கால்டுவெல் ஒப்பிலக்கணம் முதற் பதிப்பு - 1944 இந்நூல் 1944இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. ராபர்ட் கால்டுவெல் அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து தேயத்திற்குத் தம் பெற்றோர் சென்று குடியேறினமையால், இவரும் அவர்களுடன் சென்றார். இளமையிலேயே மதிநலம் வாய்ந்து விளங்கிய இவர், எளிதில் கல்விநலமும் வாய்க்கப்பெற்றார். பதினாறாம் ஆண்டு வரை இவர் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின், தம் தந்தையாரின் விருப்பப்படி ஓவியத் துறையிற் பயின்று தேர்ந்து உயர்ந்த பரிசும் பெற்றார். எனினும், அத்துறையில் தொடர்ந்துழைத்து வாழ்க்கையை நடத்த இவர் கருத்துச் செல்லவில்லை. இறை வனத்தாற்றலையும், பெருமை யையும் தெரிக்கும் மெய்யுணர்வு நூல்களிலேயே இவர் கருத்துச் செல்வதாயிற்று. எங்கும் நிறைந்த பரம்பொருளின் பெருமையைத் தம் சமய உண்மைகட்கேற்ப யாண்டும் பரப்பித் தொண்டாற்றுவதே தலைசிறந்த வாழ்க்கைப் பணியாம் என்று இவர் தேர்ந்து கொண்டார். அதற்கேற்ப, இருபதாம் அகவையில், இலண்டன் நகரத்திலிருந்த சமயத்தொண்டர் சங்கத்தில் இவர் உறுப்பின ராகச் சேர்ந்தார்; அதன் சார்பில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஐரோப்பியத் தொன்மொழிகளிலமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும் தெளிவுபெறக் கற்றார். அப் பல்கலைக் கழகத்தில் கிரீக்குமொழி பயிற்றியவர் பேராசிரியர் சர் டேனியல் சேண்ட்/போர்டு என்பார். அவர் மொழி நூல்முறை வழுவாது, கிரீக்கு மொழியின் அருமை பெருமைகளைப் பிற உயர்தனிச் செம்மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டிய திறமையைக் கண்டு கால்டுவெல் அளவிலா வியப்பெய்தினார். வியப்பு விருப்பாயிற்று; விருப்பு இவர் தம் உள்ளத்தை அத்துறையில் வெள்ளம் போல் ஈர்த்துச் செல்வதாயிற்று. இதுவே, இவர் பிற்காலத்தில் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிப் பெருமை யெய்துவதற்கு அடிப்படையாயிற்று. இந்நிலையில் தென்தமிழ்நாட்டில் கிறித்து சமயப் பணி செய்யத்தக்க அறிஞரொருவரை இலண்டன் சமயத்தொண்டர் சங்கத்தினர் நாடினர்; நாட்டம் இயல்பில் கால்டுவெல் மீது சென்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய இவரையே அச்சங்கத்தினர் தேர்ந்தனுப்பினர். ஆர்வத்துடன் ஒப்புக்கொண்ட இளைஞர் உடனே கப்பலேறினர். அக்காலம் கப்பல் இந்தியா சேர நான்கு திங்கள்களாகும். இந் நெடுங்காலத்தை வீணாக்கக் கருதாத நம் இளைஞர் அக்கப்பலிலேயே இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த பிரௌன் என்னும் ஒருவருடைய நட்பைத் தேடிக்கொண்டார். பிரௌன் சென்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்; ஆந்திரமும், ஆரியமுங் கைவந்தவர். அவருடன் நாடோறும் நன்கு பழகி, கால்டுவெல் முறையாக ஆரியம் பயின்றார். 1838ஆம் ஆண்டில் கால்டுவெல் முதன்முதல் சென்னை வந்திறங்கினார். அந்நகரில் தமிழ்ப்புலமை வாய்ந்து பெருஞ் சிறப்புடன் விளங்கிய துரூ என்னும் ஆங்கிலேய அறிஞருடன் இவர் மூன்றாண்டுகள் வரை உறைந்து வருவாராயினர். அம்மூன்றாண்டுகளிலும் அப்பெரியாரிடம் இவர் முறையாகத் தமிழ் பயின்று வந்தார். சென்னை நகரில் அக்காலம் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களாகிய உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன் முதலியோர் நட்பும் இவருக்குக் கிடைத்து, இவரது தமிழார்வத்தை மேலும் மேலும் உக்குவதாயிற்று. 1841ஆம் ஆண்டில் இவர் சமயத்துறையிற்றேர்ந்து குருப் பட்டம் பெற்று, ஆங்கிலச் சர்ச்சிலும் உறுப்பினரானார். இவ்வாறு மூன்றாண்டுகள் சென்னையிற் கழிந்ததும், கலைவல்லுநராய நம் ஐயர் பழந்தமிழ்ப் பதியாய பாண்டி நாட்டிற் பணி செய்யப் புறப்பட்டார்; புறப்பட்டவர் நானூறு கல் தொலைவையும் நடந்தே கடப்பதெனத் துணிந்தார். அதனால், இடைப்பட்ட நாட்டுமக்களின் பழக்கவழக்கங்களையும், ஆங்காங்கு வழங்கும் மொழியையும் நேரே அறிந்து பயனுறலாகும் என்று இவர் கருதினார். 1“செல்லும் நெறியில் அமைந்த இயற்கை வளங்களைக் கண்டு இன்புற்றார்; மரங்கள் செறிந்த பூம்பொழில்களில் தங்கி இளைப்பாறினார். காலையும், மாலையும் வழி நடந்து, பொன்னிநாடென்று ஆன்றோராற் புகழ்பெற்ற சோழநாட்டின் அணியாய காவிரிச் செழும்புனலைக் கண்டு களித்தார். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையையும் கண் கூடாகக் கண்டார். மாயூரம் என்னும் மயிலாடுதுறையின் வழியாகச் சென்று கடற்கரையில் அமைந்த தரங்கம்பாடியில் தங்கினார். `கத்தும் தரங்கம் எடுத்தெறியும்’ கடலருகே கவினுற விளங்கிய துறையைத் தரங்கம்பாடி என்னும் அழகிய பெயரால் அமைத்த தமிழ்மக்களது அறிவின் பெருமையை வியந்து புகழ்ந்தார்... அப் பாடியிலமைந்து பெருந்தொண்டு புரிந்த 2தேனிய சங்கத்தின் வரலாற்றையும், அச்சங்கத்தார் இயற்றிய தமிழ்நூல்களின் பெருமையையும் அறிந்து அகமகிழ்ந்தார். அப்பால் கும்ப கோணத்தின் வழியாகத் தஞ்சைமாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற் பெருமான் கோவிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு வியந்தார்... நெல்லைமாநகரிற் பிறந்து கிறிஸ்துமதத்திற் சேர்ந்து தஞ்சையிற் குடியேறி வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியாரைக் கண்டு அளவளாவினார். அவரியற்றிய இனிய தமிழ்க் கீதங்களைக் கேட்டு இன்புற்றார். பின்பு காவிரிக்கரையிலமைந்த சிராப் பள்ளிக் குன்றின் அழகையும், ஆற்றிடைக்குறையி லமர்ந்த திருவரங்கத்தின் சிறப்பையும் அறிந்து நீலகிரியை நோக்கிச் சென்றார். காருலாவும் நீலகிரியில் வசித்துவந்த ஸ்பென்சர் என்னும் அத்தியட்ச குருவின் விருந்தினராக ஒரு மாத காலந் தங்கி இளைப்பாறினார். நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கொங்கு நாட்டுக் கோவையின் வழியாகப் புலவர் நாவிற் பொருந்திய மதுரைமாநகரை நோக்கி நோக்கி நடந்தார். பாண்டி நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்தபொழுது தாயைக் கண்ட சேய்போல ஐயர் அகமலர்ந்து இன்புற்றார். €ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையையாற்றில் வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங் குளிர்ந்தார். அப்பால் அங்கயற் கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு €ஆனந்தமுற்றார்... பைந்தமிழ் வழங்கும் நாடு பாண்டிநாடே யென்றும், கசடறக் கற்ற புலவரடங்கிய கழகத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த நகரம் மதுரைமாநகரம் என்றும் எண்ணிய நிலையில் எல்லையற்ற இன்பமுற்றார்... தமிழ் மணக்கும் மதுரைமா நகரைவிட்டு நீங்கித் திருமங்கலத்திற் சமயத்தொண்டு புரிந்த 3திரேசி என்னுந் தமிழறிஞருடன் அளவளாவி, சில நாட்களில் தென்றல் வந்துலாவும் திருநெல்வேலியை அடைந்தார்... பொருணையாற்றைக் கடந்து பாளையங் கோட்டைக்குச் சென்றார்... நலமலிந்த மக்கள் வாழும் நாசரத்தென்னும் நகரை நண்ணினார். அந்நகர மக்கள் விருப்பத்திற்கிணங்கி ஆலயத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார்... அருகிருந்த €முதலூரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அரியதோர் விரிவுரை செய்தார். அப்பால், இடையன்குடியை நோக்கிப் புறப்பட்டார்; காதவழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை இராப்பொழுதில் வந்தடைந்தார்.” சமயத்தொண்டும், தமிழ்த்தொண்டும் புரியப் போந்த நல்லறிஞர் தம் தொண்டிற்கு இடமாக அமைந்த இடையன் குடியை இவ்வாறு சென்றடைந்தார். இவ்வழிநடையினால் சோழநாட்டின் நிலவளமும், தரங்கம்பாடியின் கடல்வளமும் ஐயர் தம் உள்ளத்தில் நன்கு பதிந்தன. தமிழ்நாட்டில் திகழும் ஊர்கள் பலவற்றையும் நேராகச் சென்று கண்டமையால், தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களும், தமிழ்மொழியின் பல்வளங்களும், அதனோடு தொடர்புடைய பிற திருந்தா மொழிகளின் நுட்பங்களும் இவர்க்கு நன்கு விளங்கின. இவை பின்னர் இவர் எழுதிய ஒப்பற்ற ஆராய்ச்சி நூலாகிய ஒப்பிலக்கண நூலைத் திறம்பட எழுதுதற்குப் பேருதவியாயின. திருநெல்வேலித் தேரியிலமைந்துள்ள வெப்பமிகுந்த இடையன்குடியை அடைந்த பெரியார் அவ்வூர் ஒரு பெரிய குப்பைக் காடாக இருக்கக் கண்டார்; தாறுமாறாகக் கிடந்த அவ்வூர்த் தெருக்களையும், தெருக்களிலுள்ள வீடுகளையும் முறைப்படுத்தித் திருத்தியமைக்கத் தூண்டுதலளித்தார். தமக்குக் குடியிருக்க அமைந்த வீட்டை நன்கு செப்பனிட்டு, பிறரும் அவ்வாறே தத்தம் வீட்டினைச் செப்பனிட்டு அமைக்கத் தூண்டினார். இந்நிலையில் 1843 ஆம் ஆண்டில், இவருக்குத் திருமணம் நடைபெற்றது. நாஞ்சில் நாட்டு நாகர்கோயிலில் கிறித்தவத் தொண்டராய்த் திகழ்ந்த மால்த் என்பாரின் மகளாரான எலிசா இவர்தம் அரிய மனைவியாராக வாய்த்தார். தமிழும் ஆங்கிலமும் பயின்று, சொல்வன்மையும் நல்லறிவும் வாய்ந்திருந்த எலிசா அம்மையார் கால்டுவெல் ஐயர் மேற்கொண்ட அருந்தொண்டு களுக்கு உடனிருந்து உதவி புரிவாராயினர். அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த இவ்விருவர்களும் உயர்தரக் கல்வியும், பெண் கல்வியும் பரவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இவர்கள் முயற்சியால் தூத்துக்குடியில் ஓர் ஆங்கிலக் கலாசாலை நிறுவப் பெற்றது. ஆங்கில “ஆலய நிர்மாண சங்க” த்தாரின் உதவியினாலும், வள்ளன்மை வாய்ந்த பொருளாளர் சிலர்தம் உதவியினாலும், வள்ளன்மை வாய்ந்த பொருளாளர் சிலர்தம் பேரீகையினாலும் அழகும் வேலைப்பாடும் அமைந்த கிறித்தவக் கோயில் ஒன்றை இடையன்குடியில் ஐயர் கட்டி முடித்தார். 1847ஆம் ஆண்டில் அடிப்படைக் கல் நாட்டப் பெற்றுத் தொடங்கப் பெற்ற அக் கோவிற் றிருப்பணி 1880ஆம் ஆண்டில் முடிவு பெற்றதென்றால், அத் திருப்பணியின் அருமை பெருமைகளையும் ஐயர்தம் முயற்சிச் சிறப்பினையும் விரித்துரைக்கவும் வேண்டுமோ? இடையன்குடிக்கே ஓர் அணிகலனாகவும், ஐயர் தம் ஆற்றலுக்கும் பெருமைக்கும் அழியாத சான்றாகவும் அக்கோவில் திகழ்கின்றது. அறிவறிந்த மக்கள் மூவர், (இரு பெண்களும் ஒரு பிள்ளையும்) ஐயருக்குப் பிறந்தார்கள். இளைய மகளான லூயிசா என்பாள் மணவினை பூண்ட சில ஆண்டுகளுக்குள் இறந்தாள். பெரிய மகள், வியாத் என்னும் அறிஞரை மணந்து மனையறம் பூண்டாள். வியாத்தின் உதவிகொண்டே கால்டுவெல் ஐயர் பின்னர்க் கோடைக்கானலில் ஒரு பெரிய கோவிலைக் கட்டி முடித்தார். தம் அருமை மாமனாரின் வரலாற்றைத் திறம்பெற எழுதியளிக்கும் பேறு வியாத்துக்கே வாய்த்தது. இனி, ஐயர் பல ஆராய்ச்சிகளி லீடுபட்டுத் தமிழநாட்டிற்கும் நற்பெயர் எய்துவித்தார். இடையன் குடியில் அமைந்திருந்த செக்கர் நிலமாகிய தேரியின் குறுமணல் இவருக்கு அளவிறந்த வியப்பை யூட்டியது. அதனைச் சிறிதளவெடுத்து வியன்னா நகர ஆராய்ச்சி நிலயத்திற்கனுப்பி வைத்தார்; உலகில் வேறெங்குமே அத்தகைய நிறம் வாய்ந்த மணல் இல்லை என்ற ஆராய்ச்சி முடிபைப் பெற்றுப் பொருனை நாட்டிற்குப் பெருமை யளித்தார். பண்டைத் தமிழகத்தின் வாணிபப் பெருமையையும், பழந்துறை யமைப்புகளையும் ஆராய்ந்து தமிழ் நாட்டின் தொன்மையும் சிறப்புங் கால்கொளச் செய்தார். தமிழிலமைந்த 4 “பிரார்த்தனை நூலை”த் திருத்தி யமைக்கும் பணியிலீடுபட்டு அதனைச் செய்து முடிக்கும் பெரும் பேற்றிற் பங்கு கொண்டார்; இடையன்குடி சேருமுன் 6000 ஆக இருந்த திருநெல்வேலிக் கோட்டக் கிறித்தவ மக்களின் தொகையை, 1,00000 ஆகப் பெருக்கிச் சமயத் துறையிற் பெரும்பணி யாற்றினார். 1877ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப் பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரும் பெருமை நூலேயாகும். இந்த நூல் 1856ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1875 இல் வெளி வந்தது. இப்பொழுது இருப்பது மூன்றாம் பதிப்பாகும். இது கால்டுவெலின் மருமகனாரான வியாத் பதிப்பித்தது. மொழி நூல் உலகிற்கு இவ்வாறு புது நெறி காட்டிய ஐயர்க்குக் கிளாஸ்கோப் பல்கலைக் கழகத்தார் “டாக்டர்” என்னும் பட்டம் அளித்தனர். இவரியற்றிய ஏனைய நூல்கள் “திருநெல்வேலிச் சரித்திரம்” “தாமரைத் தடாகம்”, “ஞானஸ்நானம்”, “நற்கருணை” முதலியனவாம். இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, அறம் பல புரிந்து, செயற்கருந் தொண்டுகளைச் செய்து முடித்த அருந்திறற் பெரியார் 1891 ஆம் ஆண்டு தள்ளாமையை முன்னிட்டுப் பணியினிற்று நீங்கி ஓய்வு பெற்றுக் கோடைக்கானல் மலையில் வாழ்ந்துவருவாராயினர். ஆனால், நெடுநாள் இவர் அவ்வாறு வாழ்வதற்கில்லை. அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28ஆம் நாளன்று ஐயர் இறைவன் திருவடி சேர்ந்தார். இவருடைய உடல் இடையன்குடிக்குக் கொண்டுசென்று, அவரே இவரால் அங்குக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தில், அடக்கஞ் செய்தனர். 5“கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார். தென் தமிழ் நாடாகிய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுக்கு மேலாக வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழைமாந்தர்க்கு எழுத்தறிவித்தார். சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதித் திருச்சபைகள் நிறுவினார். தூர்ந்துகிடந்த துறைகளைத் துருவினார். திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதினார். தென்மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிறமொழிகளை ஒத்துநோக்கித் `திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றி”த் திராவிட மொழிகளுக்குப் புத்துயிரளித்தார். ஐயர்தம் பெருமை அளவிடப் போமோ! அடிக்குறிப்புகள் 1. கால்டுவெல் ஐயர் சரிதம் - திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல். 2. கூhந னுயniளா ஆளைளiடிn. 3. னுச. கூசயஉல 4. கூhந ஞசயலநச க்ஷடிடிம 5. கால்டுவெல் ஐயர் சரிதம் திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எஸ். இராபர்ட் கால்டுவெல் சுடிநெசவ ஊயடனறநடட (மே திங்கள், 1814 - ஆகஸ்டு 25, 1891) ஸ்காட்லாந்து சார்ந்த இவர் பெற்றோர் அயர்லாந்தில் சில ஆண்டுகள் வசித்தபொழுது அங்கு பிறந்த இவர், பெற்றோர் தாய்நாடு திரும்பியபொழுது தாமும் ஸ்காட்லாந்து போந்து கிளாஸ்கோ நகரில் வசித்தார். 2. தமிழிய (திராவிட) மொழிகளின் ஒப்பிலக்கணத்தை 1856இல் எழுதித் தமிழின் தமிழரின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், (இரண்டாவது பதிப்பு 1875). இன்றுள்ள மொழிகளில் தமிழும் தமிழிய மொழிக் குடும்பமுமே மாந்தன் முதன்மொழிக்கு மிக நெருங்கியதாயிருக்கலாம் என்ற முடிவை 1856லேயே தேற்றமாகக் குறிப்பிட்டவர். தமிழைக் கருதும் பொழுது கால்டுவெலையும் கருதியாக வேண்டும் என்ற பெருமித நிலையில் உள்ளவர். 3. தமது இருபதாம் வயதில் லண்டன் விடையூழியர் சங்கத்தில் சேர்ந்தார். கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் (அச்சங்கம் அனுப்பிய) மாணவராகச் சேர்ந்து ஈராண்டு பயின்று பி.ஏ. க்ஷ.ஹ. பட்டம் பெற்றார். இயல்பாகவே கால்டுவெல் நாட்டம் கொண்டிருந்த மொழிகளின் ஒப்பாய்வு ஊடிஅயீயசயவiஎந ஞாடைடிடடிபல என்னும் துறையில் மேலும் ஆழமாக அவரை ஈர்த்தவர் அவருடைய கிரீக் பேராசிரியர் தானியேல் சான்ட்போர்டு ஆவார். “நாம் வேற்றுமொழிகள் பேசும் நாடுகளுக்குச் சென்றால் அந்நாட்டு மொழிகளையும், ஒப்பாய்வு செய்து மொழியியல் துறைக்கு வளம் சேர்க்க வேண்டும்” என்று அப்பொழுதே சூளுரைத்துக் கொண்டதாக அவர் எழுதியுள்ளார். (“ஊயடனறநடட சுநஅinளைஉநnஉநள” லெ து.டு. றுலயவவ; 18987) தமிழின், தமிழரின் நல்லூழ், காரணமாக கால்டுவெல் தமிழ்நாட்டில் பணி செய்ய அனுப்பப் பட்டார். மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்கிய பின்னர் திருநெல்வேலியில் இடையன் குடிக்கு அவர் இறை பணியாற்றச் சென்றார். அவர் சென்னையில் வாழ்ந்தபொழுது ஏற்கனவே தமிழ்ப்பணியிலும் தமிழாய்விலும் ஈடுபட்டிருந்த போப், துரு, வின்ஸ்லோ, பவர் (க்ஷடிறநச) ஆகியோரொடு பழகித் தம் தமிழறிவைப் பெருக்கிக் கொண்டார். பின்னர் இடையன் குடியில் மறைப்பணி ஆற்றத் தொடங்கிய பின்னரும் மொழியியலாராய்ச்சியில் இடையறாது கடுமையாக 15 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துத் தமது அரிய ஒப்பிலக்கண நூலை வெளியிட்டார். 4. உலக மொழிகளிலேயே தமிழின் தொன்மை - முன்மை யையும் முதன்மையையும் முதன் முதலில் கண்டறிந்து சாற்றியவர் இவரே: “தமிழிய மொழிகளில் உள்ள சில சொற்கள்/வேர்கள் மாந்தன் முதன்மொழியில் இருந்திருக்கக் கூடிய வடிவங்கள் எனக் கூறலாம்.” ஒருபுறம் தமிழிய மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள், எலாமைட் மொழி, சித்திய (இப்பொழுது “உரால்-அல்தாய்க்”) மொழிகள், சப்பானிய மொழி, ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி முதன்முதலாக ஆணித்தரமான ஆழ்ந்த பல செய்திகளைத் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன்மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய தமிழிய (திராவிட) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை கால்டுவெல் தான் நிறுவினார். அவர் நூல் என்றும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றது. தமிழ் மொழியியல் - இலக்கண ஆய்வு குறித்து எழுதப்பட்ட நூல்களில் தலையாயது. பரந்துபட்ட சான்றுகள், நுட்பமான விளக்கம், கூரிய ஆராய்ச்சி, ஒப்பியலாய்வு நிறைந்த நூல். 5. இருபதாம் நூற்றாண்டிலும், நம் காலத்திலும் நூஸ்திராதிக், ஞாலமுதன் மொழி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் முன்னோடி அவர். அவருடைய 1856/1875 நூலை அவர்கள் ஆழ்ந்து கற்பார்களானால் இன்றும் அவர்களுக்குப் புதிய ஒளி தர வல்லவை அவர் ஆய்வுகள். 6. இன்று பல துறை சார்ந்த பன்னாட்டறிஞர்களின் (ஜே.எச். கிரீன்பெர்க், தால்கோபால்ஸ்கி, ஏ.ஆர்.பொம்ஹார்டு, வாக்லாவ் பிலாசக், காலின் மாசிகா, லெவிட், ஹகோலா முதலிய வர்களின்) ஒருமித்த கருத்தின்படி, (i) உலகில் இன்றுள்ள 700 கோடி மக்களின் மூதாதையராகிய மிகச் சிறிய குழுவினர் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு முன்னர் (இ.மு) க்ஷ.ஞ. 1,50,000ஐ ஒட்டித் தோன்றிய பின்னர் அவர்களில் இருந்து பிரிந்த ஒரு சிறு குழுவினர், இ.மு. 70000-50000ஐ ஒட்டி ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்காக தென்னிந்திய கடலோரக் கண்டத்திட்டு (ஊடிவேiநேவேயட ளுhநடக யரெவவiபே ளுடிரவா ஐனேயை) ஆஸ்திரேலியா வரைப் பரவினர். மாந்த முதன்மொழி இ.மு. 70000-50000க்கு முன்னரே தோன்றி விட்டது. தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் தமிழ் மொழி பேசுநர் கி.மு. 50000லிருந்தே தொல் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். (ii) தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கே பரவிய பிற்றைக் காலகட்டத்தில் தான் இந்தோ ஐரோப்பியம்; செமித்தியம், உரால் - அல்தாய்க் முதலிய மொழிக் குடும்பங்கள் கிளைத்தன. ஸபின் இயல்களில் லெவிட், ஹகோலோ பற்றிய குறிப்புகளையும் காண்க.] 7. கால்டுவெல் காட்டிய வழியில் தொடர்ந்து முறையான மொழியியல் கோட்பாடுகளின்படி ஆய்வு செய்தவர்கள், செய்பவர்கள் பலருள் (குறிப்பிடத்தக்கவர்கள்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்; ஞா. தேவநேயப் பாவாணர், எச்.எஸ். டேவிட், இரா. மதிவாணன், அருளி, கு. அரசேந்திரன், ஸ்தீபன் ஹில்யர் லெவிட், எச்.பி.ஏ. ஹகோலா போன்றவர்கள்) கால்டுவெல் 1856இல் வெளியிட்ட கோட்பாட்டை - அதாவது தமிழே ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியது என்பதை மெய்ப்பித்து விட்டனர் எனலாம். தமிழ்மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் கால்டுவெல். 8. இவருடைய வரலாறை “கால்டுவெல் ஐயர் சரிதம்” என்னும் பெயரில் 130 பக்கங்களில் திறம்பட தீந்தமிழில் இரா.பி. சேதுப்பிள்ளை எழுதி 1944இல் வெளியிட்டார். (பழனியப்பா பிரதர்ஸ் அதன் மறுபதிப்புகளைக் கொணர்ந்துள்ளது) அரிய செய்திகளுக்காக மட்டுமன்றி அழகுநடைக்காகவும் தமிழர் அனைவரும் படிக்க வேண்டியது அந்நூல். அந்நூலின் முடிவுரையில் வரும் மறக்கொணாத பகுதிகள்:- “ஐயர் இறந்தமையால் அருங்கலையுலகம் சிறந்த அறிஞரை இழந்தது. தமிழ்நாடு தகை சான்ற மைந்தனை இழந்தது. வேத விளக்கச் சங்கம் விழுமிய தொண்டரை இழந்தது. கற்றறிந்தடங்கிய நற்றவப் பெரியாரது பிரிவறிந்து பரிவு கூர்ந்தார் பலர்.” “தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, கற்றறிந்தடங்கிய நற்றவச் செவ்வராய், தம்மையே தமர்க்கு நல்கிய தனிப்பெருந் தொண்டராய் விளங்கிய தகை சான்ற கால்டுவெல் ஐயரை மனக்கோயிலுள் அமைத்துப் போற்றுதல் தமிழ்நாட்டு மக்கள் கடனாம்.” 9. ஆங்கிலத்தில் 2007இல் ஓய். வின்சென்ட் குமார தாஸ் “சுடிநெசவ ஊயடனறநடட: ஹ ளஉhடிடயச அளைளiடியேசல in உடிடடிnயைட ளுடிரவா ஐனேயை” என்ற பெயரில் கால்டுவெல் வாழ்க்கை வரலாற்றை 301 பக்க நூலாக வெளியிட்டுள்ளார். 10. தமிழ்ப் பொழில் 34-44: (1958 ஆகஸ்டு கால்டுவெல் நூற்றாண்டு மலரின்) பக் 97-136 இல் கால்டுவெல் தமிழ்ப்பணி பற்றிய தமிழ்க்கட்டுரையையும் ஐதுனுடு (துயn 1989; ஒஎiii - 1 பக். 42 - 66) இதழில் அக்கட்டுரைச் செய்திகளின் ஆங்கில வடிவையும் காணலாம். இந்தோ - ஐரோப்பிய மொழிகள் வழங்கும் தமிழ்ச்சொற்களும் இலக்கண/மொழியியல் கூறுகளும் பற்றி கால்டுவெல் கண்டறிந்து (1856லேயே நிறுவியவை) கால்டுவெல்தான் முதன் முதலில் திராவிடச் சொற்கள் பலவற்றுக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிகள் பலவற்றின் சொற்களுக்கும் இடையிலுள்ள (ஞால முதன் மொழியிலிருந்து கிளைத்த காலத்திலேயே உருவான) ஒப்புமையைத் தன் நுண்மாணுழை புலத்தால் கண்டு நிறுவியவர். தம் நூலின் 569-607 பக்கங்களில் அவர் குறிப்பிடும் அத்தகைய சொற்கள் வருமாறு: சமஸ்கிருதம் கடன் பெற்ற தமிழ்ச் சொற்கள் பக்கங்கள் 569-581: அக்கை, அக்கா, ய அடிவாநச. (பரோ, தேவநேயன்) அத்தா, அத்தி, ய அடிவாநச, யn நடனநச ளளைவநச, ய அடிவாநச’ள நடனநச ளளைவநச அடவி (தேவநேயன்) ஆணி (தே)அம்பா கயவாநச, அடிவாநச (யடளடி in டிடன ழiபா ழுநசஅயn யனே டீளஉயn; யஅஅய; ஐஉநடயனேiஉ, யஅஅய = பசயனேஅடிவாநச; ழுநசஅயn, யஅஅந = ரேசளந) (பரோ, தே) ஆலி = தோழி ஸஈ - ஆள் கநஅiniநே ளரககiஒ] (ப, தே. 1971) கடுக, கடு, ளாயசயீ, யீரபேநவே, கநைசஉந (ப, எமெனோ) கலா = கலை (ப, தே, எ 1971) காவேரி = மஞ்சள்; ஆற்றின் பெயர் (தே) குடி, hடிரளந; பின்னிஷ் மடிவய; கூநரவடிniஉ உடிவ, உடிவந நவஉ? (ப, தே) பட்டன, பட்டண, பட்ட, ய உவைல, வடிறn, எடைடயபந (ப.தே) பந்நோ=பொன் பல்லீ, ய உவைல/ வடிறn/எடைடயபந பள்ளி (ப,தே) bhயத, bhயபய ஈ -பகு (தே) மீன - மீன் (ப,தே) எயடயமளாய = றாவைந ஈ - வெள்; ழரபேயசயைn எடையபந = ய டiபாவ; ளுடயஎடிnயைn எநடi = றாவைந வல ஈ - வளை (வடி ளரசசடிரனே) வளயம் ஈ - வளையம், வளையல் (ப, தே) எயடபர = hயனேளடிஅந ஈ - அழகு ஸவ, ஸாவ ஈ - சா; ளுயஅடிநைனந உhயறந = னநயன ஸூக்தி , ய உரசட சுற்று ஸாய வாந நஎநniபே சாய் (தே) அயடயலய மலை (ப,தே) 2. குந்தர்த் (ழுரனேநசவ) ஷ்நவைணளஉசகைவ னுநரவளஉhநn ஆடிசபயடேயனேளைஉhந ழுநளநடடளஉhயகவ 1869 இதழில் குறித்தவற்றுள் கால்டுவெல் ஏற்றவை வருமாறு: உருண்ட, ய னநஅடிn ஈ - உருள், உருண்டு ஏட, ஏடக ள ளாநநயீ டிச படியவ (ப, தே) கர பா(b)ல, கரவால, ய ளறடிசன ஈ - கைவாள் கர்நாடகம் குண்ட (ன) ய hடிடந ஈ - குண்டு (ப,தே) குர்குர = நாய் குரை (ப,தே,எ. 1971) கேயூர, ய செயஉநடநவ றடிசn டிn ரயீயீநச யசஅ ஈ - கை, உறு (ப.) கோகில குயில் கோட (ழுhடிவய) = ய hடிசளந குதிரை, ரனேநசiஎநன, iனேபைநnடிரள னுசயஎனையைn றடிசன; தெ. குர்ரம் சம்பக (மரம்) நாரங்க டிசயபேந பிட, பிடக, ய டயசபந யௌமநவ பிடி புத்ர = ளடிn ஈ - புது புந்நாக (மரம்) ஈ - பொன் பேட ஈ - பெட்டி (ப,தே) பல யீhயடய ஈ - பழம் மருத்த ய அநனiஉiநே அயn, ய ளடிசஉநசநச மருந்து, மருத்துவன் மர்க்கட = குரங்கு மரம் (ப.) முக்த ஈ - முத்து (ப.) bhடைடயள ஈ - வில் ராத்ரி ஈ - இரா, இரவு விரல, டடிடிளந ஈ - விரல் ஹேரம்ப = எருமை (ப,தே) ஸ்ரிங்கவேர ஈ - இஞ்சி ரூப ஈ - உருவம், உருவு, உரு (ப,தே) 3. கித்தல் (முவைவநட) ஐனேயைn ஹவேiளூரயசல 1872 ஆகஸ்டு இதழில் குறித்தவற்றுள் கால்டுவெல் ஏற்றவை வருமாறு: அட்ட, யn ரயீயீநச டடிகவ ஈ - அடுக்கு, அட்ட (தே) அட்ட bடிடைநன சiஉந, கடிடின ஈ - அடு (தல்) (ப,தே) அட்ட/ஹட்ட, ய அயசமநவ, ய அயசமநவயீடயஉந ஈ - பட்டி, ஹட்டி ஆம், லநளவ ஆகும், ஆம். ஆர கூட செயளள, உடிஅbiயேவiடிn டிக அநவயடள ஆட, யனய, யள ய ளரககiஒ, யீடயலiபே றiவா, வநனேiபே யகவநச நப எயஉhயவய, வயடமயவiஎந - ஆடு = வடி யீடயல / ரளந. ஆல யள ய ளரககiஒ யீடிளளநளளiபே ந.ப. அயடயலயடய, அஸ்வவால, (ஆள் வடி யீடிளளநளள) ஆலி, ய னவைஉh - ஆழி ஈ - ஆழ பாலந வாந ஆடைம டிக ய உடிற வாயவ hயள சநஉநவேடல உயடஎநன; பால் வல்லி ஈ - வள் = நெனே, ளரசசடிரனே, வள்ளி (ப,தே) முகுர, முகுல ய ரென ஈ - முகிழ் குட ஈ - குடம் முரவாயசய, யn யஒந ஈ - கடி = வடி உரவ மேலும் கால்டுவெல் தாமே கண்டனவாகக் கூறும் முடிவுகளைப் பின்வரும் அ, ஆ பகுதிகளில் காண்க. அ) திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான மூல மொழியிலிருந்து உருவானவையும் வேர்மூலமானது தெளிவாகத் தமிழிலேயே விளங்குவனவும் ஆன சொற்கள். திராவிடம் சமஸ்கிருதம் அடி(த்தல்), உதை(த்தல்) ளுமவ ரவா ரவா, வடி ளவசமைந, வடி மnடிஉமனடிறn அடை(தல்) ஏநனiஉ யன, வடி யீநசஎயனந, வடி யவவயin எண் (வடி ளயீநயம, வடி ளயல) யn, வடி ளடிரனே அருமை யசா, வடி னநளநசஎந யசபாய, எயடரந ஊரு(தல்) ரச, வடி படி கட(த்தல்), கடு கடு, கடுக கழுதை மாயசய, கின்ன; கன்னடம், சின்ன (தமிழ்) மயnமைய, மயnலைய, கை (hயனே); செய். மயச, வடி னடி; மயசய (ய hயனே) செய் (பநல கன்னடம்) உhயமயசந, i னனை (ரசயட - யநவயiஉ மநண hநளை (ழரபேயசயைn) பாரச, (ஆடிபேடிட) குரல் hயச, வடி ளாடிரவ பயச, வடி ளடிரனே கிழி மாரச, வடி உரவ, வடி ளஉசயவஉh கெடு மானை, வடி ளரககநச யீயin டிச அளைநசல மாவை, வடி வநசசகைல மாநவ; யென, டடிற (ழுசநநம உhநனடிள = ளடிசசடிற) கொடு மரவ=உசடிடிமநன சிலிர் உhநட, வடி ளாயமந வடி வசநஅடெந செ(வடி நெ சநன) ளடியே, வடி நெ சநன செவி ஸ்ரு = வடி hநயச தடி, தட்டு வயன, வடி ளவசமைந, வடி நெயவ (எமெனோ 1971) தீ னi, வாந யௌந டிக னiயீ வடி ளாiநே தூவு, தூறு/தூற்று னார, வடி ளாயமந, வடி யபவையவந னாரடi, னரளவ வரள, வடி ளயீசiமேடந னரளவ (நுபே) நட(த்தல்) சேவை-யேவ, வடி னயnஉந,வடி யஉவ நெய் யோ, வடி ளயீin பல்(அயலே, யள ய எநசb, யீரடர; யீரசர, அரஉh, அடிசந வடி நெ அரடவiயீடநைன) பாடு (தமிழில், படி என்பது யீயவா, வடி சநயன, வடி சநஉவைந பாட்டுப் படித்தல் என்ற பொருளிலும் வழங்குவதே) பால் ஈ - (பகல் பகு) யீhயட, னநசசனைந டயவin; யீயச-ள, ய யீடிசவiடிn பிற யீயசய, னகைகநசநவே, கடிசநபைn பொறு bhசi, (bhயச) வடி நெயச பால் (அடைம) ஞயலயளய, அடைம யீயலய, றயவநச (யீய, வடி னசiமே) பேசு bhயளா, வடி ளயீநயம பூ யீhரடட-ய, வடி டெடிளளடிஅ யீரளாயீய, ய கடடிற வல், ளவசடிபே, வல்லமை, யெடய, வசநபேவா வன்மை ஆ) தமிழ்ச் சொற்களோடு இயையுடைய மேலை இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்கள் (அந்தந்தப் பொருள் குறித்த சமஸ்கிருதச் சொல்லுக்கும் தமிழுக்கும் இடையிலுள்ள இயைபை விட மிக நெருங்கிய தெளிவான உறவைக் காட்டுபவை) அசை ழுசநநம நi-டி, வடி ளாயமந, வடி அடிஎந வடி யனே கசடி அருவி டுயவ, சiஎ-ரள; நுபே.சiஎநச சாரடி, வடி கடடிற அலை ழு. யடய-டிஅயi; யடந; வடி றயனேநச ழுநசஅ, றநடடந, ய றயஎந அவா, ஆவல் டுயவin யஎந-டி, வடி னநளசைந ளுயளே யஎ. வடி னநளசைந அவ்வா, அவ்வை டு. யஎ-ரள, ய பசயனேகயவாநச யஎயை, ய பசயனேஅடிவாநச யஎ-ரnஉரடரள, ய அயவநசயேட ரnஉடந ஆவி ழு. யடி, வடி கடடிற; ளுமவ. எயட, வடி கடடிற இழு (கன்னடம்: எளெ) ழு. hநடஉடி (யடடயைnஉந டிக ச வடி 1 in யடட டயபேரயபநள) இரும்பு டு. டிநள, டிநச - ளை; ளுயஒடிn சைநn டீடன ழுநச. நச, ளுமவ யலயள ஈனு நுபே. வடி நயn டிச லநயn, ஹபேடடி ளுயஒடிn, நுயnயைn உயர் ழு. யநசை-டி, வடி சயளைந ரயீ, ஹசஅநnயைn றடிச, hiபா எரி (கன்னடம், துளு உரி) டு. ரச-ய வடி ரெசn, ஹசஅநnயைn டிச, கசைந உளை, அசைந ழு. நட-டிள, ய அயசளா ஊளை, டு. ரடரடடி, வடி hடிறட, ழு. யடடி - டரணடி; நு.hடிறட, எய்(அம்பை) ழு. hiடி, வடி ளாடிடிவ, வடி உயளவ hநடி வடி ளநனே எழு டு. யசை-டிச வடி சளைந, வடி பநவ ரயீ எழு ஞாயிறு டு. டிசi-நளே ளடிட எல்லா, எல்லாம், எல்லீர் டீளளநவந, யட; யடi, யடட ளுயஒடிn நயட; டீடன ழழு யட; நுப. யடட. ஏர் (கன்னடம் ஆரு) ய யீடடிரபா டு. யசய, ழு. யசடி- டிடiவா யசர (ளுஉhநடநபநட’ள உடிnநேஉவiடிn டிக வாநளந றiவா ளுமவ யச (சi டிச சi) ளபைnகைலiபே வடி உரவ டிச hரசவ, ளை nடிவ உடிnஎinஉiபே. சுயனiஉயட அநயniபே டிக சi ளநநஅள வடி நெ, வடி சரn) ஓரம் டு. டிசய, bடிசனநச கடி, வடி உரவ, சநனே நு.உரவ சுநயீசடிஎந; கத்தி றுநடளா உயவநயை, வடி உரவ கண், காண் றுநடளா உநடிnயைற, வடி ளநந ளுமவ மயயே, டிநே நலநன ழுசநநம பnடி-யேi டுயவin பயே, பயேசரள ளுமவ யே (தே) கரடி ஞநசளயைn உhயசள முரசன hயசத டு. ரசள -ரள கழுகு ஞநசளயைn மநசபiளா ளுமுவ பயசரனய, பசனாசய கள, களவு டு. உடநயீ-டி வடி ளவநயட ழு. மடயயீ-நளை ழுயஎசi (கன்னடம்) கெபி, ய உயஎந கப்பு (கன்னடம்) ய யீவைகயடட டு மயஎந-ய, ய உயஎவைல, ய னநn காய் வடி நெ hடிவ, வடி bடிசn ழு. மயiடி, வடி நெ hடிவ, வடி ரெசn காங்கை, (கன்னடம்) மயபந ளு. மயஅய, வடி னநளசைந; (உடிஅயீயசந ழநசெநற hயஅ; hயஅஅயஅ, வடி நெ றயசஅ; h ய - யன, னநளசைந) கிண்டு ழு. மநவே - நடி வடி யீசiஉம, வடி படியன, வடி ளயீரச டிn கிழ ழு. பநசயள, பநசயi-டிள, யபந,யபநன ளுமவ தயச-யள யபந கிழமை (ஒருகோளுக்குக் ழு. மரசi-யமந ளரனேயல, வாந டடிசன’ள கிழமையுடையது உரியது) னயல (மரசi-டிள, ய டடிசன, யீடிளளநளளடிச, யடடநைன வடி கிழ யீடிளளநளளiடிn) கிளை ழு. முடயனடிள, ய லடிரn ளாடிடிவ, செயனே குப்பை ழு. மடியீசடிள, னரபே, னசைவ குறு, குறுகு, குறை ழுநசசஅயn. மரசண டு. உரசவ -ரள ழு. மரசவடிள, உரசசஎநன குரி (கன்னடம்) ஆடு ஐசiளா, மயடிசய ழுநடிசப, உhhரசi குருடு ஞநசளயைn மரசர; முரசன மடிச; டீளளநவந மரசஅ, டெiனே குளிர், சிலிர் ழுநசஅயn மராட (க.தெ.சளி) ளுயஒடிn உலட, உடிட நுபே உடிடிட, உடிடன, உhடைட டுயவin பநடர கேள் டு. யரள -உரட-வடி வடி hநயச டளைவநn, உடரடி, வடி நெ உயடடநன ழு. மடர-டி, வடி hநயச, ஐசiளா உடரயள, வாந நயச டுiவாரயnயைn மடயர, வடி hநயச கொல் சுரளளiடிn மடிடலர, வடி ளவயb நு. மடைட, ளூரநடட சாத்து ளுயஒடிn ளஉலவவ-யn வடி ளாரவ in, நபே வடி ளாரவ னுரவஉh ளஉhரவவ-நn வடி ளவடியீ சால், ய ரெஉமநவ, ய கரசசடிற, ழு.ளநடயை ய கடயவ bடியசன டிச வசயல றiவா ய சயளைநன சiஅ சிவரு (கன்னடம்), சிராய்ப்பு நுபே ய ளாiஎநச சீறு ழு. ளரச-ணைய வடி யீiயீந, வடி hளை டு. ளுர- ளரசச-ரள ய றாளையீநசiபே டிச றாளைவடiபே சுடு, சுடர் ஞநசளயைn ளரள-யn; முரசன ளடினதயn டீளளநவந ளரனள-in, வடி ரெசn டு. ளiஉஉடி, னசல ளு. ளரளா, னசல சுவை நு ளயயீ ழுநசஅயn ளயகவ சுருங்கு நு. ளாசரமே ழுநசஅயn ளஉhசரஅயீகநn செப்பு ழு. நயீடி, பநயீடி, வடி ளயீநயம செல் டு. உநட, வடி படி, உநடநச, நஒ-உநடடடி-டி யீசடிந-உநடட-டி ழு.முநட, hநட-நள, ய சரnநேச மநடடடி வடி ரசபநடிn ளுமவ ளயட வடி படி டிச அடிஎந ளநட வடி அடிஎந, வசநஅடெந ழiனேi உhயட, வடி படி தகு ழுநசஅயn வயரப-நn, வடி நெ கவை கடிச நுபே னடிரபாவல தயிர் ழு. வாரச-டிள, உhநநளந ளுமவ னாயலட னசiமேiபே, ளரயீயீiபே,ளரஉமiபே தின் ழு. வநனேடி வடி nibடெந, நயவ னயiவேடைல வநவோநைள, ய படிஎசஅயn திற, தொற, திறவு ழு. வாரசய, ய னடிடிச டீ. ழழுநசஅயn வடிச எநனiஉ னரச ளுமவ னஎயசய தீண்டு, (வடி வடிரஉh மiனேடந) ழுடிவாiஉ வயனேலய, ஐ மiனேடந தெள் உடநயச ழு. னநடடிள உடநயச, அயnகைநளவ தொலை ழு. வநட-டிள யn நனே வநட-ந கயச டிகக (கசடிஅ வநடடிள) திருப்பு (தெலுங்கு; த்ரிப்பு- திப்பு) ழு.வசநயீ டி வடி வரசn திருகு, திரும்பு, திரி, திரிகை நு. வரசn ளுமவ வயசமர, ளயீiனேடந, வடி ளளூரநநணந உடடிளந நசு(க்கு) ழு. யேளள-டி நரம்பு (நார்) ழு. நேரச-டிn ய வநனேடிn, ய டபையஅநவே நினை, நெஞ்சு ழு. nடி-நடி; அnடி-டிஅயi, வடி வாiமே டிn, வடி சநஅநஅநெச நீந்து, நீஞ்சுஇ நீச்சு டு.nடி(யேஎi) வடி ளுறiஅ ழு.நேடி-டி, நேஉhடி நெய் (வடி றநயஎந) ழு. நேடி-டி, வடி ளயீin நேஅய, ய வாசநயன டு. நேடி வடி ளயீin, வடி நவேறiநே, வடி றநயஎந ழுநசஅயn யோ- நn வடி ளநற ளுமவ யோ, வடி biனே, வடி வநை படு, பாடு டு. யீயவiடிச யனே ழு யீயவா-நin வடி ளரககநச, வடி சநஉநiஎந டிச கநநட யn iஅயீசநளளiடிn; ளுமவ யெனாய வசடிரடெந. டு. யீநவ in iஅயீநவடி யடளடி வடி கயடட ரயீடிn ளுமவ யீயவ (ஞசயமசவை யீயன) வடி கயடட பண், பண்ணு ழு. யீடிn-நடி வடி வடிடை பண்ணை, பணி ஞடிn-டிள, றடிசம, ய வயளம யீநn-டிஅயi வடி றடிசம க்ஷயலெடடிniடிn யெn-யள வடி னடி, வடி அயமந ளுமவ யீயn, வடி னடி ரௌiநேளள, நேபடிவயைவந அனுப்பு (தெ: அம்பு, பனுப்பு, ழு. ஞநஅயீடி வடி ளநனே யீடிஅயீ-ந யளநனேiபே பம்பு) பழு (படு, பண்டு ழு. யீயடயi-டிள டிடன, யnஉநைவே யீயடயi, தெலுங்கில்) in டிடனநn வiஅநள ளுமவ நெஉடிஅந யீhயடய, கசரவை வடி நெ டிடன, வடி சiயீந பல், பலர், பல, பல்கு ழு. யீடிடரள, யீடிடல, அயலே அரஉh hடிi யீடிடடடிi வாந அயலே, வாந அயதடிசவைல டு. ஞடரள ழுநசஅயn கடைர அரஉh பள்ளி (பள் hடிடடடிற) ழு. யீடிடளை ய உவைல ளுமவ யீயடடi ய எடைடயபந, வடிறn பிய்த்தல்/பிய்க்கு ழு. யீநமடி வடி நடிஅb நு வடி யீiஉம? பிரி, போழ் டு. யீயச-ள ய யீடிசவiடிn (பால், ய யீடிசவiடிn) யீடிசவiடிn, வடி னiஎனைந ழு. யீடிச-டி; ளுமவ யீhயட-ய வடி னiஎனைந பிள்ளை டு. யீரடட-ரள, யீரநடட - ய bடில, ய பசைட யீரடடரள, லடிரபே டிக யn யniஅயட புகழ் டீடன ஞநசளயைn யீயபசைர, ஐ யீசயளைந புழுதி, பூமி, பூழ்தி டு. யீரடஎளை புறம், அப்புறம், இப்புறம் ழு. யீயசய, நௌனைந புறத்து, புறம்பாக டு. கடிசளை, யசெடியன புறப்பாடு (கன்னடம் பரகெ கடிசரஅ, யீரடெiஉ யீடயஉந கடிசi, னநஉமள (பந) = டிரவளனைந) டிக ய ளாiயீ பூசை (பூனை) புலி, ஊயளாபயச (ஹகபாயn) யீரளாய பில்லி (தெலுங்கு; பூனை) ஐசiளா யீரள நுபே யீரளள டு. கநடநள / கநடடநள ய உயவ நவஉ ஞநசளயைn யீநடயபே, ய வபைநச பெண் டு. கநஅiயே பெரு (பரு) ளுமவ யீரசர, யீரடர அரஉh யெசா, எயசா வடி நெ யீசநநஅiநேவே பெறு டு. யீயசi-டி, யீந-யீநச-i வடி செiபே கடிசவா, வடி யஉளூரசைந பையன், பையல், பைதல் ழு யீயளை, யீயனைடிள ய bடில டிச பசைட ளநசஎயவே டு. யீரநச, ஞநசளயைn யீரளநச ய ளடிn நு. bடில; ளுமவ யீரவசய? பொறு, பொறுப்பு, பொறுமை ழு. யீhநசடி; டு. கநசடி ளுமவ bhசi (bhயச) வடி நெயச டீழழு நெசயn, யீநசயn நு நெயச, bடிசந டீடன நு நெயசn ய உhடைன பொழுது, போழ்து டு நெச ளரககiஒ டிக வiஅந (ளுநயீவநஅநெச, னுநஉநஅநெச) ளுமவ எயச-ய வiஅந யீநச யெச, வாந வாநஅந டிக யெசi, டிnஉந போர, போகு ழு. யெ டி, வடி படி டு. எய னடி வடி அயசஉh ழநb யெ வடி உடிஅந; டிஉஉயளiடியேடடல வடி படி போடு னுரவஉh யீடிடிவ-நn வடி ளநவ டிச யீடயவே னுயniளா யீடினநச வடி பசயகவ நுபே யீரவ விழு (க. bடைர) நு. வடி கயடட ழு. கயடட-நn மகன் டு. அயள, ய அயடந ழுடிவாiஉ அயப-ரள ய bடில, ய ளடிn; ழுயநடiஉ அயஉ, ய ளடிn; கூiநெவயn அயபய, ளடிn in டயற மன்(னுதல்) டு. அயநேசந மயிர் (மை டெயஉம) ஞநசளயைn அரi ஹசஅநnயைn அயள மற டுiவா அரசளண வடி கடிசபநவ மா (எ.கா. அரிமா) டு. அயள ய அயடந மாழ்கு, மாழ், மாள் டு. அயசஉ நடி, வடி றiவாநச, வடி நெ கயiவே ழு. அயசயinடி வடி றயளவந யறயல, னநை ளு. அசi (அயச) வடி னநை ஏநனiஉ அயசமய, னலiபே யறயல? மிகு, மிஞ்சு, மிகல் டு. அயபரேள, அயபளை, ழு. அநபய, அநபயடளை ஞநசளயைn அih, அநயா டீழழு அihhடை,அiஉhடை சூடிசளந அமைடை; னுயniளா அநபநn நுபே அiபாவ ளுஉடிவஉh அiஉமடந ளுமவ அயபா அயா- அயாய மூழ்கு, அமிழ் டு. அநசபடி வடி யீடரபேந, வடி iஅஅநசளந முகில் ழு.டி-அiஉhட-ந, ய உடடிரன டுiவாரயnயைn அபைடய ளுடயஎடிnயைn அபடய ழுடிவாiஉ அiடாஅய முயல்(வடி டயbடிரச/ நனேநயஎடிரச) டு. அடிட-iடிச வடி நனேநயஎடிரச வடி ளடசiஎந ழு. அடிடடி-ள வாந வடிடைள டிக றயச நுபே வடி அடிடை முணு டு. அரசரஅரசடி,வடி அரவவநச ழு. அர அர, வடி அரவவநச, வடி பசயஅடெந மூக்கு (முகர் = வடி ளஅயடட) ழு. அரமவநச வாந nடிளந மெல், மெல்ல டு. அடிடடளை, ளடிகவ, வநனேநச யீடயைவே ழு. அயடயமடிள ளடிகவ, பநவேடந வநனேநச ளுமவ - அசனைர அறைஇ (பாறை); ராய் (தெ)கல்= ழு. டய-யள (i சநயீடயஉநள ச) வல், வலி, வலிய, வன்மை வலி = டு. எயட-யீடி வடிநெ ளவசடிபே, எயடi-னைரள இழு; வலு = வன்மைபெறு ளுமவ யெடய, எயட-யஅ சiபாவ - hயனே, ஏயட- வலிய தானாக வலம், சiபாவ (hயனே) லைய ளயீடிவேயநேடிரளடல வள் கநசவடைவைல, யரெனேயnஉந வளர் டு. யட-டி வடி nடிரசiளா - டு. எநவே -ரள விண்டு ஈ - விண் விறை நு.றiனே? ழு. யீhசளைளடி வடி வசநஅடெந சாபை-நடி, வடி ளாiஎநச, ளாரனனநச றiவா உடிடன கசபை - நடி வடி நெ உடிடன கசபை - ரள உடிடன சபை-நடி, நு. கசநநணந வீண் டு. எயச-ரள நஅயீவல, ரசேநயட, கசiஎடிடடிரள, எயin வேள்-வேண்டு ளுயஒடிn றயnயைn, வடி கயடை (க நெனேர, நெனர நெடமர, நெமர) நுபே றயவே வேறு (வெறு = எடினை, னளைவயவே?) டு. எயச-ரள னகைகநசநவே, னளைளiஅடையச. ஏயசரைள னiஎநசளகைநைன, எயசiடிரள. 4. தமிழோடு உறவுடைய செமித்திய, உரல் அல்தாய்க் மொழிச் சொற்களெனக் கால்டுவெல் கண்டறிந்தவை வருமாறு: செமித்திய மொழிகளின் சொற்களோடு உறவுடைய தமிழ்ச்சொற்கள்: அப்பா, அம்மா, ஆறு, அல், அவா, இரு இறங்கு, எரி, ஊர், எறி, எருமை, கூர், சாய், சினம், சிறு, சுமை, சுவர், செவ்வை, நாட்டு, நீட்டு, நோக்கு, பழு, பால் (பகுதி) பெறு, வா (கன்னடத்திலும், பாபிலோனியத்திலும் யெ எபிரேயத்தில் bடி) மாய், மாறு, மெத்தை. உரால் அல்தாய்க் சொற்களோடு உறவுடைய தமிழ்ச் சொற்கள்: அக்கா, அத்தன், அன்னை, அப்பன், அம்மை / அம்மா, அரு(மை) / ஆர், அல்/ஏல் ((யீசடிhibவைiஎந யீயசவiஉடந) அவ்வா, அலை, ஆறு, ஆம், இரும்பு, நீந்து, ஊர்/ உள், எழுது, எலும்பு, ஓக (தெ-டிநே) ஒக்க(யடட) கடி/கறி, கட்டு, கண், கண்ணீர், கடல், கரு, கரடி, கழுகு, கல்/காழ், கள்ளம்/களவு/ காற்று, காய், கால், கிழ, கீழ், குதிரை, குடி, குளிர், கை (தெ.கேலு) கப்பு, செவு/கிவி; கேள், கொல், கோன், கோழி, சாரல், சா(கு), சேரு, தலை, தீ, தேர், தோல், நக்கு, நகை, நாய், நெற்றி, நோடு, ஞாயிறு, பசுமை, பையன், பழ, பல் (வடிடிவா), பல்/பல, பால், பிடி, பிறகு, பிள்ளை, புகை, பெண், பொக்கிலி (தெ= யேஎநட); வயிறு, வாழ்/க: யெட, மனை, மரம், மறி, (விலங்குக்குட்டி), மலை, முறுமுறு, முன் (நெகடிசந), வான், வாய், விழி வெளிச்சம்; மேலும் ஹங்கேரிய மொழியுடன் உறவுடையன வாகக் குந்தர்த் தெரிவித்த 29 சொற்கள் (இவற்றோடு இயைபுடைய செமித்திய, உரால் அல்தாய்க் மொழிச் சொற்களை மூல நூலில் காண்க. இங்கு இடமில்லை). செமித்திய மொழிகள் கால்டுவெல் கண்டறிந்த சொல் ஒப்புமைகளுள் முக்கியமானவை; யb (அப்பன்), நஅ (அம்மா) , ய் ஓர் (ஆறு); அல் nடிவ; அவ் (அவா) ; ஆர்/ ஈர் (ஊர்); அர் = வடி நெ (க்ஷயலெடடிnயைn) இரு; சுடர் = குத்து, கூர்; ஷாஅன் = டநயn, சாய்; சாமக = வடி ளரயீயீடிசவ; சுமை; ஷுர், சுவர்; ஷாவா = சமம், செவ்வை ; பால = வடி னiஎனைந; பிள; மாய = வடி னநை, மாய்; மித்தா = ய நென, மெல், மெத்தை சீனமொழி நீ பேயn (கண்); வளர (செய்) யமய (அண்ணன்) யெட- (படர்) கிட் (கட்டு); யென (படு) - ளபைn டிக யீயளளiஎந; சத் (சிதறு). 1. தோற்றுவாய் திராவிட மொழிகள் என்று ஒரு மொழியினமாக வகுக்கப்பெறும் மொழிகளுள் தமிழ்மொழியே பண்டைநாள் தொட்டுத் திருத்தமுற் றமைந்ததும், செவ்விய முறையில் வளர்ச்சி பெற்றுவந்துள்ளதுமாகும். சுருங்கக் கூறின், திராவிடமொழி யினத்தின் வகைக்குறிமொழி தமிழே என்று கூறலாம். “திராவிடம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அது தென்னிந்திய மக்களிற் பெரும்பகுதியினராற் பேசப்பட்டு வரும் உண்ணாட்டு மொழிகளைக் குறிப்பதாகும். குஜராத்தி மொழியும், மராத்தி மொழியும் வழங்கும் பகுதிகளொழிந்த மேற்கிந்தியப் பகுதியும், தக்காணப் பகுதியும், ஒரிஸா நாடும் நீங்கலாக, விந்தியமலைக்கும், நருமதை யாற்றிற்கும், குமரி முனைக்கும் இடைப்பட்ட தென்னிந்தியப் பெரும்பகுதியிற், பண்டைக்காலத்திலிருந்தே, ஒரே மொழியின் கிளைகளாகிய பல திருந்தாமொழிகளைப் பேசும் குழுக்கள் பலவற்றைக் கொண்ட மக்கட் பெருங்குழுவொன்று பரவி வாழ்ந்து வந்திருந்ததாகத் தோற்றுகிறது. விந்தியமலைக்கு வடக்கேயுங் கூட பலூச்சிஸ் தானம் வரையிலும், வங்காளத்தைச் சேர்ந்த இராஜ்மகால் மலைகள் வரையிலுங்கூட இம்மொழியினத்தைச் சேர்ந்ததாக எண்ணக்கிடக்கின்ற கிளைமொழிகள் சில வழங்கக் காணலாம். குஜராத்தியும், மராத்தியும், மராத்தியின் கிளை மொழியாகிய கொங்கணியும், ஒட்ரதேசம் அல்லது ஒரிஸா என்ற நாட்டார் பேசும் ஒரியாவும், வடமொழிச் சிதைவுகளு மாகிய இவை திராவிட மொழிகள் பேசுங் குழுவினரொழிந்த பிற இந்து மக்களால் ஆங்காங்குப் பேசப்பட்டுவரும் மொழிகளாம். இந்தியப் பெருநாட்டின் வட பகுதியிலேனும் தென்பகுதி யிலேனும், எக்காலத்திலும் சமஸ்கிருதம் என்ற வடமொழி உண்ணாட்டு மொழியாக வழங்கியிருத்தல் கூடும் என்று நம்புவதற்கில்லை. இருந்தாலும், தென்னிந்தியப் பகுதியைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு 1கோட்டத்திலுமுள்ள (னுளைவசiஉவ) பார்ப்பனக் குழுவினருள் ஒரு சிலராலாவது, அது படிக்கப்பட்டும், பொருளுணரப்பட்டும் வருகின்றது என்பது மட்டும் உண்மை. இப்பார்ப்பனக் குழுவினர் பன்னூறாண்டுகளுக்குமுன் இந்நாட்டிற் குடியேறிய பார்ப்பன வந்தேறிகளின் வழியினராகும். இவர்களுடைய கூட்டுறவினால் திராவிட மக்களின் நல்வாழ்க்கைக்குரிய கலைப்பகுதிகளும் இலக்கியத் துறையும் ஓரளவிற்குச் செப்பமுற்றுச் சீர்திருந்தி யுள்ளனவென ஒப்புக் கொள்ளல் வேண்டும். பார்ப்பனர்களாகப் பிறந்து அவர்கட்குரிய தொழிலாகிய வேதமோதுதல், கருமஞ்செய்தல் முதலியவற்றை மேற்கொண்டுள்ள சிற்சிலர், பொதுவாக, வடமொழி நூல்களைக் கற்றறிந்து அவற்றைத் தாந்தாம் உறையும் நாட்டிடை வழங்குவதான உண்ணாட்டு மொழியில் எடுத்து விளக்கும் ஆற்றல் வாய்ந்திருந்தனர். இத்தகையினர் அவரவர் வாழும் நாட்டுப் பகுதிக்கேற்பத் திராவிடப் பார்ப்பனர், ஆந்திரப் பார்ப்பனர், கன்னடப் பார்ப்பனர் என்று அழைக்கப்பெற்றனர். நாளாவட்டத்தில் அவரவர்கள் பேசிவரும் மொழி வேற்றுமை வாயிலாக இப்பார்ப்பனக் குழுவினர் தத்தமக்குள்ளேயே மாறுபாடு மிகுந்த இனவேற்றுமையை எய்தலாயினர். ஆயினும் இவர்களெல்லோரும் பண்டு ஒரே கிளையினராக இருந்த வர்களே யென்றும், அவர்களுடைய மொழி ஒருகாலத்தில் வடமொழியா யிருந்திருக்கக் கூடும் என்றுங் கூறலாம். இது நிற்க. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்கானியர்களும் பட்டாணியர்களும், ஏனைய வடஇந்திய முகம்மதியர்களும் தென்னிந்தியப் பகுதிகளில் வந்து குடியேறினர். அவர்கள் பேசிய தனிப்பட்ட மொழி இந்துஸ்தானியாகும். இன்றும் ஐதராபாத் பகுதியில் இந்துஸ்தானி உண்ணாட்டு மொழியாகவே வழங்கி வருகின்றது. ஆனால், தென்னிந்தியப் பகுதியிலோ, முகம்மதியர் களுள் உயர்தர வாழ்க்கையுள்ளவர்கள் தவிர்ந்த நடுத்தர வாழ்க்கையினரும், ஏழை எளியவர்களும் எவ்வளவுக்குத் தம் இனமொழியாகிய இந்துஸ்தானியை வழங்கிவருகிறார்களோ அவ்வளவுக்கு உண்ணாட்டு மொழிகளையும் பேசிவரு கிறார்கள். அதிலும், லப்பைகள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் தென்னிந்திய முகம்மதியர்களுக்கு “இந்துஸ்தானி” எப்பொழுதுந் தாய்மொழியாக இருந்ததில்லை. இந்த “லப்பைகள்” கிழக்கிந்தியக் கரையோரங்களிலுள்ள இந்திய மக்களால் சோனகர்கள் (யவனர்கள்) என்றும் மேற்கிந்தியக் கரையோரங் களிலுள்ள மக்களால் மாப்பிள்ளைகள் என்றும் அழைக்கப்படு கிறார்கள். இவர்களெல்லோரும் அராபிய வணிகர்களையும் அவர்களால் மதமாற்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களையுஞ் சேர்ந்தவர்கள்; தமிழோ மலையாளமோ பேசுபவர்கள். கொச்சியிலும் அதன் சுற்றுவட்டங்களிலுமுள்ள யூதர்களால்2 எபிரேயம் (ழநசெநற) என்ற மொழி பேசப்பட்டு வருகிறது; பார்ப்பனர்களால் எந்த அளவுக்கு, எவ்வெக்காரியங் கட்கு வடமொழி கையாளப்பட்டு வருகிறதோ, அந்த அளவுக்கு அவ்வக்காரியங்கட்கு யூதர்களால் எபிரேயம் கையாளப்பட்டு வருகிறது. தென்னிந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் குஜராத்தி வட்டிக்கடைக்காரர்களாலும், பார்ஸி வணிகர்களாலும் குஜராத்தியும் மராத்தியும் பேசப்பட்டு வருகின்றன. கோவாவிலுள்ள போர்த்துகேசியர்கள் மட்டும் போர்த்துக் கேசிய மொழியைப் பேசிவருகிறார்கள்; ஏனைய இடங்களிலுள்ள போர்த்துகேசியர்கள் விரைவில் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தைப் பயின்றுவருகிறார்கள். புதுச்சேரி, காரைக்கால், மாஹி என்ற பிரெஞ்சுநகரங்களிலுள்ள பிரெஞ்சு அரசியற் சிப்பந்திகளாலும், அவர்கள் வழிவந்தவர்களாலும் பிரெஞ்சு மொழியே பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இந்தியப் பகுதி களெங்கணுமுள்ள ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலோ இந்தியர்களாலும், யூரேஷியர்களாலும் பேசப்பட்டுவருவது ஆங்கிலமே. வாணிகத் துறையிலும் நீதிமன்றங்களிலும், அரசியற் பணித்துறைகளிலும் ஆங்கிலம் வரவர இந்தியர்களாலும் மிகுதியாகக் கையாளப்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்தைப் பொhறுத்தமட்டில், பண்டு வடமொழி எந்த உச்ச நிலையை எய்தியிருந்ததோ அந்த அளவிற்கு இப்பொழுது ஆங்கிலம் உயர்தரக் கல்வி பெறும் மொழிக் கருவியாக இருந்து வருகிறது. எனினும், இவ்வாங்கிலமோ, வேறெந்தப் புற மொழியோ எக்காலத்திலேனும் தென்னிந்திய உண்ணாட்டு மொழியாக மாறிவிடக்கூடும் என்று நம்புவதற்கு எட்டுணையும் வழியில்லை. ஆற்றலிலும் எண்ணிக்கையிலும் மிக்கவர்களாகக் கருதப்படும் ஓரினத்தாரின் மொழியாகிய வடமொழியைச் சென்ற 2000 ஆண்டுகளாக எதிர்த்துநின்று போராடி வருவனவாய திராவிடமொழிகள், மற்றெந்த அயல் மொழியும் தம்மிடைத் தலைசிறவாதபடி எதிர்த்து நின்று தடுத்துக்கொள்ளும் என்று எளிதில் நம்பலாம். அடிக்குறிப்புகள் 1. னுளைவசiஉவ. 2. ழநசெநற 2. “திராவிட மொழிகள்” என்று வகுத்துக்கொண்டதேன்? தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் பலவுந் தமக்கெனத் தனித்தனி ஒரு பெயருடையனவேனும் அவையனைத்தையும் ஓரினப்படுத்தி, அவ்வினத்திற்குக் குறியீடொன்று கொடுத்து, அக்குறியீட்டை யெடுத்தாளுதல் ஒப்பிலக்கண முறைக்கு இன்றியமையா தொன்றாகும். தென்னிந்திய மொழிகளை இலக்கண வகையால் நோக்குமிடத்து அவையனைத்திற்கும் தனிப்பட்ட பொது அமைப்பொன்று அடிப்படையாக இருப்பது காணப்படும். இப்பொதுச் சிறப்பினாலும், மொழிக்கு இன்றியமையாத வேர்ச்சொற்கள் பலவற்றைப் பொதுப்படை யாகவும் பெருவாரியாகவும் தம்முள்ளே இம்மொழிகள் கொண்டுள்ளமையாலும் இம் மொழிகளெல்லாம் ஓரின மொழிகளே யென்பது எளிதிற் பெறப்படும். மேனாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் தொடக்கத்தில் இத்தென்னிந்திய மொழிகளைத் “தமிழ்” என்றே இன மொழிக் குறியீடுகொடுத்து வழங்கிவந்தார்கள். ஒரு வகையில் இதுசரியே. தென்னிந்திய மொழிகளும் தொன்மை மிகுந்ததும், திருத்தம் பெற்றதுமாகிய மொழி தமிழ்மொழியே; தென்னிந்திய மொழி யினத்திற்குரிய தனிச்சிறப்புக்களையும் அடிப்படை யமைப்பையும் உரிமையோடு கொண்டிலங்குவது தமிழ்மொழியே. ஆகவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மொழியை அதன் இனத்தைச் சுட்டும் வகைக் குறிமொழியாகக் கொள்வதில் தவறேது மில்லையாயினும், தெளிவு கருதித், தமிழ் மொழியையும், அம்மொழி பேசும் தமிழ்மக்களையுங் குறிப்பதற்குமட்டும் “தமிழ்” என்னும் குறியீட்டை வழங்குவதே சால்புடைத்தாம். அற்றாயின், இத்தமிழ்மொழியை யுள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையுங் குறிப்பதற்குக் குறியீடொன்று இன்றியமையாது வேண்டப்படுமாதலின் “திராவிடம்” என்று அதனை வகுத்துக்கோடல் எடுத்துக் கொண்ட ஒப்பிலக்கண முறைக்குப் பெருத்தமாம். “திராவிடம்” என்று கொண்டதேன் என்பது பின் வருமவற்றால் இனிது விளங்கும். வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப் பட்டதாகத் தெரியக்கிடப்பது “ஆந்திர - திராவிட பாஷா” என்ற சொற்றொடரேயாம். “தெலுங்கு - தமிழ் மொழி” என்பது அச்சொற்றொடராற் போந்த பொருள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சிறந்த வடமொழி வணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் இரண்டிற்கு மேற்பட்டிருக்க, தெலுங்கு தமிழ் என்ற இரண்டைமட்டுங் குறித்தெடுத்துக்கொண்டது. “மேம்போக்கான” தொன்றாகத் தோற்றலாம். ஆனால், தென்னிந்திய மக்கட் டொகுதியினரிற் பெரும்பாலோராற் பேசப்படுவது தமிழுந் தெலுங்குமே யாதலின், பெருவழக்கு நோக்கி அவ்விரண்டை மட்டுமே தேர்ந்துகொண்டது ஒருவகையில் ஏற்புடைத்தேயாகும். மலையாள மொழியைத் தமிழிலும், கன்னடத்தைத் தெலுங்கிலும் அக்காலத்தினர் அடக்கிக் கொண்டனர்போலும்! இனி, மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில், “கீழ்வரும் க்ஷத்திரியக் குடிகள் படிப்படியாக (ஆரிய) சமஸ்காரங்களிலிருந்து வழுவி, பார்ப்பனர்களுடன் சகவாசமிழந்து விருஷலர்கள் (ஜாதிப் பிரஷ்டர்கள்) ஆனார்கள்: பௌண்ட்ரகர், ஒட்ரர், திராவிடர், `காம்போஜர், யவனர், சாகர், பாரதர், பஹ்லவர், சீனர், கிராதர், தரதர், கசர்” என்று கூறப்பட்டுள்ளது. மேற்குறித்த குடிகளில் தென்னிந்தியாவிற்குரிய ராவார் திராவிடர் என்று குறிக்கப் பட்டவர்களே. இதனால் தென்னிந்தியப் பகுதியிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் பொதுப்படையாகக் குறிப்பதற்கு “திராவிடம்” என்ற குறியீடு எடுத்தாளப்பட்டுள்ளமை தெளியலாகும். ஒருகால் திராவிடப் பெருங்குழுவைச் சேர்ந்த பெருங் குடிகளில் யாதாமொரு பெருங்குடி மேற்குறித்த பட்டியில் சேர்க்கப்படாமல் விலக்கப்பட்டிருத்தல் வேண்டு மானால் அ/து “ஆந்திரர்” என்ற பெருங்குடியே யாதல் வேண்டும். ஏனெனிற் கூறுதும். ஐத்ரேய பிராமணத்தில் விசுவாமித்திரரின் வழித்தோன்றல்களாய் வந்து விருஷலர் களானவர்களைக் குறிக்குமிடத்து, புண்டரர், சபரர், புளிந்தர் என்பவரோடு “ஆந்திரர்” என்றும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்களை ஒருவாறு விலக்கியதாகக் கொண்டாலும், மனுஸ்மிருதியில் “திராவிடம்” என்ற சொல் ஏனைய தென்னிந்திய மக்களனைவரையுங் குறித்து நிற்பது பெறப்படும். இனி, இந்தியப் பெரு மூதாதைகளில் ஒருவரான சத்திய விரதர் என்பவரைக் குறிக்குமிடத்து, பாகவத புராணம் “திராவிட மன்னர்” என்றே குறிக்கின்றது. இனி, ஸ்மிருதிகாலத்திற்குப் பின்னர் வந்த மொழி யாராய்ச்சியாளர்களும் “திராவிடம்” என்ற சொல்லைத் தென்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண் டுள்ளனர். இந்தியப் பாகதமொழிகளைத் தொகைப்படுத்தி இனம் பிரித்த பண்டையாராய்ச்சியாளர் மூலபாகதங்கள் மூன்றென்றும், அவை, மகாராஷ்ட்ரி, சௌரசேனி, மாகதி என்றும் பிரித்தனர். இம் மூலபாகதங்களுக்கு அடுத்தபடியாக வைத்துக் கருதப்பட பாகதமொழித் தொகுதியில் “திராவிடி” என்னும் பெயரால் திராவிட மொழியினஞ் சேர்க்கப்பட்டுள்ளது. வடமொழி மூலநூல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட ஜே. மூர் என்னும் பேராசிரியர், “1சமஸ்கிருத மூலங்கள்” என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோளொன்றில், “திராவிடம்” என்பது “விபாஷை” (சிறுபாகதம்) என்று வடமொழி வாண ரொருவராற் குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வடமொழிவாணர் திராவிடர்களுடைய மொழி திராவிடி என்று கூறியுள்ளார். எனவே, பண்டை நாட்களில் வடநாட்டாரால் `திராவிட மொழிகள்’ என்று குறிக்கப்பட்டது தமிழையோ, தெலுங்கையோ, அன்றி அவைபோன்ற தனி மொழியையோ அன்று என்பதும், தமிழையுந் தெலுங்கையும் மற்றுந் தென்னிந்திய மொழி களனைத்தையும் உட்கொண்ட ஒரு மொழியினத்தையே என்பதும், அவை யாவற்றையும் ஓரின மொழியாகவே வடவர் கருதியிருந்தார்கள் என்பதும் எளிதில் விளங்கும். திராவிடர்களுடைய மொழியை வடநாட்டார் “பைசாச பாகதம்” என்ற வகுப்பினுள் அடக்கிவிட்டமை ஈண்டுக் குறிக்கப்பாற்று. இந்தியாவில் அக்காலை வழங்கின பல உண்ணாட்டு மொழிகளையும் பைசாச பாகதத்தொகுதியிலேயே சேர்த்து விடுவது வடவர் வழக்கம்போலும்! இன்றேல், பாண்டியன் மடியிற் றவழ்ந்த பண்பார் செந்தமிழும், 2போத்தர்கள் என்ற திபேத்தியர் மொழியும் பைசாச பாகதத்துள் சேர்க்கப்பட்டிருப்பானேன்? பல்லாற்றாலும் வேறுபட்ட பல பண்டைப் பாகத மொழிகளையும் “பைசாச பாகதம்” என்ற ஒரு தொகுப்பிற் சேர்த்ததற்குப் பொதுப் படையான காரணம் ஏதேனும் இருந்திருக்கக் கூடுமென்றால், அது பார்ப்பன மொழிநூலறிஞர் அம்மொழிகளின்பாற் காட்டிய ஒருபடித்தான வெறுப்பேயாகும். ஆதலினாலே யன்றோ அப்பண்டை மொழிகள் பைசாசம் அல்லது பேய்கள் என்பவராற் பேசப்படும் மொழியாகிய “பைசாச்சி” என்றே அழைக்கப்படுவ வாயின. இது கிடக்க. இனி, அண்மையிலிருந்த வடநாட்டு அறிஞர் பலரும் தென்னிந்திய மொழிகளைத் திராவிடமொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்திமொழி நூலறிஞரான பாபு இராஜேந்திரலால் மித்ரா என்பார், 1854 ஆம் ஆண்டில், “திராவிடி” என்பது மூலபாகதங்களில் ஒன்றே யென்றும், சௌரசேனியுடன் அ/து ஒருங்கு சேர்த்தெண்ணற் குரிய தென்றும், அது சௌரசேனியைப்போன்றே பிற பல உண்ணாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியென்றும், நன்கெடுத்து நவின்றுள்ளார். இதுகாறுங் கூறியவாற்றால், “தமிழ்” என்பதைத் தமிழ்மொழி யொன்றிற்கே சிறப்பாக அமைந்த பெயராகக் கொண்டு, தென்னாட்டில் வழங்கும் தமிழுந் தெலுங்கும் உள்ளிட்ட பல மொழிகளையுங் குறிக்கும் ஓர் இனமொழியாக “திராவிடம்” என்பது பரந்துபட்டபொருளில் கொள்ளக் கிடப்பது காலங்கண்ட தொன்றாகும் என்பது ஒருவாறு விளக்கப்பட்டது. அடிக்குறிப்புகள் 1. ஆரசை’ள ளுயளேமசவை கூநஒவள. 2. க்ஷhடிவயள 3. திராவிட மொழிகள் - தமிழ் “திராவிடம்” என்ற சொல் பிராகுவி1 என்ற மொழி நீங்கலாக, கீழ்வரும் பன்னிரண்டு மொழிகளை உட்கொண்ட தாகும். திருந்திய மொழிகள் 1. தமிழ் 4. கன்னடம் 2. மலையாளம் 5.துளு 3. தெலுங்கு 6. குடகு அல்லது கூர்க்கு திருந்தா மொழிகள் 1. துதம்2 4. 5கந்தம் அல்லது கு 2. கோதம்3 5. ஒராவோன் 3. கோண்டு4 6. இராஜ்மகால் தமிழ் பேசப்படுமிடம் திராவிட மொழியினங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த திருந்திய மொழி தமிழேயாம். அது சொல்வள மிகுந்தது; பண்டைச் சொல்லிலக்கணத் தொல்வடிவங்களிற் பெரும்பாலன வற்றை இகவாதுகொண்டு மிளிர்வது. இதனாலேயே மேற்கண்ட பட்டியல் தமிழுக்குத் தலைமையிடம் அளிக்கப்பட்டது. தமிழ்மொழி செந்தமிழ், கொடுந்தமிழ் என இருவகைத்து. செந்தமிழ் என்பதைப் பண்டைத் தமிழ் என்றும், இலக்கிய வழக்குத் தமிழ் என்றும் கூறலாம்; கொடுந்தமிழ் என்பதை இன்றைத் தமிழ் என்றும், பேச்சு வழக்குத் தமிழ் என்றுங் கூறலாம். இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் மிகப் பல. அவ் வேறுபாடுகளை நோக்க இவ்விரண்டும் இருவேறு தனி மொழிகள் என்று கூடக் கூறிவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டதாய், பழவேற்காடு முதல் குமரிமுனை வரையிற் பரந்து கிடக்கும். பெருநிலப் பகுதியாகிய கருநாடகத்திற் பேசப்படுவது தமிழ். தென்திருவாங்கூர்ப் பகுதியிற் குமரிமுனை தொடங்கித் திருவனந்தபுரம் வரையிலும் தமிழ் பேசப்பட்டு வருகிறது. ஈழத்தின் வடமேற்குப் பகுதியிலும் அது வழங்குகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் ஈழஞ் சென்று குடியேறினர் என்பதற்குச் சான்றுகள் உள. ஈழத்திலுள்ள காப்பித்தோட்டக் கூலிகளிற் பெரும்பாலோர் தமிழர்களே. கொழும்பு நகரிற் பொருள் திரட்டும் வணிகர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சென்னை மண்டிலத்தின் பற்பல பகுதிகளிலுறையும் ஐரோப்பியப் பெருமக்களின் வீட்டு வேலைக்காரர்களும், பணியாளர்களும் தமிழர்களே. இதனாலேயே தென்னிந்தியக் கோட்டங்கள்6 பலவற்றிலும் வழங்கும் மொழி எதுவாயிருந்தாலும் ஆங்காங்குப் படை மக்கள் உறையும் பகுதிகளிலெல்லாம் தமிழே வழங்கி வருகிறது. மலையாள நாட்டுக் கண்ணனூரிலாதல், கன்னட நாட்டுப் பெங்களூரிலாதல், தெலுங்கு நாட்டுப் பல்லாரியிலாதல், இந்துஸ்தானி நாட்டுச் சிக்கந்தராபாத்திலாதல் ஆங்காங்குத் தமிழ்மொழி பயிலக் காண்பதும் இதனாலேயாம். பெகு, பினாங்கு, சிங்கப்பூர் முதலிய கீழைநாடுகளிற் காணப்படும் கலிங்கர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. மோரீசுக்கும் மேலை யிந்தியக் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றுள்ள கூலிமக்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சுருங்கக்கூறின், பொருள் திரட்டும் வழியமைந்துள்ள இடங்களி லெல்லாம் தமிழர்களைக் காணலாம்; சோம்பேறிகளாய், நகத்தில் அழுக்குப்படாமல் வாழவிரும்புஞ் செல்வர்கள் இருக்கு மிடங்களிலெல்லாம் தமிழர்கள் அணியணியாய்க் காணலாம். இ/தொன்றைக் கருதின் தமிழர்களைக் கீழைத்தேய கிரேக்கர்கள் அல்லது ஸ்காட்ச்கள் என்று கூறலாம் போலும்! இந்துக்கள் என்று அழைக்கப்படும் பெருந்திரளான மக்களிடையே குருட்டுநம்பிக்கைகள் மலிந்து காணப்படும் என்று கூறுவதுண்டு. ஆயினும் அக்குருட்டு நம்பிக்கைகள் மிகவும் குறைந்த அளவிற் காணப்படும் ஒருபகுதியினர் அவர்களுள்ளும் இருக்கின்றனர் என்றால் அவர்கள் தமிழர்களேயாம். பொருளீட்டும் பெரு முயற்சியும் பேருழைப்பும் வாய்ந்தவர்கள் தமிழர்களே. தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டிற் பத்தில் ஒரு பங்கு காணப்படலாம். அவர்களையும் முகம்மதியர்களையும் நீக்கிக் கணக்கிடின் தமிழ் மொழி பேசுந் தமிழ்மக்களின் தொகை ஏறக்குறைய 220 இலட்சங்களாகும். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையே; அதுவே தென்னிந்திய மண்டிலத்திற்கும் தலைநகரமாகும். தமிழ்மக்கள் அந்நகரைச் சென்னபட்டினம் என்றே வழங்குவர். சந்திரகிரித் தெலுங்கரசர்க்குக் கப்பங்கட்டி வந்தவரும், செங்கற்பட்டு நாயக்கரின் மாமனாருமான சென்னப்ப நாயக்கர் என்பவரிட மிருந்து ஆங்கிலேய வணிகக்குழாத்தினர் ஒரு சிறு கோட்டையைப் பெற்று, அதனை அவர்கள் அரண் அமைந்த தொழிற்சாலையாக மாற்றி யமைத்துக்கொண்டனர். மதராஸ் (மதராஸ்பட்டினம்) என்று ஆங்கிலேயர்களால் அ/து அழைக்கப்பட்டு வந்தமைக்குச் சரியான காரணந் தெரியவில்லை. ஒருகால், தமிழ்ச் சொல்லான “மதில்” என்பதற்கு நேரான தெலுங்கு மதுரு (கோட்டையின் மதிற்சுவர்) என்ற சொல்லின் அடியாக அப்பெயர் பிறந்தது போலும்! மராஸ் நகருக்கு அண்மையில் சதராஸ் என்று ஓர் ஊரும் உள்ளது. இவ்விரு ஊர்களின் பெயரொலிகளில் ஒற்றுமை யிருப்பது காணப்படும். “சதுரங்கம்” என்ற சொல் சதுரையாகக் குறுகி ஆங்கிலேயரால் சத்ராஸ் என்று திரித்து வழங்கப்பட்டது போலும்!. இனி மந்தராஜ்பட்டினம் என்பதன் திரிபே மதராஸ் என்று கூறுவோரின் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. தமிழ் தமிழ் என்பதிலுள்ள ழகர வொற்றை ளகர வொற்றாகத் திரித்துத் “தமிள்” என்று ஒரு சிலர் வழங்குவர். ஐரோப்பியர் முதலில் அதைத் “தமுல்” என்றே புகன்று வந்தனர். பிரெஞ்சுக்காரர் இவ்வாறாகவே எழுதிவைத்தனர். ஆனால் அவர்களுக்குமுன் போந்த போர்த்துகேசியர்கள் தமுல் என்றோ தமிள் என்றோ கூறாமல் “மலபார்” என்றே தமிழ்மொழியைக் குறித்துவந்தனர். புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு அரசாங்க ஆட்சியாளரான டியூப்ளேயின் திவானாக விருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை என்பார்; அவருக்குப்பின் திவானாகவந்த அவ் ஆனந்தரங்கப் பிள்ளையின் மருகருக்கு, கி.பி. 1766ஆம் ஆண்டில் பிரான்சு மன்னர் பதினான்காம் லூயி என்பார் “மலபார் (தமிழ்த்) தலைவர்” என்ற பட்டத்தை வழங்கியது போர்த்துகேசியர் வழக்கை யொட்டியே போலும். இதனையே “சமஸ்கிருத பிராகிருதமொழி ஆராய்ச்சி” எழுதிய கோல்புரூக் என்பவர், “சென்னை மண்டிலத்தின் மொழி தமிழ்மொழியே; ஆனால், அதனை ஐரோப்பியர் `மலபார்’ என்று கூறுகின்றனர்” எனக் குறித்துள்ளார். கி.பி. 1577 அல்லது 1579இல் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காடு என்ற ஊரில் முதன்முதலாக அச்சிடப்பட்ட தமிழ்நூலின் மொழியை அந்நூலுக்குடையார் “மலவார் அல்லது தமிழ்” என்றே குறித்துள்ளனர். இதனாலும் தமிழ் என்பதே சரியான மொழிப்பெயர் என்று எளிதில் ஊகிக்கப்பெறும். தமிழ் என்னுஞ் சொல்லுக்கு நேர்வடமொழிச் சொல் திராவிடம் என்பதாம். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒருங்கே குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலிவடிவிற்கும் திராவிடம் என்ற சொல்லின் ஒலிவடிவிற்குமிடையே எத்துணையோ வேறுபாடு காணப்படினும், இரண்டும் ஒரே வேரிலிருந்தே பிறந்ததாகக் கருதுவதற் கிடமுள்ளது. இக் கருத்து ஒப்புக் கொள்ளப்படின், தமிழ் என்ற சொல்லே பின்னர் திராவிடம் எனத் திரிபுற்றது என்று கூறுவதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல் தான் தமிழ் என்று பின்னர்த் திரிபுற்றது என்று €கூறுதல் எளிதும் நேரிதுமாம்7. இந்திய நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் ஒரு மக்கட் பகுதியினர் தங்களையே €குறிப்பதற்குக்கூடத் தமிழ் மொழியை யொழித்து வடமொழியாகிய திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டிருப்பர் என்றே, அன்றி அவர்தம் நண்பர்களான அயல்நாட்டினரும் அவர்களை அப்பெயராலேயே குறித்திருப்பர் என்றோ கொள்ளுதல் பிழைபாடுடையதாகத் தோற்றக்கூடும். தமக்கெனத் தம் மொழியிற் பெயரொன் றில்லாது பிறமொழிப் பெயரொன்றைத் தேடி அமைத்துக் கொண்டார் ஒரு மக்கட் பகுதியினர் எனின் யார்தான் முதலில் எளிதில் நம்ப ஒருப்படுவர்! ஆனால் இதுவே உண்மையென்று கருதவேண்டிய தாகவுள்ளது .திராவிட நாட்டின் தென்பகுதிக்குப் பாண்டியநாடு என்ற பெயருள்ளது. அப்பெயர் வடமொழிப் பெயரே. இன்னும், சோழம், கேரளம், ஆந்திரம், கலிங்கம் என்ற எல்லாம் வடமொழிச் சொற்களாகவே தோற்றுகின்றன. கருநாடகம் என்ற ஒரு சொல் மட்டும் தனித்தமிழ்ச் சொல்லாகக் கொள்ளப்படும். மேற்குறித்த பெயர்களெல்லாம் வடமொழி அகராதிகளிற் காணப்படினும் அவற்றின் வேர்ப் பொருள் என்ன என்பது அவ்வகராதிகளிற் குறிக்கப்படவில்லை. இதனால் அப்பெயர்க ளெல்லாம் வடமொழிப் பெயர்கள்தான் என்று துணிந்து கூறுவதற்கு மியலாதிருக்கின்றது. எனவே, இவை வடமொழிப் பெயர்களாகவே தோற்றுகின்றன என்ற அளவில் இவ்வாராய்ச்சி நின்றுவிடுகிறது. இனி, ஆந்திரம் என்ற சொல் பிராமணங்கள் ஒன்றனுள்எடுத்தாளப்பட் டிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. ஆயினும், அந்தச் சொல்லின் உண்மைப் பொருள் என்ன என்பது யாண்டும் விளக்கப்பட வில்லை. வேதங்களுட் காணப்படும் பல பெயர்களுக்குப் பொதுவாகவே பொருள் விளங்குவதில்லை. ஆதலால் இப்பெயர்களெல்லாம் வடமொழிக்கு முற்பட்ட ஒரு வட இந்திய மொழியினின்று பெறப்பட்டனவோ என்று ஐயுறவேண்டியதாகவு மிருக்கின்றது. திராவிட மொழி யியல்புக்கே அப்பாற்பட்ட ஒரு கூட்டொலியாம். திராவிடம் என்ற சொல் திராவிடம் என்று பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. திராவிடம் என்பது திராவிடர் எனக் குறுகி, திரவிடம் திரமிடம் என்றாயிற்று என முடிவு செய்தல் ஒருவாறு பொருந்தும். இந்த இரு சொற்களும் தமிழில் வழங்குகின்றன; எனினும் திரமிடம் என்ற சொல்லே தமிழ் நிகண்டுகளில் முதலிடம் பெறுகின்றது. இனி, வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் திராவிடம் என்ற சொல் திரவிடம் என்பதற்கு மாறாகப் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது என 8டாக்டர் கெர்ன் என்ற அறிஞர் கூறுகிறார். இந்தத் திரமிடம் என்பதே திரமிளம் என்பதாக, “9இந்தியாவில் புத்தமத வளர்ச்சி” என்று கி.பி. 1573இல் தாரநாதர் என்பவரால் திபேத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிற் காணப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள புராணங்களில் இவ்வுருவமே காணப்படுகின்றதென 10டாக்டர் குண்டெர்ட் என்பவர் குறித்துள்ளார். 11மகாவமிசத்திலுள்ள “பாலி”யில் திரமிளம் என்பது தமிளோ என்பதே தமிழ் என்றாயிற்று என்று எளிதில் ஊகிக்கலாம். இனி, 12பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற பெயரால் உரோம நிலப்படங்கள் சில வழங்குகின்றன. அவற்றுள் காணப்படும் இந்தியப் பகுதி, 13ஆந்திர இந்தி என்றும் தமிரிசி என்றும் இரண்டு பெயர்களாற் குறிக்கப்பட்டுள்ளது. இவை தெலுங்கு நாட்டையும் தமிழ் நாட்டையுமே குறித்தனவாம். சில நூற்றாண்டுகட்குப் பின் வந்த குமாரிலபட்டர் என்பவரால் ஆந்திரர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தெளிவாகக் குறிக்கப்படுவது கொண்டு இது விளங்கும். தமிரிசி என்ற பகுதியில்14 மொதுரா என்ற நகரம் ஒன்று இருந்ததாக 15இராவென்னா என்ற நிலநூலாசிரிய ரொருவர் குறித்துள்ளமை யால் தமிரிசி என்பது தமிழையே குறிப்பதாகும் என்பது வலியுறுத்தப்படும். இன்னும் 16ஹியூன்சியாங் என்னும் சீன யாத்திரிகர், ட்சி-மோ-லோ என்று குறித்துள்ளதும் தமிழ் என்ற சொல்லையேதான். இதுகாறுங் கூறியவாற்றால் திராவிடம் என்பதுதான் தமிழ் எனத் திரிந்தது என்பது ஒருவாறு விளங்கும். எனினும், இதில் ஒரு வியப்பென்னவென்றால், எடுத்ததெல்லாம் வட மொழியி லிருந்துதான் பிறந்தது என்று சாதிக்க முயலும் தமிழ்ப் புலவர்கள் இந்தத் “தமிழ்” என்ற சொல்மட்டும் வடமொழியிலிருந்து பிறந்ததாகவோ, வடமொழிச் சொல்லே திரிந்ததாகவோ கொள்ள முன்வருகின்றார்களில்லை என்பதே. “இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று தனிப்பட்ட ஒரு விளக்கத்தை அவர்கள் தமிழ் என்ற சொற்குக் கொடுத்து வலியுறுத்துகின்றனர். செம்மைசான்ற உயர்மொழியாகிய தமிழ்மொழியின் ஒலிச் சிறப்புநோக்கி இந்த வரையறையை ஒப்புக்கொள்ள எவரும் மறுக்கமாட்டார். ஆயினும் இதன்கண் அதன் பிறப்புண்மையும் பொதிந்து கிடக்கின்றது என்பதை மட்டும் எளிதில் ஒப்புக் கொள்வதற்கில்லை. பாண்டியர்: “மகா வமிச”த்திற் றொகுத்து வைக்கப் பட்டுள்ள சிங்கள வரலாற்றுக் குறிப்புக்களில், ஈழ நாட்டின் முதன் மன்னன் விஜயன் என்பவனே என்றும், அவன் பாண்டிய நாட்டு மன்னன் ஒருவன்றன் மகளை மணம் புரிந்தானென்றும், அவன் மகனுக்கு அதனாலேயே பாண்டு வமிசதேவன் என்று பெயரிடப்பட்டதென்றுங் காணப்படுகின்றன. மகாபாரதத்திற் பாண்டவர்கள் ஐவருள் ஒருவனாகிய அருச்சுனன் பாண்டிய மன்னனொருவன் மகளை மணந்தானென்றுங் காணப்படுகிறது. பிளைனி17 என்னும் உரோம வரலாற்றாசிரியர் காலத்தில் மலையாள நாட்டில் ஒரு பகுதி பாண்டியர்களின் ஆட்சிக்குள் இருந்ததாக உறுதியாகத் தெரிகிறது. ஆகவே, இவற்றாற் பாண்டியை நாட்டின் ஆதிக்கம் நெடுந்தொலை பரவியிருந்ததென்பது எளிதில் ஊகிக்கப்படும். இனி, அகஸ்டஸ் என்ற உரோம் நாட்டு மன்னனுக்கு இந்தியாவிலிருந்து தூதனுப்பியவன் வடநாட்டுப் போரஸ் அல்லனென்பதும், அவன் தென்னாட்டுப் பாண்டியனே என்பதும் உறுதியே. சென்னைப் பொருட்காட்சிச் சாலையில், கிளாடியஸ் என்னும் உரோம் நாட்டு மன்னன் பிரிட்டன் நாட்டை வென்றதற்கு அறிகுறியாக வெளியிட்ட காசு ஒன்று மதுரைக் கோட்டத்திற் கிடைத்ததாக வெளியிட்ட காசு ஒன்று மதுரைக் கோட்டத்திற் கிடைத்ததாக எடுத்துச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஏரியன் முடி மன்னர்களில் ஒருவரான 18வேலன்ஸ்என்பானின் காசு ஒன்று வைகையாற்றிற் கிடைத்ததாக 19சர். எம். இ. கிராண்ட் ட/ப் என்பார் எழுதியுள்ளார். இவற்றால் பாண்டிய நாட்டிற்கும் ஐரோப்பாவிற்கும் பண்டைக் காலத்திற் றொடர்பு இருந்துவந்ததென எளிதிற் புலப்படும். வடமொழிப் பாண்ட்ய என்ற சொல் தமிழிற் பாண்டியன் என்று எழுதப்படுகின்றது. இதுவே குறுகிப் பாண்டி என்றும் எழுதப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கும் பண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டியம் என்ற சொற் பிறந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கில்லை. பாண்டவர் தந்தையின் பெயரான பாண்டு என்னும் வடமொழிச் சொல்லடியாகவே இது பெறப்பட்டிருத்தல்வேண்டும். ஆனால் தமிழாராய்ச்சி யறிஞர்களெல்லாம் இது பண்டு என்னும் தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தொன்றாகவே வற்புறுத்திக் கூறுகின்றனர். பாணினிக்குப் பின்வந்த 20காத்தியாயனர் என்பார் பாண்டுவின் வழியினரே பாண்டியர் என்று கொண்டிருப்பதாகப் 21பேராசிரியர் மாக்ஸ்முல்லர் குறிப்பிடுகிறார். பாண்டியர்களின் முதல் தலைநகரம் பொருநைக் கரையிலிருந்த கொற்கை என்பதாகும்; இரண்டாந் தலைநகரம் மதுரை, பண்டைய தேசப் படங்களில், 22மட்ரா என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் 23மதுரா என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் 24மெதொரா என்று குறிக்கப்படுவதும் இத் தமிழ் மதுரையேயாம். பாரதப் பெரும்போhர் முடிந்த பின்னர்ப் பாண்டியர்களின் ஆட்சியி லிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இம் மதுரையேயாம். ஆனால், வடமொழி நூலாகிய 25ஹரி வமிசத்தில் இது தென் மதுரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழ நாட்டில் ஒரு 26மதுராவும், கீழை இந்தியத் திட்டுகளில் ஒரு மதுராவும் இருக்கின்றன. இம் மதுரை மன்னர்களைப் பாண்டியர்கள் என்றும், சிற்சில இடங்களிற் பாண்டு என்றும் சிங்கள மகாவமிச நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதனாலும், இப் பெயருக்கும் வடமொழிப் பாண்டு என்ற சொல்லுக்கும் தொடர்பிருந்ததாகக் கருதிக் கோடல் பிழையாகாது. பாண்டியர் என்பது அரசுரிமை பூண்ட ஒரு முதுகுடியின் பெயராகவே முதற்கண் இருந்திருத்தல் வேண்டும். இனி, 27மெகாஸ்தெனீஸ் என்பவர் தம்முடைய வரலாற்று நூலிற் 28பண்டையீ என்ற இந்திய நாடொன்றைக் குறித்து எழுதியுள்ளார். அந்நாட்டிற்கு அப் பெயர் இந்திய வீமனாகிய கிருஷ்ணன் என்பவனுடைய ஒரே மகளின் பெயரைப்பற்றி இடப்பட்டதாகும் என்று அவர் குறித்துள்ளார். அவர் குறித்துள்ளது பாண்டிநாட்டையே என்பது பற்றி எட்டுணையும் ஐயமின்று. 29“அந்தாரீ” “கலிங்கீ” என்ற பெயர்களைக் கேட்டறிந் துள்ள கேட்டறிந்துள்ள அவர் பாண்டியர்களைப்பற்றிக் கேட்டிராதிருந்திருக்க முடியாது; ஆனால், கேட்டவற்றைப் பிறழ உணர்ந்து ஒன்றைவிட் டொன்றாக மாற்றிக் கூறியிருத்தல் கூடும். எனினும், அவர் பாண்டிய நாட்டைப் பாண்டுவோடு பொருத்திக் கூறியிருத்தல் ஒப்பத் தகுந்ததேயாம். மகாபாரதக் கதை இக்காலை யுள்ள விரிவான நிலையில் அக்காலை இருந்திருக்கக் கூடும் என்று உறுதி கூறுதற்கில்லை. அவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டால், அதன்கண் காணப்படும் வரலாற்றுக் குறிப்பொன்றையே மெகாஸ்தெனீசும் குறித்துள்ளார் என்று எளிதில் நம்பலாம். ஐம்பெரும் பாண்டவர்களுள் ஒருவன் அருச்சுனன்; அவன் கிருஷ்ணனின் சிறந்த நண்பன். அவன் “தீர்த்த யாத்திரை” செய்து வந்த காலத்துப் பாண்டியன் ஒருவன் மகளை மணந்துகொண்டான். இது மகாபாரதக் கதை. மெகாஸ்தெனீஸ் கூறியுள்ள நாட்டு வளமெல்லாம் இப்பாண்டியன் நாட்டிற்கே முற்றிலும் பொருத்தமாக உள்ளது. அதிலும் முத்துக் கொழிக்கும் நாடு என்று அவர் கூறியிருப்பது கொண்டு பாண்டிய நாடுதான் அ/து என்பது உறுதியாகக் கொள்ளப்படும். இனி மெகாஸ்தெனீசுக்குப் பின் வந்த பிளைனி என்பார் இந்தியாவிலுள்ள பலவகுப்பு மக்களுக்குள் ஒரு வகுப்பினர் 30பாண்டி என்னும் பெயரினர் என்றும், அவ் வகுப்பினர் இராணிகளால் ஆளப்பட்டு வருகின்றனர் என்றும் குறித்துள்ளார். மலையாள நாட்டில் மருமக்கள் தாயம் இன்றுகாறும் வழங்கி வருவது கொண்டு பிளைனி கூறியது மலையாள நாட்டைத்தான் என்று கொள்ளலாகதோ எனின், அம் மலையாள நாட்டிலும் தம் காலத்திற் பாண்டியர் ஆட்சி பல இடங்களிற் பரவியிருந்தது என்று அவரே கூறியுள்ளமையால், அவரும், அவருக்கு முன் வந்த மெகாஸ்தெனீசும் குறிப்பிட்டது 31பாண்டிய நாட்டையே என்பது பொருந்தும். சோழர் சோழர் என்ற பெயர்க் காரணம் நன்கு புலப்படவில்லை. அசோகர் கல்வெட்டொன்றில் அது, 32சோடா என்று காணப்படுகிறது. சாளுக்கிய மரபினரின் தெலுங்குக் கல்வெட்டுகளிலும் அஃது அவ்வாறே காணப்படுகின்றது. தெலுங்கர் அதைச் சோளர் என்று மொழிகின்றனர். இந்நாட்டை ஹியூன் சியாங் என்ற சீன யாத்திரிகர் “சோழிய நாடு” என்று குறிக்கின்றனர். இஃது எவ்வாறு சோழ நாட்டோடு பொருந்தும் என்பது விளங்கவில்லை.33 ஆனால் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வடசர்க்கார்க் கோட்டங்கள் சோழர் அரசாட்சியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடற்பாற்று. சோழர்களின் பழைய நாடு காவிரிக் கரையிலுள்ள செழுமை வளம் நிறைந்த தஞ்சை திருச்சிக் கோட்டப் பகுதிகளாகும். பின்னர் அவர்கள் காவிரிக்கு வடக்கேயுள்ள தமிழ் நாடு முழுதையும் ஒருகாலத்திற் கட்டி ஆண்டுவந்தனர். அவர்களுடைய தலைநகரம் முதலில் உறையூர்ப் பதியாம். உறையூர் உறைவிடம் என்றே பொருள்படுதற் காண்க. இவ்வூருக்குக் கோழி யென்றும் ஒரு பெயருண்டு. கி.பி. பதினோராம் நூற்றாண்டிற் சோழராதிக்கம் உச்ச நிலையிலிருந்தது. அவர்கள் தமிழ்நாடு முழுதிலுமே யன்றிப் பாண்டிய நாடு, சேர நாடு, ஈழ நாட்டின் வட பகுதி, தெலுங்குநாட்டில் ஒரு பகுதி ஆகியவற்றிலும் ஆணை செலுத்திவந்தார்கள். சேரர் சோழர் மொழிக்கும் பாண்டியர் மொழிக்கும் வேறுபாடில்லை. எட்டாம் நூற்றாண்டிற்குரிய சிரிய, யூதிய கல்வெட்டுக்களின் உதவி கொண்டு நோக்குமிடத்துச் சேரர் மொழியிலும் வேறுபாடிருந்ததாகக் காண்பதற்கில்லை. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகிய மூவரும் திராவிடர்களே. அவர்கள் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்ற ஒரே பெயராலேயே வழங்கப்பட்டு வந்துள்ளனர். தமிழ்ப் பண்டைய வரலாற்றின்படி சேர சோழ பாண்டியர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் சிறுகதை யொன்றுண்டு; சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் உடன்பிறந்தோர்கள். அவர்கள் முதலில் கொற்கை என்னுமிடத்தில் அரசுபுரிந்துவந்தனர். இக்கொற்கை தாமிரபர்ணி ஆற்றின் கரையில் உள்ளது. அவ்வாற்றின் கரையிலேயே தென்னிந்திய நாகரிகக் கலை வளர்ந்ததாகக் கூறலாம். உடன்பிறந்தோராகிய அம் மூவர்களும் பிரிய வேண்டிய காலம் வந்தது. பாண்டியன் கொற்கையிலேயே தங்கினான். சேரனும், சோழனும் வெளியிற் புறப்பட்டனர். இருவர்களும் முறையே சேர சோழ அரசுகளை நிலைநிறுத்தினர். இக் கதையினை யொத்த கதைகள் பல வடமொழி நூல்களிலுங் காணப்படுகின்றன. ஹரிவமிசத்தில், பாண்டியன், கேரளன், கோலன், சோழன் என்பவர்கள் ஆக்ரீடன் என்பவனுடைய பிள்ளைகளாவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். துஷ்யந்தனின் பிள்ளைகள் அவர்கள் என்று கூறுவாருமுளர். கோலர் என்ற இப் புதிய குடியினர் யாவர்? கருநாடர்களே அவர்கள் என்று புராணங்கள் சில கூறும்; ஆயினும் அவர்கள் கோலேரிய மரபினரே என்று கொள்ளுதலே சால்புடைத்தாம். தமிழ் தமிழை `அரவ’ மென்பதேன்? தக்காணத்திலுள்ள முகம்மதியர்களும், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழ் மொழியை `அரவம்’ என்றே அழைப்பர். அ/தேன்? `டாக்டர் குண்டெர்ட் என்பவர் அரவம் என்ற சொல்லை அறவம் என்று கொண்டனர்: கொண்டு, தமிழலக்கியமே ஏனைய மொழி இலக்கியங்களைக் காட்டினும் அற நூல்களும் அறத்துறைகளும் நிறைந்ததாகக் காணப்படுகின்றதாதலின், அறம் மலிந்த அம் மொழி அறவம் என்று அழைக்கப்பட்டது போலும் என்று வகுத்துரைத்தார். இதன்படி அறவர் என்ற சொல் அறம் மலிந்த கொள்கையினரையே குறிக்கும். புத்தர் பெருமானுக்கு அறவன் என்ற பெயரொன்றுங் காணப்படுதல் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. அதனால் அரவம் என்பது புத்தர்களையே குறிப்பதாகாதோ என்று ஐயம் நிகழ்தல் கூடும். இடையின ரகரங் கொண்டியலும் அரவம் என்ற சொல்லை வல்லின றகர முடையதாகக் கொண்டு இப்பொருள் கூறுதல் ஆகுமோ என்று கேட்கலாம். தமிழ் வல்லின றகரம் தெலுங்கிலும் கன்னடத்திலும் இடையின ரகரமாகத் திரிதல் இயல்பு. ஆதலின் அக் கேள்விக்கு விடை எளிது. தமிழ் அறம் என்ற சொல் கன்னடத்தில் அரவு என்றாதல் காண்க. இனி, அரவம் என்ற சொல் அறிவு என்ற சொல்லடியாகப் பிறந்த தென்று கொள்வர் ஒருசாரார். தென்னாட்டிலுள்ள மக்களினத்தாருள் தமிழ்மக்களே அறிவிற் சிறந்தவர்களாகப் பண்டுதொட்டு யாவரானுங் கொள்ளப்பட்டு வந்துள்ளமையின் இக் கருத்துத் தோன்றியது போலும்! இனி, செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளுள் அருவா என்பதும் ஒன்று. அருவா என்ற அச்சொல்லின் திரிபே அரவம் என்று கொண்டார் மற்றொரு சாரார். இவையெல்லாம் அரவம் என்ற சொல் ஒரு மொழியையோ, அம் மொழி பேசும் மக்களினத்தாரையோ குறிக்க எழுந்த தமிழ்ச் சொல்லாகக் கொண்டு இடர்ப்பட்டுக் கூறியனவேயாம். அப் பொருளில் அரவம் என்ற சொல் தமிழ் மொழியில் யாண்டும் வழங்கப்பட்டதில்லை. தெலுங்கர்களும், கன்னடர்களும், தக்காணிகளும் அவ்வாறு அழைக்கின்றனர் என்று மேற்கூறினமையால், அச் சொற்பொருள் தமிழொழிந்த ஏனைய மொழிகளிலேயே தேடக் கிடப்பதாம். தெலுங்கு மொழி வல்ல பண்டிதர்கள் பலர் அரவம் என்பது திராவிட மன்று, வடசொல்லே என்று யாப்புறுத்துக் கூறுகின்றனர். அ+ரவ என்பதே அரவம் ஆகி, ஒலியற்றது என்று பொருள் கொடுக்கும் என அவர் கூறுவர். ஹ என்பது போன்ற மூச்சொலிகள் இன்மையால் தமிழ் இப்பெயர் பெற்றது என்பது அவர்கள் கருத்துப் போம். இந்திய மொழிகள் பலவற்றுள்ளும் தமிழ்மொழி யொன்றில் மட்டுமே இவ் வொலிகள் இல்லை. அதனால் அம் மொழி இழுக்குடைய தொன்றாகக் கருதப்பட்டது. ஆனால் இத்தகைய ஒரு காரணத்தைக் கொண்டு பெறப்பட்ட ஒரு பெயரைத் தமிழ் மக்கள் தாமாகவே சூட்டிக்கொண்டிருப்பார்கள் என்று கருதுதல் அறிவுடைத்தாகாது. ஓசையற்ற மொழி என்பதைக் குறிக்க அரவ-மு என்று மொழிக்குப் பெயர் சூட்டிய தெலுங்கர் அம்மொழி பேசுவோரை `அரவா-ளு’ என்று அழைத்ததும் இயல்பே. தெலுங்கில் அரவம் என்ற சொல் ஓசையற்றது என்று பொருள் பட்டது; தமிழிலும் அரவம் என்ற சொல் வழங்குகிறது; ஆனால், அச்சொல், ஒலி என்று பொருள்படுகிறது. இப்பொருள்படும் இச்சொல்லை ரவ என்ற வடசொல் திசைச் சொல்லிலக்கண முறைப்படி அகர வொலியை முதலிலேற்று அரவ என்று தமிழிலும் வந்துள்ளது என்று கூறுதல் கூடாது. ஏன்? வடமொழி ரவ என்ற சொல் பேரொலியைக் குறிப்பது; தமிழிலுள்ள அரவம் என்ற சொல்லோ மெல்லிய ஓசையை குறிக்கு மாகலின். இனி, 34சோழ மண்டலக் கரையிலுள்ள நெல்லூர்ப் பகுதியில் 35அர்வர்ணி என்ற மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்று 36டாலிமி என்ற கிரேக்க நில நூலாசிரியர் வரைந்துள்ளமையும் ஈண்டு குறிக்கற்பாலது. எனவே, தமிழை `அரவம்’ என்றழைப்பதற்கு உண்மைக் காரணம் என்ன என்பது இன்னும் ஆராய்ச்சிக்கே இடனாக உள்ளது. ஐஐ. மலையாளம் திராவிட மொழியினத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக இடம் பெறக்கூடியது மலையாளம் என்னும் மொழியாம். தமிழுக்கு மற்றெல்லா மொழிகளைக் காட்டிலும் நெருங்கிய தொடர்புடையது அம் மொழியே. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பாலுள்ள மலபார் என்னும் மலைவாரக் கடற்கரையை யடுத்துள்ள ஊர்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. மங்களூர் என்ற ஊர் தொடங்கித் தெற்கே திருவனந்தபுரம் வரை இம் மொழி வழங்கி வருகிறது. மங்களூருக்கு வடக்கே கன்னடமுந் துளுவமும் வழங்குகின்றன. திருவனந்தபுரத்திற்குத் தெற்கிலும் தென்கிழக்கிலும் தமிழ் மொழி பெரிதும் கலப்புறுகிறது. திருவாங்கூர், கொச்சி, மலையாளம், கன்னடக் கோட்டங்கள் ஆகிய இடங்கள் மலையாள மொழி வழங்கும் இடங்களாம். இம்மொழி பேசும் மக்கள் ஏறக்குறைய எழுபது நூறாயிரவராவர். மலபார் கடற்கரை வெளிநாட்டு மக்கள் பலர்க்கு இறங்குதுறையா யிருந்துவந்துள்ளது. /பினீஷியர், கிரேக்கர், யூதர், சிரியக் கிறித்தவர், பாரசீகக் கிறித்தவர், அராபியர்கள் ஆகியோர் வழிவழியாகப் பண்டு தொட்டு அந்தக் கரையோரங்களில் வாணிகம் நடாத்தி வந்துள்ளனர். அவர்களுள் யூதரும் சிரியக் கிறித்தவரும் அராபியர்களும் பல இடங்களில் நிலையாகவே வந்து குடியேறி யுள்ளனர். மலையாளம் என்பது மலையாழ்மா என்றும், மலையாய்மா என்றும் கூறப்படும். இவை மூன்றும் ஒன்றேயாம். இவை மூன்றிலும் முதற்கண் நிற்கும் மலை என்ற பகுதி மலைத் தொடர் என்று பொருள்படும் வடசொல்லாகிய மலய என்பதன் திரிபன்று; தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதேயாம். தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதிலிருந்தே வடசொல்லாகிய மலய என்ற சொல் பெறப்பட்டுள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம். மலை என்ற பகுதி நீங்கிய “ஆளம்” என்ற சொல் `பழகு, உடைத்தாயிரு, ஆணை செலுத்து’ என்று பொருள்படும் ஆள் என்ற சொல்லடியாகப் பிறந்ததாகும். `ஆழம்’ என்று கொண்டு “ஆழ்” என்ற சொல்லடியாகப் பெறப்பட்டது என்று கொள்ளுதல் பொருந்தாது. தமிழ் “ஆண்மை” என்பது “ஆள்மை” என்பதன் திரிபாம். அந்த “ஆள்மை” என்பது மலையாளத்தில் “ஆள்மா” எனப்படும். அதுவே “ஆழ்மா” என்று திரிந்ததாகும். மலையாளத்தில் இந்த ஆள்மா என்பது ஆய்மா என்றுந் திரிபுறும். ஆகவே மலையாளம் அல்லது மலையாழ்மா என்பது மலைப்பகுதி என்றே பொருள்படும். வில்லாண்மை படைத்தோரை வில்லாளிகள் என்று அழைப்பார்கள். அது போன்றே மலைப்பகுதியில் வாழ்ந்து மலையாண்மை புரிந்து வந்தவர்கள் மலையாளிகள் என்றழைக்கப்பட்டனர். வடமொழிவாணர்கள் மலையாள மொழியைக் குறிப்பதற்குத் தனிப்பெயர் கொடுப்பதில்லை. மலையாளம் தமிழ் என்ற இரண்டையும் குறிப்பதற்கு அவர்கள் திராவிடம் என்ற சொல்லையே வழங்குவர்.ஆனால் மலையாள நாட்டைக் குறிக்குங்கால் அவர்கள் வேறு தனிப் பெயர் கொடுத்தே குறிப்பர். கோகர்ணம் முதல் குமரிமுனை வரையிலுள்ள ஊர்களுக்கெல்லாம் அவர்கள் வடமொழிப் பெயர்கள் வகுத்துள்ளனர். மலையாள நாட்டுப் பகுதியை அவர்கள் கேரளம் என்று கூறுவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற் குரியதான அசோகர் கல்வெட்டில் “கேரளம் புத்திரா” என்று மலையாள் நாட்டு மன்னனொருவன் குறிக்கப்படுகிறான். திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் கேரளம் என்ற சொல் பல திரிபுகளுடன் பயின்று வருகின்றது. தமிழில் கேரளம், சேரலம், சேரம் என்ற மூன்று சொற்கள் வழங்குகின்றன. தெலுங்கிலும் கன்னடத்திலும் கேரளம் என்ற சொல் வழங்குகின்றது. மலையாள மொழியில் கேரளம், சேரலம், சேரம் என்ற சொற்களுடன் சேரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. கேரளவாசி யொருவன் கேலன் என்றும், கேளு என்றும் அழைக்கப்படுவான். இந் நாட்டு மன்னனைப் பிளைனி என்பவர் 37செலாபொத்ராஸ் என்று குறிக்கின்றார். இது சேரல புத்திரரர் என்பது போலும். டாலிமியோ 38கெரபொத்ராஸ்(கேர புத்திரர்கள்) என்று குறித்தார். பண்டைக்காலத்திற் கேரள நாடு இருபெரும்பிரிவினதாக இருந்தது போலும்! மேலைக்கடற்கரை யோரத்தை யடுத்திருந்த பகுதிகளெல்லாம் கேரளம் என்ற வடமொழிப் பெயராலேயே வழங்கி வந்திருத்தல் வேண்டும்; இடையிடையே தமிழ்ப் பெயராகிய சேரம் என்பதையும் அது வழங்கியிருத்தல் கூடும். இ/து ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு உள் நாட்டப் பிரிவு. இப்போதைய கோயமுத்தூர், சேலம் ஆகிய இருகோட்டங்களும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியும் இப் பிரிவின்பாற்பட்டன. இப் பிரிவு கேளரம் என்ற வடமொழிப் பெயரையே கையாண்டதாகத் தெரியவில்லை. சேரம் என்றும், கொங்கு என்றுமே அது தன்னைக் குறித்துவந்துள்ளது. எனினும், கேரளம் என்பதற்கும் சேரம் என்பதற்குமிடையே வேறுபாடொன்று மில்லை. இரண்டும் ஒன்றே. சேரநாட்டெல்லை குறித்த தமிழ்ப் புலவ ரெல்லாரும் கள்ளிக் கோட்டை என்ற கோழிக்கோட்டின் தென்பாலுள்ள மலையாளக் கரையை யடுத்திருக்கும் பகுதி யெல்லாம் சேரநாடென்றே குறித்துள்ளனர். கேரம் என்ற சொல்லிலிருந்தே கேரளம் என்ற வடசொற் பிறந்திருத்தல் வேண்டும். கொங்கு என்பது, குடகு என்பதைப் போன்று ,வளைந்தது கோணலானது என்றே பொருள்படும். மலையாள நாட்டு இயற்கை யமைப்பை யொட்டி இப் பெயர் உண்டாயிருத்தல் எளிதில் உய்த்துணரப்படும். கேரம் என்ற சொல்லுக்கு மலையாள மொழியில் “தென்னைமரம்” என்ற பொருளுளது. மலையாள நாட்டில் தென்னைகள் சிறப்பாக வளர்ந்து பெருகியிருக்கின்றமை பற்றி ஒருவாறு இம் மரத்தினாலேயே அந்நாட்டிற்கு அப் பெயர் வந்த தென்று கூற முன்வரலாம்; எனினும் மரத்தின் பெயரை யொட்டி நாட்டிற்குப் பெயர் வந்ததா அன்றி நாட்டின் பெயரை யொட்டி மரத்திற்குப் பெயரிடப்பட்டதா என்பது சிக்கலான ஒரு கேள்வியேயாகும். மலையாளம் இனி, மலையாளம் என்ற சொல்லை யொட்டிய எச்சொல்லும் பண்டைக் கிரேக்க ஆசிரியர்களால் குறிப்பப்பட வில்லை. கி.பி. 545 ஆம் ஆண்டிற் குரியது என்று கருதப்படுவதான 39“கிறித்தவ ஊர் வரலாறு” என்ற கிரேக்க நூலில் ஈழநாட்டைக் குறித்து எழுதிவருமிடத்து அதனை யடுத்துள்ள நாடுகளில் “மிளகுவரும் மலே” என்ற ஒரு நாடுங் குறிக்கப்பட்டுள்ளது. இச் சொல் மலையென்ற தமிழ்ச் சொல்லுடன் பொருத்தமாக இருப்பது எளிதிற் புலனாகும். மலை, மலைநாடு போன்ற சொற்கள் அக்காலை ஈழநாட்டிற் குடியேறியிருந்த தமிழர்களால் பெருவாரியாக வழங்கப்பட்டிருத்தல் கூடும். இன்றும் அங்கும் அவை வழங்குவனவே. மலை என்ற அச்சொல் மலையாளத்தில் மலெ என்றே வழங்குவதாம். மலையாள மொழி தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே “உதித்தெழுந்த” கிளைமொழியே. ஆயினும், தமிழில் காணப்படும் 40ஐம்பால் விகுதிகளை அம்மொழி ஒதுக்கி யுள்ளது; மேலும், அளவுகடந்த வடமொழிச் சொற்களைத் தன்பாலேற்று அம்மொழி பயன்படுத்தி வருகின்றது. இவையே அம்மொழிக்கும் தமிழுக்குமுள்ள தலையாய வேறுபாடுகளாம். இவ் வேறுபாடுகள் நோக்கியே, மலையாளம் தமிழின் இனமொழியா அன்றிக் கிளைமொழியா என்ற ஐயப்பாடு எழுந்ததாகும். இனமொழி என்று கொள்வதினும் கிளைமொழி என்று கொள்வதே ஏற்புடைத்தாம். தமிழிலிருந்து பன்னூறாண்டுகட்கு முன்னரே மலையாள மொழி பிரிந்ததாயினும், தமிழ்மொழியின்மாட்டுக் காணப்படும் மொழி வளர்ச்சியும், திருத்தமும், அதன்கண்ணும் காணப்படு கின்றன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கடந்து சென்று மேலைக் கடற்கரையில் வதிந்துவந்துள்ளமையால் இத்தொடர்பு காணப்படுகின்றது என்று எளிதில் ஊகித்துக் கொள்ளலாம். 41“பெரிப்ளூஸ்” ஆசிரியர் மேலைக் கடற்கரையிலிருந்த 42”நெல்குன்றம்’ என்ற சிறந்த துறைமுகப்பட்டினம் தமிழ் மூவேந்தர்களுள் தலைசிறந்த மதுரைப் பாண்டிய மன்னர்தம் ஆட்சிக் குட்பட்டது என்று குறித்துப் போந்தமை இக் கொள்கையை அரண் செய்வதாகும். மலையாள மொழியின் பண்டை இலக்கியங்க ளெல்லாம் வட மொழியை விடத் தமிழ் மொழியையே பின்பற்றி வந்துள்ளன வாகக் காணப்படுகின்றன என்று டாக்டர் குண்டெர்ட் கூறுவதும் அதனையே தெளிவுறுத்தும். தமிழ் முதலெழுத்துக் களாகக் கணக்கிடப்படும் உயிருமுடம்புமா 43முப்பதெழுத்துக்கும் புறம்பான பிற எழுத்துக்களைப் பண்டை மலையாள இலக்கியங்கள் கையாளாமல் ஒதுக்கி வந்துள்ளன என்றும், அவ் விலக்கியங்களிலுள்ள வரிவடிவமோ தமிழ்நாட்டில், அதிலும் தென்பாண்டி நாட்டில், கல்வெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த வட்டெழுத்துக்களைப் போன்றிருந்த தென்றும், குண்டெர்ட் பெரியார் கூறியுள்ளார். மலையாள மொழியின் முதற் செய்யு ளிலக்கியமாகக் கருதப்படுவது “இராம சரிதம்’ என்பதேயாம். இது சில நூற்றாண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட தாகும். எனினும் இதன்கண் வடமொழி எழுத்துக் கலப்புக் காணப்படவில்லை. யூத பட்டயங்களிலும், சிரிய பட்டயங் களிலுங் காணப்படும் இலக்கண அமைப்பையே உடையதாகவும் இ/து இருக்கின்றது. இதை நோக்கும்போது மலையாள மொழியும் அதன் பிற்கால இலக்கியங்களும் எத்துணை விரைவில் வடமொழி மயமாக மாறிவிட்டன என்பது வியப்பையே அளிப்பதாகும். இத்துணை மாறுதலும் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக் குள்ளாகவே ஏற்பட்டதாகும். இரண்டு அல்லது மூன்றே நூற்றாண்டு! எனினும் எத்துணை வடமொழிக் கலப்பு!! தமிழில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிக் கலப்புக் குறைவாகக் காணப்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு மலையாளத்தில் மிகுதியாகக் காணப் படுகின்றது! மேலும், அதன் வரிவடிவமும், தமிழ் நாட்டில் வடமொழி எழுத்துக்களை எழுதக் கையாளப்படும் கிரந்த எழுத்துக்களின் வரிவடிவை யொட்டியே வகுக்கப் பட்டுள்ளதாகவும் கருதக்கிடக்கின்றது. ஆகவே, தமிழிலிருந்து ஒரு சிறிது வேறுபட்டிருந்த மலையாளம் படிப்படியாக வேறுபாடுகள் மிக்கதாகி, தமிழின் கிளைமொழி யென்பது போய், உடன்றோன்றிய இனமொழியோ என்று கருதக்கூடிய தொரு நிலையை எய்திவிட்டது. மலையாள மொழிக்குத் தமிழே தாய்மொழி என்பதில் யாதொரு ஐயமு மின்று; எனினும் மலையாள மொழி இப்பொழுதுள்ள நிலையை நோக்கில், தாயின் தொடர்பை நீத்துத் தனிப்பட்ட வேற்றுருவைக் கொண்ட மகளொருத்தியைப் போன்றாய்விட்டது. மலையாள மொழி என்றுதான் கூறுதல் வேண்டும். மலையாள மொழி தமிழின் கிளை மொழிதானா? ஆம்; கிளைமொழிதான். திசைகளைக் குறிக்க எழுந்த `கிழக்கு’ `மேற்கு’ என்ற இரு சொற்களைக் கொண்டே மேற்கண்டவாறு விடை யிறுக்கலாம். கீழ் அல்லது அடி என்ற பொருளைக் குறிப்பது தமிழ்க் “கிழக்கு” என்னுஞ் சொல்; அவ்வாறே மேல் அல்லது உயரம் என்ற பொருள் குறிப்பது தமிழ் “மேற்கு” என்ற சொல். இச் சொற்களைக் கொண்டே இவை மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப்புறம் இருந்த தமிழ்நாட்டு மக்களிடையே தான் முதற்கண் தோற்றம் பெற்றுளவாதல் வேண்டும் என்று எளிதில் ஊகிக்கலாம். மேற்றிசையில் எங்கணும் ஒங்கி யுயர்ந்த மலைத்தொடர் ஆகவே மேற்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டின் வரவர மேலேறித்தான் செல்லல் வேண்டும். கீழ்த்திசையில் எங்கணும் பரந்து விரிந்த பனிக்கடல்! ஆகவே, கீழ்த் திசை நோக்கிச் செல்லவேண்டின் வரவரக் கீழ்நோக்கி இறங்கித் தான் செல்லல் வேண்டும். அதாவது, தமிழ்நாடு மேற்புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது என்பதே. ஆனால் மலையாள நாடோ இதற்கு நேர்மாறான அமைப்பை உடையதாக இருக்கிறது. ஓங்கியுயர்ந்த மலைத்தொடர் கிழக்கிலும், பரந்து விரிந்த பனிக்கடல் மேற்கிலுமாக ஆங்கு அமைந்துள்ளன. இவ்வாறிருந்தும், உயர்ந்த மலையமைந்துள்ள கீழ்த்திசையைக் குறிக்கும் சொல் மலையாளத்திலும் “கிழக்கு” என்பதேதான்! மலையாளம் தமிழ்தான் என்று கூறுவதற்கு வேறு சான்றும் வேண்டுமோ? மலையாளம் பேசும் மக்கள் எல்லோரும் பண்டைத் தமிழர்களே யல்லரோ? 44பாலைக்காடு, கோயமுத்தூர் வரியாகப் பண்டைத் தமிழ்மக்கள் மேலைக் கடற்கரையை யடைந்து வடக்கே 45சந்திரகிரி வரையிலும், தெற்கே திருவனந்தபுரத்தருகே யோடும் நெய்யாற்றுக் கரைவரையிலும் பரவியிருத்தல் வேண்டும். அவ் விரண்டு எல்லைகட் கப்பாலும் அவர்கள் செல்லாமைக்குக் காரணம் இரு மருங்கிலும் தங்களினத்தைச் சேர்ந்த பிற வகுப்பினர் முன்னரே ஆங்குப் போந்து உறைந் திருக்கக் கண்டமையேயாம். “மலையாள அகராதி”யின் முன்னுரையில் அதன் ஆசிரியரான டாக்டர் குண்டெர்ட் தமிழுக்கும் மலையாளத்திற்கும் பெருந் தொடர்புள்ள தென்பது உண்மையேயாயினும், முன்னதைப் பின்னதன் தாய்மொழியாகக் கொள்ளுதல் சரி யன்றென்று எழுதியுள்ளனர். “கிழக்கு”, “மேற்கு” என்ற சொற்களைக் கொண்டே மலையாள மக்கள் தமிழ்நாட்டிலிருந்து மேலைக் கடற்கரை போந்து குடியேறியவர்கள் என்று கொண்டுவிட லாகாது என்றும், ஆரியர்களைப் போலவே திராவிடர்களும் வடபாலிருந்து தென்பாற் போந்தவர்களானால், அவர்கள் முதலில் மேலைக் கடற்கரை (மலையாளம்) போந்து தங்கிய பின்னரே கிழக்கே (தமிழ் நாட்டில்) புகுந்திருத்தல் வேண்டும் என்றும் அவர் தம் கருத்தை விளக்கியுள்ளார். “மேற்கு’ என்று மலையாளிகள் பெரும்பாலும் மொழிவதில்லை என்றும், “படிந்நாயிறு என்றே வழங்குகின்றார்கள்” என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் “படிந்நாயிறு’ என்ற அச்சொல்லும் “படு ஞாயிறு” என்ற தமிழ்ச் சொல்லின் மலையாளத் திரிபேயாம். படு ஞாயிறு என்பது மேற்கே தாழ்ந்துபடும் அல்லது மறையும் சூரியனைக் குறிப்பதாகும். “மேற்கு,” “கிழக்கு” என்ற சொற்கள் தமிழ்ச் சொற்களே என்பதையும், அவை தமிழ்நாட்டிலே தான் முதற்கண் தோற்றம் பெற்றன என்பதையும் டாக்டர் குண்டெர்ட் ஒப்புக் கொள்ளுகிறார். ஆனால் அவர் கருதிய வண்ணம் தமிழ் மக்கள் மேற்கிலிருந்துதான் கிழக்கே போந்தார்கள் என்று கொள்வது - அ/தாவது, மலையாளந்தான் தமிழ்மொழியின் தாய்மொழி என்று சொல்வது - இயற்கை யமைப்புக்கும் மொழிவரலாற்றிற்கும் எவ்வாற்றானும் முரண்படுவதாகும். ஈண்டுத் தமிழ்நாட்டின் கீழ்க் கரைக்கும், மேற்கரைக்கும் முறையே கோரமாண்டல் என்றும், மலபார் என்றும் ஆங்கிலத்திற் பெயர் வந்ததேன் என்பதை ஆராய்வோம். 1. கோரமாண்டல்: தமிழ்ச் சோழமண்டிலம் என்பதே கோரமண்டலம் என்று திரிபுற்றிருத்தல் வேண்டும். சோழம் என்பதைச் சோளம் எனப் பிறழ உணர்ந்து, அதற்குத் தினை என்று பொருள்கொண்டு, சோழ மண்டிலம் என்றால் “தினை நாடு” என்று ஒருவர்46 பொருள் கூறியது தவறேயாகும். பாண்டிய மண்டிலம் என்பது பாண்டிய நாடு என்று பொருள்படுவதே போன்று சோழ மண்டிலம் என்பதே சோழநாடு என்றே பொருள்படும். முதன்முதல் இந்தியாவிற்கு வந்த போர்த்து கேசியர்கள் மேற்கரையிலிருக்கும் கொல்லத்திலிருந்து கீழ்க்கரையில் ஒரிஸ்ஸா வரையிலுள்ள கடற்கரைக்குச் சோழ மண்டிலம் என்றே பெயர் கூறிவந்தனர் என டாக்டர் குண்டெர்ட் கூறுகிறார். போர்த்துகேசியர்கள் வருவதற்கு முன்னிருந்த முகம்மதியர்கள் சோழமண்டிலக் கரையின் பெரும் பகுதியை மா பார் என்றே அழைத்துவந்தனர் என்பதும், அதனையே நெடு நாள்வரை ஐரோப்பியர்களும் வழங்கி வந்தனர் என்பதும் மார்க்கோ போலோவின் குறிப்புக்களால் தெரியவருகின்றன. மாபார் என்பது நீண்ட கரை என்றே பொருள்படும்; முன்காலத்தில் மதுரையையடுத்த கடற்கரைக்கு அதுவே பெயராக வழங்கிவந்தது. மதுரைக் கரையிலிருந்து ஈழத்திற்குச் செல்வதற்கு “இராமர் பாலம்” (சேது) என்று நீண்ட அணை யொன்று இருந்ததே இவ் வழக்கிற்குக் காரணம் போலும்! பின்னர், கீழ்க்கரை முழுதிற்குமே இப்பெயர் வழங்கப்பட்ட தாகல் வேண்டும். பிற்காலத்தில் வந்த டச்சுக்காரர்கள் கீழ்க்கரையின் நடுப் பகுதியை மட்டும் “சோரோ மாண்டல்’ என்று குறித்து வந்தனர். “இந்தியாவிற்குப் போர்த்துகேசியர்கள் வந்தபோதே கோரமாண்டல் என்ற பெயர் வழங்கிவந்தது உண்மையே. 1499 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹீரானிமோ டீ ஸ்டோ ஸ்டெஃ பானோ47 என்ற சிறு வரலாற்று நூலில் இப் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஈழத்தை விட்டபின் `பன்னிரண்டு நாட்கள் கழித்துக் கோரமாண்டல் என்ற மற்றோரிடத்தை அடைந்தோம்’ என்று அதிற் கூறப்பட்டுள்ளது. 1510இல் வெளிவந்த வெய்தெமாவின் கடற்செலவு48 என்ற நூலிலும், பார்போசா49 என்ற போர்த்துகேசிய வரலாற்று நூலிலும் சாரமாண்டல் என்றும், கோரோமண்டல் என்றும், சோலொமண்டில் என்றும், சோல்மெண்டர் என்றும் பலவாறாக வழங்கப்பட்டள்ளது. முகம்மதியர்களும் சோழமண்டிலம் என்ற பெயரையே வழங்கிவந்ததார்க ளென்பதற்கு ரோலண்ட்ஸன் மொழிபெயர்ப்பாகிய `தோ/பாத் அல்மஜாஹிதீன் அல்லது மலபார் முகம்மதியர்களின் வரலாறு’50 என்ற நூலும் சான்று பகர்கின்றது. சோல மொண்டல51 த்திலுள்ள மைலாப்பூரிலும், நாகப்பட்டினத்திலும் எனைய கடற்றுறைகளிலும் பறங்கிகள்52 கோட்டைகள் வகுத்துக்கொண்டனர் என்று அந் நூலிற் காணப்படுகிறது”. என்று கர்னல் யூல்53 வரைந்துள்ளார். இவற்றாலும், சகரமும், ககரமும் ஐரோப்பிய மொழிகளில் மாறுவதுண்டாதலாலும், சிறப்பு ழ கரத்திற்கு ரகரம் வழங்குவது பிறநாட்டு வழக்காதலாலும் சோழ மண்டிலம் என்ற தமிழ்ச் சொற்றொடரே ஆங்கிலத்தில் கோரமாண்டல் என்று திரிந்தது என்பது இனிது விளங்கும். 2. மலபார்: மலபார் என்பதன் முதற்பகுதியும் மலையாளம் என்பது முதற்பகுதியும் ஒன்றேயாகும். (தமிழ்; மலை, மலையாளம்: மல.) பிற்காலக் கிரேக்கர் இதனை மலெ என வழங்கினர். அராபியக் கப்பலோட்டிகள் நெடுநாள் வரை பார் என்னும் அடை இல்லாமல் மல என்னும் முதற் பகுதியை மட்டுமே அந்நாட்டின் பெயராக வழங்கிவந்தனர். 851இல் குலம் - மலை என்ற வழக்கும், 1150இல் மலீ, மலிய என்ற வழக்குகளும் காணப்படுகின்றன. இவற்றுள் குலம் மலை என்பதில் குலம் என்பது கொல்லத்தைக் குறிப்பதாகும். (கொல்லம் என்ற நகரின் பெயர் 660ஆம் ஆண்டிலேயே வழங்கியதாகத் தெரிவதால் அது 825இல் அமைக்கப்பட்ட தென்னும் கூற்றுத் தவறென்று ஏற்படுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.) பார் என்னும் அடை முதன்முதலாக 1150 லேயே வருகின்றது. இது வாரம் என்னும் வடசொல்லிலிருந்து வந்ததென்றும், பார் என்னும் அராபியச் சொல்லிலிருந்து வந்ததென்றும், பார் என்னும் பாரசீகச் சொல்லிலிருந்து வந்ததென்றும் பலவாறான கொள்கைகள் உள்ளன. அடிப்பகுதி என்று பொருள்படும் வாரம் என்ற தமிழ்மலையாளச் சொல்லே இ/து எனக் கொள்ளலாமாயினும், அத்தகைய வழக்கு அம்மொழிகளில் இல்லாதிருப்பது அங்ஙனம் கொள்ள இடையூறாகின்றது. வட இந்திய நாட்டுப் பெயர்களாகிய மார்வார், தார்வார், கத்தியவார் என்பவற்றுள்ளும் இதே அடை காணப்படுவது வடமொழி “வாரம்” என்பதை உறுதிப் படுத்துவதாகத் தோன்றக்கூடும். ஆனாலும், வார் என்பது வா/ட் என்று எழுதப்படுவதி லிருந்து இவை சூழல், நாடு என்னும் பொருள் உடைய வாட என்ற வட சொல்லிலிருந்து வந்தவையே என்றேற்படுகின்றது. முதன்முதல் இந்த அடைமொழியை வழங்கியவர்கள் அராபியரேயாவர். ஆதலால் “பார்’ என்ற அராபியச் சொல்லையே இதன் முதலாகக் கொள்ளல் வேண்டும். ஆனால் பார் என்ற பாரசீகச் சொல்லை நாடு, கண்டம் என்னும் பொருளில் அராபியர் பல்வேறிடங்களில் பயன்படுத்தி யிருப்பதாகக் கர்னல் யூல் கூறுகிறார். ஆகவே “பார்” என்னும் பாரசீகச் சொல்லடியாகவே, மலபார் என்பதிலுள்ள பார்54 பிறந்திருத்தல் வேண்டும் எனக் கோடலே சிறந்தது. மலபார்க் கீரைக்கு அருகில் உள்ள தீவக் கூட்டங்களுக்கு மால் தீவங்கள் என்று பெயர் பிரார் தேலா வால்55 மோர்ஸ்பீ56 முதலியோர் இதனை மலெ என அழைத்தனர். சிங்களரும் இதனை மல்திவ மென்றே வழங்கினர். “பார்” என்பது நாடு, கண்டம் என்று பொருள்படுவதை நோக்க, மலெ என்ற பொதுப் பெயருடைய தீவுகளையும் தலைநிலத்தையும் பிரித்தறியவே மல தீவுகள், மலபார் என வேறுபடுத்தி உரைத்தனரோ என்று நினைக்க இடமுண்டு. ஆனால் தமிழில் மல் என்பது மால என வழங்குவது புதுமையானது. இபின் பதூதா57 என்பவர் மால தீவங்களை திபத் அல் மஹால்58 என அழைப்பதிலிருந்து தமிழ் `மால்’ என்பது “மஹால்” என்பதன் மரூஉ என்று கூறலாகும். மஹால் மால் ஆதல் தமிழ் ஒலியியற்படி இயற்கையே என்க. ஐஐஐ. தெலுங்கு தொன்மைச் சிறப்பிலும், சொல்வளத்திலும் தெலுங்கு மொழியைத் தமிழுக்கு அடுத்தபடியாகக் கூறலாம். மொழியினிமையை நோக்கின் அது தமிழினுஞ் சிறந்த தொன்றாகவே மதிக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் முதலில் தெலுங்கு மொழியை “ஜெண்ட்டூ” என்று அழைத்து வந்தனர். வர வர அது வழக்கொழிந்தது. தெலுங்கு மொழி பழவேற்காடு தொடங்கிச் சிக்கை குளம்59 வரையிலுள்ள நிலமூக்கின்60 கீழ்க்கரையிலும், மேற்கே மராட்டிய நாட்டின் கீழெல்லை தொடங்கி மைசூர் வரையிலும் பேசப்பட்டு வருகிறது; வட சர்க்கார்க் கோட்டங்களும்61, கர்நூல் கோட்டமுமே, நிஜாம் நாட்டிற் பெரும் பகுதியும், நாகபுரி நாடும், கோண்டு வனமும்62 இதனுள் அடங்கியனவாம். இந் நிலப் பகுதியை முகம்மதியர்கள் தெலிங்காணம் என்றழைத்துவந்தனர். தொலைநாடுகளுக்குத் தொழில் கருதிச் செல்வதையும், பிற நாடுகளிற் சென்று குடியேறுவதையும் தெலுங்கு மக்கள் வரவரக் குறைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். திராவிடக் குழுவினருள் எண்ணிக்கை மிகுந்த இனத்தினர் தெலுங்கர் என்று ஐயமின்றிக் கூறலாம். தமிழ்நாட்டில் நாயக்கர்கள் (வடமொழி நாயக்கர்கள்) என்றழைக்கப்படுவோரும், ரெட்டிகளும் தெலுங்கர்களே. இவர்கள் ஏறக்குறையப் பத்து நூறாயிரவர் உள்ளனர். இவர்களையும் மைசூரிற் குடியேறியுள்ள தெலுங்கரையும் சேர்த்துக்கொண்டால், தெலுங்கு பேசும் மக்களின் மொத்தத் தொகை 2,30,00,000 ஆகும். நிஜாம் நாட்டில்மட்டும் இருக்கும் தெலுங்கர் தொகை, 1911 கணக்குப்படி, 60,00,000 ஆகும். இன்று தெலுங்கர் தமிழரைப் போன்று திரை கடல் கடந்து பொருளீட்டும் முயற்சியுடைய ரல்லராகக் காணப்படினும், பண்டைக் காலத்தில் இத் துறையில் தமிழருக்கு வழி காட்டியா யிருந்தவர்கள் அவர்களே யாவர். இன்றும் மலாய நாட்டினர் தமிழரைக் குறிக்க வழங்கும் கிளிங்63 என்ற சொல் கலிங்கம் என்பதன் மரூஉ. கலிங்கம் என்பது தெலுங்குநாட்டு நெய்த னிலத்திற்குப் பெயர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன் சுமத்ரா, ஜாவா என்னும் திட்டுகளுக்குச் சென்று குடியேறி ஆங்குக் கோயில்கள் கட்டி வாழ்ந்துவந்த சென்னை மண்டில மக்கள் தெலுங்கர்களே என்று கருதப்படுகின்றனர். வடமொழி வாணர் தெலுங்கை ஆந்திரம் என்றழைப்பர்; ஆந்திரர்கள் பேசும் மொழி ஆந்திரம். தெலுங்கர் பண்டைக் காலத்திலிருந்தே ஆந்திரர் என்றும், கலிங்கர் என்றும் இரு பிரிவினராக வாழ்ந்து வந்துள்ளனர். கலிங்கர்களை விட ஆந்திரப் பிரிவினரே பண்டைய ஆரியர்களுக்கு மிக்க அறிமுகமானவர்கள். இருக்கு வேதத்தின் கிளையாகிய ஐதரேய பிராமணத்தில்64 ஆந்திரர்கள் என்ற மக்கள் முதன் முதலாகக் குறிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் நாகரிகமற்ற ஓரினத்தார் என்று அந் நூல் கூறுகின்றது. புராண காலத்தில் ஆந்திர அரச பரம்பரை யொன்று வட இந்தியப் பகுதியில் ஆட்சி செலுத்திவந்துள்ள தாகவும் தெரியவருகிறது. மெகாஸ்தனீசுக்குப் பின்வந்த பிளைனி என்பார் “அந்தாரீ” என்போர் ஆற்றல் மிகுந்த ஓரினத்தார் என்று குறிப்பிடுகின்றார். பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற உரோம நிலப்படங்களில் ஆந்திர இந்தி என்ற ஒன்று (கங்கைக்கு வட பகுதியில்) இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது என்று முன்னர்க் காட்டப்பட்டது. ஆந்திரர்களின் மொழியைப் பற்றி முதற்கண் குறித்தெழுதியவர் ஹியூன் சியாங் என்ற சீனயாத்திரிகரே. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்த அவர் ஆந்திரர்களின் மொழி மத்திய இந்தியமொழியினும் வேறுபட்ட தொன்று என்றும், ஆனால் அதன் வரி வடிவமோ மத்திய இந்திய மொழியின் வரி வடிவத்தைப் பெரும்பாலும் ஒத்ததே என்றும் குறித்துள்ளார். எனவே, ஆந்திர மொழி கலைத்துறையில் ஒருவாறு அக் காலத்திலேயே வளர்ச்சியுற் றிருந்தது என்பதும், அதனாலேயே ஆந்திரர் என்ற பிரிவினர், கலிங்கர் என்ற பிரிவினரை நோக்க, நாகரிகத்தில் மிக்கவராக வடமொழி வாணராற் கருதப்பட்டு வந்தனர் என்பதும் எளிதிற் பெறப்படும். ஹியூன் சியாங் காலத்திற்குப் பின் வந்தவரான குமாரில பட்டர் என்பார் “ஆந்திர திராவிட பாஷா” என்று திராவிட மக்கள் பேசும் மொழியைக் குறித்ததும், கலிங்க திராவிட பாஷா என்றே, திரிலிங்க திராவிட பாஷா என்றோ குறிக்காததும் கருதற்பாலன தெலுங்கு மக்கள் தம் மொழியினைத் தெலுகு என்றே கூறுகின்றனர். தெலுங்கு, தெலிங்க, தெய்லிங்க, தெனுகு, தெனுங்கு என்றும் அம் மொழிக்குப் பிற பெயர்கள் உண்டு. தெனுகு அல்லது தெனுங்கு என்பதே மொழிக்குரிய சரியான பெயர் என்று தெலுங்கு மொழிப் புலவர்கள் கூறுவர்; தேன் என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் காரணமுங் காட்டவர். இது ஒப்பக்கூடியதன் றாயினும், சொற்போக்கும் மொழி யினிமையும் அப் பெயருக்கு ஏற்றனவாகவே காணப்படுகின்றன. தெலுங்கு, திரிலிங்கம் என்பதன் மரூஉ என்பதூஉம் ஒன்று. இத் தொடரின் பொருள் இலிங்கங்களை யுடைய மூன்று கோயில்களை எல்லையாகக் கொண்ட நாடு என்பதே. இவ் விளக்கம் தெலுங்குப் புலவரின் நுணுக்கத் திறனைக் காட்டுகிற தென்பதில் ஐயமில்லை. குறிப்பிட்ட மூன்று கோயில்களின் பெயருடன் இப் பெயரை ஒட்ட வைப்பது நம்பத்தக்க தன்றாயினும், இலிங்கம் என்ற சொல்லுடன் இது தொடர் புடையது என்பதில் மிகுந்த உண்மை இருக்கத்தான் வேண்டும்; ஏனெனில் இன்றைப் புலவரது கொள்கைக்கே நெடுந்தொலை அப்பாற்பட்ட காலத்தவரான திபெத் நாட்டு அறிஞர் தாரநாதர் திரிலிங்கம் என்ற தொடரை வழங்குவ தோடல்லாமல் கலிங்கம் என்ற நாடு திரிலிங்கத்தின் ஒரு பகுதி என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். மேலும், இன்னும் பழமையான நாளிலேயே டாலிமி65 இப் பெயரைக் கையாண்டுள்ளார். டாலிமியின் காலம் புராணங்களுக்கு முந்தியதாகல் வேண்டும். இனித் தெலுங்கு என்பது திரிலிங்க மன்று, திரிகலிங்க மென்பாரும் உளர். இதற்குப் பொருத்தமாகப் புராண மொன்றில் இவ் வழக்கிருப்பதாக டாக்டர் கெர்னும்66, கல்வெட்டொன்றில் அரசர் குடி யொன்றைச் சேர்ந்தோர் தம்மைத் திரிகலிங்க அரசர் என்று கூறிக்கொண்டதாகக் கன்னிங்ஹாமும்67 உரைக்கின்றனர். மாபாரதத்தில் மூவேறிடங்களில் மூவேறு குழுவினரைக் கலிங்கர் என அழைத்திருப்பதும், பிளைனி என்பார் கலிங்கருடன் மக்கோக் கலிங்கர், கங்கரிதேஸ் கலிங்கர் என்பவர்களைக் குறிப்பிட்டிருப்பதும் இதனை வலியுறுத்துவதாக அவர் கொள்கிறார். தெலுங்க நாட்டைப் பிளைனி மோடொகலிங்கம் எனவும் குறித்துள்ளார். இதில் மோடொக என்பது மூன்று என்ற பொருள்கொண்ட பழந் தெலுங்குச் சொல் என ஏ.டி. காம்பெல்68 கொள்கிறார். ஆனால், இன்றைத் தெலுங்கில் மூன்று என்பதற்குச் சரியான மொழி மூடு என்பதேயாகும். மூடுகு என்பதுகூட உயர் இலக்கிய வழக்கேயாம். காம்பெலுக்கு மாறாக ஸி.பி. பிரௌன் என்பார் மோடொ கலிங்கத்தை மோடொ+கலிங்கம் எனப் பிரித்து மூன்று கலிங்கம் எனப் பொருள்படுத்துகிறார். தெலுங்கிற்குத் தமிழர் தந்த பெயர் வடுகு என்பதாகும். தெலுங்கர், அதிலும் சிறப்பாக, நாயக்க வழியைச் சேர்ந்தவர் வடுகர் எனப்படுவார். இதன் முதன்மொழி வட என்ற தமிழ்ச் சொல்லேயாகும். போர்த்துகேசியராலும் ஸெயின்ட் ஸேவியராலும்69 குறிப்பிடப்பட்ட, படகேஸ், இவர்களேயாவர். ஐஏ. கன்னடம் தெலுங்கு மொழிக்க அடுத்தபடியாக இடம் பெறத் தக்கது கன்னடம். கர்நாடகம் என்றும், கானரீஸ் என்றும் அது வழங்கப் பெறும். மைசூர், தென் மராட்டிய நாடு, நிஜாம் நாட்டு மேலைக் கோட்டங்கள் சில, ஆகிய பகுதிகளில் இம் மொழி வழங்கிவருகிறது. மலபார்க் கரையிலுள்ள கானரா என்னும் கன்னடியக் கோட்டத்தில், மலையாளம், துளு, கொங்கணி ஆகிய மொழிகளுடன் கன்னடமும் பேசப்படுகிறது. நீலகிரியிலுள்ள வடகர்70 என்னும் பெருந் தொகை மக்கள் பேசுவது பழைய கன்னடமே. இம் மொழி பேசுவோரின் மொத்தத் தொகை 1,05,00,000. கர்நாடம் அல்லது கர்நாடகம் என்ற சொல் முதற்கண் தெலுங்கு, கன்னடம் என்ற இரண்டு மொழிகளையுங் குறிப்பதற்கே பொதுப்பட வழங்கப்பெற்றது; பின்னர், தெலுங்கை நீக்கிக் கன்னடத்தை மட்டுமே அது குறிப்பதாயிற்று. கர்நாடகம் என்பது வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும், டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நடு+அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச் சொல் என்று கொள்வதே சிறப்பாகும். தமிழிற் செந்தமிழ், கொடுந் தமிழ் என்ற இரு பிரிவுகள் இருப்பன போன்று கன்னடத்திலும், பழைய கன்னடம் என்றும், புதுக் கன்னடம் என்றும் இரு பிரிவுகள் உள்ளன. இப் பிரிவுகளுக் கிடையேயுள்ள வேறுபாடு தமிழையும் மலையாளத்தையும் போன்று வடமொழிச் சொற்கலப்பினால் ஏற்பட்ட தொன்றாகும். பழைய கன்னடம் என்ற மொழியும், பழைய கன்னடம் என்ற வரிவடிவமும் ஒன்றன்று. அது வேறு, இது வேறேயாம். இரண்டையும் ஒன்றுடனொன்று கலத்தல் கூடாது. மைசூரிலும், மராட்டிய நாட்டிலும் காணப்படும் கல்வெட்டுகளிற் பல பழைய கன்னடம் என்னும் வரிவடிவத்தா லியன்றனவேயாம். ஹள கன்னடம் என்ற பழைய கன்னடத்தி லுள்ள கல்வெட்டுக்களின் சொற்களெல்லாம் வடமொழியே யன்றிக் கன்னடமல்ல. கர்நாடகம் என்ற சொல் பன்னூறாண்டுகளாகவே வழக்கில் இருந்துவருகிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினரான வராஹமிஹிரர் அதனை எடுத்தாளுகிறார். தாரநாதரும் கர்நாடம் என்பதைக் குறிக்கிறார். முகம்மதியர்கள் இதனைக் கர்நாட்டிக் என்றனர். ஆங்கிலேயர்கள் ‘கானரீஸ்’ என்று திரித்து வழங்கலாயினர். ஏ. துளு துளு அல்லது துளுவம் திருந்தியதொரு மொழியே யாகும். எனினும், அதற்குத் தனிப்பட்ட வரிவடிவமோ, இலக்கியமோ இல்லாமையால் அதனைத் திருந்திய மொழியினத்தில் சேர்த்தல் ஒல்லுமோ என்று ஐயுறுதல் கூடும். துளு மொழியில் முதன்முதலாக நூல்கள் சில அச்சிட்டவர்கள் பேசில் மிஷனைச்71 சேர்ந்த குருமார்களே யாவர். ஆனால் அவர்கள் அந் நூல்களைக் கன்னட மொழியின் வரிவடிவிலேயே அச்சிட்டுவிட்டனர். ஆதலால், துளு மொழிக்குரிய எழுத்து கன்னடமே என்று நம்பப்படுவதாயிற்று. இலக்கிய மில்லையேனும் துளு மிகவும் திருந்திய திராவிட மொழிகளுளொன்று என்றுதான் கூறவேண்டும். இம் மொழி சிறு தொகையினரான மக்களால் குறுகிய அளவுள்ள ஒரு பகுதியில்மட்டும் பேசப்பட்டு வருகிறது. கன்னடக் கோட்டத்தில் ஓடும் சந்திரகிரி, கல்யாணபுரி என்ற இரண்டு ஆறுகளும் இம் மொழி வழங்கும் பகுதியின் இரண்டு எல்லைகளாகக் கருதப்படுகின்ன. அவ் வெல்லைகளைக் கடந்து அது வழங்கியவதாகக் கூறுதற்கு மில்லை. துளு மொழி பேசுவோரின் தொகை 5,00,000க்கு மேற்பட்டதாகும். இருந்தாலும் அவரிடையே பல மொழிகள் வழங்குகின்றன. ஆதலால் துளு எங்கே ஒருவழியாய் மறைந்தொழிந்துவிடுமோ என்றுகூட ஐயுறலாம். இருந்தாலும் அது மறைந்தொழிதற்கான குறிகள் ஒன்றும் இதுவரைக் காணப்பட்டிலது. திராவிட மக்களுக்குள் மாறுதல் என்பதே வேண்டாத ஓர் இனத்தார் இருக்கக்கூடு மென்றால் அவர்கள் துளுவர்களே. ஆதலின் அவர்கள் தம் மொழியை மறைந்தொழியவும் விடுவரோ! துளு என்பது பணிவு, அடக்கம் என்று பொருள்படும் என் பிரிகெல்72 என்ற கன்னட இலக்கண நூலாசிரியர் கூறுகிறார். இதிலிருந்து அச்சொல் அம்மொழி பேசும் மக்களையே யன்றி அம் மொழியைக் குறித்ததாகக் கொள்ள இடமில்லை. மலையாள மொழியின் கிளை மொழியே துளு என்று எல்லிஸ்73 நம்பினார். அவர் அவ்வாறு நம்பியதற்கு மலையாள மொழி அருகிற் பெரு வழக்கி லிருப்பதும், துளுவப் பார்ப்பனர்கள் வடமொழியில் எழுத மலையாள எழுத்துக்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதும் காரணங்க ளாகலாம். இக் காரணங்கள் சாலா. துளுவம் மலையாளத்தின் கிளையன்றென்று உறுதியாகக் கூறலாம். “துளு இலக்கணம்” வகுத்த பிரிகெல் இதைக் குறித்துப் பல உண்மைகளை யெடுத்துக் கூறி விளக்கியுள்ளார். மலையாளத்திற்கும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாட்டைவிட மிகுந்த வேறுபாடு துளுவத்திற்கும் மலையாளத்திற்கு மிடையே உள்ளது. ஆனால் அதற்கும் கன்னட மொழிக்கு மிடையே அத்துணை வேறுபாடில்லை. குடகு மொழிக்கும் துளுவத்திற்கு மிடையிலுள்ள வேறுபாடோ மிகமிகக் குறைவு. தமிழ் மொழியிலிருந்தோ குடகு பெரிதும் வேறுபடுகிறது. சென்னைக் கருகில் வசித்துவந்த குறும்பர்கள் என்ற நாடோடி இடையர்கள் துரத்தப்பட்டு அவர்களுடைய நிலபுலங்கள் துளுவ நாட்டு வேளாளர்களுக்கு வழங்கப்பெற்றன என்ற ஒரு பழங் கதையை எல்லிஸ் கூறியுள்ளார். சென்னையையும், சென்னையையடுத்து முள்ள சில குடும்பத்தினர் தங்களைத் துளுவ வேளாளர் என்று அழைத்துக்கொள்வது மேற்குறித்த பழங் கதைக் கொள்கையை வலியுறுத்துவதாகும். இருந்தாலும், துளுவ நாட்டிலிருந்து பலர் சென்னைக்கு வந்து குடியேறி யிருக்கக்கூடும் என்று கொள்வதற்கில்லை; ஏனெனில், அவ்வா றிருந்தால் சென்னை நகரத் தமிழ் சிற்சில துறைகளிலேனும் துளுவ மொழிப் பண்புகளை ஏற்றுக்கொண்டிருத்தல் இயல்பாகுமாதலின், அவ்வாறு துளுவ மொழிக் கலப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சென்னை நகரத் தமிழ், சென்னை மண்டிலத் தமிழிலிருந்து வேறுபட்டுக் காண்பது தெலுங்கு மொழிக் கலப்பினாலேயே யன்றித் துளுமொழிக் கலப்பினாலன்று. ஏஐ. குடகு குடகுக்கு இலக்கியம் இல்லை. துளுவை ஒப்பக்கூட இதனைப் பண்பட்ட மொழி என்று சொல்ல முடியாது. எனவே, முதற்கண் இதனைத் தனி மொழியாகக் கணக்கிடாமல் கன்னடத்துள் அடக்கிக் கூறப்பட்டுவந்தது. இதன் உறவைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தெளிவு பெறவில்லை. டாக்டர் மோக்லிங்74 என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் இது கன்னடத்தை விடத் தமிழ் மலையாளம் இவற்றுக்கு அண்மையானது என்று கூறினர். திராவிடக் குழுவில் இ/து எதனுடன் நெருக்கமான உறவுடைய தென்று தெளிவாகத் தெரியவில்லை யாயினும், மேற்படையாக நோக்கின், இது பழங் கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்டதெனத் தோற்றுகிறது. இம் மொழியின் இலக்கண மொன்றும் சில பாட்டுக்களும் மேஜர் கோல்75 என்பவரால் வெளியிடப்பட்டுள்ளன. “நீலகிரியிலுள்ள பண்டைக் குடிகளின் மொழிகளைப் போன்று இம் மொழியும் (குடகு) தன் தொன்மைப் பண்பை மாறாமல் இருந்து வருகிறதென்பதில் ஐயமில்லை. இ/து இம் மக்கள் பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்து வருவதனாலேயே யாகும். குடகு மக்கள் பண்டைக் காலத்திலேயே மேற்கு மலைத்தொடரிற் குடியேறிவிட்டனர் என்பது அவர்களிடையே இன்றும் ஒரு பெண் பல ஆடவர்களை மணந்து கொள்ளும் வழக்கமிருந்து வருவதனாற் புலப்படும். இவ் வழக்கம் பண்டைத் திராவிடர் வழக்கமாகும். இவர்களுக்கு இலக்கியமில்லை; பார்ப்பனர் பழக்க வழக்கங்கள் இன்றளவும் இவர்களிடைப் புகவில்iல்” என்று பர்னெல்76 எழுதியுள்ளார். இதுகாறும் விரித்துரைத்த ஆறு மொழிகளும் திராவிடக் குழுவினுள் திருந்தியவையாகக் கொள்ளக் கிடப்பன. இனிக் கூறப்போகும் ஆறும், இவற்றிற்கு மாறாகத், திருந்தாதன; அதாவது எழுத்தும் இலக்கியமும் இல்லாதன. திருந்தா மொழிகள் (1) துதம் துதம் அல்லது தொதம் என்பது நீலகிரி மலையிலுறையும் துதவர் அல்லது தொதவரின் மொழியாம். இவர்கள் தொகை எக்காலத்தும் ஒன்றிரண்டாயிரத்திற்கு மிகுதியா யிருந்திருக்க முடியாது. அபினிப் பழக்கத்தாலும், பெண்கள் பல கணவர்களைக் கொள்ளும் முறையாலும், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடும் வழக்கம் ஒரு காலத்தில் கையாளப்பட் டிருந்தமையாலும் இவர்கள் தொகையில் அருகி, இன்று 700 அளவில் குறைந்திருக்கின்றனர். ஆயினும், இவர்கள் மொழி ஒப்பியல் மொழியிலக்கணத்திற்குப் பயன்படும் சிறப்புக்கள் உடையது. துத அல்லது தொத என்பது தமிழ்த் தோழன் (கூட்டத்தான்) என்பதுடன் உறவுடையது என்று டாக்டர் போப் கொண்டனர். ஆனால், அ/து ஒப்புக்கொள்ளத் தக்க தன்று. (ii) கோதம் தொதவர்களே யன்றி, நீலகிரி மலையில் கோதர்கள் என்ற ஒரு சிறுகுடியினரும் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளே யாவர். இவர்களின் தொகை ஏறக்குறைய 1200 ஆகும். பண்டை நாட்களிலிருந்த உயர்குடி மக்களால் துரத்தப்பட்டு இவர்கள் இங்கே வந்து குடியேறியவர்க ளாதல்வேண்டும். இவர்கள் மொழியாகிய கோதம் கன்னடத்தின் கொச்சைக்கிளை என்று ஒருவாறு கூறலாம். 1911ஆம் ஆண்டு எடுத்த மக்கட் டொகைக் கணக்கின்படி அஸ்ஸாம் நாட்டில் ஒன்பதின்மர் கோதர் இருந்தார்களாம். இனி, இத் தொதவமும் கோதமுமே யன்றி, வடகர்கள் பேசும் ஒரு தனிப்பட்ட மொழியும், இருளர்கள் பேசும் தமிழ் மொழிச் சிதைவும், குறும்பர்கள் என்ற முல்லை நில மக்கள் பேசும் தமிழ்மொழிச் சிதைவும் நீலகிரி மலைத் தொடரில் வழங்குகின்றன. (ஐஐஐ) கோண்டு கோண்டர்கள் மத்திய இந்தியாவிலுள்ள குன்றுகளிலும் காடுகளிலும் உறையும் பழங்குடிகள் ஆவர். இவர்களது தொகை பதினைந்து நூறாயிரம் (15,00,000) ஆகும்77. இவர்கள் வாழும் பகுதியை முன்னைய ஆராய்ச்சியாளர் கோண்டவனம் என்றழைத்தனர். கோண்டர்கள் தாமே தம்மைக் குறிக்க வழங்கிய பெயர் கோயீதோர்78 அதாவது கோயீக்கள் என்பதாகும். இவரிடையே 12 வகுப்புக்கள் உள்ளன. அவற்றுள் 4 வகுப்பினர் தம்மைச் சிறப்பாகக் கோயீதோர் என்று கூறிக்கொள்ளுகின்றனர். இவருள் ஒரு வகுப்பினர் கோஹிதூர் என்று தம்மைக் குறிக்கும் மாரியார் ஆவர். இவர்களே கோண்டர் அனைவரிலும் வீரமும் முரட்டுத்தனமும் மிக்கவர். கலப்பற்ற பழங்கோண்டர்களும் இவர்களே யாவர் என்று எண்ண இடமுண்டு. (ஐஏ) கந்தம் அல்லது கு ஆங்கில அறிஞர் இவர்களைக் கொந்தர் என்று வழங்குகின்றனர். ஆனால் இவர்களை அடுத்துள்ளோர் இவர்களைக் கந்தர் என்றும், இவர்கள் தாமே தம்மைக் கு என்றும் வழங்குகின்றனர். இவர்கள் கோண்டவனத்தின் கிழக்குப் பக்கத்திலும், ஒரிஸ்ஸாவின் குன்றுகளிலும் உறைபவர்கள். கோண்டருடன் உறவுடையவர் இவர் என்று கருதப்படுகிறது. கோண்டர் என்ற பெயரும், கந்தர் என்ற இவர் பெயருங்கூடக் குன்று என்ற தமிழ்ச்சொல் அல்லது அதற்குச் சரியான கொண்ட என்ற தெலுங்குச் சொல்லி லிருந்து வந்ததெனச் சிலர் சொல்லுகின்றனர். ஆனால் இதற்கு ஒவ்வபாத முறையில் இவர்களை யடுத்து வாழும் தெலுங்கரே இவர்களைக் கொந்தர் என்றும் கோதர் என்றும் அழைக்கின்றனர். கழிந்த (1911) கணக்குப்படி இவர்களது தொகை ஐந்து நூறாயிரத்து முப்பத்தினாயிரம் (5,30,000) ஆகும். (ஏ) இராஜ்மஹால் மாலர்கள் என்றும், இராஜ்மஹாலர் என்றும் இவர்கள் பெயர் பெறுவர். வங்காளத்திலுள்ள இராஜ்மஹால் மலைகளில் இவர்கள் பண்டைக்காலத்தி லிருந்து வாழ்ந்துவருபவர்கள். இராஜ்மஹால் என்பது பாறையர் அல்லது குன்ற மக்கள் என்று பொருள்படும். இம் மொழியின் அடிப்படை திராவிட இனத்தைச் சேர்ந்ததே என்பது “ஆசிய மொழியாராய்ச்சிகள்”79 என்ற நூலின் ஐந்தாந் தொகுதியில் எடுத்துக் கொடுக்கப் பட்டுள்ள இராஜ்மஹால் மொழிச் சொற்கள் சிலவற்றிலிருந்தும், ஹாட்ஜ்ஸன் என்பார் எழுதிய “வங்காள மக்களின் வரலாறு”80 என்னும் நூலிற் காணப்படும் சொற்பட்டியிலிருந்தும் நன்கு விளங்கும். சந்தாளர் என்போரின் மொழியோடு இதனைக் கலந்து விடுதல் கூடாது. இம்மொழியின் இலக்கண அமைப்பைப்பற்றி ஒன்றுந் தெரிவதற்கில்லை. இம் மக்களின் தொகை ஏறக்குறைய 64,000. (ஏஐ) ஒராவோன் சூடியநாகபுரியிலும், அதைச் சுற்றிலும் வாழும் ஒராவோன் இனத்தாரின் தொகை 8,00,000. “வங்காள மக்களின் வரலாறு”45 என்ற நூலில் கர்னல் டால்டன் இவர்களைப் பற்றிய சுவையான வரலாற்றுக் குறிப்பொன்று எழுதியுள்ளார். இவர்கள் மொழியும் திராவிட மொழியையே அடிப்படையா யுடையதாகும். பாட்ஸ்க் பாதிரியார் இம் மொழிக்கரிய இலக்கணச் சுருக்கம்81 ஒன்று எழுதியுள்ளார். இவர்கள் தங்களைக் குர்ங்கர்கள்82 என்று கூறிக்கொள் கின்றனர். கொங்கணத்திலிருந்து வந்ததாகவும், ரோதா83 மலைகளிலும் பாடலிபுரக் கோட்டத்தை யடுத்த மலைகளிலும் நெடுநாள் வாழ்ந்திருந்ததாகவும், அங்கிருந்து துரத்தப்பட்ட பொழுது இராஜ்மஹால் மலைகளுக்கு ஒரு பகுதியினரும், சூடியநாகபுரி மலைகளுக்கு மற்றொரு பகுதியினருமாகச் சென்று குடியேறியதாகவும் அவர்கள் கூறிக்கொள்கின்றனர். மொழி யொற்றுமைகளும், பழக்க வழக்க வொற்றுமைகளம் இதனை வலியுறுத்துகின்றன. மூண்டர்களும் கோலேரியர்களும் வந்து குடியேறுவதற்கு முன்னரே ஒராவோனியர்கள் சூடியநாகபுரியில் வந்துவிட்டார்கள் என்பது வழக்காறு. துதம், கோதம், கோண்டு முதலிய மொழிகள் திருத்த மற்றவையா யிருந்தபோதிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய திருந்திய மொழிகளைப் போலவே அவை தூய திராவிட மொழிகள் என்பதில் ஐயமில்லை. அவற்றிற் கடுத்த படியாக, இராஜ்மஹால், ஒராவோன் என்ற இரண்டு மொழிகளையும் திராவிட மொழிகளாகக் கொள்ளலாம். ஏனெனில், இவற்றில் சுட்டுப் பெயர்கள், முதல் நான்கு எண்கள் போன்ற இன்றியமையாச் சொற்களை உள்ளிட்ட முதற்சொற்களில் பெரும்பாலானவை திராவிடச் சொற்களே யாயினும் அவற்றோடுகூடப் பிற குழுச் சொற்களும் கலந்துள்ளன. இப் பிறகுழு கோலேரியக் குழு எனக் கொள்ளப்படுகிறது. எனவே, இவ்விரு மொழிகளும் திராவிட மொழிகளே யாயினும் பிற திராவிட மொழிகளைவிடத் தூய்மை குறைந்தவையே. இவற்றுள்ளும், ஒராவோன் இராஜ்மஹாலையும், கோலேரிய இனத்தையும் இணைப்பதென்றும், இராஜ்மஹாலே அதேபோன்று ஒராவோனையும் திராவிட மொழிகளையும் இணைப்ப தென்றும் ஹாட்ஜ்ஸன் கொள்கிறார். எப்படியும் ஒராவோனைவிட இராஜ்மஹாலே திராவிடச் சார்பு மிகுதியுமுடையதென்பது தேற்றம். மத்திய மண்டிலத்திலும், வங்காளத்திலும் வழங்கும் திருந்தா மொழிகளுள் இரண்டிலாவது திராவிடத் தொடர்பு இருக்கின்றது என்பது மேற்கூறிப் போந்தவற்றால் இனிது விளங்கும். எனவே, திராவிடப் பெருங் குழுவினர் கங்கைக் கரையி லில்லாவிட்டாலும் ,வங்காள மண்டிலம் வரையிலேனும் பரவி யிருந்தார்கள் என்பது போதருகின்றது. முன்னைப் பழங்காலத்தில் திராவிடக் குழுவினர் இந்தியா முழுதுமே பரவியிருந்திருத்தல் வேண்டும் என்ற கொள்கை ஒருவாறு இதனால் வலியுறுத்தப்படுகின்றது. கர்னல் டால்டன் தம்முடைய “வங்காள மக்கள் வரலாறு” என்ற நூலில் திராவிடத் தொடர்பைக் குறித்துக் கூறியுள்ள பகுதி வருமாறு: “பொதுவாக இப்பொழுது நம்பப்பட்டு வருவதைக் காட்டினும் மிகப் பெருவாரியாகத் திராவிடத் தொடர்பு வங்காள மக்களிடை காணப்படுகிறது. இன்று இந்துப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டவர்களாகக் காணப்படும் வங்காளப் பழங்குடிகளிற் பெரும்பகுதியினர் திராவிடக்குழுவைச் சேர்ந்தவர்களே. வங்காளக் கோட்டங்களிலும், சூடிய நாகபுரி, ஒரிஸாப் பகுதிகளிலும் அவற்றை யடுத்த காடுகளிலும் வாழ்ந்துவரும் பூயியர்கள்84 அனைவரும் திராவிடர்களே; கொச்சர்கள்85 என்ற இனத்தாரும் திராவிடர்களே. பூயியர்களின் தொகை ஏறக்குறைய 25,00,000; கொச்சர்களின் தொகை 15,00,000. இந்த நாற்பது நூறாயிரவரும் வங்காள மண்டில மக்கட்டொகையில் பத்தில் ஒரு பங்கினராவர். இவர்கள் திராவிட இனத்தாருள் சேர்க்கப்பட வேண்டியவர்களே.” இம் முடிபு ஆராயத்தக்க தொன்றாகும். கொள்கை வேற்றுமைக் கிடமுள்ள இத்தைய பகுதிகளை நீங்கி, ஐயத்திற்கே இடமின்றித் திராவிட என ஏற்றுக்கொள்ளத்தக்க வகுப்புகளும் அவற்றின் தொகைகளும் 1911ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி கீழே தரப்படுகின்றன. திராவிட மொழிகள். பேசுவோர் தொகை 1. தமிழ்86 1,91,89,740. 2. தெலுங்கு 2,35,42,859 3. கன்னடம் 1,05,25,739 4. மலையாளம் 67,92,277 5. துளு 5,31,498 6. குடகு 42,881 7. துடம் 730 8. கோதம் 1,280 9. கோண்டு 15,27,157 10. கந்தம் (கு) 5,30,476 11. இராஜ்மஹால் 64,875 12. ஒராவோன் 8,00,328 மொத்தத் திராவிடர் 6,35,49,840 இக் கணக்கின்படி திராவிடமொழி பேசுவோரின் மொத்தத் தொகை 6 கோடியே 40 நூறாயிரம் ஆதல் காண்க. இக் கணக்கில் நாடோடிகளான இராமூஸிகள், இலம்பாடிகள் முதலியவர்களைச் சேர்க்கவில்லை. ஏனெனில், இலம்பாடிகள் பேசுவது ஒருவகை இந்துஸ்தானியேயாகும். இராமூஸிகள் மொழியோ தெலுங்கின் மரூஉ. ஆதலால், அவை தனியாகக் கூறப்பட வேண்டியவையல்ல. மேற்குத் தொடரின் தென் பகுதியில் வாழும் மலையரசர்களிலோ சற்று வடக்கில் மலையாளமொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளச் சிதைவுமொழி ஒன்றையும், தெற்கே தமிழ்மொழி வழங்கும் பகுதியின் அண்மையிலுள்ளோர் மலையாளக் கலப்புற்ற தமிழ்ச் சிதைவுமொழி ஒன்றையுமே பேசுகின்றனர். இனி, மத்திய இந்தியாவிலும் வங்கத்திலும் உள்ள ஹோ, மூண்டா முதலிய கோலேரிய மொழிகளும், சவரர்களின் மொழிகளும் திராவிட மொழிகளுள், சேர்க்கப்பட வில்லை. இவற்றை சர் ஜார்ஜ் காம்பெல் கோலேரிய இனமென்றும் ஹாட்ஜ்ஸன் தமிழினம் என்றும் வகுத்துள்ளார்கள். கோண்டு, கு, இராஜ்மஹால், ஒராவோன் முதலிய மொழிகளுடன் இவை உறவுடையவையாகத் தோற்றுகின்றன என்பது உண்மையே. ஆனால் இவ்வுறவு ஒருசில திராவிட முதற்சொற்களுடன் நின்றுவிடுகிறது. இலக்கண அமைப்பில் யாதோர் ஒற்றுமையு மில்லை. இத்தகைய உறவு இன உறவாகமாட்டாது; நெடுநாளைய இட அண்மையையும் பழக்கத்தையுமே காட்டுவதாகும். இந்தியாவின் வடகிழக்கில் போடொவர்87 திமாலர்88 முதலியவர் மொழிகளையும், குமாவோன்89 அஸாம் இவற்றிடையேயுள்ள மலைக்காட்டு மக்களின் மொழிகளையும் இவ்வாறே திராவிட மொழியீனத்திற் சேர்க்கவில்லை. ஹாட்ஜ்ஸன் இவற்றையும் தமிழ்க்குழு என்றே மதித்தனர். இதற்குக் காரணம் அவர் ஆரிய இனமல்லா மொழிகள் எல்லாவற்றையும் ஒரே குழு என்றும், அதில் தலைமையான மொழி தமிழ் என்றும் கொண்டதே யாகும். ஆனால் இலக்கண அமைப்பு, முதற்சொல் தொகுதி இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவை திராவிட மொழிகளுடன் அத்தகைய நேரான இன ஒற்றுமை உடையவையாகத் தோற்றவில்லை. அவர் காட்டிய சிற்சில இலக்கண அமைப்பு ஒப்புமைகள் இம் மொழிகளுக்கு மட்டுமேயன்றிச் சித்திய இன மொழிகள் அனைத்திற்கும் பொதுப்பட்டவையாம். ஆதலால் அவற்றைத் திராவிடக் குழுவுடன் சேர்ப்பது துருக்கியக் குழுவுடன் சேர்ப்பதை யொப்பதேயாகும் என்க. பலூச்சிஸ்தானத்தில் கெலத்துத் தொகதியில் பேசப்படும் பிராகுவீ மொழி திராவிடச் சொற்கள்மட்டுமன்றித் திராவிட இலக்கண அமைப்புக்கூட உடையதாகலால், அது ஹாட்ஜ்ஸன் தமிழ்க்குழுவில் சேர்த்த நேபாள, பூதான்த் தமிழ்மொழிகளை விட, திராவிடக் குழுவுடன் சோக்கப்படுவதற்கு எத்தனையோ மடங்குரிமையுடையதேயாகும். ஆனால் அதிலுங்கூடத் திராவிடப் பகுதி குறைவாகவும், பிற பகுதி மிகுதியாகவும் இருப்பதால், திராவிட ஒப்பியல் இலக்கணத்திற்கு உதவும் இடங்களில் மட்டும அஃது எடுத்துக்காட்டப்படும். 1911ஆம் ஆண்டுக் கணக்கில் பிராகுவீ திராவிட மொழிகளுள் வைத்து எண்ணப்பட்டுள்ளது. அக் கணக்கின்படி பேசுவோர் தொகை 170,998 ஆகும். இது தவிர 236 பேர் பேசும் மல்ஹர்90 என்பதொன்றும், 24,074 பேர் பேசும் கொலாமீ91 என்பதொன்றும் திராவிட இனத்துள் சேர்க்கப்பட்டுள்ளன. பிராகுவீ மொழியில் ஒருசில தலைமையான சொற்கள் திராவிடச் சார்புடையவையாயினும், சொற்களுள் பெரும்பாலான திராவிடத்தின் வேறாயிருக்கின்றன. ஆனால் இலக்கண அமைப்பிலோ தெளிவான திராவிட ஒற்றுமைகள் உள்ளன. பிராகுவீ மக்கள் தாங்கள் ஹாலெப்பி92 (அலெப்போவி) லிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். இ/து ஒருகால் அவர்களிடையே பின்வந்த ஒரு கூட்டத்தாரைக் குறிப்பதாயிருக்க வேண்டும். அ/து ஆரியக் கூட்டமாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனால், எப்படியும் திராவிடச் சார்பான ஒரு முதல் கூட்டம் இருந்திருக்க வேண்டும். அதைப்பற்றி இத்திராவிட ஒற்றுமைகளால் தெரிவது தவிர வேறெதுவும் தெரியவில்லை. பின்வந்த கூட்டத்தார் இவர்களை வென்று இவர்களுடன் கலந்திருக்கலாம். பிராகுவீ மொழி திராவிட வகுப்பைச் சிந்து ஆறு கடந்து நடு ஆசியாவரையிற் கொண்டுபோய்ச் சேர்க்கின்றது. அம்மொழி உண்மையில் பஞ்சாபி, சிந்தி இவற்றுடன் ஒத்த மொழியாயினும் திராவிடப் பகுதி ஒன்றுடன் இணைந்துள்ள தென்பது மறுக்கக்கூடாத உண்மையாகும். இத் திராவிடப் பகுதியை நோக்கத் திராவிடரும் பின்னாளைய ஆரியர், கிரேக்கர், சித்தியர், மங்கோலியர் முதலியவர்களைப் போல் வடமேற்கிலிருந்து வந்தவர்தாமோ என்று எண்ண இடமிருக்கின்றது. அடிக்குறிப்புகள் 1. க்ஷசயாரi. 2. கூரனய. 3. முடிவய 4. ழுடினே. 5. முhடினே. 6. னுளைவசiஉவள. 7. கால்டுவெல் துரைமகனாரே தங்காலத்திலிருந்த தமிழ்ப் புலவர்கள் இம்முடிபை ஒப்புக் கொள்ளவில்லை என்று பின்னர்க் கூறியுள்ளார். இக்கால ஆராய்ச்சிப் புலவர்களும் இதனை ஒப்புக்கொள்ள முன்வராமை வியப்பன்று. 8. னுச. முநச. 9. கூயசயயேவாய’ள “கூiநெவயn ழளைவபடிசல டிக வாந ஞசடியீடிபயவiடிn டிக க்ஷரனனாளைஅ in ஐனேயை”. 10. னுச. ழுரனேநசவ. 11. கூhந ஞயடi டிக வாந ஆயாயறயளேடி. 12. கூhந ஞநரவiபேநச கூயடெநள. 13. ஹனேசந ஐனேi யனே னுயஅசைiஉந. 14. ஆடினரசய. 15. சுயஎநnயே. 16. கூஉhi-அடி-டடி டிக ழநைரn-கூளயபே. 17. ஞடiலே. 18. கூhந ஹசயைn நுஅயீநசடிச ஏயடநளே. 19. ளுசை ஆ.நு. ழுசயவே னுரகக. 20. முயவலயலயயே. 21. ஞசடிகநளளடிச ஆயஒ ஆரடடநச. 22. ஆரவசய. 23. ஆயனரசய. 24. ஆநவாடிசய. 25. ழயசiஎயஅளய. 26. ஆயவரசய. 27. ஆநபயளவாநநேள. 28. ஞயனேயii. 29. கூhந ஹனேயசயந யனே ஊயடiபேயந. 30. ஞயனேநை. 31. அருச்சுனன் பாண்டி நாட்டரசி அல்லியை மணந்ததும், அல்லி பாண்டிநாட்டு ஆட்சி நடத்தி வந்ததும் ஈண்டுக் குறிப்பிடற் பாற்று. 32. ஊhடினய. 33. சோழ நாட்டு மக்கள் சோழியர் எனப்படுவர். வேளாள வகுப்பினர் சோழநாட்டிற் சோழிய வேளாளர் என்றும், பாண்டிய நாட்டிற் பாண்டிய வேளாளர் என்றும் பெயர் பெறுவர். “முன் குடுமிச்சோழியா” என்ற காளமேகப் புலவரின் வாக்கையும் நோக்குக. 34. ஊடிசடிஅயனேநட உடியளவ. 35. கூhந ஹசஎயசni. 36. ஞவடிடநஅல. 37. ஊநடடிbடிவசயள. 38. முநசடிbடிவாசயள. 39. ஊhசளைவயைn கூடியீடிபசயயீhல டிக ஊடிளஅயள ஐனேiஉடியீடநரளவநள. 40. போகிறேன், போகிறாய், போகிறான் போகிறது, போகின்றன என்ற ஐவேறு தமிழ் வினைச்சொற்களும் மலையாளத்தில், “போகுன்னு” என்ற ஒரே வினைச்சொல்லாற் குறிக்கப்படும். 41. ஞநiயீடரள. 42. சூநடமலனேய. 43. முப்பத்திரண்டொன்றார் கால்டுவெல். 44. ஞயடபாயவ. 45. ஊhயனேசயபசைi 46. ஃப்ரா பாலினோ ஸெயின்ட் பார்தோலோமியோ. 47. ழநைசடிniஅடி னந ளவடி ளுவநகயnடி. 48. ஏயiவாநஅய’ள கூசயஎநடள. 49. க்ஷயசbடிளய. 50. கூடிhகயவ யட ஆயதயானைin டிச ழளைவடிசல டிக ஆயாயஅஅயனயளே in ஆயடயயெச. 51. ளுடிடஅடினேரட. 52. குசயமேள. 53. ஊடிட. லுரடந. 54. (தமிழ்ப்) பார் - பரப்பு. வன்னிலம். 55. ஞலசயசன னநடய ஏயட. 56. ஆடிசளநலெ. 57. ஐbn க்ஷயவரவய. 58. னுhiயெவ யட-ஆயடாயட. 59. ஊhiஉயஉடிடந. 60. ஞநniளேரடய. 61. ஊநனநன னுளைவசiஉவள. 62. ழுடினேஎயயே. 63. முடiபே. 64. ஹவையசநலய க்ஷசயாஅயயே டிக வாந சுபை. ஏநனய. 65. ஞவடிடநஅல. 66. னுச. முநசn. 67. ழுநநேசயட ஊரnniபோயஅ. 68. ஆச. ஹ.னு. ஊயஅநெடட. 69. ளுவ. ஓயஎநைச. 70. க்ஷயனயபயள. 71. க்ஷயளடந ஆளைளiடியேசநைள. 72. ஆச. க்ஷசபைநட. 73. ஆச. நுடடளை. 74. னுச. ஆடிபடiபே. 75. ஆயதடிச ஊடிடந. 76. க்ஷரசநேடட’ள “ளுயீநஉiஅநளே டிக ளுடிரவா ஐனேயைn னுயைடநஉவள: சூடி.3”. 77. கோண்டர்கள் பழங்குடி மக்கள்; ஆகையால் இக்காலத்துத் திருந்திய சமூக வாழ்க்கையில் இடம்பெறக் கூடாதவர் என்று தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த நிலைமையை ரீவாப் பேரரசர் நீக்கி, கோண்டர்கள் இனி க்ஷத்திரியர்களாகவே பாராட்டப்பட்டு, க்ஷத்திரியர்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெறுவர் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். (அஸோஸியேட்டெர்ட் பிரஸ்) - இந்தியன் எக்ஸ்பிரஸ். (19-2-41.) 78. முடிவைடிச. 79. கூhநஹளயைவiஉ சுநளநயசஉhநள. 80. நுவாnடிடடிபல டிக க்ஷநபேயட-உடிட. னுயடவடிn 81. ஹn நுயீவைடிஅந டிக வாந பசயஅஅயச டிக டீசயடிn லெ சுநஎ. க்ஷயவளஉh. 82. முhரசமே. 83. சுhடிவயள. 84. க்ஷhரலயைள. 85. கூhந முடிஉஉh. 86. கிழக்கிந்தியத் தீவுகள், மோரீஸ் முதலிய தொலை நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் தொகை சேர்க்கப்படவில்லை. அதையுஞ் சேர்த்தால் தமிழ்மொழி பேசும் மக்கள் தொகை 21,00,000 ஆகும். 87. க்ஷடினடிள. 88. னுhiஅயடள. 89. முரஅயடிn. 90. ஆயடாயச. 91. முடிடயஅi. 92. ழயடநb (ஹடநயீயீடி.) 4. திராவிட மரபு மொழிகள் ஒரே மூல மொழியின் மண்டிலவகைத் திரிபு மொழிகள் அல்ல ஒரே மண்டிலத்தில் வழங்கும் மொழிகள் கோட்டத்திற்குக் கோட்டம் சிற்சில மாறுதல்களுடனும், சிறப்பியல்புகளுடனும் வழங்கப்படுதல் கூடும். அப்பொழுது அவற்றைத் திசைமொழிகள் என்றும், வகைத்திரிபு மொழிகள் என்றும் கொள்வது வழக்காறு. அவ் வழக்காற்றின்படி மேற்குறிக்கப்பட்ட பன்னிரண்டு வகை மொழிகளையும் ஒரே மூல திராவிட மொழியின் வகைத் திரிபுமொழிகள் என்று கொள்வதற்கில்லை. ஏனெனில், இவற்றினிடையே உள்ள வேற்றுமை யியல்புகள் பலப்பல வாதலினாலேயே. ஒரு வகையினர் பேசும் மொழியை மற்றொரு வகையினர் எளிதில் கேட்டுப் பொருளுணர்ந்துகொள்ள முடியாது. தமிழையும், மலையாளத்தையும் ஏறக்குறைய நெருங்கிய தொடர்புடையனவாகக் கொள்ளலாம். எனினும், அவ்வம் மொழியில் பேசப்படும் எளிய சிறு தொடர்களையே மற்ற மொழியாளர் உணர்ந்துகொள்ளுதல் இயலும். அடுக்குத் தொடர்களையோ, சிக்கலான வாக்கியங்களையோ ஒருவருக் கொருவர் தத்தம் மொழியிற் கூறினால் மற்றவர் அறிந்து கொள்ளுதல் இயலாது. பேசும் மொழி ஒருபுறமிருக்க, இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் இதே வேறுபாடுதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட சிறப்பான இலக்கியக் கலைவளம் இருக்கின்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்றில் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட வரி வடிவமும் உள்ளது. ஆனால், இக்காலை வழங்கும் கன்னட எழுத்துக்களோ தெலுங்கிலிருந்து பெறப்பட்டு, ஒருசிறிது, மாறுபட்டியலுகின்றன. இக் காரணத்தால் கன்னடம், தெலுங்குடன் நெருங்கிய உறவுடையது என்று கொளவதற்கு மில்லை. ஏன்? மொழி என்ற முறையில், கன்னட மொழி தெலுங்கைவிடத் தமிழையே பெரிதும் சார்ந்ததாகும். அதிலும், பழைய கன்னட எழுத்துக்கள் தெலுங்கெழுத்துக்களுக்கு முற்றிலும் வேறானவையாம். திருந்திய மொழிகளாகக் கொள்ளப்பட்ட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, என்ற ஆறனுள், தமிழிற்கும் தெலுங்கிற்கும் இடையேயுள்ள வேறுபாடு மிகப் பெரிதாம். இரு மொழிகளிலும் உள்ள வேர்ச் சொற்களிற் பெரும்பாலன இரண்டற்கும் பொதுவாகக் காணப்படுகின்றமை உண்மையே. எனினும், தமிழை மட்டும் அறிந்த ஒருவர், தெலுங்கில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழு நீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பது எளிதில் முடியாது; அவ்வாறே தெலுங்கைமட்டும் அறிந்த ஒருவர் தமிழில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழுநீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பதும் எளிதில் முடியாது. எனவே, இம் மொழிகள் அனைத்தும் ஒரே மூல மொழியினின்றுதாம் கிளைத்தனவே யாயினும், இன்றைய நிலையில், ஒன்றற்கொன்று உறவுடைய தனிப்பட்ட மொழிகளாகவே கருதப்படும். திருந்திய இம் மொழிகளினிடையே இத்துணை வேறுபாடானால், திருந்தா மொழிகளான துதம், கோதம், கோண்டு, கந்தம், ஒராவோன் என்ற மொழிகளுக்கிடையே மிகுந்து காணப்படும் வேற்றுமைகளை எடுத்துரைக்கவும் வேண்டுமோ? உண்மையைக் கூறின், அவற்றிற்கிடையே காணப்படும் வேற்றுமை மிகுதியால், அவை ஒன்றுடனொன்று வேறுபடுகின்றன என்பதைச் சான்றுகளுடன் எடுத்து விளக்கிக் காட்டுதலைவிட, அவையெல்லாம் ஒரே மூல மொழியைச் சார்ந்தவையே என்றும், அம் மூல மொழி திராவிடமொழிதான் என்றும் சான்றுகளுடன் ஈண்டு விளக்கிப்போதலே, கடமை யாயிற்று. திராவிட மொழிகள் வடமொழியின் வேறானவை தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர் களிடமிருந்து பெறப்பட்டதாகத்தா னிருக்க வேண்டுமென்று வடமொழிப் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பிவந்தார்கள். அதனை யொட்டியே அவர்கள் திராவிட மொழிகள், வட இந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட் டிருப்பினும், வடமொழி யினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்து வந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பிவந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தத்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால், அம் மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபுமொழிகளும் பல இருந்தன வென்பதையும், அவைவே அம்மொழிகளின் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம் மொழிகளின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்துகிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்துகொள்ளவில்லை. அதன் பயனாக, அவர்கள் அம் மொழிகளிற் காணப்படும் வடமொழியைச் சார்ந்தனவல்லாத பகுதிகளெல்லாம் யாதோ ஒரு பண்டைய புறநாட்டு மொழியைச் சார்ந்தவை என்று கூறிவந்தனர். அக் கொள்கைப்படி திராவிரர்களுக்கும்1, கௌரர்களுக்கு2 மிடையே முதன்மையான வேறுபாடுகள் கிடையா. அதற்குக் காரணம், வங்காளி முதலிய கௌரிய இனத்தைச் சேர்ந்த மொழிகளெல்லாம் வடமொழிச் சிதைவுகளேயாயினும், அவற்றுள் வடமொழி யல்லாத சொற்களும், மரபுமொழிகளும் ஒரு சிலவே காணப்படுகின்றன என்பதே. அவற்றைப் போன்றவையே திராவிட மொழிகளுள் காணப்படும் வடமொழிச் சார்பற்ற சொற்களும், மரபு மொழிகளும் என்று அவர்கள் ஊகித்தமை இயல்பே. எனவே, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழிகள் தோன்றின என்று முடிவுகட்டிக் கொக்கரித்து வந்தார்கள். கோல்புரூக், காரி, வில்கின்ஸ் முதலிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் வடமொழி யாராய்ச்சியில் வல்லுநரேயாயினும் திராவிட மொழிகளைப் பற்றிய வரையில் மிகவுங் குறைந்த அறிவுடையவர் களென்றோதான் கொள்ளல்வேண்டும். ஒப்பிலக்கணத்தின் உண்மைகளைத் தெரிந்த எவரும் திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளையும், சொற்றொகுதி களையும், வடமொழி இலக்கண அமைதிகளோடும், சொற்றொகுதி களோடும் ஒப்பிட்டுப் பார்த்தபின், அவை எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றற்கொன்று உறவுடையன வென்றோ, வடமொழியிலிருந்துதான் திராவிட மொழி இலக்கண அமைப்பும், சொல்லாக்கத் திரிபுகளும் தோன்றியிருத்தல் வேண்டும் என்றோ கூற முன்வரமாட்டார் என்பது திண்ணம். திராவிட மொழிகளுக்கும் வடமொழிக்கு மட்டுமே யன்றி, அவ் விரண்டிற்கும் இந்து - ஐரோப்பிய3 மொழிகளுக்குமே ஏதோ ஒரு வகையான மூலத் தொடர்பு இருந்திருக்கவேண்டுமென்று கொள்வதோ, அக் கொள்கையே அடிப்படையாக, இந்து - ஐரோப்பிய மொழியினத்தில் திராவிட மொழிகளுக்கும் இடம்பெற உரிமை யுண்டு என்று கொள்வதோ, வடமொழியி லிருந்தே திராவிட மொழிகள் தோன்றி யிருத்தல் வேண்டும் என்ற கொள்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளாகும். இலக்கண அமைப்பு முறைகளையும் சொற் றொகுதிகளையும் ஆராய்ந்தால், மேற் குறித்த இந்து - ஐரோப்பிய மொழியினத்தில் திராவிட மொழிகளுக்கும் இடமுண்டு என்று நிறுவுதல் ஒருவாறு இயலும். ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திய4 மொழியினத்திலிருந்து இந்து ஐரோப்பிய மொழி யினங்கள் பிரிந்துவிட்டன. இம் முடிபு பின்னிஷ்5 மொழியிலும், துருக்கிய மொழியிலும் காணப்படும் சில பண்டை மூலச் சொற்களால் வலியுறுகிறது; அதுபோலவே, திராவிட மொழிகளிலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்து வழங்கியிருந்தனவாகக் கருதக்கூடிய சில மொழிச் சொற்கள் பயின்று வருகின்றமை மேற்கூறிய முடிபை வலியுறுத்துவதாகும். அதனால், திராவிட மொழிகள் இச் சொற்களை வடமொழியிலிருந்து பெற்றன என்றோ, அன்றி இரண்டு மொழிகளுக்கும் பொதுவான ஒரு பண்டைப் பாகத மொழியிலிருந்து பெற்றிருக்கக்கூடும் என்றோ கொள்வது தவறென்பதும், அருகில் வழங்கிய திராவிட மொழிகளிலிருந்து வடமொழி பல சொற்களைப் பெற்றுப் பயன்படுத்தப் பின்வாங்கவில்லை யென்று கொள்வதே சரியான முடி பென்பதும், எளிதில் ஊகிக்கப்படும். எ/து எப்படியாயினும், வடமொழியிலிருந்து திராவிட மொழிகள் பிறந்திருக்கவேண்டும் என்று கொண்ட பழங் கொள்கை குருட்டுக் கொள்கையே என்பதில் ஐயமேயில்லை. இந்தி, வங்காளி முதலிய கௌரிய மொழிகள் வடமொழியி லிருந்து தோன்றியிருக்கக்கூடு மாதலால், திராவிட மொழிகளும் அவ்வாறேதான் தோன்றியிருக்க வேண்டும் என்று கொள்ளுதல் சால்பாமோ? ஆகாது. கீழ்வரும் உண்மைகளைச் சரிவர உய்த்துணராமையே தவறான இம்முடிபுக்குக் காரணமாகும். (1) திராவிட மொழிகளில் வடமொழிச் சார்பில்லாத தனிப் பகுதி, வடமொழிச் சார்புள்ள பகுதியினும், மிகமிக விரிந்ததொன்று என்பதைப் பண்டையாராய்ச்சியாளர்கள் புறக்கணித்து விட்டனர். (2) ஒரு மொழியின் உயிர்நிலைகள் என்று கருதப் படுவனவான இடப்பெயர்கள், வினைத்திரிபுகள், பெயர்த்திரிபுகள், சொல்லாக்க முறை முதலிய எல்லாவற்றிலும் திராவிட மொழிகள் வடமொழியினின்று அடியோடு மாறுபடுகின்றன என்ற கண்கூடான உண்மையையும் அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். (3) திராவிட மொழிகளும் வடமொழியினின்று தோன்றினவே என்று கொண்ட மேனாட்டாராய்ச்சியாளர் தங்கொள்கைக்குத் திராவிட மொழிகளில் அக்காலை வெளியிடப் பட்டிருந்த அகர வரிசைகளையே6 ஆதாரமாகக் கொண்டிருந்தனர். அவற்றுள் வடமொழிச் சொற்களிற் பெரும்பாலன மாறுதலின்றி அப்படியே காணப்படுகின்றன; மாறுதல் பெற்ற சில சொற்கள் தம் வடமொழித் தொடர்பை நன்கு தெரிவிப்பனவாகக் காணப்படுகின்றன. ஆனால், திராவிட மொழிப் புலவர்கள் இச் சொற்களைத் திராவிடச் சொற்களாகக் கொள்ளாமல், (வடமொழியிலிருந்து வந்த) திசைச் சொற் களாகவே கொண்டனர் என்பதும், அவற்றின் திரிபள விற்கேற்றவாறு அவை அவர்களால் ஒழுங்குபடுத்திப் பதிப்பிக்கப் பட்டன என்பதும் பாவம்! அவ் வாராய்ச்சியாளர்க்குத் தெரியாது. அன்றியும், வடமொழிச் சார்பற்ற சொற்களின் தொகுதியே பெரும் பகுதியாகும் என்பதை உணர்ந்து, அச் சொற்களைத் தனியாகப் பிரித்து முறைப்படுத்தி நாட்டு மொழிச் சொற்கள் அல்லது “செஞ்சொற்கள்” என்று பாராட்டிவந்தனர் என்பதை அவ் வாராய்ச்சியாளர் யாங்ஙனம் அறிந்திருப்பர்? உண்மையில் திராவிட மொழிகளிற் காணப்படும் வட சொற்களையும், சிதைவுகளையும் பிரித்தறிதல் அரிதன்று. ஒருசில சொற்களே வட சொல்லா, திராவிடச் சொல்லா என்று ஆராய்ந்தறிதற் குரியனவாம். நீர் என்பதும் மீன் என்பதும் இரு மொழியாளராலும் தத்தம் மொழிச்சொற்கள் என்று உரிமை பாராட்டப்படுகின்றன. எனினும், இரண்டும் திராவிடச் சொற்கள் என்பதே ஏற்புடைத்தாகும். (ஒவ்வொரு மொழியிலும் நெருங்கிய உறவினர்களையும், உடலுறுப்புக்களையும், என்றும் மாறாதனவும் பொதுப் படையானவையுமான இரவு, பகல், ஞாயிறு, மரம், கல், வீடு, யானை, குதிரை போன்ற பொருள்களையுங் குறிக்குஞ் சொற்கள் அவ்வம் மொழியின் முதன்மையான சொற்களாகக் கருதப்படும். இடப் பெயர்களும் எண்ணுப் பெயர்களும் மாறுபடுதல் இயல்பாகலான் அவற்றை முதன்மைச் சொற்களோடு ஈண்டுச் சேர்ப்பதற்கில்லை. பின்வரும் பட்டியல், ஒப்புநோக்கி உயத்தறிதற் கெளிதாக வடமொழியிலிருந்தும், தமிழிலிருந்தும் 60 முதன்மைச் சொற்கள் தரப்படுகின்றன. (இடப்பெயர்கள் எண்ணுப்பெயர்கள் நீங்கலாக) வடமொழி, தமிழ்மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட 60 முதன்மைச் சொற்கள் அடங்கிய பட்டி. தமிழ் வடமொழி வடமொழியின் தமிழ் ஒலிப்பு அப்ப(ன்) பித்ரு ஆயி மாத்ரு மக(ன்) ஸுனு மக(ள்) துஹித்ரு தலை சிரஸ் கண் அக்ஷி செவி கர்ண வாய் முக பல் தந்த மயிர் கேச கை ஹஸ்த கர கால் பாத் ஞாயிறு ஸுர்ய திங்கள் சந்த்ர வான் திவ் நாள் திவஸ இரவு நக் தீ அக்னி நீர் அப்நீர* மீன் மத்ஸ்யமீன* மலை பர்வத மரம் த்ரும கல் அச்மன் இல் வேச்மன் ஊர் க்ராம ஆனை ஹஸ்தின் குதிரை அச்வ ஆ கோ எருமை மஹிஷ நாய் ச்வன் பூனை விடால கடு-வாய் வ்யாக்ர மான் ம்ருக குரங்கு கபி கரடி ச்ருக்ஷ பன்றி ஸூகர பாம்பு ஸர்ப பறவை வயஸ் கரு கால வெள் சுக்ல செ(வ்) ரக்த பெரு மஹத் சிறு அல்ப இன்(சுவை) மதுர புளி அம்ல உப்பு லவண தின் பக்ஷ் குடி பா வா ஏ போ கம் நில் ஸ்த்ர இரு ஆஸ் ஏகு சர் ஓடு த்ரு உறங்கு ஸ்வப் கேள் ச்ரு சொல் வத் நகை ஹஸ் அழு ருத் கொல் ஹன் (4) மேலும், வடமொழியிலிருந்து தோன்றியனவே திராவிட மொழிகள் என்று நம்பிய மேனாட்டாராய்ச்சி யாளர்களுக்கு, வட சொற்களையே எடுத்தாளாமலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகவும் அருகிய நிலையில்மட்டும் எடுத்தாண்டோ வரும் திருந்தா மொழிகளும் திராவிட மொழி யினத்தில் இருக்கின்றன என்பதே தெரியாது. அன்றியும், வடசொhற்களை ஓரளவிற்கு எடுத்தாளும் திருந்திய திராவிட மொழிகளும் கட்டாயமாக அவற்றை எடுத்தாளத்தான் வேண்டுமென்பதில்லாமல், விருப்பமுளதேற் பயன்படுத்தியும், இன்றேல் அறவே யொதுக்கியும் வருகின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், இன்றைய நிலையை நோக்கின், வடமொழியை அறவே நீக்குவதென்பது தெலுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம் மொழிகள் கணக்கு வழக்கில்லாமல் வட சொற்களை எடுத்தாண்டு வந்துள்ளமை யாலும், அச் சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும், தத்தம் சிறப்புப் பண்புகளை யிழந்து, தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால், திராவிட மொழிகள் அனைத்தினும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுள்ள தமிழ்மொழியோ, வேண்டுமென்றால், வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்ப தோடன்றி, அவற்றின் உதவி யில்லாமல் மிகவும் மேம்பட்டு, வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும். பண்டைத் தூய தமிழ்மொழிக்குச் செந்தமிழ் என்று பெயர். இச் செந்தமிழிலேயே தமிழ்மொழியிற் காணப்படும் பண்டைய இலக்கியங்களிற் பெரும்பாலன இயன்றுள்ளன. ஆனால், அவற்றுள் காணப்படும் வடசொற்களோ மிகமிகக் குறைவு. இன்றைய பேச்சுத் தமிழுடனும், உரைநடைத் தமிழுடனும் இந்நிலை மாறுபட்டதொன்றாகக் காணப்படும். எதனால் அவ்வாறெனிலோ, கண்ணுங் கருத்துமாய் இருந்து வடசொற் களையும், வடமொழி யெழுத்துக்களையும் விலக்கி, தூய தமிழ்ச்சொற்கள், மரபுமொழிகள், ஆகியவற்றையே கையாண்டு வந்துள்ளமையினாலேதான். தமிழ்மக்களிடையே இச் செந்தமிழ் மொழிப் பாதுகாப்பு எவ்வளவுக்குப் பரவியிருந்த தென்பது, எழுதப்பட்ட ஒரு தமிழ்நூலில் எவ்வளவுக் கெவ்வளவு வட சொற்கள் அருகிக் காணப்படுகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது சிறந்ததொரு நூலென்றும், எவ்வளவுக் கெவ்வளவு வடசொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அது தாழ்ந்ததொரு நூலென்றும் கருதி மதிப்பிடும் பழக்கம் பண்டுதொட்டுப் பயின்று வருகின்றமை யினாலேயே இனிது தெளியப்படும். பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வளவுக் கெவ்வளவு வடமொழிச் சொற்கள் பயின்று வருகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அந்நூல்கள் அவ்வம்மொழியினராற் சிறப்புடன் போற்றப்படும்; தமிழிலோ எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு சிறப்புடன் போற்றப்படும். உண்ணாட்டுச் சிற்றூர்களிலும், நாட்டுப்புறங்களிலும் வாழ்ந்துவரும் தாழ்ந்த மக்களிடையே வடமொழிச் சொற்களைப் பேச்சுவழக்கிலும் கையாளாமல் ஒதுக்கும் தூய பழக்கம் காணப்படுகின்றது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புநிலை அம் மொழியியலிலும் செய்யுள் களிலும், தாழ்ந்த குடிமக்களின் பேச்சுகளிலுமிருந்தே ஆராய்ந்து காணப்படும் என்பது ஒருபொது உண்மையாகும். பிற்காலத்தில் மிகவும் வலிந்து முயன்று எழுதப்பட்ட தமிழ் உரைநடை நூல்களிலும், பார்ப்பனர்கள் பேசும் தமிழிலும், மிகவும் கற்றவர் களாகக் கருதப்படும் தமிழர்களின் பேச்சிலுமே வடமொழி மிகைபடப் பரவி வழங்குகின்றது. அதுவும், சமய உண்மை, அறிவியல், தத்துவம், ஏனைக் கலைகளிலுள்ள மரபுச் சொற்கள் ஆகியவற்றை விளக்குமிடங்களில் மட்டுமே இவ்வாறு வடசொற் கள் பெரும்பான்மையும் கையாளப்படுகின்றன. ஆனால், இவ்வாறு காணப்படும் வட சொற்களின் தொகை, ஆங்கில நூல்களிற் கையாளப்பட்டுக் காணப்படும் இலத்தீன் மொழிச் சொற்களின் தொகையை விட மிகுதியானதொன்றன்று. எடுத்துக்காட்டாக, ஆங்கில விவிலிய நூலிலும், தமிழ் விவிலிய நூலிலும் “பத்துக் கட்டளைகள்” என்ற பகுதியை ஒப்புமைக்காக எடுத்துக்கொண்டு அவற்றின் சொல் தொகுதி களை ஆராய்வோம். ஆங்கிலச் சொற்களை ஆராயுமிடத்து நேரிடையான இலத்தீன் சொற்களையும், நார்மன் பிரெஞ்சு மூலமாக வந்த இலத்தீன் சிதைவுகளையும் ஒன்றாகச் சேர்த்து இலத்தீனாகக் கணக்கிடுவோம். அதன் பலன் கீழ்வரும் பட்டிகைப்படி யாகும். சொல் வகை ஆங்கிலம் தமிழ் மொத்தம் இலத்தீன் தூய மொத்தம் வட தனித் ஆங்கிலம் மொழி தமிழ் பெயரும் 43 14 29 53 21 32 பெயருரியும் 20 7 13 34 7 27 வினை எண்ணுப் பெயர் 5 0 5 6 1 5 “ஆயிரம்” என்பது வடமொழிப் பெயர். அதனாலேயே எண்ணுப் பெயரி னெதிரில் வடமொழியின் கீழ் `1’ என்று காணப்படுகிறது. மொத்தமாகக் கணக்கிட்டால் ஆங்கிலத்தில் வரும் இலத்தீனும், தமிழில் வரும் வடமொழியும் ஒரேபடித்தாக நூற்றுக்கு 45 விழுக்காடு ஆகிறது. இரண்டிலும் இடப்பெயர்கள், உரிச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், இலக்கண உறுப்புக்கள் இவை முற்றிலும் தாய்மொழியைச் சேர்ந்தவையே யாகும். ஆங்கிலமொழி தன் வளர்ச்சிமுறையில் தூய ஆங்கிலோ சாக்ஸன் மொழியிலிருந்தும், இலத்தீன் மொழியிலிருந்தும் எவ்வகையில் உதவிபெற்றிருக்கிறது என்பதை ஆங்கில சமயத் தலைவர் ட்ரெஞ்ச்7 பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார். “இம் மொழியி (ஆங்கிலம்) னுடைய இணைப்புகள், ஒலி முறை, நாடி, நரம்புகள், தசை நார்கள், இடச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், எண்ணுப் பெயர்கள், துணை வினைகள், யாப்பு முறைக்குப் பயன்படும் சிறுசிறு அசைச் சொற்கள், இலக்கண முறையமைப்பு ஆகியவை எல்லாம் தனிப்பட்ட ஆங்கிலோ சாக்ஸனே. இத் தெய்விகக் கட்டிடத்திற்கு இலத்தீன் மொழி உதவியவை செங்கற்களும், நன்கு செதுக்கிக் கடைசலிடப் பட்ட சலவைக் கற்களுமேயாம்; ஆனால் இவை யெல்லாவற்றையும் பதித்துப் பிணைத்துக் கட்டிடமாக எழுப்புவிக்க உதவிய நீறு, சுண்ணாம்பு, சாந்து எல்லாம் தூய ஆங்கிலோ சாக்ஸனே”. இக்கூற்று அப்படியே திராவிடத்திற்கும் வடமொழிக்கும் பொருந்துவதாகும்; மேற் பகுதியில் “ஆங்கிலோ சாக்ஸன்” என்று வருமிடங்களி லெல்லாம், “திராவிடம்” என்பதையும், “இலத்தீன்” என்று வருமிடங்களிலெல்லாம் “வடமொழி” என்பதையும் அமைத்துக்கொண்டு படித்தால் திராவிட மொழிக்கும் வடமொழிக்கும் இடையே எத்துணை யுறவு இருக்கிற தென்பது தெள்ளத் தெளிய விளங்கும். மேற் “பத்துக் கட்டளைகள்” என்ற தமிழ் விவிலிய நூற்பகுதியில் காணப்படும் வடசொற்றொகையும் ஆங்கில நூற்பகுதியில் காணப்படும் இலத்தீன் சொற்றொகையும் வியக்கத்தக்க வண்ணம் ஒன்றாகக் காணப்படுகின்றதென்பதை அறிந்தோம். அதனால் ஆங்கிலம் இலத்தீனுக்கு எவ்வளவிற்குக் கடன்பட்டுள்ளதோ, அவ்வளவிற்குத் தமிழ் வடமொழிக்குக் கடன்பட்டிருக்கவேண்டும் என்று சொல்வது தவறாகும். ஆங்கிலப் பகுதி தன்மாட்டுள்ள இலத்தீன் சொற்களை நீக்கிவிட முயன்றால், அதன் பொருள் நுட்பங் கெட்டுவிடும். ஆனால், தமிழ்ப் பகுதி தன்மாட்டுள்ள வடசொற்களில் பெரும் பகுதியையோ, அன்றி முழுவதையுமோ நீக்கிவிட்டுத் தக்க தமிழ்ச் சொற்களைப் பெய்துகொண்டால் எவ்வகையிலுங் குறைவுறாது; அவ்வாறு நீக்குவதால் அதன் தூய்மை மாற்றும், செம்மைப் பண்பும் உயர்ந்தொளிருமேயன்றிக் குறைந்து மங்கா இலத்தீனி லிருந்து பெற்ற சொற்களிற் பலவற்றிற்கு ஆங்கிலோ சாக்ஸனில் நேர்ச் சொற்கள் கிடையா; எனவே, அச் சொற்களை நீக்கிவிடுவ தென்றால் அவற்றின் கருத்துக்களை நீண்ட, அழகற்ற சொற் றொடர்களால் தான் விளக்கவேண்டும். ஆனால் தமிழோ, தனிப்பட்ட வகையில் சொல்வளம் நிறைந்தது. அப்படியிருக்க அ/தேன் வடசொற்களை எடுத்தாண்ட தென்றால், சொல்வள மின்மையானன்று; புதுமை கருதியேயாம் என்று விடுக்க. “பத்துக் கட்டளைகள்” என்ற விவிலிய நூற்பகுதியை நாட்டுப்புறத் தாழ்ந்த மக்களின் பேச்சு முறையில் அமைத்தால், அதிலுள்ள வடசொற்களின் தொகை மிகவுங் குறைந்துவிடும். அதனையே செம்மைப்படுத்தித் திருத்தி இலக்கிய நடையில் அமைப்போ மானால், அதில் எஞ்சியுள்ள ஒன்றிரண்டு வடசொற்களும் மாயமாய்ப் போய்விடும். அப்பகுதியிற் காணப்படும் வட சொற்களுள் ஒன்றே ஒன்றிற்குத்தான் குற்றஞ் சொல்லாத வகையில் நேர்த் தமிழ்ச்சொல் அமைக்க முடியாது. அச் சொல் “விக்கிரகம்”8 என்பது. அச் சொல்லும் அதன் கருத்தும் தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கொள்கைகளுடக்கும் புறம்பானவை. பார்ப்பனர்களால் புராணக் கருத்துகளோடும், “விக்கிரக ஆராதனை முறை” என்னும் உருவ வழிபாட்டோடும், இச் சொல்லும் கருத்தும் தமிழ்நாட்டினுள் புகுத்தப்பட்டன வாகும். பார்ப்பனவர்களின் சமயத்திற்கு இந் நாட்டில் முதலில் இருந்த செல்வாக்கினாலேயே, சமயக் கருத்துக்களைத் தெரிவிப்பனவாய்த் தமிழ்நூற்களிற் காணப்படும் சொற்களிற் பெரும்பாலன வடசொற்களாகவோ, அச்சொற் சிதைவு களாகவோ காணப்படுகின்றன. ஏற்ற திராவிடச் சொற்கள் இல்லை என்பதில்லை; முற்றிலும் ஏற்றவையும், ஒரோவழி வடசொற்களிலும் சிறந்தனவாகவுங் கொள்ளக் கூடிய சொற்கள் உள. அவை யெல்லாம், இன்று வழக்கிழந்து, மறைந்து, செய்யுள் வழக்கில்மட்டும் அருகி வழங்குகின்றன. தமிழ்க் கல்வி மங்கியுள்ள இந்நாளில், உரைநடையில் அச் சொற்கள் வழங்குமேல் அந் நடை மிகவும் கரடுமுரடான தென்றும், கடபடாம் போன்ற தென்றும் கருதி இகழப்படும். தமிழ்ச் சமய நூல்களில் வடசொற்கள் பொதுவாக எடுத்தாளப்பட்டுள்ளமைக்கு இதுவே, உண்மை யான காரணமும், ஒரே காரணமுமாகும். ஏனைய திராவிட மொழிகளில் எப்பொருளைக் குறித்தெழுந்த கட்டுரையாயினுஞ் சரி, செய்யுளாயினுஞ் சரி, அதன்கண் மிகுதியான வடசொற்கள் பயின்றிருக்கக் காணலாம். அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல; கிட்டத்தட்ட இன்றியமையாதனவாகவே கருதிக் கையாளப் பட்டுள்ளன. இந்த நிலைமை வந்ததற்குக் காரணம் அம்மொழிகளின் இலக்கிய வளர்ச்சி முதன்மையாகப் பார்ப்பனர்கள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளமையேயாம். தெலுங்கு மொழியை யெடுத்துக்கொண்டால், அம் மொழியில் இலக்கண நூல்கள் எழுதியவர்களுள்ளும், இலக்கியங்கள் எழுதியவர்களுள்ளும் முதன்மையானவர்களும், பெயர் போனவர்களும் பார்ப்பனர்களே. அம்மொழியிற் காணப்படும் நூல்களுள் ஒன்றே ஒன்றுதான் பார்ப்பன ரல்லாதாரான ஆசிரியரொருவரால் இயற்றப்பட்ட தாகும். உண்மையாகப் பார்த்தால், தெலுங்குமக்கள் என்று அழைப்பதற்கு எவ்வகையிலும் உரியரான தெலுங்குப் பார்ப்பன ரல்லாத தொகுதியினர் தங்கள் மொழிவளர்ச்சி, கலைவளர்ச்சி ஆகியவற்றைப் பார்ப்பனர்களிடமே ஒப்படைத்து விட்டவர் களாகக் காணப்படுகின்றார்கள். தமிழிலோ இப்படியில்லை. நூல் என்ற பெயருக்குரியன வாய்ப் போற்றிச் சேமித்துவைக்கவேண்டிய வகையில் பார்ப்பனர் களால் எழுதப்பட்டனவாய்க் காணக்கூடியவை மிகமிகச் சிலவே. தமிழ்மக்களால் அவர்களுடைய தாய் மொழியாகிய தமிழின் வளர்ச்சியும், கலையும், நாகரிகமும் பண்டுதொட்டுக் கண்ணுங் கருத்துமாய் ஆர்வத்துடனும் வெற்றியுடனும் போற்றப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய ஆசிரிய வரிசையில் பார்ப்பனர்கள் எய்தியதெல்லாம் உரையாசிரியர் என்ற நிலைக்கு மேற்பட்ட தில்லை. தாழ்ந்த வகுப்பினராய திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்குப் பார்ப்பனரான பரிமேலழகர் என்பார் வகுத்துள்ள உரையே மிகவுஞ் சிறந்ததொன்றாகப் பாராட்டப் படுகிறது. தென்பகுதியில் பேசப்படும் மொழிகள் வடமொழியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டபோதிலும், தனிப்பட்ட இலக்கிய வளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவற்றுட் சில விரும்பி முயன்றன என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிற் காணப்படும் முதன்மையான இலக்கியங்க ளெல்லாம் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்போ, அன்றி விரிவுரையோ ஆதல்வேண்டும் என்றும், அவ் விரிவுரையெழுது வதிலும் வடமொழித் தெடர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் உவில்ஸன்9 என்பவர் கூறுகிறார். தமிழைப்பற்றிய வரையில் இக் கூற்று ஒப்பத்தக்கதன்று. தமிழில் இரண்டு ஒப்பற்ற சிறந்த நூல்களாக உலகத்தோரால் கருதப்படுவன குறளும், சிந்தாமணியுமாம். இவ் விரண்டும் முற்றிலும் வடமொழித் தொடர்பற்றவை. தமிழாசிரியர்கள் வடமொழி நூலமைப்பையும் நடையையும் பின்பற்றியிருக்கக் கூடும்; தொடருக்குத் தொடர் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. தமிழ் இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் இவ்வாறு எழுந்தவேயாம். தமிழர் தங்கள் கம்பராமாயணம் முதனூலாகிய வால்மீகி இராமாயணத்தினும் மிகவுஞ் சிறந்தது என்று உரிமை பாராட்டுவதே இதற்குச் சான்றாகும். (5) மொழிகளுள் ஒன்றற்கொன்றனிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கப் பெரிதும் பயன்படும் முறைகள் மிகவும் முடிவானது அம் மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பதேயாம். அம் முறைப்படி திராவிட மொழிகள் வடமொழியினும் வேறானவை யென்றும், திராவிட மொழிகளை இந்து -ஐரோப்பிய மொழியினத்தோடு இணைப்பதைவிட, சித்திய மொழியினத் தோடு இணைப்பதே சால்புடைத்தாகும் என்றும் துணிந்து கூறலாம். அடிக்குறிப்புகள் 1. னுசயஎசையள. 2. ழுயரசயள 3. ஐனேடி-நுரசடிநியn. 4. ளுஉலவாயைn. 5. குinniளா 6. னுiஉவiடியேசநைள. 7. ஹசஉhbiளாடியீ கூசநnஉh. 8. ஐஅயபந. 9. ஞசடிகநளளடிச றுடைளடிn 5. இலக்கண அமைப்பில் வடமொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் (i) திராவிட மொழிகளில் உயிரற்ற பொருள்கள் மட்டுமன்றி, பகுத்தறிவற்ற உயிர்களும் பொதுப்பால் (அ/றிணை) ஆகவே மதிக்கப்படுகின்றன. ஆண்பால், பெண்பால் வகுப்பு, இடப் பெயர்கள், அதிலும் படர்க்கையில் மட்டுமே, காணப்படுகிறது. பெயருரிச் சொற்களிலும், படர்க்கை வினைகளிலும் இப் படர்க்கைப் பெயரின் திரிபே விகுதியாய் நின்று பால் உணர்த்துகின்றது. உயிர்வகைகளின் பெயர்கள் பால்வகை காட்டவேண்டின் ஆண் பெண் என்ற பெயர்களைச் சேர்த்தேயாகவேண்டும்; அப்போதும் அவை ஆண் அல்லது பெண் பாலாவதில்லை; பொதுப்பாலேயாகும். ஏனெனில், அவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களும், அவற்றின் பயனிலையான வினைகளும் பொதுப்பால் (அ/றிணை) முடிவையே கொள்ளல்வேண்டும். இத்தகைய பால்வகுப்பு வடமொழி முதலிய இந்து - ஐரோப்பிய மொழிகளின் பகட்டான புனைவியல் பால்பாகுபாட்டினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சித்தியக் குழுவின் வழக்குக்கு இ/து ஒத்தது. (ii) திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்கும்போது விகுதியேற்று உருமாறுவ தில்லை; அச் சொற்களினின்று எளிதில் பிரிக்கக்கூடிய பின் அடைகள் அல்லது உருபுகளையே ஏற்று மாறுகின்றன. மேலும் பன்மைப் பெயரின் வேற்றுமை யுருவானது உருபுகளை ஏற்குமுன் பன்மை விகுதி பெறுவதொன்றைத் தவிர மற்றெவ்வகையிலும் ஒருமை வேற்றுமை யுருவிலிருந்து மாறுபடுவதில்லை; சித்திய மொழிகளும் இவ்வாறே.1 (iii) திராவிட மொழிகளின் அ/றிணைப் பெயர்களுக்குப் பன்மை பெரும்பாலும் வழங்குவதில்லை; வினைச் சொல்லில் இ/து இன்னும் அருமை. (iஎ) திராவிட மொழியின் நான்காம் வேற்றுமை யுருபாகிய கு-கி-அல்லது கெ வடமொழி அல்லது இந்து - ஐரோப்பிய (ஆரிய) மொழிகளிலுள்ள எந்த வேற்றுiமை விகுதியுடனும் ஒத்ததாக இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது கீழைத் துருக்கியுடனும்2, பெஹிஸ்தன்3 பட்டயங்களுடனும் பின்னிஷ் மொழியினங்களுடனும் தொடர்புடைய தாயிருக்கின்றது. (எ) இந்து-ஐரோப்பிய மொழிகளில் முன்னுருபுகள்4 அல்லது ஒட்டுக்கள் (பிரத்தியயம்) பயன்படுத்தப்படும் இடங்களில் எல்லாம் திராவிட மொழிகளும், சித்தியக் குழுமொழிகளும் பின்னுருபுகளை அல்லது ஒட்டுக்களைப் பயன்படுத்துகின்றன. இவ் உருபுகளும், ஒட்டுக்களும் இலக்கண முறைப்படி தனிச்சொல்வகைகள் அல்ல, பெயர்ச்சொல் திரிபுகளேயாம். இவ்வாறே அவற்றின் வினை உரிச்சொற்களும் பெயர் அல்லது தொழிற் பெயர் அல்லது வினையெச்சங்களே யாகும். அவை எப்போதும் தாம் தழுவும் வினைகளுக்கு முந்தியே வருகின்றன. (எi) வடமொழியிலும், இந்து - ஐரோப்பிய மொழிகளிலும் பெயருரிச் சொற்கள் பெயர்ச் சொற்களைப் போலவே பால், எண், இடம் ஏற்கின்றன. திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் அவை பால் முதலியவை ஏற்பதில்லை. இப் பெயருரிச் சொற்கள் உண்மையில் பண்புப் பெயர்களிலிருந்து வந்தவையே யாகும். பண்புப் பெயர் என்று தனிப்பட நிற்கும்போது, அவை பிற பெயர்கள் போலவே திணை பால் முதலியவை ஏற்பினும், பிற பெயர்களுடன் ஒட்டப்பெற்று உரிச்சொல்லாகப் பயன்படும்போது அங்ஙனம் ஏற்பதில்லை. (எii) இன்னொரு வகையில் திராவிட மொழிகள் மங்கோலியம், மஞ்சு முதலான சித்திய மொழிகளுடன் ஒத்தும் இந்து - ஐரோப்பிய மொழியீனத்துடன் மாறுபட்டும் உள்ளன. அ/தாவது, இயலும்போ தெல்லாம் இம் மொழிகள் பெயருரிச் சொல்லை வழங்காமல், வினைச்சொல்லின் பெயரெச்ச உருபையே வழங்குகின்றன. (உயர் மரம் - என்பதற்கு உயர்ந்த மரம் என்பதுபோல என்க.) இவ்வழக்கத்தின் பயனாய்ப் பண்புப் பெயர்களைப் பெயருரியாக வழங்கும்போது கூட, அதனுடன் பெயருரிச்சொல் விகுதியாக `ஆன’ என்ற பெயரெச்சம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. (சிவப்பான) (எii) தன்மைப் பன்மையில் முன்னிலையை உட்படுத்தியும் உட்படுத்தாமலும் இரண்டு வகைகள் திராவிட மொழிக்கும், சித்திய மொழிகளுக்குமே சிறப்பாக இருக்கின்றன. வடமொழி யிலும், இந்து -ஐரோப்பிய மொழியிலும் இங்ஙனம் இல்லை. இதனை யொப்பதாய் ஒருவாறு குறிக்கக்கூடியது பிற்குறித்த மொழிகளிலுள்ள இருமை5 என்ற எண்ணேயாகும். (iஒ) திராவிட மொழிகளில் செயப்பாட்டு வினைக்குத் தனி வடிவம் கிடையாது. படு என்னும் துணைவினை சேர்க்கப்பட்டே அப் பொருளில் வழங்கப்படுகிறது. (ஒ) திராவிட மொழிகளும், சித்திய மொழிகளும் இந்து - ஐரோப்பிய மொழிகளைப் போல இணைப்பு இடைச் சொற்களைப்6 பயன்படுத்தாமல் “செய்து” என்ற வினையெச்சத்தையே வழங்குகின்றன. (ஒi) உடன்பாடு, எதிர்மறை என்ற இவ் விரண்டு வினை வடிவங்களிருப்பது திராவிட மொழிகட்கும், வடமொழிக்கும் இடையே காணப்படும் தலையாய வேற்றுமைகளுள் ஒன்று. சித்திய மொழிகளுடன் திராவிட மொழிகளுக்கு உள்ள ஒப்புமைகளில் இது தலைமையானதாகக் காண்கிறது. (ஒii) திராவிட மொழிகள், மங்கோலியம், மஞ்சு, முதலியவை, ஓரளவுக்குப் பிற சித்திய மொழிகள் ஆகிய இவற்றின் தனிப்பட்ட சிறப்புப் பண்புகளுள் ஒன்று இணைப்பு இடப்பெயர்களினிடமாகப் பெயரெச்சங்கள்7 வழங்குவதாம். இப்பெயரெச்சம் முக்காலங்களிலும் உள்ள வினையெச்சத்துடன் ஆறாம் வேற்றுமை உருபோடொத்த அ-என்னும் சாரியை பெற்று வந்தது ஆகும். திராவிட மொழிகள் எதனிலும் இணைப்பு இடப்பெயர் என்பதன் நிழல்கூடக் காணப்படவில்லை. கோண்டு மொழியில் மட்டும் வினையெச்சங்கள் இல்லாமல் ஒழிந்து போனதை ஒட்டி, ஹிந்தி மொழியின் இணைப்பு இடப்பெயர் கையாளப்பட்டு வருகிறது. (ஒiii) திராவிட மொழிகளிலும், சித்திய மொழிகளிலும் தழுவு மொழிகளும், தழுவு தொடர்களும் தழுவப்படும் மொழிக்குப் பின்னதாகவே வருகின்றன. இந்து - ஐரோப்பிய மொழி இனத்தில் அவை பொதுவாக முன்வருகின்றன. எனவே, இம் மொழிகள் அனைத்திலும் வாக்கியத்தின் முதலில் எழுவாயும், முடிவில் பயனிலையும், எழுவாய் அடை8 எழுவாய்க்கு முன்னும், இடையில் செயப்படுபொருளும் வினை அடைகளும் ஆகவருகின்றன; பெயரடைகளும் பெயரெச்சங்களும் பெயரின் ஆறாம் வேற்றுமையும் பெயருக்கு முன்னும், இட உருபுகளும் கால உருபுகளும் பெயருக்கு முன் அன்றித் தாம் தழுவும் பெயர்களுக்கும் அவற்றின் வேற்றுமை உருபுகளுக்கும் பின்னாகவும் வருகின்றன. வினை யெச்சங்களும் வினை அடைகள் போல வினைக்கு முன்னாகின்றன. எல்லாவற்றையும் தழுவும் வினைமுற்று இறுதியிலேயே நிற்கிறது. இவ்வாறு சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு முறையிலும் சித்திய மொழிகள் திராவிட மொழிகளை ஒத்தே இருக்கின்றன. மேற்கூறிய இலக்கண அமைதிகளிலெல்லாம் திராவிட மொழிகள் பொதுவாக இந்து - ஐரோப்பிய மொழிகளினின்றும் வேறுபட்டே இருப்பதும், நெடுநாள் கலந்து வாழ்ந்துங்கூட வடமொழியினின்றும் இன்னும் வேறுபட்டே யிருப்பதும் காண்க. அதே சமயத்தில், எங்கெங்கோ நடு ஆசியாவிலும், வடஆசியாவிலும் சிதறிக் கிடக்கும் சித்திய மொழிகளுடன் அவை பொருந்தி இருப்பது கவனிக்கத் தக்கது. திராவிட மொழிகள் வேறு, வடமொழி வேறு என்பது மேற்கூறியவற்றால் நன்கு தெரியப்படும். திராவிட மொழிகள் வடமொழியிலிருந்து பெறப்பட்டன அல்ல; அன்றி அதனுடன் சேர்க்கப்படக்கூடிய பண்புடையனவுமல்ல. சில குறிப்பிட்ட இடங்களில் வடமொழி பிற இந்து - ஐரோப்பிய மொழிகளைவிடச் சித்திய மொழிக் குழுவுடன் உறவுடையதாய்த் தோற்றுவது ஒரு வேளைப் பழங்குடிகளுடன் உள்ள நெடுநாட் பழக்கத்தைப் பொறுத்ததாயிருக்கலாம். இவற்றுள் ஒன்று, வடமொழியீல் (ட ண ஷ) என்ற நாஅடி அண்ண மெய்கள் இருப்பனவாகும். இவ் வகையில், “மொழியியலில் சீனத்தின் இடம்”9 என்ற நூலில் எட்கின்ஸ் என்பார் கொண்ட புதிய கொள்கையைக் குறிப்பிடல் வேண்டும். உருபின்றி விகுதியிலேயே பெயர்களின் வேற்றுமை அமைதல் சொல்லொழுங்கு, தழுவு வாக்கியங்கள் தலைவாக்கியத்திற்கு முன்வரல், வினைமுற்று இறுதியில் நிற்றல் ஆகிய இலக்கண அமைப்புக்களுள் வடமொழி ஆரிய இனத்தைவிடத் துரானிய இனத்தையே பின்பற்றியுள்ளது என அவர் கூறுகிறார். ஆனால், வடமொழியை விட இவ்வகையில் இன்றைய வட இந்திய உண்ணாட்டு மொழிகளே விலக்கின்றி முற்றிலும் இவ் வொழுங்கைப் பின்பற்றுகின்றன. வடமொழி உரைநடையில்கூட ஒன்றிரண்டிடங்களில் இவ் வொழுங்குக்கு மாறுபாடு ஏற்படுகிறதென்பதை எட்கின்ஸே எடுத்துக்காட்டுகிறார். ஆயினும் பொதுப்பட உரைநடையில் இவ் வொழுங்குப்படி வினைமுற்றே ஈற்றிலும், தழுவு வாக்கியங்கள் முன்னும் வருகின்றன. ஆனால், இக் கொள்கை நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க உறுதிப்பாடு உடையதன்று; ஏனெனில் சொல் ஒழுங்கு ஒன்றையேபற்றி வகைப்படுத்துவதாயின் கிரேக்க மொழியைவிட இலத்தீனும், ஆங்கிலத்தைவிட ஜெர்மனும் துரானியச் சார்புடையவை என்று கூறவேண்டி வரும். அடிக்குறிப்புகள் 1. வடமொழியிலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் ஒருமைக்கும், பன்மைக்கும் ஒவ்வொரு வேற்றுமையிலும் வெவ்வேறு விகுதிகள் உள. 2. டீசநைவேயடகூரசமiளா. 3. க்ஷநாளைவரn கூயடெநவள. 4. ஞசநயீடிளவைiடிn 5. ஒருமை பன்மை என்பதின்றி ஒருமை, இருமை, பன்மை என்று என் மூன்று வழங்கும். 6. ஊடிதேரnஉவiடிளே. 7. சுநடயவiஎந ஞசடிnடிரளே. 8. ஹனதரnஉவள. 9. “ஊhiயே’ள யீடயஉந in ஞாடைடிடடிபல” - ஆச. நுனமiளே. 6. திராவிடமும் வட இந்திய மொழிகளும் திராவிட மொழிகள் வடமொழியிலிருந்து பெறப்பட்டவையே, அவற்றுள் வடமொழிச் சார்பற்றனவாகக் காணக்கிடக்கும் சொற்கள் யாதோ ஒரு பண்டைப் பாகத மொழியிலிருந்து பெறப்பட்டவை என்று கொண்டிருந்த கொள்கைகள் இரண்டும் பிழைபட்டன வென்று காட்டப்பட்டது. எனவே, அறிஞர் சிலர் இவற்றிற்கு நேர்மாறான கொள்கை யொன்றைக் கூற முன்வந்தனர். வடமொழியிலிருந்து கிளைத்த வட இந்திய மொழிகளுள் காணப்பெறும் பிறமொழிக் கலப்புத் திராவிட மொழிகளின் கூட்டுறவால் ஏற்பட்டதுதான் என்பது இப் புதுக் கொள்கை. இக் கொள்கையைப் பரப்பியவர்களில் தலையானோர் பம்பாயைச் சார்ந்த ரெரெண்ட் டாக்டர் ஸ்டீவென்சன்1 என்பவரும், நேபாளத்தைச் சார்ந்த ஹாட்ஜ்ஸன்2 என்பருவமே. இவர்கள் கருத்து (1) வட இந்திய மொழிகள் இயற்கைத் தாக்குதல்களாலும், கால மாறுபாட்டாலும் வடமொழியிலிருந்து கிளைத்தவையல்ல; ஆனால், வடமொழியல்லாத பிற மொழிகளின் ஆற்றல் மிக்க கலப்பினால் சிதைவுற்றனவேயாம். (2) இப் பிறமொழிகள் திராவிடப் பேச்சுடன் ஒப்புமையுடையன; இத் திராவிடப் பேச்சே, பண்டை நிஷாதர்கள் பேச்சும், பிற பழங்காலக் குடிகளின் பேச்சுமாகும் என்பதே. இவ்விரு பகுதிகளுள் முன்னையது பின்னையதைவிட உறுதிப்பாடுடையதாகும்; ஆனால் அதுவும் ஒருவாறு மிகைபடக் கூறப்பட்டதென்றும், அதனைத் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. ஏனெனிற் கூறுதும்: முதன்மையான சிலவற்றை நோக்க வடமொழி ஹிந்தியாகவும், வங்காளமாகவுந் திரிபுற்றது இயற்கை மாறுதலே என்று நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இலத்தீனிலிருந்து எப்படி இத்தாலியமும், ஸ்பானிஷும் கிளைத்தனவோ, அப்படியேதான் இவையும். ஆனால், வடமொழி இலக்கண அமைப்போடும் பண்புச் சிறப்புக்களோடும், வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பையும் பண்புச் சிறப்புக்களையும் ஒப்பிட்டு நோக்கினால், அவற்றிடையே காணப்படும் வேற்றுமைகள் ஆரியச் சார்பற்ற தாக்குதல்களின் பயனே என்று ஒருவாறு தெளியலாம். அதிலும், பல்வேறுபட்ட வட இந்திய மொழிகளு ளெல்லாம் ஒரேபடித்தான இலக்கண வேற்றுமைகள் காணப்படு கின்றமை கொண்டு, இதற்குக் காரணம் பொதுப்பட்ட ஒரு தாக்குதலாகவே இருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கப் படும். “நாகரிக காலத்திற்கு முற்பட்ட பழங்காலச் சுவடுகளாகிய பண்டைய, செம்மைப்படாத முரட்டு மொழிச்சொற்களே” இதற்குக் காரணம் என்று பேராசிரியர் உவில்ஸன் கூறுகிறார். பொதுவாகவே, வட இந்திய மொழிகளுள் இத்தகைய தாக்குதல் பத்தில் ஒருபங்கும், மராத்தி மொழியில் மட்டும் ஐந்தில் ஒருபங்குந்தான் என்று கணக்கிடப்பட்டுள்ளமையால், ஆரியச் சார்பற்ற கலப்பே காரணம் என்பது நன்கு தெளியப்படும். வடமொழி பேசிய பார்ப்பனர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற வகுப்பினர்களடங்கிய ஆரியர்கள் வருகைக்கு முன்னே, வட இந்தியாவின் பெரும் பகுதியில் “தஸ்யூக்கள், நிஷாதர், மிலேச்சர்” என்று அவர்களால் அழைக்கப்பட்டு வந்த பழங்குடி மக்களே வாழ்ந்து வந்திருந்தனர் என்பதும், அம் மக்கள் சித்திய இனத்தையோ, அன்றி ஆரியச் சார்பற்ற வேறோர் இனத்தையோ சேர்ந்தவர்கள் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். இப் பழங்குடிமக்கள் பேசிய திருந்தாத சித்திய மொழிச், சொற்கள், படையெடுத்து வந்து வெற்றிபெற்ற ஆரியர்கள் தம் சொல்வளமும், பொருண்மையும் நிறைந்த வடமொழி வெள்ளத்தில் ஆழ்ந்து போய்விடுதல் இயல்பே. எனினும், அப் பழங்குடி மக்களின் மொழி ஒரேயடியாய் அழிந்தொழியாமல், தன்னை விழுங்கவந்த வடமொழியையே உரங்கொண்டு தாக்கிக் கலக்கித் தன்னுடைய சொற்களிற் சிலவற்றைப் புகுத்திப் புதியதொரு மதுகையையும் நடைப் போக்கையும் அது மேற்கொள்ளச் செய்திருக்கவேண்டு மென்பது பின்வருங் காரணங்களால் ஊகிக்கப்படும்: (1) சித்திய மொழியின் இலக்கண அமைப்பு நிலையானதும், எதிர்ப்புக்கு ஈடுகோடுக்கும் ஆற்றலும் வாய்ந்தது. (2) ஆரியர்களை நோக்க அப் பழங்குடிகள் தொகையில் மிகுந்தவர்களா யிருந்தனர். (3) அதனால், அவர்களை ஆரியரால் அறவே அழித்தொழிக்க முடியவில்லை. (4) முதற்கண் அடிமைகளாக்கப்பட்டு நாளா வட்டத்தில் ஆரியக் கூட்டத்தினருடனே சேர்க்கப்பட்டனர். இக் கொள்கை மற்றெக் கொள்கைகையும் விட இன்றைய நிலைமையைத் தெளிவுபட விளக்குகிறது. வட இந்திய மொழிகளுள் சொல்தொகுதியில்மட்டுமே வட மொழிச் சார்பு மிகுதியாயிருப்பதும், இலக்கண அமைப்பு சித்திய மொழிச் சார்புடையதா யிருப்பதும், நோக்க., அம்மொழிகள் சித்தியப் பகுதியுடன் கலந்த ஆரிய அடிப்படையுடையவை என்பதைவிட, ஆரியத்துடன் கலந்த சித்திய அடிப்படையை உடைய மொழிகள் என்று கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும். இம் மொழிகளுள் “தாத்தாரிய அல்லது சால்டிய”3 (அதாவது சித்திய)க் கலப்பு உள்ளது என முதன்முதல் கூறியவர் சர். உவில்லியம் ஜோன்ஸ்4 ஆவர். இதனை மறுப்பவருள் தலையானவர் ஹிந்தி மொழியைப் பற்றி, 1872 ஏப்ரில் இண்டியன் ஆண்டிக்கவரி5 என்ற வெளியீட்டில் கட்டுரை ஒன்றெழுதிய கிரௌஸ் பி.ஸி.எஸ்6. ஆவர். அவர் ஹிந்திமொழி ஒன்றை மட்டும் ஆராய்ந்துள்ளார்; அதிலும் இலக்கண அமைப்பை விட்டுச் சொல் தொகுதி ஒன்றை மட்டுமே ஆராய்ந்துள்ளார். ஆகையால் இன்னும் இத்துறையில் நுணுகி ஆராய்ந்து முடிபு காணும் வரையில், சித்திய அடிப்படை முடிபே நிலவி வரும். இனி, டாக்டர் ஸ்டீவென்ஸன் கொள்கையின் பின்னைய பகுதியை நோக்குவோம். வட இந்திய மொழிகளில் வட மொழியல்லாத பிற மொழிக் கலப்பு இருக்கிறதென்பது ஒப்புக்கொள்ளப்படின், அப் பிறமொழி திராவிட மொழி யினத்தைச் சேர்ந்ததே என்பது அப் பகுதியாகும். இக் கொள்கை அவ்வளவு திட்டமாக ஆராய்ந்து நிறுவப்படுவதொன்றன்று. (வட இந்திய மொழிகளாயினுஞ் சரி, தென்னிந்திய மொழி களாயினுஞ் சரி,) எல்லாவற்றுள்ளும், சித்திய மொழிக் கலப்போ, திராவிட மொழிக் கலப்போ பெரும்பாலும் ஒரே படித்தானது. (2) ஆரியரால் முதலில் கைப்பற்றப் பெற்ற வட இந்தியக் கோட்டங்களள் அக் கலப்பின் அளவு மிகவுங் குறுகியது. (3) சற்றுச் சேய்மையிலுள்ள தக்காணம், தெலிங்காணம், மைசூர் ஆகிய இடங்களில் அக் கலப்பின் அளவு சற்றுப் பெருகியது. (4) நில மூக்கின் தென்கோடியில் இருப்பதும், மனுவின் காலத்திலும், இராமாயண காலத்திலும் பார்ப்பன ஆதிக்கம் கார்த்திகைப் பிறைபோல் இருந்துவரப்பெற்றதுமாகிய தமிழ் நாட்டிலோ அது மிகப் பரந்து பெருகியிருந்தது. முதற்கண், இம்முடிபு பண்டைய இந்திய வரலாற்றின் போக்கோடு ஒத்ததாகவே காணப்படும். எனினும், மொழி யாராய்ச்சிக் கண்ணாடிகொண்டு பார்க்கின் வட இந்தியப் பழங்குடி மக்களும், தென்னிந்தியப் பழங்குடி மக்களும் ஒரே இனத்தார் என்று சொல்லிவிடுவதற்கில்லை. வடஇந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு சித்திய மொழிகளோடு ஒத்திருப்பதானாலும், திராவிட மொழிகளுடன் சிறப்பாக ஒத்திருப்பதாகக் காணப்படவில்லை. வட இந்திய மொழிகளுள் காணப்பெறும் வடமொழிச் சார்பற்ற பகுதி திராவிட மொழி களோடு எவ்வளவு தொடர்புடையதாக் காணப்படுகிறதோ, அவ்வளவிற்குக் கீழைத் துருக்கிய மொழிகளுடனோ, அன்றிச் சித்திய மொழிகளுடனோடு தொடர்புடையதாகவுங் காணப்படுகிறது. ஆதலால் மேற்கொள்கை எளிதில் ஒப்புக் கொள்ளக் கூடியதொன்றாக இல்லை. வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும், திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பிற்கும் உள்ள தலைமையான ஒப்புமைகள் கீழ்வருபவையாம்: (1) பெயர்ச்சொற்களின்பின் உருபுகள் சேர்ந்து வேற்றுமைகள் உண்டாதல். (2) பன்மைப் பெயர்களின் வேற்றுமை ஒருமையினின்றும் வேறுபடாமல் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின் வேற்றுமை உருபுகளைச் சேர்ப்பதனால் உண்டாதல். (3) வட இந்திய மொழிகள் பலவற்றுள் திராவிட மொழிகளைப் போலவே தன்மைப் பன்மையின் முன்னிலையை உளப்படுத்தி ஒன்றும், விலக்கி ஒன்றுமாக இரண்டு வடிவங்கள் இருத்தல். (40 உருபுகளும், ஒட்டுக்களும் பெயருக்குமுன் வராமல் பின்வருதல். (5) வினைச்சொல்லின் காலத்தை இடைநிலை முதலிய உறுப்புகள் காட்டல். (6) தழுவு வாக்கியங்கள் தலைமை வாக்கியத்தின் முன் வருதல். (7) தழுவும் மொழி தழுவப்படும் மொழிக்குப் பின் வருதல். வட இந்திய மொழிகள் திராவிட மொழிகள் ஆகியவற்றின் இலக்கண அமைப்பில் இத்தகைய ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், இவற்றால் இவ் விரண்டு மொழியினங்களுக்கும் நேரான உறவு உளதெனக் கூறிவிடுதற்கில்லை. ஏனெனில், இவ் வொப்புமைகள் திராவிட மொழிகளோடுமட்டும சிறப்பாகக் காணப்படும் ஒன்றுமைக் களாகாமல், சித்திய இனத்தைச் சேர்ந்த மொழியினங்கள் பலவற்றோடும், ஒரே வகையில், ஒரே அளவில் காணப்படும் பொதுப்படையான ஒப்புமைகளாகின்றன. துருக்கிய மங்கோலிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே காணப் படும் வேற்றுமைகளில் யாதொன்றும், வட இந்திய மொழிகளிற் காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக, சித்திய மொழியினங் களிலில்லாத பெயரெச்சத்தை எடுத்துக் கொள்வோம். இது கொடு ஒன்று நீங்கலாக ஏனைய திராவிட மொழிகள் எல்லா வற்றிலும் உளது; ஆனால் வட இந்திய மொழிகள் ஒன்றிலும் இல்லை. அதைப் போன்றே, திராவிட மொழிகளில் எல்லா வினைத்திரிபுகளுக்கும் ஒழுங்காக எதிர்மறைவினை இருக்கின்றது. அவற்றுள் எதுவும் வட இந்திய மொழிகளில் இல்லை. திராவிட மொழிகளிற் காணப்படும் இடப்பெயர் எண்ணுப் பெயர்கள் முதலியவற்றுள் ஒன்றுதானும் அவற்றுள் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு அப்பால் பெஹிஸ்தன் பட்டங்களிலும் சீன மொழியிலும், ஒஸ்தியக்கு7 மொழியிலும், லாப்பர்8 மொழி யிலுங் கூட இவற்றுட் சில காணப்படுகின்றன. மேலும், இம் மொழிகளில் திராவிடத் தாக்கு ஏதேனும் இருந்திருக்கக் கூடுமாயின் கை, கால், கண், காது (செவி) போன்ற முதன்மையான சில சொற்களேனும், அவற்றின் சிதைவுகளேனும் இவற்றுள் எம் மொழியிலாயினும் காணப்படாமலிருக்க இடமில்லை. உண்மையில் அத்தகைய எச் சொல்லும் இவற்றுள் யாண்டுங் காணப்படவில்லை. பேராசிரியர் ஸ்டீவென்ஸன் கண்ட சில ஒப்புமைகள் அருவழக்காய்எங்கோ மூலையிலிருந் தெடுக்கப்பட்ட சொற்கள் ஆகும். வேறு முதற்சொற்களும், இலக்கண அமைதி ஒப்புமைகளும் இல்லாவிடத்து அச் சிறுபான்மையான ஒப்புமைகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆகவே, முதன்மையான வேர்ச் சொற்களைப் பொறுத்த வரையில் திராவிட மொழிகளுக்கும், வட இந்திய மொழிகளுக்குமிடையே எத்துணை வேறுபாடு! ஆனால் திராவிட மொழிகள் எல்லா வற்றுள்ளும் எத்துணை ஒற்றுமை! வியக்கத்தக்க இவ் வுண்மைகளைக் கீழ்வரும் அட்டவணையிற் காணலாம்; தன்மை முன்னிலை யொருமைப் பெயர், இடப் பெயர்களுள் எழுவாயில் ஓர் உருவும், பிற வேற்றுமைகளில் வேறு உருவும், வினை விகுதிகளில் மற்றோருருவுமாக மாறி வருவதுடன், ஒரே இடத்திலும் உருக்கள் பண்டைக் காலத்தில் ஒருவகையாகவும், பிற்காலத்தில் வேறாகவும் இருக்கின்றமையால் வேண்டிய இடங்களில் அவை யாவும் ஒப்புமையாகத் தரப்படுகின்றன. (பின்வரும் அட்டவணைகளில் எளிதில் ஒப்பிட்டறிதற்காக வடமொழி இடப்பெயர்களும், துருக்கிய இடப்பெயர்களும் பிறைக்குறிகளிட்டு முதலிற் கொடுக்கப் பெற்றுள்ளன.) தன்மை ஒருமைப் பெயர் கௌர மொழிகள் திராவிட மொழிகள் மொழி வடிவங்கள் மொழி வடிவங்கள் (வடமொழி அஹம்; தமிழ் நான், யான்; ஏன்,என். ம,மி,ம்) (துருக்கி மன்) கன்னடம் ஆன்,யான், நா, நானு; என், ஏனெ ஹிந்தி மை(ன்) துளு யான்,யென்,எ. வங்காளி மூஇ மலையாளம் ஞான், ஏன்,என், என, எனி, இனி. மராட்டி மீ குஜராத் ஹு(ன்) தெலுங்கு நேனு, நே, ஏனு, ஏ, நா, நு, நி. சிந்தீ ம(ன்) துதம் ஆன்,என்,எனி,இனி கோதம் ஆனெ,என்,எ. கோண்டு அன்னா, நா, ஆன்,ந. கு ஆனு, நா, இன், எ. இராஜமஹால் என் ஒராவோன் எனன். முன்னிலை ஒருமைப் பெயர் கௌர மொழிகள் திராவிட மொழிகள் மொழிவடிவங்கள் மொழி வடிவங்கள் (வடமொழி த்வம்,தவ் தமிழ் நீ,நின்,நுன், ஐ, இ, தெ; ஸி,ஸ்) ஆய், ஓய். (துருக்கி ஸென்) கன்னடம் நீன், நீனு, நீ, நின், ஐ, எ, ஈயெ, ஈ, இ. ஹிந்தி து, து(ன்)தெ. துளு ஈ, நின், நி. வங்காளி தூஇ, தொ. மலையாளம் நீ, நின். மராட்டி தூ(ன்), து, . தெலுங்கு நீவு, ஈவு, நீ, நின், வு, வி. தொ துதம் நீ, நின், இ. குஜராதீ தூ(ன்), த. கோதம் நீ,நின், இ. சிந்தீ து(ன்), தொ கோண்டு இம்ம, நி, ஈ. கு ஈனு, நீ, இ. ஒராவோன் நீயென். இராஜமஹால் நின். பிராகுவி நீ,நா. பெஹிஸ்தன் நீ. சித்திக் அட்ட வணை. கௌர மொழிகளின் இடப் பெயர்களுக்கும் திராவிட மொழிகளின் இடப் பெயர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமையிருப்பதை நோக்க, `அம் மொழிகளின் திரிவுக்கு மூலகாரணமாகத் தாக்குதல்கள் வேறெவையாயினும் ஆகக்கூடும், திராவிட மொழிகள் ஆகா, என்பதுதெற்றெனப் புலப்படுகின்றது. ஆனால், அதே இடப் பெயர்களின் ஆராய்ச்சி யாலேயே பல வடமொழிகளிலும் சித்திய விகுதியாகிய னகரம் இருப்பது காணலாம். அதனோடு, தன்மையில் வட இந்திய மொழிகள் ஒன்றிலேனும் வடமொழி எழுவாயுரு இல்லாமல், துருக்கிய மொழியின் எழுவாயைப் போன்ற மை(ன்) அல்லது ம(ன்) என்ற சித்திய தோற்ற முடைய உருவே நிலவுதல் காண்க. ஒருவேளை எதிர்கால ஆராய்ச்சிகளால் திராவிட உறவு உண்டென்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவே, வடஇந்திய மொழிகளின் வடமொழிச் சார்பற்ற பகுதியும், தென் இந்திய மொழிகளும் இரண்டும் ஆரியச் சார்பற்றவை என்பதும், இரண்டும் சித்தியச் சார்புடையவை என்பதுந் தவிர வேறு எவ்வகையிலும் ஒப்புமையுடையன அல்ல என்றே துணியத்தகும். இனி, டாக்டர் குண்டெர்ட் வட இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட மொழியிலேகூட, திராவிடத் தாக்குக் காணப் படுகிறது என்கிறார்9. இந்தி மொழியை ஆராய்ந்த கிரௌஸ் என்பவரோ, வடமொழிச் சார்பற்ற பகுதி யென்றொன்று அவ்வளவா யிருந்திருக்க வழியில்லை என்று கூறி, அதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்: (1) அம்மொழியின் பழமையான இலக்கண நூலார் அதனைக் குறிப்பிடாதது. (2) வடமொழிச் சார்பற்றதென விரைந்து துணியப்பட்ட சொற்கள், நுண்ணிய ஆராய்ச்சியால், வடமொழி யென்று பெரும்பாலும் நிறுவப்பட்டு வருகின்றமை. (3) வடமொழி வளர்ச்சியுற்ற காலத்தில், பிறமொழித் தாக்குதல்களால் வட இந்திய மொழிகள் திரிபுற்றமைக்கு என்னென்ன நியதிகள் காணப்பட்டனவோ அந் நியதிகளை இக்கால வடநாட்டு மொழிகளும் பின்பற்றி வருகின்றமை. இச்செய்தியைக் குறித்து 1872இல் பீம்ஸ் என்பார் “ஆரியச் சார்பற்ற இக்கால இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்”10 என்ற நூலில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: “இனி, வடமொழியு மல்லாத ஆரியமுமல்லாத சொற்களைப் பற்றி ஆராய்வோம். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது தமக்குமுன் அங்குக் கூடியிருந்த மக்களோடு நெடுநாள் போரிட்டு நாட்டை அவர்களிடமிருந்து பறித்தாக வேண்டியிருந்தது. அத்தகைய போர்களுக்கிடையே அமைதி நிலவிய காலமும் இருந்திருத்தல் வேண்டும். அப்போது இரு திறத்தினரும் கலந்து ஒருவருடன் ஒருவர் கருவிப்போர் செய்யாது, வாழ்க்கைப் போர் நடாத்தியிருப்பர். ஆரியரல்லாதா ரிடையே ஆரியரது தாக்கே மிகுதியாயிருந்திருப்பினும், ஆரியரிடையே ஆரியரல்லாதார் தாக்கம் ஒரளவிற்கு இல்லா திருக்க முடியாது. ஆகவே, வடமொழியிலேயே ஆரியச் சார்பற்றனவாகத் தோன்றும் சொற்கள் சில காணப்படு கின்றனமை இயல்பே. இக் கால வட இந்திய மொழிகளிலோ இச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, எச் சொற்கள் ஆரியச் சொற்களாகத் தோற்றவில்லையோ அவையெல்லாம் ஆரியச் சார்பற்றவையே என்று கூற முன்வருவது வழக்கமாகி விட்டது. “இங்ஙனம் ஆரியர்கள் பழங் குடிகளிடமிருந்து கடன் வாங்கினர் என்ற கொள்கையை ஒப்புக்கொள்வதற்குத் தடைகள் பல உள்ளன. மொழியியலிற் பிற சான்றுகளின் துணையில்லாத விடத்து வெறும் சொல்லொப்புமை கொண்டு எதையும் துணிந்துவிட முடியாது. பல வழிகளிலும் சிறந்த பேரறிஞர்கூட இத் துறையில், “ஆனைக்கும் நான்கு கால், பூனைக்கும் நான்கு கால்; ஆனைக் காலிலும் பூனைக் காலிலும் நகங்கள் காணப்படு கின்றன” என்ற ஒப்புமைகளின் பேரில் முடிவுகட்டிவிடுகின்றனர். ஒரு தமிழ்ச் சொல்லில் ஒரு பகரம் இருக்கிறது; ஒரு வடசொல்லிலும் ஒரு பகரம் இருக்கிறது. ஆகவே, வடசொல் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்று கூறிவிடுவதா! முதலாவதாக, இந்தியப் பழங்குடிகளைவிட உடல்வலியிலும் அறிவுவன்மையிலும் ஆரியர்கள் உயர்வுடையவர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் ஏற்றதைவிட ஈந்ததே மிகுதியா யிருந்திருக்க வேண்டும். இரண்டாவதுதாக, இந்தியாவுக்கு வருவதன் முன்னரே ஆரியர்கள் சொல்வள மிக்கதொரு மொழியை உடையவராயிருந்தனர். எனவே, உடை, கருவிகள், தட்டுமுட்டுகள், கன்று காலிகள், உடற் கூறுகள், உறவு முறைகள் போன்ற பொதுக் கருத்துக்களுக்குரிய சொற்களைக்கூட அவர்கள் கடன்வாங்க வேண்டும் நிலைமை அவர்களிடம் இருந்திருக்கமுடியாது. அவர்கள் கடன் வாங்கவேண்டு மென்றால் புதிய செடி கொடிகள், உயிர் வகைகள், தாம் முன்னர்க் கண்டிராத புதுப் பொருள்கள் ஆகியவற்றின் பெயர்களையே யாகும். இவற்றில்கூடத் தம் மொழிச் சொற்களையே திரித்தும் கூட்டியும் புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய அமைந்துள்ளது. மூன்றாவதாக, நில இயலைப்11 பொறுத்து எழும் சிக்கல்கள் இருக்கின்றன. ஆரியர்வருகையின்போது அவர்களுடன் நட்பாகவோ பாகையாகவோ உறவுபூண்ட மக்கள் யார் யார்? வந்தேறிய ஆரியர்க ளெல்லோருமே திராவிடர்களுடன் நெருங்கி உறவாடி இருக்கமுடியுமா? முடியுமென்றால் எப்பொழுது? எப்படி? இன்றைய ஆராய்ச்சி நிலையில் இவ் வினாக்களுக்குத் திறம்பட விடையிறுப்பது அரிது. எனினும், அவற்றிற்கு ஏதாவது ஒரு வழி காணல் வேண்டும். கங்கைக் கரையினின்றும் ஆரியரால் தெற்கே விரட்டப்பட்ட மக்கள் கோலேரியரும், வடக்கே விரட்டப் பட்டவர் திபேத்துக் கலப்புமக்களும் ஆவர். எனவே, கோலேரியர் மொழிச் சான்றின்றி வடமொழிச் சொல் ஒன்று நேராகத் தமிழிலிருந்து பெறப்பட்டு விட்டது என்பதை ஒப்புக் கொள்ளுதல் சாலாது. இத்தகைய நிலைமையில் அச் சொல்லின் மூலத்தை ஆராயும் பகுதி உண்மையில் வடமொழியும், அதன் கிளைமொழிகளும் என்ற அளவுக்கே குறுகிவிடு மென்பதற்கைய மில்லை. ஆழ்ந்து நோக்கினால் அதில் பெரும்பாலும் அதற்குரிய வேர்ச்சொல்லைக் காணலாம்.” இக் கூற்று ஒருவாறு ஒப்புக்கொள்ளக் கூடியதேயாம். திராவிட மொழிகளைப் பற்றியவரை வட இந்திய மொழிகளில் அவற்றின் தாக்குதல் ஒருசிறிதுதான் இருந்திருக்கக் கூடும். ஆனால், சித்தியத் தாக்குதல்களாலோ அன்றி ஆரியச் சார்பற்ற பிற மொழிகளின் தாக்குதல்களாலோ, வட இந்திய மொழிகள் இன்றைய திரிந்த நிலையை அடைந்திருக்கக் கூடாவோ என்பது வேறு கேள்வி. திராவிடம், சிகத்தியம், ஆரியச் சார்பற்றவை என்பன ஒரு பொருட் கிளவிகளல்ல. பீம்ஸ் என்பார் `உயிர் ஒலிமாற்றங்கள்’12 என்ற பிரிவில், “ஆரிய உயிரொலிகள் இந்தியாவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் நடுவிலும் தெற்கிலும் உள்ள வெளி இனத்தாரால் எவ்வளவு மாறுதலடைந்தன வென்று சொல்லமுடியாது. ஆனால், மாறுதல் அடைந்துள்ளன என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும்” என்று கூறியுள்ளார். வட இந்திய மொழிகளுள் அகரமும் ஆகாரமும் ஏகாரமாக மாறியமை, இத்தகைய ஆரியச் சார்பற்ற மாறுதல் என்று அவர் கூறுகிறார். நாவடி அண்ண மெய்யாகிய ளகரத்தைப் பற்றிக் கூறுகையில், அது ரகர டகரங்களுடன் மயங்குகின்றது என்றும், அது நடு இந்தியாவிலுள்ள கோலர் களின் குழுவில் காணப்படுகிறது என்றும் அவர் உரைக்கின்றார். இக் கோலர்களுடனும் திராவிடர்களுடனும் நெடுநாள் உறவு கொண்டிருந்த மராட்டிய, ஒரியா மக்களிடை, இந்த ளகரம் மிகுதியாகப் பயில்வது வியப்பன்று என்றும் அவர் கூறுகிறார். “சிந்தி மொழியின் இலக்கணம்”13 என்ற நூலில் டாக்டர் எர்னஸ்டு ட்ரம்பு ஆரியச் சார்பற்ற அல்லது தாத்தாரிய மொழியினத் தாக்குதல்கள் வட இந்திய மொழிகளில் காணப்படுகின்றன’ என்று உறுதியாகக் கூறுகிறார்; முன் நா அண்பல் ஒலியாகிய தகர நகர ஸகரங்களினிடமாக, அவை நாஅடி அண்ண ஒலியாகிய டகர ணகர ஷகரங்களைப் பெரிதும் ஏற்கின்றமை அதற்குச் சான்று பகரும் என்றும் கூறுகிறார். அதே போன்று உயிர்ப்பு ஒலியாகிய ஹ என்பதைப் பிராகிருத மொழி விலக்குவது நோக்க, “அதைப் பேசிய பொது மக்களிடையே தாத்தாரியத் தாக்கு இருந்திருக்கவேண்டும். தெற்கேயுள்ள திராவிட மொழிகளில் இவ் எழுத்து இல்லாமை காண்க” என்றும் கூறுகிறார். மேலும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த தெலுங்கு `ச்ச’, `ஜ’ என்ற எழுத்துக்களை `ட்ச’ என்றும், ட்ஸ என்றும் ஒலிப்பது போலவே மராட்டி மொழியும் ஒலிக்கின்றது; ஆதலால் திராவிடத் தாக்கு மராட்டியிலுள்ளது வெளிப்படை என்றும் அவர் முடிவுகட்டுகிறார். அடிக்குறிப்புகள் 1. சுநஎ னுச. ளுவநஎநளேடிn டிக க்ஷடிஅயெல - துடிரசயேட டிக வாந ஹளயைவiஉ ளுடிஉநைவல டிக க்ஷடிஅயெல.. 2. ஆச. ழடினபளடிn டிக சூநயீயட - துடிரசயேட டிக வாந ஹளயைவiஉ ளடிஉநைவல டிக க்ஷநபேயட; யடளடி “ஹbடிசபைiநேள டிக ஐனேயை.” 3. “கூயவயசநயn டிச ஊhயடனநந” 4. ளுசை று. துடிநேள (ஹளயைவiஉ சுநளநயசஉhநள ஏடிட.i) 5. ஐசூனயைn ஹவேiளூரயசல (ஹயீசடை 1872) 6. ஆச. ழுசடிறளந க்ஷ.ஊ.ள. 7. டீளவயைம 8. டுயபேரயபந டிக வாந டுயயீயீள. 9. கூhந துடிரசயேட டிக வாந ழுநசஅயn டீசநைவேயட ளுடிஉநைவல கடிச 1869. 10. “ஹ உடிஅயீயசயவiஎந ழுசயஅஅயச டிக வாந ஆடினநசn சூடிn-ஹசலயn டுயபேரயபந டிக ஐனேயை” லெ துடிhn க்ஷநயஅநள க்ஷ.ஊ.ளு. 1872. 11. ழுநடிபசயயீhல. 12. ஏடிறநட உhயபேநள. 13. “ழுசயஅஅயச டிக வாந ளiனோi டுயபேரயபந” - னுச. நுசநேளவ கூசரஅயீயீ. 7. திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை? திராவிட மொழிகள் சித்திய மொழியினத்தோடு சேர்த்தற்குரியனவே யன்றி இந்து - ஐரோப்பிய மொழியினத் தோடு சேர்த்தற்குரியனவாகா என்பது பேராசிரியர் ராஸ்க்1 என்பாரின் முடிபாகும். சேர்த்தற்குரியன என்று மட்டும் கூறலாமே யன்றி, சேர்ந்தன என்று சொல்லிவிடுதற்கில்லை; அவை சித்திய மொழிகளோடு தொடர்புடையன வேயன்றிச் சித்திய மொழியினத்திலிருந்து பெறப்பட்டவையல்ல. சித்திய மொழியீனம் என்பதில் பின்னிஷ், துருக்கி, மங்கோலியம், துங்கூஸியம் ஆகியமொழியினங்கள் அடங்கும். ராஸ்க் என்பாரே இவ்வாறு முதன்முதல் வகைப்படுத்தினார். இம் மொழிகள் அனைத்தும் ஒரே இலக்கண அமைப்புடை யவையாய், ஒரே படித்தான பொது விதிகளையும் பின்பற்று கின்றன. உருபுகள் அல்லது துணைச் சொற்களைச் சேர்ப்பதனாலேயே அவை இலக்கண வேறுபாடுறுகின்றன; செமித்திய2 மொழியினங் களிலோ பகுதியின் உயிரொலிகளை மாற்றுவதால் வேறுபாடுறு கின்றன; சீனத்திலும், பிற தனிப்பட்ட ஓரசை மொழிகளிலும் சொற்றொடரிலுள்ள சொற்களை முன்னும் பின்னும் மாற்றி யமைப்பதால் வேறுபடுகின்றன. இவ்வகையில் இந்து - ஐரோப்பிய மொழிகளும் சித்திய மொழிகளைப் போலவே முதன்முதல் அடுக்கியல்3 முறையையே கையாண்டிருந்தன என்று தோற்று கின்றன. ஆனால் அவற்றின் அடைகள் அல்லது துணைச் சொற்கள்வரவரத் தேய்ந்து விகுதிகளாகவோ உருபுகளாகவோ மாறிவிட்டமையால் அவை சித்திய இனங்களைப் போலவுமின்றி, சீன மொழிகளைப் போலவுமின்றித் தனிப்பட்ட ஒருவகை இனமாயின. சித்திய மொழிகளைச் சிலர் தாத்தார் மொழியினம் என்பர்; பின்னிஷ் இனம், ஆல்தாயிக் இனம், மங்கோலிய இனம், துரானிய இனம் என்றும் பலவாறாகப் பலர் கூறுவர். ஆனால், இவையனைத்தும் இப்பெரு மொழிக் குழுவிலுள்ள மொழி யினங்கள் பலவற்றுள் ஒன்றிரண்டையே தனித்தனிக்குறிக்குமாத லால் அவற்றைப் பெரு மொழிக் குழுவின் பெயராகக் கொள்ளல் சாலாது. இதுகாறும், பண்டைக் கிரேக்க அறிஞர்களால் சித்தியம் என்ற பெயர் பொதுப்பட ஆசியாவிலும், ஐரோப்பா விலும் இருந்துவந்த நாகரிகமற்ற பண்டை மக்களைக் குறிக்கவே பயன்படுத்தப் பெற்றுவந்துள்ளமையால் அதனைப் பெயராக வழங்குதலே சால்புடைத்தாம். பேரறிஞர் ராஸ்க் திராவிட மொழிகள் சித்தியச் சார்புடை யவை எனக் கூறினவர்களுள் முதல்வராயினும், அதனைத் தெளிவுபடுத்தி விளக்க எத்தகைய முயற்சியும் அவர் செய்ய வில்லை. அவரைப் பின்பற்றிய பலரும் அதேமாதிரி அவர் கூறியதைக் கூறினரேயன்றி வேறு ஒன்றும் செய்ய வில்லை. பிரிச்சார்டு4 என்பார் தம் ஆராய்ச்சிகளில் சித்திய திராவிட மொழிகளில் சில பொதுப்படையான ஒற்றுமைகளை ஒன்றிரண்டு இலக்கணச் சார்பான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் போயினர். ஆதாரங்களுடன் ஆய்ந்து விளக்குவது எளிதன்று. ஏனெனில் அங்ஙனம் விளக்க வேண்டுமாயின் முதல் முதலில் திராவிட மொழிகளைத் தனித்தனி ஆராய்ந்து அவற்றின் ஒப்புமையின்மூலம் அவற்றின் பண்டைய உருக்களையும் இலக்கண அமைதிகளையும் தலைமையான பண்புகளையும் அறிவதோடு, அதேமாதிரி பிற சித்திய உட்பிரிவுகளின் பண்பு களையும் உணர்ந்தாக வேண்டும். “உலக வரலாற்றின் பொதுப் படையான அமைதிகள்” என்ற தொகுதியில் மாக்ஸ்மூலரது “துரானியமொழிகள் பற்றிய நமது இன்றைய அறிவுநிலை”5 என்ற ஆராய்ச்சியுரை பின்னர் வெளிவந்தது. அந் நூல்மிகச் சிறந்த தொன்று. எனினும், அந்நூலில் ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட பொருள் முழுவதையும், பொதுப்படவே ஆராய்ந்துள்ளார். அதனால் ஈண்டு எடுத்துக்கொண்ட பொருளுக்கு அது புதுச் சான்றுகள் ஒன்றையும் பகரவில்லை. திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளும், சொற்றொடர் முறையும் மேற்போக்காகப் பார்ப்பவர்க்குக்கூட விளங்கக் கூடுமாயினும், அவற்றின் ஒலிமுறை, அவற்றின் இடவகை மாற்றங்கள், வழக்குகள், இலக்கண உருமாற்றங்கள் முதலியவை தனிப்பட்ட ஆராய்ச்சி யாலன்றி விளங்கத் தக்கவையல்ல. இனி, இவ்வகை ஆராய்ச்சியைத் தொடங்குமுன் போட்லிங்6 என்பார் வரையறுத்துக் கூறிய, பின்வரும் கருத்து நினைவு கூரற்பாற்று: “தாம் நன்கு ஆராய்ந்தறியாத மொழி களைப்பற்றி ஒருவர் எழுத முற்படுதல் தீங்கு விளைப்பதாகும்”. சித்திய மொழியைப்பற்றி ஆராயவேண்டுமானால், அவற்று ளடங்கிய பல்வேறு மொழிகளின் ஒப்பியல்களும் வேற்றுமை யியல்களும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும. பாலர்7 என்பார் எழுதிய பின்னிய மொழியாராய்ச்சிக் கட்டுரைகளும், பேராசிரியர் ஹன்/பல்வி8 என்பார் எழுதிய துரானிய மொழி யாராய்ச்சிகளும் இத்துறையில் பேருதவி புரிய வல்லனவாம். ஹங்கேரியன், வோகுல்9 ஒஸ்தியாக், பின்னிஷ் ஆகிய நான்கு மொழிகளும் ஒரே பொது மொழியினத்தைச் சோந்தவை என்றும், அவற்றின் இலக்கணங்களெல்லாம் நெருங்கிய தொடர்புடையன என்றும் ஹன்/பல்வி விளக்கியுள்ளார். பேரறிஞர் பாட், பிரடெரிக் முல்லர்10 முதலிய பல மொழி யியலார் சித்திய அல்லது துரானிய மொழிகள் ஒருபொது மொழியிலிருந்து வந்தவை என்று உறுதியாகக் கூறமுடியாது என்று கருதுகின்றனர். பேரறிஞர் பிளாக்கும்11 “துரானிய மொழிகள் பலவும் ஒருபுடை ஒரே படித்தான வளர்ச்சியை அடைந்துள்ள ஒரே குழு மொழிகளோ அல்லது பல குழு மொழிகளோ ஆகும்” எனக் கருதுகின்றனர். எனினும் பொதுப்பட நோக்க, கஸ்த்ரேன்12 முதலிய அறிஞர் கூறுகின்றபடி அவற்றின் ஒற்றுமைகள் மொழிக்கு இன்றியமையாதவையாகவும், பலவாகவும் இருக்கிறபடியால் அவற்றால் ஏற்படும் தொடக்கப் பொதுமையை, அ/தாவது ஒரே முதன்மொழியினின்று அவை தொடங்கி யிருக்கவேண்டும் என்ற முடிவை, ஏற்காதிருக்க முடியாது. “இம் மொழிகளின் சொல் ஒற்றுமைகளும் வடிவ ஒற்றுமைகளும் ஆரிய செமித்திய இனங்களிற் காணப்படும் ஒற்றுமையினின்றும் வேறுபட்டவை யாயினும், தற்செயலாய் ஏற்படக் கூடியவை அல்ல, ஒரே முதன்மொழியிலிருந்து ஏற்பட்டவையாகவே இருக்கவேண்டும் என்பது தெளிவு” என்பர் அறிஞர் மாக்ஸ்மூலரும், மேலும் “நெடுநாள் பிரிந்தியங்கிய அடுக்கியல் மொழிகளுள், மொழியியற்கையின் அடிப்படைப் பகுதிகள் அல்லது மாறுபாடு செய்யமுடியாத சொல் வகைகளான இடப்பெயர்கள், எண்ணுப் பெயர்கள், உருபுகள் போன்றவற்றைத் தவிர வேறு எத்தகைய ஒற்றுமைகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. மேற்படையான பொருள் கொண்ட சொற்களுள் வேற்றுமை இருப்பதைவிட, ஒற்றுமை யிருப்பதைத் தான் நாம் அருமையாய்க் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார். மேலே திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறுபட்டவை என்பதற்குக் காட்டிய அக் காரணங்களையே அவை சித்திய இனங்களுடன் ஒன்றுபட்டவை என்பதற்கும் காட்டலாகும். சித்திய இனத்துட்பட்ட மொழிகள் அனைத்தும் ஒரே இனம் என்பதையும் அக் காரணங்களே காட்டும். அவற்றின் விளக்கத்தைக் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலுங்கூட அவை தொடர்பு உடையவை என்பது ஐயமறத் தெளிவாகும். சில கூறுகளில் மட்டும் திராவிட மொழிகள் இந்து - ஐரோப்பிய மொழிகளை ஒட்டியவையாய்க் காணப்படுகின்றன; அ/தாவது ஓரளவுக்கு, “அடுக்கியல்” மொழியாய் இருப்பதிலிருந்து முன்னேறி (இந்து-ஐரோப்பிய மொழிகளைப் போல)ச் “சிதைவியல்”13 மொழிகள் ஆகியுள்ளன. வேற்றுமையிலும் வினைத்திரிபிலும் பயன்படும் துணைச் சொற்களிற் பல தனி மொழியாக வழக்காறற்றுப்போயின. ஆனால், இ/தொன்றை முன்னிட்டு, திராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்து பிரிக்க வேண்டியதில்லை; ஏனெனில் இத் துணைச்சொற்கள் சிற்சில இடங்களில் முற்றிலும் உருபுகள் அல்லது விகுதிகளாகக் குறைந்துவிட்டனவாயினும், சொற்களின் பகுதிகளிலிருந்து இவை எப்பொழுதும் பிரிக்கப்படக் கூடியனவாகவே இருந்து வருகின்றன; இந்து-ஐரோப்பிய மொழிகளிற் போன்று இவை பகுதியுடன் ஒன்றுபட்டு ஒரே மொழியின் கூறாய்விடவில்லை. இந்து - ஐரோப்பிய மொழிகளில் இவை அங்ஙனம் கலந்து விட்டபடியால் பகுதி எது, விகுதி எது என்று பிரிப்பது கூட அரிதாய் விடுகிறது. அதனோடு, துருக்கியம், பின்னியம், ஹங்கேரியம், ஜப்பானியம் முதலிய மொழிகள் அனைத்தும் திராவிட மொழியைவிடச் “சிதைவியல்” துறையில் மேம்பட்டிருப்பினும், அக்காரணத்தால் சித்திய இனத்திலிருந்து விலக்கப்படவில்லை என்பதையும் ஓர்தல் வேண்டும். “மொழியியலில் சீனத்தின் இடம்” என்ற நூலில் எட்கின்ஸ் சித்திய இனத்தின் ஒருமை, அவற்றுடன் திராவிட மொழிகளின் தொடர்பு ஆகிய கொள்கைகளைப் பெரிதும் ஏற்றுக் கொள்ளுகின்றார். அவர் காட்டும் பல தற்செயலான, நுணுக்க மான ஒற்றுமைகள் ஆழ்ந்து ஆராயுமளவில் நிலைநிற்கா. ஆயினும் பொதுப்படக் கூறுமளவில் இத்துறையில் ஒருவர் ஆராயுந்தோறும் திராவிட மொழிகள் மங்கோலிய மொழிகள் ஆகிய இரண்டும் ஒருவாறு ஒருமைப்பாடுடையன என்பதைக் காண்பர். திராவிட சீன மொழிகளிடை ஒற்றுமைகள் மிகுதி எனக் கூறமுடியாது. எட்கின்ஸ் “சித்திய இனம்மட்டுமன்று, ஆசிய ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே ஒரே முதன்மொழியின் வகைத் திரிபுகள் ஆகும்” என்கிறார். இதுவரை மனித வகுப்பின் மொழிகளை அறிஞர் ஆராய்ந்த அளவில் இக்கோட்பாடு பொருத்தமாகத் தோற்றினும் அறிவியல் முறைப்படி இது முற்றிலும் நிலைநாட்டப்பட இன்னும் நெடுநாள் செல்லக் கூடும். கடைசியாக, திராவிட மொழிகளின் அமைப்புகளை விளக்கச் சித்திய மொழியினத்தை ஒற்றுமைப்படுத்தி ஆராய்ந்த அறிவு எவ்வளவோ பயன்படுகிறது என்ற ஒரு செய்தியே அவற்றுள் சித்தியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கோர் அறிகுறி யாகும். இதற்கு எடுத்துக்காட்டாகத் திராவிட மொழியிலுள்ள வினைச்சொற்களின் பெயரெச்சத்தின் அமைப்பை எடுத்துக் கொள்ளலாம். மங்கோலியம், மஞ்சு இவற்றில் இ/து எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை அறிந்த பின்னரே, திராவிட மொழிகளில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதை எளிதில் அறியமுடிந்தது. அங்ஙனம் அறிந்த விளக்கத்தை இதுவரை யாரும் மறுக்கவோ அல்லது வேறு வகையில் விளக்கவோ இல்லை என்பது குறிபிடத்தக்கது. சித்திய இனச்சார்புக் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு சான்றுங் கிடைத்துள்ளது. அதுவே மேற்கு முடியா14 அல்லது பாரஸீகத்தில் உள்ள பெஹிஸ்தன் அல்லது பகிஸ்தான் அட்டவணைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். இவ் அட்டவணைகள் டரையஸ் ஹிஸ்டாஸ்பஸ்15 என்பவர் தம்மைப்பற்றித் தாமே எழுதிய வரலாறு ஆகும். இவை பழம் பாரஸீக மொழியிலும், பாபிலோனிய மொழியிலும், பாரஸீக, மீடியப் பேரரசிலுள்ள சித்திய மக்களும் அறியும் படியாக அவர்களது தாய்மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொழிபெயர்ப்பு திராவிட சித்திய உறவை விளக்கும் வகையில் ஒரு புத்தொளியாய் விளங்குகின்றது. இவற்றின் இரண்டாம் தொகுதி தெளிவாகச் சித்தியச் சார்பானது என்று நாரிஸ்16 தமது கட்டுரையில் எழுதுகிறார்.17 பேரறிஞர் ஆப்பர்ட்18 இம் மொழியைப் பேசிய மக்கள் மீடியரே என்று கூறுகிறார். ஆயினும் அவரும் இம் மொழி சித்திய அல்லது துரானியச் சார்பானதென்றே கொள்கிறார். இதனால், கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே பேசப்பட்ட ஒரு சித்திய இன மொழியுடன் திராவிட மொழிகளை ஒற்றுமைப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இம்மொழி பொதுப்படச் சித்திய இனச் சார்புடையதே எனினும், அவற்றுட் சிறப்பாக உக்ரோ - பின்னிஷ் குழுவுடன் இன்னும் நெருங்கிய தொடர்புடைய தாகவுங் காட்டப்படுகிறது. திராவிடமொழிகள் இந்த உக்ரோ - பின்னிஷ் மொழிகளைச் சிறப்பாக ஒத்திருக்கின்றன என்பது இங்கே கூறவேண்டிய தொன்றாகும். திராவிட மொழிகளுக்கும், இப் பெஹிஸ்தன் அட்ட வணையின் மொழிக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகள் வருமாறு: (1) இவ் அட்டவணைகளில் ட் ட, ட, ண என்ற நா அடி அண்ண ஒலிகள் உள்ளன. இதே ஒலிகள் திராவிட மொழிகளிலும் உள்ளன. வடமொழியிலும் இவை உள்ளன வாயினும் (பிற ஆரிய மொழிகளுள் இல்லாமையை நோக்கத்) திராவிட மொழிகளைப் பின்பற்றி வடமொழியில் ஏற்பட்ட ஒலிகளே இவை என ஊகிக்கலாம். நாரிஸும் இக் கருத்தையே வெளியிட்டுள்ளார். (2) திராவிட மொழிகளுள் தமிழைப்போல, இவ் அட்டவணை மொழிகளுள் வல்லெழுத்துக்கள் மொழிமுதலில் வரும்பொழுது இரட்டித்த இடத்தும் வல்லொலி உடையவை யாகவும், மொழி இடையே உயிர்களின் நடுவே வரும் பொழுது அண்மை அல்லது அரை அங்காப்பு ஒலியுடையவாகவும் ஒலிக்கின்றன. (3) இவ்வட்டவணை மொழியின் ஆறாம் வேற்றுமை உருபுகள் ன, னின, இன்ன என்பவையாகும். இவற்றிற்குச் சரியான திராவிட உருபுகள் தெலுங்கு னீ என்பதும், கோண்டு அல்லது பிராகுவி ன அ என்பவையும், தமிழ் இன் என்பதும் ஆகும். (4) அட்டவணைகளில் நான்காம் வேற்றுமை உருபு இக்கி அல்லது இக்க என்பதாகும். இதனை யொத்த உருபுகள் தாத்தார் - துருக்கியக் குழுவிலும், உக்ரியன் இனத்திலும் உள. ஆனால் இதனை முற்றிலும் ஒத்திருப்பவை திராவிட உருபுகளாகிய கு, கி, க என்பவையாம். தமிழ், மலையாள மொழிகளில் இவ்வுருபுகள் இரட்டிக்கும்போது அவற்றின் முன் உ அல்லது இ சொல்லொலிச் சாரியையாக வருகின்றது. அட்டவணைகளில் உனக்கு என்னும் பொருளில் நினிக்க (நின்-இக்க) என்னும் சொல்லுடன் கன்னடம் நினகெ (நின்-அ-கெ) மலையாளம் நினக்கு (நின்=அ-க்) என்பவற்றை ஒப்பிட்டு நோக்குக. (5) அட்டவணைகளிலுள்ள இடப்பெயர்களின் இரண்டாம் வேற்றுமை உருபு உன், இன், ன் என்பவையாம். இத்துடன் தெலுங்கு உருவு னு, னி என்பதையும் கன்னடம் அம், அன்னு (அன்ன்- உ) என்பதையும் ஒப்பிட்டு நோக்குக. (6) அட்டவணைகளில் வரும் எண்ணுப் பெயர்களில் எழுத்தில் எழுதிய பெயர் ஒன்று என்னும் பொருளில் வரும் கிர் என்ற சொல் மட்டுமேயாம். இ/து உண்மையில் பெயருரிச்சொல் வடிவத்திலேயே (அ/தாவது பண்புத் தொகையாகவே) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தெலுங்கில் இவ்வடிவம் ஒக- என்பதும், தமிழில் ஓர் -என்பதும் ஆகும். கு-மொழியில் தமிழ் ஒரு என்பதற்குச் சரியான சொல் ர என்பதாம். இக் கு மொழியின் வடிவத்திற்கு அட்டவணையிலுள்ள பிறிதொரு வடிவமாகிய ர அல்லது இர்ர மிகவும் நெருக்கியதாகும். அட்டவணையில் எண்ணுப் பெயர்கள் பெயரடையாகும் பொழுது இம் என்ற சாரியைக் கொள்ளுகின்றன. இது தமிழ் ஆம் என்பதையும் ஸாமோயியத் இம் என்பதையும் நினைவூட்டு கின்றது. (7) திராவிட மொழிகளிலும், அட்டவணையிலும் முன்னிலைப் பெயர் ஒன்றே. இவை இரண்டிலும் எழுவாய் நீ; பிறவேற்றமைக்கு முன்னைய முதல் வடிவு நின் என்பதாகும். தமக்குக் கீழ்ப்படியிலுள்ளவர்களை அழைக்க முன்னிலை ஒருமையையே வழங்கிவந்த காரணத்தால் இவ்வட்ட வணைகளில் முன்னிலைப்பன்மை காணப்படவில்லை. (8) அட்டவணை மொழியிலும் திராவிட மொழிகளைப் போலவே பெயரெச்சம் இருக்கிறது. ஆனால் அதோடு கூடவே அதில் இணைப்பு இடப்பெயர்19 ஒன்றும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி பாரசீகத்தினின்றும் மொழிபெயர்க்கப் பட்டதாதலால் பாரசீகத்திலுள்ள இணைப்பு இடப்பெயரைத் தான் இங்கே புனைந்து உண்டுபண்ணி யிருக்கவேண்டும் என்று நாரிஸ் கருதுகிறார். அட்டவணையின் பெயரெச்சம் உருவில் திராவிடப் பெயரெச்சத்தினின்றும் வேறுபட்டிருப்பினும் அதன் பொருளும் பயனும் திராவிட வழக்கை ஒத்தே இருக்கின்றன. இப்பெயரெச்சமே சித்திய இனச் சார்புடைய மொழிகள் அனைத்திற்கும் பொதுவான சிறப்புப் பண்பு எனக் கொள்ளலாம் போலும்! (9) அட்டவணையின் ஏவல் எதிர்மறை முடிபு இன்னி கோண்டில் இது மின்னி ஆகும். இவ்வொற்றுமைகள் நீங்கலாகப் பிறவேற்றுமைத் திரிபுகளில் பெஹிஸ்தன் அட்டவணையின் மொழி ஹங்கேரியம், மோர்டுவின்20 முதலிய பிற உக்ரிய மொழிகளை ஒத்திருக்கின்றது. ஆனால், இவ்வகைகளிலெல்லாம் திராவிட மொழிகள் வேறுபடுகின்றன. அவற்றின் வினைச்சொல்லாக்கம் சிக்கலற்றது. அவை பெரும்பாலும் காலங்காட்டும் இடைநிலைகளுடனும், அவற்றின்பின், பால், இடம் காட்ட அவற்றிற்குரிய இடப்பெயர் களின் திரிபுகளையே கொண்டும் விளங்குகின்றன. இவ்வகையில் வேற்றுமைகள் இருந்தும்கூட, மேற்கூறிய ஒற்றுமைகள் இன்றியமையாச் சிறப்புடையன ஆதலின், திராவிட மொழி களுக்கும் சித்திய மொழிகளுக்கும் இடையிலுள்ள உறவு ஒருசிறிதேயாயினும் அ/து அடிப்படையானதே என்பதில் ஐயமிருக்க முடியாது. ஏனெனில், இவ்வளவு வேற்றுமை களுக்கிடையிலும் இன்றியமையா ஒற்றுமைகளும் காணக் கிடக்கின்றனவாதலின். இவ்வொற்றுமைகளிலிருந்து பெறப் படுவன யாவை யெனில், திராவிடர் வரலாற்றுக் காலங்களுக்கு நெடுநாள் முன்னரே இந்நாட்டிலேயே இருந்தவர்கள் என்பதும், அவர்களும் உலக மக்கட் குழுவினர் அனைவருக்கும் முதற் பிறப்பிடமாகக் கருதப்படும் நடு ஆசியாவினின்றே இங்கு வந்தவர்கள் என்பதுமேயாம். முதலில் ஆரியரிடமிருந்தும், பின் உக்ரோ- துரானியரிடமிருந்தும் பிரிந்து இவர்கள் இந்தியாவை நோக்கி வந்திருக்கவேண்டும் என்பதும், வரும் வழியில் பலூச்சிஸ்தானத்தில் ஒரு பகுதியினரைக் குடியேறவிட்டு வந்திருக்கவேண்டும் என்பதும் எளிதில் ஊகிக்கப்படும். இங்ஙனம் இலக்கண அமைப்பு முதலிய பல ஒற்றுமைப் பண்புகளின் மூலம் திராவிட மொழிகள் சித்தியச் சார்புடையவை என்று கொள்ளப்படினும், அவை இந்து - ஐரோப்பிய மொழியினச் சார்பும் உடையவையே என்பது வியக்கத்தக்க சில ஒப்புமைகளால் உய்த்துணரப்படும். அவற்றின் சித்தியத் தொடர்புகூடத் தனிப்படத் துருக்கியக் குழுவுடனோ, உக்ரிய, மங்கோலிய, துங்கூஸிய மொழிகளுடனோ அன்று; அம் மொழிகள் அனைத்தும் தம்முள் எவ்வளவோ வேற்றுமை யுடையன; ஆயினும் அவை யனைத்திற்கும், தாயாயுள்ள ஒரு பேரின மொழியுடனேயே திராவிட மொழியினங்கள் தொடர்புடையவையாம். இவற்றுள் திராவிடத்திற்கு மிகவும் அண்மையுடையதெனக் கொள்ளக்கூடியது பின்னிஷ் அல்லது உக்ரியமே. ஒஸ்தியக்குடனும் சில சிறப்பான உறவுகள் உள்ளன. இலக்கண ஒப்புமை, சொல் தொகுதி ஒப்புமை ஆகியவற்றின் மூலமாகட்டும் ஆராய்ந்து கண்ட இம் முடிபு பெஹிஸ்தன் அட்டவணைகளின் வெளியீட்டால் பெரிதும் உறுதியடைவது காண்க. இதனால் மீடோ - பாரசீகரது படை யெடுப்பிற்கு முன் நடு ஆசியாவில் குடியிருந்த மக்கள் துருக்கிய அல்லது மங்கோலியக் குழுவினர் அல்லர், உக்ரியக் குழுவினரே என்பது விளங்கும். வெப்ப மண்டலத்துள் இருக்கும் திராவிடக் குழு எங்கே, வட துருவப் பக்கத்திலிருக்கும் பின்னியர், ஒஸ்தியக்கர், உக்ரியர் எங்கே!இவர்களிடையே எத்தகைய தொடர்பு? திராவிட மொழிகளைச் சித்தியச் சார்புடையவை என்று கணித்தற்கான தெளிவுகளை ஆராய்கையில் நினைவில் வைக்க வேண்டிய தொன்றுண்டு. அ/தாவது, ஒருபுறம் சித்திய இன மொழிகளின் அடிப்படையான “தொக்க இயல்” பண்புகள் தெளிவான வுருவுடையவை ஆக இருப்பினும், இன்னொருபுறம் சொல் தொகுதியிலும், வேறு பல சிறு குறிப்புகளிலும் ஒன்றுக்கொன்று மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உடையவையா யிருக்கின்றன என்பதே. உண்மையில், இந்து - ஐரோப்பிய இன மொழிகள் ஒன்றுக்கு ஒன்று வேற்றுமைப் படுவதைவிட, சித்திய மொழிகள் ஒன்றுக்கொன்று எத்தனையோ மடங்கு மிகுந்த வேற்றுமையுடையன என்று கூறுதல் வேண்டும். எடுத்துக் காட்டாக, இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் எண்களின் பெயர்கள் ஒத்திருக்கின்றன என்று சொன்னாற் போதாது, (வடமொழி ஒன்று என்னும் பொருள் கொண்ட ஏக என்பது நீங்கலாக மற்றவை அனைத்தும்) ஒரே வடிவுடையவை யாகவே இருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இதற்கு நேர்மாறாக, சித்திய இன மொழிகளில் அனைத்திற்கும் பொதுவான ஒற்றுமைகள் அருகியிருக்கின்றன என்று சொன்னாற் போதாது; ஏதேனும் இரண்டு மொழிகளுக்குப் பொதுவான எண்களின் பெயர்கள்கூட மிக மாறுபட்டே யிருக்கின்றன என்றுங் கூறுதல் வேண்டும். இவ் வேற்றுமைகளின் மிகுதிப்பாட்டை நோக்கின், இந்தச் சித்திய இனம் இந்து - ஐரோப்பிய இனத்தைப் போல் ஒரு தனி இனம் என்று சொல்வதைவிடப் பல இனங்களை உட்கொண்டதோர் பேரினம் என்று சொல்வதே சாலும். இப்பேரினத்துட்பட்ட குழுக்களின் ஒருமைப்பாடு நுணுக்கமான ஒற்றுமைகளால் நிறுவக்கூடிய தன்று, பெரும்போக்கான வடிவு அல்லது அமைப்பு ஒற்றுமை களினாலேயே நிறுவப்படும். எனவே, இந்து ஐரோப்பிய இனத்துட்பட்ட மொழிகளாகிய வடமொழி, ஸெந்து (கீழப் பழம் பாரஸீகம்), பழம்பாரஸீகம், கிரேக்கம், இலத்தீனம், காதிக்லித்து வேனியம், ஸ்லவோனியம், கெல்த்தியம் முதலியவை ஒவ்வொன்றும் ஓரினத்துட்பட்ட தனி மொழிகளேயாம். ஆனால், சித்தியப் பேரினத்திலே இவற்றிலும் மிகுந்த வேற்றுமைகளை யுடைய சிற்றின மொழிகள் ஐந்தாறுக்கு மேற்பட்டுள்ளன. இவ்வுட்பிரிவினங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட இந்து - ஐரோப்பிய மொழிகளில் எத்தனைத் தனி மொழிகள் உண்டோ அத்தனைத் தனி மொழிகள் உள்ளன. இவைபோக வகைப்படுத்தி இந்நாள்வரை இனமாகச் சேர்க்க முடியாத நிலையுடைய இருபது முப்பது தனி மொழிகள்கூட உள்ளன. இந்து - ஐரோப்பிய இனத்திற்கும் சித்தியப் பேரினத்திற்கும் இடையில் உள்ள இப்பெரு வேற்றுமைக்குக் காரணம் முதன்முதற் கொண்டே முன்னைய இனத்தவர் அறிவும் நாகரிகமும் படைத்திருந்தமையும், அவர்கள் மொழிகள் இன்னும் முந்திய நாள் முதற்கொண்டே திருத்த முற்று முதற்சொற்களும் அமைதிகளும் சிதையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமையும் தான். சித்திய இனத்தவர் நாடோடிகளாய்த் திரிபவரா யிருந்தமையும், ஆரியர் ஒழுங்கான குடிவாழ்க்கை உடையவரா யிருந்தமையும் இதற்கு அடிப்படைத் தூண்டுதல்களா யிருந்திருக்க வேண்டும். காரணம் எதுவாயினும் சரி, சித்திய மொழிகளின் இன உறவுகளை ஆராயும் வகையில் இச்செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும். நெடுநாள் பிரிக்கப்பட்ட சித்திய இன மொழிகளிடையே அதே இயல்புடைய இந்து - ஐரோப்பிய மொழிகளில் காணப்படும் நுணுக்கமான ஒற்றுமைகளை எதிர்பார்க்க முடியாது. திருந்தா மொழிகளிடையே, ஒரு மொழியின் வகைத்திரிபுகளிடைக் கூட மிக விரைவான மாறுதல்கள் ஏற்பட்டு, மாறுபாடும் மிகுதியாய்விட்டதற்கான எடுத்துக் காட்டுகளைப் பேரறிஞர் மாக்ஸ்மூலர் தமது “மொழியியல் சொற்பொழிவுகளில்” குறிப்பிடுகிறார். இதே மாக்ஸ்மூலருக்கு வரைந்த கடிதமொன்றில் பாட்டிஸன் பாதிரியாரும் “ஒன்றனை யொன்று அடுத்துள்ள தீவுகளிரண்டின் மொழிகள் சொல் தொகுதியில் முற்றிலும் வேறுபட்டும், அமைப்பு ஒன்றில் மட்டுமே ஒன்றுபட்டும் காணப்படுவது இயல்பு” என்று இதனோடொப்பக் கூறுதல் காண்க. ஒரு தனிமொழிக்கு ஒரு மொழியினத்துடன் மூன்று வகையான உறவுமுறை இருக்க முடியும். (1) நேரான கால்வழி முறை (2) உடனியங்குந் துணைமொழி முறை (3) அவ்வினத்துட் சாரும் சார்புமுறை. இவற்றுள் மூன்றாம் உறவு முறையையே திராவிட மொழிகள் சித்திய மொழியினத்துடன் கொண்டுள்ளனவாகக் கூறலாம். எனினும், திராவிட மொழியாராய்ச்சியாளர்கள் இதனை ஒப்புக்கொண்டதாகக் கூற முடியாது. திராவிட மொழிகள் பெரிதும் இந்து - ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவையே என்று திராவிட மொழியாராய்ச்சிப் பேரறிஞர் டாக்டர் போப் கருதுகிறார். “தமிழ்க் கைச் சுவடி”21 என்னும் தம் நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “தென்னிந்திய மொழிகளை எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து படிக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை வடமொழித் தொடர்புடையனவெனவும், இந்து - ஐரோப்பிய மொழியினத் துடன் மிகவும் நெருங்கிய பண்டைத் தொடர்பு உடையன வெனவும் காணலாம். ஆனால், அவை வெறும் பாகதங்கள் என்றோ, வடமொழிச் சிதைவுகள் என்றோ கூறிவிட முடியாது. அவை இந்து - ஐரோப்பிய மொழியினத்துள் இடம் பெற வேண்டியனவே என்றும், வடமொழிக்கு இணையான வேறொரு துணைமொழியின் சிதைந்த கூறுகளே அவை என்றும், அவையும் வடமொழியும் ஒரே பண்டை மூல மொழியின் கிளைகள் என்றும் யாம் எப்பொழுதும் கருதி வந்துளோம். இந்து ஐரோப்பிய மொழியினத்தைச் சேர்ந்த கிரேக்கம், காதிக்22, பெர்ஸியன் முதலிய மொழிகளுடன் அவை நெருங்கிய தொடர்புடையன என்பதற்கு உறதியான சான்றுகள் பல உள; அத்தகைய தொடர்பு வடமொழிக்கு இருந்ததாகச் சொல்வதற் கில்லை”. “மலைச் சொற்பொழிவு”23 எனும் விவிலியப் பகுதியைத் திராவிடமொழிகள் நான்கிலும் மொழிபெயர்த்துத் தந்துள்ள தம் நூலின் முன்னுரையில், போப் பின்வருமாறு எழுதியுள்ளார். “இந்தத் திராவிட மொழிகளுக்கும் கெல்திக்24 தெயுத்தோனியம்25 ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள அடிப்படையான ஆழ்ந்த உறவுகளை மொழியியலார் கூர்ந்து நோக்குதல்வேண்டும். இடமும் காலமும் வாய்ப்பின் இவ் வொப்புமைகளை விரித்தெழுதக் கூடும். இந் நூலின் அடுத்த பதிப்பிலோ வேறு நூலிலோ இது பற்றி மேல் எழுதக் கருதியுள்ளோம். முழு ஒப்புமை அகர வரிசை ஒன்றாலன்றி வேறெதனாலும் இம் மொழிகளின் இன உறவை விளக்குதலரிது.” கடைசியாகப் போப் தமது “துதமொழி இலக்கணச் சுருக்கத்”26 தின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: “பேரறிஞர் கால்டுவெலுடன் யாம் பெரிதும் ஒத்த கருத்துடையோம் ஆயினும், திராவிட மொழிகளுக்கும், கெல்த்திய மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவு இன்னும் நன்கு ஆராயக் கிடப்பதொன்றென எண்ணுகின்றோம்” என்பதே. இத்துறை ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததே என்பதில் ஐயமில்லை. போப் இந்து - ஐரோப்பிய மொழியுடனே ஒற்றுமை, உறவு, இன ஒற்றுமை என்று கூறுவன வெல்லாம் எமக்கு உடன்பாடே. இந் நூலின் முதற்பதிப்பில் அவற்றை யாமே எடுத்துக்காட்டியும் உள்ளோம். ஆனால் அவ் எடுத்துக்காட்டுக்களிலிருந்து போப் கொண்ட முடிபு எம் முடீவான முடிபுடன் வேறுபடுகிறது. எமது கோட்பாடு சித்திய, இந்து- ஐரோப்பிய உறவுகள் இரண்டற்கும் இடந் தருபவையாக இருப்பினும், இந்து - ஐரோப்பிய இனத்தைவிடச் சித்திய இனமே திராவிடக் குழுவோடு நெருங்கிய உயிர் நிலையான தொடர்பு உடையது என்பதாகும். கெல்த்திய உறவுகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், இந்து - ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இம்மொழியினமே பொதுப்படச் சித்திய இனத்துடனும், சிறப்பாகப் பின்னியக் குழுவுடனும் மிக நெருங்கிய தொடர்புடையவையாகத் தோன்றுகிறது. கெல்த்தியர் ஐரோப்பாவுக்கு வரும்போது அங்கிருந்த முன் குடிகள் கெல்த்திக் மொழியையும் பின்னிஷ் மொழியையும் பேசி வந்தார்களோ என்பது ஆராயத்தக்கது. மேலும், கெல்த்திய உறவுகள் என்று கூறப்படும் உறவுகள் சிறப்பாகக் கெல்த்திய உறவுகள் தானா அல்லது உண்மையில் சித்திய உறவுகள் தானா என்பதும் ஒப்பிட்டு ஆராயத் தக்கதொன்றாம். இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே மேற்குறிப்பிட்ட திராவிட-இந்து=ஐரோப்பிய ஒற்றுமைகள் ஒப்புக் கொள்ளப் பெற்றுள்ளன. அதற்காகக் குறித்துள்ள எடுத்துக்காட்டுகளில் சில ஒற்றுமைகள் அடிப்படையானவை அல்ல; ஆதலால் ஆழ்ந்து நோக்கும் அளவில் மறைந்துவிடுகின்றன. (தமிழ் ஒன்று அல்லது ஒண்ணு; இலத்தீனம் ஊனுஸ்; தமிழ் அஞ்சு; வடமொழி பஞ்ச(ன்); தமிழ் எட்டு; வடமொழி அஷ்ட(ன்) என்பன போல்பவை). இவற்றைப் புறக்கணித்து விட்டுப் பார்த்தாலுங் கூடத் திராவிட மொழிகளின் இலக்கண அமைதிகளிற் பலவும், முதற் சொற்களிற் பலவும் இந்து-ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்புமையுடையவையாய் இருக்கின்றன. ஆயினும், உயிர் நிலையான அமைப்பு முழுவதும் ஐயமறச் சித்தியச் சார்புடைய தாதலால் சித்திய இன உறவே வலியுறுத்தப்பட்டது எபிரேய முதுச் சொற்களிற் பல வடமொழி முதற்சொற்களுடன் தொடர்புடையவை என்று காட்டப்படுகின்றமை கருதி, எபிரேய மொழியைச் செமித்திய இனத்தினின்றும் பிரித்து இந்து - ஐரோப்பிய மொழியாகக் கணிக்காததுபோல, வடமொழி, கிரேக்கம், காதிக், கெல்த்திக், பாரஸீகம், முதலிய பல மொழிகளுடன் வியக்கத் தகும் ஒற்றுமைகள் திராவிட மொழிகளிற் காணப்படினும் திராவிட மொழிகளைச் சித்திய இனத்திலிருந்தும் பிரிக்க வேண்டியதில்லை. “சினிகோ = ஆர்யக” என்ற நூலில்27 பேரறிஞர் ஷ்லெஜெல் ஆரிய சீன ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டி ஆரிய சீன மொழிகள் தம்முள் இன உறவுடையன என்று விளக்க முயல்கிறார். அவர் கூறிய உறவு உறுதிப்பட்டு விடினுங் கூடச் சீனம் ஆரியமொழி என்று ஆய்விடமாட்டாது. இரு மொழிகளிலும் மிகப் பழமையான சில முதற் சொற்கள் உள்ளன என்றுதான் முடிவு செய்யப்படும். மேலும் சீனமொழி மட்டுமேயன்றி, வடமொழியும், எபிரேயமுங்கூட முதன்முதலில் ஓரசை மொழிகளாய் இருந்தன என்று ஆராய்ச்சியால் தெரியவருகின்றது. பெரும்பாலும் திராவிட முதற்சொற்களும் அங்ஙனம் ஓரசைச் சொற்களே என்பது இவ்வாராய்ச்சியால் புலனாகும். இவ்வகையில் பேரறிஞர் ப்ளீக்28 என்பார் ஆரிய மொழிகள் மிகப் பழைமையானதொரு காலத்தில், “திராவிட மொழிகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும்” எனக் கொள்கிறார். அவர் கூறுவதாவது: “பால் வகுப்புடைய மொழிகளுள் இப் பொதுப்பால் திருந்திய முறையில் வழங்குவது ஆங்கிலம் ஒன்றிலேதான். ஆனால் பழைய மொழிகளுள் ஆங்கிலத்திற்கு ஒப்பத் திருத்தமாக இதனைத் திராவிட மொழிக் குழுவே வழங்கி வந்துள்ளது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும் இப் பாலை வழங்கும் இடங்கள், எல்லை ஆகியவற்றுள் முற்றிலும் ஒத்திருக்கின்றன. (ஆண், பெண், பொது என்ற) முப்பால் பாகுபாட்டை உடைய குழுக்கள் இவை இரண்டுமே என்பதை நோக்க இவை உறவற்றவை என்று கொள்ளுதல் இயல் பாகத் தோற்றவில்லை. பால் வகுப்பையுடைய ஆரிய இனத்துடன் திராவிட மொழிகள் இதுகாறும் தொடர்புபடுத்தப்பட வில்லையாயினும், ஆரிய மொழிகள் உரு அடையாமல் வளர்ந்து வந்த காலத்தில் அவற்றில் திராவிடத்தாக்கு ஏற்பட்டதனாலேயே இவ்வொற்றுமையும் பிற ஒற்றுமைகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூற இடமுண்டு” என்பதே. ஆராய்ச்சி எட்டுமளவும் பார்த்தாலும் மிகப் பழமையான காலத்தில்கூடத் திராவிட மொழிகளில் இப் பொதுப்பால் ஒருமைப் (ஒன்றன்பால்) பெயர் இருந்ததாகக் காணப்படுகிறது. ஆனால் வினைச்சொல்லில் பால் பாகுபாடு ஏற்பட்டது பிற்காலத்திலே என்றுதான் எண்ண வேண்டும். இந்தியாவுக்குள் திராவிடர் வருங்கால் அவர்கள் மொழியின் வினைச்சொல்லில் விகுதியே இருந்திருக்க இடமில்லை; எனவே, பால் பாகுபாடும் இருந்திருக்க முடியாது. உலகில் வேறெந்த மொழிகளையும்விடத் திராவிட மொழி வினைச்சொற்களிலேயே பால் பாகுபாடு நிறைவுடையதாக இருக்கின்றது என்பது பின் தெளிவுறுத்தப்படும். இத்தகைய பால் பாகுபாட்டு வளர்ச்சி வடமொழிச் சார்பினால் உண்டான தொன்றாகாது; அதற்கு நேர்மாறாகவே உண்டாயிருத்தல் வேண்டும். திராவிட மொழிகளில் வடமொழியுடனும் இந்து - ஐரோப்பிய மொழிகளுடனும் தொடர்புடைய சில வேர்ச் சொற்களும், சொல் வடிவங்களும் காணப்படுகின்றன என்று பொதுப்பட மேற்கூறப்பட்டது. தவறான சில கருத்து முடிபுகள் அக் கூற்றிலிருந்து எழக்கூடுமாதலின், அவற்றை விலக்குதல் இன்றியமையாததாகும். ஆரியர்களும் திராவிடர்களும் பல நூற்றாண்டுகள் கலந்து உறைந்து வந்தமையால், வடமொழி யிலிருந்து திரவிடமொழிகள் பல சொற்களைக் கொண்டு மேற்கூறிய மொழியொப்புமைக் கருத்தை ஈண்டு யாம் விளக்க முயலவில்லை. இரு மொழிகளின் அடிப்படையான மூலச் சொற்களிலும், சொல்லமைப்பிலும் காணப்படும் ஒற்றுமைகளே யாம் எடுத்துக் கொண்டனவாகும். தம்மையடுத்து வழங்கிவந்த வளமிக்க பிறமொழிகளிலிருந்து திராவிட மொழிகள் பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்பது ஒப்புக்கொள்ளத் தக்கதே; ஆனால் அதுபோலவே வடமொழியும் சிற்சில வகைகளில் திராவிட மொழிச் சொற்களைக் கடன் வாங்கிப் பயன்படுத்தப் பின் வாங்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளுதல் வேண்டும. பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியில் இவ்வாறு வந்தேறியுள்ள சொற்களைப் பிரித்தறிதல் அரிதன்று. எடுத்துக்கொண்ட பல சொற்களும், சொல்லமைப்புகளும் வடமொழியோடுமட்டுமன்றி இந்து-ஐரோப்பிய மொழியினத்துடனும் ஒற்றுமையுடையனவாகக் காணப் பெறுகின்றன. இன்னுங் கூறப்போனால் வடமொழியிற் காணப்பெறா ஒற்றுமைகள் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் காணப்பெறுகின்றன. வடமொழியில் காணப்பெறும் ஒற்றுமை களும் சிற்சில இடங்களில், திருந்திய அமைப்புடைய பிற்கால வடமொழியிலன்றிப் (ஸ்ம்ஸ்க்ருதம்) பண்டைய திருந்தாத வடமொழியிலேயேயாகும். திராவிட மொழிகளிற் காணப்பெறும் இத்தகைய கொடுக்கல் வாங்கல் சார்பற்ற அடிப்படையான ஒற்றுமைகளிற் சில கீழே தரப்படுகின்றன; (1) கிரேக்க மொழியிற்போல் னகரம் உடம்படு மெய்யாகப் பயன்படுதல். (2) மூன்றாம் இடத்திலும் (படர்க்கையிலும்), வினைச் சொல்லிலும் பால் பாகுபாடு இருத்தல்; சிறப்பாகப் பொதுப்பால் (ஒன்றன்பால்) என ஒன்றிருத்தல். (3) படர்க்கை யொருமை ஒன்றன்பாற் பெயரின் விகுதி `த்’ ஆக இருத்தல். (4) இலத்தீனைப் போன்று பலவின்பால் விகுதீ அகரமா யிருத்தல். (5) தொலைச் சுட்டு அகரமாகவும், அண்மைச்சுட்டு இகரமாகவும் இருத்தல். (6) பாரஸீக மொழி போன்று இறந்தகால மறிவிக்கப் பெரும்பாலும் `த்’ என்ற அடையை (இடைநிலையை)ப் பயன்படுத்தல். (7) பகுதியின் ஒரு கூற்றை இரட்டித்து இறந்தகாலம் உணர்தல். (8) வினைப்பகுதியின் முதலுயிர் நீண்டு தொழிற் பெயராதல். மேற்காட்டிய சில பகுதிகளாலேயே இந்து-ஐரோப்பிய- திராவிடத் தொடர்பு ஒன்று உள்ளது என்பது புலப்படும். அன்றியும், திராவிட மொழிகளுக்கு அருகிற் பன்னெடுநாளாய்ப் பயின்றுவந்த மொழி வடமொழியே யாயினும், திராவிட முதற் சொற்களிற் பல வடமொழி அல்லது கீழ இந்து - ஐரோப்பியக் குழுவைவிட மேல ஐரோப்பியக் குழுவையே சார்ந்தவையா யுள்ளன என்ற கூற்றின் உண்மையும் விளங்கும். எனவே, திராவிட மொழியைச் சித்திய இனச் சார்புடையதென வகுத்துக் கொள்வதே சரியாயினும், அந்தச் சித்திய இனத்திலுள்ள மற்றெல்லா மொழிகளையும் விட இந்து-ஐரோப்பிய மொழி களுடன் மிகப் பலவான, பழைமையான அரிய ஒப்புமைகளை யுடைய குழு திராவிடக் குழுவே என்பது தெளிவாகும். இக் குழுவை ஆரிய சித்திய இனங்களுக்கு இடைப்பட்ட குழு என்று சொல்லாமற் போனாலுங்கூட, இந்து-ஐரோப்பிய இனத்துடன் உறவுடைய சித்திய உறுப்பு மொழி என்றேனும் கூறத் தடையில்லை. இந்த இரண்டு இனங்களின் மிகப் பழைமையான ஒருமைப்பாட்டுக்கும் இதுவே சான்றாகும். இக் கொள்கை சரியாயின், திராவிட மொழிகளிலுள்ள இந்து-ஐரோப்பிய ஒற்றுமைகள் நம்மை வரலாற்றுக் காலங்கள் அனைத்திற்கும் முற்பட்ட காலத்திற்குக் கொண்டு செல்லுகின்றன; அதுமட்டுமோ? சமயக் கதைகளின் தோற்ற காலத்திற்கும் முந்தியும், இந்து-ஐரோப்பிய இனத்தார் மேலைஇனம், கீழைஇனம் எனப் பிரிவதற்கும் முந்தியும், இந்து - ஐரோப்பிய இனத்தானும், இன்று சித்தியச் சார்புடையவை என்று கூறப்படும் எல்லா மொழி களுக்கும் தாயகமான முதற் சித்திய மொழி யினத்துடன் ஒன்றுபட்டிருந்த காலத்திற்கு முந்தியும் கொண்டுசெல்லுந் தகையவா யிருக்கின்றன. திராவிட மொழிகளில், சிறப்பாகத் தமிழில், ஒருசில செமித்திய ஒற்றுமைகள் காணப்படுகின்றமை வியக்கத்தக்கதே. அவற்றுள்ளும் சில ஒற்றுமைகள் இவ்விரண்டில் மட்டுமன்றி, எபிரேயத்திலும், இந்து-ஐரோப்பிய மொழிகளிலும் இருக்கின்றன. இத்தகைய இடங்களில் எபிரேய உருவே இந்து-ஐரோப்பிய உருவினும் திராவிட மொழிகளுக்கு அண்மையதா யிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழில் அவா (பெயர்ச்சொல்); ஆவல் (தொழிற் பெயர்); இவற்றை இலத்தீனம் அவெ-ஓ (வினைப்பகுதி), வடமொழி அவ் முதலியவை அண்டியே இருக்கின்றன. ஆயினும், எபிரேயம் அவ்வாஹ் (பெயர்ச்சொல்), ஆவஹ் (வினை) என்ற இரண்டும் மிகவும் அண்மையுடையவா யிருக்கின்றமை காண்க! இங்ஙனம் திராவிடம் உள்ளடங்கிய எல்லா இனங்களுக்கும் பொதுவான ஒற்றுமைகள் ஒருபுறம் இருக்க, திராவிடம், எபிரேயம் இவற்றிற்கே சிறப்பாய், பிற மொழிகள் எவற்றிற்கும் உரியவல்லாத ஒப்புமைப் பண்புகளும் சில இருக்கின்றன. மேற் குறிப்பிட்ட தமிழிலுள்ள செமித்திய ஒற்றுமைகள் இந்து - ஐரோப்பிய ஒற்றுமைகளைப் போலச் சிறந்தவையுமல்ல, பலவு மல்ல; ஆனால், இம் மூன்றினங்களிலுங் காணப்பெறும் ஒற்றுமைகளுடனும், எபிரேயத்துடன் மிகவும் நெருங்கியவாய்க் காணப்பெறும் பண்புகளுடனும் சேர்ந்து, அவை திராவிட மொழியின் பண்டைத் தொன்மையைப் பற்றி ஆராயும் அறிஞருக்கு மிகவும் பயன் தரத் தக்கவை. இத்தகைய ஒப்புமை களை இங்கே குறிப்பது திராவிடத்திற்கும் எபிரேயத்திற்கும் இவற்றிற்கும் தொடர்பு உண்டென்று காட்டவன்று; “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்” என்ற உண்மையைக் கருத்திற் கொண்டு இத்துறைகளில் எல்லாம் ஆராய்ச்சியைச் செலுத்தாவிடினும், பிறரது ஆராய்ச்சிக்காக இத்தகைய முடிவு படுத்தப்படாத சிதறிய ஒப்புமைகளை அப்படியே எடுத்துக் காட்டவேயாம். ஆனால், இந்து- ஐரோப்பிய திராவிட ஒப்புமைகள் மொழியியலின் உயிர்நிலையை ஒட்டியவையாதலின் அவற்றைப் பழைமையான கூட்டுறவினால் பெறப்பட்டவை என்று கூறிவிட முடியாது. செமித்திய ஒற்றுமைகளோ இங்ஙனமன்றி இன ஒற்றுமையை இன்றியமையாதவையாக வேண்டக்கூடியவை யல்ல; தற்செயலாய் ஏற்பட்டவை என்றோ, அல்லது ஏதேனும் ஒருகாலத்தில் பண்டைத் திராவிடர்கள் செமித்திய இனத்தாருடன் அடுத்து வாழ்ந்தமையால் ஏற்பட்டவை (இது எளிதில் இருந்திருக்கக் கூடியதே) என்றோ கூறிவிடலாம். இனி, திராவிட மொழிகளின் இடப்பெயர்கள் தெற்கு, மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள பழஞ்குடிகளின் மொழியிற் காணப்பெறும் இடப்பெயர்களை வியக்கத்தக்க முறையில் ஒத்திருக்கின்றன. இவ் வொப்புமைக்குக் காரணங்கள் பல கூறலாமாயினும், ஒப்புமை இருக்கின்ற தென்பதை மட்டிலும் மறுத்தற்கில்லை. ஆனால், ஆஸ்திரேலியத் தன்மை இடப்பெயர், திராவிடமொழித் தன்மை இடப்பெயரைவிட, திபேத்திய மொழித் தன்மைப் பெயரை மிகுதியும் ஒத்துள்ளது என்பது இதுகாறுங் கவனிக்கப்படவில்லை. கீழ்வரும் ஒப்புமைப் பட்டியை நோக்குக! திராவிடம் ஆஸ்தி திபேத்தியம் சீனம் ரேலியம் தன்மை நான்,யான் ங,ஙைஇ, ங,ஙெ,ஙெத், ஙொ ஒருமை நா,என் ஙத்ஸ,ஙன்ய இதில் ஆஸ்திரேலியத் தன்மைப் பெயரின் பகுதி திபேத்திய மொழியையும் இந்து-சீன இனத்தையும் பெரிதும் ஒத்திருப்பினும், பன்மையாகும் பொழுத அது திராவிட மொழிகளை, அதிலும் சிறப்பாகத் தெலுங்கு மொழியை, ஒத்திருக்கிறது. தெலுங்கில் பன்மை லு என்ற விகுதி சேர்ப்பதால் ஏற்படுகிறது. அதேபோன்று ஆஸ்திரேலிய மொழிகளிலும் லு, லி, டலு, ட்லி இவற்றைச் சேர்ப்பதால் பன்மை ஏற்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மொழிகளும் இவ்வகையில் தெலுங்கை ஒத்துள்ளன. எடுத்துக் காட்டாக, திமல்29 நா (= நீ) என்பதன் பன்மை நியெல் (=நீர், நீங்கள்) என்பதாம். தன்மையிலும் ஆஸ்திரேலிய மொழியின் இருமைப் பெயர்கள், பன்மைப் பெயர்கள் ஙலு, ஙட்லு, ஙட்லி, ஙலத என்பன போன்றவை . இதனுடன் தெலுங்குப் பெயர்கள் பன்மையாகும் முறையைக் கூர்ந்து நோக்குக. (எ-டு) : வா(ண்)டு (=அவன்), வா(ண்)ட்லு (=அவர்கள்); தமிழிலுங்கூட `நான்’ என்பதன் பன்மையான `நாங்கள்’ இதனை மிகவும் அடுத்திருப்பது காண்க! ஆஸ்திரேலிய முன்னிலை இடப்பெயர்களும், திராவிட முன்னிலை இடப்பெயர்களும் தன்மை, பன்மை இரண்டிலும் தெளிவாக ஒத்திருக்கின்றன. அதிலும் விகுதியுடன்மட்டுமன்றிப் பகுதியிலும் முழு ஒற்றுமை இருப்பதுங் காண்க! திராவிட மொழிகளில் பொதுப்படையான (முன்னிலைப்) பெயர்களின் ஒருமை நீன் என்பதும், பன்மை நீம் என்பதும் ஆம். இவற்றுள் நீ என்பதே பகுதிப் பொருள் தருவது. இ/து ஈரெண்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. ஒருமையில் ஒருமை விகுதியாக னகரமும் (ன்), பன்மையில் பன்மை விகுதியாக மகரமும் (ம்) வருகின்றன. சில இடங்களில் பன்மை விகுதியாகிய மரகத்திற்கு மாறாகப் படர்க்கைப் பன்மையின் விகுதியாகிய ரகரம் வந்து நீர் (தெலுங்கு மீரு; அதாவது மீர்+உ) ஆதலும் உண்டு. ஆனால், புதிதாக வந்த இந்த ரகர விகுதி எழுவாயில், அதிலும் தனியானசொல்லில் மட்டுமே வருகிறது. பிற விகுதிகள் உருபுகள் சேர்ந்த பகுபதங்களுள் வரும்பொழுது மகர விகுதியே வருதல் காண்க! (எ-டு): நாங்கள் = நாம் +கள்; நீங்கள் = நீம்+கள்; உங்கள் உம்முடைய முதலாயின. ஒருமையில் முன்னிலைப் பெயரிலுள்ள உயிரொலி இகரமேயாயினும், பன்மையில் இகரத்தினிடமாக உகரமும் வருகிறது. (எ-டு): பிரகுவி; நும் = நீங்கள்; செந்தமிழ்: நும் (உங்களுடைய). இக் காலக் கன்னடம் இந் “நீம்” என்பதன் மகரத்தை வகரமாக மெலிவித்து, நீஉ30 அல்லது நீவு31 ஆக்குகின்றது காண்க! இம்மாற்றங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறு ஆஸ்திரேலிய மொழியியல்பு திராவிட மொழி யியல்பை முற்றிலும் ஒத்திருப்பது விளக்க முடியாததொரு புதுமையேயாம். திராவிடம் ஆஸ்திரேலியம் முன்னிலை நின்ன,ஙின்னெ, ஒருமை நீன், நின் ஙிந்தொஅ, நிங்தெ. முன்னிலைப் நீம்,நிம் நிமெதூ, நுர, பன்மை நீர், நும் நிவ, ஙுர்லெ. நீவு கீழ்வரும் ஒப்புமைப்பட்டியில் இருமை, பன்மை ஆகிய ஈரெண்களும் (இரண்டின் பொருளும் திராவிடமொழிகளில் ஒன்றேயாதலால்) பன்மை என்றே குறிக்கப்படுகின்றன. தமிழ் தன்மை ஒருமை இரண்டாம் வேற்றுமை உருபு `என்னை’ என்பதையும் ஆஸ்திரேலிய இரண்டாம் வேற்றுமை உரு `என்மொ’ என்பதையும் ஒப்புநோக்குக! ஆஸ்திரேலிய மொழிகளின் மொழியமைப்பு சித்திய இனத்துடன் பெரும்பாலும் ஒற்றுமையுடையதாகவே காணப்படுகிறது.முன்னடைகளின் இடமாகப் பின்னடைகளை வழங்குதல்; தன்மைப் பன்மையில் ஒன்று முன்னிலை நீங்கலாகவும் ஒன்று அதனை உளப்படுத்தியும் இரண்டு வடிவங்கள் உடைமை; தன்வினை, பிறவினை முதலியவற்றை விகுதி சேர்ப்பதாலேயே தெரிவித்தல்; சொற்களின் அடுக்கியல் அமைப்பு, வாக்கியத் திலுள்ள சொற்றொடர்பு முறை ஆகிய இவை யனைத்திலும் இவை திராவிட மொழிகளையும், துருக்கியம் மங்கோலியம் போன்ற பிற சித்திய மொழிகளையும் ஒத்தே இருக்கின்றன. ஆனால், ஒன்றிரண்டு இடங்கள் நீங்கலாக, `பாலினேஸிய’32 மொழிகளுடன் இவை வேறுபடுகின்றன. ஆஸ்திரேலிய மொழிகளில் திரட்டப்பட்ட சொற்றொகுதிகளில் இவ்வொற்றுமைகளை உறுதிப்படுத்தும் வேறு விவரங்கள் இல்லையாயினும், இவ்வொற்றுமைகள் தற்செயலானவை யென்று விடத்தக்கவையல்ல. நடு ஆப்பிரிக்காவில் போர்னு33 நாட்டில் பேசப்படும் கனூரி34 அல்லது போர்னு என்னும் மொழிக்கும் திராவிட மொழிக்கும் தொடர்பிருப்பது மேற்கூறிய ஒப்புமையினும் புதுமையானதேயாம். இவ் வொப்புமைகள் பொதுப்படை யானவை என்பது உண்மையே. அவையாவன: கனூரியும் “அடுக்கியல்” அமைப் புடையது உறவு அடைகளை முன்னடையாக்காமல் பின்னடை யாக்குகிறது; ஐயம், வினா, அழுத்தம் முதலியவற்றைக் குறிக்க (திராவிடமொழி களுக்கே சிறப்பான முறையில்) அடைகளைப் பெயர் வினைகளுடன் சேர்க்கிறது; வினைக்கு எதிர்மறை உருவும் உண்டு ஹங்கேரிய மொழியைப்போன்று தன்வினை35 பிறவினை36 உண்டு. திராவிட மொழிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமை இருப்பதைக் குறிப்பது முன்னிலை ஒருமையாகிய `நி’ என்பதாகும். இதுவும் திராவிடம் பிராகுவி, சீனம், பெஹிஸ்தன் அட்டவணை மொழி, ஆஸ்திரேலியம் முதலிய மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதென்பது மேலே காட்டப்பட்டது. கனூரி மொழி மேல ஆப்பிரிக்காவின் மொழிகளிலிருந்து மிகுதியும் வேற்றுமைப் படுவதால் அது தனிப்பட்ட ஆராய்ச்சிக்குரியதாகும்.37 அடிக்குறிப்புகள் 1. ஞசடிகநளளடிச சுயளம டிக ஊடியீநnhயபநn. 2. ளுநஅவைiஉ. 3. ஹபபடரவiயேவiஎந. 4. ஞசiஉhயசன. 5. “டீn வாந யீசநளநவே ளவயவந டிக டிரச மnடிறடநனபந டிக வாந கூரசயnயைn டுயரேபயபநள” லெ ஆயஒ ஆரடடநச in க்ஷரளேநn’ள “டீரவடiநேள டிக வாந ஞாடைடிளடியீhல டிக வாந ருniஎநசளயட ழளைவடிசல. 6. க்ஷடிhவடiபோ. 7. க்ஷடிடடயச. 8. ஞசடிக. ழரகேயடஎல. 9. ஏடிபரட. 10. ஞசடிகநளளடிச ஞடிவவ யனே குசநைனசiஉh ஆரடடநச. 11. னுச. க்ஷடடிஉம. 12. ஊயளவசநn. 13. ஐகேடநஒiடியேட. 14. றுநளவநசn அநனயை. 15. னுயசரைள ழலளவயளயீநள. 16. ஆச. சூடிசசளை. 17. துடிரசயேட டிக வாந சுடிலயட ஹளயைவiஉ ளடிஉநைல ஏடிட ஓஏ. 18. ஞசடிக. டீயீயீநசவ. 19. சுநடயவiஎந ஞசடிnடிரn. 20. ஆடிசனஎin 21. கூயஅடை ழயனே-க்ஷடிடிம. 22. ழுடிவாiஉ. 23. கூhந ளுநசஅடிn டிn வாந ஆடிரவே. 24. ஊநடவiஉ. 25. கூநரவடிniஉ. 26. டீரவடiநே டிக வாந ழுசயஅஅயச டிக வாந கூரனய டுயபேரயபந. 27. னுச. ழுரளவயச ளஉhடநபநட in “ளுiniஉடி - ஹசலயஉய” (க்ஷயவயஎயை 1872) 28. னுச. க்ஷடநநம. 29. னுhiஅயட 30. சூiஎர. 31. சூறைர. 32. ஞடிடலநேளயைn. 33. க்ஷடிசரே. 34. முயரேசi. 35. ளுரதெநஉவiஎந எநசb 36. டீதெநஉவiஎந எநசb. 37. ளுநந முடிநடடந’ள ழுசயஅஅயச டிக க்ஷடிசரே. 8. திராவிட மூலமொழியின் இயல்பை உள்ளவாறறிவிக்கும் மொழி எது? திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளை ஒப்புமைப்படுத்துமுன் திராவிட மூலமொழியின் அமைப்பை எங்ஙனம் அறியலாகும், அதற்குத் துணைசெய்யும் மொழியாது என்பவற்றை ஆராய்தல் நலம். சிலர் செந்தமிழ் என்று கூறப்படும் இலக்கியத் தமிழே பண்டைத் திராவிட மூல மொழியின் சிறந்த வகைக்குறிமொழி எனக்கருதுகின்றனர். (செந்தமிழின் மதிப்பை ஈண்டு ஒரு சிறிதும் குறைவுபடுத்தக் கருதவில்லை.) எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் திராவிட மொழிகளின் தொன்மையை விளக்குங் கண்ணாடியாகக் கொள்வதற்கில்லை என்றமட்டும் துணிந்து கூறலாம். இன்றுள்ள மொழிகள் அனைத்தையும் ஒப்புமைப்படுத்துவதனாலேயே நாம் கிட்டத்தட்ட அப்பண்டையமொழியின் நிலையை ஒருவாறு அறியமுடியும். இவ்வகையில் செந்தமிழ் மட்டுமன்று; கொடுந் தமிழும், பிறமொழிகளில் மிகத் திருந்தா முரட்டு மொழியுங்கூடப் பயன் தருவனவேயாகும். இதில் பங்குகொள்ளாத மொழி இல்லை என்றே சொல்லலாம். தமிழ்த் தன்மை முன்னிலைப் பெயர்களைப் பழங்கன்னட வடிவங்களின்றி அறியமுடியாது. திராவிடத்தின் படர்க்கை ஆண்பால் பெண்பால் விகுதிகளின் அமைப்பை நன்குவிளக்க உதவும் மொழி, ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை வரிவடிவே இல்லாமலிருந்து வந்த காட்டுமொழியாகிய கந்தம் அல்லது கு மொழியே என்பது உண்மை. இங்ஙனமாயினும் மூல திராவிடத்தின் நிலைமையை உணர்த்தும்வகையில் பிறமொழிகள் அனைத்தையும்விடத் தமிழே, அதிலும் சிறப்பாகச் செந்தமிழே, மிகவும் பயன் தருவதென்பதை ஒப்புக் கொள்ளல்வேண்டும். இதற்குக் காரணம் திராவிட மொழிகள் அனைத்தினுள்ளும் முன்னதாகத் திருத்தமுற்ற மொழி தமிழ் என்பதேயாம். (1) திராவிட மொழிகளின் இலக்கிய நடைமொழி எவ்வளவுக்கு அவ்வம் மொழிகளின் பண்டைய உருவங்கள் எனத் தகும்? ஒரு மொழி இலக்கிய மொழியாகப் பயிலத் தொடங்கியதும், அ/து அம்மொழியின் பேச்சு நடைமொழியுடன் தொடர்பற்றுப் பிறிதொரு மொழியாய்விடுதல் இந்திய மொழிகளிடைக் காணப்படும் புதுமைகளுள் ஒன்றாகும். இப்பண்பு வடக்கிலுள்ள ஆரியமொழிகள், தெற்கிலுள்ள திராவிடமொழிகள் ஆகிய இரண்டிலுமே காணப்படுகின்றன. இவ்வகையில் வடமொழிக்கும், பாகதங்களுக்கும், தற்கால வடஇந்திய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு, இலத்தீன் போன்ற உயிரற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் ஐரோப்பியாவின் இன்றைய உயிருள்ள மொழிகளுக்கும் உள்ள தொடர்பைப் போன்றதன்று. ஐரோப்பாவில் “உயிரற்ற” மொழிகள் என்று சொல்லப்படுபவை ஒருகாலை உயிருள்ள மொழிகளாகவே இருந்தன; அ/தாவது, கிட்டத்தட்ட எழுதுவது போன்றே பேசப்பட்டுவந்தன. ஸிஸரோவும்1, டெமாஸ்தனீஸும்2 இதற்குச் சான்று பகர்வர். அவற்றை “உயிரற்றமொழிகள் என்று சொல்லும்போது அவை உயிருள்ள நிகழ்காலத்து மொழிகள் அல்ல, உயிரற்ற இறந்தகாலத்துமொழிகள் என்பதே குறிப்பு. வடமொழியை “உயிரற்ற” மொழி என்பது இதே பொருளிலன்று. பெரும்பாலும் அ/து என்றும் உயிரற்ற மொழியாக இருந்ததென்றே தோற்றுகிறது; அ/தாவது என்றும், எவ்வளவுதொலைப்பட்ட பண்டைக் காலத்தும் ,எந்தவிடத்தும், ஆரிய இனத்தாருள் எவ்வகையோராலும் அது பேசப்பட்டதில்லை. அதன் பெயர் ஸம்ஸ்கிருதம் என்பதில் இருந்தே அது பண்படுத்தப்பட்ட, நிறைவு படுத்தப்பட்ட மொழி என்று விளங்குகிறது. அ/து; ஓரினத்தாரது மொழியோ, ஓரிடத்தின் மொழியோ அன்று; ஒருவகுப்பாரின் மொழி: அ/தாவது புலவர், கவிஞர், அறிஞர் ஆகியோர்களது மொழி; சுருங்கக் கூறின் அ/து இலக்கிய மொழியாம். எனவே, இலக்கிய வளர்ச்சி முன்னேற முன்னேற, அதுவும் வளர்ந்து பெருகிப் பண்பட்டு வந்தது. உயிர் என்பது வளர்ச்சி, வளர்ச்சி என்பது மாற்றம் என்ற பொருளில் வழங்குமாயின், வடமொழி உயிரற்ற மொழியன்று, உயிர் ததும்பிநிற்கும் மொழி என்றே பல்காலும் கூறத்தகும். எனினும், அதன் வளர்ச்சிமட்டும் மிகவும் மெதுவானதொன்று (இந்தியாவில் எல்லாப் பொருள்களும் மெதுவான வளர்ச்சியுடைய தென்பதற்கு ஐயமே யில்லை; புராண வடமொழி வேத வடமொழியின் மாறுபட்டது; வேதங்களுக்குள்ளேயும் அதன் பிந்திய மந்திரங்கள் முந்திய மந்திரங்களை நோக்க மொழியில் மாறுபாடுடையவை. ஆனால், நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான வட மொழிகூடப் பேச்சு மொழியன்று, பண்பட்ட மொழியேயாம். அதுவும் பேச்சு மொழியிலிருந்து பண்பட்டதன்று; தனக்கு முந்தி வழங்கி இறந்துபட்டதோர் இலக்கிய மொழியினின்று பண்பட்டதே யாகும். இங்ஙனம் வடமொழி இலக்கிய மொழியாதல் பற்றி, வட மொழியாலியன்றுள்ளது ஒரு நூல் என்ற காரணத்தால் அந்நூல் பழைமையானது என்று முடிவுகட்டிவிடுதல் கூடாது. ஏனெனில், புத்த சமயத்தவர் நீங்கலாக வட இந்திய, மேல இந்தியப் புலவர்கள் அனைவரும், அவரையொட்டித் தென் இந்தியாவிலுள்ள புலவருள் ஒரு சாராரும், சமயக் கருத்துக்களைத் தெரிவிக்க வட மொழியையே ஏற்ற கருவியாகக் கொண்டு அம் மொழியில் எழுதிவந்துள்ளனர். “கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த உயர் சீர்திருத்த அறிஞரான புத்தர் தம் கோட்பாடுகளைப் பரப்ப மக்களது பேச்சுமொழியையே வழங்கலானார். அவர்தம் மாணாக்கர்கள் கணக்குவழக்கின்றி நூல்களை எழுதித் தள்ளினர். அக்காலப் பேச்சுமொழி பாகதம். அப் பேச்சு மொழியில் எழுதிய இவர்களும் மேலே குறிப்பிட்ட குருட்டுக் கொள்கையைப் பின்பற்றினர். என்று பாகதம் புத்த சமயத்தின் இலக்கியத்துள் வழங்கிற்றோ, அன்றே அதுவும் “தெய்வமொழி” யின்பாற்பட்டு வடமொழியின் வளர்ச்சியற்ற போக்கைப் பின்பற்றத் தொடங்கிற்று. இந்திய மொழிகளுள் எதுவும் இவ் “ஊழ் வலி” யினின்றும் தப்பவில்லை. எழுத்தில் வந்ததும் பேச்சில் செத்தது. இன்று வங்காளத்தில் இந்த நிலைமையைத் தான் பார்க்கிறோம். ஆங்கில அறிவும் பயிற்சியும் உடைய ஒருசிலரைத் தவிர வேறெவரும் பேச்சுமொழியை எழுதுவது கொண்டு மன நிறைவடைவதில்லை. எழுதுகோலைக் கையில் எடுத்துவிட்டால், “எல்லாரும் பேசுவதையா எழுதுவது? பிறர் மலைக்கும்படியான பகட்டும் உருட்டும் மிக்க வடமொழி வண்டவாளங்கள் தான் எழுதத் தக்கவை” யென்னும் நினைப்பு வந்துவிடுகிறது! (இந் நடையைப் பொது மக்கள் அறிய முடியாது என்று அவர்களே ஒப்புக்கொள்ளவும் தயங்குவதில்லை!)” வடஇந்தியாவில் மட்டுந்தான் இந்நிலைமை யென்பதில்லை; தென் இந்தியாவிலும் இதே நிலைமைதான்; இதே பயன்தான். நன்கு திருந்திய திராவிட மொழிகளுள்ளும் கிட்டத்தட்ட எல்லாமே இலக்கியமொழி ஒருபுறமும் பேச்சுமொழி ஒருபுறமுமாக இரண்டுபட்ட மொழிகளாகவே நிலவுகின்றன. இலக்கியத்தில் வழங்கும் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று அழைக்கின்றனர். ஆனால் உண்மையில், அது பழையதும் அன்று, புதியதும் அன்று; ஏனெனில் கேசவர் இலக்கணம்3 வகுத்தநாள் முதல், அ/தாவது, 12ஆவது நூற்றாண்டு முதல், இன்றுவரை, கன்னட இலக்கிய எழுத்தாளர் அனைவரும் அதிலேயே எழுதுகின்றனர். இப்பழங் கன்னடத்தை விடப் பழைமை என்ற பெயருக்கு உரிமை மிகுதியுடையது பழமலையாளம்; ஏனெனில் இதில் இன்று வழக்காற்றுப்போன வடிவங்கள் மிகுதி. மேலும் இன்றைய மலையாள இலக்கியம் முற்றிலும் வடமொழிமயமாயிருப்பவும், பழ மலையாள இலக்கியம் பழந்தமிழ் இலக்கியச் சார்புடையதாக இருக்கிறது. தெலுங்கில் செய்யுள்மொழி பேச்சுமொழியிலிருந்து எவ்வளவோ வேறுபட்டுள்ளது. ஆனால், இதற்குத் தனியாகப் பெயரில்லை. தெலுங்குப் புலவர்கள் இதனைத் தூய்மைமிக்க உயர்ந்த தெலுங்கு எனவே கொள்கின்றனர். இலக்கிய நடைமொழிகளுக்கிட்ட பெயர்களுள் தமிழ் இலக்கிய நடை மொழிகளுக்கு இட்ட பெயர்தான் மிகவும் பொருத்தமானதாம். அது செந்தமிழ் என்பது; அ/தாவது நேரான, திருத்தமான தமிழ் என்பது. இதனின்றும் பிரித்து வேறாகக் கூறப்படும் கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழையும், தமிழின் இடவகைத்திரிபுகளாக இலக்கண அறிஞரால் வகுத்துரைக்கப்பட்ட பன்னிருமொழி களையும் குறிக்கும். ஐரோப்பிய அறிஞர் இச் செந்தமிழைக் குறிக்க ‘உயர் தமிழ்” என்ற தொடரை வழங்குகின்றனர். கன்னட இலக்கிய மொழிக்குக் கொடுத்த பெயரைவிட இது மிகவும் சரியான பெயர் என்பதில் ஐயமில்லை; ஏனெனில், இந்த இலக்கிய மொழிகள் அனைத்துமே ஒரு வகையில் பழைய மொழிகள் என்று கூறத்தக்கவையே யாயினும், அவற்றின் சிறந்த பண்பு பழைமையன்று; அவற்றின் திருந்திய உருவும், செம்மைப்பாடுமேயாம். வட மொழிக்கும் பழைய பாகதங் களுக்குமோ, அல்லது வட மொழிக்கும் இன்றைய கௌரிய மொழிகளுக்குமோ இடையில் என்ன தொடர்பு உளதோ, அதே தொடர்புதான் செந்தமிழுக்கும் இன்றைப் பேச்சுத் தமிழுக்கும் இடையே உளது. இன்று பேச்சுத் தமிழுக்கும் இவ் உயர் செந்தமிழ் நடைக்கும் இடையே எவ்வளவு மாறுபாடு இருக்கிறதோ, அவ்வளவு பெரும்பாலும் அவை எழுதப்பட்ட காலத்துப் பேச்சு மொழிக்கும் அதற்கும் இடையே இருந்திருக்கக் கூடும். இவ்வளவு திருத்தமும் செம்மைப்பாடும் உடைய தொருமொழி என்றேனும் எத்தகைய வகுப்பாரிடையேனும் பேச்சு வழக்கிலிருக்கக் கூடுமென்பது நம்பக்கூடாத செய்தியே யாம். அதில் பல பழைய சொல் வடிவங்கள் இருக்கின்றமை உண்மையே. ஆனால், இலக்கிய வழக்கு ஏற்பட்ட போது கொச்சை என்று கூசாது விலக்கப்பட்ட சொற்களுள் மிகப் பழைமையான சொற்களும் விலக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே, இலக்கியச் சொல், பழைமைமிக்க சொல்லாகத் தான் இருக்கவேண்டு மென்பதில்லை. அடிக்கடி பேச்சு வழக்குச் சொற்கள் அவற்றுக்குச் சரியான இலக்கியச் சொற்களைவிடப் பழைமை உடையவையா யிருப்பதும் உண்டு. ஆயினும், ஒரு வகையில் இலக்கியச் சொல் உயர்வு உடைய தென்று ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அதாவது, ஒரு சொல்லின் பழைமையை அல்லது பழைய வடிவை வரையறுக்கும் இடத்தில் அதன் பேச்சு வடிவைவிட இலக்கிய வடிவையே பழைமைக்குச் சான்றாகக் கொள்ள முடியும். பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், என்று எவ்வடிவில் வழங்கின என்று கூற முடியாது. ஆனால், இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு சொல் வழங்கினால் அ/து அந்நூல் எழுதப்பட்ட காலத்திலேயோ, அன்றி அதற்கு நெடுநாள் முன்னரேயோ அவ்வடிவில் வழங்கி வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாகும். ஒரு சொல் இலக்கியத்தில் வழங்குவதற்கு முன்னமேயே அது நெடுநாள் பேச்சு வழக்கில் வழங்கியிருக்க வேண்டுமாதலால், இலக்கிய வழக்கால் அதன் பழைமை இன்னும் நான்றாக வலியுறு மென்பதில் ஐயமில்லை. திராவிட மொழிகள் எதனிலும் ஒரு நூல் இலக்கியவழக்கு உடையது என்று ஏற்பட்டால் அது குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே வழங்கப்பட்டதொன்று என்று தயங்காமற் கூறிவிடலாம். புலவர்களெல்லாரும், பண்டைக் காலப் புலவர்கள்கூட, வழக்காற்றில் மிக அருகி வழங்குவன வாயுள்ள சொற்களையே செய்யுளுக்குச் சிறந்தனவாகக் கருதிப் பொறுக்கிச் சேர்க்கும் வழக்கத்தைக் கையாண்டு வந்துள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடற்பாற்று. (2) தமிழ் இலக்கியத்தின் பழைமை ஒப்பியல் இலக்கணமுறைக்குப் பயன்படுவ தொருபுற மிருக்க, பொதுவாகவே, செந்தமிழிலக்கியங்களின் பண்டைத் தொன்மை தனிப்பட்ட சிறப்புடையது. அதற்குரிய சான்றுகளிற் சில கீழே தரப்படுகின்றன:- 1. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழ்மட்டு மன்று; தமிழின் மிகப் பழைமையான முதல் வடிவங்களைப் பெரும்பாலும் அழியாமற் பாதுகாத்து வந்திருப்பதும் அதுவே. இதன் பயனாக, பிற திராவிட மொழிகளில் இலக்கியநடை பேச்சுநடையினின்றும் வேறுபடுவதைவிட, இச்செந்தமிழ் பேச்சுத்தமிழினின்றும் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவ் வேறுபாட்டின் அளவை நோக்க இதனைப் பேச்சுத் தமிழின் வேறானதொரு தனிமொழி என்றுகூடக் கூறிவிடலாம். உண்மையில், செந்தமிழின் செய்யுள்நடை மட்டுமே யன்றி, உரைநடை கூடத் தற்காலத் தமிழனுக்கு விளங்காத அளவு கடுமையான தெனல்மிகையாகாது. இக்கால இத்தாலியனுக்கு இலத்தீன் மொழியிலுள்ள விர்கிலின் ஈனீட்4 எவ்வளவு தொலைவோ, அவ்வளவு இன்றைத் தமிழனுக்குச் செந்தமிழும் தொலைவுடையது என்று கூறலாம். மணிக்கணக்காகச் செந்தமிழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்கக் கேட்டப் பின்னரும் கல்வியறிவற்ற தமிழனொருவன் தான் கேட்ட பொருளை ஒருசிறிதும் அறியான். ஆனால் இவ்வளவுக்கும் திராவிடப் பேச்சுமொழிகளிற் காணப்படும் வடமொழிச் சொற்களைவிட, செந்தமிழில் குறைந்த அளவிற்கே அச்சொற்கள் காணப்படுகின்றன. உண்மையில், செந்தமிழின் புதுமை என்னவெனில், அது பேச்சுத் தமிழைவிட வடமொழிச் சொற்கள் குறைந்ததும், தூய்மை மிகுந்ததும் ஆகும் என்பதே. தூய்மையும், நாட்டுப்பற்றும் அதன் உயிர் நிலைகள் ஆகும். அதன் திருத்தம் அனைத்தும் தற்சார்பில் உண்ணின்றெழுந்த திருத்தமேயாம்; வெளிவரவால் ஏற்பட்ட திருத்தமன்று. செந்தமிழ்ச் சொற்களும் இலக்கண அமைதியும் சில பல புலவர்களால் ஒரே காலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று; படிப்படியாகவும் மெதுவாகவுமே பழக்கத்தில் வந்திருக்கவேண்டும். கீழே நாட்டில் எல்லாம் மெதுவாகவே வளர்ச்சியுற்று வருகிற பான்மைக் கேற்பவே தமிழும் மெதுவாகவே வளர்ச்சியுற்றிருத்தல் வேண்டும். அப்படி யிருக்க, பேச்சு வழக்கினின்று செந்தமிழ் இன்று காணப்படும் அளவுக்கு மாறுபாடடைந்துள்ள தொன்றே அதன் பழைமையை நன்கு விளக்கும் சான்றாகும். 2. செந்தமிழில் சொற்களும், அவற்றின் இலக்கணத் திரிபுகளும் எண்ணிறந்தவையாய் மலிந்து கிடக்கின்றமையும் அதன் பழைமைக்கு இன்னொரு சான்று ஆகும். செந்தமிழின் இலக்கணம் இறந்துபட்ட சொல்வடிவுகள், பழங்கால விகுதிகள், அருவழக்குகள் முதலியவை நிறைந்ததொரு பழம் பொருட்காட்சி சாலை போன்றதே யாகும். சிறப்பாகக் கூறுமிடத்துப் பழந் தமிழில், எளிமை வாய்ந்த பழைய இலக்கண முடிபுகளும், திரிபற்றவையோ அன்றி ஒரு சிறிது திரிபுற்றனவோ ஆன வினைகளும் காணப்படுகின்றன. இப் பழைமைக் குறிகள், செந்தமிழ் மொழியின் முதிரா இளமையிலேயே, எழுத்து வடிவம் ஏற்பட்ட காரணத்தால் செந்தமிழ் வினைச்சொற்களின் வளர்ச்சி தடைப்பட்ட தென்பதைக் குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும். சீனமொழியிலும் இவ்வாறே வினைச் சொற்கள் இதே காரணத்தால் வளர்ச்சியுறாமல் தடைப்பட்டமை வியக்கத்தக்க தொன்றாம். செந்தமிழின் சொல்வளத்திற்குச் சான்று வேண்டின், யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கப் பாதிரிமார்கள் வெளி யிட்டுள்ள பள்ளிக்கூட அகரவரிசையை5 எடுத்துக்கொள்ளலாம். அதில் 58,500 சொற்கள்வரை உள்ளன. இவற்றுடன் ஆயிரக்கணக்கான மரபுச் சொற்களையும், தொடர்களையும் சேர்த்தால்தான், தமிழ்மொழிச் சொற்றொகுதி நிறைவுறும். தமிழிற் பயிற்சியுடைய எவரேனும் பிற திராவிட மொழிகளின் அகரவரிசைகளை மேற்போக்காகப் பார்த்தால்கூட அவற்றுள் வியக்கத்தக்க ஒரு வேற்றுமையைக் காண்பர்; அஃதாவது: தமிழைப்போல அவற்றுள் ஒருபொருட் பலசொற்கள் இல்லை என்பதே. மேலும், ஒவ்வொரு கருத்தையும் குறிக்கத் தமிழில் பெரும்பாலும் பிற மொழிகளிற் காணப்படாத சிறப்புச் சொற்கள் இருபபதோடு அப் பிறமொழிகள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான அதே கருத்துடைய சொற்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. (எ-டு) வீடு என்பது தமிழுக்கே சிறப்பான சொல் ஆகும். இதே கருத்தில் தமிழ் இல் (தெலுங்கு இல்லு), மனை (கன்னடம் மன), குடி (வடமொழி குடீ; பின்னிஷ் மொழிகள் குடி) என்ற சொற்களும் தமிழில் உள்ளன. இங்ஙனம் ஒவ்வொரு திராவிட மொழியிலும் உள்ள சொற்களின் பழந் திராவிட வடிவங்களும், வேர்ச் சொற்களும் தமிழில் இருப்பதால் இதனை அத்தகைய பழந்திராவிட வேர்ச் சொற்களுக்கும் வடிவங் களுக்கும் ஒரு களஞ்சியம் என்னலாம். இச் செய்திகளை நோக்க, தமிழ் மொழி இலக்கிய மொழியாகத் திருத்தமுற்றது மற்றைத் திராவிட மொழிகள் இலக்கிய மொழிகளானதற்கு நெடுங்காலம் முன்னராகும் என்றும், தமிழைத் தவிர்ந்த ஏனைய திராவிட மொழிகள் பண்டைத் தமிழர் மொழியினின்று அக்காலத்தில் பிரிந்திருக்கக்கூட முடியாதென்றும் முடிவு கட்டலாகும். 3. தமிழின் பழைமைக்கும் தூய்மைக்கும் இன்னொரு சான்று அ/து (ஒருபுறம் பழங் கன்னடம், பழ மலையாளம், துளுவம் முதலியவற்றுடனும், இன்னொருபுறம் துதம், கோண்டு, கு முதலியவற்றுடனும் ஒற்றுமை உடையதாயிருப்பதாகும்.) பல இடங்களில் இக்காலக் கன்னடமும், தெலுங்கும், தமிழுக்கு மாறுபட்டிருக்கும்போதுகூட, பழங் கன்னடம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 4. தெலுங்கு மொழியின் முதற்சொற்களும், விகுதிகளும் தமிழின் முதற்சொல், விகுதி இவற்றின் மரூஉவாக மிகுதியும் இருப்பதும் தமிழின் பழைமையைக் காட்டுவதாகும். (எ-டு) திராவிட மொழியின் சுட்டுக்களில் அ தொலைவையும் இ அண்மையையும் காட்டுபவை. இவற்றுடன் பால் உணர்த்தும் விகுதியும், இடையே உடம்படு மெய்யாகிய வகரமும் வர அவன், இவன் என்னும் இடப்பெயர்கள் அல்லது சுட்டுப் பெயர்கள் ஏற்படுகின்றன. இவற்றிற்குச் சரியான தெலுங்குச் சொற்கள் எங்ஙனம் அமைந்துள்ளன என்று பார்க்கலாம். தமிழின் அன் விகுதிக்குச் சரியான தெலுங்கு விகுதி டு, உடு, அல்லது, அடு ஆகும். எனவே, தமிழில் அ+வ்+அன் என்பதற்கும், இ+வ்+ அன் என்பதற்கும் சரியாக, தெலுங்கிலும் அ+வ்+அடு (அவடு), இ+வ்+டு (இவடு) என்ற புணர்ப்பு உருவை எதிர்ப்பார்க்கலாம்; ஆனால் இன்றைத் தெலுங்கிலுள்ள சொற்கள் `வாடு’ (=அவன்) `வீடு’ (=இவன்) என்பவையாம். இச் சொற்கள் வந்தமை எப்படி? தெலுங்கு இலக்கணத்தில் ஒலியியல் அமைதிப்படி, முதலில் சுட்டு அகரமும் இகரமும் இரண்டாம் உயிரைத் தம்மினமாக்கிய பின் தாம் இறந்துபட்டன. இறந்துபட்ட உயிரின் மாத்திரை பின் உயிருடன் கூட்டப்பட்டு உயிர் நீள்கின்றது. இங்ஙனம் பெரிதும் மாறுதலடைந்த தெலுங்கு வடிவங்கள் தமிழ் வடிவங்களுக்குப் பிந்தியவை என்பது தெளிவு. மிகப் பழைய இலக்கியத் தெலுங்கில்கூட இவ் வடிவே காணப்படுவதால் தெலுங்கில் இலக்கியச் சார்பான திருந்திய மொழி ஏற்பட்டது இம் மாறுதலுக்குப் பின் என்றும், அதிலிருந்தே தெலுங்கு இலக்கியமொழி தமிழ் இலக்கியமொழிக்குப் பிந்தியதென்றும் ஏற்படுகின்றன. 5. தமிழில் காணப்படும் வடமொழித் திரிபுகள் (தற்பவங்கள்) பிற மொழிகளிலுள்ள வடமொழித் திரிபுகளை விட எவ்வளவோ சிதைந்திருக்கின்றமையால் அவற்றின் வழக்கு மிகப் பழைமையானது என்று ஏற்படுகிறது. தமிழின் பழைமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். தமிழில் வந்துள்ள வடமொழிச் சொற்கள் வெவ்வேறு காலத்திற்குரிய மூன்று வகைப்பட்டவை: (அ) அவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை சமய நூல்களில் வழங்குபவையாம். தமிழ்நாட்டிலுள்ள சமயங்களுள் மக்களிடையே செல்வாக்குடையவை மூன்று; முதலாவது, ஆகமங்களைப் பின்பற்றி எழுந்த சைவ சித்தாந்தம், தமிழரிடையே6 பெருவழக்கா யிருப்பதும் இதுவே. அத்துவிதத் தலைவரான சங்கராச்சாரியரது கட்சி இரண்டாவது. இராமானுஜரது வைணவம் இவ்விருவரது கட்சிக்குமே எதிரிடையானது. இம் மூன்று கட்சியினரின் சமய நூல்களும் தழைத்தோங்கிய காலம் 11-ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டுவரை என்னலாம். இன்றியமையாச் சில மாறுதல்கள் நீங்கலாக, இவற்றுட் பெரும்பாலும் காணப்படுவன தூய வடமொழிச் சொற்களே. (ஆ) மேற்கூறிய சமயத் தலைவர்கள் காலத்திலும், அதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னும், அ/தாவது 9,10 ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுவரை, இருந்த சமணர்களே7 தமிழில் இன்று காணும் வட சொற்களிற் பெரும்பாலானவற்றை வழக்கிற்கொண்டு வந்தவர்கள் ஆவர். சமணர்கள் அந்நாள் தழைத்தோங்கியது அரசியல் உலகில் அன்று; கல்வியுலகினும் அறிவுலகிலுமே யாம். உண்மையில், அவர்கள் தழைத்தோங்கிய காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று கூறத்தக்கது. மதுரையில் சங்க மிருந்ததும், குறள், சிந்தாமணி முதலிய செந்தமிழ் நூல்களும் இலக்கண நூல்களும், நிகண்டுகளும் எழுதப்பட்டமையும் இக்காலத்தேதான். இக்காலத்தில் வழக்காற்றில் வந்த வடசொற்கள் தமிழ் ஒலிப்பியலுக்குத் தகுந்தபடி மாற்றப்பட்டு விளங்குகின்றன. (எ-டு). வடமொழி லோக-தமிழ உலகு; வடமொழி ராஜா - தமிழ் அரசு. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் காணப்படும் வட சொற்கள் அனைத்துமே பெரிதும் மேற்கூறிய இரண்டு காலப் பகுதிகளிலும், அதிலும் சிறப்பாக முதலிற் கூறப்பட்ட அண்மைக் காலப் பகுதியிலேயே, வந்திருக்க வேண்டும் என்னலாம். எப்படியும் அவை இக்காலப் பகுதியில் வந்த தமிழ்மொழியின் வட சொற்களைப் பெரிதும் ஒத்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றில் காணப்படும் மாற்றத்தின் அளவை ஒட்டி இவை இயற்கை வரவுகள் (தற்சமம்) திரிபுகள் (தற்பவம்) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயற்கை வரவுகள் வடமொழியிலும் தாய் மொழியிலும் ஒரே ஒரு உடையன. திரிவுகள் என்பவை திராவிட மொழியின் ஒலிப்பியலை ஒட்டி மாறுதல் பெற்று உரு மாறியவை. இயற்கை வரவுகளுள் பெரும்பாலானவை பிற்காலத்திலேயே புகுந்திருக்கவேண்டும் ஏனெனில், அவை வட மொழிகளில் புகுத்தப்பட்ட பின்னர் பார்ப்பனரால் வட மொழி ஒலிப்புத் தவறா வண்ணம் எழுதப்பட்டவையாகவே காணப்படுகின்றன என்க. திரிபுகள் என்பவை வட மொழியிலிருந்து நேரில் கொள்ளப்பட்டவை யல்ல; பண்டைய பேச்சு மொழியாகிய பாகதங்களிலிருந்தோ, வட நாட்டில் பிற்காலத்தில் வழங்கப்பட்ட கௌரிய மொழிகளிருந்தோ எடுப்பட்டவையே என்று தெலுங்கு, கன்னட இலக்கண அறிஞர்கள்தாமே ஒப்புக்கொள்கின்றனர். (இ) ஆனால், தமிழில் மட்டும் மேற்கூறிய இரண்டு காலங்களிற்கும் முந்திய மூன்றாவது வகையான வடசொல் வரவுகள் உள்ளன. இவை வேதாந்த, சைவ, வைணவ, சமய நூல்களுக்கு முன்னாகவே, இலக்கியத் திருத்தம் ஏற்பட்ட முதற் காலத்தில்தானே, வடமொழியிலிருந்து வந்து நாட்டு வழக்காலும் காலப்போக்காலும் பெரிதும் சிதைந்த சொற்கள் ஆம். இவை பிற திராவிட மொழிகளிலுள்ள வடசொற்களைவிடக் காலத்தால் முந்தியவையாம். இவ் வரவுகள் வட பாகத மொழிகளைக் காட்டிலும் மிகுதியாகச் சிதைவடைந்தவையே யாயினும் அவ் வடபாகதங்களிலிருந்து வந்தவையல்ல; தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த பார்ப்பனக் குருமார், சோதிடர், புலவர் முதலியவர்களது வாய் மொழியினின்று நேராகக் கொள்ளப்பட்டுத் தமிழர் கூட்டுறவால் சிதைந்தவையேயாம். இவை சமணகாலத்துப் பாகத வரவுகளைவிட மிகுதியுஞ் சிதைந்தவை என்பது மட்டுமன்று, இவற்றின் சிதைவு வேறுவகைப் பட்டதுமாகும். அ/தாவது, பின்னைய சிதைவுகள் பெரிதும் பிற்காலத் தமிழ் இலக்கண நூலார் வகுத்த வடசொல் ஆக்க அமைதிக்கு இணங்கியவையா யிராமல், யாதொரு வரம்புமற்றுச் சிதைந்தவை யாம். இவ் வகையுட் சேர்ந்த சொற்களிற் சிலவே கீழ் வருவன: (அ) வடமொழி ஸ்ரீ(ஸ்ரீ); பழந்தமிழ் திரு; பிற்காலத் தமிழ் சிரீ, சிறீ, சீ. (ஆ) வடமொழி கர்ம (ன்) - மிகப் பழந்தமிழ் கம்; பழந்தமிழ் கன்மம்; பிற்காலத்தமிழ் கருமம். (இ) தமிழ்த் திங்கட்பெயர்கள் இத்தகைய முதல்வட மொழிச் சிதைவுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும். தமிழ்த் திங்கட் பாகுபாடு இன்று ஞாயிற்றியல் சார்பாய்8 இருப்பினும் முன்னாட்களில் திங்களியல் சார்பாகவேயிருந்தது. எனவே, அவற்றின் பெயர்கள் திங்கள் தங்கும் விண்மீன்களின் பெயரையே பெரும்பாலும் கொண்டன. இவ் விடங்களிலும், நேரிடையான விண்மீன்களின் பெயர்களிற்கூட சிதைவு மிகுதி காணப்படுகின்றது. (எ-டு) விண்மீனின் பெயராகிய வடமொழி பூர்வ - ஆஷாட(ம்) தமிழில் பூராடம் ஆயிற்று; திங்களின் பெயரிலோ ஆஷாடம் என்ற வடசொல் ஆடம் என்றாகி, அதன்பின் ஆடி என்று உருப்பெற்றது. வட மொழி விண்மீனின் பெயராகிய அஸ்வினி என்பதே தமிழ்த் திங்கட்பெயர் ஐப்பசி ஆயிற்று. இன்னும் தொலைப்பட்ட சிதைவு புரட்டாசி என்பது. இதன் வடமொழி முதற்சொல் பூர்வ-பாத்ர-பத என்பதாம். இவ் வடசொல்லே விண்மீனின் பெயராக வரும்பொழுது பூரட்டாதி என்றாகின்றது; பின்னர் புரட்டாசி என்று திங்கட்பெயராகத் திரிகின்றது. இவ் விண்மீன்பெயர்கள், திங்கட் பெயர்கள் அனைத்திற்கும் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் தனி வட மொழிச் சொற்கள் வடமொழி உருவிலேயே வருகின்றன. இதிலிருந்து இப்பெயர்கள் வடமொழியினின்று அம்மொழி களில் எடுக்கப்பட்ட காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழிலக்கியத்திலோ தமிழ் மொழியிலோ எடுத்தாளப் பட்டிருக்கவேண்டு மென்பது தெளிவாகும். 6. தமிழ்மொழி திருந்திய உருவடைந்த காலத்தின் பழைமையைத் தமிழ்க் கல்வெட்டுக்களிலிருந்தும் அறியலாகும். கர்நாடகத்திலும் தெலிங்காணத்திலிருந்தும் முற்காலக் கல்வெட்டுக்கள் யாவும், பிற்காலக் கல்வெட்டுக்களிற் பெரும்பாலனவும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இக் கல்வெட்டுக்கள் பழங்கன்னடம் அல்லது பழந் தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. எனினும், இக் கல்வெட்டுக்களின் மொழியோ பெரும்பாலும், அதிலும் பழங்காலக் கல்வெட்டுக்களாயின், வடமொழியிலேயே காணப் படுவது குறிப்பிடத் தக்கதாம். வடமொழியின் சிறப்பொலி களுக்குத் தகுந்த எழுத்துக்கள் ஆங்காங்குப் புதியனவாக வகுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றிற்கு நேர்மாறாக, தமிழ்நாட்டிலுள்ள பழங்கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழி யிலேயே உள்ளன. பண்டைய பாண்டிநாட்டைச் சேர்ந்தவை யான தென் திருநெல்வேலி, தென் திருவாங்கூர்ப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக்களின் படிவங்கள் அத்தனையையும் துருவிப் பார்த்தும் 14ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக ஒரு வடமொழிக் கல்வெட்டுக் கூட அகப்படாதது குறிப்பிடத்தக்கது. இக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவில்களின் சுவர்களிலும், தூண்களிலும், நிலைக்கற்களிலும், நிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் 150க்கு மேற்பட்டவற்றின் படிவங்கள் எம்மிடமுள்ளன. இவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை திராவிடப் பார்ப்பனர் வடமொழியை எழுதப் பயன்படுத்தும் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன; முந்தியவையோ இன்றைய தமிழ் எழுத்துக்களிலும் பழைமையானதோர் எழுத்தில் எழுதப் பட்டுள்ளன. இப் பழந்தமிழ் எழுத்துப் பழந்தமிழ் நாட்டிற்கும், பழைய மலையாள நாட்டிற்கும் பொதுவானதொன்றாகக் காண்கிறது. கொச்சியில் யூதர்களுக்கும், திருவாங்கூரில் சிரியக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட்ட பட்டயங்கள் இப் பழந்தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் வட மலையாளத்திலுள்ள முகம்மதியர் இவ்வெழுத்தினையே சில மாறுதல்களுடன் எழுதிவருகின்றனர். இந்த எழுத்துக்காலத் தெலுங்கு - கன்னட எழுத்தினுடனும், இலங்கையிலும் கீழை இந்தியத் தீவுகளிலும் இதுகாறும் இன்ன மொழி என்று விளக்கமுறாத சில கல்வெட்டுக்களின் எழுத்தினுடனும் ஒருவாறு ஒற்றுமை உடையதாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய இப் பழந் தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழியை எடுத்துக்கொண்டால் அது தமிழே என்பதும், அதுவும் பழைமையும் தூய்மையும் மிக்க செந்தமிழே என்பதும் காண்க. இவற்றின் நடை இலக்கியச் செந்தமிழாயிருப்பதுடன், இக்காலத் தமிழ் நடையைக் கெடுக்கும் பிற்காலப் புது வழக்குகளான (நீர் என்பதனிடமாக) நீங்கள் என்பது போன்ற இரட்டைப் பன்மைகளையும் விலக்கியிருப்பதும், செய்யுள் வழக்கிற்குரிய சுருங்கச் சொல்லலும், சிக்கலான நடையுமாயில்லாம லிருப்பதுங் குறிப்பிடத் தக்கதாம். தெலிங்காணத்திலும் கர்நாடகத்திலும் (தெலுங்கு, கன்னட எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த போதிலும்) அம் மொழிகளில் எழுதப்பட்ட ஒரு பழங் கல்வெட்டுக்கூடக் கிடையாமலிருப்பது தமிழிலக்கியத் திருத்தத் தொன்மையை ஒருபுறமும், அதன் தனிப்பட்ட சுதந்தர உணர்ச்சியை மற்றொரு புறமும் விளக்குவதாகும் என்று கொள்ளலாம். மேலும், டாக்டர் குண்டெர்ட்டால் மொழிபெயர்க்கப் பெற்று வெளியிடப்பட்ட மேற் குறிப்பிட்ட திருவாங்கூர், கொச்சிப் பட்டயங்கள் பழந்தமிழும் பழ மலையாளமும் ஒரே மொழிதான் என்பதையும் நிலைநாட்டுகின்றன. இப்பட்டயங்களின் காலம் 9ஆம் நூற்றாண்க்குப் பிந்தி இருக்க முடியாது; 7ஆம் நூற்றாண்டுக்கு முந்தியும் இருக்க முடியாது. ஏனெனில், இவற்றுட் காணப்படும் (ஆரியப்பட்டரின் சூரிய சித்தாந்தத்தை ஒட்டி எழுந்த) ஞாயிற்றியல் சார்பான காலப்பாகுபாட்டை ஒட்டிய மரபுச் சொற்கள் 7ஆம் நூற்றாண்டுகட்குமுன் ஏற்படவில்லை. இவை எழுதப்பட்ட காலத்து அரசரும் கேரள அரசரேயாவர். எனினும், இவற்றின் மொழிநடையென்ன, பெயர் வினைத்திரிபு களென்ன, மரபு வழக்குகள் என்ன, எல்லாம் முற்றிலும் தமிழே; மலையாளத்திற்கே சிறப்பான ஒன்றிரண்டு தனிவடிவங்கள் இடையில் காணப்படலாம். எனினும், இதிலிருந்து அன்றைய மலையாள நாட்டில் அரசியலார், கற்ற உயர்தர மக்கள் ஆகிய இவர்களது மொழியேனும் தமிழ் என்றும், மலையாளம் என்ற மொழி இருந்திருக்குமானால் மலைகளிலும் குன்றுகளிலும் உள்ள மக்களது திருந்தா வாய்மொழியாகவே இருந்திருக்க முடியும் என்றம் முடிவு செய்யலாம். “மதுரைப் பாண்டிய அரசர் எக்காலத்திலேனும் மலையாள நாட்டின் எப்பகுதியையேனும் ஆண்டிருப்பர்; அதனால்தான், யூதர்களுக்கும், சிரியக் கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்ட இப் பட்டயங்கள் தமிழில் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்” என்று கொள்வதற்குச் சற்றேனும் இடமில்லை; ஏனெனில், இவற்றைக் கொடுத்த அரசர் பாண்டியரல்லர்; கேரள உரிமைப் பட்டங்களும், சின்னங்களும் முற்றிலும் பெற்றள்ள கேரள முடிமன்னரே யாவர் என்க! மலையாளக் கரையில் பாண்டியர் எங்கேனும் ஆட்சி செலுத்தியிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டானால் அவை கிரேக்க நிலயியலார் குறிப்புக்களேயாம். ஆனால், அவர்கள் குறிப்புக்களில் பாண்டியன் வென்றனவாகக் கூறப்படுபவை மலையாளக் கரையின் சில தனியிடங்களையே யன்றி வேறல்ல; பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கக் கூடிய இடம் ஆய்நாடு அல்லது பரலிய நாடு என்ற தென் திருவாங்கூரே யாகும். இவ்விடத்தில் அன்றுமட்டுமல்ல, இன்றும் பேசப்படும் மொழி தமிழே; மலையாளமன்று. மேற்கூறியவற்றிலிருந்து திராவிட மொழிகள் அனைத் தினும் தமிழே பழைமை வாய்ந்தது என்பதும், இக்காலத் திராவிட மொழிகளின் வேறுபாடுகள் அனைத்திற்கும் மூலமான பழந் திராவிட வடிவங்களை ஆராயும் வகையிற் பேருதவி தருவது அதுவே என்பதும் பெறப்படும். ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட படி தமிழோ மற்ற எந்தத் தனிப் பட்ட மொழியோ (அது பழைமையுடையதாயினும் சரி, அன்றாயினும் சரி) பண்டைத் திராவிடமொழியின் வகைக்குறி மொழியாகக் கொள்ளுதற் குறியதாகாது. இம் மொழிகளின் சிறப்பான பண்புகள் அனைத்தையும் நன்கு ஓர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து அவற்றின் ஒற்றுமைகளைப் பிரித்தறிவதால் இம் மொழிகளின் இலக்கணங்கள் வகுக்கப்பட்ட காலங்களுக்கெல்லாம் முந்தி, இம் மொழிகள் வேறு வேறாகப் பிரிவதற்குங்கூட முந்தி, இவை இருந்த நிலைமையும் அமைப்பும் நன்கு விளங்கும். அவற்றை ஆராய்ந்து காணும் ஒப்புமையே பெரிதும் மொழியியலார்க்குத் துணை புரிவதாம். அடிக்குறிப்புகள் 1. ஊiஉநசடி. 2. னுநஅடிளவாநநேள 3. முநளயஎய’ள ழுசயஅஅயச. 4. ஏசைபடை’ள ஹநநேனை. 5. னுiஉவiடியேசல. 6. “தமிழ்ச் சூத்திரரிடையே” என்றெழுதியுள்ளார் கால்டுவெல். 7. சமணர்கள் காலம் இன்னும் முந்தியது என்பது பிற்கால ஆராய்ச்சி முடிபாகும். 8. ளுடிடயச-ளனைநசயைட. 9. திராவிட மொழிகளின் மிகப் பழைய எழுத்துச் சான்றுகள் மிகப் பழைய வடமொழிக் காவியங்களாகிய இராமாயணம், மாபாரதம் போன்ற நூல்களில் திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. ஆனால், அவை மிகச் சிலவே. அச் சிலவற்றைக் கருவியாகக் கொண்டு கி.பி. ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட திராவிட மொழிகளின் பண்டைய நிலைமையை ஆராய்ந்தறிய முடியாது. ஒன்பதாவது நூற்றாண்டிற்கு முற்பட்டதாக யாதொரு தமிழ் நூலும் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்று சொல்வதற்கில்லை.1 உலகத்தில் எழுத்தானியன்ற பழைய நூல்களிடைக் காணப்பெறும் பண்டைய திராவிடச்சொல் மயிலின் பெயர்க்குரிய சொல்லாகும். கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்னாகவே தர்ஷிஷ்2 உவரி3 முதலிய இடங்களிலிருந்து மன்னன் சாலமனுடைய கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட வானிபப்பொருள்களுள் மயிலிறகும் ஒன்றாகும் என்பது எபிரேய விவிலிய நூலிற்4 காணப்படும் சான்றாகும். இவ் விடத்தில் மயிலிறகு என்பதற்கு `அரசர்’ பகுதியில் `துகி’ என்ற சொல்லும், `வரலாற்று’ப் பகுதியில் தூகி’ என்ற சொல்லும் வருகின்றன. மலையாளக் கரையில் இப் பொருளில் இன்று வழங்கும் சொல் மயில் (தமிழ்- மயில்; வடமொழி மயூர). `சிகி’ (சிகையை உடையது) என்ற சொல்லும் வடமொழியில் வழங்குவதொன்றாம். ஆயினும், பழைய தூய தமிழ் - மலையாள மொழியில் இதற்குச் சரியான பொதுப் பெயர் “தோகை” (அழகிய தோகை அல்லது இறக்கைகளை யுடையது) என்பதாம். இன் வேர்ச் சொல் தொக் அல்லது தோக், துக் அல்லது தூக் ஆகும்; பினீஷியர்5 இதனைத் துக் என்றனர். இதன் உயிரொலி விவிலியக்குறிப்பில் குறில் நெடிலாக மயங்குவதும் தமிழ் வழக்கைத் தழுவியதே. தோகை என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் தோக் அல்லது தூக் ஆயினும், இதன் மிகப் பழைமையான மூல வடிவம் தொ அல்லது து என்பதே என்று தோன்றுகிறது. பிற சொற்களுடன் ஒப்புமைப்படுத்தி நோக்க ஈற்றில் வரும் க் அல்லது கு ஒரு சாரியையே என்று காணப்படும். முதலில் இச்சாரியை தொழிற்பெயர்விகுதியாயிருந்து பின் அதுவே ஒரு துணைப் பகுதி ஆயிற்றுப்போலும். இச்சொல்லின் பழைமைபற்றி மாக்ஸ்மூலர் “இவ் விளக்கம் சரியாயின் ஆரியர் வருமுன் இந்தியாவில் வழங்கிய தமிழ்க் குழுவின் பழைமை இதனால் நன்கு விளக்கப்படும்” என்று கூறுகிறார். இவ் விளக்கம் சரி என்பதிலும், அதன்மூலம் மாக்ஸ்மூலர் கொண்ட முடிவு சரியானதே என்பதிலும் ஐயமில்லை. இவ்விடத்தில் தோகை என்ற இத் திராவிடச் சொல்லோடு (ஒலிப்பு தோஹை) அரபு மொழி தவஸ், கிரேக்கம் தஓஸ், இலத்தீனம், பவோ, ஆங்கிலம் பீ/பௌல்6 என்பவற்றின் ஒப்புமை நோக்கத்தக்கது. இந்திய வணிகர் பாபிலோனியா (பவேரு7, பழம் பாரசீகம் பபிரு8) வரையிற் கடல் வழியாகச் சென்று அந் நாட்டில் முதல்முதலாக மயிலை விற்பனை செய்தனர் என்று புத்த நூல்கள் கூறுவதாக மினாயெ/ப்9 என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.10 மேற் கூறிய எபிரேய நூற்களில் கூறப்படும் பிற கீழ் நாட்டு வாணிபச் சரக்குகள் குரங்கு, தந்தம், சந்தனம், அகில் முதலியவையாம். இவற்றுள் குரங்கு என்பதற்கான கோ/ப்11 என்ற சொல் வடமொழி கபி என்பதனோடும், கிரேக்கம் கேபஸ் என்பதனோடும் ஆங்கிலம் ஏப்12 என்பதனோடுங்கூடத் தொடர்பு படுத்தப்படுகிறது. எனினும், எகிப்திய மொழியிலுள்ள கா/ப் இவற்றினும் பழைமை வாய்ந்ததும் பொருத்தமானதுமான தொடர்பாகும். தந்தத்தினைக் குறிக்கும் ஷென் ஹப்பிம்13 என்ற தொடரிலுள்ள ஹப் என்பதும் எகிப்தியத்தின் அப் என்பதேயாக விருக்கக்கூடும். சந்தனம் என்பதன் பெயராகிய அல்கும்14 என்பது வட மொழியில் அதே பொருளின் பெயராகிய வல்குக15 என்பதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இவ் வட சொல்லின் இன்னொரு பொருள் அழகு என்பதாம். இம் மூன்று சொற்களுமே ஒன்றுடனொன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும். அகிலின் பெயர்கள் அஹலிம், அஹலத் என்பன. இவை வடமொழி அகரு என்பதைவிடத் தமிழ்-மலையாளம் அகில் என்பதனுடனேயே பெரிதும் தொடர்புடையவாம். எனவே, பொதுப்பட நோக்கின், மூன்று மொழிகளும் ஒன்றற் கொன்று தொடர்புடையனவே. கிரேக்க மொழியில் நெல்லின் பெயராகிய ஒருஸா16 மிகப்பழமை வாய்ந்த தொன்றாகும். ஐரோப்பாவுக்கு இந்தியாவினின்றும் அரிசி ஏற்றுமதியானபொழுதே இச்சொல்லும் உடன் போயிருக்கவேண்டும் இ/து அரிசி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. மலையாளத்திலுள்ள “அரி” அரிசி என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவே. கிரேக்க மொழியின்கண்ணுள்ள முதல் திராவிடச் சொல் கார்ப்பியன்17 என்பதாம். தெஸியாஸ்18 என்பவர் இலவங்கப் பட்டைக்குக் கொடுத்த பெயர் இது. ஹெரடோட்டஸ் என்பவர் இலவங்கப்பட்டையைக் கார்/பியா19 என்று கூறினர். அச் சொல் காய்ந்த சுப்பி என்று பொருள்படும். பினீஷியர்கள் அதனைக் கின்னமோமன்20 என்பர்; இதிலிருந்தே ஆங்கிலத்தில் சின்னமன்21 என்பது வந்ததாகும். அரபு மொழியிலிலுள்ள கிர்/பாஹ்22 என்ற சொல்லுடன் தெஸியாஸ் குறித்த கார்ப்பியன் என்ற சொல் நெருங்கிய தொடர்புடையதா யிருப்பது தெளிவு. திராவிடச் சொல்லாகிய கருவாப்பட்டை என்பதனுடன் அதற்குத் தொடர் பிருப்பதும் எளிதிற் றெளியப்பெறும். இந்தியாவைப் பற்றித் தாம் எழுதிய கட்டுரை யொன்றில் கிரேக்கர் `முரோரோதா’ என்று குறிப்பது கார்ப்பியன் என்னும் இந்திய மரமே என்றும், அதிலிருந்து மணமுள்ள ஒரு நெய் எடுக்கப்படுகிறதென்றும் தெஸியாஸ் எழுதியுள்ளார். இது கருவாப்பட்டைத் தைலம் என்பது தெளிவு. ஆகவே அவர் குறித்தது தமிழ் மலையாளச் சொல்லாகிய கருப்பு அல்லது கரப்புத் தைலம் என்பதையே யன்றிச் சிங்கள மொழியில் வழங்கும் வட சொற்றிரிபாகிய குருந்து என்பதை அன்று. மலையாளத்தில் கருவாப்பட்டை நெய்க்குக் கரப்புத் தைலம் என்றும், தமிழில் கருவாப்பட்டை மரத்திற்குக் கருவ, கருவா என்றும் பெயர்கள் வழங்குகின்றமை யுங்க காண்க. மேலும் இச்சொல்லின் வேராகிய கரு-(கர்) என்பதற்குக் கருமைநிறமும், எரிப்பு என்னும் சுவையும் ஒருங்கே பொருளா யிருப்பனவுங் காண்க. வடமொழி கர்ப்பூர(ம்) என்பதற்கு வடமொழியில் பகுதியின்மை நோக்க, அ/தும் இதே தமிழ்ச் சொல் மூலத்தினடியாக எழுந்ததே என்னலாம். இதோடு கருப்பு என்னும் இச் சொல்லிலும், தோகை என்னும் சொல்லிலும், பு,கு என்ற தொழிற்பெயர் விகுதிகள் துணைப்பகுதிகளின் சாரியை யாக வந்துள்ளன; ஆதலால் இவ் விகுதிகளின் வழக்கு தெஸியஸ் காலம் (அதாவது கி.மு. 400) முதற்கொண்டு உள்ளது என்பதும் தெளிவாகின்றது. வடமொழித் தொடர்பற்ற தூய திராவிட மொழிகள் இருந்தமைக்குச் சான்றுபகரும் தொன்னூல்கள் கிரேக்க மொழி களிலேயே காணப்படுகின்றமை வியக்கற்பாலதாம். பண்டைத் திராவிட மொழிச் சொற்கள் பெருந்தொகையினவாய் அவற்றுள் வழங்கப் பெற்றுள்ளன. டாலிமி என்னும் கிரேக்க நில நூலாசிரியர், “பெரிப்ளூஸ் மரிஸ் எரித்ரை”23 என்னும் நூலின் ஆசிரியர், “இயற்கை வரலாறு” என்னும் நூலின் ஆசிரியர் பிளைனி ஆகியோர் இச்சொற்களை எடுத்தாண்டுள்ளனர். ஊர்ப்பெயர்கள், மக்கட்குழுப்பெயர்கள் பலவற்றை அவர்கள் குறித்துள்ளார்கள். அவற்றுட் பல இன்றும் எழுத்துக்கெழுத்து மாறுபாடில்லாமல் வழங்கப் பெற்று வருகின்றமை குறிக்கற் பாலதாம். கிரேக்கர்களால் எழுதி வைக்கப்பெற்றுள்ள அத்தகைய திராவிடச் சொற்களில் சில கீழே தரப்படுகின்றன. (1) பாண்டியன்: கிரேக்க மொழியில் இது பண்டியோன் என்று வழங்கப்பட்டுப் பாண்டி நாட்டு மக்களையும், பாண்டியனையும் குறிக்கின்றது. இச் சொல் வட சொற்றிரிபு என்று முன்னர்க் காட்டப்பட்டது. மெகாஸ்தெனீஸும் பிளைனியும் குறித்த பாண்டீ என்ற சொல் வட சொல்லை ஒட்டியதே. ஆனால், பிளைனி பின்னர்க் குறிப்பிட்டதும், பெரிப்ளூஸ் வரலாற்றில் காணப்படுவதுமாகிய சொல் திராவிடச் சொல்லின் வடிவை யொட்டி வந்ததாகும். ஆன் ஈறும், இகரச்சாரியையும் பெற்றுப் பண்டியோன் என்று வழங்கும் அது தமிழ்ச் சொல்லாகிய பாண்டியன் என்பதை நெருங்கி யொலிப்பது தெளிவு. கன்னடத்தின் ஆண்பால் விகுதி அம் என்பதாகும்; தெலுங்கிலோ உடு என்பதாகும். இதனால் பண்டைக்காலத்தில் தமிழ்ச் சொல்லமைப்புக்கள் பிற திராவிட மொழிகளிலிருந்து மாறுபட்டிருந்தன வென்றும், ஆனால் அச் சொல்லமைப்புக்கள் இற்றைநாள் வரையில் தமிழில் அவ்வாறே மாறாதிருந்து வருகின்றன என்பதும் இப் பாண்டியன் என்ற சொல்லிலிருந்து ஊகிக்கப்படும். மொதூர பெஸிலியோன் பாண்டியோனிஸ்24 என்ற கிரேக்க மொழித் தொடரிலிருந்து கிறித்து பிறப்பதற்கு முன்னரேயே பாண்டியர்கள் தங்கள் தலைநகரைப் பொருநையாற்றின் கரையிலிருந்த கொற்கையி னின்றும் வையையாற்றின் கரையிலிருந்த மதுரை நகருக்கு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் தெளியப்படும். வட இந்தியாவிலுள்ள மத்ரா என்பதைக் கிரேக்கள் மெதொரா என்று குறித்துவந்தமை இங்கு நினைவு கூரற்பாற்று. (2) சேரன் பெயரை டாலிமி, கேரொபொத்ரஸ்25 என்றும், பிளைனி கேலோபொத்ரஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுவும் வடமொழிப் பெயரே. ஆனால் வடமொழி கேளரபுத்ர என்பது மலையாளத்தில் கேர, கேல என்று சுருங்கி வழங்கும். (3) சோழன் பெயர் டாலிமியால் சோர என்ற உருவில் தரப்படுகிறது. இதன் வடமொழி உரு ஸோல, தெலுங்கு சோள. கிரேக்கச் சொல்லின் முதல் மெய்யான ஸ் என்பது தமிழ் ஒலிப்பையே காட்டுகிறது (தமிழ் நாட்டின் சோழன் என்ற சொல்லை ஸோழன் என்றே ஒலிப்பர்). இடையில் வரும் மெய்யாகிய ரகரம் தமிழின் சிறப்புழகரத்தினிடமாக மேல்நாட்டு மக்களால் இன்னும் வழங்கப்படுகிறது. இவ் ஒலி தெலுங்கு, வடமொழி முதலியவற்றில் இல்லை. எனவே, தெலுங்கர் இதனை டகரமாகவும் ளகரமாகவும் (சோட-சோள என்றும்), வடமொழி யாளர் டகரமாகவும் (சோட), பாலிமொழியார் ளகரமாகவும் (சோள என்றும்) எழுதினர். கிரேக்கர் இதனை ட,ள,ல என்றெழுதாமல் ர என்றெழுதியதிலிருந்து சிறப்பு ழகர ஒலிப்பும், அதனை உடைய தமிழும் மிகப் பழைமை யுடையன என்று விளங்குகின்றமை காண்க. சோழனது தலைநகராகக் கிரேக்க மொழியில் கூறப்படும் ஒர்துர26 உறையூர் ஆகவேண்டும். (4) கிரேக்கமொழியில் ஆர்காதோஸ்27 என்ற இந்தியச் சிற்றரசன் பெயர் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர் அடிக்கடி நாட்டின் பெயரையும் மன்னன் பெயரையும் மயங்கக் கூறுவதுண்டு. அதன்படி ஆர்க்காடு என்ற ஊரின் பெயர் மன்னன் பெயராக மாறியிருக்கக்கூடாதோ என்று ஐயுற இடமுண்டு. இதன்பெயர் கி.பி. 1340ஆம் ஆண்டில் இபின்பதூதா என்ற அராபிய எழுத்தாளரால் குறிப்பிடப் படுகிறது. ஆறு முனிவர் வாழ்ந்த காடு ஆதலால் இ/து ஆறுகாடு என்று கூறப்பட்டது என்று அவ்விடத்துள்ளோர் கூறுகின்றனர்28. தமிழில் ஆறுகாடு என்பது பிற சொற்களுடன் சேர்ந்து தொடர்சொல்லாகும்போது ஆறுகாட்டு என்றாகும். கிரேக்கரது தகரம் இந்த டகரத்தின் ஒலிப்பெயரைக் குறிப்பிடுவதாய் இருக்கவேண்டும். இங்ஙன மாயின் பகுதியிலுள்ள உகர முதலிய மெய்கள் இரட்டுவதும், வல் எழுத்துக்கள் சொல்லின் இடையில் உயிர்களினிடையே நலிந்த திறந்த ஒலிப்புடையவையாயும், இரட்டித்தபோது கடுமையான ஒலியுடையவையாயும், திராவிட வழக்கில் வருவதும் பழைமையானவை என்பதற்கு இது சான்று தருகின்றது. (5) கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்ற கிரேக்க ஆசிரியர் வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கழிந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்று ஒலிக்கப் படுவதுபோன்று ஒலிக்கப்பட்டன என்பது விளங்கும். கரூர் என்பதில் கரு ஊர் என்ற இரு சொற்கள் உள்ளன. இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களே. இச்சொற்களின் பழைமையும் இதனால் உறுதிப்படுகிறது. (6) மோடகலிங்கம்: மூன்று இலிங்கம் அல்லது மூன்று கலிங்கம் என்பது இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. இதனைக் குறித்த ஆராய்ச்சியை 41ஆம் பக்கத்திற் காண்க! அப்படியாயின் தெலுங்கில் மூன்றுக்குச் சரியான சொல்லாகிய “மூடு” என்பதன் பழைமையையும் அதன்மூலம் தெலுங்கின் பழைமையையும் இது வலியுறுத்தும். (7) பியூட்டிஞ்சர் நிலப்படங்களிலும், ராவென்னா என்னும் நில இயல் ஆசிரியன் நூலிலும் தமிரிகே,29 திமிரிகே30 என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவை தமிழைக் குறிப்பிடுபவை யானால் இப் பழங்காலத்திலேயே திராவிடம் என்ற பெயருக்குப் புறம்பாகத் தமிழ்என்ற பெயரும் வழங்கப்பட்டது என்பது உறுதிப்படும். தமிரிகேயின் வடக்கிலுள்ளது ஆரியகே என்பது பெரிப்ளூஸ் என்ற நூலிற் காணப்படும். வராஹமிஹிரர் மலையாளநாட்டின் வடக்கிலுள்ளது ஆரியகம் என்றனர். எனவே, மலையாளக் கரையின் தென்பகுதி (மலபார்) திராவிட அல்லது தமிழ்மக்கள் இடம் என்றும், வடபகுதி ஆரியர் பகுதி என்றும் ஏற்படும். (8) மலையாளக் கரையிலுள்ள ஒரு நகரின் பெயர் கிரேக்கமொழியில் மூஹிரிஸ்31 என்று காண்கிறது. இது முயிரி அல்லது முயிரிக்கோட்டையாக வேண்டும். துண்டிஸ் என்றும், நெல்கிண்டத்திலுள்ள கிண்டா என்றும் இன்னும் இரண்டு நகரங்கள் குறிக்கப்படுகின்றன. முன்னது துண்டி ஆகும்; பின்னது இன்றையக் கன்னெற்றி ஆகும் என்பது பேரறிஞர் குண்டெர்ட்டின் கூற்ற. (9) பிளைனி கூறும் கொத்தனர - பெரிப்ளுஸ் கொத்தனரிகே32 - என்பது கோழிக்கூட்டின் பக்கமுள்ள கடத்தநாடு அல்லது தலைச்சேரிப் பக்கமுள்ள கொளத்த நாடு எனக் கொள்ளப்படுகிறது. கடத்தநாடு, கொளத்தநாடு இரண்டும் மிளகுக்குப் பேர்போனவை. (10) மலையாளக் கரையில் மிளகு கொண்டு செல்லும் படகுகளைப் பெரிப்ளூஸின் ஆசிரியர் ஸங்கர33 என்றும், அங்கிருந்து இலங்கைக்கும் கங்கைநாட்டிற்கும் செல்லும் கப்பல்களைக் `கொலந்தியோ/ போந்தா’34 என்றும் கூறினர். பின்னதன் முதற் சொல் விளங்கவில்லை. முனனதற்கிணையான மலையாளச்சொல் சங்காடம் என்பதும், தெலுங்குச் சொல் ஜங்கால என்பதும் ஆம். (11) கொத்தியாரா35 என்பது டாலிமி கூறும் ஆய்நாட்டிற்கும், பெரிப்ளூஸ் கூறும் பரலியநாட்டிற்கும் தலைநக ராகும். ஆய் அல்லது பதலியம் என்பது கிட்டத்தட்டத் தென்திருவாங்கூர் என்னலாம். பியூட்டிஞ்சர் நிலப்படங்களுள் இந்நகரே கொத்தார என்னப்படுகிறது. இந்நகர் தென்திருவாங் கூரில் இன்றும் சிறந்த வாணிக நகரமாக விளங்கும் கோட்டாறு என்பதாம். இப் பெயர் கோடு + ஆறு என இரண்டு சொற்களா லானது. டகரம் இரட்டுதல் முதலிய தமிழ்வழக்கின் பழைமைக்கும், தமிழ் ஒலிமுறையின் பழைமைக்கும் இப்பெயரே சான்று பகரும். (12) கொமரிய அக்ரன்36 இது குமரி முனைக்கு டாலிமி கொடுத்த பெயர். பெரிப்ளூஸில் இது கொமர் என்று அழைக்கப்படும். கேப் காமொரின் என்பது ஆங்கிலம். இது வடமொழிச் சொல்லாகிய குமாரியின் திரிபென்பர். ஆனால், கொமர் என்பது தமிழ்வடிவே. இங்கிலாந்திலுள்ள உவேல்ஸ் பகுதியில் கிம்ரி37 என்று ஓர் ஊர் உள்ளது. “கிம்ரி, கும்ரி, கிம்ரை என்றழைக்கப்படும் இப்பகுதிமக்கள் தென்இந்துஸ்தானத்தி லிருந்து பண்டைக்காலத்தில் இங்கு வந்தவர்கள். தென் இந்துஸ்தானத்தின் தென் கோடியிலுள்ள முனைக்குக் குமரி முனை என்ற பெயர் இச் சொல்லடியாகப் பிறந்ததேயாம்” என்று 1903இல் வெளிவந்த வரலாற்றாராய்ச்சிக் குறிப்பொன்றனுள் காணப்படுகிறது.38 தமிழிற் குமாரி என்பது குமரி என்றாகும். குமரிமுனையை யடுத்துள்ள மக்கள் இதனைக் குமர் அல்லது கொமர் என்றே கூறுவர். பெரிப்ளூஸில் இப்பெயர் இவ்வடிவில் வழங்குவது வியப்பே. அதில் வருங் குறிப்பு: “இதனை யடுத்துக் கொமர் என்று ஓரிடம் உள்ளது. அங்கே ஒரு கோட்டையும், ஒரு துறைமுகமும் உண்டு. திங்களுக்கொருமுறை ஒரு பெண் தெய்வம் அங்கு வந்து நீராடிச் செல்லும் அப்போது திரளான மக்கள் அங்குக் குழுமி நீராடிச் செல்வர். பண்டைக் காலத்திலேயே குமரி ஐந்து சிறந்த நீராடுந் துறைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. பியூட்டிஞ்சர் நிலப்படங்களில் குமரிமுனை குறிக்கப்படாதது விந்தையே. (13) பரலிய என்றும், கரைய என்றும், ஆய் என்றும் கூறப்படுவது தென் திருவாங்கூரை அடங்கிய பழைய அரசியற் பகுதி. இது கொல்லம்முதல் தொடங்கி, கன்னியாகுமரியை உள்ளடக்கி இருந்ததுடன் முத்துக்குளிக்கும் கொற்கைவரை எட்டியிருந்தது. திருவாங்கூருக்குப் புரளி என்றும், திருவாங்கூர் மன்னருக்குப் புரளீசர் என்ற பட்டம் இதனால் வழங்கப்படுகிற தென்றும், அப்பெயரால் முன் ஒரு கோட்டை இருந்ததென்றும் பேரறிஞர் குண்டெர்ட்டு கூறுகிறார். பரலிய என்பது கிரேக்கச் சொல்லாகவே இருத்தல் வேண்டும். (14) மேற் கூறப்பட்ட கரைய என்ற பெயர் சிறப்பாகக் குமரிக்கும் கொற்கைக்கும் இடைப்பட்ட இடத்திற்கு வழங்கியது. இது தமிழ் கரை என்ற சொல்லுடனும், கரையில் உறையும் கரையார் என்ற வகுப்பினர் பெயருடனும் தொடர்புடையது. (15) கன்னியாகுமரிக்கும் காவேரிக்கும் இடையில் ஸோலேன் என்ற ஆற்றின் பெயரொன்று டாலிமியால் கூறப்படுகிறது. இதுவே கொற்கையின் தெற்கில் விழுவதாகவும் கூறப்படுகிறது. இது தாமிரபர்ணி ஆறாகவே இருக்கவேண்டும். இதன் தமிழ்ப்பெயர் பொருநை என்பது; வடமொழிப் பெயராகிய தாமிரபர்ணியின் பிற்பகுதிபோன்றொலிக்கிறது. கிரேக்க மொழியில் இதன் பெயர் எப்படி வந்ததென்று கூறமுடியவில்லை. அந்த மொழியில் இப்பெயர் சங்கு என்று பொருள்படுவதால், சங்கு அல்லது முத்துச் சிப்பிகள் எடுக்குமிடம் என்ற பொருளில் இப்பெயரை வழங்கியிருக்கலாம். (16) பேத்திகோ39 என்பது பொதிகை. (17) கொல்கை40 என்பது கொற்கை. இன்றைய இலக்கியத் தமிழில் லகரம் றகரமாய்விடினும் முன் லகரமாகவே இருந்ததென்பதை இது காட்டுகிறது. பழைய கல்வெட்டுக்களில் கொல்கை என்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் இன்றும் இது கொல்கா எனப்படும். இது முகமாகவும் முத்துக் குளிக்குமிடமாகவும் இருக்கிறது. இதன் பெயரால் மன்னார் குடாவையே கிரேக்கர் கொல்கிக் குடா என்றழைத்தனர். பொருநையின் மணலால் இதன் கடற்கரை தூர்ந்து இ/து உள்நாட்டில் சென்றபின் காயல் என்னுமிடம் துறையாயிற்று. இதுவே மார்க்கோ போலோவின் கயேல்41ஆகும். இக் காயலும் கடலினின்றும் விலகியபின்தான் போர்த்துகேசியர் தூத்துக்குடி என்னும் சிற்றூரைத் துறைமுகமாக்கினர். கொற்கை என்னும் பெயர் கொல்கை அல்லது கொல்கிற கை ஆகும். தமிழில் கொல்கை என்பது படைக்கும், படைவீட்டிற்கும் இடக்கரடக்கற் பெயர் ஆம். தமிழர் அரசியன்மறை தோன்றிய இடம் இதுவே எனக் கொள்ளப்படுகிறது. (18) கோரு: இது கோடி என்னும் தமிழ்ச்சொல். தனுக்கோடி என்றும் இது தமிழிற் கூறப்படும். “இராமனது வில்” என்பதுவே தனு ஆகும். இங்குக் குறிக்கப்பட்டது இராமேசுரமே. (19) கல்லிகிகொன்42 என்பது இராமேச்சுரம் என்பர் சிலர். அதன் எதிர்க்கோடியாகிய கள்ளிமேடே43 இதுவாகும். (2) கோலிஸ், கோரு: இரண்டும் இராமேச்சுரம் அல்லது கோடியின் பெயர்கள். கோடி என்னும் வடசொல் தமிழில் கோழி என்றிருந்தது என்று இது காட்டும். வடசொல் டகரம் ழகரமானதற்கு, திராவிடம் தமிழ் ஆனது ஓர் எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளோம். (21) மல்லி அல்லது மலய (மலை) - இது கலிங்கத்தின் வடக்கிலிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது கஞ்சத்துள்ள மகேந்திர மலையாய் இருக்கலாம். எனினும்,. இவ்வளவு வடக்கிலும் தமிழ்ப்பெயராகிய மலை இருப்பது குறிப்பிடத் தக்கது. இராஜமஹாலின் பெயராகிய மாலெர் அல்லது மலேர் மலையர் என்ற பொருளிலேயே வருதல் காண்க. (22) க்லெமென்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்44 என்பவர் புத்தரை புத்த என்றும், சமணரை (வடமொழி ஸ்ரமண) ஸெம்னாய் என்றும் கூறுகிறார். இப்பெயர்கள் வடமொழிப் பெயர்களே யாயினும் அவை தமிழ் உருக்களை ஒத்திருத்தல் கவனிக்கத் தக்கது. (23) கிரேக்க மொழியில் எடுத்துக் கூறப்படும் தென் இந்திய இடப்பெயர்கள் பலவும் ஊர் அல்லது ஊர என்று முடிவது தமிழ் ஊர் என்பதைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அதன் முன்வரும் ந்த், த்த், ம்ப் என்ற கூட்டு மெய்கள் கூட தமிழ் எழுத்துத் தொடர்பை மிகவும் நினைப்பூட்டுகின்றன. இத்தகைய பெயர்கள் 23 உள்ளன. கிரேக்க மொழியில் எடுத்துக்காட்டப்படும் பெயர்களுட் சிலவற்றிலிருந்து தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனர் புகுந்து பல இடங்களில் தங்களையும் தங்கள் பெயரையும் நிலைநிறுத்தி விட்டனர் என்பது புலப்படும். மதுரையும், பாண்டியனும் வடசொற்களே. கபேரஸ் (காவேரி) என்பதும் வடசொல்லாகக் கொள்ளப்படினும் உண்மையில் திராவிடச் சொல்லேயென்று கொள்ள இடமுண்டு. கொமரியா (கன்னியாகுமரி)வும் கோரு (இராமேச்சுரம்)வும் வடச் சொற்களே. பொதிகையடியில் ப்ரக்மே45 வாழ்ந்ததாக டாலிமி கூறுகிறார். இஃது இன்றைய பிரமதேசம் என்ற பழைய நகரமாயிருக்கக் கூடும். டாலிமிக்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்பு - கிரேக்கர்களிடமிருந்து வந்த இந்திய வாணிபம் பாரசீகர்களிடம் கைமாறியதற்குப் பின்பு - எழுதப்பெற்ற “கிறித்தவ உர் வரலாறு” என்ற நூலில் காஸ்மாஸ் இண்டிகோபுளூஸ்டெஸ் என்ற ஆசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்கள் சிலவற்றைக் குறித்துள்ளார். அவற்றள், பூதோ பட்டின46 மென்பது ஒன்று; டாலிமி முன்னர் இதனையே போதோ பேரோரா47 என்று குறித்தனர். பட்டினம் என்பது திராவிடச் சொல்லே. இபின் பதூதா குறிப்பிட்ட போத்/பட்டன்48 என்பதும், நிக்கோலோ கோண்டி49 குறிப்பிட்ட பூதோ/பிதானியா50 என்பதும் இப் புதுப்பட்டினமே என்று கர்னல் யூல் ஆராய்ந்து காட்டியுள்ளார்.51 கிரேக்க நில இயல் நூலார் தென்னிந்தியாவின் மொழி களைப்பற்றித் தெளிவான குறிப்புக்கள் ஒன்றுந் தரவில்லை. எனினும், அவர்கள் எடுத்துக்காட்டிய ஊர்ப் பெயர்களிலிருந்து சுவை பயக்கும் சில செய்திகளை அறியலாம். கிரேக்க ஆசிரியர்களின் நூல்களிலிருந்து கிடைக்கப்பெறும் திராவிட மொழிச் சான்றுகளே யாவரும் ஒப்பக்கூடிய பண்டைய சான்றுகளாகும். ஆகவே, அவற்றை நன்காராய்ந்ததிலிருந்து பெறக்கூடிய முடிபுகளாவன: (1) கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் திராவிட மொழிகள் மாறுதலின்றி வழங்கிவருகின்றன. (2) இன்று காணப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளின் பாகுபாடும், அம்மொழிகள் வழங்கிய நில எல்லையும் ஏறக்குறைய இதே நிலைமையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பும் இருந்துவந்தன. (3) எழுத்துவடிவு வழக்கத்தில் வந்துவிட்டது. (4) இலக்கண அமைப்பு செம்மைப்பட்டு உறுதியுற்றது. (5) கிரேக்க வணிகர்களின் வருகைக்கு முன்னரே இலக்கியங்கள் தோன்றிவிட்டன.52 (6) இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மொழிகள் பெரிதும் மாறுபாடின்றி வழங்கிவருகின்றமை, இலக்கியத் திருத்தமுற்ற காலத்திலிருந்து ஆசிய மொழிகள் மாறுபாடின்றியே வளர்ச்சியுற்று வருகின்றன என்ற வரலாற்றுப் பொது உண்மைக்குச் சான்று பகர்வதாகும். திராவிட மொழிகள் யாம் கூறியபடி சித்திய இனத்தைச் சேர்ந்தவை என்பது உண்மையானால் அவை அவ்வின மொழிகளுள் மிகமிகப் பழைமையானவை என்பதில் ஐயமில்லை. திரு. நாரிஸ் என்பவர் சித்திய இன மொழிகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: “மாகியர் மொழியில் 15ஆம் நூற்றாண்டிற்குமுன் ஒன்றும் எழுதப்படவில்லை. உக்ரிய மொழியிலோ 50 அல்லது 60 ஆண்டுகட்கு முன் எழுத்தே கிடையாது. பின்னிஷ் வீரக் காப்பியமாகிய கலெவல53 என்பது எக்காலத்தது என்று அளவிடுவதற்கில்லை. வாய்மொழியாகவே நெடுங்காலம் அது பயின்று வந்துள்ளதாதலால், காலத்திற்குக் காலம் அது மாறியே வந்திருத்தல் வேண்டும்.” நெஸ்தோரியக் கிறித்தவரிட மிருந்தே54 உய்குர்54 என்ற கீழைத்துருக்கியரும் அவர்களிடமிருந்து மங்கோலியரும் எழுத்துக் கலை பயின்றனர். எனவே, திராவிட மொழிகளின் தொன்மைப் பண்புடன் ஒப்பிடக்கூடிய வேறு எம்மொழியும் சித்திய இனத்திலேயே இல்லை என்பது தெளிவு. ஆல்தாய்56 மலைகளில் வாழ்ந்துவந்த பண்டைத் துருக்கியருக்குரியவை எனச் சீனரால் குறித்துவைக்கப் பெற்றுள்ள எட்டுச் சொற்கள் கிடைத்துள்ளன. இவை இன்றைய துருக்கியமொழியிலுங் காணப்பெறுவனவே. சித்திய இனமொழி களில் மிகத்தொன்மைவாய்ந்த சொற்களாய்க் கிடைக்கப் பெற்றள்ளன இச் சொற்களே. இந்த எட்டுச் சொற்களுள் மூன்று, இன்றேல், உறுதியாக இரண்டு சொற்களாவது திராவிடச் சொற்களே என்பதில் ஐயமில்லை. அம்மூன்று சொற்கள் கீழே காணப்படுவனவாம்: ஆல்தாய் அல்லது இக்காலத் தமிழ் பண்டைத் துருக்கியம் துருக்கியம் கொரொ, க்வரா, கரு. கொரி, கொரி,57 கிழ. கான் க்ஹான்58 கோன்(கோ). கடைசியிலுள்ள கோன்(கோ) என்பது கான், க்ஹான் என்பதனோடும், துருக்கோமங்கோலியச் சொல்லாகிய க்ஹோகன்59 என்பதனோடும் நெருங்கிய தொடர்புடைய தாயிருப்பது காண்க. ஓஸ்டியாக் மொழியும், உக்ரியன் மொழியும் க்ஹேழன்60 என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. பிற்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப்பெறும் வடசொல்லாகிய ராஜா என்பது பழைய தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப் பெறவில்லை. அதற்குமாறாக, கோன், கோ என்ற சொற்களே காணப்பெறுகின்றன. இச்சொற்கள் இக்காலத் தமிழில் அருகியே வழங்கி வருகின்றன. செய்யுள் வழக்கிலும், சாதிப்பெயர்க் குறிப்பிலுமே இவை பெரும்பாலும் இக்காலை வழங்கப்பெற்று வருகின்றன. இற்றைநாள் கிடைத்துள்ள தமிழிலக்கியத்தின் துணை கொண்டு திராவிட மொழிகளின் தொன்மையைக் கி.பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுவரையிற் கொண்டு செல்லலாம்; கிரேக்க வரலாறுகளிற் கிடைக்கும் திராவிடச் சொற்களின் துணைகொண்டு அதனைக் கிறித்தவக் காலத் தொடக்கத்திற்குக் கொண்டுசெல்லலாம். அதற்கு முன்னர் இம்மொழிகளின் வரலாற்று நிலையை அறிவதற்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆராய்ச்சியே துணைபுரிவதாகும். தமிழரது நாகரிகமும், தமிழிலக்கியந் திருத்தமுற்ற காலமும் கி.மு. ஆறு அல்லது ஏறாம் நூற்றாண்டாகலாம். ஆனால், திராவிட மூலமொழி இக்காலக் கிளைகளாகப் பிரிந்ததோ, திராவிடர் இந்தியாவிற்குள் வந்து இக்காலை வசிக்கும் பகுதிகளில் குடியேறிய பின்னரேயாகும். இஃது இன்ன காலந்தான் என்று அறுதியிட்டுக்கூற முடியாது; எனினும் மிகமிகப் பழைய காலத்திலேயே அவ்வாறு பிரிந்திருக்கவேண்டுமென்று கொள்ளலாம். கெல்தியத்திலிருந்து ஐரிஷும், வெல்ஷும், தொயுத்தோனியத்திலிருந்து பண்டை உயர் மொழியும் பண்டைக் கீழ்மொழியும், உக்ரியத்திலிருந்து பின்னிஷும், மாகியரும் ஆகிய இவை யெல்லாம் அவ்வம்மொழிக்குரிய மக்கள், அவரவர்கள் இக்காலை காணப்பெறும் இடங்களில், குடியேறுவதற்கு முன்னர்ப் பிரிந்து விட்டிருக்கலாம்; திராவிட மொழிமூலமோ அவர்கள் வந்து குடியேறிய பின்னரே தான் பிரிவுற்றதாதல்வேண்டும். அங்ஙனம் திராவிடர்கள் வந்தமை ஆரியர் வருகைக்கு முன்னராகவேண்டும். எனினும், அம்மொழிகளிற் காணப்பெறும் இலக்கண அமைதிகள், சொல்லொப்புமைகள் ஆகியவெல்லாம் ஆரியர் வருகைக்குப் பின்னர், ஆரியர்தம் இலக்கண அமைப்புடன் ஒருங்கே அமைந்தனவாகக் கொள்ளுதல் வேண்டும். திராவிட மொழிகளுடன் ஒப்பிடக்கூடிய வகையில் பிராகுவி மொழியிற் காணப்பெறும் சொல்லமைப்புக்கள், வேர்ச்சொற்கள் எல்லாம் காலத்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் முற்பட்டன என்று கொள்ளலாம். ஆகையால் இந்தப் பிராகுவிமொழியின் துணைகொண்டு திராவிடமொழிகளின் தொன்மை ஆரியர் வருகைக்கு (அ/தாவது கி.மு. 1600க்குப்) பல நூற்றாண்டுகட்கு முன்னென்று ஒருவாறு தெளியலாம். அடிக்குறிப்புகள்: 1. இம் முடிபு தவறானதாகும். பிற்கால ஆராய்ச்சிகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் நூற்கள் இருந்தனவாக விளக்கியுள்ளன. 2. கூயசளாiளா. 3. டீயீhசை. 4. ழநசெநற கூநஒவ டிக வாந க்ஷடிடிமள டிக முiபேள & ஊhசடிniஉடநள. 5. ஞாடிநniஉயைளே. 6. ஞநய-கடிறட. 7. க்ஷயஎநசர. 8. க்ஷயbசைர. 9. ஆiயேலநக. 10. ஞயயீநச லெ ஞசடிக. றுநநெச in வாந ஐனேயைn ஹவேiளூரயசல, ஆயல 1873, 11. முடிக. 12. ஹயீந. 13. ளுhநn hயbbiஅ. 14. ஹடபரஅ. 15. ஏயடபரமய. 16. டீசரணய. 17. முயசயீiடிn. 18. ஞவநளயைள. 19. முயசயீhநய. 20. முinயேஅடிஅடிn. 21. ஊinயேஅடிn. 22. முசைகயா. 23. ஞநசiயீடரள ஆயசளை நுசலவாசயநi. 24. ஆடினடிரசய க்ஷயளடைநiடிn ஞயனேiடிnளை. 25. முநசடிbடிவாசடிள. 26. டீசவாடிரசய. 27. ஹசமயவடிள. 28. ஆர்க்காடு என்பதே சரியான தமிழ்ப் பெயர். 29. னுயஅசைiஉந. 30. னுலஅசைiஉந. 31. ஆடிரணசைளை. 32. முடிவவடியேசமைந. 33. ளுயபேயசய. 34. முடிடயனேiடியீhடிவேய. 35. முடிவவயைசய. 36. முடிஅயசயை ஹமசடிn. 37. ஊலஅசi. 38. ஹ ழளைவடிசiஉயட ளுடிரஎநnசை ளைளரநன டிn வாந டிஉஉயளiடிn டிக வாந அநநவiபே டிக வாந க்ஷசவைiளா ஆநனiஉயட ஹளளடிஉயைவiடிn யவ ளுறயளேநய. 1903. 39. க்ஷநவவபைடி. 40. முடிடஉhயi. 41. ஊயநட. 42. முயடடபைமைடிn. 43. ஞடிiவே ஊயடலஅநசந. 44. ஊடநஅநளே ஹடநஒயனேசiரேள. 45. க்ஷசயஉhஅந. 46. ஞடிரனடி யீயவயயே. 47. ஞடினடியீநசடிரசய. 48. க்ஷடினகயவவயn. 49. சூiஉடிடடி ஊடிவேi. 50. ஞநரனநகவையnயை. 51. க்ஷடிஅயெல ஹவேiளூரயசல கடிச ஹரபரளவ 1874. 52. எகிப்தை உரோமர்கள் வென்று கைப்பற்றிய காலத்தேதான் கிரேக்க வணிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அகஸ்தஸ் என்னும் உரோம முடிமன்னரின் நாணயங்களே இந்தியாவில் அகப்பட்டுள்ள உரோம நாணயங்களுள் காலத்தால் முதன்மையானவையாம். இவற்றுள் முப்பதுக்கும் மேற்பட்டவை மலையாளக் கரையில் கண்டெடுக்கப் பெற்றவை. 53. முயடநஎயடய. 54. கூhந சூநளவடிசயைn ஊhசளைவயைளே. 55. ருபைரசள. 56. கூhந ஹடவயi. 57. ழுடிசi. 58. முhயn 59. முhயபயn 60. முhடிn 10. பண்டைத் திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் வடஇந்தியப் பழங்குடிகளுக்கு மிடையே இருந்த அரசியல் வாழ்வியல் தொடர்புகள் திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்தது ஆரியர் வருகைக்கு முன்னரே யாதல்வேண்டும். ஆனால், ஆரியர் வருகைக் காலத்தில், வடஇந்தியாவில் வாழ்ந்துவந்த வட இந்திய மொழிகளில் ஆரியமல்லாத பகுதியைப் புகுத்த உதவிய பழங்குடிகளும் திராவிடர்களும் ஒரே யினத்தவரா, அன்றித் திராவிடர்கள் அப் பழங்குடியினரினும் வேறுபட்ட மூத்த பழங்குடியினரா என்பதை அறுதியிட்டுக் கூறுதல் எளிதன்று. ஆரியர்கள் வருகையை முதற்கண் எதிர்த்துப் பின் அவர்களுக்குத் தோற்றுக் கீழ்ப்படிந்து அவர்களுடைய அடிமைகளும் பணியாட்களுமாக மாறிய தஸ்யூக்கள் (தாஸர்கள்) என்போரின் இனத்தைச் சேர்ந்தவர்களா திராவிடர்கள்? அன்றி, முதற்கண் வந்த ஆரியர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களாய் அவர்கள் வருகைக்குமுன் வடஇந்தியப் பகுதியை நீத்தோ அன்றி அதனின்றுந் துரத்தப்பட்டோ தென்னிந்தியாவிற் குடியேறிய ஒரு பண்டைப் பழங்குடி மக்களா? திராவிடர்களுக்கும், ஆரியமய மாக்கப்பட்ட வட இந்தியப் பழங்குடிகளுக்கு மிடையேயுள்ள இத்தொடர்பு மிகவும் சிக்கலானது. வடமொழிக்கும், பாகத மொழிகளுக்கும், வடஇந்திய மொழிகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளைத் துருவித்துருவி ஆராய்வதனால் இச் சிக்கலான கேள்விக்கு ஒருவாறு விடைகாணலாம். எனினும், திராவிடர்களை இந்தியாவின் பண்டைப் பழங்குடியினர் என்றோ, வடமேற்குக் கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் முதன்முதல் வந்தேறியோர் அவர்களே என்றோ கொள்வது தவறாகாது. திராவிடர்களும் (தஸ்யூக்களாகிய) பழைய சூத்திரர்களும் ஓரினத்தவரே என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திராவிடமொழிகள், தஸ்யூக்களின் மொழிகளினும் தொன்மை வாய்ந்தன என்பது கவனிக்கத் தக்கது. இதன்படி நோக்கினால், வட இந்தியாவில் இப் பொழுது காணப்பெறும் சித்தியச் சார்புடையவர்களும் ஆனால் ஆரியச் சார்பற்றவர் களுமான சூத்திரர்களும், கலப்பினத்தவர்களும் திராவிடர் களுக்குப் பின் இந்தியாவிற்குட் புகுந்தவராதல் வேண்டும்; இவர்கள் வருகையைக் கண்ட பண்டைத் திராவிடர்கள் வடஇந்தியப் பகுதிகளிற் பெரும் பகுதியை நீத்துத் தெற்கே போந்தவராதல் வேண்டும். இதையன்றி அவர்கள் ஆரியர்களால் துரத்தப்பட்டுத் தெற்கே குடியேறினர் என்று சொல்வதற்கு எட்டுணையும் ஆதாரமில்லை. என்னை? சேர சோழ பாண்டியர் எக்காலத்திலாவது ஆரியர்களுக்கு அடிமைப்பட்டனர் என்றோ, வட இந்தியாவிலிருந்து ஆரியர்களால் துரத்தப்பட்டுத் தெற்கே போந்த பழங்குடியினரே பின்னர் சேரசோழபாண்டிய கலிங்க ஆந்திரர்களாக மாறினார்கள் என்றோ எந்த வடமொழிச் சான்றோ, தென்மொழிவரலாறோ குறிக்கக் காணவில்லை. திராவிடக் கண்ணாடிகொண்டு பார்த்தால் திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் மிடையே என்றும் அமைதியும் நட்பும் பொருந்திய தொடர்பே இருந்து வந்ததென்றும், வரலாற்றுக் காலத்திற்குமுன் திராவிடர்கள் வட இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு கோண்டுவனம், தண்டகாரண்யம் முதலிய திராவிடக் காட்டுப்பகுதிகளிற் குடியேறினார்களென்றால், அவ்வாறு அவர்களைத் துரத்தியவர்கள் ஆரியர்களல்லர், அவர்களுக்கு முன்வந்த வேற பழங்குடியினரே என்றும் தெரியவரும். ஆரியர்களுக்கு முன்வந்த சித்தியர்களே திராவிடர்களைத் தெற்கே துரத்தியவர்களாதல் வேண்டும். இவர்களை வட இந்தியாவிலுள்ள கோலர்கள், சந்தாளர்கள்,1 வில்லர்கள்2, தோமர்கள்3 ஆகியவர்களோடு ஒன்றுபடுத்தி விடக் கூடாது. ஒருகால் ஆரியர்வருகைக்குமுன் மேற்குறிப்பிட்ட வகுப்பினர்கள் திராவிடர்களைக் கண்டு காடுகளிற் சென்று குடியnறி யிருக்கக்கூடும். ஒருவேளை இப்பழங்குடிகள் வடமேற்குவழி வராமல், பூதான் குடிகள்4 மாதிரி வடகிழக்கிலிருந்து வந்து வங்கத்தின் சதுப்பு நிலக்காடுகளைத் தாண்டி இங்கே குடியேறியிருக்கக்கூடும். எங்ஙனமாயினும் இக்காட்டுக் குடிகளது படையெடுப்பினால் திராவிடர் தெற்கு நோக்கிச் சென்றிருப்பர் என்பது பொருந்தாது. மற்றும் வட இந்தியத் தாய்மொழிகளிலுள்ள ஆரியச் சார்பற்ற பகுதிக்கும் கோலேரிய மொழிகளுக்கும் ஒப்புமை பெரிதுங் காணப்படவில்லை. வட இந்திய ஆரியர் சூத்திரராக்கித் தம்முடன் சேர்த்துக் கொண்ட மக்கள் வகுப்பினர் பெருவாரி யினராகவும், போர்த்திறனும், நாகரிகமும் உடையவராகவும் இந்திருத்தல் வேண்டும். ஸெர்ஸீஸ்5 என்ற பாரசீகப் பேரரசன் படையில் இந்தியாவிலிருந்து கோரைமயிரினரான எத்தியோப்பிய வீரர் (அ/தாவது கருநிறமக்கள்) வந்திருந்தனர் என ஹெரடோட்டஸ் என்ற கிரேக்க வரலாற்றறிஞர் கூறுகிறார். இவ் எதியோப்பியர் மேற்கூறிய சித்திய இனத்து மக்களாக இருக்கக்கூடும். இவ்விளக்கத்திலும் ஒரு தடங்கல் இல்லாமலில்லை. இன்றைய திராவிடமக்கள் வட இந்திய ஆரியர் வயப்பட்ட சூத்திரரைவிடத் தன்னாண்மையும், நாட்டுப்பற்றும், அறிவாற்றலும் மிக்கவர்கள். ஆகவே, இவர்கள் தம்மினும் குறைந்தவரான மக்களால் தம்முதலிடத்தினின்று துரத்தப் பட்டிருக்கக் கூடுமோ என்று ஐயமேற்படக்கூடும். ஆனால் திராவிடருடன் போரிடும்போது இந்தச் சித்திய மக்கள் இன்றைய நிலையிலில்லை. அவர்கள் திராவிடரை யொத்த நாகரிக முடையவரல்லராயினும் அவர்களைவிட வெறிமிக்க முரட்டு மனிதராகவே இருந்தனர். காலப்போக்காலும், ஆரியரால் அடிமைப்படுத்தப்பட்டும் அவர்கள் இன்று தற்பண்பு இழந்து விட்டனர். எனவே, முதலில் திராவிடர்கள் சித்திய முரட்டு மக்களுக்குத் தோற்றார் என்பதிலும், அந்தச் சித்திய மக்கள் தம் முரட்டுத்தனம் இழந்தபின் ஆரியருக்குத் தோற்றார் என்பதிலும், அங்ஙனம் தோற்று அடிமைப்பட்ட ஸூத்திரரைவிடத் தன்னாண்மையுடன் தெற்கில் ஆட்சி செலுத்திய திராவிடர் நாகரிகமிக்கவர்களாக விளங்கினர் என்பதிலும், பின்னர் ஆரியர்கள் போர்செய்து வெற்றியுறாமல் வந்தேறிகளாகத் தெற்கே போந்தபோது, அவர்களுடன் கலந்துறவாடி மேன்மை யுற்று ஆரிய அரசுகளை யொத்த திராவிட அரசுகளைத் தெற்கே நிலைநாட்டினர் என்பதிலும் நம்பக்கூடாத செய்தி ஒன்றுமில்லை. கர்ஸன் என்பவர் “தமிழர் ஆரியாவர்த்தம் அல்லது வட இந்தியாவில் என்றும் இருந்திலர்; மலாய் மக்களினத்தைச் சேர்ந்தவராய், கடல்வழியாக வங்காளவிரி குடாவைக் கடந்து நேராகவோ இலங்கை மூலமாகவோ வந்தனர்” என்றார்6 இது முற்றிலும் பொருத்தமற்றது. ஏனெனில், தமிழ் எவ்வளவு திராவிடத்தைச் சேர்ந்ததோ அவ்வளவு கோண்டு, கு முதலியவையும் திராவிடமேயாம், ஒராவோனும் இராஜமகாலும், இன்னும் தெளிவாகத் திராவிடமேயாம். பிராகுவி வடமேற்கில் திராவிட மொழியுடன் இணைப்புடையதாயிருக்கிறது. பெஹிஸ்தன் பட்டயங்களையோ, சித்திய உறகுளையோபற்றிச் சொல்லவேண்டியதில்லை. மேலும், டாலிமியின் காலத்தில் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த காலத்தில் - திராவிடர் தென்கீழ்க்கரை மட்டுமின்றிக் கங்கையாறுவரை ஆட்சி செலுத்தியிருந்தனர் என்பதும் குறித்தற்பாற்றாம். இலங்கையிலிருந்து அவ்வப்போது தென் இந்தியாவிற்கு மக்கள் வந்து குடியேறியுள்ளனர் என்பது மறுக்கக் கூடாததே. இன்று திருவாங்கூரிலுள்ள தீயர், ஈழவர் முதலியவர் இவ்வகை யினர் ஆவர். தீயர் என்பது உண்மையில் தீவர் என்பதன் மரூவே. ஈழவர் என்பதன் பொருள் ஈழம் அல்லது இலங்கை யிலிருந்து வந்தோர் என்பது. ஈழம் என்பது இலங்கையின் தமிழ்ப் பெயர். இது ஸிம்ஹலம் என்ற வட சொல்லிலிருந்தோ, ஸீஹலம் என்ற பாலிச் சொல்லிலிருந்தோ வந்திருக்கவேண்டும். உண்மையில் இக்குடியேற்றங்கூட இலங்கைக்குள் தமிழர் குடியேறியதன் எதிரொலியேயாகும். சோழியர், பாண்டியர் முதலிய தமிழர் அடிக்கடி நாட்டின்மீது படையெடுத்ததையும், ஒரு தடவை அரசாட்சியையே கைப்பற்றியதையும் மஹாவமிசம் என்ற சிங்கள வரலாற்று நூல் கூறுகிறது. இத்தகைய படையெடுப்பின் பயனாக, இன்று, தமிழர் வட மாகாணம் முழுமையும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சிங்களர் வேறு, தமிழர் வேறு என்பதில் ஐயமில்லை. சிங்களரே தாம் மகதநாட்டினின்று குடியேறியதாக ஒப்புக்கொள்கின்றனர். எனவே, தமிழர் யாவருமே இலங்கையிலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வதற்கில்லை. அடிக்குறிப்புகள் 1. ளுயவோயடள. 2. க்ஷhடைள. 3. னுடிஅள 4. க்ஷhரவயn கூசiநௌ. 5. ஓநசஒநள. 6. துடிரசயேட டிக வாந சுடிலயட ஹளயைவiஉ ளுடிஉநைவல ஏடிட. ஓஏஐ. 11. `ஸூத்திரர்’ என்னுஞ் சொல்லின் பண்டைய வழக்கும், பிற்கால வழக்கும் இன்று “ஸூத்திரர்” என்ற பட்டம் இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் குறிக்க வழங்குகிறது.1 கௌரியர் திராவிடர் என்ற வேற்றுமை இதன் வழக்கில் இன்று இல்லை. முதன்முதலில் இது ஸிந்து ஆற்றின் கரையிலுள்ள ஒரு பழங் குடிமக்களின் பெயர் என்று கருதப்பட்டது. லாஸ்ஸென்2 என்பார் ஸிந்து ஆற்றின் தென் பகுதியில் உள்ள ஸுத்ரோஸ்3 என்ற நகரப் பெயர் இப்பெயருடன் தொடர்புடையது என்றும், சிறப்பாக வட அரகோஸியாவிலுள்ள4 ஸூத்ராய்5 என்ற மக்களின் பெயரே இதன் முதற் சொல் என்றும் கூறுகிறார். அபீரர்6, நிஷாதர் முதலியவரைப்போலவே இவர்களும் கறுத்த நீண்ட மயிருடைய பண்டைக் குடியினர் என்றும், ஆரிய ரல்லாதவரானபோதிலும் ஆரியரால் வென்றடக்கப்பட்டு ஆரிய மயமாக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறுகிறார். பிற பழங்குடிகள் பலரும் ஆரியரால் பின்னர் வென்றடிமைப் படுத்தப்பட்டபோது அவர்களெல்லாரும் இவர்களது பெயராகிய “ஸூத்திரர்” என்ற பெயராலேயே அழைக்கப் பட்டனர். கீழ்ப்படுத்தப்படாது எதிர்த்த பழங்குடிகள் தஸ்யூ என்றோ, மிலேச்சர் என்றோ அழைக்கப்பட்டனர். ஆராய்ச்சியாளர் பலர் ஸூத்திரர் என்னப்பட்ட அனைவரும் இங்ஙனம் அடிமைப்படுத்தப்பட்ட ஆரியரல்லாதாரே என்கின்றனர். இது முற்றிலும் பொருத்தமுடையதன்று. ஆரியர் முதலிலிருந்தே தம்மிடையே அடிமைகளையும் பணியாளர் களையும் உடையவரா யிருந்திருக்கவேண்டும். ஸ்லவோனிய அடிமைகள் ஸ்லவோனியரேயாகவும், மாகிய அடிமைகள் மாகியரேயாகவும் இருப்பதுபோல ஆரிய அடிமைகளும் முதலில் ஆரியரேயாய் இருந்திருத்தல் வேண்டும். அங்ஙனமின்றேல் பாகதங்களிலும் இன்றைய வட இந்திய மொழிகளிலும் இவ்வாறு பெருவாரியான வட சொற்கள் இருக்க இடமில்லை. திராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்த தாலன்று; அமைதியோடு கூடிய ஆரியக் குடியேற்றத்தாலும், நாகரிகக் கலப்பினாலும், தென் இந்தியாவின்மேல் ஆரியர் படையெடுத்ததாகவோ, திராவிடரைக் கீழ்ப்படுத்தியதாகவோ மரபுரை இல்லை; அங்ஙனம் ஏதாவது நடந்திருந்தால் அது மக்கள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்திருக்குமாதலால், மரபுரைகள் இல்லாமலிருக்க வகையுமிராது. இதற்கு நேர்மாறாக, நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும், ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்), ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி உடல்வலியால் ஏற்பட்டதன்று, அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்பதைக் காட்டும். போர்வீரர்கள் திராவிட நாட்டிற்குள் வந்ததாக ஏதேனும் மரபுரை உண்டானால் அது (சூரிய குலத்திலுதித்தவர்களான) சந்திரகுலத்தைச் சார்ந்த மாபாரத வீரர்களாகிய பாண்டவர் தொடர்பு, பெயரளவிலேனும், மதுரை அரசனாகிய பாண்டியனுக்குண்டானது தான். இதனாலேயே பாண்டிய அரசர் வடநாட்டுப் போர் வீர (க்ஷத்திரிய) மரபைச் சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், இக்கதையில் இரண்டாம் பாண்டியன் மகளை மணந்தவன் பாண்டியருள் முடிபெறாத இளையவனான அருச்சுனனேயாயினும், அத்தகையோன்கூட மணமானவுடன் மதுரையில் தங்காது தன் நாட்டிற்கே சென்று விட்டமை காண்க! பண்டைத் திராவிட அரசர்களுக்குச் சமயத் தலைவராகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்த பார்ப்பனர்தாம் அதுகாறும் திராவிட அரசர்களுக்கு வழங்கிய ஆரிய அரசுரிமைப்பட்டங்கள், சின்னங்கள் முதலியவற்றையும், குலமுறையையும் அவர்களுக்கு நாளடைவில் நல்கினர்7 என்றும், திராவிட அரசரும் மக்களும் அவற்றை நாளடைவில் உவந்து ஏற்றுக் கொண்டனர் என்றும் எளிதில் ஊகிக்கலாம். பிற்காலங்களில், கோண்டு வனத்திலும் இதே நிலை எய்தியமை காண்க! கோண்டர்களின் தலைவர்கள் ராஜா என்ற பட்டம் பெற்றதுடன் நாளடைவில் பூணூல் பெற்றுப் போர் வீரர் (க்ஷத்திரிய) மரபிற் சேர்க்கப்பட்டனர். தென்னாட்டிலும் முற்காலப் பாளையக்காரர் இந்நிலை யெய்தப் பெற்றனர்; இக்கால இராமநாதபுரம் புதுக்கோட்டை அரசர் போன்ற திராவிட அரசர்கள் ஆரியர் கூட்டுறவால் ஆரியராக்கப்பட்டு, படிப்படியாக அரசர் குலத்துள் சேர்க்கப்பட்டு அக்குலத்தார்க் குரிய தேவர், வர்மா முதலிய பட்டங்களையும் பெற்றிருக்க வேண்டும். பிற போர் வீர (க்ஷத்திரிய) மரபினரும் நாளடைவில் இதனை ஏற்றுக் கொண்டிருப்பர். மனு நூலாரும், பாரத ஆசிரியரும், புராண ஆசிரியர்களும் திராவிடக் குழுவைச்சேர்ந்த மக்கள் எல்லோரையுமே போர்வீரர் மரபில் சேர்த்து க்ஷத்திரியரென வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால், திராவிடரிடையே வந்து குடியேறி அவர்களிடையே வடநாட்டு வகுப்புப் பிரிவினையையொட்டிச் சாதிப் பிரிவினை கற்பித்த பார்ப்பனர்மட்டும் நாடாளும் அரச குடும்பத்தினர் களொழிந்த மற்றையோர் அனைவரையும் சூத்திரர் என்ற பெயருக்கு மேற்பட்ட எப்பெயராலும் அழைத்ததாகத் தெரியவில்லை. இது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் எளிதாக வேளாளரையும், வணிகரையும் “வைசியர்” என்று அழைத்து, மற்றைக் கீழ்த்தர வகுப்பினரை ஸூத்திரர் என அழைத்திருக்க முடியும். அங்ஙனம் அவர்கள் செய்யவில்லை. அ/தேனின், ஆரிய இனத்தைச் சேர்ந்தோரையன்றி ஏனையோரை க்ஷத்திரியரென்றோ, வைசியரென்றோ அழைப்பது அவர்கள் மரபுக்கு மாறான தொன்றாகையால், ஆசிரியரல்லாத திராவிட மக்களை, - (அவர்கள் எவ்வளவு உயர்தர மக்களேயாயினும்) - ஸூத்ரர்கள் என்றே அழைத்துவந்துள்ளனராதலின் என்க. மேற்கூறிய நிலைமையினால்தான் வட இந்தியாவில் ஸூத்திரர் என்ற மொழிக்கிருந்த பொருளைவிடத் தென் இந்தியாவில் அதற்கு உயர்வான பொருள் ஏற்பட்டது. வட இந்தியாவில் சூத்திரர் என்போர் அடிமைகள்; சட்டத்தின் பாதுகாப்புக்குப் புறம்பானவர்கள். அவர்களுக்கு நிலமோ, அரசியல் உரிமையோ கிடையாது. எனவே, அடிமைகளும் தாழ்ந்த வகுப்பினருமே அங்கு ஸூத்திரர் என்னப்பட்டனர். தென் இந்தியாவிலோ எனின், உயர் வகுப்பினரும் நடு வகுப்பினருமே ஸூத்திரர் என்றழைக்கப்பட்டனர். வட நாட்டு ஸூத்திரருக்குச் சரியான தென் நாட்டு மக்களோ ஸூத்திரர் என்றழைக்கப் படாமல், பள்ளர், பறையர் முதலிய பெயர்களாலேயே அழைக்கப்பட்டனர். “ஸூத்திரர்” என்ற பெயர்கொண்டு அழைக்கப் பட்டதாலேயே தென்னாட்டிலுள்ள சிற்றரசர்களும், வீரர்களும், வேளாளரும் ஆரியரால் அடிமைப்படுத்தப் பட்டவர்கள் என்றாகிவிடமாட்டார்கள். உண்மையில் பார்ப்பனர் முதலில் அவர்களை ஸூத்திரர் என்றழைத்தபோது அப்பெயர் மதிப்பிற்குரியதோர் பட்டப்பெயர் என்றே அவர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றியிருக்கக் கூடும். இவ் ஏமாற்றம் வெற்றியடைந்ததென்றே கூறலாம். வட இந்தியாவில் ஸூத்திரர் எல்லா வகுப்பிலும் தாழ்ந்த வகுப்பினர்; தென் இந்தியாவிலோ, ஸூத்திரர் பார்ப்பனருக் கடுத்தபடியான உயர்ந்த வகுப்பினர் ஆவர். உண்மையில் க்ஷத்திரியர், வைசியர் என்பவற்றை யொப்ப, ஸூத்திரர் என்பதும் திராவிடருள் எவ் வகுப்பினோர்க்கும் பொருத்தமற்ற பெயரேயாம் என்க. திராவிடரை ஆரியப் பாகுபாட்டுடன் தொடர்புபடுத்தாமல் திராவிடர்தம் மரபிற்கேற்ப வேளாளர், நாயக்கர் என்று அவரவர் பழங் குடிப்பெயராலேயே அழைத்தலே சால்புடைத்தாகும். அடிக்குறிப்புகள் 1. அண்மையில் இச்சொல்லின் ஆட்சி தமிழ்மக்களால் ஆங்காங்கு எதிர்க்கப்பட்டு வருகிறது. 2. டுயளளநn 3. ளுரனசடிள. 4. சூடிசவாநசn ஹசயஉhடிளயை. 5. ளுரனசடிi. 6. ஹbhசையள. 7. இதே கருத்தைப் பேராசிரியர் மாக்ஸ்மூலர் “பிரிட்டிஷ் அஸோஸியேஷனின் 1847ஆம் ஆண்டறிக்கை”யில் வெளியிட்டுள்ளார். 12. ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிகம் பண்டைத் திராவிடரை எவ்வகையாலும் காட்டு மக்களாகவோ, கீழ்ப்பட்டவர்களாகவோ கருதுதற்கில்லை. காட்டுப் பழங்குடிமக்கள்தம் நாகரிக நிலை யாதாயினும், திராவிட மக்களைப் பற்றியவரை அவர்கள் ஆரியப் பார்ப்பனர் வருமுன்னரேயே நாகரிகத்தின் முதற்படியிலிருந்தனர் என்பது தெளிவு. இன்றைய தமிழ்மொழியிலிருந்து வடசொற்களை அறவே அகற்றிப் பார்த்தால் மிகுந்துள்ள பண்டைத் திராவிடச் சொற்கள் ஆரியச் சார்பற்ற திராவிட நாகரிகத்திற்கு ஒரு சான்று ஆகும். அவ்வாறு வட சொற்களையகற்றிப் பண்டைத் தமிழ்மொழிச் சொற்களைமட்டும் ஆராய்ந்து கண்டு தமிழ்மக்களின் உள்ளநிலை, பழக்க வழக்கங்கள், சமய உண்மைகள் முதலிய வற்றைக் கீழே தருகிறோம். திராவிடர்களிடை அரசர் வன்மை மிக்க அரண்களில் வாழ்ந்து நாட்டில் கோட்டங்களை ஆண்டு வந்தனர். விழாக் காலங்களில் அவர்களிடையே பாணர்கள் பாட்டுகள் பாடி மகிழ்ந்தார்கள். மக்கள் ஏட்டில் எழுத்தாணியால் எழுத்து எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைகள் பல சேர்ந்த கட்டுக்குச் சுவடி என்று பெயர். அவர்கள் கடவுளைக் கோ என்று உரிமைப் பெயரிட்டழைத்தனர். வழிபடும் இடங்களும் (கோ+இல்) கோவில்கள் ஆயின. அவர்களுக்குச் சட்டங்களும் முறைகளும் இருந்தன. ஆயினும் வழக்குரைஞரோ, வழக்கறிஞரோ இல்லை. அவர்கள் மணவாழ்க்கை முறையைப் பின்பற்றினார்கள். ஈயம், வெள்ளீயம், துத்தநாகம் ஒழிந்த ஏனைய ஒண்பொருள் களின் பயனை அவர்கள் அறிவார்கள். பழங்கால மக்களுக்குத தெரிந்த கோள்களில் சனி, புதன் நீங்கலாக ஏனைய கோள்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. மருந்து, சிற்றூர், படகு, குடைமரம், கப்பல் ஆகியவை தெரிந்திருந்தன. இலங்கையைத் தவிர்ந்து, கடல் கடந்து அவர்கள் வேற்றுநாடு சென்றதில்லை. இலங்கைகூட அக்காலம் கால்நடையாய்க் கடந்து செல்லும்படி கிடந்திருக்கலாம் போலும்! தலைநிலம்1, தீவு2 என்ற சொற்கள் அவர்களிடை இல்லை. உழவும், போரும் அவர்கள் நாள்முறை வாழ்வு. வில், அம்பு, ஈட்டி, வாள் இவை போர்க் கருவிகள். வாழ்க்கைக்கு வேண்டிய நூற்றல், நெய்தல், சாயமிடல் முதலிய தொழில்கள் யாவும் அவர்களிடை மேம்பட்டிருந்தன. மட்பாண்டம் வனைதலில் அவர்கள் தலைசிறந்து விளங்கினர். பண்டைத் திராவிட மக்களிடை நாகரிகம் சிறந்து பரவியிருந்ததற்கு இதைவிட வேறு சான்றும் வேண்டுமோ? அடிக்குறிப்புகள் 1. ஊடிவேiநேவே 2. ஐளடயனே 13. திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம் திராவிட நாகரிகத் தொடக்கம் பாண்டிநாட்டுத் தமிழ் மக்களிடையே தான் என்றும், பண்டைத் தமிழர்கள் வகுத்தமைத்த முதற்பட்டினம் தாமிரபர்ணி எனப்படும் பொருநையாற்றின் கரையிலிருந்த கொள்கையே யென்றும் திராவிடப் பழங் கதைகள் எல்லாம் ஒருபடித்தாகக் கூறுகின்றன. இந்நாகரிகம் தொடக்கத்தில் தற்சார்புடையதாகவே இருந்திருத்தல் வேண்டும்; எனினும், அதன் விரைந்த வளர்ச்சி வட நாட்டிலிருந்து வந்து ஆங்காங்குச் சிறு குடியினராகத் தங்கிய ஆரியர்களின் துணைகொண்டு ஏற்பட்டிருத்தல் கூடும். இவ்வாறு வடக்கிருந்து தெற்கே போர்ந்து குடியேறியவர்களுட் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். அவர்கள் காவேரியும், பொருநையும் பாயும் நிலப்பகுதிகளின் செழுமையையும் கொழுமையையும் கேள்வியுற்று நாடி வந்திருக்கலாம். இன்றேல், பழங்கதைகளின் படி, இராமனின் வீரச்செயல்களின் பெருமையைக் கேட்டும், இராமேச்சுரத்தில் இராமனே பூசை செய்த சிவலிங்கத்தின் மகிமையைக் கேட்டும் வந்தவர்களாதல் வேண்டும். முதற்கண் வந்து குடியேறிய பார்ப்பனர்களுக்குத் தலைவர் அகஸ்தியர். வேதப் பாசுரங்கள் பலவற்றை இயற்றியவர் என்றும், வேள்விகள் பல இயற்றிய தூய மாமுனிவர் என்றும், தெற்கே எட்டிய தொலை செல்பவர் என்றும் வட இந்தியாவில் இவர் பெயர் பெற்றவர்; தென்னிந்தியாவிலோ கலைகளும், இலக்கியமும் திராவிட மக்களுக்கு வகுத்தளித்த தமிழ்முனி என்று இவர் கொண்டாடப் பெற்றவர். (அகஸ்தியர் என்று ஒருவர் இருந்தாரென்பது உண்மையானால்) `அவர் ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட, அக்குடியேற்றக் கட்டுக் கதைக்குத் தலைவரவரே எனக் கூறலாம். அவர் சிறப்பாகத் தமிழ்முனி என்று வழங்கப் பெறுவதுடன் முதற் பாண்டியனான குலசேகரன் அவையில் தலைமை வகித்திருந்தாரென்றும், அவனைச் சீர் திருத்தி அறிவுறுத்தும் வகையில் மூல நூல்கள் பல இயற்றினாரென்றும், அவற்றுள் தமிழ்மொழி இலக்கணம் தலைசிறந்தது என்றும் கூறப்படுகின்றன. தமிழ்நாட்டுத் தென்புறவானில் சுடரொளி வீசி மிளிரும் விண்மீன்1 அகஸ்தியரே என்று புராணங்கள் கூறும். கன்னியாகுமரிக் கருகில் அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது. பொருநை ஆறு தோன்றும் அகஸ்திய மலை என்னும் மலையில் இன்றும் அவர் உருமறைந்து வாழ்ந்துவருவதாக இந்துக்கள் நம்புகின்றனர். அகஸ்தியர் காலமோ, திராவிடரிடையே பார்ப்பனர் நாகரிகம் புகுந்த காலமோ இப்பொழுதுதான் என்று வரையறையிட்டுக் கூற முடியாது. கிரேக்கர் காலத்தே நாடு முழுமையும் பார்ப்பன நாகரிக வயப்பட்டிருந்தமையையும், பேரூர்ப் பெயர்களிற் பல வடமொழிப் பெயர்கள் கொண்டு வழங்கினமையையும், பாண்டிய அரச பரம்பரையினர் அரசு செலுத்தி வந்தமை ஐரோப்பாவிலும் தெரிந்திருந்தமையையும் நோக்க, அக்காலம் கிரேக்கர் காலத்திலும் மிக முற்பட்டதென்று மட்டும் துணியலாகும். எனினும், அக்காலம் இராமாயண காலத்திற்குப் பிற்பட்டதேயாகவேண்டும். ஆகவே, அ/து இராமாயணத்திற்கும், கிரேக்கர் வரவிற்குடும் இடைப்பட்ட காலமென்னலாம். மாபாரதத்தில் கூறப்படும் திராவிட அரசர்கள் பற்றிய குறிப்பு இடைச்செருகலன்று எனக் கொள்ளப்படின், அகஸ்தியர் காலம் இராமாயண மாபாரத காலங்களுக்கு இடைப்பட்டதென்பது ஏற்படும். இவற்றின் ஐயப்பாடான காலநிலையாலும், மனுவின் காலத்தின் பழைமை மறுக்கப்படுவ தாலும் (பாரதத்திலும், மனுவிலும் சீனர் குறிப்பிடப்படுவதாகத் தெரிகிறது) காலவரையறைக்கு இவற்றுள் ஒன்றும் உதவாமற் போகின்றது. இலங்கைக்கு மகத ஆரியர் விஜயன்தலைமையிற் சென்றது இதன் காலத்தை ஒருவாறு வரையறுக்க உதவுவதுபோலத் தோற்றக்கூடும். ஏனெனில், தமிழ் நாட்டை அதற்குள் ஆரீயர் நன்கறிந்திருப்பர் ஆதலின் என்க. மகாவமிசம் இதனைக் கி.மு. 550 என்று குறிக்கிறது. இதற்கு முந்தியே தமிழ்நாட்டையும் தண்டகாரணியத்தையும் ஆரியர் நன்கு அறிந்திருப்பர் என்று கூறலாம். மகாவமிசம் எழுதப்பட்ட காலம் கி.பி. 459 முதல் 477 வரை ஆகும். மகத நாட்டினர் இலங்கையிற் குடியேறிய காலம் உறுதியாக வரையறுக்கக் கூடாததா யிருப்பினும், கிறிஸ்து பிறக்கு முன்னரேயே குடியேற்றம் நடைபெற்றிருக்க வேண்டுமென்று உறுதியாகக் கொள்ளலாம். இதற்கு மொழியியல்பு ஒன்றே போதிய சான்று பகரும். தாமிரபர்ணி என்பது சிங்களம்; தாம்பபண்ணி என்பது பாலி; மகத ஆரியர் முதன் முதலில் இலங்கையிற் குடியேறிய இடத்தைத் தாமிரபர்ணி என்றே அழைத்தனர்; பின்னர் அத்தீவு முழுதையுமே தாமிரபர்ணி என்றழைத்தனர். கிரேக்கர்கள் இதனைத் தாப்ரபேனே என்று அலெக்ஸாந்தர் காலத்திலேயே, குறித்துள்ளனர். தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலோடும் ஆற்றின் பெயரை இ/து ஒத்திருப்பது வியக்கத்தக்கதே. இவ்வாற்றில் வானவர் குளித்ததாகப் பாரதத்தில் கூறப்படுவதால் இப்பெயர் இவ்வாற்றின் பெயராக வழங்கியிருத்தல் தெளிவு; எனவே, இக்குடியேற்றத்தார் இலங்கையை யடையுமுன் இவ்வாற்றின் கரையிலுள்ள துறையாகிய கொற்கையிற் சிலகாலந் தங்கிப் பழகியவர்களாதல் வேண்டும் என்று உய்த்துணரலாம். இதற்கேற்ப மகாவமிசத்திற் குடியேற்றத் தலைவனாகிய விஜயன் பாண்டியன்மகளை மணம் புணர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இம் மணவினைபற்றி ஐயம் எழினும் (ஏனெனில் சிங்கள அசுரர்தம் அரசியையும் அவனே மணந்தான் என அது கூறுகிறதாதலின்), பாண்டியநாடொன்றிருந்ததென்பதும், அ/து ஆரியர் முறையையொட்டி முதற்கண் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தமிழரசாதல்வேண்டும் என்பதும், இலங்கையில் மகத ஆரியராட்சி ஏற்படுவதற்கு முன்னர் இப்பாண்டிய ஆட்சி நடைபெற்று வந்த தென்பதும் எளிதிற் றெளியப்படும். பண்டைய இந்திய வரலாறு எழுதியவர்களுள் சிங்களரே உண்மையிற் றலை சிறந்தவர்கள் என்பது ஈண்டுக் குறிப்பிடற்பாற்று. “இண்டியன் ஆன்டிக்குவரி” என்ற வெளியீட்டில் 1872 அக்டோபர்த் திங்களில் எழுதிய கட்டுரை யொன்றில், டாக்டர் பர்னல் தென்னாட்டில் பார்ப்பன நாகரிகம் ஏற்பட்ட காலம் மிகப் பிந்தியதெனக் கூறுகிறார். கி.பி. 700இல் வாழ்ந்த குமாரிலபட்டர் தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளைப் பேசுவோர் மிலேச்சர் என்று கூறியதனால் அவர் காலத்திற்குள் பார்ப்பன நாகரிகம் இந்நாடுகளுக்குள் மிகுதியாகப் பரவியிருக்க முடியாதென்பது அவர் கருத்து.2 `பார்ப்பனரது உழைப்புக்குத் தென்நாடு பயன்படும் நிலமாய் இருந்த போதிலும் குடியேறிய மக்கள் மிகக் குறைவாகவே யிருந்தனர்’... `சில நூற்றாண்டுகள் முன்னதாகவே இலக்கியங்களில் பார்ப்பன இடப்பெயர்கள் சில காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆயினும், இவை பேராற்றுத் துறைகளிலும், கடற்றுறைமுகங்களிலும் காணப்பெறுபவையே. பெரும்பாலும் இவை புத்தர்களால் வழங்கப்பெற்றவை போலும்’ என்றும் பர்னெல் கூறுவர். பார்ப்பன நாகரிகம் புகுந்த காலமும், தமிழ் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்ட காலமும் வேறு வேறானவையாம். பிந்தியது சமணரது முயற்சி ஆகும். ஆனாலும், திராவிட இலக்கியத்தைச் சமணர் முழு உருவாக்கினாலும் அதன் கருத் தோற்றத்திலேயே பார்ப்பனத் தாக்கு ஏற்பட்டமை தெளிவு. உண்மையில் சமணர்கள் கூட திராவிட மொழிகளைச் செப்பனிட்டுப் பார்ப்பன மொழியாகிய வடமொழிக்குப் போட்டியாக்கும் வரை முதன் முதலில் தென் இந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி, வடமொழியையே பயன்படுத்தி வந்தனர். இதற்கேற்ப முதல்முதல் ஆரியச் சார்புடையவையாய்க் காணப்படும் இடப் பெயர்கள் பெரும்பாலும் பார்ப்பனச் சார்போ, புத்தச் சார்போ இல்லாதவையாய்க் காரணப் பெயர்களாகவே இருக்கின்றன. இரண்டுமட்டும் இவற்றள் தெளிவான பார்ப்பனச் சார்புடையவை; ஒன்று குமரி; மற்றொன்று யாதவர் தலைநகராகிய வட மதுரையைப் பின்பற்றி இடப்பட்ட பெயராகிய மதுரை. பினீஷியர்களும், சாலமன் மன்னரின் பணியாளர்களும் மலபார்க் கரையோரம் உவரி3 வரைச் சென்று நடத்திவந்த கப்பல் வாணிபத்தில் சிந்து நதிக் கரையில் வாழ்ந்திருந்த ஆரிய வணிகர்களும் பங்கு கொண்டு உடன் சென்றவர்களாதல் வேண்டும். இந்த உவரி என்பது இந்தியாவின் மேற்கரை யிலுள்ளதே யென்றும், ஆப்பிரிக்காவில் அப்பெயருடைய இடமில்லை என்றும் எர்னெஸ்ட் ரெனான்4 என்பவர் கூறியதாக சர் எம். இ. கிராண்ட் டஃப்5 எழுதுகிறார். இத்தகைய கப்பல் வாணிக முறையினாலேயே, செங்கடல் வணிகரிடமிருந்து திராவிடர்கள் எழுத்து முறை கற்க, அவர்களிடமிருந்து பின்னர் ஆரியர் கற்றனர் என்று டாக்டர் பர்னெலும், வடஇந்தியா விலுள்ள லாட்6 என்னும் மொழியின் எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களை யொட்டி எழுந்தவையே என்று எட்வர்ட் தாமஸ்7 என்பவரும் கூறுகிறார்கள். இவை ஆராய்ச்சிக்குரியன. மன்னன் சாலமன் காலத்தில் ஆரியர்கள் தொலை நாடுகளுடன் கப்பல் வாணிபம் செய்து வந்ததாக வேதங்கள் கூறுகின்றன; ஆனால் எத்துறைமுகங்களிலிருந்து கப்பலேறிச் சென்றனர் என்பது ஆராய்ச்சிக் குரியதாம். அடிக்குறிப்புகள் 1. ஊயnடியீரள. 2. “தென் இந்தியாவில் கண்ட பிரமி எழுத்துச் சான்றுகளால் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே பார்ப்பன நாகரித்தாருடன் தொடர்பு ஏற்பட்டதென்பது தெளிவாகின்றது”. “வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தென் இந்தியா முற்றிலும் திராவிட அறிவும் நாகரிகமுமே நிறைத்திருந்தன” என்று ஒருசிலர் கொண்ட கொள்கைக்கு இது மாறுபடுவதாகும். - சென்னை ஆர்க்கியலாஜிகல் ரிப்போர்ட். 3. டீயீhசை. 4. ஞசடிக. நுசநேளவ சுநயேn. 5. ளுசை. ஆ.நு. ழுசயவே னுரகக in hளை டுகைந டிக நுசநேளவ சுநயேn, ஞசடிகநளளடிச டிக ளுநஅவைiஉ டுயபேரயபநள டிக வாந ஊடிடடநபந டிக குசயnஉந. 6. டுயவ. 7. ஆச. நுனறயசன கூhடிஅயள. முற்றிற்று பிற்சேர்க்கை இந்நூலிற் குறிக்கப்பெற்றுள்ள கிரேக்க, உரோம நில இயல் நூலாசிரியர்களின் காலம் கி.மு. ஹெரொடோட்டஸ் 420 தெஸியாஸ் 400 ஒனெஹிகிரீட்டஸ் 325 மெகாஸ்தெனீஸ் 300 கி.பி. ஸ்ட்ராபோ 20 பொம்போனியஸ் மேலா 50 பிளைனி 77 பெரிப்ளூஸ் மாரி எரித்ரை 80 டயனீஷியஸ் பெரிகெட்டெஸ் 86 டாலிமி 130 அர்ரியான் 150 கிளெமன்ஸ் அலெக்ஸாண்டிரினஸ் 200 யூஸீபியஸ் 320 ஃபெஸ்டஸ் அவீனஸ் 380 மார்ஹியன் 420 காஸ்மாஸ் இண்டிகோபுளூஸ்டெஸ் 535 ஸ்டீஃபென் ஆஃப் பைஸான்ஷியம் 560 இராவென்னாட்டிஸ் அனானிமி காஸ்மோகிரேபியா 7ஆம் நூற்றாண்டு ஜ்யாஜிர்யஸ் ஸின்ஸெல்லஸ் 800 பியூட்டிஞ்சர் டேபில்ஸ் (பிளைனி காலத்திற்கும் முற்பட்டன.) கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள் 1. திராவிடப் பெருங்குழு இந்தியப் பெருநாட்டிலுள்ள மக்கட் டொகுதியை ஆராய்ச்சிமுறையில் வகுத்து, இனம் பிரித்துப் பொதுவியல்பு சிறப்பியல்புகளை வரையறை செய்ய முயன்ற ஆராய்ச்சி யறிஞர்கள் அ/து எழுவகைத்தாய குழூஉக்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும் என்று முடிவுகட்டினர். அவை வருமாறு:- (1) துருக்க - ஐரோனிர் (2) இந்திய-ஆரியர் (3)சித்தியத் திராவிடர் (4) ஆரியத் திராவிடர் அல்லது இந்துஸ்தானி (5) மங்கோலியத் திராவிடர் அல்லது வங்காளி (6) மங்கோலாய்ட் (7) திராவிடர்.1 இவ்வேழனுள் இறுதியவராயுள்ள திராவிடர் என்ற குழுவினர் ஒரு காலத்தில் இலங்கைத்தீவு தொட்டுக் கங்கையாற்று வெளிகள் வரையிற் பரவி வாழ்ந்துவந்திருந்தனர் என்று பொதுவாகத் தெரிகிறது. சிறப்பாகச் சென்னை மண்டிலத்திலும், ஐதராபாத் பகுதியிலும், மத்திய மண்டிலங்களிலும்2, சோட்டா நாகபுரியிலும்3 அவர்கள் பெருந்தொகுதியினராக நிறைந்து வாழ்ந்திருந்தார்கள் என்ற அறியக் கிடக்கின்றது. இப்பெருங் குழுவினரின் குழூஉச் சிறப்பியல்புகளை இக்காலத்தில் மலையாள நாட்டிலுள்ள பணியர்4களிடத்திலும், சோட்டா நாகபுரியிலுள்ள சந்தாளர்களிடத்திலுங்5 காணலாம். திராவிடக் குழுவினர் உயரத்திற் குறைந்த உருவினர்களே; ஏனைய இனத்தினரை நோக்க இவர்களைக் குள்ளர்கள் என்றே கூறலாம். நிறமோ தீர்ந்த கறுப்பில்லா விட்டாலும் கறுப்பென்றுதான் கூறல்வேண்டும். இவர்களுடைய தலைமயிர் கறுத்துச் செழித்துவளர்ந்து சுருளும் பண்புடையது. கரிய கண்கள்; நீண்ட தலை; மூக்கோ முனையகன்றும், அடிப்பகுதி சிறுபான்மை எடுப்பில்லாது தட்டையாகவும் இருக்கும்; முன்னங்கைகள் சற்று நீண்டனவாகவே யிருக்கும். இந்தியாவிலுள்ள மற்றெக் குழுவினரையும் நோக்க, இக்குழுவினரே தொன்மை மிகுந்த பழங்குடிகள் என்று அறியக் கிடக்கின்றது. நிலநூலார்6 மிகவுந் தொன்மைக்கு எடுத்துக் காட்டாகக் கூறும் மலைப்பகுதிகளிலும், மேடான நிலப்பகுதி களிலும், மற்றும் விந்தியமலை முதல் கன்னியாகுமரி வரையிற் பரந்து கிடக்கும் நிலப்பகுதியிற் பற்பல விடங்களிலும் இக் குழுவினர் காணப்படுகின்றனர். தென்னிந்தியாவின் கீழ்க்கரை மேற்கரையாகிய இருகரைகளிலும் தொடர்ந்து வளர்ந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி, மேற்குத் தொடர்ச்சியென்ற மலைகள் இரண்டிலும் வாழ்வோரெல்லாம் திராவிடர்களே; அவ்வாறே வடக்கே அராவலி மலைகளிலும்,7 இராஜமஹால்8 மலைநாடு களிலும் வாழ்வோரும் திராவிடர்களேயாவர். இடையிடை நேர்ந்த ஆரியர்கலப்பினாலும், மங்கோலியர் கலப்பினாலும், இக் குழுவினர் தம் குழூச் சிறப்பியல்புகளிற் பலவற்றை இக்காலை யிழந்திருக்கின்றனர்; எனினும் ஆராயப்புகுவோரால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய சிறப்பியல்புகள் வாய்ந்தவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். திராவிடர்கள் என்றால் உழைப்பாளிகள் அல்லது தொழிலாளிகள் என்றே பொருள் கொள்ளலாம்; என்னை? மெய் வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டி, வாழ்வது அவர்களுக்கே சிறப்பாக உரித்தாகலின். வடகோடியிலுள்ள அஸ்ஸாம்9 நாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் மாக்களைப் போல் உழைக்க வேண்டுமானாலுஞ் சரி; வங்காளத்தைச் சேர்ந்த சதுப்பு நிலங்களில்10 மாடுபோலுழைத்துச் சாகுபடி செய்ய வேண்டு மானாலுஞ் சரி; கல்கத்தா, இரங்கோன், சிங்கப்பூர் போன்ற தலைநகரங்களில் தெருப்பெருக்கிக்11 குப்பை கொட்ட வேண்டுமானாலுஞ்சரி; மற்றித்தகைய உடல் வருத்தும் கீழ்த்தரமான வேலைகள் எவையாயினுஞ்சரியே, அவற்றிற் கெல்லாம் ஈடுகொடுத்துப் பாடுபடுபவர்கள் திராவிடர்களே. கரிய நிறம் வாய்ந்து, திண்ணிய உடற்கட்டுடனும், தட்டையா யகன்று நீக்ரோவர்தம்12 மூக்குகளை யொத்த மூக்குகளோடுங் காணப்பட்டு மெய்வருந்திப் பாடுபடுவதே தொழிலாகக் கொண்டு வந்திருந்தவர்களெல்லாம் திராவிடர்களே என்று எளிதிற் கூறிவிடலாம். குழுவரையறை துணிதலியலாது குழுவின ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டு மேற்பிரித்துக் காட்டியவாறு ஏழு இனத்தினராகவோ அதற்குக் கூடுதற்குறைவான தொகையுள்ள இனத்தினராகவோ பிரித்தும், இந்தியப் பெருநாட்டின் இன்னின்ன பகுதிகளில் இன்னின்ன இனத்தார்தான் வாழ்ந்துவந்தனர் என்று வரையறுத்துங் கூறுதல் என்பது இயலாது. சென்னைப் பகுதியிலுள்ளவர்களெல்லாம் திராவிடர்களென்றோ, அன்றி, வங்காளத்திலுள்ளவர்க ளெல்லாம் மங்கோலியத் திராவிடர்களென்றோ நூல் பிடித்ததுபோல் வகுத்துக் கூறிவிடத்துணிதல் அறியாமையே யாகும். பண்டு தொட்டே இந்திய நாட்டின் வடபகுதியி லிருப்போர் தென்பகுதிக்கும், மேலைப் பகுதியினுள்ளோர் கீழைப்பகுதிக்கும் சென்று குடியேறியமை வரலாற்றுண்மை யாகும். இவ்வாறு இடம் பெயர்ந்து சென்றோர் வணிகர் களாகவோ, விறல் மன்னர்களாகவோ, நிலக் கிழவர்களாகவோ, இன்றேல், பூசாரிகளாகவோ குடிபுகுந்துறைந்து தம் குழூஉச் சிறப்புகளில் தலையாயவற்றை வழுவவிடாமற் காத்துப் பெருமையாகவும், இயன்றவரையில் தனியாகவுமே வாழ்ந்துவர முயன்றுவந்துளர். எனினும், ஆங்காங்கு ஒருசிலர் தம் குழூஉச்சிறப்பியல்புகளை அறவேயொழித்து, குடியேறிய நாட்டினரோடு பல்லாற்றானும் ஒற்றுமைப்பட்டு வாழ்ந்து வந்திருத்தலுங் கூடும். ஆகவே, மேற்கண்ட பிரிவுவகை ஆராய்ச்சிக்கருவியாகக் கொண்ட பொதுப்படையான அளவு கோலேயாகும். அடிக்குறிப்புகள் 1. கூரசமடி - ஐசயnயைn, ஐனேடி-ஹசலயn, ளுஉலவாடி- னுசயஎனையைn, ஹசலடி-னுசயஎனையைn டிச ழiனேரளவயni, ஆடிபேடிடடி - னுசயஎனையைn டிச க்ஷநபேயடi, ஆடிபேடிடடினை, னுசயஎனையைn. 2. ஊநவேசயட ஞசடிஎinஉநள. 3. ஊhடிவய - சூயபயீரச. 4. ஞயnலையளே. 5. ளுயவேயடள. 6. ழுநடிடடிபளைவள. 7. ஹசயஎயடடளை. 8. சுயதஅயாயட. 9. ஹளளயஅ. 10. ளுறயஅயீள. 11. ளுஉயஎநபேiபே. 12. சூநபசடிநள. 2. திராவிடப்பெருங்குழுவினரே முதுகுடிகள் திராவிடர்களுடைய குட்டை உருவமும், கறுத்த தோலும், நீண்ட தலையும், அகன்ற மூக்கும், சற்று நீண்ட முன்கையும் அவர்களை ஏனைக் குழுவினர்களினின்றும் வேறு பிரித்துக் காட்டுவனவாகுமென்று மேற்கூறினோம். இக்குழு உச் சிறப்புக்களையே துணையாகக்கொண்டு, ஹக்ஸ்லி1 என்பார் ஆஸ்திரேலிய2 நாட்டு முதுமக்களுடன் தொடர்பு பூண்டவர்களே திராவிடர்கள் என்று கூறிய கூற்றுக்கு அரண்கோல ஒருசிலர் முயல்வர். முண்டாரி3 மொழிக்கும் ஆஸ்திரேலிய மொழிகள் சிலவற்றிற்கும் எண் முறையில் காணப்படும் சில ஒற்றுமை களையும், தென்னிந்தியாவில் மாய்ந்து மறையும் நிலையிற் காணப்படும் வளைதடிகளின்4 வேறுபாடுகளையும் அவர் தம் கூற்றுக்கு உறுதுணையாகக் கொள்வர். மடகாஸ்கர்5 தீவிலிருந்து மலேயாத்6 தீவுகள் வரையிற் பரந்து கிடந்து, இந்திய நாட்டை ஆ/பிரிக்காவுடனும்7, ஆஸ்திரேலியாவுடனும் இணைத்திருந்த பெருநிலப் பகுதியாகிய இலெமூரியா8 என்றொன்று இருந்ததென்றும், அப்பகுதியில் வாழ்ந்தவர்களே திராவிடர்களென்றும் ஸ்க்ளேட்டர்9 என்பார் ஊகத்தாற்கூறிய கொள்கையோடு தொடர்புபடுத்த மற்றொரு சாரார் முயல்வர். எனினும் ஆஸ்திரேலியப் பண்டை மக்களின் மண்டை யோடுகளையும், பண்டைத் திராவிட மக்களின் மண்டையோடு களையும் ஒப்புநோக்கி ஆராய்ச்சிசெய்த ஸர் உவில்லியம் டர்னர்10 என்ற அறிஞர் அவ்விருதிறத்தினரும் ஓரினத்தினர் என்று கொள்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். அவருடைய கூற்றிலிருந்து, அந்தமான்11 தீவுகளிலும், பிலிப்பைன்12 தீவுகளிலுமுள்ள நீக்ரோவரினத்தைச் சேர்ந்தவர்களுடன் திராவிடர்களை ஒன்றுபடுத்துவதும் முடியாதாகின்றது. டர்னரின் முடிபுகள் இவ்வாராய்ச்சித் துறையில் முடிந்த முடிபுகளாகவே கருதப்படுகின்றன. அவ்வாறு கருதப்பட்டாலும், ஸர் உவில்லியம் ஹன்டர்13 என்ற பேரறிஞர், திராவிடர்கள் இருகிளையினர் என்றும், முண்டாரி மொழித்தொகுதியைச் சேர்ந்த திருந்தா மொழிகளைப் பேசிய கோலேரியர்14 என்பவர் ஒருகிளையும், தமிழ்மொழித் தொடர்புடைய மொழிகளைப் பேசிய உண்மைத் திராவிடர் மற்றொரு கிளையுமாவர் என்றும் ஆராய்ந்து புதியதொரு கொள்கையைப் பின்னர் நிறுவியுள்ளார். மேலும், கோலேரியக் கிளையினர் இந்தியாவிற்குள் வடகீழ்ப்பகுதியூடு வந்து, விந்தியமலைக்கு வடக்கிலுள்ள மேட்டு நிலப்பகுதி யிற்றங்கியவர்களென்றும், பின்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியூடு பஞ்சாபிற் புகுந்துவந்த திராவிடர்களால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களென்றும், இத்திராவிடர்களே தெற்கு நோக்கித் தொடர்ந்து முன்னேறிச்சென்று தங்கினார்களென்றும் அவர் கூறுவர். பலூச்சிஸ்தானத்தில்15 வழங்கும் பிராகுவி மொழிக்குந்16 தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகளுக்கும் தொடர்புள்ளதென்று ஐயுறுதற் கிடனிருப்பதையும், சோட்டா நாகபுரியிலுள்ள மக்கள்பால் மங்கோலியக் குழுவினர்க்குரிய சில குழூஉச் சிறப்புக்கள் காணப்படுவதையுமே ஆதாரமாகக் கொண்டு இக்கூற்று எழுந்ததாகும். இவ்வடிப்படை தானும் வலுவற்ற தொன்றன்றென்று கூறவும் வேண்டுமோ? அன்றியும், மொழிவேற்றுமை, ஒற்றுமைகளையே கருவியாகக்கொண்டு ஓரினத்தாரைக் கோலேரியரென்றோ, திராவிடரென்றோ இரு பிரிவினராகப் பிரிக்க முயல்வது அறிவியன்முறைக்கு ஒவ்வாத தொன்றாமன்றோ? இருதிறத்தினரின் உடலமைப்புக்களில் எத்தகைய தீர்ந்த வேறுபாடுகளுங் காண்டற்கில்லை யாதலின் மேற்குறித்த கொள்கையை யேற்றுக்கொள்ளலரிதாகின்றது. அதுவுமன்றி, மஞ்சள்நிற மேனியும், பெரிய தலைகளும் வாய்ந்த மக்கட் குழுவினரே வதிந்துவரும் நிலப்பகுதி யொன்றிலிருந்து, கருநிறமும், நீண்ட தலையமைப்புமுடைய ஒரு பெருங் கூட்டத்தினர் புறப்பட்டு வந்தனர் என்பது நம்பத்தக்க தொன்றாமோ? எனவே, இமயத்திற்கு அப்புறமிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளும் கொள்கைகளுக்கு அறிவியன் முறைப்படி நம்பத்தக்க எத்தகைய ஆதாரமுமிருப்பதாகத் தோற்றவில்லை. இந்தியாவில் இந்நாளிலும் திராவிடர்கள் வாழ்ந்து வருவதாகக் கொள்ளப்படும் நிலப்பகுதி களின் இயற்கை யமைப்பையும், அவர்களுடைய தனிப்பட்ட பண்டைய உடலமைப்புக் குறிகளையும், உயிருண்மை17 தெரிக்கும் அவர்களுடைய சமயத்தையும், சிறப்பியல்பு பொதுளும் மொழிகளையும், கற்றச்சு வேலைகளையும், தொன்மைக் கறிகுறியான குல தெய்வ வழிபாட்டையும்18 நோக்கினால் அவர்கள்தாம் இந்தியாவின் முதுகுடிகள் என்று கொள்வதே சிறப்புடையத்தாகும். அடிக்குறிப்புகள். 1. ழரஒடநல. 2. ஹரளவசயடயை. 3. ஆரனேயசi. 4. க்ஷடிடிஅநசயபே. 5. ஆயனயபயளஉயச. 6. ஆயடயல ஹசஉhiயீநடயபடி. 7. ஹககசiஉய. 8. டுநஅரசயை. 9. ளுஉடயவநச. 10. ளுசை றுடைடயைஅ வரசநேச. 11. ஹனேயஅயளே. 12. ஞாடைiயீயீiநேள. 13. ளுசை. றுடைடயைஅ ழரவேநச. 14. முடிடயசயைளே. 15. க்ஷயடரஉhளைவயn. 16. க்ஷசயாரi. 17. ஹniஅளைவiஉ சநடபைiடிn. 18. கூடிவநnளைஅ. 3. திராவிடப் பெருங்குழுவியல்பு மக்கட் டொகுதியமைப்பு முறையை ஆராய்ந்து காண்போமாயின், தனிப்பட்ட வகையில் மக்கள் என்றும், நெருங்கிய உறவினராய மக்கள் பலர் ஒன்றுசேர்ந்த குடும்பம் என்றும், பலகுடும்பங்கள் சேர்ந்த கிளை யென்றும், பலகிளைகளைக் கொண்ட இனம் என்றும், பல இனங்களாலாய குழுவென்றும், பல குழுக்கள் அடங்கிய பெருங் குழு வென்றும் நிரல்பட விளங்கக் காணலாம். நடைமுறையில் சிக்கல் ஏற்படாவாறும், தெளிவு கருதியும் இவ் வகுப்பினை மக்களால் தேர்ந்து கொள்ளப்பட்ட தொன்றாகும். தொழிலொற்றுமை, உறவுமுறை, அடிமையாப்பு முதலிய பற்பல ஏதுக்களை முன்னிட்டு மக்கள் இவ்வகுப்பினையை மேற்கொண்டனர். தொழில் கருதிப் பெயர் பூண்டுள்ள பிரிவினர்களும், தம் முன்னோர்களின் பெயர்களையே சிறப்புப் பெயர்களாக அமைத்துக் கொண்ட குடும்பத்தினரும், இன்னும் இவைபோன்ற பல ஏதுக்களை முன்னிட்டுத் தனித்தனியாய்ப் பெயர் பூண்டுள்ள பற்பல குடும்பத்தினர்களும் ஒரே குலப்பெயரை யுடையரா யிருத்தல் கூடும். இக்குலத்தினரிடை வழங்குவது பெரும்பாலும் ஒரே மொழியாக இருத்தலும் கூடும். ஒரு குடும்பத்தினர் தங்குடும்பத்தினர்க் குள்ளேயே கொள்வனை கொடுப்பனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை; ஆனால் இயன்ற வரையில் ஒரே குலத்தினுக்குள் அவ்வாறு செய்து கொள்ளல் வேண்டும். இவ்வியல்பே இந்தியநாட்டின் பண்டைப் பெருங்குடிகள் பலரிடத்துங் காணப்பட்ட தொன்றாகும். இனி, இத்தகைய பல இனங்களை யுட்கொண்ட திராவிடக் குழுவைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். திராவிட இனத்தாரின் தொன்மைநலங் கெடாத நிலையைக் காண வேண்டின் சோட்டாநாகபுரியிலுள்ள திராவிடக் குழுவினரைத் தான் நோக்கவேண்டும். அவர்கள் பல இனங்கள் ஒன்றுசேர்ந்த குழுவினர். ஒவ்வோரினத்தையுஞ் சேர்ந்த பல குலங்களில் ஒவ்வொன்றற்கும் பெரும்பாலும் ஒரு செடி அல்லது விலங்கின் பெயரேதான் குலப்பெயராக விருக்கும். ஒவ்வொரு குலத்தினருக்கும், அவர்களுக்கென்று ஏற்பட்ட தனியான நாட்டாண்மைக் கழக மொன்றிருக்கும்; அக்கழகத் தலைவனாக நாட்டாண்மைக்கார னொருவனிருப்பான்; அவனுக் குதவிபுரிய ஒரு சின்ன நாட்டாண்மைக்காரனும், ஊர்ப் பெரிய பூசாரி யொருவனும், ஏனைச் சிறு தெய்வங்களுக்குப் பலியிட்டுப் படைப்பதற்கென வமர்த்தப்பட்ட சிறு பூசாரிகள் பலரு மிருப்பார்கள். இனி, ஒரிஸாவிலுள்ள1 கந்தர்கள்2 திராவிடக் குழுவைச் சேர்ந்தவர்களே. நிலம் நன்கு விளைந்து பலனளிக்கவும், ஊர்மக்கள் நோய்வாய்ப் படாமலிருக்கவும் வேண்டி ஒருகாலத்தில் அவர்கள் நிலமகளுக்கு மக்களையே வெட்டிப் பொங்கலிட்டு (நரபலி) வந்ததுண்டு. இக் கந்தர்கள் ஐம்பது கொச்சி3 அல்லது குலத்தவர்கள். ஒவ்வொரு கொச்சியும் ஒரு முற்றம்4 அல்லது சிற்றூரின் பெயரைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு குலத்தவரும் தாங்க ளெல்லோரும் ஒரே மூதாதையின் வழிவந்தவர்களென்று கூறிக்கொள்வார்கள்; இயன்றவரையில் தத்தங் குலப்பெயருடைய சிற்றூரிலேயே இருந்து வாழ்ந்துவருவார்கள். நாகமலைகளில்5 வசிக்கும் மங்கோலாய்ட் இனத்தவர்களும் கந்தர்களைப் போன்று பல குலங்களைக் கொண்டவர்களே. அவர்கள் மொழியிற் குலப்பிரிவு ஒவ்வொன்றற்கும் கேள்6 என்று பெயர். ஒவ்வொரு கேளைச்சேர்ந்த மக்களெல்லோரும் ஒன்றுபட ஒரே ஊரில் வாழ்ந்து வருவார்கள். ஆனால், அவர்களுடய சிறப்பியல்பொன்றென்ன வென்றால், தஞ்சிற்றூரைச் சேர்ந்த தங்கள் குலத்தவர்களே நட்பினர் என்றும், ஏனை ஊர்களைச் சேர்ந்த பிறகுலத்தினர்கள் எல்லோருமே தங்கள் பகைவர்கள் என்றுங் கருதுவதேயாம். ஆகவே, தங்கள் சிற்றூரைச் சுற்றி அகழ்போன்ற பள்ளம் ஒன்றைத் தோண்டிக் கொள்வார்கள்; அப்பள்ளம் நிறைய கூர்மை பொருந்திய மூங்கிற் கப்பணங்களை7 அடித்து வைப்பார்கள்; அப்பள்ளத்தைத் தாண்டித் தாங்கள் உள்ளே செல்லுவதற்கும், வெளியே வருவதற்கும் பயன்படுமாறு நூலேணிபோன்ற ஒன்றை வைத்திருப்பார்கள். மகளிரைச் சிறையெடுப்பது கருதி இக்கேளினருக்குள் ஒருவருக் கொருவரிடையே அடிக்கடி படையெடுப்பும், பூசலும் நிகழ்வதுண்டு. இனி, துருக்க-ஐரானியர்களென்ற இனத்தாரிடையே இரண்டு தனிப்பட்ட பிரிவுகள் உள. உறவின் முறையை அடிப்படையாகக் கொண்டு ஒன்று சேர்ந்த தொகுதி முதற் பிரிவாகும். ஆ/ப்கானிஸ்தானத்திலுள்ள8 பதான்ஸ்9 என்ற பட்டாணிகள் இம்முறைபற்றி ஓரினமாகப் பிரிக்கப்பட்டவர்களே; பஷ்டூ10 என்ற மொழியை அவர்கள் பேசுவதாலேயே “பதான்ஸ்” என்றழைக்கப்பட்டனர் போலும். மற்றொரு பிரிவோ, உறவின் முறையினர் என்ற கட்டுப்பாடின்றி, வழிவழி நட்புப்11 பூண்டவர்கள் என்ற முறைபற்றி ஒன்று சேர்ந்த பல குலத்தினரைக் கொண்டதாகும். வேளாக்மாறி12 என்ற ஒரு பகுப்பினரை இதற்குக் காட்டாக எடுத்துக் கூறலாம். பிராகுவியர், பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த வேளாகர், ஆ/ப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த வேளாகர், கேத்திரர்கள்,13 ஆ/ப்கானியர், 14ஜாதர் முதலிய பல்வேறு குலத்தவர்கள் இப்பிரிவினுள் இடம் பெற்றவர்களே. இவர்கள் மத்திய ஆசியாப் பகுதியைச் சேர்ந்தவர்களென்று கருதப்படுபவர்கள். இனி, பிராகுவியர், வேளாகர் என்ற இருபிரிவினர்களும் தாய்வழி முறையே சிறந்தழி முறையென்று கருதிச் சிறப்பிக்கும் கொள்கையர்கள்; ஆகவே, பெண் மக்களுக்கு ஏற்றங் கூறுபவர்கள். ஆ/ப்கானியரோ, தாயினுஞ் சிறந்தது தந்தை வழிமுறையென்று கருதுபவர்கள்; அதனால் பெண் மக்களை விலைபடுபொருள் எனக்கருதி நடத்தி வருபவர்கள்; பெண்களைப் பொருள்கருதி அடிமைகளாக விற்பவர்கள். அடிக்குறிப்புகள் 1. டீசளைளய. 2. முhடினேள. 3. ழுடிஉhi. 4. ஆரவய. 5. சூயபய ழடைடள. 6. முhநட. 7. ஊயடவாசடியீ. 8. ஹகபாயnளைவயn. 9. ஞயவாயளே. 10. ஞயளாவர. 11. க்ஷடடிடின-கநரன. 12. கூhந ஆயசசi டிக க்ஷயடடிஉh. 13. முhநவசயளே. 14. துயவள. 4. திராவிட மொழிகள் இந்தியப் பெரு நாடெங்கணுந் திராவிடப் பெருங்குழு பரவிப் படர்ந்திருந்தது உண்மையே. எனினும், அப்பெருங் குழுவைச் சேர்ந்த மக்களியாவரும் திராவிட மொழியினத்தைச் சேர்ந்த மொழிகளையே பேசி வந்தார்களென்பதில்லை. வடபால் அமைந்தோர் பின்னர்த் தம்மை அடிமைப்படுத்திய ஆரியர் நாகரிகத்தில் இயல்பாய்ச் சிக்குண்டு, முற்றிலும் ஆரியராகவே மாறி, ஆரிய மொழிகளையே பேசி வருவாராயினர்; எனினும், ஆராய்ந்தால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய திராவிடக் குழூஉச் சிறப்பியல்புகளை அவர்கள் முற்றிலும் இழவாதவர் களாகவே இருந்துவருகின்றனர். இனி, வடபாலுள்ள இவ்வாரியக் கலப்பினரை யொழித்துவிடின், முண்டா மொழியினத்தை1 சேர்ந்த மொழிகளைப் பேசி வருவோர்களிற் பெரும்பான்மையோரும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிவரும் ஏனையோரிற் பெரும்பான்மையோரும் திராவிடர்களே என்று ஒருவாறு துணிந்து கூறலாம். ஒரே திறப்பட்ட உடலமைப்பியல்பு வாய்ந்த மக்களால் இந்த ஈரின மொழிகளும் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றமை கொண்டு, முண்டா மொழியினத் திற்கும் திராவிட மொழியினத்திற்கும் தொடர்புண்டென்று கருதினர் அறிஞர் பலர்; எனினும், இந்திய மொழியாராய்ச்சி யளவைக் கழகத்தினர்2 இடைவிடாது அரிதிற் றொடர்ந்து நடத்திவந்த ஆய்வுகளின் பயனாய் அக்கருத்துத்தானும் நிலைபெறாதாயிற்று. சொற்களின் ஒலிப்பு முறையையாதல், ஆக்கமுறையையாதல் ஆராய்ந்து பார்க்கினும் அவ்வீரின மொழிகட்கிடையே ஒற்றுமையன்றி வேற்றுமைகளே மிகுந்து கிடக்கக் காணலாம். ஒலிப்பு முறையில் வேறுபாடு; பால் குறிப்புமுறையில் வேறுபாடு; வேற்றுமை ஏற்கும் முறையில் வேறுபாடு; எண் முறையமைப்பில் வேறுபாடு; இன்மை, அன்மை, மறுதலை என்ற எதிர்மறையைக் குறிப்பதில் வேறுபாடு; சொற்கூட்டத் தொகுதியிலோ அளவற்ற வேறுபாடு! அவற்றிடையே காணப்படும் ஒற்றுமைகள் இரண் டொன்றும் உண்டாலோவெனின், அவையிரண் டொன்றும், உலகமெங்கணும் பரவியுள்ள பன்மொழித் தொகுதிகளுள் ஒன்றற் கொன்றினிடையே பொதுப்படக்காணப் பெறும் ஒற்றுமைப் பெற்றிகளே யாமென விடுக்க. திராவிட மொழியினத்தைக் குறித்து இனி, நோக்குவாம்; இவ்வினத்தைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவிலும், மத்திய இந்திய மலைநாடுகளிலும் பெருவாரியாக வழங்கி வருவனவாம். அவற்றுள் இரண்டு மொழிகள் இவ்வெல்லையுங் கடந்து வடக்கே சென்று, சோட்டாநாகபுரியிலும், சந்தாளபர்காணாஸ்3 பகுதிகளிலும் முண்டா மொழியினங்களோடு உடன் வழங்கியும், இந்தியப் பெருநாட்டின் வடமேற்கு மூலையிலுள்ள பலூச்சிஸ்தானத்திடையே பிராகுவி என்ற பெயரால் வழங்கியும் இன்றளவும் இருந்து வருகின்றன. வடமொழிவாணர் பலருக்கு மேற்குறித்த பிராகுவி என்ற திராவிட மொழியிருந்ததாகவே தெரிந்ததில்லை. ஆந்திரபாஷா4 திராவிட பாஷா5 என்ற இரண்டு பிரிவுகளே அவர்களறிந்தன; அவற்றுள் ஆந்திர பாஷா என்பது இப்போதைய தெலுங்கு மொழி; பின்னையதான திராவிட பாஷா என்பது தெலுங்கு ஒழிந்த ஏனைய மொழிகள். இப்பிரிவு ஒருவாறு உண்ணாட்டு மொழிக்கணக்குப் புள்ளி விவரங்களோடு ஒத்திருக்கின்றமை நோக்கற்பாற்று: பேசுவோர் தொகை (1901 ஆம் ஆண்டு) ஐ திராவிடக் குழுவினம் தமிழ் 16,525,500 மலையாளம் 6,029,304 கன்னடம் 10,365,047 குடகு 39,191 துளுவம் 535,210 துதம் 805 கோதம் 1,300 குறுக்கம் 592,351 மால்தோ 60,777 ஐஐ இடைப்பட்ட மொழி: கோண்டு முதலியவை 1,123,974 ஐஐஐ ஆந்திரக் குழுவினம் தெலுங்கு 20,696,872 கந்தம் 494,099 கோலாமி 1,505 ஐஏ பிராகுவி 48,589 மொத்தம்: 56,514,524 சென்னை மண்டில அரசியன்முறை விளக்கம்6 என்னும் ஒப்பரிய தொகுப்பிலிருந்து, திராவிட மொழிச் சிறப்பியல்பு களைக் காட்டுவதான பின்வரும் குறிப்பு தமிழில் மொழி பெயர்த்துத் தரப்படுகிறது: “திராவிட மொழிகளில் உயிரில் பொருள்களும், அறிவில் உயிர்களுமாய அ/றிணைப் பெயர்களெல்லாம் பொதுப்பாலனவே. படர்க்கைச் சுட்டு, குறிப்புப் பெயரெச்சம், படர்க்கை வினை ஆகிய இவற்றிற்கு அம் மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பால்வேறுபா டில்லை; ஏனைய எல்லாப் பெயர் வினைகளும் பால் குறித்தனவே. திராவிட மொழிப் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்குங் காலத்துச் சாரியை அல்லது உருபுச் சொற்களின் பிற்சேர்ப்பினாலேயே வேற்றுமை யடைகின்றன. பால்பகா வ/றிணைப் பெயர்கள் பெரும்பாலும் பன்மை குறித்தெழுதப் படா. திராவிட மொழிகளில் சாரியை, இடைநிலை, உருபு முதலியன பெயர் வினைச் சொற்களுடன் பின்னிணைப்புப் பெறுவனவேயன்றி முன்னிணைப்புப் பெறுமாறில்லை. உரிச் சொற்கள் வேற்றுமை ஏலா; `இந்திய-ஐரோப்பிய7 மொழியினத்தைப் போலன்றி இத் திராவிட மொழிகளின் தனிச் சிறப்புக்களிலொன்றென்ன வென்றால், வேண்டுமிடத்துப் பண்புப் பெயரென்னும் உரிச் சொற்களை விடுத்துப் பெரும்பாலும் வினையெச்சங்களையே உரிச் சொற்களைப் போன்று இவை பயன்படுத்துகின்றன என்பதேயாம். முண்டா மொழியினத்தைப் போன்று திராவிட மொழியினத்திலும் தன்மை முனனிலைப் பன்மைப் பெயர்களுக்கு இரண்டிரண்டு சுட்டுப் பெயர்கள் அமைந்துள; அவை முன்னிலையை உட்படுத்தியதும், உட்படுத்தாது விலக்கியதுமான இருவகையாம். செயப்பாட்டு வினை என்பது பொதுவாகத் திராவிட மொழியினத்திற்கில்லை; `படு’ என்னும் வினை முதலைச் சேர்த்தே இ/து இக்காலை குறிக்கப்பட்டு வருகிறது. இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் போலன்றித் திராவிட மொழிகள் இடைச் சொற்களைப் பயன்படுத்துவதினும், சாரியை, உருபு முதலியவற்றையே பெருவாரியாகப் பயன்படுத்துகின்றன. திராவிட மொழிகளிலுள்ள வினைச் சொற்களுக்கும் உடன்பாடு, எதிர்மறையென்ற இரண்டும் உண்டு. சொற்றொடர்களைவிடக் குறிப்புப் பெயரெச்சங்களையே திராவிட மொழிகள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன.” அடிக்குறிப்புகள்: 1. கூhந ஆரனேய. 2. கூhந டுiபேரளைவiஉ ளுரசஎநல டிக ஐனேயை. 3. ளுயவேயட ஞயசபயயேள. 4. ஹனோசய-bhயளாய. 5. னுசயஎனைய-bhயளாய. 6. கூhந ஆயரேயட டிக வாந ஹனஅinளைவசயவiடிn டிக வாந ஆயனசயள ஞசநளனைநnஉல. 7. ஐனேடி-நுரசடியீநயn. 5. திராவிட மொழிகள் ஐஐ தமிழ் தமிழ்மொழி தென்னிந்தியா வெங்கணும் பரவியுள்ளது. அதனை `அரவ’மென்று மழைப்பர். மேற்கே மைசூர், மேற்குத் தொடர்ச்சி மலைகள்வரை அம்மொழி பயின்றுவருகின்றது. வடக்கே சென்னைப்பட்டினம் முடியவும் அதற்குச் சற்று அப்பாலும் அது பயின்று வருகின்றது. ஈழமென்னும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ்மொழியே நாட்டு மொழியாக இருந்துவருகின்றது. 1901ஆம் ஆண்டு எடுத்த குடிமதிப்புக் கணக்குப்படி அப்பகுதியிலிருந்த தமிழரின் தொகை 953,535. தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள தொழிலாளர்கள் கூலி வேலைக்காரர்கள்மூலம் ஈழத்தைக் கடந்தும் பல பகுதிகளில் தமிழ்மொழி பயின்று வருகின்றது. இன்னுங் கூறப்புகின், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்கள் மூலம் தமிழ்மொழி இந்தியாவெங்கணுமே பேசப்பட்டு வருவதைக் காணலாம். திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்த்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக் காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும், தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை யெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. மலையாளம் மலையாளம் என்பது தமிழிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டிற் கிளைத்துப்பிறந்த புதுமொழியாகும். மேற்குக் கடற்கரையிலுள்ள மலையாள நாட்டிற் பயின்றுவருவது இம்மொழியே. எழுத்து வழக்கில்லாத ஏரவம் என்ற ஒரு மொழி இம்மலையாளத்திலிருந்து கிளைத்துக் குடகு நாட்டின் ஒரு பகுதியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. மலையாள மொழியில் இக்காலத்திற் பெருவாரியாக வட சொற்கள் கலந்து விட்டன; பால் விகுதிகளைப் பயன்படுத்திவரும் முறையை மலையாள மொழி ஏறக்குறையப் புறக்கணித்து விட்டதென்றே சொல்லலாம். இம் மொழியிலும் நூல்கள் எண்ணிறந்தன எழுதப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிற் பண்டு வடமொழியை எழுதக் கற்பித்துக்கொண்ட கிரந்த எழுத்துக்களையே மலையாளமொழி கையாண்டு வருகிறது. கன்னடம் மைசூரிலும், அதனை யடுத்த மலைப் பகுதிகளிலும், பம்பாய் மண்டிலத்தின் தென் மூலையிலும் கன்னட மொழி பேசப்பட்டு வருகிறது. பண்டைப் பெருநூல் வளம் அதற்கு முண்டு. அந்நூல்கள் தெலுங்கு எழுத்துக்களுக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவகை எழுத்துக்களால் இயன்றவை. எழுத்து வழக்கில்லா வடகு, குறும்பு என்ற இருமொழிகள் இக் கன்னடத்திலிருந்து கிளைத்துள்ளன. இவ்விரண்டும் நீலகிரிப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன. குடகு நாட்டிற் பயின்றுவரும் குடகு மொழியும் இதன்கிளை மொழியேயென்று கூறுவாருமுளர். துளுவ மொழி பயிலும் தென் கன்னடக் கோட்டத்திற்கும், மைசூர்ப் பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இக் குடகுமொழி பயின்று வருகிறது. துதம், கோதம் என்ற இரு திருத்தமில்லா மொழிகள் நீலகிரியைச் சேர்ந்த பகுதிகளிற் பேசப்பட்டு வருகின்றன. இவை சொற்றொகுதிகள் என்று சொல்லுந் தரத்தனவே யன்றி மொழிகள் எனக் குறிப்பிடற் கேற்றவையாகா. குறுக்கம் அல்லது ஒராவோன்1 சோட்டா நாகபுரியிலுள்ள திராவிட மக்கள் பேசுவது ஒராவோன் என்று அழைக்கப்படும் குறுக்க மொழியே. அது சோட்டாநாகபுரியை யடுத்துள்ள மத்திய மண்டிலப் பகுதிகளினும் பயின்றுவருகின்றது. தொன்மைசான்ற தமிழ் மொழியுடனும், பழைய கன்னடமொழியுடனும் அதற்குத் தொடர்பிருக்கிறதாகக் கூறலாம். இவ்விரண்டையுந் தவிர்ந்து, திராவிட மொழியினத்தைச் சார்ந்த வேறெம் மொழியுடனும் அதற்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அம்மொழி பேசும் மக்களே தாங்களும், மாலர் என்ற இனத்தாரும் கன்னட நாட்டிலிருந்து வந்து அங்குக் குடியேறியதாக இன்றுஞ் சொல்லிக்கொள்கின்றனர். மாலர்கள் பேசுவது மால்டோ என்ற மொழியாகும். மால்டோ ஒராவோனினத்தைச் சேர்ந்த இவர்கள், இக்காலை, கங்கை யாற்றின் கரையிலுள்ள இராஜமகாலருகில் அதன் வட பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஓராவோன், மால்டோ ஆகிய இரண்டு மொழிகட்குமே எழுத்து வடிவோ, இலக்கியமோ கிடையா. கோண்டு மத்திய இந்தியாவிலுள்ள மலைநாடுகளிற் கோண்டு மொழி பயின்று வருகின்றது. எனினும், அம்மக்களிற் பெரும் பாலோர் ஆரிய மொழியைப் பின்னர் பயின்று அதனையே பேச்சு வழக்கிற் பெரிதுங் கையாண்டு வருகின்றனர். எனவே, உண்மையாகக் கூறுமிடத்துக் கோண்டு மொழியென்பதைத் திராவிட மொழிக்கும், ஆரிய மொழிக்கும் இடைப்பட்டதொரு கலப்பு மொழியாகவே கூறுதல் வேண்டும். இதன்வழிக் கிளைத்தனவாக எண்ணிறந்த மொழிகளுள; எனினும், அவற்றுள் ஒன்றற்கேனும் எழுத்து வடிவோ, இலக்கணமோ கிடையா. தெலுங்கு தெலுங்கு மொழியே ஆந்திர மொழியினத்தின் தலைசிறந்த மொழியாகும். சென்னை தொடங்கி ஒரிஸ்ஸா வரையிலுள்ள சென்னை மண்டிலத்தின் கீழைப் பகுதி யெங்கணும் தெலுங்கு மொழியே பேச்சு வழக்கிலிருந்து வருகின்றது. நிசாம் நாட்டிலும், மத்திய மண்டிலத் தென்கோடி யிலும், பீரார் பகுதியிலும் இ/து ஒருவாறு பயின்றுவருகின்றது. பரந்த இலக்கியவளம் படைத்ததொரு பெருமொழி. தேவநாகரியையொத்த தனிப்பட்ட வரிவடிவில் இ/து எழுதப்பட்டு வருகின்றது. கந்தம் ஒரிஸ்ஸா மலைகளிலுள்ள கந்தர் பேசுவது கந்த மொழி. இது திருந்தியதொரு மொழியன்று. இதற்குக் கோலாமி என்றதொரு திருந்தாத கிளைமொழியுமுண்டு. இக் கிளைமொழி பீரார்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஒரு சிலரால் பேசப்பட்டு வருகிறது. பிராகுவி பிராகுவி ஒரு திருந்தா மொழி. பலூச்சிஸ்தானத்தின் நடுவிலுள்ள மலைப்பகுதிகளில் இது பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு நெடுந்தொலைவில், தனித்த நிலையில், வந்து தங்க நேர்ந்தமையால் இ/து ஒருசிறிது தடைப்பட்ட தனி வளர்ச்சியை யடைந்துள்ளது. இம்மொழி பேசும் மக்கள் இக்காலத்தில் திராவிட மக்கட்குரிய குழூஉக்குறிகள் யாதொன்றையுங் கொண்டுள்ளவர்களாக வெளிப்படையாகக் காணப்படு கின்றிலர்; எனினும், இவர்கள் திராவிட மக்களினத்தைச் சேர்ந்தவர்களே என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. கலப்பியல்பற்ற பண்டைத் திராவிடர்களாகக் கணக்கிடற் குரியோரில் பிராகுவி மொழி பேசும் இவ்வினத்தாரையே தலைசிறந்தவர்களாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது மொழியாராய்ச்சியாளர்தந் தேர்ந்த முடிபாகும். அடிக்குறிப்பு 1. ஆழ்ந்து நோக்கின் ஓராவோன் அல்லது உராவோன் என்பது தமிழ்மொழிக்கு ஒரு பெயராய அரவம் என்பதன் திரிபேபோலும்; அரவம், உரவம், உரவன், உராவன் என்றின்னணம் கொள்க. 6. முண்டா மொழிகள் முண்டா மொழிகளைக் “கோலேரிய1 மொழிகள்” என்றும் அழைப்பதுண்டு; அவ்வாறழைப்பது பிழைபட்ட தொன்றாகு மென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம் மொழிகளக்கு முண்டா மொழிகள்2 என்ற இனப்பெயர் வகுத்தவர் பேராசிரியர் மாக்ஸ்முல்ல3 ரேயாம். இந்தியாவில் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வருவதாகக் கருதப்படும் மொழிகளுள் இம்மொழி யினமும் ஒன்று; இவ் இனமே பண்டைய இந்தியமொழி யென்று கருதுவோரு முளர். இம்மொழிகளுக்கும் மலாக்கா4, ஆஸ்ட்ரலோனேஷியா5, நக்கவாரத் தீவுகள்6 முதலிய கீழை இந்தியப்பகுதியில் வசித்து வரும் பண்டை மக்கள் சிலர் பேசும் மான்குமேர்7 மொழியினத்திற்கும் வெளிப்படையாகத் தொடர் பேதங் காணப்படுகின்றதில்லையாயினும், பொதுப் படையா நோக்கின் ஒருபூடை யொற்றுமை யிருப்பது புலனாகும். இவ்வொற்றுமை காரணமாகப் பண்டொரு காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியிலும், கீழை யிந்தியப் பகுதியிலும் பொதுமொழியொன்று வழங்கியிருந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளுதல் மிகையாகாது. அப் பொதுமொழிச் சுவடுகள் முண்டாமொழி யினங்களுள் இக்காலையளவும் நன்கு காணக் கிடைக்கின்றன; ஆனால், கீழை யிந்தியப் பகுதிகளிலோ, அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்ந்த பிறமொழிக் கலப்பினால் அவை காணப்படாவாயின; ஆங்காங்கு ஒன்றிரண்டு குறிப்பாகத் தென்படுவதைக் கொண்டு பொதுமொழி ஆண்டுப் பயின்றிருந்தமை தெளியப்படும். முண்டா மொழிச் சொற்கள் அடுக்கியல் முறையா லியன்றனவே. இப் பண்டைச் சிறப்பு முறையை அவை எத்தகைய திரிபுமின்றி இன்றுங் கொண்டுள்ளன. ஒன்றன் பின்னொன்றாக அசைகளைச்சேர்த்தடுக்கி அமைக்கப்படும் ஒருசொல் முழுச் சொற்றொடர் ஒன்றற்குரிய பொருளனைத்தை யுங் கொண் டிலகுவதாகும். உயிருள்ளவற்றிற்கும் உயிரில்ல வற்றிற்கும் பால் வேறுபாடு உண்டே தவிர, உயர்திணை அஃறிணைப் பாகுபாடு முண்டாமொழிகளிலில்லை. அம்மொழி யினங்களில் ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூவகை எண்கள் உண்டு. வேற்றுமை யுருபுகள் வினைச்சொற்களுடன் சேர்க்கையுறுவனவேயன்றி, பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து தொழிற்படுமாறில்லை. கணக்கீடு முறையில் இருபஃது இருபஃதாக எண்கள் கணக்கிடப்படுமே யன்றிப் பத்துப்பத்தாகக் கணக்கிடப்படுவதில்லை. தன்மைப் பன்மைக்கு மட்டும் திராவிட மொழியினத்தைப் போன்று, முன்னிலையை யுட்படுத்தியதும், விலக்கியதுமாய இருவகைத் தாய சுட்டுப்பெயர்கள் அமைந்துள. முண்டா வினைச்சொற்றிரிபு முறைக்கும் திராவிட வினைச் சொற்றிரிபு முறைக்கும் ஒற்றுமை யேதுங் கிடையாது. வினைச் சொற்களும் எளியனவாய் அமை வனவல்ல. எதிர்மறை வினைகள் முண்டாமொழிகளிற் கிடையா. முண்டா மொழியினம் பயின்றுவரும் பகுதிகளிற் றலையாயது சோட்டாநாகபுரியே யாகும். வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை மண்டிலங்களை யொட்டிய சிற்சில கோட்டங்கள் ஆகியவற்றில் இவ்வின மொழிகளைப் பேசும் மக்கள் காணப்படு கின்றனர். பீகார் மண்டிலத்தின் மேற்கே நெடுந்தொலைவிலுள்ள மகாதேவ மலைகளில்8 இம் மொழிக்குரிய ஒரு குழுவினர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இம்மொழி யினத்தைக் குறித்த புள்ளிவிவரங்கள் பின்வருவனவாம்: பேசுவோர் தொகை (1901 ஆம் ஆண்டு) கேர்வாரி9 2,774,395 கூர்க்கூ10 87,675 கறியா11 101,986 ஜுவாங்12 10,853 சவரா13 157,136 கடபா14 37,230 மொத்தம் 3,179,275 இம்மொழியினத்துள் தலையாயது கேர்வாரியே; இதனைச் சேர்ந்த வரிவடிவில்லாக் கிளைமொழிகள் பலவுள; அவை இதனின் வேறுபட்டனவெனக் கருதுவோரு முளர். கேர்வாரி: சந்தாளீ15, என்ற ஆர்16, முண்டாரி17, புமிஜ்18, பிரார்19, கோடா20, ஓ21, தூரி22, அசூரி23, அகரியா24, கொர்வா25, என்பன அக்கிளை மொழிகளே. இவற்றுள் சந்தாளி, முண்டாரி என்ற இரண்டும் இலக்கண அமைப்பு வாய்ந்தவை. சந்தாளி மொழிக்கு அகராதி யொன்று முண்டு. சிங்கபூமியைச்26 சேர்ந்த லர்க்கா27 என்னும் “போர்க்” கோலர்கள்28 பேசும் மொழி ஓ என்பதாம். சந்தாளி பயிலுமிடம் சந்தாள பரகணாக்கள்29 என்ற பகுதியே யெனினும், இன்னும் தெற்கே நெடுந்தொலைக்கு, அ/தாவது, வங்காள மேலெல்லை யோரமாக வடஒரிஸ்ஸா வரை அது பயின்றுவருகிறது. ஏனைய மொழிகளெல்லாம் சோட்டா நாகபுரியிலும் அதனை யடுத்த ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதி களிலும், மத்திய மண்டிலத்திலும் பயின்று வருகின்றன. கூர்க்கூ கூர்க்கூ என்னும் முண்டாமொழிவகை மகாதேவ மலைப்பகுதிகளில் வழங்கி வருகின்றது. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடுஞ் சேர்ந்து இ/தொரு தனிப்பட்ட மொழிவகை யாகக் கருதப்பட்டுவரினும், கேர்வாரியுடன் ஏனைய இரண்டை யும் நோக்க, இதுவே பெரிதுங் தொடர்புடையதாய்க் காணப் படுகிறது. இம் மொழியும் ஒருவாறு திருத்தமுற்ற தொன்றே. இதற்கு இலக்கண அமைப்பும் உண்டு. கறியா இராஞ்சியின்30 தென்மேற்குப் பகுதியிலும் அதனை யடுத்த ஜஷ்பூர்31 காங்புர்ப்32 பகுதிகளிலும் இம்மொழி பயின்று வருகின்றது. இம் மொழி பேசும் குழுவினர் இன்னுந் தெற்கே பரவி வாழ்ந்துவந்துள்ளவராகக் காணப்படினும், கறியாவாகிய தம்மொழி பேசுவதை விடுத்துத் திராவிட மொழியினத்தைச் சேர்ந்த குறுக்கம் என்பதனையோ, அன்றி, வடமொழிச் சிதைவு களையோ அவர்கள் ஆங்காங்குப் பேசிப் பழகிவருகின்றார்கள். அதனால் இம்மொழி சிறிது சிறிதாக இறந்துபட்டு வருகின்றது. ஜுவாங் ஜுவாங் என்பதும் ஏறக்குறைய கறியாவைப் போன்றதே தான். ஒரிஸ்ஸா நாட்டு மலைப்பகுதிகளிலுள்ள ஒருவகைக் குறவர்களால் இம்மொழி பேசப்பட்டு வருகின்றது. அம் மக்கள் அணிந்து கொள்ளும் தழை உடை காரணமாக இது பத்வா33 என்றும் அழைக்கப்படும். சவராவும், கடபாவும் ஒரிஸ்ஸா எல்லையை யொட்டிச் சென்னை மண்டிலத்தில் சவராவும், கடபாவும் பேசப்பட்டு வருகின்றன. இவ்விரு மொழிகளும் தெலுங்குமொழியுடன் இக்காலை பெரிதுங் கலந்துவிட்டன என்று கூறல்வேண்டா. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடு இவற்றையும் ஒருவகையிற் சேர்த்துக் கொள்ளலாம். சவராமொழி பேசுவோராகிய சவரர்கள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவர்கள். பல இடங்களிற் படர்ந்து பரவியிருந்த இக் குழுவினர் வேகாலத்திலிருந்த இந்திய -ஆரியர்களுக்கு34 அறிமுகமானவர்கள். பிளைனி35, டாலிமி36 என்ற இரு மேனாட்டு வரலாற்றாசிரியர்களும் இவர்களைக் குறித்து எழுதியுள்ளார்கள். ஆனால், இக்காலை, இக்குழுவினரில் மிகவுங் குறைந்த தொகையினரே தம் மொழியாகிய சவராவைப் பேசி வருகின்றனர். முண்டாமொழியினத்திற்கே பொதுவாக வரிவடிவங் கிடையாது; இலக்கிய மென்பதுமில்லை. அடிக்குறிப்புகள் 1. முடிடயசயைn. 2. ஆரனேய டயபேரயபநள. 3. ஞசடிக. ஆயஒ ஆரடடநச 4. ஆயடயஉஉய. 5. ஹரளவசயடடிநேளயை. 6. சூiஉடியெசநளந. 7. ஆடிn-முhநஅச. 8. ஆயாயனநடி ழடைடள. 9. முhநசறயசi. 10. முரசமர. 112. முhயசயை. 12. துரயபே. 13. ளுயஎயசய. 14. ழுயனயயெ. 15. ளுயவேயடi. 16. ழயச. 17. ஆரனேயசi. 18. க்ஷhரஅதை. 19. க்ஷiசாயச. 20. முடினய. 21. ழடி 22. கூரசi 23. ஹளரசi. 24. ஹபயசயை. 25. முடிசறய. 26. ளுiபோbhரஅi. 27. டுயசமய. 28. குiபாவiபே முடிடள. 29. ளுயவேயட ஞயசபயயேள. 30. சுயnஉhi. 31. துயளாயீரச. 32. ழுயபேயீரச. 33. ஞயவரய. 34. ஐனேடி-ஹசலயளே. 35. ஞடiலே. 36. ஞவடிடநஅல. 7. வட இந்திய மொழியினங்கள் ஆரியர் வருகையால் இந்தியப் பெருநாட்டிற் பண்டு பயின்றிருந்த உள்நாட்டு மொழிகள் பல்வேறு மாறுதல்களை யடைந்தன. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து சீர்தூக்கி இனம் வகுத்த மேனாட்டறிஞர்கள் ஐம்பெரு மொழியினங்களாக அவற்றைப் பிரித்து முடிவுகட்டினர். ஆரியம், திராவிடம், முண்டா, மான்குமேர், திபேத்தோ- சீனம் என்பனவே அவை. அவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்ததாகக் கருதப்படுவது முண்டா மொழியினமே. ஈண்டு ஆரியத்தைப் பற்றிய சில குறிப்புக்கள் தரப்படுகின்றன: ஆரியம் என்பது, கன்றுகாலிகளை மேய்த்துக்கொண்டு ஊரூராய், நாடுநாடாய்த் திரிதந்து வாழ்க்கையை நடத்திவந்த ஒரு பெருங்குழுவினரின் திருந்தா மொழியாகும். அக் குழுவினர், பின்னர், வட இந்தியாவினுட் புகுந்து பரந்து தங்கியபோதுதான் அவர்களுடைய மொழியும் திருத்த முற்றுச் சீர்படுவதாயிற்று. அஸ்ஸாமின் கீழைப் பகுதி தொடங்கி பம்பாயை யடுத்த வடகன்னடம் வரை அவர்கள் மொழி பெருகியும் அருகியும் வழங்குவதாயிற்று. தாந்தாம் உறையு மிடங்களிலிருந்த பண்டைய இந்திய மக்களுடன் கலந்து உறவாடிய முறையில் அவர்கள் தங்களுடைய குழூஉச் சிறப்பியல்புகளை ஒருவவிட்டுவந்தாலும், தங்கள் மொழிப்பற்றை மட்டும் அவர்கள் கைவிட்டதில்லை. அதனால், அவ்வத் தொன்மக்களுடைய சொந்த மொழிகள் வழக்கிழந்து போக, இவ்வாரிய மக்கள்தம் மொழியே மேம்பாடுறுவதாயிற்று. திருந்திய ஓர் ஆரியமொழியுடன் பண்டைய இந்திய உள்நாட்டு மொழி யொன்று தொடர்புற்றுக் கலக்கநேரிட்ட போதெல்லாம், பின்னையதாகிய உள்நாட்டு மொழியே தன் தனிச்சிறப்பிழந்து கேடுறுகின்ற தென்பது மொழி நூலுண்மைகளுள் ஒன்றாகும். வந்தேறிகளாய ஆரியர்கள் உள்நாட்டுப் பண்டை மொழிகளைக் கற்றுப் பேச எளிதில் முன்வருவதில்லை. உள்நாட்டுத் தொன்மக்களோவெனில் இயல்பான தாராள மனப்பான்மையாலும், கொள்வினை கொடுப்பனைகளினால் நேருங் கட்டாயத்தினாலும் அரையுங் குறையுமாக வந்தேறிகளின் மொழியைப் பேசப் பழகிக் கொள்வார்கள். காலமேறவேற இந்த அரைகுறைப் பயிற்சியே திருத்தமுற்று ஏறக்குறைய முதன் மொழியோடு ஒப்பிட்டுக் கூறத்தக்க நிலையை அடைகின்றது. இந்நிலையில் பண்டைய உள்நாட்டுமொழி சிறிதுசிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு மங்கி மடிந்து மாய்ந்தொழிகிறது. நன்கு திருத்த முற்றுக் கலையுரம் பெற்றுச் செம்மொழிகளாக வழங்கும் தொன்மொழிகள் நிலவும் தென்னிந்தியப் பகுதி யொன்றில் மட்டுமே ஆரியம் வெற்றிபெற முடியாது தனித்து நின்று தயங்குவதாயிற்று. இது பண்டைய வரலாற்றுண்மையாகும். எனினும், பண்டைய இந்திய மொழி யொன்று ஆரிய மொழி வழங்கு மிடத்திற் பரவிக்கலப்புற்று அதனை வழக்கிழக்கச் செய்தது என்பது யாண்டுமில்லை. இனி, ஆரியமென்பது இந்திய ஐரோப்பிய மொழி யினத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும். அ/து இந்திய-ஆரியமென்றும், ஈரானியமென்றும் இரு பிரிவினது. ஈரானிய மொழிகள் பேசும் பகுதியினர் பாரஸீகம், பலூச்சிஸ்தானம், ஆப்கானிஸ்தானம் என்னும் நாடுகளில் தங்கி உறைவராயினர். அவ்வாறு பரந்துறைய நேர்ந்தமை காரணமாக அவர்கள் பேசிய மொழிகள் பெர்ஸிக் என்றும், மீடிக் என்றும் இரு பிரிவாகத் தொகுக்கப்பெற்றன. பெர்ஸிக் என்பது இக்காலப் பாரசீக மொழியின் பண்டைப் பெயராகும். இதுவே முஸல்மான்களின் தாய்மொழி மீடிக் என்பதோ அவெஸ்தா இனத்தாருக் குரியதாகும்; பஷ்டோ, வேளாக் என்ற இருபெரு ஈரானிய மொழிகளும் அதனுடைய கிளைமொழிகளேயாம். இனி இந்திய - ஆரியத்தை நோக்குவாம். வடமொழி நில நூற்படி இந்தியா “மத்திய தேசம்” அல்லது நடுநாடு என்றும், இதரதேசம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த “மத்திய தேசம்” என்பதே வடமொழி நூல்களில் அடிக்கடி ஆரியர்களின் இந்தியத் தாயகமாகப் போற்றப்பட்டுள்ளதாகும். இதர தேசமாகிய பிறபகுதிகளிலெல்லாம் காட்டுமிராண்டிகள் வசித்து வந்தார்களெனவே “மத்தியதேச” ஆரியர்கள் கருதிவந்தனர். இந்த “மத்திய தேசம்” என்பது வடக்கில் இமயத்தையும், தெற்கில் விந்தியத்தையும், மேற்கில் கீழைப் பஞ்சாபையும், கிழக்கில் கங்யைமுனைக்கூடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு பெரும் பகுதியாகும். இப்பகுதியினர் பேசிவந்த மொழி சௌரசேனி என்ற பண்டைப் பாகதமாகும். இச் சௌரசேனி இந்தி மொழியின் பெரும்பகுதியாகிய மேலை இந்திக்குத் தாய் மொழியாம். இந்திய- ஆரிய மொழியினத்தைச் சேர்ந்த இச்சௌரசேனியே பின்னர் “மத்திய தேசத்” திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே, மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமஸ்கிருதம் (அல்லது செம்மை செய்யப்பட்டது) என்று பெயர் பெறுவதாயிற்று. இச்செம்மைப்பாடு கி.மு. 300ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பாணினி இலக்கணத்தில் உருப்பெற்றது. எனவே, கற்றோரால் இலக்கண முறைப்படி திருத்திச் செம்மை செய்யப்பெற்ற ஆரியப் பாகதங்களே “சமஸ்கிருதம்” என்பது ஒருவாறு விளங்கும். அன்றியும், பண்டைய ஆரியமொழிகளும், பண்டைய இந்திய உள்நாட்டு மொழிகளை யொப்பத் திருந்தா மொழிகளேயாம் என்பதும் விளக்கமுறும். இதனால், திருத்தஞ் செய்யப்பெற்றுப் புத்துருக் கொண்ட “சமஸ்கிருத” மொழியினின்றும் வேறெம் மொழியுங் கிளைத்திருக்க முடியாதென்பது தெளிவு; குறிப்பிட்ட ஒரு மொழியும் வடமொழியாகிய “சமஸ்கிருத”மும் ஒரே பண்டைய மொழியிலிருந்து பிறந்து பிரிந்தவை என்று வேண்டுமானால் வலிந்து கூறிக் கொள்ளலாம். “மத்திய தேச”த்திற்கு மேற்கிலும் தென்மேற்கிலும் வந்துறைந்த ஆரியர்கள் பேசிவந்த மொழிகள் காஷ்மீரி,1 கோஹிஸ்தானி2, ல/ண்டா3, சிந்தீ4 என்பனவாம். இவ்விரு திறத்தாருக்குமிடையே வசித்துவந்த மக்கள் இம்மொழிச் சொற்களைத் தத்தம் சொந்த மொழிகளுடன் கலந்து பேசி வந்தனர்; அதனால், அம்மொழிகள் பின்னர்த் தனியுருவேற்றுத் தனிப் பெயர் பெறுவவாயின. இராஜஸ்தானி5, பஹாரி6, குஜராத்தி7, பஞ்சாபி8 என்பன அம்மொழிகளாம். இனி, தொகை மிகுதியாலும், மண்ணசையாலும் “மத்திய தேச”த்திலும், அதன் மேலைத் திசையிலுமிருந்த ஆரிய மக்கள் கிழக்கிலும், தென்கிழக்கிலும் நாளாவட்டத்தில் பரவி அங்குள்ள மக்களுடன் உறைவாராயினர். அதனால் ஆங்காங்கிருந்த மொழிகள் ஆரியமொழிக் கலப்புற்றுத் தத்தம் தனிச் சிறப்பைச் சிறிதுசிறிதாக இழக்கலாயின; மேற் கூறியாங்கு ஆரிய மொழித் தாக்கை நேரே எதிர்த்துநின்ற தம் தலைமை இழவாமலிருந்த மொழிகள் தென்னிந்தியத் திராவிட மொழிகளேயாம். அதிலும் இன்றளவும் புறங்கொடுக்காது உயர்தனிச் செம்மொழியென்று மொழியாராய்ச்சி வல்லுநராற் புகழ்ந்து போற்றப்பெறும் பெருமையுடன் திகழ்வது முன்னைப் பழைய மொழிகட்கும் முன்னைப் பழைய மொழியாகிய சீர்சால் தமிழ்மொழி யொன்றே! இந்திய ஆரிய மொழியினத்திற்குரிய புள்ளி விவரங்கள் பின்வருவனவாம்: பேசுபவர் தொகை (1901 ஆம் ஆண்டு) ஐ “மத்தியதேச” மொழி மேலை இந்தி 40,714,925 ஐஐ. இடைப்பட்ட மொழிகள் (i) “மத்திய தேச” மொழித் தொடர்புடையன: இராஜஸ்தானி 10,917,712 பஹாரி மொழிகள் 3,124,681 குஜராத்தி 9,439,925 பஞ்சாபி 17,070,961 (ii) மத்தியதேச மொழித்தொடர்பு அருகியன: கீழை இந்தி 22,136,358 ஐஐஐ. “பிறதேச” மொழிகள் (i) வடமேற்குத் தொகுதி காஷ்மீரி 1,007957 கோஹிஸ்தானி 36 லஃண்டா 3,337,917 சிந்தீ 3,494,971 (ii) தென் தொகுதி: மராத்தி 18,237,899 (iii) கீழைத் தொகுதி: பிஹாரி 34,579,844 உறியா 9,687,429 வங்காளி 44,624,048 அஸ்ஸாமீஸ் 1,350,846 மொத்தம் 219,725,509 அடிக்குறிப்புகள் 1. முயளாஅசைi 2. முடிhளைவயni 3. டுயானேய 4. ளுiனோi 5. சுயதயளவயni 6. கூhந ஞயாயசi 7. ழுரதயசயவi. 8. ஞயதேயbi திராவிட மொழிகளில் உள்ள இலக்கியங்களின் காலக்கணிப்பு சுநுடுஹகூஐஏநு ஹசூகூஐணுருஐகூலு டீகு னுசுஹஏஐனுஐஹசூ டுஐகூநுசுஹகூருசுநு திராவிட நாகரிகம் மிகத்தொன்மை வாய்ந்ததுதான் என்ற போதிலும், திராவிடமொழிகளில் இன்றுள்ள இலக்கியங்களில் மிகப் பழையவற்றின் காலம் கூட சமஸ்கிருத இலக்கியம் தோன்றிய காலத்தைவிட மிகப்பிந்தியதுதான். பின்வரும் இரண்டு தொகுதி மொழிகளின் இலக்கியங்களை விடத் திராவிட மொழி இலக்கியங்கள் பழமை வாய்ந்தவை: (க) இன்று வழங்கும் இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளின் இலக்கியங்கள் அனைத்துக்கும் முற்பட்டவை எனத் திராவிடமொழிகளில் இன்றும் வழக்கில் உள்ள இலக்கியங்கள் சிலவற்றை நாம் கொள்ள வேண்டியுள்ளது. (உ) ஐரோப்பாவில் இன்று வழங்கும் இத்தாலியன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் முதலிய மொழிகளில் உள்ள இலக்கியங்களையும் விடத் தொன்மை வாய்ந்தவைதாம் இன்றுள்ள திராவிடமொழி இலக்கியங்களுள் சில என்பதும் உண்மை. அத்தகைய நூல்களை யாரும் தொன்மைமொழி இலக்கியம் என்று அழைப்பதில்லை. ஆகவே அதுபோல திராவிடமொழிகள் எதிலும் இன்றுள்ள இலக்கியம் எதையும் தொன்மை யவேiளூரவைல வாய்ந்தது எனக்கூறுவது பொருந்தாது. தெலுங்கு இலக்கியத்தின் காலம் 2. தெலுங்கு மொழிக்கு முதலில் இலக்கணம் எழுதியவர் ஆந்திர குல அரசர்கள் அவையில் இருந்த கண்வமுனிவர் என்பவர். எந்த ஆந்திர அரசன் காலத்தில் தெலுங்கு பேசுபவர் பகுதியில் சமஸ்கிருதம் முதலில் புகுத்தப்பட்டதோ அந்த அரசன் அவையில் இருந்த முனிவர் கண்வர் என்று பொதுவாகக் கருதப் படுகிறது. அதுவரை வடஇந்தியாவில் இருந்த திராவிடமொழி பேசிவந்த மக்களிடையே ஆரியர் தம் நாகரிகத்தைப் பரப்பத் தொடங்கிய காலத்தைப் பற்றிய யீசடியெடெந னயவந டிக ஹசலயn உiஎடைணையவiடிn டிக வாந னுசயஎனையைளே என்ற முந்தைய பகுதியைக் காண்க. இப்படிக் கருதிட வரலாறு இடம் தருகிறது:- பிராமணர்கள் தென்னாட்டில் பரவிக் குடியேறத் தொடங்கிய காலத்தில்தான் சமஸ்கிருதக் கூறுகளைத் தெலுங்கில் புகுத்தியிருக்க இயலும். தெலுங்கு மன்னன் அவையில் இருந்த பிராமணர் ஒருவர் தெலுங்கு இலக்கணம் வகுத்தார் எனக்கருதுவது நியாயம்தான். கண்வர் தெலுங்குக்கு இலக்கணம் எழுதினாரோ இல்லையோ, இன்று அது கிடைக்கவில்லை. இன்றுள்ள தெலுங்கு இலக்கணங்களில் மிகத்தொன்மை வாய்ந்தது நன்னய பட்டன் (நன்னப்பா) சமஸ்கிருத மொழியில் தெலுங்குக்கு எழுதிய இலக்கணம்தான. நன்னயர்தான் தெலுங்கில் இன்றுள்ள மிகப்பழைய நூல் ஆகிய தெலுங்கு மகாபாரதம் இயற்றியவர்; சாளுக்கிய அரசு பரம்பரையின் ஒரு கிளையினர் ஆன கலிங்க அரசர் பரம்பரையில் வந்து, இராஜமகேந்திரத்தில் ஆண்டு வந்த விஷ்ணுவர்த்தனன் காலத்தில் கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஸவிஷ்ணுவர்த்தனன் கி.பி முதல் நூற்றாண்டு சார்ந்தவன் என்று ஏ.டி.காம்ப்பெல் கூறுவதற்கு ஆதாரம் இல்லை. மாறாக சி.பி.பிரௌன் தமது ஆந்திர அரசபரம்பரையினர் பட்டியல்களில் தகுந்த ஆதரங்களுடன் நிறுவியுள்ளது போல நன்னயர்காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டுத் தொடக்கமாகத்தான் இருக்க வேண்டும். நன்னயரை அடுத்துவந்த தெலுங்கு இலக்கண அப்பாகவி தமது தெலுங்கு இலக்கண விரிவுரைகளை சமஸ்கிருதத்தில் எழுதாமல் தெலுங்குச் செய்யுளில் எழுதினார்.] 3. கி.பி.12ஆம் நூற்றாண்டு இறுதியில் எழுதிய ஒரு சில நூல்களைத் தவிர இன்றுள்ள பழைய தெலுங்கு இலக்கியங் களில் பெரும்பகுதி விஜயநகரப் பேரரசு உருவான 14ஆம் நூற்றாண்டிலும், பின்னரும் எழுதியவையாகவே தோன்றுகின்றன. சில மிக அண்மை நூற்றாண்டுகளில் எழுதியவை. இன்றுள்ள தெலுங்கு இலக்கியங்கள் எவையும் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை அல்ல எனினும் அம்மொழி 12ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நெடுங்காலம் வழங்கி, பயன்படுத்தி, நயமான இலக்கியங்களும் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதி. நன்னயரின் தெலுங்கு மகாபாரதம் சிறந்த தெலுங்குச் செய்யுளுக்கு லட்சிய முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. (வாந பசநயவ ளவயனேயசன டிக கூநடரபர யீடிநவசல) அதற்கு முன்னரே பல நூற்றாண்டுகள் தெலுங்கு மொழியில் நூல்கள் பல எழுதிய இலக்கிய பாரம்பரியம் இல்லாமல் நன்னயர் காவியம் திடுமென வெடித்து உருவாகியிருக்க இயலாது; முந்தைய புலவர்களின் இலக்கிய முயற்சிகளின் அடிப்படையில்தான் நன்னயர் தனது நயமான காவியத்தை உருவாகியிருக்க இயலும். 4. (வேமனர் எழுதியாகப் பலரும் கூறும்) சமயம், ஒழுக்கம் இவை சார்ந்த ஏராளமான (2000க்கு மேற்பட்ட) சொலவங்கள் ஹயீhடிசளைஅளஅள தெலுங்கு பேசுபவர்களிடையே வழங்குகின்றன— அனைத்தும் வேமனர் இயற்றியதாக! அவற்றுள் 700-ஐ மட்டும் சி.பி.பிரௌன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட் டுள்ளார். வேமனர் காலம் கி.பி.16ம் நூற்றாண்டு என்பவர் பிரௌன். ஆனால் அச்சொலவங்கள் தமிழ் ‘சித்தர்’ (தமிழ் இலக்கியப் பகுதியில் பார்க்க) பாடல்களைப் போல ஒரே இறைவன், பிராமண எதிர்ப்பு / சடங்கு - ஆசார எதிர்ப்பு இவற்றை வலியுறுத்துபவையாக இருப்பதாலும், கிறித்துவ மதப் பிரசாரத்தின் தாக்கத்தினால் இது நடந்திருக்கலாம் என்பதாலும் வேமனர் காலம் 1600க்கும் மிகப் பிந்தியது. 17ம் நூற்றாண்டு அல்லது 18ம் நூற்றாண்டின் தொடக்கம் (1701-1730) ஆக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். வேமனர் பாடல்கள் இன்றைய நாடோடிப் பாடல்களின் நடையில்தான் உள்ளன. (பார்க்க ழுடிஎநச குடிடம - ளுடிபேள டிக ளுடிரவாநசn ஐனேயை) ஆனால் வேமனர் காலத்தை கோவர் 1700க்கும் முன்னர்க் கொண்டு செல்கிறார். கன்னட இலக்கியத்தின் காலம் அண்மையில் கன்னடத்தின் மிகப்பழைய, மிகச்சிறந்த இலக்கணமான கேசவ / கேசிராஜா எழுதிய சப்தமணி தர்ப்பணம் இலக்கணத்தை முவைவநட பதிப்பித்துள்ளார். அவ்விலக்கணத்தை எழுதியவர், அவருடைய காலம் இவைபற்றி இக்கால மொழியியல் வல்ல ஆராய்ச்சியாளர்கள் போல நுணுக்கமாக ஆராய்ந்து பின்வரும் முடிவுக்கு வந்துள்ளனர். கேசவர் ஒரு சமணர் (ஜைனர்) சமணர்கள் தாம் முதன்முதலில் ஊக்கத்துடன் உழைத்து கன்னடமொழியில் நல்ல இலக்கியங்களை உருவாக்கினர். கித்தல் குறிப்பிடுபவர்களில் பெரும்பாலோர் சமணர். ‘வடஇந்தியாவில் சிறந்த சமண இலக்கியம் உருவானது கி.பி.4ம் நூற்றாண்டிலிருந்துதான் என்பது உண்மையானால், நெடுந்தொலைவில் தென்னாட்டில் உள்ள கன்டைப்பகுதிக்கு இத்தகைய சமண ஆர்வம் பரவி மக்களிடையே வழங்கிய கன்னடத்தில், சமண இலக்கியம் உருவாக மேலும் சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். தமக்கு முந்தைய கன்னடப் புலவர்கள் 11 நபர்கள் பெயர்களைச் சுட்டுவதுடன் ஏனையோரும் பலர் இருந்ததை குறிப்பிடு முகத்தான் ‘தொல்லாசிரியர் யnஉநைவேள என்று இவர்கள் அனைவரையும் அழைக்கிறார். கேசவர் தாம் எழுதும் மொழியைக் ‘கன்னடம் என்றே சுட்டுகிறார். ஆனால் அவர் எழுதிய நடையே இன்று (1850)-ல் பழங்கன்னடம் எனப்படுகிறது! கேசவர் காலத்திலேயே இன்றும் தமிழிலும் மலையாளத்திலும் வழங்கும் எடிஉயடiஉ ச (ழ) கன்னட மக்கள் வழக்கில் கைவிடப்பட்டிருக்க வேண்டும்; எனவே தான் அவ்வெழுத்தை வழங்குவது எப்படி என்ற விதியைச் சேர்த்துள்ளார். ஆனால் hயசன ச (ற) இன்றும் தமிழ், மலையாளத்தில் பெருமளவு வழங்குவது, (தெலுங்கில் ஓரளவுக்கு வழங்குவது) பற்றிய ஒலிப்புவிதியைக் கன்னடம் சார்ந்து அவர் தரவில்லை— காரணம் கேசவர் காலத்துக்குப் பின்னர்தான் அது வழக்கிழந்தது. இந்த இரண்டு ஒலியன்களுமே இன்றும் நீலகிரி மலையில் வாழ்பவர்களும் / கன்னடர்களிடம் இருந்து / சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்ப் பிரிந்தவர்களும் ஆன படகர் பேசும் பழங்கன்னடப் (பேச்சுமொழி)யில் உள்ளன. இவற்றால் கேசவர் காலம் கண்டிப்பாக கி.பி.1000 த்தைத் தாண்டியிருக்க வேண்டும். பிற்காலச் சாளுக்கிய அரசபரம்பரை கல்யாண நகரில் கி.பி.800-1189 வரை இருந்தது. அப்பரம்பரை சார்ந்த (போரில் வல்ல) தைலபன ஐஐ கி.பி.973-ல் அப்பரம்பரையின் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவினான். கேசவர் கூறும் கன்னடப்புலவர் ஒருவர் ‘தைலபனின் சுட்டெரிக்கும் வாளைப்’ புகழ்கிறார். ஆனால் கி.பி.1369-இல் எழுதிய பார்கவ புராணத்தை கேசவர் சுட்டாததால் அவர் அதற்கு முற்பட்டவர் எனலாம். கி.பி.1637இல் எழுதிய வேறொரு கன்னடப்புலவர் கேசவரைச் சுட்டுகிறார். ஸஹரிவம்சம் கேசவர் காலத்துக்கு முன்னரே கன்னடத்தில் பெயர்க்கப்பட்டுவிட்டது. மகாபாரத, இராமாயண காவியங்கள் பற்றியும் அவற்றில் வருபவர்கள் பற்றியும் கேசவருக்கு முன்னரே கன்னடப் புலவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் அவ்விரு காவியங்களும் கேசவர் காலத்துக்கு முன்னர் கன்னடத்தில் பெயர்க்கப்படவில்லை) இச்சூழலில் குறிப்பாக தைலபன் ஐஐ பற்றிய செய்தியின் அடிப்படையில் - கேசவர் ஏறத்தாழ கி.பி.1170இல் வாழ்ந்திருக்கலாம் என்பர் கிட்டல், அக்கால கட்டமே (பின்னர் நாம் காணவிருப்பதுபோல) தமிழ்நாட்டிலும் சிறந்த இலக்கியங்கள் பல தோன்றின. கேசவர் எழுதிய காலத்திலேயே ‘நம் காலத்தில் ஸகிட்டல்] இன்று கன்னட மக்கள் பேசும் மொழியில் நாம் காணும் அளவுக்கு சமஸ்கிருதச் சொற்கள் தத்சமம் ஆகவோ தத்பவம் ஆகவோ — ஏனைய தொல் கன்னடமொழிச் சொற்களைப் போலவே— சேர்க்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கன்னடத்தில் நாம் காணும் மொழியியல் நுட்பங்களையெல்லாம் நமக்கு விளக்கிக் காட்டும் மூல ஆதாரம் கேசவர் சப்த மணிதர்ப்பணம் மட்டுமே, காரணம் அம்மொழியின் அடிப்படைக் கூறுகள் எல்லாம் அந்த இலக்கணப்படியே அமைந்துள்ளன. ஸஐனேயைn ஹவேiளூரயசல இந்தியன் ஆன்டிகுவாரி 1875 சனவரி இதழில் கன்னட இலக்கியங்கள் அனைத்தையும் பற்றி (சமண, லிங்காயத், சைவ, வைணவ நான்கு சமயங்கள் சார்ந்தவை) கட்டுரை எழுதியுள்ளார்]. மலையாள இலக்கியத்தின் காலம் மலையாளமொழி மொழியியல் நோக்கில் நமக்குப் பல உண்மைகளைத் தெரிவிக்கும் தன்மை வாய்ந்தது. அம்மொழி சார்ந்து மட்டுமல்ல, மலையாளம் தமிழிலிருந்து பிரிந்து தனிமொழியாகிவிட்ட காலகட்டத்தில் தமிழ்மொழியின் மொழியியல், இலக்கணம் இருந்த நிலைமைகளை அறிய மலையாளம் உதவுகிறது. இலக்கிய வளம் உடைய திராவிட மொழிகளில் காலத்தொன்மை மிகக்குறைந்தது மலையாளம். மலையாளத்தில் மிகச்சிறந்த வல்லுநர் டாக்டர் குந்தர்த் ழுரனேநசவ தாம் உருவாக்கிய மலையாள அகரமுதலியின் முன்னுரையில் மலையாள இலக்கியம் பற்றிக் கூறுவதன் சாரம் வருமாறு: செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் காணும் சில பொறிப்பு களில் பழைய மலையாள வாசகங்களைக் காணலாம். அவற்றைத் தவிர மலையாள இலக்கியம் என்று பார்த்தால் இன்றுள்ள மலையாள இலக்கியங்களில் மிகத்தொன்மை வாய்ந்தது எழுத்தச்சன் ராமசரிதம் தான். இன்றுள்ள (சமஸ்கிருத ஒலிகளை முழுமையாகச் சேர்த்துள்ள மலையாள வரிவடிவம் ஆயடயலயடயஅ ளஉசiயீவ உருவாகுமுன்னர் எழுதியது அக்காவியம். ஸபோர்ச்சுகீசியர் கி.பி.1498-இல் வருவதற்கும் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த] தொடக்க கால மலையாள மொழியியலாய்வுக்கு அது முக்கியமானது ஆகும். இன்று வழக்கில் இல்லாத பல மலையாளச் சொற்கள் அந்நூலில் மட்டுமே உள்ளன. மலையாளத்தில் இன்றுள்ள மகாபாரதம், இராமாயணம், பல புராணங்கள் இவையெல்லாம் கடந்த இரண்டு-மூன்று நூற்றாண்டுகளில் எழுதியவை. பிற்கால மலையாள நூல்கள் பலவற்றில், குறிப்பாக வேதாந்திகள் கடைப்பிடிக்கும் நடையில் எழுதிய நூல்களில் தமிழ்நாட்டு வேதாந்திகள் பயன்படுத்திய சொற்களையும் நாம் ஏராளமாகக் காணலாம். தமிழ் இலக்கியத்தின் காலம் 1. தெலுங்கு, கன்னட இலக்கியங்களைவிடத் தொன்மை வாய்ந்தது தமிழ் இலக்கியம்; மலையாள இலக்கியங்களைவிட மிகுதொன்மை வாய்ந்தது அது. தமிழ்ப்புலவர்களும் பிறரும் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றின் கழி தொன்மை பற்றிக் கூறுவது அப்படியே ஏற்கத்தக்கதல்ல! 2. தெலுங்கு இலக்கியத்தில் கண்வருக்கு தரப்படும் இடத்தைவிட மிக முக்கியமான இடம் தமிழ் இலக்கியத்தில் அகத்திய முனிவருக்குத் தரப்படுகிறது. பின்வருவனவற்றுக் கெல்லாம் அகத்தியரே மூலம் எனக் கூறப்பட்டு வருகிறது. 1. தமிழ் எழுத்துக்கள் யடயீhயநெவ உருவாக்கம் 2. தமிழுக்கு முதல் இலக்கணம் (அம்மொழியின் மொழியியல் சார் இலக்கணக் கூறுகள் அனைத்தையும் உருவாக்கியமை உட்பட) 3. மருத்துவம், வேதியியல் (ஊhநஅளைவசல டிச ஹடஉhநஅல) மந்திரவாதம், கட்டடவியல், வானியல், சட்டம் போன்றவற்றுக் கெல்லாம் முதல் நூல்களை இயற்றியமை ஸஇத்துறைகள் சார்ந்தவையும் மிகமிகப் பிற்காலத்தில் எழுதியவையாகத் தெளிவாகத் தெரிவனவும் ஆன 50க்கும் மேற்பட்ட நூல்களும், அகத்தியர் எழுதிய தமிழ் இலக்கணத்தின் பகுதிகள் எனச் சிலவும் உலவுகின்றன. இலக்கணப்புலமையும் இலக்கணநூல் பயிற்சியும் வாய்ந்த புலமைமிக்க நற்றமிழறிஞர் இவை அகத்தியர் எழுதியவையே அல்ல: போலிகள் என ஒதுக்கிவிடுகின்றனர் ] 3 (i) அகத்தியர் என ஒருவர் உண்மையில் இருந்தாரா என்பது இன்றுவரை முடிவு பெறாத விவாதமாகும்! ஒரு காலகட்டத்திலோ, அல்லது ஒரு குழுவினரோ உருவாக்கிய ‘அனைத்துக்கும் மூலமாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்ட கற்பனை வடிவமே ஆலவாடிடடிபiஉயட சநயீசநளநவேயவiஎந”தான் அகத்தியர் என்ற கருத்தும் உள்ளது. (ii) கழிபழங்காலத்தில் அகத்தியர் இயற்றியவை எனப் போலியாகக் கூறப்படும் நூல்களில் எவையும் அகத்தியர் எழுதியவையே அல்ல என்பது உறுதி. அவற்றுள் ஒன்றுகூட கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதன்று. (iii) தமிழ் சித்த மருத்துவ நூல்கள் என வழங்குபவை ஒரே தெய்வக் கொள்கை, சும்மா இருக்கும் மோனநிலை, இரசவாதம், கிறித்தவக் கோட்பாடுகள் இவற்றின் கதம்பம் தான். இந்தியா விற்குள் சில ஐரோப்பியர்; நுழைந்த (கி.பி.1498) காலத்துக்குப் பின்னர்தான் இவையனைத்தையும் உருவாக்கியிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பாமரமக்களுக்குச் சொல்லி நம்பவைப்பதற் காகப் பல நூற்றாண்டுகளாகவே இப்போலி நூல்களைப் பல்வேறு இடங்களிலும் பல்வேறு நபர்கள்; படைத்திருக்க வேண்டும். அகத்தியர் எழுதியதாகக் கூறும் ஞான நூறு ஊநவேரஅ டிக றளைனடிஅ நூலில் அகத்தியர் எழுதியதாகப் பின்வரும் செய்யுள் வருகிறது:- (கிறித்துவ மதத்தை எங்கும் குறிப்பிடவில்லை யெனினும் கிறித்தவக் கோட்பாடுகள் பலவும் அகத்தியர்மேல் ஏற்றப்பட்டுள்ளன. இத்தகைய நூல்கள் அனைத்துமே இப்படிப் பட்டவைதாம்.) தமிழ்ப்புலவர்களும் இப்பாடலைச் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் அகத்தியர் எழுதியதாக நம்புகின்றனர்! பொதுவாக இந்தியர்கள் சிந்தனையானது நுண்மாணுழை புலமற்று, இப்படித்தான் எதையும் நம்புவதாக (ரnஉசவைiஉயட) இருக்கிறது! இந்துமதம் சார்ந்தவர்கள் இந்துமதச் சார்பாக இப்பாடலை விளக்குகின்றனர். கிறித்துவ இந்தியர்கள் ‘கிறித்துவச் சார்பாக தீர்க்கதரிசனம் இது என்கின்றனர்! இப்பாடலில் பொருள் புரியாத பழஞ்சொல் ஒன்று கூட இல்லை. இன்றையத் தமிழில் பேச்சுவழக்கில் ளடிடநஉளைஅ நிறைந்து எழுதியுள்ள இப்பாடல் பழம் பாடலாக இருக்க இயலாது என்ற சாதாரண அறிவுகூடத் தமிழ் இந்து / கிறித்துவர்களிடம் இல்லை. 4(i) அகத்தியரை அடுத்துட் தொல்காப்பியத்தை ஸதொல்-யnஉநைவே, காவ்ய (சமஸ்கிருதம்) - செய்யுள்] அதாவது பழைய நூலை எழுதியதாகவும் அகத்தியர் சீடராக இருந்து, பின்னர் அவரோடு பிணங்கித் தன் வழியே சென்று இலக்கணம் எழுதியவருமான தொல்காப்பியர் வருகிறார். இன்றுள்ள மிகுதொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணம் தொல்காப்பியம் மட்டுமே என்பதை அனைவரும் ஏற்கின்றனர். அம்முடிவுக்கு உறுதியான ஆதாரம் இல்லை. (சிற்சில நூற்பகுதிகளை தொல்காப்பியத்துக்கு முந்தியவை எனச்சிலர் கூறுகின்றனர். அது பற்றிக் கீழே பார்ப்போம்.] (ii) தொல்காப்பியம் எழுதியவர் சைவர் எனத்தோன்றி னாலும் அவர் சைவ சமயமானது வேதாந்த சைவமும் அன்று; சைவ சித்தாந்தமும் அன்று. தொல்காப்பியத்தில் கணிசமான பகுதி கிடைக்கவில்லை எனக் கருதுகின்றனர். கிடைத்துள்ள இயல்களில் காணும் பல இலக்கணக் கூறுகள் மிகப்பழையவை யசஉhயiஉ என்று சிலர் கருதுவதற்கு ஆதாரம் இல்லை எனக் கருதுகிறேன். அகத்தியர் இலக்கண நூலின் சாரத்தை தன் நூலில் தருகிறார் என்கின்றனர்! ஸயார் யாரோ அண்மை நூற்றாண்டு களில் எழுதியதையெல்லாம் ‘அகத்தியர் படைப்பு என்று இன்று பலரும் பெயர் சூட்டுவது போல் இது உள்ளது] தமிழ் இலக்கியத்தின் மிகு தொன்மைக்கால நூல்களின் எச்சங்களோ என்று உன்னிக்கக் கூடியவை தொல்காப்பியம் போன்றவற்றில் (வெளிப்படையாகக் கூறாவிட்டாலும்) சேர்ந்துள்ள முந்தைய இலக்கண/இலக்கியங்களின் பகுதிகளிலும், இலக்கண/இலக்கியப் பழைய உரைகளிலும் இனம் காண இடமுண்டு. இன்றுள்ள அனைத்துச் செய்யுள் வடிவங்களுக்கும் முந்தைய வடிவங்களும் அவற்றில் இருக்கலாம். தொல்காப்பியத்தின் காலத்தை எதுவாக நிறுவினும், அந்நூலுக்கு முன்னர் பல நூற்றாண்டுகள் தமிழ் இலக்கியம் நிலவி வளர்ந்திருக்க வேண்டும் அரளவ hயஎந நெநn யீசநஉநனநன லெ அயலே உநவேரசநைள டிக டவைநசயசல உரடவரசந. தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சிறந்த பழஞ்செய்யுள் படைப்புகளின் அமைப்பைக் கண்டுதான் பல்வேறு செய்யுள் வடிவங்கள், உள்ளடக்கம் போன்றவற்றுக்கு தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது எனலாம் செய்யுள் நூல்கள் மட்டுமன்றி முந்தைய இலக்கண நூல்களும் இருந்ததை தொல்காப்பியத்திலிருந்து அறியலாம்—ஸ‘என்மனார் புலவர் வாந யீடிநவள i.ந. பசயஅஅயசயைளே ளயல”] என்பர்தான் பிந்தைய வடிவம் என்பர் சிலர்; ஆனால் நான் (கால்டுவெல்) ‘என்பர்’தான் முந்தைய வடிவம், பொருத்தமான வடிவமும் கூட எனக் கருதுகிறேன்.] ஆக தமிழ் இலக்கியத்தின் காலத்தைப்பற்றி ஆழமாக ஆய்வு செய்யச்செய்ய அதன் தொன்மை கூடிக் கொண்டே வருவதை உணரலாம். (iii) தொல்காப்பியருக்குப் பிந்தையதாகக் கருதப்படும் நூல்களை எடுத்துக் கொண்டால் திருக்குறள், சீவகசிந்தாமணி இவற்றின் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் நயம் உச்சநிலை அடைந்தது சநயஉhநன வாந ளரஅஅவை டிக வைள யீநசகநஉவiடிn எனக் கருதப் படுகிறது. ஆனால் ‘அவ்விரண்டில் ஒவ்வொன்றும் உருவான காலத்தை திட்டவட்டமாக நிறுவ உறுதியான ஆதாரம்’ ஒன்று கூட இல்லை. தோற்றக்காலம் பற்றிய மனம் போவம் வாக்கில் செய்யும் உன்னிப்புகள் ஒன்றுக்கொன்று சிலநூறு நூற்றாண்டுகள் வேறுபடுகின்றன. தமிழ்ப்புலவர்களின் காலங்களை ஸஇந்தியாவின் பிறமொழிப்புலவர்களை காலங்களைப் போல] அவரவர் நூல்களின் உள்ளடக்கம், செய்யுள் வடிவம் இவற்றின் அடிப் படையில் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பலருடைய இயற் பெயர்களே தெரியவில்லை. ‘ஒவ்வொரு புலவரும் தனித்துவம் வாய்ந்த படைப்பாளி, தனித்தனிச் சிறப்புத்தன்மையுடையவர்கள் என்ற கருத்தோட்டமே தேவையில்லை எனக்கருதி தமிழகத்தின் செவ்வியல் இலக்கியக் கருவு+லத்தில் படைப்புக்குரிய பொதுத் தன்மைகள் ருniஎநசளயட ளுயீசைவை இருந்து அதன் காரணமாக ஒரு புலவரின் படைப்பு தமிழ்ச் செவ்விலக்கியமாக அமைந்து விட்டால் அதுவே அவருடைய பெருஞ்சிறப்பு (அது போதும்)’ என்ற எண்ணவோட்டம்தான் இருந்தது. நூற்றாண்டுகள் பல கழிந்தாலும் இதே நிலை தான். ஒரு இலக்கியப் படைப்பு சிறந்ததாக இருந்தால் அதைட் தமிழ்ப்புலவர் எழுதினாலும் சரி, தெய்வமே(!) எழுதினாலும் சரி, அல்லது (வேதங்கள் போல) தாமாகவோ தம்மை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் சரி!, கவலை யில்லை; பிற்றைப் புலவர்களுக்கும் அந்நூல்களைப் பயின்ற வர்களுக்கும், காலவரையறை நிறுவும் உணர்வு யவேiளூரயசயைn ளயீசைவை; இலக்கிய மதிப்பீடு, ஸஉயர்வு/தாழ்வு, நேர்மை / ஒரு சார்புநிலை போன்றவை] சார்ந்த திறனாய்வு உணர்வு ஊசவைiஉயட ளுயீசைவை இவையெல்லாம் முன்னர் இருந்ததில்லை, அண்மைக் காலத்தில்தான் மெதுமெதுவாக உருவாகி வருகின்றன. எனவே, அடுத்து, தலைசிறந்த தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சற்று விளக்க விருப்பதைப் படிக்கும் அன்பர்கள் எனது கருத்து அவற்றைப் பொறுத்தவரை, காலம், இயற்றியவர் என்பதெல்லாம் பெருமளவு தோராயம் தான்! அந்நூல்கள் இதுவரை நிலவி வந்து நம் கைக்கும் கிட்டியுள்ளன என்பதே! 5. இன்றுள்ள தமிழ் இலக்கியங்களில் முதன்மையான வற்றை (ஐ) சமணர் காலம், (ஐஐ) தமிழ் இராமாயணம் காலம், (ஐஐஐ) சைவ மறுமலர்ச்சிக் காலம், (ஐஏ) வைணவக் காலம் (ஏ) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலம், (ஏஐ) பிராமணிய எதிர்ப்புக்காலம், (ஏஐஐ) நவீனகாலம் (கி.பி.18,19ம் நூற்றாண்டு) என்றவாறு தோராயமாகக் காலவரையறைப்படுத்தி பின்வரும் பகுதிகளில் காண்போம். 1. சமணர் காலம் 6. இக்காலம் சார்ந்த தலைசிறந்த இரண்டு நூல்களாகிய திருக்குறள் நாலடியார் இரண்டும் மதுரைத் தமிழ்ச்சங்கம் (ளுயபேயஅ டிச உடிடடநபந) ஏற்றவை என்ற நம்பிக்கை நிலவுவதால், இக்காலத்தை மதுரைத் தமிழ்ச்சங்க காலம் என நான் கூறியிருக்கலாம்;. கூறாததற்கு காரணம் (i) இச்சங்கம் பற்றி வழங்கும் புராணக் கற்பனைகளும் (ii) திருக்குறள், நாலடியாருடன் ஒப்பிடுவதற்கு அறவே தகுதியற்ற மட்டமான (உடிஅஅடிnயீடயஉந) பல நூல்களையும் அச்சங்கம் ஏற்றதாகக் கூறி வருவதும்தான். முன்னர் இருந்திருக்கக் கூடிய உண்மையான சங்கம் போன்ற சிறந்த அமைப்பின் பெயரைப் போலியாக கற்பனையில் உருவாக்கிய இச்சங்கத்துக்கு (வாந ளாயனடிற டிக ய பசநயவ யேஅந) இட்டுள்ளமையால்தான் நான் ‘சங்க இலக்கியம்’ எனச் சுட்டாமல் சமணர் கால இலக்கியம் எனப் பெயரிட்டுள்ளேன். 7(i) தமிழ் இலக்கணங்களிலும் உரைநூல்களிலும் வரும் எடுத்துக்காட்டுச் செய்யுள்களில் சில பழையனவாக இருக்கலாம்; ஆனால் உறுதியாகக் கூற இயலாது. எனவே அவைகளைக் கண்டு கொள்ளவில்லை. சமணர் எழுதியவை/‘அவர்கள் எழுதியனவாக’ நமக்கு வந்துள்ளவை சமணர் தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் முனைந்து செயல்பட்ட காலத்தில் உருவாகியவை, இவை மூன்று வகை நூல்களையும் நான் சமணர் கால நூல்கள் என்று அழைக்கிறேன். (ii) பாண்டிய நாட்டில் அன்று வாழ்ந்த சமணர்கள் தமிழ்/தமிழிய உணர்வும் வலுவான பிராமணிய எதிர்ப்பு உணர்வும் கொண்டிருந்தனர் (ய யேவiடியேட யனே யவேi- க்ஷசயாஅயniஉயட கநநடiபே டிக யீநஉரடயைச ளவசநபேவா). அச்சமணட் தமிழறிஞர்களிடம் இருந்துதான் தமிழக மக்கள் சிறந்த நாகரிகத்தைப் பெற்றனர். அத்துடன் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழரின் பிற துறைகள் இவை பெருமளவுக்கு சமஸ்கிருதமொழி /இலக்கியத்தின் தாக்கம் இன்றி ஓங்கி வளர்ந்தன. (கூயஅடை ளை iனேநவெநன (வடி துயiளே) கடிச வைள hiபா உரடவரசந யனே வைள உடிஅயீயசயவiஎந iனேநயீநனேநnஉந டிக ளுயளேமசவை) 7(i) மேற்கண்ட வாசகத்துக்கு அடிக்குறிப்பாக கால்டுவெல் தருவது வருமாறு:- ஸதிராவிடர்மொழி / நாகரிகம் இவற்றின் மீதான ஆரியமொழி நாகரிகத்தின் தாக்கம் நேர்ந்த காலம் பற்றிய முந்தைய 4 பக்கப் பகுதியில்] நான் ஏற்கெனவே சுட்டிய பர்னெல் இந்தியன் ஆன்டிகுவாரி 1872 அக்டோபர் கட்டுரையில் சொல்வது வருமாறு: ‘இதுவரைத் தெரிந்தவற்றின்படி, தென் இந்திய மக்களின் தொடக்க கால நாகரிகங்கள் யாவும் சமணருடன் தொடர்புடையவை. கி.பி.639-40இல் தெலுங்கர், தமிழர் நாடுகளுக்கு வந்து பார்த்த யுவான் சுவாங் அந்நாடுகளில் வாழ்ந்தவர் நிர்கிரந்தர் (அதாவது திகம்பர ஜைன) என்கிறார். புத்தமதத்தினர் சிலரையும் குறிப்பிடுகிறார். ஆனால் பிராமணர் பற்றி யாதொரு குறிப்பும் இல்லை. தமிழ்மொழியை கி.பி.7 - 8 நூற்றாண்டு சார்ந்த குமாரிலபட்டர் ‘ஆந்திர-திராவிட பாஷா’ என்ற தெளிவற்ற ஏயபரந சொற்றொடரால் குறிப்பிடுகிறார். ‘திராவிடமொழிகள் என இன்று நாம் அழைக்கும் மொழிகளைப் பற்றிய மொழியியல் பார்வை 8ஆம் நூற்றாண்டில் ஏது? குமாரிலபட்டர் தென்னிந்திய (திராவிட) மொழிகளை நாகரிகமற்ற மிலேச்ச (பிராமணச் சார்பற்ற) இனத்தவர் மொழிகளாகவே கருதியிருப்பார். அப்படிச் சொல்லாவிட்டாலும் அவர் வாசகங்களிலிருந்து கருத்து அதுதான் என்பது தெளிவு. ஸஇதுசார்ந்து மொழிபெயர்ப்பாளன் தரும் மேலும் சில செய்திகள் வருமாறு: சமணப் புலவர்களுக்குப் பின்னர் வந்த சைவ வைணவப் புலவர்களும் - குறிப்பாக சைவப் புலவர்கள் - சமணர் எந்த அளவுக்கு தமிழன் தூய்மைக்கும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்திற்கும் ஆர்வத்துடன் உழைத்தனரோ அத்தகைய ஆர்வத்தில் பெரும்பகுதியைக் கொண்டிருந்தனர். ஆகையினால் தான் (தமிழில் இன்று உள்ள பல்துறை இலக்கியங்களை சமஸ்கிருத இலக்கியங்களுக்குச் சமமானவை என்று கூற இயலாது என்றாலும் இந்தியாவின் பலபகுதிகளிலும் பின்னர் உருப்பெற்ற ‘இந்திமொழி முன்னோடிகள்’, வங்காளி, சிந்தி முதலியமொழி இலக்கியங்களுக்கு இல்லாத சிறப்பாக சமஸ்கிருத இலக்கியங்களுக்கு ஒப்பான சில இலக்கியங் களையும் சமஸ்கிருத இலக்கியங்களைவிடச் சிறந்தவையான சில இலக்கியங்களையும் தமிழ் மட்டுமே கொண்டுள்ளது.] (ii) ஒரு துறையில் அதாவது அறம், நீதி, ஒழுக்கம் இவை சார்ந்த இரத்தினங்கள் எனத்தக்க சிறந்த தமிழ் செய்யுள்கள் (நவாiஉயட யயீடிவாநபஅள) சமஸ்கிருதத்தில் உள்ள அத்தகையவற்றைவிட நயமும் சிறப்பும் வாய்ந்தவை என்று பல அறிஞரும் கூறுவதை நானும் ஏற்கிறேன். (iii) சமணத்தமிழ் இலக்கியம் ஓங்கிச் செழித்த காலம் ஏறத்தாழ கி.பி.8,9 நூற்றாண்டுகளிலிருந்து கி.பி.12-13ம் நூற்றாண்டுகள் முடிய எனலாம். சுந்தரபாண்டியன் (கூன்-அதாவது சமஸ்கிருதத்தில் கூப்ஜபாண்டியன்) காலத்தில் சமண மதம் சார்ந்தவர் அனைவரையும் பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர் எனக் கூறப்படுகிறது. ஆக, சமணத்தைப் பரப்பும் இலக்கியங்களும் சமணம் சார்ந்த இலக்கியங்களும் ஏறத்தாழ கி.பி.1250க்கு முற்பட்டவையே. 12ம் நூற்றாண்டில் சமண சமயம் வலுவிழக்கத் தொடங்கியதற்கு முற்பட்டவையாகவும் இருக்கலாம். இதற்கு ஒரே ஒரு விலக்கு 16ம் நூற்றாண்டில் விஜயநகர அரசன் ஒருவன் ஆதரித்த மண்டலபுருடர் — சூடாமணி நிகண்டை யாத்தவர். 8(i) திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் புருஷார்த்தங்கள் (அதாவது மனிதனாகப் பிறந்ததன் ஒரே காரணம்) என இந்து மதத்தினர் கருதிவரும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றின் முதன்மையான உள்ளடக்கத்தை 1330 குறள் வெண்பாக்களில் திறம்பட விளக்குகிறது. தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்தது குறளே எனத் தழிழர் அனைவரும் கருதுவது பொருத்தமே. இன்றுள்ள தமிழ் இலக்கியங்களில் அது தலைசிறந்தது மட்டு மல்ல, மிகுதொன்மை வாய்ந்தது என்றும் கருதப்படுகிறது. குறளை கி.பி.10ஆம் நூற்றாண்டு (901-1000) பின்னர் கொண்டு செல்ல இயலாது. (ii) அத்தகு தொன்மையுடையது குறள் என்று நான் கருதுவதற்கான காரணங்கள் வருமாறு. (அ) சங்கராச்சாரியாரின் அட்வைதக்கொள்கை குறளில் இல்லவே இல்லை. பழைய சாங்கிய ளுயமோலய தத்துவத்தையே குறள் போதிக்கிறது. (சாங்கிய இலக்கியத்தில்) சங்கரர் புகுத்திய புதுக்கோட்பாடுகள், மாற்றங்கள் இவை குறளில் இல்லை. சங்கரர் தத்துவம் தென்னாட்டில் பரவுவதற்கு முன்னரே குறள் எழுதப் பட்டிருக்க வேண்டும். சங்கரர் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்; (801-900) முன்னர். எனவே சங்கரருக்குப் பிந்தையது குறள். (ஆ) கி.பி.11ம் நூற்றாண்டிலிருந்து (1001-1100ஹனு) வேறு எந்த தத்துவத்தையும்விட ஆகம (அதாவது சைவசித்தாந்த) தத்துவமே தமிழ் இலக்கியத்திலும் தமிழர் மனதிலும் வலுவான இடம் வகிக்கிறது. இந்த ஆகம தத்துவம் பற்றிக் குறளில் எதுவுமே காணவில்லை. (இ) தற்காலம் தென்னாட்டு புராணிக (சைவ-வைஷ்ணவ) மக்களின் பக்தி-(இந்து ஆண்/பெண் கடவுளரில் ஒன்றன்பால் மட்டும் அசைக்க முடியாத தனி ஈடுபாடு கோட்பாடு) பற்றிக் குறளில் ஒன்றுமே இல்லை. குறளை எழுதிய காலம் பின்வருவனவற்றுக்கு முந்தையதாகத்தான் இருக்க வேண்டும். 12 (i) மாற்று வியாக்யானங்கள் என்ற நிலையில் இருந்து மாறி சைவமும் வைஷ்ணவமும் வேறுபட்ட சமயங்கள் ஆக மாறிவிட்ட காலம். (ii) இன்று நாம் காணும் புராணங்கள் இந்துமத தத்துவங்களுக்கு ழiனேர கூhநடிடடிபல ஆதார நூல்கள் வநஒவ க்ஷடிடிம ஆக மாறிவிட்ட காலம். தொடக்கக் கால வேதாந்தத்தையும், (மகாபாரதம் நுவலும்) இந்துமதக் கடவுளர்கள் பற்றிய தொன்மங்களையும் பெரும்பாலான இந்துக்கள் கடைப்பிடித்த காலத்தில் குறள் எழுதப்பட்டிருக்கும் எனலாம். (ஈ) குறளாசிரியர் சிவமதத்தவர் என சைவரும்; சமணர் என சமண மதத்தவரும் பற்பல காரணங்காட்டி வாதிடுவதுபோல, ‘அவர் என்று வைணவர்தாம்’ என்பது வைணவர் நிலைப்பாடு (ஆனால் வைணவர் வாதம் ஆனது சைவர் / சமணர் வாதங்கள் அளவுக்குக் கூட ஏற்கத்தக்கதாக இல்லை). ஆக, சமணர் என்ற வாதமே எனக்கு வலுவுடையதாகத் தோன்றுகிறது. குறள் கடவுள் வாழ்த்திலும் பிற குறள்களிலும் கடவுளுக்கு அவர் வழங்கும் அடைமொழிகளுள் சமண ருடையனவே பெரும்பாலானவை. குறள் கூறும் அறங்களில் தலைச்சிறந்தது கொல்லாமை என்பதுடன், அதுவே தலையாய அறம் ஸஒன்றாக நல்லது கொல்லாமை’ 323 மற்றும் 33 கொல்லாமை அதிகாரத்தின் ஏனைய பாடல்கள்] என்றும் குறள் தெளிவாக வலியுறுத்துகிறது. ஆயினும் சமணமதத்தின் ஏனைய கோட்பாடுகளை விரிவாக தெளிவாகக் குறள்வலியுறுத்த வில்லை; காரணம் குறள் எழுதிய காலத்தில் சமணம் முழுமையான (வரையறுத்த) தனிச்சமயம் iனேநயீநனேநவே டிதெநஉவiஎந ளலளவநஅ டிக சநடபைiடிn என்ற நிலையை வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் அடையாமல் இருந்திருக்கலாம். பண்டைய இந்து சமயத்திலிருந்து அப்பொழுதுதான் ‘உயர்களிடத்து அன்பு’ சார்ந்த நுட்பமான கோட்பாடுகள் கொண்டதும் புதியதுமான சமணக்கொள்கைக்குத் தமிழக மக்கள் பெருமளவில் செல்லும் நிலை தொடங்கியிருக்கலாம். அப்படிப் பார்த்தால் குறளின் காலம் கி.பி.9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனலாம். (உ) ஏறத்தாழ கி.பி.11, 12 நூற்றாண்டுகளில் எழுதிய தமிழ் இலக்கணங்களும் தமிழ் யாப்பிலக்கணங்களும் குறளைச் சுட்டுவதுடன் மேற்கோளாகவும் காட்டுகின்றன. 9. மேற்கண்ட காரணங்களால் அவை அசைக்க முடியாதவை என்பதல்ல (கடிச வாநளந சநயளடிளே, ளரஉh யள வாநல யசந) — கி.பி.10ம் நூற்றாண்டில் எழுதியது குறள் என நாம் கருதுவது பொருத்தமாக இருக்கலாம் ளநநஅள வடி நெ றயசசயவேநன. ஒன்றை மறந்துவிடக்கூடாது. இந்தியாவில் பல்வேறு மொழி சார்ந்த அனைத்து இலக்கியங்களைப் பொறுத்தம் கூட நாம் குறளுக்குக் கூறியது போல அவற்றின் காலவரையறைகளும் தோராய மானவையே! உறுதியாக நம்பக்கூடிய காலவரையறை ஆதாரமோ வேறு ஸகாரண காரிய] ஆதாரமோ கிடைத்தால் இத்தகைய வரையறைகள் மாற்றிக் கொள்ளநேரும். குறளை கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குப்பின் சில பல நூற்றாண்டுகள் கழித்தும் எழுதியிருக்கலாம் என்று கருதவும் சில காரணங்கள் உண்டு. ‘மதுரைத்தமிழ் சங்கம் முடிவதற்கு முன்னர் வாழ்ந்தவர் வள்ளுவர் என்று பல ஆதாரங்களும் ஒரே குரலில் கூறுகின்றன. மதுரைத்தமிழ்சங்க நூல்களின் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் குறள் உள்ளது. வள்ளுவர் பற்றிய கதையில் அச்சங்கப் பலகையின்; மேல் ஒரு நூலை வைத்தபின் அதனைப் பலகை ஏற்றுக்கொண்டு மிதந்தால் தான் அந்நூலைச் சங்கப்புலவர்; ஏற்பர்! என்ற கூற்றும் குறள் பற்றிய கதையில் வருகிறது!! குறள் ஆசிரியர் வள்ளுவன் என்ற தாழ்ந்த ஜாதியில் பிறந்ததால் சங்கத்தார் திருக்குறளை ஏற்க மறுத்தனர். ஆனால் சங்கப்பலகை தன் நீளத்தைத் தானே அதிகப்படுத்தவே, நீண்ட பகுதியின் மேல் குறளை வைத்தவுடன் பலகை தன்னைக் குறள் நூல் வைத்த பரப்பு அளவுக்குச் சுருக்கிக் கொண்டு, சங்கப்புலவர்களைத் தண்ணீரில் தள்ளிவிட்டதாம்!! அவமானம் தாங்காமல் அப்புலவர்கள் அனைவரும் தாங் களாகவே தண்ணீருக்குள் மூழ்கித் தங்களைச் சாகடித்துக் கொண்டார்களாம்! இப்புனை கதையின் உட்கருத்து உண்மை யென்றால் குறளின் காலம் கி.பி.10ம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட தாகலாம். இன்னொரு காரணம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் நக்கீரன் கி.பி.13ம் நூற்;றாண்டில் வாழ்ந்த கரிகாற்சோழன் காலத்தவர் ஆவார். இத்தகைய இன்னொரு கதையானது ‘திருவள்ளுவர் உடன் பிறப்பு ஒளவையார் குலோத்துங்கன்காலத்தவர் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) என்கிறது. குலோத்துங்கள் காலத்தில்தான் தமிழ் (கம்ப) இராமாயணம் எழுதப்பட்டது. கம்பராமாயணத்தில் (தூதர்கள் பணி, தகுதிபற்றிக் கூறும்பொழுது) கம்பர் திருக்குறத் கருத்துக்களை சுட்டுகிறார். எனவே வள்ளுவர் காலத்தை அவ்வளவு பிற்பட்டதாகக் கொள்வது பொருந்தாமற் போகலாம். 10. திருக்குறளை எழுதிய புலவர் பறையர் ஜாதியைச் சார்ந்தவர் சென்னை மைலாப்பூரைச் சார்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஒரு கர்ணபரம்பரைக்கதை (டநபநனே) வள்ளுவர் பிராமணத் தந்தைக்கும் பறையர்குலத்தாய்க்கும் பிறந்தவர் என்கிறது. வள்ளுவர் இயற்பெயர் சநயட யேஅந தெரியவில்லை. பறையர்களின் குருக்களாக (யீசநைளவால னiஎளைiடிn) இருப்பவர்கள் வள்ளுவர்கள். வள்ளுவர்கள் குறிசொல்பவர்களும் கூட. திருவள்ளுவர் - புனிதமான (மரியாதைக்குரிய) வள்ளுவர் (பறையர்)குரு இக்கூற்றுகள் எல்லாம் பல்வேறு ஜாதிகளுக் கிடையே நிலவிய மனமாச்சரியங்களுக்கு முற்றிலும் எதிரானவை, கட்டுக்கதைகள் என்றாலும், விநோதமானவை, ஆகையால் உண்மையாகவே இருந்திருக்க வாய்ப்பு உண்டு. கூhளை ளை டிநே டிக வாடிளந வசயனவைiடிளே றாiஉh யசந ளடி சநயீரபயேவே வடி inஎநவநசயவந யீடியீரடயச யீசநதரனiஉந வாயவ வாநல யயீயீநயச வடிடி ளவசயபேந கடிச கiஉவiடிn யனே யசந யீசடியெடெல கடிரனேநன டிn கயஉவ. திருவள்ளுவர் உடன்பிறப்பு ஆகிய ஒளவையார் என்றும் பறையர் குலப்பெண்புலவர் பற்றியும், அவர் எழுதிய (ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற) தமிழகம் முழுவதும் போற்றி வழங்கும் நூல்களைப் பற்றியும், நாம் கவனிக்க வேண்டிய வியத்தகு செய்தி. வள்;வர் இயற்பெயர் தெரியாததுபோலவே ஒளவையார் இயற்பெயரும் தெரியவில்லை. (ஒளவையார் -அன்னை; வழிபடத்தக்க மூதாட்டி) 11. சமணர் காலத்தில் உருவான மற்றொரு சிறந்த அறநூல் நாலடியார் (அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் பற்றியது. அது குறளைப்போல் செறிந்த நடையில் இல்லாமல், கருத்துக்களைச் சற்றே விரிவாகச் செய்யுள் நடையில் அணி நயத்துடன் தருவதால் அது குறளுக்கு முந்தியதாக இருக்கலாம் என்பர் டாக்டர் கிரால் ழுசயரட. அது குறளுக்கு முந்தியதா யிருக்கலாமென நானும் கருதுவதற்கு இன்னொரு வலுவான காரணம், குறள் இவ்வகைத் தமிழ் நூல்களில் ஈடும் எடுப்பும் இல்லாத சிறப்புடன் வழங்கத் தொடங்கிய பின்னர் அதே பொருண்மையில் அதே அடிச்சட்டத்தில் வள்ளுவர் அளவுக்குப் புலமை இல்லாத பிறர், குறட்கருத்துக்களையே வேறு உத்திகளால் வலியுறுத்துவனவாக நாலடியார; செய்யுட்களை இயற்ற முற்பட்டிருப்பாரா?! என்று ஐயுறுகிறேன். குறள் என்றால் சுருங்கியது (1 அடி குறள்வெண்பா), நாலடியார் நான்கு அடிகள் கொண்ட வெண்பா யாப்பு சார்ந்தது (நாலடி-கடிரச கநநவ); நாலடியாரை எழுதியவர் பெயரும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை; அவர் சமணர், பாண்டிய நாட்டில் இருந்து கொண்டு எழுதினார் என்று மட்டும் தெரிகிறது. நாலடியார் பாடல்களில் பாண்டிய நாட்டைச்சுட்டும் நயமான வாசகங்கள் உள்ளன. மதுரைத் தமிழ் சங்கம் (ஆயனரசய ஊடிடடநபந) ஏற்று பதினெண்கீழ்கணக்கு நூல் தொகுப்பில் சேர்த்தவற்றுள் “நாலடியாரும் ஒன்று. தமிழ்நாட்டுப் புலவர் சிலர் ‘நாலடியார் பாடல்களை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதிய வெண்பாக் களிலிருந்து தொகுத்ததற்கான அடையாளங்களை நாலடியார் பாடல்களே காட்டுகின்றன” என்பர். 12. சமண மதத்தைச் சார்ந்தவர் எனத் திட்டவட்டமாகத் தெரியும். ஒருவர் எழுதிய புகழ்பெற்ற தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணி; 15000 வரிகள் கொண்டது. சமணர் புலவர் எழுதியதனால் மட்டுமன்றி சிந்தாமணி நடையும் கடினமானது என்பதால் அக்காவியம் பிரபலமாகவில்லை. சிந்தாமணியை முன்னோடியாகக் கொண்டு தேம்பாவணி இயற்றிய பெஸ்கி (வீரமாமுனிவர்) தமிழ்ப்புலவர்களில் தலைச்சிறந்தவர் ஞசinஉந டிக கூயஅடை ஞடிநவள என்று புகழ்வது சரியே. கம்பராமாயண நடையை விடச் சிந்தாமணியின் நடை சிறந்தது எனக் கருதப்படுகிறது. ஸசிந்தாமணியை எழுதியவர் பெயர் (கால்டுவெலுக்கு) தெரியவர வில்லை]. தமிழ்நாட்டுப்புலவர் சிலர் குறளுக்கு முந்தியது சிந்தாமணி என்கின்றனர்; சிந்தாமணிச் செய்திகள் சிலவற்றைக் குறளும் குறட்செய்திகளை (விரிவாக) சிந்தாமணியும் கூறுகின்றன எனச் சிலர் கருதுகின்றனர். ‘கம்பராமாயணத்துக்குக் குறள் முற்பட்டது என்போர் சான்றாக சிந்தாமணி கம்பராமாயணத்துக்கு முற்பட்ட செய்தியைச் சுட்டுகின்றனர். இன்றுள்ள அனைத்துத் தமிழ் காவியங்களுள் மிகுத்தொன்மை வாய்ந்தது என நிறுவப் பட்டுள்ளன. சிந்தாமணிதான் தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்திலும் தொன்மை வாய்ந்தது எனவும் நிறுவப்படுமாயின் வியப்பாக அமையும். 13. மதுரைத் தமிழ்ச் சங்கப்புலவர் (சமணர்) சேந்தனார் யாத்த திவாகரம் (திவாகர = னயலஅயமநச ஞாயிறு) நிகண்டுதான் மிகப்பழையது. ஏனைய இரண்டு நிகண்டுகள், பிங்கலந்தை, சூடாமணி ஆகியவையும் சமணர் இயற்றியவைதாம். இன்று தமிழ் இலக்கணங்களில் பிரமாணமாகக் கருதப்படுவது (யரவாடிசவையவiஎந) புகழ்பெற்ற (பவணந்திமுனிவர் எழுதிய) நன்னூலை யாத்துள்ள முறையும் மிகக் குழப்பமாகவே (அநவாடின எநசல யீநசயீடநஒiபே) உள்ளது. சமணர்கள் தொடக்க காலத்தில் நிகண்டுகளை யாப்பதில் தலைசிறந்து விளங்கினர்; இலக்கணங்களைச் சைவர் செய்யவிட்டுவிட்டனர் போலும். ஐஐ தமிழ் இராமாயணக் காலம் 14. தமிழில் வழங்கும் கம்பராமாயணம் வால்மீகியின் சமஸ்கிருதக் காவியத்தின் மொழிப்பெயர்ப்பு அன்று, தழுவலே iஅவையவiடிn சயவாநச வாயn வசயளேடயவiடிn. வால்மீகி காவியம் சில இடங்களில் செறிந்த இலக்கிய நடையில் வாநவடிசiஉயட உள்ளது; சில இடங்களில் எளிமையான இயற்கையாக ஆனால் உணர்ச்சித் ததும்பும் நடையில் உள்ளது. வேறு சில இடங்களில் சாதாரணமாக அல்லது செயற்கையாகச் சுற்றிவளைத்துக் கூறுவதாக யீசடிடiஒ உள்ளது. கம்பராமாயணமோ எந்தப் பகுதியிலும் இயற்கை யானதாக, எளிமையானதாக இல்லை; அடைமொழிகள் பல, உவமைகள் பல என்றவாறு அமைந்து கதை நிகழ்ச்சி தெளிவிழக்கிறது. கதையோட்டம் குறுக்கீடுகளுக்குட்பட்டு மறந்துவிட்டதோ! என்று கூட ஐயுறும் நிலை ஏற்படுகிறது. தமிழ்க்காவிய மரபுகளில் மட்டும் தோய்ந்தோர் செவிக்கு கம்பராமாயணம் இனிய நயமான காவிய நடையாகத் தோன்றலாம். ஆனால் (பிறநாட்டுக் காவியங்களைப் பயின்ற) ஐரோப்பியர் பார்வையில் அதன் இனிமை கடுந்தித்திப்பாகவும் டரளஉiநேளள, அதனுடைய காவியச் செய்யுள் போக்கு இடையறாத எதுகை மோனை அடிnடிவடிnடிரள தiபேடந ஆகவுமே பல இடங்களில் தோன்றுகிறது. வால்மீகி இராமாயணத்துக்கும் கம்பராமாயணத் துக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஹோமர் கிரிக் மொழியில் எழுதிய இலியட் காவியத்துக்கும் ஸகி.மு.6ஆம் நூற்றாண்டு] அலெக்சாண்டர் போப் கி.பி.18ஆம் நூற்றாண்டில் இயற்றிய அக்காவியத்தின் ஆங்கில வடிவத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றது ஆகும். (இவ்வொப்புமை ஓரளவுக்குத்தான் சரி, காவியமொழி பெயர்ப்புகள் என்ற வகையில் நோக்கினால் வேறுபாடுகள் ஏராளம்). (ii) கம்பரின் போக்கில் சிலகுறைகள் இருப்பினும் இலக்கியச்சுவை நோக்கில் கம்பராமாயணம் ஐயத்திற்கிடமின்றி ஒரு பெரும் காவியம்தான் சூடிவ றiவா ளவயனேiபே வைள கயரடவள டிக ளவலடந, கசடிஅ வாந யீடிiவே டிக எநைற டிக ய உரடவரசநன வயளவந, வாந கூயஅடை சுயஅயலயயே ளை ரனேடிரவெநனடல ய பசநயவ யீடிநஅ. தமிழ்க்காவியங்களில் கம்பராமாயணத்தோடு போட்டியிடக் கூடியது சீவகசிந்தாமணி ஒன்றே. அன்றைய சோழநாட்டின் தஞ்சைப்பகுதியில் அடங்கிய கம்பநாட்டில் பிறந்ததால் கம்பர் எனப்பட்டார். கம்பர் புலமைத்திறன் இராசேந்திரசோழன் காதை எட்டவே அவன் அவரை அழைத்து அரசவைப்புலவர்களுள் ஒருவராக ஆக்கி `கவிச்சக்கரவாத்தி’ என்ற பாராட்டையும் வழங்கினான். கம்பர் எழுதியதாக வழங்கும் வேறு நூல்களில் உழவுத்தொழிலைப் பாராட்டும் ஏர் எழுபதும் பிரபலமானது ஆகும். 15. இன்றும் தமிழ் இலக்கியத்தில் சிறந்தவையாகப் போற்றப்படும் பல நூல்களை எழுதியவர்கள் (குறிப்பாக புகழேந்தி, ஒட்டக்கூத்தர், ஒளவையார் ஆகியோரும்) கம்பர் காலத்தவரே எனத் தோன்றுவதால் அக்காலகட்ட இலக்கியங் களை தமிழ் இராமாயண கால இலக்கியம் (சுயஅயலயயே உலஉடந) என அழைப்பது பொருத்தம் என்பது எனது கருத்து. அக்காலத்தின் வரையறையை நிர்ணயிப்பது முக்கியமானது. (முந்தைய) சமணர்கால இலக்கியத்தின் தொடக்கம் — முடிவு பற்றி திட்டவட்டமாக ஏதும் தெரியவில்லை. ஆனால் கம்பர் வாழ்ந்தது பிற்காலச் சோழர் பரம்பரையின் இரண்டு மாமன்னர்கள் ஆண்ட காலமாகையால் அந்தக் காலத்தையாவது நிர்ணயிப்பது இயலுமா எனப் பார்ப்போம். ஸஇன்றைய நிலையில் (1856/1875) தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ் இராமாயண (கம்பர்) காலத்தையாவது நிர்ணயிக்க முடியுமென நம்புகிறேன். கி.பி.886க்கு சமமான சாலிவாகன சகாப்தத்தில் கம்பர் இராமாயணம் அரங்கேறியதாகக் கூறும் செய்யுள் (கம்பர் எழுதியது என்பது சிலர் உன்னிப்பு) கம்பராமாயண முகப்பில் உள்ளது. இதனைத் தமிழ்நாட்டுப் புலவர் மட்டுமன்றி இத்துறை வல்லார் ஆகிய ஐரோப்பியர் சிலரும் சரியெனக் கருதுகின்றனர். இந்நிலைப்பாடு சரியென்றால், “இன்றுள்ள தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தொன்மை வாய்ந்தது கம்பராமாயணம்; கம்பரே தமிழ்ப்புலவர்களில் முற்பட்டவர்”, என்று ஆகிவிடும். தமிழ் இலக்கியங்கள் எதிலும் இப்படித் திட்டவட்டமான காலக்குறிப்பு வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கம்பர் நூலின் காலம் மிகப்பழையது எனக்காட்டுவதற்காக இப்பாடலைப் போலியாக எழுதி யாரோ ஒருவர் (கம்பர் மேல் பற்றுக் கொண்டவர்) சேர்த்திருக்க வேண்டும் என்பதே என கருத்து. 16. (i) ‘கம்பர் இராசேந்திரசோழன்-குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பதற்கு ஆதார ஆவணங்கள் எந்தக் கல்வெட்டிலோ பிற ஆவணத்திலோ கிடைக்கவில்லை அவ்வாறு கூறுபவை பாரம்பரியச் செய்தி புராணக்கதை / கட்டுக்கதைகள் ஸவீராசாமிச் செட்டியார் அண்மையில் வெளியிட்டுள்ள விநோதரசமஞ்சேரி அக்கதைகளைத் தருகிறது] போன்றவைதாம். எனினும் அவையெல்லாம் ஒரே மாதிரியாக கம்பர் காலச்சோழ அரசர் இருவரைச்சுட்டுவது (அனைவரும் சேர்ந்து பொருந்தப்புளுகியது அல்ல) உண்மை நிலைமை காரணத்தால்தான் என முடிவு செய்து நான் கம்பர், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் மூவரும் சமகாலத்தவர் என்கிறேன். (ii) ராசேந்திரன் மகன் குலோத்துங்கன் என எந்தக் கல்வெட்டும் கூறவில்லை. ஆனால் திருவாங்கூர் அரசின் தமிழ் பேசும் பகுதியாகிய நாகர்கோயில் அருகே கோட்டாறு ஊரில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டில் ராசேந்திரனை அடுத்து உடனடியாக அரியணை ஏறினவனா அல்லது (ஓரிரு மன்னர்கள் சில ஆண்டுகள் ஆண்டபின்னர்) சில ஆண்டு கழித்துச் சோழ அரசன் ஆனவனாக என்ற நுட்பமான விவரங்கள் இல்லா விட்டாலும் இராசேந்திரனுக்குப் பிற்பட்டவன்தான் குலோத்துங்கன் என்பதைச் சாற்றுகிறது. குலோத்துங்கன் ஆட்சி ஆண்டு 31 சார்ந்த அக்கல்வெட்டு ‘இராசேந்திர சோழேஸ் வரருக்கு = இராசேந்திர சோழன் வணங்கிய ஈஸ்வரர் / இராசேந்திரன் இறந்த பின்னர் (சிவனோடு அடங்கியதாகக் கருதி) அச்சோழீஸ்வரருக்கு அக்கோயிலைக் கட்டியதாக கூறுகிறது. ஸஉரோம சக்கரவர்த்திகள் காலத்தில் அகஸ்தஸ் இறந்த பின்னர்; அகஸ்தஸ் தெய்வம் னுiஎரள ஹரபரளவரள எனப்பட்டதைப் போல] (iii) இப்படி ராசேந்திர சோழன் நினைவாகப் பின்வந்த சோழ மன்னர்கள் செய்த கொடைகளைக் குறிப்பிடும் பல கல்வெட்டுக்களை பிற கோயில்களிலும் கண்டுள்ளேன். சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் கூட; அவற்றுள் ஒன்றில் தான் ஆண்டு குறிப்பிடப்படுகிறது. அதுவும் பிற்காலத்தது, பராக்ம பாண்டிதேவர் தம் 5-வது ஆட்சி ஆண்டில் (ஹனு 1390க்கு சமமான சக வருடம்) அதே கோட்டார் கோயிலில் வெட்டிய சாசனம் அது. பாண்டிய நாட்டுக்கல்வெட்டுகள் பொதுவாக இராசேந்திரசோழன் என்றே குறிப்பிடுகின்றன. (ஒரே கல்வெட்டில் மட்டும் இராசேந்திர சோழ பாண்டியன் என்று வருகிறது). 16. இராசேந்திரன் ஆட்சி ஆண்டுகள் எவை? கன்னியா குமரியில் நான் கண்ட இரண்டு கல்வெட்டுகள் (ஆட்சி ஆண்டு 4-இல் ஒன்று ஆட்சி ஆண்டு 5இல் ஒன்று) சாளுக்கிய அரசன் (சமணன்) ஆகவமல்லனை இராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றின் கரையில் நிகழ்ந்த போரில் வென்றதாக அவை கூறுகின்றன. அக்கல்வெட்டுகளில் ஒன்றின் காலக்குறிப்பு தவறென்பதை உணர்ந்தேன். துடிரசயேட டிக வாந சுடிலயட ஹளயைவiஉ ளுடிஉநைவல குறித்துள்ளபடி மேலைச் சாளுக்கிய இராச்சியத்தில் கி.பி.11ஆம் நூற்றாண்டு நடுவில் இராசேந்திரனை அதே போரில் வென்றதாகத் தெரிகிறது. அக்காலத்தில் கலிங்கநாட்டை (வட சர்க்கார்) ஆண்டுவந்த கீழைச்சாளுக்கியர் வம்சக் கல்வெட்டு ஸகி.பி.1874-இல் ஐவேநசயேவiடியேட ஊடிபேசநளள டிக டீசநைவேயடளைவள மாநாட்டுக் கட்டுரையில் டாக்டர் எக்கலிங் நுபபநடiபே தரும் விவரம் ‘இராசேந்திர சோழன் ஆட்சி தொடங்கியது கி.பி.1063-இல் ஆகும் அவன் சோழநாடு மட்டுமின்றி கலிங்கத்தையும் ஆண்டான் ஸநான் மேலே சுட்டிய பாண்டிய நாட்டுக் கல்வெட்டுகள் கூறுவது போல பாண்டிய நாட்டையும் தான்]. ஆக அவனும் ஆகவமல்லனும் கி.பி.1063-1066 இவற்றுக்கிடையே போர் செய்திருக்க வேண்டும். பாண்டிய நாட்டுத் தென்பகுதியில் ‘இராசேந்திரன் ஆட்சி ஆண்டு 30 சார்ந்த கல்வெட்டைக் கண்டுள்ளேன். ஆக அவன் கி.பி.1093-க்கு பின்னரே இறந்து இருக்க வேண்டும். இராசேந்திரன் இறந்தது கி.பி.1112இல் (41 ஆண்டுகள் ஆண்ட பின்னர்) என்பர் சர் வால்டர் எலியட். இராசேந்திரன் இறந்த ஆண்டும் குலோத்துகங்கன் ஆளத்தொடங்கிய ஆண்டும் சரிவரத் தெரியவில்லை. (கி.பி.1112 என்பவர் எலியத்) குலோத்துங்கன் ஆட்சி ஆண்டு 49 சார்ந்த கல்வெட்டும் உள்ளது. கம்பர் இராமாயணம் இயற்றிய அரங் கேற்றிய ஆண்டை அவ்வளவு பிற்காலத்துக்குத் தள்ள வேண்டாம். பரம்பரைச் செய்திகள் கூறுவது போல கம்பராமாயணத்தை இராசேந்திரன் காலத்திலேயே எழுதத் தொடங்கி குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1100க்கு வெகுமுன்னரே) முடித்திருக்க வேண்டும். 1100க்குப் பின்னர் முடித்ததாகக் கருதுவது சரியாகத் தோன்ற வில்லை. குலோத்துங்கன் ஆட்சி ஆண்டு 24-இல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் கம்பர் அரங்கேற்றினார் எனக் கொண்டால் மேலே 14ஆம் பத்தியில் கண்ட ‘கி.பி.886-க்கு சமமான சாலிசகத்தில் கம்பராமாயணம் அரங்கேறியது, என்ற கூற்று அந்தக் காலகட்டத்தை 250 ஆண்டு பழமை வாய்ந்ததாக காட்டுவதற்காகக் கற்பனை செய்த பொய் எனலாம். 17. வைணவ (விசிஷ்டாத்வைத) சமயத்தை நிலை நிறுத்திய இராமானுஜருக்குப் பிந்தியவர் கம்பர் என்பது உறுதி. கம்பன் எழுதியதாகக் கூறப்படும் சடகோபர் (நம்மாழ்வார்) அந்தாதியில் இராமானுஜரைக் குறிப்பிடுகிறார். அவ்வந்தாதியைக் கம்பன் தான் எழுதியிருப்பதாக வைணவர் கூறுகிறார்கள். பிறர் அதுபோல் எழுத இயலாத அளவுக்குத் தனித்துவம் ளுரi பநநேசளை வாய்ந்த கம்பர் நடையில் உள்ள அந்நூலை வேறு எழுதியிருக்க இயலாது என்ற வாதத்துடன் ஸஊ.ஞ.பிரௌன் தனது காலவரை யறை பட்டியலில் ஊலஉடiஉ கூயடெநள விஷ்ணுவர்த்தனனை இராமானுஜர் வைணவத்துக்கு மாற்றியது கி.பி.1133-இல் என்கிறார்ஸ. பேராசிரியர் வில்சன் சிறந்த சான்றுகளுடன் இராமானுஜர் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் என்கிறார், ஆக கம்பன் காலம் இராமானுஜர் காலத்துக்குப் பிந்தியதுதான். மேலே நாம் நிறுவியபடி ராஜேந்திரசோழன், குலோத்துங்க சோழன் காலங்களில் கம்பன் வாழ்ந்தான் என்பது அனைத்துச் செய்திகளுக்கும் பொருந்தி வருகிறது. 18. ஒளவையார் (i) செவிவழிச் செய்திகளும் கதைகளும் புகழேந்தி, ஒட்டக்கூத்தன், கம்பன் இவர்கள் மூவரையும் குலோத்துங்கன் காலத்தவர்கள் என்பதுடன் திருவள்ளுவர் உடன்பிறப்பு எனப்படும் ஒளவையையும் அதே காலத்தில் வைத்து, அம்மூவருடன் ஒளவையை இணைக்கும் உரையாடல்கள் / நிகழ்ச்சிகளையும் தருகின்றன. ஆக தற்போதைக்கு ஒளவையையும் அம்மூவர்களுடைய காலத்தில் சேர்க்கிறேன். (சேர்ப்பதால் திருவள்ளுவரும் ஒளவையும் உடன்பிறப்புகள் என்ற கதை அடிபடலாம்! குறளின் நடையும் பொருண்மையும் சுட்டும் அந்நூலின் தொன்மைக்கு மாறாகவும் அந்த உன்னிப்பு இருக்கும் ஒளவையாரைப் பொறுத்தவரை இக்கால நிர்ணயத்தில் சிக்கல் இல்லை. ஓளவை எழுதியதாக வழங்கும் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ஒவ்வொன்றிலும் உள்ள பாடல்கள் (தமிழ் அகர வரிசைப்படி அமைந்தவை) ஓரளவு தொன்மை வாய்ந்தவை என்று ஏற்கலாம். (ii) ஆனால் ஒளவையார் குறள் என வழங்கும் அட்வைத நூல் தென்னிந்தியாவிற்குள் முகமதியர் வந்த பின்னர்த்தான் எழுதப்பட்டிருக்கும். நல்லொழுக்கம் பற்றிக் கவிநயத்துடன் எழுதப்பட்டுள்ள பல பாடல்களைக் கொண்ட மூதுரை (யீசடிஎநசbயைட றளைனடிஅ) ஐரோப்பியர் - ஏன் ஆங்கிலேயர்கள் வந்த பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். காண்க ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற்போலக் கல்லாதான் கற்றகல்வி’ என்ற பாடலை. வான்கோழி அமெரிக்காவில் உருவாகிய பறவையினம், கி.பி.1492-க்கு பின்னர் ஐரோப்பாவுக்குக் கொணர்ந்தது, அதன் பின்னர் இந்தியாவுக்கும் கொணர்ந்திருப்பர். ‘இப்பாடல் (இடைச்செருகல் அல்ல) மூதுரை மூலத்தில் கி.பி.1492-க்கு முன்னரே இருந்திருக்கும் எனச் சாதிப்பது அபத்தம் ஆகும் என்பதை நான் தமிழர்களிடம் சொன்னால் அவர்கள் ஏற்பதில்லை! ‘புகையிலை, ‘உருளைக் கிழங்கு போல (‘வான்கோழி; புதியதாக உருவாக்கிக் கொண்ட சொல் (வான்கோழி = வாந பசநயவ கடிறட) தான் என்பதை மறுத்து (அசட்டுத்) தைரியமாக ‘வான்கோழி தொன்றுதொட்டு இந்தியாவில் இருந்ததுதான் என்கின்றனர்! (iii) தமிழ்ச்செய்யுளில் ஈடுபாடுள்ள மதுரை கூ.ஆ. ஸ்காட் தரும் விளக்கம் இன்னும் விநோதமானது. அவர் பதிப்பித்த மூதுரையில் ‘வான்கோழி ஞநயாநn பெண்மயிலைக் குறிப்பதே! கூரசமநல-ஐ குறிப்பதல்ல என்பார் அவர். பெண் மயிலையும் ஆண்மயிலையும் பிரித்துக்காட்ட மூதுரையாசிரியர் விரும்பிருந் தால் ஆணை மயில் என்றும் பெட்டைக்கோழியை மட்டும் கடிறட / வாந பசநயவ கடிறட (வான்கோழி) அதுவும் பொல்லாச் சிறகுடையது, எனக் கூறியுள்ளார். ஆண் ஞநயகடிறட, பெண் வாந பசநயவ கடிறட என்று வாதம் அபத்தமானது. இப்பாடல் மூலத்தில் இல்லாமல் பின்னர் இடைச்செருகலாக நுழைத்தது எனக்கூறுவதே அறிவுடைமை யாகும். (3) சைவ நூல்கள் ஓங்கிய காலம் 19. சைவசித்தாந்த சமயத்துவம் சார்ந்த நூல்களைக் கொண்ட சிவனையும் சிவன் கோயில்களையும் புகழ்வனவும், ஆழ்ந்த சமய உணர்வைத் தூண்டுவனவும் ஆன பக்திப் பாடல்களில் பின்வரும் இருபெரும் தொகுப்புகள் அடங்கும். (1) தொகுப்புகளுள் காலத்தால் முந்தியது மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம் என்னும் சிறந்த சிவநெறி போற்றும் நூல் சிவமதத்தை மிகுந்த ஆர்வத்துடன் பரப்பியவர்களுன் ஒருவர் மாணிக்கவாசகர். உயர்ந்த சைவக் கருத்துக்களை சமயப்பற்றுடன் பரப்பி தமிழ் மக்களிடம் பெரும்புகழ் பெற்றவர். இலங்கையி லிருந்து தமிழ்நாடு வந்து புத்தமதத்தைப் பரப்பிய பிட்சுக்களை வாதத்தில் வென்றவர் என்று திருவாதவூர் புராணம் கூறுகிறது. முதன்மைவாய்ந்த சைவ நாயன்மார்களுள் ஒருவரான ஞான சம்பந்தருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தவர் மாணிக்க வாசகர் எனக் கருதுவது தவறாகாது. ஸசுந்தர பாண்டியன் காலத்தைக் கீழே ஆய்வு செய்ய இருக்கிறோம்]. சைவ நாயன்மார் 63 பேர்களுடைய வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டர் புராணம் அந்த 63 பேர்களுள் மாணிக்கவாசகரைச் சேர்க்கவில்லை. ஆகையால் தமிழ்ப்புலவர்களும் ஆய்வாளர்களும் சிலர் அவர் 63வர்க்கு ‘முந்தியவர் என்றும் வேறு சிலர் ‘பிந்தியவர் என்றும் கருதுகின்றனர். பிந்தியவர் எனக் கருதுவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. மதுரைத் தலபுராணத்தில் வரும் பாண்டிய மன்னர் பட்டியலில், கடைசி மன்னனாகக் குறிப்பிடப்படும் சுந்தர பாண்டியனுக்கு முன்னர் ஆண்ட பாண்டியர்களில் பத்தாவது அரசனான அரிமரித்தன பாண்டியனுடைய அமைச்சராக மாணிக்கவாசகர் இருந்தார் எனக்குறிப்பிடப் படுகிறது. சுந்தரபாண்டியனுக்கு முந்தையவர்களாக திருத்தொண்டர் புராணம் தரும் ‘பாண்டிய மன்னர் பட்டியல் நம்பத்தக்கதல்ல என்பது என் முடிவு ஆகும். ஆக மாணிக்கவாசகர் காலப் பாண்டியனும், சுந்தரபாண்டியனுக்கு முற்பட்டவன் என்பதும், அதில் சிறிது ஐயம் என்று கொண்டாலும் கூட மாணிக்கவாசகர் சுந்தரபாண்டியனுக்கு முன்னர்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என முடிவு செய்யலாம். 20. மாணிக்கவாசகருக்குப் பின்னர் வந்த சைவ நூல்களின் பெருந்தொகுப்பு பெருமளவுக்கு சோழ நாட்டில் சிதம்பரத்துக்குத் தெற்கில் சீர்காழி நகரில் பிறந்த, ஞானசம்பந்தரும் /எஞ்சியவை அப்பரும் சுந்தரரும் பாடிய தேவாரம் (சமஸ்: னநஎயசாய = கடவுளுக்குகந்தது) ஆகும். (ஏனைய நாயன்மார்களை - அப்பர், சுந்தரர் உட்பட! ஞானசம்பந்தரின் னளைஉiயீடநள சீடர்கள் எனக் கால்டுவெல் சுட்டுகிறார். அது பிழை) சம்பந்தர் தேவாரப் பாடல்கள் (மொத்தம் 384) மூன்று மடலங்களிலும் அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல்கள் 1+1 மடலத்திலும் உள்ளன. சிவனடியார்கள் 63 பேருள் இம்மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். (பிற்காலச் சேக்கிழார் பெரியபுராணம் என்னும் பெயரில் அந்த 63 நாயன்மார்கள் வாழ்வு, சிவநெறிச் செயல்பாடு, இயற்றிய அற்புதங்கள்; ஆகிய இவற்றைப் பற்றி எழுதியுள்ளார். ஸமதுரைத் தலபுராணமான] திருவிளையாடல்புராணமும் சம்பந்தர் சுந்தரபாண்டியனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மீட்டதுடன் வாதில் தோற்றமை, அற்புதங்கள் அசையஉடநள செய்ய இயலாமை, இவற்றுக்காக சமணர் 8000 பேரைக் கழுவேற்றிக் கொன்றதையும் குறிப்பிடுகிறது. அப்புராணத்தின் காலம் தெரியவில்லை. சமஸ்கிருத மூலத்திலிருந்து அதிவீரராம பாண்டியன் கோரியபடி அப்புராணம் தமிழாக்கப்பட்டது என்பது உண்மையானால் திருவிளையாடல் புராணத்தின் காலம் (பின்னர் கூறவிருப்பது போல கி.பி.16ம் நூற்றாண்டு சார்ந்ததுதான் எனலாம். சேர (கேரள) மன்னனும் 63 நாயன்மாரில் ஒருவனும் ஆன சேரமான்பெருமாளும் சைவநூல்கள் சில இயற்றியுள்ளான். 21. மேற்சொன்ன சைவ நூற்செய்திகளிலிருந்தும் தமிழரிடையே வழங்கும் செய்திகளின் வசயனவைiடிளே படியும் சுந்தரபாண்டியன் ஆண்ட காலத்தில்தான் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டது எனத் தெரிவதால் அவன் காலத்தை நிர்ணயிப்பது இன்றியமையாதது. (குலோத்துங்கன் காலத்தை நிர்ணயிப்பது முக்கியம் என மேலே சொல்லியதுபோல). இந்த ஒப்பிலக்கண நூல் 1856 முதற்பதிப்பில் நான் ‘ஸகி.பி.1292-இல் தென் இந்தியாவுக்கு வந்துபோன இத்தாலியர் மார்கோபோலோ குறிப்பிடும் செந்தர்பாண்டி ளுநனேநச-ஞயனேi-தான் சுந்தரபாண்டியன் என்றேன். ஜே.எச்.நெல்சன் 1858-இல் வெளியிட்ட மதுரை (மாவட்ட)க் கையேடு நீண்ட நுணுக்கமான பார்வையுடன் பல்வேறு சான்றுகளையும் ஆய்வு செய்தபின் ‘சுந்தரபாண்டியன் 11ம் பிற்பகுதியில் வாழ்ந்தான். (அதாவது போலோவின் ‘செந்தர்பாண்டிக்கு 200 ஆண்டு முன்னர்) என்கிறது. கர்னல் யூல் எனக்குத் தெரிவித்துள்ளது. ‘போலோ வந்த காலகட்டத்தில் பாண்டிய நாட்டில் (அராபியர் அதை மாபர் ஆயயெச என்பர்) ‘சுந்தரன் பெயரில் இரண்டு பாண்டியர் இருந்தனர் என முகமதிய வரலாற்றாசிரியர்கள் வசாப் & ரஷியுதீன் கூறுகின்றனர். இவ்விரு பாண்டியரில் முந்தியவன்தான் போலோவின் செந்தர்பாண்டி; அவன் மதுரையின் முடிசூட்டிய மன்னன் அல்ல (எப்படியோ அரசைக் கைப்பற்ற முயன்றவன் யனஎநவேரசநச). நான் (கால்டுவெல்) சுட்டும் சுந்தரபாண்டியன் அல்லன் என்பதாகும். 22. (i) தொன்மை வாய்ந்த பாண்டிய அரசப்பரம்பரையின் கடைசி அரசன் ஆன இந்த சுந்தரபாண்டியன் காலத்தை உறுதியாகக் காண்பது கடினம்தான். அவன் ஆட்சிக்கால கல்வெட்டுகளில் என் கையிலேயே 20-ன்படிகள் உள்ளன. ஆனால் ஒன்றிலும் தேதிக் குறிப்பு இல்லை. அவன் வெளியிட்ட தேதிக்குறிப்புள்ள ஒரே ஒரு கல்வெட்டு கிடைத்தாலும் தெளிவு கிடைத்துவிடும். அவன் வெளியிட்ட தேதிக்குறிப்புள்ள ஒரே ஒரு கல்வெட்டு கிடைத்தாலும் தெளிவு கிடைத்துவிடும். (அவன் காலப்பாண்டிய அரசின் பரப்பில் 1/5 பகுதி மட்டுமேயான / எனது நெல்லை மாவட்டக் கல்வெட்டுகளில் இல்லாவிடினும் பிற பகுதிகளில் கிடைக்கலாமே) அப்படிக் கிடைத்தால் மார்க்கோபோலோவின் ‘செந்தர்பாண்டியை விட்டுவிடலாம்!. கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த விஷயத்தை நான் கைவிட விரும்பவில்லை. (ii) நெல்சன் கருத்துப்படி சமணரைக் கழுவேற்றிக் கொன்றவன் ஆகிய சுந்தரபாண்டி (அவனோடு பண்டையப் பாண்டிய அரசபரம்பரை ஒழிகிறது)யின் காலம் கி.பி.13ம் நூற்றாண்டு இறுதியே ஒழிய (நெல்சன் கருதுவது போல) 11ம் நூற்றாண்டு இறுதியாக இருக்காது. காரணம் பின்வருமாறு:- இராசேந்திரசோழனுக்குப் பின்னர்தான் சுந்தரபாண்டியன் வாழ்ந்திருக்க வேண்டும். ராசேந்திர சோழீஸ்வரம் கோயிலுக்கு சுந்தரபாண்டியனின் 32 ஆம் ஆண்டில் செய்த தருமம் பற்றிய கல்வெட்டின் படி (நகல்) என்னிடமே உள்ளது. (சர்.வால்டர் எலியட் இராசபரம்பரைப் பட்டியல்களின் படி இராசேந்திரன் ஆட்சி கி.பி.1112இல் முடிகிறது. அதாவது கி.பி.12ஆம் நூற்றாண்டு) இராசேந்திரசோழன் இறந்த பின் ஸசுந்தரபாண்டியன் காலத்துக்கு முன்னரே] மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறபடி குலோத்துங்க சோழனும் சோழநாடு மட்டுமின்றி பாண்டிய நாடு முழுவதையும் ஆண்டிருக்க வேண்டும். சுந்தரபாண்டியனுக்கு முன்னர் இன்னொரு பாண்டியனும் விக்கிரமபாண்டியன் (= விக்கிரம சோழ பாண்டி) பாண்டியநாட்டை ஆண்டது உறுதி நான் படியெடுத்துள்ள (சுந்தரபாண்டியன் காலத்துக்) கல்வெட்டு ஒன்றின்படி விக்கிரமபாண்டியனும் (= வி.சோ.பா) / வீரசோழன் இருவரும் சேர்ந்து கோயிலுக்கு கொடை வழங்கியிருக்க வேண்டும். ஸஇருவரும் இராசேந்திரசோழன் — சுந்தரபாண்டியன் இவர்களுக்கு இடைப்பட்ட காலத்தவர்கள்]. கி.பி.12ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த இராமானுஜர் காலத்துக்குப் பிந்தியவன் வீரசோழன் ஆவான். என்னிடமுள்ள சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் பலவற்றில் அவன் வைணவக் கோயில்களுக்கு தானம் செய்துள்ளான. அவற்றில் ஒன்றின் சாட்சிகளில் ஒருவர் பெயர் இராமனுஜதாசன். அப்பெயருடையோன் இராமானுஜர் இறந்து சில காலம் கழித்து வாழ்ந்திருந்தால்தான் ‘-தாசன் என்று பெயரிடப்பட்டிருக்கும். (இராமாயணமும், ராமன் தம்பி இலக்குவனை ‘ராமானுஜன் எனக் கூறுகிறது. நாம் கூறும் ராமானுஜதாசன் இலக்குவனுடைய தாசன் அல்லன்) சுந்தரபாண்டியன் கி.பி.11ஆம்நூற்றாண்டு பிற்பகுதியில் வாழ்ந்தான் என்று கூற்று மேற்சொன்ன சான்று களுக்கு முரணாக இருப்பதால் தவறு ஆகும். (iii) கடைசியாக இன்னொரு செய்தி. மேற்சொன்ன சுந்தரபாண்டியன் (கூப்ஜபாண்டியன் / கூன் பாண்டியன்) பெயர்தான் மதுரைத் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் கடைசிப் / பாண்டிய அரசன், எல்லா ஆதாரங்களும், பரம்பரைக் கூற்றுகளும் ‘சுந்தரன் காலத்துக்குப்பின் அராஜக காலம் தொடங்கியது’ என்றும் பல முகமதிய அரசர்கள் மதுரைப் பகுதியை ஆண்டனர் என்றும் கூறுகின்றன. எனவே முகமதிய வரலாற்றாசிரியர்கள் கூறும் சுந்தரபாண்டியர் இருவரில் ஒருவன் மார்கோபோலோ சுட்டும் செந்தர்பாண்டி எனலாம். 23. (i) முகமதியர் வரலாறுகள் சுட்டும் 2 சுந்தரன்களில் முதலாமவனைப் பற்றி அவை கூறும் செய்திகள் ‘போலோவின் செந்தர்பாண்டி அவன்தான், எனக் கருத இடம் தரவில்லை. வாசாப் சுட்டும் (1310இல் டெல்லிக்கு ஓடிய) சுந்தரபாண்டிஐஐ-ஐ விட்டு விட்டுப்பார்த்தால் மார்க்கோபோலோ கூறும் -4 சகோதரர்களில் ஒருவன் ஆன (1293இல் இறந்த) சுந்தர பாண்டியன்தான் போலோவின் செந்தர் பாண்டி (1292இல் பாண்டிய நாட்டை ஆண்டவன்) எனலாம். அந்த சுந்தரனும் கல்வெட்டுகளின் சுந்தரனும் ஒருவன் என நிறுவ முடியாதா? முடியும் என்கிறேன். நான் முகமதிய வரலாற்றாசிரியர் இருவர் எழுத்துக்களின்படியும் 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் ஆண்ட ஒரு சுந்தரபாண்டியன் அவன்தான் தேவர் னுநறயச - அதாவது மாபர் ஸபாண்டிய சோழநாடுகளைச் சேர்த்து அராபியர் தென்னாட்டை அவ்வாறு அழைத்தனர்] நாட்டின் பெருந்தலைவன் டுடிசன ஞயசயஅடிnவெ ஆவான் பாண்டிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவனவன் கை ஓங்கி இருந்த 4 அல்லது 5 பாண்டிய சகோதரர்களில் அவனும் ஒருவன்தான் எனினும் தேவர் எனப்பட்டவன் அவன் மட்டுமே, அவனுடைய செல்வம் அளவற்றது ஐஅஅநளேந றநயடவா. அவன் சகோதரர்களையும் போலோ ‘அரசன் மiபே என்று அழைக்கிறார். அவனை மட்டுமே செந்தர் பாண்டி என்று அடையோடு அழைத்து முடிசூட்டிய மன்னன் ஊசடிறநேன மiபே அவனே எனச் சுட்டுகிறார். (ii) சில முக்கியமான அம்சங்களில் அவன்தான் ஆகப்பெரியவன் ளுரயீசநஅந. சுந்தரன் கல்வெட்டு எதிலும் அவன் தன் சகோதரர்களைச் சுட்டுவதும் இல்லை. சகோதரர்களுடன் இணைந்து ஆட்சி நடத்துவதாகக் கூறுவதும் இல்லை. ‘தானும் அவர்களும் எய்திய அரசநிலையானது பரம்பரை உரிமையால் வந்தது’ என்பதனால்தான் அரசுரிமையை கைப்பற்றியதாக யஉளூரசைநன எனக்கூறுவதுமில்லை. (iii)ஆனால் (ii)இல் குறித்தவற்றையெல்லாம் எந்த அரசனும் தனது கல்வெட்டுகளில் குறிப்பிடமாட்டான். கல்வெட்டு வாசகங்களோ, கர்ணபரம்பரைக் கதைகளோ ‘செந்தர் பாண்டி தேவர் உடைய சகோதரர்களும் சிற்சில பகுதிகளை ஆண்டு வந்திருக்க வேண்டும் என்பதைப் பொய் யாக்கிவிடமாட்டார். ஒரு வழக்கம் / ஆசாரப்படி ஒருவன் மட்டுமே பாண்டி தேவர் (ஞயனேi டுடிசன ஞயசயஅடிரவே) என்று அழைக்கப்பட்டு கல்வெட்டுகள் அனைத்தும் அவன் பெயரில் செதுக்கும் மரபு இருந்திருக்கும். இது ஒன்றும் பிரச்னைக் குரியதல்ல. (iஎ) செந்தர்பாண்டி மன்னன் இந்தியாவின் மிகச்சிறந்த மிகவளமிக்க பகுதியாகிய சோளி ளுடிடi-யையும் ஆண்டான் என்கிறார். போலோ ‘சோளி = தஞ்சை நாடு அதாவது சோழ நாடு என்று கர்னல் யூல் லுரடந சரியாக அடையாளம் கண்டுள்ளார். அவர் கூற்று நான் மேலே ஆய்ந்து நிறுவியுள்ளது போல ‘செந்தர் பாண்டி ஸ்ரீ கல்வெட்டுகள் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் என்ற முடிவுக்கு வலு ஊட்டுவது ஆகும். காரணம் ‘சுந்தரபாண்டியன் என்று மட்டும் வரும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையைவிட ‘சுந்தரசோழ-பாண்டியன் என்று வரும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையே அதிகம். பின் சொன்னவை அவன் சோழநாட்டை வென்று அங்கு சோழ மன்னனாகவும் தன்னை முடிசூட்டிக் கொண்டான் எனக் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் முக்கிய மான செய்தி சோழ நாடு மட்டுமன்றி பாண்டிய நாடாகிய மதுரை, திருநெல்வேலி அவை இரண்டிலிருந்தும் கால்டுவெல் காலத்திற்குப் பின்னர் பிரிக்கப்பட்ட இராமநாதபுரம் ஆகிய கரையோர மாவட்டங் களையும் ஆண்ட மன்னன் செந்தர் பாண்டி என்பதை “அவன் நாட்டில்தான் முத்துக்குளிப்பு நடந்தது” என்று தெரிவிக்கும் ஆதாரங்களிலிருந்து உணரலாம். (எ) சுந்தரபாண்டியன் அரசவையில் முகமதியர் செல்வாக்கு இருந்தது கூறப்பட்டுள்ளது. ‘சுந்தரனை அடுத்து முகமதிய சுல்தான் ஆட்சி என ரஷித்-உதீன் கூறுகிறார். ரஷித்;, வசாப் றுயளயக இருவரும் சுந்தரனிடம் முகமதிய மந்திரியும் இருந்தான் எனக் கூறுகிறார். துர் நெல்சன் மதுரைப் பகுதிக் கையேடு ஆயனரசய ஊடிரவேசல ஆயரேயட தரும் கல்வெட்டு ஒன்று ‘கூன்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்ட சுந்தர பாண்டியன், மதுரையில் முகமதிய மசூதி ஒன்றுக்கு நிலம் தந்திருந்ததை கி.பி.1573இல் வீரப்ப நாயக்கன் மீண்டும் உறுதி செய்ததாகக் கூறுகிறது. ஆக சுந்தரபாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் முகமதிய ஆதிக்கம் தொடங்கிவிட்டது என்பது உறுதியாகிறது. அந்தக்காலத்தில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முதலில் ஒரு இஞ்ச் அளவில் தொடங்கினாலும் வெகுவிரைவில் ஒரு முழத்தைக் கைப்பற்றும் வேகத்தில் முகமதியர் ஆதிக்கம் பரவி வந்தது என்பதை வரலாற்றிலிருந்து அறிகிறோம். எனவே பண்டையப் பாண்டிய மன்னர் பரம்பரையில் கடைசி மன்னன் சுந்தரபாண்டியன்தான் என்று ஆகிறது; எனவே பாண்டியர் குலம் வீழ்ந்ததும் மதுரைப்பகுதி முழுமையும் முகமதியர் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது என்று பொதுவாக வழங்கும் செய்தி வியப்பல்ல. (எi) ஆக சுந்தர (கூன்) பாண்டியன் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் என்பது ஆச்சரியப்பட வைக்கும் கூற்றாகவும், 13ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்தான் என்பது நம்;பகமான கூற்றாகவும் அமையும். மேலும் உணர வேண்டியது பாண்டிய நாட்டின் எப்பகுதியில் காணும் கல்வெட்டுகளும் ‘ஆண்ட மன்னனாக கூறுவது ஒரே சுந்தரபாண்டியனையே; அவனை விவரிக்கும் சொற்றொடர்களும் ஒன்று போலவே உள்ளன. எனவே அனைத்தும் சுட்டுவது ஒரே சுந்தர பாண்டியனையே சொற்றொடர்களும் ஒன்று போலவே உள்ளன. எனவே அனைத்தும் சுட்டுவது ஒரே சுந்தரபாண்டியனையே. எ.கா.நெல்சன் சுட்டும் நீண்ட மதுரைக் கல்வெட்டு ஒன்றில் 1,2,3,4,5,6 எண்களைக் கொண்டு சொல் விளையாட்டு ஒன்று உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் திருக்கோளூர் கல்வெட்டிலும் அது சுருக்கமாக உள்ளது. இப்படி ஒரு குடைக்கீழ் இரு நாடுகளை (பாண்டிய, சோழ) ஆள்பவன், மூன்று தமிழை வளர்ப்பவன், நான்கு வேதம் போற்றுபவன், ஐந்து வகை வேள்விகள் செய்பவன், ஆறு சமயங்களின் பாதுகாவலன் என்கின்றது. மதுரைக் கல்வெட்டு 8 வரைச் செல்கிறது. (எii) சுந்தரபாண்டியன் பல வருடங்கள் ஆண்டிருக்கிறான். அவன் ஆட்சியின் 32ஆம் ஆண்டில் ராஜேந்திரசோழேஸ்வரன் கோயிலில் ஒரு தானம் செய்திருக்கிறான். சைவ மறுமலர்ச்சிக் காலம் ஆகையால் அத்தகைய கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளமை வியப்பு அன்று. ஆக பின்வரும் காரணங்கள் அடிப்படையில் - அதாவது, அ) இப்பெயர் (சுந்தர) கொண்ட வேறு அரசன் எவன் பெயரிலும் எக்கல்வெட்டும் இல்லை. ஆ) இவனுக்கு முந்திய / பிந்திய அரசர்கள் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இ) முகமதிய வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி இவன் நீண்ட காலம் பாண்டிய நாட்டை ஆண்டிருக்க வேண்டும். (மாபார் ராச்சியம், துறைமுகங்கள், வாணிகம் முதலியவற்றை அவர்கள் வருணிக்கும் பொழுது சுந்தரனைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்கள். போன்ற காரணங்களால் ஸஆண்டு குறிப்பிடும் கல்வெட்டு யாதாவது, இதற்கு மாறான செய்தியைக் குறிப்பிடுவது இனிமேல் கிடைத்தால் ஒழிய] முகமதியர் கூறும் சுந்தரபாண்டி போலோவின் செந்தர் பாண்டி, கல்வெட்டுகளும், சைவ மறுமலர்ச்சி நூல்களும் குறிப்பிடும் செய்தி சுந்தர (கூன்) பாண்டியன் மூவரும் ஒருவரே எனக் கொள்வதற்கு யாதொரு தயக்கமும் தேவையில்லை. (இணைப்பு-ஐஐ ஆங்கில மூலத்தில் பக் 708-713-ம் காண்க. (4) வைணவ நூல்கள் ஓங்கிய காலம் 24. இராமானுஜர் வைணவக் கொள்கையைப் பின்பற்றிய ஆழ்வார்கள் பன்னிருவருடைய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்யப்பிரபந்தம் (பெரிய பிரபந்தம்) ஆனது மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் முதலிய சைவ நாயன்மார்கள் எழுதிய பாடல்களைவிட அதிகப் பாடல்களைக் கொண்டது. சமய உணர்விலும் கவி நடையிலும் தேவார சைவப்பாடல் களுக்குக் குறைந்தவை அல்ல அவை. தேவாரத் தொகுப்பையும் திருவாசகத்தையும் சேர்த்து ‘தமிழ்மறை, எனச் சைவர் வழங்குவது போல, வைணவரும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை குறிப்பாக பெரியதிருமொழி, திருவாய்மொழி ஆகிய பகுதிகளை தமிழ்வேதம் என வழங்குகின்றனர். 25.(i) சைவ நூல்களின் காலங்களை வரையறுப்பதை விட வைணவ நூல்களைக் காலவரையறை செய்வது கடினம். காரணம் வைணவ நூல்களில் காலக்குறிப்பு தரும் செய்திகள் இல்லை. ஸஇக்குறைபாடு தமிழ் இலக்கியங்கள் ஏறக்குறைய அனைத்திலும் உண்டு, ஏனைய பிறமொழி இந்துசமய இலக்கியங்களிலும் உண்டு]. (ii) இராமானுஜர் ஹொய்சள அரசன் விஷ்ணுவர்தனனை (ஞநனனயவய) சமண மதத்திலிருந்து வைணவத்துக்கு மாற்றிய செய்தியிலிருந்து அவரது காலம் தெளிவாகத் தெரிகிறது. “சுந்தரபாண்டியன் சமணத்தைக் கைவிட்டு சைவத்துக்கு வரச்செய்த” ஞானசம்பந்தர் தேவாரமும் அவர் காலத்தைத் தோராயமாகக் காட்டுகிறது. ஆனால் 12ஆழ்வார்களும் அப்படி பெரிய நபர்களை வைணவத்துக்கு மாற்றியதாகச் செய்தியில்லை. பன்னிருவரும் இராமானுஜருக்கு சில பல தலைமுறை பிற்பட்டவர்கள் என்று மட்டும் உன்னிக்க இயல்கிறது. (சிலர் இராமானுஜரையே பாடல்களில் குறிப்பிடுகின்றனர்) பின்வருமாறு காலவரையறை செய்வதில் பெருந்தவறில்லை எனலாம்; சம்பந்தர், அப்பர், சுந்தரர், தேவாரம், திருவாசகம் (மாணிக்கவாசகர்) - சுந்தரபாண்டியன் காலம், - நாலாயிரப்பிரபந்தம் - திருவாசக காலம் அக்கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதுமே சமயம் சார்ந்த மாற்றங்களும் இயக்கங்களும், சமயம் சார்ந்த ஆழ்ந்த பரபரப்பு iவேநளேந சநடபைiடிரள நஒஉவைநஅநவே இருந்ததாகத் தெரிகிறது. சைவ/வைணவப் பிரிவு நாயன்மார்/ஆழ்வார்களில் சிறந்தவர் ஒருவர் இயற்றும் பக்திப்பாடலின் தாக்கம் அவ்வளவு (புலமை/ஞானச்) சிறப்பு இல்லாத பிறரையும் அவ்வாறே கவி இயற்றத் தூண்டியிருக்குமல்லவா? சைவ நூல்களும் வைணவ நூல்களும் முறையே வைணவ சைவ நூல்களைக் குறிப்பிட்டு ஏதும் சொல்வ தில்லை. ஆயினும் இருவகை பக்திப்பனுவல்களையும் எழுதிய பலரும் ஒருவருக்கொருவர் சம காலத்தவராய் இருந்திருக்க வேண்டும்; ஆனால் தமக்குப் போட்டியான சமய நூலையோ அதனை எழுதியவரையோ குறிப்பிடாமல் தவிர்த்துள்ளனர்!. (இங்கிலாந்தில் ஜான் மில்டனும், ஜெரெமி டேலரும் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் - முன்னவர் அக்கால மாபெரும் கவிஞர் பின்னவர் மாபெரும் அக்கால உரைநடையாசிரியர். முன்னவர் புராடஸ்டெண்டுகளில் தீவிரக் கொள்கையர் ஞரசவையn. பின்னவர் இங்கிலாந்து புராடஸ்டெண்டு சர்ச் சமயத்தை அப்படியே பின்பற்றியவர், இவ்விருவரும் அடுத்தவரும் தம் காலத்தில் வாழ்ந்தவர் என்று எங்கும் குறிப்பிட்டதேயில்லை (குறிப்பிட நியாயமான சூழல் இருந்தும்)! இங்கிலாந்தில் கி.பி.17ம் நூற்றாண்டில் (அடிப்படையில் யாதொரு பெரிய முரண்பாடும் இல்லாத ஞரசவையn-களுக்கும் ‘ஆங்கில புராடஸ்டண்ட் சர்ச் கொள்கையை அப்படியே பின்பற்றியவர்களுக்கும் இடையில் அப்படிப்பட்ட மாச்சரியம் இருந்தபோது, பல நூற்றாண்டுகள் முன்னர் தமிழ்நாட்டில் சமகாலத்தில் வாழ்ந்த சைவ, வைணவ புலவர்களும் அப்படிப் பட்ட மாச்சரியம் காரணமாக — சைவத்துக்கும் வைணவத்துக்கும் பொதுவான கோட்பாடுகள் இல்லை என்ற அடிப்படையில் ஒரு பிரிவினரை மற்றப்பிரிவினர் தமது பார்வையிலிருந்து வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதில் என்ன வியப்பு. 5. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கால நூல்கள் 26. (i) சுமார் 200 ஆண்டுகள் தமிழ் இலக்கியத்தில் எந்தக் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகளும் உருவாகவில்லை. குறிப்பிடத்தக்க புலவருமில்லை. அதன்பின்னர் உருவான புலவர் குழாத்தின் தலைவன் அதிவீரராம பாண்டியன். அவன் புலமைத் திறமிக்க சிறந்த பல நூல்களை எழுதினான். ஆனால் அவை ஆழ்ந்த கவித்துவச் சிறப்புடையவை அல்ல யn நடநபயவே யனே யீசடிடகைiஉ றசவைநச,றiவாடிரவ அரஉh டிசபைiயேட பநnரைள. இடைக்காலத் தமிழகத்தின் மாபெரும் இலக்கியங்களான சீவகசிந்தாமணி மற்றும் முந்திய சங்க காலப்பனுவல்கள் போன்றவற்றின் காலத்தை மீண்டும் உருவாக்குவது அவன் நோக்கமாக இருந்துள்ளது. அவனுடைய நூல்கள் வருமாறு:- (1) நைடதம்: அவன் நூல்களில் புகழ்பெற்றது நளன் கதையை 1100 பாடல்களில் கூறுகிறது. செய்யுள் நடை அலங்காரம் மிகுந்தது, பல செய்யுள்கள் மிகுந்த காமச் சுவையுடையவை. (2) காசி காண்டம்: கந்தபுராணத்தில் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில் தனி நூல் ஆகும். (3) ரூ (4) சமஸ்கிருதத்தில் உள்ள லிங்க, கூர்ம புராணங்களின் தமிழாக்கம் இந்நூல்கள் பாராட்டப்படுகின்றன. (5) வெற்றி வேற்கை: நல்லொழுக்கம் பற்றியது: அவனுடைய தனிச்சிறப்பான சிந்தனையை டிசபைiயேடவைல காட்டும் வகையில் எழுதியது. நூலின் தொடக்கத்தில் தன் பெயரையும் தருகிறான். தமிழ் இலக்கியத்தில் இது புதுமை ஆகும். (ii) இக்காலம் சார்ந்த வில்லிபுத்தூரார் பாரதம் மகாபாரதத்தின் தமிழாக்கம்; பெரும்பகுதி வில்லிபுத்தூரார் செய்தது. கம்பராமாயணம் அளவுக்கு இது புகழ் பெறாவிட்டாலும் மிக நயமான தமிழ் நூலாகக் கருதப்படுகிறது. (iii) பல துறை சமஸ்கிருத நூல்களின் தமிழ்ப்பெயர்ப்புகள். பின்வருவன இவை இக்கால நூல்களாகக் கருதத்தக்கவை. எ.கா. 1) பெரும்பாலான புராணங்கள் 2) வேதாந்த / சைவசித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் ஆழமான தத்துவ நூல்கள் ஜசில சமஸ்கிருத மூலங்களில் இருந்து பெயர்த்தவை. சில அம்மூலங்களைப் பார்த்து எழுதியவை. எ.கா. ஞானவாசிட்டம் (தமிழில் வேதாந்தம் பற்றிய தலைமையான நூல்) மற்றும் ஆகம (சைவசித்தாந்த) சமயங்களை அதிகாரப் பூர்வமாக விளக்கும் சிவஞானபோதம், முற்சொன்னதின் உரையான சிவஞான சித்தியார் இவை குறிப்பாகச் சொல்லத் தக்கவை. 3) இன்று வழங்கும் (சித்த) மருத்துவ நூல்களில் பெரும்பான்மையானவை. 4) மிகப்பிற்காலத்தில் எழுதிய இழிவான காமச்சுவை நூல்கள். 5) தமிழ்ப்புலவர்களில் (மிகுபுகழ் பெறாத) புலவர்கள் அinடிச யீடிநவள எழுதிய நூல்கள். ஸதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் (?) எழுதியனவாகக் கூறப்படும் நூல்களில் சில உட்பட]. மொத்தத்தில் இக்கால நூல்களில் பெரும்பாலானவை சமஸ்கிருத நூல்கள் (அல்லது அவற்றின் சிறந்த பகுதிகளின்) தமிழாக்கங்கள்; ஒழுக்கம் நன்னெறி கூறும் வாசகங்களின் தமிழ் வடிவங்கள்; வறட்டுக் கவித்துவத்தை மட்டும் காட்டும் செய்யுள்கள்; ஆகியவைதாம். அதுவரை வெளிவராத புதிய சிந்தனையைக் காட்டும் நூல்கள் இவற்றுள் மிகச்சிலவே. 27.(i) அரசப்புலவன் ஆன அதிவீரராமபாண்டியனே கற்பனையில் உருவானவன் என்பர் சிலர். பாண்டிய நாட்டு வரலாறு சார்ந்த கர்ணபரம்பரைச் செய்திகளில் அவன் பெயர் இல்லை. ‘உண்மையில் ஆண்டுவந்த (பாண்டிய மன்னர் பரம்பரை சார்ந்த) சிற்றரசன் அவன் என்றால் அவனே புலவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை. புலவர்களை ஆதரித்துப் பல நூல்கள் தமிழில் புதிதாக வர வழி செய்த வள்ளல்தான் என்ற கருத்தும் உண்டு. தன் அவை சார்ந்த சமஸ்கிருத / தமிழ்ப் புலவர்களிடம் இருந்து நீண்ட சமஸ்கிருத புராணங்களைத் தமிழாக்க உதவி பெற்றிருக்கலாம்; ஆனால் இதுபற்றி உறுதியாகக் கூற இயலாது. பல நூல்கள் அவன் எழுதியதாகக் கூறப்படு கின்றன. தமிழ்ப்புலவர் மெச்சும் மிகச்சிறந்த நயமான ளரஉh நஒளூரளைவைந வயளவந நூல்களை - இந்த இந்து சமய மன்னனே எழுதியிருந்தா லொழிய அவன் எழுதியதாகக் கூறியிருக்கமாட்டார்கள் எனலாம். இது கிடக்க, இச்சிறந்த அரசன் இருந்தான், ஆண்டான் என்பது உறுதி. ஆனால் அக்காலத்தில் ஆண்ட தமிழக அரசர்கள் / சிற்றரசர்கள் பெயர்களில் அவன் இல்லை என்பதற்குக் காரணம் ‘அதிவீரராம பாண்டியன் என்பது அவன் வைத்துக் கொண்ட புனைபெயராக இருக்கலாம். உண்மைப் பெயர் வல்லபதேவன் ஆகலாம். வல்லப தேவன் பெயரில் காலக்குறிப்பு இல்லாத கல்வெட்டுகளே பல. (ii) ஆனால் கடைசியாகத் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு முக்கியமான ஒரு சமஸ்கிருத கிரந்தலிபி கல்வெட்டை குற்றாலம் கோயில் உட்சுவரில் கண்டேன். அது தனது ஆட்சியின் 40வது ஆண்டில் ‘அதிவீரராமபாண்டியனான வல்லபதேவன் ஏயடடயbhய னுநஎய றாடி ளை ‘அதிவீரராமன் செதுக்கியது ஆகும். மேற்சொன்ன சிறந்த இலக்கியங்களைப் படைத்தவன் இவனே. (அக்கல்வெட்டு அவனை இசை, கலைகளிலும் ஆரளiஉ யனே நெடடநள டநவவநசள வல்லவன் என்றும் சுட்டுகிறது) வல்லபதேவன் ஆட்சி ஆண்டு 40 என்பது சக வருடம் 1527 (கி.பி.1605) ஆக அவன் ஆட்சிக்கு வந்தது கி.பி.1565 அவனுடைய முன்னோர்கள் வருமாறு:- பராக்கிரம பாண்டியன் (ஆட்சி 1516 - ) (காசிகண்ட) காசியாத்திரை செய்த விக்கிரமபாண்டியன் (ஆட்சி 1543- ) அதிவீரராமபாண்டியன் (ஆட்சி 1565 - ) (ஆட்சி ஆண்டுகள் கல்வெட்டுகள் தருபவை) (iii) இம்மூவர் ‘ஆட்சியதிகாரம்’ எல்லாம் பெயரளவில்தான் nடிஅiயேட ஆகத்தான் இருந்திருக்கும்! 1550-ஐ ஒட்டி சோழனை அடக்கவருமாறு விஜய நகரப் பேரரசின் மன்னனை ஒரு பாண்டியன் (மடத்தனமாக) வேண்டிக் கொண்டதால் விஜயநகர அரசன் தமிழ்நாட்டிற்கு படையுடன் விடுத்த தளபதி ஒருவன் பாண்டிய அரசுக்கே உரிமை கோரி சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தானே (முதலில் சோழ பாண்டிய நாடுகளின் பெரும்பகுதியையும் விரைவில் முழுவதையும் - விஜயநகரப் பேரரசனைக் கண்டு கொள்ளாமலே ஸபெயரளவுக்கு அப்பேரரசனுக்கு கீழ்பட்டபவன் தான்] பாண்டிய, சோழ நாடுகளையும் சேர நாட்டின் பகுதி களையும் (நாயக்கர் பரம்பரை ஆக) ஆளத் தொடங்கிவிட்டான். (iஎ) மேற்சொன்ன குறிப்பிடத்தக்க நயமான தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அதிவீரராமபாண்டியன் (பெயரளவு ஆதிக்கத்தில் இருந்த) மிகச்சிறிய பகுதியில் அவன் ஆட்சி காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எழுதியதாக நான் கருதவில்லை. சில அவனுக்கு முன்னரும், சில பின்னரும் எழுதப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக ‘அதிவீரராமன் காலத்தில்’ எனலாம். அவன் தமிழ்ப் புலவர்களையும் தமிழ்ப் புலமையையும் போற்றி ஆதரித்தவன்; அக்காலப் புலவர்களில் மிகச்சிறந்த புலவர்களுள் அவனும் ஒருவன் என்லாம். மதுரைத் திருவிளையாடல் புராணம் (சமஸ்கிருதத்தில் எழுதியதை) அவன் தமிழாக்கம் செய்வித்தான் என்பர். அப்படி வேறு சில தமிழாக்கங்களையும் செய்திருக்கலாம். ஸஇவ்வாறு ‘சமஸ்கிருத மூலம் — தமிழாக்கம் எனக் கருதப்படும் - தமிழ், தமிழர், தமிழகம் சார்ந்த - பிற்கால நூல்களில் பல முதலில் தமிழ் எழுதப்பட்டு சில காலம் வழங்கிய பின்னர் ‘புனித’மொழியாகிய சமஸ்கிருதத்தில் அவற்றையே பெயர்த்து எழுதி அவற்றை சமஸ்கிருத மூலத்தின் பெயர்ப்பு என விரகாகச் சுட்டியிருக்கலாம் என்பது வி.கே.சூரியநாராயண சாஸ்திரி, மறைமலையடிகள் முதலியவர்கள் கருத்து ஆகும்]. 6. பிராமணிய விரோதமான ஹவேi-க்ஷசயாஅயniஉயட சித்தர் பாடல்கள் போன்றவற்றின் காலம்; 28.(i) இதற்கு முந்தைய காலவறையரைகள் யாதொன்றிலும்; உறுதியாகச் சேர்க்க இயலாதவற்றை (சித்தர் பாடல் வகையின வற்றை) இப்பிரிவில் காண்போம். அவை ஒவ்வொன்றையும் உண்மையில் எழுதிய காலம் எதுவாயினும், பொருள் அடிப்படை யிலும் தமிழ்நடை அடிப்படையிலும் முன்கண்ட 5-இல் எப்பிரிவிலும் அவற்றைச் சேர்க்க இயலாது. தமிழில் சித்தர் எனப்பட்ட தமிழ்ப்புவர் (ளுனைனாய = ளயபநள) (அறிவர், மருத்துவர், பிறதுறை வல்லார் உட்பட) சிவனைக் கடவுள் பெயராக வைத்துக் கொண்டு, தமது (அவரவர்) யீரசந வாநளைஅ இறைக் கோட்பாட்டுக்கு இசையாத சைவக் கொள்கை அனைத்தையும் ஒதுக்கிட் தள்ளியவர்கள். (ii) அராபியர்களைப் போல சித்தர்களும் ரசாயனத்தை (அரபுமொழியில் ‘யடஉhநஅல - ஐரொப்பிய மொழிகளில் ‘ஊhநஅளைவசல மும்முரமாக ஆராய்ந்தவர்கள், அராபியர்களிடமிருந்து ரசாயனம் சார்ந்த செய்திகளைக் கற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒரு சித்தர் அரேபியா போய் வந்தார். இன்னொருவர் குசயமே இனத்தவரைக் ஸபிரெஞ்சு நாட்டவர் பொதுவாக வெள்ளை ஐரோப்பியர்] குறிப்பிடுகிறார். தென்னிந்தியா சித்தர் உட்பட முகமதியரை துரு(லு)க்கர் என அழைத்தனர். சித்தர் பாடல்கள் எல்லாமே தற்கால (19ம் நூற்றாண்டு) நடையினவை. பேச்சுநடை, கொச்சைச் சொற்கள் இவை அதிகம். முந்தையப் புலவர்களின் தமிழ் இலக்கணக் கட்டுப்பாடுகளை மீறிய சொல்லாட்சிகளும், செய்யுள் வடிவங்களும் பல முந்தைய தமிழ் இலக்கிய நயமும் செம்மையும் ஊடயளளiஉயட சுநகiநேஅநவே இல்லா விட்டாலும், சித்தர்கள் தமது கொள்கைகளையெல்லாம் முழுமையாக நம்பி அவற்றைக் (குறிப்பாகப் படிப்பறிவில்லாத பாமர மக்களிடம்) பரப்ப முயன்றனர். (iii) மேற்சொன்னவற்றை அவர்கள் செய்தது தவறல்ல. ஆனால் அவர்கள் செய்த மற்றொரு காரியத்தை நல்லறிஞர் ஏற்க இயலாது. சித்தர்களுள் பலரும் ரிஷிகள், முன்னர் வாழ்ந்த சிறந்த தமிழ்ப்புலவர்கள் / அறிஞர்கள் / ஆசாரியர்கள் பெயர்களைத் தங்களுக்கு சூட்டிக்கொண்டு எழுதலாயினர். அகத்தியர், கபிலர், சங்கராச்சாரி, கௌதமன், திருவள்ளுவர்; இவர்கள் பெயர்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டு எழுதலாயினர்! இந்த அக்கிரமம் யரனயஉவைல பரவலாக ஏற்கவும் பட்டதுதான் வியப்பாகும். இன்று (1850கள்) சித்தர்கள் தொன்மையானவர்கள் என (பாமரர் பலரும்) ஏற்கின்றனர். அச்சித்தர்கள் காலமும் முடிந்துவிட்டது. விவரம் தெரியாதவர் பலரும் இவர்கள் படைப்புகளைப் பழங்காலத்தவை எனத் தவறாகக் கருதுகின்றனர். தமிழ்க் கிறித்தவர் சிலர் இச்சித்தர்கள் தீர்க்கதரிசிகள், “சித்தர்கள் அடிக்கடி கூறும் சத்குரு (வசரந வநயஉhநச) இயேசு கிறிஸ்துவே” என்றெல்லாம் தவறாக நம்புகின்றனர். சித்தர்களுக்கு ஓரளவு கிறிஸ்தவர் கொள்கைகள் தெரியும். ஆயினும் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டனவற்றை இனிவரப் போவதாகப் (பண்டைய ஐரோப்பிய சிபில்கள் ளுலbடைள போல) பாடிவிடுகின்றனர்! (iஎ) கொங்கண சித்தர் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் பாட்டு வருமாறு. ஸஅகத்தியருடைய சீடர்கள் என்று கற்பனையாகக் கூறப்படுபவர்களில் ‘கொங்கணர் ஒருவர் ஐரோப்பாவிலிருந்து முதலில் வந்த கிறித்துவப்பாதிரியார்கள் முதலில் வந்து தங்கிக் கிறித்தவத்தைப் பரப்பிய இடம் கொங்கணம் ஆகையால் தந்திரமாக ‘கொங்கணர் என்ற பெயரில் எழுதியிருக்கலாமெனத் தோன்றுகிறது. (பாடலின் கூற்றுகளில் பல கிறித்துவ மதத்தைத்தான் சுட்டுகின்றன என்பதில் ஐயமேயில்லை)]. (எ) அடுத்து ‘திருமூலர் பாடல் ஒன்று வருமாறு:- (அகத்தியர் சீடர்களில் ஒருவர் பெயரும் திருமூலர்) சிவனடியார் 63வரில் ஒருவர் பெயரும் திருமூலர் என்கிறது திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்). திருமூலர் திருமந்திரம் நூலிலுள்ள பின்வரும் பாடல் கடவுளும் அன்பும் ஒன்றே என வலியுறுத்துகிறது. ‘அன்பும் சிவமும் வேறு என்பர் அறிகிலார் அன்பும் சிவமும் ஒன்றென்பதறிகிலார் அன்பும் சிவமும் ஒன்றென்பது அறியின் அன்பையே சிவம் என்று அமைவர்’ இப்பாடற்கருத்து முழுக்க கிறித்துவசமயக் கருத்து ஆகையால் இதனை அந்த திருமூலநாயனார் எழுதியிருக்க வாய்ப்பில்லை. (எi) பத்திரகிரி சார்ந்த பத்திரகரியார் ‘புலம்பல் டயஅநவெயவiடிளே என்ற பெயரில் 200 பாடல்கள் எழுதியுள்ளார். சித்தர்கள் பிராமண சமயத்தை வெறுப்பதைக் காட்டும் எடுத்துக்காட்டாக ஒரு ‘புலம்பல்; ‘சாத்திரத்தைச் சுட்டுச் சடங்கை வழக்கறுத்துச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவது எக்காலம்? (எii) சித்தர் பாடல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பின்வருவன சிவவாக்கியம் றுடிசனள யbடிரவ ழுடின என்ற நூலில் உள்ளன. (நூலின் பெயரால்) ஆசிரியரையும் சிவவாக்கியர் என்றே அழைக்கின்றனர். ‘கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணை மோர்புகா, உடைந்த சங்கும் ஒலிதரா, நீத்த உயிரும் உடல்புகா, காய்ந்த இலையும் வீழ்ந்தபூவும் மரம்புகா, மாய்ந்த மனிதனுக்குமிலை மறுபிறப்பே!! (எனது மகன் சு.ஊ.கால்டுவெல் மேற்கண்ட பாடல்களை ஆங்கிலப்படுத்தி ஐனேயைn ஹவேiளூரயசல (பம்பாய்) 1872 ஏப்ரல் இதழில் வெளியிட்டுள்ளான். அப்பாடலை குரோவர் எழுதிய குடிடம ளுடிபேள டிக ளுடிரவாநசn ஐனேயை நூலும் தருகிறது) 29. சித்தர் பாடல்களை கி.பி.17ம் நூற்றாண்டு (1601-1700) சார்ந்தவை என நான் கருதுகிறேன் — அவற்றின் கருத்தையும் நடையையும் கருதி. ஆனால் இப்பாடல்களை எழுதிய கருத்தோட்டம் கொண்ட புலவரும் எவரும் இன்று ஸ19ம் நூற்றாண்டில்] இல்லை என்பதைக் கருதும்பொழுது அவர்களை 17ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்வதே பொருத்தமாகும். ஸநம் காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை பிரம்ம சமாஜத்தினர் கொண்டுள்ளனர்]. அவர்களில் சிலர் நல்ல தமிழ் உரை நடையில் தங்கள் (அரைக் கிறித்தவம் என்று கூறத்தக்க) தங்கள் கோட்பாட்டைப் பற்றி எழுதி வருகின்றனர். 7. நவீனகால இலக்கியங்கள் 30.(i) இத்தலைப்பில் 18, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி பார்ப்போம் —17ஆம் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்த ஒரு சிலர் உட்பட இக்கால நூல்கள் பொதுவாக சிறந்த தரமானவையாக இல்லை பநநேசயடடல டிக டவைவடந டிக சநயட எயடரந எனினும் ஏராளமானவை உள்ளதற்குக் காரணம் முன் காலத்தைவிட நிறைய நூல்களை எழுதியமை அல்ல! மக்கள் முயன்று ‘படி எடுத்துக் காப்பாற்ற விரும்பாத’ தரக்குறைவான அநனiடிஉசந படைப்புகள் செல்லரித்து இதுவரை ஒழியாததால் தான்!! 31. இக்கால நூல்களில் புகழ் பெற்றது (கன்னடத்தில் எழுதிய) பிரபுலிங்க லீலையின் சிறந்த தமிழாக்கமாகும். வீரசைவ (ஜங்கம = லிங்காயத்து) பிரிவினரின் புனித நூலாகும். இன்னொன்று நீதிநெறிவிளக்கம் என்னும் சிறு நூல்; பள்ளி மாணவர்கள் பரவலாகப் பயில்வது. இவை இரண்டும் 17ஆம் நூற்றாண்டு இறுதிக்காலத்தவை. பட்டணத்துப் பிள்ளை பாடல்களும் இக்காலத்தனவே. 32.(i) பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதியவையும், இன்றும் பரவலாகப் பயிலப்படுவனவும், ஆன இரண்டு நம்காலப்புலவர் (ஒருவர் தமிழர், மற்றவர் வெள்ளையர்) சிறந்த படைப்புகளுக்கு நாம் முதலிடம் தந்தாக வேண்டும். ஒருவர் தாயுமானவர் (hந றாடி நெஉயஅந ய அடிவாநச யடளடி) திருச்சிராப்பள்ளியில் வழிபடப்படும் சிவனுடைய பெயரைத் தாங்கியவர், சிவன் மேல் பக்தி மிக்கவர், அவர் பாடல்களில் கிறித்தவ சமயக் கொள்கையின் சிறு சாயல் தெளிவாகத் தெரிவதாக நம்பப்படுகிறது. கிறித்தவ சமயக் கொள்கைகளை அறிய அவருக்கு வாய்ப்புகள் இருந்ததாகத் தெரிகிறது. அவ்வாறு ஆயினும் ஆக, ஆனால் அவர் பாடல்கள் ஆழந்த சமய (இறை) உணர்வும், அழகிய தமிழ்நடையும் கொண்டவை. (ii) மற்றவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி) தமிழரல்லர். கத்தோலிக்க இயேசு சபை ஊழியர், இத்தாலியர் அவர் தமிழில் (அதுவும் செந்தமிழில்) செய்யுளும் காவியமும் படைக்கும் அளவுக்கு அவர் பெற்றுள்ள ஆற்றலை எந்த ஐரோப்பியரும் இதுவரைப் பெற்றதில்லை. அவருடைய தமிழ் வசனநடை (பேச்சுவழக்கு நடை) பரவாயில்லையெனினும் மிகச்சிறந்தது அன்று. ஆனால் செந்தமிழில் பெஸ்கி படைத்த தேம்பாவணிக் காவியம் (சீவகசிந்தாமணியின் நடை போன்ற) சிறந்த காவிய நடையில் எழுதிய (கிறிஸ்தவ சமயம் சார்ந்த) பெருநூலாகும். இந்து சமய காப்பியங்களின் சிறப்பு அம்சங்களை ஒத்து தேம்பாவணிப் பாடல்கள் யாப்புச் சிறப்பு, சிறந்த அணிகள், ‘அந்தந்தப் பாடல் நவிலும் பொருளுக்கேற்ற ஓசை/தெளிவு நயம்’ இவற்றைக் கொண்டுள்ளன. சிறந்தவர்களும் நடுநிலை தவறாதவர்களுமான தமிழ்ப்புலவர்கள் பார்வையிலும் தேம்பாவாணிப் பாடல்கள் தமிழ்ப்புலவர்களில் இரண்டாம் நிலையில் போற்றப்படும் புலவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெஸ்கி பெறக்கூடியவர். முதல் இடம் மூன்று - நான்கு தமிழ் நூல்களுக்கு மட்டுமே. (குறள், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நாலடியார்) உரியது. இத்தகு சிறப்பை தமிழுக்கு முற்றிலும் அயலாரான ஐரோப்பிய மொழி பேசுநர் ஒருவர் பெற்றதை நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. (ய) தேம்பாவணி சிறந்த செய்யுள்களைக் கொண்டது. தமிழின் ஆற்றல்களை முழுவதும் கையாண்டு எழுதியது என்பதெல்லாம் உண்மையெனினும் பெஸ்கியின் படைப்பில் காணும் குறைகள் இரண்டு:- (க) தமிழின் முந்தைய காவியங்களின் தன்மை, செய்யுள் நடை இவற்றை அப்பட்டமாகப் பின்பற்ற முயன்றமை. (உ) இந்துசமயம் சார் தமிழரைக் கவர்வதற்காகவென்று, கிறித்தவ பைபிள் கூறும் செய்திகள், வாசகங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த ஊர் / இடப் பெயர்கள் இவைகளை யெல்லாம் இந்து/தமிழியப் பாங்காக மாற்றிக் கொண்டமை. (இ) இன்று இந்தியமொழிகளில் செய்யுளும் உரைநடையும் வகிக்கும் இடங்களை பின்வருவதிலிருந்தே அறியலாம் அதாவது பெஸ்கி காவியத்தையும் செய்யுளையும் பயில்வார் மிகச்சிலரே, ஆனால் அவருடைய தமிழ் இலக்கணங்களும், சதுரகராதியும் (இலக்கிய நடை அகராதி + சாதாரண நடை அகராதி) பெருமளவுக்குப் பயிலப்படுகின்றன. 33. பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் எழுந்த முதன்மையான தமிழ் இலக்கியங்கள், நாடகங்கள், கோயிற் புராணங்கள், பழைய நூற்களின் சுருக்கங்கள்தாம். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் முதன்மையானது நயமான தமிழ் உரைநடை உருவாகியுள்ளது தான். ஐரோப்பியத் தாக்கத்தால் நிகழ்ந்த இந்நிகழ்வால் வருங்காலத் தமிழ் இலக்கியப்படைப்புகளில் செய்யுளை விட உரைநடையே முதன்மை பெறக்கூடும். தமிழில் இம்மாற்றத்துக்கு வழிகோலியவர் (கயவாநச) சென்னைக் கல்லூரி ஊடிடடநபந டிக ஆயனசயள-இல் ஆசிரியராக இருந்த தாண்டவராய முதலியார்; அவர் பஞ்சதந்திரத்தைத் தமிழ் உரைநடையில் எழுதியவர். ஆவர் எழுதிய ஆற்றொழுக்கான, சிறந்த — ஆயினும் நன்கு எளிதில் புரியக்கூடிய — தமிழ்நடையைப் பின்பற்றி இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றின் உரைநடைத் தமிழாக்கங்களும் வெளி வரலாயின. 34. மேற்படி காலகட்டத்தில் மலையாள மொழியிலும் இவைபோன்ற நூல்கள் எழுதப்பட்டன என்று குந்தர்த் ழுரனேநசவ கூறுகிறார். (ஹைதர் அலி மலையாளத்தின் மீது படையெடுப் பதற்கு முன்னர்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிய இப்படைப்புகளில் கேரளோத்பத்தி டீசபைin டிக முநசயடய போன்றவை அடங்கும். 35. இந்த 19ம் நூற்றாண்டில் அச்சுக்கலை பரவிய பின்னர் தமிழ் நூல்கள் புதியனவாகப் பெரும் அளவில் உருவாகவில்லை யெனினும் பழைய தமிழ் இலக்கியங்களை அச்சிற் பதிப்பித்துக் காப்பாற்றியுள்ளனர். வங்காளி, தமிழ் மொழிகளில் 1865 வரை அச்சிட்டு வெளிவந்துள்ள புத்தகங்கள் எண்ணிக்கை (ஜான் மர்டாக் ‘ஊடயளளகைநைன ஊயவயடடிபரந டிககூயஅடை ஞசiவேநன க்ஷடிடிமள”நூல் தரும் விவரங்களின்படி, வங்காளம் தமிழ் புராடெஸ்டண்ட் நூல்கள், சிற்றேடுகள் 263 587 ரோமன் கத்தோலிக்க வெளியீடுகள் 2 87 பிற சமய நூல்கள்:- முகமதியர் 41 36 சைவம் 37 237 வைணவம் 80 103 வேதாந்தம் 40 101 சட்டம், நீதி 51 3 அறவியல் (நுவாiஉள) 59 48 மருத்துவம் 24 43 செய்யுள், நாடகம் 53 103 கதைகள் 53 42 வங்காளமொழி நூல்களைவிடத் தமிழ் நூல்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளதால் இலக்கியப் படைப்புகளில் தமிழ் வங்காள மொழியை விஞ்சிவிட்டதாகக் கருத வேண்டாம் என்கிறார் மர்டாக். அவர் கருத்து வருமாறு:- தமிழ் அச்சு நூல்களில் பெரும்பகுதியின பழைய தமிழ் நூல்கள், அப்பழைய நூல்களை அடியொற்றி சாதாரணமாக எழுதிய தற்கால நூல்கள் கநநடெந அடினநசn iஅவையவiடிளே டிக டிடன bடிடிமள ஆகியவையே. வங்காள மொழி இலக்கியத்தில் புலமை நயம் வாய்ந்த புதிய இலக்கியப் படைப்புகள் இன்று 1850 ஸதமிழ்நாட்டைவிட] வங்காளத்தில் அதிகம். 36. திராவிடமொழிகள் நான்கிலும் உள்ள செய்யுள் / காப்பியங்களின் னுசயஎனையைn ஞடிநவசல தரத்தை (உலக இலக்கியங் களின் நிலையில்) மதிப்பிட்டுக் கூற வேண்டிய இடம் இதுவன்று; ஆனாலும் ஒன்று கூறுவேன்: ஆங்காங்கு உயர்ந்த கருத்து, இயற்கையான, ஆனால் கற்பனை நயம் வாய்ந்த வருணனை, சிறந்த உண்மையை ரத்னச் சுருக்கமாகக் கூறும் வாசகம், வியக்கத்தக்க உவமை / உருவகங்கள் இவற்றையெல்லாம் காணலாம். ஆனால் அதே நேரத்தில் பரவலாக நாம் பெருமளவில் காண்பது கருத்தைக் கூறும் திட்பநுட்பத்தைவிட செய்யுள் நடைக்கு (அலங்காரம் உட்பட) தரும் முதன்மை தான் மூலக்கருத்தை திட்பநுட்பமாகக் கூறுவதில் காட்டவேண்டிய இடங்களிலும் தேவையில்லாமல் எதுகை, மோனைக்கே முதலிடம், கவித்துவப் பேராற்றலை யீடிநவiஉ கசைந-ஐ மொண்ணையாக்கும் ஏராளமான (வலிந்து புகுத்தும்) உவமை உருவகங்களுக்கே சிறப்பு ஆகியவையே. தெலுங்கு / தமிழ்க் கவிதைகளில் காணும் நயமான உயர்கருத்து, ஒலியினிமை ஆகியவற்றை வெல்லக்கூடிய வேற்றுமொழிப் படைப்புகளை எளிதில் காண இயலாது nடிவாiபே உயn நஒஉநநன வாந சநகiநேன நடநபயnஉந யனே டiமேநன ளறநநவநேளள டிக அயலே கூநடரபர யனே கூயஅடை ஞடிநஅள. அதே நேரத்தில், சொல்லவரும் கருத்தை / நிகழ்ச்சியை உயர்ந்த குறிக்கோளுடன் ஆணித்தரமாகக் கூறுவதில்லை என்ற குறையையும், கருத்தைவிட ஒலியையே பெரிதாகக் கருதும் தன்மையையும் அந்நூல்கள் அனைத்திலும் காணலாம். ஆக ஆங்கில (அல்லது பிற மொழி) வாசகரை ஈர்த்து அவர் வியந்து பாராட்டக்கூடிய தொகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமானால் சில பல நூல்களை நுணுகிப் பார்த்து கவனமாகத் தேர்ந்து சிற்சில பகுதிகளை மட்டுமே தெரிந்தெடுக்க வேண்டியுள்ளது. அந்த நோக்கத்திற்காக தமிழ் / தெலுங்கு காவியம் அல்லது செய்யுள் நூல் எதையும் முழுமையாக ஆங்கிலப்படுத்த தெரிந்தெடுக்க இயலாத நிலையே உள்ளது. 37 (i) திராவிட மொழிகளின் செய்யுள் நூல்களின் எதுகை மோனை மிக முக்கியம் — நம் கால வெல்ஷ் றுநடளா மொழியில் உள்ளது போல. இந்த ஒலி நயத்தைத் தத்தம் மொழியில் நயமாக உருவாக்கிக் கொண்ட வகையில் இவ்விருசாரரும் பாராட்டுக் குரியவர்கள். பிற ஐரோப்பிய மொழிகள் எதுகை, மோனையை வெல்ஷ் மொழி அல்லது கெல்டிக் (ஐரிஷ்;, கேலிக் ழுயநடiஉ)-மொழிகள் ஆகியவற்றைப் பேசியவர்களிடமிருந்து மேற்கொண் டிருக் கலாம் என்பர; சிலர். (ii) திராவிடமொழிப்பாடல்களில் மோனை / எதுகை யானது வரியின் முதலில் தான் வரும்; ஐரோப்பிய மொழிகள் போல இறுதியில் அல்ல. வரியின் முதற் சொல்லில்; வரும் முதல் இரண்டு உயிரெழுத்துக்களுக்கு இடையில் வரும் மெய் தான் எதுகைக்கு அடிப்படை - காண்க: சீரைத்தேடில் ஏரைத்தேடு ளுநநம கடிச ய யீடடிரபா ஐக லடிர ளநநம கடிச யீசடிநசவல (ஒளவையார;). குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது ஒலியலங்காரம் இருக்க வேண்டும்; ஆனால் பெரும்பாலும் 1-ஆம் அடியின் முதற் சொல்லும், 2ஆம் அடியின் முதற் சொல்லும் எதுகை மோனையாக அமையும்; சில பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் வரும் இரண்டாவது அசையும் இவ்வாறே அமையும். சில நேரங்களில் இதே போன்று 3-ஆவது மற்றும் பிற அடிகளிலும் அமையலாம் - அந்தந்தப்பாவின் (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா,வஞ்சிப்பா) இலக்கணத்துக்கேற்ப. 38. இந்தோ-ஐரோப்பியர், திராவிடர் இனமக்களின் மனப்பாங்கை அவரவர் இலக்கியங்களில் காணலாம். இன்னும் மிகத்தெளிவாக அவரவர் மொழிகளிலும் சொற்களிலும் காணும் ஒலிப்பு விதிகளிலிருந்தும் அறியலாம். இந்தோ ஐரோப்பியம் : மாறுபடும் ஒலி கொண்ட எழுத்துக்களைக் கொண்ட சொற்களை ஸகஷ்டம், ம்ருது] முரட்டுத்தனமாக உச்சரித்து, அத்தகைய எழுத்துக்களை ஒரே அசையாக அடக்கிவிடுதல்; இதே போன்ற (முரட்டுப்புத்தி, நேரடி மோதல், எதிர்ப்பைக் கண்டால் அதை அறவே ஒழித்துக்கட்டுதல் என்னும்) மனநிலை தான் அவர்களுடையது! திராவிட மொழிகள் : இம்மொழி ஒலிகளின் இயல்புகள் வருமாறு:- உயிரெழுத்துக்களை மிகுதியாகப் பயன்படுத்தி, கடார் முடார் மெய்களைப் ஸஅப்படிப்பட்ட மெய் எழுத்துகளின் எண்ணிக்கையும் குறைவே] பிரித்துவைத்தல் சந்திப்புணர்ச்சியிலும் மெல்லொலிகளே மிகுதல்; சொற்களைத் தேவைக்கேற்ப நீளமாக்கி ஸகடக், புடக், தடக் என்று இல்லாமல்] ஒலி நயமான ஓட்டுநிலை ஒலிப்புமுறை; மொத்தத்தில் மெல்லிய, இனிய பேச்சு ஸபெண்கள் பேச்சில் இயல்பாகக் காணுவதும், காட்டுத்தனமான முரட்டொலி இல்லாததும் ஆன] நயத்தக்க நாகரிகமாகச் சுற்றி வளைத்துக் கூறுதல்; திராவிட மொழிகளின் இத்தன்மைகள் அம்மொழி பேசுநர் தம்மை எதிர்நோக்கும் இன்னல்களை / வன்முறைகளை ஸஉடை / ஒழி / கொல் என்று இல்லாமல்] பண்பட்ட மன நிலையுடன் நோக்கித், தீர்வு காணும் போக்கு திராவிட (தமிழிய) மொழி பேசுனரிடம் இருப்பதைக் காட்டும். 39. மேற்சொன்ன வேறுபாட்டுக்கு, அதாவது திராவிட மொழிக்கவிதை இலக்கியம் ஆகியவற்றின் தரம் பொதுவாக இந்தோ - ஐரோப்பிய மொழிக்கவிதை / இலக்கியத் தரத்தை விடக் குறைவாக இருப்பதற்கான காரணம் ஒலிப்பு எளிமை, முரட்டு எண்ணம், அவ்வெண்ணவெளிப்பாடு இவற்றை மொழிப் பயன்பாட்டின் மூலமாகவும் குறைக்க திராவிட மொழி இலக்கிய ஆசிரியர்கள் முயன்றனர் அதுமட்டுமின்றி, ஆதிகவிகளும் பின்வந்தோரில் பெருங்கவிகளும் சென்றதும், அப்படிச் செல்வதை இயன்றவரைப் புலவர்களும் இலக்கண வாசிரியர்களும் வலியுறுத்தியமையும் ஒரு காரணம். பிற்கால சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சியிலும் ளரதெநஉவiடிn வடி வாந யரவாடிசவைல டிக யீசநஉநனநவே ஆகிய இந்தநிலைமை திராவிட மொழி இலக்கியங்களிலும் வேர் ஊன்றி பரவிவிட்டது. 40. தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் இடைக்காலம் சார்ந்த நன்னூல் (சூத்திரம் 388) கூறுவது வருமாறு: எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே இத்தகைய கோட்பாட்டை அப்படியே எந்தமொழி இலக்கிய ஆசிரியர் பின்பற்றினாலும், அவ்விலக்கியம் காலத்துக் கேற்ப வளர வாய்ப்பில்லை; சில காலம் வளர்ச்சியின்றி (பிற காரணங்களால்) தேக்கம் ஏற்பட்டால் மீண்டும் வளர்வதற்கான சூழ்நிலை உருவாகாது. பின்னிணைப்பு கால்டுவெல் ஐயர் சரிதம் 1. அறிவும் அருளும் புலவர் பாடும் புகழமைந்த பொருளை நாட்டிற் பொருந்தி வாழ்ந்து, “தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் உயரிய மொழி நூலியற்றித் தண்டமிழ் மொழிக்கு இணையற்ற தொண்டு புரிந்தவர் கால்டுவெல் ஐயராவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற் பணி செய்யப்போந்த மேலை நாட்டறிஞருள் தலைசிறந்த பெருமை வாய்ந்தவர் இவரே என்று கூறுதல் மிகையாகாது. கால்டுவெல் ஐயர் அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரிற் பிறந்தார். இளமையிலேயே அறிவின் கொழுந்தென விளங்கிய மைந்தனைக் கண்டு மகிழ்வுற்ற பெற்றோர், உரிய காலத்தில் அவர்க்கு எழுத்தறிவித்தார். மதிநலம் வாய்ந்த மாணவர் பத்தாண்டளவிற் பல நூல்களை முறையாக ஒதியுணர்ந்து பண்புற்றார். இங்ஙனம் இளைஞர் கல்வி நலம் பெற்று வளர்ந்து வருகையில் அவர் பெற்றோர் தம் தாய்நாடாய ஸ்காட்லெண்டு தேசம் போந்து கிளாஸ்கோ நகரில் வசிக்கத் தொடங்கினர். பதினாறாண்டு முடிவுமளவும் பெற்றோருடனிருந்து கால்டுவெல் ஐயர், ஆங்கில இலக்கியங்களை ஆர்வமுறப் பயின்றார். ஓதற்கரிய நுல்களையும் எளிதில் உணரும் திறம் வாய்ந்த இளஞரை ஓவியத்துறையில் உய்க்கக் கருதிய பெற்றோர், அரியலூரிலிருந்த கவின்கலைக் கல்லூரியிற் கொண்டு சேர்த்தார்கள். செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் வாய்ந்த கால்டுவெல் அறிஞர், ஓவியக் கலையைக் கண்ணும் கருத்துமாகக் கற்றுயர்ந்து பரிசு பெற்றாரேனும், ஓவியத் தொழிலைத் தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ள இசைந்தாரல்லர். ஐம்பெரும் பூதங்களின் நுட்பங்களை ஆராய்ந்துரைக்கும் புத்தம் புதிய நூல்களைப் போற்றி உணரத் தலைப்பட்டார். எண்ணரும் புதுமைகளை நுண்ணிய கலைகளிற் காணுந்தொறும், விண்ணிலும் மண்ணிலும், கனலிலும் புனலிலும், காற்றிலும் கலந்துறையும் இறைவன் பெருமையை அறிந்து மகிழ்ந்தார். பன்னரும் பெரும் புகழ்ப்பரமனை மனமொழி மெய்களால் வழுத்தும் வாழ்க்கையே விழுமியதென்று தெளிந்தார். தன்னேரில்லாத் தலைவன் கருணையைப் பல்லோரும் அறிந்துய்யும் வண்ணம், யாண்டும் பரப்பும் பணியே சிறப்பு வாய்ந்ததென்று துணிந்தார். இங்ஙனம் கல்லூரியிற் கவின்கலை யுணரப்போந்த மாணவர் கருணையங் கடலாய இறைவன் பெருமையறிந்து மீண்டார். இருபதாம் வயதில் கால்டுவெல் ஐயர் இறைவன் பணியில் ஈடுபடத் துணிந்து, லண்டன்மா நகரிலமைந்திருந்த சமயத் தொண்டர் சங்கத்தைச் சார்ந்தார். அச்சங்கத்தின் சார்பாக கிளாஸ்கோ சர்வகலா சாலையில் மாணவராகச் சேர்ந்து, ஐரோப்பியத் தென்ன மொழிகளிலமைந்த செம்மை சான்ற நூல்களையும் சமய நூல்களையும் ஐயந்திரிபற அறிந்தார். அக்கலாசாலையில் கிரீக்கு மொழி பயிற்றிய பேராசிரியர், அச்செம் மொழியின் பெருமையை மாணவர் உள்ளங் கொள்ள எடுத்துரைக்கும் திறமை வாய்ந்தவராய் விளங்கினார். அவர் அறிவுறுத்திய மொழிநூல் முறை, மாணவர் மனத்திற் பசுமரத்தாணிபோற் பதிந்தது. ஒப்பிலக்கண வாயிலாக மொழித்திறமுணரும் முறைமையை அப்பேராசிரியர் விரிவுரையாலறிந்த கால்டுவெலின் உள்ளம், பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல் அத்துறையிற் படர்வதாயிற்று. ஆகவே தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் தோன்றுவதற்கு இன்றியமையாத மொழி நூல் முறையை எடுத்துரைக்கும், ஆர்வத்தை எழுப்பியும் அடிப்படை கோலிய பெருமை அப்பேராசிரியருக்கே உரியதாகும்.*1 அக்காலத்தில் தென்தமிழ் நாட்டிற் பணி செய்யத்தக்கார் ஒருவரை நாடிய லண்டன் மாநகர்த் தொண்டர் சங்கம், கல்வி கேள்விகளிற் சிறந்து கலாசாலைப் பட்டம் பெற்று விளங்கிய கால்டுவெல் ஐயரைத் தேர்ந்தெடுத்து. தமிழகத்தின் பழமையையும் பெருமையையும் நூல்களின் வாயிலாக முன்னமே அறிந்திருந்த கால்டுவெல், தொண்டராணையைத் தலைக்கொண்டு போற்றினார். அரும் பிணியுற்றிருந்த அன்னையிடம் அன்றே விடைபெறச் சென்றார். வேதநூல் முதலாய விழுமிய கலையனைத்தும் ஓதியுணர்ந்த காதல் மைந்தன், கடல் கடந்து தமிழகம் போந்து, கர்த்தர் பணியாற்ற இசைந்து நின்றான் என்றறிந்த அன்னை, அருமருந்தனைய மைந்தனை அன்போடணைத்து, “ஐயனே! அருளுருவாய ஆண்டவனிடம் உன்னை அடைக்கலமாக அளிக்கின்றேன்; இனித் திவலையும் என்னுள்ளத்திற் கவலையில்லை” என்றுரைத்துக் கண்களிற் சுரந்து நின்ற கண்ணீரை மைந்தனது மலர்க் கரத்தால் ஒற்றி மனமார்ந்த விடை கொடுத்தனுப் பினாள். தாயுரைத்த சொற்கேட்டுத் தழைத்த தூய மைந்தன் துறைமுகம் போந்து சென்னைக்குச் செல்லும் ‘அன்னமேரி’ என்னும் ஆங்கிலக் கப்பலில் ஏறினார். கலம் புறப்பட்ட பொழுது கால்டுவெல் ஐயர், பன்னாள் வாழ்ந்திருந்த நன்னாட்டை நெடிது நோக்ககிக் கண்பனி சோர நின்றார். கரை மறைந்தது; காரிருள் விரிந்தது. சிறிது நேரம் ஒருமையுடனிருந்து இறைவனைத் தொழுதார். பின்பு சென்ற காலத்தின் பழுதிலாச் சிறப்பையும், எதிர்காலத்தின் விழுமிய வாழ்வையும் எண்ணி மனங்குழைந்தார். அந்நிலையிற் கடுங்காற்று சுழன்றடித்தது. பெருமழை பெய்யத் தொடங்கிற்று. காற்றின் கொடுமைக் காற்றாது அலமந்த நெடுங்கடலின் நிலை கண்டு கலந்திலுள்ளாரனைவரும் அஞ்சிக்கலங்கினர். நொடிப் பொழுதில் இடியேறு போன்ற பேரோசை எழுந்தது. மரக்கலம் முற்றும் குலுங்கி நடுங்கியது. கடும்பாறையில் மோதிக் கலம் உடைந் தொழிந்தது என்றெண்ணி எல்லோரும் ஸ்தம்பித்து நின்றனர். அப்பொழுது கடும்பாறைபோல் நேர் நின்று தாக்கிய பொருள் கடலுள் மூழ்கி மறைந்தது. மோதுந்திரைகளால் மொத்துண்டு அலறிய மாந்தர் அழுகுரலும் தொழுகுரலும் காற்றொலியோடு கலந்தெழுந்தது. பரங்கிப் பெருங்கல மொன்று*2 நெறிதவறி மாறாகவந்து மோதிச் சிதறுண்டு மூழ்கியதென்றறிந்த கப்பற் றலைவன், கடலில் ஆங்காங்கு மிதந்து கொண்டிருந்த மாந்தரை ஒல்லும் வகையால் உய்விக்க முயன்றான். ஆயினும் அறுவரொழிய ஏனையோர் அலைகடலுள் மூழ்கி மறைந்தனர். கங்குற்பொழுது கழியுமளவும் உறங்காது கவலையுற்றிருந்த கலவர் மனங்களிக்கக் காலைக் கதிரொளி எழுந்தது. ஆங்கில மரக்கலம் ஆழிவாய்ப்படாது பிழைத்தெனினும் உலைந்து பழுதுற்றிருந்து. வலிமை சான்ற தேக்கு மரத்தால் ஆக்கப் பட்டிருந்தமையால் ஆங்கிலக் கலம் முற்றும் நொறுங்காது தப்பிப் பிழைத்தது. பழுதற்ற கலத்தை அண்மையிலிருந்த ‘பிளிமத்’ தென்னும் துறைமுகத்திற் சேர்த்துச் செப்பனிடத் தொடங்கினர். காற்றின் கொடுமையாற் கருத்தழிந்து கலக்கமுற்ற கலவாசிகளை அந்நகர மக்கள் அன்புடன் ஏற்று ஆதரிப்பா ராயினர். கருணை வடிவாய இறைவனைக் கருத்திலமைத்துக் கசிந்துருகிய கால்டுவெல் அறிஞர், அந்நகர்ச் செல்வரொருவராற் சீராட்டப்பட்டார். சின்னாளிற் செப்பமுற்ற மரக்கலம் பிளிமத் துறையை விட்டுப் பெயர்ந்தது. வருந்தி வந்தடைந்த விருந்தினரைக் கனிந்து வரவேற்றுக் காலத்தில் உதவிபுரிந்த நகரமாந்தர் பெருமையை அனைவரும் மனமாரவுணர்ந்து நாவாரப் புகழ்ந்தனர். நகர வாசிகளின் வாழ்த்துரை பெற்றுப் புறப்பட்ட நற்கலம் பின்பு இடையூன்றிக் குறித்த துறைமுகத்தை நோக்கிச் செல்வதாயிற்று. பாரத நாட்டை நோக்கிச் செல்லும் கலங்கள் அக்காலத்தில் ஆப்பிரிக்கா தேசத்தின் தென் முனையைச் சுற்ற வேண்டுமாதலால் சீமைத் துறைமுகம் விட்டுச் சென்னைத் துறைமுகம் சேர்வதற்குள் நான்கு மாதகாலம் செல்லும். அந்நெடுங்காலத்தைப் பயன்படுத்தக் கருதிய கால்டுவெல் அறிஞர், கலை நலம் வாய்ந்த சிலரைக் கப்பலில் நண்பராக்கிக் கொள்ள விரும்பினார். அக்கால வாசிகளிற் பலர், வாழ்நாளின் அருமையறியாராய், வெற்றுரை யாடியும், விருந்தயர்ந்தும், வீண் பொழுது போக்கக் கண்டு மனந்தளர்ந்தார். ஆயினும் அன்னாரைத் திருத்த இயலாதென்றறிந்து கலைச்சுவை தேரும் கற்றாரைக் காண விழைந்து கலமெங்கும் துருவினார். அம்முயற்சியின் பயனாக, சிறந்த அறிஞர் ஒரு வரைச் சின்னாளிற் கண்டறிந்தார். அவர் சென்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவர். பிரௌன் என்னும் பெயரினர். அப்பெரியாரை உற்ற நண்பராகத் தேர்ந்து, அவருடன் கால்டுவெல் ஐயர் அளவளாவத் தலைப்பட்டார். ஆந்திர நாடுகளில் அவர் பல்லாண்டு அரசியற் பணி செய்திருந்தமையால் ஆந்திர மொழியைச் செல்வையாக அறிந்திருந்தார். ஆரிய மொழியையும் நன்றாகக் கற்றிருந்தார். நாள்தோறும் கால்டுவெல் அவருடன் பழகி முறையாக ஆரியம் பயின்றார். இவ்வாறு மரக்கலத்தில் தோன்றிய மாசற்றார் கேண்மை மதிபோல் வளர்ந்து பிற்காலத்திற் பெரும்பயன் விளைவிப்பதாயிற்று. இங்ஙனம் கலத்திற் கலைபயின்ற கால்டுவெல் ஐயர் தனியராய்த் தம் அறையிலமர்ந்திருக்கும் பொழுது கண்ணுக் கடங்காத கருங் கடலின் நீர்மையை எண்ணி மகிழ்வார். கலஞ் செல்லும் நெறியில் மீன்கள் துள்ளியெழுந்து மீண்டும் நீரில் மூழ்கி மறையும் அழகினைக் கண்டு வியப்பார். கடலெங்கும் காரிருள் விரியுங்கால் விண்ணிலே மிளிரும் எண்ணிறந்த மீன்களின் விளக்கங்கண்டு மனங்களிப்பார். கருங்கடலில் ஊர்ந்து செல்லும் மரக்கலம் போல், நீலவானில் ஊர்ந்து செல்லும் நிறைமதியின் ஒளி கண்டு நெஞ்சம் தழைப்பார். இங்ஙனம் இயற்கை இன்பம் நுகர்ந்து மனங் குளிர்ந்து கால்டுவெலின் உடலும் நலனுறுவதாயிற்று. அல்லும் பகலும் வீசிய கடற்காற்றின் தண்மையால் அவருடல் செழுமையுற்றது. பல்லாண்டுகளாக மருந்தருந்தியும் நீங்காது நின்று வருத்திய இருமல் நோய், கடற் பயணத்தால் தீர்ந்தொழிந்தது. தம் உடன் பிறந்தார் இருவர் காச நோயுற்று இறந்தமையால், அந்நோய் தொந்தப் பிணியாய்த் தம்மையும் தொடர்ந்து வருத்துமோ என்று கவலையுற்றிருந்த கால்டுவெல் ஐயர் இறைவனருள் நினைந்து வாழ்த்தினார். கண்ணினைக் காக்கும் இமைபோல் திண்ணிய அன்பு வாய்ந்த அடியவரை இறைவன் முறை காக்கும் என்று எண்ணி அளவிறந்த ஆர்வமுற்றார். இறைவனருளாற் பழுதற்ற உடலும் பண்புற்ற மனமும் பெற்ற அறிஞர், சென்னைத்துறைமுகம் வந்து சேர்ந்தார். அவர் வருகையை முன்னமே அறிந்திருந்த கிருஸ்துமதத் தொண்டரிருவர் துறைமுகம் போந்து வரவேற்று அகனமர்ந்து அழைத்துச் சென்றார். அந்நாளில் சென்னை மாநகரிற் சிறந்து விளங்கிய ஐரோப்பியத் தொண்டர்களுள் தமிழ்ப் புலமை வாய்ந்த ‘துருவரும்’*3 ஒருவராய்த் திகழ்ந்தார். அவர் செந்தமிழ் மொழியைச் செவ்வையாகக் கற்றுணர்ந்து திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அரும்புகழ்வாய்ந்து விளங்கினார். விருந்தினராய் வந்தடைந்து கால்டுவெல் ஐயரைக் கண்ட துருவர் மனம் நெகிழ்ந்து மகிழ்வுற்றார். நற்றாமரைக் கயத்து நல்லன்மை சேர்ந்தாற் போல், தமிழ் மணங்கமழ்ந்த துருவர் மனையிற் சேர்ந்த கால்டுவெல் ஐயர் பைந்தமிழ் மொழி பயிலத் தொடங்கினார். அக்காலத்தில் சென்னை மாநகரில் தலைசிறந்து விளங்கிய தக்கார் சிலரை இவர் உயரிய நண்பராகப் பெற்றார். ஈழ நாட்டிலமைந்த ஏசுமத் தொண்டர் சங்கத்தில் நெடுங்காலம் உழைத்து, சிறந்த தமிழகராதி தொகுத்து விழுமிய புகழ்வாய்ந்து விளங்கிய ‘வின்சுலோ’ என்னும் மேலைநாட்டறிஞரும், தமிழ் மொழிக்குத் தொண்டு புரிதலே தம் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு தலைசிறந்த நீதி நூல்களையும் திருவாசகமென்னும் பெரு வாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அழியாப் பெருமை வாய்ந்த ‘போப்’ ஐயரும், கிருஸ்து சமய முதல் நூலாய பைபிளையும் பிரார்த்தனை நூலையும் தமிழில் மொழி பெயர்த்துப் பெரும்பணி புரிந்த ‘பவர்’ என்னும் பெரியாரும், ஆங்கிலக் கல்வியின் வாயிலாக அறிவை வளர்த்துக் கிருஸ்துமதக் கொள்கைகளை எங்கும் பரப்பக் கருதிச் சென்னையில் ஆங்கிலக் கல்லூரி நிறுவி, கலை பயிலும் மாணவர்பாற் கரையிறந்த கருணையும் அளவிறந்த ஆர்வமும் உடையராய் விளங்கிய ‘ஆந்தர்சன்’*4 என்னும் அறிஞரும், ஏனைய அருங்கலைவாணரும் கால்டுவெல் ஐயரின் நண்பராக அமைந்தார்கள். இங்ஙனம் அருந்தமிழ்ச் சுவையறிந்த அறிஞர் இணக்கத்தால் மூன்றாண்டு களில் தமிழ் மொழியின் நயந்தெரிந்த கால்டுவெல் ஐயர், பழம் பதியாய பாண்டி நாடிற் பணி செய்யப் புறப்பபட்டார். அடிக்குறிப்பு 1. “றுhளைவ ளவரனலiபே in ழுடயளபடிற, ஐ iஅbiநென வாயவ டடிஎந டிக உடிஅயீயசயவiஎந யீhடைடிடடிபல றுhiஉh hயள நஎநச ளinஉந பசடிறn றiவா அல பசடிறவா. ஐ றயள டநன in வாளை னசைநஉவiடிn லெ வாந யேவரசயட நெவே டிக அல டிறn அiனே ரெவ அல iவேநசநளவ in வாந ளரதெநஉவ வடிடிம ளாயயீந யனே னநநயீநநேன வாசடிரபா வாந iகேடரநnஉந டிக வாந டநஉவரசநள டிக ளுசை னுயnநைட ளுயனேகடிசன, டிரச யீசடிகநளளடிச டிக ழுசநநம, யn நவோரளயைளவiஉ ளுஉhடிடயச றுhடி in hளை யஉளூரiயேவnஉந றiவா உடிஅயீயசயவiஎந யீhடைடிடடிபல, ய ளரதெநஉவ வாநn ளவரனநைன உhநைகடல in ழுநசஅயலே, றயள கயச in யனஎயnஉந டிக அடிளவ டிக வாந ளஉhடிடயசள டிக hளை டிறn உடிரவேசல யனே வiஅந. ஐ சநஅநஅநெச வாநn கடிசniபே வாந சநடிடரவiடிn வாயவ கை ஐ நஎநச கடிரனே அலளநடக யஅடிபேளவ ளவசயபேந சயஉநள ளயீநளமiபே ளவசயபேந டயபேரயபநள ஐ ளாடிரடன நனேநயஎடிரச ளடி வடி ளவரனல வாடிளந டயபேரயநேள யள வடி ளூரயடைகல அலளநடக வடி றசவைந ளடிஅநவாiபே யbடிரவ வாநஅ வாயவ ளாடிரடன நெ ரளநகரட வடி வாந றடிசடன. கூhளை நயசடல கடிசஅநன சநளடிடரவiடிn றயள வாந ளநநன டிரவ டிக றாiஉh நஎநவேரயடடல அல உடிஅயீயசயவiஎந பசயஅஅயச டிக வாந னுசயஎனையைn டுயபேரயபேநள பசநற.” ஊ.சு.7. 2. குசநnஉh எநளளநட. 3. “ஆச. னுசநற றயள ய னநஎடிரவ அயn, ய ணநயடடிரள அளைளiடியேசல, ய அயn டிக உரடவரசந, யனே ய னநஎடிவநன ளவரனநவே டிக கூயஅடை. ழளை நனவைiடிn டிக வாந மரசயட, ய பசநயவ கூயஅடை உடயளளiஉ, வாடிரபா hந னனை nடிவ டiஎந வடி உடிஅயீடநவந வாந றடிசம, யீடயஉநன hiஅ in வாந கசைளவ சயமே டிக நுரசடியீநயn கூயஅடை ளுஉhடிடயசள.... ஐ னநசiஎநன அரஉh நெநேகவை கசடிஅ வாந ளவiஅரடரள வடி கூயஅடை ளவரனநைள வாயவ ஐ சநஉநiஎநன கசடிஅ அல னநகடல iவேநசஉடிரசளந றiவா ஆச. னுசநற.” ஊ.சு.52. 4. “டீநே டிக வாந ஞசடிஅiநேவே கபைரசரள in வாந அளைளiடியேசல றடிசடன டிக அயனசயள வாயவ வiஅந றயள வாயவ டிக ஆச. ஹனேநசளடிn, நௌவ மnடிறn யள துடிhn ஹனேநசளடிn டிக வாந ளுஉடிவஉh யீசநளலெவநசயைn ஆளைளiடிn, வாந னுச. னுரகக டிக ஆயனசயள லெ றாடிஅ வாந கசைளவ பசநயவ நுபேடiளா ளுஉhடிடிட கடிச ழiனேர லடிரவாள றயள நளவயடெiளாநன யனே வாந கசைளவ ளலளவநஅயவiஉ நககடிசவ அயனந வடி ரளந நுபேடiளா நனரஉயவiடிn யள ய அநயளே டிக ளயீசநயனiபே உhசளைவயைnவைல யஅடிபே வாந hiபாநச உடயளளநள யனே உயளவநள... துடிhn ஹனேநசளடிn றயள அல பசநயவநளவ கசநைனே in ஆயனசயள யவ வாயவ வiஅந. ழந றயள டிநே டிக வாந யடெநளவ யனே அடிளவ ணநடிரள யனே னநஎடிவநன ஆளைளiடியேசநைள ஐ hயஎந நஎநச அநவ யனே றயள உநசவயiடேல வாந அடிளவ நவோரளயைளவiஉ.... டிநே டிக hளை உhநைக உhயசயஉவளைவiஉள றயள hளை யடஅடிளவ றடிஅயடேல வநனேநசநேளள யனே யககநஉவiடிn வடிறயசனள hளை ளவரனநவேள றாiஉh றயள டிநே டிக வாந வாiபேள வாயவ உடினேரஉநன வடி வாந பசநயவ ரேஅநெச டிக உடிnஎநசளiடிளே டிக நனரஉயவநன லடிரபே அநn றiவா றாiஉh hளை றடிசம றயள அயசமநன. கூhசடிரபாடிரவ வாந யீசநளனைநnஉல டிக ஆயனசயள அயலே லநயசள வாந யேஅந டிக துடிhn ஹனேநசளடிn யனே வாந கயஅந யனே iகேடரநnஉந டிக றாயவ றயள உயடடநன “ஹனேநசளடிn’ள ளுஉhடிடிட” - nடிற னநஎநடடியீநன iவேடி வாந ஊhசளைவயைn உடிடடநபந-றநசந டமைந hடிரளந-hடிடன றடிசனள.” ஊ.சு.52 - 53. 2. பொருனை நாடும் ஏசு மதமும் பொருனை நாட்டிற் பணியாற்றப் போந்த கால்டுவெல் அறிஞரின் பெருமையை உள்ளவாறுணர்வதற்கு, அந்நாட்டில் அவர் வருகைக்கு முன் கிருஸ்து மதம் பரவியிருந்த பான்மையை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். பதினாறாம் நூற் றாண்டின் முற்பகுதியில் கத்தோலிக் சமயம்* பொருனை நாட்டிற் புகுந்தது. முத்துக்கரை என்று பெயர் பெற்றிருந்த தென் கடற்கரையில் வாழ்ந்த பரதவர்க்கும் மகமதியர்க்கும் நேர்ந்த நெடும் போரில், பரதவர் கொச்சியிற் படைப் பெருக்குடையராயிருந்த போர்ச்சுகீசியருதவியை நாடினர். அன்னாள், காலத்திற் செய்யும் உதவிக்குக் கைம்மாறாகப் பரதவசமுதாயம் கத்தோலிக் சமயத்தை ஏற்றுக் கொள்ள இசைந்தது. கள்ளமற்ற தம்முள்ளத்தைத் தெள்ளிதினுணர்த் தக் கருதிப் போர்ச்சுகீசியருதவியை நாடித்தூது சென்ற பரதவர் எழுபதின்மரும் கொச்சியிலேயே ஏசுமதத்தைத் தழுவினர். அப்பால் போச்சுகீசியப்படை கடல் வரியாகப் போந்து, மகமதியரைப் புறங்கண்டு, பரதவர் துயரந் தீர்த்தது. அந் நிலையில் முத்துக்கரையிலமைந்த முப்பதூர்ப் பரதவரும் ‘மைக்கேல் வாசர்’ என்னும் போர்ச்சுகீகிய மேலவரால் கிருஸ்து மதத்திற்கு மாற்றப்பட்டார்1. இருபதினாயிரம் மக்கள் வாசரின் ஆர்வத்தால் ஏசுவின் அருளைப் பெற்றனர். இங்ஙனம் வாசர்பரப்பிய விதை கடற்கரை யூர்களில் முளைத்துச் செழும் பயிராகி விளங்கிற்று. அப்பசும் பயிரை அறவுரையென்னும் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்குச் செம்மைசான்ற சீலமும், சீரிய மெய்ஞ்ஞானமும் வாய்ந்த ‘சேவியர்’ என்னும் சான்றோர் தோன்றினார். அப்பெரியார் இறைவனை வாழ்த்தி வணங்கு தற்குரிய மறை மொழிகளைத் தமிழாக்கி மனப்பாடஞ் செய்து கொண்டு ஊரூராய்ச் சென்று வீதிகளில் நின்று உபதேசிப் பாராயினார். இவ்வாறு வாசர் முயற்சியால் முளைத்து, சேவியர் ஊக்கத்தால் தழைத்த ஏசு மதம், ‘தத்துவ போதகர்’2 என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்த கலையறிஞர் ஆதரவாலும், வீரமாமுனிவர் என்னும் கவிஞர் ஆர்வத்தாலும், வளமுற வளர்ந்து கடற்கரை யூர்களில் நிலை பெற்றது. இஃதிவ்வாறாக, பொருளை நாட்டியமைந்த மற்றும் சில ஊர்களில் கிருஸ்து மதத்தின் புதிய நெறி3 பரவுவதாயிற்று. அப்புதிய நெறியைச் சேர்ந்த தொண்டருள் சாலச் சிறந்தவர் ‘சுவார்த்தர்’ என்னுஞ் சான்றோராவர்.4 திருச்சிராப்பள்ளியிலும் தஞ்சை மாநகரிலும் தகை சான்ற தொண்டாற்றிப் புகழ்பெற்ற சுவார்த்தர், பதினெட்டாம் நூற்றாண்டினிறுதியில் பொருனை யாற்றின் கரையிலமைந்த பாளையங்கோட்டையிற் போந்து ஆண்டு கிருஸ்து நெறியிற் சேர குக்கற்று நின்று இந்துக்களிற் சிலரை ஞான நீராட்டி அம்மதத்திற் சேர்த்தார்5. தஞ்சையில் அரசு புரிந்த மன்னரைச் சேவித்துப் பெரும் பொருளீட்டிய ஒரு மராட்டிய மறையவன் மனைவி தன் கணவன் இறந்த பின்னர் பாளையங் கோட்டையிற் சென்று வாழ்ந்தாள் என்றும், ஆண்டு கிருஸ்து மதக் கொள்கைகளை அறிந்து, அம்மதத்தைத் தழுவ விரும் பினாள் என்றும், அம்மாதின் ஆசற்ற ஆர்வத்தை அறிந்த சுவார்த்தர் அவளைக் கிருஸ்து மதத்திற் சேர்த்துக் ‘கிளாரிந்தாள்’6 என்னுந் திருநாம மளித்தார் என்றும், கிருஸ்துவமத சங்க வரலாறு கூறுகின்றது. செல்வ மிகப்படைத்தவளா யிருந்தமையால் ‘செல்வக்கிளாரிந்தாள்’ என்று நெல்லைக் கிருஸ்தவ அன்பர்கள் அவளைச் சீராட்டினர். இன்னும், பொருனை நாட்டின் தலைநகராய திருநெல்வேலியிற் கவிராயர் குடியிற் பிறந்த அறுவர், புதிய மதத்தைத் தழுவ இசைந்தார்கள். நெல்லைக் கவிஞர், தம் மனைவியோடும், நான்கு மக்களோடும் ஞான நீராடி நலமுற்றார். புதிய மதத்தைத் தழுவிய கவிராயர் தேவசகாயம் எனவும், அவர் மூத்த மைந்தன் வேதநாயகம் எனவும், வழங்கப் பெற்றார். ‘குலவித்தை கல்லாமற் பாகம்படும்’ என்னும் பழமொழிக் கேற்ப வேதநாயகர் இளமையிலேயே கவிபாடுந் திறமை வாய்ந்து விளங்கினார். பன்னிரண்டு வயதில் தந்தையாருடன் தஞ்சையிற் குடியேறி வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியார் இயற்றிய இனிய கீதங்கள் தென்னாட்டுக் கிருஸ்தவக் கோயில்களில் இன்றும் இசையோடு பாடப் படுகின்றன. இவ்வாறு பொருனையாற்றின் இருகரையிலும் பரவிய கிருஸ்து மதம், மெல்ல அயலூர்களிலும் நுழைவதாயிற்று. பாளையங்கோட்டைக்கும் திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட நெடுநிலத்தில் பெருந்தொகையினராய் வாழும் பழங்கடிகள் நாடார் என்று அழைக்கப்படுவர். இவ்வகுப்பார் வாழும் நாட்டில் கிருஸ்து மதம் பரவிய பான்மை அறியத்தக்கதாகும். சாத்தன் குளத்திற்குக் கிழக்கே அமைந்த காலன் குடியிற் பிறந்த சுந்தரானந்தம் என்னும் நாடார், இளமையிற் பெற்றோரை யிழந்து பரதேசிகளுடன் கூடி ஊர் ஊராய்த் திரிந்து, படிக்கவும் பாடவுங் கற்றுப் பிறந்த நாட்டில் ஆதரிப்பாரின்மையால் வடதிசை நோக்கிச் சென்று தஞ்சை மாநகரை அடைந்தார். அவ்வூர்க் கடையொன்றிற் கையாளாக அமர்ந்து பணிசெய்து காலங்கழித்து வரும்பொழுது சுவார்த்தர் என்னுஞ்சீலர், அவர் வரலாற்றை அறிந்து அவரைக் கிருஸ்து மதத்திற் சேர்த்து ‘தாவீது’ என்னும் திருநாமம் அளித்தார். பின்பு அம்மதத்திற்குரிய வேதநூல் முதலாய உயரிய நூல்களைத் தாவீது முறையாக ஓதியுணர்ந்தார். இங்ஙனம் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கிய இளைஞர், சுவார்த்தர் ஆணையை ஏற்றுத் தஞ்சையினின்றும் புறப்பட்டுத் தம் முற்றாருறவினர் வாழ்ந்திருந்த ஊரையடைந்தார். சில ஆண்டுகளாகச் செய்தியொன்றும் அறியாமையால் சுந்தரானந்தம் இறந்தாரென்று எண்ணிக் கவலையுற்றிருந்த உறவினர் அவரை உயிருடன் கண்டபோது இழந்த பொருள் அடைந்தவர்போல் எல்லையற்ற இன்பமுற்றார். கல்வி மணமறியாது காலையும் மாலையும் கடுந்தொழில் புரிந்து காலங்கழித்த உறவினர் நிலைகண்டு பரிவுற்ற தாவீது, தஞ்சை மாநகரில் தம்மை யாட்கொண்டருளிய வேதியரின் சிறப்பையும், அவர் மதத்தின் செம்மையையும் விரித்துரைத்தார். இளைஞர் வரவால் இன்புற்ற உறவினர் அவருள்ளங் கொள்ள உணர்த்திய கொள்கைகளை ஏற்றுக் கிருஸ்து மதத்திற் சேர இசைந்தார்கள். ஆயினும் அவர் உறவினரல்லாத ஏனையோர், புதிய மதத்தினரை இகழ்ந்து இடுக்கண் விளைக்கத் தலைப்பட்ட மையால் அவ்வூரிலமைந்த காணியுங் குடியும் கைவிட்டுக் கிருஸ்தவர்கள் வேற்றுரிற் சென்று வாழ்தலே ஏற்றதாகுமென்று தாவீது எண்ணினார். அக்கருத்தை அவர் உறவினரும் ஆதரித்தனர். அடையல் என்னும் சிற்றூருக்கருகே சில நிலங்களை விலை கொடுத்து வாங்கி அவ்விடத்தில் இடை யூன்றிக் கிருஸ்து மதத்தினர் குடியேறி வாழத் தொடங்கினர். இங்ஙனம் கிருஸ்து மதத்தைத் தழுவிய மக்கள் பொருளை நாட்டில் தமக்கெனத் தம் முயற்சியால் தனியூரமைத்து வாழ்ந்த கருத்துத் தோன்ற ‘முதலூர்’ என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். ஆதியில் முப்பது மக்களால் தோற்றுவிக்கப் பட்ட முதலூர், இப்பொழுது பரந்து விரிந்து நூற்றுக் கணக்கான மக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இங்ஙனம் முதலூரில் முளைத்தெழுந்த சமயநெறி, அயல் இடங்களில் வாழ்ந்த நாடார்களிடையே நாளடைவிற் பரவுவதாயிற்று. அக்காலத்தில் நாடார்கள் சிறந்து வாழ்ந்த இடங்களில் இடையன்குடி என்னும் ஊரும் ஒன்றாகும். ஆதியில் முல்லை நில மக்களாய இடையர் மிகுதியாகக் குடியிருந்த மையால் இடையன்குடி என்று பெயர்பெற்ற அவ்வூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் வகுப்பினரே பெருந் தொகையினராய் வாழ்ந்து வந்தார்கள். வேதவிளக்கச் சங்கத்தின்7 சிறந்த தொண்டராய கெற்றிக்8 என்பார் தென்னாட்டில் கிருஸ்து மதம் செவ்வையாகப் பரவக்கேட்டு மன மகிழ்ந்து நாடாருறையும் நாடு போந்து ஆயிரத்து முந்நூறு மக்களை ஞான நீராட்டுவித்தார். அவர் துணைவராக அமைந்து பொருனை நாட்டில் நெடுங்காலம் பணி செய்த சத்தியநாதர் என்னும் வேதியர்9 ஊர்தொறும் சென்று வேதநூற் கொள்கைகளை விரித்துரைத்தார். இவர் முயற்சியின் பயனாக நாடார் வகுப்பிற் பெரும் பாலார் புதிய மத்தினை ஏற்றுப் போற்றுவாராயினர். இவ்வாறு கிருஸ்து சமயம் பரவிவரும்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பருவந்தவறிப் பெய்த பெரு மழையால் பொருனையாறு கரை புரண்டு எழுந்து பல சிற்றூர்களைப் பாழாக்கியது. ஆற்று வெள்ளம் அடங்கிய பின்பு கொள்ளைக் காய்ச்சலென்னுங் கொடிய நோய் விரைந்து பரவியது. வெள்ளத்தால் வீடிழந்து உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி வருந்திய மக்கள் காய்ச்சலுக்கிரையாகிக் கழிந்தார். இந்நோய் கிருஸ்தவ நாடார்கள் வசித்த ஊர்களில் நூற்றுக் கணக்கான மாந்தரைச் சூறையாடினமையால் மதம் மாறிய மக்கள் மனம் பதைத்தார்கள். முன்னோர் பொன்னே போற் போற்றிய தொன்னெறி துறந்து கிருஸ்து மதத்தை ஏற்றமையாற் கேடு வந்துற்றதென்று எண்ணினார். தள்ளருஞ் சீற்றமுற்ற பழைய தெய்வங்களின் ஏவலாற் கொள்ளைக் காய்ச்சல் வந்திறுத்த தென்று உள்ளங் கவன்றார். குற்றம் புரியும் மாந்தரை ஒறுக்கும் திறம் வாய்ந்த கொடிய தெய்வங்களைக் கொடையாற் சாந்திசெய்ய முற்பட்டார். இடையன் குடியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும், கொடைகளும் விழாக்களும் மலிந்தன. மதம் மாறிய மாந்தரிற் பலர் மீண்டும் தென்னெறியைக் கடைப் பிடித்து வாழத் தொடங்கினார்.10 ஆகவே சத்திய நாதர் முதலிய தொண்டர் ஆர்வத்தால் விரைந்து பரவிய கிருஸ்து மதம் வெள்ளத்தாலும், கொள்ளைக் காய்ச்சலாலும் துளங்கித் தளர்வுற்றது. பஞ்சமும் பிணியும் நீங்கிய பின்னரும் புதிய மதத்தினை நெஞ்சினால் நினைக்கவும் பலர் அஞ்சினர். அம்மத்தினைப் புகழ்ந்து பேசிய வேதியரை மனமார வெறுத்தனர். ஒல்லும் வகையால் அன்னார்க்கு அல்லல் விளைத்து அவரை நாட்டை விட்டு ஓட்ட முயன்றார். ஆயிரத்து எண்ணூற்று முப்பதாமாண்டில் இடையன்குடியிற் பணிசெய்த கிருஸ்தவ வேதியர் மீது கொள்ளைக் குற்றஞ் சாற்றப்பட்டது. சர்க்காருக்குரிய வரிப்பணத்தை வசூலித்துத் தலையாரி கொண்டு வரும்பொழுது பறித்துக் கவர்ந்து கொண்டாரென்று வழக்குத் தொடரப்பட்டது. குற்றஞ்சாற்றப்பட்ட கிருஸ்தவர்கள் கையில் விலங்கு பூட்டி முப்பது மைல் தூரத்திலமைந்த பாளையங் கோட்டைக்கு அவர்களை இட்டுச் சென்று சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்தார்கள். குற்ற விசாரணை முடிவதற்குள் ஐந்து மாதகாலம் கழிந்தது. இறுதியில் கிருஸ்த வர்கள் குற்றவாளிகளல்லர் என்று நீதிமன்றத்தார் தீர்ப்புரைத் தாரேனும் ஐந்து மாதங்களாக அவரடைந்த துன்பத்திற்கு ஓரளவில்லை.11 இத்தகைய இடுக்கணுற்றவிடத்தும் கிருஸ்து மதத்தை விடாது பற்றி நின்றனர் சிலர். அன்னார், மாசற்ற ஏசுநாதரின் பெருமையையும், சிறியோர் நெஞ்சந்தேறி நெறிமுறை வழுவாது வாழ்ந்து வந்தனர். இங்ஙனம் அலக்கணுற்ற நின்ற நாட்டில் கால்டுவெல் ஐயர் அறப்பணி செய்யப் போந்தார். அடிக்குறிப்பு 1. சுடிநெசவ-னந-சூடிbடைடi. 2. உடிளேவயவேரைள க்ஷநளஉhi. 3. புதியநெறி & ஞசடிவநளவயவே வநடபைiடிn. 4. “ளுறயசவண ரனேடிரவெநனடல னநளநசஎநள வடி நெ யீடயஉநன in வாந கசைளவ சயமே டிக ஐனேயைn ஆளைளiடியேசநைள. ஐவ ளை வசரந hந உயnnடிவ நெ னநளஉசiநென யள ய அயn டிக பநnரைள டமைந குசயnஉளை ஓயஎநைச டிச ய அயவயயீhலளiஉயைn டமைந உடிளேவயவேரைள க்ஷநளஉhi, ரெவ நெ றயள nடிவ iகேநசiடிச வடி வாடிளந பசநயவ துநளரவை ஆளைளiடியேசநைள டிச வடி யலே ஆளைளiடியேசநைள டிக யலே உhரசஉh டிச ளடிஉநைவல வாயவ நஎநச டiஎநன, in ளiஅயீடiஉவைல, யனே ழுடினடல ளinஉநசவைல, in யீநைவல யனே னநஎடிவநனநேளள, in றளைனடிஅ, யீhடையவோசடியீல யனே ணநயட.” ழ.கூ.ஆ.4 5. 1778. ஹ.னு. 6. ஊடயசiனேய. 7. ளு.ஞ.ழு. ஆளைளiடிn. 8. ழுநசiஉமந. 9. ஊயவநஉhளைவ. 10. னுரசiபே வாளை வiஅந டிக ளயீநஉயைட யககடiஉவiடிn யனே யடயசஅ வாந நேறடல கடிசஅநன உhசளைவயைn உடிபேசநபயவiடிளே in கூinநேஎநடலை றநசந டநகவ யடஅடிளவ நவேசைநடல வடி வாநஅளநடஎநள, றiவாடிரவ யலே பரனையnஉந, ளவசநபேவா யனே உடிளேடிடயவiடிn வாநல ளடி ரசபநவேடல நேநனநன.... கூhந உhசளைவயைளே நெiபே நேற உடிnஎநசவள, அடிளவடல ரயேடெந வடி சநயன யனே மnடிறiபே டவைவடந கை யலேவாiபே, டிக வாந ளயீசைவைரயட ரெவ டயஅநவேயடெந சநளரடவ றயள வாயவ பசநயவ ரேஅநெச டிக வாநஅ சநடயயீளநன வடி வாந றடிசளாiயீ டிக வாநசை யnஉநளவசயட னநஅடிளே. ழ.கூ.ஆ. 172 - 73 11. கூhந ளiஒ கயவாநசள டிக கயஅடைநைள, றாடி, in உடிளேநளூரநnஉந டிக ய கயடளந யஉஉரளயவiடிn hயன நெநn னசயபபநன யbடிரவ கசடிஅ நுனயலயபேரனi வடி யீயடயஅஉடிவவயஉh, கசடிஅ யீயவவi வடி ஆயனரசய, கசடிஅ ஆயனரசய வடி யீயவவi யபயin, யடட வாந றாடைந in உடடிளந உரளவடினல, hயன யவ டயளவ நெநn சநளவடிசநன. கூடி வாநசை கயஅடைநைள in குநசெரயசல, யள வாந உhயசபநள செடிரபாவ யபயiளேவ. கூhநஅ கiயேடடல யயீயீநயசநன கயடளந; அநயவேiஅந வாநசை கயஅடைநைள hயன நெநn ளவயசஎiபே கடிச யbடிரவ கiஎந அடிவோள, யனே வாநசை யீசடிளநஉரவடிசள, யள கயச யள ஐ மnடிற, hயஎந nடிவ சநஉநiஎநன வாந ளடiபாவநளவ உhநஉம கடிச வாநசை உசரநட. ஊhiஉயநேசல - சுடிளநn’ள சநயீடிசவ. ழ.கூ.ஆ. 250 3. நாடும் நடையும் சென்னைமாநகரினின்றும் புறப்பட்ட கால்டுவெல் ஐயர் பொருனை நாட்டிற்கு நடந்து செல்லத் துணிந்தார். நானூறு மைல் தூரம் நடந்து செல்லுகையில் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும், அவர் பேசும் மொழியையும் நன்கு அறிந்து பயனுறலாகுமென்பது அவர் கருத்தாகும். தமிழ்ச் சுவையறிந்த சென்னையன்பர் பால் அரிதின் விடைபெற்று, மாற்றுடை முதலிய சாமான்களைக் கூலியாட்கள் தலையிலேற்றி மனமகிழ்ந்து வழி நடந்தார். செல்லும் நெறியில் அமைந்த இயற்கை வளங்களைக் கண்டு இன்புற்றார். வெய்யோன் ஒளி மிகுந்த நண்பகற் பொழுதில் மரங்கள் செறிந்த பூம்பொழில்களில் தங்கி இளைப்பாற்றினர். இங்ஙனம் காலையும் மாலையும் வழி நடந்து, பொன்னி நாடென்று ஆன்றோராற் புகழப் பெற்ற சோழ நாட்டின் அணியாய காவிரிச் செழும் புனலைக் கண்டு களித்தனர். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையும் கண் கூடாகக் கண்டார். மாயூரம் என்னும் மயிலாடுதுறையின் வழியாகச் சென்று கடற்கரையில் அமைந்த தரங்கம்பாடியில் தங்கினார். ‘கத்தும் தரங்கம் எடுத்தெறியும்’ கடலருகே கவினுற விளங்கிய துறையைத் தரங்கம்பாடி என்னும் அழகிய பெயரால் அழைத்த தமிழ் மக்களது அறிவின் பெருமையை வியந்து புகழ்ந்தார். அப்பாடியிலமைந்து பெருந் தொண்டு புரிந்த தேனிய சங்கத்தின்1 வரலாற்றையும், அச்சங்கத்தார் இயற்றிய தமிழ் நூல்களின் பெருமையையும் அறிந்து அகமகிழ்ந்தார். அப்பால் கும்பகோணத்தின் வழியாகத் தஞ்சை மாநகரம் போந்து விண்ணளாவிய கண்ணுதற் பெருமான் கோவிலையும், சோழ மன்னர்கள் எடுத்த கோட்டையையும் கண்டு வியந்தார்.2 அக்காலத்தில் அம்மாநகரை ஆண்டு வந்த மராட்டிய மன்னன் சபையைக் கண்களிப்பக் கண்டார். நெல்லை மாநகரிற் பிறந்து கிருஸ்து மதத்திற் சேர்ந்து தஞ்சையிற் குடியேறி வாழ்ந்த வேதநாயக சாஸ்திரியாரைக் கண்டு அளவளாவினார். அவரியற்றிய இனிய தமிழ்க் கீதங்களைக் கேட்டு இன்புற்றார். பின்பு காவிரிக் கரையிலமைந்த சிராப்பள்ளிக் குன்றின் அழகையும், ஆற்றிடைக் குறையிலமர்ந்த திருவரங்கத்தின் சிறப்பையும் அறிந்து நீலகிரியை நோக்கிச் சென்றார். காருலாவும் நீலகிரியில் வசித்து வந்த ஸ்பென்சர் என்னும் அத்தியட்ச குருவின்3 விருந்தினராக ஒரு மாத காலம் தங்கி இளைப்பாறினார். சோழ நாட்டின் நிலவளமும், தரங்கம் பாடியின் கடல் வளமும், நீலகிரியின் மலைவளமும் அவருள்ளத்தில் நன்கு நிலைபெற்றன. நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கொங்கு நாட்டுக் கோவையின்4 வழியாகப் புலவர் நாவிற் பொருந்திய மதுரைமாநகரை நோக்கி நடந்தார். கோவைக்கும் கூடலுக்குமிடையே அமைந்த நாட்டுப் புறங்களிற் கால்டுவெல் ஐயர் நடந்து செல்லும் பொழுது அவர் அடைந்த அவதிகள் பலவாகும். வண்டியேறிச் செல்ல வகையற்ற வெள்ளையர் திண்டாடித் தெருவழியே செல்கின்றாரென்று இழித்துரைத்தார் பலர். “தொல்லை வினையால் துயருழந்து செல்லும் பரங்கியைப் பார்மின்” என்று வீட்டிலுள்ளாரைப் பரிந்தழைத்தார் பலர். இவ்வாறு பழித்தும் இழித்தும் பேசிய பாமர மக்களின் அறியாமை கண்டு கால்டுவெல் ஐயர் இரங்கிச் சென்றார். ஒரு நாள் ஒரு பட்டியின் வழியாகச் செல்லும் பொழுது பகற் பொழுது கழிந்தது; பெருமழை பெய்யத் தொடங்கிற்று; கங்குற் பொழுதை அவ்வூரிற் கழிக்கக் கருதிய கால்டுவெல் ஐயர் சத்திரமேனும் சாவடியேனும் அங்கு உண்டோ என்று வினவினார். அவ்வூரில் அரசாங்கத்தார் கட்டிய சத்திரம் ஒன்று உண்டென்றும், அங்கு வெள்ளைப் பரங்கியர்க்கு இடங்கிடையாதென்றும், அவ்வூரார் கூறக்கேட்டு மனம் நொந்தார். மழையில் நனைந்து துயருற்ற கால்டுவெலைக் கண்டு கருணைகூர்ந்த சிலர் அருகேயிருந்த மாட்டுத் தொழுவொன்றைக் காட்டி அங்கு தங்கலாமென்று அன்போடுரைத்தார். சத்திரத்தில் இடம் பெற இயலாமை யாலும், மாட்டுத் தொழுவில் தங்க மனமிசையாமையாலும், சஞ்சலமுற்ற கால்டுவெல் ஐயர் அவ்வூரில் அடைபட்டிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கி இராப் பொழுதைக் கழித்தார். பாண்டி நாட்டின் தலைநகராய மதுரையை வந்தடைந்த பொழுது தாயைக் கண்ட சேய்போல் ஐயர் அகமலர்ந்து இன்புற்றார். ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் பெருமை வாய்ந்த வையை யாற்றில் வெள்ளம் பெருகிவரக் கண்டு உள்ளங் குளிர்ந்தார். அப்பால் அங்கயற் கண்ணியோடு இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோவிலின் அழகினைக் கண்டு ஆனந்தமுற்றார். திருமலை நாயக்கர் எடுத்த மாளிகை முற்றும் சுற்றி அதன் மாண்பினை மனமாரப் புகழ்ந்தார். ஏசுநாதரின் மனம் போலமைந்த மூசுவண்டறை பொய்கையின் இனிமையை நுகர்ந்து திளைத்தார். பைந்தமிழ் வழங்கும் நாடு பாண்டி நாடேயென்றும், கசடறக் கற்ற புலவரடங்கிய கழகத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த நகரம் மதுரை மாநகரமென்றும் எண்ணிய நிலையில் எல்லையற்ற இன்பமுற்றார். தமிழ் மணக்கும் மதுரை மாநகரை விட்டு நீங்கித் திருமங்கலத்திற் சமயத் தொண்டு புரிந்த திரேசியர்5 என்னுந் தமிழறிஞருடன் அளவளாவி, மங்கம்மாள் வகுத்த வளமார்ந்த சாலையின் வழியாக நடந்து, சில நாட்களில் தென்றல் வந்துலாவும் திருநெல்வேலியை அடைந்தார். பொருனையாற்றின் வடகரையில் அமைந்த குளிர் பூஞ் சோலையில் தங்கினார். அவ்வாற்றினிரு கரையின் அழகையும் நெடிது நோக்கினார். வளமுற வளர்ந்த மருத மரங்களினிடையே மாசறத் தெளிந்த நன்னீர் நெளிந்து தவழ்ந்து சென்ற அழகு, அவர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. கால்டுவெல் ஐயர் தங்கியிருந்த தண்ணறுஞ் சோலையில் சிறையாரும் மடக்கிளிகள் மழலைமொழி பேசி மகிழ்ந்தன. கண்ணுக்கினிய பறவைகள் பண்ணார்ந்த பாட்டிசைத்தன. விரையுறு மலர்கள் நிறைந்த பொழிலின் நறுமணம் நுகர்ந்தும், பறவையினங்களின் பாட்டொலி கேட்டும் இன்புற்ற கால்டுவெல் ஐயர், பொருனை யாற்றைக் கடந்து பாளையங்கோட்டைக்குச் சென்றார். சீலமே உருவாய சுவார்த்தர் முதலிய சான்றோர் ஆற்றிய பணியின் அருமையை அந்நகரிற் கண்டு போற்றினார். ஆண்டு வாழ்ந்த கிருஸ்தவர்கள் கலை நலம் வாய்ந்த கால்டுவெல் ஐயரைக் கண்டபோது, அன்பினால் அகங் குழைந்து இன்பக் கண்ணீருகுத்தார். அவரன்பின் சுவை அறிந்த கால்டுவெல் அறிஞர், சிலநாள் அவரோடளவளாவி மகிழ்ந்து, நலமலிந்த மக்கள் வாழும் நாசரத்தென்னும் நகரை நண்ணினார். அந்நகர மக்கள் விருப்பத்திற்கிணங்கி ஆலயத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார். ‘கங்குல் கழிந்தது; கதிரொளி எழுந்தது’ என்னும் நிருபமொழியைப் பீடிகையாகக் கொண்டு அவர் நிகழ்த்திய விரிவுரை வருங்காலச் சிறப்பினை அறிந்து கூறும் அறிவுரை போல் விளங்கிற்று.* அருகிருந்த முதலூரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அரியதோர் விரிவுரை செய்தார். அப்பால் முதலூர் அன்பரிடம் விடை பெற்று இடையன்குடியை நோக்கிப் புறப்பட்டார். காத வழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை நோக்கிச் செல்லும்பொழுது, நெறிதவறி நெடுந் தூரஞ் சுற்றி இராப் பொழுதில் அவ்வூரை வந்தடைந்தார். அடிக்குறிப்பு 1. கூhந னுயniளா ஆளைளiடிn. 2. “ஆல நேஒவ ளவயபந றயள கூயதேடிசந. டீn அல றயல ஐ டடிளவ nடி டியீயீடிசவரnவைல டிக நஒயஅiniபே வாந பசநயவ ழiனேர கூநஅயீளைந டிக வாந கூயதேடிசந உடிரவேசல யனே வாந நேiபாbடிரசiபே, நளயீநஉயைடடல உhனையஅயெசயஅ வாந அடிளவ ளயஉசநன டிக ளுiஎய வநஅயீடநள யனே கூயதேடிசந வைளநடக, in ளடிஅந சநளயீநஉவள வாந அடிளவ iஅயீடிளiபே வநஅயீடந in ளடிரவாநசn ஐனேயை. ஐ றயள ளரககiஉநைவேடல யஉளூரயiவேநன றiவா ழiனேரளiஅ யனே ழiனேர யசஉhநடிடடிபல வடி ரனேநசளவயனே யனே யயீயீசநஉயைவந அரஉh டிக றாயவ ஐ ளயற.” ஊ.சு. 70 - 71. 3. அத்தியட்சகுரு - க்ஷiளாடியீ 4. “ஞயளளiபே டிn கசடிஅ ஆயனரசய வடி வாந ளுடிரவா ஐ ளவயலநன ய னயல றiவா ஆச. (யகவநசறயசனள னுச.) கூசயஉல யவ கூhசைரஅயபேயடயஅ, யn ஹஅநசiஉயn அளைளiடியேசல றாடி யகவநசறயசனள கடிரனேநன வாந ளநஅiயேசல யவ யீயளரஅயடயi கடிச வாந நனரஉயவiடிn டிக வாந யேவiஎந யபநவேள டிக வாந ஆயரசய ஆளைளiடிn. ஆச. கூசயஉல றயள ய படிடின கூயஅடை ளஉhடிடயச, யள றநடட யள ய படிடின ழுசநநம ளஉhடிடயச யனே சநனேநசநன அரஉh எயடரயடெந ளநசஎiஉந வடி வாந உhரசஉh அயலே லநயசள யகவநசறயசனள in வாந சநஎளைiடிn டிக வாந கூயஅடை க்ஷiடெந, ய றடிசம in றாiஉh hந வடிடிம யீயசவ கசடிஅ வாந உடிஅஅநnஉநஅநவ வடி வாந வநசஅinயைவiடிn.” ஊ.சு.77. 5. “ஐ யசசiஎநன in கூinநேஎநடடல in சூடிஎநஅநெச 1841. ஆல கசைளவ ளரனேயல. ஐவ றயள ளயீநவே யவ சூநணயசநவா, றாநசந ஐ யீசநயஉhநன கசடிஅ ய யீடிசவiடிn டிக வாந நுயீளைவடந கடிச வாந னயல, சுடிஅ. ஓiii 12,” “கூhந niபாவ ளை கயச ளயீநவே, வாந னயல ளை யவ hயனே.” டடிடிமநன யசடிரனே in யீயடயஅஉடிவவயா யனே சூயணயசநவா, வாந டிடேல உhசளைவயைn ளவயவiடிளே in கூinநேஎநடடல ஐ hயன லநவ ளநநn. ஆல நெடநைக வாயn றயள வாயவ னயல றயள யவ hயனே. ஆயலே லநயசள hயஎந நடயயீளநன ளinஉந வாநn யனே வாந னயல hயள nடிவ யசசiஎநன லநவ, ரெவ அல கயiவா சநஅயiளே ரளோயமநn. ஐவ ளை ளவடைட அல நெடநைக, யள வை றயள வாநn, வாயவ வாந னயல ளை யவ hயனே.” ழ.கூ.ஆ. 330. 4. பழையன கழிதலும் புதியன புகுதலும் திருநெல்வேலி நகருக்குத் தென்கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் செக்கச் சிவந்த தேரியில்1 இடையன்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கதிரவன் வெம்மையை ஆண்டு முழுதும் பெற்று விளங்கும் அவ்வூரில் ஊற்று நீரல்லால் வேற்று நீரில்லை. காலையெழும் கதிரொளி மாலையில் மறையுமளவும் அதன் வெம்மையைத் தாங்கி நிற்கும் தேரியைக் காணும் கண்ணும் கருதும் மனமும் ஒருங்கே கருகுவனவாகும். வெய் யோன் ஒளி விரைந்து பரவிச் செந்நிலத்தை வெந்நிலமாக்கும் பொழுது ‘செந் நெருப்பினைத் தகடு செய்து பார் செய்ததொக்கும் அச்செந்தரை’ என்று பரணிக்கவிஞர் எழுதிய பாலையின் வடிவம் நம் கண்ணெதிரே பரந்து தோன்றுவதாகும். இத்தகைய செம்மணற் பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிறந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியில் கற்பகதரு வெனத்தழைத்துச் செழித்து வளரும் பiனைகளே அந்நிலத்தில் வாழும் மாந்தர்க்குப் பழுதற்ற செல்வமாகும். காலையும் மாலையும் பனையேறிப் பதநீர் வடித்துப் பண்புறக் காய்ச்சி கட்டி செய்து விற்றுக் காலங்கழிக்கும் ஏழை மக்களே அவ்வூர்ப் பழங்குடிகளாவர். கால்டுவெல் ஐயர் அவ்வூரிற் போந்தபொழுது கூரை வேய்ந்த குடிசைகள் தாறுமாறாகக் கட்டப் பட்டிருந்தன. மனைகளைச் சூழ்ந்து முள்நிறைந்த கள்ளியே வேலியாக அமைந்தது. நேரிய தெருக்கள் எங்கும் காணப்படவில்லை. ஊர் நடுவேயமைந்த அகன்ற வெற்றிடத்தில் ஓங்கி உயர்ந்த புளி மரங்கள் ஆங்காங்கு நின்று நிழல் விரித்தன. அவ்வெற்றிடத்தின் ஒரு மூலையில் வழிபாட்டுக்குரிய கிருஸ்தவக் கோயிலும் வேதியர்க்குரிய சிறு வீடும் அமைந்திருந்தன. அம்மனையைத் தம் இருப்பிடமாகக் கொண்ட கால்டுவெல் ஐயர், கோயிலையும் குடியிருப்பையும் திருத்தி யமைக்கத் தொடங்கினார். திருக்கோவிலைச் சுற்றியிருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். அந்நிலங்களில் தொன்று தொட்டுக் ‘குடியேற்றுரிமை’யின் பெயரால் வீடு கட்டுங் காலங்களிற் கடமை பெற்று வந்த சில நாடார்களின் உரிமைகளைத் தக்க விலை கொடுத்து விலக்கினார். இங்ஙனம் வில்லங்கத்தைத் தீர்த்தொழித்த பின்பு அந்நிலங்களைத் திருத்தத் தொடங்கினார். எம்மருங்கும் பரந்து கிடந்த கள்ளியையும் முள்ளியையும் களைந்தெறிந்து, தெருக்களைத் திருத்தமுற வகுத்து, சந்துகளிற் கிணறு களமைத்து, நிழல் விரிக்கும் மரங்களை வீதியின் இரு சிறகும் நட்டு, செவ்வியமுறையில் சிறு வீடுகள் கட்டுவித்தார். எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர்ச் சிறுவர் சிறுமியர்க்கு எழுதவும் படிக்கவும் கற்பிக்கக் கருதிப் பாடசாலைகள் நிறுவினார். பெண் மக்கள் கல்வி கற்றல் பெருந்தவறு என்று அந்நாட்டார் கருதியிருந்தார்கள். குறுகிய நோக்க முடையராயிருந்த அவ்வூர் முதியோரைக் கால்டுவெல் ஐயர் வாரமொருமுறை தவறா தழைத்துக் கல்வியின் பெருமையை விரித்துரைப்பாராயினர். ஒரு நாள் நாடார்கள் மனத்தில் கல்வியின் இன்றியமையாமையை நன்கு அறிவுறுத்தக் கருதிய ஐயர், “விலங்கொடு மக்களனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் கட்டுரையின் பொருளை விரித்துரைத்து, ஆண் மக்களும் பெண் மக்களும் அறிவுரையராதல் வேண்டும் என்று அழுத்திக் கூறினார். அப்பொழுது ஆண்டிருந்த விருத்த நாடார் ஒருவர் வெகுண்டெழுந்து, “அடுக்கiளையிற் பணி செய்யும் பெண்களுக்கு அறிவினாற் பயனென்னை? வேந்தர் வீட்டுப் பெண்களும் வேசியர் வீட்டுப் பெண்களுமே கல்வி கற்றல் வேண்டும்” என்று விசையாகச் பேசினார். அவ்வுரை கேட்ட கால்டுவெல் ஐயர், இறையளவும் மனந்தளராது இவ்வுலகில் கற்றோடையும் பெருமையையும் மற்றோடையும் சிறுமையையும் விரித்துரைத்து அவ்விருத்தரையும் திருத்தி யருளினார். கல்லைப் பிசைந்து கனியாக்கும் கருணை வாய்ந்த கால்டுவெல் ஐயரின் அறிவுரை நாளடைவில் மடக் கொள்கைகளை மாற்றி நாடாரைக் கல்வியில் நாட்டமுறச் செய்தது. கால்டுவெல் ஐயர் போற்றி வளர்த்த பாடசாலைகள் சில ஆண்டுகள் அவ்வூரிற் செழித்தோங்கி நிலைபெற்றன. கலையுருவாய கால்டுவெல் ஐயர் கட்டுவித்த வீடுகளையும் திருத்திய தெருக்களையும் கண்டு வியப்புற்ற கிருஸ்தவ நாடார்கள் தம் வீடுகளையும் வீதிகளையும் புதுக்கி அமைக்கத் தொடங்கினர். தெருக்களை நேராக்கித் திருத்தினர். வீதியின் இருபாலும் மரங்கள் நட்டு வளர்த்தனர். இங்ஙனம், கால்டுவெல் அறிஞர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து நாடார்கள் நாளடைவில் நலமுற்றார். எம்மருங்கும் பண்புற்றமைந்த வீதிகளின் நேர்மையையும், வீடுகளின் செம்மையும் கண்டு களிப்புற்ற ஐயர், ஊர் நடுவேயமைந்த வெளியிடத்தில் விழுமிய கோயில் எடுக்க விழைந்தார். கிருஸ்துநாதர் பெருமைக்கேற்ற வகையிற் புறக்கோயில் கட்டத் தொடங்கு முன்னமே ஐயர் தம் மனத்தில் அகக்கோயில் கட்டி முடித்தார். ஆலயம் அமைக்கும் முறைகளைச் செவ்வையாக அறிந்திருந்த ஆங்கில நாட்டு ‘ஆலய நிர்மாண சங்கத்தாரிடம்2 கால்டுவெல் ஐயர் தம் கருத்தைத் தெரிவித்தார். அச்சங்கத்தார் கால்டுவெலைக் கண்டறிந்த வல்லராயினும் அவர் மனத்தி லெழுந்த ஆர்வத்தை மதித்துப் பெருங் கோவிலுக்குரிய படங்கள் வரைந்தனுப்பினர். அப்படங்களைக் கண்ட கால்டுவெல் ஐயரின் உள்ளம் துள்ளி எழுந்தது. மனத்திலமைந்த மணிமாடக் கோயின் வடிவத்தைப் படத்திற் கண்கூடாகக் கண்டு கழிபேருவகையுற்றார். கைம்மாறு கருதாது கண் வருந்த முயன்று படக்கோயில் வரைந்தனுப்பிய ஆங்கில சங்கத்தாரது தொண்டின் திறமறிந்து போற்றினார். கள்ளமற்ற அன்பர் கருத்தறிந்து முடிக்கும் கர்த்தர் பெருமையை நினைந்து மனங்கசிந்துருகினார். அப்பொழுது ஆங்கில நாட்டு நண்பர் ஒருவர்க்கு வரைந்துதவிய படங்களால் எனக்கு ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும் மிச்சம் என்று கால்டுவெல் ஐயர் எழுதிய குறிப்பு அறியத் தக்கதாகும்.3 இவ்வாறு ஆலயத்திற்குரிய படடம் பெற்ற பின்பு ஐயர் பணம் திரட்டத் தொடங்கினார். ஆங்கில நாட்டிலும் தமிழ் நாட்டிலும் அவரை அறிந்தார் பலரும் அறியாதார் சிலரும் இயன்ற அளவு பொருள் வழங்கி ஆதரித்தார்கள். “எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.” என்னும் திருவாக்கைத் துணைக் கொண்ட ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்தேழா மாண்டில் ஆலயத்தின் அடிப்படைக்கல் நாட்டினார். இங்ஙனம் தொடங்கிய திருப்பணி முற்றுப் பெறுமுன் முப்பத்து மூன்று ஆண்டுகள் கழிந்தன வென்றால் அதன் பெருமை சொல்லாமலே அமையுமன்றோ? அவ்வாலயம் இடையன்டீக்கோர் அணிகலனாகவும், கால்டுவெல் ஐயரின் பெருமைக்கோர் அழியாத சான்றாகவும் நின்று நிலவுகின்றது. அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்களைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது.4 ஆயினும் சாலச் சிறந்த அக்கோயிற் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். திருப்பணி நடைபெறும் பொழுது கால்வெல் ஐயர் களியினாற்5 சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும், அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளரவேலை செய்து முடித்தாரென்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள். இளமையிற் கவின்கலைக் கல்லூரியிற் பழகி ஓவியக்கலையிற் பரிசு பெற்ற கால்டுவெல் ஐயரின் கைவண்ணம் இடையன் குடிக்கோவிற் சாளரங்களில் இலங்கக் காணலாம். சென்னை மாகாணக் கவர்னராயிருந்த லார்டு நேப்பியர் என்னும் பெரியார் கால்டுவெல் ஐயர் இயற்றும் திருப்பணியைக் காண விரும்பி இடையன்குடிக்குச் சென்றார். திருக்கோயிலின் ஒவ்வொருறுப்பையும் ஐயர் காட்டக் கண்டு களிப்புற்றார். தொழிற்சாலையிற் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சாளரத்தின் அழகினைக் கண்டு வியந்து அதன் விலையாய் ஐந்நூறு ரூபாவையும் அப்பொழுதே கையுறையாக அளித்தார். ஒரு வாரம் அச்சிற்றூரில் தம பரிவாரங்களோடு தங்கியிருந்து ஐயருடன் அளவளாவி இன்புற்றார். இங்ஙனம் சென்னைக் கவர்னர் உள்ளத்தைக் கவர்ந்த சாளரம் அக்கோயிலின் கீழ்பால் நின்று அணி செய்கின்றது.6 அடிக்குறிப்பு 1. “கூhந அடிளவ யீநஉரடயைச னiஎளைiடிn டிக வாந னளைவசiஉவ ளை வாந பசநயவ ரனேரடயவiபே நஒயீயளேந வடி சநன ளயனேமூவாந வாநசை உடிரவேசல யள வை ளை உயடடநன மூறாiஉh னடிஅiயேவநள வாந ளடிரவநசn யீயசவ டிக வாந சூயபேரநேசi கூயடரளூ யனே ய பசநயவ யீயசவ டிக வாந கூயடரளூ டிக கூசiஉhநனேரச... கூhந டுநஎநட உடிரவேசல டிக வாந வசயஉவ யனே iனேநநன வாந ளடடியீநள டிக அயலே டிக வாந னரநேள யசந ளவரனனநன றiவா வாடிரளயனேள டிக யீயடஅலசயள; வாந யீயடஅலசய கடிசநளவ ளை வாந யீhசயளந லெ றாiஉh வாளை சநபiடிn கை 150 ளளூரயசந அடைநள ளை டிகவநச உடிஅயீசநாநளiஎநடல னளநசiநென”கூ.ழு.16. 2. ஊhரசஉh - ரெடைனiபே ளடிஉநைவல. 3. “ஐ வாiமே லடிர யசந யறயசந வாயவ ஐ யஅ நபேயபநன in ரெடைனiபே ய நாரசஉh in வாளை எடைடயபந.... கூhந கடிரனேயவiடிn ளை நெiபே டயனை றாiஉh அரளவ நெ எநசல னநநயீ டிn யஉஉடிரவே டிக வாந டடிடிளந யேவரசந டிக வாந ளடிடை. ஐ படிவ பசயவளை கசடிஅ ய க்ஷரடைனiபேள ளடிஉநைவல in டுடினேடிn ய நெயரவகைரட ளநவ டிக யீடயளே யனே றடிசமiபே னசயறiபேள றடிசவா டு 50. ஐ னனை nடிவ மnடிற வாந யேஅந டிக ய ளiபேடந யீநசளடிn உடிnநேஉவநன றiவா வாந ளடிஉநைவல றாநn ஐ றசடிவந ரெவ மநேற டிடேல வாந ளுநஉசநவயசல’ள னநளபையேவiடிn. ஐ வாடிரபாவ வை றடிரடன னடி nடி hயசஅ வடி யயீயீடல வாடிரபா ஐ hயஎந hநயசன டிக யலே அளைளiடியேசல hயஎiபே யயீயீடநைன நெகடிசந யனே ஐ மநேற வாயவ வாந ளடிஉநைவல றயள யீசடியீநசடல ய ழடிஅந உhரசஉh-ரெடைனiபே ளடிஉநைவல றாiஉh hயன nடிவாiபே வடி னடி றiவா வாந உடிடடிnநைள. லுநவ வாந நேஒவ அயடை ரெவ டிn யகவநச வாந ளநஉசநவயசல சநஉநiஎநன அல டநவவநச hந னநளயீயவஉhநன ய டயசபந வin-உயளந வடி அந யீடிளவ-யீயனை உடிவேயiniபே யடட வாந னசயறiபேள ஐ சநளூரசைநன யனே டிககநசiபே பநநேசடிளவைல. கூhந யீடயளே யசந iகேinவைநடல நெவவநச வாயn ஐ உடிரடன hயஎந நஒநஉரவநன அலளநடக யன ஐ ளயஎந nடி டிடேல டு 50 ரெவ 500 hநயன-யஉhநள.” - ஊயடனநறடட’ள டநவவநச னயவநன 11வா டிஉவ. 1848. 4. “ஹ எயடரயடெந ரெடைனiபே ளவடிநே டிவெயiநேன நேயச கூளையலயேஎடையi றயள ரளநன லெ க்ஷiளாடியீ ஊயடனறநடட in வாந உடிரளவசரஉவiடிn டிக hளை உhரசஉh யவ ஐனயலயபேரனi. கூhந சடிஉம ளை டiஅந ளவடிநே எநசல டயசபநடல உடிஅயீடிளநன டிக உடிஅஅiரேவநன ளாநடடள.” - கூ.ழு. 26. 5. சாளரம் - சன்னல். 6. ஐn 1868 ஐனயலயபேரனi hயன வாந யீடநயளரசந டிக சநஉநiஎiபே ய எளைவை கசடிஅ டுடிசன சூயயீநைச, வாந ழுடிஎநசnடிச டிக ஆயனசயள றiவா டயனல சூயயீநைச யனே வாநசை ளவயகக. கூhநசை எளைவை டயளவடநன கடிச அடிசந வாயn ய றநநம யனே ஐ hயன வாந யீடநயளரசந டிக நனேநயஎடிரசiபே வடி யளேறநச வாந அரடவவைரனந டிக ளூரநளவiடிளே யீரவ வடி அந லெ டடிசன சூயயீநைச சநளயீநஉவiபே வாந உடிரவேசல யனே யீநடியீடந. ழந றயள ய அயn டிக டயசபந iகேடிசஅயவiடிn யனே பசநயவ எநசளயவடைவைல டிக அiனே யனே hளை உhநைக னநடiபாவ றயள in நனேநயஎடிஎரசiபே வடி யனன டிn எநசல hயனே வடி hளை ளவடிசந டிக மnடிறடநனபந கடிச றாiஉh ரnhயயீயீடைல hந hயள nடிவ கடிரனே அரஉh ரளந in நுபேடயனே ளinஉந hளை சநவரசn. ஊ.சு. 121. 5. கலையின் விளக்கம் வெப்பம் மிகுந்த இடையன்குடியை இருப்பிடமாக்க கொண்ட கால்டுவெல் ஐயர் மெய் வருத்தம் பாராது அரும்பணி யாற்றத் தொடங்கினார். தமிழ் நூலோர் கார்கால முதலாக ஆறு பருவங்களை வகுத்துரைத்திருப்பினும் கால்டுவெல் ஐயர் இரு பருவங்களே தேரி நாட்டிற் சுழன்று வரக் கண்டார். மூன்று மாதம் வேனிற் பருவமும், ஒன்பது மாதம் கடுவேனிற் பருவமே இடையன்குடியில் உண்டென்று ஆங்கில நாட்டு நண்பர் ஒருவர்க்கு ஐயர் அறிவித்துள்ளார். பார்க்கும் இடமெங்கும் பரந்து கிடந்த தேரிக் குறு மணலின் செந்நிறம் அவர் கண்ணைக் கவர்ந்தது. அத்தகைய செம்மணல் வேறெந் நாட்டிலும் உண்டோ என்று ஐயுற்றார். ஆண்டுதோறும் காட்சிக்குரிய அரும் பொருளை ஒருங்கு சேர்த்துக் கண்களுக்கு விருந்தளிக்கும் வீயன்னா1 என்னும் வியனகர்ப் பொருட்காட்சிச் சாலைக்கு அச்செம்மணலைப் பொதி செய்து அனுப்பினார். காட்சிச் சாலையிற் குழுமிய ஐரோப்பியர் அம்மணலின் செந்நிறங்கண்டு வியப்புற்றார். தேரிக் குறுமணலின் தன்மையை ஆராய்ந்து அறிந்த பொருட்சாலை அமைச்சர் அம்மணலையொத்த செம்மணல் உலகில் எம்மருங்கும் கண்டதில்லை என்று கால்டுவெல் ஐயருக்கு அறிவித்தார். இங்ஙனம் வேனில் வீற்றிருந்த செந்நிலத்தில் வாழ்ந்த ஐயர், பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தறியத் தலைப்பட்டார். திருவள்ளுவனார் அருளிய திருக்குறளையும், திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணியையும், பவணந்தி முனிவர் செய்த நன்னூலையும் பன்முறை ஓதியுணர்ந்து பழந்தமிழ் மொழியின் திட்ப நுட்பங் கொள்ளும் இடங்காணக் கருதி இடையன் குடியைச் சுற்றியுள்ள இடங்களை முற்றும் நாடினார். மூன்று மைல் தூரத்திலுள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல் அமைந்திருக்கக் கண்டார். உவரித்துறை பழம் பெருமை வாய்ந்தென்று அறிந்து உள மகிழ்ந்தார். கடற்கரையினருகே வதிந்து திண்ணிய நூல்களைத் துருவக்கருதினார். அப்போது அவருடன் சென்ற நண்பர்கள் ஆண்டிருந்த தெண்ணீர்ச் சுனை ஒன்றைக் காட்டி அதனருமையைப் பாராட்டினார்கள். அளவிற் சிறிதாயிருந்த அச்சுனையின் நீரைப் பருகி கால்டுவெல் ஐயர் அதன் அருமையை அறிந்தார். உவர்க் கடலின் அருகே அமைந்த சிற்றூறல் உண்ணீரு மாகிவிடுமென்று கவிஞர் கூறிய உண்மைக்குச் சான்றாக நின்று சிறு சுனையின் பெருமையை மனமாரப் புகழ்ந்தார். என்றும் சீரிளமை குன்றாது நின்று நன்னீர் வழங்கிய சிறு சுனையை ‘இளஞ்சுனை’ என்று அழைத்து அவ்வூரார் மதி நலத்தினை வியந்தார். அச்சுனையினருகே சிறு வீடு கட்டுவித்து, கடுவேனிற் காலத்தில் ஆண்டு சென்று வசிப்பாராயினார். இளஞ்சுனையின் பயனைக் கால்டுவெல் ஐயர் காட்டக்கண்ட ஐரோப்பியத் தொண்டர் பலர் முதுவேனிற் பருவத்தில் ஆண்டு சென்று கூரை வீடு கட்டிக் குடியிருந்து வந்தார்கள். இங்ஙனம் சிலகாலம் செழிப்புற்றிருந்த இளஞ் சுனையில் இப்பொழுது கால்டுவெல் ஐயரின் பழுதற்ற பழமனை யென்றே காணப்படுகிறது.2 ஆண்டுக் கொருமுறையேனும் குளிர்ந்த மலைகளிற் சிலகாலம் வசித்துத் தளர்வுற்ற உடலைத் தேற்றக் கருதிய கால்டுவெல் ஐயர், குற்றாலை மலையின் பெருமையைக் கேள்வியுற்ற சாரற் காலத்தில் அங்கு சென்றார். மஞ்சுதோய உயர்ந்த திரிகூட மலையின் செழுமையையும், கருமலையில் வெள்ளருவி, கறங்கி வழிந்து இறங்கும் காட்சியையும், சஞ்சீவி முதலாய விஞ்சை மூலிகையின் மணங் கமழ்ந்துலாவிய மந்த மாருதத்தின் மென்மையையும், செழுங்கனி தூங்கும் மரங்களில் வானரங்கள் மந்தியொடு கொஞ்சும் மாண்பினையும் கண்டு நெஞ்சம் தழைத்த கால்டுவெல் ஐயர் மூன்று மாதகாலம் ஆண்டுறைந்து முற்றிய இன்பமுற்றார். ஆயினும், சாரற் பருவம் கழிந்த பின்னர் குற்றால மலையில் மலைக் காய்ச்சல் முதலிய தொத்து நோய்கள் தொடரக் கண்டு அம்மலையை விட்டகன்றார். இளஞ்சுனையிற் போக்கிய இளவேனிற் காலத்தும் குற்றால மலையிற் கழித்த முதுவேனிற் பருவத்தும் கால்டுவெல் ஐயர், பகற் பொழுதில் ஆறுமணி நேரம் அருங்கலை பயின்று இன்புற்றாரென்றும், இடையன்குடி வெயிலிற் காய்ந்து கருகிய காலத்து இரண்டு மணி நேரத்திற்கு மேற் கலை பயில இயலாது தளர்வுற்றாரென்றும் அவர் வாழ்க்கை வரலாறு கூறுகின்றது. மூன்று மாத காலத்திற்கு மேல் திருக்குற்றால மலையில் வசிக்க முடியாமையால் இடையன்குடிக்கு அண்மை யிலமைந்த தொடர் மலையில் தண்ணார்ந்த பொழிலிடம் உளதோ வென்று ஐயர் துருவத் தொடங்கினார். பொருனை நாட்டிற்கும் மலையாள நாட்டிற்கும் இடையேயுள்ள தொடர் மலையில் மூவாயிரமடி உயர்ந்த அசம்பு மலையென்னும் குன்றம் சாலச் செழுமை வாய்ந்த தென்று அறிந்து அம்மலை முடியை நாடிச் சென்றார். சிந்தைக்கினிய செழுமையும், கண்ணுக்கினிய காட்சியும், வாய்ந்ததேனும் அசம்புமலை கொடிய விட நோய்களுக்கு உறைவிடமாயிருந்தமையால் அம்மலை பயனற்றதென்று கைவிட்டார். பாண்டி நாட்டிலமைந்த கொடைக்கானலின் செழுமையைக் கால்டுவெல் ஐயர் நெடுங்காலம் அறியா திருந்தனர். நாற்பதாண்டுகளாகத் தேரியின் வெம்மையைத் தாங்கிப் பணியாற்றிப் பழுத்த நிலையிலேயே கோடை மலைக்காற்று அவர் மேனியைக் குளிர்விப்பதாயிற்று. கால்டுவெல் ஐயர் கர்த்தர்பணி இயற்றத் தொடங்கிய பொழுதே தமிழிலமைந்த ‘பிரார்த்தனை நூலை’3த் திருத்தும் பொறுப்பினை மேற்கொண்ட கழகத்தில் ஓர் உறுப்பினராய்ச் சேர்ந்துழைக்கும் உரிமை பெற்றார். நெடுங்காலமாக ‘ராட்லர்’ என்னும் ஜெர்மானியப் பாதிரியார் இயற்றிய பிரார்த்தனை நூலே தமிழறிந்த கிருஸ்தவர்க்குத் தாரகமாய் விளங்கிற்று. அப்பாதிரியார் தமிழ் மொழியிற் சிறந்த புலமை வாய்ந்த வராயினும் ஆங்கில மொழியிலமைந்த பிரார்த்தனை நூலின் செவ்விய நலங்களை அறிதற்குரிய ஆங்கிலப் பயிற்சியற்ற வராயிருந்தமையால் அவர் மொழி பெயர்த்த பிரார்த்தனை நூல், மூல நூலின் அழகினைத் தெரிக்கும் திறமற்றிருந்தது. ஆகவே அந்நூலைத் திருத்தி அமைக்கக் கருதிய சென்னை அத்தியட்ச குரு, தமிழறிந்த ஆங்கிலத் தொண்ட ரனைவரையும் அங்கித்தினராகக் கொண்ட கழக மொன்றை நியமித்தார். பாளையங் கோட்டையில் நற்றமிழறிஞராய் விளங்கிய ‘பெற்றிதர்’4 என்னும் பெரியாரும், மெஞ்ஞானபுரத்தில் தன்னேரிலாத் தக்காராய்த் திகழ்ந்த ‘தாமஸ்’ என்னும் அறிஞரும், சாயர்புரத்தில் பைந்தமிழ்ச் செல்வராய் இலங்கிய போப்பையரும், இடையன்குடியில் இணையற்ற புலமை வாய்ந்திருந்த கால்டுவெல் ஐயரும் அக்கழகத்தில் உறுப்பினராயமைந்தார்கள். அக்கழகத்தார் நான்காண்டு களாகப் பரிவர்த்தனை நூலை நன்கு ஆராய்ந்து திருத்தி வெளியிட்டார்கள். இவ்வாறு திருத்தமுற்ற பிரார்த்தனை நூல் முப்பதாண்டு கட்குப் பின்பு மேலும் செப்பமுறுவதாயிற்று. “பணிபுரியுமாம் என்றும் பெருமை” என்னும் பொருளுரைக்கு எடுத்துக் காட்டாக அமைந்தவர்5 என்னும் பெரியாரைத் தலைவராகக் கொண்ட கழகம் அப்பணியில் ஈடுபடுவதாயிற்று. அறுவர் அடங்கிய கழகத்தில் கால்டுவெல் ஐயரும் ஒருவராக விளங்கினார். அக்கழகத்தார் மூன்று மாத காலம் அந்நூலை முற்றும் ஆராய்ந்து திருத்தியும், புதுக்கியும் செவ்விய தமிழில் அமைத்துதவினார். ஆராய்ச்சிக் கழகத்தில் அறுவர் உறுப்பினராயமர்ந்தாரேனும் பொறுப்புடன் பணியாற்றி அந்நூலைப் புதுக்கிய பெருமை தலைவராய பவருக்கும், தமிழறிஞராய கால்டுவெல் ஐயருக்குமே உரியதென்று அறிந்தோர் கூறுவர். இங்ஙனம் கிருஸ்துநாதரை வழிபடு வதற்குச் சாதனமாய பிரார்த்தனையும் நூலைத் திருத்திய மைக்கும் பெரும் பணியில் தன்னையும் ஆட்கொண்டருளிய இறைவன் கருணையை நினைந்து கால்டுவெல் மனங்குழைந்து வாழ்த்தினார். தமிழ் நாட்டில் கிருஸ்து மதம் பரவத் தலைப்பட்ட காலந்தொட்டு அம்மதத்தின் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்னும் இரண்டையும் மொழி பெயர்க்கும் பெரும் பணி ஐரோப்பியத் தமிழறிஞர் கருத்தைக் கவர்வதாயிற்று. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தரங்கம்பாடியில் அமைந்த கிருஸ்துமத சங்கத்தார் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். அச்சங்கத்தின் சிறந்த தொண்டராகத் திகழ்ந்த ‘பாப்ரீசியர்’6 என்னும் ஜெர்மானியப் பாதிரியார் அம்மொழி பெயர்ப்பைச் செவ்வனம் திருத்தி வெளியிட்டார். நெடுங்காலம் பாப்ரீசியர் வேதமே தமிழ் நாட்டிற் பாங்குற நிலவுவதாயிற்று. தமிழ் மொழியிற் போதிய புலமையும், ஏசு மதத்தில் அழுந்திய ஆர்வமும் வாய்ந்த பார்ரீசியர் பதம் பதமாக எடுத்து வேதநூலைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். விழுமிய வேத மொழிகளைப் பொன்போற் போற்றும் பெற்றிவாய்ந்த அப்பெரியார், இறையளவும் பொருள் பெயராவண்ணம் இங்ஙனம் மொழி பெயர்ப்பாராயினர். ஆயினும் அவரியற்றிய நூல் பல இடங்களில் தெளிவு பெறாமலும் இனிமை பயவாமலும் இருந்தமையால் அதனைத் திருத்தும் பணியைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்தமிழ் நாட்டிற் பெருந் தொண்டராக விளங்கிய ‘ரேனியஸ்’ என்பார் மேற் கொண்டார். பத்தாண்டுகளாக உழைத்துப் புதிய ஏற்பாட்டைத் திருத்தி முடித்தார். தமிழ் மொழியின் சொல் நயம், பொருள் நயங்களை நன்குணரும் திறம் வாய்ந்திருந்த ரேனியஸ், பாப்ரீசியர் வேதத்தைத் திருத்தத் தொடங்கியபோது அதனை முற்றும் மாற்றி எழுதுதலே ஏற்றதாகுமெனத் துணிந்தார். தமிழ் வேதம் சொற்சுவையும் பொருட்சுவையுமுடையதாய், கற்போர் கருத்தைப் பிணிக்கும் தகையதாய் விளங்க வேண்டுமென்று கருதிய ரேனியஸ், பாப்ரீசியர் முறையை முற்றுங் கைவிட்டு வேதநூலின் கருத்தை மனத்திலேற்று விழுமிய தமிழில் எழுதி முடித்தார். இங்ஙனம் அவர் பன்னாள் முயன்று பண்புறச் செய்த தமிழ் வேதத்தைச் சென்னை கிருஸ்தவ சங்கத்தார் ஏற்றுக் கொள்ள இசைந்தாரல்லர். ‘பாப்ரீசியர் மொழி பெயர்த்தனர் - பொருள் பெயர்த்திலர்’ என்றும், ‘ரனியஸ் பொருள் பெயர்த்தனர் - மொழி பெயர்த்திலர்’ என்றும் கருதினார்.7 ஆண்டு பலவாக ஆர்வத்தோடு உழைத்துப் பண்புறச் செய்த தமிழ் வேதநூலின் பெருமை அறியாது சங்கத்தார் புறக்கணித்தார் என்றறிந்த போது, ரேனியஸ் மனம் புழுங்கினார். இவ்வாறு பாப்ரீசியர் வேதமும் ரேனியஸ் வேதமும் ஒவ்வொரு வகையிற் குறைபாடுடையனவாகக் கருதப்பட்ட மையால் இலங்கையிற் பணிசெய்த பார்சிவெல் என்னும் பாதிரியார் முன்னூல்களின் குற்றங் களைந்து எல்லோரும் இசைந்து ஏற்கும் வண்ணம் வேத நூலை மொழி பெயர்க்க விழைந்தார். சில ஆண்டுகளாக முயன்று மொழி பெயர்த்து அந்நூலைச் சென்னை மாநகர்க்குக் கொண்டு சென்றார். அந்நாளிற் சென்னையிற் சிறந்த தமிழ்ப் புலவராய்த் திகழ்ந்த மழவை மகாலிங்கையர் அதனை முற்றும் படித்துப் பாராட்டி வியந்தனர்.8 பார்சிவல் வேதம் பழுதற அமைந்ததேனும் பண்புற அமைந்திலதென்று பைபிள் சங்கத்தினராற் கருதப்பட்டது. இங்ஙனம் மூவரியற்றிய மொழி பெயர்ப்பும் முற்றும் ஒப்பப் படாமையால், வேதநூலை மொழி பெயர்க்கும் விழுமிய பெரும்பணி தனிப்பட்ட ஒருவராற் செய்யத்தக்க தன்றென்று கிருஸ்து மத சங்கத்தார் தெளிந்தார்கள். பிரார்த்தனை நூலைத் திருத்திப் புகழ்பெற்ற பவர் என்னும் பெரியாரைத் தலைவராகக் கொண்ட தமிழறிஞர் கழகமே அப்பெரும் பணியை ஆற்றுந் தகுதி வாய்ந்ததென்று கருதிய சென்னை அத்தியட்ச குரு, தமிழ் நாடிலமைந்த சமயத் தொண்டருதவியை நாடினார். அக்கருத்தை ஆதரித்துத் தமிழகத்திலமைந்த ஒவ்வொரு கிருஸ்தவ சங்கமும், தக்க தமிழறிஞர் ஒருவரைத் தேர்ந்து மொழி பெயர்ப்புக் கழகத்திற் பணி செய்ய அனுப்பியது. இங்ஙனம் தேர்ந்தெடுக்கப் பெற்ற பன்னிருவருள் கால்டுவெல் ஐயரும் ஒருவராய் விளங்கினார். அக்கழகத்தின் தலைவராயமைந்த பல்ர் திருவருளை முன்னிட்டுத் தொடங்கிய அரும்பணி பதினோறாண்டுகளில் முற்றுப் பெற்றது. தமிழறிஞர் பன்னிருவர் அப்பணியில் தலைப்பட்டாரேனும் வேலை முடியுமளவும் எஞ்சாத ஊக்கமுற்று நெஞ்சாரப் பணிசெய்த தொண்டர் மூவரேயாவர். அவருள் தலைசிறந்தவர் கால்டுவெல் ஐயர் என்று கூறுதல் மிகையாகாது. பத்தாண்டு களுக்கிடையே, குற்றால மலையிலும் கொடைக்கானற் குன்றிலும் நான்கு கூட்டங்கள் நிகழ்ந்தன. இங்ஙனம் ஒருமையுடன் இருந்து ஆராய்ந்த கழகத்தார் வெளியிட்ட தமிழ் வேதம் பெரும்பாலோரால் நன்றென ஏற்றுப் போற்றப்பட்டது. ஆயினும் தரங்கம்பாடி லூதர் சபையார் பாப்ரீசியர் மொழி பெயர்ப்பே அருமை வாய்ந்தது எனக் கருதி அதனையே பாராட்டிப் படிப்பாராயினர். பத்தாண்டுகளாக அருள் கால்டுவெல் ஐயர் இறைவன் திருவருளை வந்தித்து வழுத்தினர். அடிக்குறிப்பு 1. ஏநைnயே நஒhibவைiடிn. 2. “கூடைட வாநn hந hயன அயனந வை hளை உரளவடிஅ னரசiபே வாந hடிவ அடிவோள வடி அடிஎந யடட hளை யீரயீடைள வடி ய டவைவடந யீடயஉந உயடடநன ஐடடயதேரயேi டிn வாந ளந-உடியளவ தரளவ நேயச ஐனயலயபேரனi; வநஅயீடிசயசல ளஉhடிடிட ரெடைனiபேள றநசந சரn ரயீ யனே வாந சநஅயiளே டிக னுச. ஊயடனறநடட’ள ரெபேயடடிற (ளடி அயசமநன in வாந டிடன ளரசஎநல அயயீள) ளவடைட சநஉயடட வாந னயலள றாநn மடினயமையயேட hயன nடிவ நெநn” inஎநவேநன. கூ.ழு. 396 - 397. 3. பிரார்த்தனை நூல் - கூhந யீசயலநச - bடிடிம 4. யீநவவவைவ 5. “னுச. ழநசேல க்ஷடிறநச றாடி யகவநசறயசனள டிஉஉரயீநைன ளடி னளைவiபேரiளாநன ய யீடிளவைiடிn யள வாந யீசinஉiயீயட சுநஎளைநச டிக வாந கூயஅடை கூசயளேடயவiடிn டிக வாந க்ஷiடெந யனே டிக வாந டயளவ நனவைiடிn டிக வாந கூயஅடை யீசயலநச க்ஷடிடிம றயள in ஆயனசயள றாநn ஐ யசசiஎநன யனே ஐ டிவெயiநேன அரஉh எயடரயடெந hநடயீ கசடிஅ hiஅ in அல நனேநயஎடிரச வடி யஉளூரசைந ய வாடிசடிரபா மnடிறடநனபந டிக கூயஅடை bடிவா in வைள உடயளளiஉயட னயைடநஉவ யனே in வாந கூயஅடை டிக உடிஅஅடிn டகைந.... ழந னநைன in யீயடயஅஉடிவவயா in 1885 னநநயீடல டயஅநவேநன யள ய ளஉhடிடயச, யள ய அளைளiடியேசல, யனே யள ய அயn டிக ரயேககநஉவநன உhசளைவயைn யீநைவல, ரவேயiவேநன லெ வாந டநயளவ வசயஉந டிக யீயசவல ளயீசைவை. ழந சநஉநiஎநன கசடிஅ வாந ஹசஉhbiளாடியீ டிக உயவேநசரெசல வாந ழடிnடிசயசல னநபசநந டிக னுடிஉவடிச டிக னுiஎinவைல யனே றயள வாந கசைளவ நுரசயளயைn டிn றாடிஅ வாளை hடிnடிரச றயள உடிகேநசசநன.” - ஊ.சு. 61. 6. குயசெiஉiஎள 7. “சூநiவாநச குயசெiஉரைள’ள எநசளiடிn nடிச சுhநnரைள’ள நெiபே in ரniஎநசளயட ரளந யஅடிபே கூயஅடை உhசளைவயைளே நேiவாநச எநசளiடிn hயன யஉளூரசைநன யஅடிபே வாநஅ வாயவ யீசநளஉசiயீவiஎந சநஎநசநnஉந யனே யரவாடிசவைல றாiஉh றநசந உடிnஉநனநன வடி வாந யரவாடிசளைநன நுபேடiளா எநசளiடிn றாநசநஎநச வாந நுபேடiளா டயபேரயபநள ளை ளயீடிமநn nடிச னனை வாநசந ளநநஅயலே யீசடிளயீநஉவ டிக நiவாநச எநசளiடிn நெiபே நஎநச ளரயீநசளநனநன லெ வாந டிவாநச. ஐn யள அரஉh யள குயசெiஉரைள’ள எநசளiடிn வாடிரபா யனஅவைவநன லெ யடட வடி நெ எநசல கயiவாகரட வடி வாந டிசபைiயேட றயள சநபயசனநன லெ கூயஅடை ளஉhடிடயசள in பநநேசயட யள வடிடி கசநளூரநவேடல ரnனைiடிஅயவiஉயட யனே டிளெரசந, றாடைளவ சுhநnரை’ள எநசளiடிn வாடிரபா பநநேசயடடல றசவைவநn in உடநயச னைiடிஅயவiஉ கூயஅடை றயள சநபயசனநன யள வடிடி யீயசயயீhசயளவiஉ, யள னநயீயசவiபே வடி கசநளூரநவேடல றiவாடிரவ ளரககiஉநைவே றயசசயவே கசடிஅ வாந சநனேநசiபேள யனடியீவநன in வாந யீசinஉiயீயட நுரசடியீநயn எநசளiடிளே யனே யள நேநனடநளளடல னகைகநசiபே கடிசஅ குயசெiஉரைள’ள கடிசஅள டிக நஒயீசநளளiடிn நஎநn றாநn வாநல hயயீயீநநேன வடி நெ யீநசகநஉவடல உடிசசநவ.” - ஊ.சு. 139 - 140. 8. மகாலிங்கையர் பைபில் முற்றும் வாசித்து, அதிலே பிழையில்லை யென்றும், வசன நடை நன்றாயிருக்கிறதென்றும், இந்தப் பிரகாரம் அச்சிடுதலே தகுதியென்றும் அவர்களுக்குச் சொல்லி யாழ்ப் பாணத்துத் தமிழையும் நன்கு பாராட்டி வியந்தனர். - கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரம். (மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதற்பாகம், 62, 63, பக்கங்களிலுள்ள குறிப்பைப் பார்க்க). “இவர் (ஆறுமுக நாவலர்) பார்சிவல் என்னும் பாதிரியாருக்குப் பண்டிதராயிருந்து பைபில் மொழி பெயர்க்குங் காலத்தில், அந்தப் பைபில் சென்னப் பட்டணத்திலும் மொழிப் பெயர்க்கப்பட்டு வந்தது. பாதிரியாருக்கு, தமது சபையார் சென்னப் பட்டணத்தாருடைய மொழி பெயர்ப்பை ஏற்பார்களோ, அன்றித் தம்முடைய மொழி பெயர்ப்பை ஏற்பார்களோ என்னுஞ் சந்தேகமிருந்தது. ஆதலினாலே தம்முடைய மொழிபெயர்ப்பு முடிந்தவுடன் அதனைச் சென்ன பட்டணத்தி லுள்ள சபையாருக்குக் காட்டக் கொண்டுபோன பொழுது பாதிரியார் இவரையுங்கூட அழைத்துக் கொண்டு போயிருந்தார். சென்னபட்டணத்திலே மொழி பெயர்த்தவர்கள் தங்கள் மொழி பெயர்ப்பே சரியானதென்றும், யாழ்ப்பாணத்தார் மொழி பெயர்ப்புத் தவறுடையதென்றும் பொறாமையினால் வாதித்தார்கள். அப்போது சபையார் இதனைத் தீர்க்குமாறு, அங்கேசிறந்த வித்து வானாயிருந்த மகாலிங்கய ரென்பவரை மத்தியக்ஷராக நியமித்தார்கள். அவர் பார்சிவல் பாதிரியாருடைய மொழிபெயர்ப்பே மிகச் சிறந்ததென்று பாராட்டினதுமன்றி, யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சிறந்த தமிழ் உண்டோவென்று ஆச்சரியப்பட்டார். இம்மொழி பெயர்ப்பையே சபையார்கள் மெச்சி புகழ்ந்து அச்சிடுவித்தனர்.” - ஆறுமுக நாவலர் சரித்திரம். (த. கைலாசவம் பிள்ளையால் எழுதப்பட்டது. பக்கம் 10-11) 6. பண்டைத் தமிழகம் பாரத நாட்டின் தென்பாலமைந்த தமிழ்நாடு தொன்னெடும் புகழ்வாய்ந்ததென்று தெளிந்த கால்டுவெல் ஐயர் அந்நாட்டின் பழம்பெருமையைப் பலவகைச் சான்றுகளால் நிறுவக் கருதினார். பாண்டி நாட்டிற் சிறந்து விளங்கிய தமிழ்ப் பாவலரிடம் அந்நாட்டின் பழமை குறித்து வினவியபோது, அன்னார் பைந்தமிழ் நாடு படைப்புக் காலந் தொட்டு வருவதென்றும், மூன்று கவடாய் முளைத்து எழுந்த தமிழகத்தின் மூலம், பழம்பதியாய பாண்டிநாடேயென்றும் வழக்காற்றில் வந்த கதைகளை விரித்துரைத்தார்கள். அவர்கள் கூறிய கதைகளில், புனைந்துரையும் பொருளுரையும் கலந்திருக்கக் கண்டு ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமையில்லை’ என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தென் கடற்கரையில் தூர்ந்து கிடந்த சிற்றூர் களையும், ஆங்காங்கு அகப்பட்ட பழங்காசுகளையும் அவர் ஆராய்ந்தபோது பழந்தமிழ் நாடு கலந்தரு செல்வத்திற் களித்திருந்த திருநாடென்று தெளிந்தார். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு கலத்தினும் காலினும் வாணிகஞ் செய்த பிற நாட்டார் எழுதிய நூல்களில் தமிழ்நாட்டைப் பற்றிய குறிப்புகள் கிடைத்தால் கூடும் என்று எண்ணி அந்நூல்களைத் துருவினார். முற்காலத்தில் கடல் வாணிகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்வுற்றிருந்த பினீசியரும் திரைகடல் ஓடித் திருவினைத்தேடி யவனரும் எழுதிப்போந்த குறிப்புகளை ஆராய்ந்தார். அவ்வாராய்ச்சியின் பயனாக இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் நிலைமை இனிது விளங்குவதாயிற்று. தமிழகம் என்று முற்காலத்தில் வழங்கிய தமிழ் நாடு நெடியோன் மலையை வடஎல்லையாகவும், குமரியாற்றைத் தென் எல்லையாகவும் கொண்டு திகழ்ந்த தென்று தொல்லா சிரியர் கூறிப்போந்தார். ஆயினும், செந்தமிழ்ப் பனுவலாய சிலப்பதிகாரம் எழுந்த காலத்து குமரிக்கடலே தமிழகத்தின் தென்னெல்லையாக அமைந்ததென்பது “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நாடு” என்னும் அடிகளால் அறியப்படும். முற்காலத்திருந்த குமரியாறும், அவ்வாற்று நீரால் வளமுற்ற நிலப்பரப்பும் அழிவாய்ப் பட்டழிந்த பின்னர் குமரிக்கடலே தென் எல்லையாயிற்றென்று அவ்வடிகளுக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் தெளிவுற விளக்கிப் போந்தார். இங்ஙனம் குறுகி நின்ற தமிழகத்தின் பெருமையைப் பண்டையவனர் குறிப்புகளாற் கால்டுவெல் ஐயர் நன்கு விளக்கியுள்ளார். பழந்தமிழகத்தின் அங்கங்களாயமைந்த முந்நாடுகளையும், முற்கால யவன வணிகர் நன்கறிந்திருந்தார்கள். சேர நாட்டில் கறிவளம்1 படைத்த குட்ட நாட்டையும், கலவளம் படைத்த முசிரித் துறையையும், தொல் புகழ் வாய்ந்த தொண்டித் துறையையும், கன்னியின் காவலமைந்த குமரித்துறையும், கோட்டாறு கரூர் முதலிய உள்நாட்டு ஊர்களையும், அன்னார் குறித்துள்ளார்கள். பழம்பதியாய பாண்டி நாட்டில் முத்தமிழ் முனிவர் வாழும் மலையென்று தமிழ் மக்கள் போற்றும் பெருமை வாய்ந்த பொதிய மலையையும், அம்மலை யினின்றிழிந்து அழகுறத் தவழ்ந்து செல்லும் பொருனை ஆற்றையும், அவ்வாறு கடலொடு கலக்கும் இடத்திலமைந் திருந்த கொற்கைத் துறையையும், யவனர் குறித்துள்ளார்கள். இன்னும் பைந்தமிழ் மொழியைப் பண்ணுறத் தெரிந்த ஆய்ந்த பாண்டியர் தலைநகராய மதுரைமாநகரையும், சோழ நாட்டின் உயிரென விளங்கும் காவிரியாற்றையும், அந் நாட்டின் பழைய தலைநகராய உறையூரையும் யவனர் நன்கு அறிந்திருந்தார்கள். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமே இந்நாட்டில் வழங்கிய தமிழகம் என்னும் சொல்லை யவனர் “தமிரக” என்று சிதைத்துத் தங் குறிப்புகளில் எழுதிப் போந்த முறை அறியத்தக்கதாகும். ‘ழ’ கரம் திராவிட மொழிக்குரிய சிறப்பொலி யாதலால் அவ்வொலித் திறத்தினை உள்ளவா றுணர்ந்த தம்மொழிகளிற் குறிக்க இயலாத மேலைநாட்டு வணிகர் அதனை ‘ர’ கரமாகச் சிதைத்து வழங்குவாராயினர். ஆதியில் திராவிட இனத்தைச் சேர்ந்த எல்லா மொழிகளிலும் வழங்கிய ‘ழ’ கரம் இப்பொழுது மலையாளம், தமிழ் என்னும் இரு மொழி களிலேயே காணப்படுகிறது. செவ்வையாக ஒலிப்பதற்கு நாவின் சுழற்சியும், முயற்சியும் வேண்டற் பாலதாய ழகர வொலி ஏனைய திராவிட மொழிகளில் இறந்துபட்டது. ஆயினும் பழைய ஒலிவளம் போற்றும் பான்மை வாய்ந்த தமிழும் மலையாளமும் அவ்வொலியின் பண்பறிந்து போற்றுகின்றன. பழந்தமிழ் நாட்டுப் பொருள்கள் கடல் கடந்து பிற நாடுகளிற் போந்து பெருமையுற்ற பான்மையைப் பண்டையவனர் குறிப்புகளிற் பரக்கக் காணலாம். குறிஞ்சி நிலப் பொருளாய ஆரமும் அகிலும், தோகையும் மிளகும், தும்பிக் கொம்பும்2, மருத நிலப் பொருளாய அரிசியும், நெய்தற் பொருளாய முத்தும், கலமேறிச் சென்ற பொருள்களுட் சிறந்தனவாம். சேர நாட்டிலமைந்த முசிரித் துறையை வந்தடைந்தயவனர் கலங்கள் செம்பொன்னைச் சொரிந்து கருங்கறியை அள்ளிச் சென்றன. சோழ நாட்டில் அமைந்த பூம்புகார் துறைமுகத்தில் வாணிகங் கருதி வந்தடைந்த யவனர் தமிழ் மக்களோடு கலந்திருந்துறைந் தார்கள். ஏற்றமும், இறக்கமும் 3இடையறாது நிகழ்ந்த அத்துறைமுகத்தில் மருத நிலப் பொருளாய அரிசி மரக்கலமேறிச் சென்றதுபோலும், பாண்டி நாட்டுக் கொற்கைத் துறையிற் குளித்த முத்து, பிறநாட்டு மன்னர் முடியிலும், மாதர் அணியிலும் அமைந்து இலங்குவ தாயிற்று. பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகியென்னும் சொல், தமிழ்த் ‘தோகை’யின் சிதைவென்றும், மேலை நாட்டுச் செம்மொழிகளுட் சிறந்த கிரீக்கு மொழியில் அருசா என்று வழங்கும் சொல் தமிழ் அரிசியின் சிதைவென்றும் கால்டுவெல் ஐயர் கண்டுணர்த்தினார். இங்ஙனம் செழித்து விளங்கிய முத்துறைகளின் அமைப்பும் அறியத்தக்காகும். மேல் கரையை மேம்படுத்திய முசிரித்துறை, பெருமலை விலங்கிய பேரியாறு கடரொடு கலக்குமிடத்தில் அமைந்திருந்தது. புகழ் பூத்த பூம்புகார்த் துறைமுகம் காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் களித்திலங்கிற்று4. முத்தமீந்த கொற்கைத் துறைமுகம் பொருனையாறு கடலொடு கலக்கு மிடத்திற் பொருந்தியிருந்தது.5 இங்ஙனம் மேலை நாட்டு அறிஞர் எழுதிப்போந்த செய்திகளால் தமிழகத்தின் பண்டைப் பெருமையை நிறுவிய கால்டுவெல் ஐயர், முற்காலத்தில் வளமுற்றிருந்த பழந்துறை முகங்களைத் துருவி அறியத் தொடங்கினார். சேர நாட்டுத் துறைகளையும், சோழ நாட்டுத் துறைகளையும் ஆராய்ந்தறி வதற்குப் போதிய வாய்ப்பின்மையால், பாண்டி நாட்டுப் பழந் துறைகளையேனும் பார்த்தறிய ஆர்வமுற்றார். யவன ஆசிரியர் இருவர் குறிப்பிற்கண்ட ‘கொல்க்கை’த் துறை பழந்தமிழ் நூல்களிற் கண்ட காற்கையாகவே இருத்தல் வேண்டு மென்று கருதினார். பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் ‘கொற்கைக் கோமான்’ என்றும்,6 ‘கொற்கைத்துறைவன்’ என்றும் குறிக்கப்படுவதால் கொற்கை ஒரு சிறந்ததுறைமுகமாக முற்காலத்தில் திகழ்ந்திருக்க வேண்டுமென்று துணிந்தார். பிற்காலத்தில் கொற்கைத் துறையினின்றும் கடல் விலகிச் சென்ற காரணத்தால் அத்துறை முன்னைப் பெருமை இழந்ததென்று எண்ணினார். அடுப்பாரும் எடுப்பாரும் இன்றி அடங்கியிருந்த கொற்கைக்குச் சென்று ஆண்டு அழிந்து கிடந்த அடிப்படைகளையும், அண்மையிலமைந்த சிற்றூர்களின் பெயர்களையும் ஆராய்ந்தார். கொற்கையின் அருகேயிருந்த அக்கசாலை என்னும் சிற்றூரின் வரலாற்றை வினவிய பொழுது, பழைய மன்னர்கள் பொற்காசு முதலிய நாணயங்களை ஆண்டு செய்தார் என்று அவ்வூரார் உரைத்த செய்தி அக்கசாலை7 யென்னும் சொல்லின் பொருளொடு அழகுறப் பொருந்திநிற்கக் கண்டு கால்டுவெல் ஐயர் அளவிறந்த ஊக்கமுற்றார். கொற்கையின் மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் பொருள்களை அகழ்ந்தெடுத்து ஆராயின் அத்துறையின் பழம் பெருமை விளங்குமென்றும் கருதி, சில கூலியாட்களை அமர்த்திக் கொண்டு அம்மூதூரினுள்ளே சென்றார். மல்லர் போலமைந்த ஆட்களின் ஊக்கத்தையும், அவர் கையில் அமைந்த கூந்தாலம் முதலிய கருவிகளையும், ஆங்கிலப் பாதிரியாரின் ஆர்வத்தையும் கண்ட கொற்கைவாசிகள் மனம் பதைத்தார்கள். முன்னோர் பாடுபட்டுத் தேடிப் புதைத்து வைத்திருந்த பொருள் களைப் பறித்தெடுத்துச் செல்லும் கருத்துடன் பாதிரியார் புறப்பட்டார் என்று கருதினார்கள். முன்னையோர் புதைத்து வைத்த பொருள் பூதத்தின் காவலில் அமைந்த தென்றும், அப்புதையற் பொருளை எவரேனும் புரட்டி எடுக்க முயன்றால் காவற் பூதம் கிளர்ந்தெழுந்து, கொற்கைவாசிகளை அனைவரையும் கொன்றழிக்கும் என்றும் எண்ணி நடுங்கினார்கள். இத்தகைய பாமர மக்கள் தம் முயற்சியைத் தடுக்க முயல்வர் என்று முன்னமே அறிந்திருந்த கால்டுவெல் ஐயர், பொருளை நாட்டுக் கலெக்டரிடம் தம் கருத்தை அறிவித்து அவர் சேவகர் ஒருவரை உடனழைத்துச் சென்றிருந்தமையால் கொற்கை வாசிகள் கூடி எதிர்க்கக் கூசி நின்றார். ஆயினும் பழுத்த முதுமை வாய்ந்த ஒருவர் கால்டுவெல் ஐயர் தங்கியிருந்த கூடாரத்திற் புகுந்து, முன்னாள் புதையலெடுக்க முயன்று புன்மையுற்ற வெள்ளையர் வரலாற்றை விரித்துரைப் பாராயினர். பல்லாண்டுகட்கு முன்பு பொருளை நாட்டுக் கலெக்டர் ஒருவர் கொற்கையிற் பெரும் புதையல் உண்டென்று கேள்வியுற்றுப் பரிவாரங்களோடு அவ்வூரருகே போந்து பாடி வீடமைத்து முற்றம் சோதிக்கப் பணித்தார் என்றும், அப்பெரும் பணியில் ஈடுபட்ட கூலியாட்கள் அங்குமிங்கும் தோண்டித் துருவி அந்தி மாலையில் அரும் புதையலைக் கண்டபோது கை சோர்ந்து மெய் தளர்ந்து மயக்க முற்றாரென்றும், மறுநாட் காலையில் புதையலைப் பெயர்த் தெடுக்கக் கருதிய கலெக்டர், சேவகர் சிலரை அவ்விடத்திற் காவல் வைத்துத் தம் கூடாரத்திற் சென்று உறங்கினாரென்றும், காலையிற் கண் விழித்த கலெக்டர் துரை கூடாரத்தோடு பாளையங்கோட்டையிலமைந்த தம் பங்களாவில் படுத்திருக்கக் கண்டாரென்றும், பகல் முழுதும் கை வருத்த உழைத்துத் தோண்டிய குழியும் சிக்கென அடைப் பட்டிருந்ததென்றும், அன்றோடு அத்துரை புதையல் தேடும் பொல்லாப் பணியை விட்டொழித்தாரென்றும் கொற்கை முதியவர் கூறிமுடித்தார். அக்கதையை ஆதரிக்கக் கருதிய மற்றொரு பெரியவர் பக்கிள் துரை காலத்தில் நிகழ்ந்த அற்புதச் செயலொன்றை, அறிவிக்கத் தொடங்கினார். பெருங் கருணை வாய்ந்த பக்கிள் துரை பழங்காயலின் சில பாகங்களை அகழ்ந்து துருவிப் புதைந்து கிடந்த பொருள்களைக் காண விழைந்தா ரென்றும், அப்பணியில் ஆறுமுக மங்கலப் பெரியாரொருவர் துரைக்குத் துணைபுரிந்தா ரென்றும், முதல் நாள் வேலை முடிந்த போது, இருவரும் தத்தம் இடத்திற்கு இளைப்பாறச் சென்றாரென்றும், கண்ணயர்ந்து உறங்கிய ஆறுமுகமங்கலப் பெரியார் கனவில் வீராவேசமுற்ற பூதமொன்று விகார வடிவத்தில் தோன்றி வெருட்டி மறைந்ததென்றும், கனவை நனவாகவே கருதி அவர் திடுக்கிட்டுக் கண் விழித்த பொழுது காலும் கழுத்தும் கட்டுண்டு கிடந்தார் என்றும், வீட்டிலுள்ளார் கட்டறுத்து விட்ட பின்னர் பக்கிள் துரைக்கும் உதவி புரியும் கருத்தை அவர் விட்டொழித்தா ரென்றும், முதியவர் விரித்துரைத்தார். இரு கதைகளையும் கேட்டு இன்புற்ற கால்டுவெல் ஐயர், பூதங் காக்கும் புதையலருகே தாம் போவதில்லையென்று வாக்களித்தார். அவ்வுரை கேட்டு அறுதலுற்ற ஊரார் ஒருவாறு தடையை நெகிழ்த்து வேலை செய்ய விடை கொடுத்தார்கள். பணியாளர் கொற்கையிற் சில இடங்களைத் தோண்டிய பொழுது, ஆறடி மண்ணின் கீழ்ப் மணற்பாறையும் அப்பாறையின் கீழ் ஓரடி ஆழத்தில் கடற்கரைக் குறுமணலும் அமைந்திருக்கக் கண்டார்கள். மேற்பரப்பிலமைந்த மண்ணைத் தோண்டிய பொழுது கடற் சங்குகளும், சிப்பிகளும், அம்மண்ணுள் மூழ்கி மறைந்து கிடந்தன. ஆறடி மண்ணின் கீழ் அமைந்த மணற் பாறையின் பரப்பே முற்காலத்தில் கடற்கரையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஆற்று நீரிற் கலந்து வந்த மண்ணும் மணலும் துறைமுகத்திற் படிந்து நாளடைவிற் கடலைத் தூர்த்தன வென்றும், அவ்விதம் படிந்த மண்ணால் அழுத்தப்பட்ட அடிமணல் கடினமுற்று ஓரடிப் பாறையாக உறைந்ததென்றும், கால்டுவெல் ஐயர் அறிந்து மகிழ்ந்தார். இப்பொழுது கடல் கொற்கையினின்றும் ஐந்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இன்னும் கொற்கைக்கும் கடலுக்கும் இடையே உள்ள கழிக்கானலிற் பழங்காயல்8 என்னும் சிற்றூர் அமைந்திருக் கின்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற் போந்த ‘மார்க்கப் போலோ’9 என்னும் வெனீசிய அறிஞரது குறிப்பிற் கண்ட காயல் பழங்காயலாக இருத்தல் கூடும் என்றெண்ணி ஐயர் அவ்வூரை முற்றும் சுற்றி ஆராய்ந்தார். காயலும் முன்னாளில் கடற்கரையில் துறைமுகமாக இருந்திருக்க வேண்டுமென்ற தெள்ளிதின் உணர்த்திய அடையாளர்களை ஆங்காங்கு கண்டு களிப்புற்றார். கொற்கைத் துறையைக் கைவிட்டு அலை கடல் விலகிய பொழுது காயல் துறைமுக மாகிச் செழுமையுற்ற தென்று கருதினார். கொற்கைக்கு நேர்ந்த கதியே பின்பு காயலுக்கும் நேர்ந்தமையால் பதினாறாம் நூற் றாண்டில் தமிழகம் போந்து வாணிகம் செய்த போர்ச்சுகீசியர் காயலைக் கைவிட்டுத் தூத்துக்குடியைத் துறைமுகமாகத் திருத்தி அமைத்தார்கள். பொருனை யாறும் பெருங்கடலும் இடையறாது போர்புரியும் இடத்தை விட்டு விலகியுள்ள மையால் தூத்துக்குடி தூர்ந்தொழியாது இன்று காறும் பொருனை நாட்டில் சிறந்த துறைமுகமாக நின்று நிலவுகின்றது. இங்ஙனம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வாணிகத் துறையில் வளமுற்றிருந்த பழந் தமிழ் மக்கள், கடல் கடந்து பிற நாடுகளிலும் குடியேறி வாழ்ந்த பெருமையைக் கால்டுவெல் அறிஞர் ஆராய்ந்து அறிவித்துள்ளார், சிங்களம், புட்பகம், சாவகம் முதலிய தீவகங்களிலும், காழகம் முதலிய வளநாடு களிலும் தமிழ் மக்கள் குடியேறி வாழ்ந்த தன்மையைக் குறித்துள்ளார். ஈழ நாட்டுப் பழைய வரலாற்றை எடுத்து ரைக்கும் மகாவம்சம் என்னும் சரித்திர நூலைத் துணைக் கொண்டு சிங்கள நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் தொன்று தொட்டிருந்த தொடர்பினை விளக்கியுள்ளார். சிங்கள நாட்டுச் சிறந்த மன்னனாய விசையன் என்பான் பாண்டி மன்னன் திருமகளை மணந்து ஆண்டு தோறும் இரு நூறாயிரம் ரூபா மதிப்புள்ள சங்கும் முத்தும் பாண்டிமன்னர்க்குச் சேர்ப்பித்தா னென்றும் அம்மன்னன் காலத்திற்குப் பின்பு ‘பாண்டு வம்ச வேன்’ என்பான் பட்டம் பெற்றான் என்றும் மகாவம்சத்திற் குறிக்கப் பட்டிருந்தலால், பாண்டி நாட்டிற்கும் ஈழ நாட்டிற்கும் பண்டை உறவு உண்டென்று காட்டினார். இன்னும் தாளாண்மையிற் சிறந்த தமிழ் மக்கள் நாற்றிசையும் போந்து நலமார்ந்த இடங்களைக் கவர்ந்து செழுமையுற்று வாழ்ந்து வருதலால் தமிழரைக் கீழ் நாட்டுக் கிரீக்கர் என்று கூறுதல் மிகையாகா தென்று கால்டுவெல் ஐயர் கூறும் புகழுரை பொருளுரையே என்பது ஆராய்ந்தறிவார்க்கு இனிது விளங்கும்.10 அடிக்குறிப்பு 1. கறி - மிளகு 2. “கூயஅடை டயனே hயன வாந படிடின கடிசவரநே வடி யீடிளளநளள வாசநந யீசநஉiடிரள உடிஅஅடினவைநைள nடிவ யீசடிஉரசயடெந நடளநறாநசந, யேஅநடல யீநயீயீநச, யீநயசடள யனே நெசலடள. யீநயீயீநச கநவஉhநன யn நnடிசடிஅடிரள யீசiஉந in வாந அயசமநவள டிக நுரசடியீந யனே றயள ளடி hiபாடல யீசணைநன வாயவ றாநn ஹடயசiஉ, வாந ழுடிவா டநஎநைன hளை றயச iனேநஅnவைல கசடிஅ சுடிஅந ளை ஹ.னு. 409 hளை வநசஅள. ஐnஉடரனநன வாந னநடiஎநசல டிக 300 யீடிரனேள டிக யீநயீயீநச” - கூhந நுயசடல ழளைவடிசல டிக ஐனேயை வெ. ஏ. ளுஅiவா 461. 3. ஏற்றம் - ஏற்றுமதி; இறக்கம் - இறக்குமதி, 4. “ஐn வாந நயசடல உநவேரசநைள டிக வாந உhசளைவையைn நசய வறடி டிக வாந யீசinஉiயீயட யீடிசவள யவ றாiஉh வசயனந in யீநயீயீநச யனே டிவாநச சயசவைநைள றயள உயசசநன டிn றநசந ஆரஷ்சைளை, வாந அடினநசn உசயபேயnடிசந, யவ வாந அடிரவா டிக வாந யீநசலையச யனே க்ஷயமுயசயi டிச ஏயமமயசயi வாந டயனேiபே யீடயஉந கடிச முடிவவயலயஅ.” நு.ழ.ஐ.லெ ஏ.ஹ. 447. 5. “கூhந யீசinஉiயீயட உhடிடய யீடிளவ றயள மயஎநசiயீயவயேஅ ளவைரயவநன யவ வாந nடிசவாநசn அடிரவா டிக வாந முயஎநசi சiஎநச. கூhளை டிnஉந றநயடவால உவைல in றாiஉh வாந மiபே அயiவேயiநேன ய அயபnகைiஉநைவே யீயடயஉந யனே கடிசநபைn அநசஉhயவேள கடிரனே சநளனைநnஉந யபசநநயடெந யனே யீசடிகவையடெந hயள எயniளாநன, யனே வைள டநைள ரெசநைன ரனேநச னநநயீ ளயனே - னசகைவள” நு.ழ.ஐ. லெ ஏ.ஹ. 481 6. ‘கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகை பெரிதுடைய காதலி கண்ணே’ - ஐங்குறுநூறு - நெய்கற்பத்து. 7. அக்கசாலை - ஆiவே 8. புன்னைக்காயல் 9. ஆயசஉடி ஞடிடடி 10. “ஐn ளாடிசவ றாநசநஎநச அடிநேல ளை வடி நெ அயனந, றாநசநஎநச ய அடிசந யயீயவாநவiஉ டிச ய அடிசந யசளைவடிஉசயவiஉ யீநடியீடந ளை றயவைiபே வடி நெ யீரளாநன யளனைந, வாiவாநச ளறயசஅ வாந கூயஅடையைளே, வாந ழுசநநமள டிச ளஉடிவள டிக வாந நுயளவ, வாந டநயளவ ளரயீநசளவவைiடிளே யனே வாந அடிளவ நவேநசயீசளைiபே யனே யீநசளநஎநசiபே சயஉந டிக ழiனேரள.” ஊ.ழு. ஐவே. 7. 7. தென்னாட்டு மொழிகள் பாரத நாட்டில் வழங்கும் மொழிகள் யாவும் ஆரிய வகுப்பைச் சேர்ந்தனவே என்று ஐரோப்பிய மொழி நூலறிஞர் நெடுங்காலம் கருதியிருந்தார்கள். பத்தொன்பதாம் நுற்றாண்டின் தொடக்கத்தில் நேப்பாள நாட்டிற் பெரும்புகழ் வாய்ந்த விளங்கிய ஹாட்சன்1 என்னும் அறிஞர், மதத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கும் மொழிகளி லமைந்த சொற்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்ந்தும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அவற்றைக் கருத்தூன்றிக் கற்ற ஐரோப்பிய அறிஞர், ஆரிய இனத்தைச் சேராத மொழிகளும் பாரத நாட்டில் உண்டென்று கண்டார்கள். பம்பாய் நகரத்தில் பல்லாண்டு நீதிமன்றத் தலைவராக வீற்றிருந்த ‘பெறி’யென்னும் பெரியார், வட இமயம் முதல் தென்குமரி வரை வாங்கும் மொழிகளின் பரப்பையும் சிறப்பையும் ஆராய்ந்து தாம் கண்ட உண்மைகளைக் கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார். வட நாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தன வென்றும் தென் னாட்டில் வழங்கு மொழிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்தன வென்றும் அவர் அறிந்துணர்த்திய கொள்கை ஐரோப்பிய நல்லறிஞர் கருத்தைக் கவர்வதாயிற்று. இங்ஙனம் விந்த மலைக்குத் தென்பாலமைந்த மொழிகளின் தன்மையை வட இந்திய மொழி நூலறிஞர் ஆராய்ந்து வருகையில் தென்னாட்டு மொழிகளைக் கற்றுணரும் கடமை பூண்ட ஐரோப்பிய அறிஞர் சிலர் திராவிட நாட்டிற் போந்து திறம்பட உழைக்கத் தலைப்பட்டார்கள். கேரள நாட்டில் வழங்கும் மலையாள மொழியைக் ‘குந்தார்த்தர்’ என்னும் ஜெர்மானியப் புலவர்2 செவ்வனம் கற்றறிந்தார். கர்நாடக நாட்டில் வழங்கும் கன்னட மொழியைக் ‘கிட்டல்’ என்னும் கலைவாணர் முட்டறுத் துணர்ந்தார். ஆந்திர நாட்டில் வழங்கும் தெலுங்கு மொழியைப் ‘பிரௌன்’ முதலிய பெரியார் துருவியறிந்தார். நீலகிரியில் வாழும் தோடர் மொழிச் சொற்களைப் போப்பையர் திரட்டித் தந்தார். இங்ஙனம் ஒவவொரு தென்னிந்திய மொழியை ஒவ்வொருவர் ஆராய்ந்து தத்தம் முடிவுகளைக் கட்டுரை வாயிலாக வெளிப் படுத்திக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கால்டுவெல் அறிஞர் தென்னாட்டில் தோன்றினார்.3 தமிழ் மொழியிலமைந்த நூல்களை முறையாகக் கற்றறிந்தார். மொழி நூலாராய்ச்சித் துறையில் முன்னணியில் நின்ற ஜெர்மானிய அறிஞர் இயற்றிய நூல்களைச் செவ்விதின் உணருமாறு அம்மொழியை நன்கு பயின்றார். பழந்தமிழ்ச் சொற்களை பழங்கன்னடச் சொற்களோடும் ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒத்து நோக்கிய பொழுது நூற்றுக் கணக்கான இயற் சொற்களின் தாதுக்கள் மும் மொழி களிலும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார். மேல்நாட்டு மொழி நூல்களிற் கண்ட தெள்ளிய ஆராய்ச்சி முறைகளைத் துணைக் கொண்டு தென்னிந்திய மொழிகளைத் துருவத் தொடங்கினார். அவ்வாராய்ச்சியின் பயனாகத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் சொல்லாக்க முறைகளும் அடிப் படையான ஒற்றுமையுடையனவாய் விளங்கக் கண்டு அகமகிழ்ந்தார். பதினைந்தாண்டுகளாக அத்துறையில் இடையறாதுழைத்து ‘தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் பெயரால் திராவிட மொழி நூலை வெளியிட்டார். இந்நூலே இன்று காறும் திராவிட மொழித்திற முணரக் கருதும், அறிஞர்க்கு உற்ற துணையாக நிற்க உதவுவதாகும். தென்னிந்திய குடும்பத்தில் ஆறு மொழிகள் திருந்திய மொழிகள் என்றும், ஆறு மொழிகள் திருந்தா மொழிகள் என்றும் கால்டுவெல் ஆசிரியர் திறம் படக் காட்டிப் போந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், குடகு என்னும் ஆறும் திருந்திய மொழிகளாம். நீலகிரியில் வாழும் தோடர் மொழியும் கோடர் மொழியும், கொண்ட வனத்தில் வாழும் கொண்டர் மொழியும், ஒரிச நாட்டில் வாழும் கூசர் மொழியும், நாகபுரியில் வாழும் ஓரியர் மொழியும், ராசமால் கிரியில் வாழும் மேலர் மொழியும் திருந்தாத் திராவிட மொழிகளாம். இன்னும் இந்திய நாட்டின் வடமேற் கெல்லைப்புறத்தமைந்த பெலுச்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகி மொழியும் திராவிட குடும்பத்திற் சேர்க்கப் பட்டுள்ளது. பாரசீக இனத்தைச் சேர்ந்த மொழிகள் வழங்கும் எல்லைப் புறத்தில் திராவிட மொழியாய பிராகி நெடுங்காலமாக நிலைத்து நின்று வழங்குதலால், முற்காலத்தில் திராவிட மக்கள் ஆசியாவின் நடுப்பாகத்தினின்று வட மேற்குக் கணவாய்களின் வழியாகச் சிந்து நதிக் கரையிற் குடியேறி வாழ்ந்த பின்பு பாரத நாடு முழுதும் பரவினார் என்று கால்டுவெல் ஐயர் கருதுவாராயினர். தென்னிந்திய மொழிகளுள் மலையாளம் தமிழொடு நெருங்கிய தொடர்புடையதாய் நெடுங்காலம் தாயை விட்டகலாத சேய் போல் ஒத்து வாழ்ந்த தென்றும், பிற்காலத்தில் ஆரியச் சொற்களையும் போக்குகளையும் தழுவிய தன்மையால் தற்கால மலையாளம் முற்கால மலையாளத் தினின்று வேறுபட்டு வழங்கலாயிற் றென்றும் ஆசிரியர் தக்க சான்றுகளால் நிறுவியுள்ளார். அங்ஙனமே தெலுங்கும் கன்னடமும் ஆரியச் சொற்களை அளவின்றி ஏற்று வழங்கத் தலைப்பட்டமையால், தற்காலத் தெலுங்கும் கன்னடமும் ஆரிய மொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலிழந்து விட்டன என்று குறித்துள்ளார். தமிழ்ப் புலவர்கள் தொன்று தொட்டு இயன்றவரை இயற்றமிழ்ச் சொற்களையே நூல்களிற் போற்றியமைத்தமையாலும், இன்றியமையாத வட சொற்களை ஏற்கும் பொழுது, அவற்றைத் தமிழின் நீர்மைக்கேற்றவாறு வண்ணமுறக் குழைத்து வழங்கி வந்தமையாலும், இன்றளவும் பண்டைத்திறம் குன்றாது தமிழ் மொழி சிறந்தோங்கி வளர்கின்ற தென்றும், தமிழ் மொழியில் இன்று வழங்கும் ஆரியச் சொற்களை அகற்றி விடினும் அம்மொழி வளங்குன்றாது செழித்தோங்கித் தழைத்தியங்க வல்ல தென்றும் செப்பமாக அறிவித்துள்ளார்.4 தென்னாட்டில் வழங்கும் மொழிகளின் சொல் நிலை களையும் இலக்கணக் கூறுகளையும் ஒத்துநோக்கி நுணுக்கமாக ஆராய்ந்து திராவிட மொழித்திற முணர்த்திய பெருமை கால்டுவெல் அறிஞர்க்கே உரியதாதலின் வரைத் திராவிட மொழி நூலின் தந்தையென்று தக்ககோர் போற்றுவர். ஒப்பிலக்கணம் ஆங்கில நாட்டில் வெளியிடப்பட்டபோது அந்நாட்டு அறிஞரனைவரும் அதன் அருமையறிந்து பாராட்டி னார்கள். அதுகாறும் சில மொழிகளையே சீர் தூக்கிக் கற்றுவந்த மொழி நூற் புலவர்கள் ‘கற்றது கைம் மண்ணளவு கல்லாத துலகளவு’ என்றறிந்து உலகில் வழங்கும் பிற மொழிகளையும் ஆராயத் தொடங்கினார்கள். கால்டுவெல் அறிஞர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து ‘பீளீக்’ என்னும் மொழி நூற் புலவர் தென் ஆப்பிரிக்காவில் வழங்கும் மொழிகளை ஆராய்ந்து ‘தென் ஆப்பிரிக்க மொழிகளின் ஒப்பிலக்கணம்’5 என்னும் பெயரால் ஓர் அரிய நூல் இயற்றினார். இங்ஙனம் மொழி நூல் உலகிற்குப் புதுநெறிகாட்டிய கால்டுவெல் அறிஞர்க்குக் கிளாஸ்கா சர்வகலா சங்கத்தார் ‘டாக்டர்’ என்னும் கௌரவப் பட்டம் வழங்கினர். இருபது ஆண்டுகட்கு முன்னமே அக்கலா சாலையில் கிரீக்கு மொழி பயிற்றிய பேராசிரியர் இளங் கால்டுவெல் உள்ளத்தில் ஊன்றிய மொழிநூல் வித்து முளைத்தெழுந்து, துருவர் வார்த்த நன்னீரால் துளிர்த்தோங்கி வளர்ந்து, திராவிடக் கிளைகள் விரைந்து படர்ந்து, ஒப்பிலக் கணம் என்னும் செழுங்கனி பயப்பதாயிற்று. திராவிட மொழிகளுக்கே சிறப்பாக உரிய பல கூறுகளைக் கால்டுவெல் அறிஞர் ஒப்பிலக்கணத்தில் விளக்கிக் காட்டி யுள்ளார். பெயர்களை உயர்திணையென்றும் அஃறிணை யென்றும் திராவிட இலக்கண நூலோர் வகுத்த முறை உலகில் வேறெம் மொழியிலும் காணப்படாத செவ்விய முறை யென்று வியந்து புகழ்ந்துள்ளார். மாநிலத்தில் வாழும் உயிர்களையும் மற்றையப் பொருள்களையும் பகுக்கும் முறைகள் பலவாயினும் அறிவுடைமையே ஆன்ற நலமெனத் தேர்ந்து பகுத்தறிவு வாய்ந்த உயிர்களே உயர்திணை யென்றும், அவ்வறிவு வாய்க்கப் பெறாத தாகவும் மாக்களும் மற்றுமுள்ள பொருள்களும் அஃறிணை யென்றும் திராவிட நூலோர் கருதிய முறை அவர் அறிவின் செம்மைக்குச் சிறந்த சான்றாகும் என்று காட்டியுள்ளார்.6 இன்னும் ஆரிய மொழியிலும் திராவிட மொழியிலும் வழங்கும் பொதுச் சொற்களனைத்தும் ஆரியச் சொற்களே யென்று ஒரு தலையாகக் கூறுத ல் உண்மை காணும் பெரு நோக்கத்திற்குப் பொருந்தா தென்பது கால்டுவெல் அறிஞர் கருத்தாகும். இரு மொழிகளிலும் காணப்படும் சொற்களின் தாது நிலை நோக்கி ஆராய்ந்து அவற்றின் பிறப்பு முறை துணிதலே மொழிநூல் முறைக்கு ஏற்றதாகும் என்று இனிதுணர்த்தி யுள்ளார். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னும் முதுநெறியைத் தழுவி வட மொழியிலும், தென் மொழியிலும் வழங்கும் சொற்களை மொழி நூல் முறைக்கிணங்க ஆராய்ந்து அவற்றின் பிறப்பையும் சிறப்பையும் காட்டிப் போந்தார். தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் உரிய நூலின்கண் அமைந்துள்ள அடிப்படையான கொள்கைகள் அறியத் தக்கனவாம். ஆரிய குடும்பத்தில் தொன்மையும் செம்மையும் வாய்ந்து விளங்கும் வட மொழியைப் போலவே திராவிடக் குடும்பத்தில் தொன்மையும் செம்மையும் வாய்ந்து விளங்கும் மொழி தமிழ் மொழி யென்பது ஒப்பிலக்கணக் கொள்கைகளுள் ஒன்றாகும். இன்னும் ஆசிய நாடுகளில் வழங்கும் சித்திய குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்கும் தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுவதால், அவ்விருவகை மொழிகளும் ஓரினத்தைச் சேர்ந்தனவாம் என்பது மற்றொரு கொள்கையாகும். இக் கொள்கையை நிலையிடுதற் குரிய சான்றுகள் நூலில் எம்மருங்கும் காணப்படும். ஆயினும் இக்காலத்து மொழி நூலறிஞர் கால்டுவெல் ஐயர் விரித்துரைத்த கொள்கைக்குப் போதிய ஆதாரமில்லை என்றெண்ணுகின்றார்கள். சித்திய குடும்பத்தைச் சேர்ந்தன வாகக் கருதப்படும் துருக்கியம், மங்கோலியம், துங்கேசியம், பினீசியம் முதலிய மொழிகளின் இலக்கண அமைதிகள் செவ்வையாக ஆராயப்படுமளவும், அவற்றின் மொழித்திறங் குறித்து முடிவாக யாதும் கூறுமுடியாதென்பது தற்கால மொழி நூலறிஞர் கருத்தாகும். பாரத நாட்டில் வழங்கும் மொழிகளின் பண்புகளை ஆராய்ந்து எழுதிய பேராசிரியர் ஒருவர்,7 தென்னிந்திய மொழி களை உலகிலுள்ள எவ்வகை மொழி களோடும் இணைக்க இசைந்தாரல்லர். இன்னும் பழந்தமிழ்க் கவிஞர் வாழ்ந்த காலங்களை வரை யறுத்துக் கூறுதற்குரிய சான்றுகளடங்கிய சாசனங்களும் இலக்கியங்களும் கால்டுவெல் ஐயர் காலத்தில் வெளிப் படாமையால் ஒப்பிலக்கண முகவுரையில் தமிழ் இலக்கிய வரலாறு குறித்து எழுதப்பட்டுள்ள கொள்கைகள் இப்பொழுது பழையன என்று கழிக்கத் தக்கனவாம். தமிழ் மொழியில் விழுமிய நூல்கள் எழுந்த காலம் சமணர் தென்னாட்டிற் சிறந்திருந்த காலமேயாகும் என்றும், அக்காலம் பத்தாம் நூற்றாண்டு தொடங்கிப் பதின்மூன்றாம் நூற் றாண்டொடு முற்றுப் பெற்ற தென்றும், பொது மறையென்றும் தமிழ் மக்கள் போற்றும் திருக்குறள், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னெழுந்த நூலாகக் கொள்ளத் தக்கதன்றென்றும் கால்டுவெல் ஐயர் காலவரையறை செய்வாராயினர்.8 இங்ஙனம் திருவள்ளுவர் காலத்தைக் குறித்தெழுதிய ஆசிரியர், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டி நாட்டிற் போந்த மார்க்கப் போலோ எழுதிய குறிப்பிற் கண்ட ‘சுந்தர் பந்தி’ என்றும் பாண்டியன், திருஞான சம்பந்தரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்ட சுந்தர பாண்டியனே யாதல் வேண்டும் எனக் கொண்டு, அப்பெரியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண் டென்று துணிந்தார். கால்டுவெல் ஆசிரியர் இயற்றிய நூலை ஆதாரமாகக் கொண்ட ஐரோப்பிய அறிஞர் தாமியற்றிய பெருநூல்களில் அவர் கொள்கையை எடுத் தாண்டு யாண்டும் பரப்பினர். அன்றியும் கால்டுவெல் அறிஞரது கருத்தைப் பிறழவுணர்ந்து திருக் குறளின் காலம் பத்தாம் நூற்றாண்டே என்று எழுதிப் போந்தார் சிலர். சென்ற ஐம்பதாண்டுகளாக நிகழ்ந்துள்ள ஆராய்ச்சியின் பயனாகத் திருக்குறளின் பழமையும் திருஞான சம்பந்தர் காலமும் செவ்வையாக நிறுவப் பட்டிருப்பினும் ஐரோப்பிய அறிஞர் சிலர், ஒப்பிலக்கண முகவுரையிற் கண்ட பழங் கொள்கையையே தம் பெரு நூல்களின் வாயிலாகப் பரப்புகின்றார்கள்.9 இன்னோ ரன்னமாசு துடைத்து ஒப்பிலக்கணத்தைப் பொன்னே போற்றுதல் தமிழ் மாணவர்கடனாகும். அடிக்குறிப்பு 1. “ழந (னுச. ழடினபளடிn) பயஎந உடிஅயீயசயவiஎந எயஉஉயரெடயசநைள டிக யடட வாந ஐனேடி-உhiநேளந டயபேரயபநள ளயீடிமநn in ஐனேயை யனே வாந நேiபாbடிரசiபே உடிரவேநைள யனே டிக வாந ஆரனேய யனே டிக வாந னுசயஎனையைn கடிசஅள டிக ளயீநநஉh. கூhநளந hந உடிஅயீயசநன றiவா அயலே டயபேரயபநள டிக உநவேசயட in வாந ளநயசஉh டிக டிநே உடிஅஅடிn டிசபைin கடிச வாந றாடிடந. ளுடி கயச யள ஐ யஅ யறயசந hந றயள வாந கசைளவ நுபேடiளாஅயn வடி ரளந வாந வநசஅ னுசயஎனையைn கடிச வாந டயபேரயபநள டிக உநவேசயட யனே ளடிரவாநசn ஐனேயை, ரெவ hந inஉடரனநன. ருனேநச வாயவ வநசஅ nடிவ டிடேல வாந னுசயஎனையைn டயபேரயபநள யீசடியீநச ரெவ யடளடி வாடிளந டிக யn யடவடிபநவாநச னகைகநசநவே கயஅடைல - வாந அரனேய. ஐவ ளை வாயவ hந கயடைநன வடி நளவயடெiளா hளை கயஎடிரசவைந வாநடிசல டிக ய உடிஅஅடிn டிசபைin கடிச யடட வாந டயபேரயபநள நஒயீடடிசநன லெ hiஅ, ரெவ வாளை hயசனடல னiஅiniளாநள வாந எயடரந டிக hளை றசவைiபேள றாiஉh உடிவேயin ய அயளள டிக நஎனைநnஉந டிn வாந யbடிசபைiயேட டயபேரயபநள டிக ஐனேயை வாயவ hயள நேஎநச நெநn ளரயீசநளநனநன.” - டுiபேரளைவiஉ ளுரசஎநசல டிக ஐனேயை ஏடிட.1. பு 2. னுச. ழுரனேநசவ. 3. “குசடிஅ வாந வiஅந டிக அல யசசiஎயட in வாந ஐனேயை ரெவ நளயீநஉயைடடல கசடிஅ வாந வiஅந டிக அல யசசiஎயட in கூinநேஎநடடல, ஐ ளநவ அலளநடக வடி வாந ளவரனல டிக ஐனேயைn யீhடைடிபடடிபல, நுவாnடிடடிபல யனே ழளைவடிசல. ஐ ஞசடிஉரசநன வாந நௌவ bடிடிமள றநசந யவவயiயேடெந யனே டநயசநேன ழுநசஅயn வாயவ ஐ அயல நெ யடெந வடி அயமந ரளவ டிக வாந எயளவ ளவடிசநள டிக ஐனேயைn டநயசniபே யஉஉரஅரடயவநன லெ ழுநசஅயn ளஉhடிடயசள. ஐவ றயள அல உhநைக யiஅ வடி நெ யீநசகநஉவடல யஉஉரசயவநன யனே nடி டிநே றாடி hயள nடிவ அயனந வசயைட டிக வை உயn சநயடளைந வாய யஅடிரவே டிக டயbடிரச யனே உயசந inஎடிடஎநன in வாந நனேநயஎடிரச வடி ளநஉரசந யீநசகநஉவ யஉஉரயசயஉல in யீhடைடிடடிபiஉயட, நவாnடிடடிபiஉயட யனே hளைவடிசiஉயட ளவயவநஅநவேள.”- ஊ.சு. 149 4. “ஐவ ளை வசரந வை றடிரடன நெ nடிற னகைகiஉரடவ கடிச கூநடரபர வடி னளையீநளேந றiவா வைள ளுயளேமசவை; அடிசந ளடி கடிச உயயேசநளந; யனே அடிளவ டிக யடட கடிச ஆயடயலயடயஅ, வாடிளந டயபேசரயபநள hயஎiபே bடிசசடிறநன கசடிஅ ளுயளேமசவை ளடி டயசபநடல, யனே நெiபே ளடி hயbவைரயவநன வடி டடிடிம ரயீ டிவ கை கடிச hநடயீ, வாயவ வை றடிரடன நெ ளஉயசஉநடல யீடிளளiடெந கடிச வாநஅ nடிற வடி யளளநசவ வாநசை iனேநயீநனேநnஉந. கூயஅடை, hடிறநஎநச வாந அடிளவ hiபாடல உரடவiஎயவநன யb iவேசய டிக யடட னுசயஎனையைn னைiடிஅள, உயn னளையீநளேந றiவா வைள ளுயளேமசவை யடவாடிபநவாநச, கை நேநன நெ, யனே nடிவ டிடேல ளவயனே யடடிநே ரெவ கடடிரசiளா றiவாடிரவ வைள யனை.” - ஊ.ழு.ஐவே. 45. 5. னுச. க்ஷடநநம’ள “உடிஅயீயசயவiஎந ழுசயஅஅயச டிக வாந ளுடிரவா ஹகசiஉயn டயபேரயபநள.” 6. “கூhந உடயளளகைiஉயவiடிn டிக nடிரளே வாடிரபா nடிவ ளடி iஅயபiயேவiஎந யள வாயவ டிக வாந ஐனேடி-நுரசடியீநயn யனே ளுநஅவைiஉ வடிபேரநள, ளை னநஉனைநனடல அடிசந யீhடைடிளடியீhiஉயட; கடிச வாந னகைகநசநnஉந நெவறநநn சயவiடியேட நெiபேள யனே நெiபேள டிச வாiபேள றாiஉh யசந னநளவவைரவந டிக சநயளடிn ளை அடிசந அடிஅநவேடிரள யனே நளளநவேயைட, வாயn யலே னகைகநசநnஉந வாயவ நஒளைவள நெவறநநn வாந ளநஒநள... கூhந யீநஉரடயைச னுசயஎனையைn டயற டிக பநனேநச றாiஉh hயள nடிற நெநn னநளஉசiநென றடிரடன யயீயீநயச வடி நெ ய சநளரடவ டிக யீசடிபசநளளiஎந iவேநடடநஉவரயட யனே பசயஅஅயவiஉயட உரடவiஎயவiடிn.”-ஊ.ழு.220. 7. னுச. ழுசநைசளடிnமூடுiபேரளைவiஉ ளுரசஎநசல டிக ஐனேயை ஏடிட.ஐஏ. 8. கூhந முரசயட டிக கூசைரஎயடடரஎயச.... றாiஉh ளை சநபயசனநன லெ யடட கூயஅடையைளே (யனே யீநசாயயீள தரளவடல) யள வாந கiநேள உடிஅயீடிளவைiடிn டிக றாiஉh கூயஅடை உயn bடியளவ, ளை பநநேசயடடல சநபயசனநன nடிவ டிடேல வாந நௌவ ரெவ வாந டிடனநளவ கூயஅடை யீடிநஅ டிக யலே நஒவநவே றாiஉh ளை nடிற in நஒளைவநnஉந. ஐ வாiமே, றந ளாடிரடன nடிவ நெ றயசசயவேநன in யீடயஉiபே வாந னயவந டிக வாந முரசயட டயவநச வாயn வாந கூநவோ உநவேரசல ஹ.னு... குடிச வாநளந சநயளடிளே, ளரஉh யள வாந யசந, றந ளநநஅ வடி நெ றயசயவேநன in யீடயஉiபே வாந முரசயட in வாந கூநவோ உநவேரசந ஹ.னு. யவ டநயளவ. ஐவ அரளவ நெ சநஅநநெசநன hடிறநஎநச, யள in யடஅடிளவ நஎநசல ளiஅடையச நnளூரசைந யீநசவயiniபே வடி ஐனேயைn டவைநசயவரசந, வாயவ வாந சநயளடிளே டிக வாளை உடிnஉடரளiடிn யீடிளளநளள டிடேல ய எநசல டiஅவைநன யஅடிரவே டிக யீசடியெடைவைல யனே உயயீயடெந டிக biபே டிஎநசசரடநன லெ வாந கசைளவ னளைஉடிஎநசல டிக ய சநடயைடெந னயவந டிக கயஉவ. - உ.ழு.ஐஐ. நுன. 130, 131. 9. “கூhந யீநசiடின டிக வாந யீசநஎயடநnஉந டிக வாந யீயனேலய மiபேனடிஅ கசடிஅ வாந சூiவோ டிச கூநவோ வடி வாந கூhசைவநநவா உநவேரசல ளை துரளவடல வநசஅநன வாந ஹரபரளயவயn யபந டிக கூயஅடை டவைநசயவரசந. கூடி வைள நயசடநைச னயலள ளை யளளபைநேன வாந சூயடயனயைச, யனே நவாiஉயட யீடிநஅ டிn வாந வாசநந டிதெநஉவள டிக நஒளைவநnஉந, றாiஉh ளை ளரயீயீடிளநன வடி hயஎந யீசநஉநனநன வாந முரசயட டிக கூசைரஎயடடரஎயச, வாந கiநேளவ யீடிநவiஉயட யீசடினரஉவiடிn in வாந றாடிடந சயபேந டிக கூயஅடை உடிஅயீடிளவைiடிn. - நுnஉ. க்ஷசவை. (14வா நுன.) 1929.” “கூhந முரசயட டிக கூசைரஎயடடரஎயச ளை உடிளேனைநசநன யள டிநே டிக வாந பநஅள டிக கூயஅடை டவைநசயவரசந. கூhந யரவாடிச ளை ளயனை வடி hயஎந நெநn ய யீயசiயா யனே hந உயnnடிவ யஉஉடிசனiபே வடி க்ஷiளாடியீ உயடனறநடட நெ யீடயஉநன டயவநச வாநn வாந கூநவோ உநவேரசல.”- டுiபேரளைவiஉ ளுரசஎநல ஏடிட. ஐஏ. 301. 8. பாண்டிப் பழந்துறைகள் திராவிட மொழி நூலின் அடிப்படை கோலிய மொழி நூற் புலவர், பொருனை நாட்டின் வரலாற்றைத் திறம்பட வரைந்துதவிய சிறந்த சரித்திர ஆசிரியராகவும் விளங்குகின்றார். பாண்டி நாட்டிலமைந்த பழைய சாசனங்களைச் செவ்வையாக உணர்ந்தும், தமிழ் நூல்களிற் கண்ட சரித்திரக் குறிப்புகளைத் திரட்டியும், சென்னை அரசாங்கத்தாரிடம் இருந்த ஆதரவுகளை ஆராய்ந்தும், பொருனை நாட்டின் சரித்திரத்தை ஆதி முதல் ஆயிரத்து எண்ணூற்று ஆண்டளவும் வரன் முறையாக எழுதி முடித்தார். அந்நூலின் பெருமை அறிந்த அரசாங்கத்தார் அதனை அச்சிட்டு வெளிப்படுத்தும் பொறுப் பினை ஏற்றுக் கொண்டதோடு, சரித்திர ஆசிரியர்க்கு ஆயிரம் ரூபாய் மனமுவந்து பரிசளித்தார். அச்சரித்திர நூலின் முன்னணியில் நின்று பாண்டி நாட்டின் பழம் பெருமை காட்டும் முகவுரை சாலச் சிறந்த பொருளுரையாய்த் திகழ்கின்றது. தென்பாண்டி நாட்டை வளப்படுத்தும் பொருனை யாற்றின் பெருமையைப் பண்டைப் புலவர் புனைந்துரை யானும், பழையயவனர் புகழுரையானும் அறிந்து கால்டுவெல் ஐயர் போற்றியுள்ளார். ஆரமும் அகிலும் அடர்ந்து ஓங்கி வளரும் பொதியமலையில் பிறந்து மஞ்சுலாவும் மலைச்சாரலில் தவழ்ந்து, சான்றோர்மனமெனச சவியுறத் தெளிந்து செல்லும் பொருனை யாறு தென் தமிழ்நாட்டின் உயிர்நிலையாக விளங்குவதாகும். ‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருனையெனும் திருநதி’யைக் குறுமுனிவரது கருணையின் வடிவமாகவே கண்ட பழந்தமிழ்க் கவிஞர் பலர் செஞ்சொற் பாமாலை புனைந்தேத்தி நெஞ்சம் தழைத்தார். இத்தகைய பொருனையாது கடலொடு கலக்குமிடத்தில் இலங்கிய கொற்கைத்துறை செல்வச் செழுந்துறையாய் விளங்கிய தன்மையால் பாண்டி மன்னரும் மக்களும் அத்துறையைப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள். கொற்கைத் துறையைத் தன்னகத்தே கொண்ட வளைகடல், கொற்கைக்குடாக் கடல் என்று பண்டையவன வணிகரால் பாராட்டப்பட்ட தென்றால் அத்துறையின் பெருமை சொல்லாமலே அமையுமன்றோ?1 முத்தமிழ் நாடுகளுன் சேரநாடு மலைவளம் உடைய தென்றும், சோழநாடு நிலவளம் கெழுமியதென்றும். பாண்டி நாடு கடல்வளம் படைத்ததென்றும் கவிஞர் கனிந்து பாடிக் களிப்புற்றார். முத்து விளையும் தமிழ்நாட்டை முற்காலத்தில் நாகரிகமுற்றிருந்த ஐரோப்பிய நாட்டரசர்கள் நன்கறிந்திருந்தனர். முதல் நூற்றாண்டில் அரும்புகழ் வாய்ந்து ரோமாபுரியில் அரசு புரிந்த அகஸ்தஸ் என்னும் அரசனிடம் பாண்டியன் தூது போக்கினானென்றும், அத்தூதின் பண்பும் பயனுமறிந்த யவன வேந்தன், வரிசை வழுவாது பரிசுவந்தளித்து விடைகொடுத் தனுப்பினானென்றும் இந்திய வரலாறு அறிவிக்கின்றது. முத்து வணிகத்தால் நேர்ந்த பழக்கமே இவ்வாறு இருபெரு வேந்தரும் நெருங்கி உறவாடுதற்கு ஏதுவாயிருந்ததென்று சரித்திர ஆசிரியர் கருதுகின்றார்.2 இங்ஙனம் திருமகட்கு உறைவிடமாய்த் திகழ்ந்த கொற்கையின் பெருமை நாளடைவில் குன்றுவதாயிற்று. பொருனை ஆற்றின் மண்ணும் மணலும் கொற்கைத்துறை முகத்தைத் தூர்த்துக் கருங் கடலை அத்துறையினின்றும் துரத்தியது. இற்றைக்கு அறுநூறு ஆண்டுகட்கு முன்பு தமிழகம் போந்த மார்க்கப்போலோ3 காலத்தில் கா]ல்துறை முத்துத் துறையாகவும், வணிகத் துறையாகவும் விளங்கிற்று. ஆண்டு சீனரும், அரேபியரும் சிறந்த வாணிகம் புரிந்து வந்தார்கள்.4 காயல் துறைமுகத்தில் பாரசீகநாட்டுப் பரிகள் இறங்கிய பான்மையையும், அவை விலைப்பட்ட முறையையும், பிறநாட்டு வணிகரைப் பாண்டியர் ஆதரித்த பெற்றியையும், மார்க்கப் போலோ விரித்து எழுதியுள்ளார். இன்னும் வேனிற்பருவத்தில் நெய்தல் நிலமாக்களாய பரதவர் படகுகளிலேறி ஆழ நீரிற் சென்று மூழ்கி முத்துச்சிப்பிகளை அள்ளி வருவர் என்றும், நாள்தோறும் கிடைத்த சிப்பிகளில் பத்தில் ஒரு பங்கு பாண்டி மன்னற்குத் திறையளப்பரென்றும், எஞ்சிய சிப்பிகளில் இருபதி லொருபாகம் மச்சங்களின் அச்சந்தீர்க்கும் மறையவர்க்குக் கையுறையாக அளிப்பரென்றும் மார்க்கப்போலோ கூறுகின் றார். முந்நீரில் மூழ்கி முத்தெடுக்கும் மக்களைப் பெருமீன்கள் ஊறு செய்யாவண்ணம் ஒவ்வொரு நாளும் மறையவர் மந்திரம் நவில்வர் என்றும், காலைப் பொழுதில் மந்திரவலியாற் கட்டிய மச்சங்களை மாலைப் பொழுதில் பரதவர் கரையேறிய பின்பு கட்டவிழ்த்து உலாவித் திரியவிடுவர் என்றும், அவ்வாறு மறைமொழியின் வலிமையாற் காத்தருளும் மாந்தர்க்கும் பரதவர் மந்திரக்கூலி கொடுப்ப ரென்றும் மார்க்கப்போலோ கூறுகின்றார். ஆகவே கொற்கைத் துறை தூர்ந்த பின்னர் அதன் செழுமையையும் செல்வத்தையும் காயல் ஏற்றுக் களித்திலங்குவ தாயிற்று என்னும் உண்மை இனிது விளங்குவதாகும். முன்னால் கொற்கைத் துறையிலும் காயல் துறையிலும் குளித்த முத்து இந்நாளில் தூத்துக்குடியில் எடுபடுகின்றது, இக்காலத்தில் சிற்றூராகக் கடற்கரையினின்று மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ள பழங்காயலின் முற்கால வணிகச் செழுமையை அறிதற்குரிய புதையற் பொருள் ஐம்பதாண்டு கட்கு முன்பு பொருனை நாட்டு கலெக்டராயிருந்த ‘பக்கள்’ துறையாற் கண்டெடுக்கப்பட்டது. பக்கிள் வாய்க்கால் என்று வழங்கும் பாசனக் கால்வாய் தோண்டும்பொழுது பழங்காய லினின்று செல்லும் சாலையில் பொற்காசு நிறைந்த ஒரு பெரும் பாதை அகப்பட்டது. அப்பானையில் ‘சூல்த்தான் சாலடின்’ பெயர் பொறித்த காசு ஒன்றும், பீட்டர் என்னும் அரகானிய மன்னர் பெயர் பொறித்த நாணயம் ஒன்றும், அரேபிய நாட்டுப் பொற்காசுகள் பலவும் அடங்கியிருக்கக் கண்டு அதனைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்கு அனுப்பினார். அச்சாலைத் தலைவர் காசுகளை உரிய முறையில் ஆராய்ந்து அவையாவும், பதினான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவே யென்று அறிவித்தார்.5 இங்ஙனம் பொருனை நாட்டு ஆற்றின் பெருமையையும் துறைகளின் செழுமையையும், அறிவுறுத்திய கால்டுவெல் ஐயர், பழங்காலந் தொட்டுப் பத்தாம் நூற்றாண்டு வரை பாண்டி மன்னர் அரசு புரிந்தவாறும், அப்பால் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு தமிழகம் முழுதாளத் தலைப்பட்ட சோழ மன்னர் பொளைக் காவல் பூண்டவாறும், பின்பு பாண்டியர் மீண்டும் தலையெடுத்துப் பதினாறாம் நூற்றாண்டளவும் பழம்பதியை ஆண்டவாறும், அப்பால் வடுக மன்னராய நாயக்கர் ஆட்சி நிகழ்ந்தவாறும், பின்னர் மகமதியரும் ஐரோப்பியரும் தென் நாட்டில் நிறைபெறக் கருதி இகல் விளைத்தவாறும், இறுதியில் ஆங்கிலக் கம்பெனியார் வேற்றரசர்களை வென்று வீரம் விளைத்த குறுநில மன்னர்களை மடக்கித் தென்னாட்டு அரசுரிமை பெற்றவாறும். பொருனை நாட்டுச் சரித்திரத்தில் அடைவு படக் காட்டப்பட்டுள்ளன. நினைப்பிற் கெட்டாத நெடுங்காலமாகப் பாண்டி நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய பொருனை நாடு ஆர்க்காட்டு வேந்தர் ஆளுகையிற் போந்த பதினெட்டாம் நூற்றாண்டினிடைப் பகுதியில் மதுரையினின்றும் வேறாகித் தனி நாடாக நிலவத் தொடங்கிற்று.6 முற்காலத்தில் பாண்டி நாட்டின் ஓர் உறுப்பாக விளங்கிய நாஞ்சில் நாடு இப்பொழுது மலையாள நாட்டின் ஓரங்கமாக விளங்குகின்றது. கல்வி கேள்விகளிற் சிறந்த அறிஞரே எந்நாட்டிற்கும் நல்லணியாவரென்று நன்குணர்ந்த கால்டுவெல் ஐயர், பொருனை நாட்டுப் புலவர் பெருமையைப் புகழ்ந்து போற்றி யுள்ளார். பொதிய மலையில் வீற்றிருந்து முத்தமிழ் வளர்க்கும் குறுமுனியைக் குறித்துத் தொன்றுதொட்டு வழங்கும் கதைகளை ஆராய்ந்துள்ளார். பொருனையாற்றின் கரையிலமைந்த குருகூரில் வேளாண் மரபிற் பிறந்து வைணவப் பயிர்வளர்த்த நம்மாழ்வார் பெருமையை அறிந்து நாவார வழுத்துகின்றார். இன்னும் செந்தில் மாநகர்க் கந்தனருள் பெற்றுச் செந்தமிழ் மணக்குஞ் செழுங்கவிபாடிய குமர குருபர அடிகளின் கவித்திறம் அறிந்து போற்றுகின்றார். வடமொழிப் பெருங்காவியமாகிய பாரதத்தை மொழி பெயர்த்துப் பெருமையுற்ற வில்லியையும், பொது மறைக்குச் சிறந்த உரையெழுதிப் புகழ்பெற்ற பரிமேலழகரையும் பொருனைப் புலவரெனக் கொண்டு பாராட்டுகின்றார். இன்னும் பைந்தமிழ் மொழியிலமைந்த பன்னூல்களையும் பண்புற உணர்ந்து தொன்னூல் என்னும் இலக்கணம் இயற்றி, தேம்பாவணி என்னும் பாமாலை புனைந்து பெருங்கவிஞராக விளங்கிய வீரமாமுனிவர்க்கு ஏழாண்டு தமிழ் விருந்தளித்து அவர் அறிவை வளம்படுத்திய பெருமையும் பொருனை நாட்டிற்கே உரியதென்று புகழ்ந்துரைக்கின்றார்.7 இங்ஙனம் பெருங் கவிஞரையும், முனிவரையும் கனிந்து நல்கிய பொருனை நாடு பைந்தமிழின் பண்பினைப் பாரெங்கும் பரப்பிய பேரறிஞராய கால்டுவெல் ஐயரையும் மகன்மை கொண்டு வீறுபெற்று விளங்குகின்றது. அடிக்குறிப்பு 1. “கூhந ழுசநநமள உயஅந வடி மடிடமடிi வடி யீரசஉhயளந யீநயசடள, உநசவயiடேல ளடிடிn யகவநச வாந ஊhசளைவயைநேசய, யீசடியெடெல அயலே லநயசள நெகடிசந யனே சநயீசநளநவேநன வை யள ழநயன ளூரயசவநசள டிக வாந யீநயசட வசயனந... ஐவ அரளவ hயஎந நெநn சநபயசனநன யள ய உடிளேனைநசயடெந யீடயஉந யவ வாந வiஅந, ளநநiபே வாயவ கசடிஅ வைள யேஅந வாநல உயடடடநன வாந ழுரடக டிக ஆயnயேச, வாந முடிடஉhiஉ பரடக. கூhளை றயள வாந முடிசமயi வடி றாiஉh யடட யேவiஎந வசயனவைiடிளே யீடிiவேநன யள வாந உசயனடந டிக ளடிரவா ஐனேயைn உiஎடைளையவiடிn.” ஐ.ஹ. ஏடிட. ஏஐஐ. 80-82. 2. “ ஐ சநபயசன வை யள நேயசடல உநசவயin வாயவ வாந ஐனேயைn மiபே றாடி ளநவே யn நஅயௌளல வடி வாந நஅயீநசடிச ஹரபரளவரள றயள nடிவ யீடிசரள ரெவ யீயnனைடிn, வாந மiபே டிக வாந யீயனேலயள, உயடடநன in கூயஅடை வாந யீயனேiடிn. கூhந நயசடநைளவ யஉஉடிரவே டிக வாந நஅயௌளல ளை பiஎநn லெ ளவசயbடி (ஹ.னு.20).... கூhளை inஉனைநவே ளை யn iவேநசநளவiபே யீசடிடிக டிக வாந யனஎயnஉநன ளடிஉயைட யனே யீடிடவைiஉயட யீடிளவைiடிn டிஉஉரயீநைன லெ வாந யீயனேலயள யீசடியெடெல ளை உடிளேநளூரநnஉந டிக வாந கடிசநபைn வசயனந வாநல உயசசநைன டிn, எணை யவ மடிசமயi in உடிளேநளூரநnஉந டிக வாந கடிசநபைn வசயனந வாநல உயசசநைன டிn வாந ஆயடயநெச உடியளவ. ஹகவநச வாந வநசஅiயேவiடிn டிக வாந யீடிடவைiஉயட சநடயவiடிளே வாயவ ளரளெளைவநன நெவறநநn வாந ளரஉஉநளளடிசள டிக ஹடநஒயனேநச யனே வாந யீசinஉநள டிக சூடிசவாநசn ஐனேயை, றந வாரள கiனே வாயவ வாந யீயனேலயள றநசந வாந டிடேல ஐனேயைn யீசinஉநள றாடி யீநசஉநiஎநன வாந யனஎயவேயபநள டிக நுரசடியீநயn யடடயைnஉந.” ழ.கூ.17. 3. ஆயசஉடி யீடிடடி எளைவைநன வாந யீயனேலய முiபேனடிஅ in 1292 ஹ.னு. 4. ஹள வாந ளடைவ யஉஉரஅரடயவநன in வாந ளநய நேயச வாந அடிரவா டிக வாந சiஎநச டிச யள வாந டயனே சடிளந, டிச கசடிஅ bடிவா உயரளநள, முடிசமயi றயள கடிரனே யவ டநபேவா வடி நெ கயச iடேயனே கடிச வாந உடிnஎநnநைnஉந டிக ய ளநய-bடிசநே வசயனந, யனே மயலயட (அநயniபே ய டயபடிடிn டியீநniபே iவேடி வாந ளநய) சடிளந in வைள ளவநயன டிn வாந ளநய ளாடிசந யனே யவவயiநேன யீநசாயயீள வடி ளவடைட பசநயவநச னiஅநளேiடிளே. முயலயட உயசசநைன டிn யn iஅஅநளேந னசைநஉவ வசயனந றiவா உhiயே யனே ஹசயbயை, வாந நஎனைநnஉநள டிக றாiஉh - செடிமநn யீநைஉநள டிக உhiயே யனே ஹசயbயைn யீடிவவநசல - யசந கடிரனே டலiபே யடட டிஎநச வாந டியீநn டிn றாiஉh வாந உவைல ளவடிடின.” ஐ.ஹ. ஏடிட. ஏஐஐ. 5. “ளுடிஅந லநயசள யபடி ய உடிளேனைநசயடெந ¹ளூயவேவைல டிக ஆராயஅயனயn படிடன உடிiளே றயள னளைஉடிஎநசநன in கூinநேஎநடடல நேயச யn சடியன டநயனiபே கசடிஅ மயலயட... ஐவ றயள கடிரனே நேயச யn டிடன யஎநரேந டநயனiபே iடேயனே கசடிஅ றாயவ றயள டிnஉந வாந உவைல டிக முயலயi... ஹடட வாந முயடகையவ உடிiளே றiவா வாந நஒஉநயீiடிn டிக niநே hயஎந நெநn னநஉiயீhநசநன யனே நெடடிபே வடி வாந வாசைவநநவோ உநவேரசல; ளடி டிக உடிரசளந னடிநள வாயவ டிக யீநவநச டிக ஹசயபடிn, வை நெiபே யகவநச 1276. கூhநசந ளை ய னடிரவெ யbடிரவ ளடிஅந டிக வாந னயவநள ரெவ nடிநே யசந யயீயீயசநவேடல டயவநச வாயn 1300”... ழ.கூ.287 - 288. 6. “ஹnடிவாநச னகைகiஉரடவல ரனேநச றாiஉh வாந நயசடல hளைவடிசல டிக கூinநேஎநடடல டயbடிரசள ளை வாயவ in நயசடல வiஅநள வாளை னளைவசiஉவ hயன nடி ளநயீயசயவந நஒளைவநnஉந, ரெவ கடிசஅநன அநசநடல வாந ளடிவாநசn யீடிசவiடிn டிக வாந யீயனேலய எடிரவேசல, யனே வாளை றயள வாந யீடிளவைiடிn வை டிஉஉரயீயனை ரனேநச வாந உhடிடயள, வாந நயசடல ஆராயஅயனயளே யனே வாந சூயலயமள யள றநடட வாந ரனேநச வாந யீயனேலயள வாநஅளநடஎநள. ஐவ றயள nடிவ வடைட வாந inஉடிசயீடியசவiடிn டிக வாந மiபேனடிஅ டிக ஆயனரசய, inஉடரனiபே வைள எயசiடிரள னளைவசiஉவ யனே னநயீநனேநnஉந iவேடி வாந வநசசவைடிசநைள ரனேநச வாந சரடந டிக வாந சூயறயb டிக யசஉடிவ, யbடிரவ ஹ.னு.1744 வாயவ வாந னளைவசiஉவ டிக கூinநேஎநடடல உயஅந வடி நெ சநபயசனநன, யவ கசைளவ கடிச சநஎநரேந யீரசயீடிளந யடடிநே, யள iனேநயீநனேநவே டிக டிச யவ டநயளவ யள கசடிஅ, வாந னளைவசiஉவ டிக ஆயனரசய.” ழ.கூ.3. 7. “ஐவ hயள யடறயலள நெநn மnடிறn வாயவ க்ஷநளஉhi வநசஅiயேவநன hளை உடிரசளந in கூinநேஎநடடல ரெவ வை றயள நேஎநச மnடிறn வடைட nடிற வாயவ வை றயள in கூinநேஎநடடல யடளடி வாயவ hந உடிஅஅநnஉநன hளை உயசநநச. றுந nடிற வாயவ கூinநேஎநடடல. ஊயn உடயiஅ hiஅ அளைளiடியேசல டகைந யனே யள வை றயள நேஉநளளயசடைல னரசiபே வாடிளந லநயசள வாயவ hந டயனை வாந கடிரனேயவiடிn டிக hளை அயசஎநடடடிரள மnடிறடநனபந டிக கூயஅடை யனே hளை ளவடைட அடிசந அயசஎநடடடிரள ளமடைட in அயமiபே ரளந டிக வாந மnடிறடநனபந hந யஉளூரசநைன, கூinநேஎநடடல அiபாவ யடஅடிளவ ளநநஅ வடி hயஎந வாந சiபாவ டிக உடயளளiபே hiஅ யஅடிபேளவ hநச டவைநசயசல உநடநசெவைநைள. ருகேடிசவரயேவநடல கடிச வாளை உடயiஅ hடிறநஎநச வை னடிநள nடிவ யயீயீநயச உநடநசெவைநைள. ருகேடிசவரயேவநடல கடிச வாளை உடயiஅ hடிறநஎநச வை னடிநள nடிவ யயீயீநயச உநடநசெவைநைள. ருகேடிசவரயேவநடல கடிச வாளை உடயiஅ hடிறநஎநச வை னடிநள nடிவ யயீயீநயச வாயவ யலே டிக hளை உடிஅயீடிளவைiடிளே, றாநவாநச in யீசடிளந டிச inஎநசளந றயள றசவைவநn in கூinநேஎநடடல.” - ழ.கூ. 241. 9. ஏற்றமும் தோற்றமும் பொருணை நாட்டிற் பணியாற்றப் போந்த கால்டுவெல் ஐயரின் ஆர்வத்தையும் ஆற்றலையும் செவ்வையாக அறிந்திருந்த சென்னை வேதவிளக்கச் சங்கத்தார் முன்பு முதலூர் வட்டத்தில் ஓரங்கமாக விளங்கிய இடையன் குடியைப் பிரித்து அதற்குத் தனி உரிமையும் பெருமையும் அளித்தார்கள். ஏசுநாதர் பெருமையைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருதிய கால்டுவெல் ஐயர், இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்ட நாள்முதல் இடையறாத் தொண்டாற்றத் தலைப்பட்டார். மன்னுயிர்பாற் கொண்ட கருணையால் மண்ணுலகிற் போந்து, சிறியோரிழைத்த சிறுமையைத் தம் பெருமையாற் பொறுத்து, சிலுவையில் வடித்த செந்நீரால் மாநிலத்தில் உறைந்திருந்த நெடும் பாவம் கழுவி, மாந்தர்க்கு நன்னெறி காட்டியருளிய ஏசுநாதர் பெருமையை இடையறாது எடுத்துரைத்துக் கல் மனத்தையும் கரைத்தார். தண்டமிழின் சுவையறிந்த தனிப்பெருந் தொண்டர் மொழிகள் கேட்டார்ப் பிணிக்குந் தகையனவாய்க் கேளாரும் வேட்கும் வகையினவாய் அமைந்திருந்தமையால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த நாடார்கள் அவர் வாய்மொழியில் ஈடுபட்டார்கள். நாளுக்குநாள் கிருஸ்து மதத்தை ஏற்றுக் கொண்டவர் தொகை வளர்ந்தோங்கியது. இவ்வாறு அம்மதத்தின் மணம் நாடெங்கும் கமழத் தொடங்கியபோது, கிருஸ்தவ சமய சங்கத்தார் கால்டுவெல் ஐயரை அத்தியட்ச குருவாக்கிச் சிறப்பிக்கக் கருதினார்கள். ஆனால் அக்காலத்திருந்த சட்ட திட்டங்கள் சென்னை மாகாணத்தில் ஒருவரே அத்தியட்ச குருவாக இருத்தற்குரியர் என்று விதித்திருந்தமையால் தாம் கொண்ட கருத்தை நிறைவேற்றுதற்குரிய வழியறியாது திகைத்து மனந்தளர்ந்தார். அனைவரும் வியக்கத்தக்க முறையில் அரும்பணி புரிந்த கால்டுவெல் ஐயரை உரியமுறையில் போற்றாதிருத்தல் முறையன்றென்று சென்னை மாகாண அத்தியட்ச குருவும் கருதினார். முறைமை வழுவாமல் பொது மக்களின் ஆர்வத்தை நிறைவேற்றுதற்குரிய வழிகளை நாடினார். தென்னிந்தியாவில் கர்த்தர் பணியிலீடுபட்ட வேத விளக்கச் சங்கம், சர்ச்சு முறைச் சங்கம்1 என்னும் இருவகைச் சங்கங்களுக்கும் இருவேறு அத்தியட்ச குருக்களை நியமித்தலே நலமாகு மென்றும், அவரிருவரும் சென்னை அத்தியட்ச குருவின் உதவிக் குருக்களாக அமைந்து பணிபுரிவராயின் முறைமை வழுவாது என்றும் எண்ணி அங்ஙனமே செய்யத் திருவுளங்கொண்டார். தென்னாட்டிற் பணிசெய்த சர்ச்சு முறைச் சங்கத்தின் சார்பாகக் சார்சந்தர் என்னும் சான்றோரையும்2 வேத விளக்கச் சங்கத்தார் சார்பாக கால்டுவெல் ஐயரையும் குருமாராகத் தேர்ந்தார். பெறுதற்குரிய பேறு பெற்ற இருவரும் அகில இந்திய அத்தியட்ச குருவின் இருப்பிடமாய் கலக்கத்தாவிற் பட்டம் பெறச் சென்றார்கள். அம்மாநகரில் பல்லாயிரக்கணக்காகக் குழுமியிருந்த கிருஸ்தவ அன்பர்கள், ஐயர் இருவரையும் கண்டு களிகூர்ந்து வாழ்த்தினார்கள். பம்பாய் மாகாணச் சமய குருவும், சிங்கள நாட்டுச் சமய குருவும், சென்னைச் சமயத்தொண்ட ரொடு போந்திருந்தார்கள். ஆயிரத்து எண்ணூற்று எழுபத் தேழாம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தேவாலயத்திற் கூடிய மாபெருஞ் சபையில் தென்னாட்டிற் பணி புரிந்த பெரியாரிருவரும் அத்தியட்ச குரு என்னும் பட்டமும் அதற்குரிய சின்னங்களும் பெற்று விளங்கினார்கள். பின்பு அந்நாட்டு நல்லன்பரிடம் விடைபெற்றுக் கால்டுவெல் ஐயர், வட நாட்டில் அமைந்த வாரணாசி முதலிய தென்னகரங்களைக் கண்டு பம்பாய்த் துறைமுகத்திற் கப்பலேறித் தூத்துக்குடித் துறையை அடைந்தார். அவர் வருகையை முன்னரே அறிந்திருந்த தென்னாட்டுக் கிருஸ்தவர் பல்லாயிரவர், அத்துறைமுகத்திற் குழுமிக் கால்டுவெல் ஐயரை வரவேற் றார்கள். ஆறடிக்கு மேலுயர்ந்த அழகமைந்த மேனியில் அத்தியட்ச குருவெனும் பட்டத்திற்குரிய செந்நிறச் சட்டை யணிந்த ஐயர் எழுந்தருளிய போது, அழகெனும் அணியும் ஓர் அழகு பெற்றதென்றெண்ணி அனைவரும் வியந்து நின்றார். இங்ஙனம் கண்குளிர நோக்கி வரவேற்று வாழ்த்துரை வழங்கிய மக்கள் மனங்குளிரக் கால்டுவெல் ஐயர் அமிழ்தினுமினிய தமிழில் மாற்றம் உரைத்தார். இசையினும் இனிய சொல்லின் சுவையறிந்த கிருஸ்தவ அன்பர்கள் அவர் மொழிகளைக் கேட்டு முன்னிலும் மும்மடங்கு மகிழ்வுற்றார். கிருஸ்து மதத்தைத் தழுவிய மக்கள் மனதில் அமைந்த அன்பின் திறமறிந்து மனம் நெகிழ்ந்த கால்டுவெல் ஐயர், தோன்றாத் தொழுதார். இங்ஙனம் இறைவன் அருளையும், மக்கள் அன்பையும், குறையறப் பெற்ற கால்டுவெல் ஐயர் இடையன் குடியிற் போந்து மீண்டும் தொண்டாற்றத் தொடங்கினார். அப்பொழுது பொருனை நாட்டில் கொடும் பஞ்சம் வந்துற்றது.3 வானம் பொய்த்தது; வருபுனல் வற்றியது; குளங்கள் நீரற்றன; வயல்கள் பயிரற்றன. உண்ண உணவின்மையால் கொள்ளையும் கொலையும் மிகுந்தன. வற்றிய மனையும் வறண்ட வயலும் துறந்து பிற நாடுகளிற் பிழைக்கச் சென்றார் சிலர். அன்பார்ந்த மக்களைக் காப்பதற்கும் வகையற்றுக் கை விடவும், மனமற்றுக் கதறினார் பலர். பஞ்சத்தின் கொடுமைக் காற்றது ‘முற்றிய நெற்றெனவற்றிய’ பாவலர்,4 “நாறுக்கு நாள் விலைவேறுதம்மா கடனாகுதம்மா தேளுக்கு நேரிந்தப் பங்சத்திலே என்ன செய்வமம்மா வாளுக்குவமை சொலும் விழிக்காந்திமதியம்மை நின் தாளுக்கு நாங்களடிமை என்றே வந்துசார்ந்தனமே.” “அம்மா அம்மா என்றழுங்குரல் கேட்டிரங்காமலும் தாய் சும்மா கிடக்கட்டும் போ என்பளோ பெற்ற தொந்தம் விட்டே இம்மாதிரி வன்மை கொண்டதென்னே அன்னை யென்றிருந்தும் பெம்மான்நெல்லேசர் மகிழும் இமாசலப் பெண்ணரசே.” என்று நெல்லையிற் கோயில் கொண்டருளும் காந்தியம்மை யிடம் நெஞ்சுருகி முறையிட்டார். இங்ஙனம் மக்கள் அடைந்த துயரங் கண்டாற்றாத அரசியலாளர் பசியென்னுந் தீப் பிணியை ஒருவாறு ஆற்ற முயன்றார். பொருனை நாட்டுக் கலெக்டரா யிருந்த ஆங்கிலப் பெரியார் மெய் வருத்தம் பாராது ஊர் ஊராய்ச் சென்று பஞ்சத்தின் கொடுமையால் வாடி வருந்திய மக்கட்குக் கஞ்சி வார்த்தார். மூன்று முறை பொருனை நாட்டிற் கலெக்டராக இருந்து நலம் புரிந்து பின்பு சென்னை நில வரி மன்றத்தின்5 உறுப்பினராய்த் திகழ்ந்த பக்கிள் துரையை அரசாங்கத்தார் நெல்லைக்கு அனுப்பிப் பஞ்ச நிவாரண வேலையை மேற்கொள்ளப் பணித்தார்கள். அந்தி வந்தடைந்த தாயைக் கண்ட ஆன்கன்று போல அவரைக் கண்டு அகமகிழ்ந்த நாட்டு மக்கள் பஞ்சத்திற் பட்ட பாடெல்லாம் மறந்தார். இங்ஙனம் அரசியலார் மேற்கொண்ட நன் முயற்சிகளில் கால்டுவெல் ஐயர் மனங் கலந்து உழைத்தார். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் உயரிய வாசகத்தை உளத்திற் கொண்டு வருந்தி வந்தடைந்த ஏழை மாந்தர்க்கு உணவளித்து அவர் திருந்திய முகம் கண்டு திளைத்தார். இவ்வாறு வேதனை செய்த தாதுப் பஞ்சம்6 தவிர்ந்த பின்பு ஆலயத் திருப்பணியை முடிக்கும் முயற்சியிற் கால்டுவெல் ஐயர் ஈடுபட்டார். முப்பத்து மூன்றாண்டுகட்கு முன்னர் அடிக்கல் நாட்டித் தொடங்கிய அரும் பணி, ஆயிரத்து எண்ணூற்று எண்பதாம் ஆண்டில் முற்றுப் பெற்றது. செந்நெடுந் தேரியிற் சிறந்த தோங்கி நின்ற திருக்கோவிலை ஆண்டவனுக்கு அர்ப்பணஞ் செய்யும் வண்ணம் ஐயரெடுத்த அணிவிழாவில் பல்லாயிரம் மக்கள் குழுமியிருந்தார்கள். ஆலயத்தினுள்ளே அன்பர் அணியணியாக அமர்ந்திருந்தனர். பண்ணார்ந்த பைந் தமிழிற் பல்லோர் சேர்ந்து பாடிய வேத கீதம் அனைவரையும் பரவசப் படுத்தியது. பின்பு சார்சந்தர் என்னும் அத்தியட்ச குரு அரியதோர் அறவுரை நிகழ்த்தினார். திருப்பணிக்குப் பொருளுதவி புரிந்து ஆதரித்த அன்பர் நலத்தையும், ஒருமையுடன் பணி புரிந்து ஆதரித்த அன்பர் நலத்தையும், ஒருமையுடன் பணி புரிந்த தொழிலாளர் பொறுமையையும், எடுத்த பணியைத் தொடுத்து முடிக்கத் துணை நின்ற திருவருளின் திறத்தினையும், கால்டுவெல் ஐயர் வியந்து புகழ்ந்தார். அணி விழாக் காண வந்திருந்த மாந்தர் அனைவரும் அவ்வாலயத்தின் அங்க நலன்களைக் கண்டு இன்புற்றார். ஆலயத்தின் முன்னணியில் அமைந்துள்ள திருமஞ்சனத் தொட்டி7 கண்களைக் கவரும் அழகுவாய்ந்து விளங்குகின்றது. இன்னும், ஆலய முகப்பில் அமைந்து அணி செய்யும் கோபுரத்தில் தூங்கும் கொடுமணியின் ஓசை காதவழி தூரங் கேட்குமென்று கூறுதல் மிகையாகாது. கலைமணம் கமழும் இடையான்குடியின் நடுவே நின்று கண்களுக்கு விருந்தளிக்கும் திருக்கோவில். “மண்ணிய முடியோ முடியின் மாமணியோ வானிடை வயங்கு செஞ்சுடரோ புண்ணிய உடலத்துயிர் கொலோ முகமோ பொலமுகக் கண் கொலோ யாதோ கண்ணிய அளவிற்றிடமெலாம் நிறைந்த கடவுள்தான் உறைந்தருள் காட்டப் பண்ணிய அம்மா நகரிடைப் பகலைப் பழித்தெரி பரந்த ஆலயமே”8 என்று அன்பார்ந்த அறிஞர் பாராட்டும் பான்மை வாய்ந்ததாகும். அடிக்குறிப்பு 1. ஊ.ஆ.ளு. ஆளைளiடிn. 2. “ழளை (நுனறயசன ளுயசபநவே’ள) ளவயவiடிn in கூinநேஎநடடல றயள யவ ளரஎளைநளாயயீரசயஅ, ய எடைடயபந டிடேல கiஎந அடைடநள கசடிஅ அல டிறn ளவயவiடிn டிக நுனயலயபேரனi, ளடி வாயவ றந கசநளூரநவேடல. ஆநவ யனே டிரச iவேநசஉடிரசளந றயள யடறயலள அடிளவ யீடநயளயவே யனே ஐ நெடநைஎந யள யீசடிகயைவயடெந யள யீடநயளயவே. ழந hயன ய யீநசகநஉவ மnடிறடநனபந டிக கூயஅடை றாiஉh hந ளயீடிமந யள கடரநேவடல யள ய யேவiஎந யனே றயள யடளடி வாடிசடிரபாடல கயஅடையைச றiவா யேவiஎந னைநயள ளடி வாயவ வை றயள ய பசநயவ யனஎநவேயபந வடி அந டிn கசைளவ நவேநசiபே டிn றடிசம in கூinநேஎநடடல வடி நெ யடெந வடி வயடம டிஎநச அயவவநசள றiவா hiஅ கசடிஅ வiஅந வடி வiஅந.” ஊ.சு. 104. 3. கூhந பசநயவ கயஅடநே டிக 1877 - கூ.ழு. 249 - 51. 4. அழகிய சொக்கநாத பிள்ளை பாடிய கலித்துறை யந்தாதி 5. க்ஷடியசன டிக சுநஎநரேநஇ ஆயனசயள. 6. தாதுவருஷப் பஞ்சம். 7. க்ஷயயீளைஅயட கடிவே. 8. தேம்பாவணி 10. ஆங்கிலக் கல்வியும் தமிழ்க் கல்வியும் கலைச் சுவையறிந்த கால்டுவெல் ஐயர் தாம் வாழ்ந்திருந்த நாட்டைக் கலைமணக்கும் திருநாடாகக் கருதினார். அக்காலத்தில் கல்வித் துறையில் ஈடுபட்டுழைத்த அறிஞர், ஏசு நெறியைப் பரப்பும் முறையில் இருவேறு கருத்துடையராய்க் காணப்பட்டனர். ஆங்கிலக் கல்வியின் வாயிலாக அறிவை வளர்த்து வேத நூலின் விழுமிய உண்மைகளை நாடெங்கும் விரித்தலே நற்பயன் விளைக்குமென்று கருதினர் ஒரு சாரார். அவ்வாறன்றி நாட்டு மொழிகளின் வாயிலாக மாந்தர்க்கு நல்லறிவூட்டிக் கிருஸ்து மதக் கொள்கைகளை நிலை பெறுத்தலே ஏற்றதாகு மென்று எண்ணினர் மற்றொரு சாரார். வங்காள மாகாணத்தில் தலைநகரிற் பெரும் புகழ் வாய்ந்து விளங்கிய ‘தவ்வர்’1 என்னும் பெரியார் ஆங்கிலக் கல்வியின் வாயிலாக அறிவு புகட்டுதலே சிறந்த நெறியெனக் கருதிக் கல்கத்தாவில் ஆங்கிலக் கல்லூரி நிறுவினர். அன்னார் கொள்கையை ஆர்வமுறத் தழுவிய ‘ஆந்தர்சன்’ என்னும் அறிஞர் சென்னை மாநகரில் சிறந்த ஆங்கிலக் கல்லூரி யொன்றமைத்துதவினார். ஆங்கிலக் கலை பயிலத் தொடங்கிய இளைஞரை ஆதரித்தேற்று அருங்கலை புகட்டிச் சென்னையில் வாழ்ந்த மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தார். ஆயினும், ஆந்தர்சன் காட்டிய நெறி கடைப்பிடிக்கத் தக்கதன்றென்று கருதினார் பலர். தென்னாட்டில் வாழும் மக்களனைவரும் ஆங்கில மொழியின் வாயிலாக அறிவினைப் பெற்று வேதநூற் பொருளறிந்து கிருஸ்து நெறியை ஏற்றுக் கொள்ளுமுன் கண்க்கிறந்த காலங் கழியுமென்றும், நாட்டு மொழிகளின் வாயிலாகச் கிறிஸ்துமதப் பெருமையை யாண்டும் பரப்புதல் எளிதென்றும், அம்முயற்சியே பிற்காலத்திற் சிறந்த பயன் விளைக்கு மென்றும், அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்னும் அறிவுரையின் வழிநின்ற கால்டுவெல் ஐயர் இருதிறத்தார் கருத்தையும் செவ்வையாக மனத்திற் சூழ்ந்து இரு கொள்கை களிலும் உண்மை அமைந்திருக்கக் கண்டார். மேலை நாட்டுக் கலைச்சுவை அறிய வல்ல மேற்குல மாந்தர்க்கு ஆங்கிலக் கல்வி ஏற்றதாகு மென்றும், பல்லாயிரக் கணக்காகச் சிற்றூர்களில் வாழும் ஏழை மாந்தர்க்கு நாட்டு மொழியின் வாயிலாக அறிவூட்டுதலே நலந் தருவதாகுமென்றும், கால்டுவெல் ஐயர் எண்ணினார். இக்கருத்தைத் தழுவியே கிருஸ்தவ வேதநூலைத் தமிழில் மொழி பெயர்க்கும் பொறுப்பினை மேற்கொண்ட கழகத்தில் ஐயர் பொருந்தி உழைப்பாராயினார். இன்னும் தமிழறிந்த மாந்தர் ஏசு நாதரை வழிபட்டு உய்வதற்குச் சாதனமாய தியான மாலை முதலாய சிறு நூல்களையும், தமிழ் மொழியில் இயற்றிப் போந்தார். இங்ஙனம் நாட்டு மொழியின் வாயிலாக மக்களுக்கு நல்லறிவூட்டிய கால்டுவெல் ஐயர் ஆங்கிலக் கல்வியையும் ஆதரித்து வளர்க்கத் தலைப்பட்டார். சாயர்புரம் என்னும் நகரில் போப்ஐயர் முயற்சியால் நிலை பெற்ற வேதியர் காலசாலையின் மேல் வகுப்புகளை வணிக வளம் வாய்ந்த தூத்துக்குடிக்கு மாற்றினால் பெரும்பயன் விளைவு மென்று கருதினார். அக்கலாசாலையிற் பொதுவாக ஆங்கிலக் கலையறியும், சிறப்பாக கிறிஸ்துமத நூலறிவும் செவ்வையாகப் பயிற்றுப் பட்டன. தூத்துக்குடி சிறந்த துறைமுகமாகவும், வளமார்ந்த செல்வர் வதியுமிடமாகவும், இருப்புப் பாதைத் தொடர்புடையதாகவும் இருந்தமையால் அந்நகரிற் கலாசாலை செழித்தோங்கி வளரும் என்று ஐயர் எண்ணினார். இங்ஙனம் கால்டுவெல் ஐயர் மனத்தில் அரும்பிய கருத்தின் செம்மையை நன்குணர்ந்த நண்பர் பலர் பொருளுதவி செய்ய முற்பட்டார்கள். தூத்துக்குடி நகரில் நெடுங்காலம் வாழ்ந்து பருத்தி வணிகத்தில் பெரும் பொருள் திரட்டிய ‘குரோவர்’2 என்னும் செல்வர் சிறந்த பொருளுதவி புரிந்தார். அன்றியும், ஆங்கில நாட்டுக் கிருஸ்தவ அறிவு விளக்கச் சங்கத்தார் கால்டுவெல் ஐயர் வகுத்துரைத்த நெறியை ஆதரித்துக் கலாசாலைக் கட்டிட வகைக்கு இருபதினாயிரம் ரூபாயும், அக்கலாசாலையிற் சேர்ந்து கலைபயிலும் மாணவரை ஆறாண்டு ஆதரித்தற் பொருட்டு ஐயாயிரம் பவுனும், கணித ஆசிரியராக அமைந்து பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர்க்கு ஆறாண்டிற்குரிய வேதனமாக ஆயிரத்தைந்நூறு பவுனும் மனமுவந்து வழங்கினார்கள். அந்நன் கொடையால் ஊக்கமுற்ற கால்டுவெல் ஐயர் கலா சாலையை ஆதரித்து வளர்க்கத் தொடங்கினர். மதி நலமும் நூலறிவும் ஒருங்கே வாய்ந்த நல்லறிஞரை ஆசிரியராகத் தேர்ந்து அமைத்தார். இலங்கு நூல் அறிதற்குரிய மதிநலம் வாய்ந்த ஏழை மாணவர்க்கு உணவும் உறையுளு மளித்து ஆதரித்தார். அக்கால சாலையிற் கற்றுத் தேறிய கிருஸ்தவ மாணவர்களின் ஏற்றத்தால் அந்நிலையத்தின் புகழ் நாடெங்கும் பரவுவ தாயிற்று. அக்கலா சாலையின் வேலையை அளந்தறியப் போந்த அரசியல் அறிஞர், அதன் சீர்மையையும் நீர்மையையும் கண்டு களிப்புற்று மனமாரப் புகழ்ந்துரைத்தார். இங்ஙனம் பல்லோர் புகழுரைக்கும் உரியதாய் தூத்துக்குடியில் நிலவிய உயர்தரக் கலாசாலை நெடுங்காலம் நடைபெறாது பத்தாண்டுகளில் ஒளி மழுங்கிய தன்மையை உணரும் பொழுது அறிஞர் மனம் வருந்துவரென்பதில் ஐயமில்லை. கால்டுவெல் கலாசாலை என்று எத்திசையும் புகழ் மணக்க வீற்றிருந்த பெருஞ்சாலை இப்பொழுது கால்டுவெல் கல்லூரியாகத் தூத்துக்குடியில் நடைபெறுகின்றது. இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சிராப் பள்ளியில் சுவார்த்தரால் தோற்று விக்கப் பட்ட ஆங்கிலத் தமிழ்க் கல்லூரி நாளடைவில் நலமுற்று உயர்தரக் கலாசாலையாய் ஓங்கியபொழுது அதன் தலைமை ஆசிரியராக விளங்கிய ‘கால்டுவெல் ஹாஸ்டல்’ இன்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகின்றது. கலை பயில்தெளியும் கட்டுரை வன்மையும் வாய்ந்த கால்டுவெல் ஐயர் சென்னைச் சர்வகலாசாலையின் இருபத்திரண்டாவதாண்டு விழாவில்3 பட்டம் பெற்ற மரணவர்க்கு அறிவுரை வழங்க அழைக்கப்பட்டார். நாற்பத்தேராண்டு தென்னாட்டிலுழைத்துப் பழுத்த நல்லறிஞர், கலையறிந்த மாந்தர் கடைப்பிடித்தற்குரிய கடமைகளை அழகுற விரித்துரைத்தார். தென்னாட்டு ஆலயங்களின் அகத்தும் புறந்தும் பொறிக்கப் பட்டுள்ள பழைய சாசனங்களைப் பண்புற ஆராய வேண்டு மென்றும், தமிழ் மொழியில் வேண்டுமென்றும், ஒரு மொழியினிலக்கணத்தை நுனித்தறிந்த நுண்ணறிவாளர் அதனை ஏனைய மொழிகளின் இலக்கணங்களோடு ஒத்து நோக்கும் முறையைக் கையாள வேண்டு மென்றும் தென்னாட்டில் வழங்கும் திராவிட மொழிகள் இங்ஙனம் ஆராயப்பட்டால் அவற்றின் மொழித்திறம் நன்கு விளங்குமென்றும்,4 லே நாடுகளில் ஓங்கி வளரும் புதிய கலைகளைப் பாரத நாட்டு மக்கள் விரைந்து பயில வேண்டுமென்றும், இலங்கு நூல் கற்றறிந்தோர் ஏனையோர்க்கு எழுத்தறிவித்து அவரை மக்களாக்க வேண்டு மென்றும், கடனறிந்த தொழுகும் மாந்தரே இறைவன் திருவருளுக் குரியராவரென்றும் கட்டுரை கூறினார். ஐயர் நிகழ்த்திய விரிவுரையிற் புதுமையொன்று மில்லையாயினும், ‘பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்’ என்னும் உண்மை யறிந்தோர் அவ்வுரையைப் பொன்னுரையாகப் போற்றுவர் என்பதில் ஐயமில்லை. அடிக்குறிப்பு 1. னுச. னுரகக. 2. “ஆச. ழுசடிஎநள டிக டுiஎநசயீடிடிட றாடி றயள வாந கசைளவ வடி iவேசடினரஉந வாந ளஉசநறiபே டிக உடிவவடிn in கூரவiஉடிசin ளநவே ய னடியேவiடிn டிக சுள. 600 கடிச உhசளைவயைn றடிசம.” 3. ஊhசளைவயைn முnடிறடநனபந ளடிஉநைவல. 4. கூறநவேல - ளுநஉடினே உடிnஎடிஉயவiடிnமூ1879. 11. மனையற மாண்பு நாஞ்சில் நாட்டிலுள்ள நாகர்கோயில் என்னும் நன்னகரில் மால்த்தையர் என்பார் சிறந்த கிருஸ்துமத் தொண்டராய்த் திகழ்ந்தார்.1 ஆங்கில நாட்டில் அரும்புகழ் பெற்று விளங்கிய ஆலிவர் கிராம்வெல் மரபிற் பிறந்த மங்கையை ஐயர் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மனையறம் புரிந்தார். அருளறமும் ஆன்றகுடிப்பிறப்பும் வாய்ந்த அம்மனை வாழ்க்கையின் அணிகலனாய் ஒரு மங்கை தோன்றினாள். எலிசா என்னும் பெயர் வாய்ந்த அந்நங்கை இளமையிலேயே தாய்மொழியாய ஆங்கிலத்தொடு தமிழ் மொழியும் பயின்று விளங்கிய அறிவும் எலிசா நங்கைக்குப் பிறப்புரிமையாகவே வாய்த்தன. நாகர்கோயிலில் மால்த்தையர் நடத்திய அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்களைக் கருத்துற நோக்கிப் பிழைத்திருத்தும் பணிபூண்டிருந்த அந்நங்கையின் தமிழறிவு நாளடைவில் திருந்தி வளம் பெறுவதாயிற்று.2 இருபத்தோராண்டளவில் நலமெலாம் ஒருங்கே பெற்று விளங்கிய எலிசா நங்கையைக் கால்டுவெல் ஐயர் காதலித்து மணந்து இல்லறமென்னும் நல்லறம் புரிவாராயினர்.2 பிறந்த மனையின் பெருமைக்கும் புகுந்த மனையின் செம்மைக்கும் ஏற்ற முறையில் வாழ்ந்துவந்த மங்கை, ஐயர் மேற்கொண்ட அரும்பணிக்குப் பெருந்துiணாயமைந்தாள். கண்ணிரண்டும் ஒன்றையே காணுமாறுபோல் கால்டுவெல் ஐயரும் எலிசா நங்கையும் கருத்தொருமித்து மனையறம் நிகழ்த்தினர்.3 “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்னும் பொருளுரைக்கு எடுத்துக்காட்டாயமைந்த அம்மையார் இடையன்குடிச் சிறுமியர் கல்வி கற்பதற்குரிய கல்லூரியமைத்து அதனைக் கண்ணுங்கருத்துமாய்க் காதலித்து வளர்ந்தார். கல்வி கற்க வந்த சிறுமியரை அன்னைபோல் ஆதரித்த தன்மையால் அக்கல்லூரி சில ஆண்டுகளிற் செழித்து வளர்ந்து செவ்வனம் நிலைபெறுவதாயிற்று. பெண் மக்கள் கல்விகற்றல் பெருந்தவறென்று கருதியிருந்த நாடார் வீடுகளிற் கலைமணங் கமழச்செய்த எலிசா நங்கையின் ஆர்வமறிந்து கால்டுவெல் ஐயர் அளவிறந்த மகிழ்வுற்றார். வீட்டுப் பணிக்கும் நாட்டுப் பணிக்கும் ஏற்ற கலைகளை அம்மையார் கல்லூரியிற் பயிற்றி வந்தமையால் அவ்வூரில் கலையின் ஒளிவிளங்குவ தாயிற்று; வீதிதோறும் கலையின் நறுமணம் கமழ்வதாயிற்று; இடையன்குடிச் சிறுமியர் பின்னிய சரிகையின் பெருமை தென்னாடு முழுதும் பரவியது. இரக்கமே உருவாய எலிசா நங்கை பிணியுற்று வருந்திய ஏழைப் பெண்களை அகனமர்ந்து ஏற்று மருந்தளித்து அவர் துயரம் தீர்த்தமையால் ஐயர் மனை அறச்சாலையாகவே விளங்கிற்று. கால்டுவெல் ஐயர் மனைவியை, கையால் தொட்டு மருந்தளித்தால் கடும் பிணிகள் கடிதோடுமென்று அந்நாட்டார் கருதினார்கள். ஆகவே உயிர்ப்பிணியாய போதைமையை அறிவென்னும் அரு மருந்தால் அகற்றிய அம்மையார், உடற்பிணியாய நோய் களையும் ஏற்ற மருந்துகளால் மாற்றி நாட்டுப் பெண்களின் உயிரையும் உடலையும் வளர்ப்பாராயினார். இங்ஙனம் இணையற்ற அறம் புரிந்த அம்மையார் தமிழ் மொழியை அழகுற மிழற்றும் திறம் வாய்ந்து விளங்கினார். மால்த்து ஐயர் மனையில் அவர் மாசறக் கற்ற தமிழ் வாசகம் கால்டுவெல் ஐயர்க்கு விழுமிய லநம் விளைப்பதாயிற்று. ஏட்டுத் தமிழை நூல்களின் வாயிலாகக் கற்றறிந்திருந்த ஐயர், வீட்டுத் தமிழைத் தன் வாழ்க்கைத்துணையிடம் கற்றறிந்ததாகக் கூறுகின்றார்.4 தமிழ் மொழியைத் தமிழ் மக்கள் பேசுமாறு போலவே இனிய எளிய முறையிற் பேசக்கருதிய கால்டுவெல் அறிஞர்க்கு எலிசா நங்கையின் இயற்றமிழ்ப் பழக்கம் இணையற்ற நலம் புரிவதாயிற்று. ஆகவே ஐயராற்றிய அறப்பணிக்குத் துணை நின்றும், அவரருந் தமிழறிவை நிறைவித்தும் பேருதவி புரிந்த அம்மையார் ‘வாழ்க்கைத் துணை’ என்னும் சொல்லின் பொருளை இனிது விளக்கிப் போந்தார். இல்வாழ்க்கையின் சிறந்த அணியாய மக்கட் செல்வமும் கால்டுவெல் ஐயர் மனையகத்தில் மாண்புறத் திகழ்ந்தது. அறிவறிந்த மக்கள் மூவர் அவ்வறமனையிற் பிறந்து விளங்கி னார்கள். அவருள் ‘ஆடிங்கிதன்’5 என்னும் பெயர்வாய்ந்த மைந்தன் கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்து விளங்கினார். இளமையிலேயே மருத்துவக் கலையினை மாண்புறக்கற்று, ஆஸ்திரேலியா தேசத்தில் அரும்புகழ் வாய்ந்த மருத்துவ சீலராய் வாழ்ந்து வந்தார். பெண் மக்ககளிருவருள் தலைமகளாய தகை சான்ற நங்கை தன் பெற்றோர்க்குரிய நலங்களனைத்தையும் பிறப்புரிமையாகப் பெற்றுச் சிறப்புற வளர்ந்து வந்தார். தந்தையின் ஆன்ற அறிவும், அன்னையின் ஆழ்ந்த அன்பும் ஒருங்கே வாய்ந்து விளங்கிய நங்கை உருவிலும் திருவிலும் ஒத்த நலம் படைத்த ‘வியத்தர்’6 என்னும் அன்பரை மணந்து திருச்சிராப்பள்ளியில் திருந்திய தொண்டாற்றத் தலைப்பட்டாள். கால்டுவெல் ஐயரின் இளைய மகளாய ‘லூரிசா’ நங்கை கருவிலே திருவுடைய கன்னியாய், ஐயர் கண்களிப்ப வளர்ந்து வந்தாள். அழகின் bக்hழுந்தெனத் திகழ்ந்த அந்நங்கை, ஆங்கிலமும் அருந்தமிழும் பயின்று, அன்பும் அருளும் வாய்ந்து விளங்கினாள். வீரச்சுவை ததும்பும் காதைகளை விரும்பிக் கற்ற இளைய நங்கை தன் தாய்வழிப் பெருமையை விளக்கினாள் என்று தகவுடையோர் கருதினார். இத்தகைய நல்லாள் மணப் பருவ முற்றபோது ஆங்கிலப் படை வீரனொருவனைக் காதலித்து அவன் வாழ்க்கைத் துணையாயினாள். கருத்துக் கிசைந்த காதலனை நங்கை கணவனாகப் பெற்றாள் எண்றெண்ணிக் கால்டுவெல் ஐயர் மனங்களித்தார். ஆயினும் அவள் மணவாழ்க்கை நெடிது செல்லாது தடையுற்றது. மனையறம் தொடங்கிச் சில ஆண்டு கழியு முன்னமே லூயிசா மங்கை இம்மண்ணுலக வாழ்வை நீத்தாள்.7 எண்ணரிய நலம் வாய்ந்த பெண்ணருங் கலத்தினை இருபத்திரண்டாம் வயதில் இழந்த ஐயர் புண்ணுற்ற மனத்தினராய்க் கண்ணீருகுத்தார். ஆயினும் நினைந்துருகும் அடியாரை நைய வைத்து நலம் புரியும் இறைவன் அருள் நினைந்து தேறினார். திருச்சிராப் பள்ளியில் மனையறம் புரிந்த தலைமகள் பெண்களனை வரும் கல்விநலம் பெற்றாலன்றி மனை வாழ்க்கை மணமுறாது என்றறிந்து சிறுமியர் கல்வி கற்றற்குரிய சிறந்த கல்லூரிகள் நிறுவினார். சீலம் நிறைந்த சில மாதரை ஆசிரியர்களாக அமைந்தாள். இன்னும், பிணியுற்று வருந்திய ஏழையர்க்கு அன்னை போல் மருந்தளித்தாள். கடும்பிணி தீர்க்கும் நலம் வாய்ந்த வியத்தர் மனைவியின் கைவாசி கண்டோர் அந்நங்கையை இறைநலம் பெற்று திருமகள் என்று வியந்து போற்றுவாரா யினர். மருத்துவர் கை கடந்த மாயப் பிணிகளும் அம்மங்கையின் மருந்தால் தீர்ந்து ஒழியுமென்று பல்லோரும் பாராட்டி மகிழ்ந் தார்கள். இக்கருத்து ஒரு சிறிய நிகழ்ச்சியால் நாடெங்கும் பரவுவதாயிற்று. நெடுங்காலம் மகபேறின்றி மனந்தளர்ந்த ஒரு மாது, வியத்தர் மனைவியார் நிறுவிய கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தாள். கல்லூரி வேலையிற் புகுந்து அம்மையார் அன்புற வழங்கிய அன்னத்தை அருந்தி முறையாகச் சிறுமியர்க்குக் கல்வி பயிற்றி வருங்கால் அம்மாது கருவுற்று உரிய காலத்தில் ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அச்செய்தி கேட்டோர் அனைவரும் மலடி வயிற்றிற் பிறந்த மகனைக் காண வந்து மொய்த்தார். அம்மகவினைத் தோற்றுவித்த அம்மையின் கருணையை நினைந்து மனங்கனிந்து வாழ்த்தினார். கர்த்தருளால் வியத்தகு செயல்களைச் செய்யும் திறம் வியத்தர் மனைவிக்கு வாய்த்த தென்று வாயார வழுத்தினார். முன்னவன் அருளே முன்னின்றால் முடியாத பொருளுளதோ என்று எண்ணி எண்ணி இறும்பூ தெய்தினார். இவ்வாறு பல்லோரும் பாடிய பல்லவி கேட்டுத் திகைப்புற்ற மங்கை தன்பால் தெய்விகத்தன்மை தினைத்துணையு மில்லையென்று பன்முறை அழுத்தமாகக் கூறியும் அதனைப் பாமர மக்கள் ஏற்றுக் கொள்ள இசைந்தாரல்லர். வியத்தர் மனைவி தீராத வன்பிணியும் தீர்த்தொழிக்கும் திறமுடையா ளென்றும், மலடு போக்கிமகப் பேறளிக்கும் மாண்புடையா ளென்றும், முற்றும் நம்பிய மக்கள் நாடோறுங் குழாம் குழாமாய்ச் சென்று அவளுதவியை நாடுவாராயினர். திருமணம் நிகழ்ந்து பதினேழாண்டு கழிந்தும் மகப்பேறு பெறாத ஒரு மங்கை நல்லாள், ஒரு நாள் வியத்தர் மனையகம் போந்தாள். தன் மனக் குறையை உருக்கமாக எடுத்துரைத்துக் கண்ணீர் பெருக்கி நின்றாள். மனந்தளர்ந்து வருந்திய மங்கையின் நிலைகண்டு வியத்தர் மனைவி வாடினாளேன்னும் அவள் நாடிய பொருளை நயந்தளிக்கும் திறமை தன்பால் இறையளவும் இல்லையென்று தெளிவாக எடுத்துரைத்தாள். ஐயர் மனைவியினருள் பெற்றாலன்றித் தன் மனக்குறை தீராதென்றறிந்த மங்கை அவ்விடம் விட்டுப் பெயர மனமற்று அழுத கண்ணும் தொழுத கையுமாய் அவலமுற்றழிந்தாள். அக்காட்சியைக் கண்டாற்றா ஐயர் மனைவி, இறைவன் திருவருளை நயந்து, வாடி வந்தடைந்த மாதின் நோயினை நாடியறிந்து, உடலை வளர்த்தற்குரிய மருந்தொன்றளித்து அதற்கேற்ற உணவும் வழங்கினாள். சின்னாளில் மருந்தின் நலத்தாலும், உணவின் வளத்தாலும், உடல் தழைத்து அம்மாது பன்னாட் காதலித்த பசுங்குழவியை உயிர்த்து எல்லையற்ற இன்பமுற்றாள். வியத்தர் மனைவியின் வளக்கைச் சிறப்பினாலேயே மலடு நீங்கி மகப்பேறு கிடைத்தென்று முற்றும் நம்பிய அம்மாது, தான் பெற்ற நலத்தினை ஏனையோடும் பெற்று இன்புற வேண்டுமென்னும் உயரிய காதலால் அச்செய்தியை யாண்டும் பரப்புவாளாயினள். இத்தகைய சீர்மை வாய்ந்த நங்கையை வாழ்க்கைத் துணையாகப் பெற்ற வியத்தர் வழுவிலா நெறியில் வாழ்ந்து வந்தார். கால்டுவெல் ஐயரிடம் கனிந்த அன்பு வாய்ந்த வியத்தர், அப்பெரியாரியற்றிய அரும் பணிகளிற் கலந்துழைத்தார். மருகராயமைந்த வியத்தரது மாசற்ற பண்பினை அறிந்து கால்டு வெல் ஐயர், பன்முறை திரிசிரபுரம் போந்து அவர் விருந்தின ராய் அமர்ந்தார். அறப் பணியாற்றும் முறையிலமைந்த குறை களையும், எதிர் காலத்தின் வேலை வகைகளையும் இருவரும் கலந்து பேசிக் களிப்படைவரென்று அவர் காதை கூறுகின்றது. சுருங்கச் சொல்லின் ‘மாமனும் மருகனும் போலும் அன்பின’ என்று திருத்தக்கதேவர் அருளிய தெள்ளிய வாய்மைக்கு இவ்வையர் இருவரும் ஆன்ற பெருஞ் சான்றாய் அமைந்தா ரென்று கூறுதல் மிகையாகாது. வெம்மை சான்ற இடையன்குடியிற் கடும்பணி புரிந்து தளர்வுற்ற கால்டுவெல் ஐயர் குளிர்மை நீங்காக் கொடைக் கானற் குன்றில் வதிந்து ஆண்டு திருக்கோவிலெடுக்கத் தொடங்கிய பொழுது வியத்தர்க்கு அவ்வரும் பணியில் ஈடுபட்டுழைக்கும் பெருமை வியத்தர்க்கு வாய்த்தது. திருப்பணியின் அடிப்படை கோலிய நாள்முதல் அப்பணி முற்றுப் பெறுமளவும் ஒருமையுடன் உழைத்த வியத்தர், நல்லார் பலரிடம் போந்து அறப்பணியின் பெருமையை எடுத்துரைத்துப் பொருள் திரட்டினார். “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்” என்னும் செம்மொழியைக் கடைப்பிடித்துச் சீலராய வியத்தர் செய்து முடித்த சிறு கோவில்8 இன்றும் அக்குன்றில் நின்று அன்பர் மனத்தைக் குளிர்விக்கின்றது. இன்னும் கால்டுவெல் ஐயர் வாழ்க்கைக் காதையை வகுத்தும் தொகுத்தும் வெளிப்படுத்திய பெருமை வியத்தருக்கே உரியதாகும். அன்றியும், திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தின் மூன்றாம் பதிப்பை முயன்று அச்சிட்டு உதவிய வியத்தரின் ஆர்வம் போற்றத் தக்கதாகும். பல்லாண்டு தென்னாட்டில் உழைத்த வியத்தர் இப்பொழுது பழுத்த பெருங்கிழவராய் ஆங்கில நாட்டில் வாழ்கின்றார். அடிக்குறிப்பு 1. “றுhயவ யn நஒவநளேiஎந யனே iவேநசநளவiபே கநைடன ஐனேயை யீசநளநவேள கடிச வாந உடிஅயீயசயவiஎந ளவரனல டிக டயபேரயபநள யன nடிறாநசந றடைட யஅயீடநச ளஉடியீந நெ கடிரனே வாயn in வாந னளைவசiஉவள னசைநஉவடல டிச iனேசைநஉவடல ரனேநச வாந ஆயனசயள ழுடிஎநசnஅநவே. கூhந னுசயஎனையைn கயஅடைல, றாiஉh hள வைள உhநைக hடிஅந in வாளை யீசநளனைநஉஉல inஉடரனநள யஉஉடிசனiபே வடி வாந அடிளவ சநஉநவே நரேஅநசயவiடிn 14 டயபேரயபநள யனே 30 னயைடநஉவள; in யனனவைiடிn வடி றாiஉh ளுயளேமசவை, ழiனேரளவயin யனே நுபேடiளா உடயiஅ யவவநவேiடிn.... கூhந யீநடியீடந டிக ஐனேயை hயஎந ளரசயீயளளநன யடட டிவாநச யீநடியீடநள, யnஉநைவே டிச அடினநசஅ, in வாந நயசநேளவநேளள யனே யளளனைரவைல றiவா றாiஉh வாநல hயஎந ளவரனநைன வாந பசயஅஅயசள டிக வாநசை எயசiடிரள வடிபேரநள, யனே வடி வாளை அரளவ நெ யவவசiரெவநன வாந றடினேநசகரட யீநசகநஉவiடிn ளநஎநசயட டிக வாடிளந டயபேரயபநள hயஎந சநயஉhநன யள டிசபயளே டிக வாடிரபாவ யனே அரஉh டிக வாந யஉரவநனேநளள கடிச றாiஉh வாந ஐனேயைn அiனே ளை கயஅநன. க்ஷரவ வாந ளவரனல டிக வாந டயபேரயபநள டிக வாநசை உடிரவேசல லெ ஐனேயைn ளஉhடிடயசள hயள நேஎநச நெஉடிஅந உடிஅயீயசயவiஎந யனே வாநசநகடிசந hயள நேஎநச நெஉடிஅந ளஉநைவேகைiஉ.” - ஊ.ஹ. 1879. 2. “ஆச. ஆயரடவ றயள bடிசn in க்ஷiளாடியீ ழநநெச’ள யீயசiளா in ளாசடியீ - ளாசைந யனே hளை றகைந றயள னநளஉநனேநன கசடிஅ டிநே டிக வாந னயரபாவநசள டிக டீடiஎநச உசடிஅறநடட. ஆச. ஆயரடவ நளவயடெiளாநன ய யீசiவேiபே யீசநளள யவ சூயபநசஉடிடை யனே வாநசந செடிரபாவ டிரவ ய அரடவரைனந டிக கூயஅடை bடிடிமள யனே வசயஉவள.’ - ஊ.சு. 181. 3. “ஐ றயள அயசசநைன ய சூயபநசஉடிடை வடி நுடணைய, நடனநளவ னயரபாவநச டிக வாந சுநஎ. உhயசடநள ஆயரடவ, அளைளiடியேசல டிக வாந டுடினேடிn ஆளைளiடியேசல ளுடிஉநைவல. ஐ றயள வாநn வறநவேல niநே லநயசள டிக யபந யனே hயன நெநn ளiஒ லநயசள in ஐனேயை. ஆல றகைந றயள வறநவேல டிநே.” - ஊ.சு. - 181. 4. “டீநே டிக hநச உhநைக ளூரயடகைiஉயவiடிn hயள யடறயலள நெநn hநச யீநசகநஉவ மnடிறடநனபந டிக உடிடடடிளூரயைட கூயஅடை யனே ளாந உடிரடன nடிவ hயஎந யஉளூரசைநன வாளை in ய நெவவநச ளஉhடிடிட வாயn சூயபயசஉடிடை. ஐவ றயள கசடிஅ hநச வாயவ ஐ டநயசநேன அடிளவ டிக அல உடிடடடிளூரயைட யனே னடிஅநளவiஉ கூயஅடை.” - ஊ.சு. 181. 5. ஹனனiபேவடிn. 6. றுலயவவ. 7. டுடிரளைய - அயசசநைன வடி டுநைரவநயேவே ளுhநயீhநசநன சு.நு. - னநைன டிn 28வா டீஉவடிநெச 1872 யவ வாந யபந டிக 22 லநயசள 10 அடிவோள - ஐளேஉசiயீவiடிn in வாந “ழடிடல கூசinவைல ஊhரசஉh” ஐனயலயபேரன. 8. ளுவ. ஞநவநச’ள ஊhரசஉh, முடினயமையயேட. 12. நல்லாரிணக்கம் பொருனை நாட்டில் கால்டுவெல் ஐயர் தொண்டு புரிந்த காலத்தில் சமயப் பற்றும் தமிழ் மொழிப் பற்றும் வாய்ந்த அறிஞர் பலர் அந்நாட்டின் பல பாகங்களில்அமைந்த அரும்பணி புரிவாராயினர். அவர்களுள் தமிழ் மக்கள் பெரிதும் போற்றும் போப் ஐயர்1 தலை சிறந்தவராவர். வேத விளக்கச் சங்கத்தின் சிறந்த தொண்டராய்த் திகழ்ந்த போப் ஐயர் சாயர்புரம் என்னும் ஊரிற் பணியாற்றிப் போந்தார். ‘சாயர்’ என்னும் போச்சுகீசிய வணிகரது ஆதரவால் நிலைபெற்ற சிற்றூர் பாயர்புரம் என்று பெயர் பெற்றது. ஆதியில் நாசரது வட்டத்தைச் சேர்ந்திருந்த சாயர்புரம், போப் ஐயர் பணி செய்யப் போந்த போது அதினின்றும் பிரிந்து தனியாக நின்று இயங்கும் உரிமை பெற்றது. ஐரோப்பியச் செம்மொழிகளோடு ஆங்கில நன்மொழியையும் அருந்தமிழ் மொழியையும் செவ்வையாகப் பயின்று சிறந்த புலமை வாய்ந்திருந்த போப் ஐயர் சாயர்புரத்தைச் சர்வகலாபுரமாக்கக் கருதினார். அல்லும் பகலும் உழைத்துச் கல்விச் சாலைகளும் கிருஸ்தவ சபைகளும் நிறுவினார். இளமையிலேயே தொன்மொழிச் செம்மையும் செழுங்கலைச் செல்வமும் மாணவர் உளத்திற் சேர்ந்து அவரறிவை வளம்படுத்த வேண்டும் என்று கருதிய போப் ஐயர் ஐரோப்பியத் தொன் மொழிகளையும் செந்தமிழ் மொழியையும் கணித நூலையும் ஒருங்கே கற்பிக்கத் தொடங்கினார். அவ்வளவில் அமைவுறாது ‘செய்மூர்’ என்னும் ஜெர்மானிய அறிஞரை ஆசிரியராக நியமித்து அவர் வாயிலாக அளவை நூலும் சரித்திர நூலும் பயிற்றத் தொடங்கினார். சுருங்கச் சொல்லின் சீரிய கலைகள் யாவும் சாயர்புரக் கல்லூரியிற் சிறந்து திகழவேண்டும் என்று ஐயர் ஆசையுற்றார். பாடங்களனைத்தையும் ஓதி யுணர்வதற்குப் பகற்பொழுது போதாமையால் இரவில் மூன்று மணி நேரம் போப் ஐயர் கல்வி பயிற்றுவாராயினர். கல்லூரி மாணவர்கள் கல்வியின் பளுவறிந்து நாளடைவில் மனந்தளர்ந்து ஒதுங்கத் தொடங்கினர். பாடசாலையிற் படிக்கப் போந்த மாணவரின் மனப்பான்மை அறியாது உணர்வரிய கலைகளைப் புகட்டி வெருட்டிய காரணத்தால் போப் ஐயரின் உயரிய எண்ணம் பழுதுறுவதாயிற்று. இங்ஙனம் குன்று முட்டிய குருவிபோற் குறுகிநின்ற ஐயர் வேதியர்க்குரிய கல்வி அறிவு ஒழுக்கங்களை மேம்படுத்தக் கருதி அவ்வூரில் வேதியர் கலாசாலை ஒன்று நிறுவினார். சீலம் வாய்ந்த சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்க்குச் சிறந்த கல்வியும் சீரிய ஒழுக்கமும் பயிற்றி வந்தார். ஐயர் மனத்திலமைந்த ஆர்வத்தின் வடிவமாக விளங்கிய வேதியர் கலாசாலை சாயர்புரத்தில் தழைத்தோங்கி வளராமையால் வேத விளக்கச் சங்கத்தார் அதனைத் தூத்துக்குடிக்கு மாற்றினார்கள். இவ்வாறு தாம் தொடங்கிய பணி விளக்கமுறாது தளக்கமுறக் கண்ட போப் ஐயர் மனம் வருந்தினாரேனும், அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துதவும் பெரும் பணியில் தளர்ந்தாரல்லர். பழுத்த முதுமையுற்று ஆங்கில நாட்டில் இளைப்பாறும் பொழுதும் திருவாசகத்தை மொழி பெயர்த்து ஆங்கில நாட்டு ஆன்றோர்க்குக் கையுறையாக வழங்கினார். இன்னும் சுவிசேஷப் புரத்திலும் பாளையங்கோட்டை யிலும் சிறந்த தொண்டு புரிந்த ‘சார்சந்தர்’2 என்னுஞ் சான்றோர் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். வேத நூலைத் திருத்தும் பொறுப்பு வாய்ந்த கழகத்தில் சார்சந்தரும் ஒருவராய்ச் சேர்ந்து சலிப்பின்றிப் பணி செய்தார். தமிழ் மொழியின் நயங்களை இவர் நன்கு அறிந்திருந்தமையால் வழுவற எழுதவும் பழுதறப் பேசவும் வல்லவராய் இருந்தார். கற்றாரும் கல்லாரும் கசிந்துருகும் வண்ணம் கிருஸ்துமதக் கொள்கைகளை எடுத்துரைக்கும் சொல்நயம் சார் சந்தரிடம் அமைந்திருந்தமையால் அவர் விரிவுரையைக் கேட்டார் பலர் மனங்களிர்ந்தெழுந்து அம்மத்தினைத் தழுவினார்கள். இங்ஙனம் பெருந் தொண்டாற்றிப் புகழ்பெற்ற சார்சந்தர், கால்டுவெல் ஐயருடன் கல்கத்தா நகரம் போந்து அத்தியட்ச குருவென்னும் சீரிய பட்டம் பெற்றுயர்ந்தார். குதிரை மொழித் தேரியிலமைந்த மெய்ஞ்ஞானபுரம் என்னும் சிற்றூரில் சிறந்த தொண்டராய்த் திகழ்ந்த ‘தாமஸ்’ என்னும் அறிஞர் இணையற்ற சீர்மை வாய்ந்த விளங்கினார்.3 அவர் அறிவின் செழுமையையும், அகத்தின் செம்மையையும் அறிந்தோர் அவரை மனமார வியந்து போற்றினர். ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் அவர் அழகுறப் பேசவல்லவர்; நீதி வழுவா நெறிமுறையாளர்; இன்னிசையால் மாந்தர் கருத்தைக் கவரும் நல்லிசையாளர்; மறப்பிணிகளை மாற்ற வல்ல மருத்துவர்; சட்டங்களின் நுட்பங்களை வழுவறக் கூறும் வழக்கறிஞர்; வீடுகட்டும் முறைகளை விளங்கக் கற்றவர்; நெடும் புனலில் நீந்த வல்லவர்; கடும் பரிகளை இயக்க வல்லவர். இத்தகைய சான்றோரைத் தொண்டராகப் பெற்ற மெஞ்ஞான புர மக்கள். பல்லாற்றானும் பண்புற்று விளங்குவாராயினர். மெஞ்ஞானபுரியில் அழகுற நின்று மாந்தர் கருத்தையும் கண்ணையும் ஒருங்கே கவரும் திருக்கோவிலின் ஒவ்வோருறுப் பிலும் தாமஸ் ஐயரின் கைநலம் திகழக் காணலாம். மெய்ஞான புரத்தைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட சிற்றூர்களில் கிருஸ்து மதத்தைப் பரப்பிய பெருமை அவ்வையர்க்கே உரிய தாகும். மருத்துவசாலை அமைத்தும், பாட சாலைகள் நிறுவியும், மக்கள் உளத்தைக் கவர்ந்து முப்பதாண்டுகட்கு மேலாகப் பொருனை நாட்டில் உழைத்துப் புகழ்பெற்ற தாமஸ் ஐயர் தமிழ் மொழியின் சுவை அறிந்த தக்காராகவும் விளங்கிய தன்மை அறிந்து போற்றத்தக்கதாகும். இங்ஙனம் மூன்று சிறந்த அறிஞர் மூன்று ஊர்களிலமைந்து தொண்டாற்றும் பொழுது நாசரத் என்னும் நன்னகரில் ‘மார்க்கோசியர்’ வேத நெறியை விளக்குவாராயினர். சிறந்த கல்வியும், நிறைந்த ஆர்வமும் வாய்ந்த இவ்வறிஞர் முப்பத்து மூன்று ஆண்டுகள் அந்நகரில் அமர்ந்து தொண்டு புரிந்தார். ‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வ’ மென்று செவ்வையாக அறிந்த மார்க்கோசியர் அந்நகர்ச் சிறுவரும் சிறுமியரும் கல்வி கேள்விகளில் மேம்படத்தற்குச் சாதனமாய சிறந்த பாடசாலைகள் நிறுவினார். அற்றார்க்கு ஆதரவளிக்கும் அறச் சாலைகள் அமைத்தார். பொருனை நாட்டிற் பெரும் பஞ்சம் வந்துற்ற பொழுது பசி நோயால் வருந்திய ஏiழை மாந்தர்க்கு உணவளித்து உதவி புரிந்தார். கைத் தொழிற் கல்வியே நாட்டின் வறுமையை ஒழிக்க வல்லதெனக் கருதிச் சிறந்த கைத் தொழிற் கல்விச் சாலை கண்டார். அச்சாலையில் தச்சு வேலையும், அச்சு வேலையும், தையற்றொழிலும், நெற்தற்றொழிலும் செவ்வை யாகப் பயிற்றப்பட்டன. அவர் ஆற்றிய அருந் தொண்டின் பயனாக இன்று பொருனை நாட்டிலமைந்த கிருஸ்தவ நிலையங்களுள் நாசரத் நகரமே தலைசிறந்து விளங்குகின்றது. இன்னும் பொதுநலம் பேணிய பான்மையால் பொருனை நாட்டு மக்கள் நன்றிக்குரியராய்த் திகழ்ந்த ஆங்கிலக் கலெக்டர் இருவரது பெருமை அறியத் தக்கதாகும். தண்ணளி வாய்ந்த தாமஸ்துரை, எம்மருங்கும் சாலைகள் வகுத்தும், சோலைகள் வளர்த்தும், சத்திரங்கள் அமைத்தும், சாவடிகள் எடுத்தும், சலிப்பின்றி ஆற்றிய அறப் பணியின் அருமையறிந்து நாட்டு மக்கள் அன்புற வாழ்த்தினார்கள். தாமஸ் கண்ணுங் கருத்துமாய்க் காதலித்து வளர்த்த தண்ணறுஞ் சோலைகளில் தங்கி இளைப்பாறும் பொழுதும், கோடையின் கொடுமை யறியாது குளிர்ப் பூஞ் சாலையில் வழி நடந்து செல்லும் பொழுதும், தாயனைய மங்கம்மாளுக்குப் பின் தகைசான்ற தாமஸ் தோன்றி அறம் வளர்த்தார் என்று ஏழை மாந்தர் மனமாரப் புகழ்ந்த வாழ்த்தினார்கள். பொருனை நாட்டு மக்கள் இன்றும் மறவாது நினைந் தேத்தும் மற்றொரு கலெக்டர் பக்கிள் துரையாவர். குடிகளின் நலத்தை இடையறாது நாடிய இந்நல்லார் பொருனையாற்றைப் பிறப்பித்து ஊற்றமளிக்கும் பொதிய மலைத் தொடரிலமைந்த நெடிய சோலைகளைப் பாதுகாத்தும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கியும், தாதுப் பஞ்சம் வந்துற்ற போது பிசியால் வாடி வருந்திய மக்களை பரிந்து பாதுகாத்தும் நலம்புரிந்த பான்மையால், “வாழ்ந்தோம் என்றுரைப்பாரும் மேன்மேலும் நாமடைந்த வறுமை மாறப் போழ்ந்தோம் என்றுரைப்பாரும் செழித்தோ மென்றுரைப்பாரும் பொருமல் தீர்ந்து தாழ்ந்தோம் பேரின்பத்தென் றுரைப்பாரும் அல்லாமல் தாவாத் துன்பத்து ஆழ்ந்தோ மென்றுரைப்பார்கள் ஒருவரிலை பக்கிள் மன்னன் அதிகாரத்தே”4 என்று மக்களiனைவரும் பாராட்டினார்கள். இங்ஙனம் பிறர்க்கென வாழும் பெருந்தகையாளர் ஆங்காங்கு அமைந்து ஆற்றிய அரும்பணியின் திறத்தினை அறிந்த கால்டுவெல் ஐயர், நல்லார் பலரைப் பொருனை நாட்டிற்கு நல்கிய இறைவன் கருணையை வியந்து போற்றினார். ஆயிரத்து எண்ணூற்று எண்பதாம் ஆண்டில் பாளையங் கோட்டையில் கிருஸ்து மத சங்க நூற்றாண்டு விழா நிகழ்ந்த பொழுது, இறந்த காலத்தில் அருந் தொண்டாற்றிய ஆன்றோர் சிறப்பைக் கால்டுவெல் ஐயர் விரித்துரைத்தார். அடிக்குறிப்பு 1. சுநஎ. ழு.ரு. ஞடியீந- கூ.ழு. 436; ழ.கூ.ஆ. 176 - 77; ஊ.சு. ஊh. ஏஐஐஐ. 2. கூ.ழு. 397; ஊ.சு.ஊh. ஏஐஐஐ. ளுயசபநவே. 3. “கூhடிஅயள றயள ய அயn டிக அயல பகைவள யனே யஉஉடிஅயீடiளாஅநவேள. ழந hயன செடிரபாவ ரயீ, ஐ நெடநைஎந, யள ய ளடிடiஉவைடிச யனே றயள யn நஒஉநடடநவே டயறலநச. ழந hயன அயனந hiஅளநடக லெ ளவரனல யனே யீசயஉவiஉந, யn நஒஉநடடநவே னடிஉவடிச. ழந றயள யn நஒஉநடடநவே ளiபேநச, ய படிடின அரளiஉயைn, யனே றநடட யஉளூரயவைநன றiவா வாந ளஉநைnஉந டிக அரளiஉ. ஹள ய ரெடைனநச hந hயன nடி நளூரயட in கூinநேஎநடடல. நுஎநசலவாiபே hந ரெடைவ, றாநவாநச யீயசளடியேபந, ளஉhடிடிட டிச உhரசஉh அiபாவ நெ ளவரனநைன லெ டிவாநச ரெடைனநசள யள ய அடினநட டிக நஒஉநடடநnஉந. ஐn யனனவைiடிn hந றயள ய படிடின அநஉhயniஉயைn, ய படிடின சனைநச யனே ளறiஅஅநச யனே றயள ய அயn டிக பசநயவ bடினடைல ளவசநபேவா யனே டiஎடiநேளள டிக னளையீடிளவைiடிn. ஐவ ளை அடிசந iஅயீடிசவயவே in உடிnநேஉவiடிn றiவா hளை உhயசயஉவநச யனே யீடிளவைiடிn யள அளைளiடியேசல வடி ளயல வாயவ hந றயள ய படிடின கூயஅடை ளஉhடிடயச, ய யீயசவiஉரடயசடல படிடின ளயீநயமநச டிக கூயஅடை, ய படிடின யீசநயஉhநச bடிவா in கூயஅடை யனே நுபேடiளா யனே யn யனஅinளைவசயவடிச டிக கசைளவ சயவந நஒஉநடடநnஉந. - ஊ.சு. 102.” 4. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாட்டு. 13. பண்பும் பயனும் ஐம்பதாண்டுகட்கு மேலாகத் தென் தமிழ் நாட்டில் அரும் பணியாற்றிப் புகழ் பெற்ற ஐயர், சிறந்த மனத்திட்பம் வாய்ந்தவராய்த் திகழ்ந்தார். ‘வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்’ என்று பொதுமறை அருளிய வாய்மைக்கு ஐயரே சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தார். எண்ணிய செயலைத் திண்ணிய மனத்தொடு செய்யுந்திறமையும், எடுத்த பணியைத் தொடுத்து முடிக்கும் பொறுமையும் அவரிடம் இனிதமைந் திருந்தன. இடையன்குடி வட்டத்திலமைந்த திருச்சபைகளைக் கண்காணிக்குமாறு கால்டுவெல் ஐயர் புறப்பட்டுச் செல்லுங்கால் ஆங்காங்கமைந்த கிருஸ்த அன்பர்கள் நாட்டு வழக்கத்திற் கிணங்க அவர்க்கு நல் வரவளிப்பார்கள். மேளதாளங்களோடு ஊர்ப்புறத்தே வரவேற்று ஆடல்பாடல் களோடு அழைத்துச் சொல்வார்கள். அந்திமாலையில் தீவர்த்திகளை ஏற்றி எங்கும் ஒளி விரிப்பார்கள். ஐயர் ஆற்றும் அரும் பணியின் திறத்தினைப் பாட்டாலும் உரையாலும் பாராட்டுவார்கள். இவ்வாறு திருச்சபையைச் சேர்ந்த உறுப்பினர் ஆடிப்பாடி அகங்களித் திருக்கும் வேளையில் கால்டுவெல் ஐயர் பொறுமையின் திருவுருவாய்ப் புன்னகை பூத்த முகத்தோடு இலங்குவார். கங்குல் எல்லை காண்பளவும் அன்னார் களியாட்டயரினும், கால்டுவெல் ஐயர் மனஞ்சுளிப்ப துமில்லை; கண் அயர்வதுமில்லை. சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையை ஒத்திருக்கும் அவர் முகத்தின் செழுமை கண்டு ஊராரனைவரும் உவகையுறுவர்.1 இவ்வாறு எல்லையற்றதாய் விளங்கிய அவர் பொறுமையில் பெருமையை அறிவதற்கு ஒரு சான்று போதியதாகும். ஒருநாள் கால்டுவெல் ஐயர், காதலர் இருவர்க்குக் கடிமணம் நிகழ்த்தும் பொருட்டு ஆலயத்திற்கு அழைக்கப் பட்டிருந்தார். மணமகனும் மணமகளும் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்காகக் குறித்திருந்த காலத்திற்கு முன்னதாகவே கால்டுவெல் ஐயர் ஆலயத்திற்கு போந்து மணமக்கள் வருகையை நோக்கியிருந்தார். உற்றார் உறவினர் அனைரும் உரிய காலத்தில் வந்து நிறைந்தார்கள். மணமகன் நல்லாடை புனைந்து தோழனோடு வந்து தோன்றினான். ஆயினும் மணப்பெண் நெடு நேரமாக வரவில்லை. அங்கிருந்தாரனைவரும் வழிமேல் விழிவைத்த வண்ணமாய் இருந்தனர். உற்றார் சிலர் குற்றங் கூறினார்.உறவினர் சிலர் பொறுமை இழந்தனர். ஆயினும் கால்டுவெல் ஐயர் முகத்தில் இறையளவும் மாற்றம் தோற்ற வில்லை. ஓவியத் தெழுதிய உருவம் போல் கருணை பொழியும் கண்களோடு ஐயர் காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் மேளதாள முழக்கத்தினிடையே மணமகள் நாணிக் கோணி நடந்து திருக்கோயிலினுள்ளே புகுந்தாள். நீலப்பட்டாடை உடுத்து, முகத்தின் கோலத்தை முந்தானையால் மறைந்து, குனிந்த தலை நிமிராமல் கூசித் துவண்டு நின்ற நங்கையைத் தோழியர் மணமகனருகே கொண்டு நிறுத்தினார்கள். அப்பொழுது கால்டுவெல் ஐயர் ஊக்க முற்றெழுந்து இறைவனுக்கு குரிய வழிபாடு முடித்து மணமகள் சொல்லுதற்குரிய வாக்குறுதி வாசகத்தைக் கூறி நின்றார். அவ்வாசகத்தை மங்கை வாய் விட்டு ரைப்பளென்று கருதினார். கூசினிற் மங்கை யாதும் பேச இசைந்தாளல்லள். அரைநாழிகை நேரம் ஐயர் காத்திருந்தார். அவ்வாசகத்தைப் பின்னும் ஒருமுறை கூறினார். அப்பொழுதும் மங்கை அசைவற்று நாவெழாது நின்றாள், பின்னும் அரை நாழிகை கழிந்தது. மணமகளின் நிலைகண்டு உறவினர் அனைவரும் மனம் தளர்ந்தார். மங்கையின் செவியருகே போந்து, ‘சொல் சொல்’ என்று உந்தினர் சில மாதர். ‘ஐயரைக் காக்க வைத்தல் அழகாமோ?’ என்று பரிந்துரைத்தார் பல மாதர். இவ்வாறு உற்றார் செவியறிவுறுத்திய பின்னரும் மங்கை வாய்திறக்க மனமற்றிருந்தாள். காலம் வறிதே வழியக் கண்ட கால்டுவெல் ஐயர் மூன்றாம் முறையும் வாக்குறுதி வாசகத்தைக் கூறினார். அப்பொழுதும் நங்கையின் நாவெழாதிருக்கக் கண்டு மணமகளைக் கூர்ந்து நோக்கி, “இதோ பார்! ஒருமுறை கூறினேன். நீ ஒன்றும் பேசுகின்றாயில்லை. இனிமேல் நீ பேசாதிருப்பாயாயின் நானும் பேசாமல் உன்னை வீட்டுக் கனுப்பிவிடுவேன்” என்று உறுதியாகக் கூறினார். ஐயர் பேசிய மொழியின் கருத்தறிந்த மங்கையின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது; தலைநிமிர்ந்து ஐயரைஅமர்ந்து நோக்கி அவர் மூன்று முறை கூறிய வாக்குறுதி வாசகத்தைத் திறம்பட உரைத்தாள். காலம் கழிந்தேனும் காரியம் பலித்ததென்று களிப்புற்ற ஐயர் திருமணத்தை நிறைவேற்றி மணமக்கள் இருவரையும் ஆசி கூறி அனுப்பினார். இறைவன் திருவருள் எஞ்ஞான்றும் நல்லோரைக் காத்து நிற்குமென்று உறுதியாகக் கருதிய கால்டுவெல் ஐயர் ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்னும் உயரிய கொள்கையைப் பற்றி ஒழுகுவாராயினர். ஒரு நாள் நாசரத் என்னும் நல்லூரிலமைந்த நண்பர்களைக் காணக் கருதி ஐயர் ஆண்டு சென்றிருந்தார். அவர் வருகையை அறிந்த அவ்வூராயர் நறுமலரும் நற்கனியும் கையுறையாக வழங்கிக் களிப்புற்றார். காலைப் பொழுதில் அவ்வூர்த் திருக்கோவிலைச் சூழ்ந்திருந்த பூந்தோட்டத்தில் ஐயர் உலாவச் சென்றார். அப்போது ஊரார் சிலரும் உடன் சென்றார்கள். பணியாளன் கால் நழுவிக் கிணற்றினுள்ளே விழுந்து விட்டான். அக்காட்சியைக் கண்ட சிலர் அலறி அடித்துக் கிணற்றருகே ஓடினர். ஆழ்ந்த கிணற்றை உற்று நோக்கி அலக்கணுற்று நின்றார். அந்நிலையில் கருணை சான்ற கால்டுவெட் ஐயர் மேலாடைகளைக் கழற்றி எறிந்து திகைத்து நின்ற மாந்தரை விலக்கி இறையளவும் அச்சமின்றி ஆழநெடுங் கிணற்றினுள்ளே குதித்தார். தண்ணீரிற் கிடந்த தத்தளித்த பணியாளனைப் பற்றி இழுத்து ஒரு மூலையிற் கொண்டு சேர்த்தார். ஐயர் மனத்திண்மையைக் கண்ட ஆடவர் மானத்தால் மனங் குறுகினார். உடனே ஒருவர் கிணற்றினுள்ளே குதித்து ஐயர் அரும்பணியைப் பங்கிடத் தொடங்கினார். மற்றும் சிலர் ஓடிச் சென்று ஏணியும் கயிறும் கொண்டு வந்து மூவரையும் கரையேற்றினார்கள். மாசற்ற ஏசுநாதர் வாழ்ந்து காட்டிய நெறியைக் கடைப்பிடித் தொழுகிய கால்டுவெல் ஐயர் எளிய வாழக்கையே தமக்குரியதெனக் கொண்டார். இடையன்குடி வட்டத்திலமைந்த சிற்றூர்கட்குச் செல்லும் பொழுது பெரும்பாலும் நடந்து செல்வதே அவர் வழக்கமாயிருந்தது. செல்லும் இடங்களில் எளிதாகக் கிடைக்கும் காய் கனிகளை உண்டு மகிழ்வார். நெடுங்காலம் தென்னாட்டிற் பழகிய பான்மையால் அந்நாட்டுக் காய்கனி கிழங்குகள் அவர்க்கு ஏற்ற உணவாயின. பகற் பொழுதில் வெய்யோனொளியைப் பொறுக்க வியலாது ஆங்காங்கமைந்த கூரைப் பள்ளிகள் தங்கியிருப்பார். பனையோலைகளாற் பண்புற வேய்ந்த கூரைப்பள்ளியின் குளிர்ந்த நிழலில் அமர்ந்து அருங்கலை பயில்வார். காலையும் மாலையும் நெடுந்தூரம் உலாவி வருவார். இராப்பொழுதுதில் ஊரடங்கிய பின்னர் பள்ளியின் முற்றத்தில் பனைநார்க் கட்டிலிற் படுத்துறங்குவார். இராப் பொழுதில் வீட்டினுள்ளே மூட்டைகள் வேட்டையாடித் திரிந்தமையால் இங்ஙனம் ஐயர் வெளி முற்றத்தில் உறங்கும் வழக்கத்தை மேற்கொண்டார். வாரத்தில் ஆறுநாள் வெளியூர்களிற் சுற்றி ஏழாம் நாள் இடையன்குடியில் வழிபாடு நிகழ்த்த வருவார். ‘என்றும் நன்றே செய்தலும் வேண்டும், நன்றும் இன்றே செய்தலும் வேண்டும்’ என்னும் அறிவுரையின் வழிநின்ற கால்டுவெல் ஐயர், இடையன்குடி வட்டத்தில் வாழ்ந்த நாடார் வகுப்பினர்க்கு நலம் புரியக் கருதி அவர் வாழ்க்iயையும் வழிபாட்டையும் குறித்து ஆங்கில மொழியில் ஒரு சிறு நூல் எழுதி வெளியிட்டார். நாள் முழுதும் நெற்றி வியர்வை நிலத்தில் வீழப்பாடுபட்டுழலும் ஏழை மக்கள் பெரும்பாலும் வறுமையுள் ஆழ்ந்து பசியால் வருந்தும் பான்மையையும், அன்னாரை மேற் சாதியிற் பிறந்த மாந்தர் இழிவாக நடத்தும் கொடுமையையும் மேலை நாட்டு மக்கட்கு அறிவித்து, அவர் இரக்கமுற்றளிக்கும் பொருளுதவி பெற்று நாடார் வகுப்பைப் பல்லாற்றானும் நலமுறச் செய்தலே அந்நூலின் நோக்கமாகும். ஐயர் கருதியவாறே நாடார் குல மக்களின் அறிவை வளர்த்து அவர் துயரம் தீர்த்தற்கு ஆங்கில மேன்மக்கள் சிலர் அரும் பொருள் வழங்கினர். கைம்மாறு கருதாது அன்னார் அளித்த பொருளைக் கொண்டு கல்விச் சாலைகள் நிறுவி ஐயர் மாக்களாயிருந்த நாடாரை மக்களாக்கினர். ஆயினும் அக்கல்விச் சாலைகளின் வாயிலாக ஆங்கிலம் கற்றுயர்ந்த நாடார் குல இளைஞர் சிலர் இருபதாண்டுகட்குப் பின்பு ஐயர் எழுதிய நூலைப் பழிக்கத் துணிந்தார். நாடார் குலத்தின் தொன்மையையும் அறியாது கால்டுவெல் ஐயர் இழித் துரைத்தார் என்று பெருங் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். அந்நூலின் நோக்கத்தையும், அதனால் விளைந்த பயனையும் இறையளவும் கருதாது குறை கூறித் திரிந்த இளைஞரைத் திருத்த இயலாது ஐயர் மனந்திகைத்தார். ‘நன்றாற்றலுள்ளும் தவறுண்டு’ என்று ஆன்றோர் அருளிய உரையின் பொருளுணர்ந்து உளந்தளர்ந்தார். தாம் எழுதிய நூலிலமைந்த ஒவ்வொரு சொல்லும் உண்மையே என்று காட்டுதற்குரிய சான்றுகள் கையகத்திருப்பினும் நலமறியாத நாடாரிளைஞரை மறுத்துப் பகைமையை வளர்த்தலினும், பணிந்து அவரை வெல்லுதலே பண்பின்பாலதாகு மென்று கருதி அந்நூல் நாட்டிற் பரவா வகை செய்து இளைஞர் வேகத்தை அடக்கினார். கால்டுவெல்லையரது அறிவின் பெருமையையும் வாழ்க்கையின் செம்மையையும், கண்டு அழுக்காறுற்ற சிலர் மறைவாகக் குறை கூறித் திரிந்தார்கள். சென்னைமாநகரினின்று புறப்பட்டுக் கால்டு வெல்லையர் பொருனை நாட்டிற்குப் போகும் வழியில் நீலகிரியில் வசித்த ஸ்பென்சர் என்னும் அத்தியட்ச குருவைச் சார்ந்து நான்கு வாரம் நன்கு முகமன் இயம்பிச் சில நன்மைகளைப் பெற்றாரென்று வகை கூறினார் சிலர். இன்னும அம்மலையில் ஒரு மாதகாலம் தங்கியிருந்த பொழுது ஐயர் ஒரு மங்கையைக் காதலித்து மணத்திற்குரிய நாளும் குறித்தாரென்று கதை கட்டிவிட்டார் சிலர். இச்செய்தி களை நண்பர் வாயிலாக அறிந்த ஐயர் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்னும் பொய்யா மொழியின் வழிநின்று அன்னார் இன்னா ரென்றறிந்து நன்னயம் புரிவாராயினர். ஐயர் பெருமையையும் தம் சிறுமையையும் அங்கைக் கனிபோலறிந்த குறும்ப நாணி மனங்குறுகி நாளடைவில் திருத்தி நலம் பெற்றார். தென்னிந்திய மொழிகளின் திறமுணர்ந்து கால்டுவெல் ஐயர் நற்றமிழ் மொழியை நாட்டு மக்கள் பேசும் முறையிலேயே பேசக் கருதினார். எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் உள்ள வேற்றுமையை நன்குணர்ந்து பேச்சு முறைக்குரிய தமிழைப் பெரிதும் முயன்று பழகினார். அப்பழக்கத்தின் பயனாக அவர் பேசிய தமிழ், கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய் அமைந் திருந்தது. நூல் நடையில் வழங்கும் திரி சொற்களும் கல்லார் நாவில் நடமாடும் கொச்சை மொழிகளும், ஐயர் பேச்சிற் காணப்படாமையால் அவர் விரிவுரை கற்றார்க்கும் கல்லார்க்கும் ஒருங்கே இனிமையும் பயனும் விளைப்பதாயிற்று. ஏசு மதத்தினரல்லாதாரும் அவர் பேச்சைக் கேட்க ஏக்கமுற்றிருந் தார்கள். பொருனை யாற்றின் கரையிலமைந்த ஆழ்வார் திருநகரி என்னும் சிற்றூர்க்கு ஐயர் ஒருமுறை சென்றபோது, அவ்வூர் வைதிக முதியோர் அவரைத் தம் ஆலய முன் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று விரிவுரை நிகழ்த்த வேண்டினாரென்றால் அவர் சொல்லின் செம்மைக்கு வேறு சான்றும் வேண்டமோ! இத்தகைய அரும்புலமை வாய்ந்த ஐயர் நண்பருடன் உரையாடும் பொழுது நகைச்சுவை ததும்பப் பேசுவார். ஒரு நாள் கல்கத்தா நகரினின்று விருந்தாக வந்தடைந்த ‘காட்டன்’ என்னும் சமய குருவை அழைத்துக் கொண்டு ஐயர் கன்னியா குமரிக்குச் சென்றார். நீலத்திரைக் கடலோரத்திலே நின்று இருவரும் நெடுங் கடலின் நீர்மையை நெடிது நோக்கி வியப்புற்றார். தென் தமிழ் நாட்டில் எல்லையில் நின்று காவல் புரியும் கன்னியின் தவப் பெருமையறிந்து பொன் மணலும், கருமணலும், வெண் மணலொடு கலந்து தூவி அடி பணிந்த கருங்கடலின் பெருமை கண்டு களிப்புற்றார். அப்போது வங்க நாட்டுப் பெரியார் குமரித் துறையிலிறங்கி நீராட விரும்பினார். அவர் விருப்பத்திற் கிணங்கிய கால்டுவெல் ஐயர் அத்துறையில் குளித்தற்குரிய முறைகளைக் குறிப்பாக எடுத்துரைத்துக் காட்டன் கையைப் பற்றிக் குமரிக் கோலின் எதிரேயமைந்த துறையிலிறங்கினார். கடலில் நீராடிப் பழகாத காட்டன், நுரைத் தெழுந்த திரைக்கடலின் ஆரவாரங் கண்டு அஞ்சி ஐயர் கரத்தை இறுகப் பற்றினார். அப்பொழுது பெருமித முற்றெழுந்த வந்த அலை யொன்று காட்டனைப் பிரித்திழுத்துப் புரட்டிக் கரையில் உருட்டியது. அலையின் கொடுமைக் காற்றாது அமைந்த காட்டனை ஐயர் விரைந்தோடிக் கவர்ந்து கருங்கடலின் வாயினின்றும் விடுவித்தார். கருணையற்ற அலையின் கையகப் பட்டு நிலைகுலைந்த காட்டனை நோக்கி, ‘ஐயனே! பண்புற்ற நும் பெருமை அறிந்து பகவதி சலாம் செய்துவிட்டாள்; ஒரு சலாம் போதும்; இப்பொழுதே கரையேறிவிடுவோம்’ என்று கூறி அடுத்த அலை வருமுன்னே அவரை ஐயர் அப்புறப் படுத்தினார். இங்ஙனம் குமரித்துறையில் சலாம் பெற்ற காட்டன், கல்கத்தா நகரில் கங்கையாற்றில் தவறி வீழ்ந்து உயிர் துறந்தாரென்று அறிந்தபோது கால்டுவெல் ஐயர் பெருந்துயர முற்றார். செயற்கரும் பணி செய்த சிறப்புற்ற கால்டுவெல் ஐயர் மனமொழி மெய்யென்னும் மூன்றையும் தமிழகத்தார்க்கே ஒப்புவித்த தன்மையால் அப்பெரியாரைத் தமிழர் என்று கருதுதலே தக்கதாகும். அவரும் அவ்வண்ணமே கருதினர் என்பது அவர் வாழ்க்கைக் காதையால் விளங்குகின்றது. தம் பிறப்பையும் வளர்ப்பையும் குறித்து எழுதிய காதையில் “நான் அயர்லாந்து தேசத்திற் பிறந்தேன்; ஸ்காட்லண்டு தேசத்தில் வளர்ந்தேன்; ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன்; ஆயினும் என் வாழ்நாளில் ஐம்பதாண்டுகட்கு மேலாகப் பாரதப் பெருநாடும் அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால் யான் இந்திய மக்களுள் ஒருவனாயினேன்.”2 என்று தம் மனத்திலெழுந்த உணர்ச்சியை மாண்புற விளக்கிப் போந்தார். கருணை உருவாய கால்டுவெல்லையர் பொருனை நாட்டைத் தம்மிருப்பிடமாகத் தேர்ந்த காலமுதல் தமிழ் மக்களுடன் வேற்றுமையின்றிக் கலந்துறைவாராயினர். அறியாமையில் மூழ்கிக் கிடந்த மாந்தர்க்குக் கலையின் ஒளி காட்டினார். கிருஸ்து சமயத்தை அவரிடையே நலமுற நாட்டினார். அல்லது பகலும் இடையறா துழைத்துவந்த நெல்லை நாட்டிலேயே கல்லறை கொள்ள விரும்பினார்.3 தேரி நிலத்தின் வெம்மையார் ஐயர் உடல் நலங்குன்றக் கண்ட ஆங்கில நாட்டு நண்பர்கள் அவரைக் குளிந்த நாட்டிற்கு வருமாறு பன்முறை ஆதரித்து அழைத்தார்கள். அன்னார் விருப்பத்திற் கிணங்கி ஐயர் ஆங்கில நாட்டிற்கு மும்முறை சென்றாரேனும், அவர் மனம் பொருனை நாட்டையே நாடுவதாயிற்று. நலிவுற்றவுடல் நலமுற்றவுடன் சேயை நினைத்து செல்லும் தாய்போல் தேரிக்குடிகளை நோக்கி விரைந்து போந்தார். முதன் முறை4 சென்றபோது ஆங்கில நாட்டில் மூவாண்டு தங்கினார். இரண்டாம் முறை5 சென்றபோது ஈராண்டு தங்கினார். மூன்றாம் முறை6 சென்றபோது ஓராண்டு தங்கி மீண்டார். இதனை ஆராயும் பொழுது, உடல் நலம்பேணச் சென்ற விடத்தும் அவர் மனம் தமிழகத்தையே நாடிய தென்பதும், மேனியின் தளர்வினால் முதுமை விரைந்துறுதலை அறிந்த ஐயர் ஆங்கில நாட்டில் அவப்பொழுது போக்கக் கருதாது தமிழகம் போந்து விழுமிய தவப்பணி ஆற்ற விழைந்தாரென்பதும் விளங்கித் தோன்றும். ஆயினும் மூன்றாம் முறை சீமைக்குச் சென்று திரும்பியபொழுது அவருடல் கட்டிழந்து உலைந்து தளர்வுற்றது. எழுபதாண்டு கண்ட கிழவர் பொருனை நாட்டின் வெம்மையைப் பொறுக்கலாற்றாது வெதும்பினார். அந்நிலையில் கொடைக்கானல் மலைக்குச் சென்று அதன் குளிர்மையையும் செழுமையையும் நுகர்ந்து மனந்தழைத்தார். அம்மலையிற் சில காலம் தங்கியிருக்க எண்ணினார். இயற்கை வளம் மலிந்த கோடை மலையில் இறைவனை வழுபடுதற்குரிய திருக்கோயில் இல்லாமை கண்டு மனம் வருந்தினார். முதுமைப் பருவத்தில் ஒருமையுடனிருந்து இறைவன் திருவருளை நினைந்து வழிபடுதற்குரிய ஆலயமெடுக்க விழைந்தார். அரசாங்கத்தில் சிறந்த செல்வா க்குடையராயிருந்த ‘லவிஞ்சு’ துரையிடம் ஐயர் தங்கருத்தை அறிவித்தபோது அவர் ஊக்கமுற்றுத் திருக்கோவில் அமைத்தற்குரிய இடத்தைத் தேர்ந்துதவியதோடு சிறந்த நன்கொடையும் வழங்கினார். அன்பார்ந்த வியத்தர் ஆதரவைத் துணைக் கொண்டு அம்மலையில் ஐயர் அழகிய கோவில் கட்டி முடித்து இறைவனுக்கு அர்ப்பணஞ் செய்தார். அவ்விழாவில் ஐயர் இயற்றிய விரிவுரை சிறந்த அறிவுரையாகத் திகழ்கின்றது. அவர் எடுத்து முடித்த திருக்கோவில் சீருஞ் சிறப்புமுற்றுக் கொடைக்கானற் குன்றில் இன்றும் விளங்கக் காணலாம்.7 அடிக்குறிப்பு 1. “ஹள hந அடிஎநன யbடிரவ கசடிஅ னளைவசiஉவ வடி னளைவசiஉவ hந றயள அநவ டிn வாந றயல யனே றநடஉடிஅநன யவ நயஉh hயடவiபே யீடயஉந லெ உசடிறனள டிக யீநடியீடந றiவா வாந ரளரயட யஉஉடிஅயீயniஅநவே டிக யெனே, யெnநேசள யனே வடிசஉhடiபாவ யீசடிஉநளளiடிளே. ஹகவநச ய டடிபே யனே வசைநளடிஅந தடிரசநேல, வாந வயஅயளாய நெபயn றiவா யனனசநளளநள யனே ளடிபேள யனே வாந க்ஷiளாடியீ சநயீடநைன றiவா ரகேடயபபiபே யீயவநைnஉந. ழந ளயவ டளைவநniபே லெ வாந hடிரச வடி யடட வாயவ வாநல hயன வடி ளயல யனே யயீயீநயசநன யள hயயீயீல யனே யீhடைடிளடியீhiஉ யள கை வாந னரளவ யனே hநயவ, வாந னin டிக வடிஅவடிஅள, வாந டெயசந டிக வாந னசநயனகரட செயணநn iளேவசரஅநவேள யனே வாந ளஅநடட டிக வாந டிடை வடிசஉhநள றநசந யள சநகசநளாiபே யள வாந யெவா யனே னinநேச வாயவ றநசந யறயவைiபே hiஅ. நுஎநn in hளை டிடன யபந றாநn hந உடிரடன ளஉயசஉவைல ளநந வடி சநயன, hந ளவடிடின நசநஉவ யள ய யீயடஅ, வாந நயீளைஉடியீயட எநளவஅநவே, வாந டடிபே றாவைந hயசை, வாந ளnடிறல நெயசன யனே வாந உடநயச உரவ கநயவரசநள பiஎiபே யn னைநயட யீசநளநவஅநவே டிக ய எநசநேசயடெந biளாடியீ.” - ஊ.ஊ. 241. பு 2. “ஆல சநளனைநnஉந in ஐனேயை கடிச லெ கயச வாந டயசபநச யீடிசவiடிn டிக அல டகைந யனே வாந னநநயீ iவேநசநளவ ஐ hயஎந யடறயலள வயமநn in ஐனேயை யனே நஎநசலவாபை ஐனேயைn ஆயமநள அந அடிசந யn ஐனேயைn வாயn யலேவாiபே நடளந.” - ஊ.சு. 3 3. “ஐவ hயன டடிபே நெநn வாந நஒயீசநளளநன றiவா டிக வாந biளாடியீ வாயவ றாநn hந னநைன hந ளடிரடன நெ ரெசநைன யஅடிபே hளை யீநடியீடந. ஐn கயஉவ ளடி டடிபே யபடி யள 1883 றாநn hந றயள டயளவ in நுபேடயனே யனே றயள சநளூரநளவநன லெ hளை கசநைனேள வடி சநஅயin வாநசந, hளை யளேறநச றயள “ஐ றiளா வடி னநை யஅடிபேநளவ வாந யீநடியீடந கடிச றாடிஅ ஐ hயஎந டiஎநன.” - சுநஎ. றுலயவவ ஊ.சு. 186. 4. 1854 - 1857. 5. 1873 - 1875 6. 1883 - 1884 7. ளுவ. ஞநவநச’ள ஊhரசஉh - னுநனiஉயவநன 1886. 14. மூப்பும் முடிவும் ஐம்பத்து மூன்றாண்ட தமிழ் நாட்டில் அரும்பணி புரிந்த கால்டுவெல் ஐயர் பழுத்த முதுமையுற்றார். நலமெலாம் ஒருங்கே அமைந்த முகத்தில் நரையும் திரையும் நிறைந்தன. பரந்துயர்ந்த நெற்றின் மீது பஞ்சு போல் விளங்கிய தலையும், பண்புற்ற நெஞ்சின் நிலைகுறித்த பால்போன்ற தாடியும் மூத்தவடி வழகின் பெருமையை எழுதிக் காட்டின. கற்றோர்க்கணியாய நற்றவப் பெரியார் செற்றம் நீக்கிய மனத்தினராய் மாசற இமைக்கும் உருவினராய்த் திகழ்ந்தார். “வலம்ஸபரி புரையும் வானரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர்... செற்றம் நீக்கிய மனத்தினர்... கற்றோர் யாவரும் அறியா அறிவினர்” என்று நக்கீரர் அருளிய முனிவர் கோலம் நற்றவச் செல்வராய கால்டுவெல் ஐயரிடம் முற்றும் அமைந்து விளங்கிற்று என்று கூறுதல் மிகையாகாது. வெம்மை சான்ற நிலத்தில் விழுப்பணி புரிந்து பழுத்த ஐயர், சென்னை அத்தியட்ச குருவினிடம் முறையிட்டுப் பொறுப்பு வாய்ந்த வேலையினின்றும் விலகி இளைப்பாற விரும்பினார். “ஐய சாலவும் அலசினன் அரும்பெரு மூப்பும் வெய்யதாயது” ஆதலால் விலகிட உதவிட வேண்டும் என்று அப்பெரியாரைப் பரிந்து வேண்டினார். கால்டுவெல் அறிஞரின் அருமையை நன்கறிந்த அத்தியட்ச குரு அவர் விருப்பத்திற் கிணங்கி இளைப்பாற விடை கொடுத்தார். பொறுப்பும் பெருமையும் வாய்ந்த அரும்பணி துறந்து புனிதராய் ஐயர் கொடைக்கானற் குன்றில் வாழப் புறப்பட்டபோது இடையன்குடி வட்டமைந்த மக்களனைவரும் அணியணியாகப் போந்து பிரிவாற்றாது கலங்கி அழுது கதறத் தலைப்பட்டார். அழுத கண்ணினராய் அடிபணிந்த மாந்தரை ஐயர் அகனமர்ந்து தழுவி எடுத்து ஆசி கூறினார். தொழுத கையினராய்த் துயருற்று நின்ற மாதரைத் தூயநன்மொழிகளால் தேற்றியருளினார். ஒருவாறு பிரிவெனும் பெருந்துயர் பொறுத்த மக்கள்பால் விடைபெற்றுக் கொடைக்கானல் மலையை நோக்கிச் சென்றார். அந்நாளில் கொடைக்கானற் குன்றிற்கு நேரியசாலை அமைக்கப்படவில்லை. கடும்பாறையின் வழியாகக் காதவழி தூரம் நெடுந்தடங் கிடந்தது. செங்குத்தாக நிவந்த பாறை களினிடையே நெளிந்து சென்ற நெடுந்தடம் வழி நடந்து செல்வார்க்கு வருத்தம் விளைத்தது. இத்தகைய தடத்தின் வழியாகத் தம் மனைவியொடு நடந்து கொடைக்கானற் குன்றடைந்த ஐயர் கவலை நீத்து இளைப்பாறிக் களிப்புற்றார். கொடைக்கானலின் குளிர்மையால் ஐயர் மேனிதளர்வு நீங்கித் தழைத்தது. எந்நாளும் ஏசுவின் நன்னாமம் மறந்தறியாத ஐயர் அக்குன்றிலமைந்த திருக் கோவிலில் வாரந்தொறும் தவறாது சென்று வழிபாடுபற்றியும், விரிவுரை நிகழ்த்தியும் அமைதியுற்று வாழ்ந்தார். அறமே உருவாய ஐயர் மனைவியார் பொழுதறிந்து ஏற்ற உணவருத்தி அவர் மேனியைப் பொன்போற் போற்றி வந்தார். நாடோறும் காலையும் மாலையும் ஐயர் நெடுந்தூரம் நடந்து மலைவளங் கண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் வாழுங்கால் ஒருநாள் வெளியே சென்று உலாவி வந்த ஐயர் குளிருற்று நடுங்கினார். அம்மலையில் வாழ்ந்த மருத்துவர் ஒருவர் விரைந்து போந்து மருந்தளித்தார். முதலிற் சிறிது மடங்கத் தொடங்கிய நோய் ஏழாம் நாள் வலுவுற்று வருத்தத் தொடங்கியது. இரவு முழுதும், கால்டுவெல் ஐயர் பிணியின் கொடுமையால் வாடி வருந்தினார். ஆஸ்திரேலியா வினின்று தந்தையைக் காண வந்திருந்த ஆடிங்கிதனென்னும் அருமைசான்ற மைந்தன் கங்குல் கழியுமளவும் கண்ணயராது ஐயர் படுக்கையினருகே அமர்ந்து பணிவிடை புரிந்தார். தம் வாழ்க்கையின் எல்லை வந்துற்றதென்று அறிந்த ஐயர் கருணை யங் கடலாய கர்த்தரைக் கருத்திலமைத்து, மறைமொழிகளால் மனமாரத்தொழுது, “புண்ணியா! உன்னிடமே போதுகின் றேன்” என்றுரைத்து மண்ணுலக வாழ்வை முடித்தார். திருச்சியிலிருந்த மருமகருக்கு ஐயர் இறந்தார் என்னும் செய்தி தந்தியின் வழியாக அறிவிக்கப்பட்டது. அவர் உடனே புறப்பட்டு இடையன்குடிக்குச் சென்று ஐயர் எடுத்த ஆலயத்திற் கல்லறையமைத்தற்குரிய வேலையில் ஈடுபட்டார். ஆயினும், கொடைக்கானல் மலையில் நிகழ்ந்த கொடுமையை அந்நிலையில் ஊரார்க்கு அறிவித்தல் ஒல்லாதென்று கருதி உற்ற பணியாளர் சிலரிடம் மறைவாகக் கூறி அடக்கிவைத்தார். ஐயர் இறந்த செய்தி கொடைக்கானற் குன்றில் பரவிய பொழுது ஆண்டிருந்த அறிஞரனைவரும் அவர் திருமேனியைக் காண விரைந்து மொய்த்தார். ஐயர் முகத்திலமைந்த சாந்தமும் தெளிவுங் கண்டு வணங்கினார். பெரியவர் உடலைப் போற்றி எடுத்துப் பேழையுளடக்கிக் கண்ணீரும் களிமலரும் சிந்தினார். பேழையின்மீது அன்பரிட்ட மாலைகள் அடுக்கடுக்காய்க் குவிந்தன, காதவழி தூரம் கடும் பாதையின் வழியாகப் பேழையை எடுத்துப் பெரும் பணியாளர் வேண்டுமே என்று ஐயர் மனைவியார் கவலையுற்றார். அப்பொழுது கண்களில் நீரும் கைகளில் மலரும் தாங்கி ஓரன் பர்குழாம் பேழையை நோக்கி வந்தது. தொண்ட ராய ஐயரை அழைத்துச் செல்லத் தேவதூதர் வந்தனரோ என்று அம்மையார் ஐயுற்றார். கர்த்தரை நம்பினோர் எஞ்ஞான்றும் கைவிடப்படார் என்னும் முதுமொழியை நினைத்து அவரையே நோக்கி நின்றார். அகங்குழைந்து வந்தடைந்த அன்பர்கள் ஐயர் பேழையை அணுகிக் கண்ணீரை மலரொடு கலந்து சொரிந்தார்கள். அப்பால் அறமே உருவாயமைந்த அம்மையின் அடி பணிந்தெழுந்து, “தாயே! அருந்தவ முனிவராய ஐயரைச் சுமந்து செல்லும் பெருமையை ஏழைகளாய எங்களுக்கு அளித்தல் வேண்டும்” என்று இறைஞ்சி நின்றார். அற்றார்க்கு உற்ற துணையாய் நின்று அருள் புரியும் இறைவன் கருணையை அம்iமாயார் நினைத்து மனமார வழுத்திப் பேழையை மெல்ல எடுத்துச் செல்லுமாறு அன்பரைப் பணிந்து வேண்டியானள். அப்பணி தலைமேற் கொண்ட அறுநான் கடியவர் அருங் குழவியைத் தழுவியெடுக்கும் தாய்போல் பேழையை ஆதரித் தெடுத்துத் தலைமிசைத் தாங்கி நடந்தார்கள். அப்பேழையின் பின்னே ஐயர் மனைவியும் மைந்தனும் சிந்தனை முகத்திற் தேக்கி வந்தனை புரிந்து நடந்து சென்றார். காதவழி தூரமும் பாதையின் கடுமையறியாது ஐயர் பேழையை அலுங்காமற் குலுங்காமற் கொண்டு சென்ற அடியாரது அன்பின் திறங்கண்டு பின்னே நடந்த இருவரும் பெருவியப் புற்றார். மலையடி வாரங் கடந்த பின்னர் அருஞ்சுமையை நாட்டு வண்டியிலேற்றி இருப்புப் பாதை நிலையத்திற் கொண்டு சேர்த்தார்கள். நண் பகற் பொழுதில் அந்நிலையத்து வந்துற்ற ரயில் வண்டியில் பேழையை ஏற்றி ஐயர் மனைவியும் மைந்தனும் அருகேயிருந்து காவல் புரிந்தனர். ஐயருடலைத் தாங்கி விரைந்து நடந்த வண்டி அந்தி மாலையில் நெல்லை மாநகரை அடைந்தது. நெல்லை நிலையத்தில் காருடைத் தொண்டர் பலர் காத்திருந்தனர். ஐயர் பேழையை வண்டியினின்றெடுத்தபோது அன்பர் அனைவரும் கண்மழை பொழிந்தார். தெண்ணீர் தெளித்தற்குரிய தரையிற் கண்ணீர் சொரிந்து வரவேற்ற மாந்தரின் காதல் கண்டு கரைந்துருகாதார் எவருமில்லை. பெரியார் பேழையைப் பாளையங் கோட்டைத் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று சான்றோர் மறைமொழி நவின்றார்; மற்றையோர் ஏங்கித் தொழுது நின்றார். அன்றிரவு முழுதும் அந்நகர்க் கிருஸ்தவர்கள் அவ்விடம் விட்டுப் பெயர மனமற்று அழுத வண்ணமும், தொழுத வண்ணமுமாய் அமர்ந்திருந்தார்கள். மறுநாட் காலையில் பேழையை வண்டியிலேற்றி இடையன்குடியை நோக்கிப் புறப்பட்டார்கள். ஐயரிறந்தாரென்னும் செய்தி பாளையங்கோட்டையின் வழியாக எல்லா ஊர்களிலும் பரவிற்று. ஆங்காங்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாலை யினிருமருங்கும் வழிமேல் விழிவைத்துக் காத்து நின்றார். பாளையங் கோட்டையின் எல்லை கடந்தபொழுது பாதை யினிரு மருங்கும் அவலமுற்று நின்ற இளநங்கையர் அருங் கண்ணீர் வடித்து, “நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் தந்தாய் தனிஅறத்தின் தாயே தயாநிலையே” எந்தாய் இறந்தனையே! எமைக்காப்பார் யாருளரே! என்று பரிந்து பாடிய பொழுது கருங்கல் மனமும் கரைந்துருகுவதாயிற்று. இங்ஙனம் பெருந்துயரினிடையே நடந்து சென்ற வண்டி மறுநாட்காலை ஆறு மணிக்கு இடையன்குடியின் எல்லை வந்துற்றது. அங்கு தந்தையை இழந்தவர் போல இரவு முற்றும் தயங்கி நின்ற மக்கள் பேழையைக் கண்ட போழ்து விழுந்து அழுது புரண்டு அரற்றினார். ஆலயத்தினருகே இறக்கி வைத்த பெட்டியின்மீது அவ்வூர் மகம்மதிய அன்பர்கள் வெற்றிலையும் விரைமலரும் கையுறையாக வைத்துக் கண்ணீருகுத்தார். அப்பால் ஐயர் பேழையை ஆலயத்தினுள்ளே உரிய முறையிற் கொண்டு செல்ல எடுத்தார்கள். மருகராய வியத்தரும், மாண்பு வாய்ந்த மார்க்கோசியரும், கெழுதகைமை வாய்ந்த கெம்பரும், வண்டமிழறிந்த வாக்கரும், ஏனைய ஆங்கிலத் தொண்டரும் அணியணியாகப் பேழையின் முன்னே சென்றார். ஐயரின் மைந்தர் அருஞ்சோகமுற்றுப் பின்னே போந்தார். மறைமொழியால் முறையாக இறைவனைத் தொழுது பேழையுள் அமைந்த பெருமை சான்ற திருவுருவை அன்பார்ந்த மருகம் ஆலயக் கல்லறைவிட்டார். அரை நூற்றாண்டு இடையன்குடியில் அறப்பணியாற்றி அளவிறந்த நலம் புரிந்து, ‘அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்னும் மறைப் பொருளை விளக்கியருளிய கால்டுவெல் ஐயரின் தகை சான்ற வாழ்க்கை நன்றி மறவாத நற்றமிழ் மக்கள் உள்ளத்தை அள்ளுவதாகும். 15. முடிவுரை ஐயர் இறந்தமையால் அருங்கலையுலகம் சிறந்த அறிஞரை இழந்தது. தமிழ் நாடு தகைசான்ற மைந்தனை இழந்தது. வேத விளக்கச் சங்கம் விழுமிய தொண்டரை இழந்தது. காற்றிந் தடங்கிய நற்றவப் பெரியாரது பிரிவறிந்து பரிவு கூர்ந்தார் பலர். கால்டுவெல் ஐயரின் பணித்திறத்தினை வியந்து ஆங்கில நாட்டு முதலமைச்சர்1 மன்னர் தயாள நிதியினின்று2 நூற்றைம்பது பவுன் அவர் மனைவியார்க்கு அன்பு கூர்ந்து வழங்கினார். பல துறைகளிலும் ஐயர் ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி சென்னை அரசாங்கமும் பல்கலைக் கழகமும் பரிவுத் தீர்மானங்களைப் பாங்குற நிறைவேற்றின. ஐம்பதாண்டுகட்கு மேலாகக் கைம்மாறு கருதாது அறப்பணியாற்றிய கால்டுவெல் ஐயரின் ஒருமையை அளந்தறிதல் அரிதாகும். ஆயினும் அவர் வாழ்க்கையின் விழுமிய குறிக்கோள் இனிது விளங்குகின்றது. இளம் பருவத்தில் கவின் கலைக் கல்லூரியிற் கால்டுவெல் ஐயர் பயிலும் பொழுது தள்ளரிய கருணை வெள்ளம் அவருள்ளத் தடத்திற் பொங்கி எழுந்தது. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் வழங்கிய தயாபரனை நினைந்து ஊன் கரைந்து உயிர் கரைந்து உருகினார். இறைவனைப் போற்றாது ஆற்ற நாள் போக்கிய புன்மையை நினைந்து மனங் குறுகினார். இருபதாம் வயதில் லண்டன் மாநகர்த் தொண்டர் சங்கத்தைச் சார்ந்தார் ஆவிதுறக்கும் நிலையிலிருந்த அன்பார்ந்த அன்னையைக் கர்த்தர் காவலில் விட்டுத் தமிழ்நாட்டை நோக்கிப் புறப்பட்டார். சென்னைத் துறைமுகம் சேருமளவும் ஏசுநாதர் பெருமையை பேசி மகிழ்ந்தார். சென்னை மாநகரில் மூன்றாண்டு சமயத் தொண்டரோடு இணங்கி இருந்தார். அப்பால் பொருனை நாட்டில் நாடோறும் நாதன் பணியே நயந்து புரிந்தார். கிருஸ்து மதக் கொள்கைகளை ‘வினா விடை’யின் வாயிலாக விளக்கிப் போந்தார். இன்னும் ‘ஞானாலயம்’, ‘தியானமாலை’ முதலிய தமிழ் நூல்கள் இயற்றியருளினார். வேதநூலையும் பிரார்த்தனை நூலையும் தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருந்த பதினோராண்டும் தம் வாழ்க்கையின் பண்பார்ந்த பாகம் என்றெண்ணி எண்ணி உள்ளம் தழைத்தார். சுருங்கச் சொல்லின், கர்த்தரால் ஆட்கொள்ளப்பட்ட அன்றே கால்டுவெல் ஐயர் தம் உடல், பொருள், ஆவியென்னும் மூன்றையும் அவர் பணியில் உய்த்தார் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. ஐயர் புரிந்த அரும்பணியின் பயனாக இடையன்குடி வட்டத்தில் ஏசுவின் புகழே நிறைந்து நின்றது. பொருனை நாட்டில் ஐயர் அரும்பணி தொடங்கும் பொழுது நாலாயிரம் கிருஸ்தவர் காணப்பட்டனர். அவர் வாழ்க்கை முடிவுறும் பொழுது நாற்பதினாயிரம் மக்கள் கிருஸ்து மதத்தை மேற்கொண்டு விளங்கினர். அன்றியும் தென்னாட்டில் முன்பு பலரும் பழித்துரைத்தற்கு நிலைக்களனாக நின்ற கிருஸ்து மதம் ஐயர் அரும்பணியாற் பண்புற்று நல்லோர் புகழுரைக் குரியதாயிற்று. காசுக்கும் கஞ்சிக்கும் வகையற்றார் கிருஸ்து மதத்தை ஏற்பார் என்று பாமர மக்கள் கூறிய வசைவேரற்று வீழ்ந்தது. ‘சோற்றுக் கிருஸ்தவர்’ என்று அரசாளும் வகுப்பினராற் கருதப்பட்ட மக்கள் இப்பொழுது கல்வியறிவிற் சிறந்து விளங்குகின்றார்கள்.3 பொருனை நாட்டில் ஐயர் ஆர்வத்தால் கிருஸ்து மதம் விரைந்து பரவி நிலைபெறக் கண்ட ஆங்கில நாட்டுக் கிருஸ்து சமய சங்கத்தார் அவர் சான்றாண்மையை வியந்து போற்றினார். டர்காம் என்னும் நகரில் அமைந்த சர்வகலா சங்கத்தார் அவர் சமயப் புலமையை மதித்து ‘டாக்டர்’ என்னும் கௌரவப் பட்டம் வழங்கினர். இங்ஙனம் மாசிலா மனநலம் வாய்ந்த சமயத் தொண்டர்கள் பலபடப் பாராட்டியபொழுது கால்டுவெல் ஐயர் தாம் ஆற்றிய பணியின் சிறுமையையும், ஆற்றாதொழிந்த பணியின் அளவினையும் நினைந்து அகங்குறுகினார். மாசற்ற ஏசுநாதர் காட்டிய நெறியே மாநில மெங்கும் பரவித் திகழவேண்டுமென ஆர்வமுற்ற ஐயர் மனத்தில் தாம் செய்து முடித்த பணியின் சுருக்கமும், பின்னும் செயற்பாலதாய பணியின் பெருக்கமும் விளங்கித் தோன்றின. ஆகவே சர்வகலா சங்கத்தார் வழங்கிய பட்டம் ஐயர் பின்னும் தூய நற்றொண்டு செய்வதற்குத் தூண்டுகோலாகவே அமைந்தது. தென்னாட்டில் தொண்டு புரிந்த வேதவிளக்கச் சங்கத்தின் வரலாற்றைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பரந்த கொள்கையைக் கடைப்பிடித்து தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, கற்றறிந்தடங்கிய நற்றவச் செல்வராய், தம்மையே தமர்க்கு நல்கிய தனிப்பெருந்தொண்டராய் விளங்கிய தக்காரை மனக்கோயிலுள் அமைத்துப் போற்றுதல் தமிழ் நாட்டு மக்கள் கடனாகும்.4 அடிக்குறிப்பு 1. Gladstone. 2. The Royal Bounty Fund. 3. “In 1838 (Caldwell) found the native converts sneered at by the governing race as ‘rice christians’ and disdained by the Brahmins and educated Hindu as a new low caste be gotten of ignorance and hunger. Not long before his death, the Director of public Instruction in Madras declared that if the native christians maintain the present rate of educational progress they will before long engross the leading positions in professional life in Southern India.” w.w.Hunter. - London Times, 19th October 1891. 4. “A man of wide and varied Knowledge, a scholar of European reputation ful of philosophic and practical wisdom, yet he was content to live for half a century in a remote part of Tinnevelly. Spending and being spent for the benefit of the people of that province. The Tinnevelly native church owes him a debt of gratitude it can never repay.” - Rev. Wyatt, C.R. 187. APPENDIX I Dr. Caldwell’s life and work. “By the death of the Right Reverrend Dr. Caldwell, Bishop of Tinnevelly, Christianity in Tinnevelly loses one of its most venerated fathers, and Indian scholarship one of its great original workers. During more than half a century Dr. Caldwell has, in spite of his retiring nature held a foremost place among his countrymen in India, not only as a leader and moving spirit of the missionary Church, but as a scholar without an equal in his special field of learning.... For more than fifty years Dr. Caldwell has been identified with this great work of humanity. In his funeral sermon at Kodaikanal last month, it was stated that he had seen the Christian in Tinnevelly increase from 6000 to 1,00,000. It is however as the investigator of the South Indian family of languages that Bishop Caldwell was most widely known. His comparative grammar of the Dravidian group originally published in 1856 was a revelation to western philologers and it remains, in the form of a second edition in 1875, the standard authority on the subject without a rival or a successor. His comparative grammar of tthe Dravidian languages will ever stand forth as one of the monumental works of the age. But in this, as in every branch of his untiring labours, he was inspired with the belief that he was doing true missionary service. The literary work to which he himsellf looked back with greatest satisfaction was the part which he took during eleven years in the revision of the Tamil Bible and when that long labour was ended in the revision of the Tamil Book of Common Prayer.” - The London Times, 19th Oct. 1891. “A true servant of God, a profound scholar, a man of persistent and whole hearted devotion to the one great purpose of his life, he strove to raise and benefit in the highest and fullest sense the whole mass of the people in whose midst he spent more than half a century of his noble life. Their bodily, mental, spiritual and social welfare were all alike the objects of his unceasing solicitude and effort. The large village of Idayangudi, with its magnificent Church, its regular streets, commodious and comfortable houses, hospitals and schools and many other appliances for the welfare and elevation of the people abundantly illustrates the many side character of his great life work. Few Missionaries who came out to India surpassed him in scholarship, in success in the work of winnings souls or in breadth and saintliness of character. he was familiar with eithteen languages and has left behind him as abiding monuments of his learning a comparative grammar of the Dravidian languages and a History of Tinnevelly besides other literay productions of less importance.” - The Centenary History of the C.M.S. in Tinnevelly 1923. APPENDIX II Chronological list of Dr. Caldwell’s Works. A. BOOKS 1. “A comparative Grammar of the Dravidian or South Indian family of languages.” First Edition 1856 Second 1857 Third (Published by Wyatt.) 2. A Political and General History of Tinnevelly - Published by the Madras Government 1881. 3. History of the Tinnevelly Mission of the S.P.C.K. and S.P.G. - Published in 1881. 4. Reminiscences of Bishop Caldwell. - Published by Rev. J.L. Wyatt 1887. B. LECTUREE, PAMPHILETS & SERMONS. 1. The Tinnevelly shanars (1849) - withdrawn from circulation. 2. Three Lectures on the Tinnevelly Mission (1857) 3. The Three Way Marks (1860) 4. On the Kudumi (1867) 5. The Mass disowned by the Missal (1867) 6. Tinnevelly & Tinnevelly Mission (1869) 7. Explorations at Korkai and Kayal (1877) 8. Address at the Convocation of the University of Madras (1879) 9. Address at the First Centenary of the Tinnevelly Mision (1880) 10. On Reserve in Communicating Religious Instruction to Non- Christians in Mission Schools in India (1881). 11. On the Demonolatry in Southern India (1887) 12. The Inner Citadel of Religion - published by the S.P.C.K. 13. Christianity & Hindusim (Four Lectures). 14. On the use of Roman characters for Indian languages (Journal of the Madras Liteary Society). 15. The Languages of India in their relation to Missionary works. C. TAMIL WORKS 1. The Spiritual Temple :- Sermon preached at the opening of St. Mark’s Church, Christianagaram. (1849). 2. Dyanamalai :- Companion to the Holy Communion - published by the S.P.C.K. 3. Elementary Catechism - published by the S.P.C.K. 4. Rudimentary catechism on conformation (1887). 5. Translation of service for the Dedication of churches. அப்பாத்துரையம் - 21 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  கால்டுவெல் ஒப்பிலக்கணம் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 21 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+348 = 368 விலை : 460/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 368  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் ராபர்ட் கால்டுவெல் ... 3 இராபர்ட் கால்டுவெல் ... 10 1. தோற்றுவாய் ... 27 2. “திராவிட மொழிகள்” என்று வகுத்துக்கொண்டதேன்? ... 31 3. திராவிட மொழிகள் - தமிழ் ... 35 4. திராவிட மரபு மொழிகள் ஒரே மூல மொழியின் மண்டிலவகைத் திரிபு மொழிகள் அல்ல ... 75 5. இலக்கண அமைப்பில் வடமொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் ... 90 6. திராவிடமும் வட இந்திய மொழிகளும் ... 95 7. திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை? 107 8. திராவிட மூலமொழியின் இயல்பை உள்ளவாறறிவிக்கும் மொழி எது? ... 130 9. திராவிட மொழிகளின் மிகப் பழைய எழுத்துச் சான்றுகள் ... 145 10. பண்டைத் திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும்... ... 161 11. `ஸூத்திரர்’ என்னுஞ் சொல்லின் பண்டைய வழக்கும், பிற்கால வழக்கும் ... 166 12. ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிகம் ... 170 13. திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம் ... 172 பிற்சேர்க்கை ... 177 1. திராவிடப் பெருங்குழு ... 179 2. திராவிடப்பெருங்குழுவினரே முதுகுடிகள் ... 183 3. திராவிடப் பெருங்குழுவியல்பு ... 186 4. திராவிட மொழிகள் ... 190 5. திராவிட மொழிகள் ஐஐ ... 194 6. முண்டா மொழிகள் ... 198 7 வட இந்திய மொழியினங்கள் ... 203 திராவிட மொழிகளில் உள்ள இலக்கியங்களின் காலக்கணிப்பு ... 208 பின்னிணைப்பு -கால்டுவெல் ஐயர் சரிதம் 1. அறிவும் அருளும் ... 256 2. பொருனை நாடும் ஏசு மதமும் ... 263 3. நாடும் நடையும் ... 269 4. பழையன கழிதலும் புதியன புகுதலும் ... 273 5. கலையின் விளக்கம் ... 278 6. பண்டைத் தமிழகம் ... 286 7. தென்னாட்டு மொழிகள் ... 294 8. பாண்டிப் பழந்துறைகள் ... 302 9. ஏற்றமும் தோற்றமும் ... 308 10. ஆங்கிலக் கல்வியும் தமிழ்க் கல்வியும் ... 313 11. மனையற மாண்பு ... 317 12 நல்லாரிணக்கம் ... 324 13. பண்பும் பயனும் ... 329 14. மூப்பும் முடிவும் ... 338 15. முடிவுரை ... 343