இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் முதற் பதிப்பு - 1940-43 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது 1. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புகள் இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவு முறைப்படி ஏறக்குறைப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ் நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன. மிகப்பழைய இலக்கணங்களிலும், நூல்களிலும், உரை களிலும் குமரி முனைக்குத் தெற்கே நெடுந்தொலை நிலமாயிருந்தது என்றும், அந்நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர். இப் பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும், விவரங்களும் சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஆங்கிருந்த மலைகளுள் குமரிமலை ஒன்று என்றும், ஆறுகளுள் குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன. இந் நாடு தமிழகத்தின் ஒரு பகுதி மட்டுமன்று; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகம் என்றே கூறவேண்டும். ஏனெனில், தமிழைத் தொன்று தொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச்சங்கம் நடைபெற்ற தென் மதுரையும், இடைச் சங்கம் நடைபெற்ற கவாடபுரமும் இக் குமரிப் பகுதியிலேயே இருந்தன. எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியிலும், இடைச் சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும், இக் குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழி வளர்ச்சியும் ஏற்பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றனர் என்பதும் விளங்குகின்றன. தமிழ் நூல்களில் மூன்று கடல்கோள்களைப் பற்றித் தெளிவாகக் குறிப்புகள் காணப்படுகின்றன. முதல் கடல்கோளால் பஃறுளியாறும், குமரிக்கோடும் கடலில் கொள்ளப்பட்டன. பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென் மதுரையே பாண்டியன் தலைநகரும், தலைச்சங்கமிருந்த இடமும் ஆகும். இக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திலிருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் குறிக்கப்பட்ட வனாவன். கடல்கோளில் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாட புரத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். இங்கே தான் இடைச்சங்கம் நடைபெற்றது. தலைச்சங்க நாட்களில், பஃறுளியாற்றிற்கும், குமரியாற் றிற்கும் இடைப்பட்ட பகுதி, அளவிலும் சிறப்பிலும் பாண்டி நாட்டின் மிகச் சிறந்த பாகமாயிருந்திருக்க வேண்டும். அது 49 நாடுகளாக வகுக்கப்பட்டிருந்த தென்றும், இரண்டு ஆறுகட்கு மிடையே 700 காவத அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம். இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப் பட்டது. அதன் பின் சிலகாலம் ‘மணவூர்’ பாண்டியன் தலைநகராக இருந்து பின் மூன்றாம் கடல்கோளால் அம் மணவூரும், குமரியாரும் அழியவே, பாண்டியன் மதுரை வந்து அங்கே கடைச் சங்கத்தை நிறுவினான். சிலப்பதிகாரத்தில் மாடலன் குமரியாற்றில் நீராடியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கதைமுடிந்தன்பின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோன் பௌவமெனக் ‘குமரி’ கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்கிடையே, அஃதாவது கோவலனிறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக்கடலாயிற்று என்பர் பேராசிரியர். குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே மணி மேகலையுட் கூறப்பட்டபடி காவிரிப்பூம்பட்டினம் கடல் வயமானது. வங்காளக் குடாக்கடலில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். “நாகநன்னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்,” என்றது காண்க. இதனோடு, மேற்குத் தொடர்ச்சிமலை இன்று கடலிருக்கும் இடத்திலும் தொடர்ந்து கிடந்ததென்றும், ஆண்டு அதற்கு மகேந்திரம் என்பது பெயர் என்றும் வடநூல்கள் கூறுகின்றன. இராமாயணமும் அனுமான் கடல் தாண்டியது மகேந்திர மலையி லிருந்தே யென்றும், அது பொதிகைக்கும் கவாடபுரத்திற்கும் தெற்கில் இருந்த தென்றும் விவரித்துரைக்கின்றது. முருகன், சிவன் முதலிய தமிழ்த் தெய்வங்கள் மகேந்திர மலையில் உறைந்தனர் என்றே தமிழர் முதலில் கொண்டனர். கடல்கோளின் பின் அவர்களது இடம் அன்றைய தமிழ்நாட்டின் வடக்கில் இருந்த மேலைத் தொடர் என்று கொள்ளப்பட்டு, வடமலை ஆயிற்று. நாளடைவில் வடமலை என்பதே மேரு என்றும் கயிலை என்றும் கருதப்பட்டது. சிவதருமோத்தரத்தில் குறிப்பிட்டுள்ள உன்னதத் தென் மகேந்திரம் இதுவே என்க திருவாசகத்தில், “மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்” என்று இதனையே மணிவாசகப் பெருந்தகையார் ஆகமங்களருளிய இடமாகக் குறிப்பிடுகின்றார். தமிழ்நாட்டின் தென்கரை மட்டுமன்று, அதன் கீழ்க்கரையும் இலங்கையுங் கூடப் பல சிறு கடல்கோள்களுக்கு உட்பட்டன என்று தோன்றுகிறது. வடமொழி வானநூலார் தமது உலக நடுவரை (ஆநசனையைn)யை இலங்கையில் ஏற்படுத்தினர். ஆனால், இன்று அஃது இலங்கை வழிச் செல்லாமல் கடலூடு செல்வதிலிருந்து, அந்த இடம் முன்பு இலங்கையைச் சார்ந்திருந்த தென்று உய்த்துணரக் கிடக்கின்றது. மேலும் கேள்வியறிவால் தென் இந்தியாவைப் எழுதும் மெகஸ்தெனிஸ் (ஆநபயவாயநேள) என்ற கிரேக்க அறிஞர் இலங்கையைத் தாப்பிரபனே (கூயயீசயயெநே) என்று கூறுவதுடன் அஃது இந்தியாவினின்று ஒர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கின்றார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநையாறு கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்க வேண்டும் என்றேற்படும். கந்தபுராணத்தில் சொல்லப்படும் வீரமகேந்திரம் இலங்கை யின் தெற்கே பல கடல்கோள்களுக்குத் தப்பிக் கிடந்த ஒரு சிறு தீவேயாகும். கிழக்குக் கரையில் காவிரிப்பூம்பட்டினமேயன்றி வேறு பல தீவுகளும் அழிந்தன என்று மேலே கூறினோம். புதுச்சேரிக்கு மேற்கே பாகூர்ப்பாறை யிலுள்ள கல்வெட்டில் அது கடலிலிருந்து நாலுகாதம் மேற்கே இருப்பதாகக் குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், இன்று அது கடலிலிருந்து ஒரு காதமே விலகியிருப்பதால் கடல் 3 காதம் உட்போந்த தென்பது விளங்கும். சீர்காழி, தோணிபுரம் என்றழைக்கப்படுவதும் மதுரைவரை ஒருகால் கடல் முன்னேறிவர, பாண்டியன் வேல் எறிந்து அதனை மீண்டும் கவறச்செய்தான் என்ற திருவிளையாடற் கதையும், கன்னியாகுமரியில் இன்று உள்ள மூன்று கோயில்களுள் ஒன்று கடலுள் மூழ்கி அழிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதும், தமிழ்நாட்டுள் கடல் பலகால் புகுந்து அழிவுசெய்த தென்பதைக் காட்டுவனவாகும். தலை இடை கடைச் சங்கங்களில் இன்னின்ன புலவர்கள் இருந்தனர். இன்னின்ன நூல்கள் செய்தனர். இன்ன இலக்கணம் கையாளப்பட்டது என்ற விவரங்கள் இறையனாரகப் பொருளுரையிலும், பிற நூல்களிலும் கூறப்படுகின்றன. கடல்கோள்கள் காரணமாகவும், போற்றுவாரற்றும் அந் நாளைய நூல்களுள் பல இறந்துபட்டன. கடைச்சங்கப் புலவர்கள் காலத்திலும், ஏன் பிந்திய நாட் புலவர்கள் காலத்திலுங்கூட இவற்றுள் பல நூல்கள் முழுமையாகவோ பகுதியளவிலோ நிலவி யிருந்தன என்பது அவர்கள் குறிப்புகளாலும் மேற் கோள்களாலும் அறியக்கிடக்கின்றன. இங்ஙனம் தலைச்சங்க இடைச்சங்க நூல்கள் மிகுதியாக அழிந்து போக, நமக்கு இன்று மீந்துள்ளது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலொன்றேயாகும். அகத்தியம் முதலிய வேறு பல நூல்களுக்கு மேற் கோள்கள் வாயிலாகச் சில சில பாக்களோ அல்லது குறிப்பு வாயிலாகப் பெயர் மட்டிலுமோ கிடைக்கின்றன. ஆன்றோர் உரையும், முன்னோர் மரபும் இங்ஙனம் தெளி வாகச் சங்கங்களது வரலாற்றையும் குமரிநாட்டின் மெய்மையையும் வலியுறுத்துகின்றன; ஆயினும் இக் காலத்தார் சிலர் இவற்றை ஐயுறத் தொடங்குகின்றனர். இந் நூல்களில் சங்கங்கள் நடைபெற்றதாகக் கூறும் கால எல்லை ஆயிரக்கணக் காயிருப்பதும், அவை தரும் நூற்பட்டிகையுள் பெரும்பாலான இன்று காணப் பெறாமையுமே இவ் வையப்பாட்டிற்குக் காரணமாவன. தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கணித்தறிவார்க்கு இச் சங்க வாழ்வின் எல்லை அவ்வளவு நம்பத்தகாததன்று, இன்று வடநாட்டில் ஹரப்பா (ழயசயயீய) மொகஞ்சொதாரோ (ஆடிhநதேடி-னுயசடி) முதலிய இடங்களில் கண்ட கல்வெட்டுகளால் தமிழர் நாகரிகம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரேயே இந்தியநாடு முழுமையும் பரவியிருந்தது என்பது புலனாகின்றது. அதோடு அவற்றைப் பற்றிய குறிப்புகள் காலத்தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட வேறுவேறான பல நூல்களிலும் ஒன்றுக்கொன்று முரணாகாமல் பொருத்தமாகவே கூறப்பட்டிருக் கின்றமையும், தமிழ் நூல்களே யன்றி வடநாட்டு நூற்கு றிப்புகளும், பண்டைய கிரேக்க அறிஞர் தங் குறிப்புகளும், சங்க வரலாற்றைப் பல இடங்களில் வலியுறுத்துகின்றமையும், தற்கால மேனாட்டு ஆராய்ச்சியுரைகளும், கண்கூடான பல நடைமுறை யறிவுகளும் சேர்ந்து இச் செய்தி வெறும் புனைந்துரையன்று. மரபு வழக்காக வந்த மிகப்பழைமை யானதொரு செய்தியே என்பதை மெய்ப்பிக்கும். வடமொழிச் சான்றுகளுட் சிலவற்றை முன்பே குறிப்பிட்டுள் ளோம். அவற்றுள் மறுக்கக்கூடாத தெளிவான சான்று முதல் கடல்கோள் பற்றியாகும். அக் கடல்கோளுக்குத் தப்பிநின்று திரும்பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திருவிற் பாண்டியனைத் திராவிட நாட்டரசனாகிய சத்தியவிரத னென்றும் அரசமுனி என்றும், மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின. ஊழிவெள்ளத்தினின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகைமலை ஆகும். இதனையே வடமொழியாளர் மலையமலை என்பர். இஃது அன்றைய பாண்டிநாட்டின் பெரும்பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை என்னப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்தெண்ணப்பட்டது. இவ் வெள்ளக் கதைகள் பல புராணங்களிலும் காணப் படுபவை. அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துகளாலும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண்டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும், மகாபாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகராயிருந்த மணவூரைப் பற்றியும் விவரிக்கப் பட்டிருப்பதுங் காண்க. இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும், தென்மொழி, வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலைநாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ, புறக்கணிக்கவோ இயலாது. பின்வரும் பிரிவுகளில் மேல்நாட்டறிஞர் பலவேறு ஆராய்ச்சித் துறைகளையும் சீர் தூக்கிப் பார்த்து இதே முடிவை ஏற்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுவோம். 2. மொழிநூல் (ஞாடைடிடடிபல) முடிவு மனித நாகரிகத்தின் பழைமை பற்றிய செய்திகளை ஆராய்ந்து முடிவு கட்டும் வகையில் பல அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. ஆயினும், முதன் முதலாக அத்துறையில் வழி காட்டியாய் நின்றது மொழியியல் என்றே கூறவேண்டும். உலகிலுள்ள பல மொழிகளையும் பயின்று ஆராய்ந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகள் மூலம் அவற்றைக் கோவைப் படுத்துவது மொழியியலார் போக்கு. அங்ஙனம் செய்தோர் பலரும், உலகில், தென் இந்தியா தொடங்கிப் பல பக்கங்களிலும் நெடுந்தொலை பரந்து கிடக்கும் மொழிக் கோவைகள் பல உள்ளன என்று கண்டனர். அவற்றுள் ஒன்று தென் இந்தியா முதல் இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ் வரை கோவையாய்க் கிடக்கின்றது. இக் கோவையை அறிஞர் ஆரிய இனம் என்றனர். இவ் வாராய்ச்சியையொட்டிப் பலர் மனிதநாகரிகம் அவ் ஆரிய இனத்தார் முதலில் இருந்த இடத்திலிருந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சென்று பரந்தது எனக் கொண்டனர். ஆரியர் முதலிடமும் இதற்கேற்ப நடு ஆசியா அல்லது தென் உருசியா என்று கொள்ளப்பட்டது. பாலகங்காதர திலகர் என்ற வரலாற்றறிஞர், “மனிதர் முதலிடம் நடு ஆசியாவுமன்று” தென் உருசியாவுமன்று; வடதுருவப் பகுதியே,” என்று பல சான்றுகளுடன் காட்டினர். இக்கொள்கை ஆரிய இனத்தைப் பற்றிய வரையில் ஒவ்வு மாயினும், மனிதநாகரிகத்தின் தொடக்கத்திற்குப் பயன்படாத தாயிற்று. ஏனெனில், ஆரிய இனத்தார் வந்த இடங்கள் பலவற்றுள் அவரினும் உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகக் காணப்படுகின்றது. கிரேக்க நாட்டில் முகைனிய (ஆலஉயநnயைn) நாகரிகமும் ஐகய (ஹநபநயn) நாகரிகமும் கி.மு. 3000 ஆண்டு முதல் மேலோங்கி யிருந்தன. இந்தியாவில் திராவிட நாகரிகத்தின் சிறப்பை வான் மீகியார் இராமாயணமும், இருக்குவேத உரைகளும் ஏற்கின்றன. ஆரிய இனக்கோவையே யன்றி வேறு பல கோவைகளும் தென் இந்தியா வரை எட்டுகின்றன என்று மேலே கூறினோம். எனவே, நாகரிகம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஏன் சென்றிருக் கக்கூடாது என்பதும் ஆராயத்தக்க தொன்றாகும். மொழியில் ஆராய்ச்சி, இத்தகையதொரு கொள்கையை எழுப்பப் போதியதாயினும் அதன் உண்மையை நிலைநாட்டப் போதிய சான்றுகள் உடைய தன்று. மேலும், மொழிக் கோவைகளின் போக்கால் மொழித் தொடர்பு இருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியுமேயன்றி, அத்தொடர்பின் போக்குத் தெற்கினின்றும் வடக்கு நோக்கியதா, வடக்கு நின்றும் தெற்கு நோக்கியதா என்பதை வரையறுக்க முடியாது. இந் நிலையிலேதான் வானநூல் (ஹளவசடிnடிஅல), ஞாலநூல் (ழுநடடிடடிபல), நிலநூல் (ழுநடிபசயயீhல), ஆவிமண்டலநூல் (ஆநவநடிசடிடடிபல) முதலிய அறிவியற் பகுதிகள் நமக்குப் பயன்படுகின்றன. இவை யனைத்தும் ஒரே முகமாக உலகில் மிகப்பழைய பகுதியும், நாகரிகத் தொடக்கம் ஏற்பட்ட இடமும் தென் இந்தியா அல்லது அதற்கும் தெற்கில் இருந்த இலெமூரியாவாகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. ஆயினும், உண்மையை நிலைநாட்டும் வகையில் மொழி இயல் ஆராய்ச்சியால் ஏற்படும் துணை கொஞ்ச நஞ்சமன்று. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஆரியர் நாகரிகத் தாக்கு மிகவும் குறைவு; திராவிடர் நாகரிகத்தாக்கே பெரும்பான்மை என்பதை அண்மையில் சிந்து நாட்டில் கண்டெக்கப்பட்ட கல்வெட்டுகள் காட்டுவதற்கு முன்னமே, தெளிவுபட உணர்த்தியது மொழியியலே. “கற்காலம்” (ளுவடிநே ஹபந) என்ற தலைப்புக் கொண்ட நூலில் திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள், `மொழி ஓப்புமையால் நோக்கத் தென் இந்திய மொழிகள் மட்டுமல்ல; வட இந்திய மொழிகளுள், வட மொழியுங் கூடச் சொற்பயன், சொற்றொடர் அமைப்பு முதலிய வகைகளில் ஒன்று போலவே இருக்கின்றன. இம் மொழிகளுள் ஏதாவதொன்றினின்றும் இன்னொன்றுக்கும் மொழி பெயர்க்க வேண்டுமாயின் அகரவரிசையில் துணை கொண்டு மொழிக்கு மொழி மாற்றினால் போதும்,” என்று கூறுகிறார். இவ் வகையில், வட இந்திய மொழிகள், பிற ஆரிய மொழிகள் போலாமை நோக்க, அவற்றின் அடிப்படைச் சட்டம் வடமொழியோ ஆரியமோ அன்று; பழந்தமிழ் அல்லது திராவிட மூல மொழியேயாகும் என்பது வெள்ளிடைமலை. இன்னும் சற்று நுணுகி நோக்கினால் வடநாட்டார் தம் மூலமொழி எனக் கொண்ட வடமொழி தானும் திராவிடத்தாக்கு உடையதே என்பது தெரிய வரும். மேலும் மொழியியலின் தந்தை என்று புனைந்து கூறப்படும் பேரறிஞர் கால்டுவெல் (னுச. ஊயடனறநடட) அவர்கள் திரவிட மொழிகள் சித்திய (ளுஉலவாயைn) மொழிகளுடன் இன்றியமையா உறவுடையது என்று கூறுகிறார். அஃதாவது நான்காம், ஆறாம் வேற்றுமை யுருபுகள், உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, எதிர் மறைவினை, தழுவும்சொல் முந்திநிற்றல், எச்சங்களே உரிச் சொல்லாக நிற்றல், வினைத் தொடர்ச்சியினமாக எச்சங்களை யாளுதல், உயிரிடைப் பட்டவன்மை திறந்த உயிர்ப்புடைய மென்மை இனமாக மாறி ஒலித்தல், நாவடி மெய்களாகிய டணள உடைமை சுட்டு, எண், இடப்பெயர் முதலியன இம் மொழிகளுள் ஒற்றுமையுடையன வாகக் காணப்படும். சித்திய இனம் ஆசிய ஐரோப்பா முழு மையிலும் பரந்து கிடப்பதால் திராவிட இனத்தின் தொடர்பும் இவ்விரு கண்டங்களையும் தழுவியுள்ளதென்று பெறப்படுகிறது. பேரறிஞர் போப்பையர் (னுச. ழு.ரு. ஞடியீந) “தமிழ், ஐரோப்பிய மேலை நாடுகளில் உள்ள கெலத்திய (ஊநடவள) தெயுத்தானிய (கூநரவடிளே) மொழிகளை ஒத்திருக்கின்றது என்கிறார். இவ்விரண்டு இனங்களும் ஆரிய இனத்தின் மிகத் தொலைவுக் கிளைகள் என்பர். இன்னும் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, அமெரிக்க மொழிகளும் வியக்கத்தக்க முறையில் தமிழ்க்குழுவை ஒத்துள்ளன” என்று அறிஞர் கூறுகின்றனர். இதனால் தமிழ்க்குழு உலக முழுமையும் உறவுடையது என்பது பெறப்படுகிறது. 3. தென் இந்தியாவின் பழைமைக்கான சான்றுகள் நில நூல்களை (ழுநடிபசயயீhல) மேற்போக்காகப் பார்ப்பவர் களுக்குக் கூடச் செடி கொடி வகைகளிலும், உயிர் வகைகளிலும் செழித்து, மனித நாகரிகப் பழைமை வகையிலும் மிகச் சிறந்து விளங்குவது நடுக்கோட்டுப் பகுதியே (நுளூரயவடிசயைட சநபiடிளே) என்பது விளங்கும். இதுவே உயிர் வகைகள் பெருகுதற்கேற்ற தட்பவெப்ப நிலைகளைச் சிறப்பு வகையிற் பெற்றுள்ளது. இப் பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் செல்லச் செல்ல உயிர் வளர்ச்சிக்குப் பலவகைச் செயற்கைத் துணைகள் வேண்டியிருப்பது தெரியவரும். உயிர்த்திரளின் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும் அழகமைப்பிற்கும், எண்ணிக்கைப் பெருக்கிற்கும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது. ஸ்விஸ் நாட்டு (ளுறவைணநசடயனே) அறிஞர் ஒருவர் நினைவூட்டு கிறபடி உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் ஐந்தடி உயரந்தானும் வளர்வது அரிது. துருவங்களண்டைப் பாசிகள் கூட மிக அருமையாகவே காணப்படுகின்றன. ஆனால், நம் தென் இந்தியா போன்ற நடுக்கோட்டுப் பகுதியிலோ நூறு, நூற்றிருப்பது அடி உயரமுள்ள மூங்கில்கூடப் ‘புல்’ எனப்படுகிறது. “புறக்கா ழனவே புல்லென மொழிப” என்னும் தொல்காப்பிய உரை காண்க. மற்றும் ஆலமரம் நமக்கு ஒரு மரமே; குளிர்ந்த வடநாட்டினர் அஃது ஒரு காடு எனக் கணிப்பாராம். எனவே, உயிர்வகைகளின் பிறப்பிடம் தென் பகுதியாயிருப் பதே பொருத்தமுடையது. நடு ஆசியா, தென் உருசியா, வடதுருவம் இவை ஒருகாலத்து உறைவிடங்களாயிருந்திருந்தால் கூடுமேயன்றி முதலிடங்களாக இருந்திருக்க முடியா. மேலும் உலகின் தட்பவெப்ப நிலைகளைப் பார்த்தாலும் மனிதர் தோற்றம் முதலில் ஏற்பட்டது தென் இந்தியாவிலேயோ அல்லது அதன் அருகிலேயோதான் என்பது போதரும். நிலநூல் கூறுகின்றபடி இம் மண்ணுலகம் ஞாயிறோடு ஞாயிறாய் அதன்பாரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியாய் இருந்தது. ஞாயிறு தன்னைத் தானே சுற்றும் விரைவினால் அதனினின்றும் சிதறி வீழ்ந்த திவலைகளே கோள்களும் துணைக்கோள்களும் ஆகும். நமது மண் உலகமாகிய கோளும் அத்தகைய ஒரு பிழம்புத் திவலையேயாம். முதலில் இதுவும் ஞாயிற்றைப் போன்ற ஆவிப் பிழம்பாகவே இருந்து படிப்படியாகக் கொதித்துருகி நிற்கும் குழம்பாகவும், அதன்பின் ஞாயிற்றைச் சுற்றும் விரைவினாலும், தன்னைத்தானே சுற்றும் விரைவினாலும் மேன்மேலுங் குளிர்ந்து திண்மையான மேல்தோட்டினை உடையதாகவும் மாறிவந்தது. இங்ஙனம் மாறுவதில் நாம் உற்று நோக்கத்தக்க உண்மை ஒன்றுண்டு. ஒரு பம்பரம் சுழலும்பொழுது அதில் அசையாத பகுதிகள், நடு அச்சு பம்பரத்தைத் துளைக்கும் இடமான உச்சியும் அடிப்பகுதியுமேயாகும். பம்பரத்தின் நடுவட்டமே மிக விரை வாகச் சுழலும். இதுபோலவே உலகிலும் வடதென் துருவப் பகுதிகள் பெரும்பாலும் அசையாமல் தம்மைத்தாமே சுழலும் நடுக்கோட்டுப் பகுதியே மிக விரைவாகச் சுழலும் இடமாம். இக் காரணத்தால் மேல்தோடு குளிரும்போது பிற பகுதி களைவிட இந் நடுக்கோட்டுப் பகுதியே முன்கூட்டிக் குளிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கொதிக்கின்ற பிழம்பில் உயிர்வகைகள் இருக்க முடியாத தல்லவா? எனவே, முதன்முதல் குளிர்ந்து நேரிய தட்பவெப்ப நிலைகளை உடைய இப் பகுதியிலேயே உயிர் வாழ்க்கைத் தொடங்கி இருத்தல் வேண்டும் என்று உய்த்து ணர்வதில் தவறென்ன? இனித் தென் இந்திய மண் இயல்புபற்றி ஞாலநூலார் (ழுநடிடடிபளைவள) கூறுவதைப் பார்ப்போம். இவர்களது ஆராய்ச்சி யின்படி, தென் இந்தியா இலங்கை இவை பெரும்பாலும் கருங்கற் பாங்காகவே இருக்கின்றன. இவற்றின் பாறைகள் நெருப்பு வண்ணப்பாறை (ஐபநேடிரள சடிஉமள) என்ற வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கொதிக்கின்ற நெருப்புக் குழம்பாயிருந்து பின் இறுகிய பாறையாகும். எனவே, இதில் எத்தகைய உயிர்வகையும் இருப்பதற்கு இடமில்லை. இதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னைய காலம் தொட்டே, தென் இந்தியா நிலப்பகுதியாக இருந்தது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வடஇந்தியா, இமாலயம், பிற ஆசியப் பகுதிகள் இவற்றின் மண் இயல்பையும் பாறை இயல்பையும் பார்த்தால், அவை மிகவும் பிற்பட்டவை என்பது தெளிவாக விளங்குகிறது. வட இந்தியப் பகுதிகளின் நிலத்தில் எவ்வளவு ஆழந் தோண்டினாலும் கருங்கல் பாங்கான நிலம் காண்பதரிது. ஏனெனில், அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிர ஆண்டுகளாகச் சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல்களால் ஏற்பட்டதேயாகும் என்க. இதனினும் சற்றுப் பழைமையான இமாலயமோ எனில் உலக வரலாற்றின் மிகப்பிந்திய நாள்வரையிற் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடற்சிப்பிகளும், நண்டு முதலிய கடலுயிர்களின் எலும்புக் கூடுகளும், சுவடுகளும் இவ் வுண்மைக்குச் சான்று பகர்வனவாம். மேலும், இவ் விடங்களின் நில அடுக்குகளில் செடி கொடி வகை உயிர் வகைகளின் சுவடுகள் காணப்படுகின்றன. அவையும் மிகப்பழைய உயிர் வகைகளாக இல்லை. இவற்றிற்கு மாறாகத் தென் இந்தியப் பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர்வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல்லே காணப் படுகிறதென்று முன் கூறினோம். அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி கொடி வகைகள், உயிர்வகைகள் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன. மேலும், திருநெல்வேலிக் கோட்டத்தைச் சேர்ந்த ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் மிகப்பழைமையான மனித எலும்புக் கூடுகளும், தலை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நுணுகி ஆராய்ந்த அறிஞர் இவையே உலகின் மற்றெந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும்விடப் பழைமை வாய்ந்தவை என்றும், பெரும்பாலும் இவையே மனிதத் தோற்றத்தின் தொடக்க காலத்தைச் சார்ந்தவையாயிருக்கக்கூடு மென்றும் அறிவிக்கின்றனர். நிலஇயல், நிலத்தோற்ற இயல் (ஊடிளஅடிடடிபல), ஞால இயல் (ழுநடிடடிபல), ஆவி (ஆநவநடிசடடிபல) மண்டல நிலை இயல் இவற்றின் துணைகொண்டும் உய்த்துணர்வு கொண்டும் மிகப் பழைமையான காலத்தின் உலகப்படத்தை அறிஞர்கள் பலர் வரைந்து காட்டி யுள்ளனர். அதில் சென்ற 1,50,000 அல்லது 2,00,000 ஆண்டுகளாகத் தென் இந்தியா, நிலப்பகுதியாகக் இருந்து வந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இன்னும் தமிழ்நாட்டின் பழைமையைக் காட்ட வரலாற்றுச் சான்றுகளும் பல உள. ஆரியர் வட இந்தியா வந்தது கி.மு. 1500 என்றும் 2000 என்றும், 3000 என்றும் பலவாறாக வரலாற்றிஞர் உரைக்கின்றனர். எப்படியும் திராவிடர் நாகரிகம் இதனினும் பழைமையானதாதலின், இது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற் பட்டதென்பதற்கு ஐயமில்லை. அதோடு இந்தியாவிற்கு வந்தபின், ஏற்பட்டதாதலால் அதற்கும் திராவிட நாகரிகம் முற்பட்டதென்பது சொல்லாமே அமையும். வரலாற்றறிஞர் பலர் இருக்கு வேதமே உலகின் முதல் இலக்கியம் என்று கருதுகின்றனர். இவர்களுக்குத் தமிழிலக்கியத் தைப் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் இருந்திருக்க இடமில்லை. தமிழ்நாட்டாரின் நான்கு ஊழிகளும் வட நாட்டார் பாகுபாடாகிய 4 யுகங்களும் ஒன்றே என்று கீழே காட்டுகிறோம். அதன்படி தமிழின் தலை இடைச்சங்கங்கள் முதல் மூன்று ஊழிகளுக்குட்பட்டவை வேதங்களோ பாரத காலமாகிய மூன்றாம் ஊழி இறுதியை ஒட்டி அப் பாரதக் கதையை எழுதிய வேதவியாசரால் ஏற்பட்டவை. இதனைத் தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையாலும் காணலாம். “நான்மறை” என்னும் சொற்றொடர்க்குப் பொருள் கூறுமிடத்து அவர், “நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடை மையால் நான்மறை என்றார்; அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவகாரமும், சாமவேதமும் ஆம். இனி இருக்கும் யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது; இவர் (தொல்காப்பியர்) இந் நூல் செய்த பின்னர், வேத வியாசர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்குகூறாக இவற்றைச் செய்தாராதலின்” என்று கூறுகிறார். இதனால் தமிழின் பழைய நூலாகிய தொல்காப்பியம் இருக்கு முதலிய வேதநூல்களுக்கு முந்தியதென்பது பெறப்படும். ஆரிய நாகரிகத்தினும் தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமையுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது தொடக்கற்ற பழம் பெருமையே காட்டும். திருக்குறளில் பழங்குடி என்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர், “சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்ட குடி” என்று கூறுவது காண்க. கி.மு. 1000 ஆண்டுக்கு முன்னதாகக் கூறப்படும் பாரதப் போரில் உதியஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன் இருபடைக்கும் சோறு வழங்கியதாகப் புறப்பாடல் ஒன்று கூறுகின்றது. இங்ஙனம் பெருஞ்சோறு வழங்கிய காரணத்தால் இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என அழைக்கப் பட்டான். இவனைப் பாடிய புலவரான முரஞ்சியூர் முடிநாகராயரும் இவன் காலத்தவராதலின் பாரத காலந் தொட்டே தமிழிற் சிறந்த பாக்கள் இருந்தமை மறுக்கமுடியாத உண்மையாகிறது. பாரதக் கதையில் பாண்டியனது தலைநகர் மணவூர் என்று கூறப்படுவதனால் அஃது இடைச்சங்கத்தினும் பிந்தியது என்றும், வால்மீகியாரின் இராமாயணத்தில் கவாடபுரமே தலைநகராகக் கூறப்படுவதால் அஃது இடைச்சங்க காலத்தில் இருந்ததென்றும், தலைச்சங்கம் இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் மிகப் பழைமையானது என்றும் ஏற்படுகின்றன. தவிர, சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் முதலிய சோழ மன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவர். இராமாயண பாரத காலங்களிலும் சிலப்பதிகார காலத்திலுங்கூட இவர்கள் மிகத் தொன்மையான புராணத் தலைவராகவே கருதப்பட்டனர். சோழரின் பழைமையிது வாயின் அவரினும் பழைமையான பாண்டியரைப் பற்றிக் கூற வேண்டுவதில்லை. 4. குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? இதுகாறும் தென் இந்தியா உலகின் மிகப்பழையான நிலப் பகுதி என்றும் மிகப் பழைமையான செடி கொடி வகைகளும், உயிர்வகைகளும், மனித நாகரிகமும் இதில் இருந்திருக்கின்றன என்றும் காட்டினோம். இனி, இத் தென்னாட்டிற்கும் தெற்கில் குமரிக்கண்டம் என்றோ இலெமூரியாக் கண்டம் என்றோ, ஒரு நிலப்பரப்புடன் தமிழ்நாட்டுக்கு என்ன தொடர்பு என்பதையும் விளக்குவோம். உயிர்த்தோற்றம், மனிதத்தோற்றம் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் செடி கொடி வகைகள் உயிர்கள் இவற்றின் செழித்த வளர்ச்சியும், பெருக்கமும், அளவும், உலக நடுக்கோட்டுப் பகுதியிலேயே தலைசிறந்து விளங்கின என்று காட்டினர் என்பதாக மேலே கூறினோம். அங்ஙனம் நடுக்கோட்டுப் பகுதிக்கு அண்மையிலோ, அல்லது நடுக்கோட்டுப் பகுதியிலோ இருக்கும் இக்கால நிலப் பகுதிகள் ஆப்பிரிக்கா, தென் இந்தியா, இலங்கை, மலாய நாடு, கிழக்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா என்பவையே. இந் நிலப்பரப்புகள் இன்றும் செடி கொடி வகைகள், உயர் மரங்களடர்ந்த காடுகள், உயிர் வகைகள் முதலியன செறிந்து விளங்குகின்றன. இவற்றுள் தென் அமெரிக்கா அண்மையிலேயே மேல் நாட்டினரது குடியேற்ற நாடாகிறது. அதற்கு முன் பழைமையான பெருபிய (ஞநசரஎடயn), மய (ஆயலயn) நாகரிகங்கள் தென் அமெரிக்கா, நடு அமெரிக்காப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்தன. இந் நாகரிகங்கள் அப்பகுதிகளிலேயே ஏற்பட்டவையல்ல. இலெமூரிய நாகரிகத்தின் கிளையாகிய அத்லாந்திய நாகரிகத்தை ஒட்டி ஏற்பட்டவையே. ஏனைய பகுதிகளுள், இந்தியாவில் மண் செடி கொடி உயிர் இனங்கள் பெரிதும் ஆப்பிரிக்கா இனங்களை ஒத்திருக்கின்றன; அதுவே போன்று கிழக்கிந்தியத் தீவுகள், மலாய், பஸிபிக் தீவுகள் இவை ஒருசார் ஆஸ்திரேலிய இனங்களையும், ஒருசார் வட அமெரிக்காவிலுள்ள காலிபோர்னிய இனங்களையும் ஒத்திருக்கி ன்றமை காணலாம். ஆப்பிரிக்காப் பக்கமிருக்கும் மடகாஸ்கர் (ஆயனயபயளஉயச) தீவு நில இயல்படி ஆப்பிரிக்காவுடன் வைத்தெண்ணப்படினும், உயிர் வகை செடி கொடி வகைச் சார்பில் முற்றிலும் ஆப்பிரிக்கா வையும் ஒவ்வாது ஆசியாவையும் ஒவ்வாது இரண்டிற்கும் இடைப்பட்ட தொரு நிலையிலிருப்பது குறிப்பிடத்தக்கது. சில காலங்களுக்குமுன் ஸர் ஜான் மரே (ளுசை துடிhn ஆரசசல) என்பவர் இந்துமாக்கடல் ஆராய்ச்சிக்கு என இருபதினாயிரம் பொன் முதலீடு வைத்துச் சென்றனர். அதன் பயனாக நிறுவப்பெற்ற ஆராய்ச்சிக் கழகத்தார், சிந்து ஆறும் அவ் ஆற்றின் பள்ளத்தாக்கும், அதன் அருகிலுள்ள ஆரவல்லி மலை (ஹசயஎயடடi ழடைடள)களும் கடலுள் பெருந்தொலை சொக்கோத்ரா (ளுடிமடிவசய) வரை நீண்டு கிடந்ததற்கான குறிகள் அத் தீவில் உள்ளன என்று கூறுகின்றனர். குறிப்பாக ஆரவல்லி மலையின் தொடர்ச்சியும் சிந்து ஓடிய பள்ளத்தாக்கும் அதிற் காணப்படுகின்றனவாம். ஆப்பிரிக்காவில் போபோர்ட் (க்ஷநயரகடிசவ) குழுவைச்சார்ந்த செடி வகை உயிர்வகைகள் இந்தியாவில் உள்ள பஞ்செத்துக்கள் (ஞயnஉhநவள) கத்தினிகள் (முயவாnளை) என்பவற்றையும், ஆப்பிரிக்கா விலுள்ள உவிட்டனெஜ் (ருவைநnhயபந) குழுவைச் சேர்ந்தவை இந்தியாவிலுள்ள இராஜ்மகால் (சுயதஅயாயட) செடிகளையும் பெரிதும் ஒத்திருக்கின்றன. ஜுராஸ்ஸிக் (துரசயளளiஉ) உயிர்க்குறிகளுள் கச்சைச் சார்ந்தவை பெரிதும் ஆப்பிரிக்க உருப்படிகள் போன்றே இருக்கின்றன என்று பேரறிஞர் ஸ்டோலீஸ்கா (ளுவடிடநளைமள) உரைக்கின்றார். இவருடன் ஒத்துழைத்தவரான திரு கிரீஸ்பக் (ஆச. ழுசநைளயெஉh) ஆப்பிரிக்காவில் உம்தயுனி ஆற்றின் கரையிற்கண்ட முப்பத்தைந்து செடிவகைக் குறிகளுள் இருபத்திரண்டு இந்திய வகைகளை ஒத்திருக்கின்றன என்கிறார். கடைசியிற் குறிப்பிட்ட இனங்களின் ஒற்றுமை இலெமூரியாக் கண்டத்தின் மெய்ம்மையை நாட்டும் வகையில் மிகவும் மதித்தற்குரிய சான்று ஆகும். ஏனெனில் அச் செடி வகைகள் உப்புமண்ணிலோ உப்பு நீரிலோ வளர்பவை அல்ல; நன்னீரிலேயே வளர்பவை ஆகும். எனவே, கடல் வழியாக எவ்வகையிலும் இந்த ஒற்றுமையை விளக்க முடியாது. இலெமூரியாக்கண்டம் மூலமாக மட்டுமே இத்தகைய நிலச்சார்பான வளர்ச்சி ஒற்றுமை ஏற்பட்டி ருக்க முடியும். மேலும், திருநெல்வேலிக் கோட்டத்தைச் சார்ந்த தூத்துக் குடியிலும், தென் திருவாங்கூர்ப் பகுதியைச் சார்ந்த (நாகர்கோவில் என்று தற்போது அழைக்கப்படும்) கோட்டாற்றிலும் இந்தியா எங்கணும் இல்லாததும், இந்தியருக்குப் பெயரே தெரியாததும் ஆன ஒரு மரம் உளது என்றும் அதனை அவ்விடத்து மக்கள் சீமைப்புளி, பப்பரப்புளி, யானைப்புளி எனப் பலவாறாகப் புனைபெயரிட்டுக் குறிக்கின்றனர் என்றும் கால்டுவெல் கூறுகின்றார். இம்மரம் இந்தியாவுக்கு இத்தனை அருமை யாயினும் ஆப்பிரிக்காவுக்கு மிகப் பொதுப்படையாய் உரிமையுடையது ஆகும். இன்னும் செடி கொடி மர வகைகளுள் தேக்கு தென் இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவிற்கும்; புளி சாவகத் (துயஎய)திற்கும் இந்தியாவிற்கும்; தென்னை இந்தியா, இலங்கை மேலனேசியா (ஆநடயநேளயை) என்பவற்றிக்கும்; கரும்பு சீனம், இந்தியா, சாவகம் என்பவற்றிற்கும், நெல் இந்தியாவிற்கும், பர்மாவிற்கும், சீனத்திற்கும், ஜப்பானிற்கும், சாவகத்திற்கும் பொது உரிமையாய் இருக்கின்றமை காண்க. ஆப்பிரிக்காக் கண்டமும் இந்தியாவும் பெரிதும் ஒத்திருப் பதிலிருந்து இலெமூரியாக் கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியா வையும் இணைத்திருக்க வேண்டுமென்பதும், கிழக்கிந்தியத் தீவுகளும் ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதிலிருந்து இலெமூரியா ஆஸ்திரேலியா வரை ஒரு காலத்தில் எட்டியிருக்க வேண்டும் என்பதும் பஸிபிக் தீவுகள் வட அமெரிக்காவில் காலிபோர்னியப் பகுதியுடன் ஒற்றுமையுடையவையாயிருப்பதால் இலெமூரியா அதனை ஒருவகையில் உள்ளடக்கி இருந்தது என்பதும் விளங்கும். இலெமூரியாக் கண்டத்தின் மூலமாக ஆப்பிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது. பெர்மியன் (யீநசஅயைஅ) மயோஸீன் (ஆiடிஉநநே) காலங்களில் என்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது. பலயோஸிபிக் (யீயடயநடிணடிநை) காலங்களில் என்றும் கருதப்படுகிறது. இன்றைய உலகப்படத்தை எடுத்துப் பார்த்தாலுங் கூட இந்தியாவும் ஆப்பிரிக்காவும் முன் இணைக்கப்பட்டிருந்தன என்று காட்டும் அறிகுறிகளைக் காணலாம். இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து ஆப்பிரிக்காவினருகிலுள்ள ஸெசெல்ஸ் (ளுநலஉhஉடடநள) மடகாஸ்கர், மோரீஸ் (ஆயரசவைரைள) வரைக்கும் இலக்கத் தீவம் (டுயஉயனiஎநள) மாலதீவம் (ஆயடனiஎநள) சாகோஸ் தீவுக் (ளுயபடிப) கூட்டம் ஸாயாதே முல்லா (ளுயலயனநஅரடடய) அதஸ்கரை (ஹனயள க்ஷயமே) இவை உட்படப், பல பவளத் தீவுகளும் மணல் மேடுகளும் காணப்படு கின்றன. இவற்றுள் ஸெசெல்ஸைச் சுற்றி நெடுந்தொலை கடல் 30 அல்லது 40 பாக ஆழத்திற்கு மேலில்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான அகன்ற மணல்மேடே என்றும் டார்வின் (னுயசறin) என்பவர் குறிப்பிடுகின்றார். மேற்கூரிய இத் தீவுகள் அனைத்தும் இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் முன் பிணைத்திருந்த நிலப்பகுதியின் முதுகெலும் பென்னலாகும். ஆல்பிரட் வாலஸ் (ஹடகசநன றுயடடயஉந) என்பவர் இலெமூரியாக் கண்டம் பிற்றை நாட்களில் இருபிரிவாகப் பிளந்து இருகண்டங் களாய்விட்டது என்றும், அப் பிளவு கிழக்கிந்தியத் தீவுகளினூடு சென்று அவற்றை இருவேறு நிலைபடப் பிரித்தது என்றும் கூறுகிறார். இதன்படி கிழக்கிந்தியத் தீவுகளில் மேல்பக்கத்திலுள்ள ஸீமாத்ரா (ளுரஅயவசய) ஐhவா (துயஎய) போர்னியோ (க்ஷடிசநேடி) முதலிய பெரிய தீவுகள் கிழக்குப் பாதியை அஃதாவது இன்றைய ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவை என்றும், கீழ்ப்பக்கமுள்ள ஸெலிபீஸ் (ஊநடநநௌ) மொலுக் காஸ் (ஆடிடரஉஉயள) நியூகினி, (சூநற ழுரiநேய) ஸோலமோன் (ளுடிடடிஅடிn) தீவுகள் முதலியவை கிழக்குப்பகுதி அதாவது இன்றைய ஆஸ்திரேலியாவுடன் சேர்ந் தவை என்றும் ஏற்படுகின்றன. இவ்விரு பகுதிகளையும் பிரிக்கும் நீர்நிலை பலிஜ்யாம்பக் தீவுகளினிடையேயுள்ள கால்வாயேயாகும் என ஆல்பிரட் வாலஸ் கூறுகிறார். உயிரின வகைகளுள் இலெமூரியா நாட்டிற்குச் சான்று களாவன இலெமூரியாக் கண்ட அமைப்பைச் சுற்றியிருக்கும் நாடுகள் அனைத்திலும் காணப்படும் அரிமா, கழுதைப்புலி, சிறுத்தை, நரி, புள்ளிப்புலி, கலைமான், படமான் (ழுயணநடடந ஐனேயைn க்ஷரளவயசன யனே ளுஉயடல யவேநயவநச) முதலியவைகளும், இன்னும் இவை போன்ற பிற (ளுயனேபசடிரளந) விலங்குகளுமே. இவற்றுள் அரிமா இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும், காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா என்னும் இவற்றிலும் வாழ்வது காண்க. மேலும் தென் கண்டத்திற்கே சிறப்பாகக்காணும் காரன்னம் (க்ஷடயஉம ளுறயஅ) தமிழ்நாட்டில் முன்னாள் இருந்திருக்க வேண்டு மென்று தெரிகிறது. “ஓதிம விளக்கின்” என்ற பெரும்பாணாற்றுப் படைத்தொடருக்கு உரை கூறுமிடத்து நச்சினார்க்கினியர், “ஈண்டுக் காரன்ன மென்றுணர்க” என்றும், “வெள்ளை யன்னம் காண்மின்” என்ற சீவக சிந்தாமணிப் பகுதி உரையில், “காரன்னமு முண்மைபின் வெள்ளையன்னம் இனம் சுட்டிய பண்பு,” என்றும் கூறியுள்ளார். நீர்நாயுள் நிலவாழ்வுடைய தொருவகை தென் கண்டத்துள் நீரெலி என்று அழைக்கப்படுவதாகவும், அதன் மயிர் நூற்க உதவுவதென்றும் கூறப்படுகிறது ஐங்குறுநூற்றில். “பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர” என்ற இடத்து நீர்நாய் என்றது மருதநிலத்து ஆற்றினிடை யுள்ள நீர்நாயாகும். இதனோடு சிலப்பதிகாரத்துள் எலிமயிரி னின்றும் ஆடை நெய்யப்பட்டதாகக் கூறுவதை நோக்க, அந் நீர்நாய்க்கு நெருங்கிய உறவான நீரெலியும் தமிழ்நாட்டில் இருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இந்துமாக் கடற்பகுதியைச் சேர்ந்த நிலப்பகுதிகளிலேதாம் பாம்புகளில் பல்வேறுவகைகளும் காணப்படுகின்றன. அவற்றுள் இந்தியாவில் மட்டும் இருநூற்று முப்பது வகைகள் உள்ளன என்று கூறுகின்றனர். இவற்றுள் மிகப்பெரிய இனம் தென் அமெரிக்காவிலுள்ள அனகொண்டாவும் (ஹயேஉடினேய) இந்தியாவிலும் மலேயாவிலும் உள்ள பாந்தளுமே (ஞலவாடிn) இவை முப்பது அடி நீளமுள்ளது. நச்சுப் பாம்புகளுள் மிகக்கொடியதும், பெரியதும் இந்தியாவிலுள்ள அரச நாகமேயாம். இது பதினெட்டு அடி நீளமுள்ளது. இது பர்மா, தென் சீனம், மலேயா பிலிப்பைன் தீவுகள் (ஞாடைiயீயீiநே ஐளடயனேள) என்பவற்றிலும் காணப்படும். இதற்கடுத்த படியாகப் பெரிய நச்சுப் பாம்பு தென் கண்டத்திலுள்ள பறவை நாகம் (னுசயபடிn ளுயமேந) ஆகும். இது பன்னிரண்டு அடி நீளமுள்ளது. நல்லப் பாம்பு, விரியன் என்பவை இந்தியாவிற்கே உரியவை. இப்பாம்புகளுள் பெரும்பாலன நீரை வெறுப்பவை. ஆதலால், இவையனைத்தும் கரை வழியாக இலெமூரியா போன்ற ஓர் இடத்திலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பது தெளிவு. கடற்பாம்புகள் கூட இந்துமாக்கடலிலும், தென்பஸிபிக்கி லுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென் இந்தியாவில் இலெமூரியப் பகுதிக்குரிய ஊர்வனவும், புழுப்பூச்சி வகைகளும் இன்றளவும், அழியாது நிலைபெற்று வருகின்றன. செடிவகைகளுள் பெரும்பாலனைவும் அப்படியே. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட கங்கை, சிந்து ஆற்றுவெளிகள், இமாலயம், சீனம் என இவற்றின் உயிர்கள் வந்து கலந்தபின் இலெமூரியப் பகுதிக்கே சிறப்பாயுள்ள பால் குடிக்கும் உயிர் களாகிய (ஆயஅஅயடள) காண்டாமிருகம், கம்பளி (ஆயஅஅடிவா) யானை முதலியன புதிய சுற்றுச்சார்பினாலும் தட்பவெப்ப நிலை களாலும் அவற்றுடன் போட்டியிடமுடியாதழிந்தன. இவ் வகைளுள் பெரும்பாலானவை இன்று ஆப்பிரிக்காவிலுள்ளன. இனி, நிலத்தோற்ற இயலார் (ஊடிளஅடிபநலே) மனிதத் தோற்றத்தைப் பற்றிக் கூறுவதை எடுத்துக் கொள்வோம். உயிர் வகைகள் அனைத்திலும் அறிவாலும் உடலைப்பின் உயர்வாலும் தலைமையானவன் மனிதனே. படைப்புக் காலந்தொட்டு எல்லா உயிர்வகைகளும் தனித்தனியாகப் படைக்கப்பட்டன என்பது பலரது எண்ணம். மேல் நாட்டுச் சமயவாதிகளுள் பலர் இன்னும் இதே கொள்கை உடையவராயிருக்கின்றனர். ஆனால் அறிவியலார் உயிர்வகைகள் அனைத்துமே படிப்ப டியான வளர்ச்சி உடையவை என்றும், முதல் முதல் ஒரறிவுயிர் களாகிய செடி கொடி வகைகளும், பின் படிப்படியாக ஈரறிவுயிர் முதல் ஐயறிவுயிர்களும் கடைசியில் மிக உயர்ந்த ஆறறி வுயிராகிய மனிதப் பிறவியும் ஏற்பட்டன என்றும் அவர்கள் காட்டுகின்றனர். இத்தகைய படிமுறை வளர்ச்சியில் (நுஎயடரவiடிn) முதுகெலும் பற்ற உயிர்களுக்குப்பின் முதுகெலும்புடையவையும் அவற்றுள்ளும் முட்டையிடு பவற்றிக்குப் பிந்தியே குட்டியிட்டுப் பால் கொடுப்பவையும் தோன்றின என்றும் : குட்டியிட்டுப் பால் கொடுப்பவற்றுள்ளும் உயர்ந்தவையான மனிதக்குரங்கு முதலிய இருகால் உயிர்கள் மிகப்பிற்காலத்திலும் அதனினும் ஒருபடி உயர்ந்த அறிவுடைய மனிதப்பிறவி கடைசியிலும் தோன்றின என்றும் அறிஞர்கள் உடலமைப் பாராய்ச்சியினாலும் நிலத்தோற்ற ஆராய்ச்சியினாலும் நிலை நாட்டுகின்றனர். ஞாலஇயலின்படி பார்த்தாலும் இப் “படிமுறை வளர்ச்சி” பொருத்தமாகவே காண்கிறது. மிகப்பழமையான, அஃதாவது அடிப்பகுதியிலுள்ள நில அடுக்குகளில், புலனறிவிற்சிறுமைப் பட்ட உயிர்களின்குறிகளே காணப்படுகின்றன. படிப்படியாகப் புழும் பூச்சிகளும், பின் முதுகெலும்புடையவை, பறவைகள், குட்டியிடுபவை, இருகாலுயிர் என்பவையுங் காணப்படுகின்றன. ஆனால் இவ் விருகாலுயிர்களுக்கும் மனிதனுக்கும் வேற்றுமை மிகுதியாயிருப்பதால் அவற்றிற்கு இடைப்பட்ட இனம் ஒன்று இருக்க வேண்டும் என்று அறிவியலறிஞர்கள் நினைத்தார்கள். அதன்படி தேடியதில் கிட்டத்தட்ட மனிதரது அமைப்பும், மூளை உருவும் உடைய லெமூர் (டுநஅரச) என்ற உயிர்வகை ஒன்று நடுக்கோட்டுப் பகுதியைச் சுற்றி இருப்பதைக் கூர்ந்து நோக்கி அந்த லெமூர்களிலிருந்தே மனிதர் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். ஆனால் தனித்தனிச் சிதறிக்கிடக்கும் நடுக்கோட்டுப் பகுதி நாடுகளில் தனித்தனி அவை ஏற்பட்டிருக்க முடியாதென்பது கண்டு அவை அனைத்திற்கும் பொதுவான நடுவிடத்தில் அத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என முடிவு கட்டினர். அப்பொது நடுவிடத்திற்கு “லெமூர்” என்ற அவ்வுயிரின் பெயரையே அடிப்படையாகக் கொண்டு இலெமூரியா என அறிஞர் பெயர் வகுத்தனர். சிந்து நாட்டிலும் திருநெல்வேலிப் பகுதியிலும் மிகப் பழைய மண்டை யோடுகளும் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன என்பது மேற்கூறப்பட்டது. சாவக்காட்டில் ஒராங்உட்டாங் என்றும், காட்டுமனிதன் என்றும் கூறப்படும் குரங்கினம் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் மிகப் பழையதொரு மண்டையோடு எடுக்கப்பட்டுள்ளது. தென்னாட்டில் காணப்படும் தாழிகளும் ஏனங்களும் மிகப் பழைமையைக் காட்டுகின்றன. தென்னாட்டார் இந்தியாவுக்குக் கொடுத்த முதற்பெயர் ‘நாவலந் தீவம்’ அல்லது ‘நாவலந் தண் பொழில்’ என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. நாவலந்தீவம் என்ற தொடரால் ஒருகாலத்து இது வடஇந்திய ஆசியப் பகுதிகளுடன் ஒட்டாது வடக்கேயும் கடலாற் சூழப் பட்டிருந்தது என்பதும், நாவலந் தண்பொழில் என்ற சொல் வழக்கால் அந்நாள் மனிதர் தொகை குறைவாயிருந்தபடியால் ஊரும் நாடும் அருகிக் காடே நிறைந்து சோலைபோல் இருந்தது என்பதும் உய்த்துணரலாகும். இந்துமாக் கடற்பகுதியைச் சுற்றியிருக்கும் இன்றைய மொழி களனைத்தையும் ஒப்பிட்டு நோக்குபவர்க்கு எதிர்பாரா வகையில் அவற்றிடையே ஒருமைப்பாடுகள் காணப்படுவதும், அவ்வொரு மைப்பாடுகளும் இலெமூரிய நடுப்பகுதிக்கு அண்மையில் வரவர மிகுதியாயிருப்பதும்; ஒருமைப்பாட்டை ஒட்டிக் கோவைப் படுத்திய கோவைகள் எல்லாம் தென்இந்தியா அல்லது குமரிப்பகுதி நோக்கிக் கிடப்பதும் எல்லாம் இலெமூரியாக் கண்ட மொன்றிருந்த தென்பதையே காட்டுகின்றன. மக்களது சமயம், நாகரிகம், பழங்கதை என்பவற்றிற்கூட இதே வகையான எதிர்பாரா ஒற்றுமைகளை நாம் காண்கிறோம். உலகெங்கும் பரந்து காணப்படும் இலிங்க வணக்கம், கன்னியாகிய உலக அன்னை வணக்கம், ஊழிக் கதைகள், தெய்வீகச் சோலைக் கதைகள் என்பவற்றைப் பலகால் உற்று நோக்கினால், அவை, தாமே ஏற்பட்ட ஒருமைப்பாடுகளாயிருக்க முடியாது என்பது புலப்படும். தமிழ்நாட்டாரறிவில் நெட்டிடையிட்டுப் மூன்று பெரிய கடலழிவுகள் ஏற்பட்டிருந்தன என்றும், அவற்றுள் ஈரழிவுக்கு உட்பட்டகாலத்தை ஓர்ஊழி எனக் கொண்டு நான்கு ஊழிப் பாகுபாடு ஏற்பட்டது என்றும், இவற்றுள் முதலழிவு வடமொழியில் மகாபாரதத்திலும் சதபதம், மச்சம் அக்கினி பாகவதம் முதலிய புராணங்களனைத்திலும் சில சில வேறு பாடுகளுடன் கூறப்பட்டுள்ளது என்றும் முன்னர்க் காட்டி உள்ளோம். கிட்டத்தட்ட இதே மாதிரியான வெளிக்கதைகள் யூதர், பாபிலோனியர், கிரேக்கர், மெக்ஸிகோவிலுள்ள செவ்இந்தியர், சீனர், கல்தேயர், இலங்கையர் முதலிய பல நாட்டினரிடையேயும் வழங்குகின்றன. இவற்றுள் பலவும் அவ்வந் நாட்டு மக்களால் சற்றேறக்குறையக் கிறிஸ்து பிறப்புக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்தனவாகக் கூறப்படுவது நோக்கத் தக்கது. இவை ஒரே கடல் கோளைக் குறிப்பனவே யாகும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இத்துடன் “மலையாளக் கரையில் தமிழ்நாட்டின் மிகப் பழைமையான சொற்கள், தொடர்கள், பண்கள், பழக்க வழக்கங்கள், சமயக் கொள்கைகள் பொன்போல் பொதிந்து கிடக்கின்றன,” என்று வரலாற்றறிஞர் காட்டுகின்றனர். அவற்றுள் சில உலக நாகரிகத்தின் மிக அடிப்படையான நிலைமையை விளக்குபவை ஆகும். எடுத்துக்காட்டாக அந் நாட்டினரது ஊமைக் கூத்தை எடுத்துக் கொள்வோம். மாந்தர் பேச்சுப் பழக்கம் மிகக் குறைந்திருந்த ஒரு காலத்திலே தான் செவிப்புலனால் இன்றறியப் படும் கருத்துக் களனைத்தையும் கட்புலனுக்கு உருவகப்படுத்தும் அரிய கலையின் தொடக்கம் ஏற்பட்டிருக்க முடியும். ஆப்பிரிக்க நீக்ரோவர், அமெரிக்கச் சிவப்பிந்தியர் முதலியவர்களிடையிலும், மனித நாகரிகத் தொடக்கத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய உயர்கலைகள் பல இருந்தன என்பது காணலாகும். அமெரிக்க இந்தியர் தமது கண், மூக்கு, செவி ஆகிய புலன்களை மனிதர் எவரும் வியக்கத்தக்க அளவு கூர்மைப்படுத்தி இருந்தனர் என்பதை அந் நாட்டு வரலாறுகள் விளக்கும். அவர்கள் மூக்கு வேட்டை நாய்களுக்கொப்பான மோப்ப முடையவை. செவியும் நாய் முதலிய விலங்குகளுக்கொப்ப பல கல் தொலைவிலுள்ள சிறு ஒலிகளையும் கேட்கும். கண்கள் கழுகுகளின் கண்களைப் போல நெடுந் தொலை காணக்கூடியவை. ஆப்பிரிக்க நீக்ரோவர் தமது பறையொலியைப் பல்லாயிரக் கணக்கான கல்தொலை வரை கேட்கச் செய்யும் ஒரு முறையை உடையவர் என்று சொல்லப்படுகிறது. மனித நாகரிகத்தில் பின்தோன்றிய மொழிகள் கருவிகள் இவை இல்லாமலே மனிதன் வளர்ச்சியடைந்த இடங்களில் இத்தகைய மனித இயல்புக்கு மாறான புலனறிவு வளர்ச்சி ஏற்பட்டது. மாந்தரது பழைய பழக்க வழக்கங்களுள் தாய் வழி உரிமை மிகப் பழைய குடிகள் பலவற்றுள் வழங்கிவருகிறது. இன்றும் மலையாளக் கரையில் மருமக்கள் தாயம் என்ற பெயரால் அது நடைமுறையிலுள்ளது குறிப்பிடத் தக்கது. கருநீசியத் தீவுகளிலும் இம்முறை காணப்படுகிறது. இவ்விடத்தில், தாயம், தாயபாகம் என்பவை வடசொற்கள் அல்ல; தாய் என்ற பகுதியடியாக வந்த தாயம் என்பதற்குத் தாய்வழி உரிமை என்பதே முதற் பொருள்; பின்னர், உரிமை வகை மாறிய பின்னும் வழக்காற்றால் அப் பழைய மொழியே வடமொழி வரையிற் சென்று தந்தைவழி உரிமையைக் கூடக் குறிக்க வழங்கிய தென்றறிக. கோயில்கள், வீடுகள் இவற்றின் அமைப்பிலும் கீழ் நாடுகள் பெரும்பாலும் தமிழ்நாட்டையும், சிறப்பாக மலையாள நாட்டையும் ஒத்திருத்தல் காண்க. பட்டம் விடுதல், சேவல் போர், மஞ்சுவிரட்டு (காளைப் பந்தயம்) சொக்கட்டான் விளையாட்டு முதலிய பல இந்திய விளையாட்டுகள் ஜப்பான் முதலிய கீழ்நாடுகள் பழைமையான உரோமநாடு வரையிலும் பரவியிருந் தமையும் அவை இன்று வரையிலும் நடுக் கீழைநாடுகளுக்குச் சிறப்பாயிருக்கின்றமையும் கூர்ந்துணரத் தகும். கடைசியாக, ஊர் என்னும் மொழியில் ஒர் அரிய உண்மை காணப்படும். முற்காலத்தில் எரிமலையும், கடற்பாம்பும், அச்சந்தரும் விலங்கினங்களும் இருந்தன. ஆதலின், மக்கள் நிலவரமாய்க் குடியிருப்பதற்கின்றி ஆண்டாண்டுக் குடி யேறுவதும், பின் பிற இடங்களுக்கு ஊர்வதும் வழக்கமா யிருந்தன. அதனாலேதான் ஊர் என்ற பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். வடமொழியில் புரம் என்ற சொல்லிலும் இந்தூர், சிங்கப்பூர் என்ற வடநாட்டுப் பிறநாட்டு ஊர்ப் பெயர்களிலும், சால்டியரது தலைநகராகிய ஊர் என்பதிலும் இச் சொல்லின் கிளைகள் காண்க. ஆரிய மொழிகளிலும், உர் - உளர் என்னும் பகுதி முதன்மை பழைமை என்னும் பொருளையே காட்டுவது காணலாகும். மேலும், கடலால் பிரிக்கப்பட்ட பல்வேறு நாடுகளிலும், மனித முயற்சியால் ஏற்பட்ட சட்டிபானைகள், கட்டிடங்கள் முதலியவற்றின் வேலைப்பாடு மட்டுமன்றி, அவற்றைச் செய்ய உதவிய மண் முதலிய பொருள்களும் ஒன்றாக இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் இத்தகைய பொருள்கள், பெரும்பாலும் பய்னபடுத்தப்படும் இடங்களுக்குரிய வையல்லாமல் நெடுந்தொலை விலுள்ளவை என்பதை நோக்க, இத் தொழில்களது பயிற்சி ஒரு பொதுப்பட்ட முதலிடத்திருந்து தான் வந்திருக்க வேண்டுமென்பது ஐயமற விளங்கும். இங்ஙனமாக, இலெமூரியாக் கண்டம் இருந்தது என்பதற் கான அறிகுறிகள் இவை, அறிஞர் அதனைக் கண்டறிந்தவை இவை என்றவற்றைக் காட்டினோம். அக் கண்டம் ஏன் கடலில் மூழ்கிவிட்டது என்பதற்கும் தக்க காரணங்களை அறிஞர் காட்டுகின்றனர். இம்முறையில் நில இயலார் ஆஸ்திரேலியாக் கண்டத்தைப் பற்றி ஆய்ந்தறிந்த சில உண்மைகளுடன் வான இயலார் அதனை விளக்கிக் கூறும் விளக்கமும் அறியத் தக்கதாகும். பலவகையில் ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு ஆகும். இங்குள்ள மரஞ்செடிகள் இயற்கையாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே யாழ்ப்பறவை, துறக்கப்பறவை, ஏமு முதலிய பறவையினங்களும், கங்காரு முதலிய விலங்கினங்களும் வேறெங்கும் காணப்பெறாதவை ஆகும். இதை நோக்க, ஆஸ்திரேலியா உலகொடு சார்பு பெற்றிராத ஒரு தனித் துண்டமோ என்று நினைக்கவும் இடமுண்டு. ஆனால், இந் நினைவு வெறும் உய்த்துணர்வு மட்டுமன்று அறிவியலறிஞர்கள் பலர் வான ஆராய்ச்சியால் இவ் ஆஸ்திரேலியா உண்மையில் ஒரு பொரித்துண்டமே என்கின்றனர். அஃதாவது. அஃது உலகின் இழுப்பு வன்மைக்குட்பட்ட காரணத்தால் உலகின் மீது வந்து விழுந்த ஒரு விண்வீழ்மீனின் சிதைந்த பகுதியேயாம் என்கின்றனர். அம்மீன் விழுந்ததாக்கு வன்மையினாலேதான் அது வரை இருந்த இலெமூரியா கடல்வாய்ப்பட்டதும், அதன் வடக்கிலுள்ள பகுதிகள் உயர்ந்தவை யுமாகும். அதோடுகூடச் செங்குத்தாய் அதுவரை சுற்றிக் கொண்டிருந்த உலகு இருபத்தாறு பாகை (னுநபசநந)யளவு சரிந்து ஓடிப் பின் அத்தாக்கு வன்மை குறையக் குறையச் சரிவும் குறைந்து, இன்று இருபத்து மூன்றரைப் பாகையளவு சரிவில் ஒடுவதும் அதனாலேயே. இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றபின் இப்படி ஏற்பட்ட சரிவும் நீங்கிவிடும் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இதுகாறும் கூறியவாற்றால் மக்கள் இப் பூவுலகில் தோன்றியது நடுக்கோட்டுப் பகுதியிலேயே என்பதும் இப்பகுதி மூன்றாம் ஊழியிறுதியில் கடல் வாய்ப்படத் தலைப்பட்ட போது வடக்கிற் கடல்வற்ற விந்தியமலைக்கு வடக்கில் இப்போதுள்ள பெருநிலப் பரப்பவ்வளவும் மேற்கிளம்பியதென்பதும் பெறப்பட்டன. இதன்பிற் கடற்கோளால் வடக்கு நோக்கித் தள்ளப்பெற்ற தமிழ்மக்கள் மெசபொடோமியா, வட இந்தியா, நடு ஆசியா முதலிய இடங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அதேசமயம் இலெமூரியாவின் மேல்பகுதியிலுள்ளோர் சிலர் ஆப்பிரிக்காவிற்கும், கீழ்ப்பகுதியிலுள்ளோர் கீழ் ஆசியாக் கரைக்கும் சென்றனர். இலெமூரியாவின் கீழ்ப்பகுதியின் ஒரு துண்டே இன்றைய காலிபோர்னியா என்ற வடஅமெரிக்கப் பகுதியாகும். மொழி ஆராய்ச்சியாளர் ஆரிய இனத்தாரின் முதலிடத் தையே மனித வகுப்பின் முதலிடமென மயங்கி, மக்கள் முதலிடம் நடு ஆசியா, அல்லது தென் உருசியா என்று கூறினார் என்றும், அவற்றைத் திருத்திப் பாலகங்காதர திலகர் என்ற வரலாற்றறிஞர் ஆரியர் முதலிடம் வடதுருவப் பகுதியே எனக் காட்டினர் என்றும் முன்னர்க் கூறியுள்ளோம். இக் கொள்கை இலெமூரியாவினின்றே மக்கள் நாகரிகம் பிறந்ததென யாம் காட்டிய விளக்கத்திற்கு முரணானதன்று. அதனையும் உள்ளடக்கி மேற்சென்று விளங்கும் முழுஉண்மை யேயாகும். ஏனெனில், ஆரிய இனத்தவர் வடக்கு நின்றும் தெற்குப் போந்தது கி.மு. 2000 ஆண்டுக்காலத்தில்; அஃதாவது இன்றைக்கு 4000 ஆண்டுகட்கு முன்னே தான். ஆனால் இலெமூரிய நாகரிக காலமோ இன்றைக்கு 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டு 50,000 ஆண்டுகள் வரையில் ஆகும். இலெமூரிய மக்கள் வட துருவம் வரையிற் பரவிச் சென்ற காலத்தில் வட துருவமும், வட பகுதிகளும் இன்று போல் முற்றும் பனிநிலமாயிருக்க வில்லை உலகின் நடுச் சூட்டினின்றும் விடுபடும் வகையில் முதலில் குளிர்ந்தது நடுக் கோடுப் பகுதியே என்று கூறினோம். வடபகுதி குளிரக் குளிர உயிர்கள் அங்குப் பரவ முடிந்தது. இலெமூரியர் செல்லும் காலத்திலும் அஃது இன்றைய ளவுக்குக் குளிராமல் போதிய சூடுடையதாகவே இருந்திருக்க வேண்டும். வட துருவத்தையும் நடு ஆசியாவையும் துருவி ஆராய்ந்த அறிஞர் அவற்றுள் பழைமையான நாள்களில் மிக உயர்ந்த நாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்பதையும், அவை இப்போதிருப்பதைப் போல் குளிர்ச்சியுடையவையாயிராமல் செழித்திருந்தன என்பதையும் காட்டப்போதிய அடையாளங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். இன்று பாலைவனங்களாயுள்ள இராஜபுதனமும், சிந்துவும், மலை நாடாகவுள்ள ஆப்கனிஸ்தானமும், பாரசீகமும், பனிப்பாங்கான சைபீரியாவும் பல்லாயிர ஆண்டுகளுக்குமுன் பெரிய நகரங்களுடனும் மனித வாழ்கைக்கான பல வசதிகளுடனும் இருந்தன என்பதற்கான சான்றுகள் உள. அப்படியாயின் இவ்வட பகுதிகள் இன்று பனி மூடிப் பாழாயிருப்பானேன்? இதற்கு விடை எளிது. உலக நடுச்சூடு முற்றிலும் தணிந்தபின் உலக மேற்பகுதிக்கு ஞாயிற்றிடமிருந்தே சூடு கிடைக்கவேண்டும். ஞாயிற்றின் கதிர்கள் நடுப்பகுதியிலே நேராக விழுகின்றன. இரு துருவங்களிலும் சாய்ந்து விழுவதால், தொலைவு மிகுதியாவதுடன் கதிர்களும் நிலப்பரப்பில் மிகுதியாக விழுவதில்லை. உலகின் சரிவால் ஆண்டில் ஒரு பாதிக்காலம் துருவப் பகுதிகளில் ஞாயிறு மறைவதும், உலகு சுற்றும் விரைவால் காற்று மண்டலம் துருவப் பக்கத்தில் நெருக்கமா யிருப்பதும் அதன் குளிர்ச்சியை இன்னும் மிகுதிப்படுத்துகின்றன. இங்ஙனம் துருவம் குளிரக் குளிர வடபகுதிவரையிற் சென்று வாழ்ந்த மக்கள் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது இயல்பே அன்றோ? அப்போதுதான் ஆரிய இனம் தெற்கு நோக்கி வர நேர்ந்தது. இதனால் தெற்கிலிருந்த இலெமூரியாவிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற தமிழ்ச் சார்பான நாகரிகத்தின் ஒரு வழிக்கிளையே திரும்ப ஆரிய நாகரிகமாக இந்நாட்டிலும் வந்தது என்று ஏற்படுகிறது. வடபகுதியில் வாழும் நாள்களில் குளிரினாலும், பிற குளிர் நாட்டு மக்களுடன் கலந்ததாலும், குளிரைத் தடுக்க அணிந்த ஆடை அணிகளாலும், சுற்றுச் சார்புகளின் நிறத்தினாலும் அவர்கள் நிறம் மாறி வெள்ளை நிறத்தவர் ஆயினர்; பின்னர், சூட்டினால் கறுத்து ஆடையணிகள் குறைவாக அணிந்திருந்த மக்களைவிடத் தம்மை உயர்வாக மதித்துக் கொண்டனர். 5. ஞாலநூல் காலப் பகுதிகள் ஞாலநூலின் ஆராய்ச்சிகளால் ஏற்பட்ட முடிபுகளைப் பார்ப்பவருக்கு முதன்முதலில் அவை வியப்பாகவே தோற்றும். இன்று மலை இருக்குமிடம் கடலாகவும் கடலிருக்குமிடம் மலை யாகவும் இருந்தன என்பதோ, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் உலகின் பரப்பு, தட்பவெப்பநிலை, உயிர்வகை, செடி கொடிவகை முதலியவை இன்றைய நிலைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன என்பதோ முதற்கண் நமதுபொது அறிவுக்கு ஒத்தவையன்றெனவே படக்கூடும். ஆனால், இவை யனைத்தும் அறிஞர் காரண காரியத் தொடர்புடன் தம் ஆராய்ச்சியால் நிலைநிறுத்திய உண்மைகளே ஆகும். பெரும்பாலும் இம் முடிவுகள் நமக்குப் பொருத்த மற்றன வாகத் தோன்றக் காரணம் அவை நமது அறிவுக்குட்பட்ட குறுகிய கால எல்லையுட்படாமைதான். வரலாறுகளுள் நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய சான்றுகள் கூட, மேல் நாட்டாராய்ச்சியாளரின் முடிவுகளின் படி இரண்டு மூன்றாயிர ஆண்டுகளுக்கு முந்திய காலம் வரையில்தான். நாம் இந் நூலிற் குறிப்பிடும் கால எல்லைகள் அதனிலும் எத்தனையோ மடங்கு பழைமையான காலத்தைக் குறிப்பன. அவற்றைப் பற்றிய அறிவு நமக்குப் பெரும்பாலும் ஞால நூலாலேயே ஏற்படுகிறது. ஞால நூலின்படி ஒரு காலப்பகுதி என்பது நூறாயிரக் கணக்கான ஆண்டுகள் கொண்டது என்பதையும், அவ்வளவு நீண்டகாலங்களில் நிகழ்ந்த செய்திகளைப் பற்றிய நமது அறிவு அவற்றினிடையே ஏற்பட்ட நில அடுக்கின் ஆழம், ஆக்கம் முதலியவற்றைப் பொறுத்தது என்பதையும் நாம் மனத்திற் கொள்ள வேண்டும். நெடுங்காலத்திற்கு முன் கோடி கோடிக் கணக்கான மனித ஆண்டுகளுக்கு முன் இம் மண்ணுலகம் ஞாயிறென்னும் பாரிய, கொதித்துருகிக் குமுறிநிற்கும் அழல் ஆவிப்பிழம்பின் ஒரு பகுதியாக இருந்தது. அஞ்ஞாயிறு தன்னைத்தானே சுற்றும் விரைவாற்றலால் அதனின்று வீசி யெறியப்பட்ட ஒரு பிழம்புத் திவலையே என்று மேலே கூறியுள்ளோம். ஞாயிறு இத் திவலையிலும் பன்மடங்கு பாரியது ஆதலின், அஃது அதன் கவர்ச்சியினின்றும் விலகமுடியாது சற்றுத் தொலைவிலேயே (அஃதாவது நூறாயிரக் கல் தொலைவிலேயே) நின்று அஞ்ஞாயிற்றின் சுழற்சியாற்றலால் தானும் சுழன்று அதனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது. நாள்செல்லச் செல்ல (அஃதாவது பல கோடி ஆண்டுகளில்) உலகின் மேற்பகுதி குளிர்ந்து இறுகியது. குளிர்ந்த பகுதியில் ஒரு துண்டே இதனினின்றும் எறியப்பட்டுத் திங்களாயிற்று என்பர் வான இயலார். வெளிப்பகுதி இறுகிக்கட்டிப்பொருளான பின்னும் உட்பகுதி உருகிக் கொதித்துக் கொழுந்துவிட்டெரியும் அழலாகவே இருக்கிறது. வெளியே வர வர இவ்வழல் நீர்ப் பொருளுருவாயும், பின்னும் வெளிவரவரக் கட்டியாய்க் குழம்புருவாயும், பின் களிபோன்றிருகியும், இறுதியில் பாறைபோல் கட்டியான பொருளாயுங் குளிர்கின்றது. இத்தகைய கட்டியான பாறையே உலகின் மேல் தோட்டில் மிகப்பழைமையான பகுதியாம். உலகின் மிகப் பழைமையான நிலப்பரப்பு இப்பாறைகளாலேயே ஆக்கப்பட்டது என்பதும், அத்தகைய நிலப்பரப்புள் தென் இந்தியாவும் ஒரு பகுதி ஆகும் என்பதும் முன்னமே கூறியுள்ளோம். இயற்கையின் பலவகையான விளையாடல்களால் இம் மேற் பரப்பில் பல மாறுதல்கள் எற்பட்டன. இம் மாறுதல்களின் பயனாகவே உலகில் செடிகொடி வாழ்வும் அதனை ஒட்டி உயிர்வகைகளின் வாழ்வும் ஏற்பட்டன. இம் மாறுதல்களுக்குக் காரணமாயிருந்தவை இயற்கை ஆற்றல்களே யாகும். அவை மூவகையின 1. நில உட்பகுதியின் இயல்பு 2. நில மேற்பரப்பின் இயல்பு 3. இதற்கு வெளியிலுள்ள நீர் மண்டலம் ஆவிமண்டலம் இவற்றின் இயல்பு. 1. நில உட்பகுதியின் இயல்பால் ஏற்படும் தலையான மாறுதல் எரிமலையாம். உலகின் நடுவில் உள்ள அழற்பிழம்பு ஆங்காங்கு மேற்பரப்பாகிய போர்வையில் உள்ள பிளவுகள் வழியாகவோ, மென்மையான பகுதிகளைக் கிழித்துக் கொண்டோ வெளிப்பட்டு, மேற்பரப்புக்கு வெளியே கற்குழம்பு, சாம்பல், பலவகை ஆவி ஆகியவற்றைத் தள்ளுகின்றது. உலகிற் பெரும்பாலான மலைகள் இவ்வகையில் ஏற்பட்டவையே. இவற்றில் பலவகையான கருப்பொருள்கள் இருப்பதால் இவை மிகவும் செழிப்பான செடி கொடி வளர்ச்சியுடையன ஆகின்றன. தென் இந்தியாவின் இருபுறமும் உள்ள மலைத் தொடர்களில் மேற்குத் தொடர் இங்ஙனம் எரிமலைகளால் ஏற்பட்ட மலைகள் ஆகும். கிழக்குத் தொடர் அவற்றிலும் பழைமையானவை என்ப. 2. நில மேற்பரப்பியல்பால் ஏற்படும் மாறுதல்கள் நிலப் பெயர்ச்சி நில அதிர்ச்சி, நில மடக்கு முதலியன ஆகும். நிலப்பரப்பின் உட்பகுதிகள் மென்மையாகவும் மேற்பகுதிகள் கட்டியாகவும் இருக்கின்றன என்று கூறியுள்ளோம். மேற்பகுதி ஒரே தொடர்ச்சி யாயிருக்குமிடத்தில் அது கீழ்ப்பகுதியை இறுக்கிக் கொண்டிருக்கிறது. எங்கேனும் மேற்பகுதி துண்டாக நின்றால் கீழ் உள்ள மென்மையான பகுதிமீது அது சறுக்கி வழுக்கிப்போகும் அங்ஙனம் போவதால் நிலப்பெயர்ச்சி ஏற்படுகிறது. உட்பகுதியின் சூட்டினாலோ, நடுப்பகுதியின் பிழம்பு தாக்குவதனாலோ (எரிமலையாக வெளிவராத இடத்தில்) நில அதிர்ச்சி ஏற்படுகிறது. சில இடங்களில் மென்மையான உட்பகுதி இறுகுவதால் உள்ளிடம் ஏற்பட்டு, அதன் மீது கட்டியான மேற்பகுதி நொறுங்கி வீழ்வதால் பலவகையான நிலமடக்குகள் ஏற்படுகின்றன. மலைகள் பல இப்படிப் பட்ட மடக்குகளினாலும் ஏற்படுகின்றன. பாரிய இமயமலைகூட இத்தகைய மடக்கினால் ஏற்பட்டதெனக் கொள்ளப்படுகிறது. 3. நிலப்பரப்புக்கு வெளியிலுள்ள நீர்மண்டலம் கடலேயாகும். ஆவி மண்டலம் உலகைச் சுற்றிலும் பலகல்தொலை உயரம்வரை அதனைப் போர்த்திருக்கிறது. ஞாயிற்றின் சூட்டால் கடல்நீர் ஆவியாகி மலைகளால் தடையுண்டெழுந்து உயர்ந்த பகுதியில் சென்று குளிர்வதால் மழையுண்டாகின்றது. காற்றின் வன்மையாலும் மழையின் வன்மையாலும் நாம் மேற்கூறிய நெருப்பு வண்ணப் பாறை பொடியாகின்றது. சில சமயம் காற்று நெருப்பு வண்ணப் பாறையில் இடையிடையேயுள்ள கருப்பொருள்களை எரித்துவிடக் கடுமையான பகுதிகள் பொடியாகி மணலாகின்றன. இங்ஙனம் பாலைவனங்கள் ஏற்பட்டு அவற்றின் மீதுள்ள காற்றினால் மணற்படலங்களை உண்டாகின்றன. காற்றுடன் வீசும் மணலாலும், ஆறுகளாலும் பாறை பொடியாகி மண் உண்டாகிறது. மண்ணுடன் நீர்கலக்க அதில் சிறு செடி கொடி உண்டாகி அவை இறந்துவிட்டபோது அவற்றின் கருப் பொருள் மண்ணுடன் கலந்து உரமாகிப் பெருஞ்செடிகளுக்குண வாகிறது. இங்ஙனம் மண்ணும் உரமும் வரவர வளர்ந்து வர, நீரினின்றே பிற உயிரினங்கள் உண்டாகி இச்செடி கொடிகளைத் தின்று வளர்க்கின்றன. உலகின்மண், உண்மையில் காலனது வயிறேயாகும். எல்லை யற்ற காலத்தில் பிறந்திறந்த உயிர்கள் அனைத்தும் செடி கொடியும், விலங்கினங்களும் எல்லாம் இதில் செரித்துள்ளன. இன்று ஞால இயலார் மண்ணை ஆராய்ந்து அஃது இன்னவகை என்றறிவதுடன், அதன் உட் பகுதிகளை ஆழத்தோண்டி அதன் பலவகையான அடுக்குகளிலிருந்தும் அவ்வடுக்குகள் ஏற்பட்ட கால எல்லை இது. அஃது இத்தனை ஆயிர ஆண்டு நீடித்திருந்தது. அக் காலத்தின் தட்பவெப்ப நிலை இது. உயிர் வகை, செடி வகை இவை, மனிதவாழ்வு இத்தகையது என்ற எல்லாத்துறை அறிவுகளையும் நமக்குச் சேகரித்துத் தருகின்றனர். ஒவ்வொரு நில அடுக்கும் ஞால இயல்படி ஒரு காலப் பகுதியைக் காட்டும் ஓர் ஏடு ஆகும். அக் காலப் பகுதி மனிதகால அளவைக் கப்பாற்பட்டுப் பல்லாயிர ஆண்டுப் பரப்புடையது. இவ் வடுக்குகளின் கால அளவைப்பற்றிக் கொள்கை வேற்றுமை இருக்கக்கூடும். ஓர் அடி மண், இத்தனை ஆண்டுகளுக் குள்ளேதான் ஏற்படும் என்று ஒரே வரையறை கிடையாது. ஆயினும் பொதுப்படத் திண்மை கூடக் கால அளவும் கூடும் என்று கூறலாம். தற்கால மேற்பரப்புவரை 5 நில அடுக்கு பகுதிகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். அவற்றின் பெயரையும் திண்மையையும் அவற்றிற் காணும் செடி வகை உயிர்வகை விவரங்களையும் மனித வகையையும் சுருக்கிப் பட்டிகை உருவில் கீழே தருகிறோம். ஆக 1,32,500 அடி ஆழமுள்ள உலக மேற்பரப்பில் வரலாற்றுக் காலம் என நாம் கொள்ளும் ஆரிய நாகரிக காலமாகிய 4000 ஆண்டுகளுக்குரிய மேலடுக்கு 500 அடியளவேயாகிறது. அதற்கு முன்னைய அத்லாந்திய நாகரிகம் அதனினும் பத்துப் பங்கு திண்மையுடையது. எனவே, இவ் வரலாற்றுக் காலத்தினும் நீண்ட அளவு காலம் அத்லாந்தியர் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. டப்ள்பூ எஸ் ஸ்காட் எலிபட் என்பார் அத்லாந்தியார் நாகரிக காலம் இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் 40,000 ஆண்டுகட்கு முன் வரை என்கிறார். இலெமூரியர் காலத்து நில அடுக்கு, அத்லாந்தியர் கால அடுக்கிலும் மும்மடங்காகின்றது; அஃதாவது 15,000 அடி ஸ்காட் எலியட் இதன் கால எல்லை. இன்றைக்கு 2,00,000 ஆண்டுகட்கு முன்னர் 50,000 ஆண்டுகளுக்குமுன் வரை என்கிறார். 6. உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் எல்லையற்ற காலப் பரப்பில் ஓர் இமைப்பொழுதென்னும் படி சிறுமையான வாழ்க்கையினையுடைய மனிதனால் அவ்வெல் லையற்ற காலத்தை எளிதில் உணரமுடியாது. அதே போன்று எல்லையற்ற இடத்தில் ஓர் அணுவான அவனால் அவ்வெல் லையற்ற இடத்தையும் உணர முடியாது. ஆயினும், அறிவியல் அறிஞரின் அறிவுக்கண் பார்வை மனிதனது இடச் சிறுமையையும் காலச் சிறுமையையும் கிழித்துக்கொண்டு எல்லையற்ற காலத் தையும் இடத்தையும் அளந்தறிவதாயிருக்கிறது. பொறுமையுடன் இவ் எல்லையற்ற காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஆராயும் அறிஞர் உலகின் மேற் பரப்பும் கண்டங் களும் இன்று உலகப்படத்தில் காண்பன போல் என்றும் இருக்க வில்லை யென்றும் இன்று நிலமிருக்குமிடம் கடலாகவும், கடலிருக்குமிடம் நிலமாகவும், மலையிருக்குமிடம் வெளி நிலமாகவும், வெளி நில மிருக்குமிடம் மலையாகவும் மாறி மாறி வந்திருக்கிற தென்றும் உணர்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் சிலசமயம் கடல்கோள்களால் நிகழும் சிலசமயம் எரிமலைகளால் கடலுள்ளிலிருந்து நிலமும் நிலத்தினுள்ளிருந்து மலைகளும் மேலெழுப்பப்படும். இன்னும் சிலசமயம் மேற்பரப்பும் சாய்வுற்றுப் பள்ளமான இடம்மேடாகவும், மேடான இடம் பள்ளமாகவும், கடலுள்பட்ட இடம் கடலுக்கு வெளியாகவும், வெளியில் உள்ள நிலம் கடலுளாகவும் மாறுதலுண்டு. இன்னும் சிலசமயம் ஒரு கண்டத்தின் மீது ஒரு கண்டம் சரிவதும், இரு கண்டங்கள் ஒன்றாக ஒட்டுவதும், கண்டங்கள் நீரில் மிதந்து செல்வதும் உண்டு. இம் மாறுதல்களுள் பல இன்னும் பஸிபிக் கடல் புறத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர் அறிவுக்கு எட்டும் படியான அளவு விரைவில் இங்குத் தீவுகள் தோற்றுவதையும் மறைவதையும் காணலாம். இம் மாறுதல்கள் அங்கங்கே ஒழுங்கு முறையின்றி நிகழ்பவையல்ல என்று ஆராய்ச்சியாளர் நமக்குக் கூறுகின்றனர். 24 மணி நேரத்திற்கு ஒரு முறை ஞாயிற்றின் ஒளி உலகைச் சுற்றுவது போல உலகைப் பல்லாயிர ஆண்டுகளுக்கு ஒரு முறை கிழக்கிலிருந்து மேற்காக மின்வலி அலைகள் சுற்றுகின்றன. அவை உலகின் எந்தப் பகுதியில் வந்துள்ளனவோ அந்தப் பகுதியில் வடதுருவம் முதல், தென் துருவம் வரை இடைவிடாத கொந் தளிப்பும் மாற்றமும் ஏற்படுகின்றன. ஒவ்வோர் அலையும் 80 பாகை அல்லது 6000 கல் அகலத்திற்கு ஆட்சி செலுத்துகிறது. இம் மாறுதல் அலைகளின் வன்மையினாலேதான் கண்டங் கள் தோன்றுவதும் மறைவதும். இவற்றால் ஒருகால் உலகெங்கும் பரவியிருந்த இலெமூரியாக் கண்டம் படிப்படியாகச் சிதைவுற்று இறுதியில் கடலுள் மூழ்கியது. இவற்றாலேயே இன்றைய ஆசியா ஐரோப்பாவின் பெரும் பகுதி மேலெழுந்ததும், அத்லாந்திக் கண்டம் உண்டானதும், அது பின் அமிழ்ந்ததும் ஆகிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இலெமூரியாக் கண்டத்தின் அமைப்பு ஆராய்ச்சி அறிஞர் முடிவுப்படி எவ்வாறிருந்திருக்க வேண்டும் என்பதை உலகப்படம் 1-இல் காணலாம். ஒப்புமைக்காக வேண்டி இப்படத்தில் தற்கால உலக அமைப்பை வெறும் வரைகளினாலும் இலெமூரியாவின் அமைப்பை முற்றிலும் கரு நிறப்படுத்தியும் காட்டியிருக்கிறோம். அதன் படி இலெமூரியாக் கண்டம் கிழக்கு 20 பாகை முதல்மேற்கு 80 பாகை வரையிற் பரவிக்கிடந்தது. அஃதாவது முழுச் சுற்றளவாகிய 360 பாகையில் 260 பாகை இலெமூரியவின் நீளமேயாகும். இன்றைய உலக அமைப்புடன் ஒப்பிட்டு நோக்கினால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி, இந்துமாக்கடல், தெற்கு ஆசியா, பஸிபிக் கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா இத்தனையையும் இலெமூரியாக் கண்டம் உள்ளடக்கி இருந்தது. அந் நாளில் இன்றைய ஆசியாவின் பெரும் பகுதியும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா இவையும் பெரும்பாலும் சதுப்பு நிலங்களாகவே இருந்தன. சில பகுதிகள் கடலுள் ஆழ்ந்தும் இருந்திருக்கக்கூடும். ஆனால், இப்பழங் கண்டங்கள் அன்று இன்று கிடந்த வண்ணம் கிடக்கவே இல்லை. அமெரிக்கா இன்று ஐரோப்பா, ஆப்பிரிக்கா இவற்றுடன் ஓட்டிக் கிடந்தது. இன்றுகூட அமெரிக்காவின் கீழ்கரையும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா இவற்றின் மேல்கரையும் ஒன்றுக்கு ஒன்று பொருந்தத்தக்க உருவுடையவை யாயிருத்தல் காணலாம். அந் நாளில் நீர்மட்டத்திற்குமேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே. மற்ற இன்றைய கண்டங்களெல்லாம் நீருள் அமிழ்ந்தும் அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே ஆகும். முதற் படக் காலத்திற்கு 50,000 ஆண்டுகளுக்குப் பின் இன்றைய கண்டங் களிற் சில பகுதிகள் நீர்மட்டத்திலிருந்து நன்கு உயர்ந்திருந்தன. “அழிந்துபோன இலெமூரியா” என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் `இந் நாளில் இலெமூரியர் அக் கண்டங்களைச் சுற்றிப் பார்த்து அவற்றின் படங்கள் வரைந்து வைத்துள்ளார்’ என்றும், `அவை இன்றும் இருக்கின்றன’ என்றும் கூறுகிறார். ஆனால், அந் நாடுகளுள் ஒன்றும் அன்று விளைவதில்லை; அன்றி மனித வாழ்க்கைக்கோ உயிர் வாழ்க்கைக்கோ ஏற்றதாக இருக்கவு மில்லை. ஆகவே, மனித வாழ்க்கைக்கும் உயிர் வாழ்க்கைக்கும் முதல் பிறப்பிடம் இந்த இலெமூரியாவேயாகும். மனித நாகரித்தின் தொடக்கமும் இங்கேதான் ஏற்பட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட நூறாயிரம் ஆண்டுகளாக மனித வகுப்புத் தவழ்ந்து வளர்ந்த தொட்டில் இவ் இலெமூரியாக் கண்டமே எனலாம். “அழிந்து போன இலெமூரியாவின்” ஆசிரியர், `இதற்கு நெடுநாள் முன்னும் மனிதர் இருந்தனர் என்றும், ஆனால் அவர்கள் மனித நிலையில் மேம்பாடைந்தது இலெமூரிய நாட்டிலேயே’ என்றும் கூறுகிறார். டப்ள்யூ. ஸ்காட்எலியட்டும், ருடால்ஃப் ஸ்டைனரும் ‘மனித நாகரிகத்தில் ஏழு வகுப்புகள் உள’ என்றும், ‘முதல் இரண்டு வகுப்பைச் சார்ந்த மக்களும் இலெமூரியாவுக்கு முந்திய இரண்டு நில ஆக்கக் காலப் பகுதியில் வாழ்ந்தனர்’ என்றும், ‘ இலெமூரியர் 3ஆம் வகுப்பைச் சார்ந்தவர்’ என்றும், ‘அவர்களின் பின்வந்த அத்லாந்தியர், இன்றைய ஆரியர் முதலியவர்கள் 4ஆம் 5ஆம் வகுப்பைச் சேர்ந்தவர்’ என்றும், இன்னும் எதிர் காலத்தில் 2 வகுப்புகள் இவற்றிலும் மேம்பாடுவடையவையாய்த் திகழும்’ என்றும் கூறுகிறார். ஆனால் இவ்வாசிரியர்களே, ‘முதல் இருவகுப்பினரும் உடலின்றி உலவி வந்தனர்’ என்ற புதுமையான செய்திகலையுங் குறிப்பிடுகின்றனர். இப் புதுமையான செய்தியை வலிந்து அவ்வாசிரியர்கள் நம்மீது சுமத்துவதற்குக் காரணம் மனிதர் பிற உயிர்களிடமிருந்து படிப்படியாக வளர்ந்தனர் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாததேயாகும். மேல்நாட்டுச் சமய நூல்களைப் பின்பற்றி ‘மனிதன் கடவுளது தனிப் படைப்பு’ என்றும், ‘படைப்புக் காலந்தொட்டே படைக்கப்பட்டான்’ என்றும் அவர்கள் நிலைநாட்ட விரும்புகின்றனர். அறிவியல் ஆராய்ச்சியில் முதல் இரண்டு காலப் பகுதியிலும் மனித வாழ்வுக்குரிய அறிகுறி இல்லாமற் போகவே அதினினின்றும் அவர்கள் ‘மனித வாழ்க்கை பின் ஏற்பட்டது’ என்ற நேரான முடிவை ஏற்க விரும்பாமல் உடலற்ற மனிதர் இருந்தனர் என்ற பொருந்தாச் செய்தியைப் புனைந்து மேற்கொள்ளலாயினர். “அழிந்துபோன இலெமூரியா” ஆசிரியர், `முதன் மனிதர் இலெமூரியாவிலேயே வாழ்ந்தனர்’ என்பதை ஒப்புக்கொள்கின்றன ராயினும் `அவர்கள் இலெமூர் என்ற உயிர்வகையுடன் உறவற்றவர்’ என்று கூறியதும் இதே காரணம் கொண்டுதான் போலும். `இலெமூர்கள் மனிதரது முன்மாதிரியாவர்’ என்பதைச் சிலர் ஏற்காவிடினும், `உயிரின் வளர்ச்சியில் மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் இடைப்பட்ட பகுதியையேனும் காட்டுபவை’ என்பது ஒருதலைச் சார்பற்ற அறிஞரால் மறுக்கக்கூடாத உண்மை ஆகும். நாம் மேற்குறிப்பிட்ட உலக மாறுதல்களில் மிகப் பழைமையான மாறுதல் ஒன்று 1,00,000 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. அதனால் இலெமூரியாவின் அளவு சுருக்கியதுடன், அதன் நடுவில் ஏற்பட்ட ஓர் ஆறு வரவர விரிந்து கடலாகி, அமிழ்ந்த கண்டத்தை இருபெரும் பிரிவாகப் பிரித்தது. அவற்றுள் ஒரு பிரிவு இந்து மாக்கடற் பகுதியும் இன்னொன்று பசிபிக் மாக்கடற் பகுதியும் ஆகும். இதன் பின் 82,000 ஆண்டுகளுக்கு முன்னும், 75,000 ஆண்டு களுக்கு முன்னும் வேறு பல பெரு மாறுதல்கள் ஏற்பட்டு அவற்றின் பயனாய் இலெமூரியாவின் பல பகுதிகள் மேன்மேலும் குறைந்தன. கடைசியில் நின்றது பசிபிக் மாக்கடலில் கிழக்கு 100 பாகை முதல் 140 பாகை வரையில் உள்ள பகுதியே யாகும். அதுவும் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடலுள் ஆழ்ந்தது. இதே காலப்பகுதியுள் ஆசியாவின் பெரும் பகுதியும் நிலமாக உயர்ந்துவிட்டது. அமெரிக்காக் கண்டம் ஆப்பிரிக்கா விலிருந்து விலகி நெடுந்தூரம் சென்று விட இடையில் அத்லாந்திக் மாக்கடல் ஏற்பட்டது. மடகாஸ்கர் தீவும், தென் இந்தியாவும், பசிபிக் தீவுகளிற் பலவும், இலெமூரியாவின் மீந்த பகுதிகள் ஆகும். இலெமூரியாவில் அழியாது மீந்த இன்னொரு பகுதி, கடலுள் மூழ்கிய பிற பகுதிகளிலிருந்து பிரிந்து நீரில் மிதந்து சென்று அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டது. அவை இரண்டுக்கும் இடையில், அவை சேர்ந்த இடத்தில் ஒரு கடல் இருந்தது என்பதற்கு இன்னும் அறிகுறிகள் உள்ளன. பின்னால், இது பற்றி இன்றைய உதா ஏரியாயிற்று. இலெமூரியா கடலுட்பட்டபின் அத்லாந்திக் கடலின் அடிப்பகுதி அப்போது ஏற்பட்ட உலக மாறுதல்களில் ஒன்றின் காரணமாக மேலெழுந்து நிலமாயிற்று. இதனையே அறிஞர் அத்லாந்திஸ்கண்டம் என்பர். இலெமூரியா கடல் கொள்ளப் பட்டபோது அதன் மக்கள் சிலர் ஆப்பிரிக்கா, ஆசியா முதலிய பகுதிகளுக்குச் சென்றனர். இன்னும் சிலர் ஆப்பிரிக்கா கடந்து அத்லாந்திஸில் குடியேறி அங்கே ஒரு பேரரசு ஏற்படுத்தினர். பதினாயிரம் அல்லது இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் ஆட்சியும் நாகரிகமும் மேலோங்கியிருந்தன. 15,000 ஆண்டுகட்கு முன் நேர்ந்த பெருமாறுதல் ஒன்றால் அத்லாந்திஸ் கண்டமும் கடலுள் மூழ்கிப் போயிற்று. அதன் மக்கள் தெற்கு அமெரிக்கா, நடு அமெரிக்காப் பகுதிகளில் குடியேறினர். இவர்களே மய நாகரிகத்தையும் பெரூவிய நாகரிகத்தையும் ஏற்படுத்தியவர்கள். இவ் அத்லாந்திஸ் கண்டத்தின் மீந்த பகுதிகளே இன்றைய அஸோரீஸ் (ஹணடிசநள) என்று கூறப்படுகிறது. முகம்மது நபி, இயேசுநாதர் என்பவர்களுக்கு முன்னோர் களான யூத மரபினர், இந்த அத்லாந்தின் கண்டத்திலிருந்து வந்தவர்களே. அவர்கள் மொழிகளும், ஐரோப்பா ஆசியா முழுவதும் பரந்து கிடக்கும் பின்னிய துருக்கிய, ஹங்கேரிய, சிதியக்குழு மொழிகளும் திராவிட மொழிகளுடன் தொடர் புடையவையா யிருக்கின்றன என அறிஞர்கள் நினைக்கின்றனர். இலெமூரியாக் கண்டத்தைப் பற்றி இதுகாறும் கூறிய விவரங்கள் முதற்பகுதியில் யாம் எடுத்துக்காட்டிய தமிழ் நூலுரைகளுடன் எத்துணைப் பொருத்தம் உடையவை என்பதை நோக்குவோம். இலெமூரியரின் சமயநிலை நாகரிகம் இவற்றைப் பற்றி மேல்வரும் பிரிவுகளில் கூறுவோம். அவை தமிழர் சமயம், நாகரிகம் இவற்றுடன் பொருந்துமாறும் அதன் மேற்காட்டப் படும். சங்கங்களின் வாழ்வுகளைப் பற்றிய மட்டில் முதற் சங்கம் இடம் மாற, முதலூழி இறுதியில் ஏற்பட்ட கடல் கோளும், இடைச்சங்கம் இடம் மாற, மூன்றாம் ஊழியிறுதியுள் ஏற்பட்ட கடல்கோளும் காரணம் என்று கூறப்பட்டன. இங்கே ஊழி என்று கூறிய கால அளவை என்ன? சங்க வரலாறு கூறும் இறையனார் அகப்பொருளுரையிலோ வேறிடத்திலோ ஊழியின் அளவை, திண்ணமாக அவ்வளவு என்று கூறப்படவில்லை. ஆனால், அஃது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் முதற் சங்கம் நடைபெற்ற கால அளவை 4440 ஆண்டுகள் என்றும், 89 அரசர்கள் அக் காலத்துள் ஆண்டனர் என்றும், இடைச்சங்கம் நடைபெற்ற காலம் 3700 ஆண்டுகள் என்றும், 59 அரசர்கள் அக் காலத்திற்குள் ஆண்டனர் என்றும், கடைச்சங்கம் நடை பெற்றது 1850 ஆண்டுகள் என்றும், 49 அரசர்கள் அக் காலத்திற்குள் ஆண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சங்கங்களினிடையே ஊழியிறுதி மாறுதல்களுக் கிடமிருப்பதால் அவை தொடர்ந்து நடக்கவில்லை என்பதும் தெளிவே. சொற்போக்கிலிருந்து இவ்வூழிகள் இந்திய வான நூலாரது காலப்பிரிவாகிய நான்கு ஊழிகள் அல்லது யுகங்களே என்று தோற்றுகிறது. தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில் வடமொழி மறைகள் மூன்றாம் ஊழி இறுதியில் பாரதப் போர்க் காலத்தில் வாழ்ந்த வியாசரால் ஏற்பட்டவை என்று கூறு மிடத்து ஊழி என்ற சொல்லை இப் பொருளிலேயே வழங்கியிருப்பது காண்க. மேலும் இரண்டாம் யுகம் அல்லது ஊழியில் நடை பெற்றதாகக் கூறப்படும் இராமாயணக் கதையை எழுதிய வான்மீகர் அவ்வூழியில் இருந்திருக்க வேண்டிய இடைச்சங்க இடமாகிய கவாடபுரத்தையே பாண்டியன் தலைநகரமென்று கூறியதும் இக கொள்கையை வலியுறுத்தும் இந்திய வான நூலின்படி நான்கு ஊழிகளும் சேர்ந்து நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இலெமூரியாவின் பழைமைகூட ஸ்காட் எலியட் கூறுகிறபடி 2,00,000 ஆண்டு அளவே பழைமையுடையது. இவ்விரண்டும் பொருத்தமுடையனவாமோ? இவ் வானநூலாரின் கணக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தடையாய்த் தோன்றுவது, ஆண்டுகளின் தொகை மிகப் பெரியதாயிருப்பதும் ஒவ்வோருழியின் தொகையும் முன்னைய ஊழித் தொகையுடன் பொருத்தமாகவும் வட்டத் தொகைகளாகவும் இருப்பதுமேயாம். ஆனால் பெருந்தொகை களை மதிப்பளவாகக் கணிக்கையில் கிட்டத்தட்ட வட்டத் தொகைகளையும், ஒன்றுக்கொன்று பொருத்தமாகவும் அமைப்பது இயற்கையேயாம். ஞாலநூலின் பழைமையைக் கணித்தறிந்த ஸ்காட் எலியட் என்ற அறிஞர் உலகில் 5 பெருங்கடற்கோள்கள் ஏற்பட்டுள்ளன என்றும், முதலாவது பத்து நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், இரண்டாவது எட்டு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும், 3 ஆவது இரண்டு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் 4 ஆவது 80,000 ஆண்டுகளுக்கு முன்னும், 5 ஆவது 9,500 ஆண்டுகட்கு முன்னும் ஏற்பட்டன என்றும் கூறுகிறார். நான்கு ஊழிக்கணக்கு அளவை இதற்கு ஒத்தில்லாவிடினும் கிட்டத்தட்ட இதனுடன் பொருந்தியிருப்பது காண்க. எனவே, அவ்வூழிகளின் அளவை இந்திய வான நூலார் கணக்குப்படி அப்படியே ஏற்றுக் கொள்வது கூடாத தொன்றன்று. இந் நான்கு ஊழிக் கணக்கை வரலாற்றிஞர் பலர் ஏற்க வில்லை. எனினும், இத்தகையோருங்கூட மூன்றாம் ஊழி இறுதியைப் பற்றிய மட்டில் அதன் கணக்கு நம்பத்தக்கதே என்கின்றனர். இவரது ஆராய்ச்சி முடிவை நோக்குவோம். இந்திய வான நூலாரின் ஊழிக்கணக்கு இந்திய வானநூல் வகுக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டது. இந்திய வானநூல் வகுக்கப்பட்டது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்த வராஹமிஹிரராலேயே என்று வரலாற்றிஞர் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர், இவருக்கு முன்னமே வகுக்கப்பட்டது என்கின்றனர். எப்படியும் ஊழிக் கணக்கு ஊழிகளுக்குப் பின்னர்த் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கையமில்லை. ஆகவே, நாட்டாரிடையே நான்கு ஊழிகள் உண்டு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வானநூலார் தமது நூலாராய்ச்சிக் கிணங்கக் கால அளவை ஏற்படுத்திக் கொண்டனர் என்பதே பொருத்தமானது. இதன்படி ஊழிகள் வான நூலளவிற்குக் குறைந்தவை யாயினும் மக்களிடை நெடுநாள் மரபாக வழங்கிவந்தபடியால் மிகப் பழைமையுடைய பெரு மாறுதல்களின் நினைவினால் ஏற்பட்டவையே என்று பெறப்படும். அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அடங்கியதாக இருக்கக்கூடும் என்று மட்டுமே நாம் சொல்லமுடியும். பொதுப்பட ஊழிகளை வரையறுக்க இதனால் கூடவில்லை யாயினும் மூன்றாம் ஊழியிறுதியைப் பற்றிய அளவில்மட்டும் கணித நூலாரது காலவரையறையை அப்படியே ஏற்றுக்கொள்ள இடமுண்டு. ஏனெனில், புராணங்கள் எழுதப் பெற்றது மூன்றாம் ஊழியிறுதியில் என்று அப்புராணங்கள் தாமே கூறுகின்றன. மூன்றாம் ஊழிக்குப் பிந்திய காலங்களிலுள்ள நந்தர்கள், மௌரியர் முதலியோரது வரலாற்றை அது கூறினும் அதனை எதிர்காலத்தில் வைத்துக் கூறுவதால் அப் புராணம் எழுதத் தொடங்கிய காலம், அதில் நிகழ்காலமாக ஏற்றுக்கொள்ளப் பட்ட, சனமேசய அரசன் காலம், அஃதாவது நான்காமூழித் தொடக்கம் என்றேற்படுகிறது. இந்திய மரபுரைகளின் வரலாற்றுப் பகுதி என்று நூலின் பார்கிட்டர்’ என்ற வரலாற்றறிஞர் இதே முடிபுக்கு வந்துள்ளார். எனவே, மூன்றாமூழி இறுதி என்பது இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன் அஃதாவது கி.மு. 3100 இல் என்று காணப்படும். இலெமூரியாக் கண்டம் 2,00,000 ஆண்டுகட்கு முன், முதல் 50,000 ஆண்டுகட்டுமுன் வரை இருந்ததென்றும், 50,000 ஆண்டு கட்கு முன் பெரும்பாலும் அழிந்த தென்றும் கூறினோம். அதில் மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக்கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும். முச்சங்கங்கள் (15,000 ஆண்டுகளுக்கு முன்) அத்லாந்திஸ் கண்டம் அழிந்த நாளிலிருந்து நடைபெற்றிருக்கலாம்: அல்லது இலெமூரியாக் கண்டம் அழிந்தது முதற்கொண்டு தொடங்கியிருக் கலாம். அல்லது இலெமூரியா வாழ்வுகூடத் தமிழர் சங்க கால வாழ்வாகவே இருந்திருக்கலாகும். அங்ஙனமாயின் நாம் மேலே கூறியபடி இந்திய வானநூலாரின் நாலூழிக் கணக்கு அப்படியே ஏற்றுக்கொள்ளத்தக்க தென்பதை ஈண்டுக் குறிப்பிடலாகும். மேல் வரும் பகுதிகளில் இலெமூரிய நாட்டைப் பற்றியும் அதன் மக்களது நாகரிகம், வாழ்க்கை, சமயம், கொள்கை இவற்றைப் பற்றியும் ஆராய்ச்சியாளர் கூறுவதைத் தொகுத் துரைப்போம். 7. இலெமூரியாவின் இயற்கை இயல்புகள் பழங்கால ஆராய்ச்சியிலிருந்தும், பழங் கருவிகளாராய்ச்சி யிலிருந்தும் இலெமூரியாவின் நில இயல்பையும், தட்ப வெப்ப நிலையையும் நாம் உய்த்துணரக் கூடும். இலெமூரியாக் கண்டத்தில் மலைகள் மிகுதியாக இல்லை. கிழக்குப் பாதியின் மேற்பகுதியில் சில உயர்ந்த மலைகள் இருந்தன. அவையே இன்று பஸிபிக் கடலின் தீவுகளாயிருக்கின்றன. இவை எரிமலைகளே யாகும். சிறு எரிமலைகளும், நில அதிர்ச்சியும் அக் கண்ட முழுமையையும் என்றும் குலுக்கிக் கொண்டே இருந்தன. ஆனால், கண்டத்தின் நடுப்பகுதி மலையின்றிப் பெரிதும் மட்டமாகவே இருந்தது. ஆங்காங்குள்ள சிறு மலைக்கொடுமுடிகள் 2,000 அல்லது 4,000 அடிக்கும் குறைந்தவை. கண்டத்தின் பல பகுதிகளிலும் கொதிக்கும் நீர் நிறைந்து ஆவி கிளம்பிக் கொண்டேயிருக்கும் சதுப்புநிலங்கள் இருந்தன. இத்தகைய நிலம் இன்னும் நேப்பில்ஸ் நகரின் பக்கத்தில் உள்ளது. இவை பெரும்பாலும் கடல் மட்டத்திற்குக்கூடக் கீழ்ப்பட்டிருந்தன. இவற்றின் பயனாகவே இக் கண்டத்தில் எரிமலைகளின் அச்சமும் கடல் கோளின் அச்சமும் குடி கொண்டிருந்தன. இச் சதுப்பு நிலங்களின் அடியில் உருகிய பாறைகள் கொந் தளித்துக் கொண்டிருந்தன. இவற்றாலும் இயற்கையில் அந் நாள் ஞாயிற்றின் கதிர்கள் இன்றைவிடக் கடுமையானவையாயிருந்தமை யாலும், காற்று மண்டலம் நீராவி நிறைந்திருந்தமையாலும் அக் காலத்து இலெமூரியர் தாங்க ஒண்ணாத வெப்பத்துக்கு ஆளாகியே வாழ்ந்து வந்தனர். இந் நிலைமையில் அங்கிருந்த குன்றுகளினின்றும் ஒழுகிய சிற்றாறுகளும் ஒடைகளும் இலெமூரிய மக்களுக்கு மிகுந்த ஆறுதலளித்திருக்க வேண்டும். இக் கண்டம் வெப்ப மண்டலத்தில் இருந்தாலும், அதிலும் அந்நாளைய வெப்பமும் மழைவீழ்ச்சியும் இந்நாளிலும் மிகுதியான தாதலாலும், செடி கொடிகளின் வளர்ச்சி வெப்ப மண்டலத்தில் மழை மிகுதியுள்ள மலைகளில் காணும் காடுகள் போன்று நெருக்கமாகவும் ஒங்கியும் இருந்தது. தற்கால மலைக் காடுகள்கூட இவ் வகைகளில் அவற்றிற் கீடில்லை எனலாம். அக் காடுகளில் பெரும்பாலும் சூரலே நிறைந்திருந்தது. ஆனால், அச் சூரல் இன்றைய சூரலைவிடப் பல மடங்கு பெரிதாய்ப் பன்னூறடிகள் உயரமாய் வளர்ந்திருந்தது. குடை போன்று கவிந்து வளரும் வடதுருவ மரங்களும் மிகுதியாய்த் தழைத்திருந்தன. பெரிய மரங்களுள் யுக்காலிப்ட்ஸ் பாரிய செம்மரம் (நுரஉயடலயீவரள, ழுயைவே சுநனறடிடின) முதலியவை செழிப்பாக வளர்ந்தன. இலெமூரியாவை அடுத்திருந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து முதலியவற்றில் இன்னும் இம்மரங்கள் மிகுதியாயுள்ளன. இவற்றுள் சில மரங்கள் 30,000 ஆண்டளவும் அழியாத வேலைப்பாட்டில் பயன்படுத்தப் பட்டுள்ளன. வெப்பமண்டலத்தின் செடி கொடிகளும் உயிர்வகைகளும் பொதுவில் மிகப்பெரியவையாகவே இருக்கும். இலெமூரியா விலுள்ள உயிர்கள் இன்றைய உலகில் காணப்படும் எவ்வுயிர் களையும் விடப் பெரியவை. அந் நாட்டு எறும்பினம் 2 அங்குலம் வரை நீண்டிருந்தது. மூட்டைப் பூச்சி 4 அங்குல அளவிருந்தது; அது தன் சிறகுகளால் நெடுந்தொலை பறக்கக்கூடியதா யிருந்தது. இது போலவே மற்றெல்லா உயிர்களும் அதன் தற்கால அளவுக்குப் பன்மடங்கு பெரியவை. இலெமூரியா வாழ்க்கைக் காலம் நடுக் கற்கால (ஆநளடிடiவாiஉ) மாகும். இந் நாள் சதுப்பு நிலங்களிலும், உள்நாட்டுக் கடற் கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் பிளெயாஸாரஸ் (ஞடநயைளளயரசரள) இனமும், இக்தியாஸாரஸ் (ஐஉவாலடிளயரசரள) இனமும் காணப் பட்டன. ஆனால், நாளடைவில் இவ்வுள் நாட்டுக் கடல்கள் வற்றவற்ற இவ்வுயிரினங்கள் அருகி நிலத்துக்கே உரிய பிற ஊரும் வகைகள் பல்கி வளரலாயின. இவ்வகைக்கு தினோஸாரி (னுinடிளயரசயை) என்று பெயர். இவ்வகையுட் சில நிலத்திலூர்வ தோடு கூடப் பறக்கவும் தக்கதாக வெளவால்கள் போன்று தோல் களாலேயே அமைந்த இறக்கைகளை உடையனவாயிருந்தன. இவற்றிற்குப் பேத்ரோதாக்கில் (ஞநவசடினரஉயவலடள) என்று பெயர். இவற்றுள் மிகச் சிறியவை குருவியளவும், மிகப் பெரியவை இன்றைய மிகப் பெரிய பறவைகளினும் பன்மடங்கு பெரியவையாய் 16 அடி அகலமுள்ள இறக்கைகளை உடையவையாயு மிருந்தன. தினோஸாரியாவே இலெமூரியாவின் மிகப்பெரிய உயிராகும். அது 100 அடிக்கு மேற்பட்ட நீளமுள்ளது. செடி கொடிகளையும், உயிர்வகைகளையும் அழிக்கும் ஆற்றலில் இதற்கு ஈடுகிடையா தெனலாகும். ஊன்வெறியால் அவை உறுமும் பொழுதும், மரஞ்செடிகளை நெரித்து அவை நடக்கும் அரவம் கேட்கும் பொழுதும் இலெமூரிய மக்கள் கவலையும் முன்னெச்சரிக்கையும் கொள்ளுவர். அவர்கள் வாழ்க்கையில் நிறைந்த பேரச்சம் இதுவே. 1907 ஜனவரியில் அரசுரிமை நிலையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேரறிஞர் ரே லாங்கெஸ்டர் (ஞசடிகநளளடிச சுயல டுயமேநளவநச) என்பவர் அமெரிக்கக் கூட்டுறவு நாடுகளின் தென் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பிரொன்டோஸாராஸ் (க்ஷசடிவேடிளயரசரள) என்ற உயிரினத்தின் எலும்புக் கூடு 65 அடி நீளமாயிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். மெஸோலிதிக்குக் (ஆநளடி டiவாiஉ) காலத்தின் பிற்பகுதியில் பால்குடி உயிர்கள் முதல்முதலாகத் தோன்றலாயின. அக் கால பால்குடி இனங்களும் பாரியவையே. ஆனால், இன்று அகப் பட்டுள்ள கம்பளியானை மாஸ்டொடன் (ஆயளவடினடிn) முதலிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் இக்காலத்தினும் பிந்தியவையே. அவை இயோஸின் மியோஸின் (நுடிஉநநே ஆiடிஉநநே) காலங்களிலுள்ளவை. இலெமூரியாவில் பறவைகள் மிகுதி. அவற்றின் வகைகளும் பலப்பலவாகும். பலவகைப் பாம்புகளும் இருந்தன என்று தெரிகிறது. கடற்பாம்புகள் என்ற பெயரைக் கேட்டவுடனே மக்கள் ஒரு தலைமுறைக்கு முன் சிரிப்பது வழக்கம். ஆனால், அத்தகைய உயிர் வகை இருந்தது கட்டுக்கதையன்று, உண்மையே என்று இன்று ஐயமற விளங்குகிறது. 1931 இல் அமெரிக்காவிலுள்ள டெக்லாஸ் (கூநஒயள ளுவயவந) நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பாரிய எலும்பு இதன் அளவையும் இயல்பையும் காட்டுகிறது. இதன் பெயர் ப்ளையோஸராஸ் என்பது. இது கிட்டத்தட்ட 75 ஆடி நீளமுள்ளது. அதன் தலையின் அகலம் ஒன்றரை அடி அதன் கழுத்து மட்டிலும் 25 அடிக்குமேல் நீளமுள்ளது. இலெமூரியர் நெருங்கப் பெரிதும் அஞ்சிய உயிர் வகைகளுள் இதுவும் ஒன்று. இலெமூரியாவில் மிகுதியாய் உறைந்த நில உயிர் வகை “ இலெமூர்” என்பதாகும். இது மனிதரது தோற்றம் கொண்ட ஒருவகைக் குரங்கினம். இதிற் பலவகைகளிருந்தனவாயினும், சில இடங்களில் தற்கால மனிதர் உயரமாகிய ஆறடிவரை இது வளர்ந்திருந்தது. இதற்குக் குரங்கைவிடக்கூட நீண்ட வால் உண்டு. ஆனால், மற்றவகைகளில் அது மனிதரை ஒத்திருந்தது. இதன் கைவிரல்கள் ஐந்தும் குரங்கின் விரல் போல் ஒரே புறமாய் இராமல் மனிதர்களின் விரல்களைப் போல 4 விரல்கள் ஒரு புறமும் பெரிய விரல் எதிர்ப்புறமும் ஆக அமைந்திருந்தன. கால் விரலமைப்பும் குரங்கை ஒத்திராமல் மனிதனை ஒத்திருந்தது. இவற்றைக் கூர்ந்து நோக்கிய பழைய பழங்கால ஆராய்ச் சியாளர் இவ்வினமே அந் நாளைய மனித இனம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால், இலெமூரிய மக்களின் உயரிய நாகரிகமும், பிறவும் நேராக இன்று அறியப்படுகின்றமையால் இவை மக்களின மல்ல என்று சொல்லப்படுகிறது. ஆசிரியர் டப்ஸ்யூ எஸ். கார்வே என்பார், ‘மக்களினம் என்றும் குரங்கினத்துடனோ வேறு கீழினத்துடனோ உறவு கொண்டிருக்கவில்லை. படைப்புக் காலத்தில் தானே மனித இனமாகப் படைக்கப்பட்டது’ என்று கொள்கிறார். எப்படியாயினும் இலெமூரியர் காலத்தில் மனிதர் விலங்கு நிலையிலில்லை; மிக உயர்ந்த மனித நிலையிலேயே இருந்தனர் என்பது மட்டும் கண்கூடு. 8. இலெமூரிய மக்களது நாகரிகம் மேலே நாம் குறிப்பிட்டபடி, இலெமூர்களே முதல் மனிதர்கள் என்ற தப்பெண்ணத்தின் பயனாகவேதான் இப்பழங் கண்டத்திற்கு அறிஞர் முதலில் இலெமூரியா என்ற பெயரைக் கொடுத்தனர். மனித வகுப்பின் முன் மாதிரி எனக் கருதப்பட்ட இலெமூர்களின் உறைவிடம் என்பது இதன் பொருள். இக் கருத்துப் பிழைபாடுடைய தென்றும் அந்நாளைய மக்களின் ஏடுகளில் இந் நாடு “மூ”வின் “தாய்நிலம்” என்று வழங்கி வந்ததென்றும் ஆசிரியர் கார்வே கூறுகிறார். இலெமூரிய மக்கள் தற்கால மக்களைவிடப்பெரிதும் நெட்டையானவர்களே. ஆறடிக்கு மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர். அவர்கள் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது. அவர்களுடைய கைகள் இன்றைய மனிதனின் கைகளைவிட நீண்டவையாகவும், பெரியவையாகவும், சதைப்பற்று மிக்க வையாயும் இருந்தன. கால்கள் இதற்கொத்து நீட்சிபெறாமல் திரட்சியுடையவையாய் இருந்தன. தலை உச்சியில் மயிர் இயற்கையாகவே கட்டையாக இருந்தது. ஆனால், பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப் பெற்றிருந்தது. மயிர்கள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை. கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும், தோலில் தீட்டப் பெற்ற ஒவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும், தலைமுடியைப் பின்னி முடிப்பதையே பேரணியாகக் கொண்டனர் என்றும், அவ்வோர் அணியிலேதானே அவர்கள் தம் பலவகைப்பட்ட திறங்களையும் திருந்தக் காட்டினர் என்றும் அறிகிறோம். அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள். சிறுமணி களாலாகிய மாலை ஒன்றையே அவர்கள் கழுத்தணியாகக் கொண்டார்கள். காலடிகளும், கைகளும், அங்கைகளும் மிகப் பரந்திருந்ததோடு விரல்களின் எல்லாக் கணுக்களும் தடையின்றி அசையக்கூடியவையாயிருந்தபடியால் அவர்கள் தற்கால மனிதரை விட மிக நுண்ணிய வேலைத் திறனுடைய வராயிருந்தனர். பெண்கள் ஆடவரைவிட உயரத்தில் சற்றுக் குறைந்தும், பருமனில் சற்றுக் கூடியும் இருந்தனர். ஆடவரைவிட அவர்கள் உருவம் வனப்புடைய தாயிருந்தது என்பது எதிர்பார்க்கத்தக்கதே. ஆடவர் முகம் பெண்டிர் முகம் போன்றே மயிர் அற்றதாய் இருந்தது. ஆனால், பெண்கள் ஒருவகை நாரினால் செய்த முகமூடி அணிந்திருந்தனர். இதன் மூலம் வெயிலின் சூடு அவர்கள் முகத்தை வாட்டாமலும், காற்று மட்டும் எளிதில் புகும்படியும் இருந்தனால் ஆடவர்களைவிட அவர்கள் முகங்கள் பொன்நிற மிக்கவையா யிருந்தன. அவர்கள் காதுகள் இன்றைய மக்களின் காதுகளைவிடச் சிறியவையா யிருந்தன. மூக்கு மிகவும் சப்பையாகவும் பெரிதாகவும் இருந்தது. கண்கள் பெரியவை தெளிவையும் கூர் அறிவையும் காட்டுபவை. பொதுப்பட அவர்கள் செம்பு அல்லது பொன் நிறமுடைய வர்கள். கண்கள் தவிட்டு நிறமும் மயிர் கருமை நிறமும் உடையன. பற்கள் சிறியவையாய் முத்துப்போல் ஒரே படியினவாய் வெண்மையாக விளங்கின. அவர்களது உடலமைப்பில் மிகவும் குறிப்பிடத் தகுந்த பகுதி நெற்றியேயாகும். இலெமூரியர்களுக்கு இஃது 6 அல்லது 7 அங்குலம் வரை அகன்று உயர்ந்திருந்தது. அதில் மூக்கடியினின்றும் ஓர் அங்குலம் அல்லது ஒன்றரை அங்குல உயரத்தில் வாதுமைப் பருப்பளவில் ஒரு புடைப்பு இருந்தது. இஃது அவர்களுக்கு மிகவும் மென்மையும் நுட்ப ஆற்றலும் பொருந்திய ஒரு புலனாயமைந்தது. இவர்களுக்கே சிறப்பான இவ்வுறுப்பின் பயனைப் பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார். இது வேண்டும் பொழுது பிற புலன்களின் தொழிலையே நேரடியாக மனத்துடன் கொள்வது என்றும், நாம் அறியும் (நீளம்: அகலம்: அல்லது உயரம், ஆழம் அல்லது திண்மை) என்ற அளவைகளுக்கும் அப்பாற்பட்ட நான்காம் அளவையை உய்த்துணர்வது என்றும், முக் காலங் களையும் பிறர் எண்ணங்களையும் தொலைநிகழ்ச்சிகளையும் அறியும் அறிவுக்கண் என்றும் ஆசிரியர் கார்வே கொள்கிறார். எப்படியாயினும் தொல்காப்பியத்தில் மனிதர்க்குச் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஆறாம் அறிவையும் சிவபெருமானது நெற்றிக் கண்ணையும் இது நினைப்பூட்டுவதும் காண்க. இலெமூரியர்கள் வீடுகளும் மற்றக் கட்டிடங்களும் நீண்ட சதுர உருவில் 10 அல்லது 11 அடி உயரமுள்ள சுவர்கள் எழுப்பப் பெற்று அவற்றின்மீது கைகள் இறக்கித் தழைகளும் வேயப் பெற்றவை. அவற்றிக்கு வெளியிலும் கூரை 4 அல்லது 5 அடி தொலைவுடையதாயிருந்ததால் உட்பகுதி குளிர்ச்சியுடையதா யிருந்தது. வீடுகள் நெருக்கிக் கட்டப்பெறவில்லை. இடைவெளியிட்டு உடல் நலத்துக்கு ஒத்த முறையில் பெரியவையாகவும், காற்றோட்ட முள்ளவையாகவும் அமைக்கப்பட்டன. பெரிய பொதுக் கட்டிடங்களும் இந்த மாதிரியிலேதான் கட்டப்பட்டன. சுவர்கள் இன்னும் உயரமாயிருந்தன. சில சமயங் களில் பல தனிக்கட்டிடங்கள் கூரையிட்ட வழிப் பாதையில் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தன. பாறைகளுக்குள்ளும் மலைகளுக்குள்ளும் குடைந்து செதுக்கிய அரிய வேலைப்பாடுடைய கட்டிடங்களும் இருந்தன. இக் கட்டிட வேலைகளில் நாம் மேற்கூறிய யுக்காலிப்தஸ் (நுரஉயடலயீவரள) செம்மரம் (சுநன றுடிடின) முதலிய மரங்களின் பகுதிகள் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. கோயில் கட்டுகையில் வளைந்து கவிந்த விமானங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் முன்வாயிலில் இரண்டு பிறை வளைவுகள் இருந்தன. அவர்களுடைய சமய, அறிவியல் ஆராய்ச்சிகளை இவ்வளைவுகள் குறிப்பன ஆகும். நிலத்திலிருந்து உயர்ந்த மேடை ஒன்றமைத்து அதனைச் சுற்றிக் கொசு முதலிய சிற்றுயிர்கள் தொந்தரவு செய்யாமல் நார்வலை ஒன்றை தொங்கவிட்டுப் படுக்கை அமைக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காக மேலிடம் திறந்தே இருந்தது. உணவு நெருப்புமீதோ அல்லது வெயில் வன்மையால் சமைக்கும் கருவி அடுப்புகளின் மீதோ சமைக்கப்பட்டது. காலைக்குளிப்பும், கடவுள் வழிபாடும் சமயத்தின் பகுதியாகக் கொள்ளப்பட்டு வந்த நடைமுறைகளாயிருந்தன. வீடுகள், கோயில்கள், பயிர்ப்பண்ணைகள், தொழில் நிலையங்கள் இவை, வேறு வேறு தனியிடங்களில் கட்டப்பட்டன. தெருக்களும், தலைமைப்பாதைகளும் அமைக்க வேண்டு மிடங்களில், முதலில் செடி கொடிகளை வெட்டி நிலத்தைச் செம்மைப்படுத்தி ஈரமாக்கி அதன் மீது சீமைச் சுண்ணம்பு போல் தோன்றும் ஒரு வகை வெண்மையான கற்பொடியைத் தூவினர். காய்ந்தபின் அது தற்காலத்து சிமெண்டைப்போல் இறுகிவிடுமாம். அவ்விடத்தில் புல் முதலிய செடிகள் வளர்ந்து பாதை கெடுவ தில்லை. ஒட்டகம் போன்ற ஒருவகைப் பெரிய விலங்கின் மீதமர்ந்து அவர்கள் பயணம் செய்தனர். இதனை அவர்கள் வரைந்துள்ள படங்களினின்றும் நாம் அறிகிறோம். இடம் விட்டு இடம் பெயர்வது மிகுதியாக அன்று வேண்டப்பட வில்லை. அவ்வவ்விடங்களில் அவ்வவ்விடங்களுக்கு வேண்டிய பொருள்கள் பெரும்பாலும் செய்யப்பட்டு வந்தமையால் வாணிபம் குறைவாகவே நடந்தது. இயற்கை வளப்ப வேறு பாட்டால் உண்டாகாத பொருள்கள் மட்டுமே மற்ற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டன. அக் காலங்களிலும் அவ் வாணிபத்துக்குப் பணம் வழங்கப் பெறவில்லை பண்டமாற்றே நிகழ்ந்தது. இலெமூரியர் பெரும்பாலும் ஆற்றின் கரைகளிலேயே வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாணிபம் பெரும்பாலும் ஆற்றில் படகு மூலமாகவே நடந்துவந்தது. மேற்கூறிய ஒட்டக இனத்து விலங்கையன்றி வேறு சில விலங்குகளையும் ஊர்தியாக அவர்கள் பயன்படுத்தினர். நயப்புள்ள நிலங்களில் சில சிறுவிலங்குகள் வழுகும் வண்டிகளை இழுத்தன. வாணிபத்தில் பணங் காசுகளை இலெமூரியர் வழங்க வில்லை யென்று மேலே கூறினோம். அதனால் பொன் வெள்ளியே அவர்களுக்குத் தெரியாது என்பதில்லை. நேர்மாறாகப் பொன்னும் வெள்ளியும் இன்றைவிட அன்று மிகுதி. ஆயினும் அவை பயன்பட்டது அணிகலன்களுக்கு மட்டுமே. இன்று மிகவும் அருமையாக மேல்நாட்டார் கையாளுவதும், பொன்னினும் விலைமிக்கதுமான பிளாட்டினம் என்னும் ஒண் பொருள் அவர்களிடையே மிகுதியாக வழங்கியதாய்க் காண்கி றோம். ஆயின், இதுவும் அணிகலன் வகையில் மட்டுந்தான் பயன்பட்டது. கட்டிடஅமைப்பிலும் வேலைப்பாட்டிலும் இலெமூரியர் தற்கால மக்களைவிட மிகவும் முற்போந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் கட்டிட அமைப்புத் திட்டங்கள் மற்ற எல்லோருடைய திட்டங்களையும் விடக் கால எல்லைக் கடந்து என்றும் நிலவத்தக்க நிலவரத்தன்மை பெற்றவை என்றும் கூற வேண்டும். நெடுநாள் நடைமுறை அறிவாலும், அறிவியல் நுட்பத்தாலும் உளஇயல் ஆராய்ச்சியின் மேம்பாட்டினாலும் தம் கண்டத்தின் இயல்பு, அதன் எதிர்கால விளைவு ஆகியவற்றை அவர்கள் அறிந்திருக்கவேண்டும். எனவே தனது கண்டம் பல நில அதிர்ச்சிகளுக்கும், பெயர்ச்சிகளுக்கும் ஆளாக வேண்டுமென்று கண்டு தமது திறத்தால், இயற்கையின் அழிவையும் கால வலிமை யையும் வெல்லும் வகையில் கட்டிடங்கள் அமைத்தனர். அவற்றின் உறுதிக்கு அவற்றைக் கட்டப் பயன்படுத்திய பொருள் மட்டும் காரணம் அன்று. அதனை அடுக்கும் முறையில் நடுநிலை ஒப்புமை (ஊநவேசந டிக பசயஎவைல) மயிரிழையளவுகூடப் பிறழாமல் பார்த்துக் கொண்ட அவர்கள் நுட்பம் நாம் அழுக்காற டையக் கூடியதேயாகும். பெரிய நில அதிர்ச்சி முதலிய இயற்கையின் சீற்றங்களுக் கிடையே அவர்கள் கட்டிடங்களில் சில 30,000 ஆண்டளவும் அழியாது நின்றுள்ளன என்றால் அவற்றின் உறுதிப்பாடுதான் என்னே! இக் கட்டிடங்களில் அவர்கள் பயன்படுத்திய கற்கள் கருங்கல்லையும் சலவைக்கல்லையும்விடக் கடுமையும் உறுதியும் உடையவை. இவற்றைப் பிணைக்கும் ஒரு வகைக் குழம்பு அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவ்விரண்டு பொருள்களையும் அவர்கள் சென்ற இடமெல்லாம் நாம் காண்பதால் அவர்களது ஒருமைப்பாட்டை அவை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. தென் அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர்னியா, நெவதா முதலிய இடங்களில் இக்கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப் படுகின்றன. இன்று இவ்விடங்களில் இக்கல் அகப்படாததை நோக்க அஃது இலெமூரியாவின் உட்பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று கொள்ள வேண்டும். இவற்றோடு ஒவியம், மட்பாண்டவேலை, பயிர்த் தொழிற் கருவி முதலியவற்றிலும், அமெரிக்காவின் மேல்கரை பஸிபிக் தீவுகளை ஒத்திருப்பது இலெமூரியாக் கண்டத்தின் உண்மைப் பாட்டை வலியுறுத்துவதாகும். இலெமூரியரது வாழ்வு இன்றைய ஜப்பானியர் வாழ்வைப் போன்று இடுக்கண் நிறைந்ததாகும். நாட்டின் காற்று மண்டலமும், நிலமும் பொறுக்க வொண்ணாச் சூடு உடையவையாயிருந்தன. எரிமலைகளின் எழுச்சியும், நில அதிர்ச்சியும் ஏற்படுவது இன்ன சமயம் இன்ன இடம் என்றில்லை. காட்டு விலங்குகளும், உயிர் வகைளும் எங்கும் நிறைந்திருந்தன. ஆனால், இத்தனைத் தடைகளிடையேயும், இலெமூரியர், நெடுங்கால நடைமுறை அறிவால், இயற்கையைக் கீழ்ப்படுத்திப் பலவகைகளில் தற்கால உலக நாகரிகத்தினும் சிறந்ததென்று சொல்லக்கூடிய உயரிய நாகரிகத்தை உண்டுபண்ணும் திறனுடைய வராயிருந்தனர். கருவிகளைக் கையாளுவதிலும் சரி, நிலக் கனிப்பொருள் களில் நமக்குத் தெரியாதவற்றின் உதவியாலோ அல்லது தெரிந்த பொருள்களையே நமக்குத் தெரியாத வகையில் பயன்படுத்து வதனாலோ அவர்கள் இயற்றிய பொருள்களிலும் சரி, அவர்கள் நம்மைவிட அரிய செயல்கள் செய்யக்கூடிய வராயிருந்தனர் என்பது மட்டும் உறுதி. அவர்களுடைய அரிய கருவிப் பொருள்களுள் சிறந்த குணமுடைய ஒருவகைக் கல்லைப்பற்றி ஓவியங்களாலும் அவர்களுடைய சில கையெழுத்துப் படிகளின் மூலமாகவும் படிக்கிறோம். இக் கல் தண்ணீரைத் தன் பக்கம் நின்றுமிகுந்த வன்மையுடன் தள்ளும் ஆற்றல் உடையது. படகின் பின்பக்கம் இது நீர்மேல் தொட்டுப் தொங்கவிடப் பட்டால் தண்ணீரைத் தள்ளிப் படகை ஓட்டுமாம். இதேபோன்ற ஏதோ ஒரு கருவியால் அவர்கள் வான ஊர்தியையும் இயக்கி வந்தனர். ஒரு வகை நீராவிக்கருவியும், அவர்களுக்குத் தெரிந்திருந்தது. காற்றியக்கு கருவியும், காந்த வலியால் இயங்கும் திரிகைக் கருவிகளும் பொது வழக்கில் இருந்தன. வெயிலின் ஆற்றலை நம்மைவிட இலெமூரியர் பெரிதும் பயன்படுத்தி அதன்மூலம் பகல்வெளிச்சத்தை இரவிலும் தொடரச் செய்ததோடு, தொழில் ஆலைகளுக்கு வேண்டும் தொழில் வலிமையும் உண்டு பண்ணினர். ஒளியை ஆளும் வகையில் தற்காலத்தவரை நெடுந்தொலை இலெமூரியர் பின்னடையச் செய்துவிட்டனர். அவர்கள் ஒளியை ஒரு மலை முழுவதும், அல்லது ஒரு நாடு முழுவதும் பேரொளி பரப்பச் செய்யும் ஆற்றல் உடையவர்களாயிருந்தனர். காலிபோர்னிய நாட்டில், மலையில் இன்றும் அடிக்கடி நெடுந்தொலைவரை எட்டும்ஒளி வீசுகின்றது என்றும் இதுமலையில் மறைந்து உறையும் இலெமூரியரினதே எனக் கருதப்படுகின்ற தென்றும் ஆசிரியர் கார்வே கூறுகின்றார். அவர்கள் இவ் வகையில் தற்காலத்தாராற் கண்டுபிடிக்க முடியாத படி உண்டுபண்ணிய ஒளிகள் பெரும்பாலும் அண்மையிலேயே நாம் கண்டுபிடித்த இரேடியம் என்ற புதிய பொருளினாலோ அல்லது அதுபோல் இன்னுங் கண்டு பிடிக்கப்படாத நிலப் பொருள் ஒன்றினாலோ ஏற்பட்டிருக்க வேண்டும். இலெமூரியர்களிடை எழுத்துப் பயிற்சி திருத்த அமையப் பெற்றிருந்தது. அவர்கள் எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவர்களறிந்த அறிவியல் செய்திகளே. தம் நாடு அழியக்கூடும் என்பதை அறிந்த அவர்கள் தமது நெடுநாளைய வாழ்க்கையின் மெய்ப்பயனாகிய அறிவியல் உண்மைகளை என்றுமழியாது பதிவு செய்ய எண்ணி உலகப் பேரழிவு நேரினும் அசையா உறுதி கொண்ட கட்டுப்பாடுடைய தங்கள் கோயில்களின் சுவர்களில் அவற்றை எழுதி வைத்தனர். இவற்றிலிருந்து அவர்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை அறிந்து, பின்வருகின்ற தலைமுறைகட்குத் தமது அறிவைப் பயன்படுத்த விரும்பினர் என்பது நன்கு விளங்குகிறது. அவர்களைப் பற்றிய எழுத்துச்சான்றுகளில் சிறந்தது கிலமத் அருவியின் பக்கம் கிலமத் ஏரியைச் சுற்றி எழுதப் பட்டவையே. இவற்றை வாசிக்க இவற்றின் ஒலிக் குறியீடு இன்னும் புலப்பட வில்லை. ஆயினும் வேறு இலெமூரியர் எழுத்து வகைகளுடன் இஃது ஒத்தே காணப்படுகிறது. போரில் இலெமூரியர் வில் அம்பு இவற்றை மட்டுமே திறமையுடன் பயன்படுத்தினர் என்று தெரிய வருகிறது. அவர்கள் தற்கால மக்களைப் போல் அழிவு வேலையில் அத்தனை கருத்துச் செலுத்தாமல் ஆக்கவேலையில் மட்டுங் கருத்துச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இலெமூரியர்களிடையே கொடுக்கல் வாங்கல் முறையிலும் நாணயம் வழங்கப்பெறவில்லை. உழைப்புக்கு ஊதியம் ஆவ தெல்லாம் பொது உணவு, உடை இவற்றுட் பங்கேயன்றி வேறில்லை. தம்மிடம் கிடையாத பொருள்களை மட்டும் வேறுபுலத்தவரின் பொருள்களுடன் அவர்கள் பண்டமாற்றுச் செய்து கொண்டனர். கலைப்பயிற்சி வகையில் அவரவர்க்குப் பிடித்த கலையை அவரவர் மேம்படுத்திக்கொண்டு போக எல்லா வகை உதவியும் செய்யப்பட்டது. கலைத் தொழிலாளர் பிழைப்புக்குக் கலையை எதிர்பார்த்திருக்கவிட்டுக் கலையின் வன்மை, உயர்வு முதலியவற்றைத் தற்காலத்தவர்போல் அவர்கள் கீழ்ப்படுத்த வில்லை. அறிவுத் துறையிலுள்ளவர்க்கும் இதே வகையில் உணவுக்கும், ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இலெமூரியர்களின் வாழ்க்கை விவரங்களைப் படித்துப் பார்க்கும் தற்காலத்தான் ஒருவன் கண்ணுக்கு அவர்களிடம் ஒழுக்க முறையே கிடையாது என்று தோன்றும். திறந்த உடல்பற்றிய எவ்வகை வெட்க உணர்ச்சியும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் தற்கால வெற்றுடற் கழகங்கள் மாதிரி வேண்டுமென்று ஆடையில்லாமல் இருப்பதில்லை. ஆயினும் குளிக்கும் இடங்களில் இருபாலரும் ஆடையின்றிக் குளிப்பதிலும் நீந்தி விளையாடுவதிலும் அருவருப்பு அற்றவாராயிருந்தனர். இலெமூரியர், இந்தியர், எகிப்தியர் முதலிய கீழ் நாட்டு மக்களைப் போலவே அரையைச் சுற்றித் தொங்கலான ஆடை கட்டி வந்தனர். அவர்களது நாடும் இந்தியாவைப் போலவே வெப்ப முடையதாயிருந்ததனால் இந்த ஆடைமுறை மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. இலெமூரியரிடை இருபாலார்க்கும் பொதுவான ஒழுக்க முறைகளும், மணவினை முறைகளும் இருந்தன. அவற்றுட் சில இன்னும் பஸிபிக் கடற்புறத்திலுள்ள தீவுகளில் காணப்படு கின்றன. மனமொத்த காதலர் இருவர் மணவாழ்வினை ஏற்க விரும் பினால் முதன்முதலில் அவர்களது சமயத் தலைவரை அணுகுவர். சமயத் தலைவரை இலெமூரியர் தம் மொழியில் ‘கு’ என்று வழங்குவர். அவரே ஆசிரியராகவும், ஊர்த் தலைவராகவும் முதல் வகுப்புத் தலைவராகவும் இருந்தார். இவர்முன் காதலர் சென்று தங்கள் பெயரைப்பதிவு செய்து கொள்வர். அதன்பின் இருதிறத்துப் பெற்றோர், உறவினர் முதலியவர் களை அக் ‘கு’ அல்லது குரு அழைத்து அவர்களுடன் கலந்து அவ்விருவரது வாழ்க்கைப் பிணிப்பு விரும்பத்தக்கதுதானா என்பதை ஆராய்ந்து விரும்பத்தக்கதே என்று துணிந்தபின், அவ்விருவரது உடை, உடைமையாவற்றையும் அகற்றிவிட்டு வெறுமையாக ஊர்க்கு வெளியேயுள்ள காட்டில் தனிமையில் துரத்தி விடுவர் அவர்களிடம் ஒண்பொருள் (உலோகம்) எதுவும் அப்போது இருக்கப்படாது. இந்த நிலையில் அவர்கள் காட்டினுள் 50கல் தொலைவரை சென்று அங்கே இரண்டு திங்கள் பொழுதேனும் காலங் கழித்து வரவேண்டுமென்று அவர்களுக்கு ஆணை தரப்பட்டது. அவ் வெல்லையுள் அவர்கள் தங்களுக்கான ஆடைகள் செய்து கொண்டு வாழப் பயின்றனரா, காட்டு விலங்குகளிலிருந்து தன் காதலியைக் காதலன் காத்து அச்சமகற்றி வாழ்ந்தனனா. காதலி காதலனுக்கு எவ்வகையிலும் ஒத்த துணைவியாய் இருந்தனனா என்பனவெல்லாம் மறைவாயும் நேரிடையாய் உசாவியும் அறியப்பட்டன. அவர்கள் அன்பு, இத்தனை தேர்வுகளிலும் தேறிப் பின்பும் மாறாதிருந்தால், கோவிலில் வைத்துப் பல நுண்ணிய வினைகளுடன் அவர்களது மணவினை நிகழ்த்தப்பெறும். தேர்வுகளுள் இன்னொன்றும் உண்டு. காட்டுவழியினின்று வந்தவுடன் குரு காதலர் ஒவ்வொருவரிடமும் ஒண்பொருள் (உலோகத்) துண்டு என்று கேட்பர். அது அவர்களிடமில்லா விட்டால் காட்டுக் கனுப்பும் நாள் ஒரு திங்கள் ஒத்தி வைக்கப்படும். தேர்வுகளுள் எதிலேனும் தவறினால், அக் காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் மணக்க முடியாதது மட்டுமன்று, மணப்பேச்சே பின் எடுக்கவும் இயலாது. மணவாழ்வு முறிவு என்னும் பெயர்கூட அன்று கிடையாது. மணவினைகளுள் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. மண மக்கள் கைகளின் சுட்டுவிரல்களிரண்டிலும், ஓரங்குலம் கத்தியால் செதுக்கிச், செதுக்கிய இடத்தில் இரண்டையும் சேர்த்து (ஒட்டுமாங் கன்றை ஒட்டிப் பிணைப்பதுபோல்) பிணைத்து இருவர் குருதியும் ஒருப்பட்டொழுகச் செய்வர். (தமிழ் நாட்டில் செதுக்குதல் மட்டும் அகற்றப்பட்டு விரல்கள் பிணித்துவைக்கப் படுதல் காண்க.) பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு, தாய் தந்தையரிடமே விட்டுவிடப்படவில்லை. ஊர்ப் பொதுவில் பிள்ளை வளர்ப்புக் கழகங்கள் இருந்தன. மருத்துவரும் மிக உயர்நிலையிலிருந்தனர். மருந்துகளைவிட இயற்கை முறைகளும், உள்ளத்தை இயக்குவதன் மூலம் உடலை இயங்கி நோய் நீக்குமுறைகளும் அந்நாள் மிகுந்திருந்தன. சாவு என்பதைக் கண்டு இக் காலத்தவர் அஞ்சும் அச்சத்தின் நிழல்கூட அன்றில்லை. சாவுக்குப் பின்னும் பிறப்புக்கு முன்னும் உள்ள வாழ்வுகளை அறிந்தவர்கள் அவர்கள் என்று மேலே கூறப்பட்டது. எனவே. அவருக்குத் (தமிழருக்கு எப்படியோ அப்படியே.) “உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு” மேலும் இந் நாளிலோ, அந் நாளில் வேறு பல நாடுகளிலும் இறந்த உடலைப் போற்றி உயிர்க்கும் போது கூடக் காட்டாத பூசனைகளை யெல்லாம் காட்டிப் பூசிக்கும் வழக்கம் உண்டு. ஆனால், இலெமூரியரோ (பழைய சித்தர்கள் போன்று) “நார்த்தொடுத் தீர்க்கிலென்? நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென்? பல்லோர் பழிக்கிலென்? தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்” எனக் கொண்டு பிணத்தை எங்கெறிந்தாலென்ன என்று அமைந்த கருத்துக் கொண்டிருந்தனர். மேலும், பிறப்பு வாழ்க்கை யரும்பு, வாழ்வு அதன் வளர்ச்சி; இறப்பே அதன் முதிர்வு; கீழ் வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்குப் போகும் மாணவனுக்கே இறக்கும் உயிர் ஒப்பாகும். தேறிய வனுக்காக வருந்தும் ஆசிரியனையே இறந்தவனுக்காக வருந்து பவர் ஒப்பர் எனக் கொண்டனர் இலெமூரியர். ஆதலான், தமது உடம்பினைப் பெற்ற பயன் அடைந்து விட்டோம். என்றோ, உடம்பு அப் பயனைப் பெறுதற்குரிய தகுதியை இழந்து விட்ட தென்றோ கண்டவுடன் தாமே தமது உயிரை விடும் இயல்புடையவர். இம் முறை தற்கொலை முறையன்று, உடம்பை அழிக்காமலே உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் அருஞ்செயல் அவர்களிடம் மிகுதி. இவ்வகையில் இளமையில் உயிர்விட்டார் சிலர். அங்ஙனம் உயிர் நீப்பார் அதனை முன்கூட்டி உறவின் முறையார்க்கு அறிவித் தழைக்க அவர்கள் வந்திருந்து வழியனுப் புவதும், சில சமயம் இறப்பார் தமக்கான கல்லறை கட்டிவைத்து அதில் தம் கைப்பட இறக்கும் நாள், இறக்கும் தம் பெயர், தமது குறிக்கோளான மொழிகள் இவற்றைச் செதுக்கிப் பின் இறந்து அதில் அடக்கம் செய்யப்படுவதும் உண்டாம். இச் செய்தியுடன் தமிழரது வடக்கிருத்தல் என்னும் வழக்கினையும், முதுமக்கள் தாழிகளையும் பொருத்தி நோக்குக. இலெமூரியரிடமுள்ள கலைச் சிறப்புகளுள் ஒன்று அவர்கள் இறந்த உடலின் எலும்பு மட்டுமன்று; தசை கூடக் கெடாது வைத்திருக்கும் ஆற்றல் படைத்திருந்தமை ஆகும். இவ்விரண்டும் நல்நிலையில் வைக்கப்பட்ட உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நம் நாகரிகந் தோன்றி ஒன்றிரண்டாயிர ஆண்டுகளே ஆயின. ஆனால், இலெமூரியர் நாகரிகம் உயர் நிலை அடைந்திருந்த காலத்தில் அது நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியடைந்து முதிர்ந்திருந்தது. இதன் பயனாக அவர்கள் வாழ்க்கைப் பயிற்சியிலும், தொழில் நுட்பம், விடாமுயற்சி, இயற்கை அமைதிகளுடன் ஒத்துழைப்பு முதலியவற்றிலும் மிகவும் மேம்பட்டிருந்தனர். குறைபட்ட அறிவு, அக் குறையிறவால் கறைபட்ட உள்ளம் என்பவை அவர்களிடையே கிடையா. போலி அறிவினாலும், வாழ்க்கையைப் பற்றிய தப்பெண்ணங்களாலும் அவர்கள் கருத்துக் குழப்பமுற்றதில்லை. சமய வகையிலும் அவர்களது அறிவு களங்கமற்றிருந்தது. ஏனெனில், உலகத்தோற்றம், நடுக்கம், உயிர்களின் நிலை ஆகிய அடிப்படையான செய்திகளில் எல்லாம் அவர்கள் குரங்குப் பிடியாக ஏதேனும் ஒரு கொள்கையைப் பற்றிக் கொண்டிராமல், திறந்த மனமுடையவராய் வாழ்ந்து வந்தனர். ஆதலினாலேயே உயிர்களின் உள்ளத்திற்கு அப்பாற்பட்ட உலகப்பொது உள்ளம் ஒன்று இருந்ததென்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். அஃது அவர்களிடை வெறும் நம்பிக்கை யன்று; நடை முறையுட்பட்ட ஒரு நிலவரமான நாள்முறை உண்மையாதலின், அஃது இந்நாளுலகில் இருப்பதுபோல் வாரத்துக் கொருநாள், அல்லது நாளில், ஓர் ஓரை, அல்லது ஓர் இடம் பற்றி நில்லாமல் பாலில் நீர் கலந்தாற்போல் அவர்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்தது. அவர்கள் நெற்றியில் கண்போன்றமைந்திருந்த உறுப்பைப் பற்றியும் அஃது அவர்களுக்கு ஆறாம் அறிவைத் தந்ததுடன் நாலாம் அளவையையும் அறியக் கருவியாயிருந்தது என்பதுபற்றியும் மேலே கூறியிருக்கிறோம். அதோடு இதே நெற்றிக்கண்ணின் பயனாகவே அவர்கள் உலகமுற்றும் செல்லத்தகும் தொலைப்பார்வை யாற்றலையும், முக்கால உணர்வையும் பெற்றிருந்தனர். இக் கண்ணின் பார்வை, முன்னால் உள்ள அண்மை சேய்மைப் பொருள்கள் நீங்கலாகப் பின், மேல் நுண்மை ஆகிய பிறநிலைகளைத் துருவி நோக்குவதாகவும் அமைந்திருந்தது. தமிழில் அண்மையை இ என்ற சுட்டும், சேய்மையை அ என்னும் சுட்டும், காட்ட, உ என்பது முன் அல்லாத இப் பிற இடங்களையே காட்டி நிற்றலை நோக்குக. அ இ என்ற இரு சுட்டும் கட்புலப் பொருள்களைக் குறிப்ப, உச் சுட்டு மட்டும், அகக் கண்ணுக்கன்றிப் பிற கண்களுக்கு மறைக்கப்பட்ட வெளிப்பொருள் களையும் உட்பொருள்களையும் குறிக்கின்றது காண்க. கடவுளின் இயல்பு பற்றிய இலெமூரியர் கருத்து மிகவும் உயர்வானது. அவர்கள், கடவுள் எங்கும் நிறைந்த ஒரு தத்துவம் அல்லது உண்மை என்றும், அது நன்மை தீமை, ஆண், பெண் என்னும் இருமை உணர்ச்சியின்றிப் பொதுநிலை வாய்ந்தது என்றும், அவரது படைப்புத் தொழிலே அன்புக்கு அறிகுறி என்றுங் கொண்டனர். மறுபிறப்பு அவர்களுக்குக் கொள்கை என்று சொன்னால் போதாது. வீட்டின் முன்திண்ணை, பின்னறை நமக்கு எவ்வளவு எளிய உண்மைகளோ, அவ்வளவுக்கு அஃது அவர்கள் தெளிவாய் அறிந்த, ஒரு செய்தி ஆகும். தம் முற்பிறப்பும் பிற்பிறப்பும் அறிந்து, உணர்வுடன் இறந்து உணர்வுடன் பிறக்கும் அத்தகைய மக்களுக்கு அது கண்கூடான உலகியல் உண்மையேயன்றிச் சமயக் கொள்கை என்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் சமயக்குறி, ஸ்வஸ்திகாச் சக்கரம் போல் நடுவே சிலுவை அல்லது காற்றாடி மாதிரி ஒரு குறியும் சுற்றிலும் ஒரு வட்டமும் ஆகும். இவற்றுட் சிலவகைகளைப் படத்தில் பார்க்க. அவர்கள் சமயத்தில் அடிப்படையாக நான்கு கவர்கொண்ட கொள்கையைக் (குடிரசகடிடன னுடிஉவசiநே) கொண்டனர். அவர்களுடைய வரலாற்றைப் பிற்காலத்தவர்க்கு அறிவிப் பதற்கென எழுதப்பட்டனவாகக் கருதப்படும் எண்ணிறந்த குறிகள் ஏரியையடுத்த மலைப் பாறைகளிற் காணப்படுகின்றன. அவற்றிற் சிலவே முன்படத்திற்காண்பன. இத்தகைய குறிகள் காணப்படும் இடத்திற்குச் சற்றுத் தொலைவிலே தான் ஷாஸ்தாமலை (ஆவ. ளுhயளவய) இருக்கிறது. இது ஸிரா நிவாடா (ளுநைசசய சூநஎயனய) மலையின் வடமுனையில் இருப்பதாகும். இம் மலையில் அடிக்கடி காணப்படும் பேரொளி களைப்பற்றிக் காலிபோர்னியா மக்களிடைப் பல கதைகள் வழங்குகின்றன. இம் மலை பண்டைக் காலத்தில் ஓர் எரிமலையாயிருந்திருக்க வேண்டும் போலும்! இனி இம் மலையில் அவர்கள் தெய்வமொன்றைத் தொலைப் பார்வைக் கண்ணாடியில் தாம் பார்த்ததாக திரு. லார்ஸ்கின் கூறுகிறார். அந்நாட்டு மலைகளிற் காணப்படும் பேரொளிகளும், குன்ற மாந்தர்களின் அருஞ் செயல்களும் இன்னும் மீந்திருக்கும் இலெமூரியரது அறிவியல் உயர்வைக் காட்டுகின்றன என்று திரு. கார்வே கூறுகிறார். 9. தற்கால நாகரிகமும் இலெமூரியரும் உலகியலறிஞர், உள்ள நிலைகளின் மூவகைப் பாகுபாட்டைப் பிரித்தறிகின்றனர். முதலாவது அறிவுப் பகுதி அல்லது உணர்வு நிலை, (ஊடிளேஉiடிரள டநஎநட) இரண்டாவது உணர்ச்சிப் பகுதி அல்லது உரை உணர்வுநிலை, (ளுரbஉடிளேஉiடிரள டநஎநட) மூன்றாவது உணர்வின்மை நிலை (ருnஉடிளேஉiடிரள டநஎநட) இவற்றையே தமிழ் நூல் வல்லார் நணாநிலை, கனாநிலை, கணழுத்திநிலை எனக் கூறுவர். இவற்றுள் தற்கால மாந்தர் உணர்ச்சியினின்று விடுதலை பெற்று அறிவினாலேயே உயர்வு பெற்று வருகின்றனர். இவ்வறிவை நன்கு பயன்படுத்தக் கற்குமுன் பிற விலங்குகினங்களைப் போன்று மனிதனும் உணர்ச்சினாலேயே எல்லாக் காரியங்களையும் செய்திருக்க வேண்டும். ஆசிரியர் ஸ்காட் எலியட், ருடால்ப் ஸ்டைனர் முதலியோர் தமது மனிதத் தோற்றக் கொள்கைக்கிணங்க, முதல் இரண்டு நில ஆக்க இயல்காலப் பகுதிகளிலும் இருந்த மக்கள் உடம்பே அற்று மூன்றாவது கழுத்தி நிலையை ஒட்டிய முந்திய கற்பத்து உயிர்கள் என்றும், மூன்றாங் காலத்தைச் சார்ந்த இலெமூரிய மக்கள் உணர்ச்சியையே முழு ஆற்றலாகக் கொண்டவர் என்றும், அவ்வுணர்ச்சி தற்கால மனிதரைவிட அவர்களிடம் கூடுதலாக இயற்கையாகவே அமைந்திருந்தபடியால் தற்காலத்தாரால் செய்வதற்கு அரிய சில செய்கைகளையும் உணர்ச்சியின் உதவியால் செய்தனர் என்றும் அதன்பின் நான்காம் காலத்திருந்த அத்லாந்தியர் அறிவைப் பயன்படுத்தினும் அதனைத் தன்னல முறையில் ஆற்றியதால் அழிந்தனர் என்றும், ஐந்தாம் காலத்தவ ராகிய தற்கால ஆரியர் அறிவை நன்முறையில் பயன்படுத்த முயல்கின்றனர் என்றும் மனித வளர்ச்சி பற்றிக் கூறுகின்றனர். இன்னும், முதன் முதல் பால் பாகுபாடு ஏற்பட்டதுகூட இலெமூரியாவிலேயே என்றும், எழுத்தும் பேச்சும் அதற்குப் பிந்தி ஏற்பட்டதே என்றும், அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆசிரியர் எஸ். கார்வே காலிபோர்னியாவிலும் பிற இடங்களிலும் கண்ட சான்றுகளால் இத்தகைய புனைவியல் தடுமாற்றங்களுக்கு இடமில்லாமல் செய்துவிட்டனர். இலெமூரியர் எழுத்து வாசனையுடையவர். பேசத் தெரிந்தவரே யாயினும், பேச்சின்றிக் கருத்து மாற்றும் ஆற்றலும் உடையவர் என்றும், இவற்றின் உதவியால் தற்கால மனிதரைவிட அறிவியற் கலை கருவியாற்றல், நாகரிகம், ஆகிய பகுதிகளில் பலவழியில் முன்னேறியவர் என்றும் கொள்கிறார். முன்கூறிய ஆசிரியர்கள் தடுமாற்றங்களுக்குக் காரணம் அவர்கள் தாம் கண்கூடாகக் கண்ட அறிவியல் உண்மைகளையும் தமது சமயக் கருத்துக்கு ஒப்பத் திருத்தி அமைக்க முயல்வதனா லேயே என முன்னர்க் கூறினோம். அறிவியல் முறைப்படி வரலாற்றாராய்ச்சி வழியில் அவர் களைப் பின்பற்றிச் சென்று பார்த்தால் இலெமூரிய நாகரிகம் மனிதரின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதும், நெடுநாள் வளர்ச்சியால் சிலவகையில் தற்கால நாகரிகத்துக்கு ஒப்பாகவோ மிகையாகவோ காணப்படினும் பலவகைளில் அதன் பழங் காலத்தைக் குறிக்கும் குறைபாடுகளில்லாததன் றென்பதும் அதற்குப் பின்னும் அத்லாந்திய நாகரிகத்திற்குப் பின்னும், மற்றும் அடிக்கடி வேறு காலங்களிலும் மனித நாகரிக வளர்ச்சியில் உயர்வு தாழ்வுகளும், மாற்றங்களும், அழிவுகளும், புதுவளர்ச்சி களும் ஏற்பட்டுள்ளன என்பதும் தெளிவாகக் காணப்படுகின்றன. தற்கால (அஃதாவது, சிறப்பாக மேல்நாட்டு) நாகரிகத்தை விட இலெமூரியர் சிறந்து விளங்கிய பகுதி, அவர்களது வாழ்க்கை அமைதியிலேயே, அவ்வுயர்வு உண்மையில் இலெமூரியாவுக்கு மட்டுமன்று; பிற்போக்கு உடையவை என்று மேல்நாட்டாராற் கருதப்படும் பழைய கீழ்நாட்டு நாகரிகங்கள் அனைத்திற்கும் பொதுவானதேயாகும். தற்கால மேல்நாட்டு நாகரிகத்தின் தன்னலமும், போட்டியுணர்ச்சியும், அழிவாற்றலும் மேம்பாடு போலத் தோற்றினும் அவை அந்நாகரிகத்தின் அடிப்படையே அழிக்கும் பெருந்தீங்குகளேயாகும். இலெமூரியரது வாழ்க்கை யமைதிக்கேற்ப, இலெமூரி யரியன் சமய உணர்ச்சி நடுநிலையும், நேர்மையும் உடையது. இன்று உலகில் காணப்படும் கடவுள் மறுப்புணர்ச்சியும் அவர் களிடையில்லை. அதற்கு மாறாகக் கீழ்நாட்டாரிடை அடிக்கடி காணப்படுகின்ற கடவுள் பேராற் காட்டப்படும் வெறியும் அங்கில்லை. போலி உணர்ச்சியோ மருந்திற்கும் இருந்த தில்லை சமயம், அவர்கள் வாழ்க்கையோடு சேர்ந்த ஒரு வாழ்க்கை அமைதி. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், இன்னும் சிறப்பாகச் சிலப்பதிகாரத்திலும் இத்தகைய சமய அமைதியை நாம் காணலாம். வாழ்க்கையிலும் இலெமூரியரிடைப் பொருளற்ற போட்டி யில்லை. அதற்கான விரைவும் இல்லை. மாலையின் உலாவப் போகிறவர்கள் அதற்காகக் கடற்கரை செல்ல 60 கல் விரைவில் ஊர்தியில் செல்கின்ற புதுமை இக் காலத்தது. ஒரு நாட்டில் மக்கள் முற்றிலும் கைத் தொழிலே செய்து அத் தொழிற் பயனாகிய பொருள்களை அடுத்த நாட்டார் வாங்க வேண்டு மென்று வற்புறுத்துவதும், நெடுந் தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து உணவுப்பொருள்களை அவற்றிற்கு மாற்றாக வாங்குவதும் இதே வகைப்பட்ட குழப்பத்தைச் சார்ந்ததே. இலெமூரியரது வாழ்க்கை, இதிலும் கீழ் நாட்டாரது வாழ்க்கையையே போன்றதாகும். அறிவியல் கலைவகைகளில் எல்லாத் துறைகளிலும் இன்றைய மேல்நாட்டறிவுக்கு இலெமூரியர் அறிவு ஒப்பாக மாட்டாது. ஆனால், அவர்கள் குறைபாடு பெரிதும் அழிவுத் துறைபற்றியது என்பதும் உயர்வு ஆக்கத்துறை பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கவை. வீடு நகரம் முதலியவற்றின் அமைப்பு களிலும் உடை வகையிலும் உணவுவகையிலும் அவர்கள் உடல் நலத்தையும் இன்பத்தையும் போற்றினரே யன்றிப் பகட்டையும், ஆரவாரத்தையும் பாராட்ட வில்லை. இந்த அடிப்படையான உயர்நிலை (ஆன்மிக) உண்மையை விட்டு விட்டுத் தற்கால அறிவியல் நோக்குப்படி பார்த்தாற்கூட இலெமூரியர் சில வகைளில் தற்கால மக்களைவிட முற்போக் கானவர் என்று தெரிகின்றது. இதற்கு நாம் முற்கூறிய செய்தி யோடு கூட அவர்களது நெடுங்கால நடைமுறையறிவும் ஒரு காரணமாகும். நமது தற்கால மேல்நாட்டு நாகரிகம் சில நூற்றாண்டுகளே பழைமையுடையது. அதற்கு அடிப்படை யாயிருந்த கிரேக்க உரோம நாகரிகங்கள் கூட இரண்டு மூன்றாயிர ஆண்டுகளுக்கு முந்தியவையல்ல. இந்த அளவில் கூட இந் நகரிகம் முழுத் தன்னாட்சி (சுதந்தரம்) உடையதன்று. ஏனெனின் இலெமூரிய நாகரிகத்தின் கிளைகளாகிய இந்திய நாகரிகம், செமித்திய நாகரிகம் இவற்றின் பலபகுதிகளை அது பல காலங்களில் தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, இலெமூரிய நாகரிகம் தன்னாட்சியுடன் ஒரு நூறாயிர ஆண்டு முதல் இரண்டு நூறாயிர ஆண்டு வரையிற் பயின்ற தொன்றாகும். இந் நடைமுறையறிவால் தற்காலத்தவருக்குத் தெரியாத பல மூலப் பொருள்களும் (நுடநஅநவேள), கருப்பொருள்களும் (ஆiநேசயடள), ஒண் பொருள்களும் (ஆநவயடள) அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றுள் நீரை விலக்கும் ஆற்றல் வாய்ந்த கல் ஒன்றும், பேரொளிகள் தரும் ஆற்றலுடைய ரேடியம் என்றதற்கான புதிய ஒண்பொருளோ அல்லது அது போன்ற பிறிதோர் ஒண்பொருளோ ஒன்றும், தற்காலப் பூச்சுமண்ணை (சிமெண்டைப் போல் (ஊநஅநவே) மண்ணை உறுதி செய்யக் கூடிய வெண் கற்பொடி ஒன்றும் தலைமையானவை என்று முன்னர்க் கூறியுள்ளோம். இவற்றின் உதவியால் அவர்கள் பலவகை ஊர்திகளும், வான ஊர்திகளும் உறுதியான பாதைகளும், அமைத்தனர். மூலப் பொருள்களின் அறிவாலும், பொருள்களின் ஒப்ப நிலை (க்ஷயடயnஉந) அறிவாலும், மரக் கட்டைகளைப் பாதுகாத்து வைக்கும் அறிவாலும், அவர்கள் 30,000 ஆண்டளவும் அழியாத கட்டிடங்களும் கோயில்களும் நிறுவினர். அவர்களது ஒளியறிவு மிகுதியால் தற்காலத்தவரால் வியக்கத்தக்க வண்ணம் பல நூறு கல் தொலைவரை ஒளிவீசும் விளக்கங்களை அவர்கள் உண்டு பண்ணி இரவைப் பகலாகச் செய்திருந்தனராம். கலைகளிலும் ஓவியத்திலும் மற்றும் அவர்களது திறன் தற்காலத்தவர் அழுக்காறடையத் தக்கதாகவே இருந்தது. ஆனால், இத்தனை திறனும் மனித ஆக்கத் துறையில் சென்றதேயன்றி அழிவுத் துறையில் செல்லவில்லை; அத்லாந்திய நாகரிக காலத்திலும், அதன் பின் செமித்தியர் நாளிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் போர்த்திறங்காட்டி அழிவு செய்தபடி அவர்கள் செய்யவுமில்லை. செய்ய முயலவுமில்லை; தம்மைச் சுற்றியுள்ள பெரிய விலங்கினங்கள் பாம்புகள் இவற்றிலிருந்து கூட அவர்கள் தப்பி ஒதுங்கி நிற்க முயன்றனரேயன்றி அவற்றை அழிவு செய்ய முற்பட்டதாகத் தெரியவில்லை. அழிவுத் திறம் மிகுந்த நாகரிக காலங்களிலேதான் கோட்டை கொத்தளங்களும், பெரு நகரங்களும் மிகுந்திருக்கும், அத்லாத்திய நாகரிகம் இத்தகையதே. ஆனால், இலெமூரியாவில் வீடுகளும் ஊர்களும் மனித வாழ்க்கை நலமொன்றையே நோக்கமாகக் கொண்டு, தற்கால மலையாள நாட்டு வீடுகளைப் போன்று இடைவெளிகளும் சோலைகளும் விட்டுக் கட்டப்பட்டவையே யாகும். ஆங்காங்குள்ள சில நகரங்களும் வாணிபத் துறைகள் அல்லது தொழில் துறைகளாகவே அமைந்திருந்தன. இன்று இலெமூரியர் நாகரிகத்தைப் பற்றி நாம் அறிய உதவும் கட்டிடங்கள் அவர்கள் கோயில்கள் மட்டுமேயாகும். அவர்கள் ஊர்களும் வீடுகளும், இன்றைய ஜப்பானியர் வீடுகளைப் போல் எரிமலை, நில அதிர்ச்சி முதலியவை காரணமாக அழியும் பொருள்களாலேயே கட்டப்பட்டன. இலெமூரியர் உலகியல் வாழ்வில் பற்றுக் குறைந்திருந்ததும் இதற்கு இன்னொரு காரணம். தமிழரும் இதே கருத்துடையர் என்பதைத் தமிழ் மூதாட்டியார் ‘இடம்பட வீடெடேல்’ என்று கூறியிருப்பதனால் அறிக. 10. இலெமூரியாவும் தமிழ்நாடும் இதுகாறும் இலெமூரியர்களைப்பற்றி வரைந்த குறிப்பு களால் இலெமூரியாவிற்கும் தமிழ்நாட்டிற்குமுள்ள இன்றியமை யாத தொடர்புகள் எளிதில் விளங்கத் தக்கவையேயாயினும், முடிவுரையாக ஈண்டு அவற்றைத் தொகுத்துக் கூறுகிறோம். முதன் முதலாகத் தமிழ் நூல்களின் பழைமையும் தமிழ் நூல்களிற் குறிப்பிட்டுள்ள முச்சங்கங்களின் பழைமையும், வட மொழி நூலாகிய வான்மீகரது இராமாயணத்தாலும், புராணங் களாலும் நன்கு வலியுறுத்தப் படுகின்றமையோடு தற்கால ஆராய்ச்சி நூல்களான ஞால நூல்; நிலநூல், ஆவி மண்டல நூல் முதலியவற்றுடன் முற்றும் பொருத்தமுடையன என்றும் காட்டப்பட்டது. உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக் கண்டம் அவ் விலெமூரியாவாகவோ அல்லது அதன் பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும், அவ்விலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடி கொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பனவாகிய உயிரினங்களும் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன என்பதும் அந் நூல்கள் நமக்கு எடுத்துக்கூறும் உண்மைகளாகும். இவையேயன்றி, இலெமூரியர் நாகரிகம், சமயம், ஒழுக்க நிலை முதலியவற்றைப் பற்றி நாம் எடுத்துக் கூறியவற்றுள்ளும் எத்தனையோ செய்திகள் இன்றைய உலகில் தமிழ்நாட்டினர்க்கே சிறப்பாக உரியவை என்பதும் போதரும். அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே இங்கே விதந்துரைக்க எண்ணுகிறோம். இலெமூரிய மக்களுக்கு நெற்றியில் கண்போன்ற ஓர் உறுப்பு உண்டு என்பது தற்காலத்தவர்க்கு எவ்வளவோ புதுமையான, நம்புதற்கரிதான செய்தியாயினும், தமிழர் தெய்வங்களின், அவற்றிலும் சிறப்பாகச் சைவ சமயச் சார்பான சிவன், பிள்ளையார், முருகன், காளி ஆகிய பழந்தமிழ்த் தெய்வங்களின் உருவ அமைப்புகளுள்ளும் இதே உண்மை வலியுறுத்திக் கூறப்படுவது உற்று நோக்கத்தக்கது. (இத் தெய்வங்களின் முகங்கள் ஐந்து, ஆறு என மாறிவிடத்துங்கூட இம் மூன்றாவது கண் அல்லது நெற்றிக் கண் இன்றியமையாது வேண்டப்படுவது காண்க.) இக் கண்ணின் இயல்பை நோக்க இவ்வியைபு இன்னும் நுட்பமானது என்பது காணலாம். ஐம்புலன்களிலும் சிறப்புடையது கண் ஆதலின், இவ்வுறுப்பு நெற்றிக்கண் என்று பெயர் கொண்ட தாயினும், உண்மையில் இது கண்ணோ அல்லது ஐம்புலன்களுள் ஒன்றோ அன்று; அவ் வைம்புலன்களையும் உள்ளடக்கி, அவற்றிக்கும் அப்பாற்பட்ட ஒர் ஆறாம் அறிவின்பாற்பட்டது. (தொல்காப்பியர் இத்தகைய ஆறாம் அறிவு தெய்வப் பிறவிக்கேயன்றி மக்கட் பிறவிக்கும் இன்றியமையாப்பண்பாகக் கூறினார்.) இவ்வறிவைப் பற்றிய கருத்து தமிழரிடை வெறுங் கட்டுக்கதையோ புனைந்துரையோ அன்று. அடிப்படையான இன்றியமையாத பழைய உண்மையே என்பது அதற்கெனத் தமிழில் வேறெம் மொழியிலும் இல்லாத ஒரு தனிப்பட்ட நுண்கருத்துடைய சொல் இருப்பதனால் அறியலாம். “அதுவே, `உ’ என்ற மூன்றாம் சுட்டு ஆகும். இஃது இம் மூன்றாம் கண்ணாற் காணப்படும் பொருள்களை - அஃதாவது பருப்பொருள்களுள் மற்ற இரு கண்களுக்கும் மறைந்தவற்றையும் (பின் உள்ளது, மேல் உள்ளது தொலையிடத்தும் முக்காலத்தும் உள்ளது ஆகியவற்றையும் நுண் பொருள்களையும் குறிப்பது என்பது யாவரும் அறிந்ததே.) இரண்டாவதாக, இறந்தவரை உடலழியாமல் தாழியில் அடக்கி வைப்பது இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய மூவர்க்கும் மட்டுமே சிறப்பான பண்பாம். இஃதன்றி இலெமூரி யரிடை வழங்கிய உடலினின்று உயிரைப் பிரிக்கும் முறையையும், உடலை நீண்டநாள் கெடாது வைத்திருக்கும் முறையையும் நோக்குவோர் தமிழரிடை வழக்காற்றிலிருந்த ‘வடக்கிருத்த’ லையும் சித்தர் காயகற்ப முறையையும் எண்ணாதிருக்க முடியாது. இலெமூரியரிடையேயும், தமிழரிடையேயும் பெண்கள் அடைந்திருந்த உயர்வு அதனைப் பற்றிப் பறை சாற்றி வரும் இந் நாளைய மேல் நாட்டினரிடையே கூட இல்லை எனல் மிகையாகாது. (தமிழ்நாட்டில் பெண்கள் ஒளவையார் முதலிய தனிப்பெரும் புலவராகவும், மங்கையர்க்கரசி போன்ற அரசியல் தலைவராகவும், திலகவதியார் சூடிக்கொடுத்த நாச்சியார் முதலியோர் போன்ற சமயத்தலைவராகவும் இருந்தனர்.) இவ்வகையில் இன்னொரு சுவை தரும் பொது உண்மை உளது. உலகின் மற்றெல்லாவகை மக்களிடையேயும் உலகின் முழுமுதற் பொருள் ஆண்பாற் சார்புடையதாகவே கொள்ளப் பட்டிருக்க, மேற்கூறிய (இலெமூரியர், எகிப்தியர், தமிழர் ஆகிய) மூவரிடை மட்டும் அது பெண்பாற் பொருளாகத் தாயுருவிலும் வழிபடப்படுகிறது. சைவரிடை அம் முழுமுதற் பொருள் இன்னும் அம்மையப்ப ருருவில் இருபாலும் ஒரு பாலாக வணங்கப்படுதல் காண்க. இயற்கையை இலெமூரியர் இக்காலத்தவரை விடப் பன்மடங்கு மிகுதியாக அறிந்திருந்தும், அதனைத் தந்நலத்திற் காகவோ உலக அழிவிற்காகவோ பயன்படுத்தாமல் ஆக்க முறையிற் பொதுநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தியவரை ஒரு புறமும், கிட்டத்தட்ட அதே முறையில் அமைந்துள்ள சித்தர் முறையை மற்றொரு புறமும் ஒப்பிட்டு நோக்குபவர்க்கு அவ்வி லெமூரியரில் மீந்து நின்றவரே சித்தராயினரோ என்ற ஐயம் எழாதிராது. இன்னொரு சுவை தரும் பொதுமைப் பண்பு இலெ மூரியரிடையும் இன்றுவரை பழந்தமிழரான மலையாளத்தாரி டையும், கிழக்கிந்தியத் தீவுகள், பலித்தீவுகள் முதலியவற்றிலுள்ள மக்களிடையும் காணப்படும் தாய் வழி உரிமையாம். இன்றும் இவ்வுரிமையைக் குறிக்கும் ‘தாயம்’ என்ற பழந்தமிழ்ச்சொல் வடமொழிச்சட்ட நூல்வரை சென்று ‘தாயபாகம்’ என வழங்குதல் காண்க. இன்னும் வாழ்க்கை அமைதி, சமயக் கொள்கை, கோயி லமைப்பு, ஒழுக்கநிலை முதலிய பலவகைகளிலுங் பழந்தமிழர் இலெமூரியரையும், எகிப்தியரையும், அமெரிக்க சமய நாகரிக மக்களையும் பல நுண்ணிய செய்திகளில் ஒத்திருக்கின்றமை காணலாம். தமிழ்ச் சித்தர் நூல்களை நுணுகி ஆய்வோர்க்கு இன்னும் பலப்பல ஒப்புமை புலப்படக்கூடும் என்றும் நாம் நம்புகிறோம். இலெமூரியரின் கல்வெட்டுகளிலும், வட இந்தியாவில் சிந்து ஆற்றுப் பக்கமுள்ள கல்வெட்டுகளிலும் காணப்படும் எழுத்துகள் மொழிகள் முதலியவை தெளிவுபெறப் பொருள் கொள்ளப்பட்டால் தமிழரைப்பற்றிய பல புதைபட்ட உண்மைகள் விளங்கலாம். தமிழர் முன்னேற்றத்திற்கு இஃது ஒரு முதற்படியாக உதவும். µµµ பின்னிணைப்பு மொழிஞாயிறு பாவாணர் (பக். 77-138) குமரிக்கண்டம் (டுநஅரசயை) “மறைந்த குமரிக்கண்டம் (டுடிளவ டுநஅரசயை) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென் பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி `மடகாசுக்கர்’ என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது” 2 என்று பேரா.கா. சுப்பிர மணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப் போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும். “முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி” (புறம். 9) என்று நெட்டிமையாரும், “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும்” (சிலப்.11:19-20) என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம். “தொடியோள் பௌவமும்”3 என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், “தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும்” என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது. “காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது. பொருநையோ (க்ஷடிசநேடி), சாலி (துயஎய), சுமதுரா(ளுரஅயவசய) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (டுநஅரசயை) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந் திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது.” 4 “செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்.” 5 “இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (க்ஷயடியெb) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (ஞநniளேரடய) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனையருகிலுள்ள கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்தி ருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன. 6 குமரிக்கண்ட நால்நிலைகள் 1. ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு. 2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு. 3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு. 4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு. 5. மாந்தன் பிறந்தகம் தென்னிலம் மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள்: “மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையை நெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக்கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (குரசவாநச ஐனேயை) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங்காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாக வுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா (டுநஅரசயை) எனப் பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறியிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்.” 7 “மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்று வாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும் நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக் காட்டும். இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததாயிருப்பினும், பொது வாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.”8 இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (துயஎய) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய ‘நிமிர்ந்த குரக்கு மாந்தன்’ (ஞiவாநஉயவோசடியீடிள நுசநஉவரள) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-இல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (ஞசடிக.டுநயமநல) என்னும் ஆங்கில மாந்தனூலறிஞராற் கண் டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய ‘நெற்றுடைப்பான்’ (சூரவ உசயஉமநச ஆயn டிச ளுiதேயவோசடியீடிள க்ஷடிளைi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந்நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்சமின்றிக் கூறலாம். ‘உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும்’ பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், ``இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்” 9 என்று கூறுகின்றார். தொன்னிலம் நிலவியல் வரலாற் றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (துடிhn நுபேடயனே) என்னும் ஆராய்ச்சியாளர், “கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது” என்பர். இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனி மலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகிய வற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர். நண்ணிலம் முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமை களை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே. நண்ணிலக்கோடு (நுளூரயவடிச) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (ஆயயீ) காண்க. முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்ப நாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும். ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (ஆநனவைநசசயநேயn ளுநய) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக. வண்ணிலம் முதற்கால மாந்தன் காட்டுவிலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக் கண்டமே. ஏதேன் (நுனநn) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும். ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல். பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது. நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (ஞயஉகைiஉ டீஉநயn) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப் படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்ட மிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது. அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (நுரயீhசநவநள) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள. பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந்தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகைகளும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ? முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது, “அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்” (புறம். 109) என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்! காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப் பட்டும், நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள் தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி(பச்சை), தட்டான்(தட்டை), கல், கரம்பை(வயல்), கொள்(காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன. நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது. காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள். இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத் தான் தெரியும்! பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை. இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர். கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை, “கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங் காலை” (சிலப்.11: 60-7) என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க. இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. 6. நாகரிக மாந்தன் பிறந்தகம் மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன. இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல். இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே. இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொட ரிருந்தது. அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன. ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது. வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ் வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான். முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக் கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது. 7. தமிழன் பிறந்தகம் தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்: 1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழி களும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச்செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும். 2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட் கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும். 3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும், அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும். 4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும். 5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திராவிட மொழிகளிலுமுள்ள வன் மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும். 6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும். 7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும். 8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல். 9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற் றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். 10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்),தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர் கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை. 11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்கு மாய்த் திரிகின்றவன், தென்பல்லி வடபல்லி (தலை யணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல். 12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர் பெற்றிருத்தலும். 13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல். 14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக் கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும். 15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை. குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக. 116. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை. குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது. 8. தமிழ் வரலாற்றடிப்படை மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே, “வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (ஞசடிடெநஅ) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (ஞநniளேரடய) இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண் டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக்கூட, வரலாற் றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும். “அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகை யாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும்” என்று எழுதினார். இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (நுயசடல ழளைவடிசல டிக ஐனேயை) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி, “குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப் படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார். அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்றுகின்றேன்” என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (ஞ.கூ.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர். குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சி யாளரிடைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று. குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது. ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மையினாலும், தமிழரின் சொலமாட் டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சியினாலும், மேலையர் இன்னும் இவ்வுண்மையை ஒப்புக்கொண்டிலர். அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடை பெற்று வருகின்றது. இற்றையறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடையுண்மையாலும், ஆராய்ச்சியில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர். மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரே யென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ்வுலகில் இல்லை யென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்க வேண்டியவரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக்கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும். சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண் டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபு கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டிவிட்ட hர். ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டுசெல்லும். இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது. வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், ‘ வாழைப்பூ’ என்பதுபோல் ‘தாழைப்பூ’ என்று வராது. ஞயவசiஅடிலே என்பதற் கொத்த பொருள் அயவசiஅடிலே என்னுஞ் சொற்கில்லை. இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது. பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்த னுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக் கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக. ஆகவே, கருவிகொண் டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (ழுரநளள றடிசம) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும். விரல் என்னும் பெயர் விரி என்னும் வினை யினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல் லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது. அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சி யாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலை யென்று தள்ளிவிட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோ ரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளை யெல்லாங்கண்டு, வரலாறு, மாந்தனூல் (ஹவோசடியீடிடடிபல), ஞாலநூல் (ழுநடிபசயயீhல), நிலநூல் (ழுநடிடடிபல), உளநூல் (ஞளலஉhடிடடிபல) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறை களும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (ளுமநயவ), வீக்கிலியும் (றுநநமடநல), சேம்பர்சு (ஊhயஅநெசள) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல. ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதா யிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக் கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்த வராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும். தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத் திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட் டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமஸ்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக் கொண்டதாகு மாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட் டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத் தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர். வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (ளு.மு.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (ஏ) இராகவனாரும், 1952-இல் வெளிவந்த ‘நந்தமோரியர் காலம்’ (ஹபந டிக சூயனேயள யனே ஆயரசலயள) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (டுயபேரயபந யனே டுவைநசயவரசந) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (ஊசநவந) தீவில் ‘தெர்மிலை’ (கூநசஅடையi) என்றும், சின்ன ஆசியாவின் (ஹளயை ஆinடிச) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (டுலஉயை) ‘த்ர்ம்மிலி’ (கூசஅஅடைi) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் ‘த்ரமிட’அல்லது ‘த்ரமிள’ என்றும், பின்னர்த் ‘த்ரவிட’ என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் ‘தமிழ்’ என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த ப த ன ன b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (எடிiஉநன ளவடியீள) ம உவ வ யீ என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (ஏடிiஉநடநளள ளவடியீள) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம். இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான மயnயே, ளரசபைஒ (ளரசபைப), அயளவiஒ (அயளவபைடிள) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும். இதன் விளக் கத்தை என் ‘வண்ணனை மொழிநூலின் வழுவியல்’ என்னும் நூலிற் காண்க. தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, பி.டி. சீநிவாசையங்கார் எழுதிய ளுவடிநே ஹபந in ஐனேயை, ழளைவடிசல டிக வாந கூயஅடைள என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய டீசபைin யனே ளுயீசநயன டிக வாந கூயஅடைள, ஞசந-ழளைவடிசiஉ ளுடிரவா ஐனேயை என்னும் நூல்களையும் படித்துணர்க. 9. தமிழர் வரலாறு அமையும் வகை காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன் றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (சூயவiடியேட) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப் படுவது. அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது. வரலாற்று மூலங்கள் (ளுடிரசஉநள டிக ழளைவடிசல) பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்: 1. தொல்பொருள்கள் (ஹவேiளூரவைநைள) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன. 2. இலக்கியம் வெட்டெழுத்து (நுயீபைசயயீh), திருமுகம் (சுடிலயட டநவவநச டிச டிசனநச), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (னுயைசல), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன. வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும். 3. செவிமரபுச் செய்திகள் (கூசயனவைiடிளே) 4. பழக்கவழக்கங்கள் 5. மொழிநூற் சான்றுகள் 6. நிலநூற் சான்றுகள் (ழுநடிடடிபiஉயட நஎனைநnஉந) 7. கடல்நூற் சான்றுகள் (டீஉநயnடிபசயயீhiஉ நஎனைநnஉந) நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவ தனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (னுடிடiஉhடிஉநயீhயடiஉ), குறுமண்டை (க்ஷசயஉhலஉநயீhயடiஉ), இடைமண்டை (ஆநளயவiஉநயீhயடiஉ) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (ஹவோசடியீடிஅநவசல), குலவரைவியலும் (நுவாnடிபசயயீhல) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல. தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று (ஹசஉhயநடிடடிபiஉயட நஎனைநnஉந) இன்று அறவே இல்லாத தாயிற்று. நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலை களிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே. அவர் மொழி களெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரிநாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கை நிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம். நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக் கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைக ளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின. துடவரையும் கோத்தரையும் முந்தியல் (ஞசiஅவைiஎந) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (ழயநஉமநட) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (க்ஷசரஉந குடிடிவந) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்ச நல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும். மலைவாழ் குலத்தா ரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன் படுத்தினவையே. இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரி யெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று. ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறை யனாரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியன வாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே. தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும். “முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்” என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம் பாரனார் கூறியிருப்பதோடு, நூல்முழுவதும் “என்ப” “என்மனார் புலவர்” எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரி யரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க. உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-இல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள ‘தமிழரின் தோற்றமும் பரவலும்’ (டீசபைin யனே ளுயீசநயன டிக வாந கூயஅடைள) என்னும் நூலிற் கண்டு தெளிக. தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மண முறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப் பட்டுள்ளன. இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டி நாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில், முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ்வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன. முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர்களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந்நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும். பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப் பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படாதிருத்தல் காண்க. இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள். பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட் டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள். தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொட ரமைப்பும் மொழியியற் சான்றுகளாம். பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்பு வினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம். நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம். கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (னுலயேளவல) வாரியாகவும், ஆள்நில (கூநசசவைடிசல) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும். “கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (சூயசசயவiஎந) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது.............. இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோ மாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழி களிலும் இலக்கியங்களிலும் பழக்க வழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும்” என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளி வந்துள்ளமையால். இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும். தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றி யுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடு களையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங் குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது. தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (னுநளஉசiயீவiஎந) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும். ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்தி களைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந்நூல். அடிக்குறிப்புகள் 1. சிலப் : 8:1 2. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு 3. ஊ.கூ.ளு.ஐ. ஏடிட.1,யீயீ.20, 21. 4. ஊ.கூ.ளு.ஐ. ஏடிட.1,யீ.24. 5. கால்டுவெல். 6. ஆ.ஹ.ஆ. ஞ. பக் : அடிக்குறிப்பு(2) 7. ஆ.ஹ.ஆ. ஞ., - ப. 111. 8. ஊ.கூ.ளு.ஐ ஏடிட. 1, ப.20. 9. நுயசடல ஐனேயை, ஞஞ. 7 & 8 - பாவாணர் தமிழ்க் களஞ்சியம்- 7 பக். 2-17 குமரிக்கண்டம் (தோரா. கி.மு.?-5,500) “இந்துமாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழைக்கரைமட்டும் பரவியிருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. கிளேற்றர் இப் பழம் பெருங் கண்டத்தை, அதில் வதிந்திருந்த குரங்கொத்த உயிரி(பிராணி)பற்றி இலெமுரியா (டுநஅரசயை) என்றழைக் கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருக்கக் கூடுமாதலின், மிக முதன்மையானது” என்றார் பேரறிஞர் எக்கேல். “ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவை யும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்தது” என்றார் அறிஞர் ஓல்டுகாம். “காட்டு எலியட்டு என்பவர் எழுதியுள்ள மறைந்த இலெமுரியா(டுடிளவ டுநஅரசயை) என்னும் நூலிலுள்ள நிலப்படத்தி லிருந்து, ஒரு பெரு மலைத்தொடர் மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக் குமரி முனைக்குத் தென்பாலிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்பா லிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்மேற்காகத் திரும்பி, மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது” என்றார் பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை. “கடல்நூல் (டீஉநயnடிபசயயீhல) என்னும் தற்காலக் கலை, ஒரு காலத்தில், தென்அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவை யொட்டியும் இந்தியாவை யொட்டியும் ஆத்திரேலியாவரை படர்ந்திருந்ததும், `காண்டுவானாக் கண்டம்' என்றறியப் பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, வியக்கத்தக்க வுண்மைகளை அண்மையிற் கண்டுபிடித்திருக்கின்றது” என்பது 29-07-1934-இல் வெளிவந்த இந்தியப் படவிளக்கக் கிழமையிதழ்ச் செய்தியாகும். “கோடியாண்டுகட்குமுன்-ஒருவேளை அதற்கு முந்தி-ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்தது” என்றார் திருவாளர் யோவான் இங்கிலாந்து. குமரிநாட்டு மாந்தன் தோற்றம் (தோரா. கி.மு. 500,000) இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட பழைய மாந்தன் எலும்புக்கூடுகளுள், சாலித்தீவில்(துயஎய) 1891-இல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய ‘நிமிர்ந்த குரக்கு மாந்தன்’ (ஞiவாநஉயவோசடியீடிள நுசநஉவரள) காலம் கி.மு. 500,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-இல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் இலீக்கி (டுநயமநல) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய கொட்டையுடைப்பான்’ (சூரவ-உசயஉமநச ஆயn டிச ளுiதேயவோசடியீடிள க்ஷடிளைi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்ட வன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித் தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன் னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்து மாந்தன் தோற்றம் கி.மு. 500,000 ஆண்டுகட்கு முந்திய தென்று மறுப்பச்ச மின்றிக் கூறலாம். குமரி மாந்தர் மொழியற்ற நிலை (தோரா. கி.மு. 5,00,000 - 1,00,000) குமரிநாட்டு மாந்தன், முதற்காலத்தில் நிலையான மணவுற வின்றி விலங்குபோல் அவ்வப்போது தன் வேட்கை களைத் தணித்துக் கொண்டு, மொழியும் மொழியுணர்ச்சியுமின்றி இயற்கையான உணர்ச்சி யொலிகளையும் விளியொலிகளையுமே யுடையவ னாய், பெரும்பாலும் சைகைகளாலேயே தன் கருத்தை வெளிப் படுத்தி வந்தான். ஆகையால், அவன் மொழி சைகை மொழியாகவே (ழுநளவரசந டயபேரயபந டிச ளுபைn டயபேரயபந) இருந்தது. உடற்சைகை, உறுப்புச் சைகை எனச் சைகை இரு திறப்படு மாதலால், முகச்சைகையாகிய வலிச்சமும் (பசiஅயஉந) சைகையுள் அடங்கும். மொழியற்ற நிலையில், மாந்தன் கருத்தும் எண்ணமும் உருவலிப்பாகவே (iஅயபiயேவiடிn) இருந்துவந்தன. உருவலிப்பாவது, ஓர் இடத்தையோ, பொருளையோ, நிகழ்ச்சியையோ உள்ளத்திற் படம் பிடித்தல். மொழித்துணையின்றிக் கருத்து நிகழாதென்பது ஆராய்ச்சி யில்லாதார் கூற்றே. உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, எண்ணம், தீர்மானம், அகக்காட்சி, இன்புறவு, பொந்திகை (திருப்தி), மகிழ்ச்சி, துன்புறவு, சினம் அல்லது வெறுப்பு ஆகிய பல்வேறு உளநிகழ்ச்சி களும், நமக்கிருப்பது போன்றே மொழியற்ற மாந்தனுக்கும் இருந்தன. இவ்வுண்மையை இன்றும் ஊமை யரிடத்துக் காண்க. மொழியமைந்த பின்பும், மாந்தன் கருத்திற் பெரும்பகுதி உருவ லிப்பே யென்பதை ஓர்ந்துணர்க. - பாவாணர் தமிழ்க் களஞ்சியம் -5, பக். 51-52 குமரிநாடே நாகரிக மாந்தன் பிறந்தகம் சான்றுகள் 1. நிலத் தொன்மை ஞாலத்தில் மிகமிகப் பழமையான நிலப்பகுதியும், பரவை தோன்று முன்பே நீண்ட காலம் நிலைத்திருந்ததும், குமரிக் கண்டமே, எகிபதிய நாகரிகத்திற்கு முந்தியது குமரிநாகரிகம். 2. ஞால நடுமை ஞாலநடுவிடம் நண்ணிலக் கோட்டை (நுளூரயவடிச) யடுத்த குமரிக் கண்டமேயன்றி, சமதட்பவெப்ப மண்டலத்ததைச் சார்ந்ததும் நண்ணிலக் கடல் என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளதுமான இடத்தைச் சேர்ந்ததன்று. ஆடையின்றி நீண்ட காலமாகக் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்திருந்த இயற்கை மாந்தனின் உடல் முழுதும் போர்த்திருந்த மயிர் கழிவதற்கு, வெப்ப நாடே ஏற்றது. 3. இயற்கை வளம் இயற்கை விளையுளையே பெரும்பாலும் உண்டு வந்த முதற்கால மாந்தனுக்கேற்ற காயுங் கனியும் கிழங்கும் வித்தும் விலங்கும், பறவையும், மீனும், ஏராளமாய்க் கிடைத்திருக்கக் கூடியது குமரிக் கண்டமே. ஆடும், மாடும், ஊனும் பாலுந் தோலும் ஒருங்கே உதவின. 4. உயிர்வாழ்வதற்கு ஏற்பு நான்காம் மண்டலக் காலத்தில் ஐரோப்பாவிற் படர்ந்த பனிக் கட்டிப் படலம் போன்ற இயற்கைப் பேரிடர்ப்பாடு, குமரிக் கண்டத்தில் நிகழ்ந்ததில்லை. 5. தமிழர் பழக்க வழக்கப் பழைமை பண்பட்ட தென்னாட்டுப் பழங்குடி மக்களான தமிழரிடை யிருந்து அருகிவரும் காது வளர்ப்பு, பச்சை குத்தல் முதலியன. முந்தியல் மாந்தர் பழக்க வழக்கங்களாகும். 6. முந்தியல் மாந்தர் வாழ்நில அண்மை விலங்காண்டியரும் அநாகரிகருமான முந்தியல் மாந்தர் வழியினர் வாழ்நிலங்களான ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும், குமரிக் கண்டமிருந்த இடத்தைச் சூழ்ந்தே யிருக்கின்றன. அநாகரிக நிலைக்கு அடுத்ததே நாகரிக நிலை. 7. உலக முதல் உயர்தனிச் செம்மொழி வழங்கிய இடம் உலக முதற்றாய் மொழியாகிய தமிழ் வழங்கிய இடம் பழம் பாண்டி நாடான குமரிநாடே. மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றது குமரிநாடே: சான்றுகள் - 1. புள்மாப் பெருக்கம் உழவுத் தொழிற்குரிய காளை யெருமை முதலியனவும், காவற் றொழிற்குரிய நாய் பூனை முதலியனவும், செய்தி விடுத்தற் குரிய கிளி புறா முதலியனவும், குமரிநாட்டில் ஏராளமாயிருந்தன. 2. கருவிப் பொருள்வளம் வீடு கட்டுவதற்குரிய மரமுங் கல்லும் சுண்ணாம்பும், கருவியும் கலமும் அணிகலமும் படைக்கலமும் செய்தற்குரிய பொன்னும் வெள்ளியும் செம்பும், இரும்பும், மரமும், ஆடை நெய்தற்குரிய பட்டையும் நாரும், பஞ்சும், மயிரும், கூரைவேய்தற் குரிய தட்டை யுந்தாளும் புல்லுங் கோரையும், தழையும், ஓலையும், கூடையும் பெட்டியும், சுளகும், முறமும் முடைதற்கேற்ற மூங்கிலும் பனைநாரும் பாயுங் கட்டிலும் பின்னற் குரிய கோரையும் நாரும், திருமுகமும் சுவடியும் வரைதற் கேற்ற மடலும் ஓலையும், இசைக் கருவிகள் செய்தற்குரிய மரமுந் தோலும் நரம்பும், தீக்கடை கோலுங் கட்டையும், இன்னோ ரன்ன பிறவும், குமரி நாட்டிற் போல் வேறெங்குங் கிடைத்திருக்க முடியாது. 3. நானில அண்மை குறிஞ்சி நாகரிகத்தினின்று முல்லை நாகரிகத்திற்கும் முல்லை நாகரிகத்தினின்று மருத நாகரிகத்திற்கும் கலஞ்செலுத்தி ஆறு கடத்தலினின்று கடல் கடத்தற்கும், அடுத்தடுத்துச் செல்லுமாறு நானிலமும் அணித்தணித்தாகத் தொடர்ந்தமைந் திருந்தது, குமரி நாட்டிலேயே. இந்நிலைமை இற்றைத் தமிழ் நாட்டிலுமுண்டு. பஃறுளியாறும் குமரிமலைத் தொடரும் கங்கையும், பனி மலையும் போன்றிருந்தனவே. -தேவநேயம் -5, பக். 13-14 தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு அவைத்தலைவர் அவர்காள்! புதுப்புனைவர் கோ. து. நாய்க்கர் அவர்காள்! பேராசிரியர்காள்! இங்குக் கூட்டப் பெறும் இக்கருத்தரங்கு உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பில் கூட்டப் பெறுகின்றது. இதற்குப் பேராசிரியர் கள் பலரையும் அழைத் திருந்தோம். ஆனால் மிகவும் பொறுப்பு வாய்ந்த தமிழின்பால் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் சிலர்தாம் இங்கு வந்திருக்கின்றனர். இக் கருத்தரங்கு தமிழன் பிறந்தகத்தைத் தீர்மானிக்கும் கருத்தரங்கு ஆகும். ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வருதற்கு முன்பே இந்நாவலந்தீவு முழுவதும் பரவியிருந்தவர்கள் பழந்திராவிடர்கள் என்று தான் எல்லா நடுநிலை யாளர்களும் சொல்லி வருகின்றார்கள். அவர்களையும் கூட இக்காலத்தில் சிலர் மறுக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். நான் மொழித்துறையில் மட்டும், மறைமலையடிகள் இல்லாத இக் காலத்திலே, இவ்வுலகத் தமிழ்க்கழகத்தை ஆற்றுப் படுத்தி வருகின்றேன். மறைமலையடிகள் இருந்திருந்தால் நான் அவரின் தொண்டராக - அடித்தொண்டராக இருந்திருப்பேன். அவர்கள்தாம் இந்தத் தனித்தமிழ் உணர்ச்சியை நமக்கு ஊட்டியவர். நீண்ட காலமாக நம் தமிழ்மொழியானது மிக மறையுண்டும் புதையுண்டும் கிடந்தது. போன நூற்றாண்டிலே கால்டுவெல் என்கின்ற வெளிநாட்டு ஆராய்ச்சியறிஞர் இத் தென்னாட்டிலே வந்து, ஓர் அரை நூற்றாண்டு திருநெல்வேலியில் தங்கியிருந்து, ஆராய்ந்து திரவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் இலக்கண நூலை இயற்றினார்கள். அவர்கள் காலத்திலே, பெரும் தமிழ்ப் புலவர்களுக்கே, அஃதாவது தமிழ் அதிகாரிகள் என்று சொல்லத் தக்கவர்களுக்கே, பண்டைத் தமிழ் நூற்கள் என்று சொல்லப் பெறுகின்ற கழகநூற்கள் எவை என்று தெரியாவாம். திரிசிரபுரம் என்கின்ற திருச்சிராப்பள்ளியிலிருந்து, பர். உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும் ஆசிரியராக விருந்து கற்பித்த பெரும்புலவர் மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்குக் கழக நூற்கள் என்றால் என்னவென்றே தெரியாதாம். அந்தநிலை இந்தத் தமிழ் நாட்டிலே இருந்தது. அந்தக் காலத்திலே - அஃதாவது காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்திலே - வழி தெரியாத ஒருவர் தன்னந்தனியாகச் சென்று ஆராய்வது போல் கால்டுவெலார் ஆராய்ந்து பல உண்மை களைக் கண்டு பிடித்தார். தமிழன் மேனாட்டிலிருந்து வந்தவன் என்ற தவறான ஓர் அடிப்படைக் கொள்கையை அவர் கொண்டு விட்டதினாலே சில உண்மைகளை அவர் அறிய முடியவில்லை. உயர்ந்த நாகரிகம் ஆரியருடையது என்று சொல்லி விட்டார். கொற்கையிலே தான் தமிழ் நாகரிகம் தோன்றியது என்றும் சொல்லிவிட்டார். அவர் காலத்திலே தொல்காப்பியம் போன்ற நூல்கள் இல்லை. அது மறைந்து கிடந்தது. நன்னூலும் திருக்குறளுந்தாம் பயிலப் பெற்று வந்தன. அதனால், அவர் மற்ற பண்டை நூல்களை அறியாததி னாலே தமிழர் மேல் நாட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்ற தவறான கொள்கையைக் கொண்டு விட்டார். அவ்வாறிருந்தும் தமிழ் மொழியானது ஆரியத்திற்கு முந்தினதே என்று மிகத் தெளிவாகப் பல இடங்களில் சொல்லியுள்ளார். அதற்குச் சிறப்பாக அவர் எந்த அடிப்படையை எடுத்துக் கொண்டார் என்றால், மொழியின் சொல் தொகுதியிலே, மூவிடப் பெயர்கள் இருக்கின்றனவே, அவற்றில் சுட்டுச் சொற்களையே எடுத்துக் கொண்டார். அவற்றை வைத்து, தமிழ்மொழிதான் ஆரியத்திற்கு மூலம் என்று சொல்லுகிறார். பலர் இதை இன்னும் சரியாகப் படிக்கவில்லை என்று நான் கருதுகின்றேன். கால்டுவெல் எழுதிய அந்த ஒப்பியல் இலக்கணத்தைத் திரும்பவும் சரியாகப் படித்துப் பாருங்கள். அதில் அந்தக் கருத்தைப் பலவிடங்களில் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றார். ``மாந்தனின் முதல் பெற்றோர் - மொழியினின்று வழி வழி வந்தவர் - கூறியவையாகக் கருதும் ஒரு சொல் தொகுதியானது திரவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது'' என்று அவர் கூறியிருக்கின்றார். அது மிகவும் உண்மை. அவர் எந்த அடிப்படையில் அதை ஆராய்ந்தார் என்றால், இந்தக் கொடிவழி முறையில் ஆராய்ந்துள்ளார். மொழியாராய்ச்சி இருவகைப்பட்டது. ஒன்று கொடிவழி முறை என்பது; இன்னொன்று வடிவியல் முறை; அஃதாவது ஆடிசயீhடிடடிபiஉயட முறை. கொடிவழி முறை என்பது ழுநநேயடடிபiஉயட. இந்தக் கொடிவழி முறையில்தான் உண்மையை அறிய முடியும். மேலையாராய்ச்சியாளர்களெல்லாரும் இந்தக் காலத்திலே ஆரியத்தை அடிப்படையாக வைத்து, அதன் மூலத்தைக் காண முடியாமல் குன்று முட்டிய குருவி போல இடர்ப்பட்டு, ``எல்லாமொழிகளும் இடுகுறித் தொகுதிகளே; அஃதாவது ஒவ்வொரு மொழியும் அடிப்படைச் சொற்கள் உட்பட ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை முற்றிலும் மாறிவிடு கின்றது; அதனால் இற்றை நிலையை வைத்து, நாம் பண்டை நிலையை அறிய முடியாது'' என்று ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் ஆங்கில மொழியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய முறையை எடுத்துச் சொல்வ தானால், ஓர் உவமையால் உங்களுக்கு விளக்கலாம். அவர்கள் வரலாற்றுத் துறையையே அடியோடு விட்டு விட்டார்கள். அஃது, இப்பொழுது இங்கே உள்ள ஆரியச் சார்பானவர்களுக்கும், தமிழ்ப் பகைவர்களுக்கும் மிகவும் கொண்டாட்டமாயிருக் கின்றது. ஏனென்றால், வரலாற்று முறையில் ஆராய்ந்து பார்த்தார்களென்றால் இந்த (தமிழ் முந்தியது; ஆரியம் பிந்தியது என்னும்) உண்மை நாளடைவில் வெளிப்பட்டு விடும்; அப்புறம் அவர்கள் ஏமாற்று எல்லாம் தெரிந்துவிடும். அவற்றை அடியோடு மறைத்துக் கொள்ளுதற்கு இந்த வண்ணனை மொழியாராய்ச்சி (வடிவியல் முறையை அடிப்படையாகக் கொண்டது) அவர்களுக்குத் துணை செய்கின்றது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் யார்? பிள்ளைகள் யார்? அண்ணன் தம்பி யார்? அக்கை தங்கை யார்? என்றெல்லாம் ஆராய்ந்தறியாமல், ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனைப்பேர் நெட்டையர்? எத்தனைப் பேர் குட்டையர்? எத்தனைப் பேர் என்னென்ன நிறத்தி லிருக்கிறார்கள்? என்னென்ன இயல்பு அவர்களுக்கு உண்டு - இவற்றைத் தாம் எடுத்துச் சொல்ல வேண்டும். மற்றபடி ஒன்றுஞ் சொல்லக் கூடாது. இதுதான் வண்ணனை மொழியாராய்ச்சி. தெ. பொ. மீ. என்னும் ஒருவரை உங்களுக்குத் தெரியும். நம் பேரா சிரியர்களுள் ஒருவர். இப்பொழுது இருக்கின்ற ஒரு கேடான நிலைமை என்னவென்றால், மற்ற நாடுகளிலே இல்லாத ஒரு நிலைமை இங்கே தமிழை எவன் ஆராய்கின்றானோ அவனுக்கு ஒருவகை மதிப்பும் இல்லாமற் போக வேண்டும். அவனுடைய வாழ்க்கைக்கும் இடமில்லை, இங்கே! தமிழை எவன் காட்டிக் கொடுக்கின்றானோ அல்லது பகைக் கின்றானோ அல்லது பகைவரோடு சேர்ந்து கொண்டு கருத்தறிவிக் கின்றானோ அவனுக்குத்தான் நிறைய மதிப்பும் வாழ்வும் ஏற்பட வழியிருக்கின்றன, இங்கே! தமிழ்மொழியே உலக முதன்மொழி. அஃதாவது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமானது. திராவிடத் திற்குத்தாய் என்று முதன்முதல் நமக்கு உணர்த்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். சென்ற நூற்றாண்டிலே, இந்தியா முழுமையும் மட்டுமில்லை, உலக முழுமையும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது ஆங்கில மொழி. அந்த மொழி ஒன்றுதான் உயர்வாகக் கருதப் பெற்றது. அதில் பேசியவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்றோ தேவர்கள் என்றோ மதிக்கப் பெற்றார்கள். தமிழ்மொழி தாழ்த்தப் பெற்ற ஒரு மொழியாக விருந்தது. அது நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தக் காலத்தில் மேடை மேல் ஏறியவர்கள் எல்லாரும் `எனக்கு தமிழ்த் தெரியாது' என்று சொல்வதையே பெருமைக்கு ஒரு சான்றாக மதிக்கப் பெற்ற காலம் அது. அந்தக் காலத்திலே, ஆங்கில அறிஞராக ஒருவர் தோன்றினார், தமிழ்த் தொண்டராக! அவர்தாம் பேரா. சுந்தரனார். அவர்தாம் தமிழ்மொழி விழிப்பு உணர்ச்சியை முதன் முதல் தமிழர்களுக்கு ஊட்டியவர். அவர்தாம் தமிழுக்குப் பள்ளியெழுச்சி பாடினார் என்று சொல்லலாம். ``நீராருங் கடலுடுத்த'' என்னும் பாட்டு அது. ``ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்'' என்பது தான் அவர் பாடிய அப்பாட்டில் ஓர் உயிர் நாடித் தொடர். அந்த அடியைத்தான் இப்பொழுது ஒழித்து விட்டார்களே, அக்கருத்து ஒரு சாரார்க்குப் பிடிக்கவில்லை என்று! ஆகையினால் அந்தப் பாட்டைப் பாடாமலே விட்டு விடுவது நல்லது. அதை எழுதிய ஆசிரியரவர்கள் இந்தக் காலத்திலே இருந்திருப்பாரானால் அந்த நிலைக்கு மிக மிக வருந்தியிருப்பார். ஒரு வேளை அதன் பொருட்டு அவர் உண்ணா நோன்பு கூட இருந்தாலும் இருந்திருப்பார். இப்படி அந்தப் பாட்டின் கருத்து மறைக்கப்பட்டிருக்கின்றது. இக்கால், `அமுதசுரபி' என்னும் ஓர் இதழில் `அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று ஒரு கட்டுரை வந்ததாம். அக்கட்டுரையில் அந்தணர் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துக் கொண்டதே தவறு. அந்தணர் என்னுஞ் சொல் ஆரியர்களைக் குறிக்குஞ்சொல் அன்று. ஆனால் அதை ஆரியர்களைக் குறிப்பதாகத் தவறாகக் கருதிக் கொண்டு எழுதியுள்ளார் அதன் ஆசிரியர் கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் என்பவர். கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு மூலம் `க்ருஷ்' என்பது அதற்குக் `கருப்பு' என்பது பொருள். `க்ருஷ்ணபக்ஷம் (கரும்பக்கம்) க்ருஷ்ணஸர்ப்பம் (கரும்பாம்பு) என்று வரும். க்ருஷ்ணன் என்றால் மாயோன். மாயோன் - கரியவன் என்பதையே மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை வடநாட்டுக் கண்ணன் என்பானும் கரியவனாக இருந்திருக்கலாம். ஆனால் அவன் தமிழன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. தென்மதுரை முழுகிப்போன பின் தென்னாட்டிலிருந்து போன தமிழ் மக்கள்தான் அங்குப்போய் மதுராபுரி என்று அங்குள்ள ஓர் ஊருக்குப் பெயரை வைத்துக் கொண்டார்கள். எப்படி ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போய், தங்களின் பழைய நாட்டை நினைவு கூர்வதற்காக `இங்கிலாந்து' என்றால் `நியூ இங்கிலாந்து' என்றும் `யார்க்கு' என்றால் `நியூயார்க்கு' என்றும் பெயர்களை வைத்துக் கொண்டார்களோ, அதே போல் தென்னாட்டிலிருந்து போன நம்மவர்களும் வட நாட்டுக்குப் போய் `மதுரை' என்றே பெயர் வைத்தார்கள். இப்பொழுது அது `மத்ரா' என்று வழங்கி வருகின்றது. அங்கே தான் கண்ணன் இருந்தான். அவன் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் தூய தமிழன். அங்குள்ள வழக்கத்தையெல்லாம் பார்த்தீர்களானால், கண்ணன் அக்கால் தென்னாட்டில் உள்ள வழக்கப்படியே நப்பின்னையை ஏறு தழுவி மணந்தான் என்று இருக்கின்றது. இவ் வழக்கம் நம் நாட்டின் முல்லை நிலத்தின் விழாவை யொட்டியது. ஒவ்வோர் ஆயர் குடும்பத்திலும் ஒரு சேங்கன்று பிறந்தவுடன் அதற்கு அக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரை வைத்து அதை வளர்த்து வருவார்கள். அந்தப் பெண்ணுடன் அந்தக் கன்றும் நன்கு வளர்ந்து காளையாகும். அந்தக் காளையை எவன் பிடித்து அடக்குகின்றானோ அவனே அந்தப் பெண்ணை மணப்பதற் குரியவன் என்று தீர்மானிப்பார்கள். இதெல்லாம் அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கம். அந்த முறைப்படி அந்தக் கண்ணனும் மணந்தான். இப்பொழுது, க்ருஷ்ண என்றால் கருப்பன் என்றுதான் பொருள். நீங்கள் அகர முதலியை எடுத்துப் பாருங்கள். அதிலே `கருள்' என்ற தூயதமிழ்ச் சொல் இருக்கும். கருள் - என்றால் கருப்பு. இந்தக் `கருள்' என்னுஞ் சொல்தான் வடமொழியில் `க்ருஷ்' என்று திரியும். `சுள்' என்று ஒரு சொல் உண்டு. `சுள்' என்று வெயிலடிக்கின்றது என்று நாம் சொல்வ தில்லையா? சுள் என்றால் சுடுதல் என்னும் பொருள் குறிக்கும் ஒரு சொல் மூலம், காய்கிறது, சுடுகிறது என்பதையெல்லாம் இந்த `சுள்' என்னும் சொல் உணர்த்தும். காய்ந்துபோன குச்சியைச் `சுள்ளி' என்று சொல்கிறோம். சுள் என்னும் மூலத்திலிருந்துதான் `சுரம்' என்று வெப்பத்தைக் குறிக்கும் சொல் பிறக்கும். அதை வடமொழியில் `சுஷ்' என்று வைத்திருக்கிறார்கள். சுக்கு இருக்கின்றதே காய்ந்து போன இஞ்சி, அது காய்ந்து போனதால்தான் சுள்+கு சுக்கு என்று சொல்கிறோம். இந்தச் சுக்கைச் சமசுக்கிருதத்தில் `சுஷ்க' என்று சொல்கிறார்கள். நம் `சுள்'ளை அவர்கள் `சுஷ்' என்று மாற்றி அதை அவர்களுடைய சொல் என்று வேறு சொல்கின்றார்கள். இன்னும் என்ன சொல்கிறார்கள், `சுஷ்' என்பதைத்தான் நாம் `சுக்கு' என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்கின்றார்கள், ஏன் தெரியுமா? தமிழன் திறந்த வாயன். அப்படி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுபோல் ஒன்று என்று எண்ணாதீர்கள் இதுபோல் எத்தனையோ எழுதிக்கொண்டு வருகின்றார்கள். அவற்றை யெல்லாம் இங்கு எடுத்துச் சொல்லிவிட முடி யாது. ஆனால் தமிழர்களில் எவரும் இது பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை; யாரும் கேட்பதும் இல்லை. அதனால் ``பொய்யுடையொருவன் சொல்வன்மை யினால் பொய்போலும்மே மெய்போலும்மே'' என்றாகி வருகின்றது. இதையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால், இப்படி `அகிலம் முழுவதும் அந்தணர் மயம்' என்று சொல்கிறவர்தம் பெயரே எப்படி அமைந்திருக்கின்றது என்பதைத் தெரியாமல் இருக்கிறார். தூய சமசுக்கிருதச் சொல் என்று அவர் கருதிக் கொண்டிருக்கும் அவர் பெயரே தூய தமிழ் மூலத்தைக் கொண்டிருக்கின்றது. அதே போல் ஸ்ரீ என்பது `திரு' என்பதன் திரிபு. திரு என்பதற்குத் திரண்டது என்பது பொருள். திரட்சி - திரண்டது. திரண்டது என்பது முதன் முதலில் செல்வத்தைக் குறித்தது. திருவரங்கம் என்று வழங்கியதைத்தான் இப்பொழுது ஸ்ரீரங்கம் என்று மாற்றி வைத்திருக்கின்றார்கள். அடுத்து `நிவாஸ்' என்பதையும் பார்த்தீர்களானால், அதில் உள்ள `நி' என்பது ஒரு முன்னொட்டு (அஃதாவது ஞசநகiஒ என்கிற உபசர்க்கம்). `வாஸ்' என்பது வஸ் என்பதினின்று வந்தது. வஸ்-வடி னறநடட. `வஸ்' என்பது `வதி' என்னும் தமிழ் மூலத்தின் திரிபு. வதிதல் என்றால் தங்குதல் அல்லது வாழ்தல். இனி, இந்த `வதி' என்னும் மூலத்தினின்று வேறு பல சொற்களை எடுத்து உருவாக்கிக் கொண்டார்கள். அவற்றிற்கும் மூலம் தமிழிலேயே உண்டு. எனவே இஃது ஒன்றைக் கொண்டே நம் கருத்தை நாட்ட வேண்டும் என்பதில்லை. எத்தனையோ ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. நான் இவற்றைக் கண்டு கொள்ள ஓராண்டு ஈராண்டு அன்று ஐம்பது ஆண்டுகள் ஆராய்ச்சியில் மூழ்கினேன். இவற்றுக்கு வேண்டிய சான்றுகளையெல்லாம் எல்லா நூல்களையும் படித்துத் தேடி எடுத்தேன். ஓர் உண்மையை நிலைநாட்டுவதற்கு நான்கு வழிகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை நால்வகை அளவைகள் (பிரமாணங்கள்) எனப்படும். அவை காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்பவை. அவற்றைத்தான் அவர்கள் சமசுக்கிருதத்திலே பிரத்தி யட்சம், அநுமானம், உபமானம், ஆகமம் என்று பகுத்து வைத்திருக் கின்றார்கள். இப்பொழுது நமக்குக் காட்சி சான்று இல்லை. சிலர் கேட்கிறார்கள், தமிழ்நாடு குமரிநாடு என்பதற்கும் தமிழன் குமரி நாட்டான் என்பதற்கும் நமக்குக் காட்சி சான்று அஃதாவது பழம் பொருட்கலை ஹசஉhயநடிடடிபiஉயட நஎனைநnஉந நமக்கில்லையே என்று. அப்படி ஏன் இல்லை என்றால், நம்முடைய பழைய நிலமெல்லாம் கடலுள் மூழுகிப் போய் விட்டது. காவிரிப் பூம்பட்டினம் எப்படி மூழ்கிப் போய் விட்டதோ அப்படியே தெற்கே விருந்த அந்தக்குமரி நாடு, பழந்தமிழ் நாடெல்லாம் முழுகிப் போய் விட்டது. தெற்கே ஒரு பெரிய நிலம், அஃதாவது பனிமலை என்கின்ற இமயமலை எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு தொலைவில் குமரிமலை என்று ஒரு பெரியமலை தென்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் நம் முன்னோர்கள் தோன்றினார்கள். அதனால்தான் அந்தக் காலத்திலேயே பாண்டியன் சிதம்பரம் என்று சொல்லப்பெறும் தில்லையை நடுவிடமாக வைத்துக் கணக்கிட்டான். நெஞ்சாங் குலையின் துடிப்புப் போன்றது இறைவனுடைய ஆற்றல். அந்த இறைவனுடைய தொழிலைத்தான் மூன்றாகவோ ஐந்தாகவோ சொல்லி, அதை நடம் என்று உருவகித்துச் சொல்கிறது. வடக்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். தெற்கே போனாலும் ஓர் ஈராயிரத்து ஐநூறு கல். நடு இடம் அந்தத் தில்லை. பாண்டியனே அந்த இடத்தை அப்பொழுதே அமர்த்தி விட்டான். இந்தச் சிவனடியார்களுக்கெல்லாம் சிறந்ததான உருத்திராட்சம் (உருத்திரா - அட்சம் சிவனுடைய கண்மணி.) தொன்று தொட்டு விளைவது நேபாள நாட்டிலேதான். முதலில் மதுரையை நான் சொன்னேன். அதற்கு முன் தமிழர்கள் வங்கத்திலே தங்கி அங்கு ஒரு காளி கோயிலை உண்டாக் கினார்கள். அதனால்தான் அதற்குக் காளிக் கோட்டம் (ஊயடஉரவவய) என்று பெயர். இன்றைக்கும் வடமொழியிலே காளிக்கட் என்றுதான் சொல்வார்கள். ஆங்கிலத்தில்தான் கல்கத்தா என்று சொல்வார்கள். அதனால் வடநாட்டில் உள்ளதெல்லாம் ஆரியருடையது என்று தவறாக நாம் கருதிக்கொள்ளக் கூடாது. வடநாட்டிலே ஒரு காலத்திலே தமிழர்களாகவே இருந்தவர்கள் பின்னர் திரவிடர்களாக மாறினார்கள். நம் மனோன்மணியம் சுந்தரனாருக்குப் பின்னாலே பிராமணத்தொண்டர் ஒருவரே தோன்றினார் இந்தத் தமிழைக் காப்பதற்கு. அவர்தாம் பரிதிமாற்கலைஞர் என்னும் சூரியநாராயண சாத்திரியார். அவர் வரலாற்றை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அவருடன் நெருங்கிப் பழகியவர்களைக் கேட்டால்தாம் பல உண்மை களெல்லாம் விளங்கும். சிறந்த தமிழ்ப்பற்றுள்ள உண்மையான தொண்டர். சிறந்த பண்பாடுள்ளவர். கிறித்துவக் கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராக விருந்த பொழுது, பிராமண மாணவர்களை வைத்துக் கொண்டு சொல்லியிருக்கின்றார், ``பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டார்'' என்று. எவ்வளவு துணிச்சலும் நெஞ்சுரமும் கள்ளங்கவடற்ற தன்மையுமிருந்தால் அவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் என்று கருதிப் பாருங்கள். அவர் தம் இறுதிக் காலத்தில் இருமல் நோயால் பேரிடரும் பெருந்துன்பமும் பட்டார். அப்பொழுதும் அவர் அன்பளிப்பாகவோ கட்டணமாகவோ காசு பணம் ஒன்றும் வாங்காமல் மாணவர்களுக்கு இலவசமாகத் தமிழைப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அடிக்கடி அவருக்கு இருமல் வருமாம். இவரோ இருமிக்கொண்டே பாடம் சொல்வாராம், ``இருமல் என்னோடு பெருமல் செய்கிறதே'' என்று. நம் நாட்டிலே, பழைய காலத்திலே, இந்தியா முழுவதும் பெருவாரியாகப் பரவியிருந்தது, இக்கால் தென்னாட்டிலே சிறந்த சமயமாக விருக்கின்ற சிவநெறிதான். அந்த சிவ சமயத்திலே, பரிதிமாற் கலைஞர்க்குப் பிறகு தமிழில் சிறந்த புலவராகவும் ஆங்கிலத்திலே சிறந்த அறிஞராகவும் சிறந்த சிவநெறியாள ராகவும் பண்பு மிக்கவராகவும் விளங்கிய பேரறிஞர் ஒருவர் தோன்றினார். அவர்தாம் தனித்தமிழ் உண்மையை நமக்கு விளக்கமாக அறிவித்தார். அவரே மறைமலையடிகள். அவர் களுக்குப் பின்னாலே நான் இந்தத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து வருகின்றேன். இந்தப் பணிக்குக் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த ஒருவனாகிய என்னை ஏன் இறைவன் தோற்றினான் என்றால், அந்த உண்மையை நீங்கள் அறிதல் வேண்டும். மேனாட்டாருக்கு நம் குமரிநாட்டு வரலாற்றை அறிவதற்கு ஒரு பெருந்தடையாக விருப்பது இந்த (பைபிளில் சொல்லப்பெற்ற) ஏதேன் தோட்டக் கதை. ஏற்கனவே அந்த மதப்பற்றில்லாதவர்கள் கூட இனப்பற்று ஒன்றின் கரணியமாக நம்மைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். திரவிடரோடு அஃதாவது தமிழரோடு நாம் தொடர்பு கொள்வதாயிருந்தால் அது மிகவும் இழிவு என்று அந்த மேனாட்டார்களில் சிலர் கருதுகிறார்கள். சமசுக்கிருதம் என்றாலோ பிராமணர்கள் என்றாலோ, ``அவர்கள் நம்முடைய இனத்தார்; நமக்கு இனமான ஒரு மொழியைப் பேசுகிறவர்கள்'' என்று அவர்களுடன் தொடர்பு கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அதைக் கூட ஒரு காலத்தில், அஃதாவது மாக்சுமில்லர் காலத்திலே, அவர்கள் அந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஆரியர்கள் மேனாட்டார் களைத் தம் சொந்த இனத்தார் என்று கூறி அவர்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொண்டனர். இப்பொழுது சமசுக்கிருதம்தான் மேலை ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் மூலம் என்று அவர்கள் நன்றாக உறுதியாக நம்புகிறார்கள். நீங்கள் 1970ஆம் ஆண்டிலே வெளியான `பிரித்தானிய கலைக்களஞ்சியம்' (நுnஉலஉடடியீநயனயை க்ஷசவைவயniஉய) என்கிற நூலை ஒருமுறை பாருங்கள். அதிலே அமெரிக்கப் பதிப்பைப் பார்த்தீர்களானால், இந்த இந்தியா படம் எங்கெங்கு வருகின்றதோ அங்கெல்லாம் கரியைப் பூசி வைத்திருக்கிறார்கள். ``முகத்திலே கரியைப் பூசி விட்டான்'' என்று நாம் கூடச் சொல்லுகின்றோமே அந்தச் சொற்படியும் பொருள் படியும் அது சரியாக விருக்கின்றது. அந்த னுநஅபைசயவiடிn என்பது அதிலே மிகப் பொருத்தம். வெபுசுடர் பேரகர முதலி (றுநளெவநச னுiஉவiடியேசல) என்று ஓர் அமெரிக்கப் பதிப்பு உளது. அதிலும் அப்படியே செய்திருக்கின்றனர். இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் இருபத்து நான்கு மடலம். மூவாயிரம் உருபா. அதில் பிற்பகுதியிலே நிலப் படங்களை யெல்லாம் காட்டி யிருக்கின்றனர். அவற்றில்தான் இந்தியப் பகுதியை மட்டும், அது பெரிய படமாக விருந்தாலும் சரி, சிறிய படமாக விருந்தாலுஞ் சரி முழுவதும் கரியைப் பூசி வைத்து விட்டார்கள். ஆனால் பாக்கித்தான் பகுதிகளை மட்டும் நன்றாக மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். இந்நிலை எதனாலே என்றால், இந்த எல்லைச் சச்சரவு (சச்சரவு என்பதைத் தகராறு என்று சொல்வோம்; அஃது உருதுச்சொல்; எனவே அதை விட்டுவிட வேண்டும்) ஏற்பட்டதே அப்பொழுது அவர்கள் பாக்கித்தானியர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக, அப்படிச் செய்ததாகத் தெரிகிறது. இது தவிர அதற்கு வேறு ஒரு கரணியம் இருப்பதாக உய்த்துணர முடியவில்லை. இப்படிச் செய்ததனால் இந்தியர் அனைவரை யுமே இழிவு செய்திருக் கிறார்கள். இந்த நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது தமிழர்களைப்பற்றி அவர்கள் தாழ்வாக மதிக்கின்றார்கள் என்று சொன்னால் அதில் வியப்பதற்கு இடமில்லை. இவ்வாறுதான் மாந்தத் தோற்றவரலாறும் மறைக்கப்பட்டு இருக்கிறது. மாந்தன் தோன்றியது மேனாட்டிலே உள்ள ஏதேன் தோட்டத்திலேதான் என்று கிறித்துவர்களின் திருப்பொத்தகம் என்னும் பைபிளிலே சொல்லப் பெற்றிருக்கின்றது. அதைத்தான் மேனாட்டார்கள் நம்புகிறார்கள். இதற்கு நாம் இப்பொழுது ஒரு புது விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உண்மையானது எத்தனைக் காலமானாலும் அல்லது எத்தனைத் தடைகள் இருந்தாலும் எப்படியாகிலும் வெளிப்படத்தான் செய்யும் டீடை யனே வசரவா பநவ ரயீயீநச அடிளவ யவ டயளவ - என்பது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி. எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். ஆகவே நாம் முனைய வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஓர் உண்மையான ஆராய்ச்சியாளருக்கு ஆறு தகுதிகள் அமைய வேண்டும். கூர்மதி, பரந்தகல்வி இந்த இரண்டும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கின்றன என்று கூட சொல்லிவிடலாம். ஆனால் மற்ற நான்கு தகுதிகளாகிய நடுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்பவை மிக இன்றியமை யாதவை. இவையில்லா விட்டால் ஒருவன் ஆராயவும் முடியாது; உண்மையை அறியவும் முடியாது. யாரைக் கண்டாலும் எங்கு அமைச்சருக்கு மாறாகப் போய் விடுமோ எந்த மேலதிகாரிக்காகிலும் வருத்தம் உண்டாகிவிடுமோ அல்லது ஓர் இனத்தாருடைய பகையைத் தேடிக்கொள்ளும்படி நேர்ந்து விடுமோ மேலும் மேலும் நம் பதவி உயர வேண்டும்; பணம் தொகுக்க வேண்டுமே - என்றெல்லாம் கருதினால் ஒருவன் உண்மையான ஆராய்ச்சி யாளனாக விருக்க முடியாது. இந்தக் குமரிநாட்டு வரலாற்றை ஒப்புக்கொள்ளுகின்ற தென்றால் அஃது ஓர் எளிய செய்தியன்று. ஆனால் அஃது உண்மை. உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். காட்சி, கருத்து, ஒப்பு, உரை என்று நால்வகை அளவைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அவற்றுள்ளே இப்பொழுது காட்சியை நாம் காண முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் தெற்கே இருந்த குமரி நாடு இப்பொழுது கடலில் முழுகிக் கிடக்கின்றது. அவ்வாறு முழுகிக் கிடக்கின்ற நாடு முழுவதும் பாண்டியநாடு என்பதை நீங்கள் அறிய வேண்டும். அது தமிழ் நாடு மட்டுமன்று; அது பாண்டியநாடு. இந்தக் குமரி முனையிலிருந்து ஒரு கோடு வடக்கே இழுக்கப்பட்டால் கீழ்ப்பகுதியெல்லாம் சோழ நாடு, மேற்குப்பகுதியெல்லாம் சேரநாடு. தெற்கே முழுகிப்போன நிலம் முழுமையும் பாண்டி நாடு. அந்தப் பாண்டி நாடு முழுகிப்போன பின்னர்தான், அந்தக் கடல்கோளுக்குத் தப்பிய பாண்டியர்கள் இந்தச் சேரநாட்டின் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் ஒரு பகுதியையும் கைப்பற்றித் தங்களுடைய குடிகளுக்குக் கொடுத்தார்கள் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில் வரைந்திருக்கிறார். கருத்து (அளவை) என்பது உய்த்துணர்வது. ஒருவனைப் பார்த்து `உன்னுடைய பாட்டனுடைய பாட்டன் (அவனுக்கு ஓட்டன் அல்லாது சேயான் என்று பெயர். இந்தப் பகுதியில் ஓட்டன் என்று சொல்வார்கள்; திருநெல்வேலிப் பகுதியில் சேயான் என்ற சொல் வழக்கிலிருக்கின்றது. அதைப் படியாதவர்கள் ஜீயான் என்பார்கள். `உங்கள் ஜீயான் காலத்திலே கூட இது இல்லையே' என்பார்கள். அவனையே எடுத்துக் கொள்வோம். அவனுக்கு முந்தினவனைக்கூட வேண்டாம்.) இருந்தானா? என்று கேட்டால், அவன் என்ன சொல்லுவான். `இருந்தான்' என்பான். உடனே, `நீ அவனை கண்டாயா' என்று கேட்டால் என்ன சொல்லுவான். `நான் காணவில்லை' என்பான். `அப்படியானால் அவனை நீ காணாமலேயே அவன் இருந்தான் என்று எப்படிச் சொல்லலாம்' சொல்லலாமா? அப்படிச் சொல்லுகிறார்கள். இப்பொழுது நாம் ஒன்றை முடிவு செய்ய வேண்டுமானால் நமக்குப் பல சான்றுகள் இருக்க வேண்டுமே. அளவை நூலின் முதற்பகுதியிலேயே ஒரு விளக்கம் சொல்வார்கள். `எல்லா மாந்தரும் இறப்பவரே. சாத்தன் ஒரு மாந்தன். எனவே அவனும் இறப்பவனே' என்று சொல்லுவார்கள். இப்படியில்லாமல் `எல்லா மாந்தரும் இறவாதவரே' என்று அடிப்படையையே தவறாக வைத்துக் கொண்டால் முடிவும் தவறாகத்தான் வரும். ``அப்படியானால் சாத்தன் ஒருமாந்தன்; சாத்தனும் இறவாதவனே'' என்று முடிவு காண வேண்டியிருக்கும். மேனாட்டாருடைய ஆராய்ச்சி அப்படி யிருக்கின்றது. மேலை நாடுகளில் மிகப்பெரிய ஆராய்ச்சியறிஞர்கள் இருக்கின்றார்கள். பரோ, எமனோ என்னும் இருவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பரோ என்பவர் இலண்டனில் இருக்கின்றார். எமனோ என்பவர் அமெரிக்காவில் இருக்கின்றார். இருவரும் பெரிய அறிஞர்கள். மொழிநூல் அறிஞர்கள்தாம். திரவிட மொழிகளையும் படித்திருக்கிறார்கள். ஆனால் தமிழரைப் போல தமிழை ஆழ ஆராய முடியாது. தமிழ் மிகமிகப் பழமையான மொழி. இப்பொழுது மாந்தனுடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், பகுத்தறிவுள்ள மாந்தன் தோன்றினானே அக்காலம் தமிழன் காலத்திலே தான் தொடங்குகின்றது. அவ்வளவு பழமை யான காலம் தமிழர்களுடையது. பலர் இப்பொழுது தமிழில் உள்ள மிகப் பண்டைய நூலாகிய தொல் காப்பியத்தை ஆராய்ந்து அத்துடன் நின்று கொள்கின்றார்கள். தொல் காப்பியத்தின் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முந்திப் போக வேண்டும் மாந்தன் தோன்றிய காலத்திற்கு. கி.மு. நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போனால்தான் தமிழனுடைய தோற்றத்தை நாம் அறிய முடியும். அந்த அளவுக்குப் பழமையானது தமிழ்மொழி. அவர்களுக்கு (பரோ, எமனோவிற்கு) இந்த உண்மைகள் தெரியாது. அவர்களுக்கு எடுத்துச் சொல்வாரும் இல்லை. கால்டுவெல் சொன்னது உண்மைதான்; ஆனால் பிற்காலத்திலே அவர்கள் ஆரியத்திற்குச் சிறப்புக் கொடுத்த தினாலும் ஆரியத்தை வைத்து அவர்கள் அடிப்படையாகக் காண முடியாமையினாலுந்தான் எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் என்னும் முடிவுக்கு வந்து விட்டார்கள். இப்பொழுது, இந்தக் காட்சியளவைக்கு - பழம்பொருள் கலைக்கு - நமக்கு இடமே இல்லை. இக்கால் சில மண்டை யோடுகளைக் கண்டெடுத்துக் கொண்டு சிலர், இதுதான் இக்காலம். அதுதான் அக்காலம் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் எந்தக் காலத்திலும், ஒரு நாகரிக காலத்திலும் கூட முத்திறப்பட்ட ஆட்கள் இருந்தே தீருவார்கள். அவர்கள் தலையாயார், இடையாயார், கடையாயார் எனப்படுவர். இப்பொழுதுள்ள காலத்தை நாகரிகமில்லாத காலமென்று சொல்ல முடியுமா? ஆனால் இன்றும் இந்த ஆனைமலைப் பகுதிகளுக்கு நீங்கள் போனீர்களானால் அங்கு இன்னமும் நாகரிகத்தில் மிகக்குறைந்த காடர்கள் போன்ற மக்கள் இருக்கிறார்கள். இன்னும் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் நாகரிகமடையாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு மண்டையோட்டைக் கண்டெடுத்தவுடனே இதுதான் நாகரிக மாந்தனுடையது அல்லது தமிழனுடையது என்கிற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது; வந்துவிட முடியாது. இப்பொழுது இசையை எடுத்துக் கொள்ளுங்கள். தோற் கருவிகளுக்குள்ளே மிகச் சிறந்தது மத்தளம் என்கின்ற மதங்கம். அஃது ஓர் உயர்ந்த இசையரங்கிலே அடிக்கப் பெறுகிறது. ஆனால் இன்னோர் அரங்கிலே ஒருவன் கஞ்சுரா அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது தோற்கருவிகளுக்குள்ளே தாழ்ந்த கருவி. இந்நிலையில் ஓர் அயல் நாட்டார் அந்தக் காஞ்சுரா அடிக்கின்ற அரங்கத்திற்குப் போய்க் கேட்டார் என்றால், அவர் `இந்தக் காலத்திலே இவர்கள் இப்படிப்பட்ட கருவியைத் தான் வைத்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். அப்படித் தான் ஒவ்வொரு நாட்டிலும், துறையிலும் தாழ்ந்த நிலை, உயர்ந்தநிலை, இடைப்பட்டநிலை என்பனவற்றை யெல்லாம் கவனிக்க வேண்டும். தஞ்சையில் கடந்த சிலை 17 (31. 12. 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில், பெரும் புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில். மொழிநூல் முனைவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் தொடர்ச்சி வருமாறு: நீங்கள் சில வரலாற்று நூல்களைப் பார்ப்பீர்களானால், திரவிடன் என்று ஒரு காட்டு விலங்காண்டி (அஃதாவது மிருகாண்டி - மிராண்டி; மிருகாண்டி என்பது வடசொல்) அல்லது தாழ்ந்த நாகரிகமுள்ள ஒரு சிற்றூர் வாணனைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். திரவிடன் என்று சொன்னால் உமாமகேசுவரனார், பவானந்தனார் போன்றோரைப் படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். நம்முடைய முன்னோ ரெல்லாம் அவன் காட்டிய தோற்றத்தினராய் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டுங் கூட நாம் எதிர்க் காமலேயே இருக்கிறோம். அதனால்தான் நம் பகைவர்கள் மேலும் மேலும் தமிழையும் தமிழனையும் பழித்துக் கொண்டே இருக்கத் துணிந்திருக்கிறார்கள். வெளிநாட்டாரும் அவர்கள் கூறுவதை நம்புவதற்கு இடமுண்டாகி விடுகிறது. எனவே காட்சிப் பொருளளவைக்கு இடமில்லை. ஆகையினால் ஆங்காங்குக் கிடைக்கின்ற சில மண்டையோடுகளாலேயே நாம் அந்த முடிவுக்கு வந்து விடமுடியாது. இப்பொழுது, ஐரோப்பாவின் வரலாற்றைப் பார்த்தீர்களானால், நண்ணிலக் கடற்கரை (ஆநனவைநசசயநேயn சுநபiடிn) இருக்கின்றதே, அங்கே யுள்ள மக்களில் கிரேக்கர்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பொத்தகத்தில் உள்ள படங்களில் பாருங்கள் அவர்கள் சட்டையே அணிந்ததில்லை; கீழ்வேட்டியும் மேல் வேட்டியும் வெவ்வேறு வகையில் அணிந்திருக்கிறார்கள். இந்த நீள் மண்டையர் தாம் அங்கேயும் அந்தக் காலத்தில் இருந்திருக் கின்றார்கள். ஏனென்றால், இங்கிருந்து போனவர்கள் அவர்கள். மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மிகப் பழைய நாகரிகமாக ஒரே காலத்தில் இரண்டு நாகரிகங்களைக் காட்டுகின்றார்கள்; எகிப்து ஒன்று; சுமேரிய நாகரிகம் ஒன்று. சுமேரிய நாகரிகத்திற்குப் பிற்பட்டது தான் பாபிலோனிய நாகரிகம். இவற்றுள் இந்தச் சுமேரிய நாக ரிகத்திற்கு எழுத்துச் சான்று மிகுதியாயிருக்கிறதென்று காட்டுகின்றார்கள். அந் நாகரிகத்தை கி.மு. 3500 - இலிருந்து தொடங்குகிறார்கள். அதற்கடுத்தது பாபிலோனிய நாகரிகம். ஆனால் தமிழர் நாகரிகமோ மிக மிக முந்தியது. தலைக் கழகக் காலமெல்லாம் கி. மு. 10,000-க்கு முந்தியது. தமிழ்மொழி தோன்றியதோ அதற்கும் முந்தியது. இப்பொழுது எழுத்தைச் சார்பாகக் கொண்டு தமிழைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் பகைவர்கள். நீங்கள் இன்னொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம். இலக்கியம் இருகூறானது எழுதப்பெற்ற இலக்கியம்; எழுதப் பெறாத இலக்கியம். இவற்றுள் எழுதப் பெற்ற இலக்கியத்திற்கு முந்தியது எழுதப் பெறாத இலக்கியம். அதற்கு முந்தியது மொழி. மொழி வளர்ச்சியோ ஆறு ஏழு நிலைகளைக் கொண்டது. இந்த மொழி நிலைக்குப் பிற்பட்டதே எழுத்து. அந்த எழுத்து நிலையிலும் நான்கு வகைகள் சொல்லப் பெறுகின்றன. அந்த நான்கு வகைகளுள் சிறந்ததும் இறுதியுமான நிலையைத் தமிழ் தலைக்கழகக் காலத்திலேயே அடைந்து விட்டது. மேலே ஐரோப்பிய மொழிகளை நீங்கள் பார்ப்பீர்களானால் எந்த மொழியிலும் உயிர்மெய் எழுத்து இல்லவே இல்லை. அதில் உயிர்மெய் உயிர்முன்னும் மெய்பின்னும் என்றில்லாதபடி உயிரொடு மெய்யும் மெய்யோடு உயிரும் கலந்தே இருக்கும். எல்லாம் ஹடயீhயநெவ என்று சொல்லிக் கொள்வார்கள்; அவ்வளவுதான். அல்ஃபா (ஹடயீhய) பீட்டா (க்ஷநவய) என்று சொல்வார்கள் அல்ஃபா, பீட்டா என்று இரண்டு எழுத்துகள் முன்னாலே தோன்றிய தாலே அவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். அஃது எதைப்போல் என்றால், நம்மவர்கள் `அ'னா `ஆ'வன்னா தெரியாதவன்' என்று சொல்வதைப்போல். அ, ஆ என்பதைப் போல் அவர்கள் அல்ஃபா (ஹ) பீட்டா (க்ஷ) என்பார்கள். ஆனால் தமிழ் எழுத்துகள் எப்படி என்றால் உயிரும் மெய்யும் மட்டுமல்ல; உயிர்மெய்யும் தோன்றியது. அஃது ஏன் அவ்வாறு தோற்றினார்கள் என்றால், நம் பழைய இலக்கணவாசிரியர்கள் எல்லாரும் முற்றும் துறந்த முனிவர்கள்; சிறந்த மெய்யறிவுள்ள, கொண் முடிபுப் பேரறிஞர்கள். அஃதாவது `தத்துவஞானிகள்'. அவர்கள் மூன்று வகையான பொருள்களை இவ்வுலகத்திலே கண்டார்கள். உயிர், உயிரில்லாத பொருள்கள், உயிரும் மெய்யும் கூடிய பொருள்கள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்கள் ஈறாக உள்ள அனைத்தும் நிலைத்திணை முதல் மாந்தன் ஈறாக உள்ள அறுவகைப்பட்ட உயிர்மெய்கள். எனவே தாம் கண்ட எழுத்துகளுக்கும் உவமை முறையிலே உயிர் என்றும், மெய் என்றும், உயிர்மெய் என்றும் பெயர்களிட்டார்கள். தானே ஒலிப்பது உயிர்; உயிரின்றி இயங்காத எழுத்து மெய்; உடம்பு போன்றது; இரண்டும் கலந்தது உயிர்மெய். இந்த வகைகளைக் கூட முறையாக வைத்திருக் கின்றார்கள். முதன் முதல் ஓர் ஆளைப் பார்த்தவுடன் நமக்கு உயிர் தெரிவதில்லை. உடம்பு தான் விளங்கித் தெரியும். க என்று சொன்னால் க்+அ. இந்த உயிர்மெய் உண்மை எல்லா மொழிகளிலும் உண்டு. ஊயவ (கேட்) என்று சி, ஏ, டி என்று பிரித்துச் சொன்னாலும் `கேட்' என்று தானே (முதலில் `க்'கைத்தானே) சொல்லல் வேண்டும். முiபே என்பதை, மு, ஐ, சூ, ழு என்று பிரித்துச் சொன்னாலும் `கிங்' என்று உயிர்மெய் முன்னால் வரும்படி தானே சொல்ல வேண்டும். க், ஐ, ங், கு-என்றா சொல்லிக் கொண்டிருக்கிறான்? மு, ஐ, சேர்ந்தாலே `கி' என்றுதானே உயிர்மெய் வருகின்றது. ஆனால் அதை அவன் கண்டு பிடிக்க வில்லை. அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து ஒன்று போல் ஒலிக்கின்றது என்பதை அவன் பிரித்து உணரவில்லை. அவர்களைப் போலன்றி நம் முன்னோர்கள் சிறந்த மெய்ப் பொருள் அறிஞர்களாயிருந்ததாலே அதற்கு உயிர்மெய் என்று பெயரிட்டார்கள். இந்த உயிர்மெய் அமைப்பினாலே எழுத்துத் தொகை நீண்டு விடுகிறது. ஆகையினால் இதற்கு நெடுங்கணக்கு என்று பெயரிட்டார்கள். அந்த உயிரும் மெய்யும் மட்டும் பிரித்துச் சொல்வதைக் குறுங்கணக்கு என்றார்கள். மேலை மொழிகளில் இந்தப் பாகுபாடு இல்லவே இல்லை; நீங்கள் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த முறை தமிழிலே தான் தோன்றியது. ஆனால் இப்பொழுது சொல்லப்படுவது என்ன? முதன் முதலில் இம் முறை சமற்கிருதத்தில்தான் தோன்றியது. சமற்கிருதத்தைப் பின் பற்றித் தமிழில் இதை வகுத்துக் கொண்டார்கள்' - என்று சொல்கிறார்கள். `உரத்தியும், எடுத்தும், கனைத்தும் க (மு), க (ழு), கஹ (முபா) என்னும் இம்மூவகை ஒலிகளையும் விட்டு விட்டுப் பொது வகையான ஒலிகளைத் தமிழர்கள் எடுத்துக் கொண்டார்கள்' என்று ஒரு தவறான கருத்தைச் சொல்கிறார்கள். கால்டுவெல்லே இந்தக் கருத்தைத் தோற்றுவித்து விட்டார். அஃது எதனாலே என்றால் இந்த வரலாறு தெரியாமையாலே! `தமிழ் குமரி நாட்டில் தோன்றியது; அது மற்ற மொழிகளுக்கெல்லாம் முந்தியது; என்னும் உண்மையை அவர் அறியாததாலேயே! எனவேதான் இந்தக் குமரி நாட்டு உண்மையை அடிப்படையாக நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். இதற்குப் பின்னால் வேறு போராட்டங்கள் வரும். இந்த உண்மையை நாம் நன்றாக, அழுத்தந்திருத்தமாக, உறுதியாக உள்ளத்திலே கொள்ள வேண்டும். முதன் முதலாக இந்த நெடுங்கணக்கு தோன்றியது தமிழில்தான். அதற்குப் பின்பு திரவிட மொழிகளிலும், அதன்பின் வடநாட்டு மொழிகளிலும் தோன்றியது. இந்த முறையைத்தான் சமற்கிருதம் பின்பற்றி யிருக்கிறது. எழுத்து, மொழிக்குப் பிற்பட்டது. மிகப் பழைய காலத்திலேயே தமிழில் எழுத்து தோன்றி விட்டது. ஆனால் வடக்கே யிருந்து வந்த சமணர்கள் சிலரும் பௌத்தர்களும் அந்தக் காலத்திலே வடக்கே வழங்கிய பிராமி எழுத்தைத் தென்னாட்டிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார்கள். அவற்றில் கல்வெட்டுகள் மதுரையருகிலும் கிடைக்கின்றன. நம் தமிழ்ப் பகைவர்கள் இதையே சான்றாகக் கொண்டு, இதிலிருந்துதான் நம் தமிழ் எழுத்தே தோன்றியது, அஃதாவது அசோகர் காலத்திய பிராமி எழுத்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தில் தோன்றியது; இதிலிருந்துதான் தமிழ் நெடுங்கணக்கு வகுக்கப் பெற்றது; தொல்காப்பியம் தோன்றியது அதற்குப் பிற்பட்டுத்தான் என்று, போன உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கிலே, ஐராவதம் மகாதேவன் என்னும் ஒருவர், தில்லியிலே இருப்பவர், எழுதி அச்சிட்டுப் படித்து விட்டுப் போய் விட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. அந்தக் கருத்தரங்கோ ஒரு சந்தைக் கூட்டம் போல் நடந்தது. இந்த உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு உள்ளதே, அதைப் பற்றி ஒன்று உங்கட்குத் தெரிய வேண்டும். இது தனி நாயகம் என்ற வையா புரியின் வேலை; இவ்வளவும். மூன்று மாநாடுகள்! நடந்து விட்டன. பெரிய மாநாடுகள் உலகத் தமிழ் மாநாடுகள் கூட்டத்தினுடைய ஆரவாரத்தையும் மக்கள் தொகையையும் கண்டே பலரும் மயங்கி விடுகிறார்கள். ஆனால் ஒருவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. இப்பொழுது ஒரு செய்தியைச் சொல்கின்றேன். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்: ஒரு பெரிய மாநாடு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்; இங்கிலாந்திலே! அஃது உலகத்தமிழ் மாநாடு. அதற்குத் தலைமை தாங்குகிறவர் இங்கிலாந்துப் பேரரசியார். அதற்குக் கொடியேற்றி வைக்கிறவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன். அதைத் தொடங்கி வைக்கிறவர் கோசிசின் அல்லது குரோமிகோ போன்றவர். சீனக் குடியரசுத் தலைவர் சூ. என். இலாய் போன்றவர்கள் அதிலே பேச்சாளர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைப் பார்க்கிறவர்கள் என்னவென்று நினைப்பார்கள். ``அடேயப்பா, உலகம் முழுவதும் தமிழ் மாநாட்டை நடத்தத் தொடங்கி விட்டார்கள்.'' என்று ஆராய்ச்சி யாளர்கள் கூடப் பெருமையாகத்தான் பேசுவார்கள். ஆனால் என்ன பயன் என்று நீங்கள் கருதிப் பார்க்க வேண்டாமா? இப்படி இவர்களெல்லாரும் சேர்ந்து ஒரு தமிழ் மாநாட்டை நடத்துவ தென்றால் என்ன நடக்கும்? இப்படித்தான் இன்று நடக்கிறது. இந்தத் தனிநாயகம் என்கிறவர் பிறர் முயற்சியாலே ஒரு பெயர் பெறுவதிலே ஒரு தனிநாயகம்! (சிரிப்பு!) அவருடைய வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியாது. அவர் முதலில் கூயஅடை ஊரடவரசந என்ற ஓர் இதழைத் தொடங்கினார். அதில் தம்மைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் குறித்துக் கொண்டார். அதற்கப்புறம் ஈழத்திலே பல்கலைக் கழகத்திலே ஒரு பதவிக்குத் தாண்டினார். அங்கிருந்து மலையாவிலே ஒரு நல்ல வாய்ப்பு வந்து சேர்ந்தது. அங்கே பேராசிரியாக விருக்கிறார். முதல் முதலிலே அங்குத்தான் உலகத்தமிழ் மாநாடு. முதன் முதலில் தமிழ் நாட்டில்தான் நடப்பதா மலையாவில் நடப்பதா? அதோடுகூட, தமிழ் என்ன ஒரு வழக்கற்ற மொழியா? எந்த மொழியில் தமிழ் மாநாடு நடக்க வேண்டும்? ஆங்கில மொழியிலா நடப்பது? இப்படி ஆங்கிலத்துக்கென்று ஒரு மாநாடு நடப்பதானால் வேறு ஒரு மொழியிலா நடத்திக் கொண்டிருப்பார்கள்? மற்ற மொழிகளிலே வேண்டாம்; பிரஞ்சு மொழியில் நடத்துவ தென்றாலும் அதற்கு இணங்குவார்களா? தமிழ் ஓர் உயிர் மொழி. அதற்கென்று ஒரு மாநாடு நடப்பதென்றால் தமிழிலன்றோ நடக்க வேண்டும். அதில் பேசுகிறவர்க ளெல்லாரும் தமிழில்தான் பேசுதல் வேண்டும். கட்டுரை படிப்பதென்றாலும் தமிழில்தான் எழுதிப் படித்தல் வேண்டும். பேசவோ எழுதவோ தெரியா விட்டால் பார்வையாளராகத்தான் வந்திருக்க வேண்டுமே தவிர, கருத்துக் கூற முடியாது. (கைதட்டல்). ஆனால் இந்த மாநாடுகள் அப்படியில்லை. எவரும் எந்த மொழியிலும் பேசலாம். அந்தக் கருத்தரங்கிற்கு ஒரு தலைவருமில்லை. ஒரு நடுவரும் இல்லை. இங்குத் தமிழகத்தில் நடந்த உலகத் தமிழ்க் கருத்தரங்கில், காமில் சுவலபெல் என்னும் ஒருவர்; அவர் ஓர் ஆரிய வெறியர். அவர் என்ன படித்து விட்டுப் போனார் தெரியுமா? ஐவேசடினரஉiபே கூயஅடை டுவைநசயவரசந என்னும் ஒரு சிறு சுவடி. ஆங்கிலத்திலே எழுதிப் பரப்பிவிட்டுப் போய் விட்டார். அதில் வரும் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். ``மறைமலையடிகள், சோமசுந்திர பாரதியார், பாரதிதாசன் இந்த மூவரும் தமிழைக் கெடுத்தவர்கள்.'' எப்படியிருக்கிறது பாருங்கள்! (சிரிப்பு) எவ்வளவு சிறந்த, அழகிய உண்மை! அவர் ஆராய்ச்சியினாலே கண்டு பிடித்தது! (பெருஞ்சிரிப்பு) ``இவர்களுடைய கொள்கையினாலே உலக அறிஞர்களுக்குள்ளே பிரிவினையும் பகைமையுந்தாம் உண்டாகும். இவர்கள் நூல்கள் நாளடைவில் தாமாக ஒழிந்து போம்'' - இப்படி எழுதி வைத் திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்களை யெல்லாம் வைத்துக் கொண்டு ஒரு மாநாடு நடத்தினால் எப்படியிருக்கும்? நீங்களெல்லாம் நன்றாக எண்ணிப்பாருங்கள். மறைமலையடிகள் தமிழுக்காகப் பட்டபாடு எவ்வளவு? அவர் தமிழில் மட்டுமல்லர், சமற்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் வல்லவர். அவருடைய ஆங்கில நடை எவ்வளவு பெரிய பட்டந்தாங்கி ஆங்கிலப் படிப்பாளிகளுக்கும் வரவே வராது. மிக அருமையாக எழுதுவார், ஆங்கிலத்திலே! அழகிய நடை; எழுத்தும் மிக அருமையாக விருக்கும். அவர்கள் இவ்வாறிருந்தும் அவரைப் பழித்துவிட்டுப் போயிருக்கிறார். பாரதிதாசன் ஏதோ தனிப்பட்ட ஒரு கொள்கையுடையவராக இருந்தும், தமிழுக்காக எவ்வளவோ பாடுபட்டார். சோமசுந்திர பாரதியாரைச் சொல்ல வேண்டுவதில்லை. இப்படிப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் பழித்து விட்டுப் போய் விட்டார்கள் அவர் (காமில் சுவலபெல்) தமிழை எப்படி ஆராய்ந்திருக்கிறார். எந்தெந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டார் என்றால், நற்றிணை என்ற தொகை நூலையும், சானகிராமன் என்பவர் எழுதிய நாலுவேலி நிலம் என்ற நாடகத்தையும் வைத்தே தமிழை ஆராய்ந்திருக்கிறார். அந்த நூல் தஞ்சையில் நடந்த ஒரு கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பெற்ற நூல். அதைப் போன்ற கடுங் கொச்சை நடையான ஒரு நூல் இருக்கவே முடியாது! சேரி மக்கள் பேசுவதைவிட மிகக் கடுமையான கொச்சை நடையை உடையது. அதை வைத்துக் கொண்டு தமிழை ஆராய்ந்துள்ளார். (சிரிப்பு) தமிழ் மொழியி னுடைய காலம் (தமிழ் தோன்றியதே) கி.மு. 1500 என்ற முடிவுக்கு வந்திருக் கிறார். இதைப் பார்த்த பின்னும் கேட்ட பின்னும் நம்முடைய பேராசிரியர்கள் எல்லாரும் அக்கருத்தை எதிர்க்காமல்தான் இருக்கிறார்கள். இப்படி, அதாவது இந்தியர் களிலேயே சிலரைக் கண்டாலும் நம் பேராசிரியர்கள் அஞ்சிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆங்கிலேயர் என்றாலோ மிகவும் அஞ்சுகிறார்கள். இப்பொழுது நம் சென்னை ஆளுநர் கூட என்னென்ன வெல்லாமோ தமிழைப் பற்றிப் பேசுகிறார், ஆனால் அவர் கருத்தைக் கேட்கின்ற நம் புலவர்கள் ஒருவருக்கும் பேசுவதற்கு நா வருவதில்லை. அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு அப்படியே இருந்து விடுகின்றார்கள். ஆகவே இந்தத் துறையில் எவர் உண்மையான அறிஞர் என்று அறிதல் வேண்டும். அப்படிப் பட்டவர்களுக்குத்தான் நாம் இதுபோன்ற மாநாடுகளில் இடம் தருதல் வேண்டும். இந்தத் தனி நாயகம் அந்த உலகத் தமிழ்க் கழகத்திற்கு பிலியோசா என்னும் பிரெஞ்சுப் பேராசிரியர் ஒருவரையே தலைவராக வைத்திருக்கின்றார். அவர் சமற்கிருதம் படித்தவர். தமிழறியாத ஒருபெருமாள். அவர் எப்படிப் படித்தார் என்றால், இக்கால் ஆங்கிலம் போல் அக்கால் இந்தியா முழுவதும் சமற்கிருதந்தான் பொது மொழியாக இருந்தது. அதன்வழியாக - அதனின்றுதான் தமிழ் வந்தது என்னும் - படி தமிழைப் படித்தார். இப்பொழுது அதைவிடக் கேடாக இருக்கிறது. வரவரக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவுந் தேய்ந்து சிற்றெறும்பாகி, பிறகு ஒன்றுமில்லாமற் போன வகையில், தேய்ந்து காய்ந்து தேரைக்கால் போல ஓய்ந்து வருகிறது இந்த உலகத் தமிழ் மாநாடு. அதுவும் முன்பு நடந்த பாரீசு உலகத் தமிழ் மாநாட்டில், மொகஞ்சதோரா நாகரிகம் திராவிடருடையதா ஆரியருடையதா என்று ஆராயும் பொறுப்பு யாரிடத்தில் ஒப்படைக்கப் பெற்றது தெரியுமா? நான் சொன்னேனே இந்த ஐராவதம் மகாதேவனிடத்தில். அஃதாவது பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்து தோன்றியதென்று சொன்னாரே அவரிடத்தில். இப்படியெல்லாம் செய்கிற பொழுது, அவர்கள் (காமில் சுவலெபில் போன்றவர்கள்) ஏன் அப்படி எழுதமாட்டார்கள் என்று கேட்கின்றேன். தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் நிமையத்திற்கு ஒரு முறை கொட்டும். இனி, ஒரு முறை மட்டுமன்று; மூன்று முறை, பன்முறையும் கூடக் கொட்டும். அதைப் பிடித்து வைத்துக் கொண்டு கொட்டுகிறதே கொட்டுகிறதே என்று சொன்னால் அந்த முட்டாளுக்கு நாம் என்ன சொல்வது? `நன்றாகக் கொட்டட்டும்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி, தமிழுக்குப் பகைவர்களாகவே, வெளிப் படையாக அப்படி உள்ளவர்களையே கருத்து மாறுபாடுள் ளவர்களையே பார்த்துத் தலைவர்களாக வைத்திருப்பார்களா? நீலகண்ட சாத்திரியாரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் இந்தியாவிலேயே சிறந்த வரலாற்றறிஞர். அவருக்கீடாக ஒருவருமே இல்லை. அவர் அவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சிறந்த கருவி நூல்களை யெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். நூல் தொகுப்பில் அவரை டார்வினுக்கு அடுத்தபடியாகச் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு தமிழ்ப் பகைவர். வேண்டுமென்றே தமிழுக்கு மாறாக, உண்மைக்கு மாறாக எழுதி வைத்திருக்கிறார். சமற்கிருதத்தைப் பற்றியோ ஆரியத்தைப் பற்றியோ சொல்லுவதென்றால் துரும்பைத் தூணாக்குகிறார். தமிழைப் பற்றியோ தமிழர்களைப்பற்றியோ சொல்லுவதென்றால், தூணைத் துரும்பாக்குவது மட்டுமில்லை; ஒன்றுமில்லாத படி ஆக்கி விடுகின்றார். அவர் ஏராளமாக நூல்கள் எழுதியுள்ளார். முதலில் அவர், ழளைவடிசல டிக ளுடிரவா ஐனேயை என்று ஒரு பொத்தகம் எழுதினார். அதிலே அவர், மு. இராகவய்யங்கார் சொன்னதைத் துணைக் கொண்டு, அஃதாவது, `பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்று தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா இருக்கிறது; இதில் உள்ள ஐயர் என்ற சொல்லுக்குப் பிற்காலத்து வழக்கைத் துணையாகக்கொண்டு ஆரியர் என்று பொருள் கூறிவிட்டார். அவரும் (அஃதாவது நீலகண்ட சாத்திரியாரும்) அதை ஒப்புக்கொண்டு, `தமிழர்கள் அக்காலத்தில் மணமுறையில்லாமல் விலங்குகள் போல் திரிந்தார்கள்; அவர்களுக்கெல்லாம் மணமுறையை ஏற்படுத்தி வைத்தவர்கள் ஆரியப் பிராமணர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார். பிறகு ழளைவடிசயைn ஊரடவரசந டிக வாந கூயஅடைள என்று ஒரு பொத்தகம் எழுதினார். அதிலே, கால்டுவெல், `கொற்கையிலே தான் தமிழ் நாகரிகம் தோன்றியது; அக்காலத்திலே தமிழர்கள் நாகரிகத்தின் தொடக்க நிலையிலே இருந்தார்கள் என்று, எழுதி வைத்ததை அடிப்படையாகக் கொண்டு, இவரும் அப்படியே எழுதி வைத்து விட்டார். அக்காலத்தில் கால்டுவெல்லுக்கு வழிகாட்ட வல்ல தமிழ்ப் புலவர் ஒருவரும் இல்லை. ஆனால் நம் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் 1908-லேயே 'ஐனேயை யீசடியீநச in வாந ளுடிரவா' தென்னாடுதான் உண்மையான இந்தியா-என்றார் 'ஐனேயைn ஹவேiளூரயசல' என்ற ஓர் இதழிலே! அதற்குப் பின்னால் 1912-இல் இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட் சிமித் என்ற ஆங்கிலேயர் (அவர்தாம் இந்திய வரலாற்றை ஓரளவு சிறப்பாக எழுதியவர்) இந்தக் கருத்தைத்தழுவி, `இந்தியாவின் வரலாற்றைத் தென்னாட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்' என்று மிகத் தெளிவாக எழுதியுள்ளார். 'கூடி கiனே வாந யௌiஉ நடநஅநவே டிக ழiனேர ஊரடவரசந, லெ ய ளவரனல டிக ளுயளேஉசவை யனே வாந hளைவடிசல டிக ளுயளேஉசவை in வாந ரயீயீநச ஐனேயை, ளை வடி நெபin வாந யீசடிடெநஅ யனே வைள வாந றடிசளவ யனே அடிளவ ஊநஅயீடiஉயவநன யீடிiவேள' என்று சொல்கிறார். மேலும் அவர் ``இந்நூல் வரலாற்றுக்குச் சிறந்த வழிகாட்டியாக விருக்கிறது. நான் அயல் நாட்டானாக விருக்கிறபடியால், இந்த நூல் கருத்தின்படி என்னால் வரலாற்றை எழுத முடியவில்லை. பின்னால் இந்திய வரலாற்றை விரிவாக எழுதப்போகும் ஒரு வரலாற்றாசிரியர் இந்த நூலைக் கடைப் பிடித்து, அந்நூலாசிரியர் கூறுகிறபடியே இந்திய வரலாற்றை எழுதுவாராக' என்று குறிப்பிடுகின்றார். ஆனால் நீலகண்ட சாத்திரியாரோ, வேண்டுமென்றே, ``அவர் இப்படிச் சொல்லியுள்ளார்; இவர் அப்படிச் சொல்லியுள்ளார்'' என்று தம் விருப்பம் போலவே எழுதி வருகிறார். அவர் எழுதியதாகச் சொன்னேனே ழளைவடிசல டிக ளுடிரவா ஐனேயை-அந்த நூலில், `தமிழர் ஆறு இனம் சேர்ந்த ஒரு கலவை இனம்' என்று சொல்லியிருக்கின்றார். நீக்ரோ இனம், ஆத்திரேலிய இனம், அர்மீனிய இனம், மங்கோலிய இனம், நடுக்கடற் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்களினம் முதலிய ஆறு கலவையினம் என்று சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கின்றபொழுது எப்படியிருக் கின்றது தெரியுமா? இப்படிப்பட்ட நூல்களை இந்தக் காலத்திலே எழுதும்படியும் தமிழர்கள் விட்டுக் கொண்டிருக்கின்றார்களே என்று வருந்த வேண்டியுள்ளது. இந்த நிலைகள் வேண்டுமானால் எல்லாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் படித்தவர் களுக்காகிலும் தெரிய வேண்டுமா, இல்லையா? இப்படிப்பட்ட நூல்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. வாங்கப் பெற்றுப் படிக்கப் பெற்றும் வருகின்றன. ஆனால் இவற்றையும் படித்துக் கொண்டு `எங்கெழிலென் ஞாயிறு எமக்கு' என்று கவலைப் படாமலுந்தாம் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலைகள் தங்களையும் கெடுத்துக் கொள்வது மட்டுமன்று. தங்கள் முன்னோரையும் பழிக்கின்றதுமாகும். இப்படியிருந்தால் தமிழர் மாந்தர் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பயன் ஏற்படும்? மாந்தனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டு மில்லை. உள்ளுயிர் இருக்கின்றதே அதுதான் மாந்தன். அந்த அகக் கரண வளர்ச்சியடையா விட்டால் மாந்த நிலையை அடைய முடியாது. வெறும் உடம்பு மட்டும் வளர்வதாக வைத்துக் கொண்டால் அஃது அஃறிணை நிலை என்றுதான் நாம் சொல்லுதல் வேண்டும். அதனால்-தான் நாம் இதைப்பற்றி யெல்லாம் சொல்ல வேண்டியிருக்கின்றது. பகுத்தறிவு, நெஞ்சுரம், தன்மானம் இந்த மூன்றும் இல்லை பலருக்கு அவற்றை ஆரியன் நன்றாகச் சுரண்டி எடுத்து விட்டான்; துளிக் கூட இல்லை. இதைப்பற்றி ஏதாவது நாம் சொன்னால், உண்மையிலேயே சினம் மூளவேண்டியதற்கு மாறாகச் சிரித்து மழுப்புகிறார்கள். இன்னொன்று, ஹn யனஎயnஉந hளைவடிசல டிக ஐனேயை என்று ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நீலகண்டசாத்திரி யாரும். வி. என் சீனிவாசாச்சாரியார் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல் அது, அஃது ஓரளவு பெரிய நூல். இருபத்தைந்து உருபா விலை. அதிலேயும் தமிழர்களைத் தாழ்த்தியே எழுதி வைத்திருக் கின்றார். அவர்கள் தமிழரைப்பற்றிய வரலாற்றைத் தொடக்குவ தெல்லாம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்துதான். மெகசுதனிசு என்ற நாடுகாணி முதன் முதல் பாடலிபுரத்திற்குப் போனானே (பாடலிபுரம் என்பது பாட்னா) அந்தக் காலத்திலிருந்துதான் இந்திய வரலாற்றையே தொடங்குகிறார்கள். இக்கால் புதியதாக ஒரு நூல் வந்திருக்கின்றது. சுப்பிரமணியம் என்னும் பேராசிரியர் ஒருவர் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருப்பவர். அவர் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றவர். (அவரும் இன்னொருவரும் தமிழ்ப் பேராசிரியர்களாகத் தெ. பொ. மீயால் அமர்த்தப் பெற்றனராம். அவர்கள் இருவரும் தங்களுக்குள் நான் பெரியவன், நீ சிறியவன் என்று திருமாலும் பிரமாவும் போரிட்டுக் கொண்டது போலப் போரிட்டுக்கொண்டு இருந்தார்களாம். அதன்பின் மு.வ. அங்குப் போய்ச் சேர்ந்த பின் இருவரையும் இரண்டு துறைகளுக்குப் பேராசிரியராக்கி அமைதிப்படுத் தினாராம். நம் பேராசிரியர்கள் இப்படிப்பட்ட வகைகளில்தாம் போரிட்டுக் கொண்டிருக்கின்றார்களே தவிர, தம் மொழிக்கோ இனத்துக்கோ ஏற்படுத்துகின்ற இழிவுகளைக் கவனிப்ப தில்லை. பணத்தொகுப்பு, பதவி உயர்த்தம் முதலிய வற்றில் இருக்கும் கருத்து இதிலெல்லாம் இருப்பதில்லை (அச்செய்தி இருக்கட்டும்). அந்த சுப்பிரமணியம் என்பவர் எழுதிய நூல் இது. (நூலைக் கையிலெடுத்துக் காட்டி) இதன் விலை முப்பத்தைந்து உருபா. இருப்பது முந்நூற்றைம்பது பக்கந்தான்! விலையோ அளவு கடந்தது. இவரும் இதில் என்ன செய் திருக்கிறார். திராவிடர் ஒரு கலவை இனத்தார்' என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும், ``சிலர் சொல்லுகிறார்கள், திராவிடர்கள் தென்னாட்டில் தோன்றி யவர்கள் என்று; ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மேனாட்டிலிருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது'' என்று எழுதுகிறார். இரண்டு பிராமணர்கள், (இஃது ஓர் அரிய வாய்ப்பு. இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு பேறு என்றே நாம் நினைக்க வேண்டும் பெரிய வரலாற்றாசிரியர்கள்; நம் கருத்துக்குச் சார்பாக, நாம் சொல்லி எழுதினது போலவே எழுதி வைத்திருக்கிறார்கள், அந்த இருவர் யார் என்று சொன்னால் பி.டி. சீனிவாச அய்யங்கார் ஒருவர்; இராமச்சந்திர தீட்சிதர் என்பவர் ஒருவர். பி.டி. சீனிவாச அய்யங்கார் பல நூல்கள் எழுதினார் ழளைவடிசல டிக வாந கூயஅடைள என்பது ஒரு பெரிய நூல். அதிலே நன்றாக - தெளிவாக விளக்கியிருக்கிறார். “தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். அதோடு நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும்” என்று சொல்லி யிருக்கின்றார். ஏனென்றால், நாகரிக மாந்தன் வளர்ச்சிக் கேற்ற அந்த நால்வகை நிலங்கள்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை அடுத்தடுத்து இருக்கின்ற நிலம் இந்த உலகத்திலேயே தமிழ் நாடுதான்; வேறு எங்கும் இல்லை. ஒரே பாலை நிலமாக இருக்கும்; இல்லெனில் ஒரே காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருக்கும். இல்லெனில் குறிஞ்சியாக இருக்கும். இங்குப் போல் நான்கு நிலங்களும் அடுத்தடுத்து அமைந்த நிலப்பகுதியே உலகத்தில் இல்லை. முதன் முதல் குறிஞ்சி நிலத்தில்தான் மாந்தன் தோன்றியிருக்க வேண்டும். அங்கிருந்து அவன் முல்லைக்கு வந்திருக்க வேண்டும்; அதற்கடுத்தாற்போல் மருதம் இருக்கிறது அதற்கும் அடுத்தாற்போல் கடல். அது நெய்தல் ஆகி விடுகிறது. இப்பொழுது எண்ணிப் பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையை அடுத்துக் காவிரி, வையை முதலியவற்றையும், குமரி மலையையடுத்துக் குமரியாறு, பஃறுளியாறு முதலியவற்றையும், எடுத்துக் கொண்டால், அவற்றை அடுத்து அந்த நால்வகை நில அமைப்புகளும் உள்ளதை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் விரிவாக எழுதி அந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். அடுத்து, சிலர் சொல்லுகிறார்கள், இந்த மொகஞ்சதோரா நாகரிகத்தை ஒத்திருக்கிறது சுமேரிய நாகரிகம், என்று. அந்தக் கருத்தை மிகவும் நன்றாக விளக்கி இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். “இங்கிருந்து போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள்” என்பது அவர் கருத்து. பாபிலோனிய நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்பவையெல்லாம் பழைமையானவை என்று சொல்லு கிறார்களே, அங்கு ஊர் என்று ஒரு நகர் இருந்தது. அந்த ஊர் என்னும் பெயருடைய ஊரில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு தேக்கு மரம் நம் சேரநாட்டிலிருந்து கொண்டு போனதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மேலும் பைபிள் என்னும் திருப்பொத் தகத்தில் சொல்லப் பெற்றிருக்கின்றவனும் யூதர்களுக்கு முந்தியவனும் ஆன ஆபிரகாம் என்பவன் பெயரில் உள்ள ஆப் என்னும் சொல்லுக்குத் தந்தை என்று பொருள். அந்த மொழியிலும் ஆப்-அப்பு என்னும் சொற்கள் தந்தையை அஃதாவது அப்பனைக் குறிக்கும். அப்பன் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மை இப்படியெல்லாம் இருக்கிறது. இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால். வரலாற்றுத் துறை, கல்வெட்டுத் துறை, பழம் பொருட்கலைத் துறை இந்த மூன்று துறைகளிலும் துறைத் தலைவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ தன்மானமுள்ள தமிழர்தாம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பொழுதும் தமிழும் வளராது; தமிழனும் முன்னேற மாட்டான். மதுரைப் பல்கலைக் கழகமாயினும் சரி; சென்னைப் பல்கலைக் கழகமாயினும் சரி. இப்படித்தான் இருக்க வேண்டும். இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். இனி இத்தகைய (சுப்பிரமணியம் போன்றவர்கள் எழுதிய நூல் போன்ற) வரலாற்று நூல்களையெல்லாம் வகுப்பில் பாடப் பொத்தகமாகப் படிக்கக் கூடாது. தமிழைப் பற்றியோ தமிழனைப்பற்றியோ வரலாற்றுப் பொத்தகத்தில் தவறாக எழுதியிருந்ததால் உடனே மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறிவிட வேண்டும். சரியான வரலாறுகள் எழுதப் பெற்றால்தான் அவற்றை வகுப்பில் படிக்கவோ பாடஞ் சொல்லவோ விடலாம். இந்த நிலை ஏற்படுகின்ற வரையில், ஒருவேளை உண்மையான வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் இன்னும் வெளிவரவில்லையெனில், மாணவர்கள் பல மெய்யான வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாகிலும் கற்கலாம் கற்பிக்கலாமே! இது நாள் வரையில் நாம் எத்தனையோ முறைகளில் உண்மைகளை எடுத்துச் சொன்னோம் எழுதியும் வருகிறோம். இனிமேல் நாம் ஒன்று சேரவேண்டும். அப்பொழுது உண்மையில் இதற்கென ஒரு போராட்டமே தொடங்க வேண்டியிருக்கும். அதற்கு ஒரு கால்கோளாகவே இக் கருத்தரங்கு கூட்டப் பெற்றது என்று எண்ணிக் கொள்ளுங்கள். இனி அடுத்த ஆண்டிலே ஒரு மாநாடு நடக்கும். அது சமற்கிருத எதிர்ப்பு மாநாடு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆட்சி மொழிகள் மூன்றாகத்தான் இருக்க முடியும். ஆங்கிலம், தமிழ், இந்தி. ஆங்கிலம் எல்லாருக்கும் பொது. தமிழ் தமிழ்நாட்டிற்குரியது. இந்தி இந்தி வழங்குகிற நாடுகளுக்கு, அதை விரும்புகிற நாடுகளுக்கும் பொதுவாக இருக்கட்டும் இந்த மூன்று மொழிகள் தாம் இருக்க வேண்டும். இதுதான் நடுநிலையான முடிபு. ஆங்கிலம் இருந்தே தீர வேண்டும்; இந்தியா முழுவதற்கும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே இந்தி இங்கு இருக்கவே கூடாது. தமிழும் ஆங்கிலமுந்தாம் இருக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையப் பலகை களிலோ, அரசியல் அலுவலகங் களிலுள்ள பெயர்ப் பலகைகளிலோ இந்தி எழுத்து இருக்கவே கூடாது. இருப்பதாக விருந்தால் இந்திய நாடுகளில் (மற்ற மாநிலங்களில்) உள்ள அலுவலகங்களில் உள்ள பலகைகளிலும் தமிழ் எழுத்தும் இருக்க வேண்டும். (நீண்ட கையொலி). அங்குத் தமிழ் இருக்கக் கூடாதென்றால் இங்கும் இந்தி இருக்கக் கூடாது. அந்த நிலைமை வந்தாலொழிய நமக்கு விடிவில்லை. எவ்வளவொ மேலும் மேலும் சொல்லிக் கொண்டே வருகிறோம். மேலும் மேலும் இந்த இந்தியும் நெருங்கிக் கொண்டே வருகிறது. இப்பொழுது யாரும் அதைத் தடுப்பதாயில்லை. அவர்கள் தங்கள் நிலைகளைக் காத்துக் கொள்வதே பெரிதும் இடர்ப் பாடாயிருக்கிறது. எனவே நாம்தாம் எல்லா நிலைகளிலும் விழிப்பா யிருக்க வேண்டும். இனி, அடுத்து நடைபெற விருக்கும் சமற்கிருத மாநாடு பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டியிருக்கின்றது. நமக்கு சமற்கிருதம் தேவையே இல்லை. இந்தச் சமற்கிருதத்தைப் பற்றித் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தமிழ் வடக்கே போய்த் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறினது. அந்த ஆரியத்திலே ஒரு பகுதியினர் - கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிய ஒரு தொகுதி ஆரியர்கள்தாம் - இந்தியாவிற்கு வந்தார்கள்.அவர்கள் இந்தியா விற்கு வந்தவுடன் அவர்கள் பேசிய மொழி வழக்கற்றுப் போய்விட்டது. ஏனென்றால் அவர்கள் ஒரு சிறு கூட்டத்தாராக இருந்ததாலும், அக்கால் வடக்கே இருந்த மக்கள் பேரளவினராக இருந்ததாலும், கடலில் காயம் கலந்தது போல் அம்மொழி ஒன்றுமில்லாமற் போய் விட்டது. அந்த வழக்கற்றுப் போன ஆரிய மொழியுடன், அக்கால் வட இந்தியாவில் வழங்கி வந்த வட திராவிட மொழியான பிராகிருதம் கலந்து தான் வேதமொழி (ஏநனiஉ டுயபேரயபந) ஏற்பட்டது. அந்த மொழியும் பேச்சு மொழியாக இல்லாமல் எழுத்து மொழியாக மட்டுமே இருந்தது. பிராகிருதத்துடன் அந்த ஆரியமொழி கலந்ததால் தான், மேனாட்டு ஆரிய மொழிகளில் உள்ள எகர ஒகரம் இதில் இல்லாமற் போயின. இந்தியிலும் எகர ஒகரம் இல்லை. ஏ, ஓ நெடில்கள் தாம் இருக்கின்றன. அப்படியே வேதமொழியிலும் ஏ, ஓ நெடில்கள்தாம் இருக்கின்றன. மேலும் வேதங்களில் நிரம்பவும் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அதற்குப் பின்னர் ஆரியர்கள் தங்கள் நிலையை மேம்படுத்துவதற்காகவும், வலுப்படுத்துதற் காகவும் ஓர் இலக்கிய மொழி வேண்டுமென்று தென்னாடு வந்து பழந்தமிழர்களுடன் பழகி அவர்கள் மொழியிலுள்ள சொற்களை யெல்லாம் தங்கள் மொழியில் கலந்து கொண்டார்கள். அந்த வேதமொழியும் தமிழ் மொழியும் கலந்து செய்த ஓர் இலக்கியமொழி (டுவைநசயசல டுயபேரயபந) தான் இந்தச் சமற்கிருதம் என்று சொல்லப் பெறும் மொழி. சம்ற்கிருத்-சம் என்றால் கூட என்று பொருள்; வேறொன்றுமில்லை. கூட- கலந்து செய்தது உன்பது. ப்ராகிருத் என்றால் முந்திச் செய்யப்பட்டது என்று பொருள். இந்த வரலாற்றை இப்பொழுது தலை கீழாக மாற்றிச் சொல்கிறார்கள். இப்பொழுது வட்டம் என்று தமிழில் இருந்தால் அது வட்ட என்று பிராகிருதத்தில் இருக்கும் சமற்கிருத்திலே விருத்த என்று திரியும். அது இன்னும் ஏநசனடி என்றிருக்கும் இலத்தீனிலே இப்படிப் பார்த்தால் தமிழின் முன்மை நன்கு தெரியும். சமற்கிருதமானது ஓர் அரைச் செயற்கை இயற்கைமொழி. (ளுநஅi யசவகைiஉயைட டுவைநசயசல னயைடநஉவ) அதை இப்பொழுது, என்றோ பெருமளவில் வழங்கி வந்தமொழி போலவும், உயிர்மொழி போலவும் சொல்லிக் கொள்வார்கள். அதோடு, அந்த வேத மொழியைக் கூட ஏனநiஉ ளுயளேஉசவை என்று சொல்லுகிறார்கள். அது (ஞசடி-உhசடிnளைஅ) முற்காலப்படுத்தம் என்னும் முற்றத்திற்கு-வழுவுக்கு இடந்தருவது. அந்தக் காலத்தில் அம்மொழி இல்லவே இல்லை. சமற்கிருதம் ஆரிய மொழிகளுக் கெல்லாம் மிக முந்தியது என்று வேறு தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இஃதெல்லாம் `என் பாட்டன் திருமணத்திற்கு நான்தான் பாட்டு கட்டினேன்' என்று சொல்வது போலாகும். (நெடுஞ்சிரிப்பு). ஆகவே, காலமுறைப்படி நாம் ஆராய்ந்து பார்த்தால் சமற்கிருதம் இறந்தது மில்லை; பிறந்தது மில்லை. சிலர் அதை இறந்தமொழி என்று சொல்லுகின்றார்கள். அவர்களோ அஃது இறக்க வில்லை; இன்னும் உயிரோடு இருக்கின்றது என்று சொல்லி வருகிறார்கள் அது பிறந்தா லன்றோ இறப்பதற்கு? மொழிக்கு உயிர் என்று சொன்னால் அது வழங்க வேண்டும். மக்கள் ஒரு கூட்டத்தார் அதைக் கல்லாமலேயே இயல்பாக அதைப் பேசி வர வேண்டும். அப்படி எவன் பேசுகிறான்? சும்மா, ஏதோ காட்டு மாடத்திலே ஓட்டாண்டிகள் கூடினது போல, சமற்கிருதப் பண்டிதர்கள் சிலர் சேர்ந்து அதைப் பேசி வருவதால் அது உயிருள்ள மொழியாகப் போய்விடுமா? அதும் உயிருள்ள மொழியென்றால். எல்லா மொழிகளும், உலகத்தில் வழக்கற்றுப் போன மொழிகளெல்லாம் கூட இப்பொழுது பேசப் படத்தான் செய்கின்றன. இலத்தீன் பேசுகிறார்கள்; கிரீக்கு பேசுகிறார்கள். எசுப்ப ரெண்டோ, நோயல், வலப்புக்கு என்ற செயற்கை மொழிகளையெல்லாம் இப்பொழுது பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் நாள்தொறும் வாய்தொறும் பேசுவதினாலே ஒருமொழி உயிருள்ள மொழி என்று ஆகிவிடாது. சமற்கிருதம் ஒரு பாவை (பொம்மை) போன்றது. கடையிலே இருக்கிறதன்றோ பாவை; அஃது என்றைக் காகிலும் பிறந்ததா? என்றைக்காகிலும் இறந்ததா? அது போன்றது இந்தச் சமற்கிருதம். அதை வைத்துக் கொண்டு இவ்வளவு பெருமை பண்ணுகிறார்கள். எதனாலென்றால் அந்த அளவுக்கு நாம் அடிமையாகப் போனதனால்தான். இந்த முயற்சிகளையெல்லாம் நாம் தடுத்தே ஆக வேண்டும். தமிழைக் கெடுப்பதற்கென்றே இந்தச் சமசுக்கிருதம் தோற்றுவிக்கப் பெற்றது. என்னுடைய தமிழர் மதம் என்னும் நூலிலே கூட அது வழிபாட்டிற்குத் தகாதமொழி என்று நான் சொல்லி யிருக்கின்றேன். நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சொல்கிறேன். சமற் கிருத்திற்கும் தமிழுக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாக இருக்கின்றன. அவர்கள் தமிழிலிருந்து அத்தனைச் சொற்களை யும் கடன் கொண்டு விட்டு, இப்பொழுது கடன் கொடுத்தவனையே கடனாளி என்கிறார்கள். இதற்கெல்லாம் நம் ஏமாளித்தனந்தான் காரணியம். இப்பொழுது நாம் சில அடிப்படைச் சொற்களை எடுத்துக் கொள்வோம், காலம், உலகம் போல. தொல்காப்பியத் திலே ஒரு நூற்பா வருகிறது, கிளவியாக்கத்திலே! காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. என்பது அது. இந்த நூற்பாவின் தொடக்கத்தில் வரும் காலம், உலகம் இரண்டும் தூய தமிழ்ச் சொற்கள். உலகம் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். உலவுதல் என்றால் வளைதல் என்று பொருள். உலாப் போதல் என்று சொல்லப் படுவதில்லையா? அரசன் ஊரை வலமாக வளைந்து வருவதைத் தான் உலாப் போதல் என்பது. உல-என்றால் உருட்சி அல்லது திரட்சி. உலமரல் என்றால் சுழலுதல். உலமரல்தான் அலமரல் என்று திரியும். அலமரல் தெருமலல் ஆயிரண்டும் சுழற்சி, என்பது நூற்பா. உலவு-உலகு; அம் என்பது ஒரு பெருமைப் பொருள் பின்னொட்டு. இது பெரியதைக் காட்டும். குன்று சிறியது. குன்றம் பெரியது. விளக்கு என்றால் சிறியது. விளக்கம் பெரியது. கலங்கரை விளக்கம் என்று சொல்ல வேண்டும். நிலை என்பது ளுடயனே. அது ளுவயவiடிn ஆக இருந்தால் நிலையம் என்று சொல்ல வேண்டும். இப்படி, உலகம் என்ற சொல்லை வடமொழியில் எடுத்துக் கொண்டு அதை லோக என்று சொன்னார்கள். அஃது இந்தியிலே லோக் என்று இருக்கிறது. இந்தியில் எப்பொழும் இப்படித்தான். மிக மிகக் குறுக்கி வைத்துவிடுவான். கிருகம் என்று வடமொழியிலிருந்தால் இந்தியில் கர் என்பான். இப்பொழுது என்று தமிழில் இருப்பதைப் படியாதவர்கள் இப்ப என்பார்கள். அது அப் என்று இந்தியில் வழங்குகிறது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இப்பொழுது நேரமில்லை. இப்படி முந்நூறு சொற்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சொற்களையெல்லாம் ஓர் அரங்கு கூட்டி நன்றாக மூலம் வேரெல்லாம் சொல்லி விளக்க வேண்டும். அதன் பின்னாலே எது முந்தினது தமிழா சமற்கிருதமா என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லை; உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி; அப்புறம், எவராகவிருந்தாலும் சரி. சென்னைப் பல்கலைக் கழகத்திலே சமற்கிருதத் துறைத் தலைவராக இருந்த இராகவனாக இருந்தாலும் சரி; இனி, அவருக்குப் பின்னாலிருந்து குஞ்சனிராசாவாக இருந்தாலும் சரி; மேனாட்டில் இருப்பவர்களான பரோ, எமனோ யாராயிருந்தாலும் சரி; அவர்கள் எல்லாரும் வர வேண்டும். நாமும் இந்தத் தமிழ் பேராசிரியர்கள் அத்தனைப் பெயரையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் சொல் வரலாறு சொல்வேன். அவர்களும் (அந்தச் சமற்கிருதப் பேராசிரியர்களும்) அவர்கள் கருத்துப்படி அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். இருதிறத்தார்க்கும் நடுவராக நம் குடியரசுத் தலைவரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அல்லது இந்திய உயர்நெறி மன்றத் தலைமைத் தீர்ப்பாளர் கூட இதற்கு நடுவராக இருக்கலாம். கடைசியிலே முடிவாக வேண்டும். இஃது என்ன சொல்; தென்சொல்லா வட சொல்லா என்று. அதற்கப்புறம் ஒருவனும் வாய்திறக்கவே கூடாது. (பெரிய அளவில், கை தட்டல்) இப்படி இல்லாவிட்டால் இந்தப் `பெருமாள்' களெல்லாம் இப்படித்தான் எழுதிக் கொண்டே வருவார்கள். தமிழர்க ளெல்லாரும் ஒரு கலவையினம்; இந்தத் தமிழ்மொழி சமற்கிருதத்திலிருந்து தான் வந்தது' என்று இப்படி! எனவே, அப்படியொரு போராட்ட நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறி என் உரையை நான் முடித்துக் கொள்கின்றேன். வணக்கம். - பாவணர் தமிழ்க்களஞ்சியம்47, பக். 52-75. முனைவர் அன்பரசு (பக். 139-150) இந்துமா வாரியில் கண்டமளவு பெருநிலம் மூழ்கவில்லை மூழ்கிய கண்டங்கள், பெருந்தீவுகள், கண்டக் கரையோரங்கள் பற்றிய புனைவுச் செய்திகள் மனித வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக இடம்பெறுகின்றன. அவை கற்பனை வளத்தைச் சிறப்பிக் கின்றன. எனினும் அண்மைக் காலமாக புவியியல் கற்பனைகளில் உண்மைகள் புதையுண்டு இருக்கலாம் என்ற கருத்து ஆய்வுப் பெருமக்கள் மத்தியில் காணப்படுகிறது. டொறதி விற்தாலியானோ (னுடிசடிவால ஏவையடயைnடி) என்ற அறிஞர் 1966ஆம் ஆண்டு `புவியயல் கற்பனை’ (ழுநடிஅலவாடிடடிபல) என்ற கலைச் சொல்லை உருவாக்கி அதற்கான விசேட அர்த்தத்தையும் வழங்கி யுள்ளார். பழஞ் சமுதாயங்கள் மீது கடும் அழுத்தம் பிரயோகித்த பாரிய புவியியல் நிகழ்ச்சிகள் பிற்காலக் கற்பனைக் கதைகளுக்கு வித்திடுகின்றன. எனவே அப்படியான கற்பனைகளை நாம் சகட்டுமேனிக்கு நிராகரிக்கப்படாது. எமதுகடமை அவற்றின் பின்னணியை துருவி ஆராய வேண்டியதாகும். மகாபாரத இதிகாசத்தில் கிருஷ்ணா கட்டியெழுப்பிய துவாரகைப் பெருநகரம் பற்றியும் அவர் மறைந்தபின் அது கடலடிக்குச் சென்றது பற்றியும் தகவலிடப்பட்டுள்ளது. இதை கற்பனை என்ற பலருக்கு 1963 ஆம் ஆண்டு கடலடித் தொல்லியல் மூலம் அதே நகரம் அடையாளம் காணப்பட்ட செய்தி பெருவியப்பளித்தது. மகாபலிபுரத்தின் பெரும் பருதி கடலில் மூழ்கி விட்டது என்ற கர்ண பரம்பரைக் கதை நிலவியதை நாம் அறிவோம். 2004ஆம் ஆண்டுச் சுனாமியின் போது கடல் பின்வாங்கியது, நாம் கற்பனை என்று எண்ணிய கட்டுமானங்கள் கண்ணுக்குப் புலப்பட்டு மீண்டும் மறைந்தன. பனி யூழியின் உச்சம் நிலவிய இற்றைக்கு 20,000 ஆம் ஆண்டு களுக்கு முன்பு கடல் மட்டம் இன்றையதிலும் பார்க்க 120 மீட்டர் தாழ்வாக இருந்தது. அடுத்த 13,000 ஆம் ஆண்டுகளில் கடல் மட்டம் இன்றைய உயரத்திற்கு வந்துள்ளது. கடலின் இத்தகைய விளைவுகள் பல புனைவுகளுக்கு இடமளித்தன. ஆஸ்திரேலிய வாழ் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் கதைகள் கடலின் ஏற்றத்தை உறுதி செய்கின்றன. ஆஸ்திரேலிய கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றோ டொன்று தொடர்பில்லாது வாழும் பழங்குடிகளின் இருபத்தியொரு வரலாற்றுக் கதைகள் திரட்டி ஆய்வு செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. தாம் வாழும் பகுதி நிலம் வெகு தூரம் நீண்டிருந்து, பின்பு கடல் முன்னேற்றத்தால் மறைந்து விட்டதாகும், அதே நிலத்தை மீண்டும் காண மாட்டோம் என்று கதைகளின் பிழிவு கூறுகின்றது. பியரி தைல்ஹார்ட் டி சார்டின் (ஞநைசசந கூநiடாயசன னந ஊhயசனin) என்ற யேசு சபை மதகுருவும் தத்துவஞானியுமானவர் 1922ஆம் ஆண்டு புவித்திடல் பொருட்களும் கற்பனை உலகிற்கும் உள்ள தொடர் புறவை விளக்கும் `நூஸ்பியர்’ (சூடிடிளயீhநசந) என்ற புதிய சொல்லை உருவாக்கினார். கற்பனை நிகழ்ச்சிகளுக்கும் ஏதோவொரு உண்மைச் சம்பவத்திற்கும் அல்லது சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அர்த்தத்தில் அவர் இச் சொல்லை உருவாக்கினார். 21ஆம் நூற்றாண்டு பிறந்தபின் நூஸ்பியர் என்ற சொல்லிற்குப் பதிலாக `ஐடியாஸ்பியர்’ என்ற சொல் பாவனைக்கு வந்துள்ளது. எண்ணங்கள் வீணல்ல, அவற்றில் உண்மையுண்டு என்பது இதன் பொருள். புத்தம் புதிய ஆய்வுகள் மனித வரலாற்றின் பல பகுதிகளை மாற்றுகின்றன. அல்லது திருத்தி அமைக்கின்றன. ஆஸ்திரேலிய பழங்குடிகளின் குடியேற்றம் பற்றிய தரவுகள் இவ்வாண்டுக் (2017) கண்டுபிடிப்புகளால் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வடபால் அமைந்த நொதேன் தெரிட்டரி (சூடிசவாநசn கூநசசவைடிசல) என்ற மாநிலத்தில் நடந்த அகழ்வுகளில் பழங்குடியினர் 65,000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டனர் என்பதற்குச் சான்றுகள் கிடைத்தன. இதற்கு முன்பு மானுட வியலாளர்கள் ஆஸ்திரேலிய பழங்குடியினர் தொடர்பாக எடுத்த முடிவுகள் பின்வருமாறு. அவர்களுடைய வருகை 47000 ஆம் ஆண்டுகளுக்கு முன் நடை பெற்றது அவர்கள் மனித நாகரிகப் படித்தட்டின் அடிமட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் நிலையான வாழ்விட வாழ்க்கையை அறியாதவர்கள். குகைகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் போது வேட்டைக் கருவிகள், மிகத் திறம்பட உருவாக்கப்பட்ட கற்கோடரிகள், மனித எச்சங்கள் என்பன மீட்கப்பட்டன. அவர்கள் தீட்டிய குகை ஒவியங்களும் அடையாளம் காணப்பட்டன. ஆதி மாந்தன் ஆப்பிரிகாவில் வாழ்ந்து, அதன்பின் உலகின் பல பாகங்களுக்குச் சென்று குடியேறிய காலக் கணிப்புகளை திருத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் வருகைக் காலக்கணிப்பு மூலம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொல்லியல்துறை, மானுடவியல்துறை கண்ட மிக முக்கியமான ஆய்வுச் செய்தி இதுவொன்று மாத்திரமே. லெமூரியா என்ற கண்டம் இந்துமா வாரியில் இருந்ததாகவும் அது தொல் தமிழ நாகரிகத்தின் இருப்பிடம் என்றும் நம்பும் தமிழர் பெரும் ஆத்ம திருப்தியும் தமது முன்னோடிச் சிறப்பிற்கு முன்னுதாரணமாகவும் அதைக் கொள்கின்றனர். பரிதிமார் கலைஞர் என்று பெயர் மாற்றம் பெற்ற வி.ஜீ. சூரியநாராயண சாஸ்திரி அவர்கள் லெமூரியா கண்டமே தமிழர்தம் மறைந்த குமரிக் கண்டம் என்று முதன் முதலாகப் பிரகடனஞ் செய்தனர். தமிழ் மொழியைச் செம்மொழி என்றும் வலியுறுத்தியதோடு தனித் தமிழ் இயக்க முன்னோடியாகவும் திகழ்ந்தார். திராவிட சாஸ்திரி எனப்படும் பரிதிமார் கலைஞர் வாழ்ந்த காலம் 32 ஆண்டு மாத்திரமே (1870-1903). லெமூரியா என்ற கண்டப் பெயரும், கண்டம் இருந்து மறைந்த செய்தி என்பன பிலிப் ஸ்கிலேற்றர் (ஞாடைடiயீ ளுஉடயவடிச) என்ற விலங்கியல் மற்றும் புவி வரலாற்று அறிஞரால் தோற்றம் பெற்றன. 1864ஆம் ஆண்டு அவர் விஞ்ஞானச் சஞ்சிகை ஒன்றில் எழுதிய விலங்கியல் புவியியல் கட்டுரையில் லெமூரியா என்ற பெயரை வெளியிட்டார். லெமூர் என்ற பெருங் குரங்கின் படிவங்கள் தொல்லியல் ஆய்வில் மடகாஸ்கர் தீவிலும் இந்தியத் தென்பகுதியிலும் கண்டெடுக்கப் பட்ட போது அவர் அது பற்றி ஒரு முடிவுக்கு வந்தார். மடகஸ்கார் தீவும் இந்திய உப கண்டமும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தன. இப்போது இரண்டும் பிரிந்துவிட்டன, இடையில் பெருங்கடல் புகுந்துவிட்டது. கடலடியில் தீவுக்கும் உப - கண்டத்திற்கும் இடைப் பட்ட பெருநிலம் மூழ்கிக் கிடக்கின்றது. அதற்கு நான் லெமூரியா என்று பெயரிடுகிறேன் என்றார் பிலிப் ஸ்கிலேற்றர். `சூப்பர் - கண்டம்’ பத்து பில்லியன் வருடத்திற்கு முன்பு மறைந்த வரலாறு என்ற ஆய்வு நூலில் ஸ்கிலேற்றரின் நிலைப்பாடு பின்வருமாறு பதியப்பட்டுள்ளது. “மடகஸ்கார் தீவின் ஒழுங்கற்ற விலங்கினங்கள் பற்றிய விளக்கமாக ஒரு பிரமாண்டமான கண்டம் உடைந்து சின்னஞ் சிறிய பகுதிகளாக ஆபிரிக்கா, ஆசியா ஆகிய வற்றுடன் ஒன்றி இருப்பதை முன்வைக்க முடியும். மடகஸ்காரும் மஸ்கரின் தீவுகளும் அதன் பகுதிகளாகும். அப்பிரமாண்டமான கண்டத்திற்கு லெமூரியா என்று பெயரிடுகிறேன்” க்ஷடிடிம: ளுரயீநச உடிவேiநேவே வநn க்ஷடைடiடிn லநயசள in வாந டகைந டிக லடிரச யீடயநேவ: கூநன சூநடைன: ழயசஎயசன ருniஎநசளவைல ஞசநளள (2007) இன்று கண்டமளவு பெரிய நிலப்பரப்பு எதுவும் எக்காலத்திலும் கடலில் மூழ்க வில்லை என்று அறிவியல் அறிஞர்கள் இன்று உறுதிப்படக் கூறுகின்றனர். மடகஸ்கார் தீவும் இந்திய உப கண்டமும் ஒன்றாக இருந்துப் பிரிந்தன என்பது உண்மையே அதற்கு காரணம் கண்ட உடைவு அல்ல, புவித்தட்டு அசைவு, கண்டப் பெயர்வு என்பனவே காரணம். அது மாத்திரமல்ல பனி ஊழிக்குப் பிறகான கடல்மட்ட எழுப்பத்தால் `ஏறத்தாழ இருநூறு முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கிவிட்டது’ இது உலகெங்கும் நடைபெற்றது. தமிழர் வரலாறு: பி. இராமநாதன் தமிழ்மண் (2008) பிலிப் ஸ்கிலேற்றர் போன்ற அறிஞர்கள் புவித் தகடு அசைவு, கண்டப் பெயர்ச்சி பற்றிய பிரக்ஞை இல்லாததாலோ அது பற்றிய அத்துறை இல்லாததாலோ லெமூரியா கண்டம் மூழ்கியதையும் அதுவே மனித குலம் தோன்றிய பிறப்பிடம் என்றும் தவறாக வலியுறுத்துகின்றனர். இன்றைய அறிவியல் லெமூரியாக் கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கின்றது. 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு லெமூரியா என்ற விடயம் மறைந்து விட்டது. ஆனால் குமரிக்குத் தெற்கில் கடல் மட்ட உயர்வால் தமிழர் தாயகத்தின் கணிசமான பகுதி மூழ்கியதை மறுக்க முடியாது. அதே மூழ்கிய நிலத்தில் கலித்தொகை, சிலப்பதிகாரம், ஆகியவை குறிப்பிடும் பகுதிகள் இருந்திருக்க முடியும். அதே மண்ணில் முதலாம், இரண்டாம் கழகங்கள் இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. “கி.மு. 8,000 ஐ ஒட்டி கண்டத்திட்டுப் பகுதி (ஊடிவேiநேவேயட ளுhநடக) கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கழக (சங்க) இலக்கிய கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றும்’ - பி. இராமநாதன்: 1998, 2003, 2004. பூமிப் பந்தின் வரலாற்றை இயம்பும் அறிஞர்கள் புவித் தட்டு அசைவு காரணமாக வரலாற்றிற்கு முந்திய தொல் பழங்காலத்தில் மூன்று தடவை கண்டங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த பிரமாண்டமான ஒற்றை நிலப்பரப்புகளே தோன்றின என்கின்றனர். பின்பு அதே புவித் தகட்டு அசைவு காரணமாக ஒற்றை நிலப்பரப்புக்கள் உடைந்து பிரிந்தன என்றும் அறிஞர்கள் இயம்புவர். இறுதியாக ஒன்றிணைத்த ஒற்றை பிரமாண்டமான கண்டத்திற்குப் பான்கேயா (ஞயபேயநய) என்று பெயரிட்டுள்ளர். பான்கேயா தோன்றிய காலம் 600 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்று கண்டறியப் பட்டுள்ளது. பான்கேயா உடைந்த காலம் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது இருபெரும் பாகங்களாகப் பிரிந்தது. ஒன்றிற்கு `கொண்ட்வானா’ (ழுடினேறயயே) அடுத்ததற்கு லோறேசியா (டுயரசயளயை) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. கொண்ட்வானாவில் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா என்பன இணைந் திருந்தன. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கொன்ட்வானாவும் உடைந்தது. ஒட்டியிருந்த ஆபிரிக்காவும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா என்பன இணைந்திருந்தன. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கொண்ட்வானாவும் உடைந்தது. ஒட்டியிருந்த ஆப்பிரிக்காவும் தென்னமெரிக்காவும் வெவ்வேறாகி இடம் பெயர்ந்தன. இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியா பக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. ஆஸ்திரேலியா கிழக்கு நோக்கிச் சென்றது, அன்டார்டிக்கா தெற்கு நோக்கி நகர்ந்தது. லொறேசியாவில் வட அமெரிக்கா, ஆசியாவும், ஐரோப்பாவும் இணைந்த யூரேசியா (நுரசயளயை) என்பன இடம்பெற்றன. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு லொறேசியாவும் உடைந்து வட அமெரிக்கா மேற்கு நோக்கிச் சென்றது. ஐரோப்பாவும் ஆசியாவும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. மாற்றம் என்பது மாறாத விதி, இது புவித் தகட்டுக்கு மிகப்பொருத்தம். புவித் தகட்டின் அசைவு வேகம் ஆண்டு ஒன்றிற்கு 100 மில்லிமீட்டர் அல்லது அதிலும் குறைவு அல்லது பூச்சியம். புவித் தகடுகளில் மிகப் பெரியவற்றின் எண்ணிக்கை 7 அல்லது 8, சிறியன வற்றின் எண்ணிக்கை 12 அல்லது 14. புவித்தகடு என்றால் என்ன? அவை 15 கி.மீ தொடங்கி 200 கி.மீ. வரையான தடிப்புக் கொண்ட உறுதியான பாறைக் கட்டமைப்பையும் பலவிதமான கோணல் மாணலான உருவங்களையும் கொண்டவை. அவற்றின் மேற்குபகுதியில் கண்டங்களும், கடல்களும் இடம் பெறுகின்றன. புவித் தகடுகள் ஏன் அசைகின்றன? புவித் தகட்டின் எடையை தாங்கும் பூமியின் உட்பகுதி பலம் குன்றியது மாத்திரமல்ல, பூமியின் உட்பகுதி அதியுச்ச வெப்பம் கொண்டதாகவும் இருக்கிறது. வெப்பம் வெளியேறும் போது புவித்தகடு அசைகின்றது. அது மாத்திரமல்ல பூமியின் உள் மையத்தில் திரவ உலோகங்களும் அதிவெப்பத் தீயும் கனன்று கொண்டிருக்கின்றன. சூரிய, சந்திரனின் பூமி மீதான இழுவையும் தகட்டை அசைக்கின்றன. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. இதுவும் அசைவுக்குக் காரணமாகின்றது. உலகின் மிக உயரமான, மிக நீளமான இமய மலைத் தொடர் இரு புவித் தகடுகளின் மோதலால் உருவானது. இமயம் கிழக்கு நோக்கி மிகவும் மெதுவாக நகர்கின்றது. தகடுகள் ஒன்றோடொன்று மோதி பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஒன்றின்கீழ் இன்னொன்று செருகியதால் கடலடியில் பாரிய குழிகள் (கூசநnஉhநசள) தோன்று கின்றன, ஆழிப் பேரலை, எரிமலை போன்றவை ஏற்படுகின்றன. தகடுகள் அசைவால் கண்டப் பெயர்ச்சி மாத்திரமல்ல, கண்ட உடைவு ஏற்படுகிறது. கிழக்கு ஆபிரிக்காப் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (ழுசநயவ சகைவ எயடடநல) ஆப்பிரிக்கா கண்டத்தின் பிளவுக்கான அறிகுறி. ஜப்பான் நாட்டின் கீழ் நான்கு பெரும் தகடுகள் சந்திக்கின்றன. அவற்றின் உராய்வும் மோதலும், நிலநடுக்கத்தை தோற்றுவிக்கின்றன. ஆஸ்திரேலியா வடதிசையில் ஆசியாவை நோக்கி நகர்கின்றது. கண்டம், கடல் ஆகியவற்றின் உருவம், அமைவிடம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் புவித் தகடு அசைவு முக்கியமான இடம் வகிக்கிறது. மேலும் கண்டத்திட்டு அழிவு கடல் ஏற்றத்தால் நிகழ்கின்றது. இந்துமா வாரியின் ஆழ் தென்பகுதியில் அன்டார்டிக்காவுக்கு அண்மித்தாக் கோடலியன பீடபூமி (முநசபரநடயn ஞடயவநயர) என்று பெயரிடப்பட்ட சிறிய கண்டம் (ஆiஉசடி ஊடிவேiநேவே) கடலடியில் காணப் படுகிறது. இது கொண்டவானா பெருங் கண்டத்தின் ஒரு சிறு பகுதி என்று அறிஞர் கூறுவர். ஜோயிடஸ் றெசலூசன் (துடினைநள சுநளடிடரவiடிn) என்ற ஆய்வுக் கப்பல் இந்தப் பகுதியில் ஆழ்கடல் துளையிட்ட போது (னுநந ளுநய னுசடைடiபே) இந்தப் பீடபூமி 20 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கியதை உறுதி செய்யப்பட்டது. அது நீருக்கு மேல் இருந்த காலத்தில் நெருக்கமான தாவரம் நிறைந்த பூமியாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. கப்பலுக்குக் கொண்டு வரப்பட்ட இப்பீடபூமியின் சகதியில் 90 மில்லியன் வருடம் பழமையான மகரந்தப் பொடிகள் காணப்பட்டன. பீடபூமியில் செய்யப்பட்ட ஆய்வில் ஒரு காலத்தில் ஒட்டியிருந்த ஆபிரிக்க, இந்திய, அண்டார்ட்டிக் புவித் தகடுகள் பிரிந்து வெவ்வேறானதற்கான சான்றுகள் புலப்பட்டன. எனினும் அது லெமூரியா கண்டக் கோட்பாட்டை எந்தவிதத்திலும் உறுதி செய்யவில்லை என்று ஆய்வாளர் கூறுவர். இன்று கேர்டலியன் பீடபூமி 1000 தொடக்கம் 2000 மீட்டர் ஆழத்தில் (3,300-6,600 அடி) கிடக்கின்றது. அதன் பரப்பளவு 1,250,000 சதுர கி.மீ. (480,000 சதுர மைல்) இது கிட்டத்தட்ட ஜப்பான் நாட்டின் முழுப்பரப்பளவிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியதாகும். இப்பீடபூமியானது ஆஸ்திரேலிய கண்டத்தின் தென்மேற்கில் 3000 கி.மீ. (1,900 மைல்) தொலைவில் காணப்படுகிறது. இப்பீடபூமி வட-மேற்கு, தென்கிழக்கு திசையில் நீண்டு பரந்து மிக ஆழமான கடலடியில் கிடக்கின்றது. ஆனால் பீடத்தின் சில பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேல் துருத்திக் கொண்டு தீவுகளாக இடம்பெறுகின்றன. பிரான்சு அவற்றிற்குச் சொந்தம் கொண்டாடுகிறது. இன்று லெமூரியாவுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை. இருப்பினும் கிழக்குமா வாரியில் கடலடித் தரைப்பரப்புக்குள் வெளிவந்தபடி இருக்கின்றன. மொறிசியஸ் (ஆயரசவைரைள) தீவுக் கூட்டங் களுக்கு அண்மித்தான கடலடியில் மொறிற்றியா (ஆயரசவையை) எனப் பெயரிடப்பட்ட ஒரு பெரிய நிலப்பரப்பு புதையுண்டு கிடப்பதாக கடலடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது 2 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு மூழ்கிவிட்டது. அது போல் சுன்தா தீவுகளுக்கு (ளுரனேய ஐளடயனேள) அண்மித்தான கடலடியில் சுந்தாலாந்து (ளுரனேநசடயனே) என்ற நிலப்பரப்பு கிடப்பதாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது. சுந்தா தீவுகள் தெற்காசியாவில் இந்தோனேசியாவுக்குச் சொந்தமான தீவுக் கூட்டங்களில் ஒன்றாகும். அமொக்காவின் ஐம்பதாவது மாநிலமான ஹாவாய் தீவுகள் (ழயறயii) ஒரு காலத்தில் மவுயி நூயுயி (ஆயரi சூரi) என்று பெயரிடப்பட்ட பெருந் தீவாக இருந்து கடல் எழுப்பத்தால் சிறு தீவுகளாக மாறி விட்டது. மேலும் இப்பகுதி எரிமலையும் நிலநடுக்கமும், ஆழிப் பேரலையும் நிறைந்த பகுதி. அது புவித் தகடுகளின் அசைவைக் காட்டும் அறிகுறி. இன்று மேற்கு ஐரோப்பாவின் வடபால் அமைந்துள்ள வடகடல் என்று பெயரிடப்பட்ட சூடிசவா ளுநய முன்னொரு போது பெருந் தரைப்பரப்பாக இருந்தது. அதற்கு டொகர்லாந்து (னுடிபபநச டயனே) என்று பெயரிடப்பட்டது மேற்கு ஐரோப்பாவையும் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து தீவுகளையும் அது தொகுத்தபடி நீண்டு பரந்து கிடந்தது. கடல் ஏற்றத்தால் இன்று மறைந்து விட்டது. மத்தியதரைக் கடலில் காணப்படும் மால்டா தீவு (ஆயடவய) முன்பு பாரிய நிலப்பரப்பின் ஒரு சிறிய பகுதியாக இருந்தது. அப்போது மத்தியதரைக் கடல் சிறியதாக இருந்தது. கடல் மட்டம் உயர்ந்ததும் அத்திலாந்திக் மாகடல் நீர் புகுந்து மத்தியதரைக் கடலைப் பெரிதாக்கியது. கடல் எழுப்பத்தால் மறையும் நிலங்கள் பற்றிய ஆய்வுக்கு உதாரணம் தேடி வெகு தூரம் போக வேண்டியதில்லை. தமிழர்கள் தமது பாரம்பரிய பூமி பண்பாடு, இலக்கியம், மக்கள் தொகை என்பனவற்றை இந்துமா வாரியின் எழுப்பத்தாலும் தமிழ் வளர்ந்த பூமியின் கடல் கோளாலும் இழந்துள்ளனர். தமிழரின் வார்த்தகம், கடலோட்டம், பன்னாட்டுச் செலவு போன்றவற்றின் ஆதாரமான காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிவிட்டது. உலகின் பழம் பெரும் நகரங்களில் ஒன்று என்று வர்ணிக்கப்படும் இத்துறைமுக நகரம் பற்றிய கரிசனை எமக்கு இல்லாமல் இருப்பது பேரிழப்பாகும். வங்காள விரிகுடாவில் 1910ஆம் ஆண்டு நியூ மூவர் ஐலன்ட் (சூநற ஆடிடிசந ஐளடயனே) என்ற தீவு கடல் எழுப்பத்தால் மூழ்கியதை நாம் மறத்தலாகாது. தேசிய உணர்ச்சிப் பெருக்கால் லெமூரியா போன்ற ஆகாயத் தாமரையை நாம் இலக்காகக் கொள்ளும் அவசியம் கிடையாது. லெமூரியாக் கண்டம் பற்றிய அதீத கனவு நிலவிய காலத்தில் கூட நிலை தடுமாறாத சிறந்த தமிழ் அறிஞர் சிலர் தமிழர் தாயகமான கடலில் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று, குறைந்த, ஆனால் மிகவும் முக்கியமான தமிழ்மண் என்றே குறிப்பிடப்பட்டள்ளனர். இதற்கு, அதாவது இந்த விவகாரம் தொடர்பான வாதப் பிரதிவாதங் களுக்கு முடிவு கட்ட வேண்டுமாயின் தமிழகத்தின தென்கோடிக் கடலடி ஆய்வு மிகவும் அவசியம். குடநஅஅiபே ஆ.ஊ. (2004) ளுரbஅயசiநே ஞசநாளைவடிசiஉ ஹசஉhயநடடிடடிபல டிக வாந ஐனேயைn ஊடிவேiநேவேயட ளுhநடக - ஹ ஞடிவநவேயைட சுநளடிரசஉந, ஊரசசநவே ளுஉநைnஉந 86: ஞயபநள 1225 - 30. இந்தியா ஒன்றே உப - கண்டம் என்று பெயரிடப் படுவதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். ஒரு கண்டத்திற்குரிய தனி அடையாளங் கள் இருப்பதால் இந்தியா அவ்வாறு அழைக்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய பரப்பைக் கொண்ட ருஷ்யா கூட அவ்வாறு அழைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவிலிருந்து பிரிந்ததொரு பகுதி மடகஸ்கார்தீவு. 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பிரெஞ்சு றீயூனியன் (குச. சுநரniடிn) கொமொரொஸ் தீவு (ஊடிஅடிசடிள) மொரிசியஸ் என்பன ஒரு பெருநிலத்தின் சிறுபகுதிகளாகும். மடகஸ்கார் தீவின் தாவரங்கள் உலகின் பிறிதொரு பகுதியில் காணப்படாத வகையாக அமைகின்றன. உயிரினங்களும் அவ்வாறே உருவாகியுள்ளன. பன்னெடுங்காலமாக மடகஸ்கார் தீவு வெளியுலகத் தொடர்பு இல்லாதிருந்ததே இதற்குக் காரணம். லெமூர் இனத்தில் 103 ரகங்கள் அடையாளம் காணப்பட்டன (2012). மனிதக் குடியேற்றம் கிமு 350-கிபி 550 இடைப்பட்ட காலத்தில் பல உயிரினம் அழிந்துவிட்டது. பெரும்பாலான குடியேறிகள் போர்னியோ (க்ஷடிசநேடி) பெருந் தீவிலிருந்து படகுகள் மூலம் வந்து சேர்ந்தனர். ஆபிரிக்கர்கள் கி.பி. 1000 ஆண்டு வரத் தொடங்கினர். மடகஸ்காரின் தேசிய மொழி மலகசே (ஆயடயபயளயல) எனப்படும். பிரெஞ்சு கொலனியாக 1960 வரை இருந்தபடியால் பிரெஞ்சும் தேசிய மொழியாக இடம்பெறுகிறது. மனித உருவத்திலும் பெரியதான லெமூர்கள் மனிதர் வருகைக்குப்பின் முற்றாக அழிந்துவிட்டன. புதைபடிவ ஆய்வின் போது அவற்றின் எலும்புக் கூடுகள் வெளிவந்துள்ளன. இன்று உயிர்வாழும் லெமூர்களும் அதே அழிவை எதிர்நோக்குகின்றன. உலகின் பச்சை ஓணான் அனைத்தும் மடகஸ்கார் தீவில் தான்தோன்றின என்று விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொன்ட்hனா என்ற கண்டப் பெயர் எப்படித் தோன்றியது. என்பதற்கு விளக்கம் இதோ. மத்திய இந்தியாவின் புவியியல் அமைப்பு தென் அரைக்கோளம் (ளுடிரவாநசn ழநஅளையீhநசளந) காணப்படுகிற நாடுகளின் புவியியல் அமைப்புடன் ஒத்துப் போவதால் கொண்டவானா என்ற பெயர் தெளிவு செய்யப்பட்டது. இந்திய மத்திய பகுதி கொன்ட்வான பிராந்தியம் (ழுடினேறயயே சுநபiடிn) என்று அழைக்கப்படுகிறது. கொன்ட்வானா என்ற பெயர் 1800 களில் எடுவார்ட் சுவெஸ் (நுனரயசன ளுரநளள) என்ற வியன்னா நகர் புவியியல் அறிஞரால் முன்வைக்கப்பட்டது. அவர் தென்னமெரிக்கா, இந்தியா ஆப்பிரிக்கா ஆகியவற்றில் நடந்த புதைபடிவ ஆய்வில் வெளிவந்த ஒரே மாதிரியான தாவர எச்சங்கள் அடிப்படையில் இவை அனைத்தும் ஒன்றாக இணைந்திருக்கலாம் என்று முடிவுக்கு அந்து கொன்ட்வானா என்று அந்தப் பெருநிலத்திற்குப் பெயர் சூட்டினார். எடுவார்ட் சுவெஸ் கொன்ட்வானா என்று பெயர் சூட்டும் போது அவர் புவித்தகடு அசைவு, கண்டப் பெயர்ச்சி பற்றி அறிந்திலர். கண்டங்கள் என்றோ ஒன்றாக இருந்திருக்கலாம் என்ற அவர் ஊகம் மிகச் சரியானதே அவருக்குப் பிந்திய காலத்தில் அன்டார்டிக்கா கண்டத்தில் செய்யப்பட்ட புதைபடிவ ஆய்விலும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய வற்றில் காணப்பட்ட தாவர எச்சங்கள் காணப்பட்டன. அன்டார்டிக்காவும் கொன்ட்வானாவின் ஒரு பகுதியே. கண்டங்கள் ஏழு (7) என்று படித்துள்ளோம். இப்போது எட்டாவது (8) கண்டம் அறிமுகம் செய்யப்படும் நிலையில் இருக்கிறது. அதற்கு சீலான்டியா (ணநயடயனேயை) என்று புவியியல் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இதுவும் கொன்ட்வானா பெருங்கண்டத்தின் ஒரு பகுதியே. 60 மில்லியின் ஆண்டுகளுக்கு முன் அது கடலால் மூடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. கடற் தரையில் போடப்பட்ட பெரிய பாறை போல் சீலான்டியா தனித்து நிற்கின்றது. அதன் பரப்பளவு ஐரோப்பா பரப்பளவின் சரி பாதியாகும். அது கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் (3,280 அடி) ஆழத்தில் கிடக்கின்றது. அதன் உச்சியில் நியூசிலாந்தின் இரு தீவுகள், நியூ கலிடோனியா ஆகியவை இடம்பெறுகின்றன. அமெரிக்கத் தேசிய விஞ்ஞான பவுன்டேசனின் பெருங்கடல் ஆய்வகம் (ருளு சூயவiடியேட ளுஉநைவேகைiஉ குடிரனேயவiடிn, டீஉநயn ளுவரனநைள னுiஎளைiடிn) சீலான்டியாவின் கடலடித் தரையில் 2,500 மீட்டர் (8,202 அடி) ஆழமான துளைகளைப் போட்டு ஆய்வு செய்தபோது தாவர எச்சங்கள் வெளிவந்தன. ஒரு காலத்தில் அதில் பெருமளவு தாவரங்கள் இருந்ததற்கான ஆதரமாக இது அமைகின்றது. 8,000 வரையான தாவர மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சிறிய சிப்பிரக உயிரினங்களும் வாழ்ந்தன என்பது தெரியவந்தது. அப்பகுதியில் வெப்பம் நிலவியதை இது காட்டுகிறது. மேலும் தட்பவெப்பம் மாறியதற்கான ஆதாரமாகவும் இது இடம்பெறுகிறது. சீலான்டியா கண்டத்தின் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. அது நீயூசிலாந்தின் கிழக்கு, ஆஸ்திரேலியாவின் கிழக்கு ஆகியவற்றில் வடக்குத் தெற்காக நீண்டிருக்கிறது. நியூசிலாந்து அதன் பகுதி ஆனால் ஆஸ்திதேரலியா கண்டம் வேறு, சீலான்டியா கண்டம் வேறு. எனினும் இரண்டுமே கொன்ட்வானா பெருங்கண்டத்தின் ஒரு பகுதிகளாகும். சீலான்டியாவின் பரப்பளவு 5 மில்லியன் சதுர கி.மீ (1.9 மில்லியன் சதுர மைல்) சீலான்டியாவின் 94 விழுக்காடு கடலால் மூடப்பட்டுள்ளதாகவும் மிகுதி 6 விழுக்காட்டில் நியூசிலாந்தின் இரு தீவுகள், நீயூ கலிடோனியா இடம் பெறுவதாகவும், ஆஸ்திரேலியாப் பரப்பளவில் மூன்றில் இரு பங்கை அது கொண்டிருப்பதாகவும் புவியியல் விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். - ழுசயாயஅ ஐது, ஊhநைக நனவைடிச (2015) ஹ உடிவேiநேவே டிn வாந அடிஎந சூநற ணநயடயனே ழுநடிளஉநைnஉந சநஎநயடநன; 2னே நனவைiடிn: ழுநடிளஉநைnஉந ளடிஉநைவல டிக சூநறணநயடயனே. 02. டிசெம்பர் 2017. - முனைவர் அன்பரசு, முனைவர் அ. இராமசாமி மேனாள் துணைவேந்தர் (பக். 151-158) தொன்மைத் தமிழர் நாகரிகம் குமரிக்கண்டம் அல்லது இலெமுரியா சான் என்ற இங்கிலாந்து ஆராய்ச்சியாளர், “கோடியாண்டு கட்கு முன்பு, ஒருக்கால் அதற்கும் முன்பு, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது”, என்று கூறுகின்றார். பேராசிரியர் எக்கேல் இது பற்றிக் கூறும் போது, “இந்தியப் பெருங்கடல் ஒரு காலத்தில் சந்தாத்தீவுகளில் தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைவரை பரவியிருந்த ஒரு பெருங்கண்டமாக இருந்தது. கிளேற்றர் என்ற ஆராய்ச்சியாளர் அப்பெருங்கண்டத்தில் வாழ்ந்த குரங்கு போன்ற உயிரினத்தின் பெயரை அதற்குச் சூட்டி இலெமுரியாக் கண்டம் என்று அழைத்தார்”, என்று குறிப்பிடு கின்றார். சர் வால்டர் ராலே, இசுகாட் எலியட், சர் சான் ஈவான்சு, ஓல்டுகாம் ஆகிய ஆராய்ச்சியாளர்களும் குமரிக்குத் தெற்கே பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும், அதனை இலெமுரிலயாக் கண்டம் எனப் பெயரிட்டும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கியங்களிலும் இது பற்றிய சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன. “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமுரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை ஆண்ட தென்னவன் வாழி!” என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. குமரிமுனைக்குத் தெற்கே நெடுந்தொலைவில் இப்பாண்டியனின் நாட்டில் இருந்த பஃறுளியாறும் பன்மலைத் தொடரும் குமரிமலையும் கடலில் மூழ்கிப் போனதால், வாழும் நிலப்பரப்பு வேண்டி, வடக்கே படையெடுத்துக் கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றி ஆண்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. புறநானூற்றில் ஒன்பதாவது பாடல், குமரிநாட்டில் ஓடிய பஃறுளி ஆறு பற்றியும், அந்நாட்டை ஆண்ட நெடியோன் என்ற பாண்டிய மன்னன் பற்றியும் கூறுகின்றது. பாண்டியன் ஆண்ட குமரி நாடு கடலுக்குள் மூழ்கிப்போன செய்தியைக் கலித்தொகை தெரிவிக்கின்றது. இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மூன்று கடற்கோள்களால் குமரிநாடு மூழ்கிப் போனதாகக் கூறுகின்றார். வால்மீகியின் இராமாயணத்திலும், வியாசரின் மகா பாரதத்திலும் பாண்டியர் தலைநகரமான கபாடபுரம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சமற்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள ஆகமங்கள் சிலவும் குமரி நிலம் பற்றிக் கூறுகின்றன. சந்திரஞான ஆகமம் குமரி நிலத்தின் நகரமைப்புப் பற்றி விரிவாகக் கூறுகின்றது. ஆனால், இலெமுரியா என்பது ஒரு கற்பனைக் கதை என்று கூறி வரலாற்றாசிரியர்கள் பலர் அதை ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் மூன்று காரணங்களைக் கூறுகின்றனர். அட்லாண்டிக் கடலிலும் ஒரு பெரும் நிலப்பரப்பு மூழ்கிவிட்ட தாகவும், அதன் பெயர் இலெமுரியாக் கண்டம் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். அவ்வாறெனில், இரண்டு பெரும் நிலப்பரப்புகள் இரண்டு பெரும் கடலுக்குள் மூழ்கிப் போயின என்றும், அவை இரண்டிற்குமே இலெமுரியாக்கண்டம் என்ற ஒரே பெயர்தான் என்றும் பொருளாகிறது. இந்தக் குழப்பத்தை நீக்கும் வகையில் இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கிப் போன நிலப்பரப்பை இலெமுரியாக் கண்டம் என்று அழைக்காமல், வேறு ஒரு பொருத்தமான பெயரால் அழைக்கலாம். அக்கண்டத்தில் குமரி மலையும் ,குமரி ஆறும் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுவதால், அதற்குக் குமரிநிலம் என்று பெயரிட்டு அழைக்கலாம். ஒரு பெரும் நிலப்பரப்புக் கடலுக்குள் மூழ்கிப் போனது என்பது நம்ப முடியாத ஒரு கற்பனை என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறும் இரண்டாவது காரணமாகும். ஆனால், 2004 திசம்பர் 26ஆம் நாள், இந்தோனிசியாவில் உள்ள சுமத்ராவிற்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி என்ற ஆழிப் பேரலைகள் உருவாகித் தமிழ்நாட்டுக் கடற்கரை வரையிலும் கடுமையாகத் தாக்கிப் பல லட்சம் உயிர்கள் பலியானதையும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பாழானதையும் நாம் பார்த்தோம். அதைப் போன்ற பல சுனாமிகள் தாக்கிக் குமரி நிலத்தைக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டன. குமரி நிலத்தை மூன்று சுனாமிகள் தாக்கிக் கடலுக்குள் மூழ்கடித்து விட்டதாக இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறுகின்றார். முதல் சுனாமி பாண்டியரின் முதல் தலைநகரமான தென்மதுரையையும், குமுரி நிலத்தின் சில பகுதிகளையும் தாக்கிக் கடலுக்குள் மூழ்கடித்து விட்டது; இரண்டாவது சுனாமி பாண்டியரின் இரண்டாவது தலைநகரமான கபாடபுரத்தையும், குமரி நிலத்தில் மேலும் சில பகுதிகளையும் தாக்கி மூழ்கடித்துவிட்டது. மூன்றாவது சுனாமி மணலூரையும், எஞ்சியுள்ள குமரி நிலத்தின் பகுதியையும் மூழ்கடித்துவிட்டது. ஒரு பெரிய கண்டமே கடலுக்குள் மூழ்கிப் போனது என்பது நம்ப முடியாத கற்பனை என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறும் மூன்றாவது காரணமாகும். கோடியாண்டுகளுக்கு முன்பு மனித இனம் இருந்ததா என்பதே ஐயத்திற்கு உரியதால், அக்காலப் பகுதியில் இன்றைய குமரிமுனையிலிருந்து ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரை குமரிக் கண்டம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்ற கருத்தை நீக்கிவிடலாம். வரலாற்றுக் காலத்தில் குமரிநிலம் ஒரு பெருங்கண்டமாக இல்லாமல், இன்றைய குமரி முனையிலிருந்து சில ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களே பரவி இருந்தது. இக்கருத்தைக் கன்னியாகுமரிக்குத் தெற்கே செயற்கை கோளால் அறியப்பட்ட நிலப்பரப்பு என்ற கட்டுரையில் பேராசிரியர் சோம. இராமசாமி உறுதிப்படுத்துகின்றார். இப்போதைய கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர்கள் ஆழத்தில் மலைகள் இருப்பதை, இந்தியப் பெருங்கடலுக்கு மேலே எடுக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன. இந்தச் செங்குத்தான மலையடுக்குகள் மனிதர்கள் குடியிருப்பதற்கும், மனித நாகரிக வாழ்வுக்கும் ஏற்றதாக இல்லை. ஆனால், இந்தச் செங்குத்தான மலையடுக்குகளுக்கும் கன்னியா குமரிக்கும் இடையே சுமார் 20,000 ச.கி.மீ. பரப்பளவுக்குச் சமவெளிப்பகுதி உள்ளது. அந்தச் சமவெளியே தமிழ் சமற்கிருதம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள - குமரி நிலம் ஆகும். பாண்டியர்களின் தொன்மைக் காலத் தலைநகரங்களான தென் மதுரை, கபாடபுரம் ஆகியன இருந்த குமரி நிலத்தைப் பல சுனாமிகள் தாக்கிப் பல கட்டங்களாகக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டன. சோம. இராமசாமி தந்துள்ள தகவல், சா.குருமூர்த்தி அளித்துள்ள சுனாமிகள் கால அட்டவணை, இறையனார் அகப்பொருளுரையில் கூறப்பட்டுள்ள செய்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செய்த ஆய்வில் - சுமார் கி.மு. 3000இல் தென் மதுரையும் சுமார் கி.மு. 1500இல் கபாடபுரமும், பின்னொரு காலத்தில் மணலூரும் கடலுக்குள் மூழ்கிவிட்டன என்று கருதமுடிகிறது. எனவே, இப்போதைய கன்னியாகுமரிக்கு அப்பால் இருந்த குமரி நிலம் கடலுக்குள் மூழ்கிப் போய்விட்டது என்ற அறிஞர்களின் கருத்தை நடுநிலையான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வார்கள். குமரி நிலத்திலிருந்த செங்குத்தான மலையடுக்குகள் மனிதக் குடியிருப்புக்கு ஏற்றவையல்ல. எனவே, அந்தக் குமரிமலைத் தொடரைக் குமரி நிலத்தின் தெற்கு எல்லையாகவும், அதனால் தமிழகத்தின் தெற்கு எல்லையாகவும் கருதலாம். இக்கருத்து, வடக்கே வேங்கடமலையும், தெற்கே குமரி மலையும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன என்ற தொல்காப்பியத்தின் நூற்பாவுக்கும் பொருத்தமாக உள்ளது. அந்தக் குமரிநிலமும், இப்போதைய கேரள மாநிலமும் இணைந்த தமிழகத்தில்தான் தொன்மைத் தமிழர் நாகரிகம் புகழுடன் திகழ்ந்தது. அ. இராமசாமி, தமிழ்நாட்டு வரலாறு, 8ஆம் பதிப்பு, ஆகாஸ்ட் 2017,பக், 19-29 தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு தொன்மைக் காலத்தில் கன்னியாகுமரிக்கு அப்பால் நிலப்பரப்பு இருந்தது என்ற உண்மையைத் தமிழ், சமற்கிருதம் மொழிகளின் இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் மூன்று காரணங்களைக் காட்டி இலெமூரியக் கண்டம் இருந்தது என்பது வெறும் கட்டுக் கதையே என்று கூறி, அதை ஏற்க மறுக்கின்றனர். அறிஞர்கள் சிலர் அட்லாண்டிக் பெருங்கடலும் இலெமூரியாக் கண்டம் என்று அழைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பை மூழ்கடித்துள்ளது என்று கூறுகின்றனர். அப்படியெனில், இரண்டு நிலப்பரப்புகளைக் கடல் மூழ்கடித்துள்ளது என்றும், அவை இரண்டுமே இலெமூரியாக் கண்டம் என்று அழைக்கப் பட்டன என்றும் இதற்குப் பொருளாகின்றது. கடலுக்குள் மூழ்கிப் போன இரண்டு கண்டங்களை இலெமூரியாக் கண்டம் என்ற ஒரே பெயரால் அழைப்பது நம்ப முடியாததாக இருக்கின்றது. இந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கிவிட்ட நிலப்பரப்பை இலெமூரியாக் கண்டம் என்று அழைக்கப் பட்டதைக் கைவிட்டுவிடலாம். அதற்குப் பதிலாக, அந்நிலப்பரப்பைப் பொருத்தமான வேறு ஒரு பெயரிட்டு அழைக்கலாம். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளபடி, கன்னியாகுமரிக்கு அப்பால் கடலுக்குள் மூழ்கிப் போன நிலப்பரப்பில் குமரிமலைத் தொடரும், குமரி ஆறும் இருந்ததால் அந்நிலப்பரப்பைக் குமரி நிலம் என்றே அழைக்கலாம். ஒரு கண்டம் முழுவதுமே கடலுக்குள் மூழ்கிப்போனது என்பது நம்பமுடியாத ஒன்று என்பது வரலாற்று ஆசிரியர்களின் எதிர்ப்புக்கான இரண்டாவது காரணமாகும். ஆனால், 2004 திசம்பர் 26ஆம் நாள், இந்தோனிசியாவில் சுமத்திராவிற்கு அருகில் கடலுக்குள் மாபெரும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடல் கொந்தளித்து சுனாமி (கூளரயேஅi) பேரலைகள் உருவாகி, இந்தியப் பெருங்கடலைச் சுற்றிக் கடலோரம் இருக்கின்ற ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளைத் தாக்கி, நகரங்கள், சிற்றூர்கள் முதலியன வற்றை மூழ்கடித்து, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, பல்லாயிரம் கோடி உருபாய்கள் மதிப்பிடக் கூடிய சொத்துகளை நாசமாக்கியதையும் கண்கூடாகப் பார்த்தோம். சுனாமி என்று அழைக்கப்பட்ட அந்தக் கடல் கொந்தளிப்பு, இருபதாம் நூற்றாண்டில் கடலுக்கடியில் ஏற்பட்ட ஐந்தாவது பெரிய நில நடுக்கம் என்றும் கடந்த நாற்பது ஆண்டுகளில் மிகப் பெரியது என்றும் கூறப்படுகின்றது. அதைப் போன்றே - தமிழ், சமற்கிருத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவாறு - குமரி நிலத்தைப் பல சுனாமிகள் தாக்கிக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டன. மூன்று சுனாமிகள் குமரி நிலத்தைத் தாக்கிக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டதாக இறையனார் அகப்பொருளரை கூறுகின்றது. பாண்டியரின் முதல் தலைநகரமான தென்மதுரையை முதல் சுனாமி தாக்கிக் குமரி நிலத்தின் ஒரு பகுதியைக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. இரண்டாவது சுனாமி, பாண்டியரின் இரண்டாவது தலைநகரமான கபாட புரத்தைத் தாக்கிக் குமரி நிலத்தில் மேலும் சில பகுதிகளைக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. மூன்றாவது சுனாமி மணலூரைத் தாக்கிக் குமரி நிலத்தின் எஞ்சிய பகுதியைக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்ட நிலப்பரப்பு மிகவும் பரந்து இருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் எதிர்ப்புக்கான மூன்றாவது காரணமாகும். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதைய கன்னியாகுமரி யிலிருந்து ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரையில் குமரிக்கண்டம் பரந்து இருந்தது என்ற கருத்தை - அக்கால கட்டத்தில் மனித இனம் இருந்தது என்பதே ஐயத்திற்குப்பட்டது என்பதால் நீக்கிவிடலாம். மேலும், நம்முடைய ஆய்வுக்காலம், வரலாற்றுக் காலத்திலிருந்தே தொடங்குகிறது என்பதால், அக்கால கட்டத்தில் குமரி நிலம் ஒரு பெரும் கண்டமாகப் பரந்து இல்லாமல், இப்போதைய கன்னியாகுமரிக்கு நெருக்கமாக இருந்த நிலப்பரப்பாகக் கொள்ளலாம். இக்கருத்தை ளுயவநடடவைந ளுநளேநன டுயனேஅயளள - ளுடிரவா டிக ஊயயீந ஊடிஅடிசin (கன்னியாகுமரிக்குத் தெற்கே செயற்கைக் கோளால் அறியப்பட்ட நிலப்பரப்பு) என்ற கட்டுரையில் காந்தி கிராமியப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இராமசாமியும் உறுதிப்படுத்து கின்றார். உலகின் பல பகுதிகளிலும் உள்ள நிலவியல் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வுகள் மூலம் கடலுக்கடியில் உள்ள நிலம் சமதளமாகவோ அல்லது ஒரு தொட்டியாகவோ இல்லாமல் மலையடுக்குகள், மூழ்கிப்போன எரிமலைகள், குன்றுகள், மலைத்தொடர்கள் போன்றவைகளும் உள்ளதாக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. வடக்கே கன்னியாகுமரியி லிருந்து தெற்கே அண்டார்டிக் வரையில் உள்ள கடலுக்கடியில் இருக்கும் நிலவியல் கூறுகளை முந்தைய ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போதைய கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர்கள் ஆழத்தில் மலைகள் இருப்பதை, இந்தியப் பெருங்கடலுக்கு மேலே எடுக்கப்பட்ட, செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக சோம, இராமசாமி தெரிவிக்கின்றார். செங்குத்தான மலையடுக்குகள், மனிதர்கள் குடியிருப்பதற்கும், மனித நாகரிக வாழ்வுக்கும் ஏற்றதாக இல்லை. ஆனால் இந்தச் செங்குத்தான மலையடுக்குகளுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே சுமார் 20,000 ச.கி.மீ. பரப்பளவுக்குச் சமவெளிப் பகுதி உள்ளது. அந்தச் சமவெளியே - தமிழ், சமற்கிருதம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குமரிநிலம் ஆகும். பாண்டியர்களின் தொன்மைக்காலத் தலைநகரங்களான தென்மதுரை, கபாடபுரம் ஆகியன இருந்த குமரி நிலத்தைப் பல சுனாமிகள் தாக்கிப் பல கட்டங்களாகக் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டன. சோம. இராமசாமி தந்துள்ள தகவல், சா. குருமூர்த்தி அளித்துள்ள சுனாமிகள் கால அட்டவணை, இறையனார் அகப்பொருளுரையில் கூறப்பட்டுள்ள செய்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செய்த ஆய்வில் - சுமார் கி.மு. 3000இல் தென் மதுரையும், சுமார் கி.மு. 1500இல் கபாடபுரமும், பின்னொரு காலத்தில் மணலூரும் கடலுக்குள் மூழ்கிவிட்டன என்று கருதமுடிகிறது. எனவே, இப்போதைய கன்னியாகுமரிக்கு அப்பால் இருந்த குமரி நிலம் கடலுக்குள் மூழ்கிப் போய்விட்டது என்ற அறிஞர்களின் கருத்தை நடுநிலையான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்கள். சோம. இராமசாமியின் கூற்றுப்படி குமரி நிலப்பகுதி யிலிருந்த செங்குத்தான மலையடுக்குகள் மனிதக் குடியிருப்புக்கு ஏற்றவையல்ல. எனவே, அந்தக் குமரி மலைத்தொடரைக் குமரி நிலத்தின் தெற்கு எல்லையாகவும், அதனால் தமிழகத்தின் தெற்கு எல்லையாகவும் கருதலாம். அக்கருத்து, வடக்கே வேங்கட மலையும், தெற்கே குமுரி மலையும் தமிழகத்தில் எல்லைகளாக இருந்தன என்ற தொல்காப்பியத்தின் நூற்பாவுக்கும் பொருத்த மாக உள்ளது. அந்தக் குமரி நிலமும், இப்போதைய கேரள மாநிலமும் இணைந்த தமிழகத்தில்தான் தொன்மைத் தமிழர் நாகரிகம் புகழுடன் திகழ்ந்தது. தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, முனைவர் அ. இராமசாமி, மூன்றாம் பதிப்பு, அக்டோபர், 2015, பக், 127-130. திராவிடப் பண்பு (கில்பர்ட் சிலேடர்) முதற் பதிப்பு - 1955 தமிழாக்கம் அப்பாத்துரையார் இந்நூல் 2014இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. இந்திய நாகரிகத்தில் திராவிட பண்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியராய், தலைவராய்ப் பணிசெய்த அறிஞர் கில்பர்ட் சிலேட்டர் 1924இல் கூhந னுசயஎனையைn நுடநஅநவேள in ஐனேயைn ஊரடவரசந - இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள் என்ற சிறந்த ஆய்வு நூலை வெளியிட்டார். அவர் பொருளாதாரம், வரலாறு, மொழியியல், சமூகயியல் முதலிய பல்துறைகளிலும் வல்லவர். அந்நூல் இன்றும் பயிலுவதற்குரிய அரும் செய்திகள் அடங்கியது. அதனை 1955 இல் பண்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் திறம்பட தமிழாக்கம் செய்து வெளியிட்டார். பல செய்திகள் குறித்த அன்றிருந்த (1955) நிலைமைகளை விளக்கியும், விரிவாக்கியும் தமது மொழிபெயர்ப்பை தமிழ் மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக ஆக்கினார். மூலநூல் வெளிவந்து 90 ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 இல் தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிடும்போது அப்பாத்துரையாரையே அடியொற்றி (2014 வரை நிகழ்ந்துள்ள முக்கியமான வரலாற்று செய்திகளை உள்வாங்கிக் கொண்டு) சிறப்பாக வெளியிட்டோம். அந்த 2014 பதிப்பையே இப்பொழுதும் பயில்வார் நலங்கருதி அப்பாத்துரையம் தொகுப்பில் (2017) இந்நூலினை வெளியிடுகிறோம். அதுமட்டுமன்று கில்பர்ட் சிலேட்டர் சென்ற வழியிலேயே மேலும் ஆய்வு செய்து 1990இல் இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழிபெயர்ப்பினர் பங்கு...(பக். 119-159) மறு பார்வை தேவையென்ற ஆய்வு நூலை ஆந்த்ரி. எப். ஜோபெர்கு வெளியிட்டார். அதனையும் தக்க அறிஞரை கொண்டு தமிழாக்கம் செய்து அப்பாத்துரையம் தொகுப்பில் இணைத் துள்ளோம். தமிழ்ச்சமுதாயம் பயன்பெறும் வகையில் அத்தமிழாக்கத்தையும் சேர்த்துள்ளோம். இவ்வாறு 1924 இல் கில்பர்ட் சிலேட்டர் எழுதிய மூல நூலையும் 1955 இல் அப்பாத்துரையார் செய்த மொழிபெயர்ப்பையும் இன்று படிப்பவர்கள் பெரும் பயன் அடையும் வகையில் இத்தொகுப்பு வெளிவருகின்றன. கில்பெர்ட் °லேட்டர்(1924) முன்னுரை 1915-ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தின்போது சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு என்னை இந்தியப் பொருளாதரத் துறையின் (iனேயைn நஉடிnடிஅiஉள)தலைமைக்குப் பரிந்துரைத்ததென்று அறிவிக்கப்பட்டதும், நான் தமிழ் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது ‘இந்திய நாகரிகத்தின் மூலமுதல் ஆரியச்சார்பானது’ என்று இன்று இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியுள்ள கோட்பாட்டின் உள்ளார்ந்த வலுவில் எனக்கு முதன்முதல் ஐயமேற்பட்டது. சென்னை வந்த பின் (நகரமைப்புத் திட்ட வகையில் சென்னைஅரசாங்கத்தின் அறிவுரை யாளராயிருந்த). எச்.வி. லங்காஸ்டரைக் கண்டு கலந்துரையாடியதில், இவ்வையங்கள் பின்னும் வளர்ந்தன. அவர் எனக்கு மிகச் சுவையான பல தகவல்களைத் தந்ததுடன், சிவகங்கை பற்றிய வியத்தகு நிழற்படத் தொகுதி ஒன்றையும் எனக்குக் காட்டினார். 2. 1922 இளவேனில் வரை நான் தென்னிந்தியாவில் தங்கிய காலத்தில் திராவிட நாகரிகத்தின் தோற்றம், இந்திய நாகரிகத்தில் அதன் பங்கு பற்றியும், என் உள்ளம் ஓயாது சிந்தித்து வந்தது. இத்தகைய ஆர்வம் கொண்டிருந்த பிறரை நான் கண்டால், அவர்களுடனும் வாதிடுவேன். இவ்வாறுதான் இந்நூல் கருத்துக்கள் என் எண்ணத்தில் உருவாயின. 1922-இல் நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லும் வரும் வரை எலியட் சுமித், பெரி ஆகியவர்கள் நூல்களும் மாந்தர் இனத்தோற்ற ஆராய்ச்சி, தொல்லியல் துறைகளின் பண்பாட்டுப் பரவுதற் கொள்கை சார்ந்த நூல்களும் எனக்குத் தெரிய வரவில்லை. இந்தியாவுக்கு என் பொருளாதாரத்துறை சார்ந்த நூல்கள் தவிர மற்றப் புதிய நூல்கள் என்னை அடையவில்லை. 3. இந்நூலின் முதல் நிலை வரைவை இந்தியாவில் 1920-இல் எழுதினேன். அதனை நிறைவு படுத்துவதற்கான தூண்டுதல் தந்தவர் களான டாக்டர் ஈ.ஈ. பவர்(யீடிறநச), பேராசிரியர் புளூர் (கடநரசந) ஆகியோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் தட்டச்சுப்படி அச்சுத் திருத்தப்படிகளை வாசித்து புதுக் கருத்துக்களைத் தந்துதவிய பேராசிரியர்கள் புளூர், எலியட் சுமித்(நடடiடிவவ ளஅiவா) ஆகியோருக்கும் நான் பேரளவு கடமைப்பட்டிருக்கிறேன். அத்தகைய பல கருத்துரைகளுள் சில மட்டுமே அவர்களுடைய கருத்துகள் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 4. முதல் இயல் சார்ந்த புளூர் குறிப்பில் ஒரு சிறு செய்தியை நான் முழுமையாக ஏற்க இயலவில்லை. பண்பாட்டுக் கூறுகள் பரவிய வகையில் இந்தியாவையும் மெஸெபொட்டேமியாவையும் அவர் இணைத்த போதிலும், கடல்வாணிகத்தை விடத் தரை வாழி வாணிகமே முக்கிய காரணம் என்று அவர் கருதுகிறார். மொத்தத்தில் கடல் நெறியே முக்கியத்துவம் மிக்கதாயிருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். இது ஓரளவு அக்கால நிலைமை காரணமாகவே ஆயினும், “கடற்கரை பின் வாங்கிய பின்னர் எரிது நகரின் வாழ்வு சிறுத்துப் போய்விட்டது” என்ற வரலாற்றுச் செய்தியையும் ஆதாரமாகக் கொண்டது எனது முடிவு. கி.மு. 3000-2000 கால அளவில் தரைவழி வாணிகத்தை விடக் கடல் வாணிகத் தொடர்பே முக்கியமாயிருந்தது என்று உறுதியாகக் கூற இயலாவிடினும் அதற்கே முதன்மை தரலாம். பாரசீகக்குடாவைக் கடந்தபின், கடல்வழிப்பாதை இரண்டாகப் பிரிந்து மேற்கு நோக்கிய கிளை அரேபியாவின் கடற்கரை வழியே சென்றது. அடுத்த கிளை கிழக்கு தெற்காகவும் இந்தியக் கடற்கரை ஓரமாகச் சென்றது. இரண்டு கிளைகளுமே சமமுக்கியத்துவம் வாய்ந் திருக்கலாம். 5. எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழித் தொடர் புக்கு புளூர் அவர்களைவிட எலியட் சுமித்தைப் பின் பற்றி அதிக முக்கியத் துவம் தருகிறேன். அவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டு இவ்வாணிகத் தொடர்பு இந்தியப்பண்பாட்டை அம் மேற்றிசை நாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதுவதிலும், ஆரியர் வரவுக்கு முன்னரே இந்தியாவில் வலுவுடன் வழங்கிவந்த திராவிட நாகரிகம் அம் மேற்றிசை நாடுகளுக்கும் பரவியிருக்கவாய்ப்புண்டு ஆகையால் அதற்கும் அதிக முதன்மை தரவேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும். நூன்முகம் ஸ1924 - 2014]: தொண்ணூறு ஆண்டுகளில் இத்துறை ஆய்வில் நிகழ்ந்துள்ளவற்றின் சுருக்கம். ஸமேலும் பல தகவல்களுடன் இதை விரிவாக விளக்குவது இணைப்பில் காணும் விரிவான ஆந்த்ரே எப். ஜோபெர்கு கட்டுரை] இன்று இந்திய நாகரிகம் என்று வழங்கப்படும் நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை உண்மையில் தமிழர், தமிழிய நாகரிகக் கூறுகளே “இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே” - எஸ். ஏ. டைலர் 1973 ஹடட டிக ஐனேயைn உiஎடைளையவiடிn ளை ரெடைவ டிn யn ரனேநசடலiபே யௌந டிக னுசயஎனையைn டயபேரயபந யனே உரடவரசந - ளு.ஹ. கூலடநச (1973) ஐனேயை யn ஹவோசடியீடிடடிபiஉயட யீநசளயீநஉவiஎந. இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேய அறிஞர், கில்பெர்ட் சிலேட்டர் 1915-23 கால அளவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பொருளியல் ஐனேயைn நுஉடிnடிஅiஉள துறையை ஆய்வுத்துறையாகத் தொடங்கி நிலைப் படுத்தினார். 1916 - 17 இல் சுமார் பத்து தென்னிந்தியக் கிராமங்களில் (பல இன்றைய தமிழ்நாட்டில்) பொருளியல் கள ஆய்வு செய்து 1918 இல் ளுடிஅந ளுடிரவா ஐனேயைn ஏடைடயபநள என்னும் ஆய்வு நூலை வெளியிட்டார். ஸபின்னர் அதே கிராமங்களில் பி.ஜே. தாமஸ் மீண்டும் கள ஆய்வு செய்து 1940இல் அன்றைய நிலையை விளக்கும் ஆய்வை வெளி யிட்டுள்ளார்.] 2. இவர் பல்துறை வல்லுநர். இங்கிலாந்திற்கு போன பின்னர் 1931 இல் ளுநஎநn ளுhயமநளயீநயசநள என்ற நூலை எழுதியவர் ஸஎஸ். முத்தையா கூழநு ழஐசூனுரு நாளிதழ் 20.2.2012 கட்டுரை]. பொருளியல் குறித்து ஐந்தாறு நூல்களை எழுதியுள்ளார். 1923 இல் இவர் எழுதிய இந்தியப் பண்பாட்டில் திராவிடக் ஸதமிழியக்] கூறுகள் கூhந னுசயஎனையைn நடநஅநவே in ஐனேயைn ஊரடவரசந நூல் (ஆங்கிலத்தில் 192 பக்கங்கள்) புகழ்பெற்றதாகும். (i) இந்தியப் பண்பாட்டில் திராவிடக் (தமிழியக்) கூறுகள் பற்றிய ஸ்லேடர் 1924 முடிவுகளைக் கடந்த 90 ஆண்டுகளின் பல்துறை ஆய்வுகள் மேலும் வலுவாக ஆதரிக்கும் நிலைமை 3. 1856 - 1980 கால கட்டத்திலேயே கால்டுவெல் மறைமலையடிகள், ஞானப்பிரகாசர், ஞா. தேவநேயப் பாவாணர் முதலியோர் நிறுவிய திராவிட மொழிக்குடும்பத் தொன்மையை இன்று பல்துறை அறிஞரும் (ளஉhடிடயசள டிக எயசiடிரள னளைஉiயீடiநேள டிக ளுஉநைnஉநள யனே ழரஅயnவைநைள டமைந ழரஅயn ஞயடயநவேடிடடிபல, ழரஅயn ஞயடயநடிபநநேவiஉள, ஊடிஅயீயசயவiஎந யனே ழளைவடிசiஉயட டுiபேரளைவiஉள - inஉடரனiபே சூடிளவசயவiஉ யனே ஆடிவாநச கூடிபேரந ளவரனநைள) ஏற்கின்றனர். அதுமட்டுமல்ல தமிழிய மொழி பேசுநரின் தொன்மை, இந்தியாவிலும் தென்னிந்தியா விலும் இன்றைக்கு முன்னர் (இ.மு = க்ஷநகடிசந ஞசநளநவே; க்ஷ.ஞ.) 50000 - 10000 வரைச் செல்கிறது. முந்து தமிழியத்தின் தொன்மையானது இந்தோ ஐரோப்பியம் முதலிய மொழிக் குடும்பங்களின் தாயான நாஸ்திராதிக் , யூரேஷியாடிக் வரைச் செல்கிறது. காண்க: ஊhசடிnடிடடிபல டிக வாந ஆயதடிச யீயசவ டிக வாந றடிசடன’ள டயபேரயபநள யஉஉநயீவநன லெ ளஉhடிடயசள டிக சூடிளவசயவiஉ யனே ஆடிவாநச கூடிபேரந ளவரனநைள inஉடரனiபே ஹ.சு. க்ஷடிஅhயசன சுநஉடிளேவசரஉவiபே ஞசடிவடி - சூடிளவசயவiஉ க்ஷசடைட. டுநனைநn (2008) 4. தமிழிய மொழிக்குடும்பத்தின் தொன்மை தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் இமு. 70000 - 50000 அளவுக்கு முந்தியது என்பதை இன்று நம் காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருபவர்களில் முதன்மையானவர் அமெரிக்க அறிஞர் ஸ்தீபன் ஹில்யர் லெவிட் (1943-) மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும், தொல் இந்தோ - ஐரோப்பியம், நாஸ்திராதிக் இன்றும் காணப்படும் பல தமிழிய மொழியியல் கூறுகளை நிறுவியுள்ளார். ஞா. தேவநேயப் பாவணரின் மொழியியல் நோக்கானது ஏற்கத் தக்கதென நிலைநாட்டிவரும் முதன்மையான மேலை மொழியியலறிஞர். இவர் அமெரிக்காவில் நியூயார்க்கில் வாழ்பவர். அவர் (ஐவேநசயேவiடியேட துடிரசயேட டிக னுசயஎனையைn டுiபேரளைவiஉள ஐதுனுடு) 2007 கட்டுரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது:- ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளன எனக் கண்டுள்ளனர். உறவுமுறை (முiளோiயீ) பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம்மக்க ளுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழிய (திராவிட) மொழிபேசுநர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது. இந்த (“திராவிடர் ஏற்றம்”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவி லிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ-ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது.” 2013 சூன் ஐதுனுடு கட்டுரையில் லெவிட் முடிவுகள் வருமாறு: தமிழிய (திராவிட) மொழிகளில் நாம் காணும் ஒலியன் மாற்றங்கள்; ஒரு ஒலியனுக்குப் பகரமாக இன்னொரு ஒலியனைப் பெய்து பொருள் மாற்றம் , புதுப்பொருள் தெரிவிப்பது இவையெல்லாம் திராவிட மொழிகளில் கழிபழங்காலத்துக்கு முன்னரே இருந்ததைக் காணலாம். அம்மாற்றங்களை நாஸ்திராதிக் நிலையிலேயே முந்து திராவிடத்திடம் இருந்து கி.மு. 45000க்கு முன்னர் பெற்றுவிட்ட (இந்தோ - ஐரோப்பியம் உள்ளிட்ட) பிற நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்ப மொழிகளில் (ஐனேடி நுரசடியீநயn யனே டிவாநச டயபேரயபந கயஅடைநைள உடிஅiபே ரனேநச சூடிளவசயவiஉ ஆயஉசடிகயஅடைல) இன்றும் நிலை பெற்றுள்ளதைக் காணலாம். 5. பின்லாந்து நாட்டறிஞர் ஹானு பானு அகஸ்தி ஹகோலா தமது 2009 / 2011 நூல் டுநஒiஉயட ஹககinவைநைள க்ஷநவறநநn கூயஅடை யனே குinniளா (ஹ ஊடிவேசiரெவiடிn வடி சூடிளவசயவiஉ ளவரனநைள கசடிஅ வாந யபேடந டிக உடடிளந ழுநநேவiஉ யககinவைநைள நெவறநநn வாந னுசயஎனையைn யனே ருசயடiஉ டுயபேரயபந கயஅடைநைள), நூலில் 765 + 373 சொல்லொப்புமைகளை பரோ - எமெனோ (1983) னுநுனுசு மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (1985 - 2007) இவற்றையும் பயன்படுத்தி ஆய்வு செய்து தந்துள்ளார். இந்நூலில் ஹகோலா வெளி யிட்டுள்ள முடிவுகள் வருமாறு: (i) 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது ஞால முதன் மொழி (ஆடிவாநச கூடிபேரந டிக ஆயn) அந்த ஞால முதன் மொழிக்கு அடுத்த நிலையில் தோன்றிய மொழிப் பெருங் குடும்பங்களில் (ஆயஉசடிகயஅடைல) ஒன்றான ஞசந - ஞசடிவடி சூடிளவசயவiஉ (தொல் நாஸ்த்ராதிக்) முதன் முதலில் தென்னிந்தியாவில் நிலவி யிருக்கலாம். உலகில் இன்றுள்ள தமிழியம், இந்தோ ஐரோப்பியம், செமித்தியம், உரால் - அல்தாயிக் மொழிக் குடும்பங்கள் (மற்றும கி.மு. 3000 அளவில் வழங்கிய சுமேரியம், எலாம் ஆகிய மொழிகள்) இவற்றின் தாய்க்கு மொழியியலாளர் சூட்டியுள்ள பெயர் நாஸ்திராதிக் / யுரோசியாடிக் என்பதாகும். ஸஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் 2000 அக்தோபரில் பத்ரிராஜு கிருஷ்ண மூர்த்தியோடு பேசும்பொழுது ஜோசப் ஹெச். கிரீன்பெர்கு கூறியது: “திராவிட மொழிக்குடும்பம் யுரேசியாடிக்கின் மகள் அல்ல; சகோதரி யாகத்தான் இருந்திருக்க முடியும்” க்ஷh. முசiளாயேஅரசவால (2003) கூhந னுசயஎனையைn டயபேரயபநள.] “(ii) 1000 (க்ஷநகடிசந ஞசநளநவே) க்ஷஞ ஐ ஒட்டி தொல் - நாஸ்திராதிக் பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய பின்னர் (தொல் திராவிட - தமிழிய - மொழியினர் இந்தியா அளவில் நிற்க) நாஸ்திராதிக்கின் ஏனைய பிரிவினர் மையக் கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் 10000 - 8000 க்ஷஞ கால அளவில் உடனுறைந்த பின்னர், சில ஆயிரம், ஆண்டுகளில் சுமேரியம், இந்தோ - ஐரோப்பியம், உரால் - அல்தாயிக், செமித்தியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் பிரிந்து ஆசியாவில் பல பகுதிகளுக்கும், எகிப்து முதலியவற்றுக்கும் பரவின. “ (iii) 7,000 க்ஷஞ (= கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து - பஞ்சாப் உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர். “(iஎ) மையக்கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் கி.மு. 6000 - 4000 அளவில் வாழ்ந்த “இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்ப மூலமொழியை (ஞசடிவடி - ஐனேடி - நுரசடியீநயn) பேசியவர்களிடமிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்த இந்தோ இரானியப் பிரிவின் ஒரு உட்கிளையாகிய “வேத - சம்ஸ்கிருத” மொழி பேசுநர் கிமு 2500 - 1500 கால அளவில் சிறு எண்ணிக்கையில் வடமேற்கு இந்திய (சிந்து - பஞ்சாப்) பகுதிக்கு வந்து அங்கு தமிழிய (திராவிட) மொழி பேசுநருடன் கலந்து விட்டனர்.” 6. இந்தப் பின்புலத்தில் தென் ஆசியாவில் கழி பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல்திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம். (ஐவ அயல நெ ய ளூரநளவiடிn டிக ய எநசல யnஉநைவே உடிஅஅடிn ளரளெவசயவரஅ in ளுடிரவா ஹளயை, யீசந -னுசயஎனையைn படிiபே யெஉம நஎநn வடி வாந டிசபைiயேட யீநடியீடiபே டிக வாந றடிசடன) என்றார் ஊடிடin ஞ. ஆயளiஉய (ஞயயீநச in கூhந லுநயச க்ஷடிடிம - கடிச 2001 டிக ளடிரவா ஹளயைn டயபேரயபநள யனே டுiபேரளைவiஉள; சூநற னுநடாi; ளுயபந ஞரடெiஉயவiடிளே) 7. (i) இன்று உலகெங்கும் உள்ள 700 கோடி மனிதர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், நீக்ரோவர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்சு (ழடிஅடி ளுயயீநைளே டிச ஹயேவடிஅiஉயடடல ஆடினநசn ழரஅயளே) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் அல்லது குழுவிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலாளர் அனைவரும் ஏற்ற முடிவு. காண்க ஸசூயவரசந (டுடினேடிn) 3 ஆயல 2012 ஏடிட. 485. பக். 25; மற்றும் ஆயயீ டிn யீ.11 டிக ஊலசடை ஹலனடிn (2009) ஹ செநைக hளைவடிசல டிக ஆயமேiனே: 1,50,000 லநயசள டிக ழரஅயn hளைவடிசல (டுடினேடிn; ஊடிளேவயடெந யனே சுடிbiளேடிn] எனினும் ஏறத்தாழ மனிதனை யொத்த ‘முன்மாந்த’ (ழடிஅinனை) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்ச ஆண்டு வாழ்ந்த பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்துவிட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டசு இன்றைக்கு முன்னர் க்ஷநகடிசந ஞசநளநவே (இ.மு. 17 லட்சம் - கி.மு 50000) என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. க்ரோமக்னான் மனிதன், பீகிங் மனிதன், ஈடல்பர்க் மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாஸில் மனிதன் ஆகியவர்கள் (சுமார் 3 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்சு வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிந்து போன நியாண்டர்தல் (சூநயனேயசவாயட) (கிமு 5 லட்சம் - 30000) இனமும் அவ்வாறே. (ii) விஞ்ஞானிகள் மேலும் நிறுவியுள்ளது: இன்றைக்கு 70,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஆப்பிரிக்காவை விட்டு தற்கால மாந்த இனம் (ஹஆழ)புலம்பெயர்ந்து உலகின் பிற கண்டங்களுக்குப் பரவியது என்பதாகும். அவ்வாறு பரவுமுன்னரே மாந்தன் முதன்மொழி ஆடிவாநச கூடிபேரந டிக ஆயn உருவாகிவிட்டது என்று வரலாற்று மொழியியலாளர் உட்பட பலதுறை அறிஞரும் கருதுகின்றனர். ழ.ழ. ழடிஉம யனே க்ஷ.னு. துடிளநயீh (2009: ஐஐ சுநஎளைநன நனவைiடிn) “டுயபேரயபந hளைவடிசல, டுயபேரயபந உhயபேந யனே டுயபேரயபந சநடயவiடிளோiயீள (ழளைவடிசiஉயட யனே ஊடிஅயீயசயவiஎந டiபேரளைவiஉள” ஆடிரவநn னந ழுசரலவநச: க்ஷநசடin. யீ 474: “டுயபேரயபந டிசபைiயேவநன யbடிரவ 1,00,000 -- 50000 க்ஷநகடிசந ஞசநளநவே.... லெ றயல டிக பநளவரசயட ளாகைவ வடி டிசயட உhயnநேட... எடிஉயட ளடிரனேள யவ கசைளவ றநசந நஅயீhயளளைiஎந யவவயஉhஅநவேள” (சுட்டுகளின் முதன்மை பற்றி கால்டுவெல், ஞானப்பிரகாசர் அன்றே கருதியதும் அதுவே)... (iii) அவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டுப் பெயர்ந்து பரவிய மாந்தப் பிரிவினரில் முக்கியமான ஒரு பிரிவு தென்னிந்தியா வழியாக (தென்னிந்தியா என்பது அக்கால கட்டத்தில் கடலோர நிலப்பகுதியாக இருந்த கண்டத்திட்டு ஊடிவேiநேவேயட ளுhநடக பகுதியும் சேர்ந்தது) சென்று சிலர் தென்னிந்தியாவிலேயே நிலைத்திட; வேறு சிலர் ஆஸ்திரேலியா வரை கடலோர நிலப்பகுதி வழியாக மெதுமெதுவாக, அதாவது ஒரு தலைமுறைக்கு ஒன்றிரண்டு மைல் வீதம், சென்றடைந்தனர். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் (ஊடிவேiநேவேயட ளுhநடக) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கலாம் என்பர் பிளெமிங் (2004). ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எச்சங்கள் அக்கண்டத்தில் இமு 50000 முதல் உள்ளன. (iஎ) இன்றைய தமிழ்நாட்டு மக்களுள் அவ்வாறு இன்றைக்கு 70000-50000 ஆண்டு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி ஆஸ்திரேலியா வரைச் சென்றடைந்த மாந்தரின் பிறங்கடைகள் பெருமளவில் உள்ளனர் என்பதை மைடகான்டிரியல் னுசூஹ மாந்த மரபணு ஆய்வு திட்டவட்டமாக நிறுவிவிட்டது. அவ்வாய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மதுரையைச் சார்ந்த முனைவர் இராமசாமி பிச்சப்பனும் ஒருவர். 23.8.2007, 16.4.2008 நாள்களில் அவர் செய்தித்தாள் நேர்காணல்களில் தெரிவித்த செய்திகள் வருமாறு:- “ஆப்பிரிக்காவை விட்டு இன்றைக்கு 70000-50000 ஆண்டு களுக்கு முன்னர் வெளியேறிய ஒரு குழுவினரிடம் மை னுசூஹ அடையாளக் குறியீடு ஆ130 தோன்றியது. இன்றுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் தொகையினருள் இரண்டில் ஒருவரிடம் இந்த ஆ130 உள்ளது. “மதுரைப் பகுதியில் உள்ள மக்கள் பலருடைய மை னுசூஹ-வை ஆய்வு செய்ததில் அவர்களில் 5லிருந்து 7 நபர்களிடம் இந்த ஆ130 உள்ளது என்று தெரிய வந்தது. அன்றைய கடற்கரைப் பகுதி வழியாக மாந்த இனத்தின் ஒரு பிரிவு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தது என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்தது (ஞசடிஉநநனiபேள டிக வாந சூயவiடியேட ஹஉயனநஅல டிக ளுஉநைnஉநள; ருளுஹ; 2001) பிரிட்டன் நாட்டு மரபணுவியலறிஞர் சர் வால்டர் பாட்மர் சொன்னது போல். “உலகில் இன்றுள்ள மக்கள் அனைவரும் (700 கோடி பேருமே) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் பிறங்கடைகளே.” ‘இந்திய மக்களிடையே காணப்படும் மை னுசூஹ அடையாளக் குறியீடு களில் மிகத் தொன்மை வாய்ந்தது ஆ130 தான். அதைவிடப் பழைமையான மை னுசூஹ குறியீடுகள் இந்தியாவில் எவரிடமும் இல்லை. ஆப்பிரிக்காவில் இக்கால மாந்த இனம் ஹஆழ உருவாகிய பின்னர் அக்கண்டத்தை விட்டு முதலில் புலம் பெயர்ந்து இந்தியாவில் முதலில் குடியேறியவர்களின் பிறங்கடைகள் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நிறுவப் பட்டுள்ளது. 8. “(கி.மு 300 - கி.பி. 200 காலத்தைச் சார்ந்த) சங்கத் தமிழ் நூல்கள் தமிழக மண்ணிலேயே தொல் வரவாகத் தோன்றியவை என்பதைக் காட்டும் அனைத்து அடையாளங்களும் உள்ளன. எந்த நாட்டிலிருந்தோ தமது மொழியுடனும் இலக்கியத்துடனும் தமிழர் தமிழகத்துக்கு வந்து குடியேறியதாக யாதொரு ஆதாரமும் அந்நூல்களில் இல்லை என்பதையும் இதிலிருந்து உணரலாம்.” என்ற சேவியர் தனி நாயகம் (1953) முடிவு இன்று அசைக்க முடியாததாக உள்ளது. ஸ்லேடரின் இயல் 1இல் திராவிட மொழி பேசுநர் மெசபொதாமியா பகுதியிலிருந்து கி.மு. 3000க்குப்பின் இந்தியாவுக்குள் நுழைந்து பின்னர்த் தமிழ்நாடு வரைப் பின்னர் குடியேறினர் என்ற உன்னிப்பு இன்று அடிபட்டுவிட்டது. மாறாக, மிகப் பழங் காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது. என்று - திருத்தந்தை ஹீராஸ் தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (ளுவரனநைள in ஐனேடி ஆநனவைநசசயநேயn ஊரடவரசந 1953) நூலில் நிறுவியுள்ள முடிவையே இன்றையப் பல்துறை ஆய்வுகளும் ஆதரிக்கின்றன. “திராவிட” மொழிக் குடும்பமா? “தமிழிய” மொழிக் குடும்பமா? 9. மொழியியலில் தமிழிய (கூயஅடையைn) மொழிக்குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் “திராவிட” மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபு வடிவமே திராவிடம் என்பதாகும். மகாவம்சத்தில் “தமிள”, தண்டி எழுதிய அவந்திசுந்தரி கதையில் “த்ரமிள” என்ற சொல்லும் வருகின்றன. இக்ஷ்வாகு குடிமர பினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் ‘தமிள’ தான் வருகிறது. பின்னர் குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ” (அப்படி திராவிட (=தமிழ்) மற்றும் பிறமொழிகளில்) என்னும் இடத்தில் தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-த்ரவிட-திராவிட என்று மாறிவிட்டது. ஏ.சி. பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்டபொழுது அபத்தமாக, “ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ” என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறான வாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ (டுiபேரளைவiஉ ளுரசஎநல டிக ஐனேயை: 1906) போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பி.டி. சீனிவாசஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி 42ஆம் தொகுதியில் (1913) தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளார். (குஞ்ஞ&ண்ணிராஜா ஹnயேடள டிக டீசநைவேயட சுநளநயசஉh தொகுதி 28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல, பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றி “தமிழையும், தெலுங்கை யும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித்தார்” என்று தவறாக எழுதிவருகின்றனர்.) 10. “திராவிடம்” என்னும் சொல்லில் இருந்து “தமிழ்” உருவானது என்று கால்டுவெல் தவறாகக் குறிப்பிட்டது பற்றி அவரைக் குறை கூறல் ஒல்லாது. அக்காலத்தில் தமிழ் சார்ந்த மொழியியல் ஆய்வுகள் இருந்த நிலை அவ்வளவுதான். ஆனால் அவருக்குப் பின்னர் 1887இல் கலித்தொகைப் பதிப்புரையில் சி.வை. தாமோதரம் பிள்ளை தொடங்கி, கமில் சுலெபில் (துடிரசயேட டிக வாந ஐளேவவைரவந டிக ஹளயைn ஆயனசயள ஐஏ-2: 1987) முடிய நூற்றுக்கணக்கான மொழியியலறிஞர் அனைவரும் “தமிழ்” என்னும் சொல்லின் திரிபுற்ற வடிவமே “திராவிடம்” என்று ஆணித்தரமாக நிறுவியுள்ள நிலையில் இன்றும் “திராவிடம்” என்னும் சொல்லிலிருந்து “தமிழ்” என்னும் சொல் உருவாகியது என கூறிக்கொண்டிருப்பது அறியாமை. 11. தொல்திராவிடம் (ஞசடிவடி-னுசயஎனையைn) என்று வண்ணனை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதையும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் பாவாணர் நிறுவிவிட்டார். தமிழின் திரிபுகளே பிற திராவிடமொழிகள். பழந்தமிழினின்றும் வேறுபட்டதாக தொல் திராவிடம் என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே திராவிடம், தொல் திராவிடம் என குறிப்பிடப்படுவன வெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாக உணர்க. எனினும் உலக அளவில் “திராவிட மொழிக் குடும்பம்” என்பது ஒரு குறியீட்டுச் சொல் ஆகிவிட்ட நிலையில் அதை நாம் பயன்படுத்துவதில் தவறில்லை. அதன் உண்மைப் பொருள் ‘தமிழிய மொழிக் குடும்பம்’ என்பதே. 12. ஜி.யூ.போப் திருக்குறள் ஆங்கிலப் பெயர்ப்பை 1886இல் வெளியிட்ட பொழுது அந்நூல் முன்னுரையில் கூறியது:- “(தமிழே) தென்னிந்திய மொழிகளின் தாய் ஆகும். தென்னிந்திய மொழிக்குடும்பத்தைத் தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி என்று நான் கருதுகிறேன். அக்குடும்ப மொழிகளில் எதனை ஆய்வு செய்ய வேண்டுமென் றாலும் தமிழ்மொழிப் பின்னணியில் தான் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” (i) அண்மை ஆண்டுகளில் தமிழிய மொழிக் குடும்பத்தின் தொன்மை - ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளை யொப்ப - தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் இ.மு. (இன்றைக்கு முன்னர்; க்ஷநகடிசந ஞசநளநவே) 50000 வரைச் செல்கிறது. (ii) அத்தகைய தொல்தமிழியக் குடும்பத்திலிருந்தே இந்தோ ஐரோப்பியம், உரால், அல்தாய்க் போன்ற மொழிக் குடும்பங்கள் பிரிந்திருக்க வேண்டும் என இன்று கருதப்படுவதாலும், (தெலுங்கு, கன்னடம் போன்ற ஏனைய திராவிடமொழிகளின் தோற்றக் காலத்தை எப்படிப் பார்த்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு செல்ல இயலாது என்ப தாலும்) தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி; எனினும் மொழியியலில் குறியீட்டுச்சொல் ஆகிவிட்ட “திராவிட” மொழிக்குடும்பம் என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியதாகிறது. 13. எல்.வி. இராமசாமி ஐயரும் தமது நுனரஉயவiடியேட சுநஎநைற சூலை 1928 கட்டுரையில் பின்வருமாறு தமிழின் தொன்மையை வலியுறுத்தி யுள்ளார்:- “தமிழின் மாபெரும் சொற்களஞ்சியத்தில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான தமிழ்வேரைக் காணமுடியும்; இன்று வழங்கும் தமிழ்ச்சொற்களிலும் மிகப்பல சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தூய தமிழ் வடிவத்தில் வழங்கிவந்துள்ளன. திராவிட மொழிகளிலேயே தமிழ்தான் மூலமொழியின் முழுத்தன்மையைப் பெரும் அளவுக்கு இன்றும் கொண் டுள்ளது. தமிழில் காணும் எளிமையான தெளிவான வேர்களிலிருந்துதான் சிலபல (படிமுறையான) மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய திராவிட மொழிகளிலுள்ள திராவிடச் சொற்களை விளக்க இயலுகிறது. “எனவே இந்நிலையில் தமிழ்ச்சொல் எதனையும் தூய தமிழ் ஓரசை, ஈரசை வேரின் / வேர்களின் அடிப்படையில் விளக்க இயலும்பொழுது (தமிழில் இவ்வாறு விளக்கும் பொழுது கிட்டும் அருமையான தெளிவையும் ஒளியையும் குழப்பும் வகையில்) அச்சொல்லுக்கு தொல் திராவிட ஞசடிவடி னுசயஎனையைn வடிவத்தை உன்னிப்பது உதவாக்கரைவேலை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நேர்வுகளில் மட்டுமே பிற திராவிட மொழிகளில் உள்ள சிற்சில சொற்களை விளக்குவதற்குதொல்திராவிடச்சொல் வடிவங்களை உன்னிப்பது தேவைப்படும்.” ஊடிளேனைநசiபே வாந கயஉவ வாயவ கூயஅடை’ள எயளவ றடிசன-hடியசன உடிரடன நெ வசயஉநன வடி வைள டிறn நடநஅநவேயசல யேவiஎந சடிடிவள யனே கரசவாநச வாயவ ளடிஅந டிக வாந அடிளவ யnஉநைவே கடிசஅள (ளடி கயச யள றந மnடிற) hயஎந நெநn hயனேநன னடிறn வடி ரள in வாநசை யீசளைவiநே யேவரசந, கூயஅடை சநயீசநளநவேள றiவாin உநசவயin டiஅவைள வாந அடிளவ உடிளேநசஎயவiஎந டிக னுசயஎனையைn னயைடநஉவள. கூhளை எநைற சநஉநiஎநள உடிகேசைஅயவiடிn கசடிஅ வாந கயஉவ வாயவ அயலே டிக வாந நடநஅநவேயசல சடிடிவள டிக கூயஅடை யசந கடிரனே (றiவா அடினகைiஉயவiடிளே யனே யடவநசயவiடிளே டிக எயசiடிரள னநபசநநள) in ய டயசபந ரேஅநெச டிக டிவாநச னயைடநஉவள. “ஐn வாளை எநைற வாநn, கை ய கூயஅடை றடிசன உடிரடன நெ ளயவளைகயஉவடிசடைல நஒயீடயiநேன யள நெiபே nடிசஅயடடல னநசiஎநன கசடிஅ ய யேவiஎந கூயஅடை சடிடிவ வைளநடக, டிச ய உடிஅbiயேவiடிn டிக சடிடிவள, வை றடிரடன நெ கரவடைந வடி உடிளேவசரஉவ யீசடிவடி-கடிசஅள டிக றடிசனள, டிளெஉரசiபே வாந சநடயவiடிளோiயீள டிக சடிடிவ யனே றடிசன in கூயஅடை, ரடேநளள iனேநநன வாந யககinவைநைள டிக கூயஅடை றடிசனள யனே சடிடிவள றiவா வாடிளந டிக டிவாநச னயைடநஉவள னநஅயனே வை.” - டு.ஏ. சுயஅயளறயஅi ஐலநச (ii) தொல் தமிழியச் சிந்து நாகரிகம் 14. 1923 ஆம் ஆண்டில் எழுதி முடித்து 1924 இல் வெளிவந்தது ஸ்லேடரின் இந்நூல். ஆனால் 1923க்குப் பின்னர்த் தான் சர் ஜான் மார்ஷல் தலைமையில் மொகெஞ்சொதரோ விலும் ஹரப்பாவிலும் அகழ்வாய்வுகள் தொடங்கப்பட்டு முதற்கட்ட முடிவுகள் 1924 செப்தெம்பரில்தான் மார்ஷல் ஐடடரளவசயவநன டுடினேடிn சூநறள கட்டுரையில் வெளியிட்டார். அந்நாகரிகம் தமிழிய (திராவிட) நாகரிகம் (கி.மு. 7000 - 1800); அந்நாகரிக முத்திரைகள் தமிழிய மொழியே என்பதை விரிவாக பி. இராமநாதன் (2012) தொல் தமிழியச் சிந்து நாகரிகம் நூலில் காணலாம். சிந்துநாகரிச் செய்திகள் வந்த பின்னர் எழுதி யிருந்தால் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளை மேலும் வலுவாகத் தம் நூலில் சிலேட்டர் நிறுவியிருப்பார். (ii) ஹீராஸ் தமது 1953 “ளுவரனநைள in ஞசடிவடி ஐனேடி - ஆநனவைநசசயநேயn ஊரடவரசந” நூலின் அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது. (இந்தோ ஆரிய மொழி பேசுநரின் (சிறு எண்ணிக்கையில்) நுழைவுக்கு முன்னர்) இந்தியாவெங்கும் திராவிடமொழி பேசுநரே வசித்து வந்தனர். (ஹெவிட் 1889; ஹால் 1913, ரிக்வேதம் உபநிஷத்துக்கள் காலத்திலிருந்தே திராவிடத் தாக்கம் (வினைக் கொள்கை, மறுபிறப்பு, யோகம்) உள்ளது. வேத, புராணப் பகுதிகளில் பல பண்டைத் திராவிட நூல்களின் மொழி பெயர்ப்பு களே, (ஹீராசுக்கு 22.11.1942 அன்று எழுதிய கடிதத்தில் வி.எஸ். சுக்தங்கர் `யுதிஷ்டிரன் கதை ஆரியர் வரவுக்கும் ரிக் வேதத்துக்கும் முந்தியது என்பது சரியான கருத்தே’ எனத் தெரிவித்தார்.) நாகரிகமற்ற நிலையில் இந்தியா விற்குள் நுழைந்த இந்தோ ஆரியர் தமது மொழியை சம்ஸ்கிருதமாக (திருந்திய மொழியாக) ஆக்கிக்கொண்டனர். (கூhநல உடிnஎநசவநன வாநசை சரனந அயவவநச டிக -உடிரசளந ளயீநநஉh -- ய ளயீநநஉh டிக ளாநயீhநசனள யனே hரளயெனேஅநn - iவேடி ய உடயளளiஉயட ளுயளேமசவை டயபேரயபந) திராவிட மொழி பேசுநர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து இந்தியா விற்கும் தென்இந்தியாவிற்கும் வந்தவர்கள் அல்லர். இங்கிருந்து அங்கு சென்று பின்னர் உலகெங்கும் நாகரிகத்தைப் பரப்பியர்வர்கள் இவர்களே. இத்துறை ஆய்வுகள் நிறைவடையும் பொழுது திராவிட நாகரிகமாகிய சிந்து நாகரிகம் உலக நாகரிகத் தின் தொட்டில் என்பது ஏற்கப்படும். “வாந னுசயஎனையைளே டிக ஐனேயை, யகவநச ய டடிபே யீநசiடின டிக னநஎநடடியீஅநவே in வாளை உடிரவேசல, வசயஎநடடநன றநளவறயசனள, யனே ளநவவடiபே ளரஉஉநளளiஎநடல in வாந எயசiடிரள டயனேள, வாநல கடிரனே வாநசை றயல கசடிஅ ஆநளடியீடிவயஅயை ரயீவடி வாந க்ஷசவைiளா ளைடநள, ளயீசநயன வாநசை சயஉந -- யகவநசறயசனள யேஅநன ஆநனவைநசசயநேயn டிறiபே வடி வாந யீடயஉந றாநசந வாநல றநசந மnடிறn யவோசடியீடிடடிபiஉயடடல -- வாசடிரபா வாந றநளவ யனே அயனந வாநசை உiஎடைணையவiடிn கடடிரசiளா in வறடி உடிவேiநேவேள, நெiபே வாரள வாந டிசபைiயேவடிசள டிக வாந அடினநசn றடிசடன உiஎடைணையவiடிn. கூhந ஆநனவைநசசயநேயn யேவiடிளே டிக வாந யnஉநைவே றடிசடன றநசந சயஉயைட டிகக-ளாடிடிவள டிக வாந அiபாவல யீசடிவடி - ஐனேயைn சயஉந” ஸஹகவநச வாந யீசடிடெநஅள டிக னநஉiயீhநசஅநவே டிக ஐனேரள ளஉசiயீவ யனே வாடிளந டிக வாந அபைசயவiடிn டிக னுசயஎனையைn உiஎடைளையவiடிn டிரவ டிக ஐனேயை வடி நுடயஅ, ளுரஅநசயை யனே வாந றுநளவ யசந ளடிடஎநன] ஐனேயை றடைட நெ யஉமnடிறடநனபநன யள வாந உசயனடந டிக hரஅயn உiஎடைணையவiடிn. 15. என். லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (னுசயஎனையைn டீசபைiளே யனே வாந றுநளவ) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும்:- “i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை” (ஞடிடலளலவோநவiஉ ளுரககiஒயட) மொழிகள், இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற்களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்தி, போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) “இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) “இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய் மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம்.” - என். லாகோவரி (iii) வேதமொழி சம்ஸ்கிருதத்தின் தாயாகிய முந்து இந்தோ-ஐரோப்பியத்திலேயே காணும் திராவிடக் (தமிழியக்) கூறுகள் 16. திராவிட மொழிகளின் பல இலக்கணக் கூறுகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் மூல மொழியின் அத்தகைய இலக்கணக்கூறு களின் அளவுக்கு கழிபழந் தொன்மை வாய்ந்தவை என்பதையும் கால்டுவெல் முதலில் உணர்த்தியவர். தமது நூலின் 149-151 பக்கங்களில் தமிழிய மொழிகளிலிருந்து தான் சமஸ்கிருதம் ட், ன, ண் முதலிய வளை நாஒலியன்களை (சுநவசடிகடநஒ/டுiபேரயட/ஊநசநசெயட), அவ்வொலியன்களைக் கொண்ட தமிழ்ச்சொற்கள் பல உட்படக், கடன் பெற்றது என ஆணித்தரமாக நிறுவினார். 17. இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து கடன் பெறப்படாதவையும், என்றாலும் அம்மொழிகளின் தொல்பழங் காலத் தன்மைகளையொத்தனவாக இருப்பனவும், ஆன பின்வருவனவற்றை இன்றும் திராவிட மொழிகள் கொண்டுள்ளன என்பதையும் கால்டுவெல் நிறுவினார். (அதாவது இக்கால மொழியியல் நடையில் கூறுவதானால், தொல் இந்தோ-ஐரோப்பிய மொழித் தன்மைகளைத் திராவிட மொழிகள் தாமாகவே கொண்டுள்ளதை நிறுவினார்.) (1) “ஒலிப்பு எளிமை, இனிமைக்காக ‘ந’வின் பயன்பாடு - கிரேக்க மொழியில் உள்ளது போல (2) படர்க்கையிடப் பிரதி பெயர்களிலும் வினைச் சொற்களிலும் பால் வேறுபாடு இருப்பது - குறிப்பாக பொதுப்பால் இருப்பது. (3) சுட்டுப் பிரதிப் பெயர்களிலும், படர்க்கைப் பிரதி பெயர்களிலும் பொதுப்பால் ஒருமையைக் காட்ட ன, த் பயன்பாடு (4) லத்தீனில் உள்ளது போல பொதுப்பால் பன்மையைக் காட்ட அ பயன்பாடு (5) சேய்மைச் சுட்டுக்கு அ; அண்மைச் சுட்டுக்கு இ பயன்பாடு (6) பெர்சியன் மொழியிற்போல, பெரும்பாலும் இறந்த காலத்தைக் காட்ட த் பயன்பாடு (7) வேரில் ஒலி ஒலியனை இரட்டித்து சில சொற்களில், இறந்த காலத்தைக் காட்டுதல் (8) வினைச் சொல்லில் ஓர் உயிரெழுத்தை நீட்டி ஒலித்து வினையாலணையும் பெயர்களை அமைத்தல். “ஞசiஅவைiஎந ரனேநசiஎநன ஐனேடி-நுரசடியீநயnளைஅள னளைஉடிஎநசயடெந in வாந னுசயஎனையைn டயபேரயபநள (in உரசசநவே யீயசடயnஉந: ‘யீசடிவடி-ஐனேடி நுரசடியீநயn கநயவரசநள னநசiஎநன கசடிஅ னுசயஎனையைn”):- 1. கூhந ரளந டிக n, யள in ழுசநநம வடி யீசநஎநவே hயைவரள 2. கூhந நஒளைவநnஉந டிக பநனேநச in வாந யீசடிnடிரளே டிக வாந வாசைன யீநசளடிn, யனே in எநசளெ, யனே in யீயசவiஉரடயச வாந நஒளைவநnஉந டிக ய நேரவநச பநனேநச. 3. கூhந ரளந டிக ன டிச வ யள வாந ளபைn டிக வாந நேரவநச ளiபேரடயச டிக னநஅடிளேவசயவiஎந யீசடிnடிரளே டிக வாந வாசைன யீநசளடிn. 4. கூhந நஒளைவநnஉந டிக ய நேரவநச யீடரசயட, யள in டுயவin, in ளாடிசவ ய. 5. கூhந கடிசஅயவiடிn டிக வாந சநஅடிவந னநஅடிளேவசயவiஎந கசடிஅ ய யௌந in ய; வாந யீசடிஒiஅயவந கசடிஅ வாந யௌந in i. 6. கூhந கடிசஅயவiடிn டிக அடிளவ யீசநவநசவைநள, யள in ஞநசளயைn லெ வாந யனனவைiடிn டிக ன. 7. கூhந கடிசஅயவiடிn டிக ளடிஅந யீசநவநசவைநள லெ வாந சநனரயீடiஉயவiடிn டிக ய யீடிசவiடிn டிக வாந சடிடிவ. 8. கூhந கடிசஅயவiடிn டிக ய உடிளேனைநசயடெந ரேஅநெச டிக எநசயெட nடிரளே லெ டநபேவாநniபே வாந எடிறநட டிக வாந எநசயெட சடிடிவ.” - இராபர்ட் கால்டுவெல் 18. தேவநேயப் பாவாணர் தமது செந்தமிழ்ச் செல்வி 1977-80 கட்டுரைகளில் முந்து இந்தோ ஐரோப்பிய ஞசடிவடி ஐனேடி-நுரசடியீநயn நிலையி லேயே அம்மொழியில் ஏறிவிட்ட தமிழியச் சொற்கள் சிலவற்றைக் குறிப் பிட்டார். இக்கட்டுரைகளின் ஆங்கில ஆக்கம் பி.இராமநாதன் செய்தது (விரிவான முன்னுரையுடன்) - 2004ல் “சூடிளவசயவiஉள வாந டiபாவ கசடிஅ கூயஅடை யஉஉடிசனiபே வடி னுநஎயநேலயn” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது:- “i) உம்பர் ரயீயசi (சுப ஏநனய); ரயீயசi (ளுமவ); ளரயீநச (டுயவin, றiவா யீசடிளவாநவiஉ ள); hரயீநச (ழுசநநம); hலயீநச (நுபே). ii) உய் - ஏநனiஉ யனே ளுமவ = வடி படி, றயடம, கடடிற, யனஎயnஉந iii) உருளை - ரசரடயi - சடிவய (டுயவin, ‘ய றாநநட’); சடிடட (நுபே). iஎ) கண்-காண் - உரnniபே (ஆநு), மnடிறநn (ஆநு). மnடிற (நுபே) - தயேn (ளுமவ) எi) காந்து - உயனேநடி (டு); உயனே, உயனேசய (ளுமவ)/ எii) காலம் - மயடய (ளுமவ) எiii) கும்மல் - உரஅ (டு); ளரஅ(ழு), ளரஅ(ளுமவ) ஒ) எல்லா - யசந (ளுமவ); hயடடடி (நு) ஒii) மகன் - அயபரள (ழுடிவாiஉ); அயஉ/ஆஉ (ழுயநடiஉ); அயnn (ழுநசஅயn); அயn (நு); அயரேள (ஏநனiஉ); அயரே, அயரேளாலய (ளுமவ). ஒiii) முன்னுதல் - அயnரேவயட-அயயேஅ-அயயேள (ளுமவ) ஒஎ) புகா bhரத; bhரமவi, bhடிதயயே (ளுமவ) ஒஎi) பள்ளி யீடிடளை (ழுசநநம) ஒஎii) பதி - பாதம் - யீயனய (சுஏ); யீடினடிள, யீநனளை (டுயவin, ழுசநநம) ஒஎiii) புரி - யீரச (சுஏ); யீநசi (ழுசநநம) ஒiஒ) பொறு - bhசi (சுஏ); யீhநசடி (ழுசநநம); கநசடி (டுயவin); நெயச (நுபே); ஒஒ) பகு - யீயமளாய (ளுமவ.), யீhயளளை (ழுசநநம), கயஅய(டுயவin) ஒஒi) பேசு - bhயளா (ளுமவ.), யீhயளளை (ழுசநநம), கயஅய (டுயவin) ஒஒii) திரும்பு - ளவசடியீhந (ழுசநநம); வடிசளூரநசடி(டுயவin); வடிசளூரந (நுபே) தொகுதிச் சொற்கள் பூனைப் பெயர்கள்: மடிவவi (முயnயேனய) யனே முடிசசi (ஆயடயலயடயஅ) மயவவய (ழுசநநம); யீரஉயi-யீரளள/யீரள/யீரளளந (நுபே.நவஉ.) யீடைடயi-bடைடi(ழiனேi): கநடiநே (டு) எவையசயஎயn - எவையசயமய நவஉ. (ளுமவ.) கள் வழிப் பிறந்த நெருப்பின் பெயர்கள்: உரட-ளடிட (டு), ளரn நவஉ. 19. பாவாணர் வழியில் முறையான மொழியியல் ஆய்வு நெறிகளைப் பின்பற்றி இந்தோ-ஐரோப்பியத்தில் ஏறியுள்ள பல நூறு தமிழியச் சொற்களை நிறுவியுள்ள அண்மைக்கால ஆய்வுகள் வருமாறு:- ப. அருளி (1985) மொழியியல் உரைகள் (5 மடலம்) பாண்டிச்சேரி (மற்றும் பின்னாளில் எழுதிய “தென்மொழி”க் கட்டுரைகள். கு. அரசேந்திரன் (1997/2000) உலகம் பரவிய தமிழின் வேர்: கல்(2014 அச்சில்) வட இந்திய மொழிகளில் தமிழியக் கூறுகள் (செம்மொழித் தமிழாய்வு மையநிறுவன ஆய்வாகச் செய்தது; “வடஇந்திய மொழிகளில்” என்று குறித்துள்ள போதிலும் அவற்றுக்கு முந்தைய வேதமொழி/சமஸ்கிருதம்; வே-ச இரண்டுக்கும் முந்தைய இந்தோ ஐரோப்பியம் என்ற தொன்மை நிலைகளிலேயே தமிழிலிருந்து சென்று ஏறிவிட்ட சொற்களையும் ஆணித்தரமாக விளக்குகிறது. 20. எச்.எஸ். டேவிட் (1966) கட்டுரைகளில் குறிப்பிடும் 21 அடிப்படைத் தமிழ்வேர்களும் (வள்/வண், உள் (உண்) உண்டு, கேள்/கேளிர், கேண்மை, கொள்/கொடு/கோடல்; கீழ்; போழ்; ஒல்; கல், கால், சால், நில், பால், பல்சில், தொல்வல், எள், ஒள், விள்) அவை சார்ந்த சொற்றொகுதிகளும் ஒரு பான்மை பாவாணர் கருத்தோடு ஒத்து நோக்கத்தக்கனவாகும். 21. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி (இன்றைய நாஸ்திராதிக் ஆய்வாளர் கருத்தும் அதுவே) கி.மு. 10000க்கு முன்னரே தொல் இந்தோ- ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்து விட்டனர். மைய ஆசிய புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர், அவர் களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், லத்தீன், கெல்டிக், செர்மானிக், சிலாவிய மொழிக் குடும்பங்களாகும்) வேறு சில குழுக்கள் கிழக்கு-தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும். அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழி களில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல்திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து இரண்டாவது கட்டமாக (ய ளநஉடினே னடிளந டிக னுசயஎனையைn கநயவரசநள) ரிக் வேதத்திலேயே புதிதாக மேலும் பல தமிழிய மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. அத்தகைய இரண் டாவது கட்ட நிகழ்வுகளை அடுத்த பகுதி (உ) விளக்குகிறது. 22. இறுதியாக இப்பகுதியில் ஞாலமுதன்மொழி ஆய்வாளர் களின் அண்மைக்கால ஆய்விலும் தமிழ் முதன்மை பெற்றுள்ளதைக் காண்போம். ஞால முதன்மொழி சார்ந்த ஆய்வுகளில் இன்று ஈடுபட்டுள்ளவர்கள் மெரிட் ரூலன், ஜான் பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக், விதாலி செவரோஷ்கின் (ஆநசசவை - சுராடநn, துடிhn க்ஷநபேவளடிn, ஏயஉடயஎ க்ஷடயணநம, ஏவையடல ளுhநஎடிசடிளாமin) போன்றவர்களாவர் யூரேசியாடிக் பற்றி கிரீன்பெர்க் இறப்பதற்கு முன் கடைசியாக எழுதிய நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் அவற்றோடு நெருங்கிய உறவுடையனவும் - யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம். ஐனேடி-நுரசடியீநயn யனே வைள உடடிளநளவ சநடயவநைள; வாந நுரசயளயைவiஉ டுயபேரயபந குயஅடைல: ஏடிட 1; ழுசயஅஅயச; ஏடிட ஐஐ: டுநஒiஉடிn” (ஸ்டான் போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2000/2002) என்பதாகும். 23. ஞாலமுதன்மொழி ஆய்வாளர் மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடி வழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994 நூலின் பக்கம் 2777இல் கூறுவது வருமாறு: “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.” அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முக்கியமான கருத்து களுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் “ழுடடியெட நுவலஅடிடடிபநைள” தரப்பட்டுள்ளன. அக்கருத்துகளுக்கு ஞால முதன்மொழியில் என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடி யாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு)த் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தனவாகவும் ஞாலமுதன்மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. (“தமிழே இயன்மொழி’ எனப் பாவாணர் செப்பியதை இது மெய்ப்பிக்கிறது):- “ஞாலமுதன்மொழி வேர் திராவிடச் (தமிழ்) சொல் 1. ஹதய (அடிவாநச, டிடனநச கநஅயடந சநடயவiஎந) ஆய்: அடிவாநச 2. க்ஷர (சூ) முஹ (மநேந, வடி நெனே) வாங்கு: வடி நெனே 3. க்ஷருசு (ஹளாநள, னரளவ) பூழி: யீடிறனநச 4. முடீடுடீ (hடிடந) ஒள்: வடி யீநைசஉந, வடி அயமந hடிடந 5. முருஹசூ (னடிப) குக்கல்/குக்கன் (குரைப்பது) 6. முருசூஹ (றடிஅயn) பெண் - கிரேக்கம் பரநே (4, 5,6 க்கு ரூலன் “திராவிட” மொழிச் சொல் தரவில்லை. மேலே தந்துள்ள தமிழ்ச் சொற்கள் இவ்வாசிரியன் தந்தவையே) 7. ஆஹமுடீ (ஊhடைன) மகன் (மழ=இளமை) 8. ஆஹடுஐணுஹ (வடி ளரஉம, ளரஉமடந, மெல்லு(தல்) ரேசளந, செநயளவ) 9. ஆஹசூஹ (வடி ளவயல in ய யீடயஉந) மன்னு(தல்): வடி நெ யீநசஅயநேவே 10. ஆஹசூடீ (அயn) மன்: (கசடிஅ மகன்) 11. ஆநுசூஹ (வடி வாiமே யbடிரவ) முன்னு(தல்): வடி வாiமே 12. ஞயட (2) பால்: யீயசவ, யீடிசவiடிn 13. ஞஹசு (வடி கடல) பற: வடி கடல 14. ஞருகூஐ (எரடஎய) பொச்சு 15. கூநுமுரு (டநப, கடிடிவ) தாவு = தரஅயீ; (பர்ஜிவயம தாக் =நட 16. கூஐமு (கiபேநச, டிநே) ஒண்ணு - ஒண்டி தெலுங்கு - ஒகடி; உரால்: டினமை 17. கூஐமுஹ (நயசவா) துகள்: னரளவ - மெரிட் ரூலன் (iஎ) இந்து சமயத்தின் திராவிட (தமிழிய அடிப்படை) 24. இன்றைய “இந்து” சமயக்கடவுள் வழிபாட்டு முறைகள், மெய்யியல் ஆகியவை முற்றிலும் தமிழிய (திராவிடச்) சார்புடையவையே; ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை 1900க்கு முன்னர் இருந்தே நல்லறிஞர் கூறிவருகின்றனர். மறைமலையடிகள் (1903: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, 1923 தமிழர் நாகரிகம், 1941 தமிழர் மதம்); பி.டி. சீனிவாச ஐயங்கார் (1929: ழளைவடிசல டிக வாந கூயஅடைள கா. சுப்பிரமணிய பிள்ளை (1940 தமிழர் சமயம்) தேவநேயப் பாவாணர் (1972: தமிழர் மதம்) ஆகியோர் உட்பட. ஆரிய வேதங்களிலிருந்து மாறுபட்ட, அவற்றுக்கு முந்திய ‘தமிழ் நான் மறைகள்’ இருந்தன வென்னும் கோட்பாட்டையும் கா. சுப்பிரமணிய பிள்ளை (1927; கூhந ஆயனசயள ஊhசளைவயைn ஊடிடடநபந ஆயபயணiநே; பின்னர் 1920 (செந்தமிழ்ச்செல்வி) முதலியோர் கொண்டிருந்தனர். 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் “முருகுஅன்” (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000-1500ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். “புதுக் கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினர் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக்கண்டு பிடிப்பு நிறுவுகிறது என்பர் ஐ. மகாதேவன்.” (“கூhந சூநடிடiவாiஉ யீநடியீடந டிக கூயஅடையேனர யனே வாந ஐனேரள எயடடநல யீநடியீடந ளாயசநன வாந ளயஅந டயபேரயபந றாiஉh உயn டிடேல நெ னுசயஎனையைn யனே nடிவ ஐனேடி-ஹசலயn):1.5.2006 இந்து நாளிதழ். 25. இன்றைய வேதமதக் கருத்துக்கள் - அவற்றிற்கு எதிரான சமண, புத்தம் முதலிய கருத்துக்கள் இவற்றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே, மறுமலர்ச்சியே இன்றைய இந்து மதம் ஆகும். (கூhந ழiனேர ளலவோநளளை றயள டநளள வாந னயைடநஉவiஉயட சநனரஉவiடிnடிக டிசவாடினடிஒல யனே hநவநசடினடிஒல வாயn வாந சநளரசபநnஉந டிக வாந யnஉநைவே யbடிசபைiயேட ஐனேரள உiஎடைளையவiடிn)” என்பர் டைலர் (1973) 26. “பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமையானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக்கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள் சமூகத்தினரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக்கொள்கை இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.” - பிராகிங்டன் து.டு. க்ஷசடிஉமiபேவடிn 1981: கூhந ளுயஉசநன வாசநயன ஹென்ரிச் சிம்மர் (1951) “வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன் மக்கள் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கின பின் முந்தைய உள்ளூர் ஆளுங் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றன. எடுத்துக்காட்டாக சந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. - ஹென்ரிச் சிம்மர் ழநiசேiஉh ஷ்iஅஅநச 1951: ஞாடைடிளடியீhநைள டிக ஐனேயை “இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியரல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணியத்துக்கு வந்தது” லெவின் - ழு.ஆ. க்ஷடிபேயசன டுநஎin (1986) ஹ உடிஅயீடநஒ ளவரனல டிக ஹnஉநைவே ஐனேயை “மொகஞ்சொதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விட்டனரோ” வால்பர்ட் - ளுவயடேநல றுடிடயீநசவ 1982: ஹ நேற ழளைவடிசல டிக ஐனேயை. இந்தோ ஆரிய மொழி பேசுநர் இங்கு வந்த பின்னரும் வட இந்தியாவில் வாழ்ந்து திராவிட மொழி பேசிவந்த தொல் குடியினர் வந்தவர்களைவிடப் பெரும் எண்ணிக்கையில் இருந்தமையால் தொடர்ந்து அவரவர் இடத்தில் இருந்தனர். வட இந்தியப் பகுதியில் வாழ்ந்து வந்த தொல்குடியினர் இந்தோ ஆரிய மொழி பேசுவோருடைய அரசியல், பொருளாதார, சமயத் தாக்கத்தின் கீழ் வந்து சிலகாலம் இரு மொழி (தமது தொன் மொழியாகிய தமிழிய மொழி - மற்றும் ஆரியர் மொழி) பேசுவோராக இருந்து நாளடைவில் தம் தொன்மொழியைக் கைவிட்டு ஆரியமொழியைக் கைக் கொண்டனர். வட இந்திய மக்களில் பெரும்பான்மையினராக இருந்த திராவிட மொழி பேசுவோர் தென் இந்தியா வுக்குச் சென்று விட்டதாகக் கருத இடமில்லை. ஆரிய வருகைக்கு முன்னர் இந்தியா வெங்கும் பரவியிருந்த திராவிட மொழிகள் அவ்வருகைக்குப் பின் வட இந்தியாவில் நலிவுற்றன் என்பதே நடந்திருக்க கூடியது. தாமஸ் டிரௌட்மன் (1981) திராவிடர் உறவு முறை ரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.மு. 1500 - 1300 ஆகம். இந்தோ ஆரிய மொழிப் படைப்புகளில் மிகப்பழையது அதுவே. அவ்வேதத்திலேயே இந்தோ - ஆரிய மல்லாதனவும், திராவிடத் தன்மை வாய்ந்தனவுமான பல கூறுகள் - ஒலியன் மாற்றங்கள், திhவிடத்திலிருந்து கடன்பெற்ற சொற்கள், இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவை உள்ளன. கி.மு. 1500க்கு முன்னர் சில நூற்றாண்டுகள் காலம் வடமேற்கு இந்தியாவில் வேதமொழி பேசியவர்களும் திராவிட மொழி பேசியவர்களும் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. கூhந நுயசடநைளவ ஐனேடி - ஹசலயn வநஒவஇ வாந உடிஅயீடைநன சுப ஏநனய, ளாடிறள ளநஎநசயட iகேடரநnஉநள டிக ய nடிn -ஐனேடி - ஹசலயn, னுசயஎனையைn நடநஅநவே in வாந கடிசஅ டிக யீhடிநேவiஉ உhயபேநள, iவேசடினரஉவiடிn டிக டடியn றடிசனகள யனே யேஅநள நவஉ. கூhநளந யீசநளரயீயீடிளந வாந உடிநஒளைவநnஉந டிக வாந ஏநனiஉ யனே னுசயஎனையைn ளயீநயமiபே யீநடியீடநள in ய உரடவரசயட உடிவேயஉவ ளவைரயவiடிn கடிச ய யீநசiடின, யீநசாயயீள டிக உநவேரசநைள, நெகடிசந வாந உடிஅயீடையவiடிn டிக வாந சுப ஏநனயள (உசைஉய 1500 - 1300 க்ஷஊ) - க்ஷசனைபநவ யனே சுயலஅடினே ஹடடஉhin (1988) கூhந சளைந டிக ஊiஎடைளையவiடிn in ஐனேயை யேன யீயமளைவயn. (எ) இந்தியாவில் வழங்கும் சாதி முறை 27. சிலேட்டர் நூலின் இயல்கள் 5- 7 இல் திராவிடமொழி பேசுந ருடையே வழங்கும் சாதிமுறை முதலியவை பற்றிய அவருடைய கண் ணோட்டம் உள்ளது. அதில் பல தமிழிய மொழி பேசி வந்த தமிழக இனக் குழுவினரிடம் கூசiநௌ ஏற்கெனவே நிலவிய ஒரு வகையான (சாதி போன்ற) இனக்குழுத் தன்மைகளை வருணாசிரமக் கொள்கை வழிபட்ட தாக விரகாக மாற்றி சாதிவேற்றுமையும் கொடுமைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்பர் ஸ்லேடர். கூhந ஹசலயளே கடிரனே ய ளலளவநஅ சநளநஅடெiபே உயளவந, யடசநயனல in கடிசஉந யஅடிபே வாந னுசயஎனையைn inhயbவையவேள யனே வாநல யனடியீவநன யனே அடினகைநைன வை வடி ளரவை வாநசை டிறn யீரசயீடிளநள. 28. மறைமலையடிகள் 1923: சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்; ஏ.எல். பஷாம் 1954,1955; கே.கே. பிள்ளை 1977 ஊடிhn 1987, னுசைமள 1987/1992; ஐனேநn 1986/1990 ஆகியோர் கருத்தும் பெருமளவுக்கு இதுதான்) (எi) 1924க்கு பின்னர் இத்துறையில் ஆய்வு வளர்ச்சி 29. இந்தியக் காவியங்களின் சமயக் கோட்பாடுகளில் ஆரியமல்லாத (பெரும்பாலும் திராவிட) கோட்பாடுகளே மிகுந்துள்ளமையை ஆந்த்ரே எப். ஸ்ஜோபெர்கு ஹனேசநய கு. ளுதடிநெசப ஐதுனுடு 38, (1999) பக் 71-90 கட்டுரையில் சூடிn ஹசலயn (அயiடேல னுசயஎனையைn) கநயவரசநள in வாந சநடபைiடிரள உடிவேநவே டிக வாந ஐனேயைn நயீiஉள கட்டுரையில் காண்க. அவர் ஊடிஅயீயசயவiஎந ஊiஎடைணையவiடிn சுநஎநைற 23: 1990 (பக் 40-74) இல் இந்திய நாகரிக வளர்ச்சிக்கு திராவிடமொழி பேசுநர் பங்களிப்பு மறு ஆய்வுதேவை என்ற 1990 கட்டுரையையும் சிலேட்டர், நூலைப்படிப்போர் பயில்வது நலம். அந்த 1990 கட்டுரையின் தமிழாக்கம் மட்டும் சிலேட்டர் நூல் முடிந்தபின்னர் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. பொருளடக்கம் பக்கம் 1. திராவிடர் 26 2. ஆரியர் 42 3. திராவிட நாகரிகத்தின் தொல்பழமை 55 4. இந்திய சமயக் கருத்துகளின் வளர்ச்சிமுறை 65 5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின் பொருளாதார அடிப்படை 84 6. திராவிட நாகரிகத்தின் சிறப்புக் கூறுகள் 100 7. இந்திய நாகரிகத்துக்கு மொழி பேசுநரின் பங்களிப்பு (இன்றைய 1924 நிலை ) 108 இணைப்பு : இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழி பேசுநர் பங்கு : மறுபார்வை தேவை - ஆந்த்ரி எப். ஜோபர்க்கு : 1990 கட்டுரை. 119 1. திராவிடர் “திராவிடர்” என்ற பெயர் ஒரு குருதியினத்தைக் (சயஉந)குறிக்கிறது என்று கொள்வதைவிட ஒரு மொழியினத்தைக் குறிப்பதாகக் கொள்ளுவதே பொருத்தமானது. “திராவிட” என்ற சமஸ்கிருதப்(ளயளேமசவை) பெயருக்குத் *தெற்கு என்ற பொருளும் உண்டு.(தமிழ் என்ற சொல்தான் நாளடைவில் தமிள், த்ரமிள, த்ரவிட, த்ராவிட எனத் திரிந்தது என்பது இன்று (2014) மொழியியலாளர் அனைவரும் ஏற்கும் கருத்து ஆகும்) திராவிட மொழிகளும் பெருமளவுக்குத் தென் இந்தியாவின் மொழிகளாகவே இருக் கின்றன. 1911-ஆம் ஆண்டைய மக்கட் கணிப்பின்படி6.20 கோடி மக்கள் பேசிய பதினைந்து மொழிகள் திராவிட மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. 2.திராவிட மொழிகளுள் பண்பாட்டில் தலைசிறந்ததும் தூய்மை மிக்கதும் தமிழே. இது இந்தியாவில் 1.80 கோடி மக்கள் பேசுவது(1921) அத்துடன் இலங்கையில் ஒரு பகுதியினரும் பர்மா, மலேசியா முதலிய பல பகுதிகளில் குடியேறியுள்ள தமிழரும் உண்டு. சென்னைமுதல் கன்னியாகுமரிவரை அதுவே தாய்மொழியாயுள்ளது. தெலுங்கு மொழியை 2.40கோடி பேர் சென்னைமுதல் கஞ்சம் மாவட்டம் வரைப்பேசுகின்றனர். கன்னடம் தெக்கணப் பகுதியில் பெருவழக்கானது; (மைசூர்த்தனியரசில் அதுவே அரசுமொழி.) 1.56 கோடி மக்கள் பேசுவது மலையாளம் திருவாங்கூர், கொச்சி, மலபார் ஆகிய பகுதிகளுக்குரியது. அது கிட்டத்தட்ட எழுபது லட்சம் மக்கள் பேசுவது. இவையே தலையான திராவிடமொழிகள். 3. (i) தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழைவிட மிகுதியாகச் சமஸ்கிருதச் சார்பான மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் பெற்றுள்ளன. (ஐஐ)இந்நான்கு மொழிகள் நீங்கலான மற்ற பதினொரு திராவிடமொழிகளும் இலக்கியத்துறைச் சிறப்பு அற்றவை. 4.திராவிடமொழிகள் இந்தியாவின் தென்பகுதிக்குரியன என்பதற்கு முக்கியமான ஒரு விலக்கு “பிராகுவி (செயாரi)” மொழி; அதன் வாழ்விடம் பலுசிஸ்தானம்; உடற்கூறு, உளப்பண்புகளிலும் பிராகுவி பேசுபவர்கள் அப்பகுதி மக்களிடமிருந்து வேறுபாடுடையவர்களாகவும், தென் இந்திய மக்களுடன் ஒப்புமைகள் பல உடையவர்களாகவும் உள்ளனர். பிராகுவியின் இந்நிலைமை குருதியினத்தொடர்பின் (சயஉந) காரணமாக இருக்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது. 5. ஆனால், இந்தியாவில் தென் இந்திய திராவிடருக்கும், வடஇந்திய மக்களுக்குமிடையே உடற்கூறு சார்ந்த இனவேறுபாட்டு எல்லைகளைக் காணஇயலாது. காடு வாழ் பழங்குடியினங்களை நீக்கிப் பார்த்தால், மொத்தத்தில் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நாடிச் செல்லுந் தோறும் சராசரி உடற்கூற்றுப்படிவம் படிப்படியாக சிறுசிறு மாறுதலடை வதையே காணலாம். 6. திராவிடரிடையே (சற்றே) தனிப்பட்ட நிலையுடையவர்கள் மீனவர் குடியினர், காடுவாழ் குடியினர் சிலரே, இவர்களில் நாகரிகம் குறைந்த இனத்தவர்களைச் சிலர் தொல் திராவிடர் (ஞசடிவடி-னுசயஎனையைளே). என்று வகுக்கின்றனர். வேறு சிலர் அவர்களைத் ‘திராவிடருக்கு முற்பட்டவர்’ (ஞசந-னுசயஎனையைளே); திராவிடர்களுடன் ஊடாடி அவர்கள் மொழிகளைக் கைக் கொண்டவர் என்றும் குறிக்கின்றனர், இதுவே முதல் கருத்தைவிடப் பொருத்தமானது எனலாம். 7. திராவிடமொழி பேசும் மக்களில் (முன் பத்தியிற்சுட்டிக்காட்டிய) இருசாராரைத் தவிர மற்றவர்களிடையே மிக நெருங்கிய குருதியினத் தொடர்பான ஒற்றுமை சயஉயைட யககinவைல காணப்படுகிறது. ‘திராவிட இனம்’ என்ற தொடரை வழங்கமுடிவது இதனாலேயே. அத்தொடர் இன்றும் திராவிடமொழி பேசிவரும் மக்களைமட்டுமின்றி, ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு வந்த பின்னர் அவர்கள் தாக்கத்தால் சமஸ்கிருதச் சாயல் கொண்ட மொழிகளை இன்று பேசும் பிற மக்களையும் சுட்டுவதாகும். 8. பிராகுவி நீங்கலாக ஏனைய திராவிட மொழிகளைச் சமஸ்கிருதச் சார்பான மொழிகள் இந்தியாவின் தென்கோடி நோக்கி நெருக்கித் தள்ளியுள்ளன என்பதிலிருந்து, “சமஸ்கிருதம் பேசிய ஆரியப் படையெடுப் பாளர்கள் ஏனைய இந்தியப் பகுதிகளிலிருந்து அவர்களை முற்றிலும் அழித்தொழித்துவிட்டார்கள், துரத்திவிட்டார்கள்” என்று கொள்வது தவறு. பிரஞ்சு மொழி இலத்தீனச் சார்பான மொழி என்பதிலிருந்து “ஜுலியஸ் சீஸரின் உரோமப்படைகள் கெல்திய மொழி பேசிய ‘கால்’ பயரட (இன்றைய பிரான்°) மக்களை அழித்தொழித்துவிட்டனர்!” என்று கொள்ள முடியாது. அது போன்றதே இதும். 9(ஐ)இத்தகைய சூழல்களில் இருமொழிகளுக்கிடையே ஏற்படும் போராட்டங்களில் வெற்றிதோல்விகளின் முடிவு ஓரளவு சுற்றுச்சார்புகளையும், ஓரளவு மொழியின் பண்புகளைம் பொறுத்தது ஆகும். ‘கால்’ நாட்டில் இலத்தீன் மொழிக்கு ஒரு பெருங்குறைபாடு இருந்தது, அதைப் பேசியவர் ஒரு சின்னஞ்சிறு குழுவினர்; ஆயினும் முடிவில் எஞ்சி நின்றது அதுவே! இதற்கு உதவிய காரணங்கள் இரண்டு; ஒன்று அது வெற்றிகண்டவர் மொழி என்பது; மற்றொன்று, கேய்லிக், பிரிட்டானிய மொழிகளைவிட லத்தீன் மொழி அயலார் கற்று மேற்கொள்ளச் சிறிது எளிதாயிருந்தது என்பது. (ஐஐ) இந்தியாவின் மிகப்பல பகுதிகளிலும் வடமொழிச் சார்பான மொழிகளுக்கும் திராவிடமொழிகளுக்குமிடையே நடந்த போராட்டம் பெரிதும் பிரான்சு நாட்டுப் பண்டைய மொழியினப் போராட்டத்துடன் மிக நெருங்கிய ஒப்புமை உடையதாகவே இருந்திருக்க வேண்டும். 10. திராவிடமொழிகள் யாவுமே கற்பதற்கு மிகவும் கடுமை யுடையவை. வடமொழிச் சார்பான மொழிகளைவிட அவை கடுமையானவை என்பது எவ்வளவு தொலைவு உண்மை என்று இன்றும் காணலாம். திராவிட மொழிகள் நாட்டு மொழிகளாயிருக்குமிடங்களில் ஐரோப்பிய அதிகாரி களுக்கும் அவர்களின் இந்தியப் பணியாட்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு மொழி எப்போதும் ஆங்கிலமாகவே இருக்கிறது. ஏனைய இந்தியப் பகுதி களிலோ அது எப்போதும் இந்துஸ்தானியாகத்தான் இருக்கிறது. சென்னையில் பக்கிங்காம் கர்நாட்டிக் ஆலைகளை ஐரோப்பிய மேலாண்மை நிறுவியபோது, இந்திய மொழிபெயர்ப்பாளர்களை வைத்துச் செயல்படவில்லை. மாற்றுமுறை ஒன்று காணப்பட்டது. தொழிலாளர் பிள்ளைகளுக்கும் பகுதி நேரத் தொழிலாளர்களுக்கும் பள்ளிகள் வைத்து ஆங்கிலங் கற்றுக்கொடுக்கும் முறையை மிக எளிதாகப் பின்பற்றி வெற்றிபெற முடிந்தது. இதிலிருந்து திராவிடர் பெரும்பான்மைக் குடிமக்களாய், அவர்களிடையே சிறு குழுவினரான ஆரியப் படையெடுப்பாளர்கள் ஆட்சியினத்தவர்களாக அமைவுறும் இடங்களிலெல்லாம், ஆளும் இனத்தவர் ஆளப்படும் இனத்தவர்களுடன் கலந்து மறைந்து விட்டபோதிலுங்கூட, ஆரியச் சார்பான ஆட்சியாளர் மொழியே நாட்டு மொழியாகிவிடுகிறது என்று காணலாம். திராவிட மொழிகளும் வடமொழி சார்ந்த மொழிகளும் உறவாடும் இடங்களிலெல்லாம் திராவிடமொழி அழிவுற்று, வடமொழி சார்ந்த மொழி வெற்றி பெற்றோங்கும் மரபு இன்றும் தொடர்ந்து நிகழ்கிறது. 11. குருதியினப் பரவல் (சயஉயைட ளயீசநயன)சான்றுகளால் இந்தியாவின் இனஆக்கத்தில் திராவிட இனக்கூறே மற்றெல்லா இனக்கூறுகளையும் விஞ்சிக் காணப்படுகிறது. மொத்தத்தில் இன்று மொழிகளின் பரவல் குருதியினப் பரவல் இரண்டும் ஒன்றுபோலவே உள்ளன. இதுமட்டுமன்று; வேறு ஒரு செய்தியும் குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதத்தின் ஒலிப்புமுறை யானது, தமிழ்போன்ற திராவிட மொழிகளுக்கும், மற்ற இந்தோ - ஜெர்மானிய (ஆரியஇன) மொழிகளுக்கும் இடைப்பட்ட நிலையிலேயே அமைந்திருக்கிறது. இன்று நமக்குக் கிட்டியுள்ள வடிவில் இருக்குவேதம் உருவான காலத்தி லேயே சமஸ்கிருதமொழி பேசிய மக்களில் ஒரு கணிசமான பகுதியினர் திராவிட இனத்தவராகவே இருந்தனர். 12. இங்ஙனமாயின், இத்திராவிடர் யார்? இந்தியாவுக்கு வெளி யேயுள்ள மக்கட்பகுதியினருடன் அவர்கள் இனமுறைத் தொடர்புகள் எத்தகையவை? அவர்கள் இந்தியாவுக்கு எவ்வாறு வந்தனர்? ‘நடுநிலக்கடல் இனம் ஆநனவைநசசசயநேயn சயஉந’. என்பதை அகன்ற பொருளில், (அவ்வினத் தொடர்புடைய அனைத்தையும் குறிப்பதாகக்) கொண்டால், திராவிட மக்களின் தலைமை இனக்கூறு நடுநிலக்கடல் இனத்தின் ஒரு கிளையே எனலாம். பொதுவாக நோக்கினால் தலையோட்டுப்படிவம், மயிரமைதிப்பண்பு நிறம், கண்நிறம், உறுப்பமைதி, உடலமைதிகள் ஆகியவற்றில் அவ்வினத்த வருடன் திராவிடர் குறிப்பிடத்தக்க ஒற்றுமை உடையவர்கள் எனலாம். 13. இரு சாரரிடையேயும் மிகத் தெளிவாகக் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே மேனிநிறம். பொதுவாகத் திராவிடர் நிறம் மற்றவரைவிடக் கறுப்புச்சாயல் மிக்கது. ஆனால், சராசரி இத்தாலியர் அல்லது சப்பானியரின் செம்பொன்மேனி நிறத்திலிருந்து நீகிரோவின் கறுப்பு நிறம் வரையுள்ள எல்லா வகை நிறங்களும் அவர்களிடையே உள்ளன. மயிர்நிறம், முகத்தோற்றம் முதலியவற்றில் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன; ஒரு முனையில் பம்பித்த சுருட்டை மயிரையும் மறுமுனையில் மென்மையையும் காணலாம். நடுநிலக் கடற்பகுதி மக்களைவிடத் திண்ணமான உதடுகளும் சப்பையான மூக்குகளும் அவர்களில் சிலரிடம் உள்ளன. 14. இவ்வேறுபாடுகள் யாவும், திராவிடர் இந்தியாவுக்குள் வந்தபின், அவர்களுக்கு முன்னரே இங்கு வாழ்ந்த கறுப்பு மேனி, திண்ணிய உதடுகளை உடைய முன்னைப் பழங்குடி மக்களுடன் இனக்கலப்புப் பெற்றதனால் ஏற்பட்டவையே என எனக்குத் தோற்றுகிறது. திராவிடர் இக்கலப்பினால் மேனிநிறம் மாறி வெப்பமண்டலத்தில் பிழைத்து வாழும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். இம்மாறுதலால் அவர்கள் அழகமைதி ஒரு சிறிது குறைந்துள்ளது; சிறப்பாகத் தமிழகத்தில் தான் இது ஏற்பட்டுள்ளது. 15. ‘ஆங்கிலோ இந்தியர்’ என்று முன்பு அழைக்கப்பட்ட இந்திய வாழ் ஐரோப்பியரிடையே சென்னையில் வழங்கிய பழமொழி. “தீவினையின் மருட்சிவலையிலிருந்து எம்மைக் காப்பாற்றுவீராக’ என்ற வேண்டுகோளுக்கு இணங்கிக் கர்த்தர் உலகுக்குத் தமிழக நங்கையை அனுப்பினார்!” என்பதாகும். திராவிட மக்களில் தென்கோடியிலுள்ள தமிழ்ப் பெண்டிரைப் பொதுவாகக் குறிப்பதில் இது சற்று மிகைப்படுத்தியதாகும்! தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவரைப் பார்க்கிலும் தமிழர் கருமைச்சாயல் கூடியவராயும், மேனிவனப்புக்குறைந்தவராகவுமே உள்ளனர். பொதுவாகத் தெற்கே செல்லுந்தோறும் வேளாண்மை செய்யும் மக்களிடையேயும், சிறப்பாக ‘ஆதிதிராவிடர்’ என்று சென்னை அரசாங்கம் குறிப்பிடும் மக்களிடையேயும், திராவிடருக்கு முற்பட்ட யீசந னசயஎனையைn இனமக்களின் சாயல் மிகுதியாகவே இருக்கிறது. 16(ஐ) திராவிடரின் நிற மாறுபாட்டுக்குக் காரணமான பண்புக் கூறுகள் இரண்டு வகைப்பட்டவை. மிகப்பெரும்பாலான பொதுமக்கள் கடுவெயிலில் இருந்து உழைக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அத்துடன் அரையில் இரண்டு முழத் துணியும் தலைக்குட்டையையும் தவிர வேறு பாதுகாப்பு இல்லை. எனவே தோலின் கருநிற அணுக்கள் நல்ல பாதுகாப்பாக அமைகின்றன. இந்நிலையில் இயற்கையின் தேர்வுமுறைப்படி எல்லா இந்தியரையும் போலவே திராவிடரும் வெண்பொன்னிறத்தையே பெரிதும் பாராட்டுகின்றனர்! (ஐஐ) நாடகமேடைகளில் பெண்களாக நடிக்கும் சிறுவர்கள் முகத்தில் வெண்பொடி பூசி அதை வெண்பொன்நிறமாக்க அரும்பாடுபடுகின்றனர். ஐரோப்பியர் பார்வையில் அது முழு வெற்றி பெறவில்லைஎன்பது வேறு! மணப் பெண்கள் வகையில் செந்நிறத்திற்கேற்ப மதிப்பு உயர்கிறது. மண விளம் பரங்களில் மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டார் ஆகிய இரு சாராருமே நிறத்தை வற்புறுத்துகின்றனர். (ஐஐஐ) மேல்நிலைக்குடும்பங்களில் மாப்பிள்ளையை இணங்கச் செய்வதற்காக மாமனார் தரும் சீதனம் பெண்கள் செந்நிறமாயிருக்கும் அளவுக்குக் குறைவு. இதனால் செந்நிறம், சாதியைக் குறிக்கும் வடமொழிச் சொல்லே முதலில் நிறத்தைக் குறிக்கிறது. சாதிமுறை உயர்வு தாழ்வும் ஓரளவு செந்நிறம், கருநிறம் என்றவாறே அமைந்துள்ளது. 17. ஆக திராவிடர் நடுநிலக்கடற்பகுதிப் பேரினத்தின் ஒரு கிளையினர்; பிற இனக்குருதிக்கலப்பால் சிறிது மாறுபட்டுள்ளனர் என்பதை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டால், அவர்கள் தம் மூலமுதலிடத்திலிருந்து தொல்பழங் காலத்திலேயே இந்தியாவுக்கு வந்துவிட்டனரெனலாம். நடுக்கடல் இனம் அநனவைநசசயநேயn சயஉந கிழக்காப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கலாம்; அவர்களில் ஒரு பகுதியினர் அரேபியா, தென்பாரசிகம் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்று கொள்ளலாம் என்பர் ஜி. எலியட் சுமித். 18. இக்கோட்பாட்டுக்கு எதிர்க் கோட்பாடு, நடுநிலக்கடல் இனத்தின் மூலமுதலிடமே இந்தியாவில்தான் என்பதே. இன்றைய சிந்து கங்கைச் சமவெளி பண்டு கடலாயிருந்த பழமை ஊழியில் தென் இந்தியா ஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததென்றும், மூலத் திராவிடக்குடியகம் அதுவென்றும், இச்செய்தி தமிழ் மரபுரைகளில் தொனிக்கிறதென்றும் காட்ட முயல்வது பொருத்தமற்றது, ஏற்றுக்கொள்ள இயலாதது.(கண்டங்கள் இன்றைய நிலையை ஒருகோடி ஆண்டுக்கு மன்னரே அடைந்து விட்டன! அப்பொழுது மனிதக்குரங்கு இனம் கூட உருவாக வில்லை!!) 19. எகிப்தில் நடுநிலக்கடலினம் மிகப்பெரும் பழமை உடையது என்பதும், ‘மேலீடாகப் பார்க்கும் அளவிலேயே திராவிட இனப்பண்புக்கும் அதன் சூழலுக்கும் இருக்கும் பொருத்தத்தைவிட, நடுநிலக்கடலினத்தின் பண்புடன் அதன் சூழல் பெரிதும் பொருந்தியிருக்கிறது என்பதும் சரியான முடிபு எது என்பதைத் திண்ணமாகக் காட்டுகின்றன. சென்னையிலிருந்து இங்கிலாந்துக்கு வரும் மாணவர் அக் குளிர் நாட்டு நிலைமையுடன் எளிதாக இசைந்து விடுகிறார்; மாறாகச் சென்னைக்கு வந்ததும் இப்பகுதி வெப்ப நிலையில் நான் இடர்ப்பட்டேன். 20. திராவிடர் வெளியிலிருந்து வந்தார்களானால், எந்த வழியாக வந்திருக்கலாம்? “முற்காலப் பண்பாடுகளின் இடப்பெயர்ச்சிகள்” என்ற நூலில் (பக்கம்:80) பேராசிரியர் கிராஃவ்டன் எலியட் சுமித் “புதிய பண்பாட்டுக்குரிய மக்கள் அதாவது மேல்திசையிலிருந்து வந்த கடல் வழிப் பயணிகள் திராவிடருக்கு முற்பட்ட மக்களுடன் குருதிக் கலப்புற்று அதன் பயனாகத் திராவிடராயினர்”என்கிறார். அவர்கள் கி.மு. 3000 முதற்கொண்டு, பொதுவாகவும்; சிறப்பாக, கி.மு. 800-ஐ அடுத்துப் பெருவாரியாகவும், புறப்பட்டு, எகிப்தில் உருவாகி வளர்ந்த ஞாயிற்றுக் கல் (hநடiடிடiவாiஉ)வழிபாட்டுப் பண்பாட்டுடன் சென்று, பிற இடப் பண்பாடுகளையும் கலந்து கொண்டவராய், பழைய உலகு புதிய உலகு இரண்டின் கடல் தீரங்களிலும் பரந்தனர். (ஐஐ) அவர் கூற்று ‘முத்துச் செம்படவரும் மீன் செம்படவரும் உலோகவாணருமான இம்மேனாட்டுக் கடலோடிகள், பல்லாயிரம் மைல் கடல் பயணம் வழிப் பரந்தனர்’ என்பதாகும். எனவே அப்படிக் குடியேறிய வருள் ஆடவர் பலராக இருந்திருக்க முடியாது; பெண்டிர் சிலர்கூட இருத்தல் அரிது. அவர் குறிப்பிடும் அப்பழங் காலத்தில், சிறந்த திராவிடப் பண்பு உருவாவதற்குப் போதிய கால இடைவெளி இருந்திருக்க வழியில்லை; ஆரியப் படையெடுப்பைமிகப் பிந்தியதாகக் கொண்டாலும் அதற்கும் முன்னரே மேனாட்டு கீழ்நாட்டுப் பண்டை மரபுகள் கலந்து புதுமரபு ஒருவாகி, வளர்ந்திருக்க முடியாது. கி.மு. 1000 - 800 காலகட்டத்துக்கு முன்னரே திராவிடர் இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. 21. திரு. டப்ள்யூ.ஜே.பெரி (1923: வாந உhடைனசநn டிக வாந ளரn ‘கதிரவன் சேய்கள்’ என்ற நூலில்)எகிப்திய நாகரிகத்தினர் ஆறாவது எகிப்திய அரசகுல மரபுக்காலம்3 (கி.மு.2500)முதல் இந்தியக் கடற்கரைகளுடன் போக்குவரவுத் தொடர்புகொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் தருகிறார். “பண்டைக் கடலோடிகள்” (1917) என்ற கட்டுரையில் எலியட் சுமித் இதே முற்பட்ட காலக்குறிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இப்புதுக்கருத்து பொருத்தமிக்கதே. ஆனால் அதனையும் ஒரு சிறு மாறுதலுடன் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. (சிந்து நாகரிகம் கி.மு.3000க்கும் மிக முற்பட்டதென்பது 1924க்குப்பின்னர் அகழ்வாய்வில் தெரியவந்துள்ளது.) 22. கடல்வழிப் பயணக்கோட்பாட்டை மறுத்தால் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் நிலவழியை ஏற்கநேரும். பலுச்சி°தான் கிழக்கெல்லையை அடுத்துத் தற்போது பிராகுவி இனம் அமைந்திருப்பதை மனதிற்கொண்டால் (கைபர் கணவாய் வழி நுழையும்) ஆப்கானிஸ்தான் வழி பொருந்தாது. இன்னொரு பாதை மெசபொட்டேமியாவையும் இந்தியாவையும் இணைக்கும் இரயில்போக்குவரத்துக்காக1920 களில் ஆராய்ந்து கைவிடப்பட்ட பழம்பாதை ஆகும். அது பாரசீக வளைகுடாவிலிருந்து வடகிழக்காகக் குவெட்டா வந்து பின் தெற்கு நோக்கிப் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. இதுவே அவர்கள் வந்த பாதையாயிருக்கலாம். 23(ஐ) மெசபொட்டேமியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள பகுதி வறட்சியடைந்தது இடைக்காலத்திலேதான் என்று நமக்குத் தெரிய வருகிறது. திராவிடர் இங்குவந்த காலத்தில் வேடர், மீனவர் குழு வினராகவே இருந்தனர் எனலாம். அத்தகையவர் தொடர்ந்து முன்னேறத் தூண்டுவதற்குப் போதுமான நீர்வளம், செடியினவளம், வேட்டை உயிரினவளம் ஆகியவை இவ்விடங்களில் இருந்தன என்று கொள்ளலாம். கொண்டால், திராவிடரின் முதற்புடை பெயர்ச்சி (அபைசயவiடிn) பினீசியரின் முதற் புடைபெயர்ச்சியைப் பெரிதும் ஒத்ததாகிறது. ஏனெனில் பினீசியர் மரபுக்கதைகளின்படியே, அவர்கள் பாரசிக வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு அரேபியக் கடற்கரை வழியாகச் செங்கடற்பகுதிசென்று, அதன் பின்னரே நிலையாகப் பாலஸ்தீனக் கடற்கரைப் பகுதியில் தங்கினர் என்று அறிகிறோம். (ஐஐ). அக்காலத்தில் அரேபியா பிற மக்களைத் தன்பக்கமாகக் ஈர்த்து உள்நாட்டில் குடியேற்றுவிக்கும் நிலையில் இல்லை எனலாம். ஆனால் இந்தியாவின் மேல்புறக் கரையில் சிந்து ஆறும், காம்பே வளைகுடாவில் தொடங்கிப் பாலக்காட்டுக் கணவாய்வரை (இன்று இரயில் பாதை செல்லும் போக்கில்) சென்ற பழையபாதையும் இருந்தன. நிலவியல் அடிப்படையில் வளமான இந்தியச் சமவெளிகளை நோக்கி மக்களை ஈர்க்க, இவ்வாய்ப்புகள் போதியவை. 24.(அ). திராவிடர் வந்த காலவரையறைபற்றி இனி ஆராய்வோம். திராவிட நாகரிகம் இந்தியாவிலேயே உருவானது. வெளிச்சூழல்களின் தடங்கள் அதில் சில இருந்தாலும், அது பெரும்பாலும் இந்தியச் சூழலிடையே உருவானதேஎன்பது கீழே விளக்கப்படும் . எனவே இவ்வகையில் கீழ்வரும் செய்திகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்: 1. நடுநிலக்கடல் வெளியிலிருந்து பலுச்சிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் பாதை கட்டாயமாக மெசபொட்டேமியா வழிச் சென்றிருக்க வேண்டும். 2. மேலே விளக்கிய சூழ்நிலைகளை நோக்க இப்புடைபெயர்ச்சி சுமேரிய நாகரிகத் தோற்றத்துக்கு முற்பட்டதாயிருக்க வேண்டும். (ஆ) திராவிடர் பாபிலோனியா வழியாகவே வந்தும், இந்தியாவுக்கு வேளாண்மைப் பண்பாட்டைக் கொண்டு வந்திருக்கவில்லை என்றால், பாபிலோனியாவில் வேளாண்மைப் பண்பாடு பிறப்பதற்குமுன்னர் அவர்கள் அவ்வழியாக வந்திருக்க வேண்டும். (மாறாக அவர்கள் அவ்வறிவைத் தம்முடன் கொண்டுவந்தனர் என்றால், உண்மை இதற்கு நேர்மாறாயிருந்திருக்க வேண்டும்.) (இ) இந்தப் புடைபெயர்ச்சி வகையிலும், இதுபோன்ற வேட்டுவ வாழ்க்கைப் படிநிலையில் உள்ள பிற புடைபெயர்ச்சிகள் வகையிலும் போதிய திட்டமான விவரங்கள் தெரிவதில்லை; காரணங்களை உன்னிக்கத்தான் இயலும். இவ்வாழ்க்கைப் படித்தரத்திலுள்ளவர்கள் புடைபெயர்வது எளிதே; ஆனாலும் ஏதேனும் வலிமைவாய்ந்த தூண்டுதலில்லாமல் இத்தகைய புடைபெயர்ச்சி நடந்திருக்கும் எனக் கூறமுடியாது. 25. தட்பவெப்ப மாறுதல்களை நீக்கிப் பார்த்தால், ‘வேட்டைக் கருவிகளில் முக்கியமான கருவி மேம்பாடும்’ தூண்டுதலுக்குக் காரணமா யிருந்திருக்கலாம். வளைதடி, ஈட்டி தவிர வேறு கருவிகள் இல்லாத ஒரு நிலப்பகுதியில், ஒரு இடத்தில் வில், அம்பு கண்டுபிடிக்கப்பட்டன என்று வைத்துக்கொள்வோம். முதலில் அவ்விடத்தில் உணவு மிகுதியாகக் கிடைக்கும்; இறப்பினைவிடப் பிறப்பு மிகுதியாகும்; ஆனால் நாளடைவில் வேட்டை விலங்குகளில் எண்ணிக்கை குறைந்து புதிய வேட்டை நிலங் களை நாடிப் புதுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் எத்திசையிலாவது இடம் பெயர நேரிடும். மானைக்கொல்லும் கருவியால் மனிதனையும் கொல்லலாம். ஆகவே புதுக்கருவிக்காரர் புடைபெயர்ச்சியை (அபைசயவiடிn)பிறர் தடுக்க முடியாது. அக்கருவியைக் கைக்கொண்டவரோ எனில், உடன் கலந்து தாமும் புடைபெயரவே எண்ணுவர். 26. வேளாண்மைக்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் உள்ள இனங்கள்(சயஉநள), பண்பாடுகள் ஆகியவற்றின் புடைபெயர்ச்சிபற்றிக் கிடைத்துள்ள பல தகவல்களை ஒருங்கு இணைத்துப் பார்த்தால் மேற் கொண்ட கருதுகோள் சரியாகவே தோன்றுகிறது. அயலார் புடை பெயர்ச்சி (அபைசயவiடிn)இல்லாமலும் பண்பாட்டுக் கூறுகள் பரவியுள்ளன புடைபெயர்ச்சியுடன் இணைந்தும் பலகூறுகள் பரவியுள்ளன. இணைந்து நடைபெற்ற இடங்களிலெல்லாம் புதுவரவினர் ‘வேட்டையில் பயன்படும் ஏதாவது புதுக்கருவிகளை’ உடன்கொண்டே வந்துள்ளனர். எடுத்துக் காட்டாக நடுநிலக்கடல் இனத்தவரும் அஸிலியப்(யணடையைn) பண்பாட்டினரும் வடக்கு நோக்கிப் பரவுகையில் வில் அம்புகளைக் கொண்டு சென்றனர். மேற்கு நோக்கிச் சென்ற மாக்லெமோசியப் (அயபடநஅடிளயைn) பண்பாட்டினர் வேட்டை நாய்களைத் தம்முடன் கொண்டுசென்றனர். ஆக திராவிடர் இந்தியாவிற்குள் வருவதற்கு வேட்டையின் வகைதுறைக் கருவிகளில் நிகழ்ந்த மேம்பாடு காரணமாயிருந்திருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது. 27. (ஐ)இன்றிருக்கும் மொழிகளிலிருந்தே பண்டைத் திராவிட வேடுவர்களின் மனநிலை பற்றிய நுண்ணிய (ஆனால் முழுவிளக்கமற்ற) ஒளி கிட்டுகிறது. திராவிட மொழிகளில் தமிழே தூய்மைமிக்கதாதலால், அதன் உதவியை நாடுவோம். தமிழ் மிக அகலவிரிவுடைய நாகரிகத்தின் நீண்டகால வளர்ச்சியில் உருவானது. ஆயினும் அந்நாகரிகத்தைத் தோற்றுவித்து அம்மொழியை செம்மைப் படுத்திய மனப்பண்பு அவர்கள் வேட்டுவ மூதாதையரிடத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். (ஒருக்கால் அம்மூதாதை யரிடம் அப்பண்பு முதிராநிலையில் இருந்திருக்கலாம்.) (ஐஐ) தமிழ்மொழி அதன் நயநுட்பம், அறிவுத் திட்பம் முதவிய வற்றில் மீப்பெரும் தனிச் சிறப்புடையது. அதனைச் சொல்ஓட்டு நிலை மொழி(ஹபபடரவiயேவiஎந டயபேரயபந)என்பர். ஆயினும் சொல்திரிபு மொழியின் தொடக்க நிலையில் உள்ளதென்றே (ஐnவையைட ஐகேடநஒiடியேட ளவயபந) அதைக் குறிப்பது சரி. அதில் வினைகளுக்குத் திணை, பால், இட, விகுதிகள் உண்டு. ஆனால் அவை அவ்வவ் இடப்பெயர்களின் திரிபுகளே; படர்க்கை ஒருமைக்குரிய ஆண்பால், பெண்பால், அஃறிணைவடிவங்கள் அவன், அவள், அது என்பவை; எல்லாக் காலங்களுக்கும் உரிய இதே இடங்களின் வினை விகுதிகள் ஆன், ஆள், அது என்பவையே. (ஐஐ) ஆனால் பெயர்களுக்கும், இடப்பெயர்களுக்கும் விகுதிகள் உண்டு. இவையும் பெரும்பாலான இடங்களில் தனிச்சொற்கள் என்று தெளிவாகத் தெரியும். பெரும்பாலும் எல்லாப் பெயர்ச்சொற்களும் ஒரே மாதிரியாகத் திரிபடைகின்றன. வேற்றுமை விகுதிகளும் ஒருமை பன்மை இரண்டிலும் மாறுபாடற்றவை. பன்மைக்குப் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின்னர் வேற்றுமையுடன் உருபு பெறுவதே அதற்குரிய சிறப்பு.(மாட்டுக்கு; மாடுகளுக்கு) (ஐஐஐ) எதிர்மறை வினையாக்கத்தில் திராவிடச் சிந்தனை நுட்பம் நன்கு விளங்கும். நிகழ்கால வினைக்கு நிகழ்காலச் சின்னமாகிய நிகழ்கால இடைநிலை வேண்டும். அதுபோலவே இறந்தகாலத்துக்கும், எதிர் காலத்துக்கும் அவ்வக்காலத்துக்குரிய இடைநிலைகள் வேண்டும். இத்தகைய (காலம் காட்டும்) இடைகளின் இணைப்பு இல்லாமல் பகுதியுடன் நேரடியாக இடவிகுதி இணைக்கப்பட்டால், வினையின் செயல் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்திலும் நிகழவில்லை என்று மறுக்கப்படுகிறது - அதாவது அது எதிர்மறை (நேபயவiஎந) ஆகிவிடுகிறது. செய்தல் என்னும் பொருளுடைய செய் என்ற வினைப்பகுதியை எடுத்துக் கொண்டால். நிகழ்காலம்: (செய்-கிற்-ஏன்) செய்கிறேன். இறந்தகாலம்: (செய்-த்-ஏன்) செய்தேன். எதிர்காலம்: (செய்-வ்-ஏன்) செய்வேன். ஆனால் எதிர்மறை; (செய்-ஏன்) செய்யேன்.(மிகையான யகரம் புணரியல் முறையில் வேண்டிய உடம்படுமெய் மட்டுமே.) இங்கே ‘செய்யேன்’ என்ற எதிர்மறையின் முழுப்பொருள் செய்கிறே னில்லை, செய்தேனில்லை, செய்வேனில்லை என்பதே. இது அறிவு நுட்பமும் திறமும் வாய்ந்தமுறை. ஆயினும் எதிர்மறையின் எல்லா நுண்ணயங் களையும் இங்கு விளக்கவில்லை. தமிழர் மற்ற எல்லா மொழிகளிலும் நம் ஆங்கிலத்திலும் இருப்பது போன்றே, “இல்லை” என்ற சொல்லையும் கொண்டுள்ளனர். இதில் பிறமொழிகளைப் போலவே இடம் மட்டுமின்றிக் காலமும் குறிக்கப்படுகிறது. (இஃதன்றிக் காலம்குறித்து, இடம் குறிக்காத மற்றொரு எதிர்மறையும், காலம் இடம் இரண்டும் குறிக்காத மற்றோர் எதிர்மறையும் உள்ளன.) (ஐஏ) வினாவாசகங்களிலும் இதேநிலையைக் காண்கிறோம். வாசகத்தில் எந்தச் சொல்லுடனும் சேர்க்கக்கூடிய இடைநிலையாகிய “ஆ” ஒரு வினாக்குறியீடு. அது இலத்தீன் மொழியிலுள்ள “நெ” என்ற அசை போன்றது. ஐயக்குறிப்புடன் இதேபோன்று எல்லாச் சொற்களுடனும் சேர்க்கக்கூடிய மற்றொரு வினாக் குறி “ஓ” என்பது. இது இலத்தீன் மொழியின் “தும்” அடையை ஒத்தது. இலத்தீனத்திலுள்ள “நொன்னெ” (=இல்லையா!) என்ற அசையின் பொருள் வேண்டுமானால், ‘இல்லை’ என்ற சொல்லை அசைகளுடன் சேர்க்கின்றனர். ஆனால் இச்சொல்லுடன் “ஆ” “ஓ” என்ற அசைகளை நேரடியாகச் சேர்க்காமல், வினாக்குறிப்பு ஏற்கும் அடிப்படைச் சொல்லுடன் சேர்க்கின்றனர். சுருங்கக்கூறினால், தமிழ் மொழியின் வினா ஆக்கமுறை மாந்தன் சிந்தனை நயத்தைச் சிறப்பாகக் காட்டுகிறது. (ஏ) இம்மொழியின் மற்றொரு தனிச்சிறப்பு உயர்வு வழக்குகள் மிகப்பல என்பது ஆகும். உயர்வுப்பன்மை முன்னிலையில் மட்டுமின்றிப் படர்க்கையிலும் இடம் பெறுகிறது. இது சிறப்பாக, வல்லாண்மையுடைய மன்னர், மரபுமுறை வழுவாத அரசவையோர், சமயகுரவர் ஆகியவர்கள் இடம் பெற்றிருந்த பிற்கால சமூக அமைப்பு முறையின் விளைவே என்னலாம். (ஏi) தமிழ் யாப்புமுறை கிரேக்க இலத்தீன மொழிகளைப் போலவே அளவு (ளூரயடவைல)அடிப்படையானது. அதில் எதுகை உண்டு; ஆனால் இவ்வெதுகை அடியீற்றிலல்ல, அடியின் முதலில் இடம்பெறுகிறது. மோனை உண்டு; ஆனால் இது யாப்படிகளை இணைப்பதன்று, அடியினுள் இயல்வது. 28. தமிழிசை காற்சுரங்கள் (ளூரயசவநச வடிநேள)அடிப்படையானது. அதாவது இசைநிலையிலுள்ள ஏழு சுரங்களின் இடத்தில் தமிழிசையில் இருபத்தெட்டுச் சுரங்கள் உண்டு. 29. நுட்ப ஆராய்ச்சித்திறமும் முழுநிறை விளக்கப் பண்பும் இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்புப் பண்புகள். இவை இப்பண்புகளை இயற்றவும் இயக்கவும் வல்ல சிறந்த மக்களினத்தினிடமிருந்தே தோற்றியிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் தமிழ் மொழி வளர்ச்சியிலும் இடம் பெற்றது இயல்பே. திராவிட மொழிகளில் தூய்மைமிக்க தமிழ் இச்சிறப்புகளை உச்ச அளவில் கொண்டிலங்குகிறது; வேறு எந்த இந்திய மொழியையும் விட தமிழில் இப்பண்பு மிகுதி. பேராசிரியர் ஹெச்.ஜே. ஃவ்ளூரின் (h.த.கடநரசந) குறிப்பு தென்னிந்திய மக்களின் இனப்பிரிவுகளும் (சயஉநள) அவற்றிடையே பண்டு இருந்த பண்பாட்டுத் தொடர்புகளும்: 30.தென்னிந்திய மக்களிடையே தலை(மண்டையோட்டு)வடிவமைதி (உசயniடிடடிபல) பல்வேறு வகைப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியத் தென் பாதியில் அது நீண்டு ஒடுங்கிச் (னடிடiஉடிஉநயீhயடல)சற்று உயர்ந்துள்ளது. ஒரு சில தனியிடங்கள் நீங்கலாக, திராவிட இந்தியாவில் தலைகள் பொதுவாக நீளமாகவே இருக்கின்றன. மேனி மட்டும் பொன்னிறமாய் இருப்பினும் மற்றப்படி இத்துடன் ஒத்த மண்டையோட்டுமாதிரிகள்(வலயீநள) தென்மேற்கு ஆசியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆகவே (நிறம், மூக்குப் பரிமாணம் தவிர மற்றப்படி) அரேபியாவிலுள்ள செமித்தியத் தலை, திராவிடத் தலை படிவ ஒற்றுமைபற்றி ஐயப்பட வேண்டியதில்லை. இதுபோலவே வட ஆப்பிரிக்கா மற்றும் நடுநிலக்கடலில் பரந்த மேலைப் பகுதி சூழ்ந்த நாடு களின் மக்களின் சராசரி பரிமாணங்களுடனும் ஒப்புடையது. 31. மிக நீண்டொடுங்கிய உயர்தலைகள், குட்டையான அகன்ற மூக்குகள், முனைப்பான (பலர் திண்ணிய உதடுகளுடன்) மோவாய்கள் ஆகியவற்றை உடைய தனி நபர்களை நாம் மேற்கூறிய எல்லா இனக் குழுவினரிடையிலுமே(சயஉநள) பார்க்கிறோம். இப்பண்புகள் மூலம் அவர்கள் பிரான்சிலுள்ள ‘கிரிமால்டி’க் குகையிலிருந்தும் (ழுசiஅயடனi உயஎநள) ‘கோம்பே கப்பெ’லிலிருந்தும்(உடிஅநெ உயயீநடடந) அகழாய்வில் கண்டெடுத்த பழங்காலப் படிவ மாதிரிகளின் வழிவந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்களைப் போன்ற பண்டைப் படிவங்களின் படிவ வளர்ச்சி முதிர்ச்சியின் விளைவாகவே, ஐபீரியத் தீவக் குறையிலிருந்து (°பெய்ன், போர்ச்சுகல்) தென்னாடு வரை தற்காலம் தலைமை வாய்ந்துள்ள இனங்கள் எழுந்துள்ளன; பற்பல சூழல் தாக்குதல்களால் அவர்கள் வளர்ச்சி யடைந்த முறை மட்டும் ஓரளவு வேறு பட்டிருக்கலாம். 32. தென்மேற்கு ஆசியாவில் குளிர்காலம் நீண்டது. ஆகவே மூச்சுக்காற்று மூச்சுப்பைக்குள் செல்லும் வழியில் அதனை வெதுவெதுப் பாக்குவதற்கேற்ற முறையில் நீண்ட மூக்கு அமைந்துள்ளது. இதனால் முகத்தின் பொது முனைப்பும் மிகுந்துள்ளது. வடஆப்பிரிக்காவிலும் தென் இந்தியாவிலும் வெப்பமண்டலத்தின் தட்பவெப்ப நிலை மேனியின் கரு நிறக்கூறுகளைப் பேரளவு பெருக்கியுள்ளது. அத்துடன் தோலின் மயிர்த் தொளைகள் தளர்ச்சியடைவதால் மயிர்பல இடங்களில் சுருட்டையாகும் போக்கும் உண்டு. ஆயினும் இம்மாற்றங்கள் ஆப்பிரிக்காவில் ஹாமித்திய இனத்தார் வாழும் வடஆப்பிரிக்கப் பகுதிக்கு தெற்கேயுள்ள அகல்சமவெளி யில்தான் முழுநிறைவு பெறமுடிந்துள்ளது. ஆனால் தென் இந்தியாவில் தெற்கு நோக்கி வருந்தோறும் அது அருகி அருகி வந்து, முற்றிலும் மறைந்துவிட்டது. நடுநிலக்கடற்பகுதியில் வெப்பங் குறைந்த தட்பவெப்ப நிலைச் சூழலாலும், வடஐரோப்பிய, வடமேற்கு ஐரோப்பிய மக்கள் தொடர்பு களாலும் கருநிறக் கூறுகள் வளர்ச்சி குறைந்தது; அத்துடன் முகச்சாயல் களும் பேரளவில் ஒழுங்குபட்டுள்ளன. 33. ஐரோப்பாவின் பழங்கற்கால ஊழிகளில் நீண்டநாட்களாக (சகாரா, அரேபியா, பாரசிகம், துருக்கிஸ்தானம் ஆகிய இடங்கள் இடைக்காலங் களிலிருந்து இன்றுவரை இருப்பதுபோலிராமல்) மனிதவாழ்க்கைக்கு மிகவும் உகந்த சூழ்நிலை இருந்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட இம்மாறு தலுக்குக்காரணம் பனிக்கட்டி ஊழியின் பிற்பகுதியில் பனிமண்டலம் குறைந்து அதனால் வெப்பமண்டலம் வடக்குநோக்கிச் சென்றதேயாகும். சிறிதளவு கருநிறக்கூறும் நீண்டதலைவடிவமும் (னடிடiஉடிஉநயீhயடiஉ) உடைய மனிதஇனம் ஐபீரியத்தீவக்குறை தொடங்கி வடஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, தென்இந்தியா ஆகிய இடங்களடங்கிய ஒரு பெரும்நிலப்பரப்பில் பரவியிருந்தனர் என்று கொள்ளலாம். 34. இங்கே கூறிய தட்பவெப்பநிலை மாறுபாட்டுடன் மேற்கு நடுநிலக்கடல் பகுதி, சூடானிய (ஹாமித்தியஇன)ப் பகுதி, செமித்திய (அரேபியாவைச் சூழ்ந்த ஈரப்பண்பு தோய்ந்த நில)ப் பகுதிகள், ஈரானியப் பகுதி, இந்தியப் பகுதி ஆகியவற்றுக்கிடையே நூற்றுக்கு நூறுவரை இல்லாவிட்டாலும், பெருமளவு மாறுபாடுகள் ஏற்பட்டன. அதுமட்டுமன்றி, மேற்கூறியது போன்ற சற்றுக் கவர்ச்சிமிகுந்த நன்னிலங்களை நோக்கி மக்கட்செறிவு பரவவும் தொடங்கிற்று. 35. இதனால்தான், மனித இனக் கூற்றாராய்ச்சியாளர்கள் நடுநிலக் கடல் இனம், ஹாமித்திய இனம், செமித்திய இனம், ஈரானிய இனம், திராவிட இனம் என்று வகுத்த பல இனமாதிரிகளின் (சயஉயைட வலயீநள) எச்சமிச்சங்களை மேற்கூறிய மண்டலங்கள் எல்லாவற்றிலுமே காண முடிகிறது. ஆனால் அதேசமயம் ஒவ்வொரு பகுதியிலும் அவ்வப் பகுதியின் சூழலுக்கு உகந்தபடி வளர்ச்சி முறை நோக்கிய முன்னேற்றத்தையும் காண்கிறோம். இதனால் ஒவ்வோரிடத்திலும் பேரளவான வேறுபாடுகளையும், அவற்றின் ஊடாக அடிப்படையில் பேரளவான பொது ஒற்றுமைகளையும் காண்கிறோம். இவ்வொற்றுமை இம்மண்டலத்துக்கு வெளியிலும் பல இடங்களில் உண்டாயினும், அவற்றை நாம் இப்போது இங்கே கவனிக்கத் தேவையில்லை. 36. எடுத்துக்காட்டாக, நடுநிலக்கடல் இனம் ஆப்பிரிக்க இனங்களுடன் தொடர்புகள் உடையது; ஹாமித்திய இனத்திலிருந்து அது சில பரிமாணங் களில் மட்டுமே மாறுபடுகின்றது என்று கூற இடமுண்டு. தொடக்கத்தில் மாறுபாடு மிகுதியில்லாத ஒரே சூழ்நிலையில் அடைந்த வளர்ச்சி அவர்களை அடிப்படை ஒற்றுமை உடையவர்களாக்கிவிட்டது. இதுபோலவே செமித்திய, ஈரானிய, திராவிட அல்லது இந்திய இனங்களும் ஒன்றுக்கு ஒன்று படிப்படியான மாறுதல்களைக் காட்டுகின்றன. தென் இந்தியா இந்த மாறுதல் இயக்கத்தில் ஒரு கடைக்கோடியாகும். ஒரு புறம் தென் இந்தியாவிற்குள்ளேயே இந்த மாறுதல் படிகள்பலவற்றைப் பார்க்கிறோம். மறுபுறம் இவற்றுடன் மேலை நாடுகளில் உள்ள பல ஒற்றுமைகளையும் மிகத் தெளிவாகக் காண்கிறோம். 37. புதிய கற்காலத் தொடக்க முதலாக ஐரோப்பாவில் வாழ்க்கை வளத்துக்குரிய பல புதுப்புனைவுகள் ஏற்பட்டதற்கான சான்றுகள் கிடைக் கின்றன. புதிய செடியினம், உயிரினங்கள் உருவாக்கப்பட்டன . இதிலிருந்து குடும்ப நிலை முன்னேறியிருந்ததென்றும், குழந்தைகளுக்கான மெல் லுணவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின என்றும் அறிய முடிகிறது. பின்னர் மட்பாண்டக்கலை வளர்ந்தது . மரம் வெட்டுவதற்கான ஆப்பு வடிவான கோடரி தோன்றியது. சக்கரங்களும் நாகரிகத்துக்குரிய அதுபோன்ற பல நுணுக்கக் கருவி முறைகளும் சாதனங்களும் ஏற்பட்டன. பழைய கருவிகலும் திருந்தின நயமாயின. இம்முன்னேற்றங்கள் பெரும்பாலும் பாலைப் பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களிடமே காணப்பெறுகின்றன. பலூச்சிஸ்தானத்தின் கடற்கரைப் பகுதி இத்தகைய புடைபெயர்ச்சிக்குரிய மண்டலம் என்பதை, அதன் பிற்பகுதியில் இன்றும் பிராகுவி மொழி எஞ்சியிருப்பதன் மூலம் உணரலாம். 38. யூப்ரட்டிஸ், டைக்ரிஸ் ஆற்றுத் தாழ் நிலங்களில் பிற் காலங்களில் மாபெரும் நாகரிகங்கள் ஏற்பட்டதை நோக்க, இந்தியாவில் உருவான திராவிட நாகரிகத்தின் மீது தொன்றுதொட்டுப் பாபிலோனிய நாகரிகத் தாக்க விளைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறன்று. 39. கி.மு. 800-வரை கடற்போக்குவரத்துத் தொடர்பு மிகவும் குறைவே என்று அணிமைவரை நம்பப்பட்டிருந்தது. ஆனால் மினோவா நாகரிகம், கிரீத் நாகரிக மூலமாக, அரசமரபுக்கு முற்பட்ட எகிப்துடனும்(யீசந- னலயேளவiஉ நபலயீவ), கி.மு. மூவாயிர ஆண்டுக்குரிய சுமேருடனும் தொடர் புடையதாயிருந்தது. அத்துடன் தொல்லியல் ஆய்வு மூலம் அது மேற்கு ஐரோப்பாவுடனும் தொடர்புடையதாயிருந்தது தெரிகிறது. ஆகவே, கடற்போக்குவரவுத் தொடர்பு ஏற்பட்ட காலம் அதற்கும் நெடுங்காலம் முற்பட்டதென்றும், கி.மு. 3000லிருந்தே மிகப் பேரளவாயிருந்ததென்றும் காணலாம். 40. சுமேரியப் பழங்கதைகளின்படி, தேவர்கள் மக்களுக்கு நாகரிகப் பண்பாட்டை முதன் முதலில் கொடுத்த பொன்னுலகம் பாரசீக வளை குடாவினை அடுத்த ‘தில்முன்’(னடைஅரn) என்று கூறப்படுகிறது. மேலும் சூசா, மூசியன், ஊர், எரிது முதலிய முற்பட்ட நாகரிகங்களுக்குரிய ஒரே நிறத்தின் பலதிறச் சாயல்களமைந்த, உருக்கணக்கியல் (பநடிஅநவசல) படிவங்கள் வாய்ந்த மட்பாண்டங்கள், பிற புதுக்கற்கால நாகரிகப் பண்புகள் ஆகியவற்றின் தடயங்களை, புஷயர்த்தீவில் கண்டதாக பெசார்டு(அ.யீநணயசன)குறிக்கிறார். தைகிரிஸ் ஆற்று மேல் பகுதியை அடைந்தபின்னர் சுமேரியர் நாகரிகம் விரைந்த திடீர் வளர்ச்சி பெற்றது பேரீந்துமரச் சூழலின் காரணமாகவே ஆகும். அவர்களின் எழுத்துப் பதிவுகளிலேயே (உரநேகைடிசஅ வயடெநவள)“தில்முன் ஈந்தம் பனைகள் நிறைந்த இடம்” என்று குறிக்கப்படுகிறது. 41. எலம், சுமேர் ஆகிய இரண்டு இடங்களிலுமுள்ள வண்ண மட்பாண்டங்களின் தோற்றம் கி.மு. 4000-க்கும் முன்னர் செல்கிறது. சூசாவும் அதே காலத்ததே. ஆனால், பேரீந்துகள் பற்றிய விவரம் கிடைப்பது கி.மு.3200 முதல் தான். சார்கன் (ளுயசபடிn) என்ற அரசன் (ஏறத்தாழ கி.மு.2800-ல்) சைப்ரசுடன் (ஊலயீசரள) தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. (கேம்பிரிட்ஜ் பண்டை வரலாறு. ஏடு1-இயல் 10 (1923)) பண்டை நாட்களில் எரிது, வகாஷ் ஆகியவை கடற்கரை நகரங்களாயிருந்தன. ஆனால் ஹமுராபியின் காலத்திற்குப்பின் (கி.மு.2100) கடல் பின் வாங்கி, எரிது நகர் சிறப்பிழந்தது. நேரடியாகவே இந்தியாவுக்கும் மெஸபொட்டேமியாவுக்கும் நாகரிகத் தொடர்பு இருந்தது என்று காட்டக் காலவரையறையுடைய அகழாய்வுச் சான்றுகள் கிட்டாவிட்டாலும், இச்செய்திகளால் அத்தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. (1924 க்குப்பின் சிந்து நாகரிக அகழாய்வுச் செய்திகள் வெளிவந்து அத்தகைய தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுவிட்டது) 42. ‘முற்கால நாகரிகப் புடை பெயர்ச்சி’ (ஆபைசயவiடிளே டிக நுயசடல ஊரடவரசநள) என்ற நூலின் ஆசிரியர் கிராப்டன் எலியட் சுமித், ‘கதிரவன் சேய்கள்’ என்ற நூலின் ஆசிரியர் டப்ள்யூ. ஜே. பெரியும் வியந்து குறிப்பிடும் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிக்கூறு “உலோகக் கனித்தடங்களுடன் தொடர்புடையதாகக் குறிக்கப்பெறும் கல்சின்னங்கள் ஆநபயடiவாள தெக்கணத்தில் காணப்பெறுவது” பற்றியது. இக்கல்மாடங்கள் ஒருபுறம் பசிபிக் மாக்கடல் பகுதியிலுள்ள இதே போன்ற கல்மாடங்களுடனும் மற்றொரு புறம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே ஜார்ஜியா, யூக்ஸின், கிரிமியா, திரேஸ் ஆகிய இடங்களில் காணப்படுபவற்றுடனும் தொடர்புடையவை என்று கூறலாம். 43. இந்தக் கடல்வழித் தொடர்பு இந்தியாவுடன் கி.மு. 3000 லிருந்தே உண்டு என்று திரு.பெரி கருதுகிறார். ஆனால் மாடக்கற்களின் (னடிடஅநளே)பரப்பு நோக்க நிலவழித் தொடர்பையும் கருதலாம். தவிர “பிராகுவி” சான்றும் கடல்வழி, நிலவழி ஆகிய இரு வழிகளுக்கும் பொது ஆதாரமாகவே உள்ளது. இங்ஙனமாக ஏற்கெனவே நீடித்து நிலவி ஊன்றியிருந்த மெஸபெட்டோமி யாவின் உயர்ந்த நாகரிகத்தின் தாக்கம் கி.மு.2500-க்கு முன்பு இல்லா விட்டாலும், குறைந்த அளவு அக்காலத்திலேனும், திராவிட இந்தியாவின் மீது ஏற்பட்டதெனலாம் . முற்காலக் கடல்வழி வாணிகத்துறையில் மேற்கு, தென் மேற்கு ஐரோப்பாவில் எத்தனையோ கடற்கரைப் பகுதிகளில் அகல் மண்டையோடு (செயஉhலஉநயீhயடiஉ) மனிதர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இவ்வகையில் திரு.ஹார்னெல் (ழடிசநேடட. 1923 லிவர்ப்பூல் பிரிட்டிஷ் சங்க உரையில்) சுட்டிக் காட்டியுள்ளபடி இந்தியாவின் தென்மேற்கு, தென்கிழக்குக் கரைகளில் அகல் மண்டையோடுடைய மீன்படவர் இருப்பதை ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். 44. முடிவாக, நம் கண்முன் ஏற்படும் கருத்தோவியம் இது: இந்தியாவில் முற்கால மனித இனம் அழிவுபடாமல் எஞ்சியிருந்தது. படிப்படியாக வரண்டுவரும் பகுதிகளிலிருந்து புதுக்கற்காலம்முதல் நடுநிலக்கடல் இனம், ஹாமித்திய இனம், செமித்திய இனம் என்று கூறப்படும் பல்வகை நீண்ட தலையோட்டு (னடிடiஉடிஉநயீhயடiஉ)மக்கள் வரவால் அது படிப்படியாக வளர்ச்சி பெற்றது. அவர்களே பெரும்பாலும் அவ்வக்காலத்துக்குரிய பல கருவி மேம்பாடுகளையும் கொண்டுவந்திருக்கலாம். முற்றிலும் வேடராயிருந்த நிலையிருந்து இவை அவர்களை உயர்த்தியதுடன், வேளாண்மையின் தொடக்க நிலை வளர்ச்சியைக் கூட அவைகளே ஏற்படுத்தியிருக்கக் கூடும். 45. கி.மு. 3000 ஆண்டுகாலத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு பொதுப் பண்பு யாதெனில், நெடுந்தொலைவுத் தொடர்புகள் ஏற்பட்டதாகும். இது இந்தியாவிலும் தடம் பதிக்காமலிருக்க முடியாது. இவ்வகையில் மேல் திசையுடன் ஏற்பட்ட தொடர்புக்குரிய மூன்று நெறிகளாவன: (1) மெசபொட்டேமியாவிலிருந்து கடல்வழியாகப் பாரசிகக்குடா, அராபிக்கடல் கரையோரமாகவரும் நெறி. (2) மெஸபொட்டேமியாவிலிருந்து இந்தியா வரும் நிலப்பாதைகள். (3) எரித்ரியன் கடல் (செங்கடல்)சுற்றுப் பயணம் (ஞநசiயீடரள டிக வாந நுசலவாசநயn ளுநய) என்ற நூல் விவரித்துள்ளபடி செங்கடலிலும், பண்ட் (யீரவே) நாட்டிலும் உள்ள எகிப்தியத் துறைமுகங்களிலிருந்து வரும் கடல்நெறி. 46. ஆரியர் வருகைக்குக் குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன் பாகவே இங்ஙனம் இந்தியா வந்தடைந்த பண்பாட்டுக்கூறுகள் ஏற்கெனவே இந்தியாவில் குடிபுகுந்திருந்த மற்ற உயர் இனங்களுடன் கூடிக் கலப்புற்றன என்றும், திராவிடப் பண்பாடு அக்கலப்பின் வழி ஏற்பட்டதே என்றும் கூறுவது பொருந்துவதாகும். பேராசிரியர் புளூர் அனுப்பிய பின் குறிப்பு 47. இந்தக் குறிப்புகள் ஆசிரியர்(சிலேட்டர்) ஆராய்ச்சிக்குப்பயன் படுத்திட முற்குறிப்பாக முதலில் தரப்பட்டிருந்தது. பிறஆய்வுரைகள் அடிப்படையில்தான் ஜியூபிரிடா ரிக்கரியின் ‘ஆசிய மனித இனக் கூற்றாராய்ச்சியின் பருவரைக்கோடுகள்’ (டீரவடiநேள டிக ய ளுலளவநஅயவiஉ ஹவோசடியீடிடடிபல டிக ஹளயை: ழுரைகசனைய சுரபபநசi). (கல்கத்தா, 1921) கேம்பிரிட்ஜ் பண்டைவரலாறு (பக்,2923), மனித இன ஆராய்ச்சி சார்ந்த ராயல் கழக இதழ் (துடிரசயேட டிக வாந சுடிலயட ஹவோசடியீடிடடிபiஉயட ஐளேவவைரவந). (1916, 1918, 1921) “மனிதன்” (அயn)என்ற இதழ் உள்ள ஹெச்.ஜே. புளூர் கட்டுரைகள் முதலியவவையே மூலச்சான்றுகளாகிய அப்பிற ஆய்வுரைகள் ஆகும். ? 2. ஆரியர் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளைச் சரியாக மதிப்பிடு வதற்குப் பெருந்தடையாக உள்ளது “ஆரியக் கட்டுக்கதை” (யசலயn அலவா) பரப்பப்பட்டு அதுவே சரி எனப் பலரும்(தவறாகக்) கருதுவதுதான். தாம் ஆரியர், தம் சமயமும் தம் நாகரிகமும் ஆரியச் சார்பானவை என்ற (ஆதாரமற்ற) எண்ணத்தை இந்தியருள் பெரும்பான்மையினர் ஆர்வக் கோளாறினால் கொண்டுள்ளனர். 2. இந்தியாவினுள் வடமேற்கிலிருந்து நுழைந்து சம்ஸ்கிருத மொழியைக் இங்கு கொண்டுவந்து புகுத்தியவர்கள் என்ற பொருளுடன் ‘ஆரியர்’ என்ற பெயரை வழங்கினால் தவறில்லை. ஆனால் மாக்ஸ் மூலர் (அயஒ அரநடடநச)பெருவழக்காகப் பரப்பியபடி, “மற்றெல்லா இனங்களையும்விட ஆரியர் நாகரிக மேம்பாடுடையவர்கள்; ஐரோப்பா, ஆசியாவில் எங்கோ இருந்ததாக உன்னிக்கப்படும் ஆரியத்தாயகத்திலிருந்து பெயர்ந்து பாரசிகம், ஐரோப்பா ஆகிய இடங்களிலெல்லாம் குடியேறியவர்கள்; ஆங்காங்கு வாழ்ந்த முந்தைய மக்கள் அனைவரும் சிந்தனை, உடற்கூறு, பண்பாடு இவற்றில் ஆரியரைவிடத் தாழ்ந்தவர்கள்; அவர்களைத் துரத்திவிட்டு அல்லது அடக்கிவிட்டு அவ்விடங்களைத்தமதாக்கிக் கொண்டு, அவற்றை “இந்தோ-ஐரோப்பிய மொழி”யின் கிளைகளான சம°கிருதம் போன்றவற்றைப் பேசுபவர்களுக்கு அடிமையாக்கினர்” என்ற பொருள்பட ஆரியர் என்ற சொல்லை வழங்குவது நேர்மையற்றது. 3. அத் தவறான கருதுகோளை உண்மைச் செய்திகளுடன் பொருத்தி மெய்ப்பிக்க வலிந்து செய்த முயற்சிகள் தகர்ந்துவிட்டன. இறுதியில் இனம் சயஉந என்பது மொழி அடிப்படையில் மட்டும் அமையாது என மாக்ஸ் மூலரே ஒத்துக்கொண்டார். ஆயினும் ஐரோப்பாவில் இக்கோட்பாடு இன்னும் (1924) முழுமையாகக் கைவிடப்படாமல் உள்ளது. ஹெச்.ஜி.வெல்ஸ் தம் “மாந்தர் வரலாற்றில்”(ழளைவடிசல டிக அயமேiனே) ‘நார்டிக் ஆரியர்’ (சூடிசனiஉ ஹசலயளே) என்ற சொல்லை வழங்குகிறார். ஆனால், ஆரியர் இனத் தொடர்புக்கூறுகள் எதுவாயினும், வடமேற்கு ஐரோப்பியருக்குரிய தனித் தன்மைகளான நீலநிறக் கண்களும், வெண்ணிற மேனியும் மூல ஆரியர்கள் பண்பாக ஒருகாலும் இருந்திருக்க முடியாது. ஆனால் நீலநிற சாம்பல்நிறக் கண்களை இந்தியரிடம் மேல் கடற்கரையில் மட்டுமே ஒரு சிலரிடம் காணலாம் கடல் வாணிகத் தொடர்பு காரணமாக. 4. இந்தியாவில் ஆரியக் கோட்பாடு மக்களது ஆதாரமற்ற உணர்ச்சியின் அடிப்படையிலேயே இயங்குகின்றது; தாங்கள் ஆரியர் என்பதிலும், ஆரியரிலும் தாங்களே மூத்தமரபினர் என்பதிலும் இந்தியர்கள் போலிப் பெருமை கொள்கின்றனர். ‘பிரிட்டிஷ், பிரஞ்சு, ஜெர்மன் ஆரியர்’ தங்களை விடக் குறைந்தகால வரலாறுடைய ஆரியர் என்றும், மிக அணிமைக் காலம்வரை அவர்கள் ஆரியரின் முழு நாகரிக முதிர்ச்சி பெறாத நிலையின ராகவே இருந்தனர் என்றும் எண்ணித் தற்பெருமை கொள்கின்றனர். முந்திய இயலில் குறிப்பிட்ட “திராவிட இனத்தின் பண்டை இனத்தொடர்புகள், பண்டை இனப் பண்பாட்டுக் கலப்பு” ஆகியவற்றைப் பற்றி பெரும்பாலான இந்தியருக்கு ஒன்றுமே தெரியாது என்பதால், திராவிடராக எவரும் கருதப்பட விரும்புவதில்லை; அங்ஙனம் கருதினால் தங்களை மேலை ஐரோப்பியருடன் இனத்தொடர்பு அற்ற மட்ட இனமாகக் கருதுவர் என்று அஞ்சுகின்றனர்!. ஆரியராகக் கருதினால், மதிப்புயர்வு கிடைக்குமென்பது தவிர இக்கோட்பாட்டுக்கு வேறு ஆதாரம் இல்லை. 5. அணிமையில் மயர்ஸ் (ஆலசநள) குதிரை பற்றிய தம் வரலாற்றாராய்ச் சியில் கேம்ப்ரிட்ஜ் பண்டைவரலாறு ஏடு 1 : பக்கம்-106-7. ஆரியர் பரவல், அதன் காலம், அவர்கள் அடிப்படைப் பண்புகள் ஆகியவை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். “பழங்காலமுதல் உணவுக்காக குதிரை வேட்டையாடப்பட்டு வந்துள்ளது. ஆனால், நடு ஆசிய மேட்டு நிலத்துக்கு வெளியே, எங்கும் பால்தரும் வீட்டு விலங்காகக்கூட அது பழக்கப்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் கிட்டவில்லை. “ஐரோப்பாவில் ‘ஹால்ஸ்டட்’ ழயடளவயவவ பகுதியில் வழங்கிய நாகரிகம் தான் “குதிரையை ஏறியூர்வதற்கும் வண்டியிழுப்பதற்கும் ஒருங்கே பயன்படுத்திய” முதல் நாகரிகம் ஆகும். ஆசியாவில் இதற்கான முதல் தெளிவான சான்று, கி.மு. 2100-க்குரிய ஒரு பாபிலோனியப் களிமண் ஓட்டுப் பொறிப்பேயாகும். அது, ‘கீழ்த்திசைக்குரிய, மலைப்பகுதிக்குரிய, கழுதைகள்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதுவரைக் கழுதை மட்டுமே வழங்கிவந்த ஜாக்ராஸ் மலைத்தொடருக்கு மேற்கேயுள்ள மக்களுக்கு அது அன்று புதிய பழக்கமாகவே இருந்திருக்கிறது. 6. குதிரையின் வரவு ஈரானிலிருந்தும், அதற்கப்பாலிருந்தும் திரண்டு படையெடுத்துவந்து, கி.மு.1750-இல் பாபிலோனின் ‘காசைட்’முயளளவைந மரபை நிறுவிய புதிய மக்களுக்குரியதாகவே குறிக்கப்பெறுகிறது. முல்லைநில நாகரிகத்தைத் தானாகப் பிறப்பித்து வளர்க்கும் தன்மை ஈரானிய மேட்டு நிலத்தில் இன்றும் இல்லை, அன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லைஎனவே, மேற்சொன்ன படையெடுப்பு இன்னும் சற்று வடகிழக்கிலிருந்து, அதாவது சர்மேஷியன்(ளுயசஅயவயைn) சமவெளியிலிருந்தே தொடங்கியிருக்கலாம். சமகாலத்தில் இல்லா விட்டாலும் முக்கியத்துவத்தில் அதே வடதிசைத் தாயகத்திலிருந்து(பின்னர்) இந்தியாவுக்குப் புடைபெயர்ந்து வந்த ஆரியமொழி பேசிய மக்கள் வரவுடன் அது தொடர்புடையதே. ஐரோப்பாவில் நீப்பர் ஆறு கடந்து கலிஷியா (ழுயடiஉயை) வழியாக பொஹீமியாவுக்கும், பால்கன் தீவக்குறை வழியாகச் சிறிய ஆசியாவுக்கும் சென்ற புடைப்பெயர்ச்சிகளுடனும் இதனைத் தொடர்புபடுத்தலாம். 7. எனவே, ஆரியர்கள் மற்ற இனங்களை நோக்க நாகரிகம் குன்றியவர்கள்(யெசயெசiஉ inஎயனநசள)தாம் எனினும் விரைந்து, மிகப்பலர் படையெடுக்கச் சாதகமான குதிரைகளுடன் வந்திருக்க வேண்டும் என்று கருதலாம். குதிரைவீரர்களைப் பயன்படுத்தி அரசியல் ஆதிக்கம் பெற்றனர். சுமேரியரும் திராவிடரும் செல்வம், நாகரிகம் போன்றவற்றில் மேம்பட்டிருந்தாலும், ஆற்றலும் வெற்றியும் தரும் குதிரைப் படை அவர்களிடம் இல்லை; சக்தியற்றவர்களாகவே இருந்தனர். அவர் களுடைய திரண்ட செல்வமும் பகைவர்களை ஈர்த்தது. குதிரை மட்டுமின்றி பல புதுமைகளையும் (இறந்தோரை எரியூட்டும் வழக்கம், அதனுடன் தொடர்புடையதான “இறப்புக்குப் பின் மறுஉலகில் உயர்நிலை” பற்றிய கோட்பாடு முதலியவை) கொணர்ந்தனர். இவை திராவிடருடைய பழைய நம்பிக்கைகளை அழிக்காவிடினும் உடன் கலந்துவிட்டன. 8. குதிரை பயன்பட்ட நாகரிகம், குதிரைக்கு முற்பட்ட கால நாகரிகம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளை ஒப்பிடும் கிரேக்க புராணக் கதை ஒன்று உண்டு. தேவன் பாசிடானும் (ஞடிளநனைடிn) தேவி அதேனாவும், அதேன்ஸ் (ஹவாநளே) நகரத்திற்கு யார் பெயரை வைப்பது என்பது பற்றிப் போட்டியிட்டனர். யார் தரும் நன்கொடை மதிப்புயர்வடையதோ, அவர் பெயரையே ஏற்பதென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாசிடான் குதிரையைக் கொடுத்தார். அதேனா தேவதாரு மரத்தை (டீடiஎந வசநந). அளித்தார். தேவர்கள் நடுவர் குழு அதேனா பக்கமே தீர்ப்பளித்தது. ஏனெனில், அதேனாவின் நன்கொடை அமைதி சார்ந்தது. பாசிடானின் நன்கொடையோ போருக்கே பயன்படுவது. இதையொத்த காரணங்களினால் எகிப்திய நாகரிகத்தை ஹிக்ஸோ நாகரிகத்துக்கும், ரோமன்-கிரேக்க நாகரிகத்தை அதனை வீழ்த்திய துருக்கிய நாகரிகத்துக்கும் மேம்பட்டதாக கருதலாமானால், ஆரியப் படையெடுப்புக் கால திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகத்துக்கு மேம்பட்டதாகக் கருதத் தடையில்லை! 9. இந்திய நாகரிகத்தைப் பொறுத்தும் இதுபோலவே, (இன்னும் முக்கியமாக திராவிட ஆரிய நாகரிகக்கூறுகள் எந்த விழுக்காட்டளவில் ஒன்றுகூடியிணைந்துள்ளன என்னும் வகையில்) நாம் நடுநிலையுடன் ஆராயவேண்டும். முற்கால கிரேக்க வரலாற்றின் ஒப்புமை இதற்குத் துணைசெய்வது ஆகும். ஆனால், ஒப்புமை முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டுமாயின், நாம் அதனைச் சற்று மாறுபடுத்திக் கற்பனைசெய்து பார்க்க வேண்டும். நாகரிகமற்ற ஆரிய, கிரேக்க முரடர்கள் படையெடுப்புகள் மினோவ, மீசினிய நாகரிகங்களை முற்றிலும் அழித்தன என்பது வரலாறு. ஆனால் “அங்ஙனம் அழிக்காமல் கொரிந்த் வளைகுடாவைக் கடந்து அம்முரடர்கள் செல்லவில்லை என்றும்; பெலப்பொனெஸ் தீவக்குறை மட்டும் தன் பண்டைய மொழியையும் பண்பாட்டையும் காத்து நிலைபெற வைத்துக்கொண்டது” என்றும் (நடக்காத ஒன்றை) நாம் கற்பனை செய்தால், கிரேக்க நாட்டு வரலாறு எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! 10. இந்தியாவுக்கு நேரில் வந்த வெளிநாட்டாளர் பலர் முடிவுகளில் ஒரு முரண்பாட்டைக் காணலாம். இந்திய மக்களில் பெரும்பாலோரின் அடிப்படை இன ஒற்றுமை கண்டு வியப்படைவதுடன் இந்தியர் பெரிதும் இனத்தால் திராவிடரே என்னும் சரியான முடிவையும் ஏற்றுக் கொள்கிறார்கள்; ஆயினும் அதேசமயம் இந்திய நாகரிகம், சமயம், மெய்விளக்கத் தத்துவங்கள் ஆகியவை அனைத்தும் ஆரியச் சார்பானவை! என்னும் பாமரத் தனமான கோட்பாட்டையும் ஆழ்ந்த சிந்தனையின்றி ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வகையிலேயே, “ஞாயிறும் நாகமும்”(கூhந ளரn யனே வாந ளுநசயீநவே) என்ற சிறந்த நூலில் சி.எப்.ஓல்டுஹாம் (டிடனாயஅ) வடஇந்தியப் பொது மக்களின் திராவிட இனச்சார்பை எடுத்துக் காட்டிவிட்டு, அதன்பின்னரும் பிராமண மதம் ஆரியர் உருவாக்கியது என்றும்; நாக (திராவிட) அரசாட்சியிலும் ‘பிராமணரே ஆதிக்க நிலையில் இருந்தனர்’ என்று வடமொழி இலக்கியம் குறிப்பதாலேயே, “அந்த அரசுகள் அத்தனையும் ஆரியமயமாகிவிட்டன என்று கருதலாம்” என்கிறார். ஆயினும் பிராமண சாதியில் உச்சநிலை உயர்வும் சரி, சாதி வேறுபாடும் சரி, இவற்றின் அடிப்படையில் அவர்களை ஆரிய மரபு என்று கூறுவதற்குச் சிறிதேனும் ஆதாரம் இல்லை. மாக்ஸ்மூலர் (சிறு துணுக்குகள் (உhiயீள) ஏடு:2 பக்கம்-311) கூறுவது காண்க. “வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் மனு குறிப்பதும் இன்று வழக்கிலுள்ளதுமான சாதிமுறை இடம் பெற்றுள்ளதா? “இல்லை” என்ற ஒரே சொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுத்து விடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய ஆதாரமும் இல்லை, அதுபோலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு ஆதாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால்வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத இழிவுக்குறியிட்டுத் தீண்டத்தகாதவ ராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி ஆகியவர்களின் அச்சந்தரும் செயல்முறைகள்; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம்; திருமாலின் தெய்வீக அருஞ்செயல்கள், இவை பற்றி, வேதத்தில் ஒன்றும் இல்லை. ‘கடவுளுக்குரிய மதிப்பைத் தமதெனக் கொண்டு தம்மையே பழிக்குள்ளாக்கிக் கொள்ளும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள்’, “மனித இனத்தின் கிளைகளை விலங்கிலும் கீழாக இழிவுபடுத்தும் முறை” ஆகியவற்றை ஆதரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மண ஆதரவு, விதவை மறுமணத் தடை, கணவன் பிணத்துடன் கைம்பெண்ணை உயிருடன் எரிக்கும் கொடுமை இவற்றை ஆதரித்து வேதத்தில் ஒரு வாசகங்கூட இல்லை. இவை யாவும் வேதத்தின் தத்துவத்துக்கும் சொல்லுக்கும் மாறுபட்டவை.” 11. சாதிமுறை; பிராமணர் தெய்விகத்தன்மை, காளி, சிவன், திருமால், சிவன் துணைவி பார்வதி, சிவன் மகன்கள் முருகன், கணபதி, திருமாலின் இறுதி அவதாரமான கண்ணன், ஆகியோர் வழிபாடு - இத்தனையும் வெளி யிலிருந்து வந்தவை, “ஆரியர் வேத அடிப்படையிலான” இந்திய நாகரிகத் துடன் ஒட்டிக் கொண்ட மாசுகள் என்றும் ஒதுக்கிவிட முடியாது. அவை இந்தியப் பண்பாட்டின் அடிப்படை உயிர் நிலைக்கூறுகள் ஆகும். காளி, சிவன், திருமால், முதலியவர்கள் வேதத்தெய்வங்களும் அல்லர்; ஆரியருடையவருமல்ல என்பது தெளிவு. அவர்களைத் திராவிடர் கடவுள்கள் என்று கூறுவது தவிர வேறு வழி இல்லை. 12. இதுபோலவே சாதிமுறை ஆரிய வழக்கமல்ல,என்னும் பொழுது அது திராவிடர் வழக்கமா என்ற கேள்வி எழுகிறது. இது சற்றுச் சிக்கல் வாய்ந்தது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கோட்பாடு, “சாதி முறை ஆரியர் இந்தியாவில் குடியேறி வாழ்ந்தபின் இங்கே ஓர் உயர்ந்த வேளாண்மை, கைத்தொழில் சார்ந்த வாழ்வை நிறுவினர், அதன் பின்னரே சாதி ஆரியர்களிடையே தோன்றியது ; அதன் அடிப்படை பொருளியல் சார்ந்தது” என்பது ஆகும். அத்துடன் அது மிக எளிய, ஆனால் பயனுடைய தொழிற் பாகுபாட்டு முறையாக அது அமைந்ததென்றும், “தொழில் நுணுக்கப் பயிற்சியளிக்கும் வகையில் பிறப்பு அடிப்படையான தொழில்மரபே மிக எளிதான, இயற்கையான முறையாகும்” என்றும் கூறுவர். சாதிமுறை இம்மாதிரி ஏதோ ஒரு நிலையில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, இன்றும் இதேமுறையில் புதிய சாதிகள் எழுவதைக் காட்டலாம். பேராசிரியர் ராதா கமல் முக்கர்ஜி ‘இந்தியப் பொருளியலின் அடித்தளங்கள்’ என்ற நூலில் இதற்கான சுவைமிக்க எடுத்துக்காட்டு ஒன்று தருகிறார்: வங்காள நாட்டின் செக்கு வாணிகர் யாவரும், எண்ணெய் விதைகள் அரைக்கப்படும் செக்குக் குழியின் அடியில் துளைஒன்றை இடும் புதுமுறைப் பழக்கம் வரும் வரை, ஒரே சாதியாய்த் தான் இருந்தனர்; அப்பழக்கம் வந்தபின் புதிய முறையை மேற்கொண்டவர் ஒரு தனிச் சாதியாகவும், பழைய முறைப்படி எண்ணெயைக் கூடிய மட்டும் மொண்டு எடுத்து, மீந்ததைத் துணியில் தோய்த்துப் பிழிந்து வந்தவர்களைவிடச் சமூக சாதிப்படியில் தாழ்ந்தவர்களாகவும் ஆயினர். 13. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதியின் தோற்றம் பொருளியல் சார்ந்ததெனக் கொள்வதைவிட மிகுதியாக, அரசியல் சார்ந்ததென்றே கொள்கின்றனர். சாதியின் படிப்படியான உயர்வு முறையிலும், சாதியுயர்வு பேரளவில் செந்நிறம் (கயசை உடிடடிரசயவiடிn) நோக்கிச் செல்லும் நிலையிலும் அவர்கள் முனைந்து கருத்துச் செலுத்தி அதனைச் சிறிது மிகைப்படுத்தினர். ஆகவே, சாதிமுறை வடமேற்குக் கணவாய் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வந்த படையெடுப்புக்களின் விளைவு என்றும், ஒவ்வொரு படையெடுப் பாளரும் முந்திய படையெடுப்பாளரை விட மிகுதியான செந்நிறம் உயரமான பாரித்த உடல், போர்ப்பண்பு இவற்றை உடையவராகவும் இருந்தனரென்றும் அவர்கள் கருதினர். ஒவ்வொரு புதிய படையெடுப்புக்குழுவும் தேசமுழுவதும் பரந்து, முன்படையெடுப்புகளில் வந்துவிட்ட மக்களிடையே பெண்கள் எடுத்தனராயினும், தம் இன உயர்வுச் செருக்கினால் தூண்டப்பட்டு, தம் பிள்ளைகள், சிறப்பாகப் பெண் குழந்தைகள், நாட்டு மக்களுடன் மணஞ் செய்து கலப்பதைக் கண்டிப்பான விதிகளால் தடுத்தனர். இதனால், அவர்கள் மரபினர் (பிறரோடு கலவாத) ஒரு தனிச் சாதி ஆயினர். 14. மேற்கூறிய இரண்டு கோட்பாடுகளிலும் ஓரளவு உண்மையின் கூறுகள் இருக்கின்றன எனினும், இன்றைய நிலையையும் கவனித்து அவற்றில் நாம் சில திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது. இருகோட்பாடு களின்படியுமே தென் இந்தியாவை விட வட இந்தியாவே சாதிமுறையின் சிறப்பான வாழ்வகமாய் இருந்திருக்க வேண்டும். (ஏனெனில், முதற் கோட்பாட்டின்படி வடஇந்தியாதான் மிகுதியும் ஆரியமயமாகியுள்ளது. இரண்டாவதின்படி அடுத்தடுத்து அந்நியர் படையெடுப்புக்கு ஆளானது வட இந்தியாவே).ஆனாலும் நிலைமை இதற்கு நேர்மாறானதென்பது நன்கு அறிந்த உண்மை. வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவில் தான் சாதி முறைமை வலுப்பெற்றதாக, பெருக்கமுடையதாக, சமூக வாழ்வில் மிகப்பெரும் பங்குடையதாக இருக்கிறது. அதுமட்டுமன்று. அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சிமலைக்கும் இடையிலுள்ள மலையாளத் தீரம் வடக்கிலிருந்து நிலவழிவந்த படையெடுப்புக்களுக்குச் சிறிதும் இடமில்லாமல் துண்டுபட்டுக்கிடக்கும் ஒரு பகுதியாகும். ஆனால் மலையாளத்தில் தான் சாதிமுறை உச்சநிலைக்கு முதிர்ந்து உள்ளது! இது ஒன்றே சாதிமுறை ஆரியரிடம் தோன்றியதன்று, திராவிடரிடையே தோன்றியது என்று காட்டப்போதியதாகும். சாதிமுறை எங்ஙனம் தோன்றி வளர்ச்சியடைந்தது என்பது பின்னர் விளக்கப்படும். 15. மேலே சொன்ன “ஞாயிறும் நாகமும்” நூலில் ஓல்டுஹாம் (டிடனாயஅ)ஆரியப்படையெடுப்பின்போது இருந்த திராவிட இந்தியாவின் நாகரிகம் பற்றி வேதங்களிலும், வடமொழி இதிகாசங்களிலும் காணப் பெறும் பகுதிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஆரியர்கள் அக்காலத்தில் சிறிதளவு வேளாண்மை அறிந்தவர்களாயினும், முக்கியமாக அவர்கள் நாடோடி மேய்ச்சல் நில நாகரிகத்தினராகவே இருந்தனர் என்பதில் ஐயமில்லை. திராவிடர்களோ இதை விடச் சிறந்த நாகரிகப்படியில் இருந் தனர். ஆரியப்படையெடுப்புக்குப் பிந்தைய நிலைமையைக் குறிக்காமல், படையெடுப்புக் கால நிலைமையை குறிப்பிடுவது வேதங்களில் மிகப் பழைய இருக்குவேதமே. மேற்கூறிய கருத்தை வலியுறுத்த இந்த இருக்கு வேதத்திலிருந்து ஓல்டுஹாம் தரும் பின்வரும் மேற்கோள்களை காட்டினாலே போதுமானது. “திவோதாசனுக்காக, இந்திரன் சம்பரனுடைய நூறு கோட்டை களைத் தகர்த்தான்” “இந்திரனே, இடியேற்றுப்படை ஏந்தியவனே, நீ புருகூதனுக்காக வேண்டிப் போரிட்டு ஏழு நகரங்களையும் வீழ்த்தினாய்; சுதாஸுக்காக வேண்டி அன்ஹாஸின் செல்வத்தை வேரறுத்தாய்!” “மனித இனத்திடம் அன்புகொண்டு, நீ பிப்ருவின் நகரங்களை முறியடித்தாய். தஸ்யூக்களுடன் போராடுகையில், நீ ரிஜிஸ்வானைக் காப்பாற்றினாய்.” “துணிகரமாக நீ சுஷ்னாவின் செல்வத்தைத் துடைத்தாய். அவன் கோட்டைகளைத் தகர்த்தாய்.”கோட்டைகள், நகரங்கள், செல்வம்-திராவிட நாகரிகத்தின் மேம்பாட்டைக் காட்ட இவை போதுமானவை. மேலும் ஓல்டுஹாம் கூறுவதாவது: “இவை யன்றி, திராவிட அசுரரின் பண்புகளாகச் சமஸ்கிருத ஏடுகள் ‘இன்பவாழ்க்கை வாய்ப்புகள், மந்திரதந்திரம், மேம்பட்ட சிற்பத்திறன், இறந்தவரை உயிர்ப்பிக்கும் திறன்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன!” இச்செய்திகள் தெரியப்படுத்தும் உண்மைகளை ஒதுக்கிவிடக் கூடாது. இவற்றிலிருந்து ஆரியருக்கு முற்பட்ட திராவிட இந்தியாவிலேயே ஆரியரிட மில்லாத, ஆனால் இன்றைய இந்து மதத்தில் உயிர்நிலைப் பண்பாயுள்ள, ஒரு மந்திரக் குருமார் வகுப்பு அல்லது சாதி (யீசநைளவ அயபiஉயைn உடயளள டிச உயளவந)இருந்ததென்று அறியலாம். அத்துடன் பிராமணசாதி, (வீரர் அல்லது) சத்திரியர் சாதிக்கு மேற்பட்ட பிராமண ஆதிக்கம் இரண்டும் திராவிட மரபுகளே என்பதையும் இதுவே நேரிடையாக நிறுவுகிறது. தெளிவான இந்த முடிவுக்கு ஓல்டுஹாம் வரவில்லையானாலும், அவர் மேற்கோளாகக் காட்டும் நுண்ணிய சான்றுகளே அதை நிறுவப் போதியவை. 16.(i) ஓல்டுஹாம் (80-ஆம் பக்கத்தில்) குறிப்பிடுகிறபடி, கண்ணன் (கிருஷ்ணன்) பிராமணர்களின் சிறப்பான பாதுகாவலன். அவர்கள் கால்களைக் கழுவி மரியாதை செய்வது அவன் வழக்கம். ‘ஆரியரல்லாத வருக்குரிய கருமேனி உடையவன் அவன்’ என்ற மரபைக் கலைமரபு இன்றும் மாறாமல் காத்து வந்துள்ளது; அவன் நிறம் எப்போதும் நீலமாகவே தீட்டப் படுகிறது. பிறப்பு வகையிலும், அவன் திருமாலின் அவதாரம் மட்டுமன்றி, ஆர்யகன் என்ற நாகர் தலைவனின் கொள்ளுப் பேரனான வாசுதேவன் மகன். “நாகர்” என்ற சொல் பாம்பையும் குறிக்கும்; மனிதருக்கு வழங்கப்படும் போது நாகவழிபாட்டினரையும் குறிக்கும். சமஸ்கிருத இதிகாச ஏடுகளில் அது பொதுவாக அசுர, தஸ்யூ, தைத்ய, தானவ ஆகிய சொற்களின் மறு வடிவமாகவே, வட இந்தியாவில் அதுவரை வென்றடக்கப் படாதிருந்த திராவிடரைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்குகிறது. (ஐஐ) மீண்டும் (78-ஆம் பக்கத்தில்): “கண்ணனின் தமையனான பலராமன் தலைமீது பல பாம்புகளின் படங்கள் கவிந்து காப்பளிப்பதாகக் காட்டப்படுகிறது. அவன் சேடநாகனின் அவதாரம் எனப்படுகிறான். கண்ணன் இறந்தபோது அவன் வாய்வழியாக, ஒரு பெரிய பாம்பு வடிவில், அவன் ஆன்மா வெளியேறிச் சென்றது.” (ஐஐi)மகாபாரதத்திலிருந்து (அதே78-ம் பக்கத்தில்): “அசுரர் (திராவிடர்) களின் தலைமைக்குருவான சுக்கிரன் தன்னுடைய தவத்தின் பெருமையால் தன்னை இருகூறாக்கிக்கொண்டு தைத்தியர்கள் (திராவிடர்கள்), தேவர்கள் (ஆரியர்கள்) ஆகிய இரு சாராருக்குமே சமயகுரு ஆனான்,” திராவிடர் களின் விரிவான குருமார்சாதியானது தனது சமயத்துறை ஆட்சியை ஆரியர் மீதும் வெற்றிகரமாகச் சுமத்திற்று என்பதை இது நிறுவகிறது. (iஎ) விஷ்ணுபுராணம் தரும் தகவலின்படி சுக்கிரன் அல்லது உசானஸ் என்பவன் எரிஓம்பி, மந்திரங்கள் கூறி, ஆரியர் தெய்வமான இந்திரனுக்கெதிராக அசுரர்கள் அல்லது திராவிடர்களின் வெற்றிக்காக அதர்வண வேதத்தை ஓதினான்; அவனே (ஆரியரான தேவர்களால் கொல்லப்பட்ட) திராவிட தானவர்களுக்கு உயிரூட்டினான். சுக்கிரன் பிருகு என்ற பெரிய ரிஷியின் மகன்; பிருகுவும் ஒரு திராவிட குரு மந்திரவாதியே (யீசநைளவ அயபiஉயைn) ஆனாலும் பிருகுவின் மக்கள் பிராமணர். அத்துடன் தைத்திய (திராவிட) மன்னனான ஹிரண்யகசிபுவுக்கு பிருகுவழியினர் சமய குருமாராயிருந்தனர். 17. ஓல்டுஹாம் தரும் இத்தனை சான்றுகளுடன் நன்கு அறிந்த வேறு இரண்டு செய்திகளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். (1) பிராமணர்கள் தொடக்கத்திலேயே ஆரியருடைய புரோகித வகுப்பாயிருந்துவந்தவர்களானால், இந்து சமூகத்தில் பிராமணர் ஆதிக்க மேற்பட்டிருப்பதுபோல், இந்திரன், வருணன்முதலிய ரிக்வேதத் தெய்வங்களின் வணக்கம்தான் இந்து மதத்தில் தலைமை பெற் றிருக்கும். வேதங்களை இந்து சமயம் மதித்த போதிலும், இந்திரன் முதலிய வேதக்கடவுளர் வணக்கம் மறைந்தே போய்விட்டது. அவர்கள் இடத்தில் வேதச்சார்பற்ற தெய்வங்கள்தாம் இன்று உள்ளன. (2) பிராமணசாதியின் தனிக்குறியீட்டுச் சின்னம் ‘ஒருதோள் மீதும் எதிர்க் கையின்அடியிலுமாக’ அணியும் பஞ்சுப்பூணூல் ஆகும். இச் சாதியினர் முதற்கண் பஞ்சுநூற்றல் தொழிலுடன் தொடர்புடையவர்களா யிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. ஆனால், பருத்திநூற்பு ஒருபோதும் வேத ஆரியரிடையே தோன்றியிருக்க முடியாது என்பது உறுதி. ஆரிய °டெப்பி(ளவநயீயீந) புல்வெளி நிலங்களிலிருந்த மேய்ச்சல் நில மக்கள், (யீயளவடிசயட வசiநௌ). அவர்கள் அருகில் பிற மக்கள் உழுது பயிரிட்டுவந்த நிலங்களின் மீது அவ்வப்போது படையெடுத்துச் சூறையாடி வந்ததையே ‘ஆரியப் படையெடுப்பு யசலயn inஎயளiடிn’ எனக் கொள்வதே அறிவுக்குப் பொருந்துவது. தொல்லியலாளர் அண்மையில் நிறுவியுள்ளபடி, ஆடுமாடு வளர்க்கும் நாகரிகத்துக்கு முன்னரே உணவுப்பயிர் பயிரிடுதல் தொடங்கி யிருக்க வேண்டும் . முதலில் ஓரிரு பயிர்களைச் சிறு அளவில் மேற் கொள்ளுதல் iவேநளேiஎந யபசiஉரடவரசந; பின்னர் பெருமகசூல் தரக்கூடிய பயிர்களை விரிந்த நிலப்பரப்பில் பயிரிடுதல் நிகழ்ந்திருக்கும். இது இயற்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றினும், உண்மை இதுதான். மாடுகளும் ஆடுகளும் எகிப்திய மெசபெட்டோமிய வேளாண்மக்களால் பழக்கப் பட்டிருந்தன. அவர்களையடுத்திருந்த வேட்டுவ மரபினரிடையே கால்நடை வளர்க்கும் பயிற்சி அதைவிடக் கடுமையான வேளாண்மை பரவுமுன்னரே பரந்து நிலவியிருக்க வேண்டும் என்பதில் தடையில்லை.(நீராவி இயந்திரம் இங்கிலாந்தில் முதலில் சுரங்கவேலை, பின்னர் நெசவு, இறுதியில் போக்குவரத்து என்றவாறு பயன்படுத்தப்பட்டது. எனினும் தொலைவு நாடுகளில் அப்பயன்பாடு தலை கீழாக, போக்குவரத்து, நெசவு, சுரங்கம் என்று அமைந்தது! 18. வேட்டுவ நிலையிலிருந்து ‘மேய்ச்சல் வாழ்வு’ யீயளவடிசயட நிலைக்கு மாறியதும், பிறப்பு பெருகி இறப்பு குறைந்திருக்கும். குழந்தைகளுக்குக் கால்நடைகளின் பால் கிடைப்பதனால், தாய்ப்பால்கொடுக்கவேண்டிய கால அளவு குறைகிறது. பிள்ளைகள் இறப்பு குறைவதுடன் அவர்கள் வளர்ச்சியும் விரைவாகிறது. தாய்க்கும் மாட்டுப்பால் கிடைப்பதன் காரணமாக, பிள்ளைப்பேற்றுத் தளர்ச்சி குறைகிறது. ‘இனப்பெருக்க வன்மையுடைய’ இளமைப்பருவம் தாய்மாருக்கு நீடிக்கிறது. தாயே பால்கொடுக்க வேண்டிய காலஅளவு ஒவ்வொரு பிள்ளைப்பேற்றின் பின்னும் குறைவதனால் பிள்ளைப் பேறும் அடுத்தடுத்து ஏற்படுகிறது. ஓரளவு மக்கள் தொகையினர் வாழ் வதற்குப் போதிய நிலம் சில தலைமுறைகளுக்குப்பின்னர் போதாதாகிறது. முதலில் வேட்டைக்குப் பயன்பட்ட பரப்பு, பின்னர்ச்சில காலம் மேய்ச்சல் நில(முல்லை) வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் நாளடைவில் முல்லை நில வாழ்க்கைக்கும் அது போதாதாகிவிடுகிறது. 19. மேய்ச்சல் நிலத்தின் வளத்தை முழுதும் பயன்படுத்தித் தீர்ந்த பின்பும் மக்கட்பெருக்கம் நிற்பதில்லை; அப்போது அழிவு ஏற்பட்டுத் தானாக வேண்டும். பேரரசுகளையும் வீழ்த்திய ஹிக்ஸா°, ஹுணர், மங்கோலிய, துருக்கிய சர்வநாசப்படையெடுப்புகள் போல. மேய்ச்சல் நிலப்படையெடுப்பாளர் குதிரை வளர்ப்பவராயிருந்தால், அழிவு பயங்கர மாகும். இந்தியா இந்த ஆபத்திலிருந்து ஓரளவுக்குத் தொலைவில் இருந்த போதிலும், அதுவும் பலமுறை இத்தகைய படையெடுப்புகளுக்கு ஆளாகி யிருக்கிறது. பாபரின்(மங்கோலியர்)1526 மொகலாயப் படையெடுப்பு இவற்றுள் கடைசியானது எனலாம். வேதங்கள் கூறும் ‘இந்திரன் தலைமை யில் நடந்த ஆரியப் படையெடுப்பு’ முதலாவது ஆகலாம். இடைப்பட்ட காலத்துப் படையெடுப்புகள் பல. 20. இந்தியாவினுள் ஆரியர் பெரும்பாலும் கைபர் கணவாய் வழியாகத் தான் வந்திருக்க வேண்டும். பஞ்சாபின் வடக்கு மூலையில் அக்காலகட்டத்தில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே, அதில் அவர்களும் அப்பகுதிவாழ் அவர்களின் கால்நடைகளும் பெருகி வளர இடமிருந்தது. பின்னர் திராவிடர், உடன் ஆரியரின் இனப்போராட்டம் தொடங்கியிருக்கும்- பின் வருமாறு மூன்று படிகளில் (i) முதலாவது (இருக்குவேதம் குறிப்பிடுவது): இதில் கொலையும் கொள்ளையும் இடம்பெற்றன. படையெடுப்பாளரின் விரைந்த போக்கு வரத்து ஆற்றல் (குதிரைப்பயன்பாடு) அவர்களுக்கு பேருதவியா யிருந்தது. எதிர்ப்புமுனை ஒவ்வொன்றுக்கும் எதிராகத் தங்கள் முழுப் படையுடன் போரிட்டு வென்றனர். “உரித்சா விழுங்கப்பட்டது. பாலா வீழ்த்தப்பட்டது. பிப்ருவின் நகரங்களும் ஏழு நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. சுஷ்னாவின் கோட்டைகள் தகர்க்கப்பட்டு. அவன் செல்வத்தை இந்திரனை வழிபட்டவர்கள் கொள்ளை கொண்டனர்.” (ii) இரண்டாவது, படையெடுப்பாளர் எவருக்கும் உடனடி யாகவோ நாளடைவிலோ ஏற்படும் அனுபவத்தால் “கொன்றழிப்பதைவிட திராவிடரை அடிமைப்படுத்தி ஆள்வதே ஆதாயம்” என்று உணர்ந்தனர். இதன்பின் ஆரிய அரசுகள் ஏற்பட்டன. அவற்றைக் காத்தவர் ஆரியப் படை வீரர். திராவிட உழவரும் தொழிலாளரும் உழைத்து அரசை வளப்படுத்தினர். (iii) மூன்றாவது இதிகாசங்கள் காட்டுவதைப்போல. பல்வேறு ஆரிய அரசுகளும் தமக்குள் போரிட்டுக் கொண்டனர்(கட்சி சேர்த்துக் கொண்டு) அவர்களைச் சூழ்ந்து இன்னும் ஆண்டுவந்த திராவிட அரசுகளையும் சில நேர்வுகளில் தேவைக்கேற்பக் கட்சி சேர்த்துக்கொண்டனர். 20.(அ) இரண்டாவது படியிலும், (இன்னும் மிகுதியாக, மூன்றாவது படியிலும்), ஆரியர் திராவிடர் இருவரிடையிலும் பல காரியங்கள் நடந்தேறின. இருவரிடையே மணத்தொடர்புகள் ஏற்பட்டன. எம்மொழியின்கை ஓங்குவது என்பது குறித்து போராட்டம் எழுந்தது. முரடர்களான - ஆனால் மூளைத்திறம் குறைந்த- ஆரியர்கள், வேதங்களில் “திருந்தாப் பேச்சினர்”(வாந டைட- ளயீநயமiபே அயn என்று)தாமே பழித்த திராவிடரின் மொழியினை முயன்று ஏன் கற்கவேண்டும்? மாறாகத் திராவிடரே சம்ஸ்க்ருதம் கற்கவேண்டியிருந் தது.அன்று என்ன நடந்திருக்குமென்பதை அண்மைக் காலத்திய தென் இந்தியாவில் நிகழ்ந்ததிலிருந்தே அறியலாம். (ஆ) டியூப்ளே தோற்றபின் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாண ஆட்சியுரிமை பெற்றது. ஆங்கில மொழித்திறன்தான் ஆதாய ஆற்றல், செல்வாக்கு இவற்றுக்கு வழியாயிற்று. காலங்காலமாக எழுத்து, படிப்பு, மூளைப்பணியில் ஈடுபட்டுவந்தவர்களும் வியத்தகு நினைவாற்றல் கொண்டவர்களுமான பிராமண சாதியினர் இதனைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். (இ) இன்றைய(1924) தமிழகத்தில் இன்னும் சில பழைய “கோவில் பிராமணர்”(வநஅயீடந செயாஅiளே) ஆங்கிலத்தை விட சம்ஸ்கிருதத்திலும், ஷேக்ஸ்பியரைவிட வேதங்களிலும் வல்லவர்கள். ஆனால், அத்தகையோர் பிராமணசாதியில் மிகச் சிறுபான்மையினரே. தமிழ்ப் பிராமணரில் பெரும் பான்மையோர் தமிழைவிட ஆங்கிலத்தைத் திருத்தமாகப் பேசுகிறார்கள்; திருத்தமாகவும் விரைவாகவும் எழுதுகின்றனர்; அதிகம் படிப்பது ஆங்கில நூல்களையும் ஆங்கில இலக்கியத்தையுமே. இதனால் அரசாங்க அலுவலகங்களிலும், வாணிக மனைகளிலும் சரி, பணியாளர் யாவரும் (ஏறத்தாழ) முற்றிலும் பிராமணராகவே உள்ளனர். சட்டத்துறை, பத்திரிகைத் துறை முழுவதும் அவர்கள் ஆதிக்கம்தான். 21. இதே சூழ்நிலைகளும் வாய்ப்புகளும்தான் அன்று பஞ்சாபில் ஆரியர் நுழைந்த பகுதியிலும் ஒட்டிய பகுதிகளிலும் உள்ள திராவிடப் பிராமணர்களைத் தூண்டியிருக்க வேண்டும். சம்ஸ்கிருதத்தை அவர்கள் தங்கள் மொழியாக ஏற்றுத் தங்களையே வேதங்களின் காவலராகவும், கொள்கைவிளக்க அறிஞர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். அவர்களுடைய சமய குரு - மந்திரவாத மரபு இவ்வகையில் அவர்களுக்கு ஆதரவாயிருந்தது. ஏனெனில், அம்மரபின் உள்ளார்ந்த தத்துவம் ஒன்றே ஒன்று தான் - ஏதேனும் மறை நுணுக்கத் தத்துவத்தை(சநஉடினேவைந டிச நளடிவநசiஉ டநயசniபே) ஊடுருவி ஆராய்ந்து அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து தம்மை ஒரு புனித சாதியாக வேறுபடுத்திக் காட்டுவது, அல்லது வேறு எந்த வகையிலாவது செல்வாக்கும் ஆதிக்கமும் பெறுவது, என்பதேயாம். இங்ஙனம் அன்று பஞ்சாப் பகுதி வாழ் திராவிட பிராமணர் சமஸ்கிருதத்தை அல்லது சம்ஸ்கிருதச் சார்பான மொழிகளை அப்பகுதித் திராவிடரிடையே பரப்பும் முயற்சியில் முன்னின்றதனால், மற்றவர் களும் படிப்படியாக, (சிலர் குறைந்த ஆர்வத்துடன் சிலர் மிகுதியான உழைப்புடன்) அதே வழியைப் பின்பற்றலாயினர் எனலாம். சென்னை மாகாணத்தில் ஆங்கிலப் பரவல் வகையில் (1800க்குப் பின்னர்)நேர்ந்தது போலவே அன்று வடநாட்டிலும் நடந்திருக்கும். 22.(i) வட இந்தியத் திராவிடர் இங்ஙனம் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர், ஆரியர்கள் பண்பாட்டில் திராவிட மயமாக்கப் பட்டனர். இதன் முழுமையான விளக்கத்தைப்பின் இயல்களில் காண்க. ஆனால், இம்மாறுபாட்டின் ஒரு கூறு ‘ஆரியர்கள் பிராமண சாதி யினரின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டனர்’ என்பதாகும். (ii) (குருமார் சாதி (யீசநைளவல உயளவந எனத் தனிப்படப் பயிற்சிபெற்ற குழு எதுவும் இல்லாத) இந்தோ-ஆரிய மொழி பேசுநர் இந்தியாவினுள் புகுந்த பின்னர் இங்கிருந்த திராவிடருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்காலிக மாகவாவது, குருமார்சாதி தன் ஆதிக்க நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்தது. படைவீரர்சாதி அந்த இடத்தில் உயர்வு பெற்றது. சில நூற்றாண்டுகள் வரை இந்த நிலை மாறவில்லை. ஆனால், பிற்றை நூற்றாண்டுகளில் இந்தியச் சூழ்நிலைத் தாக்குதலின் பயனாக இந்நிலை மாறியது. (iii) கோடை வெயிலின் கடுவெப்பம், பருவமழையின் பெரு வெள்ளம், புயல், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவை அனைத்தும் சேர்ந்து வாளோச்சிய (சத்திரிய) மக்களைவிட ‘இயற்கையாற்றல்களைக் கட்டுப்படுத்தவல்லவர்கள் என்று கூறிக்கொண்ட பிராமணர்களை உயர்ந்தவராக்கின.’ சினங்கொண்டெழுந்த தெய்வங்களை அமைதிப் படுத்திச் சீற்றம் தணிப்பவர்களை மக்கள் மதிக்கும் சூழ்நிலையினால் தான், பிராமணசாதி மீண்டும் தன் முதன்மையை நிலைநிறுத்திக் கொண்டது. (iஎ) அண்மைக் காலத்தில் முகலாயர் பேரரசுக்காலத்தில் கூட இத்தகைய வீழ்ச்சி மீட்சிகளுக்குச் சான்று உள்ளது. அச்சமயம் ஏற்பட்ட இதே வகைச் சமூக எழுச்சிகளின் பயனாக உயர்நிலையெய்தியவர்கள் சிவாஜியின் மராட்டிய (சூத்திர) சாதியினர். ஆனால், அதனையடுத்து விரைவில் பிராமண ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 23. வேத காலத்திலேயே பிராமணசாதியானது குருதிக்கலப்பால் பெரிதும் ஆரிய மயமாயிருக்கவேண்டும் என்பதையும் உய்த்துணரலாம். ஆற்றல்மிக்க மனிதர் எளிதில், அழகு மிக்க பெண்களை மணக்க முடியும் என்ற நிலையே இதற்குக் காரணம். ? 3. திராவிட நாகரிகத்தின் தொல்பழமை ‘ஆரிய சம்°கிருத நாகரிகமே திராவிட நாகரிகத்தைவிடப் பழமை யானது, இந்திய நாகரிகமே ஆரிய, சமஸ்கிருதத்தில் தோன்றியது’ என்னும் பொதுவான (ஆனால் தவறான) கருத்துக்குக் காரணம் மறுக்கமுடியாத பண்டை எழுத்துச்சான்றுகளோ,தொல்லியல் சான்றுகளோ தென் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான். விரைவில் அழியும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தியமை, சுவடிகளைப் பனைஓலையில் எழுதியமை, வெப்பமும் ஈரமும்மிக்க தட்பவெப்ப நிலை, பூச்சிகளால் அழிவு இவற்றால் சான்றுகள் அழிந்துவிட்டன. (திராவிட (தமிழிய) நாகரிகம் என்று அனைவரும் ஏற்பதும், கி.மு.3000 லேயே தலை சிறந்து விளங்கிய துமான சிந்து நாகரிகத் தொல்லியல் சான்றுகள் சிலேட்டர் எழுதிய காலத்தில் வெளிவரவில்லை!) 2. தொல்பழங் கோயில்களின் தோற்றக்காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை, ஆயினும் அவை இயேசு பிறப்புக்கு முற்பட்டது என்றோ, அதற்கு அணிமையான தென்றோ கூறுவதற்கில்லை. இந்நிலையிலும், (கல்மாடங்கள் (னடிடஅநளே), பிறவகை நயமற்ற (சரனந) கற் சின்னங்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு) மிகப்பழைய எச்சங்களை நோக்கினாலும், அவை தமக்கும் முந்தைய தொல்பழமை வாய்ந்த சிற்பக்கலையிலிருந்து உருவானதைத் தெளிவாகக்காட்டுகின்றன. 3. (i) கருங்கல்லானது சிற்பப் பணிக்கு எளிதாக இடந்தருவது அன்று. ஆனால் பழங்காலக் கற்கோயில் கட்டிடங்களில் மிக நுணுக்க மான அழகிய சித்திர வேலைப்பாடுகள் உள்ளன. பல நூறு ஆண்டு களாக (எளிதிற் செய்யக்கூடிய) மரச்சிற்பவேலையில் பழகிப் பழகித் தேர்ச்சி பெற்ற வேலைத்திறனை நாம் காண்கிறேம். கல்லில் கோயில்களும் அரண்மனைகளும் முதன்முதலில் கட்டிய பிறநாட்டவர் கள், நேரடியாகக் கல்லில் சிற்பவேலை செய்யத் தொடங்கி அந்தக்கல் சிற்பக்கலையையே படிப்படியாக நுண்மையாக மேம்படுத்தி வளர்ச்சி பெற்றார்கள். இந்தியாவில் அப்படிஅல்ல. எடுத்த எடுப்பிலேயே தென்னிந்தி யாவில் கற்சிற்பம் மிகநுட்பம் வாய்ந்ததாக அமைந்ததற்குக் காரணம் இங்கு சிற்பிகள்முதலில் மரச்சிற்பம் போன்றவற்றில் நெடுங் காலம் உழைத்துத் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டதுதான். எனவே கற்சிற்ப வேலையில் எவரும் பெற்றிராத சிறந்த நுணுக்கங் களை எடுத்த எடுப்பிலேயே கல்லில் செய்து காட்டியுள்ளனர். (ii) மதுரைச் சிவன் கோயிலிலும் மீனாட்சியம்மன் கோயிலிலும் பார்ப்பவரை மலைக்க வைக்கும் சிற்பங்கள் உள்ளன. ஐரோப்பியர் பலர் பார்வைக்கு அவை அருவருப்பாகக்கூடத் தோன்றலாம். ஆனால், பெரும் பாலான இந்தியர் அவற்றைப் பேரழகும் வீறமைதியும் உடையன என்று கருதி வியக்கின்றனர். (iii) திராவிடக் கோயிற் சிற்பவரலாறு முழுவதையும் பண்டை நகரான காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் பார்த்து விடலாம். அங்கே பாழடைந்த நிலையில் உள்ள தென் இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கற்கோயில்கள், பழமை சற்றுக் குறைந்த ஆனால் பழுதற்ற நிலையில் இன்றும் வழிபாடு நிகழும் கோயில்கள்; நாட்டுக்கோட்டைச் செட்டிகள் செலவில் புதுப்பித்து விரிவுப் படுத்தப்பட்டு வரும் கோயில்கள், ஆகிய அனைத்தையும் காணலாம். அவைமட்டு மின்றி நெல்வயல்களினூடாக, (அன்று மரவேலையால் அமைந்த கோயில் முழுதும் கரையானரித்து பலநூறு ஆண்டுகள் ஆகி அழிந்த பின்பும்), அவற்றின் எச்சமாக அன்றே கல்லில் செதுக்கிய கருங்கல் இலிங்கங்களை மட்டும் இன்றும் காணலாம். 4. செம்மணற் கற்களாலும் வெண்சலவைக் கற்களாலும் (சநன ளயனே ளவடிநே, றாவைந அயசடெந) இழைத்த மொகலாயப் பேரரசர் கல்லறை, அரண்மனை, மசூதி ஆகியவை வட இந்தியாவில் வீறுபெற்றுள்ளன. இராஜபுத்திர அரசர் அரண்மனைகளில் காணும் சிற்பங்களை “தென் இந்தியாவில் உள்ள சிற்பங்களையும் விட அழகு வாய்ந்தவையாக” ஐரோப்பியர் கருதுகின்றனர். எனினும் இந்துக் கோயில்கள் என்றால் தெற்கிலுள்ள மாபெரும் கோயில்களின் கம்பீரமும் , கட்டுமானம், சிற்பவேலைச் சிறப்புகளும் வாய்ந்தவை எவையும் வடநாட்டில் இன்று இல்லை. 5(அ) தமிழ்நாட்டில் காவிரி முதலிய ஆற்று நீர்வேளாண்மை சிறந்து விளங்கிய பகுதிகளில் திராவிடக் கோயில்களில் சிற்பம் முதலிய கலைகள் சிறிதும் தடைபடாமல் 1565-இல் விஜய நகரப் பேரரசு விழும் வரைத் தொடர்ந்து வளர்ச்சிபெற்றன. அதற்குப்பின்கூட, தற்காலிக, அரைகுறைத் தடங்கலே ஏற்பட்டது. எடுத்துக்காட்டாக16ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த கலைப் படைப்பு மதுரைத் திருமலைநாயக்கர் அரண்மனைதான்; மேலும் இன்று கூட (1924)இருப்புப் பாதை இணைப்பில்லாத சிவகங்கை நகரைச் சூழ இருந்துகொண்டு தேர்ச்சிபெற்ற இளைஞரைப் பயிற்றுவித்து அனுப்பி, பர்மாவில் அரிசி வாணிகத்தில் பணம் போட்டு அதை வளர்ப்பவர்களும், இந்தியாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் வட்டிக்கடைகள் மூலம் வங்கித் தொழில் நடத்துபவருமான நாட்டுக்கோட்டைச் செட்டிமார் அந்நகரையே பழைய திராவிடக் கலைமரபின் இன்றைய புதிய மைய கலைக்கூடமாக்கியுள்ளனர். இங்கே கலையார்வமிக்க செட்டிமார் தங்கள் நேரடிப் பார்வையிலேயே சிற்ப விற்பன்னர் (மேஸ்திரி)களைப் பயிற்றுவித்து, அவர்கள் மூலம் பிற நகரங்களில் சிவன் கோயில் கட்டுகின்றனர்; பழைய கோவில்கனைப் புதுப்பிக்கின்றனர்; அவர்கள் சாதி மரபு வட்டித் தொழிலில் ஈட்டும் ஆதாயத்தில் பத்திலொரு பங்கை இவ்வழியில் செலவிட வேண்டும் என்பதாகும். (ஆ) இங்ஙனம் ரிக்வேதகாலம் அளவுக்குப்பழமை வாய்ந்த எதுவும் திராவிட கட்டடக் கலைச்சின்னம் எதுவும் இன்று இல்லை எனினும் அக்கலை உருவாகிய சூழல் மொத்தத்தில் திராவிட நாகரிகம் ஆரிய நாகரிகத்தை விடப் பேரளவு பழமையானது என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. 6(i) இலக்கியவகையிலும் நிலை இதுவே. இன்றிருக்கும் இலக்கியத் துறையில் தமிழிலோ மற்ற எந்த மொழியிலோ தொல் பழமைக்குரிய இலக்கியம் இருப்பதாகக் கூறமுடியாது. (சங்க இலக்கியப் பாடல்கள் பல கி.மு. 300வரைச் செல்கின்றன என்பதும் தொல்காப்பியம்-குறிப்பாக எழுத்து , சொல் அதிகாரங்கள் கி.மு. 500க்கும் முன்னதாகலாம் என்பதும் சிலேட்டர் காலத்தில் நிறுவப்படவில்லை) சம°கிருதத்தின் இலக்கிய இலக்கணப் பெருமை முழுவதும் சங்க இலக்கிய காலத்துக்குப்பிற்பட்டதும் தமிழியத் தாக்கம் வாய்ந்ததுவும் ஆகும். (ii)ஆயினும் தமிழின் மொழியியல்பண்பே - நுண்ணிய கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிக்கும் பேராற்றல் பெற்றிருக்கும் தன்மைதான். மொழிகளின் வளர்ச்சிப்படியில் இந்தோ ஜெர்மானிய (ஐரோப்பிய) மொழி யினம் சொல்திரிபியல் (iகேடநஉவiடியேட) படியில் உள்ளது. மாறாக திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் நிலைக்கு முற்பட்டதான ஒட்டுநிலை (யபபடரவiயேவiஎந) நிலையில் உள்ளதையும் தமிழின் முழுநிறைச் செம்மையையும் (யீநசகநஉவiடிn) இணைத்துப் பார்த்தால், நிலையாக அமைந்த வாழ்க்கை முறை, ஆட்சி முறை ஆகியவற்றைக்கொண்ட திராவிடர் ஏனைய இனங்களுக்கு முற்பட்டே, நனிநாகரிகம் அடைந்துவிட்டவர்கள் என்பது தெளிவு. (iii) ஏனைய நாகரிகம் சார்ந்த மற்றொரு சான்றும் உண்டு கிரேக்க மொழியானது சொல் திரிபியல்(hiபாடல iகேடநஉவநன)நிலையிலிருந்த கால கட்டத்திலேயே முழுநிறைச்செம்மை அடைந்தது. ஆனால், ஆங்கில மொழி தனது சொல்திரிபு நிலையை iகேடநஉவiடிளே முற்றிலும் இழந்த பின்புதான் முழுநிறை பண்படைந்தது. காரணம் என்ன? கிரேக்க நாகரிக வளர்ச்சி யானது ஆங்கில நாகரிகம் வளர்நிலை அடைந்த கி.பி.1500க்குச் சுமார் 2000ஆண்டுகட்கு முன்னரே உச்சகட்டத்தை அடைந்து விட்டதுதான். திராவிட நாகரிகமும் இதுபோல இந்தோ ஐரோப்பிய மொழி யினங்களுக்கு மிகமுற்பட்ட காலத்திலேயே முழுநிறை பண்பு பெற்றுவிட்டது. 7(i). வருங்காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் திராவிட மொழிகள் இரண்டிலும் தேர்ச்சியுடைய ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்களைக் கூர்ந்து மேலும் ஆராய வேண்டும். அவற்றுள் வடமொழிக்கும், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான சொற்களை வடமொழியிலிருந்து தமிழ் பெற்றுக் கொண்டது என்று கொள்ளலாம். ஏனைய சொற்களை சம்°கிருதம் ஒன்று தமிழிலிருந்து, பிற திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருத்தல் வேண்டும்; (அல்லது அழிந்து விட்ட வடஇந்தியத் திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருக்க வேண்டும்) இத்தகைய ஆய்வின்மூலம் ஆரியரும் திராவிடரும் முதன் முதல் தொடர்பு கொள்ளும்போது அவரவர் பண்பாட்டு நிலைபற்றி உண்மையை அறிந்து கொள்ளலாம். (ii) தமிழ்-வடமொழிச் சொல்ஒப்பாய்வில் ஓரளவு இறங்கிய ஒருவர் என்னிடம் “பூக்களைப் பற்றிய சொற்களும் மாலை கட்டுவதைப் பற்றிய சொற்களும் திராவிட மொழிகளுக்குரியவை” என்று கூறினார். இது உண்மையாயின் இதுவும் முக்கியமானதே. 8(i) இதுபோலவே தமிழ் ஆண்டுத்தொகுப்பு முறை, (பஞ்சாங்கம்) வயஅடை உயடநனேயச இவ்வகையில் முக்கியமானது. தென்னாட்டுப்பஞ்சாங்க உருவாக்கத்தில் இரண்டு முறைகள் வழங்குகின்றன: ஒன்று மதத்துறை சார்ந்தது, மற்றொன்று வாழ்க்கைத்துறை சார்ந்தது. முன்னது (தெலுங்குப் பஞ்சாங்கம் உட்பட எல்லா ஆசியப் பஞ்சாங்கங்களையும் போலவே) மதிமுறை(சந்திரமானம்) டரயேச உயடநனேயச சார்ந்தது. இது பற்றிக் குறிப்பிட எதுவுமில்லை. (ii) ஆனால், சமயஞ் சாராத (தமிழ்)ஆண்டுத் தொகுப்பு உiஎடை உயடநனேயச நூற்றுக்குநூறு ஞாயிற்றுச் சார்பானது (சூரியமானம்). (மேனாட்டு முறைபோல, மதி முறைப்படி முதலில் கணித்த மாதத்தை ஞாயிற்று முறைப்படி கணித்த ஆண்டுகளுடன் பின்னர் ஒட்டவைத்து இணைத்துக்கொள்ளும் முறையன்று) சற்றும் மட்டுமழுப்பலில்லாமல் நூற்றுக்குநூறு ஞாயிற்று முறையாகும். ஏனெனில், அது ஒரு மாதத்தில் இத்தனை முழுநாட்கள் இருக்கவேண்டும் என்று கூடப்பார்ப்பதில்லை! வான்மண்டலம் (நஉடiயீவiஉ) பன்னிரண்டு மனையகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு ஒரு புது மனையகத்தில் புகும் நேரம் காலையாயினும் சரி, நண்பகலாயினும் சரி, இரவாயினும் சரி, அந்தக் கணத்திலேயே மாதம் பிறக்கிறது. நாட்களும் ஞாயிற்றெழுச்சியுடன் தொடங்குகிறது. (iii)ஆனால், ஞாயிற்றெழுச்சி என்பதும் இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் ஞாயிறு தோன்றும் வேளையன்று; உலகநடு நேர் கோட்டை, நுளூரயவடிச நடுநிரைகோடு ஆநசனையைn சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கில் ஞாயிறு எழும் வேளைதான் அது. தமிழரின் இந்த நடுநிரைகோடு தமிழ ருடைய பண்டைய வானியலாராய்ச்சி நிலையம் அமைந்திருந்த இடத்துக்கு நேராயிருந்திருக்க வேண்டும். 9. உலகின் இத்தனியுயர் சிறப்புக்குரிய ஆண்டுக் கணிப்பு முறையை திராவிடர் எப்போது உருவாக்கினர் என்து தெரியவில்லை. ஆனால், அது தனிச் சிறப்புடையது; நடைமுறையில் எவ்வளவு வசதிக் குறைவா யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அம்முறை பிடிவாதமாகப் பின்பற்றப்படுகிறது; மற்றெல்லாப் பஞ்சாங்க முறைகளையும் விட அது துல்லியமான வானிலைக்கணிப்பிலிருந்து உருவானது என்பவை குறிப்பிடத் தக்கன. இந்தியாவிலேயே, ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் இல்லாத பகுதி யிவேயே - அதாவது தமிழகத்திலேயே - திராவிட அறிவியல் இங்கேயே தோன்றித் தொடர்ந்து வளர்ச்சி பெற்றிருந்ததை இது நிறுவுகிறது. 10. வேதங்கள் சுட்டும் திராவிட நகரங்கள், திராவிடக் கலைகள் ஆகியவை பற்றிய சில குறிப்புகள் தவிர, திராவிட நாகரிகத்தின் தொல் பழமையை அறுதியிட்டு நிறுவும் வேறு எதையும் இன்று குறிப்பிட இயல வில்லை. (கி.மு.3000லேயே சிறந்திருந்த சிந்து நாகரிகம் பற்றி அன்று தெரியாது) ஆயினும் தென் இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாகரிகமையங் களுக்கும் இடையேயுள்ள தொல்பழந் தொடர்புகளைப் பற்றிய ஏராளமான சான்றுகளை ஜி. எலியட் சுமித், வில்ப்ரெட் எச். °காப், ஜே. வில்ப்ரெட் ஜாக்ஸன், டப்ளியூ. ஜே. பெரி முதலிய பலரின் ஆய்வு நூல்களில் காணலாம். அவற்றையெல்லாம் பொது நிலை வாசகர்க்கும் புரியும்படி பெரி “ஞாயிற்றின் சேய்கள்”(உhடைனசநn டிக வாந ளரn) என்ற தம் நூலில் தொகுத்துரைத்துள்ளார். ஏனைய ஆதாரங்களில் இருந்து எனக்குக் கிடைத்த ஒரு சில செய்திகள் வருமாறு. (i) லோகன் எழுதிய சிறந்த “மலபார் மாவட்டக் கையேடு”(அயடயயெச னளைவசiஉவ அயரேயட)இல் இந்தியாவின் மேல் கடற்கரையில் இலட்சத் தீவுகளுக்கு தெற்கே மினிக்காய் தீவின் மொழிபற்றிய ஒரு அரிய செய்தியைக் குறிப்பிகிறது. அம்மக்கள் மொழியில் எண்கள் 100-வரை வெளியுலகிலுள்ள பதினடுக்கு முறையல்லாமல், (னுநஉiஅயட ளலளவநஅ) பன்னீரடுக்கு முறை (னுரடி-னநஉiஅயட ளலளவநஅ)சார்ந்ததாயிருக்கிறது என்பதை அவர் குறிப்பிடுகிறார். மினிகாய் எண்ணுப் பெயர்கள் வருமாறு: 1. ஏக்கே 23. தோலோஸ் எக்லுஸ் 2. தே 24. பஸிஹி 3. தினே 25. பஸிஹி ஏக்கே 4. ஹத்தரி 36. திந்தோலோஸ் 5. பஹே 48. பனஸ் 6. ஹயே 60. பத்தோலோஸ் 7. ஹத்தி 72. பஹித்தி 8. அரெக் 84. ஹைதொலோஸ் 9. நுவே 96. ஹியா 10. திஹே 100. ஹியாஹத்திரி (அல்லது ஸத்திகா) 11. ஏகாரா எக்லுஸ் 101. ஸத்திகா ஏக்கே 12. தொலோஸ் 200. தே சத்திகா.....(என்ற வாறு) 13. தொலோஸ் - ஏக்கே 14. தொலோஸ் - தே (என்றவாறு) நூறு என்பதற்கான சொல் இந்தியப் பகுதியிலிருந்து வந்துள்ளது; பன்னீ ரடுக்குமுறையானது முரணான இடையீடாகவே வந்துள்ளது. அப்பன்னீரடுக்கு முறையின் தோற்றம் எங்கே? பன்னீரடுக்கு முறையைக் கணக்கியலில் நிலைநாட்டுவதென்பது நம்மாலேயே முடியாத செயல்! மினிக்காய்த் தீவிலுள்ள மக்கள் அதைத் தாமே உருவாக்கியிருக்க முடியாது; இதை இந்தியா விலிருந்தும் பெற்றிருக்க முடியாது. அதற்குரியதாக நாம் நினைக்கக்கூடும் மிக அணித்தான மூலப்பிறப்பிடம் மெசெபொட்டேமியா தான். ஆனால் எண்களுக்கான இச் சொற்களை மேலும் ஆய்வு செய்தால் சால்டியத் தொடர்பை நிறுவமுடியுமா இல்லையா என்பது தெரியவில்லை. (ii) கல்மாடங்கள், கற்பேழை, கற்குவைகள் (னடிடஅநளே,மளைவஎயநளே, உயசைளே)ஆகியவற்றில் இந்தியா வளமுடையதென்பதும், பண்டைக் கடலோடி இனத்தின் ஞாயிற்றுக்கல் (hநடiடிடiவாiஉ)வணக்க நாகரிகத்தின் தாக்கம் இந்தியாவரை வந்துள்ளது என்பதும் யாவருக்கும் தெரிந்தது, ஆனால் இந்த அளவுக்கு எல்லாருக்கும் தெரியவராத செய்தியும் ஒன்று உண்டு. ஹைதராபாத்துக் கற்குவைகளிடையே ஹைதராபாத்து தொல்லியலாய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் உள்வெட்டுக்கீற்றுக் (inஉளைநன) குறிகளுடைய பாண்டங்கள் கிடைத்தன. அவற்றுட் பல குறியீடுகள் ஸர் ஆர்தர் எவான்° அகழ்வில் கிரீட், மினோவா நாகரிகச் சின்னங்களில் கண்டவற்றுடன் முற்றிலும் ஒத்துள்ளன. (iii) (அ) முதல் உலகப்போர் தொடங்கிய1914க்குச் சற்று முன்பு இந்தியத் தென்கோடியில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த நாகரிகச் சின்னங்கள் சென்னைப் பொருட்காட்சி சாலையிலுள்ளன. அவற்றுள் புதைகுழிக்குரிய பெரிய மட்பாண்டங்களும் அவற்றினுள் வளைந்து மடிந்த எலும்புக்கூடுகளும் பல்வேறு வீட்டுவிலங்குகளின் வெண்கல உருவங் களும் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் உயிர்த்துடிப்புடைய தோற்ற முடையது ஒரு சாதாரணத் தெருநாய் ஆகும். (ஆ) உருவங்களில் மிகப்பல எருமை உருவங்கள் ஆகும். இவற்றுள் ஒரு எருதின் உருவங்கூட இல்லை காரணம் என்ன? எருதுகள் இந்தியாவுக்குள் புகுவதற்கு முற்பட்ட (ஆனால் எருமைகளைப் பழக்கியதற்குப் பிற்பட்ட) காலத்தவை. (இ) காட்டெருது(bளைடிn,பயரச) என்றும் இந்தியாவில் பழக்கப்படவே யில்லை. பழக்கப்பட்ட இன்றைய இந்திய எருது எந்த இடத்திலிருந்து வந்தது என்று தெரியவில்லையாயினும், அது இந்தியாவுக்கும் வெளி யிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். (ஈ) ஆதிச்சநல்லூர் எச்சங்களுள் மிக மெல்லிதாக அடித்துத் துவைக்கப்பட்ட தங்க நெற்றிப்பட்ட இழைகள் காணப்படுகின்றன. இவைகள் பெரிதும் குருமார்களின் (யீசநைளவள)நெற்றிப்பட்டங்களாக அமைந்தவையே எனலாம். அவை முற்றிலும் மினோவாநாகரிக கிரீட்தீவில் கண்டெடுத்த வற்றைப் போன்றிருக்கின்றன. ஒரு வெண்கல உருவம் எஸ்கிமோ இனத் தவருக்குரிய ஆடையை அணிந்த ஒரு பெண்ணின் உருவம்போலத் தோன்றுகிறது. (உ) இந்தத் தங்க நெற்றிப்பட்டத்தையோ, ஹைதராபாத்துக் கற் குவியல்களில் உள்ள மட்பாண்டங்களின் உள்வெட்டுக்கீற்றுகளையோ சான்றாகக் கோண்டு, ஆரியருக்கு முற்பட்ட திராவிடர்களுக்கும் கினாசஸைத் (மnடிளளடிள)தலைநகராகக் கொண்டு வாழ்ந்த கடலோடி நாகரிகத்தினருக்கும் நேரடித்தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூற இயலாது. பினீஷியர் களுக்கு முன்னரே மினோவர்கள் நண்ணிலத் கடல் தீரங்களிலும், ஒருகால் பிரிட்டன் உட்பட அட்லாண்டிக் தீரங்களிலும், சென்று பரந்த தொடர்பு கொண்டிருந்தார்கள். ஆனால் செங்கடல், பாரசீக வளைகுடா, இந்துமாக்கடல் ஆகியவற்றுடனும் மினோவா அன்றே தொடர்பு கொண்டதற்கான சான்றுகள் இல்லை. மாறாக மினோவர்கள் மேற்கு நோக்கியும் பினிஷியர் கிழக்கு, தெற்கு நோக்கியும் கிட்டத்தட்ட சமகாலத்தில் பரவத் தொடங்கியிருக்கலாம். சரியொத்த இவ்விரு நாகரிகப்பரவல்கள்தாம் கப்பல்கட்டும் தொழிலை யும் கடல் வாணிகத்தையும் உலகெங்கும் பரப்பினவென்று கருதுவதை விட அவற்றை அவ்விருவருமே எகிப்தியரிடமிருந்து கற்றனர் என்பதே பொருத்தமாகும். ஹைதராபாத் கற்குகைப் பாண்டங்களின் - எழுத்துப் பொறிப்புகள் (டநவவநச ளபைளே) பெரும்பாலும் பினிஷியத் தொடர்பு, மினோவத் தொடர்பு ஆகிய இரண்டின் விளைவுகளாக இருக்கலாம். பினீஷியக் குருமாரும் நெற்றிப்பட்டம் அணிந்தவர்கள்தாம். (இன்றும் தூத்துக்குடி பகுதிப் பரதவர் களுடைய சாதித் தலைவர்களுக்கு ‘பட்டங்கட்டி’ என்ற பெயர் வழங்குகிறது.) 11. திராவிடக்கலை நேரடியாகவோ மறைமுகமாகவோ கினாசசுடன் (மnடிளளடிள) தொடர்புறவு உள்ளதாகத் தெரிகிறது. தெய்வங்கள் சிவனைப் போல் ஆண்பாலாயினும் சரி, காளியைப்போல் பெண்பாலாயினும் சரி, இருபால்களுமே மிகைப்படுத்தப்பட்ட ஒடுங்கிய இடையுடையவராக, (அதுவும் இடையை ஒடுக்குவதற்கேற்ற பெல்ட் போன்ற எதுவும் இல்லாமலே) காட்டப்படுகின்றனர். ஆனால் மினோவக் கலையில் இடை இன்னும் சிறிது; ஆனால் ஆடவரும் பெண்டிரும் உலோக ஒட்டியாணம் அணிபவராகக் காட்டப்பட்டுள்ளனர். இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே அணியப் பட்டு என்றும் அகற்றப்படாமல் இருந்திருக்கலாம். இங்ஙனம் இடையைச் சிறுக்கவைக்கும் பழக்கம் இந்தியாவுக்குள் பரவாவிடினும், அப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைமரபு மட்டும் இந்தியாவரை வந்து பரவிற்று என்று தோன்றுகிறது. 12. மக்கள் பழக்க வழக்க மரபுகள், தொன்மங்கள் இவற்றிலிருந்து சான்றுகள் தருவதற்கேற்ற அளவில் எனக்கு நாட்டுப்புறவியல் புலமை போதாதாகையால் ஒன்றிரண்டை மட்டுமே தருகிறேன்: (i) ஏழு அறிவர்களுடனும் பலவகை விதைகளுடனும் ஊழிப் பெருவெள்ளத்தில் மனு மிதந்து நின்றார் என்னும் தொன்மம் பெரு வெள்ளம் பற்றிய பாபிலோனிய மரபின் மறு படிவமே. (ii) ‘கடலைக் கடைந்த கதை’ ஐயத்துக் கிடமின்றிப் பண்டைத் திராவிடக் கடல் வாணிகத்தையே விவரிக்கிறது. தேவர்கள் அமுதம் என்ற தேறலைப் பெறக் கடல் கடைந்தனர். அதற்கான கருவி அமைக்க நாகதெய்வம் ஆகிய அனந்தன் மந்தர மலையைக் கல்லி எடுத்தான். (இந்நிகழ்வின் உட் பொருள் நான்காம் இயலில் விளக்கப்படும்) கடல் கடைந்து கிடைத்த பொருள்கள் வரிசைமுறைப்படி அம்பர் (பரஅள), வாசனைச்சத்துகள் (நளளநnஉநள), தங்கம், தேறல், வெண் குதிரை, கௌஸ்துவமணி, இறுதியில் ‘வெண்ணிறக் கலத்தில் வந்த அமுதம்’ ஆகியவை. அவ்வெண்ணிறக் கலத்தைப் அடைய தேவருக்கும் அசுரருக்குமிடையே வாழ்வா- சாவா போராட்டம் ஏற்பட்டது. இறுதியில் தேவர்களே வெற்றி பெற்று அதை மலைப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று விட்டனர். இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. ஆனால், புதிராக இருக்கும் கேள்வியாவது: “அந்த அமுதம்! ஆ, அது இனிய கள்ளா,(நெநச) கடுந்தேறலா? கேய்லிக்(பயநடiஉ) கலவை என்பார் சிலர். ஆனால் சாக்சன் ஆகிய நான் ‘சாக்சன் மதுவே’ என்கிறேன்.” ‘கால்வெர்லி’யின் இந்தக் கேலி உண்மையைத் தொனிப்பதாகவே அமைகிறது. ஏனெனில், பின்வரும் இரண்டில் ஒன்றாகவே அது இருந்திருக்கக் கூடும். (1) அமுதத்தேறல் எகிப்தியக் கடுந்தேறலே. (2) அது இனிய கள் (றுhளைமல-வடினனல) அன்று, கள்ளே கூடினனல தான் ஈந்துப்பனையின் இனஞ்சார்ந்த பனை அல்லது தெங்கின் வெட்டப் பட்ட பாளையிலிருந்து வடித்துப் புளிக்கவைக்கப்படும் குடிவகையே அது. இந்தியாவில் மிகப்பெரும்பான்மை வழக்குடைய மயக்கக்குடி இதுவே. பிரிட்டனின் கடுந்தேறலை (நெநச) விட இது கடுமையானது; 8ரூ ஆல்கஹால் உடையது. கள்ளிறக்கும் தொழில் இந்தியாவுக்குக் கடல் வழியாக ஈந்துப் பனையின் தாயக நாடான மெசொபெட்டோமியாவி லிருந்தே வந்திருக்கலாம். 13. இன்றைக்கு 5000 - 4000 ஆண்டு முன்னர் கடல் வழியாக எகிப்திலிருந்து அல்லது பாபிலோனியாவிலிருந்து அல்லது இரண்டிடங்களிலிருந்தும், திராவிட இந்தியா பல பண்பாடுகளின் மூல விதைகளைப் பெற்றது; அவ்விதைகள் இங்கே செழிப்பான நிலத்தில் வேரூன்றி மேலும் வளர்ந்தன எனலாம். (திராவிடரைவிடக் குறைந்த சிந்தனையாற்றல் கொண்ட இனங்களிடையே இவ் விதைகள் உணங்கி உயிர்ப்பில்லாச் சின்னங்களாகிப் படிப்படியாக நலிவுற்றப் போயின. “ஞாயிற்றின் சேய்கள்” நூலில் பெரி இதை நன்கு விளக்கியுள்ளார்.) ஆனால், இந்தியாவிலோ இப்பண்பாட்டு விதைகள் மேலும் வளர்ச்சி பெற்றன; திராவிட இனத்தின் உள்ளார்ந்த சிந்தனைத் திறத்தால் தூண்டப்பெற்று, இந்தியத் தட்பவெப்பச் சூழலுக்கேற்ப மேலும் வளர்ச்சி பெற்றது. 14. மேலே கண்டவற்றிலிருந்து, நாம் ஒருவாறு கீழ்க்கண்ட முடிவு களுக்கு வரலாம். (i) ஆரிய நாகரிகத்தை நாம் ஒரு ‘நாகரிகம்’ என்று கூற இயலுமானால், அதைவிட மிகவும் வளர்ந்த விரிந்த திராவிட நாகரிகம் ஆரியர் இந்தியாவில் நுழையுங் காலத்திலேயே திராவிடரிடம் இருந்தது. (ii) திராவிட நாகரிகத்துக்கு பிற நாகரிகத் தொடர்பு உண்டா என்றால், அத்தொடர்பை எகிப்து, மெசபொட்டோமியாவில் தான் தேடவேண்டும். அத்தொடர்பு கடல் வழி வாணிகமே யாகும். (iii) நாகரிக வளர்ச்சியில் மதக் கருத்துக்களுக்கிருந்த வலிமையிலும் குருமார் வகுப்பு சாதிக்கு(யீசநைளவடல உடயளள டிச உயளவந) இருந்த ஆதிக்கத்திலும் திராவிட நாகரிகமானது எகிப்து, மெசெபொட்டோமிய நாகரிகங்களைப் போன்றே இருந்தது. (iஎ) எகிப்தியர் செங்கடலைக் கண்டுணர்ந்து பண்ட் (யீரவே) நாட்டை அடைந்தது, எகிப்து இந்தியத் தொடர்பின் முதற் படியாயிற்று. திராவிடர்களும் தொன்மைக் காலத்திலேயே கடலோடிகளாயிருந்தவர் தாம். ஆனால், அவர்கள் கடலோடிப் பண்பு எகிப்தியரைவிட சற்றுக் குறை வாயிருந்தது. அவர்கள் எகிப்தியப் படகுகளை முன்மாதிரிகளாகக் கொண் டிருப்பர் என்பார் எலியட்°மித். 15. இவ்விடத்தில் நாம் மேலும் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி உண்டு. மேற்குக் கடற்கரையிலுள்ள ‘அழிபொழி’களும் (யெஉம றயவநசள) காயல்களும் கடற்பயணத்துக்கு ஒரு நாற்றங்காலாக அமைந்துள்ளவை. இக்காயல்களில் முதற்பயிற்சி பெற்றுப் பின்னர், திறந்த பெருங்கடலில் மேலும் பயிற்சி வளரத் தூண்டுதலாக வடகிழக்குப் பருவக்காற்று சில மாதங்கள் தொடர்ந்து வீசுகின்றது. மேலைக் கடலிலுள்ள சிறந்த மீன்வளமும் அவர்களை ஊக்கியது. (ஆயினும், இந்தியக் கடற்கரையிலுள்ள இதே தூண்டுதல் வாய்ப்புக்கள் ஆப்பிரிக்கக் கடற்கரையின் பல பகுதிகளிலும் இருந்தபோதிலும், எகிப்தியர் நீங்கலாக மற்றப் பகுதிகளில் இருந்த ஆப்பிரிக்க மக்கள் படகு, கப்பல் பக்கமே போனதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது) குறிப்பு: பேராசிரியர் எலியட்ஸ்மித் கருத்து: “ஆதிச்சநல்லூரிலிருந்து நான் இரண்டு மண்டையோடுகளை ஆய்வு செய்தேன். ஒன்று தொடக்ககால அசல் எகிப்திய மண்டையோடு போன்றே இருந்தது. மற்றது சிறிதளவு மாறி இருப்பினும் “சற்றே மாறுபட்ட எகிப்திய தலையோடு” எனக் கூறத்தக்கதுதான் ? 4. இந்திய சமயக்கருத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும் இன்றுள்ள இந்துமதக் கோட்பாடுகளை வேதங்களில் முதன்மையாகக் குறிப்பிடும் தெய்வங்கள், அவற்றின் செய்கைகள் ஆகியவற்றோடு தொடர்பு படுத்திடக் கடுமையான முயற்சிகள் பல இதுவரை நடந்துள்ள போதிலும் ஒன்று கூட வெற்றிபெறவில்லை. இந்திரனை விஷ்ணு, சிவன் இவர்களோடு இணைக்கவே முடியாது, வேதங்களில் காளி வழிபாடு இல்லை; இன்றைய இந்து மதத்தில் மாருத் (அயசரவ) என்னும் வேதக்கடவுளர் இல்லை, ஆகவே வேதங்களை உருவாக்கியவர் எண்ணப்போக்கு வேறு; இன்றைய இந்து சமயத்தின் அடிப்படை எண்ணப் போக்குகள் வேறு. 2. வேத சூக்தங்களும், இந்து சமயமும் வேறுவேறு வகை மனப்பான்மையின் விளைவுகள் ஆகும். வேதங்கள் சிறுபிள்ளைத் தனமான எண்ணவோட்டத்தைப் காட்டுகின்றன - வியத்தகு இயற்கை ஆற்றல்களை, காட்சிகளை தெய்வங்களாகக் கருதி ஒவ்வொரு தெய்வத்தை அப்படியே வேதங்களில் தெய்வமாகக் கொண்டன. நேர்மாறாக, இந்து சமயம் நுட்பமான தத்துவ ஆராய்ச்சிப் போக்கு உடையது; பிரபஞ்சத்தின் அமைப்பு ஆற்றல்கள் இவைபற்றி ஆழமாக மேலும் மேலும் நயமான கோட்பாடுகளை உருவாக்கிச் செழுமையான தத்துவத்தைப்படைத்தது. 3. தென்னிந்தியர் இன்று வணங்கும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றிலிருந்தே நாம் இந்தப்படிமுறைவளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம். எகிப்தின் வரண்ட மணற்பரப்பு கி.மு.3000 லிருந்து அங்கு வாழ்ந்து வந்த மாந்தர் நாகரிக வளர்ச்சியைப் பாதுகாத்து வருவதுபோலவே, திராவிட உள்ளப் பாங்கும், சமுதாய வாழ்க்கை முறையும் இவற்றை மேற்கொண்ட போதும் பண்டைக் கொள்கை கோட்பாடுகளையும் கைவிட்டு விடாமல் (புதியன வற்றோடு முரணாத வகையில்) இன்றுவரையில் பேணிவருவனவாகும். 4. இந்தியர் மதத்தின் மிகப் பழங்கூறுகளுள் ஒன்று நாகம் (நல்லபாம்பு) வணக்கம் ஆகும். இந்தியா முழுதும் அந்நாகம் மிகுதி. இந்திய கிராமப்புறக் கதைகளிலும் நாகதெய்வம் அடிக்கடி வருவதுடன் நல்லவற்றையும் செய்கிறது. வேதகாலத்தில் நாகவணக்கம்தான் திராவிடரிடையே ஓங்கியிருந்தது என்பதை ‘நாகர்’ என்ற சொல்லையே பிற்காலத்தில் திராவிடரைச் சுட்டுவதற்காக சம°கிருத இலக்கியம் பயன்படுத்து வதிலிருந்து உணரலாம். 5. பெர்குஸன் (குநசபரளளடிn) தரும் அமராவதி உருவச் சிற்ப நிழற் படங்களிலிருந்து (வாந ளரn யனே வாந ளநசயீநவே பக்.178) புத்த சமயத்திற்கும் நல்லபாம்பு வணக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை நிறுவுவதாக ஓல்டுஹாம் கூறுவார். மேலும் அவர் கூறுவது: “கபிலவாஸ்துவை மகத அரசன் அழித்தபோது இறந்த சாக்கியர்களுக்காக நிறுவிய °தூபங்களை 1898இல் திறந்த பார்த்தபோது ஒவ்வொன்றிலும் ஒரு நாகவடிவம் இருந்தது. இத்தகைய ஒரு பேழையில் இருந்த தங்க நாகத்தின் மீது மகாநாமன் என்ற பெயர் பொறித்திருந்தது. இவர் புத்த பகவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்; புத்தர் துறவியானபொழுது, தமக்குரிமையான அரசிருக்கையை வேண்டாம் என்று ஒதுக்கியதால் அவ்விருக்கையில் அமர்ந்தவர் இம் மகாநாமனே ஆவார்.” 6. நல்லபாம்பு இந்தியாவுக்கே உரிய பாம்புவகை என்று அழுத்த மாகக் கூறலாம். இந்தியாவில் நச்சுயிரிகளால் ஏற்படும் மாந்தர் சாவுகளில் பெரும்பாலானவை பாம்புக்கடிச் சாவுகளே. அதுவும் பெரும்பாலும் நல்ல பாம்புக் கடிச்சாவுகளே. நிலைமை இப்படி இருக்கும் பொழுது ‘திராவிடர் பாம்பு வணக்கத்தைப் பாரசிக நாடுகளிலிருந்து தம்முடன் கொண்டு வந்தனர்’ என்று ஓல்டுஹாம் கூறுவதும், ‘எகிப்திலிருந்து வந்த பழக்கம்’ என்று எலியட் சுமித், பெரி ஆகியோர் கொள்வதும், (அதாவது இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்தது நாகவணக்கம் என்ற கருத்தை மறுப்பதும்)வியப்புக்குரியதாக இருக்கிறது! 7. பண்டைக்காலத்தில் இந்தியா தவிரப் பிற நாடுகளிலும், எகிப்து உட்பட்ட ஆப்பிரிக்கா, மேiலைஆசிய நாடுகள் பொன்ற வற்றிலும் நல்ல பாம்புகள் இன்றுள்ளதை விட மிகுதியாயிருந்திருக்கலாம். தவிர (எகிப்தியரின் தலயணிச்சூட்டிலும் நல்ல பாம்புருவம் இருந்தது). ஆக, இந்திய சமயத்தின் நல்ல பாம்பு வணக்கம் எகிப்திய நாட்டில் இருந்தும் வந்திருக்கலாம். ‘வெளியிலிருந்து ஏதோ ஒரு வகைப் பாம்பு வணக்கம் இந்தியாவுக்குள் புகுந்தது, என்று கொண்டாலும், அதே இனத்தின் கொடூரமான வகையான “நல்லபாம்பு” இந்தியாவில் மிகுதியாக இருந்தமையால் பாம்பு வணக்கம் எளிதில் பரவி இங்கே நிலைபெற்று வளர்ந்தது என்றும் கொள்ளலாம். 8. தென்னிந்திய மேற்குக்கரை நாயர்கள் மிக முன்னேறிய, படித்த சாதிகளுள் ஒன்றைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழ்வில்(விநோதமான) நிகழ்ச்சி ஒன்றைக்கண்டிருக்கிறேன். கொச்சி அரசின் மாந்தரின ஆராய்ச்சி யாளர் மற்றும் மியூசியம், விலங்குக் காட்சிச் சாலைப் பொறுப்பாளர் அனந்தகிருஷ்ணய்யருடன் நான் திருச்சூரில் ஒரு நாயர் குடும்ப இல்லத் திற்குச் போனேன். ஆங்கில, பிரஞ்சுமொழிகளிலும் பேசும் ஆற்றலுடைய, நாகரிகமிக்க கருநாடக இசையும் வல்ல நாயர் பெண் ஒருத்தி எங்களை வரவேற்றாள். அவள் தம்பி 12 வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டாசிரியர் ஒருவரிடன் அல்ஜிப்ரா பயின்று கொண்டிருந்தான். நாங்கள் வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்றபோது அங்கே மரஞ்செடி கொடிகளுக் கிடையே நாகக் கோயில் ஒன்று சிறிதாக இருந்தது; அதில் கருங்கல் நாக வடிவங்கள் இருந்தன (படம் விரித்த கோலத்தில்). சுற்றிலும் கம்பி வேலிகள் இருந்தன. தோட்டத்தில் உயிருள்ள பாம்புகளும் இருந்திருக்கும். ஆனால், என் கண்ணில்படவில்லை. இக்கோவிலுக்கு உரியநாட்களில், காலங்களில் வந்து ஒரு நம்பூதிரி பிராமணன் பூசை செய்துவந்தான்- பாம்புகள் அவ்வீட்டு மக்களைக் கடிக்காமலிருப்பதற்காக. 9. நல்லபாம்பை மிகப்பழமையானதெனக் கருதத்தக்க மற்றொரு அசல் திராவிடர் தெய்வம் முனிசாமி. முனிசாமி என்றால் ‘கடுஞ்சினமிக்க தெய்வம்’ என்றுபொருள்; பொல்லாத தெய்வம். சிலவகை மரங்களிலும் வீடுகளிலும் அவர்குடிகொண்டிருப்பார். தான் இருப்பதைத் தெரிவிக்க, யாராவது ஒருவருக்குத் தீங்கு விளைக்கும் வகையில் முனிசாமித் தெய்வம் ஒரு மரத்தின் கிளையை கீழே செல்பவர், வாழ்பவர் ஆகியோருக்குத் தீங்கோ சாவோ ஏற்படும் படி முறிந்துவிழச் செய்யும். முனிசாமி இருப்பதாகத் தெரிந்தாலோ ஐயப்பட்டாலோ அவருக்குக் கோபம் தணிக்கப் பூசைகள் போடப்படும். முனிசாமி இருக்கும் மரத்தடியில் சிறு கை விளக்கேற்றி அவரைச்சாந்தப் படுத்தலாம். அவ்வப்போது பழம், பூக்களையும் வைத்துக் கும்பிடலாம். வீட்டில் முனிசாமி குடியிருந்தால் ஆண்டுதோறும் விழாஎடுத்து பூசை போட்டாக வேண்டும். 10. முனிசாமி வணக்கம் தென்னிந்தியா முழுவதும் இருக்கிறது. குறும்பில் அவர் இங்கிலாந்து ‘பக்’ போன்ற தமாஷ் பேர்வழி! சென்னை யில் அவர் எழும்பூர் மியூசியப் புறவெளியில் ஒரு மரத்தடியில் இருக்கிறார். புராட்ட°டண்ட் கிருத்தவ மாவட்ட பிஷப் இல்லத்திலுள்ள ஒரு மரத்தடியும் முனிசாமி இருப்பிடம்தான்! மேனாட்டு அறிவியல், கிறித்துவ சமயம் இவற்றை யாரும் கண்டு கொள்ளாமல், அவ்விரு மரங்களினடியிலே சிறு விளக்குகள் எரிந்து வந்தன - இன்றும் எரிந்துகொண்டிருக்கலாம்! 11. முனிசாமி கோயில் ஒன்றுக்கு ஒரு ஆண்டுப்பூசைச் செலவுக்கு என்னிடம் பணம் கேட்டபொழுது, முனிசாமி வீடுகளிலும் இருப்பார் என்று உணர்ந்தேன். முனிசாமி புகுந்திருந்த வீடு முன்னர் படைத்தலைவர் (உடிஅஅயனேநச in உhநைக) இருந்த வீடேயாகும். பின்னர் அது பலவகையில் பயன்பட்டு, இறுதியில் அரசுத்துறைப் பணிமனையிடங்கள் அங்கு இருந்தன. 12. “முனிசாமி அந்த வீட்டில் குடிகொண்டுள்ளதாக கருத என்ன சான்று? ஏதாவது ஆபத்து நடந்துள்ளதா?” என்று கேட்டேன். “இது வரை ஒன்றும் செய்யவில்லை தான். ஆயினும் ஒரு வீட்டில் ஒரு தடவை பூசை நடத்திவிட்டால் ஆண்டு தோறும் தொடர்வதை விரும்புவார்; நிறுத்திவிட்டால் மிகவும் சீறியெழுவார்; இந்தப் பொது விதிக்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.” என்று தெரிவித்தனர். உதகமண்டலத்திலுள்ள ஒரு பயங்கர நிகழ்ச்சியும் எடுத்துக்காட்டப்பட்டது. அங்கு ஒரு வீட்டை இந்தியரிடமிருந்து ஐரோப்பியர் வாங்கி, பின்னர் பூசையைத் தொடர்ந்து நடத்தாமல் நிறுத்திவிட்டார். தொடர்ச்சியாக அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் எத்தனையோ பெருங் கேடுகள் நடந்தன. இறுதியில் பழைய பழக்கத்தை மீண்டும் தொடர்ந்தபின் கேடுகள் நின்றன. இதைக்கேட்டதும் அதன்படியே நானும் பூசை நிதிக்கு என் பங்கு கொடுத்தேன். பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் ஆடு வெட்டப்பட்டு போதிய சாராயத்துடன் முனிசாமியின் குறைதீரப் பூசையும் விருந்தும் படைத்தளிக்கப்பட்டன. எஞ்சிய உணவையும் சாராயத் தையும் வழிபட்டாளர் உண்டு பருகித் தீர்த்தனர். ‘முனிசாமிக்கு நல்ல குணமும் உண்டு; தன்னை வழிபடுபவர் மனமார இன்பமுறுவதைத்தான் அவர் விரும்புவார்’ என்றும் பூசைபோட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். 13. பாம்பு வணக்கம் இந்தியாவில் முதலில் தோன்றியதன்று. மூலத் தாயகமான எகிப்திலிருந்து வந்ததென்று ஒத்துக் கொண்டாலும் கூட, ‘இப்பாம்பு வணக்கத்துக்கும் முனிசாமிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்ன தொடர்பு?’ என்ற வினா எழுகின்றது. இதற்கு விடையளிப்பது திராவிட எண்ணஓட்டத்தை அறிவதைப் பொறுத்தது. தென் இந்தியாவில் கல்வி அறிவைப் பொறுத்தது. தென் இந்தியாவில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பிக்கும் அனுபவமுடைய எவருக்கும் இது தெரியும். *(இவ்வகையில் திராவிட சிந்தனையில் தனிப் போக்கான சமூக இயல் விளக்கத்தை இயல் 5-இல் காண்க) திராவிட எண்ணஓட்டத்தின் முனைப்பான பண்பு ‘எந்த சிகழ்வானாலும் சரி நிகழ்வுகளிலிருந்து, பொதுவான கோட்பாட்டை கற்பனை செய்துவிடும் பண்பு’ ஆகும். ஒரு நிகழ்விலிருந்து அவசரமாக, அறை குறையாக ஒரு பொது விதியமைதி(பநநேசயட யீசinஉiயீடந)க்குத் தாவிவிடு வார்கள்! அந்த பொது விதியிலிருந்து மேலும் பல கற்பனைகளையும் செய்துகொள்வார்கள். இத்தகைய மனப்போக்கு பொது இயல்பு என்பது வெளிப்படத்தெரியும். இதனால் ஏற்படும் கேடுகள்பல. முதலில் போதிய சான்று இன்றி அவசர அவசரமாகப் பொதுக் கோட்பாடுகளை எந்த உறுதியான ஆதாரமும் இன்றி உருவாக்கிக்கொள்வார்கள்; அப்படி மூடத்தனமாக பொதுவிதி அமைத்துவிட்டால் அதை எளிதில் கைவிட்டுவிட அவர்கள் இசையவே மாட்டார்கள். 14. நாக வணக்கம் பற்றி நமக்குக் கிட்டும் மிக முற்பட்ட சான்று களிலிருந்தே அது அன்றே நிலைபெற்றுவிட்டது என்றும், அரசியல் அதிகாரம் சார்ந்த வழிபாட்டு முறையாக, அல்லது தங்களையே நாகர்கள் எனப் பிறர் கருதி அஞ்சிடவிரும்பிய சிறுசிறு அரசர்கள்(யீநவவல மiபேள) அரசியல் சார்வழிபாட்டு முறையாக அதைப் புகுத்தியிருக்கலாம். புதிய கலை, தொழில்கள் புதிய கோட்பாடுகளை கொண்டுவந்து, அவற்றின்மூலம் ஆற்றலும், ஆதிக்கமும் பெற்ற அயலார்கள் இவ்வழிபாட்டு முறையைப் புகுத்தியிருக்கலாம் என்பதை உணரலாம். அது மட்டுமல்ல இந்தியாவில் ஏற்கெனவே நல்லபாம்பு நிரம்பிய பயங்கர சூழல்நிலையில் , அரசியல் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கும் குருமார்களுக்கும் (யீசநைளவள)ஆதாயம் தரும் நாக வழிபாடு சேர்ந்து கொண்டது. அஞ்சத்தகு நல்ல பாம்பு வணக்கத்தை ஏற்ற அந்த வேளையில், ‘அச்சந்தரும் பிறவற்றையும் வணங்குவது தக்கது’ என்ற பொதுக் கோட்பாடும் உருவானது. 15. (i) முன் சொன்னதன் மறுதலையாக, நன்மைதருவது, தரக்கூடியது எனக்கருதுவதையும் வணங்க வேண்டும் என்ற கருது கோளும் சேர்ந்தது; ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆயுதபூசைக்கு இதுவே காரணம். ஆயுதபூசை நாளில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் தன்தொழிற் கருவியை வணங்கு கிறான். கல்லூரி மாணவன் தன் பாடப் புத்தகங்கள், கல்லூரி ஆசிரியர் சொல்லும் குறிப்புத் தொகுப்பு, (டநஉவரசந nடிவநள), தன் ஊற்றுப்பேனா இவற்றை வணங்குகிறான். குதிரை வண்டி கார் ஓட்டுபவன் தன் முதலாளி வண்டியை காரை வணங்குகிறான். தொழிற்சாலைப் பணியாட்களும், முதலாளி இசைவுடன் இயந்திரங்களுக்கு ஆடு பலியிட்டுப் பூசைபோடுகின்றனர். தொழிற்சாலை மேலாளர் ஒருவர் “தொழிற் சாலையையே ரத்தக்களரியும் அசிங்கமும் செய்துவிடுகிறார்கள்” என்றார் என்னிடம். (ii) மேற்குறிப்பிட்ட கொடூரமான பூசைகள் மட்டுமின்றி, அருவருப்பும் அச்சமும் தராத சிறு பூசனைகளும் நடக்கின்றன. என் மோட்டார் பைக்கில் உள்ள சிறு தெய்வத்துக்குச் மஞ்சள் நெய்ப்பூச்சும், ஒன்றிரண்டு ஊது பத்திகளும் போதியவை. நண்பரின் பொறிவண்டிக்குப் பழங்களும் விளக்குப் பூசையும் போதியவையாயிருந்தன. மேலும் மாலையில் ஒவ்வொரு சக்கரத்துக்கு முன்பும் கைவிளக்கு வைத்தனர். வண்டிஓட்டி என்னிடம் “அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கு இவ்வண்டியில் செல்பவர்களுக்குத் விபத்துகள் வாராமல் காப்பதற்கு இந்தப் பூசனை போதும்,” என்று கூறினான்! 16(i) இத்தகைய நகைப்பிற்கிடமான கருத்துக்களிலிருந்து திராவிட எண்ணஓட்டம் ஒரு பாரிய பெண்தெய்வக் கருத்தை உருவகம் செய்தது. தாராளமானது ஆனால் பயங்கரமானது; அளவிலாத ஆற்றலுடையது ஆனால் ஏன் என்று புரியாத வகையில் அழிக்கவும் வல்லது(யவ டிnஉந டயஎiளா யனே வநசசiடெந; கiஉமடந யனே inஉடிஅயீசநாநளேiடெந யனே வாநசநகடிசந கநஅயடந). அத் தெய்வமே (ஊர் அம்மன்) அம்மை நோய், காலரா, பஞ்சம் ஆகியகேடுகளைத் தரக் கூடியதாயினும், அதேசமயம் பயிர்ச்செழிப்பும் பயிர் விளைச்சலும் வளமை யான வாழ்வும் தரவல்லது. (ii) இந்த கிராம தெய்வத்துக்குப் பல இடங்களில் பல பெயர்கள் உண்டு. பெரும்பாலும் தெலுங்கு நாட்டில் கங்கம்மா என்றும், தமிழகத்தில் மாரியம்மன், மாரியாத்தாள் என்றும் அழைக்கப்படுகிறாள். (ஒயிட் ஹெட் எழுதிய, “தென் இந்தியாவின் சிற்றூர்த் தெய்வங்கள்” ) (iii) அவள் பண்புகள் காளியின் பண்புகளுடன் நூற்றுக்கு நூறு ஒத்தி ருப்பதால், இருவரையும் ஒரே தெய்வமென்றே எண்ணலாம். இருவருமே உருண்டு திரண்ட உறுப்புக்களும், மட்டுமீறி மிக ஒடுங்கிய இடை, கொலை ஆயுதங்கள் தாங்கிய மிகப்பல கைகள், இவற்றை உடையவளாய், தளராது ஆடிக் கொண்டே இருக்கும் இயல்பும் உடையது இப்பெண் தெய்வம். இந்தியாவில் இயற்கையன்னை நற்காலங்களில் இனிய வளமும், பிற காலங்களில் பேரழிவும் பெருஞ்சாவும் தருகிறாள் அல்லவா? அது போன்றதே இப்பெண் தெய்வமும். (iஎ) சில ஊர்களில் ஊர்த்தெய்வங்களுக்கு வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12 ஆண்டுகளுக்கொருமுறை பூசையிடப் பெறுகிறது. சில இடங்களில் தொடர்ந்து மழைபெய்யாத காலங்களிலும், கொள்ளை நோய் வந்து அவள் கோபக்குறி காட்டும் சமயங்களிலும் மட்டுமே பூசை. இத்தெய்வம் இரத்த வெள்ளப் பலியில் மகிழ்கிறது. பெரும் எண்ணிக்கை யில் சேவல், ஆட்டுக்கடா, செம்மறி ஆகியவை பலியிடப்படுகின்றன. எருமைக்கடா பலிதான் இத்தெய்வம் மிக விரும்புவது. 17. தெலுங்கு நாட்டு மக்கள் உள்ளத்தில் கங்கம்மாவுக்கு ஈடான மதிப்பு வேறு எதற்கும் கிடையாது. ஆனால் அவர்கள் மனப்பாங்குமாறி இன்றும் பூசைமுறைகள் மாறாவிட்டாலும் பூசை செய்யும் அன்பர் மனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பகமான செய்திகள் உள்ளன. ஒரு வேளை பிரிட்டிஷ் ஆட்சியாளர் வந்து நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் காத்து, “கடவுள் இருப்பது பரமண்டலத்தில், எனினும் பூமண்டலத்திலும் அவர் அதிகாரம் நிலைநிற்கும்” என்ற நன்னம்பிக்கைக் கருத்தை ஊட்டியதால் இம்மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணலாம். இதன் பயனாகத் தெலுங்கு நாட்டு மக்கள் கங்கம்மாளை அஞ்சுவதை விடுத்து அன்பு செலுத்தத் தொடங்கியுள்ளனர்; தீமைகளைத் தரும் தெய்வமாகக் கருதாமல், ‘தடுத்தாண்டு மக்களைப் பாதுகாப்பவள்’ என்று பலர் கருதுகின்றனர். 18. அன்பாதரவும் பாதுகாப்பும் தரும் ஒரு தெய்வத்தை விரும்பும் இதே மனத்தேவையைத்தான் பழங்காலத்தொட்டுத் தமிழ் நாட்டில் ஐயனார் தெய்வம் நிறைவேற்றுகிறார். கங்கம்மாவும் அவள் தங்கையரும் ஊர்ப் பெண்தெய்வமாயிருப்பதுபோல, அவர் ஊர் ஆண் தெய்வமாவார். வழக்கமாக அவர் ரத்தப்பலி கோருவதில்லை. ஆயினும் அணிமையில் சென்னை b&உ பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய போது, ‘தங்கள் குறைகள் அனைத்தும் தீர்ந்தாலல்லாமல் தாம் வேலைக்குப் போவதில்லை’ என்று ஐயனார் சான்றாக உறுதி கூறியிருந்தனர். ஆனால் சிறிது சாதகமான சமரசத்தின் மீது வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தொழிலாளிகள் தம் உறுதிமொழியை மீறிய தண்டமாக அவருக்கு ஒரு ஆட்டைப் பலிதந்தனர். 19(i)ஒவ்வோரிரவும் தீய ஆவிகளின் தொல்லையிலிருந்து ஊரைப் பாதுகாக்க ஐயனார் ஊரில் வலம்வருகிறார். எனவே வளமான ஊர்களில் மக்கள் அவர் தங்குவதற்கு சின்னஞ்சிறு கோயில் ஒன்று கட்டித் தருகிறார்கள். இவ்விடத்திலிருந்து கூடியமட்டும் தொலைபரப்புவரை சென்று சுற்றிப்பார்க்க வசதியாக, அக்கோயில்கள் உயர்ந்த மேடு அல்லது பொற்றையின் மீது அமைக்கப்பெறுகின்றன; வெளியிலுள்ள ஒரு நிலைமேடை மீது இரண்டு குதிரை உருவங்கள் உள்ளன. செங்கல்லும் நீறும் கொண்டு கட்டிச் சுண்ணாம்பு பூசி இக்குதிரைகள் வழக்கமாக “ஷயர்”(ளாசைந) பொலி குதிரையின் அளவாக உள்ளன. ஒவ்வொரு குதிரையின் பக்கத்திலும் குள்ளமான ஒரு குதிரைக்காரன் சிலை, ஐயனார் ஏறுவதற்கு வாய்ப்பாகக் குதிரையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறது. (கும்பகோணம் ஐயனார் தலைக்கோயிலில் ஒரு குதிரையும் ஒரு யானையும் உள்ளன. ஆனால் இப்படி நான் கண்ட இடம் இது ஒன்றே). (ii) இவ்வளவு வளமாக ஐயனாருக்கு வாய்ப்புச் செய்ய முடியாத ஊர்களில் மரத்தடியில் ஊர் வெளியில் அவருக்கு ஓர் உறைவிடம் தருகின்றனர்; அரைகுறை வேலைப்பாடுடைய பொள்ளலான(hடிடடடிற வநசசயஉடிவவய) மண்குதிரையை வைத்து அவர் தம் வேலையைச் சமாளித்துக் கொள்வார் என்று நம்புகின்றனர். இத்தகைய இடங்களில் ஆண்டு தோறும் அவருக்குப் புதுக்குதிரைகள் செய்தளிக்கின்றனர். (இக் குதிரைகள் உடைந்து தகர்ந்து, சிலவற்றுக்கு வாலில்லை, சிலவற்றுக்குத் தலையில்லை; பலவற்றுக்கு நாலுகாலுமே இல்லை; குதிரைப்பொம்மைகளின் எண்ணிக்கை மட்டும் பெருகி விடுகிறது!) 20(i) மேற்கூறிய சமயமுறைகள் யாவும் திராவிட சமயக் கருத்துக் களின் வளர்ச்சி வரலாற்றில் தொடக்ககாலம் சார்ந்தவையே. (மிக முக்கியத்துவம் வாய்ந்த)“உயிர்கள் கருக் கொள்வது எப்படி” என்ற பிறப்புத் தத்துவம் பற்றிய மெய்ம்மை biடிடடிபiஉயட கயஉவள சநடயவiபே வடி யீயவநசnவைல. கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் அது. இத்தத்துவத்தை நேரடியாகக் கண்டுணர்வது கடினம்; இதனை நாடிப்பெறும் முயற்சியிடையே எத்தனை, எத்தனைவகையான முடக்கற்பனைகளைக் கொண்டிருந்தனர் என்பதை “முற்காலப் பிறப்புத் தத்துவங்கள்”. ஞசiஅவைiஎந யீயவநசnவைல: என்ற நூலில் இ.எஸ். ஹார்ட்லண்டு கூறுகிறார். பண்டை உலகில் நாகரிகம் தோன்றிய இடங்களுள் ஒன்றில் இம்மெய்ம்மை கண்டுணரப்பட்டிருக்க வேண்டும்; பின்னர் உலகெங்கும் மிகவிரைவிலேயே பரவி இன்று மிகக் கீழான நிலைநாகரிக மக்களுக்கும் அது தெரிந்திருக்கிறது. ஆயினும் முதலில் அதை அறிந்திட உயர்ந்த அறிவாற்றல் தேவைப்பட்டிருக்கும். (ii) வீட்டில் பழக்கிய விலங்குகள் சினையாகிக் குட்டிபோடுவதைக் காணும் முதல்குறிப்புத் தந்தன என்று வைத்துக்கொண்டாலும் கூட, விலங்குகளைப் போலத்தான் மனித இனமும் என்று உணரப் பெருந் தயக்கம் ஏற்பட்டிருக்கும். உண்மையை முதன்முதல் கண்டுணர்ந்த மக்கள் அதற்கு முன்னர் வேட்டை நிலைக்குப் பக்கத்துணையாக சிலகாலம் வேளாண்மையைக் கைக்கொண்டு, பின் வேளாண்மையையே முக்கிய தனித் தொழிலாக்கிக் கொண்டவர்களாயிருக்க வேண்டும். மனிதஉடல் உழைப்புக்கு உதவியாக அவர்கள் எருதுகளைப் பயன்படுத்திக் கிடைத்த மிகுதி வருவாயினால், ஒரு சிலராவது சிந்தனை செய்து பொழுதுபோக்கும் அளவுக்கு ஓய்வுள்ளவர்களாயிருந்திருக்க வேண்டும். (iii)தாமாகவே, பிறரிடமிருந்து அன்றி, இந்த மெய்ம்மையை மக்கள் கண்டு கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியா ஒன்று என்று தோன்று கிறது. இதற்கு முன்னரே இந்தியா மிக உயர்ந்த மூளைத்திறம் அமையப் பெற்றிருந்தது. இதனைக் கண்டுபிடித்தபின் அம்மெய்ம்மையின் வியத்தகு சிறப்பு வேறெந்த நாட்டையும் விட இந்தியாவில் மக்கள் உள்ளத்திலும் சமயக்கருத்துக்களிலும் ஆழ்ந்து பதியலாயிற்று. 21 (i) ஸ்பென்ஸர் & கில்லென்(ளயீநnஉநச&படைடநn) கூறுகிறபடி, ஆஸ்திரேலியாவின் பழங்குடி வசiநெ களில் பலர் இன்னும் கருவாதலும் பிறப்பும் (ஒதுக்கிடங்களில் கரந்துரையும்) ஆவிகளின் மூலமே ஏற்படுகிறது பெண்களை, சிறப்பாக இளமையும் உடல்பொலிவும் உடைய பெண்களைக் கண்டால், அவ் ஆவிகள் வாய்ப்பு வரும்பொழுது அப்பெண்கள் உடலில் புகுந்து புதுஉயிர்களாக (மாந்தக் குழந்தைகளாக) உருவாகின்றனர் என்று கருதுகின்றனர். இந்திய மக்களின் மூளைத்திறன் காரணமாக, இங்கே எழுந்த ஊகங்கள் பலதிறப் பட்டவை. ஆயினும் இங்குள்ள சுயநலப் புரோகித வகுப்பினர் (யீசநைளவடல உயளவநள)ஆஸ்திரேலியப் புதர்மக்களிடையே உள்ள மூடக் கருத்தையே எடுத்துக் கொண்டு (போலியான ஒரு) தருக்க வாத டடிபiஉ கோட்பாட்டு முறையை உருவாக்கினர். (ii) பெண் உடலில் ஓர் ஆவி புகுவதன் மூலமே குழந்தை உருவாகிறது என்றால், அந்த ஆவி எங்கிருந்து வருகிறது? இறந்துவிட்ட ஏதேனும் ஒரு உடலிலிருந்துதானே வந்திருக்க வேண்டும்? இக் கருத்திலிருந்தே படிப்படியாக உயிர்களின் பிறப்பு இறப்புத் தொடர்ச்சிக் கொள்கை ஐனநய டிக வாந கூசயளேஅபைசயவiடிn டிக ளடிரடள வளர்ந்தது. மாந்தக் குழந்தை பிறப்புக்கு விலங்குகள், செடியினங்கள் காரணம் என்ற பழைய கொள்கை போய் விட்டபோதிலும், மறுபிறப்புக்கொள்கையின் வசயளேஅபைசயவiடிn வளர்ச்சியில் பழையதன் சாயல் இடம் பெற்று “எல்லா உயிர்வகைகளிடையேயும் ஒரேமாதிரியான தொடர் ஒற்றுமைக்” கருத்து நுழைந்தது. இத்துடன் தொடரும் பல பிறவிகளில் தாழ்ந்த நிலை உயிரினங்களிலிருந்து படிப்படியாக மிக உயர்படியிலுள்ள உயிரினங்களை நோக்கி ஓர் உயிர் முன்னேறுகிறது என்ற பிறவியுயர்வுக்கோட்பாடும் உருவானது. (iii) மறுபிறப்புக் கொள்கையுடன் வினைப்பயன் கொள்கையும் னுடிஉவசiநே டிக முயசஅய சேர்ந்தது. இரண்டும் ஒரே முழுநிறை தத்துவ முறைமை ஆனது. இது இந்து சமயத்துக்கு மட்டுமன்றிப் புத்தசமண சமயங்களுக்கும் அடிப்படையானது. “வினைப்பயன் கோட்பாடு”(மயசஅய) என்பது ஒழுக்கத்துறை சார்ந்த ஒரு காரணகாரியக் (அடிசயட உயரளயவiடிn) கோட்பாடேயாகும். அதன்படி ஒவ்வொரு பிறப்பிலுமுள்ள ஒவ்வொரு செயலும் அதன் நீக்கமுடியாத பயனை விளைவிக்கிறது. நற்செயலிலிருந்து இன்பமும், தீச்செயலிலிருந்து துன்பமும் உண்டாகின்றன; அந்த இன்பம் துன்பம் இப்பிறப்பிலேயே விளையாவிட்டால், கட்டாயமாக அடுத்த பிறவிகளில் விளைகிறது. 22 (i) மறுபிறப்புக் கோட்பாடும் வினைப்பயன் கோட்பாடும் தோன்று வதற்குக் காரணம் மடத்தனமே (னநடரளiடிn)ஆயினும், அவற்றின் அபத்தம் காணப்பட்டபின்பும், மனித மூளைக்கு (hரஅயn iவேநடடநஉவ)அவை முழு மனநிறைவு தந்ததால், அவை கைவிடப்படவில்லை. ஏனெனில் எந்த நீதி நேர்மை முறையைப் பற்றிய அறிவோ வந்ததும், அதைப் பிரபஞ்சம் முழுவதும் முழுநிறைவடிவில் புகுத்த வேண்டுமென்று மனித உள்ளம் அவாவுகிறது. மேலும் புராட்ட°டன்ட் கிறித்தவரின் சுவர்க்க- நரகக் கோட்பாட்டை விட “மறுபிறப்பு - வினைப் பயன் கோட்பாடு” மனித ஆவலை முழு அளவில் தீர்ப்பதாய் அமைந்துள்ளது. சுவர்க்கம், நரகம், இடைப்பட்ட ஞரசபயவடிசல என்ற கத்தோலிக்கக் கிறித்தவரின் கோட்பாடு கூட அதற்கு ஈடாகாது. (ii) விவிலிய நூலில் யோபுவுக்கு துயரத்துடன் ஆறுதல் கூறவந்தவர் களுக்குமட்டும் மறுபிறவிக் கோட்பாடு தெரிந்திருந்தால் பின்வருமாறு எளிமையாகச் சொல்லிவிட்டு ஒதுங்கியிருப்பார்கள்(யோபு தடிb ஐ சோதிக்க கர்த்தர் அவனுக்குத் தாங்கொணாத இன்னல்களைத் தருகின்றார். இத் தூயவனுக்கு வந்த வாதைகளைக் கண்டு அனைவரும் வருந்துகின்றனர். இறுதியில் கர்த்தரே அவன் இன்னல்களைப் போக்குகிறார்.) “என் அருமை யோபு, நீ இப்பிறப்பில் நன்மதிப்புக்குரிய முன்மாதிரி ஒழுக்கம் உடையவன் தான். ஆனால் உன் முற்பிறவிகளில் நீ கொடுமையான தீவினைகளைச் செய்திருப்பாயே; அவற்றின் பயனை நுகருமுன் நீ இறந் திருப்பாய். அந்தப்பழந் தீவினைக்கான தண்டனையை இப்பிறப்பில் அனுபவிக்கிறாய். இப்பொழுது படும்பாடு எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவு விரைவாக உன் பழந்தீவினைப் பயன் ஒழிந்து விடும். இப்பிறப்பில் நீ செய்யும் நல்வினைகளுக்கான நற்பயனை அடுத்த பிறவியில் எய்தி மகிழ்வாய்,” 23. வினைப்பயன் (கர்மம்) கொள்கை மனிதன் தன் இன்னல்களைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளப் பேருதவியாக இருப்பது உண்மையே. ஆனால், இக்கொள்கை காரணமாக இந்தியர் பிறர் துன்பங்களை ‘அவனவன் முற்பிறவிப்பாவங்களின் பயன்’ என்று எண்ணி வாளா இருப்பதைப் பிறநாட்டார் சரியெனக் கருதுவதில்லை. நடைமுறை அரசியலிலும் சமூகக் கொடுமைகளைக் கண்டு சினங்கொண்டு தீர்க்க முயலும் மனப்பான்மை உருவாவதை இது தடுக்கிறது; அம்மனப்பான்மை உருவாகவும் தடையாகிறது. “பிராமணன் தனிச்சிறப்பும் உரிமையும் உடையவனாகவும், பறையன் சண்டாளன் இழிநிலை அடிமையாகவும் இருப்பதற்கு முன்வினையே காரணம். நல்வினைகள் செய்தவன் பிராமணனாகப் பிறக்கிறான். பறையனாகப் பிறப்பவன் முன் பிறவியில் விலங்காகப் பிறந்தும் நன்மை செய்தமையாலோ, அல்லது உயர் வருணத்தில் பிறந்து தீவினைசெய்ததன் தண்டனையாகவோ அப்பிறப்பை அடைகிறான். இப்பிறவியில் பறையன் நல்வினை செய்தால் உரியகாலத்தில் இன்னொரு பிராமணனாகலாம், இப்பிறப்பில் பிராமணன் தீயன செய்தால் அதற்குத் தண்டனையாகப் பின்னர் பறையனாகவும் பிறக்கலாம். இத்தகைய எண்ணவோட்டங்களை மறுபிறவிக் கொள்கை உருவாக்குகிறது. 24. வினைப்பயன் கோட்பாட்டின் இன்னொரு பலனாவது: விலங்கு கள் பறவைகளை இந்தியர் நடத்தும் முறை, பிரிட்டிஷ் (ஐரோப்பிய) முறைக்கு நேர்மாறானது. இந்துவுக்கு ஒருவிலங்கை, பறவையை விரைவாக வலி யின்றிக் கொல்வதும், கொலைக் குற்றத்துக்கு ஒப்பாகும். ஆனால் பசிபட்டினி, நோய் இவற்றால் ஓர் விலங்கு பறவை எவ்வளவு வலியும் துன்பமும் சித்திரவதையும் அடைந்து உயிர்விட்டாலும், அதை அப்படிச் சாகவிடுவதையே நல்ல செயல் என்று இந்தியர் கருதுகின்றனர். அதுமட்டு மன்று. “சித்திரவதை செய்வதுகூட விலங்குக்கு துயர்தருவதால் தீச்செயல்” என்று இந்தியர் கருதுவதில்லை; ‘சித்திரவதையைச் செய்பவர்கள், பார்த்திருப்பவர்களுடைய உணர்வை மரத்து மழுங்கச் செய்வதனால்தான் தீங்கு’ என்றும் இந்தியர் கருதுகின்றனர். தெருநாய்களை கொன்றழிக்கும் முறையை மேற்கொள்ள பம்பாய் நகரரட்சி கருதியபோது, கண்டித்துப் பொதுவேலை நிறுத்தமே நடந்தது. ஆனால் நேர்மாறாக, கோடைக்கானல் நகராட்சி வண்ணார் கழுதைகளைக் கொடுமைப்படுத்துவதை தடுக்கக் கருதிய போது, வண்ணார்கள் வேலை நிறுத்தம் செய்து தடுத்து நிறுத்திவிட்டனர்! 25. மறுபிறவிக்கோட்பாட்டினால்தான் நோயும் ஆபத்தும் விளை விக்கும் எலி, சுண்டெலி, நோய்க்கிருமி எவற்றையும் இந்தியர் கொன் றொழிக்க இசைவதில்லை. ஆனால் குதிரை, வண்டிமாடு போன்றவற்றை வேறு எந்த நாகரிக நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியர் இங்கே கொடுமைப்படுத்துகின்றனர்! காரணம் என்ன? எலி ஒன்றை அதன் விதி முடியு முன் கொன்றால், அதன் ஆன்மா இந்தப் பிறவியில் வினைப் பயனை ஒழிக்க முடியாமல் போவதுடன் அடுத்த பிறவியில் உயர் பிறவியாக முடியாமல் எலியாகவே மீண்டும் பிறக்கவும் நேரிடுகிறது! உயிரின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றிலிருந்து அடுத்தபடிக்கு காலத் தாழ்வின்றிப் போவது தடுக்கப்படுகிறது. ஆனால் குதிரைகள், எருதுகளை எப்படிக் கொடுமைப்படுத்தினாலும், அவை கொடுமைகளே ஆகமாட்டா! அக்கொடுமைகள் யாவும் குதிரை எருதின் ஆன்மாவுக்கு நற்பயன் கணக்கில் ஏறி, அதன் உயிர்உயர்பிறவிக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும். 26(i) மறுபிறவிக்கருத்து இந்து , புத்த, சமண சமயங்கள் மூன்றிற்கும் பொதுவாயினும், சமணமே இதனை நூற்றுக்கு நூறு வலியுறுத்துவதாகும். சமணமும் புத்தமும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றியவை. ஆனால் இந்தியாவில் புத்தசமயம் அழிந்து போயிற்று. சமண சமயத்தவரோ 1911-இல் பன்னிரண்டரை இலட்சம் பேர் இந்தியாவில் இருந்தனர். சமணருள் பெரும் பாலோர் பெருஞ்செல்வரும் படித்தவர்களும் ஆகையால் அவர்கள் பிற இந்தியர்களை விடப் பொருளாதார அரசியல் அதிகாரம் வாய்ந்தவர்கள். (ii) அண்மையில் 1920களில் ஆஜ்மீர் பக்கத்தில் ஒரு சிறுத்தையை உயிருடன் பிடித்தபோது, சமணர்கள் கூடி, பணம் திரட்டி அதை விலைக்கு வாங்கி உயிரோடு காட்டில் விட்டுவிட்டனர்! சிறுத்தையின் உயிரைப் பாதுகாத்து புண்ணியம் அடைந்தனர். (iii) புத்தசமயப்பேரரசர் அசோகர் அவர்காலத்தில் மனிதருக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தியிருந்தார். அதேமாதிரி விலங்கு மருந்துவமனைகளை (பிஞ்சரப்போல்) சென்னை யிலும் தென்இந்தியாவின் மற்ற இடங்களிலும் சமணர்தம் செலவில் இன்றும் நடத்தி வருகின்றனர். அது மட்டுமா? நோய்வாய்ப் பட்ட பூச்சிகளுக்கு மருத்துவம் செய்யவும் சில ஜீவத்கானா மருத்துவமனைகளைச் சமணர் நடத்துகின்றனர். அவற்றைப் பற்றி எனக்கு முழுவிவரங்கள் தெரியாது. 27. சமண, புத்த, இந்து சமயங்கள் மூன்றுக்குமே அடிப்படைக் கோட் பாடுகள் பொதுவானவையாயினும் சமணமும் புத்தமும் ஆர்வத்தால் ஒரு படி மேற்சென்றுள்ளனர். புத்தரும் சமணரும் நல்வினையின் பலனைக் காட்டி ஊக்கி, மற்ற உயிரினங்களின் ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவ முனை கின்றனர். இதைப் பர்மாவில் காணலாம். (1924.இல்- ஏன் 1935 வரை பர்மாவும் இந்தியாவின் ஒரு மாகாணம்தான்) அதன் புத்த குருமார் ஊர் தோறும் ஊரவர் வாழ்வை ஒழுங்கு படுத்துகின்றனர். அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பர்மா உச்ச உயர்நிலை அடையச்செய்துள்ளனர். பர்மியருக்கே தனிப் பண்பாயுள்ள நல்லமைதியும்(யீநஉரடயைச பநவேடநநேளள), அவர்கள் சீரான வாழ்க்கையும் புத்தகுருமார் கொடையே ஆகும். 28(i) ‘மனிதர் கருவுற்றுப் பிறத்தல்’ தெரியவந்த பின்னர் சிவன், விஷ்ணு ஆகிய புதிய தெய்வங்களை உருவாக்கினர். ஒரே தெய்வத்தின் இருவேறு வடிவங்களாகிய இவர்களைச் சில இடங்களில் சிவன் என்றும் சில இடங்களில் விஷ்ணு என்றும் அழைக்கிறார்கள் எனலாம். இந்தியர் அல்லாத பிறர் எண்ணத்தில் திருமால் பொதுவாகப் படைப்பு, காப்பு இவற்றையும், சிவன் அழிப்பையும் நடத்துபவர்கள்; இவர்களுடன் படைப்பவன் பிரமனும் சேர்ந்து மும்மூர்த்திகளாக ஆகிறார்கள். (ii) ஆனால் சிவன் அடிப்படையில் அழிவுக்கடவுள் அல்ல; பிறப்புக் கடவுளே (படின டிக யீசடிஉசநயவiடிn). அவர்அடையாளமே பிறப்புக்குரிய ஆண் குறியின் வடிவமாகிய இலிங்கம் *(உயிரின் குறியீடு). கோயில்களில், கோயில்களுக்கு வெளியில், (கோயில்கள் இல்லாமலே) வெட்ட வளியில் கூட, இலிங்கங்களை கல்லில் நிறுவி வணங்குகின்றனர். தென் இந்தியாவின் முக்கிய சாதிகளுள் ஒன்றைச் சேர்ந்த லிங்காயதர் (டiபேயலயவள)தங்கள் கழுத்திலேயே சிறு இலிங்கங்களை அணிந்து கொள்கின்றனர். லிங்கம் பற்றிய இந்தியர் கருத்தை மதுரையில் சிவன் - மீனாட்சி கோவில் சிற்பம் ஒன்று காட்டும் பழங்கதை விளக்குகிறது. “நீண்ட நாளாகப் பிள்ளை வேண்டித் தவங்கிடந்த முதிய தாய் தந்தையர் இறுதியில் அவ்வரம் பெற்றனர். ஆனால், வரம் ஒரு மாதிரியாக அமைந்தது! தாய்தந்தையர் இறந்த பின்னரும் வாழும் தீயொழுக்கமுள்ள வீணனும் தாம் இறந்தபின் பிள்ளையில்லாதவர் செல்லும் பழியுலகிலிருந்து அவர்களைக் காப்பதற்கு, அவர்கள் இறுதிக் கடனாற்றுபவனுமான வீணன் வேண்டுமா? அல்லது அழகிய , நல்லொழுக்கமுடைய, ஆனால் தாய்தந்தையருக்கு முன்னரே, தன் இளமைப் பருவத்திலேயே இறந்துவிடும் புதல்வன் வேண்டுமா? என்று தெய்வம் கேட்டது. தாய்தந்தையர் பிந்தியவகைப் புதல்வனையே தேர்ந்தனர். நல்லொழுக்க முடைய அப்புதல்வன் சிவபெருமானைப் பூசனை செய்து, காலன் தன் உயிரை எடுக்க வந்தபோது, இலிங்கத்தை இறுதிப்பற்றிக் கொண்டதனால், யமன் அவனை அசைக்க முடியாது போயிற்று. தாய் தந்தையர் சாகும்வரை இளைஞன் அவர்கள் வாழ்வின் ஒளியாயிருந்தான்.” 29(ய) சிவனைப்போலவே விஷ்ணுவும் தொடக்கத்தில் பிறப்புத் தெய்வந்தான் (படின டிக யீசடிஉசநயவiடிn). அவர் குறியீடாகிய நாமம் கலவிச் சின்னம் (யஉவ டிக உடிவைiடிn). அது ஆண் பக்தர்களின் நெற்றியில் வெண் சுண்ணம் செஞ்சுண்ணத்தால் வரையப்படுகிறது. சிவனைப் போலவே அழித்தலும் விஷ்ணுவின் துணைப்பண்பாகும். திருமால் நெறியினரின் முக்கிய திருநூலான பகவத்கீதை இதை நன்கு தெளிவுபடுத்துகிறது. (b) கிருஷ்ணன் ஆகப் பிறந்த விஷ்ணு குருட்சேத்திரப் போரில் அருச்சுனனுக்குத் தேரோட்டியாகிறான். போரிலீடுபட்ட பாண்டவரும் கௌரவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளானாலும் உறவினர். உறவினர் களை அழிக்கும் போரில் இறங்க அருச்சுனன் தயங்கி, கண்ணனிடம் கேட்கிறான். “உறவினரைக் கொல்வது பாவம் அல்லவா? இவ்வழிவு பொது அமைதிக்கேடு, பெண்கள் ஒழுக்கக்கேடு, சாதிநெறிக் குழப்பம், சமயக்கடமைப் புறக்கணிப்பு இவற்றுக்கு வழிவகுப்பதல்லவா? அத்துடன் இறுதிக் கடனாற்றவேண்டியவர்கள் சாவதால் முன்னோர் நரகத்துக்கு செல்லவும் வழிவகுப்பதாயிற்றே! இப்படுகொலையில் ஈடுபடுவதை விட, எதிர்தரப்பார் கைப்பட்டு இறத்தலே சிறந்ததல்லவா?’ கண்ணனோ “உன் கடமை போர்செய்து வெற்றிபெறுவதே,” என்கிறான். அத்துடன் தனது விரிவான பகவத்கீதை விரிவுரையில் வைணவ தத்துவங் களையும் தன் இயல்பையும் விளக்குகிறான். “நான் இன்றுள்ளன யாவற்றையும் விழுங்கும் காலன். இனி வரப்போகும் யாவற்றுக்கும் மூலமும் நானே.” இங்ஙனம் கூறிவிட்டு, அருச்சுனனுக்கு கண்ணன் பின்வரும் வி°வ ரூபத்தைக் காட்டுகிறான்:- “பல வாய்கள், கண்கள்; தெய்விக அணிகலன்கள் பல. தெய்விகப் படைக் கலங்கள் தாங்கி, வியக்கத்தக்கவனாய் எல்லையற்றவனாய், திசைஅத்தனையிலும் திரும்பிய முகங்களுடையவனாய், வானில் ஆயிர ஞாயிறெழுந்தாற்போன்ற பேரொளியுடையவனாய்” அதைக் கண்டு மலைப்பெய்து மிரண்ட அருச்சுனன் மொழிகளிடையே, அவன் பின்வருவதையும் கூறுகிறான்.“உன் பற்கள் காலத்தின் அழிவுக்கனல் (வiஅந’ள னநளவசடிலiபே கடயஅநள) போன்றிருக்கின்றன. நம் படைகளின் தலை சிறந்த வீரர்களெல்லாம் உன் திறந்த வாய்க்குள் பாய, அவர்கள் தலைகள் நெரிந்து தவிடுபொடியாக அரைக்கப்படுகின்றன. தீயையே நாக்காய்ப்படைத்த நீ, எல்லாம் விழுங்குகிற நீ, மனித இனம் உட்பட யாவற்றையும் விழுங்குகிறாய்.” 30. திருமாலும் சிவனும் இருவேறு பெயர்களில் விளங்கும் ஒரே கடவுள்தான் எனினும் திருமால் வட இந்தியாவுக்கும் சிவன் தென் னிந்தியாவுக்கும் உரியவராகக்கூடும் (தென்னாடுடைய சிவனே போற்றி-திருவாசகம்). ஆனால், இருவரில் ஒருவரும் வேதத் தெய்வமல்ல. சைவப் பெருந்தலைவர் சங்கராச்சாரியும், வைணவப் பெருந்தலைவர் இராமானுஜாச் சாரியும் திராவிட இந்தியாவிற் பிறந்தவர்கள்தான். எனினும் சிவனும் விஷ்ணுவும் நூற்றுக்கு நூறுதிராவிடக் கடவுள் ஆக இல்லாமலும் இருக்கலாம் . சிவன், திருமால் ஆகிய இரு தெய்வங்களும் இந்தியக் கடவுளரே, திராவிட மூளையின் படைப்புக்களே என்றாலும், அவர்கள் வேதகாலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவர்கள், ஓரளவு ஆரியர் நுழைந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் திராவிடர் உருவாக்கிய கடவுள்களாகவும் இருக்கலாம் என்று கருத இடமுண்டு. 31(i) முன்பத்தியிற் சொன்னதன் அடிப்படை என்ன? காளிக்கு எருமை யுடன் தொடர்புண்டு; சிவனுக்கு எருதுடன் தொடர்புண்டு. மேலே குறித்தவாறு இந்தியக் காளையானது இந்தியாவுக்குப் புறம்பான காட்டு எருது வகையி லிருந்து உருவானது என்பது உறுதி. எனவே, அக்காளையை நாடோடி முல்லைநில மக்கள் யாரோ (ஆரியர்களாகவும் இருக்கலாம்.) கொணர்ந்தனர் என உன்னிக்கலாம். இந்திய சமயம் மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்கிறது, சிறப்பாகப் பசுக்கொலை கூடாது. இந்தியாவுக்குள் நுழைந்த புதியவர்கள் தங்கள் கால்நடைகளைக் காப்பதற்காக அவற்றை, சிறப்பாகப் பசுவைக் கொல்வதைக் கடும் குற்றமாக, பாவமாக ஆக்கியிருக்க வேண்டும். இத்தடை முழுப் பயன் தரும் வகையில், தாங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே இந்தியாவிவிருந்த திராவிடரும் கடைப் பிடிக்கச் செய்திருக்க வேண்டும். (ii) சிவனும் விஷ்ணுவும் காளையுடன் தொடர்புடையவர்கள். கண்ணனின் பெயர்களுள் ஒன்று இராசகோபாலன்(மiபே உடிறாநசன) என்பது. ஆழ்ந்து பார்த்தால் வேதகாலத்துக்கு முன்பே திராவிடர்கள் எருமையைப் பழக்கி நெல்வயலை உழுததுடன் எருமையை வளப்பந்தரும் அன்னை (படினனநளள டிக கநசவடைவைல) உடன் சேர்த்துப் போற்றினர். ஆயினும் அவர்கள் எருமையினத்தை மேம்படுத்தும் முறையை செநநனiபே மேற்கொள்ள வில்லை. எருமைக்கன்று உருவாவது பற்றியும் அறியார். பிற்காலத்தில் வந்த (எருமையைவிட மதிப்பு வாய்ந்த) காளையையும் பசுவையும் கண்டபின்னரே, எருமைகளும் மாடுகளும் ஒன்று போன்றவை என உணர்ந்திருப்பார்கள். (iii) ரிக்வேதம் இலிங்க பூசையைக் குறிப்பது கண்டிப்பதற்குத்தான். வேதகாலத்துக்கு முன்பே விஷ்ணு, சிவன் இவர்களைத் திராவிடர் வழிபட்டுவந்தனர் என்பதை இது காட்டுகிறது. எலியட் சுமித் கூறுவது போல், எகிப்தில் தாய்த்தெய்வத்தின் மூலவடிவம் ஒரு தெய்விகப் பசுவே. எகிப்தில் அது கி.மு. 4000 முதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தெய்வீகக் காளையும் சம முக்கியத்துவம் அடைந்திருந்தது. எனவே ஆரியருக்கு முற்பட்ட காலத்திலேயே எகிப்தியத் தொடர்பு காரணமாக சிவன்- காளை இயைபு, பசுவின் புனிதம் பற்றிய கோட்பாடுகள் இந்தியாவில் நிலை பெற்றிருந்தது என்ற கொள்கைதான் (மேலே(ii)ல் சொன்ன கோட்பாட்டை விட) வலுவானதாகத் தோன்றுகிறது. 32(i) சிவன், திருமால் இவர்களைவிட பிரமன் மக்கள் செல்வாக்கில் மிகவும் குறைந்த தெய்வம். சிவனுடனும் திருமாலுடனும் பிரமன் திருமூர்த்தி வடிவில் இணைக்கப்பட்ட வகையிலும்,(பிற்கால இந்திய சமய தத்துவத்தின்படி, பரம்பொருளுக்குரிய (ரniஎநசளயட ளயீசைவை) பெயர் ஆகிய பிரம்மா என்ற பெயரிலும்) அன்றி வேறெந்த வகையிலும் தென் இந்தியாவில் பிரமனுக்கு மதிப்பு இல்லை பிரமனுக்குரிய ஒரே பெருங்கோயில் இராஜபுதனத்தில் ஆஜ்மீர் அருகிலுள்ள புஷ்கரத்தில் உள்ளது. ஆயினும் திருமால், சிவன் போலவே பிரமனும் வேதத்தெய்வம் அன்று. ‘பிரம்மா’ பிராமணசாதி ஆகையால் பிரமனும் வேதகாலத்துக்கு முற்பட்ட காலத்தவனே என்று கூறலாம். (ii) “ஞாயிறும் பாம்பும்” (வாந ளரn யனே வாந ளநசயீநஅ) என்ற நூலில் ஓல்டு ஹாம் இராஜபுத்திர அரசரில் சூரிய, சந்திர மரபு, இரண்டுமே நாகர் அல்லது திராவிடமரபுகளே என்று கருதுகிறார். எகிப்திலிருந்து தான் கீழ்த்திசைநோக்கி ஞாயிறு, பாம்பு வணக்கங்கள் விரிந்து பரந்துள்ளன என்று எலியட் °மித் சான்றுகளுடன்கூறுவதும் ஓல்டுஹாமின் இம்முடிவை ஆதரிக்கிறது . எனவே எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதிரவன் தெய்வமே பிரமன் என்று நாம் கருதலாம். 33(i) திருமாலும் சிவனும் விலங்குப் பலி கேட்பதில்லை. ஆனால், அவர் களைப்பற்றிய புராணக்கதைகளில் வருவது போல் கன்னிப்பெண் கேட்கின்றனர். பல வழிகளில், கொடுமையான வழிகளிலும், சிறு பெண்களைப்பிடித்து, இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக உருவாக்குகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் சமய முக்கியத்துவம் வாய்ந்திருந்தால், அங்கு மேகநோய்கள்(எநநேசநயட னளைநயளந) மிகுதி எனலாம். (ii) 1917-இல் கும்பகோண நகரின் மக்கள்தொகை விவரங்களைச் சரிபார்க்கும் பணியைச் சென்னை மாகாண அரசு எனக்குத் தந்தது. பல ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் மிகக் குறைந்து1000க்கு 30-ஐ ஒட்டி ஊசலாடிக் கொண்டிருந்தது. அரசு ஊழியர்கள் பிறப்புக்களிற் பலவற்றை ஒழுங்காகப் பதிவு செய்யவில்லை என அரசு ஐயுற்றது. ‘நகர மன்றம்’ அதனை மறுத்தது. மாவட்ட கலெக்டரும் ஆராய்ந்து, நகரவை முடிவு சரியென்றார். (iii) நான் கும்பகோணம் நகரமன்ற அலுவலாளர்களிடம், பிறப்பு விகிதம் குறைவாயிருப்பதற்குக் காரணம் கேட்டேன். அவர்கள் உடனே “இங்கே பன்னிரண்டு பெருங்கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வென்றிலும் தேவதாசிகள் இருக்கிறார்கள்” என்றனர். மருத்துவ விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் பாதிப்பேர் வெள்ளை, வெட்டை (படிnடிசசாடிநய, ளலயீhடைளை) முதலிய மேகநோய் கடுமையாக பீடித்தவர்கள். பலர் ஆயுர்வேத மருத்துவர்களிடம் வெளியே சிகிச்சைபெற்றுக்கொண்டவர்கள். பிராமண இளைஞர் ஒருவர் “இவ்வூர் பிராமண மாதரில் ஐந்தில் நான்குபேர் இந் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்று கூறினார். (iஎ) அம் மருத்துவமனைக்கு (வெளிநிலை நோயாளித் துறை உட்பட) பொறுப்பேற்று 30 ஆண்டு மருத்துவராயிருந்த ஒருவர் இந்தக் கருத்து சரியே என்றார். பிராமணர்களைவிட சௌராஷ்டிரரின் நிலை இன்னும் மோசமானது; ஏனென்றால் அவர்களிடையே ஆண்களும் பெண்களைப் போலவே ஒழுக்கங்கெட்டவர்கள்; அத்துடன் மற்றவர்கள் அளவுக்கு பால்வினை நோயைத் தடுக்கும் முறைகளையும் அவர்கள் அறியாதவர்கள்” என்று கூறினார். 34(i) பிற்காலச் சமயக்கருத்து வளர்ச்சிபற்றி நான் சுருக்கமாகத்தான் குறிப்பிட இயலும். ஞாயிறுக்கு வாழ்க்கைத் துணைவி வேண்டுமென்று கருதியவர்கள். சில இடங்களில் நிலவை(அடிடிn படினனநளள) துணைவி யாக்கினர். சிலர் நிலமகளைத் தேர்ந்தெடுத்தனர். பிரமன் துணைவி யாகிய சர°வதியையும் (அறிவுத் தெய்வம் நான்முகனைப் போலவே வானில் உறைபவள்) திங்களோடு இணைத்தனர், படைப்புத் தெய்வத் துடன். பிறப்புத் தெய்வத்தை இணைப்பது இயல்பாகலின் விஷ்ணுவை லட்சுமியுடனும், சிவனைப் பார்வதியுடனும் இணைத்தனர். (ii) படைப்புப் பற்றிய சைவப் புராணக்கதை எளிமையும் தத்துவ ஆழமும் உடையது. சிவனும் பார்வதியும் செடியினங்கள் உயிரினங்களை உருவாக்கிட அரும்பாடுபட்டபொழுது அந்த வேலை எளிதில் இயலுவ தாக இல்லை சிவபிரான் சிந்தித்தார். அவரது வலத்தொடை இடத் தொடைகளிலிருந்து முறையே ஆண் காதல் தெய்வம் ஒன்றும், பெண் காதல் தெய்வம் ஒன்றும்(அயடந யனே கநஅயடந உரயீனை) தோன்றி, ஆண் பெண்கள் உள்ளங்களில் பால் உணர்ச்சியைத் தூண்டினர். அதன்பின், படைப்பு வேலை எளிதாகவும் மும்முரமாகவும் நடந்தது. (iii) சிவபெருமானை அவருக்குரிய மனைவியுடன் இணைக் காமல், காளி, துர்க்கை என்ற பழம் பெண்தெய்வங்களுடன் இணைக்கும் போக்கும் இருந்து வருகிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் சிவனையும் மீனாட்சியையும் மணமுடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி நடக்கிறது. அவர்கள் இருவரும் ஒரே பெரிய கோவிலில் ஒருங்கு வாழ்கிறார்கள். ஒவ்வொரு இளவேனில் பருவத்திலும் அண்டைச் சிற்றூர் ஒன்றிலிருந்து மீனாட்சியின் அண்ணனை அவர் வீட்டிலிருந்து வர வழைத்து அவர் முன் திருமணம் நடத்த ஏற்பாடாகிறது; அவர் புறப்பட்டு வருகிறார். ஆனால் வைகையாற்றின் நீர்வற்றிய ஆற்றுப் படுகையை அவர் கடக்கும் நேரத்தில் ஆண்டுதோறும் அவர் கூட்டத்தவருள் ஒருவருடைய அமங்கலமான தும்மல் அவரைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடுகிறது. திருமணமும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. மீனாட்சி உண்மையில் திராவிடரின் பொது ஊர்த்தெய்வமாகிய ஊரம்மனின் உள்ளூர் வடிவமே. 35. அசோகர் புத்த சமயத்தைச் சிந்துகங்கைவெளி உட்பட ஏறத்தாழ இந்தியா முழுவதுமே அரசு சார்ந்த சமயமாக ஆக்கினார். சமண சமயமோ இன்னும் தெற்கே பரந்திருந்தது. சிவநெறி விஷ்ணு (திருமால்) நெறி இரண்டுமே புத்த சமண சமயங்களைத் தீவிரமான பிரசாரத்தினாலேயே வென்றன. இத்துடன் இன்னொரு பண்பும் அவர்கட்கு உதவிற்று. புத்த சமய தத்துவக் கருத்தான நாத்திக யீhடைடிளடியீiஉ யவாநளைஅ கோட் பாட்டைவிட, பல புராணச் சூழல்களை உடைய ‘மனிதன் போன்றே நடந்துகொண்ட தெய்வங்களையே’ மாந்தர் பெரிதும் விரும்புவர். அத்துடன் புத்த சமயத்தின் எளிய வாழ்வையும் இளந்துறவையும் யரளவநசவைல யனே உநடiயெஉல விரும்பாமல் பரம்பரையாய் புரோகிதம் செய்த பிராமண சாதியினரும் மனிதரைப்போலவே நடந்து கொண்ட யவோசடியீடிஅடிசயீhiஉ கடவுளையே மிக விரும்பினர். எனவே அவர்கள் பிரசாரத்தால் அத்தகையதெய்வங்களையே பெருமளவுக்குச் சாதாரணப் பொதுமக்களும் விரும்பலாயினர். 36. இந்தியாவின் நிலவியல் அமைப்பு வடக்கே இமயமலைச்சுவர் வட இந்தியாவில் தடைகளெவையுமில்லாத சமவெளி (இந்தியாவின் பிற பகுதிகளைவிடச் செழித்து மக்கள் தொகை மிக்கது அது) இவை காரணமாக வடஇந்தியாவில் பேரரசுகள் பல எழுந்தன. ஒரு பேரரசுக்கும் அடுத்த திற்கும் இடைப்பட்ட காலங்களில், சிற்றரசுகளும் தலைவர்களும் போரையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினர். போரிடுவதால் பிழைத்தவர்கள் தவிர ஏனைய சிந்தனையுள்ள மக்கள் அமைதியை நிலைநாட்டும் பேரரசையே விரும்பினர். 37. இதே மனப்பான்மையுடன் மதத்துறைச் சிந்தனையாளரும் சிறு சிறு தெய்வங்களை ஒன்றாக்கிட விழைந்தனர். இந்தியர் உள்ளம் அளவைத் (தருக்க) நூல் வழியே செல்வதாகையால் பொதுமை ஒருமை கோட்பாடுக்குச் சென்றது யார் உருவாக்கிய தெய்வமாயினும் சரி, ஆண் தெய்வமாயினும் பெண் தெய்வமாயினும் சரி அவையனைத்தும் ஒரே கடவுளின் படிவங்கள் தான் என்று இந்திய மெய்யியலறிஞர்கள் கூறினர். அது மட்டுமா, உயிர்களும் உயிரில்லாப் பொருள்களுங்கூட வெறும் மாயத் தோற்றமே; அனைத்துக்கும் பின்னர் இருப்பது உருவங்கடந்த ஒரே அடிப்படைப் பொருள்(சநயடவைல). அதுவே கடவுள் என்றும் சாற்றினர். 38. மந்திரவாதத்தின் ஆற்றல் பற்றிய நம்பிக்கை இன்றும் கொஞ்சமும் குறையவில்லை. தங்கம், வெள்ளி, மணிக்கற்கள் அணிந்தால் நற்பலன் வரும் என்று அனைவரும் நம்புகின்றனர். பாம்புக் கடியை மந்திரம் சொல்லி குணமாக்கலாம் என்று பட்டதாரிகள் கூட என்னிடம் பகர்ந்துள்ளனர். 39. நச்சுப்பொடியை (உடிசசடிளiஎந ளரடெiஅயவந) மருந்தாகக் கொடுத்து ஒரு பெண்ணைச் சாகடித்தஆயுர்வேத மருத்துவர் ஒருவர் சென்னை நீதி மன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். ‘முப்பு’ விட்டு நச்சுத்தன்மையை முறித்துத்தான் கொடுத்தேன் என்றான் கொடுத்தவன். முப்பு என்றால் என்ன? என்பதை தெரிவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி தமிழ் லெக்சிகன் தொகுக்கும் குழுத்தலைவர் மூலம், பண்டிதர்களைக் கேட்டு அறிந்தது. “முப்பு என்றால் மூன்று உப்பு. சரியான முறையில் (உரிய மந்திரங்களைச் சரியாக ஓதிச்)செய்த முப்புவை அப்படியே விழுங்குபவனுடைய உடலுக்குள் போனதும் முப்பு பொன்னாக மாறிவிடும். அவன் சாகவேமாட்டான். முப்புவுடன் நஞ்சு கலந்தாலும் நஞ்சின் கேட்டை முறித்து அதையே மருந்தாக்கிவிடும். இந்த மருத்துவர் முப்புவை சரியாகத் தயாரிக்கவில்லை” “இன்னொரு உயர்மதிப்புடைய மருந்தும் உண்டு. உரிய மந்திரங்கள், சடங்குகளுடன் அதைக் கொடுத்தால் செத்தவன் உயிர்பிழைப்பான். இந்த மருந்தை யாரும் செய்வதில்லை; காரணம், செய்யும் போழுது சிறு தவறு நேரினும், மந்திரங்களைச் சரியாக ஓதாவிட்டாலும், பிணம் உயிருடன் எழுவதற்குப் பதிலாக மருத்துவன் தான் சாவான்.” 40. கவர்னர் மாளிகை அருகே சிந்தாதிரிப்பேட்டை கூவம் பாலத்தை 1920 இல் இடித்துக் கட்டியபோது, கட்டாயம் நரபலி கொடுப்பார்கள் என்ற வதந்தி எங்கும் பரவி விட்டது. ஜார்ஜ் டவுனில் தன் மகனைத் தூக்கிக் கொண்டு சென்ற ஒரு அரசுப் பணியாளனைக் கண்ட ஜனங்கள் நரபலிக் காகத்தான் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வதாக நம்பி அப்பணி யாளனை அடித்துக் கொன்றுவிட்டனர். 41. மனித வசியம் மூலம் பிறரை அழிக்கலாம், சீராக்கலாம் என்பது போன்ற உடிவேயபiடிரள ளலஅயீயவாநவiஉ அயபiஉ நடவடிக்கைக் கோட்பாடுகள் எல்லாம் ஆழ்ந்து சிந்தித்துத்தான் உருவாக்கப்பட்டிருக்கும். இவை முதலில் எகிப்திலே தோன்றிப் பிறகு மெதுவாக உலகின் பிறப் பகுதிகளுக்குப் பரவியயிருக்க வேண்டும்; பல இடங்களிலும் தாமாகவே தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றே நான் எண்ணுகிறேன். 42. ஐரோப்பாவில் கழிபழங்காலத்தில் வாழ்ந்த ஆரிக்னேஷிய (யரசபையேஉயைn) பண்பாட்டுக்கால மனிதனிடம் மந்திரவாத நம்பிக்கை இருந்ததற்குச் சான்றுகள் கிட்டியுள்ளன. அவ்வளவு தொன்மையிவேயே இம்மூடநம்பிக்கை எகிப்திலிருந்து பரவிவிட்டதால் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மந்திர சூனியவாதம் திராவிடர், ஆரியர் இரு இனத்தாரிடமும் எகிப்திலிருந்து பரவியிருக்க வேண்டும். வேதங்கள் திராவிடரையே “மந்திர தந்திரக்காரர், செத்தவனை எழுப்பவல்லவர்” என்று குறிப்பிடு வதால், இன்று இந்தியாவெங்குமுள்ள மந்திர தந்திரங்கள் ஆரியர் உருவாக்கியவையன்று திராவிடர் உருவாக்கியவையே என்பதுதான் சரி. ? 5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின் பொருளாதார அடிப்படை (நஉடிnடிஅiஉ யௌளை) நெற்பயிரிடலே திராவிடப்பண்பாட்டின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவு. நெல்லுடன் பல்வகைச் சிறுதானியங்களும் விளைவிக்கப் பட்டன. எனினும் அவற்றை இரண்டாம் தரக் கூலங்களாகவே கருதினர். பிற கூலவகைகளைப் பயிரிடும் போதும் நெற்பயிருக்காக உருவாக்கிய கருவிகளையே அச்சிறுதானியங்களைப் பயிரிடவும் பயன்படுத்தினர். 2. துருக்கிஸ்தானம் பக்கம் எங்கோ ஓரிடத்திலிருந்து நெல்லைத் திராவிடர் கொணர்ந்தனர் என்று சிலர் கூறுவது தவறு. திராவிடரின் முதல் தாயகமல்ல துருக்கிஸ்தானம். இந்தியாவுக்குள் நுழையுமுன் திராவிடர்கள் வந்தவழியில் எங்காவது நெல் பயிரிட்டிருந்தால் அவ் விடத்திலேயே தங்கியிருப்பார்களேயொழிய, (எந்தத் தடயமும் விட்டு வைக்காமல்) மொத்தமாக அவ்விடத்தைவிட்டு வந்திருக்க மாட்டார்கள். பிற நாடோடிமக்கள் போலவே வேளாண்மையறியாதவர்களாகவே இருந்தனர் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். 3. இந்தியாவின் பல பகுதிகளில் காட்டரிசி தானாகவே என்றும் விளைவது. மேற்குக் கரையில் இன்றும் சில காட்டுவாசிகள் அதை உண்ணவும் செய்கின்றனர். ஆண்டுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நெல் வகை உண்டு என்பது பழமொழி. அவையனைத்தும் இந்தியக் காட்டரிசியிலிருந்தே தோன்றின என்று கருதுவது தாவரவிய லுக்கு இசைந்ததே. 4. எகிப்தியர் நெல்லைப் பயிரிடுவதற்கு முன்னரே வால்கோதுமை (யெசடநல), சாமை ஆகியவற்iறைப் பயிரிட்டனர், எனக்கருதுகின்றனர். அக்கருத்து சரியாக இருக்கலாம். “கதிரவன் சேய்கள்” என்னும் நூலில் பெரி கூறுகிறபடி, இந்தியாவில் வேளாண்மை செய்யப்பட்ட பயிராகிய நெல் இந்நாட்டுக்குரியதாயிருந்தபோதிலும், தானியம் பயிரிடும் எண்ணம் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம். இரு நாடுகளுக்கு மிடையே கடல் வழித் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே நெற்பயிர் செய்யும் முறை இங்கு வந்திருக்கலாம். 5. புளூர் கருதுவதுபோல் அது தரைவழியாக மிகத் தொல்பழங் காலத்திலேயே மெசெபொட்டேமியாவிலிருந்து வந்திருக்கக்கூடும். இவ்விஷயத்தில் அறுதியிட்டு முடிவுகூறத் தகுந்த எத்தகைய நேரடிச் சான்றும் இல்லை. ஆயினும் ஒரு செய்தி; எகிப்திலிருந்து ஞாயிற்றுக்கல் (hநடiடிடiவாiஉ) வணக்க நாகரிகத்தை மேற்கொண்டதாகக் கருதப்படும் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பண்புக் கூறுகள் பலவற்றிலும் நெருங்கிய ஒப்புமை உள்ளது. ஆயினும் “முண்டா” இனங்களிடமும் (வடகிழக்கு இந்தியாவில் அவர்களைப் போன்றவர்களிடமும்) காணப்படுவதை விட இப்பண்புகள் தென்இந்தியத் திராவிடர்களிடையே குறைவாகவே உள்ளன. வடகிழக்கிந்தியமக்கள் திபத்தோ-பர்மிய மொழிகளையோ (ஏன் திராவிட மொழிகளைக் கூடப்) பேசலாமாயினும், பண்பாட்டில் அவர்கள் ஒரான்(டிசயடிளே) காசி, அங்காமி முதலிய பிற நாக மரபினரைப் போன்றே இருந்னர்; அவர்கள் இனமும் அதுவேயாகலாம். 6. எகிப்துடன் மிகவும் நேரடித் தொடர்பு கொண்ட பகுதி தென் இந்தியாவே என்பதை நோக்க, டப்ள்யூ எச். ஆர். ரிவர்ஸ் (வில்லியம் ரிட்ஜ்வேக்கு அர்ப்பணித்த கட்டுரைத்தொகுப்பு ஆகிய) ‘மக்களினத் தொடர்பு’ (வாந உடிவேயஉவ டிக யீநடியீடநள) என்ற நூலில் கூறும் பொதுவிதிக்கு இது ஒரு சான்று ஆகலாம். அப் பொது விதி “ஒரு மக்களினத்திடமிருந்து பிற இனம் எவற்றைக் கடன் பெறும் என்பது அவர்களிடையே உள்ள பண்பாட்டுத்தர வேற்றுமையைப் பொறுத்தது” என்பதே. 7. தமிழர், மலையாளிகள் இடையே ஞாயிற்றுக்கல் வழிபாட்டு மரபுத் தாக்குதல் மிகவும் குறைவாயிருப்பதற்குக் காரணம், ‘இயற்கை தரும் உணவைத் தேடியுண்பவர்கள் என்ற நிலையிலிருந்து தாமே உணவை உற்பத்தி செய்பவர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதால், கற்றுக்கொள்வதற்கான செய்திகள் மிகக் குறைவு’ எனலாம். ஆகவே, அவர்கள் அயலாரிடமிருந்து வேறு கொசுறுப் பண்புகளை பின்பற்ற விரும்பவில்லை. வெள்ளையர் நாட்டு நாகரிகக்கூறுகளை மேற்கொள்வது நன்று என வெளிப்படையாகத் தெரியுமிடங்களில்கூட, இந்தியர் அவற்றை மேற்கொள்வதில்லை. காரணம் புதியவற்றை பின்பற்றுவதை விடப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த வழக்கத்தைவிட்டு விடுவதுதான் கடுமையானது. 8. நெற்பயிர் விளைவிக்கும் திறனைத் திராவிடர் தாமாகவே தெரிந்து கொண்டனர் என்று கருதினால் , வேளாண்மைத் தோற்றம் பற்றி கிராண்ட் ஆலன் தரும் பின்வரும் புதுமையான ஊகம் பொருத்தமாக உள்ளது: பிணங்களைப் புதைத்தபோது, செத்தவனுக்குப் பயன்படக்கூடும் என்று கருதிப் பயிர்விதைகளும் அப்பிணங்களுடன் புதைக்கப்பட்டன. தொன்மை வேளாண்மைக்கும் நரபலிக்கும் உள்ள தொடர்பை இது விளக்குகிறது. 9. நெல்லை முதலில் நாற்றைப் பறித்து நடும்முறைதான் முதலில் தோன்றியிருக்கும், பின்னர்த் தோன்றியதே விதை விதைத்துப் பயிரிடுதல் என்று நான் நினைக்கிறேன். நாடோடி மக்கள் புதிய வேட்டை நிலங்களுக்குச் செல்கையில் சதுப்பு நிலத்தில் பிடுங்கிய காட்டு நெற்பயிரின் நாற்றை புதிய வேட்டைக்காடுகளுக்கருகில் நடுவதற்காக எடுத்துக்கொண்டு சென்றிருப்பர்; அல்லது அயலிடங்களில் நெற்பயிரைப் பிடுங்கிச்சேர்த்து தம் குடியிருப்புகளில் நட்டிருப்பர். புதுப்பயிருக்கு இடந்தரும் முறையில் களை அகற்றும் பொழுது ஒரு சில நெல் விதைகளும் தற்செயலாக விழுந்து முளைப்பதைக் கண்டு, நாற்றுப்பாவி நடும் எண்ணம் தோன்றியிருக்கலாம். 10. நெல் விளைப்பு எங்கு தோன்றியதாயினும் ஆகுக. நெற்பயிர் வேளாண்மையால் திராவிடர்கள் மீதும் அவர்கள் மூலம் இந்திய பண்பாட்டிலும் ஏற்பட்ட மாறுபாடுகள் பற்றிக் காணப்போகிறோம். 11. இந்தியாவின் பெரும் பகுதி அதுவும், இந்திய சமூக வளர்ச்சி மிகுதியாக நிகழ்ந்துள்ள பகுதியும் (புளுர் இப்பகுதியை பெருவிளைவு நிலங்கள் டயனே டிக inஉசநஅநவே என்பர்.) நெல் விளைச்சல் பகுதிகள் தாம். கங்கை ஆற்றின் மேல்நிலப்படுகை, கங்கை, பிரமபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, காவிரி ஆகியவற்றின் வாய்முக(டெல்டா)பகுதிகள், மலையாளக்கரைத் தாழ்நிலங்கள் ஆகியவற்றில் மக்கள் பெருக்கமானது பொருளியலார் “முயற்சி பெருகினாலும் விளைச்சல் பெருகாமை விதி (டயற டிக னiஅiniளாiபே சநவரசளே)” விதி செயல் படுவதற்கு முன்னால் ‘குறைந்த உழைப்பு, நிறைந்த விளைச்சல்’ நிலையே இருந்து வந்தது . இதேசமயம் கடும் வெப்பமும் ஈரமும் கலந்த காரணமாக வயல் பகுதி ஊர்களின் புழுக்கம் உடல் உழைப்பைக் கொடுமையானதாக ஆக்குகிறது , ஆயினும் அதே நேரத்தில் தொடர் சிந்தனை, ஆழ்ந்த ஆராய்ச்சி இவற்றுக்கு உகந்த அமைதிச் சூழ்நிலை நெல்விளை நிலங்களில் உள்ளது. உணவு உடைத்தேவைகள் அங்கெல்லாம் மிகக்குறைவே. 12. எனவே, வேளாண்மை வந்ததிலிருந்து, உடலுழைப்பு இன்றியே (சிலர்) வாழத்தக்க ஒரு வாய்ப்பும் ஆசையும் ஒருங்கே வளர்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங் களில் மட்ட நிலையான சிறிய பார்ப்பனக் குடும்பம் ஒன்று சாதாரண விளைவுடைய ஐந்து ஏக்கர் நிலவிளைச்சலைக் கொண்டு எந்த உழைப்பு மின்றி வாழ முடியும், வாழவும் செய்கிறது. உழவு போன்ற தொழிலை பள்ளர், பறையரே செய்வதால், நிலச் சொந்தக்காரர்களுக்கு எந்த வேலையுமில்லை. தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள அதிக வளமான நிலங்களில் ஒரு குடும்பம் எந்த உடலுழைப்பும் இல்லாமல் பிழைக்க மூன்று ஏக்கர் நிலம் போதும். 13. மேலும் இந்தியாவில் இயற்கை பேரச்சம் தருவதாயினும் அதே நேரத்தில் வளமையும் உடையது. இங்கே புயல், மழை, வெயில் ஒவ் வொன்றும் வீறும் நிறைவும் செறிவும் உடையவை; நல்ல பயிர் விளைச்சலையும் தருவன. மேனாட்டினராகிய நம்மை முடக்கி , கடும் வலியுடனே நீண்டநாள் வாழ வைத்துக் கொல்லாமல் கொல்லும் சிறுநீர் சார்ந்த நோய்கள் (ரசiஉ யஉனை னளைநயளநள)இந்தியாவில் இல்லை. ஆனால் ஓரிரு நாளில் ஒருசில மணியில் கொல்லும் நோய்வகைகளோ எண்ணற்றவை. அத்துடன் பருவ மழை பொய்க்கும் பேரிடரும் எவ்வாண்டும் நிகழலாம். மழை என்றும் பொய்க்காத மலையாளக்கரையில் , காலந்தவறிப்பெய்யும் மழை இன்னல் விளைவிக்கும். அல்லது வங்காளம் போன்ற இடங்களில் பேய்மழை பெய்து பெரு வெள்ள அழிவும் வரக்கூடும். 14. புவிவியல், புவிவியல்சார் பொருளியல்(பநடிபசயயீhiஉ-நஉடிnடிஅiஉ உடினேவைiடிளே) இவை சார்ந்த மேற்சொன்னவற்றால் இந்திய மக்கள் சமுதாயத்தில் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன. (1) குருமார்வகுப்பு (யீசநைளவடல உடயளள) மந்திரம் சொல்லியும் தெய்வங்களின் கோபத்தைத் தணித்தும் இயற்கையை அடக்கியாள முடியும் என அனைவரும் நம்புவதால் அவர்கள் சமூகத்தில் உச்ச அளவு மதிப்பும் செல்வாக்கும் பெறுகின்றனர். அவ்வப்பொழுது ஆங்காங்கு நிகழும் போர்கள் காரணமாக, போர்த்துறைத் தலைவர்களின் முதன்மை காரணமாக தற்காலிகமாய் இந்நிலை சிறிது மாறக்கூடுமானாலும், உடனுக்குடன் அவ்வகுப்பார் ஆதிக்கம் மீண்டும் தலையெடுத்துவிடும். (2) குருமார் வகுப்பு உரிமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி உடலுழைப்பை அறவே கைவிட்டு விடுகிறது. ஆனால் தன் ஓய்வு நேரத்தையும் ஆற்றலையும் சிந்தனைத்துறையில் ஈடுபடுவதற்கு ஓரளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. (3) உடலுழைப்பு இல்லை; மற்றொருபுறம் மற்ற நாடுகளைவிட, உணவு உடை போன்றவற்றின் தேவை மிகக்குறைவு, இவை காரணமாக இக்குருமார் பெற்றுள்ள சிந்தனையாற்றலைக் கொண்டு வேளாண்மைத் தொழில் முறைகள், கருவிகள் ஆகியவற்றை மேம்படுத்த கருதுவதேயில்லை! வேளாண்மையையும் தொழில்களையும் திறம்பட மேற்பார்வை யிடக்கூட அவர்கள் முயல்வதில்லை. இக்குருமார் சிந்தனை முழுவதும் மனிதன் இயல்பு, உலக இயல்பு, பிரபஞ்சத்தின் மூலமுதற்காரணங்கள் ஆகியவற்றின் ஆய்விலேயே ஈடுபட்டது. குருமார் வகுப்பு இங்ஙனம் அறிவுசார் (iவேநடடநஉவரயட உடயளள) வகுப்பாகவே வளர்ந்துள்ளது. இவ்வகுப்பார் எப்போதும் “அரைகுறைச் சான்றுகளின் மீது பாரிய கோட்பாட்டு மனக் கோட்டைகளைக் கட்டுவதிலெயே” ஈடுபடுகின்றனர். தாம் ஊகிக்கும் முடிவுகள் சரியா என்று சோதித்துப்பார்க்கக் கூட முயல்வதில்லை! (4) இவ்வகுப்பு கூடியமட்டும் குறைந்த உடலுழைப்பு, அல்லது ‘உடலுழைப்பே கூடாது’ என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருப்பதால், உடலுழைப்புக் கீழ்நிலைச்சாதியினர் குறைந்த அளவு சிந்தித்தால் போதும், ஏன் சிந்திக்கவே வேண்டாம் என்ற எண்ண வோட்டத்தை வளர்த்துள்ளது. 15. பெற்றோர் தொழிலையே பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற கோட்பாடும் சாதிமுறையும் (அதைப்பற்றிக் கீழே காண்க) மேற் சொன்ன நிலைமைகளை மேலும் கடுமையாகஆக்கிவருகின்றன. 16.(i). இப்பொழுது நாம் தென் இந்தியத் திராவிடர்களில் தாய் வழி மரபுச் சாதியினரையும் தந்தை வழி மரபுச் சாதியினரையும் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. (ii) மேற்குக்கரை மலையாளிகளிடையே பெண் வழிச் சொத்து உடைமை முறையும். தாய் வழியே உறவுமுறையைக் கணிக்கும் முறையும், நாயர், பந்தர்(யெவேள), தீயர் முதலிய மிகப் பெரும்பாலான சாதியினரிடையேயும், ஓரளவு சிரியன் கிறிஸ் தவரிடையேயும் காணப்படுகின்றன. (iii). அப்பகுதியிலுள்ள மற்ற திராவிடச்சாதிகளிடையே பொதுவாக இந்துச்சட்ட மரபுரிமைமுறையே பின்பற்றப்படுவதுடன் உறவு முறையும் தாய்தந்தை இருவழியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் தந்தை வழியாக உறவுமுறை கணிக்கப்படுவதே பெரும்பான்மை. மகன் தன் பெயருடன் தந்தை பெயரையே சேர்த்துக் கொள்கிறான். ஆயினும் எல்லாச்சாதித் திராவிடரும் தொடக்கத்தில் தாய்வழி மரபினராகவே இருந்தன ரென்று கருத இடந்தரும் வகையில் சில சிறப்புக்கூறுகளை அவர்களின் திருமண வழக்கங்களில் இன்றும் காணலாம். 16. தாய்வழி மரபுரிமைச் சாதிகளின் பழக்க வழக்கங்களுக்கு நாயர்களின் பழக்கவழக்கங்களையே சிறந்த மாதிரியாகக் கொள்ளலாம். அவற்றைச் சுருக்கமாகத் காண்போம். பிரிவினை இல்லாத கூட்டுக் குடும்பமுறையே இங்கே நிலவுகிறது- தரவாடு என்று பெயரில். தரவாட்டின் சொத்து கூட்டுப் பொதுஉடைமை ஆகும். குடும்பத்தின் இல்லமும் நிலமும் நேரடியாக சென்னை, கொச்சி, திருவாங்கூர் அரசுக்கு வரி செலுத்துவதாக இருக்கும்; அல்லது பெருநிலக்கிழாரான நம்பூதிரி பிராமணரிடமிருந்து குத்தகைக்கு (டநயளந)பெற்றதாக இருக்கும். தரவாட்டின் ஆண்மக்கள் அனைவரும் தம் தாய்மாரிடமிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அவ்வுடைமைகளைத் துய்த்து ஆண்டுவருவாயில் பங்கு பெறும் உரிமை யுடையவர் ஆவர். ஆனால் அவ்வுரிமையை அவர்கள் தங்கள் பிள்ளை களுக்கு விட்டுச்செல்லும் உரிமை இல்லை. தரவாட்டின் பெண் மக்களோ ஆண்மக்களைப் போல வருவாயில் பங்கு பெறுவதுடன் தமது பிள்ளைகளுக்கு அதே உரிமையை விட்டுச் செல்லவும் தகுதியுடையவர்கள் ஆவர். 17(i) தரவாட்டின் மிகமூத்த பெண்தான் அதன் பெயரளவு (வவைரடயச) தலைவர். பொதுவாக அதன் மிகமூத்த ஆடவனே காரணவன் என்ற பெயருடன் சொத்துகளை நிர்வாகம் செய்கிறான். சிலசமயம் மூத்தவனுக்கு பதிலாக திறமைமிக்க அடுத்த இளையவன் காரணவனாகி விடுவதும் உண்டு. (ii) நாயர்சாதியில் ஒவ்வொரு தாயும் தன் மகள் பூப்படையும் முன்பே அவளுக்குச் சாதிமுறைப்படி ஒரு (பெயரளவுத் உநசநஅடிnயைட) திருமணம் நடத்தியாக வேண்டும். இது சில மணிநேரத்தில் சிறு செலவில் சடங்காசாரங்கள் எவையுமின்றி நடப்பது. மணப்பெண்ணின் கழுத்தைச்சுற்றித் திருமணக்காப்பு (தாலி) அணிவது மட்டுமே சடங்கு, அவளுக்குத் தாலிகட்டுபவன் குடும்பத்துக்கு முன்பின் தொடர்பில்லாதவனாக, தெருவழி செல்பவனாக இருந்தாலும் சரி. ஒப்புக்கு மணமகனாக இருந்து தாலி கட்டியதற்காக அவனுக்குப் பெண்ணின்தாய் ஒரு ரூபாய் வெகுமதியாய் அளிக்கிறாள். தாலி கட்டியதன் காரணமாய் பெண்ணிடம் மண உரிமையோ, வேறு உறவோ கிடையாது. தாலி கட்டிவிட்டுப் போய் விடுகிறான்; பின்னர் அவன் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கூட நேராது. 18. அப்பெண் வளர்ச்சியடைந்த பின் தான் விரும்புபவனுடன் மணத் தொடர்பை வைத்துக்கொள்வாள். அதன் பெயர் ‘சம்பந்தம்’ அது பல ஆண்டு நீடிக்கும் திருமணமாகவுமிருக்கலாம். சில காலம், மாதம், நாள் கணவன்- மனைவி தொடர்பாகவும் இருக்கலாம். பெண் தான் விரும்பிய நேரத்தில் சம்பந்தக்காரனை நிறுத்திவிடலாம், புதியவனைக் கொள்ளலாம். ஆனால் அவள் ஒரு நேரத்தில் ஒருவனுடன் மட்டுமே சம்பந்த உறவு கொள்ளலாம். மணமகனுக்கு இத்தகைய கட்டுப்பாடு இல்லை. 19. மலையாள நாயர் பெண்கள் தமது தரவாட்டிலேயே வாழ்வர். அவர் களுடன் சம்பந்த உறகொண்டு புணர்பவர்கள் அங்கு வந்தே சந்திக் கின்றனர். பெண் ‘இனி வரவேண்டாம்’ என்று சொல்லியோ, வருபவன் தானாகவே அவளைப் புணர வருவதை நிறுத்திவிட்டாலோ அந்த சம்பந்தம் முடிந்துவிடும். இம் முறையின்படி பிள்ளைகள் தாயின் தரவாட்டு உறுப்பினர்களாகத்தான் ஆகமுடியும். அப்படியே ஆகின்றனர். தாயின் வயிற்றில் அவனை உருவாக்கிய தந்தைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அவன் தரவாட்டுக்குரிய பிள்ளைகளை (அதாவது அக்காள், தங்கையினர் தமது “சம்பந்தங்கள்” மூலம் பெறும் குழந்தைகளை) பராமரிப்பதும் உடன் பிறந்த நங்கையரை பேணி வருவதும் தான் ஆடவன் பொறுப்பு. 20(i). ஆயினும் ஒரு நாயர் தரவாட்டிலிருந்து வெளியே சென்று, தன் முயற்சியினால் ஈட்டும் செல்வத்தை அவன் தரவாட்டின் சொத்தாக கருதாமல், அவன் தன் உடைமையாகக் கருதி விருப்பம் போல் பயன்படுத்தலாம். (ii) தரவாட்டுத் தலைவன் (காரணவன்) உடைய நிர்வாகம் பொதுவாக முயற்சி குன்றியதாகவே இருக்கும். பல தலைமுறையாகச் செல்லும் தரவாட்டு உடைமையின் சொத்து மதிப்பு கூடவாய்ப்பில்லை; அதைக் கொண்டு வாழும் நபர்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தரவாடு அனைவரையும் காக்கும் வலுவை இழக்கிறது அக் கட்டத்தில், தரவாட்டில் அதுவரை உண்பது, குடிப்பது, உறங்குவது, பெண்கள் சல்லாபம் ஆகியவற்றிலேயே பழகியவர்கள் வேலைக்குச் செல்ல நேருகிறது. (iii) சில தரவாடுகளில் உறுப்பினர் சிலர் (தரவாடு அழிவு நிலைக்கு வராத நிலையிலும்) இளைஞரின் முன்னேற்ற ஆசையால் உந்தப்பட்டு தொழில் தேடி வெளியே செல்கின்றனர். அப்படி இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்குச் சென்று வாழும்போது, அவர்கள் தங்கள் மனைவியரை தரவாடுகளிலிருந்து விடுவித்துத் தம்முடன் கொண்டு சென்றுவிடுகின்றனர். அவ்வாறு வெளியூர் வாழ்க்கை மேற்கொள்ளும் துணைவியர் கணவருக்குச் சொந்தமானவீட்டில் வாழ்கின்றனர். ‘கணவனோ மனைவியோ விரும்பினால் சம்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம்’ என்ற போதிலும், அப்படிச்செய்யாமல் இந்நேர்வுகளில் தந்தை தான் ஈட்டிய செல்வத்தைத் தன் பிள்ளைகளுக்கே விட்டுச் செல்கிறான். 21. தரவாடு முறையும் “மருமக்கள் தாயம்” என்று அழைக்கப்பெறுகிற அம்முறைசார்ந்த மரபுரிமைமுறையும், சொத்து பணத்தை பெகுக்குவதாக இல்லையாகையால் விரைவில் மறைய இருக்கிறது. பெண்பாலாருக்கு அது தரும் உயர்மதிப்பும் சுதந்திரமுமே அதன் சிறப்பு. ஒருக்கால் இச் சிறப்பு மட்டும் அழிந்துபோகாதவகையில் தரவாட்டு முறை தொடரவும் செய்யலாம். ஆனால் இந்த கேரள மற்றும் பிற மேற்குக்கரைத் தாய்வழிமரபுச் சாதிகளின், சமூக, மணமுறை அமைப்புகள் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தந்தை வழி முறைகளைப்போல மாறிவிடாமல் (பெண்களுக்கு அதிக உரிமைதரும் பர்மா மக்கள் சமூக முறைகளைப் போன்றும்) வளரக்கூடிய வாய்ப்புண்டு. 22. மனைவி, பிள்ளைகள் என்ற கால்கட்டுகள் இல்லாமல் போர்ப் படைக்கு இளைஞர்களைப் பெரும் அளவில் திரட்டு வதற்காக கோழிக்கோடு சாமூதிரி போன்ற குறுநிலமன்னர் அரசியல் காரணங்களுக்காக தரவாட்டை உருவாக்கினார்கள் என மலையாளத்துக்கு 1498இல் வந்த ஐரோப்பியர் ஊகித்தனர். பெண் பூப்படையுமுன் நடைபெறும் தாலிகட்டுத் திருமணம், இப்புதுமரபுக்கு முற்பட்ட உண்மைத் திருமணத்தின் எச்சம் என்றனர் போர்த்துகீசியர். ஆயினும் தரவாடு, மருமக்கள் தாயம், சம்பந்தம் ஆகியவை நெடுங்காலமாக இருந்து வந்த பழக்கங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் பிறபகுதிகளில் நிலவிய இம்மரபினை ஒழித்து, தந்தை வழி மரபுமுறை வந்த பின்னும், சாதகமான சிறப்புச் சூழ் நிலைகளின் காரணமாக மலையாளக் கரையில் மட்டும் அழியாது நின்று மீந்திருக்க வாய்ப்புண்டு. அச்சிறப்புச் சூழ்நிலைகள் யாவை? 23. உறவுமுறை தொடக்கத்தில் தாய் வழியாகத்தான் கணிக்கப்பட்டது என்று ஹார்ட்லண்ட் (1909. யீசiஅவைiஎந யீயவநசnவைல) கூறுவதை நாம் ஏற்கலாம். வேளாண்மை பரவி சொத்துகள் பெருகும் வரை வாரிசுகளுக்கு வருபவை கைக்கருவிகளும் கலங்களுமே. எனவே ஆண்கள் ஆடவர் பயன்படுத்திய கருவி, கலங்களை (அவை அவர்களுடனே புதைக்கப்படாவிட்டால்) பிற ஆடவரும், பெண்களுக்குரியவற்றைப் பெண்களும் பெற்றிருப்பர். ஆண்களைப் பொறுத்தவரை இன்ன உறவினருக்குத்தான் சென்றிருக்கும் என்று உன்னிக்க முடியாது. பெண்டிரைப் பொறுத்தவரை இறந்தவளின் பொருள்கள் அவள் புதல்வியருக்கே சென்றிருக்கும். வேட்டை, மீன் பிடித்தல், காய்கனி கிழங்கு பொறுக்குதல், இவற்றுடன்(புதிய) துணைத்தொழிலாக வேளாண்மையை மேற்கொண்ட போது, அப்பணியைப் பெண்கள் தலையில் தான் கட்டியிருப்பர். 24. வேளாண் கருவிகளும், வளரும் பயிர்களும் பெண்கள் வசமே இருந்ததால், நில உடைமைச் (டிறநேசளாiயீ டிக டயனே)சிந்தனை ஏற்பட்டதும் இயற்கையாகவே நிலமும் பெண்களிடம் விடப்பட்டு, தாயிடமிருந்து மகளுக்கு நிலம் சென்றிருக்கவேண்டும். வேட்டையே குழுவின் முக்கிய பிழைப்புத் தொழில் என்று இருந்த வரையிலும் இம்முறைக்கு எதிர்ப்பில்லை. ஆனால் மக்கள் தொகை பெருகி இனக்குழுவின் வசiநெ பிழைப்புக்கு வேளாண்மையே முக்கிய ஆதாரமானபின்னர் ஆண்களும், பெண் டிருடன் சேர்ந்து வயல்களில் வேலை செய்யத் தலைப்பட்டனர். இப்போது சமூகச் சரிசம நிலை கொஞ்சம் நிலை குலைந்தது. ஆயினும் எகிப்திலும் மெசபொட்டோமியாவிலும் இருந்தது போல, இம்முறை நீடித்து இருந்திருக்கலாம். ஆனால் நீடிக்கவிடாமல் ஏதோ ஒரு சமுதாய அதிர்ச்சியினால் மக்கள் அம்முறையை மாற்றக் கருதியிருக்கலாம். அவ்வதிர்ச்சி போர் ஆக இருந்திருக்கலாம். அல்லது வேட்டையிருந்து நேராக ஆடு மாடு மேய்க்கும் பணிக்குச் சென்றபின், ‘ஆண்கள் வழியிலேயே கருவிகள் உடைமைகள் இறங்கிய வாரிசுரிமை கொண்ட மக்களுடன்’ தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். இவையன்றி, மக்கட்தொகை மிகப்பல்கியதால் வேளாண்மைக்கு எளிதில் இடம் தராத கடும் பார்நிலப்பகுதிகளை திருத்திப் பண்படுத்த ஆண்களை ஏவியதால் சொத்துரிமை தந்தை- மகன் என்று வந்திருக்கலாம். 25. இவ்வாதங்கள் சரியென்றால், மலையாளக் கரையில் தாய்-மகள்அயவசடைiநேயட வாரிசுரிமை வளர்ந்தற்கான சிறப்புச் சூழல்களாக கொள்ளத்தக்கவை: (1) இங்கு பயிர் நிலங்கள் மீன்நிறைந்த கடலும் காயலும் ஒரு புறமும், வேட்டையாடக்கூடிய விலங்குகள் நிரம்பிய காடுகள் மறுபுறமும் கொண்டு அமைந்திருந்தன. (2) அண்மைக் காலம்வரை கேரளத்தைக் கடலும் மலையும் இயற்கை அரண்களாக அயலார் படையெடுப்புக்களிலிருந்து காத்து வந்தன. (3) வேளாண்மையில் கேரளத்தில் முக்கியம் பெற்ற தென்னையை நட்டால் போதும்; தானாகவே வளர்ந்து நூறாண்டுகளுக்குப் பயன்தரும். ஆண்டுதோறும் அது பத்துமாதங்களுக்கு நன்கு விளைந்த தேங்காய் தரும். மிகக் குறைந்த உழைப்பில் நிலத்திலிருந்து பிழைப்பு நடத்தலாம். 26.(ய) மேற்கூறிய சூழ்நிலைகள் மட்டும் காரணமாயிருந்திருக்க முடியாது. மருமக்கள் தாயப் பழக்கம் நிலைத்ததத்குக் காரணம் நம்பூதிரி பிராமணருடைய சமூகமுறைகளுடன் அது இரண்டறப் பின்னிப் பிணைந்து நம்பூதிரிகளுக்கு வசதியானதாக அது இருந்ததே முக்கிய காரணம். (b) திராவிடரிடையேயும் குருமார் பணியும் யீசநைளவடல கரnஉவiடிn மந்திரவாத முறையும் பிறரைப்போல பெரும்பாலும் ஆடவரிடமே இருந்தன. இவ்விரண்டையும் தம் தொழில்களாகக் கொண்ட நம்பூதிரி பிராமணர் களிடமும் (பிறபகுதிப்பார்ப்பனர்களைப் போலவே) தந்தை வழியிலேயே வாரிசும் சொத்துடைமையும் இறங்கி வந்தன. கேரளத்துக்கு கிழக்கே (தமிழகத்தில் பிராமணர் ‘தந்தை வழி முறையையே’ பிற சாதி யினரிடையேயும் பரப்பினர்.) ஆனால் நம்பூதிரிகள் தம் சொத்து சுகங்களை வெகுவாகப் பெருக்க எண்ணி அதற்கேற்ப ஒருபுது முறையைக் கொணர்ந்தனர்; அதாவது மூத்தபுதல்வன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணைத் திருமணம் செய்யலாம்; இளைய புதல்வர் அனைவரும் நாயர் பெண் களுடன் சம்பந்த உறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளலாம். பார்ப்பனருடன் சம்பந்தம் நாயருடன் சம்பந்தத்தைவிட மதிப்புடையது, விரும்பத்தக்கது என நாயர் பெண்கள் கருதும் வகையில் நம்பூதிரிகள் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. தரவாட்டுப் பெண்கள் நம்பூதிரிகளுக்குப் பெறும் பிள்ளைகள் அவர்கள் தாய்மாரின் தரவாட்டைச் சேர்ந்த நாயர்களாகவே ஆகிறார்கள். (உ) திருமணம் செய்யும் உரிமையுடைய நம்பூதிரி குடும்ப மூத்த பையன் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். இருந்த போதிலும் நம்பூதிரிப் பெண்களில் பலர் திருமணம் செய்ய இயல்வதேயில்லை. இக்கன்னிப் பெண்களைக் கண்டிப்பான காவற் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர். குறிப்பாக நம்பூதிரி ஆடவரிடமிருந்து. இயலும் வழியில் எல்லாம் நிலச் சொத்தைப் பெருக்குவதும், பெற்றதை எக்காரணங் கொண்டும் விட்டு விடாதிருப்பதும் நம்பூதிரிகளின் பண்பு. நம்பூதிரி சொத்தில் 1. குடும்பத்தின் நேரடி மேற்பார்வையில் பயிரிடும் இல்லப்பண்ணை ஒன்றும், 2. நாயர் தரவாடு தலைவர்களைக் குத்தகையாளர் (காணம்தார்) ஆக்கி 12 ஆண்டு ஒற்றிக்கு விட்ட மீதி நிலங்களும் உண்டு. (ஒற்றி 12 ஆண்டுடன் நிறுத்தப்பட்டால் காணம்தாருக்கு நிலத்தை மேம்படுத்தியதற்காக இழப்பீடு பெறும் உரிமை உண்டு.) வழக்கமாகக் காணம்தார் ஒற்றி நிலத்தில் பெரும்பகுதியை ஆண்டு வாரமாக அவர்களுக்கும் தாழ்ந்த கீழ்ச்சாதியினருக்கு விட்டு விடுவர். (ன) நாயர்களின் மருமக்கள் தாயவழக்கப்படி நம்பூதிரிக் குடும்ப இளம் ஆண்கள் ‘சம்பந்தம் மூலம் நாயர் பெண்களுடன் புணர வசதிகள்’ தரப்படா விட்டால் நம்பூதிரிகள்“மகனுக்கே சொத்து”முறையை அமலாக்கி யிருக்கவே முடியாது. 27. மலையாளக்கரையில் தாய்வழி மரபு அழியாது எஞ்சியிருப்பதன் பயனாக, தென்இந்திய (பிரிட்டிஷ் சென்னை மாகாண) சமூக, அரசியல் வாழ்வில் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையிலுள்ள பெண்கள் கல்லூரி இரண்டிலும் பயில்பவர்கள் நாயர் பெண்களும் (மருமக்கட்தாய முறையையே பின்பற்றும்) சிரியன் கிறித்துவப் பெண்களுமே. நன்கு படித்து உயர்பவர்களும் அவர்களே. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும் அவ்விரு ஜாதிப்பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஆண்களையொப்ப நன்கு பயில்கின்றனர். 28(i). 1919 இல் அமுலுக்கு வந்த மாண்ட்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை தரலாமா எள்ற வினா சென்னைசட்ட சபையில் எழுந்தபோது, சில மணிநேர விவாதத்தில் மூன்றில் ஒரு பங்கு பெரும் பான்மையுடன் “தரலாம்” என முடிவு செய்தனர் அப்படியே பம்பாய் மன்றமும் இரண்டு நாள் விவாதத்தின்பின், சிறிய பெரும்பான்மையுடன் முடிவு செய்தது. வங்காள மாகாண மன்றமும் பிற மாகாண மன்றங்களும் பெண்களுக்கு வாக்குரிமை தர மறுத்தன! அல்லது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே மறுத்து விட்டன! (ii). ‘பெண்களுக்கு மதிப்பு’ வகையில் வடஇந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயுள்ள இப் பெரிய வேறுபாட்டுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று தெற்கே முகமதியமதத் தாக்கம் குறைவு. ஆயினும் மலையாளக்கரைப் பெண்களுக்கு இருக்கும் உயர்வும் மதிப்பும் சுதந்திரமும் தென் இந்தியப் பெண்களின் மதிப்பைப் பொது வாகவே உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தன. 29. நாயர் சாதி இந்திய அரசியல் வாழ்வில் சர்சங்கரன் நாயர் வடிவில் ஒரு ஆற்றல்மிக்க சென்னை மாகாணசட்டமன்ற உறுப்பினரைத் தந்தது. டாக்டர்.டி.எம். நாயரின் வாழ்க்கைப்பணியானது சாதிச்சூழலின் தாக்கத்தை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. ஃவரீர்-ஸ்மித் (குசநநச-ளுஅiவா) தொழிற் சாலைக் குழுவில் பிற்போக்கு எண்ணப் பெரும்பான்மை உறுப்பினர்களை எதிர்த்து அவர் தந்தகுறிப்பு (னளைளநவேiபே அiரேவந)அவர் ஆற்றிய பெருந் தொண்டு. 1911-ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம் பிற்போக்கான பெரும்பான்மையினர் கருத்தை ஏற்காமல் டி.எம். நாயருடைய சிறுபான்மைக் குறிப்பையே பின்பற்றியது. மேலும் 1911-ல் ஏற்கப்படாத அவர் யோசனைகள் சில 1922-ல் ஏற்கப்பட்டன. அவரே பார்ப்பனரல்லாதார் அரசியல் கட்சியை அமைத்தவர். அவர் இறந்தபின் நீதிக்கட்சி சென்னைச் சட்ட மன்ற (டநபளைடயவiஎந உடிரnஉடை) முதல் தேர்தலில் வெற்றி கண்டது. பார்ப்பனரல்லாதார் பத்திரிகையாகிய, “ஜஸ்டிஸ்”(தரளவiஉந) அவர் தொடங்கியது. அதன் ஆசிரியரும் நாயர் சாதியினரான கருணாகரனே. 30(i). மலையாளக்கரை சிறந்த இயற்கை வளமுடையது. பல்வேறு வாழ்க்கைத் திறத்தினரில் யாவரும் தத்தம் வாழ்க்கைக்கு நாள்தோறும் போதுமான வருவாயைச் சில மணி நேர உழைப்பில் பெறலாம். ஆனால் இதே காரணத்தினால் உயர்ந்த சாதிக்கும் மிகத் தாழ்ந்த சாதிக்கும் இடையே பயங்கர வேறுபாடும் ஏற்பட்டது. வயது வந்தவர்களில் 9/10 மக்கள் உற்பத்திப்பெருக்கத் தொழில் எதிலும் ஈடுபடுவதில்லை. அந்த சுகவாசிகள் அனைவருக்கம் உழைத்து உணவளிக்கும் 1/10 மக்களுக்குக் கிட்டும் வாழ்க்கைத் தேவைக்கான வசதிகள் மிகமிகக் குறைவு. உழைப்புக்கு நன்றியாக அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் தீண்டத்தகாதவர்களாக கொடுமைப்பட்டதுதான். (ii). ஆயினும் அவர்களும் பிற நாடுகளின் உழைக்கும் மக்களை விட மன நிறைவுடையவர்களாக இருப்பதாகவே கூறுகின்றனர். காரணம் தம் நிலைமையில் நல்ல மாறுபாடு ஏற்படலாமென்ற நம்பிக்கையே அவர்களிடம் இல்லை. ஜனநாயகக் கருத்து இப்போது இத்தகையவர்கள் உள்ளத்திலும் எழுந்திருக்கிறது. பல பொது இடங்களிலும், மற்றச் சாதியினர் நடமாடும் சாலைகளிலும், தாமும் செல்லவும், கடைத்தெரு சென்று பொருள்கள் வாங்க விற்கவும் தமக்கு உரிமை வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இவர்கள் 1924க்குச் சில ஆண்டுகள் முன்னர் வரை அடிமையாகவே இருந்தனர். 31(i). கருநாடகப்பகுதியில் (தமிழகம்) மக்களின் வாழ்வுக்கு நெல்லும் பிற கூலங்களுமே ஆதாரம். இவற்றை விளைவிக்கக் கடும் உழைப்பு தேவை. தெக்காண பூமியில் உழைப்பு இன்னும் கடுமையாகத் தேவைப்படுகிறது. (ii). தமிழக ஆற்றுக் கழிமுக டெல்டா பகுதிகளில் உள்ள நெற்பயிர் வேளாண்மை திராவிட நாகரிக வளர்ச்சிக்கு எந்த அளவில் உதவியுள்ளது என்பதைக் காண சீனாவிலும் இங்கும் நெற்பயிர் செய்பவர்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்க்க வேண்டும். (iii). இரண்டு நாடுகளிலும் தந்தைமரபு வழியினதான பிரிவினையற்ற கூட்டுக் குடும்ப முறை(தடிiவே கயஅடைல)இருக்கிறது. ஆயினும் இந்தியாவில் சீனாவைவிட எளிதாக கூட்டுக் குடும்பம் உடைகிறது . இரண்டு நாடுகளிலுமே திருமணங்களை மிகச் சிறுவயதில் பெரும்பாலும் தாய் தந்தையரே நடத்து கின்றனர். மண வயது இந்தியாவில் இன்னும் குறைவு. இரு நாடுகளிலுமே சிறுமியான மணப்பெண் மாமியாரின் அடிமையாகி விடுகிறாள், (சீனாவில் இவ்வடிமைத்தனம் இன்னும் மிகுதி.) இரு நாடுகளிலுமே நிலம் குடும்பத்தின் பொது உடைமையாகிறது. தனி நபர்கள் தம் வாழ்நாள் காலத்தொடர்பு மட்டுமே உடையவர்கள்; இறுதி விருப்பப்பத்திரம் எழுதி தம் சொத்தைப் பிரித்துத் தரும் உரிமை இல்லை. ஆயினும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தனிமனிதனுக்குத் தன் பங்கை வாங்க, விற்க ஒற்றி வைக்க உரிமை அளித்துள்ளது. இரு நாடுகளிலுமே தனி நபருக்கும் குடும்பத்துக்கும் வாங்க விற்க உள்ள உரிமைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. இருநாடுகளிலும் இவ் அரசுரிமைகள் தேய்வடைந்துள்ள போதிலும் இத்தேய்மானம் இங்கு சீனாவைவிடக் குறைவுதான். (iஎ). இந்தியா-சீனா இடையேயுள்ள வேறுபாடுகளுள் முதன்மை யானது தாய்தந்தைப் பற்றுக்கும், வழிபாட்டுக்கும் தலைசிறந்த நாடு சீனா என்பதாகும். இந்தியா செல்லங்கொடுத்துக் கெடுத்த பிள்ளைகள் நிறைந்த நாடு. 30-40 வயதுள்ள சீனன் ஒருவனை அவன் தாய் கசையாலடித்தாள்; அவன் அழுதான்; அழுதது அடிபொறுக்காமலல்ல; அடிகள் அவனுக்கு வலி தராமையை உணர்ந்து ‘ஐயோ தாயார் கை வலுவிழந்து வருகிறதே’ என்று அழுதானாம்! இக்கதையுடன் கோயமுத்தூர் மாவட்டச் சிற்றூர்க் கிழவி ஒருத்தி சார்ந்த உண்மை வரலாற்றை ஒத்துப்பாருங்கள்: கிழவி வலுவிழந்து விட்டாள். தன்னைப் பாதுகாக்கவும் தன் புதல்வன் செய்யும் செலவுக்கும் தன் உழைப்பின் பயன் சரிக்கட்டி வராது என்று உணருகிறாள். ‘என்னைக் கொன்றுவிடுவதன் மூலம் அச்சுமையைக் குறைத்துக் கொள்’ என்று மகனுக்குக் கூறினாள்; தன் பிணத்தின் மூலம் அவன் ஆதாயம் அடைய அவனுக்கு ஒரு திட்டமும் தந்தாள். ‘தன்பிணத்தை ஓர் குறிப்பிட்ட இடத்தில் போட்டு விட்டுப் பின்னர் அவ்வூரில் நம் குடும்பத்துக்கு எதிராளிக்கட்சியாக இருந்த ஒரு குடும்பத் தலைவன் மீது கொலை வழக்கு போட்டுவிடு” என்பதே கிழவி சொன்ன திட்டம்.(ஊர்க் கட்சிப் பிணக்கு பற்றிய இன்னொரு நிகழ்வை இவ்வியல் இறுதியிலுள்ள குறிப்பில் காண்க) 32(i). குழந்தைகளிடம் இந்தியர்களுக்குள்ள அதீதமான பற்றைக்காண ஒருவன் இந்தியாவுக்குத்தான் வரவேண்டுமென்றில்லை. கப்பல் கூலிகள் கப்பலிலுள்ள வெள்ளையர் குழந்தைகளை ஆர்வத்துடன் நோக்கும் பார்வை யிலிருந்தே உணரலாம். பேரரசர் அக்பர் கூறியதாக ஒரு கதை; “ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முழு இன்பந்துய்க்க நான்கு மனைவிகள் வேண்டும். உரையாடுவதற்கு ஒரு பாரசிக மனைவி, குழந்தைகளைக் காக்க ஒரு இந்து மனைவி; ஊழியம் செய்ய ஒரு மங்கோலிய மனைவி; பிற மனைவியர் செய்யும் தப்பிதங்களுக்காக அடிபட ஒரு துருக்கி தார்தார்(வயசவயச)மனைவியும் இருப்பது சிறப்பு”. (ii). திராவிட மொழிப் பாடல் ஒன்றில் குழந்தைப் பற்று அடிப்படைக் கவிதை உணர்ச்சியாயுள்ளது. கீழ்வரும் புறநானூற்றுத் தமிழ்ப் பாடலைக் காண்க படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.’ - பாண்டியன் அறிவுடை நம்பி, (புறம்: 188) 1‘அரிகொள் பொன்புனை கிண்கிணி தண்டையோ டணிந்த தருண மென்தளிர்ச் சீறடித் தளர்நடைச் சிறுவர் மருவ றாதசெவ் வாம்பல்வாய் மழலையார் அமுதம் பருகி லாச்செவி பாவையென் செவியெனப் படுமால்.’ - சிவப்பிரகாச சுவாமிகள்,(சீகாளத்திப்புராணம், கண்ணப்ப: 16) 33. மன்னன் சாலமன் வெளிப்படையாகக் கூறாமல் “பிரம்புக்கு ஓய்வு, பிள்ளைக்குத் தோய்வு” என்று நீதி கூறினான். இதைக் கேட்கும் தமிழர் அவள் ஞானத்தைக் குறைகூறிவிடுவர்! குழந்தைகளை இயக்க நல்லவழி, கதை கூறுவதே என்பர். பொது மக்களிடையே ஏராளமான கதைகள் புழங்கும் நாடாக இந்தியா இருப்பதற்கான காரணம் இதுவே. தமிழ்ப் பெண்ணை ‘ஆயா’ஆக அமர்த்திய ஒவ்வொரு பிரிட்டிஷ் தாய்க்கும் இது நன்கு தெரியும். சென்னைக்கு வந்த இரண்டொரு நாளுக்குள் நானும் கண்டேன். சென்னை மாகாணக் கல்லூரி மாணவன் ஒருவன் சென்னை நகரின் நடுவே ஓடும் கூவம் ஆற்றில் வளமாகப் பெருகும் பலவகைக் கொசுப்புழுக்குஞ்சுக் களிலிருந்து மலேரியா பரப்பும் அனாஃவிலிஸ் கொசுக் குஞ்சுகளைப் பிரித்தறிவது எவ்வாறு என்று எனக்கு விளக்கி வந்தவன், திடுமென ‘எனது மருமகப்பையனுக்குக் கதை கூறுவதாகச் சொல்லியிருக்கிறேன் நான் போயாக வேண்டும்’ என்று சொல்லி விட்டு உடனே சென்றுவிட்டான்! 34 (i). எட்மண்ட் டெமோலின்சுநூலும், லெப்ளேயைத் (டநயீடயல) தொடர்ந்து அவர் புத்தகத்தை முடித்து வைத்தவர்களும் சீனாவைப்பற்றிக் குறிப்பிடுவதாது: கன்-சு, வீ-ஹோ பள்ளதாக்குகளில் முயn-ளர யனே றுநi-ழடி ஏயடடநலள உள்ள சீனவேளாண்மைமுறை மிகு விளைச்சல் தருவது; ஆனால், மிகவும் கடும் உழைப்பு வாய்ந்தது. சீனர் இம்முறையை முதலில் சாமை (அடைடநவ)முதலிய தானியவகைகளையும், பின் சமவெளிக்கு வந்தபின்னர் நெல்லையும் பயிரிட்டுப் பழகித் தேர்ச்சி அடைந்தனர். வெற்றிக்குக் காரணம் சிறந்த பாசன முறைதான். மிகச் சிறிய நிலப்பரப்பில் மிக அதிக தானியம் விளைவித்தாலன்றிப் போதிய உணவு கிட்டாது. (ii). இன்று வரை சீனக் குடியானவர் குடும்பங்கள் ஒவ்வொரு நெல் நாற்றையும் தனிக் கவனத்துடன் பேணுகிறார்கள். நாற்று நடும் சமயம் வரும்போது ஒவ்வொன்றின் வேரையும் தனித்தனியாக கிளறி, உரநீரில் தோய்த்து அதன்பின்னர் அதற்குரிய சிறு குழியில் நடுகின்றனர். கோதுமை யையும் இதுபோலவே. இதனால் ஓர் ஏக்கர் நிலத்துக்குக் கிட்டும் விளைச்சல், ஐரோப்பியரைத் தலைகுனியச் செய்யும். இப் பெருவிளைச்சல்பெற எண்ணற்ற கைகள் பாடுபட வேண்டியிருக்கிறது. சிறு குழந்தைகளின் மென்கைகளா யிருந்தாலும் போதும்; ஆனால், அக்கைகளை ஒழுங்குபடுத்தி வேலை செய்ய வைத்திட குழந்தைகளைக் கட்டுபாட்டுடன் னளைஉiயீடiநே வளர்க்கின்றனர். தொட்டிலிலிருந்தே தாய் தந்தையர் நோக்கங்களை ஆர்வத்துடன் நிறைவேற்றுவதே தங்கள் வாழ்வின் நோக்கம் என்று அவர்கள் கருதும்படி பயிற்சியளிக்கப்படுகிறது. இந்நிலைக்குக் காரணமாக நாம் நிலவியல் பநடிபசயயீhiஉயட காரணம் சொல்லிப் பயனில்லை. சீனர்கள் உருவாக்கியுள்ள சமூகநிலையை உணரவேண்டும். 35. இந்தியமக்களின் சூழ்நிலை இத்தகைய கடுமையான நிலைமை களை ஏற்படுத்தவில்லை . இந் நெற்பயிர் விளைப்பில் கருத்தும் முயற்சியும் இங்கு குறைவு. நாற்று நடாமல் சில பகுதிகளில் விதையைத் தூவி விதைத்தும் பயிரிடுகின்றனர். நாற்று நடவும் கவனிப்பில்லாமலே நடக்கிறது; பெரும்பாலும் நடுபவர் பெண்டிரே. சென்னை அரசின் வேளாண்மைத்துறை ‘தனி நாற்று’நடும் முறையை புகுத்தி அது மெள்ளப் பரவி வருகிறது. ஆனால், அதை மேற்கொள்ளும் நிலக்கிழார்களும் கூலிப்பெண்களையே அமர்த்து கின்றனர். ஏழைக் குடும்பக் குழந்தைகள் தாய் தந்தையருக்கு தாமாகவே இவ்வகையில் உதவ முன்வருகின்றனர். ஆனால், இவ்உதவியானது சுற்றித் திரிந்து ஓடியாடுவது; ஆடுமாடுகளைப் பார்த்துக்கொண்டு விளையாடுவது; என்ற அளவில் முடிகிறது. இந்தியாவில் நாய்கள்கூட நன்கு பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஒரு சில வேட்டைநாய் ரகங்களைத் தவிர, தென் இந்தியர்கள் நாய் வளர்ப்பது குரைப்பதற்கு மட்டும்தான். 36. இங்ஙனம் இந்திய சீனநாகரிகங்கள் இரண்டிற்கும் பொருளாதார அடிப்படை நெற்பயிர் விளைவிப்பே, ஆயினும் சீன மக்களின் உழவர் குடும்பங்களின் கடுமையான பயிற்சியின் விளைவாக உளவியல் அடிப் படையில் உருவான தாய் தந்தையர் பற்று உள்ளது. இந்திய சமூகத்திலோ வென்றால், உடலுழைப்பாளர் மேல்சாதியினரிடம் அடக்க ஒடுக்கமா யிருக்கும் நிலையையும், தமது உடலழைப்பைப் பயன்படுத்திக்கொண்டே தமக்கும் (தம்மை அடிமைகளாகவே படைத்த) கடவுளருக்கும் இடையே தரகராகக் கருதப்படும் குருமாருக்கு யீசநைளவடல iவேநசஅநனயைசநைள அஞ்சி யடங்கிப் பணிவதையும் தான் காண்கிறோம். குறிப்பு ஊர்க்கட்சிப் பிணக்கு 37. “நேர்மைக்கு எதிராகப் பணம் வாங்கமறுத்துவிட்ட இந்திய வழக் கறிஞர் ஒருவர் தம்மிடம் வந்த வழக்கை ஏற்க மறுத்த நிகழ்ச்சியை நான் என் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன்,” என்று ஓய்வு பெற்றுள்ள ஒரு இந்தியப் பணி அதிகாரி(i.உ.ள) தம் அனுபவத்தை கூறுகிறார்: (i). “நான் அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் துணைகலெக்டர் (னுநயீரவல ஊடிடடநஉவடிச) ஆகஇருந்தேன். அப்பகுதி ஊர்களில் பொதுவாக உள்ள ஒரு ஊரில் இருபிரிவின ரிடையே(கயஉவiடிளே) பகை வெறி குமுறிக்கொண்டிருந்தது. ‘ஏ’ கட்சி இரவில் ஆரவாரமிக்க ஒரு கூட்டம் நடத்தி. ‘பி’ கட்சி கொடுமைகளை இனிப் பொறுத்திருக்க முடியாது, ஏதேனும் செய்து தான் ஆகவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்து. ஆராய்ந்தபின் ‘பி’ கட்சியின் முக்கிய உறுப்பினர் இருவர் மீது பொய்யான கொலை வழக்குத் தொடுப்பதென முடிவு செய்தனர். (ii). குருசாமி என்ற ஓர் இளைஞன் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான். அவனுடைய கிழட்டுத் தந்தை எந்த வகையிலும் பயனற்றவராதலால், பொது நன்மைக்காக அவரை கொலை வழக்குக்குவேண்டிய கொலைப் பலியாக்குவது நலம் என்று இளைஞனிடம் கூற அவ் விளைஞனும் தன் தந்தையைக் கொன்று பிணத்தை (பொய் வழக்குக்காக) ஒப்படைக்க இசைந்தான். ஆனால், வீட்டுக்குச் சென்றபின் தன் முடிவை மாற்றிக்கொண்டான். (iii). அதன்பின் அதிக வெறியுடன் இரண்டாவது கூட்டம் கூடிற்று. குருசாமியை மிக வற்புறுத்த அவன் மறுத்துவிட்டான். ஆனால், அவனை விடத் துணிந்த மற்றொரு இளைஞன் இசைந்தான். அவனுக்கும் ஒரு கிழத்தந்தை இருந்தார். அன்றிரவு அக்கிழவனைக் கொன்று பிணம் ஏ’ - கும்பலைச் சேர்ந்த ஒருவன் வீட்டின் முன்னால் தெருவில் போடப்பட்டது. விடியற் காலம் ‘ஏ’-கும்பல்காரன் அதைக் கண்டு காவல் துறையினருக்கு அறிவித்தான். போலீ°காரர் புலனாராய அனுப்பப்பட்டார். (iஎ). ‘ஏ’ - கும்பலைச் சேர்ந்தவர் இருவர் தாங்கள் இரவு நெடுநேரம் விளக்கடியில் உட்கார்ந்து கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், தற்செயலாக வெளியே பார்த்த போது, ‘பி’ - கும்பலைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு பேர் அக்கொலையைச் செய்ததைத் தாங்கள் பார்த்ததாகக் கூறினார்கள். போலீ°காரர் கூரிய அறிவுடையர். அவவறையில் எரிந்த விளக்கு மிக மங்கலாக ஒளி தருவதாகையால் ‘அன்றிரவு இருட்டில் கொலை நடந்ததைக் காணக்கூடிய அளவுக்கு ஒளி இருந்திருக்க முடியாது. மிஞ்சினால் தெருவின் போனவன் கால் மட்டுமே தெரிந்திருக்கும்’ என்பதை உணர்ந்தார். (எ). தாங்கள் எதிர்பார்த்தபடி பொய் வழக்கு வெற்றி பெறாது என்பதை ‘ஏ’ - கட்சியினர்கள் கண்டு கொண்டு, வழக்கைத் திறமையாக நடத்தி வெற்றிகாணத் தலைவர்கள் உதவி வேண்டுமென்று எண்ணினர். என் நண்பர் ஒருவரை அணுகினர். இளைஞராயினும் அவர் சிறந்த வக்கீல் எனப் பெயர் எடுத்துக் கொண்டிருந்தார். நிலைமையை விளக்கிப் பெருந் தொகையும் தருவதாகவும் கூறினர். ஆனால், அவர் அவ்வழக்கை ஏற்கமுடியாது என்று கூறியபோது, அவர்கள் நொந்து போயினர். (எi). அவரைவிட வயது சென்று அனுபவமிக்க ஒரு வழக்கறிஞரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர் சென்னைச் சட்ட மன்ற உறுப்பினர். தொழில் நேர்மை பற்றிக் கவலைப்படுபவர் அல்ல அவர். அவர் யோசனைப்படி ‘ஏ’ கும்பல்காரர்களுள் ஒருவர் சென்னை சென்று பெரும் ஒளி வீசும் புதுவிளக்கை வாங்கிவந்ததுடன், வந்து கொத்தனாரைக் கொண்டு பல கணியையே மாற்றியமைத்து கட்டிவிட்டனர், கொலை நடந்திருந்தால் அதன் வழியாகப் பார்க்கக் கூடியவகையில்! (எii). குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் மீதான வழக்கு விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டியவர்கள் பிரகாசமான புதிய விளக்கையும் கொண்டு வந்தனர்; (புதிய) பலகணியையும் குறிப்பிட்டனர். ஆனால், அந்த ஆங்கிலோஇந்தியப் போலீ°காரன் நுண்ணறிவும் விழிப்பும் உடையவன். முதன் முதலில் விசாரிக்கச் சென்ற போதே விளக்கு, பலகணி இவற்றின் பரிமாணம் உயர அளவு இவற்றை அளந்து போலீ° ரிக்கார்டில் எழுதியிருந்தான்! ஆகவே, வழக்கு கவிழ்ந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவரும் விடுவிக்கப்பட்டனர். பொய் வழக்குத் தொடுத்ததற்காகக் குற்றஞ்சாட்டியவர்கள்மீதே வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் நான் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டேன். மேற்கொண்டு நடந்தது எனக்குத்தெரியாது. ஆனால், நேர்மை காரணமாக இந்திய வழக்கறிஞர் ஒருவர் வழக்கை ஏற்க மறுத்ததற்கு எனக்குத் தெரிந்து கிட்டியுள்ள சான்று இது ஒன்றே. ? 6. திராவிட நாகரிகத்தின் சிறப்புக்கூறுகள் சாதி, திராவிடர் உருவாக்கியது என்பதை மேலே கண்டோம். அது, இந்தியா முழுவதும் இருந்தபோதிலும், அதனை மிக நன்றாக ஆய்ந்துகாண முடிவது தென்னாட்டில்தான். “தென் இந்தியச் சாதிகள் குலங்கள்”(ஊயளவநள யனே கூசiநௌ டிக ளுடிரவா ஐனேயை) 1909 என்ற தர்ஸ்டனின் சிறந்த நூலில் ஆய்வுக்கான ஆதாரங்கள் நல்லமுறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அந்நூற் செய்திகளைப் படிப்பவர்களுக்கே சாதி முறைக்குக் காரணமாக பொதுவாகக் கூறப்படும் விளக்கங்கள் இரண்டனுள் எதுவும் தன்னளவில் போதுமானதன்று என்றும், இரண்டையும் சேர்த்துப்பார்த்தால்தான் விளக்கம் கிடைக்கும் என்றும் தெரியும். அதாவது சாதிமுறை உருவானதற்குத் தொழில் வேறுபாடு மட்டும் காரணமாகாது; அதுபோல இனவேறுபாடு மட்டுமே காரணம் என்றும் கூறமுடியாது; இரண்டுவகை வேறு பாடுகளும் சேர்ந்து உருவானதே இந்தியச் சாதிமுறை. 2. முற்கால நாகரிகங்களில் முற்றாகவும், இன்றைய நாகரிகங்களில் ஓரளவுக்கும் தொழில்கள் பரம்பரையாகத் தொடரும் போக்கைக் காண்கிறோம். டர்ஹாம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் மகன் பெரும்பாலும் அதே தொழிலாளனாகவே ஆகிவிடுகிறான். நார்போக் உழவன் மகன் உழவனா கிறான். பெரும்பாலும் டர்ஹாம் சுரங்கத் தொழிலாளியின் மகன் மற்றொரு நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளி மகளையும், நார்போக் வேளாண்மைத் தொழிலாளி மகன் மற்றொரு வேளாண்மைத் தொழிலாளி மகளையுமே மணந்துகொள்கிறான். இப்போக்கு விதிவிலக்கில்லாமல் கட்டுப்பாடாகக் கடைப்பிடிக்கப்பட்டால், அதாவது டர்ஹாம் சிறுவன் நிலக்கரித் தொழிலாளனாக மட்டுமே ஆகி, நிலக்கரித் தொழிலாளி மகளை மட்டுமே மணந்து கொள்ள முடியும் என்ற நிலைவந்தால் - நிலக்கரித் தொழிலாளர் சாதி! டர்ஹாமில் உருவாகிவிடும். இந்திய பொற் கொல்லன், கொத்தன் சாதிகள் போல. 3 (ய) தொழிலுக்கு ஒரு சாதி என்பது தந்தை தொழிலை மகன் பின் பற்றியதால் எழுந்ததென்று கருத இடம்தருகிறது. ஆனால்,தொழிலுக்கு ஒரு சாதி என்பது இந்தியாவில் மட்டும் எப்படி ஏற்பட்டது எனக் கேட்கலாம். பின்வருமாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. (i). திராவிட நாகரிகத்தின் பெரும்பழமையும் படிப்படியான வளர்ச்சியும் கருதப்பட வேண்டும். தொழில் ஒவ்வொன்றும் சிலரின் வாழ்க்கைத் தொழிலான பின்னர்க் கூடிய மட்டும் அவர்கள் அதைத் தமக்கேயுரிய தனி உடைமையாக வைத்துத் தம் குடும்பங்களிலேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். (ii). இந்தியக் கோடைகாலச் சூடு உடலைத்தளரச் செய்து ஒருதொழிலை விட்டு வேறு தொழிலை நாடும் ஆர்வத்தைத் தடுக்கிறது. எனவே, ஐரோப்பா போன்ற மிகு வெப்பநாடு களைவிட இந்தியாவில் பெருமளவுக்குத் தந்தை- மகன் என்றவாறு செல்லும் தொழில்கள் போக்கு மிகுதி. வீட்டு வேலைக்காரர்களிடம் இதைக் காணலாம். (iii). இந்திய வெப்பநிலை காரணமாக ஆண் பெண் இருவருமே சிறுவயதிலேயே முதிர்ச்சி அடைகின்றனர். ஆகவே உடல்தவிர உள்ள அளவில் முதிராவயதுடைய சிறுவர் சிறுமியர்கள் மணவாழ்வை மேற்கொள்ள இடமேற்படுகிறது; இந்திய இளைஞன் சிறுவனாக, தந்தை தொழிலில் இன்னும் முற்றிலும் தேர்ச்சிபெறாத பயிற்சித் தொழிலாளியாக இருக்கும் போதே, திருமணம் ஆகி தானே ஒரு தந்தையாகவும் ஆய்விடுகிறான். அவனுக்குரிய மணப் பெண்ணைத் தந்தையே தேர்ந்தெடுப்பதும் இயல்பாகி விடுகிறது; அதே தொழில் செய்பவர்களின் குடும்பங்களிலிருந்தே பெண்ணைத் தேடுவதுதானே இயல்பு. திருமணம் சார்ந்த சமயச் சடங்குகள் தொழில் சார்ந்த சமயச் சடங்குகள் இவையும் சாதிக் கட்டுப்பாட்டை வளர்க்கின்றன. தன் சாதிக்கு வெளியே மண உறவு கொள்வது தொல்லை விளைவிப்பதால், நாளடைவில் அது தடுக்கப்பட்டுவிடுகிறது. (b). சாதிமுறை மேற்கூறிய காரணங்களிலிருது தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கீழ்வரும் செய்திகள் வலியுறுத்துகின்றன: (1) தொழிற் பாகுபாடு, தொழில்முறைப் பயிற்சி, அந்தந்த தொழிலில் திறமை வளர்ச்சி ஆகியவற்றுக்காக ஏற்பட்டதாகவே பொதுவாகச் சாதிமுறையைக் கருதுகின்றனர். (2) தொழில்வகை மாறுபாடுகளின் காரணமாகப் புதிய சாதிகள் எழுகின்றன. (3) இந்தியாவில் அயலார் படையெடுப்புகள் மிகுதியாகத் தாக்காத தென்னிந்திய திராவிடப் பகுதிகளில்தான் சாதிமுறை மிகு வளர்ச்சி அடைந்துள்ளது. 4(i). ஆயினும் இன்றையச் சாதி முறை உருவானதற்கு வேறு சக்தி களும் காரணம் என்பது தெளிவு. இவை பெரும்பாலும் இன(சயஉந) வேறுபாடுகளே. திராவிட மக்கள் சமூக அமைப்பின் உறுப்பாக சாதி முறைக் கருத்தும் கோட்பாடும் பண்டு தொட்டு நிலைபெற் றிருந்ததால், பின்னாளில் ஏற்பட்ட தாக்கங்களையும் சாதிமுறை தன் வயப்படுத்தி சாதியே வென்றது. (ii). எடுத்துக்காட்டாக, தெலுங்கு (ஆந்திர) விஜயநகரப் பேரரசு போர் மூலம் தெற்குநோக்கி விரிவடைந்தபோது, தெலுங்கு ரெட்டி, தெலுங்கு நாயகன்சாதி சேர்ந்த பல குடும்பங்கள் தமிழகச் சிற்றூர்களில் குடியேறின. அங்கெல்லாம் சாதிமுறை முன்பே நிலைபெற்றிருந்திராவிட்டால், அவர் களுடைய வாரிசுகள் தமிழ் மக்களுடன் கலந்து மறைந்திருப்பர். தமிழ் நாட்டில் உள்ள சாதிமுறைகாரணமாக அவர்கள் தமிழர்களுடன் இணைந்திட முடியாததனாலேயே தங்கள் சாதிக்குள்ளேயே மண உறவு செய்து கொண்டதன் காரணமாக தனிச் சாதியாக (தெலுங்கு மொழிபேசிக் கொண்டும், தம்முடைய சற்றே சிவந்த நிறத்துடனும் உயரமான பளுவான உடலமைப்புடனும்) உள்ளனர். (iii). சாதிக்கருத்தை முகமதியர் முற்றிலும் ஆதரிப்பதில்லை. கிறிஸ்தவத்தை விட முனைப்பாக அது தன் மதத்தவரிடையே தோழமையை வலியுறுத்துவது. ஆனால், ‘தென் இந்திய முஸ்லிம்கள்’ அங்குள்ள சாதிகளுள் ஒன்றாகவே உள்ளனர். ஏன் இந்தியக் கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் கூட தனித்தனி சாதி போன்றே கருதப்படுகின்றனர். 5. தென்னிந்தியச் சாதிகள் குலங்கள் பற்றிய தர்ஸ்டன் நூலின் தலைப்பே சிந்தனையைத் தூண்டுவது. அவர் கூறும் தனித்தனிச் சாதிகளில் அடங்கியவை கொல்லன், இடையன் போன்ற தனித்தொழில் சாதிகள்; இனஅளவில் வேறுபட்ட தோடர், கன்னடிகரிடமிருந்து மிக நீண்டநாள் தொடர் பற்றுப் போய் உண்மையிலேயே தனிச் சாதியாக மாறி விட்ட நீலகிரி படகர் ஆகியவர்கள்; தனிச்சாதியினரா, தனிக்குலத்தினரா என்று கூறவியலாத பல பிரிவினர்; தொழில் முறை இனமுறை இரண்டின் அடிப்படையிலும் சௌராஷ்டிர பிராமணர் (இவர்கள் தொடக்கத்தில் குஜராத்திலிருந்து வந்து குடியேறிய பட்டு நெசவாளர் ஆவர். அவர்கள் முசுலிம் படையெடுப்பினால் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கி நாளடைவில் தெற்கே தமிழகம் வந்து தங்கிவிட்டவர்கள் ஆவர்.) 6. ஆரியர் படையெடுப்பே சாதி முறைமைக்கு மூலகாரணம் எனச் சிலர் கூறுவது தவறு. எனினும் அப்படையெடுப்பு இரண்டு செயற் பாடுகளுக்கு வலிமை சேர்த்து சாதியை வலுவாக்க உதவியிருக்கலாம் அவையாவன: (1) சாதி உயர்வு தாழ்வை அவரவர் தோலின் நிறத்தின் அடிப்படையில் உருவாக்குவது (2)சமுதாயத்தில் ஆதிக்கம் பெற்று விட்டவர்கள் மேல் சாதியாகவும் பெறாதவர்கள் கீழ்ச்சாதியாகவும் நிர்ண யித்தல். இவவிருவகைச் செயல்பாடுகளும் கறாராக நடந்துவந்தன எனக்கூற இயலாது. வேறொரு சாதியை விடத் தமது சாதியே உயர்ந்தது என்று சாதித்து வரும் சாதிகளும் உள்ளன. இவ்வகை நிகழ்வுகள் சிலவே. எடுத்துக்காட்டாக, திருவாங்கூர்த் இராச்சியத்தின் தொழில் துறை இயக்குநர் தெரிவித்த செய்தி வருமாறு: பெரும் மரத்தடிகளைத் துண்டு போடுபவர் தச்சரை விடக் கூடவும், தச்சர்கள் மரப்பேழை செய்பவர்களைவிட அதிகமாகவும் கூலி பெற்றுவந்தனர். என்றாலும் வாளறுப்பவர்கள் தமக்குத் தச்சுவேலைப் பயிற்சியளித்துத் தச்சராக்கும்படி கோரினர்; தச்சரும் மரப்பேழை செய்பவர்களாகத் தமக்குப் பயிற்சியளிக்கும்படி கோரினர். (புதிதாகக் கோரும் பணிக்குச் சம்பளம் குறைவானாலும், சாதி அந்த°தில் உயர்ந்தவராக விரும்பினர். 7. ஒன்றோடொன்று திருமணம் செய்துகொள்ளாத சாதியினரிடையே நாளடைவில் ‘உடன் உண்ணக்கூடாது’ என்ற தடையும் இயல்பாக உருவாகி யிருக்கும். மேனாட்டினரை விட இந்தியரிடையே உணவுப்பந்தி ஆசாரம் மிகுந்தது; பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய சடங்குகளுடன் சேர்ந்தது. உணவுப்பந்தியில் தீண்டாமையும் சில இடங்களில் தொழில் காரணமாக ஏற்பட்டதே. பசுவின் தெய்வத்தன்மைக் கோட்பாடு காரணமாக, மாட்டுத் தோலுரித்தல், தோல்தொழில் ஆகியவை ஓரளவு பாவமான செயலாகக் கருதப்படுகின்றன. சண்டாளர், சக்கிலியர் தீண்டப்படாதவரானதற்கு இதுவே காரணம். 8. நெற்பயிர் விளைவிக்கும் வேளாண்தொழிலிலேயே பெரும் எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் பெருவகுப்பினராகிய பறையர், பள்ளர், செறுமர் ஆகியோரையும் தீண்டத்தகாதவர் ஆக்கியதற்கான காரணத்தைக் காண்பது எளிதன்று. ஆனால், எந்தெந்தப் பகுதிகளில் கடும் உழைப்பை முழுமையாகவோ பெருமளவுக்குத் தாழ்ந்த சாதியின் மீது சுமத்தி, அத்தகைய அவ்வுழைப்புசெய்யாமலே “உயர்ந்த” சாதியினர் சுகவாசியாக வாழ உந்தப்பட்டனரோ அங்குதான் வேளாண் தொழிலாளர் தீண்டத் தகாத வர்களாய் இருப்பதைக் காணலாம். ஒரு குழுவினர் மீது தீண்டாமையைப் புகுத்தி விட்டால் நாளடைவில் அவர்கள் மனநிலையும் ஒடுங்கி விடுகிறது. தீண்டாதசாதி ஆக்கப்பட்ட பறையன் ஆட்டிறைச்சி உண்ண, கள்குடிக்கத் தயங்குவதில்லை; உயர்சாதியாளர் தமக்குரியது எனக் கருதும் செயல்களைப் புறக்கணிப்பதும் இயல்பே. 9. பிராமண சாதியினரின் தோற்றம் பற்றித் திட்டவட்டமாகக் ஏற்கக்கூடிய விளக்கம் உருவாகும் என்று கூற இயலாது. ஓரளவு பொருத்தமான சில கருத்துக்கள் வருமாறு; எலியட் சுமித் கருத்து “புதிய (ஞாயிற்றுக்கல்) நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் பின்னர் திராவிடராக உருவான பண்டைப் பழங்குடி மக்களுடன் மணஉறவுகொண்டு (குருதிக் கலப்பு) உருவானவர் திராவிடர்”. என்பது. அதைத் திருத்தி “எகிப்திலிருந்து அந்நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் திராவிடர்களுடன் மணஉறவு கொண்டு குருதிக் கலப்புற்றனர். அதன் பயனாக எழுந்த இனமே பிராமண சாதி” என நான் சொல்லும் திருத்திய வடிவத்தைத் தானும் ஏற்பதாக எனக்கு எலியட் °மித் எழுதியுள்ளார். எனது திருத்திய கோட்பாடு பின் வருவனவற்றோடு இசைகிறது:- (1) பொதுமக்களிடமிருந்து வேறுபட்ட வேறொரு பரம்பரையில் வந்தவர்கள் எனத் தம்மைப் பிராமணர் கருதுகின்றனர், இப்படி அவர்கள் தென்னிந்தியாவில் கூறும் பொழுது தங்கள் மரபு வேறு, திராவிடர் மரபுவேறு என்கின்றனர். கொஞ்சம் கூடப் பகுத்தறிவின்றி ஐரோப்பிய ஆய்வாளர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்! ஆனால், இது உண்மைக்குமாறானது. தென்னிந்திய பிராமணர் பெருமளவுக்கு முகத்தோற்றம், நிறம், படிப்பறிவு ஆகியவற்றில் பிற சாதியினரிடமிருந்து மாறுபட்டிருப்பதினாலேயே இதைப் பலரும் ஏற்கின்ற நிலை உள்ளது. எலியட் சுமித் (மற்றும் அவர் கருத்தே கொண்ட ஆய்வாளர்களின்) நூல்கள் வெளிவருமுன்னர் பிராமணர் தமது மரபில் இருந்ததாகப் பீற்றிக் கொள்ளும் (திராவிடமல்லாத) வேறு மரபானது இந்தோ ஆரிய மரபு என யோசனையின்றி அபத்தமாகக் கருதப்பட்டது. (2) “வாந உhடைனசநn டிக வாந ளநய” நூலில் பெரி விளக்கியுள்ளபடி ஞாயிற்றுக்கல் hநடடடிடiவாiஉ வழிபாட்டு நாகரிகத்தைக் கொண்டு சென்று பரவியவர்கள் (இந்தோனேசியா போன்ற) பல இடங்களிலும் தாமே தெய்வம் அல்லது தெய்வங்களுக்குப் பிறந்தவர்கள் என்று கதைத்துக் கொண்டு ஆளும் அதிகார வகுப்புகளாகத் தங்களை ஆக்கிக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பிராமணனும் தெய்வமே என்பதுதான் பிராமணியக் கோட்பாடுமாகும். (3) அந்த நாகரிகத்தை இங்கு கொண்டு வந்தவர்கள் ஞாயிறு வழிபாட்டுடன் பாம்பு வழிபாட்டையும் இணைத்துக் கொண்டனர். பார்ப்பன வகுப்புக்களிலேயே மிகப் பழமைப் பற்றுடைய, மிகப் போற்றப்படுபவர்களான நம்பூதிரிகளின் ஆசாரங்களில் ஒன்று நாயர் (சூத்திர) நாயர் குடும்ப இல்லங்களிலுள்ள நாகதெய்வங்களுக்குப் பூசனைசெய்வதும் ஒன்று என்பதைக் கண்டோம். பிரமன் ஞாயிற்றுத்தெய்வமானால், (பிராம்மண)ஜாதி முழுவதுமே ஞாயிற்று வணக்கத் துடன் மிக நெருங்கியது தானே. (4) ஞாயிற்றுக்கல் hநடடடிடiவாiஉ வழிபாட்டு நாகரிகத்தை எகிப்திலிருந்து கொணர்ந்தவர்கள், நூல் நூற்பு, நெசவு, வேளாண்மை ஆகியவற்றையும் தம்முடன் இங்கு கொண்டு வந்தனர். இந்தக் கலைகளை அவர்கள் கொண்டு சென்று புகுந்த நாடுகளிலெல்லாம் “கதிரவன் சேய்” தெய்வ மரபை உhடைனசநn டிக வாந ளரn நிறுவியதுடன் அம்மரபினரின் முன்னோர் வேளாண்மை, பாசனம் இவற்றை உருவாக்கியவர்களாகவே கருதப்பட்டனர். ஆனால் இந்தியாவில் அப்படி நுழைந்த வீரர் வேளாண்மையை தொடங்கியதற்கான எந்தத் தடையமும் இல்லை. எகிப்துடன் (கடல்வழியாக)த் தொடர்பு ஏற்படுவதன் முன்பே திராவிடர்கள் நெற்பயிர் வேளாண்மையை விளைவைத் தொடங்கிவிட்டனர் என்று நாம் மேலே கண்டுள்ளோம். அதுவே சரியானது. 10(i). நூற்பு நெசவுக்கலை ஏற்கெனவே திராவிடரிடம் இருந்தும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் புதுவரவாளர்களிடமிருந்து கற்றிருந்தால் அந்த நூற்பு- நெசவு “தெய்வத் தன்மையுடைய வந்தேறிகள்- உள்ளூர்ப் பெண்கள் கலப்பால் தோன்றிய ‘தேய்விகப்’ பிரிவினருடன்” தொடர்பு படுத்தப்படுவதும் இயல்புதானே. பிராமணனைத் தனித்துக்காட்டும் வேறுபாட்டுச் சின்னம் அவன் (ஆடைகளுக்கு உள்ளாக அணியும்) பூணூல்தான். எனவே இந்திய மக்களுக்கு நூற்பு, நெசவைக் கற்பித்து அதனால் அவர்கள் நன்றிக்கும் போற்று தலுக்கும் உரியவரான வந்தேறிகள் மரபில் வழிவந்தவர் என்ற கருத்திலேயே பிராமணர் உயர்வுக்கோட்பாடு தோன்றியிருப்பதற்குத் தெளிவான அறிகுறியாகும். (ii). ஆனால், எகிப்திலிருந்து (கடல்வழியாக) இந்தியாவுக்கு வந்தது நூற்பு நெசவு பற்றிய பொதுவான கோட்பாடே, அன்றி குறிப்பாகப் பருத்தி நூற்பு, பருத்தி நெசவு அல்ல. அக்கலைகளுக்கு இந்தியாவே முதல் தாயகம் ஆகும். தெலுங்கு நாட்டில் (ஒருவேளை பிற சில பகுதிகளிலும்) பிராமணர், பூணூலைப் பருத்தி (இலவ) மரத்தின் பஞ்சிலிருந்தே செய்ய வேண்டும் என்ற மரபு இன்றும் உள்ளது. பருத்திச் செடியின் பஞ்சைப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் இலவமரப் பஞ்சு பயன்பட்டிருக்கலாம், தற்போது மெத்தைகளிலும் இலவம்பஞ்சு பொதிந்த மார்புச் சட்டை களிலும் (டகைந ளயஎiபே எநளவ) பயன்படுவது தவிற பிறவற்றுக்கெல்லாம் பருத்தியே பயன்படுவதைக் காண்கிறோம். (ஹெரடோட்டஸ் முதலியோர் எழுதிய பண்டைக் குறிப்புகள் யாவுமே இந்தியப்பருத்தி மரத்தில் விளைந்ததாகவே கூறுகின்றன, இன்றும் பருத்தி என்பதற்கான ஜெர்மன் மொழிச்சொல் (க்ஷயரஅறடிடிட) மரக்கம்பளி தான்). 11. இந்தியப் பட்டுத்தொழில் இங்கேயே உருவானதா அல்லது சீனா பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது பற்றி எதையும் கூறுவதற்கில்லை. சணல் தொழில் இந்தியாவுக்கே உரியது என்பதில் மட்டும் ஐயமில்லை. இன்றும் சணல் இந்தியாவுக்கு வெளியே எங்கும் இல்லை; வங்காள மக்கள் எப்போதுப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பதும் தெரியவில்லை. மலையாளக் கரையிலுள்ள கயிறு பின்னும் தொழிலும் இதுபோன்றதே. ஆனால், அது இன்னும் பழமைமிக்கது. 12. நெசவு சார்ந்த தொழில்கள் இந்தியாவில் கழிபழங் காலத்தி லிருந்தே வழங்கிவந்தன. சிறப்பாகப் பருத்தித் துணியில் சாயம் போடுவதும் இணைந்து பெருக்கமுற்றதின் காரணமாக பல்வேறு சிறப்புத் தொழிலாளர் வகைகளும் பெருகின. சாதிமுறை தொழிலடிப்படையில் அமைந்ததால் (சாயம் போடுவோர் போன்று) தனிச் சாதிகள் உருவாக உதவியிருக்கலாம். 13. மக்களிடையே புதுப்புது (ஆடம்பரத்) தேவைகளைப் பெருக்கியதால் செல்வம், ஆதிக்க மோகங்கள் பெருகின, பணக்கார வகுப்புக்களும் அதிகாரம் செலுத்தும் வகுப்புக்களும் பெருகி வளர்ந்தன . அரசு உருவானது. அரசு தலைநகரங்களும் ஏற்பட்டு நகரங்களை மையமாகக் கொண்டு நூற்றல்நெசவு, சாயத்தொழில், பருத்தித்துணி வாணிகம் முதலிய பெருகின. இப்பெருக்கத்தின் காரணமாக நேர்த்தியான, வேலைப்பாடுமிக்க, விலை யேறிய, கலைநயமான துணிகள் தேவைப்பட்டன; உச்சகட்டமாக உருவானது வியப்புக்குரிய ‘டாக்கா’ மஸ்லின் ஆகும். அதன் புகழ் ஐரோப்பிய ‘தேவதைக் கதைகளில்’ கூட ஏறியுள்ளது. 14(i). நெசவுத் தொழில் போலவே தொழில்நுட்ப வளர்ச்சி, உலோகத் தொழில், கல்சிற்பத் தொழில் முதலியவையும் வளர்ச்சியடைந்தன. முற்கால எகிப்தியக் கடலோடிகள் அவர்களோடு இணைந்து செயல்பட்ட மினோவ, பினிஷியக், கடலோடிகள் நீள்பயணமேல்லாம் ‘உயிரைக்காப்பனவும் நீட்டிப் பனவும் ஆன பண்புடைய பொருள்களைத் தேடியே’ என்பது மெய்யானால் அவர்கள் தேடிய அதிசயப் பொருள்கள் இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். மன்னார்குடா முத்துக்கள், சங்குகள், மேல் தொடர் மலையிலிருந்து ஆற்று நீருடன் கரைந்து வந்து படிந்த பொன்துகள்கள் போன்றவையே அவை. (ii). போலிச் சங்குகள் செய்ய முதலில் தங்கத்தைப் பயன்படுத்திய தனாலேயே முதன்முதலாக தங்கம் மதிப்புப்பெற்றது என்பர் எலியட் சுமித். இதை பெரி ஆதரித்தாலும், நான் ஏற்கவில்லை.தொடுவதன் மூலம் மந்திர ஆற்றலை உய்க்கலாம் என்ற மூட நம்பிக்கை ஏற்பட்டவுடனே, தங்கம் எந்த வேதியியல் மூலத்துடனும் கலக்காத (உhநஅiஉயட iநேசவநேளள)தன்மை உடையது ஆகையால் மந்திரம் மூலமாகச் செய்யும் கேட்டைத் தடுக்கும் பொருளாக தங்கத்தைக் கருதியிருக்க வேண்டும். (இக்கோட்பாடு இன்றும் இந்தியாவில் பரவலாக உள்ளது). 15(i). பல வெளிநாடுகளில் உலோகத் தொழிலாளர் செம்பு, வெண் கலத்தைப் பயன்படுத்தினாலும், இரும்பு அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இந்திய இரும்புத் தாது மூலத்தை (டிசந) பயன்படுத்தியிருக்கலாம். ஏனெனில் இந்தியாவின் பல பகுதிகளின் ‘உயர்ந்த அளவு இரும்புடைய’ இரும்புத்தாது தரைக்குமேலேயே காணப்படுகிறது. ஹைதராபாத் பகுதியில் குகைகளில் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர்ச்செய்த இரும்புக் கருவிகள் கிட்டின. இரும்பின் பயனீடும் கல்கட்டடமும் வேதகாலத்துக்கு முன்பே திராவிடமொழி பேசுநருக்குத் தெரிந்திருக்க வேண்டும். (ii). எலியட்சுமித் கூறுகிறபடி செம்பு உளியே எகிப்தின் கற்கட்டட, சிற்பக் கலையைத் தோற்றுவித்தது. அதுபோல இரும்புக் கருவியே இந்தியாவின் கல்கட்டுமானம், சிற்பத்தைத் தோற்றுவித்தது எனலாம்; இரும்பினால் கூரான கருவிகள் ஆக்கப்பட்டன; போர்த் தொழில், சாதிகள் தோன்றின; வன்முறையில் தம்மிடம் தோற்போரின் உழைப்பையும் உடைமையையும் கவரும் கொள்ளை சயயீயஉiடிரள அரசுகளும் இந்தியாவில் ஏற்பட்டன. 16(i). தங்கம், வெள்ளி , முத்து, வைரம் மணிக்கற்கள் இவற்றின் பயன்பாடும் துணி நெசவுத்தொழிலைப் போலவே சமூக அமைப்புகளில் பெரும் மாறுதல்களை உண்டுபண்ணின. இவற்றின் தாக்கம் துணித்தொழிலை விடக் கடுமையாகவே இருந்திருக்கும். (ii). மணிக்கற்கள் அணிவது மன்னவன் கடமைகளுள் ஒன்று என்று மனுநீதி சா°திரம் கூறுகிறது. தொட்ட அளவில் பரவும் மந்திர ஆற்றல் (உடிவேயபiடிரள அயபiஉ) கொள்கைப்படி இக்கற்களின் உயிர்ப் பண்பு மன்னனிடம் பரவுகிறது. மன்னன் ‘அரசியலின் வாழ்வின் முழுமுதல் மந்திரச் சின்ன மாதலால்,’ அது அவன் மூலம் அரசியலின் குடிமக்கள் அனைவருக்கும் செல்கிறது. மன்னன் கடமைகளுள் இன்னொன்று மணிக் கற்குவைகளைப் பெருக்குவது. உயிரைக்காக்கவேண்டுமென்றால் தரலாம் விற்கலாம் என்றாலும் மணிக்கற்களை விற்கக் கூடாது என்ற கொள்கைக்கும் இக் கருத்தே அடிப்படை. (iii). தனி நபர்களும் கூட பொன், வெள்ளி, உயர் மணிக் கற்களாலான பூணணிகள் வாங்கிச் சேர்ப்பதே அறிவுடைய, சிறந்த முதலீடு எனக் கருதுகின்றனர். பயன்கள் மந்திரவகை நன்மை, சமூக மதிப்பு ஆகியவை மட்டுமல்ல; எந்த நேரத்திலும் அவற்றைவிற்றுப் பணம் பெறவும்கூடும். பொதுவாகச் வணிகப் பொருள்களின் தேவையளவு இந்தியாவில் ஏறுக்கு மாறாக உள்ளது; பெரும்பாலான பொதுமக்கள் உயிர்வாழத்தேவையான உணவு முதலிய பொருட்களில் பற்றாக்குறை; ஆனால் மிகச் சிலரான மேட்டுக்குடியினரின் டாம்பீகத் தேவைக்கான பொருள்கள் தாராளமாகக் கிடைக்கும்! நடுத்தரவகுப்பு மக்கள் தொகை வளர்ந்தது அணிமைக் காலத்திலிருந்தே; எனினும் அவர்கள் தேவை உற்பத்தியை ஓரளவுக்குப் பெருக்கிவருகிறது. ? 7. இந்திய நாகரிகத்துக்கு திராவிட மொழி பேசுநரின் பங்களிப்பு இன்றைய (1924) நிலை திராவிடர் விழுக்காடு எவ்வளவு? முன் இயல்களில், ‘திராவிடர் கள்(திராவிடமொழி பேசுநர்) யார்? போன்ற வரலாறு சார்ந்த பொருண் மைகளை விரிவாக விவாதித்துள்ளோம். திராவிட மொழிபெசுநர் எதிர்காலம் பற்றி- அதாவது வருங்கால இந்திய வரலாற்றிலும் உலகவரலாற்றிலும் தென்னிந்திய திராவிடமொழி பெசுநர் பங்களிப்பது எவ்வகையில் அமையும்? என்பது பற்றிப் பார்ப்போம். 2. மேற்சொன்ன வினாவிற்கு விடையளிக்கு முன்னர் இன்றைய நிலையைப்பார்ப்போம். இன்று நாம் காணும் முரண்பாடு திராவிடப் பகுதியில் தான் இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த நாகரிகம் இன்றும் நின்று நிலவுகிறது. அதே நேரத்தில் பல் துறை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள பகுதியும் தென்னிந்தியாதான் என்பது வியப்புக்குரியது. இந்தியாவின் பிற பகுதிகள் இன்றும் இடைக்கால நூற்றாண்டுகளில் (கி.பி. 700-1500) ஐரோப்பிய நாடுகள் இருந்த நிலையையே, அல்லது சிலுவைப் போர்கள்(கி.பி. 1000-1200)நடந்த காலத்து பால°தீன நாடு இருந்த நிலையையே ஒத்தனவாக உள்ளன. 3. மதுரையில் மீனாட்சியம்மன், சிவன் கோயில்களில் நாம் காண்பவை எகிப்திலுள்ள ஐசி°,ஆஸிரி° ளைளை, டிளசைளை. அல்லது பாபிலோன் தெய்வம் மார்துக் இவற்றைக் காண்பது போன்ற உணர்வையே தரும். சென்னை வேளாண்மைத்துறைசார்ந்த கால் நடைமருத்துவர் ஒருவர் எகிப்திய அபி°யயீளை கடவுளுக்கு ஈடான கோயில் நந்தியைப் பார்த்தபொழுது அது ஜெர்ஸிக்காளை போன்று இருந்தது என்றார். 4. எகிப்தின் மிகப் பழைய இலக்கியத்திலேயே மறைந்து வந்தனவாகக் குறித்த பண்புகளை இன்றும் நாம் கேரள நாயர் சாதியினரிடம் காணலாம். ஆனால், அதே நாயர் சாதி இளைஞர் ஒருவர் இந்தியத் தொழிலாளர் பிரச்சினைபற்றி ராயல் ஆசியவியல் கழகத்தில் நவீனக் கட்டுரை படிப்பதையும் காணலாம். வாணிகத் துறையில் சென்னை பிற்பட்டிருக்கிறது; எனினும் இந்தியாவுக்கும் மேலைவேள்ளையர் நாடுகளுக்கு மிடையேயுள்ள அறிவுசார் கலந்துரையாடல் மூலமான தாக்கத்தில் சென்னையும் கல்கத்தா, பம்பாய் அளவுக்கு முக்கியமானதே. இந்திய சமய தத்துவங்களை மேனாட்டவர்க்கு இயையப் புதிய விளக்கத்துடன் தரும் பணி அடையாற்றுக் கரையில்தான் நடந்தது (தியோசாபிகல் சங்கம்). சென்னையின் முன்னாள் பள்ளியாசிரியர் (சீனிவாச சா°திரி) இன்று இலண்டனிலும் ஜெனிவாவிலும் இந்திய அரசின் பேராளராக இருக்கிறார். 5 (i) இந்திய அரசியலில் கவர்ச்சியான ஆற்றல்மிக்க தலைவர் களான திலகர், காந்தி, சி.ஆர். தாஸ் ஆகியவர்கள் இந்தியாவின் பிறபகுதி களைச் சார்ந்தவர்களானாலும், ஜனநாயகமுறை அரசியலைச் சென்னை மாகாணச்சட்டமன்றத்தில் திறம்பட வழி நடத்துவதில் தமிழ்ப் பிராமணரே தலைமைவகிக்கின்றனர். (ii) இந்திய தொழிலாளர் சட்ட உருவாக்கத்தில் இந்தியர் அனைவரிலும் முதலிடம் வகிப்பவர் ஒரு நாயரே(டி.எம்.நாயர்) தற்காலத் தொழிற்சங்க இயக்கம் தோன்றியது பம்பாயிலோ, கல்கத்தாவிலோ அல்ல, சென்னையில் தான். இந்தியத் தொழிற்சங்களுக்கு முன்மாதிரியாய் உள்ளது சென்னையி லுள்ள அலுமினியத் தொழிலாளர் சங்கம்தான். (iii) கூட்டுறவு இயக்கம் சென்னையில்தான் தொடங்கியது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கம், மயிலாப்பூர் சா°வத நிதி ஆகிய இரண்டும் தான், வாணிகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேனாட்டுக் கூட்டுறவு முறையை நன்கு செயல்படுத்திவரும் இரண்டு அமைப்புகள் ஆகும். இந்திய அரசு கூட்டுறவு முறையை தொடங்கு வதற்கு முன்பிருந்தே இவை தோன்றி (குறிப்பிடத்தக்க அரசு உதவி எதுவும் இல்லாமலேயே) வளர்ந்தவை இவை. 6 (அ) உறுதியாகக் கூறஇயலாவிட்டாலும் நகரமக்கள் தொகையில் பெரும் விழுக்காட்டினர் கிரிக்கட் வளைகோற்பந்து (ஹாக்கி), டென்னி°, கால் பந்து இவற்றை விளையாடுவதில் கல்கத்தா, மும்பாயைவிடச் சென்னையே முதலிடம் வகித்து வருகிறது எனலாம். (ஆ) பிரிட்டிஷ் கேளிக்கைகள் பற்றிய தமிழர் மனப்பான்மைக்கு கும்பகோணம் கல்லூரி முன்னாள் தலைவர் ஒருவரைப் பற்றி அவருடைய பழைய மாணவன் சொன்ன செய்தி பொருந்தும்: “அவர் எங்களுக்கு கால்பந்து ஆடக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியபோது. நாங்கள் ‘உதைக்கக் கற்றுக்கொடுக்கிறீர்களே; நாங்கள் என்ன கழுதைகளா?’ என்று முதலில் சிணுங்கினோம். ஆனால் இப்போது நாங்கள் அதற்காக அவரிடம் நன்றிபாராட்டுகிறோம்”. 7. முன் இயல்களில் குறித்தவாறு பெண்களின் சமுதாயநிலை, படிப்புச் செயல்பாடுகள் ஆகியவை சார்ந்த யாவற்றிலும் பர்மாவை அடுத்து இந்தியாவின் எப்பகுதியையும்விட முன்னணியில் நிற்பது திராவிட இந்தியப் பகுதிதான். 8. திராவிடப் பண்பாட்டின் இந்த வளர் நிலைக்கு ஒரு முக்கிய காரணம், பிரிட்டிஷ் தொடர்பானது மற்ற பகுதிகளைவிடத் (தமிழ் நாடு உள்ளிட்ட) தென்னாட்டுடன் நெடுநாளாக இருந்து வருவதுதான். அத்துடன் மகாராட்டிரர்கள், மைசூரைச் சார்ந்த ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகிய வர்கள் தாக்குதல்கள், கொள்ளைகளிலிருந்து தமிழக மக்களை பிரிட்டிஷ் ஆட்சிதான் அரணாக இருந்து காத்தது.மற்றொரு காரணம். மூன்றாவதாக கிறித்துவ சமயத்தாக்கம் வடஇந்தியாவைவிடத் தென் இந்தியாவில் அதிகம். இயேசுவின் அப்போ°தலர்களுள் ஒருவராகிய புனித தாம° இந்தியாவில் அம்மதத்தை முதலில் நிறுவினார் என்ற தொல்கதையும் வசயனவைiடிn உள்ளது. அக் கதை உண்மையோ அல்லவோ, கிருத்துவ மதம் இங்கு பரவிய காலத்தை அக்கதை சரியாகச் சுட்டுவதாகலாம். “சிரியன் கிறித்தவர்” முக்கிய மையம் திருவாங்கூர், கொச்சி மற்றும் இப்பகுதிகளை அடுத்த சென்னை மாகாணப் பகுதியும்தான். தென்னாட்டின் இந்நிலைக்கு மிக மிகமுக்கியமான காரணம் திராவிட மொழிகளைப் பேசும் மக்களிடையே ஆங்கிலமொழி மிகப் பேரளவில் பரவியுள்ளமைதான். 9 (i) ஆங்கிலம் எந்த அளவுக்குத் தென்னிந்திய மொழியாகவே ஆகியுள்ளது என்பது வியக்கத்தக்கது. சென்னையில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவங்களுள் ஒன்று, காசியில் புதிதாக உருவாக்கிய இந்துப் பல்கலைக் கழகச் சார்பில் வடக்கேயிருந்து வந்த பேச்சாளர்கள் பேசிய பொதுக் கூட்டமாகும். பேச்சுக்கள் முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தன. பெரிய மக்கள் திரள் கூர்ந்து கேட்டது. என் கடைசி அனுபவங்களுள் ஒன்று சென்னையில் திருவல்லிக்கேணி கூட்டுறவுச் சங்கத்தின் அரையாண்டுக் கூட்டம்தான். கூட்டம் தோடங்கியபின் சென்ற நான் ஒருவன்தான் ஐரோப்பியன். ஆயினும் நடவடிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தன. (ii) சென்னை நகர மொத்த மக்கள் தொகை ஐந்து லட்சம் தான் (1924). ஆனால், அங்கு ஆங்கில நாளிதழ்கள் ஆறு நடைபெறுகின்றன. மெயில், எக்ஸ்பிரஸ், இந்து, நியூ இந்தியா, ஜஸ்டிஸ், ஸ்வராஜ்யா; ஆனால் பிறமொழிகளில் தமிழில் ஒன்றும் தெலுங்கில் ஒன்றுமே. உலகின் வேறு எந்தப் பகுதியில் உள்ள நகரத்திலாவது அப்பகுதியல்லாத அயலார் மொழி ஒன்றில், ஆறு நாளிதழ்கள் அச்சிட்டு வெளிவருவதைப் பார்க்க முடியுமா? அதாவது ஒரு பகுதி மக்கள் தங்களுக்கு ஆர்வமூட்டும் செய்திகளை தம்சொந்தத்தாய் மொழியை விட்டுவிட்டு அயலார் மொழி இதழில் படிக்க விரும்புவதை உலகிம் வேறு எங்கும் காண இயலாது! (iii) தன்னாட்சியியக்கம் (அன்னிபெசண்டின் hடிஅந சரடந) உச்சநிலை யிலிருக்கும்போது நியூ இந்தியா பத்திரிகை (ஐரோப்பியர் நான்கு பேரே உள்ள) கும்பகோணம் நகரில், ஒரு பொதுக்கூட்டத்தின் நடவடிக்கைகள் முழுவதுமே ஆங்கிலத்தில் இன்றி தமிழிலேயே இருந்ததை வியப்புக்குரிய செய்தியாகக் குறிப்பிட்டிருந்தது! பேசுபவர்கள், கேட்பவர்கள் அனைவருமே ஆங்கிலத்திலேயே பேசி எழுதிப் பழகிவிட்டவர்கள் என்பதால் தமிழில் கூட்டத்தை நடத்தியது நாட்டுப் பற்றுக்கு ஒரு அறிகுறி என்று கொள்ளப் பட்டது. 10. பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வளர்ச்சி அரசின் முனைப்பால் வந்ததன்று. கல்வித் துறைக்குச் செலவிடப் போதிய பணம் அரசிடம் இல்லை. சென்னை மாகாணப் பொது மக்களின் ஆங்கிலமோகமே காரணம். தவிர, திருவாங்கூர், கொச்சி இராச்சியங்களிலும் இதேநிலைதான். கொச்சி இராச்சியமோ எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. 11. உயர்தரக் (கல்லூரிக்) கல்வி அந்தந்தப்பகுதித் தாய்மொழி வாயிலாக அல்லாமல், ஆங்கிலம் ஆகிய அந்நியர் மொழியில் நடை பெறுகிறது என்ற ஒரு பெருங்குறைபாடு இருந்து வருகிறது. ஆனால், இன்றைய நிலையில் இதனால் மிகக் குறைந்த அளவு பாதிக்கப்படுவது திராவிடப் பகுதியே. கல்லூரிக் கல்வி தொடங்குமுன்னர் பிற மாகாண மாணவன் கல்லூரிப் பாடங்களை ஆங்கிலத்தில் பயிலத் தன்னைத் தகுதிப்படுத்து வதற்காக செலவிடும் ஓர் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக மாணவனுக்கு மிச்சம். எனினும் தற்காலப் பொதுக்கல்வி, அறிவியல் கல்விகளின் ஆற்றல் மிக்க பயிற்று மொழிகளாக உருவாகும் வாய்ப்பு வங்காளி, இந்தி, உருது மொழிகளுக்குத் தான் அதிகம் திராவிடமொழி களுக்குக் குறைவு என்பதே நிலை. வட இந்தியர் தம் தாய் மொழி களுள் ஒன்றை (இந்தி,வங்காளி) இருபது -முப்பதுகோடி மக்களின் இலக்கிய, அறிவியல் மொழியாக ஆக்கிவிட இயலும். ஆனால், தென் இந்தியாவில் பொதுமக்கள் மொழியும் படிப்பு, கல்வியக மொழியும் ஒன்றே என்ற நிலை ஏற்படும் காலம் அந்தத் திராவிட மொழிகள் மறைந்த பின்னர்த்தான் (அதாவது அவற்றுக்குப் பதிலாக அனைத்துத் துறை களிலும் ஆங்கிலம்) என்ற நிலையில்தான் நிகழுமோ என்னவோ! 12. நான் நினைப்பது வருமாறு; இப்படி நாட்டுமொழிகள் ஒழிந்து ஆங்கிலம் அவ்விடத்தைப் பிடிப்பது சரியா? அப்படித்தான் நிகழ்ந்து விடுமா? என்பதைச் சென்னை மாகாணத்தில் தமிழ் முதலிய மொழி பேசுநர்தான் முடிவு செய்ய வேண்டும். இம்மொழிகள் நின்று தழைத்திட வேண்டுமாயின் வேறு முயற்சிகள் வேண்டும். சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் (உடிரnஉடை) நான் “ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் ஒரு பொது வரிவத்தை(லிபி) ஏற்றுச் செயல்படலாமா என்பதை ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைக்கலாம்” என்று தீர்மானம் கொணர்ந்தேன். திராவிடமொழிகள் பிழைத்து வாழத் தம் வலிமையை ஒன்று திரட்டி முயலவேண்டுமென்று சொன்னேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை பேசுவோர் மொத்தம் ஆறுகோடி பேர் (1924ல்). இவர்கள் சேர்ந்து உயிர்ப்புள்ள திராவிட இலக்கியத்தை உருவாக்கிப் பேணலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி எழுத்துமுறை இருப்பதனால் இன்று தமிழ், தெலுங்கு லிபி நூலை 1.80கோடி தமிழர், 2.10கோடி தெலுங்கர் மட்டுமே படிக்க இயலும். நான்கு மொழிகளும் மிக அணுக்கமான தொடர் புடையவை. இவற்றுக்குப் பொது லிபி உருவாக்கினால் எடுத்துக்காட்டாக தமிழ் நூலை அதிக சிரமமின்றி தெலுங்கர் கன்னடியர், மலையாளிகள் படிக்க இயலும். 13. மேலும் பொது வரி வடிவ லிபியில் நூல்களை அச்சிட்டால், நான்கு மொழி இலக்கியங்களும் யாதொரு கடும் முயற்சியும் இன்றிப் பெருமளவுக்கு வளர இயலும். அத்துடன் இப்போதைய கடின லிபியை மாற்றி எளிய பொது லிபியை உருவாக்கினால் வாசிக்க எழுத அச்சகம், கைஅச்சுப்பொறி, தட்டச்சு முதலியவைகளின் செயல்பாடுகளை மாகாணமுழுவதும் அனைவருக்கும் எளிதானதாகவும் மாற்றலாம். ஆனால் என் தீர்மானத்தைச் சென்னை மாகாண சட்டமன்றம் (டநபளைடயவiஎந உடிரnஉடை) ஏற்காமல் தோற்கடித்தது; காரணம் பழமைப் பற்று எனலாம். அந்தந்த மொழியின் லிபி அம்மொழியுடன் இன்றியமையாத் தொடர்புடையது, புனிதமானது என்றும் கருதியிருக்கலாம். தாய்மொழிகளின் இடத்தில் ஆங்கிலம் வரட்டுமே நல்லதுதானே(!)என்றும் சிலர் நினைத்திருக்கலாம். என்னுடைய இந்த அனுபவம் போலவே அண்மையில் ஆந்திர நாட்டில் தெலுங்கு இலக்கிய நடையை நடப்புத் தெலுங்குப் பேச்சு நடைபோல் மாற்றிடப் பெரு முயற்சிகள் செய்த போதிலும் அவற்றைத் தெலுங்குப் பண்டிதர்களில் பெரும்பாலோர் கடுமையாக எதிர்த்தனர். இத்தகைய போக்கு அந்தந்த மொழியை நிலைபெறச் செய்யாமல் மக்கள் வழக்கிவிருந்து துரத்தி (மியூசியம் மொழியாக்கி) விடலாம். 14. ஒரு சமூகத்தின் உணர்வு நிலைகளுக்கும் (யேவiஎந பநnரைள) அவர்களுடைய சொந்தத் தாய் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பர் சிலர். கருத்தை வெளியிடும் கருவியாக அயல்மொழியைக் கொள்ளும் பொழுது குழந்தைகள் மூளை வளர்ச்சியின் ஒரு கூற்றின் குறைபாடு எற்படலாமென அவர்கள் கருது கிறார்கள். ஒரு நாடு சமூகத்திற்கும் பிறவற்றுக்கும் இடையேயுள்ள அடிப்படை மனநிலை, உள்ளுணர்வு, மரபுகள் ஆகியவற்றை மிகைப்படுத்துவது இந்த எண்ண ஓட்டம் நேர்மாறான நிலை தான் சரி என்பதை வரலாறு காட்டும். 15. தாந்தே(னயவேந) காலத்து பிளாரன்ஸ் நகரமக்கள் டஸ்கனி பகுதியில் தங்கள் முன்னோர்கி.மு.300வரைப் பரவலாகபேசிய எத்ரஸ்கன் மொழியை அழியாது வைத்திருந்து தாந்தேயும் எத்ர°கன் மோழியில் காவியம் எழுதியிருந்தால் அது மிகு சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் கருதவில்லை. முன்னர் ஜுலிய°சீசர் படையெடுப்பில் பண்டைய பிரான்சு நாட்டிலிருந்த பெல்கே, கல்லீ, அக்குவிட்டனி (நெடபயந,பயடடi, யளூரவையni) படைகள் தோற்று அம் மொழிகள் அழிந்திராவிட்டால், இன்றைய பிரஞ்சு மக்களின் நாகரிகம் இன்னும் உயர்வுற்றிருக்கும் என்று கூற இயலாது. 16. திராவிடமொழிகள் அனைத்திலும் எக்கருத்தையும் நுட்பமாகத் தெரிவிக்கவல்ல சிறந்த மொழி தமிழே! ஆயினும் தமிழ்ப்பட்டதாரிகள் அவ்வகையில் ஆங்கிலத்தையும் தமிழுக்கொத்த கருவியாகக் கருதுவதாகவே தோன்றுகிறது . இது சரியானால், ஆங்கிலத்தில் நேரடியாக எழுதிய (அல்லது மொழி பெயர்க்கப்பட்ட) முழு உலகின் அனைத்துக் கருத்துக்களும் இலக்கியமும் தமிழருக்கு எளிதாக ஆங்கிலம் வழி யாகவே பயன்படும் என்ற சிறந்த சாதகநிலை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, மொத்தத்தில் தங்கள் குழந்தைகள் இளமையிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்று அதில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் இன்றைய(1924) தென் இந்திய மக்கள் கருத்து சரியாகவே எனக்குப்படுகிறது. 17. திறமான ஆராய்ச்சிக்கு இந்தமொழி உதவுமா அல்லது அந்தமொழி உதவுமா என்பது விவாதத்துக்குரிய செய்தி. பாராளுமன்றக் குடியாட்சி சிறந்ததா, அயலார்க்குக் கட்டுப்பட்ட சிப்பந்திகள் (ரெசநயரஉசயவள) ஆட்சி சிறந்ததா என்பதும் அவ்வாறே. (ஆனால், இரத்தசோகை (யயேநஅயை) மேம்பட்ட சிந்தனைக்கும், திறம்பட்ட செயலுக்கும் உதவுமா என்பதோ, அலைக்கழிக்கும் பிற நோய்கள் நாட்டுக்கு நன்மை பயக்குமா என்பதோ விவாதத்துக்குரிய செய்தி ஆகாது!) எனவேதான் பெருமுழக்கத்துடன்1924ஐ ஒட்டி அறிவித்த செய்திகளாகிய வேல்ஸ் இளவரசர் வருகை, இந்திய அரசிய லமைப்புச் சீர்திருத்தம், மலையாளமாப்பிளா கலவரம், கிலாபத் கிளர்ச்சி, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றைவிட, ராக்பெல்லர் நிறுவனத்தினர் சென்னைக்கு வந்ததும் கொக்கிப்புழு நோய்க்கெதிரான முயற்சி களைத் தொடங்கி வைத்ததும் அதிக முக்கியமான நிகழ்ச்சிகள் என்பது என் கருத்து. 18. சென்னைமாகாணப் பகுதிகள் பலவற்றில் கொக்கிப்புழு நோயால் அல்லலுறுபவர் விழுக்காடு 100க்கு 65 முதல் 98 வரை ஆகும். இதுபோன்ற பிற நோய்களும் உள்ளன. மலேரியா போன்று அவை நோயாளியை விரைந்து கொன்று விடுவதில்லை; யயேநஅயை பொதுவான நரம்புத்தளர்ச்சி, மனக் கிளர்ச்சியின்மை ஆகியவற்றை உண்டாக்கி, பாதிக்கப்பட்டவரின் செயல் பாட்டையே கெடுத்துவிடுகிறது. இதனாலன்றோ ஐரோப்பியர் கிரு°தவ சமயம் மக்களுக்கு ஊட்டும் நம்பிக்கை நிரந்தர மோட்ச வாழ்வாயிருக்க, இந்தியாவில் அது செயலற்ற நிலை (நிர்வாணம்) ஆக உள்ளது! இந்தியரின் சோர்வுக்கோட்பாடு யீநளளiஅளைஅ மருத்துவரால் இன்ன நோய் என்று கூறமுடியாத நிலையில், உடலுக்குள் நின்றழிக்கிற நரம்புத் தளர்ச்சி யூட்டும் பலவகை நோய் நலிவுகளாலும் ஏற்படுவது. ராக்பெல்லர் நிலையம் கொக்கிப்புழுநோய்த் தடுப்பைக் தேர்ந்தெடுத்தது அது பெருங்கேடு விளைப்பது என்பதனால் மட்டும் அன்று; அதை எதிர்க்கும் முயற்சி வேறு பல நல்லவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதனாலாகும். கொக்கிப்புழு குணப்பட்ட பின்னும் அது (மிக எளிதில்) மீண்டும் தொற்றிவிடாதபடி காக்க மேற்கொள்ளும் துப்புரவுப் பழக்கங்கள், அந்நோயை மட்டுமின்றிப், பிற நோய்களையும் தடுக்கும் என்பதும் ஒரு பெரிய நன்மை. 19. திராவிடரின் மனிதப்பண்பாற்றலை மதிப்பிடுபவர்கள் தாம் காணும் திராவிடரில் மிகப் பெரும்பாலோர் அன்னாருக்குத் தெரியாமலே பலநோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனைக் உணர வேண்டும்; அவர்கள் நோய்களில் பல அணிமைக்காலம் வரை சிறிதும் உணரப்படாதவை. (ஆனால் உணரப்பட்டபின் மிக எளிதில் தடுக்கக் கூடியவை). மேலும் திராவிடர் நாட்டுப்பற்றும் இப்புதிய செய்திகளால் விரிவடையும். (குறுகிய மனப்பான்மை யின்றி) உதவி எங்கிருந்து வந்தாலும் வரவேற்கும் மனநிலையும் ஏற்படும்- எடுத்துக்காட்டாக அமெரிக்க மருத்துவர்(வேலூர்) செல்வி ஐடா ஸ்கடர் இலங்கை செல்வி வீரசிங்கா ஆகியோர் தொண்டு வரவேற்கப்படுகிறது. 20. தளர்வூட்டும் இந்நோய்களுக்கு எதிரான செயல்பாடுகளால் இந்தியரின் சராசரி அறிவாற்றல் பன்மடங்கு வளருமென்பது உறுதி. அன்றாட வாழ்வே பிரச்னை என்ற இன்றைய நிலைமாறினால், 30 கோடி இந்தியர் திரண்டு உலகின் வல்லமை வாய்ந்த (புதிய வரவு) வல்லரசு ஆக உருப்பெற்று விடுவர். 21. அவ்வாறு உருப்பெற இந்தியாவுக்கு மேல்நாடுகளின் உதவி தேவை. முதலில் இந்தியர் இன்றைய வெறும் ஆழ்ந்த அடிப்படையற்ற கற்பனைகளைக் கைவிட்டு, எந்த விஷயமாயினும் அதன் இன்றைய நிலைமை, அதன் சாதக பாதகங்களைப் பற்றித் தீரயோசித்தல், மாற்றம் தேவையெனத் தோன்றினால் அம்மாற்றத்தை முதற்கண் சிறு அளவில் செயல் படுத்திப்பார்த்துப் பின்னர் முடிவு செய்தல், என்னும் மேலை விஞ்ஞான முறையாகிய டிளெநசஎயவiடிn யனே நஒயீநசiஅநவேயவiடிn ஐ இந்தியர் பின்பற்றியாக வேண்டும். இதில் வழிகாட்டியாயிருப்பவர் இன்று சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆவர். மேலும் பலர் அவர் போல் உருவாகிவருகிறார்கள். 22. இன்று இந்தியரைப் பாதிக்கும் ரத்தசோகை யயேநஅயை போன்ற நோய்களால் வரும். உடல் நலக்குறைவும், வெறும் கற்பனை மட்டும் சார்ந்த சிந்தனையும் விரைவில் நீங்கவேண்டும்; நீங்கிய பின்னர் முன்பு ஐரோப்பியர் காட்டுமிராண்டிகளாகவிருந்த காலத்தில் (கி.பி.1000வரை) இந்தியா உயர் நாகரிக நாடாயிருந்ததற்குக் காரணமான பண்புகள் மீண்டும் செயல்படும். சிறிதளவு உணவு, உடை; கடுங்குளிர் இல்லாததால் உறையுள் வகையில் அதிகச் செலவு இங்கு இன்மை, முதலியவை அடங்கியவை சூழலில் இந்திய மாணவர்கள் நுண்ணிய தத்துவங்களுக்குப் பண்டே பெயர்பெற்ற “எளிய வாழ்வு, உயரிய சிந்தனை” வல்லவர்கள் ஆகையால் வருங்காலத்தில் மிகச் சிறந்த ஜனநாயக மரபுடைய சிறந்த நாகரிகத்தை உருவாக்கவல்லவர்கள். 23. ஐரோப்பிய, அமெரிக்க நாட்டுமக்களின் வெறும் உலோகாயதப் அடிப்படை(வடிடி அயவநசயைடளைவiஉ) வாழ்வுமுறை நாகரிகத்தை என்றும் இந்தியர்கள் மதித்தது இல்லை. பணம், படைபலம் அடிப்படையில் செயல்படும் மேலை நாட்டவர் உலகநாடுகளிடையே, உலகமக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டத் தவறிவிட்டனர். ஒரு நாட்டிற்குள்ளேயே பல வகுப்புகளிடையே, தனி நபர்களிடையே ஒற்றுமையை, அமைதியைக் காண முடியவில்லை. (ஐரோப்பிய-அமெரிக்க) நாட்டவரிடமிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ளவேண்டுவது எவ்வளவோ அதே அவ்வளவு இந்தியரிமும் மேலை நாட்டார் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும் (வாந றநளவ hயள யள அரஉh வடி டநயசn கசடிஅ iனேயை யள வடி வநயஉh) கிழக்கில் இருந்து மேற்கு கற்பதாயினும் சரி, மேற்கிவிருந்து கிழக்கு கற்பதாயினும் சரி ஆங்கிலத்தில் பேராற்றல் பெற்ற திராவிடமொழி பேசுநரின் பங்கு அதில் பெரியதாக, சிறந்ததாக இருக்கும். ? குறிப்பு ‘ஆரியம்’ என்ற சொல்லும் ‘இந்தோ ஜெர்மானிய’க் குடும்ப மொழிகளும் (2014) இன்றைய மொழியியல் “இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்” என்பறே “இந்தோ -ஜெர்மானியக் குடும்பத்தைச் சுட்டுகிறது. 24. “ஆரியர்” என்ற சொல் இந்தியாவிற்குள் நுழைந்து வேத சம்ஸ்கிருத மொழியைப் புகுத்தியவர்களை மட்டுமன்றி, இந்தோ ஜெர்மானிய குடும்பத்தின் பல்வேறு மொழிகளை முதல்முதலில் பேசியவர்களையும், (வேறு சிலரால் இதற்கும் முற்பட்டு அவ்வினத்தின் எல்லா மொழிகளுக்கும் மூலமான தொல் இந்தோ ஜெர்மானிய மொழி யீசடிவடி iனேடி-பநசஅயniஉ பேசியவர் களையும்) குறிக்க வழங்குகிறது. இப்பயன்பாடு தவறானதென்று எனக்குத் தோற்றுகிறது. அப்படிக்குறிப்பது உடல் வலுவினாலோ, இனப்பெருக் கத்தாலோ, பல்வேறு இடங்களுக்கும் பரவிச் சென்று பிற இனங்களை வென்றும் தம் இந்தோ ஜெர்மானிய மொழிகளை எங்கும் கொண்டு சென்று பரப்பிய ஆரிய இனம் என்ற ஒரு திட்டவட்டமான இனம் இருந்ததாக! தவறாக எண்ண இடம் தருகிறது. ஆனால் இதை ஒரு உன்னிப்பாக மட்டும் கைக் கொண்டு, “ஆரியர் நடு நிலக்கடலினத்தவரா? நார்டிக், அல்பைன், அர்மீனிய இனத்தவரா?” என்று கேட்கும் பொழுதுதான் இன முறையில் சயஉந எவரையும் ஆரியர் என்று இனம் காணமுடியாதென்பது தெரிகிறது. 25. அடுத்து நான் கூறவிருக்கும் புதுக்கருத்தை முன்னர் எவராவது கூறியுள்ளனரா அல்லவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தோற்றுவது இதுதான் தொல் இந்தோ ஜெர்மானிய மொழி உண்மையில் மெஸெபொட்டேமியாவிலிருந்து கருங்கடல் வழியாக, பால்டிக் கடற்கரை வரை நீண்டு கிடந்த வணிகநெறிக்குரிய பொது மொழி என்பதே என் கருத்து. “அம்பர்” (யஅநெச) கொண்டு சென்று விற்ற இவ்வணிகரே வட ஐரோப்பாவுக்கு இரும்பை உருக்கி வார்க்கும் கலை போன்றவற்றைக் கொண்டு சென்றவர் ஆவர். எனவே தான் மூல இந்தோ ஜெர்மானிய மொழிக்கு மிகவும் அணுக்கமுடைய இருமொழிகளாக ஒன்றுக் கொன்று நெடுந்தொலைவிலுள்ள லிதுவேனியமும் சமஸ்க்ருதமும் காணப் படுகின்றன. ஆரிய மூலத்தாயகம் இதுவா, அதுவா என்ற குழப்பமும் தீர்கிறது. மிகுந்த திரிபியல் iகேடநஉவநன மொழியாகிய பண்டை இந்தோ ஜெர்மானிய மொழிக்கு தாயான மொழி முல்லைநில நாடோடிக் கும்பலின் மொழியாயிருந் திருக்க முடியாது; பண்பட்ட நாகரிக இனத்தின் மொழியாகவே இருந்திருக்க வேண்டுமென்பதற்கான சான்றுகள் பல உள்ளன. இக்கருத்து சரியானால், பிரிட்டானியக் கப்பல்கள் செல்லும் துறைமுகங்களின் வழியாக உலகெங்கும் கடல்வழியாக ஆங்கிலம் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் பரவியுள்ளமை இது போன்றதே ஆகும். 26. இதுபற்றிப் பேராசிரியர் புளூர் குறிப்பதாவது:- “செமித்துக் மொழி என்பது அராபியப் பாலைவனத்துக்கு வடக்கே பிறைபோல வளைந்து கிடக்கும் செழிப்பு வாய்ந்த நாடோடி வணிகப்பாதையில்(கநசவடைந உசநளஉநவே) பலமொழி மோதுதலால் உருவான ஒரு மொழியோ என்று நான் அடிக்கடி எண்ணியதுண்டு. அங்ஙனமாயின் அது பாலைவனத்தில் வழங்கிய பல மொழிகளுடனும் பாலையைச் சூழ்ந்த மொழிகளுடனும் மொழியியல் சார் கொள்வினை கொடுப்பினை செய்திருக்கவேண்டும். ஆகவேதான் மூல இந்தோ ஜெர்மானிய மொழியும் இதுபோல இந்துகுஷ் மலைக்கும் நீப்பர் ஆற்றுக்கும் இடையேயுள்ள வணிகக்குழுக்கள் நாடோடிகள் வழங்கியதில் உராய்வுற்றுக் கடுமைக்கூறுகள் நீங்கி எல்லோரும் கற்க எளிதாகிப் பரவியது என நான் எண்ணுகிறேன். 27. உலக வாணிகத்தின் பயனாக இன்று ஆங்கிலம் அயல் மொழிச் சொற்களை எளிதில் ஏற்பதால் மக்கள் அதை வரவேற்கின்றனர். ஜெர்மன் மொழி இம்முறையில் பரவாதது மட்டுமல்ல. ஜெர்மானியிலிருந்து சென்ற ஜெர்மன் வணிகரே அதைக் கைவிட்டுள்ளனர்; பிரெஞ்சு மொழியோவெனில் பிரெஞ்சுப் பேரரசுக்கு வெளியே வேளாண் மக்களிடையே மட்டுமே நிலவுகிறது. அத்துடன் கார்ப்பேதிய - ரஷ்யப் பகுதிகளிலுள்ள அல்பைன் இனமக்கள் இந்தோ ஜெர்மானிய மொழியைப் பயின்று, சமவெளிகளில் நீண்டமண்டையோடும் குறுகிய உதடுகளும் உடைய குதிரைவாணர்களுக்கே தனிச் சிறப்பொலியான ‘க்,ச்வ’(ளூ டிச உhற) - அல்லது ‘கம’ என்ற அடித் தொண்டை ஒலியைத் (தமக்கேற்ப மாற்றியமைத்து) ஸ்லாவ் மொழி பேசநர் (அகன்ற மண்டையோடும் நீண்ட உதடும் உடைய மக்களுக்குரிய முறையில்) ‘ப’ யீ- என்ற ஒலி ஆக்கினரென்றும் (யீநயமந அவர்களைப் போல) நானும் கருதுகிறேன். 28. தற்கால ஐரோப்பிய நாடோடி இனமாகிய ‘ஜிப்ஸி’களிடையேயுள்ள வட்டாரவழக்கு வேறுபாடுகள் பற்றி டாக்டர் சாம்ப்ஸன் கருத்துக்களும் இது போன்றவையே. இக்குறிப்பு முழுவதிலுமே இனக்குழு ஆய்வின் சயஉயைட சநளநயசஉh அடிப்படையிலேயே சில கருத்துகளை முன்வைத்துள்ளேன். (29. கில்பர்ட் சிலெட்டர் இந்நூலை எழுதியது சிந்து நாகரிக எச்சங் களைப் புதிதாக அகழத் தொடங்கிய காலத்தை அடுத்ததாகும். ஆனால் அந்நாகரிகத்தைப்பற்றிய ஆழ்ந்த முழுமையான ஆய்வுக்கட்டுரையை 1925 இல்தான் டைடரளவசயவநன டடினேடிn நேறள இதழில் ஜர். ஜான் மார்ஷல் வெளி யிட்டார். சிலேட்டர் இந்நூலை எழுதிமுடித்தது 1923இல்; அச்சிட்டு வெளிவந்தது 1924.இல். 1925 க்குப் பின்னர் இதன் திருத்திய பதிப்பை வெளியிட வாய்ப்புக் கிடைத்திருந்தால் சிலேட்டர் சிந்து நாகரிக அகழ்வாய்வுக் கண்டு பிடிப்புகளின் அடிப்படையில் தனது வாதங்கள் பலவற்றுக்கு மேலும் வலுவூட்டியிருப்பார். ? கில்பர்ட் சிலேட்டர் நூலுக்குப் பின் இணைப்பு இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழி பேசுநர் பங்கு: மறுபார்வை தேவை ஆந்த்ரி. எப். ஜோபெர்கு (1990) (வாந னசயஎனையைn உடிவேசiரெவiடிn வடி வாந னநஎநடடியீஅநவே டிக iனேயைn உiஎடைளையவiடிn: ய உயடட கடிச சநயளளநளளஅநவே) லெ யனேசநந க. ளதடிநெசப (இவ்வாய்வுரையின் முதல் நிலை வடிவம் 31. 5. 1986 அன்று சாந்தா பே ளயவேய கந இல் நாகரிகங்களின் ஒப்பீட்டாய்வுக்கான பன்னாட்டு மன்றம்” நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்டது. பின்னர் 1990 இல் உடிஅயீயசயவiஎந உiஎடைணையவiடிn சநஎநைற (23: பக் 40-47) இல் இறுதி வடிவம் வெளிவந்தது. 1. இந்திய நாகரிக வளர்ச்சியில் (இந்து மதவளர்ச்சி உட்பட) திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் பங்கு பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்பொருள் மிக விரிந்தது; எனவே திராவிடர் பங்கு பற்றிய சான்றுகள் பலவற்றை முன்வைத்து அவைகளுக்கும் முக்கியம் அளித்து, வருங்காலத் திலாவது இத்துறை ஆய்வுகள் மேம்பட வேண்டும் என்பதே நோக்கம். இந்திய நாகரிகத்தில் திராவிடர் பங்கு பற்றிய பல கூறுகளில் இன்று நிலவும் கருத்துகளை மறு ஆய்வு செய்து முழுமையானதாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. 2. பல்வேறு ஆய்வுப்புலங்களிலிருந்தும் (சமுதாய மொழியியல் ளடிஉiடிடiபேரளைவiஉள தரவுகள் சில உட்பட) பல வகைச் செய்திகளையும் ஒரு சேரக்கருதி, அத்துறைகளில் திராவிடர் பங்கு எந்தெந்த அளவுக்கு இருந்தது என்பது சுருக்கமாக விளக்கப்படும். (தனிப்புத்தகம் எழுதினால்தான் முழுமையாக விளக்க இயலும் எனச் சொல்லக்கூடிய முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை) 3. இம் மீள்பார்வைக்கட்டுரைக்குத் தேவை என்ன? தம்முடைய சமூக ஆற்றலைப் பரவலாகத் தெரிவிக்க இயலாத சிறுபான்மையினரான திராவிட மக்களைப் பற்றி இந்திய நாகரிக ஆய்வாளர்கள் பலர் (இந்தியர்களும், குறிப்பாக பெரும்பாலான மேனாட்டாரும்) எழுதியுள்ளவை திராவிடர்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவுக்குத் தவறாகவே கூறுகின்றன. பழங்கால இந்தியவரலாறே, வென்றவர் (ஆரிய மொழிபேசுநர்) பார்வையில் அவர்கள் தந்த செய்திகள் அடிப்படையில் -பிறவகை மொழி பேசுநராகிய வீழ்த்தப் பட்டோர் பார்வையில் அல்ல- எழுதப்பட்டது. அண்மைக்காலம் வரையில் இந்தப் பார்வைக்கு வலுவூட்டிய மேலை அறிஞர் சிலர் தத்தம் பற்று காரணமாக (சிலர் இந்திய வரலாற்றில் ஆரியப்பார்வையே சரியானது! எனத் கருதுபவர்கள்) இத்தவறான பார்வைக்கே வலுவூட்டி வந்தனர்! குறிப்பாக இந்திய நாகரிகமே ஆரிய மொழிபேசுநர் உருவாக்கியது, வளர்த்தது என்பது அவர்கள் கருத்து. 4. ஆரியச் சார்பான இப்பார்வையை இன்னும் சிலரிடம் காணலாம். 1980ல் கூட மயசஅய யனே சநbசைவா in உடயளளiஉயட iனேயைn வசயனவைiடிn (பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகம்) நூலில் பலரும் போற்றும் வென்டி தோனிகர் ஓ ‘பிளாஹேர்தி அம்மையார் “பண்டைக்கால இந்தியர்கள் அடிப்படையில் இந்தோ-ஐரோப்பிய மொழிபேசிய தலை சிறந்த குழுவினர் தாமே! (வாந யnஉநைவே iனேயைளே, யகவநச யடட, றநசந iனேடி நரசடியீநயளே யீயச நஒஉநடடநnஉந)” என்று போகிறபோக்கில் in ய யீயளளiபே சநஅயசம கூறியுள்ளார். பண்டை இந்தியர் (எண்ணிக்கையிவோ, முக்கியத்துவத்திலேயோ) அடிப்படையில் இந்தோ-ஐரோப்பியமொழி பேசுநர்தாம் என்று கூறுவது அபத்தம். இந்திய வரலாற்றில் ஆரியமொழியினரல்லாதார், குறிப்பாகத் திராவிட மொழியினர், முக்கியத்துவம் இன்னும் சரிவர வெளிக் கொணரப்படவில்லை என்ற எனது வாதத்துக்கு இது ஒரு சான்று. 5. கடந்த ஐம்பது-அறுபது ஆண்டுகளாக, இத்துறையில் சரியான மாற்றுப் பார்வை தேவை என்பதை இந்தியவியலாளர் iனேடிடடிபளைவள சிலர் உணர்ந்து தெரிவித்துள்ளனர். 1970லிருந்து இப்புலத்தில் நிலவும் தவறான பார்வைகளைத் திருத்த என்னால் இயன்ற அளவு முனைந்து வருகிறேன். இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளின் முக்கியமான இடத்தைப் பற்றிய எனது வாதங்களை 1960, 1970களில் இந்தியவியலில் தலைமையிடம் வகித்த சிலர் தவறு, மேம்போக்கானது எனக் கூறி ஒதுக்கி வந்தனர். இன்று (1990 கட்டுரை) நான் கூறுவதையும் அவர்கள் குறைகூறத்தான் செய்வார்கள், ஆயினும் இந்திய நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அத்தகையோரில் சிலரிடமும் பரவி வருகிறது. 6. இந்திய நாகரிகத்தை உருவாக்கி வளர்த்ததில், திராவிட மொழி பேசுநரின் முக்கியமான பங்கை நிறுவிட எழுதப்படுவது தான் இந்த ஆய்வுரை: அதற்கு அடிப்படையாகப் பின்வருவன போன்ற சில அடிப்படைத் தரவுகளை முதலில் குறிப்பிடவேண்டும்: 1) திராவிட மொழி பேசுநரின் வரலாற்று--பண்பாட்டு முதன்மை பற்றி இன்று மேலை நாட்டறிஞரும் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளமை. 2) இத்துறை சார்ந்த சான்றுகளை நுட்பமாகக் கண்டுபிடித்து உண்மையாக உணர்வதில் உள்ள சில சங்கடங்கள். 3) “திராவிடமொழி பேசுநர்” என்னும் பொழுது அவர்கள் யார் என்பதை முதலில் தெளிவாக நிறுவுவது இன்றியமையாதது. இந்திய நாகரிகத்தில், குறிப்பாக இந்து மதத்தில் திராவிடத் தன்மையே மேலோங்கியுள்ளது என்பதற்கான வாதங்களைக் கூறுவதற்கு முன்னர் மேற்சொன்ன மூன்று பொருண்மைகளை முதலில் பார்ப்போம். திராவிட மொழி பேசுநரின் வரலாறு-பண்பாட்டு முதன்மை பற்றி மேலை நாட்டறிஞரும் படிப்படியாக உணரத் தொடங்கி யுள்ளமை: 7.(i) இந்திய நாகரிகத்தில் இந்துமதத்துக்கும் ஆரிய மொழி பேசுநரல்லாதோர், குறிப்பாக திராவிட மொழி பேசுநர், பங்கை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஆய்வு நூல்கள் பொதுவாக அறவே ஒதுக்கிவிட்டன. ஒரு விதிவிலக்கு ஹெய்ன்ரிச் சிம்மர் ணiஅஅநச 1951 ல் வெளியிட்ட நூலாகும். (1940 களின் தொடக்கத்தில் அவர் செய்த ஆய்வுப் பொழிவுகளின் அடிப்பபடையில் எழுதப்பட்டது; அந்நூலில் அவர் தம்முடைய முந்தைய கருத்துகளை மாற்றிக்கொண்டுள்ளார்) இத்துறையில் அது காறும் முன்னிலையில் இருந்த அறிஞர்களை மறுத்து, சிம்மர் இந்திய தத்துவ மரபுகளில் முதன்மையானது ஆரியமல்லாத (திராவிட) மரபுதான் என்னும் முடிவை அந்நூலில் ஏற்றுள்ளார். இவ்வகையில் அது மிக முக்கியமான ஆய்வு நூல்; ஆயினும் அவர் முடிவையும் அதற்கடிப்படையான ஆதாரங்களையும் பிற்றை அறிஞர் கண்டு கொள்வதில்லை! (ii) ரெனோ டுடிரளை சுநnடிர 1953இல் வெளியிட்ட சுநடபைiடிளே டிக யnஉநைவே ஐனேயை நூல், வேத கால நாகரிகத்தைப் பாராட்டுகிறது என்றாலும், பிறகால இந்துமதத்தில் ஆரியமல்லாதவையே முக்கியமானவை என்பதற்கான பல சான்றுகளை ரெனோ தந்துள்ளார். ஆனால் இந்நூல் இக்கருத்தை நயமாக, வலுவாகக் கூறாமல் ஆரியமல்லாத விஷயங்களைத் தெளிவாக வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. “திராவிட மொழி பேசுநரைப்” பற்றி அவர் குறிப்பாகச் சுட்டுவதே ஒன்றிரண்டு தடவைதான்). (iii) ஆர்தர் லெவ்லின் பஷாம் யசவாரச டடநறநடலn யௌhயஅ 1954இல் வெளியிட்ட “வியத்தகு இந்தியா வாந றடினேநச வாயவ றயள iனேயை” நூலும் திராவிடரை ஒரிரு இடங்களில் சுட்டுகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியச் செய்திகள் சிலவற்றையும் பயன்படுத்தியுள்ளார் எனினும் திராவிடர் பங்கைக் குறைத்து மதிப்பிடுவதோடு, அவர்கள் நாகரிகத்தையும் குறைவான தாகக் கூறுகிறார். (iஎ) எல்டர் (ஜோசப் ற. எல்டர்) பதிப்பாசிரியராக இருந்து 1970 ல் வெளியிட்ட டநஉவரசநள in iனேயைn உiஎடைணையவiடிn பரவலாக பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியம், தென்இந்தியப் பக்தி இயக்கம், தென் இந்தியத் திருமண முறைகள் இவை பற்றிய நூற்பகுதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தப் பெரிய புத்தகத்தில் இந்துமதம், இந்திய நாகரிகம் ஆகியவற்றில் திராவிடரின் முக்கியப் பங்கைத் தெரிவிக்கும் செய்திகள் எவையும் இல. (எ) ஹாப்கின்° வாடிஅயள த. hடியீமiளே 1971 ல் வெளியிட்ட வாந hiனேர சநடபைiடிரள வசயனவைiடிn பரவலாகப் பாடபுத்தகமாகப் பயன் படுத்தப்படுகிறது. ‘பிராமணிய’ இந்து மதத்தில் பொதுமக்கள் மதத்தின் தாக்கம் காரணமாகஆரியமல்லாத கூறுகள் ஏறியதைத் தெரிவித்த போதும் இந்நூல் ‘திராவிடர்’ ஐ வெளிப்படையாகச் சுட்டி அவர்கள் பங்களிப்பை நன்கு விளக்கத் தவறிவிட்டது. பொதுமக்கள் தாக்கத்தால் வேதகாலத்துக்குப்பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வெறுமனே “புது பிராமணியம் வாந நேற செயாஅயnளைஅ என்று அடைமொழி சூட்டுவதோடு நின்று விடுகிறார்.(பக். 63) 8. அண்மையில் மேற்சொன்ன வாலாயப் பார்வையில் சில மாற்றங்கள் தெரிகின்றன. 1979 ல் மாதவ் தேஷ்பாண்டே & பீடர் எட்வின் ஹாக் பதிப்பித்த யசலயn யனே nடிn யசலயn in iனேயை தொகுப்பு நூலில் “தென் ஆசியாவில் ஆரியமும் ஆரியமல்லாததும்” என்ற தனது கட்டுரையில் பஷாம் தனது முந்தைய 1954 நூலில் திராவிடர் பற்றி எடுத்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்; 1979 நூல் கட்டுரையில் “இந்திய நாகரிக வளர்ச்சியில் திராவிடமொழி பேசுநருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு” என்பதை ஏற்றுள்ளார். 9. பிரிட்ஜட் & ரேமாண்ட்-ஆல்சின் இணையர் (தமது முந்தைய 1968 வாந bசைவா டிக iனேயைn உiஎடைணையவiடிn நூலில் எடுத்த நிலையிலிருந்து முன்னேறி 1982 ல் எழுதிய வாந சளைந டிக உiஎடைணையவiடிn in iனேயை யனே யீயமளைவயn நூலை “இந்திய நாகரிக உருவாக்கம், வளர்ச்சியில் திராவிடருக்கு முக்கிய பங்கு உண்டு” என்ற அடிப்படையிலேயே எழுதியுள்ளனர். 1983 ல் °டால் கசவைண ளவயடட எழுதிய யபni, வாந எநனiஉ சவைரயட டிக வாந கசைந யடவயச (2 மண்டலம்) புத்தகத்தில் ஆரியரல்லாதாரிடமிருந்து வேதச்சடங்குகள் சிலவற்றை ஆரியர் மேற்கொண்டனர் என்பதை விளக்குகிறார். 10. (i) முன் பத்திகளில் சொன்னவாறு அண்மைக் காலத்தில் மேலை அறிஞர்கள் சிலர் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பை ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் பரோ, எமனோ, கைப்பர் முன் வைத்த யாரும் மறுக்கொணாத மொழியியல் சான்றுகள்தாம். இந்தியாவில் (சிறு எண்ணிக்கையில், கி. மு. 1500 ஐ ஒட்டி) ஆரியர் நுழைந்த பொழுதும், அதையடுத்து ரிக்வேதம் முதலிய வேதங்களும் உபநிஷத்துகளும் உருவாக்கப்பட்டபொழுதும் கண்டிப்பாக அப்பகுதியில் திராவிட மொழி பேசுநர் இருந்திருக்க வேண்டும் என்பதை அம்மூவரின் மொழியியல் ஆய்வுகள் திட்டவட்டமாக நிறுவின. (ii). திராவிட மொழிபேசுநரின் முக்கியப் பங்களிப்பை பஷாம், ஆல்சின் போன்றவர்கள் இவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எவ்வாறு ஏற்பட்டது. அந்தப் பங்களிப்பை உறுதி செய்த தமிழறிஞர்கள், குறிப்பாக ஹார்ட் பநடிசபந டரஉநசநே hயசவ ஐஐஐ, சுவெலபில் மயஅடை எயஉடயஎ ணஎநடநbடை ஆகிய இருவர் ஆய்வு முடிவுகளே காரணம்--குறிப்பாக பின்வரும் நூல்களைக் காண்க:- ஹார்ட்(1973) றடிஅநn யனே வாந ளயஉசநன in யnஉநைவே வயஅடை யேனர (தடிரசயேட டிக யளயைn ளவரனநைள 32: 233-250) (1975) வாந யீடிநஅள டிக யnஉநைவே வயஅடை : வாநசை அடைநைர யனே வாநசை ளயளேமசவை உடிரவேநசயீயசவள (பெர்கலி கலிபோர்னியா) (1980) கட்டுரை: “வாந வாநடிசல டிக சநinஉயசயேவiடிn யஅடிபே வாந வயஅடைள” ஒ. பிளாக் ஹெர்தி பதிப்பித்த ‘மயசஅய’ புத்தகத்தில் பக் 116-133. (iii) இவர்கள் எல்லாம் தமிழ், தமிழரைப் பற்றியே ஆழ்ந்தகன்று நுண்ணிய ஆய்வு செய்தவர்கள்; பொதுவான “திராவிட மொழிபேசுநர் தாக்கம்” என்ற நிலையில் அவர்கள் ஆங்காங்கு சிலவற்றைக் குறிப் பிட்டுள்ளனராயினும் திட்டவட்டமான கருத்துகளைக் கூறுவதில்லை. இந்திய நாகரிகத்திற்கும், குறிப்பாக இந்து மதத்துக்கும், திராவிட மொழி பேசுநரின் இன்றியமையாத பங்களிப்பை (உசவைiஉயட சடிடந) ஏறத்தாழ என்னைப் போன்றே திட்டவட்டமாக வலியுறுத்துபவர் மாந்தவியல் துறைப் பேரறிஞரான °டீபன் ஏ. டைலர் ஆவார். தனது(1973) iனேயை: யn யவோசடியீடிடடிபiஉயட யீநசளயீநஉவiஎந புத்தகத்தில் (பக்-68) டைலர் திட்டவட்டமாகப் பின்வருமாறு கூறுவதைக் காண்க. “ஆரிய மொழிபேசுநரின் அசலான (மூல) மதக்கோட்பாடுகளை (டிசவாடினடிஒல)அவற்றுக்கெதிரான மாறுபட்ட கோட்பாடுகள் (hநவநசடினடிஒல) அழித்துவிட்டன எனினும் டிசவாடினடிஒல அழிந்த அதேநேரத்தில், ஆரியமொழி பேசுநரின் ஆதிக்கமும் (பின்னர் எக்காலத்திலும் மீண்டு எழவொண்ணாத படி)சுக்கு நூறாகிவிட்டது. ஆரியமொழிபேசுநர் பண்பாட்டுக் கூறுகள் சிற்சில, அவ்வழிவுக்குப்பின்னரும் நிலவினவெனினும் திராவிடமயமாக்கப் பட்ட னசயஎனையைnணைநன வடிவத்தில்தான் அவை நிலவின. பண்பாட்டின் ஒவ்வொரு உட்கூறிலும் பண்டைத் திராவிட வடிவங்கள் புத்துயிர் பெற்று, ஆரிய மொழிபேசுநர் கோட்பாடுகளையும் மரபுகளையும் அறவே மாற்றிவிட்டன; ஆரியக் கடவுளர் திராவிடக்கடவுளர் போலவே மாறினர்;வீடு தோறும் ஹோமம் வளர்க்கும் கயஅடைல யடவயச சடங்கு நைந்து, திராவிடக் கோயில் வழிபாடே ஓங்கியது; சடங்குகள் வலுவிழந்து பக்திக் கோட்பாடு உருவாயிற்று; தொழிலடிப்படைப் பிரிவுகள் மாறிச் சாதி வேறு பாடுகள் உருவாயின; இனக்குழுக்கள் வசiநௌ சிலபல சேர்ந்து “இனக்குழுக் கூட்டமைப்புகள் -வலுவான கட்டமைப்போ நிரந்தரமோ இல்லாதவை - டடிடிளநடல மnவை வசiயெட உடிகேநனநசயஉநைள” ஆண்டநிலை மாறி, ஆதிகாரத்தை மையப்படுத்திய பேரரசுகள் உநவேசயடணைநன நஅயீசைநள உருவாயின. புதிதாக உருவாகிய இந்து மதம் வாந hiனேர ளலவோநளளை ஆனது ‘வாலாய டிசவாடினடிஒ கோட்பாடு ஒ முரணான புதுக் கோட்பாடுகள் hநவநசடினடிஒல’ இவற்றின் மோதலால் ஏற்பட்டது அல்ல. இந்தியாவில் (கி. மு. 5000 லிருந்தே) இடைவிடாது வாழ்ந்து வந்த யbடிசபைiயேட சிந்து நாகரிகமதத்தின் புத்துயிர்ப்பே சநளரசபநவே இந்து மதமாகும். இந்த மாற்றம் நடந்த காலத்தில் முரடர்களும், நாகரிகமற்றவர்களுமான ஆரிய மொழி பேசுநர் படிப்படியாக நாகரிகமடைந்து நாளடைவில் (பெருந்தொகை யினராகிய) இந்நாட்டுத் திராவிட மொழி பேசுநரிடன் கலந்து விட்டனர். பிராமணப் புரோகிதர்கள் இல்லம்தோறும் ஹோமம் வளர்த்தல் முதலிய சடங்குகளை அக்கறையுடன் பாதுகாத்து வந்தனராயினும், ஆரியமொழி பேசுநர் இந்தியாவிற்குள் வரும்பொழுது உடன் கொண்டுவந்த பண்பாட்டுக் கூறுகள் ஒரு சிலவே; சிறு சிறு கதைகள், உருவகங்கள் யடடநபடிசல வடிவில் (திராவிட மொழி பேசுநர், ஆரிய மொழி பேசுநர் இரு மரபுகளும் கலந்த) பெரும் பெரும் தொகுப்புகளாக உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்கள், ளலnஉசநவளைவ உடிஅயீநனேயை ஆக நிலவுகின்றன. மொத்தத்தில் இந்தியப்பண்பாட்டுக்கு ஆரியமொழிபேசுநர் பங்களிப்பு மிகக்குறைவு (டிn வாந றாடிடந, யசலயn உடிவேசiரெவiடிn வடி iனேயைn உரடவரசந ளை iளேபைnகைiஉயவே) இந்தியப் பண்பாட்டின் அடிப்படைகள் ஆரியமொழிபேசுநர் வருவதற்கு முன்னர் கி.மு. 3000 ஐ ஒட்டியே திட்டவட்டமாக உருவாகியிருந்தன; எனவே தான், இந்திய நாகரிகத்தின் மூலவடிவம் அழியாமல் உயிரூட்டத்துடன் இருந்து (ஆரிய மொழிபேசுநர் தாக்கம் செயல்பட்ட கி.மு. 1500-1000 காலகட்டத்தையும் தாண்டி) பின்னர் ஏறத்தாழ தன்னுடைய (முந்தைய திராவிடத் தன்மைகளைக் கைவிடாமல்) மூலவடிவத்தில் புத்துயிர்ப்பு எய்தி இன்றுவரை நிலவுகிறது. தரவுகளும் ஆய்வு செய்யும் வழிமுறைகளும்: சில குறிப்புகள் 11. தொன்மைக்கால வரலாற்று வளர்ச்சிப் படிநிலைகளைப் பற்றி ஆய்வு செய்வதில் உள்ள சிக்கல்களில் ஒன்று “நம்பகமான ஆதாரச்செய்திகள்” மிகக் குறைவு என்பதே. இந்தியாவைப் பொறுத்தவரை இதைவிடப் பெரிய சிக்கல் தொடக்ககாலப் பதிவுகளைப் (சநஉடிசனள) பெரும்பாலும் (சில நூறு ஆண்டுகளில்அழியக்கூடிய) பனையோலை முதவியவற்றில் எழுதுவதே இந்தியாவின் பாரம்பரிய வழக்கமாயிருந்ததுதான். 12. பிற சிக்கல்களும் உள. அண்மைக்காலம் வரைத் தொல்லியல் அகழ்வாய்வு மிகக்குறைவு. (இக்குறைவை ஈடுசெய்வதற்கு உதவுவதற் கான) “ஆரிய மொழிகளின் மீதான திராவிட மொழித்தாக்கம்” பற்றிய முக்கியமான மொழியியல் சான்றுகளை அத்துறையறிஞர்கள் 1940 க்குப் பின்னரே வெளியிட்டுவருகின்றனர். 13. இன்னொரு முட்டுக்கட்டை, இந்தியவியலாய்வில் ஈடுபடும் அறிஞர்கள் பலரும், ஒரே ஒரு உட்புலத்தில் மட்டுமே தமது முழுக் கவனத்தையும் (கடிவாளம் போட்ட குதிரை போல) செலுத்திவிடுவது தான் டிஎநசளயீநஉயைடணையவiடிn. மேலை நாட்டறிஞர்கள் முன்னர், பெரும் பாலும் சம°கிருத ஆய்வில் ஈடுபட்டனர்: சிலர் ஆரிய, சம°கிருதச் சார்பாகவும் இருந்தனர். மாறாகச் சிலர் திராவிட மொழியியல், பண்பாடு இவற்றை ஆய்வதில் கவனம் செலுத்தினர்; அண்மையில் தமிழ்ப் பண்பாட்டு ஆய்விலும் மேலையறிஞர் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். பலவகையினரான இவர்களுள் மிகச் சிலரே விரிந்தபார்வையுடன், வரலாற்றை வெளிக்கொணர உதவக்கூடிய சிறுசிறு தரவுகளை இணைத்து இந்தியக் கண்ணோட்டத்தில் பொருத்தி நயமான விளக்கங்களைத் தர வல்லவர்கள் ஆவர். இந்திய நாகரிகத்தையே நயமான கட்டமைப்புடைய ஒன்றாக பநளவயடவ யீநசளயீநஉவiஎந எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்துப்பகுதிகள் சார்ந்த பலவகைமொழியியல், பண்பாட்டுத்(தொல்லியல் எச்சங்கள் காட்டும் பழம் பண்பாடு உட்பட) தரவுகளையும் பொருத்திப்பார்க்க வேண்டும்; மேலும் யூரேசியா(ஆசியா-ஐரோப்பா) வில் கடந்த சுமார் 10000ஆண்டுகளாக நிகழ்ந்தனவாகத் தெரியவருவனவற்றோடு பொருந்து கிறதா என்றும் பார்க்கவேண்டும். 14. ஆய்வுமுறை எப்படி இருக்கவேண்டும்? எமில் தர்கெய்ம் நஅடைந னரசமாநiஅ (1951: ளரiஉனைந: ய ளவரனல in ளடிஉiடிடடிபல) கூறுவது போல் ஆதாரமற்ற, போலி, அவசரக் கருதுகோள்களை ஒவ்வொன்றாக நம் சிந்தனையிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு (சநயளடிniபே வாசடிரபா நடiஅiயேவiடிn) பொருத்தமான முடிவுக்கு வரவேண்டும். பல்வேறு பண்பாட்டுக் கூறுகளின் தொகுப்புக்கு நாம் சூட்டியுள்ள பெயராகிய “இந்து மதத்தை” உருவாக்குவதில் திராவிடமொழி பேசுநருககுத்தான் பெரும பங்கு இருந்திருக்கவேண்டும், என்ற முடிவுக்கு நான் வந்தது இத்தகைய நடiஅiயேவiடிn முறைப்படிதான். இந்துமதத்தின் முதன்மைக்கூறுகள் பண்டு இந்தோஐரோப்பிய மொழிபேசுநர் அனைவரும், மையஆசிய °தெப்பி பகுதியில், உடன் வசித்துவந்த (கி.மு. 7000-4000) காலத்தில் இருந்தவை யாகக் கருதும் முதன்மையான பண்பாட்டுக்கூறுகள் எவற்றையும் ஒத்ததாக இல்லை. அதுமட்டுமல்ல அந்த (இந்து மத முதன்மைக்) கூறுகள் திராவிடப் பண்பாடு ஆக உள்ளனவே தவிர வேறு எந்த ஆரியமல்லாத பண்பாட்டைப் போன்றும் இல்லை. திராவிடர்கள் யார்? 15. இன்று இந்தோ-ஆரிய மொழிபேசுபவர்கள் பண்டைக் காலத்தில் கண்டிப்பாக “ஆரியப்” பண்பாடு, இனம் இவை சார்ந்தவர்களாக இருந் திருக்கவேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர்; இது தவறு. அவர்களின் முன்னோர், பழங்காலத்தில் ஆரியமல்லாத மொழிகளைக்- குறிப்பாக திராவிட மொழிகளைப் பேசியவர்களாகத்தான் இருந் திருக்க வேண்டும் என்பது நிறுவப்பட்டுள்ளது. 16. இந்தோ-ஆரிய மொழிபேசுநர் (ஏற்கெனவே இந்தியாவில் சில ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தவர்களான (திராவிட மொழிபேசிய) மக்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இந்தியாவில் நுழைந் திருக்க வேண்டும். பல சிறுசிறு கும்பல்களாக, நீண்ட கால அளவில் வந்திருக்கவேண்டும். எளிய பண்பாட்டு நிலையிலிருந்த அரை- நாடோடி ளநஅi- nடிஅயனiஉ நிலையினர் ஆயினும் சில தொழில்நுட்ப நிலைகளில் இங்குள்ளவர்களைவிட வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும். அதாவது அவர்களிடம் குதிரைகள், ரதங்கள், திறன் வாய்ந்த ஆயுதங்கள் இருந்திருக்க வேண்டும். எனவே இந்தியத் துணைக்கண்ட வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை வென்று கீழ்ப்படுத்தியிருக்க வேண்டும். சிந்து நாகரிக நகரங்களின் அழிவில் அவர்களுக்கும் பங்கு இருந்திருக்கலாம். ஆயினும், வடமேற்கு இந்தியாவில் அன்று வாழ்ந்த மக்கள் அடைந்திருந்த நாகரிக அளவுக்கு, அவர்கள் நாகரிகம் அடையவில்லை. நகரவாழ்வு, எழுத்தறிவு, இவ்விரண்டை யும் சார்ந்து ஏற்படும் சமூக அமைப்புகள், போன்றவை அவர்களிடம் இல்லை. 17. ஆரிய மொழிபேசுநர் வடமேற்கு இந்தியப் பகுதியில் நுழைந்த பொழுது, அங்கு வசித்து வந்த மக்கள் யார்? இதற்குப் பதிலளிக்கத் தேவையான தொல்லியல், வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவு.சில காலத்துக்கு முன்னர் வரை (1940 வரை) அங்கு அப்பொழுது வசித்தவர்கள் முண்டா இனத்தவர்கள் எனச் சிலர் கருதினர். வேதங்களில் ஏறியுள்ள முண்டா மொழிச்சொற்கள் மிகச்சிலவே. எனவே வேதங்களை இயற்றி யவர்கள் மீது முண்டாஇனத் தாக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, வேதங்களுள் மிகப் பழையதான ரிக்வேதத்திலேயே சுமார் 20 திராவிடச் சொற்கள் ஏறியிருப்பதை பரோ ஆய்வு செய்து தெரிவித்தார். (கீழே விவரிப்பதுபோல) எமெனோ, கைப்பர் மரiயீநச இருவரும் ஆரிய வேதங்களின் மொழியமைப்பு, இலக்கணம் இரண்டிலும் திராவிட மொழியின்(தமிழின்) தாக்கத்தைக் கண்டறிந்து நிறுவியுள்ளனர். திராவிடத் தாக்கத்தை வேதங்களாகிய நான்கு சம்ஹிதைகளில் தொடங்கி, ஆரண்யகம், உபநிஷதம் என்றவாறு வேதகாலத்துக்குப் பிந்தைய சம°கிருத இலக்கியங்களிலும் காண்கிறோம். 18. முண்டா மொழிகளைப் பேசுநர் பேரும்பாலும் சிறு எண்ணிக்கையில் வாழ்ந்தவர்கள்; எழுத்தறிவற்ற தனித்தனிக் குழுவினர்; மிகக் குறைந்த பண்பாட்டுத் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கக் கூடியவர்கள். (கைப்பர் 1967 iனேடி சையnயைn தடிரசயேட 10:82-102 கட்டுரையில் கூறுவது போல வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே முண்டா மொழிகள் திராவிட மொழியியல் கூறுகளை ஏற்றுப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன) மாறாக இந்தியாவில் இருந்த ஆரியமல்லாத மொழி பேசுநர்களுள் பண்டைக் காலத்திலிருந்தே தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலும் பலத்துடனும் வாழ்ந்து வந்தவர்கள் திராவிடமொழி பேசுநர்தாம். வேத காலத்திலேயே திராவிடர் சிலர் பிராமணர்களாகத் ஏற்கப்பட்டு விட்டனர். இதனைப் பின்வரும் அறிஞர்கள் கருத்துகளிலிருந்து உணரலாம். (i) கே. மீனாட்சி (1985) “சம°கிருதச் செம்மொழியின் தோற்றம்” தைனட 14: 209-223 “வேத மந்திரங்களில் பல ஆரியரல்லாதார் செய்தவை” மேலும் பார்க்கத்தக்கது: குஞ்சுண்ணிராஜா(1939) “ரிக் வேதத்தை எழுதி யவர்கள்” (கே.வி. ரங்கசாமி ஐயங்கார் பாராட்டுமலர்) (ii) க.b.த கைப்பர்(1967) மேற்சொன்ன iனேடி சையnயைn தடிரசயேட கட்டுரை பக் 87: வேதப்பாடல்களை எழுதிய ரிஷிகள் பெயர்களுள் பல, ஆரியமல்லாதவையாக இருப்பது இந்தியாவில், ஆரியர் வருவதற்கு முன்னே வசித்து வந்த திராவிடமொழி பேசுநரும், ஆரியர்களோடு சேர்ந்து ரிஷிகளாகிவிட்டனர் என்பதை நிறுவுகிறது. (iii) ஏ. எல். பஷாம் 1979 கட்டுரை(ப.5):வேதகாலத்துக்குப் பின்னர் (கி.மு. 1000க்குப் பின்னர்) தவம், சடங்குகளைச் செய்து வந்த திராவிட மொழி பேசுநரும் ஆரியராக ஏற்கப்பட்டனர். (iஎ) சுநீதி குமார் சட்டர்ஜி (1965: “திராவிட மொழிகள் பற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக உரை” பக் 55-57: வேதங்களை முறைப்படுத்திய வேதவியாசரும் ஆரியரல்லாதவரே; பல ரிஷிகளின் பரம்பரையும் ஆரியமல்லாததே. 19.(i) தமிழ்ச்சங்க இலக்கியங்கள்(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம்) ஆகியவை, தமிழ்மக்கள் கி.மு. 300க்கு முன்னரே (அதாவது அசோகன் காலத்துக்கு முன்னரே) வடநாட்டு ஆரியர் அவர்களிடம் தொடர்பு கொள்வதற்கு முன்னரே, சிறந்த நாகரிகம் உடையவராயிருந்தனர் என்பதை நிறுவுகின்றன. பாணினியின் அஷ்டாத்யாயி இலக்கணத்துக்கு வார்த்திகம் எழுதிய (கி.மு. 400) காத்யாயனர் சோழ, சேர, பாணடிய மன்னனர்களைக் குறிப்பிடுகிறார்; அசோகன் கல்வெட்டுகளும் அவர்களைக் குறிப்பிடு கின்றன. தமிழகத்தில் அன்றே பெருநகரங்களும் தலைநகரங்களும் வளர்ச்சி யடைந்த சமுதாயமும் இருந்தன. (யீநசiயீடரள டிக வாந நசலவாசநயn ளநய (செங்கடல்-இன்றைய அரபிக்கடல்) பயணநூல்” (கி.பி. 1 நூ); தாலமியின் பநடிபசயயீhல (கி.பி. 2 ம் நூ) சங்கஇலக்கியங்கள், சிலப்பதிகாரம்(கி.பி. 3 ம்நூ) போன்றவை அக்காலத் தமிழகத்தின் செழிப்பான துறைமுகங்களையும் (அப்பொழுது ரோம் ஆட்சியின் கீழ் இருந்த) எகிப்துடன் நடந்த வணிகத் தையும் குறிப்பிடு கின்றன. கி.பி. 1க்குச் சிலகாலம் முற்பட்டதான சங்க இலக்கியம் தனிச்சிறப்பு வாய்ந்தது. (ரniளூரந). உண்மையான சிறந்த நாகரிகம் என்று கருதக்கூடிய நகர நாகரிகம் அன்று தமிழகத்தில் இருந்தது. ஒரேகுறை: கி.மு. 200ஐ ஒட்டி ஆசிரியர் (அசோக மௌரியர்) இடமிருந்து எழுத்து வடிவத்தைத் தமிழர் கற்றுக்கொள்ளும் வரைத் தமிழுக்கான வரிவடிவம் (லிபி) இருந்ததற்குச் சான்று இல்லை; எனினும் ஆரியர் தொடர்புக்கு முன்னரே தமிழர் தமது மொழிக்கு விபியை உருவாக்கச் சில முயற்சிகள் செய்திருக்கலாம். ((ii) கடைசி இரண்டு வாக்கியங்களை ஜோபெர்கு எழுதியது 1990 இல் ஆகும். இப்பொழுது அவைசரியல்ல: டாக்டர் கே.வி. ரமேஷ் எழுதி iஉhச தென்மண்டலம், பெங்களுர் 2006 இல் வெளியிட்டுள்ள iனேயைn iளேஉiயீவiடிளே ய ளவரனல in உடிஅயீயசளைடிn யனே உடிவேசயளவ நூலில், தெளிவாக தமிழி (தமிழ் பிராமி) கண்டிப்பாக அசோகனுக்கு முந்தியது;அதனைச் சற்றே மாற்றி, வட இந்தியர் தமது அசோகன் கல்வெட்டு விபியை உருவாக்கிக் கொண்டனர் என்பதை நிறுவி விட்டார். காண்க பி.இராமநாதன் (2012) “தொல்தமிழியச் சிந்து நாகரிகம்” பக் 168-169. பழநி அருகே பொருந்தல் ஊரில் கிட்டிய பொறிப்புகள் இரண்டின் காலத்தை கே. ராஜன் அறிவியல் ஆய்வுப்படி கி.மு. 490/450 என 2011 இறுதியிவேயே உறுதியாக்கியுள்ளார்(வாந hiனேர 15.10. 2011) ஆதிச்ச நல்லூர் (2005 கண்டுபிடிப்பு) பானை ஓட்டின் காலமும் கி.மு. 700 ஆகும். ஆகத் தமிழுக்கு கி.மு 800 ஐ ஒட்டியே ஒரு தனி விபி (வரிவடிவம் ளஉசiயீவ) இருந்திருக்கும் என்பது உறுதி. சிந்து நாகரிக லிபி திராவிட மொழி லிபி ஆகையால் தமிழி (தமிழ் பிராமி) லிபியும் சிந்துலிபியிலிருந்தே உருவாகி யிருக்கலாம் என்றார் ஹீரா° (நேற சநஎநைற 1936). 20. (i) மேற்கண்ட பல்வேறு மொழியியல், பண்பாடு இவைசார்ந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, ஹான்° ஹென்ரிச் ஹாக் (1975“ளரளெவசயவரஅ iகேடரநnஉந டிn சபை எநனiஉ ளயளேமசவை” in ளவரனநைள in டiபேரளைவiஉள 5:76-125) இந்தோ ஆரிய மொழிபேசுநர்ஆரியமல்லாதவற்றின் தாக்கத்தைப் பெற்றது பெரும்பாலும் முண்டா மொழிகளைப் பேசி வந்தவர்களிடமிருந்து தான்” என்று எப்படிக் கருதுகிறார் எனத் தெரியவில்லை. (ஹாக் hடிஉம தனது 1986 யீசinஉiயீடநள டிக hளைவடிசiஉயட டiபேரளைவiஉள நூலில் இக்கருத்தைச் சற்றே மாற்றிக்கொண்டு, “இந்தோ- ஆரிய வேத, சட°கிருத மொழியின் மீதான திராவிடத் தாக்கம் முண்டா தாக்கத்தை விட அதிகமாக இருந்திருக்கலாம்” என்கிறார்) முண்டா மொழிகள் அத்தகைய முதன்மை வாய்ந்தவையாக இருந்தால், திராவிட மொழிகள் ஏன் முண்டா சொற்கள் ஒரு சிலவற்றை மட்டுமே கடன்பெற்றுள்ளன? இதனை ஹாக் போன்றவர்கள் கண்டுகொள்ளவதில்லை) இந்தோ-ஆரிய மொழியமைப்பு இலக்கண அமைப்பின் மீதும் பெருந்தாக்கம் விளைவித்தவை திராவிட மொழிகளே என்பதை எனது வாந iஅயீயஉவ டிக னசயஎனையைn டிn iனேடி-யசலயn - யn டிஎநச எநைற (1992) கட்டுரையில் காண்க (அக்கட்டுரை எட்கார் சி. போலோம் & வெர்நர் விண்டர் பதிப்பித்த (பெர்லின் அடிரவடிn னந பசரலவநச 1992 வெளியீடு) சநஉடிளேவசரஉவiபே டயபேரயபநள யனே உரடவரசநள புத்தகம் பக் 507- 529 ல் காண்க. (ii) திராவிட மொழிபெசுநர் பெரும் எண்ணிக்கையில் நிலையாகப் பெரிய குடியிருப்புகளில் வசித்து வந்தனர்; உண்மையான பெருநாகரிக நிலையை எட்டும் நிலையில் அவர்களுள் சிலர் இருந்தனர். முண்டா பேசுநரோ சிறு குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்தனர்; எழுத்தறிவும் இலர். (“நகர, பட்டண என்னும் நகரத்தை குறிக்கும் இரு சம°கிருதச் சொற்களுமே திராவிடரிடமிருந்து கடன்பெற்றவை” என்பார் பிராங்க்ளின் சி. சௌத் வொர்த் தமது 1979 “டநஒiஉயட நஎனைநnஉந கடிச நயசடல உடிவேயஉவள நெவறநநn iனேடி-யசலயn யனே னசயஎனையைn கட்டுரையில் (தேஷ்பாண்டே& ஹாக் 1979 புத்தகம் யசலயn யனே nடிn-யசலயn in iனேயை பக்கம் 191-233) (iii) இந்தோ-ஆரிய மொழிபேசுநரைப் பொறுத்தவரையில், வட இந்தியாவில் அன்றிலிருந்து இடைவிடாது நிகழ்ந்த பண்பாட்டு, மொழியியல் மாற்றங்கள்; மற்றும் அவர்கள் இன அடையாளமாற்றங்கள் (அடினகைiஉயவiடிn in சயஉயைட அயமந-ரயீ) இவற்றிலிருந்து அவர்கள் இந்தியாவுக்குள் வந்த கி.மு. 1500 காலத்திலிருந்தே பெருமளவுக்கு ஏற்கெனவே வசித்து வந்த ஆரியருக்கு முந்திய மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் என்பது வெள்ளிடைமலையாம். அந்த முந்தைய மக்களுள் பெரும்பாலோரும் முக்கியமானவரும் அக்காலத்தில் இந்தியா முழுவதும் வசித்து வந்த திராவிட மொழிபேசுநர் தாம்; நமக்குத் தெரிந்து வேறு மக்கள் யாரும் இல்லை. திராவிடமொழிபேசுநர் தோற்றம் 21. (i) இப்பொழுது திராவிட மொழி பேசுநருடைய தோற்றம், தன்மை, ஆகியவற்றைப்பற்றி அதாவது மொழி, பண்பாடு இன(சயஉயைட) பின் புலங்களைப் பற்றிப் பார்ப்போம். 1971இல் நான் பதிப்பித்த ளலஅயீடிளரைஅ டிn னசயஎனையைn உiஎடைணையவiடிn(யரளவin & நேற லடிசம:தநமேiளே)நூலில் நான் “றாடி யசந வாந னசயஎனையைளே? வாந ளவயவந டிக வாந மnடிறடநனபந என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதன் பின்னர் வந்த செய்திகளையும் சேர்த்து அதனை விரிவாக்கி இதுவரை (1990) வேறுயாரும் எழுதியதாகத் தெரியவில்லை. (ii) சில துறைகளில் மேலும் பல செய்திகள் வந்து என் கருது கோளை வலுவாக்கியுள்ளன. திராவிட மொழிபேசுநரின் மாந்த இன வியலைப் பொருத்தவரையில் தொல் -ஆ°திரேலியப் பழங்குடியின ரின் சாயல் குறிப்பிடத்தக்கதாக இருப்பினும்(தென் ஐரோப்பிய நாடுகளிலும் மையக் கிழக்கு நாடுகளிலும் காணப்படும்)நண்ணிலக்கரை, காகச° இன (அநனவைநசசயநயn, உயரஉயளடினை இனத்தின் (சற்றே கருமையான வகை) இனக்கலப்பும் கொண்டவர் என்று அந்த 1971 கட்டுரையில் கூறியிருந்தேன். (iii) இன்றைய ஈரானில் (சுமேரியாவுக்கு கிழக்கே) பழங் காலத்தில் பேசப்பட்டு வந்த எலாம் நடயஅ மொழியுடன் திராவிட மொழி தொடர்புடையது. எனினும் (வட ஆசியப்பகுதியிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் இன்றும் பேசப்பட்டு வரும்) உரால் மொழிகள், மைய-கிழக்கு ஆசியப்பகுதிகளில் வழங்கும் அல்தாய்க் (பின்னிஷ் முதலிய) மொழிகள் இவையும் திராவிடத்தோடு தொடர்புடையவை என்பது இன்று நிறுவப் பட்டுள்ளது. 1856 லேயே கால்டுவெல் இதைக் கண்டு தெரிவித்திருந்த போதிலும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இது பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை; ஒரு சிலரே இது பற்றிய அதிகவிவரங்களைச் சேர்த்தனர்;கடந்த பத்து இருபது ஆண்டுகளாக இக்கோட்பாட்டுக்கு அறிஞர் சிலர் மிகவும் வலுவூட்டியுள்ளனர். 1968 ல் டைலர் (டயபேரயபந இதழ் 44. 798-812 ல் “னசயஎனையைn யனே ரசயடயைn”: வாந டநஒiஉயட நஎனைநnஉந கட்டுரையில்) திராவிட - உரால் வேர்ச்சொல் ஒப்புமைகள் பலவற்றைச் சுட்டியுள்ளார். (iஎ) எல்லி ஜோஹனா புதா°- மார்லோ அம்மையார் தனது 1974 முனைவர் ஆய்வேட்டில் அனைவரும் ஏற்கக்கூடிய வியத்தகு வேர்ச்சொல் ஒப்புமை திராவிட -உரால் மொழிக்குடும்பங்களிடையே இருப்பதை நிறுவும் வலுவான செய்திகளைக் தற்துள்ளார். அவர் தாய்மொழி பின்னிஷ்; திராவிட மொழிகளைப் பயின்றவர். பின்னிஷ் மொழியிலுள்ள “உரால் மொழிகளின் சொற்பிறப்பியல் அகரமுதலி” யை நுட்பமாகப் பயன்படுத்தி பரோ-எமனோ திராவிட சொற்பிறப்பியல் அகராதி (1961,1968) தரும் திராவிட வேர்ச் சொற்களோடு ஒப்புமையை நிறுவியுள்ளார். டைலர் 1968ல் எழுதி வைத்துள்ள கைப்பிரதியில் மார்லோ முடிவுகளை ஆதரிக்கிறார்; கழிபழங்காலத்தில் மைய இந்தியாவிலிருந்து மைய ஆசியாவரை ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்பாடுகளைக் கொண்ட மக்கள் சங்கிலித் தொடர்போல வாழ்ந்து வந்தனர் என்றும் கருதுகிறார். உரால் மொழிகள் வழங்கும் பகுதிகளுக்கும் திராவிட இந்தியாவுக்கும் நெடுந்தோலைவு இருப்பதை இதற்கு ஆட்சேபனையாகக் கூறுவது வலுவற்றதாகும். (பின்லாந்து நாட்டறிஞர் ஹானு பானு அக°தி ஹகோலா தனது 2009/2011 டநஒiஉயட யககinவைநைள நெவறநநn வயஅடை யனே கinniளா நூலில் வேர்ச்சொல் அடிப்படையில் மிக நெருங்கிய தமிழ் பின்னிஷ் சொற்கள் வயஅடை கinniளா உடிபயேவந உயனேனையவநள (754+371ஐ தந்துள்ளார்.) 22. திராவிட மொழிபேசுநர் தோற்றம் பற்றி, வேறு புதிர்களும் உள்ளன. டைலர்(1986 கைப்பிரதி) திராவிட- உரால் அல்தாய்க் உறவுச் சொற்கள் இடையிலுள்ள ஒற்றுமையைச் சுட்டுகிறார். திராவிட உறவுமுறைக்கும் ஆ°திரேவிய கரையரா மயசயசைய பழங்குடிமக்கள் உறவுமுறைக்கும் நெருங்கிய உறவுள்ளது (இது பற்றிய விரிவான செய்திகளை டிராட்மன்(1981) திராவிடர் உறவுமுறை னசயஎனையைn மiளோiயீ நூல்; பி. இராமநாதன் 1991 “தமிழ்ப் பொழில்” கட்டுரை “திராவிடர் உறவு முறை” இவற்றில் காண்க.) 23. இவை மட்டுமல்ல தொல்லியல் சான்றுகளும் பிறவும் “தொல்பழங் காலத்தில் தென்னிந்தியா- இந்தியா-மைய கிழக்கு நாடுகள்- தென் கிழக்கு ஐரோப்பா” என்றவாறு பண்பாட்டுப் பொதுமைச் சூழல் நிலவியதை நிறுவுகின்றன. ஜான் ஹார்டு தடிhn hயசன தனது1987 வாந வறடைiபாவ டிக வாந படினனநளள:யn யnஉநைவே சநடபைiடிரள சநஎடிடரவiடிn கட்டுரையில் (உடிஅயீயசயவiஎந உiஎடைணையவiடிளே சநஎநைற 16:57-91) பழங்காலத்தில் இப்பகுதியில் பரவலாக “தாய்த்தெய்வம்-மகன் /அவள் துணைவன்- காளை-மலை” என்ற அடிப்படையில் அமைந்த இறைவழிபாட்டு முறைகள் வழங்கியதைச் சுட்டுகிறார். தாய்த் தெய்வம், பெண் தெய்வங்களாகிய “அம்மன்கள்” ஆகியோர் பால் ஆழ்ந்த பக்தி; பசு, காளை புனிதத் தன்மை; பாம்பு வழிபாடு ஆகிய ஆரியமல்லாத வழிபாட்டுக் கூறுகள் தாம் இன்றும் இந்தியாவில் தலை சிறந்து வழங்குகிள்றன. 24. அ. மேற்கண்ட இனவியல், பண்பாடு, மொழியியல் சார் தரவுகள் “திராவிடமொழிபேசுநர்” தோற்றம் குறித்துப் பின்வருமாறு பல திசைகளைக் காட்டுகின்றன. (i) மொழியியல் மைய/வடக்கு ஆசியப்பகுதி (திராவிட-உரால்/அல்தாய்க் உறவு) மையகிழக்கு அதற்கு முன்னர் வட ஆசியா? (திராவிட- எலாம் உறவு) (ii) பண்பாடு (இந்தோ ஆரியமொழி பேசுநர் சிறு எண்ணிக்கையில் கி.மு. 1500ஐ ஒட்டி இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர்) தென் ஆசியப்பகுதியிலோ அல்லது அண்டைப்பகுதிகளிலும் சேர்ந்தோ வழங்கிய பல பண்பாட்டு மரபுகளின் கூறுகளும் ஒருங்கிணைந்து (யஅயடபயஅ டிக யீயவவநசளே)திராவிடர் பண்பாடு உருவாகியிருக்கலாம். (iii) இன்று திராவிட மொழிபேசுநரிடையே பல இனக்குழு உட் பிரிவுகளையும் காண்கிறோம் (ய அiஒவரசந டிக சயஉயைட ளரb-வலயீநள) எனினும் நண்ணிலக்கரை காகச° மாந்த இனக்கூறுகள் அநனவைநசசயநேயn உயரஉயளடினை உடிஅயீடிநேவே தாம் முதன்மையாக உள்ளன. ஆ. இன்றைய “திராவிடப் பண்பாடு” உருவாவதில் பங்கேற்ற பல உட்குழுக்களைப் பற்றி நமக்கு எந்தக் காலத்திலும் தெரியவரப்போவதில்லை. எனினும் ஆல்சின் இணையர் தமது1982 வாந சளைந டிக உiஎடைணையவiடிn in iனேயை யனே யீயமளைவயn புத்தகத்தில் இந்தியாவில் வரலாற்றுக் காலத்துக்கு முன்வழங்கிய (யீசநாளைவடிசiஉ) பண்பாடுகளை திராவிட மொழி பேசுநரின் பண்பாட்டோடு இணைக்கின்றனர். வருங்காலத் தொல்லியல் ஆய்வுக்கண்டு பிடிப்புகள் இதில் மேலும தெளிவு தர வாய்ப்பு உண்டு. எனினும், அடுத்து நாம்‘இந்திய நாகரிகத்தையும் இந்து மதத்தையும் உருவாக்கி வளர்த்ததில் திராவிடர் பங்கு’ பற்றி ஆய்வு செய்யும் பொழுது அவர்கள் தோற்றம் குறித்த (மேலே கண்ட) பவ விஷயங்களையும் மனதிற் கொண்டாக வேண்டும். இந்துமதத்தில் திராவிட மொழி பேசுநரின் தாக்கம் 25. இந்து மதத்தில் திராவிடர் பங்களிப்பு பற்றி மதிப்பிடுகையில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து நிகழ்ந்துள்ள பலவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. என் வாதங்கள் பொதுவாக எத்தகைய முடிவை ஆதரிப்பவை என்பதையே இங்கு விளக்கமுடியும். வாலாயமாக இந்தியவியலாளர் ஐனேடிடடிபளைவள கருதுவனவற்றிலிருந்து எனது கருத்துக்கள் ஒரளவு மாறுபடுவதைக் காணலாம். மேல்மட்டத் தொல்வரவு கூhந ழுசநயவ கூசயனவைiடிn 26.சமூகவியல்துறைகள் சார் பன்னாட்டுக்கலைக்களஞ்சியம் ஐவேநசயேவiடியேட நுnஉலஉடடியீயநனயை டிக ளுடிஉயைட ளுஉநைnஉநள (1968) மடலம் 13: 350-353 இல் சார்ல° லெ°லி தனது கட்டுரையில் ராபர்ட் ரெட்பீல்ட் சுடிநெசவ சுநனகநைடன நாகரிக வகைகளைப் புரிந்து கொள்ள “உருவாக்கிய ழுசநயவ கூசயனவைiடிn மேல்மட்டத் தொல்வரவு / டுவைவடந கூசயனவைiடிn கீழ் மட்டத் தொல்வரவு ” கோட்பாட்டை ரெட்பீல்டு எப்படி வகுத்துக் கொண்டார் என்பது பற்றிக் கூறுவது வருமாறு: நாகரிகங்களைப் புரிந்துகொள்ள பண்பாடு சார் கோட் பாட்டு விளக்கச் சொற்களை மேல்மட்டத் தொல்வரவு, கீழ்மட்டத் தொல்வரவு (இரண்டும் எப்பொழுதும் இணைந்து செயல்படுபவையும் ஒன்றை ஒன்று பாதிப்பவையும் ஊடிநஒளைவiபே யனே iவேநசனநயீநனேநவே ஆகிய இரண்டு ஐனநய ளுலளவநஅள இரண்டு கருத்துலகங்களாகப் ஐனநய ளுலளவநஅள பார்க்க வேண்டும் என்பர் ரெட்பீல்டு. முன்னதில், ஆழ்ந்து சிந்திக்கும் அறிவுஜீவிகளின் ஊசவைiஉயட யனே சுநகடநஉவiஎந நடவைந படைப்புகளாகிய அறிவியல், தத்துவம், நுண்கலைகள் அடங்கும்; பின்னதில் பொது ஜனங்களின் (ஊடிஅஅடிn யீநடியீடந) நாட்டுப் புறக்கலை, புராணங்கள், மதங்கள் போன்றவை அடங்கும். 27. (i) இக்கட்டுரையில் பொதுவான இந்துமதத்தில் (ஆயiளேவசநயஅ ழiனேரளைஅ) மேல்மட்டத் தொல்வரவு (இனி “மே-தொ”) பற்றியே அதிகம் விவாதிக்கப்படும். (ii) இந்தியாவில் மே. தொ வைஆரியத் தொல்வரவு என்று கருதிவிடக்கூடாது. குளோதி ஊடடிவாநல தனது 1978 கூhந அயலே கயஉநள டிக அரசரபயn நூலில் ஆரிய/ வட நாட்டுத் தொல்வரவை மே.தொ போலவே கருதியுள்ளார். நான் அப்படியல்ல. (வேத காலச் செய்திகளைக் கூறும் பொழுது தவிர பிற இடங்களில்) நான் மே.தொ. எனபொதுவாகக் குறிப்பிடுவனவற்றில் ஆரியக் கூறுகளை விட ஆரியமல்லாத கூறுகளே அதிகமாக இருக்கும். எல்மூர் ற.வ.நடஅடிசந 1913 இல் வெளியிட்ட தன் னசயஎனையைn படினள in அடினநசn hiனேரளைஅ நூலில் இப்பொழுது மே.தோ என நாம் அழைப்பதை ‘பிராமணிய’ எனச் சுட்டினார். சில இடங்களில் மே.தோ இந்து மதம் என்று சொன்னதோடு ‘இந்து’ ‘திராவிடம்’ இவை இரண்டும் வேறுபட்டவை என்றும் எல்மூர் வறினார். உண்மையில் அவர் இந்தியாவில் உள்ள ‘மே.தொ’ வையும் கீழ்மட்டத் தொல்வரவையுமே அவ்வாறு குறித்துள்ளார். (iii) “மே. தோ” வைப் பற்றிப் பேசும் பொழுது வேதகால முற்பகுதி: வேதகாலப்பிற்பகுதி; வேத காலத்துககுப் பிந்தைய காலம் (ஞடிளவ - ஏநனiஉ வே.பி.க) என்று தனித் தனியாகப் பார்க்கவேண்டும். இத்துறை வல்லுநர்கள் சிலர் வேத கால முற்பகுதியை இந்துமதத்தோடு தொடர்பு படுத்தாமல் “வேத மதம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவர்; இது சரியல்ல. இந்து மதத்தின் பிற்காலத் தன்மைகள் பலவற்றுக்கான அடிப்படை இம்முற்பகுதியிலும் உள்ளது. வேத காலப் பிற்பகுதி, வேதகாலத்துக்குப் பிந்தைய காலம் பற்றிக் கீழே கூறும் பொழுது விளக்க இருப்பது போல, °ருதி (மாந்தருக்கு வெளிப்படுத்திய புனிதச் செய்தி சநஎநயடநன ளஉசiயீவரசந) க்கும் °ம்ருதிக்கும் (பொதுமக்களுக்காகக் உருவாக்கியது) வேறுபாடு உண்டு. வேதகாலப் பிற்பகுதியிலேயே °ம்ருதிகள் உருவாகத் தொடங்கின; ஆனால் வே. பி. காலத்தில் தான் அவை முக்கியத்துவம் பெற்றன. வேதகால முற்பகுதி கூhந நுயசடல ஏநனiஉ ஞநசiடின 28.(i) மிகுபழமைவாய்ந்த வேத சம்ஹிதைகளின் காலத்தை நான் வேதகாலமுற்பகுதி எனச் சுட்டுகிறேன். பிற்றை மூன்று சம்ஹிதை களிலிருந்து முதல் சம்ஹிதையாகிய ரிக் வேதம் சற்று வேறுபட்டது; அதில் ஆரிய மொழி பேசுநர் (இந்தோ-ஐரோப்பிய நெருக்கம்) பற்றிய செய்தி களை அதிகமாக ரிக் வேதத்தில் காணலாம். பின் மூன்று சம்ஹிதைகளில் குறிப்பாக அதர்வ வேதத்தில் ஆரியமல்லாத கூறுகள் வெளிப்படையாகத் தெரியும். அதர்வ வேதத்தில் (பிற்றை) உபநிஷத்துகளின் கருத்துகளைக் கூறும் இடங்களும் சில உண்டு. (வேத காலப்பிற்பகுதி என்பது வேதசம்ஹிதைகளின் மீதான ஆரண்யகம், பிராமணம், உபநிஷதம் ஆகிய வியாக்யானங்கள் உருவான காலமாகும்) (ii) இவ்வேதங்களே இந்திய இலக்கியங்களில் மிகப் பழயவை ஆகும். அவை இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் “இந்தோ-இரானியன்” பிரிவின் இரண்டு கிளைகளில் ஒன்றான பழைய இந்தோ-ஆரியத்தில் அல்லது சம்°கிருதத்தில் உள்ளன. சம°கிருதமொழியின் நெருங்கிய உறவு மொழிகள் இந்தியாவுக்கு வெளியில் (மேற்றிசையில்) உள்ளன. பழைய சம°கிருதத்தைப் பேசியவர்களும் தங்களை ஆரியர் என்று அழைத்துக் கொண்டவர்களும் இனம், பண்பாடு அடிப்படையில் சயஉயைடடல யனே உரடவரசயடடல மைய கிழக்கு, ஐரோப்பிய நாட்டு மக்களோடு, குறிப்பாகப் பண்டை இரானிய மக்களோடு தொடர்புடையவர்கள். (iii) மிகப் பழமை வாய்ந்த ரிக் வேதம் சுமார் கி.மு. 1500க்குச் சற்று பின்னர் இயற்றப்பட்டதாகத் தெரிவதால், அக்கால கட்டத்தில் தான் அதை இயற்றியவர்கள் வடமேற்கு இந்தியா/ சிந்து நதிபாயும் பஞ்சாப் பகுதிக்கு வந்தனர் என்று நெடுநாளாகக் கருதப்பட்டுவந்தது. இப்பொழுது இக் கருத்தை மறுத்து பரோ, கைப்பர் போன்றோர் “இந்தோ- இரானியன் பொது மொழியிலிருந்து ரிக் வேதமொழியாகிய மிகப்பழைய இந்தோ ஆரியமொழி மொழியியற் கூறகள் பலவற்றில் மாறுபட்டு உள்ளது” என்று நிறுவியுள்ளனர்; எனவே வடமேற்கு இந்தியாவிற்குள் ஆரிய மொழி பேசுநர் நுழைந்த காலம் மிகப் பழைய வேதப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் இவற்றுக்கிடையே நீண்ட கால இடைவெளி இருந்திருக்கவேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். (iஎ) ஆனால் சுநீதி குமார் சட்டர்ஜி 1951 இல் பாரதிய வித்யாபவன் வெளியிட்ட கூhந ஏநனiஉ ஹபந நூலிலும் 1959 கூயஅடை ஊரடவரசந (8: 267-324) கட்டுரையிலும் ஆரியமொழி பேசுநருக்கும் ஆரியமல்லாத மொழி பேசுநருக்கும் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையுமுன்னர் கிழக்கு இரான் பகுதி போன்றவிடங்களிலேயே இன, பண்பாட்டுக் கலப்பு சயஉயைட யனே உரடவரசயட கரளiடிn ஏற்பட்டிருக்கலாம் என்பர், (விஷயத்தை மேலும் சிக்கலாகும்படியாக!). வால்டர் பேர்சர்வீ° & பிராங்க்ளின் சவுத்வார்த் தமது 1986 டுiபேரளைவiஉ ஹசஉhயநடிடடிபல யனே வாந ஐனேரள ஏயடடநல ஊரடவரசந நூலில் ‘வேதங்களை எழுதிய இந்தோ-ஆரிய மொழி பேசுநர் வருவதற்குச் சில நூறு ஆண்டுகள் முன்னரே அவர்களுக்கும் முந்தையவர்களான அம்மொழி பேசும் குழுக்கள் சில வடமேற்கு இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்’ என்பர். 29. எதுவாயினும் சரி, வேதங்கள் விவரிக்கும் முக்கியமான மதக் கூறுகள் பெருமளவுக்கு இந்தோ- ஐரோப்பியப் பண்பாட்டுக்கு நெருங்கி யவையாக உள்ளமையால் அவ் வேதப்பண்பாட்டை ‘ரிக்வேத ஆரியப் பண்பாடு’ என்றே பெயரிட்டு அழைக்கலாம். அடுத்து வரும் பத்திகளில் தொடக்க கால வேதமதக் கூறுகளில் முக்கியமானவை சுருங்கக் கூறப்படும். (அவற்றுள் பல பின்னர் மறைந்து விட்டன அல்லது மாறிவிட்டன, எனினும் ஏனையவை தொடர்ந்து நிலைத்தன). 30. இந்தோ ஆரிய மொழி பேசுநரின் முக்கிய மதச்சடங்கு பலி கொடுப்பதே (ளயஉசகைiஉந). அவரவர் இல்லத்தில் இல்லத்தலைவன் செய்து வந்த இல்ல வழிபாடுகளும் (னடிஅநளவiஉ உரடவள) முக்கியமானவை. அவற்றின் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன.ஆனால் ரிக்வேதம் நுணுக்கமான சடங்காசாரங்களுடன் ‘ஒவ்வொரு காரியத்துக்கும் ஒருவர்’ என்ற முறையில் அமைந்த பூசகர் குழுவினர் செய்வித்த யக்ஞங்களில் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் பலிகொடுத்ததையே முகாமையாக விவரிக்கிறது. யக்ஞத்தின் நோக்கம் தேவர்களைத் திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து நன்மைகளை வரமாகக் கோருவது. யக்ஞத்துக்குத் தேவர்களை ஈர்த்து வரம் கொடுக்கச் செய்வதற்கான சடங்குகளும் மந்திரங்களும் பூசகர்களுக்கு மட்டுமே தெரியும். 31. இயற்கை ஆற்றல்களின் உருவகங்களும் அவ்வாற்றல் களைக் கட்டுப்படுத்துபவர்களுமே ஆரிய தெய்வங்கள் ஆவர். அவர்களுள் மேல்தட்டில் இருந்தவர்கள் ‘வானுலகத்தில்’ வாழ்வதாகக் கருதப்பட்டவர் களாகிய வானம், ஞாயிறு, மழை, மேகம், வளி(காற்று) இவற்றின் உருவ கங்கள். இரானியர், கிரேக்கர், ரோமர், ஜெருமானியப் பிரிவினருள் சிலர் ஆகிய பிற இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் இதே போன்ற கடவுள்களை வழி பட்டு வந்தனர். ஒரு கடவுள் வருணன்(பின்னர் அஹரமஜ்தா என அழைக்கப் பட்ட இரானிய தெய்வத்தின் மறுவடிவம்) பிரபஞ்ச ஒழுங்கைக் கட்டுப்படுத்தி யவன்; நேர்மையையும் ஒழுக்கத்தையும், வழிபாட்டு முறைகளையும் (ரிதம் சவய) நிலைநாட்டுபவன். பிற்கால “தர்ம னாயசஅயகோட்பாடுகள் இந்த தொன்மை வேதக் கால ரிதத்திலிருந்து தோன்றியன எனப்பல அறிஞர் கருதுகின்றனர். 32. ரிக்வேதத்தில் தொட்ங்கிப் பிற்றை வேதங்களில் விரைவாக நிகழ்ந்த ஒரு மாற்றம் வருணனுக்கும் (ரிக் வேதத் தேவர்களின் தலைவனான) இந்திரனுக்கும் முக்கியத்துவம் குறைந்ததாகும்; பூமியிலேயே காணும் தேவர்கள் முக்கியத்துவம் அதிகரித்தது. முக்கியமான தீயின் தெய்வம் அக்நி, தேவகுரு பிருக°பதி,யக்ஞங்களில் படைக்கப்பட்ட தலைசிறந்த சோமா (போதை தரும் சோமாச்சாறு) இவற்றின் உருவகங்களாகிய தேவர்கள் முதன்மை பெற்றனர். இவற்றில் அக்நி வழிபாட்டின் ஒரு தேய்மானமடைந்த கூறு ஆரியமல்லாத (பெரும் பாலும் திராவிடருக்குரிய) பூசையில் இன்றும் உள்ளது. வேதகாலத்தில் உருவான பிறப்பு, உபநயனம், திருமணம், போன்ற முதன்மையான வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்த சடங்குகளை இன்றும் இந்தியாவில் உரிய வேத மந்திரங்கள் ஓதிக் கொண்டாடுகிறார்கள். 33. ரேனோ சநnடிர (1953 : சுநடபைiடிளே டிக யnஉநைவே ஐனேயை) ஆரியரின் மதக் கோட்பாடானது தமது பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்பிட அவர்கள் உருவாக்கியது என்பர். (அந்த ஆரியமதக் கோட்பாட்டை பிற்றை இந்து மதத்திலிருந்து பிரித்து வேதமதம் ஏநனளைஅ என்று சுட்டுவார்) வேதமதத்தில் தொல்வரவு, கடன் பெற்றவை இரண்டுமே இல்லையென்றும் பஞ்சாப் பகுதியை ஒட்டி அவர்கள் தனிமையாக (in ளநஉடரளiடிn) வாழ்ந்த பொழுது உருவாக்கிக் கொண்டதே அது என்பர். சிந்து நாகரிக வீழ்ச்சிக் காலத்தில் அப்பகுதியில் அரியமொழி பேசுநர் சிறு குழுக்களாகவாவது அங்கு இருந்திருக்கவேண்டும்; அக்குழுக்கள் மீது அந்நாகரிகத் தாக்கம் இல்லாமல் இருந்திருக்காது: எனவே ரெனொ கருத்து சரியாகத் தோன்றவில்லை(சிந்து நாகரிகம் தலைசிறந்தது; அந்நாகரிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் எழுத்துச் சான்றுகள் (ஓரிரு சொல், சொற்றொடர் மட்டுமே கொண்ட) சில ஆயிரம் முத்திரைகள் மட்டுமே; அவையும் அனைவரும் ஏற்கும் வகையில் இன்னும் வாசிக்கப்படவில்லை. ஆய்வறிஞர் பலரும் சிந்து முத்திரை எழுத்து திராவிட(தமிழிய) மொழியின் தொடக்க நிலை வடிவில் இருந்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். பஞ்சாபுக்குத் தெற்கில் சிந்து தீரத்தை ஒட்டிய பலூச்சித்தானத்தில் இன்றும் திராவிட மொழி யாகிய பிராஹுய் பேசும் மக்கள் உள்ளனர். 34. 1945, 1946, 1947- 48 ஆண்டுகளில் கூசயளேயஉவiடிளே டிக வாந ஞாடைடிடடிபiஉயட ளுடிஉநைவல, க்ஷ.ளு.டீ. ஹ.ளு லண்டன் ஆகிய ஆய்விதழ்களில் பரோ தமது நுண்ணிய ஆய்வின் மூலம் வேதங்களில் உள்ள ஏறத்தாழ 500 சம்°கிருதச் சொற்கள்,வடமேற்கு இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகளிலிருந்து கடன் பெற்றவை - ரிக் வேதத்திவேயே ஏறியுள்ள சுமார் 20 சொற்கள் உட்பட என்பதைத் தெரிவித்தார். 1955 ல் பரோ எழுதிய கூhந ளுயளேமசவை டுயபேரயபந நூல் பரோ, எமெனோவின் னுசயஎனையைn நுவலஅடிடடிபiஉயட னுiஉவiடியேசல (ஐஐ 1984) ; எமேனோ 1956 இல் டுயபேரயபந (32:3-16), இதழ்; 1974 இல் தைனட (3:93-134 கட்டுரை) கைப்பர் (ஐனேடி - ஐசயnயைn துடிரசயேட 10 : 82-102) கட்டுரை முதலியவற்றில்அவ்வறிஞர்கள் அத்தகைய திராவிட மொழிச்சொற்கள் மேலும் பலவற்றைக் கண்டறிந்து குறிப் பிட்டுள்ளதுடன் திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கண, சொல் லமைப்புக் கூறுகளையும் பழைய இந்தோ ஆரியத்தில் (வேத மொழி உட்பட) கண்டறிந்து கூறியுள்ளனர். (பிற்றை இந்தோ- ஆரிய மொழிகளில் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளின் தாக்கம் மிகத் தெளிவாக உள்ளது என்பதை சுமித்ர மங்கேஷ் காத்ரே (1964 : ஞசயமசவை டயபேரயபந யனே வாநசை உடிவேசiரெவiடிn வடி ஐனேயைn ஊரடவரசந) நூல் போன்றவற்றில் காண்க.) மேலும் பழைய இந்தோ - ஆரிய (வேத) மொழியிலேயே பல்லொலி னநவேயடக்கு இணையாக வளை நா ஒலி சநவசடிகடநஒ ஒலியன்கள் (ஞாடிநேஅநள) (த்-ட், ந்-ண், ல்-ள்) புதிதாக ஏறியுள்ளமை திராவிடத் தாக்கத்தால் என்பதை பரோ- எமெனோ நிறுவியுள்ளனர்; குறைந்தபட்சம் ட், ண் முதவிய வளைநாஒலி கொண்ட திராவிடச் சொற்கள் வேதமொழியில் ஏறிப் புழங்கத் தொடங்கிய பின்னர், அவ்வொலியன்களைப் புதிதாகத் தம் வண்ணமாலையில் ஆரியர் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும். எமனொ (1962 : ஞசடிஉநநனiபேள டிக ஹஅநசiஉயட யீhடைடிளடியீhiஉயட ளுடிஉநைவல 106: 430-442) கட்டுரையில் வடஇந்தியாவில் அன்று வாழ்ந்த திராவிட மொழிபேசுநர் வேத மொழியைப் பயின்று பயன் படுத்திய பொழுது தம் பழக்க தோஷத்தால் திராவிட (வளை நாஒலி) ஒலியன்களைப் புகுத்தியும் இருக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறார். சௌத்வொர்த் ஐதுனுடு 3:1, 1974 கட்டுரையில் கூறுவது போல வடஇந்தியாவில் அப்பழங்காலத்திலேயே பெரு மளவுக்கு ஆரியமல்லாத மொழி பேசுநரும் ஆரிய மொழி பேசுநரும் கலப்படைந்திருக்கவேண்டும். 34. மேற்கண்டதிலிருந்து வேதகால ஆரியர் “தனிமையாக” வாழ்ந்தனர் என ரெனொ உன்னித்தற்கு ஆதாரமில்லை என்பது தெளிவாகும், இன்னும் சிலர் எ.கா. னுடிசளை ளுசiniஎயளயn 1983 “ஏநனiஉ சுரனசய - ளுiஎய” துஹடீளு13:543-556) “ஆரிய/ வேதமொழி (திராவிட தாக்கமின்றி) இந்தோ-ஐரோப்பிய மொழியாகவே இருந்தது” என கூறுவது சரியல்ல என்பதைக் காட்டவே முன் பத்தியில் கண்ட செய்திகளைத் தந்துள்ளேன். பிற்றை வேதகாலம் கூhந டுயவநச ஏநனiஉ ஞநசiடின 35. வேதகால முற்பகுதிக்குப் பின்னர், பிற்பகுதியில் பல விஷயங்கள் தொடர்ந்தனவெனில், முக்கியமான சில கைவிடவும்பட்டன. “வேதகாலம்” என்று பொதுவாக குறிப்பிடுபவர்கள் பலர் இம் மாற்றங்களைச் சுட்டாமல் விட்டு விடுகின்றனர். பிறபகுதிக்கான இலக்கிய ஆதாரங்கள் °ருதிதான். ஆனால் அந்த °ருதியில் முக்கியமான உபநிஷதங்கள் வேத சம்ஹிதைகளிலிருந்து பெரிதும் மாறுபாடானவையாக உள்ளன. சம்ஹிதைகள் பெரும்பாலும் சடங்குகளை விவரிப்பவை. உபநிஷத்துகள் தத்துவக் கருத்துகளைக் கூறுபவை, அவை பல புதிய தத்துவங் களைக் கூறுகின்றன. (பிற்றை/ இக்கால இந்துமதத்தின் அடிப் படையாக உள்ள சில உட்பட) மேல் மட்டத் தொல் வரவை பசநயவ வசயனவைiடிn உபநிஷத் கால கட்டத்தில் உருவாக்கியதில் ஆரிய மல்லாதவர்கள் குறிப்பாக திராவிட மொழி பேசுநர் முக்கிய பங்கு வகித்ததனால்தான் இம்மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது என்பது என் கருத்து. வேத காலத்திலிருந்தே இம்மாற்றம் (பண்பாடு, மொழியியல், இனம் ஆகிய துறைகளில் ஆரியர்- ஆரியமல்லாத மொழி பேசுநர் கலப்பு தொடங்கி யிருக்கவேண்டும். மாதவ் அ. தேஷ்பாண்டே கட்டுரை “பநநேளளை டிக சுப ஏநனiஉ சநவசடிகடநஒiடிn: ய hளைவடிசiஉயட யனே ளடிஉiடிடiபேரளைவiஉ ஐnஎநளவபையவiடிn (1979 தேஷ்பாண்டே-ஹாக் புத்தகம் ஹசலயn யனே சூடிn-ஹசலயn in ஐனேயை : 235-315) போன்றவை இதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளன) 36. சமூக- மொழியியல் ளுடிஉiடிடiபேரளைவiஉ செய்திகள் சிலவற்றை இங்கு முதலில் குறிப்பிடவேண்டும். ஒருதத்துவத்திற்கு, பண்பாட்டுக் கூறுக்கு சம்°கிருதப் பெயர் இருநத அளவிலேயே அது ஆரியருடையது என்று இந்தியவியலாளர் பொதுவாக(தவறாக) எண்ணிவிடுகின்றனர். எ.கா. “சம்ஸார” என்பது சம்°கிருதச் சொல்தான்; ஆனால் அது சுட்டும் பொருள்- மறுபிறவி, வாழ்வுச்சக்கரம் றாநநட டிக நஒளைவநnஉந ஆரியரிடைத் தோன்றியது மல்ல; இந்தியாவுக்கு வந்த ஆரியமொழி பேசுநர் கொணர்ந்த இந்தோ - ஐரோப்பிய மதம் சார்ந்ததுமல்ல. பண்டு இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநரிடை(கி.மு. 1000 க்கு முன்னர்) வழங்கிய மதக் கொள்கைகளாக ஆய்வறிஞர்கள் உன்னித்து முடிவு செய்துள்ள சநஉடிளேவசரஉவநன கொள்கைகளில் இந்திய மத தத்துவங்களில் - இந்து , புத்தம், ஜைனம் அடிப்படையான கோட்பாடுகளில் முக்கியமானவை எதுவும் இல்லவே இல்லை. எனினும் வேபிள்கள் மட்டும் சம்°கிருதத்தில் உள்ளன! இவ்வாறு “ஆரியக் கருத்து” என்று அபத்தமாக்க கருதுவதனால் தான் இந்து மத தத்துவங்களை உருவாக்கிய ஆரியமல்லா தாரின், முக்கியமாக திராவிட மொழி பேசுநரின் மாபெரும பங்கை இருட்டடிப்புச் செய்யும் நிலை உள்ளது. 37. இந்தியப் பண்பாட்டில் ஆரியமல்லாத கூறுகள் பலவற்றுக்கும் சம்°கிருத லேபிள்கள் பரவலாக வழங்கும் நிலை எவ்வாறு ஏற்பட்டது? ஆரியமொழி பேசுநர் இங்கு (சிறு எண்ணிக்கையில்) வந்த காலத்திலிருந்த ஆரியமல்லாத தன்மைகள் பலவற்றைத் தாங்களும் கைக்கொள்ளலாயினர். சட்டர்ஜி (1959) கூறுவது போல மொழி, மதம், தத்துவம் இவற்றில் மட்டுமல்ல,உணவு, குடிவகை, உடை, இல்ல அமைப்பு (அறைகலன்கள் உட்பட) கணக்கிடும் முறை போன்றவற்றிலும் இது நிகழ்ந்தது. அவ்வாறு புதிய வற்றைக் கைக்கொள்ளும் பொழுது பலவற்றை சம்°கிருதப் பெயரில் (லேபிலில்) ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக மத-தத்துவக் கொள்கைகளை அவர்கள் ஏற்றுத் தமதாக்கிய பொழுது இது தவறாது நிகழ்ந்ததற்குக் காரணம் வேத சம்ஹிதை மொழியாகிய சம்°கிருதம் தான்ரிஷிகள் மொழி, புனித மொழி எனக் கருதப்பட்டதுதான். அனைவரும் மதித்து வந்த புனிதமான சாத்திரங்களின் மொழியிலேயே இப்புதுவரவு மத, தத்துவக் கருத்துகளுக்கும் பெயரிட்டழைத்தமையானது அவற்றை மொத்த சமுதாயத்தில் அனைவரும் மததத்துவ விவாதத் துறையில் பரப்பவும் பயன்படுத்தவும் வகை செய்தது. 38. (i) பிற்றை வேத காலத்தின் முக்கியமான சில தத்துவக் கோட்பாடு களைக் காண்போம். உபநிஷத்துகளில்தான் இவை முதன்முதலில் தோன்றின (சம்ஹிதைகளில் வழங்கிய சில பழஞ்சொற்களுக்கு அவற்றின் மூல அர்த்தத்தை ஒதுக்கிவிட்டு உபநிஷத் கால கருத்துக்கு ஏற்ற புதிய அர்த்தத்தை வலிந்து ஏற்றிக் கொண்டனர்) தோன்றிச் சிலபல காலம் கழிந்தபின்னர்த்தான் முறையான தத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டன. புதியவற்றில் மிக முக்கியமானவை ஆரியமல்லாதார் உருவாக்கியவை (குறைந்த பட்சம் ஆரியமல்லாதார், குறிப்பாக திராவிட மொழி பேசுநரிடம் காலகாலமாக இருந்தவற்றை ஆரியர் ஏற்றுக் கொண்டவை) என்பதை அடுத்துக் காண்போம். (ii) “தொடக்க கால இந்தோ-ஐரோப்பியப் பண்பாடு” என அறிஞர் மீட்டமைத்துள்ளதில் (சநஉடிளேவசரஉவநன) இப்புதிய தத்துவங்களைப் போன்றவை. எவையேனும் உளவா? என்று பார்ப்பது முக்கியம். ‘இல்லை’ என்று மேலே36 ஆம் பத்தியில் கண்டோம். இந்தியாவுக்கு வந்த இந்தோஆரிய மொழி பேசுநர் தமக்குள்ளாகவே- வெளியார் தாக்கம் இன்றி - புதிய கோட்பாடுகளைச் சுயசிந்தனைபடி உருவாக்கிக் கொண்டிருக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர்! எனக்கு இது சரியாகத் தோறைவில்லை. வேதமொழியி லேயே ஆரியமல்லாத மக்கள் மொழி மக்களின் தாக்கம் இருந்ததைக் கண்டோம்; பெரும் எண்ணிக்கையினரான ஆரியமல்லாத மக்களிடையே சிறுசிறுகுழுக்களாகவே ஆரியமொழி பேசுநர் அன்று வாழ்ந்திருக்கவேண்டும். மொத்தத்தில் பல்வேறு காலங்களில், நாடுகளில் நிகழ்ந்தது பற்றிய வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் “புதிய கோட்பாடுகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்” என்ற வாதம் நிற்கக் கூடியதல்ல. 39. பிற்றை வேதகாலத்தில் தோன்றி, வேதங்களுக்குப் பிந்தைய காலத்தில் ஞடிளவ-ஏநனiஉ இந்து தத்துவங்களில் அடிப்படைகளில் முதன்மை யானவை கர்மம், சம்சாரம், மோட்சம், பிரம்மன்(‘ஆத்மன்’ உடன்) 40. பல உபநிடதங்கள் கர்மத்தை புதிய கோட்பாடாகவே சுட்டுகின்றன. அந்தக் கால கட்டத்தில்தான் சாதி அடிப்படையிலான தொல்லிந்திய சமூக அமைப்பு உருவாகத் தொடங்கியிருந்தது. அப்பொழுதிருந்தே கர்மம், சம்சாரம்(மறுபிறவி, மீண்டும் பிறத்தல்) நிர்வாணம் (தான் ஞநசளடியேட ளுநடக என்பதன் அழிவு) மோட்சம் (பிறவியிலிருந்து விடுதலை) அகியவையும், சாதி முறையும், கூட்டாக உருவாக்கித் தொல்லிந்தியப் பண்பாட்டின் மையக் கோட்பாடுகளாக அமைந்தன. 41. கர்மம், முதலிய தத்துவக் கோட்பாடுகளை என்ன என்று திட்டவட்டமாக வரையறுத்து கூறுவது கடினம்தான். அண்மைக்கால மாநாடு ஒன்றில் கர்மம் பற்றிய பல ஆய்வுரைகளை விவாதித்த பின்னர் “கர்மம், மறுபிறவி இவற்றைக் கறாராக வரையறுக்க முயல்வது வீண்வேலை என்றும், இவை என்ன என்று தெரிந்து கொண்டு மேலும் நுணுக்கமாக ஆய்வதற்கு தேவையான அளவுக்கு இவற்றின் அடிப்படைகள் என்னவென்பதை இத்துறை ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர்” என ஓ பிளாஹெர்தி தனது 1980 நூல் முன்னுரையில் கூறியுள்ளார். பொதுவாகவே (கிருத்தவ மதத்தில் கூசinவைல பிதா, சுதன், பரிசுத்த ஆவி பற்றித் தீராத வேறுபாடு உள்ளது போல்) பருப்பொருள் சாராத (யளெவசயஉவ) மத, தத்துவக் கொள்கைகள் குறித்து எங்கும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். இந்துமதம் போன்ற முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுக் கோட்பாடு பற்றிய கருத்துகளை மேலை (ஐரோப்பிய-அமெரிக்க) பண்பாட்டுச் சொல்லாடல் (அநயniபேகரட றநளவநசn னைiடிஅ வழி தெளிவாக விளக்குவது கடினம்தான். 42. மேலே சொன்னவற்றை மறந்துவிடாமல் இப்பொழுது நாம் கர்மம் முதலியவை பற்றிப் பார்ப்போம். கர்மத்தின் சொற்பொருள் “செயல்/ செய்கை” என்பது. உபநிஷத்துகள் ஒவ்வொரு செயலின் ஒழுக்கம்/நேர்மை அடிப்படையில் எச்செயலையும் மதிப்பிடுகின்றன. உபநிஷத் காலத்துக்குப் பின்னர் ‘செயலால் ஏற்படும்(நாம் காண இயலாத) ஆற்றலை நநேசபல’ அது குறிக்கலாயிற்று. இவ்வாற்றல்(உடனடியாகவோ நாளடைவிலேயோ) செய்தவனைப் பாதிக்கிறது- அவன் செய்த வினையின் பயனை அவனே அனுபவிக்கும் நிலை ஏற்படாவிட்டால் அதனை மறுபிற வியில் துய்க்க நேருகிறது. தண்டேகர் 1971 ‘ழiனேரளைஅ’ பற்றிய கட்டுரையில் கூறுவது. ‘தனது அடிப்படை அஞ்ஞானம் காரணமாக தொன்று தொட்டு (ளinஉந நவநசnவைல சம்சார) இருந்து வரும் முடிவிலாத பிறவிச் சுழலில் மனிதன் அகப்பட்டு உழல்கிறான். முடிவில்லாத (காரண-காரிய) கர்மச் சங்கிலியில் பிணிக்கப் பட்டுள்ள மனிதன் ஒரு பிறவியில் தான் செய்யும் செயல்களுக்கான பயனை பின்பிறவிகளில் துய்த்தாக வேண்டும். அவ்வாறு துய்ப்பதற் கேற்றதாகவே அடுத்த பிறவிகளின் தன்மையும் சூழல்களும் அமைகின்றன. பிறவித்தளை யிலிருந்து இறுதியாக விடுபட ஒரே வழி இந்து மத தத்துவப்படி மோட்சம் தான். மோட்சம் என்பது முழுமுதல் இறையுடன் சேர்ந்துவிடுதல் யவவயiniபே னைநவேவைல றiவா வாந டிநே யளெடிடரவந தான். பிற்றை வேத உபநிஷத்துகள் எல்லாம் அனைவரின் இறுதியான நோக்கு மோட்சம் அடைவதே என்று சாற்றுகின்றன. 43. பல ஆய்வாளர் இக்கருத்துகள் ஆரியமொழி பேசுநர் கொண் டிருந்தவை என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இவை போன்ற கோட்பாடுகள் முந்தைய இந்தோ- ஐரோப்பிய/ இந்தோ இரானிய மதங்களில் இல்லை. குறிப்பாக கர்மம், சம்சாரமும் எப்படி மோட்சம், தர்மம் இவற்றோடு காரண காரியத் தொடர்புடையன என்பது பற்றியோ அம்மதங் களில் எதுவுமே இல்லை.(தர்மம் என்பது இயற்கையும் சமூகமும் என்றும் நியதிப்படி நின்று நிலவுவதற்கான அடிப்படையான தத்துவக் கொள்கை.) தொடக்க கால வேத யக்ஜச் சடங்குகளையும் ‘கர்மக்’ கொள்கையையும் சிலர் தொடர்பு படுத்த முயன்றுள்ளனர். (எ.கா. ஜேம்° ஓ. பூன் க்ஷடிடிn 1983: முயசஅய, யn யவோசடியீடிடடிபiஉயட நnளூரசைல புத்தகத்தில் ஒரு கட்டுரை; ஒ பிளா ஹெர்தி 1980 பதிப்பித்த புத்தகத்தில் அவரே (பக். 37 இல்) எழுதிய “வேத, புராணங்களில் கர்மமும் மறுபிறவியும் கட்டுரை ஆனால் “கர்மம்-சம்சாரம்-மோட்சம்” என்று பிணைப்புண்ட ஒட்டு மொத்த தத்துவம் ஆரியமல்லாதது என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன. 43. (i) “பிரமன்” பற்றிப் பார்ப்போம். ரிக்வேதத்தில் சேர்ந்து உள்ள மிகப் பிற்காலத்திய ரிக் ஒன்று (ழலஅn டிக உசநயவiடிn) படைப்புக்கு ஒரே மூல காரணமாக ஒரு தெய்வீக ஆற்றல் iஅயீநசளடியேட னiஎiநே கடிசஉந இருந் திருக்கலாமோ என்ற ஐயுறுகிறது. அவ்வாற்றலை அது ஐவ அந்த ஒன்று என்று சுட்டுகிறது. பிற்கால வேதாந்தத்துவத்தில் அது ‘பிரமன்’ ஆகத் தோன்றி முற்றிலும் மாறுபட்ட சிந்தனைக் கட்டுக் கோப்பின் பகுதியாக அடங்கி விடுகிறது யீயசவ டிக ய எநசல னகைகநசநவே அயவசiஒ; முந்தைய இந்தோ ஐரோப்பிய மதத்துக்கு அறவே மாறுபட்டதாக வேதசம்ஹிதையில் (ரிக் முதலிய 4வேதங்கள்) பிரமன் க்ஷசயாஅயn (புனிதவாசகம், ளயஉசநன ரவவநசயnஉந (அல்லது அதன் மூலம் உற்பத்தியாகும் சக்தி டிச வாந யீடிறநச பநநேசயவநன வாநசலெ). வேதகாலம் முடிந்த பின்னர்தான் ‘பிரமன்’ என்பது மேற்சொன்ன ரிக்கில் வரும் ‘அது’ வைச் சுட்டுவதாகக் கற்பித்துக் கொண்டார்கள்! (ii) ரிக் வேதம் சுட்டும் ‘அது’பருப் பொருள் அல்லாத, மாந்தனுக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆற்றலைப் பற்றியது: ரிக் வேதத்தின் ஏனைய ரிக்குகளிலிருந்து அறவே மாறுபட்டது. ஏனையவை எல்லாம் பற்பல தெய்வங்களை(பெரும் பாலும் ஆண் தெய்வங்கள்)வழுத்துபவை; இயற்கையில் காணும் தீ முதலியவற்றை உருவகப்படுத்தியவையே அத்தெய்வங்கள். பல நூறு ஆண்டுகளாக ஆரியம், ஆரியமல்லாத பண்பாட்டினர் நெருங்கிப் பழகிய பின்னர் உருவாகிய புதுக் கருத்தை அந்த ரிக் தெரிவித்தது. 44. உபநிஷத் காலத்தில் ‘பிரமன்’ ‘ஆத்மன்’ இரண்டும் இணைக்கப் பட்டன. வேதங்களில் (சம்ஹிதை) ஆத்மன் என்பது சாகும் பொழுது உடலைவிட்டு நீங்கும் ஆவியைக் (டகைந - செநயவா) குறித்தது. மனித உயிர் மட்டும் வானுலகத்துக்குச் hநயஎநn சென்றதாகக் கருதினர். நாளடைவில் மனித உயிர் வானுலகம் செல்லும் என்ற எண்ணம் மாறி “ஆத்மன்”- உம் “பிரமன்” உம் இறுதியாக ஒன்றே என்ற எண்ணம் வந்தது. அதுவே தத் த்வம் அஸி கூhயவ (க்ஷசயாஅயn) வாடிர (வாந hரஅயn ளடிரட) யசவ (தமிழில் ‘அது நீ தான்’ (நீயாய் இருக்கிறாய் என்று நீட்டத் தேவையில்லை) சாஹ்னர் ஷ்யநாநேச (1966) ழiனேரளைஅ பக்கம் (எiii)கூறுவது போல் “உபநிஷத்துகளின் அடிப்படைக் கொள்கை ‘பிரமனும் ஆத்மனும் ஒன்றே’: அதாவது பிரபஞ்சம் நிலைப்பதற்குக் காரணமானதும் என்றும் மாறாததுமான உள்ளீடு உhயபேநடநளள நளளநnஉந எதுவோ அதுவே மனிதனுக்குள்ளும் உறையும் மாறாத உள்ளீடு ஆகும். 45. ரெனோ 1953 “பிரமன்’ உடைய முற்கால அர்த்தத்துடன் தொடர் புடையதே பிற்கால “பிரமன்” உடன் தொடர்புடையது; முதற்கட்டத்தில் அச் சொல் உயிரிகளிடம் மறைவாய் இருந்த உயிராற்றலை குறித்தது போல அடுத்தகட்டத்திலும் அதையே குறித்தது” என்பர். நாளடைவில் அச்சொல்லின் பொருண்மை மாறிவிட்டதை அரை குறையாகவே ரெனோவின் வாதம் விளக்குகிறது. (மேலே 33ம் பத்தியிற் சொன்னது போல வேதக் கோட்பாடு களுக்கு மாறான உபநிஷத் கோட்பாடுகளை ஆரிய மொழி பேசுநர் சுயமாகவே உருவாக்கிக் கொண்டிருக்கலாம் என்ற ரெனோ கருத்து சரியல்ல) ஆரியமல்லாத சிந்தனைகளின் தாக்கத்தால்தான் உபநிஷத்துகள் உருவாயின என்பது அவருக்குப் புரியவில்லை. 46. ‘பிரமன்’ மற்றும் பிற்கால வேதாந்த தத்துவத்தில் வரும் ‘ஆத்மன்’ இரண்டும் செயல்படும் பண்பாட்டுக் கட்டமைப்பில் மாயை என்னும் முக்கியமான கோட்பாடும் அடங்கும். வேதப்பாடல்களில் ‘மாயை’ தந்திரம்/ ஏமாற்று என்ற பொருளுடன் தான் வந்தது. நாளடைவில் நாம் புலன்களால் காணும் பிரபஞ்சமே அடிப்படையில் மாயையே (கற்பிதமே) என்ற அடிப்படையில் ‘மாயை’ பிரபஞ்சத்தைச் சுட்டுவதாயிற்று. ‘பிரமன்’, ‘ஆத்மன்’ ஆகியவற்றைப்போல ‘மாயை’ யும் வேதப்பாடல்களில் எளிய பொருளில் வந்தது மாறி உயர் நுணுக்கமான சிந்தனை உருவாக்கத்தைக் குறிப்பிடலாயிற்று. இந்திய மண்ணில் இவ்வாறு வியத்தகு முறையில் உருவான (இந்து) மததத்துவத்துக்கு ஆதாரமாக அமையக்கூடியது ஒன்றும் இந்தோ-ஐரோப்பிய இந்தோ இரானிய மதக்கோட் பாடுகளில் இல்லை. இந்து மதத் தோற்றத்தில் ஆரியமல்லாதார் பங்கை ஏற்றுக்கொள்ள இந்தியவியலாளர் பலருக்கு மனம் இல்லை; ஆனால் ஏற்காமலிருப்பது அபத்தம் hiபாடல ரசேநயடளைவiஉ. ஆரியமல்லாதார் பங்கு என்பதில் பெரும்பங்கு வகித்தவர் எண்ணிக்கையிலும் பண்பாட் டுயர்விலும் ஓங்கியிருந்தவர் திராவிட மொழி பேசுநர் என்பதை நினைவிற்கொள்க. 47. உபநஷத் காலக் கருத்தியலில் (பெரும்பாலும் ஆரியமல்லாதார் தாக்கத்தால் உருவான) யோகம், சமாதி, தப°, அகிம்சை இவைபற்றிப் பார்ப்போம். (i) யோகமானது மனத்தையும் சிந்தனையையும் ஆன்ம வளர்ச்சிக் காகக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்துவதாகும். யோகமும் துறவு மனப் போக்கும் யளஉநவiஉ வசயனவைiடிn இந்தியாவில் மிகு தொன்மை வாய்ந்தவை. ரிக்வேதகாலத்துக்கு குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநிலை அடைந்திருந்தது சிந்து நாகரிகம். அந்நாகரிக எச்சங்களில் மொகெஞ் சோதாரோவில் கிடைத்த தாயத்து/ முத்திரை ஒன்றில் யோகிகளுக்குரிய ஆசனத்தில் ஒருவர் இருக்கிறார். வேதகாலத்துக்குப் பின் புகழ்பெற்ற மக்கட் பெருக்கக் (கநசவடைவைல) கடவுள் ஆன சிவனை இந்த யோக ஆசனத்தில் தான் அடிக்கடி அமைப்பர். அவன்தான் மாபெரும் யோகி(ஆனால் ஏனைய கடவுளரையும் அப்படிக் காட்டக் கூடாதென்று இல்லை) (ii) யோகத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவதின் உச்சகட்டம் தான் சமாதி (ஊடிnஉநவேசயவiடிn). (ii) தப° என்பது யோகப்பயிற்சி செய்பவர்களும் துறவோரும் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளையும் உடல் மனக் கட்டுப் பாடுகளுக்கும் வழங்கும் பெயர். (iஎ) இப்பண்பாட்டுச் சூழலில் அகிம்சையும் ஒரு கூறு ஆகும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதவியவை இவற்றுக்கு எந்த இன்னலும் செய்யக்கூடாது என்பது அகிம்சை. (எ) வேத காலத்துக்குப் பின்னர்தான் துறவு யளஉநவiஉளைஅ பெருவளர்ச்சி அடைந்தது. ஆரியமொழி பேசுநர் பண்பாட்டில் உருவானதன்று துறவு. (எi) மேற்சொன்னவை பற்றியெல்லாம் உபநிஷத் காலத்தில் தான் முதலில் கூறப்படுகிறது என்பதிலிருந்தே (பிற சான்றுகளுடன் சேர்ந்து) இந்திய மேல்மட்டத்தொல்வரவில் ழுசநயவ கூசயனவைiடிn அக்கால கட்டத்தில் தான் பெருமளவில் ஆரியமல்லாத மிகமுக்கியமான மத தத்துவக் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டன என்பதை உணரலாம். முன்னிருந்தவை யும் இப்படிச் சேர்த்தவையும் கலந்துதான் இன்று நாம் இந்த மதம் என்று அழைக்கும் மதம் உருவானது. வேதங்களுக்குப் பிற்பட்ட காலம் யீடிளவ எநனiஉ யீநசiடின 48. இக் காலகட்டத்தில் தான் இந்தியாவின் பெரும் தத்துவங்கள் உருவாயின. மேற்கண்ட உபநிஷத் கோட்பாடுகளும் பிறவும் நாளடைவில் கட்டுக்கோப்பாக இணைக்கப்பட்டு தனித்தனி தத்துவ மரபுகள் உருவாக்கப் பபட்டன. முக்கியமானவை சங்கரரும் இராமானுசரும் இறுதி வடிவம் தந்த மரபுகள். வேறுபல மரவுகளும் உருவாயின. வேதங்களிலிருந்து சில கொள்கைகளையும் வேதமல்லாத மரபுகளிலிருந்து சிலவற்றையும் சேர்த்து சில மரபுகள் உருவாயின. புருஷ, பிரக்ருதி இவற்றை வலியுறுத்தும் சாங்கியம், யோகம் இரண்டும் இப்படி உருவானவை. 49. நிலைப்படுத்த கோட்பாடுகளுடன் பிற்காலத்தில் வளர்ச்சி யடைந்த செம்மைப்படுத்தப்பட்ட இந்து மத உடயளளiஉயட hiனேரளைஅ தத்துவங்களை நான் இங்கு விவாதிக்கப்போவதில்லை. இக்கட்டுரையின் நோக்கத்துக்கு அது தேவையில்லை. எனினும் பிற்காலத்தில் பொது மக்கள் பயிலும் புனித நூல்கள் யீடியீரடயச ளஉசiயீவரசநள மூலம் வலுப்பெற்ற முக்கியமான கோட்பாடுகள் அவற்றோடு பிணைந்து உருவான நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாகச் சில கூறுவேன். குறிப்பாக பொதுமக்களிடம் பிரபலமாக வழங்கும் °ம்ருதிகள் (இதிகாசங்கள் பகவத்கீதை உட்பட; புராணங்கள்) குறிப்பிடுவனவற்றை; (வேதங்களும் அவை சார்ந்த ஆரண்யக, பிராமண உபநிஷங்கள் முதலியவையும் °ருதி ஆகும்.) °ருதி முழுமையும் மேல்மட்டத் தொல்மரபு; பொதுமக்கள் புனித நூல்களும் அவ்வாறே (ஆனால் கீழ் மட்டத் தொல் மரபு மூலம் முதலில் நுழைந்து பின்னர் மேல்மட்டத் தொல் மரபாக மாறிவிட்டவை பலவாகும்.) 50. (i) வேதமதத்துக்கு எதிரானவையும் வேதகாலம் முடிந்த பின்னர் உருவானவையும் ஆன ஜைனம், புத்தம் ஆகியவற்றைப் பற்றி இந்நிலையில் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே உபநிஷத்துகளின் கோட்பாடுகள் பலவற்றைச் சேர்த்துக் கொண்டன. ஆனால் அவற்றுக்கு சற்று வேறுபாடான வியாக்யானங்களைத் தந்தன. எனினும் அவையிரண்டுமே பிராமணப் பூசாரிகளை ஏற்கவில்லையாகையாலும் “வேதங்களே இறுதிப் பிரமாணம்” என்பதையும் மறுத்தனவாகையாலும் அவை மரபை மீறியவை ரnடிசவாடினடிஒ என அழைக்கப்பட்டன. இரண்டுமே ஆரியமல்லாத (குறிப்பாகத் திராவிட) மரபுகளையும் தம் மதங்களில் சேர்த்துக் கொண்டு போற்றின. (ii) ஜிம்மர் (1951: 218-19) கூறுவது “இந்தியாவுக்குள் புதிதாக நுழைநத வேத-ஆரிய கருத்தோட்ட தத்துவம், ஆன்மீக உணர்வு ஒருபால், இவற்றிடையே ஏற்பட்டதாக்கம், உரசல் காரணமாக இந்திய தத்துவ வரவாற்றில் பெருமளவுக்கு, பல கால கட்டங்களில் கருத்து மோதல்கள் ளநசநைள டிக iவேநசயஉவiடிளே பல ஏற்பட்டு வந்துள்ளன. ஆரியக்கருத்தோட்டத்தை முக்கியமாக பிராமணர் ஆதரித்துவந்தனர், திராவிடக் கருத்தோட்டத்தை தொல் இந்தியர்களான கருநிற, ஆரியமல்லாத மக்களைச் சார்ந்த, அரசர்களும் சிற்றரசர்களும் ஆதரித்தனர். வேறெந்த இந்திய சித்தாந்தத்தையும் விட ஜைனமே திராவிட மொழிபேசுநர் மதக் கோட்பாடுகளை அதிகத் தூய்மையோடு காத்துப்பேணி வந்துள்ளது. சாங்கியம், யோகம், தொடக்க கால புத்தமதம், உபநிஷத்து தத்துவங்களின் பெரும் பாலானவை(ஏன் வேதாந்தப் பிரிவுகளில் “அத்வைதம் சூடிn-னரயடளைஅ” என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் தனிப்பிரிவுகள் ஞநளளiஅளைவiஉ னரயடளைஅ கூட) இவையனைத்துக்குமே அடிச் சட்டமாக அமைந்தது “இவ்வுலக வாழ்வு துயரமானது” என்ற அடிப்படையில் அமைந்த த்வைதக் கொள்கை. ஞநளளiஅளைவiஉ னரயடளைஅ ஆகிய திராவிடசித்தாந்தக் கொள்கையை எளிதானதாக, டாம்பீகமில்லாததான, வெட்டொன்று துண்டிரண்டு ஊடநயn - உரவ வடிவில் நேரடியாகப் பின்பற்றிப் போற்றி வருவது ஜைனம்தான் (iii) மேலும் ஒரு படிசென்று ஜிம்மர் “பின் காலத்தில் பண்டைய இந்திய தத்துவத்தின் 6 மரபுகள் என்று சுட்டியவற்றை” உருவாக்கிய கருத் தோட்டங்களுக்கு அடிநாதமாகிய விளங்கிய மனநிலை பற்றிய விவாதம் யயேடலளளை டிக வாந யீளலஉhந வாயவ யீசநஎயடைநன in வாந ளiஒ ளலளவநஅள டிக உடயளளiஉயட iனேயைn யீhடைடிளடியீhல ஆனது. அந்த 6 மரபுகள் தனித்தனியாக உருப் பெரு முன்னரே ஜைனர் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது என்றும் அக்கருத்துகள்தாம் பின்னர் சாங்கியம், யோகம் மூலமாக விரிவாக விளக்கப்பட்டன என்றும் கூறுகிறார். இவையெல்லாம் முதலில் ஆரியமல்லாதவர் சிந்தனையில் உதித்தவையே என்பர் ஜிம்மர். (iஎ) இடைக்காலத்தில் ஆநனநைஎயட யீநசiடின இந்தியாவில் உருவான தந்திர கூயவேசய கோட்பாடுகள் முதலில் (குறிப்பாக) சாங்கியக் கருத்துக ளாக இருந்தவைகளே என்றும் மேற்சொன்ன உளவியல் கொள்கைகளை அவை மேலும் நயமாக்கின என்றும் கூறுவர் ஜிம்மர். இவையெல்லாம் இந்தியா மட்டுமல்ல, திபெத், சீனா, சப்பான், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் நிலையிலும் புத்த சமய அறிஞர் நிலையிலும் காணும் புத்தமதக் கோட்பாடுகள் மீதெல்லாம் தாக்கம் விளைவித்தன என்பர் ஜிம்மர். 51. சாங்கியர் தத்துவத்தில் அடிப்படை ஆற்றல்கள் இரண்டு வறடி ரடவiஅயவந யளெடிடரவநள : (i) புருஷ (பொதுமக்கள் நிiலையில் சிவன்); இது ஆண் தத்துவம்; ஆன்மாவின் உருவகம்; (ii) பிரகிருதி (சக்தி) பெண் தத்துவம்: ஆயவவநச இன் உருவகம். அத்வைத வேதாந்தத்தில் பிரமன் - மாயா என்ற பாகுபாட்டுடன் இது ஒருபுடை ஒப்புமை உடையது (ஆயினும் அதில் பிரமன் தான் மெய்யானது; மாயை வெறும் பிரமையே.) 58(i) இப்போழுது இந்துத்தெய்வம் சிவன், பெரும் பெண் தெய்வம் சக்தி இவர்களை “மேல்மட்டத் தொல் வரவின்” பொது மக்கள் நிலை எவ்வாறு வழிபடுகிறது என்று பார்ப்போம். சிவன் தோற்றம் பற்றி அண்மைக் கால ஆய்வாளர் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளனர். வேத காலத்திற்குப் பின்னர் திராவிட இந்தியாவின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் தெய்வமாகிய சிவன் ஆரியமல்லாதவர்களிடம் தோன்றியவன் (தென்னாடுடைய சிவனே போற்றி) இந்தோ- ஐரோப்பிய இந்தோ இரானிய மதங்களில் சிவனின் முன் வடிவங்கள் கூட இல்லை. பிற்காலச் சிவனின் தன்மைகள் சிலவற்றைக் கொண்டிருந்த வேதகால ருத்ரன் ஆனவன் சிவன் தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்தான்; ‘ஆரிய- ஆரியமல்லாத சிந்தனைக் கலவையே அவன்’ என்பர் பெரும்பாலான ஆய்வாளர். (ii) ஆனால் 1983 துஹடீளு “வேதத் தெய்வம் ருத்ர-சிவா” கட்டுரையில் டோரி° சீனிவாசன் இக்கருத்தை ஏற்பதில்லை. °டெல்லா கிராம்ரிஷ் (கலை வரலாற்றாய்வாளர்) உடைய 1981 நூல்கள் ஆயnகைநளவயவiடிளே டிக ளுhiஎய; கூhந யீசநளநnஉந டிக ளiஎய உம் சிவனை ஆரியத் தெய்வமாகக் கருதுகின்றனர் ஆரியமல்லாத(திராவிட) தன்மையே சிவனிடம் அதிகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளாமல்)தன் கருதுகோளை ஆதாரமற்ற உன்னிப்புகள் சிலவற்றின் அடிப்படையில் டோரி° உருவாக்கியுள்ளார். “ஒன்று ருத்ரனை வேதம் சுட்டுவதால் அவன் ஆரியக் கடவுளே ; பிற்றை வேதப்பகுதிகள் ருத்ரனும் சிவனும் ஒன்று எனச் சொல்வது அதை உறுதிசெய்கிறது. எனவே சிவன் வேத தெய்வம், ஆரியதெய்வம்,” என்பார் டோரி°. அவை அவ்வாறு சொல்லி விடுவதால் மட்டும் அவன் ஆரியக்கடவுள் ஆகிவிடமாட்டான்! ஏற்கெனவே விளக்கியபடி பிற்றை வேத காலத்தில் தொடர்ந்து ஆரியமல்லாத கருத்துகள் பல நுழைந்து பழைய நிலைமைகளை மாற்றிவிட்டன. தொடக்ககாலத்தில் சிறுதெய்வங்களுள் ஒன்றாக இருந்த ருத்ரன் °வதே°வதார உபநிஷத்தில் முக்கியத்துவம் பெற்றதற்கு காரணமே படிப்படியாக அவனும் மாபெரும் திராவிடத் தெய்வமாகிய சிவனும் ஒன்று என்ற கருத்து உருவாக்கப்பட்டது தான் என்பதை டோரி° உணர மறுக்கிறார். ரெனோவைப்போல இவரும் (உண்மை நிலைக்கு மாறாக) வேத மதம் வேறெந்தத் தாக்கமும் இன்றி சுயமாகவே (உரடவரசயட எயஉரயஅ) வளர்ந்து விட்டது என்று எண்ணிக்கொள்கிறார்! (ரிக் வேத தொடக்ககாலத்திலேயே நிகழ்ந்த திராவிடப் பண்பாட்டுத் தாக்கங்களை மொழியியலாய்வு மெய்ப் பித்துள்ளதை இவர் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்) வேதம் சொல்வதெல்லாம் ஆரியம் என்று கொள்ள இத்தகைய (தவறான) சிந்தனை இடம் தருகிறது. (ஆரியப்பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் வேதம் கூறுகிறது என்பதும் சரியல்ல) ஆரியமல்லாத பண்பாட்டுக் கூறுகளைப் பெருமளவுக்கு ஏற்றுக்கொண்டு (‘ஆரியம்’ என்ற லேபிள் இருந்தாலும்) வேதகாலப் பண்பாடு அதனுடைய பிற்றைப் பாதியில் தன் மூல இயல்பை இழந்து விட்டது என்பதை டோரி° உணர்ந்திலர். 53. மாபெரும் பெண் தெய்வத்துக்கு வழங்கும் பெயராகிய சக்தியைப் பற்றியும் அவள் வடிவங்களையும் பற்றிப் பார்ப்போம். சிவனும் சக்தியும் பிரிக்கமுடியாதபடி இணைந்தவர்கள் ஆகையால் சக்தி ஆரியமல்லாத தெய்வம் என்பதற்கு மறுபேச்சில்லை. (டோரி° 1983) சக்தியின் இணை சிவனை வேத தெய்வம்; ஆகவே ஆரிய தெய்வம் என்று காட்டமுயலும் போது இதனை மறந்துவிடுகிறார். மேல்மட்டத் தொல்வரவின்படி (பசநயவ வசயனவைiடிn) சிவனும் சக்தியும் கணவனும் மனைவியர். சாங்கிய தத்துவத்திலும் அதன் அடிப்படையில் அமைந்த தந்திர வழிபாட்டிலும் சிவனும் சக்தியும் எதிர் துருவங்கள்; ஆனால் ஒன்றில்லாவிட்டால் மற்றதில்லை என்ற அளவுக்குப் பிணைந்துள்ளவர்கள் (உடடிளநடல உடிnநேஉவநன யள யீடிடயச, யனே உடிஅயீடநஅநவேயசல) 54. ‘சக்தி’ யின் அர்த்தம் ‘ஆற்றல் (யீடிறநச, நநேசபல)’ ஆகும். புதியதை உருவாக்கும் ஆற்றல் (உசநயவiஎந யீடிறநச) பிரபஞ்சத்தின் ஆற்றல் சம°கிருதத்தில் அது பெண்பாற்சொல்;பெண் தெய்வம் ஆக உருக் கொடுத்து அச்சொல்லின் தன்மையைப் பருவுலகிலும் காட்டுகின்றனர் மேல் மட்டத் தொல்வரவில் விஷ்ணு, சிவன் இவர்களை வழிபடுபவர் களைஅடுத்து மிக அதிகமானவர்கள் வழிபடுவது சக்தியைத்தான். விஷ்ணு/சிவனை வழிபடுபவர்களிடையே கூட “இந்த ஆண் தெய்வங்கள் செயல் திறன் அற்ற மரக்கட்டைத்தன்மையுடையவர்கள்; பருவுலகில் சுயமாகச் செயலாற்ற இயலாதவர்கள் -தத்தம் மனைவியரின் ஆற்றலைப் (னலயேஅiஉ நநேசபல) பெற்றால் ஒழிய” என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மாந்தர் களிடம் சக்தி உள்ளது- ஆனால் ஆணைவிடப் பெண்ணிடம் அதிகமாக, என்று கருதப்படுகிறது. சக்தி பற்றி இந்துமதத்தில் பரவலாகப் பேசப்படினும் அச்சிந்தனை உச்ச கட்டத்துக்கு வளர்ந்தது தமிழ் நாட்டில்தான்; 2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச்சங்க இலக்கியத்திலேயே இது வலியு றுத்தப்படுகிறது; எனவே சக்தி பற்றிய கோட்பாடுகள் திராவிட மொழிபேசுநர் உருவாக்கியவையே என்றுதான் தாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது (வட இந்தியாவில் இதிகாச, புராண காலத்தில் கற்புள்ள பெண்ணின் ஆற்றலை ‘சக்தி’ என்று அழைக்கும் மரபு தொடங்கி வளர லாயிற்று) 55. ரிதா கிரா° சவைய பசடிளள (1978துஹடீளு 46: 269-291-) “பெண் தெய்வத்தின் முக்கியத்துவத்தை நிறுவ உதவும் இந்துப் பெண்சிறு தெய்வங் களைப் பற்றிய செய்திகள்” கட்டுரையில்) தற்கால இந்து மதத்தில் சிறு பேய்த்தெய்வத்திலிருந்து மாபெரும் தெய்வம் அடங்கலாக ஒவ்வொன் றுக்கும் இணையான பெண்தெய்வம் உள்ளதை விளக்குகிறார். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அவரவருக்குரிய முழுத்தன்மையை அப்படியே கொண்டுள்ள பெண் இணைத் தெய்வமூர்த்தங்கள் (iஉடிளே) உள்ளன. மும்மூர்த்திகளையுமே சில இடங்களில் பெண்வடிவில் காட்டுவர். வேதத் தொல்வரவின் பிற்றை வளர்ச்சியில் பழைய வேத ஆண் தெய்வங்களுக்கு இணையாகப் பெண் தெய்வங்கள் ஒட்டவைக்கப்பட்டனர். இந்திய நாட்டிலேயே உருவான, குறிப்பாக திராவிட மொழி பேசுநர் உருவாக்கிய உள் நாட்டுக் கடவுட் சிந்தனையின் தாக்கத்தையே இது நிலைநாட்டு கிறது; பிற்றை வேதக்காலத்திலிருந்தே இது தொடங்கிவிட்டது எனலாம். 56. (மேலே விரிவாக நிறுவிய மெய்ம்மைகளுக்கு மாறாக) இந்திய வியலாளரின் பொதுவான பார்வையானது “இந்து மதத்தின் முக்கியமானவை யெல்லாம் (பெண் தெய்வமுதன்மை உட்பட) வேதங்களில்தான் அதாவது ஆரிய மொழி பேசுநரிடமே முதலில் தோன்றியது” எனச் சாதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு சுகுமார் சென் ஆவார்! அவர் தனது 1983 கூhந பசநயவ படினனநளள in iனேiஉ கூசயனவைiடிn புத்தகத்தில் “மாபெரும் பெண்தெய்வம்” இந்தியர் மதத்தில் உருவானதைக் கூறும்போழுது புராண காலத்துக்கு முன்னர் அத்தகைய மாபெரும் பெண்தெய்வம் தெளிவாக உருவாகவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும அதே நேரத்தில் (ஆதாரமேதும் இல்லாமலே) “பிற்காலத்தில் இந்தியாவில் மாபெரும் பெண்தெய்வ உருவாக்கச் சிந்தனை அத்தெய்வவடிவங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அடிப்படைகளைத் தந்தவை முந்தை/ பிற்றை வேத நூல்கள் குறிப்பிடும் சிலபல பெண் தெய்வங்களே” என்ற துணிந்து கூறிவிடுகிறார். 57. (i) இன்றைய இந்து மதத்தில் பெண் தெய்வ வழிபாடு ஓங்கியுள்ளது திராவிடமொழி பேசுநர் வாழும் தென்னிந்தியாவிலும் (திராவிடப் பண்பாட்டு அடித்தளம் உள்ள) வங்காளம் போன்ற சில பகுதிகளிலும் ஆகும். பெண் பெரும் தெய்வ வழிபாட்டை பூதாகாரமாக வளர்த்தது மகாயான புத்தமதம் குறிப்பாக அதன் தாந்திரிக உட்பிரிவுகள். இந்து மதத்திலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. இது அதிகமாக நிகழ்ந்தது வங்காளத்திலும் வட கிழக்கு இந்தியப் பகுதிகள் சிலவற்றிலும் மேலும் அதிகமாக (வங்காளம் போன்ற பகுதிகளின் தாக்கம் காரணமாக) திபேத் நாட்டிலும் ஆகும். தென் னிந்தியாவில் ஆந்திரத்தில் சில மகாயானப் பிரிவுகள் ‘புத்தரின் தாயார்’ போன்ற பெண் தெய்வங்கள் அடிப்படையில் இத்தகைய பெண்தெய்வ வழிபாட்டை முதன்மைப் படுத்தின(டயானா மேரி பால் 1980 க்ஷரனனாளைவ கநஅiniநே னைநயட) இந்துமத தாய்த் தெய்வ வழிபாட்டுத் தாக்கம் ஜைன மதத்திலும் ஏற்பட்டது. (ii) ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு வருமுன்னர்ச் சில ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருந்த சிந்து நாகரிகத்தில் தாய்த் தெய்வ, பெண் தெய்வ வழிபாட்டுக கூறுகளைக் காணமுடிகிறது. சிந்து நாகரிகத் தொல்லியல் அகழ்வாய்வுகளில் ஆண் சின்னமான லிங்கங்களும், லிங்கத்தின் பெண் இணையான யோனியைக் குறிக்கும் கல்வடிவங்களும் (சiபேளவடிநேள) கிடைத்துள்ளன. சிந்து நாகரிகக் காலம் சார்ந்த அல்லது அதற்கு முந்தைய மைய கிழக்குக் தொல்நாகரிகங்களிலும் நண்ணிலக்கரைத் தொடக்க நிலை (ஞசநஉடயளளiஉயட) நாகரிகங்களிலும் வழங்கிய மதங்களிலும் வழிபாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பெண் தெய்வவழிபாடும் (i) சந்ததியைப் பெருக்கும் தாய்த்தெய்வ ஆற்றலாகவும் (ii) காம உணர்வை ஊக்குவிக்கும்/ அதன் மூலம் அழிவுக்கு வழிவகுக்கும் ஆற்றலாகவும், நடைபெற்று வந்தது. திராவிட மொழி பேசுநரின் முன்னோர் அவ்விடங்களிலிருந்தோ அதையொட்டிய பகுதிகளிலிருந்தோ (ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு நுழைவதற்கு 2000-1000 ஆண்டுகட்கு முன்னரே) இந்தியாவுக்கு வரும்பொழுது பெண்தெய்வ வழிபாட்டை உடன் கொண்டுவந்திருக்கலாம். (57ய முன்பத்தியின் கடைசி வாக்கியத்தில் சொன்ன ஜோபர்கு கருத்து பற்றிச்சில கூறவேண்டியுள்ளது: 1990இல் இந்தியாவில் திராவிட (தமிழிய) மொழிகளின் தொன்மைபற்றி ஒருசில அறிஞர்களின் கருத்து அப்படி இருந்தது. இன்று அப்படி அல்ல. இன்று ழரஅயn ஞயடயநடிவேடிடடிபல, ழரஅயn பநநேவiஉள யனே னுசூஹ ளவரனநைள; சூடிளவசயவiஉ யனே அடிவாநச கூடிபேரந ளவரனநைள ஆகிய புலங்களின் திட்டவட்டமான முடிவு பின் வருவதே; தற்கால மாந்த இனம் (ஹஆழ) ஆப்பிரிக்காவை விட்டு இ.மு(இன்றைக்கு முன்னர்) 70000-50000 கால அளவில் வெளியேறி அன்றையத் தென் னிந்தியக் கரையோரக் கண்டத்திட்டு ஊடிவேiநேவேயட ளுhநடக) வழியாக ஆ°திரேலியா வரைச் சென்று பரவிய காலகட்டத்திலேயே தமிழிய மொழி(முந்து தமிழ்) தொல்தமிழ் ஞசந கூயஅடை / ஞசடிவடி கூயஅடை (அல்லது முந்து திராவிடம் தொல் திராவிடம்) என்றும் கூறலாம்) பேசுநர் தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் குடியேறிவிட்டனர். இந்தியாவில் தமிழ் மொழி பேசுநரின் தொன்மை இ.மு. 10000க்கும் பல பத்தாயிரம் ஆண்டுகள் முற்பட்டதாகலாம். இக்கட்டுரையைத் தமிழாக்கியோன் இந்த கில்பர்ட் °லேட்டர்1924நூற் செய்திகள் சிலபற்றிய இன்றைய(2014) நிலையை விளக்கிமேலே எழுதியுள்ள விரிவான முன்னுரை ரயீனயவiபே கடிசறயசன யைப் பார்க்க.) 58. இந்தோ ஐரோப்பிய மொழிபேசுநர் மதத்தில் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு மிகச் சிறிதளவு மதிப்பே இருந்தது. பண்டைய கி.மு. 1500-கி.மு. 500 கால கிரீக் நாட்டுப் பழந்தெய்வங்களில் முக்கியமான பெண் தெய்வங்கள் உள்ளனவே என்றால் அவையெல்லாம் அவர்கள் கிரீ° பகுதிக்கு வந்து குடியேறுமுன்னர் பல்லாயிரம் ஆண்டுகள் அப்பகுதியில் வாழ்ந்த தொன்மை நண்ணிலக் கரை நாகரிகங்கள், மற்றும் இந்தோ ஐரோப்பியருக்கு முந்தைய சில நாகரிகங்கள் இவற்றிடமிருந்து கடனாகப் பெற்றவைதாம். கிம்புடா° பiஅரெவயள (1952) கூhந படினனநளளநள யனே படினள டிக டிடன நுரசடியீந. டுடினேடிn, கூhயஅநள & ழரனளடிn) 59. இந்தியாவில் பெண்கள் மாபெரும் சக்தி படைத்தவர்கள் என்ற கருதப்படுவதை மேலே கண்டோம். பெண்கள் சார்ந்த வேறு பல பண்பாட்டுக் கூறுகளும் ஆரியமல்லாததாகவே தோன்றுகின்றன.தனது கட்டுரையில் ஹார்ட் தடிரசயேட டிக யளயைn ளவரனநைள 32:233- 250 பெண்கள் சார்ந்த சில இந்துப் பழக்கங்களை பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களில் காணலாம் என்கிறார். வட இந்தியாவில் இன்று உள்ளது போல் அன்றி வேதகாலத்தில் அங்கு மகளிர் கற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிறார். வேதகாலத்துக்குப் பின்னர்இந்நிலை மாறியதற்கு “கற்புடை மகளிரின் புனித சக்தி குறித்த பழந்தமிழ் ஐதீகம் வடஇந்தியாவில் பரவியது காரணமாயிருக்கலாம்” என்கிறார். இத்தகைய கற்புசார் நிலைப்பாடுகள் வேத கால ஆரியப் பண்பாட்டில் இல்லவே இல்லை. 60. வேத காலத்துக்குப் பின்னர்த்தான் விதவை மறுமணத்தடை, விதவைகள் வாழ்க்கை முறையில் கட்டுப்பாடுகள், கணவன் பெயரை மனைவி சொல்லத்தடை வயbடிடி போன்றவை வடஇந்தியாவில் புதிய பழக்கங்களாகப் பரவின. தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பார்த்தால் மிகப்பழங் காலத்திலேயே இவை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. வட இந்திய °கந்தபுராணம் விதவைகள் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறிய தலைமொட்டை, உண்டியைச் சுருக்குதல், கட்டிலில்துயிலாமை, இறந்த கணவனுக்குத் தவறாமல் ஆண்டு தோறும் பிண்டம் அர்ப்பணித்தல் ஆகியவற்றை அப்புராணத்துக்கு 600 ஆண்டுகளுக்கும் முன்னரே பழந்தமிழ்ச்சங்க இலக்கியம் குறித்துள்ளது. விதவையைக் கணவன் பிணத்துடன் கொளுத்திக் கொல்வதும்(சதி) ஆரியமல்லாத பழக்கமாக இருக்கலாம். சங்க இலக்கியப் பாடல்களில் தான் சதி, விதவைகளின் துறவு வாழ்க்கை முறை, இவை விதிக்கப்பட்டதற்கான காரணம் சொல்லப்படுகிறது என்பார் ஹார்ட்(காரணம் விதவைப் பெண்ணிடம் தெய்வீக சக்தி உள்ளது; அவளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்த சக்தி அவளையும் பிறரையும் அழித்துவிடும் என்ற அச்சம்). கி.மு.300லிருந்தே திராவிடக் கூறுகள் ஆரியப்பண்பாட்டில் ஏறத்தொடங்கிவிட்டன என்பர் ஹார்ட். அந்த காலகட்டத்தில்தான் சம்°கிருதத்திலும் அந்நாள் இந்தோ-ஆரியப் பேச்சுமொழிகளான ஆபப்ரம்சங்களிலும் திராவிட(தமிழிய) மொழிச் சொற்கள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்ததுடன், தமிழருடைய (மற்றும் தக்காணத்தில் அன்று திராவிடமொழியாளர் அரசாண்ட பகுதிவாழ் திராவிட ருடைய) செய்யுள் கோட்பாடுகளும், வாய்மொழி இலக்கியக் கூறுகளும் சம்°கிருத ஆபப்ரம்ச இலக்கியங்களில் நுழைந்திருக்க வேண்டும் என்பர் ஹார்ட். 61. அண்மைக்காலம் வரை தென் இந்தியாவில் கேரளப்பகுதியில் திராவிட நாயர் சாதியினரிடம் தாய்வழி உறவுமுறை செயல்பட்டு வந்தது. தாய்வழி உறவினருக்கே திராவிடர் உறவுமுறை முதன்மை தந்தது, தருகிறது. எனவே பழங்காலத்தில் திராவிடர் தாய்வழிஉறவு முறையை பின்பற்றினர் எனலாம் (தாம° டிராட்மன்1981 னுசயஎனையைn முiளோiயீ) திராவிடர் தாய்த்தெய் வழிபாட்டுக்கே முதன்மை தந்தவர்கள், தருபவர்கள். பெண்களிடம் சக்தி உள்ளது என்ற கோட்பாடும் அவர்களிடமே வலுவாக உள்ளது. இவற்றை யெல்லாம் ஒருசேரக்கருதிட வேண்டும். 61.(i) வேதகாலத்திற்குப் பிந்தைய இந்துமதத்தில் புகுந்தவற்றை யெல்லாம் இதிகாசங்கள்(பகவத்கீதை உட்பட), புராணங்கள், யோக சூத்திரங்கள்(மிகப்பிற்காலத்தில் தந்திரங்கள், நாட்டுமொழிகளில் பக்தி இலக்கியம் ஆகியவையும்) இவற்றின் மூலம் இலக்கியத்திலும் ஏறி விட்டன என்பதை மேலே கண்டோம். சில இந்தோ-ஐரோப்பியக் (ஆரியமொழி பேசுநர்) கூறுகள் இவ்விலக்கியங்களிலும் உள்ளன (குறிப்பாக ஆரியத் தலைவனின் இலட்சிய உருவமாகக் காட்டப்படும் இராமன்) எனினும் இந்தோஐரோப்பியமல்லாத உள்ளடக்கம் தான் இவற்றில் பெரிதாக உள்ளது. (ii) தண்டேகர்(1971: 48-49) முதலில் ஆரியருக்கு முந்திய “மக்கட் பேறு- வளமை கநசவடைவைல” கடவுளாக இருந்த விஷ்ணுவை வேதமியற்றிய ரிஷிகள் ஆரியக் கடவுளாக்கிவிட்டனர் என்கிறார். விஷ்ணுவின் அவதாரமான கருமை நிறக் கிருஷ்ணன் ஆரியமல்லாத முக்கியக்கூறுகளுடன் உருவாக்கப் பட்டவன். விஷ்ணுவின் ஏனைய அவதாரங்களில் பல விலங்கு, பாதி விலங்கு- பாதி மாந்தன் ஆக உள்ளன; பிற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநர் புராணக்கதைகளில் இப்படி இல்லை. கிரேக்க இதிகாசங்களில் இருக்கின்றனவென்றால் அவர்கள் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பெருமளவு ஆரியமல்லாத கிரேக்கத்துக்கு முந்தைய நாகரிகங்களிட மிருந்து பெற்றுக் கொண்டது தான் காரணம். (iii) யோகிகளின் தலைவன் சிவன் ஏறத் தாழ முற்றிலும திராவிட மொழி பேசுநரின் தெய்வமே, அவன் மனைவி சக்தியும் அவள் மேற் கொள்ளும் பல வடிவங்களும் தோற்றங்களும் அனைத்துமே திராவிடம் தான். தமிழரின் மிக முக்கியமான போர்க் கடவுள் முருகன், இந்தியாவெங்கும் இன்றும் மிகப்பிரபலமாக வழங்கும் யானைத்தலைக் கடவுள் கணேசன் இருவருமே திராவிடத் தெய்வங்களே. (iஎ) இந்து மதத்தில் காண்பனவும் இந்தோஐரோப்பியர் மதங்களில் ஒப்புமைகள் இல்லாதனவும் ஆன பலவற்றுள் அடங்குவன:- சில விலங்குகள் (குறிப்பாக பாம்பு) வழிபாடு; ஒரளவுக்கு குரங்கு வழிபாடு; அரசமரம் போன்ற பலமரங்கள், துளசிச் செடி; போன்றவற்றை வழிபடுதல் முதலியவையும் இவையெல்லாம் இந்தியாவெங்கும் பரவியுள்ள வெனினும் இன்றும் திராவிடர் அடர்ந்து வாழும் தென்னிந்தியாவிலேதான் மிக முக்கியமான வையாக யாண்டும் பரவியுள்ளன. 63. இந்து மத வழிபாட்டில் முக்கிய பங்கேற்கும் பின்வருவன வெல்லாம் ஆரியமல்லாதவையே; கோயில்கள், புனித°தலங்களுக்கு யாத்திரை; கோயில் வழிபாடு; கோயில் வழிபாட்டோடு இணைந்த நாட்டியம், தேவதாசிகள் பங்கேற்பு போன்றவை; தெய்வங்களின் உருவாரங்களுக்கு iஅயபநள முதன்மை; உயிர்ப் பலிக்கு மாற்றாக தெய்வத்துக்குப் படைக்கப்படும் பழம், பூ, மஞ்சள், குங்குமம், சாம்பிராணி (எனினும் சடங்குகளில் சம்°கிருதச் சொற்களே பயன்படுத்துகின்றனர்;) அத்துடன் தீயும் (அக்னியின் அடங்கிய வடிவமாக) இடம் பெறுகிறது. இவை ஆரியத்தாக்கத்தின் எச்சங்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்து மதச் சடங்காசாரங்கள் ஏறத்தாழ முழுமையுமே ஆரியமல்லாதவை; பெருமளவுக்கு திராவிடமொழி பேசுநர் பண்பாட்டிலிருந்து பெற்றவைதாம். 64. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்து மதம் பற்றிய இப்பகுதியை முடிக்குமுன்னர் (இந்து மத ஆய்வாளருள் பெரும்பாலோர் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடுவனவான) திராவிடக்கூறுகளான பக்தி, ஜாதி ,வீரவிளையாட்டு மூன்றைப்பற்றிச் சில கூறுவேன். இந்திய நாகரிகத்தின் திராவிடமொழி பேசுநரின் முதன்மையான பங்களிப்பை வலியுறுத்தி நான் மேலே கூறிய வற்றுக்கு இவையும் வலிமை சேர்ப்பவை. 65.(i) பக்தி என்பது ஒருவர் (அல்லது ஒரு குடும்பம், குழு, சாதி முதலியன) விஷ்ணு, சிவன் சில பகுதிகளில் சக்தி போன்ற கடவுளரின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை(அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மூர்த்தத்தை)ஆழமான ஈடுபாட்டுடன் தனது முழுமுதற் கடவுளாக வழிபடுவதாகும். அத்தகைய பக்தியை முறையாகச் செலுத்தினால் துறக்கம்(மோட்சம்) எய்திவிடலாம் என்பது திடமான நம்விக்கை. (ii) கி.மு. 3-2 நூற்றாண்டுகளிலேயே பக்திசார் வழிபாடு என்ற புதுவகைச் சமயம் வட இந்தியாவில் தொடங்கி விட்டதாகக் கருது கிறார்கள். ஆனால் அதன் இறுதி வடிவத்தில் வட இந்தியா தென் னிந்தியா இரண்டின் தாக்கமும் உள்ளது. மையக்கிழக்கு நாடுகளிலிருந்து படையெடுத்து வந்தவர்களிடமிருந்து பெற்ற சில கருததுகளும் இருக்கலாம் என்கின்றனர். இன்று நாம் காணும் பக்தியில் தென்னிந்திய (திராவிட மொழிபேசுநர்) பங்களிப்பே மிக முக்கியமானது என்பதைப் பலர் உணர வில்லை. ஷ்யநாநேச (1966:134) பக்தி இயக்கம் தமிழரிடையே தான் தோன்றிப் பின்னர் வடக்கே பரவியது என்பதை உணர்ந்து கூறுவது வருமாறு. அதுவரை“சந்நியாசிகளின் நெறியான துறவு, தன்னை மறத்தல் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த ரகசிய மந்திர வழிமுறை அலளவiஉயட வநஉhniளூரந” போன்று இருந்த இந்துமதத்தில் “தன்னைக் கடவுளின் கருணைக்கு ஒப்படைத்துவிட்டு கடவுளின் மேல் ஆழ்ந்த பற்றைக் கொண்டாலே போதும்; வீடு பேறடையலாம் என்ற மாற்றத்தைக் கொணர்ந்தது பகவத்கீதை தான். ஆயினும் பக்தி இயக்கத்தை உந்து சக்தியாக இந்து மதத்துக்கு தந்தது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு தான். கி.பி. 900 லிருந்து இந்து மதத்தின் உயிர்த் தத்துவக்கோட்பாடுகளுக்கு பக்திதான் வழி முறையாக உள்ளது. (பஷாம் 1954 கூhந றடினேநச வாயவ றயள ஐனேயை வையும் காண்க) (iii) பக்தன் (னநஎடிவநந) உடைய ஆழ்மன அனுபவங்களை அலளவiஉயட நஒயீநசநைnஉநள அளவை முறைப்படி சிந்தித்துப் பார்த்து, உருவாக்கப்பட்ட சைவ சித்தாந்தம் என்னும் மிக விரிந்த நுட்பமான தத்துவமும் தெளிவாக முற்றிலுமாக திராவிடர் உருவாக்கியதே (°டீபன் நெய்ல் 1974 : க்ஷhயமவi ழiனேர யனே ஊhசளைவயைn : ஊடுளு) 66. அடுத்து ஜாதி வர்ணங்கள் (உடயளளநள/டிசனநசள) ஆரியர்கள் உருவாக்கியமைதாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘பரம்பரையான ஜாதிகளும் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொழிலும்’ என்னும் பாகுபாடு ஆரியத்தைவிட திராவிடத்தைத் தான் அதிகம் சார்ந்ததாக உள்ளது. பண்டை இந்திய சமூகத்தின் ஏட்டுச்சுரைக்காய்க் கோட்பாடான நால்வகைப் பெரும் பிரிவுகளான வர்ணம் இருந்தபோதிலும் ஆரியமல்லாதாரிடம் உருவாகிய ஜாதிதான் அன்றாடச் செயல்பாட்டின் மையக் கூறாக உடிசந அமைந்தது. ஜாதியே பிற்றை இந்து மதத்தில் கோலோச்சியதாகும். (ii) முதலில் ஆரியர்களிடம் வழங்கிய மூன்று வர்ணங்களோடு நான்காவதாக சூத்திரர்களைச் சேர்த்த பின்னர் முந்தை வேத காலத்தில் இருந்த சமுதாய வேறுபாடுகள் கடுமையாயின. சூத்திரர் கீழ்நிலையினர் அநnயைடள பிற்றை வேத காலத்தில் திராவிட மொழி பேசுநர்களுள் மிகப் பெரும்பாலோரும், ஆரியமல்லாத வேறு சிலரும் சூத்திரர்களில் அடக்கப்பட்டனர். ஆரிய மொழிபேசுநர் இந்தியாவுக்கு வருமுன்னர் இங்கிருந்த ஆரியமல்லாத மக்கள் சிலரிடம், குறிப்பாக அக்காலத்தில் திராவிடமோழி பேசுபவர்களாக வடநாட்டில் இருந்தவர் களிடையே (அவர்கள் பண்பாட்டில் ஆரியத்தாக்கம் ஏற்படு முன்னரே) ஜாதிமுறை போன்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதற்கு வலுவான சான்றுகள் உண்டு. பிற்காலத்தில் ‘வர்ணக்’ கோட்பாடுகளும் மாற்றப்பட்டு வர்ணம், ஜாதி இரண்டும் ஊடும் பாவுமாகக் கலந்து பிற்காலத்தின் மிக விரிவான, எண்ணிறந்த படிநிலைகளும், தர நிர்ணயங்களும் அடங்கிய ஜாதி முறை நிலை பெற்றது. (iii) ஹார்ட் தனது 1975 கூhந யீடிநஅள டிக ஹnஉநைவே கூயஅடைள: வாநசை அடைநைர யனே வாநசை ளுயளேமசவை உடிரவேநச யீயசவள நூலில் சங்ககாலத் தமிழ் மக்களிடையே கூட சில மக்கட் பிரிவினரிடையே அந்த°து வேறுபாடு இருந்ததற்கான சான்றுகளைத் தந்துள்ளார். சாதியோடு பிணைந்த புனிதம் - தீட்டு ஞரசவைல - ஞடிடடரவiடிn கோட்பாடு திராவிடருடையது தான். பொதுவாகப் பார்த்தால் இன்றைய இந்தியாவில் பல்வேறு சாதி களிடையே மிகக் கடுமையான சாதிஅடிப்படையிலமைந்த வேறுபாடு களை இன்றும் நிலைபெறவைத்துளளவர்கள் திராவிட மொழி பேசுநர் தாம். 67.(i) இந்தியாவில் படைக் கருவிப்பயிற்சி அயசவயைட யசவள பற்றிச் சில கூற வேண்டும். (போரிடும் கலையைச் சுட்டும் அயசவயைட யசவள என்று நினைத்துவிடாதீர்!) இது படைக்கருவியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைப் பயிற்றும் கலை; தொன்று தொட்டு ஆன்மீகக் கட்டுப்பாடு, மருத்துவ ஆற்றல்கள் இவற்றோடும் தொடர்புடையது ஆகும். இது ஆசியக் கண்டத்தில் உருவானது. இந்தியாவிலோ, சீனாவிலோ, அல்லது 2000 ஆண்டுகட்கு முன்னரே அவ்விரு நாடுகளையும் இணைத்த கடல், நிலவழிப் போக்குவரத்துப் பாட்டைப் பகுதிகளிலோ உருவாகியிருக்க வேண்டும். (ii) வட இந்தியாவில் படைக் கருவிப் பயிற்சி இருந்தது பற்றி இந்திய இதிகாசங்களும் அக்நி புராணமும் கூறுகின்றன. பிற பயிற்சிகளுடன் வில்வித்தையும் கற்றுத்தரப்பட்டது; குருவைப் பணிந்தனர்; கருவிகளை வணங்கினர்; ஏனைப் பிறவும் பயின்றனர்; மருத்துவம் (வழிபாட்டு முறைகள் - லிங்க வழிபாடு போன்ற தாந்திரிக வணக்கம்) யோக அடிப்படையில் மனதை ஒரு நிலைப் படுத்துதல் ஆழ்நிலைத்தியானம் செய்தல் முதலியன. இவை யனைத்துமே அடிப்படையில் ஆரிய மல்லாதவை. இன்று படைக்கருவிப்பயிற்சி வடஇந்தியாவில் (வடகிழக்கு மூலையில்) மணிப்பூர், வங்காளம், ராஜ°தான் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் திராவிட மொழிப்பகுதி களில் பல சிற்றூர்களில் கூட உள்ளது; அந்தப்பகுதி சமூக-சமயப் பின்புலத்துடன் இணைந்து. (iii) கேரளத்தில் வட, மையப் பகுதிகளில் ஆங்காங்கு பல குழுக்கள் களரிகளை (பலஅயேளரைஅ, பயிற்சிக் கூடம்) நடத்துகின்றன. பெரும்பாலும் காவல் தெய்வமான பகவதி (சிவன்+சக்தி இணைந்தது) கோயிலுடன் சார்ந்து இது நடக்கிறது. களரிப்பயட்டு என்னும் இப்பயிற்சியை இளைஞர்களும் (சில இளம் பெண்களும்) பெறுகின்றனர். இவற்றுக்கு முற்பட்ட அடிதடா யவவையவய (தமிழகத்திலும் காண்பது) பயிற்சி போன்றவற்றை களரிப் பயிற்சி பின்பற்று கிறது எனலாம், (ஆயுர் வேத, சித்த, மருத்துவம்) மர்ம அடி (அங்கு அடித்தால், குத்தினால், அழுத்தினால்,- சாவு, மயக்கம், நோய் வரும் என்ற நிலை) போன்றவை கைவந்த குழுக்களிடம் உடற்பயிற்சி ஆன்மீகப் பயிற்சியும் பெறுகிறார்கள். பிலிப் ணயசசடைடi எழுதிய கைப்பிரதிநூல் (கூhசநந bடினநைள டிக யீசயஉவiஉந in ய வசயனவைiடியேட ளடிரவா ஐனேயைn ஆயசவயைட யசவ); ழடிறயசன சநனை & ஆiஉhயநட ஊசடிரஉhநச 1983: கூhந கiபாவiபே யசவள; ஆ.ளு.ஹ. சுயடி, 1957: ளுடிஉயைட உhயபே in ஆயடயயெச. கேரளத்தில் களரிப் பயட்டு உடன் சேர்ந்து கதகளி போன்ற நடன வகைகளும் உருவாகியுள்ளன. கீழ் மட்டத்தொல் வரவு கூhந டுவைவடந கூசயனவைiடிn 68. இது பற்றி விரிவாகக் விளக்கிட இக்கட்டுரையில் இடமில்லை. மேல்மட்டத் தொல்வரவு (மே-தொ)ஆனது. கீழ் மட்டத் தொல் வரவு (கீ. தொ) இடமிருந்தும், முன்னது பின்னதிடமிருந்தும பலவற்றை எற்றுக் கொண் டுள்ளது. (குருப் 1977 ஹசலயn யனே னுசயஎனையைn நடநஅநவேள in ஆயடயயெச கடிடமடடிசந ) ஹென்றி ஒயிட்ஹெட் 1921 (ஐஐ கூhந எடைடயபந படினள டிக ளுடிரவா ஐனேயை. இவற்றிடையே காலகாலமாக நடந்துள்ள நடந்துவரும் பரிமாற்றங்களைக் கண்டு விவரிப்பது முடியாத காரியம்; நூல்களும் ஆவணங்களும் மே.தொ வைப்பற்றி நிறையத் தெரிவித்தாலும் கீ.தொ பற்றிச் சிறுசிறு தகவல்களையே தருகின்றன. ஆயினும் கடந்த 50-60 ஆண்டுகளில் கள ஆய்வில் பற்றிய செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவரமான புத்தகங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பொதுவாக இவ்விரண்டுக்குமிடையே நடந்திருக்கக் கூடிய பரிமாற்றம் பரிணாமங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 69. எல்லா இடங்களிலும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக கீ.தொ. உள்ளது. அந்தந்த ஊர், மாவட்டம், பகுதி, மாநிலம் இவற்றில் உள்ள சிற்சில மாற்றங்களுடன் பொது நிலையில் தென்னிந்திய (திராவிட) கீ.தொ. விற்கும் வட இந்திய (ஆரிய) கீ.தொ விற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் குறிப்பிடலாம் (வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் பொதுவாக ஆரியப் பண்பாட்டில் சேர்ந்தவையாக பொதுவாகக் கருதினாலும் அடிப்படையில் அவை பல தன்மைகளில் ஆரியமல்லாதவையே. இப் பகுதிகளில் கீ.தொ மட்டுமன்றி மே.தொ.வில் கூட இதுதான் நிலைமை- பொதுவாக மே.தொ நிலைமையில் இத்தகைய பெருநிலப்பகுதிகளிடையே (சநபiடிளே) வேறுபாடு குறைவு என்றாலும் 70(i) கீ.தொ வின் முக்கியமான அம்சங்கள் எவை? மிக முக்கிய மானவை எராளமான பெண்தெய்வங்கள்- பெரியம்மை, கழிச்சல்(காலரா) நோய் அம்மன்கள் உட்பட (லாரன்° ஹ. க்ஷயbb 1975. கூhந னiஎiநே hநைசயசஉhல; யீடியீரடயச ழiனேரளைஅ in ஊநவேசயட ஐனேயை; ஒய்ட் ஹெட் 1921 புத்தகம், குருப் 1977 போன்றவை) ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமதேவதை உண்டு. பரிவார ஆண்,பெண் தெய்வங்கள் உட்பட மே.தொ வில் ஆண் தெய்வங்களுக்கு கீழ் நிலையிலேயே பெண்தெய்வங்கள்; கீ. தொவில் பெண்தெய்வங்களுக்குக் கீழ் நிலையில்தான் ஆண்தெய்வங்கள் மத்திய இந்தியப் பிரதேசங்களில் யெbb கூறுவது கிராமம் என்றால் கண்டிப்பாக ஊர்த்தெய்வக் கோயில் அல்லது மூர்த்தம் இருந்தாக வேண்டும். மே.தொவில் உள்ள பெருந்தெய்வங்கள் எட்ட நிற்பவை; கீ.தொவில்அன்றாட மக்கள் வாழ்வின் அங்கமாக அவை உள்ளன. (ii) தென்னிந்தியக் கிராமங்களில் மாடு, ஆடு சார்சடங்குகள், விலங்கு, கோழி பலி இவை பரவலாக உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் விவரிக்கும் ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு) இன்றும் மதுரையைச் சூழ்ந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. (iii) திராவிடப் பகுதிகளிலும வங்காளத்திலும் மே.தொ; கீ.தொ இரண்டிலும் பாம்பு வணக்கம் உள்ளது எ.கா னுநbடிசயா டுசூநகக 1987 நுவாnடிடடிபல 26: 63-71) கட்டுரை கேரளத்தில் “பாம்பின் துள்ளல்” பற்றியது. இந்துக் கலைகளில் நாகங்கள் பெண்ணாகக் காட்டப்படுகின்றன. நாக தெய்வங்கள் செல்வம், மகப்பேறு, நோய்நீக்கம் இவற்றைக் தரும் என நம்புகின்றனர். தென்னிந்தியாவில் பாரம்பரியமாகச் சில இடங்களில் தோட்டங்களில் பாம்புகள்குடியேறி வாழவிட்டு, உணவும் அளிக்கின்றனர். 71. கீழ்மட்டத் தொல்வரவு (கீ.தொ) குறிப்பாக திராவிட மொழி பேசும் இந்தியப் பகுதிகளில் மிகு தொன்மை வாய்ந்தவையான பெண் தெய்வ வணக்கம், மாடு, ஆடு சார் சடங்குகள், பாம்பு வணக்கம் போன்றவை இன்றும் உயிர்த் துடிப்புடன் நிலவி வருவதைக் கண்டோம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் (ஞசந உடயளளiஉயட) நண்ணிலக் கரை, மத்திய கிழக்கு நாடுகளில் இவை யெல்லாம் மிகப் பிரபலமாக நடைபெற்று வந்ததைக் கருதுக. மேற்சொன்னதுபோல அப்பகுதிகளிலிருந்து அந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் திராவிடர்களின் முன்னோர் இந்தியாவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது (கடைசி வாக்கியத்தில் ஜோபர்கு கூறும் கருத்து தவறு என்பதும் கி.மு. 10000க்கு முந்திய திராவிட (தமிழிய) மொழிப் பரவலில் னுசயஎனையைn ஹளஉநவே இல்தான் இவர்களும் இவர்களும் பண்பாடும் வடக்கு வடமேற்காக பரவின என்பதை மேலுள்ள மொழிபெயர்த்தோன் குறிப்பில் காண்க. நுண்மாணுழை மிக்க ழநசேல ழநசயள(1954) ளவரனநைள in யீசடிவடி- ஐனேடி ஆநனவைநசசயநேயn உரடவரசந நூலில் அன்றே இதை விரிவாக நிறவியுள்ளார். 1990க்குப் பிந்திய ழரஅயn ஞயடயநடிவேடிடடிபல, ழரஅயn ழுநnவைiஉள, சூடிளவசயவiஉ ளவரனநைள முதவியவையும் இதை உறுதிப்படுத்திவிட்டன.) 72. சில பல பகுதிகளில் ஆங்காங்கு யக்ட்சன் யக்ட்சி, அப்சர° போன்ற சிறுதெய்வங்களின் வணக்கமும் கீ.தொ வில் உள்ளது யக்ட்சியும், அப்சர° உம் விலங்கு, மரம்,ஆறு, போன்றவற்றில் வசிக்கும் பெண் தெய்வங்கள் ஆவைஉhநடட (1977. கூhந ழiனேர கூநஅயீடந) கூறுவது போல, “இந்தியாவில் இன்றுள்ள மிகப்பழைய புனித சிற்பங்கள் (மைய இந்தியப் பகுதியில் உள்ளவை கி.மு.300-200 சார்ந்தவை) எவையும் இந்துமதப் பிரதான(ஆண்/ பெண்) கடவுளைச் சித்தரிப்பவை அல்ல; இத்தகைய உள்ளுர்/ வட்டார சிறு தெய்வங்களையே சித்தரிக் கின்றன. முடிப்புரை 73. (i) இந்திய நாகரிகத் தோற்றம், வளர்ச்சி பற்றிய உண்மை களைத் தெரிந்து கொள்வதற்கெதிரான பெருந்தடை பெரும்பாலான மேலைநாட்டு இந்தியவியலாளரின் ஆரியச் சார்பான நிலையே. ஐரோப்பியப் பண்பாட்டுத் தொல்வரவே சிறந்தது; இந்தியப் பண்பாட்டின் “ஆரியக்” கூறுகளும் அத்தொல்வரவின் விரிவாக்கமே” என மேலை ஆய்வாளர் தவறாகக் கருதியதே இதற்குக் காரணம். அடுத்த கோளாறு இந்திய வியலாளர் பலரும் வட இந்தியாவில் பண்டு நிலவிய வேத வேதகாலத்துக்குப் பிந்திய பண்பாடுகள் ஆரிய மொழிபேசுநர் படைப்பே என அபத்தமாகக் கருதியதே ஆகும். (ii) 1975 இல் “க்ஷநசயேசன டுநறளை, நுனஅரனே டுநவைநள, ஆயசபயசநவ ஊhயளந பதிப்பித்த ஹள டிவாநசள ளநந ரள : ஆரவரயட ஞநசஉநயீவiடிளே, நுயளவயனே றநளவ நூலில் சே° கூறுவது போல “ஐரோப்பியர் (குறிப்பாக ஆங்கிலேயர்) பிராமணியப் புனிதநூல்கள், பிறபடைப்புகள் அகியவற்றை மட்டுமே ஆதார மாகக் கொண்டு இந்தியப் பண்பாட்டை தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ததால்தான் 18-19 நூற்றாண்டு ஆய்வு முடிவுகள் “பிராமணியமே அனைத்துக்கும் மூலம்” என்ற தவறான கோட்பாட்டை- அதற்கு முன்னர் இல்லாத கோட்பாடு அது- ஆதரித்தன நுசiஉ சு.றுடிடக1982 “நுரசடியீந யனே வாந யீநடியீடந றiவாடிரவ hளைவடிசல” நூலில் தெரிவிப்பது போல “வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களாக” திராவிட மொழி பேசுநர் போன்றவர்களைக் கருதி (இந்திய நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பு போன்ற விஷயங்களில்) முழுமையான, நேர்மையான மறு ஆய்வு சநநஎயடரயவiடிn மேற்கொண்டாக வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்கிறேன். 74. அண்மைக் காலத்தில் திராவிடர்கள், அவர்கள் பண்பாடு இவை குறித்து பஷாம் முதலியவர்கள் மறு மதிப்பீடு செய்யத் தொடங்கி யுள்ளதை இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். இவ்விஷயத்தில் டைலர் கருத்துக்கு மிக நெருங்கியவையே என்னுடையவை. ஆயினும் சிலவிஷயங்களை (டைலரும் பிறரும் கடைப்பிடிக்காத) புதிய கண் ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளேன். தென் ஆசியாவுக்கும் (இந்தியத் துணைக்கண்டத்துக்கும்) அப்பால் விரிந்த ஆழ்ந்த வரலாற்று ஒப்பியல் நோக்கில் இந்தியப் பண்பாட்டைக் காண வேண்டும். “இந்தியாவில் ஆரியப் பண்பாட்டுக் கூறுகள்” எனச் சுட்டப்படும் பலவற்றுக்கும் இணையானவை இந்தோ ஐரோப்பிய முதன் மொழியிலிருந்து பிரிந்த ஏனைய இ. ஐ. மொழி பேசுநர் குடியேறி வாழ்ந்த/ வாழும் (இந்தியா ஒழிந்த பிற) நாடுகளில் காணப்படவில்லையே ஏன்? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் ஒன்றால் ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே இங்கு நிலவியவையாக இருக்க வேண்டும்; அன்றால் இந்தியாவிற்கு ஆரியர் வந்த பின்னர் அவர்களுக்கும் ஏற்கெனவே இங்கிருந்தவர்களுக்கும் இடையில் பண்பாட்டுக்கலப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதே சரியான விடையாக இருக்கும். 75. தென் ஆசியாவுக்கு வந்த ஆரியமொழி பேசுநர் மீது யாருடைய தாக்கம் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்பதையும் ஆய்வு செய் துள்ளேன். சான்றுகளுக்கு ஒத்துவராதனவான விளக்கங்களைக் கைவிட்டு விட்டு (நமக்குக் கிட்டியுள்ள ஆழமான மொழியியல் சான்றுகள் மற்றும் ஓரளவுக்கு பண்பாடு தொல்லியல் சார் சான்றுகள் இவற்றின் அடிப்படையில்) வேதகால முற்பகுதிக் கட்டத்திலிருந்தே இ.ஐ.மொழி பேசுநராகிய புது வரவினர் மீது திராவிட மொழி பேசுநர் தாக்கம் தான் முதன் மையானதாக இருந்திருக்கும் என்ற வாதத்தை முன் வைத்துள்ளேன். இந்திய வரலாற்று ஆய்வாளர் பெரும்பாலோர் பண்பாடு, தொல்லியல், மாந்த மரபியல் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி மொழியியல் சான்று களைக் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்; ஆனால் இந்தோ ஆரிய மொழி யினரும் திராவிட மொழி பேசுநரும் வட இந்தியாவிலேயே பெருமளவுக்குக் கலந்துவிட்ட தொல்பழங்கால கட்டத்தில் நடந்ததை நமக்கு விளக்கிட மொழியியல் சான்றுகள்தான் மிக முக்கியமானவை. 76. இந்திய, மேலை ஆய்வாளர்கள் பொதுவாக “பண்பாட்டில் விஞ்சியிருந்த ஆரியமொழி பேசுநர் அன்று இந்தியாவில் வாழ்ந்த தொல் குடியினர் மீது தம் பண்பாட்டைப் புகுத்தினர் இந்தியாவில் ஆரியர் பண்பாட்டை முதன்மையானதாக நிறுவினர்” என்று உன்னிக்கின்றனர்; அடிப்படைத் தரவுகளோ இவ்வுன்னிப்பு தவறு என்பதைக் காட்டுகின்றன. இந்தியா விற்குள் புகுவதற்கு முன்னரே ஏனை இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் குழுக்களிடமிருந்து நீங்கி இவர்கள் நெடுந்தொலைவு வந்து விட்டனர். இந்தியத் துணைக் கண்டமாகிய வரம்புக்குள்(ஏற்கெனவே இங்கிருந்த தொன்மக்கள் தொடர்பு தவிர வேறு எவர் தொடர்புமின்றி) இங்கே நிலையாகக் குடியேறிய ஆரியமொழி பேசுநர் இங்கிருந்த மக்களுடன் (பெருமளவுக்கும் முக்கியமாகவும் திராவிட மொழி பேசுநருடன்) மொழி, பண்பாடு, இனக்கலப்பு போன்றவற்றில் ஆழமாக இரண்டறக் கலந்து விட்டனர். ஆரியக் கூறுகள் சில தொடர்ந்தன- குறிப்பாக புனித நூல்களை எழுதுவது, பரப்புவது ஆகியவற்றுக்கு முக்கியமானதாக சம்°கிருதத்தையே பின் பற்றியது போன்றவற்றில். மொழி, பண்பாடு, மக்கள் உடலமைப்பு (ஞாலளiஉயட வலயீந) இவற்றில் வேறுபாடே தெரியாத ஒருமைப்பாட்டை ளலnஉசநவளை மிகப்பெரும் அளவில் நாம் இந்தியாவில் காண்கிறோம் 77. மேலே தந்துள்ளவையான ‘இந்திய நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ பற்றிய முழுமையான வரலாற்றுச் சான்றுகள், இந்தியவியலாளர் வாலாயமாக அந்நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பைச் சரிவரக் கண்டுகொள்ளாமல் குறைத்து மதிப்பிடுவதை நிறுவுகின்றன. அத்தகைய வேறு நாட்டு நிலப்பகுதிகளில் வேறு காலப்பகுதிகளில் வேறு சிலர் பங்களிப்பு சார்ந்து நிகழ்ந்து போலவே திராவிடர் பங்களிப்பு ஒதுக்கப்பட்டது, அல்லது திரித்துக் காட்டப்பட்டது. என் கருத்துகள் சரியானால் உலகின் மிகப்பெரிய நாகரிகங்களில் ஒன்றின் தோற்றம் வளர்ச்சி பற்றி விரிவான மறு ஆய்வு தேவை என்பது விளங்கும். ? அப்பாத்துரையம் - 20 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  இலெமூரியா அல்லது குமரிக் கண்டம்  திராவிடப் பண்பு ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 20 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+324 = 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் 1. குமரிநாடு பற்றிய தமிழ்நூற் குறிப்புகள் ... 3 2. மொழிநூல் (ஞாடைடிடடிபல) முடிவு ... 9 3. தென் இந்தியாவின் பழைமைக்கான சான்றுகள் ... 12 4. குமரிக்கண்டம் (இலெமூரியா) என்ற ஒன்றிருந்ததா? ... 17 5. ஞாலநூல் காலப் பகுதிகள் ... 31 6. உலக மாறுதல்களும் இலெமூரியாக் கண்டமும் ... 37 7. இலெமூரியாவின் இயற்கை இயல்புகள் ... 46 8. இலெமூரிய மக்களது நாகரிகம் ... 50 9. தற்கால நாகரிகமும் இலெமூரியரும் ... 65 10. இலெமூரியாவும் தமிழ்நாடும் ... 70 பின்னிணைப்பு - மொழிஞாயிறு பாவாணர் ... 77 - முனைவர் அன்பரசு ... 139 - முனைவர் அ. இராமசாமி ... 151 திராவிடப் பண்பு கில்பெர்ட் °லேட்டர்(1924) முன்னுரை ... 161 நூன்முகம் ... 163 1. திராவிடர் ... 182 2. ஆரியர் ... 198 3. திராவிட நாகரிகத்தின் தொல்பழமை ... 211 4. இந்திய சமயக்கருத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும் ... 221 5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின் பொருளாதார அடிப்படை (நஉடிnடிஅiஉ யௌளை) ... 240 6. திராவிட நாகரிகத்தின் சிறப்புக்கூறுகள் ... 256 7. இந்திய நாகரிகத்துக்கு திராவிட மொழி பேசுநரின் பங்களிப்பு ... 264 கில்பர்ட் சிலேட்டர் நூலுக்குப் பின் இணைப்பு ... 275 முடிப்புரை ... 313