பெரும்புலவர், நாவன்மையர், நல்ல பொழிவர், தமிழரவையங்களில் ஆழங்கால் பட்டவர், குறள் நெறிப் பரப்பாளர், குறளிய வாழ்வர் திருமிகு. மு. படிக்கராமர் இயற்றிய ஆய்வுப் பொழிவு நூல், “திருவள்ளுவர் திரும்பி வந்தால்... அறம்பாடுவார்” என்பது. இஃதவர்தம் முதல் நூல்; அதனொடும், முதன்மை நூல் என்பதையும் புலப்படுத்தும் நூல்! செந்தமிழ் அந்தணரின் வாழ்த்துரை தமிழ் அறவளம் பெரும்புலவர், நாவன்மையர், நல்ல பொழிவர், தமிழரவையங்களில் ஆழங்கால் பட்டவர், குறள் நெறிப் பரப்பாளர், குறளிய வாழ்வர் திருமிகு. மு.படிக்கராமர் இயற்றிய ஆய்வுப் பொழிவு நூல், "திருவள்ளுவர் திரும்பி வந்தால்... அறம்பாடுவார்” என்பது. இஃதவர்தம் முதல் நூல்; அதனொடும், முதன்மை நூல் என்பதையும் புலப்படுத்தும் நூல்! தவத்திரு மறைமலையடிகளார், தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆயோர் பொழிந்தவை நூலாயின; நூல்கள் பொழிவாயின; மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் புதிய உத்திமுறையில் கற்பனை மேடையும், கற்பனை அவையமும், கொண்டு அருமையும் செறிவும் செம்மாப்பும் மிக்க 'வள்ளுவப் பொழிவு நூலைப் படைத்தார். இவ்விரண்டன் வழிகளும், ஊடும் பாவுமாய் அமைந்த, 'அறத்துப்பால் உரைவிளக்கப் பெருநூல்' இந்நூல் ஆகும். நுவன்று நுவன்று வந்த பொருளே, நுவல் > நூல் ஆயது. பழையோன், 'படைப்பு ஆட்சிக் கலைச்சொல்' இம்முறைப் பழைமையைத் தெளிவிக்கும்! "நுவல்வோன் நுவலும் திறனே” என்பது நன்னூல் (3) இந்நூற்பாவின் தொடக்கச் சொல் “நூலே” என்பதாம். ஆசிரியன் கற்பிக்கப் பயன்படுத்தியதும் இலக்கணம் இயற்றியதும் இந்நூற்பா ஆதலால், ஆசிரியப்பா' எனப் பெற்றது. நூலினான் என்பது தொல்காப்பியம் (1421) அடிவரை இல்லது நூற்பா; அடிவரை அமைந்தது ஆசிரியப்பா. ஆனால், சீரும் தளையும் அடியும் ஒத்தாலும், அடியளவில் மட்டும் சிறிது வேற்றுமையுடையவை; அவ்வளவே! யாப்பியல் மொழியியல் நூலியல் அடிமணைச் சொல் 'நூல்' என்பதாம். பை வாரார்! பிறப்பியல் கோட்பாட்டின் வழி, அவர் பிறந்து வரினும் வள்ளுவராக - நாம் கண்டுள்ள படைப்பு உருவில் - வாரார்! இப்பொழுதுள்ள 'அறம்பாடுதல் பொருளில் அறம் பாடவும் மாட்டார்! திருக்குறளுக்கு யாப்பால் "குறள்' என்னும் பெயரும், அதன் அடிமூலப் பொருளமைவால் 'அறம்' என்னும் பெயரும் ஏற்பட்டன. 'அறம்' பாடுதல் என்பது, "எம்மை ஏற்றுப் போற்றுக! போற்ற வில்லையேல், அறம்பாடி அழிப்பேம்; இவ்வகையால் இன்னார் இன்னார் எம் அறம்பாடலால் அழிந்தார்” என அச்சுறுத்திக், கருமி பொருள் வழங்கப் புலவர் பாடிய வசைப்பாவாக மாறிவிட்டது! அப்படியாயின் இப் பெயரீட்டின் நோக்கு என்ன? வள்ளுவர் திரும்பி வந்தால், இந்நாள் மக்கள் நிலை நாட்டு நிலை ஆட்சி நிலை ஆயவை கண்டு வருந்தி, "வாழ்வாங்கு வாழும் வகையால், தெய்வ நிலையராக விளங்க வேண்டியவர், நூற்று எட்டாம் அதிகாரப் பொருளாக வலம் வருகின்றனரே! 'ஒருநாளும் வாழ்வ தறியார்' என்று யான் கூறியதை மெய்ப்பிக் கின்றவராய் உலா வருகின்றனரே!” என அறம்பாடுவார்! அவ்வறம், தாம் பாடிய அறத்திற்கு வேறுபட்ட அறமாய் அமையும், என்பதாகலாம்! ஆனால், திருக்குறளில் அவ்வறமும் பாடி விட்டாரே! எதை விட்டார்? பொழிவு முறை நூலாம் இதனை, அறத்துப்பால் அளவில் முப்பத்தெட்டுப் பொழிவுகளாகச் செய்துள்ளார். ஒவ்வோர் அதிகாரமும் அவ்வதிகாரப் பொருளை மும்முறை கற்றதாக அமையும் நோக்கில் பொழிந்துள்ளார். ஆனால், ஐந்து முறை கற்ற பெருந்தக்க பேற்றில் பொழிவு அமைகின்றது. அ) அதிகாரப் பொருளை விளக்கும் முகப்பிலேயே, அதிகாரப் பொருள் முழுதுற அறிய வாய்த்தல்! உரை விளக்கத்தில், விரிவான பொருளும் வளமான சான்றுகளும் வாழ்வியல் சான்றுகளும் அறிய வாய்த்தல்! இ) அதிகார நிறைவில், அதிகாரத் திரட்டுப் பொருளைப் பாகெனச் சுவைக்க வாய்த்தல்! இம் மூன்றுடன், அறத்துப்பால் விளக்கத்திலேயே பொருட்பால் குறள் விளக்கமம் பொருந்த வாய்த்தல்! மேலும் ஒன்று, அதிகாரம் வளர வளர, முன்னைத் தொடர்ச்சி அறிந்து கொள்ளவும் வாய்த்தல்! இவ்வகையால், ஒருமுறைக்கு ஐந்து முறை ஓதிய நலம் வாய்க்க அமைந்த விரிநூல் இஃதாம்! வாழிய, இப்புத்தியல் பொழிவு! "வள்ளுவர் உலகவர்; அவர் நூல் உலக நூல்!'' இதனை மெய்ப்பிக்கும் வாழ்வியல் சான்றுகள் குறள் தோறும் சுட்டப்படுகின்றன! நம் தொல்காப்பியர் முதலாகத் திரைப்படப் பாவலர் பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரர் வரை மேற்கோள் சான்ற ராகின்றனர்! சமயச் சால்பராம் வள்ளுவர், சமயச் சான்றோர் எனப் பயில வழங்கப்படுவார், அனைவர் கருத்தொடும் ஒத்தியங்கலை, உரிய உரிய இடங்களில் காட்டி விளக்கப்படுகின்றனர். முதலுரையாசிரியர் மணக்குடவர் உரை முதல் இந்நாள் உரை கண்ட பெருமக்கள் உரைகள் வரை, பொருந்திய வகையில் எடுத்தாளப்படுகின்றன. இவ்வுரைகளைக் கடந்த உரையாகத் 'தம் உரையெனத் தருவதும் அரிதாக இடம் பெற்றுள்ளது! “ஒரோ ஒரு குறளுக்கு வள்ளுவர் உள்ளம் கருதிய உரை வாய்க்கும் எனினும் அவ்வுரை வேண்டத் தக்கதே” என்பார் வ.சுப.மா! உடன்பாட்டுக்குறளை, எதிர்ப்பாட்டுக் குறளாகவும், எதிர்ப்பாட்டுக் குறளை, உடன்பாட்டுக் குறளாகவும் மாற்றி நயங்காட்டும் அருமை சில குறள்களில் உண்டு! மெய்ப்பிக்கும் நயமும், மறுக்கும் நயமும், இடைஇடை உண்டு! ஒப்புச் சொன்மை, ஒப்புப் பொருண்மை எங்கும் காண வாய்ப்பு மிக உண்டு! பாட வேறுபாடு காட்டித், தக்கது சுட்டலும் அரிதில் உண்டு! 255 ஆம் குறள் விளக்கத்தில்” எங்கோ ஒரு சிறு எழுத்துப் பிழை நேர்ந்திருக்கிறது. அஃது உண்மையைக் கண்டறிய விடாதபடி குழப்பிக் கொண்டிருக்கிறது. குழப்பம் தீர வழிகாண்பது, குறள் நெறியாரின் உயிர் நிலைக் கடனாகும்” எனச் சுட்டும் குறிப்புளது (பக். 349). ஆனால், திருக்குறளுக்கு உரை திருக்குறளே' என்னும் முடிவு கொண்டால், சிக்கல் - குழப்பம் என எதுவும் இல்லை! அதன் குழப்பத் தீர்வுக்குறள்கள் 500, 883 என்பவை. மேலும் துணை நிற்பன 835, 919 ஆகிய குறள்கள்! ஈரடிக்குறளுக்கு மூவடி உரை மு.வ. கண்டார். ஈரடிக் குறளுக்கு ஈரடி உரைகள் வந்துள். ஈரடிக் குறளுக்கு ஓரடி உரை தொடங்கி வருகின்றது. ஒரு குறளுக்கு ஒரு நூல் என எண்ணப், பாரிய நூல் வந்தது. அது, 'முதற் குறள் உவமை' என்னும் அறிஞர் அ.கோதண்டபாணியார் இயற்றிய அரிய நூல். திரு.வி.க. மிக விரிவுரையாக 100 பாடல்களுக்கு எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். அதன் மேல் நின்றது. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் மணிவிளக்க உரையும் பெருகிய உரையே! முடியாமல் நின்றது! இப்பொழிவுரை, இவற்றை எண்ணச் செய்கின்றது! 'மேற் கோள்கள் மிக்குள் எனத் தயங்குவார் உளராயின், உரையும் சான்றும் கற்ற அளவில் அமையலாம்! விரிய மேற்கோள் காட்ட விழையும் ஆய்வரும் பொழிவரும் தேடற்கரிய திருவைத் தேடித், தேனடையாக வைத்ததாகக் கண்டும் கொண்டும் பயன் எய்தலாம்! இத் தொடரில், பொருட்பாலும் காமத்துப்பாலும் தொடரல், தமிழ் வளம் - தமிழற வளம் - தமிழர் வாழ்வியல் அறப்பெருக்கு எனத் திகழ்தல் உறுதியாம்! பொழிவாளர் புலமைப் பரப்பும் - சிந்தனைப் பரப்பும் - கற்ற நூற்பரப்பும் - எவரையும் தூண்டித் துலங்கச் செய்யும் என்பது ஒரு தலையாம்! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன் 25.10.2012 முன்னுரை திருக்குறளை இளமையிலேயே கற்கும் வாய்ப்பு இயல்பாய்க் கிட்டியது. அதன் நோக்கும் போக்கும் இரண்டறக் கலந்த ஈடுபாட்டை உருவாக்கிற்று. என் தந்தையார் ப.ரா.முத்தையா அவர்கள். பயன்படுத்திய திருக்குறள் நாட்குறிப்பேடு நல்லதொரு தூண்டுதலாய் அமைந்தது. மாணவப் பருவத்தில் பள்ளியில் நிகழ்ந்த திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற இயன்றது. ஆசிரியப் பணி வாய்ப்பால் தொடர்ந்து கற்கவும், சிந்திக்கவும், உணர்ந்து பார்க்கவும். மாணவர் உளம் கொள்ளுமாறு வாழ்வியல் சிந்தனையுடன் திருக்குறள் கருத்துகளை எடுத்து மொழியும் சூழலும் இனிதே வாய்த்தது. திருக்குறளைக் கற்பதுடனும் கற்பிப்பதுடனும் அமையாது. குறள் காட்டும் வழியில் வாழ வேண்டும். பிறர் வாழ வழிகாட்ட வேண்டும் என்னும் உந்துதல் உள்ளத்தில் தோன்றியது. ஏனெனில், திருக்குறள் வாழ்வாங்கு வாழ வழி காட்டி மாந்தரைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் உயர் நூலாகும். ஆகலான், நாம் குறள்நெறியைப் பின்பற்றி வாழ்வதுடன், குறள் நெறி பரப்பும் மேலோர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் கிளர்ந்தது; அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் நாள் இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் உருவாக்கம் பெற்றது. அதற்குத்தக்க ஏந்தாய் அமைந்த தமிழ்ச் சான்றோர்களில் முதன்மையராய் விளங்கியவர்தான் செஞ்சொல் கொண்டல், பேராசிரியர் திருமிகு. அ.சங்கரவள்ளி நாயகர் ஆவார். அம்மன்றில் நிலைக்குழு உறுப்பினராய் அமைந்ததுடன் பத்து ஆண்டுகள் செயலராகப் பொறுப்பேற்றும், ஒல்லும் வகையான் குறள் நெறி பரப்பும் தொண்டில் தலைப்பட்டு முனைப்புடன் இயங்க வாய்த்தது. அம்மன்றம் படிப்படியே வளர்ந்து, வளமான நூலகத்துடன் சிறப்பாகக் குறள் நெறி பரப்பி வருகிறது. அதன் இற்றைக் காலத்தலைவர் பாவலரேறு புலவர். திருமிகு. ம.முத்தரசர் ஆவார். 1963 சூன் திங்கள் 23 ஆம் நாள் எங்கள் (படிக்கராமு - முத்துலக்குமி) திருமணத்தைக் குறள்நெறிக் காவலர், செந்தமிழ் அரிமா, பேராசிரியப் பெருந்தகை சி.இலக்குவனார் அவர்கள் எம் சீரூனான வாழவந்தாள்புரம் வந்து நிகழ்த்தி வைத்தார்கள். 1968 ஆம் ஆண்டு கோயிற்பட்டி. ஆ.வை.மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியப் பணி மேற்கொண்டதால் 1971 ஆம் ஆண்டு கோயிற்பட்டியிலும் திருவள்ளுவர் மன்றம் தொடங்கி, பேராசிரியப் பெருந்தகை அ.சங்கரவள்ளி நாயகர் அவர்களைத் தலைவராகவும், பல்கலைச் செல்வர், தொழில் வல்லார் திருமிகு. சி.பழ.இராமகிருட்டிணர் அவர்களைத் தலைமைப் புரவலராகவும், நான் பதினெட்டு ஆண்டுகள் செயலாளராகவும் அமைந்து, நன்கு திட்டமிட்டு, நிறைவுடன் குறள் நெறி பரப்பும் பணியில் ஈடுபட வாய்த்தது. அம்மன்றமும் வளர்நடையிட்டு மிடுக்குடன் இன்று பேராசிரியர், கவிஞர் திருமிகு. க.கருத்தப்பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, நல்லோர் கூட்டால் நாளும் பணி செய்து வருகிறது. எங்கள் மகள் பேராசிரியர் ப.வேல்மணி. மருகர் பேராசிரியர் முனைவர் மு.சிவக்குமார் ஆகியோர் திருமணத்தை 24.6.1993 ஆம் நாளும், எங்கள் மகன் பத்திரிகையாளர் ப.திருமாவேலன். மருமகள் ஆசிரியர். சு.கி.இரேணுகா ஆகியோர் திருமணத்தை 9.2.2000 ஆம் நாளும், குறளாய முறைப்படி இலக்கியச் செம்மல் திருமிகு. இரா.இளங்குமரனார் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்கள். மனைவி, மக்கள், மருமக்கள் கொண்டவர்கள், கொடுத்தவர்கள் அனைவரும் அமைந்த பண்பினராய் அமைந்தமையால் வாழ்வில் செம்மையை இயல்பாய் பின்பற்ற இயல்கிறது. குறளாய முறைப்படி பல நூறு திருமணங்களை நிகழ்த்தி வைக்கும் வாய்ப்பும் பெற்றதால், அந்நிகழ்ச்சிகளில் வாழ்வியல் குறள்களை ஆயிரக்கணக்கான மக்களுக்கு விளக்கி உரைக்கும் நல்ல வாய்ப்பாகவும் அமைந்து வருகிறது. திருக்குறளைத் தொடர்ந்து சிந்திக்கவும், பரப்பவும் நல்வாய்ப்பு வழங்கிய அமைப்புகளில் கழுகுமலை, திருவள்ளுவர் கழகம் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும். 1986 - 88 ஆம் ஆண்டு என் வாழ்வில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க ஆண்டுகளாகும். சங்கரன் கோயிலில், தமிழ் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் நல்லமைப்பு 'இந்து சமயத் தமிழ்ப் பேரவையாகும். அதன் நிறுவனரும் பெருமைக்குரிய தலைவரும், இலக்கியச் செல்வருமாகிய திருமிகு. சொ.வீரபாகு அவர்கள். அதன் அன்றையப் பொதுச் செயலாளர் பாவலர், சொல்லாய்வு வித்தகர் திருமிகு. ஆ.முத்துராமலிங்கம் அவர்கள். அவர்கள், கிழமைக்கு ஓர் அதிகாரமாக நான்கு கிழமை நான்கு அதிகாரங்கட்கு குறள் விளக்கம் செய்ய வேண்டினார்கள். அதன்படி தொடங்கப்பட்ட திருக்குறள் விளக்கப் பொழிவு 133 கிழமைகள் 133 அதிகாரங்களும் நானே தொடர்ந்து விளக்கவுரை நிகழ்த்த வாய்த்தது. அப்பணியை உயர்ந்த தவம் போல் எண்ணிச் செய்வதற்கு ஏற்ற சூழல் இனிதே அமைந்தது, நான் பெற்ற பெரும்பேறாகும். கிழமைதோறும் ஓர் அதிகாரத்திற்குள் மூழ்கி முத்தெடுத்து வழங்கும் அருமையான வாய்ப்பாக அமைந்தது. திருக்குறள் தொடர் பொழிவு ஊரின் நடுவண் அமைந்துள்ள அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் நடராசப் பெருமான் திருமுன் நிகழ்ந்தது. திருக்கோயில் ஒலி பெருக்கி முன் பொழிவு செய்யும் வாய்ப்பால் திருக்கோயில் கோபுர உச்சியில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் ஐந்து கல் சுற்று வட்டத்தில் உள்ளவர்களும் தொடர்ந்து கேட்டுப் பயன்பெற வாய்த்தது. இந்து சமயக் கோயிலுக்குள் வராத, வர விரும்பாத பிற சமயத் தலைவர்களும் சமய மறுப்பாளர்களும் கூடக் கேட்கும் வாய்ப்புப் பெற்றனர். திருக்குறள் பொழிவு கேட்கும் திருக்கூட்டத்தைக் கிழமைதோறும் மிகுதிப் படுத்த வேண்டும் என்னும் விரிந்த நோக்குடன், ஏற்பாடுகளையும் விளம்பரங்களையும் மிகச் சிறப்பாகச் செய்து ஊக்க மூட்டிய பெருமகனார் திருக்குறள் தோன்றல் திருமிகு. க.பேச்சியப்பனார் அவர்கள். திருக்குறள் பொழிவை 'நானே தொடர்ந்து நிகழ்த்த அமைப்பாளர்களை வேண்டியதுடன், அதற்காகும் செலவு தொகையைத் தானே தொடர்ந்து வழங்க ஏற்றுக் கொண்டு செய்த நயனுடையார் திருமிகு. பி.எல்.சித்திரபுத்திரன் அவர்கள் என்பதையும் நினைந்து அப்பெருமக்களைப் போற்றக் கடமைப்பட்டவன் ஆவேன். ஏனெனில் கால் நூற்றாண்டிற்கு முன் பொழிந்த திருக்குறள் மழையால் 'இன்று திருவள்ளுவர் மீண்டும் பிறந்தால் - அறம் பாடுவார்' என்னும் நூல் மணியாக விளைந்துள்ளது. திருக்குறள் ஒலி நம் செவிகளில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் என்றும் குறள் நெறி வாழ்வராய் வாழ வேண்டும் என்பதே எம் நோக்கம். யாம் பெற்ற இன்பத்தையும் பயனையும் அனைவரும் பெற இந்நூல் துணை புரியும் என நம்புகிறேன். இந்நூலுக்கு வாழும் வள்ளுவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் செந்தமிழ் அந்தணர் திருமிகு. இரா.இளங்குமரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பும் செய்துள்ளார்கள். இந்நூலை நாளந்தா பதிப்பக உரிமையாளர் அருப்புக் கோட்டை திருமிகு. பொ. தங்கப்பாண்டியன் அவர்கள் பேருள்ளத்துடன் வெளியிடுகிறார்கள். நன்றி மறவேன். குறள் கற்போம்! குடியரசு காப்போம்! அன்பகத்தான், மு. படிக்கராமு 30.12.2012 "அறிவகம்" 31, இராம் நகர், திருநெல்வேலி - 627011. 0462 - 2532755 பொருளடக்கம் இறைவணக்கம் வான் சிறப்பு நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணை நலம் மக்கட் பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றியறிதல் 126 நடுவு நிலைமை 138 154 அடக்க முடைமை ஒழுக்க முடைமை பிறனில் விழையாமை 172 184 பொறையுடைமை 197 அழுக்காறாமை வெஃகாமை 227 19. புறங்கூறாமை 241 திருவள்ளுவர் திரும்பி வந்தால்... 20. பயனில சொல்லாமை 253 21. தீவினையச்சம் 265 ஒப்புர வறிதல் 276 ஈகை 294 24. புகழ் 313 அருளுடைமை 339 புலால் மறுத்தல் 354 தவம் 366 28. கூடா ஒழுக்கம் 382 29, கள்ளாமை 394 வாய்மை 405 வெகுளாமை 425 இன்னா செய்யாமை 444 கொல்லாமை 460 480 496 34. நிலையாமை 35. துறவு 36. மெய்யுணர்தல் 37. அவாவறுத்தல் 38. ஊழ் 513 528 542 அறம் பாடுவார் தொடக்கம் வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்கி வளர்புகழ் எய்தும் வேட்கையுடன் இவண் குழுமி யுள்ள பேரவையினரே! வணக்கம். உங்கள் திருமுன் திருக்குறள் பொழிவு நிகழ்த்தும் நல்வாய்ப் பினைப் பேருள்ளத்துடன் எளியேனுக்கு வழங்கிய சான்றோர் பெருமக்கட்கு நான் பெரிதும் கடப்பாடுடையவன் ஆவேன். பெருமக்களே! இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை தோறும் சரியாக மாலை ஆறு மணிக்குக் கூடுவோம்! திருக்குறளை வாழ்வியல் நோக்கில் சிந்திப்போம். கிழமைக்கு ஓரதிகாரமாகத் தொடர்ந்து 133 கிழமைகளில் கூடுவோம். திருக்குறளாம் திருவமுதைப் பருகுவோம்! விருந்தினர் எண்ணிக்கை வரவரப் பெருகும்! புதியவர் வருகை நமக்குப் புத்துணர்ச்சி ஊட்டும்! திருக்குறள் ஆர்வம் வளரட்டும்! குறள் வாழ்வு மலரட்டும்! “திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர் வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார். திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்” "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண்கொண்டு நோக்கியவர்; மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர். 'ய: திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்; தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளை எல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர். திருவள்ளுவர் இயற்கை இன்ப வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு, குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர். சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன் மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர். பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும், படிப்பறிவும் பட்டறிவும், மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்கும் என்னும் அருள் உள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர். இவை "வள்ளுவ வழிக் கண்டவை” எனத் 'திருக்குறள் வாழ்வியல் உரை' என்னும் அருமை நூலில் இளங்குமரனார் வரைந்த "திருவள்ளுவர் வரலாறு” என்னும் வழித் தடத்தில் நடந்து திருவள்ளுவர் படைத்த வாழ்வியல் உலகமாகிய திருக்குறளுக்குள் நுழைவோம்! இறைவணக்கம் திருவள்ளுவர்க்கு முன்னரே தமிழ் மண்ணில் கடவுள் வழிபாடும், வழிபாட்டு முறையும் உண்டாகி விட்டன. அவர்க்கு முன்னரே 'தேவபாணி' என்னும் இசைப்பாவகை உண்டாகி விட்டது 'பரிபாடல்' என்பதோ பெரிதும் இறை வழிபாட்டுப் பாடல்களாகவே அமைந்தது. சங்கத் தொகை நூல்களில் 'நீலமணி மிடற்றோன், மால், செவ்வேள், மாயோன், கண்ணன், பலராமன், வேந்தன், வருணன், கொற்றவை முதலாய தெய்வப் பெயர்களும் வழிபாடுகளும் உருக்கொண்டு விட்டன. மெய்ப்பொருள் கொள்கைகள் விளக்கமாக அமைந்து விட்டன. 'நிலை பேறானவை இவை' 'நில்லாதவை இவை' என்பனவும் கண்டு கொள்ளப்பட்டன. அவ்வகையில் 'காஞ்சித் திணை' என ஒரு திணையே உருவாக்கம் பெற்று, புறப்பொருளில் இடம் பெற்றது. போர்த்துறையில் பெருங்கடனாற்றிய வீறுமிக்கவன் 'நடுகல்' ஆகிப் 'பீடும் பெயரும் எழுதப்பட்டுப் படையலிட்டு வழிபடப் பட்டான். வேற்படையாகிய கருவி வழிபாடும் வேலன் வெறியாடலும் பெருவழக்காக ஆயின. 'இல்லுறை தெய்வம்' என முன்னோர் வழிபாடும் கிளர்ந்தது. கோயிலும் கோட்டமும் விளங்கின. படைத்தோன், கூற்றுவன் பற்றிய கருத்துகளும் எழுந்தன. இவ்வளவு பெருக்கமாக இறையுணர்வும் வழிபாடும் உண்டாகிய நிலையிலும் வருங்கால மக்களின் நலமே நாம் எண்ணத் தக்க ஒன்று; அதில் எம் தனிச்சார்போ , எம் குடிவழிச் சார்போ , எம் குருவர்ச் சார்போ, எம் சூழல் சார்போ புகுந்து விடல் ஆகாது. மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பகுத்தும் பிரித்தும் ஆன்ம நேயப் பெருநிலையைச் சுருக்கி விடுதல் ஆகாது என்று ஆழமாகக் கருதினார். பல் கால் எண்ணினார். திண்மையாக முடிவு செய்து கொண்டு தெளிவாக இறைமை நிலையைக் கண்டார் திருவள்ளுவர். புத்த நெறி இம்மண்ணின் வரவாக அமைந்தது; சமணர் நெறியும் அவ்வாறே அமைந்தது; வேதநெறியும் அழுத்தமாகப் பரவியது; ஆயினும் தாம் கொண்ட முடிவு மாறாமல் கடவுள் வாழ்த்தினைத் திருக்குறளில் முற்பட வைத்தார்' எனத் திருக்குறள் ஆய்வில் தோய்ந்த தமிழ் அறிஞர் இளங்குமரனாரின் கருத்துக் கோவை நமக்கு நேர்வழி காட்டுகிறது. இறை நிலைகளுள் குருவன் நிலை திருக்குறளுக்கு உரை காணத் தொடங்கும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. 'ஏட்டினின்றும் இயற்கையிடமும் அதன் உள்ளுறையான இறையினிடமும் செல்லுதல் வேண்டும் இஃதொரு வித ஒழுங்கு முறை” என்கிறார். "மனமுடைய மக்கள், வாக்குடைய மக்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒன்றை எப்படி நினைத்தல் கூடும்? எப்படி வாழ்த்தல் கூடும்? என வினாவி, இயற்கையில் இறை நீக்கமறக் கலந்துள்ள நுட்பம் இயற்கை வழிபாட்டாலேயே சிலர்க்கு இயல்பாக விளங்கும். பலர்க்கு அஃது அவ்வழிபாட்டால் விளங்குவதில்லை. இப் பலர்க்குக் குருநாதன் அருள் தேவை; கடவுள் குருநாதன் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு உயிர்கட்கு அருள் செய்தலால் கடவுள் நிலைகளுள் குருநாதன் நிலையும் ஒன்றாகும்” என்கிறார். மேலும் “ஆதிபகவன் 'ஞானகுரு' என்னும் பொருளில் நிற்கும் ) போது, அவனது குருநிலை விளங்குவதாகிறது. இது வழிபாட்டுக்கு எளியது" "குருநாதன் வாயிலாகக் கடவுள் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் நின்றவர் நீண்ட காலம் வாழ்வர்” ஐந்தவித்தான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப! இறைவனுக்கு ஐந்து புலன் உண்டா ? புலனே இல்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது? 'ஐந்தவித்தானை' - எல்லாம் கடந்த இறைவன் என்று சொல்லுதல் பொருந்தாது. ஐந்தில் இருந்து ஐந்தவித்தவன் - குருநாதன். குருநாதன் உடலைக் கோயில் கொண்டு கடனாற்றுவதும் கடவுள் நிலைகளுள் ஒன்றாதலான் ஆசிரியர் ஐந்தவித்தானைக் (குருநாதனை) கடவுள் வாழ்த்தில் வைத்து ஓதினார் என்க! குருநாதன் மனிதனா? ஆண்டவனா? குருநாதன் மனிதக் கோலம் உடையவன். அவன் அகத்தில் வீற்றிருப்பவன் ஆண்டவன். குருநாதன் தனக்கென ஒன்றில்லாதவன். கடவுளே விளங்கும் உள்ளமுடையவன். கடவுள் இயக்க இயங்குவோன். மனமிலாக் கடவுள், குருநாதன் வழி நினைப்பவன் ஆகிறான். மொழியில்லாக் கடவுள், குருநாதன் வழிப் பேசுவோன் ஆகிறான்; மெய்யிலாக் கடவுள் குருநாதன், வழிச் செயல் புரிவோன் ஆகிறான்” என ஆய்ந்து கூறிய தெளிந்த முடிவு நமக்கு நம் பெற்றோர் உரிமையுடனும் உணர்வுடனும் காட்டும் நல்வழி போன்றதாகும். "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” எனத் திருக்குறளின் முதற்குறளைத் தொடங்குகிறார் திருவள்ளுவர். மாந்தனை அறிவுப் பிறப்பினனாக அடையாளம் காட்டுவது மொழி. மொழியே அறிவின் ஊற்றுக்கண். மொழி - எழுத்து, சொல், பொருள் என வளர்நிலை உறுவது. மொழியின் பயன் பொருள்; மொழிக்கு அடிப்படை எழுத்து. ஆகவே மொழியைத் தாங்கி நிற்கும் அடித்தளமும் தூணும் போன்றன எழுத்துகள். மொழிக்கு மூலமாய் அமைந்துள்ள எழுத்துகட்கு எல்லாம் மூலமாயும், முதன்மையானதாயும் அடிப்படை யானதுமாயும் அமைந்து, மொழி ' ஊர்தியை' இயக்கி வரும் 'வலவன்' போன்ற எழுத்து “அகரம்” என்பதைக் கற்றவர் அறிவர். அவ்வகர எழுத்தின் முதன்மை போன்று இவ்வுலகுக்கு ஒப்பற்ற முதன்மை வாய்ந்தவனாக விளங்குபவன் யாவன்? அவனை 'ஆதி (முதற்) பகவன்' என்கிறார் திருவள்ளுவர். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என உலகத்து நல்லறிஞர்கள் கூறிய நல்லறங்களிலெல்லாம் தலையான முதன்மையான அறம் உள்ள உணவைப் பகுத்துத் தந்து பல உயிர்களையும் பேணுதலாகும், என ஆய்ந்து உரைக்கும் திருவள்ளுவர், அதற்குத் தோற்றுவாய் செய்வது போல் முதற் குறளிலேயே 'ஆதி பகவன் முதற்றே உலகு' எனக் கூறுவதன் உட்கிடக்கை, வாழ்வியல் செப்பமாக அமையத் தான் தேடிய பொருளைத் தானே துய்க்க வேண்டும் என எண்ணாதே! உழைப்பு - தனியுடைமை; அவ்வுழைப்பால் தேடிய பொருள் - தன் பொருள் அன்று; அது பொதுப் பொருள் எனக்கருதிச் செயல்படும் - பகுத்து வழங்கும் பண்பாளனையே இவ்வுலகம் முதல்வனாய்க் கொண்டு இயங்கி வருகிறது. அவ்வியக்கம் செவ்வையுற இயங்கி இவ்வுலகைச் செவ்விதின் இயங்க வைப்பதில் நம் பங்கும் கட்டாயம் இருக்க வேண்டும் என்னும் முதன்மையை உணர்த்த யாத்த முதற்குறளே! "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்னும் தலைமைக் குறள். மக்களை 'அறிவறிந்த மக்கள்' 'பழிபிறங்காப் பண்புடை மக்கள்' எனக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் அறிய வேண்டியவற்றை அறிந்த நல்ல மக்களும், பழிவழியில் செல்லாத பண்புடைய நல்ல மக்களுமே உண்மையான மக்களாவர் என்பது அவர் முடிபு. அறிவறிந்த மக்கள் அறிய வேண்டியவற்றை அறியக் கற்பது இன்றியமையாக் கடன் எனக் கருதியதால் அனைவரையும் பால் வேறுபாடின்றி அகவை வரம்பின்றி உயிர் வாழும்வரை கற்க வேண்டும். தகாதவற்றை விலக்கிக் கற்கத் தகுந்த நூல்களையே கற்க வேண்டும். கற்பதை நிறைவாகத் தெளிவாக மயக்கமின்றிக் குற்றமறக் கற்க வேண்டும். கற்றுணர்ந்த, ஆக்கம் தரும் நெறிகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும். அக்கடைப்பிடியே கற்றவர்க்கு விழுப்பம் தரும் என்பது திருவள்ளுவர் காட்டும் நெறி என்பதை நாம் உணர்ந்து கொண்டால் - தூய அறிவின் திருவுருவாய் விளங்கும் நல்லறிஞன் காட்டும் குற்றமற்ற, அறிவார்ந்த நல்வழியைப் பின்பற்றி நாம் ஒழுகவில்லை என்றால் நாம் எத்தனை துறை நூல்களைக் கற்றுப் புலமை நலத்தைப் பெருக்கிக் கொண்ட உயர்கல்வியாளராய் விளங்கி னாலும், அதனால் எத்தகைய பயனும் இல்லை என்பதை உணர்த்து பவராய்க் 'கற்றதனால் ஆய பயனென்கொல்? என வினா எழுப்பி வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்' என விடையும் தந்தார். 'கல்வி கற்பதன் பயன் - மாசற்ற நல்லறிஞன் காட்டும் நல்வழியைப் பற்றி ஒழுகுதலே என்பதை உணர்வோமாக! வாலறிவன் தீதையும் நன்றையும் நன்கு பகுத்து உணர்ந்தவன் மட்டுமல்லன் நினைவு, சொல், செயல் மூன்றானும் வன்மைக்கு, கொடுமைக்குத் தீமைக்கு இடந்தரா மல், மென்மைக்கும் தூய்மைக்கும் இனிமைக்குமே இருப்பிடமாக விளங்கும் முதன்மையன் ஆவான். 'முதல்வனாய் இரு' - இல்லையேல் முதல்வனோடு இரு” என்பது ஒரு பெருமொழி. இன்று முதல்வனாய் இல்லை என்றாலும் நாளை முதல்வன் ஆவாய்! 'சார்ந்ததன் வண்ணமாகும் என்பது உண்மை மொழி. ஆகவே, நல்லவனாய் மலரினும் நம்புவர் "து. ஆகவே, இரு என வேண்டும் திருவள்ளுவர் நல்லவனோடும் சேர்ந்து வாழ் என நெறிப்படுத்தும் போழ்து, "நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை” "இனநலம் ஏமாப் புடைத்து” "இனத்து இயல்பதாகும் அறிவு” "இனநலம் எல்லாப் புகழும் தரும்” "இனம்தூயார்க்கு இல்லை நன்றாகா வினை” என மொழிவதுடன், இனத் தூய்மையே ஒருவனை மனத் தாலும் செயலாலும் தூயவன் ஆக்கும்” என்றும் உறுதி கூறுகிறார். 'தீயவை தீய பயக்கும்' ஆகவே நீ தீயவனாக இராதே. 'தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்' ஆகவே தீயவர்களுடன் சேராதே என விழிப்பூட்டுவார் திருவள்ளுவர். மலர் மெல்லியது, அழகியது, மணம் உடையது ஆகவே அதனை எல்லாரும் மதிப்பர், விரும்புவர் தக்கவாறு பயன்படுத்துவர். அத்தகைய மலரினும் மெல்லிய நல் இயல்பை மேற்கொண்ட பெருமைக் குரியவனின் தூய, இனிய, நல்வழி பற்றி நடப்போர் இவ்வுலகில் புகழுடனும் பெருமையுடனும் நெடுங்காலம் வாழ்வர். முரட்டுத் தனம் நம் வாழ்வையும் புகழையும் குறைத்து அழிக்கும். மெல்லிய இனிய நல்லியல்பு வாழ்நாளையும் நீட்டி, புகழால் நிலை பெறுத்தும் என்னும் கருத்து "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” என்னும் குறள் வழி விளக்கப்படுகிறது. கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாகவும், காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாகவும் வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமாகவும், மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாகவும், நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாகவும் நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமாகவும், எல்லார்க்கும் பொதுமையனாய் விளங்கும் இறைமைத் தன்மை பொருந்தியவன் காட்டிய வழியைத் தம்வழி எனக் கொண்டு பின்பற்றி நடப்பவர்கட்கு எக்காலத்தும் எவ்விடத்தும் துன்பம் இல்லை என உறுதி வழங்குவது போல், "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என மொழிகிறார். விருப்பும் துன்பம் தரும்; அது போல் வெறுப்பும் துன்பம் தரும். அப்படியானால் துன்பம் இன்றி வாழ யாரிடத்தும் எதனிடத்தும் விருப்போ, வெறுப்போ கொள்ளாது, நடுநிலைக் கண் கொண்டு உள்ளது உள்ளவாறு காண்க! கழிபேரின்பம் எய்துவாய். 'துணையோடு அன்றி நெடுவழி போகேல்' என்பது பழமொழி. நல்ல இடத்திற்குச் செல்லத் தேர்ந்தெடுக்கும் வழியும் நல்லதாய் இருக்க வேண்டும். துணையும் நமக்கு வலிமை சேர்க்கும் உயர்ந்த துணையாகவும் இருக்க வேண்டும். என்பது எப்பயணத்திற்கும் வேண்டும் பொது விதி. நல்லியல்புகளை எல்லாம் தன்னகத்தே கொண்ட இறைவனின் அழிவற்ற புகழ் வழியை விரும்பி நடப்பவரிடத்து அறிவை மயக்கும் நல்வினைகளும் தீவினைகளும் சேர மாட்டா! அறியாமை நம்மை ஆட் கொள்ளாத வினைகளையே செய்து வாழ, இறைவனின் நிலைத்த புகழ் வழியைப் பற்றி நடத்தல் வேண்டும் என்பதை "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்னும் குறள் தெளிவுபடுத்தும். "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” என்னும் இவ்வாறாவது குறட்பாவே இம்முதல் அதிகாரத்தின் மெய்ப்பொருளை நாம் தெள்ளிதின் உணர்ந்து கொள்வதற்கு வாய்த்த வள்ளுவக் கண்ணாடியாகும். நெறி நின்றார் நீடுவாழ்வார்! எந்நெறி நின்றார்? ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்? எத்தகைய ஒழுக்க நெறி? பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் நீடு வாழ்வார்? எத்தகையோர் பொய்தீர் ஒழுக்க நெறி? பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ்வார் எனப்படுத்தும் இணைத்தும் காண்போம்! நாம் யாரைத் தலைவராக வழி காட்டியாகக் கொள்ள வேண்டும்? பொறிவாயில் ஐந்தவித்தானை வழி காட்டியாய்க் கொள்ள வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் (அடக்கமுடையார்) காட்டிய மெய்மையான நல்லொழுக்க நெறி நின்று வாழ வேண்டும்? அவ்வாறு வாழ்ந்தால் நாம் அடையும் பயன் நெடுங்காலம் வாழலாம். "ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப் படுத்தியவனின் மெய்யான வழியில் நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்” என்பது இப்பாடலின் திரண்ட கருத்து. 'இவனுக்கு ஒப்பு இவனே' வேறு யாரும் இவனை விட உயர்ந்தவனும் இல்லை இணையானவனும் இல்லை. மற்றையவர் களெல்லாம் அவனினும் ஒரு படி தாழ்ந்தவர்களே' எனக் கூறத்தக்க இயல்புடையவனின் வழியைப் பின் பற்றாதவர் தமக்கு ஏற்படும் மனக் கவலையை மாற்றிக் கொள்ள இயலாது. நாம் கவலை நீங்கி வாழ வேண்டுமானால் கவலை நெருங்க முடியாத உயரிய நிலையில் நிலைபெற்றவர் வழி நின்று வாழ்வு நடத்துதல் வேண்டும். "தனக்குவமை இல்லாதான் தான் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பது குறள் மணி. வாழ்க்கையில் நாம் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ குறுக்கீடுகள் தடைகள், இடையூறுகள், ஏற்படலாம். நாம் பண்பாட்டால் ஒழுக்கத்தால், செயல் முறைகளால் கெட்டுச் சீரழிவதற்குரிய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். அவற்றில் எல்லாம் நாம் சிக்கித் தவிக்காமலும், நாம் நம் நிலையிலும், தன் நிலையாகிய தகு நிலையிலும் தவறாமல், தடுமாறாமல் வாழ நமக்குப் பெருந்துணை தேவை என்பதை உணர்த்த விரும்பும் திருவள்ளுவர், "அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது” என்கிறார். அறக் கடலாக விளங்கும் அருளாளனாம் அந்தணனின் வழியைப் பின்பற்றி வாழ்பவர்களை அறமல்லாப் பாவம் நெருங்கவே நெருங்காது. அறக் கடலின் பக்கம் பாவக் கடல் அண்டாது. அறமே நமக்கு அரண்! அந்தணனே பாதுகாப் பாளன். ஓடாப் பொறியால் ஏதேனும் பயன் உண்டா? இயற்கையாம் உடற்பொறி ஆயினும் என்ன? செயற்கையாம் இயந்திரப் பொறி ஆயினும் என்ன? அவற்றின் முறையான இயக்கமே பயன்பாடு ஆகும். இயங்காமை பயனற்றதாகும். "கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி” "குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்ததோ கண்” "உளரெனினும் இல்லாரோ டொப்பர் கள்னஞ்சிக் கற்ற செலச்சொல்லா தவர்” "உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லாதவர்” "ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.” "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தாள் தாளை வணங்காத் தலை” எனச் செயலற்ற பொறிகள் பொறிகள் ஆகாவென்றும், செயலற்ற வாழ்வு வாழ்வாகாது என்றும் வள்ளுவர் பயில் வழங்குதல் நோக்கத் தக்கன. இயக்கம் இல்லாத பொறிகளால் பயனில்லை. அதுபோல் எண்ணிப் போற்றும் நற்குணங்களை எல்லாம் ஒருங்கே கொண்டவனை வணங்காத தலையாலும் பயனில்லை. அறிவுக்கடலாம் இறைவனின் வழியைப் பின்பற்றி வாழ்வோர் அறியாமை என்று சொல்லப்படும் பெருங்கடலையும் எளிதில் கடப்பர்; அறியாமைக் கடலை மற்றையோர் எவ்வழியில் முயன்றாலும் கடத்தல் அரிது என்பதை, "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” எனும் குறள் வழி தெளிவுபடுத்துகிறார். இம்முதல் அதிகாரம் ஒப்பற்ற நல்லியல்புகளைக் கொண்டவர் வழியில் நடத்தல் எனும் பொருள் தருவது. ஒப்பற்ற நல்லியல்புகளைக் கொண்டவர்களைத் திருவள்ளுவர், பகவன், வாலறிவான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தவக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், இறைவன்' என எந்தச் சமயமும் சாராத பண்பியல் பெயர்களால் சுட்டி அமைவது போற்றி வழி நடக்கத் தூண்டுகோலாய் அமைகிறது. வான் சிறப்பு வான் என்றது மழையை. வானத்திலே ஞாயிறு, திங்கள் என்னும் இருபெஞ் சுடர்களும் மற்ற உடுக்களும் உலகத்திற்கு ஒளி வழங்கி நன்மை செய்தாலும் அவற்றின் உதவி, மழையின் சிறப்பைப் போல் யாவர்க்கும் நன்கு விளங்குவதில்லை. மழை உண்மையால் நன்மையும், அஃதின்மையால் தீமையும் உண்டாதல் தெளிவு. இயற்கையின் தண்ணருளைக் குறிப்பதற்கு மழையே சிறந்த அறிகுறியாக இருக்கின்றது. மழை மண்ணில் பொழியவில்லை யாயின் உலகும் இல்லை; உயிர்களும் இல்லை; உழைப்பும் இல்லை; உணர்வும் இல்லை; உணவும் இல்லை; ஒழுக்கமும் இல்லை; ஏன் கடலும் இல்லை கடவுள் வழிபாடும் இல்லை. இவையெல்லாம் இருக்க வேண்டுமானால் மழை கட்டாயம் வேண்டும். மண்ணின் சிறப்பு மழையால் அமைவதால், திருவள்ளுவர் மழையின் உயர்வு குறிக்க 'வான்' என்று கூறுவதுடன் அமையாது வான் சிறப்பு' என அதிகாரத்திற்குப் பெயர் அமைத்தார். மழையின் சிறப்பு இவ்வோர் அதிகாரத்தில் மட்டும் அடங்கி விடவில்லை . 'நல்ல கணவனுக்கு வாய்த்த நல்ல மனைவி மழை போன்றவள் என்பதைத், "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என வாழ்க்கைத் துணை நலத்திலும், "வான் நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” 542 "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு” 545 எனக் செங்கோன்மையிலும், "துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு” 557 "முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி ஒல்லாது வானம் பெயல்” 559 எனக் கொடுங் கோன்மையிலும் "கைம்மாறு வேண்டாக் கடப்பாடு; மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" 211 என ஒப்புரவறிதலிலும், "சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்க் தனைய துடைத்து" 1010 என நன்றியில் செல்வத்திலும் "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி” 1191 எனத் தனிப்படர் மிகுதி, என்னும் அதிகாரத்திலும் "உறுதோறும் உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்” 1106 என புணர்ச்சி மகிழ்தலிலும் "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” என மக்கட் பேற்றிலும் 'வான் மழை' வள்ளுவரால் தக்க தலைப்புகளில் சுட்டப் பெறுகிறது. மழையின் சிறப்பை உணர்ந்த மாணிக்க வாசகர், "முன்னி யவள் நமக்கும் முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையே லோர் எம்பாவாய்” என அன்னை அருள் போல் மழை பொழிய வேண்டியுள்ளார். இளங்கோவடிகள் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றுவதுடன், "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கவன் அளிபோல் மேனின்று தான் சுரத்த லான்” எனப் போற்றியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசனார் தம் மூன்றாம் கவிதைத் தொகுதியில் அமிழ்து எது? என்னும் தலைப்பில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியில் கிட்டும் 'அமிழ்து நமக்கு நல்லமிழ்தாகும். தலைவன் "வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று” என்று சாற்றிய வள்ளுவர் பாட்டை வகையாகச் சொல்லி அதற்குள்ள கருத்து உரை அதையும் கேட்பாய்; "அமிழ்தென் றுணரும் அருமை மழைக்கே அமையும்” என உரைத்தார் வள்ளுவரே! அல்லவா? ... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... . "கண்டவை எல்லாம் அமிழ்தே என்று கதைபேசிக் கொண்டிருப்போர் பேதைமையைக் கண்டே இவ்வாறு உரைத்தார்;” தலைவி : "சாவா மருந்தென்று சாற்றுகின்றாரே அது என்ன?” தலைவன்: சாவா மருந்து தனியல்ல இவ்வமிழ்தே! வான் பெய்து கொண்டிருக்கும் ஆதலினால் மண்ணுலகம் தான் சிறக்கும் என்று குறள் சாற்றியதைக் கேட்டாயே!” "எங்கும் உளதுமழை என்றும் உளதுமழை தாங்கும் உலகுயிரைச் சாவாது காக்கும் மழை அந்த மழை தான் அளிக்குமோர் இன்பத்தைச் செந்தமிழால் வள்ளுவரும் நன்றாய்த் தெரிவித்தார். "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி” என்றார் விள்ளக்கேள். "சென்று திரும்பிவந்து சேர்ந்து அவர் அளிக்கும் இன்பந்தான் எவ்வாறு இருக்குமென்றால் இவ்வுலகில் வாழ்வார்கள் நல்ல மழைபெற்றாற் போலிருக்கும் யாழ்மொழியே! அந்தக் குறளின் கருத்திதுவே!” தலைவி: "இந்த மழைதான் அமிழ்து என்ற எண்ணத்தில் எந்தப் புலவர் எழுதியுள்ளார் செய்யுள்?' தலைவன்: “சிறந்த ஒரு கேள்வி கேட்டாய் திருவே! "உறுதோ றுயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்” என்ற பாட்டில் கமழும் கருத்தை நீ காண்பாய் - உயிர்தளிர்க்கத் தீண்டினாள் தன் துணைவி, அன்னதற்குக் காரணம் அம்மாண்புடையாள் தோளேயாம்! தளிர்க்க வைப்பது யாது? "மழையன்றோ ? அந்தக் குளிர் மழையை அன்னார் அமிழ்து என்றார்! கூறும் அதனால், அமிழ்தை மழை என்றே சொன்ன மதியுடையார் சொல்லால் மகிழ்ந்து நலமடைவாய்!” மழை பொழிந்து உலகுக்கு வேண்டும் நலங்களை வழங்கி வருவதால் அம்மழையே உலகுக்கு அமிழ்தம் என்று உணர்தற்கு உரியது என்பதைக் குழப்பமின்றியுணர்ந்து கொண்டோம். "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" 12 ஒருவனுக்குக் கட்டாயத் தேவை 'துப்பு' - துப்பு இல்லாமல் உயிர் வாழ எவர்க்கும் இயலாது. துப்புக்கு வழியில்லாதவனைத் 'துப்புக் கெட்டவன் என்பது உலக வழக்கு. - துப்பு என்பது என்ன? 'துய்ப்பு என்பதே யகர ஒற்றுக் கெட்டு துப்பு என நின்றது. துப்பு என்பதற்கு உணவுப் பொருள் என்னும் பொருளுடன் வலிமை என்னும் பொருளும் உண்டு. உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதுடன் உண்பவர்க்குக் 'குடிநீர்' என்னும் உணவாக இருப்பதும் மழையேயாம். இலங்கையில் சிறை இருந்த போழ்து நீரையே பருகி உயிர் வாழ்ந்தேன்' என்னும் உண்மையைத் தூது வந்த அனுமனிடம் சீதையே கூறுவதாகக் கம்பர் கூறும் பாடல் நல்ல சான்றாகும். "தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை வீரன் மேனியை மானும் இவ்வீங்கு நீர் நாரா நாண்மலர்ப் பொய்கையை நண்ணுவேன் சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால்” அமுதமாம் மழை பருவத்தே பெய்து நிலத்தை எல்லாம் வளநிலமாய் ஆக்குகிறது. தொழில்கள் எல்லாம் சிறப்புற நிகழ்கின்றன! மனித இனம் மகிழ்வுடன் உண்டு வாழ்ந்து வருவதுடன் விலங்குகள் பறவைகள் முதல் அனைத்து உயிரிகளும் பசியாற உண்டு, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விழாவிற்கும் வேடிக்கைகட்கும் குறைவில்லை இத்தகைய திருக்காட்சியைக் கண்டு மகிழ்ந்த திருவள்ளுவர் தொடர்ந்து சில ஆண்டுகள் மழை பொய்த்தமையால் உற்ற அழிபாடுகளையும் காண நேர்ந்தது போலும், மழை தடையின்றிப் பெய்யுங்கால் அடைந்த இன்பத்தை விட, மழை பொய்த்தக் கால் உற்ற துன்பமும் இழப்பும் பன்மடங்காய்ப் பெருகிச் சோலை வனமெல்லாம் பாலை வனக்காட்சி வழங்கியமை அவர் உள்ளத்தைப் பெரிதும் வாட்டியிருக்கும் போலும், அதனால் தான் 13. "விண்ணின்று பொய்ப்பின்” 14. புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்” 16. "விசும்பின் துளிவீழின் அல்லால்” 17. "தடிந்தெழிலி தான் நல்கா தாகி விடின்” 18. "வானம் வறக்குமேல்” 19. "வியனுலகம் வானம் வழங்கா தெனின்” என ஆறு குறட்பாக்களில் 'மழை இன்மை ' படுத்துப் பாட்டையே விரித்துரைக்கிறார். "வேண்டுங் காலத்திலே மழை பெய்யாது போகுமாயின், இவ்வுலகு கடல் நீரால் சூழப்பட்ட பேருலகமாய் இருப்பினும் அனைத்து உயிர்களும் உண்ண உணவிற்கு வழியின்றிப் பசிக் கொடுமையால் துன்புறுவர்.” 'மழை என்னும் சிறந்த வருவாய் குறைந்து போகும் காலம் உண்டாகுமானால், உலகமாகிய தேர்க்கு அச்சாணியாய் விளங்கும் உழவர் தம் ஏரைப்பூட்டி உழவுத் தொழிலைச் செய்யவும் மாட்டார். நீர் வாய்ப்பு இன்றிச் செய்யப்படும் உழவுப் பணி வீண்பணியாகவே அமைந்து விடும். உழவரே உழார் எனின் எவரும் எத்தொழிலையும் செய்ய இயலாது. தொழில் முடக்கம் இறுதியில் உயிர் இழப்பில் தான் கொண்டு போய் விடும் 14 "மழை பெய்து வரும் காலங்களில் பசுமை பூத்துக் கண்கொள்ளாக் காட்சி வழங்கிய நிலத்தில், தொடர்ந்து வான் மழை பொழியத் தவறுமானால் சின்னஞ் சிறிய புற்களின் முளையைக் கூடப் பார்க்க வியலாது. எல்லாம் வெறும் வறண்ட நிலமாகி விடும்” 16 “மேகமானது கடல் நீரைப் பருகிக் கடலுக்குக் குறைவு செய்து பருகிய நீரைத் திரும்பக் கொடுக்காமற் போகுமாயின் பெரிய அக்கடலிலிருந்து கிடைக்கும் வளங்கள் எல்லாமும் குறைந்து போகும். புது நீர் கடலுக்கு வாராது போமாயின் கடலின் உப்பு நீர் மேலும் கடும் உப்பாகிக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்குரிய தன்மையையும் இழந்து விடும்” 17 "மழை பெய்யாமல் போகுமானால் புகழ்த் தலைவர்கட்கு இங்கு நடத்தப்படும் சிறப்பு விழாக்களோ நாள் வழிபாடுகளோ, எந்த மகிழ்ச்சி தரும் சிறப்பு நிகழ்ச்சிகளோ இன்றி மக்கள் ஒடுங்கிப் போவர்” 18 மழை பெய்யத் தவறுமாயின் எவை எல்லாம் இல்லையாகும் என்பதை "விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி.” "ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்” "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது” "நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்” 18 "சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” எனக் கூறியதுடன் அமையாது, “இப்பெரிய உலகத்தில் மழை பெய்யாது பொய்த்து விடுமாயின், பிற உயிரின் துன்பம் போக்கப் பேருள்ளத்துடன் அருளாளர் வழங்கும் கொடை போன்ற உயர்பண்புகளோ; தமக்கு ஏற்பட்ட துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக் கொண்டு, மறந்தும் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாது வாழும் தவ வாழ்வோ இம்மண்ணில் இல்லாது போய்விடும் என்பதைத், தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்” 19 எனும் பாவழியே தெளிவுபடுத்தியுள்ளார். மழை பெருவளம் தரும், பேராற்றல் பொருந்திய இயற்கை, அம்மழை எப்பொழுது பெய்யும்? எங்கே பெய்யும்? எவ்வளவு பெய்யும்? என்பதைக் முன் கூட்டிக் கணித்தறிதல் அரிது. வேண்டிய காலத்தில் - வேண்டிய இடத்தில் வேண்டிய அளவு பெய்விக்கச் செய்யும் ஆற்றலும் யாருக்கும் இல்லை. பெய்யாமல் கெடுப்பதும் மழைக்கு இயற்கை; அதுபோல் | அளவின்றிப் பெய்து கெடுப்பதும் மழைக்கு இயற்கை! அப்படி யானால் இருவழியும் கெடுப்பது தான் இயற்கையா? இல்லை. வரம்பின்றிப் பெய்து கெடுத்ததும் உண்டு; பெய்யாமல் பொய்த்துக் கெடுத்ததும் உண்டு எனினும் அதை விடக் கொடுத்து உயர்த்தியது மிகுதி! மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருக்கும். அமுதூட்டும் தாய், அழுத்திப் பிடிப்பதும் அரட்டுவதும் போன்றதே மழை செய்த கெடுதல்; உள்ளத்து அன்பால் அரவணைத்துப் பேணுவது போன்றதே மழையால் பெறும் இணையற்ற உயர்வு” என்பதைக், "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை” 15 என்றார். மக்களைத் தாழ்விப்பதும் வாழ்விப்பதும் செய்ய வல்லது மழையே என்பதை உணர்ந்து கொள்கிறோம். 'தகடூர் யாத்திரை' என்பது ஒரு பழமையான நூல் அதில் | ஒருபாடல் "பெருநீரால் வாரி சிறக்க; இருநிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக; நாறார் முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க; அக்கிளை பால்வார்பு இறைஞ்சிக் கதிரீன; அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம் நிறைக! அக்களத்துப் போரெல்லாம் காவாது வைகுக; போரில் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையொடு நாரை இரியும் விளைவயல் யாணர்த் தாக அவன் அகன்தலை நாடே” - புறத்திரட்டு 844 “நீர்ப் பெருக்கால் வளம் சிறப்பதாக! விதைத்த விதை எல்லாம் முளைக்கட்டும்! முளைத்த நாற்றுச் சிறக்க மழை பெய்யட்டும்; பெய்தபின் ஒன்றனை ஒன்று ஒட்டாது பயிர் கிளைக்கட்டும் அக்கிளைகள் எல்லாம் பால் பிடித்து வளையும் கதிர்களை ஈனட்டும்; அக்கதிர்கள் எல்லாம் உழவர்களின் களத்தில் நிறையட்டும்; அக்களத்தில் போர்கள் எல்லாம் காவல் இல்லாமலே கிடக்கட்டும்; போர் அடிப்பார் ஒலிக்கு அஞ்சி நாரை தன் துணையோடு அகலட்டும்; இவ்வாறு மேலும் மேலும் பெருகும் வயல் வளம் உடையதாக ஆகட்டும் அவன் அகன்ற இடத்தை உடையநாடு என வாழ்த்துகிறது. இவ்வாழ்த்து வள்ளுவரின் உட்கிடக்கையைப் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. அதிலும் "களத்துப் போரெல்லாம் காவாது வைகுக” என்பது நாட்டு மக்களின் பண்பட்ட நல்வாழ்வை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. திருவள்ளுவரும் "நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு" என நிறைவுக் குறள் யாத்தார். நீரில்லாமல் உலக வாழ்வு நடைபெறாது. மழை நீரே ஆறு, குளம், ஏரி, கிணறு, அருவி, கடல் முதலாய் அனைத்து நீருக்கும் அடிப்படை. மழை இல்லையானால் உயிரினங்களின் வாழ்வும் இல்லை உயர்ந்தோர்களின் ஒழுக்க வாழ்வும் குன்றிப் போகும் 20 அவ்வளவு இன்றியமையாதது 'மழை' என்பதைத் திருவள்ளுவர் எண்ணியது போலவே எண்ணிப் பார்த்த சங்கத்துச் சான்றோர் குடபுலவியனார், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழிய மன்னனிடம் வேண்டும் புறநானூற்றுப் பாடல் ‘வான் சிறப்பை, மேலும் சிறப்பாக்கிச் சிறப்பும் நிறைவும் புகழும் பெற வழி காட்டுகிறது. "மல்லல் மூதூர் வயவேந்தே செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ யாகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்; மற்றதன் தகுதி கேளின் மிகுதி யாள்! நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே! வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாது அதனால் அடுபோர்ச் செழிய இகலாது வல்லே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளா தோரே” - புறம் 18 'வளமான பழைய ஊரினை உடைய வலிய வேந்தனே! நீ மறுமை உலகத்தில் நுகரும் செல்வத்தை விரும்பினும்; நீ ஒருவனே இவ்வுலகத்தை ஒரு குடைக்கீழ் ஆள விரும்பினும்; மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தில் நிலைபெறுத்த விரும்பினும் அதற்குத் தக்க வழி கூறுகிறேன் கேட்பாயாக! பெரியோய்! நீரை இன்றி அமையாத உடம்பிற்கெல்லாம், உணவைக் கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உணவை முதலாக உடையது அவ்வுணவால் உளதாகிய உடம்பு. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; அந்நீரையும் நிலத்தையும் ஒரு வழி கூட்டினவர்கள் இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவராவார். “நெல் முதலாயவற்றை விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புல்லிய நிலம், மிக்க விரிந்த பரப்புடைய தாயினும் அது பொருத்தமாக ஆளும் மன்னனது முயற்சிக்குப் பயன்படாது.” 'ஆதலால், போராற்றல் மிக்க செழிய! இதனைக் கடைப்பிடித்து, விரைந்து நிலன் குழிந்த விடத்தே நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர் - தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாய மூன்றனையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத் தோர் ஆவர்; அந்நீரைத் தளையாதவர் இவ்வுலகத்துத் தம் பெயரையும் தளையாதோர்' ஆகவே நீயும் நீர்நிலை பெருகத் தட்க வேண்டும் என வேண்டினார். மழை நீரின் மாண்புரைத்தார் வள்ளுவர்! மழை நீரைச் சேமிக்க வேண்டினார் குடபுலவியனார். சேமித்து வழிகாட்டிப் புகழ் பெற்றான் பாண்டியன் நெடுஞ்செழியன். நாமும் மழை வளம் பெருக மரம் வளர்ப்போம்! கொட்டும் - மழையின் சொட்டு நீரையும் வீணாக்காது, மாசு படுத்தாது காப்போம்! செழிப்புடன் வாழ்வோம்! 3. நீத்தார் பெருமை "தன் பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்; தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என் சிற்றூர் என் போனுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்! தொன்னை யுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச் சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்! ஆயுதங்கள் பரிகரிப்பார். அமைதி காப்பார் அவரவர் தம்வீடு நகர் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார்! மாம்பிஞ்சு உள்ளத்தின் பயனும் கண்டோம்! தூய உள்ளம் அன்புள்ளம் பெரியஉள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே” என்பது பாவேந்தர் பாரதிதாசனார் 'உலக ஒற்றுமை' எனும் தலைப்பில் பாடிய அருமையான பாடல். தன்னலத்தை விட்டவரே - நீத்தார், அவரே தொல்லுலக மக்களெல்லாம் 'ஒன்றே' என எண்ணும் தாயுள்ளம் தூய்மையான அன்பு நிறை பெருமை வாய்ந்த உள்ளம் படைத் தவர் ஆவார். அத்தகையோர் பெருமையை விளக்கிக் காட்டும் அதிகாரமே 'நீத்தார் பெருமை' என்னும் இவ்வதிகாரமாகும். புளியம் 'பிஞ்சு' - தோல், தசை, விதை - தனித்தனியே பகுக்க இயலாது ஒன்று இணைந்தும் பிணைந்தும் காணப்படும். அத்தகைய பருவம் இளமைப் பருவம்; - காய்ப்பருவம் - தோலும் தசையும் விதையும் ஒன்றி இருக்கும் ஆனால் தனித்தனியே பகுக்கவும் செய்யலாம். முற்றி முதிர்ந்த பழம் - தோல் தசை, விதை ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும் அதே வேளையில் மேல் தோலுக்குள்ளும் அமைந்திருக்கும். மிகு பயன் தரும் பருவமும் அஃதே. அது போல் பெற வேண்டிய தகுதிகளை எல்லாம் பெற்று வளர்வாங்கு வளர வேண்டிய பருவம் இளமைப்பருவம். இணைந்து இல்லறக் கடமைகளையாற்றித் தம் குடும்பத்தைத் தகுதி வாய்ந்த குடும்பமாக ஆக்கிக் கொள்ளும் பருவம் நடு அகவைப் பருவம் - அது தன்னலப்பற்று மேலோங்கிக் காணப்படும் பருவம். மூன்றாம் பருவமே முதிர்நிலைப்பருவம். அதனைத் தொல்காப்பியர், 'காமம் சான்ற கடைகோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறுகிறார். (தொல். கற்பு. 51) 'இன்ப நுகர்வு நிறைந்து முதிர்வுற்ற நாளில், தாம் கொண்ட இல்லறக் காவற் கடமையை மக்களைத் தாங்கச் செய்து, தம் முதிய சுற்றத்தொடு தலைவன் தலைவி ஆகிய இருவரும் சிறந்த பொது நலப்பணிகளில் ஈடுபடுதலே அம்முதுமைச் சிறப்பின் பயனாகும் என்பது இதன் பொருள். 'நீத்தல்' அல்லது துறவு என்பது ஒரு பெருநிலை. தன்னலப் பற்று அற்றநிலை; பிறர்நலத் தொண்டுக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்ட நிலை; விருப்பு வெறுப்பு அற்றுப் போன வியன்நிலை. அதனாலேயே இன்னிசை என்னும் நூல். "நீத்தாரைப் போற்றுதும் நீத்தாரைப் போற்றுதூஉம் நேத்திரம் என்ன உலகை நெறிநிறீஇ மூத்த அறிவினால் நூற்பொருள் முற்காட்டி ஆத்தனையும் காட்டிவிட லான்” (பன்னூல் பாடற்றிரட்டு. 65) (நேத்திரம் - கண்) எனப் பணிந்து நீத்தாரைப் போற்றுகிறது. திருவாவினன்குடியில் செவ்வேளை வழிபட முன் நிற்கும் முனிவர்களைத் திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் மாறுபாட்டோடே பகையையும் போக்கின மனத்தை யுடையவரும், கற்றோராலும் அறியப்படாத அறிவினை உடையவரும், கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமை உடையவரும், அவாவுடனே சினத்தையும் போக்கிய அறிவினையுடையவரும், மனத்தால் வருத்தம் சிறிதும் கரும், கற்பார்க்குத் தான் சினத்ை அறியப்படாத இயல்பினையுடையவரும், ஒருவருடனும் வெறுப்பில்லாத நற்பண்பினையுடையவரும் ஆகிய முனிவர் எனப் பற்றற்ற முனிவரைக் காட்டுகிறார். "உலகில் வாழும் ஒவ்வொரு வரும் நாம் பிறர்க்குத் தொண்டு செய்யவே படைக்கப் பட்டோம்' என்று நினைத்துத் தம்கடன் ஆற்றினால், உலகம் தெய்வ உலகமாகவன்றோ மாறும்? உலகில் தோன்றிய சமயாசாரியர் பலரும் இத்தொண்டையே அறிவுறுத்திச் சென்றனர். எச்சமயத்தை எடுத்து ஆய்ந்தாலும் அதன்கண் தன்னல மறுப்பும், பிறர் நலச்சேவையும் பேசப்படுதல் காணலாம். சமயங்கள் பலவாகக் காணப்பட்டாலும் அவற்றின் ஊடே தொண்டெனும் ஒரு பெரும் ஒப்புரவு திகழ்ந்து கொண் டிருக்கிறது. பல மதங்கள் என்று பன்மையாகக் கூறுதற்குப் பதிலாகத் தொண்டு மதமென அவற்றை ஒருமைப்படுத்திக் கூறலாம். "எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொது என்னும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிறவுயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும் மற்றவர் வாழ்க்கை தோல்வியுடையதென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அனுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன' எனத் திரு.வி.க நீத்தார் பெருமையை உணர்த்துகிறார். "நல்லோர் அளித்த நல்லெண்ணங்கள் நல்லோன் பாலுற நன்மை வளரும்” தன்னல மறுப்பால் தன்னை மறந்தோன் இன்னலின் நீங்கி உண்மையில் நிலைப்பான்” "உய்க பிறரென உயிரையும் வழங்கும் தெய்வத் தன்மை சேர்ந்தவர் மேலோர்” "நானென தென்னும் நசையின் நீங்கி நிவர்த்தி வழியின் நிற்கும் நிலையே கருமமும் ஞானமும் பத்தியும் ஒன்று கூடிய நிலையெனக் குறிக்க வேண்டும்” தலைவன் வீட்டுத் தனையரைப் பேணும் தாதி போலத் தம்பொருள் என்ப இறைபொருள் ஆமென இதயத் தெண்ணி மலையசை வுறினும் நிலைகலங்காது சுகமுனி போன்று துளக்கமற் றிருக்கும் பூரண மாகிய தன்னல மறுப்பே பற்றின்மை யாமெனப் பகர்ந்தனர் மேலோர்” (விவேகானந்தரின் ஞான தீபம் சுடர் - 3) எனப் பகர்கிறார் தன்னல மற்ற திருத்தொண்டில் மேலோராய் உலகம் மதிக்கும் விவேகானந்தர். “யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு' எனக் கூறி 'வான் சிறப்பை நிறைவு செய்த வள்ளுவர். 'நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தை "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” எனத் தொடங்குவது ஒழுக்கத்தைப் பற்றிய வள்ளுவரின் உயர்நோக்கைப் புலப்படுத்துகிறது. "ஒழுக்கம் உடைமை குடிமை” 133 "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” 137 "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” "ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என ஒழுக்கத்தின் உயர்வு கூறியதுடன் "இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” "பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” "இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” "இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” 137 "தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” 138 எனவும் கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்நிலை மாந்தரும் ஒழுக்கமின்றி உயர்வோ, சிறப்போ, பெருமையோ புகழோ அடைய வியலாது என்பதைத் திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார். ஆகவே, மீமிசை மாந்தராகிய நீத்தார்; பற்றைவிடுவது எவ்வளவு சிறப்புக்குரியதோ அதைவிட அன்னார்க்கும் அவர் தம் நெறிக்கும் பொதுநலத் தொண்டிற்கும் சிறப்புத் தருவது நல்லொழுக்கத்தை விடாது பின்பற்றி ஒழுகுதலே என்பதை உணர்த்தவே 'ஒழுக்கத்து நீத்தார் பெருமை' எனத் தொடங்குகிறார். 'ஒழுக்கத்தில் நிலைபெற்றுத் தன்னலப் பற்றை விட்டவர் பெருமையே பெருமைக்குரியன பலவற்றுள்ளும் சிறந்தது என்பதே உயர்ந்த நூல்களின் முடிவாகும்” என்பது சுருக்கவுரை. "ஒருவன் ஞான சாத்திரப் பயிற்சி இல்லாதவனாய் இருப்பினும், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவனாய் இருப் பினும், அவன் தனது வாழ்வில் ஒருமுறையேனும் கடவுளை நோக்கி வணங்கா விட்டாலும் நற்கருமத்தின் வலியினாலே மற்றவர்களுக்காகத் தன்னுயிரையும் கொடுக்கச் சித்தமாய் இருக்கிற நிலையை அடைந்து விட்டான் எனில், அத்தகைய மனிதனானவன் பத்திமான். பத்தியினாலும், ஞானவான். ஞானத்தினாலும் அடைந்த நிலையை அடைந்தவன் ஆவான். ஆகவே, ஞானவான் கருமயோகி, பத்திமான் ஆகிய அனைவரும் முழுத் தன்னல மறுப்பாகிய நிலையில் ஒன்று பட்டவரே” "தாம் கைக்கொண்டொழுகும் கொள்கைக்கு மாறுபட்ட சமயக்கொள்கை, தத்துவக் கொள்கைகளை உடையவனாய் இருப்பினும், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனைக் கண்ட மாத்திரத்தே உலகத்தார் அன்பினோடும் ஆர்வத்தினோடும் அவனைப் பணிந்து நிற்பர். இந்த நிலையில் சமய வேறுபாடும் கொள்கை வேறுபாடும் கருதப் படுவதில்லை. சமயக் கொள்கைக்கு முற்றும் முரண்பாடான மனிதரும் பூரணத் தன்னல மறுப்பைக் கண்ட மாத்திரத்தே கைதொழுது நிற்பர்.” "புத்த தேவர் கடவுளைப் பற்றிப் பிரசங்கம் செய்யவில்லை. ஆயினும் பூரணத் தன்னல மறுப்பின் உருவமாய் இருந்தார். அதனாலே தான் அவருடைய சரித்திரத்தைக் கூறுவதும், எட்வின் ஆர்னால்டு என்னும் ஆங்கிலக் கவிஞர் செய்ததுமான 'ஆசியாவின் பேரொளி விளக்கம்' என்னும் நூலைப் படிக்கிற ஒருவன் கடுங்கிறித்தவனாய் இருப்பினும் புத்த தேவரை உள்ளத்திற் தொழுகிறான் என விவேகானந்தப் பெருமான் ஞான தீபம் 3-இல் வழங்கும் விளக்கம் இக்குறளுக்கு ஏற்ற விரிவுரையாய் விளங்குவதைக் காண முடிகிறது. கால எல்லை தாண்டி, நில எல்லை கடந்து உலகில் என்றும் போற்றப்படுபவர் புத்தர், மகாவீரர், இயேசுநாதர், நபிகள் நாயகம். சமயக்குரவர் நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பதினெண் சித்தர்கள், இராமலிங்கர், இராமகிருட்டிணர், விவேகானந்தர், நைட்டிங்கேல் அம்மையார் அன்னை தெரசா, காந்தியடிகள், திரு.வி.க போன்ற பேருள்ளம் படைத்த பெருமக்களின் தன்னலமற்ற தூய பொது நலத்தொண்டு ஏடுகள் போற்றும் ஏற்றமிக்கனவாகும். ஆகவே, ஒளவைப் பெருமாட்டி, "பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது” "இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” என நீத்தார் பெருமையே உலகில் இணையற்ற பெருமை வாய்ந்தது எனக் கூறுவதும் இக்கருத்திற்கு அரண்செய்கிறது. துறந்தார் பெருமைக்கு அளவு உண்டா? இல்லை. இல்லை என்று கூறினால் எப்படி? எதற்கும் ஓர் அளவு உண்டல்லவா? உண்டு. துறந்தார் பெருமைக்கும் உண்டு. இதுவரை இம் மண்ணில் பிறந்து இறந்தவர் எத்தனை பேர்? எண்ணிச் சொல்? உலகம் தோன்றிய காலத்தையே திட்டமாக வரையறுக்க இயலவில்லை. பின் உலகம் தோன்றிய நாளிலிருந்து தோன்றிய மக்களின் எண்ணிக்கையை எப்படி வரையறுக்க முடியும்? முடியாதா? அப்படியானால் துறந்தாரின் பெருமையையும் அளவிட்டுரைக்க இயலாது. நீத்தார் பெருமைக்கு இணை நீத்தார் பெருமையேயன்றி வேறு எவருடைய பெருமையும் அன்று என்பதை நயமாக துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” என எண்ணி வியக்க வைக்கிறார். "துறவிக்கு வேந்தனும் துரும்பு” என்பது இம்மண்ணின் மொழி. "இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு” இருவேறு இயல்புடைய இவ்வுலகியல் தெரிந்து, பற்றுத்தல் | என்னும் உயர் அறத்தை மேற்கொண்டவர் பெருமை. உலகில் நிலைபெற்று விளங்கும் பெருமைகளிலெல்லாம் உயர்ந்த பெருமை உடையதாகும். அறம்-மறம்; அரண்-முரண்; அடக்கம்-அடங்காமை; ஆக்கம் கேடு; ஆகூழ்-போகூழ்; ஆகாறு - போகாறு; இன்சொல் வன்சொல்; இசை-வசை; இன்பம் - துன்பம்; உயர்வு தாழ்வு; ஒழுக்கம்- இழுக்கம்; ஒளி- இருள்; பெருமை-சிறுமை; பொய்மை வாய்மை; நன்மை-தீமை; வன்மை - மென்மை என்பன போன்ற இருவேறு தன்மைகளின் இயல்புகளைத் தெள்ளிதின் அறிந்து, விலக்க வேண்டுவனவற்றை விலக்கி மேற்கொள்ள வேண்டியவற்றை மேற்கொண்டு பெருமை பெறுக! "இருவேறு உலகத் தியற்கை ; திருவேறு தெள்ளிய ராதலும் வேறு” 374 என ஊழ் அதிகாரத்துக் கூறுவதும் ஒப்பிட்டு நோக்குதற்குரியது. "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து” என்னும் குறட்பாவை, ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' 126 என்னும் அடக்க முடைமைப் பாடலில் ஆமை போல் தம் ஐம்பொறிகளையும் அடக்கும் திறம் பெற்றால் அஃது எக்காலத்திற்கும் சிறந்த பாதுகாப்பு ஆகும் என்கிறார். இறை வணக்கத்தில், "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” என்றார். ஐம்பொறிகளையும் மனம் செல்லுகிற வழியில் செல்லவிடாமல் அறிவு செலுத்துகிற வழியில் செலுத்த வேண்டும். வேண்டாத வழிகளில் எப்பொறியும் செயல்பட இடந்தந்து விடலாகாது. விட்டால் வேண்டாத வம்புகளை எல்லாம் விலைக்கு வாங்கி வந்து விடும். அதிலிருந்து மீள்வது அரிது. தேவையில்லாத போழ்த்து ஆற்றலை வீணாக்கி விட்டால் தேவையுள்ள போழ்து செயல்படும் ஆற்றல் இல்லாது போய்விடும். ஆகவே திருவள்ளுவர் அறிவு என்னும் தோட்டியால் பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் அடக்கிக் காப்பவன் 'ஆக்கம்' என்னும் சேமிப்புக் கிடங்கை நிரப்பும் தேர்ந்தெடுத்த நல்ல விதை போன்றவன் ஆவான் என்கிறார். பெருமைக்குரிய தகுதி சான்ற முனிவர் வியாசர்; அவர் தம் மைந்தர் சுகருக்குத் தாம் அறிந்த மெய்ப்பொருளைக் கற்பித்தார். மேலும் புலமை பெறப் பற்றற்ற பெருந்துறவி மிதிலை மன்னன் சனகரிடம் அனுப்பிவைத்தார். சுகர் தம்மிடம் வருவதை ஞானத்தால் அறிந்த சனகர்; வாயிற் காவலரிடம் சுகருக்கு ஒரு இருக்கை தந்து அமர்ந்திருக்க ஏற்பாடு செய்தார். மூன்று இரவு பகல் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவ்விளைஞர் முகம் மலர்ந்தே காணப்பட்டதாம். பின்னர் அமைச்சர் பெருமக்கள் அன்புடனும், சிறப்புடனும் அரண்மனைக்குள் அழைத்து வந்து உடை, உணவு, முதலியன வழங்கி அரசு மரியாதையோடு போற்றினர். அப்போதும் முகத்தில் மாற்றம் இல்லை. பின்னர் அரசவைக்கு அழைத்து வந்து - ஆடல் பாடல்களால் மன ஒருமையைக் குலைக்க வழி செய்து 'பொற்கிண்ணம் நிறையப் பாலால் நிரப்பிக் குறிப்பிட்ட நேரத்திற்குள் மண்டபத்தை ஏழுமுறை சுற்றிவரப் பணிக்கப்பட்டார் சுகதேவர். அதிலும் அவர் மன உறுதியுடனும் அடக்கத்துடனும் விளங்கினார். சனகர், சுகதேவரை நோக்கி 'உமக்கு இனி நான் கற்றுத் தரவேண்டியது ஒன்றுமில்லை. நீரே முழுமை பெற்ற உயர் ஞானி” என்று பாராட்டி அனுப்பினாராம். சுகதேவர் உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காத்தவர். அவர் மேன்மையைப் பெருக்கும் உயர்வித்துப் போன்றவர். "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்தரனே சாலும் கரி” என்பது நீத்தார் பெருமையின் ஐந்தாம் குறள் இக்குறளில் இந்திரன் என்னும் பெயராட்சி உள்ளது. 'விசும்பு உளார் கோமான்' எனப் பதவிப் பெயர் உள்ளது அவன் நீத்தார் பெருமைக்குச் சான்றானவன் எனப்படுகிறான்” இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்” எனப் பரிமேலழகர் திருக்குறள் உரைப் பாயிரத்தில் வரைகின்றார். ஆயினும் தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று (ஐந்து) அவித்தானது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் 'இந்திரனே சாலும் கரி' என்கிறார் பரிமேலழகர். அவ்வுரை ஏற்புடைத் தன்று. "தொல்காப்பியப் பாயிரத்தில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பதொரு தொடர் வருகின்றது. அவன் புலன் ஐந்தும் வெற்றி கொண்ட துறவோன் புலன் ஐந்தும் வென்றான் ஐந்திரன் எனப்பட்டான். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு ஏற்ப அவன் அமரநிலை எய்தினான். சிலப்பதிகாரத்தில் 'விண்ணர் கோமான் விழுநூல்' என்று வரும் தொடர்க்கு ஐந்திர வியாகரணம் என உரை வரைவார் அரும்பத் உரையாசிரியர். சமண சமய நூல்கள் இந்திரனை ஐந்தவித்த ஆற்றலாளியாகவே காட்டுதலால் அவன் அடக்கத்தைச் சான்றாகக் காட்டினார் என்பது தகும். பிற சமயத்தார் குறிப்புகளைச் சமயம் கடந்த சால்பு வள்ளுவர் கொள்ளுவரோ எனின், 'எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பாகலின்' எனப் பரிமேல் அழகரே வள்ளுவர்க்குச் சான்றளித்தல் இச்சான்றுக்குச் சான்றாம். ஐம்புலன்களையும் அடக்கிய நீத்தார் திறத்திற்கு எண்ணற்ற புகழ் உடம்பாளர்க்கு ஒரு பெருந்தலைவனாகக் கூறப்படும் ஐந்திரனே (இந்திரனே) சிறந்த சான்றாவான்' என்னும் இளங்குமரனாரின் விளக்கமும் உரையும் ஏற்புடையதாகும். "செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார்” பிறரால் செய்வதற்கு அரிய உயர்ந்த பயனுடைய நல்ல செயல்களை எளிமையாக அல்லது இயல்பாகச் செய்பவரே பெரியவர்; அவ்வாறு செய்வதற்கு அரிய செயல்களை முயன்றும் செய்ய இயலாதவர் சிறியவர். கந்து மதக் கரியை வசமா நடத்தலாம் கரடிவெம் புலிவா யையும் கட்டலாம், ஒருசிங்க முதுகின் மேற் கொள்ளலாம் கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல் கொள்ளலாம் சந்தசமும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம் தன்னிகரில் சித்தி பெறலாம் சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' சத்தாகியென் சித்தமிசைக் குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” எனத் தாயுமானவர் 'அடக்கமுடைமையே அரிதினும் அரிது என்கிறார். "சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” 664 எனும் வினைத் திட்பக் குறளையும் "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்” 975 எனும் பெருமைக் குறளையும் இணைத்து எண்ணிப் பார்க்க வேண்டும். "சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு" நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் பூதத் தன்மைகள் ஐந்தையும், நிலம், நீர், தீ காற்று, வெளி என்னும் பூதங்கள் ஐந்தையும், மூக்கு, வாய், கண், உடல், செவி என்னும் பொறிகள் ஐந்தையும் முகர்தல், சுவைத்தல், காண்டல், தொடுதல் கேட்டல், என்னும் புலன் ஐந்தையும் விரிவாக, தெளிவாக, நுட்பமாகத் தெரிந்த நீத்தார் இடத்தே தான் இவ்வுலகியக்கம் அடங்கியுள்ளது. நீத்தார் 'நிறை மனத்தர்', நிறை தொண்டு புரிந்த நிறை செயலர், அவர்கள் கூறிய மொழிகள் எல்லாம் உலகை நெறிப்படுத்தி உயர்த்தும் நிறைமொழிகள். ஆகவே, அவர்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன் கூறிய மொழிகளும் அழியாமல் நின்று உலகை உயர்த்தி வருகிறது. அவையே மக்கள் முழு ஈடுபாட்டுடன் போற்றும் மந்திர மொழிகள் ஆகும். அவை தன்னலம் கருதாது, பொது நலம் கருதி மாந்தரது பெருமையை நிலை நாட்டி வருகிறது. என்னும் கருத்தை விளக்கும் திருக்குறள் "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் (1434) தழுவியது. மாந்தன் வாழ்வில் விலக்க வேண்டியவற்றுள் முதலிடம் பெறுவது வெகுளி. அது, சினம், கதம், கோபம் என்றும் கூறப்படும். 'சினம் கொண்டவனை அழிக்கும் நெருப்பு என்பதை, 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்றும், சினம், சினங் கொண்டவர் இனத்தையும் அழிக்கும் தீ என்பதை 'இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்' என்றும் 'சினம் நகையையும் உவகையையும் அழிக்கும் உட்பகை' என்றும், 'தீயவை எவையோ அவை எல்லாம் சினத்தாலேயே உண்டாகும்' என்றும் 'சினம் கொண்டார் இறந்தார் போன்றவரே' என்றும் கூறியதுடன், "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்” 305 என்றும் சினம் தோன்றாமல் உன்னை நீயே காத்துக் கொள்க எனப் பரிவுடன் வேண்டினார். "தன் மனத்தாலும் வெகுளுதலை ஒருவன் நினையான் என்றால் அவன் நினைப்பதெல்லாம் நினைத்தபடியே உடன் நிறைவேறும்” 'வெகுளுதலை விலக்கிய எளிய மனிதனும் பற்றற்ற உயர்ந்த துறவிக்கு ஒப்பாவான்' என்றும் மொழிந்த பயன் மொழியராம் வள்ளுவர் குணமென்றும் குன்றேறி நின்றார் வெகுளி காணமேயும் காத்தல் அரிது' என ஒரு குணமலை காட்டும் குறள் யாத்துள்ளார் என்றால் அதற்கு 'உயர்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்று நிலைபெற்ற நீத்தார் நொடிப் பொழுதும் சினம் தம்மிடம் தங்க இடம் தர மாட்டார்” என்பது போல் தானே பொருள் கொள்ள வேண்டும். சினத்திற்கு இடந்தந்தால் அவர் நீத்தாரும் அல்லர்; உயர் பண்பாளரும் அல்லர் என்பது தானே முறைமை. "பலதிறத் தொல்லைகளிடை என் வாழ்க்கை வளர்ந்தது. ஆனால் அது பொருட் பெருக்கில் புரளாததாயிற்று தொண்டின் பெருக்கில் புரள்வதாயிற்று. வாழ்க்கையின் அடைவு பொருட்பெருக்காயின் என்னுடையது தோல்வி எய்தியதாகும். தொண்டாயின் அது வெற்றி எய்தியதாகும். தொண்டின் சேய் எது? அந்தண்மை. தொண்டு அந்தண்மை ஊற்றைத் திறந்தது. அந்தண்மை அருவியாய் ஓடுகிறது. அது வெள்ளமாதல் வேண்டும். எனது வாழ்க்கை ஒரே வழி அந்தணச் செல்வத்தைப் பெற்றது. அவ்வந்தணச் செல்வம் முழுநிலை எய்தும் முயற்சியில் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியும் ஈடுபடுமாறு ஆண்டவன் அருள் சுரப்பானாக!” "இப்பிறவியில் எனது வாழ்க்கை அந்தணச் செல்வம் பெறுதற்குத் துணை நின்ற கல்வி கேள்விகட்கும், நல்லிணக்கத் திற்கும், இல்வாழ்க்கைக்கும், இயக்கங்கட்கும் பிறவற்றிக்கும் எனது வாழ்த்து உரியதாக!'' எனத் தம் வாழ்க்கைக் குறிப்பில் வாய்மையாளராகிய தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களே வரைவதன் வழி, "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக வான்” 30 என்னும் இலக்கணக் குறளுக்கு, அவரும் இலக்கியமாய் விளங்கியவர் என்பதை அறிந்து போற்றுகிறோம். "எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல்லின்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்” "மண்ணுலகதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல்வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்” என வேண்டிப் பிறவுயிர்களின் துயர் துடைத்து வாழ்ந்த வள்ளலாரும் செந்தண்மை பூண்டொழுகிய அந்தணர். அந்தணர் என்பது சாதிப் பெயரோ குலப்பெயரோ, குடிப் பெயரோ, அன்று அது ஓர் உயர்ந்தோங்கிய அருள் நிலைப் பண்புப் பெயர். "ஆடு சுமந்திளைத்த புத்தரேன் அந்தணராய்ப் பாடு புகழ்பெற்றார் வள்ளுவரே! - நீடிய அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்” எனக்கூறும் திருக்குறள் வள்ளுவர் நேரிசை வெண்பாவையும் எண்ணிப் பார்க்க, "நந்தனாராம் அந்தணாளர்" என்ற சேக்கிழாரின் உள்ளக் கருத்தையும் உணர்க! அன்னை திரேசா போன்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு திருத்தொண்டு புரிந்த அறவோராம் அந்தணத் தாயையும் உலகம் கண்முன்னே கண்டு போற்றியது. வாழும் தொல்காப்பியராக, வள்ளுவராக, பாவாணராக விளங்கும் இலக்கியச் செம்மல், தமிழ்க்கடல் இளங்குமரனார் மனக்கவலை மாற்றும் மாமனிதராய்த் தமிழ் நலத்தொண்டு புரிந்து வருவதால் குறள்நெறிச் சான்றோர்கள் அன்னாரைச் 'செந்தமிழ் அந்தணர்' எனப் போற்றி வருவதை நற்றிமிழ் உலகு நன்கு அறியும். நீத்தார் பெருமையில் திருவள்ளுவர் நீத்தாரை: ஒழுக்கத்து நீத்தார் - துறந்தார்; அறம் பூண்டார்; இருமை வகை தெரிந்தார்; ஓரைந்தும் காப்பான்; ஐந்தவித்தான்; ஐந்தின் வகை தெரிவான்; நிறைமொழி மாந்தர்; குணமென்னும் குன்றேறி நின்றார். அந்தணர் என்னும் பண்பியல் உயர் சொற்களால் அடையாளம் காட்டுவதைக் காணும் நாம் அவர் இறை வணக்கத்தில் பகவன்; வாலறிவன்; மலர்மிசை ஏகினான் வேண்டுதல் வேண்டாமை இலான்; பொறிவாயில் ஐந்தவித்தான்; தனக்குவமை இல்லாதான்; அறவாழி அந்தணன்; எண் குணத்தான்; இறைவன் என அடையாளம் காட்டும் மீமிசைப் பண்பியல் பெயர்களையும் ஒப்பிட்டு நோக்க, ஒப்புமை மிகுந்து காணப்படுவதையே காண இயல்கிறது. நீத்தார் வழி நிற்போம்! எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோம்! 4. அறன் வலியுறுத்தல் திருக்குறளில் 'வலியுறுத்தல்' எனும் தலைப்பு அமைந்த ஒரே அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' என்னும் இவ்வதிகாரம் ஒன்றேயாகும். வள்ளுவர் தாம் உணர்த்த எடுத்துக் கொண்ட எதனையும் ஒப்புக்குக் கூறுபவர் அல்லர். வலியுறுத்திக் கூறுவது அவரின் தனித் தன்மையாகும். அறம், பொருள், இன்பம் எனும் முப்பகுப்பு உடையதாய் நூல் அமைந்துள்ளது. எனினும், 'உயிர் நாடி' அறமே. வள்ளுவரின் பொருளும் அறநெறிப் பொருளே; இன்பமும் அறநெறி இன்பமே! அறநெறி தவறிய பொருளைப் பொருளாகவோ? அறநெறி தவறிய இன்பத்தை இன்பமாகவோ கருதாக் கருத்துடையவர் வள்ளுவர். ஆகவே, முப்பால் நூலாகிய திருக்குறள் 'அறநூல்' என்பதே வாய்மையாகும். ஆகவே சங்கத்துச் சான்றோராகிய ஆலத்தூர் கிழார் திருக்குறளை, 'அறம்' என்றே போற்றி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நமக்கு வழி காட்டியுள்ளார். நூற்று முப்பத்து மூன்று தலைப்புகளில் நூல் விரிந்து இயலுவதாயினும் அடிப்படை நோக்கு 'அறன் வலியுறுத்தலே' என்பதைத் தெளிவுபடுத்தும் முகமாய் அமைக்கப்பட்டதே 'அறன் வலியுறுத்தல் அதிகாரம். வள்ளுவர், மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என விரும்புகிறார். ஆகவே, அவர்கள் எண்ணுவாங்கு எண்ண வேண்டும், பேசுவாங்கு பேச வேண்டும், செய்வாங்கு செய்ய வேண்டும். அவ்வியல்பான முறைமை ஒவ்வொரு மனிதனின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் வாழ்விலும், மன்பதை வாழ்விலும், அரசியல் வாழ்விலும் நாட்டு வாழ்விலும், உலக வாழ்விலும் ஆளுமை வாழ்விலும் இடம் பெற வேண்டும் அவ்வாறு நன்னெறியில் வாழ்பவரே உண்மை மனிதர்; அத்தகையோர் வாழும் நாடே நாடு! அத்தகையோர் வாழும் உலகே வாழும் உலகு'. அதுவே 'வாழ் உலகு' அதில் வாழ்வோரே வாழ்வோர்' என உலக நலம் கருதி உயர்நெறி காட்டும் திருவள்ளுவர் தம் நோக்குக்குத் தோற்றுவாயாய் அமைத்துள்ள அதிகாரமே இவ்வதிகாரம்! "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்பது அறநெறிச் சாரம். 'இன்சொல்லே விளைநிலமாகவும், ஈகையே விதையாகவும், கடுஞ்சொல்லாகிய களைபிடுங்கி, வாய்மையாகிய எருவிட்டு அன்பாகிய நீரைப் பாய்ச்சி அறமாகிய கதிரை ஈனுவதாகிய ஒப்பற்ற பசிய பயிரை இளம்பருவத்திலேயே மனமே செய்வாயாக! என முனைப்பாடியார் வேண்டுகிறார். அறமாகிய கதிரை ஈனும் பயிரை ஏன் விளைவிக்க வேண்டும்? அறவழி எண்ணமும் மொழியும் செயலுமே நமக்கு உண்மையான நிலைத்த சிறப்பையும் புகழையும் தரும்! அறநெறியைக் கைக்கொண்டு செய்யும் தொழில் முயற்சியே நமக்கு மன நிறைவு தரும்; நிறைந்த செல்வத்தையும் தரும். ஒரே நேரத்தில் சிறப்பையும் செல்வத்தையும் வழங்கும் அறத்தைக் காட்டிலும் முறையான வளர்ச்சியையும் நலத்தையும் ஆக்கத்தையும் வேறு எதனாலும் பெறல் அரிது. புகழையும் பொருளையும் வழங்கும் அறமாகிய அன்னையைப் போல் நமக்கு ஆக்கம் சேர்ப்பார் யாருமில்லை. என்பதைத் திருவள்ளுவர், "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்கம் எவனோ உயிர்க்கு?!” என்னும் குறள்வழி விளக்குகிறார். திருவள்ளுவரின் அறநெறி அழுத்தம் பொருட்பால் - பொருள் செயல் வகையில், "அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” என வெளிப்பட்டு நிற்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். "தருமமே இணை இல்பொருள் தரைஇடைத் தகைசால் ஒருமை இன்பினை உதவி, விண்ணுலகினும் உடன் போய் அருமை இன்பம் உய்த்தந்தகர்ச் செறும் எனில் அறமே இருமையும் துணை ஆகுவது அன்றி மற்றில்லை” எனக் கூறும் திருக்கூவப் புராணப் பாடலும் இக்குறளுக்கு வேறு ஒரு கோணத்தில் விளக்கம் அளிக்கிறது. "அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு? என வினவிய திருவள்ளுவர் இரண்டாவது குறளை "அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை மறத்தலி னூங்கில்லை கேடு” என அமைத்துள்ளார். 'உண்மையான நலங்களை எல்லாம் அறநெறி மூலமே தான் பெறமுடியும்' என்ற கருத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளார். அறநெறியைப் பின்பற்றாவிடின் கிடைக்க வேண்டிய நலங்கள் தானே கிட்டாது போகும்; போனால் போகிறது. இருப்பது இருக்கும் அல்லவா என்று வினவுவார்க்கு விடையளிப்பது போல் - அறிநெறியை நீ பின்பற்றி வாழவில்லை என்பது இருக்கட்டும். அறத்தை மனத்தில் கூட வைத்துக் கொள்ளாது மறந்து விடுவாயானால் விளையக் கூடிய கேடு இவ்வளவு அவ்வளவு என்று அளவிட்டுரைத்தல் இயலாது. அறத்தை மறந்தால் பெருத் தீமைக்கு ஆட்படுவாய்! ஆகவே அறத்தை மறவாது போற்றுக என வேண்டுகிறார். கம்பர் வீடணனை, "பொய்யும் களவும் பாதகமும் பொல்லா ஒழுக்கும் அவை கடிந்து மெய்யும் தயாவும் தருமமும் உடன் விளங்கும் பொறையும் இவை பூண்டு செய்யும் செயல்கள் அவை எல்லாம் சிட்டர் செய்யும் செயலாக்கி அய்யன்புகழ் வீடணன் மறைகள் அறைந்த அறத்தின் வழி நின்றான்” என அறிமுகப் படுத்துகிறார். அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை என்னும் தொடருக்கு வீடணன் எடுத்துக்காட்டு ஆகிறான். 'அறத்தை மறத்தலின் ஊங்கில்லை கேடு” என்னும் தொடருக்கு அவன் தமையன் இராவணனே இராமாயண வழியில் சான்றாய் அமைகிறான். திருவும் இன்பம் சிறப்பும் புகழும் மற்று ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ மருவும் புண்ணிய மாந்தர்க்கு அவைஎலாம் தருமம் இன்றெனில் தாமே சிதையுமால்' என்னும் சேதுபுராணப் பாடல் அறம் இல்லையேல் நன்மை எல்லாம் அழிந்து போம் எனக் கூறுவதும் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தக்கதாம். அறநெறி நின்று அறச்செயல்களைச் செய்வது அனைவர்க்கும் கடமையாகும். எப்போது செய்ய வேண்டும்? என்று வினவுவார்க்கு இடைவிடாது எப்போதும் செய்க என விடை தரும் வள்ளுவர்! எவ்வளவு அறவினை செய்ய வேண்டும்? - உன்னால் எவ்வளவு அறவினை செய்ய முடியுமோ அத்தனையும் செய். எங்கே அறவினை செய்ய வேண்டும்? எங்கெல்லாம் செய்ய முடியுமோ அங்கெல்லாம் செய்! நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் செய்! எங்கெல்லாம் உன்பணி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் செய்! எங்கும் எப்பொழுதும் உன்னால் இயன்ற அறவினை களைச் செய்து கொண்டே இரு என்பது வள்ளுவர் ஆணை. "இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம்” என நாலடி நவில்வதை ஈரடியுடன் இணைத்துச் சிந்திக்கலாம்! "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” அற நூலாகிய திருக்குறளில் 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தின் இலக்கணத்தை மிகத் தெளிவாக விளக்கும் அருமைப் பாட்டிலேயே அவரின் நுண் மாண் நுழைபுலம் விளங்குவதுடன் மாசற்ற மனவளமும் புலப்படுகிறது. மாசற்ற - குற்றமற்ற களங்கமோ கறையோ இல்லாத தூய மனத்துடன் எண்ணுகின்ற எண்ணம் அறம், பேசுகின்ற மொழி அறம், செய்கின்ற செயல் அறம்; அறம் எங்கே இருக்கின்றது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா? எங்கெல்லாம் மாசற்ற மனம் இருக்கிறதோ? அங்கெல்லாம் அறம் இருக்கிறது? எதிலெல்லாம் மாசற்ற தூய மனம் இருக்கிறதோ அதிலெல்லாம் அறம் இருக்கிறது. மனத்தில் மாசுடன் கலந்த இன்சொல்லும் அறமன்று; அது போல் மனமாசுடன் செய்யப்படும் எத்தகைய ஒப்புரவுப் பணியாயினும் சரி, அருட்பணியாயினும் சரி, அவை அறப்பணி ஆகா! அவற்றை வெறும் ஆடம்பரப்பணியாகவும் ஆக்கம் கெடுக்கும் பணியாகவுமே வள்ளுவர் கருதுகிறார். மனத் தூய்மையின் அளவே அறத்தின் அளவு; மனதில் குற்றம் குறைந்து குறைந்து தூய்மை பெருகப் பெருக அறமும் வளரும்! "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்'' என்னும் தொடரால் ஈர்க்கப்பட்டோர் பலர். அவருள் ஒருவர் நாகை. சொ. தண்டபாணியார் அவர், "தெய்வப் புலமைத் திருவள்ளுவர் நாயனார் மக்கள் உய்யத் திருவாய் மலர்ந்தருளிய இத்தமிழ் மறை உலகிருள் அகற்ற வந்த ஒற்றைத் தனியாழிப் பரிதி எனில், இக்குறட்பா அவ்வாழியின் அச்சாணி எனத் தக்க அருமையுடைத்தாதல் கண்டு உணர்ந்து உளங்கொளற் பாற்று' என்பார். மனத் தூய்மையே அறத்தின் அடிப்படை என வள்ளுவர் உளங்கொண்டவர் என்பதால், "மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி” 453 "மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்” 456 "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்” 457 "மன நலத்தின் ஆகும் மறுமை” "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை” 295 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை” என நூலில் பரக்க உணர்த்தியுள்ள நுட்பத்தையும் ஒப்பிட்டுச் சிந்தித்தல் நலம். 459 "கற்றதங் கல்வியும் கடவுட் பூசையும் நற்றவம் இயற்றலும் நவையில் தானமும் மற்றும் அறங்களும் மனத்தின்பால் அழுக்கு அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால்” என்னும் காசி காண்டத்தின் கூற்று நல்லதொரு விளக்கமாம்! 'மனதில் மாசு இல்லாமையே அறம்' எனக் கூறிய திருவள்ளுவர் சிந்திக்கிறார். எத்தனையோ வகையால் மனத்தில் மாசு பற்றுமே! அவற்றை வரையறுக்க இயலாதே! வரையறுக்க வில்லையானால் நற்பயன் விளையாதே என ஆழமாக ஆய்ந்து பார்த்த வள்ளுவர் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, "அறுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்” என்னும் அருமைக் குறளை யாத்தார். நன்மை தருவனவற்றை எண்ண முடிந்தாலும், தீமை தருவனவற்றை எண்ண இயலாது. கவலைப்படவும் வேண்டா; குழப்பம் அடையவும் தேவையில்லை. நான்கே நான்கை மட்டும் உன்னை அண்டவிடாமல் காத்துக் கொண்டாலே போதும். அறத்தை அழிக்கும் நான்கு கொடியவர்கள்; பாவிகள் யார் யார்? பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப் படுபவர்; தமக்கு உரிமையில்லாப் பொருளையும் அடைய ஆசைப்படுபவர்; தம்மடக்கமின்றிப் பிறர்மீது சீற்றம் கொள்பவர்; தடித்த கடுங்சொற்களைப் பேசிப் பிறரைப் புண்படுத்துபவர்; ஆகியோரே ஆவர். இந்நால்வரையும் நெருங்க விடாதே! அவர்களை நெருங்கவிட வில்லையானால் 'அறம்' உன்னோடு நெருங்கியிருக்கும். நீயே அறமாவாய்! "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று தீயுழி உய்த்து விடும்” 168 "விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்” 162 என அழுக்காறாமையில் வள்ளுவர் கூறும் வாய்மொழியையும், "அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து” 361 "தூஉய்மை என்பது அவாவின்மை” 364 “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில்” 363 என்னும் அவாவறுத்தல் குறள்களையும், "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்” 306 "உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்' 309 என்னும் வெகுளாமைக் குறள்களையும், "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100 "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும்” 96 எனும் இனியவை கூறல் குறட்பாக்களையும் இணைத்து நோக்கினால் நிறைவு காணலாம்! அறத்தை மேற்கொள்ளக் காலம் நேரம் பார்க்காது, பின்னே செய்து கொள்ளலாம் இன்னும் வயது இருக்கிறதே எனக் கருதிக் காலம் கடத்தாமல் உடனே செய்ய வேண்டும். உடனே அறம் செய்பவருடன் காக்கும் துணைவர் இருப்பர். அவர்கள் துன்பத்தில் துணை நின்று காப்பர். அறமே நற்றுணை. அறம் செய்து நல்ல வலிய துணையைத் தேடிக் கொள்க! இதனையே "அன்றறிவாம் என்னாது அறம் செய்க! மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை” என அழியாத் துணையைக் காட்டினார். "நாளைச் செய்குவம் அறம் எனில் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் இதுவென வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை ” எனச் சிலப்பதிகாரம் உணர்த்தும் நிலையாமையை உணர்ந்தும் உடன் அறம் செய்ய வேண்டும்! "இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது” என மணிமேகலையில் 'அறமே விழுத்துணை எனத் தண்டமிழாசான் சாத்தனார் கூறுவதையும் ஒப்பிட்டு நோக்குக! "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்” 280 "அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின்” "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்” 785 "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுணின்” 942 இக்குறட்பாக்கள் அனைத்தும் மக்களிடம் வேரூன்றியுள்ள பழங்கருத்தை விலக்கிப் புதுநெறியைக் கைக்கொள்ள வள்ளுவர் பயன்படுத்திய உத்தியே 'வேண்டா! என்பதாகும். அவ்வுத்தியைப் பயன்படுத்தி வரைந்த குறளே, "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்னும் குறட்பாவாகும். "மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்” 973 என்கிறார் வள்ளுவர் 'மேல்நிலைப் பணியில் இருப்பினும் மேலான பண்பு இல்லாதவர் மேலோர் அல்லர்; அவ்வாறே கீழ்நிலைப் பணியில் இருப்பினும் கீழான பண்பு இல்லாதவர் கீழோர் அல்லர்” என்ற குறள் விளக்கத்துடன் "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” என்ற குறளை வள்ளுவக் கண்கொண்டு நோக்குதல் வேண்டும். அவ்வாறு நோக்கினால் 'பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும் அதன்மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையே உள்ள 13 43. 38 வேறுபாடு அறத்தின் பயன் என எண்ணவே வேண்டா'' என்னும் வாழ்வியல் உரை வாழ்விக்கும் உரையாய் அமையும். நொடிப் பொழுதையும் வீணாக்காது அறச் செயல்களையே செய்து கொண்டு வருவது உன்கடமை; உன் வாழ்நாளில் உன் வளர்ச்சியைத் தடுக்க, உனக்குத் தொல்லை, துயரம் தர எத்தனையோ குறுக்கீடுகள் தடைகள் ஏற்பட்டு அல்லல் உற நேரலாம்; அப்போது நீ செய்த அறமே 'கல் அரண்' போல அமைந்து நீ உன் நோக்கிலும் போக்கிலும் அறப்பணியைத் தொடர்ந்து தொல்லை இன்றிச் செய்யும் வாய்ப்பை - சூழலை உருவாக்கித் தரும் எனும் கருத்தை வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்” எனும் குறள் மூலம் நமக்குத் தந்தார். அறம் சிறப்புத் தரும்; அறம் செல்வம் தரும்; அறம் ஆக்கம் தரும்; எனக் கூறிய திருவள்ளுவர் அறவழிச் செயலால் வரும் இன்பமே உண்மையான நிலைத்த நிறைவான இன்பமாகும். அறநெறிக்குப் புறம்பான செயல்களால் கிட்டுவது சிலவேளைகளில் நமக்கு இன்பம் போல் தோன்றினும் அஃது இன்பமன்று துன்பமேயாகும். மேலும் அச்செயல்கள் புகழ்தருவனவும் அல்ல. அறவினையே இன்பமும் தரும் புகழும் தரும்! என்பதை அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல” எனும் குறள் வழி வலியுறுத்துகிறார். இக்குறளைத் தம் வாழ்வோடு இணைத்துப் பார்த்த பாரதிப் புலவர், "அறம் ஒன்றே தரும் மெய்யின்பம் என்ற நல் அறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்; பிறவிரும்பி உலகினில் யான்பட்ட பீழைகள் எத்தனை கோடி, நினைக்கவும் திறன் அழிந்து என் மனம் உடைவெய்துமால் தேசத்துள்ள இளைஞர் அறிமினோ அறம்ஒன் றேதரும் மெய்யின்பம் ஆதலால் அறனையே துணை என்று கொண்டு உய்திரால்” எனக் கூறுவதிலிருந்து 'அறத்தான் வருவதே இன்பம்' என்று கூறும் வள்ளுவரை அறிஞர் எனக் குறிப்பிடுவதுடன் அவரை நாளும் போற்றுவேன் என்பதோடு அமையாது இளைஞர்களே அறம் ஒன்றே இன்பம் தரும், ஆகவே அறத்தையே துணையாய்க் கொண்டு நற்பேறு பெறுக' என வேண்டுகிறார் என்பது அக்குறட் கருத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது. திருத்தக்கத்தேவரும் 'பால் போன்று ஒழுகி அமுதூறும் நல்லறம்' எனப் போற்றுகிறார். நிறைவாக வள்ளுவர், ஒருவன் வாழ்வில் செய்யத் தக்கவை நல்ல அறச் செயல்களே! அவ்வாறே அவன் செய்யாமல் விலக்கத் தக்கவை பழிச் செயல்களே! என்பதை "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” எனும் குறள்வழி தெளிவுபடுத்தி அறனை வலியுறுத்து கிறார். அறநெறி காட்டும் அறவோர். "அறச் செயல்களை செய்க! அறத்தின் அடித்தளம் மாசற்ற மனமே! அறத்தான் வருவதே இன்பம் அறமே சிறப்புத் தரும் அறமே செல்வம் தரும் அறம் தரும் ஆக்கமே ஆக்கம் அறவினையை ஒல்லும் வகையான் செய் அற வினையை ஓவாது செய் அறவினையைச் செல்லும் வாயெல்லாம் செய்” 5) 5. இல்வாழ்க்கை வாழ்வியல் நூலாம் திருக்குறளில் அமைந்துள்ள, இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம் என்னும் இரண்டு அதிகாரங்களும் நல்லதொரு முகப்பாய் அமைந்துள்ளன. தக்க பருவம் எய்திய தலைவனும் தலைவியும் திருமணத்தால் இணைக்கப்பட்டுக் கூடி இன்புற்று வாழும் நிலையமே 'இல்லம்' ஆகும். தலைவன் தலைவி தனித்து வாழும் இல்லங்களும் உண்டு; தலைவனின் உடன் பிறந்தோர்; தாய், தந்தை; தந்தையின் பெற்றோர்; தலைவன் தலைவியின் மக்கள், பெயரன் பெயர்த்தியர் என வீழ்துகள் பரப்பிப் பரந்து விரிந்த ஆலமரம் போல் பெருக்கமாகவும் வாழும் இல்லங்களாகவும் அமைந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செவ்விதின் ஆற்றி இணைந்து வாழும் இன்பப் பேறு இணையற்ற பேறாகும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையா உறுப்பினர் தலைவனும் தலைவியுமேயாவர். இல்வாழ்க்கைத் தலைவன் நல்ல அறிவாளி, தேர்ந்த உழைப்பாளி நிறைந்த பண்பாளி, சீரிய ஒழுக்க சீலன் உடல் நலமும் மனநலனும் பொருள் வளமும் வாய்க்கப் பெற்ற தன்னிறைவு பெற்ற தலைவன்; தன் தேவைக்கு எவரையும் எதிர்பாராதவன்; அதே நேரம் வேண்டியவர்கட்கு வேண்டியாங்கு விரும்பி உதவும் வேட்கையாளன்; சிறந்த ஒப்புரவாளன். "நல்லாண்மை என்ப தொருவற்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்” 1026 என்னும் குறள் மொழி வழி தன் குடும்பத்தை மேம்படுத்தி வரும் நல்ல ஆண்மையாளன். நாட்டை ஆள்பவன் பேரரசன் எனின் குடும்பத்தை ஆளும் இவனோர் சிற்றரசன் போல்வான்; நாட்டாட்சி சட்டமுறை ஆட்சி எனின் குடும்ப ஆட்சி அன்பு வழி அற ஆட்சியாகும். வாழ்வின் நோக்கமே 'துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் ஆகும்.' அப்படி எனின் அல்லவை அகற்றி நல்லவை கொள்ள வேண்டும்; திருவள்ளுவர் 'அறத்தான் வருவதே இன்பம்' எனத் தெளிவுறுத்தியதுடன், 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ' எனத் திட்டப்படுத்திக் கொள்ள வலியுறுத்துகிறார். "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” இல்வாழ்வான் என்பான் துணை. எப்படிப்பட்ட துணை? நின்றதுணை? நல்லாற்றின் நின்ற துணை; யாவர்க்கு நல்லாற்றின் நின்ற துணை? மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை? எத்தகைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை? இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லற வாழ்வு வாழ்பவன் என்று ஒருவனைச் சொல்ல வேண்டுமானால் அவன் தன் துணைவியோடு இன்பமாக வாழ்ந்தால் மட்டும் போதாது அவனுக்கு என முக்கிய கடமைகள் சிலவுண்டு. அக்கடமைகளை அவன் செவ்விதின் நிறைவேற்ற வேண்டும் அக்கடமைகளில் முதலாவது நிற்பது. இயற்கையாகவே அவனுடன் பிணைக்கப்பட்டுள்ள, தகுதி வாய்ந்த மிகநெருங்கிய குருதித் தொடர்பும் உணர்வுத் தொடர்பும் பொருந்திய பிரிக்க முடியாத பிரிக்கக் கூடாத மூவர்க்கும் நன்னெறியில் என்றும் நிலையான நல்ல துணையாக விளங்க வேண்டும். அப்படித் துணையாக அமைந்து கடமை புரிந் தால் தான் அத்தலைவன் இல்வாழ்பவனாகக் கருதப்படுவான். மூவர் யார் என்பதை அறிந்து கொள்ள வள்ளுவரின் வாய்மொழிகளான இயல்புடைய; நல்லாற்றின் நின்ற துணை; எனும் தொடர்கள் துணை புரிகின்றன; அத்துடன் பெரிய புராணமும் சிலப்பதிகாரமும் நற்றுணை புரிகின்றன. அப்பூதியடிகள் இல்லத்தில் உணவுண்ண அமர்ந்த திருநாவுக் கரசர் இல்லத்தில் உள்ளவர்க்குத் திருநீறு வழங்குகின்றார். அப்பூதியடிகளார்க்கும் அவர் துணைவியார்க்கும் வழங்குவதைப் பெரிய புராணத்தில் "இயல்புடைய இருவருக்கும் பொருந்திய நீறு நல்கி” எனச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். இயல்புடைய இருவர்: தாயும், தந்தையும் என்பது தெளிவாகிறது. இவ்விருவரோடு மூவரில் மூன்றாமவர் 'மனைவியே என்பதைச் சிலம்பில் இளங்கோவடிகள் தெளிவுபடுத்துகிறார். மாநகர் மதுரைக்குள் சிலம்பு விற்கச் செல்லும் கோவலன் தன் குறையுணர்ந்து, "இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழுவெனும் பாரேன்” என்று கூறுகிறான். ஓர் இல்வாழ்வான் தாய், தந்தை, மனைவி ஆகிய மூவருக்கும் என்றும் எங்கும் துணையாக இருக்க வேண்டியவன் என்பது தெளிவுறுகின்றது. "இல்லற வாழ்வு வாழ்பவன் என்பான் இயற்கைத் தொடர்பால் அமைந்த தாய், தந்தை, மனைவி ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணை ஆவான்” என்னும் இளங்குமரனாரின் வாழ்வியல் உரை. நமக்கு வழிகாட்டித் துணை புரிகிறது. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை” தம்மால் இயன்ற அளவு துணைபுரிய வேண்டும். இம்மூவரும் இவனை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்றும் சொல்ல இயலாது. எனினும் உதவி புரிதல் கடமையேயாகும். இம்மூவர் துறந்தார் துவ்வாதார், இறந்தார் எனப்படுவர். துறவோர் பற்றற்றான் பற்றினைப் பற்றியவர்; யான் எனது என்னும் செருக்கை அறுத்தவர்; இன்மையை உடைமையாகக் கொண்டவர்; தம் உடம்பும் மிகை எனக் கருதுபவர்; ஐந்தன் புலத்தையும் அட்டவர்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விட்டவர்; எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணி ஏற்றம் பெற வழி காட்டும் எந்தல்; இத்தகைய உலக நலம் கருதி வாழ்வானை வாட்டம் இன்றிக் காப்பது இல்வாழ்வான் கடமை என்பது ஏற்புடையது அல்லவா? துவ்வாதார்: வாழ்ந்து கெட்டோர் இன்று வறுமைக்கு ஆட்பட்டு, உழைக்கவும் வழி இன்றி, வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழியும் வாய்ப்பும் இன்றித் தம் இல்லத்தில் வாடிக் கிடப்போர்; இரந்து வாழ மனமும் இன்றி மானம் கருதி இருப்பவர். அவர் நிலையறிந்து வேண்டுவன செய்து அவர்களைக் கைதூக்கி விட வேண்டியது அறவாழ்வு 43 வாழ்பவன் கடமை என வள்ளுவர் கருதுவதால் துவ்வாதார்க்கும் துணை புரிக என வேண்டுகிறார். இறந்தார்: செத்தவர் அல்லர், உயிரோடு இருப்பவர்தாம்; உழைக்க முடியாதவர் உழைக்க வழியும் வாய்ப்பும் அற்றவர் உணவுக்கும் வழியற்றவர். உறைய வீடும் இல்லாதவர். பிறர் துணையை எதிர் பார்த்தே இரந்துண்டு வாழ வெளியேறிய வர்கள்; அத்தகையோர் இல்லறத்தான் வீடு தேடி எந்நேரமும் வரலாம். அவன் பசி போக்கிக் காப்பதும் இல்வாழ்வான் பொறுப்பு என வள்ளுவர் கருதுவதால் 'இறந்தார்க்கும்' இல்வாழ்வான் என்பான் துணை என்கிறார். எளியவரைக் காப்பது வலியவர் கடமைதானே! "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை” தாய், தந்தை, மனைவி ஆகிய இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை எனக் கூறிய வள்ளுவர் துறவி, ஏழை, ஏதிலி ஆகிய மூவருக்கும் துணையாக விளங்க வேண்டும் எனக் கூறியதுடன் அமையாது. தூய குற்றமற்ற பேரறிவாளர்; வாழ்வாங்கு வாழ்ந்து, குணக்குன்றாய் உயர்ந்து வணங்கத்தக்க தெய்வத்தன்மை வாய்ந்தவர். முன்பின் அறிமுகமோ, ஒட்டோ உறவோ, நட்போ உடையவர் இலர் எனினும் வழிப் போக்கில் பசி வாட்ட நம் இல்லம் வந்த விருந்தினர், பிறப்பாலும் கொண்டு கொடுத்தலாலும் உறவான சுற்றத்தாரையும் பேணுவது இல்வாழ்வான் கடமை என வள்ளுவர் வலியுறுத்துவதுடன், தன்னைத் தானே எல்லா நிலைகளிலும் தகுதி உடையவனாய் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் தான் அவன் மற்றவரைப் பேண முடியும், துணை நின்று போற்றவும் முடியும் எனத் தெள்ளிதின் உணர்ந்து தன்னைப் பேணலையும் நிறைவில் வைத்தார். தன்னைத் தானே பேணிக் கொண்டவரே பிறரைப் பேணத் தகுதியுடையவர் என்னும் வள்ளுவரின் வாழ்வியல் நோக்கு நினைந்து போற்றத் தக்கதாகும். “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” நேரிய வழியில் முயன்று உழைத்துப் பொருளைத் தேட வேண்டும். தவறான வழியில் இறங்கிவிடக் கூடாது. பொருள் வரும் வழியும் நல்லதாய் இருக்க வேண்டும். பணியும் நல்லதாய் இருக்க வேண்டும்; நற்பணி செய்வதிலும் நல்ல வழியில் செய்வதிலும் தான் துணிவு இருக்க வேண்டுமே தவிர, தீமை செய்ய அஞ்ச வேண்டும் 'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் பொருள் தேடும் முறையில் குற்றங்குறைகள் ஏற்படுமாயின், புகழ் பெற இயலாது; பழியே ஏற்படும். ஆகவே நீ எவ்வளவு பொருள் தேடுகிறாய் என்பது முதன்மை அன்று. எப்படித் தேடுகிறாய் என்பதே முதன்மை. ஆகவே பழிக்கு இடம் தந்து விடாமல் தேடு! தேடிய பொருளை நீயோ? உன் குடும்பம் மட்டுமோ துய்க்க வேண்டும் என்று எண்ணாதே! அப்படியானால் எல்லாவற்றையும் பிறர்க்கு வழங்கிவிட்டு நானும் என் குடும்பமும் பட்டுணியில் வாட வேண்டும் என்கிறீர்களா? இல்லை நீயும் நன்றாக உண்டு உடுத்தி வாழவேண்டும்! அவ்வாறே உன்னை அண்டியவர்களும் பசியின்றி வாழ வேண்டும். ஆகவே தனித்து மறைத்து உண்ணாதே! இருப்பதைப் பசித்தவர்கட்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்து அவர்களோடு நீயும் சேர்ந்து உண்டு வாழ்க! பழிக்கு அஞ்சித் தேடி, பகுத்து உண்டு வாழ்வதை வாழ்வியல் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தால் உன் வாழ்வு என்றும் நிறைவாழ்வாக நிலைபெறுமே தவிர்த்து என்றும் எப்பொழுதும் குறைவு உண்டாதல் இல்லை. உலகில் அமைதி நிலவவும் நிறை வாழ்வு பெருகவும் வள்ளுவர் வலியுறுத்தும் உயர் கொள்கை 'பகுத்துண்ணல்' கொள்கை யாகும். ஆகவே, "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனக் கொல்லாமை அதிகாரத்தில் இவ் வறத்துப் பாலில் கூறுவதுடன் அமையாது இன்பத்துப் பால் புணர்ச்சி மகிழ்தலில் "தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு" 1107 எனக் கூறுகிறார். அறநெறிச் சாரம், "பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறந்தார் நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ - நிச்சலும் கொல்லாமை காத்துக் கொடுத்து உண்டு வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு” எனக் கூறுவதையும் ஒப்பிட்டு நோக்கலாம். இல்வாழ்க்கையே நம்மைப் பண்படுத்தும் வாழ்க்கை; இல்வாழ்க்கையே நம்மை இவ்வுலகிற்குப் பயனுடையவராக ஆக்கும் வாழ்க்கையாகும். அப்படியானால் இல்வாழ்வினர் அன்பையும் அறத்தையும் தம்முடைய உடைமைகளாகக் கொள்ளுதல் வேண்டும். அன்பை உயிராய்க் கொண்டு மறநெறி விலக்கி அறநெறியில் விலகாது வாழ்ந்தால் பண்பு நிறைந்த பயனுடைய வாழ்வாக என்றும் மிளிரும். என்னும் கருத்துடையவராய், "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என எளிமையாயும் இனிமையாகவும் கூறுகிறார். இல்வாழ்க்கைக்கு வேண்டும் பண்பு 'அன்பு' இல்வாழ்வால் அடையும் பயன் அறம். "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்?” திருவள்ளுவர் காலத்தில் இல்வாழ்வைக் குறைத்து மதிப்பிட்டவர்களும் அதை விட்டு விலகினால், வெளியேறி னால் கிடைத்தற்கரிய பேரின்பத்தை எளிமையாய்ப் பெற்று வாழ வாய்ப்புகள் பல உள்ளன என்னும் கருத்துகளும் பரப்பப்பட்டு வந்திருக்கலாம். அவற்றை மறுத்து இல்வாழ்க்கையே மனித இனம் பின்பற்றி ஒழுகத் தகுந்த இயற்கை நெறி என்பதை நிலைநாட்ட வேண்டிய தேவை திருவள்ளுவருக்கு ஏற்பட்டுள்ளதால் தான் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்தினால் போதும். இவ்வுலகில் பெற வேண்டிய பேறுகள் அனைத்தையும் பெற்று இன்புற்று வாழலாம். இதற்கு இணையான இன்பத்தையோ நிறைவையோ பயனையோ வேறு எம்முறை வாழ்வாலும், எங்கும் என்றும் பெற இயலாது என உறுதிப்படுத்தவே, "புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்?' என்னும் வினாக்கணை கொண்டே மடக்கினார். 'முயற்சி திருவினை ஆக்கும்' என்பது வாழ்வியல் உண்மை மொழியாகும். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றுள்ள கல்வி - அறிவிற்கு ஏற்பவும், திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்பவும், ஒன்றோ பலவோ தொழில்களைத் தேர்ந்தெடுத்து அயராது உழைத்துப் பொருளையும் புகழையும் ஈட்டி வருகின்றனர். திருவள்ளுவர் அத்தகைய முயற்சியாளர்கள் சாதனையாளர்கள் புகழாளர்கள் அனைவரையும் ஒரு தட்டில் வைத்து நிறைகோலின் அடுத்த தட்டில் இயல்பான அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்பவனையும் வைத்து நிறுத்து எடை போட்டுப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்தவராய் "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை” என்னும் குறளைப் படைத்துள்ளார். "முறையாக இல்வாழ்க்கை வாழ்பவனே முதன்மையான முயற்சியாளன்” தவ வலிமை மிகப் பெரிய வலிமையாகும். தவவலிமை உடையவனைக் கண்டு சாவும் நெருங்காது. தவ வலிமை மிக்கவனைக் கண்டு உயிர்கள் எல்லாம் வணங்கும். தவ வலிமை உடையவன் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். தனக்கு வந்த துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொள்ளக் கூடியவன் ஆனால் தான் எவ்வுயிர்க்கும் மறந்தும் கூட துன்பம் செய்யா நோன்புடை யவனே உண்மையான தவச் சிறப்புப் பொருந்தியவன். தவத்தோன் வலிமைதான் உலகில் பெரிய வலிமையா? இல்லை . "உண்ணாது நோற்பார் பெரியர் தான் அவரும் பிறர்சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்க்குப் பிற்பட்டவரே” எனப் பொறையுடைமையிலும், "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்” 225 என ஈகையிலும் கூறும் வள்ளுவர் பிறரையும் அறநெறிப்படி வாழச்செய்து, தானும் அறநெறியைத் தவறாது பின்பற்றி வாழும் இல்லறத்தானின் வலிமை; கடுந்தவம் செய்பவர் தவத்தினும் வலிமையுடையதாகும். இல்வாழ்வான் தன் சுமையைச் சுமப்பதுடன் மேலும் பதின்மரின் சுமையையும் சேர்த்துச் சுமப்பவன், அப்பதின்மரில் ஒருவர்தாமே நோற்பாராம் துறந்தார். ஆகவே, தன் சுமையையே முழுமையாகச் சுமக்காத தவத்தோனைக் காட்டிலும் பலரின் பெருஞ்சுமையையும் கடமை எனக் கருதி நிறைவுடன் சுமக்கும் இல்லறத் தான் வலிமையுடையவன் தானே அதனால் திருவள்ளுவர் "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து” என ஓங்கி உரைத்தார். "விழுப்பம் சான்ற வியத்தகும் இல்லறம் ஒழுக்க வியல் அறி வுறுத்துஞ் சாலையாய் நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி, மென்மை அரும்பி மேன்மை மலர்ந்து பேர் அன்பு காய்த்துநல் லருள்கனிந்து அலகிலா இன்பந்றை பிலிற்றும் இனியகற் பகமாய் இலகிடும் உண்மை மலை இலக் கன்றோ ? ஏத்துறுந் தகைய இல்லறம் எனும் இம் மாத்தடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ் செலுத்தும் துன்பத் தீயரை யெறிந்து தொலைத்திடல் அறியார் துறவு துறவென நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து மயக்கினும் ஆழ்கலீர் மாந்தர்காள் உய்க்கமின்று இல்லறம் முற்றும் மெய் யுணர்மினோ? என்னும் தனிப்பாசுரத் தொகையின் கருத்து நல்லதொரு . விளக்கமாய் அமைந்துள்ளதையும் காண வாய்த்துள்ளது. அறமே இயல்பு நெறி; இயற்கை நெறியாகும். தக்க பருவம் எய்திய ஒருவனும் ஒருத்தியும் திருமணம் மேற்கொண்டு வாழவேண்டியதே இயற்கையான வாழ்வியல் முறையாகும். ஆகவேதான் 'அறத்தான் வருவதே இன்பம்' எனக் கூறிய திருவள்ளுவர் இன்ப ஊற்றாய் இலங்கும் இல்வாழ்க்கையை, "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ” என உறுதிப்படுத்தினார். 'வசையொழிய வாழ்வாரே வாழ்வார்' எனக் கணக்கிடும் வள்ளுவர், 'பிறர் பழிக்கு ஆளாகாமல் வாழ்க்கை நடத்தினால் மிக்க நலம் தரும் என்ற கருத்துடன், "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று” என்னும் இலக்கணக் குறளை அமைத்துள்ளார். "மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும் தவமிலார் இல்வழி இல்லை - தவமும் அரசியல் இல்வழி இல்லை ; அரசனும் இல்வாழ்வான் இல்வழி இல்” என்னும் நான்மணிக்கடிகை ஒரு நாட்டின் சிறப்புக்கும் செம்மைக்கும் அடியும் முடியுமாய் இலங்குவது இல்வாழ்வே என்பதை உணர்த்துகிறது. தாரம் நல்விதந் தாங்கித் தலைநில்மின்; ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை வீரவென்றி விறல்மிகு விண்ணவர் சீரின் ஏத்திச் சிறப்பெதிர் கொள்பவே!” என வளையாபதி விண்ணவர் போற்றும் வியத்தகு வாழ்வு இல்வாழ்வு என்பதை இயம்பும். வாழ்வாங்கு வாழ்ந்து சீரும் சிறப்பும் பெயரும் புகழும் அடைய மக்களுக்கு வழி காட்டும் திருவள்ளுவரின் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களும் ஒரே ஒரு குறளின் விளக்கம் என்று கூறலாம். அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரே குறள் விளக்குத்தான், "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” 50 என்பதாகும். எப்படியும் வாழலாம் என்று எண்ணாது, முறையோடும் ஒழுங்கோடும் திட்டத்தோடும் தெளிவோடும் அறநெறிப்படி வாழ வேண்டும். அதுவே 'வாழ்வாங்கு வாழ்தலாகும். அப்படி மண்ணில் வாழ்ந்தாலும் எளிமையாய் வாழ்ந்தாலும் அவ்வாழ்வியல் முறை அவனை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் உயர்ந்த நிலைகளில் எல்லாம் உயர்ந்த நிலை பிறரால் வணங்கப்படும் தெய்வ நிலையாகும். வாழ்வாங்கு வாழ்பவன் வழிகாட்டும் தெய்வமாய் மதிக்கப்படுவான் என மனிதனைத் தெய்வமாக்கும் குறளைப் படைத்த தெய்வப் புலவர் ஆனார் வள்ளுவர். "இல்வாழ்வே அற வாழ்வு! இல்வாழ்வால் பெறமுடியாத சிறப்பு வேறு இல்லை” இல்வாழ்வானே சிறந்த முயற்சியாளன்” துறவு வாழ்வினும் மேம்பட்டது இல்லற வாழ்வு” பிறர் துணை நாடாது பலர்க்கும் துணை நிற்கும் வாழ்வு இல்வாழ்வு! இல்வாழ்வு தெய்வ நிலைக்கு உயர்த்தும் வாழ்வு. 6. வாழ்க்கைத் துணை நலம் "பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வோடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பது தலைவன் தலைவியரிடைய அமைய வேண்டிய ஒப்புமை பற்றிக் குறிக்கும் தொல்காப்பிய நூற்பா. 1. பிறந்து வளர்ந்த நிலை, 2. குடும்ப நிலை, 3. ஆளுமை நிலை, 4. அகவை நிலை, 5. உருவத் தோற்ற நிலை, 6. துய்ப்பு நிலை , 7. ஒழுக்கநிலை, 8. அருள்நிலை, 9. அறிவு நிலை, 10. பொருள் நிலை என்னும் பத்து நிலைகளிலும் பொருத்தம் உடைய தலைவனும் தலைவியுமே கணவனும் மனைவியுமாக இணைந்து திருமணம் புரிந்து இல்வாழ்வு வாழத்தக்கவர்கள். இணையான தகுதிவாய்ந்தவர்களின் இணைப்பே இணைப்பாகும். அவர்கள் இணையர் ஆவர்; ஒருவர்க்கொருவர் துணைவரும் ஆவர். ஆகவே திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ வாழ்க்கைத் துணைவன் நலம் என்றோ தலைப்பிடாமல் 'வாழ்க்கைத் துணை நலம்” எனப் பெயரிட்டமையில் ஆண் பெண் சமன்மையையும் நிலை நாட்டுகிறார். இத்துணை பேச்சுத் துணை, பயணத் துணை, படிப்புத் துணை, பணித்துணை போன்று குறுகிய காலத்துணையன்று. இணைந்த நாளிலிருந்து இயற்கை எய்தும் நாள் வரை இன்பநிலை, துன்பநிலை என இருவேறு நிலையிலும் வேறுபடாமலும் மாறுபடாமலும் ஒன்றாகியும் உடனாகியும், இணைந்தும் பிணைந்தும் துணைக்குத் துணையாய் வாழ்ந்து, கடமைகளைச் சிறப்புடன் ஆற்றி இணைந்தே பெருமை பெற வேண்டியவர்கள். இல்வாழ்க்கை அதிகாரத்தை "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என நிறைவு செய்த வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலத்தை' "மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” எனத் தொடங்குவது அருமையினும் அருமை. தலைவியை மாண்புடையள் என்கிறார் திருவள்ளுவர். மாண்புக்கு இணையான பண்பியற்சொல் ஒன்று கிடைப்பது அரிது. எத்தனை வகையான நற்பண்புகள் உண்டோ அத்தனை நற்பண்புகளும் ஒருங்கே அமைந்தவள் தான் மாண்புடையள்' எனச் சுட்டத் தக்கவள். முதுமையிலும் இளமை நலம் தோன்ற விளங்கிய சங்கச் சான்றோர் பிசிராந்தையார் முதுமைத் தோற்றம் தம்மிடம் கால்கொள்ளாமைக்கு முதற்காரணம் 'மாண்ட என் மனைவி' என்றே கூறினார். இளமை வாழ்வு வேறு; தம் பிறந்த வாழ்வு நிலை வேறு; புகுந்த இடத்து வாழ வேண்டிய வாழ்வு, பொறுப்பான வாழ்வு; தலைமை ஏற்று வழி நடத்த வேண்டிய வாழ்வு; நல்ல குடும்பத்தில் பிறந்து பாங்காய் வளர்ந்து, நல்ல குடும்பத்திற்கு 'மனைவி' என்னும் தகுதியுடன் வந்தவளால் அவள் வந்து சேர்ந்த மனை பெருமை அடைய வேண்டும். ஆகவே அவளை 'மனைத்தக்க மாண்புடையவள்' என்கிறார். அவளை வாழ்வியல் துணையாக விரும்பி ஏற்றுக் கொண்டவனைத் 'தற்கொண்டான்' எனக் குறிப்பிடுகிறார் அவளை மனைவியாகக் கொண்ட கணவன் கொண்டுள்ள வளமைக்கு ஏற்றவாறு வாழ்க்கை நடத்த வேண்டும். பிறந்த இல்ல வளமையைக் கருதிப் பயனில்லை. ஏனெனில் இரண்டு இல்ல வளமைக்கும் வேறுபாடு இருக்கவும் செய்யலாம். ஆகவே வாழ வந்த இல்லத்தை வாழ வைப்பவளாய் இவ்வில்லத்தின் எல்லா வளமையையும் மனத்தகத்தே கொண்டு அதற்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணையாம். "வருவாய்க்குத் தக்க வழுக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பி திருவாக்குந் தெய்வத்தை எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு” எனக் காரியாசான் சிறு பஞ்சமூலத்தில் கூறுவதையும் ஒப்பிட்டு நோக்குவோம்! ஒரு குடும்பத் தலைவன் கரையற்ற கல்வியின் கரை கண்டவனாய் இருக்கலாம்; அறிஞர்க்கும் அறிஞனாய் விளங்கலாம்; ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியவனாய் இருக்கலாம்; குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னனாகக் கூட இருக்கலாம்; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் வினைத்திட்பம் வாய்ந்தவராகவும் இருக்கலாம். உலகவாம் பேரறிவாளராம் ஒப்புரவு நோக்குடையவராகக் கூட இருக்கலாம். அவருக்கு வாய்த்த மனைவியிடம் இல்லற வாழ்விற்கு ஏற்ற நல்லெண்ணமோ, நற்பண்புகளோ, நற்செயல்களோ, இல்லை என்றால் அவரிடம் எத்தனை சிறப்புகள் அமைந்துள்ளதாலும் எத்தகைய பயனும் இல்லாது போய்விடும்! மனைவியின் மாட்சியே மாட்சியாகும். "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்” என அழுத்தமாக உரைத்தார். முதுமொழிக் காஞ்சியும், "தாரம் மாணாதது வாழ்க்கை யன்று ” என மொழிகிறது. "மழைதிளைக்கும் மாடமாய், மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் விழைத்த மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற் கரியதோர் காடு" என நாலடியாரும் நவில்கிறது. மனைமாட்சி பொருந்திய இல்லாளின் குடும்பச் சிறப்பைப் பாவேந்தர் தாம் படைத்த 'குடும்ப விளக்கிலும் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் குடும்பம் அடையும் கீழ்நிலையை 'இருண்ட வீட்டிலும் காட்சிப் படுத்தி இக்குறளுக்கு இலக்கியம் சமைத்துள்ளதையும் கற்றுப் பயன் பெறுவோமாக! வசதி வாய்ப்பு இல்லாத எளிய குடிசை வீடுகளில் மகிழ்ச்சி குடிகொண்டிருப்பதை யும், அதே வேளையில் வசதி வாய்ப்புகள் நிறைந்த வளமனைகளில் 'போர்க்களக் காட்சியும்' சுடுகாட்டுக் காட்சியும் நிலவிக் கொண்டிருப்பதையும் வள்ளுவர் காண நேர்ந்த போது காரணத்தை எளிமையாக அவரால் உணர முடிந்தது. "இல்லவள் மாண்பானால் இல்லதென்? ஒன்றுமில்லை. நல்லதெல்லாம் உண்டு; நன்மை எல்லாம் உண்டு; செல்வம் எல்லாம் உண்டு; சிறப்பெல்லாம் உண்டு; தெய்வச் சிறப்பும் வாய்க்கும். 'இல்லவள் மாணாக் கடை உள்ளதென்; ஒன்றும் இல்லை! எல்லாம் கணக்கில் இருக்கிறது; கண்ணில் படுகிறது. அதனால் இன்பமோ பயனோ நிறைவோ, புகழோ பெருமையோ எதுவும் இல்லை. பண்பில்லா மனைவி நஞ்சாவாள். நன்பாலும் கலம் தீமையால் திரிவது போல் இருந்ததெல்லாம் பயனற்று அழிந்துபோம்! ஆகவே, 'அறனெப் பட்டதே இல்வாழ்க்கை ' என்பதை உணர்ந்து 'வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணும் இனிய இல்லறத் தலைவா! நீ 'பண்பமைந்த' நல்ல பெண்ணை உன் மனைவியாக ஆக்கிக் கொள்! அகப் பண்பை நோக்காது உடல் அழகையும் அணி மணிகளையும், செல்வச் செழிப்பையும் கண்டு மயங்கி உன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளாதே! இவை எல்லாம் வேண்டா எனக் கூறவில்லை 'பண்புடன்' அவையும் இணைந்திருந்தால் சிறப்புத் தான் வரவேற்கலாம். பண்பில்லை யேல் வேண்டவே வேண்டா என விலக வழிகாட்டும் வள்ளுவர் "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ள தென் இல்லவள் மாணாக் கடை” 53 எனக் கூறிச் சிந்திக்க வைக்கிறார். மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தும் கவுந்தியடிகள் 'வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில் வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும் அத்தகு நல்லுரை அறியாயோ நீ” எனக் கூறுவதாக இளங்கோவடிகள் கூறும் கூற்று "இல்லதென் இல்லவள் மாண்பானால்” என்னும் அரைக் குறளுக்கு அமைந்த இலக்கியச் சான்றாகும். கல்விச் சிறப்பால் பெருமை அடையலாம்; கலைச் சிறப்பால் பெருமை அடையலாம்; தொழில் சிறப்பால் பெருமை அடையலாம்; ஆட்சிச் சிறப்பால் பெருமை அடையலாம்; இவற்றால் அடையும் பெருமையை விட மேலான பெருமையை ஒரு பெண்ணுக்குத் தருவது 'கற்பு என்று சொல்லப்படும் உறுதித் தன்மையாகும். ஆகவே தான் திருவள்ளுவர் கற்பென்னும் திண்மை வாய்ந்த பெண்ணைக் காட்டிலும் உலகில் பெருமைப் படத் தக்கனவாக வேறு எவையும் இல்லை என்கிறார். பெண்களே உங்கள் பிறப்பை மேன்மைப் பிறப்பாக்கக் கற்பென்னும் திண்மை உடையவர்களாக விளங்குவீர்களாக! கற்பென்னும் திண்மை உடையவர்களிடம் அமைந்துள்ள ஏனைச் சிறப்புகள் அவர்கட்கு உயர்ந்தோங்கிய பெருமையை ஈட்டித் தரும். ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு” 973 எனப் பெருமையில் ஆடவர் தாமும் பெண்ணினம் போல் கற்பைப் போற்றுக எனவும் வேண்டினார். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள? கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் என அறத்துப் பாலில் வினா எழுப்பிய வள்ளுவர், பொருட்பாலில் "பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து” 907 என விடை அளித்ததுடன் அமையாது இன்பத்துப் பாலில், "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” 1137 என உறுதிப் படுத்தினார். "தெய்வந் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் மழை போல் மாப் பயன் தரும் குறளை வள்ளுவர் படைத்துள்ளார். அன்னையும் தெய்வம், தந்தையும் தெய்வம்; ஆசிரியனும் தெய்வம், பற்றற்ற முனிவரும் தெய்வம்; வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாளரும் தெய்வம்; உற்ற காலத்து உதவியவரும் தெய்வம், முன்னோரில் பீடும் பெருமையும் பெற்றவர் தெய்வம். இவர்கள் எல்லாம் மதித்துப் போற்றி வணங்கத் தக்கவர் தாம் பெண்ணைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன் தம் குடும்ப ஒழுங்குக்கு ஏற்ப இத்தகைய தெய்வத் தன்மையரை வணங்கிப் போற்றும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். திருமணத்தின் பின் தன் இல்லற வாழ்வு செழிக்க, பழிக்கு ஆளாகாது இருக்க, வேண்டாத வம்புக்கு இடம் தராது இருக்கத் தன் கணவனையே தெய்வமாகக் கருதி மதித்துப் போற்றித் தன் இல்லறக் கடமைகளைச் செம்மையாகச் செய்து வருவது நல்லது. இத்தகைய குடும்பப் பாங்கான பெண்ணால் அக்குடும்பமும் ஊரும் நாடும் அடையும் பயன் மிகுதி. அவள் பருவ மழை போன்றவள் அதிலும் வேண்டிய காலத்தில் வேண்டிய இடத்தில் வேண்டிய அளவு பெய்யும் உலகியல் ஒழுங்கை நிலைபெறுத்தும் மழை போன்றவர். அவளின் அடக்கமும் பணிவும் அமைந்த பண்பும் அவளைப் 'பெய்யெனப் பெய்யும் மழை' யாக வள்ளுவரால் போற்றச் செய்திருக்கிறது. அத்துடன் அமையாது இன்பத்துப் பாலில், "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி” 1192 என அன்பு மழையைக் காட்டினார். தெய்வம் தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்” - மேகலை சிறை 59-61 எனச் சீத்தலைச் சாத்தனார் இக்குறளைத் தம் காப்பியத்தில் அப்படியே பதித்துக் கொண்டதுடன் வள்ளுவருக்குப் 'பொய்யில் புலவர்' என்ற பட்டமும் திருக்குறளுக்குப் பொரு ளுரை என்னும் சான்றிதழும் வழங்கி அல்லவா போற்றியுள்ளார். மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்தும் கவுந்தியடிகள் - 19"இங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்றுணை மகளிர்க்கு இன்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்” எனப் போற்றுவதாகச் சிலப்பதிகாரம் கூறுவதுடன், "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து” (- சிலப்பு. கட்டுரை காதை - வெண்பா) எனவும் இளங்கோவடிகளைப் பாடவைத்த இக்குறளின் சிறப்பே சிறப்பு. நிலத்தை உழுதல் நல்லது; எருவிடுதல் அதனினும் நல்லது; களை எடுத்தல் அதனினும் நல்லது; அதனினும் நல்லது நீர் விடுதல்; உழுதல், எருவிடுதல், களை எடுத்தல், நீர் விடுதல் அனைத்திலும் சிறந்த பணி காவல் பணி என்கிறார் வள்ளுவர். நிலத்திற்கும் காவல் வேண்டும். வீட்டிற்கும் காவல் வேண்டும்; நாட்டிற்கும் கட்டாயம் காவல் வேண்டும் என்பது அனைவரும் தெரிந்ததே. திருவள்ளுவர் மனிதனுக்கும் காவல் வேண்டும் என விரும்புகிறார் அதனால் தான் தன்னைத் தான் காக்கின் சினம் காக்க' என அறிவுறுத்தினார். அறிவறிந்த பிறப்பினர் தன்னைத் தானே காத்துக் கொள்வதே தகுதியானது எனக் கருதுவதால் குடும்பத் தலைவி தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும்; உடலையும் காக்க வேண்டும் உள்ளத்தையும் காத்துக் கொள்ள வேண்டும் தீய இயல்பு நம்மிடம் நுழைந்து விடாமலும் காக்க வேண்டும். நல்லியல்பு வெளியேறி விடாமலும் காக்க வேண்டும். நம் மானத்தையும் காக்க வேண்டும் ஒழுக்கத்தையும் காக்க வேண்டும். குறிப்பறிந்து கணவனையும் தக்கவாறு பேணிக் கொள்ள வேண்டும். தம்மால் அவனுக்குத் தொல்லலையோ, துயரமோ, சோர்வோ ஏற்பட்டு விடாமல் விழிப்புடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். நாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டிய நம் முன்னோர்களாம் சான்றோர்களின் மணிமொழிகளை நாம் என்றும் மறவாது நாளும் கற்று நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பக் கடமைகளைச் செய்வதில் சோர்வு ஏற்படாமல் மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடன் செய்து கொண்டு இருப்பவளே பெண் ஆவாள் என்பதைத், "தற்காத்து தற்கொண்டான் பேணித்தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” எனும் குறள் வழி தெரிவித்தார். கணவனை மனைவி நம்ப வேண்டும்; அதுபோல் மனைவி கணவனை நம்ப வேண்டும். தூய மனத்துடன் நம்புமாறு நடந்து கொள்ள வேண்டும். கணவனிடம் மனைவியைப் பற்றியோ? மனைவியிடம் கணவனைப் பற்றியோ பிறர் குறை கூற அஞ்ச வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டுமே அல்லாமல் அரட்டி மிரட்டி ஒழுங்குபடுத்தி விடலாம் என்று எண்ணுவது தவறு. குற்றமாகத் தெரிந்தால் பக்குவமாக எடுத்துரைத்துத் திருந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இருபாலார்க்கும் பொதுவான முறையாகும். ஆகவே திருவள்ளுவர் புறக்காவலை விரும்பவில்லை; அது விலங்கு நெறி! அகக் காவலே அகம் மகிழச் செய்யும் அருமைக் காவல்; புண்படுத்தாத பண்பாட்டுக் காவல் எனக் கருதியதால் சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” எனத் தலைமையான காவலைப் பின்பற்ற வேண்டினார். மனைத்தக்க மாண்புடைய பெண்மணி மனைத்தக்க மாண்புடைய ஆடவனைக் கணவனாகப் பெற வேண்டும். அத்தகைய நல்வாய்ப்புப் பெற்றவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள். அவர்கள் திருமணப் பொழுது துய்த்த, பேரின்பத்தை என்றும் துய்ப்பவர் ஆவர். ஒரு பெண் அடையக் கூடிய சிறப்புகளில் எல்லாம் உயர்ந்த சிறப்பையும் இன்பத்தையும் பெருமையையும் நிறைவையும் அடையலாம். அவர்கள் மண்ணுலகில் வாழ்பவர் எனினும் ஒரு தனிப்பெரும் இன்ப உலகில் வாழ்வது போன்ற நிலையினை எய்துவர் என்னும் நம்பிக்கை ஊட்டத் திருவள்ளுவர் யாத்த குறட்பாவே "பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர்பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” என்பதாகும். ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் இருப்பது போல் பகைவர்களும் இருக்கலாம், பாராட்டுவோர் இருப்பது போல் இகழ்பவர்களும் இருக்கலாம். நிறை மனம் பெற் றோர் போற்றுவார் போற்றட்டும்; இகழ்பவர் இகழட்டும், இரண்டிலும் நல்லதை எடுத்துக் கொள்வோம்; அல்லதை அகற்றி விடுவோம் "தீதும் நன்றும் பிறர்தர வாரா” "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” என்பவற்றை உணர்ந்து பெருமை தரும் செயல்களையே செய்து வரலாம்! அத்தகைய தெளிந்த அறிவும் சிந்தனையும் பக்குவமும் வாய்ந்தவர்களாக இருப்பினும், பகைவர்கள் இவரின் மனைவியின் செயல்பாடுகளை, ஒழுங்கை, கற்பைக் குறைகூறி இகழ்ந்தால் தாங்கிக் கொள்ள இயலாது கூனிக் குறுகிப் போவர் என்பது தானே உலக இயல்பு. மனைவி பிறர் பழிப்புக்கு இடந்தராத உயர் ஒழுக்கம் வாய்ந்த புகழாளராக வாய்த்தால் கணவனாகிய தலைவன் பகைவர் கூட்டத்திலும் தலை நிமிர்ந்து செல்வான் என்பதை "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை” எனும் குறள் வழி உணர்த்தினர். தலைவனின் பெருமிதம் தலைவியின் கற்பில் அமைந்துள்ளது. "மனைக்கு விளக்கம் மடவார் - மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்” என நான்மணிக்கடிகை நவில்கிறது. நல்ல தலைவனுக்கு நல்ல மனைவி வாய்க்க வேண்டும்; இருவர்க்கும் நன் மகப்பேறு வாய்க்க வேண்டும். வாய்த்தால் திருமண வாழ்வு மேற்கொண்டதன் பயன் கிட்டும்! எந்நாளும் நன்னாளாகும்! எந்நாளும் இன்ப நாளாகும்! அது போல் இல்லத்திற்கு அழகும் பெருமையும் தருவது வேறொன்றும் இல்லை, என்பதை "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” எனும் குறள் வழி வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தை நிறைவு செய்கிறார். வாழ்க்கைத் துணை, நலம் தரும் துணையாக விளங்க 1. மனைத்தக்க மாண்பு, 2. வளத்தக்க வாழ்வு, 3. மனைமாட்சி, 4. கற்பெனும் திண்மை , 5. வழிபடு தன்மை , 6. தற்காத்தல், 7. தற்கொண்டான் பேணல், 8. தகைசான்ற சொற்காத்தல், 9. சோர்வின்மை , 10. புகழ், பேறு ஆகிய இயல்புகளின் இருப்பிடமாய் அமைய வள்ளுவர் வாழ்த்துகிறார். 7. மக்கட் பேறு ஆணும் பெண்ணும், தலைவனும் தலைவியுமாய்க் காதல் கொண்டு, கணவனும் மனைவியுமாய் இல்லறம் நடத்துகின்றனர். இவர்கள் கல்விச் செல்வம் பெற்றவர்கள்; கேள்விச் செல்வம் பெற்றவர்கள்; அறிவுச் செல்வம் பெற்றவர்கள்; அருட்செல்வம் பெற்றவர்கள்; பொன் பொருள்; நிலம்புலம்; மாடு மனை; பட்டம் பதவி ஆகிய பல்வகைச் செல்வங்களைப் பெற்றுச் செழிக்க வாழ்ந்தாலும் அவர்கள் பெற்றோர் ஆகார். எப்போது அவர்கள் மக்கட் பேறு பெறுகிறார்களோ அப்பொழுது தான் அவர்கள் 'பெற்றோர்' ஆகின்றனர். தாய் தந்தையர்க்கு வேறு எந்தச் செல்வமும் தாராத பெருஞ் சிறப்பைத் தருவது மக்கட் பேறு ஆகும். தலைவன் தலைவியரின் கூட்டு வாழ்வின் பயனால் உருவாக்கம் பெற்ற பேறு மக்கட்பேறு. பெற்றோரின் பால் நிறைந்துள்ள அன்பை மேலும் பெருக்கி வளர்ப்பது மக்கட் பேறு ; பெற்றோர் கடமையை விரிவாக்கம் செய்வது மக்கட் பேறு; குடும்பம் வழி வழியாய் வளர வாய்ப்பளிப்பது மக்கட் பேறு; பெற்றோரின் இணைப்பை மேலும் வலுப்படுத்துவது மக்கட் பேறு; பெற்றோர்க்கு வாய்த்த சோர்வு நீக்கி இல்லத்தை இன்ப நிலையமாய் ஆக்குவது மக்கட் பேறு; குடும்பத்தை வாழ வைப்பது மக்கட் பேறு ; உலகை உய்வித்து உயர்த்தத் தோன்றியது மக்கட் பேறு என்பது உண்மை . ஆகவே, ஈராயிரம் ஆண்டுகட்கு முன் மாண்புடன் ஆண்ட பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, “படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும், இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே!” எனப் பாடிய புறநானூற்றுப் பாடல் வழி "செல்வங்களைச் செல்வங்கள் ஆக்குவதும் வாழ்நாளைப் பயனுடைய நாள்களாக ஆக்குவதும் மக்கட் பேறு' ஒன்றே யாம் என்பதைத் தம் பட்டறிவால் விளக்கியுள்ளார்.” "பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை, மேவத் துறையிலா வனசவாவி, துகிலிலாக் கோலத்தூய்மை நறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வம் அன்றோ ?” என மக்கட்பேறு இல்லாக் குறையை அடுக்கடுக்கான உவமை வழி விளக்குகிறது வளையாபதி. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் மக்கட் பேற்றிற் பெறும்பே றில்லை” என்பது முதுமொழிக் காஞ்சியின் முடிவுரை. பொன்விளைந்த களத்தூர் வெண்பாய் புலவர் புகழேந்தியார், "பொன்னுடைய ரேனும், புகழுடைய ரேனும்மற்று என்னுடைய ரேனும் உடையரோ? - இன்னடிசில் புக்களையும் தாமரைக்கை பூநாறும் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்” எனப் பாடியுள்ளார். பொன் உடையவரும் உடைமையர் இல்லை; புகழ் உடையவரும் உடைமையர் இல்லை; மக்களை உடையவரே உண்மையான உடைமையர் என்பது தானே அவர் கருத்து. இல்லறத்தார் பெற வேண்டிய பேறுகள் பல இருக்கலாம். அவற்றுள் அறிவை அறிந்த சிறந்த மக்களைப் பெறும் பேறும் ஒன்று. அதுவே மிக உயர்ந்த பேறு. மக்களைப் பெறும் அப்பேற்றை விட உயர்ந்த பேறு ஒன்று உலகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை எனும் கருத்துப்பட "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை ; அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற” எனக் கூறி மக்கட் பேற்றைத் தொடங்குகிறார். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட் பாக்களும் வள்ளுவர் ஆய்ந்து உரைத்தனவே எனினும் "யாம்” என்னும் தன்மைப் பன்மைச் சொல்லைப் பயன்படுத்தி ஆணையிட்டு உறுதி கூறும் நுட்பம் நம்மை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. "யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற” 300 என வாய்மை அறத்தின் மேன்மையை உணர்த்தும் போதும் "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்” என உயர்பிறப்பினன் இழிபிறப்பின்னாக வாழ்வதைக் கண்டு வேதனைப்படும் போதும் 'யாம்' பயன்படுத்தியுள்ளார். "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” 320 ஆகவே, "மறந்தும் பிறன்கேடு சூழற்க” 204 "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானம் | மாணாசெய் யாமை தலை” "தீயவை தீயினும் அஞ்சப் படும்” 202 என்னும் வள்ளுவர் வாய்மொழிகள் மனத்தாலும் பிறர்க்குத் தீமை செய்ய நினைக்காதே! நினைத்தால் தீமைக்கு ஆட்படுவாய் என்பதை உணர்த்துகிறது. ஆகவே நாம் துன்பமின்றி வாழ வேண்டுமானால் பிறர்க்குத் துன்பம் செய்ய எண்ணுதலும் கூடாது என்பது குறள் நெறி. நம் வாழ்நாளில் எஞ்சிய காலத்திலும் அதன் பின்னர் நம்முடைய கால் வழியினரையும் பழிதரும் தீயவை நெருங்காதிருக்க வழி என்ன? என்று வள்ளுவரைக் கேட்போம்! வள்ளுவர் வழி சொல்கிறார். நீங்கள் வாழ்வாங்கு வாழ்கிறீர்கள்! அறன் எனப்பட்ட இல்வாழ்க்கை வாழ்கிறீர்கள்! மகிழ்ச்சி! பாராட்டு! அத்துடன் உங்கட்கு வாய்க்கும் மக்கட் பேறு பழிபிறங்காப் பண்புடைய மக்கட் பேறாக அமைந்து விடுமாயின் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கால்வழியினரையும் எந்தக் காலத்திலும் தீயவை நெருங்கவும் நெருங்காது. தீயவை தீண்ட விடாது காக்கும் பேராற்றல் பண்புடை மக்களின் புகழ்வாழ்வில் அடங்கியுள்ளது. "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின்” என்பதே வள்ளுவர் வழங்கும் படைக்கலம். பழிக்கு இடம் | தராத பண்புடைய மக்களைப் பெற்றுப் பெரும் பேறு பெறுவோம்! ஒரு நாட்டிற்கு மலையும் செல்வம், காடும் செல்வம், வயலும் செல்வம் கடலும் செல்வந்தான்; இவற்றில் எது சிறந்த செல்வம்? எங்கே தகுதி வாய்ந்த மக்கள் வாழ்கிறார்களோ அந்த நிலமே சிறந்த செல்வம். வளங்களில் சிறந்த வளம் என்றாலும் சரி; செல்வங்களில் சிறந்த செல்வம் என்றாலும் சரி; பொருள்களில் சிறந்த பொருள் என்றாலும் சரி - 'மக்கள்' என்பதே விடை. மக்களாகிய பொருள் நாட்டுச் செல்வமாய் விளங்குவது போலவே ஊர்ச் செல்வமாகவும் விளங்குகிறது. இல்லறத்தார் தாம் வாழும் வீட்டை, தேடிய பொன்னை பொருளைத் தமக்குப் பெருமை தரும் பொருளாகக் கருதுவதுடன் 'தாம் பெற்ற மக்களையே தம் பொருளாகக் கருத வேண்டும். தாய் தந்தை அன்புக் கூட்டால் உருவானவர்களே மக்கள். தாய் தந்தையரின் தோற்றமும் இயல்பும் மக்களிடம் பொருந்தியிருக்கும். பண்பமைந்த பெற்றோர் வழியே பண்பமைந்த மக்கள் உருவாகிறார்கள். பெற்றோர்களின் வளர்ப்பு முறையும் பாங்காக அமைய வேண்டும். நல்ல பள்ளிச் சூழ்நிலை, நல்லோர் கூட்டு இவற்றால் மேலும் அறிவும் பண்பும் ஒழுக்கமும் திறமையும் உடையவர்களாய் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும். "ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்னும் சங்க காலத்துப் பெண்பாற் புலவர் பொன்முடியார் கூறுவது போல் தாய் தந்தையர் கடமை புரிதல் வேண்டும். பெற்றோர் தாம் பெற்ற மக்களுக்கு நிறையப் பொருளைத் தேடி வைத்து விட்டுச் செல்வது நல்லதன்று. மக்களைக் கல்வியாளராய், பண்பாளராய், முயற்சியாளராய் உருவாக்கு வதையே கடமையாகக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் தேவைக்குரிய பொருளை நீங்கள் தேடிக்கொண்டது போல் அவர்கள் வாழ்வுக்குத் தேவையான பொருள்களை அவர்கள் தேடிக் கொள்வார்கள். அவர்களே தேடிக் கொள்வதே அவர்கட்கும் நல்லது. மக்களை மறந்து பொருளாசையில் அழுந்தி ஊண் உறக்கமின்றி அலைந்து அல்லல் படாதீர். நம் இன்ப துன்பத்தில் உடன் பங்கு கொள்ளும் பொருள்; நம் மீது அன்பு கொண்ட பொருள்; அறிவுப்பொருள் நமக்குப் பெருமையை ஈட்டித் தரும் பொருள்; உரிமையுடைய பொருள் உணர்வுடைய பொருள்; வீட்டையும் வாழவைக்கும் பொருள் மக்களாகிய பொருளே என்பதைத் திருவள்ளுவர் தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும்' என்கிறார். வினை என்றால் செயல் உழைப்பு என்று பொருள். "மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை” என நான்மணிக்கடிகையின் மணிமொழியையும் மனத் தகத்தே கொள்க! தாயோ தந்தையோ தம் சின்னஞ் சிறு குழந்தைக்கு நிலவு காட்டி ஆடிப்பாடி விளையாட்டுக் காட்டி உணவு ஊட்டுகின்றனர். பற்கள் முளைத்தோ முளைக்காமலோ இருக்கும் தம் வாயில் வாங்கி நாக்கால் சுழற்றி அது சிந்திச் சிதறி உண்ணும் காட்சி பெற்றோர்க்குப் பேரின்பம் தருவதாய் அமையும். எஞ்சிய உணவைத் தம் சிறுகையால் பிசைந்து உழப்பி பக்கத்திலுள்ள தாய்க்கோ தந்தைக்கோ அள்ளத் தெரியாமல் அள்ளி ஊட்டுகிறது குழந்தையின் கையிருக்கும் வாய்ப்புக்கு ஏற்ப அவர்கள் வாயைத் திறந்து நாக்கை நீட்டி வாங்கி உண்கிறார்கள். தம் குழந்தையின் மலர்க்கை பட்ட சிற்றுணவும் அவர்கட்கு அமுதாய் இனிக்கிறது. அமுதாகவே கருதி உண்டு மகிழ்கிறார்கள். எனக் கூறுவதில் நிறைவு காணா வள்ளுவர் அமிழ்தத்தைக் காட்டிலும் மிக்க இனிது என மகிழ்ந்து உண்பர் என்பதை "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளவிய கூழ்” எனக் கூறி இன்புறுகிறார். தாம் பெற்ற சிறுகுழந்தை ஓடி வந்து பெற்றோரைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறது. பிஞ்சு விரல்களால் தடவிக் கொடுக்கிறது. மலர்க்கால்களால் மிதிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் எப்படியும் தம் குழந்தை தம் பெற்றோரைத் தொடுவது கூட பெற்றோர்க்குப் பேரின்பம் அவர்கள் பேசும் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம். அப்படிக் குழந்தை பெற்றோரை இன்புறுத்துகிறது. அவர்கள் கடினமாய் உழைத்துச் சோர்ந்து இருந்தாலும் சோர்வு நீங்கிப் போகும். மன வருத்தமோ பசிவாட்டமோ இருந்தாலும் நீங்கித் தெளிவும் மகிழ்வும் அடைவார்கள் என்பதைத் தாமே துய்த்தவர் போல், "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு எனக் கூறி நம்மையும் இன்புற வைக்கிறார். இக்குறட் கருத்தில் மகிழ்ந்த வில்லிபுத்தூரார் தம் பாரதத்தில், "கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும் சொல்லால் உருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி, மைந்தர் இல்லா தவர்க்கு மனைவாழ்வில் இனிமை என்னாம்?” மெய்தானம் வண்ணம் விரதம் தழல் வேள்வி நாளும் செய்தாலும் ஞாலத் தவர்நற் கதிசென்று சேரார் மைதாழ் தடங்கண் மகவின் முகமன்னு பார்வை எய்தா தொழியிற் பெறுமின்பம் இவணுமில்லை” என்றும் எதிர்மறை நோக்கில் பாடுகிறார். "குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்” தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதற்கு வாய்ப்புக் கிட்டாதவர்கள் தான் குழல் இசை இனிமை ஆக இருக்கிறது. யாழ் இசை இனிமையாக இருக்கிறது என்று சொல்வர் என்றால் தம் குழந்தைகளின் மழலை மொழி குழலிசையினும் யாழிசையினும் மிக இனியது என்றுதானே பொருள். நளவெண்பாவில் புகழேந்திப் புலவர், "சொன்ன கலையின் துறையனைத்தும் தோய்ந்தாலும் என்ன பயனுடைத்தாம் இன்முகத்து - முன்னம் சிறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச் சிறுகுதலைக் கேளாச் செவி” என வருந்திக் கூறுகிறார். "யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை” என்றார் சங்க காலத்து ஒளவைப் பெருமாட்டி 'குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவி” எனச் சிலப்பதிகாரம் பாடுகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தம்முடைய மக்களை உரிய பருவத்தில் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளின் தனித்திறனையும் ஆர்வத்தினையும் நன்கு கண்டுணர்ந்து அவ்வத் துறையில் உயர் கல்வி கற்கவும், அவர் கற்ற கல்விக்கும் திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற பணியில் ஈடுபடச் செய்து, அத்துறையில் சிறந்த பணிபுரிந்து வெற்றிமேல் வெற்றியும் விருதும் பெற்று, ஊர் உலகம் மதிக்க உயர் நிலையில் இருக்க வைப்பதற்கான வழிவகைகள் அனைத்தும் செய்து துணைபுரிய வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” எனக் கூறுகிறார். "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்பது பொன்முடியாரின் புறப்பாடல் வரி. வளரா நாடு - வளரும் நாடாகி - விரைவில் வளர்ச்சி பெற்ற நாடாகி - தன்னிறைவு பெற்று - மிகுவளம் பெற்ற நாடாக விளங்க வேண்டுமென்றால் கற்றோர் தொகை பெருகிக் கொண்டே வர வேண்டும் 'கல்லாரே இல்லை' அனைவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலையினை எய்த வேண்டும். அனைவரும் முன்பு தொடக்கக் கல்வி கற்றனர். அடுத்த ஐந்தாண்டில் அனைவரும் நடுநிலை வகுப்பு வரைக் கற்றனர். அடுத்த ஐந்தாண்டில் அனைவரும் உயர்நிலை வகுப்பு வரைப் படித்து விட்டனர். அடுத்த மூன்றாண்டில் அனைவரும் மேல்நிலை வகுப்பு வரைப் படித்துவிட்டனர். அடுத்த மூன்றாண்டில் அனைவரும் கல்லூரியில் இளங்கலை படித்துவிட்டனர் எனக் கல்வி அறிவு வளர்ந்து கொண்டே வர வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் தம்மைக் காட்டிலும் தம்முடைய மக்களைச் சிறந்த அறிவாளர்களாக ஆக்குவதைக் கடமையாகக் கொண்டு ஆக்கிக் காட்ட வேண்டும். அப்படி மக்களைச் சிறந்த அறிவாளர்களாக ஆக்கினால் நன்மை அடையப் போவது அவர்கள் வீடு மட்டுமன்று ஊர் மட்டுமன்று நாடு மட்டுமன்று. உலகே நன்மை அடையும். நம் மக்களை நாம் சிறந்த அறிஞர் ஆக்குவது உலகிற்கே நன்மை செய்ததாகும். தனி மனித வளர்ச்சியிலே உலக வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதைத், "தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்கிறார் உலக நலம் விரும்பும் உயர் புலவர். குழந்தை கருக்கொண்டது அறிந்தே கணவனும் மனைவியும் மகிழ்ந்தனர். குழந்தை உரிய நாளில் நலமே பிறந்தது கண்டு மகிழ்ந்தனர்; கணவனும் மனைவியுமாக இருந்தார்கள் தாயும் தந்தையும் ஆனார்கள்; பெற்றோரும் ஆனார்கள் குழந்தை உடலும் வளர்ந்தது வளர்ச்சியைக் கண்டு கண்டு மகிழ்ந்தனர். அறிவாலும் வளர்ந்தான் / வளர்ந்தாள். பண்பாலும் வளர்ந்தனர், செயல் திறனாலும் வளர்ந்தனர். ஏற்ற துறைகளில் எல்லாம் ஏற்றம் பெற்றுப் பரிசும் பாராட்டும் பெற்று வருகின்றனர். உயர்ந்த பெருமக்கள் வீடு தேடி வந்து அவர்களைப் பாராட்டிக் செல்கிறார்கள். தாய் தந்தையர்க்கு மகிழ்ச்சி எப்படி இருக்கும். திருவள்ளுவர் "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்கிறார். "மீனுண் கொக்கின் தூவி யன்ன வால்நரைக் கூந்தல் முதியோர் சிறுவன் களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே” எனப் புறநானூறு பாடுகிறது. வசிட்ட முனிவர் அயோத்தி மன்னன் தயரதனிடம், "மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தார் இல்லை” என உரைத்தார். அதனைக் கேட்ட மன்னவன் "மற்று அவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப் பெற்ற அன்றினும் ............... பெரியது ஓர் உவகையன் ஆனான்” எனக் கூறும் கம்பரின் திருக்குறள் ஈடுபாட்டையும் உணர்ந்து கொள்கிறோம். "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்” என்பது மக்கள் கடன் உரைக்கும் நிறைவுப் பாடல். தான் பிறந்த நாள் தொட்டுத் தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் தன்னிறைவுடன் வாழ ஒரு பணியில் அமர்த்தித், திருமணம் செய்வித்து மனையறம் படுத்தித், தன் செல்வத்திலும் உரிய பங்கை வழங்கிய தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு. தன் அறிவாற்றலையும், நற்குண நற்செயல்களையும் கண்டோர் இவன் தந்தை இவ்வரும் மருந்தனைய மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவம் செய்தாரோ என்று கூறும் புகழ்ச் சொல்லை அவர் வாயினின்றும் தானாக வரச் செய்தலாம். தன் ஐ-க்கு அதாவது தந்தைக்கும் தாய்க்கும் 'புகழைப் பெற்றுத் தர வேண்டியது பிள்ளைகள் கடமையாகும். "எத்துணைத் தவம் செய்தான்கொல் என்று எழுந்து உலகம் ஏத்த" எனச் சிந்தாமணி ஏற்றுவதும் "என்னை நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா!” என்ற பெரியாழ்வார் வாக்கும் ஆழ்ந்து நோக்குதற்கு உரியன. 'அறிவறிந்த, பழி பிறங்காப் பண்புடை மக்கள் தொகை பெருகட்டும்! நன்மக்களே தம்பொருள் எனக் கருதிப் பெற்றோர் இன்புறட்டும்! இவர்க்கு மகவாய்ப் பிறந்தோம் என மக்கள் மகிழட்டும்! இவர்களை மக்களாய்ப் பெற்றோம் எனப் பெற்றோர் பெருமை அடையட்டும்! மக்கள் அறிவால் மாநிலம் செழிக்கட்டும்! 8. அன்புடைமை வாழ்க்கை என்னும் விளை நிலத்தை உழுது பண்படுத்துவதும், நல்ல வித்தாய் விளங்கி முளைப்பதும், கதிரொளியாய், காற்றாய், நீராய் அமைந்து 'புகழ்ப் பயிரை' வளர்ப்பதும் காப்பதும் அனைத்தும் அன்பே! 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி' விளங்கும் இறைமை அன்னது அன்பே! அதனேயே திருமூலர், "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!” என்கிறார். வள்ளலாரோ "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே! அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே அன்பெனும் காத்து அமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே!” என்கிறார். அன்புருவாம் இறைமையை அன்பால் எளிதில் அடைய முடியும் என்பது அவரது பட்டறிவு. உலகம் வளர்வதும் நிலைப்பதும் பண்பால் என்பது சான்றோர்களின் மெய்யுணர்வு. பண்புகளின் தாய், பண்புகளின் ஊற்றுக்கண், பண்புகளின் அடிவேர்; அன்பேயாகும். வள்ளுவரும் 'அன்பே இல்வாழ்க்கையின் பண்பு' என்றார். கணவனோடு மனைவியையும் அவர்களோடு அவர்களின் முன்னவர்களையும் பின்னவர் களையும் உற்றார் உறவினர் களையும் நண்பர்களையும் ஊரவர்களையும் நாட்டவர்களையும் ஒருங்கே இணைக்கும் பாசக் கயிறு அன்பேயாகும். பிறர் துயர் கண்டு அழவைப்பதும் அன்பே! பிறர் நல்வாழ்வு கண்டு மகிழ வைப்பதும் அன்பே! சேய்மையில் இருப்பவர்களையும் நெருங்கி இருப்பவர் போல் நினைக்க வைப்பதும் அன்பே! இணைந்து இருக்குங்கால் இன்புறுத்துவதும், பிரிவில் துன்புறுத்துவதும் அன்பே! எட்டுணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ண வைப்பதும் இயங்க வைப்பதும் எதுவோ அதுவே அன்பு. "மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினாலும், அன்பு எனக்கு இல்லையேல், ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போல் ஆவேன். இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்திருந்தாலும், அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும், மலைகளைப் பெயர்த்து அகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும், அன்பு எனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. எனக்கு உள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும், எரிப்பதற்கு என் உடலை என் கை அளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றும் இல்லை . அன்பு பொறுமையுள்ளது; பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது, பெருமை பேசாது; இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது. சீற்றத்திற்கு இடம் தராது. வர்மம் வைக்காது. அநீதியைக் கண்டு மகிழ்வுறாது; உண்மையைக் கண்டு உளம் மகிழும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும், பிறர்மீது நல்லெண்ணம் இழப்பதில்லை, நம்பிக்கையில் தளர்வதில்லை, அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் அன்புக்கு என்றும் முடிவு இராது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. அவற்றுள் தலை சிறந்தது அன்பே! அன்பை நாடுங்கள்” என விவிலியம் புதிய ஏற்பாடு 1 கொரிந்தியர் 13-ஆம் அதிகாரம் கூறும் கருத்துகள் திருக்குறள் கருத்துகளுடன் இணைந்து நடைஇடுவதை எண்ணி இன்புறுவோம்! அன்புடையவரே உண்மையான குடும்ப உறுப்பினராக விளங்க முடியும். அன்பகத்துக் கொண்டவரே அமைந்த குடும்பத் தலைவர் ஆவார். அன்புடையவரே தொண்டர் ஆவார். அன்புடையவரே தலைவராவார். அன்புடையவரே தம் குடியைப் பெருமைக்குரிய ஆன்ற குடியாக்க முடியும், அன்புடையவரே நாடாளத் தகுதி உடையவர். அன்புடையவரே சான்றோரும் ஆவார். அன்பே வீட்டையும் நாட்டையும் உயிருள்ள உணர்வுள்ள வீடாகவும் நாடாகவும் ஆக்குவதாகும்! "அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே” எனக் கூறுகிறார் கம்பர். அன்பு உள்ளத்து உருக்கம்! வாய்மொழியை வைத்தும் செயல்களைக் கண்டுமே அன்புடையார் யார் என்பதைக் கணித்தறிய முடியும். ஒருவன் துன்புறுகிறான், இருப்பது பகைவனின் பாசறை; ஆறுதலாக ஓர் இனிய சொல்லும் சொல்ல முடியாத நிலை; அவன் தாகத்திற்கு ஒரு குவளை நீர் கூட கொடுத்து உதவ முடியாத சூழல்; அன்புடையோன் துன்புறுவோனைப் பார்க் கிறான் அவன் உள்ளம் மெழுகாய் உருகுகிறது; அவ்வுருக்கம் முகத்தில் தெரிகிறது; இடுக்கண் கண்ட கண் இடுங்குகிறது! கண்ணிலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் கொட்டுகிறது. அது கொட்டுவது நீரா? இல்லை அன்பை அல்லவா அடக்கி வைக்க முடியாமல் கொட்டுகிறது. அன்பை அடைத்துப் பூட்டும் தாழை உலகம் கண்டதில்லை. கண்ணும் கண்ணில் நீரும் இருக்கும் வரை அன்பை அடைத்து வைக்க இயலாது. அண்ணியார் தம்மால் அடக்கி வைக்க முடியாமல் கொட்டிய கண்ணீரே இராமலிங்கத்தை வள்ளலார் ஆக்க வழி காட்டி அமைந்தது என்பதே உண்மை. "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்பதே அன்புடைமையின் முதற்குறள். யார் அன்பிலார்? தமக்கு உரிமைப் பட்ட பொருள்களின் மீது மட்டும் உரிமை பாராட்டாது. தாம் கண்ணில் கண்ட பொருள்களை எல்லாம் தம் பொருள்களாக ஆக்கித் துய்க்க அவாக் கொள்பவர்; தம் உழைப்புக்குரிய ஊதியம் பெறுவதுடன் கையூட்டும் நன்கொடையும் வாங்கி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள எண்ணுபவர். அளவிற்கு மேல் இலாபம் (ஊதியம்) வைத்துப் பொருட்களை விற்பனை செய்வோர்; உழைக்கும் தொழிலாளர்கட்கு உரிய ஊதியம் வழங்காமல் பணத்திற்கு மேல் பணம் தேடிப் பதுக்குவோர் இப்படி பேராசை கொள்ளும் தன்னலக் காரர்கள் எல்லாம் அன்பிலார் ஆவர். "துன்பம் பிறர்க்கு, நல்லின்பம் தமக்கு என்னும் துட்ட மனோபாவம்” என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அவரே தொடர்ந்து, "அன்பினை மாய்க்கும் அறம் குலைக்கும் புவி ஆக்கந்தனைக் கெடுக்கும்” எனவும் விளக்கி உரைக்கிறார். அன்புடையார் யார்: பிறர்க்குப் பயன்படும் எப்பொருள் தன்னிடம் இருந்தாலும் தனக்குப் பின்னர்த் தேவைப்படலாம் என்றும் கருதிப் பார்க்காது எப்பொருளையும் விருப்பத்தோடு வழங்கி மகிழ்பவரே அன்புடையார். ஏன் தம் உடம்பும் பிறர்க்கே உரியதென்று கருதித் தம் உடம்பையும் பிறர் பயனுக்கு ஆக்குபவர். குருதிக் கொடையாளர்; சிறுநீரகக் கொடையாளர்; கண்பாவையை வழங்குவோர் எல்லாம் அன்புடையவரே! தம் கணவர் மீது கொண்ட பேரன்பால் தான் 'கணவரை இழந்தோர்க்குக் காட்டுவதில் என்று இணையடி தொழுது வீழ்ந்து உயிர் விட்ட கோப்பெருந்தேவி! தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மீது பாய வந்த குண்டைத் தான் ஏந்தி மாண்ட வள்ளியம்மை. தொடர் வண்டியில் ஏறிய மாணவரைக் காக்க முயன்று தன்னுயிர் துறந்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் இராமச்சந்திர பத்தர். தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கி இருந்த குமணன், தன்னைப் பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தன் தம்பியிடம் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்தான் என்பதெல்லாம் 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்பதற்குச் சான்றுகள் தாமே! அன்பிலார்; அன்புடையார் இலக்கணம் கூறும் குறட்பா, "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” உடலும் உயிரும் ஒட்டி இருப்பது எதற்காக? என ஒர் அருமையான வினாவை எழுப்பிக் கொண்டு விடைதருவது போல் எழுதப்பட்ட குறளே, "அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு” 73 உடல் தாங்கிய மனிதன் இம்மண்ணில் உலவிக் கொண்டிருக் கிறான் என்றால் அவன் உள்ளத்தாலும் உரையாலும், செயலாலும் அன்பைப் பொழிய வேண்டும். வாழ்ந்தால் அன்புடையவனாய் வாழ வேண்டும்! இல்லையேல் பயனில்லை. ஆருயிர் என்போடு இயைவது அன்போடு இயைந்து ஒழுகுவதற்கே” என்றும் கூறலாம். அதனை 'உயிர் உடல் தாங்குதல் அன்பொழுக்கத்தின் பொருட்டே” என்றும் உணர்ந்து போற்றலாம்! 'அறம் சிறப்பீனும் செல்வமும் ஈனும்' எனக் கூறிய வள்ளுவர் இங்கே "அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு” என்கிறார். நீர் வேட்கை இருக்கிறது. நீர்ச் சுனையைக் காணுகிறோம். ஆர்வத்தோடு அள்ளிப் பருகினால் வேட்கை தீரும். பசிக்கிறது - நமது மாந்தோப்புக்குள் செல்கிறோம்! பழுத்த கனிகளை ஆர்வத்துடன் பறித்து சுவைத்து உண்டால் பசி அடங்கும். அறிவுப் பசி - நல்ல நூல்களைத் தேடுவதிலும் ஆர்வம் இருக்க வேண்டும்! முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும்! ஆர்வம் பெருகப் பெருக! மீண்டும் மீண்டும் கற்கக் கற்க இன்பம் பெருகும். நல்ல நண்பர்கள், நல்ல நூல் போன்றவர்கள், படிப்புப் போன்றதே நட்பும். ஒருவர் வாழ்வில் நட்புச் செய்தல் போல் செய்வதற்கு அரியவை யாவை உள்ளன என்னும் பொருள்படுமாறு "செயற்கரிய யாவுள நட்பின்” 781 என்கிறார் திருவள்ளுவர். 'நட்புக்கொள்ளுதல் எளிதன்று' 'செயற்கு அரிய செயல்' எனத் திருவள்ளுவர் நுட்பமாகக் கூறுகிறார். அன்புடைய மனம். அன்புடைய மனத்தவரை ஆர்வத்துடன் தேடிக் கண்டு கொள்ளும், தொடர்ந்து காணவும் கண்டு உரையாடவும் விரும்பும்; ஒன்றிய அன்பு இருப்பின் பழக்கம் பிறை மதிபோல் வளர்ந்து உளம் கலந்த உயிர் நட்பாய் நிலைபெறும். அன்பானது ஒருவனுக்கு, அக்குணம் உடைய பிறரிடத்தும் விருப்பமுடை மையைத் தரும்; அவ்விருப்பமுடைமையானது, அப்பிறர்மாட்டு நட்புரிமை என்னும் அளவிட முடியாத சிறப்பினைத் தரும்! பெரிய புராணத்தில் சேக்கிழார் காட்டும் ஒப்பற்ற அன்புடையார் கண்ணப்பர் வரலாற்றில், முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்ப மான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல் கூர் வள்ளலார் மலையை நோக்கி என்புநெக் குருகி உள்ளத்து எழுபெரு வேட்கை யோடும்' காளத்தி நாதனை கண்டு காதல் கொண்டதைக் காட்டுவது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். அன்பு அடிப்படையான வாழ்வியல் பண்பு மட்டுமல்ல, அது வாழ்நாள் பண்பு; ஆகவே, எங்கும் எப்பொழுதும் என்றும் அன்புடையவராய் வாழ வேண்டும். உறவைக் கெடுக்கும் பண்பைக் குலைக்கும் வளர்ச்சியைத் தடுக்கும் எந்த வேண்டாத இயல்புக்கும் இடந்தந்து விடலாகாது; அவ்வாறு அன்போடு பொருந்த வாழ்ந்து வருவோர்; அறவழிப்பட்ட இன்பத்திலும் திளைப்பர்; குடும்ப வாழ்வினர் அடைய வேண்டிய சிறப்பும் பெருமையும் புகழும் அடைவர். "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு” என்கிறார் அன்பு நெறி போற்றி வாழ்ந்து இன்பமும் சிறப்பும் எய்திய செம்மல். "செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு; எனக் கவிஞர் பாரதியார் பாடுவது இக்குறளை எளிய நடையில் விளக்கிக் காட்டுவது போல் அமைந்துள்ளது. “பேராண்மை என்பது தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு” 773 என்பது படைச்செருக்கில் இடம் பெற்றுள்ள குறள். போரிலே காட்டும் வீரத்தையே ஆண்மை என்பார்கள். போர்க் களத்திலேயே பகைவர்க்கு ஒரு துன்பம் நேர்ந்த போது உதவி நிற்றல் அவ்வாண்மையினும் மேன்மையானது ஆகும். வீரன் படைக் கருவி ஏந்திப் போரிடுவதற்குக் காரணம் நாட்டின் மீது கொண்ட அன்பு. பகைவனின் துன்பம் நீங்க உதவுதல் அறநெறி வழிப்பட்ட அன்பு என்பது தானே விளக்கம். அன்பின் தன்மையை முற்றிலும் அறியாதவர் தான் அன்பு அறச்சார்புடைய பண்பு என்றும், அவ்வன்பு வீரச் சார்புடைய பண்பல்ல என்றும் கூறுவர். அன்பின் பரந்துபட்ட இயல்பை அறிந்தவர்கள் தான் அன்பே உண்மையான அறம் வீரம் இரண்டிற்கும் அடித்தளமானது என்பதை அறிவார் என்பதை "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” எனும் குறள் வழிப் புலப்படுத்துகிறார். குடும்பப் பெருமையை நிலைநாட்ட, தீயவர் தரும் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க, குடிகாக்க, மொழி நலம் பேண, நாட்டு எல்லை காக்க; கொடியவர்களை ஒழிக்கத் தேவைப்படுவது வீரம். வீரம் காட்டத் தூண்டுவது அன்பே. "மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” 766 "அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு” 384 "உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்” 778 என்னும் மூன்று குறள்களிலும் மறம், மறன் மறவர் எனும் சொல் வீரப்பொருளை அன்றி வேறு பொருளில் வழங்கப்பட்டில் என்பதை அறியின் 'மறம்' என்பது 'வீரம்' என்னும் பொருளே தரும் என்பது தெள்ளிதின் புலப்படும். மனிதன் உடம்போடும் உயிரோடும் வாழ்வதே அன்புநெறி | நின்று, பிறவிப் பயனை அடைவதற்கே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்; நான் வன்புக்காரன் அல்லன் எனினும் அன்புக்கும் எனக்கும் பொருந்திவராது, அன்பைக் கடைப்பிடி என என்னை யாரும் வற்புறுத்தாதீர் என எவனாவது திருவள்ளுவரிடம் கூறியிருப்பான் போலும். திருவள்ளுவர் அவ்வன்பனை அன்புடன் அணுகி, தம்பி, புழு பூச்சி போன்ற சிற்றுயிர்களைப் பார்த்திருக்கிறாயா? அவற்றின் உடம்பில் எலும்புகள் உள்ளனவா? கடுங்கோடை வெயிலில் நண்பகல் வேளையில் பாறையில் பட்டுப் பதைக்கும் புழுவைப் பார்! நெருப்பில் பட்டது போல் பொசுங்கிப் போகும் அல்லவா? அது போல் அன்பு இல்லாத உயிர்களையும் அறமாகிய கதிரவன் வாட்டி வதக்கி அழித்து விடுவான். 'அறம்' இருக்கிறானே அவன் நெறி தவறியவர்களை 'மறநெறி நின்று தண்டிப்பதே அறம் என்பான். அவன் தண்டனைக்கு ஆளாகாதே! அவனைத் துணைக் கொண்டு வாழ்! நலமெல்லாம் பெறுவாய்! "என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் என நான் இங்கு கூறுவதுடன் தீவினை அச்சத்தில், மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” 204 எனக் கூறியதையும் எண்ணிப்பார். “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்' என்னும் சிலப்பதிகார நீதியையும் “அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்” என்னும் நீதிநெறி விளக்கத்தையும் ஒப்பிட்டு நோக்குக! உயர்நோக்கு எய்துக! "அன்பிலா நெஞ்சம் அரும்பிணி எனவும் அளவிலாப் பகை நமக்கு எனவும் துன்பமாய் சோக மோகமே முதலாம் துயரெலாம் விளை நிலம் எனவும் இன்பவீடு எய்தாது இடற்கிடை யூறாம் இருளும் என்று இயம்புவர் பெரியோர்” என்னும் மூல சித்தியும் மூலமாய் அமையட்டும்! "கண்ணோட்டம் இல்லாதவர் மரத்தனையர்” 576 "ஊக்கம் இல்லாதவர் மரம்” 600 "மக்கட் பண்பு இல்லாதவர் மரம்” 997 "நாணம் அற்றோர் மரப்பாவை” 1020 "இரப்பார் இல்லா உலகம் மரப்பாவை” 1058 என உவமைப்படுத்திய வள்ளுவர் அன்பு இன்மைக்கு வற்றல் மரம்' தளிர்த்தலை உவமை ஆக்கியுள்ளார். நிலத்தில் அளவான குழிதோண்டி, நல்ல மண்ணும் உரமும் இட்டு உயிருள்ள வேருடன் கூடிய நல்ல இளமையான மரக்கன்றை ஊன்று; அன்று நீர் விடுவதுடன் வாடாமல் நீர்விட்டு உரம் இட்டு ஆடு, மாடு மேய்ந்து விடாமல் நோய் நொடி பற்றாமல் காத்து வளர்க்க வேண்டும். உளநிலை சரியில்லாத ஒருவன் நல்ல கற்பாறையில் காய்ந்து பட்டுப்போன பட்டையும் கழன்ற மரத்தின் கொம்பை ஊன்றிக் கீழே விழாமல் மண்ணணைத்து நீரும் விடாமல் மரத்தின் வளர்ச்சியை மட்டும் காணச் சென்று ஏமாந்து போகும் இல்பொருள் உவமைக் காட்சியைக் காட்சிப்படுத்தி, அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வை உயிரோடு கூடிய வாழ்வாகக் கூறுவது வலிய பாறையின் மேல் பட்ட மரம் தளிர்த்தது என்று கூறுவது போன்ற பித்தலாட்டமாகும் என்கிறார். வசிட்டர் இராமனுக்குக் கூறிய உறுதிப் பொருள்களுள் ஒன்று. "என்புதோல் உடையார்க்கும்; இலார்க்கும் தம் வன்பகைக் புலன் மாசற மாய்ப்பது ஏன்? முன்புபின்பு இன்றி மூவுலகத்தினும் அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?” என்று கம்பராமாயணம் கூறுவதையும் நினைவு கூர்க! "அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று” என்பது நம் உள்ளகத்து இடம் பெற வேண்டிய குறள். "புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு” என்பது குறள். உடம்பிற்கு உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்களுக்கு யாக்கையின் வெளியுறுப்புகளாகிய கை, கால், கண், மூக்கு, செவி முதலிய எல்லாம் நன்கு அமைந்திருந்தும் என்ன பயன் ஒன்றுமில்லை . இடம், பொருள், ஏவல் போன்ற புற உறுப்புகள் இருந்தும் பயன் ஒன்றும் அமையாது. "இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று எல்லாம் இருந்தும் அவற்கு என்செய்யும் நல்லாய் மொழியிலார்க்கு ஏது முதுநூல்; தெரியும் விழியிலார்க்கு ஏது விளக்கு” என்னும் விளக்கும் விளக்கம் தரும்! "நாடாளின் என்ன? நகராளின் என்ன? நரர்க்குச் செல்வம் கோடானு கோடி இருந்தென்ன? மேனியிற் கோட்டழகு வாடாது இருந்தென்ன? வாயாத்திறம் பல வாய்த்தும் என்ன? ஈடாகுமோ உள்ளன்பு இல்லாக் குறைக்கு அவை எண்ணிடினே!” என்னும் செய்யுட் கோவையையும் எண்ணிப் பார்க்க! "இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ" "மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர்பாய்ச்சா விடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் அன்றோ! யான்எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே! நீவீர்! என் மதத்தைக் கைக்கொள்மின்! பாடுபடல் வேண்டா ஊனுடலை வருத்தாதீர்; உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்” எனப் பாரதியாரே வேண்டுகிறார் என்றால் வேறு நாம் என்ன சொல்ல இயலும்! பிறனில் விழைவானை விளிந்தார்” (இறந்தார்) 143 என்றார், "ஒத்ததறியான் செத்தாருள் வைக்கப்படும்' 214 “இறந்தார் (சினம் கொண்டோர்) இறந்தார்” “உண்ணாது பெரும்பொருள் வைத்தான் செத்தான்' எனக் கூறிய திருவள்ளுவர். அன்பு வழியில் செயல்படுவோர் உடம்புகளே உயிருடைய உடம்புகள் என்றும் உள்ளத்தில் அன்பிலார் உடல்கள் வெறும் எலும்புக் கூட்டைத் தோலால் மூடிய பிணங்களே ஆகும் என்பதை "அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” என்கிறார். அன்பு உடைய உடலே உயிருடைய உடலாகும்! மாணிக்க வாசகர் "அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக!” என வேண்டுவது போல் அன்பினால் கசிந்து உருகுவோமாக! "அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே” - தாயுமானவர் "அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” "அன்பு ஆர்வமுடைமையை ஈனும்” "ஆர்வமுடைடைமை நட்பை ஈனும்” "அன்பு அறத்திற்கும் துணை” "அன்பு மறத்திற்கும் துணை” "அன்பு அகத்துறுப்பு - "அன்பின் வழியது உயிர்நிலை” "அன்பை அடைக்கம் தாழ் இல்லை” 9. விருந்தோம்பல் எத்தனையோ புதுமைகளைப் புகுத்திய திருவள்ளுவர் செய்த புதுமையான அதிகாரம் விருந்தோம்பல்' ஆகும். வேறு விருந்து அதிகாரமும் படைக்கவில்லை . அதுபோல் 'ஓம்' வேண்டும் என வேண்டும் அதிகாரமும் இஃதே ஆகும். "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல் தலை” என இல்வாழ்க்கை அதிகாரத்தில் இல்வாழ்வான், சிறந்த கடமையாகக் கருதி ஓம்ப வேண்டிய ஐவரை அடையாளம் காட்டினார். அவருள் தென்புலத்தார், பேணல் - 90. "பெரியாரைப் பிழையாமை” அதிகார வழியும்; தெய்வம் பேணல் - 3 நீத்தார் பெருமை, 45 'பெரியாரைத் துணைக் கோடல்' வழியும்; சுற்றம் ஓம்பல் 53 'சுற்றந்தழால்' அதிகார வழியும் விளக்கத் திட்டமிட்ட வள்ளுவர் இங்கே விருந்தினரை ஓம்ப வேண்டியதன் இன்றியமையாமையினையும் முறையினையும், பயனையும் எடுத்து மொழியலானார். தன்னைப் பேணல் ஒரு அதிகாரத்தில் கூற இயலுவதன்று. நூல் முழுமையும் தன்னைப் பேணலை | அறிவுறுத்துவது தானே! தென்புலத்தாரும், தெய்வமும் ஊர் மட்டுமன்று; நாடறிந்த நல்லோர்; ஒக்கல் ஆகிய சுற்றத்தினர் தலைவனால் நன்கு அறியப்பட்டவர்கள். ஆனால் 'விருந்தினரோ' முன் அறியப் படாதவர். அவர் யாராகவும் இருக்கலாம், எப்படிப்பட்ட வராகவும் இருக்கலாம். எந்நிலையினராகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் குற்றவாளிகள் அல்லர்; திருடர்களும் அல்லர் குடிகாரர்களும் அல்லர்; சூதாடிகளும் அல்லர்; ஒழுக்க மற்றவர்களும் அல்லர்; வஞ்சகர்களும் அல்லர்; ஏமாற்றுக்காரர் களும் அல்லர்; பொய்யர்களும் அல்லர் உழைக்கப் பயந்த சோம்பேறிகளும் அல்லர். பயன் கருதி, நல்ல நோக்கத்துடன் வெளியூர் செல்பவர்கள்; செல்லும் ஊர் அண்மையிலும் இருக்கலாம் சேய்மையிலும் - இருக்கலாம். வள்ளுவர் காலம் 'காசுக்கு உணவு விற்கும் காலமன்று. பயணத்திற்குக் 'கட்டுச் சோறு' கட்டி எடுத்துச் செல்வர். உணவு தீர்ந்த பின், வழியில் உறவினர் இல்லம் இருந்தால் உண்டு தங்கிச் செல்வர். உறவினரும் நண்பரும் அறிமுகமானவரும் இல்லாத ஊரிலும், 'விருந்தினரைப் பேணும் பண்பு அன்று இருந்ததால் யார் இல்லத்திற்கும் உரிமையுடன் செல்லலாம் அல்லது ஊர்ப் பொது இடம் செல்லலாம். உணவு தந்து, உறையுள் தந்து பேணல் உண்டு அதற்குப் பெயர்தான் “விருந்தோம்பல்' ஆகும். விருந்தினரைப் பேணும் பழக்கத்தால் புதியவர் பலரைக் காணவும் பழகவும் வாய்க்கிறது. தலைவன் தலைவியர், நல்லவர் கூட்டுறவைப் பெருக்கிக் கொள்ளத் துணைபுரிகிறது. குழந்தைகளும் பெற்றவர்களைக் கண்டு ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இல்லம் வந்த விருந்தினர் மூலம் குழந்தைகள் நலம் பல பெறுவார்கள். தலைவன் தலைவியரிடை ஊடல் நிகழும் காலத்து விருந்தினர் வந்தால், அவர்கள் ஊடல் தீர்க்கும் நல்ல வாயிலாகவும் அமைவர். அன்புடைய இல்லறத்தார் செய்யும் பொதுநலப் பணிகளில் இயல்பானது விருந்தினர்ப் பேணல் ஆகும். இலங்கை அசோக வனத்தில் துன்பம் தன்னைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கும் வேளையிலும், சீதாபிராட்டி இராமபிரான் "விருந்து கண்டபோது என்னுறுமோ? என்று” விம்மி அழுது புலம்புவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார். இல்லறத்தார் கடமையாக இளங்கோவடிகள். "அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்” எனக் குறிப்பிடுகிறார். நல்ல இல்லத்தில் குடியிருந்து குடும்ப நலம் பேணி வாழ்க்கை நடத்துவது, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, தானும் தன் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நன்றாக, உண்டு, உடுத்தி, அணிகலன் அணிந்து வாழ்ந்தால் போதும் என்று எண்ணாது, தம்மைத் தேடிவரும் விருந்தினரையும் அன்புடன் வரவேற்று, இன்னுரை கூறி அவர்களின் தேவையை அன்புடன் உரிமையோடு நிறைவேற்றி வைப்பதற்காகவே நாம் வாழ்கிறோம். என்று எண்ணி மகிழ்வுடன் விருந்தோம்பி வாழ வேண்டும். "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பது குறள். "வேளாண்மை ” - உழவுத் தொழில், இல்லறம், உதவி என்னும் முப்பொருளும் உணர்த்தும் சொல்லாகும். 'வேள்' என்றால் 'மண்' மண்ணில் உழைப்போர் வீட்டிலிருந்து இல்லறம் நடத்துவதே விருந்தினரைப் பேணுவதற்கே! “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்' என்பது பழமொழி. "பெருந்தடங்கண் பிறைநுத வார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்கிறார் கம்பரும். ஆவூர் மூலங்கிழார் புறப்பாடல் ஒன்றில் பாண்டிய நாட்டுக் குறுநில மன்னன் கீரஞ்சாத்தன்; தன் மனை முற்றம் வந்த சான்றோர் பசியற்றவராய் இருப்பினும் அவரை மிகப் பணிந்து வற்புறுத்தி உண்ணுமாறு வேண்டுபவன்' என்பதை "மணன்மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணா ராயினும் தன்னொடு சூளுற்று உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்” (புறம் 178) எனக் குறிப்பிடுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்! நெறி நின்று இல்லறம் நடத்துவோர் தம் தேவைக்கு மேல் பொருளைச் சேமித்து வைப்பது, தமக்குப் பிற்காலத்துப் பயன்படும் என்பதற்காக மட்டுமன்று, எதிர்பாராமல் திடீரென வரும் விருந்தினரைப் பேணுவதில் தடையோ காலத் தாழ்வோ ஏற்பட்டு விடாமல் கடமை புரிதற்கே என்னும் திட்டமிட்ட வாழ்வியல் திறம் வேண்டும் என வலியுறுத்துபவர் திருவள்ளுவர். இல்லத்தில் ஆக்கிய உணவே மிகுதியாக இருக்கும் போது வீட்டிற்கு விருந்தினர் வந்தால், மகிழ்வுடன் வரவேற்று இல்லத்தினரும் வந்தவரும் உடனிருந்து உண்பது எளிது. இல்லத்தினரே கடும் பசியுடன் இருக்கின்றனர். இருக்கும் உணவோ அவர்கட்குப் போதுமானது என்றும் சொல்லி விட இயலாது. குறைந்த அளவே உளது. உண்ண உட்காரப் போகும் நேரத்தில் விருந்தினர் வருகின்றனர். அவர்களும் பசியோடு வருவது போல் தான் தெரிகிறது. திருவள்ளுவர் தம் வீடு தேடி வந்த விருந்தினர் வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது அவர்களை உண்ண வைக்காமல் இல்லத்தவன் தான் தனித்து உண்டு, தன் பசியை மட்டும் போக்கிக் கொள்ள எண்ணுவது விரும்பத் தக்கது அன்று என்கிறார். அந்த அளவுடன் அமையாமல் "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” எனப் பாடியுள்ளதால் ''சாவா மருந்து" தேடி அலைய வேண்டியுள்ளது. வேதனை இன்றி இருக்க உண்ணும் மருந்து 'நோவா மருந்து' மூப்பின்றி வாழ உண்ணும் மருந்து 'மூவா மருந்து' வள்ளுவர் இங்கே குறிப்பிடுவதோ 'சாவா மருந்து' "சாவாமைக்கு உண்ணும் மருந்து” என மணக்குடவரும், நஞ்சாகிலும் (சாவுஆம் மருந்து) எனப் பரிதியாரும், "ஒரு கவள் அளவு சிறிய ஊண், இதனை உண்டால் உயிர் நிலைக்கு மாயினும் அதனையும் பகிர்ந்துண்க” எனப் பரிப் பெருமாளும், "அமரர் உலகத்து அமுதம்” எனக் காளிங்கரும் "சாவை நீக்கும் அமிழ்தம்” எனத் திரு.வி.க அவர்களும் “சாவாமல் இருக்கச் செய்யும் மருந்தாயினும் எனப் பாவாணர் அவர்களும் ''விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவாம்; வந்த விருந்தினரே தமக்குப் பசியில்லை; நீங்களே அருந்துங்கள் எனக் கூறினாலும், தனித்து உண்பது விரும்பத் தக்கதன்று” 'சாவா மருந்தை' 'சாவாம் + அருந்து' எனப் பிரித்துப் புணர்ச்சி காட்டி அரசஞ் சண்முகனார் அவர்களும், 'உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்தே உணவாக இருந்தாலும்' என இளங்குமரனார் அவர்களும் வள்ளுவக் கடலில் மூழ்கிச் 'சாவா மருந்தை தேடிக் கொண்டு வந்து காட்டி இருக்கிறார்கள். "உயிர் தளிர்க்கச் செய்யும் அமுத உணவு" "வான் மழையே” எனக் கூறி, "வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று” என்னும் திருக்குறளையே சான்றாகக் காட்டி இளங்குமரனார் கூறும் வாழ்வியல் உரை வாழவைக்கும் உரையாகும். பாண்டியன் இளம் பெருவழுதி, கடல் கடைந்தெடுத்த தொன்மக் கதை மீது கொண்ட நம்பிக்கையால், "......... இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே” எனப் புறநானூற்றுப் பாடலில் கூறியுள்ளார். நீ உண்ணும் உணவு அரியதா எளியதா என்பது முதன்மையதன்று, விருந்து வந்ததைக் கண்ட பின்னும், தான் மட்டும் தனித்து உண்ண எண்ணாதே! அவர்கட்கு வழங்கி விட்டு எஞ்சியதை உண்டு மகிழ்க! அதுவே அன்பும் அறனும் ஆகும் என்பது தான் வள்ளுவர் நோக்கு! அந்நோக்குடையார் பெருகி இருந்தமையாலே 'விருந்தில்லா உணவு மருந்து' என்னும் பழமொழி வழங்கலாயிற்று. "மருந்தே யாயினும் விருந்தோடுண்' எனக் கொன்றை வேந்தனும் கூறலாயிற்று. இரவு உணவு வேளை தமையனார் மகள் ஒரு குவளை பாலும் பழமும் திரு.வி.க அவர்கட்குக் கொண்டு வந்து கொடுத்துச் செல்கிறார். அது போழ்து அவரைக் காண ஒரு துறவி வருகிறார். பாலும் பழமும் அவர் வயிற்றை நிரப்புகிறது. திரு.வி.க நீர் பருகி நிறைவு காணுகிறார். நிறை மனிதர் அல்லவா அவர். ஆகவே வள்ளுவர் வழியில் மேலும் உயர்ந்து வழி காட்டுகிறார். "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” என இல்வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டினார்! நல்ல வழியில் உழைத்துப் பொருளைத் தேடு! அப்பொருளை நல்ல வழிக்குப் பயன்படுத்து; பொருள் வரும் வழியும் போகும் வழியும் 'அற வழியாக' என்றும் அமையட்டும்! உனக்கு எக்குறையும் நேராது! என ஊக்கப்படுத்தியதை மறந்து விடாமல், "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று" எனக் கூறும் குறளைப் படித்துப் பாருங்கள் அவரின் நோக்கும் போக்கும் தெள்ளிதின் புலப்படும்! "ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரோடு செல்லினும் தலைநாள் போன்ற விரும்பினன்” என ஒளவையாரால் அதியமான் நெடுமானஞ்சி போற்றப் படுகிறான்! அவன் ஒருநாள் கொடையாளி அல்லன். வாழ்நாள் கொடையாளி யாவான். அது போல் விருந்தோம்பலை இல்வாழ்வான் வாழ்நாள் கடமையாகக் கொண்டு விருந்தினரை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் விருந்தினர் நாளும் வருவர் எனக் கூற இயலாது. வரவும் செய்யலாம் வாராமலும் இருக்கலாம். யாரும் நெடுநாள் தங்குபவர் அல்லர். நமக்கு ஆக்கிய உணவில் அவர்கட்கும் பகிர்ந்து அளித்து நாமும் உண்ணுகிறோம். அதனால் பெரிய செலவோ பொருள் இழப்போ ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, பொருட் கவலையின்றி விருந்தினரைப் பேணல் மகிழ்வுடன் நடைபெறட்டும்! விருந்தினரைப் போற்றுதல் காரணமாக யாரும் துன்புற்றுக் கெட்டுப் போக மாட்டார்கள் என நம்பிக்கை ஊட்டி, நல்லன்புடன் வந்த விருந்தினரைப் பேணுமாறு வேண்டுகிறார். வீடு தேடி வந்த விருந்தினரை நன் முறையில் பேண வேண்டும்! வந்த விருந்தினரும் நற்குண நற்செயல்களை உடையவராயும் இருத்தல் நல்லது; வந்த விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்க வேண்டும்! அதாவது நல்ல விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று நன்முறையில் பேண வேண்டும். அப்படி விருந்தோம்பும் இல்லம்; பெருமைக்குரிய இல்லம்; பெருமக்கள் பலரின் காலடி பட்ட இல்லம் மட்டுமன்று; நல்லோர் பலரின் நல்வாழ்த்துப் பெற்ற இல்லம். செல்வம் என்பது ஒரு கருவி; அதற்கெனத் தனிச் சிறப்போ பெருமையோ கிடையாது. யாரிடம் பொருந்தி இருக்கிறதோ எதற்குப் பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்தே செல்வம் பெருமையும் சிறுமையும் அடைகிறது. நல்ல விருந்தினரை முகம் மலர்ந்து வரவேற்று நல்விருந்து பேணுபவனிடம் பொருந்தியுள்ள செல்வம் பெருமைக்குரிய செல்வமாக மதிக்கப்படுகிறது. செல்வம் அத்தகையோன் இல்லத்தில் மனமகிழ்வுடன் நிலைபெறும். ஊற்று நீர் முகக்க முகக்க ஊறுவது போல் ஊறிக் கொண்டிருக்குமே தவிரச் செல்வம் குறையாது என்பதைத் தான் அக்காலத்தில் மக்களிடையே நிலவிய நம்பிக்கைக்கு ஏற்பச் 'செய்யாள்' - அதாவது திருமகள் தங்கி இருப்பாள் எனக் கூறுகிறார். "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்” என்பதே அக்குறட்பா. முதலில் வந்த விருந்தினரை உண்ணச் செய்து, எஞ்சி இருப்பதை மட்டும் உண்பதை வழக்கமாகக் கொண்டவன் மிக உயர்ந்த மனிதன், பண்பாளன், தன்னலமற்றவன், கடமையைப் பெரிதாகக் கருதுபவன், அத்தகையோன்பால் உதவும் வாய்ப்பு இல்லாதபோதும் உடைமைகளை விற்றும் தாம் மேற்கொண்ட விருந்தோம்பல் பணியை மேற்கொள்வான். இளையான்குடி மாற நாயனார் விருந்து பேணும் கடப்பாடு உடையவர்; மழை கொட்டுகிறது; மழையில் நனைந்து கொண்டே பசியுடன் விருந்தினர் அவர் இல்லம் வருகிறார். வீட்டில் ஆக்கிய உணவும் இல்லை; ஆக்க அரிசியும் இல்லை; யாரிடமும் கைம்மாற்று வாங்கவும் வாய்ப்பில்லை. விருந்தினரை உண்பிக்க வேண்டும் என் செய்தார், காலையில் வயலில் விதைத்த விதை நெல்லை நீரோடும் சேறோடும் அள்ளி வந்து அலசி வறுத்து அரிசி ஆக்கி உணவு சமைத்து உண்பிக்கச் செய்கிறார். ஒன்றுக்கு நூறாக விளையக் கூடிய விதை நெல் ஆயிற்றே என்று கருதிப் பார்க்காமல் நாயனார் போல் விருந்து பேணுகிறவர்களும் உலகில் இருக்கிறார்கள் - இருப்பார்கள் என்ற எண்ணத்தாலும், "வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்?” என்ற குறளைப் பாடியிருக்கலாம். ''ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்” என்னும் பழமொழி பட்டறிவில் தோன்றிய மொழியே! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” 319 என்பது நடைமுறை உண்மையாயின் "பிறர்க்குதவி முற்பகல் செய்யின் தமக்குதவி பிற்பகல் தாமே வரும்” என்பதும் உண்மையில் நிகழக் கூடியதாகத் தானே இருக்க வேண்டும். அப்படி நிகழ்வதையும் எத்தனையோ குடும்பங்களில் கண்டும் கேட்டும் இருக்கிறோமே! தம் இல்லம் தேடி வந்த விருந்தினரை முதற்கண் உண்ணச் செய்துவிட்டு, எஞ்சி இருக்கும் உணவையே உண்பதை வழக்கமாகக் கொண்ட இல்லறத்தார்; வேளாண்மையே அவர்க்குத் தொழில் அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார் இடையில் பருவ மழை பெய்தது; ஊரில் உள்ள உழவர்கள் எல்லாம் தம்தம் நிலத்தை உழுது பக்குவப்படுத்தி உரிய பக்குவத்தில் விதைத்தனர். ஊரிலேயே விருந்து பேணுவதில் முதன்மை பெற்ற பண்பாளர் ஊரில் இல்லை என்பதைத் தெரிந்து, உழவர்களோ ஒருவர்க் கொருவர் போட்டி போட்டும் கூட்டுச் சேர்ந்தும் உழுது விதைத்து விடுகின்றனர். ஊர் சென்று வந்த பெருந்தகையாளர் திரும்பி வந்து நிலத்தைக் காண்கிறார். அவர் நிலம் பசுமைக் காட்சி வழங்குகிறது. விருந்தோம்பும் அவரின், வியத்தகு பண்பு அல்லவா இத்திருப்பணி நிகழத் தூண்டு கோலாய் அமைந்தது. என்பது போல் எண்ணிப் பார்க்கவும் வாய்ப்பாகத் தான் "வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்” என்னும் புலமை நலம் செறிந்த இக்குறள் அமைந்துள்ளது. நாம் இல்லத்தில் இருக்கிறோம்; பசியோடு ஒருவர் நம் இல்லம் நோக்கி வருகிறார்; அவர் விருந்தினர்; நாம் விருந்தோம்புபவர். நாம் வெளியூர் செல்கிறோம்; பசி வந்துற்றது; நாம் ஒருவர் வீட்டிற்குச் செல்கிறோம். இப்போது நாம் விருந்தினர் நாம் யார் வீட்டிற்குச் சென்றோமோ அவர் இப்போது “விருந்தோம்புபவர்” அன்பு, உதவி, விருந்து ஒரு வழிப் பாதையன்று கொண்டும் கொடுத்தும் வாழ்வதே வாழ்வு. 'முன் கை நீண்டால் முழங்கையும் நீளும்' என்பது பழமொழி! வந்த விருந்தினரை முறையுடன் பேணுவதுடன் மேலும் விருந்தினர் தம் இல்லம் நோக்கி வருகிறார்களா என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பவன் மிக மேலான பண்பாளர் விரும்பிப் போற்றும் நல்ல விருந்தாளியும் ஆவான். "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு” என்பது நல்விருந்தாய் விளங்கும் குறள். சென்ற விருந்தோம்பிச் சேர வருவிருந்தும் நின்று வரவேற்று நேய உரையாடி 'இன்று போல் என்றும் வரவாக' என்றாரால் நின்ற புகழ்க்கொரு நீள் எல்லை ஆயோரே” என்ற குண்டல கேசியும் விருந்து போற்றுவாரைப் போற்றுகிறது. "அருந்தினர் அருந்திச் செல்ல அருந்துகின் றாரும் ஆங்கே இருந்து இனிது அருந்தா நிற்க இன்னமுது அட்டிப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெல்லாம் வயலில் வீசி வருந்தி விண் நோக்கும் ஓர்ஏர் உழவர்போல் வாடி நிற்பார்” என்னும் திருவிளையாடல் பாடல் 'செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்' என்னும் குறள் மொழியை அருமையான உவமை வழி விளக்கி அமைகிறது. பண்டை வேளாண் மகளிர் தம் பிள்ளைகளை முறையாக விடுத்து வழிப் போக்கரைத் தடுத்துத் தம் வீட்டிற்கு வருவித்து விருந்தோம்பிய செய்தியை "உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த அவைப்புமாண் அரிசி அமலைவெண் சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்” (190-195) என்னும் சிறுபாணாற்றுப்படைப் பகுதியால் அறிந்து கொள்கிறோம். விருந்திடுதலை விருப்பம் இல்லாமல் - ஏனோ தானோ என்று ஒப்புக்குச் செய்வதால் பயனில்லை. விருந்து மிக ஈடுபாட்டுடன் விரும்பிச் செய்யும் வினையாகும். அதனாலேயே அதற்கு 'வேள்வி' என்றும் பெயர் வந்தது. விருந்திடுதலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினை உடையது என்று எப்படிக் கூறுவது? விருந்திற்குச் செலவிட்ட செலவை வைத்துக் கணக்கிடவா? விருந்திட எடுத்துக் கொண்ட முயற்சியை வைத்துக் கணக்கிடவா? என வினவின் திருவள்ளுவர் அஃது முறைமையன்று விருந்தாக வந்தவர் யார்? அவருடைய தகுதி என்ன? எனக் கணக்கிடு - வந்தவரின் தகுதி அளவே விருந்தின் தகுதி அளவாகும்! அதற்கேற்பவே பயனும் பெருமையும் நல்கும் என்கிறார். என் இல்லத்திற்கு திருவள்ளுவரே விருந்தாக வந்தார் என்கிறார் ஒருவர்; என் இல்லத்திற்கு கணியன் பூங்குன்றனே விருந்தாக வந்தார் என்கிறார் ஒருவர். திருநாவுக்கரசர் என் இல்லத்திற்கு விருந்தாக வந்துள்ளார் என்பது போல் விருந்தாக வந்தவர் புத்தராக, மகாவீரராக, இயேசு பெருமானாக நபிகள் நாயகமாக, வள்ளலாராக, காந்தியடிகளாக, திரு.வி.க வாக, வ.உ.சி. ஆக இருந்தால் விருந்தின் தகுதியும் பயனும் அளவிடற்கு அரியதாகும். நடுக்காட்டில் குதிரையிலிருந்து மயங்கி மண்ணில் வீழ்ந்த மருது பாண்டியனுக்கு ஒரு பாட்டி, முகத்தில், நீர் தெளித்து, தான் கொண்டு வந்திருந்த 'கூழில் ஒரு குவளை பருக வைத்தாள். ஆனால் அவள் பெற்றது ஓரூர் நிலம்'. கூழ் வழங்கியதால் கிட்டிய ஊர். 'கூரூர்' ஆயிற்று என்றால் விருந்தின் தகுதி காலத்தாலும் உயர்கிறது இடத்தாலும் உயர்கிறது, தகுதி உடையவராலும் பெரும் பயனும் தகுதியும் பெறுகிறது என்பதை "இனைத்துணைத் தென்பது ஒன்றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்” என்கிறார். "உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தா அங்கு - அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்” என நாலடியாரும் நவில்கிறது. "அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி' 226 நாம் தேடிய பொருள் நம் தேவையை நிறைவு செய்வதுடன் வறியவர் பசியைப் போக்கப் பயன் படுத்தப்பட வேண்டும். வறியவர் வறுமை நீங்கச் செலவு செய்வது பொருள் அழிவு அன்று. அதுவே 'பொருளுக்கு நல்ல வைப்பகம்' என்ற கருத்துடையவர் திருவள்ளுவர். "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்” பொருள் நிலையற்றது. ஆனால் நிலைத்த பணி செய்யப்பயன்படுவது. ஆகவே பொருள் வந்தபோதே நிலையானவற்றைச் செய்து நாம் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர். "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” உண்மை. ஆகவே 'செய்க பொருளை' ஆனால் பொருட்பற்றில் மூழ்கி விடாதே உள்ளார்ந்த விருப்பத்துடன் அகமும் முகமும் மலர விருந்தோம்புதலாகிய வேள்வியில் ஈடுபடுத்திக் கொள்க! அவ்வாறு செய்யாமல் பொருளைத் தேடிச் சேமிப்பதே வாழ்வின் நோக்கம் எனக் கருதி ஈடுபட்டால் 'உன்னை யாரும் விரும்ப மாட்டார்கள். நீ உற்றார் உறவினர் நண்பர்களால் வெறுத்துப் புறக்கணிக்கப்படுவாய்! நீ உயிரோடு இருப்பினும் இறந்தவனாகக் கருதப்படுவாய்! ஆகவே, உன்னை நிலைபெறுத்திக் கொள்ளவும், நிறை இன்பம் பெறவும் விருந்தோம்பும் விருப்ப மிக்க செயலில் ஈடுபடுக என வேண்டும் பொருட்டு, "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்” என எதிர்மறை வாய்ப்பாட்டால் கூறியுள்ளார். "உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்து ஈட்டினார் இழப்பர் வான்தோய் மலைநாட உய்த்தீட்டும் தேனீக் கரி” என்பது நாலடியார் நவில்வது. 'தான் நல்லுடை உடுத்தாமலும் நல்லுணவு உண்ணாமலும், தம் உடலை வருத்தியும், அழியாத அறச் செயலைச் செய்யாமலும், வறியவர்க்கு எதுவும் வழங்காதும் பொருளைச் சேர்த்து வைத்தவர் அதனை இழப்பர். தேனை ஆராய்ந்து தேடிச் சேர்த்து வைத்து இழக்கும் தேனீ இதற்குச் சான்றாகும் என்னும் உரையையும் எண்ணிப் பார்க்க. நாம் தேடிய செல்வம் நமக்கும் மற்றவர்கட்கும் பயன்பட வேண்டும்! தான் மட்டும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கட்கு உதவாத செல்வம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே! இன்னும் சொல்லப் போனால் இருப்பது தீது; இல்லாததே நல்லது. செல்வம் தாராளமாக இருக்கும் போதும் வீடு தேடி வந்த விருந்தினரைப் பேணாது புறக்கணிப்பது நல்லதன்று. அவர் செல்வராயினும் செல்வராகக் கருதப்பட மாட்டார். இருந்தும் இல்லாதவரே ஆவர். வாழ்வியல் நுட்பத்தையும் தொழிலியல் நுட்பத்தையும் தன்மையையும் அறிந்தவர் யாரும் விருந்தினரைப் புறக்கணிக்க மாட்டார்கள். விருந்தினரைப் பேணாது ஒதுக்குவோர் அறிவிலியாகவே கருதப்படுவார். உடைமையுள் இன்மை, விருந்தோம்பல், ஓம்பா மடமை, மடவார்கண் உண்டு” விருந்தோம்பாச் செல்வர்வறியரும் ஆவார்; மடையரும் ஆவார். "மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” இயல்பாகவே மென்மையாகவுள்ள பூக்களுள்ளும் மென்மையானதாகக் கருதப்படும் பூ அனிச்சப்பூ; அவ்வனிச்சப்பூ முகர்ந்து பார்த்த அளவில் வாடிவிடும். ஆனால் மானமுள்ள விருந்தினர் முகமோ அனிச்ச மலரினும் மென்மையானது. இல்லத்தவர் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் பார்த்தாலே விருந்தினர் முகம் வாடிப்போகும். 90 விருந்தினரைப் பேண வேண்டும். அதன் முன் இன்சொல் கூறி வரவேற்க வேண்டும். அதன் முன் இன்முகம் காட்ட வேண்டும். இன்முகம் இன்சொல், இன்செயல் மூன்றும் இணைய வேண்டும். எனக் கூற விரும்பும் திருவள்ளுவர். "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” எனக் கூறுகிறார். இக்குறளால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசனார், "நந்தமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில்; உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல் மோந்தால் குழையும் அனிச் சம்பூ, முகமாற்றம் வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று - ஆய்ந்ததிரு வள்ளுவனார் சொன்னார்” எனச் சொல்கிறார். "வந்த விருந்து, மலராத வதனம் நோக்க, முன்குழையும் அந்த அடைவால் அகத்தன்மை அலர்ந்த முகத்தால், வெளிப்படுத்தி சந்த மணிவாயினும் தோன்றச் சற்றும் வஞ்சம் கலவாமே, உந்தும் சுவையின் மொழியென்றும் உரைத்தல் வேண்டும் பயன் வேண்டின்” என்னும் விநாயக புராணப் பாடல் நல்லதொரு விளக்கமாகும்! "இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றும் இன்பம் - கட்டிக் கரும் பென்பார் பெண்ணைக் கவிஞரெல்லாம், வந்த விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ ?” "வீடு மலர்க் காடு விருந்தினரும் வீட்டாரும் பாடுகளி வண்டுகள் தாம் பார்க்கத் தகும் காட்சி” என விருந்து பற்றிப் பாடியுள்ள பாவேந்தரின் பாடல்களும் நல்ல இலக்கிய விருந்தாகும்! "விருந்தோம்பி வேளாண்மை செய்க” "வரு விருந்து வைகலும் ஓம்புக” "முகனமர்ந்து நல்விருந்து ஓம்புக" "செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்க!” “விருந்தோம்பி மிச்சில் மிசைக! 10. இனியவை கூறல் மனிதன் மனத்தால் தூயவனாக விளங்க வேண்டும். "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்கிறார் பாரதியார். வாக்காகிய சொல், நெஞ்சின் ஊர்தியாக இருக்க வேண்டும். “சொல்லுக சொல்லிற் பயனுடைய” 200 “யாதொன்றும் தீமை இலாத சொலல்” 291. "வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து சொல்லுக” 645. "அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக” 711. எனச் சொல் நெறி காட்டும் வள்ளுவர் முதலில் சொல்லறம் பற்றிக் கூறும் அதிகாரமே இனியவை கூறல். பயனற்ற சொற்களையோ, இன்னாச் சொற்களையோ, பொய்யான சொற்களையோ பேசக் கூடாது. புறங்கூறல் கூடவே கூடாது எனக் கூறுபவர் திருவள்ளுவர். மனத்தில் எண்ணுகிற எண்ணங்கள் செயலாக வெளிப் படுமுன் சொல்லாக வெளிப்படுகிறது. சொல்பவருக்கும் நிறைவு இருக்க வேண்டும்; கேட்பவருக்கும் நிறைவு ஏற்பட வேண்டும். கேட்பவர் மனம் புண்படவோ, வருந்தவோ, கவலைப்படவோ கூடாது. கேட்பவர் இன்புறுமாறு பேச வேண்டும். இனிமையாகப் பேசுவதே மனிதனுக்கு இயற்கையானது எளியது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலந்தருவது. "நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு” 953 என்பது வள்ளுவரின் குடிமைக் குறளில் ஒன்று. வாய்மைக் குடிக்குரிய இயல்புகள் நான்கில் இனியவை கூறலும் ஒன்று. "துணைவரின் இன்சொல்லைப் பெற முடியாமல் உலகத்தில் வாழ்கின்ற துணைவியாரைக் காட்டிலும் கொடுமை அனுபவிப்பவர் யாரும் இல்லை' - 1198 இன்சொல்லே அன்பைப் பெருக்கி வாழ்வை வாழ்வாக்குவது. இன்சொல்லே இன்புறுத்துவது; மகிழ்ச்சியூட்டுவது; துன்பம் கவலையை வெருட்டி அடிப்பது; கணவன் மனைவி இணைப்பை மேலும் நெருக்கமாக்குவது; உறவை நட்பை விரிவுபடுத்துவது. நாம் செய்யும் நல்ல பணிகளை எல்லாம் நல்ல பணிகளாக ஆக்கிக் காட்டுவது இன்சொல்லே! திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரமாகிய விருந்தோம்பலின் வெற்றிக்கு எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமையும் பத்தா வது அதிகாரமாகிய இனியவை கூறலுமே அடிப்படையாகும். 'நடுவணது எய்த இருதலையும் எய்தும்' எனக் கூறுவதைக் காட்டிலும் 'இருதலையும் எய்த நடுவணது எய்தும்' எனக் கூறுவது மேலும் ஏற்புடையது. இனிய சொற்களையே கூறுக! எனக் கூறுவது எளிது. ஆனால் எவை இனிய சொற்கள்; எவை இன்னாத சொற்கள் என எல்லாராலும் எளிதாகக் கூறிவிட இயலாது. திருவள்ளுவர் இன்சொல்லை அடையாளம் கண்டு வாழ்வில் பயன்படுத்த வழி சொல்கிறார். அன்பு கலந்த சொல்லும் இன்சொல் தான், வஞ்சகம் ஒட்டாத சொல்லெல்லாம் இன்சொல் தான்; மெய்ப்பொருள் உணர்ந்த பெருமக்கள் பேசிய வாய்மொழிகள் எல்லாம் இன்சொல் தான். அன்பு கலந்ததாய், வஞ்சனைக் கலப்பு அற்றதாய் சொல்லின் பொருளைத் தெளிவாக ஆராய்ந்து கண்ட பெருமக்கள் வாயிலிருந்து வந்த சொற்களும், வரும் சொற்களுமே இன்சொல்லாகும். என்பதை "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” என இன்சொல்லிற்கு இலக்கணம் வகுத்துள்ளார். செம்பொருள் கண்ட அறிஞர் நூல்களைக் கற்றும், அத்தகையோர் வாய்மொழி கேட்டும், அன்புடைய வஞ்சகம் அற்ற தூய உள்ளத்துடன் பொருந்தப் பேசுக! இராம இலக்குவரிடம் தூய அன்புடனும், தூய உள்ளத்துடனும், இனிய மொழி பேசி, வரவேற்று, விருந்து போற்றி இன்னுரை வழங்கிய சிறப்பு, மதங்க முனிவர் சாரலில் இருந்த தவமுதியவர் சவரிக்கு அமைந்திருந்தமையைக் கம்பர் கூறி மகிழ்கிறார். "வீட்டினுக்கு அமைவதான மெய்ந்நெறி வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற் றெல்லாம் கேட்டனன் என்ப மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்' என்பது நல்லதொரு எடுத்துக்காட்டு. இனிமை, வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் இன்சொல் ஆகாது; இனிமை உள்ளத்தில் இருக்க வேண்டும்; வஞ்சகம் அற்ற அன்பு நிறைந்த உள்ளமே இனிமை வாய்ந்த உள்ளமாகும். என்பதை மறந்து விடலாகாது. அதனால் தான் வள்ளுவர் '92 வரைவின் மகளிர்' அதிகாரத்தில் "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்” 911 என இயம்புகிறார். அதனால் தான் நீதிநெறி விளக்கம் "இனியவர் என்சொலினும் இன்சொல்லே இன்னார் கனியு மொழியும் கடுவே” எனவும் நன்னெறி "மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது; ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க” எனவும் கூற நேர்ந்துள்ளது. "இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு” 387 "கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றம் படும்” 525 எனும் இரு குறட்பாவில் முதற்பாவை இறைமாட்சியிலும், இரண்டாவது குறளைச் சுற்றம் தழாலிலும் அமைத்துள்ளார் திருவள்ளுவர். நாடாளுபவனிடம் இன்சொல்லும் ஈகைப் பண்பும் அமைந் திருந்தால் ஆள்வோன் குறிப்பு வழியே மக்கள் இயங்குவர். இன்சொல்லும் ஈகையும் அமைந்திருப்போர் அடுக்கடுக்கான சுற்றத்தாரால் சூழ்ந்திருக்கப் படுவார். என வள்ளுவர் கூறுவதில் ஏதோ நுட்பம் அமைந்திருக்க வேண்டும். இன்சொல்லால் தான் ஈகை சிறப்புறுகிறது. வறுமைப்பட்டவர்க்கு அவர் வேண்டும் பொருளை வழங்குவதே ஈகையாகும். அதிலும் உள்ளார்ந்த மன மகிழ்ச்சியோடு கொடுப்பதே ஈயும் முறைமையாகும். நம் வீடு தேடி வந்தவர் விருந்தினர் ஆயினும், உற்றார் உறவினர் நண்பர், மற்றும் யாராய் இருப்பினும் இனிய சொற்களைக் கூறி வணங்கி வரவேற்க வேண்டும். மனத்தூய்மையுடன் முகம் மலர்ந்து விளங்க, அன்பு கனிய இனிது நோக்கி இன்சொல் கூறி வரவேற்பதே சீர்மையாகும். அகம் மலர்ந்து ஈதலும் நன்று; முக மலர்ந்து இன்சொல் கூறுவதும் நன்று; ஈகை - இன்சொல் இரண்டில் மிக்க நன்மை வழங்குவது எது என வள்ளுவரை வினவினால் அவர், "அகனமர்ந்து ஈதலின் நன்றே, முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்” என விடை தருகிறார். இன்சொல் கூறுபவன் இன்சொல்லனாகவே ஆகிவிடு வானானால் இன்சொல்லே ஈகையினும் நலம் தரும் என்பதே வள்ளுவர் கருத்து. அறம் பல செய்வானுக்கும் இன்சொல்லும் இன்முகமும் மிக இன்றியமை யாதன என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. சங்கச் சான்றோர் ஆவூர் மூலங்கிழார் கிள்ளி வளவனை நோக்கி இன்று கண்டது போல் இன்சொல்லும் எளிய இனிய காட்சியும் வழங்கி உயர்ந்தோங்கி விளங்குக என வாழ்த்துகிறார். "யாமே நின் இகழ்பாடுவோர் எருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவு தோன்ற இன்று கண்டாங்கு காண்குவம்: என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும்” இதுவே புறநானூற்றில் (40) இடம்பெறும் அப்பாடலின் ஒருபகுதியாகும். வட மதுரை மன்னன் கண்ணனைக் காண, அவனது பள்ளித் தோழர் குசேலர் வறுமை வாட்டச் சென்றார். குசேலர் வருவதைக் கண்ணன் கண்டு அணை உடைத்து எழும் வெள்ளம் போல் படுக்கையிலிருந்து விரைந்து எழுந்து; பேரன்பு பொங்க மாதவனாகிய குசேலன் முன் சென்று, அவன் பொன்னடியை வணங்கினான். அத்துடன், "மன்னுடைய மறைஅனைத்தும் வகுத்துணர்ந்த மாதவனே! உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூரித்தனன்யான் மின்னுடைய விளங்கொளிவேல் வேந்தருளும் தேவருளும் என்னுடைய பெறலரும்பேறு யார் பெற்றார்? யார்பெறுவார்? என முகமலர்ந்து கூறிய இன்சொல் இலக்கிய மணம் கமழும் இன் சொல்லாகும். அறன் வலியுறுத்தலில் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்' 34 எனக் கூறியதுடன் "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்” எனவும் கூறியுள்ளதை நன்கு அறிவோம். மனத் தூய்மையுடன் | செய்யப்படும் நல்ல பணிகள் எல்லாம் அறமாகும். பொறாமை, ஆசை, சினம், இன்னாச் சொல் என்னும் தீயவை நான்கையும் அகற்றி நடப்பதே அறம். அழுக்காறு, அவா, வெகுளி, மூன்றும் மன மாசுகள் ஆகும். இன்னாச் சொல் மட்டும் சொற்குற்றமாகும். சொற் குற்றங்கள் பல உண்டு எனினும், சொற்குற்றங்களுக்கெல்லாம் அடிப்படையான குற்றம் எனத் திருவள்ளுவர் கருதுவதால் இன்னாச் சொல் கட்டாயம் விலக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இன்னாச் சொல், தீமை தரும் சொல், துன்பம் தரும் சொல், கடுஞ்சொல் வன்சொல், தீய சொல், சிறுமைச் சொல் என எப்படிக் கூறினும் ஒன்றே! இன்னாச் சொல் விலக்கப்படுதல் அறம் என்றால் 'இனியவை கூறல் அறம் என்பது சொல்லாமலே விளங்கும் எனினும், திருவள்ளுவர் தெளிவாகவும் திட்டமாகவும் கூறுவதே நன்று எனக் கருதுவதால், "முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்” எனக் கூறுகிறார். இனிய சொல்லில் அறத்தின் இயல்பு அமைந்து கிடக்கிறது. ஆகவே இன்சொல் கூறல் அறம் என்று உணர்க! அவ்வின் சொல்லும் உள்ளத்தோடு பொருந்தியதாகவும் அமைந்திருக்க வேண்டும். அத்துடன் சொல்கிறவன் கேட்பவன் முகத்தைப் பார்த்துக் கேட்க வேண்டும். இருவர் முகமும் ஒத்த நிலையில் மலர்ந்து காணப்பட வேண்டும். இத்தன்மையும் முறையும் பொருந்திய இனிய சொல்லைக் கூறுதலே அறம் எனக் கூறுகிறார் திருவள்ளுவர். முகமும் முகமும் மலர இனிமை பொங்கப் பார்த்து, உள்ளத்தோடு கூடிய இனிய சொற்களைக் கூறுவதே சொல் அறமாகும். "இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக, வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி, அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்” என்னும், 'அறநெறிச்சாரம் இன்சொல்லாகிய விளைநிலத்தில் தான் அறம் விளையும் என்பது நல்லதொரு உருவகமாகும். "யாவர்க்கும் ஆம்இறை வற்கொரு பச்சிலை, யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாயுறை, யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கும் ஆம்பிறர்க்கு இன்னுரை தானே” எவரும் மேற்கொள்ளத் தக்க இனிய எளிமையான அறம் 'இன்சொல் வழங்கலே” எனத் திருமந்திரம் கூறும் மொழி மந்திர மொழியாகும். இன்னார் இனியவர், வேண்டியவர் வேண்டாதவர், நண்பர் பகைவர், உயர்ந்தோர், தாழ்ந்தோர், நம் நாட்டார் பிறநாட்டார்; நமக்கு நன்மை செய்தோர், கெடுதல் செய்தோர் என்றெல்லாம் மக்களை இனம் பிரித்துப் பார்க்காமல், நாம் காணும் எல்லாரிடத்திலும் எப்பொழுதும் இன்பத்தைப் பெருக்கும் இனிய சொற்களையே பேச வேண்டும் என உறுதி மேற்கொண்டு தவறாது பின்பற்றி ஒழுக வேண்டும். நாம் ஆத்திரம் கொள்ளுமாறு உணர்ச்சி,வயப்படுமாறு சூழ்நிலை ஏற்பட்டாலும், உணர்ச்சி வயப்படாமல் மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டு இனிய சொற்களையே பேச வேண்டும் என அறிவுரை வழங்கும் போது அப்படி எல்லாரிடமும் இன்சொல் பேசுவதனால் அடையும் பயன் யாது? என வினாத் தொடுப்பவர் உண்டு. அவர்கட்கு விடையளிப்பது போல் 'நீங்கள் உங்களைத் துன்புறுத்தும் பசிக் கொடுமைக்கு ஆளாக மாட்டீர்கள். உங்களுக்கு ஊரெல்லாம் உறவாகும். நீங்கள் துன்புறுவதை யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இன்சொல் 'நமக்கு எதிர்பாராமல் வரும் இயற்கைத் துன்பத்தினின்றும் நம்மைக் காக்கும். உன்னிடம் உள்ள நல்லதை நீ வழங்கிக் கொண்டிருந்தால் உன் தேவை யாராலாவது விரைந்து நிறைவேற்றப்படும். என்னும் நடைமுறை வாழ்வின் இயல்பினை நன்குணர்ந்த திருவள்ளுவர், "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு” என உறுதி அளிக்கிறார். இன்சொல்லுடன் ஈகையை இணைத்துக் கூறும் திருவள்ளுவர், இன்சொல்லுடன் பணிவுடைமையையும் இணைப்பதைக் காண முடிகிறது. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” 125 என அடக்கமுடைமையிலும், "நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு” 960 எனக் குடிமையிலும், "ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை” 986 எனச் சான்றாண்மையிலும் போற்றப்படும் உயர் பண்பே 'பணிவுடையாகும். "சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க் கணி” 118 "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்” எனக் கண்ணோட்டத்தை அணிகலமாகவும், "அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை” என நாணுடைமையையும் அணிகலமாகக் கருதுபவர் திருவள்ளுவர். "பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற” என்னும் குறட்பாவழி ஒருவன் பணிவுடன் நடந்து கொள்வதுடன் இனிய சொற்களையே பேசுபவனாகவும் விளங்க வேண்டும். உண்மையில் அழகு தரும் கலன்கள் இவை இரண்டுமே ஆகும். செல்வச் செழிப்பிற்கு ஏற்றவாறு நம் உடலில் அணியும் பொன், முத்து, வைரம் போன்ற விலை மதிப்பு வாய்ந்த மணிகளைக் கொண்டு செய்யப்படும் அணிகலன்கள் அணிகலன்கள் அல்ல. அவை நம் உடலுக்கு அழகூட்டலாம். புற உடலுக்கு அழகு செய்வதை விட, அகவுடல் அழகுடன் அமைவதே நிறைவினைத்தரும். அணிகலன் அணிந்திருப்பவர் கட்குத் தன்மதிப்பையும் மகிழ்வையும் நிறைவையும் தரும். காண்பவர்கள் விரும்பி நோக்குவர், அணிந்திருக்கும் அணிகலனுக்குத் தக அவர் தகுதி எடை போடப்படும். என்பது பொதுவான ஒருநிலை. அது போல் பணிவும் இன்சொல்லும் உடையவர் யாரிடமும் பகைமை பாராட்டாது மகிழ்வுடன் இருப்பதுடன் மனநிறை வுடன் வாழ்வார். அனைவரும் அவர்களை வெறுக்காமல் அன்பு பாராட்டி உயர்வாக மதித்துப் போற்றுவர். ஆகவே, பணிவுடைமை, இன்சொல் ஆகிய அணிகலன் பூண்டு அனைவரும் அழகுக் காட்சி வழங்குவீர்களாக எனத் திருவள்ளுவர் வேண்டுகிறார். பண்புடைமையாலும் இன்சொல்லாலும் இராம் இலக்குவரை ஈர்த்த பண்பாளன், சொல்லின் செல்வன் எனப் போற்றப்படும் அனுமன் என்பதைக் கம்பர் பல்வேறு இடங்களில் காட்டிப் பெருமைப் படுத்துவார். "நில்லடா! சிறிது நில்லடா! உனை நினைத்து வந்தனென், முனைக்கு நான் வில் எடாமை நினது ஆண்மைபேசி, உயி ரோடு நின்று விளையாடினாய், கல்லடா, நெடுமரங்களோ, வரு கருத்தினேன், வலி கடக்கவோ? சொல்லடா' என இயம்பினான், இகல் அரக்கன்” எனத் தரம் தாழ்ந்த சொல்லம்புகளை இந்திர சித்து அனுமன் மீது ஏவினான்! வன்சொல்லே இன்றி பணிவுடன் அனுமன் கூறிய மறுமொழி! ஐயன் இவை சொல்லினான், "வில்லெடுக்க உரியார்கள், வெய்ய சில வீரர், இங்கும் உளர்; மெல்லியோய் கல்லெடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடைக் காணலாம் வில்லெடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர்கொடு ஏகுவார்; புல்லெடுத்தவர்கள் அல்லம்; வேறுசில போர் எடுத்து, எதிர்புகுந்துளோம்” என இன்சொல் உரை வளர்ந்து போவதைக் கம்பராமாயணத்தில் காணலாம்! சொற்களில் நன்மை தரும் சொற்களும் உண்டு, தீமை தரும் சொற்களும் உண்டு. தீமை தரும் சொற்களை விலக்கி நன்மை தரும் சொற்களை நன்கு ஆராய்ந்து கூறவேண்டும். அத்துடன் ஒருவன் விரும்பிக் கேட்குமாறு இனிமையாகக் கூற வேண்டும்! அவ்வாறு கூறுவதை முதலில் பழக்கப்படுத்திக் கொண்டால், நம்மிடம் அறமல்லா இயல்புகள் ஏதேனும் முன் பழக்கத்தில் அல்லது அறியாமையால், புரியாமையால், தெளிவின்மை யால், குழப்பத்தால் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவை படிப்படியே தேய்ந்து கொண்டு வரும். தீமை தருவன தேயத் தேய, நன்மை தரும் அறம் பெருகிக் கொண்டே வரும்! "நல்லவற்றை ஆராய்க! இனியவே கூறுக! அல்லவை தேயும் அறம் பெருகும்” அறம் பெருக வள்ளுவர் கூறும் இனியமொழி "அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்” என்பதாகும். விளக்கை ஏற்றினால் இருள் அகலும். ஒளி நிறையும் இன்சொல்லே விளக்கு; தீவினையே இருள். அறமே ஒளி. "விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின் முன் நில்லாவாம் பாவம்” என்னும் நாலடியார் கருத்து ஒருவழி ஒப்புமையுடையது. சொல்பவர் ஒருவர்; கேட்பவர் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எத்தனை பேரும் இருக்கலாம். நெல்விற்பனை செய்பவர் நல்ல அரிசி உடைய நெல்லாகவும் விற்க வேண்டும். விற்பதால் அவருக்கு இழப்பு ஏற்படலாகாது. தக்க ஊதியமும் கிடைக்க வேண்டும். வாங்குவோர் நெல்லை நல்ல பக்குவத்தில் வாங்க வேண்டும்; அரிசி சமைத்து உண்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் ஏமாறாமல் உரிய விலைக்கு வாங்க வேண்டும். கொள்பவரும் கொடுப்பவரும் பயனும் நிறைவும் அடைய வேண்டும். அது போலவே பேசுபவருக்கும் பயனும் நிறைவும் இருக்கவேண்டும். கேட்பவரும் பயனும் நிறைவும் அடைய வேண்டும். அவ்வாறு இருபக்கமும் இன்பமும் பயனும் இருந்தால் தான் பேசுவதிலும் பொருள் இருக்கும் கேட்பதிலும் பொருள் இருக்கும் என ஆழ நினைந்து படைத்த பயன்குறள் தான் "நயனின்று நன்றி பயக்கம், பயனின்று பண்பின் தலைப்பிரியாச் சொல்” கேட்பவர்க்குப் பயன் அளிக்கும் பண்பமைந்த இனிய சொல், பேசுபவர்க்கும் இன்பமும் நன்மையும் நல்கும். ஆகவே இருபாலும் இன்பமும் பயனும் தரும் சொற்களையே பேசுவோம்! இன்சொல் இன்பம் தரும்; அவ்வின் சொல்லும், சிறுமையற்ற தூய பேருள்ளத்தோடு கூறப்படுமானால் கூறும்போது மட்டும் அல்லாது எப்பொழுதும் இன்பத்தையும் நன்மையையுமே தரும். எனத் திருவள்ளுவர், "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்” என உறுதி மொழிகிறார். ஆகவே, இன்சொல்லே கூறுக! அஃதும் சிறுமை அற்ற இன்சொல்லாக இருக்கட்டும். இன்றும் என்றும் அதன் பயனாகிய இன்பத்தினை நுகர்வோம்! "இன்சொலான் ஆகும் கிளைமை; இயல்பிலா வன்சொலான் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின் ஆய்வினான் ஆரருள் அவ்வருளின் நன்மனத்தான் வீவிலா வீடாய் விடும்” என்று இன்சொல் கூறலின் நன்மையைச் சிறுபஞ்ச மூலமும் நவில்கிறது. "இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே” என நன்னெறி கூறுவதையும், "மென்மதுர வாக்கால் விரும்பும் சகம், கடின வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நன்மொழி சேர் ஒதுகுயில் ஏதங்கு உதவியது; கர்த்தபந்தான் ஏதபரா தம் செய்த தின்று” என்னும் நீதி வெண்பாக் கூற்றையும் அறிவோம்! நீ பசுப் போன்றவன் என்று கூறினால் மகிழ்கிறோம்! நீ ஒரு மாடு என்றால் வருந்துகிறோம்! நீ ஒரு காளை என்றால் மகிழ்கிறோம்! நீ ஒரு சின்னமாடு என்றால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாடு என்பதோ சிறியமாடு என்பதோ பொருட்குற்றம் அற்ற சொல்தாள் ஆனால் கூறும் முறையால் வன்சொல்லாகி விடுகிறது. கழுதையைப் போல் நிறைபாரம் சுமந்து மனிதனுக்கு உதவும் உயிரினம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆயினும் அதன் 'வன்குரல்' வெறுப்பூட்டுகிறது. குரல் இனிமை தவிர வேறு எந்தப் பயன்பாடும் இல்லாத குயில் போற்றப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்! ஒருவர் இனியமொழி கூறி வரவேற்றாலும், உரையாடி னாலும் பாராட்டினாலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆகவே, அறிவுடைய நாம், இன்சொல்லால் இன்புறும் நாம்! மற்றவர்களும் இன்புறுமாறு வரவேற்பதும், உரையாடுவதும் பாராட்டுவதும் தானே முறையாகும். பின் ஏன் பிறர் புண்படுமாறு வன்சொல்லை வழங்குகிறோம்! ஒரு குற்றத்தைத் தெரியாமல் செய்துவிட்டால் பொருட் படுத்த வேண்டா! பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அறிவுடைய இனம் அறிந்தே அத்தவற்றை அடுக்கடுக்காகச் செய்கிறதே ஏன்? பிறர் துன்புறுவது கண்டு மகிழும் சிறுமதியா? அல்லது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமையா? அல்லது தனது இறுமாப்பா? பிறரைத் தாழ்வாகக் கருதுவதாலா? வன்சொல் கூறுவது பின் ஏன்? ஏன்? என வினவத்தான் தோன்றுகிறது. தனக்கென ஒரு சட்டம், பிறர்க்கென ஒரு சட்டம் என்பது எந்த வகையில் பொருந்தும்! எண்ணிப் பார்க்கத் தூண்டும் வள்ளுவர், "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவது” என வினவுகிறார். இன்சொல்லால் இன்புறுபவன் வன்சொல்லை வழங்கித் துன்புறுத்தல் கூடவே கூடாது. கூற வேண்டிய இன்சொல்லைக் கூறவில்லை. ஆயினும் குற்றமன்று வன்சொல் வழங்குவது குற்றம் குற்றமேயாகும். "வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும் இன்மொழி யுரைக்கின் வரும் இன்மொழி, எமக்கும்; நன்மொழிகளே பல இருக்க நவி லாமல் புன்மொழி யுரைப்பவர்கள் பூரியர்கள் அன்றோ ” என்னும் நீதிநூல் பாடல் - இன்சொல்லின் இனிய பயனைத் தெரிந்தும் வன்சொல் கூறுவோர் கீழானவரே என்கிறது. சுவையும் நலமும் நல்கும் இனிய கனிகள் வீடு நிறைய நிறைந்திருப்பதுடன், தோட்டத்திலும் வகை வகையான கனிகள் பழுத்துத் தொங்குகின்றன. இவற்றில் எதனையும் உண்ணாது, அடுத்தவர், அதுவும் வேண்டாதவர் தோப்பில் காய்த்துத் தொங்கும் கேடுதரும் காய்களை உரியவர்க்குத் தெரியாமல் எவனோ ஒருவன் தின்னத் திருடியதை வள்ளுவர் கண்டிருப்பார் போலும். அக்காட்சி அவர் உள்ளத்தை வேதனைப்படுத்தி, அழுத்தமாகப் பதிந்து விட்டது. சொல்பவருக்கும் கேட்பவர்க்கும் இன்பமும் பயனும் தரும் எண்ணற்ற சொற்களைத் தன்னகத்தே கொண்ட மொழி நம் தாய்மொழி. அவற்றைக் கூறாது இனிமையும் பயனும் இல்லாத வன்சொற்களைப் (அயல்மொழிச் சொற்களை) பேசித் திரிபவர்களோடு ஒப்பிட்டுச் சிந்தித்திருக்கிறார். அதனால் உருப்பெற்றதே, "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்னும் குறட்பாவாகும்! "கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” என்னும் உவமை அப்பரடிகள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கிறது. அதனால் தான் அவர் திருவாரூர்த் தேவாரத்தில், "மெய்யெலாம் வெண்ணீறு கண்ணித்த மேனியான் தாள் தொழாதே, உய்யலாம் என்று எண்ணி உறிதூக்கி யுழிதந்து, என் உள்ளம் விட்டுக் கொய்யுலா மலர்ச் சோலைக் குயில் கூவ, மயிலாலும் ஆரூரைக் கையினால் தொழாதொழிந்து, கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே! எனப் பாடியதுடன், கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே” "விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்த வாறே” "அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே” என ஒப்புமை உடைய உவமைகளை அடுக்கிக் கூறியுள்ளதையும் ஒப்பிட்டு நோக்கலாம். இருப்பதை உண்பது இயல்பானது முறையானது, இல்லாததை அதுவும் தேவையில்லாததைத் திருடி உண்ண எண்ணுவது இயற்கையுமன்று, முறைமையுமன்று. நமக்குத் தெரிந்த இனிய சொற்களைப் பேசுவதே இயல்பானது, முறையானது அதை விடுத்து முறையற்ற செயற்கையான வன்சொல் கூற முற்படுவது நன்றன்று. என்பதை அருமையான உவமை வழி வள்ளுவர் உணர வைக்கிறார். "அன்பு கலந்த வஞ்சகமற்ற சொல்லே இன்சொல்” "செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லே இன்சொல்” "மன மலர்ச்சியுடன் கூறும் இன்சொல்லே இன்சொல்” "முகமும் அகமும் மலரப் பார்த்து மனநிறைவுடன் சொல்லும் சொல்லே இன்சொல்” "நன்மை தருவனவற்றையே ஆராய்ந்து கூறும் சொல்லே இன்சொல்” "பயன் அளிக்கும் பண்பமைந்த சொல்லே இன்சொல்” "சிறுமை நீங்கிய சொல்லே இன்சொல்” என்பதை உணர்கிறோம்! "இன்சொல்லினதே அறம்” "இன்சொல் அல்லவற்றை அழித்து அறத்தைப் பெருக்கும்” "இன்சொல்லாளர் துன்புறுத்தும் வறுமைக்கு ஆளாகார்” "இன்சொல் நயன்ஈன்று நன்றி பயக்கம்” "இன்சொல் இம்மையும் இன்பந்தரும்” "இன்சொல் மறுமையும் இன்பந்தரும்” "இன்சொல் சிறந்த அணிகலன்” "இன்சொல் ஈகையினும் சிறந்தது” ஆகவே, வன்சொல் வழங்காதே! இன்சொல்லே கூறுக! 11. செய்ந்நன்றியறிதல் கொண்டும் கொடுத்தும் வாழ வேண்டிய பிறவி மானிடப் பிறவி. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தால் பிறருடைய உதவியைப் பெற்றிருப்போம். எவ்வளவு பெரிய வாய்ப்பு உடையவராக ஒருவர் உயர்நிலையில் இருந்தாலும் அவரும் பிறருடைய உதவியைப் பெற்றிருப்பார். அவருக்கும் பிறருடைய உதவி தேவைப்படும். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு நன்மை செய்து வாழ வேண்டுவது தம் பிறவிக் கடமையாகும். அதுபோல் பிறர் நமக்குச் செய்த நன்மையை மறந்து விடக் கூடாது. 'உப்பிட்ட வரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி. பிறர் செய்த நன்மையை என்றும் நினைவில் வைத்திருப்பதால் நன்மை செய்தவருக்கு நன்மை கிட்டும் என்பதை விட நன்மையைப் பெற்றவர் மேலும் நன்மையும் சிறப்பும் அடைவார். பிறர் செய்த நன்மையை மறவாதிருக்க வேண்டும். அவர்க்கு உதவி தேவைப்படும் போழ்து, அவர் எதிர்பாராமலே முந்திச் சென்று உதவிபுரிய வேண்டும். நாம் உற்ற துன்பம் பிறர் உறா வகையில் ஒல்லும் வகையான் உதவிபுரிய வேண்டும். உதவி உணவு உதவியா? உடை உதவியா? உறையுள் உதவியா? கல்வி உதவியா? தொழில் உதவியா? மருத்துவ உதவியா, பாதுகாப்பு உதவியா? இன்னோரன்ன உதவி எதைப் பிறரிடமிருந்து பெற்றாலும், அதைப் பெரியது சிறியது என எடை போட்டுப் பார்க்காமல், பண்பட்ட தூய உள்ளத்துடன் எண்ணிப் பார்த்து, நன்மை செய்தவர்க்கு நன்மையும் செய்து போற்றி மகிழ்வதே செய்ந்நன்றி அறிதலாகும். நாம் அவர்க்கு இதற்கு முன் எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் வேண்டியவராகவும் இருக்கலாம் வேண்டாதவராகவும் கூட இருக்கலாம்! முன் அறிமுகம் ஆனவராகவும் இருக்கலாம். புதிய அறிமுகமாகக் கூட இருக்கலாம். நம் துன்பத்தைக் காணுகிறார். விரைந்து வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து விட்டு, அவர் போக்கில் போய் விடுகிறார். அவர் நமக்குச் செய்த உதவிதான் திருவள்ளுவர் சுட்டும் 'செய்யாமற் செய்த உதவியாகும். நாம் வறுமையில் வாடும் போது, உற்றார் உறவினர்கள் எல்லாம் கண்டும் காணாதவர் போல் இருக்கும் போழ்து, இன்னார் எம்நிலை தெரிந்து, ஊக்க உரை வழங்கி, நான் கேட்காமலே தொழில் செய்யப் பொருளும் இடமும் தந்து உதவினார். அன்று என் நிலையைக் கண்டவர் யாரும் என்னை நம்பாத காலத்தில், அவர் செய்த உவியால் நானும் என் குடும்பமும் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம். எம் தொழிலும் ஓகோ என வளர்ந்து வருகிறது. என் தொழிலகத்திற்கு அவர் பெயர் வைத்துள்ளேன். என் மைந்தனுக்கும் அவர் பெயரே இட்டுள்ளேன். என் இல்லத்திலும் தொழிலகத்திலும் 'ஒரே ஒரு படம் தான் வழிபாட்டிற்குரிய படமாக விளங்குகிறது. அது அந்தப் பெருமகனார் படமே! அவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்! செய்து மகிழ வேண்டும் என நாளும் எண்ணி, வாய்ப்பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. அவரும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்கும் நிலையிலும் இல்லை ! அவரும் உடல் வளம், மனவளம், பொருள் வளம் எல்லாம் நிறைந்து நிறை மனிதராக வாழ்கிறார்! அவர் செய்யாமற் செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வது என அவர் வள்ளுவரை வினவினார் போலும் வள்ளுவரோ, "செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" என விடை அளித்திருக்கிறார். செய்யாமற் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அந்த உதவிக்கு இணையான உதவியாகக் கருத முடியாது. மறக்காமல் நினைந்து போற்றுகிறாயே அது போதும்! அவர் அன்று உனக்கு உதவியது போல், நீயும் யாருக்கெல்லாம் உதவ முடியுமோ அவர்கட்கெல்லாம் உதவி உன் மனிதத் தன்மையைக் காத்துக் கொள் அது சாலும் என்பது தான் வள்ளுவர் நோக்கு. "பொன்னணி மார்பன் முன்னர் ஆற்றிய நன்னர்க்கு உதவும் பின்னுப காரம் அலைதிரைப் பௌவம் ஆடையாகிய நிலமுழுது கொடுப்பினும் நேரோ என்மரும்” என்னும் பெருங்கதைப் பாடல் நல்ல சான்றாக அமைகிறது. குதிரையில் சென்ற வீரன் நடுக்காட்டில் மயக்க முற்றுக் குதிரையிலிருந்து கீழே சாய்கிறான். காட்டு வேலைக்கு, கலயத்தில் கூழுடன் வந்திருந்த ஒரு முதியவள் பார்த்துப் பதறினாள், உள்ளம் துடித்தது துணைக்கு யாரும் இல்லை. எனினும் முகத்தில் நீர் தெளித்தாள் கண் விழித்தான். கரைத்த கூழை ஒரு குவளை குடிக்க வைத்தாள். மயக்கம் தெளிந்தான் மாவீரன் மருது பாண்டியன். பாட்டிக்கு அவன் யாரெனத் தெரியாது. ஓலையில் முள்ளால் தன் முகவரி எழுதி பாட்டியிடம் கொடுத்து உனக்கு என்னைக் காண வேண்டும் என்ற எண்ணம் வந்தால் இவ்வோலையுடன் என்னை வந்து காண்க எனக் கூறிச் சென்றான். பாட்டிக்கு ஒருநாள் திடீரென நினைவு வந்தது. சென்று கண்டாள்; அவன் பெருஞ்சிறப்புச் செய்ததுடன், ஓரூர் நிலத்தையே அவளுக்கு உரிமையாக்கினான். காலத்தால் கூழ் பெற்றுத் தந்த ஊர் 'கூஜரும் ஆயிற்று. உதவி சிறிதா பெரிதா என்பது முதன்மையதன்று. கடும் களைப்பு தாகம் - ஒரு குவளை நீர் வழங்கியது பேருதவி: வாட்டும் அழிபசியால் வாடிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு வேளை உணவு வழங்கியது பேருதவி. கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழுவி ஆடையின்றி வாடையில் வாடுவோனுக்கு வழங்கும் ஒரு போர்வை; நேர்ச்சியில் அடிபட்டவனுக்கு விரைந்த மருத்துவ உதவி, கொள்ளைக் காரனிடம் சிக்கியவனுக்கு எட்டத்திலிருந்தே யாரது என வினவிக் குரல் கொடுப்பது, இன்று பணம் கட்டாவிடின் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் கிடைத்த பணவுதவி. பணியின் பொருட்டு நேர்முகத் தேர்விற்குச் செல்ல வண்டி வாய்ப்பின்றிச் சாலையில் தவித்துக் கொண்டி ருப்பவனை அவ்வழிவந்தவன் தன் தனியூர்தியில் ஏற்றிச் சென்று உரிய நேரத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பணிபெறத் துணை நின்றது போல தக்க காலத்தில் செய்யப்படும் உதவிதனிச் சிறப்புடையது. அதன் மதிப்பு அளவிட்டு உரைக்கக் கூடியது அன்று. விரிந்து பரந்த இவ்வுலகத்தைக் காட்டிலும் மிகப் பெரியதாகும். நல்ல நேரத்தில் கடவுள் போல் வந்து காப்பாற்றினீர்கள் எனப் பயன் பெற்றவர் உளம் உவந்து பாராட்டும் நிலை அதனால் தான் ஏற்படுகிறது. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்பது குறள். எப்பொழுது உதவி தேவையோ அப்பொழுது உதவுகிற உதவியின் பெருமை அளவிட்டு உரைக்கக் கூடியது அன்று . காலங்கடந்த உதவியால் பயனில்லை . நெருப்புப் பற்றிய சில நிமிடங்களில் தீ அணைப்பு ஊர்தி வந்தால் பயன் நெருப்புப் பற்றி எரித்து அழித்தபின் 'தீ அணைப்பு ஊர்தி வந்து என்ன பயன்? தாகத்தால் துடிக்கும் வேளையில் தண்ணீர் தாராமல், காலங்கடத்தி விட்டு, இறந்தபின் குடங்குடமாய்ப் பால் கொணர்ந்து, கொட்டி என்ன பயன்? காலத்தால் உதவுவதே உதவி! அதுவே பேருதவி! ஆகவே, காலத்தால் உதவிப் பெருமை பெறுக! "பயன் காரணத்தைக் குறியாமல் பரிந்து காலத்தால் செய்த நயஞ்சேர் நன்றி சிறிதேனும் நாடின் அதற்கோர் அளவில்லை பயன் காரணத்தைக் குறித்தினையும் பதத்திற் புரிந்த நன்றியையும் வியன் பூதலத்தில் பெரிதாக விரும்பி மதித்தல் வேண்டும். என்னும் விநாயகபுராணப் பாடல் நல்லதொரு எடுத்துக்காட்டு! "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது” என்பது மூன்றாவது குறள். சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடித்தல் போல இன்னது செய்தால் பின்னால் இதை விட மிகுதியாகப் பெறலாம் என்பது போல் கருதி உதவுதல் அன்று, வணிகமாகும். அவர்க்கு உதவி தேவைப்படுகிறது. இவர்க்கு உதவ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே உதவ வாய்ப்புள்ளார் தமக்கு இன்ன பயன் கிடைக்கும் என்று பயனை ஆராய்ந்து பார்க்காமல் வேண்டுவார்க்கு வேண்டுவன செய்து உதவுவதைக் கடமையாக கொள்ள வேண்டும். அவ்வாறு ஒருவர் செய்த நன்மையின் தன்மையை நடு நிலையாளர்கள் ஆராய்ந்து பார்த்தால், அந்நன்றி பெரிய கடலினும் பெரியதாகும் எனக் கூறுவார். ஏனெனில் கடல், மேகத்திற்குத் தந்த நீரைத் திரும்பப் பெறுகிறது. ஆனால் பயன் தூக்காரோ தாம் செய்த உதவியை மீளப் பெறுவதே இல்லை. அதனால் உதவியால் கிட்டும் நன்மை கடல் அளவினது எனக் கூறாராய் கடலைக் காட்டிலும் பெரிது என்கிறார். பயன்தூக்கார் புதுக்கோட்டைத் திருக்குறள் கழக நிறுவனர் அண்ணல் சுப்பிரமணியனார். அவர் செய்த உதவியின் நயனை ஆராய்ந்து உரைப்பவர் காரைக்குடி, கவியரசர் முடியரசனார். "தாய்தந்தை நல்லன்பைக் கண்டேன் அல்லேன், தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய்வந்து மனத்துயரால் மாழ்குங் காலை நுவலறிய தனித்துணையாய் இராமச் சந்திரச் சேய்கொண்டு மனநோயைத் தீர்த்து வைத்துச் சிறியேனை நின் குடும்பத் தொருவன் ஆக்கிச் சேய்போல ஆட்கொண்டாய் அன்பு செய்தாய் செம்மனத்தோய் கைமாறு யாது செய்வேன்” "எந்நாளும் உன் பெயரைச் சொல்லிச் சொல்லி ஏத்துவதே தொழிலானேன், என்றன் சேய்க்குப் பொன்னான நின் பெயரைச் சூட்டி நெஞ்சில் பூசித்து மகிழ்கின்றேன், போற்று கின்றேன் நின்பேரன் என்மகனாம் காரணத்தால் நீ எனக்குத் தந்தைமுறை ஆகி விட்டாய்! என்ன பிழை நான்செயினும் பொறுத்தல் வேண்டும் என் தந்தாய்! பொன் தந்தாய், புகழும் தந்தாய்!” "என்னுயிரைக் காத்தமையால் தன் கழுத்தில் எழிற்றாலி மின்னுவதைக் கண்டு நெஞ்சால் என்மனையாள் வாழ்த்துகின்றாள், என்றன் சேய்கள் எம் தந்தை தந்தாய் என்று ஏத்துகின்றார் நன்மழலைச் செல்வர்களைக் காதல் வாழ்வின் நற்றுணையை நான் மீண்டும் காணச் செய்து உன்னுதவி நாடோறும் ஏத்து கின்றேன் உயிரனையாய் திருவடியை வாழ்த்து கின்றேன்” என்று பாடும் நன்றிப் பாடலின் பயன் தூக்கின் நயம் கடலினும் பெரிதாகும். "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்” என்பது திருக்குறள், "தினையனைத்தே யாயினும் செய்ந்நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்” என்ற நாலடிப் பாடலின் ஈரடியும் ஓரடியே காட்டுவதைக் காணமுடிகிறது. தமக்கு ஒருவர் தினை அரிசி போன்ற சிறிய அளவினதான நன்மையைச் செய்தாலும், பிறர் செய்த நன்றியின் பயனை மறவா மனத்தவர். அதனைப் பனைமரம் போன்ற பெரிய அளவின தாகவே கருதிப் போற்றுவர். தினை, பனை என்னும் நிலைத் திணைப் பெயர்கள், இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன. ஒருவர் செய்த உதவியைப் பொருள் அளவிலும், முயற்சி அளவிலும் நோக்காது, பயன் அளவில் நோக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகும். நன்கொடை பெற மூவர் தனித்தனியே வந்தனர். மூவர்க்கும் தனித்தனியே வெண்பொன் நூறு வழங்கப்பட்டது. முதலாமவர் 'ஏ அப்பா இவ்வளவு தொகையா' என வியந்தார்! இரண்டாமவர் “நிறைவுடன் நன்றி கூறினார். மூன்றாமவரோ 'நூறு தானா மேலும் நூறு கொடுக்கக் கூடாதா' என வினவினார். மூவர்க்கும் வழங்கியவர் ஒருவர் தான் வழங்கப்பட்ட தொகையும் ஒன்றுதான் பெற்றுக் கொண்ட மூவரும் அவரவர் நிலைக்கும் தகுதிக்கும் ஏற்ப மதிக்கின்றனர். தன் மைந்தனின் கல்விக்காக ஒரு இலக்கம் செலவிட்டான்; வறியவரின் வறுமை நீங்க ஒரு இலக்கம் செலவிட்டான். தகாத வழியில் ஒரு இலக்கம் செலவிட்டான். மூன்று வகையிலும் செலவிட்டவர் தனித் தனி மூவராவர். தொகை ஓர் அளவினதாக இருந்தாலும் மூவரும் மூன்று விதமாக மதிக்கப்படுகிறார். முதலாமவர் நல்ல குடும்பத் தலைவராகவும், இரண்டாமவர் நல்ல பொது நலத் தொண்டராகவும், மூன்றாமவர் கயவராகவும் கருதப்படுகிறார். உதவியின் பெருமை உதவிய பொருளின் அளவைப் பொறுத்தது அன்று. உதவியைப் பெற்றுக் கொண்டவரின் தகுதியைப் பொறுத்ததாகும். "உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" எனக் கூறுகிறார் திருவள்ளுவர், விருந்தோம்பலிலும், "இனைத்துணைத் தென்பதொன் றில்லை; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்” என்றே கூறியுள்ளார். திருமால் மாவலி மன்னனிடம் மூன்றடி மண் இரந்து கேட்டான், மாவலி திருமாலிடம், "அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க” என்றான், நெடியவன் குறியகை நீரில் நீட்டினான்” "கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும் பயந்தவர்களும் இகழ் குறுளன் பார்த்து எதிர் வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே!” எனக் கூறுகிறான் கம்பன். அறிவியல் அறிஞர் எடிசன் இளம் பருவத்தில் வறுமையால் வாட்டமுற்று மயங்கிக் கீழே விழுந்தார். விழுந்த இடம் சாலையோரச் சாய்க்கடை. அவ்வழியே சென்ற ஒருவன் அவரை மேலே தூக்கி முகத்தில் நீர் தெளித்தான். தேநீர் வாங்கி வந்து குடிக்கக் கொடுத்தான். மயக்கம் தெளிந்தார் எடிசன் போன உயிர் மீண்டது. எடிசன் உலகம் பயன் எய்த இருநூறுக்கு மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த மேதையாகப் பின்னர் வளர்ந்தார். மயங்கிய எடிசனை விழிக்க வைத்தவன் செய்த உதவி, வள்ளுவரின் குறள் வழியில் அது 'செய்யாமல் செய்த உதவி' மட்டுமன்று 'காலத்தினால் செய்த நன்றி' 'பயன் தூக்கார் செய்த உதவி' 'பனைத் துணையாய் கொள்ளத் தக்க நன்றி' 'உதவி செய்யப்பட்டார் சால்பால் உயர்ந்த நன்றி' என்னும் ஐவகை நன்றிக்கும் ஏற்புடைய நன்றி அல்லவா! "மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு” என்பது நட்பாராய்தலில் அமைந்துள்ள குறள். ''குற்றமற்றவர் நட்பினை அவர் விரும்பும் ஒன்றைக் கொடுத்தும் தழுவிக் கொள்க! பொருந்தாதார் நட்பினை அவர் விரும்பும் ஒன்றைக் கொடுத்தாவது விலக்கிக் கொள்க” என்பது வள்ளுவரின் வேண்டுகோள். இங்கே மறவற்க மாசற்றார் கேண்மை ; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு” என்னும் அருமைக் குறளை அமைத்துள்ளார். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என நட்பிற்கு இலக்கணம் வகுப்பவர் வள்ளுவர் என்பதை மறந்து விடலாகாது. "நட்பு வாழ்வில் செய்வதற்கு அரியது; நட்பு வினையாற்றுங்கால் அரிய பாதுகாப்பு” என்பதும் வள்ளுவ நெறியே! நட்பிற்கும் உறவிற்கும் வேறுபாடு உண்டு. நட்பு ஆராய்ந்து | கொள்ள வேண்டியது. தக்கவரை நட்பாக்கிக் கொள்ள வேண்டும் தகாதவரை விலக்கிவிட வேண்டும். அப்படி விலக்க முடியாதது உறவாகும் அது பிறப்பு வழி அமைவது. நாம் நெருங்கிப் பழகாவிடினும் உறவினர் உறவினரே! திருவள்ளுவர் நட்பை விலக்காதே! என ஆணையிடுகிறார். யாருடைய நட்பை என நாம் கேட்பதற்கு முன்பாகவே அவரே 'உனக்குத் துன்பம் வந்த காலத்து உனக்கு உற்ற துணையாய் அமைந்து, துன்பத்தைத் துடைத் தூன்றும் தூணாக விளங்கினாரே அவருடைய நட்பை என்றும் விடாதிருக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்கையில் அவரிடம் சில குறைபாடு கள் இருப்பது புலப்படலாம் எனினும் 'துறவற்க' என்கிறார். உள்ளத் தூய்மையும் நல்ல எண்ணமும் இல்லாத உறவினர்களை மனத்தளவில் மறந்து விடலாம். அவ்வாறு | மறப்பதால் நமக்கொன்றும் இழப்பில்லை. நன்மையாகக் கூட அமையலாம். ) ஆனால் குற்றமற்ற அறநெறியாளர் உறவை ஒரு காலத்திலும் மறந்து விடக் கூடாது. மறப்பது நல்லதன்று! மாசற்றார் உறவு நம்மையும் என்றும் மாசு அணுக விடாது காக்கும் அரணாகும் ஆகவே, "மறவற்க மாசற்றார் கேண்மை ; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு” எனத் தெளிவு படுத்துகிறார். மாசுற்றார் கேண்மையை மறந்து விடுக! துன்பத்துத் துணைபுரியார் நட்பைத் துறந்து விடுக! தமக்கு உண்டாகிய கொடிய துன்பத்தினை முழுமையாக மடியச் செய்து, தம் வாழ்வை நிலைபெற வைத்தவர் நட்பை நன்றியுணர்வுடையோர் நினைத்துக் கொண்டே இருப்பர். இன்றும் நினைப்பர் என்றும் நினைவில் வைத்திருப்பர். செய்ந்நன்றி மறவாக் குடும்பத்தில் பிறந்தவர்களும் வழி வழியாய் நினைந்து போற்றிக் கொண்டே இருப்பர். நாங்கள் அவர்கள் குடும்பத்து முன்னோர்கட்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்! அன்று அவர்கள் பூட்டனார் மட்டும் துணைபுரியாமல் இருந்திருந்தால் நம் பூட்டனார் வாழ்வு அன்றே முடிந்து போயிருக்கும். நம் பூட்டனார் அன்று காப்பாற்றப்பட்டதால் நம் பாட்டனார்; நம் பெயரர் என்று நம் குடும்பம் வழி வழியாய் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகிறது. வாழ வைத்த குடும்பத்தார் வாழ நாமும் துணைபுரிவோம். அஃது நமது கடமையாகும் என உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பாராட்டி மகிழ்வோர் என்றும் உண்டு. ஆகவே திருவள்ளுவர், 'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கள் விழுமம் துடைத்தவர் நட்பு” என்னும் விழுமிய கருத்தை மொழிந்தார். நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரிய வேண்டும்! ஒருவர்க்கு மறதி வேண்டுமா? வேண்டாமா மறப்பது நல்லதா? கெட்டதா? என வினவின் 'நல்லதை மறப்பது கெட்டது' 'கெட்டதை மறப்பது நல்லது' - 'மறவற்க மாசற்றார் கேண்மை ' எனக் கூறிய திருவள்ளுவர். "பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனினும் நன்று” ஆகவே எனப் பொறையுடைமையில், பிறர் செய்த தீமையைப் பொறுப்பதுடன் மறப்பது நல்லது என்றும், வெகுளாமையில், "மறத்தல் வெகுளியை யார்மாட்டும், தீய பிறத்தல் அதனான் வரும்” தீமையின் பிறப்பிடம் சினம்; சினத்தை மறந்து விடு' எனவும் சினம் கொள்வதையும் பிறர் செய்த தீமைகளையும் மறந்துவிட வள்ளுவர் சொல்வதோடு இங்கே நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்கிறார். ஆகவே, பிறர் செய்த தீமையை உடனே மறப்போம்! பிறர் நமக்குத் செய்த நன்மையை என்றும் மறவோம்! நல்லதை நினைப்போம்! அல்லதை நினையோம்! உதவி செய்தோர்க்கு உதவாராயினும் மறவி இன்மை மாண்புடைத்து' என்னும் பெருங்கதை மொழியும் நினைவில் கொள்வோம்! நமக்கு நன்மை செய்தவனே தீமையும் செய்யின், அத்தீமை முன் செய்த நன்மையைக் காட்டிலும் பெரிதாய் இருப்பினும், சிறிய நன்மையைக் கொண்டு பெரிய தீமையை மறந்து விட வள்ளுவர் வழி கூறுகின்றார். நமக்கு முன்னர் நன்மை செய்தவர், பின்னர்க் கொல்லுதல் போன்ற கொடுமையைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை மட்டுமே நினைத்தால் தீமை மறக்கடிக்கப்படும் என்கிறார். "கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்” பிறர் செய்த நன்மை நினைவில் இருக்கட்டும்! தீமை தானே மறந்து போய்விடும் என்பது எவ்வளவு ஆழமான உளவியல் சிந்தனை. நாலடியாரும் இந்நன் நோக்கை வழி மொழிவது போல், ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்” என்றும், "ஒன்றுதவி செய்யினும் அவ்வுதவி மறவாமல் பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்” என்று வில்லி பாரதமும். "நன்றி புரிந்தோர் மற்றொருகால் நவைகள் புரிந்தார் ஆயிடினும் என்றும் உதவியே மதித்திட்டு ஓம்பா நவையை மறந்து அவரை என்றும் மறவாது இருந்திடுக” என்று விநாயக புராணமும் வள்ளுவர் வழிக்கு வலிமை சேர்க்கின்றன. எத்தகைய நற்செயல்களை அழித்துத் தீமை செய்தவர்க்கும், அத்தீமைகளிலிருந்து தப்பிப் பிழைக்க வழி உண்டாம். ஆனால், ஒருவர் தனக்கு செய்த நல்லுதவியை மறந்து அவருக்குத் துன்பத்தைச் செய்தவனுக்கு அத்துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்க வழியே இல்லை என்பதை, "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என அழுத்தமாகக் கூறுகிறார். இக்குறளின் கருத்தால் கவரப் பட்டவர்களில் ஒருவராக விளங்கிய சங்கச் சான்றோர் ஆலத்தூர் கிழார். "எந்நன்றி கொன்றார்க்கும்” என்பதற்கு விளக்கம் அளிப்பது போல், "ஆன்முலை யறுத்த அறினி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்” எனப் பட்டியலிடுவதுடன் "வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றார்க்கு உய்திஇல்” எனக் கூறியுள்ளார். உய்வுண்டாம், உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்னும் குறள் மொழிக்கு விளக்கமாய் அமைவதுடன், "அறம் பாடிற்றே” என்று பாடுவதால் அவர் திருக்குறளை ஒப்பற்ற அறநூல் எனப் போற்றுவதையும், திருக்குறள் நெறிகட்குச் சங்கச் சான்றோர் தந்த மதிப்பையும் சிறப்பையும் புலப்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. "சிதைவுஅகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வப் பதவிஅந் தணரை ஆவை பாலரை, பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல், மாயா உதவிகொன் றார்க்குஒன் றானும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ ?” எனக் கவி மன்னன் கம்பனும் இக்குறளைப் பொன்னே போல் போற்றியுள்ளதையும் அறிந்து நாமும் செய்ந்நன்றி மறவோம். பாரதக் கண்ணனும், இராமாயணக் கும்பகர்ணனும் செய்ந்நன்றி மறவாச் செம்மலாகப் புகழ் பெற்றவர்கள்! விடுதலைப் போராட்டத்தால் வழக்கறிஞர் தொழில் உரிமையை இழந்து, துன்புற்ற கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு அவ்வுரிமையை மீண்டும் பெற்றுத் தந்தவர் 'வாலிசு' என்னும் ஆங்கில நீதிபதி. அவர் செய்த நன்றியை மறவாமல் தம் மைந்தர் ஒருவர்க்கு 'வாலேசுவரன்' எனப் பெயரிட்டுத் தம் செய்ந்நன்றியைப் புலப்படுத்திய கப்பலோட்டிய தமிழன், செய்ந்நன்றி மறவாச் செம்மலாகவும் விளங்கியதை நாடறியும்! செய்யாமற் செய்த உதவியும் காலத்தினாற் செய்த நன்றியும் பயன் தூக்கார் செய்த உதவியும் ஒன்றில் ஒன்று பெரிது என உணர்க! நன்றியில் சிறியது கிடையாது எல்லாம் பெரியதே! மாசற்றார் கேண்மையை மறவாதே! துன்பத்துள் துப்பாயார் நட்பைத் துறவற்க! உன் தகுதியால் நீ பெற்ற உதவியும் தகுதிபெறட்டும் துன்பம் துடைத்தவர் நட்பை என்றும் நினை1 பிறர் செய்த நன்மையை மறவாதே பிறர் செய்த தீமையை நினையாதே! ஒருவர் செய்த நன்மையை நினைத்தால் தீமை நினைவிற்கு வாராது! செய்ந்நன்றி மறவாதே! செய்ந்நன்றி போற்றிப் பெரும் பேறுபெறுக! 12. நடுவு நிலைமை எந்த நல்லியல்பும் குடும்ப வாழ்விலேயே கால்கொள்ள வேண்டும். பெற்றோர் தம் மக்களை ஒன்று போல் கருத வேண்டும். மகன் ஆயினும் சரி, மகள் ஆயினும் சரி அன்பு செலுத்துவதிலோ, கல்வி புகட்டுவதிலோ, பிற துணை புரிவதிலோ அணுவளவும் வேறுபாடு காட்டலாகாது. உறவினர்களிலும் தன் வீட்டு உறவினர், மனைவி வீட்டு உறவினர் எனப்பகுத்துப் பார்த்து வேறுபடுத்தல் நல்லதன்று. "எட்டுணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணி உள்ளே ஒத்து உவக்கும் வள்ளலார் நோக்கே நடுவுநிலை நோக்கு. எதனையும் தற்சார்பின்றி, உணர்ச்சி வயப்படாமல், எச்சார்பிற்கும் இடம் அளிக்காமல் அமைவுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அறத்தினின்றும் விலகி விடவும் கூடாது; அறம் அல்லாதவற்றில் கலந்து விடவும் கூடாது. அற வழியே, நேர்வழி அதுவே உயர்வழி! கண்ணால் காண்பதெல்லாம் உண்மையாய் இருக்கும் என நம்பாதே! அதுபோல் காதால் கேட்பதெல்லாம் உண்மையாய் இருக்கும் என்று எண்ணாதே! எதனையும் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அறிந்தே உண்மையைக் கண்டுணர வேண்டும்! அதனால் தான் "கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்னும் நடைமுறை மொழி தோன்றிற்று. நடுவு நிலைமை என்பது ஆட்சிக்கு மட்டுமன்றித் தனிமனித ஒழுக்கமாகவும் சமுதாய வளனுக்குப் பயன்பட வேண்டும் என்பதே வள்ளுவரின் கருத்து. ஆகவே, அறத்துப் பாலில் இல்லற வியலில் இந்நடுவு நிலைமை அதிகாரத்தை வைத்தார். நடுவு நிலைமையைத் 'தகுதி' செப்பம், நெஞ்சத்துக் கோடாமை, நடுவாக நன்றிக்கண்தங்கல், ஒருபால் கோடாமை சொற்கோட்டம் இல்லது; பிறவும் தமபோல் செய்தல் என்றும் திருவள்ளுவர் சுட்டுகிறார். நடுவுநிலையாளரைத் 'தக்கார் எனத்தகு பெயரிட்டு அழைப்பதுடன், நடுவுநிலை தவறி நடப்போரைத் 'தகவிலார்' எனவும் குறிப்பிடுகிறார். நடுவு நிலை நோக்கே இறைமை நோக்கு எனவும் நடுவு நிலைமைப் பண்பே இறைமைப் பண்பு எனவும் 'நடுவு நிலைமையே' 'இறைமை' எனக் கருதிக் கருத்துக்களைப் பரப்பி வந்த வள்ளலார் "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே! காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே! மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே! நல்லார்க்கும் பொல்வார்க்கும் நடுநின்ற நடுவே! நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே! எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!” எனக் கூறிப் போற்றுவது நடுவு நிலைக்கு நல்லதொரு நுழைவாயிலாய் அமைந்திருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எதனையும் அரையும் குறையுமாகச் தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அதுபோல் ஒரு பக்கக் செய்திகளை மட்டும் தெரிந்து கொண்டும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது. ஒவ்வொன்றையும் ஆராய வேண்டும், பகுதி பகுதியாக ஆராய வேண்டும், ஆராய்ந்தவற்றை ஒன்று சேர்த்து முழுமையையும் ஆராய்ந்து தெளிவான முடிவிற்கு வர வேண்டும். முடிவு செய்த பின்னர் நடுவு நிலைமையுடன் நடப்பதை முறையாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், "நடுவு நிலைமை' என்பது தகுதி வாய்ந்த ஒப்பற்ற நல்லறமாகும்.” நன்றும் தீதும் கலந்து காணப்படும் இவ்வுலகில், நன்கு ஆராய்ந்து நல்லதைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுணர்ந்த பின்னர் நல்வழி நிற்க வேண்டும், நல்வழி காட்டவும் வேண்டும்; நடுவு நிலையைப் பின்பற்றி நடக்கவும் வேண்டும். நடுவு நிலைமையை வீட்டில், ஊரில், நாட்டில் நிலைநிறுத்தவும் வேண்டும் என விரும்பும் வள்ளுவர் படைத்த முதல் நடுவுநிலைமைப் படியே, தகுதி யெனஒன்று நன்றே, பகுதியாற் பாற்பட்டு ஒழுகப் பெறின்” என்னும் குறட்பாவாகும். 'காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்றகுணந் தோன்றா தாகும் உவப்பதன் கண் குற்றமும் தோன்றாக் கெடும்” என்னும் அறநெறிச் சாரப் பாடல் ஏன் நடுவுநிலை ஆய்வு தேவை என்பதை அருமையாக விளக்குகிறது. நமக்குக் குற்றம் குற்றமாகவே தெரிய வேண்டும். குணம் குணமாகவே தெரிய வேண்டும். விருப்பும் வெறுப்பும் உண்மைத் தன்மையை உணர முடியாமல் செய்துவிடும். ஆகவே, விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி நடுவுநிலை ஆய்வு மேற்கொள்க! நடுவு நிலை நோக்கின்றி, தன்னல நோக்கு மேலோங்குவதால் தான் பல்வேறு வன்புகளும், வழக்குகளும் நாட்டில் வளர்ந்து வருகின்றன. "உங்கள் காளை என் பசுவை முட்டிக் காயப்படுத்தி விட்டது” என்றால் “காளைக்கு என்ன தெரியும், பசுவைப் பாதுகாப்பாகக் கட்ட வேண்டாமா” என உரைக்கிறார் ஒரு நீதிபதி. அவரிடம், இல்லை ஐயா என் காளை தான் உங்கள் பசுவை முட்டிக் காயப்படுத்தி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள் என வேண்டிய போது, அது எப்படிப் பொறுக்க முடியும். காளையைக் கட்டி வைக்க வேண்டாமா? சட்டப்படி இழப்புத் தொகை வாங்காமல் விட மாட்டேன்” எனக் கூறுபவர்கள் நீதிபதிகளாய் இருந்தால் நடுவுநிலை எப்படி வாழும்! நாடுதான் எப்படி உருப்படும். உடன் பிறந்தார் பாகப்பிரிவினையில் உனக்கு இதைத்தான் கொடுப்பேன், எனக்கு இது தான் வேண்டும் எனப் பிடிவாதம் செய்யாமல் சொத்துகளைத் தனித்தனியே மதிப்பிட்டு, தக்கவாறு பிரித்துப் பட்டியலிட்டு, ஆளுக்கொரு சீட்டை எடுத்துக் கொள்ளும் பெருந்தன்மை இருந்தால் நடுவு நிலைமை வாழும்! காவல் நிலையம் செல்ல வேண்டா! வழக்கறிஞர் துணையை நாட வேண்டாம். நீதிமன்றப் படிக்கட்டை மிதிக்க வேண்டா. சொத்து சுகத்தை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டா. ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் காதல் மடல் அனுப்பினார் கடிதத்தைக் கண்ட அத்தாய், கடிதம் எழுதியவர் இப்படித்தானே வருவார் வரும் போது அவருக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கால் செருப்பைக் கையில் ஏந்தி நிற்கிறார். வெளியே சென்றிருந்த கணவர் வீட்டிற்கு வந்தார். இக்காட்சியைக் கண்டார். ஏன் இந்தக் கோலம் என வினவினார்? அத் தாய் விம்மி விம்மி அழுது கொண்டே கடிதத்தைக் காட்டினார். கடிதத்தைக் கண்ட கணவர் உணர்ச்சி வயப்படாமல், எழுதியவன் மீதும் சினங்கொள்ளாமல், மனைவி மீதும் ஐயம் கொள்ளாமல், இப்பொழுது எழுதியது அவனுக்கு மட்டும் தெரியும் அதை ஊருக்கெல்லாம் தெரியப்படுத்த வேண்டுமா? என வினவி அமைதிப்படுத்தினார். கடிதம் எழுதியவருக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர் முகத்தில் இனி எப்படி விழிக்க! என எண்ணி மருந்து குடித்துத் தற்கொலை செய்ய முயன்றார். அங்கும் அப்பெரியவர் சென்று தக்க மருத்துவம் செய்து காத்தார். இன்று இரண்டு குடும்பமும் நல்ல குடும்பமாக வளர்ந்து வாழ்ந்து வருகிறது என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. தமிழக முதலமைச்சர் இருக்கையை அணி செய்தவர்களில் ஒருவர் ஓமாந்தூர் இராமசாமியார். காட்சிக்கு எளியர், கடுஞ்சொல் சொல்லாதவர். எவரும் எளிதில் அணுகலாம் ஆனால் பணி நேர்மையானதாக இருக்க வேண்டும். முறைப்படியும் அணுக வேண்டும். சட்ட முறைக்குப் புறம்பாக அவரும் செயல்படார். முறையற்ற பணியாயின் மிக நெருங்கியவரும் அவரை நெருங்க முடியாது. மிக நெருங்கிய உறவினர் அரசுக் குடியிருப்பில் வரிசை தவறி வீடு பெற்றுத்தர அரசு ஊர்தியில் சென்று முயன்றார். செய்தி அறிந்த ஓமாந்தூரார் காவல்துறை முறையான நடவடிக்கை எடுத்து வழக்குத் தொடரச் செய்து உரிய தண்டனையும் பெறச் செய்தார். அப்படியோர் நடுவு நிலைமையர் ஓமாந்தூர் இராமசாமியார். அப்படி நடுவு நிலைமையே உயர்ந்த அறம் எனக் கொண்டொழுகியோர், ஒழுகுவோர் என்றும் உண்டு! 'நல்ல குடியில் பிறந்தவர்களிடத்து அல்லாமல் மற்றவர்களிடத்து நடுவு நிலைமையும் பழிக்கு நாணும் பண்பும் ஒருசேர இயல்பாக அமைவதில்லை' என்பதைக் குடிமையில் கூற வந்த வள்ளுவர், "இற்பிறந்தார் கண் அல்லது இல்லை; இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு” 951 எனக் கூறுகிறார். நடுவு நிலைமையும் நாணமும் நற்குடிப்பண்பு என்பது அவர் கருத்து. அதிலும் நடுவு நிலைமை என்பதைச் “செப்பம்” எனக் கூறியது மிகச் சிறந்ததாகும். கட்டமைப்பு, ஒழுங்கு, செம்மை அனைத்தும் பொருந்திய நடுவு நிலைமையே செப்பம் ஆகும். முதற் குறளில் நடுவுநிலையைத் 'தகுதி' என்னும் சொல்லால் குறித்த பெருமகன் இரண்டாவது குறளில் 'செப்பம்' எனக்குறித்து நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறார். செப்பம் உடையவன், செம்மையானவன், ஒழுக்கமுடையவன், பண்பாளன், நல்ல வினைமாட்சியன், நடுவு நிலைமையன் அவன் தன் பணியின் சீர்மையால் வாழ்வில் பெற வேண்டிய ஆக்கங்களை எல்லாம் பெற்றுப் புகழாளனாய் விளங்குகிறான். அவன் தேடிய செல்வங்கள் அழியாச் செல்வங்கள். ஆகவே அச்செல்வங்கள் அவனுக்கு மட்டும் அல்லாது அவனது கால் வழியினர்க்கும் நல்ல 'ஏமாப்பாய்' விளங்கும். ஏமாப்பு நல்ல துணை, சிறந்த வலிமை, உயர்ந்த பாதுகாப்பு, ஆகிய உறுதி நிலையையும் பெற்றுத் தரும் என்பதை வலியுறுத்தவே "செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து” என்னும் குறளை வடித்துள்ளார். அப்படியானால் செப்பம் இலான் ஆக்கம் தேடியவனைச் சிதைப்பதுடன் அமையாது அவன் கால் வழியினரும் காலூன்ற வழி இன்றிச் சிதைக்கப் படுவர், என்பதும் நடக்கக் கூடியது தானே! ஆகவே, நாமும் கால்வழியினரும் பெற்ற பெருவளம் கொண்டு நிறைவாக வாழவேண்டுமானால் நாம் நடுவு நிலை போற்றுவதைக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும். "அறன் ஈனும், இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்" 754 எனப் பொருள் செயல் வகையில் உணர்த்தும் நுட்பத்தையும் மறந்து விடலாகாது. படிக்காமலே பட்டம் பெறலாம். பட்டம் பெறாமலே பதவி பெறலாம், உழைக்காமலே செல்வம் தேடலாம். மக்களின் தற்குறைகளைப் பயன்படுத்தி, அவர்களை மேலும் கேட்டில் உழலுமாறு செய்தும் பணம் திரட்டலாம். பிறரை ஏமாற்றியும் செல்வம் தேடலாம். கூட்டாளிகளை அழித்து விட்டும் பொருள் தேடலாம். அப்பொருளும் அவர்கட்குப் புறவுலகில் சிலகாலம் சில போலிப் பெருமையையும் ஈட்டித் தரலாம். ஆகவே, இப்போலி நன்மையை உண்மை என நம்பி, போலியர் வழியை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று எண்ணாதீர், நடுவு நிலை வழியிலிருந்து விலகிச் செல்வம் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இன்றே விட்டுவிடுக! என வலியுறுத்தவே, "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்” 113 என வேண்டுகிறார். இக்கருத்தை மேலும் வற்புறுத்த வேண்டும் என எண்ணியே வெஃகாமையில் "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்" 171 எனக் கூறுவாராயினார். ஒரு நகராட்சி மன்றம், அதன் அன்றைய தலைவர் ஒரு தனியார் பேருந்து நிறுவன மேலாளர், அவர்கள் நிறுவன நகருந்தே அந்நகரில் பல தடங்களில் இயங்கி வருகிறது. அப்பொழுது இன்னொரு நிறுவனத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் வருகிறது. “குறிப்பிட்ட தடத்தில் எங்கள் நிறுவன ஊர்தி ஓட அனுமதி அளித்தால் அச்சாலையை நாங்கள் வலிய கல்மாச் சாலையாக மாற்றித் தருகிறோம்” என்று அதனை ஒரு உறுப்பினர் வலியுறுத்துகிறார். அதற்குத் தலைவர் வழங்கிய மறுமொழி. தார்ச்சாலையாக இருக்கும் போதே நிறைய நேர்ச்சிகள் ஏற்படுகின்றன. கல்மாச்சாலையாக மாற்றினால் நேர்ச்சிகள் கூடிவிடும் என்பதாகும். 'நடுவிகந்தாம் ஆக்கத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. நடுவிகந்தாம் ஆக்கத்தை ஒழிய விட்டு வழி காட்டிய சான்றோர் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோ வடிகள். வீடு ஒத்தி இரண்டாயிரம் எனப் பேசியவர் எண்ணிப் பார்க்காமல் 2500 கொடுத்து விட்டார். வீட்டுக் காரர் எண்ணிப் பார்க்கும் போது தொகை 500 கூடுதலாக இருப்பது கண்டு அத்தொகையை உரியவரிடம் ஒப்படைத்து வந்தார். வீடு, ஒத்திக்கு விடப் பட்டாலும் வீட்டுக்காரரே அதில் வாடகையின்றிக் குடியிருந்தார். ஒத்தியை மீட்டும் பொழுது ரூ. 1500 வாங்கிக் கொண்டு பத்திரத்தை ஒப்படைத்து விட்டார் நடுவு நிலை ஆக்கத்தையே விரும்பும் தஞ்சை சின்னையா பிள்ளை. குடும்பம் வறுமையில் வாடும் போதும் கூடுதலாக இருந்த தொகையை உரியவரிடம் கொண்டுபோய் ஒப்படைத்த நடுவுநிலையாளர் புதுக்கோட்டைத் திருக்குறள் கழக நிறுவனர் அண்ணல் சுப்பிரமணியனார். நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடும் பெருமக்கள் தொகை பெருகட்டும். அத்தகையயோர்களால் நாடு ஒளிபெறட்டும். "மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்” 456 எனச் சிற்றினம் சேராமையிலும், 'வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்” 238 எனப் புகழிலும், "எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ, ஒருவரால் நச்சப் படாஅ தவன்” 1004 என நன்றியில் செல்வத்திலும் நாம் வாழும் காலத்தும் புகழுடன் வாழ வேண்டும். உடல் வாழ்வுடன் பொருள் வாழ்வும் முடிந்து போகும். ஆனால் புகழோடு நாம் என்றும் வாழ வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர் ஆகவே, "தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” என்கிறார். தன்னலத்தால் நடுவு நிலை பிறழ்ந்து வாழ்கின்றவர்களில் சிலர் நன்மை பெற்றும் வாழலாம். செல்வாக்கும் பெறலாம்; அச்செல்வாக்கினால் அவர்கள் நடுவு நிலைமை தவறிச் செய்த குற்றங்களும் மறைக்கப்படலாம். ஆனால் மறைக்கப்பட்ட குற்றம் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டு விடும். வாழும் காலத்தில் குற்றமற்றவர் போலத் தோன்றினாலும், பிற்காலத்தில் உண்மை ஒருநாள் வெளிச்சமாகும். ஆகவே, ஒருவர் நடுவுநிலையோடு வாழ்ந்த 'தக்கவர்' என்பதும், நடுவுநிலையை தவறி வாழ்ந்த 'தகாதவர்' என்பதும் அவர் உயிருடன் வாழும் காலத்தில் உலகுக்குப் புலப்படவில்லை என்றாலும் அவர் மறைவுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும். ஆகவே நடுவு நிலைமை நெறிநின்று புகழையே பெருக்கிச் சேமித்து வருக! "தக்கோராய்த் தங்குக நிலத்து” நடுவுநிலையாளர் எல்லா வழியிலும், முறையிலும், நிலையிலும் தகுதி சான்றவர் என்பதை அடையாளப் படுத்தும் அருமையான பெயர் 'தக்கார்' என்பது. ஆகவே தக்கவழி வாழ்ந்து, நம் பெயரை இம்மண்ணில் தக்கவைத்துத் தக்காராவோம்! தக்காரைத் தாங்கட்டும் இவ்வையம்! "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று” 332 "அற்கா இயல்பிற்றுச் செல்வம்” 333 செல்வம் நிலையற்றது சிறுகச் சிறுகச் சேரும் சேர்ந்தது மொத்தமாய் போனாலும் போகலாம் என நிலையாமையிலும், "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” 241 "பொருளற்றார் பூப்பர் ஒருகால்” 248 என அருளுடைமையிலும், "இன்மை ஒருவற்கு இளிவன்று” 988 எனச் சான்றாண்மையிலும் தம் கொள்கையைத் தெளிவு படுத்தும் வள்ளுவர், "கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி” 115 என்னும் உலக இயல்பை உணர்த்தும் அழகுக் குறளைப் படைத்துள்ளார். மழை பெய்து ஆற்றில் பெருவெள்ளம் வந்து போனால் மேடு பள்ளமாகும். பள்ளம் மேடாகும். அது போல் நேற்றைய செல்வர், இன்று ஏழையாகலாம். இன்றைய ஏழை நாளை செல்வராகலாம். செல்வர்களில் நடுவுநிலைமை நிற்போரும் இருக்கலாம்; நடுவு நிலை தவறியவர்களும் இருக்கலாம். அதுபோல் வறியவர்களிலும் தக்காரும் இருக்கலாம்; தகவிலாரும் இருக்கலாம். இது உலக இயற்கை; ஏன் என்றால் அது அப்படித்தான் இருக்கும். அது போல் பொருள் வளம் பெற்றவர்கள் எல்லாம் போற்றப்படுவதும் இல்லை. பழிக்கு ஆளாகுவோரும் உண்டு! அது போல் வறியவர்கள் எல்லாம் பழிக்கப்படுவதில்லை. போற்றுதலுக்கு ஆளாகும் வறியவர்களும் உண்டு! ஆகவே, நாம் நம்மிடம் வளமைக் குறை இருக்குமானால் அதற்காக நாணவேண்டியதில்லை. அதுபோல் நம்மிடம் பொருள் வளம் பெருகி இருக்கிறது. இனி நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. நாம் கொடுத்து வைத்தவர்கள்! நாம் நினைத்ததை எல்லாம் இம்மண்ணில் சாதித்து விடலாம் எனக் கருதி இறுமாப்புக் கொள்ளாதீர்! உங்களைத் தகுதியானவர் ஆக்குவதும், செப்பம் உடையவர் ஆக்குவதும் தக்கார் ஆக்குவதும் சான்றோர் ஆக்குவதும், நீங்கள் தேடிய செல்வமே உங்கட்கும் உங்கள் கால்வழி யினர்க்கும் நல்ல துணையாய் அமைவதற்கும், சான்றோர்கள் தமக்கு அழகு தரும் அணிகலமாகப் பூட்டி மகிழ்கிறார்களே நடுவு நிலைமை என்னும் அணிகலன். அதனையே நீங்களும் அணிந்து மகிழுங்கள்! நீங்கள் என்றும் புகழோடு வாழ்வீர்கள் என உரிமையோடும் உள்ளன்போடும் வேண்டுபவர் திருவள்ளுவர் ஆகவே, "கேடும் பெருக்கமும் இல்லல்ல” என உலக இயல்பை, மொழிந்ததுடன் நிற்காமல் "நெஞ்சத்துக் கோடாமை” வேண்டும் அதுவே 'சான்றோர்க்கு அணி” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். நடுவு நிலையைக் கைவிட்டு யாரும் சிறப்போ பெருமையோ, புகழோ அடைய முடியாது. அப்படி அடைந்ததாகக் கருதிக் கொண்டிருப்போர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் பேதையர். நடுவு நிலைமையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே அச்சத்தாலோ, ஆசையாலோ பாதையை மாற்றும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுமானால் நமக்குக் கேடு வரப்போகிறது' என்பதை உணர வேண்டும். உணர்ந்தால் கேடு வாராமல் காத்துக் கொள்ளலாம். என்னும் அருள் நோக்கில்தான், "கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்” 116 எனக் கூற நேர்ந்தது. "கெடுவான் கேடு நினைப்பான்” "கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே ” என்பன இந்நாட்டுப் பட்டறிவாளர் மொழிகள் அல்லவா? "வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்க்காப் பாளரைக் கூவி ஈங்கு என் தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகில் கொன்றச் சிலம்பினைக் கொணர்க'' எனப் பாண்டியன் நெடுஞ்செழியன் நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செய்ய முற்பட்டதால் அழிந்தான்' என்பது சிலப்பதிகாரம் காட்டும் சான்றாகும். இராமபிரான் முன்பின் சிந்திக்காது, நடுவுநிலை அறம் மறந்து யாரோ ஒரு வழிப் போக்கன் கூற்றை மெய்யென்று ஏற்றுச் சீதா பிராட்டியைக் காட்டிற்கு அனுப்பியது முறைமையன்று. "இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்” 988 சான்றாண்மை என்று சொல்லப்படும் உறுதிப்பாடு உடையவராக ஒருவர் விளங்கினால் அவர்க்கு ஏற்பட்ட வறுமையை உலகம் இழிவாகக் கருதாது. வறுமை பழிப்பிற்கு உரியதன்று செல்வம் பாராட்டிற்கு உரியதும் அன்று. "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” 505 புகழுக்கும் அதற்கு எதிராம் பழிக்கும். அவரவர் செய்யும் செயலின் செம்மையும், செம்மை இல்லாமையுமே உரை கல்லாகும். ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கலாம். அவர் நடுவுநிலை தவறாமல் பணி புரிந்தால் தான் உயர்ந்தவராகக் கருதப்படுவார். பெயரளவில் பதவியால் மட்டும் ஒருவர் மதிக்கப்படுவதில்லை . இன்னொருவர் ஓர் அலுவலத்தில் ஏவலர்; பெரிய குடும்பம்; ஆகவே வறுமையில் அல்லல்படுகிறார்; ஆனால் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு முன்பே வருவார்; அவர் பணியை எவரும் ஏவாமலே செவ்வையாகச் செய்வார். எல்லோரையும் மதிப்பார், யாரிடமும் வெறுப்புக் கொள்ளார். எல்லார்க்கும் இயன்ற உதவி செய்வார். எவர் உதவியையும் நாடார்; எவருடைய அன்பளிப்பையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்தே வந்து போவார். அலுவலகத்தில் அவருக்கு தனி மதிப்பு உண்டு! யாரும் அவரை ஏவலராகக் கருத மாட்டார்கள். குடும்ப உறுப்பினராகக் கருதி மதிப்புடன் நடத்துவர். பணியின் பொருட்டு அலுவலகம் வருபவர் அனைவரும் அவரைத் தேடுவர்; அவர் முன் யாரும் கையூட்டு வாங்க அஞ்சுவர். அவர் படிப்பும் குறைந்த படிப்பே! பணியும் கீழ்நிலைப் பணியே! ஊதியமும் குறைவே! எனினும் இத்தகையோரை யாரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள். என்பது தானே என்றும் நடைமுறை உண்மை. இதைத் தான் திருவள்ளுவர் அவர் நடையில் "கெடுவாக வையா துலகம், நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” எனப் பகர்கிறார். நடுவு நிலைபோற்றி நல்வழியில் நிலைபெற்றவன். வறுமையை எவரும் பழியார். கோல், அளக்கும் கோல், நீட்டி அளப்பதோர் கோல், ஊற்றுக் கோல், எழுதும் கோல் செங்கோல், மன்னவன் கோல் எனப் பல்வேறு கோல்களைக் காட்டும் வள்ளுவர் நடுவு நிலைமைக்கு அடையாளச் சின்னமாகக் காட்டுவதே சமன் செய்து சீர் தூக்கும் கோல்”. நன்னூல் இலக்கணமும், "ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே” எனக் கூறுகிறது. "சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்பது குறள். நடுவு நிலையைப் போற்றுவோர் துலாக் கோலை நோக்க வேண்டும், தான் சமமான நின்று, பிறகு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னிடம் வைத்த பொருளின் எடையைத் துல்லியமாக அறிவிக்கின்றது துலாக் கோல். அதுவே அதன் பெருமைக்குக் காரணமாய் இருப்பது. அதுபோல் சமநிலையில் நின்று ஒரு சார்பாகக் கோணாமல் நடப்பதே சான்றோர்க்கு அழகாகும். "அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகிச் சிறந்த கொள்கை அறங்கூ றவையம்” பண்டு அறங்கூறு அவையம் இன்றைய நீதி மன்றங்கட்கு முன்னோடியாய் அமைந்து நடுவுநிலையுடன் நீதி வழங்கியதை மதுரைக் காஞ்சி இவ்வாறு சுட்டுகிறது. "அறன் நிலை திரியா அன்பின் அவையத்து திறனில் ஒருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக" என பூதப் பாண்டியன் வஞ்சினம் கூறும் முகமாய்ப் பாடிய புறநானூற்றுப் பாடல் அறங்கூறவையத்தை எதிர்மறை நோக்கில் சுட்டிக் காட்டுகிறது. - 1) தன் கணவனை இழந்த கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் தன் வழக்கை உரைத்தாள். மன்னன் "பெண்ணணங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று” என்றான் கண்ணகி, நற்றிறம் படராக் கொற்கை வேந்தே! என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே” என மன்னன், "தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே! தருக எனத் தந்துதான் முன்வைப்ப கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே! மணிகண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன், யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே! தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று இணையடி தொழுது வீழ்ந்தனளே! மடமொழி!” என்பது சிலப்பதிகாரம் காட்டும் தராசுக் கோல் அன்ன நீதி! பசுவின் கன்று, மனுநீதிச் சோழனின் மைந்தன் வீதிவிடங்கனின் தேர்க்காலில் வீழ்ந்து மாண்டது. துயருற்ற தாய்ப் பசு ஆராய்ச்சி மணியை ஒலித்தது. உண்மை தெரிந்த மன்னன் 'தன் மைந்தனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று 'கொலைக்குக் கொலையே தக்க தண்டனை - அதுவே நடுவு நிலையான தீர்ப்பு எனக் கூறி நீதி வழங்கினான். சோழன் மாவண் கிள்ளியின் மைந்தன் உதயகுமரன், மணிமேகலையை விரும்பினான். துறவு பூண்ட மணிமேகலை அதனை விரும்பாது, அவன் தரும் தொல்லையில் இருந்து விடுதலை பெற, காய சண்டிகையின் வடிவினளாக மாற்றிக் கொண்டாள் அதனையும் தெரிந்து கொண்ட உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்தான். இதனைக் கண்ட காய சண்டிகையின் கணவன் விஞ்சையன் இளவரசனைக் கொன்றான். வழக்கு அரசவை சென்றது. மன்னன் மாவண் கிள்ளி 'யான் செயற்பாலது தன்னைத் தான் செய்ததால் தகவிலன் விஞ்சையன்' எனத் தீர்ப்பளித்ததாகச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் கூறியுள்ளார். முகலாயப் பேரரசர் சகாங்கீரின் மனைவி அரண்மனைக்குள் இருந்து எய்த அம்புகளில் ஒன்று தவறிப்போய் அவ்வழியே சென்ற ஒரு தொழிலாளியின் மீது பாய்ந்தது. அவன் மாண்டான். அவன் மனைவி மன்னனிடம் நீதி கேட்டு வந்தாள். மன்னன் தீர விசாரித்தான். தொழிலாளியின் சாவுக்குத் தன் மனைவி எய்த அம்பே காரணம் என்பதை அறிந்தான். தொழிலாளியின் மனைவி கையில் வில்லையும் அம்பையும் கொடுத்தான். இப்படித் தீர்ப்பளித்தான் 'எந்த அம்பு உன் கணவனைக் கொன்று உன்னை விதவை ஆக்கி விட்டதோ அது போல் உன் கணவனைக் கொன்றவளின் கணவனைக் கொன்று அவளை விதவை ஆக்கி விடு' எனத் தீர்ப்பளித்து நடுவு நிலைமையை நிலை நாட்டினான் என்பது வரலாறு. 'ஒருபால் கோடாமையே சான்றோர்க்கு அணி எனக் கூறும் குறள் அணி பூண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கோண் - கோடு - கோட்டி - கோணல் - கோட்டம் என்றாகும் நேர் நேர்மை, நடுவுநிலை அற்றுக் கோணியது வளைந்தது தான் கோட்டம். உள்ளத்தில் கோணுதல் இல்லாத நடுவு நிலைத் தன்மையே முதலில் வேண்டும்; மனத்தில் கோணல் இல்லையானால் சொல்லில் கோணல் பிறக்காது. அதுவே சிறந்த நடுவுநிலைமையாகும்! சொற்கோட்டம் இன்மை மட்டும் நடுவுநிலைமை ஆகாது. மனக்கோட்டம் இன்மையும் வேண்டும். மனக் கோட்டம் உடையவனும் சொற்கோட்டம் இன்மையை மேற்கொள்ள இயலும்; ஆகவே மனக்கோட்டம், சொற் கோட்டம், செயல் கோட்டம் ஆகிய மூவகை நிலையிலும் கோட்டம் இன்மையே நடுவுநிலையின் இலக்கணமாகும் என்பதை "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்” என விளக்குகிறார் என்பதை விளங்கிக் கொள்வோம்! வாணிகம் பற்றி வள்ளுவர் ஒரே ஒரு குறள் தான் . பாடியுள்ளார் "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்” என்பதாகும் அது. நடுவு நிலைமை சிறப்பாக வணிகர்க்கு வேண்டும். பொருளைக் கொடுத்துக் கொள்ளும் அவர்களுடைய தொழிலில், கொடுப்பதையும் குறைவாகக் கொடுக்காமல் கொள்வதையும் மிகையாகக் கொள்ளாமல் செய்யும் நடுவுநிலைமை வேண்டும். பிறர் பொருளையும் தம்பொருள் போல் போற்றி வாழ்வார்களானால் வாணிகத்தைத் தொழிலாகச் செய்வார்க்கு அது நன்மை பயக்கும். "நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினர் வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉம் மிகைகொள்ளாது கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்று இருக்கை” வணிக நிலையங்கள் கரிகாலன் ஆட்சியில் பூம்புகாரில் நடுவு | நிலைக்கு எடுத்துக் காட்டாய் இலங்கியதைப் 'பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இவ்வாறு பாடியுள்ளார். நடுவுநிலை தவறா நல்ல வணிகர்கள் பலர் நிறைந்த நல்ல நாடு நம் நாடு. "நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவு நின்றார்க்கு நரகம் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவருமாவார் நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே” என்பது திருமந்திரம். "தகுதியாம் நடுவுநிலை ஒப்பற்ற அறம்” "செப்பம் உடைவன் ஆக்கமே கால் வழிக்கும் பயனாகும் ஆக்கம்” "நடுவு நிலை தவறி ஆக்கம் பெற எண்ணாதே” "தக்கார் என்ற பெயர் நிலைக்கட்டும்” "நெஞ்சத்துக் கோடாமையே நல்லழகு” "நடு நிலை தவறுதல் கேட்டிற்குக் கால்கோள்' "நடுவாக நன்றிக் கண் தங்குக! கோட்டம் மனத்திலும் கூடாது! கோட்டம் சொல்லிலும் கூடாது! கோட்டம் செயலினும் கூடாது! பிறவும் தமபோல் கருதி வணிகம் செய்க! நடுநிலையாளன் அடக்கமாக இருப்பான், ஒழுக்கம் போற்றுவான், பிறமனை நயவான், பொறுமை உள்ளவனாகவும், பொறாமை கொள்ளாதவனாகவும் இருப்பான், பிறர் பொருள் விரும்பான், புறங்கூறான், பயனில சொல்லான் தீவினைக்கு அஞ்சுவான், ஒப்புரவாளனாகவும் திகழ்வான். நடுவு நிலைமை நல்லறங்களின் திறவு கோல்! 13. அடக்கமுடைமை அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை எனப் பத்து "உடைமை"கள் திருக்குறளில் அதிகாரத் தலைப்பாக அமைந்துள்ளன. அவற்றுள் முதல் ஐந்து உடைமைகள் அறத்துப் பாலிலும், அடுத்த ஐந்து உடைமைகள் பொருட்பாலிலும் இடம் பெற்றுள்ளன. அறத்துப்பாலில் அமைந்துள்ள இரண்டாவது உடைமை அதிகாரம் அடக்கமுடைமையாகும். மனம், மொழி, மெய் தீய நெறிக்கண் செல்லாது அடங்குதல். நடுவு நிலைமையான நோக்கும் போக்கும் உடையவர்களிடம் பொருந்தியிருக்கும், நல்லியல்புகளில் 'அடக்கம்' முதன்மையான தாகும். அடங்கியிருத்தல் என்றால் ஒரு செயலும் இன்றி முடங்கி இருத்தல் என்பதன்று. தீயன செய்யாதிருத்தலும், நல்லனவற்றைச் செய்ய வேண்டிய காலத்தில், செய்ய வேண்டிய முறையோடும் ஒழுங்கோடும் செய்தலுமாகும். 'அடக்கம்' யாரையும் யாருக்கும் அடிமைப்படுத்துவதும் அன்று; யாரும் யாரிடமும் கூனிக் குறுகி நடிப்பதும் அன்று. காந்தியடிகளுக்குப் பிடித்த குரங்குப் பதுமைகள் உணர்த்துவது என்ன? தீயவற்றைப் பாராதே! தீயவற்றைக் கேளாதே! தீயவற்றைப் பேசாதே! என்பது தானே! அதுவும் அடக்கமுடைமை தானே! திறன் வீணாகாதவாறு அடக்கி வைத்து, ஒருமுகப்படுத்திச் செயல் பட்டால் ஆற்றல் உடையதாய் அமையும். அடக்கி வைக்கவில்லையானால் தேவையற்ற காலத்தில் வீணாகி எப்பொழுது தேவையோ அப்பொழுது ஆற்றல் குன்றி வீழ்ச்சியை உண்டாக்கி விடும். அடக்கம் என்பது தேடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் இடைப்பட்ட 'சேமிப்பு நிலை” ஆகும். குளத்து மடைக்கு அடைப்பு இல்லாமல் எப்பொழுதும் திறந்தே இருந்தால் என்னாகும்? அடுப்பில் ஏற்றிய கலங்களை ஏன் மூடி வைக்கிறார்கள்? பொதுவாகவே பண்டங்களுடைய எல்லாப் பாத்திரங்களையும் ஏன் மூடி வைக்க வேண்டும்! எந்தப் பொருள் பிறர் எளிதில் காண இயலாதவாறு மறைத்துப் பாதுகாக்கப்படுகிறதோ அதன் மதிப்பும் உயரும்! கையிலும் பையிலும் தீப்பெட்டியை வைத்திருக்கிறோம். எதனால் நெருப்பாற்றல் அடங்கிக் கிடப்பதால் தீயை வைத்திருக்க முடியுமா? காப்பிடப்பட்ட மின் கம்பிக்குள் எவ்வளவு ஆற்றல் அடங்கிக் கிடக்கிறது. காப்பில் பழுது ஏற்பட்டு மின் கசிவு ஏற்படுமாயின் விளைவு என்னாகும்? தெரிந்து செயல்வகை, வலிஅறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் எல்லாம் எதற்கு? எண்ணிப் பார்க்க! பணிநேர வரையறை ஏன்? வார விடுமுறை ஏன் விட வேண்டும்? வணிக நிலையங்கள் எப்பொழுதும் ஏன் திறந்து வைத்திருப்பதில்லை? குறித்த நேரத்தில் மட்டும் இயங்குவது ஏன்? பெட்டியாயினும் வீடாயினும் தேவையுள்ள போதே திறக்கப்பட வேண்டும். தேவையற்ற போது மூடிப் பாதுகாக்க வேண்டும். "அன்றிவாம் என்னாது அறம் செய்க” "துன்பம் உறவரினும் செய்க துணவாற்றி, இன்பம் பயக்கும் வினை” "செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல்” 669 எனச் செயல்படத் தூண்டி அனைவரையும் வினைமாட்சியர் ஆக்க விரும்பும் திருவள்ளுவர். "காக்க பொருளா அடக்கத்தை” "யாகாவாராயினும் நாகாக்க" பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்” "கள்ளாமை காக்க தன் நெஞ்சு” 281 "தன்னைத் தான் காக்கின் சினம் காக்க! 305 "குற்றமே காக்க பொருளாக” 434 உட்பகை அஞ்சித் தற்காக்க" 883 என அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டுவதில் நுட்பம் இருக்கிறது. புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல் மனிதன் அடங்கி இருப்பது சிறப்பாகச் செயல்படுவதற்கு ஆகும். “அடக்கம் என்னும் முளையில் இருந்தே ஆற்றல் என்னும் மரம் வளரும்” "உயரமான கோபுரத்திற்கு ஆழமான அடித்தளம் அமைப்பர்”. "பிறரை அறிந்து கொண்டிருப்பவர் புத்திசாலி” "தன்னைத் தான் அறிந்து கொண்டுள்ளவன் - ஞானி” "பிறரை வென்றவன் பலசாலி” "தன்னைத் தான் வெற்றி கொண்டவன் - வீரன்" என்கிறார் இலாவொட்சே என்னும் அறிஞர். “ஒருவனை மக்களுள் மாணிக்கமாகச் செய்யக் கூடிய பண்புகள் பொறுமையும் அடக்கமும் தாம்” "தன்னை அடக்கத் தெரியாதவன் பிறரை எவ்விதம் அடக்கி ஆள இயலும்! “இரண்டாவது உலகப் போரில் கிட்லரை முறியடித்து வாகை சூடிய ஐசன் கோவர் அடக்கத்திற்கு அணி செய்பவர்களில் ஒருவர். மாபெரும் வெற்றிபெற்ற அம்மாபெரும் தளபதிக்குத் தற்பெருமை அணுவளவும் கிடையாது. ஒரு தடவை சர்ச்சில் அவரிடம் கூறினார்” ஐக், உங்களிடமுள்ள பண்புகளில் நான் மிகவும் விரும்புவது என்ன வென்றால் நீங்கள் புகழ் வேட்டைக்காரராக இல்லாதிருப்பது” என்று ஆம்! ஆபிரகாம் லிங்கன் போன்று ஐசன் கோவரும் புகழைச் சிறிது கூடப் பொருட்படுத்தாதவர். உயரிய மதிப்புள்ள விருதுகளையோ, உயரிய பெருமை வாய்ந்த படை நாடாக்களையோ அவர் அணிவதே கிடையாது. அவர் இங்கிலாந்தில் இருந்த பொழுது முக்கியமான கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் கூடச் செல்ல மறுத்து விட்டார். தம்முடைய அலுவலகம் “ஐசன் கோவரின் தலைமை அலுவலகம்” என்பதற்குப் பதிலாக 'நேச நாட்டுப் படைகளின் தலைமைச் செயலகம்” என்றே கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடுகள் பலவற்றைப் போரில் வென்று அடிமைப்படுத்திய பேரரசனைக் காட்டிலும் தம் ஐம்பொறிகளையும் தம் போக்கில் போக விடாது நன்னெறியில் இயங்க வைக்கும் துறவி ஆற்றலுடையவன் ஆவான். உலகில் செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள் எல்லாம் அடக்கம் உடையவர்களே! உலகில் இன்புற்று நிறை வாழ்வு வாழ்கின்றவர்கள் எல்லாம் அடக்கம் உடையவர்களே! உலகில் பல்வகையான சிக்கலுக்கு ஆளாகி அல்லல் படுபவர்கள் எல்லாம் அடக்கம் இல்லாதவர்களே! தனி மனித வாழ்விலும் குடும்ப வாழ்விலும், அரசியல் வாழ்விலும், தொழில் வாழ்விலும், தொண்டு நிலை வாழ்விலும் உயர்நிலை அடைய முடியாதவர்கள் எல்லாம் அடக்கம் இல்லாதவராகவே இருப்பர். "அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு” என ஒளவைப் பெருமாட்டி மூதுரையில் கூறுகிறார். அடக்கம் உடையவர் கோழையரும் அல்லர், அறிவிலாரும் அல்லர். அடக்கம் உடையவர் கற்றுணர்ந்த அறிஞர்; பேராண்மை மிக்க பெருவீரர். ஓடும் சிறு மீன்களைப் போக விட்டுப் பெரிய மீனின் வருகைக்காகக் கவனமுடன், அமைதியாகக் காத்து நிற்கும் கொக்குப் போன்ற செயல் ஆண்மையர். அடக்கம் உடையவனாக ஒருவன் எண்ணிப் பேசி, செயல்புரிந்து வாழ்ந்தால் அவ்வாழ்வு அவனை எங்கே கொண்டு சேர்க்கும்? மன அடக்கமும் இல்லை, வாய் அடக்கமும் இல்லை; செயலிலும் அடக்கம் இல்லை; அடங்காமையாகிய இத்தகைய இழிதன்மை ஒருவனை எங்கே கொண்டு சேர்க்கும்? என்னும் வினாக்கட்கு வினயமுடன் விடை கூறுபவர் போல், "அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” என்கிறார். அடக்கம் என்னும் உயர்ந்த பண்பு வாழப் பிறந்த அனைவரிடமும் அமைந்திருக்க வேண்டிய இன்றியமையாப் பண்பாகும். அப்பண்பால் உயர்நிலை எய்திய மாந்தர் அவ்வவத் துறையில் புகழ்க்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள், "சான்றோர் சான்றோர் பாலர்” என்னும் நன்மொழிக்கு ஏற்ப அப்புகழாளர் கூட்டத்தில் நீயும் சேர்த்து எண்ணப்படுவாய்! அடக்கமின்றி நல்வழி பற்றிச் சிந்திக்காமல் மனம்போன போக்கில் வாழ முற்பட்டால் நீ வாழ்வில் என்றும் ஒளிப்பகுதியில் அண்டவும் முடியாது; புகழ் பெறவும் இயலாது. வாழ்வே இருளாகும். நீங்காப் பழியே வந்து சேரும்! அடக்கம் உடையவன் மேலும் உயர்வான்; உயர்த்தப் படுவான். அடக்கமிலான் மேலும் மேலும் கீழ்நிலை அடைவான்; கீழானவனாகவும் கருதப்படுவான். உயர்ந்த மானிடப் பிறப்பு உற்ற மனிதனே! அடக்கம் உடையவனாய் விளங்கி உயர் புகழ் எய்துக என வள்ளுவர் வாழ்த்துகிறார். அடங்காமை ஆகிய கீழான தன்மை நம்மை உயர விடாமல் தடுப்பதுடன், நம்மைக் கீழ்மைப்படுத்தும் பேரிருளில் தள்ளி விடும். இருளில் நாம் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனத் திருவள்ளுவரை வினவுவோம்! வள்ளுவர் வழங்கும் விடை. "காக்க பொருளா அடக்கத்தை” என்பதாகும். காக்க! எதை? அடக்கத்தை எது போல் பொருளா' - பொருளாக - பொருளைப் போல் அடக்கத்தை நாம் பாதுகாக்கும் உயர்ந்த பொருள்களிலும் மேலானதாய்க் கருதிக் காக்க வேண்டும். அடக்கத்தைக் காத்தால் நாம் எதனை அடையலாம்? அடக்கத்தைக் காத்தால் ஆக்கத்தை அடையலாம்! அடக்கத்தால் மட்டும் தான் ஆக்கம் பெற முடியுமா? இல்லை எத்தனையோ தன்மைகளால் ஆக்கம் பெற இயலும். அடங்காமையால் ஆக்கம் பெற்று விடலாம். ஆனால் அடக்கத்தால் பெறும் ஆக்கமே உயிர்க்கு நலம் தரும் ஆக்கமாகும். அடக்கத்தைக் காட்டிலும் உயிர்க்கு நலம் தரும் ஆக்கம் வேறு ஒன்றும் இல்லை என உறுதி தரும் முகத்தான் "ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு” எனப் பகர்கிறார். "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” 247 "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை” என்பது வள்ளுவ நெறி. பொருளின்றி இவ்வுலகில் உயிருடன் வாழ இயலாது. பொருளைத் தேடுவது கடமை; பொருளைக் காத்தல் உரிமை; பொருளைத் தக்க வழியில் செலவிடல் பெருமை. நம்மையும் நாம் தேடிய பொருளையும், நமக்குத் தேவையான பொருளையும் காக்கவே வீடு கட்டி வாழ முற்பட்டோம். பனி, மழை, வெயில் காற்று முதலியன எல்லை தாண்டும் போது அழிக்கும் ஆற்றலாகிறது. அவ்வியற்கைக் கொடுமையி லிருந்தும் பொருள்களைக் காக்க வேண்டும்; திருடர்கள் தொல்லையிலிருந்து காக்க வேண்டும், விலங்குகள் பறவைகள் புழு பூச்சிகள் அழித்து விடாமலும் கவர்ந்து விடாமலும் காக்க வேண்டும். பாதுகாக்க வலிய வீடுகளை அமைத்தோம்; வீடுகளுக்கு வலிமையான கதவுகளையும் பூட்டுகளையும் பொருத்தினோம். மதிப்புள்ள பொருள்களைப் பொறுப்புடன் காக்க இரும்புப் பெட்டிகள் பேழைகளை வைத்திருக்கிறோம். வசதி வாய்ப்புக் கூடக் கூட நாய் காத்து நிற்கிறது. காவலர் கருவி ஏந்தி வாயிலில் நின்று காத்து வருகிறார். பொருள் களவு போகாமல் காத்தலும் காவல் தான், பொருள் கெட்டுப் போகாமல் காப்பதும் காவல் தான்; எந்தப் பொருளை எந்தப் பக்குவத்தில் வைத்திருக்க வேண்டும் அப்படி வைத்திருக்க வேண்டியதும் காக்கும் முறைகளில் ஒன்றே! இப்படிப் பொருளை அதன் தன்மைக்கு ஏற்பக் காத்துப் பயன்படுத்தினால் தான் பொருளால் ஆகும் பயனைத் அனுபவிக்க முடியும். அப்படி வாழ்வியலுக்குத் தேவைப்படும் பொருள்களை நாம் பாதுகாத்து வருவதற்கு மேலாக நாம் காத்து வர வேண்டிய பண்பியல் அகப்பொருள் அல்லது உணர்வுப் பொருள் ஒன்று உண்டு. அதுதான் அடக்கமுடைமை. அவ்வடக்க முடைமையைப் போல மனித உயிர்க்கு நிலையான ஆக்கம் தருவது அதாவது நலம் தருவது வளர்ச்சியை நல்குவது; செல்வம் ஆவது வேறு ஒன்றும் இல்லை என்பதை, "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங் கில்லை உயிர்க்கு” எனும் குறள் வழி விளக்குகிறார். தாம் நரைதிரை மூப்பின்றி இருப்பதற்குரிய காரணங்களை அடுக்கி வரும் சங்கச் சான்றோர் பிசிராந்தையார் நிறைவாகக் கூறும் காரணம், "ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே” என்பதாகும். "அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது” என இயம்புவது நாலடியார். "சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித், தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே! என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் முற்றிய நெற்கதிர் தலைதாழ்ந்து நிற்பது உயர்ந்த நூல்களைக் கற்றுணர்ந்த பெருமக்களின் அடக்கமுடைமையை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளதாக, அருமையான உவமை வழி விளக்குகிறது. "செறிவறிந்து சீர்மை பயக்கும், அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்” என்பது சீர்மை பயக்கும் செறிவுமிக்க குறள்! கற்க வேண்டுவனவற்றை எல்லாம் கற்க வேண்டும்! அறிய வேண்டுவனவற்றை எல்லாம் அறிய வேண்டும்! நல்லறிஞர் காட்டும் நன்னெறிப் படி அடங்கி நடக்க வேண்டும்! எந்த அளவிற்கு அடக்கமுடையவராய் வாழ்கிறோமோ அந்த அளவிற்கு நாம் சிறப்படைய இயலும்! அடக்கம் பெருகி உயர உயரச் சிறப்பும் பெருகி உயர்ந்து கொண்டே செல்லும் என்பது வள்ளுவர் கருத்து. வள்ளலார், "படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றவிட்டு அடக்கிப் பார்த்திடலும் அடக்கி உறும் பரிசமெலாம் அடக்கிச் தடிப்புறும் ஊண்சுவை அடக்கிக் கந்தமெலாம் அடக்கிச் சாதி மதம் சமயமெனும் சழக்கையும் விட்டு அடக்கி மடிப்படக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வனக்குரங்கும் வியப்ப என்றன் மனக்குரங்கு குதித்த துடிப்படக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்த சிகாமணியே!” என்கிறார். கல்வி, கேள்வி எலாம் அடக்கம் பார்வை அடக்கம், தொடல் அடக்கம், சுவை அடக்கம், முகர்வு அடக்கம், சாதி மத சமயச் சழக்கு அடக்கம், சோம்பல் அடக்கம், துடிப்பு அடக்கம் என எத்தனை அடக்கங்களைச் சுட்டுகிறார். வள்ளுவரின் அடக்கமுடையை ஆழமாகச் சிந்தித்து விளக்கிய அகலவுரை போலல்லவா விளங்குகிறது வள்ளலார் கூற்று. நாம் கற்ற கல்வியால் நாம் ஒரு நிலைக்கு வருகிறோம்! அது போல் நாம் பெற்ற அறிவின் திறத்தாலும் நாம் ஒருநிலை அடைகிறோம். நாம் ஏற்றுள்ள பணிக்கு என ஒரு நிலை அல்லது ஒரு தகுதி, ஒரு தரம் உண்டு! பிறந்த குடும்பத்தின் தகுதிக்கு ஏற்ப நம்மிடம் உலகம் ஒரு நிலையை எதிர் பார்க்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அறிவறிந்த மக்கட் பிறப்பினர்; அறநெறியை நன்கு உணர்ந்தவர்கள். காலம் மாறினாலும், இடம் மாறினாலும், பணி மாறினாலும் சூழ்நிலை மாறினாலும் நாம் நம் தகுதியிலிருந்து மாறாத உறுதிப் பாட்டுடன் அடக்கம் உடையவராய் விளங்குவோமானால் நாம் குறைந்த கல்வி கற்று, எளிய குடும்பத்தில் பிறந்து கடைநிலை ஊழியராய்ப் பணி புரியும் தோற்றப் பொலிவற்ற குள்ளராக இருப்பினும், நாம் உயர்ந்து ஓங்கி வளர்ந்த மலையினும் தகுதியால் நாமே மிக உயர்ந்தவர்களாகச் சிறந்து விளங்க முடியும் என்பதை, "நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” எனப் பேருள்ளத்துடன் எடுத்துக் காட்டுகிறார். "அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே” என மலைக்கு இலக்கணம் சொல்கிறது. நன்னூல் என்னும் இலக்கண நூல் "சென்று கண்டோர்க்கும் தோன்றும் பெருவரை நின்று கண்டோர்க்கும் தோன்றும்!” எனப் புறநானாறு கூறுகிறது. அதனால் மலை போல் அடக்கமுடையவர் அண்மைப் புகழும் சேய்மைப் புகழும் ஒரு சேரப் பெறுவர் என்பது விளக்கமாகிறது. தன் நிலையில் வேறுபடாது அடங்கி இருப்பவனது தோற்றம் மலை போல் உயர்ந்தது என்று கூறாமல், மலையினும் பெரிது என்று கூறாமல் திருவள்ளுவர் 'மலையினும் மாணப் பெரிது எனக் கூறும் நுட்பம் எண்ணி மகிழத் தக்கது. மலையின் உயர்விற்கு மலை எடுத்துக் கொண்ட முயற்சி, எதுவும் இல்லை . அது அதன் இயற்கையாகும். காற்று மழை, வெயில் முதலிய இயற்கையின் தாக்குதலுக்கு ஏற்பத் தோற்றத்தில் சில வேளைகளில் மாறும் நிலையும் அதற்கு உண்டு. பல சூழ்நிலைகள் மனிதனை மோதி அசைத்தாலும், அவற்றை உடலால் தாங்கிக் கொண்டு மனத்தை ஒருநிலைப் படுத்தி அடக்கம், உடையவனாய் வாழ்வது எளிதன்று. எனினும் அதனையும் இயல்பாகக் கொண்டு அடங்கி வாழ்பவன் மிக உயர்ந்த மனிதன் தான். ஆகவே தான் அடக்கம் உடையான் உயர்வு மலையினும் மிகப் பெரிது எனக் கூறினார் போலும்! எல்லார்க்கும் நன்மை தரும் நல்லியல்புகளில் பணிவுடைமையாகிய அடக்கம் உடைமையும் ஒன்றாகும். கல்வியால், அறிவுப் பெருக்கால், பட்டத்தால், பதவியால், பணத்தால், தொழிலால் பொருளால் வசதியும் வாய்ப்பும் பெற்றுச் சமுதாயத்தில் மேட்டுக் குடிமக்களாகக் கருதப்படுவோர். தாம் பெற்ற செல்வத்தால் செருக்கடைதல் நன்றன்று எனத் திருவள்ளுவர் கருதுவதால் "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை ” (439) என வழி காட்டினார். தம்மிலும் பெருமைக்குரியவர் உலகில் பலர் இருப்பர். என எண்ணிப் பார்க்க வேண்டுமேயொழியத் தம்மைத் தாமே பெரிதாகக் கருதிப் பாராட்டிக் கொள்ளல் ஆகாது. வசதி வாய்ப்பால் நாம் வளர்வதற்கு ஏற்பவே அடக்கமுடைமையிலும் நாம் வளர்ந்து கொண்டே வருதல் வேண்டும் என வள்ளுவர் விரும்புவதால் தான் “பெருக்கத்தில் வேண்டும் பணிதல்” (963) என மானத்தில் வேண்டினார். அவரே பெருந்தன்மையாளர் எப்பொழுதும் பணிவுடையவராகவே இருப்பார் என்பதையும் “பணியுமாம் என்றும் பெருமை” (976) என்றும் செருக்கு இல்லாதிருப்பதே பெருமைக்குணம் என்பதைப் "பெருமை பெருமிதம் இன்மை ” எனப் பெருமையிலும் சுட்டிக் காட்டுகிறார். ஏழையர், கீழ்நிலைப் பணி புரிவோர் அடக்கமுடையவராய் இருப்பின் அடையும் நன்மையைக் காட்டிலும் செல்வம் உடையவரிடம் அடக்கமும் அமைந்திருப்பின் அது அவர்கட்குக் கூடுதல் பெருமையையும் சிறப்பையுமே நல்கும்! ஆகவே, செல்வர்கள் செல்வம் தேடியது பெரிதில்லை. அடக்க முடையவராய் விளங்குவதே மேலும் ஒரு செல்வம் பெற்ற பெருஞ்சிறப்பாகும்! அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை குதிரை மீது அமர்ந்து சாலை வழியே வந்தார். பெரிய பதவி எதிலும் இல்லாத ஒருவர் குதிரையில் ஏறி அவர் எதிரே வந்தவர். இலிங்கனைக் கண்டவுடன் குதிரையிலிருந்து இறங்கித் தலையில் அணிந்திருந்த தொப்பியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, தலை தாழ்த்தி நின்று மிகப் பணிவுடன் வணங்கினார். இலிங்கனும் அவரைப் போலவே குதிரையை விட்டு இறங்கிப் பணிவுடன் பதில் வணக்கம் செலுத்தினார். அதனைக் கண்டு வியந்த ஒரு பெரும் பதவியாளர் இலிங்கனிடம் 'சாதாரணமான அவர் குதிரையை விட்டு இறங்கிப் பணிவுடன் வணங்கினார் என்றால் நீங்களும் இப்படிப் பணிந்து வணங்க வேண்டுமா? என வினவினார். இலிங்கன் அவர்க்கு அளித்த விடை “பணிவுடைமையிலும் என்னை யாரும் வெற்றி கொள்ள விட மாட்டேன்'' என்றாராம். இப்படிப் பட்டவர்கள் மண்ணில் என்றும் வாழ்வார்கள் எனத் தெரிந்து தான், "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” எனப் பாடினார் போலும்! தூது வந்த கண்ணபிரானைப் பணிந்து போற்றிச் சிறப்புப் பெற்ற பெரியவர் விதுரர், அதனை அறிந்த துரியோதனன் அவரைத் தகுதியற்ற சொற்களால் பழித்து உரைத்தான். அதனால் வேதனையுற்ற விதுரன், துரியோதனனுக்காகப் போரிடுவதில்லை என முடிவு செய்து வில்லை முறித்துப் போட்டார். "ஒருசிலை முறித்த சீற்றம் என்கொல்லோ உரைசெய் என்றான் கண்ணன்” விதுரர் அளித்த விடை, "செல்வம்வந் துற்றகாலைத் தெய்வமும் சிறிது பேணார் சொல்வன அறிந்து சொல்லார், சுற்றமும் துணையும் நோக்கார் வெல்வதே நினைவ தல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார் வல்வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்” ஆகவே, அடக்கமிலார்க்குத் துணை நிற்பது தீமைக்குத் துணை நிற்பதாகும். அடக்கமிலார் உரிய செல்வத்தையும் இழப்பர். இவ்வெடுத்துக் காட்டு அடங் காமையின் அழிவு காட்டும். விவேகானந்தர் பெரும்பாலான வேளைகளில் கண்ணை மூடிக் கொண்டே பள்ளியில் பாடங் கேட்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் என்பது வரலாறு. எழுதும் போதும் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைப் பார்க்கும் போது மட்டுமே கண்ணுக்கு வேலை; சொல்வதைக் கேட்கும் போது செவிக்கு மட்டும் தானே வேலை. அதோடு ஒருமுகமான கவனத்துடன் கேட்க முடியும். கவனச் சிதைவிற்கு இடம் இல்லை . கவனச்சிதைவு இல்லையேல் கேட்ட பாடம் மனத்தில் தெளிவாகப் பதியும். தெளிவாகப் பதிந்து விட்டால் என்றும் நினைவில் நின்று, உரிய பொழுதில் பயன்தரும். நெப்போலியன் போர்வீரனாக இருக்கும் பொழுது, பாசறையில் ஓய்வு நேரத்தில் எல்லா வீரர்களும் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், நெப்போலியன் அமைதியாக ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பானாம்! அதனைக் கண்டு அவனைக் கேலி செய்தவர்களும் உண்டு! ஓர் இளம் பெண் மிகுதியாகக் கேலி செய்தாள். அவன் அதனைக் காதில் வாங்கியும் வாங்காதவனைப் போல் படிப்பிலேயே கவனமாக இருந்தான். எனினும் அந்தப் பெண்ணை நன்றாக அடையாளம் வைத்துக் கொண்டான். பத்தாண்டுகள் கடந்த பின்னர் நடந்த போரின் போதும் அவ்வூரில் பாசறை அமைக்கப்பட்டிருந்தது. வீரர்களின் கலை நிகழ்ச்சிகளைக் காண வந்த ஊர்மக்களுடன் வந்திருந்த அப்பெண்ணிடம் தன்னை அடையாளம் தெரிகிறதா என வினவினான் நெப்போலியன். முன்பு படை வீரனாக வந்தான். இப்பொழுதோ பேரரசனாக வந்துள்ளான். ஒரு முகப்பட்ட நோக்கே அவனை உயர்த்தியது என்பது வரலாறு. திருவள்ளுவர் நம்மை ஒரு நீர் நிலைக்கு அழைத்துச் சென்று அங்கு இயங்கும் ஆமைகளைக் காட்டினார். அது இயங்கும் போது அதன் நான்கு கால்களும் ஒரு தலையும் ஒட்டிற்கு வெளியே அசைவது நன்கு தெரிகிறது. ஒரு சின்னஞ்சிறு கூழாங்கல்லைக் கையில் எடுத்து ஒருவர் ஆமையின் மேல் போடுகிறார். தனக்கு ஏதோ துன்பம் நேரப் போகிறது என்பதை அறிந்த ஆமை தன் கால்களையும் தலையையும் வெளியே தெரியாதவாறு தன் ஓட்டுக்குள் மறைத்துக் கொள்கிறது. இப்பொழுது ஆமை ஓர் இயக்க மற்ற 'பாறை' போல் தோற்றமளிக்கிறது. அதனை நன்கு பார்த்துக் கொள்! 'ஆமை' - ஓர் ஆசான்; அதுவும் நடந்து செய்முறையில் செய்து காட்டும் ஆசான் ஆகும்! என்பதைத் தெரிந்துகொள் என் கிறார். ஓர் ஓட்டுள் தன் ஐந்து உறுப்புகளையும் ஆமை அடக்குவது போல் நாம் நம் ஐம்பொறி களையும் தேவைப்படும் பொழுது முறையே பயன்படுத்தவும் ஏனைய வேளைகளில் அடக்கி வைத்திருக்கவும் ஆகிய ஆற்றலைப் பெற்றுவிடுவோமாயின், நாம் துன்ப துயரம் இன்றி வாழலாம்! பொறிகளைக் கட்டுக்குள் வைக்கத் தவறுவதால் தான் தொல்லைக்கு ஆளாகிறோம்! பார்க்கக் கூடாததைப் பார்ப்பதாலும், கேட்கக் கூடாததைத் கேட்பதாலும், பேசக் கூடாததைப் பேசுவதாலும் உண்ணக் கூடாததை உண்பதாலும், அளவின்றி வேளையின்றி உண்பதாலும், நுகரக் கூடாததை நுகர்வதாலும், தொடக் கூடாததைத் தொடுவதாலும் நாமே நமக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிக் கொள்கிறோம். ஐம்பொறிகளையும் கட்டுக்குள் அடக்கிக் காத்தால் நாம் அஞ்சத் தேவை இல்லை. அஃது என்றும் வலிய அரணாக அமைந்து காக்கும் என நம்பிக்கை ஊட்ட அமைத்த குறளே, "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தற்காவல் குறளாகும். "தன்னைத் தான் காக்கின் சினம் காக்க" 305 என்னும் வெகுளாமைக் காவலையும் இணைத்து நோக்கினால் இன்னும் பல கருத்துகள் புலப்படும். திருவள்ளுவர் சொல்லறம் பற்றிப் பேச இனியவை கூறல், வாய்மை, சொல் வன்மை, அவை அறிதல், புறங்கூறாமை, பயனில் சொல்மை, அவை அஞ்சாமை ஆகிய ஏழு முழு அதிகாரங் களைப் பயன்படுத்திக் கொண்டவர். "நாநலம் என்னும் நலனுடைமை; அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று” 641 சொல்வன்மை இணையற்ற உயர் செல்வம் எனக் கூறுகிறார். "திறனறிந்து சொல்லுக சொல்லை ; அறனும் பொருளும் அதனினூஉங் கில்” 644 திறனறிந்து சொல்லும் சொல்லே சிறந்த அறமும் பொருளும் ஆகும் எனக் கூறும் திருவள்ளுவர். "ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு” 642 நன்மையும் தீமையும் ஒருவர் சொல்லும் சொல்லால் வரும். ஆகவே தீமை தாராத சொற்களைக் கண்டுணர்ந்து பேசுக என ஆணையிடுகிறார். "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100 ஆகவே, இன்னாச் சொல்லை இயம்பாதே! 196 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்” 183 ஆகவே, உயிரே போவதாயினும் புறங்கூறாதே "பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல்” பயனற்ற சொற்களைப் பேசிப் பதடி ஆகாதே "தன்நெஞ் சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” 293 எனவே பொய்பேசி நெஞ்சைச் சுட்டுக் கொள்ளாதே என்றெல்லாம் கூறுவதுடன் அமையாது. அடக்கமுடைமையில் நாவடக்கத்தை மட்டும் சிறப்பாக வலியுறுத்தத் திருவள்ளுவர் மூன்று குறட்பாக்களை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதில் இருந்தே நாவடக்கத்தின் இன்றியமையாமை புலப்படும். 'யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்பது நாகாக்க வேண்டும் குறட்பா. பொறிகள் ஐந்துமே காக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தும் போது ஐம்பொறிகளையும் அடக்குவது கடினம் ஆயிற்றே சலுகை வழங்கக் கூடாதா? என எவராவது வேண்டியிருப்பர்! ஐந்தை அடக்க முடியவில்லையானால் ஏதாவது நான்கினை அடக்கு! அதுவும் இயலாது எனக் கருதினால் மூன்றையாவது அடக்கு அதுவும் முடியாது எனக் கருதினால் இரண்டையாவது அடக்க முயற்சிசெய்! அதற்கும் தயங்கினால் ஐந்தில் ஒன்றையாவது அடக்கு ஒன்றைத் தான் அடக்க முடியுமானால், அந்த ஒன்று எது என்பதை நான் கூறுவேன். அந்த ஒன்று நாவடக்கம் ஆகும். அடக்கத்தில் சிறந்தது நாவடக்கம் ஆகும். வேறு நான்கு பொறிகளையும் அடக்கிக் காக்கத் தவறினாலும் பெருங்கேடு விளையாது. நாவைக் கட்டாயம் அடக்கிக் காக்க வேண்டும். அதிலும் தவறுவாயானால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைய நேரிடும் என எச்சரிக்கும் முகத்தான் கூறிய குறளே, இதுவாகும். "ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும், புலைநரகத்து உய்விக்கும் "காக்கப் படுவன் இந்திரியம் ஐந்தினும் நாக்கு அல்ல தில்லை நனிபேணு மாறே” என வளையாபதி வலியுறுத்தும் நாவடக்கமும் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. "அடல்வேல் மன்னர் ஆருயிர் உண்ணும் கடலந் தானைக் காவலன் உரைக்கும்” கடல்போல் பரந்த படைவீரர்களைக் கொண்ட பெருமன்னன் சேரன் செங்குட்டுவன் ஆவான். "பால குமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனக் கூற்றம் கொண்டு இச்சேனை செல்வது” எனச் சிலப்பதிகாரம் பகர்கிறது. நாகாவாக் கனகனும் விசயனும் கற்புக்கரசி கண்ணகியின் சிலை வடிக்கக் கல் சுமக்கப் பணிக்கப் பட்டனர். வில்லினை முறித்ததேன் என வினவிய கண்ணனுக்கு விதுரர் இறுத்த விடை "ஆவது கருதானாகில் அமைச்சர் சொல் கேளா னாகில் வீவது குறியானாகில் விளைவதும் உணரான் ஆகில் நாவது காவான் ஆகில் அவனுக்கா நடந்து போரில் சாவது பழுது என்று அன்றோ சகத்துளார் சாற்றுகின்றார். எனக் கூறும் வில்லிபாரதப் பாடல் பிறிதொரு கோணத்தில் வழங்கும் விளக்கமாய் விளங்குகிறது. ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்” 128 “நூற்றைக் கெடுக்குமாம் குறுணி” "ஒரு குடம் பாலில் ஒருதுளி நஞ்சு” என்னும் பழமொழிகள் இக்குறளின் கருத்தை வழிமொழிகின்றன. நாம் பல நல்ல சொற்களையே பேசி வந்துள்ளோம்! ஆயிரத்தில் ஏதாவது ஒரு சொல் தீய சொல்லாய் அமைந்து தீய பொருளையும் தீய பயனையும் உண்டாக்கி விடுமானால், ஏனைய 999 நல்ல சொற்களின் நற்பயனையும் கெடுத்து விடும்! ஆகவே நல்லதையே பேசுகின்ற போழ்தும் இடையில் மறந்தும் கூடத் தீய சொல் ஒன்று கூடக் கூறாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஒரு சொல் தானே! தெரியாமல் சொல்லி விட்டேன், புரியாமல் சொல்லி விட்டேன். அப்படி நினைத்துச் சொல்லவில்லை. மறந்து சொல்லி விட்டேன்! பொறுத்துக் கொள்க! என வேண்டியும் பயனில்லை. 'நெல்லைச் சிந்தினால் பொறுக்கிக் கொள்ளலாம்! சொல்லைச் சிந்தினால் பொறுக்க முடியுமா? தூய வெள்ளை நிற ஆடையை ஒரு துளி கறுப்பு மை அழுக்காக்கி விடும் ஆகவே தீய சொல்லைப் பேசவே பேசாதே! "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” தீய சொல்லை விடத் தீயே மேலானது. தீ பயன்படுத்து வோனைப் பொறுத்து நன்மையும் செய்யும் தீமையும் செய்யும்! தீயால் உடலில் சுட்டால் புண்ணாகும்! புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றிவிடலாம். வெளியே சுட்ட இடத்தில் வடு வேண்டுமானால் நிலைத்து இருக்கலாம். புண் உறுதியாக ஆறிவிடும்! ஆனால் நாவினால் கூறிய தீய சொல் உண்டாக்கிய புண், உள்ளத்தில் என்றும் ஆறாது. நீங்காத வடுவாக நிலைத்துவிடும். ஆகையால் பிறருடைய மனத்தைப் புண்படுத்தும் சொற்களை என்றும் எங்கும் எச் சூழ்நிலையிலும் கூறாது நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்! "காவாது ஒருவன் தன் வாய்திறந்து சொல்லும் சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து” என்னும் நாலடிப் பாடலின் கருத்தும் இதற்கு அரண் செய்கிறது. "எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச் சொல் தன்னெஞ்சில் கொள்ளி வைத்தாற் போல் கொடிது” என்னும் அறநெறிச் சாரத்தின் சாரமும் ஒன்றேயாகும்! 'கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து” என்னும் குறள் நோக்கும், "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை” 594 என்னும் ஊக்கம் உடைமைக் குறளின் நோக்கும் ஒன்றே! அற நூல்களைக் கற்றறிந்து சினம் வாராமல் காத்து அடக்கம் உடையவனாய் ஒழுகும் வல்லமை உடையவனை, அறம் தானே தேடிச் சென்று அவனைக் கண்டு பாராட்டி மகிழ்வதற்குத் தக்க நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் எனக் கூறுகிறார். வாயடக்கிக் கண்ணடக்கிச் செவியடக்கி மகிமையோடு வாழ வேண்டின் தீயடக்க விறகெடுக்கும் செய்கைபோல் நீ மனத்தை அடக்க வேண்டும்! பேயடக்கம் போல் உலகைப் பேயாட்டம் ஆட்டி வரும் பேயாம் நெஞ்சை நீயடக்கி நின்றாயேல் நின்எதிரே நிலமடங்கி நிற்கு மன்றோ ? எனச் செகவீர பாண்டியனார் அருமையான விளக்கம் அளித்துள்ளார். அடங்காமல் இறுமாப்பு மிகுந்தால் அது இருளில் உய்த்துவிடும் என முதற் குறள் கூறுகிறது. 'ஆரிருள்' எனக் கூறுவதாலும் 'உய்த்து விடும்' என்னும் உறுதி காட்டும் சொல் முடிவினாலும் இருளில் இருந்து மீள்வது கடினம் என்பதும் உணர்த்தப் படுகிறது. அடக்கம் ஓர் அறம் ஆதலால் 'ஆக்கம் அதனின் ஊங்கில்லை ' என அறத்திற்குக் கூறியாங்கே அடக்கத்திற்கும் கூற நேர்ந்தது. 'அறன் ஈனும் இன்பமும் ஈனும் பொருள்' என்றபடி அடக்கமும் நலங்கள் தரும். ஆகவே பொருளைக் காத்துக் கொள்வது போல அடக்கத்தையும் காத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு அடக்கம் பற்பல வழிகளில் புலப்படக் கூடியது. அவ்வழிகளில் எல்லாம் அடக்கத்தைக் காத்து வருதல் நல்லது. 'ஆற்றின் அடங்கப் பெறின்' 'அறிவறிந்து அடங்கப் பெறின்' எனவும் வரும் தொடர்களை நினைவு கூர்தல் வேண்டும். நிலையில் திரியாத அடக்கம், உயர்ந்தோர் எளியோர்க்கும் பணிபுரியும் பணிவாகிய அடக்கம், ஐம்புலன் அடக்கம், நாவடக்கம், தீச்சொல் அடக்கம், சின அடக்கம் முதலிய பலவகையான அடக்கங்களைக் குறள்வழியே கண்டோம்! இவற்றுள் நாவடக்கத்திற்கு மட்டும் திருவள்ளுவர் மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். நாவடக்கம் இல்லா விட்டால் சொன்ன சொல் பொய்த்துப் போகும், தீய சொற்கள் வெளிப்படும்; மறக்க முடியாதபடி பிறரைப் புண்படுத்தும் என்றெல்லாம் விளக்கிக் கூறுவதுடன் காத்துக் கொள்ளும் பொறுப்பில் 'நாவடக்கம்' காத்தலே முதன்மையானது என்பதை உணர்த்த 'யாகாவா ராயினும் நாகாக்க' என வேண்டியுள்ளார். அறம் நிலை பெறுவதற்கு அடக்கம் இன்றியமையாதது என்பது வள்ளுவர் முடிவு. 14. ஒழுக்கமுடைமை நம் வாழ்வு, குறிக்கோள் உடைய வாழ்வாக அமைய வேண்டும்! குறிக்கோளை அடையச் செய்யத் தக்க செயல்களையே செய்தல் வேண்டும்! செய்யும் செயல் பயனுடையதாகவும் இருக்க வேண்டும். செயலில் வெற்றியும் பெற வேண்டும்! உயர்ந்த குறிக்கோள், தக்கசெயல், நிறைபயன், சிறந்த வெற்றி எவ்வளவு முதன்மையோ அவ்வளவு முதன்மை! இல்லை! இல்லை! அதை விட முதன்மை அதனை அடையும் வழியும் செயல்பாட்டு முறையும் என்பதை முதலில் உணர வேண்டும். தீமை தராத சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வழியில் செயல் புரிந்து பழக வேண்டும்! தொடர்ந்து பழகி வழக்கமாக்கிக் கொண்டால் அதுவே ஒழுக்கமாய் நிலை பெறும்! வான் மழையின் முறையான ஒழுக்கமே இவ்வுலகை, உயர் உலகாக்கும் மழை நீரன்ன ஒழுக்கமே மனிதனை உயர் மனிதனாக்கும்! ஒழுக்கு - ஒழுங்கு ஆகி ஒழுக்கம் ஆகும். வழியில் செல்லுதலும் வேண்டும். வழியில் செலுத்துதலும் வேண்டும்! நாம் உலகில் தோன்றிய முதல் மாந்தர் அல்லர்; நமக்கு முன் உலகில் தோன்றிய கோடான கோடி மாந்தர்களில் உயர்வாழ்வு வாழ்ந்தவர்கள் எண்ணற்றோர். அவர்கள் வாழ்ந்து காட்டிய நல்லொழுக்க நெறிகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்குகள் ஆகும். விளையாட்டு வீரர்கள் நல்ல பயிற்சி பெற்றுத் திறமையாளர்களாக விளங்கினாலும் ஆட்ட விதிகளைப் பின்பற்றி விளையாட வேண்டும். எல்லைக் கோடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் அப்படியானால் தான் வெற்றி பெற இயலும், பெற்ற வெற்றியும், உண்மையான வெற்றியாக மதிக்கப்படும். கட்டப் போகும் கட்டடத்தின் வரை படம் போன்றது ஒழுக்க நெறிகள்; கட்டடத்தின் அடித்தளம் போன்றது அடிப் படையான ஒழுக்கங்கள் கட்டுமானத்திற்குத் தேவையான பொருள்களை அளவோடும் பயன்படுத்துதல், தொடக்கம் முதல் பணி முடிவுறும் வரை அனைத்து வேலைகளையும் கவனத்துடன் கண்காணித்து வருவது போன்று, மனித வாழ்வின் தொடக்கம் முதல் நிறைவு வரை முறையான பாதையில் வாழ்ந்து வரப் பின்பற்றும் நெறியே ஒழுக்கமாகும். அணை கட்டித் தேக்கிய நீர் வீணாகாமல் தக்கவாறு பயன்படுத்திப் பயன் கொள்ளப் பின்பற்றும் நெறிமுறை சட்ட திட்டம் போன்றதே ஒழுக்கம். உழைத்துத் தேடிய உயர் பொருளைத் தக்கவாறு பாதுகாத்தல் போன்றது 'அடக்கமுடைமை' என்றால் - தேடிய செல்வத்தைத் தக்க காலத்தில் உரிய செயலுக்குத் தக்க திட்டத்துடன் தக்க வழியில் செலவிடுவது போன்றது 'ஒழுக்கமுடைமை' ஆகும்! இருப்புப் பாதை அமைப்பே தொடர் வண்டி இயக்கத்தைச் செப்பம் ஆக்குகிறது. நாம் செல்ல வேண்டிய ஊர்க்கு, எப்படியும் போகலாம் என்று மனம் போன போக்கில் போகாது, உரிய நல்ல தடம் எது என்பதை அறிந்து அப்பாதை வழி சென்றால் தான் உரிய ஊர்க்குக் குறித்த நேரத்தில் அல்லல் இன்றிப் போய்ச் சேர முடியும். அது போல் நம் வாழ்க்கையாகிய பயணத்தை இன்னலின்றி இன்பமாக மேற்கொள்ள முன்னோர்கள் போட்ட நல்ல சாலைகள் போன்றனவே ஒழுக்க முடைமையாகும். "உலகம் வேண்டுவது ஒழுக்கமே! தன்னலம் தீய ஒழுக்கம் தன்னலம் அற்றதே நல்ல ஒழுக்கம்” என்கிறார் விவேகானந்தர். அப்படிக் கூடப் பகுக்கத் தேவையில்லை. தன்னலம் கருதிச் செயல்பட்டாலும் பொது நலம் கருதிச் செயல்பட்டாலும் பிறர்க்குத் தொல்லையோ துயரமோ விளைவிக்காததும், செயல் படுவோருக்குப் பெருமையும் சிறப்பும் நல்குவது மாகிய உயர்நெறியே உலகம் விரும்பும் நல்லொழுக்கம் எனக் கூறலாம். "ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பதே ஒழுக்கமுடைமையின் முதற்குறள். மனிதன் பெற வேண்டிய சிறப்புகள் அனைத்தையும் பெற்றுத் தருவதற்கு அடிப்படையாய் விளங்குவது அவரவர் பின்பற்றி வாழும் நல்லொழுக்கமே ஆகும். ஆகவே நாம் ஒழுக்கத்தைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். எதைப் போல காக்க வேண்டும்? பொன்னைக் காப்பது போல் காக்கவா? தேடிய பொருள்களைக் காப்பது போல் காக்கவா? வீட்டைக் காப்பது போல் காக்கவா அல்லது உடையைக் காப்பது போல் காக்கவா? உடலைக் காப்பது போல் காக்கவா? நீ சொன்ன பொருள்களை எல்லாம் விடச் சிறந்த பொருள் ஏதேனும் உண்டா ? உண்டு; உண்டு எனின் அஃது எது? உயிர் அப்படியானால் உயிரைக் காப்பது போல் காக்க வேண்டும் என்கிறீர்களா? இல்லை உயிர் இருப்பதால் சிறப்பு மட்டும் தான் வரும் என்பதில்லை . சிறுமையும் வரலாம். ஆகவே உயிரைப் போல் காக்க வேண்டும் என்று சொல்வது எனக்குப் பொருத்தமாகப் படவில்லை . ஆகவே உயிரினும் - உயிரை விடச் சிறப்பாகக் கருதி; 'ஓம்பப்படும்' - பேணிக் காக்க வேண்டும் என்பதே சரியானதாகும். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பதைக் கனவிலும் மறந்து விடலாகாது. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை” என முதுமொழிக் காஞ்சி கூறுவதையும் ஒப்பிட்டு நோக்குக! "உன் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லும் பொருள் நிறைந்ததாயும் இன்பம் பயப்பதாயும் இருக்கட்டும். எக்காலத்திலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய் ஓம்பி வருவாயாக” என வேண்டுகிறார் சேம்சு ஆலன். "ஒழுங்கைக் கவனியுங்கள்! ஒழுங்கு உங்களைக் கரை ஏற்றும் நாவாய்; ஒழுங்கைக் கைசோர விடாதேயுங்கள்; ஒழுங்கு உயர்வளிக்குமா என்ற எண்ணம் வேண்டா; ஒழுங்கு உயர்வளிக்கும்; ஒழுங்கைப் போற்றுங்கள்; போதியுங்கள்.” "உயிரின் ஆக்கம் ஒழுக்கத்தைப் பற்றிக் கிடப்பது. இதனால் உயிரினும் ஒழுக்கம் ஓம்பப்பட வேண்டும் என்னும் வழக்கு எழுந்தது போலும்” என்னும் திரு.வி.க அவர்களின் சிந்தனை போற்றத் தக்கது. "வாள் முனையே வலிமை உடையது என்றான் - நெப்போலியன். நாமுனையே வலிமை உடையது என்றான் - நாவலன். பேனா முனையே வலிமை உடையது என்றார் - வால்டேர். அறிவு முனையே வலிமை உடையது என்றார் - பெர்னாட்சா. இவை அனைத்தையும் மறுத்து ஒழுக்க முனையே வலிமை உடையது என்றார் திருவள்ளுவர். ஒழுக்க மற்றவனது வாளோ நாவோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது; பெற்றாலும் வெற்றி பெறாது, பெற்றாலும் நிலைத்து நிற்காது! என்கிறார் ஒழுக்கம் போற்றி வாழ்ந்த கி.ஆ.பெ.வி அவர்கள். ''ஒழுக்கக் கட்டுப் பாட்டைப் பொறுத்த மட்டில் மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய தீங்கு ஏற்பட்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. "சுதந்திரமாகச் செயல்படுங்கள், விரும்புவதைச் செய்யுங்கள்; விரும்பாததை ஒதுக்குங்கள்; உங்கள் பருவ வெறிக்குத் தடை போடும் எந்தக் கட்டுப் பாட்டினையும் மதிக்காதீர்கள்; நீங்கள் விரும்பாத சட்டத்திற்குக் கீழ்ப்படியாதீர்கள்; ஒழுக்கத்திலிருந்து விடுபடும் போது விடுதலை பெற்ற மனிதர்களாக நீங்கள் ஆவீர்கள்" இந்த அறிவுரை தான் இன்றைக்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.” என இக்காலத்தவர் நிலைமையை வருந்தித் தெரிவிக்கும் அறிஞர். எம்.ஆர். காப்மேயர். "ஒழுக்கத் தளைகளில் இருந்து விடுபடுவது ஒரு வகையில் சுதந்திரம் தான்! இது பயங்கரமான வெடி மருந்துகள் ஏற்றப்பட்ட, நிறுத்தும் பொறி இல்லாத சரக்குந்து, சரிவான மலைப் பாதையில் வேகமாகச் செல்லுகின்ற சுதந்திரம் போன்றது” என விளக்குவதுடன், “உடல் கட்டுப்பாடு, மனக் கட்டுப்பாடு ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து உங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும் போது 132 நீங்கள் எதற்கும் பயன்படாத உதவாக்கரை ஆகிவிடுகிறீர்கள்” எனக் காப்மேயர் கூறும் கருத்து வள்ளுவரின் ஒழுக்க முடைமைக்கு விளக்கமாய் அமைகிறது. அறம் எல்லாவற்றையும் ஆராய்ந்து போற்றித் தேர்ந்தாலும் முடிவில் துணையாய் நின்று காப்பது ஒழுக்கமே! ஆகவே, ஒழுக்கத்தை விருப்பத்தோடு போற்றிக் காப்பதைக் கடப்பாடாய்க் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தைக் காப்பது சில வேளைகளில் அல்லலாய் இருக்கலாம். தொல்லையாகவும் தெரியலாம் எனினும் ஒழுக்கங்காக்கத் துன்பப்படுவது பற்றிக் கவலை கொள்ளாது. எப்பாடு பட்டாகிலும் ஒழுக்கங் காப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும் என்னும் வேட்கை உடையவராய்ப் "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை எனக் கூறித் துணை நிற்கிறார். "மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை பழியாமல் வாழும் திறம்” என அறநெறிச் சாரம் கூறும் கூற்றும் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. "பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோய் இன்மை இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்தும் என்ப ஒழுக்கம் பிழையா தவர்” என ஆசாரக் கோவை கூறும் ஒழுக்கப் பயன் எட்டையும் பெற்று வாழ வாழ்த்துவோம்! மரத்திற்கு ஒளி, மண், புனல், காற்று முதலியன எவ்வளவு, இன்றியமையாதனவோ அவ்வளவு உயிருக்கு ஒழுக்கம் இன்றியமையாதது ஒழுக்கம் இல்லையேல் உயிர், பிறவிப் பயனைத் துய்த்தல் அரிது" என்பதும் தேர்ந்து தெளிந்த உண்மையாகும்! ஒழுக்கத் துணையே உயர் துணையாகும்! "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் மற்றவர் கீழோர்” - என்கிறார் பாரதியார். யார் உயர்ந்தவர்? யாருடைய குடும்பம் உயர்ந்த குடும்பம்? கற்றவரும் உயர்ந்தவர் தாம் அவர்கள் குடும்பமும் உயர்ந்த குடும்பத்தான்! அறிஞர்களும் உயர்ந்தவர்கள் தாம்! அவர்கள் குடும்பமும் உயர்ந்த குடும்பத்தான்! வினை மாட்சியரும் உயர்ந்தவர் தாம்! அவர்கள் குடும்பமும் உயர்ந்த குடும்பத்தான்? செல்வந்தரும் உயர்ந்தவர் தாம்! அவர்கள் குடும்பமும் உயர்ந்தது தான் எப்பொழுது? அவர்கள் நல்லொழுக்கமும் உடையவராயும் விளங்கினால் தான் உயர்ந்த குடும்பத்தவராய் மதிக்கப்படுவர். ஒழுக்கம் தவறிவிடுவார்களானால் அவர்கள் கற்றவராய், அறிஞராய், வினை மாட்சியராய், செல்வராய் இன்னோரன்ன தகுதியினராய் அமைந்திருந்தாலும் அவர்கள் இழிந்த குடிப்பிறப்பினராகவே கருதப்படுவார். ஒழுக்கத்தால் உயர்ந்தவரே உண்மையில் உயர்ந்தவர் ஆவார். ஒழுக்கமுடையார் வாழும் குடும்பமே உயர்ந்த குடும்பம் என்பதைத் தெள்ளத் தெளிவாக்கி சாதிப் பிரிவுகளால் உயர்வு தாழ்வு பாராட்டும் பேதைமையை அகற்ற வள்ளுவர் வழங்கிய கருவியே, ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” 133 இக்குறளைப் படிக்குங்கால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” 972 "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” 505 "ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்” 952 என்னும் குறட்பாக்களையும் சிந்தனையில் கொள்ளுதல் வேண்டும்! "மனிதன் மனிதனாகப் பிறந்தும் பாம்பைப் போல ஊர்ந்து செல்லக் கற்றுக் கொண்டான்! மாட்டைப் போல வண்டி இழுக்கக் கற்றுக் கொண்டான்! மீனைப்போல நீந்தக் கற்றுக் கொண்டான்! பறவை போலப் பறக்கக் கற்றுக் கொண்டான்! ஆனால் மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் மனிதனைப் போல வாழக் கற்றுக் கொள்ளவில்லை. அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்பது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி. அவர்களின் ஒழுக்கச் சிந்தனை. மனிதன் மனித ஒழுக்கத்தைப் பின்பற்றி நடந்து, தான் மனிதனே என்பதை நிலை நாட்ட வேண்டும்! "ஒழுக்கம் இன்றியமையாதது, உதிர்ந்த மலர் மரத்தில் போய் ஒட்டாது, உடைந்த கண்ணாடி உருவம் காட்டாது” என்கிறார் சிண்டோ . "ஒழுக்க வழி முறைகளைப் பற்றிக் கற்பித்தல் மிக மிகத் தேவையாகும். அதன் மூலம் மிக உயர்ந்த மக்கள் தோன்றுவார்கள்” என்கிறார் ரூஸ்வெல்ட். 'முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலங்கெடின் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்” என்பது கபிலரின் குறிஞ்சிப்பாட்டு அடிகள்! ''அணிகலனில் நேர்ந்த குறையைத் தொழில் வல்லார் எளிமையாகக் செப்பம் செய்து விடுவார். சான்றாண்மை பெருமை, ஒழுக்கம் இவற்றில் நேர்ந்த குறையை மிகப் பெரிய அறிஞர்களாலும் சீர் செய்தல் இயலாது' என்பது கபிலரின் கணிப்பு. கற்ற கல்வியை மறந்துவிடல் ஆகாது. யார் மறந்தாலும் நூலை ஆராய்ச்சி செய்பவர்கள் மறக்கக் கூடாது. கற்ற கல்வியில் எதனை மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டியிருக்கிறதோ அதை மறக்க வாய்ப்புக் குறைவு. நெடுநாள் நினைத்துப் பார்க்கவில்லையானால் மறதி ஏற்படுவது இயற்கை. மறப்பது ஒரு பெரிய குற்றமன்று; ஒரு சிறிய குறை என்று வேண்டுமானால் கூறலாம் மீண்டும் நமக்கு அது தேவைப்படுமாயின் திரும்பவும் படித்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளலாம் என்பது அறிஞர்கள் அனைவரும் அறிந்ததே! இதைத் திருவள்ளுவர் தாம் சொல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. பின் ஏன் திருவள்ளுவர் மறந்த கல்வியை மீண்டும் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். கற்ற கல்வியை மறந்தது போல் ஒழுக்கத்தைப் பின்பற்ற மறந்துவிட்டோம் என்று எவரும் காரணம் சொல்லித் தப்பிக்கவும் முடியாது. மறந்து பின்பற்றத் தவறியதை மீண்டும் சீர் செய்யவும் இயலாது. அது உன்னை இழிந்தவன் ஆக்குவதுடன் நீ பிறந்த குடியின் பெருமையையும் குறைத்து இழிந்த குடி ஆக்கிவிடும். இழிந்த குடி ஆக்குவதுடன் குடும்பம் சீரழிந்து கெட்டொழியும் என்பதைத் தான், “மறப்பினும் ஒத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” 134 எனும் குறள் மொழிகிறது "அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்” 168 என்பது அழுக்காறாமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறள்களில் ஒன்று. அழுக்காறு என்னும் பொறாமை ஒரு கொடும்பாவி. அப்பாவி கொண்டவனின் செல்வத்தை அழிப்பதுடன் அவனைப் பல தீயவழிகளிலும் தள்ளிவிடும். பொறாமைக்காரன் பிறர் வளர்ச்சி கண்டு மனம் வெந்து போகிறவன். அவன் தான் செல்வனாக வேண்டும் என எண்ணுவதை விட, வேண்டியவர்கள் செல்வர் ஆகிவிடக் கூடாது என்று எண்ணுபவன். அத்தன்மையன் என்றும் ஆக்கம் பெறப் போவது இல்லை. இருப்பதையும் இழந்து தான் போவான். அது போல ஒழுக்கத்தைப் போற்றிக் கொள்ளாதவனிடத்து உயர்வு இல்லை. இருக்கும் நிலையிலிருந்து மேலும் மேலும் உயர வேண்டியவன் மனிதன் அவன் உயரப் பல வழிகளைப் பின்பற்றலாம் தளராத ஊக்கம் உடையவனாய் முயன்று உழைக்கலாம் எனினும் அவற்றோடு கூட ஒழுக்க நெறியைப் பின்பற்றிப் பெறும் உயர்வே உண்மையான உயர்வாகும். என்பதை "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” 135 என்னும் குறள் மூலம் தெரிவிக்கிறார். ஒரே நேரத்திலே அழுக்காறு ஆகிய தீயதையும் ஒழுக்க மின்மையாகிய தீயதையும் இணைத்து இரண்டையும் அண்டவிடாது காத்துக் கொள்ள வேண்டும் உத்தி சிந்திக்கத் தக்கது. ஆக்கம் பெற அழுக்காற்றை அகற்றுக! உயர்வு பெற ஒழுக்கம் போற்றுக! என்பது தானே வள்ளுவர் வளமார்ந்த உள்ளம்! "அறிவுடையார் ஆவது அறிவார்” 427 "அறிவு அற்றம் காக்கும் கருவி” 421 ஆகவே, ஒழுக்கத்தைக் கைக் கொண்டால் அடையப் போகும் உயர்வையும் சிறப்பையும் முன் கூட்டியே அறிவுடையோர் அறிவர். அதுபோல் ஒழுக்கத் தவறினால் பழியும் துன்பமும் உண்டாகும் என்பதும் அவர்கட்கு நன்கு தெரியும். ஆகவே, அறிவுடையவர்கள் எக்காரணம் கருதியும், எக்காலத்திலும், எவ்விடத்திலும் ஒழுக்க நெறியில் இருந்து சிறிதும் விலக மாட்டார்கள். என்பதை ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து” எனும் குறள் வழி அறிகிறோம்! ஒழுக்கத்தை வாழ்வியல் நெறியாகப் பின்பற்றி வாழ்வோர் எல்லாம் மேன்மை அடைவர். ஒழுக்க நெறி தவறி நடப்போர் அடையக் கூடாத பழிக்கு ஆளாவர். காந்தியடிகளைப் போல ஒழுக்க நெறியை கைக்கொண்டு வாழ்ந்து மேன்மை அடைந்தோர் எண்ணற்றோர் உண்டு. "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்பது குறள். "இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின் நெய்யேதன் நெஞ்சத்து அருளுடைமை நெய்பயந்த பால்போல் ஒழுக்கத் தவரே பரிவிலா மேலுலகம் எய்து பவர்” என்கிறது அறநெறிச் சாரம். "கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை, ஒருவர்க்கு - நல்லாய் இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” எனக் கூறும் பழமொழியும் ஒப்பு நோக்கத்தக்கன. 'செல்வமும் கல்வியிலையேற் சிறப்பில்லை; கல்வியும் நுண்ணறிவு இன்றேல் கணிப்பில்லை எல்லாம் இருப்பினும் நல்லொழுக்கம் இல்லாயின் வல்லார்க்கும் இல்லை மதிப்பு” என இன்னிசை இயம்புவதும் ஏற்புடைத்தே! நம் வாழ்வு துன்பவாழ்வாய் அமைந்து விடாமல் இன்ப வாழ்வாய் அமைய வேண்டும் என அனைவரும் விரும்புவது இயல்பு. அப்படியானால் தீமை தருவனவற்றை விலக்கி நன்மை தருவனவற்றையே செய்தல் வேண்டும். தீமை தருவது எது? தீயொழுக்கம்! இந்நுட்பத்தைத் திருவள்ளுவர், "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” 138 என்கிறார். நன்மை என்னும் விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதையே நல்லொழுக்கம். தீய ஒழுக்கம் இன்று மட்டுமன்று என்றும் துன்பமே தரும்! என்பதை உணர்ந்து ஒழுக்கமாகிய விதையை விதைப்போம்! தீயொழுக்கமாகிய களை முளைக்காமல் காப்போம்! "தானும் அடங்கி அடங்கினர்க்கு ஏந்திய ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது ஞான ஒழுக்கம் பெருகு நலத்தை ஈனமில் இன்ப நிலங்கட்கு வித்ததே!' எனச் சூளாமணி நவில்வதையும் ஒப்பிட்டு நோக்குவோம்! ஒழுக்க முடையார் நெடுந்துயில் கொள்ளார்; வைகறையில் துயில் எழுவார், காலைக் கடன்களை முறையே முடிப்பார்; உடல் உடை, இருப்பிடம், பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வார்; வேளை தவறியும் உண்ணார்; அளவு கடந்தும் உண்ணார், பொருந்தா உணவும் உட்கொள்ளார் ; காலந்தவறாமல் உரிய பணியைச் செய்வார்; பணியிலும் செம்மை இருக்கும்; யாரும் குறை சொல்வதற்கு இடம் தரார்; எப்பொருளையும் உரிய இடத்திலே வைப்பர். அவரால் யாருக்கும் தொல்லை இராது. இயன்ற உதவியைச் செய்வார்; மன மொழி மெய்யால் அடங்கி இருப்பார், பார்வையில் இனிமையும் தூய்மையும் இருக்கும். நற்பண்புகளின் உறைவிடமாக விளங்குவார். மாசற்ற மனத்தராய் விளங்குவார்; உடலை, மனத்தை, பொருளை, குடிப்பிறப்பைக் கெடுக்கும் எந்தச் செயலையும் எப்பொழுதும் எங்கும் எச் சூழ்நிலையிலும் செய்யமாட்டார். அவர்கள் இனிமையாகப் பேசுவர், பயனுடையதையே பேசுவர்; வாய்மையே பேசுவர், மறந்தும் கடுஞ்சொல் கூறார்; பொய் கூறார்; தீமை தரும் எந்தச் சொல்லையும் யாரிடமும் மறந்தும் கூற மாட்டார்கள் என்பதைத் தெளிவுபடும் முகத்தான் "ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்” என வாய்மை மொழிகிறார். "எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு” 426 என்பது அறிவின் இலக்கணம் உணர்த்தும் குறட்பாக்களுள் ஒன்று. உயர்ந்தோர் எவ்விதம் முறையோடும் ஒழுங்கோடும் வாழ்கின்றனர் என்பதைக் கண்டும், கேட்டறிந்தும் படித்தறிந்தும், தெரிந்து கொள்வதுடன் அவர்கள் காட்டிய வழியில் வாழ்வதே அறிவுடைமையாகும். எனக் கூறிய கருத்தை ஒட்டியே "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார், அறிவிலா தார்? என்னும் பாடலைப் படைத்துள்ளார். எல்லாரும் கற்க வேண்டும்! கற்கத் தகுந்த நூல்களையே கற்க வேண்டும்! கற்பவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும்! எனக் கூறியதுடன் அமையாமல் கற்ற நூல்கள் காட்டும் நன்னெறிப்படி ஒழுக வேண்டும்! என்பதே வள்ளுவர் நோக்கு! சான்றோர் காட்டிய ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழாதவர் பல்துறை நூல்களைப் பாங்காகக் கற்றுணர்ந்த கல்வியாளராய் இருப்பினும் அவற்றின் நுண்பொருள்களை எல்லாம் கேட்பவர் மனங்கொள்ளுமாறு எடுத்துரைக்கும் வல்லாளராக இருப்பினும் திருவள்ளுவர் அவர்களைக் கல்வியாளராகவோ, அறிவுடைய வராகவோ ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களே மிகப் பெரிய அறிவிலிகள் என்கிறார். அப்படியானால் ஒருவன் நிறைய நூல்களைப் படித்துள்ளான் என்பதால் மட்டும் அவனை அறிவுடையோர் பட்டியலில் சேர்த்து விடாதே! அவன் உயர்ந்தோர் காட்டிய ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தால் தான் அறிவுடையவன் என மதிக்கத் தக்கவன். அப்படியானால் கற்றவனெல்லாம் அறிவுடையவன் அல்லன் எவன் ஒழுக்க முடையவனோ அவனே அறிவுடையவன் என்பது வள்ளுவர் கணிப்பு! "ஒழுக்கம் விழுப்பம் தரும்” "ஒழுக்கமே உயர்ந்த துணை” "ஒழுக்கம் உடைமையே குடிமை” "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” "நன்றிக்கு வித்து நல்லொழுக்கம்” என்பதை உணர்ந்து “இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” "ஒழுக்கம் குன்றப் பிறப்புக்கெடும்” "ஒழுக்கமிலான்கண் உயர்வு இல்லை” "இழுக்கத்தின் எய்த்துவார் எய்தாப்பழி” "தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” "ஒழுகக் கல்லார் அறிவிலாதார்” என்னும் வாய்மொழியையும் நினைவில் கொள்க! "ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புக! "ஒழுக்கத்தைப் பரிந்தோம்பிக் காக்க! 15. பிறனில் விழையாமை வாழ்வியல் செம்மையால் மாந்தர் தெய்வநிலை எய்த வேண்டும் என்பது திருவள்ளுவரின் வேட்கை! ஆகவே விலக்கப் பாலனவற்றையும், விடாது பற்றி ஒழுக வேண்டியனவற்றையும் சிந்தித்து வகைப்படுத்தியுள்ளார். இன்பத்துப் பால் அது ஒரு தனி உலகம். அறத்துப் பால் 38 அதிகாரம், பொருட்பால் 70 அதிகாரம். அறம் பொருள் இரண்டும் சேர்ந்து அடங்கியுள்ள 108 அதிகாரங்களில் 72 அதிகாரங்கள் உடன்பாட்டு நிலையில் மேற்கொள்ளத் தக்கன! அதிற்பாதி 36 அதிகாரங்கள் எதிர்மறை நிலையில் விலக்கப்படுவதால் தெய்வநிலை பெற வழி அமைத்துத் தருவன! விலக்கத் தக்கனவற்றுள் முதலாவது இடம் பெறுவது பிறனில் விழைதலாகும். திருவள்ளுவர் “பிறனில் விழைதல்” என்று தலைப்பிடாமல், தம் நோக்கம் நிறைவேறப் 'பிறனில் விழையாமை' எனத் தலைப்பிட்டு, தலைப்பிலேயே 'மாற்றான் மனைவியை விரும்பாதே' என வேண்டாத ஆசைக்கு அணை போட எண்ணியிருக்கிறார். வயிற்றுப் பசி போல் காமப் பசியும் உயிர்கட்கு இயற்கையே! காமப்பசி உரிய பருவத்தில் அரும்புவது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறைமையில் இணைந்து, அன்புடன் இல்வாழ்வு மேற்கொண்டு இன்புற்று வாழ வேண்டும். நிலையில் திரியாது அடக்கத்துடனும் வாழ வேண்டும்! விழுப்பம் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் போற்றி வாழ வேண்டுவது முறைமை. தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு? 1103 எனப் பெருமிதத்துடன் வினவுபவர் திருவள்ளுவர். அன்புடைய கணவனும் மனைவியும் இணைந்து இன்புற்று வாழும் வாழ்விற்கு இணையில்லை. ஆகவே, ஒவ்வொரு ஆண்மகனும் தன் மனைவியை அன்றிவேறு எந்தப் பெண்ணையும் இன்புறும் நோக்குடன் எண்ணிக் கூடப் பார்க்காமல் கட்டுப்பாட்டுடன் வாழ்தல் வேண்டும். மனம் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதற்கு இடம் தந்துவிடல் ஆகாது. பிறருடைய உடைகளையோ, படுக்கைகளையோ, இருக்கைகளையோ, காலணிகளையோ, மிதிவண்டி போன்ற ஊர்திகளையோ, உண்கலன்களையோ, எழுது கோல்களையோ கூடப் பயன்படுத்த விரும்பாத அறிவுப் பிறவி மானுடப் பிறவி! அது போல் நாம் பயன்படுத்தும், உரிமைப் பொருள்களைப் பிறர் பயன்படுத்த உடன்படுவதும் இல்லை . இவை அனைத்தையும் விட முதன்மையான உடைமைப் பொருள் உரிமைப் பொருள் “மனைவி” என்பதை அனைவரும் அறிவர், தம் மனைவியை மாற்றான் பார்க்கும் பார்வையிலே ஏதாவது உள்நோக்கம் இருப்பது போல் தோன்றினாலே பொங்கி எழும் மனிதன், தான் மாற்றான் மனைவியிடம் இன்பம் துய்க்க எண்ணுவது எப்படி ஏற்புடையதாகும். தனக்கு ஒரு நீதி! மற்றவர்க்கு ஒரு நீதியா! எந்த உழவனும் பிறர் நிலத்தில் உழுது பயிரிடுவது உண்டா ? பிறர் உண்ட எச்சில் இலையில் உணவு உண்பது உண்டா? ஒப்பிட்டு எண்ணிப் பார்க்க! உடலோம்பல் முறையை விளக்கும் சான்றோர் நாளைக்கு இரண்டு வேளை உணவு உட்கொள்க எனவும், வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணெய் நீராடுக எனவும், மாதம் இருமுறை கணவன் மனைவி உடல் உறவு கொள்க எனவும், ஆண்டுக்கு இரண்டு முறை உண்ணா நோன்பு கொள்க! எனவும் வேண்டுகிறார். கணவன் தன் மனைவியோடு மாதம் இருமுறை கூடி இன்புறுவதே நலம் பயக்கும் எனக் கூறுகிறார் என்றால், எவ்வளவு கட்டு திட்டத்துடன் வாழ வேண்டியவர்கள் மனிதர்கள் என்பது புலப்படும்! புலனடக்கம் தேவை! ஆசைக்கு அடிமைப்பட்டு விடக் கூடாது. அதிலும் காம வேட்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தவறிவிடக் கூடாது. சிலப்பதிகாரம் பிறன்மனை அஞ்சுமின்” என அதிகாரப் படுத்துவதையும் "பிறர் பெண்ணோடும் நண்ணன்மின்' என வளையாபதி போட்டுள்ள வளையத்தையும் தாண்ட மனத்தாலும் எண்ணலாகாது. "பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியற் காதல் மனையாளும் இல்லாளா! என்னொருவன் ஏதில் மனையாளை, நோக்கு” என நாலடியார் போடும் நாலடியும் நம்மீது விழ இடம் தரல் ஆகாது. ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக்கு உட்படாதாம் ஒருபெட்டை மத்தாப்பைப் போல் ஒளிபுரிந்திட நின்றாலும் திரும்பியும் பார்ப்பதில்லை வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட் டால்தான் ஒன்று மற்றொன்றை நாடும்” எனப் பாவேந்தர் காட்டும் புறாக்கள் போல் பிறன்மனை நோக்காப் பேரொழுக்கம் உடையவர்களாய் அனைவரும் விளங்க வேண்டும் எனக் கருதியே வள்ளுவர் 'பிறனில் விழையாமையைப் படைக்க விழைந்துள்ளார். திருவள்ளுவர் பிறனில் விழைதலாகிய இழிதன்மையைப் 'பிறனில் புகல், பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை என்கிறார். பிறனில் விழையும் இழிந்தவர்களைப் 'பிறன்கடை நின்ற பேதையார்' “தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகுவார்” “எளிதென இல்லிறப்பான்” எனக் குறிக்கிறார். பிறனில் விழையாமை ஆகிய தன்மையைப் 'பிறன்மனை நோக்காப் பேராண்மை' 'பிறன் வரையாள் பெண்மை நயவாமை' என்றும். பிறனில் விழையாப் பண்பாளர்களைப் 'பிறனியலாள் பெண்மை நயவாதவன்' 'பிறர்க்குரியாள் தோள் தோயாதார்” என்றும் குறிப்பிடுகிறார். "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்” 141 என்பது பிறனில் விழையாமையை வலியுறுத்தும் முதற்குறள். ஒருவர்க்கு நட்பாளர் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். அது போல் உறவினர் எத்தனையோ பேர் இருக்கலாம். மக்களும் இத்தனை பேர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எப்படி ஒவ்வொருவருக்கும் ஒருதாய் ஒரு தந்தை தான் இருக்க முடியுமோ அதுபோல் ஒரு ஆணுக்கு ஒரு மனைவியும், ஒரு பெண்ணுக்கு ஒரு கணவனுமே அமைவதும் அமைப்பதுமே அறமும் முறையும் ஆகும். ஒரு கணவனுக்கு உரிமை வாய்ந்த உடைமையாக மதிக்கத் தக்க முதன்மையான பொருள் மனைவி ஆவாள். அது போல் ஒரு மனைவிக்கு உரிமை வாய்ந்த உடைமையாக மதிக்கத் தக்க முதன்மையான பொருள் கணவன் ஆவான். ஆகவே, ஓர் ஆடவனுக்குத் தன் பொருள் என்பது தன் மனைவியைக் குறிக்கும். தன் பொருள் அல்லாது எல்லாம் பிறன் பொருளாகும். தன் உரிமையள் அல்லாத எந்தப் பெண்ணையும், அவள் திருமணம் ஆனவள் ஆனால் பிறனுக்கு உரிமையானவள்; திருமணம் ஆகாதவளாய் இருந்தால் பிறனுக்கு உரிமை ஆகப் போகிறவள். எப்படியும் தன் பொருளாள் அல்லாதவள் எல்லாம் பிறன் பொருளாளே ஆவாள். தமக்கு உரிமை இல்லாத எந்தப் பொருளையும் தொட நமக்கு உரிமை இல்லை. 'மனைவி' என்பவள் மாற்றிக் கொள்ளத் தக்க பொருள் இல்லை. ஒருவர்க்கு ஒருத்தி தவிர்த்து யாரும் காதல் இன்பம் துய்க்கும் உரிமைப் பொருளாக இருத்தல் இழுக்குத் தரும். 'பிறன் பொருளாள்' என்றால் பிறன் உடைமையாய், கணவனாகிய அவன் வழி அன்றிப் பிறன்வழி ஒழுகா உயர் கற்பினள் கணவனின் வாழ்வின் பொருளாக, அவன் வாழ்வின் இலக்கை நிறைவேற்றுபவளாய் அவன் வாழ்வை ஒரு பொருளுடைய பயனுடைய வாழ்வாக ஆக்க வந்தவள் ஆவாள். அத்தகையவள் தரும் இன்பத்தில் பங்கு போட எண்ணுவது அறிவுடைமை ஆகாது. பேதைமை அதாவது அறியாமை ஆகும். அவர்கள் அறத்தின் தன்மையையும் அறியவில்லை. பொருளின் மாட்சியையும் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். அறத்தையும் பொருளையும், அல்லது அறத்தின் உண்மைப் பொருளை அறிந்த எவனும் மாற்றான் மனைவியை விரும்பிச் சேர எண்ணவும் மாட்டான். "அறம் பொருள் அறியா அறிவிலியே பிறனில் விழைவான்' எனக் கூறி அனைவரும் அறம்பொருள் உணர்ந்த அறிஞராய் வாழ்க! என வாழ்த்துவதே வள்ளுவர் நோக்கம்! 'பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்' 163. நடுவின்றி நன்பொருள் வெஃகுவார் 171. 'புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வார் 183. 'பயனில் சொல் பாராட்டும் பதடி' 196. 'தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்' 251. 'வஞ்ச மனத்தான்' 271. 'களவின்கண் கன்றிய காதலவர்' 286. 'சினத்தைப் பொருளென்று கொண்டவன்' 307. 'கொலை வினையராகிய மாக்கள்' 329. 'கடுஞ்சொல்லன் கண்ணிலன்' 566. 'எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார்' 921. ஒன்றெய்தி நூறு இழக்கும் சூதர் 932. இன்னோரெல்லாம் அறநெறி தவறி வாழ்வோர் வள்ளுவர் கூற்றுப்படி 'அறங்கடை நின்றார்' இவரெல்லாம் அறிவறிந்த பிறப்பு எய்தியும் பேதையராய் வாழ்வோர். இவர்களைக் காட்டிலும் பேதையன் ஒருவன் உண்டு எனின் அவன் அயலான் மனைவியை அடைய விரும்பி அவள் வீட்டின் கடை வாயிலில் நிற்கும் நிலை எய்திய கடையனே கடைந்தெடுத்த பேதையாவான் என்பதை 'அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல்”142 என்கிறார். இவரைக் கடையனில் கடையன் என்றும் பேதையிற் பேதை எனவும் கருதுக! நாம் கடையரும் அல்லர்; பேதையரும் அல்லர், அறம் பொருள் கண்ட அறிஞர் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்! வல்லானிடம் வாள் பயிற்சி பெற்ற சித்தன் கலைத் தேர்ச்சி பெற்றபின் தன் ஆசான் மனைவியைத் தொட முயன்ற இழி தன்மையைப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில், 'அறங்கடை நின்றாள்ளும் ஆற்றவும் கடையனாகிப் பிறன்கடை நின்றான்” எனக் குறளின் பொருளையும் சொல்லையும் பொன்னே போல் போற்றியுள்ளதைக் காண முடிகிறது. சீதையைக் கவர விரும்பிய இராவணன் மாமன் மாரீசன் துணையை வேண்டிய போது, மாரீசன் கூறிய அறிவுரை "நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்; நடையல்லா வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனைவாழும் தாரம் கொண்டார், என்ற இவர் தம்மைத் தருமம் தான் ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா!'' என்னும் கம்பராமாயணப் பாடல் பிறர் மனை நயத்தல் பேதைமை எனக் கூறுவதுடன் அறத்தின் தண்டனையிலிருந்தும் தப்ப இயலாது என்பதையும் இணைத்துக் கூறுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். உயிர் இருக்கிறது என்றால்! உணர்வு இருக்க வேண்டும்! உணர்வு இருந்தால் சிந்திக்க வேண்டும்! எதனையும் சிந்தித்துப் பார்த்தால் தான் நன்று தீது கண்டுணர முடியும்! நன்மை இது; தீமை இது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்தால் தான் செய்யத் தக்கதைச் செய்ய முடியும்! செய்யத் தகாததைச் செய்யாமல் தவிர்க்க இயலும்! திருவள்ளுவர் செய்தக்க செய்வோரையே உயிருடையவராகக் கருதுகிறார். செய்ய வேண்டியதைச் செய்யாது அல்நெறியில் சிக்கியவர்களில் சில வகையினரை அவர் உயிருடையவராகக் கருதாது இறந்தவர் பட்டியலில் சேர்க்கிறார். "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” "ஒத்தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” "இறந்தார் இறந்தார் அனையர்சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை” 'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”926 அன்பிலார், ஒத்தது அறியார், சினங்கொள்வோர், கள்ளுண்பவர், ஆகியோரை இறந்தவராகக் கூறுவதுடன் விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்” என மற்றும் ஓர் இறந்தவரை அடையாளம் காட்டுகிறார். தம்மை நல்லவர் என்று நம்பிப் பழகி வருபவரின் மனைவியிடம் நெறி தவறி நடக்க எண்ணுகின்றவர்களை இறந்த பிணம் போல் கருதி அப்புறப்படுத்தி விட வேண்டும்! பிணம் வீட்டிற்குள் இருக்கலாமா? நம்பினவர் வீட்டில் நம்பிக்கைக்குப் புறம்பாக ஒழுக்கக் கேடு செய்பவர் செத்தவரல்லது வாழ்பவர் அல்லர் என்பது வள்ளுவர் கணிப்பு. சீதையைக் கவர்ந்து செல்லும் இராவணனை எதிர்க்கும் சடாயு இராவணனிடம், "கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வைஎலாம் சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ பட்டாய் எனவே கொடு பத்தினியை விட்டு ஏகுதியால், விளிகின் றிலையால்” எனக் கூறும் அறிவுரையில் வள்ளுவர் வாய்மொழியின் சாயல் புலப்படுகிறது. "எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்” வள்ளுவர் போடும் தடை ஆணை 144 இதுவாகும். மாற்றான் மனைவியை விரும்பும் ஒருவன், தான் செய்கின்றது ஒரு சிறிதும் தவறு என்று உணராதவனாய் காம வெறியனாய் நடந்து கொள்வான் ஆனால்; அவன் எப்படிப்பட்ட பெரியதோர் தகுதி உடையவனாய் இருப்பினும் அவன் அத்தகுதியை எல்லாம் இழந்து பிறரால் பழிக்கப்படுவான். அறிவின்றி அயலான் மனைவியை விரும்புகின்றவன் பெரியவனாயினும் பெருமை எல்லாம் இழப்பான்! அதனாலேயே நீதி நூல், "தன்னைப் போல் பிறரை எண்ணல் தகுதியாம்; தான் மணந்த மின்னைப் போல் இடையினாளை விழியினால் நோக்குவோரைத் தின்னல் போல் முனிவு கொள்வோன் அயலான் தேவி தன்னை அன்னை சோதரிபோல் எண்ணாது அணைந்திட விரும்பல் என்னே! என வினவுகிறது. "அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் திறனுடையன் என்றுரைக்கும் தேசும் பிறனில் பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல் இழுக்காம் ஒருங்கே இவை” என்னும் அறநெறிச்சாரம் வள்ளுவர் வாய்மொழியை வழி மொழிகிறது. மந்திரப் படலத்தில் இராவணன் முன் கும்பகர்ணன் கூறியது. "ஓவியம் அமைந்தநகர் தீஉண, உளைந்தாய்! கோஇயல் அழிந்தது என, வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ? பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ ?' ..............."சிறை வைத்தாய் அன்று ஒழிவதாயின்! அரக்கர் புகழ்!” ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம் மாசில் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப் பேசுவது மானம் இடைபேணுவது காமம்; கூசுவது மானுடரை, நன்றுநம் கொற்றம்!” "சிட்டர் (பெரியோர்) செயல் செய்திலை குலச் சிறுமை செய்தார்!” எனக் கூறுவது இக்குறளுக்கு நல்லதொரு விளக்கமாகும். "முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் எக்கோடியாராலும் வெல்லப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும், உலகனைத்தும் செருக்கடந்த புய வலியும்” வாய்க்கப் பெற்ற ஒப்பற்றவன் இராவணன், அவன் வீழ்ச்சிக்கு ஆராய்ந்து பாராமல் சீதையை அடைய விரும்பி மனச் சிறையில் வைத்த குற்றம் ஒன்றே ஆகும் என்பதே இராம காதை காட்டும் உண்மையாகும். தகுதி அனைத்தையும் பெற்ற ஒருவன், தன் தகுதியின் மிகுதியால் அயலானது மனைவியைத் தான் அடைதல், தனக்கு மிக எளிமையானது என எண்ணி அத்தீய ஒழுக்கத்தை மேற்கொண்டால், அதனால், உலகம் அவனை மட்டும் பழிப்பது அன்றி, அவன் குடியையும் உலகுள்ளவரை பழித்துக் கொண்டே இருக்கும் என்பதை "எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி" எளிதென்று கருதிப் பிறர்மனை நுழைந்து தீராப் பழியை எவரும் தேடிக்கொள்ளக் கூடாது எனப் படைத்த குறள் இதுவாகும். "எண்ணமது அலாமை பண்ணும் இற்பிறப்பு இடிய நூறும் மண்ணியல் புகழை மாய்த்து, வருபழி வளர்க்கும், மானத் திண்மையை உடைக்கும், ஆண்மை திருவொடு சிதைக்கும், சிந்தை கண்ணொடு கலக்கும் மற்றுஇக் கடைபடு காமம் என்றான்” என்னும் யசோதர காவியப் பாடல் நல்லதொரு விளக்கமாகும். பிறன் மனைவியோடு காமத் தொடர்பு கொள்ள விரும்புகின்றவனுக்குப் பகைவர் பெருகுவர், குற்றத்தால் உண்டாகும் பாவம் நிலைக்கும்! உரிய கணவரோ அவர்க்கு உற்றவர்களோ கண்டு கொண்டால் தலையாவது தப்புமா என்ற அச்ச உணர்வு மேலோங்கும், கண்டு கொண்ட அனைவரின் பழிக்கும் ஆளாவர்! இவை நான்கும் என்றும் நீங்காது என்பதை, "பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்” எனும் குறள் உணர்த்தும். மாற்றான் வீட்டில் நுழைவானை பகை, பாவம், பயம், பழி நான்கும் விடாது பற்றிக் கொள்ளும் 49 "அறம்புகழ் கேண்மை பெருமை இந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று அச்சத்தோடு இந்நாற் பொருள்” என நாலடியார் நவில்வது இவ்வீரடிக் குறளே! "காணின் குடிப்பழியாம் கையுறிற் கால்குறையும் மாணின்மை செய்யுங்கால் அச்சமாம் நீள் நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீகண்ட இன்பம் எனக்கு எனைத்தால் கூறு! துச்சாரி - பொல்லாதவனே! நீ பிறர் மனை நயத்தலால் கொண்ட இன்பம் யாதாம்! எனக்குக் கூறு! என நாலடியார் கூறுவதும் இஃதேயாகும். "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று” என்பது இல்வாழ்க்கைக் குறள்களில் ஒன்று. முறையான இல்வாழ்வே அற வாழ்வு. அவ்வாழ்வு பிறரால் பழிக்கப் படாமல் இருப்பது நல்லது. தன் மனைவியை விடுத்து மாற்றான் மனைவியை நாடுபவன் பழிக்கப்படுவதுடன் பகைக்கும், பாவத்திற்கும் பயத்திற்கும் ஆளாவான் என முன்னைக் குறளில் வலியுறுத்திய வள்ளுவர் அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் தனக்கு உரிமை இல்லாதவளின் பெண் தன்மையைக் கனவில் கூட விரும்பக் கூடாது எனக் கூற விரும்புகிறார். யார் அறநெறிப்படி வாழும் குடும்பத்தான்? இன்னொரு குடும்பத்தாளை எவன் விரும்பவில்லையோ அவன்தான். "பெண்ணின் ஆகிய பேரஞர் பூமியுள் எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார் பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினும் ஏதில் பெண் நீங்குமின்? என வளையாபதி வேண்டுவதும் குறள்நெறியே! வள்ளுவர், ஆண்மையை ஆளும் தன்மை தனிச் சிறப்புக்குரிய தாகும். ஆண்மை என்றாலே 'ஆளும் தன்மை என்பதே பொருள். ஊராண்மை, ஒப்புர வாண்மை, குடியாண்மை, நல்லாண்மை தாளாண்மை, வாளாண்மை, வேளாண்மை காரறிவாண்மை, புல்லறிவாண்மை மடியாண்மை காட்டிய வள்ளுவர். “பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு” 773 என்பது படைச் செருக்கில் வரும் பேராண்மைக் குறள். ஒருவர்க்குப் பேராண்மை என்று சொல்லப்படுவது போர்க்களத்தில் காட்டும் வீரமாகும். அக்களத்தில் பகைவர்க்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விடுமாயின் உடனே அவர்க்குச் செய்யும் உதவி பேராண்மையிற் சிறந்த பேராண்மை ஆகும். எனக் கூறும் வள்ளுவர். இவ்வதிகாரத்தில் காட்டும் பேராண்மைப்பா, “பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு” என்னும் அழுத்தமான குறளாகும்! புறப்பகைகளை அடக்கும் ஆண்மை உடையவர்க்கும், அகப்பகையாகிய காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், மகிழ்ச்சி, மதம் எனப்பட்ட ஆறனுள், காமத்தை அடக்குவது கடினம் ஆகவே, அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை என்றார். பிறன் மனைவியைக் காம் விருப்போடு நோக்காமை - பேராண்மையும் ஆகும். சான்றாண்மையும் ஆகும், உயர்ந்த அறமும் ஆகும், சிறந்த ஒழுக்கமும் ஆகும். பிறன் மனை நோக்கினால் 'பகை பாவம் அச்சம் பழி' நான்கு தீமைகள் பற்றிக் கொள்ளும் எனக் கூறியவர் இங்கே பிறன் மனை நோக்கவில்லையானால் பேராண்மையர் சான்றாண்மையர், அறநெறியாளர், ஒழுக்கசீலர் என்னும் உயர் நிலையை ஒருங்கே எய்தலாம். ஒரு தீக்கனியை உண்ண விரும்பவில்லையானால் 'நான்கு தீங்கனிகள் நம்மைத் தேடி வரும் எனக் கூறும் வள்ளுவர் பிறன்மனை நோக்காத் தன்மனை நோக்கர் களை உருவாக்க முயன்ற முயற்சி நமக்குப் புலப்படுகிறது. கம்பராமாயணம், சுந்தர காண்டத்தில் அமைந்துள்ள பிணிவீட்டு படலத்தில் அனுமன் இராவணனை நோக்கி, "இச்சைத் தன்மையில் பிறர் இல்லினை நச்சி, நாளும் நசையுற, நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து, பழிபடூஉம் கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ? என வினவுவது பிறர் மனை நயத்தலின் இழிவினையும் கேட்டினையும் உணர்த்தும். "தந்தார மன்றியே பரதாரமே நினைவுதனை வைத்த காமுகர்க்குத் தயையில்லை, நிசமில்லை, வெட்கமில்லை சமரினில் தைரியம் சற்றுமில்லை அந்தாரமில்லை, தொடர் முறையில்லை நிலையில்லை அறிவில்லை மரபுமில்லை அறமில்லை நீதியில்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மதிலில்லை நந்தாதசனமில்லை, இனமில்லை எவர்க்கும் நட்பில்லை, கனதை இல்லை நயமில்லை, இளமைதனில் வலிமையிலை முத்திபெறு ஞானமிலை என்பார் கண்டாய்” எனும் குமரேச சதகம் 'பிறன் மனை நயத்தலின் கேடுகளை விளக்குகிறது. "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தவர்” என்பது ஒன்பதாவது குறள். முழங்கும் கடலால் சூழப்பட்டது இவ்வுலகம். இவ்வுலகில் தன் மனைவியை அன்றிப் பிற பெண்டிர் தோளைத் தழுவ விரும்பாதவர் எவரோ! அவரே இவ்வுலகை நல்ல உலகம் ஆக்கும் உரிமை உடையர்கள் உலகம் அத்தகையவர்களாலேயே நலமெல்லாம் பெறும்! அவர்களே எல்லா நலங்களும் அடைவதற்கு உரிமையும் தகுதியும் உடையவர்கள் ஆவர். மாற்றான் மனைவியை விரும்பாதவரே! மண்ணில் நலமுடன் வாழ்வதற்கு உரியவராவார். காந்தியடிகள் நலக்குரியார் என்பதை நாடு அறியும்! ஆறாண்டில் மனைவியை இழந்த பின்னர் மறுமணமும் செய்ய விரும்பா மாண்பாளர் திரு.வி.க நல்ல நலக்குரியார். தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை மகளிர் கல்வி நிறுவனங்களிலேயே பணிபுரிந்து தெய்வ ஒழுக்கம் பூண்டு வாழ்ந்த கவிமணி போன்ற நலக்குரியார் வாழும் நாடு நம் நாடு! "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது” 181 எனப் புறங்கூறாமையிலும், "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று" 297 என வாய்மையிலும் கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி வடித்த குறளே "அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று” என்னும் நிறைவுக் குறள். ஒருவன் அறநெறியில் செல்லாது தீயவற்றையே செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும்! பெருங்கேடு விளையாது. பிறனால் மணந்து கொள்ளப் பட்டவளின் பெண்மையை விரும்பா நல்லொழுக்கம் ஒன்றையாவது தவறாமல் பின்பற்றி நடந்து வந்தால் அஃது ஒன்றே அவனுக்குப் பெருநன்மையை வழங்கும். அறங்கடந்த தீமைகள் பலவற்றின் விளைவையும் சமன் செய்து, உயர்த்தும் பேராற்றல் பிறன்மனை நயவாமைக்கு உண்டு என்பதை நயமாக உரைக்கிறார் திருவள்ளுவர். குற்றங்களை அகற்றச் சிலப்பதிகாரக் காலத்தில் 1. வெள்ளிடை மன்றம் 2. இலஞ்சி மன்றம் 3. நெடுங்கல் நின்ற மன்றம் 4. பாவை மன்றம், 5. பூத சதுக்கம் என ஐந்து மன்றங்கள் இருந்து செயல்பட்ட பாங்கினை விளக்கும் இளங்கோவடிகள். "தவம் மறைந்து ஒழுகும் தன்மையினார், அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர், அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர், புறங் கூற்றாளர் என்கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக் காதம் நான்கு கடுங்குரல் எழுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கம்” எனக் கூறுகிறார். தானே நன்னெறி நில்லார்க்குத் தண்டனை தந்தாவது நெறிப்படுத்த வேண்டுவது ஆட்சியர் கடமையாகும். பிறனில் விழையாதீர்! அறன் இயலான் இல்வாழ்வு வாழ்க! நலக் குரியாராய் நலம் பெற்றுவாழ்க! பேராண்மைய ராய்ப் பெருமை பெறுக! சான்றோராய் விளங்குக! அறநெறி நிற்க! ஒழுக்கத்தால் உயர்க! 16. பொறையுடைமை தமக்கும் பிறர்க்கும் தம் பேச்சாலும் செயலாலும் தீங்கு ஏற்படாதவாறு தம்மைத் தாமே காத்துக் கொள்ளுதல் அடக்கமாகும். பிறருடைய பேச்சும் செயலும் தமக்குத் துன்பத்தை விளைவித்த போதும், துன்பம் செய்தாரைத் துன்புறுத்த எண்ணாது பொறுத்துக் கொள்ளுவதும், மன்னிப்பதும் மறப்பதும் பொறுமையாகும். உலகில் நமக்கு நண்பர்கள் இருப்பது போல் பகைவர்களும் இருப்பார்கள்; நம்மீது அன்புடையவர்கள் இருப்பது போல் அன்பிலாரும் இருக்கலாம். நாம் வளரத் துணைபுரிவாரும், நம் வளர்ச்சியைத் தடுப்பாரும் இருக்கலாம். நம்மை வாழ்த்துபவரும் இருக்கலாம் பழிப்பவர்களும் இருக்கலாம். நன்மை செய்பவர்கள் இருப்பது போல் தீமை செய்பவர்களும் இருக்கலாம்! அப்படி மாறுபட்ட இருவகைப்பட்ட நிலையினர்க்கும் இடையே தான் நாம் இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டும்! ஆகவே இருவேறு நிலையும் நம் நோக்கையும் போக்கையும் மாற்றி விடாத மன உறுதி வாய்க்கப் பெற்றவர்களாய் நாம் வாழ முயல வேண்டும். நிலையில் திரியாது, அறநெறி தவறாது, அடக்கம் உடையவனாய், நல்லொழுக்க நெறியைப் போற்றி வாழ்பவனே நிறை குணத்தான், தகுதி உடையவன், சான்றோன் ஆவான். பிறர்க்குத் தொல்லை தாராது, நன்மையே செய்து வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களும் பிறரால் துன்புறுத்தவும் பழிக்கவும் படுகிறார்களே ஏன்? மனநலம் குன்றியவன் செய்தால் காரணம் கூற முடியாது. ஆனால் மற்றையவர் செய்தால் ஏதாவது காரணம் இல்லாது இருக்க முடியுமா? அறியாமையாலும், புரியாமையாலும், அச்சத்தாலும், ஆசையாலும், ஆணவத்தாலும், சினத்தாலும் பொறாமை யாலும், மேலும் குழம்பிய நிலையிலும் குடிவெறியிலும், தோல்வியிலும், இயலாமையிலும் நடுநிலையோடு சிந்தித்துப் பாராமல் நல்லவர்களையும் குறை கூறிவிடுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள் கெடுதல் செய்து விடுகிறார்கள். அது உரியவர்கட்கு இடையூறாய் அமையலாம், வேதனை தரலாம், தோல்வியைக் கூட விளைவிக்கலாம்! மனம் கலங்கிவிடக் கூடாது. இயேசு பெருமானைச் சிலுவையில் அறைந்து கொல்ல முற்பட்ட போதும் இறைவா! அறியாமல் செய்கிறார்கள்! அவர்கட்குத் தண்டனை வழங்கிவிடாதே மன்னியும்' என்று வேண்டியது நமக்கு வழி காட்டியாய் அமைய வேண்டும்! காய்த்த மரத்தில் கல்லெறி விழுவது இயற்கை. இல்லையேல் காந்தி அடிகள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவரா? "கன்னலும் பாலும் கனகமும் சந்தனமும் என்ன கண்டித்தாலும் இயல்பு அகலா - அன்னவை போல் வேலவ! சான்றோரை மிக வருத்தினாலும் - தமது சீலநலம் குன்றி விடாதே!” என்னும் நீதிபோத வெண்பா உயர்ந்தோர் இயல்பை எடுத்துக் காட்டும் ஏன் பொறுக்க வேண்டும்? பொங்கி எழுந்தால் என்ன? நாம் இதுவரை பேணிக்காத்த அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, சான்றாண்மை எல்லாம் நம்மை விட்டு அகன்று விடும்! நாமே நிமிர்ந்து நடந்து நம் வீட்டு நிலையிலேயே முட்டி மண்டையை உடைத்துக் கொண்டோம்! தடுக்கி விழுந்து கால்கைகளை முறித்துக் கொண்டோம்! பருவ மழை பொய்த்து விட்டது பாடுபட்டும் பயன் கிட்டவில்லை. அறுவடையின் போது பெருமழை பெய்த்து விளைந்ததை எல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது! யாரைத் தண்டிப்பது. கோழி மிதித்துக் குஞ்சுக்குச் சேதம் வராது' என்பது பழமொழி. அப்படியானால் குஞ்சு மிதித்தா கோழிக்குச் சேதம் வரும்! “போர்க் களத்தில் தன்மீது பாய்ந்த அம்பின் வேதனையைத் தாங்கிக் கொள்ளும் யானையைப் போலவே, நம்மீது சுமத்திய பழிச் சொற்களையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்! வழிபாடுகளில் எல்லாம் பெரிய வழிபாடு பொறுமையே! என்று புத்தரும் வழி காட்டுகிறார். "எவ்வளவு கோபம் உண்டாக்கினாலும் எதிர்த்துத் தீங்கு செய்யாமல் பொறுத்துக் கொண்டால் எதிரியால் எள்ளளவு தீங்கும் செய்ய முடியாது” என்பது நபி நாயகத்தின் நல்லுரை. "பொறுமை என்ற விளக்குத் தான் அறிவாளிகட்கு வெளிச்சம் காட்டும்” என்கிறார் கவிபாரவி. 'பொறுமை உள்ளவனுக்கு அவன் விரும்புவதெல்லாம் கிடைக்கும்' என்பது பிராங்ளின் நம்பிக்கை. "பொறுமை என்பது ஒரு கசப்பான காய். ஆனால், அது கனிந்தால் மிக இனிமையான பழமாகும்” என ரூசோவிற்கு இனிமை தந்த கனி நமக்கும் இனிமை தரட்டும்! 'மகிழ்ச்சியின் திறவு கோல் பொறுமை' என்பது துருக்கி நாட்டுப் பழமொழி வள்ளுவரின் பொறையுடைமைக்கும் திறவு கோலாய் அமைகிறது. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்பது முதற்குறள். தன்னைத் தோண்டுபவரையும் சுமந்து கொண்டு, அவர் உழைப்பிற்கு ஏற்பப் பயன் நல்கும் இயல் புடையது நிலம். அதுபோல் தம்மை இகழ்ந்து கூறுபவர்களைப் பகைவர் ஆக்காமல் பதிலுக்குச் சுடுசொற்களைப் பரிமாறிக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வது உயர்ந்த பண்பாகும். நிலம் பள்ளம் வெட்டியவனையும் வீழாமல் தாங்குகிறது. ஆனால் அவன் வெட்டிய பள்ளத்தில் அவனே வீழ்வதை நிலம் தடுக்காது. அது போல பண்பாளன் தனக்குத் தீமை செய்தவனுக்கும் தீங்கிழைக்காது பொறுத்துக் கொள்வான். ஆயினும் “தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடி உறைந்தற்று” அவன் தானே அழிவான். தன் மீது நின்று கொண்டே தன்னைத் தோண்டுவாரை நிலம் தாங்குகிறது. அது போல் நம் ஆதரவில் வாழ்ந்து கொண்டே நம்மைப் பழிப்பவரையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்! அகழ்வாரை நிலம் தாங்குகிறது, காக்கிறது. அகழ அகழ நிலம் பண்படுகிறது. அகழ்ந்து தான் உள்ளே புதைந்து கிடக்கும் பொன் போன்ற விலை மதிப்பற்ற பொருள்களைப் பெற இயலும். அதுபோல் புகழ்ச்சியை விட இகழ்ச்சியே ஒவ்வொருவர் உள்ளுக்குள் மறைந்து கிடக்கும் 'பொன் அன்ன' உயர்பண்பு களை வெளிக் கொண்டு வரும். உண்மையில் நம்மைப் பாராட்டுபவர்களை விட நம்மைப் பழிப்பவர்களே நம்மைப் பண்படுத்தி உயர்த்துபவர்கள் ஆவர். "பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” எனக் கூறுகிறது கலித்தொகை. 'நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்” என்னும் நாலடியாரும் இக்குறளின் அடியொற்றிச் செல்கிறது. நீரில் வீழ்ந்த தேளைக் கையால் எடுத்துப் பாறையில் விட்டார் காரல் மார்க்சு. தேள் அவர் கையில் கொட்டி விட்டு மீண்டும் வீழ்ந்துவிட்டது. மீண்டும் எடுத்து விட்டார் அப்போதும் ஒரு கொட்டுக் கொட்டியது. உடன் நீராட வந்த நண்பர்கள் அவரைக் கேலிசெய்து நகைத்தனர். மார்க்சு தேள் கொட்டியதற்கும் வருந்தவில்லை. நண்பர்களின் ஏளனத்திற்கும் வருந்தவில்லை. நண்பர்களை நோக்கி, 'கொட்டுவது தேளின் இயல்பு, அதனைத் துன்பத்திலிருந்து காப்பது மனித இயல்பு என அமைதியாகக் கூறினார். எவர் தீங்கு செய்தாலும், குறை கூறினாலும் நீ பொறுமையுடன் உயர் மனிதனாக நடந்து கொள்' என்பது தானே குறட் கருத்தும் காரல் மார்க்சின் செயலும். "பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை மறத்தல் அதனினும் நன்று "நன்றல்லது அன்றே மறப்பது நன்று' எனச் செய்ந்நன்றி அறிதலில் மறப்பது நல்லது எனக் கூறுவது போல் கூறும் இடம் இதுவாகும். வள்ளுவரே! பிறர் செய்த தீமையைக் கண்டு வெறுப்போ வெகுளியோ கொள்ளாது, பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினீர்கள்! அதன்படி பொறுத்துக் கொண்டோம். அவன் அடுக்கடுக்காக நாளும் தீமைக்கு மேல் தீமையே செய்து வருகிறானே! என்னால் வர வர அவன் தொல்லையைத் தாங்க முடியவில்லையே! வட்டியும் வாசியும் சேர்த்து வசமாகக் கொடுத்துப் பாடம் புகட்டி விடவா? கூறுங்கள்! அய்யோ ! அப்படி நினையாதீர்கள் முதலில் பொறுப்பது தான் கடினமாகத் தெரியும் பழகப் பழக இயல்பாகிவிடும். அவன் வரம்பு கடந்து தீமை செய்தாலும் பொறுத்துக் கொள்வது உங்கட்கு நன்மையே தரும்! நீங்கள் பொறுத்துக் கொள்வதுடன் அவன் செய்த தீமையையும் நீங்கள் பொறுத்துக் கொண்டதையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் மறந்து விடுவீர்களானால், அது மிக்க நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என விடை அளிக்கிறார் வள்ளுவர். பொறுமைக்கு எல்லை இல்லை! பொறுமையின் அளவு மிக மிக, கிட்டும் நன்மையின் அளவும் மிகும். "ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன் வெறுப்பார்க்கு நான்கு மடங்கே என்ப - ஒறுத்தியேல் ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும் ஊர்பகை நின்கண் ஒறு!” என்னும் அறநெறிச் சாரம் காமம் வெகுளி மயக்கம் ஆகிய மூன்று பகையையும் அடக்கு என வேண்டுவதையும் ஒப்பிட்டு நோக்கலாம்! "இன்மையுள் இன்மை விருந்தோரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” 153 இன்மையுள் இன்மையையும் வன்மையுள் வன்மையையும் இணைத்து உணர்த்தும் இனிய குறள். "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை, மடவார்கண் உண்டு” 89 விருந்தோம்பல் ஓம்பா மடமை உடைமையுள் இன்மையாகும். "அறிவின்மை இன்மையுள் இன்மை” 841 என இன்மை சுட்டும் வள்ளுவர், "தம்மில் பெரியார் தமரா ஒழுகல் வன்மையுள் எல்லாம் தலை” 444 "இன்மை இடும்பை இரந்து தீர்வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்” 1063 என வன்மையுள் வன்மை சுட்டுகிறார். வீடு தேடி வந்து விருந்தினரை முறையாகப் பேண முடியா நெருக்கடியே கொடிய வறுமையிலும் கொடிய வறுமையாகும். அதுபோல் அறிவிலார் செய்யும் தீங்கையும் பொறுத்துக் கொள்வதே வலிமைகளிலெல்லாம் சிறந்த வலிமையாகும். 'கெடுவான் கேடு நினைப்பான்' எப்பொழுது நினைத்தாலும் கெடுவான். எவர்க்கு நினைத்தாலும் கெடுவான் என்பது உறுதி! நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும்! நம்முடைய மதிப்பை, உயர்வை எவராலும் கெடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! 'சிறியாரை இகழ்தல் அதனினும் 'இலமே' என்ற கணியன் பூங்குன்றன் கணிப்புரையை உணர்க! சிறியாரை இகழ்ந்த பெரியோர் தம் தகுதியை இழப்பர். “அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்” என்பது கலித்தொகை கூறும் இலக்கணம். “பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்” என்னும் கம்பர் கூற்றும் போற்றத் தக்கதே! "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்” 154 'நிறையுடைமை' நம்மை விட்டு நீங்காது நிலைத்து இருக்க வேண்டுமானால், பொறையுமையை என்றும் போற்றி ஒழுக வேண்டும்' என்பது வள்ளுவர் கருத்து. நிறையுடைமையை உரையாசிரியர்கள் காட்டும் விதமும் அறிவுக்கு விருந்தாய் அமைவதால் அதனையும் காண்போம்! "காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்' - என்கிறார் பரிப்பெருமாள் "அடக்கமுடைமையாகிய மிகை உடைமை" என்பது காளிங்கர் உரை. "சால்புடைமை” என்கிறார் பரிமேலழகர் “நன்மை” - என்பவர் சொ. தண்டபாணியார் “மனத்திட்பமாகிய சால்பு” என்பவர் கா.சு. பிள்ளை . “நற்குண நிறை” - இது பாவாணர் கருத்து "நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மை” - என்பவர் சி.இலக்குவனார். “நிறையுடையவனாக இருக்கும் தன்மை ” - என்பது மு.வ. உரை "தன் பெருங்குணம்” - என்பவர் குழந்தை “நிதான குணம் உள்ளவன் என்ற பெருமை” என்பவர் நாமக்கல்லார். “நிறைந்த குணமுடைய நல்ல தன்மை” என்பவர் இராமசாமிப் புலவர். “நெஞ்சத்தின் உறுதிப்பாடு” என உரைப்பவர் இளங்குமரனார். 'நிறைந்த உடைமை அல்லது அடைந்த சிறப்பு' என்பது எம் உரை. இதுகாறும் நாம் பெற்றிருந்த சிறப்புகளை நாம் கட்டிக் காக்க வேண்டுமானால் பொறையுடைமையைக் காத்தாக வேண்டும். பொறையுடைமையைக் காக்கத் தவறினால் நம்மிடம் உள்ள சிறப்புகள் எல்லாம் நீங்கிவிடும். "பெருமையும் வன்மை தானும் பேரெழில் ஆண்மை தானும் ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே” என்னும் கம்பர் பாடல் அடி நல்லதொரு விளக்கமாகும். பிறர் துன்புறுவதைக் காண்பதில் சிறியோர் மகிழலாம். ஆகவே, உணர்ச்சியைக் கிள்ளிவிட முயலலாம். நிறை குணத்தார் சிறியோர் எண்ணம் நிறைவேற இடம் தரல் ஆகாது. தம் தகுதியைக் காத்து, பொறுமையையும் என்றும் விடாது காத்து நிறை மாந்தராக விளங்க வேண்டும் என்பது வள்ளுவம்! ஒருநாள் கபீர்தாசரைக் சந்தித்த ஒருவர் ஐயா, 'நானும் என் மனைவியும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தவில்லை எப்போது பார்த்தாலும் சண்டை தான், நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை . எதிர்த்துப் பேசுகிறாள், எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள். எனக்கு என்ன தெய்வதென்றே புரியவில்லை” என்று சொல்லி அந்த ஆள் குறைப்பட்டுக் கொண்டார். அதனைக் கேட்ட கபீர்தாசர் 'சரி... இன்னும் சிறிது நேரம் இங்கேயே இருங்கள்... சிந்தித்துப் பதிலளிக்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து வீட்டுக்குள் சென்றார். ஒரு பெரிய நூல் கண்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். வீட்டின் வெளிப்பக்கம் வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்தப் பெரிய நூல் கண்டு கன்னா பின்னாவென்று சிக்கி இருந்தது. ஆதலால் கபீர் அதில் இருந்த சிக்கல்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுக்கத் தொடங்கினார். வெளியில் அப்பொழுது நல்ல வெளிச்சம் இருந்தது. வெளிச்சம் இருந்தாலும் அவர் திடீரென்று உள்ளே இருந்த தனது மனைவியைக் கூப்பிட்டு, "இருட்டாக இருக்கிறது விளக்கை ஏற்றி எடுத்துவா'' என்றார். அந்த அம்மையாரும் உடனே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து கபீர்தாசரின் பக்கத்தில் வைத்தார். இவ்வளவு வெளிச்சம் இருக்கிறதே, இந்த நேரத்தில் விளக்கு எதற்கு?'' என்று அந்த அம்மையார் கேட்கவில்லை! உள்ளே போய்விட்டார். சிறிது நேரம் கழித்து இரண்டு குவளைகளில் உப்புக் கலந்த பாலைக் கொண்டு வந்து கொடுத்தார். கபீர்தாசர் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தார். ஆனால் வந்தவரால் குடிக்க முடியவில்லை அப்போது வீட்டுக்குள் இருந்து அந்த அம்மையார் 'பாலுக்குச் சர்க்கரை போதுமா? இன்னும் வேண்டுமா? என வினவினார் அதற்குக் கபீர் போதும் இனிப்பு சரியாக இருக்கிறது என்றார். வந்தவர் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே எதிரில் உட்கார்ந்திருந்தார். அவர் மெதுவாகக் கபீர்தாசரைப் பார்த்து 'நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லையே!'' என்றார். அதற்குக் கபீர்தாசர் 'நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் தந்தேனோ அதுவே தான் உங்கள் கேள்விக்கும் பதில்! குற்றம் பாராதீர்! குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் “குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை” "ஒருவர் பொறை இருவர் நட்பு” 'விட்டுக் கொடும்! வீடு வீடாகும் போய் வாரும் எனக் கூறி அனுப்பி வைத்தார் என்பது வரலாறு. பொறையுடைமை போற்றி வாழ்வோம்! "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” 314 என்பதே திருவள்ளுவர் நெறி. தமக்குப் பிறர் புரிந்த தீமையைப் பொறுக்காது தண்டனை வழங்கியவர்களை உலகத்தார் ஒரு பொருட்டாகவே கருதியும் பாரார். ஆனால் பொறுத்துக் கொண்டவரை பொன்னைப் போல் மதித்துப் போற்றுவர். பொன் உலோகங்கள் பலவற்றுள்ளும் அருமையும் பெருமையும் அழகும் உடையது. வலிமை மிக்கது. காக்கப்படும் பொருள்களில் எல்லாம் மிக உயர்ந்தது. பொன்னைப் போல மதிப்பான வலிமையான காவலை வேறு எந்தப் பொருளும் பெற்றதில்லை. அவ்வளவு சிறப்பு அதற்கு உண்டு என்பதோடு, அதனை நெருப்பில் காய்ச்சி அடித்து மெல்லிதாக நீட்டினாலும் வளைத்து முறுக்கினாலும் ஒடியாது 'பொறுமை' காட்டி ஒளி வீசும் அணிகலன் ஆவதும் பொன் ஆகலின் பொறுத்துக் கொண்டவர் பொன்னைப் போல் உயர்வாக மதிக்கப் படுவர் எனக் கூற வள்ளுவர் எண்ணினார் போலும் அதனாலேயே, "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” 155 எனப் பொறுத்தாரைப் பொன் ஆக்கினார். காந்தியடிகளின் கொள்கை பிடிக்காதோர் அவரைக் குருதி சொட்டச் சொட்ட அடித்துத் துன்புறுத்தியவரையும் தண்டிக்க விரும்பாது பொறுமை காத்தமையால் தான் உலகம் மதிக்கும் ஒப்பற்ற பெருமகானாக மதிக்கப்பட்டார். "புண்ணியக் கிழவர், கீழோர் பிழைத்தன பொறுப்பவாயின் மண்ணியல் வளாகம் எல்லாம் வழிநின்று வணங்குமன்றே” என்ற சூளாமணியின் கூற்றும் வள்ளுவரின் கருத்தை வழி ஒற்றியதே! "வைகுண்டத்தில் திருமகள் திருமாலுக்குத் திருவடித் தொண்டு புரிந்து கொண்டிருக்கும் பொழுது, அவர் திடீரென்று எழுந்து வெளியேறினார். அதற்குக் காரணம் யாதோ என்று திருமகள் வினவினாள். 'என் பக்தன் ஒருவனைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சொல்லிப் போனார். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் திருமால் திரும்பி வருவதைப் பார்த்த திருமகள் 'இவ்வளவு விரைவில் வந்து விட்டீர்களே!' என்று கேட்டாள். அப்பொழுது திருமால் பகர்ந்தார். ஒருவன் புல் தரையில் தோய்த்து உலரப் போட்டிருந்த துணிகளின் மீது, பேரின்பத்தில் மூழ்கியிருந்த என் பக்தன் கால் வைத்து மிதித்து விட்டான். துணிக்கு உரியவன் பக்தனை அடிக்க ஓடினான். பக்தனைக் காப்பாற்றுவது என் கடமை என்று நான் புறப்பட்டேன். ஆனால் அவனைத் திருப்பி அடிக்கக் கல் ஒன்றை எடுத்தான் பக்தன். இனி எனக்கு அங்கு வேலையில்லை என்று நான் திரும்பி வந்துவிட்டேன்'' எனக் கூறினார் திருமால் என்பது இராம கிருட்டிண பரமகம்சரின் அறிவுரைக் கதைகளில் ஒன்று. 'ஒறுத்தாரை ஒன்றாக வையாரே' என்பதற்கு நல்லதொரு சான்றாகும்! ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்” எனக் கூறி அனைவரும் புகழ்பெற்று நிலைபெறத் தூண்டும் வள்ளுவர் புகழ் பெற வழி கூறும் குறளே, "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” 156 தமக்குத் தீமை செய்தவரை விட்டு விடக் கூடாது எனக் கருதி அவர்கட்குத் தக்க தண்டனை வழங்கியவர்கட்கு அன்று வேண்டுமானால் ஏதோ ஒரு சாதனை நிகழ்த்தி விட்டோம் எனக் கருதி மகிழ்ச்சி ஏற்படலாம். அந்தப் பொய் மகிழ்ச்சியும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நொடியில் கூட மாறிவிடலாம். தண்டனை பெற்றவன் எப்படிப் பட்டவனோ? அதன்பின் அவன் எப்படி நடந்து கொள்வானோ? என்பதை எல்லாம் முன் கூட்டி முடிவு செய்ய இயலாது. முடிவு செய்தால் ஏமாந்து போவோம்! ஆனால் பொறுத்துக் கொண்டவர் அடைவது மகிழ்ச்சியன்று புகழ்! அப்புகழ் ஒருநாள் இருநாள் நிற்கும் புகழா? இல்லை . உலகம் உள்ள அளவும் நிலைக்கும் புகழ்! ஒருநாள் இன்பம் பெறப் போகிறீர்களா? பல்லாயிரம் ஆண்டு நிலைக்கும் புகழ் பெறப் போகிறீர்களா? பொறுமையால் புகழ்பெறுக என வள்ளுவர் வாழ்த்துகிறார். 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது பழமொழி. கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின் வானோங்கு மால்வரை வெற்ப! பயமின்றே தான்தோன் றிடவரும் சால்பு” என்னும் பழமொழியும் இக்குறள் கருத்தை வழிமொழிகிறது. "வெறுப்ப ஒருவன் காரணத்தால் மிக்க மடத்தால் புரிபிழையைப் பொறுப்பின் அதுவே பேரறமாம் புகழும் நிறையும் மிகவளரும் கறுப்பொன் றறியா அறிவினர்கள் கருத்தின் மகிழ்ச்சி உளவாகும் ஒறுப்பின் வருவது ஒன்றில்லை அதனால் பொறுமை உயிர்த்துணையாம்” என விநாயக புராணம் பொறுமையின் பெருமையை வள்ளுவர் வழிநின்று விளக்குகிறது. "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று" செய்யத் தகாத கொடுமையினைப் பிறர் நமக்குச் செய்தால், நமக்கு மிக்க வேதனை ஏற்படும் என்பது உண்மைதான். எவ்வளவு வேதனை ஏற்பட்டாலும் நாம் அறநெறி தவறி எந்தத் தீமையையும் அன்னார்க்குச் செய்யாமல் பொறுமை காத்தால் நாம் நன்மை அடைவோம்! இக்குறளில் இடம் பெற்றுள்ள "நோநொந்து' என்னும் சொல்லுக்கு மிக வருந்தி' எனப் பொதுவாகப் பொருள் கூறி விடலாம். ஆனால் பரிமேலழகர் தமக்குத் துன்பம் செய்ததனால் அவர்க்கு வரும் துன்பத்திற்குத் தாம் வருந்தி' எனவும், "பிறன் செய்த துன்பத்தை மனதில் வைத்து நொந்து கொண்டே இருந்து” என நாமக்கல் இராமலிங்கனாரும் ''அவற்றைத் திருப்பிச் செய்தால் அவர்க்கு உண்டாகும் துன்பத்திற்கு நொந்து" என மணக் குடவரும் சிந்தித்து உரைப்பதும் எண்ணத் தக்கதே. பொறுத்தல் கடமை! பிறரைத் துன்புறுத்த, தண்டிக்க நமக்கு உரிமையில்லை . "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை” 579 என்பதே குறள்நெறி! "தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்” என்னும் நாலடியார் 'துன்பம் செய்தார் துன்பம் அனுபவிக்க நேருமே என வருந்தும் பொறுமை சான்றவரைக் காட்டுகிறது. "காவாது ஒருவன் தன் வாய்திறந்து சொல்லும் சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து” தீச்சொல் தன்னைச் சுட்டதை உணரும் அறிவுடையார் பிறர் மனத்தைச் சுடும் சொல்லைச் சொல்ல மாட்டார் என்னும் நாலடியார் பாடல், 'நோநொந்து அறனல்ல செய்யாமைக்கு நல்ல விளக்கமாகும்! முகம்மது நபியின் கொள்கையைப் புரிந்து கொள்ளாது வெறுப்புற்ற பெண்ணொருத்தி அவரை அவமானப்படுத்த எண்ணி, நாள் தோறும் அவள் வீட்டு வழியில் வழிபடச் செல்லும் போது வீட்டில் கூட்டிய குப்பையை அவர் தலையில் கொட்டுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வரச் சற்று பிந்தினாலும் நபிகள் நாயகம் அவள் வரும்வரை காத்திருந்து அவள் வழிபாட்டை ஏற்றுக் கொள்வார். ஒரு நாள் அவள் வரவில்லை . நபிகள் நாயகம் அவள் வீடு தேடிச் சென்று பார்த்தார், அவள் நோயால் துடித்துக் கொண்டிருந்தாள்; கண்டு வருந்திய பெருமான் அவளுக்குத் தக்க மருந்தும் உணவும் தந்து காத்தார். "நொநொந்து அறனல்ல செய்யாமை நன்று” என்பதற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்து காட்டினார்! "நாமும் தீமை செய்தார்க்கும் தீமை செய்யாது வாழ்வோம்!” "எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை” என்பது நாலடியார் பொறுமைக்குக் கூறும் இலக்கணம். முள் குத்தும், நாய் குரைக்கும், தேள் கொட்டும், பாம்பு தீண்டும் - இது அதன் தன் இயல்பு; மனிதரிலும் அத்தன்மை வாய்ந்தோரும் இருப்பர். குரங்குக் குணம் படைத்தோர் உணர்வைத் தூண்டலாகாது. சாய்க்கடையில் கல்லை எறிதல் அறிவுடைமை அன்று. பல்லவ வேந்தன் திருநாவுக்கரசரை நீற்றறையில் போட்டான்; நஞ்சு கொடுத்துக் கொல்ல முயன்றான்; யானையை மிதிக்க ஏவினான்; உடலில் கல்லைக் கட்டி கடலில் வீழ்த்தினான்; மன்னன் என்ற செருக்கால் வரம்பு கடந்த தொல்லை தந்தாலும் அவரை அழிக்க இயலவில்லை அவர்தம் தகுதியால் வென்றார். "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியால் வென்று விடல்” 158 என்பதொரு வெற்றிக் குறள். அடங்காத ஆணவத்தால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் தீமை புரிந்தவர்கள் மீதும் வெறுப்போ சினமோ கொள்ளாது. அவர்க்கு எந்தத் தீமையும் செய்து விடாது. நாம் நம்பால் அமைந்துள்ள பொறுமைப் பண்பால் வெற்றி பெற வேண்டும்! பொறுமையை மேற்கொள்ளாது தீமை புரிந்தவரைத் தண்டிக்க முயன்றால், முயற்சி கை கூடினும் கூடும்; கூடாமல் போயினும் போம்! கூடாவழி முயற்சி பயனற்றதாகித் தோல்வியும்; கூடியவழி அறனல்லா வழிச் சென்ற குற்றத்திற்கு ஆளாகிச் சான்றோரின் மதிப்பையும் இழப்பர்; ஆகலான் ஒறுத்தல் வெற்றிபோல் தோன்றினாலும் வெற்றி அன்று தோல்வியேயாகும். பொறுத்துக் கொள்ளுதல், பிறர்க்கு இன்னா செய்யாமை உயர்ந்தோர் பின்பற்றி ஒழுகும் நன்னெறியாகும். நன்னெறி யிலிருந்து என்றும் விலகலாகாது; விலகினால் வாழ்க்கை தோல்வியுற்ற வாழ்க்கை ஆகிவிடும்! கவுந்தி அடிகளுடன் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோவல கண்ணகியை 'இவர் யார்? எனக் கீழ் மகன் ஒருவன் தன் மனைவியுடன் வினவினான்! கவுந்தியடிகளோ இவர்கள் 'என் மக்கள்' என விடை அளித்தார். அதனைக் கேட்ட அம்மக்கள் 'உடன் பிறந்தார் கணவன் மனைவியராகவும் வாழ்வதுண்டோ ? என இகழ்ந்துரைத்தனர். அவர் உரை கேட்ட கவுந்தியடிகள் சினம் கொண்டு அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுநரிகள் ஆகுக எனச் சாபம் இட்டார். அவர்கள் நரிகளாகி ஊளையிட்டு ஓடினர். அதனைக் கண்ணுற்ற கண்ணகி வருந்தினாள் கோவலன், கவுந்தியடிகளை நோக்கி, "நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறியல் வேண்டும்” செய்தவத்தீர் நும்திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீரோ? என வேண்டிய நிலை "துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற் பவர்" 159 என்னும் குறளுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும்! வரம்பு கடந்து நடப்பவனின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களையும் கேட்டும் ஆத்திரப் படாமல் பொறுத்து மன்னிக்கும் மனப் பக்குவம் ஒருவனுக்கு வாய்த்திருக்குமாயின் அவன் இல்லற வாழ்வு மேற்கொண்டவன் ஆயினும், அவர் தந் நலத்தை விட்ட தூய துறவியினும் மேம்பட்ட தூய்மையானவர் ஆவார். மனத்தால் தூய்மை யானவர் என்றால் சிறந்த அறவோர் ஆவார்! "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்” என்பது நிறைவுக் குறள். ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்” எனக் கூறுபவர் திருவள்ளுவர். துன்பங்களில் எல்லாம் கொடிய துன்பம் பசித்துன்பம், ஏனைய நோய் போன்ற துன்பத்தைத் தாங்கிக் கொள்பவர்கள், கூட பசித்துன்பத்தை பொறுத்துக் கொள்ள முடியாது வேதனைப்படுவர். ஆகவே தான் பசித் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது ஆற்றல்களில் எல்லாம் சிறந்த ஆற்றல் என்றார். எல்லாப் பற்றுகளையும் விட்ட துறவியர்களாலும் விடமுடியாத பற்று உணவுப் பற்று. உணவுப் பற்றையும் விலக்கி உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் வாழ்வோர் உளர் ஆயின் அவர் செயற்கரிய செய்யும் பெரியவரே ஆவர். அவரினும் பெரியவர், பந்த பாசத்துடன் இல்லற வாழ்வு வாழ்ந்து கொண்டு, பிறர் சொல்லும் கடுஞ்சொற்களையும் பொருட்படுத்தாது பொறுமையாளராய் விளங்குபவர்களே ஆவர். பசியைப் பொறுப்பவரினும் பெரியர் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர் என்பது திருவள்ளுவர் ஒப்பாய்வு முடிவாகும். "சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே” ஆகவே தான், "எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில் கொள்ளிவைத்தாற் போல் கொடிதெனினும் - மெல்ல அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின் பிறதொன்றும் வேண்டா தவம்" என அறநெறிச் சாரம் சிறப்பாக விளக்கி உரைக்கிறது. இகழ்வார் சொல்லையும் பொறுக்க! பொறுத்தலினும் மறத்தல் நன்று! பொறுப்பது ஒரு பேராற்றல் பொறுமையே நிறைமை ஆக்கும்! பொறுத்தார் பொன்போல் போற்றப்படுவார்! பொறுமை நிலைத்த புகழ்! தீமை செய்தவர்க்கும் தீமை செய்யாதே! பொறுமையர் துறந்தாரினும் தூய்மை உடையவர் பொறுமையர் உண்ணாது நோற்பாரினும் பெரியர்! பொறு! பூவுலகப் புகழ் பெறு 17. அழுக்காறாமை ஒழுகு - ஒழுக்கு - ஒழுக்கம் - ஒழுக்காறு எனச் சொல்லாக்கம் பெறுவது போல் இழுகு - இழுக்கு - இழுக்கம் - இழுக்காறு என்றாகும், அதுபோல் அழுகு - அழுக்கு - அழுக்கம் - அழுக்காறு என்றாவது மொழியின் இயல்பு. அழுகுதல் எப்போது நிகழும்? ஒரு பொருள் எப்பொழுது அழலுதல் ஆகிறதோ அப்பொழுதே அழுகுதல் ஆகும். அழுலுதல் என்பது என்ன? எரிதல், கனலுதல், அனலுதல், தீயாதல், வெதும்புதல், வெப்புதல், கொதித்தல் எல்லாம் அழலுதலே ஆம். அழலுதல் என்பது பொறாமை ஆகும். நெஞ்சத்து எரிவே பொறாமை. கருக்கொண்ட எரிவு உருக் கொண்டதே சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி ஆகும். அதனால் தானே அறத்தின் இலக்கணம் கூறுங்கால், அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” எனக் கூறியதை ஆழமாக எண்ணத் தூண்டுகிறது. அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச் சொல் நான்கையும் அண்ட விடாது வாழும் வாழ்வே அறவாழ்வு என்று சொல்லும் வரிசையிலும் 'அழுக்காறே' இழிவில் முதல் இடம் பெறுகிறது. பிறர் ஆக்கம், அதிலும் தொடர்புடைய நெருங்கியவர் ஆக்கம் கண்டு மகிழ்ச்சியும் அடையாமல், அவர் போல் நாமும் ஆக்கம் பெற வேண்டும் என்றும் எண்ணாமல், இவனெல்லாம் ஆக்கம் பெற்று விட்டானே என்றும் அவ்வாக்கத்தையும் ஆக்கமாகக் கருதாமல், அவரையும் மதிக்காமல், அவரை யாராவது பாராட்டினாலும் தாங்கிக் கொள்ள மாட்டாமல் மனத்திற்குள்ளே வெந்து புழுங்குகிற புழுக்கமே அழுக்காறு என்னும் பொறாமையாகும். பொறாமைக்காரர்களைத் தான் 'நடமாடும் கொள்ளிவாய்ப் பிசாசு' என உருவகிக்கின்றனர். பொறாமைக்காரர் கண்ணே கொள்ளிக்கண், தீக்கண், அம்புக்கண், ஆகவே தான் அத்தகையோர் பார்த்தால் 'கண்ணேறு பட்டு விட்டது என்கின்றனர். ஏறு என்றால் அம்பு என்றும் இடி என்றும் பொருள். அழுக்கு என்பதே பொறாமை தான். ஒழுக்கு - ஒழுக்காறு ஆவது போல் இழுக்கு இழுக்காறு ஆவது போல், அழுக்கு - அழுக்காறு ஆகும். உழலுதல் உழுதல் ஆவது போல் அழலுதல் அழுகுதல் ஆகும். "பொறாமையும் மனத்தழுக்கும் அழுக்காறென்ப” எனப் பிங்கலந்தை கூறுகிறது. "எவனுக்கு இயல்பாய் நற்குணம் இல்லையோ அவன் பிறருடைய குண நலங்களைக் கண்டு பொறாமை கொள்வான்” என்பது பேக்கன் கருத்து. ''அயலானுடைய கால் ஒடிந்த பிறகு தான், மிக நன்றாக நடக்கலாம் எனத் தன் கால் ஊனம் ஆன பொறாமைக்காரன் நினைக்கிறான்” என்பது டென்மார்க் பொறாமைக் காரனைப் பற்றிக் கணித்த கணிப்பு. தனக்கு ஒரு கண் போனால் பாதகம் இல்லை; அடுத்தவனுக்கு இரண்டு கண் போனால் போதும் அதுவே தனக்கு மகிழ்ச்சி எனக் கருதி வாழ்வோரே பொறாமைக்காரர். அவர் படித்து நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறியிருக்கிறார்! என்று ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் கூறுகிறோம். அதனைக் கேட்ட அவர் ஆமா! போங்க! உங்களுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்! 'அவரு படிச்சு கிழிச்சார்' என்பது போல் மறுமொழி யாரிடமிருந்து வருகிறதோ அவர் அழுக்காறு உடையவர் என்று உணர்க! 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. "அழுக்காறுடையோன் அவிநயம் உரைப்பின் இழுக்கொடு புணர்ந்த விசைபொருள் உடைமையும் கூம்பிய வாயும், கோடிய உரையும் ஓம்பாது விதிர்க்கும் கைவகை உடைமையும் ஆரணங்காகிய வெகுளி உடைமையும் காரணம் இன்றி மெலிந்த முகம் உடைமையும் மெலிவோடு புணர்ந்த இடும்பையும் மேவரப் பொலியும் என்ப பொருந்து மொழிப் புலவர்” என அவிநயம் அழுக்காறுடையாரின் புறத் தோற்றத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 'அழுக்காறு என்னும் உணர்ச்சி நல்ல மனிதனை நாகப் பாம்பாகவும், வஞ்சகமற்ற மாடப் புறாக்களைக் கழுகுகள் ஆகவும், மாற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. பேராசையும் பொறாமையும் கொண்ட எவரும் வாழ்க்கையில் நல்லவர்கள் என்று பெயர் எடுத்ததில்லை எனக் கூறுகிறார் பில்டிங் என்ற அறிஞர். ஒழுக்கமே நமக்கு உயர்வும் மேன்மையும் தரும்! நாம் பெற விரும்பும் வாழ்வியல் நலங்களை எல்லாம் ஒழுக்க நெறி நின்றே பெற இயலும். ஒழுக்கம் நம்மை மட்டுமல்லாது நம் குடியையும் உயர்குடி ஆக்கும் தகுதி வாய்ந்தது! ஆகவே ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாய்க் கருதிப் பேண வேண்டியது கட்டாயம் ஆகும்! ஒழுக்கம் தவறினால் உயர்வு பெற இயலாது! நம் பிறவியே இழிபிறவிபோல் கருதப்படும்! அடையக் கூடாத பழிவந்து சேரும்! எப்பொழுதும் துன்பத்தில் உழல நேரிடும்! ஒழுக்க மற்றவர் கற்றார் ஆயினும் அறிவிலாதவராகவே கருதப்படுவார்! நல்லொழுக்கம் நமக்கு நல்ல துணையாகும். தீயொழுக்கம் நமக்குத் தீராப் பகையாகும். தீயொழுக்கத்திற்குக் கூட்டாளிகள் பலர் இருப்பினும் அழுக்காறே அவர்கட்குத் தன்னிகரற்ற தலைவன் போன்றவன். அவன் கொடிய வழிப்பறிக் கொள்ளைக் காரனும் கொலைகாரனும் போன்றவன். ஆகவே நாம் பயணப்படும் வழி இத்தகையோர் நடமாட்டமே இல்லாத பாதுகாப்பான வழியாக இருக்க வேண்டும் அல்லவா? ஆகவே தான் திருவள்ளுவர் முதற்கண் ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு” என நல்வழி காட்டுகிறார். ஒவ்வொருவரும் தூய மனத்தினராய் விளங்க வேண்டும். அம்மனத்தில் அழுக்காறாகிய பகைவன் இருக்க இடம் தந்து விடல் ஆகாது. அதுவே நாம் பின்பற்றி ஒழுக வேண்டிய ஒழுக்க நெறிகட்கு எல்லாம் நல்லதொரு கால்கோளாகும்! அழுக்காறு உடையோர் ஒழுக்கமுடையவர் ஆதல் அரிது. அழுக்காறு சிறிதும் இல்லாதவரே தூய ஒழுக்கம் உடையவர் ஆவார். "வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளலும் நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே!” என்ற தாயுமானவரின் வினாவும் ஒத்து இயல்வதை உணரலாம்! "பிறர்மனையவரைப் பெற்றதாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் பிறர்வசை உரைத்தல் பெருமையன்று எனவும் பிறர்துயர் என் துயர் எனவும் இறுதியே வரினும் என் மனக்கிடக்கை எம்பிரான்! இவை என உரைத்தான் மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமைகூர் வாயுவின் மைந்தன்” என்னும் பாடலில் வீமன் தன் தூய ஒழுக்கை கண்ணபிரானிடம் தானே கூறுவது போல் வில்லிபுத்தூரார் பாடியுள்ளது. அழுக்காறு இலாத இயல்பை ஒழுக்காறாகக் கொண்டு உயர்ந்தவன் வீமன் என்பதை நன்கு விளக்குகிறது. நாம் வறுமையில் வாடினாலும் சுற்றத்தார் எல்லாரும் நம் போன்று இல்லாமல் சிலராவது வளமையோடு இருக் கிறார்களே! அவர்களாவது நன்றாக வாழட்டும்! என்னைப் படிக்க வைத்தார்கள். எனக்குப் படிப்பு ஏறவில்லை. எனினும் என் அண்ணனும் தம்பியும், தங்கையும் தமக்கையும் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று உயர்ந்திருக்கிறார்களே. அதுவே எனக்கு மகிழ்ச்சி. அதை விட அவர்கள் படிப்பிற்கு நான் உழைத்துத் தேடி உதவ முடிந்ததே அதுவே நான் பெற்ற பேறு! என எண்ணி வாழும் மனவளம் இருக்கிறதே அதற்கு இணையான வளம் எதுவும் இல்லை . உயர் நிலையில் இருப்பவர்கள் யாரைப் பார்த்தும் ஒருவனுக்கு அழுக்காறு ஏற்படவில்லை! மனத்தில் களங்கமோ கலக்கமோ, தடுமாற்றமோ ஏற்படாத அடக்கம் உடையவனாகவும், ஒழுக்கம் உடையவனாகவும், பொறுமை உடையவனாகவும், நடுவு நிலை தவறா நற்சிந்தனை உடையவனாகவும் ஒருவன் தன் பணியை முறையே செய்து, கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு செப்பமாக வாழ முடியுமானால் அதைவிடச் சிறந்த மேன்மை வேறில்லை என்பது வள்ளுவர் நோக்கம். ஆகவே தான் "விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்” என்னும் அருமைக் குறளைப் படைத்தார். "அழுக்காறு இன்மையே இணையற்ற நற்பேறு” ''அழுக்காறு கொள்ளாதீர்கள், நெருப்பு விறகை உண்டு விடுவது போல அழுக்காறு அறச் செயல்களை அழித்துவிடும்” என்பது முகம்மது நபியின் அறிவுரைகளில் ஒன்று. எவனொருவன் பிறர் பெற்ற ஆக்கத்தை - செல்வத்தை - நலத்தை - உயர்வை - வளர்ச்சியைக் கண்டு மகிழவில்லை என்றாலும் குற்றமில்லை. கண்டு கண்டு கவலைப்பட்டு உளம் வெந்து பொறாமைப் படுகிறானோ அவன் ஒரு காலத்திலும் அறவோன் ஆகப் போவதும் இல்லை! உண்மையான நன்மை தரும் ஆக்கம் எதனையும் பெறப் போவதும் இல்லை . அழுக்காறு கொள்ளாதவனே அறத்தையும் அடைவான்! ஆக்கத்தையும் பெறுவான்! என்பதை, அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்” எனும் குறள் விளக்குகிறது. "அள்ளித் தெண்ணீறணியும் தண்டலையார் வளநாட்டில், ஆண்மை யுள்ளோர் விள்ளுற்ற கல்வியுளோர் செல்வம் உளோர் அழகுடையோர் மேன்மை நோக்கி உள்ளத்தில் அழன்று அழன்று நமக்கில்லை என உரைத்து இங்கு உழல்வாரெல்லாம் பிள்ளைப் பெற்றவர் தம்மைப் பார்த்திருந்து பெருமூச்செறியும் பெற்றியோரே!” என்னும் தண்டலையார் சதகப் பாடல் தரும் விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. "பக்கத்து நிலத்தில் கம்புப் பயிர் செழித்து வளர்ந்திருப்பதைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் பொறாமை கொண்டு, ஒருவர்க்கும் தெரியாமல் இரவோடு இரவாக உழுது போட் டான். பயிர் அழிந்து போகட்டும் என்ற தீய எண்ணத்தால்! பகலில் அடித்த வெயிலில் நிலம் காய்ந்தது காற்றில் உலர்ந்தது. அன்று இரவு எதிர்பாராமல் நல்ல மழை பெய்தது. அதனால் பயிர் மேலும் வளத்தோடு செழித்து வளர்ந்து எதிர்பார்த்ததை விட நல்ல விளைவைத் தந்தது என்பது நடைமுறை நிகழ்வு! பிறன் ஆக்கம் பேணுக! அறனாக்கம் பெறுக! ஒழுக்கத் தவறினால் பழியும் துன்பமும் வந்து சேரும் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டோர்; ஒழுக்கநெறியை உறுதிப்பாட்டுடன் பின்பற்றி வாழ்வர் என்பதை, ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து” என ஒழுக்கமுடைமையில் கூறிய உத்தியைப் பின்பற்றி, "அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து” 164 என்னும் இக்குறளையும் பாடியுள்ளார். குற்றமுடைய வழியில் சென்றால் துன்பமே உண்டாகும் என்பதை அறிவுடையோர் நன்கு அறிவர். ஆகவே, அறிவுடை யோர் செய்யும் அனைத்தையும் குற்றமுடைய வழியில் செய்ய மாட்டார்கள். அழுக்காறு மிகத் தீயவழி என்பதையும் அறிவுடை யோர் நன்கு அறிவர். அறிவுடையோர் அறனல்லா அழுக்காறு கொண்டு எச்செயலையும் எங்கும் எப்பொழுதும் செய்யமாட் டார்கள். அழுக்காறு கொள்வது அறியாமையின் விளைவு! "அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன்மாக்கள் இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே!” எனத் தாயுமானவர் அழுக்காற்றின் கேட்டை ஆண்டவனிடமே உரைத்தார். 'யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும்! என்பர். அறிவில்லாதவர்களும் தமக்குத் தாமே விளைவித்துக் கொள்ளும் தீமையைப் போல் கொடும் பகைவர்களால் கூட செய்ய முடியாது என்பது வள்ளுவர் கருத்து ஆகவே புல்லறிவாண்மையில் "அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது” 843 எனக் கூறினார். அதே போக்கில் கூறப்படும் பாடலே, "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடுஈன் பது” 165 வெகுளி, அழுக்காறு போன்ற தீய இயல்புகள். 'நெஞ்சக நெருப்பை நிலைகளனாய்க் கொண்டு உருவாவன. ஆகவே, அவை 'அழி நெருப்பு' ஆகும். நெருப்பு எங்கே போய் எரித்து அழிக்க வேண்டும் என வைக்கிறார்களோ அங்கே போய் அழித்தாலும், அழிக்காவிடினும், முதலில் பற்றிய அல்லது பற்ற வைத்த பொருளை அழிக்காமல் விடாது. ஏனெனில் இவை தற்கொல்லிகள் ஆகும். அல்லது தற்கொலைப் படையினர் வைத்திருக்கும் 'குண்டு' போன்றதாகும். அழுக்காறு உடையவர்கள் பிறர் சிறப்புக் கண்டு ஏங்கி ஏங்கித் தமக்குத் தாமே அழிவு தேடிக் கொள்பவர்கள். பகைவர்கள் எல்லாம் கேடு விளைப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே தான் திருவள்ளுவர் பகைவர்கள் கேடு விளைவிக்கத் தவறினாலும் தவறுவார்கள் ஆனால் அழுக்காறு தன் வேலையாகிய கெடுக்கும் வேலையை மறந்து விடாமல் செய்யும். பகை என்னும் சொல்லுக்குப் பகுப்பு அல்லது பிரிவு என்றுதான் பொருள் கொள்வதற்கு வழி இருக்கிறதே அன்றி, ஒருவர்க்கொருவர் கேடு செய்து கொள்வதைப் பற்றிய குறிப்பு இல்லை . பகை கொண்டவர் என்றால் ஒருவர்க் கொருவர் நீங்கி இருக்கின்றார் என்று மட்டும் தான் கருத வாய்ப்பு உண்டு. 'ஒன்றார்' என்னும் சொல்லும் இப்பொருளையே உணர்த்தும் 'பொருந்தார்' என்று மட்டும் தான் பொருள் கொள்ளலாம். தீங்கு செய்வார் என்னும் பொருள் அச்சொல்லில் இல்லை. 'ஒன்றார்' என்னும் சொல்லே 'ஒன்னார்' என மருவி இலக்கியத்திலும் இடம் பெற்று விட்டது. ஆதலால் 'ஒன்னார்' - பகைவர் ஒன்றாதவர், பொருந்தாதவர் என்று கூறலாமே யன்றி 'தீங்கு செய்பவர்' என்று அவரை உறுதிபடக் கூறுவதற்கு, சொல் வடிவத்தைப் பொருத்து இடம் இல்லை. நடைமுறை வாழ்விலும் தீங்கு இழைப்பவர் எனத் திட்டமாகக் கூறமுடியாது. யார்கை ஓங்குகிறது என்பதும் உறுதிப்பட மொழிய இயலாது. ஆனால் அழுக்காறு என்னும் அழுக்குக்கு உட்பட்டோரால் பிறர்க்குத் தீங்கு செய்ய முடிகிறதோ? இல்லையோ? அழுக்காறு கொண்டவரை அழிக்காமல் விடாது. அழுக்காறே பகையினும் கொடியதாகும்! "மாங்கனி வாயிற் கவ்வி மரத்திடை இருந்த மந்தி பாங்கர் நீர் நிழலை வேறோர் பழம்உணும் குரங்கென்று எண்ணித் தாங்கரும் அவாவில் சலத்திடை வீழ்ந்து இறந்தது ஒப்ப நீங்களும் பொறாமை யுள்ளார் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே!” அழுக்காறு உடையார் தாமே கெடுவர் என்பதைத் தக்க உவமை வழி விளக்குகிறது விவேக சிந்தாமணி! இருப்பவர் இல்லாதவர்கட்கு இயன்றதைக் கொடுத்து உதவி வாழ வேண்டும். கையில் இல்லையாயினும் கடன் பெற்றுக் கூட உதவ வேண்டியவர் கட்கு உதவ வேண்டும்! நம் தகுதிக்கு மேல் ஒருவர்க்கு உதவி தேவைப்படுகிறது என்றால் தக்கவர் ஒருவரிடமோ, பலரிடமோ நன்கொடை பெற்றும் உதவ வேண்டியவர்கட்கு உதவி புரிவதே மனித இயல்பும் கடமையும் ஆகும். தானும் யாருக்கும் உதவி செய்வதும் இல்லை! கொடுத்துப் புகழ் பெறுவார் புகழையும் ஏற்றுக் கொள்ள மனமும் இன்றிப் பொறாமைப்படும் இயல்பு ஒருவனிடம் இடம் பெற்றால் இன்று அவன் நல்வாய்ப்போடு இருந்தாலும் விரைவில் அவன் மட்டுமின்றி அவனுடைய சுற்றத்தாரும் மானங்காக்க உடையும், பசி போக்க உணவிற்கு வழியும் இன்றி அல்லல்பட்டு அழிவர் என்பது வள்ளுவரின் கணிப்பு, அதனாலேயே "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” 166 எனக் கூற நேர்ந்தது. அழுக்காறு கொள்ளாதே! அதிலும் அருள் கூர்ந்து பிறர்க்குக் கொடுத்து உதவுவதைக் கண்டு அழுக்காறு கொள்ளவே கூடாது. "தாமும் கொடார், கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை சேமம் செய்வாரும் சிலருண்டே - ஏமநிழல் இட்டு மலர்காய் கனிகள் ஈந்தருளும் மாமரத்தைக் கட்டும்உடை முள்எனவே காண்' என்னும் நீதி வெண்பா அழுக்காறு கொள்பவனை மாமரத்தைச் சுற்றிக் கட்டப்படும் உடை முள்ளுக்கு ஒப்பிட்டு உரைக்கிறது. எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம் தடுப்பது நினக்கு அழகிதோ தகவுஇல் வெள்ளி, கொடுப்பது விலக்கும் கொடியோய் உனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றி விடுக்கின்றாய்” என்பது கம்பர் பாட்டு. நெடியமால் குறுஉருவம் ஏற்று மாவலி மன்னனிடம் மூன்றடி மண் வேண்டினான். இதில் சூழ்ச்சி இருப்பதை உணர்ந்து கொண்ட மாவலியின் தந்தை முறை உடைய 'சுக்கிரன்' கொடுக்க வேண்டாம் எனத் தடுத்த போது மாவலி சுக்கிரனுக்கு உரைப்பது போல் பாடப்பட்ட பாடல் இதுவாகும். குறட் கருத்தை மட்டுமல்லாது சொற்களையும் அப்படியே தக்கவாறு கம்பர் விளக்கும் திறமே திறம். தளராத ஊக்கம் உடையவன் இடத்திற்குச் செல்வம் தானே வழிகேட்டுக் கொண்டு வந்தடையும் என்பதை ஊக்கம் உடைமையில், "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை' 594 எனப் பெருமையுடன் கூறும் வள்ளுவர், "வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு” 519 (பபானேடாயின் அல் கு) எனத் தெரிந்து வினையாடலிலும், "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு” 920 என்னும் வரைவின் மகளிர் அதிகாரத்தில் யார் யாரிடம் செல்வம் நிலை பெறாது நீங்கி விடும் எனக் கூறுவதற்கு முன்னரே கூறும் குறள் இதோ வருகிறது. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்” மனவளம் குன்றிய அழுக்காறு உடையவன் வீட்டில் செல்வம் தங்காது வறுமையே நிலைபெறும். செய்யவள் - திருமகள், ஆவாள். இக்குறியீடு செல்வம், சிறப்பு, பெருமை, புகழ், இன்பம் ஆகிய உயர் தன்மைகள் அனைத்தையும் குறிக்கும். தவ்வை - மூத்தவள் - மூதேவி என்னும் மரபு வழிக் குறியீடு வறுமை, இருள், பழி, துக்கம், துன்பம் ஆகிய தன்மைகள் அனைத்தையும் உணர்த்தும். அழுக்காறு இடம் பெற்றால் நன்மை தரும் நல்லவைகள் இடம்பெறா ஆனால் கேடு தருவனவெல்லாம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். அழுக்காற்றை வெருட்டிவிட்டு ஆக்கத்தை நிலைபெறச் செய்வாயாக! என்பதுவே வள்ளுவரின் வேண்டுகோள்! மூதேவிக்கு இடம் தராது திருமகளை நிலைபெறச் செய்! திருமகள், கெடுமகள் இருவரில் யார் சிறந்த அழகி எனத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நிகழுற்றது. இருவரும் ஒத்த அழகிகள் தாம்! எப்படி! திருமகளின் முன்னழகே அழகு! கெடுமகளின் பின்னழகே அழகு என்றார். திருமகள் வீட்டுக்கு வருவது அழகு கெடுமகளாகிய மூதேவி வீட்டை விட்டுப் போவது வீட்டிற்கு அழகு என்பது கருத்து! வரங்களின் மூலம் இராமனைக் காட்டிற்கு அனுப்பவும் பரதனை நாடாள வைக்கவும் கூனிவழி திட்டமிட்டு, தயரதன் வரும் வேளையில் கைகேயி தன் அழகுக் கோலத்தை அழித்து விட்டுக் கிடந்த கோலத்தைக் கம்பன், "நவ்வி வீழ்ந்தென நாடக மயில் துயின்றென்ன கவ்வை கூர்தரச் சனகிஆம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம்மடந்தை தவ்வை ஆம் எனக் கிடந்தாள் கேகயன் தனையை” அவ்வை ஆகிய சீதேவி வெளியேறப் போகிறாள் தவ்வை - மூதேவி ஆகிய கைகேயி அலங்கோலமாய்க் கிடக்கிறாள். என்பது இக்குறளுக்கு ஏற்ற காட்சி அமைப்பாகும்! "இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்” 1042 என நல்குரவில் இன்மையை அதாவது வறுமையை ஓர் இணையில்லாத பாவி எனக் குறிப்பிடுவது போலவே அழுக்காறாமையில், "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்" 168 எனக் கூறுகிறார். வறுமையைப் பாவியாக உருவகப்படுத்தியவர், வறுமை ஏற்படுவதற்குரிய முதன்மைக் காரணங்களில் ஒன்றாக அழுக்காற்றைக் கருதி அழுக்காறும் ஒரு இணையற்ற கொடுமையான பாவி ஆவன். பாவச் செயல்களாகப் பார்த்துப் பார்த்துச் செய்வதுதான் அவனுடைய முழுநேரப் பணி. அவன் என்றைக்கு நெஞ்சத்தில் கால் கொண்டானோ அன்றிருந்தே அவனிடம் இருந்த செல்வங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் தொடங்கி விடுவான். அனைத்தையும் அழித்துவிட்ட பின்பும் நிறைவு அடையான். வேறு பல துன்பம் தரும் சிக்கல்களிலும் அவனைச் சிக்க வைத்து மீள முடியாதவனாகக் செய்து விடுவான். ஆகவே அழுக்காறு ஆகிய பாவியை அண்டவும் விடாது நம்மை நாமே காத்துக் கொள்வது நன்றாகும். கற்றதம் கல்வியும் கடவுள் பூசையும் நற்றவம் இயற்றலும் நவையில் தானமும் மற்றும் அறங்களும் மனத்தின்பால் அழுக்கு அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால்” என்னும் காசிக் காண்டம் கூறும் கருத்தும் நல்லது நிலைக்க அழுக்காற்றை அகற்ற வேண்டுவதையும் இணைத்து நோக்குக! ''என் மாட்டுப் பொருட் செல்வம் குவிந்திருந்தால் என் வாழ்க்கை, தொண்டுச் செல்வத்தை அடைந்திருக்குமோ? என்னவோ? தெரியவில்லை, என்பால் தொண்டுச் செல்வம் பெருகுமாறும், பொருட்செல்வம் பெருகாதவாறும் அருள்சுரந்த இயற்கை இறையை வாழ்த்துதல் வேண்டாமா? அது வாழ்க!'' எனத் தமிழ்த் தென்றல் திரு.வி.க தம் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடுவதும் சிந்திக்கத் தக்கதாகும். பொருளை எப்படியும் தேடலாம்! ஆனால் திறன் அறிந்து தீதின்றி வந்த பொருளையே உண்மையில் பொருள் என்று கருத வேண்டும்! முறையான உழைப்பின் மூலம் நல்ல வழியில் தேடிய பொருளே அறத்தையும் தரும், இன்பத்தையும் தரும் என்பதே குறள்நெறி! செல்வத்தால் பெறும் நிறைவை நாம் பெற வேண்டுமானால் செல்வம் தேடும் வழியும் தூயதாய் இருக்க வேண்டும். ஆனால் காலத்தின் கோலத்தால் எப்படி எவ்வழியில் சென்றாவது கோபுரத்தின் உச்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்ற ஆசை இன்றைய மனித சமுதாயத்தின் உள்ளே ஊடாடிக் கொண்டிருப்பதையும் அறிவோம். அவ்விய நெஞ்சத்தவரும் ஏதோ ஒரு வழியில் ஆக்கம் பெறுதலும் காணக் கூடியதே! நூல் பிடித்தது போல் எவர் மீதும் பொறாமை கொள்ளாமல் நடுவுநிலை தவறாது வாழ்வோரிலும் வறுமைக்கு ஆட்பட்டவர்களையும் உலகில் காணலாம். "கேடும் பெருக்கமும் இல்லல்ல, நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி” 115 என்பது நடுவு நிலைமைக் குறள். வளமையும் வறுமையும் உலகில் காணாத புதுமைகள் அல்ல! அவற்றிற்கு நிலையான தங்கும் இடங்களும் இல்லை; 'ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம் மாறிடும் ஏறிடும்' என்பதே அவற்றின் இயல்பு. ஒரு மனிதனின் தரத்தையும் தகுதியையும் அளந்தறிகிற கருவிபொருள் மட்டும் அன்று. அத்துடன், செல்வம் புறத்தே தோன்றும் அளவை வைத்துக் கணக்கிடக் கூடியதன்று. 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்ற நன்மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! சிற்றளவு தேடியும் பெருவாழ்வு வாழ்வார் உண்டு! பேரளவு தேடியும் எதனையும் துய்க்கவும் மாட்டாது துன்பத்திலும் கவலையிலும் வெந்து கொண்டு வெற்று வாழ்வு வாழ்வோரும் உண்டு! எது உண்மையான ஆக்கம்! முடிவையும் பயனையும் சிந்தித்தால் உண்மை புலப்படும்! பலருக்குக் கிட்டிய ஆக்கமே அவர்கள் கெட்டுப் போவதற்கும் காரணமாய் அமைந்திருந்ததையும் காண முடிகிறது. 'நன்றாகத் தான் இருந்தான், எப்படியோ நாலு காசு சேர்ந்தது நாசமாய்ப் போனான்' என ஊர் உலகம் திறனாய்வு செய்து உரைப்பதையும் கேட்க முடிகிறது. ஆக்கம் அறநெறிப் படியும் எய்தலாம்! நெறி தவறி ஆக்கம் பெற்றவர்களும் உண்டு! "சால்பென்னும் திண்மை உடையவராய் ஒருவர் விளங்கினால் அவர்க்கு ஏற்பட்ட இன்மை இழிவன்று” எனவும் “பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள” என்னும் கருத்தும் வழங்குபவர் திருவள்ளுவர். சீதா தேவியை இராவணன் தூக்கிச் சென்றது ஆக்கமா? இல்லை அவனுடன் போரிட்டு சடாயு மாண்டது தோல்வியா? இல்லை . அன்னை இந்திராக் காந்தியைச் சுட்டுக் கொன்றவன் பெற்றது வெற்றியா? இல்லை. அன்னை குண்டுக்கு இரையாகி மாண்டது தோல்வியா? இல்லை. சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்றது மன்னனுக்கு ஆக்கமா? கேடா? "மன்னவன் யானோ அரசன்; யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” எனக் கூறி மயங்கி வீழ்ந்து மாண்டது கேடா? ஆக்கமா? பொறாமைக் காரனிடம் பொருந்தியுள்ள செல்வத்தையும், பொறாமை இல்லாத நடுநிலையாளனிடம் பொருந்தியுள்ள வறுமையையும் மேற்போக்காகப் பார்த்து விட்டு எந்த முடிவிற்கும் வருதல் முறைமையன்று. உள்ளும் புறமும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்! நீதிமன்ற ஆய்வு யாருக்குத் தேவை என்பதும் புரியும்! ஆகவே தான் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' எனக் கூறும் திருவள்ளுவர். "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என நீடு நினைந்து கூறுவதைத் சிந்தித்து உணர்வோமாக! இந்திரப் பிரத்தத்தில் நிகழ்த்திய வேள்வியில் தருமன் பெற்ற சிறப்புகளை எல்லாம் கண்ட துரியோதனன் உள்ளத்தில் பொறாமைத் தீ புகையத் தொடங்கியது. அவ்வுணர்வால் உந்தப்பட்டுச் சகுனி, துச்சாதனன் முதலியவர்களிடம் அவன் பொங்கி உரைத்தது. "இந்திரன் முதலாய் உள்ள இமையவர் சிறப்புச் செய்ய சுந்தரப் பெற்றோள் வேந்தர் தொழில் புரிந்து ஏவல் செய்ய மந்திர முனிவர் வேள்வி மறைநெறி முறையிற் செய்யத் தந்திர வெள்ளச் சேனைத் தருமனே தலைவன் ஆனான்!” "தன்புய வலியும் நான்கு தம்பியர் வலியும், மாயன் வன்புய வலியும் கொண்டே மண்ணெலாம் கவர எண்ணும் இன்புச் சிகரி மன்னர் யாரையும் தன்கீ ழாக்கி மின்புயல் அனையான் மேன்மை விளைக்கவே வேள்வி செய்தான்" ஆகவே, "போதும் விரைந்து மற்றுஅப் புரவலன் செல்வம் யாவும் பேதுறக் கவர்ந்திலனேல், பின்னை யார் முடிக்க வல்லார் மோதுறப் பொருதே யாதல் மொழியொணா வஞ்ச மொன்று தீதுறப் புரிந்தே யாதல் கொள்வதே சிந்தை என்றான்” என்னும் வில்லிபாரதம். அழுக்காறு கொண்ட துரியோதனன் உயர்வுற்றானா? அழுக்காறு கொள்ளாப் பாண்டவர் தாழ்வுற்றனரா? "அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதிலார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்” அழுக்காறு கொண்டு வளம் பெருகப் பெற்றாரும் வையகத்தில் இல்லை! அழுக்காறு கொள்ளாமையால் வளம் சுருங்கி வறுமைக்கு ஆட்பட்டவரும் அவனியில் இல்லை. அழுக்காற்றால் வளர்ந்தவர் இல்லை! வீழ்ந்தவர் ஏராளம்! அழுக்காற்றை அகற்றி வளர்ந்தவர் ஏராளம் பேர் உலகில் உண்டு! அழுக்காறிலா ஒழுக்காறு கொள்க! அறவழி ஆக்கத்தையே விரும்புக! பொறாமையால் அல்லவை செய்யாதே! அழுக்காறு ஓர் அழிதீ என உணர்க! நீ கொடைஞனாய் விளங்கு! கொடுப்போரைப் பாராட்டு! அழுக்காறு கொள்ளாதே இருப்பதையும் இழக்காதே! பொறாமை இன்மையே புகழ்ப்பேறு! 18. வெஃகாமை வெள் - வெள்ளி - வெஃகு - வெஃகுதல் = வெள்குதல் என்றாகும் வெள்குதல் - வெஃகுதல் ஆகும் - வெள்குதல் எனினும் வெஃகுதல் எனினும் விரும்புதல் என்பதே பொருள். ஆனால் இவ்விருப்பம் வேண்டாத விருப்பம்; நேர்மையற்ற விருப்பம்; இது தன்னிடம் உள்ளதை விரும்பும் விருப்பம் அன்று; பிறரிடம் உள்ள பொருள்களில் நல்ல பொருள்களை, பயனுடைய பொருள்களை, அழகிய பொருள்களை இன்பமும் மகிழ்ச்சியும் தரும் பொருள்களைக் கண்டாலும் அல்லது இருப்பதாகக் கேள்வியுற்றாலும் அப்பொருளை முறையற்ற வழியிலாவது கவர்ந்து கொள்ள விரும்பும் விருப்பமே வெஃகுதல் ஆகும். பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர விரும்பும் விருப்ப எண்ணமே உளத்தில் தோன்றுவது நல்லதன்று எனத் திருவள்ளுவர் கருதுவதால், விலக்க வேண்டியவற்றில் அழுக்காற்றிற்கு அடுத்ததாக வெஃகுதலைக் கூற எண்ணியதால் வெஃகாமைக்கும் தனியொரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார். பிறர் ஆக்கம் கண்டு மகிழாமல் அழுக்காறு கொள்ளும் மனம் அப்பிறர் பொருளைத் தான் அடைந்து மகிழ விரும்புகிறது. பிறர் ஆக்கம் காண்பது குற்றமன்று! அவர் போல் ஆக்கம் பெற வேண்டும் என விரும்புவதும் குற்றமன்று! பிறர் முயன்று தேடிய பொருளைத் தான் விரும்பி உரிமைப்படுத்திக் கொள்ள எண்ணுவதும்! துய்க்க விரும்புவதும் நல்லது அல்லவே! பொருள் தேடும் வேட்கை வரவேற்கத் தக்கதே! பொருள் வேட்டை விரும்பத்தக்க தன்று! பிறர் பொருளையும் தம் பொருள் போல் பேண வேண்டுமே யொழிய, பிறர்பொருள்களையும் தம் பொருள்களாக ஆக்கிக் கொள்ள விரும்பக் கூடாது. பிறரிடம் உள்ள பொருளை விரும்பி நயந்தோ ஏமாற்றியோ வஞ்சித்தோ பொய் சொல்லியோ, நம்பிக்கை மோசடி செய்தோ அடைய விரும்புவது நல்லதன்று! “நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை” உரிமையில்லாப் பொருளை அடைய விரும்புவதே பெரிய வறுமையாகும் என முதுமொழிக் காஞ்சி கூறுவது சிந்திக்கத் தக்கது. 'உன் ஆசையும், ஏக்கமும் உனக்குச் செல்வத்தைச் சேர்க்காது! உழைப்பே செல்வத்தைத் தரும்” - என்ற சாண்மொர்லேயின் பொன்மொழி பொன் மொழியே ஆகும்! பிறர் பொருளை வஞ்சகத்தால் கவர விரும்புவோர் நடுவுநிலையாளராகவோ! நாணுடைமையராகவோ! புலன் அடக்கம் உடையவராகவோ! நல்லறிவுடைய வராகவோ அருளுடையராகவோ இருக்கமாட்டார். பிறர் பொருளைக் கவர விரும்புவோர் தகுதியற்றவராகவே இருப்பார். இருப்பதையும் இழந்து வருந்துவர். ஆகவே, பிறர் பொருள் மேல் விருப்பம் கொள்ளா மையை விரும்பிக் கைக் கொள்வதே நன்மை தரும்! நாம் ஒரு பொருளை விரும்புகிறோம் அப்பொருள் எங்கே விற்பனை செய்யப்படுகிறதோ அங்கே அதற்குரிய விலை கொடுத்து நாம் வாங்கிக் கொள்வதே முறை. அது வல்லாமல் உரிய விலை கொடுத்து வாங்க முயற்சி மேற்கொள்ளாமல் அதனை எப்படியாவது அடைய விரும்புவது இயல்புமன்று. தக்கதும் அன்று! பொருள் எவ்வளவு முதன்மையோ? அதை விட முதன்மை எந்தப் பொருளையும் அறவழியிலேயே பெறவிரும்புவதும் ஆகும்! பிறரிடம் நமக்கும் பயன்படும் ஒரு நல்ல பொருள் இருக்கிறது. அஃது அவர் முறையோடு உழைத்துத் தேடிய பொருள். அப்பொருள் ஓர் எழுதுகோலோ, சிறந்த நூலோ, உணவுப் பொருளோ உடையோ, வீடோ, மனையோ எதுவாகவும் இருக்கலாம். அப்பொருளைக் காணும் வாய்ப்புக் கிட்டுகிறது. அதன் மீது நமக்கு ஒரு ஈடுபாடு உண்டாகிறது. அப்பொருள் தன்னிடம் இருப்பது நல்லது என நம் மனம் நினைக்கிறது. அது வரையில் குற்றம் இல்லை. ஆனால் நேர்மையின்றி முறையற்ற வழியிலாவது அப்பொருளைப் பெற வேண்டும் என நம் மனம் மேலும் சிந்திப்பது! விரும்புவது குற்றமாகும்! அக்குற்றம் கவர விரும்புபவனை மட்டும் பாதிக்கும் சிறிய குற்றமன்று. அஃது அவனது குடியையே அழிக்கும் பெருங்குற்றமாகும்! ஆகவே நேர்மையின்றிப் பிறர் பொருளைக் கவர விரும்பாதே! உன் விருப்பமும் நிறைவேறப் போவதில்லை! நீயும் குற்றவாளி 5) ஆகிவிடுவாய்! உன் குடும்பமும் வாழவோ வளரவோ முடியாது அழிந்து போகும் என வள்ளுவர் கருதுவதால் தான், நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்” என முன் அறிவிப்பு வழங்குகிறார். "நெடுநுகத்துப் பகல்போல் நடுவுநின்ற நன்னெஞ்சினோர் தமவும் பிறவும் ஒப்ப நாடி” வணிகம் செய்து வந்தனர் தமிழர் என்பதைச் சங்கநூலாகிய பட்டினப் பாலை பகர்கிறது. "செம்மையின் இகந்தொரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ” என அறநூல் அறைவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், பள்ளி படைப்படலத்தில், கோசலை பரதனிடம் கைகேயின் வஞ்சனை அறியாயோ என வினவியதைக் கேட்ட பரதன் உரைத்த சூளுரையில், "கைக்கொளும் அடைக்கலம் கரந்து வவ்வியோன்” "மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் -- "எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் உயிர்வளர்த் துண்ணும் ஆசையான் அஃகலில் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான்” என்னும் கவியும் வெஃகியோர் குற்றத்திற்கு ஆளாகிக் கொடு நரகில் வீழ்வர் என உரைக்கிறார். கவி மன்னர் கம்பர். "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்” என்னும் நடுநிலைமைக் குறளும் 'நன்மை தருவது போல் தெரிந்தாலும் நடுவு நிலைமை தவறிப் பெறும் ஆக்கம் வேண்டவே வேண்டா என்றே விலக்கத் தூண்டினார். நடுவு நிலை தவறி நடக்க நாணுகின்றவர்கள், பிறர் பொருளை அடைவதால் வரும் பயனை மட்டும் பெரிதாகக் கருதி, அதற்காகப் பழிதரும் செயலைச் செய்ய மாட்டார்கள்! "படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்' என்னும் குறள். நாணுபவர், நடுவன்மைக்கும் நாணுவார்; நாணுபவர், பழிபடுவ செய்யார், பயன் முதன்மையன்று, பழிக்கு ஆளாகாமையே சிறப்பு. ஆகவே தான் புறநானூற்றுச் சான்றோன், பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்' என்றான். வள்ளுவரும், "பழமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை” 657 என வினைத் தூய்மையில் கூறியுள்ளதையும் நினைவு கூர்க! கம்பராமாயணம் உயுத்த காண்டத்தில் நிகும்பலையாகப் படலத்தில் வீடணன் மீது சினம் கொண்ட இந்திர சித்தன் இகழ்ச்சி உரையில், விழிபட, முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து வழிபட, உலகம் மூன்றும் வந்த தேனும் அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் வெஃகாப் பழிபட வந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார் என்னும் கம்பர் கவியும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாகும். "அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகம் காண இடி கிணற்று அறுகின் வேரைப் பற்றி ஞான்றிட, அவ்வேரைக் கடுக ஓர் எலியும் கறித்திட அதில் நின்றேனுக்கு இடைதுளி தேனின் இன்பம் போலும் இப்பிறவி இன்பம்” என்பது ஒரு பழம் பாடல். யானை வெருட்டியது தப்பிக்கக் கிணற்றுக்குள் இறங்கிக் தப்பிக்கலாம் என்றால் கிணற்றில் ஏற இறங்கப் படிக்கட்டுகளும் இல்லை; உள்ளே நீரும் இல்லை; ஆனால் நாகப்பாம்பு உள்ளே நெழிகிறது. ஆகவே, கிணற்றில் தொங்கிக் கொண்டிருந்த அறுகின் வேரைப் பிடித்துக் கொண்டு தொங்கும் போழ்த்து மேலே பார்த்தால் யானையும் நிற்கிறது. அறுகவேரை ஒரு எலி கத்தரித்துக் கொண்டிருக்கிறது. அவ்வேளை கிணற்று மேட்டிலிருந்து மரத்தில் உள்ள தேன் கூட்டிலிருந்து விட்டு விட்டுத் தேன் துளி துளியாகச் சொட்டியது. நாக்கை நீட்டி அத்தேனைச் சுவைத்துக் கொண்டு இருந்தான் ஒருவன். இதிலுள்ள தேன் உண்ணும் காட்சியை நாம் சிற்றின்பத்திற்கு மட்டும் எடுத்துக் காட்டாய்க் கொள்ளலாம். இதுபோல் நாவிற்கு, செவிக்கு, உடலுக்குக் கிட்டும் சிற்றளவு சிறிது பொழுது கிட்டும் தகுதியற்ற இன்பத்திற்கு ஆசைப்பட்டு, அறத்திற்குப் புறம்பான செயல்களை உயர்ந்த நிலைத்த நல்லின்பத்தை நாடும் சான்றோர்கள் எக்காலத்திலும் செய்ய விரும்பமாட்டார்கள். பெருநலத்தை நாடுபவர் சிறு நலத்தை விரும்பிச் செய்யத் தகாதன செய்யார். பேரின்பம் விரும்புவர் அறனே செய்வார்; சிற்றின்பம் விரும்புவார் அறனல்ல செய்வார். ஆகவே, அறநெறியில் சென்று பேரின்பம் பெற்றுப் பெருவாழ்வு வாழ வைக்க விரும்பும் திருவள்ளுவர் காட்டும் கைவிளக்கே, "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்” 173 பெண்களைத் தவறான எண்ணத்தில் பார்ப்பவர், சாடை மாடையாகப் பேசிக் கேலி செய்வோர், திருவிழாக் கூட்டத்தில், பேருந்துப் பயணத்தில், நெருக்குவோர், உரசுவோர் போன்றவர்களையும் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யும் கீழோர் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம். ஒருவேளை சோற்றுக்கும் ஒரு குவளை தேநீருக்கும் ஆசைப்பட்டு பிறருக்காக வேண்டாத செயல்களைச் செய்ய முயன்று வன்பில் மாட்டிக் கொள்பவரையும் சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்வார் வரிசையில் இணைத்துக் கொள்ளலாம். ஐந்திற்கும் பத்திற்கும் ஆசைப்பட்டு, அடியாட்களாய்ச் செயல்பட்டுத் தம் வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்பவரும் இப்பட்டியலில் இடம்பெறத் தக்கவர்களே! சில்லறைக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, விலைமதிப்பற்ற, நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதும் வல்லமை படைத்த 'வாக்குரிமை'யைத் தகுதி அற்றவர்கட்கு வழங்குபவர்கள் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஆவர். ஆகவே மானிடப் பிறவி உற்றோர் "அறத்தான் வருவதே இன்பம்” என்பதை மறந்து விடல் ஆகாது. அதை மறந்தாலும் 'மற்றெல்லாம் புறத்த' என்பதையும் 'புகழும் இல' என்பதையும் மறப்பது நன்றன்று. "இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” 1040 என்பது உழவு அதிகாரக் குறுள். இரண்டு கைகளையும் அதில் பத்து விரல்களையும், இரண்டு கால்களையும் அதில் பத்து விரல்களையும் இரண்டு ஒளி வீசும் கண்களையும் பொருள் பொதிந்த மணியான சொற்களைப் பேசும் நாவையும், பெற்றுள்ள ஒரு மனிதன் என்னிடம் ஒன்றும் இல்லை. நான் இல்லாதவன் வறுமையன் என்று எண்ணுவதும் பேசுவதும் இழிவு அல்லவா? என வள்ளுவர் இடித்துரைத்த போது, நீங்கள் சொல்வது போல் எல்லாப் பொறி புலன்களும் செவ்வையாக இருந்தாலும் நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளலாம்; எனக்கு ஒரு கையில்லை; இருகையும் இயங்காது; ஒரு கால் முடம், இருகாலும் இயங்காது கண் குருடு; காது செவிடு; வாய் ஊமை என்பது போல் அவரவர்கட்கு உள்ள குறையை உரைத்து ஏங்கி நிற்போரைக் கண்டு வள்ளுவர் கவலைப் படாதீர்கள்; உங்கட்கு ஒன்று உரைக்கின்றேன். கவன மாய்க் கேட்டுச் சிந்தித்து மறுமொழி கூறுங்கள் எனக் கூறிவிட்டு, "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி” 618 என்றார். உறுப்புக் குறை குறையன்று; முயன்று உழைக்காமையே குறை! பழி என்பதை உணர்க! 'உள்ளம் உடைமையே உடைமை' 592 ஊக்கம் உடைமை உயர்ந்த செல்வம். ஆகவே வாழ்க்கைத் தேவைக்குரிய பொருள் என்னிடம் இல்லை என்று சொல்லிக் கொண்டு உழைக்காமல், முயற்சி செய்யாமல் சோம்பேறியாய் வாழுதல் இழிவு. அவ்விழிவைப் போக்க முறையான வழியில் முயன்று உழைத்துச் செல்வம் நம்மைத் தேடிவருமாறு செய்ய வேண்டுமே அல்லாது. நம் தேவையைப் பிறர் தம் உழைப்பால் தேடி வைத்திருக்கும் பொருளை, முறையற்ற வழியில் பெற்றுச் சீர் செய்து கொள்ளலாம் என விரும்புபவர் முறையான அறிவோ, கட்டுப்பாடான ஒழுக்கமோ இல்லாதவராகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஐந்து புலன்களையும் அடக்கி வெற்றி கொண்ட வரும், குற்றமற்ற அறிவினை உடையவரும், தாம் பொருள் வளம் குன்றியவராய் வாழும் நிலை ஏற்பட்டாலும் பிறர் பொருளைக் கவர்ந்து வாழ விரும்ப மாட்டார்கள் என்பதை, "இலம் என்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்” 174 என்றார். புலம்வென்ற புன்மையில் காட்சியவராகிய பெருமான். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்” எனக் கூறுகிறார் ஒளவையார். 'அடக்கத்திலும் மேம்பட்ட ஆக்கம் இல்லை' என்பது வள்ளுவர் கருத்து. "இலனென்று தீயவை செய்யற்க; செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து” 205 என விழிப்பூட்டுவர் திருவள்ளுவர். இல்லாமையைப் போக்கத் தீயவை செய்யாதே! செய்தால்? உள்ளதையும் இழந்து மேலும் வறியவன் ஆவாய். ஆகவே அது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்ட கதையாய் முடியும். அடக்கம் உடைய அறிஞர் வறுமையைப் போக்கவும் பிறர் பொருளை விரும்பார். திரு.வி.க போன்ற அறிஞர்கட்குக் கொண்டு வந்து ஆர்வலர் கொடுத்த போதும்! நன்றி கூறி மறுத்த செய்தி வரலாற்று உண்மையாகும்! இதனை விளக்கவே, "இலமென்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்" எனும் குறள் மலர் பூத்தது. உயுத்த காண்டம் மீட்சிப் படலத்தில் பரதன் சத்துருக்கனை அழைத்துச் சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்; மின்னுதீயிடை, யான் இனி விழுவென்; மன்னன் ஆதி; என் சொல்லை மறாது' என்றான். அது கேட்ட சத்துருக்கன் வருந்தி நொந்து உரைத்தது; "கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து பின்பு போனானும் ஒரு தம்பி; போனவன் தான் வரும் அவதி போயிற்று” என்னா , ஆனாத உயிர்விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது, யானாம் இவ்வரசு ஆள்வென்? என்னே இவ் அரசாட்சி; இனிதே அம்மா!” "மன்னின்பின், வளநகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும் சொல் நிற்கும்” என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந்தவமே தொடங்கினாயே! என்னின் பின் இவன் உளனாம்' என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும், உன்னின் பின் இருந்ததுவும் ஒரு . குடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான்” என்னும் கம்பன் கவி புலம் வென்ற புன்மையில் காட்சியனாகிய சத்துருக்கன் பரதன் வழங்க விரும்பிய அரசச் செல்வத்தையும் பெற விரும்பா மாட்சியைப் புலப்படுத்துகிறது. இன்னா செய்யாமை அதிகாரத்தில் "அறிவினான் ஆகுவ துண்டோ , பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை” 315 என்கிறார். பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல் உணர்ந்து பேணா விட்டால், ஒருவன் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் ஒன்றுமில்லை என்பது கருத்து. அதே கருத்து அமைதியில் அமைந்த குறளே, "அஃகி அகன்ற அறிவென்னாம், யார் மட்டும் வெஃகி வெறிய செயின்” என்பதாகும். அறிவு வளர வளரப் பண்பும் ஒழுக்கமும், அடக்கமும் நேர்மையும் அறமும் வளர வேண்டும். ஆனால் நுணுகிப் பரந்த அறிவுடையான் ஒருவன், தனக்குத் தேவையான பொருள் யாரிடம் இருந்தாலும் அதாவது நண்பரிடம் இருந்தாலும் பகைவரிடம் இருந்தாலும், உறவினரிடம் இருந் தாலும் அயலாரிடம் இருந்தாலும் மேலோரிடம் இருந்தாலும் கீழோரிடம் இருந்தாலும், நல்லவரிடம் இருந்தாலும் தீயவரிடம் இருந்தாலும், செல்வரிடம் இருந்தாலும் ஏழையிடம் இருந்தாலும் அவர் இவர் என்று பாராமல் பறிக்கும் வெறித் தனமான விருப்பம் உடையவனாக இருப்பானானால் அவன் பெற்ற விரிந்த நுண்ணறிவால் எள்ளத்தனையும் பயன் இல்லை என்பது வள்ளுவர் கருத்து. பிறர் பொருளைக் கவர விரும்பாமையே அறிவின் உண்மையான பயனாகும். "நக்கிக் கண்ட நாய்க்குச் செக்காவது? சிவலிங்கமாவது” எல்லாம் ஒன்றுதான்” பிறர் பொருளை விரும்பா நல்லுள்ளத்தை இளமையிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது பழமொழி! பிறர் பொருளைக் கவர விரும்பாப் பேரறிவு வளர்வதாக! "அருள்கருதி அன்புடையர் ஆதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்” 285 என்பது கள்ளாமை அதிகாரக் குறள்களுள் ஒன்று. 'பிறர் பொருளைப் பறித்துக் கொள்ளுதலை விரும்பி, அவர் அயரும் நேரத்தை எதிர்பார்ப்பவரிடத்தில், அருளைப் பெற எண்ணி அன்புடையவராக ஒழுகும் தன்மையை எதிர்பார்க்க இயலாது” என்பது உள்ளடக்கம். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்பது அருளுடைமை அதிகாரத்தில் முதற்பாவாகும். ''உலகத்துச் செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்த செல்வம் அருட் செல்வமே ஆகும்! அவ்வருட் செல்வம் உயர்ந்த மனிதர்களிடமே பொருந்தி இருக்கும்! ஆனால் பொருட் செல்வம் அருளாளராகிய மேன்மக்களிடமும் இருக்கலாம்! அருளற்ற கீழ் மக்களிடம் கூட இருக்கலாம் என்பது பொருள்” 241 உயர்ந்தவர்களிடம் பொருந்தி நிற்கும் உயர்செல்வமாகிய அருளைப்; பெற விரும்பி அறநெறிப்படி வாழ்பவன்; மேலோர் கீழோர் என்று இல்லாமல் எவரிடமும் இருக்கும் தன்மை வாய்ந்த அதுவும் பிறருடைய பொருளை விரும்பி அதனை அடையத் தீய வழி முறைகளை எண்ணினால் விரைந்து கெட்டழிவான் என்பதை, "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்” என்கிறார். அருளை விரும்பி அறநெறியில் நிற்க விரும்புபவன், பிறருடைய பொருளைக் கவர விரும்பினால் பொல்லாத குற்றங்களால் சூழப்பட்டுக் கெடுவான். அவனிடம் உள்ள பொருளும், கெடும் அருள் விருப்பமும் கெடும். அறநெறி நிற்றலும் கெடும்! "அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ - ஒல்லொலிநீர் பாய்வதே போலும் துறைவகேள், தீயன ஆவதே போன்று கெடும்” என்னும் பழமொழிப் பாடலும் ஒப்பு நோக்கத்தக்கது. "களவிண்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்” 248 என்னும் கள்ளாமை அதிகாரக் குறள், திருடுதலில் உண்டாகும் அழுத்தமான பிடிப்பு, பயனை அடைகிற காலத்து என்றும் நீங்காத துன்பத்தையே தரும் என்ற கருத்தமைதி அமைந்த குறளே, "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்” என்னும் குறட்பா ஆகும். வெஃகியாம் ஆக்கம் வேண்டற்க! வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்! வெஃகியான் ஆக்கத்தால் பயன் கிட்டுதல் அரிதாம் ஆகவே வேண்டற்க! பிறர் பொருளைக் கவர்ந்து ஆக்கம் பெற வேண்டும் என்று எண்ணுதல் அதாவது விரும்புதல் கூடாது. ஏனெனில் அப்பொருளால் உண்டாகும் பயன் நன்மை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் தீமையே தரும். தானத்திற்கு உரித்துமன்று தான்நினைந்து ஈயிற் சால ஈனத்தில் உய்க்க நிற்கும் எச்சத்தை இழக்கப் பண்ணும் மானத்தை அழிக்கும், துய்க்கின் மாற்றலர்க்கு அடிமையாக்கும் ஊனத்தீ நரகத்து உய்க்கும் பிறர்பொருள் உவக்கின் மாதோ” என்னும் சாந்திபுராணப் பாடல் இக்குறளுக்கு நல்ல விளக்கம் ஆகும்! "படுமுன் பொருட்குப் புதுவெள்ளம் பழைய நீரை உடைப்பது போல் கெடுதி பயக்கும், குடி கெடுக்கும் கெடாத பெருந்துன்பமும் விளைக்கும் வடுமிக்கு இயன்ற பழி என்றும் வளர்க்கும் நன்பொருள் கவரக் கருத்து எண்ணாய்” என்னும் விநாயகபுராண விரிவுரை சிறப்பிற்குரியது. அரசுப் பணி புரிகிறார்கள்; அவர்கள் செய்யும் வேலைக்கு உரிய ஊதியத்தை அரசே வழங்கிவிடுகிறது. எனினும் தான் செய்யும் பணியால் மற்றவர் கட்கு நன்மை கிட்டுகிறது என்றால் உரியவரிடமிருந்து ஒரு தொகையை எதிர்பார்த்தே 'அக்கோப் பைத் தொடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப் பிறர் பொருளைக் கையூட்டு' என்னும் பெயரில் மிகுதியாகப் பெற்று வாழ்ந்தவர்கள் பல நாள் தப்பினாலும், என்றாவது ஒருநாள் இலஞ்ச ஒழிப்புத் துறையில் பிடிபடுகிறார்கள் பெற்ற பொருளெல்லாம் போகிறது. சிறைத் தண்டனை வேறு பெரும் பழிக்கு ஆளாகிறார்கள். மனைவி மக்கள் தெருவில் நடமாடவும் முடியாமல் வெட்கப்பட்டு ஒடுங்கிப் போகிறார்கள். பணி நீக்கம் ஓய்வுக்கு முதல் நாள் கிட்டுகிறது. ஓய்வுப் பயனாகிய பெருந்தொகை யையும் பெற முடியவில்லை. ஓய்வு ஊதியமும் பெற வாய்ப்பில்லை. கட்டிக் குடியிருந்த வளமனை! பயணத்திற்குப் பயன்படுத்திய இன்னியங்கி எல்லாம் பறிக்கப்பட்டது. இந்நிலை ஏற்பட என்ன காரணம்? நன்கு படித்துப் பட்டம் பெற்றவர் தாம்! துறை தொடர்பான சட்ட திட்டங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். சோம்பேறி அல்லர்; கடினமான உழைப்பாளி தாம். காலம் நேரம் கணக்குப் பார்க்காமல் பணி செய்பவர் தாம் எனினும் தாம் வாங்கும் ஊதியத்திற்கு மேலும் ஒவ்வொரு பணிக்கும் உரியவரிடம் காசு பெற விரும்பிய விருப்பாகிய சிற்றெறும்பு அந்தப் பெரிய யானையையும் எளிதாக வீழ்த்தி விட்டதையும் இவ்வுலகில் காண முடிகிறது. வழக்கில் நேர்மை இல்லை; உறுதியாகத் தோற்றுப் போகும் என்று தெரிந்து இருந்தும், வீணான நம்பிக்கை தந்து பணம் பறிப்போர் வழக்கறிஞர்களிலும் உண்டு! குடியாட்சி நாட்டில் மக்கள் தலைவர்களாக வருபவர்களில் பலர் பிறருடைய காசுகளுக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள். தொண்டர் என்ற பெயரில் எங்கெல்லாம், பணத்தைத் தோண்டி எடுக்க முடியுமா அங்கெல்லாம் தோண்டி எடுக்க விரும்பு கிறார்கள். எல்லாருடைய சொத்தும், பணமும் எம்முடையதே! ஏன்? நாட்டுச் செல்வமே எமக்கும் எம் குடும்பத்திற்குமே என்று எண்ணி ஒழுங்கு முறை இன்றி ஊர்ப்பொருளைக் கொள்ளையடித்துப் பொருள் குவித்தோர் உண்டு! இத்தகைய பிறர் பொருள் விரும்பிகளைப் பார்த்துக் கூறுகிறார். "அஃகாமை செல்வத்திற்கு யாதெனில் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்” நீங்கள் புதிதாகத் தேடுவது இருக்கட்டும்! ஏற்கெனவே முன்னோர் வழியும், நீங்கள் நேர்மையான வழியில் தேடிய பொருளும் நிலைக்க வேண்டுமானால், குறையாதிருக்க வேண்டுமானால் பிறர் செல்வத்தைக் கவரக் கனவிலும் விரும்பாதீர்கள்! என்பதே வள்ளுவர் காட்டும் வழி! தளராத ஊக்கமுடன் உழைப்பவன் எங்கே இருக்கிறான்? அவன் வீடு செல்ல இதுதானே வழி என்பதைத் தெரிந்து கொண்டு செல்வம் தானே வந்து சேரும். என்பதை, "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவிலா ஊக்கம் உடையான் உழை” 594 என்னும் குறள் வழி, ஊக்கமுடைமையில் தெரிவிக்கும் திருவள்ளுவர் இங்கே, "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந் தாங்கே திரு” என அதே முறையைப் பின்பற்றிக் கூறுகிறார். அறநெறியின் தன்மையை அறிந்து, தன் உடைமையை அன்றிப் பிறர் உடைமையை விரும்பாத அறிவாளர்களிடம், அவர் உயர் தகுதியை அறிந்து, செல்வம் அத்தகை யோரிடம் தானே வந்து சேரும்! அறன் அறிந்தாரும் பிறர் பொருளைக் கவர விரும்பார். பிறர்படும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதிக்கடிய முற்படும் அறிவுடையோரும் பிறர் பொருளைக் கவர விரும்ப மாட்டார்கள். பிறர் பொருளை எவரெவரெல்லாம் விரும்ப வில்லையோ அவர்கள் இல்லங்கள் எல்லாம் 'செல்வம்' விரும்பி மகிழ்வுடன் பெருமையுடன் வாழும் திரு இடங்கள் ஆகும். நம் வாழ்வியல் ஒழுங்கு செல்வம் விரும்பி, நம்மைத் தேடி வருமாறு அமைய வேண்டும் அல்லது அமைத்துக் கொள்ள வேண்டும்! "தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - எழுத்தும் அறங்கடையில் செல்லார்; பிறன் பொருளும் வெஃகார் புறங்கடையதாகும் பொருள்” என்னும் நீதிநெறி விளக்கம் திறம்பட விளக்கி அமைகிறது. பிறர் பொருளை அடைய விரும்புவதால் வரும் துன்பத்தை எண்ணிப் பார்க்காமல், மற்றவர் பொருளை அடைய விரும்புவது வாழ்வையே அழிக்கின்ற துன்பத்தைத் தரும்! பிறர் பொருளை விரும்பாது வாழ்கின்ற பெருமையோ வாழ்வை வெற்றிப் பாதையில் செலுத்தும்! பிறர் பொருளை விரும்புவது அழிவு; பிறர் பொருளை விரும்பாத பெருமிதமே வெற்றி! "செய்வன செய்தல், யாண்டும் தீயன சிந்தியாமல் வைவன வந்த போதும் வசையில இனிய கூறல் மெய்யன் வழங்கல் யாவும் மேவின் வெஃகலின்மை உய்வன வாக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்” என்பது இராமபிரான் சுக்கிரீவனுக்குக் கூறிய அரசநீதியாகும். அஃது இக்குறளுக்குக் கம்பர் காட்டும் விளக்கமாக அமைந்துள்ளது. "நயவேன் பிறர்பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் - வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்றுஏத்தேன்! வருமாறு என் நம்மேல்வினை!” என்னும் பொய்கையாழ்வாரின் இயற்பா வள்ளுவர் கருத்திற்கு வலிமை சேர்க்கிறது! "பிறர் பொருளை விரும்பாதே! விரும்பினால் குடும்பம் அழியும்! குற்றவாளி ஆவாய்!” பிறர் பொருளை விரும்பவில்லையானால் உள்ள பொருள் அழியாது! புதுவருவாய் வந்து சேரும்! வெற்றிமேல் வெற்றி பெறுவாய்! பிறர் பொருளை நடுநிலை தவற நாணுபவர் விரும்பார்! நல்லின்பம் வேண்டுபவர் விரும்பார்! புலம்வென்ற புன்மையில் காட்சியவர் விரும்பார். பிறர் பொருளை அறிஞர் விரும்பினால் அவர் அறிவு பயனற்ற அறிவாகும்! பிறர் பொருளை அருளை விரும்புபவன் விரும்பினாலும், அறவழி நிற்பவன் விரும்பினாலும் பொல்லாதனாகிக் கெடுவான்! பிறர் பொருளை விரும்பா நெறியை விரும்பி மேற்கொள்க! வெற்றி வாழ்வு வாழ்க!” 19. புறங்கூறாமை பிறர் வளர்வதைக் கண்டு தாமும் வளர முயல்வது நன்று. ஆனால், மக்களில் சிலர் பிறர் வளர்வதையோ, வளர்ந்து புகழ் பெறுவதையோ மனமார விரும்புவதில்லை. பிறர் ஆக்கம் பெறுவதை விரும்பாதவர், மனத்தில் அழுக்காறு உருவாகிறது. அதனால், வஞ்சகத்தால் பிறர் பொருளைக் கவர விரும்புகிறது. அதனால் பழிக்கு ஆளாகிறது. தம்பால் குற்றமுடையவர் மனம், பிறரிடம், குறிப்பாக மிக நெருங்கிய உறவினர் களிடமும் நண்பர்களிடமும் குற்றம் காண முற்படுகிறது. தாம் பிறரிடம் கண்ட, அல்லது கேள்விப்பட்ட அல்லது கற்பனையாகப் படைத்துக் கொண்ட குற்றத்தைப் பெரிதுபடுத்தி மற்றவர்களிடம் பரப்பி அவர்கள் புகழுக்கு மாசு கற்பிக்க முனைகிறது. இவ்வாறு வாய் செயல்பட முற்படுவதே புறங்கூறல் ஆகும். அறத்திற்குப் புறம்பான வழியில், கேட்பவர்க்கும் சொல்பவர்க்கும் புறம்பான செய்திகளைப் புறத்தே பேசி, ஒருவர்க்கொருவர் இதுவரை நிலவி வந்த நல்லுறவிற்குப் புறம்பான நிலை உருவாவதற்கு அடிப்படை அமைப்பதே புறங்கூறுதல் ஆகும்! "அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்” 980 இது பெருமை அதிகாரத்தில் இடம்பெறும் குறளாகும். பிறருடைய பெருமையைக் கூறிச் சிறுமையை மறைப்பதே பெருமைத் தன்மை ஆகும். சிறுமைத் தன்மையோ பிறருடைய பெருமையை மறைத்துச் சிறுமைகளையே கூறிப் பரப்பும். "பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல்” எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் விலக்கத் தக்க சொல் என மணிமேகலை கூறுகிறது. சொல்லுகிற சொல் எதுவானாலும் சொல்கிறவர்க்குப் பெருமை தருவதாக இருக்க வேண்டும்! அத்துடன் சொல்பவர்க்கும் கேட்டவர்க்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்! யாரைப் பற்றிச் சொல்லுகிறார்களோ அவர்கட்குத் தீமை பயக்காததாகவும் இருக்க வேண்டும்! ஆனால் புறங்கூறுதலில் கூறுபவர்க்கும் பயனில்லை , கேட்பவர்க்கும் பயனில்லை, சொல்லப் படுபவர்க்கும் பயனில்லை. யாரைப் பற்றிக் குறை கூறுகிறார்களோ அவர்கள் தகுதி குறைக்கப்படுகிறதோ இல்லையோ! கேட்பவர் தகுதிக்கும் இழுக்கு ஏற்படும். அதை விடப் புறங்கூறுவோர் தாம் தகுதி அற்றவர் என்பதைத் தாமே விளம்பரப் படுத்திக் கொள்வதாகும். பேசுபவரும் அக்கம் பக்கம் பார்த்து அஞ்சி அஞ்சிப் பேசுவார், கேட்பவரும் அஞ்சி அஞ்சியே கேட்டுப் போலியாக மகிழ்ந்து கொள்வார். பிறந்தான், வாழ்ந்தான் - வாழ வைத்தான் - கெடுத்தான் என்னும் மூன்று நிலையினரில் கேடு செய்பவர் என்னும் கீழ் நிலையினரே புறங்கூறுவோர். தீமை செய்யாமை நடுத்தரம்; நன்மை செய்தல் - உயர்தரம்; தீமையே செய்தல் கீழ்நிலை. அதுபோல் நாம் பேசுவனவற்றுள்ளும் தீமை தருவனவற்றையே பேசுவது கீழ்நிலை ஆகும். அதிலும் புறங்கூறுதல் கூறுபவனையே கீழோன் ஆக்கும் கீழ்த்தன்மை ஆகும். "ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு” என்பது சொல்வன்மையில் கூறப்படும் குறள்களில் ஒன்று. ஒருவர்க்கு நன்மை வருவதும் சொல்லாலே, தீமை வருவதும் சொல்லாலே! ஆகவே, குற்றமற்ற சொற்களாகவே நாம் தேர்ந்து தெளிந்து பேசவேண்டும். என்பதே குறள்நெறி! யாரையும் குறை சொல்வதே நல்லதன்று! அதிலும் ஒருவர் குறையை அவர் இல்லாத இடத்தில் கூறுவது கூடவே கூடாது எனக் கருதி விலக்கத் தூண்டும் வள்ளுவர் வகுத்த அதிகாரமே புறங்கூறாமை ஆகும்! 642 "அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது' ''ஒருவன் 'அறம்' என்ற சொல்லைக் கூட வாய்திறந்து கூறாதவனாய், அறநெறிக்கு மாறுபட்ட தீய செயல்களையே செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் யாரைப் பற்றியும் அவர் இல்லாத இடத்தில் குறை கூற மாட்டான் என்ற நற்சான்று ஒன்றைச் சான்றோர்களிடம் பெற்றிருக்கிறான் என்றால் அது ஒன்றே அவனுக்கு நன்மையைச் செய்யும்” என்ற போக்கிலும் நோக்கலாம். "ஒருவன் அறமாயினவற்றைக் கூறாதவனாகி, அறம் அல்லாதவற்றைச் செய்தாலும், பிறனொருவனைப் புறத்தே இகழ்ந்துரையான் என்று உலகத்தவரால் சொல்லப்படுதல் நன்றாகும் எனக் கூறுவதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது. "ஒருவன் அறநெறியில் ஒன்றைச் சொல்லாதவனாய், அறமல்லாச் செயலைச் செய்பவனாய் இருந்தாலும் கூட 'அவன்' புறஞ்சொல்ல மாட்டான்' என்று சொல்லுமாறு வாழ்தல்” என உரைகாண்பதும் நன்றாகத் தான் இருக்கிறது. "தகாதன செய்தவனைத் திருத்துதலாகிய அறங்கூறுதலையும், அவனுக்கும் பழிவந்தன செய்தலையும் உடையான் ஆயினும் புறங்கூறான் என்றல் இனிது'' எனக் கருதுவதும் நல்ல சிந்தனையே! ''நமக்கு வேண்டியவன் ஒருவன் அறத்திற்குப் புறம்பான செயல்களையே செய்து கொண்டு திரிகிறான். அவன் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? என்று எண்ணாது அவனுக்குத் தக்க அறிவுரை கூறி நெறிப்படுத்துவது உரிமையும் உறவும் உடையவர் கடமை ஆகும். அவர்கள் அக்கடமையை முறையாக நிறை வேற்றவில்லை என்றாலும் கூடப் பாதகம் இல்லை. அவன் இல்லாத இடத்தில் அவனுடைய குறைகளைப் பறைசாற்றாமல் அமைதியாக இருந்துவிடுவார்களானால் அது கூட அவர்கட்கு ஒருவகையில் நன்மையாகும். நீங்களும் கூற வேண்டிய அறிவுரையைக் கூறவில்லை என்றாலும் புறங்கூறாது இருத்தல் உங்கட்கும் பெருமையாகும்” என்றும் கூடக் கூறலாம் போல் தோன்றுகிறது. "யாது கூறினும், யாது செய்யினும் புறங்கூறா திருத்தல் நல்லது” "பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறன் அறிந்து ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறம்கூற வேண்டா அவற்கு” என்னும் நாலடியாரின் நல்லுரையும் புறங்கூறாமையே ஒரு நல்லறம் என உணர்த்துகிறது. முகத்தின் இனிய நகாஅ , அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்” 824 என்பது வள்ளுவர் கூடா நட்பில் கூறும் குறள். முகத்தளவில் இனியவராக மகிழ்வு காட்டி மனத்தளவில் தீமையைக் கொண்டுள்ள வஞ்சகரோடு நட்புக் கொள்ளுவதற்கு அஞ்சுதல் வேண்டும். என்பது வள்ளுவர் காட்டும் வழியாகும். அதன் சாயலில் அமைந்துள்ள குறளே "அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை” 182 ஆகும். “அறமுறையினை ஒருவன் அழிப்பது தீமையானதே ஆகும்; அறமல்லாப் பாவம் செயல்களைச் செய்வதும் தீமையானதே! இவ்விரண்டு தீமைகளையும் சேர்த்தே செய்தால் அஃது எவ்வளவு பெரிய தீமையாகும். அதை விடப் பெரிய தீமையானது ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்து உரைத்து விட்டு வந்து, அவனைக் கண்ட இடத்தில் பொய்யாக நடித்து மகிழ்தலாகும். ஒருவனுக்கு நேருக்கு நேர் தீங்கு செய்வதைக் காட்டிலும், அவனைப் புறத்தே இகழ்ந்துரைத்து, அவன் எதிரே நல்லவன் போல் நகை செய்தல் கொடியது. புறங்கூறி வாழ்தல் பொய் வாழ்க்கை . முன் நின்று ஒருவன் முகத்திலும் வாயினும் கல்நின்று உருகக் கலந்துரைத்து - பின்னின்று இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை” என்ற அறநெறிச் சாரத்தின் கருத்தும் இதனோடு இயைபுடையதே! "உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவார் உறவு கலவாமை வேண்டும்” என்பது வள்ளலாரின் வேண்டுதல், ஒருவனைக் காணாத இடத்தில் தகுதி இல்லாத சொற்களால் இகழ்ந்து கூறி, நேரில் - கண்ட பொழுது பலபடப் புகழ்ந்து கூறிப் பொய்யான முறையில் உயிர்வாழும் சிலரை வள்ளுவர் சந்திக்க நேர்ந்தது. வேதனைப் பட்டார்; புறங்கூறுதல் நல்ல பழக்கம் அன்று; விட்டுவிடுங்கள் என எத்தனை முறை சொல்லியும் நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளவில்லையே ஏன்? மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்! தவறு என்பதும் புரிகிறது! எப்படியோ விளையாட்டாய்ப் பழகிவிட்டோம்! இப்பொழுது எவ்வளவு முயன்றும் புறங்கூறும் பழக்கத்தை விட முடியவில்லையே என்ன செய்வது! சீ! நீங்களும் மனிதர்கள் தாமா? இப்படியொரு போலியான முறையில் உயிர் வாழ்வதை விடச் சாவது மேல் எனக் கடிந்து உரைத்தார். சாவது நல்லதா? ஆம்! அறநூல்கள் கூறும் ஆக்கத்தைச் உங்கள் 'சாவு' உங்களுக்குத் தரும்! என உரைக்க நேர்ந்தது. அதனால் தான் "புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும்” என்றார். புறங்கூறி வாழ்தலினும் சாதல் நன்று. சாவு அவனுக்குத் தருகின்ற நன்மையை வாழ்வு தாராது என்று கூறுவதனால், அவ்வுயிர் வாழ்க்கை எவ்வளவு தீவினை உடையது என்பதும், புறங்கூறலின் கொடுமையையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சாவு - இனிமேல் குற்றம் செய்ய வழியில்லாமல் தடுக்கிறது. பாவ மூட்டையின் அளவு அதற்குமேல் கூட வாய்ப்பில்லை! அதுவே பெரிய நன்மை தானே! ஆகவேதான் கவிஞன் பாரதி நல்ல பழக்கங்களை இளமையிலேயே கைக்கொள்ள வேண்டும்! முதுமையில் நினைத்தாலும் பின்பற்றுவது கடினம் எனக்கருதியே! "பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா! தெய்வம் நமக்குத் துணை பாப்பா! ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா! எனக் கூறிப் புறங்கூறலை ஒழிக்க முயன்றார். "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்” எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்ல வேண்டியதைச் சொல்வது குற்றமன்று! ஆனால் ஆள் நேரில் இல்லாத போது சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு புறம் பேசுதல் விரும்பத்தக்கது அன்று! என்றும் பொருள் கூறலாம்! நேரே நின்று கொண்டு இரக்கமற்ற முறையில் சொன்னாலும் சொல்லுக ஆனால் ஒருவன் இல்லாத பொழுது அவனைப் பற்றி இகழ்ந்து உரைத்துப் பின் அவனைப் பார்க்க முடியாத நிலையை உண்டு பண்ணும் சொற்களைச் சொல்லாதே என்றும் சொல்லலாம். "போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டா' என்னும் நன்மொழியும் நினைவு கூறத்தக்கதே! "கேளிர் பிரிவர், நட்பினராய்க் கெழுமுவாரும் இலராவர், மூளும் வடுச்சொல் நேராக மொழிவர் எவரும் ஆதலினால் நாளும் அறத்தைக் கொன்று அனந்த நவைகள் செயினும் எதிர்நின்று மாள உரைசெய்யினும் செய்யேல் மைந்தா! மறந்தும் புறங்கூறல்” எனும் விநாயக புராணப் பாடல் நல்லதொரு விளக்கமாய் அமைகிறது. "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும்” "புறங்கூறுவான் ஒருவன் அறத்தை நல்லதென்று சொன்னாலும், அந்த அறத்தைத் தன் மனத்தின் வழியனாய்க் கூறுகிறான் அல்லன் என்பது அவன் புறங்கூறுவதற்குக் காரணமாகிய மனப்புன்மையாலே அறிவுடையோரால் அறியப்படும்” என்னும் பரிமேலழகர் உரையும் “புறங்கூறும் சிறுமையை ஒருவன் கொண்டிருக்கும் தன்மை ஒன்றாலேயே அவன் அறமுறையைச் சொல்லும் நெஞ்சத்தவன் அல்லன் என்பது வெளிப்பட்டுவிடும் என்னும் வாழ்வியல் உரையும் ஆகும். பிறர் தவறு செய்வது தெரிந்தால், தக்க அறிவுரை வழங்கித் திருத்துவது பொது நல உணர்வுடையோர் கடமையாகும். பொதுநல நோக்கு இல்லாதோர் முயற்சி எடுத்து நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணார். யார் பிறருடைய குற்றத்தைப் பெரிது படுத்தி வெளியே பரப்பிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறவழி காட்டும் நன்னெஞ்சம் வாய்க்கப் பெற்றவர் அல்லர் என்பது தெளிவாகப் புலப்படும். எவனொருவன் மற்றவனைப் பற்றிப் புறத்தே பழித்துரைக்கும் கீழான இயல்பு உடையவனாக இருக்கிறானோ அவன் உள்ளத்தால் அற நூல் கூறும் மாசற்ற தூய உள்ளம் வாய்க்கப் பெற்றவன் இல்லை என்பதை வெளிப்படுத்தி விடும். அறநெஞ்சம் உடையான் புறங்கூறான் அறம் கூறுவான் புறங்கூறான்! புறங்கூறுபவனுக்கு அறம் கூறும் நெஞ்சமும் இல்லை புறங்கூறுவானுக்கு அறம் கூறும் தகுதியும் இல்லை . கண்ணாடி வீட்டில் குடியிருப்பவன், ஓட்டு வீட்டில் கல் எறிந்தால், கண்ணாடி வீடும் விரைவில் நொறுங்கித் தானே போகும்! எவனொருவன் அடுத்தவரின் குற்றங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் பலரிடம் புறங்கூறித் திரிகின்றானோ அவன் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். எதை? தான் செய்த தவறுகளில் எல்லாம் பெரிய பெரிய தவறுகளை யாராவது கண்டு பிடித்துப் பழிதூற்றவும் வாய்ப்பு இருக்கிறதே என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பிறர் குறையை வேறொருவன் தன்னிடம் கூறிப் பழிக்கிறானே, இவன் நம்முடைய தவறுகளிலும் கடுமையான தவறுகளைப் கண்டுணர்ந்து மற்றவர்களிடம் பழிதூற்ற மாட்டான் என்று கூற முடியுமா? புறங்கூறுபவனையும், பிறர் புறங்கூறலாம்! புறங்கூறுவதைக் கேட்பவனும் புறங்கூறப் படுவான் என்பதை எண்ணிப் பார்த்தால் எவனும் புறங்கூறவும் மாட்டான்! புறங்கூறும் புன்மையைக் கேட்கவும் மாட்டான் என்பதை உணர்த்தவே, "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்” எனக் கூறுகிறார். “பழிப்பன பகரேல்” என ஆணையிடுகிறது ஆத்திசூடி நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம், ஆதலால் பழி எல்லாம் பழி சொல்வார் பாலதாம்! பிறரைப் பழி தூற்றுபவன்! பழிக்கு ஆளாவது உறுதி! "பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயாற் கெடும்” என்னும் பழமொழியும் வேறு வடிவத்தில் அரண் செய்கிறது. கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளன்புடன் பழகி, மகிழ்ச்சி அடையுமாறு இன்சொல் பேசி நட்புக் கொள்ளவேண்டும்! இனிய இயல்பால் நண்பர்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்! அத்தகைய நல்லியல்பு இல்லாதவர்கள் தான் பழகியவர் களிடம் குறைகண்டு பிடித்து, அக்குறையை வேறு ஒருவருடன் கூறிக் கூறி நண்பர்கள் ஒவ்வொருவராய்ப் பிரிந்து செல்வதற்கு வழி அமைத்து விடுகிறார்கள். நண்பர் தொகையைக் கூட்டுகிறோமோ இல்லையோ! பழகிய நண்பர் பிரிந்து செல்வதற்கு நம் வாய், வாய்ப்புத் தந்து விடக் கூடாது. பிரிந்தவர்களை இணைக்க நம் வாய்மொழி பயன்பட வேண்டுமே ஒழிய! இணைந்தவர் பிரிய நம் வாய்மொழி காரணம் ஆகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே, "பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பவர், நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்” என்கிறார். "தக்கதுரி யோதனன்பால் சார்ந்த சகுனியைப்போல் இக்குவல யத்தில் இரங்கேசா - மிக்குப் பகச்சொல்லி கேளிர் பிரிப்பர், நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்” எனக்கூறும் நீதி சூடாமணி சகுனியைப் போல் உறவினர்களைப் பிரித்தவர் உலகத்தில் இல்லை என்கிறது. "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு” தமக்குப் பலவகையாலும் நெருங்கிய உறவினர், நண்பர்கள் குற்றத்தையும் புறத்தே தூற்றும் வன்னெஞ்சர், தொடர்பில்லாத மற்றையோரிடத்து எத்தகையவராக நடந்து கொள்வார்! தம் அறிவிற்கும் திறமைக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவாறு உள்ளே புகுந்து விளையாடி விடுவார்; புறங்கூறல் பெருகிப்பல்கும்! நண்பரைப் புறங்கூறுவோர் அயலார் சிக்கினால் விட்டு வைப்பாரா? புறம் பேசியே புறம் போவார்! குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் செயலில் ஏதேனும் குற்றம் கண்டால், திருத்த முற்பட வேண்டும்! அதுவும் புண்படுத்தாமல் பண்படச் செய்ய வேண்டும்! அதுவும் அயலார் அறியாதவாறு நிகழ வேண்டும்! நமக்கு வேண்டியவர்களைப் பற்றி நம்மிடம் புறங்கூற இடம்தருதல் ஆகாது. பிறர் அறிய நமக்கு நெருக்கமானவர் மீது நாமே குற்றம் சுமத்திப் பழிப்பது. தன் பல்லில் உள்ள அழுக்கைத் தானே எடுத்து நுகர்ந்து பார்த்து நாற்றமடிக்கிறது என அயலாரிடம் கூறுவது ஒக்கும்! அத்தகையோர் அயலாரை என்ன பாடு படுத்துவர்! நாம் பிறந்த வீடு, நாம் வளரும் ஊர், நாம் வாழும் நாடு, இதுவரையில் பெற்றிருந்த பெருமையிலும் நம்மைப் பெற்றதால் மேலும் பெருமை பெற வேண்டுமே தவிர, ஒருக் காலும் சிறுமையுறல் ஆகாது! இருந்து இருந்து இவனைப் பிள்ளையாகப் பெற்றோமே என்று பெற்றவர் வருந்தும் நிலையோ! இவனெல்லாம் தலையெடுத்து ஊரைக் கெடுத்து விட்டானே என்று ஊரவர்களும்! இவர்கள் கையில் நாடு சிக்கி நாசமாகி விட்டதே என்று நாட்டுப் பற்றாளர்களும் வருந்திப் புலம்புவதற்கு எவர் வாக்கும் வாழ்வும் இடந்தந்துவிடல் ஆகாது! உலகம் நல்லவரையும் தாங்கும் அல்லவரையும் தாங்கும் தாங்குவது அதன் இயல்பு! தன்னை அகழ்வாரையும் நிலம் தாங்கும்! தன்னைப் புகழ்வாரையும் நிலம் தாங்கும்! அவன் தன்னைப் பார்த்தாவது நல்லதைப் படித்துக் கொள்ளமாட்டானா? என்று தாங்குகிறது நிலம்! இன்று இல்லாவிட்டாலும் நாளை! நாளை இல்லாவிட்டால் மறுநாள் நம்மையும் தாங்கி மணக்கச் செய்வான் என்ற நம்பிக்கையோடு தாங்கிறது. "அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறம் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.” 'எவரும் பார்த்து விடுவாரோ' என அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு நெஞ்சம் பதைத்துப் பிறரைப் பற்றிக் கீழான பழிச்சொல்லை அயலே தூற்றிக் திரிபவனையும் தாங்குவது அறம் என்று கருதியா இம்மண் சுமக்கின்றது? புறங்கூறும் பழக்கத்திற்கு அடிமையானவன் தெரிந்தவர்களின் குணங்களை ஆராய்ந்து தெளிவதை விடுத்துக் குற்றங்களைத் துருவித் துருவி ஆராய முற்படுகிறான். ஆராய்ந்து, குற்றப்பட்டியலை அணியப்படுத்திக் கொண்டு, அதை யாரிடம் சொன்னால் மகிழ்ச்சியோடு கேட்பார்கள் என் ஆளைத் தெரிவு செய்து எதை எப்படிச் சொன்னால் நம்புவார்கள்? இழிவாக எண்ணுவார்கள். அதை எப்போது எங்கே சொன்னால் பொருத்தமாக இருக்கும்? தாம் குறை கூறியது யாருக்கும் தெரியாதிருக்க வேண்டும். அத்துடன் தாம் யாரைப் பற்றிக் குறை கூறுகிறோமோ அவருக்குத் தம் வழியாகத் தான் இச்செய்தி பரவி இருக்கிறது என்பதும் வெளிப்படாமல் சொல்ல வேண்டுமே என்றெல்லாம் ஆராய்ந்து தான் புறங்கூற இயலும், பிறர் குற்றத்தைக் காண்பதற்கும், கண்ட குற்றத்தைப் புறத்தே சொல்வதற்கும் தக்கவழி முறைகளை ஆராய்வோர், இவ்வாய்வு முயற்சியால் கண்ட பயன் என்ன? தம் மனத்தையும் காலத்தையும் நேரத்தையும் கெடுத்துக் கொண்டு தன்னைத் தானே கேட்டிற்கும் பழிக்கும் ஆளாக்கிக் கொண்டது தான் கடைசியில் எஞ்சும்! ஒவ்வொருவரிடமும் குற்றமும் குணமும் பெரும்பாலும் கலந்தே இருக்கும்! அறிவறிந்த மானிடப் பிறப்பினர் குணத்தைக் காக்கவும் வேண்டும் வளர்க்கவும் வேண்டும். தம் தம் குறைகளை நாமே கண்டு உணர வேண்டும்! உரிமையுடையார் சுட்டிக் காட்டினால் நடுவுநிலையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்! அக்குற்றங்களைப் படிப்படியே குறைத்து நீக்க முயல வேண்டும் அதுவே நமக்குப் பழி ஏற்படாமல் காக்கும் வழியாகும். ஆகவே பிறர் குற்றங்களைக் தேடிக் கண்டு பிடித்து அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் புறங்கூறுவோர். தம்பால் அமைந்துள்ள குற்றங்களை எண்ணிப் பார்க்க முற்பட்டாலே புறங்கூற எண்ணார். நாம் பிறர் குற்றங்களை அயலாரிடம் கூறிப் பழிப்பது போல் நம் குற்றங்களையும் யாராவது கண்டுணர்ந்து அயலே சென்று பழிப்பார்களே என்று எண்ணும் நடுநிலை நோக்கு வந்துவிட்டாலே பிறரைப் பற்றிப் புறங்கூற மாட்டான்! புறங்கூறுதலே ஒரு குற்றம் தானே! இதையும் ஊரும் உலகும் பழிக்குமே என்று எண்ணிப் பார்ப்பவனும் புறங்கூற எண்ணான்! பிறர் குற்றம் பார்ப்பதை விடுத்துத், தன் குற்றம் காண்பது நன்று! அதனினும் நன்று பிறரைப் பற்றிப் புறத்தே குற்றம் கூறாமை! என்பதைத் தெளிவாக உணர்த்தவே, "ஏதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு” எனக் கூறுகிறார். சீதையை இராவணன் மண்ணினோடும் பெயர்த்துச் சென்றனன் என்பதை அறிந்த இராமன் சினங் கொண்டு உலகங்கள், ஏழினையும் அழிப்பேன் எனச் சூள் உரைத்தான். அப்பொழுது சடாயு கூறும் அறிவுரை இக்குறளுக்கு நல்லதொரு சான்றாகும். "வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக்க, கொம்புஇழை மானின் பின்போய் குலப்பழி கூட்டிக் கொண்டீர்; அம்பு இழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை உம்பிழை என்ப தல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ ? என்னும் கம்பன் கவி குறட் கருத்தை அள்ளி வழங்குவதையும் காணலாம்! புறங்கூறாமை பற்றிப் புறத்தே கூறாமல் (நேருக்கு நேர்) அகத்தே கூற வாய்த்தது மகிழ்ச்சிக் குரியதே! புறங்கூறாமை இன்பம் தரும்! புறங்கூறல் அறத்தை அழித்த குற்றமாகும்! புறங்கூறி வாழ்தல் பொய் வாழ்வு! புறங்கூறி வாழ்வதைவிடச் சாதல் மேலானது அறவழி நிற்போன் புறங்கூறான்! புறங்கூறல் நட்பைக் கெடுக்கும் புறங்கூறுவான் எவரையும் பழிப்பான்! புறங்கூறுவோன் பூமிக்குப் பாரம்! பிறர் குற்றம் காணாதே! கூறாதே! தன் குற்றம் காண்! குற்றத்தை நீக்கு உன்னை உயர்த்து! உன்னாலும் உலகம் உயரட்டும்! அறத்துப்பால் - 1 20 பயனில சொல்லாமை குன்றக் கூறல், மிகைப்படக்கூரல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வெகச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன் இன்பம் என்று இன ஈரங் குர்ரம் நார்கே! என நன்னூலார் வகுத்த இலக்கணம் சொல்லுக்கும் பொருந்தும். சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல், நவின்றோர்க் இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழம் உடைத்தாதல் முறையின் வைப்பு, உலகம் மகனாலயாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல், நூலிற்கு அழகு எனும் பத்தே என்னும் நன்னூலார் வகுத்த இலக்கணம் சொல்லுக்கும் பொருந்தும், பேச்சிலும் எழுத்திலும் நாம் பயன்படுத்தும் சொற்களில் மேலே காட்டிய பத்துக் குற்றங்களும் இல்லாதிருக்க வேண்டும்! பத்து அழகுகளும் பொருந்தி இருக்க வேண்டும். அப்படி அமைந்த சொல்லெல்லாம் பொருள் பொதிந்த சொல்லாகும். அதனைக் கூறுவதாலும் எழுதுவதாலும் நற்பயன் விளையும், "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பியம், சொல்லுக்குப் பொருள் உண்டு! ஆனால் கையாளும் விதத்தில் தவறும் குழப்பமும் அறியாமையும் ஒழுங்கின்மையும் இடம்பெற்றால் சொல் எவ்வாறு பயனுடையதாகும்? வீட்டுத் திண்ணை , தெருச் சந்திப்பு, சத்திரம், சாவடி, மற்றும் பலர் கூடுகிற பல்வேறு நிலையங்கள் ஆகிய இடங்களில் சிறு சிறு குழுக்களாகக் கூடிப் பேசும் கூட்டங்கள் பலவற்றைக் காண நேரிடுகிறது. பேசிக் கலைந்தவர்களிடம் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என வினவினால் பெரும்பாலும் 'சும்மா' பேசிக் கொண்டிருந்தோம். பொழுது போக வேண் டும் அப்படியா?" என்று விடையே கிடைக்கும். இந்தச் 'சும்மா'வைத் தான் திருவள்ளுவர் 'பயனில சொல்லுதல்" என்கிறார். பொய் சொல்லுதலும், புறங்கூறுதலும் இன்னாச் சொல் கூற லும் குற்றமாய்க் கருதப்படுதல் போல் பயனற்ற சொல்லும் குற்றமே! பயன் இன்றி வாய்திறப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்! பயனில்லாத சொல்லைப் சொல்லிப் பழகுகின்றவன், கள் எநண்பவனைப் போலவும், சூதாடுபவன் எனப் போலவும் காலத்தை வீணாக்கி, ஆற்ற னபெ வீணாக்கி, கடமையையும் மறக்கின்றான்! அதனால், அவன் அடையும் பயனோ ஒரு பொய்யான இன்பம், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் போலி இன்பம்; அறத்தைப் போற்றி வாழ வேண்டியவன் இவ்வாறு வீண் வாழ்வு வாழ்ந்து வன ன் என்று இகழப்படும் நிலைக்கு ஆளாகி விடல் ஆகாது. வீண்பேச்சு, போலி வாக்குறுதி, தற்பெருமைப் பேச்சு, தற்சிறுமைப் பேச்சு, “வாய்ப்பந்தல்", காலம் உணராப் பேச்சு, இடம் தாராப் பேச்சு, தெளிவற்ற பேச்சு, தேவையற்ற பேச்சு, நோக்கம் இல்லாப் பேச்சு, குழப்பமான பேச்சு, விதண்டா வாதம் புரியும் பேச்சு, ஒப்புக்குப் பேசுவது அளவின்றிப் பேசுவது, பிறரை மிக எளிமையாய்க் கருதிப் பேசுவது, பிறரை மிகப் புகழ்ந்து பேசுவது, முரணாகப் பேசுவது, பிறருக்கு ஒன்றுமே தெரியாது எனக் கருதிப் பேசுவது, செய்தி தெரியாதவரிடம் தெரிந்தது போல் பேசுவது, முன்பின் தொடர்பின்றிப் பேசுவது ஆள்புரியாமல் பேசுவது, உளறுவது புலம்புவது, கூப்பாடு போடுவது எல்லாம் பயனில சொல்லும் வகையைச் சார்ந்தனவே ஆகும்! யார் யாரிடம் எப்பொழுது பேசினாலும் கேட்பவர் விரும்புமாறும் பேச வேண்டும், எதைப் பற்றிப் பேசினாலும் பேசுகிறவருக்கும் பயன் இருக்க வேண்டும். கேட்பவருக்கும் பயன் இருக்குமாறு பேச வேண்டும். பேசுபவருக்கு மட்டும் பயன் இருக்குமாறு பேசும் பேச்சு தன்னல நோக்கம் கொண்டது, இருவர்க்கும் பயன்படும் சொற்களைப் பேசுவது தந்நலம் கலந்த பொதுநலன் தருவதாகும். பேசுபவர்க்கு அதனைச் சொல்வதால் பயன் இல்லை; ஆனால் கேட்பவர்க்கு மிகுந்த பயன் உண்டு; அத்தகைய செய்தியைப் பேசுவோர் பொது நலம் பேணும் பெரியோர் ஆவர்! சாதி வேறுபாடு நோக்காது அனைவர்க்கும் வேதவிளக்கம் கூறிவந்தார் பெருமகன் இராமானுசர்; அதனைக் கண்ணுற்ற வைதீகர்கள் வேதப் பொருளை இப்படி அனைவரும் கேட்கும்படி கூறக்கூடாது : கூறினால் கூறியவர்க்கு நரகமே கிட்டும்! கேட்டவர் வீட்டுலக இன்பம் பெறுவர் என உரைத்தனர். அப்படியோ? நான் ஒருவன் நரகத்திற்குப் போவது பற்றி எனக்குக் கவலை இல்லை எனக்கூறி விட்டுப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பேரின்பப் பெருவாழ்வு பெறுவதே எனக்கு மகிழ்ச்சி எனக் கூறி, மக்களைத் திரட்டி வைத்துக் கோபுரத்தில் வேரறி நின்று கேட்க வாய்ப்புள்ளோர் எல்லாரும் கேட்டுப் பயன்பெற வேதத்தின் விழுப்பொருளை இராமானுசர் விளக்கி உரைத்தார் என்பது வரலாற்று உண்மை ! பயனற்ற செய்தியை ஒருவர் கேட்டாலும், கேட்டவர்க்குக் கூறுபவர் மீது வெறுப்பு ஏற்படுவது இயற்கை, ஆனால் இங்கே ஒருவர் பயனற்ற செய்தியை ஒருவர் இருவர் அல்ல பலரிடம் கூறி வருகிறார். எவருக்கும் அவர் கூறுவதைக் கேட்க விருப்பமில்லை; வெறுப்புக் கொள்கிறார்கள். இப்படிப் பயனற்று சொற்களைப் பலரிடம் பேசி வெறுப்பைத் தேடிக் கொள்பவர் அனைவராலும் இகழப்படுவர். கேட்டார் வெறுக்கப் பயனிலம் பேசுவானை எல்லாரும் இகழ்வர். பரும் வெறுப்படையுமாறு பயன் அந்த சொற்களைப் பேசுபவர், படித்தவராக இருந்தாலும் படிக்காதவராக இருந்தாலும் செல்வராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் வலியவராக இருந்தாலும் மெலியவராக இருந்தாலும் பெரும் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராக இருந்தாலும் எல்லாரும் இகழ்ச்சிக்கு ஆளாகப் போவது உறுதி என்னும் கருத்துடையவர் திருவள்ளுவர் ஆகலான், "பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்” என்றார். 'பயனில பல்லார் முனியச் சொல்லுவான் எல்லாராலும் இகழப்படுவான்' என்பதும் நடக்கக் கூடியதே." பயனில சொல்வான் இகழப்படுவான் என்றால் பயனில் சொல்லான் போற்றப்படுவான் என்பது சொல்லாமலே எரி னங்கக் கூடியது தானே! "அழிவின் அவைநீக்கி, ஆறுய்த்து, அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு 78) என்பது நல்ல நண்பனின் தன்மையை விளக்கும் அருமையான குறள். நண்பனுக்கு வந்த துன்பத்தை நீக்கித் துன்பம் வராமல் இருக்க வழிகாட்டி, மீறித் துன்பம் வந்தால் அவனோடும் இணைந்து துன்புறுதல் என்பன நல்ல நண்பனின் இயல்பாகும். திருவள்ளுவர் இங்கே ஒரு வேடிக்கையான நண்பனைக் காட்டுகிறார், இவன் பழகிய, உயிருக்கு உயிரான தன் நண்பனிடமே முறை கேடான, அல்லது விரும்பத் தகாத, அல்லது நேர்மையற்ற அல்லது அறத்திற்குப் புறம்பான செயல்ஒன்றை, ஏதோ ஒரு சூழ்நிலையில் உணர்ச்சி வயப்பட்டுச் செய்துவிடுகிறான்; அவன் செய்தது தீமையானது தான் எனக் கூறி நிறுத்தி விட்டு, வேறொரு வேடிக்கை மனிதனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், இவன் ஓரிடத்தில் இரான், இவனே பலருடைய வீடு தேடிச் செல்வான், போகிற வழியிலும் வருகிற வழியிலும் யாரைக் கண்டாலும் பேச்சுக் கொடுக்காமல் இருக்கமாட்டான், எதையாவது பேசுவான், எதையும் பேசுவான் அச்செய்தியால் அவனுக்கோ மற்றவர்கட்கோ எந்தப் பயனும் இருக்காது, அவர்கள் போதும் இன்றைக்கு இவ்வளவு என்று குறிப்புக் காட்டாமல் பேச்சை முடிக்க மாட்டான். இவன் பாபரின் நேரத்தையும் கொன்று பலரையும் குழப்பியவன்! இவன் பயனின்றிப் பலரிடம் பேசியதும் தீமையானது தான்' நண்பருக்கு நயனில் செய்த தீமையும் தீமைதான், பலர் முன் பயனில சொல்லலும் இதுதான் என்றாலும் இரண்டில் மிக்க தீமை தருவது எது என்னும் வினாவிற்கு விடையளிப்பது போல், "பயனிப் பல்லார்முன் சொல்லல் நயனில் நட்டார்கண் செய்தலின் தீது" என்கிறார், பலபேர் முன்னிலையில் பயனற்ற சொற்களைச் சொல்லுதல் நண்பரிடம் முறை கேடான செயலைச் செய்வதைக் காட்டிலும் தீமையானது என்கிறார் என்* "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்" என்னும் குறள்வழி, 'வருந்தத் தக்கவற்றை நண்பர் ஒரு வேளை செய்தார் ஆயின், அதனை அறியாமையால் செய்தது என்றோ? உரிமையால் செய்தது என்றோ? உணர்தல் வேண்டும் வள்ளுவர் கூறுவது போல் நண்பர் செய்த தவறு குற்றமாகக் கூடக் கருதப்படாமல் போகலாம். ஆனால், நண்பர் அல்லாத பலரிடம் கூறிய பயனற்ற சொல் தன் பயனை விளைவித்தே தீரும்! அவர்கள் நல்ல பொழு தெல்லாம் பாழானது பாழானது தான், அந்தப் பொழுது மீண்டும் வரப்போவதும் இல்லை. ஆகவே அதனைச் சீர் செய்யவும் இயலாது, பயனற்ற சொன்ன பழியால் பெற்ற இழிவு இனே என எண்ணிப்பார்த்ததால் தான். 'பயனில பல்லார் முன் சொல்டேல் பெருந்தீது' என உடரைக்கலுற்றார். "நயனிலன் என்பது சொல்லும் பயனில் பாரித்து உரைக்கும் உரை பயன் இல்லாத சொற்களை ஒருவன் நீட்டி முழக்குகிறான் எனின் அவன் ஒழுங்குமுறை இல்லாதவன் என்பது தெளிவாகத் தெரிந்து விடும். ) ஏனெனில், வாய்ச் சொற்கள் ஒருவனின் நெஞ்ச நிலையைக் காட்ட வல்லுன! நெஞ்சில் மாசற்ற அறம் இருந்தால் பயன் இல்லா எண் 5:33ங்கள் தோன்றா? அந்த எண்ணங்களின் விளைவான பாசன்இல்லாத சொற்களைப் பேசுதலும் நிகழாது. நாவடக்கம் இல்லாமலும் மன அமைதியும் தெரியும் இல்லாமலும் அலையும் நிலையிலேயே பயன் இல்லாத சொற்கள் வாயில் பிறக்கும். ஆகவே, பயனில்லாத சொற்களை விரிவாகப் பேசும் பேச்சே அவன் அரநொ' நாட்டமோ, நீதிநெறியில் நம்பிக்கையோ ஒழுக்கநெறியில் பிடிப்போ இல்லாதவன் என்பதை அவனுடைய நீள வாயே அறிவிக்கும்! ஆகவே பயனில பேசி நம்தகுதி இன்மையை நாமே நம் வாய்ப்பறை மூலமாக அறிவிக்க வேண்டா! ஆகவே, பயனுடையவையே பேசி நயனுடையவர் ஆவோம்! எங்கே யாரிடம் பேசினாலும் பயனுடைய சொற்களையே பேச வேண்டும் அதையும் பண்போடு பேச வேண்டும்! அதிலும் அறிவுடையார் பலர் கூடியுள்ள கூட்டத்தில் மறந்தும் பயனோடு பொருந்தாத பண்பற்ற ஒரு சொல்லைக் கூடச் சொல்லிவிடல் ஆகாது. சொன்னால், அச்சொல்லே அவனை அறத்தோடு பொருந்தாதவன் ஆக்கி', வாழ்வில் அடைய வேண்டிய நன்மைகளை அ531டய விடாமல் தடுக்கும் முன்னர் பெற்றிருந்த நான் IIகளையும் நீக்கி விடும்! என வள்ளுவர் கருதுவதால் "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில் சொல் பல்லார் அகத்து” எனக் கூறுகிறார். பயனோடு பொருந்தாத பண்பற்ற சொல்லைப் பலர் முன் கூறினால், அது அவனை ஒழுங்கு முறைப்பில் வாழ்வும் விடாமல், நன்கள் எதுவும் அடைய முடியாமலும் இழிவுபடுத்தும், ஆனால் பயனுடைய பண்பான சொல் நயனும் நன்மையும் ஆக்கும், ஆகவே தான் கவிமன்னர் கஸ்பர் "பாகையுடைச் சிந்தை யார்க்கும் பயனுறு பண்பில் தீரா நகையுடை முகத்த னாகி இன்னுரை நல்கு நாவால்" எனக் குறட் கருத்தையும் சொற்களையும் தக்கவாறு எடுத்தாண்டுள்ளார், இந்திரன் அவையில் அரிச்சந்திரனே எல்லாத் தகுதியும் பொருந்திய மன் னன் என வசிட்டர் கூறிய கூற்றை மறுத்த விசுவாமித்திரர், அவனை நானும் அறிவேன், அவன் வெய்யன், பதகன், பல தாரவிருப்பன், வீணன், பொய்யன், நிறையும் பொறையும் சிறிதுமில் புல்லன், கயன், கப்டன், சுயவன்தன்னை, நல்வன் என்ற இன்ஜயன் திருமுன் உரைத்தாய், இது என்னாக என்றான்" எனப் பயன் சாராப் பண்பில் சொல் பல்வாரசுத்துக் கூறி, அதனை மெய்ப்பிக்கத் தரங்கெட்ட செயல்கள் பலவற்றில் ஈடுபட்டும் நிறுவிக் காட்ட இயலாமல் தோல்வியுற்றுப் பழிக்கு ஆட்பட்டுத் தன் தவ வலிமையையும் இழந்து போனதை விளக்குவதே அரிச்சந்திர புராணம் ஆகும்! விசுவாமித்திரரை விட இக்குறளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு யாருளார், "நான்பியோர் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லோடு பொயம் இம்மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார்" என்னும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மும்மருந்தில் மூன்றாம் மருந்து இக்குறளுக்கு அரண் செய்வதாகும்! பயனற்ற சொற்களை யாரும் பயன்படுத்துதல் கூடாது என்பது பொது விதி. ஆட்சி அதிகாரத்தில் இருப்போரில் சிலர் சில வேளைகளில் பயனற்ற சொற்களைப் பேசுகிறார்கள், அவ்வாறே அறிவாளர்கள் பொருட்செல்வம் பெற்றவர்கள் இதுபோல் பிற பிற தன்மைகளில் உயர்நிலையில் இருப்போர் பயனில்லாத சொற்களைப் பயன் படுத்தினால் தீமை ஏற்படும் இகழ்ச்சிக்கு ஆட்படுவர் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் வீழும் உலகத்தையும் வீழாமல் காக்கும் உயர் பண்பாளனும் மற்றவர்களைப் போல் பயனற்ற சொற்களை ஏதாவது ஒரு காரணத்தால்! பேசிவிடுவான் ஆனால், அவனுக்கு ஏற்படும் வீழ்ச்சியும் இழிவும் வேறு நிலையனருக்கு ஏற்படாது. இது "சான்றோர் சான்றாண்மை குன்றின்” என்ற நிலையாகும். தரையில் நடக்கும் போழ்து வீழ்தல், ஐந்தடி உயரத்தில் இருந்து வீழ்தல் ஐம்பது அடி உயரத்திலிருந்து வீழ்தல் ஐந்நூறு அடி கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றவன் வீழ்தல் - செயல் ஒன்பதுதான் ஆனால் விளைவு ஒன்றுபோல் இருக்குமா? பண்பானன் பயணில் சொல் கூறல் ஐந்நூறு அடி உயரக் கோபுரத்தின் உச்சியிலிருந்து தலைகீழாக வீழ்வதற்கு ஒப்பாகும். அதன் பின் கூடையில் தான் அள்ள வேண்டும். உடலும் போய்விடும் உயிரும் போய்விடும் என்ற நோக்கில் எண்ணிப்பார்த்த திருவள்ளுவர், "சீர்ணம் சிறப்போடு நீங்கும் பயனில நீர்மை உடையார் சொலின்" 195 ஓஎனப்பகர்கிறார், பண்பாட்டைப் பேணிக் காக்கும் உயர் மனிதன் பயனற்ற சொற்களைக் கூறும் நேர்ந்தால் அவர் இதுவரையில் கட்டிக் காத்த சீர்ம்ை; அவர் இந்நாள் வரை பெற்ற சிறப்புசுள் அனைத்தும் தாமே நீங்கி விடும் என்கிறார் வள்ளுவர், அவர் கூறும் நீர்மையைப் பண்புடைமை என உரையாசிரியர் அனைவரும் ஒப்பக் கொள்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் கையாண்ட சீர்மை சிறப்பு அறிஞர் மத்தியில் பெற்றுள்ள சீர்மை சிறப்பு எண்ணி வியக்கத் தக்கதாகும். அப்படி அறிஞர்களைச் சிந்திக்கச் செய்துள்ளார் வள்ளுவர். 'ஒழுக்கம் வாய்மையும்' என்பவர் பரிதியார். 'ஒழுக்கமும் ஆக்கமும் இது காளிங்கர் உரை. 'விருப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் என உரைப்பவர் பரிமேலழகர். 'பெருமையும் நற்குணமும்' என்பது சுவிராசர் கருத்து. 'உயர்வும் மதிப்பும்' இது கா.சு. பிள்ளை பாவாணர் கூற்று. 'மேம்பாடு மதிப்பு' என்பவர் மு.வ. 'பெருமை மதிப்பு" என்பவர் குழந்தை, மேம்பாடும் சிறப்பும்' என்கிறார் செந்துறை முத்து, 'தரமும் சிறப்பும்' என்பவர் வ.சுபமா, புகழும் பெருமையும்' - என்கிறார் தண்டபாணியார். 'சிறந்த தன்மை , புகழ்' எனக் கருதுபவர் இளங்குமரனார் நன்பதோடும் அடையாமல் மேலும் சிந்தனை வளர வாய்ப்புள்ளது. பண்புடையான் இதுவரையில் உயிரினும் மேலாய்ப் போற்றி ஒழுகிவந்த கட்டுப்பாடான வாழ்வியல் செம்மையும், அதன் வழியாய் அவன் பெற்ற தற்புகழும் ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சுபோல் பாழாக்கி விடுகிறது 'பயனிலாச் சொல்', நெல்லுக்குள் அரிசி இருந்தால் தான் அது நெல் ஆகும். உள்ளீடு மணி இல்லையேல் பதர் ஆகும். அது போல் சொல்லும் சொல்லில் பொருட் பயன் இல்லையேல் அது சொல்லாகாது "பதரே" ஆகும்! | அதுபோல் பயனற்ற சொற்களை அள்ளி வீசிக் கொண்டிருப்பவன் மனித உருவில் உடவெளிக் கொண்டிருந்தாலும் அவன் அறிவறிந்த மானிடன் அல்வன் அவனை மக்களுள் பதடி எனக் கருதி ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார் வள்ளுவர், பாராட்டிப் போற்றுவதற்கு உரிய தகுதியோ சிறப்போ இல்லாதவர்களையும் பலபடப் பாராட்டி மகிழும் போலியர்களையும் மனிதர்களாய்க் கருதாது 'பதடி" எனவேதான் கருத வேண்டும், பிறர் கூறும் பயனற்ற சொற்களையும் கேட்டு ஆகா! என்ன பயனுடைய சொல் எனப் பாராட்டுவானையும் கூட மனிதர்களில் பதடிகனாகத் கருத வேண்டும். உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு காண இயலாதவர்களும் பதடிகளே!' எனச் சிந்திக்குமாறு, "பயணில் சொல் பாராட்டுவானை மகன்ளனல் மக்கட் பதடி எனல்" என்கிறார் வள்ளுவர். இச்சொல்லிலும் கருத்திலும் ஈடுபாடு கொண்டு, "சொல்லில் பதர்களைந்து சொன்முடிவு காணாதார் நெல்லில் பதர்போல் நிற்பார் பராபரமே!" எனப் பாடுகிறார் தாயுமானவர்! "மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" TH என ஈகையில் ஈகையை வற்புறுத்தும் வள்ளுவர், இனியவை சுகூறவில், "அகன்அமர்ந்து ஈதலின் நன்றே; முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்" g) என்று இன்சொல் கூறல் ஈகையின் நன்று என வற்புறுத்தியவர், "நயனில சொல்லின்றும் சொல்லுக; சான்றோர் பயனில சொல்லாமை நன்று" என்று கூறுவது வியப்பாகத் தெரிகிறதா முரண்பாடாகத் தெரிகிறதா? வியப்பும் அன்று! முரணம் அன்று. பிறனில் விழைவாரை, "விளிந்தாரின் வேறல்லபர்” என்றும், புறங்கூறுவாரை "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல் அறங் ஆக்கம் தரும்" கேளாச் செவியரை, "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் நான்? என்பன போன்ற இடங்களில் இன்சொல்லால் அறிவுரை வழங்காமல் வன்சொற்களால் இடித்துரைத்து நெறிப்படுத்திய இடங்கள் உண்டு! மருந்து இனிப்பாக இருந்தால் நல்லதுதான், கசப்பா இனிப்பா என்பது முதன்மையன்று நோய் நீங்க மருந்துண்ண வேண்டும் மருந்தின் சுவை எப்படி இருப்பினும் கவலையில்லை. எனினும் சில நோய்க்கு இனிப்பு மருந்து ஆகாது, சுசப்பு மருந்துதான் நல்லது என்ற நோக்கில் தான் வள்ளுவர் "நயனில சொல்லிலும் சொல்லுக, சான்றோர் பயனில சொல்லாமை நன்று" என்கிறார். பொதுவாகச் சான்றோர் இன்சொல் கூறுவதையே விரும்புவர். அத்தகையோர் பேசப்படுபவர் நிலை கருதியும் பேசப்படும் பொருள் கருதியும் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் தீமை இல்லை, ஆனால் எந்தச் சூழ்நி3 பயிலும் பயனுடைய சொற்களைப் பேசுவதே தன் Mril தரும் எனக்கருதிப் பயனற்ற சொற்களைக் கூறவே மாட்டார்கள், சான்றோர் கடுஞ்சொற்களைக் கூறினாலும் கூறுவரேயன்றிப் பயனற்ற சொற்களைக் கூறார். "அரும்பயள் ஆயும் அறிவினார் சொல்வார் பெரும்பயன் இல்லாத சொல்" அறிவுடையார் மெய்ப்பொருள் காண்பவர், பிறர் கூறுவனவற்றுள் அமைந்துள்ள மெய்ப்பொருளை மட்டும் காண்பவர் அல்லர்; தாம் கூறும் சொற்களிலும் மெய்ப்பொருள் கண்டுணர்ந்து பேசுபவர்களும் ஆவர். அதிலும் அரிய பயன்களை ஆராயும் நுட்பமும், திறனும் வாய்க்கப் பெற்று அறிஞர்கள், பிறரிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதே இயலாது. யாரிடமாவது ஏதாவது முதன்மையான செய்தியைச் சொல்ல வேண்டிய தேவை இருந்தால் தான் பேசுவார்கள்; சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றலும் கைவரப் பெற்ற அவர்கள் பயன் ஒன்றிப் பேசமாட்டார்கள் என்று மட்டும் கூறாமல் மிகுந்த பயன் - பெரிய பயன்பெருமை கொள்ளக் கூடிய பயன் இல்லாத சொல்லை வாயாலும் கூறார், எழுத்தாலும், சீகூறார், அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரும் பயன் இல்லாதவற்றைச் சொல்லார் என்பதைச் சொல்கிறார். அறிவுடையார் நிறைந்த, பயனுடைய சொற்களையே சொல்வார். நற்பயனற்ற சொல்லை எந்நாளும் சொல்வார் என்பதை உறுதிப்படுத்துகிறார். கார்காலம் கழிந்து குளிர்காலம் வந்தது என்பதைக் கூற வந்த கம்பர், "கல்வியின் திகழ் காணக்காயர் கம்பலைப் பல்விதச் சிறார் எனப்பகர்வ பல்லரி செல்லிடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா நல்லறிவாளரின் அவிந்த நாவெலாம்” குளிர்காலத்துத் தவளைகள் ஒலி எழுப்பாது ஒடுங்கி இருப்பது நல்லறிவுடையாரின் நாவடக்கம் போன்றது என்பது நயமான தளESTIயாகும்! அரும்பயன் ஆராயும் அறிவுடையார் பெரும் பயன் இல்லாத சொற்களைச் சொல்வார் என முற்குறளில் கூறிய வள்ளுவர் அடுத்த குறளில் அவரினும் மேம்பட்ட இன்னொரு வகை அறிவாளர் சொல்லும் சொல் பற்றிச் சொல்கிறார், இங்கே காட்டப்பெறும் அறிவாளர் படிப்பறிவுடன், பட்டறிவும், நுண்ணறிவும், உலகியல் அறிவும் வாய்க்கப் பெற்றவர், எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அப்பொருளின் உண்மைத் தன் 531ம்3ய தடுருளி நோக்கி ஆராய்ந்தே முடிவுக்கு வரும் மயக்கம் நீங்கிய குற்றமற்ற தூய அரிவி 533 தடடையவராவார். அத்தகையோர் பயனற்ற சொற்களைத் தம்மை மறந்தும் சொல்ல மாட்டார் என்பதை "பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்” என்னும் குறள் விளக்குகிறது. "மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்" என்னும் தொடர் குற்றம் இது, குணம் இது நல்லது இது தீயது இது: கைக் கொள்ளத் தக்கது. இது, தகாதது இது என்பவற்றை ஆராய்ந்து தெளிவான முடிவிற்கு வரக் கூடியவரும், தன்னிடம் எந்தக் குற்றமும் எள்ளளவும் இல்லாதவரும் ஆகிய மெய்ப்பொருள் உடணர்ந்து அறிவுடையார் என்பதே பொருள்! இத்தகைய மருள் நீங்கிய மாசறு காட்சியவரை மெய்யுணர்தலில் குறிப்பிட்டுள்ளதையும் ஒப்பிட்டு நோக்கலாம், "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு” 352 எனக் கூறுவதே அக்குறளாகும். போர்க் களத்தில் நிகழ்ந்ததை மாலியவானிடம் இராவணன் உரைத்த போழ்து, "நல்லியல் கவிஞர் நாவில், பொருள் குறித்து அமர்ந்த நாமச், சொல்கிறாரா செய்யுள் கொண்ட தொன்டான் தொடையை நீக்கி, சால்னலயில் சென்றும் தீரா இசையென பழுதுஇலாத, பல் அலங்காரப் பண்பேகாகுந்தன் பகழி மாதோ!" எனப் பகர்கிறார் கம்பர். இதுவும் நல்ல சான்றாகும். வாய் இருப்பதனால் பேசிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? யாரிடம் பேச வேண்டும்" எங்கே பேச வேண்டும்? எவ்வளவு பேச வேண்டும்? பேசித்தான் ஆக வேண்டுமா? பேசாது இருக்கலாமா?' என எண்ணிப் பார்த்துப் பேச வேண்டும்! தேவையானதைத் தேவையான இடத்தில், கேட்போர் உளம் கொள்ளுமாறு, தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசிப் பயன் விளைத்தல் வேண்டும்! பயனற்ற வீணான சொற்களைப் பேசாதீர் என்பதைத் கவிஞன் பாரதி, “வெற்றுரை பேசேல்” என்றான். 'நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூடி நின்று கூட்டிப்பிதற்றல் அன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடியே" எனப்பாடினார், எங்கு யாரிடம் பேசினாலும் பயனுடைய சொற்களையே சொல்ல வேண்டும்! அதுபோல் பயனற்ற சொற்களைப் பேசாது விலக்க வேண்டும்! என்பதை மிகத் தெளிவாகவும், கட்டு திட்டங்களுடனும் "சொல்லுக சொல்லிற் பயASறுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்" எனக் கூறி நிறைவு செய்கிறார், சொற்களில் பயனுடைய சொற்களேயே சொல்லுக.! பயனிலாச் சொல்லச் சொல் பற்க! கம்பராமாயாணத்தில் பயனற்ற சொற்களை நீக்கிப் பயனுடைய சொற்களையே பேசிப்புகழ் பெற்றவன் அனுமன், ஆகவே அவன் சொல்லின் செல்வன் எனப் போற்றப்படுகிறான். 'சொல்லும் சொல்லே தம்மை அளக்கும் கருவி; பலர் வெறுக்கப் பயனில பேசாதே! பழிக்கு ஆளாகாதே பயனில் சொல் = நயன் சாரா நன்மையின் நீக்கும்! "பயனில சொப்பொனிட மிருந்து சீர்மை சிறப்பொடு நீங்கும்! "பயணிய சொல்வான் மக்கட் பதடி' அறிவுடையார், பான்பாளர், மெய்ப் பொருள் அறிஞர் பயனில சுடறார். பயனுடைய சொல்லும்! பயனில சொல்லற்க! தீவினையச்சம் என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை" என்பது எளினைத் தூய்மை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறட்பா . செயலாற்றப் பிறந்தவன் மனிதன். வாழ்க்கைத் தேவையை நிறைவேற்ற எந்த வேன்டியயையும் செய்யலாம், யே வேலையில் உயர்ந்த வேலை, தாழ்ந்த வேலை என்பது வெளித் தோற்றமே! செய்கின்ற செம்மயாய் எந்த வேலையிலும் புகழும் நன்மையும் அடைய முடியும். நிறைந்த புகழும் நீடித்த நன்மையும் தாராத எந்தச் செயானார்பும் எவரும் எக்காலத்தும் செய்தல் கூடாது கட்டாயம் நீக்கி விட வேண்டும். புகழும் நன்மையும் தாராத செயல் என்றால் இசுழம் நீயும் தரும் செயல்களைச் செய்தல் கூடாது என்றும் கூறலாம் புகழும் நன்மையும் இன்பமும் தரும் செயல்பான எத்தனன தடை ஏற்பட்டாலும் இடுக்கண் நேர்ந்தாலும் தளர்ச்சி அடையாமல் துணிவுடன் செய்ய வேண்டுமே ஒழிய அமுஞ் சதி ஆனால், புகழும் இடையேயும் துன்பமும் தரும் எச்செயமைப்பும் எக்காரF31த்தைக் கொண்டும் செய்ய முடிந்து விடக் கூடாது! செய்ய அஞ்ச வேண்டும்! ஏனெனில் "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்" என்பதே வள்ளுவர் வழி! சுருங்கச் சொன்னால் நன்மை தரும் செயல்களை அஞ்சாது செய்ய வேண்டும்! அதே வேளையில் தீனம் தரும் செயலைச் செய்ய அஞ்சி விலக்கிவிடுதல் வேண்டும். நமக்கு மட்டுமல்லாது எவர்க்கும் தீமை தரும் சொல்கனளச் செய்யாது விலக வேண்டும். பிறர்பொருள் விரும்பல், திருடுதல், கொலை, கொள்ளை, கள்ளுண்ணல், சூதாடுதல், புலால் உண் 33 ல், பிறன்மனை நயத்தல், வரைவின் மகளிர் நாடல், பெண்வழிச் சேறல், அழுக்காறு, பேராசை, பொய் புகலல், புறங்கூறல், பயனில கூறல் இவையும் இவை போல் தீமை தரும் வினைகளை எல்லாம் அஞ்சி, நம்மை அண்டவிடாது காக்க வேண்டும். - திருக்குறளில் அறுபது குறட்பாக்களில் 'வினை' இடம் பெற்றுள்ளது. திருக்குறளைக் கற்பவரும் கேட்பவரும் "வினை என்றால் செயல்" அல்லது தொழில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், வினை, அறவினை அருவினை, அஞ்சும் வினை, ஆள்வினை திருவினை, எவ்வினை, தவா வினை, திருவினை, செய்வினை, நல்வினை நன்றாகா வினை, தத்தம் வினை, இன்பம் பயக்கும் வினை, இன்னுயிர் நீக்கும் வினை, சான்றோர் பழிக்கும் வினை, புகழொடு நன்றி பயவா வினை, தூங்காது செய்யும் வினை, எனக் குறிக்கப்படும் வினைகளோடு சேர்ந்ததே "தீவினை" ஆகும். ஆள்வினை உடைமை (fi: தெரிந்து வினையாடல் (5) வினை செயல் வகை ( 68 ) வினைத்திட்பம் (67) வினைத் தூய்மை (66) என்னும் ஐந்து வினன அதிகாரத்திற்கும் முன்னர் இடம் பெறுவது தீவினை அச்சம் என்னும் இவ்வதிகாரம் ஆகும், தீவினையைத் தீவினை = தீயவை = தீப்பால = தீய = தீவினைப்பால் - வினைப்பதை என்னும் சொற்களால் குறித்துள்ளார் திருவள்ளுவர், தீவினையின் விளைவு மிகக் கொடுமையானது ஆகையால் தீவினை அச்சம் என அதிகாரத்திற்கே தலைப்பிட்டுள்ளார். தீவினையும் அச்சமும் இடம் பெற்ற ஒரே அதிகாரம் திவினை அச்சம் என்னும் இவ்வதிகாரம் ஒன்றே ஆகும்! "தீமை செய்ய விரும்பும் போது உனக்கே நீ அஞ்சுக! ஏனெனில் தீவினனனயப் பிறர் காணாமல் செய்யலாம்! ஆனால் நீ காணாமல் எதையும் செய்ய முடியாது அல்லவா" என்கிறார் அறிஞர் குவாரல்சு, அறத்திற்குப் புறம்பான செயலே தீவினை; தீவினை என்றால் தீமையே தரும் வினை. அஃது ஒரு ஆணவப் பேய், அப்பேயைக் கண்டும் தீவினனயில் பழகிப் போன தீயவர்கள் அஞ்சமாட்டார்கள். ஆனால் அறநெறி வழுவாது குற்றமற்ற செயல்களைச் செய்து வாழும் உயர்ந்த பெருமக்கள் தீவினையைக் கண்டு அஞ்சி நெருங்க விடாது விலகிப் போய்விடுவார்கள். தீவினையைக் கொடியவர் அஞ்சாது செய்வர்; நல்லவர் செய்ய அஞ்சுவர், தீவினைக்கு அஞ்சுவோர் உயர்ந்தோர்; அஞ்சாதோர் தீயவர். தீவினையைத் தீவினை என்னும் செருக்கு என உருவகப் படுத்திக் கூறியுள்ளார். செருக்கு களிப்பு, மரம், மயக்கம், அகந்தை, ஆணவம், இறுமாப்பு எனப் பொருள் கொள்ளப்படுகிறது. எப்பொருள் கொண்டாலும் தீவினையின் தீமையையே எடுத்து உரைப்பதாகவே அமைந்துள்ளன! தீவினை செய்ய அஞ்சுவோம் நல்வினை நாளும் செய்வோம்! நல்லின்பம் பெறுவோம் என உறுதிமொழி ஏற்கத் தூண்டும் குறட்பாவே, "தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு" என்பதாகும். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு' என்பது அறிவியல் அறிஞர் நியூட்டனின் மூன்றாவது நல்ல செயல்களைச் செய்தோர் நற்பயனை அடைவதுபோல் தீயவினைகளைச் செய்து வாழ்வோர் அதன் பயனாகத் தீமையையே அடைவர். ஆகவே தீமை செய்ய அஞ்ச வேண்டும் எனப் பொதுவாகக் கூறாமல் தீயைக் சுண்டு அஞ்சுவது போல் அஞ்சு எனக் கூறுவதிலும் நிறைவடையாமல் 'தீயினும் அஞ்சப்படும்' எனக் கூறியுள்ளது சிந்தனைக்கு விருந்து! தீ சில வேளைகளில் தான் அழிவு வேலையைச் செய்கிறதேயொழிய மிகப் பார் நேரங்களில் மிகப் பெரும் ஆற்றல் வாய்ந்த எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இருளைப் போக்கவும், குளிர்காயவும் பயன்படும் நற்பொருளும் ஆகும். தீயவினை எக்காலும் நன்மை தாராது தீமையையே தரும் ஆகையால் தீயினும் அஞ்சப்படும் என்றார். தீவினை தீமையையே தருவதால் "தீயவே தீய பயத்தலால்" எனப் பாடங்கொள்வார் சோழவந்தான் அரசஞ்சண்முகனார், "தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்" 202 என்பது குறள், "கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு ஒட்டையே போதும். அது போல ஒரு தீய செயலே மனித வாழ்க்3ர்கா3யச் சீர்குலைத்து விடும்" என்னும் சாண்பானியன் பொன்மொழியும் நினைவு கூரத்தக்கதே. அறிவு, தீது ஒரீஇ நன்றின்பால் உய்க்கும்; எப்பொருளிலும் மெய்ப்பொருள் காணும்; எண்பொருளவாகச் செலச்சொல்லும் பிறர் வாய் நுண்பொருள் காணும்; உலகத்தோடு அவ்வது உறையும்; ஆவது அறியும், அஞ்சுவது அஞ்சும்; எதிரதாக் காக்கும்; பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றும். இத்தகைய பல்வேறு கூறுபாடுகள் கொண்ட அரிவுகளில் எல்லாம் தலைமையான அறிவு எது?' என்னும் வினாவிற்கு விடையாய் அமையும் குறளே, "அறிவினுள் எல்லாம் தலையென்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்" யாருக்குமே தீமை செய்யக் கூடாது: தம்மீது பாசனம் கொண்டு தீமை செய்தவர்க்கும் தீமை செய்ய எண்ணுதல் கூடாது. அத்தகைய பண்பட்ட உள்ளத்தவனிடம் பொருந்தி இருக்கும் அறிவு தனிச் சிறப்புடைய அறிவாகும். அவ்வறிவே அறிவின் கூறுபாடுகள் அனைத்திலும் முதன்மையான அறிவு எனச் சான்றோர் சிறுவர் எனக் கூறுகிறார் வள்ளுவச் சான்றோர். "அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்" என்பது வள்ளுவ நெற்றியின் உயர் தனிச் செம்மையை எடுத்துக் காட்டும் நுண் குறளாகும்! பகைவனுக்கும் தீமை செய்யாமை உயர்ந்த நெறியாகும். “ஒருவன் உனக்குத் தீங்கு இழைத்தால் இவ்விதம் நினைத்துக் கொள் நானும் எத்தனையோ தவறுகள் செய்கிறேன், மற்றவர்களைப் போல் நானும் ஒரு மனிதன்: சில தவறுகளைச் செய்யாவிடினும் அவற்றைச் செய்வதற்குரிய அவா இருக்கவே செய்கின்றது. அவற்றைச் செய்யாதிருப்பதற்கும், கோழைத் தனமோ? உலகத்தாரின் மதிப்பை இழக்கக் கூடாது என்ற எண்ணமோ? அல்லது இவை போன்ற சுயநல நோக்கங்களோ இனவ தாம் காரணங்கள் ஆகும்! தீங்கு இழைப்பவனிடமும் அன்பு செய்தல் உன் கடமை. உன் உறவினன் மனம் தவறு செய்வதற்குக் காரணம் அறியாமை, மனம் ஒவ்வாமல் தான் தவறு செய்கிறான். தவிர உனக்குத் தங்கும் நேரிடவில்லை, உன் ஆன்மாவிற்கும் அவன் செயலினால் ஒரு கேடும் நேரிடவில்லை. நீ உன் குணம் மாறினால் அன்றி வேறு ஒரு துன்பமும் அடையவில்லை, இவற்றை மனத்தில் வைத்தா யானால் "தீங்கு செய்தவனிடம் அன்பு காட்டுதல் எளிதாகும்" என்னும் மார்க்சு ஒளரேலியசு அவர்களின் அறிவுரை "தீய செறுவார்க்கும் செய்யா விடல் என்னும் இக்குறள் நெறியை நடைமுறைப் படுத்த நல்லவழி காட்டியாகும், "பகைவனுக்கு அருள்வாய் - நன்னெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்! தின்னவரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய் = நன்னெஞ்சே!" என்னும் பாரதியாரின் பாடல் வரிகளும் இக்குறட் கருத்தைத் தன்னகத்தே கொண்டதாகும். தவறு செய்த கல்லூரி மாணவன் ஒருவனைக் கண்டித்தார் அக்கல்லூரி முதல்வர், அவன் ஆத்திரப்பட்டு அன்னாசி செருப்பால் அடித்தான்; அவர் ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார், அவனைப் பற்றியும் யாரிடமும் குறைகூறவில்லை. ஆனால் அவன் அவரைக் காணவே அஞ்சினான்; நாட்கள் உருண்டோடின. தேர்வு முடிந்தது, வெற்றியும் பெற்றான். தயங்கித் தயங்கிச் சான்றிதழ் வாங்க முதல்வர் அறைக்குச் சென்றான். முதல்வர் அவனை வாழ்த்தி நன்று" எனக் குறிப்பிட்டு நடத்தைச் சான்றிதழும் வழங்கினார். அவன் எண்ணிச் சென்றது அவர் நடத்தைச் சான்றில் "தீயவன்” எனக் குறிப்பிட்டு விடுவார் என்பதாகும். சான்றிதழில் நன்றைக் கண்டான்; நனி தாணினான், முதல்வரின் 'அறிவினுள் எல்லாம் தலயான அறிவை உணர்ந்தான். கண்ணீர் வடித்துக் காலில் வீழ்ந்து வணங்கினான் என்பது நடந்த நிகழ்ச்சி, தலையான அறிவாளர் தொகை பெருகட்டும்! "மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு" பிறர்க்குக் கேடு செய்ய எண்ணலாகாது; பிறர்க்குக் கெடுதல் தரும் செயலைச் செய்தவர், தாம் அறியாமல் செய்து விட்டேன், புரியாமல் செய்து விட்டேன், மறந்து போய்ச் செய்து விட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள் என வேண்டி உரியவர் பொறுத்துக் கொண்டாலும், செய்த கேட்டிற்குரிய தண்டனையைத் துய்த்தே ஆக வேண்டும்! கேடு எந்த வழியில், யார் மூலமாக எப்பொழுது வரும் என்றுதான் கூற முடியாதே தவிரக் கேடு வருவது உறுதி 1என்பதனால் திருவள்ளுவர் "அறம்" கருதும் என்கிறார். சீதை சிறை இருந்த அசோக வனத்தை நெருப்பட்டு அழித்த அனுமன் சயித்தத்தை உடைத்து வீசிய பொழுது நிகழ்ந்ததை, "வெள்ளியங்கிரியைப் பண்டு, வெந்தொழில் சாக்கன் வேரொடு துள்ளினன், என்னக் கேட்டான்; அத்தொழிற்கு இழிவு தோன்று புள்ளி மாமேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல வள்ளுகிர்த் தடக்கை. தன்னால் மண்நின்றும், வாங்கி, அண்ணல் விட்டான், இலங்கை தன்யோன்: விண்ணுற விரிந்த பாடம் பட்டன, பொடிகள் ஆன, பகுத்தன பாங்கு நின்ற சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும் கெட்டனார் வீரர், அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் என்னும் கம்பன் கவிதை இக்குறளுக்கு நல்ல விளக்கமாய் அமைந்துள்ளது. தீய செயல்களை வசதி படைத்தவர் செய்தாலும் குற்றம் தான், அவர்களிடமோ அவர்கள் தேவைக்கு மேல் பொருள் பெருகி இருக்கிறது எனினும் மேலும் ஆசைக்கு ஆட்பட்டுக் குறுக்கு வழியில், தகுதி இல்லாத செயலில் ஈடுபட்டு, அதற்குத் தடையாய் இருப்பவர்களில் யார் யாரை எந்தெந்த வழிகளில் சரிக்கட்ட இயலுமோ அப்படி எல்லாம் சரிக்கட்டி, அதற்கு இசைந்து வாராதவர்களை வீழ்த்திப் பொருள் தேடும் தீயவர்கள் புரிவது குற்றம் என்பது சரிதான். ஆனால் சோற்றுக்கும் வழி இன்றி வறுமையில் வாடுகிறான், தன் அப்போதைய வாட்டத்தைப் போக்கிக் கொள்ளப் பக்கத்து வீட்டில் ஒருபடி அரிசியைத் திருடி விட்டான் அது என்ன குற்றமா' வயிற்றுப் பாட்டிற்குத் திருடியது தீவினையா" எனக் திருவள்ளுவரிடம் வினவி இருக்கிறார்கள்! அதற்கு விடையாகக் கூறியது தான், "இல்லென்று தீயவை செய்யற்க; செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து" 205 என்னும் குறள். "இலம்என்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற புள்மையில் காட்சியவர்" என வெஃகானம் அதிகாரத்தில் கூறியுள்ளார். 'ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொண்ட குற்றமற்ற அறிவுடையார் தாம் ஒன்றும் இல்லாதவராக இருக்கிறோம் என்று எண்ணிக் கூட பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார், "இலளென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்" 1040 என்னும் உழவு அதிகாரக் குறள் "யாம் எதுவும் இல்லேம்" என் சோர்ந்து கிடப்பாரைக் கண்டு நிலம் என்னும் நன்மகள் சிரிப்பாள்" எனக் கூறுவதையும் உடன் சேர்த்து எண்ணிப்பார்க்க வேண்டும்! இல்லாமையை இல்லாமல் ஆக்சு நல்லா தொழில்களை நேர்மையுடன் செய்து பொருள் ஈட்டிப் போக்கிக் கொள்ள முயல வேண்டும், நாம் செய்கிற எந்தச் செய்தாலும் எவர்க்கும் துன்பமோ, இடைஞ்சலோ ஏற்படக் கூடாது. நாம் செயல்படும் முறை குற்றமற்றதாக இருக்கவேண்டும், முறையாக உழைத்தும் உரிய பயன் கிட்டவில்லை, புயல் நிலநடுக்கம் போன்ற இயற்கை அழிவு ஏற்படுத்தி விட்டது. உழைக்க இயலாத உடற்குறை, இயங்க இயலா முதுமை நோய் முதலியவற்றிற்கு ஆட்பட்ட போதும் முறைப்பாக, இருப்பவர்கள் துன+33 யை நாடிப் பெற்றுக் கொள் என லாம்! தீய விளைவை உண்டாக்கும் முறையற்ற எந்தத் தீய வி கனயையும் இல்லாமையைப் போக்கிக் கொள்ள என எண்ணிச் செய்தாலும் இல்லாமை மேலும் வளருமே) தவிர்த்து இல்லாமை அகலாது, குறையாது என்பதை வரியோர் திட்டமாய் நம்புதல் வேண்டும்! "வறுமையையும் தாழ்வையும் மனிதர்கள் வெறுக்கின்றனர், என்பதற்காகத் தீமைகளின் துணை கொண்டு அவற்றைப் போக்கிக் கொள்ள எண்ணாதே!" என்று கன்பூசியசின் வேண்டுகோளும் குறள்வழிச் சிந்தனையேயாகும். "ஆடிக்கொண்ட எல்லாம் அழப்போம்! இழப்பினும் பிற்பயக்கும் நற்பா வேலை" என்பது வினைத் தூய்மை அதிகாரக் குறள். "பிறர் அழுமாறு அடித்துப் பிடுங்கி செல்வமெல்லாம், தாமும் அழுமாறு போய்விடும்! நல்ல வழியில் வரும் செல்வம் முதற்கண் இழப்பது போல் தோன்றினாலும் பின்னே பெருகி வளரும்! "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்" 320 என்பது இன்னா செய்யாமை அதிகாரக் குறளாகும். “துன்பம் எல்லாம் துன்பம் செய்தாரையே தொடர்ந்து வருவனவாம். ஆதலால், தமக்குத் துன்பமில்வாமையை விரும்புபவர் பிறர்க்குத் துன்பம் செய்யார்." என்னும் குறள்களின் நோக்கும் போக்கும் அமைந்த குறட்பாதான், "திப்பால் தான்பிறன்கண் செய்யற்க, நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்" என்பது. துன்பங்களால் தன்னை வருத்திக் கொள்ள விரும்பாதவன், தீமை தருவன வற்றைப் பிறர்க்குச் செய்யக் தன்னைத் துன்பம் அணுகக் கூடாது எனக்கருதுபவன் எவர்க்கும் துன்பம் செய்யற்க!' பிறரைத் துன்புறுத்துவோன் துன்பங்களிலிருந்து தப்பு இயலாது. "எனைப்பகை உற்றாகும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்" நாத்தனகய பகை கடையாரும் அதனால் வரும் துன்பத்திலிருந்து ஒரு வழியில் தப்புவர்; தீவினையாகிய பகை அவ்வாறு தன்னை உடையாரைத் துன்பத்தினின்று தப்பவிடுதdi இன்றி, அவரை நீங்காமல், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்று வருத்தும்! எனப் பெரிய பன்சரில் இருந்தும் தப்பிக்கலாம். ஆனால் தீவினை ஆகிய பகையோ விடாது வருத்தும். "வீயாது பின்சென்று அடும்” என்பது அழுத்தமான கூற்று. "வினைகளின் விளைவையாவர் விளக்குவர் என்று நின்றான். வெல்லுதற் கரிதால் வினையின் பயன்" என்னும் யசோதர காவியப் பாடலும், "தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ – நன்னெஞ்சே! என்னும் பாரதியின் பாடல் வரிகளும், திருக்குறளின் பிழிவுகளேயாகும்! 'பிறர் செய்யும் தீமைகளரிலிருந்து தப்பிவிட முடியும். ஆனால், நீயே செய்து கொள்ளும் தீமைகளிலிருந்து தப்ப முடியாது" என்பது கன்பூசியசின் கருத்தாகும், "மனிதன் தீய செயல்களைப் புரிந்து விட்டு அவற்றின் விளைவுகளில் இருந்து ஒருக் காலும் தப்பித்துக் கொள்ள இயலாது! ஆழ்கடலில் மூழ்கினாலும், மலை உச்சியில் ஏறி நின்றாலும், இருண்ட குகைகளுக்குள் ஒளிந்தாலும் தீவினைப் பயன் அவனை விட்டுவிடாது. இந்த உலகில் அவனுக்கு எங்குமே புகல் கிடையாது" என்னும் புத்தரின் பொன் மொழியும் இக்குறள் வழியதே ஆகும்! "தீயவை செய்தார் கெடுதல், நிழல்தன்னை வீயாது அடிஉறைந்து அற்று" தீவினைகளைச் செய்தவர்கள் கெடுதல் எத்தன்மைத்து எனின், ஒருவன் நிழல் அவன் எங்குச் சென்றாலும் அவனை விட்டு நீங்காது உடன் சென்று எப்போதும் அவன் அடிக்கண்ணே தங்கி இருப்பது போன்றதாகும்! உருவத்திலிருந்து அதன் நிழ 531லப் பிரிக்க முடியாது. அதுபோல் செய்த தீவினன விருந்து அதன் பயனைப் பிரிக்க முடியாது, யாருக்குத் தீமை செய்கிறார்களோ அவர்கள் அத்திப்பால் துன்புறுகிறார்களோ? இல்லையோ? தீவினை செய்தார் துன்புறுவது உறுதியாகும்! | தீவினை ஒருவனை நிழல் போல் விடாது நின்று வாட்டும், "தீய செயல் தன்னுடைய இச்சை தணட்டும் புதை குழியைத் தானே தேடிக் கொள்கிறது" என்னும் பைரன் கருத்தும் எண்ணத் தக்கது. "நின்னின் விடா நிழல் போல் திரிதருவாய்" எனக் கலித்தொகையும் *(செல்வுழிப் செல்வுழி மெய்நிழல் போல" என அகநானூறும் நிழல் இடவமையைப் பயன்படுத்தி யுள்ளமையை அறிய முடிகிறது, "செற்று ஒருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" என்னும் சுந்தரர் வாக்கும் வள்ளுவர் வாக்கின் வழியதாகும்! தீவினை செய்யாமல் தவிர்ப்பதே எவர்க்கும் நல்லது, ஒவ்வொருவரும் தாம் அழகாக இருக்க வேண்டும்! நாம் உடுத்தும் உடைகள் நம்மை பற்றிய உயர் மதிப்பை உருவாக்க வேண்டும்! எல்போ வாய்ப்புகளும் பொருந்திய வீட்டில் குடியிருக்க வேண்டும் வளத்தோடு வாழவேண்டும் "நலத்தோடு வாழ வேண்டும்! நளர் உலகம் எல்லாம் மதித்துப் போற்ற வேண்டும்! யாரும் நம்மைக் குறை சொல்லக் கூடாது, யாரும் நம் செயலில் குறுக்கிடக் கூடாது! யாரும் நமக்குத் தொல்லை தரக் கூடாது! நோய் நொடியின்றி வாழ வேண்டும்! கவலையோ, துன்பமோ நம்மை அண்டக் கூடாது! எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் துன்பத்தின் நிழல் கூட நம்மீது படலாகாது! எந்நாளும் இன்பத்தில் திளைக்க வேண்டும் என விரும்புகிறோம்! அப்படி நீங்கள் துன்பமீன் எந்நாளும் இன்புற்று வாழ் விரும்புவது மனப்பூர்வமான விருப்பமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் ஒன்றே ஒன்றில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்! அது என்ன? எள்ளளவும் தீவினைசெய்யும் எண்ணம் நம்மை நெருங்க விடாமல் கண்காணித்துக் கொண்டாலே போதும் என்பது வள்ளுவர் கருத்து? ஆகவே, "தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்" என்கிறார் தீவினைப்பால் துன்னாத வள்ளுவர். தீவினையை நெருங்கியவன் தான் வீழத் தானே குழி தோண்டியவனுக்கு ஒப்பாவான்! தீவினையை நெருங்க விடாதே! நீங்கா நலம் பெறுவாய்! ஆகவே தன்னலம் கருதி ஆயினும் தீவினை செய்யாதே என்பது வள்ளுவரின் வழி காட்டல்! | சுக்கிரீவனுக்கு இராமபிரான் கூறிய அறிவுரை "சிறியர் என்று இகழ்ந்து நோவுசெய்வன செய்யப் பற்று இந் நெறி இகழ்ந்து, யான் ஓர்தீமை இழைத்தலால் உணார்ச்சி நீண்டு குறியது.ஆம் மேனிஆய களியால், குவவுத் தோளாய் வெறியன எய்தி, நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்” என்னும் ரொமாயணப் பாடல் வழி பராமன் 'தான் பெருந்துன்பச் சுடரின் வீழ்ந்தமைக்குக் காரணம் மனபையில் கூனிக்குத் தான் செய்த சிறுத்தவரே" என்றும் தன்னிலை விளக்கம் இக்குறளுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாய் அமைந்துள்ளது. "அருங்கேடன் என்பது அறிக, பாருங்கோடித் தீயினை செய்யார் நான்” ஒருவன் அறநெறி தவறிச்சென்று தீயவினைகளைச் செய்யாது விலக்கிவிடுவான். எனின், கேட்டிற்கு ஆளாக மாட்டான், அவன் "கேடு அற்றவன்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். தொடு விதிக் கொடுமை செய்யாதவர் கேடி பில்காதவன் ஓ! ணத் தெளிக! "நீ னி னன்ன செய்யான் எனின்' என்னும் தொடரில் உள்ள "செய்யான்" என்பதைச் செய்வான்" எஈப் பாடம் கொண்ட வஉசி, "ஒருவன் அறநெறியை விட்டு விலகிச் சென்று தீவினைகளைச் செய்வான் என்றால் அவன் நீக்குவதற்கு அரிய கேட்னட உடடையவன் என்று அறியாச் சுடவன்" என்றும் உரைக்கிறார். தீவினை செய்வா எஃ நீங்காத கேடு அடைவான். தீவினை ஒரு செருக்கு தீபிகளை தீயினும் கொடியதும் பாசுவர்க்கும் தீமை செய்யாமை சிறந்த அறிவு! பிறரைக் கொடுக்க எண்ணாதே! தீபிகாகா இருப்பதையும் அழிக்கும் பிறர்க்குத் தீயாடா செய்யாதே! விசாசாப் பகாது. நீங்காப் புகாக்க! தீமை செய்ய எண்ணாதே! நல்விசாராயே செய்! துன்பம் இன்றி வாழ்வாய்! கேடின்றி வாழ்வாய்! எந்நாளும் இன்பமே துன்பம் இனப். 22. ஒப்புரவறிதல் திருவள்ளுவர், கால எல்லை தாண்டிய 5 கப் பொது நuைt நாடும் பண்பியல் அறிஞர், உசு அறிஞர்கள் எல்லாம் வியந்து போற்றுதற்குரிய சிந்தணைகளில் எல்லாம் உயர்ந்த சிந்தனை அவரின் ஒப்புரவுச் சிந்தனையாகும், செய்ந்நன்றி அறிதல் ITI பெரியாதெல் (44) காலம் அழதல் (4) இடனறிதல் 150 குறிப்பறிதல் ( 71! அவை அறிதல் 17 என உருவாக்கப்பட்ட அதிகாரங்களைப் போன்று உருவாக்கப்பட்ட அதிகாரம் தான் 'ஒப்புரவு அறிதல் அதிகாரமாகும் 'சிறப்புடிக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருவள்ளுவரின் திருமொழி. த ன் னை உயர் பிறப்பினராய்க் கருதிக் கொண்டிருப்பவரின் ஆ ஈஈன வத்னதயும், தன்னனத் தாழ்ந்த பிறப்டரிபுளாரார் கருதுவோர் தாழ்வு மனப்பான்மையையும் தக்க இத்ெது பிறப்பால் உயர்ந்தாரும் எவரும் இல்லை அது போல் தாழ்ந்தாரும் எவரும் இல்லை என்பதை எல்லாரும் முதலில் அறிந்து கொள்ள அறிவுறுத்துகிறது. எல்லாரும் தாய் வயிற்றிலிருந்து பிறந்தவர்களே! தந்தை வெயசிற்றிலிருந்து பிறந்தார் எவரும் நளரோ? அது போல் தான் இவற்றில் இருந்து பிறக்காமல், தலையிலிருந்து கைகளிலிருந்து, கழுத்திலிருந்து, கால்களில் இருந்து பிறந்தவர் உண்டோ ? ஆகவே ஒவ்வோர் உயிரும் கருவானதும் உருவானதும் பிறந்ததும் தாய் வயிற்றிலிருந்துதான் இவ்வுண்மையை அனைவரும் அறிந்தும் தெரிந்து இருந்தும், பிறப்பில் உயர்வு தாழ்வு பாராட்டுவர் 5FT Fங், இது அறியாமையின் பாற்பட்டதன்று. இது ஒரு கடைந்தெடுத்த ஓர் ஏமாற்று என்பதைத் தெளிவுபடுத்தும் கடமை திருவள்ளுவருக்கு ஏற்பட்டதால் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை எல்லாரும் உணர உரைத்தார். பிறப்பால் ஒரு நிலையினர் என்னும் வளர்க்கப்படும் நிலையிலும் வேறுபாடு காணப்படுகிறது. உடல் வளர்ச்சி, தோற்றம் நிறம் இவற்றாலும் ஒன்று போல் அமைவதில்லை. கற்கும் கல்வியிலும் வேறுபாடு உண்டு: அறிவுத் திறன், மூளைக் கூர்மை இவையும் ஒன்றுபோல் அமைவதில்லை, தொழிலில் உயர்வு தாழ்வு சுருத வேண்டியதில்லை எனினும் தொழிலுக்கு ஏற்ற தகுதி தேவைப்படுகிறது. தன தியத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு! தனித்தனியே செய்கிற தொழிலில் பெறும் வருவாயினும் ஏற்றதாழ்வு மிகுதியும் உண்டு! இவ்வேறுபாடு மனத்தகத்திலும் வேறுபாட்டை உண்டாக்கி விடல் கூடாது. உலக இயக்கம் செவ்வையாய் இயங்க ஒவ்வொருவரும் தத்தம் சுடமையைச் செவ்வனே செய்தல் வேண்டும்! பணியை நாம் தனித்தனியே செய்தாலும், பலர் இனணந்து கூட்டாகச் செய்தாலும் அதனால் கிடைக்கும் வருவாயைத் தேடியவரே துய்க்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. முயன்று உழைப்பதும் மிகுபொருள் தேடுவதும் உரிமையாகும், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள்எல்லாம் தலை” என்பதைத் தலைமேல் கொண்டு பொதுமையாய்த் துய்த்துப் பிறர் நலம் பேணும் பொதுநலத்தராப்ப் பேருள்ளத்தவராய் வாழ்வதில் இன்பம் காண வேண்டும், ஒவ்வொருவரும் அறிவாலும் ஆற்றலாலும், இயல்பாலும் வெறுபட்டவர்கள் என்பதோடு வாய்ப்பும் சூழலும் எல்லார்க்கும் ஒரு படித்தாய் அமைவதில்லை, அறிவு, ஆற்றல், பண்புக் குறையுடையாரையும், நல்வாய்ப்புக் கிட்டாதவர் களையும் வாழ்க்கையில் சோர்வா, தளர்ச்சியோ வாட்டமோ, வறுமையோ, அடைந்து துன்பத்தில் சிக்காமல் இருந்து காத்தால் தான் வளர்நிலை உற்றோர் இன்புற இயலும்! நாட்டில் சமன்மை நிலவும், ஒற்றுமையும் உறவும் நட்பும் வலிமை பெறும். "வாழ்ந்தால் முப்பது கோடி முழுமையும் வாழ்வோம்! வீழ்ந்தால் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்! "ஒன்றுபட்டால் உண்டிங்கு வாழ்வு - இங்கு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு" என்னும் பாரதியின் வாய்மொழி வெறும் வாய்மொழியாக இல்லாமல் வாய்Eை (மொழியாகும்! அப்பொழுது தான் உலக இயக்கம் முறையான ஒழுங்கில் இயங்கும்! எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம்! எல்லாரும் ஓர் நிறை! எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது நடைமுறை உணர்வாகும்! மேல் படிக்குச் சென்றோர் தமக்குப் பின்னே வருபவர் மேலே ஏறமுடியாது திண்டாடுகிறார் என்றால் கையைப் பிடித்து மேலே தூக்கி விட வேண்டியது அவர் கடமை! அதற்கும் பின்னே வருபவர் வலியவராயின் தனக்கு முன்னே நின்று கொண்டு அதற்கு மேலே ஏற முடியாது திணறுபவர் காலைப் பிடித்து மேலே ஏந்தி விட வேண்டியது அவர் கடமை, இவ்வாறு கையைப் பிடித்தும், காலைத் தாங்கியும் விடுபவர்களே உலகம் போற்றும் பொது நலத்தார். அவரே ஒப்புரவாளர். இவர்கள் தம்மைப் போல் பிறரையும் நேசிப்பவர்கள், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று மட்டும் எண்ணுபவர், அல்லர் அதனினும் மேலாக "யாம் பெறாத இன்பத்தையும் இவ்வுலகம் பெற்று மகிழட்டும்" என்று எண்ணி நிறைவு கொள்வதுடன் 'யாம் துன்பம் உற்றாலும் இவ்வையகம் துன்புறாமல் இன்புற்று வாழ வேண்டும்" என்றே கருதிக் கருதி உழைப்பவர்கள், இவர்களே ஒப்புரவாளர், இவர்கள் “யாதும் தனரே' யாவரும் கேளிர்' என்னும் பண்பாட்டு உரிமை உறவை வலுப்படுத்துபவர்கள், எங்கும் பல்குழுவும் பார் செய்யும் உட்பகையையும் தோன்றவிடாது. அனைவரையும் அசுத்து சப்பாம் அன்பால் இணைத்து கடல்சுத்தை ஒரு குடும்பம் ஆக்குபவர்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது அவர்கள் தேர்ந்து தெளிந்த முடிபாசுவின். தாம் சொல்வதைத் தான் மற்றவரெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ணார், நல்லதை யார் கூரினாலும் மகிழ்வுடனும் பெருந்தன்மையுடனும் ஏற்றுப் பாராட்டுவார். எதிலும் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாட்டார், தனி மரியாதையையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அனைவரிடமும் ஒத்துப்போவார் எவரையும் பிரியார்: அனனவரையும் இணைப்பார்; அவர்கள் ஆற்றின் அப்பாவையும் இப்பாவையும் மயுடனும் ஏகார் கூறினான் என்று ஒரு இணைத்து வைக்கும் பாலம் போன்றவர்; தொடர் வண்டிப்பாதையும், உந்துகள் செல்லும் மேடுபள்ள மற்ற சமன் சாலையும் போன்றவர்! பண்படுத்தப்பட்ட விளை நிலமும் போன்றவர். உலக நலத்திற்கு ஏற்றதையே எண் 337பவர், பேசுபவர், செயல்படுபவர்; அவர்கள் கைகாட்டி மட்டுமல்லர்: நல்லவழி காட்டி பம் வர கூட்டியும் ஆவர். யார் யாருக்கு எது எது தேவையோ, அத்தேவை அறிந்து உதவுவார்; எவரும் தன்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்றும் எண்ணார்: உதவி பெற்றவரின் நன்றியையும் எதிர்பாரார். "என்சுடன் பணி செய்து கிடப்பதே" எனத் தொண்டே குறியாய்க் கொண்டு வாழும் பண்பியல் சான்றோர்களே ஒப்புரவாளர்கள். வசதி வாய்ப்பு உடையவர்களே நீங்கள் எப்பொழுதும் "சுற்றத்தால் சுற்றப்பட வாழுங்கள்! உரளினர்களை நதரித் தள்ளாதீர்கள்! யாரும் உங்களை வேண்டாதவர்களாக! பகைவர்களாக! அயலவராகக் கருதி ஒதுங்க இடந்தந்து விடாதீர்கள்! இல்லாதவர்கள் உங்களை வாழ்த்துமாறு நடந்து கொள்ளுங்கள்! பொறாமைப்பட வாய்ப்புத் தந்து விடாதீர்கள்! எனக் கூறிச் செல்வர்களை நெறிப்படுத்தி வரும் செம்மணம் படைத்தவர்கள் ஒப்புரனள அறிந்தவர்கள்! | "த எனக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று பார்த்து உலகம் உன்னை மதிப்பதில்லை. நீ உலகுக்கு என்ன கொடுக்கிறாய்? நீ உலகில் என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தே உலகம் உன்னை மதிக்கும்" என்னும் மெட்ரோ மோட்டாளின் கருத்தும் ஒப்புரவைப் போற்றுவதேயாகும், உரையாசிரியர்கள் ஒப்புரவிற்குத் தரும் விளக்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; வள்ளுவர், ஒப்புரவைக் "கைம்மாறு வேண்டாம் கடப்பாடு' என்றும், வேளாண்மை செய்தல்" என்றும், 'தத்தது அறிதல்' என்றும் 'நயனுடைமை" எனவும் குறிப்பிடுவது நமக்கு நல்லவழி காட்டும், அதனுடன் ஒப்புரவு அறிந்தவரை "ஒத்ததறிவான்' 'உலகவாம் பேரறிவாளன், 'நயனுடையான்" பெருந்தகையான்" "சுடனறி காட்சியவர்” எனக் காட்சிப் படுத்துவதுடன் அவர் 'நீர் நிறைந்த களருளி போன்றவரி' உள்=ர்ப் பழுத்த பயன் மரம் போன்றவர் *மருந்து ஆகித் தப்பாமரம்" போன்றவர் என்னும் ஒப்பீடு ஒப்புரவையும், ஒப்புரவாளரையும் நன்கு அறியச் செய்யும்! இவ்வுலகில் வாழும் கோடிக் கணக்கான ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிரினம் ஈறாக அனைத்து உயிர்களையும் 'பால் நினைந்தூட்டும் தாயாய் அமைந்து வளர்த்து வரும் இயற்கை அன்னையின், முதன்மையான அருள்மகவாய்ப் போற்றப்படுவது "வான் மழையே" ஆகும், மழை பயிர் முதல் அனைத்து உயிர்களையும் வாழவைக்கும் தெய்வமும் ஆகும். மழையே மக்களின் உடலை உயிரைக் காப்பதுடன் ஒழுக்கத்தையும் காத்து வருகிறது. உழைப்பை ஊக்கி வருவதும் மழையே! தவத்தையும் தானத்தையும் செய்ய வைப்பதும்! மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தித் திருவிழாக் கொண்டாடி இன்புற வைப்பதும்! இறை வழிபாடும் இடையறவு படாமல் நிகழவைப்பதும் மழையேயாகும்! இத்தனை பயன்களை அடுக்கடுக்காய் இம்மண்ணுலகிற்குச் செய்துவரும் 'ம் எழ" இ ள்வு aL'சுத்தவரிடமிருந்து மாற்றாக ஏதாவது ஒருபயனை எதிர்பார்த்துப் பெய்கிறதா? இல்லை. இவ்வுலகில் வாழ்வாங்கு வாழும் பெருமக்கள் தாம் நலத்தோடும் வளத்தோடும் சீரோடும் சிறப்போடும் மட்டும் வாழ்வதில் நிறைவு காண்பவர்கள் அல்லர். தம்மைப் போல் வாழ முயல்பவர்களுக்கு வழி விடுவார்கள், வழி காட்டுவார்கள்! வழி தவறிப் போகிறவர்களை நெறிப்படுத்துவார்கள். பிறரை வாழ வைக்கத் தாம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் மனம் உவந்து, உரிமையுடன், தம் வாழ்க்கைக் குறிக்கோளாகவும் இன்றியமையாக் கடமையாகவும் கருதிச் செய்வர். "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" என்னும் வள்ளுவரின் வாய்ம் மொழிக்கு ஏற்ப, எத்தனையோ இயற்கை, செயற்கையின் மோதல்களாலும் இவ்வுலகம் தாக்குண்ட போதும் அழியாமல் நிலைபெறத் தாங்கிக் கொண்டிருக்கும் பெருமக்களாம் ஒப்புரவாளர்களும் யாரிடமிருந்தும் எந்தவிதமான பாராட்டையும் பயனையும் எதிர்பார்க்க மாட்டார்கள்! இவர்கள் பயன் விளைவிப்பதிலும் மழை போன்ற மாண்புடைவர்கள்! மறுபயனாகிய "கைம்மாறு" சுருகாமையிலும் மழை போன்ற புகழும் வேண்டாப் புகழாளர்கள் என்பதை நமக்கு அறிமுகம் செய்விக்கும் குறளே! "கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றும் கொல்லோ உலகு" கைம்மாறு கருதாமல் பிறர்க்கு உதவி செய்து வாழ்வதே சுடமையாகக் கொண்டொழுகும் ஒப்புரவாளர் மழை போன்றவர் அவர்! மழையன்ன ஒப்புரவாளர்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாட்டில் வளமும் நலமும் சீரும் சிறப்பும் பெருகும்! மழைன்னார் வாழ்க! "வான்செய்யும் நன்றிக்கு 1531 வயகத்தோர் செய்யும் கைம்மாறு உண்டேயோ" என இக்குறளுக்குத் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சான்று வழங்குகிறார். பிறருடைய உதவியைப் பெறாமல் யாராலும் இவ்வுலகத்தில் வாழ இயலாது. எழுதப்படிக்கத் தெரியாதவர்க்கு ஒரு மடல் எழுதித் தருவதும் உதவிதான் வழி தெரியாதவர்கட்கு வழிகாட்டுவதும் உதவிதான், வறியவர்க்கு உண வு உடை தந்து உதவுவதும் உதவிதான்; கல்லாதவர்கட்குக் கற்றுத் தருதலும் உதவிதான் கல்விக் கூடங்களில் சேர்ந்து பயில வழிகாட்டுவதும் வேண்டிய பணம் வழங்கல் பொருள் வழங்கல்: தொழில் புரிய வழி காட்டல்; மருத்துவ உதவி, துன்பக்கால உதவி, நேர்ச்சியில் உதவி முதல் எத்தனை எத்தனையோ உதவிகளை எதிர்பார்ப்பவர்களும் நம் அண்மையில் சுட இருக்கலாம்! அவர்களில் யார் யாருக்கு என்ன உதவி, எந்த வடிவத்தில் எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது செய்யும் அது பிறர்க்கும் செய்யும் உதவியன்று, தமக்குத் தாமே செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாக் கடமை என்ற உணர்வுடையவராய் உவந்து உதவி புரிவதுடன், உதவியைப் பெற்றுக் கொண்டவரிட மிருந்து எந்தக் காலத்தும் எந்த மறு பயனையும் எதிர்பாராமல் வாழும் உயர்மனத்தவரே ஒப்புரவாளர். சடையப்ப வள்ளலின் வீடு 'அடையாக் கதவுகளை உடையது' எனப் போற்றப்பட்டது. யாருக்கு எவ்வளவு நெல் தேவைப்படுகிறதோ அவ்வளவு நெல்லையும் உரிமையுடன் போய் எடுத்துவரலாh! சடையப்பர் அப்படி ஓர் ஒப்புரவாளர். முதல் உலகப் போரின் விளைவால் உருசிய நாட்டு மக்கள் பஞ்சத்திற்கு ஆட்பட்டு பட்டினியால் வாடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட சேலம் விசயராகவாச்சாரியார் இரண்டு கப்பல் பர்மா அரிசியை உருசிய நாட்டிற்கு அனுப்பி வைத்த பயன்கருதா ஒப்புரவாளர்களில் ஒருவர். இன்னோரன்ன ஒப்புரவாளர்கள் எண்ணற்றோர் வாழ்ந்து இவ்வுலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆள்வினையுடைமை அதிகாரத்தில் "தாளாண்மை என்னும் தகைமையாக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு" 613 என்னும் குறளில் இடைவிடாத முயற்சி என்னும் உயர்தன்மையோடு உழைப்பவர்களே பிறர்க்கு உதவுதல் என்னும் பெருந்தன்மையை அடைய முடியும் என்கிறார். முயற்சி உடையவரே உதவி புரிந்து வாழ இயலும் என்பது கருத்து!" இங்கே, ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்புடைய தொழில் களில் ஈடுபட்டு தனக்கமுடன் முயன்று உழைத்துப் பொருளைத் தேடவேண்டும்! பொருள் தேடத் தம் முழுத் திறனையும் பயன்படுத்திப் பாடுபட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அவ்வாறு தேடிய பொருளைத் தாமே துய்க்க வேண்டும் என எண்ணாது, பார் யாருக்கு எவ்வளவு தேனி எந்த வடிவத்தில் தேவைப்படுகிறதோ அப்படியெல்லாம் உதவி செய்து அச்செல்வத்தைப் பயன் உடைய செல்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்! "சிறந்த செல்வம் வைத்திருப்போர் சிறந்த அறங்காவலர்களாக இருக்க வேண்டும்.! தமக்குக் கிடைத்திருக்கும் செல்வத்தைச் சமூகத்திற்குச் சரியான வழியில் செலவு செய்வது அவர் கடமை" என்றே அறிஞர் அண்ரூ கார்னேசு கூறுகிறார், "தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர். என்ற புறநானூற்று மொழியும் தந்நலத்துடன் உழைத்துப் பொதுநலன் கருதிப் பயன்படுத்த வேண்டும் என்றே வலியுறுத்துகிறது. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" என்கிறார் வள்ளுவர். பொருளை முயன்று தேடுவது தச்சுவர்க்கு உதவி செய்தவதற்காகவே எனப் பொதுநல உணர்வுடைய ஒப்புரவானர் சுருதிச் செயல்படுவர். உதவியை வேளாண்மை என்னும் சொல்லால் உணர்த்திய திறம் எண்ணத்தக்கது. தக்கநிலத்தில் நல்ல விதையை விதைப்பது போல் பயன்தரும் உதவி இஃதாகும்! ஒவ்வொரு துறையிலும் மேனிலை எய்தியவர்கள் எல்லாம் கீழ்நிலையில் இருப்பவரை உயர்த்தி முன்னேறச் செய்ய முயன்று தரைப்போர் ஒப்புரவாளர் எனப்படுவர். இவர் போர் ஒழுகும் அப்புரவாண்மையால் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒரு நிலையா ஆவர். அந்நிலையே நன்னிலை ஆகும்! அங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர் இருப்போர் இல்லாதவர்; வெறியவர் செல்வர் அடங்குபவர், அடக்குபவர் என்ற வேறுபட்ட இருநிலைக்கு வழியே இல்லை, அங்கே உதையப்பரும் இரார், ஓடப்பரும் இரார். எல்லாரும் ஓப்பப்பர் ஆவர். ஒப்பப்பரானால் போட்டியோ பொறாமையோ: சூழ்ச்சியோ, தந்நலமோ; வெட்டோ, குத்தோ: கொலையோ; கொள்ளையோ இல் 3 பெ. எவரும் எவரையும் கண்டு அஞ்சவுமாட்டார்; வெறுத்து விலக்கவும் மாட்டார்; ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிவர்; சாவா மருந்தையும் விருந்தோடே உண்பர்; பண வுடைமையையும் இன்சொல்லையுமே அணிகலனாகக் கொள்வர். எந்நன்றியையும் எவரும் மறவார்; நெஞ்சத்துக் கோடா நடுநிலை போற்றுவர்; அடக்கத்தால் ஆக்கம் பெறுவர்; ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் பேணவர் ஒவ்வொருவரும் இல்லாததைப் பெறுவதுடன் அவரவரிடம் இருப்பதைத் தேவையுள்ளோர் எடுத்துக் கொள்ளவும் உடன்படுவர் எனும் நன்னிலையை உருவாக்குவது ஒப்புரவு. நாம் இப்பொழுது வாழும் உலகத்தை விட மிக மேலான உலகத்தைப் மிகப் புதுமையாய்ப் படைத்தாலும் அவ்வுலகத்திலும் ஒப்புரவைக் காட்டிலும் உயர்ந்த நெறி ஒன்றை உருவாக்கி விட இயலாது. ஒப்புரவே எவ்வுலகும் போற்றும் உயர்நெறி என்பதை உணர்ந்த திருவள்ளுவர் "புத்தேள் கடலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற" என உரைக்கிறார். நடுநிலைப் பள்ளி ஆசிரியராக ஒருவர் பணி புரிகிறார்; உயர்ந்த படிப்பாளி: சிறந்த அறிவாளி, மாணவர் உளங்கொள்ளும் முறையில் கற்பிக்கும் வல் லார், மேனிலை வகுப்பு மாணவர்களும் அவரிடம் தமக்கு ஏற்படும் ஐயங்களைத் தெரிவித்து விளக்கம் பெறுவார்கள். அத்தகைய திறமையான ஆசிரியர் அவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆனாலும் அவரை மேனியை ஆசிரியர் தகுதி உடையவராக அனைவரும் மதிப்பர். இன்னொரு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இவர் படிப்பும் அறிவுக் கூர்மையும் கற்பிக்கும் திறனும் நிறைவு உடையதாய் இல்னல, சில பாடங்களை நடத்தத் திண்டாடுகிறார். இவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆயினும் தொடக்கப் பள்ளிக்குக் கூடத் தகுதி இல்லாதவர் எனப் பலரால் மதிப்பிடப் படுகிறார். அதுபோல் வாழ்வியல் செம்மை உடையோர் உயர் நிலையில் வைத்து மதிக்கப்படுவதும் அஃதிலார் கீழ்நிலையில் வைத்து இகழப்படுவதும் உலக இயற்கை, அந்த அடிப்படையில் "கையயத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என இல்வாழ்க்கையில் உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் உயர்நிலையில் போற்றப்படும் தெய்வங்களில் ஒரு தெய்வமாக மதிக்கப்படுவான் எனவும், "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்” என இறை மாட்சியில் 'நடுவு நிலையோடு தன் நாட்டை ஆட்சிபுரிவோன் இறைவனாகப் போற்றப்படுவான்' என உயர்நிலைபாயில் 35வத்துப் போற்றும் திருவள்ளுவர், "நலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்” எனப் புல்வா' வாண்மை ல், "உயர்ந்தோர் உண் மைப் பொருளாகக் கூறுவனவற்றைப் பொய்ப்பொருள் என வாதிடும் மனிதன் பேயனாகக் கருதப்படுவான் என்றுரைத்த போக்கில் வரைந்த குறள் தான், "ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்” என்னும் குறளாகும், பொது நல்ல நோக்கோடு எவன் ஒப்புரவாளனாக வாழ்கிறானோ அவனே உயிர் வாழ்பவன், பிறர் எல்லாம் இறந்தாருள் வைத்து எண்ணத் தக்கவரே ஆவர் என்பது வள்ளுவர் கணிப்பு. "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்னும் தொடர் இவ்வதிகாரத்திற்கு மட்டும் அன்றி திருக்குறள் முழுமையின் உயர் நோக்கையும் உணர வைக்கும் தொடர். . ஒத்ததையே ஆராய்ந்து அறிதல் ஒருவகையான பார்வை, ஒவ்வாமையையே கண்டு உணர்தல் இன்னொரு வகைப் பார்வை: ஒத்தது அறிதல் உடன்பாட்டு நோக்கு ஒவ்வாமையையே அறிதல் எதிர்மறை நோக்கும் உடன்பாட்டு நோக்கு வாழ்வியல் நோக்கு ஒவ்வாமை நோக்கு வீழ்வியல் நோக்கு; ஒவ்வாமையையே கண்டு கண்டு எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளும் வீழ்வியல் நோக்கர்களைத் திருவள்ளுவர் வாழத் தகுதியற்ற வீணர், பயனற்றவர், நடரணர்வற்றவர், நார்ப்பற்றவர் எனக் கருதும் கருத்துடையவர் ஆகவே அவரைச் "செத்தாருள் ஒவக்கப்படும்' என்கிறார். இவர்கள் இடுகாட்டில் இடப்பட வேண்டியவர், 'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்" எது ஒத்தது? வள்ளுவரே அப்பூட்டைத் திறக்கிறார் சாங்கே? பண்புடைமையில் எப்படி? "உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு நின்றால் வெறுத்தக்க பண்புடுத்தல் ஒப்பதாம் ஒப்பு" மெய்வாய் கண், மூக்கு செவி எனது உடல் உறுப்புகள் ஒத்துக் காணப்படுவதால் ஒரு நிலையில் வைத்து எண்ணத் தக்க மக்கள் என்று சுட விட இயலாது. மனிதனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்புகளால் ஒத்து இருப்போரே உண்மையில் IIக்கள் எனக் கருதத் தச்சுவர்கள் என்கிறார் திருவள்ளுவர். ஆகவே ஒத்தது என்பது பண்பு ஒத்தது: ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள நல்ல பண்புகளில் பிறரிடமும் உள்ள நல்ல பண்புகளில் எவை எல்லாம் இணைகிறதோ, அவற்றை இணைத்துக் கொண்டே வருதல் வேண்டும். ஒவ்வாமையைத் துருவிக் கண்டு பிடித்து நண்பர்களை விலக்கிக் கொண்டே வருவதை விடுத்து, ஒத்த பண்பை மட்டும் கணக்கிட்டு உறவைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நாள் ஆக ஆக இருவரிடமும் உள்ள வேண்டாத பயனற்ற, தீமை தரும் ஒவ்வாமைகள் தானாகவே குறைந்து கொண்டே வந்து அழிந்து போகும். நூற்றுக்கு நூறு நம் பண்போடு பொருந்தியவர்களை மட்டுமே தேடிக் கண்டு நட்புக்கொள்ள வேண்டும். என நினைத்தால் எல்லாரும் தனிமையில் தான் வாழ வேண்டியது நேரிடும்! ஒவ்வாமையைக் காண முற்படும்போதுதான் சிக்கலும் சீரழிவும், வேறுபாடும் மாறுபாடும் வளர்ந்து அல்லல்படுத்தி அலைக் சுழிக்கும். இவ்வாறு ஒத்த பண்பை மட்டுமே அறிந்து உயிர் வாழ்க்கைக்கு உயிரூட்டுவது ஒரு நோக்கு." நம் உடலுக்கு ஒத்தது: நம் உயிருக்கு ஒத்தது: நம் உள்ளொளிக்கு ஒத்தது, நம் அகவைக்கு ஒத்தது, நம் அறிவுக்கு ஒத்தது: நம் குடும்பத்திற்கு ஒத்தது: நம் பணிக்கு ஓத்தது. நம் பண்பாட்டிற்கு ஒத்தது - ஏற்றது - பொருந்தியதையே எண்ணிப் பேசிச் செயல் படுவோனே ஒத்தது அறிவான் ஆவான்; அவனே உயிர் வாழ்பவனும் ஆவான். நாம் நன்றாக உண்டு உடுத்தி, குறைந்து வாழ எண்ணுகிறோம்! நாம் நன்கு கற்க வேண்டும்! பொருள் தேட வேண்டும்! நல்ல மனைவி மக்களுடன் இன்புற்று வாழ வேண்டும்! நோய் நோடி இன்றி வாழ வேண்டும்! யாரும் நமக்கு எள்ளளவு துன்பமும் செய்யக் கூடாது. நம்மை எவரும் பழிக்கக் கூடாது எல்லாரும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணுகிறோம் அல்லவா? அவ்வாறே எல்லாரும் வாழ வேண்டும் என்ற ஒன்று பட்ட நோக்கில் சிந்தித்துச் செயல்பட்டால் தான் நாம் ஒத்தது அறிபவராகவும் உயிருடையவராகவும் கருதப்படுவோம்! தம்மைப் போன்று பிற உயிர்களையும் ஓப்பக்கருதி அவற்றுக்குத் துன்பம் நேராமல் காத்து, எதிர்பாராமல் நேர்ந்த துன்பத்திலிருந்து விடுவித்து, விடுவிக்க இயலவில்லை எனினும் துன்பத்தில் பாதியைத் தான் சுமந்து கொள்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன் ஆவான் எனவும் கருதலாம். | நாம் ஒன்றை ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ! நாடு ஒப்பன செய்து வாழ வேண்டும்! நம் செயலாலும் தொண்டாலும் நாடு நற்பயனும் நற்பெருமையும் அடைய வேண்டும்! அப்படி உயர்ந்தோர் ஒப்பும் உயர்நெறி போற்றி வாழ்பவனே உயிருள்ளவன் எனவும் ஒப்புக் கொள்ளலாம். 'வாழ்வில் ஏற்படும் துன்பங்களைக் குறைக்க ஒருவர்க் (கொருவர் உதவி செய்வதற்கு அன்றி வேறு எதற்காகவும் உயிர் வாழவில்லை" எனக்கூறும் எலியட்டின் கருத்தும் ஒத்த கருத்தே! "உபகாரச் சிந்தையின் அளவே ஒருவன் உயிர்வாழ்பவனாகத் கருதப்படுவான்' என்னும் எமர்சனின் மொழியும் உயிர்மொழியே! "நாருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” திரு-செவம்: தனக்கும் பிறர்க்கும் ஏன் எவர்க்கும் பயன்படும் பொருள் எதுவாயினும் அது செல்வமே! கல்வியா, கேள்வியா, அறிவா, அருளா, பொருளா எல்லாம் செல்வமே! அச்செல்வம் அறிவாளனிடம் பொருந்தி இருக்கிறது. அறிவாளனும் சிற்றறிவினன் அல்லன் பேரறிவாளன் பெருமைப் படத்தக்க அறிவாளன். அதிலும் அவன் உலக நலனை விரும்பும் பேரறிவாளன் உடல் சோரால் விரும்பப்படும் பேரறிவாளன் அவனிடம் பொருந்தியுள்ள அருமைச் செல்வம் எதனையும் அவன் தானே துய்த்து மகிழ வேண்டும் என எண்ணான், தனி ஒருவர் எவரும் உரிம்ை கொண்டாட முடியாத, நார் மக்கள் அனைவர்க்கும் சம உரிமையுடைய சாருக்கு மிக அண்மையில் இருக்கு அழகு சேர்ப்பதாகவும் விளங்கும் தருணரியில் வற்றாமல் தூய நீர் நிரம்பிக் காணப்பட்டால் அது நர் மக்களுக்கு எப்படி உவப்பான உரிமை நீராகப் பயன்படுமோ அது போல் அனைவர் தேவைக்கும் பயன்படும் செல்வந்தான் உலக நலத்தை விரும்பும் பேரறி வாளனிடம் பொருந்தியுள்ள செல்வமாகும். உலக நலத்தை விரும்புவான் கருணி போன்றவன்; அவனிடம் நிறைந்துள்ள செல்வம், ஊருணியில் நிறைந்துள்ள நன்னீர் போன்றதாகும்! ஊருணியில் நீர் எடுக்க எவர் அனுமதியும் தேவை இல்லை! அது உரிமை நீர்! பொதுநீர் அதுபோல் உலக நலம் பேணும் போறிவாளன் செல்வம், தேவைப்படுவோர் அனைவர்க்கும் உரிமையுடைய பொதுச் செல்வம் போன்றது. இராமபிரானுக்கு முடிசூட்ட முடிவு செய்துள்ளதை அரச அவையினரிடம் தயாதன் அறிவித்தான் ; அனைவரும் தடையின்றி ஏற்றனர். மறுப்பின்றி ஒப்பக் காரணம் யாது என வினவினான் அதற்கு அவர்கள் அளித்த விடையில், "நாருணி நிறையவும் உதவும் மாடுஉயர் பார்கெழு பயன்மரம் பழுத்தற்று ஆசுவும் கார்மழை பொழியயும் கழனிபாய் நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?” என விடையளித்ததாய்க் கூறும் கம்பர் இராமன் வருal, பயன்மரம், பருவமழை ஒத்த ஒப்புரவாளன் எனக் கூறி முக்குறளின் சாற்றைப் பிழிந்து ஒன்றாக வழங்கும் சிறப்பே சிறப்பு. மா, பலா, வாழை போன்ற நல்ல பயனைத் தரும் அருமையான மரங்கள் ஊரின் நடுவே உள்ள ஊர்ப் பொதுத் தோட்டத்தில் நன்கு காய்த்து முற்றிப் பழுக்கத் தொடங்கி விட்டது. இனித் தொடர்ந்து சுனிகள் உணவிற்கு அனைவருக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு வகை மரமும் பலன்தரும் பருவம் வேறு வேறாய் அமைவதால் ஆண்டு முழுவதும் நாள்தோறும் ஏதாவது ஒரு கனி உண்ணக் கிடைக்கும். அதுபோல் "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் காரே" எனச் சங்க காலத்துச் சான்றோர் 'பிசிராந்தையார் குறிப்பிட்டது போல் "நயனுடைச் செல்வர் நனி நிறைந்த தர் எங்கள் தர்" என்று நாங்கள் மனநிறைவுடன் கூறிவருகிறோம், ஏனெனில் எங்கள் ஊரில் வாழும் செல்வார்கள்! தங்களைச் செல்வராய்க் கருதிப் பெருமை பாராட்டுவோரும் அல்லர்; எங்களை ஏழைகள் எனக்கருதி ஏழனமாய் நினைப்பவரும் அல்லர்; அவர்கள் பொருள் வளத்துடன், அறிவு வளமும், மன வனமும், பண்பு வளமும் வாய்க்கப் பெற்ற அருளாளர்கள் பொது நலம் நாடும் நல்லோர்கள்! சுருங்கச் சொன்னால் எங்களைப் பெற்ற தாய் போல் இருந்து பேணிக் கொள்பவர். நடு ஊரில் நனிசுவை உடைய நற்கனிகளை நல்கும் நம்மரங்களைக் கண்டு, செல்வர்கள் நம்பனுடைமையைக் கற்றுக் கொண்டார்களா? தளரார் உவப்ப உயர்நலப் பணிகள் ஆற்றி இளரை வாரவைத்துக் கொண்டிருக்கும் இவ்வொப்புரவாளர்களைக் கண்டு, பயன் மரங்கள் இன்சுவைக் கனிகளைத் தரக் கற்றுக் கொண்டனவோ? யாம் அரீயோம், ஏஎல்லாம் தெரிந்த திருவள்ளுவர், "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம் நயனுடை யான்கண் படின்" என்கிறார். பிறர் நலம் நாடும் பண்பாளனிடம் பொருந்தியுள்ள செல்வம்; பயன் தரும் மரம் ஊர் நடுவே பழுத்துள்ளது போன்றதாகும்! ஒப்புரவாளர் நயனுடையார் பழமரம் போன்ற பயனுடையார், திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல், கனி தந்து கொண்டிருக்கிறது. அது போல் தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும்' என்று மார்க்சு ஒளரேலியசு கூறுவதையும் ஒப்பிட்டு நோக்கலாம்! "அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல்மரம் போல் நேரொப்பத் தாங்கி பழுமரம் போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி-வாழ்வதே நல்லாண் மகற்றுக் கடன்" என்னும் நாலடியார் இக்கருத்திற்கு வலிமை சேர்க்கிறது. மருந்து மரம் எட்டும் தூரத்திலும் செழித்து வளர்ந்து நிறைந்து காணப்படுகிறது. அதன் கனி, காய், குச்சி, பட்டை , வேர் முதலாய அனைத்தும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய மருந்திற்குப் பயன்படுவது போல் பேருள்ளம் பொருந்திய பெருந்தகையாளனிடம் பொருந்தியுள்ள அனைத்து வகைச் செல்வங்களும் இல்லாரின் வறுமை நோயைப் போக்கவும் கப்போரின் அறியாம்ை நோயைப் போக்கவும், இன்னோரன்ன வழிகளில் அனைவரின் துன்பம், துயரம், அச்சம், சுவலை முதலிய அனைத்துக் குறைகளையும் களையும் தன்மை வாய்ந்ததாகும். பேரருளாளனிடம் இருக்கும் செல்வம் தேடும் இடத்தில் இருக்கும் மருந்து மரம் போன்றதாகும்! என்பதைத் தெரிவிக்கப் பாடத்த குராளே! "மருந்தாகித் தப்பா மரத்தற்றால், செல்வம் பெருந்தகை யான்கண் படின்" என்பதாகும், பேரறிவாளனின் செல்வம் நீர் நிறைந்த குனருணி போன்றதாகும் எனவும், நயனுடையான் செல்வம் உள்ளுர்ப் பழுத்த பயன்மரம் போன்றதாகும் எனவும் கூறிய திருவள்ளுவர், பெருந்தகையான் செல்வம்-மருந்தாகித் தப்பா மரம் போன்ற தாகும் என வரிசைப்படுத்திக் கூறுவது எண்ணிப் போற்றத்தக்கதாகும்! அறிவுடையான் தான் தேடிச் சேர்த்தலிலிருந்து கொடுத்துக் கொண்டிருப்பான் அவன் செல்வம் அருணி நீர்போல் பயன்படும், நயனுடையான் தான் தேடியதையும் தன்னில் ஒரு பகுதியையும் கொடுப்பான் இவன் செல்வம் பயன் மரக் சுனிபோல் பயன்படும்! பெருந்தகையான் தான் தேடியதை எல்லாம் கொடுப்பதோடு, தன்னில் ஒரு பகுதியை மட்டுமல்லாது தன்னையே முழுதுமாகப் பிறர்க்கு வழங்கும் வள்ளலானான் இவன் செல்வம் கண்கண்ட இடத்தில் காணும் மருந்து மரம் போல் பயன்படும்! நீரே வாழ்க! நீராய் வாழ்க.! பழமே வாழ்க! பழமாய் வாழ்க! மருந்தே வாழ்க! மருந்தாய் வாழ்க! மழையே வாழ்க! மழையாய் வாழ்க! செல்வத்தால் மனிதன் அடையும் சிறப்பை விட மனிதனால் செல்வம் அடையும் சிறப்பே மிகுதி! செல்வம் 'நாய் பெற்ற தெங்கம் பழமாய்' “பேய் காத்த புதையலாய்' இருப்பின் யாது பயன்! ஒப்புரவாளன்னிடம் வந்து, செல்வம் உயர்புகழ் அடையட்டுh! பூரியாரிடம் பொருந்தி பழி அடையாது நீங்கட்டும்! "வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும், பழங்குடி, பண்பின் தலைப்பிரிதல் இல் எனக் "குடிமயில் மிகப் பழமையான குடியி ல் பிறந்தவர், தாம் பிறர்க்குக் கொடுத்து உதவுவதற்குரிய செல்வம் சுருங்கிய காலத்திலும், தம் நற்பண்பில் இருந்து விலக மாட்டார். என்னும் குறட்போக்கில் பாடப்பட்ட குரனே "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடானறி காட்சி யபர்" என்பதாகும், பிறர்க்கு உதவி செய்து வாழ்வதே தம் வாழ்வியல் கடமை என்பதைத் திட்டப்படுத்திக் கொண்டு வாழும் உயர் மனம் வாய்க்கப் பெற்ற ஒப்புரவாளர். தமக்கு ஏதாவது ஒரு காரணத்தால் நெருக்கடி ஏற்பட்ட காலத்தும் உதவி செய்வதற்குப் பின்வாங்க மாட்டார். பொன் வைக்கும் இடத்தில் "பூ' வாவது வைப்பார். கடன் வாங்கியாவது கடமையைச் செய்வார், மழைக் காத்து இரவில் பசியுடன் வந்த துறவிக்கு உணவு அளிக்க இளையான்குடி மாறநாயனார் வீட்டில் ஆக்கிய உணவும் இல்லை; ஆக்க வழியும் இல்லை, யாரிடமும் கேட்டு வாங்க வாய்ப்பும் இல்லை என்றாலும் மழையோடு மழையாக நனைந்து கொண்டு தட்டுத் தடுமாறி வயலுக்குச் சென்று வயலில் அன்று பகலில் விதைத்த நெல்லைக் கூடையில் வாரி வந்து தக்கபக்குவம் செய்து உணவு படைக்க முயன்ற முயற்சி ஒப்புரவாளர் நெருக்கடியிலும் கடமை தவறார் என்பதை உணர்த்தும்! | பெருந்தலைச் சாத்தனார்க்குப் பொருள் கொடுக்க வேழியில்லாத போதும் தன் தலையைத் தம்பியிடம் கொடுத்துப் பொன் பெற்றுக் கொள்க எனக் கூறி வாள் தந்த குமணன் வரலாறு! ஒப்புரவாளரின் உயர் பண்பிற்கு எடுத்துக் காட்டு அல்லவா! நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் வாடும் கலைவாணரிடம் ஒருவர் திருமண அழைப்புத் தந்து வாழ்த்து வேண்டினார். மணமக்கட்குக் கொடுத்து வாழ்த்த வாய்ப்பில்லை என ஒரு கணம் சிந்தித்த கலைவாணர் எதிரே தெரிந்த பால்வாங்கிய வெள்ளிச் செம்பை மனைவிக்கும் தெரியாமல் எடுத்து வழங்கிய ஒப்புரவாண்மையர், தம் மனவளம் என்றும் குறையார் என்பதற்கு எடுத்துக் காட்டும் அல்லவா! திருக்கோவலூரில் ஒருநாள் விடா மழை நள்ளிரவு ஒரு சிறிய வீட்டின் தாழ்வாரத்தில் ஒருவர் படுத்திருக்கிறார். மழைக்கு ஒதுங்க இடம் உண்டா என இன்னொருவர் வினவுகிறார்! ஒருவர் படுக்கலாம் இருவரானால் இருக்கலாம்! என்ற மாமொழி வந்தது. இருவர் இருந்தனர், சற்று நேரத்தில் நனைந்து கொண்டே வந்த இன்னொருவர் இடம் உண்டா என வினார்! இருவர் இருக்கிறோம்! மூவர் நிற்கலாம்! என மறுமொழி தந்து நின்ற மூவர் தான் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதல் மூன்று ஆழ்வார்கள்! ஆகவே மேலும் கேளாமலே உள்ளே நுழைந்து மூவரையும் நெருக் கினான் இறைவன் - மனம் இருந்தால் இடம் உண்டு! இடனில் பருவம் மனத்திற்கு மட்டும் வரக்கூடாது அவ்வளவு தான்! "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லாலான மாட்டார் இகாபந்து" என்னும் நல்வழிப் பாடலும் இக்குறட் கருத்தைத் தழுவிப் பாடப்பட்டதே யாகும்! "நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு” ஒப்புரவாளர் தமக்கு வறுமை ஏற்பட்டாலும் அதனை வறுமையாகக் கருத மாட்டார். விரைவில் மாற்றி அமைக்க அயராது உழைப்பார். ஆனால் உதவி நாடி வந்தவர்க்கு உதவ முடியா நிலையொன்று ஏற்படுமாயின் அவர் அதனையே தமக்கு ஏற்பட்ட வறுமையாகக் கருதுவார்! பிறர்க்கு உதவ முடியா நிலையே ஒப்புரவாளருக்கு வறுமை! "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து" 780 என்பது படைச் செருக்கில் அமைந்த கண்ணீர்க் குரள். 'தம்மைக் காக்கும் தலைவன் கண்ணில் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு நேருமானால்! அது கெஞ்சிக் கேட்டும் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமைச் சாவாகும்' என்னும் நோக்கில் அமைந்த குறளே, "ஒப்புரவினாால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து" பொது நலம் கருதிப்பாடு படுவதனால், உடற்கேடு, உயிர்க்கேடு, பொருட்கேடு, குடும்பக் கேடு ஏற்பட்ட போதும், அக்கேடு இழிவு தருவதும் ஆகாது. அக்கேடு குறித்து வருந்தவும் மாட்டார், ஒப்புரவாளர் தன்னை விற்றும் மகிழ்வுடன் பெற்றுக் கொள்வர். பல்வகைக், காரணங்களால் ஒருவர்க்குக் கேடு நிகழலாம்! "கேடும் பெருக்கமும் இல்லல்ல" என்பவர் திருவள்ளுவர் அக்கேடு ஒப்புரவு செய்வதனால் ஏற்படுமாயின் அதனினும் சிறப்பு வேறு ஒன்றும் இல்லை! அக்கேடே அவரை நிலைத்த புகழாளர் ஆக்கும் கேடாகும். சாக்ரட்டீசு, இயேசு பெருமான், காந்தியடிகள் போன்ற பெருமக்கள் அடைந்த கேடுகள் எல்லாம் விலைமதிக்க முடியாப் பெருமையை அவர்கட்கு ஈட்டித் தந்த கேடுகளாம்! ஒப்புரவாளர் கூறும் கேடு! புகழ் தரும் கேடாகும்! ஆகவே அப்பெருமக்கள் மகிழ்ச்சியோடு சாவை ஏற்றுக் கொண்டனர். இராமாயணம், உயுத்த காண்டம், “வீடணன் அடைக்கலப் படலத்தில் அனுமன் கூறியது கேட்டு வந்த இராமன் கூற்று. "பிறந்தநாள் தொடங்கிட யாரும் துகைப்புக்கள் பெரியோன் பெற்றி பறந்த நாள் டாாடோ? காங்கனாச் சரண் மானா வாழ்கின்றானோத் துாந்த நாட்டு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சியாயே இறந்த நாள் அன்றோ ? என்றும் இருந்த நாள் ஆவது" என்றான் கம்பன் கவரி கொனனே மனி தங்க, காட்டும் கண்ணாடியாகும். "தடங் (17ாம் அடசியாக நேரி, உன் சாடிய வெறுப்பவர்களைப் போற்று! நீதியாய் இருந்து அச்சத்தை விடு! நீ எதிர்பார்க்கும் நோக்கங்கள் எல்லாம் உடன் நாட்டிற்காகவும் பண்மக்காகவும் இருக்கட்டும்! அம்முயற்சியால் நீ அழிந்து விட்டால் நீ தியாகி ஆகி விடுவாய்" என்றும் சேக்சுப்பியரின் மொழியும் போற்றார் சர, பொன்மொழியே! மாரி அன்ன கைமாறு வேண்டாம் கடப்பாடு கொள்க.! தாளாற்றிக் தருக பொருள்! தக்கார்க்கு வேளாண்மை செய்க! ஒத்ததறிந்து உயிர் வாழ்க! நின் செல்வம் நீர்நிறைந்த காருணி ஆகட்டும் தடள்சகரூர்ப் பழுத்த பபன்மரமாய்ப் பயன்படுக! மருந்து மரமாய் நோய் நீக்குக! ஒப்புரகயை என்றும் மேற்கொள்! ஒப்புரவாளனை வறுமை வாட்டாது காவ்லிபுகும் போற்றும் இணையற்ற நெருநெறி ஒப்புவே! ஒப்புரவால் கேடு வருமா? வந்தால் வரட்டும் வரவேற்போம் 23, ஈகை "வண்மை இல்லை ஓர்வறுமை இன்மையால் திண்மை இப்படிப் ஒர்செறுநர் இன்மையால் உண்மை இல்லை பொய்யுரை இமாடையாய் பெண்மை இல்காகப் பல்கேள்வி போவாலால்" "தெள்வார் மழையும் திரை.அழியும் உட்க நாளும் கொள்வார் முரசம்யுதிர் மாநகர் வாழும் மாக்கள் கள்வார் இமாபைப் பொருள் காவலும் இல்லை, யாதும் கொள்வார் இவாடைாக் கொடுப்பார்களும் இவ்வால் மாதோ" நாடும் நகரும் எப்படி இருக்க வேண் டும் 1:57:3க் கவிமன்னன் கன வு கண்டால் என்பனத எடுத்துக் காட்டும் அருமையான பாடல்கள்! 'வறுமையே இல்லாத நாடு: 1கொள்வார் இல்லாத நகர்' எண் 33 இனிக்கிறது. வாழ்க கவி மன்னன். "ஏழை யென்றும் அடிமை யென்றும் எனாம் இல்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இருப்பவையே! பாழி கல்வி, செல்வம் எய்தி பாகனம் மகிழ்ந்து ஈடியே மனிதர் யாரும் இருநிகர் சமான பாக வாழ்வமே!" விடுதலை விடுதலை விடுதலை. என நாடு விடுதலை பெற்றபின் நாடு எப்படி அமையவேண்டும் எனக் கற்பனை செய்து பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடினான் வாழ்க பாரதி! ஆனால் நாடு இன்னும் வறுமைப் பிடிமாலிருந்து விடுதலை பெறவில்லை. இந்தியாவில் இருபத்தாறு விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இந்தியப் பேரரசு வறுமையை ஒழிக்க, சொர்ண (செயந்தி சாதாரி பவானத் திட்டம்" நேரு வேனா வாய்ப்புத் திட்டம்" பிரதமரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம், நகர்ப்புற வேலைத் திட்டம் தேசிய குடும்பநலத் திட்டம், முழுமையான கிராம: வேலை வாய்ப்புத் திட்டம், பிரதமர் கிராமோதயத் திட்டம், இந்திரா ஆவாசு திட்டம், பொன்விழா ஆண்டு கிராம் சுயவேலை வாய்ப்புத் திட்டம் உறுதியாக வேலை கிடைக்கும் திட்டம் என்பன போன்ற திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் ப51 நிதிச் சிக்கல்கள் இருப்பது போலவும் தெரிகிறது. செயல்படுத்தும் மாநிலங்களில் ஆறுமுதல் இருபத்தைந்து விழுக்காடு மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது. மீதி ஏனைய செலவுகளுக்குப் பயன்படுத்தப் படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ) வறுமையின் செழுமை எதிர்பார்க்கும் அளவிற்குக் குறைந்ததாகத் தெரிய வில்லை, வறுமை, தனி மனிதனின் சோம்பல் திறமையின்மை , சாக்கன்மை , தவறுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஏற்படலாம். சமூக வாழ்க்கை முறைகள், விழுமியங்கள் நம்பிக்கைகள் ஏற்படுத்தும் மனித மேம்பாட்டுத் தடைகளாலும் ஏற்படலாம். கல்வி அறிவின்மை, நேர்மையற்ற அமைப்புகள், பணிசெய்யத் தக்க வாய்ப்பு இன்மை, ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது சில சாதியினரின் தாக்கம், வணிகம் செய்ய வாய்ப்பற்ற நி3ல், பின்தங்கிய சமுதாயச் சூழ்நிலைகளாலும் வறுமை நிலைபெறுகிறது. வேளாண்மையில் நிலையற்ற வருவாய், மனித மூலதனக் குறைவு, நாட்டின் பணவீக்க நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்புக் குறைவு, தொழில் வளர்ச்சித் தடைகள், திறமைகள் குறைந்த தொழிலாளர்கள், தொழில் ஆதாரங்கள் குறைவு, திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புக் குறை ஆகியனவும் வறுமை வளரத் துணை புரிகின்றன, அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சரிவரச் செயல்படாமை, வாழ்கின்ற இடங்களில் வறண்ட நிலை, இயற்கையினால் அல்லது செயற்கையினால் உருவாகும் இழப்புகள் மற்றும் நேர்ச்சிகள், தண்ணீர்ப் பற்றாக்குறை, அறிவியல் செயல்பாடுகள் குறைவு! இன்னோரன்ன காரணங்களே நாட்டின் வறுமைக்குக் காரணங்கள் என டேவிட் எலீசு, மேக்சு வெபர், பெக்டின் கென்றி போன்ற சமுதாய அறிஞர்கள் கூறுகின்றனர். "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" "குறையாத விளைச்சலும், தகுதி வாய்ந்த பெருமக்களும் மனவளம் மிக்க செல்வரும் ஒருங்கே சேர்ந்திருப்பது சிறந்த நாடு" எனக் கூறும் திருவள்ளுவர். "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு" என்கிறார், “கடுமையான பசித் துன்பமும், விடாத நோய்த் துன்பமும் அழிவு செய்யும் பகைத் துன்பமும் இல்லாது அமைதியாக இயங்கும் நாடே நல்ல நாடாகும்" என்றும் கூறுகிறார். ஒரே நேரத்தில் நீங்க வேண்டிய மூன்றும் நீங்கிச் சேர வேண்டிய மூன்றும் நாட்டில் சேர்ந்து நிலைபெற்று விட்டால் நாடு வன நாடாகவும் நன்னாடசுவும் விளங்கும்! விலக்க வேண்டிய மூன்றில் முதலிடம் பெறுவது பசி பசிக்கு 5 எணவு தர வாய்ப்பின்றி வாடக் காரணம் வறுமை, வறுமையைப் போக்குவதில் அரசிற்குப் பொறுப்பு அதிகம் எனினும் தாழ்விலாச் செல்வருக்கும் பொறுப்பு உண்டு! வசதியும் வாய்ப்பும் பெற்றவர் அனைவரும் தாம் மட்டும் உண்டு. உடுத்தி மாட கூடங்களில் வாழ்ந்தால் போதும் என எண்ணாது, ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு வறியவரின் வாட்டம் போக்கிச் சுவனலயற்று வாழ மனம் உவந்து வழங்கும் கொடையே ஈகையாகும். உழைக்கும் கைகள் உறுபொருள் தேடுகிறது. தேடிய பொருளை வறியவர்களுக்கு வழங்குவதற்கு மிகுதியும் தாண்டும் வகையில் "31கயே நீ வறியவர்க்கு 'ஈ,சு" [வழங்குக! என வேண்டுவது போலவும் இந்தக் க எளிய கை அன்று: 'ஈயும் வகை' என்ற உணர்வு வளர்ந்தவர்கட்குக் கட்டாயம் இருக்க வேண்டும் என முன்னோர் கருதியதால் கொடுக்கும்கொடைக்கு 'ஈகை" எனப் பெயரிட்டுள்ளனர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும், இல்லறத்தார் பெறும் நிறை நிலை புகழாகும். புகழ் பெற வாழ்வாங்கு வாழ்வதுடன், கைம்மாறு வேண்டாக் கடப்பாடு கொண்ட ஒப்புரவாளராயும் அறியார்க்கு மன வளத்துடன் வாரி வழங்கும் கொடையாளராயும் விளங்க வேண்டும் என்னும் உலகியல் நடைமுறையில் முதற் கண் ஒப்புரவறிதரை விளக்கிய திருவள்ளுவர் அடுத்து விளக்கப் புகுந்தது ஈகையேயாகும், ஈயயும் 531கயே! எவரியாரின் வெ ச =3ith #31சுகள், 35ங்கும் 5ககள் ஆக்கும் மந்திரக் கைகள்! திருவள்ளுவர் முதற் குறளிலேயே ஈகையின் இலக்கணத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறார். "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து" 221 என்பதே அக்குறள்; பெற்றோர்கட்குக் கொடுப்பது பிள்ளை சுட்டுக் கொடுப்பது, உற்றார் உறவினர் நண்பர், பதவியில் இருப்போர், பணக்காரர் இவர்கட்குக் கொடுப்பது ஈகையா? இவர்கட்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுக் கொடுத்தால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்! அல்லது அவர்களால் எதுவும் காரியம் ஆக வேண்டியதிருக்கும்! அப்படி ஏதாவது ஒரு பயன் கருதிக் கொடுத்தாகும், சாதி, சமயம், இனம், மொழி தாடு பால் என்ற எந்த அளவுகோலும் கொண்டு அளக்காமல், வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும் வழியற்ற 'வறியவர் சுட்கும்' அவர்கட்கு எது தேவையோ அத்தேவையை, அறிந்து, தாமே முன் வந்து அவர் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர் கேட்காமலே குறிப்பாரிந்து கொடுத்து உதவும் காடை ஒன்றே "ஈ131க' எனப்படும்! பயனை எதிர் நோக்காது வறியவர்கட்குக் கொடுத்து உதவுவதே ஈகை. "வறியார்க்கொன்று ஈவதே ஈகை” "அற்றார் அழிபசி தீர்த்தல்” கர் "அற்றார்க்கு ஒன்று ஆற்றல்" "தக்கார்க்கு வேளாண்மை செய்தல்" "தக்கார்க்கு ஒன்று ஈதல்" என்னும் தொடர்சுளால் வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து ஏழையரை அவர்வறியவர், அற்றார் தக்கார் என்னும் சொற்களால் குறிப்பது உணரத் தக்கது. | 'அற்றாரையும் வறியாரையும் 'துவ்வாதார்' என்றும் இல்வாழ்க்கையில் கூறுகிறார், "ஆற்றுதல் என்பதொன்று அவந்தவர்க்கு உதவுதல்" எனக் கலித்தொகை கூறும் இலக்கணமும் இயைபுடையதே, புறநானூற்றில் ஏணிச் சேரி முடமோசியார், வள்ளல் ஆய் அண்டிரனை, "இம்மைச் செய்தது மறுமைக்காம்ளலும் அறவிலை வணிகன் ஆய் அலன்" என எப்பயனையும் எதிர்பாராமல் வறியார்க்கு ஈயும் ஏந்தல் எனப் போற்றுவது நல்ல இலக்கியச் சான்றாகும்! "மனிதன் தன் நாட்டிற்கும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தன் சுற்றத்தார்க்கும், நண்பர்களுக்கும், இவர்களுக்கு எல்லாம் மேலாகத் தன் ஏழை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தாரளமாக உதவி செய்ய வேண்டும், தனக்கு அதிகமாக உதவி செய்பவர்களுக்குத் தான் அதிகமாக உதவுதலைப் போல நடந்து கொள்வதில் பயனில்லை" என்னும் பிளினியின் கருத்தும் ஒத்த கருத்தே! "ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம் வரையாது ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆகாண்கடன் = ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறுவார்க்கு ஈதல் பொலிகடன் என்னும் பெயர்த்து" என்னும் நாலடியார் பாடலும் இதே கருத்தையே வலியுறுத்துகிறது. பொலிகடன் என்பது குறியெதிர்ப்பாகும். "வறுமையுற்று வருந்திய யான் இரவலர் சுற்றத்துடனே புறப்பட்டு நள்ளியினது கண் உர நாட்டிற்குப் பல கல்லும் கானமும் கடந்து சென்றேன். ஒருநாள் வழி நடை பெருத்த மிகுதியால் யாங்கள் காட்டிடத்தே ஒரு பலா மரத்தின் அடியின் அமர்ந்தோம். மான் கூட்டத்தை வேட்டையாடி அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும் மணி விளங்கும் சென்னியும் இன்டர் சொல்லத் தோன்ரன் வருவான் 5எம்பால் வந்து, 11ம் வருத்தம் முற்றும் எம்முகம் நோக்கித் தெரிந்து கொண்டான். அவனைக் கண்டு எழுந்த என்னைக் கைகவித்து இருக்கச் செய்து, தன்னோடு வந்து காட்டுக்குள் சென்றிருந்த வில்லுடை இளையர் திரும்பி வருமுன், தன் கையில் இருந்த நீக்கடை கோலால் தீ முட்டிக் கானிடைக் கொன்ற விலங்கின் நணனைப் பக்குவப் படுத்தி எம்மை உண்பித்தான் உண்டு பசி தீர்ந்த யாங்கள், மலைச் சாரலில் ஒழுகிய அருளி நீரைப் பருகி அயர்வு நீங்கினோமாக, "எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேரில் 5s11; யாம் காட்டு நாட்டிடத்தேம்" என்று மொழிந்து தன் மார்பில் அணிந்திருந்த முத்து மாலையினையும், முன் கையில் அணிந்திருந்த கடகத்தினையும் தந்தான்; யாங்கள் அவன் வள்ளன்மையை வியந்து, "ஐய, நீவிர் யார்? தும்முடைய நாடு யாது? என வினவினோம். அவன் ஒரு மொழியானும் மொழியாது எம்பால் விடை பெற்றுச் சென்றான். பின்னர் யாங்கள் வழியில் பிற மக்கள் தம்முன் பேசிக் கொண்ட சொற்களால், இவ்வாறு அருள் செய்த வெள்ளல் தோட்டி மலைக்குரிய கன்மலை நாடனான சுண்டரக் கோப்பெருநள்ளி எனத் தெரிந்து கொண்டோம்" எனச் சங்கத்துச் சான்றோர் வன்பரணர் பாடிய புறப்பாடலின் கருப்பொருள் இக்குறளுக்கு ஏற்புடைய இலக்கியச் சான்றாகும்! திருவள்ளுவரின் நோக்கம் தக்க வறியவர்கட்குக் கொடுத்து உதவி அவர்கள் வாட்டத்தையும் வறுமையையும் போக்கும் ஈகையர்களை பளக்கப்படுத்த வேண்டும். பொது நலம் பேணும் இத்தகைய கொடையாளர் தொகை நாட்டில் பெருக வேண்டும் என்பதாகும்! ஏனெனில் அவர் உலக நலம் போகனும் உயர் மனத்தர். அப்படித் திருவள்ளுவர் போல் எண்ணாமல் ஈகை மனம் படைத்தவரைப் பார்த்து இப்படிக் கண்டவனுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தால் எவ்வளவு நாட்களுக்குக் கொடுப்பீர்கள்! இப்படி வராருக்குக் கொடுத்து வந்தால் நாளை உங்கள் மனைவி மக்களுக்கு என்ன எஞ்சும்! நீங்களும் இந்த உலகத்தில் எதனையும் மகிழ்ச்சியோடு அனுபவிக்க முடியாது. இவ்வுலக வாழ்வும் பயனற்றதாகும். இவ்வுலக இன்பத்தையே இழந்து விடுவீர்களானால், உங்கள் எதிர்காலம் பாழாகும்! இவ்வுலக இன்பத்தையே இழந்த உங்கட்கு மேலுலக இன்பமா கிடைக்கப் போகிறது? எட்டாது என்பது உறுதி! எனக்குத் தெரிந்த நல்லதை உங்களுக்குச் சொல்லி விட்டேன்! என்று அச்ச மூட்டி உங்கள் ஈகைப் பண்பைக் கெடுக்க யாரும் தவறான நெறி முறைகளைக் கூறினாலும் கூறலாம். அதனைக் கேட்டு ஏமாற்றமும் அடைய வேண்டா அச்சமும் வேண்டா' தயக்கமும் வேண்டா? பண்புகளிலெல்லாம் மிக உயர்ந்த பண்பு ஈகையே எனத் திட்ட வட்டமாகக் கூறுகிறார் வள்ளுவர். அதே போல் பிறர் பொருளால் வாழும் ஏழையார் தொகை நாட்டில் ஏன் உலகில் வா வாக குறைந்து கொண்டே வந்து, கொடுத்தாலும் வாங்கி வாழியாரும் அணியமாய் இல்லை, எல்லோரும் தன்னிறைவு பெற்றவர்கள் எனக் கூறும் காலம் வா வேண்டும் என்ற வேணவாக் கொண்டவர் தாம் வள் (பளுவப் பெருந்தகை! | ஆனால் நாட்டில் வள்ளுவர் கொள்கை பரவிவிடக் கூடாது எனக் கருதுவோரும் இருக்கலாம். அவர்கள் பிறர் பொருளால் வாழ்பவர்களை நோக்கி 'நீங்கள் எல்லாம் பேறு பெற்றவர்கள், புண்ணியவான்கள், உங்களுக்குத் தேவையான உணவு, உடை முதல் அனைத்துப் பொருள்களும் தங்குதடையின்றி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலில் அழுக்கும் படாமல், வெயில், மழை, பனி எதிலும் சிக்காமல், உடல் நோகாமல், நலமாக எல்லா வசதிகளையும் அனுபவித்து வாழ்கிறீர்கள்! இதனினும் உயர்ந்த வாழ்க்கை பெருமை தரும் வாழ்க்கை எதுவும் இல்லை எனக் கூறி ஒரு தீய எண்ணத்தை உருவாக்கினாலும் உருவாக்கலாம்! அதனை உண்மை என நம்பி ஏமாந்து என்றும் பிறர் பொருளால் வாழலாம் என எண்ணிவிடாதீர்! ஆயிரம் பேர் அது வாழ்வு முறை என்று பாராட்டினாலும் அது வாய்மை ஆகிவிடாது. கொள்ளுதல் தீது தீதே ஆகும் என்பதை உணர்ந்து கொள்ள வலியுறுத்தும் குறளே, "நல்லாறு எனினும் கொளல்தீது, மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" "கொ ளல் தீது! ஈதலே நன்று" என்பது வள்ளுவரின் தனித்தன்மை காட்டும் மணிமொழி. "ஈான இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்று! கொள்ளலாம். கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று" என்னும் சுழைதின் யானையார் பாடிய புறப்பாடல் காட்டும் நெறியும் ஒத்த நெறியேயாகும். இரத்தல் - இழிந்தது ஈயேன் - மிக இழிந்தது கொள்க - உயர்ந்தது கொள்ளேன் - மிக உயர்ந்தது இதுவே மானம் போற்றும் கொடை நெறி! "இயேசன் என்னும் சாவ்வம் உகரையாரம் ஈதல் குலனுடையான் கண்ணோ உள!" “இவன் இல்லாதவன் என்னும் இழிவை ஒருவரிடத்தும் சொல்லாமல் அவனுக்கு வேண்டுவனவற்றை ஈதல் நற்குடிப்பிறந்தாரின் நல்லியல்பாகும். - "நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்" என்பது சான்றோர் கணிப்பு. "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்" என்னும் தொடர் தொட்டனைத் தாறும் மணற்கேணினி போன்றதாகும். ஆகவே அறிஞர் பெருமக்கள்: " தரப்போன் தான் இவன் என்னும் துன்பநிலையை தரையா முன் குறிப்பாந்து கொடுத்தல்" என்பது ஓர் உரை. "நீ வேண்டும் பொருள் என்னிடம் இல்லை என்னும் துன்பந்தரும் சொல்லைக் கூறாது வழங்கல்” என்பதும் ஒருரை. "இரந்தோன் தன்னிடம் ஏற்ற பின்னர் பிறர்பால் சென்று தான் இலன் என்னும் இழிவை மீண்டும் உரையாதவாறு அவன் வறுமை தீர வழங்கல்* இந்து ஓர் உரை, "ஒன்றைக் கேட்டு வந்தவனிடத்து இவன் இல்லாதவன் எனப் பழியாதிருத்தலும் கொடுத்தலும் ஆகியன வ" என்பது வாழ்வியல் உரை. "செருமான கேவற்சென்னி தென்னுரந்தை யார்தம் பெருமான் முகம்கண்ட பின்னர் ஒருநாளும் பூத்பத்தார் தம்மைப் பொருள் நாசயாற் பாராமயார் காதலித்துத் தாழ்ந்துஇரப்போர் கண்” என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் ஒருரைக்குச் சான்றாகும், அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமன் தன்னுடைய ஒளிக்கதிர் பற்றிய ஆய்வை நிறைவாக முடித்தால் தான் நோபல் பரிசு பெறுவது உறுதி என்றும், அவ்வாய்விற்குத் தேவையான பொறி ஒன்று தேவையுள்ளது. அதன் மதிப்பு 22 ஆயிரம் ரூபாய்! கொடுத்து உதவுசு எனப் பிர்லாவிற்கு மடல் எழுதினார். விரைந்து அத்தொகைக் கான காசோலை வந்து சேர்ந்தது. ஆய்வையும் இராமன் வெற்றியாக முடித்தார். அவர் எண்ணியபடியே நோபல் பரிசும் கிட்டியது." -பிர்லா எள்வர் உரையாது ஈந்த நற்குலனுடையபார்" என்பது வரலாற்றுச் சான்று. "வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் பொடினேன், பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசியாாது அயர்ந்த வெற்றரைக் கண்டுகடாம் பதைத்தேன் நீடிய பிகானியால் வருந்துகின் றோர்களன் நேருறக் கண்டுகடளம் துடித்தேன் ஈடிகள்மா காாய் சரசம்பளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்" நான்கிறார் வள்ளலார் என்றால் அவர் பிறிதின் நோயைத் தந்நோய் போல் கருதித் துன்புற்ற உருக்கத்தின் வெளிப்பாடே அப்பாடல், தம்பால் வந்து தம் வறுமை நிலையை மிக வருந்திக் கண்ணீர் வடிய, சொல்லவும் நா எழாமல் புலம்பலைக் கேட்டும் ஒருவருக்கு வருத்தமோ கவலையோ ஏற்படவில்லை என்றால் அவர் சுல்நெஞ்சராய் இருப்பார். அவர் உதவவும் மாட்டார். வெருட்டி அடிப்பார். பிறர் மாட்டு அன்பும் இரக்கமும் பரிவும், உதவும் மனமும் கொண்ட ஈகையர் வறியவரின் துன்ப நிலையை எந்த வடிவத்தில் அறிந்தாலும் வருத்த முறுவது இயல்பு. அதனை அவரே கால, இடம் கருதிக் கட்டுப்படுத்த முயன்றாலும் இயலாது. எவனொருவன் பிறர்படும் துன்பத்தைத் தனக்குற்ற துன்பமாகக் சுருதி வருந்து கின்றானோ அவனே பிறர் துன்பத்தைப் போக்க முயல்வான், வாட்டத்துடன் உதவி வேண்டி வந்தவனின் வருத்தத்தை ஈகையாளன் ஈடுபாட்டுடன் கேட்டாலே இரப்பவரின் துன்பத்தில் பாதி குறையும் என்பது உண்மையானால் அந்தப் பாதித் துன்பம் ஈடுபட்டுக் கேட்ட ஈகையாளனுக்குப் போய் விட்டது அல்லது ஈகையானன் பாதித் துன்பத்தைப் பெற்றுக் கொண்டான் என்பது தானே பொருள். பொருளுதவி வேண்டி வந்த வாரியாவ ன் துன்பத்தோடு வருகிறான். தன் துன்பத்தைக் கொடையாளனிடம் உரைக்கிறான். கொடையாளன் அதனைக் கேட்டுத் துன்புற்று பெரியவர்க்கு வேண்டிய உதவியை உள்ளன்புடன் செய்கிறான், பெற்றவன் நிறைவுடன் மகிழ்கிறான். முகம் மலர்கிறது அதனைக் சுண்டு கொடுத்தவனும் மகிழ்கிறான். உதவி நாடி வந்தவர் வருந்தும் வரை உதவிபுரிபவர் வருந்துவதும் பொருள் பெற்றவர் மகிழ்வனதக் கண்டு கொடுத்தவர் மகிழ்வதும் நிகழக் கூடியதே என்பதை உணர்த்தவே, "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு" எனப் பாடியுள்ளார். தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றி இருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து இளங்குமணனுக்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடிய பாடலில் இடம் பெற்றுள்ள "பாடுபெறு பரிசீயான் பாடினான் பெயர்தல்கான் நாடிழந் தனினும் நனியின் னாதென வாள்தந்தனாசேன தலையெனாக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்" என்னும் வரிகள் இக்குறளுக்கு ஏற்புடைய சான்றாகும். "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து" 48 இஃது இல்வாழ்க்கையில் இடம் பெற்றுள்ள குறள்: "பிறரை நல்வழியில் நடக்கச் செய்து தானும் நல்வழியில் தவறாமல் நடப்பவன் இல்வாழ்க்கை சுடுந்தவம் செய்பவர் தவத்திலும் வலிமையுடையதாகும்." "நடண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்" என்பது ஒரு பொறையுமைக் குறள், "பிறர்சொல்லும் தீயசொல்லைப் பொறுப்பவர்கண்ணா நோன்பு கொள்ளும் தவத்தவரினும் பெரியவராவார்." மேலே கண்ட இரண்டு குறட் பாக்களிலும் துவரின் தவத்தினும் இல்லறத்தானின் கடமையும் பொறுப்பும் மேலானது எனச் சுட்டுவது போல் அமைந்த குறட்பானே, "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்" என்பதாகும். வயிற்றில் பசி உணர்வு நாளும் குறைந்தது மூன்று வேளையாவது ஏற்படும், வேளா வேளைக்கு உணவும் நீரும் தந்தே அப்பசியைப் போக்க முடியும், ஆனால் ஐம்பொறியையும் அடக்க வல்ல துறவியர் பல நாட்கள் உணாவே உட்கொள்ளாமல் நாட்டமின்றி வாழ்வது உண்டு. அது தவ வலிமை உடையவர்கட்கு மட்டுமே இயலக் கூடியது. தம் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் சிறந்த ஆற்றல் தான் எனக் குறிப்பிடும் திருவள்ளுவர் அதனினும் மேலான ஆற்றல் ஒன்றைக் குறிப்பிடுகிறார். நாளும் வறுமையின் காரணத்தால் பசிக் கொடுமைக்கு ஆட்பட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிடக் கொண்டது போல் சில வேளைகளில் துடித்து உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் வறியவர்க்கு அப்போது உணவு தந்து காத்தவுடன் தக்க தொழில் செய்து வருவாயைப் பெருக்கி, வறுமையை ஓட்ட ஒருவர் வழி வகுத்துத் தந்துள்ளார் என்றால் அது எளிய செயல் அன்று. பசிக்கு மீன் கொடுத்து உதவியதுடன் மீன்பிடிக்கவும் கற்றுக் கொடுத்து விட்டான் என்றால் அவன் என்றும் பசிக் கொடுமைக்கு ஆட்பட வேண்டியதில் 3ல. தம் பசியைத் தாமே தவ வலிமையால் பொறுத்துக் கொண்ட துறவியை விட, பிறர் பசியைப் போக்குவோர் மேம்பட்ட வராவார். அதிலும் பசித் தொல்லை என்றும் ஏற்படாதவாறு வறுமையைப் போக்கியவர் மிக மேம்பட்டவராவார். "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி” என்பது ஒரு புதுமையான நோக்கிற்கு இட்டுச் செல்லும் அரிய குறளாகும், பொரு ளை மிகுதியாகத் தேடியவர், தம் வாழ்விற்குப் பயன்படுத்தியது போக எஞ்சியதைப் பல்வேறு வழிகளில் சேமித்து வருகின்றனர். அதிலும் இன்று வளர்ந்துள்ள சேமிப்பு வாய்ப்பு வியக்கத் தக்கதாகும், திருவள் ளு வர் பொருளைத் தேடியவர்களை அழைத்து, பொருளைச் சேமிக்க வேண்டும் என வற்புறுத்துகிறார், எங்கே சேமிக்க வேண்டும் சறுங்கள்! நீங்கள் காட்டிய வழியில் நடப்பவர்கள் நாங்கள் ஆகவே நீங்கள் சொன்ன இடத்தில் தவறாமல் சேமிப்போம் என உறுதி தந்தனர். எங்கே சேமித்தால் அது நாட்டிலுள்ள வறியவர்களைப் பல வழிகளில் நாளும், அழித்து கொண்டு வருகிறதோ அத்தகைய "அழி பசியைப் போக்கக் கூடிய இடம் எதுவோ அங்கே சேமியுங்கள்! அப்படியானால் செல்வர்கள் தாம் தேடியவற்றில் தம் தேவை போக எஞ்சியவற்றை எல்லாம் பொதுவிடத்தில் சேமித்து வறியவரின் பசியைப் போக்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். யாரும் தம் தேவைக்கு மேல் பொருளைத் தனி உடைமையாக வைத்திருப்பது அவர்கட்கும் நல்ல தன்று, நாட்டிற்கும் நல்ல தன்று! "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கப்பா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பனவை இரண்டே பிறவும் காப்பாம் ரொக் கும்பேசு செல்வத்துப் பயனை யீதல் துய்ப்போம் எனினே தப்புரு பலவே" என்னும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் பாடல் இக்குறள் காட்டும் நெறிக்கு வலிமை சேர்க்கும்! "மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம்தவம் முயற்சிதாளாண்மை - தேனின் சசிவந்த சொல்லியர் மேற்காமுறுதல் பத்தும் பசிவந் திடப்போம் பறந்து" என்னும் ஒளவைப் பெருமாட்டியின் பாடல் பசி அழிக்கும் பத்தைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. அழிபசி பசிய வாளா சராமல் " அழிபசி" என்பது அதன் கொடுமை வினங்கும் வகையில் குறிக்கிறார் வள்ளுவர், எவர்க்குரிய அழிபசி என்பதைக் கூறுவார் போல் " அற்றார் அழிபசி" என்று அழிபசியில் உள்ள " அழி" என்பது எவ்வெவ் அழிவுகளை எல்லாம் உள்ளடக்கியது. திருக்குறளுக்கு இதுகாறும் உரை காண்ட எவரும் ஒடுங்கிப் போகுமாறு விளக்குகிறார் வள்ளலார். "பசியினால் துன்பம் நேரிட்ட போது, மன எழுச்சியால் சரித்துக் கொள்ளக் கூடாது. சகிக்கத் தொடங்கினால் உயிர் இழந்து விடுவார்கள். . = உயிரிழப்பு - உச்சமான அழிவன்றோ ? "பசி நேரிட்ட போது பெற்றவர்கள் பிள்ளைகளை விற்றும், பின் தானா சன் பெற்றவர்களை விற்றும், பாவியைப் புருடன் விற்றும், புருடனை மனைவி விற்றும், அந்தப் பசியினால் வரும் துன்பத்தை மாற்றிக் கொள்ளத் து3M/வார்கள் என்றால் அன்னியமாகிய வீடு, மாடு, நிலம் டேடைம் முதலியவைகளை விற்றுப் பசியை நீக்கிக் கொள்வார்கள் என்பது சொத்து வேண்டியதில்லை!” = இவை உரிமை அழிவும் உடைமை அழிவும். "நலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் பசி நேரிட்ட போது, தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் "பசி நேரிட்டது என்ன செய்வது?" என்று அருகில் இருக்கி, அமைச்சர்களிடத்துக் குறை சொல்கிறான்" - இது பதவிப் பெருமித அழிவு. "பகைவரால் எறியப்பட்டு மார்பில் உருவிய பானத்தைப்பும் னகயால் பிடித்துக் கொண்டு எதிரிட்ட பசுவரை 15ல்லாம் அஞ்சாது ஒரு நிமிடத்தில் வெல்லத் தக்க சுத்த வீரரும் பசி நேரிட்ட போது, செராசரியத்தை இழந்து பசிக்கஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து, 'இனைப்பு வருமே" சண்டை எப்படிச் செய்வது" என்று முறையிடுகின்றார்கள்." = இது பேராண்மை அழிவு. "இவ்வுலகப் போகங்களோடு இந்திர போகம் முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து, முற்றும் துறந்து அரிதான் அறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகளும் இந்திரியங்களை அடக்கி மனோலயம் செய்து உண்மை நிட்டையில் இருக்கின்ற யோகிகளும், இறந்தோர்களையும் எழுப்பத் தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்களும் முனிவர்களும் தவசிகளும் பசி நேரிட்ட போது தங்கள் தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு வருகின்றார்கள் பலி நேராத போது நி கலங்குகின்றார்கள்." - இவை ஞான யோக தவசித்து அழிவுகள். "சொற்பனத்தில் ஓர் இழிவுவரினும் அது குறித்து உயிர்விடத் தக்க மானிகளும், பசி நேரிட்ட போது சொல்லத் தகாதவரிடத்தும் சொல்லி பானங்குலைகின்றார்கள்." "சாதி சமய ஆசாரங்களில் அழுத்தமுடைய ஆசாரியார்களும், பசி வந்த போது ஆசாரத்தை மறந்து ஆகாரத்திற்கு எதிர் பார்க்கின்றார்கள்." "கல்வி கேள்விகளில் நிரம்பி அறிதற்கரிய நுட்பங்களை அரிந்து செய்தற்கரிய செய்ன சுசுனைச் செய்து முடிக்க வல்லவர்களும் பசி நேரிட்ட போது அறிவும் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள்." - இவை மானம், ஒழுக்கம், கல்வி ஆகியவை அழிவு. "இராப்பகல் தோன்றாது புணர்ச்சி இன்பத்தில் பொங்குகின்ற சாமிகளும், பசி நேரிட்ட போது புணர்ச்சியை மறந்து காமத்தைக் கசந்து கலங்குகின்றார்கள், "நாமே பெரியவர் தமக்கு மேல் பெரியவர் இல்லை என்று இறுமாப்பு அடைகின்ற அகங்காரிகளும், பசி நேரிட்ட போது அகங்காரம் குலைந்து ஆகாரம் கொடுப்பவரைப் பெரியவராகப் புகழ்கிறார்கள். "ஒரு வகைக் காரியங்களில் அனேக வாசுகளாக உபசரிக்கச் செய்கின்றடம்பர்களும், பசி நேரிட்ட போது டம்பத்தை இழந்து மயங்குகின்றார்கள்." இவை போக அழிவு - செருக்கு அழிவு 27தாரித் தன அழிவு. * அழிபசி' விளக்கம்: சுடுகைத் துனளத்துக் கடலைப் புகட்டும் குறளாக்குகிறதா? அணுவைத் துளைத்துக் கடலைப் புகட்டும் குறள் ஆக்குகிறதா? வள்ளுவர் உள்ளம் கண்டவர் அல்லவா இதுள்ளார் "நின்னயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின் கிளைமுத லோர்க்கும் சுடுப்பின் கடுப்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது சவப்பாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மானாகிழ வோயே! பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே! என்னும் பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப் பாடல் நல்லதொரு விளக்கச் சான்றாய் மிளிர்கிறது. "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” 44 என்பது இல்வாழ்க்கைக் குறள். "நல் வழியில் தேடிய பொருளைப் பகுத்துண்டால் அவன் வாழ்வில் குறைவு இல்லை" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" இது கொல்லாமை அதிகாரக் குறள். நூலவர் சொல்லியவற்றுள் தலைமையானது பகுத்துத் தந்து பல உயிர்களையும் பேணி உண்பதாம்." "தம்பில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு" 1107 இது புணர்ச்சி மகிழ்தலில் இடம் பெற்றுள்ள குறள். இக்குறளின் வழியில் பகுத்துண்ணலின் பயனை விளக்கும் குறளே, "பாத்தூண் மரீடு யானைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது" T தாம் முயன்று முறையாக உழைத்துத் தேடிய உணவுப் பொருள்களைத் தாமே உண்டு மகிழ வேண்டும் என்று எண்ணுவது அறமும் ஆகாது: பண்பாடும் அன்று என்பதை உசர்ந்து, உண்பது எதன் காயும் தனித்து உண்ணாது இல்லாதவர்களுக்குப் பங்கிட்டு வழங்கிக் சேர்ந்து உண்பதை யார் பழக்கமாக்கிக் கொண்டார்களோ, அவர்கட்கு வறுமை வாராது ஒரு வேளை ஏதாவது ஒரு பொருந்தாச் சூழலால் ஏற்பட்டாலும் அண்டையில் உள்ள எவரும் அவர்களைப் பசியால் வருந்தவிட மாட்டார்கள்! அவர்கள் செய்த நற்பணி யார் வடிவத்திலாவது வந்து அவர்களைக் காக்கும்! | பல்லோரின் பசியைப் போக்கும் பண்பியல் பணியை வாழ்வியல் குறித் தானாகக் கொண்டொழுகியவர் ஒரு காலும் பசிப் பிணிக்கு ஆளாக மாட்டார் என நம்பிக்கை நாட்டிப் பகுத்துண் 55ம் கடப்பாட்டாளர் தொகை பெருக வழிகாட்டுகிறார் திருவள்ளுவர். “பகுத்துண்டால் பசி ஆறும்' என்பது பழமொழி. "யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி” என்பது திருமூலர் காட்டும் திருநெறி! "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே" என்னும் சங்ககாலப் பாண்டிய வேந்தன் இளம்பெருவழுதியின் பாடல் வரிகளும் நல்ல சான்றாகும். "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்" தாம் சேர்த்து 37வத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்து உதவாமல் தைத்து வைத்திருந்து வீ33 ாக்குவோரும் அப்பொருளை அழிய விட்டவர்கள் கெட்டுப் போக விட்டவர்கள் திருடு போகவிட்டவர்கள் எல்லாம் இரக்சுக் குணம் இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள், இத்தகையோர் வறியவர்கட்குத் தேவையானவற்றை வழங்கி அவர்கள் வாட்டத்தைப் போக்கி இன்புறும் நல்லின்பத்தை இதுவரை அடைந்ததில்லை போலும்! ஒருமுறை வறியவர்கட்குக் கொடுத்து உதவினால் அதனால் கிட்டும் இன்பத்தை அறிவர்; பின் இன்புறும் வாய்ப்பை இழக்க மாட்டார்கள். "வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்துமுகம் காட்டும் என் தெய்வக்கடிகை" என அமுத சுரபியின் தன்மையை மணிமேகலை உணர்த்துகிறது, "உடாஅதும் உண்ணாதும் தம்தடம்பு செற்றும் கெடாத்த நல்லறமும் செய்யார் - கோடா துது நனவத்து ஈட்டினார் பெப்பர் வான்தோய் மனாப் நாட்! உய்த்துஈட்டும் தேனீக் கரி” என்னும் நாலடியார் தரும் விளக்கமும் நினைந்து போற்றத் தக்கதாம்! "நல்லாறு எனினும் கொளல் தீது" என்பதே வள்ளுவர் நெறி! பிறரிடம் ஒன்றை வேண்டிப் பெறுவதே" உயிர் வாழ வேறு வழி இல்லாத போது மேற்கொள்ளத் தக்கதாகும், இரப்பதால் மானத்திற்குக் குகார் எர்படலாம் கேட்டவர் எல்லாரும் வழங்கி விடுவார்கள் என்றும் சொல்ல முடியாது: கொடுப்பவர் எல்லாரும் மதித்துக் கொடுப்பர் என்றும் எதிர்பார்க்க முடியாது, எப்படி ஆயினும் இரந்து நிற்றல் பெருமைக்குரிய தன்று! துன்பமானதே! இழிவானதே!' எனக் கூறுவதுடன், வள்ளுவர். அக்கம் பக்கத்தில் வேளா வேளை வயிறார உண்ண வாய்பில்லாது வெறுமையால் வாடும் வறியாரும் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும், தம்மிடம் பலருக்கும் உணவு வழங்க வாய்ப்பிருந்தும், யாருக்கும் கொடுத்து உண்ண வேண்டும் என்று எண் ணாது தனித்து உண்டு வாழ்கிறதே சிவ மனிதப் பிறவி அஃது மிக இழிந்த பிறவியாகும்! அப்படி உண்பதால் ஒரு காலத்திலும் இன்பம் ஏற்படப் போவதில்லை! தனித்து உண்ணல் இரந்து வாழ்வதிலும் இன்னாது என்பது அவர்கட்கே தெரியும் என்பதைத் தெரிவித்து, இன்புற்று வாழ வாய்ப்பிருந்தும் ஏன் துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறீர்கள் என உணர்த்த எண்ணியே "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணால்” என்கிறார், டர்டர் பசியால் தடாண்டாதாந்திச் சென்றார்கட்கு நடள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாது தான் போய் விருந்தினன் ஆதலே நன்று" என நாலடியார் கூறும் நல்லுரையையும் ஒப்பிட்டு நோக்கலாம்! மனிதன் வாழ்வில் சந்திக்கின்ற துன்பங்களைக் கணக்கிட இயலாது. "மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்' என்பது ஒரு பழமொழி பொதுவாக மனிதர்களில், பெரும்பாலோர் இன்பத்தை விட துன்பத்திற்கே மிகுதியும் ஆளாகிறார்கள்! இறப்பும் நிகழாமல் உணர்வும் இருந்து சுடுநோய்க்கு ஆட்பட்டோ நேர்ச்சிக்கு ஆட்பட்டோர் உயிருக்குப் போராடுகின்ற போராட்டம் இருக்கிறதே அது உரியவர்க்கு மட்டுமல்லாது அவருடன் தொடர்புடையவர்கட்கும் துன்பம் தரும் நிலையாகும், சாவும் வாராமல் உயிர் துடிதுடிக்கப் போராடும் போராட்டமே துன்பங்களில் எல்லாம் பெருந்துன்பம் ஆகும் என்பது பெரும்பாலும் தெரிந்த செய்திதான்! சாவுத் துன்பத்தையும் சிறிய துன்பம் ஆக்கக் கூடியதுன்பம் அல்லது சாவு இனிது, எனக் கருத வைக்கும் துன்பம் ஒன்று உண்டு என்கிறார் திருவள்ளுவர்? சாளை இனிதாக்கும் துன்பம் தன்னிடம் உதவி நாடி வந்தவர்களை எல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, அவர்கட்கு வேண்டுவன வர்னரை எல்லாம் உவப்புடனும் உரிமையுடனும் கடமை எனக் கருதி வழங்கப் போற்றி வாழ்ந்து வந்தவர் இன்று அவரிடம் பழைய இனிய வாயும், வளமான மனமும், இருக்கிறது அள்ளிக் கொடுக்கக் கையும் அணியமாக இருந்தும் எடுத்துக் கொடுக்க இன்று எந்தப் பொருளும் இல்லையானால் அப்பொழுது அவர் மனம் அடையும் வேதனை இருக்கிறதே அது எது போன்றது மரண வேதனை போன்றதா? இல்லை அதனினும் விஞ்சிய துன்பமாகும்! பிறர்க்கு உதவி செய்வதற்காகவே வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என எண்ணி வாழ்ந்த பெருமக்கட்கு, உதவி செய்ய முடியாத நெருக்கடி ஏற்படுமானால் உதவி நாடி வந்தவர்கட்கு உதவ முடியாது இருந்து என்ன பயன் எனக் கருதிச் சாவைக் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்! கொடுத்து உதவ வாய்ப்பு இல்லாமையே எனக்குத் துன்பம்! சாவது துன்பமன்று! அதிலும் தன் சாவு ஒரு குடும்பத்தை அதுவும் புலமை நலம் சான்று பெருமகன் குடும்பத்தை வாழி வைக்க உதவுமானால் அதைவிட மகிழ்ச்சியோ பெருமையோ வேறு எது இருக்க முடியும் எனக் கருதிப் பெருந்தலைச் சாத்தனார்க்குத் தலை தர வாள் தந்த குமணனின் கொடை மரம் சும்பும் செயல் தாக்கு இடம்கியமாகும்! தயரதனிடம் வரம்பெறக் கைகேயியைத் தாண்டிச் சூழ்ச்சி செய்யும் மந்தரை, "தூண்டும் இதன் சாாலும் கவறுமையும் தொடர்தரத் தயரால் ஈண்டு வந்துடனை இரந்தவர்க்கு இருநிதி அவளை பேராண்டி ாதியோ? ரெகள் துதிப்போ? பிபரப்பு நோயால் மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்காவனம் போழ்தி" எனக் கூறும் கம்பன் தன்வொரு ஏரிரம் குறள் பாலிராயர் கட்டிடத் தொங்க விட்டுத் தன் நோக்கிற்கு அளித்துக் காட்டும் திறன் போற்றத் தக்கது! வறியவர்க்கே வழங்கு பெற்று வாழ்வது தீதே! இல்லை என்னாது கொடு! வறியவர் துன்பத்தை அவர்நிலையில் நின்று கேள்! பகுத்து விடகார்! பசியின்றி வாழ்வாய்! பசியால் வருந்துவோர் இல்லை' என்று ஆக்கு! பசித்தோர் "வாயிறே நல்ல காப்பகம்! ஈத்து உவக்கும் இன்பம் இராணயற்ற இன்பம் இறக்கும் போதும் ஈகையாளனாய் இற! இரவாதே இறவாப் புகழ் பெறு! 24. புகழ் இருள்சேர் இருவிளையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” இதுே இறைவணக்கத்தில் வரும் புகழ்க்குறன். *இறைவனின் அழிவற்ற புகழ் வாழியை விரும்பி நடப்பவரிடத்து அறிவை மயக்கும் நல்வினைகளும் தீவினைகளும் சேரமாட்டா." " அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இப" இந்து அறன் வலியுறுத்தலில் இடம்பெறும் குறள். * அறனழியால் வரும் இன்பமே இன்பமாம், மற்றை வழியில் 12வருவது கண்டமேயாம்! புகழும் தாராதனாவாம்." "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை" இது வாழ்க்கைத் துணைநலக் குறள்களில் ஒன்று. "புகழ் வாய்ந்த மனைவியை அடையாதவர்க்குத் தம்மைப் பழித்துக் கூறுவார் முன் பெருமித நடைஇல்லை" "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலையா" "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்" இரண்டு பாடல்களும் பொறையுடைமையில் இடம் பெறுவன. "தோண்டுபவளையும் சுமக்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்பவரையும் பொறுத்தல் உயர்ந்த பண்பு" "தீமை செய்தவர்க்கு அப்பொழுது இன்பம் கிட்டலாம். ஆகாய் பொறுத்துக் கொண்டவர்க்கு என்றும் புகழ்." "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்" புடு என்பது வாய்மைக் குரள். பொய் சொல்லாமை போன்ற புகழ்ப்பேறு எதுவும் இல்லை, அதில் குறையாமை எல்லா அறங்களையும் தரும்." "பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு" "பொச்சாப் பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நூ யோர்க்கும் துணிபு" ( 533 "புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்" 538 இம்மூன்று குறள்களும் பொச்சாவாமையில் இடம் பெறுவன. "அறிவை நிலையான வறுமை அழிப்பது போல மறதி புகழை அழித்து விடும்" "மறப்போர்க்குப் புகழ்பெறும் வாய்ப்பு இல்லை; அது உலக நாலார் முடிவு" "பெரியோர்களால் புகழப்படும் நற்செயல்களை மறவாமல் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்ய மறந்தவர்க்கு, எக்காலத்தும் நன்பைப் இல்லை" "என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை” இது வினைத் தூய்மையில் இடம் பெறுவது, "புகழும் நன்மையும் தாராத செயலை எவரும் எங்கும் கட்டாயம் நீக்கி விட வேண்டும்." "சுழலும் இசைவேண்டி, வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து" இஃது படைச் செருக்கில் அமைந்த குறள். "த டாகளாவிய புகழை விரும்பி நயனரப் பொருட்டாக எண்ணாத வீரர், வீரக் கழல் அணிதல், அக்கழலுக்குப் பேரழகு செய்யும் தன்மையதாகும்.” "புகழ் நின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் நான்பற்று இகழ்வார்பின் சென்று நிலை” என்பது மானத்தில் வரும் குறள், "வாழும் காலத்தும் புகழைத் தாராது: வணங்கப்படும் புகழ் உலக நிலையையும் தாராது, ஆகவும் தன்னை இகழ்பவர்க்குப் பிரின்னே சென்று trbானத்தில் தாழ்ந்து நிற்கின்ற நிலை ஏன்? "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலவுக்கும் பொறை" 1003 இஃது நன்றியில் செல்வத்தில் வரும் குறள். "பொருள் தேடுவதையே விரும்பி, அப்பொருட் பயனாம் புகழை விரும்பாத மக்கள் மண்ணில் பிறத்தல்! இந்நிலத்திற்குப் பாரம்" இன்னொரன்ன குறள்களின் வழி: ஒப்பற்ற நல்லியல்புகளைத் தன்னகத்தே கொண்டவன் நடந்த வழி புகழ் தரும் வழி என்றும்; அறநெறி வாழ்வே புகழ் தரும் என்றும், புகழ்வாய்ந்த மனைவியை Iணந்தோர் பெருமிதமாக வாழ்வார் என்றும்; பொறுமை நிலைத்த புகழ்தரும் என்றும்; பொய்யாமை உயர் புகழ் தரும்; மறதி புகழ் அழிக்கும் கடமையை மறந்தோர் புகழ் பெற வழி இல்லை புகழ் தாராச் செயலை விலக்க வேண்டும் என்றும்; உயிரைக் கொடுத்தும் புகழ் பெற வேண்டும் என்றும் மானம் கருதார் புகழ் பெறார்; பொருளையே விரும்பிப் புகழை விரும்பார் நிலத்திற்குப் பாரம் எனவும் கூறி வருவதை அறிய முடிகிறது. "புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுதான் நமது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவிதச் சங்கடங்களையும் தாங்கிக் கொள்ளக் கூடிய ஓர் ஆற்றலை நமக்கு அளிக்கிறது" என்பது செர்மன் நாட்டுப் பொன்மொழி! “புகழ்தான் மனித வாழ்க்கையை அமைக்கிறது, புகழ் பெற வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவன், மனிதனாக வாழவே தகுதி அற்றவன் எனக் கூறுகிறார் கென்றி போர்டு. மனிதன் தன் வாழ்க்கை முறையைச் செவ்வையாக அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் புகழ்பெற இயலும், நெரியோடு 1.வாழா எம்மனிதனும் புகழ் பெறத் தகுதி அற்றவன் ஆவான் எனக் கூறுவது இன்னும் பொருத்தமாகும். - ஆபிரகாம் லிங்கன் மூன்றாம் நிலை வழக்கறிஞராகப் பணிபுரியும் காலத்தே அவரை எதிர்காலத்தில் மணக்க விரும்பியவள் மேரி டாட் என்ற பேரழகி. அவள் ஒருநாள் விங்கனிடம் "நீங்கள் எதற்காக வழக்கறிஞர் தொழில் செய்கிறீர்கள் என வினவினாள். இலிங்கன் 'புகழுக்காக - அந்தப் புகழினால் கிட்டும் மன அமைதிக்காக' என விடை அளித்தார், மேரி 'வெறும் புகழ் மட்டும் மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடுமா? என வினவினாள். இkங்கன், "இந்த ஒருச்சாண் வயறு நிரம்புவதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட வேண்டுமா? என எதிர் வினாத் தொடுத்தார். அன்று அவர் மறுமொழியில் மேரி நிறைவடைய வில்லை, காலம் உருண்டோடியது இலிங்கன் அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற குடியரசுத் தலைவராக ஒளி வீசிக் கொண்டிருந்த, காலத்து அவருடைய மனைவியாக விளங்கிய மேரி ஒருநாள் விங்சுனிடம் “ஒரு காலத்தில் உங்களை நான் பணம் தேடும்படி வற்புறுத்தினேன். இவ்வளவு காலத்திற்குப் பிறகுதான் அது தொடர்பான ஒரு உண்மை புரிகிறது" என்றாள். * அது என்ன? என்று கேட்டார் இலிங்கன். “பணம் தேடிய வழக்கறிஞர்கள் எவரும் குடியரசுத் தலைவர் ஆகவில்லை . புகழ் தேடிய என் அன்பர் குடியரசுத் தலைவராகி விட்டார்" என்றார் போரி. | ஆபிரகாம் லிங்கனின் எளிய, நேர்மையான பணத்தாசை அற்ற வாழ்வே அவரைப் புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றியது. பணம், பதவி, படிப்பு = புகழ் பெறத் துணை புரியலாம்; துணைபுரியாமலும் இருக்கலாம். இவை மூன்றிலும் கீழ் நிலையில் ஒருவர் இருந்தாலும் புகழ்பெற இயலும். வாழவேண்டிய முறைப்படி எளிய நிலையில் இல்வாழ்வு வாழ்ந்தும் புகழ் பெறலாம். ஒவ்வொருவரும் தத்தம் தனி வாழ்வாயினும், மனைவி மக்களோடு, வாழும் குடும்ப வாழ்னாயினும், வருவாய்க்காகச் செய்யும் தொழில் வாழ்வாயினும், பொது நலம் கருதிச் செய்யும் மூதாடு வாழ்வாயிலும் எத31+யும் பார்த்தாய் ஈமயுடனும் பொறுப்புணர்ச்சியுடன் யாரும் குறை கா 18:337 இடந்தராத வகையில், பிறர்க்கு வழிகாட்டியாய் அமையும் வகையில் மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டும்! இவரைத் தவிர வேறு எவராலும் இப்ப33ரியை இவ்வளவு சிறப்பாகக் செய்ய இயலாது என் நடு நிலையாளர் ஆய்ந்து கூறுமாறு எவரொருடைய பணி அமைகிறதோ அப்பணி எதுவாயினும் அதில் அவர் புகழ் பெறுவது உறுதி! செய்யத் தக்க செயலைச் செய்ய வேண்டிய முறைப்படி சிறப்பாகச் செய்வார் எல்லாம் புகழ் பெற முடியும். பொதுவாக மற்றவர்களால் செய்ய முடியாது என்று பலர் திகைத்துப் பின் வாங்கித் தோல்வியுற்ற பணியையும் கடு முயற்சியின்றி நுண் ஒணறிவால் செய்து வெற்றி மேல் வெற்றி பெறுவோர் புகழ் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவரிடம் அமைந்துள்ள தனித்திறனைக் கொண்டு பலருடைய உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கே கவருமாறு தம் திறனை வெளிப்படுத்திச் சாதனை புரிந்து புகழ் பெறுவார் ஏராளம் ஏராளம்பேர். சமையல் கலை, தையல் கலை, கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, நாட்டியக் கலை, கூத்துக் கலை, நடிப்புக் கலை, எழுத்துக் கலை, பேச்சுக் கலை, போன்ற கலைத்துறை வழிமுத்திரை பதித்துப் புகழ் பெற்றவர் பலர். அறிவுத் துறையில் கல் இலக்கியம் இலக்கணம், அறிவியல், பொறியியல், மருத்துவம் வேளாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கிப் பெருகி வரும் துறைகள் அதன் உட்பிரிவுகள் பற்றிய ஆய்வுகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும், புதியன படைப்பதிலும் முயன்று நின்று அழியாப் புகழ் பெற்ற அறிஞர்கள் எண்ணற்றோர். முகம்மது நபி, இயேசுபெருமான் புத்தர், மகாவீரர் போன்று மக்களுக்குக் கடவுள் நெறி காட்டிச் செயற்கரிய செய்து, பின்பற்றாளர்களை உலகமெல்லாம் பெருக்கித் தம் நோக்காலும் போக்காலும் எண்ணற்றோர் உள்ளங்களில் இறை ஒளி வீசிக் கொண்டிருக்கும் பெரு மக்கள் பலர் உயர்புகழ் பெற்றவர்கள் ஆவர், செங்கோல் ஆட்சியின் சீர்மையால் குடிதழுவிக் கோலோச்சிப் புகழ் பெற்ற மன்னர்கள் உண்டு, தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் ஒருங்கே நிறைந்து வாழும் நன்னாட்டை உருவாக்க உழைத்த ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, அமைந்த பண்பாளர் எல்லாம் புகழாளர்களே! மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமை, மூட நம்பிக்கை, ஏற்றதாழ்வு, போன்றவற்றை அகற்றி மக்களைக் கற்கத் தூண்டி, அறிவு வளம் பெறவும், பகுத்தறிவுச் சிந்தனை வளரவும், பிறப்பொக்கும் என்னும் உண்மையை உணரச் செய்யவும் எழுதியும், பேசியும், போராடியும் மக்களை உரிமையுடைய மக்சுளாய், மானம் போற்றும் அறிவுடைய மக்சுளாசுவும் வாழ அயராது உழைத்துப் பெருந்துன்பத்தை எல்லாம் தாங்கிக் கொண்ட பெரியார், அம்பேத்கார் காந்தி அடிகள் அண்ணா போன்ற பெருமக்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற புகழ் மணிகள் ஆவர். உரியவற்றைச் செய்தும் புகழ் பெறலாம். செய்யத் தக்கனவற்றையே செய்தும் புகழ் பெறலாம்! செய்வதற்கு அரியனவற்றைச் செய்தும் புகழ்பெறலாம்! உரியனவற்றைத் தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்! கிடைத்த வாய்ப்புகளைப் தச்சுவாறு பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். பழைய நல்ல பாதையை விடவும் கூடாது: புதுப்பாதை அமைக்கத் தயங்கவும் கூடாது; துன்பங்களைக் கண்டு துவண்டு விடவும் கூடாது! இடையில் கிட்டும் இன்பத்தில் மூழ்கி விடவும் கூடாது. - புகழ் மாளிகையின் கதவு திறந்தே இருக்கிறது! ஆனால் நுழையும் தகுதியை அவரவரே உருவாக்கிக் கொள்ள வேண்டும்! 'புகழ்' என்னும் இல்லத்தார் விரும்பி வரவேற்கும் "விருந்தனராய்" அனைவரும் விளங்க வேண்டும் என்பதே திருவள்ளுவரின் பெருநோக்கு! இந்தியத் தலைமை அமைச்சர் அறிஞர் மன்மோகன் சிங்கை இங்கிலாந்து ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் “பெருமிைக்க அறிஞர் பட்டம் வழங்கிப் பாராட்டுகிறது. துணைவேந்தர் " அற்புதமான பொருளாதார நிபுணர், விவேகம் மிக்க அரசியல் மேதை, மக்களுக்காகப் பாடுபட்டு வரும் மாவீரர், உலகக் குடிமகன்” எனப் புகழ் மாலை சூட்டியுள்ளார். புகழ் பெற வழிகள் பல இருப்பினும் தந்தவத்தை விடப் பிறர் நலத்திற்கு முதன்மை தரும் ஒப்புரவும், வறியார்க்கு வழங்கும் ஈகையும் மிகச் சிறந்த வழிகள் எனத் திருவள்ளுவர் கருதுவதால் திருவள்ளுவர் இவ்விரண்டு அதிகாரங்களை அடுத்துப் புகழை நிறுளியுள்ளார், "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது நாதியம் இல்லை உயிர்க்கு” ஒள்வொருவரும் இம்மன் 23ல் எத்தன ன ஆ கக்கடுக்காலம் வாழ்கிறார்கள் என்பது முதன்மையன்று. உயிர் வாழும் ஒவ்வொரு நாளும் உயிருக்குப் பயன் உடைய நாட்களாவே அமைய வேண்டும் அல்லது அமைத்துக் கொள்ள வேண்டும்! ஒவ்வொருவரும் தம்மைவிட வறுமை நிலையில் வாடுவோர் வாட்டத்தைப் போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்! இயன்றதை வழங்கி உதவிபுரிய வேண்டும்! இதுவும் வாழ்வியல் சுடமைகளில் ஒன்று என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்! நாம் வாங்கி வாழ்பவராய் என்றும் இருக்கக் கூடாது. நம்முடைய பன்முக வாழ்விலும் புகழ் பெற வேண்டும்! அறிஞர்களின் பாராட்டிற்கு உரியவர்களாய் நாம் நடந்து கொள்ள வேண்டும்! "வறியார்க்கு வழங்குக! புகழோடு வாழ்க! அதுவே உயிர்க்குச் சிறந்த ஊதியம் மக்களாய்ப் பிறந்தோர் வாழ்வு புகழ் வாழ்வாக அமைய வேண்டும்! அதுவே பயனுடைய வாழ்வாகும்! பொருள் தேடியும் புகழ் பெறலாம்! பொருளை வழங்கிப் பெறும் புகழே சிறந்த புகழ். ஆகவே முயன்று தேடுக! பிறர் பயன்பட வாழ்க! சென்னை அரங்காச்சாரி மருத்தவ மனைக்கு இழுவை வண்டியில் நோயாளியை ஏற்றி வந்து மருத்துவமனை வாயிலில் மயங்கி வீழ்ந்த வண்டி ஓட்டியை உள்ளே தூக்கிச் சென்று தக்க முதல் உதவி செய்ததுடன் வயிற்றில் வளர்ந்த சுட்டியையும் அறு:30:3! மருத்துவம் செய்து அகற்றி பலவயமாக எல்லா மருத்துவமும் செய்ததுடன் இனிக் குடிக்கக் கூடாது என உறுதி மொழியும் வாங்கிக் கொண்டு, இரண்டு மாதம் ஓய்வு எடுத்துக் கொள், உன் இரண்டு மாதக் குடும்பச் செலவிற்கு இந்தச் தொகையையும் பெற்றுக் கொள் என வழங்கி, உடல் நோயையும் குடிப் பழக்கத்தையும் போக்கிய மருத்துவர் அரங்காச்சாரி இக்குறளுக்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்த புகழாளர். "பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைப்வைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் இருநிதிக் கிழவன்” என இளங்கோவடிகள் காட்டும் கோவலனின் தந்தை மாசாத்துவான் கொடுத்தும் புகழ் பெற்ற புகழ்ச் செல்வனாவான். "எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயலென்று = வையகத்து ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது தாதியம் இல்லை தயிர்க்கு" என்னும் வெண்பா யாப்பருங்கல விருத்தியில் இடம் பெறும் எடுத்துக்காட்டுப் பாடலாகும்! உலகில் நற்செயல் புரிந்தோர் அனைவரும் பெரும்பாலும் பாராட்டிப் புகழப்படுவது இயல்பு. சிறந்த இசைக் கலைஞனின் இசைத் திறனை இசை நுணுக்கங்களைத் தெரிந்த இசை அநஞர்களே பாராட்டுவர். அதுபோல் ஒரு அறிவியல் புதிய கண்டு பிடிப்பை அத்துறை வல்லாரே பாராட்டிப் புகழ முடியும். ஆனால் பிறரைப் பாராட்டும் பெருமனம் படைத்த அனைவராலும் ஒருங்கே பாராட்டுப் பெறும் வாய்ப்பு வறியவர் வறுமை தீரப் பொருள் வழங்கிய ஈகையாளர்கள் தான் அவர்களே அனைவர் பாராட்டையும் ஒருங்கே பெற இயலும். ஏனெனில் பசி நீக்கும் அறமே அறங்களில் சிறந்தது. உடனடி நன்மை தருவது, ஒருவனுக்கு உயிர் வழங்கும் கொடையாகும், உலகிற்கு நாம் செய்பவர் பட்டியலில் முதலிடம் பெறும் தகுதி கொடையாளர்களுக்கே உண்டு என்பதை உறுதிப்படுத்தும் குறளே ! "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்போல் நிற்கும் புகழ்" என்பதாகும். "இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை" என்னும் முதுமொழிக் காஞ்சியும் இதனையே வழிமொழிகிறது. "வெய்ய குரல்தோன்றி வெஞ்சினவே அட்கொளினும் பெய்யும் மழைமுகிலைப் போதுவரால் = வையத்து இருள் பொழியும் குற்றம் பலகானினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ்” என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாடலும் மழையை மேற்கோள் காட்டி ஈவார் புகழைப் போற்றுகிறது, "துலைபுக்க. பெரியோன் பெற்றி மறந்த நாள் உண்டோ ? என்று இராமனனப் பேச வைக்கிறான் கம்பன், "வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கானா மஞ்சளுக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புகடான நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச் சிறுவீ முல்காப்பக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள் ளருவி வீழும் சாரல் பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமனரி பாலுளைப் புரவியொடு வையகம் அருள் ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல்தொடித் தடக்காகக் காரியும், நிழல்திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் | ஆபயர்ச் செய்தவற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக் கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெப்லேல் அரவக்கடல் தானை அதியனும், கரவாது நட்டோர் உவப்ப நடைப்பரி சாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை நறும்போது கருவிய நாகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு எழுசமம் கடந்த மாழுவுறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் விரிகடல் வேலி வியாபகம் விளங்க ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கைப் பகப்லியக் கோடியர் புரவலன் பேரிசை நல்லியக் கோடன்" எனக் கொடுத்துப் புகழ் கொண்ட பேசுன், பாரி, காரி, ஆய், அதியன் நள்ளி, ஓரி என்னும் எழுவரோடு ஒய்மான் நாட்டு நல்லியக் கோடனையும் சிறுபாணாற்றுப் படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் வழங்கிய புகழ் மொழி ஈராயிரம் ஆண்டு கடந்தும் அள்வள்ளல்களின் புகழ்பாடிக் கொண்டி ருப்பது நல்ல சான்றாகும், இவ்வுலகம் ஒரு நிலையில் நில்லாத உலகம்! இவ்வுலகில் உள்ள கோடான கோடி உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எதுவானாலும் தோன்றி அழிந்து கொண்டே இருப்பனவாகும். ஒருநாள் வாழ்வனவும் உண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்வனவும் உண்டு எனினும் நிலைத்து வாழ்வது எதுவும் இல்லை. "நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு" என்பது மனிதனுக்குச் சொன்னதானாலும் அனைத்துப் பொருளுக்குமே பொருந்துவதாகும். இந்த இயற்கை முறையை வென்று நாம் இவ்வுலகில் என்றும் வாழ வேண்டும். வெள் ளுளரே! அதற்கு வழி கூறும் என வினளின் நீங்கள் இவ்வுலகில் என்றும் வாழ ஆசையா? தன்று உங்கள் ஆசையைப் பாராட்டுகிறேன். நீங்கள் இந்த உடலோடும் உயிரோடும் வாழும் நாளை எல்லாம் வீண் நாள் ஆக்காமல், யாருக்கும் தீங்கின்றி நல்லதையே செய்து வாழுங்கள்! அப்படி வாழ்ந்தால் உங்களுக்கு இன்னொரு உடம்பு கிட்டும் அவ்வுடம்பிற்குப் புகழ்: உடம்பு என்று பெயர், அவ்வுடம்பிற்கு அழிவு கிடையாது! அவ்வுடம்பு என்றும் வாழும்! அப்புகழ் உடம்பில் நீங்கள் அழியாது என்றும் வாழ்ந்து கொண்டிருக் கலாம்! உங்கள் காலத்தவர் மட்டுமன்றிப் பின்வந்தோரும் உங்களைப் போற்றிப் புகழ்வர் என்றார் வள்ளுவர். எப்படி ? "ஒன்றா நடப்பகத்து டேயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இன்" சரிதானே! வள்ளுவர் கூற்று. நெப்போலியனை ஒரு தடவை சந்தித்த மதகுரு பேராசில் ஆசை கொண்டு போர் போர் என நம் ஊராக அலைகிறாயே நீ இறந்து போன பின்பு நீ கைப்பற்றிய நாடுகள் எல்லாம் உன்னுடையவையாக இருக்கப் போவதில்லையே" என்றார். நெப்போலியன் கம்பீரமாகச் சிரித்துக் கொண்டு, "போர்சுகள் என்னுடையதாக இரா என்பது எனக்கு நன்கு தெரியும், பேரரசுகளை எப்படி அமைக்க வேண்டும் என்ற எண்ணமும் அதன் காரணமாக எழுந்து வீரமும் அந்த வீரத்தினால் எழுந்து புகழும் இந்த உலகம் உள்ள வரை என்னுடையதாக இருக்கும் என மறுமொழி தந்தான் என்பது வரலாற்றுச் சான்றாகும். "மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே!” துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையின் தொன்காம் மாக்களின் தொடர்பு அறியலரே!" குமணன் தந்த வாளுடன் இளங்குமணனைக் கண்டு நெறிப்படுத்தும் நோக்குடன் பெருந்தலைச் சாத்தனார் பாடிய பாடலின் முதற்பகுதி அதில் முதல் இரண்டடியும் குறட் கருத்தை உடன்பாட்டு முறையிலும் பின்னிரண்டு அடிகளும் எதிர்மறை வசையிலும் விளக்கி அமையும். "யென்றியகள் என்ற போதும் பேதம் கடள்ளளவும் யானும் நின்றுளன் அன்றோ , மற்றுஅவ் இராயன்பேர் நிற்கும் ஆயின் பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து அன்றோ இன்று கடளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ ?" என இராவணன் கூறுவது போல் பாடும் கம்பன் இராவணன் புகழுக்கும் இசுழு-க்கும் வேறுபாடு தெரியாதவனாய் இருக்கிறானே என்பதை உணர்த்தப் பாடியதாகும்! 1. கருவிலே திருவுடையார், சுவிப் பெருங்கடல் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை . 2, சீரிய தமிழ்க் காதலர், செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் சீ.யு. போப், 3, ஆற்றல் மிகு மொழி வல்லார் அயர்லாந்துத் தமிழ் அறிஞர் டாக்டர் ராபர்ட் கால்டுவெல். 4. சிவநெறிச் செல்வர், செந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர். 5, திருவருட் செல்வர், தெய்வத் தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கனார். 6, புலமைக்கோர் இமயம், புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாகராசச் செட்டியார், 7. நெடுங்கதை மூலவர், நீதித்துறை முதல்வர் மாயூரம் வேத நாயகர். 8, காப்பியப் புலவர், கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. 9, பைந்தமிழ்ப் பதிப்பாளர், செந்தமிழ்ச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை . 10, செந்தமிழ்க் கவிவாணர், சேதுபதிப் பாவலர் மாம்பழக் கவிச் சிங்க நாவலர். 11, நித்தம் தமிழ் வளர்த்த முத்தமிழ்க் காவலர் முகவை பொன்னுச்சாமித் தேவர். 2, புண்ணிய அருட்கவி, புகழ்மார்ந்த வர்களி வண்ணச் சாபம் தண்டபாணி சுவாமிகள். 13. திருமுறைப் பதிப்பாளர், திருப்பணி அறச்செல்வர் சர்க்கரை. வீ. செந்தில் வேலு முதலியார். 14. தமிழ்த் தெய்வக் குசுமணி, தகைமையுறு அருள் I 3GP, தவசியர் பாம்பன் சுவாமிகள். 15. சித்தாந்த சரபம், செந்தமிழ்த் தீபம் பூவை. கலியாண சுந்தர முதலியார். | 16. வரலாறு தந்த முதல்வர், வளர்தமிழ்த் தொண்டர் அறிஞர் நரசிம்மலு நாயுடு. 17, புண்ணியத் தமிழாகரர், தன்னிகரற்ற தமிழ்த் தாத்தா பேராசான் B.வே.சா, 18, கற்றுணரும் நூல் படைத்த கற்றறிந்தார் போற்றும் வீ, கான்க்ரிப் பிள்ளை, 19, நாடக நூல் வழங்கிய நல்லாசிரியப் பெருந்தகை அறிஞர் பெ, சுந்தரம் பிள்ளை , 20. சிவம் பெருக்கிய பாவலர் செந்தமிழ் காத்த காவலர் புலவர் சிந்நயச் செட்டியார், 31, சித்தாந்த வித்தகர், செந்தமிழ்ச் செல்வர் அறிஞர் சொக்க லிங்க ஐயா, 22, மொழி நூல் அறிஞர், முத்தமிழ் உரைஞர், மாகறல் கார்த்திகேய முதலியார், 23, செந்தமிழ்ச் செம்மல் தமிழாகரர் வெள்ளக்கால் வெ.ப., சுப்பிரமணிய முதலியார். 24. ஈடில்லாத் தமிழ்ச் சிகரம், இசைத் தமிழ்ச் சாகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர், | 25. ஈழ நாட்டு இதழாசிரியர், இனிய தமிழ் ஆசுகவி கல்லடி, வேலுப்பிள்ளை. 26, பயில்வித்த தமிழாசிரியர், பன்னிரு நூலாசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். 27. பெரும்புலவர் தலைமணி, பின்னத்தூர் கலைமணி அறிஞர் அ. நாராயணசாமி ஐயர். 28, சீரிய பதிப்பாசிரியர், செந்தமிழ் ஆர்வலர் செல்வக் கேசவராய முதலியார், 29. இசை ஞானச் செம்மல், இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை , 31, கன்னித் தமிழ்க் காவலர், காவடிச் சிந்துப் பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், 31. போற்றும் தமிழ்த் தொண்டர் புகழ் மணக்கும் படைப்பாளர், மு.ச, பூர்ணலிங்கம் பிள்ளை , 32. நாடகத் தமிழ் நல்லாசிரியர் நற்றமிழ் இசைப் பாவலர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள். 3.3, சங்கம் கண்ட தாவலர், சங்கத் தமிழ்க் காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். 34. பைந்தமிழ் ஆர்வலர், பன்னரும் நூலாசிரியர் பரிதிமாற் கலைஞர். 35. வடமொழி வல்லுநர், தமிழ்மொழிப் பேராசான் மகா வித்துவான் இரா. இராகவ ஐயங்கார். | 36. பெரும் புலமைச் சிங்கம், பெருஞ்சொல் இமயம் பேராசான் நா. கதிரவேற்பிள்ளை , 37. சித்தம் தமிழ் மூச்சு, வித்தகத் தமிழ்ப் பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா, 38, பல்கலை வித்தகர் பைந்தமிழ்ச் சித்தர் பா.வே. மாணிக்க 39. வாழ்க்கையால் மேலோர், வளர் தமிழ் நூலார். வ.. சிதம்பரனார், 40. சிவநெறிப் பெருமான், ஞானத் தமிழ் அருளாளர் தவத்திரு ஞானியார் அடிகள். 41. தளர்வறியாக் கலைஞர், தமிழ் நாடகத் தந்தை பம்பல் சம்பந்த முதலியார், 42. மாத்தமிழ்ச் செம்மல், மகாமதிப் புலவர் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர். 43, பல்சுவை: வித்தகர், பன்ர ல் ஆசிரியர் கடலூர் பல்ராம் ஐயர், 44, குழந்தை இலக்கியக் கோமான் குமரி நாட்டுப் பெருமான் சுவிமணி தேசிக விநாயகம் பிள்ளை . 45, பாடநூல் ஆசிரியர், பைந்தமிழ் ஆசான் கா, நமச்சிவாய முதலியார். 46, தனித்தமிழ் இயக்கத் தந்தை, தமிழ்ப் பேரறிஞர் மறைமலை அடிகளார். 47. முகவை மூதறிஞர், முதுபெரும் புலவர் மு. இராகவ 48. கற்றவர் போற்றிய காரைக்கால் புலவர் அமுத கவி' சாயபு மரைக்காயர். 49. அரசியல் அற நாயகர், அருந்தமிழ்ப் பன்னூலார் மூதறிஞர் இராசாசி. 50. தவத்தமிழ் மாமணி, சிவத்திருக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், 51. இளசைப் புலவர், இனிய தமிழ் ஆய்வாளர் நாவலர் சோம சுந்தர பாரதியார், 52. கம்பராமாயணப் பதிப்பாளர் கால ஆராய்ச்சி அறிஞர் சு.நா, சிவராசப் பிள்ளை , 5.3, கம்பநிலையம் கண்டவர் கதை ஆய்வுப் பிதாமகர் வீரக்கனல் வ.வே.சு. ஐயர், 54. இருமொழிப் புலமையாளர் இனிய தமிழ்ப் பன்னூலார் பண்டிதமணி கதிரேசச் செட்டியார். 55, சித்தனாய் வந்த நித்திய சூரியன் மகாகவி பாரதி, 56. வட்டத் தொட்டி, நாயகர் வளர்தமிழ் ஆர்வலர் ரசிகமணி டி.கே.சி. 57. கரந்தை இனஞாயிறு, கன்னித் தமிழ் நிறைநிலா தமிழவேள் உமா மகேசுவான் பிசின்னை , 58. தமிழ்த் தொண்டர், தமிழ்த்தென்றல் அறிஞர் திரு.வி.க, 59. சித்தாந்தக் கலாநிதி, செந்தமிழ் மாமதி தணிகைமணி செங்சுல்வராய பிள்ளை, 59. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் வேங்கடசாமி நாட்டார். 61. மெய்யுணர்ந்த மேதை, மேன்மைக்கொரு வழிகாட்டி அறிஞர் பீ.சிரி ஆச்சாரியா, 62. கம்பன் கலை காட்டியவர், திருக்குறள் நெறி ஊட்டியவர், கவிராயர் செகவீர பாண்டியனார். 63, பெருஞ்சொல் விளக்கனார் பேராசான் பெரும்புலவர் அ.மு, சரவண முதலியார். 54, சாதனைச் செல்வர் சைவப் பாதிரியார் அறிஞர் சச்சிதானந்தம் பின்னன. 65. கவின் தமிழ்க் காவலர் கரந்தைக் கவியரசு அறிஞர் (வேங்கடாசலம் பிள்ளை , 66. நாட்டு 33ர்வுக் காவலர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை .. 67. பன்மொழி ஆர்வலர், பைந்தமிழ்க் காவலர், கோவைக் கிழார் இராமர் சந்திரன் செட்டியார. 68. சட்டநூல் வல்லுநர், சான்றாண்மைப் பேராசான் போரிஞர் காசு, பிள்ளை , 69. செந்நாப் புலவர் சிறப்புரை வித்தகர் ஆ. கார்மேகக் கோனார், 70. மறுமலர்ச்சி எழுத்தாளர் மகாகவியின் மாணாக்கர் அறிஞர் வ.ரா. 71. பக்திப்பாவலர், பைந்தமிழ் இசைச்செல்வர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன். 72. வங்சுத்துத் தமிழறிஞர், வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுந்த் குமார் சாட்டர்சி, 73. ஆயுள் காப்பியம் அருளிய முத்தமிழ் மாமுனிவர். சுத்தானந்த பாரதியார். 74. வியப்பூட்டும் ஆய்வாளர் வித்தகத் தமிழ்ச் செல்வர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை . 75. புலர்காலைக் கவித்தோன்றல், புரட்சித் தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன். 76, தேசப் பிதாவின் சீரிய புதல்வர் தெய்வத் தமிழரின் ஞானச் செல்வர் அறிஞர் பொ. திரி கூட சுந்தரம் பிள்ளை . 77. அறிவியல் தமிழுக்கோர் சாற்றுக்கண், அருந்தமிழ் விளைவுக் கோர் நாற்றங்கால் அறிஞர் பெ.நா. அப்புசுவாமி, 78. மாணவர் மன்றப் புகழ்ச் செல்வர், மாணிக்கத் தமிழுக்கோர் உயிர்நாடி பேராசிரியர் மயிலை சிவமுத்து, 79, தமீரினசத் தளபதி, தமிழ் நூல் உரையாசான் டாக்டர் ஆர்.கே, சண்முகம் செட்டியார், 80, இலங்கைத் தமிழாகரர் இரசத் தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலானந்தர், 81. வரலாற்றுப் பேராசிரியர் வனர் தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார், 82, புதிய நலம் வழங்கிய போற்றற்குரிய தமிழறிஞர் பூதலப்பட்டு சிரிராமுலு ரெட்டி. 83, செந்தமிழ்ச் செம்மல், சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ. முருகப்பா , 84. இலக்கணப் பெருங்கடல் இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்கட ராசுலு ரெட்டியார். 85, செந்தமிழ்ச் செல்வர் திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் ரா. பஞ்சந்தம் ரெட்டியார். 86, உரைநடைச் செல்வர் உணர்வூட்டும் தமிழர் அறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை. 87. தமிழ்க் கல்லூரி நிறுவனர், தமிழ் நூல் பதிப்பாளர் தவத்திரு சிவஞான பாலைய அடிகளார், 88. பைந்தமிழ்க் காவலர் பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர், 89, விழுமிய சிந்தனையாளர், வித்தக நூலாசிரியர் வெ, சாமிநாத சர்மா. 90, இமைப் போதும் தமிழ் மறவார் எழுச்சி கொண்ட தமிழ் மறவர், ஏந்தல் மங்கலங்கிழார், 91. செந்தமிழ் நிறை நிலா சொல்லின் செல்வர் அறிஞர் ராபி. சேதுப்பிள்ளை, 92. சிந்தாமணிப் பெட்டகம், செந்தமிழ்க் களஞ்சியம் மகா வித்துவான் மே.வீ. வேணுகோபால் பிள்ளை. 93, செய்தித் தமிழ் மாலை, சிந்தனை தற்பேழை புலவர் இ.மு, சுப்பிரமணியபிள்ளை . 94. தமிழ்ப் பேரறிஞர், தமிழ்க் கடல் ராய. சொக்கலிங்கனார். #5, தபோவனத்துத் தமிழ்ஞானி தத்துவ நால் ஞான மணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் 96. தேசியத் தமிழ்க் கொண்டல் தித்திப்புப் புதினப் பேரூற்று பேனா மன்னர் பேராசிரியர் கல்கி, 97. விடுதலை மாவீரர், வித்தகப் பெரும் புலவர் மதுரை தொ.ரா. பத்மநாபய்யர். 98, ஆட்சிமொழிக் காவலர் அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் சி., இராமலிங்கனார், 99. ஆராய்ச்சிப் பேரறிஞர் அதிநுட்பப் பெரும்புலவர் மயிலை சீனி. வேங்கடசாமி, 100. சீர்திருத்தச் செம்மல், செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி, சிதம்பரக்கார். இப்புகழாளர்கள் நூற்றுவரும் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் எனப்பட்டியலிட்டு அவர்களின் தமிழ்ப் புலமையையும் தொண்டையும் விரித்து எழுதிப் புகழ் பெற்றவர் எழுத்துச் செம்மல் குன்றக்குடி பெரிய பெருமாள், வெளியிட்டுப் புகழ் பெற்றது சென்னை மதிநிலையம். ஒரு துறையில் ஒரு நூற்றாண்டில் பொன்றாப் புகழ் பெற்றவர் நூற்றுவர் எனின் மற்றமற்ற துறைகளின் புகழாளர்களையும் நாம் மனக்கண்ணால் எண்ணிப் போற்ற வேண்டும் என்பதற்காகவே நூற்றுவர் பட்டியலையும் வழங்க நேர்ந்தது. குடும்ப அளவில் புகழ் பெறுதல், சுற்றத்தார் அனவில் புகழ் பெறுதல் நண்பர்கள் அளவில் புகழ் பெறுதல், களர் அளவில் புகழ் பெறுதல் மாவட்டம், மாநிலம், நாடு எனப் புகழ் எல்லை வளர்ந்து, தம்முடைய செயலாலும், பல்கப் பயன் நல்கும் திருத் தொண்டாலும் உலகமெல்லாம் ஒருங்கே பாராட்டும் உயர் புகழை ஒருவர் இன்று எய்துவாரானால், அப்புகழ் எதிர் காலத்தில் உலகம் மிகப் பெரிய வளர்ச்சிபெற்ற புதுமை வாய்ந்த புரட்சி தபேகமாக மாறி விட்டாலும் அவ்வுலகிலும் முன்னைய புகழ் பெற்றோர்கள் போற்றப்படுவர். இன்றைய உலகம் எதிர்காலத்தில் அனைவரும் சுற்ற அறிவு வளம் நிரம்பிய புது உலகமாக மாறிவிட்டாலும் அவ்வுலகிலும் வெறும் அறிவு மட்டும் இருந்து பாராட்டுப் பெற இயலாது. எவர் பொது நலத்தொண்டு புரிந்து மக்கள் அனைவரும் பாராட்டிப் புகழுமாறு வாழ்வை அமைத்துக் கொண்டார்களோ அவர்களே எவ்வுலகத்திலும் என்றைய உலகத்திலும் புகழப் பெறுவர் என்பதை "நிலாவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது புத்தேள் உலகு என்னும் குறள் வழி உணர்த்துகிறார், "... பட வா. உயவேந்தே செல்லும் கடலகத்துச் செல்லாம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதி கேளினி! மிகுதி யாள நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உளனாயெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ வித்தி வானோக்கும் புன்புலம் கண்ணகன் செயப்பிற்கு ஆயினும் நன்கணினி ஆளும் இறைவன் தாட்து கடதவாதே அதனால் அடுபோர்ச் செழிய இகழாது யல்லே நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்தட்டோர் அம்ம, இவண் தட்டோரே! தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!" என்னும் புறநானூற்றுப் பாடல் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனிடம் குடபுலவியனார் அறிவுறுத்திய பாடல் வரிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும், "உலகில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரிலும் தனது சிறந்தவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் ஐசக் நியூட்டனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அன்னார மாவீரன் அலெக்சாண்டர், சார்க வாசிங்டன் போன்ற அரசியல் பெருந்தலைவர் களையும் ஏசுநாதர், புத்தர் போன்ற சமயத் தலைவர்களையும் விட சிறந்தவராக ஏன் போற்ற வேண்டும்? அரசியல் மாறுதல்களும் முககியமானவை தாம். உலக மக்களில் பெரும்பாலோர் அலெக்சாண்டருக்கு 50) ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முன்னோர்கள் எவ்வாறு 13வாழ்ந்து வந்தார்களோ அதே முறையில் அலெக்சாண்டர் இறந்த இர ஆண்டு களுக்குப் பின்பும் வாழ்ந்து வந்தார்கள். அதே போன்று கி.மு. 1500-இல் மக்கள் வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால் 500 ஆண்டுகளில் நவீன அறிவியலின் தோற்றத்திற்குப் பின்பு, உலக மக்களில் பெரும்பாலோரின் அன்றாட வாழ்க்கை புரட்சிகரமாக மாறுதல் அடைந்து விட்டது. கி.பி. 10- இல் வாழ்ந்த மக்களை விட முற்றிலும் வேறுபட்ட முறையில் இன்று நாம் ஆடைகள் அணிகிறோம், வெவ்வேறு உணவுகளை உண்கிறோம், வெவ்வேறு பணிகளைச் செய்கின்றோம், அவர்களை விட அதிக ஓய்வு நேரத்தை வெவ்வேறு வழிகளில் செலவிடுகின்றோம்! இந்தப் புரட்சிகரமான மாறுதல்களுக்கெல்லாம் காரணம் அறிவியல் கண்டு பிடிப்புகளேயாகும். அரசியல், சமயச் சிந்தனை, சுவை, தத்துவம் ஆகியவற்றைக் கூட அறிவியல் மாற்றிவிடும் அறிவியல் புரட்சியால் மாறுதல் அடையாத மனித நடவடிக்கை எதுவுமே இல்லை எனலாம், நியூட்டன் விஞ்ஞானிகள் அனைவரிலும் மகத்தான திறமை வாய்ந்தவர் மட்டுமன்றி, அறிவியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரும் ஆவார். எனவே உலகின் செல்வாக்கு மிக்க தலை சிறந்தவர்களின் வரிசையில் முதலிடத்தைப் பெறும் தகைமையை அவர் எளிதில் பெறுகிறார்." இஃது மைக்கேல் செசுசி. கார்ட் என்னும் அறிஞர் ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் அறிஞர் மணவை முஸ்தபா அவர்களைப் பதிப்பாசிரியராக அமைய "புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100" என்னும் தலைப்பில் அமைந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும். நிலவரை நீள்புகழ் ஆற்றிய பெருமக்களை வரலாற்றுக் காலம் முதல் தொகுத்து வரிசைப்படுத்திய பட்டியலில் இந்திய நாட்டவர் மூவர் இடம் பெறுகின்றனர். அவர்களில் புத்தர் நான்காவதிடமும், அசோகர் ஐம்பத்து மூன்றாவது இடமும், மகாவீரர் நாறாவது இடமும் பெறுகின்றனர். நாறுக்கு மேல் சேர்த்த பதின்மரில் காந்தியடிகளுக்கு எட்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இக்குகளுடன் இணைத்துச் சிந்திப்பது பெரும் பயன் நல்கும்! | "கேடும் பெருக்கமும் இல்லல்ல" என நடுவு நிலையில் தெளிவுபடுத்தியுள்ளார் வள்ளுவர். வளமையும் வறுமையும் இவ்வுலகில் காணாத புதுமைகள் அல்ல! உலகில் வறியவரும் இருப்பர் செல் வரும் இருப்பர் என்பது மட்டுமல்ல செல்வரே வரியனர் ஆனதும், வரியவரே செல்வராக மாற்றம் பெறுவதும் கூட உல்சு நடைமுறை உண்மையாகும்! வளமையில் பழிக்கு ஆளாகும் வளமையும் உண்டு அதுபோல் வறுமையில் புகழ் சேர்க்கும் வறுமையும் உண்டு! வறுமை ஒருவர்க்கு இழிவு தாராது புகழே தருகிறது என்றால் வெறுமைக்கு ஆட்பட்டோர் எளிய மனிதராக இருக்க இயலாது. அவர் அறிவு அருள் ஆண்மைகளான் மேம்பட்டவராகத் தான் இருப்பார். இவரே சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு. "துட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் | கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் பெண்மை தரும்” அவரே இம்மதுரை கூறும் சங்கன்ன மேன்மக்கள் அத்தகைய புகழ் சேர்க்கும் வறுமைக்கும் ஆட்பட்ட வித்தகர்கள் தான் தமிழ்த் தென்றல் திரு.வி.க, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தொழிலாளர்களின் தோழர் ப. சிவானந்தம், காரல் மார்க்சு போன்றோர். பிறப்பவர் அனைவரும் இறப்பவர் உறுதி! ஒருவர் இறந்தால் இறப்புக் குறித்து மகிழ்பவர்களும் இருக்கிறார்கள் என்றால் இறந்தவர் பலரும் பழிக்குமாறு வாழ்ந்தவர் என்று பொருள்; ஒருவர் இறந்தார் இறப்புச் செய்தியை அறிந்தவர் எல்லாம் அழுதனர். இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டியவர் ஆயிற்றே அவர் இடத்தை யாரால் நிரப்பமுடியும் இருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்கள் நடைபெறுமே" எனக் கூறிவருந்திப் பாராட்டுமாறு வாழும் வாழ்வே புகழ் வாழ்வு! எவர்க்கு வந்த சாவு ஊரவராலும் லேசுவராலும் மதிக்கப்படுகிறதோ அந்தச் சாவுக்கு ஆளானோர் அறிவு அருள் ஆண்மைகளான் மேம்பட்ட தக்காராய் இருக்க வேண்டும், அவர்கட்கே அத்தகைய புகழ்தரும் இறப்பு நேரும் அண்ணல் காந்தியடிசுட்கு ஏற்பட்ட இறப்பு; மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஏற்பட்ட இறப்பு; பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார்க்கு ஏற்பட்ட இறப்பு: பேரறிஞர் அண்ணா அவர்கட்கட்கு நேரிட்ட இறப்பு. அன்னார் புகழ் உச்சியில் நிற்கும் காலத்து ஏற்பட்ட இழப்பாகும், இப்படிப்பட்ட புகழ்ச் சாவு எல்லோர்க்கும் வாய்த்தல் அரிது. புகழ் வளர்க்கும் வறுமைக்கேடும் புகழை நிலை நிறுத்தும் சாக்காடாம் மறைவும் வித்தகர்க்கே வாய்க்கும். ஏனெனில் அவர்கள் சுடச் சுடச் சுடரும் சங்கன்னார் என்பதைச் சுட்டி அமையும் குறளே. "நத்தம்போல் கேடும் உடளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது" என்பதாகும். வித்தகர் - அறிவு ஆண்மை சுளான் மேம்பாடு அடைந்தவர்கள். அழியும் பொருளையும் உடலையும் கொடுத்தும் அழியாத புகழை அடைதல் எல்லார்க்கும் எளிது அன்று ஆகவின் வித்தகர்க்கு அல்வால் அரிது என்றார். ஒருவனது இரண்டு யாக்கை நான்பயில் நரம்பின் யாத்த உருவமும் புகழும் கொன்றாங்கு அவற்றின் வாழ்காத்து வந்து மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்றை யாக்கை திருப்பார்ந்து உல்கம் எக்கச் சிறந்து பின் நிற்கும் அன்றே" என்னும் சூளாமணிப் பாடலும் ஏற்ற எடுத்துக் காட்டாகும். செயலாற்றப் பிறந்தவன் மனிதன், செயலாற்றும் தன்மையால் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு உண்டு. விருப்பமும் ஆர்வமும் ஒரு தன்மைப் பட்டதன்று. அசுவே ஒவ்வொருவரும் பொருள் கருவி, காலம், செயல் இடம் ஐந்தையும் கருத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும். ஒரு செயலின் தொடக்கத்தி விருந்து முடிவுவரை உள்ள பணிக்கூறுகளையும், இடையில் என்னென்ன இடையூறுகள் ஏற்படலாம். இடையூற்றை வெல்லும் வகை, முறையே செய்தால் நிறைவில் கிட்டும் பயன் எல்லாவற்றையும் நன்கு சிந்தித்தே செயலில் ஈடுபட வேண்டும், எத்தொழிலைச் செய்வதற்கும் உரிய தொழில் நுணுக்கம், செயல் திறன் துணை நிலை வாய்ப்புகள் எல்லாம் பொருந்தி இருக்கிறதோ அத்தொழிலையே செய்யச் தொடங்க வேண்டும் வெற்றியும் ஊதியமும் புகழும் அடைதல் வேண்டும்! சிறப்பாகச் செய்ய முடியாத எந்தப் பணியிலும் இறங்குதல் கூடாது. புகழ்பெற இயலாப் பணியில் இறங்கித தோல்வியுற்றுப் பழிக்கு ஆளாக நேர்ந்தால் அது நம் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும் சூழலும் உருவாகலாம். ஆகவே காலம் தாழ்ந்தாலும் ஏற்புடைய பணியையே ஏற்று ஏற்றம் பெறுதலே தன்று கான வழி காட்டும் வள்ளுவர் வேகுத்த குறளே; "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிபோர் தோன்றலின் தோன்றாமை நன்று வெறும் ஏட்டுப் படிப்பும் வயது மூப்பும் மட்டும் கொண்டு பணி அமர்த்தம் பெற்றுச் செயலாற்ற இயலாமல் பழிக்கும் ஆளாகி பதவியையும் இழந்து அல்லல்படுவோர் எல்லாம் இக்குறளை எண்ணிச் செயல்பட்டிருந்தால் இழிநிலை நேராமல் தவிர்த்திருக்கலாம். பாரி நிலையையும் தம்முடைய உண்மைத் தகுதி காயயும் உணர்ந்து தமக்குப் பதவி உயர்வு வேண்டா என எழுதிக் கொடுத்துவிட்டு உள்ள பணியிலேயே புகழ் பெற்றவர்களும் உண்டு! "பாடல் பெறானேல் பலர்மெச்ச வாழானேனால் நாடறிய நன்மணங்கள் நாடானேல் = சேடன் இவன்வாழும் வாழ்க்கை இருங்கடல்சூழ் பாரில் கவிழ்ந்தென் மலர்ந்தென்னை காண்" எனும் தனிப்பாடல் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கதே! *செய்யும் தொழிலில் பொறுப்பையும் ஒழுங்கையும் வளர்ப்பது புகழே" கானத் தொழிலிலும் புகழிலும் வளர்ந்த இராக்பெல்லர் கூறுகிறார். நான் எதையும் செய்வேன் எப்படியும் செய்வேன் என்னையாரும் குறைகூறக் கூடாது எனத் தாமே ஒரு கற்பனைக் கோட்டை கட்டிக் கொண்டு வாழ்வோர் எதிலும் நிறைவும் பயனும், சிறப்பும் பெருமையும் ஒருநாளும் அடைய இயலாது. யார் தாம் செய்யும் செயலில் உள்ள குற்றங்குறைகனைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் தான் அறியாமல் நேர்ந்த பிழைகளையும் அகற்றிக் கொள்ள முயற்சி எடுப்பார்கள். குறை கூறியவர்களே பாராட்டும் நிலையை உருவாக்குவார்கள்! நாம் புகழ்பெறுமாறு நேரிய வழியில் வாழ வேண்டும், 15எதிர்பாராமல் ஏதேனும் குறை தேர்ந்து விடுமாயின் தாமே கண்டுணர்ந்து சீர்செய்து கொள்ள வேண்டும். யாராவது குறையைச் சுட்டிக் காட்டினால் வறட்டுப் பெரும் பாராட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்! குறையை எடுத்துக் காட்டியவருக்கு நன்றி கூற வேண்டும் அதுவே சிறந்த முறை, குறையைத் திருத்திக் கொள்ள வேண்டுமே தவிரக் குறை சொன்னவர் மீது வெறுப்போ சினமோ கொண்டு பகைமை பாராட்டுவோன் என்றும் புகழ் பெற இயலாது. குறையை உணர்! குறை கூறுவாரைப் பகைக்காதே! என்பதை உணர்த்துவான் வேண்டி, "புகழ்பட பாழாதார் தம்நோவார், தம்காலம் இகழ்வாரை நோவது எவன்? என வினவி நிற்கிறார், "எச்சம்ான்று காண்பாண்னாம் கொய்யா, ஒருவரால் நச்சப் படாஅ தவன்? என்பது நன்றியில் செல்வத்தில் இடம் பெற்றுள்ள குறள். "எவராலும் விரும்பப்படாத ஒருவன் தன் காலத்தின் பின்னே பழியை அன்று எஞ்சி நிற்பது என்று எதG3 ஏஎசண்31-வாரோ அறிந்திலோம்" எனக் கூறும் நோக்கைச் சார்ந்து பாடப்பட்டதே "வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறா விடின்" இசைஎன்னும் எச்சம் பெறாவிடின் வையத்தார்க்கு Fஎல்லாம் வசை என்ப" என குறள் அமைப்பை அமைத்து விட்டாலே பொருள் புலப்படும், நல்ஒர் பெற்றோர்க்கு மைந்தனாய்ப் பிறந்தான். உரியவயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டான் படித்தான் பட்டம் பெற்றான், பதவியில் அமர்ந்தான் மணம் முடித்தான் மக்களைப் பெற்றான் உரிய அசுனவயில் ஓய்வு பெற்றான் சில ஆண்டுகளில் இறந்தான். எங்கும் யாரிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை. என்றாலும் பாதகம் இல்லை! எல்லாரிடமும் எங்கும் கெட்ட பெயரே வாங்கிப் போய்ச் சேர்ந்தான் வீட்டுக்கும் இருக்கும் நல்லது என்று கூறுமாப் போல் எதுவும் செய்யாமல் அறுபது ஆண்டுகள் இம்மண்ணில் இத்தகையோர் வாழ்ந்தது உலகிற்கே தீராப் பரியாகும். யாரெல்லாம் வாழும் காலத்துப் புகழைத் தேடிச் சேமித்து வைத்துக் கொள்ள வில்லையோ! அவர் பன்னராயினும் பரியே மந்திரியாய் இருந்தாலும் பழியேயாகும்! ஆகவே பொருளைச் சேமிப்பதை விட புகழைச் சேமிப்போம்! பொருள் செலவாகட்டும்! புகழ் வரவாகட்டும்! சுவந்தன் கையுள் அகப்பட்ட இராமன் பழிசுமந்து வாழேன் என்றான் முன்ன முடிவன் என மொழியும் இலக்குவன் "பூதம் சொல்லப் போன்றுதி என்னின் பொருள் உடண்டோ ? "கேட்டார் கொள்ளார், கண்டவர் பேணார் கிளர்போரில் தோட்டார் கோதைச்சோர் குழல் தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் போடுகை கொள்ளான் செருவெல்ல மாட்டான் மாண்டான்" என்றலின் மேலும் வசை உண்டோ ?" எனக் கூறும் கம்பனின் பாடல் வரிகள் உருக்கமான எடுத்துக் காட்டாகும், ஒரு நாடு நீர் வளம் நிலவளம் பொருந்திய நாடாக இருப்பினும் அந்நாட்டில் அமையும் மனிதவளமே நீர் வளத்தையும், நிலத்தையும் தக்கவாறு பயன்படுத்தி, நிலத்தை உழுது பண்படுத்திப் பயிரிட்டு வளம் பெருக்கும். உழைக்கும் மக்கள் குறைந்தால் வருவாயும் குறையும், தாளாற்றினால் தான் தக்கார்க்கு வேளாண்மை செய்ய முடியும், வேளாண்மையாகிய உதவும் மனப்பான்மை இல்லையேல் எப்படிப் புகழ் பெற இயலும்! உழைத்து வாழாதார் மலை காடுகளில் இருந்து தானே இயற்கையாய் விளையும் விளையுளையும் கெடுத்துப் பாழாக்கி விடுவர். என்றெல்லாம் எண்ணியவராய் வள்ளுவர். "வசையிலா வெண்பயன் குன்றும் இசையிலா யாக்காக பொறுத்த நிசபம் என்கிறார். புகழற்றோர் கால்பட்ட இடமெல்லாம் கட்டாந்தரை ஆகும், "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் "இசைபெருக வாழ்வாரே வாழ்வார், பழிபெருக வாழ்வாரே வாழாதவர்" என்றும் கூறலாம். தம் வாழ்வில் அதாவது தனி வாழ்வாயினும் குடும்ப வாழ்வாயினும், உழைப்புச் சார்ந்த வாழ்வாயினும், பொது வாழ்வாயினும் சரி அனைத்துச் செயல்பாடுகளிலும் பழிப்புக்கு இடம் தாராவகையில் யார் வாழ்கிறார்களோ அவர்களே முறையாக வொழ்வோர் எனக் கூறத்தக்கவர். யார் புகழ் தரும் செயல்களையும் செய்யாது புகழ் தரும் வழியையும் விட்டு விலகி விடுகிறார்களோ அவர்கள் வாழும் வாழ்வு வாழ்வும் அல்ல, அவர்களும் வாழத் தகுதியற்றவர்கள். அவர்கள் வாழாதவரே ஆவர் என் வள்ளுவர் கருதுகிறார், சீதை மாயா சனகனைப் பழித்துரைத்தல்: "வழிகெடவரினும், தம்தம் வாழ்க்கை தேய்ந்து இறிலும், மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிகாாடப்பினும், ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது அல்போல், முறைகெடப் புறம் நின்று ஆர்க்கும் பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ? பாவம்" இசை அதிகம் வாழ்வாரே வாழாதவர் 1513ம் தொடருக்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். வசையொழகடா வாழ்ந்து பெருமித போழ்வு விவேகானந்தர் வாழ்வு. அவர் "ஞானத்தில் சங்கரர் அன்னாவர்; பேரன்பு வெள்ளத்தில் புத்தர் போல்பவர் பத்தியில் நாரதரேயாவர், பிரம்ம ஞானத்தில் சுகதேவருக்கு நேராவர்; வழக்காடுவதில் பிரகசுபதியை அப்பர்: வடிவத்தில் மன்மதனுக்கு அறிவில் வியாசருக்கு நேராவர்" என ஓர் அறிஞர் புகழ்ந்து பாராட்டுகிறார். புகழால் விவேகானந்தர் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். வாழ்வாங்கு பொழ்பவன் பவானத் தக்க மாண்புடையாள் துவாரகாய நயத்துடன் பழி பிறங்காப் பண்புடை மக்கட் பேறு பெற்று, அகத்துறுப்பாம் அன்பு உடையவராய், வருவிருந்து வைகலும் ஓம்பி, முகனமர்ந்து இன்சொல் கூறி செய்ந்நன்றி நினைந்து நன்றல்லது மறந்து, நடுவாக நன்றிக் கண்தங்கி நிசாாாயில் திரியாது அடங்கி ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பி, பிறன் மனை நோக்காது. பொறையுடைமை போற்றி ஒழுகி அழுக்காறு செயாத இயல்பு பெற்று பிரான்காகப் பொருள் வெப்காது, புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழாது பயரை சொல்லாகாயாயே நாறு சாளக்கொதாாடு மறந்தும் பிறன்கேடு சூழாது ஒத்தது அறிந்து உயிர் வாழ்ந்து ஈத்துவக்கும் இன்பமே இன்பம் நான் உணர்ந்து இாது தான்னும் சாச்சம் பெற்று வாழ்வாங்கு வாழ்தயே, வான்புகழ் இல்லற வாழ்வு. 25. அருளுடைமை "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்லச் செவிலியால் கடண்டு” இது பொருள் செயல் வகையில் இடம் பெறும் குறள். " அன்புத்தாய் பெற்ற அருட் குழந்தை பொருள் என்னும் வளர்ப்புத் தாயாக வளரும்" "தன்னன் பெருக்கற்குத் தான்பிறிது தானுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கிலப்பகாலம் தான்தின் பார்க்கு" "அருள் அய்யாது யாதெனின் கொள்கயாமை, கோறல் பொருள் அல்லது அவ்வூன் தினல்" எனும் முக்குறள்களும் "பு=Nால் மறுத்தலில் அமைந்தவை!" "தன் உடல் வளர்க்கப் பிரது ஒன்றின் உடலில் உண்பவன் எப்படி அருளாளன் ஆவன்? "பொருள் வளம் அதனைப் போற்றிக் கொள்ளாதவர்க்கு இல்லை; அவ்வாறே அருள் வளமும் புலால் உண்பவர்க்கு இல்லை .” *அருள் என்பது கொல்லாமை, அல்லது என்பது கொல்லன்; ஆதலால் புலால் உண்ணால் நல்லது அன்றாம்" "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்” இஃது வெஃகாமை அதிகாரத்தில் பெரும் தான். "அருளை விரும்பி நல்வழியில் நடப்பவன், பிறர் பொருளை விரும்பிசNால் அவ்வளவில் தீபம் சூழ்ந்து கெடுவான்." "அருள்சுருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கள் இல்" பார் "பொருளைச் சுவாப் பிறர் சோர்வை எதிர்பார்ப்பவர்க்கு அருளை எண் 5 அன்புடையவர் ஆகும் தன்மை இல்லை." இது கள்ளாம் அதிகாரக் குறளும் பொருளும். "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்" இது பொருள் செயல் வகையில் இடம் பெறும் மற்றொரு "அருளும் அன்பும் நீங்கி வந்த பொருளைத் தொடாமல் போக விடுதல் வேண்டும்" "பொருட் பொருளார் புன்னலம் தோயார், அருட்பொருள் ஆயும் அறிவி னவர்" இது வரைவின் மகளிரில் வரும் குறள், "அருளாகிய பொருளை ஆராயும் அறிவாளர், பொருளை விரும்பிக் கூடுவாரைத் கூடார்." "பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ, அருள்கெடுத்து அப்காப் உழப்பிக்கும் சூது . இது 'சூது அதிகாரத்தில் இடம்பெறும் குறள். "சூது, பொருளை அழித்துப் பொய் சொல்ல வைத்து, அருளையும் கெடுத்து, அல்லலையும் தரும்" அருளுடைமைக்கு அப்பால் திருக்குறளில் அருள் மணக்கும் இடங்களின் வழியாக “ அன்புத் தாயின் அருமைக் குழந்தையே அருள் எனவும் அக்குழந்தையின் வளர்ப்புத் தாயே பொருள் எனவும், அப்பொருளும் அன்போடும் அருளோடும் பொருந்திய பொருளாக இருக்க வேண்டும் எனவும். அருளாளர் கொலை! புரிய எண்ணவும் மாட்டார் எனவும், புலால் உண்ண விரும்பார் எனவும், பிறன் கைப்பொருள் வெஃகார் எனவும், கள்ளாமை காக்கும் நெஞ்சர் எனவும், பொருட்பெண்டிர் புன்னலம் தோயார் எனவும், அல்லது உழப்பிக்கும் சூதை நாட மாட்டார் எனவும் ஓர் அருமையான வரைபடம் தமக்குக் கிட்டுகிறது. இனிய இல்லற வாழ்வு நெறிகளைச் செவ்விதின் விளக்கிய வள்ளுவர் அதன்படி நிலை வளர்ச்சியாகத் துறவு நிலை பற்றி விளக்க முற்படுகிறார். வள்ளுவர் காட்டும் துறவு நெறி பழந்தமிழ் இலக்கண வல்லார் தொல்காப்பியர் காட்டும், "காமம் சான்று கடைகோட் காலைப் சரமம் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்தன் பயனே" என்னும் நெறிவழிப்பட்ட தாகும். "தலைவனும் தலைவியும் உரிமைச் சுற்றத்தோடும் மக்களோடும் கூடி, இல்லறம் நடத்தி மூத்த பின்னர், மக்களிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் பொதுநலத் தொண்டு புரிதலே இல்லறம் நடத்தியதன் பயன்” என்னச் சுட்டுக் கோப்பான வாழ்வியல் நெறி! அறவழிப்பட்ட துறவை வள்ளுவர் அருள் உடைமையில் தொடங்குகிறார், ஏன்? ஒவ்வொருவருக்கும் முதலில் தம் தம் குழந்தைகளின் மீது அன்பு இயற்கையாகத் தோன்றும். அந்த அன்பிலே நெஞ்சம் பழகப் பழகத் தாம் பழகும் பிறர் குழந்தைகளின் மேலும் படிப்படியாக அன்பு வளரும், அந்த அன்பிலே நெஞ்சம் தோயத் தோய உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளின் மேலும் அன்பு பாவும், இந்தப் பரந்த அன்பே அருள் எனப்படும். அனைத்துக் குழந்தைகள் மீதும் அன்பு பாராட்டிய மனம் -- வளர்ந்த மக்கள் மீதும் அன்பு பாராட்டும் - அதன் வளர்ச்சி அனைத்து மக்களையும் ஒன்றாகக் கருதி அன்பால் உருகும்! அதன்படி நிலை: உச்சம் மக்கள் என்ற எல்லையையும் தாண்டி அனைத்து உயிர்களையும் ஒப்பக் கருதி அன்பு பாராட்டும்! அனைத்து உயிர்களும் துன்பமற்று இன்புற்று வாழ எண்ணும் நளச் சுரப்பு அருளாகும், அன்புப் பெருக்காம் அருள் உணர்வுடன் எண்ய ம், அருளுரை வழங்கியும் உயிர் இரக்கத் தொண்டு புரிந்து வாழ்வாரே அருளாளர் ஆவர். வாழ்வில் நிறைவையும், பெருமையையும் சிறப்பையும் தங்கும் பொருள்கள் செல்வமாகப் போற்றப்படும். திருவள்ளுவரும், கல்வியைக், "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்றும், அவா அறுத்தலை, "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டி ல்லை . யாண்டும் அஃதொப்பது இல்" "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச் செல்வம் செல்வத்துள் கால்சலாம் தனவே" என் மம் பொருள் செயல்வகையில் பொருள் உடையார், "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு" என்றும் என்று கூறும் திருவள்ளுவர் இங்கே அருள் உடைமையைத் தொடங்கும் போதே, "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” என்கிறார் பொருளும் ஒரு செல்வம் தான் எனினும் பொருளாகிய செல்வம் உயர்ந்த நன்மக்களிடம் மட்டும் தான் இருக்க வேண்டும் ஈஎன்ற நிலை இல்லை, முயற்சியும் உழைப்பும் உடையவரும் ஆனால் பண்பால் இழிந்தவர்களிடமும் இருக்கக் கூடாது என்பதில்லை. நல்லவர் தீயவர் எவரிடமும் பொருட் செல்வம் இருக்கலாம். நல்லவனிடம் இருக்கும் போது, "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கண் படின்" எனச் சிறப்புப் பெறுகிறது, தீயவனிடம் இருக்குமானால் "நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மாம்பழத் தற்று" என இகழவும் படுகிறது. ஆனால் அருளாகிய செல்வம் பண்பால் உயர்ந்து தாயகத்தை வாழ்விக்கும் நன்மக்களிடம் மட்டுமே பொருந்தியிருக்கும், ஆகவே, கீழ் மக்களிடம் பொருந்தாது, மேன்மக்களிடமே பொருந்தி இருக்கும் மேலான செல்வமாகிய அருட்செல்வமே செல்வங்களிலெல்லாம் மேலான செல்வமாகும் எனத் தக்க காரணத்தோடு விளக்கி அமைகிறார். "சேற்றுவோர் தாமரை பயந்த ஒன்கேழ் நூற்றிதழ் அலரின் நிரைகண் டன்ன வேற்றுமை இல்லபா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை எண்ணுங் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே! மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே! புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானா வூர்தி எய்துப தான்பதம் செய்வினை முடித்து எனக் கேட்பது எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து வல்மா ராயினும் வல்லுநர் ஆயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை ஆகுமதி: அருளிபர் கொடாமை வல்ல ராகுக! கெடாத துப்பினின் பகைஎதிர்ந் தோரே” (புறம் 27) எனச் சங்கப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழப் பெருவேந்தன் நலங்கிள்ளிக்கு அறிவூட்டும் இப்பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துனை "ஒழுக்கத்தை மிக முயன்று காக்க வேண்டும். அதுவே அரிய துணையாகும். என ஒழுக்கமுடைமையின் ஒப்பற்ற பயனை எடுத்துரைத்தாங்கு, அருளுடைமையே இணையற்ற துணை என்பதைத் தெரிவிக்கும் பாடலே, "நல்லாற்றான் நாடி அருளாள்க, பல்லாற்றான் | தேரினும் அஃதே துணை" என்பதாகும். நாம் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகுவதற்கு ஏற்புடைய தெரர் அருள் நெறியே ஆகும். எத்தனை வகையாகா கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் அருள் போல் நம் வாழ்னை, பெருமையை உயர்த்தித் துணை நிற்கும் தெறி வேறு எதுவும் இல்லை' என்பதை உறுதிப் படுத்துகிறார், நம் பிறப்பிற்குப் பெருrை சேர்க்கும் அருந்துதடி13 அருளே ஆகும்! ஆகவே அருளைக் கைக் கொண்டு நல்வழியைத் தேடிக் கொள்! "அருளுடையான், செய்யான் பழி,பாவம் சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக்கு உய்த்து" என்னும் சிறு பஞ்சமூலப் பாடப் பகுதியும் ஒத்த கருத்துடையதே! "எருமை அன்ன கருங்கல் இடைதொறும் ஆனில் பாக்கும் பானைய முன்பின் கானக நாடனை நீயோ! பெரும்! நீஓர் ஆகலின் நின்னொன்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி, அளிதோ தானே அது பெறப்ரும் குறைத்தே” (புறம் 5) சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும் பொறைக்கு நல்லாரிவட்ட நரிவெரூஉத் தலையார் பாடிய இப்புறப்பாட்டு நல்லதொரு எடுத்துக் காட்டாகும், "மனம் போல் வாழ்வு" என்பது உண்மை மொழி. எவ்வுயிரும் துன்பமற்று வாழ எண்ணும் அருள் நிறைய உள்ளத்தவர் வாழும் உலகம் அறிவு ஒளி நிறைந்த இன்ப உலகம், ஆகவே, அறியாமை ஆகிய இருள் நிறைந்த துன்ப உலகில் வாழும் நிலை அருள் பொருந்திய நெஞ்சம் வாய்ந்த மேலோர்க்கு எக்காலத்திலும் ஏற்படாது. அருளாளர்க்கு எந்நாளும் துன்பம் இல்லை; இன்பமேயாம்! அருளாளர் ஒளி வடிவா எனர்; ஆகவே அவர்கள் இருட் பகுதிக்குச் சென்றால் அள்ளிடத்தில் மண்டிக் கிடந்த இருள் தானே விலகி ஒளிமயமாகி விடும்! நாட்டில் இருள் பகுதியே இல்லாமல் ஆக்கப் பிறந்தவர்கள் தாமே அருளாளர்கள் என்பதைத் தெளிவு படுத்தும் குறளே, "அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்” என்பதாகும் "கலையெலாம் உணர்ந்தான் சரணும் கசடறத் தெரிந்தான் எனும் மலையென உயர்ந்தான் எனும் மனமயல் அகன்றான் எனும் உலகெலாம் புகழப் பல்லோர்க்கு உதவிய கையன் எனும் இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகு அடைவன் அன்றே " எனச் சமய நம்பிக்கையின் அடிப்படையில் பதி பசு பாச விளக்கம் அமைந்துள்ளதும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதே! "எனக்குத் தீங்கு செய்வார்கள் என்றோ ? கலவரம் செய்யக் கூடுமென்றோ அஞ்சி, காவல் துறையினர் சிலரைக் கைது செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. அவர்களை உடனே விடுதலை செய்து விடுமாறு காவல்துறை அலுவலர்களை வேண்டிக் கொள்கிறேன், எனது உயிரை நான் பொது மக்களின் சொத்தாகவே மதிக்கிறேன், அதை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நான் பொதுத் தொண்டில் இறங்கியது முதல் அப்படித்தான் இருந்து வருகிறது." என 21.7.1934 'சுதந்திரச் சங்கு" இதழில் இடம் பெற்றுள்ள காந்தியடிகளின் வேண்டுகோளைப் படித்து வியந்தேன். "மன்னுயிர் ஓம்பி அருளாள்வாங்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை" 244 என்னும் குறளே நினைவிற்கு வந்தது! பிற உயிர்களைக் காத்து அவற்றினிடம் அருள் ஒழுக நடந்து கொள்ளும் பேருள்ளம் படைத்த பெருந்தகையார் தமக்கு ஆபத்தோ தீங்கோ நேரிட்டால் என் செய்வது என்று அஞ்சவே மாட்டார்கள். பிற உயிர்களைத் தம் உயிரினும் மேலானதாகக் கருதிவாழும் அருளாளர் தம் உயிர் பற்றி என்றும் கவலைப் படமாட்டார். எவர் பூமாலையை விடத் "தூரக்குக் கயிறே மேல் எனக் கருதி கலங்காது நிற்பாரோ அவரே மன்னுயிர் நம்பி அருளாளராய் விளங்க முடியும். "தன்னுயிர் தான்பிரிந்து ஓம்புமாறு போல் மன்னுயிர் வைகலும் ஓம்பி சுபாஸ்பேல் இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய் பொன்னுயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே" என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் நல்லதோர் எடுத்துக் காட்டாகும், அருட்பணியில் ஈடுபட்டோர் தன்னைக் காத்துக் கொள்ள தானை, யானைப் படைகளை வைத்துக் கொள்ள விரும்புவார் எனின் அவர் அருளாளர் தாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்! "அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி" என்பது ஓர் அருமையான குறட்பா. உலகத்து மக்களை எல்லாம் அல்ல விருந்து காக்கப் பிறந்தவர்கள் அருள் நெறி போற்றி ஒழுகும் சான்றோர்கள், அவர்கள் தம் பொருட்டுத் துன்பத்திற்கு ஒரு காலத்திலும் ஆளாக மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மறந்தும் பிறர்க்குத் துன்பம் செய்ய எண்ணாதவர். எவர்க்கும் துன்பம் செய்ய எண்ணாதவர்க்குத் துன்பம் நேரிட வாய்ப்பில்லை, “நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்பது தானே குறள்நெறி! அருள் வடிவான திருத் தொண்டிலே தலைப்பட்ட இயேசு பெருமான் குருதி கொட்டக் கொட்டச் சிலுவையில் அறையப்பட்டாரே! அது அல்லல் இல்லையா? அருள் வழி காட்டிய கிரேக்கப் பேரறிஞன் சாக்ரடீசுக்கு நஞ்சு தந்து சாகடித்தார்களே! அது அல்லல் இல்லையா?' அறப்போர் அண்+33ல், பகைவர்க்கும் துன்பம் செய்யாமையை நோன்பாகக் கொண்டு ஒழுகிய அருளாளர் காந்தியடிகள் உடலைத் துப்பாக்கிக் குண்டு துளைத்ததே அஃது அல்லல் இல்லையா? மெய்ப்பொருளே பொருள் எனக் கொண்டு, தொண்டு வாழ்வு வாழ்ந்த சிவச்செல்வர் மெய்ப்பொருள் நாயனார் முத்தநாதனின் கூர்வாளுக்குத் தானே இரையானார் இது அல்லல் இல்லையா? குனர் உலகத்துக்கு இவை எல்லாம் அல்லல் தான்! தாங்கி: கொள்ள முடியாத பெருந்துன்பம் தான் மறுப்பதற்கு இல்லை, ஆனால் இயேசு பெருமானும், சாக்ரட்னசும், காந்தியடிகளும் மெய்ப்பொருள் நாயனாரும் அதG17னத் துன்பம் எனக் சுருதினார்களா? கருதினால் அவர் பெயர்கள் தாம் செய்து இன்னதென்று அறியாது செய்கிறார்கள்! ஆகவே அவர்களைப் பொறுத்து அருள்சு"! Fஎன இயேசு பெருமானும்! "இவ்வளவு தானா' இன்னும் கொண்டு வருகிராயா நக" எனக் கிரேக்க அரிமாருனும் "அரே இராம் அரே இராம்" எனக் காந்தி அடிகளும், "தத்தா நம:t" ஆகவே அவரை ஒன்றும் செய்யாதே" என மெய்ப் பொருள் நாயனாரும் உயிர்விடும் போதும் உவந்து உரைத்தார் என்றால் இக்கொடுந்துன்பத்தையும் அவர்கள் துன்பமாகவே கருதவில்லை என்பது தானே பொருள். ஆகவே தான் வள்ளுவர் 'அல்லல் அருனாள்வார்க்கு இல்லை" எனத் துணிந்து கூறினார். சான்று வேண்டும் என வள்ளுவரைக் கேட்டார்! அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் 'ஞாலம்' என்று அழைக்கப்படும் உலமே சான்று! இவ்வுலகம் பெரிய உலகம்; வளம் நிறைந்த பெரிய உலகம்; காற்றால் இயங்கும் வளப்பம் பொருந்திய பெரிய உலசும்! இப்பெரிய உலகத்தில் அருள் மழை பொழிந்த சான்றோர்களின் வரலாற்றை எல்லாம் எண்ணிப் பாருங்கள் இதுவே உங்கட்கு சான்றாய் நின்று உங்களையும் அருள் ஒழுகும் சான்றோர் ஆக்கும் என்றார் வள்ளுவர். இராமாயாத காவியத்தில் இந்திரசித்து இறந்தவுடன் குரங்குப்படை டயர் பெற்று எழுந்தது என்ற நிகழ்ச்சியைக் கூறும் கம்பர், " அரம்தா11 நிகரார் சுகு இdi#T) அமீர்வு எனும் அறிஞர் பார்த்த சிறந்தது" எனக் கூறும் தொடர் ஒப்பு நோக்கத் தக்கது. "இதுவரை அடியேன் அடைந்த வெம்பயமும் இடர்களும் துன்பமும் கால்கலாம் பொதுவார் பொருளே, பிறர்பொருட்டு அல்லால் புலையமோன் பொருட்டுதுல், இதுநின் மதுவார் பாபர்ப்பொற் பதத்துணை அறிய பகுத்தான், அடியனேன் தாக்கே எதிலும் ஓர் ஆசை லைப், இசைப் பயமும் இடரும் மற்றும் இளம் இமாலதி சாந்தாய்! என்னும் வள்ளலார் வாக்கும் ஏற்புடைய எடுத்துக் காட்டாகவும் குறளுக்கு அருமையான விளக்கமாகவும் விளங்குகிறது. நல்ல பொருள் வளம் வாய்க்கப் பெற்றோர், பொருள் ஒன்றே போதும், இதை வைத்து நாம் புகழோடு இந்த மண்ணில் வாழலாம் எனத் தவறான கணக்குப் போட்டு, அருள் நெறியைப் பின்பற்றாது, தூரத்தே விலகி அரம் அல்லாச் செயல்களையே செய்து, வாழ முற்பட்டால், அவர்பால் இருந்த பொருள் எல்லாம் இழந்து, கடமையை மறந்த குற்றத்திற்கும் ஆளாகி, உலகத்தவரால் நினைவில் வைத்துக் கொள்ளத் தகாதவர் அவர் என்று சான்றோர் கூறுவர். அருளைவிட்டவரைப் பொருளும் விட்டு விலகி விடும், அல்ல நான் செய்வார் புகழ் பெற்றார். (பொருளையும் இழந்து பழிக்கும் ஆளாகும் நிலை ஏற்படாது. அருளுடன் நல்லவை செய்து பொருளுடன் புகழும் பெற்று வாழி! வழிகாட்டும் குறளே, "பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி அல்லவை செய்தொழுகு வார் "பொருளுடன் புகழும் பெற்றார் என்பர் அருளுடன் நல்லவைசெய் தொழுகுவார்" என்பதே உடன்பாட்டுப் பொருள். "இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு தெள்ளிய ராதலும் வேறு என்பது கழ் அதிகாரக் குறள்களில் ஒன்று. மனத்திட்பமும் வினைத் திட்பமும் உடையவராய் மடியின்றி, ஆள்வினையும் காக்கமும் உடையவராய் உழைத்து பொருள் வளம் பெருக்கி, மன்னராய் அமைச்சராய் வணிகராய் காதராய், ஒற்றராய், படைஞராய், உழவராய் இன்னொரன்ன தொழில் புரிந்து அதனையே பெரிதெனக் கருதி வாழும் வாழ்க்கை ஒன்று. அது பொருள் வாழ்வு; பொருள் உலக வாழ்வு எனப்படுவதுடன், பலரும் எளிதில் பின்பற்றி வாழும் உலக வாழ்வு ஆதலால் அஃது இவ்வுலக வாழ்வு எனப்படும் இதுவே திரு அமைந்த வாழ்வும் ஆகும். கேடில் விழுச்செல்வமாம் கல்வி கற்று, நுண்பொருள் காணும் அறிவு பெற்று, என்பும் பிறர்க்கு வழங்கும் அன்புடையவராய், ஈத்து உவப்பதே இன்பம் எனக் கொண்டு, தக்கார்க்கு வேளாண்Eை செய்யும் ஒப்புரவாளனாய், மானம் போற்றி நாணம் உடையவனாய், பண்பாளனாய், சான்றோனாய், மெய்யு 5:33ர்வாளனாய் அருளாளனாய் வாழும் வாழ்வு தெள்ளியார் வாழ்வு அல்லது அறிவுடையார் வாழ்வு: பண்பு வாழ்வு எனப்படும் அதுவே பண்புடையார் உலகம் எனப்படுவது அஃதே இப்பண்புடை வாழ்வு எளிதன்று. ஆனால் மேலானது மேலோர்களால் போற்றப்படும் நெறி அமைந்த வாழ்வாகும். அத்தகையோர் வாழும் வாழ்க்கையே மேல் உலகம், புகழ் உலகம் எனப் போற்றப்படும். அதனையே வள்ளுவர் அவ்வுலகம் என்கிறார். இவ்வுலக வாழ்வு புறவாழ்வு என்றால், அவ்வுலக வாழ்வு அகவாழ்வு; இவ்வுலக வாழ்வு - உடல் வாழ்வு என்றால் அவ்வுலக வாழ்வு = படணர்வு வாழ்வு ஆகும். பொருள் இல்லாதவர்களுக்குப் புறவாழ்க்கைப் பேறு இருந்தும் இல்லாதது போல், அருள் இல்லாதவர்கட்கு அகவாழ்க்கைப் பேறு வாய்த்தல் அரிது. பொருளற்ற வறியவர் உண் 33, உடுத்தல் முதலான வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இடர் உறுவர். அருள் இல்லாதவர்கள் மனத்திலும் நினைப்பிலும் நிறைவோ இன்பமோ அடைய இயலாது வருந்துவர். இவ்வுலகையும் அவ்வுலகையும் நாம் வாழும் நல்லுலகாய்க் கொண்டு பொருளைத் தேடி அருளாளராய் அன்புப் பணிபூண்டு, பிறரை இன்புறுத்தி, நாமும் இன்புற்று வாழும் நல்லுலகமாய் இவ்வுலகம் என்றும் மிளிர வேண்டும் என்னும் வேட்கை கொண்ட வள்ளுவப் பெருந்தகை "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு" எனக் கூறுகிறார். "பொருளுடையான் கண்ணதே போகம் அறனும் அருளுடையான் கண்ணாதே" எனச் சிறு பஞ்சமூலம் கூ றுவதும் இனணத்து எண்ணத் இதீன் மெட்சு என்னும் புகழ் பெற்ற அறிவியல் அறிஞரை அவருடைய நண்பர் ஒருவர் குளிர் காலத்தில் காணச் சென்றார். அறிஞர் தம் உடல் எல்லாம் போர்த்திக் கொண்டிருந்தும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆய்வுப் பணியும் நடந்து கொண்டிருந்தது. பக்கத்திலே பெரிய இருப்புக் கணப்பு இருந்தும். அதில் நெருப்பு இல்லை . "ஏன் சுரப்பை மூட்டாமல், இப்படிக் குளிரில் விறைக்கிறீர்கள்" எ டின நண்பர் வினவினார். அறிஞர் எழுந்து சுணப்பருகே சென்று அதன் கதவைத் திறந்தார். அதிலே கந்தைத் துணிகளும், பழைய தாள்களும் திணிக்கப்பட்டிருந்தன. ஒரு சுண்டெலி தன் சின்னக் குஞ்சுகளை இங்கே பாலூட்டி வளர்த்து வருகிறது குஞ்சுகள் நன்கு வளரும் வரையில் அனவகனள இங்கிருந்து வெருட்ட மனமில்லை” என்றார் அறிஞர். எலிக் குஞ்சுகனை வெருட்டி விட்டால் அருளுடைமையும் ஓடி விடும்! ஓடியது ஓடியது தான், IF/4-18:4-இல் திருநெல்வேலியில் வாழ்ந்த வேத நாயக சாத்திரியார் பறவைகளைக் கூடுகளில் அடைத்து வளர்ப்பதை விரும்பாதவர். தெருவிற்கு யாராவது குருவி விற்க வந்தால் மொத்தமாக விலை பேசி வாங்கிக் கூட்டைத் திறந்து குருவிகளை எல்லாம் பறந்து போகச் செய்வாராம், "அவற்றின் மகிழ்ச்சியைக் கெடுத்துச் சிறையில் ஏவப்பது கொடுமை; குருவிகள் சுத்திப் பாடுவது சுடவுளின் மகிமை. நமக்கு இன்பம் பயக்கிறது அல்லவா?' என்று காரணமும் சொல்வாராம்! வேத நாயகர் நல்லை அருள் நாயகர். பொருளை இழந்து விட்டவர்கள் அவரவர் முயற்சிக்கு ஏற்ப மீண்டும் பெறலாம்! மிகுதியாகவும் கூடப் பெற்றவர்கள் உண்டு! பொருள் போவதும் வருவதும் உலகத்தில் ஒன்றும் புதுமை இல்லை , ஆனால் அருளைப் பெறுவது சிலர்க்கு முடியாததாய் இருக்கலாம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் அருட் பண்பைப் கைக்கொள்ளத் தவறி விடுவோமானால் அஃது உயிரை இழந்ததற்கு ஒப்பாகும், மீண்டும் பெற இயலாது. ஆகவே பொருளைக் காப்பதைவிடக் கவனமாய்க் காத்து ஓம்ப வேண்டிய உயிர்ப்பண்பு அருளாகும். பொருள் வரும் போகும்; ஆனால் அருள் வந்தால் போகாது; ஒரு வேளை போனால் வரவே வராது அவ்வளவு 'தன்மானம்" உடையது அருளாகும், என்பதை, "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது" என்கிறார். முப்பழங்களில் ஒருமுறை ஒரு பூவே பூக்கும் வாழை அனையர் அருளுடையார், பொருளுடையார் முப்பழங்களில் ஏனைய மா மரம் போன்றவர் ஒரு பருவத்தில் பூக்கள் பல பூக்கும், உதிரும் மீண்டும் பூக்கும் அத்தகையர் எனக் கொள்க! குழப்பவாதி எதிலும் மெய்ப்பொருள் காண இயலாது: அதுபோல் அருளினான் அறம் செய்ய இயலாது. நடயிர்களிடம் உண்மையான இரக்கம் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால் அது தெளிந்த அறிவு இல்லாதவன் கண்டு உரைக்கும் மெய்ப் பொருள் போன்றதாகும், தெளிவே ஆய்விற்கு அடிப்படை அதுபோல் அருளே அறத்திற்கு அடிப்படை என்பதைத், "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்" 24) எனக் கூறுகிறது குறள், "இன்சொல் இனிதான்றல் காண்பான், எவன் கொலோ சிவன்சொல் வழங்குவது" என இனியவை கூறலில் தற்சிந்தனை கொள்ளத் தூண்டியது போல் எண்ண வைக்கும் ஏற்ற மிக்க குறளே, "வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து" என்பதாகும். ஒருவன் தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவனைத் தாக்க முற்படும் பொழுது ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படி? தான் தன்னைக் காட்டிலும் வலிமை பொருந்தியவன் ஒருவனின் சினத்திற்கு ஆளாகி, அவன் முன் நிற்கும் நிலை ஏற்படுமானால் நமக்கு அந்தச் சூழ்நிலை எத்தகைய துயரத்தைத் தரும் என்பதை எண்ணிப் பார்க்க ஒருவன் முற்படுவான் ஆனால் அவன் ஒருக்காலும் பிறரைத் துன்பத்தில் தளிக்கவிட மாட்டான் என்பதே, வாள் காதலர் காட்டும் வழி! "இறப்ப நமக்கு அடுத்த காவ்வநோய் யாவும் பிறர்க்கும் அஃதாம்கான்று கொண்மின் - உறக்கருதி எவ்வாறு உமக்கு உறுதி எண்ணுதிர்நீர் எல்லார்க்கும் அவ்வாறே எண்ணல் கடன்" எனப் பாரதம் பாடிய பெருந்தேவனார் வேறொரு பாத்திரத்தில் குறள் அமுதை வழங்குவது மேலும் சிந்திக்க நல்ல தூண்டு கோலாய் அமைகிறது. - “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று எண்ணுவது ஓர் உயர் நெறி! அது போன்றதே, "யான் உற்ற துன்பம் உறாது ஒழிக இவ்வையகம்" என்பதையும் எண்ண வைக்கிறார் வள்ளுவர். "அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே! இருட்கண்ணி னோர்க்கு அங்கு இரவியும் தோன்றா தெருள் சுண்ணினோர்க்கு வாங்கும் சீர் ஒளிஆமே! என்னும் திருமூலர் அருள் மொழியையும் ஆம்! ஆம்! என்போம்! "கொத்தித் திரியும் அந்தக்கோழி - அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடும் அந்தக் காக்காய் - அதற்கு இரக்கப்பட வேணுமடி பாப்பா! பாலைப் பொழிந்துதரும் பாப்பா = அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! பாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது மனிதனுக்குத் தோழனடி பாப்பா! திவண்டி இழுக்கும் நல்லா குதினர = நெல் பெயலில் உழுதுவரும் மாடு அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா! எனப்பாடும் பாரதியார் பாடல் குழந்தைகளை அருளாளர்கள் ஆக்கும் தல்லபாட்டு அல்லவா? "காளாறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போதெலாம் பயந்தேன் கரளாறு மாடுமுதல் பல மிருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன் கோளாறு கோழி முதல் பலப்பறவை கூடவுதல் கேட்டுளம் குளவந்தேன் வீறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என்னை வெகுண்டேன்” "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றகாரக் காடு டாம் பாதத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டுளம் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்" என அருளாளர் இராமலிங்க அடிகளார் உருகி உருகிப் பாடும் பாடல்கள் எல்லாம் அருள் தற்றின் சுரப்பல் பவா? அவைதாமே அவரை அருளாளர் ஆக்கின! வள்ளுவரின் அருளுடைமையின் உருவாய் உயர்தொண்டு ஆற்றிய வெள்ளலார் வள்ளுவர் போல் வாழ்க என வாழ்த்துவோம்! "அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்” "நல்லாற்றாள் நாடி அருளாள்க "அருள் சேர்ந்த நெஞ்சினர் ஆகுக! "அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை" "அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகாதீர்! "பொருள் இழப்பு இழப்பன்று அருள் இழப்பே பேரிழப்பு” "அருளாளராய் அறம் செய்க! "எவரையும், எதையும் துன்புறுத்த எண்ணாதீர்! "அருட் டுணையே துணை” 26. புலால் மறுத்தல் திருவள்ளுவரின் தனிப்பெருந் தன்மையினையும், அருள்வழிப்பட்ட புரட்சி மனப்பான்மையையும், வெளிப்படுத்தி நிற்கும் அதிகாரங்களில் ஒன்று "புலால் மறுத்தல்", பழந்தமிழர் விரும்பி உண்ணும் உணவு வகையில் "புலாலுக்குத் தனி இடம் உண்டு, இலக்கிய உலகமும் புலால் உணவு ஆக்கி விருந்து பேணியமையைப் போற்றிப் பாராட்டியே மகிழ்கிறது. உயிர் வாழ் உசனா வு இன்றியமையாதது. உயிரினங்களில் புல்லுணவு மட்டுமே உண்டு உயிர் வாழும் உயிரினங்களே மிகுதி; புலால் உணவு உண்டு உயிர் வாழும் உயிரினங்களும் உண்டு. ஆனால், புலால் உணவு உட்கொள்ளும் உயிரினங்களை விட புல்லுணவு உட்கொள்ளும் உயிரினங்கள் அமைதியான நல்லியல்பு கொண்ட உயிரினங்களாய் வாழ்ந்து வருவதையும் காண்கிறோம், ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித் தனி இயல்புகள் அமைந்திருப்பினும் அவ்வியல்பு உண்ணும் உணவிற்கு ஏற்றவாறும் அமைந்து காணப்படுவதையும் கண்டு துர முடிகின்றது. மனிதப் பிறவி, அறிவறிந்த பிறவி , பழி பிறங்காது பண்புடன் வாழ வேண்டி ய பிறவி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை அறிந்த பிறவி “பிறிதின் நோயைத் தன் நோய் போல்" சுருதிப் போச்சு முற்படவேண்டிய பிறவி "மன்னுயிர் ஓம்பி அருள் ஆன" வேண்டிய பிறவியும் ஆகும், ஆகவே, உண்ணும் உணவு முறையிலும் அதற்கு ஏற்ற பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்! தன் உயிரையே தான் அழித்துக் கொள்ள உரிமை கிடையாது. அப்படி இருக்கப் பிற உயிர்சுனள, அதுவும் வாய் பேச இயலாது, நம்மை அண்டிப் பிழைக்கும் ஆடு கோழி முதலியவற்றை நாமே ஆர்வத்துடன் வளர்த்து அன்பு பாராட்டி பக்கத்திலியே வைத்திருந்து பின் அதனை உணவிற்காகக் துடிதுடிக்கக் கொன்று அதன் உடல் தசையைக் கண்ட துண்டமாக வெட்டிக் கூறு செய்து பக்குவப் படுத்தி கண்ண விரும்புகிறோம் என்றால் நாம் "கள்ளம்' என்பது ஒன்று இல்லாத கற்களாக, இரும்புகளாக எண்ணிப் பார்க்கத் தாண்டுபவர் திருவள்ளுவர். ஆள் வளர வேண்டும்; உடபோய் மட்டும் பெளர்ந்து பயனில்லை; அறிவாலும் வளரவேண்டும்! அதைவிடப் பண்பால் வளர வேண்டும். மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கை யிலும் "மக்கட் பண்பு" என்னும் முத்திரை இடப்பட வேண்டும். மக்கட் பண்பிற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுகிறவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருப்பினும் அவன் "ஆறறிவு படைத்த மனிதப் பிறப்பினனாகக் கருதப் படமாட்டான் அவன் ஓரறிவு காரியாகிய மரத்திற்கு ஒப்பானவனாகவே கருதப்படுவான் என்பதே திருக்குறள் நெறி! ஆகவே பிற உயிரைக் கொன்று உணவாகக் கொள்வது உடல் நலத்திற்கும் உயிர் நலத்திற்கும் நல்லியல்பு நிலை கொள்வதற்கும் ஏற்புடையதன்று என்பது மருத்துவ உலகமும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். இன்னொன்று பிற உயிரை அழித்து உணவாகக் கொள்வது இரக்கமற்ற செயல். என்பும் பிறர்க்கு உரியவராய் வாழ வேண்டிய அன்புடையார் செயலும் அன்று. "மன்னுயிர் ஓம்பி அருள் ஆளும் " ஆளின்” செயலும் அன்று என்று எண்ணிப் பார்த்த திருவள்ளுவர் "பல்லாற்றான் தேரினும் அருளே துணை" என்பதை மன்பதை உணர வேண்டுமானால் "தன் உண்ணும் பழக்கம் கட்டாயம் விலக்கப் பட வேண்டும் எனக் கருதியே அருளுடைமைக்கும் தவத்திற்கும் இடையில் "புலால் மறுத்ததலை" வலியுறுத்த முற்பட்டுள்ளார் என்பதை உணர்ந்து பின்பற்றுவது நமது கடமையாகும். அருள் நெறியைக் கடைப் பிடித்து ஒழுக வேண்டும் என எண்ணுபவர் நளனைச் சுருக்கி நள்ளொளி பெருக்கும் மாசற்ற மனத்தினராய் விளங்க வேண்டும். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணுபவர் மறந்தும் பிற உயிர்க்குத் தீமை செய்ய எண் 532 மாட்டார், தம்முயிர் தம்முடன் எனத் தனிப்பற்றுக் கொள்ள மாட்டார், ஆகவே தான் திருவள்ளுவர், "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது நான்தடண்பான் எங்ஙனம் ஆளும் அருள்" என வினா எழுப்புகிறார். ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?' என வினவினாலே போதும். ஆனால் பிறந்து நான் நடண்பான் எனக் கூறுவதுடன் நிறைவடையாமல் தான் பிறிது ஊன் உண்பான் என்று சகூறுவதுடன் ""தன்னன் பெருக்கற்குத் தான் பிறிது நான் உண்பான்" என இவ்வளவு விரிவாகக் கூறுகிறார். பயனில சொல்லா வள்ளுவர், ஊன் உண்பானுக்கு இத்தனை முன் ஒட்டுகளைச் சேர்த்து நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறார். தாங்க முடியா வறுமைக்கு ஆட்பட்டு, கொடும்பசியால் வருந்தும் ஒருவனுக்கு அரிசி போன்ற புல்லு Sணவு எதுவும் கிடைக்கவில்லை! காட்டுப் பகுதி ஒருவேடன் வேட்டையாடிய மான் ஒன்றை நெருப்பில் வாட்டி, பக்குவப்படுத்தி உண்ணக் கொடுக்கிறான். உண்டு பழக்கமி:2:31ல எனினும் ஏதாவது உண்டு உயிர் பிழைக்க வேண்டிய நெருக்கடியில் ஒருவழிப் போக்கன் நண்பது போன்ற நேர்ச்சியைத் திருவள்ளுவர் இங்குச் சுட்டவில்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டு குறளுக்குள் செல்ல வேண்டியுள்ளது. ) அருளானனாகத் தான் விளங்க வேண்டும் என்று கருதுகிற துறவறத்தான், இன்னோர் உபயிரைப் போக்கி அதன் நளனை எடுத்து உண்ணவே எண்ணக் கூடாது. சுடும் பசியில் கூட எண்ணக் கூடாது என்றால் தன் உடலைப் பருக்க வைப்பதற்காக உண்கிறான் என்றால் அவன் எப்படி அருளைக் கடைப்பிடிக்க இயலும். நாம் எத்தகையவராக விளங்க வேண்டும் என்று கருதுகிறோமோ அதற்கு ஏற்ற ஒழுக்க முறைகளைப் பின்பற்றி ஒழுக வேண்டுவதே முறையாகும், தன்தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு எங்ஙனம் அருள் பிறக்கும்! ஊன் உண்பான் அருளாளனாக இருக்க இயலாது. அருளாளன் ஊன் உண்ணான். "பிறவிக் கடல்,அகத்து ஆராய்ந்து உணரின் தெறுவதின் குற்றம் இலார்களும் இல்லை அறுவகை ஓரா விடக்கு மிசசையோர் குறைவுஇன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவார் என்னும் வளையாபதிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கதாகும், விடக்கு மிசைவோர் சான்றால் தான் உண் பவர் என்று பொருள், "உயிர்கள் ஓம்புமின் நாள்விழைந்து கடண்ணன்மின்" எனவும் வளையாபதி வேண்டுகிறது. "நான் கண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்" என வேண்டுபவர் இளங்கோவடிகள். மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் விடுதி உணவில் புலாலும் இடம் பெற வேண்டுமென்று இருபதாம் நாற்றாண்டின் நடுவில் போராடினார்கள்! மாணவர்களை நேரில் சந்தித்த நிறுவனர் கலைத் தந்தை கருமுத்து தியாகராசர், வேறு ஏதேனும் கோரிக்கை இருப்பின் கூறுக! உடனே நிறைவேற்றி விடுகிறேன். புலால் உணவு கட்டாயம் போட வேண்டும் என்பதே உங்கள் விருப்பம் என்றால் பொறுத்துக் கொள்ளுங்கள்! விடுதியை வேண்டுமானால் மூடிவிடுவேனே தவிர்த்துப் புலால் உணவு வழங்க அனுமதிக்க மாட்டேன்” எனக் கூறி உறுதியாக நின்றது நடந்த வரலாறு. ஏற்ற தொழிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆர்வத்துடன் முயன்று உழைக்க வேண்டும்! வருவாயைப் பெருக்க வேண்டும் தக்சுவழியில் தக்க செயலுக்குச் செலவு செய்ய வேண்டும்! எஞ்சிய தொகையை முறையாகச் சேமிக்க வேண்டும்; இதில் ஏதாவது ஒன்றில் ஆளுமைக் குறை நேர்ந்து விடுமாயின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை உணர்த்த வேண்டிப் "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை" எனக் கூறும் வள்ளுவர் அவ்வாறே " அருளாட்சி தான் தின்பவர்க்கு இல்லை" என உணர்த்துகிறார், பொருளைப் பேணிக் காக்க இயலாதவன் பொருளாளனாய் பவிளங்க முடியாதது போல தா ன் தின்பவன் அருளாளனாய் விளங்க முடியாது. பேணத் தெரியாதவனிடம் பொருளும் தங்காது. தன் உண்பவரிடம் அருள் உள்ளம் அமையாது என்பதை "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்ெகலைப் சான்தின் பவர்க்கு” எனக் ச றுகிறார். புகழ் பகைவரையும் பொறுமையாலும் அன்பாலும் நன்மை செய்வதாலும் வெற்றி கொள்ள எண்ணாது. பகைவரை அழிக்க எண்ணிக் கொலைக் கருவியைக் கைாரில் கொண்டவனின் மனம் அதனாற் செய்யும் கொலையை அன்றி அருளை நோக்காதது போல் ஓர் உயிரியின் உடலைச் சுவைத்து உண்டு பழகியவன் மனம் மானைக் கருதுமே தவிர்த்து அருள்பெற எண்ணாது, பிற உயிரின் உடலைச் சுவைத்து உண்டவர் மனம், கொலைக் சுருளி ஏந்தியவரைப் போல் கொல்ல நினைக்குமே அன்றி நல்லது செய்ய எண்ணாது. "கதறினும் தொண்டை கீளக் சுத்தினும் புள்ளும் மாவும் பதறிலும் நெஞ்ச மெல்லாம் பக்கமும் தலையும் காலும் உதறினும் அங்கும் இங்கும் இடினும் அரத்தம் பீறிச் சிதறினும் இரக்கங் கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க உண்டார்” என்னும் பழம் பாடலும் தக்க சான்றாகும். களன் சுவை கண்டார் மனம் கொல்லத் தயங்காது. "அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும்” என்பது கொல்லாமை அதிகார முதற்குறள். "அறச் செயல் என்பது யாது என்றால் அது கொலை செய்யாமை ஆகும். கொலை செய்தல் அறமல்லாத தீய செயல் கள் அனைத்தையும் தரும்" எனும் போக்கில் அமைந்த குறளே, "அருளல்லது யாதுஎனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்" என்பதாகும். இது ஒரு இலக்கணக் குரள் முப்பொருளுக்கு இலக்கணம் இவ்வொரு குறளில் ஏழு சீர்களுக்குள் அடக்கிக் காட்டும் வள்ளுவரின் திறன் வியக்கத் தக்கதாகும், அருளுடைமை மிக விரிவுடையது என்பதை அறிவோம்! நினைவில் வைத்துக் கொள்ளுமாறு சில சொற்களின் கூறுமாறு வேண்டியவர்கட்கு வள்ளுவர் வழங்கிய நுட்பமான விளக்கம் "கொல்லாமை" கொண்டொழுகல்" அருளற்ற செயல் யாது? கொல்லுதலே அருளிலாச் செயல், பொருளற்ற செயல் நான் தின்னல், அதனை பொருளற்ற செயல் அறமற்ற செயல், தகுதி அற்ற செயல், பொருத்தமற்ற செயல் என எப்படிக் கூறினும் ஒன்றே ! கொல்லாமையே அருள் கொல்லுதல் அருனற்றது: நானுண்ணல் அறமன்று! எவ்வளவு சுருங்கிய தெளிந்த விடை, "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த கட்டம்பு! என்பது அன்புடைமைக் குறள். "அன்புடன் கூடிய உடலை 15யிருடன் கூடிய உடல், அவ்வன்பிலார் உடலோ எலும்பும் தோலும் போர்த்துக் கட்டிய உயிரிலா உடல் ஆகும்." எனும் நோக்கிலும் போக்கிலும் அமைந்த குறளே, "நடண்ணாமை தடள்ளது உயிர்நிலை நாணுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு” 255 பிற உயிரின் கள ன் அன்றி வேறு எதனையும் உணவாகக் கொள்ளாது உயிர் வாழும் உயிரினங்கள் உலகில் உண்டா? நானே உண் ணாத உயிரினங்கள் பல உண்டு, பிற உணவுடன் நளனையும் உணவாகக் கொள்ளும் உயிரினமும் உண்டு! இவ்விருவகை உயிரினங்களில் உயர்ந்த உயிரினங்கள் நன் உண்ணும் உயிரினமா? தன் உண்ணா உயிரினமா? ஊன் உண்ணாமல் வாழலாம். நளனை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்தல் இயலாது. அது இயற்கையும் அன்று. நளன் உண்ணாது வாழ்வதே உயர்ந்த உயிர் வாழ்வாகும், தான் உண்டு வாழ்வோர் உயர்நிலையில் 31வத்து எண்ணத்தக்கவர் அல்லர். நான் உண்ணார் உடல்களே உயிர்நிலை பெறும் உடல்கள் ஆகும், விலங்குகளில் பெரியது; இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என மதிக்கத்தக்கது. கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது, இன உணர்வு மிக்கது, ஏதாவது ஒன்று சிக்கலில் மாட்டிக் கொண்டால் கூட்டுச் சேர்ந்து விடுவிக்கும் இயல்புடையது. பழைய நால்வகைப் படையில் உயர்படையாய் விளங்குவது, உருவத்தால் பெரியது: உடலால் வலியது. தும்பிக்கை என்னும் நம்பிக்கைக்குரிய தணிக்கையையும் உடையது. பாகனுக்கும் கட்டுப்பட்டது. பெரிய பாரத்தையும் எளிதாக இழுத்து வரக் கூடியது இன்னும் படை! சிறப்புகளையும் தனித் தன்மையையும் தன்னகத்தே கொண்ட களிறுகள் இளனைக் கண்டாலே! வாயையும் திறக்காதது என்பதைக் கண்டாவது மனிதஇனம் "தான் உண்ணும் வேட்கையைப் போக்கக் கூடாதா' என விரும்பித்தான், "உண்ணாமை உள்ள துயிர் நிலை தானுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு" என்னும் அருமைக் குறளை யாத்திருப்பார். எங்கோ ஒரு சிறு 15எழுத்துப் பிழை நேர்ந்திருக்கிறது. அஃது உண்மையைக் கண்டறிய விடாதபடி, குழப்பிக் கொண்டிருக்கிறது. குழப்பம் தீர வழி காண்பது குறள் நெறியாரின் உயிர்நிலைக் கடனாகும், "திகார்பொருட்டால் கொள்ளாது கடபகெனிகள் யாரும் | விலைப்பொருட்டால் நான் தருவார் இல்" 256 புலாலை உண்பதற்காக வாங்குபவர் இருப்பதால் விலைக்கு களனன விற்பவர்கள் இருக்கிறார்கள். விற்று முதல் ஆக்குபவர் இருப்பதால் சனனின் பொருட்டு உயிர்களைக் கொல்லும் இரக்கமற்றவர்களும் இருக்கிரார்கள். . உயிர்க் கொலையாளிகள் இருப்பதால் இளனை விற்பனை செய்து பொருள் தேடுகிறவர்கள் இருக்கிறார்கள். நான் விற்பனை மிகுதியாக நடைபெறுவதால் வாயுணர்வின் மாக்கள் தட்டுப்பாடின்றி வாங்கி உண்டு வருகிறார்கள். உணவிற்காகவும் இயற்கை உwரிகளின் எண்ணிக்கை நாளும் குறைந்து கொண்டே வருகிறது. காடுகள் அழிவாலும் இயற்கை உயிரினங்கள் குறைந்து வருவதுடன் காடும் மலையும் வேட்டைக் காடாய் மாறி வருவதாலும் ஏற்பட்டு வரும் அழிவும் கணக்கில் அடங்காது. இயற்கை அழிவு மழையைக் குறைத்து மாநிலத்தை வறண்ட தாக்கும். நளன் (கொள்வாரும் கொடுப்பாரும் இல்லாத நிலையே உலகிற்கு நன்னிலை யாகும். "தகாது உயிர்கொல் வானின் மிகாமை இயைபாவம் அப்பாவியில் உண்பான் புலாப்பெருகல் வேண்டும் புகாயகலைப் சவிலயாங்குஆய்ப் பொறாதுபிற நான் கொன்று அவாவிலையில் விற்பாளம் ஆண்டு அதுவே வேண்டும்" என்பது வளையாபதிப் பாடல். "நள ன் உண்ணும் ஆசையால் தான் உண்பவன், அவ்வூன் உணவு மிகுதியாகக் கிடைத்தலையே விரும்புவான். ஆகவே, அவனும் கொனாவுக்கு உடன்பட்டவன் ஆகின்றான், எப்படி எனில் நான் விற்பவனும் அங்ஙனமே அவன் மிகுதியாகக் கிடைப்பதையே விரும்பிக் கொல்கிறான். ஆகவே தீவினை சொல்பவனை மட்டுமல்லாது உண்பானையும் மிகுதியாகச் சாரும். ஆகவே நான் உண்பது நன்றன்று வியக்கற்பாலது. தன் உடலில் ஏற்பட்ட புண்ணே தனக்கு அருவறுப்பைத் தருகிறது. பிறர் உடலில் நாட்பட்ட பெரிய புண்களைக் கண்டால் சீ! தோ! எனக் கூறி அருவறுப்பு அடைகின்றனர். ஆடு, மாடு, மான், பன்ரி போன்ற உயிரினங்களின் உடல்களில் ஏதாவது உரசி அடி பட்ட புண்ணைக் கண்டால் கண்ணையும் மூக்கையும் பொத்திக் கொள்கிறவர்களும் உள்ளனர், அப்படியானால் ஓர் உயிரை வெட்டியோ கழுத்தைத் திருகியோ கொன்று தோலை உரித்து, குடலை உருவி எலும்பு, தசைகளைத் துண்டாக்கியதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் ஒவ்வொரு துண்டும் புண்தானே! புண்தான் என்பதைக் கண்டீர்! அறிந்தீர் போதுமா? உணர வேண்டாமா? உணர்ந்தால் திருத்திக் கொள்ள வேண்டாமா?' என வற்புறுத்தவே "உண்ணாமை வேண்டும் புலால், பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்" என உணர்வூட்டினார். கோயிலாய் விளங்கும் உடலை வளர்க்கப் 'புண்ணாம்' அளனை உண்பது உகந்ததா?' தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செம்புண் வறுத்தவறை தின்பர் - அந்தோ நடுநின்று உலக நயனிலா மாந்தர் வடுவன்றோ செய்யும் வழக்கு" என்னும் அறநெறிச்சாரமும் இக்கருத்தையே வலியுறுத்துவதையும் காணலாம்! குற்றமற்ற நல்லறிவினை உடையோர், தம்மாலோ, பிறராலோ கொல்லப்படாமல் இயற்கையாலோ, அல்லது நேர்ச்சியாலோ, உயிர் பிரிந்த உயிரினத்தின் நளனையும் கூட உண்ண மாட்டார்கள். இதில் கொலைப் பாவம் இல்லை எனினும் புண் ஏஎனக் கருதுவதாலும், மனிதனின் இயற்கையான உணவு அன்மையானும் நல்லியல்பையும் கெடுத்துவிடும் என்பதாலும் அருளாளராய் விளங்க முடியாது என்பதாலும் கட்டாயம் கான் உண்ண விரும்பார் சான்பதை, "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் தடண்ணார் தயிரின் தலைப்பிரிந்த நான்” குறள் வழி விளக்குகிறார். காந்தியடிகள் தாய்க்கு போக்குக் கொடுத்துச் சென்றது போலவே இங்கிலாந்தில் புல்லு 5:3ணவிற்காக அ =LLல்பட்ட போதும் புலால் உணவு தேடாமல் கிட்டிய போதும் புலால் உணவை உண்ணாது அங்கு வாழ்ந்ததுடன் எங்கும் வாழ்ந்த செயிரின் தலைப் பிரிந்த காட்சியாருக்கு நல்லதோர் எடுத்துக் காட்டானவர் ஆவார். மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறும் கற்புடைப் பெருமாட்டி ஆதிரை அவரின் இனிய கணவர் சாதுவன் ஒரு முறை கடல் கடந்து வணிகம் செய்யச் சென்று புயலில் சிக்கி நாகரிகமற்ற நாகர்வாழ் பகுதியை அடைந்தார். அவர் நாகர்களின் மொழியையும் அறிந்தவர் அவர்கட்கு நாகர் தனலெவன் சுள்ளும் புலாலும் வழங்கிப் பெருமைப் படுத்த நினைத்தான். சாதுவன் அவற்றைத் தாம் உண்ணவும் பருகவும் மாட்டேன் எனக் கூறியதுடன் இரண்டன் இழிவையும் தீமையையும் அவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு எடுத்துரைத்து அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் என்பதைச் சீத்தலைச் சாத்தனார் காப்பிய நயத்துடன் விளக்குவது ஏற்ற எடுத்துக் காட்டாகும். "நன்றாகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை" என்பது கொல்லாமையில் இடம் பெறும் குறள். “ஓர் உயிரைக் கொல்லுதலால் உண்டாகும் நலங்கள் பெரிதாகும் என்றால் கூட சான்றோர்க்கு அக்கொலை வழியால் வேரும் நன்மைகள் கீழானவையே ஆகும்" என்ற அடிப்படை நோக்கிலேயே பாடப்பட்ட குறளே, "துவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று என்னும் புரட்சிக் குறளாகும்! சிறு தெய்வ வழிபாட்டின் பேராலும், நினைத்தது முடிய வேண்டும் எனும் விருப்பத்தால் எழுந்த அழுத்தமான நாட்டில் தவத்தோர் எண்ணிக்கை பெருகப் பெருக, நாட்டில் பகடை உணர்வு குன்றி, ஒன்றுபட்ட உயர்வாழ்வு மியாரும்! "உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால் | உடள்ளான் வெகுளி கானின்" இது வெகுளாமையின் பயன் உணர்த்தும் குறட்பாவாகும். “மனத்தில் சிறிதும் சினம் கொள்ளாதவன் என்றால் அவன் மனத்தில் நினைத்தவை எல்லாம் நிறை வேறும்" "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராசுப் பெறின்" என்பது வினைத் திட்பத்தின் வெற்றியுணர்த்தும் நூற்பா. "எண்:37கிறவர் உறுதி உடையவர் அ =னால் தாம் எண்ணியதை எண்ணியவாறு அனடவர்" என்னும் நோக்கிலும் போக்கிலும் அமைந்த குறட்பாவே, "நவகண்டிய வேண்டியாங்கு எய்தலபால் செய்தவம் ஈண்டு முயலப் படும்" என்பதாகும்! தவ ஒழுக்கம் வாய்ந்த பெருமக்கள் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று நினைக்கிறார்கள். “பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றி வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். . அவர்கள் எப்பொழுதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அது நிறைவேறத் திட்டமிடுகிறார்கள், திட்டமும் முறையான திட்டமாகும்! அதற்கு ஏற்ற இடத்தைத் தெரிவு செய்கிறார்கள். எவரையும்: எதிர்பாராமல் பணியைத் தொடங்குகிறார்கள். தேவையான (பொருள்கள் எல்லாம் தேடி வருகிறது. திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே பரி நிறைவேறுகிறது. எதனால், எண்ணியவர்கள் தன ஒழுக்கம் உடையவர்கள் பணி தந்நலமற்ற பொது நலப்பணி! அவர்கள் எடுத்த பணியை அவரை அரிந்தவர் எல்லாம் தாம் மேற்கொண்ட பணிபோல் சுருதி உதவுகிறார்கள்! உழைக்கிறார்கள். காரணம் தாம் வழங்கும் ஒவ்வொரு காசும் உருப்படியான பணிக்கே பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மிக முதன்மையானதாகும். தவ ஒழுக்கம் நிறைந்த வள்ளலார் வளமாக நினைத்தார் வடலூரில் (TAti.5) சன்மார்க்க சங்கம் (TSA) தருமச்சாலை [17] சித்திவளாகம் (1871) ஞான சபை உருக்கொண்டது. ஆற்றல் மிக்க தவ புக்கர் விவேகானந்தர் இராம் கிருட்டின பரம ஹம்சரின் கொள்கைகளைப் பரப்பத்தக்க நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என எண்ணினார் அவர் வேண்டியாங்கு நாடெல்லாம் பெரும் பெரும் நிறுவனங்கள் உருக்கொண்டு தொண்டு புரிந்து வருகின்றன, அருள் நிரை தவத்தவர் சித்பானந்தர் வேண்டியதற்கு மேலாகவே விவேகானந்தர் கேந்திரங்களும் அன்னை சாரதா நிறுவனங்களும் உருக்கொண்டன. . யாம் தொடங்கிய பணி முற்றுப் பெற்றுவிட்டது. ஆகவே இப்பணிக்காக அருள் கூர்ந்து இனியாரும் நன்கொடை அனுப்ப வேண்டா என ஒரு நிறுவனம் பொது வேண்டுகோள் விடுகிறது என்றால் தவத்தவரின் முயற்சி எண்ணியதை எல்லாம் முடித்தே தீரும் என்பது வாய்மையே. தடைகள் வரலாம்! தொல்லை துயரங்கள் ஏற்படலாம். ஆனால் தவத்தவர் தாம் மேற்கொண்ட முயற்சியில் இருந்து பின் வாங்க மாட்டார்கள். ஆல்பர்ட் சுவைட்சர் வடகிழக்குப் பிரான்சில் பிறந்தவர். சமயக் கொள்கை பரப்புநராகப் பணியைத் தொடங்கியவர் தாம். கல்வி அறிவற்ற மூட நம்பிக்கை கொண்ட கொடுமையான நோய் கட்கு ஆட்பட்டு வருந்தும் ஆப்பிரிக்காவின் வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு மருத்துவத் தொண்டு புரிய விரும்பினார். அவர் விருப்பமும் அதற்கேற்ற முயற்சியும் ஒரு பெருந்தவமாக உருக்கொண்டதால் 'பாம்பன்' என்னும் இடத்தில் ஐம்பது ஆண்டுகள் அருட் பணி புரிந்தார். நாடு விடுதலை பெற வேண்டும் என உள்ளத்தால் விரும்பியவர் காந்தியடிகள், அதற்கான முயற்சிகளை எல்லாம் ஒரு பெரும் தளமாக மேற்கொண்டனர். ஆகவே தன்ச் சியர் காந்தியடிகள் வேண்டியாங்கே நாடு விடுதலை பெற முடிந்தது. செயலும் நற்செயலாக இருக்க வேண்டும்! அச்செயலை மேற்கொண்டவர் தம்க்குற்ற துன்பங்களைப் பொருட்டாக எண்ணாதவராயும், எவ்வுயிர்க்கும் துன்பம் வினளவிக்க மனத்தாலும் எண்ணாதவராயும் இருக்க வேண்டும் உறுதியான செயல் முயற்சி உடையவராகவும் இருக்க வேண்டும். அத்தகை யோர் அவ்வாறு முயலும் முயற்சியே தவ முயற்சியாகும். முயற்சி ஒருமுகப்பட்ட தவமாகும் போது உறுதியாய் நிறைவேறும். விரும்பிய பணியை விரும்பியவாறு விரைந்து முடிக்க மேற்கொள்ளும் முயற்சி தவமுயர்சி ஆகட்டும்! *கடன் என்ப நல்லவை எல்லாம்" என்பது வள்ளுவன் வாக்கு. நாம் நல்லது செய்யவே மண்ணில் பிறந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிமனித நிலையிலும் செய்ய வேண்டிய சுடமைகள் உண்டு அவ்வாறே குடும்ப உறுப்பினர் என்ற நிலையில், தாயாக, தந்தையாக, பாட்டனாக பாட்டியாக, மகனாக, மகளாக, போனாசு, பெயர்த்தியாக, மாமனாக, மாமியாகச் செய்ய வேண்டிய குடும்பக் கடமைகளும் உண்டு! அதற்கும் மேலானது வருவாய்க்காக ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தொழிற் கடமை அல்லது கனதியம் கருதிச் செய்யும் அலுவல் சார்ந்த கடமைகள்! அதற்கு மேல் ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொண்ட பணி சார்ந்த கடமைகள். இவற்றை இவரினும் மேலாக வேறு எவராலும் செய்ய இயலாது என உலகம் பாராட்டுமாறு குற்றமும் குறையும் இழப்பும் நேராத பின்கையில் மிகச் செப்பமாகச் செய்ய வேண்டும். தாம் ஏற்றுக் கொண்ட பணி பெரியதா? சிறியதா? என்பது பற்றிக் கவலை இல்லை, தெருக்கூட்டும் பணியாயினும் சரி; நாடாளும் பெரும் பணியாயினும் அவரவர் ஏற்றுக் கொண்ட பணியில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் கண்ணும் கருத்தும் வைத்துச் செய்ய வேண்டும்! பிறர் பணியில் குறுக்கிடக் கூடாது. பேராசைப் பட்டு வேண்டாத வன்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது. 'விரலுக்குத் தக்க வீக்கம்' என்பது போல் நம் தகுதிக்கு ஏற்ற பணியையே ஏற்றுக் கொள்ள வேண்டும்" மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு, நாக்குப் பயிற்சியோ, தெளிவோ இல்லாத தொழிலுக்குத் தாவி, "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்" என களசலாடி உரிய தொழிலையும் உருப்படாமல் செய்துவிடக் கூடாது என விரும்புபவர் திருவள்ளுவர் ஆகவே, "தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவம் செய்வார் ஆசையுள் பட்டு" எனத் தெளிவுறுத்துகிறார். தம் கடமையைச் சிறப்புடன் செய்பவரே தவம் செய்பவர். கடமையைச் செய்யத் தவறுவோர் ஆசைக்கு அடிமையாகி அவம் செய்பவர் ஆவர். "கடமையாவன் தன்னைக் கட்டுதல் பிறர் துயர் தீர்த்த ல் பிறர் நலம் வேண்டுதல்” எனக் கூறும் பாரதியாரின் கூற்றையும் இணைத்துச் சிந்திப்பது நன்று . "மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணா பினார்" என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் தம் கருமத்தைத் தவம் செய்வார் எவ்வாறு முழு ஈடுபாட்டுடன் செய்வர் என்பதை அருமையாக விளக்குகிறது. "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" தவத்தவர் பொன் அன்னார் என்பதை விளக்கும் அருமைக் குறளாகும். "சுடச் சுடரும் பொன்" என்கிறார் அஃது உவமை. அவர்சுட்ட வந்த பொருள், 'துன்பம் சுடச் சுட நோற்பவர் ஒளி விடுவர்" என்பது துன்பங்களில் எல்லாம் கொடுமையான துன்பம் வறுமைத் துன்பம் சுடு நெருப்பில் தூங்கினாலும் தூங்கலாம், ஆனால் வறுமைத் தீக்கு ஆட்பட்டோர் கண்ணை மூடவும் முடியாது, கண் 1339 ஒரேயடியாக வேண்டுமானால் மூடலாம், வறுமை நேற்றுத் தான் கொன்று சென்றதே அதே வறுமை இன்றும் வருமோ?' என்று அச்சமூட்டுவது. இல் வறுமையுள்ளும் இளமை வறுlை: மிகக் கொடுமை யானது. நாற்றங்காலிலேயே நோய்பற்றிக் கொண்டது போன்ற கொடியது அதனால், "கொடிது கொடிது வறுமை கொடிது - அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்றார் ஒளவையார். வறுமைத் துயர் ஒருபால்; நோய்த் துயர் இன்னொரு பால்: பெற்றோர் மற்றோர் இறப்புத் துயர் மற்றொருபால் உடல் உறுப்புக்குறை ஒருபால்; பகைவர் தொல்லை ஒருபால், உறவினர் தொல் லை இன்னொருபால் எத்தனையோ துன்ப துயரங்கள் அடுக்கடுக்காய் வந்து தன்னை வாட்டி வறுத்தெடுத்த போதும் அச்சோதனைகளைச் சாதனை ஆக்கி வாழ்ந்து புகழின் உச்சத்திற்குச் சென்ற பலரை வரலாற்று உலகத்தில் கா32 முடியும், "குட் இயர்" பல பொருள்களையும் செய்யக் கூடிய விதத்தில் "இரப்பர்' என்னும் மரப்பாவைப் தக்க முறையில் பக்குவப் படுத்தும் முறையை கண்டுபிடித்த உலகச் சாதனையாளர் இவர், அதற்காக அவர்பட்ட பாடு அளவிட்டுரைக்க இயலாது. தமது உடைமைகளை எல்லாம் விற்று ஆராய்ச்சி செய்தார். அதனால் அவர் குடும்பம் பட்டு கிடந்தது. அவரது 12 குழந்தைகளில் 5 குழந்தைகள் அடுத்தடுத்து உயிர் இழந்தன, உறவினர்கள் எல்லாம் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். கடன் கொடுத்தோர் வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளினர். தண்டனை முடிந்து வெளிவந்தும் ஆராய்ச்சியின் வேகம் தணியவில்லை. இறுதியில் வெற்றியும் பெற்றார். இதைக் கொண்டு அவர் கோடி கோடியாகத் தேடியிருக்கலாம். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இல்லாததால் தமது கண்டு பிடிப்பின் உரிமையை மற்றொருவருக்குக் குறைந்த தொகைக்கு விற்று விட்டார். அப்படி இருந்தும் இறக்கும் காலத்தில் இருபதினாயிரம் டாலர் கடனாளியாகவே இறந்தார். இருந்தும் "குட் இயரின் தவ முயற்சியின் பயனாய் உருவான கண்டு பிடிப்பு இன்றும் அவர் பெயரை தவகெங்கும் சொல்ல வைத்து விட்டது. கெலன் கெல்லர் ஏழை, குருடு, செவிடு, தனமை எனினும் இக்குறைகளை வெற்றிபெற உறுதி பூண்டார்; மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தம்முடைய வாழ்னவ ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்தார் உலகத்தில் வாழ்ந்த பெண்மணிகளிலே சிறந்த எடுத்துக்கான பெண்ணாகத் திகழ்ந்தார். இறவா இசைப் பண்களை உருவாக்கிய "பிதோவான்' ஒரு மீண்டசொர்க்கம்" என்னும் உயர் காவியம் படைத்த மில்டன் கண்பார்வை அற்றவர். சூலியசு சீசர் காக்கை வலிப்பு நோயினால் அவதிப்பட்டவர். எனினும் பல நாடுகளை வென்ற மாவீரராக விளங்கினார். காக்கை வலிப்பு வரப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்ட உடனே, போரை நடத்துவதற்கான அறிவுரைகளைச் சொல்லி விட்டு, தன் நினைவு அற்ற நிலையில் படுத்துவிடுவாராம். தன் நினைவு வந்தவுடன் ஒன்றுமே நிகழாதது போல் தனபதி நிலையில் ஆணைகளைப் பிறப்பிப்பாராம். பிராங்க்ளின் ரூசவெல்ட் இளம்பிள்ளை வாதத்தால் கால் நாணமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராய் விளங்கிச் சிறப்புடன் ஆட்சி புரிந்தார். தீயில் இட்டுச் சுடச்சுட மாசற்று எளிமிகும் பொன்னைப் போலத் தவம் செய்வோரைத் துன்பம் சுடச்சுட உள்ளொளி பெருகும்!" காய்ச்சக் காய்ச்ச பொன் ஒளி மிகும்! தவ முயற்சியாளரைத் துன்பம் தாக்கத் தாக்க (மெய் அறிவு மிகும், "மன்னுயிர் ஓம்பி அருளாள்வாங்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை” என்பது அருளுடைமை அதிகாரத்தில் இடம் பெறும் குறள், "உலகத்து உயிர்களை எல்லாம் பேணும் அருள் ஒழுக்கம் பூண்டவனுக்கு தன் உயிர் குறித்து அஞ்சுவதற்கு உரிய தீய செயல்கள் உண்டாகா என்று தெளிந்தோர் கூறுவர்" "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" (5) இது புலால் மறுத்தலில் இடம் பெற்றுள்ள குறள், "ஒருவன் கொலை புரியாதவனாகவும், புலால் உண்ணாதவனாகவும் இருந்தால் அவனை உலகத்து உயிர்கள் எல்லாமும் கைகுவித்து வணங்கும்" என்னும் அடிப்படையில் அமைந்த குறளே, "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்" என்பதாகும், தான் உயிரோடு வாழும் வாழ்வு தனக்கு என்று இல்லாமல், பிற உயிர்கட்குத் தேவையான நன்மைகளைச் செய்வதற்கே என்று கொண்டு அருளாளியாக வாழ்பவனை ஏனைய மனிதர்களும் பிற உயிரினங்களும் எமக்காக வாழும் இவன் என்றும் நலமுடன் வாழ்வானாக என வாழ்த்தி வணங்கும், தன்னுயிரைத் தனக்கு எனக் கொள்ளாமல் மற்றை உயிரிகளின் தொண்டுச்சே எனக் கருதி வாழ்ந்தால் அவ்வுயிரிகள் அவனைப் போற்றும். 'சத்து உனக்கும் இன்பம்" ஒரு பக்க இன்பம்ன்று. ஈனார்க்கும் இன்பம் பெறுவார்க்கும் இன்பம் அவ்வாறே தன் வாழ்வையே பிறர் வாழ்வுக்கு ஒப்படைக்கும் வாழ்வு, உயிரெல்லாம் உறையுமோர் உயிர் வாழ்வாகி உயரும் வாழ்வாகும். அது வாழ்த்தத் தக்கது மட்டுமன்று! வணங்கத் தக்க தெய்வ வாழ்வாகும்! தந்நலமற்ற தனிச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டான வாழ்வாகும். "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு" உள்ளத்தை ஒருமைப்படுத்தும் ஆற்றலுடைய தவத்தினர்க்கு இரப்பாகிய அச்சம் என்பது ஒன்று இல்லை. கூற்றம் என்பதுவும் அவர்க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போகும், "கொடியில் இருந்து உதிரும் பூப்போல் உடலில் இருந்து உயிர்பிரிதல் வேண்டும்" என்பார் தாகூர். அவரே 'மணவாளன் கழுத்தில் மாலை சூட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டு செல்லக் காத்திருக்கும் மணமகள் போல் யான் காத்திருக்கிறேன்; இன்னும் வாராமல் கூற்றுவனே நீ காலம் கடத்துவது என்ன?" என வினவுகிறார், "காலா! உன்னைச் சிறுபுல் எனவே மதிக்கின்றேன்! என்றன் சாயருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்" எனக் கூறும் துணிவுடைய அச்சமற்ற வாழ்வு பாரதியின் வாழ்வு, 102 வயது வாழ்ந்த பெருமகன் விசுவேசுவரையா, அவரைப் பெரியவர் ஒருவர் "தங்கள் நெடிய வாழ்வுக்குக் காரணம் என்ன? என வினவினார் அதற்கு அவர் இரண்டு மூன்று முறை என்னை அழைப்பதற்காக வந்து காலன் என் கதவைத் தட்டினான்; அப்பொழுது எல்லாம், நான் கருத்தாகக் கடமையில் ஈடுபட்டிருந்தமையால் வேலை செய்பவனுக்கு இடைஞ்சல் செய்யக் கூடாது எனப் போய்விட்டான் என்று மறுமொழி தந்தார். கடமைகளைத் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு அதே ஒருமையில் செயல்புரிந்து கொண்டிருப்பவர் நெடிது வாழ்வர் என்னும் அரிய நுட்பத்தை அவர்தம் கூர்த்த மூளையால் கண்டு வழங்கியுள்ளார். இத்தகு நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு உடல் இறப்பு என்பது களிப்பே அன்றிக் கவலைப் பொருள் இல்லை. அவர்கள் தாம் யாராலும் அழிக்க முடியாத புகழ் வாழ்வு பெற்று விட்டனரே! தவ வலிமை பெற்றுப் பொதுவுக்கு உழைத்தவர்களைக் காலத்தாலும் அழிக்க முடியாது. அத்தகையவர்களிடம் காலனும் நெருங்க மாட்டான். "நஞ்சுகுடித்தாலும் நவைஇன்று தவம் நின்றால் அஞ்சிஓளிந் தாலும் அரண் இல்லை தவம் உடலந்தால் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் தவம் மிக்கார் அஞ்சலிவர் என்றும் அறனே களைகண் என்பார்” எனும் சிந்தாமணிப் பாடல் ஏற்ற எடுத்துக்காட்டாகும். "தவவலிமை உடையவரை உண்ணும் நஞ்சும் ஒன்றும் செய்யாது! தவவலிமை சிதைந்தாவ், அஞ்சி அளித்தாலும் காக்க அரண் இருக்காது. தவ வலிமை உடையோர் யானையின் கொம்புகளுக்கு இடையே சிக்கினாலும் தப்பிப் பிழைப்பர்! எதற்கும் அறமே துணை என்போர் எதற்கும் அஞ்சார்" என்பதே சிந்தாமணிப் பாடலின் பொருளாகும், நோற்றலின் ஆற்றல் தலைப் பட்டோர் காலனினும் வலிமை பொருந்தியவர் ஆவார். அருளில்லார் (247) அறிவில்லார் (41) அன்பிலார் (72) இல்லார் (752) இனமல்லார் (832) உள்ளம் இலாதவர் (598) ஒழுக்கமிலான் (135) கல்லாதவர் (393) சுண்ணோட்டம் இல்லவர் (57) தகவிலர் (TI4) துப்புரவு இல்லார் {IF(151) தேற்றாதவர் [40) தாண் அகத்தில்லார் (120) பண்பில்லாதவர் (ஒப்7) மேவல்லார் 973) எனக் குறிப்பிடும் இல்லார்களில் பொருள் செயல் வசையில் குறித்து இல்லார் தவிர்த்து பதினான்கு இடங்களிலும் எது இல்லார் என்பது மிகத் தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. பொருள் செயல் வகையில் இல்லார்' என்பவர் பொருள் இலார் என அதிகாரத் தலைப்பை வைத்துத் தெரிந்து கொள்வது போல் இவ்வதிகாரத்தில் இடம் பெற்ற இறுதிக் குறளாகிய, "இயர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் என்பதில் உள்ள "இலர்" தவம் இவர் எனக் கொள்வதில் மயக்கம் கொள்ளத் தேவையே இல்லை. தவம் செய்யப் பலர் மறந்து விட்டாரே என்ற கவலை திருவள்ளுவர்க்கு உண்டு! மறந்தவர்களை நேரடியாகக் குற்றமுடையவராக ஆக்காமல் பாராட்டுவது போல் தாமே ஒரு அமைதி (சொல்லிக் கொண்டார் துறவிகட்கு உதவி செய்யும் ஆர்வத்தில் 'தவம் செய்ய மறந்திருப்பர் போலும் என்ற பொருள் "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்" என வரைந்த குராளும் மனத்தில் இருக்கட்டும், பொதுவாக நாட்டில் வாழ்வோர் அனைவரும் மாந்தராசு இருப்பது போல் தவத்தவராகவும் இருக்க வேண்டும். ஆனால் நாட்டின் உலகின் உண்மைநிலை அப்படி இல்லையே! நாட்டில் தவ ஒழுக்கத்தை பின்பற்றாதவர் எண் ணிக்கை அல்லவா மிகுதியாகக் காணப்படுகிறது. வாழ்வைத் "தவம்" ஆக்கிக் கொண்டவர் தொகை மிக மிகக் குறைவாக இருக்கிறதே என்ன காரணம்? தவ வாழ்விற்குப் புரத் தேவைகள் எதுவும் வேண்டியதில்லையே எனப் பலவாறாக ஆராய்ந்து பார்த்துக் கண்டறிந்த உண்மையைத் தெளிவாகவும் உறுதிப்படவும் உரைக்கலானார். கலங்காத மனஉறுதி உடையவர்கள் தான் தவத்தவர் ஆகமுடியும். மன உறுதி வன் (ளுவர் கூறும் மனத்திட்டம் உடையவர் தொகை மிகுந்தால் தான் தவத்தவர் தொகை பெருகும், மன உறுதி உடையவர் தொகை குறைவாக இருக்குமானால் தவத்தவர் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும்! தவநெறியில் வாழ விரும்புவோர் எந்தச் சூழ்நிலையிலும் தம் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத திண்ணியராக இருந்தால் தான் தவத்தில் நிலைக்க முடியும். மனத்திண்மையிலார் விரைவிலேயே முயற்சியைக் கைவிட்டு வேண்டாம் "ஐயா! என ஓடிவிடுவார்கள். தவத்தோரெல்லாம் வலிய முயற்சியாளர்கள்: திண்ணிய பனத்தவர்கள் மாறாத (கொள்னகயர் ஆயர். "துன்பத்தைத் தாங்கும் மனவலிமை வேண்டும்” ""எவ்வுயிர்க்கும் துன்பம் சாண்ணா அருள் உள்ளம் வேண்டும்" தவச் செயலைத் தவத் தன்மையரே செய்தல் வேண்டும்! தவத்தோர் பகைமையை ஒழிப்பர் நண்பரை ஆக்குவர்" தவத்தோர் நினைத்ததை முடிப்பர் நினைத்தது முடியும் தவத்தோர் சுடமையில் மேம்பட்டவர்! தவத்தவரைத் துன்பம் மேலும் உயர்த்தும்! தவத்தவரை உலகமெல்லாம் வணங்கும் தவத்தவர் புகழ் வாழ்வால் நிலைபெறுவார் எல்லாரும் தவத்தவர் ஆவோம்! நியாசாங்கத் தக்கவர் ஆவோம்! 28. கூடா ஒழுக்கம் "தெரிந்தோம்பித் தேரினும் ஒழுக்கமே துணை* "ஒழுக்கம் உடைமை குடிமை" "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை" "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என வள்ளுவர் ஒழுக்கமுடைமைப்பில் ஒழுக்கத்தால் அடையும் நற்பயனையும் சிறப்பையும் எடுத்தோதியுள்ளார் என்பது நன்கு அறிவோம். "ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்" எனக் குடிமையில் அறுதியிட்டு உரைப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! அதே வேளையில் ஒழுக்கம் உடை19ம் அதிகாரத்திலேயே "இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்" "பார்ப்பான் பிறப்பு அழும் குன்றக் கெடும்" " முக்கயிலான் கண் உயர்வு இல்லை " இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி "தீயொழுக்கம் என்றும் இடும்ப ம் தரும்" எனத் தீயொழுக்கத்தால் விளையும் கேடுகளை அடுக்கிக் கூறுவதுடன், 'பிற ப் விழையாமை" அதிகாரத்தில் - "தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் விளிந்தார்” என இல்லற வாழ்வினருக்கே எடுத்து மொழிந்தவர் திருவள்ளுவர். இல்வாழ்க்கைக் கடமைகளைச் செவ்விந்தின் நிறைவேற்றி, தந்தம் மறந்து பொதுநலத் தொண்டு செய்ய அணியம் ஆனனார் துறவர். துரவர் நாலறிவும், து எண் 37 ரிவும், பட்டறிவும் மிக்க பண்பாளர்கள் ஆவர். இவர்கள் வளர் அறிந்து உயர்நிலை மாந்தராவார். இவர்கள் உலகவரின் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். இவர்களின் வாக்கையும் வழி காட்டுதலையும் உரியவர் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆகவே, துறவறத்தார் தாம் மேற்கொண்டுள்ள துரவுக் கோலத்திற்கு ஏற்பவும் தாம் மேற்கொண்டு வரும் தவசி செயல்களுக்கு ஏற்றவாறும், அருளாளராய் விளங்குவதுடன் ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோராகவும் விளங்கி வழிகாட்ட வேண்டும் எனப் பெரிதும் விரும்புபவர் திருவள்ளுவர். ஆகவே தான் கேள்வி அதிகாரத்தில் "இழுக்கல் உடடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் கடாடையார்வாய்ச் சொல்" எனக் கூறுகிறார். அறிவுரை வழங்குபவர் கற்றவராக, சொல்வன்மை உடையவராக மட்டும் இருந்து பயனில்லை, நல்ல ஒழுக்கம் உடைய உரவோராகவும் இருக்க வேண்டும், ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்லே வழுக்சுல் நிலத்திலும் வழுக்காமல் நடக்க உதவும் நாளன்றுகோல் போல் உதவும், ஒழுக்கமிலார் வாய்ச் சொல்லால் பயன்கிட்டுவது அரிது. மேனிலை மாந்தராம் துறவோர் மேலான ஒழுக்கம் உனடயவர்களாய் விளங்கி னால் தான் மேலானவர் ஆவார். 'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்” (473) என்று வள்ளுவர் சுடறும் குறிப்புரை நினைந்து போற்றத் தக்கதாகும். "பெருமையும் தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு” 974 எனப் பெருமையில் கூறும் பெருந்தக்க உண்மையினையும் துறவோர் மட்டுமல்லாது உயர்நிலை மாந்தர் அனைவரும் கூடா ஒழுக்கத்துடன் கூடாது, நல்லொழுக்கக் கூட்டாளர்களாய் விளங்குவது அவர்கட்கு மட்டுமன்றி நாட்டிற்கும் மிக நல்லது என்பதைத் தெளிவுபடுத்த வடித்த அதிகாரமே 'கூடா ஒழுக்கமாகும்'. தவ ஒழுக்கம் உடையவர்களுக்கே தவக்கோலம் பொருந்தும். கைக்கொள்ளக் கூடாத தீய ஒழுக்கம் உடையவர்கள் தவக்கோலம் பூண்டு வாழ்வது முறைமை அன்று குற்றமாகும். மிகுதியாக வரம்பு கடந்து தீங்கு செய்வதற்குத் துரவுக் கோலத்தைப் பயன்படுத்துவது ஏமாற்று: வஞ்சகமாகும். தூய மனத்தவராய் விளங்க வேண்டியவர்கள் அதற்கு மாறாக வஞ்சகம் பொருந்திய மனத்தினராய்க் கொண்டு ஒழுகும் தீய ஒழுக்கம் புறத்தார்க்குச் சில காலம் புலப்படாமல் இருக்கலாம்! அவர்கள் உண்மை தெரியாமல் திருவடியில் வீழ்ந்தும் வாழ்த்துப் பெறலாம். உண்மை தர் அறிய வெளிப்பட்ட போது கைது செய்து குற்றவாளிக் கூண்டில் சிலர் நிறுத்தப்படலாம், சிலர் அதிலும் தப்பியும் விடலாம். தவக்கோலம் திரையாய் அமைந்து சார் உலகத்தை உண்மையை உணர முடியாமல் கூடச் செய்து விடலாம். ஆனால், தன் வஞ்சக ஒழுக்கம் கட்டாயம் தனக்குத் தெரியும், சட்டத்தை நீதி நெரயைச் சாட்சிகள் மூலம் விலைக்கு வாங்கி ஏமாற்ற வாய்ப்பு உண்டு. ஆனால் அவன் வஞ்சக ஒழுக்கத்தை நன்கு அறிந்த அவனவன் உடலின் கண்ணே உள்ள மண்ணும் சிரிக்கும்! விண்ணும் சிரிக்கும் நீரும் சிரிக்கும், நெருப்பும் சிரிக்கும், காற்றும் சிரிக்கும். ஆமாம் ஐந்து பூதங்களும் தனிமையில் இருக்கும் வேளையில் இகழ்ந்து சிரித்து இடித்துக் காட்டும் வேதனையை! - தண்டனையை - எந்தச் சிறைக் கூடமும் தந்துவிட இயலாது. வஞ்சகன் மறைந்து செய்த கூடா ஒழுக்கத்திற்கு நேரடிச் சாட்சியாகிய பூதங்கள் ஐந்தும் அகத்தே நகைக்கும்! "உலகில் யாரும் அறியாத படி உலவும் தீமை வஞ்சக ஒழுக்கம் நன்றே அதை ஆங்காடன் மட்டுமே அரிவான்" என்கிறார் மில்டன். "வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் வஞ்சித்த காங்கும் டான்சருபகள் காணுங்கொல் என்றும்சி அங்கங் குரைவது அறிவு" என்னும் குமர குருபரரின் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கது. வள்ளுவரின் "யாக மாத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்" என்னும் குறளாகும். அறியாமல் தெரியாமல் புரியாமல் செய்யும் தவறுகள் பெரியவர்களின் மன்னிப்புக்கு உரியது தான். இங்கே இந்தப் பெரிய மனிதன் தான் அளவு 5 பயர்ந்த செல்வம் பெற்றவன்; நிகரற்ற கல்வியாளன் நாட்டிலேயே மிக உயர்ந்த ஆளுமைப் பொறுப்பில் உள்ளவன்; மக்கள் தெய்வமாக மதித்துப் போற்றும் துறவுக் கோலம் தாங்கியவன், தன் நெஞ்சம் பன்முறை செய்யாதே செய்யாதே என்று இடித்து உணர்த்திய ஒழுக்கக் கேடான செயலைச் செய்வானானால் புறத்தில் பெற்றுள்ள உயர்ந்த சிறப்புகள் எதுனாலும் எப்பயனும் இல்லை என்பதோடு இவரா இப்படி நடந்து கொண்டார் நம்பமுடியவில்லையே! உலகம் என்ன உலகம்! "எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்பதைக் கண்டு பிடிச்சு முடியவில்லையே" என மிகக் கேவலமாக அறிந்தோரெல்லாம் பழிப்பர். ஆகவே, மேலே உயர உயர வேறு எதில் குறை இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒழுக்கத்தில் மட்டும் குரை) நேர்ந்தால் ஏற்படும் வீழ்ச்சியால் என்றும் எழுந்திருக்க முடியாது. எழுந்தாலும் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியாது: அறிந்தும் குற்றம் செய்தோர் அழிவது உறுதி! என்பதை, "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின்?" என்கிறார். தன்நெஞ்சம் தான் அரிகுர்றப்படின் வானுயர் தோற்றம் எவன் செய்யும்.' எவ்வளவு அழுத்தமான சொற்களால் அமைந்து வினா? யார் மறுமொழி பகர முடியும். "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று” 273 என்னும் குறள் வழிப் புலித்தோல் போர்த்த பசு நெல் வயலில் மேயும் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறார். மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இல்லாமல் தவக்கோலம் கொள்வதால் பிறரை வஞ்சிக்கும் தன்மை மிகுதியாகும். தவக் கோலத்தைக் கண்டு மிக உயர்ந்த அருளாளராக மதித்து அவரால் தமக்கு மிகுந்த நன்மை விளையுமே தவர்த்து அவரால் தமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று முழு நம்பிக்கையுடன் மகளிரும் மற்றவரும் ஐயமின்றி மிக நெருங்கிப் பழகுவர். அந்த வாய்ப்பைத் தன் தீய ஒழுக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது [க எளிதாகும். ஆகவே, மனத் திண்மை இல்லாதவன் ஆற்றல் மிக்க தவக்கோலம் கொண்டு நம்பியவர்களை வஞ்சிப்பது பசு தன் உண்மைத் தோற்றத்தில் அணுகினால் பயிரை மேய்ந்து விடும் எனத் தோட்டக்காரன் (வெருட்டி அடிப்பான் என்று எண்ணி புலித்தோல் போர்த்தப்பட்டு வயலில் மேய்கிறது. கண்ணுறும் தோட்டக்காரன் புலியால் பயிருக்கு அழிவு நேராது என எண்ணி ஏமாற்றம் அடையவும் செய்யலாம்! ஏன்! புலி கிட்ட நெருங்கினால் நம்மைக் கொன்றுவிடும் என அஞ்சியும் அமைதி காக்கலாம், பசு எப்படியும் காடெல்லாம் மேய்ந்து அழித்துவிடும்! ஆகவே, யாரையும் தோற்றத்தைக் கண்டே முடிவுக்கு வந்துவிடக் கூடாது. உண்மையா? போலியா என்பதைக் கண்டு காணர்ந்து போற்றுங்கள் எனத் திருவள்ளுவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தும் குறட்பாக்களில் இதுவும் ஒன்று. இன்னும் உண்டு! அதுவே, "தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவண் புள்சிமிழ்த் தற்று இது வேடன் பறவை பிடிக்கும் காட்சி. தவம் மதிப்பு மிக்கது. ஆகவே துவக்கோலமும் மதிக்கப்படுகிறது. மதிப்பு மிக்க தவ வேடத்தில் மறைந்து கொண்டு தவத்தவர் செய்யக் கூடாத தீய செயல்களைச் செய்தல் ஏற்புடையதன்று அது சூழ்ச்சியும் வஞ்சமும் பொருந்திய ஏமாற்று வேலையாகும். அது பறனவ பிடிக்க விரும்பும் வேடன் தக்க இடத்தில் வலையை விரித்து வைத்து விட்டுத் தன்னைப் பானங்கள் பார்த்து விடக்கூடாது, என அஞ்சி அண்மையில் இருக்கும் புதருள் மறைந்து கொள்ளும் செயலை ஒக்கும் என்கிறார் வள்ளுவர். தன்வேடத்தில் மறைந்து தகவல் செய்தல், புதரில் மறைந்து பறனவ பிடிப்பது போலாம்! தன்னை மறைந்து நின்று அம்பு எய்து வீழ்த்தியது ஏன்? என வாலி இராமனை வினவும் வினாவலில் கம்பன் இவ்வுவமையை எவ்வாறு கையாண்டிருக்கிறான் காணுங்கள். "அவ்வுரை அமையக் கேட்ட அரிக்குலத்து அரசும், மாண்ட செவ்வியோய் அனையது.ஆக செருக்களத்து தடருத்து எய்யாதே வெவ்விய புனிஞர் என்னவிஷயங்கியே மறைந்து வில்லால் நாவ்வியது என்னை? சான்றான்" என்பது ஒப்பிட்டு நோக்கத்தக்கது. "கேட்டியால் அந்தணாள கேடிலா எம்பிரான்தன் மாட்டு ஒரு சிறிதும் அன்பு மனத்திடை நிகழ்ந்ததில்லை காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதர் மேற்கொண்ட வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடம் நீ கொண்டதன்மை" தவவேடம் தாங்கிய சிவனைப் பழித்து உமா தேவியார் உரைத்ததாகக் கச்சியப்பர் பாடியுள்ள கந்தபுராணத்திலும் இவ்வுவமைதாயக் காண முடிகிறது. "பற்றுக்களை எல்லாம் விட்டு விட்டோம்! வேண்டாமையே எமக்கு விழுச்செல்வம்! எமக்கு அவையத்தின் வானம் அன் ஈனயாகும் எனக் கூறுவோர் 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தும் அடக்கிய ஆற்றலராகவும் ஒழுக்கத்தின் ஒல்கா உரவோராகவும் இருக்க வேண்டும்.! ஆனால் துறவோர்க்குரிய இயல்புகள் எல்லாம் அற்றவராய் இருந்தும் தம்மைப் பற்றற்ற உயர்ந்த துறவியாய்க் வெளியே காட்டிக் கொண்டு, "ஒழுக்கந் தவறி நடந்து வந்தால் அஃது அப்பொழுது அவர்கட்கு இன்பமாகத் தோன்றினாலும், ஏன் இப்படி நடந்து இவ்வளவு இழி விற்கும் ஏளனத்திற்கும் ஆட்பட்டுத் துன்புற வேண்டும் என அவர்களே வருந்திப் புலம்பும் நிலையை உருவாக்கிவிடும்! ஆசை இல்லை எனச் சொல்வாரது தீய ஒழுக்கம்! சீ! சீ! என்று இகழ்ந்துரைக்கும் துன்பத்தைத் தரும்! பற்றை விடாப் போலித் துறவியர் மனச் சான்றையே விற்று விட்டவர் இறைவனையே ஏமாற்றி விடலாம் என எண்ணிச் செயல்படுபவர் பாராட்ட வந்தவரே உண்மை தெரிந்தால் பல்லை உடைப்பர் என்பதையும் அறியாதவர் "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடி உறைந் தற்று” சான்ப3த உணராது அடுக்கடுக்காகத் தியதையே இனியது எனக்கருதிச் செய்ததால் துன்பத்திற்கு மேல் துன்பம், இழிவுக்கு மேல் இழிவுறுவார் எனப் போலியரை எச்சரிக்கும் குரளே, "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் காற்றெற்றென்று ஏதம் பலவும் தரும்" என்பதாகும். உலகத்தில் வாழ்கின்றவர்களில் எல்லாம் மிகக் கொடியவர் யார்? என வினா எழுப்பி விட கூர வேண்டுகிறார்? கொலைகாரனா? கொள்ளைக் காரனா? திருடனா? குடிகாரனா? சூதாடியா? இவர்கள் எல்லாம் கொடியவர்களாகக் சுருதத்தக்கவர் தாம் மறுக்கவில்லை . நான் வினவியது கொடியவர்களில் எல்லாம் கொடியவர் யார் என்பதாகும் என்றார். எங்கட்குத் தெரியவில்லை. எல்லாம் அறிந்த நீங்கள் தான் கூறுங்கள் என வேண்டிய போது திருவள்ளுவர், "நெஞ்சில் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்" எனக் கூறுகிறார். தாவரம் மிகச் சிறப்பிற்கு உரியதே! துர்வார் நொரி நின்று ஒழுகுவோர் மீமிசை மாந்தராய்ப் போற்றப் படுவார் என்பது உண்மை தான்! ஆனால் துறவு பற்றி வாயால் பேசுவதால் உண்மையான துறவராக ஆகிவிட இயலாது! உடல் தோற்றத்தால் துறவராகக் காட்சி வழங்குவதால் துறவராக இயலாது? துறவர்கள் செய்ய வேண்டிய புறச் செயல்களை எல்லாம் செய்வதனாலும் துறவராகக் கருத இயலாது. துறவர் ஐந்தன் புலத்தையும் அடலும் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கே விடலும் வேண்டும்; யான் எனது என்னும் செருக்கை அறுக்கவும் வேண்டும்: மாசற்ற தாய நெஞ்சினராய் விளாங்கவும் வேண்டும்; சா1 டினமோ? மயக்கமோ? இன்றி நெஞ்சகத்தே அந்தப் பற்றிய துரவே துாவாகும், மனத்தில் பற்றற்ற தன்மையே துறவாகும். மனத்தாலும் பற்றை விட்டவரே துறவர். மனப்பற்னற விடாது பெருமைக்காக உண்மைத் துறவர் போல் கோலங்காட்டிப் பிறரை ஏமாற்றி மறைந்து, பொருந்தா ஒழுக்கத்தவராய் சாவர்கள் வாழ்கிறார்களோ அவர்களைப் போன்ற கொடியவர்கள் உலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்! மனத்தால் துறவாது துறவர் போல் நடிப்பர் உயர்ந்து நடிகர் அல்சர், மிகக் கொடியவர், கர்வனவற்றில் தேளும் பாம்பும் கொடிய உயிரிகள், விலங்குகளில் சிங்கம் புலி கரடி கொடிய விலங்குகள் மனிதரில் துறவு மனம் இல்லாமல் துறவராசு வஞ்சித்து வாழும் துறவரே மிகக் கொடிய மனிதர் என்பது வேள் ளுவர் கணிப்புப் போலும். ஆகவே துறவர்களை ஒழுக்கத்தால் அடையாளம் காண்க! அறியாமல் சிக்கிக் கொள்ளாதீர் என எச்சரிக்கிறார், குன்றிமணி செக்கச் சிவந்த நிறத்தில் பார்க்க மிக அழகான தோற்றம் உடையது. உற்று நோக்கினால் தான் மூக்கில் கரிய நிரப்புள்ளி இருப்பது தெரிய வரும், அதனைக் கண்கற்ற திருவள்ளுவர் தூய துறவிபோல் தோற்றம் அளிப்பவர்கள் எல்லாம் உள்ளத்தில் தூய்மையும் நல்லொழுக்கமும் உடையவர்களாய் இல்லையே என்பதையும் கண்டுணர்ந்து குன்றி மணினயயும் வஞ்சகத் துளியையும் ஒப்பிட்டுச் சிந்திக்கிறார். "புரம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து" என்னும் குறள் உருப்பெறுகிறது. புறத்தே குன்றி மணியின் சிவந்த நிறத்தைப் போன்று, தூய தவக்கோலம் உடையவராய்த் தோற்றம் அளித்தாலும் அகத்தே குன்றி மரியின் மூக்கில் உள்ள கருமை போல் வஞ்சகராய் வாழ்வாரும் இவ்வுலகில் உண்டு! ஆகவே கவனம் தேவை! கோலம் கண்டு ஏமாந்து விடாதீர் என எச்சரிப்பதே வள்ளுவரின் நோக்கமாகும், திருத்தொண்டர்களில் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்தக் கருதிய வஞ்சகன் முத்தநாதன் அரண்மனைக்குள் நுழைந்ததைச் சேக்கிழார், "மெய்யெலாம் நீறு பூசி போனிகள் முடித்துக் கட்டிக் கையினில் படை கரந்த புத்தக் கவுளி ஏந்தி மைபொதி விளக்கே யென்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய்த்தவ வேடங் கொண்டு புகுத்தனன் முத்த நாதன்" 15 3 உவமையை மாற்றிக் கருத்து விளக்கம் தருவது நல்ல இலக்கியச் சான்றாகும், மனத்தின்கண் நீக்க வேண்டிய குற்றங்களை நீக்காமல், மனம் குற்றங்களின் இருப்பிடமாய் அமைந்திருக்க அது பற்றிய உணர்வு சிறிதும் இன்றிப் புற அழுக்கு நீங்கத் தூய நீரில் வேளை தவறாமல் நீராடி எப்படி எல்லாம் மிக உயர்ந்த பெரிய மனிதராகக் காட்டிக் கொள்ள முடியுமோ அதற்கு ஏற்புடைய ஒப்பனைகள் எல்லாம் செய்து தம்முடைய உண்மையான வஞ்சக ஒழுக்கத்தை எல்லாம் மறைத்து வாழும் மக்கள் பலர் வாழுகிற உலகம் இவ்வுலகம்! | மனத்தில் களங்கம் வைத்து உயர்ந்தோர் போல் தோன்றி வாழ்வார் உலகில் தண்டு ஆகவே வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு யாரைப் பற்றியும் விரைந்து முடிவு எடுத்து, அவர்களிடம் பெரிய பணி சுனை ஒப்படைக்கவோ, மிகுதியாக நம்பி நம் குடும்பத்தில் நெருங்கிப் பழக அனுமதிப்பதோ நல்லதன்று! "ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்னும் பழமொழியை மறந்து விடாதீர், 191ன்பதை தரனர்த்துவதைக் கடமையாகக் கொண்ட திருவள்ளுவர், "மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி மறைந்தொழுகு மாந்தர் பலர்” என உரைக்கிறார்; !iக்களுக்கு உரைக்கட்டும், "உள்ளத்தின் உள்ளே உணர்வென்னும் தீர்த்த நீர் மெல்லக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பறந்து திரிவர்இக் கள்ள மனம்உடைக் காசினியோரே" என்னும் திருமூலர் வாக்கும் ஒப்புமையடையதே ஆகும்., "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்பது தெரிந்து தெளிதல் அதிகாரக்குறள், "புகழுக்கும் அதற்கு எதிராம் பழிக்கும் அவரவர் செய்யும் செயலின் செம்மையும் செம்மை இல்லாமையுமே உரை கல்லாகும்" "எனளாவகையான் தேறியக்கண்ணும் வினளவகையான் சேவறாகும் மாந்தர் பலர்" "எத்தனை வழிகளால் ஆராய்ந்து தெளிந்த இடத்தும், (செயலை மேற்கொண்டு செய்யும் நிலையில் வேறுபட்டு விடும் மாந்தர் பலராவர்", இது தெரிந்து வினையாடல், குறளும் பொருளும் ஆகும்." "போலிருந்தும் மோல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழ்வார் கீழல் பவர்" என்பது பெருமை அதிகாரக்குறள். இக்குறட்பாக்கள் உணர்த்தும் அடித்தளத்தில் அமைந்ததே, "காலாகொடிது, யாழ்கோடு செவ்விது ஆங்குஅன்னா விளைபடு பாலால் கொளல்" எனும் குறள் ஆகும். அம்பு வடிவில் நேராய் இருந்தாலும் கொடிய செயலுக்குப் பயன்படுத்தப்படுவது. யாழின் தண்டு வளைந்து தோற்றத்தின் அழகில்லாதது போல் தோன்றினும் இனிய இசை மீட்டப் பயன்படுத்தப்படுவது. நேராய் இருக்கும் அம்பு கொலைக் கருவி; கோணலாய் இருக்கும் யாழ் இசைக் கருவி, ஆகவே ஒரு பொருளின் வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வர இயலாது. பயன்பாட்டை வைத்தே எடை போட வேண்டும். அதுபோல் மக்களுள் யார் நேர்மையானவர்! யார் கொடியவர் என்பதை அவர் அவரின் வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வராமல் செய்யும் செயலின் பாங்கை அறிந்து அடையாளம் காண்பதே நல்லதாகும். "ஒருவன் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம்; அந்நிலையில் கேடு நினைப்பவனாகவும் இருக்கலாம்" என்னும் சேக்சுப்பியரின் கூற்றும் சிந்தனைக்கு உரியது. மாயமானை வெருட்டிய இராமன் "காயம் வேறு ஆகிச் செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே ரயுமே, என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த மாயமே ஆயதே; நான் வருந்தியது என்றான் வள்ளல்” எனக் கம்பர் அமைத்த பாடல் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்! "தவமும் தவம் உடையார்க்கு ஆகும்” 267 தவ ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவர்களே தம்மைத் தவஞ் செய்பவர்களாக வெளியே தோற்றத்தாலும் காட்டிக் கொள்ளுதல் பொருத்தமாகும். சமய நெறி சார்ந்த துறவியர் தலை முடியை முற்றிலுமாக மழித்து விட வேண்டும் என்னும் கொள்கையைப் பின் பற்றும் சமயத்தவரும் உண்டு. முடியை மழிக்காமலும் வெட்டி விடாமலும் அப்படியே எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு வளர்த்துக் கொள்வதே முறை 3ம் எனக் கொண்ட சமயத் துறவியரும் உலகில் உண்டு. அஃது ஒரு அடையாளம் அல்லது ஒரு சின்னம். அதனை மேற்கொள்வது அவரவரின் தனிப்பட்ட உரிம்ை, அதனால் யாருக்கும் கேடில்லை. தனி நிலையில் அதனால் எந்த நன்மையும் இல்லை , ஆனால் துறவர் போன்ற உயர்நிலை மாந்தர், அறவோர் பழிக்கும் தீய ஒழுக்கத்தைக் கட்டாயம் விலக்கி விட வேண்டும்! துறவோர், தவத்தவர் சான்றோர், நீத்தார், மேன் மக்கள் நல்லொழுக்க நெறியைப் பரிந்தோம்பிக் காத்து ஒழுக வேண்டும்! அது அவர்கள் கொண்ட கோலத்தை விட அவர்கள் உடலை விட, அன்னார் உயிரைவிட மேலானதாகப் பேணத் தக்கதாகும்! மயிரை மழித்தல் வளர்த்தல் போன்ற புறங்கோலம் மட்டும் நன்மையோ பெருமையோ தாராது. ) ஒழுக்கமே நன்மையும் பெருமையும் தருவது. ஆகவே, தவத்தோர் ஒழுக்கத்திற்கே முதன்மை தரும் மேலோராய் விளங்கி உலகிற்கு வழிகாட்ட வேண்டும்! "ஒன்பது வேலைகளைச் செய்யும்படி இறைவன் என்னைப் பளித்திருக்கிறான். அவையாவன: உள்ளும் புறமும் இறையச்சம் கொள்ளத்தல், வருத்தத்திலும் மகிழ்ச்சியிலும் நேர்மையான சொற்களையே பேசுதல், வறுமையிலும் வளமையிலும் நடுநிலையில் இருத்தல். என்னோடு பகைத்துக் கொண்ட உறவினர்க்கும் எனது கடமையைச் செய்தல், என்னை வெறுத்து ஒதுக்குபவருக்கும் உதவி செய்தல், சிந்தனை செய்வதற்காகவே பேசா நோன்பு கொள்ளுதல். இறைவனை நினைத்துப் போற்றுவதற்கு ஆகவே வாய்திறந்து பேசுதல். பிறரிடம் ஏதாவது சுற்றுக்கொள்வதற்காகவே கண்திறந்து பார்த்தல். நேர்மையாக வாழும்படி பிறரைத் தூண்டுதல், பயணம் செய்கிறவன் வழியில் ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம் தங்கி இருந்துவிட்டுப் போவதைப் போன்றது தான், எனக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு," எனத் திட்டப்படுத்திக் கூறியாங்கு தொண்டு செய்து வாழ்ந்த மீமிசை மாந்தர் முகம்மது நபி கூறும் ஒழுக்கலாறு, வள்ளுவர் துறவு நிலைத் தவத்தவர் மேற்கொள்ளத் தக்க நெஞ்சம் நிறைநல்லொழுக்கம் ஆகும்! மேனியை மாந்தர்காள்! பூதங்கள் நக இடம் தராதீர்! நெஞ்சறி குற்றம் வானுயர் தோற்றத்தையும் கெடுத்துவிடும்! புலித்தோல் போர்த்து மேயும் பசு ஆகாதீர்! நீங்கள் மறைந்து பறவை பிடிக்கும் வேட்டுவர் அல்லர் படிற்றொழுக்கம் ஏதம் பலவும் தரும் என்பார்ந்த தடமார்வீராக! நெஞ்சத் துறவு கொள்ள வேண்டியவர் வஞ்சித்து வாழும் வன்கணார் ஆகலாமா? கொள்கைக் குன்றாய் விளங்கவேண்டியவர் குன்றிமணி ஆகலாமா? மன அழுக்ககற்றி மாண்புடையோர் ஆகுவீர்! யாழிசை போல் தொண்டால் புகழ் இசை பெறுவீர்! டாப்சும் புகழும் உயர் ஒழுக்கர் ஆகுவீராக! 29 கள்ளாமை காவு செய்ய நெட்டிசாரம் எண் ணாமை வேண்டும், "ஒருவருடைய பொருளை அவரைக் கேட்காமல், அவரின் அனுமதியின் நீர் எடுத்துக் கொள்வது; தேவை இல்லாத பொருளை மற்றவரிடமிருந்து பெறுவது: வழியால் கிடைக்கும் பொருளை எடுத்துக் கொள்ளுதல் தன்னுடைய தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவது: உண்ணா நோன்புக் காலத்திலும் உணவைப் பற்றிச் சிந்தித்து அதன் மூலம் சுவை உணரல், பாரோ சுண்டு பிடித்த சித்தாந்தத்தை தம் கண்டு பிடிப்பாக வெளிப்படுத்துதல். இவை எல்லாம் திருட்டுக்கு ஒப்பாகும்" எனர் காந்தியடிகள் கனவிற்குச் சற்று விரிந்த விளக்கம் காண்கிறார். நீதியரசர் மாயூரம் வேதநாயகர் தாம் படைத்த நீதி நூலில் சாளவு செய்தல், களவு செய்ய நினைத்தல், களவு செய் யென்று 15வழி சொல்லிக் கொடுத்தல், துணைப்பாதல், பழுதான் பொருள் விற்றால், நாட்டின் நளினன! வாங்குதல், அனத்தல் நிறுத்தல் முதலியவற்றில் ஏமாற்றிக் கொள்ளை இடல் களவின்பாற் படுரை+N, . கண்டெடுத்த பிறர் பொருளைக் கொண்டு துய்த்தலும், கள்வர் வழி வந்து நுகர்பொருளை வாங்கவும், பெற்ற கடனைத் திரும்பக் கொடாமையும், பேராசை கொ டு பொய் வழக்குத் தொடர்தலும், கூலியைக் குறைத்துக் கொடுத்தலும் களவாம், பிறர்க்குப் பொருள் இழப்பு உண்டாக்கலும், நண்பர்கள் நம்பித் தந்த பொரு:TMளத் தமதாக்கிக் கொள்ள லும் அனாவிற்கு மீறி வட்டம், வட்டி வாங்குதலும் சூதாடிப் பொருள் சேர்த்தலும், வேல செய்யாது கூலி பெறுதலும் களவாம். கன்னம் வைத்தலும், செல்வாக் காசை வழங்கலும், கள்ளச்சிட்டுப் பிறப்பித்தாலும், ஒரு கட்டிடானி fmகயூட்டு வாங்காரம் முதலியனவும் களவாம்" என விரிவாக நான்கு பாடலில் விரித்துரைக்கிறார். உழைப்பின்றி முறையற்ற வழியில் அடையும் பொருளெல்லாம் களவே! தமக்கு உரிமையில்லாப் பொருளைத் தீய வழியில் வஞ்சகமாகப் பெறு மனத்தாலும் எண்ணவே கூடாது என்பதை வலியுறுத்தவே "கள்ளாமை" என ஓர் அதிகாரமே ஆக்கியுள்ளார், "எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு" எனும் இக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் இடம் பெறுவது. ''ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்குப் பொருந்தாத செயலைச் செய்வதை உயர்ந்தோர் ஏற்றுக் கொள்ளார். ஆகவே இகழ்ச்சிக்கு ஆளாகாத செயல்களைத் தெரிந்து செய்தல் வேண்டும்" எனக் கூறுகிறார். 'எள்ளாத செயல் வேண்டும்' எனப் பொதுவாகச் சுட்டுகிறாரே தவிர எள்ளாத செயல்கள் எவை எவை என்று அங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவ்வதிகாரத்தில் திட்டமாக என்னாத செயன் எது என்பதை கடி3ணர்த்தும் குரனே, "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு" என்பதாகும். பிறருடைய இகழ்ச்சிக்கு எக்காரணத்தைக் கொண்டும் ஆளாகிவிடக் கூடாது என மனப்பூர்வமாக ஒருவன் விரும்பினால் அவன் என்ன செய்யக் கூடாது? என்ன செய்ய வேண்டும்? எவருடைய எந்தப் பொருளையும் வஞ்சகத்தால் திருடிக் கொள்ளலாம் என்ற தீய எண் 53கம் தன் மனத்தில் உருக்கொள்ளாதவாறு தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும்! வசை விரும்பான்; பிறர் பொருளைத் திருட விரும்பான், "பிறர்பொருள் அன்னார் உணராது பெட்பின் சிறிய கொளினும் அவை நஞ்சில் தீய இறைவன் ஒறுக்கும், பிழைப்பினும் என்றும் உறைய இருள்சேர் உலரு” என்னும் இன்னிசைப் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதாம், தனக்குத் தேவையான பொருள் இன்னாரிடம் இருக்கிறது. அதனை உரிமையோடு கேட்டுப் பார்க்கலாம் என்று கூட எண்ணாமல் உரியவர் சுண்ணில் படாமல் வெஞ்சகமாகத் திருடிவிட வேண்டியது தான் என ஒருவன் தனக்குத் தானே மனத்தால் எண்ணினான். வேறு யாரிடமும் அவன் கூறவும் இல்லை, வேறு எவர்க்கும் தெரியவும் வாய்ப்பில்லை. திருடுவதற்கான எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை, ஆகவே பொருள் உரியவரிடம் பத்திரமாகத்தான் இருக்கிறது. ஏதோ சூழ்நிலையில் நினைத்து விட்டேன்! ஆனால் திருடவில்லை ஐயா! அது தவறா? அதனாலும் ஏதேனும் தீனம் வருமா? என ஒருவன் துணிவுடையவன் போல் உள்ளத்தில் அச்சத்துடன் திருவள்ளுவரை வினவுகிறான். அவனுக்கு விடை பரம் முகத்தான் "உள்ளத்தால் கடள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் சானல்" என அழுத்தமாக விடை தருகிறார். பிறர் பொருளை வஞ்சகத்தால் திருடிக் கொள்ளலாம் என்று மனத்தாலும் எண்ணாதே, ஏனெனில் மனத்தால் நினைப்பதும் குற்றமே ஆகும். அந்நினைப்பே உனக்குத் தீங்கு செய்வதாகும். ஆகவே! பிறர் பொருளைத் திருட மனத்தாலும் நினையாதே என்பதே வள்ளுவரின் வழிகாட்டுதல். "குர்ரம் உள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டே இருக்கும், திருடன் ஒவ்வொரு செடியையும் தன்னைப் பிடிக்க வந்த காவல் துறை அலுவலர் என்று அஞ்சுவான்'' என்கிறார் சக்கப்பிரியர். "மனிதன் செய்யக் கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும் சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே" இரசுக்கின் இவ்வாறு கூறுவதும் எண்ணத் தக்கது. "களகவு எனும் பேர்தான் காதில்உறக் கேட்டாலும் உள்ளம் கசந்துகடள் டாளயுமே, சள்ளம் பழிமக்கள் அந்தப் படுவினையைச் செய்துவின் அழிகின்றார் அந்தோ அவம்" என்னும் தரும் தீபிகையின் கருத்தும் சிந்திக்கத் தக்கதே! "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து - ஆவது போலக் கெடும்” இவ்வாக்கம் முயன்று உழைத்துத் தேடிய ஆக்கம் அன்று. திருவள்ளுவர் இங்கே சொல்லும் ஆக்கம் 'களவினால் ஆகிய ஆக்கம். களவினால் வந்த ஆக்கம் என்பது, களவு செய்ய விரும்பும் எண்ணத்தினால் வந்த துக்கம், ஆக்கமானது செல்வம் அந்தச் செல்வம் முழுவதும் கைக்கு வந்து விட்டசெல்வம் அல்ல. மனசுக்கு வந்து விட்டது போல் கனவு மனம் எண்ணுகின்ற செல்வம். களவில் இறங்கியவர் மனம் இரண்டொரு பொருளைக் கனவினால் தன்வயப்படுத்திக் கொண்ட பின் மேலும் மேலும் களவு செய்யத் திட்டமிட்டுப் பல கனவுகனள எண்ணிக் கொண்டே போகும். அந்த எண்ணத்தில் சுளவினால் ஆகிய துக்கம் அளவிறந்து ஆவது போலத் தோன்றும். அனால் உடனே மறைந்து விடும். அதுமட்டும் அன்று, களவினால் அளவு கடந்த பொருள் கைக்கு வந்து விட்டாலும் களவு போன செல்வத்திற்கு உரிமைப்பட்டவர்கள் தேடிப் பிடிக்க முயலும் போது கனவு போன பொருள்களில் ஏதாவது ஒன்றைக் கண்டு கொண்டாலும் அதன் மூலமாக அந்தக் களவாளி அதுவரைக்கும் அளவினால் தேடிய செல்வம் அனைத்தும் பிடிபட்டு விடும். ஆதலால் "களவினால் ஆகிய செல்வம் அளவிறந்து ஆவது போலக் கெடும் என்றார். களவினால் வந்த செல்வம் வந்தது போலவே போய்விடும்! கேடும் செய்யும். திருவள்ளுவர் நடுவுநிலையில் "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்” எனக் கூறியுள்ளதையும், வெஃகாம்ை அதிகாரத்தில் நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்" எனக் கூறியுள்ளதையும் இணைத்து நோக்குதல் வேண்டும்! திருடுவதில் அழுத்தமான ஈடுபாடு ஒருவனுக்கு ஏற்பட்டு விடுமாயின் அதிலிருந்து விடுபடுவது கடினம், திருடராய் வளர்ந்தோரில் பெரும்பாலோர் சாகும் போதும் திருடராகவே சாகின்றனர். அவர்கள் எங்கே சென்றாலும், எதைச் செய்தாலும் அவர்கள் எண்ணத்தில் எதை மறைவாக எடுத்து ஒழித்துக் கொள்ளலாம் என்பதிலேயே அவர்கள் மனம் குறியாய் இருக்கும் அதற்கு ஏற்ற வாய்ப்பினையே தேடிக் கொண்டிருக்கும். எத்தனை முறை பிடிபட்டாலும் தண்டனைக்கு ஆளானாலும் பழக்கம் அவர்கட்கு இயல்பான வழக்கமாய் விடும்! பலமுறை பிறர் கண்ணில் மண்ணைப் போட்டு விட்டுத் தப்பித்திருக்கலாம் எனினும் என் கரம் பிடிபடமாட்டான் என்றும் சொல்ல இயலாது. பிடிபட்டால் அதோடு முடிந்தது என்று சொல்கிறாற் போல் தப்ப முடியாத கொடும் துன்பத்திற்கு ஆளாவர். அதனால் திருவள் ளத்வர் வீயா விழுமம் தரும்" என்றார். "வீயா விமுகம்" என்றால் நீங்காத துன்பம் என்பது பொருள். "வேண்டற்க வெஃகியாம் தூக்கம் விளைபயின் மாண்டற் கரிதாம் பயன்" என்னும் வெஃகாமை அதிகாரக்குரளையும் ஒப்பிட்டுச் சிந்திக்க வேண்டும். "களவினால் ஆகிய காரறிவு நடள்ளன்மின் விளைவுஇல் வெள்ளிகனை வீவில் கதிகளுள் விளைய உள்ளழித்து ஒன்றல வேதனை வளைய வாங்கி வருத்தமுறுக்குமே" என்னும் வளையாபதிப் பாடலையும் ஒப்பிட்டு நோக்குக! "அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்" என்பது வெஃகாமை அதிகாரக்குறள், "எல்லா உயிர் களிடத்திலும் அருளை விரும்பி அறிவழியில் நின்றவன் பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணினால் கெட்டுப் போவான்" என்பதை மாற்று வடிவத்தில் உணர்த்தும் குரளே. "அருள் கருதி அன்புடைய ராதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்" என்பதாகும். ஒரு பொருளை வஞ்சகமாகக் கைப்பற்ற எண்ணி, அப்பொருளுக்கு உரியவன் ஏமாறும் நேரத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு துறவறத்தான். ) அவனை நூலகம் அனைத்து உயிர்க்கும் ஒப்ப நிகழ்வதோர் அருளினைக் கருதி அள்வுயிர்கள் மாட்டு அன்பு கொண்டு ஒழுகுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன பயன் கிட்டும். பொருளைத் திருட நேரம் பார்த்துக் கொண்டிருப்பவர் அருளை எதிர்நோக்கும் அன்புடையவராக இருத்தல் இயலாது. "அருளென்னும் அன்பீன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு” என்பது உண்மைதான். ஆனால் அப்பொருள் திறனறிந்து தீதின்றி வந்த பொருளாக இருத்தல் வேண்டும். "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்" என்பதே வள்ளுவரின் பொருளியல் நெறி முறை என்பதையும் கவனத்தில் கொண்டு களவால் பொருள் பெறக் கனவிலும் எண்:37தலைத் தளர்த்தால் தான் அருளை எண்ணவும் முடியும் அன்புடையவராக விளங்கவும் முடி யும். இல்லையேல், பொருளாளனும் ஆகான்; அருளாளனும் ஆகான்; கனளாளனாகவே நிலைப்பான். "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இப்பகமாகித் தோன்றாக் கெடும் இது வலி அறிதல் அதிகாரத்தில் அளவு அறிந்து வாழ வலியுறுத்தும் குறள். தன்னிடம் உள்ள பொருளின் அளவையும் அறிந்து அதற்கு ஏற்ப வாழ வேண்டும்! * ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழி. ஆகாற்றை விடப் போகாறு விஞ்சி விடக் கூடாது. எதற்குச் செலவு செய்ய வேண்டும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்; எனத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும், மிகைச் செலவும் கூடாது. வீண் செலவும் கூடாது; ஈகையில் கூட " ஆற்றின் அளவறிந்து ஈசு' எனவும் அளவறிந்து மன பெளத்தோடும் பொருள் வளத்தோடும் வாழ வழிகாட்டுபவர் திருவள்ளுவர். "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத பர்" எனக் கள்வர் வாழ்வை நினைந்து வருந்திக் கூறுகிறார். சுளவு வெறியர் வாழ்வில் எந்தக் கட்டு திட்டமோ, ஒழுங்கு முறையோ இது இதற்கு இவ்வளவு தான் செலவு செய்தல் வேண்டும் என்ற திட்டமோ எதுவும் இருக்க வழி இல்லை. ஆடம்பரமாகச் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள்: நல் வழிக்கும் செலவு செய்வர் என உறுதியாகக் கூற முடியாது. ஆ னால் தீயவழியில் பொருளை வாரி இறைத்து விட்டு வறியராவர், மனைவி மக்கள் எண்ணிக்கையும் அளவோடு வைத்துக் கொள்வர் என்றும் கூற முடியாது. மகிழ்ச்சியிலும் அளவு இருக்காது. சுவரிலயபிலும் அளவு இருக்க இயலாது. களவை விடுக! உழவை மேற்கொள்க! அளவோடு அமைந்து வாழ்க! "மற்றவர்கள் உன்னைத் தூற்றும் போதும் நன்னாள் தலைவர் நிமிர்ந்து நிற்க முடியுமானால்," மற்றவர்கள் உன்மேல் ஐயப்படும் போது, நீ உன் மேல் நம்பிக்கை கொள்ள முடியுமானால், ஆனால் அதே சமயத்தில் அவர்கள் ஐயப்படுவதிலும் உண்மை இருக்குமா என ஆராய நீ இடம் கொடுக்க முடியுமானால் உன்னை மற்றவர்கள் பொய்யனாக்க இடம் கொடுக்காமல் இருக்க முடியுமானால்; நீயும் உண்மைக்குப் புறம்பானவற்றில் ஈடுபடாமல் இருக்க முடியுமானால், நீ மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், மற்றவர்களால் பகைத்துக் கொள்ளப் படாமலும் இருக்க முடியுமானால்; அளவுக்கு அதிகமான நல்லவனாக இராமலும், அளவுக்கு அதிகம் பேசாமலும் இருக்க முடியுமானால்: நீ நற்சுனவுகளைக் காண முடியுமானால், ஆனால் கனவுகள் உன்னை ஆட்சி செய்ய இடமளிக்காமல் இருக்க முடியுமானால், நீ சிந்தனைத் திறன் பெற முடியுமானால், ஆனால், சிந்திப்பதை மட்டுமே உன் குறிக்கோளாகக் கொள்ளாமல் இருக்க முடியுமானால் நீ உன் வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக் கொள்ளும் மீனத்திடம் பெற முடியுமானால்" இந்த உலகம் அனைத்தும் உன்னுடையவை ஆகும். என இரட்யார்ட் கிப்ளிங் கூறியாங்கு நெறியோடு வாழும் ஆற்றல் உடையவராய் யாரெல்லாம் விளங்குகிறார்களோ அவர்களிடம் எல்லாம் பிறர் பொருளைத் திருடி வாழ வேண்டும் என்னும் அறியாமையோடு கூடிய இருட்செயல்கள் எதுவும் அணுகாது. நெறியோடு வாழும் உறுதி உடையவரிடம் திருடி வாழும் பெரும் பேதைமை இராது என்பதைக், "களவென்னும் காரறி வாண்மை அனவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்" எனத் தெளிவுறுத்துகிறார். "நீ சொன்ன உண்மைகளைப் பிறர் திரித்துக் கூறி மற்றவர்களை உனக்கு எதிரியாகச் செய்யும் போது அதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமானால், நீ உன் வாழ்க்கையில் சுண்ட சிறு தொல்லைகளையும் தோல்விகளையும் உனது திறமையால் மாற்ற முடியுமானால் நீ பெற்ற வெற்றிகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் இழக்க நேரிடும் போதும், மீண்டும் மனத்திண்மையுடன் முயற்சியைத் தொடங்கவும் உன் தோல்வியைப் பற்றி ஒரு சொல் கூட முக) முறுக்காமலும் இருக்க முடியுமானால், உனது வெற்றிகள் போன பின்னும் நீ உனது உள்ளத்தையும், நாடி நரம்புகளையும் உனது முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தி, உன் மன உறுதியின் துணையோடு மேற்கொள்ள முடியுமானால், நீ சராசரி மக்களுடனும் உனது நற்பண்பை இழக்காமல் அதே சமயம், உயர்நிலையில் இருப்பவர்களோடு பழகும் போது பொதுமக்களின் தொடர்பை விடாமல் இருக்க முடியுமானால்; உன் பகைவர்களாயினும் நண்பர்களாயினும் யாரும் உன்னைத் துன்புறுத்தா வேண் ணம் நன்னால் நடக்க இயலுமானால்: எல்லாரும் உன்னிடம் ஒரே நிலையில் பழகுமாறு உன்னால் நடந்து கொள்ள இயலுமானால்; உன் வாழ்க்கையில் நீ ஒரு நிமிடத்தைப் பயனின்றிக் கழித்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை இட ஒணர்ந்து, ஒருதுளி நேரத்தையும் பயனுள்ள வகையில் செலவிடும் வண்ணம் உன்னால் இயங்க இயலுமானால், என் அருமை மகனே, நீ ஒரு மனிதனாகச் சிறந்தோங்குவாய்" என இரட்யாட் கிப்ளிங் வாழ்த்திப் பாராட்டும் வண்ணம் வாழ்வு முறையைத் திட்டமிட்டு யார் வாழ்கிறார்களோ அவர்கள் நெஞ்சில் அறம் என்றும் எப்பொழுதும் நின்று நிலைபெறும். ஆனால் யாரெல்லாம் திருடப் பழகிவிட்டார்களோ அவர்கள் நெஞ்சில் வஞ்சனை தான் இடம் பெறும். நல்லோர் நெஞ்சில் அறமும் தீயோர் நெஞ்சில் வஞ்சனையும் நிலைபெறும் என்பதை, "அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல் நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு" 288 எனக் கூறிக் களவறிந்தார் நெஞ்சில் கரவு நீங்கி, அளவறிந்தார் ஆகி அறம் நிற்கும் நெஞ்சத்தவர் ஆக்க விரும்புகிறார் வள்ளுவர். திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்குப் பயந்து விடாதே! திறமை இருக்கு மறந்து விடாதே" சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று-தவறு சிரிசா இருக்கையில் திருத்திக்கோ! தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா! அது திரும்பவும் வராமே பார்த்துக்கோ ! = (திரு) திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது = அதைச் சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, = (திரு) என்னும் பட்டுக் கோட்டைக் கலியாணசுந்தரனாரின் பாடல் குழந்தைமையில் இருந்தே திருட்டை ஒழிக்க முயலும் ஆர்வத்தைக் காட்டுவது போல் வெள்ளத்வரும் விரும்புபவர் ஆகையால், "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்" என்கிறார். திருடி வாழ் மட்டும் தெரிந்து பிறநல்ல தொழில் செய்து வாழ அறியாதவர்கள் முறையற்ற செயல்களைச் செய்து அழிந்து போவார்களே என வருந்துகிறார், சுளவை விட்டு இயன்ற வேறு தொழில் செய்து வாழ வாழ்த்துகிறார், களவு செய்வார்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் நீங்கிப் போகும். ஆனால் களவு செய்ய உள்ளத்தாலும் உள்ளாது வாழ்வார்க்கு புகழ் உலகு உறுதியாக வாய்க்கும் என்பதை உறுதிப்படுத்தும் முகத்தான் "கள்வார்க்குத் தள்களும் உயிர்நிலைப் கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு" என்கிறார். கள் வரும் கனவைக் கருதாதீர்! புகழ் உலகின் நிலைத்த வாழ்வு பெறுவீர் என வேண்டுகிறார். "திருடாாகனத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றினால் அவன் உங்கள் கழுத்தை அறுப்பான்” என்பது இத்தாலி நாட்டுப் பழமொழி "மானுடர்கள் களககைய விட்டால் அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும் பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு நீதமில்கயாக் கள்வர்நெறி உயிர் தப்பா! நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ? என்பது பாரதியின் பாட்டு! நினைந்து போற்றத் தக்கதாகும். கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி எடுக்கிற அவசியம் இருக்காது; இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் பதுக்குற வேலையும் இருக்காது; ஒதுக்கிற வேகபயும் இருக்காது; நடழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது!" என நம்பிக்கையோடு பாடுவதில் நாமும் கலந்து கொள்வோம்! பாடுபவர் பட்டுக் கோட்டையார்! பாட்டின் நோக்கம் வெற்றி பெறட்டும்! உன்னை யாரும் எள்ளாமை வேண்டும்! உன் நெஞ்சில் கள்ளாமை வேண்டும்! களவினால் வரும் ஆக்கம் ஆக்கமன்று ஆக்கக் கேடேயாகும்! களவுக் காதல் நீங்காத் துன்பம் தரும் அனவரும் அருள்கருதி அன்புடையார் ஆகுக! அளவின்கண் நின்று ஒழுகுக! களவென்னும் காரறி வாண்யையை அண்டவிடாதே! நெஞ்சில் கரவுஅகன்று அறம் நிற்கட்டும் களவல்ல மற்றைய தேற்றுக! புத்தேள் நடப்பது போற்று வாழ்க! 30. வாய்மை நன்மை தரும் சொற்களையே பேச வேண்டும் என பொலியுறுத்தி வழிகாட்டும் அதிகாரமே வாய் அதிகாரமாகும். திருவள்ளுவர் வாய்மையைப் பொய்யாம: எனவும் சுட்டுகிறார்! பொய்யற்க எணவும் வேகாக டுகிறார். திருக்குராளே சான்றோர்களால் "பொய்யாமோ" எனப் போற்றப்படும் நூலாகும். நசாக்காக இன்சொல் இகழாமை நாள்கும் போகான்ப பொய்மைக் குடிக்கு" எனும் குறள் வழி, வழிவழியாகச் சிறந்த நற்குடியை "வாய்மைக் குடி" என வள்ளுவர் சுட்டுவதையும், "ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்” எனக் குடி மையில் "உயர் குடியினர் தவறாது பின்பற்றும் மூன்று தன்மைகளில் "வாய்மை" என்பதும் ஒன்று எனக் குறிப்பிடுவதுடாங் வாய்மையை நடுவண் அமைத்த சீர்த்தியும், "அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் பொய்மையோடு ஐந்துசால்பு நாள்றிய தூர்” எம் குரள் வர், சான்றாண்-MIC: ஆசியா பாடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஐந்தில் முதல் தூண் அன்பு எனவும் நிறைவுத் தான் வாய்மையே 15THவும் தான் 5:31 ஏTவக்கிறார். "தூய்கை துணைபைர் துனரிவுடைமை இம்மூன்றின் வாய்மை பழியுரைப்பான் பண்பு" எனும் குறள் வழி வாய் 3 மயாளனாக விளங்குதல் காது சொல்பவன் பண்பாகும்" என எண்ணி, ரைப்பதையும் நெஞ்சத்தில் கொள்ள வேண்டும்! அதனுடன், "ஒன்றாக நல்லது கொய்யாகார்; மற்றதன் - பின்சாரப் பொய்யாமை நன்று" எனக் கொல்லாமை அதிகாரத்தில் அறத்தை வரிசைப் படுத்தும் போது "கொல்லாமை" முதலாவது அறம் எனவும் 'பொய்யாமை' அதனை அடுத்த அறம் என்றும் கூறுவதையும் சிந்தனையில் கொள்வது நன்று. ) 'உண்மையே அனைத்திலும் உயர்ந்த தத்துவம் என்பதைத் தெரிந்து கொள். அறிவுள்ள மனிதன் வாய்மைக்கு அடங்கி வாழ்க்கையில் எமனையும் வென்று அமரன் ஆகிவிடுகிறான். மெய் மறந்திடாமல் எப்போதும் பொய்யை விலக்கிவிட்டு வாழ். உண்மையே பேசு. பிறருக்கு இதமானவற்றைச் சொல், இவ்வகையில் உண்மை உரைத்தல் எப்போதும் கடினம் தான். தன் இலாபம் கருதியோ, பிறருக்கு இலாபம்: விளைக்கும் எண்ணத்தாலோ ஒருபொழுதும் பொய் பேசாதே, கோபத்திலோ, பிறர்க்குப் பயந்தோ பொய் பேசாதே, பிறர்க்குத் தீங்கு விளைவிக்கும் பொய்யை நீயும் சொல்லாதே. பிறரையும் சொல்லச் செய்யாதே. நீ உண்மை பேசுவதனால் ஒருவர் மனம் நோகும், உடன் பேச்சு ஒருவர்க்குப் பிடிக்காது : பிறருடைய உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால், அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் தனக்குப் பாவமே வரும், ஊமையை "ஊமை” என்று சொல்லுதலும், அலியை 'அலி" என்றும், நோய் உற்றவனான 'நோயாளி' என்று கூறுதலும் உண்மையாயினும், இன்னாரெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் தொடர் புடையவர்கள் மனம் நோகும். உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும், உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி" என மகாவீரர் விளக்கம் அளிக்கிறார். “அன்பும் உண்மையும் ஒரு நாணயத்தின் இருபுறங்களாக இருக்கின்றன. உண்மையினாலும் அன்பினாலும் உலகத்தையே வெற்றி கொள்ள முடியும், கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆ னால் உண்மை இல்லை என்று சொல்லுபவர்களை நாம் பார்த்தில்லை, சுடவுளை நேரில் அறிய விரும்புகிறேன். உண்மை தான் நான் அறியும் கடவுள். நமக்குத் தெரிந்த உண்மைப்படி நடந்தால் போதும். உண்மை! முழுவதும் கடவுளுக்குத் தான் தெரியும். உண்மையை முற்றிலும் கடைப் பிடிப்பவர் : வாசத்தில் இல்லை. நிறைந்த உண்மை என்பது கடவுள் தன்மை ஆகவே மக்களாகிய நம்மால் நிறைவற்ற உண்மையையே கடைப்பிடிக்க இயலும். உண்மையை உறுதியாகக் கடைப் பிடிப்பதில் இருந்துதான் வலிமை எல்லாம் கிடைக்கிறது. வானமே இடிந்து தலையில் விழுவதாய் இருந்தாலும் நாம் உண்மையைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். உண்மையைக் கடைப் பிடிப்பதற்கு எவ்வளவோ தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலே எவ்வளவோ துன்பம், எவ்வளவோ கட்டுப்பாடுகள். ''உண்மையைச் சொல்லுவதற்காகத் தாக்குமரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள்" என்கிறார் தம் வாழ்வையே "வாய்மை ஆய்வாக ஆக்கி வாழ்ந்த காந்தியடிகள். "சான்றோருடைய குறிக்கோள் உண்மையே: உ 533 வன் , உண்மையைக் காணாமற் போய் விடுவோமோ என்று கவலைப் படுபவர், வறுமை வந்து விடுமோ என்று கவலைப் படார்" என்கிறார் கன்பூசியசு, "நம்மில் ஒவ்வொருவரும் பிறரிடம் பொய் பேசுவதை விடுத்து மெய்யே பேசுதல் வேண்டும்" என்பது இயேசு பெருமான் கட்டளை. "உண்மை பேசுவதே சுவர்க்கம் அடைவதற்கு ஏற்ற நற்செயல், உண் மையாயினும் ஆரவாரமாக மொழியாதே நீ அறிந்த உண்மையை வெளியிடாதும் இராதே" என அறிவுறுத்துகிறார் நபிகள் நாயகம். வள்ளளுவரின் வாய்ம்ை தனித்தன்மை வாய்ந்தது. சொல்லுதல் பொருளில் உண்மை என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. உள்ளதை உரைத்தல், கண்டதை உரைத்தல், கொடுத்த வாக்கைத் காத்தல் என்று எல்லை எல்லாம் தாண்டியது வள்ளுவரின் வாய்மையாகும், எதிலெல்லாம் ஒரு தெளிவான முடிவிற்கு வராமல் அறிஞர்கள் குழப்புவார்கள் என்று வள்ளுவர் கருதினாரோ அவற்றிற்கு எல்லாம் ஒரு தெளிவான இலக்கணம் கூறிவிடுவது வள்ளுவரின் தனித்தன்மை.சுளில் ஒன்றாகும். ஆகவே நுழை வாயிலில் கால் வைக்கும் போதே தெளிவுடன் செல்லட்டும் என முதற்குறளிலேயே, "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" எனக் கூறினாராக! வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என என வின் என்னுயிர்க்கும் ஒரு சிங்கம் திrைi பாக்காத சொற்களையே பேசுதல் ஆகும், வாயால் பேசுவதெல்லாம் வாய்மை அன்று. அது தீமை பயக்காததாகவும் இருக்க வேண்டும்! சிற்றளவு தீமையும் தந்து விடக் கூடாது. மானிடர்க்கு மட்டும் தீமையில்லாத சொற்களைச் சொன்னால் போதும் அது வாய்மையே ஆகும் எனவும் கருதிவிட வாய்ப்பு அளிக்கா வகையில் எவ்வுயிர்க்கும் எள்ளளவு தீமையும் தாராத நன்மை தரும் நற்சொற்களையே பேசுவது தான் வாய்மை என்கிறார் வள்ளுவர். வாய்மையின் இலக்கணம் எவர்க்கும் எவ்வுயிர்க்கும் எள்ளளவும் தீங்கு பயக்காத சொற்களைச் சொல்வதே அன்றி, நிகழ்ந்தது கூறுவது அன்று. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக வாழ்வியல் அற நூல் ஆக்கும் கருது கோள்களுள் ஒன்றாகும், உண்மை - உள்ளத்தில் தோன்றும் எண்ணத் தூய்மை ஆகும். நினலத்த செயல் தூய்மையை விளக்குவதே மெய்ம்மை ஆகும், என்பதுடன் வாயிலிருந்து வெளிப்படும் குற்றமற்ற தூய சொற்களைப் பேசுவதே வாய்மை என்பதையும் தெளிவாக ஈராயிரம் ஆண்டு கட்கு முன் உணர்த்தி இருந்தும் இன்னும் உணர்ந்த பாடில்லை, "சொல்லுக சொல்லில் பயனுடைய" "இன்சொ லினதே அறம்" "வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து சொல்லுசு" எனச் சொல்பறம் மொழியும் திருவள்ளுவர் அதனுடன் 'தீமை இலாத சொலல் வாய்மை' எனக் கூறுவதையும் ஒருங்கே எண்ணிச் சொல்வறம் போற்றக் கடமைப் பட்டுள்ளோம். சொல்லுகிறவரைப் பொறுத்தும், சொல்லப்படும் சூழ்நிலையைப் பொறுத்தும், சொல்லும் முறையைப் பொறுத்தும் சொற்களின் பயனும் அமையும். கடுஞ்சொல் இன்பமும் தன்மையும் தரும் இடங்களும் உண்டு. அவ்வாறே இன்சொல் துன்பமும் தீமையும் தரும் இடங்களும் உண்டு. "நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு" என்பது எப்படி வாழ்வியல் உண்மையோ அதுபோல், 'தீச் செயல்களிலும் நன்மை தருவனவும் உண்டு' என்பதும் நிகழக் கூடியதே! பொய்களில் பொய்யாமை செய்யும் நன்மைகளைச் செய்யும் பொய்களும் உண்டு. பொய்யாமைகளில் பொய்கள் தரும் திகை30 ளச் செய்யும் பொய்யாமைகளும் உலகில் தண்டு! ஆகவே வாழ்வியல் அறிஞர் வள்ளுவர் "பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” 24) என்னும் நுண்ணிய குறளைப் படைத்துள்ளார். குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைவிக்குமாயின், பொய்யான சொற்களும் அதன் பயனை நோக்கி வாய்மைச் சொற்களின் இடத்தில் வைத்து எண்ணத் தக்க தகுதியை அடைகிறது. குற்றமற்ற நன்மையானது; எவர்க்கும் எப்பொழுதும் எவ்வகைத் தீங்கும் இழப்பும் விளைவிக்காத நற்பயன். பெற்றோர் குழந்தையைக் குளிக்க வைக்க, சோறு உண் 532 வைக்க, பாடங்களைப் படிக்க வைக்க, உரிய நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்க எத்தனையோ வகையான பொய்களை உரைத்து மக்களை ஒழுங்கிற்குக் கொண்டுவர முயல்கிறார்கள் என்பதைக் காணாதவர் இரார்! குழந்தையரை வெளியூர்க்கு அழைத்துச் செல்லுங்கால் (நெடுந்தொ3யவு செய்ய வேண்டி இருந்தாலும், இன்னும் சிறிது தாரந்தான் சிறு தூரந்தான் என எத்தன ன முறை பொய் சொல்லி அழைத்துப் போகிறோம், கடுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிடமும், சோதனை யில் எல்லாம் நிறைவாக இருக்கிறது அஞ்ச வேண்டா விரைவில் நலமாகி விடும் எனப் பல் மருத்துவர்கள் கூறுவது இல்லையா? தந்தை குடிவெறியில் தன் மைந்தனை வெட்ட அரிவாளுடன் வெருட்டி வருகிறான், மைந்தன் நெடுந்தெருவிலிருந்து குறுக்குத் தெரு வழி ஓடிவந்து, ஒரு சந்தில் நுழைந்து ஒரு பெரியவர் வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறான். பெரியவர்க்கு அவன் உள்ளே நுழைந்தது தெரியும். குடிகாரன் அவரிடமே வந்து வினவுகிறான், அவரோ அப்படி எவனும் இந்தப் பக்கம் வரவில்லையே எனக் கூறி அனுப்பி விடுகிறார். அப்படித் தெரிந்தவற்றில் சிலவற்றைத் தெரியாது என்கிறோம். இப்படி நன்மை தரும் பொய்கள் ஏராளம் உண்டு. நன்மை தரும் பொய் சொல்லாதவர்களே இருக்க இயலாது. தீப் தரும் பொய்யை, பயனற்ற பொய்யை, இரவு தரும் பொய்யை தகுதியற்ற பொய்யை எவரும் எக்காலத்தும் எவரிடமும் பேசுதல் கூடாது, பிறரின் நன்மையின் பொருட்டுக் கூறப்படும் பொய், வாய்மை செய்ய வேண்டிய இடத்தில் இருந்து செய்வதால் அது பயனால் வாய்மையாகும். ஆனால் வாய்மை ஆகுமா ஆகாது. பொய் பொய் தான் எனத் திருவள்ளுவர் கருதுவதால் தான் 'பொய்யும் வாய்மையே' எனக் கூறாது 'பொய்மையும் வாய்ம்ை இடத்து" எனத் திட்டமாகக் கூறியுள்ளார், ஒருவர் கூறும் கூற்று மெய்யே யாயினும் அது தீமை பயக்கும் மெய்யாயின் அது வாய்மையின் பாற்படாது என்பதே வள்ளுவரின் கருத்தாகும். ஆகவே, ஓர் உரையின் மெய்மையினையும், பொய்ம்மையினையும் அதன் நிகழ்வு பற்றிக் கணக்கிடுவதை விடுத்து, அதனால் விளையும் பயன் கருதி லே முடிவு செய்ய வேண்டும் என விரும்புபவர் திருவள்ளுவர், "பொய்ம்மையும் மெய்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ" எனக் கூறும் வில்லிபுத்தூராரின் மொழியும் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தக்கதாகும். "தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்" குற்றங்களில் அறிந்து செய்த குற்றத்திற்கும் அறியாது செய்த குற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. அறியாமல் செய்தவன் தூயவன் ஆயின் விரைவில் அறிவான், உணர்வான் தவறுக்கு வருந்துவான். மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டான். இங்கே அறிந்து குற்றம் புரிந்தவன் ஒருவனை ஆய்வுப் பொருளாக்கி ஆராய முற்படுகிறார் திருவள்ளுவர். அப்பா! உன் நெஞ்சிற்கு நீ உன் வாயால் கூரிய சொற்கள் அனைத்தும் பொய் என்பது தெரியும் அல்லவா! ஊரார் யாருக்கும் நீ கூறுவது பொய் என்பது தெரியாது என நினைத்துத் தான் கூறினாய், உண்மை தான் இது வரையிலும் நீ கூறியதை அவர்கள் வாய்மை என்றுதான் நம்பிக் கொண்டிருக் கிறார்கள். உன்னால் துன்பத்திற்கு ஆளானவர்கள் கூட உன்னை மதிப்பாக நடத்துகிறார்கள். யாரும் நீ சொல்லிய சொல்லில் அடங்கியுள்ள பொய்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே, யாரும் உன்னை வெறுக்கவோ, பகைக்கவோ, துன்புறுத்தவோ, தண்டனை தரவோ இல்லை, ஆகவே, நீ மகிழ்ச்சியாகத் தொல்லை துயரம் இன்றி இருப்பாய் எனக் கருதுகிறேன். உண்மையா? என வினவினார் திருவள்ளுவர். அவன் விடை சுறத் தயங்கிக் கண்ணீர் விட்டு அழுதான். ஏன் அழுகிறாய் என வினவினார், நான் சொல்லும் பொய் யாருக்கும் தெரியாது என்ன நினைத்துச் சொல்லி விட்டேன். நேரில் பார்த்து முதலில் பொய் சொல்லாதே என்றும் எச்சரித்தவர் ஒருவர் உண்டு! அவர் என்னை இடை விடாமல் நெருப்பால் சுட்டுக் கொண்டு கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறார் வேதனை தாங்க முடியவில்லை எனக் கூறிப்புலம்பினான். அப்படியா அவர் யார் என வள்ளுவர் வினவ, எல்லாம் தெரிந்த உங்கட்கு அவர் யார் என நான் கூறவா வேண்டும். உங்கட்கே தெரியும் அல்லவா?' என்றான். ஓ அவரா? அவருக்குத் தெரிந்தால் தண்டபாலிருந்து தப்ப முடியாது! உன் நெஞ்சர் தானே அவர் என்றார்! ஆம்! என்று தலையாட்டினான், கொன்றை வேந்தன் நெஞ்சை ஒளித்தொரு வஞ்சமில்லை" என்று கூறுவதும் "நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா" என ஒளவையாரும் கூறும் காரணம் நன்கு புலப்படுகிறது. உன் நெஞ்சறியப் பொய் கூறாதே! கூறின் உன் நெஞ்சே பரமனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறினானாம் எல்லாம் அறிந்த பிரமன், வாசமா மலரவ! நடனக்கு மண்ணின்மேல் பூசையும் கோயிலும் போக என்றனன்" எனப் பாரதம் கூறுவதையும் எண்ணினால் "பொய் கூறல் சுடும் குற்றம்! நெஞ்சைச் சுடும் குற்றம் என்பது புரியும், "அண்னணிய கிளையும் இல்லும் அரும்பெறன் மகவும் அன்பும் திண்ணிய சீரும் மிக்க | செல்வமும் திறனும் தேகம் எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தகவமும் சரனனப் புண்ணியம் அனைத்தும் சோப் பொய்ம்மையால் பொன்று மன்றே!" எனக் கூறும் வில்லிபாரதப் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். ஒருவன் அண்ணல் காந்தி அடிகளைப் போல் உலகவர் உள்ளங்களில் 151ல்லாம் 5என்றும் நி=31 பெற வேண்டுமானால் பொய் கூற மனத்தாலும் எண்ணையாத தூயவனாக வாழ்வாங்கு வாழவேண்டும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுசு! உலகவர் உள்ளத்தில் உறைக! என்பதை விளக்கும் குறளே, "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் தடாகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்" என்பதாகும். வாய்மையின் சிறப்பை விளக்குவது அரிச்சந்திர புராணம், அந்தாடகமே தன்னன வாய்மையாளராக வாழத் தாண்டியது என்கிறார் காந்தியடிகள். . வாய்மையாளனாகிய அரிசி சந்திரனைப் பொய்யன் என்று உலகுக்குக் காட்ட விசுவாமித்திரர் அவனைப் படுத்திய பாடு அவ்வளவு இவ்வளவு என உரைத்தல் இயலாது. அரிச்சந்திரன் பெருமன்னன் எனினும் வாய்மை காக்க, நாடு நகரை இழந்தான்; மைந்தனைச் சாகக் கொடுத்தான். மனைவி கொலைக் குற்றவாளி ஆக்கப்பட்டு, தான் சுடுகாக்கும் நிலை அ டைந்து, மனைவியின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையை அவனே நிறைவேற்ற வேண்டும் என்பது மன்னன் ஆணை ; இறைவனை வணங்கி மனைவியின் தலையைத் துண்டிக்க வாளோங்கி நிற்கிறான், "அந்த வேளையில் கௌசிகன் விதரைந்து வந்து அரசே! இந்த நோதகு எய்தலென் எனக்கு நீ முன்னம் தந்த நாடு நான் தந்திலேன் எனும் மொழி சாற்றி உய்ந்து நாடும் இவ்வுயிர்களும் பெறுக என உரைத்தான்." "சேர நின்று அவன் செப்பியது அங்கு அவர் அன்றி யாரும் கேட்டிலர், வசிட்டனும் அமரரும் அறிந்தார் வீர வேந்தனும் மாங்கையும் அவனடி வீழ்ந்து, இங்கு யாரை நீ இந்த மரழமைக்கு ஆட்செய்தி என்றார்." "புலையனும் விரும்பாத புன்புலால் யாக்கை நிலையெனா மருண்டு உயிரினும் நெடிதுறச் சிறந்த தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வது தரியேம் கலை படாணர்ந்தநீ எமக்கிது கழறுவது அழகோ" "இம்மை அம்மை வீடுஎன மறை புலங்கொள இயம்பும் மும்மையும் தரும் முறை உடைத்து எனும் நிலை முரணி எம்மை ஆழ்வயிற்று அடக்கி மீட்டும் உமிழ்கிலா காரிவாய் வெம்மை கர்நாகு உய்க்கினும் மெய்மையை விடேமால்” "பதிஇழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த நிதி இழந்தாம் இனி நமக்கு உகாதொ நினைக்கும் சுதிஇழக்கினும் கட்டுரை இழக்கிலம் என்றார் மதிஇழந்து தன்வாயிழந்து அருந்தவன் மறைந்தான். உள்ளத்தால் பொய்யாது ஒழுகிய மாமன்னன் காவியமாய் கர்பவர் உள்ளத்தில் எல்லாம் நீங்கா இடம் பெற்றுள்ளான். "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்" 268 என்பது தவச்சிறப்பு உணர்த்தும் குறன். "தன்னுயிர் என்றும் தான் என்றும் உண்டாகும் பற்றுகள் முழுமையாக நீங்கப் பெற்ற தவத்தவரை மற்றை உயிர்கள் எல்லாம் தொழும்" "நடாரைப்பார் உரைப்பவை சாய்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயார் மேல் நிற்கும் புகழ்" 23) தானம் செய்வார் தனிச் சிறப்புக் கூறும் குரள். "உரையாலும் பாட்டாலும் பாராட்டும் பாராட்டெல்லாம் "இல்லை" என்று கேட்டு வருவார்க்கு வேண்டும் ஒன் றைக் கொடுப்பவர் பேரில் நிற்கின்ற புகழ்களே ஆகும்." தவம் செய்வோர் எல்லாவற்றையும் துறந்து தன்னை வருத்திப் புகழ் பெறுகிறார்கள், தானம் செய்வோர் தம் பொருளை எல்லாம் வறியவர்க்கு வாங்கிப் பொருளை இழந்து புகழ் பெறுகிறார்கள், இரு நிலையினரும் இருவகையில் சிறப்புக் குரியவர்கள் தாம். இவ்விருவகைச் சிறப்பையும் ஒருவர் ஒருங்கே பெற்றுள்ளார். வானின் மிகச் சிறப்புக்கு உரியவர் தாம்! உலசும் அவரை வந்து பாராட்டும் என்பது உறுதி. அவரினும் சிறந்தவர் உலகில் இல்லையா? வள்ளுவரே தானம் தவம் இரண்டாலும் ஒருங்கே புகழ் பெறுவதை விட, உயர்ந்த சிறப்புப் பெற இயலாதா? இயலும், அப்படியானால் அதற்கு வழி கூறுங்கள்! எளிமையான வழி வேண்டுமா கடினமான வழி வேண்டுமா? எளிய வரியே நான் விரும்பும் வழி! அப்படி ப்பா நீங்கள் உங்கள் உடலை வாட்டி வருத்த வேண்டாம்! இருக்கிற எந்தப் பொருளையும் இழக்கவும் வேண்டாம். அப்படி ஒரு வழி சொல்லட்டுமா? சொல்லுங்கள் அப்படிப்பட்ட வழி தான் எனக்கு ஏற்றது போல் தெரிகிறது எனத் தெரிவித்து வள்ளுவர் வாயையே பார்த்துக் கொண்டு நின்றார். வள்ளுவர், "மகாத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் யாரின் தலை” என்றார். ஒருவன் வாய்மையே மொழிபனாக இருக்க வேண்டும், அவ்வாய்மை மனத்தோடு நன்கு பொருந்தியதாக இருக்க வேண்டும், மனத்தோடு பொருந்த வாய்மையே பேசுபவன் அரிதின் முயன்று தவம் செய்வார்க்கும் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்பவர்க்கும் மேலான உயர்ந்தவனாக விளங்குவான்! பற்றெல்லாம் விட முடிந்தவர் தவம் செய்யட்டும்! பொருள் வளம் மிக்கோர் மன வளத்துடன் ஈந்து புகழ் பெறட்டும்! உயர் புகழ் பெறுக! என வாழ்த்துகிறார் வள்ளுவர். இக்கருத்தை அப்படியே வழி மொழிந்து பாடும் திருக் கூவப் புராணம், "நடவடமந் தீர்ந்திடு வாய்மை ஒன்றே உறின், உலகில் தவமும் தானமும் ஒருங்குறச் செய்தலில் தலையாய்ப் பயம் அகன்று மறைமுடிப்பு ஆகிய பரம் சிவன் அரும்பதம் பெறும்படி உயர்ந்திடும் தெரியின் எனக் கூறுவது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். சிவப்பிரகாச சுவாமிகள் தம் ஞானாசிரியராகிய சிவஞான பால்ய தேசிகர் பற்றிப் பாடும் போழ்து" "நவத்தமிழ் வேதம் புகலும் நன்மொழி இங்கு கடண்மை பெறத் தவத்தொடு தானம் செய்யும் ஓர்தன்மை உனக்கு அல்லது உண்டோ? என்னும் மாலையில் இக்குறள் மணம் வீசுவதை நுகர் முடிகிறது. புரை தீர்ந்த நன்மை பயக்கும் யாதொன்றும் தீமையிலாத சொற்களை உலக நலம் ஒன்றே கருதி உரைத்த பொய்யா மொழிப் புலவராகிய திருவள்ளுவர் போலும் புகழ் பெற்ற புலவரோ? அவர் படைத்த பொருளுரையாம் திருக்குறளுக்கு இணையான புகழ் பெற்ற நூலோ உலகில் இல்லை. “என்னை நிந்தித்தான் என்னை அடித்தான், என் 33 வென்றான், என்னைக் கொள்ளையிட்டான், இத்தகைய எண்ணங்கள் இல்லாதவனிடம் வெறுப்புணர்வு நில்லாது." "எக்காலத்தும் பகைமை, பகைமையால் தணிவதில்லை; பகைமை அன்பினாலேயே தணியும்” "ஆசைகளுக்கு நிகரான அனல்வேறில்லை; வெறுப்புக்கு நிகரான நோய் வேறில்லை" "வெகுளியை அறிவால் வெல்ல வேண்டும் தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்” என்பன போன்று புத்தர் சொல்லிய பொய்யாமை நல்கும் நன்மொழிகளே அவரை உலகப் புகழாளர் வரிசையில் நிறுத்தியது. பொய்யாமை கூறியவர் மட்டுமன்று வாழ்வில் தவறாது பின்பற்றியவர். அவ்வாய்மை முழக்கம் அவர்க்கு எல்லா அரங்களின் பயனனயும் ஒருங்கே வழங்கியதுடன் புத்த பெருமான் கூறிய வாய்மைகளை வாய்மை எனக் கொண்டு உறுதியாய்க் கைக் கொண்டோரும் புகழும் பெற்றனர் அறப் பயன்கள் அனைத்தையும் எய்தினர், அதுபோல் வர்த்தமான மகாவீரரும் உலகம் உய்ய வேண்டும் வாய்மைகளைத் தரய பேருள்ளத்துடன் வாரி வழங்கிய பெரும் புகழாளர் ஆவார். அவர் புகன்ற பொய்யாமை மொழிகளில் சில. "உலகிலுள்ள நிற்பன, அசைவன் என்னும் எவ்வுயிர்களுக்கும் நீ உன் உடலாலோ நினைவாலோ? துன்பம் செய்யாதே! அவை எல்லாவற்றுக்கும் உயிர் உண்டு, நம்மைப் போலவே அவை எல்லாவற்றுக்கும் தம் உயிர்மேல் பற்று உண்டு. இதனை ஈணர்ந்து அவற்றுக்கும் அச்சம் காட்டாதே! பகைமை கொள்ளாதே துன்பம் செய்யாதே." "ஒருவன் அறிவாளன் என்பதற்கு அடையாளம்; பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையேயாம். "அடக்கமுடையவன் எவன்? மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் துன்பம் உண்டாக்காதவன் எவனோ அவனே அடக்கமுடையவன். சினம் என்பது தீ, அது தன்னைச் சேர்ந்தவரை எல்லாம் எரித்த பின்னரே அவிந்து போகும். அதற்கு இடந்தந்தவர் தாம் எரிந்து போகவே செய்வர், மகாவீரரின் ஒவ்வொரு சொல்லும் வாய்மைச் சொல்; அவை அரமெல்லாம் தரும் புகழ்ச்சொல் என்றும் அழியாச் சொல்லாகும். தாம் தவம் செய்து அரிதின் கண்டுணர்ந்த பொய்யாமையை உலகுக்குக் கூறுவதைப் போன்ற புகழ்ச் செயல் வேறு ஒன்றும் இல்லை. அதனைத் பின்பற்றி வாழ்வோர், அறவாழி அந்தணர் ஆவார், வாய்மை மொழி வோர் இணையற்ற புகழ் பெறுவர், வாய்மை வாழ்வர் அரங்களின் பயனை எல்லாம் அடைவார் என்பதை வள்ளுவர் "பொய்யாமை அன்ன புகழில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும்” எனப் பகர்கிறார். அதுபோல் இயேசு பெருமான் மொழிந்தன வெல்லாம் பொய்யாமை மொழிகளே! அவையே அவரைப் புகழ் ஏணியன் உச்சிக்கு ஏற்றியது. அவரின் வாய்மை மொழியைக் கேட்டுப் படித்து வாழ்வாங்கு வாழ்ந்து அறப்பயன் நுகர்வோரும் மிகப் பலர் "நன்மையைப் போதிப்பாயாக, தீமையே விலக்குவாயாக! என்பன போன்று அவர் வழங்கிய வாய்மை உரைகளால் அழியாப் புகழும், அறங்கள் அனைத்தின் பயனையும் பெற்றுக் காலத்தை வென்று வாழ்ந்து வருகிறார். அவர் மொழிகளை மனத்தோடு பொருந்த எண்ணி உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவரெல்லாம் புகழாளரும் ஆ னார். அரவாணரும் ஆனார்; அறத்தான் பெரும் இன்பமெல்லாம் துய்த்தனர், "வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு பாவதும் உண்டோ எய்தா.அரும் பொருள்?" என இளங்கோவடிகளின் வினாவும் இக்குறட் கருத்தை வழிமொழிகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது, கணியன் பூங்குன்றன் கூறிய பொய்யாமை மொழியல்லவா? அவ்வொரு தொடர் தந்த புகழுக்கு இணையான புகழும் உண்டோ ? அதன் வழியைத் தவறாது முழு மனத்துடன் கைக் கொண்டோர் பெற்றுவரும் நலங்கட்குக் சுணக்கும் உண்டோ ? யாதொன்றும் தீமையே தாராது, புரை தீர்ந்த நன்மை பயக்கும் மொழிகளை 'எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும்" என்னும் குறிக்கோளுடன் வாழ்ந்த பெருமக்கள் வாரி வழங்கியுள்ளனர் அம்மொழிகள் எல்லாம் பொய் யாமை அதாவது வாய்மை மொழிகளே.! அவர்கள் வழிகாட்டியாய்க் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாய்மை மொழிகளின் வழி வாழ்வதே அறநெறி பாழ்வாகும். அவர்கள் எதனை விலக்க வேண்டும் என மொழிந் துன்னனரோ அவற்றை எல்லாம் உறுதிப்பாட்டுடன் நின்று விலக்கி வாழ்வது நல்லது. நல்லோர்கள் கூறிய நன்மொழிகளின் படி வாழ்வது அறம்; நல்லோர் எவற்றைச் செய்யா வேண்டாம் என வற்புறுத்தியுள்ளனரோ! அவற்றைச் செய்யாமை நன்மை ஆகும். பொய்யாமை பொய்யாமை ஆற்றுதல் அமிழ்து பருகுவது போல்வது. செய்யாமை செய்யாமல் விலக்குவது நஞ்சு பருகாமை அன்னது. சங்கத்துச் சான்றோர் நரிவெரூகத் தலையார் புலமை நலம் சொர்ந்தவர் என்பதோடு நாடாள்வோர்க்கும் நல்வழி காட்டும் திறத்தவர். மன்னர்கள் பலர் நல்லினக் கூட்டு இல்லாமையாலும் கடுமையான சட்டதிட்டங்களாலும் குடிமக்களைத் தக்காங்கு காக்கத் தவறி விடுபவர்களும் இருக்கிறார்களே என்பதையும் அறிந்தவர். புலவர் தோழனாம் சேர நன்னாட்டு வேந்தனுக்குத் தான் கூற வேண்டும் என எண்ணிய வாய்மையை "அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பரோடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஒப்பு மதி" என மொழிந்தார். பொய்யாமையாளராகிய நரிவேரூஉத் தலையார் தாம் தூய உள்ளத்தோடு நாட்டு நலன் கருதி எண்ணிய வாய்மையைக் கேட்ட இரும்பொறை அவர் மொழி பொய்யாகாதவாறும், தான் பொய்யனாகாதவாறும் "குழந்தையைக் காக்கும் தாய் போல் நாட்டைக் காத்துச் செங்கோல் தவறாது ஆண்டு அறம் நிலைபெறச் செய்தான். அருளையும் அன்பையும் நீக்கித் தம் வாழ்வையே நரகம் ஆக்கிக் கொண்ட கீழோர், தன் பக்கம் அண்ட விடாதவாறும் காத்துக் கொண்டான். பொய்யானம் பொய்யாமை ஆற்றியதால் அறுத்தவனும் ஆனான் வாய்மை அல்லாதவற்றைச் செய்யாமையால் பெற வேண்டிய நன்மைகளையும் குறைவறப் பெற்றான். பயிர் வாடாமல் நீர்பாய்ச்சிக் காத்தல் அறம்; வேண்டாத களையைப் பறித்து எறிவது நன்மை , வாய்மை கூறியவர் நரிவெரூஉத் தலையார்; கேட்ட வாய்மை வழி நாட்டை ஆண்டவர் பெருஞ்சேரல் இரும்பொறை. இன்னொரு வாய்மை மொழிந்த வாய்மையாளர் குடபுலவியனார் வாய்மையைத் தவறாது பின்பற்றிப் பொய்யாமை போற்றிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன். "நிலன்நெழி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம! இவண் தட்டோரே! தள்ளாதோர் இவண் தள்ளா தோரே” என்பதே புலவர் கூறிய வாய்மை, "நீரைத் தேக்கி வைத்தல் 12என்பது எளிய பயன் தருவது அன்று: ஒட்டத்தில் ஒடி நீர் வீணே சுடலில் சுரக்காமல் விளைவுக்குப் பயன்படுத்துமாறு தடுத்து நிறுத்தியவர் எவரோ அவரே அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் போகாமல் தடுத்து நிறுத்திக் கொண்டவர் ஆவர். அவரே தம் பெயரையும் அழிந்து போகாமல் நிலை நிறுத்திக் கொண்டவரும் அவர், அவ்வாறு நீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளாதவர் அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் தடுத்து நிறுத்திக் கொள்ளாதவரே ஆவர்; புகழையும் நிறுத்திக் கொள்ளாதவரே ஆவர்” என்பது அல்லவா குடபுலவியனார் கூறிய வாய்மையின் எளச்சும். இவ்வாய்மை நெறி நிற்க வேண்டி யவர் பழைய மன்னன் நெடுஞ்செழியன் மட்டும் தானா? நாடாள்வோர்? எவரும் பின்பற்ற வேண்டிய வாய்மை அல்லவா! வாய்மையையே கூறா லும், வாய்மையைக் கடைப்பிடித்து ஒழுகலும் அறமேயாகும், வாய்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதும் இருந்தால் மேலும் நன்மை பெருகும். என்பதை உயர்த்த ப்! | "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று" என்று பாடினார். "நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லை” என ஆலத்தூர்க் கிழார், சோழன் கிள்ளிவளவனுக்குக் கூறிய வாய்மொழிக்கு இணையான அறம் வேறு உண்டோ ? ஆலத்தூர் கிழார் கூறிய வாய்மையை மறந்தோர் 'நன்றி மறந்தவர்” அல்லரோ? "மன்னா உட்கத்து மாறுதல் குறித்தோர் தப்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே துன்னரும் சிறப்பின் தடயர்ந்த செல்வார் இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையின் தொன்மை மாக்களின் தொடர்பறி யாரே" என்னும் பெருந்தலைச் சாத்தனாரின் பொய்யாமை மொழி போற்றி ஒழுகத் தக்க அறம் அல்லவா? "சேய்ம்ை அண்மையில் உயிர்க் கொரு துணை எனச் சிறந்த வாய்மையால் அகம் தூய்மையாம் மற்றில்லை, புறத்தைத் தூய்மை செய்வது நீரலால் சொல்லின் வேறுகடளதோ? நோய்மை செய்யினும், வாய்மையே நோன்பு எமக்கு அறிதி" என்னும் அரிச்சந்திர புராணப் பாடல், "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்" 29:8 என்னும் குறளுக்கு ஏற்ற விளக்கம் போல் அமைந்துள்ளது. நீராவ் உடலையும் உடையையும் தூய்மையானதாய் வைத்துக் கொள்ள இயலும். ஒருவரைக் கண்டபோதே அவரின் புரந்தாய் Ghira3ய வெளிப்படையாகக் காடு கொள்ள இயலும்., அதுபோல் ஒருவரின் மனத்தூய்மையைக் கண்டவுடன் அறிந்து கொள்ள இயலாது. கருத்துப் பரிமாற்றத்திற்காக அவரவர் வெளிப்படுத்தும் சொற்களின் வழியே தான், உள்ளத்தின் இயல்பை உணர்ந்து கொள்ள இயலும். - தனிப்பட்ட நிலையில் நிகழும் உரையாடல் ஆயினும், பலர் குழுமியுள்ள கூட்டங்களில் நிகழ்த்தும் உரையாயினும், நாடகம், திரைப்படங்களில் வெளிப்படுத்தும் சொற்களாயினும், பாடகர்கள் பாடும் பாடல்களே அபரிதலும், படைப்பாளர்களின் கதை, கட்டுரை, கவிதை காப்பியம், நாடகம் முதலிய எப்படைப்புகளாயினும் அதில் அமைந்துள்ள வாய்மைத் தன்மையைக் கொண்டே பேசுபவரின் எழுதுபவரின் உள்ளத் தாய்மையை அறிந்து கொள்ள இயலும் மனத் தூய்மை வாய்மையையே மொழிய வைக்கும், ஆகவே வாய்மையே மொழிவோர் மாசற்ற தூய மனத்தினராகவே விளங்க இயலும், "உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினியே ஒளி உண்டாகும்.” என்னும் பாரதியின் வாய்மொழியும் ஒப்பு நோக்கத் தக்கதாகும், விளக்கின் பயன் இருளைப் போக்கி ஒளி பரப்புதல் ஆம். ஞாயிறு, திங்கள், விண்மீன்கள், அன்ன இயற்கை ஒளி விளக்குகளுடன், பழங்காலத்து எண்ணெய் விளக்குகள், பின் வந்த மண்ணெண்ணெய் விளக்குகள், ஆவி விளக்குகள், இன்று மிகுதியும் பயன்படுத்தும் மின் விளக்குகள் அவற்றில் தான் எத்தனை வகைகள்! எத்தனை வடிவங்கள்! எத்தனை வண்ணங்கள் வனப்புகள்! மக்கள் மிகுதியும் குழுமும்: திருவிழாக்கள் மாநாடுகள் எல்லாம் என க்குகளால் பெறும் விளக்கம் மிகப் பெரிதாகும். இத்தகைய விளக்குகள் அனைத்தும் புறத்தே ஒளி செய்வனவே ஆகும், புற இருளைப் போக்குவதை விட இன்றியமையாதது அக இருளைப் போக்குவதாகும். அகவிருளை அகற்றினால் தான் மனிதப் பிறப்புற்றோர் மனிதர்களாக வாழவும் முடியும் விளங்கவும் முடியும், அக இருளைப் போக்குவோர் யார்?' மருள் நீங்கிய மாசறு காட்சியராய் விளங்கும் மெய்யுணர்வுடைய சான்றோர்கள் அவர்கள் உள்ளம் ஒளிவிளக்குப் போன்றது. அவர்கள் மொழி எல்லாம் உலக நலம் ஒன்றே கருதிய உயர் மொழிகள், அத்தகைய சான்றோர்கள் காலந்தோறும் தோன்றி, மக்களை நல்வழிப்படுத்த வழங்கும் தன்மொழிகளே உலகவர் உள்ளத்து இருளை வெருட்டும் ஒளி விளக்கு என்பதை உணர்ந்து சான்றோரின் அறிவுரைகளை, அறவுரைகளை அருளுரைகளைப் பொன்னே போல் போற்றி ஒழுகுவது ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் ஆகும். ) சான்றோர் உலக நலம் கருதி உரைத்த 'தீமையே அற்ற வாய்மைகளே நமக்கு வழி காட்டிய வழி கூட்டி வாழ்வாங்கு வாழ வைக்கும் விளக்குகள் ஆகும் என்பதை "எல்லா விளக்கும் விளக்கப்பை, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என விளக்குப் போட்டுக் காட்டுகிறார் வள்ளுவச் சான்றோர், அவரின் விளக்கன்ன வாய்மைமொழி நம்மையும் வாய்மையாளர் ஆக்கட்டும்! எங்கும் விளக்கு! எல்லா விளக்கும் பொய்யா விளக்கு ஆகலான் எல்லாரும் சான்றோர் என்ற ஒளிகெம் உதிக்கட்டும்! "பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறுஅல்ல பிற" "மானிட வாழ்வினர் பெற வேண்டிய பேறுகளில் அறிய வேண்டியவற்றை அந்த நல்ல குழந்தைகளைப் பெறும் பேறுஅன்றிச் சிறந்த பேற்றை யாம் அறிந்தது இல்லை” என மிக்க பெருமிதத்துடன் கூறுகிறார் அவரே, "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" 1071 இஃது கயமையில் இடம் பெறும் குறள். "இந்த மக்களும் தோற்றத்தால் நன்மக்களைப் போலவே இருக்கின்றனர். அவரைப் போல முழு ஒன்றுபட்ட தோற்றத்தில் காணப்படுபவரை யாம் கண்டதே இல்லை." என மிக வருந்திக் கூறுகிறார், யாமே பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து இம் முடிவிற்கு வந்துள்ளோம் எனக் கூறியாங்கு தம் ஆய்வையே சான்றாக்கிக் சுற்றும் மற்றொரு குறள், "யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்காப் காபினைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற" என்பதாகும், யாம் மெய்யாகவே ஆராய்ந்து கண்ட அறங்கள் பலவற்றுள்ளும் வாய்மையினும் நல்லதாகச் சொல்லப்படும் அறம் வேறு ஒன்றும் இல்லை. என்பதே வள்ளுவரின் ஆய்ந்த முடிவு எனின் வாய்மையின் சிறப்பையும், பயனனயும் (வேறுயாரும் கூற வேண்டிய தேவையே இல்லை எனலாம். எவ்வுயிர்க்கும் யாதொரு தீமையும் ஏற்படுத்தாததும், குற்றமில்லாத நன்மையைப் பிறர்க்குத் தருவதுமாகிய வாய்மை தூய மனத்தோடு கூடியது அதனைக் கூறுவோர் சான்றோர், புகழாளர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலை பெற்றவர்கள், அவர்கள் நிறைமொழி மாந்தராவார்; அவர்கள் கூரிய மறைமொழிகளே இம்மாநிலத்தைக் காத்து வருகின்றன. நல்லோர் கூறிய நன்மொழிகள் அறநெறிகளாகும். அவர்கள் வாழ்வே உயர்ந்த இன யற்ற பெருமையும் நிறைவும் தரும் அறவாழ்வும் ஆகும், "உண்மையின் மற்றதோர் தர்மம் ஒன்றில்லை உண்மையின் மற்றதோர் தவம் ஒன்றில்லை உடண்மையின் மற்றதோர் தானம் ஒன்றில்லை உண்மையின் மற்றதோர் சுகமும் ஒன்றில்லை" என்னும் மகா பாரதத்தின் மொழியும் ஒப்பு நோக்கத் தக்கதே! "யாதொன்றும் தீமையிலா வாய்மையே கூறுக!" "புரைதீர்ந்த நன்மைதரும் சொற்களையே சொல்லுக! தன் நெஞ்சறிவது பொய்யற்க! உள்ளத்தால் பொய்யாது ஒழுகுக! "உலகத்தார் தடள்ளத்துள் எல்லாம் தடறைக' "மனத்தொடு வாய்மை மொழிக! "பொய்யாமை அன்ன புகழ் இல்லை! "பொய்யாமை பொய்யாது ஆற்றின் அறம்" அசும் தூயராய் விளங்குக! சான்றோரின் வாய்மையே உயர்ந்த விளக்கு" "வாய்மையிற் சிறந்த அறமும் இல்லை! வாய்மை போல் நன்மை தருவதும் இல்லை! வாய்மையாளர் வாய்மையே கேட்க! வாய்மையே அகத்தையும் செயலையும் தூய தாக்கும் வாய்னம் பெருகட்டும்! 31. வெகுளாமை சினம் தோன்றாமல் ஒவ்வொரு வரும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிகாரமே வெகுளாமை ஆகும், வெகுளி என்றால் சினம் என்று பொருள்: வெகுளாமை என்றால் சினம் கொள்ளாமை என்பது பொருள், வெகுளியின் வேர் -வேகு" என்பதாகும். வேகு - வெகுள், வெகுளி என்றாகும், வெகுளியின் எதிர்மறை வெகுளாமை ஆகும். அன்பும் அடக்சுமும் பொறுமையும் இல்லாமையால் உள்ளத்தில் தோன்றும் வெப்பக் கொதிப்பாகிய வேக்காடே *வேகு' ஆகும். ஆகவே அடக்க முடியாத உள்ளம் கொதிப்பின் வெளிப்பாடே வெகுளி என்றும் சினம் என்றும் சான்றோர்களால் சுட்டப்படுகிறது. நாம் ஒரு குடும்பத்தில் ஓர் உறுப்பினர். நம் குடும்பத்திலேயே நமக்கு மூத்தவர்களும் இருக்கலாம்; இளையவர்களும் இருக்கலாம். ஒவ்வொருவரின் நோக்கும் போக்கும், செயல்முறையும், இயல்பும் வெவ்வேறு வகையாகவும் இருக்கலாம், அகவையிலும் வேறுபாடு இருக்கும்; கல்வி நிலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கும். ஒரே வகையான உணவே எல்லார்க்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. தாங்கும் நேரமும் துயில் எழும் நேரமும் கூட வேறு படலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் ஈடுபாடும் ஒன்றுபோல் இருக்கும் என்றும் சொல்ல இயலாது. உடல் நிலையிலும் வேறுபாடு இருக்கலாம். ஒவ்வொருவரின் நண்பர்களும் ஒவ்வொரு வகையினராய் அமையலாம். உறவினர்களிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அவர் மேல் தனி ஈடுபாடு இருக்கலாம், பணியும் வெவ்வேறாக அமையலாம். அரசியல் ஈடுபாடும் மாறுபட்டதாக அமையலாம். சமைய ஈடுபாட்டிலும் வேறுபடலாம். கடவுள் நம்பிக்கை உடையவரும் இருக்கலாம் இல்லாதவரும் இருக்கலாம், இப்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயே அமையக் கூடிய வேறுபாடுகளைக் கணக்கிட முற்பட்டால் விரிந்து கொண்டே செல்லும். எல்லோரும் தான் சொன்னபடி கேட்டு நடக்க வேண்டும். நான் னவத்தது தான் சட்டம் என மனக்கோட்டை கட்டிக் கொள்ள முடியுமா? எல்லோரும் நம் மன உணர்வைப் புரிந்தே நடந்து கொள்வார்கள் நம் மனம் கோணாமல் நம்மை மதித்து நடக்க வேண்டியதே அவர்கள் கடமை என எதிர்பார்க்க முடியுமா?' ஆகவே, குடும்பத்திற்குள்ளேயே நம் விருப்பத்திற்குப் புறம்பான நிகழ்ச்சிகள் நிகழலாம். சில நமக்கு வேதனையூட்டலாம்; வெறுப்பூட்டலாம்; சிலர் பேச்சு தம்மைப் புண்படுத்தலாம்: சில செலவுகள் வீண் என்று நாம் கருதலாம்; சிலர் வருகை நமக்குப் பிடிக்காதிருக்கலாம், சில நாள் சமையலில் குறைகள் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் வருத்தம் ஏற்படலாம். காரணமானவர் மீது வெறுப்பும் எரிச்சலும் சினமும் தோன்றலாம், அதுபோல் உறவினர் அயலார்; நண்பர் பகைவர் நிலையிலும் பணி புரியும் இடங்களிலும், பயணங்களிலும் பொருள்களை விற்கும் இடம், வாங்கும் இடம்; பலர் கூடும் இடங்களில் எல்லாம் நாம் மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ள வாய்ப்பில்லாத பல நிகழ்வுகள் நடைபெறலாம். இவை 2533ர்ச்சி வயப்படச் செய்யலாம், தமக்குத் துன்பம் துயரம் இடைஞ்சல் யார் செய்ததாகக் கருதுகிறோமோ? யார் நம்மை, நம்சொல்லை மதிக்கவில்லையோ அவர்கள் மீது ஆத்திரமும் சினமும் வருகிறதே சினம் கொள்ளலாமா? சினம் கொள்வதால் ஏதேனும் நன்மை உடண்டா ?' எனத் திருவள்ளுவரிடம் வினவினால் அவர்கள் சினத்தால் நன்மையா? ஒருக்காலும் கிடையாது சினம் கொள்ளற்க! என வற்புறுத்தவே வெகுளி என்று தலைப்பிடாமல் வெகுளாமை என்று தலைப்பிட்டார். "குணாமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி காணாரேயும் காத்தல் அரிது" நீத்தார் பெருமையில் இடம்பெறும் குறள். “உயர்ந்த குணமலையாக விளங்குபவர் நொடியளவு கூடச் சினம் கொள்ளார். "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் பாருங்குகாடயார் மாநிலத்து இல்" இக்குறள் 'சுற்றம் தழா, அவில் இடம் பெற்றுள்ளது. "பெருங்கொடையாளனாக வும், சினம் கொள்ளாதவனாகவும் இருந்தால் அவனைப் போல் சுற்றம் உடையார் இரார்." "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" இது அறன் வலியுறுத்தும் குறள், "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடககெடும் நோய்" இக்குறளை மெய்யுணர்தலில் காணலாம். ""விருப்பு, சினம், தெளிவின்மை என்னும் மூன்றன் அச்சமும் இல்லையானால் துன்பமும் இல்லை யாகும்". "செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து" இது குற்றம் கடிதல் குறள்களில் ஒன்று. 'தற்பெருமை, சினம், இழிதன்மை ஆகியவற்றைக் கொள்ளாதவர் உயர்வே உயர்வுடையதாகும்." "இறந்த வெகுளியின் தீதே; சிறந்த நடவகை மகிழ்ச்சியிற் சோர்வுட" 531 " அளவு கடந்த சினத்திலும் மிகுந்த உவகைப் பெருக்கினால் சோர்வடைந்து கிடத்தல் தீமையாகும்." "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு இது வெருவந்த செய்யாமை அதிகாரக் குரள். "தக்கவர்களோடு அமைந்து ஆராயாது, சினத்தோடு செயல் புரிந்தால் அவன் நலங்கள் சிறிதாகி விடும்" "நீங்கான் வெகுளி, நிறையிலான் மாஞ்ஞான்றும் யாங்கணும், பார்க்கும் எளிது" "சினம் உடையவனாய், உறுதி இல்லாதவனாய் இருப்பவன் எப்பொழுதும் எங்கும் எவர்க்கும் எளியவனாவன்." "பிறர் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று சீர்திருத்த விரும்புபவன் கோபம் கொள்ளக் கூடாது. கோபம் வந்தால் காத்திருக்கவும், கவனிக்கவும், வழிபடவும் கற்றுக் கொள்ள வேண்டும்." “எனக்குக் கோபம் உண்டாகாமலில்லை. ஆனால் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். இடைவிடாமல் முயன்றால் எல்லார்க்கும் இயலும்." "கோபம் பைத்தியத்திற்குச் சமம். அதை வளர்த்தால் நிலைமை மோசமாகி விடும்." *கோபப்படுவதற்குத் தக்க காரணம் இருந்தபோதும் கோபப்படாதவனைத் தான் கோபத்தை விட்டவன் என்று கூரலாம்" என வெகுளியால் விளையும் தீமைகளைக் குறிப்பிடுவதுடன், வெகுளியை விட்டால் அடையும் பயா3னயும், அடக்க வழியும் கூறுகிறார் நாட்டுத் தந்தை காந்தியடிகள், "வலியவனிடத்தும் அத்தான் மாட்டினும் வெகுளி காத்தல் பொலிவுசெய் அறம் அது என்னப் பொருந்துறாது அனையர் தம்பால் நலிவுறு வெகுளி செல்லாது ஆதபோல் நலியபாற்றா மெலியவனிடத்தில் காக்கும் வெகுளியே அறம், அது என்பார்” என்று சிவப்பிரகாசர் பிரவுலிங்க லீலையில் கூறுகிறார். உலகில் நம்மைக் காட்டிலும் உடலாலும், பொருளாலும், பதவியாலும், துணைப் பெருச்சாலும், தவச் சிறப்பாலும் வலியவர்களும் இருப்பர். எல்லா நிலைகளிலும் நமக்கு இணையான வல்லமை வாய்ந்தவர்களும் இருப்பர். நம்மை விட மிக்க மெலிந்த நோய்வாய்ப்பட்ட உடலரும், பொருள் வாய்ப்புக் குன்றிய ஏழையரும், மிகக் கீழ் நிலைப் பணிபுரிவோரும், தூக்கிப் போட்டு மீதித்தாலும் ஏன் என்று கேட்கவும் நாதி அற்றவராய் மனஉறுதி இல்லாதவராய் இருப்போர்களும் உலகில் உண்டு, இம்மூன்று வகை நிலையானரும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் நமக்குத் தொல்லை தந்திருக்கலாம்; இடையூறாய் இருந்திருக்கலாம். அவர்கள் மீது நமக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படுகிறது. அவர்களை என்ன என்று கேட்டுவிட வேண்டும், இப்படியே விட்டு விடக் கூடாது. அடித்துப் பல்லை உடைத்துக் கையில் கொடுக்க வேண்டும்! அல்லது பதிலுக்குப் பதில் "பிறர் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று சீர்திருத்த விரும்புபவன் கோபம் கொள்ளக் கூடாது. கோபம் வந்தால் காத்திருக்கவும், கவனிக்கவும், வழிபடவும் கற்றுக் கொள்ள வேண்டும்." “எனக்குக் கோபம் உண்டாகாமலில்லை. ஆனால் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். இடைவிடாமல் முயன்றால் எல்லார்க்கும் இயலும்." #கோபம் பைத்தியத்திற்குச் சமம். அதை வளர்த்தால் நிலைமை மோசமாகி விடும்." "கோபப்படுவதற்குத் தக்க காரணம் இருந்தபோதும் கோபப்படாதவனைத் தான் கோபத்தை விட்டவன் என்று கூறலாம்" என வெகுளியால் விளையும் தீமைகளைக் குறிப்பிடுவதுடன், வெகுளியை விட்டால் அடையும் பயன்hனயும், அடக்க வழியும் கூறுகிறார் நாட்டுத் தந்தை காந்தியடிகள், "வலியப்பனிடத்தும் ஒத்தான் மாட்டிலும் வெகுளி காத்தல் பொலிவுசெய் அறம், அது என்னப் பொருந்துறாது அனையர் தம்பால் நலிவுறு வெகுளி செல்லாது ஆதலால் நலியாலாற்றா மெலியவனிடத்தில் காக்கும் வெகுளியே அறம், அது என்பார்" என்று சிவப்பிரகாசர் பிரவுலிங்க லீலையில் கூறுகிறார். உலகில் நம்மைக் காட்டிலும் உடலாலும், பொருளாலும், பதவியாலும், துணைப் பெருக்காலும், தவச் சிறப்பாலும் வலியவர்களும் இருப்பர். எல்லா நிலைகளிலும் நமக்கு இணையான வல்லமை வாய்ந்தவர்களும் இருப்பர். நம்மை விட மிக்க மெலிந்த நோய்வாய்ப்பட்ட உடலரும், பொருள் வாய்ப்புக் குன்றிய ஏழையரும், மிகக் கீழ் நிலைப் பணிபுரிவோரும், தூக்கிப் போட்டு மிதித்தாலும் ஏன் என்று கேட்கவும் நாதி அற்றவராய் மனஉறுதி இல்லாதவராய் இருப்போர்களும் உலகில் உண்டு. இம்மூன்று வகை திநகரும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் நமக்குத் தொல் 3) தந்திருக்கலாம்; இடையூறாய் இருந்திருக்கலாம். அவர்கள் மீது நமக்கு வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படுகிறது. அவர்களை என்ன என்று கேட்டுவிட வேண்டும். இப்படியே விட்டு விடக் கூடாது. அடித்துப் பல்னல் டேடைத்துக் கையில் கொடுக்க வேண்டும்! அல்லது பதிலுக்குப் பதில் இடைஞ்சல் செய்ய வேண்டும்! அவர்கள் அடிக்கும் போது நம் ஈகை என்ன புளியங்காயா பிடுங்கப் போய் விட்டது. இல்லையேல் நான் நாக்கைப் பிடுங்குகிறாற்போல் நாலு வார்த்தையாவது கேட்டால் தான் என் மனம் ஆறும் என உணர்ச்சி வயப்பட்டுக் கிளர்ந்து எழுவோர் உண்டு! சான்றோர் அனைவரும் சினம் கொள்ளாதவாறு நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம்dைi விட வலியவரிடம் சினம் கொண்டால், அது பாறையில் முட்டுவதற்கு ஒப்பாகும். முட்டினால் முட்டியவன் மண்டை உடையுமே தவிர்த்துப் பாதைக்கு எந்தத் தீங்கும் நேரம் போவது இல்லை, அதுபோல் வலியவனிடம் சினம் கொள்பவன் "ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு போல் அல்லல் படுவது உறுதி! ஆகவே, எல்லார்க்கும் தெரியும் அவியவரிடம் சினங்கொண்டால் அவர்கள் நம்மைத் தொலைத்து விடுவார்கள் என்பது. ஆகவே வலியவரிடம் விவரமான எவனும் 'வாலாட்ட மாட்டான்" ஆகவே வலியவனிடம் சினம் கொள்ளாதே என்று அறிவுறுத்தத் தேவையில்லை. சினம் கொள்ளக் காரணம் இருந்தும் அவர்களாவே அடக்கிக் கொள்வார்கள் அது சினம் காத்தால் ஆகாது: அச்சமும் இயலாமையுமே ஆகும். ஆகவே வலியவரிடம் சினம் தோன்றாமல் காத்தாலும் சரீ! காக்கவில்லை ஆயினும் சரி! அந்தத் தலைப்பை உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறோம். ஆனால், தம்மினும் வலிமை குன்றிய மெலியவர் நமக்குத் துன்பம் செய்தாலும் தீங்கு விளைவித்தாலும் அவர்கள் நம்மைக் குறை கூறினாலும் அவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லையாயினும் கண்ணோட்டத்துடன், பொறுமை யுடன் அன்பாக அணுகி, இனியமொழி கூறித் தெளிபடுத்தவோ திருத்தவோ முயல வேண்டுமே ஒழிய, அவர்களை எளிமையாய்க் கருதி அரட்டவோ, உருட்டவோ, அச்ச மூட்டவோ தடித்த சொற்களால் திட்டவோ கூடாது. அவர்களை வெறுக்கவும் பகைக்கவும் கூடாது. நடுநிலையுடன் பொறுமையாகச் சிந்தித்தால் அவர்கள் மீது சினம் ஏற்படாது. சினம் வருவது போல் தோன்றினாலும் அடக்கி விட வேண்டும், சினக்குறி வெளிப்பட இடந்தந்து விடலாகாது. மனத்திலும் தங்சு விடுதலும் ஆகாது, என ஆழமாக எண்ணிய திருவள்ளுவர், "செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் துல்லிடத்துக் காக்கின்றான் காவாக்கால் தான்" எனக் கூறுகிறார். என்ன ன யாரும் சீண்டாதவரை நான் யார் மீதும் சினங்கொள்ள மாட்டேன் சீண்டினால் எவனும் தப்ப முடியாது எனக் கூறுவோரும் உண்டு, பிறர் சீண்டிய போதும். சீறாமையே சினம் காத்தலாகும், சின மாகிய நச்சு விதையை எங்கு விதைத்தால் அது முன்னத்துத் தன் தீய விளைவை நல்குமோ அங்கு விதைக்காமல் இருப்பது தான் வேண்டுமே தவிர விளைவை உண்டாக்காத இடத்தில் விதைப்பதால் விதைப்பவனுக்கு விதை இழப்பு என்பது தவிர மற்றவர்கட்குக் கேடு ஒன்றும் இல்லை, துப்பாக்கி சுட்டுப் பழகுவோர் மனிதர் முதல் எவ்வுயிரினமும் நடமாடாத இடத்தில் பழகுவது பற்றி யாருக்கும் கவலை இல்லை, அவர் அனர் நடுவில் அவர்கள் வேலையைக் காட்டி விடக் கூடாது. தன் சினம் பலிக்கும் இடத்தில் அது உண்டாகாமல் காப்பவனே சினம் காப்பவன். மற்றை இடத்தில் காத்தாலும் ஒன்றுதான் காக்கா விட்டாலும் ஒன்றுதான். மெலியார் மேல் சினம்: கொள்ளாமையே வெகுளாம்ை ஆகும், முதற்குறளில் திருவள்ளுவர் செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' எனக் கூறியுள்ளனத அறிவோம், அப்படியானால் சினம் செல்லாவிடத்துக் காப்பவன் சினம் காப்பவன் ஆகான் என்பதே வள்ளுவர் கருத்து. ஆனால், சினத்தின் வினை ஓவை நோக்கினால் சினம் எவர் கொண்டாலும் தீது தான்; எவர் மீது கொண்டாலும் தீதுதான், ஒருவனுக்குச் சினமான து அவனை விட வல்லமை வாய்ந்தவனிடம் உண்டாகுமானால், அது அவனுக்கே கெடுதியை விளைவிக்கும் என்பதை அவனவனே பட்டுணர உடனே வாய்ப்பு அமைந்தாலும் அமைந்து விடலாம் அதன் பாதிப்பு ஒருவகைப் பட்டதாகும். ஆ னாலும் ஒரு காலத்தும் நன்மை தராது. தீயதையே உறுதியாய்த் தரும். அதன் விளைவு வெளிப்படையாகத் தெரியும் தீமையாகும். ஆனால் மெலியவரிடத்துக் கொள்ளும் சினம் அவரை மிகுதியும் பாதிக்கும் அவரைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரியவும் முடியும். ஆனால் அது சினம் கொண்டவனைப் பாதிப்பது வெளியே தெரியாமல் கூட இருக்கலாம் ஆனால் உண்மையில் அதன் கேடே மிகுதியாகும்! ஏனெனில் இதனால் புறக்கேடு குறைவாக இருப்பினும் அகக்கேடு அளவிட முடியாததாகவே இருக்கும், அக்கேட்டிலிருந்து மீள்வது கடினம் ஆகவே தான் திருவள்ளுவர், "செல்லா இடத்துச் சினந்தீது; செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற" எனக் கூறுகிறார், சினம் பலிக்காத இடத்தும் சினம் கொள்வது தீமையே தரும். ஆனால் சினம் பலிக்கும் இடத்தில் கொள்ளும் சினத்தைப் போல தீமை தருவது வேறு எதுவும் இருக்க இயலாது. ஆகவே ஒளவையார் "ஆறுவது சினம்" என வேண்டினார், "பெரியவர் தம்மைக் காய்ந்தான் பிறங்கல் கல்லிய கோலொப்பான் புரியன பதியப் பட்டு புலம்புவன், கத்தார்க் காய்ந்தான் எரிநரகு அதனில் வீழ்வன் இழிந்தவர்க் காய்ந்தான் என்றால் ஒருவர்தம் இடத்தும் சீற்றம் உறாமையே நன்று மாதோ!" எனப் பிரபு லிங்கலீலை பகர்வதையும் ஒப்பிட்டு நோக்கலாம், 1. "நமக்கு எவனிடம் சினம் ஏற்படுகிறதோ அவனிடம் நட்புக் கொள்வது, 2. அவனிடம் இரக்கம் காட்டுதல், 3, அவனைப் பார்த்துப் புன்முறுவல் புரிதல், 4. அவனவன் செயலின் பயனை அவனவனே அடைவான் என எண்ணுவது. 3, நாமே அவனை மறந்து விடுவது. ஆகிய ஐந்து வழிகளும் பிறர் மீது சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வதற்குரிய வழிகள் எனக் கூறிப் புத்தர் சினம் கொள்ளாமல் வாழ வழி காட்டுவதும் ஒப்பிட்டு உணரத் தக்கதாகும். "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்பது 'செய்ந்நன்றியறிதல்" குறள். "ஒருவர் செய்த நன்மையை மறுத்தல் கூடாது: ஆனால் பிறர் செய்த தீமையை உடனே மறந்து விடுதல் நன்று.* "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று" இது பொறையுடைமைக் குறள். "தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பு: அதனை மறந்து விடுதல் அதனினும் சிறப்பு." "காத்தின் சகா செய்தவக் காண்பதும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்" "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடப்" இவை இன்னா செய்யாமை அதிகாரக் குறள்கள், “சினம் மிகுந்து நீமை செய்த போதும் அவர்க்குத் திருப்பித் தீமை செய்யா திருத்தல் குற்றம் இல்லாதவர் கொள்கையாம்" "தீமை செய்தவரைத் தண்டிப்பது அவர் வெட்கப்படுமாறு நல்லது செய்து அதனையும் மறந்து விடுவதாகும்." என்னும் குறள் நெறியை ஒத்த குறட்பாவே, "மறத்தல் வெகுளியாய் யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும்" 303 என்பதாகும், ஒவ்வொருவருக்கும் வரும் தீமைகட்கு எல்லாம் அடிப்படையாய் அமையும் தீய தன்மை சினங்கொள்ளுதல் ஆகவே, எவரிடத்தும் எப்பொழுதும் சினம் கொள்ள வேண்டும் என்ற உணர்வே தோன்றாதவாறு மறந்து விட வேண்டும் என்பதை மறவாமல் கூறுகிறார் வள்ளுவர். | சினமே தீனகளின் பிறப்பிடம். ஆகவே சினமுள்ள ஒவ்வொருவர் உனத்தும் கால் கொள்ளாதவாறு கண்காணித்துக் கொள்ள வேண்டும். "தாக்கினால் தாங்கிக் கொள்ளுங்கள்; சித்திரவதை செய்வார்கள், சித்தம் கலங்கி இலட்சியத்தை விட்டு விடாதீர்; சிறைச் சாலையை மலர்ச் சோலையாக எண்ணுங்கள் குண்டடி பட்டாலும், கொள்கையைக் காப்பதில் குன்றென நில்லுங்கள். சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதனைப் பெறுவது நமது கடமை, ஆள் வந்தவர்கள் ஆத்திரப் படுவார்கள். நீங்கள் சினம் கொள்ளாது அமைதி வழியிலேயே போராடுங்கள்" என்பது அண்ணல் காந்தியடிகள் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் கட்குக் கூறிய அறிவுரைகளின் ஒருபகுதியாகும். இதனையும் எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். "அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்பது குறிப்பறிதல் அதிகாரக் குறள்களில் ஒன்று. "தன்னை நெருங்கியதைக் காட்டும் கண் 533 ாடி போல், நெஞ்சில் மிகுந்துள்ள உணர்வை முகம் வெளிப்படுத்தி விடும்" என்பது படிப்பறிவு மொழி மட்டுமன்று பட்டறிவு மொழியுமாகும். சினம் என்பது தீப்போன்ற தீய குணமாகும். அஃது ஒருவன் உள்ளத்துப் புகைந்து கனலத் தொடங்கி விடுமாயின் அவன் மலரன்ன முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடியாது. மலரிதழ் விரிவது போல் விரிந்து புன்னகைக்கும் அவன் வாய் இதழ்கள் புன்னகையையும் இழந்து, நெருப்பால் சுருகிய முகம் போல் கடுகடுத்து இயல்பிற்குப் புறம்பான வேற்று முகமாக மாற்றிவிடும். சினத்திற்கு இடம் கொடுப்போர் தம்மிடம் உள்ள நல்ல தன்rைகளை எல்லாம் இழந்து விடுவர், சினம் நமக்குப் பகை; கொடும் பகை; கொல்லும் பகை. சினம் ஒள்வொருவரும் மகிழ்ச்சியால் சிரிக்கும் சிரிப்பையும், உள்ள நிறைவால் தோன்றும் புன்னகையையும் அழித்துவிடும். ஆகவே, சினம் கொடுமையான உட்பகை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற" என்பது வள்ளுவர் வாய்மொழி. அகத்தும் முகத்தும், மகிழ்ச்சியே தோன்றாதவாறு அழிக்கும் சினமே ஒவ்வொருவருக்கும் கொடும் பகை ஆகும். தென் அமெரிக்காவில் வாழும் ஒருவகைத் தேளுக்குக் கோபம் வந்தால் அது தன்னைத் தானே கொட்டிக் கொண்டு இறந்து விடுமாம். இது சினத்தின் உச்ச நிலை. உண்மையில் சினம் நஞ்சு குடிப்பதற்கு ஒப்பானதாகும். அது தன்னனத் தானே நஞ்சாக்குவதை உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் மெய்ப்பித்துள்ளார்கள், " அறியாமையில் தொடங்கும் வெகுளி வருத்தத்தில் முடியும்' என்கிறார் கிரேக்க அறிஞர் பிதாகரசு. சினம் வெளிப்பட்டு விடுமாயினும் அதன் சுவடு உள் மனத்தைக் குடைந்து கொண்டு குற்ற உணர்ச்சியை வளர்த்துக் கொண்டே இருக்கும். அவாளன் அடிக்கும் சின்னமாகிய சாட்டை அடி அள்ளவன் மீதே தாக்கி, அனனவன் உடலிலும், உள்ளத்திலும் மறைக்க முடியாத வடுக்களைத் தோற்றுவிக்கும், யார் மீது சினம் கொள்கிறோமோ, சினத்தின் பயன் அவர்களைத் தாக்கத் தவறினாலும் கொண்டவனைத் தாக்கத் தவறாது. சினம் என்பது கடலில் ஏற்படும் கொடுமையான புயல் போன்றது. புயல் நின்ற பின்னரும் கடலின் கொந்தளிப்பு அடங்க நெடு நேரமாகும், அது போல் சினம் கொண்டவன் தன் நிலையாகிய நன்னிலைக்கு வர நேரம் ஆகும். ) அடிக்கடி சினம் தோன்றினால் மனம் வலிமை குன்றும், சிடுசிடுப்பும் ஆற்றாமையுமே அதிகப்படும். ஆகவே நற்குணங்களின் எதிரியாகிய (வெகுளியை அண்டவிடல் ஆகாது. தன்னைத்தான் காதலன் ஆயின் சாதனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்” இது தீவினை அச்சத்தில் தன்னைத் தானே காதலிக்கத் தூண்டும் அருமையான காதல் பாட்டு! "ஒருவன் தன்னைத் தானே விரும்பினால், தீய செயல் எதனையும் நெருங்காது இருப்பானாக, என விழிப்புணர்வு கொள்ளத் தூண்டுவது போல் தூண்டும் பாடலே, "தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினாம்” என்பதாகும். துன்பம் இன்றி எந்நாளும் இன்புற்று வாழ எல்லாரும் விரும்புகின்றனர். அப்படியாயினும் துன்பம் வரும் வழிகளைக் கண்டுணர்ந்து அவற்றை அடைக்க முயல வேண்டும். இன்புறும் வழி வகைகளைக் கண்டுணர்ந்து பின்பற்ற வேண்டும் என்பது பொதுவான நெறிமுறையாகும். இங்கே திருவள்ளுவர் நேரில் அழைக்கிறார். அவர்களிடம் உங்களைத் துன்பம் துயரங்கள் நெருங்க விடாது காத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்கள் அல்லவா? என வினவுகிறார். ஆம்! யாராவது துன்பமே என்னிடம் வா என விரும்புவார்களா? துன்பத்தை நேரடியாக வரவேற்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால் துன்பம் தானே நுழையுமாறு கதவைத் திறந்து வைத்து விடுகிறீர்களே! அதுதான் எனக்கு வருத்தம் என்றார்? அப்படியா நடந்து கொள்கிறோம்? என்றனர், பின் என்ன? சினம் எவ்வளவு பொல்லாதது என்பது உங்கட்குத் தெரியும் அல்லவா? தெரிந்த நீங்கள் சினம் உங்களான நெருங்க அனுமதிக்கலாமா?' தீப்பெட்டியில் தீக்குச்சியை உராய்ந்தால் என்னவாகும்? தீப்பற்றும் எதில் முதலில் நுனி மருந்தில் பற்றி, அடுத்து குச்சியையும் எரித்து விட்டு அல்லவா எரிக்க வேண்டியதை எரிக்க முற்படும்.' அது போன்றது அல்லவா சினம்? சினத்தைத் தோன்றாமல் காக்கத் தவறினால் கொண்டவனையே கொல்லும் நெருப்பு, நஞ்சு போன்றது அல்லவா? ஆகவே, நீ வாழ வேண்டுமானால் சினத்தை அழி! சினத்தை ஒழிக்கத் தவறினால் அது தவறாமல் உன்னன ஒழித்து விடும் என விழிப்பூட்டி நெறிப்படுத்துகிறார் வள்ளுவர். "உள்ளம் கவர்ந்தெழுந்து ஒங்கு சினம் காத்துக் கொள்ளும் குணாமே குணம் என்க = வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கணர தான் போர்த்து விடுத்தல் அரிதோ? விளம்பு" என்னும் குணப்பாடடைப்பும் ஒப்பிட்டு நோக்குக! "காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லும் சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து." என்று நாலடியார் நளில்வதையும் நினைவில் கொள்க! ""தீ எரியக் கூடிய பொருள்களை எல்லாம் எரித்து விட்டுத் தான் அணிந்து போவது போல் சினம் மனிதனை அழித்து விட்டுத் தான் அடங்கி விடும். சினம் வந்து விட்டால் மனிதனுக்குப் பிறர் குண நலங்கள் தெரிவதே இல்லை. குணங்களும் குற்றங்களாகத் தோன்றுவதால் அவன் நல்லவனையும் காற்றுகிறான், சொல்லக் கூடாததை எல்லாம் சொல்லுகிறான். அவனுக்குக் கண்ணும் தெரிவதில்லை, மண் ஈறும் தெரிவதில்லை, மனிதனாய் இருந்தும் விலங்காய் நடந்து கொள்கிறான். சினம் வந்து சேர்கையில் நமக்கு மிக வேண்டியவர்களும் ஓர் இமைப் பொழுதில் பகைவர்கள் ஆகி விடுகிறார்கள். மனிதனின் பெயரையும் புகழையும் கூடச் சினம் கெடுத்து விடுகிறது. நம்மை, மதிப்பவர்களும் மதியாதவர்களும் விருப்பப்படி நடக்கட்டும். இழிவான ஈயும் மிதித்து ஏரித் தலையில் இருக்கும் இதை உணரும் மேலோர் சினம் கொள்ளாது இருத்தல் நலம்" என்னும் மகாவீரரின் அறிவுரைகளையும் மனத்தில் கொள்ள வேண்டுதும்! "தீயனவ தீய பயத்தால் தீயாவை தீயினும் அஞ்சப் படும்" என்பது தீவினை அச்சத்தில் இடம் பெறும் குறளாகும். "தீய செயல் என்றும் தீமையே தருதலால், அத்தீய செயல் தயாரினும் கொடியதாக அஞ்சக் கூடியது." என்னும் கருத்தோட்டத்தில்! மலர்ந்த குறளே, "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனமென்னும் ஏமப் புணையைச் கடும்" என்பதாகும். இக்குறளில் திருவள்ளுவர் சினத்திற்குச் **சேர்ந்தா3ரக் கொல்லி" எனப் பெயரிட்டிருக்கிறார், அப்படியானால் சினம் ஒரு கொடு (நெருப்பு, கொடிய நஞ்சு போன்று அழிக்கும் தன்மை உடையதாக வள்ளுவர் காண்கிறார், தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் தன்மை வாய்ந்த சினத்தீ அத்துடன் அமையாது. சினம் கொண்டவர்க்குச் சுற்றத்தாராய் அமைந்து அவரைத் துன்பக் கடலில் இருந்து பாதுகாக்கும் தெப்பம் போன்றவரையும் வேதனைக்குள் பூக்கும். மின்சாரம் தாக்கியவரைக் கைகொடுத்துக் காக்க முற்பட்டவர் சுதைபோல் ஆகிவிடும். சினத்தீ கொண்டபேனையும் கொல்லும், சுற்றத்தாரையும் சுட்டு எரிக்கும். “கோபம் குடி கெடுக்கும்' என்பதும், “ஆத்திரக் காரனுக்குப் புத்திமட்டு” என்னும் பழமொழிகளையும் நினைவு கூர்சு! | *கோபமே நாம் படும் எல்லாத் துன்பங்களுக்கும், உலகில் தோன்றும் எல்லாத் துயரங்களுக்கும் காரணம், உலகில் தோன்றும் எல்லாத் தொல்லைகளும் கோபத்தி லிருந்தே பிறக்கின்றன" என இயேசுபெருமான் எடுத்துரைப்பதையும் எண்ணிப்பார்த்துச் சில நெருப்பு உண்டாகாது காப்போம்! "எனைப்பகை உற்றாரும் நடய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்" "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந்து அற்று" இவை தீவினை அச்சக் குறள்கள். "எந்தப் பகையைக் கொண்டவரும் தப்புவர்; ஆனால் தீய செயலைப் பகையாகக் கொண்டவர்கள் தப்பார்" "தீய செயல் செய்தவர் அழிவு தன் நிழல் தன்னை விடாமல் தொடர்வது போல் தொடர்ந்து தங்கும்" செய்தார்க்குச் செய்த வினை" தினை விதைத்தவன் தினையை அறுவடை செய்வது போல் வினைவிதைத்தவன் வினையை அறுவடை செய்வான். . தன் திறமையை, வலிமையை அதிகாரத்தைக் காட்டுவதற்கு எவனெல்லாம் சினத்தை ஒரு தகுதி வாய்ந்த கருவி எனக்கருதிப் பயன்படுத்த முற்பட்டானோ அவனெல்லாம் கெட்டுப் போவது உறுதி', ஏதுபோல் எனின் ஒருவன் தன் முழு வலிமையையும் சேர்த்துத் தன் கையால் வலிய நிலத்தில் ஓங்கி அடித்தால் எப்படி வலியும் வேதனையும் சேதமும் ஏற்படுவது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி. சினத்தைப் போற்றிக் கொண்டவன், தரையைக் குத்தியவன் "கை' போன்ற நிலையை அடைவான். கைக் குழந்தைக்குத் தன் மார்பில் பாலூட்டிக் கொண்டே அண்டை வீட்டாரிடம் மிகு சினம் கொண்டு வாய்ச் சண்டை போட்டாள். சண்டை முடியுமுன்னே குழந்தையின் வாழ்வு முடிந்து விட்டது. மருத்துவரின் கணிப்பு குழந்தையின் உடலில் தஞ்சு ஏறி இருக்கிறது என்பதாம். நஞ்சு எப்படி ஏறியது. தாமன் கடுஞ்சினமே அமிழ்த நஞ்சாக்கிக் குழந்தையைக் கொன்றிருக்கிறது. என மறைமலை அடிகளார் கூறும் வரலாற்று நிகழ்வையும் மறுத்தல் கூடாது என்பவற்றை எல்லாம் ஒருங்கே சிந்திக்கத் தூண்டிச் சினத்தை ஒரு பொருட்டாக எண்ணாது. பூத்தொடுக்கும் கைபோல் மரணம் பெற வைப்பது "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத் தறைந்தான் கைபிழையா தற்று" எனும் குறட்பாவாகும், "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாமதம் தகுதியான் வென்று விடல்” இது பொறையுடைமைக் குறள். "அடங்காத செருக்கி னால் தாங்க முடியாக் கொடுமை செய்தாரையும் ஒருவர் தம் பொறுமையால் வெற்றி கொள்ள வேண்டும். "அழிவந்த செய்யினும் அன்புஅறார், அன்பின் பழிவந்த கேண்டை யவர்" இது பழைமை அதிகாரக் குறள். "அன்பின் வழியால் டாண்டாகிய உரிமை நட்பினை தடடையவர் பழகியவர் தமக்கு அழிவு தரும் செயல்களைச் செய்தார் எனினும் அதனை நோக்கி அன்பு நீங்கார்" என்னும் குறட்பாக்களின் நோக்கையும் போக்3கயும் உள்ளத்துள் கொண்டு, "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புகாரின் வெகுளாமை நன்று" எனும் குறளை நோக்குதல் வேண்டும், ஒருவன் பூங்கொத்தைத் தீயால் சுடுவது போலும் கொடுமையான தீமையை ஒரு காலத்தில் செய்தவன்! காலங்கடந்து தன் தவற்றை உணர்ந்து வருந்துகிறான் மீண்டும் நட்புக் கொள்ள வேண்டும் என விரும்புகிறான், வந்து சிக்கி இருக்கிறான் வட்டியும் வாசியும் சேர்த்து வகையாகக் கொடுத்து விடுவது தகுமா? தகாது. அவன் செய்த தீமையை மறந்து சினங்கொள்ளாது நட்புக் கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் விருப்பம். “உங்களுக்கு என்னைக் கொல்ல வேண்டும் போல் தோன்றினால் அதைச் செய்யுங்கள், அ, ஈனால் உள்ளே இருப்பவர்களை அமைதியாகச் சாகவாவது அனுமதியுங்கள்" என வேண்டிய அன்னை தெரசா வெகுளாமைக்கு நல்லதொரு சான்றாக விளங்கிய துறவர். "எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச் சொல், தன் நெஞ்சில் கொள்ளி பேத்தால் போல் சொடிதெனினும் மெள்ள அறிவென்னும் நீரால் அவித் தொழுக லாற்றின் பிறிதொன்றும் வேண்டாந் தவம்" என்னும் அறநெறிச் சாரமும் வெகுளாமையே உயர்ந்த தவம் என எடுத்து (மொழிவது நல்லதொரு சான்றாகும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்" என்பது வினைத் திட்பத்தில் அமையும் குறள். "எண்ணுகின்றவர் உறுதி உடையவரானால் தாம் எண்ணியதை எண்ணியவாறு அடைய முடியும்." "வேண்டிய வேன்டியாங்கு காய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்” நெடுது ஒரு தவக்குறள். "விரும்பியவை விரும்பியவாறு வருதலால் தாம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் படுகின்றதாம்." திண்ணிய எண்ணத்தவரும் தாம் எண்ணியதை அடைவார்; தவமுயற்சியாளரும் தாம் எண்ணியதை அடைவார். அதுபோல் தன் மனத்தாலும் சினம் கொள்ள ஒருவன் நினையான் எனின் அவன் உள்ளம் பண்பட்ட தாய உள்ளமாக இருக்கும். அத்தகையவன் நினைப்பவை எல்லாம் நினைத்தபடி உடனுக்குடன் அடையப் பெறுவான், நெஞ்சத்தில் வேண்டாதவற்றிற்கு இடம் கொடுக்கவில்லை எனில் வேண்டிய தெல்லாம் நடக்கும். . சினத்தை அழித்த தவத்தவர் உலக நலம் கருதியே எண்ணுவார்! அதற்கான முயற்சியில் கவனச் சிதைவின்றி ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆக்கியே தீரும். இங்கிலாந்து நாட்டுப் பெருஞ்செல்வர் சர் வால்டர் ராலே அறைக்குள் இருந்து புகை பிடிப்பதைப் புதிதாய்க் சுண்ட வேலைக்காரன் ஒரு வாளி தண்ணீரை அவர் தலை மீது கொட்டினான் அவர் சிரித்துக் கொண்டே நெருப்பு அணைந்து விட்டது அல்லவா? தக்க சமயத்தில் உதவிய உனக்கு நன்றி என்றார், வெகுளியை உள்ளத்தாலும் உள்ளா உயர் மனிதர். இத்தாலி நாட்டுச் சிற்ப ஓவியக் கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ செதுக்கிய தாவீதின் பளிங்குச் சிலையில் மூக்கு சற்று நீளம் என ஒரு கலைஞன் நாக்கை நீட்டிக் குறை கூறினான், உள்ளத்தாலும் வெகுளி உள்ளா ஏஞ்சலோ அப்படி யா?' என அமைதியாகம் கேட்டுக் கொண்டார். தான் நினைத்த படியே உலகப் பெரும் சிற்ப ஓவியக் கலைஞருள் ஒருவராய் விளங்கினார். உள்ளிய எல்லாம் உள்ளியவாறு எய்திய கௌதம புத்தர், மகாவீரர், இயேசு கிறித்து, முகம்மது நபி, காந்தியடிகள், அன்னை தெரசா போன்ற பெருமக்கள் வெகுளியை உள்ளத் தாலும் உள்ளாது வாழ்ந்ததும் ஓர் ஒப்பற்ற காரணமாகும். "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” பிப் இஃது அன்புடைமையில் இடம்பெறும் குறள், "அன்பு தங்கிய உடலே உயிர் தங்கிய கூடல்: மற்றவை எலும்பு தோல் போர்த்த உடல், "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெரிந்தாரில் திகம்புரிந்து ஒழுகு போர்." 14) இது பிறனில் விழையாமையில் இடம்பெறும் குறள். *மிக நம்பியவர் மனையிலும் தீய நடவடிக்கை யுடையவர் இறந்து போனவருள் வேறானவர் அல்லர்." "ஒத்தது அறியான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்." இஃது ஒப்புரவறிதல் குறள்களுள் ஒன்று. "உலகோர்க்கு ஒத்தது இது என் வாழ்பவனே உயிர் வாழ்பவன். மற்றவன் இறந்தவரோடு வைக்கத் தக்கவன்." "வைத்தான் வாய் சான்ற பெரும்பொருள் நுஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்" "வாழும் இடமெல்லாம் நிரம்பிய பெரும் பொருளைத் தேடி, அதனைப் பிறர்க்கும் உதவாமல் தானும் உண்ணாமல் வைத்தவன், உயிரோடு இருப்பினும் இறந்தவனே ஆவான்." என அன்பில்லாதவனையும், பிறனில் விழைபவனனயும் ஒப்பரவு பேணாத வனையும், செல்வத்தை நல்லதற்குப் பயன் படுத்தாதவனையும் திருவள்ளுவர் இறந்தவர் பட்டியலில் தான் சேர்த்துள்ளார். அத்தகைய இறந்தாரில் ஒருவரை அறிமுகப்படுத்தும் குறளே, "இறந்தார் இறந்தார் அனகாயர் சின்னத்தைத் துறந்தார் துறந்தார் துணை" என்பதாகும். வரம்பு கடந்த வெகுளி உடையவர் உயிரோடு இருப்பவரே எனினும் அவர் இறந்தவரைப் போன்றவரே. அளவெகுளியை / [ti பாசு விளக்கியவர் பற்றற்ற தாய துறவியர்க்கு ஒப்பானவரே! "எரிநிகர் வெகுளி பொங்க மயக்கம் வந்து எய்தும் எய்தத் தெரிபவை சிதையும், உள்ளம் தெரிந்தவை சிதையும் போதே உரியதன் டாணர்வு மாயும் உணர்வு மாய்ந்து ஒழிந்த வாறே துரியான்று அறிஞர் பேசும் அனனத்தும்மாய்ந்து ஒழியு மன்றே” எனப் பகவத்கீதை பகர்வதும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாம். அறத்துப்பால் - 1) "பார்மீது நான்சாகாது இருப்பேன் =காண்பீர்! மலிவு கண்டீர், இவ்வுண்மை பொய் கூறேன்யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானிடர்க்கே நலிவுமில்லை சாவும்இல்னல கேளீர், கேளீர் நானாத்காந்தக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை, துச்சமெனப் பிறர்பொருளைக் கருதலாலே சூழ்ந்த தெல்லாம் கடவுள் எளச்சுருதி சொல்லும் நிச்சயமா ஞானத்தை மாத்தாயாலேம் நேர்வதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில் சினம் கொள்வார் தமைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார், சிளம் கொள்வார்தாம் மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்" என்னும் பாரதியாரின் பாடல் வரிகள் வெகுளாமைக்கு ஏற்று விளக்கமாய் அமைந்திருப்பதையும் உணர முடிகிறது. "மெலியவரிடத்தில் காப்பாகேன சினம் காப்பான்" சினம் செல்லிடத்தும் தீதே சினம் செல்லா இடத்தும் பெருந்திதே! வெகுளியை யார் மாட்டும் மறந்துவிடு நகைக்கும் உபனகக்கும் சினமே பாக்க! "தன்னைத் தான் காக்கின் சினம் காக்க" "சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி "சினம் இனத்தையும் சுடும் "சினத்தவன் கெடுவான்' "இன்னா செய்தார் மீதும் வெகுளாமை நன்று! "வெகுளியை உள்ளத்தாலும் உள்ளாதே! "வெகுளியை உள்ளான் உடள்ளியது எல்லாம் எய்துவான்" "சினத்தவர் இறந்தார் அனையர்! "சினத்தைத் துறந்தாரே துறந்தார்! வெகுளிக்கு இடம் கொடேல்," 32. இன்னா செய்யாமை அறிவறிந்த மானிடப் பிறப்பினர், பழிபிறங்காப் பண்புடை Ifக்களாய் மண்ணில் போழ்வாங்கு வாழ வேண்டியவர்கள் அவர்களின் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் சேர்க்க வேண்டும். மளத்துக்கண் மாசு அன்பாதவராய், வீழ்நாள் படா:13.It நன்றார். அத்தான் வருவதே இன்பம் என்று உணர்ந்து, அரன் இழுக்காது ஆற்றின் ஒழுக்கம், சிறப்பும் செல்வமும் பெற்றுப் புகழ்பட வாழ வேண்டியவர். மாரி அன்ன கைம்மாறு வேண்டாக் கடப்பாடு நடையவராய், நீர் நிறைந்த காருணியாய், உடள்ளூர்ப் பழுத்த பயன்மரமாய், தப்பா மருந்து மரமாய்த் தக்கார்க்கு வேளாண் மை செய்து, ஓத்தது அரித்து நடயிர் வாழும் உயர் போர்விசாராய் எவர்க்கும் எப்போதும் எங்கும் நல்லதையே செய்து வாழ வேண்டிய மாண்புடைப் பிறப்பே மானிடப் பிறப்பாகும். இவ்வுலகம் இயேசு பெருமானையே சிலுவையில் அறைந்த உலசும், சாக்ரட்டீசுக்கே நஞ்சு குடித்துச் சாகத் தண்டனை வழங்கிய படங்கள், காந்தி யடிகளையே குண்டுக்கு இரையாக்கிய ஆகவே, அறநெறி வழுவாச் சான்றோனாயும் வெறுப்பவர்களும், பார்ப்பவர் களும் உண்டு, அதனால் அவர்களைப் பழிப்பவர்கள், குற்றம் சொல்பவர்கள் வேண்டாத தொல்லை, துயரம் இடையூறு செய்பவர்களும் இருக்க மாட்டார்கள் எனக் கர் இயலாது. சினம் கொண்டு பின் னா செய்யும் இயல்புடையவர்களும் இருப்பர். இவர்களில் தங்கள் நன்மையையே கருதிப் பிறர் நன்மையைக் கெடுப்பவர்களும், தமக்கு யாதொரு பயனும் இன்றிப் பிறர் நன்மையைக் கெடுப்பவர்களும் கூட இருக்கலாம். அவர்கள் மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது, பசி நோக்காது. அருமையும் பாராது, அ மதிப்பையும் பொருட்படுத்தாது தனித்தும் கூட்டுச் சேர்ந்தும் தங்கள் நன்மையைக் கூட எதிர் நோக்காது, பிறர்க்கு நன்மையே செய்து வாழும் உயர்ந்த மனிதர்களைப் பல்வேறு வழிகளில் படாதபாடு படுத்தலாம். தான் துன்ப துயரங்களால் தாக்குண்டாலும் மழிபெயரினும் தாம் பெயராச் சான்றோர் பிறர் எவர்க்கும் துன்பம் செய்யார் என்பதை எடுத்து மொழியும் அதிகாரமே 'இன்னா செய்யாமை" என்னும் இவ்வதிகாரமாகும். மக்கள் வாழ்க்கையிலும் பிறர்க்கு இன்னாது செய்து வாழ்வோர் வெஃகாமையையும் கள்ளாமையையும், அழுக்காறா மையையும், வெகுளாமையையும் போற்றி வாழார். கொடிய விலங்குகளைப் போல் அவர்களும் சூழ்ச்சியும் தந்திரமும் செய்து மற்றவர்களின் உழைப்பை எல்லாம் விழுங்கி வாழலாம், ஆனால், பரந்த இவ்வுலகில் தற்காப்பை மறந்து, கவலையற்று, அமைதியாக வாழும் பேறு அவர்கட்கும் இருக்க இயலாது. உறுமிச் சீறும் உறவு உண்ட அல்லாமல் உள்ளார்ந்த அன்புடையவர்களோ நல்லவர்கள் தொடர்போ அவர்கட்கு இருக்காது. அவர்களும் நஞ்சைத் தன்னிடத்தே கொண்ட உயிரினங் களைப் போல் சுரந்து உறைதலும், அஞ்சி அடங்குதலும் உடையவர்களே! அவர்கள் வாழ்வும் நிறைவற்ற இருள் வாழ்வேயாகும். தீயவர்களாகிய அவர்கட்குப் பதிலுக்குப் பதில் தீமை செய்து அவர்கள் தம் குறையை உணரச் செய்துவிடாமல் ஆக்கி விடக் கூடாதே என இரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர். அவர்கள்பால் அறிந்தோ, அறியாமலோ, ஏதோ ஒரு வேண்டத் தகாச் சூழ்நிலையால் புரிந்து கொள்ளாமல் பற்றிக் கொண்ட அந்நோயை மருத்துவராய் அமைந்து பரிவுடன் குணப்படுத்த வேண்டும். வழி தெரியாதவர்கட்கு அல்லது வழியை மறந்தவர்கட்கு, வழி தெரிந்தவர்கள் வழி காட்ட வில்லையானால் பிறகு யார் வழி காட்ட இயலும். அவ்வாறு இன்னா செய்து வாழ்வாரையும் இனியது செய்து வாழ்பவராக அச்சு வள்ளுவர் மேற்கொண்ட வழி முறைகள் வியந்து போற்றத் தக்கன ஆகும், வள்ளுவர் கூறும் இன்னா செய்யாமை நெறியைத் தன் தனி வாழ்விலும் அரசியல் பொதுவாழ்விலும் உறுதிப்பாட்டுடன் கைக் கொண்டு வெற்றி வாகை சூடிய பெருமகன் காந்தியடிகள் என்பது நாடறிந்த செய்தியாகும், "சிறப்புானும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்” புகழ் உண்டாகத் தக்க பெரிய செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், அச்செல்வத்தை அடைய எண்ணிப் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே குற்ற மற்ற பெருமக்களின் கொள்கையாகும். சிறந்த செல்வத்தைப் பெற்றிருப்பினும் மாசற்றார் பிறர்க்குத் துன்பம் செய்யார். மாசார மணம் வாய்க்கப் பெற்றவர் எவ்வளவு வசதி வாய்ப்புக் கிட்டுவதாயினும் அதனைக் கருதி எவரையும் துன்பத்திற்கு ஆளாக்க மாட்டார்கள். மனம் பண்படாதவர்கட்கு எதிர்பாராமல் சிறப்புத் தரும் செல்வம் கிடைத்துவிடுமாயின் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுவர், எவர்க்கும் எனக்கேட்டையும் சிந்திக்காமல் துணிந்து செய்வர். நிமித்திகன் கூற்று வழிச் சேரநாட்டு அரசப் பதவியே தமக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும், மூத்தவனாகிய செங்குட்டுவனே, தந்தை இமயவரம்பனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதே முறைமை என மன்னர் அவையிலேயே எடுத்துரைத்து விட்டுத் தாம் அப்பொழுதே துறவு மேற்கொண்ட இளங்கோவடிகளின் சிறப்பு இக்குறளுக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டாகும், "கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்” ஒருவன் தன்மேல் சினம் கொண்டு, தனக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தாலும், பதிலுக்குப் பதில் என்ற முறையில் தீங்கு செய்வோர் தகுதி அற்ற மனிதராகக் கருதப்படுவார். அனால் மனத்தில் மாசற்ற அறிஞர்கள் அயலவன் எவ்வளவு கடுஞ்சினத்துடன் துன்புறுத்தினாலும் அதனை ஒரு பொருட்டாக எண்ணவும் மாட்டார் அவர்க்கு எந்த ஒரு சிறு துன்பமும் செய்யார், அவரே மாசற்றார். துன்பந்தந்தவர்க்கும் துன்பந் தாராமையோ அன்னாரின் உயர்ந்த குறிக்கோள் ஆகும், 17-ஆம் ஆண்டு சீனா நம் பாரத நாட்டுடன் வடபால் போர்புரிந்த போது கவியரசர் கண்ணதாசன் பாடிய போர்ப் பாணியில், "தாங்குகின்ற சக்தியுண்டு தாக்குமட்டும் தாக்கலாம் தருமதேவன் கோயில்மீது மணியோசை கேட்கலாம்" என்னும் அடிகள் ஒப்பிடத் தக்கன. மீட்சிப் படலத்தில் அனுமன் சீதையை நோக்கித் 'தாயே' நின்னை வருத்திய அரக்கர்களை யான் வருத்த வேண்டும் ஆணை அருளுக" என்றான். சீதை அனுமனை நோக்கி, "வேறு என்ன தீயை இவர் இழைத்தார், அவன் சொன்ன சொல்லினது அல்லால்7 தூய்மையோய் யான் இழைத்த விளையினரின் இவ்விடர் தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்! கூனியின் கொடியார் அவரே, இவர்! போன அப்பொருள் போற்றலை, புந்தியோய்! எனக்கு நீ அருள், இப்பரம்: தீவினைகள் தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் மனக்கு நோய் செயல்!” என்றனள் = மாமதி தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள்" என்னும் கம்பன் கவிகளும் மாசற்றார் கோளுக்கு நல்ல எடுத்துக் காட்டாகும், "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று" 304 என வெகுளாமையில் இடம் பெற்றுள்ள குறளையும் ஒப்பிட்டு நோக்குக! மாறுபட்ட கொள்கையர் இயேசு பிரானையும், நபிகள் நாயகம் திருநாவுக்கரசர், மெய்ப்பொருள் நாயனார் போன்ற பெருமக்க"குப் பெருந்துன்பம் விளைவித்த போதும் அம்மாசற்ற பெருமக்கள் அவர்களைப் பகைவர்களாகக் கூட எண்ணவில்லை என்பதும் தக்க சான்றேயாகும், இத்தாலி நாட்டுக் கவிஞர் டாசோ களியுலக மன்னனாக விளங்கிய காலம். அப்போது சிலர் அவரிடம் "உங்களுக்கு மிகுந்த தொல் கால்கள் தந்த இடங்கள் எதிரியைப் பழிவாங்கப் போவதில்லை, ஆனால், அவரிடம் உள்ள ஒன்றை உறுதியாக அழிக்கப் போகிறேன்" என்று பதில் அளித்தார், உடன் இருந்தவர்கள் "எதை அழிக்கப் போகிறீர்கள்? அந்த மனிதரின் செல்வத்தையா? புகழையா? அல்லது அவரது உயிரையா?" என்று வினவினார்கள், "இல்லை" என்று கவிஞர் மென்மையாகக் கூறினார். மேலும் (தொடர்ந்து "பொறுமை, கருணை, சகிப்புத் தன்மை: ஆகியவற்றின் மூலம் நான் அதை அழிக்கப் போகிறேன் அவ்வாறு நான் அழிக்கத் தீர்மானித்திருப்பது அந்த மனிதரின் பகைமை மனப்பான்மையே ஆகும்" என்றார். அந்த இத்தாலி நாட்டுக் கவிஞராகிய டாசோவின் வரலாற்று நிகழ்வு நல்லதொரு சான்றாகும். "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விடியம் தரும்" “வலியச் சண் டைக்குப் போகமாட்டேன், ஆனால் வந்த சண்டையை விட மாட்டேன்' என்று போக்குடையவர்களே நாட்டில் மிகுதி. அவர்களில் ஒருவன் வள்ளுவரை அணுகி, ஐயா, நான் எந்த வம்புக்கும் போகவில்லை, அவர் பேச்சையே எடுப்பதில்லை. என்னால் அவருக்கு ஒரு இம்மி அளவு தொல்லையும் இல்லை, நான் சிவனே! என்று அமைதியாக நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன், ஆனால் அவர் என்னைச் சாடை மாடையாய்க் குறைத்துப் பேசுபவதும், என் பணிக்கு எவ்வளவெல்லாம் கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவெல்லாம் கெடுதல் செய்து கொண்டும் இருக்கிறார் தொல்லை தாங்க முடியவில்லை. அவருக்குச் சாட்டை அடி கொடுத்தால்தான் அவர் கெடுதலை நிறுத்துவார் என நினைக்கிறேன். நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என அறிவுரை கூற வேண்டினார். வள்ளுவர் அவர்க்குக் கூறுவது போல் உலகிற்கு, "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்" என்கிறார், பிறர்க்குத் துன்பம் தருவனவற்றைச் செய்ய எவர்க்கும் உரிமை இல்லை; அவ்வாறு செய்வது அறத்திற்குப் புறம்பானது ஆகும். அறத்திற்குப் புறம்பாய்ச் செயல் புரிந்தோர் அறத்தின் தண்டனைக்கு உள்ளாவர், “செய்தார்க்குச் செய்த வினை" என்பது பழமொழி. கெடுதி செய்தவர்க்குப் பதிலுக்குக் கேடு செய்தால், முதலில் கேடு செய்தவர் அதற்குரிய தண்டனையை அடைந்து விட்டதாகக் கருதலாம். முதலாவது கேடு செய்தனர் அறியாமல் கூட செய்திருக்கலாம், அல்லது நினைத்தது ஒன்று நிகழ்ந்தது வேறொன்றாகக் கூட இருக்கலாம், கேடு செய்தவர்க்குக் கேடு செய்தவரோ வேண்டுமென்றே தண்டிக்கச் கருதியே செய்தவராவதால் இவர் தாம் செய்த கெட்டிற்குத் தண்டனையைத் துய்த்தே தீர வேண்டும். ஆகவே தான் தப்ப முடியாத துன்பத்திற்கு மீண்டும் ஆளாக வேண்டியது நேரிடும் என்னும் கருத்தில் "டய்யா விழுமம் தரும்” என்கிறார். நிமி என்பவன் கதிரவன் குலத் தோன்றலாகிய இக்குவாவின் மைந்தன். அவன் ஒரு பெரிய வேள்வி செய்தான். அவ்வேள்வியை அவன் விசுவாமித்திரரைக் கொண்டு நிகழ்த்தி இருக்க வேண்டும், அவனோ வசிட்டரைத்து கொண்டு நிகழ்த்தி விட்டான். அதனைத் தெரிந்த விசுவாமித்திரர், "என்னைமுன் வரித்துப்போன யான் வருவதற்கு முன்பு ஓர் அன்னியன் தன்னைக் கொண்டு அங்கு அருமகம் நடாத்துகின்ற மன்காயன் கானா நான்தான் வந்திடப் புறப்படாதோன் தன்னுடன் விடுக! ஆவி எனமுனி சபித்தான் என்றே" அன்னவன் சபிக்கக் கேட்ட அரசர்கோன் அழலின் பொங்கித் தன்வரவு அறியேன் பாயல் சார்ந்து நித்திரை நான் பண்ண, என்னை அநியாயத்தாலே எரிவிடுத்த 'சாபம்” அன்னான் தன்னையும் சார்க என்று சபித்தனன் தவத்தின் மிக்கான்” என ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தில் கூறியுள்ளதையும் ஒப்பிட்டு நோக்குக! எவர்க்குக் கேடு செய்தவரும் கேட்டிற்கு ஆளாவது உறுதி, ஆனால் கேடு செய்தவர்க்குக் கேடு செய்வோர் தப்ப முடியாத கேட்டிற்கு இரையாவார். "இன்னாசெய் தார்க்கும் இனியமே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" இஃது சான்றாண்மையில் இடம் பெறும் குறள், "தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடில் அது சால்பு ஆகாது” எனும் வழித் தடத்தில் மலர்ந்த குறளே, "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்பதாகும். தீமை செய்தவரைக் கண்டும் காணாது விலகி விடவோ, விலக்கி விடவோ கூடாது. அவர் செய்து கேட்டிற்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டியது முறையாகும். இனிமேல் அவர் எவர்க்கும் கேடு செய்ய மனாத்தாலும் நினக்காதவாறும் அத்தண்டனை அமைய வேண்டும். அவர், தாம் செய்த தவற்று உணரச் செய்ய வேண்டும். இவருக்கா இக்கேட்டினைச் செய்து விட்டோம் என நானுமாறு அத்தண்டனை அமைய வேண்டும். அப்படியானால் எத்தகைய தண்டனை வழங்க வேண்டும், நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நெருப்பை நீர் விட்டு அணைப்பதே முறை, ஆகவே, தீமை செய்தவர்க்கு என்னென்ன உதவிகள் தேவைப் படுகின்றனவோ அவ்வுதவிகளைப் பகைவர்க்குச் செய்வது போல் கருதாது, உற்ற நண்பர்க்குச் செய்வது போல் கருதி அன்போடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவர் செய்து கெடுதலையும் அவர்க்கு நாம் செய்த நல்லுதவியையும் எவரிடமும் சொல்லவும் கூடாது. அதாவது அவரைக் குறை சொல்லவும் கூடாது. நம் பெருமையைப் பாராட்டிக் கொள்ளவும் கூடாது. நாமும் இரண் காடயும் நினைவில் கொள்ளாமல் மறந்து விடவும் வேண்டும்! இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை 'மறதி' அனத நன்கு இதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மானிடப் பண்பை வளர்க்க வேண்டுபவர் திருவள்ளுவர், வழி நடந்து களைத்து வந்த புலவர் பெருந்தகை மோசிகீரனார், காலியாக இருந்த கட்டில், முரசுக் கட்டில் என்பதையும் அறியாது சுண்ணயர்ந்து விட்டார். அரசர் சிறப்போடு முரசைத் தூய்மைப்படுத்தி விட்டுக் கொண்டு வந்த மன்னன் பெருஞ்சேரலாதன் கண்டான். முரசுக் கட்டிலுக்கு உரிய மதிப்புத் தராதவர்கட்கு மரணமே தண்டனை ஆகவே வானள உருவினான், உறங்குபவர் முகத்தைப் பார்த்தான், தமிழால் மக்களை நல்வழிப்படுத்தும் புலவர் பெருந்தகை மோசி கீரனார் எனக் கண்டான்! கைவாள் நழுவியது. அயர்ந்த புலவரை இடையில் எழுப்பவும் வேண்டா. அவர் தாக்கமும் கெட்டு விடக் கூடாது என எண்ணிக் சுவரி வீசி நின்றான் சேர நாட்டுப் பெருவேந்தன் பெருஞ்சேரலாதன் என்னும் வரலாற்று இலக்கியம். வள்ளுவர் குறள் விளக்க வாய்த்த இலக்கியம் அல்லவா? சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வந்த குற்றவாளி ஒருவனுக்கு உணவும் தந்து, படுக்க நல்ல! படுக்கையும் தந்து தங்க 1531வத்தார் ஒரு அருளாளர். அவன் இன்னும் திருந்தாத குற்றவாளி. ஆகவே அவன் விரைந்து எழுந்து கண்ணில் கண்ட வெள்ளித் தட்டைத் திருடிக் கொண்டு தெரியாமல் வெளியோர் விட்டான். வெளியேறியவன் காவலர்களிடம் ஐயப்பாட்டின் காரணமாய்ப் பிடிபட்டான். காவலர் அருளாளர் இல்லத்திற்கே அவனை அழைத்து வந்தனர். காவலர் சூழவரும் திருடனை முகம் கோணாது வரவேற்றார். நம்மைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். வெள்ளித் தட்டை மட்டும் எடுத்துச் சென்ற நீர் நான் கொடுத்த வெள்ளிக்குத்து விளக்கையும் ஏன் எடுத்துச் செல்லவில்லை, இந்தாரும் பெற்றுக் கொள்க எனக் கொடுத்தார். இக்காட்சியைக் கண்ட காவலர் அருளாளரிடம் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டிச் சென்றனர், அருனாளரின் செயல் நல்லதொரு குறள் விளக்கச் சான்றாகும், பள்ளியிலே ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களும் பெரும்பாலான ஆசிரியர்களும் பெற்றோர்களும் மதித்துப் போற்றும் சுடமை தவறா ஆசிரியர் அவர். அவரைப் பற்றி இல்லாததையும் பொல் லதாதையும் தலைமையாசிரியரிடம் கோள் மூட்டி வருகிறார் உடன் ஆசிரியர் ஒருவர் வரும் வழியில் சால் இடறிக் கீழே விழுகிறார். மண்டையில் பலத்த அடி குருதி கொட்டுகிறது. அப்பொழுது இவர் யார் மதிப்பைக் குறைக்க முயன்று கொண்டிருக்கிறாரோ அவர் பார்த்தார் விரைந்தோடிக் தாக்கினார் தம் வட்டியில் ஒரு முனையைக் கிழித்துக் குருதி வெளியேறாதவாறு கட்டினார் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க மருத்துவம் செய்து உடன் இருந்தும் உதவினார். இத்தகைய நிலையில் இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்து நாண நனவத்தவர் ஏராளம் பேர் இவ்வுலகில் பரந்து பட்டு வாழ்வர். அவரவர் வாழ்விலும் தொடர்பிலும் எத்தனையோ சான்றுகள் கிட்டும். சுக்கிரீவன் மூலம் தனக்கு இராமன் அடைக்கலம் அருளியதை அறிந்த வீடணன், "தீர்வுஅரும் இன்னல் தம்மைச் செய்யினும், செய்ய சிந்தைப் பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ ? சார்வரை நிறுவி, தன்னளக் கனல் எழக் கலக்கக் கண்டும் ஆர்கலி அமரர் உய்ய, அமுது பண்டு அளித்தது அன்றே” என மகிழ்ந்து உரைத்ததாகக் குறிக்கும் கம்பன் கவியும் சான்றாகும். அறிவுடையோர் தம் மனத்தைச் சென்ற வரியில் செல்லவிடாமல் தடுத்துத் தீமையில் இருந்து விலக்கி, நல்வழி பற்றி வாழ்வர்; உயர்ந்தோர் வாழ்வைப் பின்பற்றி வாழ்ந்து, இவ்வுலகமாகிய கர்தியைத் தக்க வழியில் இயக்கிச் செல்வர்; பின் விளைவை முன் கூட்டியே அறிந்து நல்வினை செய்வர்; அல் வினை அகற்றுவர்; அவர்கள் எல்லாம் உடையவர்; அவர்களை உடைமையாகக் கொண்டதே உலகிற்குப் பெருமை. இவர் எழுத்தறிவு மட்டும் பெற்றவர் அல்லர், பண்பியல் கல்வி சுற்று, கற்ற வழி நிற்போர் அவரே வெள்ளுவர் ஒப்பும் அறிவுடையார், ஆகவே தான் வெஃகாமையில், "அஃகிதுன்ற அறிவுஎன்னாம், யார்மாட்டும் பக்கி வெறிய செயின்" என வினவினார். "எவரிடத்தில் உள்ளதையும் கவர விரும்புவாராயின் அவர்தம் நுண்ணிய விரிந்த அறிவின் பயன் என்ன?" என்னும் அடித்தளத்தில் கால் கொண்ட குறளே "அறிவினான் ஆகுவது உண்டோ , பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" என்பதாகும். தனக்கு உற்ற துன்பத்தின் தன்மையையும் அதனால் அடையும் வேதனையையும் அனைவரும் அறிவர். அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அதனைப் போக்க முற்படுவர். அறிவுடையோர் தமக்குற்ற துன்பத்தை எவ்வாறு உணர்கிறார்களோ அதுபோல் பிறர்படும் துன்பங்களையும் பிற உயிரினங்கள் படும் துன்பத்தையும் தக்காங்கு உணர அல்வர்கள், அப்படி இருக்க, அறிவுள்ள மனிதர் பிறர்க்கு ஏன் தீங்கு செய்ய வேண்டும்? பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பம் தமக்கு வரும் துன்பத்தைப் போன்றுதானே வேதனைப்படுத்தும் என்பதை அறிவுப் பூர்வமாக உணர்ந்து பார்த்துப் போக்கும் பணியில் தலைப் படவில்லையானால், அவர்கள் கற்ற கல்வியால் பெற்ற உயர் பட்டங்களால் நுண்மாண் நுழைபுலத்தால் அவர்கட்குத் தான் என்ன பயன்? அவர்களிடம் மிகுதியும் எதிர்பார்த்து அவர்களைத் தாங்கி நிற்கிறதே உலகு, அவ்வுலகிற்குத் தான் என்ன பயன்?' எனத் தம் வேதனையை வெளிப்படுத்துகிறார். எல்லாம் தெரிந்தவர்களே தாம் உணர்ந்த வழி வாழவில்லை! யானால் அறிவிலாரை நாம் என்ன சொல்ல இயலும், அவர்களைப் பிறிதின் நோய் தம்நோய் போல் கருதிப் போக்கி வாழ்க என வேண்ட முடியுமா? அவ்வண்டுதலைப் புரிந்து கொள்வார்களா? எனும் கவலை வெள் ளுவர்க்கு இருப்பது புலப்படுகிறது, "பிறர்நோயும் தம்நோய்போல் போற்றின், அறன் அறிதல் சான்றவர்க் கெல்லாம் கடன்" என்னும் கலித்தொகை காட்டும் நெறியும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும், "பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்டுள்ளம் எரியின் இஸ்தாவர் என்க! - தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமோ கண்" என்னும் நன்னெறிப் பாடல் அறிவுடையவர்கள் நாட்டின் கண்கள் போன்றவர்கள் எனும் உவமை வழி விளக்கும் கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கதே! விநாயகர் நான்மணி மாலையில் பாரதியார், "பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன் கேட்கா போரத்தைக் கேட்க நான் துணிந்தேன் மண்மீதுள்ள மக்கள் பறவைகள் விசபங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா! ஞான காசத்து நடுவே நின்றுநான் "பூமண் டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்தால் தடயிரெலாம் இன்புற்று வாழ்க! என் பேன்! இதனை நீ திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி "அங்ங்ஙனே யாகுக!" என்பாய், ஐயனே!" என் வேண்டுதல் வெறும் வழிபாடு மட்டும் அன்று பிறிதின் நோய் தம்நோய் போல் போற்றி ஒழுகும் மாசற்ற அறிவரின் உள்ளக் கிடக்கை அல்லவா? பிறர் துன்பம் துடைத்தூன்றும் தூணாய் இலங்குவோரே அறிவுடையார். எவை எவை எல்லாம் செய்தால் தனக்குத் துன்பம் நேரும் என்பதைத் தன் படிப்பறிவாலும் பட்டறிவாலும் உணர்ந்து (கொண்டானோ? அவற்றை பிறர்க்குச் செய்ய மனத்தளவானும் நினையாதிருக்க வேண்டும். அறியாமல் செய்தவரைப் பொறுத்துக் கொள்ளலாம். அறிந்தும் செய்தால் அறிந்ததால் என்பு பயன்? இன்னாமையை உணர்ந்தோர் பிறர்க்கு இன்னா செய்யாமை வேண்டும், இனியவை செய்து இன்புற்று இன்புறுத்தி வாழ வேண்டும் என விரும்பும் வள்ளுவர், "இன்னா நானத்தான் டானர்ந்தவை துன்னாரை பேண்டும் பிறக்ககன் செயல்" என்கிறார். "மாத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தாள்" 34 "மளத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி" "மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம்" "மனம்தூயார்க்கு எச்சம் நன்றாகும்" "மன நலத்தின் ஆகும் மறுமை" "மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம்செய் வாரின் தலை" என மனத்தூய்மையை நல்வாழ்விற்கு அடித்தளமாகக் கொண்டவர் திருவள்ளுவர் என்பதை அறிவோம். கொடுமையானவற்றைப் பேசுவதற்கும் தீமை தரும் செயல்களைச் செய்ய முற்படுவதற்கும் முதற்காரணம் மன மாசே ஆகும். ஆகவே எந்நிலையிலும் மானம் கெடாதவாறு காத்துக் கொள்ள வேண்டும், ஆகவே துன்பம் தரும் என உணர்ந்த செயல்களை வலியார், மெலியார் ஒத்தார் யாருக்கும் செல்வம் செல்வாக்கோடு இருக்கும் பொழுதாயினும், வறுமையில் வாடும் பொழுதாயினும், ஆற்றலோடு விளங்குகின்ற காலத்தும், ஆற்றல் குன்றிய காலத்தும், இளமைக் காலத்தும் முதுமைக் காலத்தும் எக்காலத்தும் சிந்தனாவாயினும் பேரளவாயினும், அகத்தாலும் புறத்தாலும் பேச வேண்டும் என்றோ? செய்ய வேண்டும் என்றோ மனத்தாலும் எண்ணாமை வேண்டும். அதுவே சிறப்பாகும் என்பதை, "எனைத்தானும் எஞ்ஞான்றும் பார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலைய" என உணர்த்துகிறார். எவ்வளவாயினும் எப்பொழுது ஆயினும் எவர்க்கும் மனமாரியத் தீமை செய்யாதிருத்தலே உயர்வாகும் என்பதை உணர்தல், "உன்னுடைய தவறுகளைப் பிறர் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பது போல், பிரருடைய தவறுகளையும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும். பிறர் உணர்ச்சியைச் சகித்துக் கொள்; பொறுமையோடு இரு, பிறர் மீது பழி தீர்த்துக் கொள்ளவோ ஆத்திரத்துடன் வெறுப்புக் கொள்ளவோ நேரம் இல்லாதபடி மனித ஆயுள் மிகக் குறுகியதாக இருக்கிறது" என்கிறார் இட்ருக்சு என்னும் அறிஞர், | "படிக்க நேரம் இல்லை என்று கூறுகிறாய் இருக்கட்டும், ஆனால் அகந்தையை அடக்கவும், இன்ப துன்பங்களை அலட்சியம் செய்யவும், புகழை விரும்பாதிருக்கவும் மூடர்களையும் நன்றி கொன்றவர்களையும் வெறுக்காதிருக்கவும் அவர்கனளக் காப்பாற்றவும் நேரம் இல்லை என்று நீ கூற முடியாது" என்கிறார். மெய்யியல் அறிஞர் மார்க்சு ஒளரேலியசு. திருவள்ளுவரோ, "தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கோலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்? 316 பிறர் தன்னைப் பாராட்ட வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான், பிறர் குறை சொன்னாலும் திட்டினாலும் ஏதாவது சிற்றளவு தீங்கு செய்தாலும் அதனைப் பெருந்துன்பமாகவும் துயரமாகவும் கருதி வருந்துகிறான். அதுபோல் பிறர்க்கு நன்மை செய்து பாராட்டினால் மகிழ்வார்கள். என்றும் இன்னாச்சொல் சொல்லி, இன்னாச் செயல் செய்தால் துன்பப் படுவார்கள் என்பதையும் தெரியாதவர்களாகவா உலகில் மனிதர்கள் இருப்பார்கள். ஆ =னாலும், உலகத்தில் பிறர்க்குத் துன்பம் செய்து வாழ்கிறார்களே! ஏன்?" அறியாமை என்று சொல்ல முடியுமா? முடியாது. பின் ஏன்? தன்னைப் போல் அவர்களும் துன்பம் அடையட்டும் என்ற கீழ்மையா? ஆ கோவமா? அகம்பாவமா? விளையாட்டா? விளைவு நோக்காமையா? குடிவெறியா? கோணல் புத்தியா? ஏன்? காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அறிவும் பண்பும் வாய்ந்த மனிதர்களாக எண்ணப் பட மாட்டார்கள். தங்களைத் தாங்களே வீரர்களாகக் கருதிக் கொண்டு கோகைனாகவும் கோமாளிகளாகவும், பித்தர் களாகவும் வாழ்ந்து பழியைத் தேடிக் கொள்பவர்கள் என்பது மட்டும் உண்மை . ஆகவே தான் வள்ளுவப் பெருந்தகை, "தன்னுயிர்க்கு இன்னாமை தானறியான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் என அவர்கள் இவ்வுலகிற்கு வினாக்குறிகள் என உணர்த்தினார். மாரி தத்தன் என்பவன் பன்னூறு ஆண்டுகட்கு முன் மகத நாட்டினை இராசமா புரத்தைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டவன், தென்னங்குலை, ஒருநாள் அவன் தலையில் வீழ்ந்தது. அதற்குப் பரிகாரமாகத் தேவதைக்கு உயிர்ப் பலியிட்டான். ஒரு முனிவரையும் பலியிட முற்பட்டான். முனிவர் புன்னகை பூத்தார். மன்னன் ஏன் சிரிக்கிறீர் என்றான். முனிவர் மன்னனை நோக்கி இளமைப் பருவத்தில் உன் கையில் வைத்திருந்து தேங்காய் ஒன்றை ஒருவன் தலையில் வீழ்த்தினாய் அவ்வினைப் பயனே இன்று உன் தலையில் விழும்படி செய்தது. அதற்காகப் பல உயிர்களைக் கொன்றாய், இதனால் எத்தனை தலைமுறை கொலையுண்டு அழிவாயோ?" என்றாராம் முனிவர். தனக்குத் துன்பமாவது இது என்பதை அறிபவன்: அத்தகைய துன்பத்தைப் பிறர்க்குச் செய்வது ஒரு வகையான பைத்திய நிலையேயாகும். "மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு" என்பது தீவினை அச்சத்தில் இடம் பெற்றுள்ள குறளாகும். "ஒருவன் தன்னை மறந்தாயினும் பிறனுக்குக் கேடு செய்யக் கருதாமல் இருப்பானாக! அவன் கேடு செய்யக் கருதினால் கருதிய அவனுக்குக் கேடு செய்ய அறம் கருதும் என்னும் நோக்கில் பாடப்பட்ட குறளே "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாபோ பேரும்" என்பதாகும். பிறர்க்குத் துன்பம் தருவனவற்றை முற்பொழுதில் செய்தால் செய்தவர்க்குத் துன்பம் பிற்பகலில் தாமே வந்து சேரும், செய்யப்பட்டவர் தாம் துன்பம் செய்ய வேண்டும் என்பதில்லை, எப்படியாவது எங்கிருந்தாவது செய்தவருக்குத் துன்பம் வந்தே தீரும். இது அறத்தின் ஆன 33, அழையா விருந்தாளியாய்த் 'தாமே" வரும் என்றார், "பிறர்க்கு இன்னாசெய்தலில் போதாம் இல்லை பிறர்க்கு இன்னாதென்று பேரிட்டுத் தமக்கு இன்னா வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலில் பித்தும் உளவோ பிற", என்னும் அறநெறிச்சாரம் வள்ளுவர் கருத்தை வேறொரு கோணத்தில் விளக்குவதையும் ஒப்பிட்டு நோக்குக! "செற்று ஒருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் தியண்னாமே" என்னும் சுந்தரர் கருத்தும் நோக்கத் தக்கதே! புகழ் சிலப்பதிகாரத்தில் கண்ணகி அரசமா தேவியை நோக்கி, "கோப்பெருந் தேவி! கொடுவினை யாட்டிபேன் யாயும் தெரியா இயல்பிலோன் கயிறும் முற்பகல் செய்தான் பிறன்கேடு, தன்கேடு பிற்பகல் காண்குறூடம் பெற்றிய காண்” எனக் கூறுவதாகக் கூறும் சுற்றில் இளங்கோவடிகள் குறட் சுருத்னதயும் சொற்றொடர்கனளயும் சேர்த்தே காட்டுகிறார். சாலையோரமாய் வேண்டாதவன் ஒருவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அவ்வழியே துள்ளுந்தில் விரைந்து வந்தவன் வேண்டுமென்றே நடந்து செல்வோன் மீது வண்டியை உராய விட்டுக் கீழே தள்ளி விட்டுத் திரும்பியும் பாராமல் விரைந்து சென்றான், சில அடி தூரம் தான் சென்றிருப்பான் எதிரே வந்த சரக்குந்து இவன் துள்ளுந்தில் மோதித் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டது, இவன் உந்தும் நொறுங்கிப் போயிற்று இவன் கால் கைகளும் சிதைந்து போய் உயிருக்குப் போராடினான். முன்னர் இவன் யாரைத் மோதித் தள்ளி விட்டு வந்தானோ அவன் தன் காயத்தைப் பொருட்படுத்தாமல் அவனுக்கு வேண்டும் உதவிகள் செய்தும் குருதிக் கொடையும் பனை உதவியும் செய்து காத்தான் எனும் நிகழ்வில் பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்னும் குறளையும், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்னும் குறளையும் இணைத்துக் காண முடிகிறது, "தீப்பால் தான்பிறன்கண் செய்யற்க; நோய்ப்பல் தன்னை அடல்வேண்டா தான்” எனத் தீவினை அச்சத்தில் அச்சுறுத்தியாங்கு அச்சமூட்டும் குறளே "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர்” என்பதாகும். இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னா செய்தாரிடமே செல்லும் ஆதலின் தம் உயிர் துன்புறக் கூடாது என விரும்புபவர்கள் யாவரும் பிற உயிர்களுக்குத் துன்பந்தரும் எச்செயலையும் செய்யாது இருத்தல் வேண்டும்! கேடுகள் கேடு செய்தார்க்கே வந்து சேரும்! ஆகவே எவரும் எவர்க்கும் கேடு செய்பற்க! மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யும் போது அந்த உயிர் துன்பப் படுவதாகத் தோன்றும். செய்ததுன்பம் அந்த உயிரின் உடலளவில் சிறிது நேரம் தாக்கி நீங்கும். ஆனால், உண்மையில் துன்பம் உறுவது செய்தவர்களின் மனமே! செய்தவர்களின் உடலில் துன்பம் தாக்காவிட்டாலும் அவர்களுடைய மனம் அந்தத் துன்பத்திற்கு ஆட்பட்டு வருந்தும். மனச்சான்று பண்படப் பண்பட இந்த உண்மை தெளிவாக விளங்கும். இதையே திருவள்ளுவர் 'துன்பமெல்லாம் செய்யப் பட்டவர்களுக்கு அன்று, செய்தவர்களுக்கே உரிமையாய்ச் சேரும், "நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்று அறத்தின் சட்டமாக விளக்குகின்றார், பந்து எறிந்தவுடன் எங்கோ சென்று தாக்குவது போல் சென்று தாக்கி, உடனே எறிந்தவனிடமே திரும்பி வரக் காண்கின்றோம். ஒருவன் மற்றவனுக்குச் செய்யும் துன்பமும் அத்தகையதே. அது மற்றவனைத் தாக்குவதைப் புறத்தே காண்கின்றோம், துன்பச் செயலர் விடத் துன்பம் எண்ணமே பொல்லாதது. இஃது அறத்தின் ஆணை: இதனை உணரா நுட்பமான அறிவு மட்டும் போதாது. பண்பட்ட மனச் சான்றும் வேண்டும். அத்தகைய மனச் சான்றுடன் வாழ்ந்து உணர்ந்த திருவன் (களுவர் இங்கே கூறுவது நுட்பமாக உணரத் தக்க உண்மையாகும்! "மாசற்றார் பிறர்க்கு இன்னா செய்யார்" "மாசற்றார் இன்னா செய்தார்க்கும் இன்னா செய்யார்' "இன்னா செய்தபின் உய்யா விழுமம் தரும்" "இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்க! "பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றுக! "உணர்ந்த இன்னாமையைத் துன்னற்க' "மனத்தானாம் மாணா செய்யாமை தாகம்" "தன்னுயிர் போல் மன்னுயிரை எண்ணுக! "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! "நோய் இன்மை வேண்டுக! நோய் செய்யற்க!” 33. கொல்லாமை "நல்லாற்றான் நாடி அருளாள்க, பல்லாற்றான் தேரினும் அஃதே துணை" என்பது அருளுடைமையின் அடிப்படை உணர்த்தும் குரான். "நல்வழியை ஆய்சு! அருள் உள்ளம் கொள்க! அருளே உயர்நிலை வாழ்வின் உயிர்த்துனரான ஆகவே உயர்நிலை எய்த விரும்பும் அறவோர், தம் வாழ்வின் ஒவ்வோர் அடியையும், அருளின் துணையுடனே எடுத்து வைத்து, நடை கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் காட்டும் வழி என்பதை மறந்து விடாது, மனத்தி அமையுடனும் விடா முயற்சியுடனும் மேற்கொள்ள வேண்டிய நோன்புகள் எட்டாகும். முதல் நோன்பு, புலால் மறுத்தல், "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" "எவ்வுயிரையும் கொல்லாதே! புலாவை! உண்ணாதே! நீ உலகின் வணக்கத்திற்கு உரியவனாவாய்" என்பதை உணர்த்தியவர் கூறும் இரண்டாவது நோன்பு தவம்" ஆகும். "நடற்றநோய் நோன்றல் நடயிர்க்கு ஈடாகாசெய்யாமை அற்றே தவத்திற்கு உரு" 251 "உனக்கு வந்த துன்பத்தைத் தாங்கும் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதே! நீயே தவம் கொள்ளத் தகுதியுள்ளவன் என்பதை உணர்ந்து செயல்படு! மூன்றாவது நோன்பு தூய துறவு மனம் பெறுதல், அதாவது கூடா ஒழுக்கைக் கூடாமை. "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன் நெஞ்சம் தான்அறி குற்றப் படின்" 27) "உயர்ந்த தோற்றத்தவனே! உள்ளத்தாலும் உயர்க! சாக்குற்றமும் செய்ய ஏரி கண்ணாதே" நான்காம் நோன்பு, கள்ளாமை, "அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்" ZEE! ""அரு எனக் கருதும் அன்புடையவனே நீ பொருள் சுவர் எண்ணாதே" ஐந்தாம் நோன்பு, வாய்மை, "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" "நீ சொல்லும் சொல்லில் எவர்க்கும் அணுவளவு தீமையும் இருக்கக் கூடாது! நன்மை பயப்பதே பேசு” ஆறாம் நோன்பு வெகுளாமை, "கடள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளாள், வெகுளி தாளின்" "எண்ணியதை முடிக்கப் பிறந்தவனே! உன் உள்ளம் சினமற்ற உள்ளமாகவே இருக்கட்டும்" எழாவது நோன்பு இன்னா செய்யாமை, "கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்" "மாசற்ற கொள்கையானனே! கறுத்தின்னா செய்யப் பட்டாலும் மறுத்தின்னா செய்யாதே!" எTFநாச் சுட்டுறுதி சுட்டியில் வெள்ளதவர் வலியுறுத்தும் எட்டாவது நோன்பே கொல்லாமை ஆகும், பறவைகள், விலங்குகள், கொல்லப் பட்டாலும் கொலை தான், தாய் வயிற்றில் உருவான கருக்கலைப்பு, பிறந்த சிறு குழவி முதல் முற்றி முதிர்ந்த முதியவர் வரை யார் கொல்லப் பட்டாலும் எதற்காகக் கொல்லப்பட்டாலும் கொலை தான். பிறர்க்கும் பிற உயிரினங்களுக்குச் செய்யும் இன்னாதவற்றி லெல்லாம் மிகக் கொடுமையானதும் அறமோ மனித இயல்போ சற்றும் சுவைக்காக மிகக் கொடிய செயலே கொலை செய்தல் தான். உGLIகப்போர் ஆயி = 3ம் சரி, நாடுகளுக்கிடையே நிகழும் போர்களாயினும் சாதி சமய இனக் குழுக்களுக்கிடையே நிகழும் போர்களில் ஏற்படும் உயிர் இழப்புகள் எல்லாம் கொலைகள் தான். திருடு, கொள்ளை அடித்தல் முதலியவற்றின் தொடர்பாக நிகழும் கொலைகள், நார்களுக்கிடையேயும் தனி மனிதர்களுக்கும் இடையே உள்ள பகைமையால் ஏற்பட்ட கை கலப்பில் நிகழ்ந்த கொலைகள், தேர்தல் காலக் கொலைகள், வறுமையால் செய்யும் கொலைக் தொழில் போட்டியால் செய்யும் கொலைகள், தன் குற்றத்தை மறைக்கச் செய்யும் கொலைகள் உணவிற்காகக் கொல்லும் கொலைகள், பொழுது போக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும், செய்யும் கொலைகள், அறியாமையால், வருமானத்திற்காக அடியாளாகச் செயல்பட்டுச் செய்யும் கொலைகள் தாதிகள் மோதிக கொல்லும் கொலைகள் எனப் பல வகைப்படும், தன்னுயிரைத் தானே செயற்கை வழிமுறைகளால் போக்கிக் கொள்வதாயினும், கொலை வரிசையில் தான் சேரும். அடிப்படைக் காரணமும் நோக்கும் எதுவாக இருந்தாலும் ஓர் உயிர் சகர அழிக்க எந்த உயிருக்கும் உரிமை இல் 2711, கொலைவழி எச்சிக்கலுக்கும் தீர்வு காண எண்ணும் எண்ணமே தீயது. அஃது அறமும் அன்று மறமும் அன்று. பெரும்பாலும் சிக்சலை நேருக்கு நேர் பேசி அறவழியில் தீர்வு காணும் நேர்மை தம்பால் இல்லாமையாலும் அச்சத்தாலும் கோழைத் தனத்தாலுமே பெரும்பாலான கொலைகள் நிகழ்கின்றன. செய்தித்தாள்களில் கொலைச் செய்தி இடம்பெறா நாளே இருக்க முடியாது என்பது போல் மிகச் சாதாரணமாகக் காய் கனி வெட்டுவது போல் மனித உயிர்கள் கொல்லப்படுகின்றன. அதிலும் அறிவு வளர்ச்சியும் சமய நம்பிக்கையும் மிகுந்தவர்களே பெரும்பாலும் பல கொலைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரண மாய் அமைந் திருக்கிறார்கள் என்பது மிக வியப்பாக இருக்கிறது. அப்படியானால் அவர்கள் அறிவுடையவர்கள் என்றோ இறை நம்பிக்கை உடையவர்கள் என்றோ சொல்லிக் கொள்வதற்கே தகுதி இல்லாதவர்கள் என்று தானே சொல்ல வேண்டியுள்ளது. ஆகவே தான் முதலில் உயர்நிலை மாந்தராகத் தன்னைக் காட்டிக் கொள்பவராவது கட்டாயம் கொல்லாமையை அறமாகப் பின்பற்றட்டும் எனக் கருதித் துறவுப் பகுதியில் இச்சொல்லாமை அதிகாரத்தை வைத்துள்ளார். "சிவ தரிசனம் செய்யப் போகிறவன் தேரூர்த்தே போகப் படாது. அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலக்கும்படி ஆள் விலக்கிகளை விட்டு, முன்னே பரிக்காரர் வரவு குறித்துப் போகப் பின்னே மெல்லெனத் தேரை விட வேண்டும். அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயம் அறியாது என்பதற்குச் சரியாகப் பரபரப்பாகத் தேரை நடத்திப் பசுங்கன்றைக் கொன்றான். ஐயோ! இவன் கல்வியறிவுள்ளவனாக இருந்தும் அறிவழிந்து அரசன் பிள்ளையாகாமல் அணிற்பிள்ளை ஆனானே! கொடிய பாதகங்களிலெல்லாம் கொலைப் பாதகமே தலையென்று வேதம் முதலாகிய கனல்களில் தானும் படித்தறிந்தான். சான்றோர் சொல்லவும் கேட்டறிந்தான் அப்படி அறிந்திருந்தும் பாதகங் சோவொட்டாமல் தன்னைக் காத்துக் கொண்டு பட்டப் பிள்ளையாகாமல் பரப்பிள்ளையானானே! ஐயோ! புதல்வனைப் பெற்றால் புண்ணியம் பெறலாம் என்று எண்ணிய எனக்கு மலடாயிருந்தாலும் வாழ்வு உண்டென்று நினைக்கும்படி நேரிட்டதே!" நான் நெடுநாளாகத் தியாகராசப் பெருமானை வேண்டிக் கொண்டது இப்படிப்பட்ட பெரிய பழிக்காளாகிய பிள்ளையைப் பெறத்தானோ! பிள்ளை என்ன செய்யும்! பெருமான் என்ன செய்வான்! "மாதா பிதாக்கள் செய்தது மக்களுக்கு' என்னும் பெரியோரின் வார்த்தையின்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்கு நேரிட்டதென்று நினைத்து என்னை வெறுத்துக் கொள்ள வேண்டுமென்றாலும் இந்தப் பிறப்பில் என் புத்தி அறிந்து ஒரு தீங்கும் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும் முற்பிறப்பிலே" - "நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! ஒலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சிநேகரைக் கலகங் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசிவாழ் வழித்தேனோ! களவு செய்வோர்க்கு உடளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசை காட்டி மோசஞ் செய்தேகேளா! வரவு போக்கொழிய வழியடைத் தேனோ! வேலை யிட்டுக்கடலில் குறைத் தேனோ! பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ! கோள் சொல்லிக் குடும்பம் குலைத்தேனோ! நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ! கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! கற்பழிந் தவளைக் கலந்திருந் தேனோ! காவல் கொண்டிருந்த சுன்னியை அழித்தேனோ! கனகாவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! கருப்பம் அழித்துக் களித்திருந் தேனோ! குருவை வணங்கக் கூசி நின்றேனோ! குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ! பெரியோர் பாட்டிர் பிசாழ சொன்னேனோ! பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத் தேனோ! சன்சுரயே உண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! வெய்யிலுக் கொதுங்கும் விருட்சகம் அழித்தேனோ! பகைகொண்டு பகைவர் பயிரழித் தேனோ! பொதுமண்டபத்தைப் போய்இடித் தேனோ! ஆலேயக் கதவை அடைத்து அபேத்தேனோ! சிவனடி யாரைச் சீறி எவதேனோ! தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! சுத்த ஞானிகளைத் தூடணஞ் செய்தேனோ தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! என்ன பாவஞ் செய்தேனோ! இன்னதென் றறியேனே!" என்னும் வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசக மொழிகள் உயிர்க்கொலை, தவறுகளில் எல்லாம் கடுமையும் கொடுமையும் வாய்ந்தது என்பதையும் எந்த வகையிலும், யாரும் பொறுத்துக் கொள்ளத் தக்க குற்றம் அன்று என்பதையும் அந்த தரைப்பதைக் காணமுடிகிறது, "அறவினை யாதெனின் கொல்லாமை, கோறல் பிறவிகனை கொல்லாந் தரும்” என்னும் இக்கொல்லாமை அதிகாரக் குறளைப் படிக்கும்போது, வள்ளுவர் புலால் மறுத்தலில் "அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்” "கொல்லாமை அருள் கொலை! அருளற்றது: புலால் உண்பதன் பொருளற்றது" எனக் கூறியுள்ளது நின ஈனவிற்கு வருகிறது. முழுநிறைவான அறச்செயல் எது? என வினவின் எவ்வுயிரையும் எதன் பொருட்டும் கொல்லாமையே யாகும். கொலை செய்தல் அறமல்லா வினையாகும். அது ஒரு கொடிய தீவினையாகும் கொலை வினை செய்தோர், எல்லாவகைக் குற்றங்களின் பயனையும் ஒருங்கே துய்ப்பர், ஏனெனில் கொலை செய்யவே முற்படுகிறான் அவன் அன்பு, அடக்கம், பொறுமை, ஒழுக்கம் இல்லாதவனாகவும், இருப்பான் அழுக்காறு, அவா (வெகுளி, இன்னாச் சொல் உடையவனாய் இருப்பான் பொய்யும் கூடா ஒழுக்கமும் கூடவே இருக்கும் பலர் திருடர்களாகவும் குடிகாரர்களாகவும் சூதாடி சுளாவும் இருப்பர் நல்ல இல்லற வாழ்வினராகவும் இரார். நல்ல துறவரும் ஆகார் இன்னோரன்ன பல்வகைக் குற்றங்குறைகளின் உறைவிடமாகவே இருப்பர். ஆகவே கொலைக் கருவியைக் கையில் தூரக்சுவும் கருதாதே! தம்மிடம் அறிந்தோ அறியாமலோ சிற்சில குறைகள் இருப்பினும் "கொல்லாமை அறம்' நம் குறையையும் அகற்றி நல்வழிப்படுத்தும் நம்மைத் துன்பத்தினின்றும் காக்கும். "ஆனை அடியில் அடங்கா அடியில்காக) தானது போல் நிற்கின்ற தன்மைதான் நானுயிரைக் கொல்லா அறத்தின் கொழுநிழற்கே உள்ளடங்கும் எல்லா அறமும் இசைந்து எனும் பெருந்தேவனார் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்" என இல்வாழ்க்கை அதிகாரத்தில், வாழ்வில் நிறைவு பெறு நல்வழியில் பொருள் தேடிப் பகுத்துண்டு வாழ வேண்டிய வள்ளுவர். புணர்ச்சி மகிழ்தலின் "தம்மில் இருந்து தமதுபாத்து தடகண்டற்றால் அம்மா அரிவை முயக்கு "உரியவளிடம் கூடிப் பெறும் இன்பம், தம் வீட்டில் தம் உணவைப் பகுத்து உண்பது போன்ற இன்பம்" என்கிறார், ஓரினம் உயர்ந்தோங்கி வாழ வேண்டுமானால் பகுத்துண்ணும் பண்பு வேண்டும் என்னும் நோக்குடையவர் திருவள்ளுவர். அதனை அழுத்தமாக உணர்த்த அன்புடைமையையோ, அருளுடைமையையோ, விருந்தோம்பலையோ, ஈகையையோ ஒப்புரவு அறிதலையோ பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் திருவள்ளுவர் அங்கெல்லாம் கூறா உயர் அறமாகிய "பகுத்துண்ணலை" கூறக் கொல்லாமை அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமை உவசு அறவோரில் வள்ளுவரின் தனித் தன்மையை நன்கு புலப்படுத்தும். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" 37) செய்க பொருளை! அவ்வாறு நீ முயன்று தேடிய பொருளைக் கொண்டு நீ உண்டு உறங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணாதே! அண்டை அயலில் உள்ளவர்களில் வறுமையில் வாடுவோர் இருப்பின் அவர்களை எல்லாம் ஒருங்கே கூட்டி, இருக்கும் உணவைப் பங்கிட்டு வழங்கி அனனவர் பசியையும் ஒருங்கே போக்கி வாழும் வாழ்வே அறவாழ்வாகும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமே அா நரவோர்கள் தொகுத்துக் கூறியுள்ள பலவகையான அறங்களிலெல்லாம் முதன்மையான அறமாகும். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்" ஒன்று அர்த்த3லமை பெறத் தகுமா' தகும், ஏனெனில் அதுவே தன் நிலத்தை முதன்மைப் படுத்தாதது. எல்லாரும் இன்புற்றிருக்க எண்ணுவது. பிறிதின் நோயைத் தந்நோய் போல் போற்றுவது "எட்டுணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உவப்பது. உடலை வளர்ப்பதும் நாம் பெறச் செய்வதும் நடனணபவ ஆகும். உணவின் கட்டமே தான் உதிர ஓட்டமாகி உலகத்து உயிர்களை வாழ வைக்கிறது, "மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என்னும் மணிமேகலைச் சாத்தனார் நோக்கும் ஒப்பிட்டுச் சிந்திக்கத் தக்கது. "டாடி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உண்ணாவின் பிண்டம்” என் சங்கச் சான்றோர் குட புலவியனார் கருத்தும் இணைந்ததே. "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெஞ்ஞானம் சேரவு மாட்டார்' என்னும் திருமூலரின் மூலநோக்கும் ஒப்பு நோக்கத் தக்கதே. "பசித்தவர் குறையர் நோயர் படுதுயர் மாற்றி இன்பம் புசித்திட காலத்துக் காணும் பொருள்மிகும் இன்பம் போலப் இசைப்படும் இன்பம் உண்டோ ? இயலறம் உண்டோ தத்தம் பசைப்பற விடுத்தோர் எல்லாம் பயின்றதுஇவ் வுயர்ந்த வாழ்வே" என்னும் இளங்குமரனாரின் குண்டலகேசிப் பாடலும் தக்க விளக்கமாம். நம் தேவைக்கு மேல் கடனளிருந்தும் அண்டை அயலில் யாராவது வறுமைத் துயரால் மாண்டால் = இருப்பவர் தக்க போதில் பகுத்து வழங்கி இருந்தால் வ று ஈமச் சாவைத் தடுத்திருக்க முடியும் என வள்ளுவர் நளன்றி நோக்கியதால் தான் இக்குறளைக் கொல்லாமையில் இடம் பெறச் செய்துள்ளார். பகுத்துண்டின் கொல்லாமை பகுத்துண் டிராமையும் கக் கொ3வயே! "நல்லாற்றால் நாம் அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துமானை" "நல்வழி தேடுக! அருள் கொள்க! அருளல்லது துணையில்லை" என அருள் உடைமையில் கூறும் திருவள்ளுவர் நோக்கையும், "சொல்லா நலத்தது நோன்பை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு" “கொலை செய்யாமையே நோன்பு. பிறர்குற்றம் கூறாமையே சால்பு" எனக் கூறுவதையும் மனத்திற் கொண்டு காண வேண்டியது. | "நப்பாறு எனப்படுவது யாதெனின், யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி" எனும் குறளாகும், எல்லா அறநூல்களாலும் மிகவும் நல்லவரி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என வினவின் எத்தகைய உயிரையும் கொல்லாமல் இருக்கக் கடைப்பிடிக்கும் நெறியே நன்நெறி ஆகும். ஆகவே எள்ளினை செய்யும் போதும் உயிர் இழப்பு ஏற்படாதவாறு கவனத்துடனும் அருள் உள்ளத்துடனும் எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும். செயல் சிறப்பும் பெருமையும் உடைய செயலாக இருக்க வேண்டும் என எண்ணுவது போல் அச்செயலைச் செய்யக் கடைப் பிடிக்கும் வழியும் அறவழியாக இருக்க வேண்டும்! கட்டாயம் பார் அழிவு ஏற்பட்டு விடக் கூடாது, சுருங்கக் கூறின் ஓருயிரும் கொலைப்படாதபடி எண்ணிச் செய்யும் நெறியே நன்னெறி ஆகும். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதே என்இச்சை பராபரமே! "சொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லவர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே!” என அருளாளர் தாயுமானவரின் குறிக்கோளும் குறட் கருத்திற்கு வலிமை சேர்க்கும், எல்லாக் குற்றங்களுக்கும் தாய் போன்றது பொய்மையே என்பதும் எல்லா அறங்களிலும் தலையாயது வாய்மையே என்பதும் அறிஞர்கள் துணிபு. ஆனால் உயிர்களின் இனிய வாழ்வு ஒன்றையே உளத்துக் கொண்டு அறம் உரைத்த வள்ளுவரும் வாய்மையையே முழுமுதல் அறமாகக் கொண்டிருந்தும் கூட அதற்குத் தனி முதல் தலைமை தா விழைந்தார் அல்லர். கொல்லாமையே முதல் அறாம்; அக்கொல்லாமைக்குத் துணை நிற்குமானால் பொய்யாமை ஆகிய வாய்மையும் அறமே என்றார் வள்ளுவர். இதனை "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்னும் குறளால் அறியலாம். நல்லது கொல்லாமை என்னும் அளவில் நில்லாமல் 'ஒன்றாக" என்றதும் 'பொய்யாமை நன்று" என்று கூறாமல் அதன் பின்சாரப் பொய்யாமை நன்று" என்றதும், துரத்தின் அச்சாரி கொய்யாக்காயே எனத் தெளிவாக விளக்குகின்றது. மேலும் வள்ளுவர் வாய்மை என்பது உள்ளதை உள்ளவாறே கூறல் என்பதாக இல்லாமல் "தYை: இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மை' என்பதையும் உயிர்களுக்குக் குற்றமற்ற நன்மையை விளக்குமாறு சொல்வது பொய்யாக இருந்தால் கூட, அந்தப் பொழுதில் அது வாய்மையாகவே கருதப்படும் என்பதையும் நன்றி அறியும் பொழுது 'உயிர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றைச் செய்வதே அறம்" என்று வள்ளுவர் கருதுகிறார் என்பது மேலும் தெளிவாகின்றது, கொல்லாமையும் வாய்மையும் தாயும் தந்தையும் போன்று இணை அறங்கள், தாய்மைக்கு முதன்மை தரும் நாடு நம் நாடு! ஆகவே கொல்லாமையைத் தாயாகவும் வாய் rைபைத் தந்தையாகவும் கொள்க! "கொலைபாதி நெறி அகன்று (ஞானம் தானே கூறரிய மேலான ஞான மாகும்! கொலைபாதி அகன்று ஒழுகும் தவங்கள் தாமே குற்றம் இலா நற்றவம் என்று உரைக்கும் நூலும் கொலைமடாதி அகற்றிய நல்லறங்கள் தாமே! குவாராயத்தில் ஒப்பரிய அறங்கள் ஆகும் கொலைபாதி அகன்றுபெறும் செல்வம் தானே! கூறிகள் உயிர்க்கு இதமான வாழ்வு தாமே!" எனச் சிவஞான தீபம் கொல்லாமைக்குத் தரும் முதன்மையையும் ஒப்பிட்டுக் காண்க! நிகரற்ற அறம் கொல்லா]ை அதற்குத் துணையாகும்: வாய்மையும் நல்லறம். இவ்வுலகில் நிலையானது எது? நிலையாமை ஒன்றே, ஆகவே நிலையாக நிலையாமையை உடைய இவ்வுலகியலுக்கு அஞ்சிப் பற்றுகள் ஒவ்வொன்றையும் விட்ட துறவி சளி லெல்லாம் முதன்மையாக மதிக்கத் தக்கார் யார்? கொலையின் உண்மையான கொடுமைகளுக்கெல்லாம் அஞ்சிக் கொல்லாமையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு அருளாளராய் வாழ்வாரே போற்றத்தக்க தலைமையானவர் ஆவார். புத்தர் மகாவீரர், வள்ளலார் தாயுமானவர் போன்ற பெருமக்கள் எல்லாம் கொல்லாமை நெறியைத் தாம் பின்பற்றிய தோடு, கொல்லாமையைப் பரப்பிய நீத்தாருள் எல்லாம் தலைமையானவர்களும் ஆவர். அங்குலி மாலன் என்பவன் மிகக் கொடியவன் கண்டவர்களின் கை விரல்களை எல்லாம் வெட்டி மாலையாகதி தொடுத்துக் கழுத்தில் அணிந்து கொள்ளும் அளவிற்குக் கொடியவன் அவன், அத்தகையவ ன்னக் கொன் ரொமரிக்க வேண்டும் என்று எண்ணிய கோசல மன்னன் வீரர்கள் பலரை அனுப்பி வைத்தான். இதனை அறிந்தார் புத்தர் பெருமான் அக்கொடி யவன் மேலும், அருள் கொண்டார். தாமே அங்குனி மாலனைத் தேடிச் சென்றார். அவரின் புத்தர் மேல் பாய்ந்து தாக்கி விரடி! வெட்டுவதற்கு வாகன ஓங்கினான், அப்பொழுது அவன், அருள் ஒழுகும் புத்தரின் திருமுகத்தைக் கண்டு தன்னை மறந்து மயங்கினான். அவர் அருள் மொழிகளைக் கேட்டான். தூய துறவியாக மாற்றம் பெற்றான். கொன்றொழிக்க வீரரை ஏவிய கோசல மன்னனே அங்குவி மாலனைக் கண்டு அவன் திருவடிகளை வணங்கிச் சென்றான். என்ன விந்தையான செயல், உரோகிணி ஆற்று நீரைப் பயன்படுத்துவதன் தொடர்பாக எழுந்தது ஒரு தகராறு. அத்தகராறுக்குச் சாக்கியர்களும், தாய் வழியினரான கோலியர்களும் ஆவர். இதனைக் கேள்விப் பட்டார். உலகில் கொல்லாமையைப் பரப்பத் தோன்றிய புத்தர். ஓடோடியும் அவர்கள் முன்வந்து தோன்றினார், | 'ஒரு சிறிய கற் று நீரின் உரிமைக்காக இத்து 531 50 பேர் பலியிடப் பட வேண்டுமா? தண்ணீரின் உரிமையைக் காப்பதற்காகச் செந்நீரை ஆறாக ஓடவிட வேண்டுமா? ஆத்திரப்படாமல் உயிர்க் கொலைக்கு வழியில்லா அமைதி வழியைப் பேணுங்கள்" இரண்டு பக்கங்களிலும் உள்ள பெரியவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்' என வேண்டினார் புத்தர், போர் வந்தது உயிர் அழிவும் நீங்கியது, பகையும் அகன்றது கொல்போன் மாயைத் தடுத்து நீத்தாருள் எல்லாம் தலைமை ஆனவரும் ஆனார். "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை" இது படைமாட்சிக் குறள், "கூற்றுவனே வெகுண் டெழுந்து தாக்க வந்தாலும், துணிவுடன் நின்று போர்புரியும் ஆற்றல் உடையதே படை" ஆகவே, படைஞர் சகூற்றுவனே வந்தாலும் அஞ்சக் கூடாது என்பது வள்ளுவர் கருத்து அவரே, பெரியாரைப் பிழையாமையில் "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு – ஆற்றாதார் இன்னா செயல்” என்கிறார். ''ஆற்றல் உள்ளவர்க்கு ஆற்றல் இல்லாதவன் துன்பம் செய்வது எங்கோ செல்லும் கூற்றுவனை என்னிடம் வா என்று அழைப்பதற்கு ஒப்பாகும்," என்பதால் பெரியார்க்குப் பிழைப் புரிந்தோன் பிழைக்க மாட்டான்! ஆகவே பெரியாரைப் பேணித் தமராத், கொள்க! என வழிகாட்டும் வள்ளுவர். "கடற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" என்கிறார் தவத்தில், "தவ வலிமையால் தம் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர் பக்கம் வர கூற்றுவனும் அஞ்சி ஓடிவிடுவான்" எனக் கூறுவதால் தவத்தோரிடம் சாவும் வசதி தயங்கும் எனக் கூறும் கருத்தோட்டத்தல் உருக்கொண்ட குறளே "கொய்யானம் மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்போல் செல்லாது உயிர்கடண்ணும் கூற்று என்னும் கொல்லாமையின் தனித்தன்மை உணர்த்தும் பாடலாகும், எக்காரணம் கொண்டும் எவ்வுயிரையும் கொல்லாமையை உறுதிப்பாடாய்க் கொண்டு ஒழுகுகின்றவருடைய வாழ்நாளைக் குறைக்க வேண்டும் என்று எல்லாருடைய உயிரையும் கொண்டு செல்லும் எமனும் சுருதி மாண்டான். எவர்க்கும் சலுகை வழங்கா எமனும் ஒருவர்க்கு, அவரே (கேளாமலே சலுகை வழங்குகிறான் கொல்லா நோன்பு மேற்கொண்ட அருளாளராய்த் தான் இருக்க முடியும், "கொல்வான் கொல்லப்படுவான்" "கொல்லானை எவனும் கொல்லான்" "கூற்றுவனும் கொல்லான்” என்பது அறத்தின் முறைமை ஆகும். "அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்" என்பது தீவினை அச்சத்தில் இடம்பெறும் குரள். "தீ31ம் செய்யும் பகைவர்க்கும் தீங்கு செய்யானம் சிறந்த அறிவாகும்" எனக் கூறுவதால். "தீங்கு செய்தவர்க்கும் தீங்கு செய்யாதே என்பதே வள்ளுவர் நெறி ஆகவே இன் னா செய்யா3Lf; அதிகாரத்திலும், "கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மரத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்" 32 என்றார். “எவராவது கடுஞ்சினத்துடன் தீமை செய்த போதும் அவர்க்குத் திருப்பித் தீமை செய்யாதிருத்தல் குற்றமற்ற பெரியோர்களின் கொள்கையாகும்." இங்கெல்லாம் பிறர் இழைக்கும் தீங்கு எது எனக் குறிப்பிடாமல் பொது நெறி காட்டிய வள்ளுவர் அத்தகைய குறிக்கோளுடன் வாழும் உயர்நிலை மாந்தரை நோக்கி, தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை” என ஆணையிடுவது போல் கூறுகிறார். பிறிதோர் உயிரால் தன்னுயிர்க்கு உறுதியாக இழப்பு பரற்படும் சூழ்நிலை ஏற்பட்ட போது, தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு உணர்ச்சி எல்லோர்க்கும் ஏற்படுவது இயற்கை. ஆகவே தற்கொல்லியை முற்கொல்லுதல் குற்றம் அன்று எனச் சில நெறியாளர்கள் கூறுவது உண்டு! அஃது அறமாகாது. தப்பிக்க முயலலாம் முடியவில்லை எனினும் அவ்வுயிரைக் கொன்று தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என மீமிசை மாந்தர் கருதுதல் கூடாது. பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி! சாவு ஐந்திலும் வரலாம் நூறிலும் வரலாம். வாழ்நாள் வரையறைக்கு உட்பட்ட தன்று. எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பனத விட எப்படி வாழ்ந்தோம் என்பதே தன்மை. ஓர் உயிரைக் கொன்று விட்டுக் கொலை காரனாய் மண்ணில் நெடுநாள் வாழ்வதை விட, எவ்வுயிரையும் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் இன்புறுத்தி வாழவைத்தோம் என்ற நற்பெயருடன் குறுகிய நாள் வாழ்ந்தாலும் சிறப்பிற்கு உரியதே ஆகும். இன்னொருவன் உன்னுயிரை எடுக்க வரும் போதும் அவன் உயிரை எடுக்க எண்ணாதே! தன்னுயிரைத் தானே நீக்கியவனும் கூட மன்னிக்கப் படவோம். ஆனால் பிறிதொன்றன் உயிரை நீங்கியவனுக்கு விதி விலக்குக் கிடையாது எனக் கூறுகிறார் வள்ளுவர். தன்னுயிரைக் காக்கும் பொருட்டுப் பிறிதோர் உயிரியைக் கொல்லும் நிலை Iஒன்று தன்னைக் கொல்ல வந்த தயிரியைக் கொல்லுதல். 2) தந்நோய்க்கு மருந்தாக ஓர் உயிரியைக் கொன்று தின்னுதல், 3! தன்னைக் கொன்று விடும் என்று நம்பி, அதைத் தடுத்தர் பொருட்டுப் பலி இடுதல் போன்ற எந்நிலையிலும் கொலை செய்யற்க! மனுநீதிச் சோழனுடைய முதல் அமைச்சன் சத்திய சீலன், மன்னன் மைந்தன் வீதிவிடங்கனுக்கு மரண தண்டனை விதித்தல் முறைமை அன்று எனக் கூறித் தான் மாண்டது தக்கதொரு எடுத்துக் காட்டாகும். "தன்னைக் கொல்லினுந் தான் பிறிது ஒன்றினைக் கோறல் பன்னிற் பாவம் என்று அறைகுவர் கற்றுணர் பழையோர்" எனப் பிரபு லிங்கலீலையில் அல்வம் தேவர் சித்து இராமருக்குக் கூறிய அறிவுரையும் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாம்! புலால் உண்ணாமையில் "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் தஉயிர்செகுத்து உண்டானளாமை நன்று" என அறம் உணர்த்தியமையையும், இன்னா செய்யாமையில், "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்” எனக் கூறும் குற்றமற்றார் கொள்கையும் மனத்தகத்தே கொள்வதுடன், "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு" என்னும் நலக்கோட்பாட்டையும் ஒருங்கே தெளிந்து "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை' 328 திருக்கோயிலில் தெய்வங்களின் முன் உயிர்ப்பலி இட்டு வணங்கினால் மிக்க செல்வமும் பெரிய பெரிய நன்மைகளும் உண்டாகும் என்ற நம்பிக்கையுடன் உயிர்ப்பலி இட்டு வணங்குவோரும் உலகில் உள்ளனர். உயிர்களை நெருப்பில் போட்டுக் கொன்று பெரிய பெரிய வேள்வி செய்தால் வேள்வியில் வெந்து அழிந்ததற்கு ஏற்ப பெரும்பெரும் செல்வமும் நன்மைகளும் உண்டாகும் எனக் கருதி வேள்வி செய்வோரும் உலகில் இல்லாமல் இல்லை, ஆட்சியில் இருக்கும் தந்தையை முன்னவனைக் கொன்றுவிட்டால் தான் அரசச் செல்வத்தை உடனே பெற்று நலமெல்லாம் துய்க்கலாம் எனக் கொலை செய்து விட்டு அரசுக் கட்டில் ஏறியவர்களும் உண்டு! அரசியல் தலைமை, மடத்தலைமைப் போட்டியிலும் தம் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்போரை ஆள் வைத்துக் கொன்று விட்டுப் பெருங்செல்வ ஆளுமையைப் பெற்றவர்கள் உண்டு ! உடன் பிறப்பு உயிரோடு இருந்தால் சொத்தைப் பங்கு போட வேண்டிய திருக்குமே என்னும் தீய எண்ணத்தால் உந்தப்பாட்டுக் கொன்று புதைத்து விட்டுப் பெருங்செல்வத்தை முழுமையாக அடைந்தவர்களும் உண்டு. இன்ன வாறு கொலைக் குற்றம் செய்தவர்களில் எண்ணியவாறு பெருஞ்செல்வமும் பெரு நன்மையும் கூடசசிலர் பெற்றிருக்கலாம், அவர்களில் பலர் "கொலைகாரன்! பாவி! வஞ்சகன், என்ற கீழ்நிலைப் பட்டங்களையே பெற்று இழிவுக்கும் பழிக்கும் ஆளாகி இருக்கிறார்கள். கொலையால் நன்மையே பெற்றார்கள் என்றாலும் அவர்கள் கீழோரே ஆவர். ஆகவே சான்றோராகிய மேலோர் பிற உயிரைக் கொன்று வரக்கூடிய எந்தச் செல்வத்தையும் இழிவாகத்தான் கருதுவார்கள். கொலை வழியில் செல்வம் பெற்றவர்களையும் மனிதர்களாக மதியார் என் அழுந்த உரைக்கும் ஆற்றல் வாய்ந்தவர் திருவள்ளுவர் என்பதை உணர்த்தும் குறட் பாக்களில், "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை” என்பதும் ஒன்றாகும், கடையரே கொன்று ஆக்கம் பெற விரும்புவார் என்பது குறிப்பு மொழி. சான்றோர் கொல்லாமை நெறி நின்று நன்றாகும் ஆக்கம் பெரிதும் பெறுவர். ஆக்கமோ பெரிது, நன்மைக்கும் ஆகும், எனினும் கொன்று பெறும் ஆக்கம் அறநெறியை உணராத கீழ்மக்கட்கு வேண்டுமானால் மேலானதாய்த் தெரியலாம் ஆனால் சான்றோர் கீழானதாகவே கருதி ஒதுக்குவர். கலிங்கப் போர் தந்த பாடம், இனிமேல் போரே செய்வதில்லை பகைவர்களைக் கொன்று பெறுவது ஆக்கம் அன்று: ஆக்கக் கேடே என உலகிற்கு உணர்த்திய பேரரசன் அசோகன் ஆவான். தானும் துய்க்காது பிறர்க்கும் உதவிபுரியாத கருமி ஒருவன் பெருஞ்செல்வனாய் இருக்கிறான். அவனைக் கொன்று விட்டால், அவனுடைய பெருஞ்செல்வத்தைக் கொண்டு நன்மைகள் பலவற்றைச் செய்ய வாய்ப்புகள் இருப்பினும் சான்றோர், கொலை செய்து பெறும் செல்வத்தை இழிந்ததாகவே கருதி ஒதுக்குவர். அவனை அழிப்பதற்குப் பதில் அவனிடம் உள்ள தீய தன்மைகளையே சான்றோர் வழிக்க முயல்வர். "வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் வீழும் கட்டலை. சஎழுப்புதலோ - ஒரு வேந்தன் நினைக்கினும் ஆகாதையா! "ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர் ஆக்கிய பார்த்து அவிகடணவை ஈட்டும் கருனைனா இறையவர், கைகளில் ஏந்திப் புசிப்பரோ கூறுமையா! எமைந்தருள் ஊமைமகனை ஒருமகன் வாளால் சரிந்து கரிசமைத்தால் தந்தாதேயும் உண்டு அளிப்பதுண்டோ ? இதைச் சற்றுநீர் யோசித்துப் பாருகாமயா! பிள்ளையைக் கொன்று கறிசமைத்தீர் அதன் பெற்றோரை உண்ண அழைத்து நின்றீர் வள்ளலே உள்ளம் தெளிந்தவரே - இது வாழ்வை அளிக்கும் செயலாமோ? மன்னுயிர் காவ்லாம் உலகில் = ஒருதாயின் மக்கள் சான்னும் உண்மை அறிந்திடுரோ? தன்னுயிர் போற்றிப் பெரும்பழி செய்வது சண்டாளர் கண்ட நெறியாபகபா? என, மகத மன்னன் பிம்பிசாரன் செய்த வேள்வியைத் தடுத்து நிறுத்த புத்தர் கூறிய அறிவுரைகளை ஆசிய சோதியில் சுவிமணி தேசிக விநாயகர் இவ்வாறு பாடுவது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். "இறைவனுக்கு ஆக்கும் கோயில் இசைமிகுந்து ஏத்தும் கோயில் நிறைமலர்ப் பூக்கள் பெய்து நெகிழ்ந்திடல் முறைமைம், ஆனால் குறைவற உதவி வாழும் முழுப்பயன் உயிரை பெட்டிக் கறையுறப் பூசை செய்தல் கடுங்கொலை வெறியே யன்றோ! உள்ளொளி இறைவன் எய்தி உயிர்களை இரந்து வேண்டாள் சுள்ளொடு விலங்கு தின்னும் கருத்துளான் செய்த வேலை! தொள்ளறிவு உடைய மாக்கள் தொண்டெனும் பெயரால் செய்த எள்ளுறு செயலே ஐயா இழிபலி கொடுக்கும் தீதே" என "உலகை மாற்றுவோர்' பாடல் நாவில் இளங்குமரனார் அவர்கள் வலியுறுத்தும் கருத்தும் குறள்நெறிக்கு அரண் செய்வதே! கொலையை ஒரு தொழிலாகக் கொண்டு வாழ்வோர் தங்களைத் தலைவர் களாகவும் மன்னர்களாகவும், வீரர் களாகவும் ஆற்றலராசுவும் ஆண்மையாளராகவும் துணிவுடைய ராகவும் அஞ்சாநம் த சடையவராகவும் கூடக் கருதிக் கொள்ளலாம், ஆனால் உண்மையில் கொலை வினை மனிதத்தன்மையோ, அன்புணர்வோ, அருள் நெஞ்சமோ, அற்ற சீழ்மக்களின் நெறியற்ற செயலேயாகும், ஆகவே கொலைத் தொழிலின் புன்மையை அறிந்தவர்கள், கொலை வினைஞர்களைப் புலைவினையர் என்றே தம் உள்ளத்தில் கருதி விலகிச் செல்வர். நச்சுத் தன்மை கொண்ட கொடிய விலங்குகளிலும் கீழானவர் என வள்ளுவர் கருதுவதால் தான் அவர்களை "மாக்கள்” என்றார். உருவத்தால் மக்களாய் இருந்து பயன் இல்லை பண்பாலும் மனிதராய் விளங்க வேண்டும் என விரும்புபவர் வள்ளுவர். "கொலையிலான் உதவும் அன்னம் கறின் போமுத மாகும் கொலையுளான் உதவும் அன்னம் கரின் பங்களிடம் தாகும் புகைபயர்தம் மனையில் கண்போன் புனபேயன் ஆமாறு போலக் கொயையர்தம் மகாயில் உண்போன் கொகலைஞனே ஆவ களன்றே" என்னும் பதி விளக்கமும் எண்ணத் தக்கது. ஆன்மநேய ஒருமைப்பாடு காணும் வள்ளலார் வேறுபாடு நோக்காது எல்லாரையும் ஒருங்கே இணைத்துக் கொள்ளக் கருதுபவர் ஆனால் அவரே "உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடடையவர்கள் எல்லாம் உறவினர்த்தார் அல்லர் புறவினத்தார்" எனப் பாடுகிறார். கொலை செய்பவரையும் புலால் உண்பவரையும் தம் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது எனத் திட்டப் படுத்திக் கொண்டார் எனின் கொலையின் புன்டை விளங்கும்! துன்பமானவை தன்னை வருத்தக் கூடாது என விரும்புபவன் பிறர்க்குத் துன்பந்தருவனவற்றைக் செய்யக் கூடாது, எந்தப் பகையைக் கொண்டவரும் தப்புவர். ஆனால் தீய செயலால் பகைமையைத் தேடிக் கொண்டவர் தப்பார்; வினைப் பகை வீழ்த்தியே தீரும், தீய செயல் செய்தவர் அழிவு தன் நிழல் தன்னை விடாமல் தொடர்வது போல் தொடர்ந்து அடியில் தங்கும். பிறர்க்குத் துன்பத்தைக் காலையில் செய்தால் செய்தவனுக்குத் துன்பம் அன்று மாலையாளியே தேடி வந்து சேரும், "நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்பதே திருவள்ளுவரின் வினைக் கொள்கை. அப்படியானால் எவனொருவன் பிற உயிரினங்களையோ, தன்னொத்த மனிதர்களையோ வெட்டி வீழ்த்தித் துடி துடிக்க வேதனைப் படுத்திக் கூசாமல் சாகடிக்கிறானோ, அவன் தான் செய்த கொலைக் குற்றத்திற்கு உரிய நீதிவழித் தண்டனையும் துய்த்தாக வேண்டும், அதி விருந்து தப்பினாலும் அறத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஒரு நல்ல உடலிலிருந்து உயிரை என்று பிரித்தானோ அன்றிருந்தே அவன் உடல் துடிக்கத் தொடங்கும், அஞ்சி அஞ்சிச் சாவான்! மனச் சான்று இடித்துக் கொண்டே இருக்கும். மனநிலைப் பாதிப்பு உடலையும் பாதிக்கும். அதுவரையில் அவனிடம் இருந்த நல்ல இயல்புகளும் அவனைக் கைவிட்டு விலகிப் போகும்! பொய்யனாகவும் புரட்டனாசுவும் தான் வாழ்வான். எவரைக் கண்டும் அஞ்சுவான் அவனுக்கு யாரைக் கண்டாலும் தன்னைக் கைதி செய்ய வரும் காவலராகத் தான் தெரியும். மனைவி மக்களையும் கூட நம்ப மாட்டான். பிற உயிரைக் கொன்றவன் கொலைக்கு ஆட்பட்டே சாவான், இல்லையேல் நாளும் சாகாமல் சாவான் என்பதை, யாருக்காவது பிறரைக் கொலை செய்யும் எண்ணம் அணு அளவு மனத்தில் தோன்றினாலும் அவ்வெண்ணத்தை விட்டு விட வேண்டும் என்னும் அருள் நோக்கோடு விரும்பும் திருவள்ளுவர் மிச உரிமை எடுத்துக் கொண்டு அடுத்தமாகச் சாறும் குறளே! "உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர்" ஓன்பதாகும், "கொல்லாமை அறவினை” "கோறல் பிறவினை" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே முதன்மை அறம்” "கொல்லாமை முதல் அறம்” "பொய்யாமை துணை அறம்" "கொல்லாமையே நல்வழி" "கொல்லாமை சூழ்வான் உயர்ந்த துறவி” "கொல்லானைக் கூற்றுவனும் நெருங்கான்" "தன்னுயிர் நீப்பினும் பிறிதின் உயிர் நீக்கற்க! "கொனகப் வழிப்பெறும் ஆக்கம் கீழானதே" "கொனப் வினளயர் புலைப்வினையரே! "கொலைப்பளுர் சாகாமல் சாகும் தீய வாழ்க்கையர்" "கொலை செய்யக் கருதற்க" "பகுத்துண்டு வாழ்க” 34. நிலையாமை உரோமப் பேரரசராக விளங்கிய மெய்யியல் அறிஞர் மார்க்கசு அரேலியசு மரத்திலிருந்து விழுந்து அழியும் கனி போன்றது வாழ்க்கை , மரத்தில் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும் சரியானது. இன்பமாகத் தன் காலத்தை முடித்துக் கொண்டு, மரத்திலிருந்து நழுவிப் பின்னால் தான் பிறந்த மண்ணில் அடங்கிப் போகிறது. அது போலவே மனித வாழ்க்கையும் கொஞ்ச நாள் உலகில் மகிழ்வாக நடந்து பின் மண்ணில் அடங்கிப் போகிறது என்றார். அத்துடன் நோயால் துயரப்பட்டவர்களை நான் குணப்படுத்துகிறேன் என்று சொன்ன மருத்துவர்கள் பலர் மாண்டு போனார்கள், மற்றவர்கள் இறக்கும் நாட்களை முன் கூட்டியே தெரிவித்து விடுவோம் என்று பெருமைப் பட்ட கணியர்கள் பலர் மாண்டு போயினர். கரணத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் பேசிவந்த புலவர்களும் மாண்டு போயினர். பல்லாயிரக் சுணக்கான மச்சானைப் போர் என்று பெயரால் கொன்று குவித்த போர் வீரர்களும் மாண்டு போயினர், தங்களுக்குச் சாவே கிடையாது என்பது போல் குடிமக்களைக் கொடுமைப்படுத்திய எத்தனையோ அரசர்கள் இருந்த இடம் தெரியாமல் மாண்டு போயினர், பெரிய பெரிய நகரங்கள் எல்லாம் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போயினர். எனவே, எல்லாப் பொருள்களும் ஒருநாள் அழிந்தே தீரும் என்பது தெளிவு" என உலக நிலையாமை பற்றிக் கூறுகிறார். திருவள்ளுவர் கூறும் "நிலையாமை' தனித் தன்மை வாய்ந்தது. ஓர் அரசருக்கு நடந்து செல்கின்றவன், செல்ல வேண்டிய வழிபான் தான் கம்ப்யம் உள்ளவாறு அறிந்து கொண்டு, நடந்து செவ்வானானால் கலக்கமும் தயக்கமும் கொள்ளாமல் அச்சமின்றி நடப்பான். வழியில் உள்ள இடர்களை முன்பே அறிந்திருப்பதால் இடர் வந்த போது வருந்தவும் மாட்டான், நல்லவழி என்று நம்பி நடந்தால் முள்ளும் கல்லும் கண்டபோது வருந்துவான். ஆனால் முன்னே உணர்ந்தவன் கவலைப் படமாட்டான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே. வாழும் உலகம் இத்தன்மையானது, உடல், உயிர், செல்வம் இத்தன்மையானது என்று முன்னமே, அவற்றின் நிலையாத் தன்மையை அறிந்து கொண்டால், பிரிவோ, மாறுதலோ, அழிவோ நேர்ந்த போது மனம் கலங்கவோ, வருந்தவோ சோர்வடையவோ நேராது. ஆ, கையால் வள்ளுவர் நிலையாமையை உணர்த்துவது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதற்காக அன்று. வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து, அஞ்சாமல் நின்று, சோர்வின்றிப் பயனுடைய முறையில் நடத்திச் செல்வதற்கே ஆகும். "இந்த உலகமே ஒரு நாடக மேடை இந்நாடக மேடையில் மனிதர்கள் எல்லாம் நடிகர்கள், நாடக மேடையான இந்த உலசு அரங்கிற்குள் நாம் நுழைவதற்கு ஒரு வழி: வெளியே செல்வதற்கு ஒரு வழி என இரண்டு வழிகள். ஒவ்வொரு மனிதனாகிய நடிகனும் பல கதைப் பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டிய நிலை, இத்தனகய நாடகம் போன்ற வாழ்க்கையை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கலாம், முதல் பகுதியில் தூக்கி எடுக்கும் செவிலித் தாயின் வகைகளை உதைத்துக் கொண்டு குழந்தையாய் ஒரு நடிப்பு, விருப்பமே இல்லாமல் மெல்ல மெல்ல அசைந்து பையைச் சுமந்து கொண்டும், வலிய கால்களை நகர்த்திக் கொண்டும் போகும் பள்ளிச் சிறுவனாக ஒரு நடிப்பு: மூன்றாவதாகக் காதல் கவிதைகளை எழுதிக் கொண்டு அவ்வப்போது தனது கைல யைப் போலப் பெருமூச்செறிகின்ற இனம் காதலனாக ஒரு வேடம், நான்காவதாகத் தன்மதிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பில் உடையிலும் நடையிலும் கவனம் செலுத்துகிற படைவீரனாக ஒரு வேடம். ஐந்தாவதாக அமைதியின் காவலனாக, நீதி தேவனாக இனிய பண்டங்களை உண்டு பெருத்த வயிறோடும் குத்திட்டு நிற்கும் கண்களோடும், நாகரிகமாய் ஒழுங்கு செய்யப்பட்ட தாடியோடும் அவ்வப்போது வாய் உதிர்க்கும் அறிவு சார்ந்த செய்திகளோடும் வாழ்விலிருந்து எடுத்துக் காட்டப்படும் நடைமுறை எடுத்துக் காட்டுகளைப் பற்றிய பேச்சோடும் காட்சி அளிக்கும் நடிப்பு: ஆறாவது பாகத்தில் உடல் எல்லாம் மெலிந்து சட்டைப் பையே ஒரு பக்கத்தில் ஒதுங்கி நிற்கும்படி காட்சியளித்து மூக்கின் மேல் கண்ணாடியும், வயது முதிர்ந்த தோற்றமுமாக ஒரு (வேடம், ஏழாவது பாகத்தில் நினைவு எல்லாம் அற்றுப் போய் மீண்டும் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பியவனாசுச் சுவை மறந்து பல் இழந்து மற்றவர்களின் இரக்கத்திற்கு ஆளாகும் கடைசி நடிப்பு: இவ்வாறு தன் நடிப்புகளை உலக அரங்கில் நடித்துக் காட்டி விட்டு, நடிகர்களான மனிதர்கள் மறைந்து போகிறார்கள் என உலக நாடகப் பேராசான் சேத்சுப்பிரியர் எடுத்துக் காட்டும் நிலையாமையையும் மனத்தில் கொண்டு வள்ளுவரை நேரடியாகக் காண்பது நலம். "நில்லாத, வற்றை நிலையின என்றுணரும் புல்லறி பொண்மை தடை" கொலையும் இறப்பும் நினைவூட்டுவது எதனை? நிலையாமையை அல்லவா? உலகில் எல்லாமும் நிலையற்றனவா? நிலை பெற்றனவும் உண்டா? "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்" எனப் புகழ் அதிகாரத்தில் நிலையில்லா இவ்வுலகில் நிலைபேறு உடையது உயர்ந்த புகழே' எனச் சுட்டியதும் கவனத்தில் உள்ளது. "கடலகத்தார் உண்டு என்பது இல்லென்பான் தலையாயத்து அபகையா னவக்கப் படும்” 85) இது புல்லறிவாண்மையில் இடம் பெறும் குறள். ""உயர்ந்தோர் உண்மைப் பொருளாகக் கூறுவனவற்றை இன் மைப் பொருள் என்பவன் இவ்வுலகில் பேயனாகவே கருதப்படுவான்" எனக் கூறுகிறது. "பொருளல்ல வற்றைப் பொருள் என்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு" என்னும் மெய்யுணர்தல் குறள். "நிலையில்லாதவற்றை நிலையானது என்று கொள்ளும் தெளிவில்லாது அறிவினன் இழிபிறப்பினன் ஆவான்" எனத் கூறுவதையும், "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்னும் மெய்யுணர்தல் குறள் வழி, "எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோற்றத்தில் தெரிந்தாலும் அதனை அப்படியே கொள்ளாமல் அப் பொருளில் அமைந்துள்ள மெய்ம்மையைக் கண்டு கொள்வதே தெளிந்த அறிவு" எனத் தெளிவுபடுத்துபவர் வள்ளுவர். ஆகவே நிலையில்லாத் தன்மை உடைய பொருள்களை நினலத்த தன்மை வாய்ந்தன எனக் கருதிக் கொள்வதோ? நிலைத்த தன்மை வாய்ந்த பொருள்களின் உயர்தன்மைகளை உணராது அவற்றை நிலையற்றன எனக் கருதிப் புறக்கணிப்பதோ அறிவுடைமை ஆகாது. அது மாறுபட அறியும் சிற்றறிவாகும், அஃது இழிவு தருவதாகும். நில்லாப் பொருள்களை நிற்கும் பொருள்களாகக் கருதுவது அறிவீனம். "இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா" என்பது இளங்கோவடிகளின் கணிப்பு. "இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது" எனச் சீத்தலைச் சாத்தனார் கூற்றையும் ஒப்பு நோக்குக! நெல் அரிசி, முதலிய தவசங்சுள் பயறு வகைகள் பக்குவமாகப் பாதுகாத்தால் ஓராண்டு வரை அழியாமல் இருக்கும். தக்காளி நன்றாக விளைந்திருக்கிறது எனச் சேர்த்து வைத்தால் ஒரு வாரம் கூடத் தாங்காது. அரிசி ஓராண்டு அழியாது ஆனால் ஆக்கிய சோறும் பூத்த பூவும் மறுநாள் பயன்படுமா? பாசிரினங்களில் ஒரு மாதத்தில் அழியும் கீரை வகைகளும் உண்டு ஓராண்டு வாழும் கரும்பு வாழை இனங்களும் உண்டு! எலுமிச்சை கொய்யா ஒரு பத்தாண்டு வாழலாம். புளி பொந்து ஆயிரம் புளி ஆயிரம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஈராயிரம் ஆண்டுகள் வேண்டுமானால் வாழலாம். மனிதன் நோய் நொடியின்றி உழைத்து, ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நூறாண்டு வாழலாம். அவ்வளவு தான். இதற்குமேல் வெள்ளத்தால் நெருப்பால், புயற்காற்றால், கொடும் பனியால் அவன் கண்டு! 13ண்ணிப் பார்த்தால் ஓஎத்தனையோ வழிகளில் பொருள்கள் அழிகின்றன. . ஆகவே, ஒவ்வொரு பொருளுக்கும் வாழ்நாள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் ஆனால் தோற்றமும் ஒடுக்கமும் எல்லாப் பொருள்கட்கும் உண்டு எனக் கருத வேண்டும். அவை நன்னிலையில் இருக்கும் போதே நல் வழிக்குப் பயன்படுத்தி விடவும் வேண்டும். ) பயிர்கட்கு உரிய நாள்களில் நீர்பாய்ச்சல் முதலிய காப்புகளும் செய்ய வேண்டும். முற்றியவுடன் அறுவடை செய்துவிட வேண்டும், காலம் தவறின் விளைவெல்லாம் நாசம் ஆகிவிடும், கோரக்கர் உடல் அழியாப் பேறுபெற்ற சித்தர் திருப்பருப்பதத்தில் வாழ்ந்தவர் அவர்க்கு அல்லம தேவர் கூறிய அறிவுரை. "பிறந்த ஆகம் ஒன்று இறந்திடல் பெருமையாயும் உடைத்தோ எறிந்த வான்சிலை வீழ்ந்திடாது இருப்பது இங்கு இல்லை செறிந்த காரியம் என்பது சான்றாயிடம் சிக்கதையும் இறந்திடாது காரணம் என்படுவதே என்றும்" எனப் பிரபுலிங்க லீலையில் கூறப்படும் செய்தியும் ஒப்பு நோக்கத் தக்கதே! "கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று" பெருஞ் செல்வம் ஒருவர்க்கு வந்து சேர்தல் கூத்து நிகழும் இடத்திற்குக் கடித்துக் காண வருவோர் பல்வேறு இடங்களில் இருந்து முன்பின்னாக ஒருவர் இருவராக மெல்ல மெல்லவே வந்து சேர்வது போன்றதாகும். செல்வம் நிலாது அழிதல் கூத்துக் காண வந்த கூட்டம் சுடித்து முடிந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் பரந்து குரு சேரக் கலந்து போவது போன்றதாகும். ஆகவே செல்வம் சேரும் போதே அதைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் செல்வத்தின் நிலையாமையை உணர்த்தக் கூத்தாட்டு அவையை உவமையாகக் கொண்டார், கூத்து ஒரு அருமையான நுண்கலை. ஒரே நேரத்தில் மனதிற்கும் அறிவிற்கும் கண்களுக்கும் செவி சுளுக்கும் விருந்தளிக்கும் கலை, அதே நேரத்தில் காண்பவர் உடலுக்கு நல்ல ஓய்வளிக்கும் கலை. பல்வகைத் திறனும் வாய்க்கப் பெற்ற கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி அது. சத்தினை நிகழ்த்துவதற்கும் ஒரு சேர மக்கள் திரண்டு காண்பதற்கும் ஏற்ற இடமும் தகுந்த வாய்ப்பும் தக்க நேரமும் பொருத்தமாகத் தெரிவு செய்தே கூத்தினை நிகழ்த்துவர். கூத்துக் கலை அனைவருக்கும் பயன்படும் பொதுச்சொத்து. அல்லது பொது உணவு காலஞர்கள் சமையல்காரரும் பரிமாறுவோரும் ஆவர், கலைஞர்கள் தமக்குத் தாமே சுவைத்து மகிழ இயலாது. சுவைத்து மகிழ மக்கள் தேவை, அச்சுனர் மக்களுக்குப் பயன்பாட வேண்டும். கலைஞர் நெடுஓய்வு கொண்டால் கலைகள் அழிந்துபடும், கூத்து அனை வருக்கும் பயன் படுவது போல் செல்வம் அனைவர்க்கும் பயன்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்தவே 'கூத்தாட்டு அவை” உவமை ஆக்கப்பட்டிருக்கிறது என எண்ண வாய்ப்பு உள்ளது. "உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” "குடைநிழல் இருந்து குஞ்சரம் தகர்ந்தோர் நடைமெலிந்து ஒரூர் நண்ணினும் நண்ணுவர்” குன்றத் தனைய இருநிதி படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்" என அதிவீரபாண்டியரின் மணி மொழிகள் குறளுக்குப் பொருந்திய விளக்கமாகும். "அற்கா இயல்பிற்றுச் செல்வம், அதுபெற்றால் அற்குப் ஆங்கே செயல்" செல்வம் நிலை இல்லாத இயல்பை உடையது என்று அறிந்து, அதைக் கொண்டு நிலையான அறச்செயல்களைக் காலம் தாழ்த்தாது விரைந்து செய்துவிட வேண்டும். வைத்துக்காத்து அழகு பார்க்க வேண்டும் என என்ன ணிப் பின் இழந்து விட்டு வருந்தக் கூடாது. ஆகவே தான் சங்கச் சான்றோர் பெருந்தலைச் சாத்தனார் "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தப்புகழ் நிறீஇத் தாம்மாபந் தனரே” எனப் பாடி :-ார், "பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காற்று இடிகரை ஒத்தது இளமை இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்வு" என ஒலிக்கும் நிலையாமைப் பாடலும் நெஞ்சில் இருக்கட்டும். செல்வம் சேரச் சேரத் தேங்கி விடக் கூடாது. நீர் தேங்கினால் விரைந்து கெட்டுப்போம் செல்வம், தொழிலைப் பெருக்கிப் பலருக்கு வேலை வாய்ப்பைத் தர வேண்டும். செல்வங்கள் ஆலயங்களாய் அறச் சாலைகளாய், கல்வி நிறுவனங்களாய் நூலகங்களாய், மருத்துவ மனைகளாய் ஆக்கம் பெற வேண்டும். 'அற்றார் அழிபசி தீர்க்க வேண்டும். சுற்றத்தாரைப் பேண வேண்டும்! விருந்தினரைப் போற்ற வேண்டும். தக்கார்க்கு என்னென்ன வழிகளிலெல்லாம் உதவ முடியுமோ அவ்வாறெல்லாம் உதவ வேண்டும். அதுவே நிலையாததை வைத்து நிலைபெறுதல், அது அறிவும் ஆகும் அன்பும் ஆகும். புகழையும் ஆக்கும், "ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் கேயாண்டும், நன்றும் இன்றே செய்யவும் வேண்டும், இன்றும் இன்ளே செய்பவும் வேண்டும்” என்னும் முன்னோர் மொழிகளும் குறள் வழித் தோன்றியனவே! "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அது தடணர்வார்ப் பெறின்" நாள் என்பது ஒரு கால வரையறை போல் தோன்றுகின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு மகிழ்கின்றார்கள், ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாளும் கழியும் போதும், உயிர்வாழும் வாழ்நாள் ஒவ்வொன்றாக் குறைகின்றது. அதை உணர்ந்தால் உண்மை விளங்கும், நாள் என்பது ஒரு நல்ல! கால/அளவு போல் காட்டினாலும், உண்மை என்னவென்றால் நாள் வாளுக்கு ஒப்பாகும் ஏன் வாள் எனக் கூறவேண்டும்! நாம் எவ்வளவு நாள் வாழப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது! ஆனால் வாழப்போகும் மொத்த நாள்களில் இருந்து ஒவ்வொரு நாளும் அறுத்து எடுக்கப்படுகிறது. நாளும் அறுத்துக் கழித்துக் கொண்டே வந்தால் என்னாகும் வாழ்நாள்! கழிபடும் காண்தெரியாமல் ஒரு கழித்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதைச் செய்வது எது நாம் 'நாள்' என்று கருதிக் கொண்டிருக்கிற 'வாள்' "நான்தோறும், நாட் காலம் தோன்றி வரக் கண்டும், அறத்தைக் கருதாராய், என்றும் நாட்பொழுதை அது நிலைத்திருக்கும் என்று கருதித் துய்த்து மகிழ்வர் அவர்யாரெனின், ஒவ்வொரு நாளும் அந்நாட்பொழுது தன் ஆயுள் சுரிதலின் மேல் நிற்றலாக, அந்நாட்காலத்தைக் கருத்துடன் எண்ணிப் பாராதவர்" என்னும் கருத்துடைய, காவகலும் பாங்கல் பரக்கண்டும், அதுனரார் வைகலும் ஏவைகலை வைகும் என்று இன்புறுவர் கவைகலும் காகங்கள்தான் வாழ்நாள் மேல் வைத்தல் வைகலை வைத்துனாரா தார்" நாலடிப் பாடல் நல்ல எடுத்துக் காட்டு ஆகும். 11 அன்று அறிவாம் என்னாது அறம் செய்க! என வேண்டுபவர் திருவள்ளுவர். ஒவ்வொருவரும் நெடுநாள் வாழப் போவதாகக் கருதிக் கொள்ளாமல் இன்றே நாம் வாழ்வின் கடைசி நான் ஆகவே செய்ய வேண்டிய, செய்ய விரும்பிய நற்பணிகளை மிக விரைந்து செய்து விடவேண்டும்! சாகப் போகும் போது சங்கராப் போடுவதால் எந்த நன்மையும் விளையப் போவது இல்லை . ஆகவே தான், "நாச்செற்று கவிக்குள் மேல் போராமுன் நல்கவினை மேற்சென்று செய்யப்படும்” என வேண்டுகிறார். உடம்பிலிருந்து உயிர்பிரியப் போகும் போது, பேச முடியாதபடி நாக்கை அடக்கி, விக்குள் மேலெழுந்து வரும், அந்நிலை வந்து சொல்லும் செயலும் ஒடுங்குவதற்கு முன் செய்யத் தக்க நல்வினைகளை எல்லாம் விரைந்து செய்ய வேண்டும்! "புல்நுனிமேல் நீர் போல் நிலையாமை என்றெண்ணாக இன்டுனியே செய்க அறவினை இன்னிரியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்,துவாச் சென்றான் எனப்படுத லால்" என்னும் நாலடிப் பாடல் நளில்வதும் ஒப்பு நோக்கத் தக்கதே! "நீரிற்குமுழி இளடைம், நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் = நீரில் எழுத்தாகும் யாக்கை! நமரங்காள்! என்னே வழுத்தாத்து எம்பிரான் என்று" என்னும் நீதிநெறி விளக்கு விரிவுரையையும் எண்ணிக் 3கக்கொள்க! "நெருநல் நடௗன்ஒருவன் இன்றில்லாமல் கான்னும் பெருமை உடைத்துஇல் வுலகு" இறுதி நாள் என்று வரும் என்று எவராலும் திட்டமாகச் சொல்வதற்குவழி இல்லை), நேற்று உயிருடன் கடமைகளைச் செய்து வந்த ஒருவனை, இன்று உயிரோடு காண முடியவில்லை, ஆளில்லை ஆனால் ஆளைப் பற்றிய புகழ் இருக்கிறது. அழிவதைக் கொடுத்து அழியாமையைப் பெற்றிருக்கிறான். ஆகவே அவன் மறைவால் அவன் மட்டுமா பெருமை பெற்றான். இல்னல! இல்லை ! அவ31s3த் தாங்கி நின்ற உலகிற்குப் பெருமையை வழங்கிவிட்டு அல்லவா சென்றிருக்கிறான். இத்தகைய இறப்பே உலகிற்குப் பெருமை தரும் இறப்பாகும். "புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்" என்பதற்கேற்பப் பொது நவனுக்கு, நாட்டு, மொழி நலனுக்குக் கொடுக்கப் பட்ட உயிர் அவ்வுயிர் ஆகவே, "பெருமை உடைத்திவ்வுலகு” என்கிறார் வள்ளுவர். "இறப்பு வாழ்வின் முடிவல்ல என்றும், நிலைத்த வாழ்விற்கு இது ஒரு வழி” என்றும் மெய்யியல் அறிஞர்கள் கூறுகின்றனர் "மேற்கொண்டு இறக்காமல் இருக்கவே இறக்கின்றோம்" என்று செர்மன் அறிஞர் ஒருவர் கூறுகிறார், "மர்சனம் மிகவும் இயற்கையானது: மிகவும் தேவையானது; உலகம் முழுவதும் இயல்பாக இருப்பது, இப்படி உள்ளது மனித சமூகத்திற்குத் தன்மையாக இறைவன் ஏற்படுத்தி இருக்க முடியாது" என்பவர் ஒரு ஐரீசு நாட்டு அறிஞர், மக்கள் அனைவரும் சாவு வேண்டாம் என்று கருதுகிறார்களா?" அதுவும் இல்லை, மரணமே இல்லாது ஒழிந்தால் மக்கள் மா3நாவரம் பெறுவதற்குத் தவம் செய்ய மாட்டார்கள் என்பது உசன்னை உறுதி. தோல் வற்றி, நரம்பு தளர்ந்து, நிமிர்ந்து, கண்கள் அவிந்து, உரை தடுமாறி, நிமிர்ந்து நிற்கவும் முடியாத தொண்டு கிழமாக மாரியபின், மனித:31 க்கு மரண த்தைத் தவிர வேறு என்ன ஆதரவு இருக்கிறது. "மரணம் அழியா வாழ்வு என்னும் அரண்மனையைத் திறக்கும் திறவுகோல்" என்கிறார் ஆங்கிலக் கவிஞர் மில்டன். "நான் இருக்கிறேனா? இல்லாமல் போகிறேனா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; ஏனென்றால் நான் இறந்தால் ஆண்டவருடன் இருப்பேன் நான் வாழ்ந்தால் அவர் என்னுடன் இருப்பார் என்கிறார் புளுடார்க் என்னும் அறிஞர். "நேற்று உள்ளவன் = இன்று இல்லாதவன். இன்று இல்லாதவன் = நாளை உள்ளவன்" இதுவே உலகிற்குப் பெருமை தரும் இயற்கை. "பனாpயன கழிதலும் புதுவன புகுதலும் வழுவல" என்பதை உணர்வோம்! "வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் என்கிறார் பட்டினத்தார், ""அடப்பண்ணி கராபத்தார் துடிசிடியை உண்டார் மடக்கொடி பாரொடு மந்தானம் கொண்டார் இடப்பக்க போருளை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே” என்கிறார் திருமூலர். "புதருள் இருந்தது பெண்மான் பூரித்து அழைத்தது ஆண்மான் ஆண்மான் அழைப்பை அன்பால் ஏற்றுப் புதரை விட்டுப் புறத்தே வந்தது பெண்மான் வெட்ட வெளியில் விரும்பியவாறு வட்டமிட்டு வானம் கூர்ந்தானா இளவெயில் வேளை இன்பம் சேர்த்தது பச்சைப் பசுந்தரைப் பஞ்சு மெத்தையாய்ப் பரிசதந்தது, நீகப் பாவாம் நேயம் சேர்த்தது பளிங்கு நீர் தாற்றுப் பரிவுடன் ஈர்த்தது. தெள்ளிய தென்றல் தேனாய்த் தவழ்ந்தது இயற்காக நாழியில் இமாமராயாய்த் திகாகாத்தனா எரியும் பந்தம் எடுத்து வீசிய கடுமைபோல் சுலைமான் சாயக் கடுவாய் ஒன்று கருதிப் பாய்ந்தது துர்சா ஆண்மான் ஆற்றலால் மோதித் தாக்க முன்னாந்து தாவிச் சென்றது ஆனால் அதற்குள் துள்ளித் துடித்து வீழும் துணையைத் தாங்கிக் கொண்டு தழுவ நேர்ந்ததே” இது இளங்குமரனாரின் மனை விளக்கின் ஓர் ஒளி. ஒட்டியல் திளைதுவன்றி ஒல்லொலி மங்கலம் தொடங்க கொட்டிய பப்புவியம் முழங்க, குழுமிய இசையின் பெயருண்டு கட்டியதாம் பிறப்புனிற்றுக் கற்றா ஒன்றுதிர்ந்தோடி முட்டியதால் மனமகனளா முடிந்ததால் அவன்ஆவி" "மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய் அணியிழையார் வாழ்த்தொலிபோய் அழுகை ஓவியாய்க் கழியக் கானா மதனிற் பிறந்து இறும்இக் காயத்தின் வரும்பயனனா நடணர்வுடையார் பெறுவார்; உடாளர்வு ஒன்றுமிலார்க்கு ஒன்றுமில்லா" எனும் திருவிளையாடற் புராணச் செய்தியும் "நெருநல் உளனொருவன் இன் று இல்லை " என்னும் குறளடிக்கு எடுத்துக் காட்டாம், "ஒருபொழுதும் வாழ்வது அறியார், கருதும் கோடியும் அல்ல பல" மறுகணம் இருப்பதை, நடப்பதை அறிய மாட்டாதவன் எண்ணும் வீண் எண்ணங்களோ பலகோடி. ஒருபொழுதும் வாழ்வது அறியார் எனின் என்னாம்? 1. உயிர் உடலில் எப்படி வாழ்கிறது என்பதை ஒரு பொழுதும் அறியாரா?" 2. உயிர் உடலில் ஏன் வாழ்கிறது என்பதை ஒரு பொழுதும் எண் ணியும் பாராதவரா? 3. உடலின் நிலையாமையை அறியாதவரா? 4. ஒரு நொடியும் நிலைத்து வாழும் தன்மையை அறிய முடியாதவரா?' 5, கணப்பொழுதும் தாம் வாழும் முறையைப் பற்றி ஆராய்ந்து பார்க்க இயலதாவாரா? பி. வாழ வேண்டிய நன்முரையைப் பர்ரரிக் கணப்பொழுதும் எண் கணித் திட்டமிடாதவரா?' 7. உலகில் எது நிலைத்துவாழும் என்பதைப் பற்றிச் சிந்திக்க நொடிப் பொழுதையும் ஒதுக்க அறியாதவரா? யார் ஒரு பொழுதும் வாழ்வது அறியார்? மேற்சொன்ன எல்லா வகையினரும் ஒரு பொழுதும் வாழ்வது அறியார்தாம். செயற்படுத்தாத, செயலுக்குக் கொண்டு வர முடியாதவர்கள் கோடிக்காகோ க்காக 335 ரக எ நா கக் கற்பனைக் கோட்டை மட்டும் கட்டிக் கொண்டே இருப்பதால் என்ன பயன்? ரூபாய் நூறு கடன் கிடைத்தது. அதையே முதலாகக் கொண்டு கண்ணாடி வணிகம் செய்யக் கண்ணாடி வாங்கி வந்தான் ஒருவன். கூடையில் கண்ணாடியை அடுக்கினான். ஊர்க்குப் புறத்தே இருக்கும் பிள்ளையார் கோயில் அரசமரத்தடியில் கூடையை இறக்கி வைத்து விட்டுப் பிள்3}ளயார் அப்பனை வணங்கினான். கற்பனைக் குதிரையை ஓட விட்டான் நூறு நாளை இருநாறு ஆகும். இருநூறு நானூறு ஆகும் என இரண்டு கோடிக்குக் கணக்சைப் பெருக்கினான். ஒரு கொடியில் பெரிய வளமனை சுட்ட எண்ணினான். பெரிய பணக்காரர் வீட்டில் உள்ள அழகான பெண்ணைத் திருமணம் முடிக்க வேண்டும் அவள் நான் சொன்னதை எல்லாம் கேட்டுப் பணிந்து நடக்க வேண்டும். அவ்வாறு அவள் கீழ்படிந்து நடக்க வில்லையானால் இப்படி எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று உதைத்துக் காட்டினான். உதைபட்டது கண்ணாடிக் கடை கண்ணாடிகள் எல்லாம் சில் சில்லாக நொறுங்கிப் போயின! அவன் வாழ்வும் நொறுங்கிப் போயிற்று. இத்னகயவர்களைக் காண நேர்ந்ததால் தான் ஒருபொழுதும் வாழ்வது அறியாதவர்களே! நீங்கள் கோடி கோடியாய் எண்ணி என்ன பயன்? என வினவி முறையே சிந்தித்து வாழ வேண்டினார் போலும். . "கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண் நீங்கு புள்போல பாக்கை தமர்க்கொழிய நீத்து" என்பது யாக்கையின் நிலையாமை உணர்த்தும் நாலடிப் பாடல், "பயனின்றி, கூடு மரத்தில் கிடக்க, அதிலிருந்து தொடிைவிலே, பறந்து போய்விடும் பறவைகள் போல, மக்கள் ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கிவிட்டு பேசாமலே இறந்து போய் விடுவார்கள்" என்னும் பொருள் தரும் பாடல் வள்ளுவர் கொடையோ எனக் கருதுமாறு கூறப்படும் குளே, "குடம்பை தனித்தொழியப் புள்பறந்தற்றே உடம்போடு கடயிரிடை நட்பு" என்னும் பிரிவுக் குறளாகும். மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த பறவை', இரைதேடும் பொருட்டு நெடுந்தொலைவு கூடச் சென்று விட்டு சிலமாதங்கள் கூடக் கடந்து திரும்புவது உண்டு. கூட்டை விட்டு வெளியேறிப் போகிறோமே, கூடு என்னாகுமோ என்றெல்லாம் கவலைப் படாது கூட்டை விட்டுப் பறந்து சென்று விடும். அதுபோல் மனித உடம்பு பறவைக் கூடு போன்றது தான் மனித உயிர் அதில்: தங்கிய பறவை போன்றதாகும். எனக் கருத வேண்டுமே ஒழிய, உயிர்ப்பிரிவிற்குப் பெரிதும் கவலை கொள்ளல் ஆகாது. கவலைப்படுவதால் பயனும் இல்லை. இயற்கை முறைமையே இதுவாகும். என உணரவேண்டும். இவ்வுடலைக் கோயிலாகக் கருதுவது போல் சுடாகக் கருதுதலும் உண்டு. ஆகவே தான் 'கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு" என்ற தொடர் புலமையாளரால் பயன்படுத்த நேர்ந்தது. "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" 30g விரிப்புப் போல உயிர்கட்கு உறக்கம் மிக இன்றியமையாதது உறக்கமும் விழிப்பு நிலையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றன, பகலும் இரவும் போன்றன. கதிரவனும் நிலவும் போன்றன, இறப்பு உறங்குவதைப் போன்றது - அதாவது உழைத்த உடல் ஓய்வு கொள்வது போன்றது. பிறப்பு உறக்கத்திலிருந்து விழித்து எழுவது போன்றது, அதாவது ஓய்விற்குப் பின் உழைக்க முற்படுவது போன்றதாகும், ஓய்வு எப்பொழுது இன்பமாக இருக்கும்! விழிப்பு நிலையில் தளர்ச்சி இன்றி உழைத்து வயிறார உண்டால் ஓய்வு இனிதாகும். அதுபோல் இறப்பு பெருமை தருவதாக அமைய வேண்டும்! அப்படியானால் உயிர் உள்ளபோதே அறத்தைப் போற்றி அன்புடையவராய்ப் பலர்க்கும் பயன்படுமாறு வாழ்ந்து" நல்லவன்" எனப் பெயர் பெற வேண்டும். பெரிய பெரிய சாதனைகளைப் புரிய ஆற்றலும் அறிவும் வாய்ப்பும் பெற்றவர் செய்யட்டும். மற்றவர் பழிக்கு ஆளாகாதவாறு "வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்' என்பதற்கு ஏற்ப வாழ வேண்டும். என்பதை உணர்த்துவதே வள்ளுவர் நோக்கு. ஆகவே உறக்கம் விழிப்பு இரண்டும் இயல்பானது அவ்வாறே இறப்பும் பிறப்பும் இயல்பானது ஆகவே வாழ்வாங்கு வாழ்வதே அனைவர்க்கும் இயல்பானது என்பதை மிக இயல்பாக எளிமையாக விளக்குகிறார் வள்ளுவர், அதனை உள்வாங்கிக் கொண்ட சீத்தலைச் சாத்தனார், "பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உடறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்" என மணிமேகலையில் பதிவு செய்துள்ளார். உடம்பினுள் உயிர் இருப்பதால் இவ்வுடல் தன் பொய்வாய் கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் வழியாகவும் அதற்கு மேல் மனத்தாலும் தேடிக் கொண்ட செல்வங்களும் சிறப்புக்களும் ஏராளம். அவை அனைத்தும் இவ்வூன் உடலால் பெற்ற பயன்கள், அவ்வுயிர் என்று இவ்வுடலை விட்டு நீங்குகிறதோ அன்றே யார் உலகவர்களால் மறக்கடிக்கப் படுகிறார்களோ? அவர்களின் உயிரின் வேலை முடிந்து விட்டது, வாழும் காலத்து வாழ்வாங்கு வாழ்ந்து, மறந்தும் பிறன் கேடு சூழாது தாம் இம்மண்ணில் இவ்வுடல் வழிப் பெற்ற அறிவு, திறன் செல்வம் அனைத்தும், எனக்கும் என் குடும்பத்திற்கும் என்ற எல்லை எல்லாம் தாண்டிப் பொதுமை ஆக்கி மனித நேயத்தோடு வாழ்ந்தார்களோ அவர்கள் உயிர் என்றும் அரியா உடல் ஒன்றைப் பெறும். அவ்வுடல் உயர்ந்த உடல் என்றும் பாபும் உடல், ஓட்டை இல்லா உடல், அவ்வுடல் சரியாஷம்: பெயர்க்க முடியா உடல் அவ்வுடலை வள்ளுவப் பெருந்தகை *உயர்ந்த புகழ்" என்கிறார். இவ்வுடல் ஒரு ஒட்டுக் குடித்தனம் என்று தெரிந்திருந்தும், இன்னுமா நிலைத்த குடித்தனமாம் புகழைத் தேடிக் (கொள்ளவில்லை. இன்று வரைத் தேடவில்லை எனினும் கவலை இல்லை உடனே தொடங்குக! அல்லவற்றைத் தேய்த்து விடுங்கள்! அறத்தைப் பெருக்குங்கள் நல்லவற்றையே நாடுங்கள்! இனியவே கூறுங்கள்! உங்கள் மனம் மட்டும் என்றும் மாசற்ற மனமாக இருக்கட்டும்! எனைத்தானும் எஞ்ஞான்றும் பார்க்கும் மனத்தானாம் மாணா செய்யாதீர்கள்! அது போதும் புகழ் உடம்பு பெறுதற்கு! நிலையத்தில் நின்று நிலையற்றதை உணர்ந்து கொண்டு நிலைத்ததைத் தேடி நிலைபேறு பெறுவதே பழிபிறங்காப் பண்புடை மக்கள் பேறு ஆகும் என்பதை உணர்த்தும் அருமைக் குளே! "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு" என்பதாகும். "வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை = திருந்திழாய் சீத நீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதயோ? நிற்றல் சாயப்பு" என்னும் சிவப்பிரகாசர் கருத்து ஒருவர் ஒப்பாகும், "நிலையிலா உடலகை நச்சி நிசாலப்பதாம் அறத்தை நீக்கி அலகையாய் வாழ்வர் அந்தோ” "தோற்றம் எங்கு உளதோ ஆங்குத் தொலைவதும் உறுதி கண்டாய்! மாற்றம் என்று அமைவது எல்லாம் மறலியின் சுடற்றே யாகும் ஏற்றதிவ் வொன்பான் வாயில் நாழில் உடல் நகர்ச்சி யாவும் கற்றத்தின் கோயில் நண்ணாக் கொண்டதோர் செலவு கண்டாய்" "விருந்தினால் பொலிந்த இல்லம் விதவித மாகச் செய்த . மருந்தினால் நிறைப்பக் காணும் மறுவறக் களித்த மாடம் பெருங்கவல் வாட்டத் தேம்பும் பேறுகள் இயற்கை யம்மா! வருந்துதற் கில்லை பாவாய்! காபயகத் தன்மை தேர்க! * அரும்பொடு மொக்குள் போது பலர் அலர்த் தோற்றம் போல் அருந்தமிழ்க் குழவி பிள்ளை குமரனே காளை மூத்தோன் பொருந்துற அமையும் நங்காய்" பொழுதெலாம் சாதியும் வாழ்வைத் திருந்திய பளியால் நிற்கத் தேர்வதே சால்பு கேட்டி!” எனக் குண்டலகேசிக் காப்பியத்தில் இளங்குமரனாரின் வடிப்பு வள்ளுவரின் நிலையாமைக்குத் தக்க விளக்கமாகும்! தடகில் நிற்பவற்றையும் அறிக! நில்லாதவர்களையும் தெளிக! செல்வம் மெதுவாக வரும் விரைந்து செல்லும்! செல்வம் நிலையற்றது! செல்வத்தால் நிலைத்த பணிகள் செய்யலாம் வயது கூட்டும் வாழ்நாள் தேயும்! நற்செயல்களைத் தளர்ச்சி வரும் முன்பே செய்க! மாற்றமும் வளர்ச்சியுமே உலகுக்குப் பெருமை சுருங்சு காண்பிக்க அறிந்து வாழ்க! நல்லதே செய்த டயிர்ப்பறவை பறந்து போகட்டும்! தடல்கம் விழிக்க கடாழைப்போம்! உயிர்க்காரி எப்போது வீழ்ந்தாலும் மகிழ்ச்சியே! உயிரைப் புகழ் உடம்பில் குடியிருக்க கனவப்போம்! 35. துறவு துறவு என்பது மிக விரிந்து பரந்த பெருநிலை. மனவளத்தால் மாட்சிமை உற்ற உயர்நிலை தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே எனக் கருதும் பெருந்தாய்மை நிலை. தன்னலமே கருதாத் தகைமை நிலை, தொண்டுக்கே தம்மை ஆளாக்கிக் கொண்ட தூயநிலை. விருப்பு வெறுப்பு அற்ற வியன்நினல. தன் குடும்பநலமே கருதி வாழ்ந்து, கடமைகளை இனிதே நிறைவு செய்தபின்னர், தான் குடும்பத்தில் ஒருவன் என்று நினைவை விடுத்து, ஊரில் ஒருவன் என வளர்ந்து, நாட்டில் ஒருவனாகி மேலோங்கி உலகில் ஒருவன் என்ற பெருமனவளத்துடன், ஒல்லும் வே எனகயான், உற்றுழி உதவித் தொண்டால் துவங்கும் நன் 3 லையே துறவு நிலை. அஃது உடகை வாழ்விக்கும் சீர் நி3வயாகும். அது செப்பமும் செம்மையும் சான்ற செழுநிலையாகும், இத் துறவு நினலயரில் புத்தர் இயேசு, மகாவீரர், நபிகள், நிவேகானந்தர், இராமகிருட்டிணர், வள்ளலார் அன்ன சமயச் சான்றோர்களும் உண்டு, ஆபிரகாம் லிங்கன், காந்தியடிகள் போன்ற அரசியல் தலைவர்களும் உண்டு! | ஆல்பர்ட் சுவைட்சர், நைட்டிங்கேல் அம்மையார், அன்னை தெரேசா, திரு.வி.க. ப. சீனா போன்ற 'பிறிதின் நோய் சந்நோய் போல் கருதித் தொண்டாற்றிய அறஞர் பெருமக்களும் உண்டு! தீயன விலக்கி, தன்னலம் விடுத்து, அறவழி நின்று பொதுத் தொண்டு ஆற்றும் புகழும் வேண்டாப் புகழாளர்கள் எத்துறை சார்ந்து எப்ப புரிவோரும் துறவியரே! கணவன் மனைவியாக இணைந்தும் துறவராய்த் துலங்கலாம். பொருள் வளம் மிக்காராயும் இருக்க லாம், ஆனால் தன் வரத் துவராவோ பொருட் பற்றினராகவோ தான் இருக்க இயலாது. "துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே! தூக்கத்தை விடுகின்ற துணையொன்று கருதீர்! சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்! சாலையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்! பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்! பசித்தவர் தம்முகம் பார்த்து உடனேவளியீர்! சான்மார்க்கம் சாச்சுகம் யாதும் வாழ்க்காக்க எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!” "பண்ணாத தீடைகள் பண்ணுகின் றீரே! பகராத வன்மொழி பகருகின் றீரே! நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே! நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே! சுண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே! காராளாத்து மாண்பாளாயும் நேருமோர் காயம் காத்துனான கொள்கின்றீர் பித்துல கீரே! என அருள் வள்ளலார் வேதாளப்படுமா / சீமையப் பற்றி ஒழுகாது, விட்டு விலகி நல்லதைப் பற்றி நன்னிலை உரவழி காட்டுவதே வள்ளுவர் காட்டும் துரவு ஆகும், பற்று என்பது பொறிகட்குப் புலனான பொருள்களின் மேற்சென்று பற்றும் உள்ளம். அப்பற்றினை விடுவதே துறவு. அவா என்பது அப்பொருளை இன்றித் தம் வாழ்வு அமையாது எனப் பொருள்களுக்கும் தமக்கும் இடையே பிணித்து நிற்பதால் அரச அதனை விலக்குவதே அவாவின்மை, அஃதே, "வேண்டாமை என்னும் விழுச்செல்வம்' என்பார் திருவள்ளுவர், "நண்பர்களையும் உற்றார் உறவினர்களையும் நம்பி இராதே. ஆன்ம நலனைப் பற்றிய கவலை இப்போது வேண்டா என்றும், அமைதி பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனக் காலத் தார்வு செய்யாதே ஏனெனில், நீ எண்ணி இருப்பதை விட மிக விரைவில் மக்கள் உன்னை மறந்து விடுவார்கள், ஆதலால், பிறர் உதவியை நாடிக் காத்திருப்பதை விட இப்போதே அதைக் கவனித்து நற்பணிகளை முன்னரே புரிதல் நன்று. இறையருள் நினைவில் வாழத் தொடங்கலாம். இப்போதே கழிவிரக்கத்தாலும் புலன் அடக்கத்தாலும் உடலைக் கசக்கிவை அப்போது உனக்கு அருள் கிடைக்கும் என்னும் உறுதியும், நம்பிக்கையும் உண்டாகும்., உனது அன்! விடுதலை அன்றி வேறு எதனைப் பற்றியும் நினையாதே இறைவன் தொடர்பான பொருளை அன்றி வேறு எதனையும் ஒரு சிறிதும் எண்ணாதே அருள் நிலை அடைந்த பெரியோர்களை மதிப்பதனாலும், அவர்களைப் பின்பற்றி நடப்பதனாலும், அவ்வருளானர்களை தனக்கு நண்பர்களாக ஆக்கிக் கொள், இவ்வுலகில் இல்வாழ்க்கையில் இடுக்கண் உற்றாலும் அவர்களால் அழியா நிலையுள்ள உலகில் எங்கப்படுவாய்! இவ்வுலகில் ஒரு பயணி போலவும், தொடர்பு இல்லாத அயலவன் போலவும், இவ்வுலக விவகாரங்களில் சிறிதும் தொடர்பு அற்றவன் போலவும் உன் மன நிலையை அமைத்துக் கொள். உனது உள்ளத்தைக் கட்டற்ற நிலையில் இவை. அதனை இறைவனை நோக்கி உயர்த்துக! ஏனெனில் உனக்கு நிலையான உறைவிடமே இங்கு இல்லை. உனது நாள் வழிபாடுகளையும் இறைவனை அடையும் பொருட்டு விம்மியழும் உனது அழுகையையும், தண்ணீரையும் அவரை நோக்கிச் செலுத்துக! இதன் பயனாக மறைவிற்குப் பின் உன் ஆன்மா மகிழ்ச்சி பொங்க இறைவனை நோக்கிச் செல்லும் தகுதி பெற்றிருப்பதைக் காண்பாய்" என அறிஞர் தாமசு (கெம்பிசு கூறும் கருத்துகளை முன்னுரையாகக் கொள்ளலாம். "யாதனின் யாதனின் நீங்கினான் நோதல் அதனின் அதனின் இவன்" துன்பம் இன்றி வாழவழி கூறும் குறட்பா இஃதாகும். நிலையாமைத் தெளிவுடையான் எவற்றில் பற்று வைக்க வேண்டுமோ அவற்றில்; தான் பற்றுவைப்பான், எவற்றில் பற்று வைத்தால் துன்பம் தருமோ அவற்றில் பற்று வையான். வகைகளில் எவ எல்லாம் நம் உடல் நலனுக்கு ஒவ்வாதோ அவற்றை எல்லாம் ஒன்றாய் விட்டு விடல் வேண்டும். எல்லார்க்கும் தீமை செய்யும் குடிவகைகளையும் உணவு வகைகளையும் கட்டாயம் விலக்கி விட வேண்டும், விலக்கி விட்டால் அதன் பொருட்டு வரும் நோய்த் தொல்லை நம் தட3பே அணுகாது. பிறன்மனை நோக்காதே பேராண் மையான் ஆவாய்! எவரையும் வெறுக்காதே போன்றுந்துணையும் புகழ்பெறுவாய்! அழுக்காறு கொள்ளாதே அரசனாக்கம் பெறுவாய்! பிறர்பொருளை வெஃகாதே உன் செல்வம் அழியாது! புறங்கூறாதே அறம் கூறும் ஆக்கம் பெறுவாய்! பயனில கூறாதே சீர்மையும் சிறப்பும் அடைவாய்! தீப்பால் தான் பிறன் கண் செய்யற்க நோய்ப் பால் உன்னை அடாது, புலால் உண்ண மறு நன்3+: எல்லா உயரும்: தொமும்! களவென்றும் காரறிவாண்மை கொள்ளாதே நன்னா எனத் புத்தேள் உலகும் தள்ளாது! உயிர்க் கொலை செய்யாதே, உயிருண்ணும் சுற்றும் உன் னை அண்டாது! வெகுளி கொள்ளாதே நீ நினைத்ததெல்லாம் நடக்கும். அவாவை அகற்று அதுவே விழுச்செல்வம்! மடியை அகற்று மாண்பயன் எய்துவாய்! இகல் என்னும் எவ்வநோய் நீக்குக தவவில்லாத் தாவில் விளக்கம் பெறுவாய்! சிற்றினம் சேராதே எல்லாப் புகழும் பெறுவாய்! உண்ணற்க கள்ளை சான்றோர்களால் எண்ணப்படுவாய்! சூதாட எண்ணாதே உன் பண்பும் நிலைக்கும் செல்வமும் நிலைக்கும்! எனப் பரந்துபட்ட நிலையில் அல்லவற்றை அகற்றி நற்பயனும் நல்லின்பமும் பெற வழி காட்டுபவர் வள்ளுவர், ஒருவன் என்னிடம் பற்றுக் கொண்டு வாழ்கிறானோ அதனால் துன்பம் அடைவான். எள்வெள்ளப் பொருள்களிலிருந்து பற்று நீங்கி வாழ்கிறானோ அவ்வப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் இல்லை , நாம் பற்றியிருக்கும் பற்றுகளில் இருந்து விடுதலை பெறத் துன்பமும் குறைந்து கொண்டே வரும் எல்லாப் பற்றுகளையும் விட்டால் தான் துன்பம் முற்றிலும் நீங்கும், தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டாமல் இருக்கும் உறவே துறவாகும். பதநீர்ப் பானையில் விழுந்த புழுப்போல இருப்பது பற்றாகும், "தஉறவு தந்தைதாய் ஓகாண்டொடி மாதரார் சிறுவர் வன்புவி செல்வம் பெரும்புகழ் பிறவினும் படுப்பூசை பிரிந்த மெய்த் துறவின் அல்லது துன்பம் அகலுமோ?" எ எனத் திருக்கூடல் புராணம் கூறுவதையும் இணைத்துக் கொள்க! இது இல்லை, அது இல்லை என்ற ஏக்கம் எங்கெங்கு ஏற்படுகிறதோ அங்கு அங்கெல்லாம் துன்பம் தலைகாட்டும் துன்பம் தங்கியும் விடும். இது வேண்டும் அது வேண்டும் எனத் தேடி அலைந்தால் துன்பம்! இதுவும் வேண்டா அதுவும் வேண்டா எதுவும் வேண்டா என்று ஒதுக்கினாலும் ஒதுங்கினாலும் 'எந்நாளும் இன்பமே துன்பமில்லை." "ஈட்டலும் துன்பம் மற்று ஈட்டிய ஒன்பொருளைக் காத்தலும், அங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம், துன்பம் உறைபதி மற்றைப் பொருள்" என்னும் நாலடியார் பொருள் வழித் துன்பத்தை அடுக்கிக் காட்டி ஏனைய துன்பங்களை உணரவைக்கிறது. பிறருடைய துன்பத்தினால் தன்னை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்கிறவன் பகைமை என்னும் வலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறான். அவன் அதனின்றும் விடுதலை அடைய முடியாது. உடலின் தேவைகள் தான் பெருந்துன்பம், பிறவித் துன்பம், பிணித் துன்பம், மூப்புத் துன்பம், இறப்புத் துன்பம், அன்பிலாரோடு தொடர்புத் துன்பம், விரும்பியதைப் பெறாமை துன்பம், சுருங்கச் சொன்னால் ஐம்புலப் பற்றும் துன்பமே." துன்பமானது மனம், மொழி, மெய் மூன்றிலும் தினமயுடையவன் பின்னால் தொடர்ந்து செல்லும். இன்பமானதையோ, துன்பமானதையோ எவனும் பற்றிக் கொண்டிருக்க வேண்டா, "இன்பமானதைக் காணாமையும் துக்கம்" துன்பமானதைக் காண்பதும் துக்கம்" என்னும் புத்தரின் பொன்மொழிகளும் ஒப்பிட்டு நோக்கத் தக்கனவாகும். "வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்" என்பது ஒரு தவக்குறள். "தவத்தால் விரும்பியதை விரும்பியவாறு அடையலாம். ஆகவே தவமாக எம்முயற்சியும் அமையட்டும். "நடள்ளிய எல்லாம் நட்டன்னய்தும் நடள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்” இது ஒரு வெகுளாமைக் குறளாகும், “மனத்தில் சிறிதும் சினத்தைக் கொள்ளாதவன் என்றால் அவன் மனத்தில் நினைத்தவை எல்லாம் நிறைவேறும்" "எண்ணிய காரணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” இது வினைத் திட்பக் குறள். ""எண்ணுகின்றவர் உறுதி உடையவரானால், தாம் எண்ணியதை எண்ணியவாறு அடைவர்". என்னும் நோக்கிலும் போக்கிலும் உருக்கொண்ட குறளே, "வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால் பல" என்பதாகும், ஒருவனுக்கு புகைப் பிடிக்கும் வழக்கம், அல்லது சுள்ளுண்ணும் பழக்கம், அல்லது சூதாடும் பழக்கம் இருக்கிறது, அவற்றை விட வேண்டும் என எண்ணுகிறான். விட்டால் நல்லது என்பதை உணர்கிறான். சிறிது சிறிதாசுக் குறைத்துக் கொண்டே வந்து விட்டு விடத் திட்டமிடுகிறான். சில நாள் அப்படிக் குறைத்துக் கொண்டே வந்தான் ஆனால் நீடித்ததா?' முற்றிலும் விலக்கி விட்டானா? இல்லை, ஏன்? தீயது விலக்கப்பட வேண்டுமானால் உடனே முற்றிலும் நிறுத்தினால் தான் விட முடியும், இல்லையேல் முயன்று தோல்விதான் ஏற்படும். பற்றை விட வேண்டும் என எண்ணினால், "நான் மிகச் செல்வமாக savளர்க்கப் பெற்றேன். என் தந்தையாரின் அரண்மனைத் தோட்டத்தில் வெண்டாமரைப் பொய்கையும் செந்தாமரைப் பொய்கையும், குவளைப் பொய்கையும் எனக்காக அமைக்கப் பெற்றES, காசிச் சந்தனத்தைத் தவிர்த்துப் பிறிதொரு சந்தனத்தைப் பூசி அறியேன்; காசிப்பட்டு அன்றிப் பிறிதொன்றைக் கட்டி அரியனே, வெயிலும் மழையும், தூசியும் என்னைத் தொடரா வண்ணம் என் ஏவலர்கள் இரவும் பகலும் குடைப்பிடித்திருந்தார், "இளவேனிற் காலத்திற்கு எடினாவும், மழைக் காலத்திற்கு எனவும், பனிக்காலத்திற்கு எனவும் மூன்று மாளிகைகள் எனச்தாசுக் கட்டப்பெற்றிருந்தன. மழைக்காலத்தில் நான் என் அரண்மனையில் இருந்து கீழே இறங்கி வந்ததே இல்லை, எப்பொழுதும் பேரழகியர் ஆடியும் பாடியும் இரவும் பகலும் என்னை இன்புறுத்தினர்." இத்தகைய இன்ப வாழ்வு வாழ்ந்த பெருமகனார்தாம் புத்தர், அவர் ஒருநாள் உலகத்தின் துன்பங்களைக் கண்டு சுண்டு கண்ணீர் பெருக்கினார். முதுமைத் துயர், பிரித்துயர், இறப்புக் கொடுமை இவை வட்டமிடும் உரசிர்களின் வாழ்வைச் சுண்டும் கேட்டும் தொந்தார். உயிர்கள் படும் துன்பத்தை ஒழித்தே ஆக வேண்டும் என முடிவு செய்து, இளம் செல்வனையும், இனிய மனைவியையும் தம் இருபத்தொன்பதாம் வயதில் பிரிந்து வெளியேறினார், துறக்க வேண்டும் என எண்ணம் தோன்றினால் புத்தரைப் போல் எல்லா வசதி வாய்ப்பு, செல்வம் செல்வாக்கு உள்ளபோதே விட்டு விட்டுத் துறவு மேற்கொள்ள வேண்டும். உண் என உணவிற்கும், உடுத்த உடைக்கும் தங்குவதற்கு ஒரு சின்னஞ்சிறு குடிசையும் இல்லாதவன் நான் துறவி அகிவிட்டேன் என்றால் அது துறவாகாது, வாழ வழி இல்லாமல், உழைக்க மனமும் இல்லாமல், மானத்தோடு வாழவும் விரும்பாமல் மேற்கொண்டே வேடமே தவிர்த்து அது துறவன்று. புத்தர், மகாவீரர், ஆதி சங்கரர், இராமகிருட்டிணர், வள்ளலார் போன்று பற்றை விடுவதே உண்மைத் துறவு. ஆகவே அத்துறவு வாழ்வால் அவர்கள் பெற்ற பேறு கிடைத்தற்கரிய பெரும் பேறுகளாகும். அவர்களால் உலகம் பெற்ற நன்மைகளும் கான சிகிட முடியாதனவாகும். என்பதை எல்லாம் வள்ளுவர் அக்குறள் மூலம் சிந்திக்க வைக்கிறார். "துறவி ஒருவன் உல.சுச் செல்வங்களை எல்லாம் முற்றத் துறந்தவனாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் தனக்கும் நலம் தேடிக் கொள்கிறான். உலகிற்கும் நலம் நல்குகிறான். உண்மைத் துறவியைக் காண்பார்க்கே துறவு மனப்பான்மை தோன்றும்" என்னும் இராமகிருட்டி 533 பரம் கம்சரின் பொன்மொழி குறளுக்கு விளக்கம் போல் அமைந்துள்ளது. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் சரமாப்பு உடடைத்து” என்று அடக்கமுடைமையில் ஐந்தடக்கனல் வலியுறுத்திய வள்ளுவர். இங்கே துறவைக் கூறும் போதும் ஐம்புல் அடக்கத்தை இணைத்து வலியுறுத்தும் குறளே, "அடல்வேண்டும் ஐந்தள் புயத்தை விடல்கேயாண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு" 43 என்பதாகும். ஐம்பொறிகட்கும் உரியவாகிய ஐம்புலன்களையும் வெல்லுதல் வே ண்டும்; அது மட்டும் போதாது. விரும்பிய பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுதலையும் ஒருங்கே விடுதலும் வேண்டும். 1. ஐந்தன் புலத்தை அடல் வேண்டும். 2. வேண்டிய எல்லாம் ஒருங்கே விடல் வேண்டும், இவை இரண்டும் துறவில் வள்ளுவர் இடும் கட்டளைகள். ஏன் எதற்கு என்று வினவுதல் கூடாது. தவறாது பின்பற்ற வேண்டும். "மனைவியர் மக்களில் வாஞ்சை உண்மையே புனனதரு நரமெல்லாம் போக்கித் தாழ்த்திடும் பளகளாவியர் மக்களில் வாஞ்சை இன்மையே புனனதரு பரகதி பொருந்த கடய்க்குமே!" என்னும் காசி ரகசியம் ஒருவழிச் சான்றாகும், "இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மைஉடடைமை மயலாகும் பற்றும் பெயர்த்து" முற்றத் துறந்த துறவி ஒருவர், தாம் கட்டி இருந்த மானம் மறைக்கும் சிறு துணியை அலசி உலர வைத்திருந்தார். அதை ஒரு எலி கடித்து விட்டது. ஆகவே ஒலித் தொல்லை நீங்க, ஒரு பூனை வாங்கி வளர்க்க நேரிட்டது , பூனைக்குப் பால் வேண்டும் அல்லவா? ஆகவே பசு30 வ வாங்கினார், அதைப் போ வேலைக்கு ஆள் போட்டார். பணி நிறைவு தரவில்லை. உரிமையுடன் கவனிக்க ஏற்ற ஆள் ஒரு பெண் துணையை நாடி னார். அவர் விரைவில் வாழ்க்3கத் துணைவியும் து 5னார், இப்பொழுது பழந்துறவி மனைவி மக்களுடன் இல்லறம் நடத்துகிறார். பள்ளிக் கல்வி முடிந்து கல்லுாரி சென்றார். கல்லுாரிக் கல்வி முடித்து மீண்டும் பள்ளியில் படிக்க வந்த கதை போலவும் வட்டாட்சியராய்ப் பணியாற்றி பணி மூப்பாலும் பணிச் சிறப்பாலும் மாவட்ட ஆட்சியராக உயர்த்தப் பட்ட ஒருவர் ஒரே ஒரு பணியில் தம் தகுதியை நிலை நாட்டத் தவறியதால் மீண்டும் வட்டாட்சியர் பணிக்குப் பணி இறுக்கம் செய்யப்பட்டது போலவும் ஆகிய காட்சியைக் கண்டவர் போல் நிலை தாழ்ந்த துறவர்களை அடையாளம் காட்டும் குறளே இதுவாகும், எப்பற்றும் இல்லாது இருத்தலே துறவுக்கு ஏற்புடைய இயல்பாகும், ஏதாவது ஒன்றன் மேல் அல்லது ஒருவர் மேல் தனிப்பற்று என்று உண்டாகிறதோ அன்று முதல் அது பல பற்றுகளை உண்டாக்கி, ஒன்றிலும் தெளிவாக இருக்க முடியாத ஒரு மயக்க நிலைக்குத் தள்ளி விடும். துறளாம் நோன்மைக்கு இன்மையே இயல்பு. உடைமை துறவரை மயக்கும். தெளிவற்றவர் ஆக்கும். "துறவி ஒருவன் உலக ஆசைக்குத் தன் உள்ளத்தில் இடம் கொடுத்தல் ஆகாது. அப்படி இடங்கொடுப்பானாகில், தான் துப்பிய எச்சிலைத் திரும்பவும் எடுத்து உண்பதற்கு ஒப்பாகும்" எனக் கூறுகிறார் இராமகிருட்டிணர், “ஒன்று இன்மை" என்றால் என்ன? அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் கேட்போமா? "உலகப் பற்று இல்லாமை" என்கிறார் வசு, பிள்ளை, "ஒரு பொருளும் இல்லாதிருத்தல்" என்பவர் நாகை தண்டபாணியார், "பற்று வைத்தற்குரிய ஒருபொருளும் இல்லாமை" இது காசு, பிள்ளான கருத்து. "ஒரு பொருட்பற்றும் இல்லாதிருத்தல்" எனக் கூறுபவர் வஉசி, "தன்னுடையது என்று ஒரு பொருளிலும் பற்று வைக்காமல் இருத்தல்” என்கிறார் நாமக்கல்லார். “பற்று உண்டாக்கத் தக்க ஒரு பொருளும் இல்லாது இருத்தல்" இது மயிலை சிவமுத்து உணரக்குறிப்பு: "ஒரு பற்றும் இல்லாது இருத்தல்” என்கிறார் மு.வ. “ஆசை எழாதிருக்கும் நிலையே” என்கிறார் கனகசுப்புரத்தினம். "ஒரு பற்றும் இல்லாது இருத்தலே" எனக் கூறுபவர் இளங்குமரனார். பற்று இன்மைதான் பலபட விரிவதைக் காண்கிறோம். "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்; பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை" உற்றாரை யான் வேண்டேன், அவர் வேண்டேன், பேர் வேண்டேன் என வாழும் பெருந்தக்க வாழ்வு துறவர் வாழ்வு. அவர்கள் பிறப்பால் வந்த உறவுத் தொடர்பாகிய தாய், தந்தை, அண்ணன் தம்பி, தமக்கை தங்கை எனக் குருதித் தொடர்பு கொண்டு பழகி, ஒன்றாய் உண்டு உரைந்த உரிமைப் உரயே துண்டித்துக் கொண்டு உலகப்பற்றை விட்டு வாழ்வோரே துறவியர். அவர்களில் கணையம் உறக்கத்தையும் மறந்தவர்கள் உண்டு! புத்தர் ஆறு ஆண்டுகள் துன்பத்தை ஒழிக்க வழி காண அலைந்தார். காடு, மலை, வெயில், மழை, பனி, பசி எவற்றையும் (பொருட்டாக எண்ணாமல் திரிந்தார். வயிற்றில் விரலை வைத்தால் முதுகெலும்பும், முதுகில் விரலை வைத்தால் வயிற்றின் தோலும் தட்டக் கூடிய அளவுக்குப் பட்டுணி கிடந்து மெலிந்தார். ஒரு சமயம் நாற்பத்தெட்டு நாள் சுள் உண்ணா நோன்பு கொண்டார். எவராலும் வேளைக்க இயலாது எனக் கருதப்பட்டவில்லை எளிமையாக வளைத்து மன்னர் மைந்தர் களும் நாணித் தலை குனிய நிமிர்ந்து நின்ற வீரர் கௌதமரைப் போன்று உயர்தவம் மேற்கொண்டவர்கள் துறவியர்கள். துறவியர் தம் உடம்பே தமக்குச் சுமை எனக் கருதுவார், அவர்கள் பற்று வைத்தற்கு உரிய பொருள் உலகில் எதுவும் இல்லை என்பதே உண்மையாகும். பற்று வைத்தால் துறவு வழியாய்த் தாம் பெற்ற தவவலிமை அனைத்தும் பயனற்றுப் போகும். நிலையின் இழிந்தவரும் ஆவார். "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறாப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகையவை யுள்ளவழிப் பற்றா வினையாய்ப் பலபலய யோனிகள் அற்றாய் உழலும் அறுத்தற் கரிதே" என வள்ளுவன் மொழிப் பொருளை வெளையாபதி (பொன்னே போல் போற்றியுள்ளதைக் காண இயலுகிறது. "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர்க்கு உறுவது அறிகென்று அருளி” என்னும் மணிமேகலை மாரியான சான்றாகும், "இருப்பது பொய், போவது பொய் என்று எண்ணு நெஞ்சே! ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே = பருத்த தொந்தி நம்ம தென்று நாம் இருக்க நாய் நரிகள் போய் கழுகு தம்ம தென்று தாம் இருக்கும் தான்" என்று பட்டினத்தடிகள் வேறொரு வகையில் உணர்த்துகிறார். ) "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" இஃது இல்வாழ்வின் ஏற்றம் உணர்த்தும் இனிய குரள். அதன் போக்கில் அமைந்த துறவுக்குறளே, "யான்ௗனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” 346 என்பதாகும். யான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் மயக்கம் இன்றி நீக்குபவர், புகழ் உடம்பாளர் உலகில் உயர்ந்த இடம் பெறுவர், தன்னலம் குறையக் குறைய புகழ்நிலை உயரும். *துக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று உடலில் "நான்" என்ற அபிமானம் மற்றது உடலுடன் தொடர்புடைய பொருள்களில் 'என்னுடையது" என்று அபிமானம் என்னும் அதி சங்கரரின் வாக்கும் ஒப்பு நோக்கத்தக்கது. ''என்னுடையது என்னுடையதே, உன்னுடைய தும் என்னுடையதே" என்று சொல்லுகிறவன் கீழானவன்." "என்னுடையது என்னுடையது, உன்னுடையது உடன்றுடைப்பது என்று சொல் கிறுவன் நடுத்தரமானவன்.* ''உன்னுடைய து உன்னுடையது, நான் = படையதும் உன்னுடையதே" என்று சொல்கிறவன் உயர்ந்தவன். "உன்னுடையதுமன்று, என்னுடையதும் அன்று எல்லாம் இறைவனுடையது என்று சொல்கிறவன்* மெய்யியல் அறிஞன்" எனக் கூறும் சான்றோர் மொழியினையும் ஒப்பிட்டுக் காண்க! முனிவரிடம் சென்று ஒருவன் 'நான் துறவு மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என வினவினான்! அவர் "நான்" செத்தபின் வருசு என்றார். அவன் திசுைத்தான் 'உன்னிடம் இருக்கிற நான் என்னும் ஆணவம் நீங்கிய பின் வா! துறவி முதலில் நீக்க வேண்டியது அதுவாகும் என்றார் என்பது ஒரு குறிப்பு மொழி, "நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இகாரசேர்மின், டேயிர்க்கு அதுநேர்நிறை இல்யே" என்னும் திருவாய் மொழியும் காண்க! "யானே பொய் சான்கொஞ்சம் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே" என்னும் மாணிக்க வாசகர் நோக்கும் உணரத் தக்கதே! "பொருள் ஒன்றுமே இல்லாதவனும், உடுப்பதற்கு உடையோ, தங்குவதற்கு வீடோ இல்லாதவனும், அழுக்கடைந்தவனும், பணரோ, நாடோ இல்லாதவனுமான ஒருவனது வாழ்க்கையும் நலமாகவே கழிகின்றது. இது எவ்வாறு என்று காட்டுவதற்காகக் கடவுள் ஒரு மனிதனை இதோ உங்கள் முன் அனுப்பி இருக்கிறார். அவன் நான் தான். எனக்கு ஓர் ஊர் இல்லை, ஒரு வீடு இல்லை, ஒரு பணியாளும் இல்லை. நான் நிலத்தின் மேலேயே படுத்து உறுங்குகிறேன். எனக்கு மனைவியோ, மக்களோ இல்லை, தரையும், வானமும் ஒரு கிழிந்த கந்தையுமே என் சொத்து. யாதாயினும் ஒரு பொருளை விரும்பி அதனை அடையாமல் இருந்ததோ அல்லது வேண்டா என்று விலக்கிய ஒரு செயலில் இறங்கித் தவித்ததோ கிடையாது. தெய்வத்தின் மீதாயினும் தனி ஒரு மனிதன் மீதாயினும், எப்பொழுதும் குறை கூறியது இல்லை . எந்த மனிதன் மீதும் நான் பொல்லாங்கு சொல்லியது கிடையாது, துக்கத்தினால் முகம் வாடி இருந்ததும் இல்லை , ஒருவனுக்கு இத்தகைய பொருள்களைச் சிந்திக்கவும், சூரிய சந்திர நட்சத்திரங்களைக் காணவும், நிலத்தையும் நீர் நிறைந்த சுடலையும் கண்டு சுளிக்கவும் வசதிகள் இருக்கையில் அவனை ஓர் ஒண்டி என்றோ, நொண்டி என்றோ சொல்லுவது தகாது" என்னும் எபிக்டிடசு அவர்களின் தன் விளக்க மொழி இக்குறளுக்கு வாய்த்த அருமையான விரிவுரையாகும், "பற்றி விடாது இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு" அகப்பற்று புறப்பற்று ஆகிய இருவகைப் பற்றுகளையும் பற்றிக் கொண்டு அவற்றை விடாமல் மயங்குவாரைத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் அலைக் கழிக்கும். உலகறிந்த பெரும் பெரும் சமயத் துறவர்களும் உள்ளார்ந்த நிலையில் சில பற்றுக்களை விட இயலாதவாறு சில வேளைகளில் நடந்து கொள்வதால் அவர்கள் அற நெறிப்பட்ட துன்பத் தாக்குதலுக்கு ஆளாவதுடன் சட்டத்தின் பிடியிலும் சிக்கி எளிய குடி மகனைப் போல அல்லலுக்கு ஆட்பட்டு அலைக்கழிக்கப் படுவதையும் கண்டும் இருக்கிறோம். கேள்வியுற்றும் இருக்கிறோம். பற்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்களும் விடாது பிடித்துக் கொள்ளும். "பொருள்களோடு தொடர்பு விடாமல் அவற்றின் சூழலில் இருந்து கொண்டே பெரியோர்கள் பற்று அற்று இருப்பார்கள். அதனால் அப்பண்டங்கள் உயர்வகையில் பயன்படுவதோடு எல்லார்க்கும் பயன்படும். அல்லாதவர்கள், பற்றினைப் பற்றி விடாதவர்களாய் இருப்பார்கள் அவர்களை இடும்பைகளும் விடமாட்டா!" "தலைப்பட்டார் தீரத் துறந்தார், மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் இராமகிருட்டிணர் இருந்த தனி அறையில், அழகிய இளம் பெண்கள் நால்வரை அரைகுறை ஆடைகளுடன் விட்டு ஆடவும் பாடவும் அவரைத் தொட்டு விளையாடவும் ஏற்பாடு செய்தவர்கள் தோற்றுப் போனார்கள் எத்தகைய நிலையிலும் எந்த நடிகர்விற்கும் அவர் ஆட்படவில்லை' என்பது வரலாற்று நிகழ்வு. பசும்பொன் முத்துராமலிங்கனார் திருவனந்தபுரத்திற்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். அவர் பொழிவைக் கேட்டு அவர் தோற்றப் பொலிவில் மனத்தைப் பறிகொடுத்த, படித்த அழகிய இளைய மலையாளப் பெண் அவரைச் சந்தித்துத் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அப்படியா என் அழகில் தன்னைக் சுவர்ந்தது எது என வினவினார். அவன் உங்கள் அழகிய மீசை என்றாள். அப்படியா? என்றவர் உடனே மீசையை நீக்கியவர். எஞ்சிய வாழ்நாளில் மீசையே வைத்துக்கொள்ளவில்லை, ம மணம் முடிக்கவும் இல் லை. தம் பெருஞ்சொத்தையும் பாடுபடுபவர்கட்கே பகிர்ந்தளித்தார். தீரத் துறந்த தலைவர்களில் அவரும் ஒருவர், அரை குறையின்றி முற்றாகப் பற்றுகளை எல்லாம் விட்டவர் எவரோ அவரே தலைமைத்தன்மை பொய்ந்த துறவர் ஆவர். அவ்வாறு பற்றுக்களை முழுமை ஆக விட முடியாதவர்களிடம் ஒன்றிரண்டு சின்னஞ்சிறு பற்றுகள் இருப்பினும் அவை அவர் சுளை மூடர்கள் ஆக்கித் துன்பம் என்னும் சிறைக்குள் அகப் படுத்தி வெளிவர முடியாத வாழ்நாள் குற்றவாளி ஆக்கிவிடும், முழுமையாகப் பற்று அற்றவரே துறவில் உயர்ந்தோர். மற்றவர்கள் ஆபாச வலைக்குள் அகப்பட்டவர் ஆவர். துறவில் ஐந்திற்கு இரண்டு பழுதில்லை என்றெல்லாம் வைத்துக் கொள்ள இயலாது. முழுக் கிணறு தாண்டினால் தான் தாண்டியவர் ஆவர்; அரைக் கிணறு தாண்டுதல் முக்கால் கினை அ தா கண்டுதல் காயப்படுத்தி வேதனைக்குத் தான் ஆனாக்கும். "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்" உயர் நிலை மாந்தர் பர்ரகளை முற்றாக விட்டு நீங்க வேண்டும். பற்றை விட்டால் கிட்டும் முதற்பயன் இரண்டு, அவற்றுள் ஒன்று பிறவியால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும், அடுத்தது உலகில் நிலைத்தவை எவை? எவை எவை நிலையாதவை என்பது தெளிவாகப் புலப்படும். பிறவித் துன்பத்தை வரிக்கவும், நிலையாமையை உணர்ந்து அகற்றி, நிலைபேறு அடையவும்: பற்றுகள் விடப்பட வேண்டும், உதயகுமரன் ஒரு நாள் மணிமேகலையை அணுகி உன் இளமைக்கும் பேரழகுக்கும் சிறிதும் பொருத்தமற்ற துறவை ஏன் மேற்கொண்டாய் என வினவிய போது மணிமேகலை, "பிறத்தலும் மூத்தலும் பிகானிப்பட்டு இரங்கலும் இறத்தலும் நடகடையது இடுப்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" எனக் கூறியுள்ளதை ஒப்பிட்டு நோக்கலாம், "பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” ஒருவனுக்கு நல்லவர் நட்பே மேலான துணையாகும். நல்ல தூய மன நலம் வாய்க்கப் பெற்றவர்கட்கும் அவரினும் உடையவர் மேலான மனநலம் உடையவர் கூட்டு அமைந்தால் அவர் தம் மன நலத்தை தொடர்ந்து எளிதாகக் காத்துக் கொள்ள இயலும். ஒருவன் பெருமைக்குரியவனாய் விளங்குகிறான் எனினும் அவனும் அவனினும் மேலான பெரியவர்களை உறவாகச் கொண்டு வாழ்வது வலிமைகளில் எல்லாம் சிறந்த வலிமையாகும், சார்ந்தவர் தவறு செய்தால் உரிமையோடு கண்டித்துத் திருத்தும், வழி காட்டிகள் யாருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறதோ அவர்களின் வாழ்வியல் செப்பத்னத எவராலும் கொடுக்க இயலாது. ) 'மனம் சார்ந்ததன் வண்ணம் ஆகும்; என்பது மெய்மொழி அல்லவா" கொடி மரத்தைப் பற்றிப் படர்ந்தால் வலிமையும் பாதுகாப்பும் பெறும் அல்லவா? 'பரு மரத்தை அண்டிய பல்லியும் பிழைக்கும்' என்பது பழமொழி அல்லவா? அலையில் அலைக்கழிவானுக்குக் கப்பலில் வருவானே கைகொடுத்தால் எவ்வளவு பெரிய வாய்ப்பு, தடுக்கி வீழ்வாரை வீழாமல் தாங்கிப் பிடிக்க ஒருவர் துணை அமையுமானால் அஃது அல்லவா காக்கும் துணை, அது போல் பற்றுகளை எல்லாம் விட்டு முழுத் துறவியாக விளங்கும் ஒருவர்க்கும் அவரினும் மேலான வழிகாட்டியும் துணையும் அமைந்தால் தான் அவர் கொண்ட துறவு நெறி தடையின்றி இயங்கும், சான்றோர்க்கு அவரின் மேம்பட்ட சான்றோரும், பண்பாளர்க்கு அவரிடம் சிறந்த பண்பாளரும் சாப்பாய் அமையும் உணவு போல, பற்றற்றவர்க்கும் பற்றற்றவர் உறவு வேண்டும் எனக் கருதும் கருத்துடையவர் வள்ளுவர். தீமைதரும் தொடர்புகள் அற்றவனது பிடிப்பைப் பற்றிச் கொள்க! ஏன்? எத் தீமையும் உன்னைப் பற்றிக் கொள்ளாமல் இருக்க! "பற்றே இல்லாத துறவோன் பற்றினை, விடாப் பற்றாகப் பற்றிக் கொள்க! எதற்காக! தம்பால் ஏதேனும் பற்றுத் தமக்கும் தெரியாமல் இருந்தால், அதனையும் விட்டு விலகி முழுத் துறவர் ஆவதற்கு ஆகும், சமயம் சார்ந்த துறவர்கள் தாம் கொண்ட முழு இறை நம்பிக்கையால் அவன் மீது பற்றுவைத்த அவனைப் பற்றிக் கொண்டனர். ஆகவே தான் மாணிக்க வாசகர், "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! அன்பிaரில் விளைந்த ஆரமுதே! பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே" என்றும் "பாசவேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமாறு அடியனேற்கு அருளிப் பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே! தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே! ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே!" என்றும் பாடுவதையும், அந்நோக்கில் ஒப்பிட்டுச் சிந்திக்கலாம். "இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உடன்னன மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி! அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்" என்றும் காரைக்கால் அம்மையாரின் உருக்கமான வேண்டுதலும் சிந்திக்கத் தக்கதே!' "வேண்டாததை விலக்கு! துன்பமின்றி வாழ்வாய்" "இருப்பதை நான்காணாது துற! மிகப்பெரு மேன்மையுறுவாய்" "இன்மையே துறவுக்கு இயல்பு" "உடடைமை மயக்கம் தரும்” "துறவிக்கு உடம்பும் மிகையே" "செருக்கை அறு சிறப்புறுவாய்! "பற்றை விடு! இல்லையேல் இடும்பை உன்னைப் பற்றும்" "முற்றத் துறந்து முதல்வனாய் இரு!” "பற்றை விடு! துன்பம் நீங்கும் நிலையாமை விளங்கும்” "பற்றற்றானே உனக்குப் பற்றுக் கோடு" 36. மெய்யுணர்தல் அருட்செல்வம் பெற்றார்; புலால் மறுத்தார்; தம் கருமமாம் தவம் செய்தார், உலகம் பழித்ததை ஒழித்தார்; கள் னா rைi காத்தார். உள்ளத்தால் பொய்யாது ஒழுகினார், உள்ளத்தாலும் வெகுளி உள்ளார்: இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்வார் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவார்: செல்வம் பெற்றார் அற்குப் செய்யார்; பற்றற்றான் பற்றினைப் பற்றினார். யார் அவர் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனியர், ஒருமைக்கண் கற்ற கல்வியாளர்: நுண்மாண் நுழைபுலத்தார்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் கேட்ட நு 535ங்கிய கேள்வியர், மனத்தைச் சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உப்ப்ப்பவர், உலகத்தோடு ஒட்ட ஒழுகுபவர். யார் அவர்? அவரே மாசறு காட்சியவர், மெய்ப்பொருள் காண்டவர். அவர் நாடு, மொழி, இனம் சமயம், காலம் என்னும் எந்த வச எல்லைக் கோட்டிற்கும் உட்படாது. விடுதலையில் நின்று கொண்டு, உலகம் உய்யவும் வாழவும், வளரவும் வளம் பெருசுவும் வாழ்வியல் மெய்மைகளை அளந்து வழங்கிய மெய்யுணர்வானர் அவர் மெய் உணர்வின்றி, எப்பொய் உணர்விற்கும் புகவிடம் தாராப் புலமையாளர். அவரே திருவள்ளுவர், உலகில் தோன்றிய பெருமக்களரில் பலர் ""வாழ்வே துன்பமானது; அதனின்றும் கடைத்தேறுவதற்கு முயல்வது பிறந்ததன் பயன்" என வலியுறுத்தினர், ஆனால், திருவள்ளுவர் தாம் வாழ்வு இன்பமானது: அது வாழ்வதற்குரியது" என எடுத்துரைத்தார். திருக்குறளைச் செர்மானிய மொழி பெயர்ப்பில் கற்றறிந்த பேரறிஞர் ஆல்பர்ட்டு சுவிட்சர் இதனைச் சுட்டிக்காட்டி, "இது போன்றதொரு உயர் பேருண்மைகளைக் கொண்டதொரு மெய்யுணர்வுத் தொகுப்பு. உலக இலக்கியங்களில் காண்பது அரிது" எனத்தம் “இந்திய எண்ணமும் அதன் வளர்ச்சியும் சஎன்னும் நூலில் பாராட்டிக் கூறியுள்ளார். திருக்குரனாம் மெய்யுணர்வு நூலைத் பெற்றிருப்பதே தமிழர்க்குத் தனிப்பெருமையாம், திருக்குறளே மெய்யுணர்வு நூல் எனத் தெளிந்து அதனுள் அமைந்த 'மெய்யுணர்தலைக் கற்போம்! உணர்வோம்! நடப்போம்! மெய்ப்பொருளர் ஆவோம்! "பொருளால் இவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லைபொருள்." என்பது பொருள் செயல் வகைக் குறள். “ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் பொருள் சிறந்த பொருளே ஆகும்" = இது பருப்பொருள். இங்கே சுட்டப்படும் "பொருள் அல்லவர்” மெய்ப்பொருள் இல்லாதவர் ஆவார். திருவள்ளுவரே நன்றியில் செல்வம் என்னும் 101-ஆம் அதிகாரத்தில், "பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும் மருளானாம் மானாப் பிறப்பு" என்கிறார். "மருளானாம் மாணாப் பிறப்பு கூறியுள்ளதும் நினைவில் நிற்கட்டும்! "எல்லாமும் பொருளால் ஆகும் என்னும் கருமித்தனம் பெரிய அறியானம் ஆகும்" அடுத்து நினனவில் கொள்ளத் தக்கது நிலையாமை அதிகாரக் குறள், "நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கனட" என்பதாகும். "நிலை பெறாதனவற்றை நிலைபெறுவன் என்று முடிவு செய்யும் சிற்றறிவு சீழானதாகும்." எனக் கூறும் திருவள்ளுவர் இங்கே மெய்யுணர்தலில் "பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு" என்கிறார், அறிவுப் பிறப்பினனாகிய மனிதன் எப்பொருளைத் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறானோ அப்பொருளின் முழுத்தன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும். அழுகிப் போன கனிகளையும் நாசிப் போன வடையையும் காசு கொடுத்து வாங்கி வந்தால் வீட்டில் உள்ளவர்கள் மதிப்பார்களா? நெல்லுக்கும் பதருக்கும் வேறுபாடு தெரிய வேண்டாவா? திருட்டுப் பொருளை வாங்கலாமா! மேல்பூச்சு நகயை உண்மைத் தங்கமாகக் கருதி வாங்கி ஏமாறலாமா? கூடாது அல்லவா? ஆகவே தான் திருவள்ளுவர் அத்தகையவர்களைப் பார்த்து, உங்களை நான் நல்ல அறிவாளர் என்றல்லவா சுருதியிருந்தேன். நீங்கள் சாதாரண மனிதனுக்குக் கூடத் தெரியும் விவரமும் தெரியாத இழிந்த பிறப்பினராக அல்லவா நடந்து விட்டீர்கள் என வேதனைப்பட்டார். ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?' என்றனர், மெய்ப்பொருள் அல்லாத வற்றை மெய்ப்பொருள் எனக் கருதி 1ஏமாந்து விட்டீர்களே! இதைக் கூட உங்களால் தெளிவாக அரிந்து கொள்ள முடியவில்லையானால் எப்படி உங்கள் அறிவை உயர்வாகக் கருத முடியும்? என்றார், பொறுத்துக் கொள்ள வேண்டியதுடன் எதிர்காலத்தில் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து போற்றுவதாக உறுதி கூறிச் சென்றனர். நிலையில்லாதவற்றை நிலையானது என உணரும் மயக்கம் இருந்தால் அத்தகையோன் இழிவானவனாகக் கருதப்படுவான். பருப்பொருள், காட்சிப் பொருளாகும், நுண்பொருள் கருத்துப் பொருளாகும். எப்பொருளிலும் மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் இருக்கலாம், மெய்ப் பொருளைத் தேர்ந்து தெளிவதே அறிவுடைமை, சமய நெறியினர் உயிரின் அறிவு நிலையை 1. இருள், 2. மருள், 3. தெருள், 4. அருள் என நான்காகப் பகுப்பர். அவற்றுள் இருள் பேதம் ஆகும், மருள் புல்லறிவாண்மையாகும், இரண்டும் அகற்றப்பட வேண்டும், தெருள்- அறிவுடைமை அருள் மெய்யுணர்வாகும். அறிவுடைமை மெய்யுணர்வதாக மலர்வதே பிறப்பின் தகுதியை உயர்த்தும். "பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்” இது பயனில சொல்லாமையில் இடம்பெறும்: குறள். இங்கே மாசறு காட்சியவர் தன்rையைச் சுட்டுகிறார். "மயக்கம் தீர்ந்த குற்றம் இல்லாத அறிவினர் பொருளற்ற சொர்களை மறந்தும் சுரா மாட்டார், "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள்" "கருத்தின்னா செய்தவக் கண்கயம் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்" இவை இரண்டும் இன்னா செய்யாமை அதிகாரத்தில் இடம் பெறும் குறள்கள். | "பெருமைதரும் பொருள் பெறுவதாயினும் பிறர்க்குத் தீனம் செய்யாமையே குற்றம் இல்லாதவர் கொள்கையாகும்." "சினம் மிகுந்து தீமை செய்தபோதும் அவர்க்குத் திருப்பித் தீமை செய்யா திருத்தலே குற்றமற்றவர் கொள்கை ஆகும்." எனக் கூறுவது போல் இங்கே. "இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு" எனக் கூறுவதிலும் "மாசறு காட்சியவர்" இடம் பெற்றுள்ளார். எதிலும் மயக்கத்திற்கு இடம் இல்லாதவாறு மிகத் தெளிவாக ஆராய்ந்து உண்மைப் பொருளைக் கண்டு கொள்ளும் குற்றமற்ற மெய்யறிவினை உடையவர்கட்கு அவர்கள் பால் அமைந்துள்ள மெய்ப்பொருள் அறியும் திறன், அறியாமை இருளையும் அகற்றும், நல்லின்பத்தையும் நல்கும், மயக்கமற்ற நல்லறிவினர் அறியாமை நீங்கி இன்புறுவர். அறிவில் மருள் இல்லையேல் வாழ்வில் இருள் இல்லை, கூதிர்ப் பருவக் காலத்தில் இருந்த இருள் மூட்டம் அகன்று முன் பனப் பருவம் வருவதைப் பகர்கிற கம்பன், "தீவினன நல்வினை என்னத் தேற்றிய பேய்வினைப் பொருள்தனை அறிந்துபெற்றதோர் ஆய்வனை மெய்யுணர்வு அணுக, ஆசஅறும் மாயையின் மாய்ந்தது மாரிப் பேரிருள் என்கிறார். உண்மை மெய்யறிவு தோன்ற மாயை மாய்ந்தது போல, முன்பனிக்காலம் தோன்ற மாரிக்காலத்து இருள் மாய்ந்தது என்பது கருத்து. வள்ளுவர் கருத்திற்குக் கம்பர் காட்டும் காட்சி அருமை! "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” இது தெரிந்து தெளிதல் அதிகாரக்குறள், " ஆராயாமல் ஒருவனைத் தெளிவதும், பின்னர் தெளிந்தவன் மேல் ஐயப்படுவதும் நீங்காத்துன்பம் தரும்" என்கிறார். "நடலகத்தார் உண்டென்பது இல்யென்பான் எவையத்து அலகையா வைக்கப் படும்" இஃது புல்லறிவாண்மையில் இடம் பெற்றுள்ள குறள். "உயர்ந்தோர் உண்மை என்பதைப் பொய் என்பவன் உலகில் பேயன் என்று சொல்லப்படுவான்” பான்கிறார். ஆனால் அவரே குறிப்பறிதலில் "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் . தெய்வத்தோடு ஒப்புக் கொளல்" என்கிறார். "ஒருவன் உள்ளத்து உணர்வை ஐயமின்றி அறிய *வல்லவனைத் தெய்வத் திற்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும்" எனக் குரிப்புணர்வைப் போற்றுவது போல் போற்றும் குளே, "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து" என்பதாகும். கல்லைக் கண்டாலும் கடலைக் கண்டாலும் கண்டதையும் கற்றதையும் கொண்டு, தம்பட்டறிவையும் இணைத்து நுண்ணறிவுடன் எதனையும் ஆய்வுக்கண் கொண்டே நோக்கி, ஆராய முற்படுபவன் முதலில் முன்னையோர் ஆய்வச் சோதித்துப் பார்ப்பான். அவர்கள் கொண்டிருந்த ஐயங்களை முதலில் களைய முற்படுவான், தனக்கு ஏற்பட்ட ஐயங்களை எல்லாம் களைந்து நிறைவான முடிவிற்கு வராமல் ஆய்வை நிறுத்தான். அவனுக்கு ஒரு குண்டூசியும் ஆய்வுப் பொருளாகலாம்! விண் == சுமும் ஆய்வுப் பொருளாகலாம். அவனுக்கு எல்லாம் ஒன்றே! மதுரையிலிருந்து சென்னை செல்ல மிக நேரம் ஆகுமா? தில்லி செல்ல மிக நேரம் ஆகுமா? சென்னை செல்லத் தான் நேரம் மிகுதியாகும் / சென்னையிலிருந்து மிகக் குறைந்த நேரத்தில் தில்லி சென்று விடுவேன் என்பதோடு நிறுத்தாமல் சென் 303 செல்வதற்குள் சிங்கப்பூர் சென்று பணி முடித்துவிட்டுத் திரும்பி விடுவேன் என்றானாம் அவன் சொன்னது பொய்யா? பொய்யா? மெய் தான், எப்படி மதுரை- சென்னை, தொடர் வண்டி; சென்னை - தி டில்லி: சென்னை -சிங்கப்பூர் வான வூர்த்தி அப்படியானால் மெய்தான். உலக ஆய்வாளன் - அறிஞன் விண் ணசு ஆய்வாளன் மெய்யறிவாளன். இனிக் குறளுக்கு நேர்பொருள் காண்போம், ஐயத்திலிருந்து விடுபட்டுத் தெளிவடைந்த மெய்யுணர்வாளர்க்கு, அவர் வாழும் மாகாணவகத்தை விட விண்ணுலகம் மிக நெருக்கமுடையதாகும். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சங்கச் சான்றோர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வெளிதிரி தரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே" எனப் பாடிய பாட்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது தக்கசான்று, இன்றும் மெய்மைகாணும் அறிவியல் அறிஞர்கள் விண்ணாய் வில் தலைப்பட்டு எட்டமுடியா உயரத்திற்குச் சென்று கொண்டு இருப்பது நேரடிச் சான்றேயாகும், "சுவைஒளி நாறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு" என்னும் நீத்தார் பெருhைtt:க் குறள் வழியாக, "சுவை ஒளி, தொடுகாணர்வு, ஓசை, மணம் என்னும் ஐந்தின் விரிவுகளைத் தெரிந்த பெருமக்கள் இடத்தே தான், உலக இயக்கம் அடங்கியுள்ளது" என ஐம்புலன்களின் விரிவை வியந்து போற்றிய வள்ளுவர் இங்கே, "ஐயுாைர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு" என்கிறார். சுலை முதன்மையில் மாநில முதன்மை பாராட்டத் தக்க உயர்ந்த வெற்றிதான். துணை வேந்தரே பாராட்டினார். பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தான். அவன் வெற்றியை மனம் உவந்து பாராட்டிய து53:33 வேந்தரே அவன் சி எண் :33ப்பத்தைத் தள்ளிவிட்டுக் குறிப்பு எழுதினார். இப்பணிக்கு முதுகலைப் படிப்பு மட்டும் போதாது. உன் பாடத்தில் அறிஞர் பட்டம் பெற்ற பின் வா! என வேண்டியது போலவே வள்ளுவர். மெய்யறிவு இல்லாதவர்க்கு ஐம்புலன்களால் உண்டாகும் ஐவகை அறிவும் சிறப்பாக ஒருங்கே வாய்ந்திருந்தாலும் அவற்றால் பயன் இல்லையே என்கிறார். *மெய்யறிவின் தன்மை எவை எனில் 'தன்னலம் இன்மையும் தீமை செய்ய நாதலுமே' ஆகும்” என்கிறார் இராக்கின், "உலகின் மெய்யறிவை எல்லாம் பிழிந்தெடுத்தால் இரண்டே சொற்களில் அடக்கி விடலாம் - அவை 1. பொறுத்திரு, 2, நம்பிக்கையுடன் இரு என்பனவாகும் என்கிறார். அலெக்சாந்தர் (மாசு என்னும் மெய்யுணர்வாளர். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இஃது அறிவுடைமையில் இடம் பெற்றுள்ள குறள். இதன் வழியாக, "எந்தப் பொருளைப் பற்றி எவரெவர் கூறும் கேட்டாலும், கூறுகிறவர் யார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் அவர் சொன்ன பொருளில் அடங்கியுள்ள உண்மைப் பொருளைக் கண்டுணர்வதே அறிவாகும்' என அறிந்து கொள்கிறோம். இது சொல்லில் பொருள் கா 3ம் அறிவு என னவத்துக் கொள்ளலாம். "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனக் கூறுவதால் இது பொருளில் பொருள் காணும் அறிவு எனக் கொள்ளலாம், "அம்பு - நேராய் அழகாய் இருக்கும். ஆனால் உயிரை எடுக்கும், யாழ் வனைந்தும் நெளிந்தும் இருக்கும், ஆனால் உயிரைத் தவிர்க்க எனக்கும் இசை இன்பத்தை வழங்கும், தோற்றத்தை வைத்து அன்று, செயலை வைத்தே முடிவு செய்ய வேண்டும்" என்பதே குறள் நொ. எந்தப் பொருளையும் அதன் வடிவத்தையோ நிறத்தையோ கருத்தில் கொள்ளாது. அப்பொருளில் அமைந்துள்ள தனித் தன்மையைப் பல்வேறு கோணங்களில் கன டுருவி நோக்கித் தீர்க்கமாக ஆராய்ந்து அதன்பால் அமைந்துள்ள மெய்மைத் தன்மையைக் கண்டுணர்வதே மெய்யுணர்தல் ஆகும், கடவுளைக் காண முடியுமா என இராம் கிருட்டிணரிடம் வினவினார் நரேந்திரர், அவருடைய இயத்தைப் போக்க அவரைக் குளத்திற்குள் தள்ளி விட்டார். நீரில் மூழ்கிய அவர் முயன்று கை கால்களை அசைத்து நீந்திக் கீரை சேர்ந்தார். நீரில் வீழ்ந்த நீர் வெளிவர எவ்வளவு முயன்றார். அது போல் முயன்று பாரும் கடவுளைக் காணலாம்' என்றாராம். மெய்ப்பொருள் நாயனார் முத்து நாதனின் போலி வேடத்தை உணராமை மெய்ப்பொருள் ஆகுமா? "ஞானிகள் முயல் வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று: உலகத்தை அறியவே ஆகும்" என்கிறார் சுதே, "நாள்தோறும் வாழ்க்கையில் நம்முன் கிடப்பதை அறிவதே முதலாவது மெய்யறிவு” என்கிறார் மில்டன். "உனக்கு ஞானம் வேண்டுமானால் நீ தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போது காற்றுக்கு எவ்வளவு தவிப்பாயோ அவ்வளவு தவிப்புடன் ஞானத்துக்கு ஆசைப்படும். அப்போது தான் உனக்குக் கிடைக்கும். நற்குணங்களையே நான் ஞானம் என்று கூறுவேன்" என்னும் சாக்ரட்டீசு அவர்களின் கருத்தையும் ஒப்பு நோக்குக." "கற்றுாண்டு மெய்ப்பொருள் கண்டார்தலைப் படுவர் மற்றுாண்டு வாரா நெறி" ஒருவர் எத்துறை சார்ந்த அறிவுடையவரோ அத்துறை சார்ந்த நூல்களை எல்லாம் கசடறக் கற்று அவற்றில் அடங்கியுள்ள மெய்ப்பொருளைக் கண்டு தெளிய வேண்டும். அவ்வாறு தெரிந்த மெய்யுணர்வாளார் தம்மால் கடலகிற்குப் புதிது புதிதாய் எதனை எல்லாம் கொடுக்க இயலுமோ அவற்றைக் கொடுப்பதுடன், இதுவரையில், உலகு காணாப் புது நெறிகள் எவற்றை எல்லாம் அவர் கண்டு தம் ஆய்விற்குப் பயன் படுத்தினாரோ அந்நெறிகளையும் வழங்குவாரே பெருஞ் சிறப்பிற்கு உரியவர் ஆவார். முன்னையோர் அறிந்தவற்றை அறிதல் முதல் நிலை; மேலும் தாமே அறிய முற்படுதல் அடுத்த நிலை; பின் னையோர் அத்துறையில் அறிவு பெற நல்வழி காட்டல் உயர்நிலை, அதுவே மெய்ப்பொருள் கண்டார் நிலை ஆகும், உலகம் சுழலும் இயக்கம் உடையது என்பதும், அது உருண்டையானது என்பதும், நாள்மீன் தன்னொளி உடையது என்பதும், கோள்மீன் கதிர்ஒளி கொண்டு ஒளி செய்வது என்பதும் 'வானம்' காற்றும் வீசாவெளி என்பதும் நாற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்தது அண்டம் என்பதும் பழந்தமிழ் மெய்யுணர்வாளர் கண்டு சுண்டு உரைத்தவை ஆகும். புவி ஈர்ப்பும், அணு ஆற்றலும் மின்னாற்றலும், வானொலி, தொலைக்காட்சி, கணினி, இMைA யதளம், ஆயன வும் மெய்யுணர்வாளர்கள் அவர்கள் தோன்றுவதற்கு முன் உலகத்தவர் காணாதவற்றைப் பற்பலர் கண்டு கண்டு உரைத்தவையே என்பதை ஆழமாக எண்ணிப் பார்த்தால் இக்குறளின் மெய்ப்பொருள் விளங்கும்! "ஈண்டுவாரா நெறி மெய்ப்பொருள் கண்டார் தலைப் படுவர் என்பதாம்” இனி புத்தர் அருகர் சாக்ராசு, காரல் மார்க்குசு, ரூசோ போன்ற பெருமக்கள் கண்டுணர்ந்து உரைத்த புது நெறிகளும் அதற்கு முன் உலகம் காணாதவையே ஆகும். "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.” இது ஒரு பேதைமையில் வரும் ஒரு குறள். "அறியாமை ஒன்றற்கே ஆட்பட்டுச் செயல்புரியும் அறிவிலி, பின்வரும் எக்காலமும் துன்பம் என்னும் புதைசேற்றுள் புகுந்து அழுந்துவான்" எனக் கூறுவதும் மனத்தில் இருக்கட்டும். "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இது கல்வி அதிகாரக் குறள். "ஒருப்பட்ட உள்ளத்தோடு ஒருவன் கற்ற கல்வி அவனுக்குப் பின் வரும் வாழ்நாள்களில் எல்லாம் சிறந்த பாதுகாப்பாய் அமையும்" எனக் கூறும் கருத்து வழிப்பட்ட வெண்பாவே. "ஓர்த்துகடள்ளம் உள்ளது உணரின், ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு" ஆராய்ச்சிக்கு முதற்கண் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி ஆய்வுப் பொருளில் நி னல் கொள்ளச் செய்ய வேண்டும், வேறு குறுக்கீட்டிற்கு இடம் தந்து விடல் கூடாது. அவ்வாறு ஒருமுகப் பட்ட உள்ளத்தால்! ஒருவர் உண்மைப் பொருளைத் தானே கண் டு கொள்ளாமல் எக்காரணம் கொண்டும் ஆய்வினை இடையில் விடல் ஆகாது. அப்படிக் கண்டு விட்டவர்க்கு அதன் பின்னர் அறியாமையோ ஐயப்பாடோ வரவே வராது. அவரை எவரும் குழப்பவும் இயலாது. தான் கண்ட மெய்ப்பொருளில் தெளிவடைந்தவரை எவரும் அசைக்கவும் இயலாது. உள்ளம் உண்மையை உணர்ந்து கொண்டால் அறியாமை அண்டாது. மெய்யுணர்வாளர் சுண்டதே காட்சி கொண்டதே கோலம் என இருப்பவர் அல்லர் எவர் எதைச் சொன்னாலும் தீர விசாரித்துத் தம் அறிவிற்கு ஏற்புடையதாக இருந்தால் தான் உண்மை என ஒப்புக் கொள்வர். இவர்கள் யாரோ எழுதியதைக் கண்ணை மூடிக் கொண்டு சிந்திக்காமல் மனப் பாடம் செய்து தேர்வு எழுதிவிட்டு மறந்து போகிறவர் அல்லர். அவர்கள் கிளிப்பிள்ளை போன்று சொல்லிக் கொடுத்ததைச் சொல்பவர் அல்லர்; அன்னம் போன்று அல்லதை விலக்கவும் நல்லதைப் பற்றவும் தெரிந்தவர். கிடைக்கும் இடத்தில் அறிவுப் பொருளை அள்ளிக் கொண்டாலும் ஆவினைப் போல் பின்னர் தன்குமென்று அசைப்போடுபவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே, அவர்கட்குக் கண்டுணர்ந்த மெய்பையில் மீண்டும் அறியாமை ஏற்பட வழியே இல்லை. "உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவேளை கடள்ளாமும் தானும் உடனே இருக்கினும் உடள்ளம் அவனன நடருவு அறியாதே" என்னும் திருமூலர் பாடலும் ஒருவரிச் சான்றாகும், அகத்தியப் படத்தில், இராம் இயக்குனர் தாண்ட காரணியத்தை அடைந்தபோது அங்குள்ள முனிவர் இயல்பாகக் சும்பர். "தெரிஞ்சுறு நோக்கினர் செய்த செய்தவம் அருஞ்சிறப்பு உதவ நல்லறிவு நரகதர விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந்துயர்ப் பெருஞ்சிறை வீடு பெற்றனைய பெற்றார்” என்றனர். அங்குள்ள முனிவர்கள் தாங்கள் செய்த தவம் உதவ மெஞ்ஞானம் தக்க சமயத்தில் கைகொடுக்க, இராமனைத் திருமால் என்றே உணர்ந்து வீடு பெற்றாரை ஓத்தனர். ஆகவே, அவர்கள் உள் ளத்தால் ஆய்ந்து தெரிந்த உண்னமனயக் கண்டவர்கள் பிறப்பாம் அறியாமையை உள்ள வேண்டா தவர்கள் ஆவர்; என்பது ஒப்பு நோக்கத் தக்கவையாகும். "பிறப்பெண்ணும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு" எனக் கூறும் வள்ளுவர் இவ்வதிகாரத்திலேயே "மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனக் கூறியதும் நினைவில் இருக்கும். அதனுடன் அறிவுடைமையில் இடம் பெறும் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு" என்னும் இரண்டு குறட்பாக்களையும் கவனத்தில் கொள்வோம்! அறிவுடைமை அதிகாரத்தில் இரண்டு காணும் அறிவையும் இம்மெய்யுணர்தல் அதிகாரத்தில் இரண்டு காணும் அறிவையும் காணுகிறோம், எதைக் காண்பது அறிவு பொருள் காண்பது அரிவு: (பொருள் காண்பது அறிவு என்னும் தொடரும் இந்நான்கு குறட்பாக்களிலும் ஒன்று போலவே அமைந்துள்ளது. இனி எப்பொருள் காண்பது அறிவு என வினவ வேண்டியுள்ளது. இங்கே தான் மெய்ப்பொருள், நுண்பொருள் செம்பொருள் என்னும் மூன்று வகைப் பொருள்களை வள்ளுவர் காட்டுகிறார், அதிலும் இவ்வதிகாரத்தில் 'மெய்ப்பொருள், செம்பொருள் இரண்டினைக் காணும் அறிவே சுட்டப்படுகிறது. அறிவை நுண்மாண் நுழைபுலம்' எனக் குறிப்பwசர் வள்ளுவர் என்பதும் நினைவில் இருக்கட்டும், நுண்பொருள் காணும் அறிவு மெய்ப்பொருள் காணும் அறிவு செம்பொருள் காணும் அறிவு எனவனர் நிசபயில் பரி:31சப்படுத்தலாம். மெய்ப்பொருளில் நுண்பொருளும் உண்டு; செம்பொருளில் நுண்பொருளும் மெய்ப்பொருளும் உண்டு. ஆகவே செம்பொருள் நுண்னியது, மொய்மையானது செம்மையும் ஆனது. செம்பொருள் காணும் அறிவே உயர் அறிவாகும். என்பதும் நம் பார்வையில் இருக்கட்டும். இனியவை கூறலில் "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்" "இரக்கம் சிவந்ததாய் வஞ்சனை இல்லாததாய்ச் செம்பொருள் 152ணர்ந்த பெருமக்கள் வாயில் இருந்து வரும் சொல்லே இன்சொல்" என இலக்கணம் உரைத்தலையும் மனத்தில் கொள்வோம். "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் | செம்பொருள் காண்பது அறிவு" என்னும் பாவின் பொருள் தெளிவாகிவிடும். பிறந்தோர்! பிறந்தோம் உண்டோம் உறங்கினோம் வளர்ந்தோம் தேய்ந்தோம் என வாழ்வு முடிந்து போவது ஒரு பயனற்ற பிரப்பாகிவிடும். பிறந்தோர் சிறு சுக வேண்டும். கற்பவை கசடறக் கற்று அறியாமை இருளை அகற்ற வேண்டும். அறிவைப் பெருக்க வேண்டும். அரிபவ நல்வழி காட்டும் ஒளிவிளக்கு, நன்றின்பால் உய்ப்பது நல்லதில் நுழைந்தோர் தொட்ட துறையில் எவ்வளவு உயரமுடியுமோ அவ்வளவு உயர்ந்து, சிறப்புப் பெற வேண்டும் அச்சிறப்பென்னும் செம்பொருளைக் கண்டு உணர்ந்து காட்ட வல்லவராக நாம் தகுதி பெற்றால் தான் நாம் மெய்யுணர்ந்தவர் ஆவோம். "மெய்மையாம் உழவைச் செய்து விருப்பென்றும் வித்தை வித்திப் பொய்காயாயாம் களைக்கப் பொங்கி பொறைஎனும் நீரைப் பாய்ச்சித் தம்களையும் நோக்கிக் கண்டு தகவு எனும் வேலி இட்டுச் செம்மையின் நிற்பா ராகிற் சிவகதி விளையு மாறே!" எனும் நாவுக்கரசரின் மந்திர மணிமொழி ஒப்பு நோக்கத் தக்கதே! "சார்புடணர்ந்து சார்பு கொடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்" இக்குறள் மெய்யுணர்வாளரின் உ எ கியல் சார்பு எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் பாடாகும். மெய்யுணர்வாளர் 'தாமரை இலையின் மருவுநீர் போல" தம் நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும். தாமரை இலை மேல் நீர் நிற்பினும் ஒட்டாது. அதுபோல் மெய்யுணர்வாளர் குடும்பம், உற்றார், உரவர், நண்பர் அயலார் எவரையும் விட்டு விலகித் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கூடாது. இணைய வேண்டியவற்றில் இணைய வேண்டும். வேண்டாதவற்றில் விலகி நிற்க வேண்டும். மெய்ம்மையைப் பற்றிப் பொய்ம்மையை விட்டு விலகுபவரே மெய்யு3ர்வாளர். ஆனால் உரிமையோடு வழிகாட்டுயராயும் இருத்தல் வேண்டும், குறுகிய நோக்கம் கொண்ட சாதி, சமய இன தொழில் சார்புகளை அறிந்து விலக்கவும் வேண்டும், ஆதலால் மெய்யுணர்வானார் தாமும் மக்களில் ஒருவரே நான்பதை உணர்ந்து, அவர்கள் இன்ப துன்பங்களில் சுமந்து கொண்டு மக்களோடு மக்களாக வாழவேண்டும்! தம் மெய்யுணர்வுக் கொள்கைகளும் கோட்பாடுகளும் கெடாமல் இணைந்து நிற்க வேண்டும். தாம் உணர்ந்த மெய்மைகளை மக்களுக்குப் பரப்பி நல்ல வழி காட்டியாய் விளங்க வேண்டும். அந்நிலை உருவாதல் நாட்டுக்கு நலமாம், அவர்கட்கும் அத்தகைய சார்பால் எத்தீங்கும் நேரிடாது. துன்பம் சாராமல் வாழ அதுவே நல்வழி. "என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மள்றுளார் அடியார், அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்” எனும் திருத்தொண்டர் புராணப் பாடலும் "ஆறிரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து, மற்றுன் வீறுயர் முடியும் சூடி, விழுநிலக் கிழமை பூண்டு சாறு அயர்ந்து இரைவேற் பேணி சார்பறுத்து உயர்த்தி என்று கூறினான் கதிர்கள் பொங்கும் குளிர்மணி முடியி னானே" என்னும் சீவக சிந்தாமணிப் பாடலையும் ஒப்பிட்டு நோக்கலாம். தகுதி அற்ற பொருள்களின் மீதும் தகுதி அற்ற உயிரினங்களின் மீதும் பற்று வைப்பதால் துன்பமே விளையும், தகுதியு 53டய பொருள்களையும் தகுதியுடைய மக்களையும் வெறுத்து ஒதுக்குவதாலும் துன்பமே விளையும், அறிவின் திறத்தால் நல்லது எது தீயது எது என்பதைத் தெளிவாகக் கண்டு உணர்ந்து நடக்க இயலாக் குழப்பத்தாலும் துன்பம் விளையும் ஆகவே, துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டுமானால் விருப்பு வெறுப்பு தெளிவின்மை ஆகிய முப்பகைக்கும் ஆளாகாமல் நம்மை ஆண்டு கொள்ள வேண்டும் என வழி காட்டும் குறளே, "காமம் வெகுளி, மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்" எனும் மெய்யுணர்வுக் குறள். "காமம் இல்லையானில் கடுங்கேடெனும் நாமம் இல்லை நரகமும் இல்லையே" என்னும் கம்பர் கருத்தும் ஒப்பிட்டுச் சிந்திக்கற்பாலதே! "சீகர னதடுய உடுக்ககையார், சீரோடு வலம்புரி புகாரையும் வாய்நகரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய நான்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பாபடடன் கழிந்த தாண்டியர்; இசுபொரிடு செற்றம் நீங்கிய மனத்தினார் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் பரம்பாகிய தாமையர், காம்மொடு கடுஞ்சிசனம் கடிந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பிகனார், மேவாரத் துனியில் காட்சி முனிவரர்” எனத் திருமுருகாற்றுப் படையின் நக்கீரர் காட்டும் முனிவர் வள்ளுவர் காட்டும் மெய்யுணர்வாளரோடு ஒப்ப நோக்கத்தக்கவரே ஆவர். "மெய்ப் பொருளே பொருள்" " இப்பிறப்பை மாண்பு அமைபிறப்பாக்குக!” "ஐயத்தின் நீங்கித் தெளிக!” "தெளிந்தார்க்கு வானமும் அண்மையே” "பொருள்களின் தன்மையை உணர்க” "எதிலும் மெய்ப்பொருள் காண்க" "கற்பன கற்று மெய்ப்பொருள் காண்க” "உள்ளத்தால் உண்மை உணர்க! "பேதைமையை அகற்றுக” "செம்பொருள் காண்க!” "நற்சார்பை உணர்க” "தீச் சார்பை நீக்குக!" "காபமும் நோய் தரும்” "வெகுளியும் நோய் தரும்” "மயக்கமும் நோயைத் தரும்” "நோய் தருவனவற்றை நீக்கி வாழ்க! 37. அவாவறுத்தல் "வயல்களுக்குக் கேடு களைகள் மனித இனத்திற்குக் கேடு கோவணாண்டிக் கோலப்பமா, சடை முடியோ, அழுக்கேறிய உடம்போ பட்டுணி கிடத்தலோ, மண்மீது புாள்தலே மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதோ, ஆ 39 ச யை வெல்லாத ஒருவரைத் தரப்பன் ஆக்கி விடாது. அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் வெருட்டப் பட்ட முயனப் போல் ஓடித் திரிகிறார்கள். ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படை ஆசையை வென்ற மனிதனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது. மனிதனைத் துன்பத்திற்கு ஆளாக்குவது பொருள் அன்று. பொருளிலும் அதிகாரத்திலும் உள்ள ஆனசயும் பற்றுமே ஆகும். அவற்றைப் பற்றில்லாமல் பயன்படுத்துபவர்களே மனித இனத்தின் ஒப்புரவாளர்கள். ஆசை என்னும் கொடி முளைத்து எழுந்து நிலைத்துப் படர்கிங் து, இக்கொடி முடிய விடிய 133 த ர் கண்டதும் மெய்யறிவின் துணையால் இதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்" என அவாவினால் எற்படும் கேடுகளையும் அனாவை நீக்க வேண்டியதன் கட்டாயத்தையும், அவா அற்றால் பெறும் நாபங்களையும் புத்தர் விரித்துரைக்கிறார். #வேட்கை விரும்பி நுகர்ச்சி அராமையே அவா" என்கிறது மணிமேகலை, தேவதை என்வனவு நிரப்பினாலும் புராத (வாட்டியாய் இருப்பது தான் அவா. திருவள்ளுவர் அறன் வலியுறுத்தலில், "அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றார், "பொறானம், அசை, சீற்றம் கடுஞ்சொல் என்பவற்றை நீக்குவதே அறம்" என்றார், நீக்க வேண்டிய நான்கு மாசுகளில் அவாவும் ஒன்றாகும். என்றவர் தெரிந்து ளினையாடலில் "அன்புஅறிவு தேற்றும் அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு" என உரைக்கிறார். “ அன்பும் அறிவும் தெளிவும் ஆசை இன்மையும் ஆகிய இவை நன்கு அமைந்தவனையே பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும்” என்றார், அவா அற்றவன் நம்பிக்கைக்கு உரியவனாய் இருப்பான் என்பது கருத்து. "ஆசைக்கோர் அளவில்லை" என்றார் தாயுமானவர், " ஆண்டுகள் செல்லச் செல்ல ஒவ்வொருவரும் முதுமை அடைகின்றனர். ஆனால் ஆசை மட்டும் எப்பொழுதும் இன டைமயாய் இருக்கிறது. ஒவ்வொருவருடைய தேவைக்கும் தக்கபடி புவியில் போதுமான அளவு பொருள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரின் பேராசைக்குத் தக்கபடி போதுமான அளவு பொருள் இல்லை" என்பது காந்தியடிகளின் கூற்று. ஆசை வலையில் ஒருவர் சிக்கிக் கொண்டால், அவர் எவ்வளவு பாடுபட்டு உழைத்து முயற்சி செய்து எத்தனை தான் தேடினாலும் தொகுத்தாலும் என்ன பயன்? தேவை நிரம்பினாலும் வேட்கை நிரம்பப் போவது இல்லை, மக்களைப் பற்றும் கொடு நோய் அவா? என்ன செய்வது? எப்படியும் இதனை நீக்கித் தீர வேண்டும் இது ஒரு புரையோடிப் போன புண், ஆகவே அSMS மருத்துவம் செய்தாக வேண்டும் இலையேல் நெருப்பில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் 'அவா வறுத்தல்' எனத் தலைப்பிட்டு (நெறிப்படுத்த முயலலானார். 'அழகான பொருள்களைக் கண்டு ஆசைப்பட்டு அதை எடுத்துக் கொண்டாலும் மன நிறைவு உண்டாவது இல்லை. அவன் ஆசை மேலும் மேலும் பெருகிக் கொண்டு போகிறது, நிறைவுறாத ஆசை உந்த அவன் பிறர் பொருளை நச்சிக் கொண்டே இருக்க, அவன் மேலும் திருடத் தொடங்கி விடுகிறான். ஆசைக்கு அடிமையானவன் அதிலிருந்து விடுதலை! அடையான் என்கிறார் மகாவீரர். தே31 வ உள் ளதற்கு ஆசைப்பட்டாலும் தேவையற்றதற்கு ஆனசப்படலாமா? பயனற்ற பொருளுக்கு ஆசைப் படலாமா? தேவைக்கு மேல் விரும்பான வேண்டும், அடுத்துத் தே33333யக் குறைக்க வேண்டும், தன் தே:31வக்கும் விரும்பா நிலை அதுவே அவா அறுத்த நிலை. பிறர்க்கு நன்மை செய்யும் பொருட்டுத் துன்புறலாம், தந்நலத்தைப் பெருக்க ஏன் துன்புற வேண்டும். வீடுகளில் தேவையற்ற எத்தனை வகையான பொருள்களைத் தொகுத்து வைத்துள்ளோம். அவற்றில் பயன்பொருள்கள் அதிகமா பகட்டுப் பொருள்கள் அதிகமா? எண்ணிப் பாருங்கள்! "தன்னலம் கருதிய அவா இல்லாதவர்களே தொண்டர்கள், துறவர்கள் அருளானர்கள், மெய்யறிவாளர்கள் ஆவர்" "உணவில் விருப்பமுள்ள மீன்; இரையால் மறைக்கப் பெற்றிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை, ஆசைப்பட்டு உணவை உண்ணப்போய் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறது" என்பது வி துாநெரி, "கடம்பு மாலை அணிந்த பெரும் நின்னிடம் யான் வேன்காடுவது பொன்றும் பொருளும் போகமும் அய்ய அன்பும் அருளும் அறமும் ஆய இம்மூன்றுமே! என திருப்பரங்குன்றத்து முருகன் திருமுன் கடுவன் இளவெயினனார் வேண்டும் வேண்டுதலே விரும்பத்தக்கது. "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும்பிடவே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்னும் சேக்கிழார் கூற்றும் நினைந்து போற்றத் தக்கதாகும். "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தபோதுப் பிறப்பீனும் கவித்து" என்பது முதற்குறள். . "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” எனத் துறவில் தோற்றுவாய் செய்தவர் திருவள்ளுவர், "ஒருவன் எந்த எந்தப் பொருள்களில் இருந்து "வேண்டா வேண்டா' என விடுதலை அடைகிறானோ அந்த அந்தப் பொருள்சுளால் எல்லாம் அவனுக்குத் துன்பம் இல்லை" என்பது தாடிய பொருள். அப்படியானால் "யாதனின் யாதனின் நெருங்கியான் நோதல், அதனின் அதனின் உளன்” என்பது சொல்லாமலே விளங்கும் உண்மை தானே. ஒருவனை என்றும் அறியாமைப் படுகுழியில் தள்ளித் துன்பமே அடையச் செய்து கொண்டிருப்பதற்கு முழுமுதல் காரணமாய் அமைவது ஆசையேயாகும். ஆகவே ஆனச இன்பம் தரும் என்று கனவில் கூட எண்ணிவிடாதீர். ஆசையே எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் விட்டு நீங்கா அறியாமை ஆகிய துன்பத்தை உண்டாக்கும் விதை! ஆகவே ஆசையாகிய துன்ப விதை முளைக்க வாய்ப்பு வழங்கி விடல் ஆகாது. எவ்வுயிரும் என்றும் துன்புறக் காரணம் அவாவே ஆகும். "இச்சைவித்து உகுத்துழி யான் கானப் பெயரிய நச்சு மாமரம் நளிமிக முளைத்துப் பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் பாவப் பஃறாழ் பரப்பிப் பூவெனக் கொடுமை அரும்பிக் கடுனம் மலர்ந்து துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து தமக்கும் பிறர்க்கும் உதவாது இமைப்பிற் கழியும்" ""எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் காழுகாயாப் பலப்பமும் ஈன்றிடும் வித்து இல்லா அவாவே அப்பவத்தின் உறுதுன்பு அறிந்தோன் உதியாமை அப்பால் மற்றும் வேண்டுமோ? வேண்டான் அவ்வுதியாகம் சொல்லார்ந்து இலங்கும் வேண்டாமை தன்னை வேண்டத் துணையின் வரும்! என்னும் குசேலோ பாக்கியானப் பாடல்கள் நல்ல சான்றாகும். "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்" இது அவாவை அகற்ற வழியுரைக்கும் குறள். இதில் வரும் பிறவாமை, அவாப் பிறவாமை; ஆசையைத் தோன்ற விடாமையே பிறவாமை ஆகும். ஒரு பொருளைக் காண நேரிடுகிறது. முதற்கண் மணமும் தோற்றமும் நம் உள்ளத்தை ஈர்க்கிறது. அதனை வாங்க வேண்டும் என்னும் ஆசை அரும்புகிறது. அப்பொழுது நம் கையில் உள்ள தொகை வேறு ஒரு பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது! அத்துடன் இப்பொழுது நாம் வாங்க எண்ணிய பொருள் நமக்குத் தேவைப்பும் இல்லை, பயனும் அற்றது கேடும் தரக்கூடியது என வைத்துக் கொள்வோம். அப்படியானால் நம் மனத்தில் திடிரெனத் தோன்றிய வேண்டாத ஆசைக்குத் தடைவிதித்துவிட வேண்டும், முதற்கண் தோன்றும் போதே அவ்வா31சயை அகற்றுவது எளிது. அவ்வாறு அகற்றாமல் இடம் கொடுத்து விட்டால் பின் நீக்குதல் அரிது. | ஆகவே தான், வள்ளுவர் ஒன்றில் விருப்பு உண்டாகும் போதே இது வேண்டாம் என எண்ணும் அவா அறுத்தல் உண்டாக வேண்டும், அதனை வளர விட்டுப் பின்னே அகற்றுதல் அரிது ஆகவே அதனை விரும்பாதிருத்தலையே நாம் நம்முடைய மனப் பூர்வமான விருப்பமாக ஆக்கிக் கொண்டால் அவா உண்டாசு இடமே இல்லை அல்லவா? ஆகையால் மற்று அது வேண்டாமை வேண்டவரும் என்றார், இளைதாக முள்மரம் கொல்சு என்பது போல விருப்பம் வேர்விடும்போதே விரும்பாமை என்னும் உத்தியால் பிடுங்கி எரிந்து விட வேண்டும், வீதி வழியே செல்லும் போது புலால் கடையிலிருந்து வெளிப்படும் மணம் ஆசையைத் தூண்டலாம் அன்றே அவ்வாசையை ஒழித்தோர் புலால் உண்ணார் முதலில் ஆசைக்கு இடம் தந்தவர்; புலால் உணவை விடார், அது போல் உடன் வந்த நண்பர் புகைக்கிறார்; அவர் வெளியிடும் புகை நமக்கு அருவறுப்பைத் தந்து மூக்கைப் பொத்தினால் அப்பழக்கம் நம்மை ஒட்டாது. மணம் நன்றாக இருக்கிறதே என எண்ணி நுகரத் தொடங்கினால் அப்பழக்கம் நம்மையும் பற்றிக் கொள்ளும், உண்மையில் தீமை தருவது நமக்கு இன்பம் தருவது போல் கருதி ஆசையை வளர விட்டவர்களே! குடிகாரர்களும் சூதாடிகளும், பிறர்மனை நயப்பவர்களும் ஆவர். காவல் என்பதே துன்பம் வரும் முன் காப்பதே காவல். தீமையும் குற்றமும் துன்பமும் இழிவும் பழியும் தரும் எவற்றையும் அடைய எண்ணவே கூடாது என்பதைத் தான் இலக்கிய நயம் கருதி, சொற்சுவை மணக்க, வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றும் வேண்டாமை வேண்டவரும் என்றும் சொற்றொடர் அமைக்கப்பட்டுள் ளது. விருப்பத்தை விட விரும்பாமைக்கு முதலிடம் தர வேண்டும். விரும்பாமைக்குத் தான் அங்கு மதிப்பிருக்கும் எனத் தெரிந்தால் ''விருப்பம்" நம் மனமாகிய வீட்டை அண்டாது: அண்டினாலும் உள்ளே நுழையாது. ஒருவேளை நுழைந்தாலும் தங்காது, நுழைந்த வேகத்திலேயே வெளியேறிவிடும். "ஒரு நல்ல பொருளை வாங்கினால் அதற்கு இசைவாக இன்னும் பத்துப் பொருள்களை வாங்க ஆசை எழும். ஆகவே, பின்னால் எழும் மற்ற ஆசைகளை நிறைவேற்றுவதை விட முதல் ஆசையை அடக்கிக் கொள்வது எளிது; நல்லது" என்னும் ரிச்சர்டு சாண்டர்சு அவர்களின் கருத்தையும் ஒப்பு நோக்குக! திருவள்ளுவர் அடக்கமுடைமையில், "எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து" என அடக்கம் உடைமையையும், அருளுடைமையில், "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் கடா" என்பதில் பொருளை ஒரு செல்வமாகக் கருதினாலும் அருளே சிறந்த செல்வம் என்றும், கல்வி அதிகாரத்தில், "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்பதில் கல்வியைக் கேடில் விழுச்செல்வம் எனவும். கேள்வி அதிகாரத்தில் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்பதில் செவிச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" எனக் கூறியுள்ளதையும் நினைவிற் கொண்டு இங்கே கூறும் செல்வக் குறளைக் காண்போம், "வேகன்டாசடைம் அன்ன விழுச்செல்வம், ஈராண்டில்களைப் யாண்டும் அஃது ஒப்பது இல்" என்பதாகும். வள்ளுவர் கூறுவது உலகியல் பற்றில் உழன்று கொண்டிருப்பவர்கட்கு வியப்பாகத் தோன்றலாம், ஆனால் உண்மை இஃதே. பொருட் செல்வம் வாழ்க்கைக்குக் கட்டாயம் தேவைப்படும் செல்வந்தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று வள்ளுவரே கூறியுள்ள சிறப்பு பொருள்களுக்கெல்லாம் உண்டு என்பது உண்மைதான், பொருட்செல்வம் எல்லாம் தரும் ஆனால் மனநிறைவைத் தரும் ஆற்றல் பொருட் செல்வத்திற்கு இல்லை , கல்விச் செல்வம், கேள்ளிச்செல்வம் பரிவுச் செல்வம், அருட்செல்வம் ஆகியவைகளில் ஏதாவது ஒன்றே போதும் என நிறைவு கொண்டு வாழ்வோர் இரார். அவ்வச்செல்வங்கள் ஓரளவு நிறைவினைத் தான் உருவாக்கும் அச்செல்வங்களை முழுமையாக யாராலும் பெற இயலாது. ஏனெனில் அவை எல்லாம் கடலினும் விரிந்தனவாகும், பெற்றவர்களும் மேலும் மேலும் பெற ஆசை கொண்டே வாழ்நாள் எல்லாம் முயன்றும் எல்லை காணாது தவிப்பர். | *செல்வம் என்பது சிந்தையின் நிறைவு" என்பது மெய்ம்மொழி என மனத்தில் கொண்டு நோக்கினால் தான் அவர் இன்னும் எவ்வளவு உயர்ந்த செல்வம் என்பது புரியும். ஆசை இல்லாமையே செல்வம் அச்செல்வத்தினும் உயர்ந்து செல்வத்தையோ அதற்கு இணையாகக் கருதத்தக்க செல்வத்தையோ நம் நாட்டில் மட்டுமன்று உலகின் எந்த நாட்டிலும் காண முடியாது. அத்தகைய ஈடு இணையற்ற உயர்ந்த செல்வம் வேண்டாமை! வேண்டாமை வேண்டாமையே என வள்ளுவர் மிகத் தெளிவாக உரைக்கிறார். "ஆசையை ஒழி, மன அமைதியைக் காண்பாய்" எனக் கூறும் தாமசு கெப்பிசு அவர்கள் கூற்றையும் " ஆசை இன்மையே சிறந்த செல்வம்' எனக் கூறும் அறிஞர் ஸ்ரீ அவர்கள் மொழியும் வள்ளுவர் கருத்து வேறு மொழிகின்றன. "அன்னோ! அன்னோ! வேண்டாமை அன்ன மேன்மைப் பெருஞ்செல்வம் என்னோ காணப்படும், ஈண்டும் இன்று, கேட்கப்படும் சிறப்பின் மின் னார் ஆண்டும் அஃதொப்பது இன்றால் நாளில், அவ்விழுச்செல்வம் தன் ஆதரவிற் பெறுபாற்குச் சாற்றும் டேவமை உளதோ கொல்" என்னும் குசேலோ பாக்கியானப் பாடல் நல்ல விளக்கமாய் அமைப்பும் சான்றாகும். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” 34 இதுவே அறத்திற்கு வெள்ளுவர் தரும் விளக்கம். அப்படியானால் "தாய் மடிமே" அறத்திற்கு அடித்தளம் என்று கூறியவர் அடுத்து மனம் தூயதாக அமைய அவரே வழியும் கூறியுள்ளதை நன்கு அறிவோம். "அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல்நான்கும்" இருக்காது இயன்றது அறம்" எனக் கூறியது தானே, பொறாமை, ஆசை, சினம் கடுஞ்சொல் ஆகிய நான்கு அழுக்குகளும் இல்லாத தாய்மையான மனமே அறத்தை வளர்க்கும் நல்ல விளைநிலம் என்பதை உணர்த்தியுள்ளார் ஓஎன்பதை மனக்கண் முன் நிறுத்திவிட்டு, "தூகடய்மை என்பது அவாவின்மை ; மற்றது வாதுய்மை வேண்ட வரும்" எனக் கூறும் போதே வள்ளுவர் நோக்கு நமக்குப் புலப்பட்டு விடுகிறது. அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் ஆகிய நான்கு மாசுகளில் முதன்மையான மாசு பொதுவாக முதலில் பற்றாக் கூடிய மாசு, பற்றினால் எளிதில் விடாத மாசு எது என பண்பியல் நோக்கிலும் உளவியல் நோக்கிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்த வள்ளுவர். அவர் என்னும் அழுக்கு நீங்கிய மனமே தூய மனம் என்பதைக் தெளிவுபடுத்தி விட்டு: அவா அற்ற தாய மானத்தை உண்டாக்கச் சொல்லும் வழியே 'பா அய்மை வேண்ட வேரும்' என்பதாகும். புரை தீர்ந்த நன்மை பயக்கும், யாதொன்றும் தீமை இலாத வாய்மையே பேச விரும்புவதால் பெறலாம் என்கிறார். வாய் பொய்யா விளக்காய் ஒளியும் ஒளியும் வீசினால், Inனத்தூய்5:33ம் அமையும். மனத்தூய்மையே அவா இன்dைr" என்பதே வள்ளுவர் நெறி! "அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” 296 என வாய்மையில் கூறியதையும் இரைத்துச் சிந்திக்க வேண்டும். சூர்ப்பனகை கூறும் சில சொற்களாலேயே அவள் நல்லள் அல்லள் என்பதை உணர்ந்தனன் என்னும் போது இராமனைக் கம்பர் “தூயவன்" என்று அறிமுகப்படுத்து வதையும் கருத்தில் கொள்க! இராமன் வாலியின் முன் வந்து நிற்கிறான், அவன் எனக் கண்ணுற்ற வாலி - "வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் காமந்தனே! என அழைப்பதையும் எண்ணிப் பார்ப்போம். "அற்றார் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்" என்பது யார் உகா மைத் துறவர் என்பதை அடையாளப்படுத்தும் குறளாகும். பற்றற்ற துறவர் என்று சொல்லப்படுபவர், மனத்தில் ஆசை தோன்றாதவாறு முற்றிலும் ஒழித்தவரே யாவர். ஆனசயினன் வழிக்காதவர் அழுக்காறு, புறங்கூறுதல், இன்னா கூறுதல், பிறர் பொருளைக் கவர்தல், களவு செய்தல், தீவினை செய்தல், இன்னா செய்தல், வெகுளி, புலால் உண்ணல், கொலை செய்தல் போன்ற குற்றங்களை எல்லாம் நீக்கியவராயினும் அவர் நீத்தாராசு, பற்றற்றவராக செம்பொருள் உணர்ந்த துறவராகக் கருதப்பட மாட்டார். "அவாவினை முற்ற அறுத்தவரே துறவர்” " அற்றது பற்று எனின் உற்றது வீடு” என்பது பெரியாழ்வாரின் பெருமொழி, "அற்றான் என்று சொல்லப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்துப் பிற ஏதுக்கள் சாலாம் செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானோ அன்றி உற்றார் வணங்கும் அவன் போல ஒழித்தான் கொல்லோ உடறுபிறவி" என்னும் குசேலோ பாக்கியானப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. அவா ஒருவனைப் பற்றிக் கொண்டால் நேரடியாகத் தான் கேடு செய்யும் என்பதில்லை, பெரும்பாலும் வெஞ்சமாகத் தான் கேடு செய்யும். ஆகவே, மனதில் வேண்டாத ஆசைகள் தோன்றிவிடாது மிக அச்சத்துடனும் விழிப்புடனும் தன்னைக் காத்துக் கொள்வது அறமாகும், " அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் ஆகவே அவர் என்னும் மாசு காஷ்கொள்ளாதவாறு காத்துக் கொள்ள வற்புறுத்தும் நோக்குடன் "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்பு தோறும் அவா" என்றார், ஆசை யாரையும் ஏமாற்றி விடும்; ஆதலின் அதனை அஞ்சி விலக்குவதே அறம், சீதா தேவி மான் மீது கொண்ட அவாதானே அவர் உற்ற அல்லுக்கெல்லாம் காரணம். "மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவிளலாம் பெற்றுச் செய்ய முத்தி அடைவதற்குச் சிறந்து உளோனை மறவிவழிப் பைய நுழைநீது பவம் மீட்டும் பாய்த்துக் கெடுக்காப்பது அயோ ஐய அதனுக்கு உடாம் நடுங்கி அஞ்சிச் காத்தல் அறிஞர் தொழில்" என்னும் குசேலோ பாக்கியானப் பாடல் நல்ல விளக்கமாய் அமைகிறது, "பள்ளியதெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உடள்ளான் செவகுளி எனின் இது ஒரு வெகுளாமைக் குறள். தன் மனத்தாலும் வெகுளி கொள்ளுதலை ஒருவன் நினைக்கவில்லையானால், அவன் நினைத்தவை எல்லாம் உடனுக்குடன் அடையப் பெறுவான், இஃது வெகுளான் உள்ளத்திற்கு வாய்க்கும் ஆற்றல்களில் ஒன்று, அதுபோல் அவாக் கொள்ளான் ஆற்றலை விளக்கும் குறளே "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்” ஒருவன் தன்னிடம் ஆசயே முழுமையாகத் தோன்றாமல் அகற்றிவிடுதல் மிகப் பெரியர் தகுதியை உருவாக்கும், அத்தகையோன் தொடர்ந்து எந்தெந்த நற்செயல்களை உலகநலம் கருதிச் செய்ய வேண்டும் என விரும்புகிறானோ அவை விரும்பிய வண்ணமே நிகழ்ந்து கொண்டிருக்கும். புத்தர், மகாவீரர், இயேசு முகம்மது நபி, இராமகிருட்டி ஈனர், விவேகானந்தர் வள்ளலார் போன்றவர்கள் முற்றாகத் தன்ன) ஆசையை ஒழித்தவர்கள், அவர்கள் நினைத்த நல்ல பணிகளை அவர்கள் வாழும் காவத்தனர் செய்தனர். அவர்கள் காலத்திற்குப் பின்னும் அவர்கள் விரும்பிய நற்பணிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை அறியாதார் யார்? ஆகவே, நாமும் தன்னலம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் ஒழித்து விடுவோமானால் நாம் நினைக்கும் நற்பணிகள் நினைத்தபடியே நிகழும். "அவாஇல்லோர்க்கு இல்லபாகும் துன்பம்; அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்" என்னும் குறள் வழியாக அறிந்து கொள்வது யாதெனின்; ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் முழுமையாக இல்லாது போகும். ஆனால் ஆசை உண்டானால் துன்பம் அழியாமல் மேலும் மேலும் தொடர் தொடராக வந்து அழிக்கும், ஆசை இல்னலயேல் துன்பம் இன்றி வாழலாம் ஆசை இருந்தால் துன்பம் வாட்டாமல் விடாது! இராமனை எதிர்த்துப் போரிட்டு மாண்ட கரன் உடன்பத் தழுவிக் கொண்டு கர்ப்பக்காக, "ஆக்கினேன் மனத்து ஆசை அவ்வாசை நான் மூக்கிளொடு முடிய முடிந்திலேன் பொக்கிகளால் உங்கள் போர்கார்வாயும் நாளையும் போக்கினேன், கொடியோன் என்று போயினாள்" எனப் புலம்பியதாகப் பாடும் கம்பர் பாடல் அவா உடையார் படும் பாட்டிற்கு சான்றாகும். "ஆசையில் பாதவர்களே அறிவர் மேலபவர் ஆசையில் பாதவர்களே அருந்தவத்தினர் ஆசையில் பாதவர்களே அருட் கலப்பினர் ஆசையில் போதவர்களே அரிய முத்தர்கள்” "ஆசையுள் பட்டவர் அல்லல் பட்டவர் ஆசையுள் பட்டவர் துளற்றில் பட்டவர் ஆசையுள் பட்டவர் அயர்வில் பட்டவர் ஆசையுள் பட்டவர் அரங்கப் பட்டவர்" என்-31ம் காசி ரகசியப் பாடல்கள் நல்ல சான்றாகும். " அவ்வவ் அருளாள்வார்க்கு இல்ல" என்பதையும் நினைவிற்கொள்ளல் நன்று. "இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்” எனும் இக்குறளை 'அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் இன்பம் இடையறாது ஈண்டும் என உரைநடை ஆக்கிக் கொண்டாலே தெளிவாகிவிடும். துன்பங்களில் எல்லாம் பெரியது ஆசை ஆகிய துன்பம். அஃது ஒருவனிடம் இல்லாது ஒழிந்து விடுமாயின் அவனுக்கு இன்பம் இடைவிடாமல் மேன்மேலும் வந்து சேரும், ஆசையாகிய பெருந்துன்பம் அகன்றால் எந்நாளும் இன்பமே வரும். ஆகவே தான் திருமூலரும், "ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள் ஈசபோாடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே! எனத் தெளிவுறுத்தினார். "போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து” என்னும் பொன்மொழியும் சுருக்கிக் கூறும். வ.சி.யைக் கப்பல் கழகப் பொறுப்பில் இருந்து விலகினால் பெருந்தொகையும் பெரிய அரசு அலுல்லும் வழங்க ஆங்கில அரசு ஆசை காட்டியது. பொருளுக்கும், பதவிக்கும் மயங்கவில்லை ஆகையால் கப்பலோட்டிய தமிழன், செக்கிழத்த செம்மல் என நாடு போற்றும் நற்புகழ் எய்தினார். பொருளாசையும் பதவி ஆசையும் இருந்திருந்தால் "வசை ஒழிய வாழ்வாரே வாழ்வாராக! வாழ்ந்திருக்க முடியுமா * ஆசை இருக்கும் வரை உண்மையான இன்பம் வராது: யாராலும் அடக்கமுடியாத மனத்தை ஆசை அடக்கி விடுகிறது. தான் உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும் என்று எண்ணுகிறவன் முதலில் பேராசையை விட வேண்டும். ஆசை அற்ற நிலையே மனத்திட்பம் எனப்படும்.” எனக் கூறும் ஞான வசிட்டத்தையும் ஒப்பு நோக்கலாம். வேடன் ஒருவன் வில்லும் அம்பும் வாளும் எடுத்துக்கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். யானையொன்று அவனை நோக்கி வருவதைக் கண்டு யானை மேல் குறிவைத்து அம்பால் எய்தி யானையை வீழ்த்தினான். அவன் அப்போது நின்ற இடம் ஒரு பாம்புப்புற்று. அதிலிருந்த பாம்பு அவனைத் தீண்டியது. அடுத்து நாணேற்றிய வில் 30கயில் இருக்கிறது. எனினும் உடைவானால் பாம்பைத் துண்டித்தான், சற்று நேரத்தில் நஞ்சு தலைக்கேறி அவனும் மாண்டான். அப்பொழுது அவ்வழியே வந்த நரி முதலில் இறந்து கிடக்கும் யானையைக் கண்டு மகிழ்ந்து வருமாத கூரான விற்குக் கவலை இல்லை என எண்ணரியது. அடுத்து மனித உடலைக் கண்டு ஒருவார உணவிற்குப் போதும் என எண்ணியது. அடுத்துக் கிடந்த பாம்பின் உடலைக் கண்டு இன்றைய உணவிற்கு இதனை னவத்துக் கொள்ளலாம் எனக் கருதியது. அடுத்து நாணேற்றியவில்லைக் கண்டு இப்போதைய பசிக்கு இந்நரம்பைக் கடித்துத் தின்னலாம் என நாம்பைக் கடித்தது. நாணேற்றிய அம்பு அதன் வாயுள் புகுந்து நரியை வீழ்த்தியது இப்பொழுது நரியும் மாண்டு கிடக்கிறது. யானையே கிடைத்த போதும், ஒரு சின்னஞ்சிறு நரம்பைக் கூட விட விரும்பாது ஒரு சிற்றாசை நரியை வீழ்த்தி விட்டது. நரி போல் ஆசைப்பட்டு அழியாதீர் என்னும் கதை திருத்தக்கத் தேவர் பாடிய நரிவிருத்தத்தின் சுருக்கம் ஆகும், ஆசையைப் போல் அழிப்பாரும் இல்லை; ஆசை இன்மைமையைப் போல் மனநிறைவைக் கொடுப்பாரும் இல்லை. குறளோடு நரிவிருத்தத்தையும் ஒப்பு நோக்குக! ஆசை இருக்கும் உள்ளம் அசையும், ஆசை அற்று உள்ளம் அசையா நிலை அடையும், அவ்வசையாப் பெருநிலையே இயற்கையாகும், "ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நியாயபயே பேரா இயற்கை தரும்" என்னும் பாவுடன் அவா அறுகிறது. - உலகத்தை இயக்கும் இயற்கை போல, அவா அற்ற மெய்யுணர்வானனும் பேரா இயற்கைப் பெருநிலை) அடைவான். அப்பேரா இயற்கை விருப்பு, வெறுப்பு, வேண்டுதல் வேண்டாம், நன்மை தீமை; இன்பம் துன்பம், காணாதது. அவ்வாறே அவா அற்றோனும் சமநிலை எய்துவான். அந்நிலையே வீடு பேறு! தன் னையும் தன் உடலையும் தன் உயிரையும் பற்றிய பற்று கனள, எல்லாம் ஒருங்கே விட்டதே விடுதலை ஆகிய வீடுபேற்று இன்பம், துறவர் இறந்த பின்னர் தான் வீடு பேறா? இல்லை ! அவா அறுத்தலே! வீடுபேறு. அவா அற்ற பெருநிலையினும் மேலான பேரின்ப நிலை; வேறொன்றும் இல்லை என்பதே திருக்குறள் நெறி! "ஆசைக்கோள் அளவில் கலை அகிலமெல்லாம் கட்டி ஆளினும், கடல் மீதிலே ஆணை செலவே நினனாவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து இரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடுநாள் இருந்தபேரும் நிலையாகவே இனும் காயகற் பந்தேடி நெஞ்சு புண்ாைாவ ரெல்லாம்" என்னும் தாயுமானவர் பாடல் ஆரா இயற்கை அவாவைப் படம் பிடித்துக் காட்டும், "கட்டற்குள் வந்துளழும் ஒள்ளழல் போன்றுபின் கிடைத்தியாப் பொருள்மேற் கிளர்ந்து ஓடியே நடக்கும் ஆசையை நண்பனும் உவப்பினால் அடக்கும் அந்தணரே அறிவாளரால்" என்னும் பாகவதப் பாடலும் ஒத்த கருத்துடையதாகக் சுருதலாம், "அவா துன்பந்தரும், அறியாமைக்கு வித்து” "அவா தோன்றும் போதே அறுத்துவிட வேண்டும்” "மனத் தூய்மையே துவா இன்மை" "வாய்காயம் கூற விரும்பு, மனத்தூய்காண்டம் போய்க்கும்" "பற்றற்றாரே அவா அற்றார்." "ஒருவனை வஞ்சுப்பது அவா?" "அவாவை அழித்தால் அழியாச்செயல் புரிய வழிபிறக்கும்.” "அவா இல்லார்க்குத் துன்பம் இல்லை" "அவாவை அறுத்தால் இடையறா இன்பம் கிட்டும்" "அவா நீக்கம் பேரா இயற்கை தரும்." 38. ஊழ் "கள்" என்னும் இவ்வதிகாரம் அறத்துப் பாயை நிறைத்து, பொருட்பால் தொடங்க வழிவிடும் அதிகாரம். இது தலைப்பில் பின் ஒட்டோ முன்னொட்டா இன்றி ஈரெழுத்துப் பெயராய் அமைந்துள்ள அதிகாரம் ஆகும். எனினும் குறளகத்தே ஆகூழ், ஆகாழ், போகூழ், இழவூழ் ஓரினச் குறிக்கப் படுவதுடன், உண்மை அறிவு, உலகத்து இயற்கை , வகுத்தான் வகை, என வும் சுட்டப்படுவதையும் அறிய இயலுகின்றது. 'நம்' என்னும் சொல்லப் பழந்தமிழர் முறைமை, மலர்தல், அவர்தல் முதிர்தல் முற்றல் உதிர்தல் செள்ளி அழிதல் பதன் அழிதல், பொருந்துதல் என்னும் பொருளில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தொல்காப்பியம், ஆகிய நூல்களில் பயன்படுத்தி யுள்ளனர். இப்பொருள்களை உணர்ந்து பார்க்கும் பொழுது களம் என்பது ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கோ, செயற்பாடு களுக்கோ, எத்தகைய தொடர்பும் இல்லாமல் இயல்பாகத் தானே நிகழும் நிகழ்ச்சியே என்பது புலப்படும். எப்பொருளும் தோன்றி அழிதல் உலக இயற்கை; தளிர்ப்பதும் உதிர்வதும் உலக இயற்கையே; நெருப்பு மேல் நோக்கிக் கிளர்ந்து எரிதலும், நீர் இருக்கும் இடத்திலிருந்து கீழ்நோக்கி வீழ்தலும் உலக இயற்கையே! காற்று சுழன்று வீசுதலும், கதிரவன் குளுமையில் தொடங்கி படிப்படியே வெப்பம் ஏறி நண்பகலின் பின் மெல்ல மெல்ல; வெப்பம் குறைந்து குளிர்மை வழங்கி மறைவதும் நாளும் காணும் உலக இயற்கையே! கதிரவனின் வெப்பத்தால் நீர் ஆவியாகி மேகமாக உருக்கொள்வதும், குளிர்காற்றுப்பட்டு மேகம் மழையாகப் பொழிதலும் மழை நீரால் மாநிலம் வளம் பெறுவதும் மிகுநீர் கடலில் கலத்தலும் உலக இயற்கையே கடல் நீர் உப்புச் சுவை உடையதாய் இருப்பதும். ஆ னால் ஆவி நீரில் உப்புச் சுவை இல்லாமல் இருப்பதும் உலக இயற்கையே! இவ்வியற்கையின் தாக்கம் எல்லா உயிர்களையும் பற்றி நிற்கும். அதனால் அவ்வுயிர்கட்கு நன்மையும் ஏற்படும், தீமையும் ஏற்படலாம். தொடர்பும் இடத்தாலும் வேறுபடும்; காலத்தாலும் வேறுபடும். ஆளுக்கு ஆள், உயிர்கட்கு உயிர் வேறுபடலாம் ஒருவற்கே ஒரு தன்மையாய் அமையும் என்பதும் இல்லை. ஒருகால் ஆக்கும்; ஒருகால் அழிக்கும் ஒருவற்கே ஒரு தொழிலில் ஆக்கமும் பிறிதொரு தொழிலில் அழிவும் செய்யலாம். அதுவும் நிலையானது என்றும் சொல்ல இயலாது. அதன் நல்ல தாக்குதலைத் தவிர்க்கவும் இயலாது. அல்ல தாக்குதலை விலக்குவதும் எளிதன்று. அதற்காக அது நல்கும் தீமையை ஏற்றுப் பணிந்து நடக்க வேண்டும் என்பதில்லை. பாதிப்பு இருக்குமானால் முழு அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி முயன்று உழைத்துப் புறங்காண வேண்டுவது மாந்தனின் உரிமையும் கடமையும் ஆகும், வள்ளுவர் இவ்வதிகாரத்தில் காழ் என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். சொல்வன்மையில் 'தாழ்த்தும்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 'கற்றிருந்தும் கற்றதைப் பிறர் உணர விரித்துரைக்க மாட்டாதவன் மொட்டு விரிந்தும் ம:33க்காத Fisu" போன்றவன்" என்பதை "இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்” என்கிறார். இங்கே இடம் பெற்றுள்ள ஊழ்த்தலுக்கு மலர்தல் என்பதே பொருள் ஆகும், ஊழ் என்பதுடன் தொடர்புடைய இன்னொரு சொல் "ஊழி" என்பதாகும் இச்சொல்வைச் சான்றாண்மையில் ஓரிடத்தில் பயன்படுத்தியுள்ளார். "நாழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்” என்பது அக்குறள். "சான்றாண்]ை என்னும் நிறைபண்புக்குக் கடல் போன்றவர். இயற்கை தம் நிலையில் இருந்து மாறினாலும் தம் நிலையில் இருந்து மாறார்" என்பது பொருள் ஆகலான் "கழி” என்பது இயற்கையையே உணர்த்துகிறது, இவ்வூழியைப் பரிபாடல், "கருவளர் வானத் திசையில் தோன்றி நடருவறி வாரா ஒன்றன் நாழியும் - உந்துவளி கிளர்ந்த தமூழ் கழியும் செந்தீச் சுடரிய தகழியும், பனியொடு தண்பெயல் தாபதிய தகழியும், அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு மீண்டும் பீடுடையர்வு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” என விரிக்கின்றது. ஒலி வடிவமான வெளி என்னும் ஒன்றாம் நாழியும், அவ்வெளியில் இருந்த காற்று என்னும் அழியும், அதன்பின் நீர், தீ, நிலம் எனத் தோன்றிய தாழிகளும் என ஐந்து வகையான ச ரிகனள இப்பகுதி கூறுகின்றது. இவ்வூரி இயற்கை வழிப்பட்டதே என்பதை அறிய இப்பகுதி பயன்படும். தொல்காப்பியர் பொருள்களை முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என மூன்றாகப் பகுத்துரைத் துள்ளார். இம்மூன்று பொருள்களுள் முதற் பொருளே அடிப்படைப் பொருளாகும், அம்முதற் பொருள் இடமும் காலமும் என இரண்டு வகைப்படும், கருப்பொருள் என்பது முதற் பொருள் வழியாகப் பெறும் இயற்கைப் பொருள்களும் அவற்றைக் கொண்டு மாந்தர்கள் ஆக்கிக் கொள்ளும் பொருள்களும் ஆகும். உரிப்பொருள் ஐந்திணை ஒழுக்கப் பொருளாகும். இம்முப்பொருள் விளக்கமும் அமைந்த நூலே திருக்குறளாகும். வான் சிறப்பு: நாழ். காலம் அறிதல், இடம் அறிதல் ஆயநான்கு அதிகாரங்களும் தொல்காப்பியர் சுட்டும் முதற்பொருள் விளக்கம் ஆகவே அமைந்துள்ளன. பிற பல இடங்களிலும் முதர்பொருள் விளக்கம் கா33 பாh! | இம் முதற்பொருள் காலம், இடம் இவற்றின் வழியாக ஏற்படும் மாற்றங்களே நாமாகும். ஆகவே, வன்கண் குடிகாத்தல் சுற்றறிதல் ஆள்வினையோடு மாண்ட அமைச்சனுக்கும் ஓர் ஆணை இடுகிறார். வள்ளுவர், 'செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்” எனக் கூறுகிறார், "செயலாற்றும் முறைமையை நாலறிவு நுண்ணறிவு ஆகியவற்றால் அறிந்து கொண்ட போதும் உலகத்தின் இயற்கை முறையினையும் அறிந்து செயல் புரிய வேண்டும்" என உணர்த்துகிறார். இங்கே இயற்கை அரிதல் அழுத்தமும் சிறப்பும் பெறுகிறது. ஐம்பூதங்களின் கலப்பால் அமைந்ததே உலகம் என்பது இற்றை அறிவிய போரும். ஒப்புக் கொள்ளும் உண்மை ஆகும். இதனைத் தொல்காப்பியர் "நிலம் தீவளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்" என்கிறார் தொல், மரபு: 1) " அண்டத்திற்கு உரியவை பிண்டத்திற்கும் உண்டு" என்பது பழமொழி. ஐம்பூதக் கலப்பு ஒவ்வொரு உடலுள்ளும் உண்டு என்பதை, "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்" என்னும் வழி தெளிவித்துள்ளார், 'சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்னும் ஐம்பூதத்தின் விரிவுசுனைத் தெரிந்தவர் இடத்தே தான் இவ்வு:கத்தின் இயக்கம் அடங்கியுள்ளது" என்பதன் வழியாகவும், "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்" என்னும் இறைவாழ்த்துக் குறள் வழியாகவும் கூறியுள்ளார். வெளி, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பூதங்களும் முறையே ஒலி நாறு, ஒளி, சுனை மணம் என்பனவற்றைப் படிமான வளர்ச்சியில் பெறுவன் என்பது அறியத்தகும், வெளி - ஒலி வளி - ஒலி, ஒளறு தீ = ஒலி, கறு ஒளி, நீர் = ஒலி ஆறு ஒளி சுவை நிலம் - ஒளி சாறு ஒளி சுவை மணம் என் நாவாறு அமைந்துள்ளன. ஐந்தவித்தல் என்பது ஐந்து பொறிகளையும் பக்குவப் படுத்துதல் பொருளாகும். என்பதன் வேதான் இவ்வாதத்தின் இவற்றை அறிவதற்காகவே ஐம்பொறிகள் அமைந்துள்ளன. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாகும். இவ்வைம் பொதிகளின் வழியாக சம்புலப்பாடுகள் உண்டாகும், அவை கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து உற்றறிதல் என்பன வாகும், அவையே ஐயரவுகள் ஆகும், அவையே சுவை ஒளி, நாறு ஓசை நாற்றம் என்பன, விலங்குகள் இவ்வையறிவு நிலையிலே நிற்பனவாகும். இவற்றின் மேலாய் விளங்கும் ஆறாம் அறிவு பெறுதலே மாந்தரின் இயல்பாகும். அவ்வழியே மெய்யெறிவு எனப்படும் இதனை மெய்யுணர்தல் எனவும் அறிஞர் குறிப்பிடுவர். "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு” என்பது வள்ளுவ மெய்யுணர்வு ஆகும். மெய்யுணர்வு பெற்றவர் இயற்கையை எளிதே அரிவார். அவர் மருள் நீங்கிய மாசறு காட்சியவர் ஆவார், அவர் பருப்பொருள் நுண்பொருள் மெய்ப்பொருள் செம்பொருள் எல்லாம் கண்டவர். நல்ல தீய சார்புகளை எல்லாம் த 53கார்ந்தவர், தீய சார்பு கெட இழுபவர், மலர்தலும் கூம்பலும் இவ்வாத அரிவினர், ஆகவே அவர்தம் சிறப்பு இயல்பை , "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனாரிய துடைத்து" எனத் தெளிவுபடுத்திய திருவள்ளுவர், அவரை "ஐயப் படாஅது அகத்தது உணர் வானைத் தெய்வத்தோடு ஒப்புக் கொளல்" எனக் குறிப்பறிதலில் போற்றலானார், ஐம்பூதத்து இயற்கையும் அதன் இயல்பு குன்றாமல் அகத்தேயும் இருப்பதை, "மண் திணிந்த நிலமும் நிலன் ஏந்திய விசும்பும் வீசும்பு தைவரு வளியும் வளித்தாலஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெரலும் துளியும் உடையோய்" என முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடலைப் புறநானூற்றில் காணலாம். " அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும் அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தியோடு மாறுபோலப் பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்கும் அளவு அல்ல ஆயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற்கு ஏற்ற மன வலியும் சதுரங்க வலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால், அவர்க்குச் செய்யும் அருளும் உடையோய்" என்பது அதன் பழைய உரையும் ஆகும். இங்குக் கூறியவற்றால் ஐம்பூதத்தால் அமைந்த உலகும், அவ்வுலகு பால் ஐம்பூதக் கூட்டால் அமைந்த உடலும், இன்னம்பூத இயல்போடு பொருந்தி அறிய ஐம்பொறிகளும், அவ்வைம்புவங்களின் வழியால் அமையும் மெய்யுணர்வும் ஆகியனவும், அம்மெய்யுணர்வாளர் உலகத்து இயற்கை உள்ளவாறு அறிவோர் என்பதும், இவ்வுலக இயற்கையே நழ் என்பதும் அஃது ஆக்கமும் கேடுமாம் இருமைத் தன்மை) உடையது என்பதும், சண்ழை மாந்தன் வெல்லும் நிலையும், மாந்தனை ஊழ் வெல்லும் நிலையும் காணக் கூடுவனவே என்பதும், உலக இயற்கையாம் ஈழி அறிந்தவர் வழியே உலகியல் பாதுகாப்பு உண்டு என்பதும் அறியலாம். சுதிர் ஒளி ஈடன்ன நீரை ஆவி ஆக்கி மேலே கொண்டு பேசும் ஆக்குகிறது, மேகத்தின் மீது வீசிய காற்று, வானில் அதனை மழையாக்கி மண்ணில் பொழிய 3வக்கிறது. அம்மழை மேலிருந்து பொரிந்து உலகுக்கு வேண்டிய நலங்களை எல்லாம் வழங்கி வருவதால் மழையே அமிழ்தம் ஆகும். அம்மரை நீர் நல்ல குடி நீர் மட்டும் அன்று. அதுவே உணவுப் பொருள்களை எல்லாம் உண்டாக்கித் தரும் நீரும் ஆகும். அம்மழை வளம் குன்றின் உழைப்புக்கு வாய்ப்பு இல்லை; உணவிற்கு வழியும் இல்லை, உலகத்து உயிர்கள் எல்லாம் பசியால் துன்புறும். மழைப் பொழிவு நின்றுவிடுமாயின் புல்லும் முளைக்காது; கடலும் வற்றும் வளரும் குன்றும். வான்மழை பொய்த்தால் உலகில் விழாக்களும் இறைவழிபாடுகளும் தானம் தவம் எல்லாம் ஒழிந்துபோகும். நீர் இல்லையானால் உலக வாழ்வே நடைபெறாது. ஒழுங்குமுறைகளும் ஒழிந்து போகும், மழை மெய்யவில்லையானாலும் மாநிலத்திற்கு கேடுதான்; வரம்பினறிப் பெய்தாலும் கேடுதான். மழையாம் இயற்கை போல் கேடு செய்வதும் தவறில்லை அதற்கு இணையான நன்மை செய்வதும் வேறில்லை, ஒளி தந்து இயற்கைப் பேராற்றலாய் விளங்கும் கதிரொளியின் வெப்பம் வரம்பு கடந்தால் அதுபோல் சுட்டெரித்துச் சாகடிப்பதும் வேறில்லை. விளியாம் காற்றே உயிர்ப்பும் உயிரும் ஆகும் அஃதே சுழற்காற்றாய், சூறாவளியாய், புயலாய்க் கிளம்பினால் மலையையும் உருட்டிவிடும். நெருப்பு ஒளி தருவது உணவு துக்கம் முதல் எ எண்ணற்ற தொழில் வளத்திற்கு உந்து ஆற்றலாய் விளங்குவது அது தேவை இல்லாத இடத்துப் பற்றினால் அதுபோல், எதனாலும் அழித்து ஒழித்துவிட இயலாது. நம்மைத் தாங்கிவாழி: வளர பணி செய்ய உண்ண உறங்க எல்லாவற்றிற்கும் தமக்குத் தாயாய் அமைந்து காப்பது நிலம். ஆனால் அது அதிர்ந்தால் அசைந்தால் நெருப்பைக் சுக்கினால், தன்மேல் இருந்தவற்றை எல்லாம் நொடியில் விழுங்கி விடும். உலகிற்கு வேண்டும் நலம் எல்லாம் செய்து வரும் பூதங்களால் நான்-31ம் வி=Eள்வதோடு மட்டுமன்று தீர்ப்பும் எரி 31லயும் நாணயத்தின் இரண்டு பக்கம் போல் உள்ளங்கை புறங்கை போல், பகலும் இரவும் போல் இருவகை நிலையும் உடையன என்பதை உணர்ந்து கொண்டு அவ்வியற்கையாம் நழை எவ்வாறு பயன்கொள்ள வேண்டும் என்ற நுண்ணறிவும், மெய்ப்பொருள் அறிவும் மானிடர்க்குக் கட்டாயம் வேண்டும் என்பதை உணர்த்தப் பாடியதே 'நார்" ஆகும். "ஞாலம் சுருதியினும் நாகக்கூடும் காலம் கருதி இடத்தால் செயின் "பகல்வெல்லும் சுடகையைக் காக்கை” "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்ததற் கரிய செயல் "கொக்குஒக்க கூப்பும் பருவத்து மற்றதன் குத்துக்க சீர்த்த இடத்து" என்னும் குறட்பாக்கள் வழி தக்க காலத்தை எதிர் நோக்கிச் காத்து இருக்க வேண்டும், கிட்டிய வாய்ப்பை விட்டு விடேல் காலத்திற்குத் தனி ஆற்றல் உண்டு என உணர்ந்து செயல்பட வழி காட்டுகிறார் வள்ளுவர். வினை செய்ய ஏற்ற இடமும் வலிமை சேர்க்கும் என்பதை "முதலை ஆனமான நீருள் இருந்தால் அதனினும் வலிய உயிர்களையும் வெற்றி கொள்ளும், ஆனால் அந்நீரை விட்டு வெளியேறி விடின், அதனினும் எளிய உயிர்களும் அதனை வென்றுவிடும் ஆதலால் இடம் அறிந்து செயல் ஆற்றுதல் வேண்டும், 404 அவ்வாறே வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் செல்ல மாட்டா. கடலில் ஓடக்கூடிய கப்பல்களும் நிலத்தில் ஓட மாட்டா ஆதலால் இடம் அறிந்து செயலாற்றுதல் வேண்டும், 400 பாகரின் சினத்திற்கு அஞ்சாததும், பகைவரின் மேல் ஆழப்பதிந்ததும் ஆகிய முகத்தை உடைய யானை தன்கால் ஆழ்ந்து செல்லும் சேற்று நிலத்தில் புகுமானால் சிறிய நரியும் எளிதாகக் கொன்றுவிடும் ஆதலால் இடம் அறிந்து செயலாற்றுதல் வேண்டும். (குறள் 500) எண்ண வேண்டியவற்றைக் குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தொடு 31+43 செய்வர் எனின், அஞ்சானம் என்னும் ஒரு தன்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை. [497) என்னும் இடத்தேர்வும் வெற்றிக்கு மிக இன்றியமையாதது என வலியுறுத்துபவர் வள்ளுவர். நம் ஆற்றலைக் கடந்து அப்பாற்பட்டதும் அதே வேளையில் எம் எண்ணங்கட்கும் அறிவிற்கும், நம் செயலாகண் இமைக்கும் தொடர்புடையதுமாகிய இயற்கையாகிய கள ஆய்வு நமக்கு எப்போதும் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். நம்மால் எதுவும் முடியும் என மின்சு நம்பிக்கையோ, இறுமாப்போ கொண்டு இயற்கையை எதிர்த்து நின்று அழிந்துவிடல் ஆகாது, வெயிலுக்கும் மழைக்கும் குடைப்பிடித்துக் கொள்ளலாம் அல்லவா? சூறாவளியில் குடைப்பிடித்தால் குடையோடு காற்று நம்மைத் தூக்கி எறிந்துவிடும். பனிக்குக் கம்பளி ஆடையும் அணிந்து கொள்ள வேண்டும், கணப்புச் சட்டியும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பனி நம்மை என்ன செய்துவிடும் என வெற்றுடம்போடு சென்றால் பனி என்னதான் செய்யாது? 2004 திசம்பர் 26 ஆழிப்பேரலை அறிகுறி கண்டு விரைந்தோடித் தப்பியவர்களும் உண்டு! வேடிக்கை பார்க்க நின்றவர்கள் எல்லாம் நொடிப் பொழுதில் காணாப் பிணம் ஆகிவிட்டார்களே! மிக வளர்ந்த அறிவியல் மேன்மையால் அழிவைத் தடுக்கமுடியவில்லை என்றாலும் முன் எச்சரிக்கை கூடச் செய்ய முடியவில்லையே! அப்படியல்லவா அவ்வாழிப் பேரலை தீயூழாய் அமைந்து உயிர்களையும் உடைமைகளையும் கொள்ளை கொண்டு போய்விட்டதே! நாம் வணங்கும் அலை மகள், சுவலை அல்லவா தந்து விட்டாள். தன் பேராற்றலை நமக்கு உணர்த்த எதிர்காலத்திலாவது விழிப்புடன் நடந்து கொள்ளக் காட்டிய எச்சரிக்கையா? நல்ல படிப்பினன தான். இளழைப் பற்றி யார் யார் என்னென்ன சொன்னாலும் "களம் ஈழ்' கேட்டுக் கொண்டிராமல்! தேடி வந்த நல்லூரை விட்டு விடாமலும்! விலகி ஓடும் தனழின் குறுக்கே போய் விழாமலும் பயன்படுத்திக் கொள்ள வள்ளுவர் வழங்கும் கையடக்கக் குறிப்பே 'தம்' அவை பத்தும் நம் கை விரல் போன்றன. எப்பொழுது கைகளை விரிக்க வேண்டும்! எப்போது கைகளை மூட வேண்டும்!' எப்போது கை வீசி நடக்க வேண்டும்? எப்போது 13ககட்டி நடக்க வேண்டும் என வழிகாட்டும் குறிப்பு நம் கவனத்தில் இருக்கட்டும். நன்மை பெருகுவதற்குக் காரணமாக வாழ்நிற்கும் போது அது ஆகூழ், ஆகாழ் நல்லூர் என்று கூறப்படும். ஒருவன் தன்மையை இழப்பதற்குக் காரணமாக நழ்நிற்கும் போது அதுபோகூழ், தீயூழ் என்று கூறப்படும். கைப்பொருள் மிகுவதற்கு ஏற்ற சளழால் முயற்சி உண்டாகும். கைப்பொருள் அழிவதற்குக் காரணமான சூழால் சோம்பல் தோன்றும், கிளர்ச்சியூட்டும் இயற்கையால் சோர்விலாத் தன்மை உண்டாகும். வறுத்தும் இயற்கையால், அல்லது வலுவைக் குறைக்கும் இயற்கையால் சோர்வு உண்டாகும். என்பதை விளக்குவதே, "ஆகூழால் தோன்றும் அசைவின்ம்ை ஈகைப்பொருள் I போகூழால் தோன்றும் மடி " காலைப் பொழுது அசைவின்மையை உண்டாக்குகிறது ஆர்வத்துடன் பணி மேற்கொள்கிறோம். இரவுப் பொழுது சோம்பலை உருவாக்குவதால் வருவாய் பெருக்கும் பணிமேற் கொள்வதில்லை, "மயில்கள் கூவுகின்றன: கொடிகளில் அமர்ந்த வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடுகின்றன இந்திர கோபப் பூச்சிகள் இங்கும் அங்கும் வளர்கின்றன. வெள்ளிய முல்லை அரும்புகள் வெடிக்கின்றன. மின்னல் மின்னுகிறது மாலைப் பொழுது அ:31சந்தாடி வருகிறது." கற்பனைத் திறம் மிக்க சேக்கிழார் கண்களில் கார்காலமோ ஒரு பெண்ணாகவே தோற்றம் அளிக்கிறது. ஆகவே, "நீலபடமா மஞ்ஞை தரங்க, நிறைக்கொடி புறவம்பாட கோலவெண் முகைரர் முல்லைக் கோபம் வாய்முறுவல் காட்ட ஆலும்பின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலவீடு அரங்கில் ஆடக் கார்எனும் பருவ நல்லாள்" என்று பாடியுள் ளார். 'கார்ப்பருவ மங்கை, சிவந்த இந்திரகோபப் பூச்சிகளைத் தன் செவ்விய வாயாக வெண்மையான முல்லை அரும்புகளைப் புன்முறுவலாக, மயில்களைக் குரலாக, வண்டுகளைப் பண்ணாகக் கொண்டு, மின் டினாலான இடை அசைய, மாலையாகிய மார்பம் குலுங்க வையகம் என்று இவ்வரங்கத்திலே ஆடுவதற்கு வந்தாள்" எனச் சேக்கிழார் காட்டும் கார்ப் பருவ உருவகம். 'ஆ கூழால் தோன்றும் அசைவின்மைக்கு நல்லதொரு எடுத்துக் காட்டு! நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் வாடைக்கானலக் காட்சி. "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா போலாம் புதுப்பெயல் பொழிந்தன ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இன நிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பாப்வுடன் தங்கக்கொள் கொள்ளியர் காயுள்புடைபூச நடுங்க மாமேயல் மறப்ப மந்திரப் பறகயை படியக்கா வீழக் கற்காசிய கன்று கோள் ஒழியக் கூடியவீசிக் குன்று குளிர்ப் பன்ன எதிர்ப் பானாள்” என்பது இரு பகுதி. இதன் வழி, "பொய்யாமல் பெய்யும் முகில் மலையை வலம் வந்து எழுந்து மண் குளிர மழையைப் பொழிகின்றது. பெய்த மழையால் பெருகிய வெள்ளத்தை ஆயர்கள் வெறுத்து, தம் ஆனிரைகளையெல்லாம் மேட்டு நிலத்திலே மேயவிடுகின்றனர். வாழ்ந்த இடத்தைப் பிரிந்ததால் வருத்தம் எய்தினர், தலையில் சூடிய காந்தள் சுண்ணி நீர்பட்டு அவைந்ததால் கலக்கம் எய்தினர். குளிர் தாங்க முடியாமல் பற்கள் பறை கொட்டப் பலரும் நடுங்கினர். பின்னர் ஒன்றாகக் கூடி நெருப்பு மூட்டி அனல் காய்ந்தனர். விலங்குகள் மேய்தமைய விடுத்தன: குரங்குகள் குளிரால் நடுங்கின மரத்துப் பறவைகள் மண்ணில் வீழ்ந்தன. கன்றுகளைப் பாலு ண் ண விடாமல் பசுக்கள் காலால் உதைத்தன. குளிர் அவ்வளவு கொடுமையாக இருந்தது. குளிரால் குன்றுகளும் குளிர்ந்தன" என்னும் வருணனை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி" என்பதற்கு அருமையான இலக்கியச் சான்று ஆகும். "பருவத்தே பயிர் செய்" காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” ஆகூழால் தோன்றும் அசைவின்மையை விளக்கும் பழமொழி. "உழும்பொழுது சர்வழி கற்றியவன் அறுக்கும் போது அரிவாள் தேடான்" என்னும் பழமொழி 'போகூழால் தோன்றும் மடியை விளக்கிக் காட்டும். "கேடுவரும் பின்னே! மதிகெட்டு வரும் முன்னே” என்பது பழமொழி, கைப் பொருளைக் கெடுக்கும் இளம் அறியாமையை உண்டாக்கும்; கைப்பொருளை ஆக்கும் HEழ் பொருந்திய விடத்து அறிவை விரிவடையச் செய்யும், அறியாமைப் படுத்துவது இழவூழ்: அறிவை விரிவடையச் செய்வதே நல்லூழ் என்பதை உணர்ந்து அறிவை விரிவு செய் என்பதை உணர்த்தும் குறளே ! "பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை" என்பதாகும். "தோண்டிய அளவிற்கு மணல் காற்றில் நீர் ஊறும் அதுபோல் மக்கட்கு அவர்கள் கற்ற அளவிற்குக் தசு அறிவு பெருகும்" என்னும் கருத்தைக் கல்வியால் "தொட்டவாகனத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.” என அறிவு வளரும் வழி கூறிய வள்ளுவர் கற்ற கல்வி எல்லாம் எல்லார்க்கும் பயன்படுமா? என வினா எழுப்பி அதற்கு விடையளிப்பது போல் அமைத்த குறளே "நுகனாரிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்" நுட்பமான கால்கள் பலவற்றை ஒன்றுபோல் ஒரு குழுவினர் அல்லது ஒரு வகுப்பினர் கற்கின்றனர். ஆனால் அதனால் பெற்ற அறிவின் தகுதியும் தரமும் கற்றாருடைய இயல்பும் ஒன்றுபோல் காகணப்படவில்லையே ஏன்? எல்லோர்க்கும் அடித்தளம் ஒன்று போல் இல்லை அதில் ஏற்ற தாழ்வு உண்டு என்பது ஒன்று. உண்ட உணவு ஒரு தன்மைத் தாயினும் செரிமானத் தன்மை எல்லார்க்கும் ஒன்றுபோல் இல்லை. ஆகவே ஒவ்வொருவரிடமும் இயற்கையாக இருக்கும் அறிவு எத்தகையதோ அத்தகைய அறிவைத்தான் அவனவன் மூளை வாங்கிக் கொள்ளும் அரிச்சந்திரன் நாடகம் பார்ப்போரில் அவன் வாய்மையைப் போற்றுபவரும் உண்டு! வாழத் தெரியபாப் பைத்தியம் எனப் பார்ப்பவரும் உண்டு அல்லவா? கற்கும் கல்வி அவரவரிடம் இருப்பதை வளர்க்கும். நாம் அறிவே அவர் அறிவு என்றால் நாய் அரிவே மிகும், ஞானியர் அறிவே அவர் அறிவு 13எனின் செம்பொருள் மிகும் என விளக்கி உரைத்தார், நுண் ணிய நூல்பல கற்றாலும் அவரவரின் இயல்பான அறிவே வளரும்! தக்காளிக்கு நீர் ஊற்றினால் தக்காளி விளையும் நெல்லுக்கு நீர் பாய்ச்சினால் நெல்லே விளையும் என்பது தானே "இருவேறு கடலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு" இதில் அமைந்த "உலகத்து இயற்கை" எனும் சொல்லே வள்ளுவரின் காழ்க் கதவைத் திறக்கப் பயன்பட்ட திறவுகோல் ஆகும். உலகத்தின் இயல்பு இருகூறாக உள்ளது. ஒன்று செல்வப் பொருள் தேடும் நோக்கு; பிறிதொன்று தெள்ளிய அறிவுப் பொருள் தேடும் வேட்கை. இவ்விரண்டு வகைக்குள் இவ்வுலகில் உயர்ந்து வாழ எண்ணும் மனிதர்களை அடக்கி விடலாம், செவம் தேடுவோர் எண் 63னம் முயற்சி, செயல் எல்லாம் அறிவு வளர்ச்சியில் ஈடுபடுவதில்லை , அதுபோல் பூக்கள் தோறும் தேனுண் 33 அவையும் வண்டு போல் அறிவு தேடுவோர் எண்ணம் முயற்சிசெயல் எல்லாம் செல்வம் தேடுவதில் இருப்பதில்லை, இவ்விரண்டும் வெவ்வேறு தகுதியை உடையன, செல்வம் தேடுவோர் ஒருவகையினர் அறிவு தேடுவோர் வேறு 15வகையினர். இன்று உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் "ஓபராய்' உணவு விடுதிகளை ஏற்படுத்திய ஓபராய் ஆறுமாதக் குழந்தையாய் இருந்தபோதே தந்தையை இழந்தவர். அதனால் அதிகம் படிக்க முடியாமல் சிம்லாவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் மாதம் ஐம்பது ரூபாய் சனதியத்தில் பட்டியல் போடும் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். அதன் பின் கடுமையாக உழைத்து நம் நாட்டிலும் வேறுபல நாடுகளிலும் பல விண்மீன் விடுதிகளைக் கட்டி மேலான செல்வந்தராய் உயர்ந்தார். இவர் திருப்பெற்ற இயற்கையாளர். மைசூரின் வளர்ச்சிக்குப் பெரும் காரணமாக இருந்தவர் தாம் பொறியியல் அறிஞர் விசுவேசுவரய்யா தனது பதினைந்தாவது வயதில் தந்தையை இழந்து, குடியிருக்க இடமும் படிக்கப் பணமும் இல்லாமல் துன்புற்றவர் இவர் குழந்தைகள் சிலருக்குத் தனிப்பாடம் சொல்லிக் கொடுத்து அவர்கள் வீட்டிலேயே தங்கி, மாமனார் வீட்டில் உணவு உண்டு துன்பப்பட்டுப் படித்து (ijன்னேறிய பேரறிவாளர் தாம் 1{}.3 ஆண்டு வாழ்ந்த விசுவேசு வரய்யா. தெள்ளியராகிய இயற்சையர்க்குச் சான்றாவார். "நல்லவை காய்ப்பொதும் தீயவாம், தீயவும் நல்லபாம் செல்வம் செயற்கு" "நல்லவர்க்கு இது காலம் இல்லை" என்ற பட்டறிவுக் கூற்றைச் சிலர் சிலவேளைகளில் உதிர்ப்பது உண்டு! அது போல் உலகில் ஏற்படும் சில இயற்கைச் சூழல்களும் அரசியல் சூழல்களும் சில தடுமாற்றங்களை உருவாக்கலாம் எனக்கருதியே வள்ளுவர் மிகக் கவனமாக அவுசேர்க்க முற்படுங்கால் சான்றோராக (முயலுங்கால் நான் எண்ணுவதற்கு இடம் தராதவாறு செல்வம் சேர்க்க முற்படுங்கால் சில வேளைகளில் நல்ல முயற்சிகள் எல்லாம் தீமையாய் முடிதலும் உண்டு. அதுபோல் தீய முயற்சிகள் நன்மையாய் முடிதலும் உண்டு! | புத்தகக் கடை நடத்தித் தோற்றுப் போனவன் 'சாராயக் கடை ஏலம் எடுத்துப் பணக்காரன் ஆனான். வட்டிக் கடை அவனை மேலும் செல்வன் ஆக்கிற்று. நேர்வழி, செல்வம் ஈட்டுதனலக் கெடுக்கலாம். தீய வழி செல்வம் திரட்ட வழி காட்டலாம், தொழிலில் பொய்யர்கள் வெற்றி பெறலாம்: வாய் மையர் தோல்வியுறலாம்; "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம" உரிமை இல்லாப் பொருள்களை எவ்வளவு வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போய்விடும். தமக்கு உரிய பொருள்களை எங்காவது கொண்டு போய்ச் சொட்டினாலும் தம்மை விட்டுப் போகாமல் இருக்கும். உரிமை இல்லாக் குழந்தையை வேறுபாடே இல்லாமல் தம்பிள்ளை போல் கண்ணும் கருத்துமாய் வளர்த்தாலும் ஒரு சொல்லைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வளர்த்தவர்களை விட்டு நீங்குவதும் உண்டு! உரிமையுடைய தன் பிள்ளையை அடித்து வெருட்டினாலும் போகான்; போனாலும் விரைவில் வந்து விடுவான். சின்னத்தில் அடித்தவன் சினம் தணிந்த பின் அன்னைக்கத் தேடி ஓடுவான். காகம் தன் கூட்டில் இருந்த குயில் முட்டையையும் தன்முட்டை என்றே கருதி அடைகாத்தாலும் குஞ்சு பொரித்தவுடன் குயில் குஞ்சு காகத்தை விட்டுப் பறந்துவிடும். நாம் பல நாள் வளர்த்து நாயை வெளியூர்க்கு விற்றாலும், வாங்கியவர்கள் கட்டி வைக்கவில்லையானால் நாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கே வந்து விடும், பசு, காளைகட்கும் அவ்வியல்பு உண்டு, "பகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” நழான் ஆட்சியாளன் .பகுத்துத் தந்த வழிக3ய அய்யாமல் (கோடிக் கணக்காகச் செல்வம் தேடித் தொகுத்து வைத்தவர்களும் அவற்றை நுகர்தல் இயலாது. தொழில்வரி வருமானவரி எல்லாம் கட்டியாக வேண்டும், அயலகத்தில் தேடி வைத்துள்ளான். வெளியேற வேண்டிய சூழல் உருவானால் தொகுத்தவற்றை எல்லாம் கொண்டு வர இயலுமா? இலங்கைத் தமிழர்களில் பலர் அங்கு வசதி வாய்ப்போடு வாழ்ந்தவர். உயிர் பிழைக்க வேறுபல நாடுகட்குச் சென்றவர்கள் உண்டு! தேடிய செல்வத்தை அவர்கள் துய்க்க முடிந்ததா! "தண்பது நாழி', தடுப்பது நான்கு முழம்! மன்னர்க்கும் ஆண்டிக்கும் ஒன்றே தான். ஆயிரம் கோட்டை நெல்லை விளைவித்தவன் நாளும்) மூடை அரிசிக் சோறா உண்ண முடியும். தொகுக்க வரம்பு இல்லை என்றாலும் துய்க்க அவரவர் வயிற்றுக்கு அளவுண்டு! இளமை முதல் நம் வயிற்றை எவ்வளவு உணவு தந்து பழக்கப்படுத்தியுள்ளோமே அந்த வரம்பை மீறி உண் =93! முடியாது. சிறிது மிகுந்து உண்டாலும் நோய்த் தொல்லைக்கு ஆளாக நேரும். "துறப்பார்கள் துப்புர வில்லார் உறற்பால் நாட்டா கழியும் எனின்" தரர் அனடயவர்கள் எல்லாம் தண் 533 + செய்யாது நீங்கி விடுவார்கள் என்றால் வறுமையாளர்கள் எல் லாம் துறவி ஆகிவிடுவார்கள் என்றும் கூறலாம். தமக்கு வந்து சேர வேண்டிய எல்லாம் வந்து சேரவில்லையானால் உணவுக்கு வழியற்றோர் துறவியாவர். அஃது உன் மைத் துரவன் று, வாழ் வழியில்லாமையால் மேற்கொண்டதாகும். எல்லா வாய்ப்பும் இருக்கும் போதே உள்ளத்தால் பற்று நீங்கப் பெறுதலே உண்மையான துரவாகும், "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்காய் அல்லற் படுவது எவன்?" நல்ல 3வ உண்டாகும் போது அவற்றை நல்லவை என்று துய்த்து இன்புறுகின்றவர்கள். தீயவை உண்டாகும் போது துன்பப்பட்டுப் புலம்பினால் துன்பம் நீங்கி விடுமா? ஏன் நன்மை விளையவில்லை எனக் காரணம் காநகர முயலவேண்டும்! தவறு தம்முடையதாயின் திருத்திக் கொள்ளவேண்டும். தம்மீது தவறு இல்லையாயினும் பிறரால் அல்லது இயற்கையால் ஏற்பட்டது எனினும் எதிர்காலத்தில் அந்நிலை ஏற்படாதவாறு முன்னரே திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டுவதே முறைமையாகும், ஆள்வினையுடைமையில் "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" "தழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞன்று பவர்" எனவும் கூறி நழாம் இயற்கை நமக்கு வாய்ப்பாய் அமையவில்லை ஆயினும் தளர்ந்து விடாதே! விடாது முயற்சிசெய்! முயற்சி வெற்றியை ஈட்டித்தரும் என நம்பிக்கை கட்டுபவர் திருவள்ளுவர், நம் அதிகாரத்தின் நிறைவில் நாம் மிக வலிமை உடையது. அவற்றில் நமக்குத் துணையாய் அமையா இயற்கை ஒன்றை வென்றால், இன்னொரு இயற்கை தடையாகச் சில வேளைகளில் அமையலாம். ஆகவே, இயற்கையைக் கூர்ந்து நோக்கும் விழிப்புணர்வு நமக்கு எப்போதும் தேவை என்பதை உணர்த்த எழுந்த குறளே, "தோழிற் பெருவலி யாவுள் மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” என்பதாகும், "ஆகூழால் அசைவின்மை தோன்றும்” "போகூழால் மடி தோன்றும்” "இழவூழ் பேதை ஆக்கும்” "ஆகவூழ் அறிவைப் பெருக்கும்” "உண்மை அறிவே மிகும்” "நீ திரு தடடையவன் ஆகு. அல்லது தெள்ளியவன் ஆகு! "வாழ் நல்லதைக் கெடுக்கலாம் அல்லதை ஆக்கலாம்” "ஊழ் நாம் வா என்றால் வராது” “போ என்றால் போகாது” "தொகுத்தவன் துய்க்காமல் போகலாம்” "ஊழின் தாக்கம் சிலரைத் துறவர் ஆக்கும்” "தழால் ஏற்படும் அல்லல் கண்டு கலங்காதே” "ஊழே வலிமையானது" "தழைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்க” "வாழலுக்கு இடம் தாரோம்." நிறைவு வள்ளுவம் பரவ வேண்டும் வாழ்வியல் துலங்க வேண்டும் உள்ளாவது உயர்வு வேண்டும்! உரையெலாம் செயலில் வேண்டும்! எள்ளுவ தவிர்க்க வேண்டும்! | எதிலார்ப் பொறுக்க வேண்டும்! கொள்ளுவது அறமாய் வேண்டும்! கொடைவளம் வேண்டும் வேண்டும்! என்னும் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வேண்டுதலுடன் அறத்துப்பாலை நிறைவு செய்வோம் திருவள்ளுவர் வாழ்த்துமாறு வாழ்ந்து சிறப்போம்!