kiwkiya«-- 16 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) கட்டுரை - 1  சிந்தனைக் கட்டுரைகள்  கருத்தோவியம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+304 = 328 விலை : 410/- மறைமலையம் - 16 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. சிந்தனைக் கட்டுரைகள் 1963இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் வெளிவருகின்றது இந்நூலைப் பற்றிய குறிப்புரை... முருகவேள் கண்டகாட்சி, படைப்பின் வியத்தகு தோற்றங்கள், துன்பமாலை, முருகவேள் கனவிற் கண்ட ஓவியச்சாலை,மராடன் கண்ட காட்சி, பேய்களும் ஆவிகளும் என்னும் ஆறு கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். இது அடிசன் என்பார் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரைகளைத் தழுவியது 1908இல் வெளிவந்தது. `முருகவேள் என்னும் புனை பெயரால் அடிகள் எழுதிய நூல் இது. இதில் அடிசன் வரலாறும், அடிகளின் இளந்தைப் பருவ வரலாறும் உண்டு. - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள மூன்றாம் பதிப்பின் முகவுரை இந்நூல் இயற்றப்பட்டு முப்பதாண்டுகள் ஆயின. முப்பதாண்டுகட்கு முன் இந்நாட்டில் தமிழ்ப்பயிற்சி யிருந்த நிலைமையோடு இப்போதிருக்கும் அதன் நிலைமையினை ஒப்பிட்டு நோக்குங்கால், இனித் தமிழ்மொழிப் பயிற்சி எங்கும் பரவுமென்றெண்ணி மகிழ வேண்டுவதாகின்றது. இந்நூலின் முதற்பதிப்பிலும், அக் காலத்தில் இயற்றப்பட்ட எம்முடைய நூல்கள் பிறவற்றினும் வடசொற்கள் கலந்திருந்தன. தமிழறிஞர் பலர் அக்காலத்தியற்றிய நூல்களிலுங் கட்டுரைகளிலும் வடசொற்களும் பிறசொற்களும் தமிழிற் கலத்தலால், நாடோறும் வழக்கில் உள்ள நிலம் நீர் நெருப்பு சோறு ஒளி கோயில் குளம் முதலான எத்தனையோ பல தமிழ்ச்சொற்களும் வழங்காமல் போதலையுணர்ந்து, பிற மொழிக் கலப்பைத் தமிழினின்றும் அறவே ஒழித்தற்கு முயலத் துவங்கினோம். அதனால், இன்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் வெளிவந்த இந்நூலின் இரண்டாம் பதிப்பு முற்றுந் தனிச் செந்தமிழ் நடையினதாகச் செய்யப்பட்டது. அங்ஙனமே, எம்முடைய மற்றைய நூல்களுந் தனிச் செந்தமிழ் நடை யினவாகவே செய்யப்பட்டன; செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்யவே, இப்போது தனிச் செந்தமிழ்நடையே பெரும்பாலும் எங்கும் வழங்கி வருகின்றது. தமிழ் வல்லவர்கள் எல்லாரும் இனித் தனிச் செந்தமிழில் திருத்தமாக எழுதி னாலன்றி அவர்களுடைய நூல்கள் மணம்பெறா என்பதனை உள்ளத்திற் பதித்து அவர்கள் தமிழன்னையை ஓம்பி நலம் பெறுவார்களாக! இந்நூலின் இப்பதிப்பில் இன்னும் பல சீர்திருத்தங்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாவரம் மறைமலையடிகள் பொதுநிலைக்கழக நிலையம் முதற் பதிப்பின் முகவுரை இவ்வுரை நூலின்கண் அடங்கியிருக்கின்ற ஆறு கட்டுரை களும், ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவரான அடிசன் என்பார் சொற்சுவை பொருட்சுவை நிரம்ப எழுதிய கட்டுரைகளினின்றும் பெரும்பாலும் மொழி பெயர்த்துச் செய்யப்பட்டனவாகும். ஆங்கிலமொழியின் அமைப்புஞ் செந்தமிழ்மொழியின் அமைப்பும் பலவகையால் மாறுபட்டுக் கிடத்தலின், ஆங்கிலத்திற் கிடந்த அரிய நூற்பொருளை ஆண்டு நின்றவாறே எடுத்துச் செந்தமிழில் மொழிபெயர்த்தல் செந்தமிழறிஞர்க்கு இன்பம் பயவாதாய் ஒழியும். ஆகவே, அம்மொழிநூலில் மிகவுஞ் சுவைப்பதாய் விளங்கும் பொரு ளைச் செந்தமிழ் இயல்புக்கு இணங்குமாற்றாற் சிறுபான்மை திரித்தும், வேறுசில சேர்த்தும் அதனை இயற்றுதல் வேண்டும். இம்முறை வழுவா வண்ணம், அடிசனார் உரைப்பொருளை வேண்டு மிடங்களில் இயையுமாறு திரித்தும், எனக்கு ஆங்காங்குத் தென்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை உடன் கூட்டியும் இவ்வுரைகளை மொழிபெயர்த்து இயற்று வேனாயினேன். ஆங்கிலத்தில் இவ்வுரைகளைப் பயின்றார்க் கன்றி ஏனையோர்க்கு, இவற்றை எழுதுதற்கண் யான் எடுத்த உழைப்பும் பிறவுஞ் சிறிதும் விளங்கா. தமிழ் ஒன்றே வல்லார்க்கு இது மொழிபெயர்ப்பு நூலென்பது சிறிதும் புலனாகாது. ஆங்கிலம் பயிலுந் தமிழ் மாணவர் தமிழினும் புலமை எய்த வேண்டுவராயின், அவர்க்கு இக்கட்டுரைகள் மிகவும் பயன்படு மென்பது இதனை ஒரு சிறிது நோக்கினுந் தெற்றென விளங்கும். ஆங்கிலப்பயிற்சி யின்றித் தமிழில் வல்லராக விரும்புநர்க்கும் இது சொன்னயம் பொருணயங்களைத் தெளிவு பெறக் காட்டுமென்னுந் துணிபுடையேன். நாகை வேதாசலம் பிள்ளை சென்னை கிறிடியன் காலேஜ் PREFACE TO THE SECOND EDITION “Different classes of persons, at different times, make, of course, very various demands upon literature. Still, scholars, I suppose, and not only scholars, but all disinterested lovers of books, will always look to it, as to all other fine art, for a refuge, a sort of cloistral refuge, from a certain vulgarity in the actual world.” - Walter Pater on ‘Style’ A literary man of fine sensibilities cannot bear to be always in touch with the vulgarity of the world in which he was destined to live. He longs to be away from it. If the circumstances of his life are such as force him to live near to it, he either seeks a means whereby he can remove the vile accretions piled up by ignorance or tries hard to introduce order and neatness where all had been disorderly and filthy. Moreover he keeps his mind intact and takes great delight in contemplating the beauties of nature and nothing the excellent traits in human character. In addition to these if he be so fortunate as to be endowed with the rare faculty of communicating his refined thoughts on life and beauty to the society in which he moves, he takes as his effective means either language or music, painting or sculpture. In representing his fine ideas in these mediums of thought, he is careful enough to avoid all sorts of vulgarity lest it should contaminate not only his mind but also the minds of those whom he addresses. If, at all, he is obliged to touch upon an aspect of vulgarity in order to bring into strong relief either the beauty of nature or human character in the delineation of which he is engaged, he touches only so much of it as is needed for his purpose. In short, a man of refined sense and productive imagination idealizes all that his experience brings into his mind, gives to them a form which is not wholly at variance with what they have in the actual world but which now becomes in his hands more sharp and distinct in its outline, more brilliant in its colour, more vital, moral and spiritual in its expression. When this product of his intellect is given to the world, the people who see it, are not shocked at it, for they find nothing extravagantly strange in it, but are pleased to perceive what was, and is, familiar to them, has now become invested with a charm and beauty which thrills them with a heavenly pleasure and awakens in them an ardour to emulate its virtue. This effect is common to all ideal production of mighty minds whether they are prose wrtitings or poems, music, paintings or sculptures. Still, of all, the effect produced by language is stronger and more permanent, since it appeals directly to intellect and imagination, while that of music, painting and sculpture reaches them only indirectly. To the power and influence exercised from time immemorial by language over the destinies of nations, the Tolkapiam, the Sacred Kural, the Silappadhikaram, the Iliad, the Mahabharata and others are a standing testimony even to-day. In English literature, leaving aside the immense good rendered by the immortal works of such master poets as Shakespeare, Milton, Shelly and others, when we come to take into account the numerous benefits that accrued first to the English people and next through them to humanity at large, from the prose writings of literary men no name stands higher in our estimation than that of Joseph Addison. Before the time of our author the English people were somewhat coarse in their tastes, rude in manners and wanting in refinement. Their age was so badly artificial that in it even the greatness of a poem like Paradise Lost was not recognized. In such an age Addison came and “spoke with the true tone of a moralist, yet with a moderation and judgement that disarmed criticism, and brought the lessons home to the hearts of men. His humour is of the subtlest and most delicate kind; his wit is keen, but kept in check by a noble temper and perfect sanity of judgement.” Again it is to Addison that we are indebted “for enforcing true cannon of taste in literature, life and art, and for establishing a more correct standard writer who, in a remarkable way, fulfilled the function of a true literary artist. Even while he was in the modst of a people with little refinement, he did not allow his mind to be tainted by their meanness, but strove hard to purigy their tastes and refine their manners close as he lived to reality, its vulgarity he shunned. He idalized everything on which he set his thought. If what he took to handle were by its nature pure, after coming into his hands, it glowed with a still purer lught casting around a serene, moral and spiritual radiance; but if it were of a low and vulgar kind, he purged it of the foul element which rendered it unclean, while its good quality he improved. In this noble work of idealisation Addison’s English style plays a prominent part. His choice of words is faultless and the harmony of sound and sense in which the words flow into sentences, renders the mater attaractive and easy of comprehension. Besides the literary grace, his mild and delicate humour infuses an additional charm into his essays which produces a pleasurable effect on the mind of the reader, when impressing on it the great moral and spiritual ideas imbedded in them. His English style, even after the lapse of two centuries which brought in succession great masters of English prose, still remains an excellent pattern to be studied after by all who wish to acquire a good English style. Wll has it been observed by Shaw that “Addison was long held up as the finest model of elegant yet idiomatic English prose; and even now, when a more lively, vigorous and coloured style has supplanted the neat and somewhat prim correctness of the eighteenth century the student will find in Addison some qualities that never can become obsolete-a never failing clearness and limpidity of expression, and a singular appropriateness between the language and the thought.” Twenty one years ago when I was studying with deep interest the essays of this master of English prose, I was taken up so much with the beauty, excellence and instructive power of which, that during the course of my reading I felt a strong desire within me to translate some of them into Tamil in order to make my countrymen understand the kind of inimitable literary grace with which the best English prose is tinged and how it aids to impress on the mind of the reader the moral and spiritual ideas which it inculcates. At first I translated ‘The Vision of Mirza’ and ‘The Wonders of Creation,’ as they are full of thoughts and sentiments that bear a close resemblance to the principles of the Tamilian religion and philisophy called the Saiva Siddhanta and published them in the year 1904 in the second volume of my magazine Jnanasagaram. To suit them to the taste of the Tamil people, I had to make certain changes in the Tamil version of the two essays. First of all I removed almost all proper names that are foreign to Tamil and put in their stead pure Tamil names. And secondly, by way of introducing the subject, I added at the beginning of each essay a few appropriate incidents taken from the early part of my life. These additions and changes, I suppose, must have made the matter of the essays look more attractive in their Tamil garb, fro the readers who were not aware of their English original, believed that they were pure Tamil productions and admired their beauty. So much the two essays pleased my readers that it encouraged me to undertake the translation of some more of Addision’s essays. And accordingly, I translated four others into Tamil sticking to my method of translation, that is, the method of displacing foreign proper names by Tamil ones, and adding to or inserting in them a few descriptive passages of my own wherever that was deemed elegant or picturesque and published them in the fourth volume of Jnanasagaram. Altogether the six essays were, a little after, made up into a book and published in the year 1908, so that they may be easily accessible to all Tamil readers. It had taken seventeen years for the copies (1500) of the first edition to be sold off. Had it not been prescribed last year as a Tamil text for the students in Ceylon preparing for the Intermediate-in-arts-examination of the Cambridge University, it would have taken some five or six years more to get a sale for the five hundred copies supplied to students. Though this book and other writings of minde had been before the University of Madras all through the past sixteen years, she cared not to take notice of them. This is due to its being mainly a brahminridden bady. Where brahmins dominate, there no non-brahmin Tamil, however learned he may be, can hope to find himself recognized merely by dint of his merits and attainments. But not so are the foreign universities. Only in Ceylon do the descendants of the original Tamil possess power and influence. The Aryanized brahmins have not as yet found ample scope for colonizing there. Vestiges of ancient Tamilian life and civilisation can still be seen there, although those who have imbibed western education have undergone a marked but undesirable change in their costumes, customes and manners, Nevertheless, the love for their mother-tongue, Tamil, has not altogether died out from their hearts; still there are visible signs of its being rekindled into an intenser form and of extending its light to all other Tamilians wherever they are. It was this love of theirs that prompted some of their learned men to recommend without my asking for it, this book of mine to the Cambridge University. For this and similar acts of kindness and substantial help, I take this opportunity to express my deep indebtedness to the Ceylon Tamils, especially to my friend Mr. C. Ariyanayakkam and my late lamented friend Sir P. Arunachalam. I also tender my thanks to the syndics of the Cambridge University for prescribing my book as a text to the Intermediate-in-arts-examination. Outside the circle of University students, it is not possible to get a good sale for high class Tamil books poetry or prose, ancient or modern; for, the tide of vernacular education in this country is at its very lowest ebb. Even one in thousand knows not to read and write Tamil. Why is it so? The cause is worth considering, as in the case of well-sinkers a correct knowledge of the mass of matter that blocks the passage of an ever-flowing spring, will help them how to remove it and make way for the life-element to issue forth. I, therefore, venture to say a few words on it, even at the rist of over stepping the bounds of a preface. The reason for this deplorable state of ignorance in South India is not far to seek. Before the immigration of northern brahmins that is before the mediaeval and ancient periods of the South Indian history, the Tamil people studied Tamil much, for their monarchs encouraged its learning in every way. All the varied forms of literature written in pure Tamil prior to the twelfth century A.D., bear ample testimony to the great literary activity of the Tamils and the vast extent of culture they had acquired in almost every branch of learning. Entire absence from old Tamil literature of all mythical, romantic, libidinous and indecent accounts about Gods and sages which constitute an essential feature of Sanscrit works, indicates the highly developed sense which the Tamilians had of the naked moral truth. But from this sense of truth came a fall, the moment the Arya brahmins came from the north bringing with them and popularizing here legendary tales about Gods and rishis, as an easy means of catching the fancy of the people and bringing them completely under their control. Since these brahmins had been very selfish, greedy and cunning, they did their best to keep the people in ignorance and illiteracy, so that they might always be sought after by the people for any enlightement they were in need of. Sanscrit they called the language of God, and the brahmins the gods on earth. The people were forbidden to learn anything in general and Sanscrit in particular and in their minds a perpetual fear was implanted lest any breaking away from the injunctions of the priests should bring about the ruin not only of themselves but of their whole family and relations as well. These brahmins did not scruple to show from the Sanscrit books that the injunctions found in them were laid down by the Gods themselves, while in fact, they were their own, fabricated in the name of Gods simply to intimidate the credulous people. As time went on, the influence of the northern brahmins penetrated to the very core of the Tamilian Society, that many, stationed high among them discharging priestly and educative functions, began to feel the secret power of the northern cult and with a view to raise themselves still higher in the estimation of their own people, gradually isolated themselves from their society and identified themselves with the northerners and their own interests with theirs, to so great an extent that they gave up completely the study of Tamil, thinking that it would sink them to make themselves mysterious and good-like in the eyes of the masses, and grew more enthusiastic in speaking loud of the sacredness of Sanscrit and the divinity of brahmins than even the northerners. Even a casual looker-on may not fail to note this state of things still continuing in Southern India. Here all the brahmins, with a few exceptions, are pure Tamilians and there is not a particle of evidence to prove that they had even been related to the northerners in any way; yet their aversion to Tamil and the Tamils is such that they are foremost in heartily lending their help and encouragement to a study of any language but that of Tamil and to an uplift of any people but the Tamils. Here, one can never hope to enlist the sympathy of a brahmin, unless he follows machine-like what is told and writ in the brahminical literature. No other cause than this domination of brahminism, can explain the existence of a multipublicity of the Sanscrit Puranas that came to be written and translated into Tamil in quick succession from the 12th century A.D. down to our own, and the adoption of Sanscrit for conducting services in the Tamil temples and performing rituals in Tamil homes. The Purity of Tamil, the simplicity of Tamil life, the height to which the Tamilians had risen in moral and intellectual culture, their excellent aesthetic sense of beauty in nature and human character, their study of arts and sciences, their conception of God, soul and matter - in short, all that constituted their ancient civilisation were totally gone. Leaving them to dispute over trivial caste distinctions, to worship and offer bloody sacrifices to deified heroes and heroines, to perform ignorantly expensive and meaningless rites prescribed by brahmin priests and to earn their livelihood by means of trades and industries not intelligently carried on with improved knowledge and appliances but blindly followed from generation to generation without either any improvement, or higher motives and purposes. Such as the condition in which the Tamil people have continued to be for the last six centuries and even now when the physical, social and intellectual progress of other nations is so rapid and astounding, theirs has not advanced even a little but recedes farther and farther away into the shade. No community that seeks its own benefit can hope to live long at the expense of others which supply its bare necessaries: food and clothing, by thier unremitting labour. The Hindu nation is composed of different classes of people who perform different kinds of work which go to render life easy and comfortable and productive of high moral and spiritual good and who are, on that account, bound up one with the other so intimately, just as the different parts of a living body are united together one co-operating with the other for the common good of the whole. If any part of one’s body claims an exclusive superiority to its own function and constitution, treats other parts and their functions with contempt or indifference and sternly refuses to co-operate with them, it requires no great wisdom to say what the result would be; surely a general breakdown will overtake the whole body, every part of it suffering most acutely with every other part from the effects of the disintegrating process that has set in one particular part. Similarly if the limited number of the Hindu people who call themselves brahmins, not on account of any superior merit which proves that they alone possess it in preference to others, but on account of mere birth as well as of conventions they have, with no good motive, created among themselves, go on most unreasonably claiming all high privileges exclisively to themselves, to the detriment of the teeming millions who do all sorts of useful work but not caring for their uplift and welfare, certain it is, as night follows day, that this comparatively insignificant number of people would be wiped out of existence in a few centuries. The Hindu nation does not at present live - even if we suppose it to have been in the hoary past, in complete isolation in a remote corner of this globe, cut off from all communication with the rest, but it does live in so close a contact with several great nations widely differing close a contact with several great nations widely differing from it in language, religion, customs, manners and so on, that it can no longer hope to remain unaffected by their influence. Except the Hindu, all others are progressive especailly the English whose advancement in the knowledge of arts and industries, of social, moral and religious principles is simply marvellous. Besides being unprogressive, the Hindu society is torn to pieces by numberless caste distinctions nurtured by vanity, selfishness and rank ignorance. That this type of weak and degenrating society cannot hold its position long by the side of a strong and fast progressing nation like the English but must before its assimilating power so as to be absorbed by it finally, is clear from the luminous exposition bestowed on the subject by Benjamin kidd. He says : “The Anglo-Saxon has exterminated the less developed people with which he has come into competition even more effectively than other races have done in like case; not necessarily indeed by fierce and cruel wars of extermination, but through the operation of laws not less deadly and even more certain in their result. The weaker races disappear before the stronger through the effects of mrer contact.” It is, therefore, most urgent that, if the Hindu people really wish to maintain a honourable place in the midst of other great nations, they should direct their energies to striking at the rootcause of all their present evil, namely: the inveterate prejudice and ignorance. These two must be ousted far from their mind by implanting in it the idea of brotherhood and a reformed knowledge of their own mother tongue. The mental eyes of every one must be opened not only to see that the present miserable condition of their life has been due to the spell cast on them by brahmin witchcraft, but also to realise the great truth common to all great religions, that is : all are the children of one Heavenly Father, and the various functions variously assigned to each, simply serve to make living less troublesome and more endurable, so that, through this mutual help, each may work independently and peacefully for the salvation of his or her soul. As such no one should ever be looked upon with contempt, how ever his calling in life may seem to unthinking minds, but should be treated with that regard which its usefulness demands: and those who, by circumstances of life, are forced to engage themselves in several low but highly useful occupations should not on that account be hindered from sharing in the benefits of education and social intercourse equally with all. While co-operating with each other, every one must have fill scope for developing on independent lines his own mental and moral culture. One must not lord over the other and seriously interfere with his freedom of action and thought as that would silently tend to interfere with the freedom of the oppressor himself and bring about his ruin. In the interest of the brahmins and other high class people themselves, I say that, if they want to save themselves they must come down from their self-assumed and supercilious position and redeem the people from the caste troubles and their fruitful source ignorance and illiteracy. All the loose and infinitely divided sections and subsections of the Hindu community must be brought together and cemented indissolubly into one compact whole by one common ideal of brotherhood, for attaining which they should all be taught to strive hard. For, a public service not directed towards educating the people and unifying them, but directed simply towards creating a mere momentary stir will produce in the end not only no good but may even disturb the peace of the country. Hence, all serious, considerate and unselfish well-wishers of the Hindu as well as of the other communities of India should set to work to uplift the people, first by means of imparting a reformed education of their own mother tongue and secondly, by making them cohere into three or more strong and solid bodies as the Hindu, the Muhammedan, the Christian, and so on, in accordance with their time-honoured religious traditions. If these two were accomplished, all other reforms will, as a matter of course, closely follow in their wake. Now, as regards this second edition, I wish to say a few words more. In order to make the study of this book much easier for students preparing for university examinations, I have added copious explanatory notes on words, phrases and subject-matter and have written also accounts of Joseph Addison’s life and my own early life so far as the beginning of some essays. Not only to University students but also to all lovers of Tamil who study them for light and aesthetic enjoyment, these notes, I believe, will be of great use. The translation was, from the first, made very faithful to the original but in this edition it was made still more so in a few places where handled it somewhat freely in the previous edition. This was done with double purpose: at first, to show the futility of the complaint put in by brahmins and many misled students that Tamil has no sufficient quantity of words adequately to express the meanings of English words used in dealing with a variety of high class subjects and secondly, to bring home to their mind the fact that Tamil is an independent language with a rich store of words capable of expressing in a skilful hand all kinds of thoughts that appear in the different branches of learning. Instead of arguing about this fact with prejudiced persons, is it not better to show the fact itself in practice? Accordingly the Tamil style of this edition of essays has been rendered extremely pure by eliminating completely all Sanscrit words that mingled in the original edition at the rate of four or five percent. In this connection I wish to say that I am not one of those who plead warmly for a free, unlimited, unscrupulous introduction into Tamil of Sanscrit words and even English and other foreign words. Not only is Tamil a language spoken at the present day nearly by twety-five millions of people, but it also is the only cultivated language that has cultivated others such as the chaldean, the Egyptian, the Hebrew, the Sanscrit, the Chinese, the Greek, the Latin and the Arabic. For a language to live so long without undergoing in its structure any such material change as would make it unfit for communication of ideas, there must, indeed have been within it an inexhaustible store of vitality. The continual existence of a language simply bespeaks the continual existence of a civilisation owned by the people who speak it, for, in less civilized communities and among savages, languages so rapidly change and die, that the very same people who were speaking formerly only one language, were after the lapse of a few years, say twenty or thirty, found to speak many languages that had become unintelligible to each other. In illustrating this fact, Prof. Max Muller has quoted many instances, out of which the following is a remarkable one. We read of missionaries in Central America who attempted to write down the language of savage tribes, and who compiled with great care a dictionary of all the words they coyld lay hold of. Returning to the same tribe after the lapse of only ten years, they found that this dictionary had become antiquated and useless. Old words hand sunk to the ground and new ones had risen to the surface; and to all outward appearance the language was completely changed. It was this natural law reigning supreme in uncivilized communities that had formed the essential cause which tended to create a great multiplicity of languages. It was the very same law that had, in olden times, led to the transformation of Tamil into Telugu, Canarese, Malayalam, Tulu, Brahui and other cognate tongues. The more the uncivilized portions of the Tamils moved onward farther and farther away towards the north, leaving behind in the south their civilized brethren each portion settling down into a small community in a small tract of land that was suitable for its living and each separting from the other by distance and difficulties of communication, the more was the original form of their speech neglected and left to undergo considerable change in course of time. And as if to complete the change and to mark them off as languages distinct from Tamil, the Aryans came into India and imposed on them their language manners, customs and religious beliefs. As these Tamils who marched to the north had been less civilized than those whom they left in the south, they readily yielded to the influence exerted by the cunning Aryans priests and have continued to remain in its grip ever since. Why Telugu, Canarese and Malayalam are loaded with such a large number of Sanscit words, phrases, and myths that there is scarcely to be found in them a single literary composition which is entirely free from them, cannot be explained on any other ground that that which is furnished by the above mentioned facts. But not so is the old Tamil literature; it is rich in grammar and rhetoric, rich in lyrics, idylls, epics and didactics, rich in exquistic poetic prose, and commentaries - all produced quite independently of any foreign influence. It was this high degree of culture, to which the ancient Tamilians had attained, that saved their language from death and decay. Prof. A.H. Sayce has truly observed: “The natural condition of language is diversity and change, and it is only under the artificial influences of civilisation and culture that a language becomes uniform and stationary. Destroy literature and facility of intercommunication and the languages of England and America would soon be as different as those of France and Italy. Besides civilisation, the very nature of the sounds of which the Tamil words are composed, helpts the people to pronounce them with least effort, and thus prevents Tamil from being corrupted into dialects. In Tamil no consonanat can come at the beginning of a word without combining with a vowel; nor can any of the hard consonants k, ch, t, t, p and r, stand singly either in the middle or at the end of a word; while the sibilants and the aspirate s, sh, c, h are totally abesent from it. For instance, the word ‘chrome’ cannot be pronounced in Tamil as it is; in accordance with its strict phonetic law it should be pronounced as ‘kurome’ by adding a vowel ‘u’ to the first letter which is hard consonant. This is exact way in which all children, I have observed, pronounce such words not according to English fashion but according to Tamil. Similarly in the middle of the word ‘irksome’, the sounds ‘r’ and ‘k’ and ‘k’ and ‘s’ do not coalesee easily with one another, unless it is changed into ‘irikkusome’ according to the Tamil phonetic law by which the act of pronouncing it is rendered easier for all including children. In the same way, the word ‘nut’ must be pronounced ‘nuttu’ in Tamil; the reason is simply this: the breath started by one’s exertion to utter it does not stop abruptly at the letter ‘t’ but runs a little onward and ends in a vowel sound ‘u’. It its this and such other phonetic laws tending to an effortless utterance of words that has preserved Tamil in all its youthful glory all through the indefinite period of its life. Even the principle of laziness which is actively at work in killing one language and creating many, - these to be killed again to make room for others to be produced anew had not been able to touch Tamil, in as much as its words lend themselves to be pronounced easily by all. It is this flexible quality combined with the influence of a permanent civilisation that has made Tamil survive all the once most cultivated language of the ancient world. Even to-day the language of a purely literary Tamil piece, of course not encumbered with old and antiquated grammatical peculiarities, is not different from that spoken by the peasantry. The Tamil words that are more than seven thousand years old, have not undergone any change in the mouths of the later. The sacred Kural written two thousand years ago is intelligible even now to an illiterate rustic. Does not this indicate the great vitality of Tamil? It was shown above that the sibilants s, sh, and c and the aspirate h are entirely absent from Tamil. These three hissing sounds and the aspirate not only do waste the breath and energy of the speaker but also produce a jarring and unpleasant sound on the ears of those who hear them. That is why all great English poets as Milton, Wordsworth, Shelley, Tennyson and others studiously eschew from their poems the use of words having hissing sounds, lest such words should mar the melody of their songs. In pointing out this characteristic beauty in Tennyson, the modern critic Mr. Greening Lamborn says, “He knew, for example, that the excess of sibilants in English is a source of hissing, and he carefully went through his work to rid it of this element - he called it “kicking the geese out of the boat.” So the remarkable absence of all hard hissing and unnatural sounds from Tamil constitutes it a melodious, poetic language in its very build. Discerning this marked excellence of Tamil, the ancients kept Tamil absolutely pure and were very careful in preventing the entry of extraneous elements into it, as almost all the foreign languages including Sanskrit are made up of harsh and hissing sounds. This wariness on the part of the Tamils, this habit or resisting unwelcome foreign influence is so persistent in them that, though what was a desirable and progressive element once has now become an undesirable and unprogressive one, it yet constitutes an important factor in keeping Tamil still alive and pure among the greater portion of their community. But recently certain Tamil scholars who have come under the influence of brahmins express it as their opinion, may even as their conviction, that a large introduction of Sanskrit words and phrases together with a number of English words and others, would enrich Tamil and keep it abreast of the needs of modern times. Indeed this suggestion must be quite welcome to all well-wishers of Tamil, if it would really enrich it. But, infact, the intrusion of foreign words instead of enriching Tamil, impoverishes it by making its own words fall into disuse one after another, in proportion to the former gain in currency. Even such pure household Tamil words as nilam, neer, neruppu, Katru, Vanam, unavu, oil, pahal, nila, iravu, talai, mooku, adi, an, erudu, enam, payan, eruchhal, aram, vinai, uyir, mahan, mahal, kadavul, niniaivu, nool, seyyul and many more which respectively mean in English earth, water, fire, air, sky, food, light, sun, moon, night, head, nose, foot, cow, bull, vessel, use, anger, virtue, action, soul, son, daughter, God, memory, treatise, stanza etc., are slowly disappearing from the speech of the high caste people, before the Sanscrit words bhumi, jalam, agni, vayu, akka, anna, prakasa, surya, chandra, ratri, ciras, nasika, padam, pacu, rishaba, patram, prayojanam, kopa, dharma, karms, jiva, putra, putri, Iswara, jnapaaka, sastram, kavita etc, which are usurping their place by the persistent use that is being made of them by brahmins and others who follow in their footsteps. Except amongst the rural population, in all the so-called high caste communities Tamil is giving place to a medley of speeches in which English and Sanscrit words mix up freely with Tamil. One might have observed when travelling in a railway carriage, how in a company of brahmins and other of their ilk, one man starts a conversation in which others also take part by introducing a subject in a few corrupt Tamil words, and another continues it immediately with a few more English words and short sentences, a little after both returning to Tamil, and using long and high sounding Sanscrit words, now jesting in Hindusthani, now taking flippantly on some political matters and so on, until the whole company disperses. However serious the observer may be the careless, indifferent, and promiscuous use of several languages in Tamil, cannot but excite in him laughter and indignation together. Yet there are some who would warmly advocate the adoption in Tamil composition of such a chaotic handling of heterogeneous elements! Can the real cultivation of mind be achieved in this slipshod fashion? No, it can result only from restraining one’s thoughts from wandering loosely and aimlessly from one thing to another. Thought and expression being most intimately related to each other, the process of strengthening, clarifying, and improving one’s thought can be accomplished in no other way than that of concentrating one’s attention on the proper, most accurate, and pleasing manner of using one’s own speech. Because, the language, one has inherited through his mother, treasures up thoughts and sentiments which have been maturing for centuries in the minds of his forefathers, and which, from the time when he was in the cradle to that when he will be laid in the grave, penetrate into his being and mould it according to their laws. However great, subtle, and profound may be one’s knowledge of a foreign language, he cannot rid himself of the habits of thought that were deeply ingrained in his mind by his mother tongue. It will therefore, be utterly impossible for any man to negelect the study of his own language and exchange it for another, without losing the essential nature, strength and simplicity of his mind. As a matter of course, the growth of one’s understanding must come from within and not from without and all that the external elements can do assist the internal growth but not to create it there. Like the coconut palm that can thrive well only in Indian soil, a man’s intellect also can develop well only by the study of his own language. He who learns a foreign speech neglecting his own, faces an element that hampers his mind’s growth at every turn. But another who acquires a sufficient knowledge of his mother tongue first, and then devotes himself to a study of the foreign one, increases his discriminative faculty by noting the points of similarity and dissimilarity between the two. Further, one can attain proficiency in his mother tongue with less trouble and in a fewer number of years than the trouble and time he takes to master a foreign language. Now, the cultivation of one’s mother tongue itself, as just pointed out, should not be carried on in the slovenly manner in which it is done by the brahmins and their followers. Defiling one’s speech by mixing up with it extraneous elements simply indicates laxity of discipline, looseness of character and lack of serious purpose in life. Acquisition of knowledge should be pursued not for the sake of money but for the sake of knowledge itself, since the possession of knowledge means the priceless enlightment of one’s own understanding. What can be more profitable to man than to obtain the light of knowledge? Riches and other earthly possessions that come to him who is learned, do not last long nor do they give as permanent a satisfaction of mind as his knowledge of great things does. A careful, judicious and fastidious handling of one’s own language not only increases the power of his understanding that arises from his gaining an insight into the native harmony of sound and sense but it also affords an ever-lasting pleasure which results from the vigilance and concentrated attention that spring up in keeping it chaste. The development of moral and intellectual elements of human mind being thus based on the aesthetic, the patriotic, and the self-restraining sense which scholars bring to bear upon the use to which they put their own speech, I need scarcely impress upon the mind of my Tamil brethren the importance of keeping Tamil pure and improving its culture in our own independent line. Scholars aiming at a refined culture must, like all great poets and prose-writers, keep themselves away from the touch of slang and vulgarity. Here may step in some brahmins who, ever watching for an opportunity to cry down Tamil, put forth the worn-out argument that the Tamil is not as sufficiently rich as to express without the help of Sanscrit all the ramifications of modern thought brought into existence by English, and that even when English loathes not to adopt as many words as it needs, from various languages all over the world, it is against the principle of expediency of contest for keeping Tamil pure and intact. But it is most unreasonable to bring in the case of English in an argument that vitally affects Tamil, without taking into account the conditions under which English developed. The races that speak English reached a civilized stage only very lately, that is only within the last three or four centuries at most. Before that time they were less civilized and consequently the language they spoke was in a continuous state of flux. Just compare the language of caedmon, of Langland of chaucer, of shakespeare, of Milton, and of Tennyson, one with the other, and see to what great an extent the language of one poet differs from that of another. At the time of Shakespeare the English language rose to such a height of change that one who is familiar only with it, is rendered unable to understand the same as was used in its preceding stages. The history of England tells us in what great disorder the condition of its people had been through what horrible, destructive, and sanfuinary conflicts and combats they had passed, as wave after wave the invasions of not one but different races came from Europe, and after what an immoderate degree of commotion and boiling they attained to a settled order of social and political life. All the troubles they underwent are reflected, as in a mirror, in the change and transformation which the English language went through. But no such troubles on so extensive a scale came to the ancient Tamils, as far as we can glean information on the point from their olf literary works. No doubts is it true that every human community should have originally passed through such troubles in greater or less degree according to the conditions of their habitation rendered them so; and yet as we come to study the life of the ancient Tamils from their most ancient literary work- I mean the Tholkappiyam, the age of which on the best internal evidence goes back to 1500 B.C., we see them already settled into highly civilized community for the most part peaceful, but for a few infrequent feuds between one Tamil king and another. It is to this continuity of a peaceful and highly civilized life enjoyed by the Tamils that we owe the existence of the Tamil language still in its pristine purity, vigour, and glory. To shape their life into a symmetrical from the English had to depend largely on the help of other nations and so they did not lag behind to take words from whichever language they could lay their hands on. But the Tamils never depended likewise upon others. It is, therefore, absurd to draw a parallel between the two languages: English and Tamil, and seek by which means to harm the later. Even now when the borrwing of foreign words on the part of English has gone out of all proportion, there are not wanting freat English scholars who, inspired with a pure, fine literary sense, recommend, may even against on the cultivation of a chaste Anglo-Saxon English style. Professor Freeman in introducing the new edition of his Essays says: “In almost every page I have found it easy to put some plain English word, about whose meaning there can be no doubt instead of those needless French and Latin words which are thought to add dignity to style, but which in truth only add vagueness. I am in no way ashamed to find that I can write purer and clearer English now than I did foruteen or fifteen years back: and I think it well to mention the fact for the encouragement of younger writers.” When in this commendable patriotic spirit even great English scholars justly advise us to write chaste English, poor though the English language is, how absurd and unpatriotic it is to plead for introducing Sanscrit and other foreign words into Tamil which is in fact not only rich in words and in noble literature but is also the only ancient language that is still alive. Now, there cannot be a greater and more evasive or ignorant or untrue statement than to say that Tamil is poor, that its words are inadequate to express the various minute shades of meanings, thoughts, and ideas with which many English words are pregnant. Such a false statement can come either from those who are utterly ignorant of old Tamil literature or from those who are deliberately intent upon concealing the truth and saying what is false for the purpose of killing Tamil wantonly. A cursory glance into the Sacred kural which deals with all kinds of high topics in a masterly manner, or into any other Tamil work of the early centuries of the Christian era, will suffice to show clearly the richness of the Tamil language. Although numerous Tamil words have fallen into disuse in the so-called higher circles, whose number is very small, yet among the masses almost all of them are in cosntant use and the language is quite pure still. A man who has received his education mainly in English and who can talk only in a strange colloquial Tamil mixed with English and Sanscrit, can hardly make himself understood by the people who speak only in pure Tamil. The kind of education that is now imparted to students simply serve to widen the gulf that already lies between the masses and the learned. I have seen many a man educated in English struggling for Tamil words to express his ideas to the people whom he was called on to address. This is not due to any defect in Tamil but it is due to his own imperfect acquintance with it. Only such persons do readily join the brahmin in condemning Tamil, just as the fox in the fable did the grapes. But as regards the richness of Tamil and of its fitness to express all manner of new thoughts and ideas, even so scathing a critic as the late Mr. M. Srinivas Aiyangar, who in a clean sweep styled the ancient Tamils liars and immoral people, did not however hesitate to speak out the truth, although in this respect he went out of his way. He says: “It (Tamil) can exist without the least help from foreign languages, as it had and even now has, sufficient elementary words of native origin, out of which compounds can, with a little attention to phonetic principles, be formed to express modern thoughts and ideas.” Much more emphatically was this truth affirmed by Dr. Caldwell than whom there never was a greater, a more profound scholar who devoted himself to a deep, careful and patient study of the Dravidian languages and their affinities. “It is true,” he says, “It would now be difficult for the Telugu to dispense with its Sanscrit: more so for the Canarese; and most of all for the Malayalam: - those languages having borrowed from the Sanscrit so largely, and being so habituated to look up to it for help, that it would be scarcely possilbe for them now to assert their independence. The Tamil, however the most highly cultivated ab intra of all Dravidian idioms can dispense with its Sanscrit altogether, if need be, and not only stand alone but flourish without its aid” “The Tamil can readily dispense with the greated part or the whole of its Sanscrit, and by dispensing with it rises to a purer and more refined style; whereas the English cannot abandon its Latin without abandoning perspicuity. Such is the poverty of the Anglo-Saxon that it has no synonyms of its own for many of the words which it has borrowed from the Latin; so that if it were obliged to dispense with them, it would, in most cases, be under the necessity of using a very awkward periphrasis instead of a single word. The Tamil, on the other hand, is peculiarly rich in synonyms; and from choice and the fashion of the age, that it makes use of Sanscrit”(Italics are mine). This impartial and candid, comprehensive yet discriminating, view of the Tamilian languages and their relative merit put forth long ago by a great European savant, ought to open - if it had not already opened the eyes of the misled Tamils to see the youthful glory, richness, and virility of their mother tongue and advance its culture on quite independent lines in accordance with its innate laws and phonetic principles. Although a like dependent culture may seem impossible in the case of other Tamilian languages as Telugu, Canarese and Malayalam, it is not really so hopeless as it seems at first sight. With a resolute will the scholars in those languages should set themselves to the task of eliminating from them all Sanscrit elements and putting in their stead pure Tamil ones which are in fact their pith and marrow. The Tamil, the Telugu, the Canarese, and the Malayalam people and other Dravidians living in the remotest parts of India, being the descendants of a single highly civilized ancestral race related to each other by the closest ties of blood and speech, should one more knit themselves together by eschewing the company of the Aryan intruder who harbours no good will towards them and should work harmoniously for promoting the common welfare of their several communities that live scattered all over India. By this I do not mean that we must hate the Aryans and their converts; on the other hand, I wish they must be let alone to work in their own way for their own well-being. And it may not be against our policy, to lend even our help and support to them, provided that course of action does not affect the welfare of our own people. All that I mean here is that the Tamilians who form the major portion of the Indian population shoud not be allowed still to be under the banefil influence of a handful of the Aryan people and suffer indefinitely for the sake of ministering slavishly to their wants, vices, caprices and indulgences. Until he treats the path of righteousness, until he learns to treat others with a kind and human heart, unitl he realizes the great benefit of living on a footing of equality with others and represses the feelings of selfishness, vanity, pride and greediness, the company of an Aryan should be studiously avoided but not be hated. We must even pity him and pray to God that he might turn to the path of light, love and right understanding. The Sacred Order of Love, Pallavaram, 24th July, 1925. VEDACHALAM பொருளடக்கம் பக்கம் 1. முருகவேள் கண்ட காட்சி 27 2. படைப்பின் வியத்தகு தோற்றங்கள் 38 3. கனவிற்கண்ட துன்பமலை 49 4. மராடன் கண்ட காட்சி 59 5. கனவிற் கண்ட ஓவியச்சாலை 66 6. பேய்களும் ஆவிகளும் 72 7. விளக்க உரைக் குறிப்புகள் ஜோசப் அடிசன் 78 8. முருகவேள் கண்டகாட்சி 86 சிந்தனைக் கட்டுரைகள் சொல் விளக்கம் 94 1. முருகவேள் கண்ட காட்சி நான் சிற்றூரில் இருந்த பொழுது ஒரு பார்ப்பன இளைஞன் எனக்குச் சிறந்த நண்பனாயினான். இவ்விளைஞன் பார்வைக்கு நல்ல தோற்றம் உடையனாயுஞ் சிறு குழந்தையைப் போல் இனிய இயல்பு உடையவனாய், இசை பாடுவதில் வல்லனாயும் இருந்தனன். அவனுடைய அமைதித் தன்மையும் இசைபாடும் வல்லமையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. எனக்கு அகவை இருபது ஆண்டு; அவ்விளைஞனுக்கு பதினைந்து ஆண்டு இருக்கும். அவனும் எனக்குத் தமிழ் மேலேயுள்ள பயிற்சியினையும் எனது நல்ல தன்மையினையுங் கண்டு விரும்பி என்னை மிக நேசித்தான். இவ்வாறு எமக்குள் என்றும் நெகிழப் பெறாததொரு மனவொருமை உண்டாவதாயிற்று. எமக்குள் விளைந்த அன்பு ஒருநாளைக் கொருநாள் மேன்மேன் முதிர்ந்து பெருகவே, யாம் ஒருவரை யொருவர் ஓர் இமைப்பொழுது பிரிந்திருப்பினும் அவ்வொருபொழுதும் ஓர் ஆண்டுபோல் தோன்றாநிற்கும். நாங்கள் இருவேருஞ் செல்வர் ஒருவர் இல்லத்தின்கண் இனிது விருந்தோம்பப் பெற்றிருந்தே மாதலால், நாள் முழுதும் பிரியாமல் ஓரிடத்தில் ஒருங்கிருந்து பல நற்பொருள்கள் பேசி அளவளாய்க்கொண்டு நாட்கழிப்பே மாயினேம். சிலநேரம் அவ்விளைஞன் தாயுமானசுவாமிகள் பாடல்கள், கடவுள்பால் அன்பு மிகுக்குந் தெலுங்குப் பண்கள் முதலியவற்றைக் குயில்போல் மனங்குழையப் பாடி என்னை மகிழ்விப்பான்; யான் அவனுக்குச் சில பொழுது திருவிளை யாடற் புராணச் செய்யுட்களுக்கு உரைவிரித்துச் சொல்லித் தமிழினருமை பெருமையினை நன்கு விளக்குவேன். அவனுந் தமிழின் இனிமையினை மிக வியந்து தமிழ்ப் பாட்டுகளுக்கு உரைகேட்டலில் மிகவும் விழைவு கொண்டான். யானோ அவன் பாடும் இனிய ஓசையில் அறிவு இழுப்புண்டு விசைமுறை அறிதலில் நிரம்பக் கருத்தூன்றி கேட்பேன். இங்ஙனம் எமக்குள் விளைந்த நட்பின் பெருமை எமக்குப் பேரின்பந் தருவதாயிற்று. எங்கள் விழுப்பத்தினை நினைக்குந்தோறும் மக்கள் பேறுகளுள் இதனினுஞ் சிறந்தது பிறிதொன்று உண்டு கொல்! உண்டுகொல்! என்று என் நெஞ்சம் உருகா நின்றது. என் நண்பன் விடியற்காலையில் நாலரை அல்லது ஐந்து மணிக்கெல்லாம் விழித்து எழுந்திடுவான்; எனக்கு அவ்வளவு காலையில் எழுந்திருத்தல் இயலாது. நல்ல புலரிக்காலையிலே தான் எனக்கு அயர்ந்த உறக்கம் வருவது வழக்கம். இவ்வழக்கத் தினை நீக்கவேண்டுமெனப் பலகால் முயன்றும், அஃதெனக்குக் கைகூடிற்றில்லை. ஆகவே, ஞாயிறு தோன்றியபின் ஏழு அல்லது ஏழரை மணிக்கு எழுந்தால் மட்டும் என் அறிவு தெளிவாயும் உடம்பு சுறுசுறுப்பாயும் இருக்கும். என் பக்கத்தே படுத்திருந்து விடியற்காலையில் வெள்ளென எழுந்திடும் என் நண்பன் என்னை எழுப்பாமல் நானே எழுந்திடும் வரையில் என் பக்கத்திலிருந்து இனிய இசைகளை மிழற்றிக் கொண்டிருப்பான். அவ்விசையைக் கேட்டதும் எனக்கு உறக்கங் கலைந்துவிடும். எவ்வளவுதான் நான் அயர்ந்து உறங்குவேனாயினுஞ் சிறியதோர் அரவந்தோன்றக் கேட்டால் உடனே உறக்கம் நீங்கி விழிப்பேன். விழித்துக்கொண்டாலும் படுக்கையினின்றும் எழுதற்கு அரை மணி நேரஞ் செல்லும். இங்ஙனமாக நான் விடியற் காலையில் எழுந்து விடுதற்காக என் நண்பன் செய்த சூழ்ச்சி வியக்கற் பாலதா யிருந்தது. இவ்வாறு நாடோறும் என்னை வருத்தாமல் வைகறையிலெழுப்பிக் கொண்டு ஊர்ப்புறத்தே என்னை அழைத்துச் செல்வான். சிற்றூர்க்குப் புறம்பேயுள்ள நிலஇயற்கை காண் போருள் ளத்தில் ஒருவகையான மனவெழுச்சியினைத் தோற்று விக்கும் இயல்புடையதாய்த் துலங்குகின்றது. பசுமையான பச்சிலைப் போர்வை மேற்கொண்டு பருத் துயர்ந்தடர்ந்த புளியமரத் தோப்புகள் ஆங்காங்கு இருக்கின்றன. அத் தோப்புகளை அடுத்துச் சிறுசிறு குன்றுகளும் உயர்ந்த மலைகளுந் தோன்று கின்றன. ஓரோவோர் இடங்களில் வாழைத் தோட்டங்களும் வெட்டவெளியான இடங்களும் இருக்கின்றன. அருவியோட்டங்களாயினுங் கான்யாறுகளாயினும் அங்கில்லை. நாற்கோண மாக வெட்டப்பட்டுக் கசங்க ளென்று சொல்லப்படுங் குளங் களும் இறைகேணிகளும் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. நிலஞ் சுக்கான் கற்கள் நிறைந்து கரடு முரடாயிருக்கின்றது. வேனிற்காலத்தில் நிலம் மிக வறண்டு புற் பூண்டுகள் கரிந்து போகின்றன. கற்பாறையுள்ள இடங்களில் அகழ்ந்த நீர் நிலைகளில் மட்டுந் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருக்கும். இறைகேணிகள் அகலமாயும் நாற்கோண மாயும் வெட்டப்பட்டு ஆழமாயிருக்கின்றன; அவற்றிற் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டிருத்தலால் நீர் அருந்துவோருந் தலைமுழுகு வோரும் இறங்குவதற்கு அவை எளியவா யிருக்கின்றன; இரும்பினாற் செய்த இறைகூடைகளைப் பூட்டையிற் கட்டி மாடுகள் இழுக்கும் முறையாற் குடியானவர்கள் நாடோறுங் காலையில் வாழைத் தோட்டங்களுக்கு நீர் இறைத்து வருகின்ற மையின் நீர் மிகவுந் தெளிவாயிருக்கின்றது. வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியன பயிரிடப்படுகின்ற கொல்லை களுக்கு இக் கேணி களினின் றிறைக்கப்படும் நீர்தான் பாய்கின்றது. வாழைத் தோட்டங்கள், புளியமரத் தோப்புகள், கிழங்குகள் பயிரிடப் படுங் கொல்லைகள் இருக்குமிடம் ஊர்க்குப் புறம்பேயாதலால், அங்கெல்லாம் மக்கள் பெரும் பாலும் வழங்குவதில்லை. அதனால், அவ்விடங்கள் தனித் திருந்து, தனியே பொழுது போக்காய் வருவார்க்குப் பெரிய தொரு மனமகிழ்ச்சியினை விளைக்கும். அவ்விடங்களின் பக்கத்தே யுள்ள சிறு குன்றுகளும் மலைகளும் ஓசையில்லா விடங்களிற் பெருமையுடன் றோன்று தலால் அவை காண் பார்க்கு ஆழ்ந்து செல்லும் நுட்பவுணர் வினைத் தோற்று விக்கின்றன. இங்ஙனம் இளைஞருள்ளத்தே இன்பம் பயக்குந் தன்மையதாயுள்ள சிற்றூர்ப்புறத்தே என் ஆருயிர்த் தோழனான அவ்விளைஞனும் யானும் விடியற்காலையில் உலாவித் திரிதல் வழக்கம். யாருமில்லா அவ்விடங்களில் யாங்கள் உலகவியற் கையினைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்லுகையில், வானம் பாடிப்புட்கள் புளிய மரக்கிளைகளி லிருந்துகொண்டு இசை பாடும்; நாகணவாய்ப் பறவைகள் கொல்லைகளில் விதை களைப் பொறுக்கித் தின்றுகொண்டு தொகுதி தொகுதி யாயிருக்கும்; மீன்குத்திப் பறவைகள் கசங்களிலுங் கேணி களிலுஞ் சடுதியில் வீழ்ந்து அயிரைமீனைக் கௌவிக் கொண்டு செல்லும். இவற்றைப் பார்த்து மகிழ்ந்துகொண்டே யாம் ஒருநாள் ஒரு சிறு குன்றின் மேல் ஏறியிருந்து நாயுருவி வேராற் பற்றுலக்கிக் கொண்டிருக்கும் போது, எமக்கு எதிரே கிழக்கில் ஞாயிறு நெருப்புத்திரளைப்போல் தக தக வென்று கிளம்பிற்று. இறைவனாற் படைக்கப்பட்ட உலக வியற்கையின் நலங்களைத் தெரிந்துகொள்ள மாட்டாதவர்க்கு, அவற்றைப் பொதிந்து சுருங்கக் காட்டி அறிவுறுத்தற்கு இறைவன் மேலே தூக்கிய பொற்குடம் போல்வதென்றே ஞாயிற்றினைக் குறித்துப் பேசினேன். அதனைக் கேட்ட என் நண்பன் அது பொருத்த மேயாம்; ஏனெனில், ஞாயிறு விளங்காத இராக் காலத்தே இருள் கவிந்து கண்ணறிவை மழுக்கி மக்கள் மனவறி வையுங் குறுக்கிவிடுகின்றது. விரிந்த மன இருளை நீக்குவது சுருங்கிய அறிவொளியேயாம் என்பதை இனிது விளக்குதற் கன்றே, எல்லாம்வல்ல இறைவன் ஞாயிறு என்று சொல்லப் படும் ஒரு சிறு பொற்குடத்தே ஒளியாகிய அமிழ்தத்தை நிரப்பி அதனை வான்மேற்றூக்க, அதனுட் பொதிந்த அவ் வமிழ்தக் கதிர்கள் விரிந்த இருண்மேற் பல்லாயிரங் கண்கள்போற் பாய்ந்து அவற்றைச் சின்னபின்னமா யழித்து நமக்குக் கட்புலனை விளக்கி மனவறிவையும் ஓங்கச் செய்கின்றது. கட்புலனுக்குக் குறுகித் தோன்றும் ஞாயிறு ஒன்று தானே நமது அறிவைப் பெருகச் செய்ய வல்லதாயின், இறைவன் திருவருள் நம் மனவறிவிற் புகுந்து தோன்றுங்கால் நமதறியாமை முழுதும் மறைந்து போமென்பது சொல்லவும் வேண்டுமோ? கண்ணறிவு இல்லையாயின் இறைவன் அமைத்த படைப்பின் வியத்தகும் அமைப்புகளை நாங் கண்டு களிப்பதெங்ஙனம்? அக்கண்ணறி விருந்தும், அதனை விளக்கும் ஞாயிற்றில்லையாயின் உலக வியற்கையிற் செறிந்த நலங்களை நாங் கண்டறிந்து மகிழ்தல் இயலுமோ? இயலாதன்றே! ஆ! ஞாயிற்றின் மாட்சி அளப்பரிது! என்று விரித்துக் கூறினான். இவ்வாறு என் இனிய நண்பன் பேசி முடித்த வளவில் என் விழிகள் கிறுகிறென்று சுழலத் தொடங்கின: என்னைச் சூழவிருந்த பொருள்களெல்லாஞ் சடுதியிற் சுற்றுவனவாயின; சூறைக்காற்றின் இடைப்பட்ட பஞ்சுபோல் ஒரு நிலையின்றி நான் இருந்தபடியே என் உடம்பும் ஆடி நின்றது; உடனே என் அறிவு கலக்கமடைந்து விழித்த கண் விழித்தபடியே நிற்க மரம் போலிருந்தேன். இங்ஙனம் யான் திரிபுற்றிருந்தபோது என் னருகே யிருந்த நண்பனை யான் காணேனாயினேன்; காணே னாக, அவன் நானறியாமல் எங்கே சென்றான் என்றறிய என்னுள்ளம் விழைந்தது; அவனை அழைக்க முயன்றேன், நாவோ எழவில்லை; கையினால் தட்ட முயன்றேன்; கைகள் பொருந்தவில்லை; எழுந்துபோய்த் தேடலாமென்று எழப் புகுந்தேன், கால்கள் அசையவில்லை; இவ்வாறு அசைவற்ற மரம் போல் உடம்பின் இயக்கமின்றி அறிவு கலங்கியிருந்த போது சடுதியில் என் உணர்விலே ஒரு தெளிவுண்டாயிற்று. உடனே, ஒரு நொடிக்குள் மீண்டும் என்னைச் சூழவிருந்த பொருள்கள் சுற்ற, என்னறிவு மீண்டும் கலங்கியது; என் நண்பனைக் காணேன், எழுந்து செல்வதற்குங் கைகொட்டு வதற்கும் என் உறுப்புக்கள் சிறிதும் இசையவில்லை; ஆ! இஃதென்னே மக்கள் வாழ்க்கை எவ்வளவு நிலையில்லா ததா யிருக்கின்றது! அது வான் நிழல் போலவும் உயிர்நிலை கனவு போலவுந் தோன்றுகின்றன! என்று பலவாறு எண்ணினேன். இங்ஙனம் யான் எண்ணிக்கொண்டிருக்கையில் எனக்கு மிகவுந் தொலைவில் இல்லாத ஒரு மலைக் குவட்டின்மேல் என் பார்வை விழுந்தது; அம் மலை குவட்டின்மேல் ஒருவர் இடையனுக்குரிய ஆடையிட்டுக் கையிற் புல்லாங்குழல் வைத்துக் கொண்டு தோன்றக் கண்டேன். நான் அவரைப் பார்த்தவுடனே அவர் அப் புல்லாங்குழலைத் தம் இதழிற் பொருந்த வைத்து ஊதப் புகுந்தனர். வேனிற்காலத்து நண்பகலில் மணல் வெளியில் நடந்து இளைத்து வந்தான் ஒருவன், ஒர் இளமரக்காவிற் புகுந்து மரநிழலில் உள்ளதொரு நீர் ஊற்றில் தலைமுழுகி மகிழ்ந்தாற்போல, அவ்வேய்ங்குழல் ஓசை என் செவியிற் புகுந்ததும் என் உடம்பெங்கும் ஒரு வகையான சிலிர்சிலிர்ப்பு உண்டாயிற்று: பலவகைப்பட்ட பண்கள் பின்னி இசைக்கப் படும் அவ்வோசையின் சுவை, வற்றக்காய்ச்சிய கன்னற் பாகுபோற் றித்தித்து ஏற ஏற என் நெஞ்சம் நெகிழ்ந்து உருகிற்று: அதுபோல்வது நான் கேட்டதே இல்லை; அதன் இனிமையினை உரைக்குந் திறமும் என்னிடத்தில்லை. இம்மைப் பிறவியிற் பல நல்வினைகளைச் செய்து அந்நல்வினை முதிர்ச்சியாற் பேரின்பம் நுகர்தற் பொருட்டுத் துறக்கநாடு செல்வோர், தாம் முன்றுய்த்த துன்பங்கள் மறந்தொழிய, இடையிடையே அரம்பை மாதர் தம் பேரெழில் நலத்திற்குப் பொருந்தப் பல வகைப்பட்ட வியத்தகு இசைக்கருவிகளால் மிழற்றுந் தீவிய ஓசைதானோ இஃதென்று நினைந்தேன். அதனை நினைந்து நினைந்து என் மனங் கரைந்தது. எனக்கு முன்னே தோன்றிய அம்மலையின் மேல் ஒரு முனிவனது ஆவி உண்டென்றும், அஃது அவ் வழியே செல் வார்க்கு இனிய இசை பாடுவதன்றிக் கட்புலனாக நேரே யாருக் குந் தோன்றுவதில்லை யென்றும் பலமுறை பலர் சொல்லி யதைக் கேட்டிருக்கின்றேன். இங்ஙனம் அஃது அவ்வேய்ங் குழலோசையினால் என் அறிவைக் களிப்புறச் செய்து ஊதிக் கொண்டிருக்கையில், அதனோடு உரை யாடினால் எவ்வளவு நன்றாயிருக்குமென்று எண்ணி அதனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; அப்போது அஃது என்னை நோக்கித் தன் அருகே வருமாறு கைகாட்டி அழைத்தது. பெரியாரைக் கண்டாற் றோன்றும் அடக்க ஒடுக்கத்துடன் நானும் அதன் அருகிற் சென்று, அஃது இசைத்த வேய்ங் குழலிசையினால் என் மனம் உருகுண்டு அதன் அடியில் வீழ்ந்து அழுதேன். அவ்வாவி என்னை இரக்கத்துடன் நோக்கி முறுவலித்து, என்னிடத்துமிக்க பழக்கமுடையது போல் நல்லுரை கூறித்தனதருகிற் சென்ற போது எனக்கிருந்த எல்லா அச்சத்தினையும் உடனே வெருட்டி விட்டது. அது நிலத்தி னின்றும் என்னை எடுத்து என் கையைப் பிடித்துக்கொண்டு, முருகவேள், தனித்திருந்து பேசிய காலை யில் நீ சொன்ன வற்றையெல்லாங் கேட்டேன், என்னுடன் வா என்றது. அதன்பின், அஃது அம் மலையடுக்கில் மிக உயர்ந்ததொரு முகட்டிற்கு என்னை நடத்திக்கொண்டு சென்று, அம் முகட்டின் உச்சியில் என்னை இருத்திக் கீழ்ப்பால் நோக்கி அங்கு உனக்குத் தோன்றுவதை எனக்குச் சொல் என்றது. அதற்கு, அதோ ஒரு பெரும்பள்ளத்தாக்கும் அதிற் பெரியதொரு வெள்ளஞ் சுருண்டு ஒழுகுவதுங் காண்கின்றேன் என்றேன். நீ பார்க்கின்ற அப் பள்ளத் தாக்குத்தான் துன்பவேலி யென்றும், அதிற் சுருண்டு ஓடும் பெருவெள்ளமே காலமென்னும் பெரியதொரு நீர்ப் பெருக்கின் ஒரு பகுதியா மென்றுங் கூறிற்று. நான் பார்க்கின்ற அவ் வெள்ளப்பெருக்கு ஒரு பக்கத்தே திணிந்த ஓர் இருளினின்றுந் தோன்றி மற்றொரு பக்கத்தில் அவ்வாறே திணிந்ததோர் இருளிற் சென்று மறைந்து போவதற்கு ஏது என்னை? என்று வினவினேன். ஞாயிற்றினால் வரையறுக்கப் படுங் காலத்தின் ஒரு பகுதியே அவ்வெள்ளப் பெருக்கெனவும், உலகத்தின் தொடக்கமே அஃது அவ்விருளினின்றுந் தோன்றுவது. அதன் முடிவே மற்றொரு பக்கத்தில் மறைவ தெனவும் அறிவாயாக என்றது. மேலும், இருபுறத்தும் இருளான் வரம்பறுக்கப்படும் அவ்வெள்ளப்பெருக்கினை நன்றாய் ஆய்ந்து நோக்கி, அதன் கண் உனக்குத் தோன்றுவதை எனக்குச் சொல் என்று மீண்டும் அது வினவிற்று. காலப்பெருக்கின் நடுவிற் கட்டப்பட்டிருக்கும் ஒரு பாலம் எனக்குத் தோன்றுகின்றது என்றேன். நீ காண்கின்ற அப்பாலம் மக்கள் வாணாள் என்றறிவாயாக, அதனை உற்று நோக்கிப்பார் என்றது. அவ்வாறே நான் அதனை மிக்க அமைதி யோடு நோக்கிய வளவில் அப்பாலத்திலே எழுபது முழுமை யான கண்களும், உடைந்து நுறுங்கிப்போன சில கண்களு மிருந்தன; அக்கண்கள் எல்லாஞ் சேர்ந்து மொத்தம் நூறு உள்ளன. அக்கண்களை நான் ஒவ்வொன்றாய் எண்ணிக் கொண்டிருக்கும் போது அம் முனிவனது ஆவி, முதன் முதல் அப்பாலத்திற்கு ஆயிரங்கண்கள் இருந்தனவாகப், பெரியதொரு வெள்ளம் பெருகிவந்து அவையிற்றிற் பெரும்பகுதியை அடித்துக்கொண்டு போய் விட்டமையால் இப்போது நீ பார்க்கின்ற நிலைமையில் அப்பாலம் பழுதாக இருக்கின்ற தென மொழிந்தது. இன்னும் அதன்மேல் எவ்வெவை பார்க்கின்றாய் எனக்குச் சொல் எனக் கேட்டது. எண்ணிறந்த மக்கள் அதன்மேற் போய்க் கொண்டிருப்பதுங், கரியவானம் அதன் இரண்டு முனையிலுந் தொங்கவிட்டாற்போல் தோன்றுவதுங் காண்கின்றேன் என்றேன். இன்னும் அதனை மிக உற்று நோக்க, அங்ஙனஞ் செல்வாரிற் பலர் அப்பாலத்தின்கீழ் ஓடும் பெரிய வெள்ளத்தில் இடையிடையே விழுந்து அமிழ்தலுங் கண்டேன்; இன்னும் அதனை ஆய்ந்து நோக்கிய அளவில், அப்பாலத்தின் இடையிடையே மறைவாய்ப் பொருத் தப்பட்ட எண்ணிறந்த கள்ளக்கதவு களையுங் கண்டு கொண் டேன்; அக் கள்ளக் கதவுகளின்மேல் அவ் வழிச்செல்வார் மிதித்தவுடனே, அவர் அவற்றின் ஊடே கீழ் விழுந்து காணாமற்போதலும் நன்கு புலனாயிற்று. அப்பாலத்தின் முனையில் தொங்கிய கரிய வானத்தைக் கிழித்துக் கொண்டு மக்கட்டொகுதியினர் அதன்கட்புக்க பொழுது, அவர் தொகை தொகையாய் விழுந்தொழியும்படி நுழைவாயிலிலே அப்படு குழிகள் மிக நெருக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பாலத் தின் நடுவிற் போகப் போக மக்களின் தொகை சுருங்கிவிட்டது; பழுதாகாமல் முழுமையா யிருந்த கண்களின் முனையிற் செல்லச் செல்ல அவர்களது தொகை மிகுதிப்பட்டு நெருக்குண்டது. பழுதுபட்ட கண்கள் மேல் நொண்டி நொண்டி நடந்தார் ஒரு சிலர் காணப்பட்டாராயினும், அவர்களின் தொகை மிகக் குறைந்த தொன்றாகவே யிருந்தது; இவர் தாமும் நெடுவழி நடந்துவந்தமையால் முற்றுங் களைப்படைந்து ஒருவர்பின் ஒருவராய் விழுந்து விட்டனர். இங்ஙனம் புதுமையாய்த் தோன்றிய அக்கட்டிடத் தையும், அதிற் காணப்பட்ட பலவேறு பொருள்களையும் பற்றி எழுந்த நினைவில் எனக்குச் சிறிது நேரங் கழிந்தது. கொண்டாட் டமும் மனமகிழ்ச்சியும் உடையராய்ச் செல்கையில் இடையே பலர் சடுதியில் வீழ்ந்தொழிதலையும், அங்ஙனம் அவர் வீழ்ந்தபோது, தப்பிக் கொள்வதற்குத் தம்பக்கத்தேயுள்ள ஏதேனும் ஒன்றை விரைந்து பிடித்தலையுங் காண்கையில் என் நெஞ்சம் ஆறாத் துயரத்தால் நிரம்பியது. சிலர் ஆழ்ந்த நினைவோடும் நிமிர்ந்து வானை நோக்கிக் கொண்டிருந்த நிலையில், அந்நினைவின் இடையே தெற்றுப்பட்டு விழுந்தும் மறைந்துபோயினர். வேறுபலர் தமக்கெதிரில் மினு மினுவென்று எழுந்தாடும் நீர்க் குமிழிகளைப் பிடிக்க முயன்று அவற்றின்பின் மிகு முயற்சியோடும் ஓடினர். அங்ஙனங் கிட்ட ஓடி அவற்றைப் பற்றிக் கொள்வோம் என்று அவர்கள் நினைந்தவுடனே கால் வழுக்கி வீழ்ந்து அமிழ்ந்து போயினர். இங்ஙனம் எல்லாங் குழப்பமாயிருப்பதற்கு நடுவே சிலர் கையிற் கொடுவாளும் வேறுசிலர் அரிவாளும் ஏந்திக்கொண்டு பாலத்தின்மேல் அங்குமிங்கும் ஓடி, அக்கள்ளக் கதவில்லா வழியிலே வந்து கொண்டிருப்பார் பலரைத் தள்ளிச் சென்று அக்கள்ளக் கதவி லே புகுத்தினர்; அவர் வலிவு செய்து தள்ளாவிட்டால் அம் மக்கள் பிழைத்துப்போ யிருப்பர், ஐயகோ! துயரமிகுந்த அத்தோற்றத்தைப் பார்த்து அதன் மேல் யான் நினைவு அழுந்தப் பெற்றிருத்தலைக் கண்ட அம்முனி வனதாவி, இத்துணை நாழிகைநேரம் அதனைப் பற்றி நீ நினைந்தது போதுமென்று சொல்லி, இனி அப்பாலத்தைப் பார்ப்பது விடுத்து, இன்னும், நீ யறியாத தேதேனுங் காண்பை யாயின் அதனை எனக்குச் சொல் என்றது. அதன்பின் நான் மேல்நோக்குதலும்அப் பாலத்திற்குமேற் பறவைக் கூட்டங்கள் ஓவாது வட்டமிட்டுச் சுழலுதலும் இடையிடையே அதன்மீது வந்திருத்தலும் யாது கருத்துப்பற்றி? கழுகு, எருவை. அண்டங் காக்கை, கடற்காக்கை முதலியனவும், மற்றைப் பறவையினங் களும் இறக்கை முளைத்த சிறுவர் பலரும் இடையிலுள்ள கண்களின் மேல் தொகை தொகையா யிருப்பதுங் காண்கின் றேன் என்றேன். அதற்கு அவ்வாவி அவைகள் தாம் பொறா மை, பேரவா, மடமை, சோர்வு, காமம் என்பனவும், இன்னும் மக்கள் வாழ்க்கையினைத் துன்புறுத்து கின்ற மற்றைக் கவலை களும் விழைவுகளும் ஆகும் என்று விடை பகர்ந்தது. இவ்வாறு சொல்லியபோது நான் பெருமூச்சு எறிந்து ஐயோ! ஆடவன் வீணே படைக்கப்பட்டான்! அவன் துன்பத் திற்குஞ் சாவுக்கும் இரையாய் ஒழிகின்றான்! வாணாளெல்லாம் வருத்தமுறுகின்றான், கூற்றுவனால் இறுதியில் விழுங்கப்படு கின்றான்! என்றுரைத்தேன். உடனே அம்முனிவனாவி என்னைப் பார்த்து இரங்கித், துன்பந் தருதன் மாலைத் தாம் அக்காட்சி யினைக் காணுதல் ஒழிக என்று கட்டளையிட்டது. என்றும் நிலையுதலுடைய பேரின்பத்தை எய்துதற்பொருட்டுச் செல்லுங்கால் ஆண்மகன் முதலி லடையுந் துன்ப நிலைமை யினை இனி நினையாதே; தன்னகத்தே விழுந்த மக்களைச் சுமந்துகொண்டு அப்பெருக்கு மற்றொரு பக்கத்தேயுள்ள இருட்செறிவிற்சென்று ஒருமிக்கும் இடத்தில் நின் பார்வை யினைச் செலுத்து என்றது. அது கட்டளையிட்ட வண்ணமே அம் முகமாய் என் பார்வையைச் செலுத்தினேன். அந் நல்ல ஆவி, என்பார்வைக்கு முன்னை யியல்பினும் மேம்பட்ட வலிவைத் தந்ததோ, அன்றி என்கட் பார்வை நுழையாதபடி திணிந்துகிடந்த அவ்விருட் குழாத்தைக் கலைத்துவிட்டதோ அறியேன்; ஏனெனிற் சேய்மைக்கண் உள்ள அம் மற்றொரு முனையில் அந்தப் படுகர் திறப்புண்டு பெரியதொரு கடல் போல் விரிந்திருக்கக் கண்டேன்; அப்படுகரின் நடுவே பெரிய தொரு வைரக் கற்பாறை நெடுக ஊடறுத்து ஓடி அதனை இரண்டு ஒத்த கூறாக்கிற்று; அதன் ஒரு பாகத்திற் புயல்கள் மிகச் செறிந்திருந்தமையால் அதன்கண் நானொன்றுங் காணக் கூடவில்லை; ஆயினும், மற்றொரு பாகத்தின் வெளியோ, பழங்களும் மலர்களும் நிரம்பிய தீவுகள் இடையிடையேயுள்ள அகன்ற கடல்போலவும், ஆயிரக்கணக்கான சிறு குடாக்கள் இடையொழுகும் நிலம்போலவும் தோன்றிற்று. அங்குள்ள மக்கள் சிறந்த புதிய ஆடை உடுத்துந், தலையில் நறுமலர்மாலை சூடியும், மரச்செறிவுகளின் நடுவே புகுந்தும், நீர் ஊற்றுக்களின் கரைமருங்கிற் பள்ளி கொண்டுங், கொழுவிய மலர்த்தளிமங் களில் உறங்கியும் இன்பந் துய்த்தலைக் கண்டேன்; பறவைகள் மிழற்றும் இசையும், அருவிவீழ் ஓசையும், மக்கள் குரல் ஒலியும் இசைக் கருவிகளினின்று எழும் ஆர்ப்பும் விரசிய கலவைப் பண்ணுங் கேட்டேன். அவ்வளவு இனியதோர் இடத்தைக் காண்டலுங் களிப்பினால் துளும்புவேனாயினேன். அத்தகைய வளப்பமான இடத்திற்குப் பறந்து செல்ல கழுகின் இறக்கைகள் எனக்கு வேண்டுமென்று விழைந்தேன்; ஒவ்வொரு நொடியும் அப்பாலத்தின்கட் டிறக்கப்படுகின்ற சாக்காடு வாயிலாக வன்றி அதன்கட்புகுதல் முடியாதென்று அம்முனி வனாவி கூறிற்று. நின்பார்வை எட்டுமட்டும் அக்கடலிற் புள்ளி புள்ளியாய்த் தோன்றிப், பச்சென்று புத்தப் புதியனவாய் விளங்கும் அத் தீவுகள் கடற்கரை எக்கர் நுண்மணலினும் பலவாயிருக்கின்றன; நீ இங்கே காண்கின்ற இவற்றிற்கும் அப்புறத்தே நின் கட்புலனுக் கும் எண்ணத்திற்கும் எட்டாத நெடுந்தொலைவிற் பல்லாயிரக் கணக்கான தீவுகள் இருக்கின்றன. தாந்தாம் மேற்கொண்ட நல்வினையை அறம் வழுவாது நன்கு முடித்தோர் தகுதிக்கு ஏற்ப இத்தீவுகள் பகுத்துக் கொடுக்கப்பட்டு, மற்று அவர்க்கு இன்ப உறையுளாய்ப் பயன்படுகின்றன; அவைகள் தம்பால் உறைவாரு டைய இன்ப நுகர்ச்சிக்கும் அறிவின் ஏற்றத்திற்கும் இணங்கப் பல திறப்பட்ட இன்பங்கள் செழுமைபெறக் கொண்டு விளங்கு கின்றன. தம்பால் உறைவார்வசதிக்கு இசைந்ததொரு துறக்கநாடு போல் ஒவ்வொரு தீவும் நலந் திருத்தப்பட்டிருக்கின்றது. ஓ முருகவேளே! இச் செழுமையான விடுதிகள் மிக வருந்தியும் பெறற் பாலனவல்லவா? இப்பெற்றித் தான் இன்பவிடுதியைப் பெறுதற்கு, நினக்கு ஏற்றக் காலங்கள் வாய்க்கும் உயிர் வாழ்நாள் துன்பமுடைய தென்றுந் தோன்றுமா? அத்தகைய இன்பவுறை யுளுக்கு உன்னைக் கொண்டு போகும் அச்சாக்காடு அஞ்சிக் கடியற்பால தாகுமா? அழிதன் மாலைத் தன்றாய் என்றும் நிலையுதலுடைய வொரு பேரின்பம் இவற்கென்று பொதிந்து வைக்கப் பட்டிருக்கும்போது, ஆடவன் வீணே படைக்கப் பட்டான் என்று நினையாதே என்று மேலும் விரித்துரைத்தது. நானும் அவ்வினிய தீவுகளை உரைவரம்பறியா வரையிலா மகிழ்ச்சியுடன் உவந்து நோக்கினேன். கடைசியாக நான் அதனைப் பார்த்து, வைரப் பாறைக்கு அப் பக்கத்தேயுள்ள கடலைக் கவிந்து விளங்குங் கரிய புயல்களிற் புதைபட்டிருக்கும் மறை பொருள்களையும் ஒருசிறிது விளக்கியருளல் வேண்டும் என்று இரந்து கேட்டேன். அதற்கு அம் முனிவனாவி ஏதும் மறுமொழி தந்திலது; உடனே நான் இரண்டாம் முறையும் அதனைக் கேட்பதற்கு அதன் முகமாய்த் திரும்பியபோது அதனைக் கண்டிலேன்; மறுபடியும் என்னெதிரே கீழ்பாற் றோன்றிய அக்காட்சியினைப் பார்ப்பதற்கு யான் திரும்பிய போது, இத்துணைநேரம் எனது நினைவைக் கவர்ந்த அக் காட்சியும் புலப்பட வில்லை; சுருண்டு ஓடும் நீர்ப் பெருக்குக்குங் கட்பாலத்திற்குங் கொழுந் தீவுகளுக்கும் வேறாகச், சிற்றூர்ப் புறத்துள்ள நீண்ட மலைச்சாரலும், அதன்கண் ஆட்டு மந்தையும் ஆனிரையுஞ் செழும்புல் மேய்தலும், அவற்றை மேய்க்கும் இடையர் மரநிழல்களிற் சாய்ந்திருந்து கதைபேசு தலுங் கண்டேன். உடனே அறிவு தெளிந்து என் நண்பன் எங்கே என்று புறந்திரும்பு தலும், அவன் என் பக்கத்தே என்னைக் கவன்று நோக்கிக் கொண்டி ருந்தான். ‘ï›tsîneu« v‹id ÉL¤J Ú v§F¢ br‹whŒ? என்று மருண்டு வினாயினேன். அதற்கு அவன் நான் எங்குஞ் செல்லவில்லை, நீ சடுதியில் மயங்கிப் படுத்தமையால் நின் பக்கத்தே வருத்தமுற் றிருந்தேன் என்றான். அதன்மேல் நான் கண்டன வெல்லாங் கனவெனத் துணிந்து நிகழ்ந்தன யாவும் விரித்துக்கூறி இருவேமும் மகிழ்ந்தள வளாய் இல்லஞ் சென்றேம். 2. முருகவேள் அறிந்த படைப்பின் வியத்தகு தோற்றங்கள் நான் திருவனந்த பட்டினத்திற்குச் சில ஆண்டுகட்கு முன் சென்றிருந்தேன். திருவிதாங்கோட்டு அரசர், தம்முடைய நாட்டில் உள்ளார் கல்விநலம் பெறுதற் பொருட்டு நிலைப்பித்த அரிய கல்விக்கழகத்தில் அறிவு நூல் ஆசிரியராய் இருந்த செல்வர் ஒருவர் என்னை மனம் உவந்து அழைத்தமையால் யான் அங்குச் செல்லுதற்கு இசைவு வாய்த்தது. இவ்வாசிரியர் ஆங்கிலந், தமிழ், மலையாளம், ஆரியம் முதலான மொழி களில் மிக வல்லுநராய்ப் புகழ் ஓங்கி வந்ததுமின்றி, அரிய இயல் பின் பொலிவானும் நல்லொழுக்கம் உடைமையானும் எல்லா ரானும் உயர்த்துப் பாராட்டப்பட்டும் விளங்கினர். இவர் தமிழ் மொழி யாக்கத்திலுந் தமிழ்ப்புலவரிடத்திலும் மிக்க விருப்பம் வைத்துப் பல நலங்கள் செய்து வந்தனர். தமிழில் இதுகாறுஞ் செய்யப்படாத புத்தப் புதிய வொருமுறையைப் பின்பற்றி மனோன்மணியம் என்னுஞ் சிறந்தவொரு நாடகக் காப்பியமும் இயற்றியிட்டார். இப் பெற்றியினரான இவர் திருவனந்த பட்டினத்திற்குப் புறம்பே ஐந்து கல் சேய்மையிலுள்ள சிறிய தொரு பொற்றை மலை யின்மேல் தம்முடைய மாளிகையினை அமைத்து அதன்கண் வாழ்ந்து வந்தனர். தாமிருந்த மலையைச் சுற்றிலும் ஏறக்குறைய இரண்டு கல் அகலமுள்ள குறிஞ்சி நிலம் இவர்க்கு உரிமையுடைய தாயிருந்தது. விருந்தினனாய்ச் சென்ற யான் அவராற் பெரிதும் விருந்தோம்பப் பெற்று அவரது இல்லத்தின் கண் ஒரு கிழமை இனிது காலங் கழிப்பேனா யினேன். அங்ஙனம் இருந்த நாட்களில் நாடோறுங் காலையில் எழுந்து அம்மலையின்கீழ் இறங்கிப்போய் அங்குள்ள வளங் களையெல்லாங் கண்டு மகிழ்ந்து மீண்டும் இல்லம் வந்து திரும்பவும் மாலையிற் போய் மீள்வது வழக்கம். அப் பொற்றைமலையின்கீழ் இறங்குதற்கு இருபுறத்துங் கோரைப் புற்கள் வளர்ந்த ஒரு சிறு வழி உண்டு. அவ்வழியே இறங்கிக் கீழ்ச்சென்றால் எதிரே ஒரு சிறு குன்று இருக்கும். இக்குன்று ஒரே மொழுக்கனான கருங்கற் பாறையினாற் சமைந்திருக்கின்றது. மேலேறுதற்குச் சிறிய படிக்கட்டுகள் வெட்டப்பட்டிருந்தமையால், இதன்மே லேறிப்போயினேன். இதன் உச்சியில் உள்ள கற்பிளவில் உண்டான ஒரு சுனையிற் பளிங்குபோல் தெளிவான நீர் நிரம்பி யிருந்தது; மேலும், இச் சுனையில் ஒரு புதுமை காணப்பட்டது; ஒருநாள் மாலைக்காலந் துவங்கி மறுநாள் விடியற்காலம் வரையில் இதில் ஓயாமல் நீர் ஊறிச் சுரந்து நிரம்பித் துளும்பிக் கீழே வழிந்து ஓடும். காலையில் ஏழு மணிக்கு மேற்பட்டால் நீர் ஊறிச் சுரப்பதில்லை. இதனைப் பார்த்து வியந்து கொண்டு அதனினின்றும் இறங்கிச் சிறிய கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கும் அம்மலையடிவாரத்திலுள்ள சுற்றுவழிப் பக்கமாய்ச் சிறிது வழி நடந்து போனாற், காட்டுமரங்கள் தொகுப்புத் தொகுப்பா யிருக்கும் ஓரிடத்திற் கான்யாறு ஒன்று ஓடிவருகின்றது. அவ்வியாற்றில் நான் ஒருநாள் தலை முழுகச் சென்றபோது, வானுலகத்தினின்றும் வழுவி வீழ்ந்த மின்னற் கொடிபோல் நாலைந்து மகளிர் நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பின்னுந் திரும்பிப் பார்க்கையில் அவர்கள் மேலாடையின்றி இடுப்பளவு நீரில் நிமிர்ந்து நின்றுகொண்டு என்னை நோக்கினர்; அவர்களைப் பார்ப்பதற்கு நாணித் தலை கவிழ்ந்து கொண்டு யான் அப்புறம் மறைவாய்ப் போய் விட்டேன். போய்க் கரையிற் கொடி பிணைந்து அடர்ந்திருக்கும் ஒரு மரங் கோணி நீரளவுஞ் சென்று மேற் கவிந்திருந்தமையால் நிழல் உள்ளதொரு துறையில் இறங்கித் தன்னந் தனியனாய்த் தலை முழுகினேன்; அங்ஙனம் நிழல் செறிந்திருக்கும் அவ்விடத்தில் நீரோட்டம் மிகக் குளிர்ந்திருந்தது; கரிய வரால் மீன்கள் என்பக்கத்தே மேய்ந்து கொண்டு துவண்டு பாய்ந்தன; கரையையடுத்து வளர்ந்திருக்கும் நாணற் புதர் அண்டையில் இறா மீன்கள் துள்ளித்துள்ளிப் பாய்ந்தன; உழுவையுங் கெளிறும் நீர்மட்டத்துக்கு மேய்வது மிகவும் அழகாயிருந்தது; அப்போது நான், அரவஞ் செய்தால் அவை யோடிப்போமென் றெண்ணி, நீரில் மெதுவாக அமுங்கி அமுங்கி எழுந்து அவை தம்மை வியந்து நோக்கினேன். இங்ஙனம் அவ்வியாற்றில் தலை முழுகி எழுந்து ஈரந் துவர்த்திக் கொண்டு அப்புறம் போகையில், அங்கு அகன்ற ஓர் ஏரி காணப்பட்டது. அவ்வேரியின் கரைப் பக்கமாய்ப் போன போது, அக்கரையில் நீர் ஒழுகும் மதகுவாய் கட்டப் பட்டிருந்தது; அவ்வேரியிருக்குமிடமுங் கற்பாறையுள்ள நிலம்; அதன் கண்ணும் நீர் ஓயாமல் ஊறி மதகுவழியாய்ச் சென்று அப்பக்கத்திலுள்ள வயல்களிற் பாய்கின்றது. அவ்வயலெங்கும் நென்முளை தோன்றி இலைவிரிந்து பச்சைப் பசேலென்று ஒரே பரவலாயிருந்தது. அவ்வேரியின் கரை மருங்கில் தென்னந் தோப்புகள் மிகவுங் கொழுமையாய் இருந்தன; சிலமரங்களிற் சிவப்பான இளநீர்க் குலைகளும் வேறு சில மரங்களிற் பசுமையான இளநீர்க் குலைகளுந் தொங்கின; ஏறக்குறைய ஒவ்வொரு தெங்கிலும் மிளகு கொடிகள் சன்னல் பின்னலாய்ப் பிணைந்து ஏறிப் படர்ந்திருந்தன. இவ்வாறு செழிப்பாய்த் தோன்றும் அத் தென்னந் தோப்புகளைக் கடந்து அப்புறஞ் செல்லக், கற்பாறைகள் எங்குஞ் சிதறிக் கிடக்கும் ஆலமரத் தோப்புகள் கட்புலனாயின. வான் அளாவி அடி பெருத்து முடி பரந்த அவ்வாலமரங்களை நோக்கும்போது, என்னுள்ளத்தில் அச்சந்தருவதான ஓர் எண்ணந் தோன்றிற்று. மிகவும் பழைய வாய்ப் போன ஆலமரங்களை அவற்றின் கோடுகளிலிருந்து கீழ் இறங்கும் விழுதுகள் நிலத்திலூன்றித் தூண்கள் போற்றாங்கிக் கொண்டிருந்தன. அம்மரங்களின் பொந்துகளிற் கொவ்வைப் பழம்போல் அலகு சிவந்து மேனியெல்லாம் பச்சென்றிருக்கும் அழகிய பேட்டிளங்கிளிப் பிள்ளைகள் தாம் பொரித்த குஞ்சி னங்களுக்குப் பழங்களைக் கோதிக் கோதி இரை ஊட்டின; ஆண்கிளிகளிற் சில வளார்களில் ஒற்றைக்காலைத் தூக்கிச் சிறு துயில் கொண்டிருந்தன, சில சீழ்க்கை அடித்தன. அவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டு அப்புறம் போகப் போகக், கருகலாய் ஒன்றன்மேலொன் றடுக்கடுக்காய் ஒழுங்கின்றி விலங்கிக் கிடக்கும் மலைகள் தோன்றின. அம்மலைகளிற் சிறுத்தைப் புலிகளும் ஓநாய்களும் மிகுதியாக உள்ளன என்று அங்குள் ளோர் சிலர் சொல்லக் கேட்டமையால், அங்கு போதற்கு அஞ்சி மறித்தும் யானிருக்கும் மாளிகைக்கு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்தபின் நான் காலையிற் கண்ட குறிஞ்சி நில வளங்களை நினைந்து நினைந்து மகிழ்ந்து, இவை தம்மை, நிலவியற்கை பொருந்தக் கண்டு பாடும் நல்லிசைப் புலவர் களான கபிலர், நக்கீரர் முதலான ஆசிரியர் அருளிச் செய்த அருமைத் திருப்பாட்டுகளுடன் ஒத்துப் பார்த்து, அவை மிகவும் பொருட் பொருத்தமுடையனவாய் விளங்குதல் கண்டு வியந்தேன். இவ்வாறு பகற்காலங் கழிப்பி, மாலைக்காலம் அணுகுதலும் நானிருக்கும் பொற்றைமலைக்கு அருகாமையில் உள்ள சிறுகுன்றின்மேல் போய்ச் சேர்ந்தேன். சேர்ந்தபின், மேற்றிசைப் பக்கமாய் வானிடத்தை நோக்கினேற்கு, முதன்முதல் அங்குச் சுடர்க்கொழுந்து விட்டுத் திகழும் பல்வேறு வகைப்பட்ட வண்ணங்களின் கொழுமையும் நிறத்தோய்ச்சலும் மிகவும் வியக்கத்தக்கனவாய்த் தோன்றின. இங்ஙனம் விளங்கிய செக்கர் வானம் வரவரச் சுருங்கி மழுங்குந்தோறும், வான் மீன்களுங் கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோற்றம் உற்று எழ எழக் கடைசியில் வானெங்கும் ஒரே வெளிச்சமாய்த் திகழ்ந்தது. அவ்வகன்ற வானின் நீலவண்ணங், காலத்தின் இயற்கை யானும் அதன் வழியே செல்கின்ற மீன்கள் கோள்கள் முதலியவற்றின் கதிர் ஒளியானும் மிகத் திணிந்து சிறந்து தோன்றிற்று. அதன்கட் பொருந்திய மீன் தொகுதிகளோ மிகவும் அழகாய் வெண்மை யாய்த் தோன்றின. இவ்வியத்தகு வானக்காட்சியில் உள்ள ஒரு குறையினை நீக்க வெழுந்தாற் போல, நளியமிழ்தம்பொழி முழு மதியம் முகிற் குழாத்தின் இடையே பேரொளியுடன் தோன் றியது. ஞாயிற்றினாலும் முன்னே நமக்குக் காட்டப்படாத தாய்ச், சிலுசிலுவெனக் குளிர்ந்த ஒளிப் பிழம்பின் ஊடேஊடே நேர்த்தி யான நிழல்தோய் வித்து வனைந்ததான ஓர் உலகவியற்கைப் புதிய ஓவியத்தை இம்மதியந் திறப்பித்து என் கண்களுக்குக் காட்டியது. இங்ஙனம் இம் முழுமதியங் கதிரொளி துலங்க மீன் தொகுதியின் இடையே ஊடு அறுத்துக் கொண்டு இயங்கு தலைக் கண்டபோது, ஆழ்ந்து நுணுகி நினையும் இயல்புடை யரான சான்றோர்க்கும் பலகாற் கலக்கம் வருவித்து அவரை இடர்ப்படுத்துவதான ஒரு நினைவு என்னுள்ளத்தில் எழுந்தது. தொல்லாசிரியர் ஒருவர் இங்ஙனமே ஒருகால் நினைந்து பார்க்கும்வழி, வானும் வானில் வயங்கு மதியமும் மீனும் நின்விரல் வேலையென் றாய்வுழி ஈனு லாவு மகனு மவன்றருந் தேனு லாஞ்சொன் மகாருந் திகழ்வரோ. என்றெண்ணி முதல்வன் செய்த வியத்தகு படைப்பில் மக்கள் எவ்வளவு சிறியரா யிருக்கின்றனரென்று உரையிட்டார்! இவ்வாறே, எனக்குமேற் றுலங்கிக்கொண்டிருந்த அளவுபடா வான்மீன் றொகுதிகளை, அல்லது இன்னும் ஆய்ந்து உரைக்குங் கால் அம்மீன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஞாயிறாகுமாதலால் அந்த ஞாயிற்றின் குழாங்களை, அவை தம்முள் ஒவ்வொன் றையுஞ் சூழ ஒருங்கு இயைந்து செல்லுங் கோள்கள் அல்லது உலகங்களொடு கூட்டி நினைந்த காலத்து, இன்னும் இந் நினைவை விரித்து உணரப் புகுந்து, நாங் கண்டுகொண்ட இவ்வானுலகத்திற்கும் அப்பாற் பலவுலகங்களும் புது ஞாயிறு களுஞ் சுழன்று செல்லுதற்கு நிலைக்களனான மற்றையொரு வானுலகம் மேலே உளது என்று எண்ணினேன்; மற்று, இவை தாமும் இன்னும் உயரத்திலுள்ள விழுமிய வான்மீன்களால் துலக்கப்படும் வானின் விளக்கத்தால் ஒளிர்கின்றனவென்பதும் எனக்குத் தோன்றிற்று; இவ் வான்மீன்கள் இப்போது நங் கண்களுக்குச் சிறுத்துத் தோன்றுமாறு போலவே, இந்த ஞாயிற்றின் உலகங்களிலிருந்து பார்ப்பவர்க்கும், இவற்றின் மேலுள்ள இவை சிற்றளவினவாய்த் தோன்றும் வண்ணம் அவை ஒன்றற்கொன்று அத்துணை நெடுஞ் சேய்மையிலே வானிற் பதிக்கப்பட்டு மின்னுகின்றன வென்பதும் எனக்குப் புலப்படுவதாயிற்று. சுருங்கச் சொல்லுங்கால், இங்ஙனம் ஒரு தொடர்பாக யான் எண்ணிக் கொண்டிருக்கையிற், கடவுளாற் படைக்கப்பட்ட இவ்விரிந்த படைப்பின் கண் யான் தாங்கிய இப் புல்லிய வடிவம் எத்துணைச் சிறியதாக இருக்கின்றது! என்று யான் நினைந்து பாராமல் இருக்கக்கூடவில்லை. தன்னைச் சூழ ஓடுகின்ற எல்லாக் கோள்களுடனும், நம்முடைய நிலவுலகத்திற்கு விளக்கந் தருவதாகிய ஞாயிறு முற்றும் ஒளிமழுங்கி அழிந்தொழியுமாயிற், கடற்கரை மணலினின்றும் வழுவிப்போன ஒரு சிறு துகளைப்போல் அதன் அழிவும் நமக்கு ஒரு சிறிதும் புலப்படாது போதல் திண்ண மேயாம். ஏனெனில் இந்த ஞாயிறு சுழலும் வானிடத்தை, வரம்பின்றி விரிந்த வான்முழுதோடும் வைத்து ஒத்துப் பார்க்கும் வழி, அது மிகச் சிறியதாய்க் காணப்படு மாதலால், அச் சிறியவிடத்தில் அஃது இல்லாது ஒழிதல் பற்றி அவ்விடம் வெறுமையாய்த் தோன்றுதல் இல்லை. ஓர் இமைப் பொழுதில் இப் படைப்பின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஓடி இவ்வுலக முழுமையுங் காணவல்லதான நங் கட்பார்வைக்கு, அந்த ஞாயிறு அங்ஙனம் இல்லாது வெறுமையாய்ப் போன இடைவெளி ஒரு சிறிதும் புலப்படா தன்றோ? இனிமேல் நமக்காவது இப்போது நம்மைவிட மிக உயர்ச்சியடைந்திருக்கும் உயிர்களுக்காவது இத்தகையதோர் உணர்ச்சி தோன்றினுந் தோன்றும். நாம் நம் வெறிய கண்களாற் கண்டுகொள்ளக் கூடாத எண்ணிறந்த வான் மீன்களைத் தொலைவு நோக்கிக் கண்ணாடிகளின் உதவி கொண்டு அறிந்து வருகின்றோம்; அத் தொலைவு நோக்கிக் கண்ணாடிகள் இன்னும் மேன்மேல் நேர்த்தியாய் அமைக்கப்படுமாயின், அவை கொண்டு இன்னும் புதுமை புதுமையான காட்சிகளைக் காண்போம். தாம் படைக்கப்பட்ட காலந்தொட்டுத் தம் ஒளிவிரி கதிர்கள் நம் நிலவுலகத்திற்கு எட்டாவண்ணந் தொலைவில் அகன்று கிடக்கும் வான்மீன்கள் இன்னும் பல இருக்கலா மென்று வான்நூலார் ஒருவருந் தங் கருத்து நன்கு அறிவித்தனர். இவ்வுலக முழுமைக்கும் ஓர் எல்லை வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதனை யாருந் தடுத்து வினாவுதல் வேண்டா வாயினும், அஃது எல்லையில்லாப் பேரருளினால் தூண்டப் பட்ட முதல்வனது அளவிலாற்றலாற் செயப்படுவ தாகலானும், அவ்வாற்றல்தானும் அளவறியப் படாமற் பரம்பிய இடத்தின் கண்ணதாய் நிகழ்வ தொன்றாக லானும் யாம் எம்மனக் கற்பனையால் அதற்கு எங்ஙனம் வரையறை செய்ய மாட்டுவேம்? ஆதலால், இதனை விடுத்து எனக்கு முதலில் எழுந்த எண்ணத்தைப் பற்றித் திரும்பவும் யான் நினைக்கையில், தனது கண்காணிப்பின் கீழும் தனது பாதுகாப்பின் கீழும் இவ்வகன்று விரிந்த உலக முழுமையினையும் வைத்துப் பெரியதோர் அருட்டொழில் புரியா நின்ற பெருந்தகையான எம்மிறைவன், என்பில்லாப் புழுவினுஞ் சிறியேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக நினைப்பனோ என்று நினைந்து நினைந்து என்மனம் மிகவும் மருண்டது. அளவுபடாது விரிந்து கிடக்கும் இப் பருப்பொரு ளுலகங்கள் யாங்கணும் பலவேறு வகைப்பட்டு எண்ணிறந்த பகுப்புக்க ளுடையனவாய்க் குழுமியிருக்கும் உயிர்த் தொகைகளுள் யானும் ஒருவனாய் ஒழிந்து, அவருடைய அருட்கடைக் கண் நோக்கத்திற் பற்றப்படாத சிறுமையனாய் விடுவேனோ என்பதனை எண்ணி எண்ணி அஞ்சினேன். இங்ஙனம் மனமடிவினைத் தருகின்ற நினைவினின்றும் நீங்குதற் பொருட்டுத், தெய்வ அருட்டன்மையினை நன்கு அறியமாட்டாச் சிறுமை யினால் இந் நினைவு எழுந்தது என்று உணர்ந்தேன். அதுவேயுமன்றி, யாம் ஒரே பொழுதிற் பலவகைப் பட்ட பொருள்களையும் ஒழுங்கு உணரும் அறிவாற்றல் இல்லேமா யிருக்கின்றோம். யாம் சிலவற்றை நன்காராய வேண்டினேமாயின் வேறு சிலவற்றைக் கருதாது ஒழிதலை வேண்டுகின்றேம். எம்மிடத்திற் காணப்படும் இக் குறைபாடு, எம்மைக்காட்டிலும் அறிவாற்றலால் மிக்குயர்ந்த உயிர்களிடத் துஞ் சிறுபான்மை காணப்படுவதாகவே இருக்கின்றது; ஏனெனில் உயிர்களெல்லாம் ஒரு வரம் புட்பட்ட அளவும் அறிவுமுடையவாகலின் என்க. இங்கே படைக்கப்பட்டிருக் கின்ற உயிர்கள் ஒவ்வொன்றும் ஒரு வரையறைப்பட்ட இடத்தின்கண் இருக்கின்றமையின், அவற்றின் அறிவும் அங்குள்ள ஒரு சிலவற்றையே உணரவல்லதாய் இருக்கின்றது. பிறவிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் உயருந் தகைமைக்கு இசையவே, யாம் இயங்க வுஞ், செய்யவும், அறியவும் நிலைக்களனாயிருக்கின்ற இவ் வுலகத்தின்கண் அவரவர்க்குட் பங்கிடப்படும் நிலவரைப்பும் அவரவர்க்குப் பெருக்க சுருக்க முடையதாகவே பகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, எவ்வளவுதான் அகன்ற தாயினும் யாமிருக்கும் இந் நிலவுலகத்திற்கும் ஒரு சுற்றளவின் வரம்பு உண்டு. ஆகையால், யாம் இறைவன் தன்மையைப்பற்றி உற்றுணரும்போது, தினைத்துணையுங் குறைபாடு இல்லாத அவனுக்கும் அதனைச் சிறிதாயினுங் கற்பித்துச் சொல்லா மலிருக்கக், குறைபாடு உடையதாய்ப் பழகிவருகின்ற எம்முடைய உள்ளத்திற்குச் சிறிதும் முடிவதில்லை. அவனுடைய தன்மைகள் அளவிடப் படாதனவென்று யாம் எமது பகுத்தறிவால் நன்கு அறிந்த வழியும், எம்மை யறியாமலே எம் உள்ளத்தே இயற்கை யாய் எழாநின்ற சிறிய மனச் சாய்வுகளைப், பகுத்தறிவு மீண்டுந் தோன்றி, முற்ற அகற்றி எமக்கு உதவி புரியுங்காறும், எமது அறிவின் புல்லிய தன்மையானது தன்னால் உணரப்படும் பொருள்களுக்கு ஓர் எல்லை வரையறுத்துச் சொல்லாமலிருக்க இசைவதில்லை. ஆகையால், இறைவன்றான், பலவேறு வகைப்பட அளவின்றி விரிந்த பொருள்களின் ஊடே யெல்லாம் ஊடுருவி நின்று இடையறாது பெரியதோர் அருட்டொழில் புரிகின்ற வனாகக் காணப்படுதலின், அவனுடைய கடைக்கண் நோக்கத் திற்கு ஒரு சிறியேனாகிய யான் எங்ஙனம் பொருளாவேன் என்று எழுவதான துயர நினைவை முழுதும் ஒழித்துவிடக் கடவே னாக; ஏனெனில், எல்லா விடங்களிலும் ஊடுருவியிருந்து எல்லாம் அறிய வல்லவனான அவனது பேராற்றலுக்கும் பெருந் தன்மைக்கும் யாம் அவ்வாறு எண்ணுதல் ஓர் இழுக்கமாகலின் என்க. அவன் எங்கும் ஊடுருவி நிற்பவனாய் விரிந்திருத்தலை ஓருங்கால், அவனது அருளாற்றல் இவ்வுலக வுடம்பு முழுமை யும் நுழைந்து, அதற்கு ஒரு களைகணாய் நின்று அதனை இயக்கா நிற்கின்றமை இனிது புலனாகும். தன்னாற் படைக்கப் பட்ட படைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் அவன் நிறைந்திருக் கின்றனன். அவன் படைத்தவற்றுள் அவன் இராத இடமு மில்லை, அவனுக்கு எட்டாமல் அகன்றிருப்பது மில்லை, அவனுக்குத் தெரியாமல் நுண்ணிதாயிருப்பதும் இல்லை, அவனால் ஒரு பொருட்டாக எண்ணப் படாததும் இல்லை. அறிவுடையது அறிவில்லது என்று பகுக்கப்பட்ட இருவகை யுலகின் உட்பொருளிலும் அவனது அருள் உள் நின்று அவற்றோடு ஒருமித்திருக்கின்றது. அவன் ஓரிடத்திருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்வனாயினுந், தான் படைத்தவற்றுள் ஏதேனும் ஒன்றிலிருந்தாவது, அளவுபடாது பரம்பிவிரிந்த இவ்வெளியின்கண் ஒரு பகுதியிலிருந்தாவது தன்னை வேறு பிரிப்பனாயினும், அஃது அவன் வரம்பில் ஆற்றற்கு ஓர் இழுக்காகவே முடியும். சுருங்கச் சொல்லுங்கால், இறைவன் எங்குமி ருக்கின்றான் என்பது மட்டும் விளங்கு வதன்றி, அவன் எதுவரையில் நிறைந்து நிற்கின்றான் என்பது ஒருவாற்றா னும் அறியப்படுவ தில்லையென்க. இனி, அவன் எங்குமிருக்கு மியல்புடையனாதல் போல வே, எல்லாம் அறியும் வல்லமையு முடையனென்பதும் இனிது விளங்குகின்றது. அவன் எங்கும் உண்மையினாலேதான் எல்லாம் அறியும் அறிவும் இயற்கையாய் இன்றியமை யாததாய்ச் சுரந்து பெருகுகின்றது. அங்ஙனம் அல்லாக்கால் அவன் நிறைந்திருக்கும் இவ்வுலக முழுமையும் நடைபெறுகின்ற தொழிற் கூறுகள் ஒவ்வொன்றனையும் அவன் எங்ஙனம் அறியமாட்டுவான்? தான் ஒருமித்திருக்கும் உயிர்கள் ஒவ்வொன்றி னிடத்தும் எழுகின்ற அறிவின் கூறுகள் ஒவ்வொன்றனையும் எங்ஙனம் உணரமாட்டு வான்? சிலர் இவ்வுலக அமைப்பினைப் பற்றிப் பேசியக்கால், இஃது அவற்கு ஓர் உறைவிடமாமென்றும், அவனது அருள் அமிழ்தம் நிரம்புங் கொள்கலமாமென்றுங் கூறினார்கள். அறிவு நூலாசிரியர் வேறொருவர், இவ்விரிந்த வெள்ளிடையை உற்று ணர்ந்து இஃது இறைவனது அருளுணர்வு அமர்ந்திருக்கும் பெருங் களமாமென்று கூறினாராகலின், அஃதொன்றுதான் மிக வுயர்ந்த மேலான கருத்தாய்த் தோன்றுகின்றது. தம்மோடு அண்டையில் நிற்கும் ஒருசில பொருள்களின் இருப்பையும் இயக்கத்தையும் அறியும் ஐம்பொறி யுணர்வின் இருப்பிடம் விலங்குகளுக்கும் மக்களுக்கும் உண்டு. அங்ஙனம் அவர் அறியும் அறிவும் உன்னிப்பும் மிகக் குறுகிய ஓரிடத்தினுள் மட்டுமே சுழன்று நிகழ்கின்றன. ஆனால் இறைவனோ தான் உறைகின்ற எல்லாப் பொருள்களையும் அறியுங் கடப் பாடு மேற்கொண்டு விளங்குகின்றானாகலின், அவன் எங்குமுள்ள பெருவெளியே அவனது எல்லையற்ற அறிவு நிகழ்ச்சிக்கு இடந்தருவதா மென்பதும், அஃது அவனது முற்றுணர்வு நிகழ்ச்சிக்கு இன்றி யமையாத ஒரு கருவிபோல் ஆவதாம் என்பதும் அறிதல் வேண்டும். உடம்போடு ஒற்றுமைப்பட்டுத் தோன்றும் ஓர் உயிர் அதனினின்றும் விடுபட்டு, மனத்தினுங் கடுகிச் சென்று இப் படைப்பின் எல்லையைக் கடந்து, பலகோடி யாண்டுகளாக ஒரு பெற்றிப்பட ஏகி இவ்விரிந்த வெளியின் அப்பாற்போய்க் கழியினும், அது பின்னும் இறைவனால் அகத்திடப்பட்டுத் திருவருள் வெளியால் தான் சூழப்பட்டிருத்தலைத் தெற்றென அறிந்து கொள்ளும். யாம் உடம்பொடு கூடி ஒருமைப்பட்டுத் தோன்றுகின்ற காலத்தும், அவன் எங் கட்புலனுக்கு விளங்கிற் றிலனாயினும், எம் அகத்தே விளங்கி யமர்ந்திருக் கின்றான் என்பது திண்ணமேயாம். இதுபற்றியன்றே காரைக்கால் அம்மையார், அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவ மேது என்று அருளிச் செய்வாராயினர். மற்றோர் அன்பர் ஓ என் அரசே, நின்னை யான் எங்ஙனங் காண்பேன்! நின்னைக் காணும் பொருட்டு முன் ஓடினேன்; அங்கும் நீ வெளிப்படுகின் றிலை; பின் ஓடினேன்; அங்கும் வெளிப்படுகின்றிலை, நீ பணி செய்யும் இடப்பக்கத்திற் றிரும்பினேன். அங்குங் காணப்படு கின்றிலை; வலப் பக்கத்திற் றிரும்பினேன். யான் காணக்கூடா தென்றே நின்னை அங்கும் ஒளித்துக் கொள்கின்றனை! நின் கள்ளம் இருந்தவாறென்னே! என்று நெஞ்சங் குழைந்து விளம் பினார். சுருங்கச் சொல்லுங்கால், எமக்கு, அறிவினுள் அறிவாய் நின்று அவன் உணர்த்து தலானும், அருட்குருவாய்க் கண்முற் றோன்றி அறிவுறுத்து தலானும், அவனை நாங் காணாவிடினும், அவன் எமக்குள் விளங்குதல் ஒருதலையென்று உறுதியாக உணர்ந்தேன். இங்ஙனம் எல்லாம்வல்ல இறைவனுடைய அருள் நிறைவு அருளறிவுகளின் எங்குமுள்ள இயல்பினை நான் ஆழ்ந்து நினைக்கையில், ஆறுதல் பயவாமற்றை நினைவு களெல்லாம் என் உள்ளத்தினின்றும் ஒருங்கே மறைந்து ஒழிந்தன. முதன்மையாய், எங்கே நம்மை இறைவன் குறியாது விடுகின்றனனோ என்று அஞ்சுகின்ற உயிர்களையும், இன்னும் மற்றை எல்லா உயிர்த் தொகைகளையும் அவன் திருவுளம் பற்றாது இருப்பான் அல்லன். எமக்குள் நிகழும் எல்லா நினைவுகளுள்ளும் அவன் மறைவாய் எழுந்தருளிக், குறிப்பாய் என்னை இப்போது கவலைப்படுத்து வருத்துகின்ற என்னெஞ் சத்தி னுள்ளுமிருந்து அருளமிழ்தம் பொழிந்து எம்மைக் கடைக்கணிக்கின்றான். அவன் தன்னுடைய உயிர்கள் எவற்றையும் கடைக்கணியாது விடுதல் இயலாமையால், மிகவுந் தாழ்மையான உள்ளத்துடன் புழுத்தலைநாயினுங் கடையே மாகிய எம்மையும் ஒரு பொருட்டாக எம் பெருமான் நினைவனோ என்று உருகி உருகிக் குழைந்தழுகின்ற நல்லன்பர்க்கு, அவன் றனது அருட்கடைக்கண் நோக்கஞ் சாத்தி அருள் புரிகின்றான் என்பதில் நாம் சிறிதும் ஐயுறுதல் வேண்டா. 3. முருகவேள் கனவிற்கண்ட துன்பமலை மக்கட்கு நேருந் துன்பங்கள் எல்லாம் ஒருங்கு திரட்டி ஒருதுறைப் படுத்து எல்லார்க்கும் ஏற்றத் தாழ்வின்றி ஒரு நிகராகப் பங்கிடப்படுமாயின், தம்மை இப்போது நல்வினை யற்றவராக நினைந்திருப்பார் பலரும், அங்ஙனந் தமக்குப் பங்கிடப்படுங் கூறு பெறுதற்கு முன்னரே, தமக்கு முன்னுள்ளதே போதும் போதுமென்று கூறியமைவர் என்னும் ஓர் அரிய கருத்தைச் சான்றோர் ஒருவர் வெளியிட்டார். ஏனையொரு சான்றோர் இக் கருத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்து, எமக்கு நேரும் இடர்களுந் துன்பங்களும் மற்றையோன் ஒருவனுக்கு நேர்வனவற்றைக் காட்டினும், எம்முடைய நுகர்ச்சிக்கு இசைந்தனவாய் இருக்கின்றன வென்பது அவனுடன் எமக்குள்ளவற்றை மாற்றிக் கொள்ளக் கூடுமாயின் நன்கு புலப்படும் என்று இன்னும் நுணுக்கமாக அதனை எடுத்து மொழிந்திட்டார். இவ்விரு கருத்தினையும் பற்றி நினைந்தவாறே நான் எனது சாய்மானக் குறிச்சியில் இருந்தபோது, என்னை யறியாமலே அயர்ந்ததோர் உறக்கம் என்னை வந்து கவிந்தது. சடுதியிலே யான் என்றுங்கேளாத ஒரு புனித ஒலி என்முகமாய் வந்தது. அஃதென்னை என்றறியக் கண்விழித்துத் தென்றிசைப் பக்க மாய்க் காண்கையிற், பச்சை மஞ்சளைப் பிளந்தாற்போலப் பசுங் கதிர் பொழியும் அரசிருக்கை மண்டபம் ஒன்று தோன்றிற்று; அது நாற்பக்கங்களிலும் பொற்சுவர் எழுப்பி முகடு பொற்றகடு வேய்ந்து அமைக்கப்பட்டிருந்தது; கொழுமையான செம்பவளத் தாற் கடைந்து திரட்டிய நூறு தூண்கள் அங்கு நிறுத்தப்ட்டிருந் தன. கீழே வழுவழுப்பாக இழைத்த வெள்ளைச் சலவைக் கற்க ளின் பொருத்துவாயில் நீலமணிகள் அழுத்திப் பதிக்கப்பட்டிருந் தன. மேலே, பொற்சரிகை பின்னிய வெண் பட்டாடை படங் காகக் கட்டப்பட்டிருந்தது. யான் இந்நிலவுலகத்திற் கண்டறி யாத மலர்கள் ஆங்காங்கு விடு பூவாகச் சிதறிக்கிடந்து ஒரு புனித மணங் கமழ்ந்தன. இவ்வாறு எல்லாந் தெய்வத் தன்மையுடையன வாய் விளங்கும் அம் மண்டபத்தின் நடுவிற் கண்ணொளி மழுங்க முழுமணி குயிற்றிச் செய்த அரியணையொன்று இடப் பட்டிருந்தது. முதன் முதல் அதனைப் பார்க்கையில் அதன்மேல் யாருமின்றி அது வறிதாய்க் காணப்பட்டது. இவ்வாறே அம் மண்டபம் எங்கும் யாருமின்றி வெறுமை யாயிருந்தது. இஃதென் னை யென்று வியந்து உற்று நோக்குகையில், வைகறை மூடுபனி யைக் கீறிக்கொண்டு இளஞாயிறு தளதளவென்று தோன்றுதல் போலப் புனித அருட்டிரு மேனியுடையவராயுங், காதிற் சங்கக் குழை துலங்குபவராயும், முறுக்கவிழ்ந்து இதழ்விரிந்த செந் தாமரை போன்ற முகமும் அருள் ஒழுகு விழிகளும் விளங்கப் பொருப்பென அகன்ற திருப்பவள மார்பில் முத்தலைவேல் ஏந்தினவ ராயும், பிறைக்கொழுந்து நகுஞ் சிவந்த சடைக்கற்றை முடியுடையவராயும் உரை வரம்பமையாப் புரைபெருந் தோற்றத் துடன் அறக்கடவுள் அவ்வரியணை மீது அமர்ந் திருக்கும் நிலை கட்புலனாயிற்று. உடனே அவர் பக்கத்தில் நோக்கினேன்; ஆண்டு உரையால் அளப்பரிய பலவேறு உருவங்கள் உடைய ரான பணியாளர்களும் பிறரும் அச்சக் குறிப்புத் தோன்ற ஆங்காங்கு வாய்புதைத்து வரிசை வரிசையாய் நிற்றலுங் கண்டேன். அவ்வறக்கடவுளுக்கு எதிரே நிறைகோல் ஒன்று தூக்கப்பட்டிருந்தது. அதுகண்டு, நடுநிலை வழாது அவரவர் வினை நுகர்ச்சிகளை அளந்தறியும் அக்கடவுள் திருவுளப் பாங்கினை அறிவுறுத்தும் அடையாளம் இதுவோ என்று நினைந்தேன். இங்ஙனம் யான் எண்ணிக் கொண்டிருக்கின்ற அளவிலே, அக் கடவுள் தந் திருவாய் மலர்ந்து ஒருபக்கத்து நெருங்கியிருந்தாரை நோக்கி, ஒவ்வோர் ஆடவருந் தத்தம் இடர்களையுந் துன்பங்களையுங் கொண்டுபோய், உதோ! தோன்றும் இடைவெளியிற் குவிக்கக் கடவர் என்று கட்டளை யிட்டு, இதற்கென்று வரைந்து வைக்கப்பட்டிருந்த ஒரு வெளி நிலத்தைக் குறிப்பிட்டார். குறிப்பிடுதலும், அங்கு நிகழ்வன வற்றைக் காண்டற் பொருட்டு நான் விரைந்து சென்று அப் பொட்டைத்திடல் நடுவில் நின்றுகொண்டு மிக மகிழ்ந்து நோக்கும்பொழுது, அங்குக் குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நடந்து வந்து, தாந்தாஞ் சுமந்து போந்த பல்வகைச் சுமைகளையும் அவ்வெளியில் இறக்கிக் குவித்தனர். அக் குவியல் முழுதும் ஒன்று சேர்ந்து முகில்மண்டிலத்தை ஊடுருவிக் கொண்டு மலைபோல் உயர்வதாயிற்று. அங்கு அக்கடவுள் இட்ட கட்டளையை நடைபெறு வித்தற் பொருட்டுப் பூங்கொம்புபோன் மெலிந்து, ஊதினாற் பறக்கும் உடம்பினளான ஓர் இளம்பெண் மிகவுஞ் சுறு சுறுப்பாய் அங்குமிங்கு முலவினள்; அவள் கையொன்றிற் பெருக்கக் கண்ணாடி ஒன்றிருந்தது. அவள் தளர உடுத்திருந்த நீண்ட ஆடை காற்றில் அலையும்பொழுது, அதன் இடையே பின்னப்பட்டிருந்த பல்வேறு பேய் உருக்களுங் கூளி உருக்களும் ஆயிரங்கோளாறான வடிவங்களைக் காட்டின. அவளது பார்வையில் எத்தகையாரும் வெருவுதற்குரிய கொடுந் தடுமாற் றக் குறிப்புகள் காணப்பட்டன. அவள் பெயர் வீண் எண்ணம் எனப்படும். அப்பெண் அங்கு ஒவ்வோர் ஆளுக்கும் உரிய சுமையினை நிரம்பக் கிளர்ச்சியோடும் பொதிந்து அவர்தம் தோள்களில் ஏற்றி ஒருவர்பின் ஒருவராய் அவரைக் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்படி நடத்தினாள். என்னோடு ஒரு பிறப்பினரான மக்கள் இங்ஙனந் தங்கடங்கட்குரிய சுமையினைச் சுமந்தவுடன் அவற்றின் பொறை பொறுக்க மாட்டாமற் கதறு தலை என் கண்ணெதிரே காணவும், எனக்கு முன்னே குவிக்கப்பட்ட மக்கட் டுன்பமலையினைப் பற்றி நினைக்கவும் என் நெஞ்சங் கரைந்து உருகிற்று. இங்ஙனமாயினும், அந்நேரத்தில் அங்கு வேறு சிலர் செய்த செய்கைகளால் எனக்கு மிகுந்த களிப்புண்டாயிற்று. ஒருவன் ஒரு பழைய சரிகை யாடையில் ஒரு பொதியை நிரம்ப உன்னிப்பாய் மறைத்தெடுத்து வருதலைக் கண்டேன்; வந்தவன் அப்பொதியினை அக் குவியன்மேல் எறிகையில் அது வறுமை என்று தெரிந்தேன். மற்றொருவன் நிறைந்த செருக்கொடு நடந்து போந்து தன் மூட்டையினை யெறிய, அதனை ஆய்ந்து நோக்கினேற்கு அஃதவன் மனைக் கிழத்தியாய்க் காணப்பட்டது. இன்னும் அங்கே கணையுந் தீங்கொழுந்தும் நிறைந் தனவும் வீண் எண்ணங் கொண்டனவும் ஆன மூட்டைகள் சுமந்தனராய்க் காதலிளைஞர் பலர் தொகுதி தொகுதியாக வருதலுங் கண்டேன்; இங்ஙனங் கண்ட காட்சியில் உண்டான பெரும் புதுமை என்னென்றால் அவ்வாறு வந்த காதலுள்ள முடையார் அப்பெரிய இடர்ப்பொதியின் பொறையால் தம் உள்ளம் இருபிளவாய் அழிவதுபோல் நெட்டுயிர்ப்பெறிந்தன ராயினும் அக் குவியலின் அருகே வந்ததுந் தம் மூட்டைகளை எறிந்துவிட மனமிலராய் வருந்தி நின்றனர்; பின்னர்ச் சிறிது வீணே வருந்தி முயன்று பார்த்தபின், தந்தலைகளை அசைத்துக் கொண்டு வந்தது போலவே பொறை சுமந்தனராய் அப்புறம் போயினர். இன்னும் அங்கே பெருமுதுமகளிர் பலர் தம்முடம் பின் திரைந்த தோல்களை எறிந்து விடுதலும், இளையமகளிர் பலர் தம் முடம்பின் பழுப்பான நிறமுடைய தோலை உரித்து எறிதலுங் கண்டேன். இன்னும் அங்கே சிவந்த மூக்குகளும், பருத்த உதடுகளுங், கறைப்பற்களும் பெரும் பெருங் குவியலாய்க் கிடந்தன. இவ்வாறு மிக உயர்ந்து ஓங்கிய அத்துன்ப மலையிற் பெரும்பாலும் அழகில்லாத உடம்பி னுறுப்புகளே விரவிக் கிடத்தலைக் காண்டலும், உண்மை யாகவே எனக்குப் பெரிய தோர் இறும்பூது எழுவதாயிற்று. இங்ஙனம் நான் இறும் பூதுற்றுக் காண்கையில், ஒருவன் ஏனையோரைக் காட்டிலும் பெரும்பொறை தாங்கினனாய் அவ் விடர்ப் பொருப்பின் அருகே நெருங்கிப் பெரிது எழுந்த மகிழ்ச்சியோடு அதனை வீசி எறிந்தான்; எறிதலும், அஃதவனுக்கு இயற்கையே முதுகிலுள்ள பரிய முரிப்பின் தசையென்று கண்டுகொண்டேன். இதுபோலவே இன்னும் அங்கு எல்லாவகையான உடம்பின் சீர்கேடு களும் குவிக்கப் பட்டிருந்தன; என்றாலும், அச்சீர்கேடுகளிற் பெரும்பாலான உண்மையல்ல வென்பதூஉம், அவரவர்தம் வீண் எண்ணத்தாற் பிறந்தனவா மென்பதூஉம் யான் இனிதறிவேனா யினேன். இனி, மக்கட்கு இயற்கையே உண்டாகும் நோய்கள் முழுமையுஞ் சேர்ந்த கலவைச் சிறுபொறி யொவ்வொன்று அழகிய மக்கள் பலப்பலர் கையிலும் இருக்கக் கண்டேன்; இச் சிறுபொதியின் பெயர் சினம் என்று சொல்லப்படும். இனி, இங்கு இவை யெல்லாவற்றினும் எனக்குப் பெரியதொரு வியப்பினை யுண்டுபண்ணிய தொன்றுண்டு; அஃதென்னை யெனின், இம் முழுக்குவியலிலும் மடமை ஒன்றாவது, பொல்லாங்கு ஒன்றாவது எறியப்படவே இல்லை: இதனால், அரிதிற்கிடைத்த இந் நேரத்தில் மக்கள் ஒவ்வொருவருந் தங்கடங்கட்கு வேண்டாதனவா யுள்ள கொந்தளிக்கும் விழை வுகள் மனச் சாய்வுகள் மனநொய்ம்மைகள் முதலானவற்றை விலக்கிக் கொள்ளுகின்றிலரே! என உள் நினைந்து வியந்தேன். இவற்றிற்கு இடையே, தான் இழைத்த குற்றங்களைச் சுமந்து கொண்டு வந்த பெருங்காவாலி ஒருவனைக் குறிப்பாய் நோக்கினேன்; அவன் வீசிய மூட்டையை ஆராய்ந்து பார்க்கையில், அவன் தன் குற்றங்களை நீக்கி விடுவதற்கு மனமின்றித் தன் நினைவை மட்டும் எறிந்து போயினானென்பது தெற்றென விளங்கிற்று. அவற்குப் பின்னே பயனற்ற வீணனான பட்டிமகன் ஒருவன் விரைந்து போந்து தன் மடமையை எறிதல்விட்டுத் தன் நாண்டகைமையையே வீசிப் போயினான். இங்ஙனம் மக்கட்தொகுதி முழுதுங் தம்முடைய அரும் பொறைகளை இறக்கிச் சென்றபின், இந்நேரத்தில் இதனை நடைபெறுவித்தற் பொருட்டு உலாவிக் கொண்டிருந்த ஒரு சூர் அணங்கு தன்னந்தனியனாய் இக்காட்சியினைப் பார்த்துக் கொண்டு வறிதேநிற்கும் என்னருகே வந்தது; வருதலும் எனக்கு ஒரு மனத்தடுமாற்றம் உண்டாயிற்று; சடுதியில் அவள் தன் கையிற் பிடித்திருந்த பெருக்கக்கண்ணாடியினை என் கண்களி னெதிரே நேராகப் பிடித்தனள். அதில் உடனே என் முகத்தைக் காண்டலும், மிகச் சிறிதாயிருந்த அவ்வடிவம் இப்போது மிகப் பெரிதாய்த் தோன்றுவதைக் கண்டு மருண்டேன். இவ்வெதிர்த் தோற்றத்தின் வரம்பு கடந்த உறுப்பின் அகலத்தை நோக்க நோக்க என் உருவத்தின்மேல் எனக்கே வெறுப்புண்டாயிற்று; அதன்பின் அதனை முகமூடியைப்போல் என்னினின்றும் வீசியெறிந்தேன். இப்போது எனது நல்வினையால் என் அருகே நின்ற ஒருவன் தன் முகம் மிக நீண்டதாயிருந்தமைகண்டு, சிறிது முன்னே அதனை அம் மக்கட் டுன்பமலைமேற் பிடுங்கி யெறிந்து விட்டு நின்றுகொண் டிருந்தான். உண்மையிலேயே அவன் முகம் நாணத் தக்கவகையாய் மிக நீண்டுதான் இருந்தது. வாய்மையே பேசுங் கால், அவன் மோவாய் மட்டும் என் முழு முகத்திளைவு பெரிதாயிருந்தது என்று நம்புகின்றேன். நாங்கள் இருவேமும் எங்கள் உறுப்பின் அழகின்மையைத் திருத்திக் கொள்வதற்கு நல்லநேரம் வாய்த்தது. எல்லாரும் தாந்தாந் தர வேண்டுவன வற்றைத் தந்து போகட்டமையால், ஒவ்வொருவரும் தமக்குள்ள குறையினை மற்றைப் பிறரொடு மாற்றிக்கொண்டு நிறைவு செய்துகொள்ள இடம் பெறுவாராயினர். இங்ஙனம் மக்களெல்லாரும் தத்தமக்குரிய துன்பங் களினின்றும் விடுதிபெற்றமை கண்டு உரையளவு கடந்த உவகை எய்தினேன். இவ்வாறு அப்பொழுது நாங்கள் எல்லேமும் அக்குவியலைச் சூழ்ந்து நின்று கொண்டு, அதிற்சேர்ந்து கிடந்தவற்றைப் பார்த்தேமாயினும், தமக்கு வாணாளிற் பெறும் இன்பமும் நலமும் இக் குவியலில் இவைதா மென்று தெரிந்து கொள்ளாமல் நின்றோர் அப் பெருங்குழாத்தில் யாருமே இலர். இப்படியாயின், இவற்றிற்கு இயற்கையிலே உரிமையுடையோர் இவற்றைத் துன்புறுத்தும் பெரும் பொறையாகக் கொண்டவா றென்னையென்று நினைந்து நினைந்து வியப்படைந்தேன். இவ்வாறு, இத்துன்பக் குழம்பலையும் அலைசலையுங் கருத்தாய்ப் பார்த்து எண்ணியவண்ணமாய் யான் நிற்கையில், அத்தாணி மண்டபத் தரியணைமீது அமர்ந்தருளிய அறக் கடவுள் தந் திருவுளமுவந்து, இப்போது ஒவ்வொருவருந் தாந் தாம் விரும்புமாறு தமக்குள்ள துன்பத்தை மாற்றி, அக்குவியலி னின்றும் பிரித்தெடுத்துக் கொடுக்கப் படுவதை மூட்டைக் கட்டிக் கொண்டு தமது இருப்பிடஞ் சேரலாம் என்று இரண்டாமுறையும் ஒரு கட்டளையிட்டருளினார். இக்கட்டளை பிறத்தலும், வீண் எண்ணம் என்ற அப்பெண் திரும்பவுஞ் சுறுசுறுப்பாகத் தொழின் முயற்சியிற் புகுந்து, அத்துன்பக்குவியல் முழுமையும் அவரவர்க்கு வேண்டும் வகையாற் பகுத்துப்பகுத்துச் சுமை கட்டி, நம்பவியலாத விரைவுடன் அவரவர்க்குரிய மூட்டையை அவரவர் தோள்மேல் ஏற்றி விட்டாள். இப்போது கிளம்பிய அலைசலையும் விரைசலையும் அள விட்டுரைத்தல் முடியாது. இந்நேரத்தில் நான் கண்டறிந்த சிலவற்றை உலகிற்கு வெளியிடுகின்றேன். போற்றக் தக்க நரைத்தோற்றம் உடையனான முதியோன் ஒருவன் தனக்கிருந்த அடிவயிற்று நோயை வீசி எறிந்த பின், தன் காணி யாட்சிக்கு உரிமை பெறுதற் பொருட்டு எடுப்புப்பிள்ளை வேண்டியிருந்தமையின், அக்குவியலில் தந்தையால் வெகுண்டு எறியப்பட்ட கடன் றவறிய மகன் ஒருவனை விரைந்தெடுத்தனன். அங்ஙனந் தெரிந்தெடுக்கப்பட்ட நன்றி யில்லா இளைஞன் கால்மணி நேரத்திற்குள் அம்முதியோன் தாடியைப் பிடித்து இழுத்து அவன் மூளையைத் திறந்து சிதறி அடிக்க விரும்பினான். இதனால் வெருக் கொண்ட அம்முதியோன், வயிற்றைப் பிசைந்த வண்ணமாய் வருந்தித் தன்னெதிரே வந்த அப்பையன் தந்தை யைப் பார்த்து நின் மகனை எடுத்துக்கொண்டு பெயர்த்தும் என் வயிற்றுவலியை எனக்குக் கொடுத்து விடு என்று மிக இரந்து வேண்டினன். வேண்டியும் என்னை? அவர் இருவருந் தாம் தெரிந்தெடுத்துக் கொண்டவற்றை மறித்துந் தம தெண்ணப் படியே மாற்றிக் கொள்வதற்கு வலிவற்றவரா னார்கள். தோணியில் தண்டுவலிக்கும் வேலையிலிருந்த ஏழை அடிமை ஒருவன் தன் கால் விலங்கினைக் கழற்றி யெறிந்து விட்டு, அதற்கு மாறாகப் பொருத்துப் பிடிப்பு நோயைத் தெரிந்து எடுத்துக் கொண்டனன். கொண்டபின் முகஞ்சுளித்து மிக வருந்தின மையால், அவனும் இக்கொடுக்கல் வாங்கலில் ஊதியம் பெற்றா னல்லனென்பது நோக்குவார்க்கெல்லாம் எளிது விளங்கும். இன்னும் இவ்வாறே, அங்கு வறுமைக்கு மாறாக நோயினையுஞ் செரியாமைக்கு மாறாகப் பசியினையும், துன்பத்திற்கு மாறாகக் கவலையினையுங் கைக்கொண்டு பலவகைப் பண்டமாற்றுகள் நிகழ்ந்தமை கண்டு மிகவுந் களிப்புண்டாயிற்று. இனிப், பெண்தொகுப்பாருந் தம்முள் ஒருவரொருவர்க் குரிய உறுப்பின்வடிவுகளை மாற்றிக் கொண்டு நிரம்பவும் முயற்சியாய் வாணிகஞ் செய்தனர். ஒருத்தி தன் ஒருபிடி நரைமயிரைக் கொடுத்து ஒரு பிளவை கட்டியை வாங்கிக் கொண்டாள்; மற்றொருத்தி தன் சிற்றிடையினைக் கொடுத்து திரண்டுருண்ட இரண்டு தோள்களை எடுத்துக்கொண்டாள். வேறொருத்தி தன் கற்புடைமையினைத் தந்து தன் அழகுகெட்ட முகத்தினை திருத்தி வாங்கிக்கொண்டாள்; ஆயினும், இங்ஙனஞ் செய்துழியெல்லாம் புதுக் குறைப்பாட்டினுக்கு உரிமை கொண் டார் பலருள்ளும் ஒருவரேனும் அடுத்த நேரத்திலேயே அது பழைய குறையைக் காட்டினும் இடர்ப் பயப்பதாதலை விளங்க அறியாமை இல்லை. இவ்வாறே அக்குழுவிலுள்ளார் ஒவ் வொரு வருந் தமக்கிருந்த பழங்குறைக்கு மாறாகப் பெற்ற புதுக் குறையினால் மகிழ்தலின்றி ஒரு தலையாக இடருழத் தலையே கண்டு வருந்தினேன். ஆனாலும், நமக்கு எய்தும் இடர்கள் அனையவும் நாம் பொறுக்குமளவில் நம் வலிவுக்கு இசைய அளவாக வகுத்துப் பொருத்தப் படுகின்றனவோ, அன்றி அவை பழகப் பழக நம்மால் தாங்கப்படும் இயற்கையவாய் இணங்கு கின்றனவோ இன்னதென்று நிலையிடுதற்குப் புகுந்தேன். இனி, அங்கு முன்மொழிந்த கூனன் ஒருவன் தன் முதுகிலிருந்த இமிலைப் போக்கிவிட்டுச் சிறுநீர்ப் பையிற் கல்லொன்று இடுவித்துக்கொண்டு உருவம் மிகத்திருந்தி ஒழுங்காய்ப் போதலையும், இவனோடு இவ்வாறு மாற்றிக் கொண்ட அழகிற்சிறந்தான் ஒருவன் தான் முன்னே மகளிரால் நன்கு புகழப்பட்ட அழகிய நல்லுருவத்தை இழந்து, அம்மகளிர் கூட்டத்தினூடே தன் தலைக்குமேல் தன் இரண்டு தோள்களும் பிதுங்கக் கூனி நடந்து போதலையுங் கண்டு இரக்கம் மிகுந்து என் நெஞ்சம் நெக்குடைந்தது. இதற்கிடையில் நான் எய்திய ஊதியத்தின் இயல் பினையுங் கூறாதுவிடுதலின்றி விளம்பி விடுகின்றேன். நீண்ட முகமுடைய னான என் நண்பன் என் சிறிய முகத்தைத் தான் வாங்கிக் கொண்ட துணையானே மிகவுங் கோணங்கியான வடிவமு டையனாய் நிற்றலைக் காண்டலும், என் முகத்தை நானே கொடுத்து அவனை வெட்கப்படுத்தி விட்டதனை எண்ணித் தாங்கமுடியாமற் சிரிப்பேனாயினேன்; அன்னோ! அந் நண்பன் நான் பகடிபண்ணுதலைத் தெரிந்து கொண்டு, தான் செய்ததைப் பற்றி மிகவும் நாண முறுவா னாயினன்; மற்று, என் திறத்தை ஆராய்கையில் நான்பெற்ற வெற்றியைக் குறித்து நான் உவப்பதற்கும் இடமில்லாமற் போயிற்று; என்னை? என் நெற்றியைத் தொடுதற்கு விரும்பி விரலை உயர்த்துகையில் அவ்விரல் அவ்விடத்தைத் தப்பி என் மேலிதழின் மேற் றெற்றுப்பட்டது. அஃதல்லாமலும், என் மூக்கு மிக நீண்டுவிட்ட மையைல் என் முகத்தைத் தடவிப் பார்த்து அதன் வேறு ஒரு பகுதியைத் தொடுகையி ளெல்லாம் இரண்டு மூன்றுமுறை என் கை மூக்கின் மேற் றட்டுப்பட்டு நோயை உண்டாக்கிற்று. இவ்வாறே என்னருகில் நின்ற வேறிரு செல்வர்களும் என்னைப் போலவே ஏளனமான நிலையை யெய்தினராய் நிற்றலுங் கண்டேன். இவர் இருவருந் தங்கட்குள்ள தடித்து வளைந்த இரண்டு கால்களையுங் கெண்டைச் சதையின்றி மெலிந்து தோல்கள் போல் நீண்ட மற்றிரண்டு கால்களையுந் தமது மடமைத் தன்மையால் மாற்றிக்கொண்டு நின்றனர். இவருள் ஒருவன் தன்னியற்கை யுயரம்போய் ஊன்றுகோலைப் பற்றி அதன் மேல் நடப்பவன் போல் மிக உயர்ந்து நீண்டமை யால், அவன் தலை வானத்திலே காற்றிற் சுழல்வதுபோல் தோன்றிற்று; மற்றொருவன் தான் நடக்க முந்துகையில் தன் புதிய கால்கள் வளைந்து வளைந்து சுழன்றமையால் எவ்வாறு நடப்பதென்றே தெரியாமல் வருந்தினான். இவனைப் பார்த்தலும் பகடி பண்ண வேண்டுமென்னும் விருப்பம் எனக்கு எழுந்தமையால், என் கையிலிருந்த பிரப்பங் கோலை நிலத்தில் ஊன்றி நேராக ஒரு கோடு இழுத்து இக்கோட்டின் வழியே நேராக நடந்து இக் கோலண்டை கால்மணி நேரத்தில் வருகுவையாயின் இது தருவேன் என்று, தீவிய கொடி முந்திரிப்பழம் பிழிந்த சாறடைத்த குப்பி ஒன்றை வைத்துக் பகடி பண்ணி மகிழ்ந்தேன். கடைப்படியாக அவ்விடர்க்குவியல் முழுதும் ஆண்பெண் என்னும் இருபாலர்க்கும் பகுத்திடப் பட்ட பின்னர்த், தத்தமக்குரிய பல்வகைப் பொறையினையுந் தாங்கமாட்டாமற் சுமந்து கொண்டு அங்குமிங்குஞ் செல்வாரான அம் மக்களை நோக்குகையில் அவர் திறம் பெரிதும் இரங்கத்தக்கதாயிருந்தது. அவ்வெளி நிலமெங்கும் முணுமுணுப்பும், முறையீடும், புலம்பலும் அழுகையும் நிரம்பின. இதனைக் கண்ட அறக் கடவுள் அவ்வேழைகள் மீது பெரிதுந் திருவுளம் இரங்கி, அவர் தமக்கு இயற்கையிலே யுரியவற்றை மறுபடியும் ஈந்தருளுதற் பொருட்டு இரண்டாமுறையும் அவர்தம் பொறைகளை யிறக்கி நிலத்தே உய்க்கும்படி கட்டளையிட்ட ருளினார். அருளலும், அவரெல்லாங் கதுமெனப் பேருவகை எய்தி அங்ஙனமே செய்தனர்; அதன்பிறகு, முன்னே அவர்கள் எல்லார்க்கும் பெரியதொரு மாயங் காட்டி, அவர்களை அதன்கண் விடுத்து ஏமாற்றிய சூர்மகள் அங்கிருந்தவாறே மறைந்தொழியும்படி கட்டளையிடப் பெற்றாள். அவட்கு மாறாக முற்றும் வேறான வடிவமுடைய நல்ல ஒரு தெய்வமகள் வருவாளாயினள்; அவளது ஒழுகலாறு நேர்மையும் அமைதியுமுடையதாயிருந் தது. அவளது வடிவம் பொறையும் உள்ளக் களிப்புமுடையதாய் விளங்கிற்று. அவள் சிறிது நேரத்திற்கு ஒருமுறை மான் மருட்டுந் தன் விழிகளால் வான்மேல் நோக்கி, அவ்வறக் கடவுளைப் புல்லிப்பார்த்தனள். அவள் பெயர் பொறுமை எனப்படும். அத் தெய்வமகள் அத் துன்பமலையின் அருகே அணுகி நின்ற வுடனே, அங்கு எனக்கு மிகவும் வியப்பாகக் காணப்பட்டது என்னையோ வெனின், மிகப் பெருத்துயர்ந்த அக் குவியன் முழுதுங் குறுகிச் சுருங்கி முன்னிருந்த பருமனில் மூன்றிலொரு கூறுகூடக் காணப் படுவதின்றாயிற்று. அதன்பின் அவள் ஒவ்வொருவர்க்குந் தக்கவாறு, உரிய துன்பங்களைத் திரும்பக் கொடுத்து, அவற்றை எளிதிலே ஏற்றபடி நுகர்ந்தொழிக்கும் நன்முறையினையும் அவர்க்குக் கற்பித்து விடுத்தனள். விடுப்பவே, அவர்கள் தாமே முன்தெரிந் தெடுத்ததனால் தமக்கு வந்து நேர்ந்த இடரில் அகப்படாது, அறிவிற் சான்ற அம் மகளின் சொல்லுறுதி வழிப்பட்டு ஒழுக இசைந்தது பற்றி மிகவுவந்து சென்றனர். இத் தோற்றத்தினின்றும் நன்கு தெளியற் பாலனவாம் நன்னெறித்திறங்கள் பல உளவாயினுஞ், சிறப்பாக இதனால், நான் அறிந்தன; எனக்கு நேருந் துன்பங்களை நுகர்தற்கு அஞ்சி யான் மனக்குறை கொள்ளல் என்றும் ஆகாதென்பதூஉம், பிறர்க்கு உளவாம் இன்பங்களைக் கண்டு மனமழுங்கல் பொருந்தா தென்பதூஉமேயாம்; என்னை? ஒருவன், அயலா னொருவன் எய்துந் துன்பங்களின் இயற்கையை உள்ளவாறு அளந்தறிதல் ஏலாமையானென்க. இந்த ஏதுவினைக் கடைப்பிடித்தே, பிறர் இடும் முறையீடுகளை மிக எளியனவாக நினைப்பது கூடாதென்றும், என்னுரிமை யுடன்பிறப்பினரான மக்கள் எய்துந் துயரங்களைப்பற்றி இரக்கமும் மனவுருக்கமும் உறக் கடவேன் என்றும் உறுதி செய்து கொண்டேன். 4. மராடன் கண்ட காட்சி ஆண் பெண் என்னும் இருபாலார்க்கு மட்டுமேயன்றி, விலங்குகளுக்கும் புற்பூண்டுகளுக்கும், உயிரில்லாதன வாகிய மரக்கட்டை கற்களுக்கும், இன்னும் எல்லாத் தோற்றங் களுக்குமே உயிர் உண்டென்று அமெரிக்க தேயத்து மக்கள் நம்பிவருகின்றனர்; கைத்தொழிலாற் செய்யப்படுங் கத்தி, படகு, கண்ணாடி முதலியவற்றிற்கும் அஃது உண்டென்று நம்புகின் றார்கள். இப் பொருள்களில் ஏதேனும் ஒன்று அழியுங் காலத்து, அதன் ஆவியானது, ஆண்பெண்களின் ஆவிகள் இருக்கும் வேறோர் உலகத்திற்குச் செல்லுகின்றதெனவும் நினைக்கின்றனர். இந்த ஏதுப்பற்றியே தங்கள் நண்பர்கள் இறந்தால், அவர்கள் தாம் உயிரோடிருந்த காலத்து மரத்தாற் சமைத்த வில்லுங் கணையு முதலான கருவிகளை இம்மையுலகில் வழங்கியது போலவே, அவர்கள் மறுமையுலகிலும் அவற்றின் ஆவிகளைக் கையாளும் பொருட்டு, அவற்றை எப்போதும் அவர்களது சவத்தின் பக்கத்தே வைப்பர். இத்தகைய கொள்கை எத்துணைப் பொருந்தாதாய்த் தோன்றினும், நந்தேயத்துச் சான்றோர்களும் இவை போல் முழுதும் நம்ப வியலாத பல கொள்கைகளையும் நிலைநாட்டியிருக்கின்றனர்: குறிப்பாய்ச் சங்கரமத வழிப் பட்டவர்கள் மன வுலகத்தைப் பற்றிப் பேசுங்கால் வெறிய எண்ணத்தின் அளவாயுள்ள பொருள்களையும் உயிர்களையும் பற்றியே உரையாடக் காண்கின்றா மன்றோ? பாற்கரிய மதவாதி களுட் பல்லோரும் இங்ஙனமே தாங் கூறும் பொருள்களை விளங்கா வகையாய் விரித்துப் பேசுகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஓர் அறிஞர் காந்தக் கல்லைப்பற்றித் தாம் விரித்தெழுதிய ஓர் உரையில் அக் கல்லின் இழுக்கும் ஆற்ற லானது தீயின் சேர்க்கையால் அழிந்து போம் என்பதனை நிலை நிறுத்துவான் புகுந்து, அவர் தாம் ஒருநாள் கொழுந்து விட் டெரிந்த நிலக்கரித் தொகுதியினிடையில் ஒரு காந்தக்கல்லை இடுவித்து உன்னிப்பாய் நோக்குகையில் அதிலிருந்து நீலவண்ண மான ஒரு புகை திரண்டு மேல் எழும்புவதைப் பார்த்து, அப்புகையே அக்கல்லின் உண்மை வடிவ மாகுமென நம்பி உரை கூறினார்; அவர் அவ்வாறு கூறிய அக்கல்லின் புகைவடிவே அதன் உயிராகும் என்பதூஉம் அவரது கருத்தாயிற்றென்க. இனி, ஆவிவடிவங்கள் தொகுதி தொகுதியாயிருக்கும் ஓரிடத்திற்கு - அதாவது மறுமை யுலக மென்று இங்குள்ள நாம் வழங்குகிற அவ்விடத்திற்குத் தங்கள் தேயத்தான் ஒருவன் கனாவிற்போய் வந்தனனாக அமெரிக்கர் தமக்குள் ஒரு கதை வழங்கி வருகின்றது. அவன் அங்ஙனம் போய் மீண்ட பின்னர், இறந்தோர் உறையும் அவ்விடத்தில் தான் கண்டன முற்றுந் தெற்றென விளங்கத் தன் நண்பர்கட்கு எடுத்துக்கூறினன். இதனைப் பற்றிப் பழமை தொட்டு அவர்கள் தமக்குள் எவ்வகையான வரலாறு வழங்கி வருகிறார்க ளென்பதைக், கூடுமாயின், உசாவித் தெரிந்துகொள்ளும்படி அவ்வமெரிக்க தேயத்து மன்னர்கள்பால் மொழிபெயர்ப் பாளனாயிருக்கும் ஒருவனை என் நண்பன் ஒருவன் ஏவினான். அவன் அவர்களைப் பலமுறையும் உசாவிய பலவகை வினாக்களால் தெரிந்து கொண்ட அளவு அது பின்வருமாறு எழுதப் படலாயிற்று:- அக்காட்சியைக் கண்டு மீண்ட மராடன் என்பான் ஒருவன் குடைவாக இருக்கும் ஒரு மலையடிவாரத்தில் நெடுவழி நடந்து சென்றபின் ஆவிவடிவங்கள் தங்கும் உலகத்தின் எல்லையிற் கடைசியாக வந்து சேர்ந்தான்; அவ் வெல்லையிற் குறுஞ் செடிகளும், முட்செடிகளுங் கூரிய முட்களும் ஒன்றோ டொன்று சன்னல் பின்னலாகப் பிணைந்ததோர் அடர்ந்த காடு இருந்தமையால் அதனிடையே வழிகண்டு நுழைவது கூடாதா யிற்று. அவன் அக்காட்டின் எப்பக்கத்திலாவது சுவடுபட்ட ஒற்றடிப் பட்டம் ஏதேனும் உண்டாவென உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் ஒரு பக்கத்தில் தனக்குரிய இரை யைத் தேடி அதனைப் பதுங்கிப் பார்க்குமாறு போலவே தன்மேல் விழிவைத்துப் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒருபெருங் கோளரியைக் கண்டான்; காண்டலுந், திடுக்கிட்டுப் பின்றங்கினான்; அவ்வரிமாவும் உடனே துள்ளி எழுந்து அவன் மேற் பாய்ந்தது. அப்போழ்து தன்னிடத்து ஏதொரு படைக் கலமும் இல்லாமையால், கீழ்க்கிடந்த ஒரு பெருங்கல்லைத் தன்கையிலெடுப்பதற்குக்குனிந்தான்; குனிந்து பற்றுகையில் அஃதவன் கையிற் பற்றப்படாது போகவே அவன் பெரிதும் வியப்புற்று, அஃது ஒரு கல்லின் வெறுந்தோற்றமே என்று கண்டான். இங்ஙனம் இதில் இவன் ஏமாந்து போனாலும், மற்ற வகையில் மிக மகிழ்வதானான்; அவன்றன் இடது தோளை வந்து பற்றிய அவ் வரிமா அதனைப் புண்படுத்த மாட்டா தாயிற்று; அஃது அக்கொலைவிலங்கின் பேயுருத் தோற்ற மென்றே அவன் கண்டு கொண்டான். வலி விழந்த அப்பகை விலங்கினின்றுந் தப்பி அவன் அக்காட்டண்டை போய் அதனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தபின், மற்றைப் பக்கத்தைக் காட்டிலும் அலைசலாயிருந்த ஒரு பாகத்தின் வழியாய்த் தள்ளி உள் நுழைவதற்கு முன்னினான். முன்னித் தள்ளலும் அப் புதல்கள் அவன்கையி லகப்படாது வறியவாயிருந்த மையாற், பின்னும் மிக வியப்படைந்து, திறந்தவெளியில் நடப்பதுபோல் அத்துணை எளிதாக முட்களிடையிலும் முட்செடிகளிடை யிலும் நடந்துசென்றான். சுருங்கச் சொல்லுங் கால், அக்காடு முழுவதூஉங் காட்டின் வெறுந் தோற்றமே யன்றிப் பிறிதில்லை என்க. ஆகவே, முட்செடிகளும் முள்ளும் பம்பிய இந்தப் பெருங்குறுங்காடு அகத்தே தங்கும் ஆவிகளுக்கு ஓர் அரணாய்க் கோலிய பச்சை மரவேலியே யாகுமென்றும், இம்முட்செடி களும் முள்ளின் கூரிய முனைகளும் ஊனுங் குருதியும் நிரம்பிய வுடம்பைக் கிழிக்கும் வலியிலவாயினும், மிக நுண்ணிய ஆவியின் உடம்புகளைக் கீற வல்லனவேயா மென்றும் அவன் உடனே முடிவு செய்தான். இவ்வகையான நினைவோடும் இந்தச் சிக்கலான காட்டின் ஊடே புகுந்து போவதற்குத் தீர்மானஞ் செய்து, இவன் உள்ளே செல்லச் செல்லத் தீவிய மணங்கமழுந் தென்றற்காற்றும் வரவர மிகுதி யாயும் இனிதாயுந் தன்மேல் வந்து வீசுதலை உணர்ந்தான். இவ்வாறு சிறிது வழி நடந்து போவதற்குள் முட்களும் முட்செடிகளும் வளர்ந்த இடம் முடிந்துபோக, நறுமணங் கமழ்வனவும் நிறஞ்சிறந்தனவுமாகிய மலர்களால் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான பசியமரங்கள் அழகுவாய்ந்து நிற்றலினால் இனியன பலவும் நிரம்பிய காடாய்த்தோன்றும் பிறிது ஓரிடந், தான் முன் கடந்து போந்த முள்ளங்காட்டிற்குக் கரைவகுத்தாற்போல் இருக்கக் கண்டான். இனிமை வாய்ந்த அக்காட்டிடத்தை விட்டுப் புறப்பட்டு, அதனாற் சூழப்பட்ட திறந்த வெளியிற் புகுந்தபோது, தன் அருகே குதிரை வயவர் பலர் கடுகிச் செல்லக்கண்டு, அதன்பிற் சிறிதுநேரங் கழித்து நாய்க் கூட்டங் குலைக்கும் ஓசை கேட்டான். இதுகேட்டு முடிவதற்குட், பால் போலும் வெளியதொரு குதிரையுருவின் முதுகுமேல் ஓர் இளைஞன் அமர்ந்துகொண்டு, உரைக்கலாகாத விரைவுடன், தமக்கு முன் ஓடாநின்ற ஒரு முயலின் உருவினை வேட்டங்கொள்ளத் தொடரும் நூறு வேட்டை நாய்களின் ஆவிகளைப் பின்பற்றிப் பாய்ந்து செல்லக் கண்டான். அந்த வெள்ளைக் குதிரைமேற் போந்த இளைஞன் தன் மருங்கே அணுகியபோது அவனை நன்றாய் உற்றுப்பார்த்து, அவன்றன் அரும் பெருந் தன்மைகளை நினைந்து நினைந்து அமெரிக்க தேயத்து மேற்பகுதிகளில் உள்ளார் எல்லாரும் அப்போது எங்கும் புலம்புதற் கேதுவாய் அரையாண்டிற்குமுன் இறந்துபோன நிச்சராகவன் என்னும் அரசிளம் புதல்வனா யிருக்கக் கண்டான். இனி, அவன் அக்காட்டை விட்டு அகன்ற பின்னர்ப், பூக்கள் மிடைந்த வெளி நிலங்களையும், பசும் புன்னிலங் களையும், ஓடுகால்களையுங், கதிரவன் வெளிச்சம் படுங் குன்றுகளையும், நிழல்படர்ந்த பள்ளத் தாக்குகளையுங் கண்டு, தானறிந்த சொற்களா லாவது பிறர்க்குள்ள கருத்துக்களா லாவது அவற்றின் சிறப்பை விரித்துரைக்க லாகாதென எண்ணி உவப் பெய்தினான். இவ்வளவு இன்பமான இடத்தில் அளவி றந்த ஆவி உருக்கள் தத்தம் எண்ணஞ் சென்றவாறு தொகுதி தொகுதியாக விளையாட்டயர்தலுஞ் சிலம்பம் பழகுதலுஞ் செய்து உறைந்து வரலாயின. அவ் வாவிகளிற் சில ஓர் இருப்புச்சில்லை அங்கு மிங்குமாக எறிந்து கொண்டிருந்தன; வேறு சில ஒரு குறுந்தறியி னுருவத்தை ஊன்றிக் கொண்டிருந் தன; மற்றுஞ் சில ஒரு குதிரையி னுருவைப் பழக்கிக் கொண்டிருந்தன; இன்னும் பல இறந்துபோன கருவிகளின் (அமெரிக்க தேயத்து மக்கள் தாம் புழங்கிய கருவிகள் உடைந்தாயினும் எரிந்தாயினும் போனால் அவை இறந்தன வென்றே தங்கள் மொழியிற் சொல்லு கிறார்கள்) உருக்களைக் கொண்டு திறமை வாய்ந்த கைத் தொழில்கள் புரிவதிற் கூட்டங் கூட்டமாய்த் தலையிட்டிருந்தன. பெரு மகிழ்ச்சி பயப்பதான இக்காட்சியைக் கண்டு செல்கையில், மிகப் பல வகையான நிற வேறுபாட் டோடுஞ் செழிப்புற்றுத் தன்னைச் சுற்றி எங்கும் வளர்ந்து எழுந்துநிற்கும் நறுமலர்களில் பெரும்பாலன, தன் நாட்டிலுந் தான் எஞ்ஞான்றும் பாராதனவாயிருந்தமையால், அவற்றைப் பறிப்பதற்குத் தான் பலமுறையும் அவாவினான். ஆனாலோ, அவை காட்சிப் புலனாம் பொருள்களே யல்லாமல் தொட்டறி தற்கு இயலா வெறுந் தோற்றமேயெனச் சிறிது நேரத்துள் தெரிந்து கொண்டான். கடைசியாக அவன் ஒரு பெரிய யாற்றங் கரைப் பக்கத்தில் வந்து, தானே மீன்பிடித்தற் றொழிலில் வல்லவனாதலால், அங்கே தூண்டிற்கார னொருவன் பலதிறப்பட்ட பல அளவான மீன்களைப் பிடித்து இட, அவை அவனருகே மேலுங் கீழுமாய்த் துள்ளிக் கொண்டிருத்தலைப் பார்க்கும் பொருட்டுக் கரைமேற் சிறிதுநேரம் நின்றான். மராடன் என்னும் இந்த அமெரிக்கன் தன் றேயத்திலுள்ள மகளிரிற் பேரழகாற் சிறந்த ஒரு மங்கையை முன்னே மணந்தா னென்பதும், அளவாற் பல பிள்ளைகளைப் பெற்றானென்பதும் யான் முன்னமே குறித்திருக்கவேண்டும். இவ் விருவரும் மாறாக் காதற் கிழமையோடும், ஒருவர் ஒருவர்பாற் றிண்ணிதாகப் பிணிக்கப்பட்ட உள்ளத்தோடும் புகழ்பெற வாழ்ந்தமை பற்றி, அவன் தேயத்தார் வதுவை யயரும் மணமகன் மணமகளை வாழ்த்துங்கால், மராடனும் அறாத்தில்லை யும்போல் ஒருமித்து வாழக்கடவீர்கள் என்று இன்றுகாறும் வாழ்த் துரை பகர்வது வழக்கம். மராடன் மேற்கூறியவாறு அச்செம்ப டவன் பக்கத்திற் சிறிது நேரந்தான் நின்றிருப்பன்; அவ்வளவில், தன் மாறாக்காதலி அறாத்தில்லையி னுருவைக்கண்டு, அவளை அவன் இன்ன ளென்று தெரிந்து கொள்ளுதற்கு முன், அவன் மேல் அவள் தன் கண்ணைச் சிறிதுநேரம் பதிய வைத்துப் பார்த்தனள்; உடனே அவள் கைகள் அவனைத் தழுவுதற்கு நீண்டன. அவள் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகிவழிந்தது, அவள் பார்வையும் அவள் கைகளும் அவள் குரலும் அவனைத் தன்மாட்டு அழைத்தன; அவ்வியாறு கடக்கலாகா அருமைத் தென்று அதே நேரத்தில் தெரிப்பனவும் போன்றன. தன் அன்பிற்குரிய அறாத்தில்லையைக் கண்ட வளவானே அவ் வமெரிக்க னுள்ளத்தி லெழுந்த களிப்பு, துயர், காதல், விருப்பு, வியப்பு என்ற உணர்வின் றொகுதியை எவர்தாம் விளக்கி யுரைக்கவல்லார்? அவளைப் பார்த்த பொழுது அவன் தன் கன்னங்களில் யாறுபோல் ஒழுகி ஓடிய கண்ணீரா லன்றிப் பிறிதொரு வாற்றானும் அதனைத் தெரிந்துரைக்கமாட்டா னாயினான்; இந்த நிலையில் அவன் நெடுநேரம் நின்றிலன்; உடனே தன் எதிரே யிருந்த நீரோட் டத்திற் குதித்து வீழ்ந்தான்; வீழ்தலும், அஃதொரு யாற்றின் தோற்றமா யிருந்ததன்றி வேறல் லாமை கண்டு அதனடியில் நடந்து போய் மற்றைப் பக்கத்துக் கரைமேல் ஏறினான். அங்ஙனம் அவன் அணுகுதலும் அறாத்தில்லை அவனைப் பறந்துவந்து தழுவினாள்; தழுவவே, தானும் அவளைத் தழுவவிரும்பியும், அது கூடாவாறு தடை செய்த தனது பருவுடம்பின் பொறையினின்றும் விடுபடுதற்கு அவாவினான். ஒருவரை ஒருவர் பலகால் உசாவியும் அன்பு காட்டியும் அளவளாவிய பின்னர், அவள் மலர் மலிந்த அவ்விடத்திற் பெறப் படுவனவாகும் எல்லா ஒப்பனைகளும் பொருந்துமாறு தன் கையாற் சமைத்த ஒரு கொடிப்பந்தருக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவள் அதனை மனக் கற்பனைக்கும் எட்டாவண்ணம் மகிழ்வுறச் செய்து நாடோறும் புதிதுபுதிதாக ஏதேனும் ஒன்றை அதனொடு சேர்த்துக் கொண்டே வந்தாள். மராடன் அவளது அந்த உறையுளின் உரைக்கலாகா அழகினை வியந்து, அதன் எப்பக்கத்துமிருந்து வீசும் நறுமணத்தை நுகர்ந்து களிப்பால் மெய்ம்மறந்து நிற் கையில், அறாத்தில்லை அவனை நோக்கி: நீர் இறைவனிடத்து வைத்திருக்கும் மெய்யன்பும், மக்கள் எல்லாரிடத்தும் நீர் உண்மையாய் ஒழுகுமியல்பும் நுமது வாழ்நாள் எப்பொழுது முடியினும், நும்மை இவ்வின்ப உலகத்திற்குத் திண்ணமாய்க் கொணர்ந்து சேர்ப்பிக்கும் என்பதனை யான் நன்கு அறிவேனாதலால், நும்மை வரவேற்றற்பொருட்டு இக்கொடிப் பந்தரை அமைப்பே னாயினேன் என்று மொழிந்தாள். அதன்பின் அவள், சில ஆண்டுகளுக்குமுன் இறந்து போய் மகிழ்சிறந்த அப் பந்தரின்கீழ்த் தன்னோடு உடனுறைந்து வருகின்ற தன் மகார் இருவரை அவனிடங் கொணர்ந்து காட்டி, அவனோடு இன்னும் இருக்கும் ஏனைச் சிறுமகாரும் இவ் வின்பவுறையுளிற் பிற்காலத்து வந்து, தாம் எல்லாருமாய் ஒருங்கு கூடும் வகையாய் வளர்த்து வருகவென்றும் அறிவுரை கூறினாள். பிறகு, இறந்தபின் தீயோர் தமக்கு உறைவிடமான இருளுல கங்களையும், அவ் வமெரிக்க தேயத்துக் குடி மக்களிடத்துள்ள பொற்றிரளைக் கவரும் பொருட்டு அவர் தம்மிற் பல்லாயிர வகைக் கத்திக்கு இரையாக்கின நாகரிக மில்லாக் கொடிய ஐரோப்பியரின் உயிர்கள் அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பொன் னுருகு கடல்கள் பலவற்றையுங் கண்டனன் என்று அக் கதை மேலுஞ் சில கூறிச் செல்கின்றது. ஆயினும், அக் கதையின் முதன்மையான குறிப்புகளைத் தொட்டுக்காட்டி, இக் கட்டுரை யின் அளவைக் கடந்து சென்றோ மாகையால் இன்னுமிதனை விரித்துரையாது விடுகின்றோம். 5. முருகவேள் கனவிற் கண்ட ஓவியச்சாலை யான் வெளியே சென்று பொழுது போக்குதற்குப் பகற்கால நிலை என்னைத் தடைசெய்வதாயிருந்தால், எனக்கு உரிய நண்பரில் இரண்டொருவரைத் தெரிந்தழைத்துக் கொண்டு, ஒரு கட்டிடத்தினுட் புதுமையாய் வைக்கப் பட்டிருக்கும் பொருள்களைப் பார்க்கப் போவது வழக்கம். ஓவியங்கள் அல்லது சித்திரப் படங்களைக் காண்டலே எனக்கு முதன்மையான இன்பத்தைத் தருவதாகும்; பகற்பொழுதிற் கெட்ட ஊதைக் காற்று வீசத் துவங்கினால், நாள் முழுதும் நடந்து சென்றேனுங் கைதேர்ந்த சிறந்த ஓவியக்காரர் தங் கைகளால் தீட்டிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஓவியச்சாலை காணப்போவேன். வானிற் கரிய முகில்கள் நிறைந்து, நிலமெல்லாம் மழைப்பெருக்கில் நீந்துவது போற் றோன்றி, எங்கும் மப்பும் மங்கலுமாய்க் கருகிக் காணும் பொழுது, ஆறுதல் பயவா அத்தோற்றங்களைக் காணும் விருப்ப மற்று ஒழிந்து, ஓவியத் தொழிலால் தோற்றுவிக்கப் பட்ட கற்பனையுலகினை நோக்கச் செல்வேன்; அங்ஙனஞ் செல்வுழி, மகிழ்பயவாக் கார் காலத்தில் உண்டாகுந் துயர உணர்வைக் கலைத்து ஓட்டிக், களிப்பான நினைவு களால் உள்ளத்தை நிரப்பும் ஒளி துலங்கும் நிலக்காட்சி களையும், மினுக்கிட்டு விளங்கும் வெற்றித் தோற்றங்களையும், அழகிய முகங்களையும், பிறபொருள்களையும் அவ் வோவியச் சாலையிற் காண்பேன். சில கிழமைகளுக்கு முன் யான் இத்தகைய காட்சி களிலேயே அடுத்தடுத்து ஈடுபட்டிருந்தமையால் என் மனக் கற்பனை முழுதும் அவற்றின் வழிப்பட்டு நிற்க, இங்ஙனம் நின்ற நிலையில் ஒரு நாட் காலையில் யான் கண்ட ஒரு சிறு கனாவின் தோற்றத்தை முடியக் கூறாவிடினும், அதன் முதன்மையான குறிப்புகளை இதனைப் பயில்வார்க்கு அறிவிக்கப் புகுகின்றேன். இடமகன்று நீண்டதோர் ஓவியக் கூடத்தினுள் யான் நுழைந்ததாகக் கனவு கண்டேன்; அதன் ஒரு பக்கத்தில் உயிரோடிருக்கும் புகழ்பெற்ற ஓவியக்காரரால் எழுதப்பட்ட ஓவியங்கள் நிறைக்கப் பட்டிருந்தன; அதன் மற்றொரு பக்கத்தில் இறந்துபோன ஓவியப் பேராசிரியர் வரைந்த ஓவியங்கள் நிரல்பட வைக்கப் பட்டிருந்தன. உயிரோடிருப்பவர் பக்கத்திற் பலர் வரைதலும் வண்ணந் தீட்டுதலுங், கோலுதலுஞ் செய்து கொண்டிருப்பக் கண்டேன்; இறந்துபோன ஓவியக்காரர் பக்கத்தில், மிக மெதுவாய் வரைதலொடு நிரம்பவும் நேர்த்தியாய்த் தொட்டுத் திருத்திக் கொண்டிருந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அங்கு ஓவியத் தொழில் புரிவதை யான் காணக்கூடவில்லை. எனக்கெதிரே நின்ற ஓவியம் வல்லார் பலரையும் ஆராய் ந்து தெரிதற்குத் தீர்மானித்து, முதலில் உயிரோடிருப்பவர் பக்கத்துக்குத் திரும்பினேன். இவ்வோவியச் சாலையின் இப் பக்கத்தே யான் முதலிற் கண்ட ஓவியக்காரன் பெயர் தற் பெருமை என்பதாம்; இவன் தன் தலைமயிரைப் பின்னே ஒரு நூனாழியாற் பிணித்துப் பிரஞ்சு தேயத்து ஆடவனைப்போல் உடை உடுத்திருந்தான். ஆண், பெண் என்னும் வேறுபாடும் அகவை வேற்றுமையுங் கருதாமல், தான் வரைந்த முகங்கள் எல்லா வற்றிலும் புன்முறுவலும் ஒருவகையான நகைக்குறியும் மிகச் சிறந்து தோன்றுமாறு அமைத்தான். அவன் எழுதிய நடுநிலை யாளர், சமயகுரவர், சூழ்ச்சித் துணைவர் முகங்களிலுங் கூட எக்களிப்புத் தோன்றியது. சுருங்கச் சொல்லுங்கால் அவன் வரைந்த ஆண்பால ரெல்லாம் வீண்பிலுக்கு உடையராயும், பெண் பாலரெல்லாம் வீண் பசப்புக்காரிகளாயுங் காணப் பட்டனர். அவனுடைய உருக்களின் மேல் இட்டிருந்த தொங்கல் ஆடைகள் அந்த முகங்களுக்குப் பெரிதும் ஏற்றனவாகவே யிருந்தன; அத் தொங்கல்கள் பகட்டான வண்ணங்கள் எல்லாம் ஒருங்கு குழைத்து எழுதப்பட்டனவா யிருந்தன; அவ் வாடை களின் ஒவ்வொரு பகுதியும் அங்குமிங்குமாய் அலைந்து ஏனைய வற்றினுந் தம்மையே சிறந்தெடுத்துக் காட்ட முயன்றன. தற்பெருமை என்பவனுக்கு இடதுகைப்பக்கத்தே பேருழைப்பாளி யான ஓவிய வேலைக்காரன் ஒருவன் நின்றுகொண்டு, அவனைப் பெரிதும் வியப்போனாய் அவன் எழுதியவற்றைப் பார்த்துப் படி எழுதக் கண்டேன். இவன் கேட்பதற்குக் கடுமையான மடையன் என்னும் பெயரு டையனாய் யர்மன் தேயத்தானைப் போல் உடை பூண்டிருந்தான். அதன்பின் யான் கண்ட மூன்றாம் ஓவியக்காரன் பெயர் வீண் எண்ணம் என்பதாம். இவன் வெனிசு தேயத்துக் கோமாளிபோல் உடையிட்டிருந்தான். இவன் வீண் கற்பனை செய் தெழுதுதலிற் கைதேர்ந்த வனாயிருந்ததனால் முகநெளிவு சுளிவுகளையே மிகுதியும் வரைந்திட்டான். தனது துகிலிகையாற் றான் எழுதிய மாய உருக்களைக் கண்டு தானே சில நேரங்களில் அவன் வெருக்கொள்ளுதலும் உண்டு. சுருங்கச் சொல்லு மிடத்து, அவன் வரைந்தவற்றுள் மிக விரித்தெழுதப் பட்ட ஓவியமானது அச்சமுறுத்துகின்ற ஒரு கனவின் றோற்றமேயாம்: இவன் மிக நேர்த்தியாய் வரைந்திட்ட உருக்களும் மனத்திற்கேற்ற கொடிய வடிவங்களே யல்லாமல் வேறு மேலாகச் சொல்லக் கூடியனவா யில்லை என்க. அதன்பின் யான் தெரிந்தா ராய்ந்த நான்காம் ஓவியக் காரன் மிகவும் விரைவாய் எழுதுவதிற் பெயர் பெற்றிருந்தமை யால், அவன் பின்வருவார்க்கு நினைவுக்குறியாய் வைத்தற் பொருட்டுக் கோலிய ஓவியத்தின் உருவழகானது அவ் வுருவுக்கு முதலாய் நின்றோனது அழகு நிற்கும் நாளளவுகூட நில்லாது விரைந்து மங்கும் வகையாய், முற்றும் எழுதி முடியாமல் விடப்பட்டது. தனது துகிலிகையைத் துப்புரவு செய்தற் கேனும், வண்ணங்களைக் கலந்து குழைத்தற்கேனுங் காலம் பெறாதவாறு தானெடுத்த வேலையை முடித்திட அவன் அவ்வளவு துடிதுடித் தான். அத் துடிதுடிப்புக்காரன் பெயர் பேரவா என்பதாம். இவனுக்கு அருகாமையில், இவனொடு முற்றும் வேறு பட்ட இயல்புடையவனும், உலாந்தாக்காரன் போல் உடை யணிந்தவனும், உழைப்பு என்னும் பெயருடையவனுமான மற்றோர் ஓவியக்காரனும் இருத்தலைக் கண்டேன். இவனுடைய உருக்கள் வியக்கற்பாலதாம் உழைப்போடும் அமைக்கப் பட்டிருந்தன. இவன் ஓர் ஆண்மகனுருவை எழுதினால் அவன், முகத்திலுள்ள ஒரு மயிரையேனும் எழுதாமல் விடான்; ஒரு மரக்கலத்தின் உருவைத் தீட்டினாற் பாய்மரக்கயிற்றுள் ஒன்றாயினும் இவனைத் தப்பிப்போனவாறில்லை. அவ்வாறே இவன் சுவரிற் பெரும்பாகம் எங்குந் தொங்கவிட்டிருந்த இராக்கால ஓவியங் களிற் பலவிடத்துங் கொளுத்தி வைக்கப் பட்டிருந்த மெழுகுதிரிகளால் அவ்வோவியங்கள் தாமே தம்மைக் காட்டுவனபோற் றோன்றின; இம் மெழுகுதிரிகளின் மேற் பகலவன் வெளிச்சஞ் சடுதியில் விழாநிற்ப, நான் அதனை முதன் முதற் காண்டலும் நெருப்பு என்று கத்தும்படி அவை அத்துணை ஒளி விரிந்து துலங்கின. இங்ஙனம் மேலெடுத்துக் கூறப்பட்ட ஓவியக்காரர் ஐவரும் இவ் வோவியச்சாலையின் இப்பக்கத்தே பெரிதும் உன்னிக் கற் பாலரா யிருந்தனர்; இன்னும் வேறு பலர் ஆங்கிருந்தனரேனும் அவரை உற்றுப் பார்க்க எனக்குப் பொழுது இலதாயிற்று. என்றாலுந் தானே தன்னறிவு கொண்டு ஏதும் எழுதா தொழியினும், மிக நேர்த்தியாய் முடித்த ஓவியங்களை மிகு முயற்சியோடு தொட்டுத் திருத்திக் கொண்டிருந்த ஒருவனை அங்கு யான் பாராமலி ருக்கக்கூடவில்லை. அவனது எழுது கோலானது முன்னமே நிறம் மிகுத்து வைத்தெழுதப்பட்ட முகத்தின் ஒவ்வோர் இயலையும் மேலும் மிகுதிசெய்து கெடுப்பதாயிற்று; ஒவ்வொரு குறையினையும் மேலுங் குறைத்துக் குறைவு படுப்பதாயிற்று; அது தான் தொட்ட ஒவ்வொரு நிறத்தினையுங் கெடுத்து நஞ்சாக்குவதுமாயிற்று. உயிரோடிருப்பவர் பக்கத்தில் இவ் வேலைக்காரன் இவ்வளவு தீச்செயல் புரிந்தனனாயினும், இறந்தோர் பக்கத்தில் இவன் தன் கண்களைத் திருப்பியதே யில்லை. இவன் பெயர் அழுக்காறு எனப்படுவதாம். இங்ஙனம் இவ் வோவியச்சாலையின் ஒரு பக்கத்தைப் பரும்படி யாய் விரைந்து நோக்கியபின், இறந்து போன ஓவியப் பேராசிரியர் வரைந்த ஓவியங்கள் நிறைக்கப்பட்ட மற்றொரு பக்கத்திற்குத் திரும்பினேன். திரும்புதலும், உடனே, என்னைப் பார்ப்பவர் குழுவினெ திரே யான் நிற்பதாகவும், ஆயிரக் கணக்கான கண்கள் என்னை உற்று நோக்குவனவாகவும் எண்ணி னேன்; ஏனெனில், என்னெதிரிற் றோன்றியவை யெல்லாம் ஆண்கள் போலவும் பெண்கள் போலவும் அங்ஙனம் உண்மை யாய்த் தோன்றவே, அவை ஓவியங்களென்பதை ஏறக்குறைய மறந்தே போனேன். இரவேல் என்பார் வரிந்த உருக்கள் ஒரு வரிசையாய் நின்றன; திஷன் என்பார் வரைந்தன மற்றொரு பக்கத்து நின்றன. குவிடோரேனி என்பார் தீட்டியவை பிறிதொருசார் நின்றன. அச் சுவரின் ஒருபுறத்தில் ஆனிபல் கராச்சி என்பவர் எழுதியனவும் வேறொரு புறத்திற் கோரெடுசோ என்பவர் வரிந்தனவும், மற்றுமொரு புறத்தில் உரூவன் என்பவர் வரைந்தனவும், நிறைந்திருந்தன. சுருங்கச் கூறுமளவில், இவ் வோவியச்சாலையின் இப்பக்கத்தை ஒப்பனை செய்தற்கு வேண்டுவன செய்யாது இறந்தொழிந்த ஓவியப் பேராசிரியர் அங்கு ஒருவருமேயிலர். இவ்வாசிரியர் பலரின் உதவியால் நிலை பேறுற்றுத் தோன்றிய மக்கள் அனைவரும் உயிரோடிருப் பது போல் உண்மையாய் விளங்கினர்; அவர்கள் தங்கள் வடிவத் திலும், நிறத்திலும், உடையிலும் மட்டுந் தம்மிலொருவர் ஒருவரின் வேறாக வேற்றுமைப் பட்டனர்; இவ்வாற்றால் இவர்கள் ஒரு வகுப்பினுள்ளே பலதிறப்பட்ட மக்கட் டொகுப்பினர் போற் காணப்படுவாராயினர் என்க. இனி, ஓர் ஓவியத்தினின்று மற்று ஓர் ஓவியத்திற்குப் போதலும் வருதலுமாய், எனக்கெதிரே நின்ற மிகவும் நேர்த்தி யான எல்லா ஒவியங்களையுந் தொட்டுத் திருத்திக் கொண் டிருந்த முதியோன் (ஓவியச்சாலையின் இந்தப் பக்கத்தில் ஒவியவேலை செய்து கொண்டிருந்தவன் என்று யான் முன்னரே கூறிய ஒரே ஓர் ஓவியக்காரன் இவன்தான்) ஒருவனைப் பார்த் தும், அவன் தொழில் முழுமையும் யான் நன்றாய் உன்னியாம லிருக்கக்கூடவில்லை; அவன் கையிற் பற்றியிருந்த துகிலிகை மிகவுத் நொய்தா யிருந்தமையால் அஃதெழுது வதாகவே புலனாகவில்லை; ஆயிரமுறை தொட்டுத் திருத்தியும், அவன் முயன்று கொண்டிருந்த ஓவியத்தின் கண் அது புலப்படத் தோற்றுவித்த தொன்று மில்லை. என்றாலும், அவன் ஓவாது முயன்று கொண்டிருந்த தனாலும், இளைப்பாறு தலுமின்றி இடையறாது திரும்பத் திரும்பத் திருத்திக் கொண்டே யிருந்த தனாலும் ஓர் உருவின்மேற் படிந்த இணக்கமில்லாச் சிறு மினு மினுப்பு ஒவ்வொன்றனையும் புலனாகாதவாறு துடைத்துத் தூய்தாக்கினான். இன்னும், அவன் நிழலோட்டங்களுக்கு அழகிய பழுப்புநிறம் ஊட்டியதனாலும், வண்ணங்களை ஆற்றி முதிரச் செய்ததனாலும் ஒவ்வோர் ஓவியமுந் தம்மை வரைந்த ஆசிரியர் துகிலிகையினின்று புதிதாய் வந்தக்கால் இருந்ததைக் காட்டினும் நிறைவு மிக்கு விளங்கித் தோன்றின. இங்ஙனமிருந்த இந்தப் பழைய ஓவியன் முகத்தை யான் பாராது போகக் கூடா மையால், உடனே அவனை உற்று நோக்கி அவன் முன்நெற்றியிற் றொங்கிய நீண்ட குஞ்சியினால் அவனைக் காலம் என்று தெரியலானேன். இங்ஙனங் கண்ட எனது கனவின் றொடர்பு முடிந்தத னாலோ பிறிதாலோ இன்னதென்று யான் சொல்லக் கூட வில்லை. மனத்தின் கற்பனையாய்த் தோன்றிய இம் முதியோனை யான் நெடுகப் பார்வையிட்ட பின் என்னை வந்து சூழ்ந்த இவ் வுறக்கம் என்னை விட்டு அகன்றது. 6. பேய்களும் ஆவிகளும் அழகர் மலைக்குப் பக்கத்திலே இடிந்து பாழாய்க் கிடக்குங் கோட்டை நடுவில் ஆண்டு முதிர்ந்த சிலபல மரங்கள் நிற்கின்றன. அவை மிக உயர்ந்து வளர்ந்திருத்தலினால் அவற்றின் உச்சியில் அமர்ந்திருக்குங் காக்கையுங் அண்டங் காக்கையுங் கரைவது வேறெந்த விடத்திலிருந்தோ கரைதல் போல் அவற்றின்கீழ் வழி நடந்து செல்வார்க்குக் கேட்கும். இவ் வகையான ஒலியைக் கேட்கும்போது, தன்னாற் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் வேண்டுவன வெல்லாந் தந்து உதவுவோனுந் திருவாசகச் செழுந் திருமுறையிற் சொல்லப்பட்ட வண்ணந் தன்னைக் கூவி அழைத்த கருங்குருவிக்கும் அருள் புரிந்தோனு மான அப் பெருமானைக் குறித்தழைக்கும் ஒருவகையான இயற்கை மந்திரவொலியே யென்று யான் அதனை நினைந்து மிக மகிழ்வது வழக்கம். பேய் பிடித்த இடம் என்று இதற்கு ஒரு கெட்டபெயர் வந்தமையால், கோயிற் குருக்களை யன்றி வேறு யாரும் இயங்குதலில்லாத இவ்விடத்தை ஏனையவற்றிலும் மிகுதியாய் விரும்புகின்றேன். (சுற்றுப்பக்கத்தூராற் சொல்லப் பட்டபடி) மேற்கூறிய ஏதுவினாலேயே கோயிற் குருக்கள் மாரும் இறைவனைத் தொழச் செல்வாருங்கூட அங்கு மாலைப் பொழுது தோன்றுதலும் அவ்விடத்திராமற் புறம்பே போய் விடுகின்றனர். இதனால் அவ்வழகர் மலைப் பக்கத்தில் எவருமே தங்குவ தில்லை. இது பற்றி என் நண்பர் ஒருவர், ஞாயிறு மறைந்தபின் என்னை அவ்விடத்திற்குத் துணிந்து போக வேண்டாம் என்ற மிகவுந் குழைந்த முகத்தொடு தடுத்து, ஓர் ஏவற்காரன், தலையில்லாத கருங்குதிரை வடிவாய்த் தன் னெதிரே வந்த ஓர் ஆவியாற் கிட்டத்தட்டத் தன்னறிவை இழக்கும்படி அச்சுறுத்தப்பட்டான் என்றும், ஒரு திங்களுக்கு முன் பாற்குடம் ஒன்றனைத் தலைமேற் சுமந்து கொண்டு தன் வீட்டுக்குப் போக அவ்வழியாய்ப் பொழுது சென்று வந்த பணிப்பெண் ஒருத்தி அங்கிருந்த குற்றுச் செடிகளின் இடை யிலே சரசரவென்ற ஓசை கேட்டு அக் குடத்தைக் கீழே வீழ்த்தி விட்டாள் என்றுங் கூறி வற்புறுத்தினார். இரண்டோர் ஆண்டுகளுக்கு முன் ஒருநாளிரவு ஒன்பதிலி ருந்து பத்துமணி வரையில் யான் இவ்விடத்தே சென்று உலாவிக் கொண்டிருந்தேன்; அப்போது யான் அவ்விடத்தின் நிலைமை யைக் கண்டு, பேய் தோன்றுதற்கு மிகவும் ஏற்றதோர் இடம் உலகத்தில் இதுவேயாகும் என்று எண்ணலானேன். அக்கோட் டையின் இடிந்த தளவாடங்கள் அங்கு எல்லாப் பக்கத்துங் கீழும் மேலுமாய்ச் சிதறிக் கிடந்தன; அவற்றின்மேல் அரைப்பாகஞ் சீந்திற்கொடி படர்ந்து வெள்ளெருக்கு முளைத்திருந்தன; மசங்கல் மாலையிலன்றிப் புறத்தே போதராப் பல்வகைத் தனிப் பறவைகளும் அங்கே குடியாய் வைகின; இடிந்து பாழாய்க் கிடக் கும் பழங் கட்டிடங்களிலும், மேல்முகடு வளைந்த அவற்றின் மண்டபங் களிலும், எப்போதும் நடப்பதற்குமேற் சிறிது உரக்க அடிவைத்து நடந்து வந்தால் உடனே எதிரொலி தோன்றா நிற்கின்றது. அதே நேரத்தில் ஆலமர அரசமரங்கள் நிற்கும் வழியிற் சென்றால் அம் மரங்களின் உச்சியிலிருக்கும் அண்டங் காக்கை இடையிடையே கூவ அவ்விடம் ஓவென அமைதி யுற்றுப் பாராட்டப்படத் தக்கதாய்த் தோன்றும். இப்பொருள் களின் தோற்றமானது மன அமைதியினையும் ஆழ்ந்த கருத்தி னையும் இயற்கையாகவே விளைவிக்கின்றது; இவற்றோடு இராக்காலமுஞ் சேர்ந்து இவ்விடத்தின் வெருட்சியினை மிகுதிப்படுத்தி, அங்குள்ள ஒவ்வொரு பொருளிலும் இன்னும் அளவிறந்த திகிலினைத் தோற்றுவிக்குமானால், மனவலிமை அற்றவர்கள் அவ்விடத்திற் பேய்களையும் ஆவிகளையும் நிறைத்து விடுதல் பற்றி யான் சிறிதும் வியப்படைகின்றிலேன். இலாகவர் என்னும் அறிவுநூற் புலவர் நினைவுகளின் கூட்டுறவைப் பற்றித் தாம் எழுதிய இயலில் மிகப் புதியவான அறிவுரைகள் சில காட்டப் புகுந்து, அடுத்தடுத்து நேருஞ் சொற்பயிற்சியா லுண்டாகுந் தப்பெண்ணத்தின் பயனாய் ஒரு நினைவானது, இயற்கையிலே ஒன்றோடொன்று ஒவ்வாத பல நினைவுகளை உள்ளத்தின்கட் பலகா லுங் கொணர்ந்து ஒரு தொடர்பாய்த் தோற்றுவிக்கின்ற தென்கின்றார். இதற்கு அவர் எடுத்துக்காட்டிய பலவற்றுட் பின்வருவதும் ஒன்று: கூளி பேய் என்ற நினைவுகள் எங்ஙனம் வெளிச்சத்தோடு ஏதொரு தொடர்பும் இல்லாதனவாயிருக்கின்றனவோ, அங்ஙனமே இருளோடுந் தொடர்புடை யனவாய் இருக்கின்றில; என்றாலும், ஒரு பேதைப் பெண் ஒரு சிறு பிள்ளையின் உள்ளத்தில் அவற்றை அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி அங்கு அவைதம்மை ஒருங்கே எழுப்புவளாயின், பின் அப்பிள்ளை பெரியவனாய்த் தான் உயிரோடிருக்கு மட்டும் திரும்ப அவையிற்றை வேறுவேறாகப் பிரிக்க எஞ்ஞான்றும் வலியற்ற வனாவான்; பிறகு இருள் தான் தோன்றும்போதெல்லாம் நடுங்கச் செய்யும் இந்நினைவு களையும் உடன்கொண்டு வரும்; அவைகள் அங்ஙனம் பிரிப்பின்றித் தோன்று தலால் அவன் அவற்றுள் ஒன்றை விலக்கி மற்றொன்றைத் தாங்கமாட்டு வானல்லன், என்பதாம். மாலைக் காலத்து மங்கற் பொழுதானது அச்சத்தை விளைவித்தற்கேதுவான பல நிகழ்ச்சிகளோடுங் கூடித் தோன் றும் இத் தனியிடத்தில் யான் உலாவிக் கொண்டிருக் கையில், எனக்குச் சிறிது சேய்மையில் ஓர் ஆ புல் மேய்ந்து கொண்டிருக் கக் கண்டேன்; அதனைப் பார்த்தவுடன் திடுக்கிடுதற்கு இசை வான உள்ளப்பாங்கு உடையானுக்கு அஃதொரு தலையற்ற கருங்குதிரையாய்த் தோன்றுவது எளிதேயாம். அந்த ஏழை ஏவற்காரன் இத்தகைய சில புல்லிய தோற்றங்களைக் கண்டு அறிவிழந்து போனானென்றே யான் துணிவாய்ச் சொல்ல மாட்டுவேன். என் நண்பர் மற்றொருவர் தாந் தமது காணியாட்சிக்கு முதன்முதல் உரிமையாளராய் வந்தபின், தமது வீட்டில் முக்காற்பங்கு முற்றும் பயன்படாதிருக்கக் கண்டாரென்றும், அதில் மிகச் சிறந்த ஓர் அறை பேய் குடிகொண்டதெனப் பெயர் பெற்றதனாற் பூட்டிடப்பட்ட தென்றும், அதனது நீண்ட நடை யிற் கூக்குரலோசை கேட்பதனால் ஏவற்காரர் ஒருவரையும் அங்கு இரவில் எட்டுமணிக்குமேல் நுழைவிக்கக் கூட வில்லை என்றும், அதில் முன் சமையல் வேலை மேற்பார்ப்பவன் ஒருவன் தான் தூக்கிட்டுக்கொண்டு இறந்துபோனதாகத் தங் குடும்பத் தார்க்குள் ஒரு கதை வழங்கிவந்தமையால் தம்முடைய அறை களுள் ஒன்றன் கதவுகள் ஆணியால் தறையப்பட்டிருந்தன என்றும், நெடுங்காலம் உயிரோடிருந்த தம் அன்னையார் தங் கணவனும், ஒரு மகனும், ஒரு மகளும் இறந்துபோன அறைகளை அரைவாசி அடைத்து விட்டனர் என்றும் மிகுந்த நகைப்போடும் எனக்குப் பன்முறை சொல்லியிருக்கின்றனர். இந் நண்பர் தமது உறைவிடம் அத்துணைச் சிற்றளவினதாகக் குறுக்கப் பட்டதனையுந், தமக்குரிய வீட்டினின்றும் தாமும் புறம் படுத்தப்பட்ட தனையுங் கண்டு, தம் அன்னையார் உயிர் துறந்தவுடனே எல்லா அறைகளையும் பரக்கத் திறந்து விடும்படி கட்டளையிட்டுத், தங் குருக்கள்மாரை ஒருவர்பின் ஒருவராய் அவ் வறைகள் ஒவ் வொன்றிலும் படுக்க வைத்திருந்து பேயோட்டுவித்து, இவ் வாற்றால் தம் குடும்பத்தார்க்குள் நெடுநாள் அரசுவீற்றிருந்த அச்சம் அனைத்தையுங் கலைத்து ஓட்டினார். இத்தேயம் எங்கணும் நிரம்பப் பரவியிருத்தலை யான் காணாவிட்டாற் பகடி பண்ணத்தக்க இவ் வச்சத்தைச் சுட்டி இங்ஙனம் ஏதுஞ் சொல்லி யிருக்கமாட்டேன். ஆனாற், பழை யரும் புதியருங் கடவுள்நேயம் உடையரும் உடையரல்லா ருமான வரலாற்று நூலாசிரியர் எல்லாருந் தெரிப்பன வற்றோடும், எல்லாத் தேயத்தாருந் தொன்று தொட்டு வழங்கிவரும் வரலாறுகளோடும் மாறுகொண்டு பேய்களின் தோற்றத்தைப் பொய்க்கட்டென்றும் அடிப்படை அற்ற தென்றுங் கூறு வாரைக் காட்டினும், பேய்களையும் ஆவிகளையும் பற்றி எழூஉம் மனக்கற்பனையால் அச்சுறுத்தப் படுகின்றவர்கள் மிக்க அறிவுடையராவரென யான் எண்ணு கின்றேன். மன்பதைகள் கூறும் இப்பொதுச் சான்றுரைக்குயான் இணங்கக் கூடா தாயினும், இப்போது உயிரோடிருப்பவரும் பிற உண்மை நிகழ்ச்சிகளில் யான் நம்பாம லிருத்தற்கு இடம் பெறாதவருமான குறிப்பாளிகள் உரைப்பனவற்றிற்கு யான் இணங்க வேண்டிய வனாயிருக்கின்றேன். இன்னும் வரலாற்று நூலாசிரியர்கள் மட்டுமே யன்றிச் செந்நாப் புலவர்களும் பண்டைக் காலத்து அறிவு நூலாசிரியர்களும் இக்கருத்தில் உடன்பாடு உடைய வராக இருக்கின்றனர். உலுக்கிரீசியர் என்பாருந் தாம் எழுதிக் கொண்டுபோம் அறிவாராய்ச்சியின் போக்கால் உடம்பினை விட்டு வேறாய் உயிர் நிற்க வில்லையென நிறுத்தல் வேண்டினா ராயினும், மெய்யாகவே பேய்களுண் டென்பதிலும், மக்கள் தாம் இறந்தபின் பலகால் தோன்றி யிருக்கின்றனர் என்பதிலும் ஐயமறச் சொல்லியிருக்கின்றார்; இது மிகவும் பாராட்டற் பாலதென யான் கருதுகின்றேன். அவர் தம்மால் மறுத்துக் கூறுதற் கேலாவாறு கிடந்த அவ்வுண்மையை வேறொரு வகையால் விளக்கி யுரைக்கும் படி நெருக்கப் படுவாராயினர்; அடுக்கடுக்காய் நின்ற உடம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது பறந்து போகின்றன வென்றும், ஒன்றினொன்று நுண்ணியவான இவ் வுடம்புகள் கட்புலனாகும் இப் பருவுடம் புக்குட் கட்டுப்பட்டிருக்குங்காறும் வெங்காயச் சருகு போல் ஒன்றினுள் ஒன்றாய் அடங்கியிருக்கின்றன வென்றும், அவை இதனினின்றும் பிரிந்த பின்னர்ச் சில நேரங்களில் முழுமை யாய்க் காணப்படுகின்றன வென்றும், இவ் வேதுவினாலேயே எதிரே யில்லாத அல்லது இறந்துபோன மாந்தரின் சாயலும் உருவும் நாம் பலகாற் காணும்படி தோன்றுகின்றன வென்றும் அவர் நம்மை நோக்கிக் கூறியிருக்கின்றார். இனி, இந்தக் கட்டுரையைப் பிறிதொரு கதைப் புத்தகத் திலிருந்து ஈண்டு எடுத்துச் சொல்லப்படும் ஒரு சிறுகதையால் முடித்து விடுகின்றேன். அக் கதையை இங்கெடுத்து உரைப்பது கதைக்காகவன்றி, அதன் ஆசிரியன் அதன்கட் பொதிந்துவைத்த நன்னெறிக் குறிப்புகளோடு வைத்து அதனை முடித்துக் காட்டு தல் பற்றியேயாம்; அதனை அவர் தஞ்சொற்களினாலேயே ஈண்டு வரைகின்றேன்: அருக்கன் என்னும் அரசன் புதல்வியான கிளிமொழி என்பாள் தான் முதல் இரண்டுமுறை மணஞ் செய்துகொண்ட இரண்டு கணவரும் இறந்த பின்றை மூன்றாம் முறையும் ஒருவனை மணந்துகொண்டாள். இம் மூன்றாங் கணவன் இவளின் முதற்கணவனுக்குத் தம்பியாவான்; இவன் இவள் மீது அளவுகடந்த விழைவு கொண்டதனால், இவளை வதுவை யயர்தற் பொருட்டுத் தன் முதன் மனைவியையுந் துரத்தி விட்டான். அதுநிற்க, அக் கிளிமொழி மிகவும் புதுமையான தொரு கனாக் கண்டாள். தன் முதற் கணவன் தன்னை நோக்கி வருவதாகவும், அவனைத் தான் மிக்க உருக்கத்தோடுந் தழுவிக் கொள்வதாகவும் அவள் எண்ணினாள். அவனைக் காண்டலும் அவள் எய்திய இன்பத்தினிடையில், அவள் கணவன் அவளைப் பின்வருமாறு கடிந்து கூறுவானாயினன்; கிளிமொழியே, பெண்மக்கள் நம்பற்பால ரல்லர் என்னும் முது மொழியை நீ உண்மையாக்கினையே பார்! நினது குமரிப் பருவத்தில் நின்னை மணம்புரிந்துகொண்ட கணவன் யான் அல்லேனோ! நின்னால் யான் மக்களைப் பெற்றேன் அல்லேனோ! இரண்டாம் முறை ஒரு மணமும், அதன் பின், வெட்கமின்றித் தன் றமையன் படுக்கையிற் களவாய் நுழைந்த ஒருவனை நின் கணவனாகக் கொண்டு மூன்றாம் முறை ஒரு மணமுஞ் செய்துகொள்ளும் வண்ணம் அவ்வளவுக்கு நீ நமது காதலை எங்ஙனம் மறந்திடக் கூடும்? என்றாலும், நமது பழைய காதலின் றிறத்தை நாடி, இப் பழியினின்றும் உன்னை விடுவித்து, உன்னை என்றும் எமக்கே உரியளாக்கிக் கொள்கின்றேன். கிளிமொழி இக் கனவைத் தனக்குப் பழக்கமான மகளிர் பலர்க்கும் உரைத்துப், பின் விரை வில் இறந்துபோனாள். இக்கதை இவ்விடத்திற்கு ஒவ்வாதது அன்றென எண்ணினேன்; அஃதன்றியும், உயிர்கள் என்று முள்ளனவா மென்பதூஉம், இறைவன் யாவும் முன்னுணர்ந்து நடத்துபவனாமென்பதூஉந் திண்ணமாய் மெய்ப்படுத்திக் காட்டுதற்குரிய சான்றுகள் அடங்கப் பெற்றிருத்தலால் அக்கதை ஈண்டு உற்று நோக்கற்பாலதேயாம். யாரேனும் இங் குரைத்தன நம்பற்பாலன வல்லவென்று கருதுவராயின் அவர் தமது கருத்தைத் தம்மளவே வைத்து மகிழ்க. இத்தன்மையவான நிகழ்ச்சிகளைத் தெரிதலால் நல்லொழுக்கத்திற் பயில மன வெழுச்சி தோன்றப்பெறுவாரது நம்பகத்தைச் சிதைத்தற்கு அவர் முயலாதிருக்கக் கடவராக. விளக்க உரைக் குறிப்புகள் - ஜோசப் அடிசன் சிந்தனைக் கட்டுரைகள் என்னும் இந்நூலில் அடங்கிய ஆறு கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதிய நல்லிசைப் புலவராகிய ஜோசப் அடிசன் (Joseph Addison) கி.பி. 1672 ஆம் ஆண்டு மேத்திங்கள் முதல் நாளில், இங்கிலாந்து தேயத்துத் தென் பகுதியில் உள்ள உவில்ட் மாகாணத்தில் (Wilt Shire) மில்டன் (Milston) என்னும் ஊரிற் பிறந்தவர். இவர்தந் தந்தையாராகிய லான்லட் அடிசன் (Lancelot Addison) ஒரு கிறித்து சமயகுரு. ஜோசப் அடிசன் இளமைப்பொழுதிலே நாட்டுப் புறத்துப் பள்ளிக்கூடங்களிற் கல்வி பயிற்றப்பட்டுத் தமது பதினைந்தாம் ஆண்டில் ஆக்பர்ட் (Oxford) நகரத்தில் உள்ள அரசியின் கல்லூரியிற் (Queen’s College) பெருங் கல்வி பயிலப் புகுந்தார். கி.பி. 1693 இல், அக் கல்விப் பயிற்சியில் தேர்ச்சிப்பெற்றுப் பெரும் புலமைக்கு அறிகுறியான பட்டமும் பெற்றார். ஆங்கில மொழியின் மட்டுமேயன்றி இலத்தீன் மொழியிலும் இவர் துறைபோகக் கற்றவர். கல்விப் பயிற்சியில் மிக்க விழைவுள்ளவர். இவர் இயற்கையிலேயே கூச்சம் வாய்ந்தவராயும், வாய் பேசாதவராயும், எந்நேரமும் எதனையும் ஆழ்ந்து எண்ணிப்பார்க்கும் உள்ளம் உடையவராயும் இருந் தனர். இவர் கி.பி. 1697 இல், மாக்டலன் கல்லூரிப் புலவர் கூட்டத் தில் ஒருவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். அக்காலத்திற் பெரிய ஓர் ஆங்கிலப் பாவலராய் விளங்கிய டிரைடன் (Dryden) என்பவரோடு இவர் பழகலானார். அரசியற் பிரிவினரில் உவிக் பக்கத்தவரோடு (Whig party) இவர் சேர்ந்துகொண்டதிலிருந்து, அப்பக்கத்தவர்க்குத் தலைவரான சார்ல மாண்டேகு (Charles Montague) என்பவர் கற்றார்க்கு உதவிபுரியுந் தன்மையுடையராகையால், அவரது கருத்தை இவர் தம்மாட்டு ஈர்ப்பவராயினர். அச்செல்வர், இவர் பல நாடுகளுஞ் சென்று காணும் வழிச்செலவிற்கு உதவியாம் பொருட்டு ஆண்டு ஒன்றிற்கு முந்நூறு பவுன் அல்லது மூவாயிர ரூபா நன் கொடையாக அளித்து வந்தனர். கல்வியிற் றேர்ந்த இளைய அடிசன் பலநாடுகளுஞ் சென்று ஆங்காங்கு நடைபெறும் அரசியல் முறைகளையும், அங்கங்குள்ள வெவ்வேறு மக்கட் பிரிவினரின் பழக்க வழக்கங்களையும் உணரப்பெறுதலால் தமது பக்கத்தவர் வலுவெய்துதற்கு வழியுண்டாமென்பது அச் செல் வரின் நோக்கமாகும். அடிசனும் அந் நன்கொடைப் பொருளைக் கொண்டு, பிராஞ்சு, சுவிட்ஸர்லாண்டு, இட்டலி, ஜெர்மனி முதலான பல தேயங்கட்குஞ் சென்று, வாழ்க்கையின் இயல்பு களையும் அறிவு வகைகளையுந் தேர்ந்து புத்தப்புதிய ஓர் அறிவுக் களஞ்சியந் தொகுத்தார். இக்களஞ்சியத்தில் இவ்வாறு தொகுத்துவைத்த அரும்பெரும் பொருள்களையே பின்னர்த் தாம் எழுதிய பாட்டிலும் உரையிலுஞ் செலவிட்டார். மூன்றாம் உவில்லியம் என்னும் அரசர் இறந்து போன வுடன், அடிசன் என்னும் நம்புலவர் பெருந்தகையார்க்கு வழிச் செலவுக்கென்று அளிக்கப்பட்டுவந்த நன்கொடைப் பொருள் நிறுத்தப்பட்டுப் போயிற்று. அதன்மேல் அவர் கீழ்நாடுகளினின் றுந் திரும்பி, 1703 செப்டம்பரில், தமது தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். அப்போதிருந்த அமைச்சர் குழாம், ப்ளென்கீம் என்னும் இடத்தில் ஆகடு, 1074 இல் தாம் அடைந்த பெரு வென்றியைச் சிறப்பித்துப்பாட விழைந்து, அது செய்யவல்லார் ஒருவரை நாடுகையில், மேற்குறித்த மாண்டேகு என்னுஞ் செல்வர் அடிசனே அது செய்தற்குத் தக்கார் என்று காட்டினார். உடனே தம்பால் வந்து தம்மை வேண்டிய அவரது வேண்டுகோளுக்கு இயைந்து இவர் பாடிய பாசறையிருப்பு (Campaign) என்னும் பாட்டு வெளிவந்தது. இப்பாட்டு மிகச் சிறந்தவல்லாவிடினும், டிரைடன் (Dryden) என்னும் பாவலர் இறந்துபட்டு வேறு நல்லிசைச் செய்யுள் இயற்றுவார் இல்லா மற் போன அந் நேரத்திற்கு ஏற்றதாய் வெளிவந்தமையின், அஃது எல்லாரானும் பெரிது கொண்டாடப்பட்டு நம்புலவர் பெருந் தகையாரான அடிசனுக்குப் பெரும்புகழை விளைத்தது. அமைச்சர்குழாம் அதனாற் பெரிதும் உவப்படைந்து, இரண் டாயிர ரூபா வரும்படியுள்ள ஓர் அலுவலை அடிசனுக்குத் தந்தனர். இவர் பாடிய இப்பாட்டில் முன்னில்லாத ஒரு பெருஞ் சிறப்பு உளது. இவர்க்குமுன் படைத்தலைவர் களைப் புகழ்ந்து பாடிய பாவலரெல்லாருந், தாம் பாடுதற்குப் புகுந்த படைத் தலைவன் அளவற்ற போராண்மையு டையவனென்றும், அவன் தான் ஒருவனாகவே தன் ஒரு கையால் எண்ணிறந்த பகைஞரை வெட்டி வீழ்த்தினனென்றும் நடவாத பொய்யைப் புனைந்து கட்டிப் பாடுதலையே தொழிலாகக் கொண்டவர்கள்; மற்று அடிசனே, உண்மையான முறையைப் பின்பற்றிப், பின் நடக்கப் போகும் போரின் கூறுபாடுகளை அளந்தறிந்து, அவற்றிற்குத் தக்கபடியாகத் தனது படையை வகுத்தமைக்கும் ஆழ்ந்த அறிவின் திறங்களையும், எதிர்பாராத ஒரு பேரிடர் பகைஞராற் சடுதியில் நேர்ந்தவிடத்துச் சிறிதும் மனங்கலங்காமல் அமைதி யாய் நின்று அவ்விடருக்குத் தனது படையைத் தப்புவிக்குஞ் சூழ்ச்சிகளையுந், தாம் பாடுதற்கு எடுத்துக் கொண்ட படைத்தலைவன் உடையனதலையே சிறந்தெடுத்துப் பாடினார். இங்ஙனம் இப் பாசறையிருப்புப்பாட்டுப் பாடிய காலந் தொட்டு இவர்க்குத் திருமகள் நோக்கம் நன்கு வாய்த்தது. துவக்கத்தில் இவர் இங்கிலாந்தின் உதவி அமைச்சராயும், அயர்லாந்தின் முதல் அமைச்சராயும் ஏற்படுத்தப்பட்டார். பொருள் வருவாயை நிரம்பத் தரும் இன்னும் பல அலுவல் களிலும் அமர்ந்திருந்தார். 1703 ஆம் ஆண்டில் ஒரு காசுகூட இல்லாமல் வறுமைப்பட்ட இவர் 1711 இல், ஒரு நூறாயிர ரூபாவுக்கு நிலங்கள் வாங்கினாரென்றால், இடையே இவர் எவ்வளவு பொருள் வருவாய்க்கு இடமான அலுவல் களைப் பார்த்திருக்கவேண்டு மென்பதை யாம் கூறல்வேண்டா. பாசறையிருப்பு என்னும் பாட்டிற்குப்பின், தாம் இட்டலி தேயத்தில் வழிச்சென்ற வரலாறுகளைப் பற்றி இவர் எழுதிய நூல் ஒன்று வெளிவந்தது. அஃது, இவர்தம் அழகியகல்வித் தேர்ச்சியினையும், அமைந்த மெல்லென்ற நகைச்சுவை காட்டுந் திறத்தினையும், அன்பும் அருளும் வாய்ந்த ஒழுக்கத்தினையும், இவருடைய நூல்கள் எல்லா வற்றிலுங் கனிந்து திகழும் பிடிவாதமில்லாத ஆழ்ந்த சமயவுணர்வின் கிளர்ச்சியினையும் இனிது விளங்கக் காட்டியது. 1707 இல் அடிசன் ரோஸமண்ட் (Rosamond) என்னும் இசை தழுவிய நாடகம் ஒன்றை இயற்றி வெளியிட்டார். அஃது இசைப்பாட்டுகள் மிகவிரவிப் பயில்வார்க்குப் பெரிதும் இனிமை பயப்பதொன் றேயாயினும், பகடியைத் தரும் இடங்களி லன்றி அடக்க ஒடுக்கமான பகுதிகளில் மிகச் சிறந்ததென்று சொல்வதற்கு வாயாதது. இவ் வாண்டிலேயே ட்ரம்மர் (Drummer) என்னும் முடிபினிய நாடகம் (Comedy) ஒன்றும் இவரால் இயற்றி வைக்கப்பட்டது; ஆனால், அஃது இவர் இறந்த பின்னர்த்தான் இவர்தம் ஆருயிர் நண்பரான டீல் (Steele) என்பவரால் வெளியிடப்பட்டது; கதைப் போக்கிலும், மனக்கவர்ச்சியை எழுப்பும் வகையிலும் இது குறைபாடுடைய தாகக் காணப்படினும், இதன் பல பகுதிகளும் நகைச்சுவை விளைத்துக் கற்போர் உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி தருவன வாய் அமைந்திருக்கின்றன. இனி, இவர் வெளியிட்ட இந்நூல்களைவிட இவர்க்கு நிலையான பெரும்புகழைத்தந்து, ஆங்கிலமக்களையே யல்லாமல் உலகத்தின்கண் இவருடைய நூல்களைக் கற்பா ரெல்லாரையுஞ் சீர்திருத்தி, அவர்கட்கெல்லாம் பல துறை களிலும் நல்லறி வையும் இன்பத்தையும் ஊட்டிப் பெரிதும் பயன்படுவனவான உரைநடைக் கட்டுரைகள் எழுதவேண்டும் அமயம் இவர்க்கு இக்காலத்தே வந்து கைகூடிற்று. இளந்தைப் பொழுதில் ஒரு பள்ளிக்கூடத்தில் இவரோடு ஒருங்கு கல்வி பயின்ற டீல் என்னும் புலவர், 1709 இல் டாட்லர் (Tatler) எனப் பெரிய ஒரு புதினத்தாளை வெளியிடலாயினர். அஃது ஒரு கிழமைக்கு மூன்று முறை வெளியிடப்பட்டது. அது வெளியிடப் பட்டதன் நோக்கம் : அக்காலத்து ஆங்கில மக்களின் நடையுடை எண்ணங்களைச் சீர்திருத்துதலேயாம். அந்நாட்களில் இருந்த ஆங்கில மக்களிற் செல்வர்களும் நடுத்தரநிலையி லுள்ளாருங் கல்விச் சுவையை அறியாதவர்கள். அவர்கள் தமது பொழுது போக்கிற்காக மேற்கொள்ளுங் கொண்டாட்டுக ளெல்லாம் புல்லியவை கள்; அல்லாக்கால் தீய ஒழுக்கம் நிறைந்தனவும் விலங்கின் செய்கைகளோடு ஒப்பனவுமாம். பெண் பாலாரிலுங் கூடச் சூதாட்டம் மிகப் பரவியிருந்தது. ஆண்பாலர் மேற் கொள்ளும் விளையாட்டுகளோ இரக்கமற்றனவாய்க் கொடுந் தன்மை வாய்ந்தனவா யிருந்தன; அவர்கள் சாராயக் குடியிலும் மட்டுக்கு மிஞ்சி இறங்கி விட்டனர். இத்தகைய நிலைமையிற் கல்வித் தேர்ச்சியும் அதனால் விளையும் இன்பங்களும் அவர்கட்குப் புதுமையாகவும் இகழ்ச்சியாகவும் தோன்றின. இவ்வளவு சீர்கேடுகளையும் போக்கி அவர்களைச் சீர்படுத்தல் வேண்டுமென்பதே டீல் என்னும் புலவரின் உயர்ந்த நோக்கம். கைக்கும் மருந்து உண்ணமாட்டார்க்கு அதனை உள்ளபடியே வைத்து உட்செலுத்துதல் ஆகாதவாறுபோல், நிரம்பச் சீர் கெட்ட நிலைமையிலுள்ள அவர்கட்கு ஒழுக்கத்தின் மேன்மை களையுங் கல்வியின் சிறப்புகளையும் நேரே உணர்த்தப் புகுந்தால், அவர்கள் அவற்றை ஒரு சிறிதுங் கேளார். ஆகவே, கைக்கும் மருந்தை இனிய அக்காரந் தீற்றி அருத்துதல்போல, அழகிய இனிய உரைநடையில் நகைச்சுவை தோன்ற ஏற்கும் வகையால் எளிய நல்ஒழுக்க முறைகளைச் சிறிது சிறிதாக நல்லுணர்வும் இன்பமும் வாய்ப்ப எழுதிக் கற்பித்தலே செயற்பாலதாகும்; இதனை நன்குணர்ந்த டீல் என்னும் புலவர் அப்புதினத்தாளில் எழில் கனிந்த சிறு சிறு கட்டுரைகள் வரைந்து வரலாயினர். தம் நண்பர் தோற்றுவித்து நடத்தும் அப்புதினத் தாளை, அப்போது ஐர்லாந்தில் அரசியல் அலுவலில் அமர்ந்திருந்த அடிசனார் கண்டவுடனே, அதற்குத் தாமும் அரியபெரிய கட்டுரைகள் எழுதிவிடலானார். டீல் என்னும் புலவர் எழுதிய கட்டுரைகளைப் பார்க்கினும், அடிசனார் எழுதியவைகளே வனப்பின் மிக்கனவாய் எல்லார் உள்ளங்களையும் எளிதிற் கவர்ந்தன. டீல் என்பவரே, அடிசன் உரைவளங்கள் தம்முடைய உரைவளங்களினுஞ் சிறந்தன வாதலை ஒப்புக்கொண்டு, இனித்தாம் அவரது உதவியின்றி அதனை நடாத்துதல் இயலாதென்றுங் கூறினார். இப் புதினத்தாள் ஓராண்டும் ஒன்பது திங்களும் நடைபெற்றது. இதன்கண் வெளிவந்த மொத்தம் 271 கட்டுரைகளில் டீல் என்பவரால் எழுதப்பட்டவை 188; அடிசனால் எழுதப் பட்டவை 42. அந்நாட்களில் இருந்த தேநீர் காப்பிநீர் விடுதி களில் நிகழ்ந்தன வெல்லாம் அதன்கண் விடாமல் எழுதப் பட்டன. நகரத்திலுள்ள மாந்தர்களின் வாழ்க்கையின் இயல்பு களெல்லாம் அதன்கண் நன்கெடுத்துப் பேசப்பட்டன. இன்னோரன்ன நிகழ்ச்சிகள் புல்லியவைகளே யாயினும், இவற்றின்கண் உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டி, இவற்றைச் சீர்திருத்து முறைகளையும் பதமாக இனிது விளக்கி யெழுதினமையால், இத்தாள் அஞ்ஞான் றுள்ளார் கருத்தைத் தன் மாட்டு ஈர்த்து எங்கும் புகழ் பெற்றுலவியது. அஞ்ஞான்று டீல் என்பவர் அரசியலிற் பெரியதோர் அலுவலில் அமரும் பொருட்டுத், தாம் அரசியலுக்கு மாறாய் ஏதும் எழுதுவதில்லையென்று சொல்லுறுதி கொடுத்தமை யால் அரசியல் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்த தமது டாட்லா என்னும் புதினத்தாளை நிறுத்தி விட்டு, 1711 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் முதல்நாளில்ddd ‘Þbg¡nll®’ (Spectator) என்னும் புதினத்தாள் மற் றொன்றைத் துவங்கி வெளியிடலானார். இஃது இலக்கியப் பகுதிகளையும், நூற்சுவை வகைகளையும், வாழ்க்கையினியல்பு களையுமே சிறந்தெடுத்துப் பேசியதாகும். அரசியன் முறைகள் இதன்கண் அறவே ஒழிக்கப் பட்டன. இப்புதினத்தாள் எங்கும் கொண்டாடப்பட்டு, எல்லா ரானும் ஆவலோடு வாங்கிப் பார்க்கப்படுவதாயிற்று, ஆங்கில மொழியில் நிகரற்ற நல்லிசைப் புலவரான மில்டன் (Milton) என்பவரால் இயற்றப்பட்ட துறக்க இழப்பு (Paradise Lost) என்னும் அரும்பெருங் காப்பியத்தின் திட்ப நுட்பங்களுஞ் சொற்சுவை பொருட்சுவைகளும் நன்கு ஆராய்ந்த கட்டுரைகள் நம்புலவர் பெருந்தகையான அடிசனால் இதன் கண் ஒரு தொடர்பாக எழுதப்பட்ன. அக்காப்பியத்தின் விழுப்பங்க ளையும் அவற்றை ஆராய்ந்து தெளியும் முறை களையும் ஆங்கில மக்கள் அப்போதுதான் முதன்முதலுணர்ந்து களிப்புற லானார்கள். ஸர் ரோஜர்டேகவர்லி எனப் பெயரிய ஒருசிறு புதுக் கதையும் மிக அழகாக இவரால் இதில் எழுதப்பட்டது. இக் கதையின் தலைவனது இயற்கையை நகைச்சுவைதோன்றக் காட்டி, அதன் வளர்ச்சியினை நெடுகப்புனைந்து அழகு படுத்தும் இவரது பெருந் திறங், கதை நூல் எழுதிய வேறுயர்ந்த ஆங்கிலப் புலவரிடத்துங் காண்பது அரிது. இன்னும் மிர்ஸாவின் காட்சி (முருகவேள் கண்ட காட்சி) படைப்பின் வியத்தகு தோற்றங்கள் போல் அமைதியும் உருக்கமுங் கடவுள் நேயமுங் கெழுமிய உயர்ந்த அறிவுரைகளும், பகடியும் விளையாட்டும் நிறைந்த ஆராய்ச்சியுரைகளும், பாவைக் கூத்து, நாடக அரங்கு பெண் மக்களின் நடையுடை எண்ணங்கள் போல்ப வற்றைப் பற்றிய சீர் திருத்த வுரைகளும், விழுமிய சமயக் கொள்கைகள் ஒழுக்க வகைகளைக் குறித்த மெய்யுணர்வுரைகளும் இவராற் பெரிதுஞ் சுவைக்க எழுதப்பட்டன. இவர் தொட்டுப் பேசாத பொருளில்லை. உயர்ந்தனவுந் தாழ்ந்தனவும் இவர் கையில் வந்தவுடன் உயர்ந்தபொருள் மேன்மேல் விளக்கம் எய்தியும், தாழ்ந்த பொருள் தன்னைத் தாழ்த்தும் இழிபொருட் கலப்பு நீங்கித் தூய்மையுற்றுந் திகழ்ந்தன. இனிய கருப்பஞ் சாற்றினைப் பெய்துவைத்த தங்கக் குழிசிபோல் இவரெழு திய கட்டுரை களெல்லாம் இனிமைமிக்குத் துலங்கின. இவரை யடுத்துத் தோன்றிய மாப்பெரும் புலவரான சாமுவேல் ஜான்சன், பழக்கத்தோடு ஒட்டியதேனும் பரும்படி யல்லாததும், அழகிய தேனும் ஆடம்பரமில் லாததுமான ஓர் ஆங்கில உரைநடையிற் பழகிக்கொள்ள விழைகுவார் எல்லாரும் அடிசன் இயற்றிய நூல்களை இரவும் பகலும் ஓயாமற் பயிலல் வேண்டும் என மொழிந்தது முழுதும் பொருத்தமேயாம். என்றாலும், அடிசனார் இயற்றிய செய்யுட்களினும், அவரு டைய உரைகளே சொலற்கரும் விழுப்பம் வாய்ந்தன வாகு மென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஈண்டு, மறைமலையடிகள் தமிழில் மொழிபெயர்த்த கட்டுரைகள் ஆறும் அடிசன் பெக்டேடரில் எழுதிய சிறந்த கட்டுரைகளி னின்றுந் தெரிந்தெடுக்கப்பட்டனவாகும். இப் புதினத்தாளில் வெளியான 555 கட்டுரைகளில் அடிசனால் வரையப்பட்டவை 274. இத்தாளின் 555 இலக்கங்கள் மட்டும் வெளிவந்தன; 1712, டிசம்பர்த் திங்களில் இதுவும் நின்றுபோயிற்று. 1713 ஆம் ஆண்டில் அடிசன் ‘nf£nlh’ (Cato) எனப் பெரிய நாடகக்காப்பியம் ஒன்றனை இயற்றி வெளியிட்டார். அஃது அவர் காலத்திற் சிறந்ததாகப் பாராட்டப் பட்டாலும் வரவர அதற்கு அச் சிறப்புக் குன்றியது. அடிசனாரின் இயற்கை யறிவாற்றல் நாடகக்காப்பியம் இயற்றுதற்கு ஏற்றதன்று. இந்நாடகத்தின் கதைப் போக்கில் இனிப்பு இல்லை. கதையில் வரும் மக்கள் மரப்பாவைகளையே ஒத்தனர். உயிரும் அவ்வ வர்க்கே யுரிய சிறப்பியல்புகளும் அம்மக்கள்பாற் காணப்பட வில்லை. இன்னும் இவர் இயற்றிய உரைகளுஞ் செய்யுட்களும் பல. எனினும், இவர் தம் பெரும்புலமையும் பெரும்புகழும் என்றும் மங்காமல் நின்று ஒளிரும் மணிவிளக்குப் போல்வன, இவர் பெக்டேடரில் (Spectator) எழுதிய விழுமிய கட்டுரைகளேயாமென்று உணர்ந்து கொள்க. இவர் தமது நாற்பத்து நான்காம் ஆண்டில், அஃதாவது 1716 இல் உவார்விக் மாகாணச் சிற்றரசியை மணந்து கொண் டனர். இவள் முதலில் அம் மாகாணச் சிற்றரசனை மணந்து அவன் இறந்த பின் தனியே அரச வாழ்க்கையிற் செருக்குற்று இருந்தவள். இவள் தன் புதல்வற்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரிய ராய் அடிசனாரை முன் ஒருகால் அமர்த்தியதிலிருந்து, இவட்கும் அவர்க்கும் நேயம் உண்டாக, அதனால் அவளை இவர் வதுவை அயர்ந்தனர். ஏழையெளிய மக்களோடு பழகி அவர்தம் இயற்கை வாழ்க்கையில் மனம் பற்றி நின்ற அடிசனார்க்குத், தற்செருக்கு மிக்க அரண்மனை வாழ்க்கை பிடியாதாயிற்று. எனவே, இவரும் இவர் தம் மனைவியாரும் மனமொத்த இன்பவாழ்வில் வாழ்ந்தில ரென்றுணரல் வேண்டும். ஆங்கில மொழியினையும் ஆங்கில மக்களையும் மிகச் சீர்திருத்தி மேனிலைக்குக் கொணர்ந்த நல்லிசைப் புலவரும், இனிய இயல்பும் இனிய செய்கையும் வாய்ந்து உல்லாரானுங் கொண்டாடப்பட்டுப் பெரும்புகழ் மிக்கவரும், தம்முடைய நூல்களைக் கற்பார் எல்லார்க்கும் உணர்வையும் உருக்கத் தையும் மகிழ்ச்சியையும் விளைத்து அவருள்ளத்தைப் புனிதப் படுத்தியவரும் ஆன அடிசனார் 1719 இல் தமது நாற்பத்தேழாம் அகவையில் மிக அமைதியாக இம் மண்ணுலக வாழ்வு துறந்தார். முருகவேள் கண்டகாட்சி நல்லிசை புலமை மலிந்த அடிசன் என்பார் ஆங்கிலத்தில் எழுதிய மிர்ஸாவின் காட்சி (The Vision of Mirza) என்னுங் கட்டுரையினைத் தமிழில் மொழிபெயர்த்துரைப்பான் புகுந்த மறைமலைடிகள், அவ்வாங்கில வுரையிலுள்ள குறியீடுகளை அங்குள்ளவாறே யெடுத்துத் தமிழின்கண் உரைப்பின், அது தமிழ்ச் சுவைக்கு ஒவ்வாமை கண்டு, அவ்வுரைப் பொருளை மிர்ஸா என்பவர் மேல் ஏற்றாமல், அவர் கண்ட அக்காட்சி யைத் தாம் கண்டதாக வைத்துத், தம் மேல் ஏற்றுதற்கு முனைந்து முதல் ஐந்து பக்கங்களில் தமது வரலாறு கூறுகின்றார். இது புனைந்துரை வழக்கு. மறைமலையடிகள் தாம் இளைஞராயி ருந்தபோது, திராவிட மந்திரி, நாகை நீல லோசினி, பாகர ஞானோதயம், இந்துமதாபிமானி முதலான புதினத் தாள்கட்குக் கட்டுரைகள் எழுதிவருகையில், அக் கட்டுரைகளின் கீழ்த் தமது இயற்பெயரைக் குறியாமல், முருகவேள் என்னும் புனைவுபெயரையே குறித்து வந்தமை யின், ஈண்டும் அஞ்ஞான்று நிகழ்ந்த நிகழ்ச்சியை அப் பெயர் கொண்டே குறிப்பிடலானர். முதல் ஐந்து பக்கங்கள் முடிய மறைமலையடிகள் தாம் சிற்றூரில் சென்றிருந்ததையும், அங்கே நிகழ்ந்த சில நிகழ்ச்சி களையும், அவ்வூர்ப் புறக்காட்சிகளையும் எடுத்துரைக்கின்றார். ஆறாம் பக்கத்தின் முதற் பிரிவு முதல் அவர் அடிசனார் வரைந்த கட்டுரையை மொழி பெயர்த்து, மேற்கோட் குறிகளுள் வைத்துரைத்தல் காண்க. மறைமலையடிகள் சிற்றூருக்குச் சென்ற வரையில் அவரது வரலாறு : 1876 ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் 15 ஆம் நாளில் மறைமலையடிகள் நாகப்பட்டினத்திற் பிறந்தவர். இவர் தம் தந்தையார் சோழியச் சைவ வேளாளக் குலத் தவைராய்த் தோன்றி, நாகப்பட்டினத்திற்கு இரண்டு கல் தொலைவிலுள்ள காடம்பாடியிற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த சொக்கநாத பிள்ளை என்பவரேயாம்; இவர் தம் அன்னையார் பெயர் சின்னம்மை. இவர் பிள்ளை மைப் பொழுதிலே நாகப் பட்டினத் தின்கண் இருந்த உவெலியன் மிஷன் கல்லூரியில் (Wesley an Mission College) கல்வி பயிற்றப்பட்டு வருகையில் ஆங்கிலந் தமிழ் என்னும் இருமொழிகளையும் விரும்பிக் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரித் தலைமையாசிரியராற் பல பரிசுகளும் அளிக்கப்பெற்று வந்தார். இவர்க்குப் பதினாறாம் ஆண்டு நடக்கையில் தமிழ்மொழி கற்கும் அவா இவரது உள்ளத்தில் அளவு கடந்து எழ, அவ் வவாவினை நிரப்புதற் பொருட்டு, அக்காலையில் நாகப்பட்டினத்திற் புத்தகக்கடை வைத்துக் கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை யடைந்து, அவர்கள்பாற் செந்தமிழிலக்கண இலக்கியங்களைச் செவ்வனே ஓதி வரலா னார். நாளேற நாளேறத் தமிழ்மொழிச் சுவை இவரது உள்ளத் தைப் பெரிதுங் கவர்ந்தது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மிக உயர்ந்த நூல்களைக் கற்பதில் இவர்க்கு விழைவு மிகுந்து வந்தமையிற், கல்லூரியிற் கற்பிக்கப்பட்டு வந்த சிறு நூற் பயிற்சி இவரது கருத்துக்கு இசையாதாயிற்று. பதினாறாம் ஆண்டு நடக்கையில், தம்மோடு உடன்பயிலும் மாணாக்கர்க்குத் தமிழறிவுந் தமது சமயவுணர்வும் பெருகல் வேண்டி இந்து மதாபிமான சங்கம் எனப் பெயரிய ஒரு கழகம் புதிதாக நாட்டி அதனை மிகுந்த ஊக்கத்துடன் நடத்தி வந்தார். பதினேழாம் ஆண்டிற் சவுந்தரவல்லி எனப் பெயரிய நங்கையார் இவர்க்கு மனைவியராக மணம் பொருத்தப் பட்டார். பதினெட்டாம் ஆண்டிற் சிந்தாமணி எனப் பெயரிய ஒரு பெண் மகவும் இவர்க்குப் பிறந்தது. இவர் சிறு பிள்ளை யாயிருந்த காலத்திலேயே தந்தையை இழந்தமையின், தம் அன்னையின் பாதுகாவலிலேயே இருந்து கல்வி பயின்றனர். கல்லூரியின் ஆசிரியர்களும் இவரோடு உடன் பயின்ற மாணாக்கர்களும் இவர் தங் கல்வியறிவின் திறத்தையுங் கூரிய அறிவையுங் கண்டு மிக வியந்து இவர்பால் மிக்க அன்பு பாராட் டினர். அஞ்ஞான்று காரைக்காலில் நடைபெற்ற திராவிட மந்திரி என்னுங் கிழமைத் தாளுக்கு இவர் முதன்முதற் செந் தமிழ் கட்டுரைகள் எழுதி வந்தனர். அதன்பின் நாகபட்டினத்தி லேயே நடைபெற்ற நாகை நீலலோசனி என்னுங் கிழமைத் தாளுக்குப் பலப் பல கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் தமக்கு முதன் மகள் பிறந்த பின், குடும்பச்சுமையைத் தம் அன்னையார் மேல் வைத்தல் இனி ஆகாதெனக் கண்டு, 1894 ஆம் ஆண்டு ஆங்கிலக் கல்லூரிப் பயிற்சியை விட்டு விலகி, ஓர் அலுவலிற் புகுதற்கு முயன்றார். அக்காலத்தில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராயிருந்த திருச் சுந்தரம் பிள்ளை எம்.ஏ., அவர்கள், இயற்றிய மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தைத் தாம் பார்க்க நேர்ந்ததிலிருந்து, தம் இயற்றமிழா சிரியராகிய திரு. நாராயணசாமிப்பிள்ளை யவர்களிடஞ் சுந்தரம் பிள்ளை யவர்கள் இளந்தைப் பொழுதில் தமிழ்க் கல்வி பயின்றவர்களென்பது தெரிந்து, அவர்கட்குத் தம்மை பற்றியுந் தம் ஆசிரியரைப்பற்றியும் அகவற் பாவில் ஒரு கடிதம் வரைந்து விடுத்தார். அதனைக் கண்டு இறும்பூதுற்ற சுந்தரம் பிள்ளை யவர்கள் ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை யவர்களையும், மறைமலை யடிகளையும் திருவனந்தபுரத்திற்குத் தம் பால் வரும்படி விரும்பி அழைத்து ஒரு கடிதம் போக்கினர். அவ் வழைப்பினுக்கு மிக மனங்களித்துத் தம் ஆசிரியரும் இவருமாக 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைக்கிழமையில் திருவனந்தபுரத்திற்குச் சென்று சுந்தரம்பிள்ளை யவர்களைக் கண்டார். இவர் அகவற்பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியராகக் கருதியிருந்த சுந்தரம்பிள்ளை யவர்கள் இவர் மிக இளைஞரா யிருத்தலை நேரிற் கண்ட வளவானே பெரிதும் வியப்புற்றுத் தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர் களோடு அளவளாவி யிருக்கையில் இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலுஞ், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத் தலை ஆராய்ந்து பார்த்து இத்துணைச் சிறுபொழுதிலே இத்துணை யுயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது! எனப் புகன்று, அங்ஙனந் தாம் பாராட்டியதற்கு அடையாளமாக ஒரு நற்சான்று இதழும் எழுதித் தந்தனர். திரும்பவும் 1896 ஆம் ஆண்டில் சுந்தரம்பிள்ளை யவர்கள் இவரைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்து அப்போது மார்த்தாண்டன் தம்பி என்பவரால் வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆங்கிலக் கல்விக்கழகத்தில் இவரைத் தமிழாசிரியராக அமர்த்தி வைத்தனர். திருவனந்தபுர நகரம் அக்காலத்தில் உடம்பின் நலம் பேணுதற்கேற்ற ஒழுங்குகள் அமையப்பெறா திருந்தமையால், இரண்டரைத் திங்கள் மட்டுமே இவர் அங்கிருந்து, பின்னர் அவ்வலுவலை விட்டு நாகப்பட்டினந் திரும்பினர். இவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரைத் திங்களும், அந்நகரத்துச் சைவர்கள் வைத்து நடத்திய சைவ சித்தாந்த சபைகளிரண்டிற் சைவ சித்தாந்த உண்மைகளைப் பற்றிய விரிவுரைகளை இடையிடையே நிகழ்த்தி வந்தனர். இவர் செய்த அவ் விரிவுரைகள் அந்நகரத்திருந்த சைவ நன் மக்களாற் பெரிதுங் கொண்டாடப்பட்டன. அப்போது திருவனந்தபுர அரசர் கல்லூரியில் நாடகத் தமிழைப் பற்றி ஒரு விரிவுரை செய்யும்படி சுந்தரம்பிள்ளை யவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கிசைந்து 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள் இவர் நாடகத்தமிழ் என்பதனைப் பொருளாகக் கொண்டு, மிக ஆராய்ந்து கண்டதோர் அரிய விரிவுரையினை நிகழ்த்தினர். அவ்விரிவுரை நிகழ்ந்த அவையில் சுந்தரம்பிள்ளை யவர்களே அவைத் தலைவராயிருந்து, இவர் செய்த விரிவு ரையின் அருமையை மிகவும் வியந்து பேசினர். அவ் வவையிற் குழுமியிருந்த பெருங்கூட்டத்தவர் எல்லாரும் அதனைப் பெரிதும் பாராட்டினர். அப்போது இவர்க்கு ஆண்டு இருபது. அவ்வாண்டின் கடைசியில் இவர் நாகைக்குத் திரும்பினர். இதற்கு முன் இவர் நாகையிற் கல்வி பயின்று வருங்காலத்தில், நாகை வெளிப்பாளையஞ் சைவசித்தாந்த சபையார், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயக ரவர்களைச் சென்னை யினின்றும் இடையிடையே வருவித்து அவராற் சைவ சித்தாந்த அரும்பொருள் விரிவுரைகள் நடப்பித்து வந்தனர். நாயகரவர்கள் நிகழ்த்திய அவ்விரிவுரைகளை இளைஞ ராயிருந்த மறைமலை யடிகள் ஆவலோடுஞ் சென்று கேட்டு, அப்பொருள்கள் முழுமையுங் கேட்டபடியே மனத் தமைத்துச் சைவசித்தாந்த வுண்மை தெளிந்து, அதற்கு முன் தாம் பயின்றுவந்த மாயவாத வேதாந்தம் பொருந்தாமை கண்டு அதனை அறவே கை விட்டுச், சைவ சித்தாந்த வுண்மைக்கே உழைக்குங் கடப்பாடு மேற்கொண்டு அதன் கண் விருப்பம் மீதூரப் பெற்றார். அவ்வாண்டில் நாகையில் நடைபெற்ற ஸஜ்ஜனப்பத்திரிகா என்னுங் கிழமைத்தாள் ஒன்றில் மாயாவாதி ஒருவர், ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் எழுதிய சிலவற்றை மறுத்து எழுதிவந்தார். அம்மறுப்பினைக் கண்ட மறைமலை யடிகள், நாயகரவர்கள் எழுதியவைகளே பொருத்தமுடையன வாதலும், அம் மாயாவாதி எழுதியவை பொருத்தமிலவாதலும் நன்கெடுத்துக் காட்டி, நாகை நீல லோசனியில் தொடர்பாகப் பல கட்டுரைகள் வரைந்து, முருகவேள் என்று கைச்சாத்திட்டு வெளியிட்டார். அக்கட்டுரைகளை நோக்கினா ரெல்லாம் அவைதம்மை வரைந்த இவர்தம் ஆராய்ச்சி யறிவின் திறத்தையுங் கல்வியறிவின் ஆழத்தையுங் கட்டுரை எழுதும் ஆற்றலையும் மிகுதியும் வியந்து கொண்டாடினர். இக் கட்டுரைகளைச் சென்னையிலிருந்த நாயகரவர்கள் பார்க்க நேர்ந்த போது அவற்றின் திறத்தை வியந்து அவற்றை வரைந்த முருகவேள் என்பார் யார்? என்று நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையார்க்கு ஒரு கடிதம் எழுதிக்கேட்டனர். அச்சபையாருட் பெருமுயற்சி யுடையவரும், மறைமலை யடிகட்கு இளமைதொட்டுச் சிறந்த நண்பருமான திரு. மதுரை நாயகம்பிள்ளை யென்பவர், அடிகளின் வரலாறுகளை நாயகர வர்கட்கு உடனே எழுதித் தெரிவித்தனர். நாயகரவர்களும் அடிகளைப் பார்க்கும் விருப்பம்மிக்குத் தாம் அடுத்து நாகைக்கு வருகையில், இவரைத் தம்பால் அழைத்து வரும்படி அவர்க்கு அறிவித்தார். அறிவித்த சில திங்களிலெல்லாம் நாயகரவர்கள் வெளிப்பாளையம் வர, இவரும் அவரைச் சென்று கண்டார். நாயகரவர்கள் இவரை யாராய்ந்து பார்த்து இவரைத் தம் புதல்வர்போற் கருதி அன்பு பாராட்டி வரலானார். நாயகரவர்கள் சென்னைக்குத் திரும்புங் காலையில், உன்னை விரைவிற் சென்னைக்கு வருவிப்போம்! நீ அந்தப் பக்கங் களில் இருந்தாற்றான் நலமுண்டாம் என்று இவரை நோக்கிக் கூறிச்சென்றார்கள். அவர்கள் அங்கே சென்றபின் இவர்க்கு அன்பான கடிதங்கள் எழுதிவர, இவரும் அவரைத் தம் ஆசிரியருந் தந்தையும்போல் எண்ணி அவர்பால் மிகுந்த அன்பு பூண்டு கடிதங்கள் எழுதி வரலானார். இந்நாட்களின் இடையில், நாயகரவர்கள் இவர்க்குள்ள சைவசித் தாந்த நுட்பவறிவைப் பயன்படுத்தக் கருதிச், சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச்செய்த துகளறுபோதம் என்னும் நூலை இவர்பால் விடுத்து, அதற்கோர் உரையெழுது மாறு தூண்டினர். அதற்கிசைந்து இவர் அந்நூலின் நூறு செய்யுட்களுக்கும் விழுமியவோர் அருந்தமிழுரை வரைந்து அதனை நாயகரவர்கள்பாற் போக்க, அவர்கள் அவ்வுரையின் நுட்பத்தையுஞ், சித்தாந்தத் தெளிவையும் சொற்சுவை பொருட் சுவைகளையும் உற்று நோக்கி, இவ்வுரை சிவஞான முனிவர் உரையோடு ஒப்பது என்று வியந்துபேசி, அதனைத் தமது செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். இவர் அக்காலத்தே மாயாவாத மறுப்பாக நாகை நீலலோசனி யில் எழுதின கட்டுரைகளிற் சில, நாயகரவர்கள் செலவில் இவர் 1899 ஆம் ஆண்டு வெளியிட்ட சித்தாந்த ஞானபோதம் முதற் புத்தகத்தின் கஉ0 ஆம் பக்கம் முதல் அதன் முடிவு வரையில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இன்னும் அக்காலத்தே சென்னையி லிருந்த மாயாவாதி ஒருவர், தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறளின் முதற்செய்யுளை மாயாவாதக் கொள்கையின்பாற் படுத்தி முதற்குறள் வாதம் எனப் பெயரிய ஒரு புத்தகம் எழுதிவிடுப்ப, இவர் அதற்கு மறுப்பாக முதற்குறள் வாத நிராகரணம் எனப் பெயர் அமைத்த நூலொன்றை வெளியிட்டார். இவ்வளவும் இவர் நாக பட்டினத்திலிருந்த ஞான்று எழுதியவைகளாகும். அப்போதிவர்க்கு ஆண்டு இருபதரை. இனி, நாயகரவர்கள் இவரை நாகையிற் கண்டு அளவ ளாவிச் சென்றதுமுதல் இவரைச் சென்னைக்கு வருவிப்பதிற் கருத்து மிகலானார். அஞ்ஞான்றுதான், நாயகரவர்கள்பாற் சைவசித்தாந்த முணர்ந்த திரு. நல்லசாமிப் பிள்ளை என்பவர், சிவஞானபோதம் என்னும் ஒப்புயவர்வற்ற விழுமிய சைவ சித்தாந்த முதல்நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினார். அதனை வெளிப் படுத்தியபின், சைவ சித்தாந்த உண்மைகளை நன்கு பரவச் செய்தற் பொருட்டு அவர் சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம் எனப் பெயர் வாய்ந்த ஒரு திங்கள் இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தக் கருதி, அதனைத் தம்மோடு உடனிருந்து நடத்தத்தக்கார் எவர் என்று ஆராய்கையில், நாயகரவர்கள் இவரே அது செய்யவல்லார் என்று மறைமலை யடிகளைச் சுட்டிக்காட்டி, இவரைத் தம்பாற் சென்னைக்கு வருவித்தனர். அப்போது நல்லசாமிப்பிள்ளை யென்பார் சிற்றூரில் வழக்குத் தீர்க்கும் மன்றத்தில் நடுவராய் (Judge) அலுவல் பார்த்து வந்தனர். அவர் நாயகரவர்கள் கட்டளைப்படி உடனே சென்னைக்கு வந்து இவரது கல்வியறிவினையும் இயற்கை யறிவினையும் தாமும் ஆராய்ந்து பார்த்து வியந்து தம்மோடு இவரைச் சிற்றூர்க்கு அழைத்துச் சென்றனர். இவரது உதவிகொண்டு, சித்தாந்த தீபிகை எனப் பெயரிய திங்கள் இதழ் தமிழ்ப் பதிப்பின் முதல் இலக்கம் 1897 ஆம் ஆண்டு, சூன் திங்கள், 21ஆம் நாள் வெளிப்படுத்தப்பட்டது. அதன் முதல் ஐந்து இலக்கங்களுக்கே இவர் ஆசிரியராயிருந்து எழுதிவந்தனர். திருமந்திரத் திலுள்ள அன்புடைமை, இரந்தார்க்கீதல், அறஞ்செயான்றிறம் என்னும் மூன்றியல் முப்பது பாட்டு களுக்கும், சிவஞான சித்தியார் அளவையியல் காப்புச் செய்யுளொடு பதினான்கு செய்யுட்களுக்கும், தாயுமான சுவாமிகள் பாடல் பரி பூரணானந்த போதம் பத்துச் செய்யுட்களுக்கும், பொருள் வணக்கம் எட்டுச் செய்யுட் களுக்கும் எழுதிய விரிவுரைகளுங், குறிஞ்சிப் பாட்டைப் பற்றி எழுதிய உரையும், அன்பு, அருள் என்பவற்றைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் ஆங்கிலத்தினின்று மொழிபெயர்த்து வரைந்த நான்கு செய்யுட்களும் மூன்று கனவு என்பதும், வேறு சில குறிப்பு களும் அப்போது இவரால் இயற்றப்பட்டு, அச் சித்தாந்த தீபிகை முதல் மூன்றிலக்கங் களில் வெளிப்படுத்தப்பட்டன வாகும். மேற்குறித்த நூல்களுக்கு இவரெழுதிய விரிவுரைகளும், மற்றைக் கட்டுரைகளும், இவர் புத்திளமைக் காலத்திலேயே எய்திய அரும் பெறற் கல்விப் புலமையினையும் ஆழ்ந்த அறிவின் றிறத்தையும் விளங்கக் காட்டும் பேரடையாளங்களாய் நிற்கின்றன. இவ்வளவும் இவர் சிற்றூர்க்குச் சென்றவரையில் நிகழ்நத வரலாறாம். இத்துணையே இந்நூலின் உரைக் குறிப்புகளுக்கு வேண்டு வதாகையால், மேல் நிகழ்ந்த இவரது வரலாற்றினை ஈண்டு கூறாது விடுகின்றாம். இவர் சிற்றூரிற் சென்றிருந்தபோது இவர்க்கு ஆண்டு இருபது நிரம்பி ஒன்பது திங்கள் மேல் ஆயின. ஆகையாற் கட்டுரையில் இருபதாண் டென்றது ஒரு குத்து மதிப்பே யாம். சிந்தனைக் கட்டுரைகள் சொல்விளக்கம் 1. முருகவேள் கண்டகாட்சி நெகிழப் பெறாத - விட்டுநீங்கப் பெறாத, இங்கே செல்வர் என்றது சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நல்லசாமிப்பிள்ளை யென்பாரை, இல்லம் - வீடு, ஒருங்கு இருந்து - ஒன்று சேர்ந்திருந்து. அளவளாய் - மனங்கலந்து, வியந்து - பாராட்டி, விழைவு - மிகுந்த விருப்பம்; நட்பு - நேசம்; கெழு தகைமை - உரிமை விழுப்பம் - சிறப்பு; எய்தும் - அடையும்; பேறு - செல்வம்; பிறிதொன்று - மற்றொன்று; உண்டுகொல் - உண்டோ; புலரிக்காலை - விடியற்காலம். மிழற்றல் - பாடுதல்; அரவம் - ஒலி; வைகறை - விடியற் காலம்; இப்பக்கம் முற்றிலுஞ் சிற்றூர்க்கு வெளியேயுள்ள நில அமைப்பின் அழகு அங்குள்ளபடியே எடுத்துச் சொல்லப்படு கின்றது, உள்ளவற்றை உள்ளபடியெடுத்து அழகுபடுத்திக் சொல்வதே நல்லிசை புலமையாகும், ஓரிடத்தை அழகுபயப்பச் சொல்லுங்கால் அங்குள்ள உண்மைக்கு மாறாகத்தம் மனம் போனபடி யெல்லாம் எழுதும் பிற்காலத்துத் தமிழ்ப் புலவரின் செய்யுள் வழக்குச் சிறிதும் விரும்பத் தக்கதன்று. பத்துப் பாட்டு கலித்தொகை புறநானூறு முதலான பழைய சங்கத் தமிழ் நூல்களிற் போந்த பாட்டுகளெல்லாம் உள்ளவற்றை உள்ளவாறே எடுத்துப் பாடும் விழுப்பம் வாய்ந்தனவாயிருத்தல் பெரிதும் பாராட்டற்பாலதாகும். புறம்பே - வெளியே; மனவெழுச்சி - உள்ளக்கிளர்ச்சி; அடர்ந்த - நெருங்கின; தோப்பு என்பது ஒரேவகையான பெரியமரங்கள் அடர்ந்திருப்பது; கூட்டம் எனப் பொருள்படும்; தொகுப்பு எனுஞ் சொல் தோப்பு என்று ஆயிற்று; வெட்டவெளி - நடுவே மறைப்பாக ஏதொரு பொருளும் இன்றி வெறும்பரப்பா யிருப்பது; வெட்ட, வெளி என்னும் இரண்டு சொற்களும் வெள் என்னும் மதனிலையிற் பிறந்தனவாகும்; கான்யாறு - காட்டாறு. ஆண்டு ஆண்டு - அவ்வவ்விடத்தே; முருடு என்னுஞ் சொல் இக் காலத்தே முரடு என வழங்கு கின்றது; வேனிற் காலம் - வெயிற்காலம், அது சித்திரைமுதல் ஆடித் திங்கள் ஈறாகநிகழ்வது. அகழ்ந்த - தோண்டிய. பூட்டை - இராட்டினம்; பயக்கும் - உண்டாக்கும், ஆர்உயிர் - உடம்பில் நிறைந்த உயிர்; அரிய உயிர் எனலும் ஆம். புட்கள் - பறவைகள். நாகணவாய்ப்பறவை இக்காலத்தார் நாரத்தம்பிள்ளை எனவும் மைனா எனவுங் கூறுவர். தொகுதி - கூட்டம், நாயுருவிப் பூண்டின் வேர் பல் துலக்குவதற்கு மிகவும் ஏற்றதென்பர். திரளெ - திரண்ட பொருள். பொதிந்து - திணிந்து: உள்ளடக்கி; அறிவுறுத்தல் அறிவிற்பதித்தல். உலக இயற்கையிலுள்ள நலங்ளை முதலிற் கண்ணி னாற்கண்டு பிறகு அறிவினால் எண்ணிப் பாராட்டல் வேண்டும். கண்ணினாற் காண்பதற்கோ பகலவனது ஒளி கட்டாயம் வேண்டியிருக்கின்றது. ஒளியைத் தருவதோடு, நிலத்தின்கண் உள்ள புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், மக்கள் என்னும் எல்லா உயிர்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் அழகிய நிறங் களுக்கும் அப்பகலவன் வெளிச்சமே ஏதுவாயிருக்கின்றது. எனவே, உலகத்தின்கட் காணப்படும் எல்லா நலங்களும் ஞாயிற்றிலிருந்தே உண்டாகின்றன. ஆதலால் , அகன்று எல்லையறியப்படாத உலகின் நலங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே ஒருகாலத்து உணரமாட்டாத சிற்றறிவினராய மக்கள், ஒருகாலத்து ஒருங்கு காணப்படும் ஞாயிற்றினைக் கண்ட வளவானே அதன் கண் அவ்வெல்லா நலங்களையும் எளிதில் உணரப் பெறுகின்றனர். இவ்வுண்மையினைத் தெரிக்கும் பொருட்டே ஞாயிற்றினுக்கு ஒரு பொற்குடத்தை உவமையாக்கி, உலக வியற்கையின் நலங்களை அக்குடத்தினுட் பெய்த பண்டங்களாக்கி உரைத்தார். கவிந்து - மூடி. மழுக்கி - மங்கச் செய்து. கண்ணறிவு நிகழப் பெறாதார்க்கு மனவறிவு மிகக் குறுகுதல் குருடர் மாட்டுக் கண்டு கொள்க. இருள் மிக விரிந்த பரப்பு உடையதாயினும், ஓரிடத்துச் சிறிதாய்த் தோன்றும் ஒரு விளக்கொளியால் அது மறைந்தொழிதலுக்கு, அறிவொளியால் மன இருள் மாய்தலை உவமை காட்டினார். இருள் கருநிறத்ததாகலின் அதனைப் போக்கும் ஞாயிற்றினை வெண்ணிறக் கதிர்களென்னுந் தீம்பால் பெய்த ஒரு பொற்குடமாக உருவகப்படுத்தினார்; மேலும், அப்பொற்குடம், இந்நில வுலகத்துப் பொற்குடம்போல் தன்னுள் பெய்ததனை மறைக்கும் இயல்பிற் றன்றி, மற்றுப் பளிங்குக் குடம் போற் றன்னுட் பொதிந்ததனை வெளியே தெளிவுறக் காட்டும் இயல்பிற்றோன்றும், நாற்புறத்தும் பாயும் அதன் வெள்ளிய கதிர்கள் அக்குடத்தின் எப்பக்கத்துந் தோன்றும் பாலொளியி னொழுக்குப் போல்வனவா மென்றுங் குறிப்பிட்டார். அங்ஙனம் பாயுங் கதிர்கள் நீண்ட கம்பி வடிவத்தானும் இருளைச் சிதைக்குந் தொழிலானும், யானை, கல்யானை முதலிய விலங்கினங்கள் மேற் பாயும் அம்புகள் போறலின், பின்னர் அவற்றைக் கணைகளாகவும் உருவகப் படுத்தினார். அதன்பிற், புறத்தே தோன்றும் ஞாயிறு புறத்திருளை நீக்கிக் கண்ணைவிளக்கி, அம்முகத்தால் அகத்தே பரவிய இருளையும் போக்கி மனவறிவை விளக்குதல் குறித்தார். எல்லை காணப்படுஞ் சிறுவடிவிற் றாகிய ஞாயிறே புறவிருள் அகவிருள் இரண்டையும் போக்கிப், புறக்கண் அகக்கண் இரண்டையும் விளக்கவல்லதாயின், எல்லை காணப்படாத இறைவனது அருளொளி நம் உள்ளத்தில் எழுங்கால் அஃது அங்குள்ள அறியாமையை முற்றும் நீக்கு மென்பதுங் காட்டினார். அமிழ்தம்-பால். கதிர்கள் - ஒளிக்கம்பிகள். கணைகள் - அம்புகள். கட்புலன் - கண் அறிவு. வியத்தகும் - பாரட்டத்தகும். அளப்பு அரிது - அளந்து சொல்லுதல் அரிது. சூறை - சுழல்காற்று. திரிபு - நிலைமாறல். இயக்கம் - நடமாட்டம். மக்கள் வாழ்க்கையின் நிலையாமைக்கு வான் நிழலும், உயிர் உடம்பில் உயரத்தில் உலவும் வானம் ஓயாமற் காற்றால் உந்தப்பட்டு ஓடிக்கொண்டே யிருத்தலின், கீழே நிலத்தின் மேற் படும் அதன் நிழலும் ஓரிடத்தும் நிலைபெறாமல் ஓடிக்கொண்டேயிருக் கின்றது. அதுபோலவே மக்கள் வாழ்க்கையும் நிலை பெறாமல் விரைந்து சென்று மறைந்து போகின்றது. இனி, நேற்றுக் கண்ட கனவு கண்ட அப்பொழுதே மறைந்து போதல் போலவும், அது திரும்பத்தோன்றி இன்று காணும் கனவொடு தொடர்பு பட்டு நிகழாமை போலவும், ஒரு நேரத்தில் ஓருடம்பில் நின்ற உயிர், நின்ற அந் நேரத்திலேயே அதனை விட்டுப் போதலுந், திரும்ப அதன் கண் வந்து புகுந்து தொடர்புற நில்லாமையும் கண்டு கொள்க; இப்பகுதி முதல் நூலிலிருந்தே மொழி பெயர்த் துரைக்கப்பட்டதாகும். ஆவது வரிமுதல் அடிசன் எழுதிய கட்டுரை நேரே மொழி பெயர்த்துரைக்கப்படுகின்றது. மலைக்குவடு - மலையுச்சி. ஆடை - போர்வை. நண்பகல் - நடுப்பகல், நள் என்பது நண் எனத் திரிந்தது. இளமரக்கா - முற்றா மரங்கள் உள்ள சோலை. வேய் - மூங்கில். சிலிர் சிலிர்ப்பு - மயிர்க்கூச் செறிதல்; புல்லாங்குழல் இசை கேட்கும் இன்பத்தால் மயிர் சிலிர்க்கும். கன்னற்பாகு - கரும்பின் சாறு. இம்மைப்பிறவி - இப்போதுள்ள பிறப்பு. நுகருதல் - உண்ணல். துறக்கம் - மேல் உள்ள இன்ப உலகம். துய்த்த - நுகர்ந்த. அரம்பைமாதர் - துறக்கவுலகத்தில் உள்ள அழகிய மாதர். எழில் - அழகு. இசைக் கருவிகளான : யாழ் குழல் தாளம் முழவு முதலியன. தீவிய - இனிய, இப்பிறவியிலிருந்த காலத்து நல்வினை தீவினைகளைச் செய்தோர், இவ் வுடம்பை விட்டபின்னும் ஆவி வடிவில் இந்நில வுலகத்திற் கருகே இயங்குதலுண்டு. இது மரணத்தின் பின் மனிதர் நிலை என்னும் நூலிற் கண்டு கொள்க. உரையாடினால் - பேசினால். இசைத்த - ஒலிப்பித்த, முறுவலித்து - புன்சிரிப்புகொண்டு. நல் உரை - நற்சொல்; கூறி - சொல்லி. வெருட்டி - வெருளச் செய்து, துரத்தி. கீழ்ப்பால் - கிழக்குத்திசை. பள்ளத்தாக்கு - மலைகளின் இடையே அமைந்திருக்குங் குழிந்த நிலம். ஒழுகுவது - ஓடுவது. மக்கள் வாழ்க்கையின் இயல்புகளை அப்பள்ளத்தாக்கிற் காணப்படும் காட்சிகளோடு பொருந்த வைத்துக் காட்டுகின்றார். துன்பவேலி - துன்பங்களுக்கு இருப்பிடம். மக்கள் வாழ்க்கையில் வருந்துன்பங்கள் ஒரு பெரும்பள்ளத்தாக்காகவும், அத்துன்பங்கள் எல்லாம் நேற்று இன்று நாளை என்னுங் கால ஓட்டத்தைப்பற்றி நிகழ்தலின் அக்கால ஓட்டம் அப்பள்ளத் தாக்கினூடு சுருண்டு ஓடும் ஒரு நீர்ப்பெருக்காகவும், உலகத்தின் தொடக்கமும் அதன் முடிவும் எவரானும் அறியப்படாமையின், அவ்விரண்டும் அந்நீர்ப் பெருக்கில் இருண்டு இடையே தோன்றிய நம்மக்கட் பிறவியின் வாழ்நாள் அந்நீர்ப் பெருக்கின் நடுவே காணப்படும் ஒரு பாலமாகவும், மக்கள் வாழ்க்கைக்கு வரையறுக்கப்பட்ட நூறு ஆண்டுகளும் அப் பாலத்தில் அமைந்த நூறு கண் களாகவும், அவரவர் தந் தகாச் செயல்களால் நூறாண்டு நிறைதற்கு முன் எழுபதாண்டுக்குள் இறந்து போதலின், மற்றை முப்பதாண்டுகளும் அப்பாலத்தில் உடைந்துபோன கண் களாகவும் உருவகப்படுத்திச் சொல்லப்பட்டன. திணிந்த - நெருங்கிய. ஏது - இயைபு, காரணம் : ஏதிலார் என்னும் பழைய தமிழ்ச் சொல் இயைபு இல்லார் எனப் பொருள் தருதலின் இதனை வடசொல் லென்றல் பொருந்தாது; ஏது என்னுந் தமிழ்ச் சொல்லே ஹேது எனத் திரித்து வடநூலா ரால் வழங்கப்பட்டது. வினவினேன் - கேட்டேன். வரையறுக்கப் படும் - எல்லை கட்டப்படும்: பகுதி - பங்கு. வாணாள் - வாழ்நாள். நோக்குதல் - உன்னிப்பாய் பார்த்தல். நுறுங்குதல் - நொறுங்குதல்; பொடி படுதல். மொத்தம் - தொகை. இறைவன் முதன்முதல் மக்களைப் படைத்த காலையில் அவர்க்கு ஆயிரம் ஆண்டு வாழ்நாள் அமைத்தானென்பது விவிலிய நூல் வழக்கு. வாழ்நாள் என்கின்ற பாலத்தின் இடையிடையே பொருத்தப்பட்ட கள்ளக் கதவுகளாக உருவகப் படுத்தப்பட்டவை, மக்கள் தம் பொருந்தாச் செயல்களால் வருவித்துக் கொள்ளும் நோய்களேயாகும். காலம் முதிரா முன்னரே இறந்தொழிவதற்கு இந்நோய்களே ஏதுவாக இருத்தலால், மக்கள் சடுதியிற் றவறிக்கீழே வெள்ளத்தில் வீழ்தற்கு வாயிலாய் அப்பாலத்தில் அமைக்கப் பட்ட கள்ளக்கதவுகளாக இவை தம்மை உருவகப்படுத்தினார். அப்பாலத்தின் முதன் முனையில் தொங்குங் கரிய வானம் வாழ்நாள் துவக்கத்திற்கு ஓர் அடையாளமாகலின், அதனைக் குழந்தைப் பொழுதிலே யணுகிய மக்கள், தாய் தந்தையர் வழிவந்த பல்வகை நோய்களாற் பற்றப்பட்டு இறந்தொழி தலைத் தெரித்தற் பொருட்டு அங்கே அக் கள்ளப்படுகுழிகள் பற்பல உள என்றார். நுழைவாயில் - உட்புகும் இடம். பாலத்தின் நடு வென்றது மக்கள் வாழ்நாளின் நடுப்பகுதி. அது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து ஆண்டு வரை யிலுள்ள காலம்; அக்காலத்திற் பெரும்பாலார் இறந்து படுதலின், அவ்விடத்திற் செல்லச் செல்ல மக்களின் தொகை சுருங்கி விட்டதென்றார். அப்பாலத்திற் பழுதுபடாதிருந்த கண்கள் என்றன, நோயில்லாத இளமைக்காலமேயாம்: அக் காலத்தில் மக்கள் தொகை பெருகியிருத் தலின் முழுமையாயிருந்த கண்களின் மேல் அவரது தொகை மிகுந்த தென்றார். பழுதுபட்ட கண்களென்றன நோயாற் பற்றப்பட்ட காலங்கள்; அக்காலங்களிற் சிறிது உயிர் பிழைத்திருந்தோரும் நாட் செல்லச் செல்ல இறந்து பட்டமை அறிவித்தார். தெற்றுப் பட்டு - தடைப்பட்டு. நீர்க்குமிழிகள் என்றன பல்வகைச் சிற்றின்பங்கள். கொடுவாளும் அரிவாளும் ஏந்தி நின்று, வழிவந் தோரை அப்படுகுழிகளிற் புகுத்தி வீழ்த்தினோர், களவு, கட்குடி, சூது, ஊனுணா, விலைமாதர். இத்துணை - இவ்வளவு. எருவை- கருடன், பருந்திலொரு வகை. ஆடவன் - ஆண்மகன். கூற்றுவன் - உயிரை உடலினின்றுங் கூறுபடுத்தும் ஒரு தெய்வம். தருதல் மாலைத்து - தருதலை இயல்பாக உடையது. தன் அகத்தே - தன்னுள்ளே. செறிவு - நிறைவு. ஒருமிக்கும் - ஒன்றுகூடும். குழாம் - கூட்டம். சேய்மை - தூரம். படுகர் - பள்ளம். புயல் - மேகம். செறிந்து - நெருங்கி. குடா - வளைந்த நீர்நிலை. இடை ஒழுகும் - நடுவேயோடும். நறு - நல்ல மணம். தளிமம் - படுக்கை. ஆர்ப்பு - ஒலி; விரகிய - கலந்த, துளும்புதல் - வழியும்படி நிறைதல். வாயிலாக - வழியாக. புத்தம் புதிய - மிகப் புதிய. எக்கர் - குவிக்கப்பட்ட மணல்மேடு. அறம் வழுவாது - தருமத்தினின்றுந் தவறாது. உறையுள் - தங்கும் இடம். ஏற்றம் - மேன்மை; இணங்க - இசைய; பல திறப்பட்ட - பலவகைப் பட்ட. வசதி - இடத்தின் நன்மை, விடுதி - தங்குமிடம்; பெறற்பாலன - பெறு தற்கு உரியன; இப்பெற்றித்து - இத்தன்மைத்து. கடியல் - கடிதல், நீக்கல். உரைவரம்பு - சொல்லின் அளவு. உவந்து - மகிழ்ந்து, ஆன்நிரை - பசுக்கூட்டம். கவன்று - கவலை யுற்று. நிகழ்ந்தன - நடந்தவை, அளவளாய் - அளவளாவிக் கொண்டு. 2. படைப்பின் வியத்தகு தோற்றங்கள் அடிசனார் இயற்றிய இவ்வாங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு பதினேழாம் பக்கத்தின் முதலிலிருந்து வருகின்றது. அதற்குமுன் இதன் மொழிபெயர்ப் பாசிரிய ராகிய மறைமலையடிகள் தாம் திருவனந்தபுரஞ் சென்றமையினையும், அங்கே காணப்பட்ட நிலத் தோற்றங்களின் அழகினையும் எடுத்துக் கூறுகின்றார். கழகம் - கல்விபயிலும் இடம்; அறிவுநூல் - தத்துவ சாதிரம் (Philosophy). அப்போது திருவனந்தை அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராய் அமர்ந்திருந்தவர் திருச்சுந்தரம் பிள்ளையவர்களே யாவர். உவந்து - விரும்பி. ஆக்கம் - பெருக்கம். பெற்றி - தன்மை. புறம்பே - வெளியே. சேய்மை - தொலைவு, பொற்றை மலை - மண்மேடாயிருக்கும் மலை. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலையடுத்த இடமும் ஆகும். விருந்து ஓம்பல் - விருந்தினராய் வருவாரைப் பேணல். ஒருகிழமை - ஒரு வாரம். இருபுறத்தும் - இரு பக்கத்திலும். மொழுக்கன் - பெரும்பாலும் மேடு பள்ளமின்றித் தன் வடிவு முழுதும் மட்டமாயிருப்பது. தொகுப்பு - கூட்டம். கான்யாறு - காட்டாறு. வழுவி - தவறி. பிணைந்து - இணைந்து, பின்னலுற்று. அடர்ந்திருக்கும் இலைகள் நெருங்கியிருக்கும். மேல்கவிந்து - மேலே மூடிக்கொண்டு. துறை - இறங்கும் இடம்; தன்னந்தனி - முழுதுந் தனியான தன்மை. செறிந்திருக்கும் - நெருங்கியிருக்கும். துவண்டு - வளைந்து. புதர் - தூறு. அண்டையில் - பக்கத்தில். அரவம் - ஓசை. அமுங்கி - அழுந்தி. ஈரம் துவர்த்தல் - மெல்லிய துணியாற் கூந்தலிற் படிந்த ஈரத்தை எடுத்தல். மருங்கில் - பக்கத்தில். சன்னல் பின்னல் - நெருங்கிய பின்னல். கட்புலனாயின - கண்ணுக்குத் தோன்றின. அளவளாவி - சேர்ந்து துலாவி. விழுது - கொம்புகளிலிருந்து இறங்கும் வேர். அலகு - பறவை மூக்கு. மேனி - உடம்பின் நிறம். பேடு - பெண். கோதி - வகிர்ந்து. வளார் - இளஞ் சிறு கொம்பு; சிறுதுயில் - நிரம்பாத் துக்கம். சீழ்க்கை வாயால் ஊதும் ஒரு வகை ஓசை, இக்காலத்தில் இச்சொல் சீட்டி என மருவி வழங்குகின்றது. கருங்கல் - கரிய நிறம். விலங்கி - குறுக்கிட்டு. மறித்தும் - மறுபடியும். பத்துப்பாட்டுக்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் அதனாசிரியராகிய கபிலர் குறிஞ்சிநில வனப்புகளைச் செவ்வனே அமைத்துப் பாடியிருக்கின்றார்; அவர் மற்றைத் தொகை நூல்களிற் பாடியிருக்கும் பாட்டுகளுங் குறிஞ்சி நில வளங்களையே நன்கெடுத்து மொழிதலின், இவர் அந்நில இயற்கைகளைக் கண்டுணர்ந்து பாடுவதில் மிகச் சிறந்தவராகக் காணப்படுகின்றார். ஆசிரியர் நக்கீரனாருந் தாம் இயற்றிய திருமுருகாற்றுப் படையிற் குறிஞ்சி நில வளங்களை எடுத்தோதுதல் காண்க. இவ்விருவரைப் போலவே பண்டைக் காலத்துச் செந்தமிழிப் புலவர் களெல்லாருந் தாங்கண்ட வளங்களைத் தாங்கண்ட படியாகவே எடுத்து ரைக்குந் தன்மையர்; பிற்றைஞான்றைப் புலவர்போல் தம் மனம் போனபடி பாடும் நீர்மையர் அல்லர். கழிப்பு - கழித்து. அருகாமை - அண்மை, அருகு. நோக்கினேற்கு - நோக்கின எனக்கு; இவ்வரி யிலிருந்து அடிசனாரது கட்டுரை மொழிபெயர்த் துரைக்கப்படுதல் காண்க. சுடர்க்கொழுந்து - ஒளியின் கொடி; திகழும் - விளங்கும். நிறத்தோய்ச்சல் - நிறங்கள் ஒன்றோ டொன்று கலந்து காணப்படல். கச : செக்கர்வானம் - செவ்வானம். வான்மீன்கள் - நட்சத்திரங்கள்; கோள்கள் - கிரகங்கள். கதிர் - ஒளிக்கம்பி. திணிந்து - நெருங்கி. மீன் தொகுதிகள் - நட்சத்திரக் கூட்டங்கள், மின்னுதலின் அவை மீன் எனப் பெயர் பெற்றன; நீர்வாழ் உயிர்களில் ஒரு சாரனவும் மின்னுதல் பற்றியே மீன் எனப்பட்டன; இத்தமிழ்ச் சொல்லே வடமொழியிற் சென்று மீனம் என வழங்குகின்றது. நளி அமிழ்தம் - குளிர்ந்த பால். முழுமதியம் - முழுநிலா. முகிற் குழாம் - மேகக் கூட்டம். ஞாயிறு - சூரியன். பிழம்பு - திரட்சி; ஊடே - நடுவே. நேர்த்தி - திருத்த முள்ளது; தோய்வித்து - கலப்பித்து. வனைத்தான - அழகாய்ச் செய்த. ஓவியம். சித்திரப்படம். துலங்க - விளங்க. இயங்குதல் - செல்லல். சான்றோர் - அறிவானும் நல்லியல்புகளானும் நிறைந்து அமைந்தோர். இடர்ப் படுத்துவதான - துன்புறுத்து கின்ற. தொல்லாசிரியர் - பழைய ஆசிரியர்; இங்கே தொல்லா சிரியரென்று அடிசனாற் குறிப்பிடப் பட்டவர் டேவிட் (David) என்பவரேயாவர்; டேவிட் என்பவர் கூறிய கருத்துக்களை மறைமலையடிகள் இங்கே தமிழ்ச்செய்யு ளாக்கினார்; அச் செய்யுளின் பொழிப்புரை வருமாறு : வானமும், வானத்தில் விளங்கும் நிலவும், வான் மீன்களும், ஓ கடவுளே, நின் கைவிரல் களின் வினையால் ஆக்கப்பட்டன வாகுமென்று ஆராய்ந்து பார்க்குங்கால், இவ்வுலகத்தில் இயங்கும் ஆண்மகனும், அவன் பெற்ற தேன்போற் றித்திக்கும் மழலைச்சொற் பேசுஞ் சிறு பிள்ளைகளும் ஒருபொருளாக விளங்குவரோ! இவ் என்னுஞ் சுட்டு நீண்டு வகரங்கெட்டு னகரச்சாரியை பெற்று ஈன் என நின்று இவ்வுலகம் எனப் பொருள் தந்தது; இச்சொல் இப்பொருட்டாதல் ஈனோர்க் கெல்லாம் இடர்கெட இயன்றது என்புழியுங் காண்க. உரையிட்டார் - சொன்னார். நங்கட்புலனுக்கு முத்துக்கள்போற் றோன்றுகின்ற வான்மீன் ஒவ்வொன்றும் ஞாயிற்று மண்டிலத்தை ஒப்பனவும் அதனினும் மிகப் பெரியனவும் ஆதல் வான்நூலிற் கண்டு கொள்க. குழாம் - கூட்டம், நமக்கு உரிய ஞாயிற்று மண்டி லத்தை, நாம் இருக்கும் இந் நிலவுலகமுஞ் செவ்வாய் புதன் வியாழன் போல, வான்மீன்களாகிய ஒவ்வொன்றனையும் பற்பல கோள்கள் சூழ்ந்து செல்லுதலை வான்நூல்களால் அறிக. நிலைக்களன் - தாங்கும் இடம். விழுமிதய - சிறந்த. துலக்கப்படும் - விளக்கப் படும்; விளக்கத்தால் ஒளிர்கின்றன - ஒளியினால் விளங்கு கின்றன. அத்துணை - அவ்வளவு; சேய்மை - தொலைவு. புல்லிய - கீழ்மையான. துகள் - பொடி. திண்ணம் - மெய்யுறுதி, வரம்பு - எல்லை. வெறிய - வெறுமையான. தொலைவுநோக்கி - கூற; telescope. ஒளிவிரி கதிர் - வெளிச்சத்தைப் பரப்பும் ஒளிக்கம்பி. இங்கே வான் நூலார் ஒருவர் என்றது ஹியூ ஜீநிய (huygenius) என்பவரையேயாம். வரையறுத்தல் - வரம்பு கட்டுதல். ஆற்றல் - வலிமை. பரம்பிய - பரவிய; நிகழ்தல் - நடைபெறுதல். மனக்கற்பனை - மனத்தால் எண்ணிக் கொள்ளப்பட்டது, உண்மையில் இல்லாதது. எங்ஙனம் - எப்படி. வரையறை - அளவறுத்தல். கண்காணிப்பு - மேற்பார்த்தல் (Supervision). புரியாநின்ற - செய்கின்ற; பெருந்தகை - பெருமையுடையோன்; என்பு - எலும்பு. பருப்பொருள் - பரும்படியான பொருள்; யாங்கணும் - எவ்விடத்தும். குழுமி - கூடி; உயிர்த் தொகை - உயிர்களின் கூட்டம். கடைக்கண் - கண்ணின் கடைசி. நோக்கம் - உன்னிப்பான பார்வை. பற்றப்படாத - பிடிக்கப்படாத. மனமடிவு - மன மடக்கம். அஃதாவது துயரம். கருதாது - எண்ணாது. சிறுபான்மை - சிறிது பங்கு. தகைமை - தன்மை; இசையவே - பொருந்தவே. இயங்கவும் - நடை பெறவும். நிலவரைப்பு - நிலப்பகுதி. உற்றுணர்தல் - கருத்தைப் பதியவைத்து உணர்தல்; தினைத் துணையும் - தினையென்னும் அரிசியின் அளவும் கடவுள் தன்னிடத்தே எவ்வகைப்பட்ட குறைபாடும் இல்லாத முழுமுதற் பொருளாயிருந்துங் குறைபாடு மிகுதியுமுள்ள மக்கள் தமக்குள்ள அக்குறைபாட்டினைக் கடவுளுக்கும் ஏற்றிச் சொல்வது வழக்கமாயிருக்கின்ற தென்று உள்ளபடியாகவே எண்ணிப்பார்க்க வல்லதன்று; அதற்கும் ஒரு குறை பாட்டை ஏற்றி வைத்தால்தான் அதனை அது கருத வல்லதாகின்றது. ஒருவன் தன் பகைவனோடு எதிர்த்துப் போராடி அவனை வெல்லல் வேண்டினனாயின், அதற்குக் கருவியாக வேல் வாள் கத்தி பரிசை முதலான படைக்கலங்களை ஏந்திச் செல்கின்றான்; அவனுக்கு அக் கருவிகளின்றிப் போராடமாட்டாக் குறைபாடு உண்மையால், அவன் தான் வழிபடுகடவுளரான முருகப்பிரான், சிவபிரான் என்பவரும் வேலும் முத்தலை வேலும் ஏந்திப் போர் புரிபவராகவே வைத்து வழிபாடு ஆற்றுகின்றான். வேலும் வாளும் இல்லாமற் கடவுள் தான் நினைந்தவளவானே எவற்றையும் அழிக்கவும், அழித்தவற்றைப் பின் ஆக்கவும் வல்லவ னென்று அறிந்திருந்தும், எம்மனோர் அவனை அந்நிலையில் வைத்து வழிபடுகின்றிலர்; இஃது எம்மனோர்க்குள்ள குறை பாட்டினால் ஆயதொன்றாம். இங்ஙனமே ஒவ்வொரு நாட்டிலுள்ளாருந் தத்தமக்குள்ள குறை பாட்டினியல்புக்கு ஒப்பவே கடவுளைப் பலதிறப்பட்ட இழிவான வடிவங்களில் வைத்து வணங்குதல் காண்க. மனச்சாய்வு - அறிவுக்கு ஏலாத தொன்றனிடத்தே மனம்பற்றி நிற்றல். மீண்டும் - திரும்பவும்; முற்ற - முழுதும். ஊடுருவி - வியாபித்து; இடையறாது - நடுவே ஓயாது. இழுக்கு - தாழ்வு, தவறு. ஓருங்கால்-ஆராயுங்கால்; கடவுளுக்கு உலகம் முழுதும் ஓருடம்பாகலின் இவ்வுலகவுடம்பு என்றார். களை கண் -ஆதரவு: இயக்காநிற்கின்றமை - நடத்துகின்றமை; புலன் ஆம் - அறிவுக்குத் தோன்றும், விளங்கும் அறிவுடைய என்றும் வடநூலார் கூறுவர்; அறிவுடையன, ஓரறிவுடைய புன்முதல் ஆறறிவுடைய மக்கள் ஈறான உயிர்கள்; அறிவில்லன மண், புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களும் அவற்றின் கலப்பாலான இவ்வுலகங்களுமாம். ஒருமித்து - ஒன்றுகூடி. பெயர்தல் - ஓரிடத்தைவிட்டுப் பிறிதோரிடத்திற்குச் செல்லல். பரம்பி - பரவி; ஒருபகுதி - ஒருகூறு. வரம்பில் ஆற்றல் - எல்லை யில்லாத வல்லமை : கடவுள் ஓரிடத்தில் ஒருகாலத்திலி ருக்கும் ஒரு வரம்புக்குட்பட்ட பொருளாயின், அஃது அவ்விடத்தில் அக்காலத்திலிருந்து பிறிதோரிடத்திற் பிறிதொரு காலத்திற் போயிருந்தது எனலாம்; மற்று அஃது எங்கும் எக்காலத்தும் இருப்பதாகலின், அதனை இடம்பெயர்ந்து செல்லும் ஒரு பொருளாக உரைத்தல் இழுக்கென்றார். ஒருவாற்றானும் - ஒருவகை யானும். இன்றியமையாது - இல்லாமற்கூடாது, என்பது கட்டாயம் என்னும் பொருட்டாம். தொழிற்கூறுகள் - செயலின் வகைகள். கடவுள் நுண்ணியவற்று ளெல்லாம் நுண்ணியனாகலின் அவனை நம்மனோர் தங் கட்புலனாற் காண்டல் இயலாது; கட்புலனாகாத உயிரை அது புகுந்திருக்கும் உடம்பின் வழியே நாங் காண்டல்போலக் கட்புலனாகாப் பேருயிராகிய கடவுளும் இவ்வுலகமாகிய உடம்பின் வழியாகவே காணப்படுவரென ஆசிரியர் அறிவித்தார். உறைவிடம் - இருப்பிடம். கொள்கலம் - பண்டம்பெய்து வைக்கும் பாண்டம். வெள்ளிடை - வெளி. அமர்தல் - விரும்பியிருத்தல். பெருங்கலம் - பெரிய இடம்; இந்தப் பெருவெளி இறைவனது அருளுணர்வுக்கு இருப்பிடம் என்று கூறியவர் சர் ஐசக் நியூடன் (Sir Isaac Newton) என்னும் ஆங்கில வானூலாசிரியரேயாவர். அண்டை - அயல். ககூ : இயக்கம் -நடமாட்டம். ஐம்பொறிகளாவன : மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன; அவ்வைம் பொறியுணர்வு களாவன : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. விலங்குகள் - மிருகங்கள்; மக்களுடம்பு நெடுக்காயிருக்க, மிருகங்களி னுடம்பு குறுக்கா யிருத்தலின் அவை விலங்கு எனப்பட்டன; விலங்கு - குறுக்கு. உன்னிப்பு - கவனிப்பு. கட்டுப்பாடு - கடமை. முற்றுணர்வு - எல்லாம் ஒருங்கே யுணரும் உணர்ச்சி. கடுகி - விரைந்து. படைப்பு - படைக்கப்பட்ட உலகம். யாண்டு - வருஷம், ஆண்டு எனவுந் திரிந்து வழங்கும். ஒரு பெற்றிப்பட ஏகி - ஒரே தன்மையாகச் சென்று, என்றது விசை குறையாமல் ஒரேயளவான விசையுடன் சென்று என்றபடியாம். கழியினும் - நடந்தாலும். அகத்திடப்பட்டு - உள்ளிடப்பட்டு. தெற்றென - தெளிவாக. கடவுளினி யல்பைப் பற்றிக் கூறுகின்றுழி முதனூலாசிரியர் ஜாப் (Job) என்னும் முனிவரது கருத்தை எடுத்து மொழிந்தனராயினுங் காரைக்காலம் மையாரது கருத்தும் அவரது கருத்தைப் போலவே இருத்தலின் தமிழுக்கு ஏற்க அம்மையாரது திருப்பாட்டை மொழிபெயர்ப்பாசிரியர் இங்கே குறிப்பாராயினர். அப்பாட்டின் பொழிப்புரை வருமாறு பெருமானே, தேவரீர் என்னை நுமக்கு அடிமையாகக் கொண்ட அந் நாளிலும் நுமது திருவுருவத்தைக் காணப் பெறாமலே நுமக்கு அடிமைப்பட்டேன்; அடிமைப்பட்டு நுமக்கு அணியளாய் நிற்கும் இந்நாளிலும் நுமது திருவுருவத்தைக் கண்ணாற் காணமாட்டாதேன் ஆயினேன்; எந்நாளி லாயினும் எவரேனும் என்னைத் தலைப்பட்டு நும் பெருமான் உவ்வகையான உருவம் உடையன்? என்று வினவினராயின் அவர்க்கு யாது விடை சொல்வேன்! ஆதலால் நினது திருவுருவம் எவ்வுருவினது? அஃது யாது? அதனைக் கூறுவாயாக என்றபடி; இதன் கருத்து என்னையென்றாற், கடவுள் எங்கும் நிறைந்த பொருளாகலின் அதனை ஓரிடத்தில் ஒருவடிவிற் காண்டல் இயலாதென்பதாம்; எந்தையார் அவர் எவ்வகை யார்கொலோ எனவும், இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே எனவும் போந்த திருமொழிகளும் இக்கருத்துப்பற்றியே எழுந்தனவாம் என்பது. பணி - தொழில், இறைவன் செய்யுந் தொழிர்களாவன: படைத்தல், காத்தல், அழித்தல் என்பன. குழைந்து - உருகி; விளம்பினார் - சொன்னார். ஒருதலை - உறுதி. பயவா - கொடாத. குறியாது - கருதாது. திருவுளம்பற்றல் - உள்ளத்தில் அருளோடும் நினைத்தல். இச் சொற்றொடர், கடவுளிடத்தும் அவனருள் பெற்ற அடியா ரிடத்தும் வழங்கப்படுவதாகும். கடைக் கணிக்கின்றான் - கண்ணின் கடைசியாற் பார்த்து அருள்புரிகின்றான். இயலாமை யால் - முடியாமையால். 3. முருகவேள் கனவிற்கண்ட துன்பமலை திரட்டி - சேர்த்து; ஒருதுறை - ஓர் இடம்; ஏற்றம்-உயர்வு. நிகராக - சமமாக. இவ்வரியிற் சான்றோர் ஒருவர் என்றது, கிரேக்கருட் பேரறிவினராய் விளங்கிய ஸாக்கிரட்டீ (Socrates) என்பவரை யேயாம்: ஏனை - மற்ற. இங்கே குறிப்பிடப்பட்ட மற்றையொரு சான்றோராவார் ஹொரே (Horace) என்பவரே யாவர். நுகர்ச்சி - அனுபவம். சாய்மானக் குறிச்சி-சாய்ந்த படியாய் அமரும் நாற்காலி; நாற்காலியைக் குறிச்சி என்பது பாண்டியநாட்டு வழக்கு. அயர்ந்தது - தன்னை மறந்தது; கவிந்தது - மூடியது. அறக்கடவுளின் அரசிருக்கை மண்டப அமைப்பின் அழகுரை முதல் நூலில் உள்ளதன்று; இது மறைமலையடிகளே இயற்றிச் சேர்த்ததாகும். சடுதியில் - திடுமென. புனிதம் - பரிசுத்தம், தூய்மை. என்முகமாய் - என்னை நோக்கி, யானிருக்கும் இடமாய். பசுங்கதிர் பொழியும் - பசிய ஒளியைச் சொரியும். அரசிருக்கை மண்டபம் - அரசன் ஐம்பெருங் குழுவும் எண் பேராயமுஞ் சூழ இருந்து, குடிமக்களின் முறையீடு கேட்டு அறம்புரியும் மண்டபம்; இதனை நாளோலக்க மண்டபம் என்றுங் கூறுப. முகடு - உச்சி; பொற்றகடு வேய்ந்து - பொன்னாற் செய்த இலைவடிவினால் மூடி. வழு வழுப்பு - காலடிவைத்தால் வழுக்கும்படியான அத்துணை மேல்மட்டம். இழைத்த- சீவிய; சலவை என்பது வண்ணானால் வெண்மையாக்கப் பட்டது; மிக வெண்மையான கருங்கல் சலவைக்கல் எனப்படும். சலவைக் கற்களெல்லாம் பெரும்பாலும் வெண்ணிறத் தனவே யாயினும் அவற்றுட் சிறுபான்மைய கருநிற முடைமையால், அவற்றை நீக்குதற்கு ஈண்டு வெள்ளைச் சலவைக்கற்கள் எனப் பிறிதினியைபு நீக்கும் அடையடுத்து வந்தது. . பொருத்துவாய் - இரண்டு கற்கள் பொருத்தப்பட்ட நடுமூட்டு; அழுத்துதல் - உட்செலுத்துதல்; பதித்தல் - உட்செலுத்துதலொடு செலுத்தப் பட்டவற்றை ஒரு முறைப் படவைத்தல். படங்கு-மேற்கட்டி. பதித்தல்-உட்செலுத்து தலொடு மேற்கட்டி. விடுபூ - கையாற் சிதறவிடப்பட்ட பூக்கள்; கமழ்ந்தன - நல்ல வாசனை வீசின: குயிற்றி - பதித்து. அரியணை-சிங்காதனம், சிங்கத்தின் வடிவு தாங்கும் வகையாக அமைக்கப்படுதலின் இஃதிப் பெயர் பெற்றது. வறிதாய் - வெறுமையாய். வைகறை - விடியற் காலை. சங்கக்குழை - சங்கினாற் செய்யப்பட்ட குண்டலம்; துலங்கல் - விளங்கல். முறுக்கு - புரி. பொருப்பு - மலை. பிறைக்கொழுந்து - பிறையாகிய கொழுந்து; நகும் - வெள்ளிய ஒளி விரிக்கும்; பிறையாகிய பிள்ளை சிரிக்கும் என உரைப்பினுமாம். சடைக் கற்றை - சடைத்தொகுதி. உரைவரம்பு - சொல்லின் அளவு; அமையாத - அடங்காத. அவரவர் செய்த நல்வினை தீவினை கட்கு ஏற்பத் துறக்க நிரயங்களைத் தரும் அறக்கடவுள், சிவபிரானுக்கு அடியவராய்ச், சிவபிரானோ டொத்த திருவுருவம் உடையரென்பது நூல்களால் நுவலப் படுதலின், இங்கே அப்பெருமானுக் குரிய அடையாளங்களே இவர்க்குஞ் சொல்லப்பட்டன. முதல் நூலிற் போந்த ஜூபித்தர் (Jupiter) என்னுங் கடவுளுக்குரிய திருவடையாளங்களுஞ் சிவபிரான் திருவடையாளங் களோடு ஒத்தலின், பழைய உரோமர் வணங்கிய தெய்வமுஞ் சிவபிரானே போலும்!. அளப்பரிய - அளவிடுதல் கூடாது. பணியாளர் - ஏவல் செய்வோர். அச்சக்குறிப்பு - உள்ளத்தில் உண்டான அச்சம் உடம்பின்கட் புலப்படும்வகை. ஆங்காங்கு - அவ்வவ்விடத்தில். நிறைகோல் - நிறுத்து அளக்குந் துலாம். நடுநிலை வழாது - நியாயந் தவறாது. பாங்கு - தகைமை. ஈண்டுக் கூறப்பட்ட அறக்கடவுளின் திருவடையாளங்களை ஒவ்வொன்றும் ஒவ்வோர் உண்மைப்பொருளை அடக்கிநிற்றல் அறிந்தார்வாய்க் கேட்டுணர்க. ஆடவர் - ஆண்மக்கள். உது - உதிரிற்றோன்றும் இடம். கட்டளை-உத்தரவு; வரைந்து வைத்தல்-இதற்கென்று பிரித்துத் தனிவைத்தல். பொட்டைத் திடல் மரஞ் செடி கொடி மலை முதலான ஏதொரு பொருளும் இல்லாத வெறு நிலப் பரப்பு. குழுமி - கூடி. போந்த-வந்த. முகில் - மேகம்; ஊடுருவி - நடு நுழைந்து. பெருக்கக் கண்ணாடி சிறிய பொருள்களைப் பெரியவாய்க் காட்டும் ஒருவகைக் கண்ணாடி, (Microscope) கோளாறு - குழப்பம், விகாரம். வெருவுதல் - திடுமென அஞ்சுதல். வீண்எண்ணம் என்பது ஒரு பெண் மகளாக உருவகப் படுத்தப் பட்டமையின், அவ்வீண் எண்ணத்திற்குரிய இயல்புகள் எல்லாம், அப் பெண்ணினிடத்துள்ள பொருள் களாகவுந் தன்மைகளாகவும் உருவகப்படுத்தப் பட்டமை காண்க. கிளர்ச்சி - மனஎழுச்சி. பொதிந்து - உள்ளிட்டுக்கட்டி. பொறை-பாரம்; கதறுதல்-வாய்விட்டு அலறுதல். பொதி- மூட்டை; உன்னிப்பு - கவனம். வறுமை - தரித்திரம், இல்லாமை. செருக்கு - அகங்காரம். மனைக்கிழத்தி - இல்லத்திற்கு உரியாள் என்றது மனைவியை. கணை-அம்பு. காதல் என்பது இளைஞராயுள்ள ஆடவர்க்கும் மகளிர்க்கும் இடைநிகழும் பேரன்பு. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு, பெருமுது மகளிர். பெரிது முதிர்ந்த பெண்டிர். திரைந்த - சுருங்கிய. கறை-கறள்; பல்மேல் ஏறிய அழுக்கு; விரவி-கலந்து. இறும்பூது - வியப்பு, அதிசயம். பரிய-பருத்த; முரிப்பு - எருத்துமாட்டின் பிடரியண்டையுள்ள சதைப் பொதி போல்வது. தசை - சதை. மடமை - பேர் அறியாமை. பொல்லாங்கு - தீங்கு. கொந்தளிக்கும் - மும்முரப்படும்; விழைவு - இச்சை, மிகுந்த விருப்பம், Passion. மனச்சாய்வு - ஆராய்வின்றி ஒன்றனைப் பற்றுதல், Predisposition. மன நொய்ம்மை - மனவுறுதி இல்லாமை, frailty. இழைத்த - செய்த. காவாலி- தெற்றென-தெளிவாக: அவற்கு- அவனுக்கு; `அவர்க்கு என்பதற்கும் அவற்கு என்பதற்கும் உள்ள வேறுபாடு கருத்திற்பதிக்கற் பாலது; முன்னையது பலர்பால், `அவருக்கு எனப் பொருள்படும்; பின்னையது ஆண்பால் `அவனுக்கு எனப்பொருள்படும். பட்டி மகன் - குறும்பன், ஊர்சுற்றி, a rogue. நாண் தகைமை - தீயன செய்தற்கு மனங் கூசுதல். சூர் அணங்கு - அச்சத்தால் வருந்துந் தெய்வப் பெண்; சூர், அணங்கு என்னும் இருசொற்களும் பெரும்பாலும் ஒரு பொருள் மேலன; தன்னந்தனி - மிக்க தனிமை. மனத்தடுமாற்றம் - மனக்கலக்கம். மருண்டேன் - வெருண்டேன். முகமூடி யென்பது முகத்தின் வடிவாகச் செய்த ஒரு படல், சில விளையாட்டுக் காலங்களில் இத்தகைய படலை முகத்தின் மேலணிந்து முகத்தை மறைத்தல் ஆங்கிலர்க்குள் ஒரு வழக்கம், இதனை mask என்பர். வாய்மை-உண்மை. உறுப்பு - அங்கம், அவயவம். போகட்ட மையால் - போக விட்டமையால், போகவிடு என்பது சிதைந்து `போகடு எனவும் `போடு எனவும் வழங்கும். விடுதி - விடுதலை. உவகை - களிப்பு. எய்தினேன் - அடைந்தேன். குழம்பல் - அடிதலை மாறுதல். அத்தாணி மண்டபம் - அரசிருக்கை மண்டபம். உவந்து - மகிழ்ந்து. அலைசல்-இங்குமங்குமாக நடத்தல்; விரைசல் - விரைவு, சருக்கு. போற்றத்தக்க-வழுத்தத்தக்க. காணியாட்சி - நிலம் முதலான உரிமைப் பொருள்களை ஆளல்: உரிமை - சுதந்திரம், அல்லது உரிமைக்காரன் a heir. எடுப்புப்பிள்ளை - சுவீகார புத்திரன். வெகுண்டு - கோபித்து. கடன்-கடமை. வெரு-சடுதியிற் றோன்றும் அச்சம். பெயர்த்தும் - மறுபடியும். இரந்து-கெஞ்சி, மறித்தும்-மறுபடியும். பொருத்துப்பிடிப்பு - மூட்டுகள் இளக்கமா யில்லாமல் விறைத்துப் போதல். ஊதியம் - இலாபம். நோக்குவார் - பார்ப்பவர். பண்டமாற்று-ஒரு பொருளைக் கொடுத்துப் பிறிதொரு பொருளைக் கைக்கொள்ளல். வாணிகம்-வியாபாரம்; வாணிகம் தமிழ்ச் சொல், வியாபாரம் வடசொல். சிற்றிடை-சிறுத்த இடுப்பு. செய்துழி - செய்தவிடத்து. இடர்பயப்பது - துன்பந் தருவது. ஒரு தலையாக - நிச்சயமாக. உழத்தல் - வருந்தல். அனையவும் - எல்லாம். நிலையிடுதற்கு தீர்மானஞ் செய்தற்கு; புகுதேன்-நுழையேன். மொழிந்த - சொல்லிய. இமில்-முரிப்பு, எருதின் பிடர் மேலுள்ள பொதித்தசை. மகளிர்-பெண்மக்கள். நெக்குடைந்தது - நெகிழ்ந்து உருகிற்று. விளம்பி-சொல்லி. துணையானே - அளவானே. கோணங்கி - வளைந்த வடிவ முடையோன், அல்லது வளைந்தாடுவோன். அன்னோ - ஐயோ. பகடி - பரிகாசம். மேல் இதழ் - மேலுதடு. தெற்றுப் பட்டது - தட்டுப்பட்டது; முட்டியது. ஏளனம் - பரிகாசம். தீவிய-தித்திப்பான. குப்பி-வயிறு பெருத்து வாய் சிறுத்த ஒருவகைப் பாண்டம். கடைப்படி - கடைசி. முறையீடு - தமக்குள்ள குறையினைக் கூறுதல். ஈந்தருளுதல் - கொடுத்து அருள் செய்தல், உயர்ந்தோர் தாழ்ந்தோர்க்குக் கொடுத்தலை ஈதல் என்ப. உய்க்கும்படி - கொண்டு வந்து சேர்க்கும்படி. கதுமென - சுருக்கென. ஒழுகலாறு - நடக்கை வகை: நேர்மை - செவ்வை, steadlines. மான்மருட்டும்விழி - தன் அழகினால் மானையும் மருளச் செய்யுங் கண். புல்லிப் பார்த்தல் - தழுவிப் பார்த்தல். பருமன் - பருத்த அளவு. ஏற்றபடி - இசைந்தபடி; நுகர்ந்து - அனுபவித்து. சான்ற - மிகுந்த; சொல்லுறுதி - நன்மை பயக்குஞ் சொல், உறுதிச் சொல் என்பது முன் பின்னாய் நிலை மாறியது. வழிப்பட்டு - உட்பட்டு; ஒழுக - நடக்க. நன்னெறித் திறங்கள் - நல் நடையின் வகைகள். மனம் அழுங்கல் - மனம் வருந்தல். ஏலாமை - இயலாமை, கூடாமை. கடைப்பிடித்து - உறுதியாய்ப் பிடித்து. 4. மராடன் கண்ட காட்சி இக்கட்டுரை முழுதும் அடிசன் ஆங்கிலத்தில் எழுதிய படியே பெரும்பாலும் மொழி பெயர்த்துரைக் கப்படுகின்றது. இடையிடையே முதனூலிலில்லாத சில வேறுபாடுகளும் உண்டு. இம்மை யுலகு - இப் பிறப்பிற்குரிய உலகு. மறுமையுலகு இறந்தபின் மேலுலகு. கையாளும் பொருட்டு - எடுத்து வழங்கும்பொருட்டு. சவம்-பிணம். சங்கரமதம் என்பது கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த சங்கராசாரியாரால் நாட்டப் பட்ட கொள்கை. எண்ணமே உலகமாய்க் காணப்படுகின்ற தல்லாமல், எண்ணத்தின் வேறாய் உலகம் என்பதொரு தனிப்பொருள் இல்லையென்றுங் கடவுளெனவும் உயிரெனவும் இருபொருள் இல்லை, கடவுளே அறியாமையாற் பற்றப்பட்டு உயிர்களாய்த் தோன்றுகின்ற தென்றுந், தன்னைக் கடவுளாக நினைதலே வீடுபேறாகுமல்லது உயிர் கடவுளைச் சென்று தலைக்கூடுதல் அஃதாகதென்றுஞ் சங்கராசாரியார்தாம் இயற்றிய வேதாந்த சூத்திர வுரையிலே கூறினார். இவர்க்கு முன் இருந்த பௌத்தர் கொள்கைகளையே சங்கராசாரியாருங் கைக் கொண்டமையால் இவரது மதம் பிரசிந்தபௌத்தம் அல்லது மறைந்த பௌத்தம் எனவும் வழங்கப்படும். இனி, அப் பௌத்த மதம் மாயாவாதம் எனவும் பண்டை நாளிற் பெயர் பெற்றமை யால், அதனோடொப்பதாகிய சங்கராசாரியார் கொள்கையும் பின்றை நாளில் மாயாவாதம் எனப் பெயர் பெறலாயிற்று. முதல் நூலிற் சொல்லப்பட்ட மாயா வாதக் கொள்கை ப்ளேடொ (Plato) என்னுங் கிரேக்க அறிஞரதாகும்: இவர் கிறித்து பிறப்பதற்கு முன் ஐந்தாம் நூற்றாண்டிலும் நான்காம் நூற்றாண்டிலும் இருந்தவர். பாற்கரியமதம் என்பது பால் தயிராயினாற்போலக் கடவுளே உலகும் உயிருமாகத் திரிந்த தென்றுரைப்பது. பாகரர் என்பவரால் இக் கொள்கை நாட்டப்பட்டது பற்றி இது பாகரமதம் எனப்பட்டது; இதனைப் பரிணாமவாதம் என்றும் வழங்குவர்; இம்மதத்தின் இயல்பினையும், மேற்காட்டிய மாயாவாதத்தினியல் பினையுஞ் சிவஞான சித்தியார் பரபக்கத்திற் கண்டுகொள்க. எடுத்துக்காட்டு - உதாரணம். காந்தக்கல் இரும்பைத் தன் மாட்டு இழுப்பது. உரையில் - கட்டுரையில். ஆற்றல்-வலிமை. நிலை நிறுத்துவான் புகுந்து - நிலையிடுதற்குப் புகுந்து. இங்ஙனங் கூறினவர் ஆல்பர்ட் மாக்ந (Albertus Magnus) உசாவி-கேட்டு. மொழி பெயர்ப்பாளன் - ஒரு மொழியில் சொன்னவைகளை மற்றொரு மொழியில் விளக்கிச் சொல்வோன். ஏவினான் - தூண்டினான். வினா- கேள்வி. குடைவு - விளைவு. பிணைந்தது - கலந்தது; அடர்ந்த - நெருங்கின. சுவடு - அடி அழுந்தின அடையாளம்; ஒற்றடிப் பட்டம் - ஒற்றை ஆள் மட்டும் செல்லத் தக்க வழி. ஒன்று அடி - ஒற்றடி என வலித்தது. கோளரி - ஆண் சிங்கம்: போழ்ந்து - பொழுது. படைக்கலம் - ஆயுதம். பற்றுகையில்-பிடிக்கையில். அலைசல் - நெருக்கமாய் இல்லாமை, இடையிடையே வெளிகள் உண்மை. முன்னினான் - எண்ணினான். புதல் - குற்றுசெடி. பிறிது - வேறு. பம்பிய - நெருங்கி வளர்ந்த. குறுங்காடு - குறிய மரங்கள் செடிகள் உள்ள காடு; அகத்தே-உள்ளே. அரண் - காவற் கோட்டை மதில்; கோலிய-வளைந்த. ஊன் - இறைச்சி, தசை. குருதி - இரத்தம். தீவியமணம் கமழும் - இனிய நாற்றம் மணக்கும். தென்றற்காற்று - தென் பக்கத்தே பொதியமலையிலிருந்து வரும் மெல்லிய இனிய காற்று; அமெரிக்காவுக்கு இத்தென்னாட்டிலிருந்து செல்லுந் தென்றற் காற்று இல்லையாயினும்; இங்குவீசுந் தென்றற் காற்றோடு ஒப்பது அங்கும் உண்டாதலின் அதனை இப் பெயராற் கூறினார். நறுமணம் - நல்ல மணம். சில்-வட்டச் சிறுதகடு. தறி - கோல், கத்தியால் தறிக்கப் பட்டமையின் தறியெனப்பட்டது. புரிவதில் - செய்வதில். .எஞ்ஞான்றும் - எந்நாளிலும். அவாவினான் - விரும்பினான், ஆசைகொண்டான். காதற்கிழமை - பேரன்பின் உரிமை. திண்ணிதாக - உறுதியாக. பிணிக்கப்பட்ட - கட்டப்பட்ட. வதுவை - கலியாணம், மணம். ஆறாத்தில்லை, எனத் தமிழில் திரிக்கப்பட்ட பெயர் முதல் நூலில் Yaratilda என்று உளது. பகர்வது - சொல்வது. பருஉடம்பு - தூலசரீரம், ஊன்உடம்பு; பொறை - சுமை. அளவளாவிய பின்னர் - மனங் கலந்திருந்த பின், மலிந்த - நிறைந்த. ஒப்பனை - அலங்காரம். மனக் கற்பனை - மனத்தாற் கற்பித்துக் கொள்ளப்பட்டது, பாவனை, imagination. உறையுள் - இருப்பிடம்; வீடு. கொணர்ந்து - கொண்டுவந்து. மகார் - சிறுகுழந்தைகள். கவரும் பொருட்டு - பறித்துக் கொள்ளும் பொருட்டு. 5. முருகவேள் கனவிற்கண்ட ஓவியச்சாலை ஓவியச்சாலை - சித்திரபடங்கள் எழுதும் இடமும் அவை வைக்கப்பட்டிருக்கும் இடமுமாகும். இக்கட்டுரையும் பெரும்பாலும் முதல் நூலில் உள்ளபடியே யெடுத்து மொழிபெயர்த் துரைக்கப்படுகின்றது. ஊதைக்காற்று - குளிர்காற்று. தீட்டிய - சித்திரித்த, வரைந்த. முகில் - மேகம். மகிழ் - மகிழ்ச்சி; பயவா - தராத; கார்காலம் - மழைக்காலம். துயரம் - துன்பம்; கலைத்து - குலைத்து. மினுக் கிட்டு - ஒளியால் மின்னுமாறு செய்து. கிழமை - வாரம். அடுத்தடுத்து - அடிக்கடி; ஈடுபடல் - மனம்பதிந்து நிற்றல். முடிய - முற்ற. கூடம் - கூடிய இடம், சூழப் பல அறைகளை யுடைத்தாய் ஒருபால் இடமகன்ற மனைப் பகுதி; இதுவும் வடமொழியிற் சென்று வழங்கும் ஒரு தமிழ்ச் சொல். நிரல்பட - வரிசையாக. கோலுதல் - வளைத்தெழுதல். நூனாழி - நாடா: பிணித்து - கட்டி. ஆடவன் - ஆண்மகன். அகவை - வயது. புன்முறுவல் - புன்சிரிப்பு. சூழ்ச்சித் துணைவர் - ஆலோசனை சொல்வோர், Privy-counsellors. எக்களிப்பு - மிக்க மகிழ்ச்சி. பிலுக்கு - பகட்டு. பசப்புக்காரி - மயக்குவோள். தொங்கல் ஆடைகள் - தொங்கவிடப்பட்ட துணிகள். ஏற்றன - இசைந்தன. பகட்டான - மினுக்குள்ள, குழைந்து - ஒன்றாய்க் கலந்து மசித்து. படி - ஒன்றைப்போல் எழுதப்படுவது. உடை - உடுப்பு. கோமாளி - நகை விளைப்போன். துகிலிகை - எழுதுகோல். வெருக்கொள்ளுதல் - திடுமென அச்சங் கொள்ளுதல். துப்புரவு - சுத்தம். பேரவா - பேராசை. மரக்கலம் - கப்பல். சடுதியில் - திடீரென. துலங்கின - ஒளிர்ந்தன. உன்னிக்கப்பாலர் - கவனித்தற்கு உரியர். ஆங்கு-அவ்விடம். இயல் - சாயல், ஒழுங்கு. அழுக்காறு - பொறாமை. பரும்படியாய் - மேம்படியாய், நுக்கமின்றி - இரவேல் (Raphael), திஷன் (Titian), குவீடோரேனி (Guido Rheni), ஆனிபல் கராச்சி (Hannibal Carrache), கோரெடுசோ (Coreggio), உரூவன (Rubens) முதலியோர் ஐரோப்பிய நாட்டில் ஓவியம் எழுதலில் மிக வல்லுநராய்ப் புகழோங்கி நின்றோராவர். நொய்தாய் - மெல்லியதாய். ஓவாது - ஒழியாது. இடையறாது - நடுவே ஒழிவு பெறாது. இணக்கமில்லா - பொருத்தமில்லாத. தூய்து - சுத்தம். நிழலோட்டம் என்பது இயற்கையிற் காணப்படும் ஒரு தோற்றத்தைப் போல் வரையுங்கால், அத் தோற்றத்தில் ஒளிபடும் பகுதியும் நிழல்படும் பகுதியுங் காட்டி எழுதுதல் ஓவியம் எழுதுதலிற் கைதேர்ந்தார் எல்லாரிடத்துங் காணப்படும். அங்ஙனம் நிழல் படும் பகுதியை வரையுமிடத்துங் காணப்படும். அந்நிழல் வரவரத் தன் கருமை குறைந்து ஒளியுடன் கலக்கு மாறெழுதும் வன்மையும் அவர் மாட்டுக் காணப்படும். இவ்வாறெல்லாம் ஓவியங்களில் நிழல் ஓடும் வகைகளைக் காட்டுவதே நிழலோட்டம் எனப்படும். நிறம் ஊட்டுதல் - நிறம் கொடுத்தல்; வண்ணங்களை ஆற்றி முதிரச் செய்தல் - சாயங்களைச் சாயங்களென்றே தெரியாமல் இயற்கைப் பொருள்களிற் காணும் நிறத் தோடு ஒப்பத் தணிவு செய்து, அங்ஙனந் தணிவு செய்யினும் அந்நிறம் ஒளி முதிர்ந்து தோன்றுமாறு செய்தல். குஞ்சி - ஆண் முடிமயிர். தொடர்பு - தொடர்ச்சி. 6.பேய்களும் ஆவிகளும் இக்கட்டுரையும் அடிசனார் எழுதியபடியே பெரும் பான்மையும் மொழி பெயர்த்துரைக்கப்பட்டதாயினும், அவ்வுரை முகத்திற் சொல்லப்பட்ட இடிந்து பாழாய்ப் போன ஒரு கிறித்துவ குருவின் மடத்திற்கு ஈடாக, அதனோடொப்ப மதுரைக்கு அருகாமையிலுள்ள அழகர்மலைப் பக்கத்தில் இடிந்து பாழாய்க் கிடக்குங் கோட்டையினிடம் ஏற்பவைத் துரைக்கப்படுகின்றது. அங்ஙனமே விவிலிய நூலில் உள்ள பண்களுக்கு (Psalms) ஈடாக அவைபோலுந் திருவாசகம் ஏற்க வைத்துரைக்கப் பட்டது. அண்டங்காக்கை - காக்கையிற் பெரிய இனம். கரைவது - கூவி அழைப்பது. முறை - புத்தகம். தன்னைக் கூவியழைத்த இளைய அண்டங்காக்கைகட்கு இறைவன் இரை தந்தானென்று விவிலிய நூலிற் பண்ணிற் சொல்லப்பட்டதனை (psalms/147/9) அடிசனார் தம் உரையுள் எடுத்து மொழிந்தமையின், அதனோ டொப்பக் கருங்குருவிக்குச் சிவபிரான் அருள் புரிந்தமை எடுத்துக்காட்டப்பட்டது; கருங்குருவிக் கன்று அருளினை போற்றி என்று மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச் செய்தார்; இதன் வரலாற்றினைப் பெரும்பற்றப்புலியூர் நம்பியார் இயற்றிய திருவாலவாயுடையார் புராணத்திற் கண்டு கொள்க. அழகர்மலை யடிவாரத்தில் இடிந்து கிடக்குங் கோட்டையைச் சாரத் திருமால் கோயில் ஒன்று தனித்து உளது. இயங்குதல் - நடமாடுதல். குழைந்த - வாடிய. கிட்டத்தட்ட - ஏறக்குறைய. அச்சுறுத்தல்; அஞ்சச் செய்தல். திங்கள் - மாதம். பணிப்பெண் - குற்றேவல் செய்வோள். வற்புறுத்தல் - உறுதிப்படுத்திச் சொல்லல். ஆண்டு - வருஷம். தளவாடங்கள் - தட்டு முட்டுகள். மசங்கல் மாலை - இருள் மயங்கிய மாலைக்காலம். போதரா - வெளியே வராத. வைகின - தங்கின. முகடு - உச்சி. எதிரொலி என்பது ஓரிடத்துண்டாய ஒலி அவ்விடத்தைக் கடந்து அப்பாற் செல்லாவாறு மலைகளேனுஞ் சுவர்களேனுந் தடையாய் நின்றால், அஃது அத் தடைமேற் றாக்குண்டு மீளவும் முன்போல் ஒலிப்பதேயாகும். ஓ என்பது ஏதோர் ஓசையுமின்றி அமைதியாய் இருக்குமிடத்திற் றோன்றும் ஓ என்னும் மெல்லிய பரந்தவொலி. வெருட்சி - திடுமெனத் தோன்றும் அச்சம். இலாகவர் (Locke): அறிவு நூல் - ஞான நூல்; `நினைவுகளின் கூட்டுறவு என்பது (The Association of ideas) ஒரு நினைவு மற்றைப் பல நினைவுகளோடு தொடர்பு பட்டு நிற்றல்; இங்ஙனம் நிற்றலால் ஒரு நினைவு உள்ளத்திற் றோன்றிய வளவானே அது தன்னோடு ஏதேனும் ஒருவாற்றால் இயைபுடைய மற்றொரு நினை வினையும் அம்மற்றொன்று அங்ஙனமே பிறிதொன்றனையு மாக இவ்வாறு உள்ளத்தில் ஒரு வரிசையாகப் பல நினைவு களையும் அடுத்தடுத்து எழுப்பாநிற்கும். இயல் - அத்தியாயம். சொற் பயிற்சி - சொல்லின் பழக்கம். ஒவ்வாத - ஒப்புமை இல்லாத. கூளி - பூதம். பேதைப்பெண் - அறிவில்லாப் பெண். நிகழ்ச்சிகள் - சம்பவங்கள். சேய்மை - தூரம். ஆ - பசு. உள்ளப்பாங்கு - மனத்தகைமை. இத்தகைய - இத்தன்மைய வான; புல்லிய - அற்பமான. நடை - ஒரு வீட்டினுள் இருபுறத்தும் உள்ள அறைகளுக்கு இடையேயுள்ள நடவை, (a gallery). தறைதல் - ஆணியால் இறுக்கல். அரைவாசி - அரைப்பங்கு. உறை விடம் - குடியிருப்பு. அத்துணை - அவ்வளவு. புறம்படுத்தல் - வெளிப்படுத்தல். உயிர் துறந்த - உயிர் நீங்கிய. பரக்க - விரிய. அரசு வீற்றிருந்த - தலைமையாய் அமர்ந்திருந்த. எங்கணும் - எவ்விடத்தும் கடவுள் நேயம் - இறைவனிடத்து வைக்கும் அன்பு, ஈசுவரப்பக்தி. வரலாற்று நூல் சரித்திர நூல். தெரிப்பன - அறிவிப்பன. தொன்றுதொட்டு - பழமைக் காலந் தொட்டு. பொய்க்கட்டு - பொய்யாகக் கட்டி விட்டது. அடிப்படை - அத்திவாரம்; அற்றது - இல்லாதது. எழூஉம் - எழுகின்ற. மன்பதைகள் - மக்கட் கூட்டத்தார், (nations); பொதுச்சான்று - பொதுவான சாட்சி. இணங்க- இசைய. குறிப்பாளிகள் - குறிப்பான ஆட்கள். செந்நாப்புலவர் - செவ்விய செய்யுட்களைப் பாடுதலிற் றேர்ந்த நாவினையுடைய பாவலர். உலுக்கீரீசியர் (Lucretius) என்பார் கிறித்து பிறப்பதற்கு முன் நூற்றாண்டில் உரோமா நகரில் இருந்த ஒரு பெரும்புலவர் ஆவர். போக்கு - போம்வகை. ஐயம் அற - சந்தேகம் இல்லையாம்படி. ஏலாவாறு - முடியாத வகையாய். கட்புலனாற் காணப்படும் நமது பரு உடம்பு வெங்காயச் சருகுபோல் ஒன்றனுள் ஒன்றாய்ப் பொதிந்த வேறு நான்கு உடம்புகளோடு கூடியிருத்தலும் மறைமலையடிகள் இயற்றிய இறந்தபின் இருக்கும் நிலை என்னும் நூலிலும், சைவ சித்தாந்த ஞானபோதம் என்னும் நூலிலும் உள்ள சிவராச யோகம் என்னும் உரையிலும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. மாந்தர் - மக்கள்; சாயல் - நிழல் போல்வதொரு நுண்ணிய வடிவு. பொதிந்துவைத்த - மறைத்து வைத்த, திணித்து வைத்த; நன்னெறிக்குறிப்பு - நன்னடையைப் பற்றிய கருத்துக்கள். இங்கெடுத்துக்காட்டப்படுஞ் சிறுகதை முதனூலாசிரியரால், ஜோசேப் (Josephus) என்னுங் கிரேக்க ஆசிரியரது நூலினின்றும் எடுத்துக் காட்டப் பட்டதாகும். ஈண்டு - இவ்விடத்தில். அருக்கன் என்னும் பெயர் முதன்நூலில் உள்ள Archilaus என்னும் பெயரோடும், `கிளிமொழி என்பது Glaphyra என்னும் பெயரோடும் ஓசையொப்பனவாக வைக்கப் பட்டன. பின்றை - பிறகு. உருக்கம் - உள்ளக்கசிவு. கடிந்து - சினந்து. முதுமொழி - பழமொழி, மூதறிவினர் கூறிய மொழி. குமரி - கன்னி. திறம் - மேன்மை, வலிமை: நாடி - விரும்பி. ஒவ்வாதது - பொருந்தாதது. பயில - பழக; மன எழுச்சி - மனக் கிளர்ச்சி. நம்பகம் - நம்பிக்கை; நம்பு என்னுந் தமிழ் உரிச்சொல்லிற் பிறந்தது இச்சொல்; நம்பு மேவு நசையாகும்மே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்; சிதைத்தல் - அழித்தல். கடவர் - கடமையுடையர். சிந்தனைக் கட்டுரைகள் - முற்றும் - கருத்தோவியம் 1963இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... மறைமலையடிகள் மாத இதழாக நடத்தி வந்த ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் இதழிலும், மறைமலையடிகளின் மருகரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனரும் ஆன திருவாளர் வ. திருவரங்கப் பிள்ளையவர்கள் நடத்தி வந்த `செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் திங்கள் இதழிலும் மேலுரைகளில் மறைமலை யடிகள் எழுதிய அருங்கருத்துகள் பல இடம் பெற்றிருந்தன. அவற்றுள் ஆறுக் கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் 1976இல் வெளியிட்ட நூலே கருத்தோவியம் என்னும் இந்நூலாகும். - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் பொருளடக்கம் பக்கம் 1. மறைமலையடிகளார் தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த சில தடைகளுக்கு விடை 123 2. திருவாசக விரிவுரையிற் சிலர் நிகழ்த்திய தடைகளுக்கு விடை 204 3. வேதம் மக்கள் வாய்மொழியே என்பது 232 4. தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவைப் பற்றிய ஒரு குறிப்பு 239 5. திருவாசக மூவா நான்மறைச் சொற்றொடர் விரிவுரைமேல் எழுந்த ஆராய்ச்சி 244 6. சேக்கிழாரும் பெரியபுராணமும் 261 மறைமலையடிகளார் தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த சில தடைகளுக்கு விடை முகவுரை (16.5.1929இல் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற சைவற் மாநாட்டில் அடிகளார் ஆற்றியது) திருப்பாதிரிப்புலியூரிற் கூடிய சைவர் மகாநாட்டில் யாம் அவைத்தலைவரா யிருந்து நிகழ்த்திய தலைமைப் பேருரைக்கட் போந்த சிலகருத்துக்களுக்கு மறுப்பாகத் தலைமைப் பேருரையாராய்ச்சி என்னும் ஒரு கட்டுரை திரு. பொ. முத்தையா பிள்ளை என்பவரால் எழுதப்பட்டுச், சித்தாந்தம் என்னும் திங்கள் தாளிலும் சிவநேசன் என்னும் கிழமைத் தாளிலும் வெளிப் படுத்தப்பட்டது. பழந்தமிழ் நூல்களிலுந், தமிழ்ச்சைவ நூல்களிலும் ஆழ்ந்து நிறைந்த கல்விகேள்விகளுடையார், எமது தலைமைப் பேருரையினையும் அதன் மேலெழுந்த மறுப்பினையும் நடு நின்று ஒத்து நோக்கு வார்களாயின், அவர்கட்கு நமது தலைமைப் பேருரையின் பொருள்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் முதல்வந்த நம் பண்டைச் செந்தமிழ்ச் சான்றேர்களாற் கைக் கொள்ளப் பட்டு, நம் தமிழ்நாட்டவரை அன்பிலும் ஒற்றுமையிலும் இன்புற்று வாழச்செய்து வழங்கியவைகளாதலும், அதற்கு மறுப்பாய் எழுந்தபொருள்கள் பண்டிருந்த நம் தமிழ்நாட்டவரால் ஒரு சிறிதுங் கைக்கொள்ளப்படாமற், பின் வந்து குடியேறிய ஆரியர் தம்மைப் பலவகையாலும் உயர்த்தி நம் தமிழ் மக்களைப் பல வகையாலுந் தாழ்த்தி அவர் தம் வாழ்க்கையினைச் சீர்குலைத்தற் பொருட்டுக் கட்டிய சாதி வேற்றுமையும் புராணப் பொய்யுரையும் என்னும் மயக்கில் வீழ்ந்து தமக்கென அறிவிலரான போலிச் சைவரும் அவர்வழி நிற்பாருங் கைக்கொண்டு, மேலும்மேலும் நந்தமிழ்நாட்டைப் பாழ்படுத்து வனவாதலும் நன்கு விளங்கா நிற்கும். அவ்வாறு ஆழ்ந்து நிரம்பிய கல்வியில்லாதார், குறுகிய நோக்கத்தாலுஞ் சாதிச் செருக்காலும் எழுதப்பட அம்மறுப்பின் பொய்ப்பொருள் கண்டு மயங்காமைப் பொருட்டு, அம்மறுப்பின்கட் போந்த வற்றை ஈண்டெடுத்துக் காட்டி அவை தீய வாதலை விளக்கு வாம். 1. காதலுஞ் சாதியும் காதலன்புடையார்க்கு அக்காதல் அன்பின்வழியே மனஞ் செல்லுமல்லாமல், மனத்தின்வழியே காதல் செல்லாமை ஆன்றோர் செய்யுள் வழக்கினுள்ளும் உலக வழக்கினுள்ளும் வைத்துச் செல்வனே அறியக்கிடந்ததொன்றும். காதலென்பது ஒருவர் ஒருவரை இன்றியமை யாராய் விழைந்துநிற்கும் பெரு வேட்கையாய், எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண்வழிக் காசுபோலவும் நீர்வழி மிதவைபோலவும் பான்மைவழி யோடி இருவரையும் புணர்விக்கும் திறத்த தென்பது ஆசிரியர் தெய்வப் புலமை நக்கீரனார் இறை யனார்அகப் பொருளுரையில் விளக்கிய வாற்றான் நன்கு விளங்கும். இவ்வுண்மை எமது தலைமைப் பேருரையில் எடுத்துக் காட்டப்பட்ட பரிபாடற் செய்யுளிற் போந்த காதற் காமம் காமத்திற் சிறந்தது என்பதனாலும் நன்கு புலனாம். இவையெல்லாம் நல்லாசிரியரை அடுத்து உணரும் பேறு வாயாத மறுப்புரைகாரர், மனஞ்சென்றவாறு சென்று துய்ப்பதே காதலின்பமெனக் கரைந்தார். மனஞ்சென்றவா றெல்லாஞ் சென்று துய்ப்பது இழிந்த காமஇன்பமே யாமென்பதும், அவ்விழிந்த காமத்தினையே ஆன்றோர்க ளெல்லாரும் வழுவெனக் கொண்டா ரென்பதும் அம்மறுப்புரைகாரர் உணரார் கொல்லோ விழுப்பமுந் தூய்மையும் வாய்ந்த காதலன்பின் வயப்பட்டார் இருவர் தம்முள் ஒருவரை யொருவர் உயிர்போல் நினைந்துருகி ஒழுகுந் தன்மைய ராதலின் அவர்மனம் அவர் தங்காதலன்பின் கீழடங்கி நின்று வேறு பிறர்பாற் செல்லாதாகலின், காதலன் புடையார்க்கு அவர் தம் மனம் அடங்காதோடிக் காமத்துறையிற் படிதல் சிறிதுமே இல்லையென்று அவர் உணர்வாராக. மற்றுக், காமவேட்கை யுடையார்க்கோ, அவரது மனம் அவர் வழி அடங்கி நில்லாது பலரையும் நச்சி நச்சிக் காமத்துறையில் வீழ்ந்து மாழ்கு மாதலின், மனத்தின்வழிச் செல்வது காமமே யன்றிக் காதலன்றென்பது இனியாயினும் அவர் பண்டைத் தமிழ் நூல்களைப் பயின்று உணர்வாராக! இனிக், காதலன்பின் நுகர்ச்சிக்கு வகுப்பு வேற்றுமை பெரிதுந் தடை செய்வது என்னும் உண்மையை இவர் ஏளனஞ் செய்கின்றனர். இவர் இகழ்ந்துரையாத வெறுங்காம நுகர்ச்சி யிலாவது வகுப்பு வேற்றுமை தடைசெய்து நிற்கின்றதா? என்பதைச் சிறிது உற்று நோக்குதல் வேண்டும். தம்மை அழுத்தந் திருத்தம் வாய்ந்த சைவரெனக் கருதிக் கொள்வாரில் எத்தனையோபேர் தஞ் சாதிவரம்பு கடந்து மறைவிலே குறத்திகளை மருவுகின்றன ரென்றும், புலைச்சிகளின் தோள்களை மருவிக் களிக்கின்றன ரென்றும், பரத்தையர் வீடே குடியாய்க் கிடக்கின்றன ரென்றும் பலர் பலகாற் சொல்லக் கேள்வியுற்றிருக் கின்றேம். இவர் புகழ்ந்து பேசும் இழிந்த காம நுகர்ச்சியே சாதி வரம்புக்குள் நில்லாது தம்வயப்படார் சாதி வரம்பைமீறிச் செல்லுமாறு ஏவ உயர்ந்த தெய்வக் காதலன்பின் வயப்பட்டார் சாதிவரம்பைத் துகளாக்கித் தாங்கொண்ட புனித ஒழுக்கத்தில் நிற்குமாறு அஃது அவரைச் செலுத்துதலாற் போதரும் இழுக்கென்னை? இத்தூய வொழுக்கம் நம் பண்டைத் தமிழ்மக்கட்கு உயிர்போற் சிறந்த விழுமிய ஒழுக்கமாதலின், இதனை உண்மை யறிவுடையாரெவருஞ் சிறிதுங் குறைகூறா ரென்க. 2. இலக்கண நூல் தொல்காப்பியர் அருளிச் செய்தது இலக்கண நூலாதலின், அவர் பொருளை அகம் புறம் என வகுத்து, அகப்பொருளின் பாற்பட்ட இன்பத்தை முதற்கண்வைத்து, அறம்பொருள்களை அதன் பின் வைத்தாரல்லது. இன்பத்துக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்பதுபற்றி அதனை முதற்கண் வைத்தாரல்லர்; என்று அம்மறுப்புரைகாரர் கூறித், தொல்காப்பியர் இன்பத் துக்கே முதன்மை கொடுத்தாரென்னும் எமதுரையை மறுக்கின் றனர். தொல்காப்பியம் இலக்கணநூலாதலின் அதன்கட் கூறிய முறை கொள்ளற்பால தன்றென்பதே இவரது கருத்தாகின்றது. இலக்கண நூலின் இலக்கணம் இன்னதென்று உணர்ந்தன ராயின் இவர் இங்ஙனங் கூறி இழுக்கார். இலக்கண நூல்க ளெல்லாம் இலக்கிய நூல்களின் சொற்பொருளியல் புகழை நன்காய்ந்து, அவை தம்மையே முறைப்படுத்தி உரைக்கும் தன்மையவாமென்பது இலக்கியங்கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் என்னும் நன்னூற் சூத்திரத்தினை அறிந்த சிறும காரும் உணர்வர். இதுதானு முணராது இலக்கணமுறை இலக்கியமுறையின் வேறாவது எனக்கொண்ட அம்மறுப்புரை காரரின் தமிழறிவு சால அழகிது. இலக்கியப் பொருளியல்புகளை முறைப்படுத்திச் சொல்லி விளக்குவதே இலக்கண மென்பது தமிழ் நூல் வட நூல் இயற்றிய ஆசிரியரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், தெய்வத் தொல் காப்பியனார் வகுத்துவிளக்கிய அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்கள் அத்தனையும், அவர்காலத்தும் அவர்க்கு முன்னிருந்த சான்றோர் காலத்தும் இயற்றப்பட்ட நூல்களின் பொருளமைதிகளேயாதல் தெற்றென விளங்கா நிற்கும். 3. பண்டை இலக்கியங்களும் இன்பமும் இனிப், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் இயற்றிய இலக்கிய நூல்கள் தாமும், அஞ்ஞான்றை உலகியல் நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்துக்கூறுந் தன்மையவன்றி, உலகிய லொழுக்கத்துக்கு மாறாவன சிறிதுங் கூறுவன அல்ல. இஞ்ஞான்று ஆரியர்தம் பொய்வழக்கின்பாற் பட்டு, உலகியல் வழக்கோடொவ்வாத பலவற்றைப் பொய்யாகப் புனைந்து கட்டிச் சொல்லுந் தமிழ்ப்புலவர் போலாது, பண்டிருந்த தமிழ் நல்லிசைப் புலவர்கள் பட்டது பட்டாங்குமொழியும் பொய்யா நாவினர் என்பது பேராசிரியர் தொல்காப்பிய மரபியலிற் கூறியவுரையானும், பண்டைத் தமிழிலக்கியங்களை ஒருசிறிது உற்றுநோக்கு முதலானும் இனிது உணரலாம். பண்டைக் காலத்துத் தமிழிலக்கியங்களிற் பெரும்பாலன இன்பத்தின் மேற்றான அகப் பொருளினையே மிகவிரித்து உரைத்தலும், இன்பத்தின் வழிப்படூஉம் ஏனை அறம்பொருள்களின் மேற்றான புறப்பொருளினைச் சுருக்கியே பாடுதலும், நன்குணர வல்லார்க்கே பண்டைத் தமிழாசிரியர் எல்லாரும் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தமை நன்கு புலனாம். பழைய சான்றோர் செய்யுட்களைத் தொகுத்த எட்டுத்தொகையுள் நற்றிணை நானூறு செய்யுட்களும், குறுந்தொகை நானூறு செய்யுட்களும், ஐங்குறுநூறு ஐநூறு செய்யுட்களும், கலித்தொகை நூற்றைம்பது செய்யுட்களும், அகநானூறு நானூறு செய்யுட்களும், பத்துப் பாட்டில் முல்லைப் பாட்டு, நெடு நல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் நான்கு பெரும்பாட்டுக்களும், பதினெண்கீழ்க் கணக்கில் கார்நாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, திருக்குறள், காமத்துப்பால் இருநூற்றைம்பது, நாலடியார் காமத்துப்பால் முப்பது செய்யுட்களும் ஆகமொத்தம் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்று நான்கு அருந்தமிழ்ச் செய்யுட்களும் அகப்பொருளின் பாலதாகிய இன்பத்தையே நுதலுகின்றன. இனி, எட்டுத்தொகையிற் பதிற்றுப்பத்து நூறுசெய்யுட் களும் பரிபாடல் எழுபது செய்யுட்களும், புறநானூறு நானூறு செய்யுட்களும், பத்துப்பாட்டில் ஆறு செய்யுட்களும் பதினெண் கீழ்க்கணக்கில் நாலடியார் முன்னூற்றெழுபது செய்யுட்களும், நான்மணிக்கடிகை நூறு செய்யுட்களும், இனியவை நாற்பது நாற்பது செய்யுட்களும், இன்னா நாற்பது நாற்பது செய்யுட்களும், களவழி நாற்பது நாற்பது செய்யுட்களும் திருக்குறள் ஆயிரத்து எண்பது செய்யுட் களும், திரிகடுகம் நூறும் ஆசாரக் கோவை நூறும், பழ மொழி நானூறும், சிறுபஞ்ச மூலம் நூறும், முதுமொழிக் காஞ்சி ஒன்றும், ஏலாதி நூறும், ஆக மொத்தம் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களும் புறப்பொருளின் பாலவாகிய அறப் பொருள்களை நுதலுகின்றன. இவ் விரண்டையும் நுதலும் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களையும் இருகூறாகப் பகுத்தாற், சிறிதேறக் குறைய அறத்துக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்றும், பொருளுக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்று செய்யுட்களுமே வருகின்றன. இன்பத்தை நுதலுஞ் செய்யுட்கள் மட்டும் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணூற்று நான்கென்பது மேலே காட்டப் பட்டமையால், இன்பத்தை நுதலுஞ் செய்யுட்கள் ஏனை அறம் பொருள்களைத் தனித் தனியே நுதலுஞ் செய்யுட்களிலும் சிறிதேறக்குறைய ஆயிரஞ் செய்யுட்கள் மிகுந்திருத்தல் காணப்படும். இதுவேயுமின்றி, அறப்பொருள் களை நுதலும் பாட்டுக்களுள்ளும் இன்பத்தைக் கூறும் பகுதிகளும் ஆங்காங்கு விராய் வந்திருக்கின்றன. இவ்வாறாகப் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் யாங்கணூம் பெரும் பான்மை யாக எடுத்துப்பேசப் படுவது. இன்பமேயாய் இருந்தலினாலும், ஏனை அறம் பொருள்களைச் சுட்டுவன அவற்றில் மிகக்குறைந்த னவாயிருந்தலினாலும் அவ்விலக்கியங்களின் வழியே இலக்கண நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவற்றோடு மாறுகொள்ளாமைப் பொருட்டு இன்பத்தை முதற்கண்ணும், ஏனைப் பொருள் அறங்களை அதன் பின்னுமாக வைத்து, இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் என்று சூத்திரஞ் செய்தருளினார். எனவே, ஒருகாரணமும் பற்றாது தாம் எடுத்துக்கொண்ட அகப் பொருளுக் கேற்ப ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முதற்கண் வைத்தாரல்லது, உறுதிப்பொருள்களில் இன்பமே முதல் நிற்கவேண்டு மென்பது அவர்க்குக் கருத்தன்று என்ற அம் மறுப்புரைகாரர் கூற்றுப் பொருத்தமில் போலிக் கூற்றாமென்க. பண்டைத் தமிழிலக்கியங்கள் எல்லாம் உறுதிப் பொருள்களில் முதல் நிற்றற்குரிய இன்பத்தின் விழுப்பம் உணர்ந்தே அதனை ஏனையவற்றினும் பார்க்க உயர்த் தெடுத்துப் பேசுவ ஆயின. அந் நுணூக்கம் உணர்ந்தே தொல்காப்பியனாரும் அகப்பொருளொழுக்கமாகிய இன்பத்தினை முன் வைத்து, ஏனைப் புறப்பொருள் ஒழுக்கங்களை அதன்பின் வைப்பாரா யினார். 4. அறம் இன்பத்தையே முதலும் ஈறுமாக உடையது இனி, அம்மறுப்புரைகாரர், அறமே முதல் நிற்கற்பாலது, இன்பம் அந்நீரதன்று என்றதூஉம் பொருந்தாமை காட்டுதும். ஒரு புல் நுனிமேல் நிற்கும் நீர்த்துளியிற் பெருக்கக் கண்ணாடி யின் உதவிகொண்டு காணப்படுஞ் சிற்றுயிர்கள் முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்கள் மாட்டும் இன்ப உணர்ச்சியும், இன்பத்தைப் பெறும் வேட்கையும், அதற்கேற்ற முயற்சியும் ஒரு தினைத்தனையும் பிழையாமற் காணப்படுகின்றன. அது போல் அறத்தைப் பற்றிய உணர்ச்சியும், அதனைப் பெறும்வேட்கையும், அதற்கான முயற்சியும் அங்ஙன மெல்லா உயிர்களிடத்துங் காணப்படாமல், ஆறறிவுடைய மக்களுள்ளும் பிற உயிர்கள் பால் அன்பு நிகழப் பெற்ற ஒருசிலர் மாட்டே காணப் படுகின்றன. இவ்வாற்றல் இன்ப உணர்ச்சியினும் அறவுணர்ச்சி மிகச்சிறுகிய நிலையில் உளதாதலும், அதுவும் பிற உயிரின் இன்பத்தைத் தம் முயிரினின்பத்தோ டொப்பக் கருதினார் பாலன்றி உளதாகாமையுற் தேர்ந்து காணவல்லார்க்கு இன்ப உணர்ச்சியின் வாயிலாகவே அறவுணர்ச்சி விளைவதன்றி, அறவுணர்ச்சி வாயிலாக இன்ப உணர்ச்சி விளையாமை இனிது விளங்கா நிற்கும். இதுபற்றி யன்றோ தெய்வத் திருமூலரும், நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அருளிச் செய்தார். ஒருவன் தான்பெற்ற இன்பத்தை இவ்வையகத்துள்ள எல்லா உயிர்களும் பெறுதல் வேண்டுமென விழைந்து. அதற்கேற்ப முயலும் முயற்சியே அறம் எனப்படும். பிறவுயிரின் இன்பத்தைக் கருதாது செய்யும் முயற்சிகளெல்லாம் அறத் துக்கு மாறான மறம் எனப்படும். பிறர்க்கு வறுமையால் வந்த துன்பத்தை நீக்குதற்பொருட்டுப் பொருளுடையார் அவர்க்குப் பொருளீந்து செய்யும் அறம் எத்துணை இன்பம் பயக்கின்றது. இதுபற்றி யான்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவரும், ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர் (குறள் - 228) என்று அருளிச் செய்தார். தமக்கும் பிறர்க்கும் நிகழும் இன்பம் இனைத்தென்பது உணர்ந்த இன்ப உணர்ச்சி உடையார்க்கன்றி, ஏனையோர்க்கு அறநினைவு சிறிதும் உளதாகாது. இவ்வுண்மை அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவும், இது தானும் உணரமாட்டாது இன்பத்தினும் அறத்திற்கே முதன்மை சொல்லப் புகுந்த மறுப்புரைகாரர் உரை தொல்லாசிரியர் நூல் வழக்கிற்கும் ஏனை உலகியல் வழக்கிற்கும் மாறுகொண்டு போலியுரையாய் ஒழிந்தமை காண்க. எல்லா உயிர்க்கும் பொதுவான இன்ப உணர்ச்சியின் வாயிலாகவே அவ்வுயிர்கட்கு முயற்சி யுண்டாகா நிற்கின்றது. அம்முயற்சியினாற் பின்னும் பின்னும் பிறவி வளர்ச்சி உரம் பெற்றுப் பிறவிக்கு வாராமல் அறியாமையில் அமிழ்ந்திக் கிடக்கும் உயிர்கள் பிறவிக்கு வந்து அறிவு கூடுகின்றன. இன்பமும் அறிவும் இவ்வாற்றாற் பெருகப்பெருக அறநினைவும் அறஞ் செய்யும் முயற்சியும் மக்கள்பால் முறைமுறையே தலைப்படுகின்றன. அம்முறையினைக் கூர்ந்து பார்க்கும் வழி, இன்பத்தினால் முயற்சியும், அம்முயற்சியாற் பொருளும், அப்பொருளால் அறமும், அவ்வறத்தால் முடிவிற் பேரின்பமும் ஒன்றினொன்று உளவாய் வருகின்றன என்பதும், எல்லா அறிவும் முயற்சியும் இன்பத்தினின்றே தோன்றி இன்பத்தின் கண்ணே சென்று முடிகின்றன என்பதும் நன்கு தெளியக்கிடத்தலின், முற்றுணர்வு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முன் வைத்துப் பொருளை அதன்பின் வைத்து, அறத்தை அதன்பின் வைத்துச் சூத்திரஞ் செய்த முறையே உலக வழக்கொடும், நூல் வழக்கொடும் முழுதொத்து என்றும் அசையா வைர மலைபோல் திகழ்ந்து நிற்பதாம் என்க. பண்டைத் தமிழ் ஆசிரியர்களே யன்றித் தமிழகத்துக்குப் புறத்தேயுள்ள நாடுகளில் உயிர்வாழ்ந்த பண்டை நாகரிக மக்களுள் வழங்கிய பலவேறு மொழி இலக்கிய நூல்களுள்ளும் இன்பமும் பொருளுமே முன் வைக்கப்பட்டு அறம் அவற்றின் பின்னதாக நிறுத்தப்பட்டிருந்தலும் நினைவிற் பதிக்கற் பாற்று. 5. தொல்காப்பியனார் இன்பத்துக்கே முதன்மை கூறினமை இனி, உறுதிப்பொருள்களுள் இன்பமே முதன்மையான தென்று தொல்காப்பியனார் கூறவில்லை என்று அம் மறுப்புரை காரர் துணிந்து சொல்லுதலை உற்றாயுரங்கால் அவர் செந்தமிழ் மொழிக்கு நந்தா மணிவிளக்காந் தொல் காப்பியத்தை ஒரு சிறிதாயினும் நல்லாசிரியரையடுத்து நன்கு ஆராய்ந்து பயின்றவரல்ல ரென்பது புலனாகா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனாரே பொருளதிகாரத்துப் பொருளியலில் இருபத்தொன்பதாஞ் சூத்திரமாக நிறுத்திய, எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவற்றாகும் என்பது இன்பத்தையே ஏனைப் பொருள் அறங்களினும் முதன்மை பெற்றதாக வைத்துக் கூறாநிற்கவும் அதனை அறியாது கூறிய அவருரையே அவர் தொல்காப்பியம் உணராமையினை நன்கெடுத்துக் காட்டா நிற்கின்றது. அச்சூத்திரத்துக்குப் போந்த மேவற்றாகுமென்றார், என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தாரெனப் படாது. அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொதுவென்பதூம்உம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழுமென்பதூ உங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்தவரு மென்றாயிற்று என்னும் பழைய உரையாசிரியர் உரைப் பகுதியையேனும் அவர் உணர்ந்திருந்தனராயின், எல்லா உயிர்க்கும் இன்பம் ஒன்றுமே உரித்தாவதென்பதூஉம், ஏனைப் பொருளறங்கள் மக்கள் பால் மட்டும் உண்டாவனவாய் இன்பத்தையே முதலும் முடிவுமாய்க் கொண்டு நிகழு மென்பதூஉம், அதுபற்றியே தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் பொருளறங்களை அதன்பின்னுமாக வைத்துக் கூறினாரல்லது ஒருகாரணமும் பற்றாது அங்ஙனம் கூறினாரல்ல ரென்பதூஉம் விளங்க அறிந்திருப்பர். இவையெல்லாம் ஒருசிறிது முணராது தொல்காப்பியனார் கருத்தை முற்றும் அறிந்தார் போன்று துணிபுரை நிகழ்த்திய அம்மறுப்புரை காரர்தந் துணிபு. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் (குறள்-405) என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்காய்த் தமிழ் வல்ல சான்றோரால் நகையாடற் பாலதாய் முடிந்தமை காண்க. என்று இத்துணையுங் கூறியவாற்றால் ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் ஏனைப் பொருளறங்களை அதன்பின்னும் வைத்துக் கூறிய முறையே அடிப்பட்ட சான்றோர்தம் நூல் வழக்கிற்கும் ஏனையுலக வழக்கிற்கும் பொருந்துவதா மென்பதூஉம், இம்முறையோடு திறம்பிப் புதிது புகுந்த பௌத்தசமண் சமயங்களின் பொருந்தா வழக்கேபற்றிப் பிற்காலத்தார் அறத்தை முன்னும், ஏனைப் பொருளின்பங்களைப் பின்னும் வைத்த தலைதடுமாற்ற முறை அவ்விருவகை மெய்வழக் கொடும் ஒவ்வாதமென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க. 6 . திருவள்ளுவர் கொண்டது தமிழ்முறை யன்று இனி ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் இன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழ்முறை யன்றாய்ப்பௌத்த சமண் சமயத்தவர்களாகிய வடநூலார் தாமே புதிது வகுத்த முறையேயாதலை மேலே காட்டினாம். இங்ஙனந் திருவள்ளுவர் கொண்டமுறை தமிழ் நூல் வழக்கன்றென்பதற்குத், திருக்குறளுக் குரைகண்ட பரிமேலழகி யார் காமத்துப்பால் முகத்தில் இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப் பற்றி ஓதுதலான் என்று உரை உரைத்தமையே சான்றாம். பண்டு தொட்டுவந்த தமிழ்நூன் முறையெல்லாம் இன்பத்தை முன்னும் பொருளறங்களைப் பின்னும் வைத்தலேயாம் என்பதனை மேலே விரித்துக் காட்டினாம். ஈண்டுப் பின்னுஞ்சிறிது அதனையே காட்டுதல் இன்றியமையாத தாகின்றது. பழைய பரிபாடலிற் செவ்வேள் மேற்பாடப் பட்டிருக்கும் ஒன்பதாம் பாட்டினை இயற்றியருளினவரான ஆசிரியர் குன்றம்பூதனார் அப்பாட்டின்கண் வடமொழி நான்மறை வல்ல புலவரைநோக்கித் தமிழது சிறப்பு அறிவுறுத்துகின்றுழித், தமிழுக்கே உரித்தான காதலின்ப ஒழுக்கத்தி னையும் அவ்வொழுக்கத்தினை யுடைமையால் வள்ளிநாச்சியார் சிறந்தமையும், அவ்வகத்தமிழை ஆராய்ந்தமையால் முருகப் பிரான் சிறந்தமையும், நன்கெடுத்து விரித்து, ஓதுவார்க்குங் கேட்பார்க்குந் தமிழ்ச்சுவை புலனாமாறு விளக்குதல் காண்க. இங்ஙனமே பத்துப்பாட்டின்கண் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டை இயற்றிய நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந், தங்காலத்திருந்த பேரறிஞர்களாற் புலனழுக்கற்ற அந்தணாளன் எனவும், பொய்யா நாவிற் கபிலன் எனவும் புகழ்ந்து பாராட்டப்பெற்றவரும் ஆன ஆசிரியர் கபிலர், தமிழ் நலம் அறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் நலம் அறிவித்தற் பொருட்டுத் தாம் பாடிய குறிஞ்சிப் பாட்டின்கண், இக்காதலின்ப அகப்பொருளொழுக்கத் தினையே விரித்தெடுத்துப் பெரிதுஞ் சுவைதுளும்பப் பாடியிருத்தல் காண்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும். இங்ஙனமெல்லாந் தமிழ்நாட்டின் கணிருந்த அடிப்பட்ட சான்றேரெல்லாருந் தமிழுக்குச் சிறந்தது இன்பவொழுக்க மென்றே ஒருமுகமாய் நின்று கட்டுரைத்துச் சொல்லுதலின், அவர்க்குப் பிற்காலத்தே நூல்செய்த திருவள்ளுவனார் கொண்ட முறை பரிமேலழகியார் காட்டியவாறு தமிழ்முறை யன்றென்பது தெற்றென விளங்காநிற்கும். 7. திருவள்ளுவர் வேறுமுறை கொண்ட காரணம் அற்றேல், தமிழ்மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் இயற்றப் புகுந்த திருவள்ளுவனார், அத் தமிழ் முறையோடு திறம்பி வட நூன்முறையைக் கைப்பற்றிய தென்னையெனிற் கூறுதும். இத்தென்றமிழ் நாட்டுப் பழைய வரலாறுகளை நன்காய்ந்துணர் வார்க்குத் திருவள்ளுவனார் இருந்த கி.பி. முதல் நூற்றாண்டிற் பௌத்தசமண் மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்தமை நன்கறியக்கிடக்கும். இதற்குத் திருவள்ளுவர் காலத்தை யடுத்துச் செய்யப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பௌத்தசமண் காப்பியங்களே ஒரு பெருஞ் சான்றாம். அவ்வாறு குடிபுகுந்த அச் சமயிகள் இரு பாலாரும், உலகிய லொழுக்கத்தை ஆழ்ந்தாராய்ந்தறிந்த சான்றோர் தம் நூல் வழக்கை நுணுகியாராயும் அறிவும துகையின்றி இன்பத்தினை இழித்துப்பேசி, அவ்வாற்றால் ஏனைமக்களினுந் தாமுயந்தார் போற்காட்டி, அங்ஙனங் காட்டுந் தமது கரவொழுக்கம் நிலை பெறுதற்பொருட்டு அறத்துக்கே உயர்வு சொல்வாராய், இந்நாட்டவரைப் பெரிய தொரு பொய்ம்மயக்கிற் படுப்பாராயினர். இவ்வாறு இன்பத்தை இகழ்ந்து அறத்தை உயர்த்துப்பேசி ஆரவாரஞ் செய்யும் பௌத்தசமண குருக்களின் உரைகளைக் கேட்ட தமிழ்ப்பொது மக்கள், அவர் இகழ்ந்து பேசிய இன்ப வொழுக்கத்தைத் தாமும் ஏனைமக்களும் விடமாட்டாமை நன்குணர்ந்தும், அறிவுரை கூறும் அவர் தம்மினும் உயர்ந்தார் போலுமென மயங்கிக், கரவொழுக்கத்தில் நிற்கும் அக் குருக்கண் மாரையும், அவர் தஞ்சொற் செயல்களையும் மிக உயர்த்துப் பேசுவாராயினர். இவ்வாற்றாற் பௌத்தசமண் கோட்பாடுகள் உண்மையில் மக்களியற்கைக்கும், அவர் தம் உலகியல் ஒழுக்கத்திற்கும் ஒருசிறிதும் பயன்படாவாயிருந்தும். போலியாக எங்கும் பரவி வரலாயின. இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் அப்புறச் சமயக்கோட்பாடுகள் மக்கட்குப் பயன்படாமையின் உள்ளீடில்லா வெறும் பதர்களாதல் தெரிந்து, உண்மை உலகியல் ஒழுக்கத்திற்கு ஏற்ற அறத்தின் கூறுபாடுகளைத் தமிழ்த் தொல்லாசிரியர் கொண்ட உண்மைப் பயன்றரு முறையில் இன்பத்தோடு படுத்து விளக்குவான் புகுந்தனர். அங்ஙனம் புகுந்தாருள் தலைநின்றவரான திருவள்ளுவனார், தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பௌத்த சமண் மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு, அவர் வழியேசென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன்வைத்து நூல் செய்வாராயினர். அங்ஙனம் நூல் செய்கின்றுழிப், பெரும்பாலும் இம்மையையே நோக்கின இல்லறமும், பெரும் பாலும் மறுமையையே நோக்கின துறவறமும் என அறத்தை இரண்டாக வகுத்து, அவ்விருவகையறமும் பொருளை இன்றி யமையாத கருவியாக அவாவுதல் பற்றிப், பொருளை அதன் பின் வைத்து, அவ்வாறு பொருள் துணையாக அவ் விருவகை அறத்தானும் அடையப்படும் இன்பமும், இம்மைக்கண் நுகரப்பட்டு இல்லறத்துக் கேதுவாய் நிற்குங்காதலின் பமுந், துறவறத்தின் பயனாய் மறுமைக்கண் நுகரப்படுந் திருவருள் இன்பமுமென இரண்டாதல் தெரிந்து, இன்பத்தினை இறுதிக் கண்ணும் வைத்து நூல்யாப்பாராயினர். ஆகவே, இறுதிக்கண் அவர் நிறுத்திய இன்பத்துப் பால் காமவின்பத்தினையே நுதலுவதென்று அம் மறுப்புரைகாரர் கூறியது பொருத்தமில் கூற்றாதல் காண்க. இறுதிக்கண் நின்ற இன்பத்துப்பால் இல்லறத்தின் பாலதான காதலின்பமொன்றனை மட்டுமே உணர்த்துவதன்று. ஆழ்ந்து நோக்குவார்க்கு, அது துறவறத்தின் பாலதான திருவருளின்பத்தையும் ஒருங்கு உணர்த்துவதேயாகும். இங்ஙனமே தமிழ்நூல்களிற் கூறப்படும் அகப்பொருட் காதலொழுக்க மெல்லாம் இம்மையின்பமொன்றனையே உணர்த்தாமல், திருவருளின்பத்தையும் உடனெடுத்து ஓதுவதென்பதற்குச், சைவவமய ஆசிரியரில் முதல்வரான மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச் செய்ததையும், ஏனை அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயக்குரவர்களுந் தாமருளிச் செய்த திருப் பதிகங்களில் ஆங்காங்கே தலைவன் தலைவி முறையில் வைத்து இறைவனைப் பாடியிருத்தலும், சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான திருவுந்தியார், பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாயங்கே முற்றவரும் பரிசு உந்தீபற முளையாது மாயைஎன்று உந்தீபற என்று உரைத்தலுமே சான்றாம். அகப்பொருட் காதல் ஒழுக்கத்தினைக் கூறுந் திருச்சிற்றம்பலக் கோவையார் இவ்வாழ்ந்த திருவருளின்பக் கருத்தும் உணர்த்தும் பெற்றியது என்பதற்குச் சிவஞானி ஒருவர் இயற்றின திருக்கோவையார் உண்மை என்னும் நூலுஞ் சான்றுபகரும். எனவே, திருவள்ளு வனார் தமதருமைத் திருக்குறள் நூலின் இறுதிக்கண் நிறுத்திய இன்பத்துப்பால், அவர் தாம் வகுத்த இல்லறத்துறவறம் இரண்டிற்கும் பொதுவான இன்பத்தையே உணர்த்துங் கருத் துடைய தன்றி இல்லற நுகர்ச்சியொன்றற்கே உரிய காதலின்பத் தினை மட்டும் உணர்த்துவதன்றென்பது கடைப்பிடிக்க. இவ்வாற்றல், இல்லாளொடு கூடியிருந்து நுகரும் இன்பமே காமத்துப்பாலிற் சொல்லப்பட்டதென்னும் அம்மறுப்புரை காரர் கூற்று உள்ளீடில்லாப் போலியாய் ஒழிந்தமை கண்டு கொள்க. 8. திருவள்ளுவரும் இன்பத்துக்கே முதன்மை தந்தமை இனிப், பௌத்தசமண் சமயக் குருக்கண்மார் இல்லறத்தை இகழ்ந்து துறவறத்தையே பெரிது கொண்டாடா நிற்பர். இல்லறத்தின்வழிச் செல்லாத துறவு, நிலைபேறின்றிச் சீர்குலையும் என்பதற்கு அத் துறவிமார்தங் காமக் கரவொழுக் கமே சான்றாம். இவ்வுண்மை கண்டு தெய்வத் திருவள்ளுவர் அவர் தங்கொள்கையை மறுத்தற் பொருட்டே இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தை முன்வைத்து நூல்செய்ததூஉம், அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் (குறள்-46) என்றும், இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாருந் தலை (குறள்-47) என்றும், ஆற்றினொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்-48 என்றும், அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று (குறள்-49) என்றும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்-50) என்றும் அவர் இல்லறத்தைத் தமிழ்ச் சான்றோர் வழக்குப் பற்றித் துறவறத்தினும் மிக்கெடுத்துக் கூறியதூஉமென்க. இனி, இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவனார் முன்வைத்து நூல்யாத்தமையின், அவர் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தார் என்று எமது தலைமைப் பேருரையிற் கூறினாமன்றி , இல்லாளொடு கூடிநுகரும் இன்பமும் அவர் இல்லற இயலிற் கூறினாரென மொழிந்திலேம். இவ்வாறாகவும், இன்பநுகர்ச்சிக்கு அவர் முதன்மை தந்தார் என யாம் மொழிந்தேம் எனப் பிழைபடக்கொண்டு, அம் மறுப்புரைகாரர் தமக்கும் தோன்றியவாறெல்லா மெழுதினார். இன்பமும் இன்பநுகர்ச்சியும் வேறாதலை உணர்ந்திருந்தன ராயின் அங்ஙனம் பிழைபட உரையார். மனையாளைப் புணர்ந்து நுகரும் இன்பங் காமத்தின்பாற்படும். அவளைப் புணராத காலங்களில் அவடன் அருங்குணங்களொடு பழகுதலானும், அவடன் அறிவுச் செயல்களைக் காண்ட லானும், அவடன் அறிவு மொழிகளைக் கேட்டலானும், எல்லா வகையினும் அவள் தன்னோடு ஒத்து ஒழுகுதலை வியத்தலானும். அவடன் எழில் நலங்களை நோக்குதலானுங் கணவற்கு ஓவாது விளையுமின்பங் காதலின்பத்தின்பாற் படும். இங்ஙனமே தன் கொழுநன்றன் அருமைப்பாடுகளை உணருந் தொறும் நினையுந்தொறும் மனைவிக்குங் கழிபெருங் காதலின்பம் ஓவாது விளையாநிற்கும். இவ்வாறு காதலின்ப நிகழ்ச்சி அவர் தமக்குள் உண்டாயினாலன்றி அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இயலாது; அன்புடையராய் ஒழுகினாலன்றி அவர் ஒருமித்துநின்று, அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலுங் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் (சிலப்பதிகாரம்) ஆகிய இல்லறத்தை இனிது நடாத்துதலும் ஒரு சிறிதும் இயலாது. ஆகவே, இன்பத்தின் வழித்தாகவே அல்லது இன்பத்தை நுதலியே இல்லறம் நடைபெறுதல் ஐயுறவின்றித் தெளியப்படும். இவ்வியல் பினை, ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரே காதலின்பத்தின் விளைவான அன்பை முன் வைத்து அறத்தைப் பின் வைத்து, அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (குறள்-45) என்று கூறி நன்கு விளக்கியருளினார். அவர் கருத்தறிந்த உரைகாரர் பரிமேலழகியாரும் இல்லாட்குங் கணவற்கும் நெஞ் சொன்றாகாவழி இல்லறங் கடைபோகமையின், அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று. என்று உரை கூறியதூஉம் உற்று நோக்கற்பாலதாம். இவ்வியல் பெல்லாம் நூல் வழக்கானேயன்றி உலகியல் வழக்கானும் எளிதில் உணரக்கிடப்பவும், இவை தாமும் உணரமாட்டாது, அறமே முதற்கண் வைக்கப்பட்டதென அம்மறுப்புரை காரர் கூறியது இரு வகை வழக்கிற்கும் மாறுகோளாம் என்க. எனவே, காதலின்பத்தினை அடிப்படையாய்க் கொண்டே ழுந்த இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவர் முன்வைத்து நூல்யாத்தது, அவர் பண்டைச் செந்தமிழ் நல்லாசிரியர் நிறுத்திய மெய்வழக்கிற்கு மாறாகாமைப் பொருட்டேயா மென்பதூஉம், தற்காலத்துப் புதிது புகுந்த பௌத்தசமண் சமய வழக்குப் பற்றி அறத்தை முதல் நிறுத்தினும் அவ்வறத்திற்கு அடிப்படையான இன்பத்துக்கு முதன்மை கொடுத்தலே அவர்தம் உண்மைக் கருத்தாமென்பதூஉம், இப்பெற்றி யெல்லாம் நன்காய்ந்து பாராது அம்மறுப்புரைகாரர் கூறிய கூற்றுத் திருவள்ளுவனார் கருத்தொடு முரணிப் பிழைபடுவதாம் என்பதூஉந் தேற்றமாதல் காண்க. 9. உயிர்களின் முயற்சிக்கு ஊழ் முதற்காரணம் ஆகாது இனி இன்பத்தை நுதலியே பொருள் ஈட்டுதலும், அறஞ் செய்தலும் நிகழ்கின்றன என்னும் எமது கோட்பாட்டுக்கு முதலில் இணங்கிப் பேசியவர். அம்மட்டில் அமையாது இன்பத்தை நுதலி மக்கள் செய்யும் அவ்விரு வகை முயற்சியும் முட்டுப்படுதற்குக் காரணம் பழவினையே என்கின்றார். எல்லா உயிர்களும், அவ்வுயிர்களிற் சிறந்த மக்களுஞ் செய்யும் முயற்சியெல்லாம் இன்பத்தை நுதலியே நடைபெறுதல் மறுப்புரை காரரை யுள்ளிடட எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தாகலின் அவ்வுண்மையினையே யாம் எடுத்து விளக்கின மன்றி, மக்கள் செய்யும் முயற்சி பழவினையால் முட்டுப்பட்டு வறிதாதலையேனும், அன்றி நிறைவேறுதலையேனும் எடுத்துப் பேசினேமல்லேம். அங்ஙனமாகவும், அவர் எடுத்த பொருளை விட்டு அதற்கியையில்லாத தொன்றனை எடுத்துரைத்தல் மேற்கோள்மலை வென்னுந் தோல்வி (நிககிரகதான) முறையாதலை உணர்ந்திலர் போலும்! இன்பத்துக்கு முதன்மை சொல்லும் எமது மேற்கோளை (பிரதிஞ்ஞை) மறுக்கப் புகுந்தவர் அதனை மறுத்து அறத்துக்கு முதன்மை சொல்லுந் தமது மேற்கோளை நாட்டல் வேண்டுமேயல்லாமல், அதனை விடுத்துப் பழவினைக்கு இடையே முதன்மை சொல்லப் புகுதல், மறுப்பெழுதும் முறை இன்னதென்றே அறியாதார்தங் குழறு படையாம். அறம் முதலியவற்றிற்குக் காரணம் பழவினை யேயாயிற், பின்னர் அறத்தைப் பொருளின் பங்குகளுக்குக் காரணமென்றல் முன்னொடுபின் முரணுமன்றோ? மேலும், பழவினைக்கே முதன்மை சொல்லுவார் மீமாஞ்சகரேயன்றிச் சைவ சித்தாந்திகளல்லர். மக்கள் தமது நன்முயற்சியால் ஊழையும் புறங்காண்பர் என்பதே சைவ சித்தாந்திகள் கோட்பாடு; என்னை? மக்கள் தமக்கென ஓர் அறிவுஞ் செயலும் இலராயின், அவர் செய்யும் முயற்சியெல்லாம் ஊழ்வினை யொன்றினாலேயே யாவனவாயின் அவர் அறிவுஞ் செயலுமில்லாக் கல்லும் மண்ணும்போல், அறிவில் (அசேதனப்) பொருள்களாவராதலின் என்க. அதுவேயுமன்றி, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அறத்துப்பாலின் ஈற்றில் ஊழ்வலியை மிகுத்துக் கூறினாராயினும், அவ்வூழின்வலி, மக்களின் விழுமிய அறிவு முயற்சியின் முன்னே நில்லாதொழியு மென்று தெருட்டிப், பின்னின்ற பொருட்பாலில் ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்று முடித்துக் கூறுதலாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் நாயனார்க்கும் உடன்பா டல்லாமை நன்கு பெறுதுமன்றோ! மலத்தினால் மறைவுண்டு கிடந்த உயிர்கள் இறைவன் திருவருளால் மாயையிற் றிரட்டப்பட்ட உடம்பினைக் கருவியாகப் பெற்று, அம் மலமாசு சிறிது நீங்கி அறிவும் முயற்சியும் உடையனவாய் முனைந்து நிற்கும் வழி, அவை இன்பத்தை அவாவியே நிற்கும் அல்லது அறத்தினை அவாவி நில்லா என்பதூஉம், முதன்முதற் பிறவிக்கு வரும் ஓரறிவுயிர்கட்குப் பழவினை சிறிது மின்மையின் அவற்றின் முயற்சிக்குப் பழவினை காரணமாகாது இன்பமே தலைக் காரணமாய் நிற்கு மென்பதூஉம், அதனாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் சைவசித்தாந்தத்துக்குச் சிறிதும் அடா தென்பதூஉம், யாண்டும் உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செய்த முயற்சிகளின் பழக்கந்துணையாக மேன்மேற்பிறவிகளில் மேலுமேலும் அறிவுமுயற்சி யுடையனவாய்ச் செல்லுதலின் இன்பத்தா லுந்தப்பட்ட அறிவுமுயற்சியே பிறவியி னேற்றத் திற்குக் காரணமாமென்பதூஉம், இதுவே சைவசித்தாந்தத்துக்கும் அதனை அகத்தடக்கி நூல்செய்த திருவள்ளுவனார்க்குங் கருத்தா மல்லது இதற்கு மாறாக அறத்திற்கு முதன்மை சொல்லுதலும் அதனை விட்டுப் பழவினைக்கு முதன்மை சொல்லுதலும் அவர்க்குச் சிறிதுங் கருத்தன்றாமென்பதூஉம் அம்மறுப்புரை காரர் உணரக் கடவாராக. சிறப்பீனுஞ் செல்வமுமீனும் என்னுந் திருக்குறள் அறஞ்செய்தலால் வரும் பயன் உணர்த்துவதேயன்றி, இன்பத்தினும் பார்க்க அறமே சிறந்ததென அறத்திற்கு முதன்மை சொல்லாமையின் அதனை எடுத்துக் காட்டுதலால் அம்மறுப்புரைகாரர் கருத்து நிரம்பு மாறில்லை யென்றும் ஓர்க. 10. அன்பும் இன்பத்தையே நுதலும் இனி, இன்பமே முதலென்பதற்குத் திருவள்ளுவனார் அருளிச் செய்த அன்பு மறனும் உடைத்தாயின் என்னுந் திருக்குறளை யாம் எடுத்துக்காட்டியது பொருத்த மில்லை என்றும், அஃது அன்புக்கே முதன்மை சொல்லுகின்ற தென்றும் மறுப்புரைகாரர் கூறியதனைச் சிறிது ஆராய்வாம். கணவனும் மனைவியும் ஒருவரோ டொருவர் அன்பு பூண்டொழுகுதல் எதனால் என்று உலகியலறிவு சிறிதுடையாரை வினாவினும், அவர் அவர்க்கு விடைதருவர். தாம் நுகருங் காதலின்பத்தினைக் குறிக்கொண்டே அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இனிது விளங்கிக் கிடப்பவும், இது தானும் உணராது மறுப்பெழுதப் புகுந்தார்க்கு நல்லறிவு கொளுத்தும் வாயில் ஏது? மேலும், மாயோன் மேய காடுறை யுலகமும் என்னுந் தொல்காப்பிய அகத்திணை இயற் சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் என்று கூறிய அரிய உரையையேனுந், திருவள்ளுவனார் இன்பத்துப் பாலிற் கூறிய, ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின் என்னு மருமைத் திருக்குறளையேனும் அறிந்திருந்தன ராயின் அம் மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாங் கூறி இழுக்குறார். எனவே, அன்பு என்னும் முளை, காதலின்ப மென்னும் வித்தினின்றும் உளதாகக் காண்டலின் இன்பங் காரணமும் அன்பு அதன் காரியமுமாய் நிற்பதாமென்றும், காதலர்க்குள் நிகழும் அன்பினைக் கூறவே அதற்கு முதலான இன்பமுந் தானே போதருமென்றும் உணர்ந்து கொள்க. அற்றேற், கணவனும் மனைவியுமல்லாத பிறசேர்க்கை யிலும் அன்பு நிகழக் காண்டுமாதலின், ஆண்டெல்லாங் காதலின்ப முண்டென்பது யாங்ஙனம் பெறப்படுமெனிற் கூறுதும்: எமது சைவசித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியார் உலகத்து மக்கள் மாட்டு நிகழும் அன்பின் சேர்க்கைகளை யெல்லாம் நால்வகைப்படுத்துச், சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம் தாச மார்க்கம் என்று கூறி, இந்நூல்வேறு வகையில் நிகழும் அன்பும், இறைவன் பால் அடியார்க்கு அவரவர் தரத்திற் கேற்ப நிகழுமென வலியுறுத்திற்று. இது கொண்டு அன்பின் தொடர்பும் அதற்குக் காரணமாவதும் ஆராய்ற்பாலன. கீழ்ப்படியின் முதலில் தாசமார்க்கம் நிற்பது; அஃது ஒருதலைவனுக்கும் அவனுக்கு ஏவல் செய்யும் அடியானுக்கும் இடை நிகழும் அன்பின்தொடர்பைக் காட்டும். ஏவலா ளில்லையேல் தானே செய்து முடிக்கவேண்டுந் தொழில்களை ஒருதலைவன் மேற்கொள்வனாயின் அவன் எவ்வளவு துன்புற்று வருந்துவன்! அவ்வாறின்றித், தன் சொல்லுங் குறிப்புங் கடவாத நல்ல ஓர் ஏவலன் தன்தலைவன் இடர்ப்படுதற்குரிய தொழில் களைத் தான் நன்கு செய்து முடிப்பனாயின், அதனால் அத்தலைவன் இன்புற்றுத் தன்ஏவலனும் இன்புற்றிருக்குமாறு அவற்கு ஊண்உடை உறையுள் முதலிய நலங்களெல்லாம் நல்கக் காண்டு மல்லமோ? இவ்வாற்றால் ஒரு தலைவனாவான் தனக்கோர் இன்பத்தை நாடியும், ஏவலனாவான் அவற்குப் பணிபுரியுமாற்றால் தனக்குவரும் இன்பத்தை நாடியும் ஒருவரோடொருவர் தொடர்புடையராய் வாழ்கின்றரேயல் லாமல், அவ்விருவரும் இன்பத்தை நாடாது தொடர்புறக் காண்கிலேம். ஆகவே, அவர் தமக்குள் நிகழும் அன்பின் தொடர்ப்புக்கும் இன்பமே காரண மென்பது பெற்றாம் இத்தொடர்பின்கண் தலைவன் உயர்ந்தோனும் ஏவலன் தாழ்ந்தோனுமாய் இருத்தலின் ஏவலன் தலைவனை அணுகாது அகன்றொழுகும் நிலையினனாவன். இவ்வாற்றல் இவர் தஞ்சேர்க்கை கீழ்ப்படிக்கண் நிறுத்தப்பட்டது. இனித், தாசமார்க்கத்திற்கு மேலான இரண்டாம்படியில் நிற்பது சற்புத்திரமார்க்கம் ஆகும். இஃது ஒருதலைவற்கும் அவன்றன் புதல்வற்கும் இடைநிகழும். அன்பினை உணர்த்து வது. தன் தலைவன்பால் அடியவனுக்கில்லாத உரிமை அவன்றன் புதல்வற்கு உளதாவதால், முன்னை நிலையினும் இந்நிலையில் நிற்பார்க்கு நெருங்கிய தொடர்பும் அது பற்றிவரும் உரிமையும் அவ்வுரிமையால் நிகழும் மிக்க அன்பும் உண்டாதலைக் காண்கின்றோம். என்றாலுந், தன் தந்தையொடு கூடிநுகரும் இன்பம் புதல்வற் கிண்மையின் இஃது இரண்டாம் படிக்கண்ணே வைக்கப் பட்டது. என்றாலும், புதல்வனால் தந்தைக்கு இன்பமுந், தந்தையின் உதவியாற் புதல்வர்க் கின்பமும் நிகழக் காண்டலின் இவரது சேர்க்கையும் இன்ப மென்னும் பொன் நாணினாலேயே பிணைக்கப்பட்டு விளங்குகின்றன தென ஓர்மின்! இனி, இதற்குமேல் மூன்றாம் படிக்கண் நிற்பது சகமார்க்கம் என்று நுவலப்படும். ஒரு தலைவன்பால் அவனடியவனுக்கு அன்புடனே கூட மிக்க அச்சமும் நிகழும்; புதல்வற்கோ தன் தந்தையினிடத்து மிக்க அன்பு உண்டாயினுந், தந்தையின் ஒழுகலாறுகள் எல்லாவற்றுள்ளுந் தலையிடுதற்கு உரிமையில்லானாய் அச்சத்தால் அவனைச் சிறிது அகன் றெழுகுங் கடமைப்பாடேயுடையன். மற்று, நெருங்கிய கெழுதகைமை வாய்ந்த தோழர் இருவர்க்குள் நிகழும் பேரன்போ அச்சம் சிறிதுமே கலக்கப்பெறாத விழுப்பம் வாய்ந்தது; ஒருவருள்ள நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவரறிந்து நலந்தீங் கிரண்டிலும் நழுவாத கேண்மையுடையராய் நிற்கச் செய்வது கீழ்ச்சென்ற ஏனை இரு படிகளில் நிற்பாரினும் நெஞ்சம் ஒத்த நேயர்மாட்டு நிகழும் அன்பும் இன்பமுஞ் சாலப்பெரிவாகலின், இவரது சேர்க்கை ஏனையிருவரது சேர்க்கையினுஞ் சிறந்ததாக மூன்றாம் படிக்கண்ணே இருத்தப் பட்டது. நெஞ்சு ஒன்றாகாவழித் துன்பமும், அவை ஒன்றாய வழிக் கழிபேரின்பமும் விளைதலால், தோழர் தம் சேர்க் கையும் இன்பத்தையே நிலைக்களனாய்க் கொண்டு நிற்றல் எளிதிற் புலனாம். இனி, இதற்குமேல் நாலாம்படிக்கண் இறுதியாய் நிற்பது சன்மார்க்கம் என்று உயர்த்துச் சொல்லப்படுவதாகும். இஃது ஒரு தலைவன்பால் அவனோடு உயிரும் உடம்பும் ஒன்றான அவன்றன் காதலிக்கு உளதாகுங் காதலன்பின் சேர்க்கை யேயாகும். இதற்குக்கீழ்ப் படியில் நின்ற தோழரது சேர்க்கை மிகச் சிறந்ததேயாயினும், அஃது அவர் தம் உள்ளத்தளவாய் நிற்பதேயன்றி, அவர்தம் உடம்பையும் பற்றி நிற்பதன்று. மற்றுக், காதலன்பின் வயப்பட்ட தலைவன் றலைவியர் சேர்க்கையோ அவர் தம் உள்ளத்தையேயன்றி உடம்பையும் ஒருங்கு பிணித்து, அன்பின் சேர்க்கைகள் எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாய்த் திகழ்வதாகும். இங்ஙனம் நிகழும் இம் முடிந்த சேர்க்கைக்கண் உண்டாம் இன்பப் பெருக்கின் நிலை அந்நிலைக்கண் வைகும் அவ்விருவர்க்கல்லாமல் வேறெவர்க்குந் தினைத்தனையும் புலனாகாது; இஃது உணர்த்துதற்கன்றே, தெய்வப் புலமைத் திருவள்ளுவனார், தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு என்றருளிச் செய்ததூஉம், மாணிக்கவாசகப் பெருமான், உணந்தார்க் குணர்வரி யோன்தில்லைச்சிற்றம் பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாய்இக் கொடி யிடைதோள், புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும் போகம் என்றருளிச் செய்ததூஉமென்றுணர்ந்து கொள்க. இவ்வாறெல்லாம் இவ்வுலகத்து நடைபெறாநிற்கும் இந்நால்வகைச் சேர்க்கை களும் நன்களந்து காணவல்லார்க்கு, அவையெல்லாம் அன்பி னையும் அதற்கு வித்தான இன்பத்தினையுமே உயிராய்க் கொண்டு நிற்றல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளிதிற் புலனாம். எனவே, அன்புக்கு முதன்மை சொல்லும் இடங்களி லெல்லாம் அதற்கு முதலான இன்பமும் உடன்விராய் நிற்கு மென்றும், அது குறித்தே மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை இன்பமே என்னுடை அன்பே என அவ் விரண்டையும் ஒருங்கு புணர்த்தோதினாரென்றும் உணர்ந்து, அம் மறுப்புரைகாரரின் பிழைபாட்டினைத் தெரிந்துகொள்க. 11. காமம் என்பது உயர்பொருளும் இழிபொருளுந் தரும் இனி, யாம் காதலின்பம் உயர்ந்ததெனவுங் காமவின்பந் தாழ்ந்ததெனவுங் கூறியதனை அம்மறுப்புரைகாரர் பிழை யெனப் புகன்று, காமம் என்பது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்து மெனக் கிளந்ததனைச் சிறிது ஆராய்வாம். காமம் என்னுஞ் சொற்பொதுவாய் ஓர் ஆண்மகற்கும் ஒரு பெண்மகட்கும் இடை நிகழும் உடம்பின் சேர்க்கையால் உண்டாம் இன்பத்தினை உணர்த்துமன்றி, யாண்டும் அஃது உயர்ந்த இன்பத்தினையே உணர்த்துவதன்று. அங்ஙனமின்றி மறுப்புரை காரர் கூறுமாறு அஃது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்துவதொன்றாயிற், காதற்காமங் காமத்திற் சிறந்தது என யாம் மேலெடுத்துக்காட்டிய பரிபாடற் பழஞ் சான்றோர் தம் மெய்ம்மொழிக்கு யாங்ஙனம் பொருளுரைப்பர்? காமம் என்னுஞ் சொல்லே உயர்ந்த வின்பத்தினை யுணர்த்துமாயின் ஆசிரியர் குன்றம்பூதனார் காதற்காமம் என அதற்கு வேறு அடைமொழி கொடுத்ததுங், காதற்காமமே காமவின்பத்திற் சிறந்த தென்றதும் என்னை? மக்கள்பாற் பொதுமையில் நிகழுங் காமவின்பங்கள் பலவற்றுட், காதலன்பின் விளைவான காமமே சிறந்ததென அவர் உரைக்குமாற்றாற், காமம் என்னுஞ் சொல் உயர்ந்தகாமத்திற்கும் இழிந்த காமத்திற்கும் பொதுவாய் நின்று புணர்ச்சி யின்பத்தினை யுணர்த்துமென்பது புலப்பட வில்லையா? ஆசிரியர் நக்கீரனார் இறையானரகப் பொருளுரை யிற் களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானும் கடியப் பட்டன? அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின்; அற்றன்று, களவு எனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉங், காமம் என்னுஞ் சொற்கேட்டுக் காமந் தீதென்பதூஉம் அன்று; மற்றவை நல்லவாமாறும் உண்டு என்றுரைத்த மெய்யுரை யாற், காமம் என்னுஞ்சொல் இழிந்த இன்பத்தின் மேற்றாயும் உயர்ந்த இன்பத்தின் மேற்றாயும் வருதல் தெளியப்படுகின்ற தன்றோ? அற்றேல், ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை உயர்ந்தவின்பத்தின் மேற்றாகவே வைத்துரைத்த தென்னை யெனின்; அச் சொல் உயர்ந்த வின்பத்தினையும் உணர்த்து தற்கு உரிமை யுடைத்தென்பது மேலே நக்கீரனார் கூறிய வுரையாற் றுணியக்கிடத்தலின், அன்பினைந்திணை யொழுக் கத்தைக் கூறும் தமது மேற்கோளுக்கு இசைய ஆசிரியர் அச் சொல்லைக் காதலின்பத்தின்பாற் படுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். ஒரு நூலுள் வரும் ஒரு சொல்லுக்குப் பொருடுணியும் வழி, அந் நூல்யாத்த ஆசிரியன் கருத்தறிந்து அதற்குப் பொருள்கொள்ளல் வேண்டுமேயல்லாது, தமக்குத் தோன்றிய வாறெல்லாம் அதற்குப் பொருளுரைப்பது சிறிதும் முறையாகாதென்க. இனி, ஆசிரியர் திருவள்ளுவனாரோ காமம் என்னுஞ் சொல்லுக்கு உயர்பொருள் இழிபொருள் இரண்டுங் கொண்டிருக்க, அதனை ஆராய்ந்து பாராத அம் மறுப்புரை காரர் அச் சொல்லுக்கு அவர் உயர்பொருளே கொண்டா ரெனப் பிழைபடக் கூறினார். திருவள்ளுவனார் காமத்துப் பாலில் மட்டும் அதற்குயர்வுபொருள் கொண்டு, துறவற வியல் மெய்யுணர்தல் அதிகாரத்திற், காமம் வெகுளி மயக்கம் இவைமூன் றன் நாமங் கெடக்கெடு நோய் என அதற்கு இழிவுபொருள் கொண்டார். ஆகவே, யாம் மெய்யன்பின்வழி நிகழும் உயர்ந்த காமவின்பத்தைக் காதல் என்றதும், அம் மெய்யின்பின் வழி நிகழாது வெற்றுடம்பின் சேர்க்கையளவாய் நிகழ்வதனை இழிந்த காமம் என்றதுந் தொல்லாசிரியர் வழக்கோடு ஒருங்கொத்த முடிபாகலின், இஃதுணராது காமம் என்னுஞ்சொல் உயர்ந்தவின்பத் தினையே யுணர்த்துமென்ற அம் மறுப்புரைகாரர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதடியாய் ஒழிந்ததென்றறிந்து கொள்க. 12. தொல்காப்பியத்திற் சாதி இல்லை இனித், தொல்காப்பியத்தில் தொழில் வேற்றுமையே சொல்லப்பட்ட தன்றிச், சாதி வேற்றுமை சொல்லப்பட வில்லை யென்ற எமது மேற்கோளை, அம் மறுப்புரைகாரர் மறுத்த பகுதி சிறிது ஆராயற்பாற்று. மக்கள் வாழ்க்கையானது, அவர் தம்முள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு அவ்வாற்றால் ஒருவருக்கொருவர் உதவியாய் நிற்ப, நடைபெறுவதாகும். ஒருவரே தமக்கு வேண்டும் பொருள்களையெல்லாந் தம்முடைய முயற்சியினாலேயே தேடிக் கொள்ளுதல் இயலாது. பசித்த வேளைக்குக் காயோ கனியோ பச்சிலையோ உண்டு, தழை களை உடுத்துக், குகைகளிலும் மரப்பொந்துகளிலும் இருந்து உயிர் வாழும் மக்களுங்கூடத் தம்முள் ஒருவருதவியை ஏனையோர் வேண்டி நிற்கின்றார். ஏதொரு முயற்சியுஞ் செய்ய அறியாத சிறு குழவிப் பருவத்தும், முயற்சி அவிந்த முதுமைப் பருவத்தும் மக்கள் பிறருதவியைப் பெறாமற் பிழைத்தல் இயலாதன்றோ? முயற்சியும் ஆற்றலும் உடைய இளம் பருவத்தினருங்கூட இடையிடையே வரும் நோயானும் பிற துன்பங்களானுந் தம் முயற்சியும் வலிவும் இழந்து பிறருதவியை அவாவியபடியாய்க் கிடத்தலையுங் காண்டு மன்றோ? நாகரிகமில்லா மக்களுள்ளேயே ஒருவருதவியை ஒருவர் நாடாது உயிர் வாழ்தல் இயலாதாயின், அறிவும் இன்பமும் முறை முறையே மிகும் நாகரிக வாழ்க்கையில் உள்ளார்க்கு ஒருவருதவியை யொருவர் அவாவாது காலங் கழித்தல் இயலுமோ? உழவும் நெசவும் வாணிகமும் அரசும் போரும் ஓதுதலும் இறைவற்கு வழிபாடு ஆற்றுதலும் பிறவுமாகிய தொழில்களை யெல்லாம் மக்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே செய்வதென்றால், அதற்கு அறிவும் ஆற்றலும் போதாமையோடு வாழ்நாளுங் காணாது. ஆகவே, ஒவ்வொரு தொழிலையுஞ் சிறப்பாகச் செய்தற்கு ஒவ்வொரு தொகுப்பினர், இப் பரத நாட்டிலே மட்டுமன்றி நாகரிகத்திற் சிறந்த ஏனை அயல் நாடுகளிலும் இன்றியமையாது இயற்கையாகவே பண்டு தொட்டு வகுக்கப்படுவாராயினர். இங்ஙனமாகப் பரந்து பல வேறு வகைப்பட்டு நிகழுந் தொழில்களைச் செய்யும் மக்கள் எல்லாம் பதினெண் வகுப்பினராகத் தமிழ்நாட்டின்கட் பிரிக்கப் பட்டனர்.மற்று, ஆரியர் வந்து குடியேறிய வட நாட்டிலோ எல்லாத் தொழில்களுங் கைத்தொழிலும் உழவு வாணிகமும் அரசும் ஓதுதலும் என நால்வகையுள் அடக்கப் பட்டு, அவற்றைச் செய்வார் முறையே சூத்திரரும் வைசியரும் க்ஷத்திரியரும் பிராமணரும் என நால்வகுப்பாகப் பிரிக்கப் பட்டனர். இவ்வாறு தென்னாடு வட நாடுகளிற் றொழில் வேறுபாடு பற்றிப் பண்டை நாளில் தனித்தனி வகுக்கப்பட்ட மக்கட் கூட்டத்தாருட் டொழில் வேற்றுமை ஒன்றே யிருந்ததல்லாமல், அக் கூட்டத்தார் ஒருவரோ டொருவர் அளவளாய் உண்ணல் கலத்தல்களைச் செய்தலில் ஏதொரு வேறுபாடும் இருந்ததில்லை. இனி, இத் தொழில் வேற்றுமையிலிருந்து, காலஞ் செல்லச் செல்லச் சில தொழில்கள் உயர்வாகவும் ஏனைச் சில தொழில்கள் தாழ்வாகவுங் கருதப்படலான காலந்தொட்டு, அவ்வக் கூட்டத்தார் தத் தம்மிலன்றிப் பிறரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்ய மறுத்தமையிற் சாதி வேற்றுமை உளதாயிற்று ஒழுக்கத்தால் உயர்குணத்தால் நல்லறிவால் மெய்யன்பாலன்றி, வெறும் பிறப்பளவால் தம்மை யுயர்த்தி ஏனையோரைத் தாழ்த்திப் பேசுஞ் சாதியிறுமாப்புப் பெரும் பாலும் இத் தமிழ்நாட்டின் கண்ணே தான் உண்டாயிற்று. இத்துணைக் கொடிய சாதி வேற்றுமை வடநாட்டின் கண் இல்லாமை அங்குச் சென்றார் யாவரும் நன்குணர்வர். இங்ஙன மெல்லாம் முன்னில்லாத சாதி வேற்றுமை பின்னுண்டான வரலாறுகளை, அரிய பெரிய நூன் மேற்கோள்களுடன் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றோம். அவற்றிற் கெல்லாம் விடைதர மாட்டாத அம் மறுப்புரைகாரர் ஒவ்வொரு கூட்டத்தார்க் குரிய ஒவ்வொரு தொழில் வரையறை யினை நுவலுஞ் சில தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக் காட்டி, அவ்வாற்றால் தொல்காப்பியத்திலேயே சாதி வேற்றுமை சொல்லப் பட்டிருக் கின்றதென எளிதாகச் சொல்லி விட்டார். இவர் தம் அறிவின் திறத்தை என்னென்பேம்! தொல் காப்பியத்திற் சாதி வேற்றுமை கூறப்பட்டதென நாட்டப் புகுந்தவர், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யவில்லை யென்றாதல், அன்றிச் செய்யலாகாதென்றாதல், நுவலும் அல்லது கட்டளை தருஞ் சூத்திரங்களிருந்தால், அவற்றையன்றோ எடுத்துக் காட்டல் வேண்டும்? அவ்வாறு செய்தற்கு அந்நூலிற் சிறிதும் இடன் இன்மையால், அது செய்யமாட்டாராய் அவ்வவர்க்குரிய தொழில் வேறுபாடுகளை மொழியுஞ் சூத்திரங்களையே சாதி வேற்றுமையும் மொழிவனவாகப் பிழைபடக் கருதி அவை தம்மையே எடுத்துக் காட்டி இழுக்கினார். நன்று, தொல்காப்பியத்திற் சாதி வேற்றுமை நுவலுஞ் சூத்திரங்கள் இல்லாதது உண்மையேயாயினுந், தொழிலால் வேறுபட்ட கூட்டத்தார் பலர் தமக்குள் உண்ணல் கலத்தல்கள் நிகழ்ந்தமையாவது அதன்கட் சொல்லப்பட்டுளதோ வெனின்; உளது, குறிஞ்சி நிலத்தில் வைகும் வேட்டுவ மகளிரை மருத நிலத் தலைவர்களான வேளாளர்கள் மணந்து கொண்டமையும், அவர்களோடு ஒருங்கிருந்து அவர்கள் அட்டுப் படைத்த உணவினை அமிழ்தினுஞ் சிறந்ததாகப் பாராட்டி அருந்தினமையுந், தொல்காப்பியத்துக் களவியல், 16ஆம் சூத்திரத்தில், புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் என்றும், வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும் என்றும், கற்பியல், 29 ஆம் சூத்திரத்தில் வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும் என்றும், கற்பியல், 5ஆம் சூத்திரத்தில், சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் என்றும் போந்த அருளுரைகளால் விளக்கமாக அறியப் படுகின்றன வல்லவோ? இங்ஙனம் அவ்வந்நிலத்துத் தொழிலால் வேறுபட்ட மக்கள் அதுபற்றித் தம்முள் உண்ணல் கலத்தல் களினும் வேறுபடாமல் ஒருங்கு அளவளாய் வாழ்ந்தமை யினைத் தெற்றென எடுத்துரைக்குந் தெய்வத் தொல்காப்பிய நூற்கருத்தினை எள்ளளவும் உணர்ந்து பாராத அம் மறுப்புரைகாரர், அதனைத் தமது சாதியிறு மாப்புரைக்குத் துணையாகக்கொண்டது, பெரிய கருங்கல்லைப் புணையாகக் கொண்டு பெரிய கடலை நீந்தப் புக்கோன் புன்செயலாய் முடிந்தமை காண்க. அற்றாயினுந், தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்துணரக் கிடக்கு மென்றல் ஆகாதோ வெனின்; ஆகாது, பண்டைநாளிலிருந்த மக்களுள் ஒரு குடும்பத்தாரிலேயே பலர் பற்பல தொழில்களைச் செய்தன ரென்பதும், அவ்வாறு பல வேறு தொழில்களைச் செய்யினும் அது பற்றித் தம்முள் வேறுபடாது ஒன்றாகவே யிருந்தன ரென்பதும் இருக்குவேத ஒன்பதாம் மண்டிலத்தின்கட் போந்த (169,9), யான் பாடல்களைச் செய்கின்றேன்; என் தந்தையோ ஒரு மருத்துவன்; என்தாயோ திரிகையில் தானியங் களை அரைக்கின்றான்; செல்வத்தைப் பெறும் பொருட் டாகப் பல்வேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப்போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம் என ஓர் ஆரியக்குடிப்பிறந்தான் இயற்றிய செய்யுளால் நன்கு தெளியப்படுகின்றமை காண்க. இஞ்ஞான்றும், பார்ப்பனர் என்றுஞ் சைவவேளாளர் என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக் கொள்வாரிலேயே ஒருபாலார் நூல் ஓதுகின்றார் ஓதுவிக்கின்றார், ஒருபாலார் திருக்கோயில்களில் தொண்டுபுரிகின்றார், ஒரு பாலார் உழவு செய்கின்றார் செய்விக்கின்றார், ஒருபாலார் ஊரூர் சென்றும் ஓருரிலிருந்தும் பண்டங்கள் கொண்டுவிற்கின்றார், ஒரு பாலார் உணவுப் பண்டங்கள் செய்து விற்கின்றார், ஒரு பாலார் இசை பாடிப் பிழைக்கின்றார், ஒருபாலார் நாடகம் ஆடிக் காலங் கழிக்கின்றார், ஒருபாலார் அரசின் கீழ்ப் பல துறைகளில் அமர்ந்து ஊழியஞ் செய்கின்றார், ஒருபாலார் மருத்துவத் தொழில் புரிகின்றார், ஒருபாலார் மன்றங்களில் வழக்காடு கின்றார், இன்னும் இங்ஙனமே அவர்செய்யுந் தொழில்கள் எத்தனையோ பல; அவ்வாறெல்லாம் அவர்கள் பற்பல தொழில்களைச் செய்தும், தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்யக் காண்டுமன்றோ? ஆகவே, தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்தறியப் படுமென்றல் பொருந்தாதென விடுக்க. 13. காரைக்காலம்மையார் மனைவாழ்க்கை இனிக், காரைக்காலம்மையார் தங் காதற்கருத்தறிந்து, அவர்தஞ் கற்றத்தார் அவர்க்கேற்ற மணமகனைத் தெரிந் தெடுத்து மணஞ்செய்வியாது, தமது சாதிக் கட்டுப்பாட்டிற் பிணிப்புண்டு, அவர்க்கு ஏலாத ஒருவனைக் கணவனாகப் பொருத்தினமையால் அவரது வாழ்க்கை காதலன்பின்பாற் பட்டு ஒரு வழிச்செல்லாதாயிற்று என யாம் மொழிந்ததனை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், மகளிர் தாமே கணவனைத் தெரிந்து கொள்ளும் முறை வேசிகளிடத்தும் அவரையொத்த வகுப்பாரிடத்துமன்றி, ஏனை யுயர்ந்த சாதியாரிடத்துப் பண்டும் இன்றும் நிகழவில்லை யென்கின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார், ஆரியர் நாட்டு எண்வகை மணங்களுட் சிறந்த காந்தர்வமணத்தோடு ஒப்ப தான கா தன் மணமே பண்டைத் தமிழ்மக்களுள் நடைபெற்ற விழுப்ப முடைய தெனக் கொண்டு, அதனையே சிறந்தெடுத்து, இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே (களவியல், 1) என்றருளிச் செய்தனர். இச் சூத்திரத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் இவ் விழுமிய மணமே வேதத்திற்கும் உடம் பாடென்பது காட்டுவாராய், வழக்கு நாடி என்றலின் இஃதுலகிய லெனப்படும்; உலகத்துமன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். என்று உரையுங் கூறினார். கூறவே, பண்டைத் தமிழ்மக்கள் மட்டுமேயன்றி ஆரிய மக்களுள்ளும் இளைய ஆடவரும் மகளிருந் தம்மில் ஒருவரையொருவர் காதலித்தே மணங் கூடினா ரென்னும் உண்மை இனிது விளங்கா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் வழிவந்த பண்டைத் தமிழ்ச்சான்றோரில் திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்திகள் முதலான எல்லாத் தெய்வ ஆசிரியர்களுங் காதன் மணத்தை விதந்தெடுத்து அருளிச் செய்திருக்க, காதன் மணம் பண்டைக் காலத் துணர்ந்தோரில் நடக்கவில்லையென்று படுபொய்யு ரைத்ததோடு அமையாது, அங்ஙனங் காதன் மணஞ்செய்த பண்டையுயர்ந்தோரையும், அம் மணத்தினை விதந்தெடுத்து நூல்யாத்த தெய்வ ஆசிரியரையு மெல்லாம் வேசி மக்கள் வகுப்பின்பாற் படுத்த அம்மறுப்புரைகாரர் அத் தமிழ் மேன்மக்கள் மரபில் வந்த ஒருத்தி வயிற்றிற் பிறந்தவரோ அல்லரோ அறிகிலம். ஒருகால் அவர் தம்மை ஆரிய வகுப்பின் கண் ஒருத்தி பாற் பிறந்தவராகக் கருதியிருக்கலாமெனின், ஆரிய வேதமுங் காதலன்மணத்தையே விழுமியதெனக் கொண்டு மொழிதலின், ஆரிய வேத நூலாசிரியரும் அவர் காலத்து ஆரிய மக்களும் எல்லாங் காதன் மணஞ் செய்தே வாழ்ந்தமை புலனாம்; அவ்வாறு காதன்மணஞ் செய்த ஆரியரும் அம் மறுப்புரைகாரர் கூற்றின்படி வேசிமக்களேயாய் முடிதலின், அவர் ஆரியப்பெண் ஒருத்தி வயிற்றிலும் பிறந்தவரல்லர் போலும்! இப் பரத நாட்டின்கட் பண்டுதொட்டு வாழ்ந்து வருந் தமிழர் ஆரியரெல்லாரும் வேசிமக்களாக இவரதுரையாற் பெறப்படுதலின், இவர் இவ்விருவேறு இனத்தவளல்லாத வேறெவ்வினத்தவள் வயிற்றிற் பிறந்தாரென்பதை அதனை ஆராய விரும்புவாரே நிலையிடற்பாலார்.அதுகிடக்க. இனிப், பண்டைநாளின்கணிருந்த உயர்ந்த மக்கள் எவருங் காதன் மணஞ் செய்யவில்லை என்று படுபொய் மொழிந்த அம் மறுப்புரைகாரர், அப் பொய்யுரையைப் பள்ளிக் கூடத்துச் சிறுவர்பாற் சென்று உரைப்பராயின், அவர் உடனே இவர்தம் பொய்யுரையின் புன்மையினை நன்கெடுத்துக்காட்டி இவர் இறுமாப்பினை அடக்கிவிடுவர். ‘உயர்குலத்த வனாகிய துஷ்யந்தமன்னனுங் கண்ணுவ முனிவர் வளர்த்த சகுந்தலையுந் தாமாகவே காதலித்து மணந்து கொண்ட வரலாற்றினை அறிந்திலிரோ!’ என்றும், “விழுமியோனை நளனை எழில் மிகும் அரசியான தமயந்தி பெரிதும் காதலித்துத் தானாகவே மாலைசூட்டி அவனை மணந்துகொண்ட வரலாற்றினை உணர்ந்திலிரோ!’ என்றும், ‘கற்பரசியாகிய சாவித்திரி சத்திய வானைக் கானகத்தே கண்டு அவன்மேற் கழிபெருங் காதல் கொண்டு அவனை மணந்த வரலாற்றினைத் தெரியீரோ! என்றும் அவர் கடாவி இவரது சாதிச் செருக் கினை எளிதிலே களைந்தொழிப்பர். இம் மேலோர்களை யெல்லாஞ் சிறிதும் வாய்கூசாது வேசிமக்களென்னும் வகுப் பிற் சேர்த்துரைத்த மறுப்புரைகாரர் புல்லுரையினை மேற் காட்டிய விழுமிய காதன் மண வரலாறுகள் வாளாய் நின்று ஈருமல்லவோ! அதுநிற்க. இனி, அம் மறுப்புரைகாரர் இஞ்ஞான்று காதன்மணம் புரிவாரையும் வேசிமக்களென்ற வகுப்பிற் சேர்த்துக் கூறிய தமது தலைகொழுத்த உரையினை, இஞ்ஞான்று கல்வியறிவு ஒழுக்கங்களாலும் உயர்ந்த பதவிகளானும் மேல்நிலைக் கண்ணின்று காதன்மணம் புரிந்து வரும் மேன்மக்கள்பாற் சென்று உரைப்பராயின் அவர், நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, நலமில்லாப் பொய்யுரை பகர்ந்து எம்மை இழித்துப் பேசும் நீரே நும்பிறப்பின்கண் ஐயப்படுதற் குரியீரன்றியாமல்லேம் என அவர் இவரது உரைக் கொழுப்பினை யுருகச்செய்வ ரன்றோ! இனி, ஆசிரியர் சேக்கிழார் உயர்ந்த வகுப்பார்பாற் காதன் மணம் நிகழ்ந்ததெனக் கூறிற்றில ரென்றார். உயர்ந்த ஆதி சைவ அந்தண வகுப்பில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்க் கும் பரவை நாச்சியார்க்கும் வேளாளவகுப்பிற் பிறந்த சங்கிலி நாச்சியார்க்குங் காதன்மணம் நிகழ்ந்ததனை ஆசிரியர் சேக்கிழார் தாம் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண முற் பிற் பகுதிகளில் நன்கெடுத்து உரையாநிற்க, அவர் அதனை உரைத்திலரென்ற அம் மறுப்புரை காரர்தங் கொடிய பொய்யு ரைக்கு அறக்கடவுளும் அஞ்சுமென்க. இனிக், காரைக்காலம்மையார்க்கு அவர் தஞ் சுற்றத்தாரால் மணம் பொருத்தப்பட்ட கணவன், அவர்தந் தகுதிக்கு ஒத்தவனல்லன் என்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், கல்வியிலுஞ் சிவநேயத்திலும் அடியார் வழிபாட்டிலும் அவன் அம்மையார்க்கு முழுதும் ஒத்தவன் என்பதனையன்றோ நாட்டல் வேண்டும்? அவர் அவ்வாறு செய்தலை விடுத்துத் தமது கூற்றின் முரணை அறுக்குஞ் சேக்கிழார் செய்யுட்களையே எடுத்துக்காட்டி நெகிழ்ந்து போதலுடன் அன் அம்மையார்க்குத் தக்கான் அல்லனெனச் சேக்கிழார் கூறினரா? என்று விளைவுதலுஞ் செய்கின்றார். அம்மையார்க்கும் அவர்தங் கணவற்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் சேக்கிழார் கூறிச்செல்லும் முறையின்படி அதனை யுணருஞ் சிறுமகாரும், அவன் அவர்க்குத் தக்க கணவனல்ல னென்பதை நர்கறிவர். அச்சிறு மகார்க்குள்ள உணர்ச்சிதானும் இன்றி, அம் மறுப்புரைகாரர் வினாவுவராயின் அவர்க்கு அறிவு கொளுத்துதற்குரியார் அச்சிறுமகாரேயாவர். ஆசிரியர் சேக்கிழாரோ தாங் கூறிச் செல்லும் முறையில் அவன் அவர்க்குத் தக்க கணவனல்லன் என்னு முண்மையினை இனிது விளங்க வைத்தாற் போல, அவன் அவர்க்குத் தக்கானென்ப தனை யாண்டேனுங் கூறியிருக்கின்றனரா? அல்லது அம்மை யாராவது அக்கணவன்பாற் காதலன்பு பூண்டு ஒழுகினாரென விளம்பினரா? சிறிது மில்லையே. அவன் அம்மை யாரொடு தனி மனைக்கண் வைகியவழிச் செல்வத்தைப் பெருக்கினா னென்றன்றோ மொழிந்தனர். அவன் அம்மையார் மேற் காதல்கொண்டு ஒழுகினான் என்றுரையாமல், தகைப்பில்பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி மிகப்புரியுங் கொள்கையி;னில் மேம்படுதல் மேவினான் என அவன் பொருள்மேற் காதல் வைத்து அதனைப் பெருக்குதலிற் கருத்தூன்றினான் எனக் கூறுதலை உற்று நோக்குங்கால், அவன் பொருண்மேற் காதல்கொண்டாற் போல் அம்மையார் மேற் காதல்கொண்டிலன் என்பது சிறிது அறிவுடையார்க்கும் விளங்கற்பாற்றும். அவன் பொருள்மேற் காதல்கொண்டு முனைந்து நிற்க, அம்மையாரோ சிவபிரான் திருவடிக்கட் காதல் பெருக வைகினார் என்பது போதரப், பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரும் மனையறத்தின் பண்பு வழாமையிற் பயில்வார் என்று ஆசிரியர் கூறுதலை ஆழ்ந்து ஆராய்வார்க்கு அம்மையார் தமக்குத் தக்கவனல்லாத அக் கணவனொடு காதலால் வைகாது கடமைக்காகவே வைகி மனையறத்தைச் செவ்விதின் நடாத்திக் கொண்டு சிவபிரான் திருவடிக்கண் மட்டுமே காதலிற் பெருகினார் என்பது உணரக் கிடக்கு மன்றோ? இன்னும், அம்மையார் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதில் உறைத்து நின்றமை புலனாக, நம்பரடியார் அணைந்தால் நல்லதிரு வமுது அளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலு முதலான தம்பரிவி னாலவர்க்குத் தகுதியின் வேண்டுவகொடுத்தும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வு மிக ஒழுகுநாள் என்று ஆசிரியர் சேக்கிழார் அம்மையார் திருத்தொண்டினை நன்கெடுத்து விளம்பினாற் போல, அவர் தம் கணவனும் அவரோடொத்து நின்று அடியார்க்குத் திருத்தொண்டு செய்தனனெனயாண்டேனுங் கூறி யுள்ளாரா! எட்டுணையு மில்லையே. அதுவேயுமன்றித் தான் விடுத்த மாங்கனிகளின் இரண்டுள் ஒன்றை அம்மையார் அடியார்க்கு இட்டனராக, அதனை அறியாதே முன் ஒன்றனை அயின்று பின்னுமொன்று வேண்டிய போது அம்மையார் தாமதனை அடியார்க்கிட்ட வரலாற்றை அவன்பால் உரையாமல் அஞ்சினார் என்பதனை ஆராய்ந்து பார்க்குங்கால், அவன் அடியார்க்கு வேண்டுவ கொடுத்தலிற் சிறிதும் விருப்பிலான் என்பது துணியப் படுகின்ற தன்றோ? அதன்பின்னர், அவர் இறைவனருளாற் பெற்ற மாங்கனியை அவனுக்கு இட அதன் அமுதினுமிக்க சுவையை வியந்து அது வந்த வரலாற்றை அவன் வினாவிய போதும், அம்மையார் நடுக்கமுற்று அஃது இறைவனருளாற் கிடைத்த உண்மையினைத் தெரிவித்த போதும் அவன் அம்மையாரின் சிவநேயப் பேரருள் நிலையினை அறிந்திலன் என்று ஆசிரியர் சேக்கிழாரே ஈசனருள் எனக்கேட்ட இல்இறைவன் அது தெளியான் என்று கூறுமாற்றானும், அவன் அம்மையாரின் உண்மை நிலையை உணர்ந்தவனல்ல னென்பதூஉம், அவனுள்ளமும் அவர் உள்ளமும் ஒருவழியே ஒன்றுபட்டு நின்றன அல்ல என்பதூஉம், அதனால் அவன் அவர்க்கேற்ற கணவனல்ல னென்பதூஉம் இனிது விளங்குகின்றன அல்லவோ? அதன்பின்னர், அம்மையார் கூறிய உண்மையை ஆராய்வான் வேண்டி மற்றுமொரு மாங்கனி அவன் வருவித்துத் தருமாறு வேண்டியபடியே அவர் இறைவன்பாற் பெற்ற மற்றுமொரு கனியையுங் கொணர்ந்து அவன் கையிற் கொடுக்க, அஃது உடனே மறைந்து போயிற்று. அங்ஙனம் மறைந்ததைக் கண்டபின்னும் அவன் அம்மையாரின் தெய்வ மாட்சியினையும், அவர்க்குச் சிவபிரான் அருள்செய்த மாட்சி யினையும் உணர்ந்து காணமாட்டானாய் அவர்பால் மேலும் மேலும் பேரன்பு கொள்ளமாட்டானாய், அவரை ஒரு தெய்வமாகவே கருதி அஞ்சி அவரை அணுகாதிருந்து, பின்னர் அவர்க்குத் தெரிவியாமலே அவரை விட்டு அகன்று வேறோரூருக்குப் போய் வேறொரு மாதினை மணந்து கொண்டான். இவை தம்மை ஆசிரியர் சேக்கிழாரே, வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் கானான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும் துணிவுகொண்டு எவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் எனவும், விடுவதே எண்ணமாக மேவிய முயற்சிசெய்வான் எனவும், சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் றானும் நலந்தரு நாளி லேறி நளிர்திரைக் கடன்மேற் போனான் எனவும், கடன்மிசை வங்க மோட்டிக் கருதிய தேயந் தன்னில் அடைவறச் சென்று சேர்ந்து எனவும், மெய்ப்புகழ் விளங்கு மவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் எனவும் உரைத்தல் காண்க. மேலெடுத்துக்காட்டிய மூன்றாஞ் செய்யுளில் அவன் அம்மையாரைவிட்டுக் கடன்மேற் சென்ற காலையில் வருணனை வணங்கிச் சென்றான் என்று சேக்கிழார் கூறியிருத்தல்கொண்டு, அவன் சிவபிரானை வணங்குதலிலுங் கருத்து ஒருப்படுதல் இலன் என்பது நன்கு புலனாகின்றது. அவன் உண்மையிற் சிவபிராற்கு அடியவனா யிருந்தால் அங்ஙனங் கடற்சிறு தெய்வத்தை வணங்கானன்றோ? மேலும், அவன் சிவபிரானிடத்தாவது சிவபிரானடியவரிடத் தாவது தினைத்தனை யன்புதானும் உடையனென்பது ஆசிரியரால் எங்கேனுங் குறிக்கப்பட்டுளதா? சிறிதுமில் லையே. இங்ஙனமெல்லாம் ஆசிரியர் சேக்கிழார் கூறி யிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளைப் பலபடியானும் ஆய்ந்து பார்க்கும் வழிக், காரைக்காலம்மையார்க்குத் தக்க கணவன் அவனல்ல னென்பது சிறுமகார்க்கும் எளிதின் விளங்காநிற்கும். இவை யெல்லாம் ஒருசிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத அம் மறுப்புரைகாரர் ஏதொரு சான்றுங் காட்டாது, அவன் அவர்க்குத் தக்க கணவனே என அழிவழக்குப் பேசியது கண்டு அறிவுடையார் அவர் கூற்றை எள்ளி நகையாடி விடுப்பதன்றி வேறு என் செயற்பாலார்! இனித், தன்னை வணங்குதற்குரிய மனையாளாகிய அம்மையாரைக் கணவனாகிய தான் வணங்கியது அவரிடத்துக் கண்ட தெய்வத் தன்மை பற்றியேயாதலின், அதுகொண்டு அவனை அவர்க்குத் தக்கானல்லன் என்றல் அமையாது என அம் மறுப்புரைகாரர் எமது மேற்கோளை மறுத்தார். தெய்வத்தன்மை கண்டபின் அவன் அவரை அன்பினால் வணங்கினானை அச்சத்தால் வணங்கினானை என்று ஆராய்ந்து பார்த்தனராயின், அங்ஙனம் போலிமறுப்பு எழுத முன்வந்திரார். அவன் வணங்கியது அன்பினால் நிகழ்ந்ததாயின் அத்தகைய அன்பு அவன்பால் முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும். முன்னரே அன்பினாற் பற்றப்பட்டிருந்தானாயின், அவ்வன்பின் பெருக்கால் அவர்தந்திருந்தொண்டின் அரிய மாட்சிகனை உணர்ந்திருந்தனனாயின், அம்மையாரை ஓரிமைப் பொழுதாயினும் பிரிந்திருக்க உளம் ஒருப்படுவனோ? அவரோடு ஒருங்கிருந்து அவர் செய்துபோ தருஞ் சிவநேயத் திருத்தொண்டிற்குத் தானு முதவியாய் உடனிருந்து அதனைச் சிறக்கச்செய்து தானும் மகிழ்ந்து அவரையும் பெரிது மகிழ்விப்பனன்றோ? அன்புடையார் செயல் இதுவாயிருக்க, அவனே அவ்வன்புக்கு மாறாய் அம்மையாரைக் காளியோ, கூளியோ, பேயோ, பூதமோ எனப் பிழையாக நினைந்து உள நடுநடுங்கி அவரைவிட்டு அவர் அறியாமே அகன்று, சேய்மைக் கண்ணதான பிறிதொரு நாட்டிற்சென்று குடியேறினான் என்பதனால், அவன் அம்மையாரின் உண்மைநிலை தெரிந்து அவர்பால் அன்பு பூண்டு ஒழுகினவன் அல்லனென்பதூஉம், அம்மையாரை அவர்தஞ் சுற்றத்தார் வலியக்கொண்டுபோய் அவன்பாற் சேர்ப்பித்த ஞான்றும் அவன் தன் இரண்டாம் மனைவிமக்களோடு எதிர்போந்து, அவரை வணங்கியது, அவர் தனக்குந் தன்குடும்பத்தார்க்கும் ஏதேனும் தீங்கு இழைத்து விடுவரோ என்னும் அச்சத்தாலன்றி அன்பினாற் செய்ததன்றாதலின், அவன் அவரை வணங்கிய வணக்கம் அவர்க்குத் தக்கான் ஒருவனாற் செய்யப்பட்ட தாகா தென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க. ஆகவே, அம் மறுப்புரைகாரர் அவன் உளப்பான்மையினைப் பகுத் துணர்ந்து பாராது, அவனை அவர்க்குத் தக்கானென்றது பொருத்தமில் போலியுரையா மென்க. இனிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அவர் தஞ் சுற்றத்தார் கூட்டிவைத்த மணத்தை இறைவன் தடுத்தருளியவாறுபோல, அம்மையார்க்கு நிகழ்ந்த திருமணத்தையும் அவன் தடுத்தி லாமை அவர்பால் அவற்கு அருளிரக்கம் இன்மையாற் போலும்! என்று அம் மறுப்புரைகாரர் மற்றொன்று சொல்லிக் குறிப்பால் எம்மை ஏளனஞ் செய்திட்டார். இறைவன் அடியார்க்கு அருள் செய்யும் முறைகள் பல பெற்றியவாய் நம்ம னோர்க்கு முரண்பாடுடைய போற் காணப்படும். அவற்றுக் கெல்லாங் காரணங்களென்னையென இறைவனையே கேட்டல் வேண்டுமன்றி, ஏனை மக்களைக் கேட்டால் அவை ஒருசிறிதும் புலனாகா. மாணிக்கவாசகர் கொணர்ந்த பாண்டியன் பொருளை யெல்லாங் கவர்ந்து நரிகளைப் பரிகளாகவும் பரிகளை நரிகளாகவும் மாறச்செய்து அருள் செய்ததும், திருஞானசம்பந்தர்க்கே திருமுலைப் பால் ஊட்டி அருள்செய்ததும், இயற்பகைநாயனார் மனைவியை அவர் பாற் பெற்றுச்சென்று அருள்செய்ததும், மெய்ப்பொருள் நாயனாரை அவர்க்குப் பகைவனாயினான் கையினாற் கொலைசெய்வித்து அருள்செய்ததும், சிறுத்தொண்ட நாயனார், பிள்ளையை அறுத்துக் கறிசமைக்கச் செய்து அருளியதும், குங்கிலியக் கலையர்க்குக் கடைசியில் ஏராளமான செல்வத்தைக் கொடுத்து அருள்செய்ததும், இளையான்குடிமாறரை வாழ்நாண் முற்றும் வறுமையிலேயே வைத்து அருள்செய்ததும், இன்னும் இவைபோல செய்ததும் என்னை? யென்று அவற்றுக்கெல் லாம் இறைவன் திருவுளக் கருத்தினை ஆராய்ப் புகுந்தால், அது நம்மனோர்க்கு விளங்கற்பாலதன்று. ஆதலால், இதனை யோர் ஏதுவாய்க் கொண்டு அம் மறுப்புரைகாரர் எம்மை ஏளனஞ் செய்யப்புக்கது அவர்க்கே ஏளனமாய் முடிந்தமை காண்க. 14. சுந்தரமூர்த்திகளின் காதற் றிருமணம் இனிச், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை மணந்ததற்குக் காரணம், அவர் தமது முற்பிறவியிற் றிருக்கைலையி லிருந்தஞான்று செய்த குற்றமேயாகுமென அம் மறுப்புரைகாரர், பிற்காலத்தே பொய்யாகப் புனைந்துகட்டிய பெரிய புராணத்தே பார்ப்பனர் சேர்த்துவிட்ட ஒருகதையினை எடுத்துக் காட்டுகின்றார். வேறு தக்க காரணங் காட்டலியலாது ஒரு பொய்க் கதையினைத் தமக்குத் துணையாகக்கொண்ட இவரதுசெயல், நீரிலமிழ்வோன் ஒருவன் பெரிதுந் தத்தளித்துச் சிறியதொரு துரும்பினைத் தனக்குத் துணையாக விரைந்து பற்றியதனையே ஒப்பதாயிருக்கின்றது! இவர் தமது சாதி யிறுமாப்புக் கொள்கைக்கு இத்தகைய பொய்க்காரணமன்றி, வேறெது காட்ட வல்லார்! அதுநிற்க. இவரெடுத்துக் காட்டிய பொய்க்கதையினைக் கூறுந் திருமலைச்சருக்கம் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப் படாமற் பிற்காலத்துப் பார்ப்பனரொருவராற் புனைந்து கட்டிய பெரியபுராணத்தின்கட் சேர்க்கப்பட்டதாகும் என்னும் உண்மையினை எமது ஞானசாகரப் பத்துப் பதினோராம் பதும இதழ்களின் புல்லிமேல் வெளிவந்த சேக்கிழாரும் பெரிய புராணம் என்னும் ஆராய்ச்சியுரையில் விரித்து விளக்கி யிருக்கின்றாம். அவ்வளவும் ஈண்டெழுதுதல் வேண்டாமையிற் சில குறிப்புகள் மட்டுமே காட்டுவாம். திருக்கைலையிலிருந்த ஆலாலசுந்தரர் இறைவற்குப் பூக்கொய்வான் வேண்டி ஆண்டுள்ள பூங்காவிற் புக்கவழி, அங்கு முன்னரே இறைவிக்கு மலர்வேண்டி வந்திருந்த கமலினி அனிந்திதை என்னும் நங்கையாரைக்கண்டு காமுற்றுக் குற்றஞ் செய்தனரென்றார். இதனைக் கூறுகின்றுழிச், சிவபிரான் றிருவருளால் ஆலாலசுந்தரர் மனம் அந் நங்கையர்மாட்டும், அந்நங்கையர்மனம் ஆலாலசுந்தரர் மாட்டும் பதிந்தன என்று முதலிற் சொல்லிப், பின்னர்ப் பெருமானுக்கு மலர் எடுக்குங்கால் அங்ஙனம் அவர் காமுற்ற குற்றத்திற்காகவே நிலவுலகத்திற் பிறக்குமாறு இறைவனால் ஏவப்பட்டார் என முன்னொடு பின் முரண உரை நிகழ்த்தினார். சிவபிரான் றிருவருளால் உந்தப்பட்டே அங்ஙனஞ் சுந்தரரும் அம் மாதரிருவரும் ஒருவரையொருவர் காதலித்தனராயின், அஃது அவர்க்குக் குற்றமாதல் யாங்ஙனம்? அக் குற்றத்தைச் செய்யுமாறு ஏவிய இறைவற்கன்றே அது குற்றமாம்? தானே அவரை ஏவிக் குற்றமான தொன்றைச் செய்வித்தபின், அவரை அதற்காக ஒறுத்தல் இறைவற்கேயன்றோ அதனினும் பெரியதொரு குற்றமாம்? ‘vŒjhÅU¡f m«ig neht bjt‹? மேலும், ஆணுடம்புக்கு ஏற்ற அமைப்புகளும் பெண்ணுடம்புக்கு ஏற்றஅமைப்புகளும் இறைவன் அத்துணை வியப்பாக வகுத்தமைத்தது எதன்பொருட்டு? அவ்விருபாலாரும் ஒருவரையொருவர் மருவி இன்பம் நுகர்தற்பொருட்டும், பிறவிக்கு வரற் பாலனவான உயிர்களைப் பிறவியில் வருவித்தற் பொருட்டுமன்றோ? ஆணும் பெண்ணுமாய் மருவுதற்கேற்ற இடம் இந்நிலவுலகமேயாயின், அராக தத்துவத்தின் கண்ண தான திருக்கைலையில் ஆண் பெண் அமைப்புகளை இறைவன் வகுப்பானேன்? மேலுள்ள அவ்வத் தத்துவ வுலகங்களில் வைகும் உயிர்களெல்லாம் ஆணும் பெண்ணுமா யிருந்தே இன்ப நுகராநிற்பரெனப் பௌட்கராகமம் புகலா நிற்க, ஆலாலசுந்தரருங் கமலினி அநிந்திதையரும் ஒருவர் மேலொ ருவர் மையல் கொண்டதுமட்டும் குற்றமாமெனக் கூறல் யாங்ஙனம் பொருந்தும்? இறைவன் உயிர்களை ஆணுடம்பு பெண்ணுடம்புகளிற் புகுத்தியது அவ்வாற்றால் அவர் இன்பநுகர்ந்து செல்லுதற்பொருட்டேயா மெனச் சைவ சித்தாந்த வழிநூலாகிய சிவஞானசித்தியார், சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம் ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம், இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார் என்று வலியுறுத்து நுவலுகையில், மணங்கூடாத ஆலால சுந்தரரும் அங்ஙனமே மணங்கூடாக் கன்னியரான அவ்விரு வரும் ஒருவரையொருவர் காதலித்தது குற்றமாமோ? அவா வறுத்த உயிர்கள் சென்று வைகுதற்கிடமான வீட்டுலகு திருக்கைலாயமாகலின், ஆண்டுள்ளார் ஒருவரையொருவர் அவாவுதல் குற்றமன்றோவெனின்; அவா வறுத் வீட்டுலகு சேர்ந்தார்க்கும் ஆண்டு மீள அவா வுண்டாமென்றல் யாங்ஙனம் கூடும்? மேலுங், காதலின்பநுகர்ந்து அவ்வாற்றால் அவா சேர்க்கை, காதலின்பம் நுகர்ந்தொழித்து அவா அவிந்து இறைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கும் மீண்டும் உளதாவதாயின், இறைவனைச் சேர்ந்து பெற்றபயன் என்னை? என்று இவ்வாறெல்லாம் நிகழுச் தடைகளால், திருக்கைலையிற் சுந்தரர் காதலித்த கதை வெறும் பொய்யாதல் நன்கு பெறப்படும் என்க. அதுவேயுமன்றி, இம் மண்ணுலகத்துள்ளார்தஞ் சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத நுண்பெரு மேல்நிலைக் கண்ணதான அராக தத்துவ வுலகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அக் கதையினை, இம் மண்ணுலகத்திருந்த சேக்கிழார் அறிந்த தெவ்வாறு? இந் நிலவுலகத்து நிகழ்ந்த நாயன்மார் வரலாறு இதற்கு எட்டாத் தொலைவில் உள்ள மேலுலகங்களின் நிகழ்ச்சிகளையும் யாண்டேனுங் கூறப்புகுந் தாரல்லர்; நாயன்மார் முற்பிறவி வரலாறுகளையேனும் யாண்டாயினுங் குறிப்பாலேனுங் கூறினரோவெனிற் சிறிதுங் கூறிற்றிலர். அப்பர், சம்பந்தர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எவர்க்கும் முற்பிறவி வரலாறுகள் சொல்லாத சேக்கிழார் சுந்தரர்க்கு மட்டும் அது கூறினாரென்றல் ஒக்குமோ? சம்பந்தரைச் சுப்பிரமணியாவ தாரம் என்றுங், கண்ணப்பரை அருச்சுனையவதாரம் என்றுஞ், சிறுத் தொண்டரைக் கர்ணன் அவதாரம் என்றும் வழங்கும் பொய்க் கதைகளைச் சேக்கிழார் சிறிதேனுந் தழுவினரா? இல்லையே. அவ்வாறிருக்கச் சுந்தரர்தம் முற்பிறவி வரலாறு தெரிப்பதாகக் கிளக்கும் இப் பொய்க் கதையினை மட்டும் அவர் நம்பிக் கூறினாரென்று அறிவுடையோர் சொல்ல முற்படுவரோ? இருந்தவாற்றால், இக்கதையின் பொய்மைத்தன்மை யினை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள், சிவ அந்தணர்குலத்திற் றோன்றியருளின சுந்தரர் தமது மரபினர் அல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென எந்நேரமுந் தமது சாதி யுயர்வினையே நினைந்திருந்தவரான ஒரு பார்ப்பனரால் தமது சாதிக்குக் குறைவு வந்து விடலாகா தெனுங் கருத்தால், அப் பொய்க் கதை கட்டிச் சேர்க்கப்பட்ட தென்பதைத் தெற்றென உணர்ந்து கொள்வர். கைலையிற் செய்த குற்றத்திற்காகச் சுந்தரர் இந் நிலவுலகத் திலுந் தமது சாதிவரம்பு கடந்து குற்றமாவது செய்து ஒறுக்கப் பட்டா ரென்று ஒரு காரணங் காட்டி, அவ்வாற்றால் தமது சாதி வரம்பைக் காத்துக்கொள்ளப் பெரிதும் அவாவுற்று அப் பார்ப்பனர் அப் பொய்க்கதையினைப் புனைந்து செருகினமை வேறுமோருண்மையாலும் புலனாகா நிற்கின்றது; என்னை? முதலில் ஒரு குற்றத்தைச் செய்தவர் பின்னும் அக்குற்றத் தினையே செய்குவராயின், அது முன்செய்த குற்றத்திற்குக் கழுவாயாகுதல் செல்லாமையின் என்பது. சுந்தரர் கைலையில் அம் மாதர்மேற் காமுற்றது குற்ற மாயின், அது தீர்தற்கு அவர் இம் மண்ணுலகிற் காம நினை வற்றுத் தவத்திலன்றோ இடையறாது அமர்தல்வேண்டும்; அவ்வாறின்றி அவர் மீண்டும் அம் மாதர்மேல் மையல் கொண்டு இன்ப நுகர்ந்திருத்தல், கைலையிற் காமுற்ற குற்றத்திற்குக் கழுவாயாகுமோ? அற்றன்று, இறைவன் திருக்கைலையைச் சார்ந்ததார்க்கு மாதரைக் காமுறுதல் குற்றமாகலின், அக் குற்றத்திற்காகவே அவர் அத்தெய்வுலகினின்று இம் மக்களு லகிற்குக் கீழ் நூக்கப்பட்டார்; அஃது அவர்க்குக் கழுவாயா மெனின்; இறைவனடி சேர்ந்தார்க்குங் காமவிருப்பு நிகழு மாயின், இறைவனடியைச் சேர்தலில் இன்பமில்லை யென்பது பெறப்பட்டு அது, தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி என்றும், தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ என்றும் போத்த அருமைத் திருமொழிகட்கெல்லாம் மாறாம். அற்றன்று, ஆலாலசுந்தரர் ஆண்டு இறைவன் திருவடிப் பேறு எய்தியவரல்லர்; இறைவன் திருவுலகு சேர்ந்து ஆண்டு அவனை வழிபட்டமரும் அத்துணைப் பேறே வாய்ந்தவரா வரெனின்; இம்மையுலகத்து வழிபாடுபோலன்றி, இறைவன்றன் உண்மையுருவினை நேரே கண்டு வழிபடும் அம்மையுலக வழிபாடும் சுந்தரர்தங் கருத்தைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியிலதாயின், அதனாற் போதரும் பயன் என்னையோ வென்று வினா நிகழுமன்றே? அதனாலும், அக் கதை உண்மை யன்றென்பது தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, மேன்மேலுள்ள நுண்ணிய தத்துவ வுலகுகளில் உள்ளாரும் ஆணும் பெண்ணுமாயிருந்தே கழிபேரின்பம் நுகர்வரென்று பௌட்கராகமங் கூறுதலே மேலெடுத்துக் காட்டினமாதலாற், சுந்தரர் அத் தேவ கன்னியரைக் காதலித்தது இறைவன் திருவுளக்குறிக்கு மாறாகா தென்பதூஉம் போதரும்; அதனாலும், அக் காதலைக் குற்றமென நுவலும் அக் கதை பொய்யென்பதே தேற்றமாம். மேலுந், திருக்கைலையிற் செய்த குற்றத்திற்காக இறைவன் அம் மூவரையும் ஒரேகுலத்திற் பிறப்பியாது, சுந்தரரைச் சிவ அந்தண உயர்குலத்திலும், பாவை சங்கிலியாரை அதனிற்றாழ்ந்த பிறகுலத்திலும் பிறப்பித்துப், பின்னர் அவரை ஒருங்குகூட்டி, நீர் உயர்த்துக்கூறுஞ் சாதிவேற்றுமைக் கட்டுப்பாடினைச் சிதைத்தது. நும் மிறைவற்கே மக்கள் இறுமாப்பால் வகுத்த சாதிக்கட்டுப்பாட்டில் விருப்பு இல்லைபோலும்! என்று கடாவுவார்க்கு அம் மறுப்புரைகாரர் இறுக்குமாறறியாது விழிக்கு நீரராவராகலின், அவர் கூறும் அக் கதையே அவர்கொண்ட சாதிச் செருக் கினைத் தொலைக்கும் பெற்றியதாதலுங் காண்க. இதனால், யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்னும் பழமொழிப் பொருள் அம் மறுப்புரைகாரர் உரை கொண்டே புலனாகின்றதன்றோ? இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கவல்லார் எவர்க்கும், சிவ அந்தணராகிய சுந்தரர் தம்மரபினரல்லாத பரவை சங்கிலி யாரை மணந்தது குற்றமாமெனக் காட்டுதற்கு விழைந்த ஒரு பார்ப்பனரால் அக் கதை பொய்யாகப் புனைந்து, சேக்கிழார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத் திடையே சேர்க்கப்பட்ட வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கும். இவ்வாறாக, முன்இல்லாத கதைகள் பின்வருவோராற் புதிது புதிதாகப் புனைந்துகட்டிச் சேர்க்கப்படுதல் உண்டென்பதற்கு, ஆறுமுக நாவலர் வரைந்த பெரியபுராணவசனத்தில் ‘இறைவன் திருக்கைலையில் ஒருநாட் கண்ணாடியையெடுத்து அதன்கட்டனது திருவுருவைநோக்க அது சுடர்விடு பேரழகாய் அதன் கட்பொலிந்து தோன்றக் கண்டு ‘சுந்தரமே வா! என்றழைக்க, அஃது ஆலால சுந்தரராய்க் கண்ணாடியை விட்டுக் குதித்து நின்றது என்னும் ஒருபொய்க் கதை சேக்கிழார் பெரியபுராணத்தில் இல்லா திருந்தும் புதிதாக எழுதிச் சேர்க்கப் பட்டிருத்தலே சான்றாம். இங்ஙனமே, சமணர் கழுவேறிய கதைக்குத் தேவாரப் பதிகங்களில் ஏதொரு குறிப்புங் காணப்படாதிருந்தும், அஃது எவ்வாறோ பெரியபுராணத்தில் நுழைந்து விட்டது. மாணிக்கவாசகரொடு வழக்கிட்டுத் தோற்ற பௌத்தர்களைச் செக்கிலிட்டு அரைத்தகதை, பெரும்பற்றப்புலியூர் நம்பி யருளிய திருவிளையாடற் புராணத்தில் இல்லாதிருந்தும், அதற்குப் பன்னூறாண்டு கழித்துப் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் இவ்வாறே முன் நூல்களில் இல்லாத பல பின்நூல்களிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். ஆதலால், ஒரு புராணத்திற் சொல்லப்பட்டிருப்பது கொண்டு, ஒரு கதையின் பொய்மை மெய்மையினை நன்காய்ந்து பாராது அதனை அவ்வாறே நம்புதல் வழுவாமென்க. எனவே, சுந்தரமூர்த்தி நாயனார் பாவை சங்கிலியாரை ஒருங்கொத்து நிற்றலானும், அம் மணத்தைக் கூட்டுவித்தற்கு இறைவனே முன் நின்றானென ஆசிரியர் சேக்கிழார் ஆண்டாண்டு நன்கெடுத்துக் கூறுதலானும் அது குற்றமாதல் ஒருவாற்றானுஞ் செல்லா தென்றும், அதனைக் குற்றமாக நினைந்து அதற்கொரு போக்குவிடுதற்பொருட்டுப் பின்வந்த பார்ப்பனர் பொய்யாகக் கட்டிச் சேர்த்த திருமலைச்சருக்க கதை சேக்கிழார் செய்ததன்றென்றுங் கடைப்பிடித்துணர்ந்து கொள்க. இங்ஙனம் முழுப்பொய்யாகிய ஒரு கதையினைத் தமது சாதியிறுமாப்பினாற் புனைந்துகட்டிப் பெரியபுராணத்தின் முதலிலே சேர்த்துவிட்ட பார்ப்பனர்தம் பொய்யுரைக்கும், பார்ப்பனராற் சூத்திரச் சாதியினராக வைத்து எள்ளப்படும் அம் மறுப்புரை தமக்கும் உயர்வுதேடிக் கொள்ளுதற் பொருட்டு அக் கதையினை உண்மையாய்க்கொண்டு எழுதிவிட்ட போலி மறுப்புரைக்கும் வேற்றுமை காண்கிலம். அப்பொய்க்கதையை எடுத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய போலி மறுப்புரைகள் அத்தனையும், முயற்கொம்பு இரண்டு முழமா நான்கு முழமா என்று வழக்கிட்டார் வழக்குரைக்கும், ஒப்பிலா மலடிபெற்ற மகன் ஒரு முயற்கொம்பேறித், தப்பில் ஆகாயப்பூவைப் பறித்தமை சாற்றினாருரைக்குந் தோழமை யாக வைத்து அறிஞரால் நகையாடி விடற் பாலனவா மென்க. இன்னும், அம் மறுப்புரைகாரர் ஆலால சுந்தரரைப்பற்றி யெழுதியவற்றில் முன்னொடுபின் முரணாவன பல. அவற்றுட் சில இங்கே காட்டுதும். நிலத்திற் போய்ப் பிறந்து இன்பம் நுகருமாறு சுந்தரரை இறைவன் ஏவியவழித், தம்மை இறைவனே வந்து தடுத்தாட்கொள்ளுமாறு அவர் வேண்டினா ரென்று அக்கதையினை அவர் எடுத்துக்காட்டினார். தாம் வன்மைகள் பேசி இறைவனை வேண்டாதிருக்கையிலும் இறைவனே வலியவந்து ஆட்கொண்டமை பற்றியே சுந்தரர் வன்றொண்டர் எனப் பெயர் பெற்றார். அவ்வாறன்றித், தாம் வேண்டியதற் கிணங்கியே இறைவன் வந்து ஆட்கொண்ட துண்மையாயின், சுந்தரர்க்கு வன்றொண்டர் எனும் பெயர் வழங்குதல் ஒக்குமோ? வன்மைகள் பேசினமையின் வன்றொண்டர் எனப் பட்டாரெனின், வன்மைகள் பேசினது தாம் இறைவற்கு ஆளாகவேண்டாமை பற்றியன்றோ? ஆகவே, தாம் அவற்கு ஆளாதலிற் கருத்தின்றியிருக்க இறைவனே வலியவந்து அவரை ஆட்கொண்டமை நன்கு விளங்குதலின், திருக்கைலையில் அவர் வேண்டியதற்கிணங்கியே இறைவன் போந்து அவரைத் தடுத்தாட்கொண்டனன் என்னும் அக்கதை பொய்யேயாதல் திண்ணம். அற்றன்று, திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டிய தனை மறந்து சுந்தரர் திருமணப்பந்தலில் வன்மைகள் பேசினமை பற்றியே வன்றொண்டர் எனப் பட்டா ரெனின்; இறைவனுக்கு அணுக்கராய்த் திருக்கைலையில் மேற் சுந்தரர் பிறந்தது உண்மையாயின், முற்பிறவியிலே திருக்கை லையில் தாம் இறைவனை வேண்டிக்கொண்டதனை மறந்து வன்மைகள் பேசுதல் கூடுமோ? இம் மண்ணின்மேற் பிறந்த பொது மக்களுள்ளேயே சிறுகுழந்தைகளா யிருப்பார் சிலர் தமது முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்து உரைத்தல், வட நாட்டின் கண் உள்ள இராமகாளி முதலான சிறு குழந்தைகள் மாட்டு இன்றுங் கண்கூடாய்க் காணப்படுவதாயிருக்கச் சிவ பிரானுக்கு அணுக்கராயிருத்தற்குரிய அத்துணைப் பெருந்தவம் வாய்ந்த சுந்தரர் தமது முற்பிறவி வரலாற்றினை மறந்து போயினாரெனக் கூறுதல் ஒக்குமோ! அக் கதையிற் சொல்லப்பட்ட திருக்கைலை நிகழ்ச்சிகளைச் சுந்தரரே மறந்து போயின ரென்றாற், பின்னர் இம் மண்ணுலகத்துள்ள அம் மறுப்புரை காரரும் அவரை யொத்த ஏனைச் சிற்றறிவினரான மக்களும் அந்நிகழ்ச்சிகளை அறிந்ததெப்படி? வானுலகத்திற்கும் மண்ணுலகத்திற்குந் தபாற் கொண்டு செல்லுஞ் சேவகனாக நாரதனை யுண்டாக்கிக் கதைகள் கட்டிவிட்ட பார்ப்பனரும் அவர்வழிப்பட்டாருங், கைலையின் நிகழ்ச்சிகளை மறுப்புரை காரர் போல்வார்க்கு வந்து அறிவிக்க மற்றொரு நாரதனைக் கதைகட்டிச் சொல்ல மறந்துவிட்டமை பெரிதும் இரங்கத் தக்கதே! இப்போது ஐரோப்பிய நன்மக்களால் ஆராய்ந்து கண்டு நிறுவப்பட்டிருக்குங் கம்பியில்லாத் தபால் வாயிலாகவாவது அம் மறுப்புரைகாரரும் அவர்தந்தோழருந் திருக்கைலைக்குச் செய்தியனுப்பி, அங்கு நிகழ்ந்த சுந்தரர் கதை நிகழ்ச்சியின் உண்மைதாமா வென்று தெரிந்து உலகிற்கு வெளியிடுவாராக! அவை ஆயிர ஆண்டுகட்குமுன் நிக்ழ்ந்தனவகையால் இப்போது அவைகளைச் சிவபிரான் மறந்துபோயிருப்பர் என்று சிவ பிரானுக்கும் அம் மறுபபுரைக்காரர் மறதிக் குற்றத்தை ஏற்ற மாட்டாரென்று நம்புகின்றோம். இனித், திருக்கைலையில் நிகழ்ந்தனவாக அக்கதை கூறும் நிகழ்ச்சிகள் உண்மையாயின், அங்கிருந்தும் இம் மண்ணு லகிற்குப் போந்தவராக நுவலப்படுஞ் சுந்தரரன்றோ அந் நிகழ்ச்சிகளை நினைத்து மொழியற்பாலார்? சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நேரே காணும் பெருந்தவமுடையராய், இறைவனருளாற் செயற்கரும் புதுமைகள் பல செய்த பெரியா ராகலின், அவர் தம்முடைய முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்த வராகவே யிருப்பரன்றி, அவற்றை மறந்தவராக இரார். அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களில் அவர் தம் வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன; ஆனால், திருக்கைலையில் அவர் மாதரைக் காமுற்று அதன் பயனாக மண்ணுலகிற் பிறந்தனரெனக் கூறும் அக் கதைக் குறிப்போ ஓரெட்டுணை யாயினும் அத் திருப்பதிகங்களிற் காணப்படுகின்றிலது. இனி, அவர் அம்மாதரைக் காதலித்தது. திருவருட்செய லென்றும், எத்துணைப் பெரியாரும் பிழைசெய்யின் ஒறுக்கப் படுவரென்பதனை இறைவன் உலகத்தார்க்கு அறிவிப்பவே அவரை இம் மண்ணின்மேற் பிறப்பித்து ஒறுத்தனன் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். இவர்தம் சைவ நூலுணர்ச்சியின் திறனை என்னென்பேம்! தன்னை யணுகித் தூயராய் நிற்கும் ஒருவரைத் தூயவல்லாதன இறைவன் அருட்செயல்! தூயராயினாரையும் பிழை படுத்துவதே இறைவன்றன் அருட்செயலாயின், தூயராகி இறைவனைச் சார்தலாற் பயனென்னை? சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் என்று சைவசித்தாந்த நூல் ஓது தலின், அதற்கு மாறாகத் தன்னைச் சார்ந்த சுந்தரரைப் பிழையற் படுப்பித்து ஒறுத்தவன் சைவசித்தாந்தக் கடவுளான சிவபிரான் ஆவனோ? மற்றுத் தூய்தாய் நின்ற நிலையிழந்து மாயையில் அகப்பட்டுப் பிரமமே சீவனாயிற்று எனப் புகலும் மாயாவாதப் பற்றுடைய அம் மறுப்புரைகாரரை யொத் தார்க்கே அக் கதை மெய்யாகக் காணப்படுமன்றிப், பிழை படுமாறு உயிரை ஏவுவது ஆணவமலம், அம் மலத்தின் சேர்க்கையினின்றும் உயிரை யெடுப்பித்துப் பின்னர் அது பிழைபடாவாறு தன் திருவருட்பெருக்கிற் படிவித்துப் பெயராப் பேரின்பம் நுகர்விப்பது சிவம் என்னுஞ் சைவசித்தாந்த உணர்ச்சியுடைய எம்மனோர்க்கு அக் கதை ஒரு சிறிதும் மெய்ம்மை யுடையதாகத் காணப்படா தென்றொழிக. மேலுந், தூயராய்த் தன்னடி சேர்ந்தாரைப் பிழைபடுத்து ஒறுக்குங் கடவுள் உலகத்தார்க்கு அறிவிப்ப தொன்றும் உண்டுகொலோவென அம் மறுப்புரை காருரையினை அறிவுடையார் நகையாடி விடுப்பரென்க. 15. நாயன்மாருஞ் சாதிவேற்றுமைச் சிதைவும் இனி, அன்பினால் அளவளாவும் பெரியார் சாதிவேற்றுமை யினைக் கைக்கொள்ளாமையும், இறுமாப்பும் அறியாமையும் உடைய இழிந்த மக்களே அதனை விடாப்பிடியாய்க் கைக்கொண்டு பலவாற்றால் அல்லலுழத்தலும் யாம் எமது தலைமைப் பேருரையில் நன்கு விளக்கி, வேளாளராகிய அப்பரும் பார்ப்பனராகிய அப்பூதிகளும் சாதிவேற்றுமை யினைச் சிறிதும் நினையாது ஒருங்கு அளவளாவிய உண்மை நிகழ்ச்சியினையும் எடுத்துக் காட்டினோம். மற்றுச், சாதி வேற்றுமையானது அறிவுடையாராலும் அன்பராலுங் கைக்கொள்ளப்பட்ட சிறந்த முறையாகும் என நாட்டப் புகுந்த அம் மறுப்புரைகாரரோ, அவ்வாறு செய்தற்கு எந்த அறிவு நூலிலும் ஆன்றோர் நடையிலுஞ் சான்று காணாமையிற் பெரிதும் இடர்ப்பட்டுத், தாமும் ஒரு மறுப்பெழுதி விட்டதாகத் தம்மை யொத்தார் குழுவிற் சொல்லித் தமக்கு ஒரு பொய்ப்பெருமை தேடிக்கொள்ளுதலையே குறியாய்க் கொண்டு, அப்பரும் அப்பூதிகளும் அளவளாவிய நிகழ்ச்சிக்கு ஒரு போக்குக் காட்டத் தலைப்பட்டார். அப்பரை அப் பூதியடிகள் குருவாய்க்கொண்டன ராகலின், அவர் ஏவிய படியே அப்பூதி அவரோடு உடனிருந்து உணவு கொண்டனர். அவரை அவர் அங்ஙனங் குருவாய்க் கொள்ளாராயின் அப்பர் அவரை அங்ஙனம் ஏவுதலுந் தம்மைக் குருவாகக் கொள்ளு மாறு அவரை வலுக்கட்டாயஞ் செய்தலும் இழி பிறப்பாள ராகிய அவர்க்குத் தகா என்று அம் மறுப்புரைகாரர் கூவினார். இவர் கூவிய இப்பொருளில் மொழியாற், சாதிவேற்றுமை யானது அறிஞர்க்கு உடம்பாடுதா னென்பது சிறிதாயினும் பெறப்படுகின்றதா என்பதை ஆன்றோர்கள் ஆய்ந்து பார்க்கக் கடவர். அறிஞரால் அன்பராற் சாதிவேற்றுமை கருதப்பட வில்லை யென்பதற்கு, அப்பர் அப்பூதியடிகளின் அளவளாவு தலையாம் எடுத்துக் காட்டினேமாக, அதனை மறுப்பான் புகுந்தவர், சாதி வேற்றுமையினையே பெரிது பாராட்டி அறிஞர்கள் தம்முள் அளவளாவுதலை யொழிந்தார் என்றன்றோ காட்டுதல் வேண்டும்; அதனை விடுத்து எடுத்த பொருளுக்கு இயைபில்லாதவைகளை யெழுதி ஏமாற்றப் பார்ப்பது முறையாகுமா? வழக்குமுறை இன்னதென்றே யறியமாட்டாத இவர், தம்மைத் தருக்க முணர்ந்தாராகக் காட்டுதற் பொருட்டுத் தருக்கநூற் சொற்களையுங் குறியீடு களையும் எடுத்தாளுதல், அந்நூலுணர்ச்சி யில்லாரை மருட்டுதற் பொருட்டே யன்றி வேறென்னை? அது கிடக்க. இவர் கூறியது கொண்டே சாதிவேற்றுமை ஆன்றோர் தமக்கு உடம்பாடா காமை காட்டுதும். இவர் கூற்றின்படி அப்பராகிய வேளாளர் இழிகுலத்தினர்; அப்பூதியடிகளாகிய பார்ப்பனரே உயர் குலத்தினர். அப்பூதியார் தம் சாதி வரம்பு கடந்து, தம்மிற் றாழ்ந்த அப்பரைக் குருவாகக் கொள்ளலாமோ? அவர் தம்மை அங்ஙனம் கொண்டாலும், இழிகுலத்தவராகிய அப்பர் தாம் அவரைத் தமக்கு மாணாக்கராக ஏற்றுக் கொள்ள லாமோ? அன்றி ஏற்றுக்கொண்டாலுந் தம்மோடு உடனிருந்து உண்ணுகவென்று அவரை ஏவலாமோ? அவர் தாம் ஏவினாலும், உயர்குலத்தவராகிய அப்பூதி அதற்கு இசைய லாமோ? அன்பிலும் அறிவிலும் நற்குண நற்செய்கைகளிலும் பார்ப்பச் சாதியே யுயர்ந்ததென்று கூவித் திரியும் அம் மறுப்புரைகாரர் கொள்கை உண்மையாயின், அக் கொள்கையினை ஆன்றோராயினார் கைக்கொண்டோ ழுகியது மெய்ம்மையாயின், அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கு அளவளாவியது அவர் தமக்கே குற்றமாதலோடு உலகத் தார்க்கும் ஆகாததொன்றாய் முடிக்கப்படுதல் வேண்டுமன்றோ? மற்று, அவ் விருவர்தஞ் சேர்க்கையோ அங்ஙனங் குற்றமாவ தொன்றாய் ஆகாமல் அவர்க்கு நன்றாயினாற் போல, உலகத்தார்க்கும் நன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, பிறப்பளவிற் கொள்ளுஞ் சாதி யுயர்வு இழிவுகள், அன்பும் அறிவும் நற்குண நற்செய்கையும் இல்லாமற் வெற்றுப் பேச்சும் வீணான கொள்ளல் கொடுத்தற் பேச்சும் பேசிப் பிறவியைப் பாழ்படுத்திச் செருக்காநின்ற இழிந்த மக்கட்கே யுரியவாகு மல்லால், அறிவு அன்பு உயர் குண வொழுக்கங் களாற் சிறந்தார்க்குச் சிறிதும் உரியவாகா வென்பது வைரத்தூண்போல் நாட்டப்படுகின்றமை காண்க. இனிப், பரவையார் சங்கிலியார் என்னுஞ் சிவநேய மாதரார் அறிஞரென்ற வகையிலும், ஏனை மாதர்க்கெல்லாந் திலகமாய் நிற்கும் வகையிலும் நல்லார் என்று பெயர் பெறுதற்கு உரிமையுடையராதல் கண்டு, நல்லாரிணக்கம் எனப் பட்டினத்தடிகள் மொழிந்தாங்கு, அவர் தம் இணக்கஞ் சுந்தரமூர்த்திகட்கு மிக விழுமிய தொன்றாதலை எடுத்து விளக்கினேம். இதனை மறுப்பான்புக்க அம் மறுப்புரைகாரர், பரவை சங்கிலியார் அடியார் கூட்டத்துள் வைத்து யாண்டுஞ் சொல்லப்படாமையின், அவரை நல்லார்என்றுரைத்தல் ஆகாது; மற்று அச் சொல்லுக்கு மாதர் எனப் பொருள் கோடலே பொருத்தமாம், மாதரார் சோர்கை நிலையில்லாதது என்று பட்டினத்தடிகள் அச் செய்யுளிலேயே மொழியக் காண்டலால், நல்லார் என்பதற்குப் பரவை சங்கிலியாராம் மாதரைப் பொருளாகக் கூறுதல் வாயாதெனக் கிளந்தார். இவர் கூறும் இச் சொற்களால் மாதர்க்கு அடியாராம் உரிமை இல்லை யென்பதே இவர் தங் கருத்தாகின்றது. ஆணவமலத்துள் அழுந்தி அறிவும் இன்பமுமின்றிக் கிடந்த உயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் வருவித்து, அவை தம்மைத் தன் திருவருளின்பத்திற் றோய்வித்தற் பொருட்டாகவே எல்லாம் வல்ல இறைவன் ஆண் பெண்ணுடம்புகளை யமைத்து, அவை தம்முள் உயிர்களைப் புகுத்தி, அவ்வாற்றால் அவை அறிவும் இன்பமும் பெற்று ஆணவக்கட்டு நீங்கித் தன்னைச் சாருமாறு செய்விக்கின்றன னென்பதும், அவ்வாறு ஆண்டவ னால் வகுக்கப்பட்ட ஆண்பெண் பிறவிகள் இரண்டுஞ் சிறந்தன வாகுமேயல்லால் அவற்றுள் ஆண் உயர்ந்தது பெண் தாழ்ந்தது எனப் பௌத்தர் சமணர் மாயாவாத வேதாந்திகள் சொல்லு முரை பொருத்தமில்லா வழக்குரையேயா மென்பதும் சைவ சித்தாந்த அருட்செல்வர்களின் கோட்பாடாகும்; இது, சத்தியுஞ் சிவமும்ஆய தன்மை இவ்வுலகமெல்லாம் ஒத்தொவ்வா ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார் என்னுஞ் சிவஞானசித்தியார்த் திருச் செய்யுளால் நன்கு விளங்கும். இங்ஙனம் இருவகைப் பிறவி அருமையுந் தேற்றுஞ் சைவ சித்தாந்த உண்மை தேறாது, அம் மறுப்புரைகாரர் பெண் பிறவியையும் அவ்வாற்றால் இறைவன்றன் படைப்பினுயர் பையும் இழித்துரைக்கப் புக்கது, அவர் தமது வாழ் நாளெல்லாம் பழகிய மாயாவாதப் பொய்வழக்கினைச் சைவ நூற் போர்வையுண் மறைந்துநின்று நாட்டிவிடும் நோக்கங் கொண்டேயாம். இவர் எத்துணை தான் சைவவுண்மையினைத் திரித்து மறைக்க முயலினும், அது வைக்கோற் போரினால் மறைவுண்டு நில்லாத கொழுந்தீப்போல், இவர்தஞ் சொற்பொருட் குவியலை நீறாக்கி மேற்கிளர்ந்து மிளிரு மென்க. அது நிற்க. மாதரார் தம்முள் அடியாராதற்குத் தக்க தகுதியுடையாரில்லை யென்று இவர் துணிந்துரைத்த பீறலுரை, சைவ நூல் உணர்ச்சியில்லாப் போலிச் சைவர்பாற் செல்லுமே யன்றி, அவ் வுணர்ச்சி சிறிது வாய்ந்த சிறார்மாட்டுஞ் செல்லாது. இத்தமிழுலகமெல்லாஞ் சிவமணங் கமழ்வித்தற்குத் தோன்றிய திருஞானசம்பந்தச் செந்தமிழ்ப் பைந்தாமரை மலர்முகிழைப் பாண்டிநாட்டுக்கு வருவித்து அதன் பெருகுமணத்தாற் சமண் முடைநீக்கி, அம் மலரினின்றும் பொழிந்த தமிழ்த்தேனிற் படிந்து நின்றவர் யார்? மங்கையர்க்கரசியாராம் பங்கயச் செல்வி யார் அல்லரோ! ஒரு முழுமுதற்கடவுள் உண்மை தேற்றும் அருமைச் சைவசமயந்தன்னை யகன்று பாழ்ங்கோள் பகருஞ் சமண்பாழி புகுந்த தன் இளவலை மீண்டுஞ் சைவம் புகுமாறு இறைவனை வேண்டி இத் தமிழ்நாட்டை வாழ்வித்த அலகில் பெரும்புகழார் யார்? திலகவதியாராம் நலமிகு நங்கையாரல்லாரோ? நம்பரடியார் திருத்தொண்டை இம் பருலகில் நன்கு விளக்கித், தேவர்க்கரியோன் திருவருட் பேற்றை மாங்கனியதனொடுந் தேங்கப்பெற்று, நெற்றிக் கண்ணன் கொற்றப் புகழைப் பைந்தமிழ்ப்பாவிற் சிந்தப் பொழிந்த செல்வியார் யார்? சீரைக்கொண்ட காரைக்காற் பாவையாரல்லரோ! இங்ஙனமே, பிறைச்சடைப் பெருமான் பேரருள் மாந்திய அருகாச் சிறப்பிற் பரவையாருங் கொங்கலர் கூந்தற் சங்கிலியாரும் மகிழ்க் கீழிருந்த மாதொரு கூறனை மற்றவனருளால் தெற்றென வுணர்ந்துங், காதலர்பொருட்டுத் தூதனாய்க் கொண்டும், எத்திறத்தார்க்கும் எங்குங்கிட்டா மெய்த்தவமுடைய மெல்லியலாராகலின் அவரினுஞ் சிறந்த அடியாரும் அவரினுஞ் சிறந்த நல்லாருஞ் சுந்தரமூர்த்திகட்கு வேறுளர் கொல்லோ? இவ்வாறு நாச்சியாரிரு வருஞ் சிவபிரான் திருவடிக்கட் பெருகிய பேரன்புடையராதல் தேற்றுதற்கன்றோ, சுந்தரமூர்த்தி நாயனார், பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் என்றருளிச் செய்தார்? மாதருள் இழிந்தாரை யன்றி உயர்ந்தாரைக் கண்டும் அறியாத தீவினையாளரே, பரவை சங்கிலியாரை ஏனை மாதரோடு ஒப்பவைத் துரையாநிற்பர். ஆகவே, அம் மறுப்புரைகாரரும் அவரோ டொத்தாரும் பரவை சங்கிலி யாரை அடியாரல்லரென இகழ்ந்துரைக்குமுரை, ஆன்றோர் கருதிப்பாராத பொருள் இல் புல்லுரையா மென்று ஒதுக்கு தலே செயற்பால தென்க. இனிப், பண்டைத் தமிழாசிரியர் அறத்தை இல்லறந் துறவறம் என இருவேறுவகைப்படுத் துரைத்தில ரெனவுந், துறவென்பது மனமாசு நீங்கி இறைவன் திருவடிக்கட் பதிந்த மெய்யன்பராய் எல்லா உயிர்கட்கும் இனியராய் நன்றி செய்தொழுகும் ஒழுக்கமேயாம் எனவும், இவ்வொழுக்கம் மனைவி மக்கள் முதலான அன்புடையார் குழுவிலிருந்தே செயப்பட்டதன்றி அவரை அறத்துறந்து செயப்பட்டதின் றெனவும், இதற்குப் பெரியபுராணத்தின்கட் சொல்லப்பட்ட அடியார் பெரும்பாலாரின் வரலாறுகளே சான்றாமெனவும், மனைவிமக்கள் முதலான அன்புடையார் தம்மையெல்லாம் அல்லற்பட விட்டுத் தாம் தனியே சென்று துன்புறும் போலித்துறவு பௌத்த சமண் மதங்கள் இத் தென்றமிழ்நாட்டிற் புகுந்த காலந்தொட்டு அவரைப் பார்த்து இங்குள்ள ஒரு சிலராற் கைப்பற்றப்பட்டதல்லது இங்கிருந்த சான்றோர்க்கு அது முழுவதும் உடம்பாடன் றெனவும் யாம் எமது தலைமைப் பேருரையிற் பண்டைப் பனுவல் மேற்கோள்களுடன் விரித்து ரைத்தேம். அவற்றிற்கெல்லாம் மாறு சொல்ல மாட்டாத அம் மறுப்புரைகாரர், பட்டினத்தடிகள் இல்லத் தொடர்பு நீங்கிச் செயப்படுவதாகிய துறவினையே மேலதாய்க் கொண்டார் எனக் கரைந்தார். பட்டினத்தடிகள் பௌத்த சமண் கோட்பாடு இங்கே புகுந்த பின்னிருந்து, அவர் போற்றாமுந் துறவு புகுந்தவராகலின் அவர் அப் புறத்துறவினை ஒரோ விடங்களில் மேலதாய் மிகுத்துக் கூறினார். ஆனாலும் அங்ஙனந் துறவு புகுந்தபின் தாம் அதனாற்பட்ட துன்பங் களை நினைந்து பார்த்து, இல்லத்துறவு புகுந்தவனிலும் அகத்துறவு புகுந்தவனே கழிபெருஞ் சிறப்புடையன் என்பது தேற்றி, அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லந் துறந்தான், அவனிற் சதகோடி உள்ளத் துறவுடையோன் என்று அருளிச் செய்தமையும், பற்றற்றவர் உலகத்தவர்போற் காணப்படுதல் பற்றி அவரை வழிபடுதல் விடேன்மின் என்பது தேற்றுவாராய், வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போ லிருப்பர் பற்று அற்றவரே. என்று அவர் அருளிச்செய்தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. ஓராசிரியர் கருத்தை முற்றும் ஆய்ந்து பாராது, அவர் ஒரோ விடத்து மொழிந்த சிலவற்றையே அவர்தங் கருத்துறுதியாகக் கோடலினும் பெரியதொரு பிழைபாடாவது பிறிதில்லை. எத்துணைச் சிறந்த ஆசிரியர்க்கும் நாட் செல்லச்செல்ல ஒழுகலாறுகள் வேறுபடுதலின் அவர்தம் உணர்வும் அறிவுங் கூடவே வேறுபடும்; அவர் தமது வாழ்நாள் எல்லையில் அவ்வக் காலங்கடோறும் இயற்றிப் போந்த நூல்களையும் உரைகளையும் நன்காய்ந்துபார்க்கும் அறிவுமதுகை யுடையார்க்கு அவ்வாசிரியர் தம் ஒழுகலாறுகளும் அவை வாயிலாக அவரெய்திய உணர்வு வேறுபாடுகளும் நன்கு புலனாம். ஆகவே, ஓராசிரியர் ஒருகாற் சொன்ன கருத்தை, அவர் முழுதுந் துணிந்த கருத்தாகக் கோடல் ஆய்ந்துணரும் அறிஞர்க்குச் சிறிதும் ஆகாது; மற்று, அவ்வாசிரியர் அவ்வக் காலங்களில் வெளியிட்ட கருத்துக்களை யெல்லாம் புடைபடவைத்து அளந்து நோக்கி, அவை தம்முள் அவர் முடிவாகக் கண்ட கருத்து இது, அங்ஙனங் காணாததிது வெனத் துணிதலே உண்மை யுணர்வினார்க்குக் கடமையாகும். காலங்கடோறும் மக்கட்கு ஒழுகலாறுகள் வேறு படுதலும், அவ்வாற்றால் திருவள்ளுவனார், அறிதோறு அறியாமை கண்டற்றால் அவர் தங் கருத்துக்களும் வேறு படுதலுந் தெய்வப் புலமை என்று கூறினமையாலுஞ் செவ்வனே விளங்கும். ஆகவே, பட்டினத்தடிகள் ஒருகாலத்துச் சொன்ன ஒரு கருத்தையே உறுதியெனக்கொண்டு, பிற்காலத்தில் அவர் அதனின் வேறாய்க் கண்ட வேறொரு முடிந்த கருத்தைக் கைக்கொளா தொழிதல் அறிஞர் பால் நிகழாது. முதலிற்றாம் மொழிந்த புறத்துறவினும், உள்ளந் தூயராய் நிற்கும் அகத்துறவே நூறுகோடி மடங்கு சிறந்ததாகுமென அவர் பின்னே வலியுறுத்தி மொழிந்தமை யால், அவ்வாறவர் பின்மொழிந்ததே அவர்தங் கருத்துறுதி யாகுமென்று கடைப்பிடிக்க. இங்ஙனங் கூறவே, உள்ளந் தூயரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு, அவர்போல் உள்ளந் தூயரான பரவை சங்கிலியாரது கேண்மையே, நல்லாரி ணக்கம் ஆவதன்றி, அவரைத் துறந்து ஏனைப் பிறரொடு மட்டுங் கேண்மை பாராட்டுதல் அஃதாகாதென்றுணர்க. நம் தொல்லாசிரியர் துறவு என்பதற்குக் கொண்ட இம் மேதகுபொருளின் மாட்சி யுணராது, உலகத்தவரை ஏமாற்றிப் பழிபாவங்களிற் படும் மாயாவாதப் பகட்டுப் புறத்துறவினைப் பாராட்டும் அம்மறுப்புரைகாரர் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவர் பரவை சங்கிலியார்பால் வைத்த காதற் கெழுதகை நேயத்தினையும் புகழாது மற்று என்செய் மாட்டுவார்! அது கிடக்க. 16. சிவநேய அடியார் நேயங்கட்குச் சாதி தடை இனி, அப்பர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியன்மார் நடந்துகாட்டியபடி, நாமுஞ் சாதிவேற்றுமைகளைப் பாராது, சிவநேய அடியார் நேயங்களில் மிக்காருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்து உண்மையன்பினால் ஊடுருவப் பெற்றாலன்றிச், சாதி வேற்றுமைச் செருக்கினாற் சிறியராய் நிற்கும் நாம் அதனையகன்று அன்பினாற் பெரியராய் நிற்கும் பேரின்ப நிலையினை எய்துதல் இயலாது என்று யாம் எமது தலைமைப் பேருரையில் மொழிந்திட்டேம். இதனை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர் உண்மையாகவே எமது கொள்கை யினை மறுக்க வேண்டினால், சாதிவேற்றுமையினைச் சிதைத்த அப்பர் சுந்தரர் பெரியராகார்; ஆகையால் அவர் போல் நடப்பது சாதியிற் பெரிய நமக்குச் சிறுமையே தருமல்லது பெருமை தராது; நாம் நமது சாதியுயர்வினையே விடாப் பிடியாய்ப் பாராட்டிக், கல்வியுஞ் சிவநேய அடியார் நேயமும் உடையராயினும் ஏனையெல்லாரையுங் கீழ்மக்க ளாகவே நடத்தி, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாது அவரை யகன்று இறுமாந்தொழுகுதலே நாம் பெரியராதற்குத் தக்க வழியாகும் என்றன்றோ மறுத்தெழுதல் வேண்டும்? அவ்வாறு செய்தால் உலகந் தம்மைப் பெரிது புறம்பழிக்கு மென்பதை நன்கு கண்ட அம் மறுப்புரை காரர், இயைபில்லாதவைகளை யெழுதி மருட்டுகின்றார். இவரது மருட்டுரை சாதி வெறிபிடித்தார்பாலன்றி, உண்மையன்பு வாய்ந்தார் பாற் செல்லாது. ஆயினும், அவர் உரைக்கும் போலியுரையின் பெற்றிமையினை ஒரு சிறிது விளக்கிக்காட்டுவாம். அப்பர் சுந்தரர் சாதிக்கட்டைச் சிதைத்து முறையே திருவமுது கொண்டதுந் திருமணஞ் செய்ததும் அவர் பெரியபுராணபிற் செய்த செயல்களாதலால், அவர்போற் பெரியராகாத நாம் அச் செயல்களைச் செய்தலாகாது என்றும், மற்று நாம் பெரியராதற்குச் சிவபிரானையுஞ் சிவனடியாரையும் ஓவாது வழிபடுதலே செயல்வேண்டும் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். அன்பரோடு உடனிருந் துணிவுகொண்டும் மணம்புரிந்தும் அளவளாவுதல் பெரியரானபிற் செயற்பாலன வென்று கூறும் அவருரை கொண்டே, பெரியராகாமற் சிறியராய்ச் செருக்குற்று நிற்குங் காலங்களிற் சாதியுயர்வு தாழ்வு பேசிக்கொண்டு அன்பரோடு அளவளாவுதலின்றி இறுமாந்தொழுகுதலே செயல்வேண்டு மென்பது அவர்தங் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக் கருத்து அவரை யறியாமலே அவர்தம் போலியுரையில் நன்கு புலப்பட்டு நிற்க. அக் கருத்துக்கு மாறாய் அதனை மறைத்துச், சிவபிரானையுஞ் சிவனடியாரையும் இடையறாது அன்பினால் வழிபட்டுப் பெரியராதல் வேண்டுமென்று மொழிந்து, தம்மை நல்லவராக்கிக் கொள்ளப் பார்க்கின்றார். சிவபிரானுக்கு அன்புள்ளார் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும் அன்புபாராட்டுந் தன்மையராவர்; சிவனடியார்க்கு உண்மை யன்புள்ளார், திருநீறுஞ் சிவமணியுமாகிய புற அடையா ளங்கள் மட்டுமே உடையாரைக் காணினும் அவர்தம் பிறப்பு வரலாறுகளைத் தினைத்தனையும் ஆராயாது அவர்பாற் கரையிகந்த அன்புமீதூரப் பெறுவர். இதற்குப், பெரிய புராணத்துப் போந்த நாயன்மார் வரலாறுகளே போதிய சான்றாம். சைவசமயாசிரியருஞ் சிவ அந்தண குலத்திற் பிறந்தருளியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரே, தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் என்று அந்தணர் குலத்து அடியாரையுங் குயவர் குலத்து அடியாரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது ஒருங்கு வைத்து வணக்கங் கூறினமையும் நினைவிற் பதிக்கற் பாற்றாம். இங்ஙனஞ் சிவனடியார் பால் உண்மையன்பு பூண்டு ஒழுகு வாரெவருஞ் சாதியுயர்வு தாழ்வு சிறிதும் பாராது அவர்க்கு அடியாராய்த் தொண்டு செய்து ஒழுகினமையே நூல் வழக்கானும் உலகவழக்கானும் நன்கறியக் கிடக்கின்றது; நாம் பெரியராதற்கு இங்ஙனம் அம்மறுப்புரைகாரர் சொல்லும் நெறிதனிலேயுங் கூடச் சாதி வரம்பைச் சிதைத்து அன்பினால் தொண்டுசெய்து ஒழுகும் விழுமிய ஒழுக்கமே புலனாகி நிற்கின்றதன்றே? ஆகவே, யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்னும் பழமொழிக்கு அம் மறுப்புரைகாரர் இலக்கியமாய் நிற்கின்றார் கண்டீர்! இங்ஙனந் தான் கொண்ட கோட்பாட்டுக்குத் தானே மாறாய் நின்று, ஆன்றோர் கைக் கொண்ட உண்மையன் பொழுக்கத்தைத் தன்னையறி யாமலே தன் வாயிற் புலப்படுத்தி விடுத லில் அம்மறுப்புரை காரரன்றி வேறு எவர் வல்லார்! இனி, அப்பர் சுந்தரர் பெரியரானபிற் செய்த செயல்கள் குற்றமுடையவாயினன்றோ நாம் அவற்றைப்போற் செய்த லாகாது? மற்று, அவை அன்பினையே குறிக்கொண்டு, அன்புக்கு மாறான சாதிக்கட்டைத் தொலைத்த பெருஞ் சிறப்புடைய வாகலின், நாமும் அவர் செய்த அச் செயல்கள் போற் செய்து அன்பரோடு அளவளாவுதலாற் போதரும் இழுக்கென்னை? இழுக்கில்லாத விழுமிய அந் நடைகளைத் தமது போலிப் புல்லறிவின் முனைப்பால், அவர் இகழ்ந்து ரைத்தால் அவ்வளவில் அவை இழிந்தவாய்விடுமோ? சாதிக் கட்டைச் சிதைத்து உண்மையன்பால் அறிவால் உயர்ந்த மேலோர்பால் உயிரும் உடலுமாய்க் கலந்து ஒழுகுதலாற் போதரும் பொல்லாங்கின்னதெனக் காட்டாமல், வீணே அம் மேலோர் தம் ஒழுக்கத்தைப் பழித்துப் பேசிவிடுதலால் அது பொல்லாங் குடையதாய் விடுமோ? ஞாயிற்றின் பேரொளி யினைக் கண்டு குரைக்குங்குக்கல், அவ்வாற்றால் அஞ் ஞாயிற்றின் பெருமையினைக் குறைக்க வல்லதாமோ? ஆதலால், அறிவு அன்பு ஒழுக்கஞ் சிவநேயம் அடியார் நேயங்களிற் சிறந்தார் எக்குடிப் பிறப்பினும் எவரேயாயினும் அவரோடு அன்பினால் ஒருங்கு அளவளாவி வாழ்தலே உயர்ந்த நடையாகுமன்றி, அந் நலங்கள் சிறிதுங் கல்லா ஒருவன் குல நலம் பேசுதல், நெல்லினுட் பிறந்த பதராகுதல் திண்ணமாதலால் அவனை யொத்தார்பால் உடன் கூடி வாழ்தல் உயர்ந்தநடை யாகாமல் இழுக்கப்படு மென்க. எனவே, நாம் பெரியராகல் வேண்டுமாயின், பெரியரான அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் நடந்துகாட்டியபடியே சிவநேயம்மிக்கு அடியார்பால் ஏதும் வேற்றுமை காணாது அன்பினால் அளவளாவுதலே செயல்வேண்டுமன்றி, ஏனைச் சிறியார் செய்யுஞ் சாதிவேற்றுமைக் கட்டிற் கிடந்து நம்மையும் நம்மைச் சார்ந்தாரையும் அல்லற் கடலுட் படுப்பித்துப் பிறவித் துன்பத்தைப் பெருக்கலாகாதென் றுணர்ந்துகொள்க. இனி, அப்பர் சுந்தரர் சாதிச்செருக்கை மாய்த்து முறையே சிவநேயம் மிக்காருடனிருந்து உணவுகொண்டதும், அவரைத் திருமணம் புரிந்ததும் திருவருளால் உந்தப்பட்டுச் செய்த செயல்களாதலால், நான் என்னும் முனைப்புடைய நம் போல்வார் அவர் போற் செய்தலாகாது என்று அம் மறுப்புரைகாரர் அடுத்தடுத்துக் கூவுகின்றார். திருவருளியக் கத்தால் அடியார்பால் நிகழுங் செயல்கள் இவை, தமது அறிவியக்கத்தால் அவர்பால் நிகழுங் செயல்கள் இவை என்று பகுத்துக் காணாமல், அடியார் செய்யுஞ் செயல்களெல்லா வற்றையுமே திருவருட் செயல் திருவருட்செயல் என்று கூவும் அவர், எல்லா மக்களையும் பிறப்பளவில் வேற்றுமை தோன்றாது படைத்திருக்கும் அத் திருவருட் கருத்துக்கு மாறாக இவர் பிறப்பளவில் உயர்ந்தவர், இவர் பிறப்பளவில் தாழ்ந்தவர் என்று அருளின்றிக் கரைந்து அல்லற்படுவது பெரிதும் இரங்கற்பாலதேயாம். அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் தமக்கென ஓரறிவுந் தமக்கென ஒரு செயலுமின்றித், தாம் உண்டதும் மணந்ததுந் திருப்பதிகம் பாடினதுந் திருக்கோயில்கட்கு நடந்து சென்றதும் இறைவன் மாட்டு அன்பால் உருகினதும் அடியார்பால் நெஞ்சம் நெகிழ்த்ததும் அவரோடு உரையாடினதும் பிறவுமெல்லாந் தஞ்செயலாகாமல் இறைவன் செயலேயாயின், அவரெல்லாம் உயிரும் உணர்வும் இல்லா வறிய இயந்திரங்கள் (பொறிகள்) ஆய்முடி வரல்லரோ? அவரை யெல்லாந் தனித்தனியே வைத்து அப்பர் சுந்தரர் என்றற் றொடக்கத்துப் பெயர்களால் தனித்தனியே வாழ்த்துதலும் வணங்குதலுமெல்லாம் நம் மாட்டுப் பொருளில் வருஞ்செயல்களாய் முடியுமல்லவோ? அவர் இறைவனைப் பாடினதும் அவர் இறைவனை வணங்கியதும் அவர் தஞ் செயலாகாமல் இறைவன் செயலே யாயின், இறைவனே தன்னைத்தான் பாடிக்கொண்டான், இறைவனே தன்னைத்தான் வணங்கிக்கொண்டான் என்று முடிக்கப்பட்டு அவை இறைவற்குத் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்தைச் சுமத்து மல்லவோ? உயிரென ஒன்றில்லை, எல்லாம் பிரமமேயெனக் கூறும் அம் மறுப்புரை காரர் போல்வாரான மாயா வாதிகட்காயின் அவ்வாறு கூறுதல் பொருந்தும்; மற்றுப், பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி (திருமூலர்) என்றும், அதுவென்னும் ஒன்று அன்று அதுவன்றி வேறே அதுவென்று அறி அறிவும்உண்டே (மெய்கண்ட தேவர்) என்றும் போந்த எம் ஆசிரியர் அருளுரை வழி பிழையாது நின்று, இறைவனைப் போலவே உயிர்களெல்லாந் தமக்கென விழைவு அறிவு செயல்கள் (இச்சாஞானக் கிரியைகள்) உடைய வாமெனவும், ஆயினும் அவை மலத்தினால் மறைக்கப்பட்டு நிற்குமெனவுந், தம்மைப் பொதிந்த மலமாசு இறைவன்றன் றிருவருளுதவியால் நீங்க நீங்க அவ்வுயிர்கள் தமக்கிற்கை யாவுள்ள அவ் விழைவு அறிவுசெயல்கள் இனிது விளங்கப் பெறுமெனவும், மலத்தை நீக்குதற்கு உதவிசெய்யும் அவ்வ ளவே இறைவன் செயல், அவ் வுதவியைப் பெற்று மலப் பிணிப்பை அவிழ்த்துச் சிவபிரானிடத்துஞ் சிவநேயம் வாய்ந்தாரிடத்தும் விழைவு கொண்டு அவரருளையும் அன்பையும் பெறுதற்கான வழி வகைகளை அறிதலும் அதற்கேற்ற முயற்சிகளைச் செய்து நடத்துலுமெல்லாம் புனிதராவா ரெல்லார்க்கும் மெய்யுரிமையாமெனவும் வற்புறுத்து நுவலுஞ் சைவசித்தாந்த உண்மைநெறி பேணும் எம்மனோர்க்காயின் அங்ஙன முரைத்தல் எட்டுணையுஞ் சாலாதென்க. அற்றேல், நம்மாட்டு நிகழும் இறைவன் செயலுக்கும் நஞ்செயலுக்கும் வேற்றுமை என்னையெனிற், காட்டுதும்; பசித்தும் உணவுபெறாமையால் அயர்ந்துறங்கும் மகவினை எழுப்பிப் பால் ஊட்டும் அன்னையின் செயல் போல்வது முதல்வன்றன் அருட்செயல்; அங்ஙனம் எழுப்பி அன்னை தரும் பாலினைப் பருகும் மகவின்செயல் போல்வது நம்போன்ற உயிர்களின் செயல்; இன்னும் அன்னையின் திருக் கொங்கைகளிற் பாலமிழ்தினை அமைத்துவைப்பது இறைவன் செயல்; மற்றுப், பால்சுரக்கும் நேரமும் மகவின் பசியும் அறிந்து அப் பாலினைத் தன் மகவுக்கு ஊட்டுவது அன்னையின் செயல். இங்ஙனமே, கண் கால் முதலான மிக வியக்கத்தக்க உறுப்புகளோடு கூடிய இவ்வுடம்பை நமக்கு அமைத்துக் கொடுத்தது இறைவன் செயல்; இவ்வரிய வுடம்பைப் பெற்ற நாம் அதனைப் பழுதுபடாமற் பாதுகாத்து அதன்றுணையால் நம் அறிவையும் அன்பையும் இன்பத் தையும் வளர்த்து இறைவன் றிருவடிப் பேற்றினை எய்துதல் நம்செயல். இவ்வாறு பகுத்து ஆராய்ந்து காண வல்லார்க்கே, இறைவன் நம்பொருட்டுச் செய்யும் படைத்தற்றொழிலைச் சிற்றறிவுடைய நம்மனோர் ஓர் அணுத்துணையுஞ் செய்ய மாட்டுவா ரல்லரென் பதூஉம். அப் படைத்தற்றொழிலைப் பயன்படுத்தி தம்மறிவையும் அன்பையும் வளர்த்து அம் முகத்தால் தமது ஆணவச் செருக்கை அகற்றிக் கொள்ளாத உயிர்களை இறைவன் தனது திருவருளின்பத்திற் படுப்பித்துக் கொள்ள மாட்டுவானல்ல னென்பதூஉம் நன்கு விளங்கும். ஆகவே, குலச்செருக்கு குடிச்செருக்கு செல்வச்செருக்கு கல்விச் செருக்கு முதலான ஆணவக்கறை சிறிதுமின்றி, அன்பினால் அகங்குழைத்துருகி அப்பரும் அப்பூதிகளும் உடனிருந்து திருவமுது கொண்டு அளவளாகியதும், சுந்தரரும் பரவை சங்கிலியாருங் காதற் கெழுதகைமையில் விஞ்சி உடலு முயிரு மெல்லாம் ஒன்றாய்ப் பேரன்பினுருவாய் நின்றதும் பிறவுமெல்லாம் அப் பெரியார்தம் அறிவுமுயற்சி அன்பு முயற்சிகளால் நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவையெல்லாம் இறைவன்செயல் களாகா வென்று கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இவ்வாறன்றி, உயிர்களின் செயல்களை இறைவன் மேலேற்றிக் கூறுதல் கழுவாய் இல்லதொரு பெருங்குற்றமாம் என்பதனையும் உணராது, எல்லாம் இறைவன் செயல் எல்லாந் திருவருட்செயல் என்று சொல்லிவிட்டமையானே தாம் ஞானக் கடலைக் கரைகண்டவரென நம்பிப் பொது மக்கள் தம்மைப் பாராட்டுவரென்று தமக்கு அவ்வாற்றால் ஒரு பொய்ப் புகழை உண்டாக்கிக் கொள்ளுதலையே விழைந்து, சிவபிரான்றன் இறைமைத் தன்மைக்கும் அடியார் தம் மெய்யன்பின் திறனுக்கும் ஆகாத இழுக்குரைகளை எழுதித், தமது மாயாவாதக் கோட்பாட்டைச் சைவசித்தாந்தம்போற் காட்டும் நாடகவன்மையில் அம் மறுப்புரைகாரர்க்கு நிகராவார் எவருமே யில்லையென்க அற்றேல், நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் றஞ்செய லேயேன் றுந்தீபற எனப் போந்த அருளுரையால் மெய்யடிமை பூண்டார் பால் இறைவன் செயலன்றி, அவர்தஞ் செயல் சிறிதுந் தோன்றாதென்பது பெறப்படுகின்றதாலே வெனின்; அற்றன்று, பொறிபுலன் கருவிகளின் வழி அறிவும் முயற்சியும் நிகழாது, அவை யெல்லாங் கடந்து இறைவன் திருவருளிற் றோய்ந்து பாலருடன் உன்மத்தர் பசாசர்குண மருவித் தம்மையும் உலகத்தையும் மறந்து நிற்குஞ் சீவன்முத்தர் நிலையினைக் கூறும் அவ்வருளுரையினை, உலகத் துயிர்களை ஈடேற்றுதற் பொருட்டுத் தோன்றி அவ் வுயிர்கள்பால் அருளும் அன்பும் பூண்டு ஒழுகி, அவர்க்கு இறைவன்றன் அருட்செயல் மாட்சிகளைக் காட்டுவாரான நம் ஆசிரியர்க்கும் ஏனைச் சிவனடியார்க்கும் ஏற்றுதல் பொருந்தா தென்றுணர்க. சீவன்முத்தர்நிலை அந் நிலையை அடைந்தார்க்கன்றி ஏனை யோர்க்குப் பயன்படாது; சிவனடியார் நிலையோ அவர் தமக்கே யன்றி உலகத்துள்ள எல்லா வுயிர்க்கும் பயன்படுவ துடைத்து. அற்றேற், சிவனடியார் தம்முட் சீவன் முத்தராய் நின்றார் இல்லையோ வெனின்; அற்றன்று, கண்ணப்பர் பெருமிழலைக் குறும்பர் முதலானவர் தம்மையும் உலகத்தையும் மறந்து இறைவன் திருவருட் பெருக்கிலேயே முழுதுந் தோய்ந்து நின்ற சீவன்முத்தரே யாவர்; மற்று, நம் சமயாசிரியன் மாருந், திருமூலர் காரைக்காலம்மையார் முதலான ஏனை நாயன்மார் பலருந் தாம் இறைவன் றிருவருளிற் றோய்ந்து நின்றதோடு அமையாது, உலகத்தாரையும் அந் நிலைக்குச் செலுத்தும் பேர் அருட்டிறம் வாய்ந்தவராகலான், அவர்பால் இறைவன் செயலே யன்றி அவர் தம் அருட்செயலும் ஒருங்கு விரவி நிற்கலாயிற்று. ஆகவே, இறைவனுக்கு அடிமைத்திறம் பேணுஞ் சான்றோருள்ளும் இவ்விருவேறு நிலைகள் கட்புலனாய்த் தோன்றக் காண்டலின், அவருள் ஒரு நிலையில் நின்றார்க்குரிய தன்மையினை வேறொரு நிலையில் நின்றார்க்கு ஏற்றிக் கூறுதல் பகுத்தறிவில்லாதார் செயலேயா மென்று ஓர்க. ஆகவே, அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கிருந்து திருவமுது கொண்டதுஞ், சுந்தரர் பரவை சங்கிலியாரை மணந்ததுந் திருவருட்செயல்களேயன்றி, அவர் தஞ் செயல்கள் அல்லவென்ற அம் மறுப்புரைகாரருரை பொருளில் புல்லுரை யேயாமென்று தெளிக. இனி, அன்பே உயர்ந்ததாகலின் அதனைக் கைக்கொள்க, சாதிவேற்றுமை தாழ்ந்ததாகலின் அதனைக் கொள்ளற்க என்று நம் ஆசிரியர் அறிவுறுத்தினராயின், அவ்வறிவுரையினை ஏற்று நடத்தல் வாய்வதாகும், மற்று அவர் நடந்த நடைகளைப் பார்த்து அவ்வாறு நடத்தல் வாயாது என்பதுபட அம் மறுப்புரைகாரர் தெளிவின்றிச் சில வரைந்தார். இவர் சொற்கள் நமக்கு இறும்பூதினை விளைத்தன. நம்மாசிரியன்மா ரெல்லாம் அன்பினையே யுயர்த்திச் சாதியினை இழித்துப் பேசியிருப்ப, முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைப்ப தோடு ஒப்ப, அவர்கள் அங்ஙனம் அறிவுரை கூறவில்லையென்று அம் மறுப்புரைகாரர் கூறியது எவரை ஏமாற்றுதற்கோ! நம் ஆசிரியன்மார் அங்ஙனங் கூறிய அறிவுரைகளை யெல்லாஞ் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றோம். அவற்றைக் காணாதார், சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங்கொண்டு என்செய்வீர் என்றும், எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்து..... என்றும் போந்த திருநாவுக்கரசு நாயனார் திருமொழிகளையும், நல்ல குலமென்றுந் தீய குலமென் றுஞ் சொல்லாள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றே தவங்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம் என்றும், சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி என்றும் போந்த சான்றோர் திருமொழிகளையுங் கருத்தில் இருத்தி, எவரும் அம்மறுப்புரைகாரர் சொல்லில் ஏமாறா திருக்கக் கடவராக! இனிச், சிவஞானசித்தியார் தவஞ்செய் சாதி என்று கூறுகின்றதே யன்றிப் பிறப்பளவிற் சாதியென்று யாண்டுங் கூறாமையாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம் மறுப்புரைகாரர் அதனை யெடுத்துக் காட்டியது,தமது கொள்கையினை அது வேரோடு அறுக்கும் ஞானவாள் என்பதை அறியாமையாற் போலும்! இங்ஙனமே தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த, மேற்பிறந்தும் மேல்அல்லார் மேலல்லர் கீழ்ப்பிறந்துங் கீழல்லார் கீழல் லவர் (குறள் 973) என்னும் அருமைத் திருக்குறள், தம்மைப் பிறப்பளவில் உயர்ந்தவராகச் சொல்லிக்கொள்வாரது குலத்திற் பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள் இல்லாதவர் உயர்ந்த குலத்தவர் ஆகார்; பிறரால் இழிந்த குலத்தவராக ஒதுக்கப்பட்ட வகுப்பிற் பிறந்தவராயினும், உயர்ந்தகுணச் செயல்கள் உடையவர்கள் கீழ்மக்களாகமாட்டார் என்று எளிதிற் பொருள்தந்து, அம் மறுப்புரை காரர் பிறப்பளவிற் கொண்ட சாதிப் பதர்க்கொள்கையினை எரித்துச் சாம்ப ராக்குங் கொழுந் தீயாயிருந்தும், அதனை இவர் கையி லெடுத்தது எத்துணைப்பேதைமை, குலங்,குடி சாதி என்னுஞ் சொற்களை ஆன்றோர் நூல்களிற் கண்டுவிட்டால், உடனே அம் மறுப்புரைகாரர், சாதி வேற்றுமை நம் தொல்லாசிரியர் நூல்களிற் சொல்லப்படுகின்றது. அஃதவர்க்கு உடம்பாடு என்று சொல்லப் பதறுகின்றார். ஆனால், நம் ஆசிரியன் மாரோ அன்பு அறிவு அருளொழுக்கம் சிவநேய அடியார் நேயங்களின் மிக்காரை யெல்லாம் ஓரினப்படுத்தி உயர்ந்த சாதியாராகவும், அந் நலங்கள் இல்லாதாரை அவரின் வேறுபடுத்தித் தாழ்ந்த சாதியாராகவுங் கொண்டிருக்கின்றார்; அங்ஙனம் எம்மாசிரியர் குணத்தாற் செயலாற் கொண்ட சாதி வேற்றுமை எமக்கும் உடம்பாடேயாம்; ஆனாற் குணத்தையுஞ் செயலையும் பாராமற் பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம் மறுப்புரைகாரரின் தீய சாதிவேற்றுமைதான் எமக்குடம் பாடாகாதது. அருச்சுனற்குக் கீதைநூல் அறிவுறுத்திய கண்ணனும் அவரவர் குணத்தாலுஞ் செய லாலுஞ் சாதி வகுத்தேன் என்று கூறுதலுங் காண்க. உண்மை இவ்வாறாகலிற், பிறப்பளவில் உயர்வு சொல்லிக்கொள்ளும் அம் மறுப்புரைகாரர், பார்ப்பனர் என்றுஞ் சைவவேளாளர் என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக் கொள்ளுங் கூட்டத்தாரில் எத்தனைபேர் குணத்தாலுஞ் செய்கையாலும் உயர்ந்தவர்! என்று நடுவுநிலை தவறாது நின்று எண்ணிப் பார்ப்பராயின், ஆயிரவரில் ஐவர்தாமும் நல்லவராக இராமையை அவரே நன்குணர்ந்து கொள்வர். இனிச், சிவயோக நிலையில் ஈடுபட்டு நின்று தம்மையும் உலகத்தை யும் மறந்து சிவமேயானாரைப் பற்றிப் பேசுதலால் ஈண்டைக்குப் பொருத்தமாவது ஏதும் இன்மையின், அன்னாரைக் குறித்து வறிதே விரித்தெழுதி வழுக்குதலில் அம் மறுப்புரைகாரர் தமக்கு நிகரானவர் எவருமேயில்லை; ஆகவே, அவ்வளவில் அவன் மகிழ்க என்னும் நயமேகொண்டு அவர் தமது திறனைத் தாமே மெச்சிக்கொண்டு மகிழ்ந்து கிடக்க. இனித், தமிழ்நாட்டவரிற் பெரும்பாலாரைத் தீண்டாதவர் என ஒதுக்கிவைக்குஞ் சாதிக் செருக்கர்கள், அத் தீண்டாதவர் பால் எல்லாவகையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு மூன்று நான்கு வேளை கொழுக்க விலாப் புடைக்கத் தின்று உயிர்வாழ்ந்து வருபவராய்த், தமக்கு அவ் வுதவிகளைச் செய்யும் அவ்வேழை யெளியவர்களுக்கு ஒருவனை நல்லுணவுகூடக் கொடாமல் அவர்கள் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து துன்புறச் செய்வதுடன், அவர்கள் கடவுளை வணங்குவதற்குக் கோயில் களினுள்ளே வருதலும் ஆகாதென்று கொடுமைசெய்வதுந் தெய்வத்துக்கு அடுக்குமா என்று யாம் எழுதிய பகுதிகளைக் கண்டு அம்றுப்புரை காரர் வயிறெரிந்து பட்டுப்போகின்றார். ஏனென்றால் இவரும் இவரோ டொத்தாரும் உயர்ந்த சாதியராம்; மற்றையோர் தீண்டத்தகாத இழிந்த சாதியராம்; ஆதலால், அவரோ டிருந்து கடவுளே வணங்கினால் தமக்கு நரகம் வந்துவிடுமாம். என்னே இவர்தம் பேதைமை! என்னே இவர்தஞ் சாதியிறுமாப்பு! தம்மைப் போலவே கடவுளாற் படைக்கப்பட்ட மக்களை இவ்வளவு குறைத்துப்பேசும் இவர் எவ்வளவு ஈரமற்ற வன்னெஞ்சராய் இருக்கின்றார்! கடவுளின் வியக்கத்தக்க படைப்பாய், அக் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் மக்களில் ஒரு பெரும் பகுதியாரை இழித்துப் பேசும் இவர் உண்மையாகவே கடவுளிடத்து அன்புடையவராயிருத்தல் கூடுமோ? தாம் அவர்களோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாதொழியினும், அவர்களைக் கோயில்களினுள்ளே வணங்கவும் விடாமை எத்துணைப் பெரிய வன்கண்மை! இத்தகைய வன்கண்ணர் இருக்கும் வரையில் மக்களுள் ஒற்றுமையும் அன்பும் உண்டாகா; இத்தமிழ் நாடு, ஒன்றோ டொன்று பகைத்துப் போரிட்டு மாயும் மற விலங்குகள் உள்ள காடாகவே சீரழியும்! இத்தகைய கொடியரால் மக்கள் ஒற்றுமையின்றிப் பல வேறுவேறு சிறுசிறு வகுப்பினராய்ச் சிதர்ந்தமையா லன்றோ, இந் நாட்டவர் வலிவிழந்து, துருக்கர் முதலான அயல்நாட்டு மக்களின் படையெடுப்பின் கீழ் அகப்பட்டு நசுங்கிக் கணக்கின்றி மாய்ந்தனர்! இந் நாட்டவர் ஒற்றுமையும் வலியும் உடைய ராயிருந்தால், அவ்வயல் நாட்டவர் இங்கே கலைக்காட்டலுங் கூடுமோ! இறைவனருளால் ஆங்கில அரசு இந் நாட்டின்கண் நிலைப்பட்டகாலந் தொட்டன்றோ, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட வகுப்பினர் சிறிது சிறிதாக ஏனையோர்க்குள்ள உரிமை களைப் போல்வன தாமும் பெற்று மேலேறி வருகின்றனர். இம் முறையரசு மட்டும் இந் நாட்டில் இதுகாறும் நிலைபெரு திருந்தால், மறுப்புரைகாரரை யொத்த வன் கண்ணரால் இந் நாட்டவர் இன்னுஞ் சீர்குலைந்து, இந்நாடு முற்றுமே பாழடைந்து போயிருக்கும். முன்னே வந்த துருக்க அரசரால் இந் நாட்டவரடைந்த துன்ப வரலாறுகளை நன்கறிந்தவர்க்கே யாம்கூறும் இவ்வுண்மை புலப்படும். இந்நாட்டவரிற் சாதிவெறி பிடித்த வகுப்பார் சிலர் நடுவுநிலை சிறிதுமின்றித்,தம்மிற் றாழ்ந்தவராகத் தம்மாற் கருதப்பட்ட ஏழையெளிய மக்கட்குச் செய்த தீமைகட்கு ஓர்அளவே யில்லை. அவ்வெளிய மக்கள் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையு மின்றி, அதனால் உடல் வலிவிழந்து, கல்வியுணர்ச்சி யில்லா மையால் அறிவுவலிவு மிழந்து நிலை கலங்கி நின்றமையா லன்றோ; அவர்கள் இந் நாட்டின்மேற் படையெடுத்து வந்த துருக்கர் மதத்தை நூறாயிரக்கணக்காய்த் தழுவித் தாமுந் துருக்கராயினர். துருக்கர்க்குப் பின்வந்த போர்த்துக்கேசியர், உலாந்தாக்காரர் இந் நாட்டின்கட் பரவச் செய்த கத்தோலிக் கிறித்துவ மதத்தைத் தழுவினவர்களும் எண்ணிறந்தவர் களாவர். இங்ஙனம் இவ்விந்தியநாட்டு மக்களில் மூன்றிலொரு கூறார் அயல்நாட்டவர் மதங்களைத் தழுவி, அவ்வாற்றாற் பல நலங்களை அடைந்தனர். இப்போதுஞ் சாதி வெறிபிடித்த மறுப்புரைகாரர் போல்வார் செய்யுங் கொடுமைகட்கு அஞ்சியும், இந்துமதத்தின் பெயரால் இன்னவர் செய்யும் அறிவற்ற நடுவுநிலையற்ற செயல்களைக் கண்டு அருவருத்தும் ஒவ்வொரு நாளும் அயல்மதம் புகுவார்தொகை பெருகியே வருகின்றது. இவ்வாறு நிகழும் நிகழ்ச்சிகளை வரலாற்று நூல்களால் அறிந்து கொள்ளும் ஆங்கில உணர்ச்சி வாயாத சாதிச் செருக்கர்கள், திருநெல்வேலி நாட்டையும் மலையாள நாட்டையும் போய்க் காண்பர்களாயின், அந் நாடுகளில் முறையே கிறித்துவர் தொகையும் மாப்பிளைத் துருக்கர் தொகையும் மிகுந்திருத்தற்குக் காரணம், மற்றை நாடுகளைவிட அந் நாடுகளிற் சாதிவெறி பிடித்தார் கூட்டம் மிகுதியா யிருப்பதுவேதான் என்பதனை நன்கறிந்துகொள்வர்கள். அதுகிடக்க, இனித், திருக்கோயில்களி னுள்ளே தீண்டாதவர்களை விடாமை ஏன் என்றால், அவர்கள் மாட்டிறைச்சியுண்டு, கட்குடித்து, ஆண் பெண்கள் வரைதுறையன்றி ஒருவரை யொருவர் மருவிக் களித்துத், துப்புரவின்றி முடைநாற்றம் வீச உலவுதலாலே தான் என்று சாதி வெறியர்கள் கூறுகின்றார்கள். ஆனால், தீண்டாதவர்கள் மட்டுந்தாம் இங்ஙனம் நடப்பவர் களா என்று உற்றுநோக்கினால், அவர்கள் நிகழ்ந்துந் தடை பொருந்தாப் புல்லுரையேயாதல் நன்கு விளங்கும். இப்போது திருக் கோயில்களின் உட்செல்வார் எல்லாரும் புலாலுங் கள்ளும் மறுத்து, ஒருவனையே மருவும் ஒருத்தியும் ஒருத்தி யையே மருவும் ஒருவனுந் தாமாவென்று ஆராய்ந்து பார்மின்கள். பார்ப்பனர் சைவர் என்று பெயர் கொண்டாரில் எத்தனையோ பெயர் தீண்டாதவர்க்கு வறுமையால் உண்ணக் கிடைக்காத வகையான விலங்கின் இறைச்சிகளையும் எத்தனை யோ வகையான சாராயங்களையுந் தாம் உட்கொள்ளு கின்றார்கள் என்பது நாடெங்கும் பேச்சாய்க் கிடக்கின்றது! இவர்களுள் எத்தனையோ பெயர் குறத்தி புலைச்சி முதலான தம்மால் விலக்கப்பட்ட மகளிரையுங் கூடிக் களிக்கின்றன ரென்னுஞ் சொல்லும் ஊரெங்கும் உலாவுகின்றது! இவர் களெல்லாங் கடவுளிடத்து அன்புடையார்போற் றம்மைப் பிறர் மெச்சிக் கொள்ளும் பொருட்டுக் கோயிலினுள்ளே ஆடம்பரத்தோடு செல்ல வில்லையா! பார்ப்பனர், சைவரிற் பலர் மறைவிலாவது ஊனுஞ் சாராயமும் உட்கொள் கின்றார்கள். இவ் விருவகுப்பின ரல்லாத ஏனை வகுப்பினர் எல்லாருமோ வெளிப்படையாக ஆட்டிறைச்சி கோழியிறைச்சி முட்டை மீன் முதலான எத்தனையோ வகையான ஊனை உண்பவர் களாயிருக்கின்றார்கள். இவர்களில் எத்தனையோ பலர் கள்ளுஞ்சாராயமும் வெளிப்படையாக அருந்து பவராயுங் காணப்படுகின்றனர். இவர்கள், எல்லாருங் காண கண்ட கண்ட மகளிரொடு உலவுதலைக் காணாதவர் யார்? இவர்கள் திருவிழாக்காலங்களிலும் மற்றை நாட்களிலும் வேசியரையும் பிற மகளிரையும் அழைத்துக்கொண்டு திருக்கோயில் களினுள் வரவில்லையா? அதுவேயுமன்றி, ஒவ்வொரு கோயிலிலுங் கோயிலுக் கென்று விடப்பட்ட பரத்தையர்கள் எத்தனைபேர்! இவர்க ளெல்லாந் தனித்தனியே ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவர் களா? இல்லையே; பொருள்தருவார் எவராயிருப்பனும் அவர்தோள் மருவிக் களிப் பவரல்லரோ! இன்னும், இவரே யன்றித் தமிழ்நாடல்லாத பிற நாடுகளிலிருந்து வந்து திருக்கோயில்களினுட் சென்று வணங்குவார் தொகைக்கு ஒரு கணக்குண்டோ? இவர்களில் இன்னார் தீண்டத்தக்க சாதியார் மற்று இன்னார் தீண்டத்தகாத சாதியாரென்று பகுத்துக் கண்டவ ருண்டோ? இன்னுந், தமிழ்நாட்டிலேயுங்கூட ஓர் ஊரில் தீண்டாதவர் என்று சொல்லப் படும் மக்கள், பிறிதோர் ஊரிலுள்ள திருக்கோயிலினுட் சென்று வணங்கி வருதலும் மறைவாக நிகழ்ந்துவருதலை அறியாதார் யார்? வெறுந் தோற்றத்தளவில் இவர் உயர்ந்த சாதியார், இவர் தாழ்ந்த சாதியார் என்று பகுத்தறிதற்குரிய அடையாளங்களை எல்லாம் படைத்த இறைவன் எந்த மக்களுடம்பிலும் படைத்து வையாதிருக்க, அவன் திருவுளக் கருத்துக்கு முற்றும் மாறாக, ஒருவர் தம்மை யுயர்ந்தவராகவும் மற்றையொரு வரைத் தாழ்ந்தவராகவுந் தமது இறுமாப்புனாற் கருதிக் கொண்டு, தம்மாற் றாழ்த்தப் பட்டவர்க்கு அளவிறந்த கொடுமை களைத் தொடர்பாகச் செய்வது, அங்ஙனஞ் செய்வார் தம்மை வேரோடு அழிக்குங் கருவியாய் வலிவேறி வருதலை அம் மறுப்புரைகாரர் அறியார் கொல்லோ! இனித், தீண்டாதவர்பால் முடைநாற்றம் வீசுகின்ற தெனக் கூவுவோர், அவர் செய்யுங் கடுமையான தொழில் களையும், அத்தொழில் மிகுதியாலுங், குளித்து முழுகித் துப்புர வாயிருக்கத் தக்க வசதிகளைச் சாதிக்கிறுக்கர்கள் அவர் கட்குத் தராமையாலும், வறுமையால் நல்ல ஆடை உடுக்கவும் நல்ல வீடுகளில் இருக்கவும் இயலாமையாலும் அவர்கள் அங்ஙனம் அழுக்கேறி முடைநாற்றம் வீசப் பெறுகின்றார் களென்பதை அறியாததென்னையோ! அவர் செய்து தருந் தொழில்களி னுதவியாற் செல்வமுடையராகித் துப்புரவான ஆடைகளும் அகன்ற பெரிய இல்லங்களும் பெற்றுக் கொழிக்குஞ் சாதிக்கிறுக்கர்களைப் போல், அவ் வேழை யெளியவர்களும் இனிது வாழப்பெற்றால் அவர்கள் பால் அந் நாற்றங் காணப்படுமோ? விலக்கப்பட்ட வகுப்பாரிலிருந்து கிறித்துவ மகமதிய மதங்களுட் புகுந்து நிலையுயரப் பெற்ற வர்க்குள் இத்தகைய முடை நாற்றங் காணப்படுகின்றதா? சிறிதும் இல்லையே! சாதிக்கிறுக்கர்கள் தாம் பயன்படுத்துங் கிணறுகள் குளங்கள் முதலான நீர்நிலைகளில், அவ்வேழை யெளியவர்களை ஒரு குடங்கை நீரும் எடுக்க விடாமை யாலன்றோ தம்மைப்போல் அவர்களுந் தக்க இடங்களில் இல்லங்களமைத்துக்கொள்ள இசையாமை யாலன்றோ ஐயோ? அவர்கள் எல்லாரும் அங்ஙனம் இரங்கத்தக்க நிலையிலிருந்து இன்னலுறுகின்றார்கள்! இங்ஙனம் அவ்வேழை யெளியவர்கள் அரு வருக்கப்படும் நிலையி லிருத்தற்குக் காரணம் சாதி வெறிபிடித்தவர்களே யாதலால், அவ்விரங்கத்தக்க பயன்படுமக்களை அங்ஙனம் இழித்து ரைத்தலினும் பெரியதொரு வன்கண்மை பிறிதில்லை யென்க. இனித், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதுஞ் சாதிச் செருக்கர்காளவாது முடைநாற்றமின்றி நறுமணங் கமழப் பெறுகின்றார்களாவென்று சிறிது கூர்ந்து பார்மின்கள்! காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகளை உட்கொள்ளலாலும், வெற்றிலை புகையிலை முதலான தீ நாற்ற மயக்கப் பொருள் களைக் குழையக் குழைய மெல்லுதலாலும், புகைச் சுருட்டுப் பிடித்தலாலும், மூக்குத்தூள் செலுத்துதலாலும், இன்னும் இவைபோன்ற அருவருப்பான செயல்களைச் செய்தலாலும், மலக்குடலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமையாலும் பார்ப்பனர் சைவரில் எத்தனையோ பெயர் முடைநாற்றம் உடையவர்களா யிருக்கின்றார்கள்! இவர்கள் கிட்டவரின் இவர்களின் வாயிலிருந்தும் உடம்பிலிருந்தும் வரும் முடை நாற்றம் பொறுக்கக்கூடியதாயில்லை. அதுவேயுமன்றி, இவர்கள் நோய் கொண்டும் புண்கொண்டும் புழுத்துக் கிடக்கை யிலாவது இவர்கள் பிறப்பளவில் தம்மை உயர்ந்த சாதியாராகப் பேசிக் கொண்டது பெரும் பிழையென உணரக்கடவராக! விலக்கப் பட்ட சாதியார் பெரும்பாலும் நோயின்றி வலிய யாக்கை யுடையவர்களாய் எல்லார்க்கும் பயன்படுவாராய் நீண்டகாலம் உயிர்வாழ்தலையுந், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனர் சைவர் முதலான ஏனை வகுப்பினரிற் பெரும்பாலார் எலும்புருக்கி ஈளை யானைக்கால் பித்தபாண்டு கொறுக்குப்புண் முதலான கொடுநோய் கொண்டு வலிவிழந்த வுடலினராய் எவர்க்கும் பயன்படாமல் விரைந்து மாய்தலையும் ஒப்பிட்டுக் காணுங்காற், பிறப்பளவிற் பார்ப்பினும் விலக்கப்பட்ட வகுப்பாரே ஏனைப் பார்ப்பனர் சைவர் முதலாயினாரைவிடத் தூயயாக்கை யுடைராயிருத்தல் புலனாகா நிற்கின்றது. இவ்வியல்புகளை யெல்லாம் ஆராய்ந்து பாராமல், உயர்ந்த அம் மக்களைத் தீண்டத்தகாத முடைநாற்ற முடையரென்பது எவ்வளவு பேதைமை! அதுகிடக்க. இனி, அம் மறுப்புரைகாரர் தீண்டாதவரைக் கோயிலினுள் விடலாகா தென்பதற்குத், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் வரலாற்றினை ஏன் மேற்கொள்ளலாகாதென்று எம்மை வினாவுகின்றார். மறுப்புரைகாரைப் போலவே சாதிவெறி பிடித்த கோயிற் குருக்கண்மார் அந்நாளிலும் இருந்தமையின், நந்தனாரைக் கோயிலினுள் விடாதே தடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனை, அக் குருக்கண்மார் இழிந்தாராதலும் நந்தனார் உயர்ந்தாராதலுந் தேற்றுதற் பொருட்டு, நந்தனாரைத் தீயிற் குளிப்பித்துக் கோயிலினுட் புகுவித்தான். தீயிற் குளித்தும் பழுதுபடாத தெய்வயாக்கையுடைய நந்தனார் பெருமைக்குந், தீயிற்படிற் படுசாம்பராய் வெந்தொழியுங் கொழுத்த வுடலினை யுடைய அக் குருக்கண்மார் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை இதனால் நன்கு புலனாகின்றதன்றோ! குருக்கண்மார் நந்தனாரைக் கோயிலினுள் விடாது தடுத்தாற்போல், இறைவனும் அவரைத் தடுத்தனனா? இல்லையே; எப்படியாவது அவரை அதனுட் புகுவித்தற்கன்றோ வழிசெய்தான்? அங்ஙனம் இறைவன் அவற்குக் காட்டிய அருள் நிகழ்ச்சியினை மேற்கோனா யெடுத்துத், தீண்டாதவரெனச் சாதிக்கிறுக்கர்கள் இழித்துப் பேசும் நன்மக்களைக் கோயிலினுள் விடுவதற்குப் பரிந்து பேசுவதே சான்றோர்க்குக் கடனாயிருக்க, அதற்கு மாறாய் அம் மறுப்புரைகாரர் தம்போற் சாதிவெறி பிடித்த அக் குருக்கண்மார் அவரிடத்துக்காட்டிய மருள்நிகழ்ச்சியினை மேற்கோளாயெடுக்க வேண்டுமெனக் கரைந்தார். என்னை இவர்தந் தீவினை யிருந்தவாறு! இவரைப் போலவே, மற்ற மக்களை இழிந்தவராகக் கருதி, அவர் கூட்டத்திற் சென்று வந்த தமக்குத் தீட்டுண்டாயிற்றெனக் கருதிய நமிநந்தியடிகள் என்னும் பார்ப்பன அடியார்க்குச், சிவபிரான் அவர்கொண்ட அக் கருத்துப் பழுதாதல் காட்டி நல்லறிவு கொளுத்திய வரலாற்றினைப் பெரிய புராணத்தின்கட் பார்த்திருந்தனராயின், அம் மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாஞ் சாதிவெறி கொண்டு அலறார். அதுவும் பாராத அவர்தந் தீவினைக்கு யாம் இரங்குதலே யன்றி வேறு என்செய்வம்! 17. அப்பர் முதலான சிலரின் துறவு இனிப், பௌத்த சமண்மதங்கள் தமிழ்நாட்டிற் புகுந்துவைகிய பின்னர்தான், மனைவி மக்களைத் துறந்துபோய் ஐயம் ஏற்றுண்டு பிழைக்கும் புறத்துறவு இந் நாட்டிலுள்ள சிலரால் மேற்கொள்ளப் படுவதாயிற்று என்றேம். மற்று, அம்மறுப்புரைகாரரோ, அப்பர் மாணிக்க வாசகர் பட்டினத்தார் கொண்ட துறவு, வேதத்தைச் சார்ந்த மிருதிநூல் வழியதே யன்றிப், பௌத்த சமண்வழியதன்று என்று ஏதொரு சான்றுங் காட்டாது கூறினார். இருக்கு எசுர் முதலான வேதகாலத்துப் பழக்க வழக்கங்களும், அவ்வேதங்கட்குப் பண்னூறாண்டு பிற்பட்டு வந்த மிருதிநூற்கால பழக்க வழக்கங்களும் வேறு வேறாயிருத்தலே மறுப்புரைகாரர் சிறிதும் ஆராய்ந்து ணர்ந்தவர் அல்லரென்பது, அவர் உரைக்கும் இப்போலி மறுப்புரையால் நன்கு புலனாகின்றது. இந்நூல் இன்னகாலத் தெழுந்தது, அக்காலத்துநிலை இன்னது, அக்கால இயல்புக்கும் அக் காலத்தில் உண்டான நூலியல்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை யின்னவையென்று உணரும் வரலாற்று நூலுணர்ச்சி (Historical knowledge) மறுப்புரைகாரர் சிறிதும் உடையரல்லாமையால், வேதத்தோடு இயைபில்லாத மிருதியை அதனோடு இயைபு படுத்தித் துணிபுரை கிளத்தார். அறியாமைக்கு உள்ள துணிபு தான் என்னே! இருக்குவேதத்தில் நுவலப்படும் முனிவரெல்லாரும் மனைவி மக்கள் முதலா னாருடன் செல்வவளத்தோடிருந்து இனிது வாழும் மனை வாழ்க்கையினையே தாம் வழிபடு கடவுளர் பால் வேண்டக் கண்டதல்லால், அவருள் ஒருவராயினும் அன்னாரைத் துறந்துறையும் வாழ்க்கையினை வேண்டக் காணேம். மற்றுப், பிற்காலத்தெழுந்த மிருதி நூல்களோ, துறவு மனைவி மக்களோடு கானகத்திருந்து மேற்கொள்ளப்படும் வானப் பிரத்த மும் அவரை அறத்துறத்து ஐயம் ஏற்றுண்டு திரியுஞ் சந்நியாச மும் என இருவகைப்படுமென்றுரைக் கின்றன. பிற் கூறப்படுஞ் சந்நியாசம் வேதநூல்களிற் சொல்லப் பட்டிருந்தால், அதனை மறுப்புரைகாரர் எடுத்துக் காட்டு தலன்றோ செயல்வேண்டும்? அவ்வாறு காட்டுதற்கு அங்கு ஏதும் இடம் இன்மையின் அதனை வாளா கூறி யொழிந்தார். சான்றேதுங் காட்டாத இவரது போலி மறுப்புரை கொண்டே, மிருதி காலத்துக்கு முன்னிருந்த முனிவரர்க்கு, மனைவி மக்களை அறத்துறந்து செல்லும் புறத்துறவு உடம்பாடா காமை பெற்றாம். பௌத்த சமண்மதங்கள் தோன்றுதற்குமுன் இத்தகைய புறத்துறவினை எவரும் மேற்கொண்டில ரென்பது கருத்திற் பதிக்கற் பாற்று. வடமொழியில் மிகச் சிறந்த முனிவரரான யாக்கியவற்கியருங் காத்தியாயினி, மைத்தி ரேயி என்னும் மனைவியர் இருவரை மணந்து, அவரோ டொருங்கிருந்து துறவு நடாத்தினமை மறுப்புரைகாரர் அறியாமை இரங்கற்பாலதாகும். தமிழ் நாட்டின் கண்ணே தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும் மனைவி மக்களோ டிருந்து தவம்புரியுந் துறவு வாழ்க்கையினையே விதந்து அருளிச் செய்தமையினையும் முன்னரே விளக்கிப் போந்தாம். இனி, விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு என்னுந் திருக்குறளைத் தமது போலிக் கொள்கைக்கு ஒரு துணையாக எடுத்துக்காட்டிய அம் மறுப்புரைகாரர், ஆசிரியர் திருவள்ளுவர் தம் மனைவியாரோடிருந்து தவமியற்றிய உண்மை நிகழ்ச்சியினை மறந்துவிட்ட தென்னையோ? காதலிற் சிறந்த இல்லாளைத் துறந்துறைதலே துறவு என்பது அவர்தங் கருத்தாயின், தாம் அறிவுறுத்திய அறவுரைக்குத் தாமே மாறாக நடப்பரா? ஆதலால், விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் என்று அவர் அருளிச்செய்த திருக் குறட் கருத்து, மறுப்புரை காரர் தாம் வேண்டியவாறு ஏற்றிக் கூறிய அப் புன்பொருன் பயப்பதன்று. பின்னை என்னையோ அதன் கருத்தெனிற்; கூறுதும், அகலியை என்னுந் தம் மனைவியோடிருந்து தவம் புரிந்த கௌதம முனிவரைச் சுட்டி, ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (குறள் 25) என்று அவரருளிச் செய்த திருக்குறளால் ஆசிரியர் கருத்து இன்னதென்பது நன்கு புலனாகா நிற்கும். தன்வழி நில்லாது, தாம் செல்லும் வழியே தன்னை ஈர்த்துச் சென்று பழி பாவங்களுட் படுப்பிக்கும் ஐம்புல அவாக்களே ஒருவனுக்குத் தீது பயந்து அவன்றன் பிறவிகளைப் பெருக்குவதாகும். துள்ளியோடும் புள்ளிமான் ஒன்றைக் கண்டு அதன் அழகை வியந்து இன்புறுவது குற்றமாகாது; அதனழகை வியந்து இன்புற்ற அவ்வளவில் அடையாது அதனைக் கொன்று அதன் தசையை வதக்கித் தின்னவேண்டுமென் றெழும் அவாவே தீதுடைத்தாம். இங்ஙனமே ஒரு வறியவன் தனக்கு ஒருநாட் கிடைத்த நல்லுணவைச் சுவைத்துண்டு இன்புற்றிருத்தல் குற்றமாகாது. அந் நல்லுணவைப் போலவே எந்நாளும் இன்சுவை யுணவு பெறவேண்டுமெனப் பேரவாக் கொண்டு, அதற்கேற்ற நன்முயற்சியு மின்றித், திருட்டுத் தொழிலால் அதனைப் பெற முயல்வதே தீதுடைத்தாம். இங்ஙனமே, தன் நிலையினையும் பிறர் நிலையினையும் மறந்து, எல்லா இன்பத்திற்கும் மேலான பேரின்பத்தைத் தரவல்லனான இறைவனையும் மறந்து, தன் உள்ளத்தான் வேட்கப்பட்ட பொருள் நுகர்ச்சியிலேயே ஒருவற்குக் கருத்து ஈடுபட்டு நிற்குமாயின், அஃது அவற்கும் பிறர்க்குத் தீது பயப்பதாகவே முடியும். அவ்வாறின்றித் தான், நுகரும் பொருள் நுகர்ச்சி யெல்லாற் தன்னையும் பிறரையும் இன்பத்தில் வளரச்செய்து, இறைவன் திருவடிப் பேரின்பத்தில் உய்க்கும் வழியேயாம் என்னும் உணர்ச்சி வலியுடையானுக்கு ஐம்புல நுகர்ச்சி நன்மை பயப்பதேயன்றித் தீமை பயவாது. ஐம்புல நுகர்ச்சிகளும் அவை தமக்குரிய பொருள்களுத் தீமையே தருவனவாயின் அவற்றை இறைவன் நமக்குப் படைத்துக் கொடானன்றோ? உழவுத்தொழில் செய்யும் ஒருவன் தன் மகனுக்கு ஓர் அரிவாளைக் கொடுப்பது, அதனை அவன் நெற்றாள் அரிதற்குப் பயன் படுத்துவானென்னுங் கருத்துப் பற்றியே யன்றி, அதுகொண்டு அவன் மக்கள் பலரையுங் கடைசியிற் றன்னையும் வெட்டி வீழ்த்திவிட வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியன்றே? அதுபோலவே, ஐம்புல நுகர்ச்சிகளை இறைவன் நமக்குத் தந்ததும், அவற்றை நாம் நல்வழியில் துய்த்தல் வேண்டு மென்னுங் கருத்துப் பற்றியே யன்றி, அவற்றைத் துய்த்தலாகாது, அல்லது அவற்றைத் தீயவழியிற் செலுத்துதல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியன்று. இவ்வுண்மையினையே தெய்வத் திருமூலரும், ஐந்தும் அடக்கு அடக்கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதனமா மென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே. என்றருளிச் செய்தார். ஆகவே, அகலியை மணந்து அவளோடு இன்பந் துய்த்தபடியாகவே தவவொழுக்கத்தில் உறைத்து நின்ற கௌதமமுனிவரை ஐந்தவித்தான் என்று ஆசிரியர் திருவள்ளுவர் உயர்த்து மொழிந்தது, அம் முனிவர் ஐம்புல நுகர்ச்சி வழியே தம்முள்ளத்தைச் செல்லவிடாது. தம் வழியே அவற்றின் நுகர்ச்சியை அமைத்துவைத்த ஆற்றல்பற்றியேயா மென்பதனை அம் மறுப்புரைகாரர் இனியேனுந் தெளிந்து கொள்ளக் கடவராக! இனித், திருநாவுக்கரசுகள் தமதிளமைக் காலத்திற் சமண் நூல் களைக் கற்றும் சமண் முனிவர்களொடு பழகியும் அவர் கைக்கொண்ட துறவொழுக்கமே சிறந்ததெனக் கருதியன்றே, சிவநேயத்திற் சிறந்த தம் தமக்கையார் திலகவதியாரையும் ஏனைத் தமது இல்லத்தொடர்பினை யும் விட்டுச் சென்று, பாழ்ங் கொள்கை (நாத்திகம்) பேசுஞ் சமண்மதம் புகுந்து தம் வாழ்நாளிற் பெரும்பகுதியை வறிதாக்கினர்? இதனை, அரசுகளே தாம் அருளிச்செய்த ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் என்னுந் திருப்பா திரிப்புலியூர்த் திருப் பதிகத்தில், திருந்தா அமணர்தந் தீநெறிப்பட்டுத் திகைத்துமுத்தி தருந்நாளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெறித்தாய் பாதிரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிறவாமல்வந் தேன்றுகொள்ளே என்னும் இறுதிச் செய்யுளிற் குறிப்பிட்டிருந்தல் காண்க. அரசுகள் தமது முதுமைக்காலத்தே மீண்டுஞ் சைவ சமயம் புகுந்து சிவபிரான் திருவடிக்கு ஆளானபின்னர், இளமைக் காலத்தே தாம் துறவு புகுந்தது பிசகென்றும், சைவசமயச் சான்றோர் இறைவன் திருவுளப்பாங்கறிந்து வகுத்தபடியே மனைவியோடிருந்தது இன்பந் துய்த்துக்கொண்டே தவவொழுக்கத்தில் நிற்றலே சிறந்ததென்றும் உணர்ந்தன்றோ, வென்றிலேன் புலன்களைந்தும் என்னும் பொதுத் திருப்பதிகத்தின் கண், விளைவறி விலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய், காமரங் கற்றுமில்லேன், தளையவிழ் கோதைநல்லார் தங்களோடு இன்பம்எய்த இளையனும் அல்லேன் எந்தாய், என்செய்வான் தோன்றினேனே என்று அருளிச்செய்தார். இவ்வாறாக, அப்பர் முதலில் மேற்கொண்ட துறவு சமண்மத வழித்தாதல் தெள்ளிதிற் புலப்படுவதாகவும், அஃது அவ்வழித் தன்றென்று கரைந்த அம் மறுப்புரைகாரருரை பெரும் புளுகுரையாதல் தேர்ந்து கொள்க. இனி, மாணிக்கவாசகரோ அப்பரைப்போற் சமண்சமய மாதல் பௌத்தசமயமாதல் சிறந்ததெனக்கொண்டு அவ் விரண்டில் ஒன்றிற் றுறவு புகுந்தவரல்லர். அவர் தெய்வம் ஒன்று உண்டு எனத் துணிந்த காலத்தில் , ஒன்றினொன்று மாறுபட்ட பல சமயக்கொள்கைகளால் உள்ளங்கலங்கி, ஒன்றிலுந் துணிவு பிறவாது நின்றார்; அப்போது சடுதியில் இறைவனே குருவடிவிற் போந்து அவரைத் தன்வயப்படுத்திக் கொண்டான். இஃது, அவரே அருளிச்செய்த போற்றித் திருவகவலில், தெய்வம் என்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தமும் பேறினர்; சுற்றமென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும், விரதமேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித்து ஆஅர்த்து உலோகா யதனெனும் ! ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும், * * * * மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே. எனக் கூறுமாற்றால் தெற்றென விளங்கா நிற்கும், இறைவனால் அங்ஙனம் ஆட்கொள்ளப் பெற்ற பின்னுஞ், சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புடையரான அவர்தம் மனைவியாரும் புதல்வியும் அவர் தம்முடனேயே யிருக்கப்பெற்றார் என்னும் உண்மையினை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் நன்கு விளக்கியிருக்கின்றேம். எனவே, மாணிக்கவாசகர் தம் அருமை மனைவியாரையும் மகளா ரையும் விட்டுத் துறவு புகுந்தவரல்ல ரென்பது நன்கு பெறப் படுதலால். அம் மறுப்புரைகாரர் அவரை மிருதிவழித்தான துறவு புகுந்தவர் என்றுரைத்தது பொருந்தாப் பொய்யு ரையாதல் கண்டுகொள்க. இனிப், பட்டினத்தடிகள் புகுந்த துறவு பண்டைச் சைவ சமயச் சான்றோர்க்கு உடம்பாடாகாததொன் றென்பதும், அதனை அவரே பின்னருணர்ந்து அகத்துறவினையே மேல தாய்க் கூறினரென்பதும் முன்னரே விளக்கிப் போந்தாம். இவ்வளவில் அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவுக்கும் விடைகள் தரப்பட்டன. இதுகிடக்க. பின்னுரை மேலெழுதிய எம்முடைய விடைகளை, அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகளோடு உடன்வைத்து நடுநின்று காணவல்ல மெய்யறிவினார்க்கு, எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையுந் தாமே புலனாம். அவர் தாமும் நடுவுநின்று நோக்குவராயின் எமதுரையே மெய்யாதல் காண்பர். ஆனால் , தமதுரைப் பிழையைத் தாம் ஒப்புக்கொண்டால் உலகந் தம்மைப் பாராட்டாதெனக் கருதிச், சென்ற ஐப்பசி 16 இலும் 26 இலும் வெளிவந்த சிவநேசன் இதழில், எமதுரையை வெற்றுரை யெனப் பழித்து உள்ளீடழிந்த பதர் மொழிகளையே நிறைத்திருக் கின்றார். அவர் நிகழ்த்திய தடைகளையெல்லாவற் றிற்கும் விடைகள் எமது ஞானசாகர இதழில் யாம் முறையாக எழுதி வருதலையும் பாராது, சித்தாந்த இதழிற் பலரும் எழுதுங் கட்டுரை கட்கிடையே முழுதும் வெளியிடுவியாமல் ஒரு சிறிதே வெளியிடுவித்த எமது விடையுரையின் முதற்பகுதியை மட்டும் பார்த்துவிட்டுத், தாம் நிகழ்த்திய தடைகள் எல்லாவற்றிற்கும் யாம் விடையெழுதிற்றிலேமென ஆராயாது கூறி மகிழ்ந்தார். இனி, அவர் மீண்டுங் கூறிய தடைகட்கு விடைகளைச் சுருக்கிக் கூறி அவ்வளவில் இதனை முடிப்பாம். காதலன்பு கொண்டார்க்கு அக் காதலன்பின் வழியே மனஞ் செல்லுமென்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், விரும்பத்தக்க தொன்றனை மனமானது முதலிற் பற்றிய பின்னரே தான் காதல் நிகழும், அதன்பிற் காதல் சென்ற வழியே மனஞ் செல்லுமென ஒன்றனை யொன்று பற்றுதல் என்னுங் குற்றம் (அந்யோந்யா சிரய தோஷம்) படமொழிந்தார்; என்னை? மனத்திற்பிற் காதலுங், காதலின்பின் மனமுஞ்செல்லுமென்றல் அக் குற்ற முடைய தாகலினென்பது, மனம் முன்னரொரு பொருளைப் பற்றினாலன்றி உணர்வு உண்டாகாமை யுண்மையே யாகலின், மற்று அக் குற்றம்படாமை யுரைக்குமாறு யாங்ஙன மெனிற், காட்டுதும். மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளின் வாயிலானன்றி மனம் புறக்கே ஒரு பொருளைப் பற்றாது; ஆகவே, அப் பொறியுணர்வுகளைப் பற்றிநின்று மனம் ஒரு பொருளைப் பற்றுகின்றுழி, அஃது அப் பொறியுணர்வி னளவாயே நிற்கு மல்லது, அவற்றின் வேறாய் நின்று தான் கண்ட பொருட்குணங்களை ஆராயாது; இது குறித்தே, உற்றறிதலாகிய ஓரறிவுமுதல், சுவை ஒளி ஓசை நாற்றம் ஈறாக ஐந்தறிவு உடைய சிற்றுயிர்கட்கு ஆசிரியர் தொல் காப்பியனார் மனவுணர்வு கூறிற்றிலர். ஏனை மக்களாவார், அவ் வைந்தறிவுகளோடு இஃது இதனை ஒப்பது, இஃது இதனின் வேறாவது, இது நல்லது, இது தீயது என ஆராய்ந்தறியு மறிவும் உடன் உடையாராகலின் அவரைச் சுட்டி மக்க டாமே யாறறி வுயிரே என்று அவர் அருளிச்செய்தார். அற்றேல் ஐம்பொறிவை ஆண்டு அங்கு அரசாய் உளம் நிற்ப என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனா ருரையொடு மாறு கொள்ளாதோ வெனிற், கொள்ளாது; பொறியுணர்வின் வேறாய் நில்லாது, பொறி வுணர்வினளவாயே நிற்பது மனத்தின் பொதுவியல்பு ஆகும்; மற்றுப், பொறிகளின் வாயிலாய் அறிந்த பொருட்பண்புகளைத் தான் தனி நின்று ஆராயுமாயின் அதுதான் மனத்திற்குச் சிறப்பியல்பு ஆகும்; மக்களல்லாத சிற்றுயிர்களில் மனவுணர்வு தனித்து நில்லாது பொறிகளினளவாயே நிற்றலின் அவை மனவுணர்வு இல்லா தன வென்று கொள்ளப்பட்டன; மற்று, அம் மக்களின் அது பொறியுணர்வுகளின் வேறாயும்நின்று ஆராய்ந்தறியுஞ் சிறப் பியல்பும் உடைமை பற்றி, அவர் மனவுணர்வும் உடையரெனப் பட்டார். ஆகவே, சிறப்பியல்பு காட்டாமற் பொறியளவாய் நிற்கும் மனவுணர்வைச் சிற்றுயிர் கட்குத் தொல்காப்பியனார் கூறாமை பெரிதும் பொருத்த மாவதேயாம். என்றாலும், மனத்தின் சேர்க்கையின்றிப் பொறி யுணர்வுகள் நிகழாமையின், மக்கட்கும் ஏனைச்சிற்றுயிர்கட்கும் மனவுணர்வு உண்டென்பது தேற்ற மேயாம். இவ்வாறு மனத் தினியல்பைக் காண வல்லார்க்குத், தொல்காப்பியனாருரையும் மெய்கண்ட தேவரு ரையுந் தம்முன் முரணாமை எளிதின் விளங்கும். அதுநிற்க. பொறியுணர்வுகளோடொன்றாய் நிற்கும் மனத்தின் வழிச் சென்று கண்டகண்ட பொருள்களை யெல்லாம் விழையும் இயற்கையதே காமவிருப்பம்; அங்ஙனங் கண்டவற்றி லெல்லாம் அவாச் செல்லாது மனத்தின் பொதுவியல்பை யடக்கி, மிகச் சிறந்ததொரு பொருளிடத்தேமட்டும் நினைவு அழுந்தி அன்பு மீதூரப்பெறுவதே காதல்விருப்பமாகும். எனவே, புலணுணர்வு களின்பாற் பொதுமையின் நிற்கும் மனத்தின்வழிச் செல்வது உயிரின் காமவிருப்பமேயா மென்பதும், அங்ஙனம் வரைதுறையின்றி ஓடற்பாலதாகிய உயிரின் விருப்பத்தைத் தடைசெய்து விழுமியதொரு பொருளினிடத்தே மட்டும் உறைந்து நிற்குமாறு செய்வதே காதல் விருப்பமாமென்பதும் இனிது பெறப்படுதலிற், காதல் மனத்தின் வழிய தன்றென்னும் எமதுரையே பொருத்த மாதல்கண்டுகொள்க. காதற்றேற்றத் திற்குப் பொறியுணர்வாய் நிற்கும் மனம் வாயிலாதல்கொண்டு, காதல் அம் மனத்தின் வயமாய் அடக்குதலினும் அறிவின்மை யாவது பிறிதில்லை; விறகிலிருந்து தோன்றுந் தீ அவ் விறகின் வலிக்கு அடங்கிய தென்பாருரையொடு ஒன்றாகவைத்து அம் மறுப்புரை காரருரை நகையாடி விடுக்கற்பாலதாமென்றொழிக. இனிப் பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சான்றோ ரெல்லாரும் இன்பத்துக்கே முதன்மைதந்தியற்றிய பொய்யாச் செந்தமிழ்ச் செய்யுள்வழக்கின் மிகுதியை யாம் எடுத்துக் காட்டி யிருக்கப், பொய்ந்நூல்களாகிய புராணங்களின் விரிவையும் மெய்ந்நூலாகிய சிவஞானபே தத்தின் சுருக்கத் தையும் எமதுரைக்கு உவமையாக எடுத்துக்காட்டி எம்மை இகழ்கின்றார். பண்டைச் செந்தமிழ்நூல்கள் வடமொழிப் புராணங்களைப் போற் பொய்ந் நூல்களாயிருப்பினன்றோ, அவற்றை அவர் அவற்றிற்கு உவமையாக எடுத்துக்காட்டலாம். பொய்ப் பொருள் ஒன்றுமே விரவாத முழுமணித் தொகுதி யாகிய பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களைப், புராணப் பொய்க்குப்பைகளோடு ஒப்புமைப் படுத்திய அம் மறுப்புரை காரரின் பொய்யறிவின் பெற்றிமைக்கு அறிவுடையார் இரங்கு தலே செயற்பாலார் பொய்யறி வினார்க்கு மெய்யும் பொய் யாகக் காணப்படுமென்பதற்கு அம் மறுப்புரைகாரர் ஓரிலக் கியமாதல் காண்மின்! இனித், தொல்காப்பியநூல் தனக்குமுற்பட்ட இலக்கிய நூல்களின் அமைதியைப் பார்த்துச் செய்யப்பட்டதொரு பழைய நூலாகலின், தொல்காப்பியத்தில் இன்பமும் பொருளும் அறனும் என்று வைத்துச் சொல்லப்பட்டமுறை, ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் முற்பட்ட தனிச் செந்தமிழ்ச் சான்றோர் கொண்ட முறையேயாகும். ஆகவே, தொல்காப்பியனார் கொண்ட முறையே, செந்தமிழ்ச் சான்றோர் வழிபேணும் எம்மனோர் பேணுதற்குரித்தாவது, தொல்காப்பியனார்க்குப் பின்வந்த நூல்களில் ஆரியமொழிக் கலப்பும் பௌத்த சமண்கோட் கலப்புங் காணப்படுதலின், அவை யெல்லாந் தொல்காப்பியம்போல் எமக்குத் தலைசிறந்த மேற்கோள்கள் ஆகா; தொல்காப்பியத்தோடு மாறு கொளா இடங்களில் மட்டுமே ஏனைப் பின்நூல்களில் வந்தவை எம்மாற் றழுவற்பாலன; மற்றுத், தொல்காப்பியத்தொடு மாறுபடு மிடங்களிலெல்லாந், தொல்காப்பியமே தழுவற்பால தன்றி ஏனைய அல்லவென்று துணிக; என்னை? தொல்காப்பியத் தோடு எதிர்நிற்கவல்லது ஏதுமேயில்லையாகலின். தெய்வத் திருவள்ளுவருந் தொல்காப்பியத்தொடு மாறுபடாமைப் பொருட்டன்றோ, தமக்கும் பிறர்க்கும் இன்பத்தைத்தரும் இல்லறத்தை முன்வைத்து, அவ்வில்லறத்தோடொத்த துறவறத்தை அதன் பின் வைத்ததூஉம், நூலிறுதியிலுங் காதலின்பத்தையே மிகுத்துக் கூறியதூஉம் என்க. இன்பம் பொருள் அறம் என்னும் முறையைத் தொல்காப்பியத்தி னின்றும் யாம் எடுத்துக் காட்டியிருக்க, ஒரு நூலிலிருந் தாயினும் யாம் அம் முறையை எடுத்துக்காட்ட வில்லை யென்ற அம் மறுப்புரைகாரர் பொய்ந் நாவினை அறக் கடவுளே ஒறுக்கற்பாலதென்க. இனி, அம் மறுப்புரைகாரர் அறத்தை முன்வைத்துச் சொல்லுந் தேவாரதிருவாசகச் செந்தமிழ்மாமறைச் செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, அவ்வருள் நூல்களில் அறமே முன் வைத்துரைக்கப் பட்டமையின் அதுவே முதன்மையுடைத்தென்றார். அற்றேல், தேவார திருவாசகங்கள் தோன்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னே தோன்றி அறுதியில் தமிழின் உறுதிப்பொருட்பரப் பெல்லாம் ஒருங்குண்ட தொல்காப்பியம் அருள் நூலன்றோ? தொல்காப்பியத்தில் இன்பமே முதல் வைத்து மொழியப் பட்டிருத்தலானும், மக்கள் இம்மையிற் றுய்ப்பதும், மறுமையிற் சிவபிரான் திருவருளிற் கலந்து துய்ப்பதும் இன்பமேயன்றி அறம் அன்று ஆகலானும், அறம் எனப்படுவதும் ஏனையுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்யுஞ் செயலேயாகலானும், பொருள் எனப்படுவதும் அங்ஙனமே பிறவுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்வதற்குக் கருவியேயாகலானும், அவ்வாற்றல் அறமும் பொருளுங்கூட இன்பத்துள் அடங்குதலானும், தொல்லாசிரியரான தொல் காப்பியனார் இன்பத்துக்கு முதன்மை தந்து அதனை முதற் கண் நிறுத்தினமையே சாலப் பொருந்துவதாமென்க. பௌத்த சமண் கொள்கைகள் மிகப்பரவி, அவ்வாற்றல் அறத்தை முன் வைத்துரைக்குமுறை மிக்குவழங்கிய காலங்களில் திருவாசக தேவாரங்கள் தோன்றின வாகலின், அவற்றுள்ளும் அம் முறை புகலாயிற் றென்றறிந்து கொள்க. அறஞ் செய்தலாற் பிறர்க்குந் தமக்கும் இன்பம் விளைதலே அறிய வல்லவர் மக்களேயன்றி ஏனைச் சிற்றுயிர்கள் அல்ல. சிற்றுயிர்களெல்லாந் தம்மளவில் இன்பம் நுகர்வன; மக்களோ பிறர்க்கும் நன்றாற்றிப் பெரிதும் இன்பம் எய்துவர். இங்ஙனம் எய்தும் இன்பம் மக்கட்கே சிறந்தமையின், ஆகவே முதன்மை யுடைத்தென்பது. இது பற்றியன்றே தெய்வத் திருவள்ளுவரும் அறத்தான் வருவதே இன்பம் என்றருளிச் செய்தார். இப் பெற்றித்தாகிய இன்பத்தை விட்டு அறம் என்பது தன் நில்லாமையின் அஃது இன்பத்திற்குப் பின்னா வதே யன்றி முன்னாம் முதன்மை யுடைத் தன்றென உணர்ந்து கொள்க. இனிப், பௌத்த சமண் கோட்பாடுகள் இங்கே மிகவும் பரவி, அறம் அல்லாதவைகள் அறம் எனக் கொள்ளப் பட்டமையின், இன்பத்தின் வழித்தாகிய அறம் இன்ன தெனவுணர்த்துதற்குத் திருவள்ளுவர் அறத்தை முன்னெடுத்து, அச் சொல்லால் தனக்கும் பிறர்க்கும் இன்பத்தை விளைத்தற் கேதுவாகிய இல்லறத் தை முதற்கண் நிறுத்தி வலியுறுத்தார். மற்று, அம் மறுப்புரைகாரரோ, தொல்காப்பியனார் காலத்து மக்கட்கு அறவுணர்ச்சியின்றி, இன்பவுணர்ச்சியே மிக்கிருந்த மையின் அவர் அதனை முதலிற் கூறினாரென்று ஏன் கூறுதலாகாதென்று வினவுகின்றார். சான்றில்லாமல் ஒன்றைத் தானாகவே படைத்து மொழிதல், பொய்கூறுவார்க்கன்றி மெய்ம்மை யுடையார்க்கு ஏலாது. மேலும், இன்பவுணர்ச்சியே தலைக்கொண்ட தொல்காப்பியனார் காலத்து நன்மக்கட்கு, இன்பத்தைச் செய்யும் அறவொழுக்கமே உளதாகுமன்றித் துன்பத்தைச் செய்யும், மதவொழுக்கம் உளதாகாதென்று அம் மறுப்புரைகாரர் அறியக் கடவராக! இனித், திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் வேதத் தொடர்புடையதாகுமென்ற அம்மறுப்புரைகாரர், எந்த வேதத்தொடு தொடர்புடைய தென்பதனை விளக்கினாரில்லை. இப்போது வேதம் என வழங்கும் இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்பவற்றொடு தொடர்புடைய தென்பது அவர் சுருத்தாயின், அவ்வாரிய நூல்களிலுள்ள பொருள்களையுந் திருக்குறளி லுள்ள பொருள்களையும் எடுத்துக்காட்டி அவ்விரண்டற்கும் உள்ள பொருளொற்றுமையினை அவர் விளக்கியிருத்தல் வேண்டும்; அவ்வாறவர் செய்திலாமையின் அவர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதரேயாம். திருக்குறள், இருக்கு முதலான ஆரிய நூற்றொடர்பு உடையதன் றென்பதனை வேளாளர் நாகரிகம் முதலான எம்முடைய நூல்களில் நன்கு விளக்கி யிருக்கின்றோம்; ஆண்டதனைக் காண்க. இனி, ஆரியத்திற்குக் குறை சொல்லலும், வேதாகமக் கருத்துக்கு வேறானா தனித்த ஒரு நூலுண்டென்பதுந் தீவினையாளர் செயல் என்று கூறி அம் மறுப்புரைகாரர் இகழ்ச்சியுரைகளை வாரியிறைத்துத், தமது தோல்வியைப் பிறிதொன்று சொல்லி மறைக்கின்றார். இவர் வேதாகமம் எனக் கொண்டவை யாவை? இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்றுங், காமிகங் காரணம் யோகசம் சிந்தியம் என்றும் வழங்கும் வடமொழி நூல்கள் தாமா? இந் நூல்களை வேதம் என்றும் ஆகமம் ன்றும் வழங்கியவர்கள் யாவர்? அவர் காலம் யாது? அவ்வாரிய நூல்களிற் சொல்லப்பட்ட பொருள்கள் யாவை? அவைகளைத் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றினார் யார்? அவர்களிருந்த காலம் என்னை? நான்கு வேதங்களும் ஒரே காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? இருபத் தெட்டாக மங்களும் அங்ஙனமே ஒரு காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? அருணந்தி சிவாசாரியார் வேதநூல் என்றுஞ் சைவ நூலென்றுங் குறிப்பிட்டவை மேற்சொன்ன ஆரிய நூல்கள்தாம் என்பதற்குச் சான்றென்னை? அருணந்தியார் காலம் யாது? மறுப்புரைகாரர் கொண்ட ஆகமங்கள் அருணந்தியார் காலத்திற்கு முன்னிருந் தவை யென்பதற்குச் சான்றென்னை? இருக்கு முதலிய வட நூல்களிற் பிரகிருதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றனவா? திருநீறும் உருத்தி ராக்கமுஞ் சிவபிரான் திருக்கோயில்களும் இருக்கு எசுர் முதலிய நூல்களிற் சொல்லப்பட்டிருக்கின்றனவா? என்றற்றொடக் கத்து வினாக்களுக்கு விடையாக ஆராய்ந்து நிறுவற்பாலன வற்றை மெய்ச் சான்றுகளுடன் நிறுவினாலன்றி , அம் மறுப்பு ரைகாரர் பொறாமையுஞ் செருக்குஞ் சினமுங்கொண்டு எமக்கு மாறாய் வடநூல்கட்கு ஏற்றஞ் சொல்லும்உரை, சிறுமகார் கலாம் விளைத்து ஏசும் உரையாகவே ஒதுக்கற் பாலதென்க. இருக்கு முதலான ஆரிய நூல்களிற் கொலை குடி சூது வரையிறந்த காமம் பொய் முதலான கொடுந்தீயொழுக்க உரைகளே நிரம்பியிருக்கதலையுந், திருக்குறள் முதலான தெய்வச் செந்தமிழ் நூல்களில் அவற்றை மறுத்த நல்லொழுக்க அறிவுரைகளே நிரம்பியிருத்தலையும் அம்மறுப்புரைகாரர் ஆராய்ந்து கண்டனராயின் இங்ஙனமெல்லாம் எம்மேற் சினங்கொண்டு கூவார். அவ்விருவகை நூல்கட்குமுள்ள வேறுபாடுகளை அந் நூல்களில் கண்டறிய மாட்டாத அவர் மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலாயினுங் கண்டறிந்து தெளியக் கடவராக! மேற் சொன்ன ஆரியநூல்களிலுள்ள குறைகளை எடுத்துக் காட்டு தலுந், தமிழ் நூல்களிலுள்ள நலங்களை எடுத்து விரித்தலுங் குற்றமாகுமா? களிம்பேறிய செம்பைச் செம்பென்றுங், களிம்பில்லாச் சுடர்விரி பசும்பொன்னைப் பொன்னென்றுங் கூறுதல் குற்றமாகுமா? செங்கல்லைச் செங்கல் லென்றுஞ், செஞ்சுடர் எறிக்குஞ் செம்மணியைச் செம்மணி யென்றுங் கூறுதல் குறையாகுமா? உயிரை மாய்க்கும் பாம்பின் நஞ்சை நஞ்சென்றும், உயிரை வளர்க்குந் தீம்பாலமிழ்தை அமிழ்தென்றும் மொழிதல் பழிப்பாகுமா? இவை தம்மையெல்லாம் ஆராய்ந்துபாராது, தீயநஞ்சையுந் தீம்பாலையும் ஒன்றாகப் பாராட்டல் வேண்டு மென்பாரோடொத்துத், தீதுநிறைந்த ஆரிய நூல்களையும், நலன்நிறைந்த தமிழ் நூல்களையும் ஒருங்கு பாராட்டல் வேண்டுமென்னும் அம் மறுப்புரைகாரர், தாம் வேலை பார்க்கும் இடத்தில் தாம்பெறும் வெள்ளிக் காசுகளுக்கு மாறாக, ஓட்டுச் சல்லிகளைப்பெற்று மகிழ்ந்திருப்பரா? பகுத்தறி வில்லா இவருரை சிறுமகாரானும் எள்ளி நகையாடற்பாலதா மென்றுணர்க. தீதுநிறைந்த ஆரியநூல்களின் குறைகளைத் தாம் எடுத்துக் காட்டினமேயன்றி, நலன்நிறைந்த பன்னிரண்டு பழைய ஆரிய உபநிடதமறைகளை அவ்வாறு செய்தனமா? அவ்வுபநிடதங் களை யாம் பாராட்டிப் பேசியிருத்தலை இவர் அறியாராயின், அவ்வறியாமைக்கு யாம் என்செய்வேம் என்க. இனிக், காதலின்பத்தின் வழியானன்றி இல்லறம் இனிது நடவாமை, காதன் மடவாளுங் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே. என்னும் ஆன்றோர் திருமொழியால் நன்கு விளங்கா நிற்கவுந், திருவள்ளுவர் இல்லறவியலிற் காதலின்பங் கூறிற்றிலர் என்று மறித்தும் மறித்தும் அரற்றுகின்றார் அம் மறுப்புரைகாரர்; தெய்வந்தொழாஅள் கொழுநற், றொழுதெழுவா ளாகிய மனைவிக்குக் காதலன்பு வாய்ப்பினன்றி, அவள் அவனை ஒரு பொருட்டாக வையாளென்பதை அறியமாட்டாத அவர்க்கு அறிவுதெருட்டும் வாயிலில்லை யென்று விடுக்க. தருக்க முறையும் ஆராய்ச்சி முறையும் நன்கறியமாட்டாத அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவும் பிழைபாடு டையவென்பது, தமிழ் ஆரியம் ஆங்கிலம் என்னும் மொழி நூல்களில் உண்மையாராய்ச்சி செய்தார்க்கு வெள்ளிடை மலைபோல் விளங்கு மாதலின், மறுப்புரைகாரர் கண்டறிந்த தோல்வித்தனங்கள் அத்தனையும் அவர்க்கே உரிமை யுடையன வென்பது பொள்ளெனப் புலனாம். அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார். ஓம் சிவம் 2. திருவசக விரிவுரையிற் சிலர் நிகழ்த்திய தடைகளுக்கு விடை திருவாசகச் சிறப்புப் பாயிரவுரையில் யாம் பின்வருமாறு எழுதினேம்: ஒருநூல் கேட்பான் புகுவோர் அதனை ஆக்கியோன் பெருமை உணர்ந்தன்றி அதுகேட்டலிற் கருத்து ஊன்றாராக லானும், நக்கீரனார், இளம்பூரணர் முதலான தொல் உரையாசிரிய ரெல்லாம் முதற்கண் ஆக்கியோன் பெருமை கூறல்வேண்டு மென்றே உரைத்தாராகலானும் முதலில் ஆக்கியோன் பெருமை கூறவேண்டுவது கடமையாம் என்க யாங் கூறிய இப் பகுதிமேற் சிலர் நக்கீரர், இளம்பூரணர் முதலியோர் ஆசிரியன் பெயர் கூறல்வேண்டும் என்பதே யன்றிச் சிறப்புக் கூறல்வேண்டுமென்று சொல்லவில்லையே என்கின்றனர். ஆசிரியர் நக்கீரனார் ஆக்கியோன் பெயர் என்பது நூல் செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு. இந்நூல் செய்தார் யாரோ வெனின் மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுளென்பது என்று இறையனாரகப் பொருணுலின் முகத்து உரை கூறினார். இனி இளம்பூரணர் தொல்காப்பியச் சிறப்புப்பாயிர வுரையில் தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி என்பதற்குப் பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து அவ்வாறு தொகுத்தான். அவன் யாரெனின், தவத்தான்வரும் பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தவ வொழுக்கத்தினை யுடையான் என்று உரை கூறினார். இவ்வாசிரியர் இருவரும் ஆக்கியோன் பெயர் என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயர் மட்டுமேயன்றி அவன் பெருமையும் தனித்தனி எடுத்துக் கூறினார். நக்கீரனார் ஆசிரியன் பெயரும் பெருமையும் எடுத்தோதினாரேனும், இளம்பூரணர் தாம் உரை கூறியது பனம்பாரனார் அருளிய வடவேங்கடந் தென்குமரி என்னும் யாப்பிற்கே யாமாகலான், அவர் தனியே ஆசிரியன் பெருமை கூறிற்றிலராலெனின்; ஆசிரியர் தொல்காப்பியனா ரோடு ஒருங்குகற்ற பனம்பாரனார் தொல்காப்பியனார் பெயரும் பெருமையும் விளங்க எடுத்துரைத்துப் பாயிரயாப்புச் செய்தருளினமையின், அவரது ஆணைவழி நிற்கும் உரைகாரரான தாம் அதற்குப் பொழிப்பு உரைக்கும் முகத்தான் அவ்விரண்டும் விளக்கி அதுவே சாலுமென அவ்வளவின் நின்றாரென்க. பாயிர யாப்புச்செய்த பனம்பாரனார்க்கு ஆசிரியன் பெயரோடு பெருமையும் எடுத்தோதுவது கருத்தாகவே,அதற்கு உரை கண்ட இளம்பூரணர்க்கும் அவ்விரண்டும் உடன்கூறுதல் உடன் பாடென்பதுபெறுதும். அஃதொக்குமாயினும், சிறப்புப்பாயிரத்தின்கட் சொல்ல வேண்டுமெனப்பட்ட, ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோ டாயெண்பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே என்னும் எட்டனுள் முதற்கண் ஆக்கியோன் பெயர் என்று மட்டுஞ் சொல்லியதென்னை, அதனால் ஆக்கியோன் பெருமை கூறல்வேண்டுமென்பது பெறப்படாதாலெனின்; ஆக்கியோன் பெயர் என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயர் கூறுதல் ஒன்றுமே எனப் பொருள் கொள்ளின், தொல் காப்பியனாரோ டொத்த பெரும்புலமைச் சான்றோரானை பனம்பாரனார் தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி என்று அவர் பெயர் எடுத்தோதிய அளவின் அமையாது, பின்னும் பல்புகழ் நிறுத்த படிமை யோனே என்று அவர் பெருமையும் உடன் கூறியதூஉம், அதற்கேற்ப இளம்பூரணர் உரை உரைத்ததூஉம், ஆசிரியர் நக்கீரனாரும் இறையனாரகப் பொருள் பாயிரவுரையில் ஆசிரியன் பெயரும் பெருமையும் எடுத்தோதியதூஉம் என்னையென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையின், பெயர் என்னுஞ் சொல்லிற் பெருமையும் அடங்கிக் கிடக்கின்றதென்று ஓர்ந்துகொள்க. இங்ஙனமே மன்னிய சிறப்பின் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப்பாயிரத்தும் துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற், பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த, பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன், ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட, வாங்குவிற் றடக்கை வானவர் மருமான், ஐயனாரிதன் என்று அதன் ஆக்கியோன் பெயரான ஐயனாரிதன் என்பதனோடு அவன் பெருமையும் உடன் கூறப்பட்டது. சிவ ஞானபோதச் சிறப்புப்பாயிரத்தும் பொய்கண்டகன்ற மெய் கண்ட தேவன், பவநனி வன்பகை கடந்த, தவரடி புனைந்த தலைமை யோனே என்று ஆசிரியன் பெயரும் பெருமையும் உடன் ஓதப்பட்டன. நன்னூற் சிறப்புப்பாயிரத்துள்ளும் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி, என்னுநாமத் திருந்தவத் தோனே என்று ஆசிரியன் பெயரும் பெருமையும் உடன்போந்தவாறறிக. இவ்வாறு ஆக்கியோன் பெயர் என்பதற்கு அவனது இயற்பெயரேன்றி அவன் பெருமையும் உடன் கொள்ளக் கிடக்குமென்பது பற்றியன்றே ஆசிரியர் சிவஞான முனிவரரும் இந்நான்கு முணர்ந்தவழியும், கற்றுவல்ல சான்றோர் அல்லாராற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியது கூறல் முதலாய குற்ற முடைத்தாமன்றே யெனவும், கற்றுவல்ல சான்றோரும் மற்றோர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவனூலோடு முரணுமன்றே யெனவும் ஐயுற்று ஊக்குஞ் செல்லாமையின் அவ்வையம் நீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும், நூற்பெருமையும், அந்நூல் வழங்கு நிலமும், அதன் முதனூலும் இவையென்பது தோன்ற ஆக்கியோன் பெயரும்வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும் என்று தொல்காப்பியப் பாயிரவிருத்தியில் உரைத்தருளுவாராயினர் ஆசிரியர் சிவஞான முனிவரர் தெளித்துரைத்த இவ்வரும் பெறலுரைகொண்டு ஆக்கியோன் பெயர் என்பதற்கு ஆக்கியோன் இயற்பெயரும் அவனது பெருமையும் என்று பொருள்கொள்ளவேண்டுமென்பது பெறப்படுகின்றதன்றோ? பெயர் என்னுஞ் சொல் புகழ் என்னும் பொருளையும் உணர்த்தல் இருபிறப்பு இருபெயர் ஈரநெஞ்சத், தொருபெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே என்னும் பதினான்காம் பரிபாடலடிகளிற்போந்த ஒருபெயர் என்பதற்கு ஒப்பில்லாத புகழ் என்று பரிமேலழகியார் உரை கூறியவாற்றான் அறிந்துகொள்க. இங்ஙனம் பெயர் என்னுஞ் சொல்லால் ஆக்கியோனது இயற்பெயரேயன்றி அவனது புகழும் குறிப்பிடப்படுதலால் அன்றே, தொன்னூல்கட்குப் பாயிரம் வகுத்த நல்லிசைப் புலவரெல்லாம் ஆசிரியன் இயற்பெயரோடு அவன் பெருமையும் உடனெடுத்து ஓதுவாராயினரென்க. ஈதுணர்ந்தே நக்கீரனாரும் இளம்பூரணரும் ஆக்கியோன் பெருமை நூன் முகத்துக்கூறல் வேண்டுமென்றார் என உரைகூறினாம். ஆதலால், அது வழுவன்மை உணர்க. இனி வேறு சிலர் சிறப்புப்பாயிரத்துள் நூற்பெருமை கூறுதல் ஒன்றே அமையும். அதனால் ஆக்கியோன் பெருமை தானே விளங்குமாகலின் ஆக்கியோன் பெருமை வேறுகூறல் வேண்டாம் என்று தடை நிகழ்த்துகின்றார். ஆக்கியோனது அறிவின் பெருமையைத் தக்கார்பலர் கூறக்கேட்ட பின்னரே அவன் இயற்றிய நூலினைக் கற்றற்கு விரும்புவர். சிறப்புப்பாயிரம் என்பது ஒருநூலினது வரலாறு தெரித்து அதனைப் பலருங் கற்கும்படி ஏவுவதாகலானும், ஆக்கியோனின்றி ஒருநூல் ஆக்கப்படாமையானும் முதற்கண் ஆக்கியோன் பெருமை கூறுதல் எல்லார்க்கும் உடன்பாடாம். மேலும், ஆக்கியோன்பெருமை நூற்பெருமையுள் அடங்காது, நூற்பெருமை ஆக்கியோன் பெருமையுங் அடங்கும். யாங்ஙன மெனின், ஆக்கியோன் அறிவு எல்லையில்லாத பரப்பினை யுடைய தாகலின் அஃது எத்துணையோ நூல்களை எத்துணை யோ வகையாக இயற்றவல்லும்; ஆதலால், அவனதறிவு அவனியற்றிய ஒரு நூல் அளவிலே அடங்குவதன்றாம். மற்று அவனியற்றிய ஒரு நூற்பெருமையோ ஓர் எல்லைக்குட்பட்டு அவனறிவின் ஒரு பகுதியிலே அடங்கும். ஆதலால், ஒரு நூற்பெருமைகொண்டு அதனை ஆக்கிய ஆசிரியர் அறிவின் பெருமை முற்றும் உணர்தல் ஏலாது. ஒருவன் ஒரு கணக்கு நூல் இயற்ற, அந்நூலுதவிகொண்டு அவனை அறியப்புகின் அவன் அற்நூலே யன்றி வேறு மருத்து நூலுங் கோணுலும் பயிர்நூலும் உயிர் நூலும் உளநூலும் அறிவுநூலுமெல்லாம் இயற்றவல்லான் என்பது அறிதல் இயலாது. அவ்வாறெல்லாம் இயற்றவல்லன் என்பதை அறிந்தோர் வேறு தனியே எடுத்துக் கூறினால் மட்டுமே அவனது அறிவின் அகலம் புலப்படும். இது போலவே, திருவாசகம் என்னும் இவ்வொரு நூற்பெருமை கொண்டே மாணிக்கவாசகப்பெருமான் அறிவின் பரப் பெல்லாம் அறிதல் ஏலாது; அவரது அறிவு இதுபோல் இன்னும் எத்தனையோ நூல்களையெல்லாம் பல திறமாய் இயற்ற வல்லமாட்சி யுடையது. அதனால் அப் பெருமானாகிய ஆக்கியோன் பெருமை வேறு தனித்துக் கூறல்வேண்டுமென்று கடைப்பிடிக்க. சிவாயசிவ என்பதே அதிசூக்கும பஞ்சாக்கரமாகு மென்று ஆசிரியர் திருமூலநாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பாட்டினால் இனிது விளக்கிக் காட்டியிருக்கின்றோம். அதற்குமாறாகச் சிவயவசி என்பதே அதிசூக்கும் பஞ்சாக்கர மாகுமென்று கூறுவார் அதனை நிறுவுதற்கேற்ற பிரமாணம் காட்டி அதனை நிறுத்துதல் வேண்டும். தக்க பிரமாணம் ஒன்றுதானுங்காட்டாமல் யாங் கூறியது அதிசூக்கும பஞ்சாக்கரம் அன்றென்றல் யாங்ஙனம் பொருந்துமோ அறிகிலேம். தூலம் சூக்குமம் அதிசூக்குமம் எனப் பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் முறை மூன்றேயெனவும், அவற்றின்மேலும் மகா காரணம் முத்தியென வேறிருமுறையும் உண்டென்றற்குத் திருமூலர் திருமந்திரத்தினாதல் சைவசித்தாந்த நூல்களினாதல் பிரமாணம் கண்டிலேம் எனவும் எழுதினேம். இதனை மறுக்கப் புகுவார் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை ஐந்து என்றற்குப் பிரமாணங்காட்டி, அதன்பின் மகாகாரண பஞ்சாக்கரம் இது வெனவும் முத்தி பஞ்சாக்கரம் இதுவெனவும் கூறும் உயர்ந்த பிரமாணங்களைத் தெளிவாய் எடுத்துக்காட்டித் தங்கருத்தை இனிது விளக்குதலே முறையாம். அதனை விடுத்து, வசி எனும் ஈரெழுத்தைத் திருஞானசம்பந்தப்பெருமான் தமது பதிகத்தில் எடுத்து மொழிதலானும், காமிகாகமம் அவ்வீரெழுத்தினையும் மகா மநு என்று கூறுதலானும் அதனை மகாகாரண பஞ்சாக்கரமென்று கூறல்வேண்டுமென்றல் யாங்ஙனம் பொருந்துமோ அறிகிலம். சிவ எனும் மொழியை அடுத்தடுத்து ஓதுங்கால் அது முன்பின்னாகமாறி வசி எனவும் நிற்கும். சிவ எனும் மொழி மகாமந்திரம் என்றலில் எவர்க்கும் ஐயப்பாடின்று. ஆனால், அஃது ஐந்தெழுத்தாய் நில்லாது ஈரெழுத்தாய்மட்டும் நிற்றலின் அதனை மகாகாரண பஞ்சாக்கரம் என்று உரைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? இனி,அருளுஞ் சிவமும் குண குணிகளாய்த் தாதான்மிய மாய் நிற்றலால் ஒன்று மற்றொன்றில் ஒடுங்குமாறு சிறிதுமில்லை யெனவும், அதனால் அவ்வீரெழுத்தில் வகரத்தை விடுத்துச் சிகரத்தைமட்டும் ஓதல் முத்திபஞ்சாக்கரம் என்றல் பொருந்தாதெனவுங் கூறினேம். இதனை மறுத்துச் சிகாரமே முத்திபஞ்சாக்கரம் ஆமென நாட்டப்புகுவார் அதற்கேற்ற உண்மைப் பிரமாணங் காட்டுதலோடு, ஓரெழுத்தாய் நிற்கும் அதனைப் பஞ்சாக்கரம் அல்லது ஐந்தெழுத்து எனக் கூறுதற்கு இசைந்த அடைவும் இனிது விளக்கிக்காட்டுதல் வேண்டும். இவையெல்லாம் தொடர்புறக்காட்டாது வாளா கூறுதல் ஏற்றுக்கோடற்பால தன்று. இனி, ஒருசாரார் ஆகமம் வேதத்திற்குப் பிந்தியதென்றல் யாங்ஙனம்? அஃது அதற்கும் முன்னே கிருதயுகத்தில் சிவபெரு மானால் அருளிச்செய்யப்பட்டதன்றோ? அஃது இறைவனா லன்றி அறிவுடையோரால் இயற்றப்பட்டதென்றல் வேதா கமங்களை ஆக்கியோன் சிவபெருமானே என்னும் திருவாக்குகளுக்கு மாறாய் முடியுமன்றேவெனின், வேதங்கள் முன்னும் ஆகமங்கள் பின்னுமாக அறிவுடையோரால் இயற்றப்பட்டனவேயாம் என்பதனை உரையுள் விரிவாக விளக்கியிருக்கின்றோம், மீட்டும் அவற்றை இங்கு விரிக்க வேண்டுவதின்று. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்னுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கட்டளையின் படி, வெறு நம்பிக்கையாய் எழுதிவைத்தவை களையும் சொல்லு வனவற்றையும் ஆராயாது நம்புதல் மேன்மேல் அறிவு விளங்குதற்கும் உண்மைகாண்டற்கும் ஆகாதவாறு தடை செய்யுமாகலின் எவற்றையும் ஆராய்ந்து, அவ்வாராய்ச்சி முடிவில் உண்மையெனப் பெறப்பட்டதனைத் தழுவுதலே அறிவுடைமைக்கு அழகாம். ஆதலால், வேதம் ஆகமம் என்னும் இரண்டையும்பற்றி யாம் ஆராய்ந்து கூறியவற்றை நடுவுநிலைமையோடு படித்துப்பார்த்து, அவற்றிற் பொருந்தாதன இருந்தால் அவற்றைத் தக்ககாரணங்களோடு எடுத்துக்காட்டி, பின்னர்த்தாங்கூறுவனவே பொருத்தமா மென்று ஒழுங்காகக் காட்டுதலே செயற்பாலதாம். ஆகமம் வேதத்தினும் காலத்தால் மிகப் பிற்பட்டதென்பதற்கு, வேதங்கள் எழுதப்பட்ட ஆரிய பாஷை மிகப் பழையதாதலும், ஆகமங்கள் எழுதப்பட்ட சமகிருத பாஷை மிகப்புதிய தாதலுமே ஒரு தக்க சான்றாம். விரிக்கிற்பெருகும். திருவாசகம் வடமொழியில் உள்ள வேதமேபோல மந்திர மொழிகளால் ஆக்கப்பட்டிருத்தலின் அதனைப் பொருள் தெரியாமல் ஓதினும் அது வீடுபேற்றின்பத்தினைத் தரும், அத்தகைய நூலுக்கு உரை எழுதுதல் குற்றமாம்; இதுபற்றியே பண்டை நாளிலிருந்த உரையாசிரியர் எவரும் இதற்கு உரை எழுதிற்றிலர்; அருணுலாகிய இதன் பொருளாழத்தைக் கண்டறிதல் நம்மனேரால் ஆகாமையின் இதற்கு உரை எழுதத் துணிந்தது எரிவாய் நிரயத்திற் புகுதற்கே ஏதுவாம் என்று ஒருவர் ஒரு பத்திரிகையில் எம்மை மிகவும் இகழ்ந்துபேசி எழுதினர்; இவர் கூற்றின் உண்மையை ஆராய்வோம். ஒருவர் கூறியபொருளில் தமக்கு உடன்பாடு இல்லையாயின் அதனை மட்டும் இசைந்த காரணங்களைக் கொண்டு விளக்கிப் போதல் நன்று; அதனை விடுத்து அப் பொருள் கூறினவரைப் பலவாறு இகழ்ந்து பேசுதல் அறிவுடை மைக்கு அழகாகுமா? தமிழ் கற்றாரும் சைவசிந்தாந்தம் உணர்ந்தாரும் வரவர அருகிப்போகும் இக்காலத்தில், அவை தெரிந்தாராயுள்ள சிற்சிலரையும் வசைகூறிக் கலாம்விளைத்தல் யாதுபயனைப் பெறுதற்கோ! ஆங்கில மொழியையே பயிலுதலால் இவ்வுலகத்திற்பெறும் பயன்களை யெல்லாம் மறுத்துத் தமிழை வருந்திக் கற்றதற்குப் பயன் இதுதானே? ஆங்கிலமொழி கற்றவர் தமக்குட் கருத்துவேறு பாடுகள் வந்தக்கால் அவரவர் தாந்தாம்கொண்ட கொள்கைகளை மட்டும் விளக்கிக் காட்டி வழக்கிடுகின்றனரே யல்லாமல், தமிழரைப்போல் இங்ஙனம் ஒருவர்மேலொருவர் வசைகூறி வழக்கிடுதலைக் கண்டிலம். ஆங்கில நன்மக்களிடத் துள்ள உயர்ந்த தன்மைகளையும் உயர்ந்த செய்கை களையும் பின்பற்றாமல் அவரைப் பழித்துப்பேசிக் கொண்டே அவர்தம் ஊண் உடைகளை மட்டும் விரும்பிக் கைக்கொண்டு உலாவும் நம் தமிழர் சிலர் கண்டது இவ்வளவு தானா? அதுநிற்க. தமிழில் மந்திரங்கள் இல்லையெனவும், அதனால் ஞானோப தேசத்திற்கும் சிவபெருமானை அருச்சித்தற்கும் தமிழ் பயன்படா தெனவும் முன்னெருகால் தெய்வச்செந்த மிழை அளவுகடந்து பழித்துப்பேசியவர் இப்போது தமிழ் நூலாகிய திருவாசகத்திற்குப் பரிந்துபேச வந்ததும் அதனை மந்திரமொழி என்றதும் புதுமையாகவே காணப்படுகின்றன! திருவாசகத்தினும் மிக்க தெனவும், ஈசுரவாக்கியமெனவும் இவர் நினைக்கும் வேதங்களுக்குங் கூட யாகாச்சாரியர் சாயனாசாரியர் முதலியோர் உரைகள் எழுதியிருக்கையில் திருவாசகத்திற்குமட்டும் உரை யெழுதலாகாதென்று இவர் கூறுதல் என்னையோ! வேதங்களையும் திருவாசகத்தையும் பொருள் தெரியாமல் ஓதினும் வீடுபேறு கிடைக்கும் என்று கூறும் இவர் அங்ஙனம் பொருள் தெரியாமல் ஓதிவீடுபேற்றை அடைந்தவர் எத்தனை பெயரைக் கண்டனரோ! எல்லாத் துன்பங்கட்குங் காரணமான அறியாமையைத் தொலைத்து ஞானத்தாலன்றே வீடுபேற்றை அடையவேண்டுமென்று அறிவு நூல்கள் வற்புறுத்துரைக்கின்றன! இது ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் நல்ல ஆகமஞ்சொல்ல அல்லவா மென்னும் ஊனத்தார் என்கடவர் அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம் என்று சிவஞான சித்தியாரினும் கூறப்பட்டமை காண்க அறிவு நூல்களின் பொருள்களை ஆராய்ந்து உணர உணர அறியாமை தேய, அறிவு விளங்கும். இவ்வுண்மை கற்றறிவில்லாரும் உணர்வர்; அங்ஙனமாகத் திருவாசகம் முதலான மெய்ந் நூல்களைப் பொருள் தெரியாமல் ஓதல்வேண்டுமெனவும், அதன் பொருளை விளக்குதல் குற்றமாமெனவும் கூறுவார் கூற்றுச் சிறுமகாரும் நகையாடற்பாலதாகவே யிருக்கின்றது! அதுநிற்க. யாம் திருவாசகத்திற்கு உரை எழுதப்புகுந்த காரணம் இது: யாம் விரிவுரை நிகழ்த்தச்சென்ற பல இடங்களிற் பலர் தேவார திருவாசகங்களைப் பொருள் தெரியாமல் ஓதக் கேட்டேம். அங்ஙனம் ஓதியவர்கள் பாட்டுகளுக்குப் பொருள் அறியாமையி னாலும், சொற்றொடர்களைச் சந்திபிரிக்கத் தெரியாமை யினாலும் சொற்களையும் சொற்றெடர்களையும் மிகவும் வழுப்படக்கூறினர். அவர்களை நோக்கி இங்ஙனம் ஓதுகிறீர்களே, இவற்றிற்குப் பொருள் என்ன? என்று கேட்டேம். அதற்கு அவர்கள் தேவார திருவாசகங்களுக்குப் பொருள் சொல்லவுங்கூடாது, கேட்கவுங் கூடாது என்ற சொல்லுகிறார்கள். அதனால் நாங்கள் அவற்றைப் பொருள் தெரியாமலே பாராயணம் பண்ணுவது வழக்கம் என்றார்கள். அதற்கு யாம் பொருள் தெரியாமையாற் சொற்களையுஞ் சொற்றெடர்களையுந் தாறுமாறாகப் பிழைபடுத்திச்சொல்வது குற்றமோ, பொருள்தெரிந்து அவற்றைத் திருத்தமாகச் சொல்வது குற்றமோ? என்று வினாவினேம். அதற்கு அவர்கள் பொருள் தெரியாமல் பிசகாகச் சொல்லுவதுதான் குற்றம். என்று ஒப்புக் கொண்டு விடைகூறினார்கள். இவ்வாறே யாம் சென்ற இடங்களி லெல்லாம், பொருள்தெரியாமையால் தேவார திருவாசகச் செழுந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பெரிதும் பிழைபட ஓதுவார் பலரைக்கண்டு வருந்திய வருத்தமே கடைசியாக இதற்கோர் உரை வகுக்கவேண்டு மென்னும் எண்ணத்தை எம்பால் எழுப்பவிட்டது. அது நிற்க. இனிப் பேரறிவினரான மாணிக்கவாசகப்பெருமான் அருளிச் செய்த திருப்பாட்டுக்களின் பொருள் ஆழத்தினைச் சிற்றறிவினராகிய நாம் கண்டுணர்தல் ஏலாதாதலின், இதற்கு நாம் உரை வகுத்தல் ஆகாதெனின்; மாணிக்கவாசகப்பெருமான் இலக்கண இலக்கிய வரம்புக்கும் அறிவுநூல் வரம்புக்கும் அடங்காமல் நூல்செய்தனராயின், அத்தகைய நூற்பொரு ளைக் கண்டுணர்தல் இயலாததேயாம். மேலும், இலக்கண இலக்கிய அமைதியும் அறிவுநூல் வரம்பும் இகந்து நூல் இயற்றுதல்தான் ஆகுமோவெனின் அதுவும் ஆகாது; அத்தகைய வரம்புகளுக்கு அகப்படாமற் சொல்லுவன பித்துப்பிடித்துப் பிதற்றுவார் சொற்களே யாகலின், அத்தன்மையவாம் பிதற்றுரைகளே பொருள் அறிதற்கு ஒருசிறிதும் ஏலாதனவாம். மற்று இலக்கண இலக்கிய அமைதியும் அறிவுநூல் வரம்பும் உடைத்தாய்ச் செந்தமிழ்வளம் நிரம்பித்துளும்பும் திருவாசகச் செழும் பாடல்களுக்குப் பொருள் தெளிதல் முற்றும் அரிதன்று. அவற்றின் சொற்கள் சொற்றொடர்களுக்குப் பொருள் தெளிதற்குப் பண்டை இலக்கண இலக்கியக் கருவிநூல்களும் சிவஞானபோதம் முதலான அறிவு நூல்களும் இருக்கின்றன; இவற்றைக் கொண்டு ஆராய்தற்குரிய தன்மையினைத் திருவருளுதவியாற் பெற்று விளங்கிவரும் நமது அறிவும் இருக்கின்றது. இவை அத்துணையுங்கொண்டு அமைதியாய் ஆராயுங் கால் திருவாசகப் பொருள் நமக்கு விளங்காமற் போகாது. என்றாலும் பண்டைக் காலத்து வழங்கி இக்காலத்து முழுதும் வழக்கு வீழ்ந்து ஒருவாற்றானும் அறிதற்கு வாயில் இல்லாத சிலசொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகள் சரித்திரக் குறிப்புகள் சிற்சிலவும், மாணிக்கவாசகப்பெருமான் புறப் பொருள் உணர்வுவிட்டு அகத்தே தமதுணர்வினை மடக்கிச் சிவபெருமான் றிருவருளில் இரண்டறக் கலந்துநின்று நுகர்ந்து கூறியவாகலின் நம்மனோர்க்கு இந்நிலையிற் சிறிதும் விளங்காத பேரின்ப வான் பொருள்கள் சிற்சிலவும் திருவாசகத்திருமறையின்கண் ஆங்காங்கு உளவென்பது எவர்க்கும் உடன்பாடேயாம். அவை ஒழிய, மற்று எஞ்சி நின்றவைகள் நம்மனோர்க்குப் புலனாவனவேயாம். ஒருவாற் றானும் நம்மமேனார்க்குப் புலனாகாத ஒரு நூலே இயற்றினார் என்றால் அறிவும் இரக்கமும் அன்பும் நிறைந்த மாணிக்க வாசகப் பெருமானது அருட்பெருந் தகைமைக்குப் பொருந்தாமையின் அங்ஙனங் கூறுதல் பெரிதோர் ஏதமாம் என்க. அங்ஙனமாயினும், திருவாசகத்தின்கட் பொருள் உணரப்படாதனவும் சிற்சில ஆங்காங்குளவென்று உடன் படுதலின், ஒரு நூற்பொருள் முழுதும் உணரப்படுதல் இயலாதிருக்கையில் அந் நூலுக்கு உரையெழுதப் புகுதல் குற்றமன்றோவெனின்; அற்றன்று முழுதும் உணரக்கூடாமைப் பற்றி ஒரு நூற்பொருளை ஆராய்ந்து பயன்பெறாதுவிட்டு மடிந்திருத்தலே குற்றமாவ தன்றி, நம்மால் இயன்றமட்டும் முயன்று அதனை யறிதல் குற்றமாகாது. திருவாசகம் என்னும் இம் மெய்ந் நூற்பொருளை அறியும் முயற்சியில் இடையிடையே நம்மை யறியாது பிழைபடுவோமாயினும் அதுகண்டு எல்லா இரக்கமும் உடைய நம் ஐயன் நமக்கு இரங்கி அருள்புரிவானே யல்லாமல் நம்மேல் வெகுள்வான் அல்லன். அப்போதுதான் நடை கற்கும் சிறு மகார் தம் தந்தையைக்கண்டு அவன்பாற் செல்லுதற்கு விழைந்து தெற்றித் தெற்றி நடந்து வருதலைப்பார்த்து அவர் தந்தை மகிழ்வனேயன்றி அவர்மேற் சினவான். மக்களுள்ளும் தந்தை யாவான் இத்துணையன்பும் இரக்கமும் உடையானாயின், எல்லா வுலகிற்கும் தந்தையாய் எல்லா அருளும் இரக்கமும் உடைய இறைவன் தன்னை யணுகி வழிபடும் பொருட்டு நம்போல்வார் செய்யும் முயற்சிகளின் இடையிடையே நாம் பிழைபடுதல் கண்டு நமக்கு இரங்கி அருளாது நம்மை எரிவாய் நிரயத்தில் இடுவன் என்றல் எவ்வளவு பேதைமை! திருவாசகத்தை ஓதலும் அதன்பொருளை உணர்தலும் அதற்கு உரைஎழுதலும் எதற்காக? அறிவும் அன்பும் பெற்றுப் பிறவாற்றல் உணரப்படாத முதல்வனை உணர்ந்து பிறவாற்றாற் கரையாத நெஞ்சத்தைக் கரைத்து அவனை வழிபட்டு உய்தற்கன்றே? திருவாசகத்தின் சொல்லிலும் பொருளிலும் எந்நேரமும் கருத்து ஈடுபட்டுநின்று உரை எழுதுதற்குப் பயன் எரிவாய்நிரயங் கிடைப்ப தென்றால், திருவாசகத்தைப் பொருடெரியாமற் பிழைபடஓதி எந்நேரமும் செருக்கிலும் அறியாமையிலும் உழல்வோர்க்கு எது கிடைக்கு மோ அறிகிலம்! நரகம்புகினும், எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா என்று அடிகள் அருளியாங்கே, திருவாசகத்திற்கு உரை எழுதுதலால் நரகம் புகுவதாயின் அதுவும் திருவருளுக்கு இசைவானால் எமக்கும் அஃது இசைவேயாம். ஆனால், அருளே உருவாகவுடைய எம் இறைவனான சிவபெருமான் எமது இச் சிறு முயற்சியைக் கண்டு உவந்து எமக்கு அருள் வழங்குவன் என்னும் உறுதி உடையோ மாதலால் பிறர் யாதுகூறினுங் கூறுக. அற்றேல், பண்டைநாளிலிருத்த உரையாசிரியர் எவரும் திருவாசகத்திற்கு உரையெழுதி வையாதது என்னையெனின், தமிழ அரசரும் தமிழ்ப்புலவரும் மலிந்த அந்நாளில் இலக்கண இலக்கியக் கருவி நூலுணர்ச்சியும் அறிவு நூலுணர்ச்சியும் எல்லாரும் உடையராயிருந்தமையால் திருவாசகம் முதலான அன்பு நூல்களை உணரவேண்டாமலே அவரெல்லாம் பயிலவல்லுநராயிருந்தார். மற்று இந்நாளிலோ கருவிநூல் அறிவு நூற் பயிற்சி பெரிதுங் குன்றிவிட்டமையால் திருவாசகம் முதலியவற்றிற்கு உணரவேண்டுவது இன்றியமையாததாயிற் றென்க. கோகழி இன்னதென்பது கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க என்று சிவபுராணத் தொடக்கத்துட் போந்த சொற்றொடர்க்குப் பொருள் காணுமிடத்துக் கோகழி என்பதற்குத் திருப்பெருந் துறை யெனப் பொருள்கொண்டு உரை எழுதினேம். அங்ஙனம் உரை உரைக்கின்றுழி அதற்குத் திருவாவடுதுறை என்று பொருள் கூறினாரையும் மறுத்திட்டேம். இனி யாங் கூறிய பொருள் பொருந்தா தெனவும், அதற்குப் பிறர் திருவாவடு துறை எனக் கூறிய பொருளே பொருந்து மெனவும் நம்மோடு ஓர் அன்பர் நட்புமுறை பிறழாமலே வழக்கிட்டனர். நட்பின் கெழுதகைமை சிதைவுறாது கடிதவாயிலாக நம்மோடு வழக்கிட்ட அந் நண்பர்க்கு யாம் நன்றி கூறுகின்றோம். அவருக்கு விடையாக யாம் எழுதியன பிறர்க்கும் பயன்படும் வண்ணம் அவற்றை ஈண்டுப் பெயர்த் தெழுதுகின்றேம். கோகழி என்பது திருவாவடுதுறையையே குறிக்கு மென்பதற்கு அந் நண்பர் முதன்மையாய்க்கொண்ட மேற்கோள் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய தேசிகரால் நூறாண்டுகட்கு முன் இயற்றப்பட்ட திருவாவடுதுறைக் கோவையேயாம். ஆவின் வடிவாய்த் தோன்றிய உமைப்பிராட்டியார்க்கு இறைவன் அவ் ஆவின்வடிவை யொழித்து அவரை அணைத்து அருள்செய்த இடம் ஆவடுதுறை யாதலால், அது கோகழி என்னும் பெயர்த்தாயிற்று என்பதே அவர் காட்டும் முதன்மை யான காரணமாம். இனி ஒரு நூலுக்கு உரைகாணுமிடத்து அந் நூலாசிரியன் கருத்தறிந்து உரைகாணுதல் வேண்டும். ஒரு நூற்பொருள் துணிதற்கு அந் நூலின் கண் வந்த சொற் களையும் சொற்றொடர்களையும் பலகால் ஆய்ந்து பார்ப்ப துடன், அந் நூல் தோன்றிய காலத்தும் அதற்கு முன்னும் பின்னுமுள்ள காலத்தும் எழுதப்பட்ட நூல்களையும் கருவி களாகக் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் ஆயும்வழியுந் தாம் ஒரு பொருளை முன்னமைத்துக் கொண்டு அதனை அந் நூலுட் புகுத்த முயல்வது சிறிதும் ஆகாது. கூறுவோர் பெருமை சிறுமைகளால் அறிவு இழுப்புண்டு போகாமல், அவர் கூறும் பொருளின் பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து காண்பதே ஒருபக்கத்துச் சாயாது நடுநின்று உண்மை காண்டதற்கு ஏற்றதாகும். இம் முறையால் நோக்குங்காற் பண்டைக் காலத்து நூலாகிய திருவாசகத்திற் போந்த கோகழி என்னுஞ் சொற்றொடர்ப் பொருடுணிதற்கு, நூற்ண்டின்முன் இயற்றப்பட்ட திருவாவடுதுறைக் கோவை யைக் கருவியாக் கோடல் பொருத்தமின்று. பண்டை நூற் பொருள் உரைப் பொருள்களோடு பொருந்து மிடங்களிற்றாம் பின்றை நூல்கள் பொருடுணிதற் கருவிகளாக எடுக்கப்படும். திருவாவடுதுறைக்குக் கோகழி என்னும் பெயருண்மை பண்டை நூல்களிற் காணப்படாமை யானும் அப்பர் திருஞான சம்பந்தர் முதலான நம் சமயாசிரியர் அத தலத்தின் மீதருளிச் செய்த திருப்பதிகங்களிலெல்லாம் ஆவடுதுறை யென்னும் பெயரன்றிக் கோகழி யெனும் பெயர்வரக் காணாமையானும், கோ என்னுஞ்சொல் ஆவினை உணர்த்தல் வடமொழியிலன்றித் தமிழின்கண் இன்மையின் கோகழி என்னுந் தமிழ்ச் சொற்றொடரிலுள்ள அதற்கு அவ்வாறு பொருளுரைத்தல் பொருந்தாமையானும், கோ என்னும் வடசொல்லே கழி என்னுந் தமிழ்ச் சொல் லோடியைந்து வந்ததெனின் அவ்வாறு ஒரு வடசொல்லும் ஒரு தமிழ்ச் சொல்லும் ஒட்டி ஒருசொற் போலியைந்து வருந் தொகை நிலைத்தொடர் பண்டைத் தமிழ் வழக்கின் கட் காணாமையனும் அங்ஙனம் பொருள் படுத்தல் பொருந்தா தென்பது. இனி அடிகள் திருப்பெருந் துறையில் அருளிச் செய்கின்ற சிவபுராணத் துவக்கத்திலேயே திருவாவடு துறையைக் கூறுதற்கு ஓரியையும் இன்றென்பதூஉம் ஒரு சிறிது காட்டுவாம். திருவாதவூரடிகள் வரலாற்றில் இயைபுற்று நிற்குஞ் சிவதலங்கள்; திருப்பெருந்துறை, மதுரை, திருவுத் தரகோச மங்கை, தில்லை, திருக்கழுக்குன்றம் என்பனவாம். அடிகள் முதன் முதல் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தலம் பெருந்துறையே யாதலானும், பின்னர்த் தமது தவம் நிறை வேறிய தலம் உத்தரகோச மங்கையே யாதலானும் அவ்விரண் டையும், இறைவன் தம்மைத் தில்லைப்பொதுவின் கண் வருக வென அருளி மறைந்தமையின் அச் சிறப்புப் பற்றித் தில்லையினையும் ஏனையவற்றின் மிக்கெடுத்துப் பாடி அடுத்தடுத்துத் திருப்பதியங்கள் கட்டளையிட்டருளுகின்றார். இவை தமக்கு அடுத்தபடியாய் வைத்து மதுரை, கழுக்குன்றம் என்னும் இரண்டனையும் பாடியிருக்கின்றார். ஏனைத்தலங்களைக் கூறும் வழி அவற்றை ஒருசேரத் தொகுத்தும், சிலவற்றிற்குத் தனிப்பதிகங்கள் வகுத்தும் அருளிச் செய்திருக்கின்றார். இங்ஙனம் அருளிச் செய்தவற்றுள் ஆவடுதுறை யென்னும் பெயராவது, அல்ல தத்தலத்தைப் பற்றிய குறிப்புச் சிறப்புக்களாவது சிறிதும் வரக்கண்டிலேம். மேலும், ஆவடுதுறை என்னுந் தலம் அடிகள் வரலாற்றில் இயைபுறுதலுங் கண்டிலேம். இங்ஙனமாக, அடிகள் திருப்பெருந்துறையில் அருளிச் செய்கின்ற சிவபுராணத் துவக்கத்திலேயே திருவாவடுதுறையை எடுத்தோதினரெனக் கொண்டு கோகழி என்னுஞ் சொற்றெடர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் தினைத் துணையும் பொருந்தாதென்க. அங்ஙனம் அதனை முதற்கட் சிறந்தெடுத்துக் கூறுதற்குச் சிறந்ததோரியைபு காட்டல் வேண்டுமன்றே. அது தெய்வத் தன்மை பொருந்திய தலமாதல் கண்டு அங்ஙனம் விதந்து கூறினாரெனின், அதனினுந் தெய்வத் தன்மை வாய்ந்த தில்லை, மதுரை, திருவாரூர் முதலிய தலங்களெல்லாம் உளவாக அவற்றையெல்லாம் விடுத்து ஆவடு துறையைக் கூறினா ரென்றல் சிறிதும் ஏலாது. மேலும், முதற்கட் கோழி யாண்ட குருமணி என்று விதந்து கூறியவாறு போலவே, கோகழி மேவிய கோவே போற்றி எனவும், கோகழி நாதனைக் கூவாய் எனவும், கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு எனவும், நம்மிடர்கள் போயகல எண்ணியெழு கோகழிக்கரசை எனவும் அதனைப் பிறாண்டும் பலவிடத்தும் அடிகள் விதந்து கூறுமாறும், பெருந்துறையைப் பற்றிய பதிகங்களிலேயே கோகழி என்னும் அச் சொற்றொடர் பெரும்பாலுங் காணப்படுமாறும் உற்றுநோக்க வல்லார்க்கு அது பெருந்துறைக்கே பழையதொரு பெயராமென்பது தெற்றென விளங்கா நிற்கும். திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின். இனி, மாணிக்கவாசகப் பெருமான் கோகழி என்னுஞ் சொற்றொடரைத் திருப்பெருந்துறைக்கே பெயராகக் கூறியருளி னாரென்பதற்கு, அவர் திருச்சிற்றம்பலக் கோவையாரில் சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமி என்பதன்கண் வான்கழி என்னும் அப் பெயரை எடுத்து ஓதுதலே சான்றாம். வான்கழி கோகழி என்பன பெரியகழி என்னும் பொருளையே தராநிற்கும். இதற்கு உரைகண்ட பேராசிரியரும் வான்கழி என்பதற்குச் சிவலோகம் எனினும் அமையும் என்று பொருளுரைத் தமையுங் காண்க. சிவபுரம் சிவலோகம் என்பனவுந் திருப்பெருந்துறைக்கே உரிய பெயர்களாம். இது, தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரசே எனவும், தென்பராய்த் துறையாய் சிவலோகா திருப்பெருந் துறை மேவிய சிவனே எனவும் அடிகளே ஆண்டாண்டுக் கூறுமாற்றால் தெளியப்படும். அற்றன்று, தேவர்கள் உறையும் வானுலகங்ளெல்லாங் கழிந்ததற்கு மேல் உளதாகிய கைலாயத்தினையை சிவலோகம் எனப் பேராசிரியர் கருதினாரென்று கொள்ளாமோவெனிற், கொள்ளாமன்றே, என்னை? வான்கழிந்த இடத்திற்கு வான்கழி என்னும் பெயருண்மை யாண்டுங் காணப் படாமையானும், அது பெரும்பாலும் நெய்தல் நிலத்துள்ள ஒருவகை நீர்நிலையி னையே சுட்டுமென்பதற்குக் கானல் முரம்பு கழியின் பெயரே அதோமுகம் புகாரோடருவி கூடல், கழிமுக மென்று கருதல்வேண்டும் காயலும் முகமுங் கழியெனப்படுமே என்னுந் திவாகர பிங்கலந்தைச் சூத்திரங்களே சான்றாகலானும் இங்ஙனமே உலகவழக்கினும் அச்சொல் நெய்தல் நிலத்து நீர்நிலைக்கே பெயராய் வழங்கக்காண்டலானும், சங்கந்தரு முத்தி என்னுஞ் செய்யுள் கடலுக்குஞ் சிவபெருமானுக்கும் சிலேடை வகையால் இருபொருள் பயக்குமாறு தலைமகள் தோழியை நோக்கிக் கூறுகின்றாளாக அடிகள் கூறுகின்றுழி அவர் தம்மைத் தலைமகளோ டொன்று படுத்திப் பெருந்துறையில் நேரே கட்புலனாய்க் குருவடிவில் எழுந்தருளித் தம்மையாண்ட இறைவனது அருட்டிறத்தை வியந்துருகியுரைப் பரல்லது புலனாகாது கைலாயத்திலமர்த் நிலையைக் கருதிக் கூறாராகலானும், கடற்பாங்கில்நின்று கடலை நினைந்து கூறுவார்போற் கூறுமவர்க்கு அதனையடுத்துள்ள பெருந்துறையில் இறைவன் எழுந்தருளிய திறத்தினையுங் கூறுதற்கே நினைவு செல்லு மல்லது பிறிது ஆகாதென்பது மனவியல்பு தேர்வார்க்கு இனிது விளங்கு மாகலானுமென்பது. இனிக், கழி என்னுஞ் சொல்லுக்குத் துறை என்னும் பொருள் நேரே பெறப்படாதாயினும் ஆகுபெயரால் அது பெறப்படு மென்பதனைச் சிறிது காட்டுவாம். சொற்கள் உணர்த்தும் பொருள் செம்பொருளெனவும் ஆக்கப்பொரு ளெனவும் இருவகைத்து. செம்பொருளாவது ஒரு சொல்லுக்கு இயற்கையாய் உள்ளபொருள்; ஆக்கப்பொருளாவது ஒரு சொற்கு இயற்கைப்பொருள் ஒழிய அதனோடு இயைபுடைய பிறிதொன்றாம். தாமரை என்னுஞ் சொல் வேர் தண்டு இலை பூ முதலான உறுப்புக்கள் முழுதுங்கூடிய ஒரு பூண்டினை உணர்த்துங்கால் அஃது அதற்கு இயற்கையான செம்பொரு ளாகும். தாமரை மலர்ந்தது என்னுஞ் சொற்றொடரில் அச்சொல் அப் பூண்டு முழுமையும் உணர்த்தாமல் அதனோடு இயைபுடைய அதன் ஓர் உறுப்பாய மலரைமட்டும் உணர்த்துதலால் அஃது அதற்கு ஓர்ஆக்கப்பொருளாகும். இம் முறையால் நோக்குமிடத்துக் கழி என்னுஞ்சொல் அகன்ற தொரு நீர்ப்பரப்பினையே இயற்கையாய் உணர்த்துமாயினும், ஒரோ வொருகால் அது தன்கண் ஒருபகுதியான நீர்த்துறையினை உணர்த்துதற்கும் உரிமையுடைத்தாம். ஆகவே, கோகழி என்னும் பெயர் பெருந்துறை எனப் பொருள்படுதற்கும் ஏற்புடைத்தாதல் காண்க. கழி துறை எனுஞ் சொற்கள் நெய்தல் நிலத்து நீர்நிலையைக் குறிக்கும் பெயர்களாய் வழங்கப்படுதலைப் பொங்குகழி நெய்தல் உறைப்ப இத்துறை (186), இருங்கழி மருங்கின் அபிரை யாருந், தண்ணந்துறைவன் (164), கானலம் பெருந்துறைக் கலிதிரை திளக்கும் (199), அலவன்றாக்கத் துறையிறாப் பிறழும் (179), என்றற் றொடக்கத்து ஐங்குறு நூற்றுத் தொடர்மொழிகளிலும், போஓய வண்டினாற் புல்லென்ற துறையவாய் (17) என்னுங் கலித்தொகைச் சொற்றொடரிலுங் கண்டுகொள்க. இனி இப்போது கடல் திருப்பெருந்துறையைவிட்டு நெடுந் தொலைவு அகன்று போயதேனும் நம் மாணிக்க வாசகப் பெருமான் இருந்த ஆயிரத்து அறுநூறு ஆண்டு களுக்கு முன் அஃது அவ்வூர்க்கு அருகில் இருந்ததென்பதூஉம், அவர் காலத்துக்கும் முன்னே அஃது அவ்வூர்க்கு மிகவும் அணித்தாய் இருந்த தென்பதூஉம், அவ்வாறு திருப்பெருந் துறை பண்டை நாளிற் கடற்கரையின் மருங்கே பெரியதோர் உப்பங்கழியை அடுத்திருந்தமை பற்றியே அது கோகழி எனவும் சிறிது பிற்காலத்தே அப்பொருளே படும் பெருந் துறை எனவும் பெயர் பெறலாயிற்றென்பதூஉம் சிறிது காட்டுதும். மாணிக்கவாசகப் பெருமான் பாண்டிய மன்ன னிடத்து அமைச்சராயிருந்த ஞான்று ஒருநாள் தூதவர் சிலர் அவ்வரசன் அவைக்களத்தே போந்து சோழநாட்டுக் கடற் கரையிலே ஆரியர் குதிரைகள் கொண்டு வந்து விலை செய்தற்கு இறங்கியிருக்கின்றனர், யாம் அதனைக் கண்டேம் என்று தொழுதுரைக்க, அது கேட்ட அவ்வரசன் தன் அமைச்சராகிய மாணிக்கவாசகரை நோக்கி நமக்குச் சிறந்த குதிரைகள் வேண்டியிருத்தலின் இப் பெரும் பொருள் கொண்டு பெருந்துறைக்குச் சென்று அவற்றை விலை கொண்டு திரும்புமின்! என்று கூறி அவர் கையிற் பெரும் பொருள் கொடுத்து விடுத்தனன் எனத் திருவாதவூரடிகள் புராணம் புகலாநிற்கின்றது; அது, தாதகி மார்பன் நெடும்புவி சார்தரும் ஆழ்கடலின் கரை தீதிலா மாதுரகங் கொடு சீர்கெழும் ஆரியர் வந்தனர் ஏதம் இலாய் அது கண்டனம் யாம் எனவே! தொழு தன்பொடு மேதினி காவலன் முன்சில மேதகு தூதர் விளம்பினர் எனவும், மெய்த்தவர் உற்ற பெருந்துறை வித்தகரைக் குறுகும்படி இத்தகு ஈற்பொருள் கொண்டு நீர் இப்படியிற் செலும் என்றவின் அத்தகு புத்தி யொழிந்துயிர் அற்புத முத்தி பெறும்படி உய்த்துள சக்தி யுடன் பொரு வொத்தனன் உத்தம பஞ்சவன் எனவும் மந்திரிச்சருக்கத்தட் போந்த அதன் செய்யுட்களிற் காண்க. இவ்வாறு பாண்டியன் பெருந்துறைக்குச் சென்று குதிரை கொண்டு வருகவென அடிகளை ஏவினமை திருவாதவூரடிகள் புராணத்தால் இனிது விளங்குதலின், அப் பண்டைக் காலத்திற் றிருப்பெருந்துறை கீழ்கடற் கரைக்கு அணித்தாயிருந்த தென்பது தெற்றென விளங்காநிற்கும். இஞ்ஞான்றுந் திருப்பெருந்துறை கடலுக்கு மிகச் சேய்த்தாய் இல்லை. திருப்பெருந்துறைக்குக் கிழக்குப் பக்கமாய்ப் பதினான்கு மைலிலும், தெற்குப் பக்க மாய்ப் பதினைந்து மைலிலும் கடல் உள்ளதென அறிகின் றோம்.1 இப்போதே இஃது இத்துணை அண்மையில் உள தாயின், ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்குமுன் இன்னும் இது கடலுக்கு எவ்வளவு அணித்தாயிருந்தாதல் வேண்டு மென்ப தனை யாங் கூறுதல் வேண்டாம். சில நிலப் பகுதிகளிற் கடல் வர வர அகன்று போதலும், வேறு சிலவற்றில் அது வர வர அணுகியேறு தலும் நில நூல்வல்லார் நன்கு விளக்கிக் காட்டுவர். அதனால், திருப்பெருந்துறை பண்டைநாளிற் கடற்கரையை அடுத்திருந்ததெனும் உண்மை மறுக்கப்பட மாட்டாதென்க. இன்னுந், திருப்பெருந்துறை முன்னை நாளில் நெய்தனிலத்துக் கழியைச் சார்ந்திருந்தமை பற்றியே கோகழி எனப் பெயர் பெறலாயிற்றென்பதற்கு வேறுமொரு சான்றுங் காட்டுவாம். திருப்பெருந்துறையும் அதனை யடுத்துள்ள ஊர்களும் பண்டை நாளில் மிழலைக் கூற்றத்தில் உள்ளன வாகக் கொள்ளப்பட்டமை மிழலை நாட்டு நரியெல்லாம், அழைத்துத் தெருட்டி என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலால்(28-11) நன்கு உணரப்படும். இம் மிழலைக் கூற்றம் நெய்தனிலத்தின்கண் உள்ளதென்பதற்கு நெல்லரியும் இருந்தொழுவர், செஞ்ஞாயிற்று வெயின் முனையின், தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து என்னும் புறப்பாட்டே (24)சான்றாதல் காண்க. நெய்தல் நிலமாவது கடலுங் கடல் சார்ந்த இடமுமே யாகலான், மிழலைக் கூற்றமும் அதன்கண் ஓர் ஊராகிய பெருந்ததுறையு மெல்லாம் கடற்கரையைச் சார்ந்திருந்த இடங்களே யாதல் ஐயுறவின்றி நாட்டப்படும். அற்றேற், பெருந்துறை ஒரு கடற்கரைப் பட்டினமாயின், அப் பட்டினத்தின்கட் குதிரை கொள்ளும் பொருட்டே அடிகள் சென்றனராயின் அதற்குச் செல்லும் வழி ஒன்றனையே பிடித்து அடிகளும் அவருடன் வந்தோரும் அதன்கட் செல்லல் வேண்டும். அவ்வாறன்றி அவர் வேறொரு வழி பிடித்துப் போயினாரென்றும், குதிரை கொள்ளச் சென்ற அவ்வழி தவறியே மற்றுமொரு கிளைவழியாற் பெருந்துறைக்கட் சென்றார் என்றும் பொருள்பட, என்றும்உள பொன்றும் உடல் என்னும் நகர்தோறுஞ் சென்றவழி மாறி யொரு தெய்வவழி செல்வார். நன்றி புள முத்திபெற நம்பர்தம தன்பால் அன்றுயர் பெருந்துறை அடைந்தபடி சொல்வாம் எனக் கடவுண் மாமுனிவர் அருளிச் செய்த திருவாதவூரடிகள் புராணங் கூறுதல் என்னையெனின்; அடிகள் குதிரை கொள்ளச் சென்றது திருப்பெருந்துறை நகரத்திலன்றி அதனை யடுத்துள்ள கடற் கரையிலேயாம். இஃது எற்றாற் பெறுது மெனின் தாதகி மார்பன் நெடும்புவி சார் தரும் ஆழ்கடலின் கரை தீதிலாமாதுரகங்கொடு சீர்கெழும் ஆரியர் வந்தனர் என அப் புராணத்தின்கண் முன்னே சொல்லப்பட்டமையாற் பெறுதும் என்பது. எனவே, திருப்பெருந்துறை நகரத்தை அடுத்திருந்த கடற்கரையில் ஆரியர் கொண்டுவந்து இறக்கித் தங்கிய குதிரைகளை விலை கொள்ளும் பொருட்டு அக் கடற்கரைக்குச் செல்லும் வழியே சென்ற அடிகள், திருப்பெருந் துறை யணுகியதும் அவ் வழியைத் தப்பி, அந் நகரத்திற்குச் செல்லும் வழியே திருவருளாற் சென்றன ரென்பதே அப் பாட்டிற்குக் கருத்தாமென்று பகுத்துணர்ந்து கொள்க. அவ்வாறாயின், திருவாசகத்திற் கோகழி என்னும் பெயரை விடப் பெருந்துறை என்னும் பெயரே பெரு வரவிற்றாய் வழங்கக் காண்டுமா லெனின், அடிகள் காலத்திற் கோகழி என்னும் பெயர் வழக்கம் அருகிப் பெருந்துறை என்னும் பெயர் வழக்கம் பெருகி வந்தமையின் முன்னையது சிறுபான்மையாயும் பின்னையது பெரும் பான்மையாயும் அதன்கண் வழங்கப்படலாயின வென்று உணர்ந்து கொள்க. என்று இதுகாறும் விளக்கிய வாற்றாற் கோகழி என்பதற்குத் திருவாவடுதுறை எனப் பொருளுரைத்தல் ஒருவாற்றானும் பொருந்தாதா மென்பதும், பெருந்துறை எனப் பொருள் கோடலே எவ்வாற்றானும் பொருத்தமா மென்பதுங் கடைப்பிடிக்க. பாணபத்திரரும் சேரனும் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க எனப் போந்த திருவண்டப் பகுதியடிகளுக்கு உரையெழுதிய வழி அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் என்பது இறைவன் பாணபத்திரர் பொருட்டுச் சாதாரி பாடின திருவிளையாடலை உணர்த்துகின்றதெனக் குறித்துப் போந்தாம். மாணிக்க வாசகப் பெருமான் சமயாசிரியர் ஏனை மூவர்க்கும் முன்னிருந்த வராகலிற், சுந்தரமூர்த்தி நாயனார் தோழராகிய சேரமான் பெருமாள் காலத்தவரான பாண பத்திரர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை அவர் குறித்தருளினாரென்றல் பொருந்தா தென நம்பால் அன்புள்ள நண்பர் ஒருவர் நமக்குக் கடிதம் வாயிலாய் நேரே எழுதித் தெரிவிக்கலானார். இவர்க்கு இது மாறுபாடாய்க் காணப்பட்டது போலவே, ஏனைச் சிலர்க்குங் காணப் படுமாதலால் எல்லார்க்கும் பயன்படுதற் பொருட்டு அவர் நிகழ்த்திய தடை பொருந்தாதென்பதும், யாங்கூறியதே பொருத்தமா மென்பதும் ஈண்டு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். பாணபத்திரர் இறைவன்பால் மதிமலி புரிசை மாடக் கூடல் என்னுந் திருமுகம் பெற்றுச் சென்றது ஒரு சேரமன்னனிடத்து என்றதேயன்றி, அச் சேரன் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழன் என்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல் கூறுகின்றிலது. காரைக்காலம்மை யாரையும், அவர்க்கு முன்னிருந்த அடியார் சிலரையும், பழைய திருவிளையாடல்கள் சிலவற்றையும் எடுத்துக் கூறுமாறு போலத் திருநாவுக்கரசுகள் திருஞான சம்பந்தர் சுந்தரமூர்த்தி கள் முதலான ஆசிரியரையாதல், இறைவன் அவர் பொருட்டு நிகழ்த்திய அற்புதங்களை யாதல் ஒரு சிறிதும் எடுத்து ஓதாமையால் அப்பர் காலத்திற்கும் முற்பட்டதாகக் காணப் படும் கல்லாடம் என்னும் நூலிற், குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென மதிமலிபுரிசைத் திருமுகங்கூறி அன்புருத் தரித்த இன்பிசைப் பாணன் பெறநிதி கொடுக்கென உறவிடுத் தருளிய மாதவர் வழுத்துங் கூடற் கிறைவன் (கல்லாடம் 15) எனப் பாணபத்திரர் பொருட்டு இறைவன் சேரமன்னற்குத் திருமுகங் கொடுத்தமை குறிக்கப்பட்டிருத்தலால், அத் திருமுகம் பெற்ற சேரன் கல்லாடநூலுக்குப் பிற்காலத்திருந்த சுந்தர மூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாள் அல்லன் என்பது தெற்றெனப் புலப்படும். இனித் திருஞான சம்பந்தப் பெருமானும் திருவாலவாயில் அருளிச் செய்த ஆலநீழ லுகந்த என்னுந் திருவியமகப் பதிகத்தில் நக்க மேகுவர் என்னுஞ் செய்யுளில் தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே என்று பாணபத்திரர் பொருட்டு இறைவன் இசைபாடினமை அறிவுறுத் தருளினார். தாரம் என்பது குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையுள் முதற்றோன்றும் இசையாகும். இக் குரன் முதலேழினும் முற்றோன்றியது தாரம் என்றார் அடியார்க்கு நல்லாரும் (சிலப்பதிகாரம் வேனிற்காதை, 32). ஈண்டுத் தாரம் என்பது ஆகுபெயரால் அதனையுடைய சாதாரியிசையினை உணர்த்திற்று. திருஞான சம்பந்தப் பெருமான் மதுரைமா நகரில் அருளிச்செய்த இத் திருப்பதிகத் திற் குறிப்பிடப் பட்ட இது பாணபத்திரர் பொருட்டு இறைவன் சாதாரி பாடின திருவிளையாடலை யுணர்த்துதலே முறையுடைத்து. இஃதிங்ஙனமாக வும், ஈண்டுக் குறிப்பிட்டது திருநீலகண்ட யாழ்ப்பாணரேயாம் என்பதுபடத் திருவிய மகத்தினுள்ளுந் திருநீலகண்டப் பாணர்க், கருளியதிறமும் போற்றி என்று பெரிய புராணத்துட் சொல்லப்பட்டது சிறிதும் பொருத்த மாகக் காணப்படவில்லை. இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசை பாடின மையே பண்டை நூல்களிற் காணப்படுகின்றதன்றித், திருஞான சம்பந்தப் பெருமானோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்காக அங்ஙனம் செய்தாலின்பது யாண்டுங் காணப்பட வில்லை. மேலும் திருஞான சம்பந்தப் பெருமான் திருநீலகண்ட யாழ்ப்பாணரைச் சிறப்பித்துச் சொல்ல வேண்டினராயின், யாழ்ப்பாணர் பிறந்த திருஎருக்கத்தம் புலியூர்க்கு அவரோடு கூடிச்சென்று இறைவனைப் பாடிய திருப்பதிகத்தில் அவரைப்பற்றிச் சொல்லி யிருக்கவேண்டும். பெருமான் திருச்செங்காட்டங் குடிக்குச் சென்றபோது, அவ்வூரிற் பிறந்தவராய் இறைவற்குப் பணி செய்த சிறுத்தொண்டரோடு அளவளாகி, அவரைச் சிறப்பித்துச் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய என்று தமது திருப்பதிகத்துள் ஓதியருளியவாறு போலத், திருவெருக்கத்தம்புலியூர்க்குச் சென்ற காலத்துத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைக் குறிப்பிட்டி ருத்தல் வேண்டும். அவரை அங்கே குறிப்பிடாமல், மதுரைமா நகர்க்குச்சென்று அங்கே அருளிச் செய்த திருப்பதிகத்திற் குறிப்பிட்டாரென்றல் ஒரு சிறிதும் பொருத்தமாகக் காணப் படவில்லை. பாணபத்திரர்க்காக இறைவன் இசைபாடிய திருவிளையாடல் மதுரையில் நிகழ்ந்த தொன்றாகையால், மதுரையிற் றிருப்பதிகங் கட்டளையிடும் திருஞான சம்பந்தப் பெருமான் அதனை நினைந்து பாடினாரென்றலே பொருத்த முடைத்தாம் என்க. இன்னும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக் கோளிலி என்னும் ஊர்க்குச் சென்று கட்டளையிட்டருளிய திருப்பதிகத் துள்ளும் நாண முடை வேதியனும் என்னுஞ் செய்யுளிற் பாணன்இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் என்று பாணபத்திரர்க்கு இறைவன் திருமுகம் அருளிய திரு விளையாடலைக் குறிப்பிடுதலானுந் திருவால வாய்ப்பதிகத்திற் குறிப்பிட்டதும் பாணபத்திரரையே யாமென்பது துணியப் படும். அற்றன்று, திருநீலகண்ட யாழ்ப் பாணர் திருவாலவாயிற் சென்று இறைவன் எதிரில் இசைபாட இறைவன் அவரது யாழை வைத்தற்குப் பொற்பலகை இடுவித்தானென்று பெரிய புராணங் கூறுகின்றமையின், ஈண்டுப் பிள்ளையார் பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் என்று குறிப்பிட்டருளியது தம்மோ டுடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற் பலகை இடுவித்ததனையே யாமெனின்; ஈண்டும் பெரியபுராணங் கூறும் வரலாறு கொள்ளற்பாற்றன்று, என்னை? பெரிய புராணத்திற்கு முதல் நூலாகிய, நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த திருத்தொண்டர் திருவந்தாதியில் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்தா ரென்பது சொல்லப்படாமையின் என்பது. இவ்வாறு திருத்தொண்டர் திருவந்தாதியிற் காணப்படாத ஒருவரலாறு அதற்குப் பின்வந்த பெரியபுராணத்துட் காணப்படுதல் பெரிதும் ஐயுறற் பால தொன்றாம். மேலும், பெரியபுராணத்தின் மட்டுங் காணப்படும் அவ் வரலாற்றுக்கு மாறானதொன்று வேறோரு பழைய நூலிற் காணப்படுமாயிற் பெரியபுராணத்திற் சொல்லப்பட்ட அது பொருந்தாதென்பதே முடிபாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: மதுரையிற் பாணபத்திரர் செல்வவளத்தாற் சிறந்து வாழ்தல் கண்டு அவர்க்கு உறவினரான ஏனைப் பாணரெல்லாம் அவர்மேற் பொறாமைகொண்டு அவரை வெறுப்ப, அதுகண்ட இறைவன் பாணபத்திரர்க்குள்ள பேரன்பைப் புலப்படுத்துவான் வேண்டிப் பெருங்காற்றோடு கூடிய பெருமழையினைப் பெய் விக்க அதற்குப் பின்வாங்காது நள்ளிருளினுங் காலாற்றடவிக் கொண்டு கோயிலிற் சென்று இறைவனெதிரே வெள்ளத்தினும் நின்றபடியாய்ப் பாணபத்திரர் யாழினை இயக்கி இசைபாட அது கண்டு ஐயன் இரங்கி அவர் ஏறியிருந்து பாடுதற்கு ஓர் உயர்ந்த பொற்பலகை இடுவிக்க அவர் அதன்மேல் ஏறியிருந்து பாடினார். அவர் உறவினரும் அவரது பேரன்பின் பெருக்கி னையும் அவர்க்கு இறைவனருளிய திறத்தினையுங்கண்டு பொறாமை நீங்கினாரெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற்புராணங் கூறாநிற்கும். இறைவன் பாணபத்திரர்க்குப் பொற்பலகை யிடுவித்தமைக்கு ஏற்புடைக் காரணங்கள் உளவாகப், பெரியபுராணத்துள் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குப் பலகை யிருவித்தமைக்கு அத்தகைய ஏற்புடைக்காரணங்கள் இலவாதலை ஒப்பவைத்து நோக்க வல்லார்க்குப், பாணபத்திரர்க்குப் பலகையிட்ட வரலாறே பொருத்த முடைத்தாமென்பதூஉம், திருநீலகண்ட யாழ்ப் பாணர்க்குப் குப் பலகையிட்டதாகச் சொல்லும் வரலாறு பொருத்த மின்றாய்ப் பாணர் என்னும் பெயரொற் றுமை பற்றிப் பாணபத் திரர்க்குரியதனை அவர்க்குப் பின்னிருந்த நீலகண்ட யாழ்ப்பாணர்க்கும் படைத்திட்டுக் கொண்டு சொல்லப் பட்டதா மென்பதூஉம் நன்குவிளங்கும். எனவே, திருஞான சம்பந்தப் பெருமான் தார முய்த்தது பாணற் கருளொடே எனவும், பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும் இருகாற் குறிப்பிட்டது தங்காலத்திற்கு முன்னிருந்த பாணபத்திரையே யாமென்பது கடைப்பிடிக்க. அற்றேல், பெரியபுராணத்துட் கழறிற்றறிவார் என்னுஞ் சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு கூறுகின்றுழிப். பாண பத்திரர் இறைவன்றந்த திருமுகம் பெற்றுச் சேரமான் பெருமாளிடஞ் சென்றாரெனக் குறிக்கப்பட்டவா றென்னை யெனின்; பெரியபுராணத்துட் காணப்படும் இவ்வரலாறும் பொருத்தமின்றாம்; என்னை? திருஞான சம்பந்தப் பிள்ளை யார்க்கு முன்னிருந்த பாணபத்திரர் தமது காலத்திருந்த சிவனடியாரான ஒரு சேரமன்னரிடஞ் சென்றாராவதே பொருத்தமாவதன்றிப், பிள்ளையார்க்குப் பன்னெடுங்காலம் பின்னிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமானிடஞ் சென்றாராவது பொருந்தாமையான் என்க. மேலும், பெரிய புராணத்திற்கு முதனூலாகிய நம்பியாண்டார் நம்பி திருவந்தா தியிற் போந்த சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றிற் பாணபத்திரர் இறைவன் றந்த திருமுகங்கொண்டு அவர்பாற் சென்றமை சொல்லப்படாமையானும், அதற்கு வழிநூலாய்ப் பின்வந்த பெரியபுராண வரலாறு பழைய உண்மை வரலாறு களோடு பெரிது முரணுதலானும் பெரிய புராணத்திற் சொல்லப் பட்ட அது கொள்ளற்பாலதன்றென விடுக்க. அற்றேற், பெரும் பற்றப்புலியூர் நம்பி திருமுகங் கொடுத்த திருவிளையாடல் ஏழாஞ் செய்யுளில் நிலத்துயிர் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான் காண் என்று கூறியிருத்தல் என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமானுக்கே கழறிற்றறிவார் எனும் பெயர் உரியதாதல் கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்யு மாற்றாற் பெறப்படு கின்றதா லெனின்; பெரும்பற்றப்புலியூர் நம்பி தாங்கூறிய கடவுள் வாழ்த்தில்; மாலை, முடிகொள் சுந்தரர்தாள் போற்றி என்று வணக்கங் கூறியிருத்தலின், அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்ட காலத்தே இருந்தா ரென்பது நன்கு பெறப்படும். அங்ஙனம் பிற்பட்ட காலத்திருந்த அவர் பாணபத்திரர் காலத்தவரான சேரமானை எடுத்துக் கூறுகின்றுழி அவ் வரசனும் சுந்தரமூர்த்தி தோழரான சேரமான் பெருமாளும் ஒருவரே போலுமெனச் சிறிது மயங்கியே திருத்தொண்டத் தொகையுட் போந்த கழறிற்ற றிவார் என்னும் பெயரை எடுத்துக் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் என அங்ஙனம் வினைப்படுத் தோதினார். அங்ஙனம் ஓதினும், தமக்கு முன்னிருந்த நூல்களில் அவ்விரண்டு சேர மன்னரையும் ஒருவராக்குதற்குப் போதிய சான்று காணாமையின் ஐயுற்றுத் திருத்தொண்டத் தொகை யிற் போலக் கழறிற்றறிவார் என்பதனை அம் மன்னர்க்குப் பெயராக உரையாது கழறுஞ் சொற்கள் அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான் காண் என அச் சொற்றொடரை வினைப்படுத்துச் சேரமான் என்னும் பெயர்க்கு அடைமொழி யாக்கினார். இவ்வாறு பெரும்பற்றப் புலியூர் நம்பியார் அச் சொற்றொடரைப் பெயராக வுரையாது, ஒரு பெயர்க்கு அடைமொழி யாக்கிக் கூறுதலானும், பாணபத்திரர் காலத்திருந்த சேரமான் சுந்தரமூர்த்திக்கட்குத் தோழராய் அவரோடு கைலாயத்திற்கு உடன் சென்ற சேரமான் பெருமாளேயாயின் அச் சிறப்பினை அவர் கூறாது விடாராக லானும் இவ்வடைமொழித் தொடரின்கண் வந்த இரண்டு சொல்லொப்புமை பற்றி அவ்விரண்டு சேரமன்னரும் ஒருவரே எனத் துணிதல் சிறிதும் பொருந்தாதென்க. அற்றாயினும், முன்னர் எடுத்துக் காட்டிய கல்லாடச் செய்யுட் பகுதியிற் பரிபுரக்கம்பலை இரு செவியுண்ணுங், குடக்கோச்சேரன் என அச் சேரற்கு அடை மொழியாய்ப் போந்த சொற்றொடர், நாடோறும் இறைவற்கு வழி பாடாற்றுங் காலங்களி லெல்லாம் இறைவன் இயற்றுந் திருக் கூத்தினான் அவர்காற் சிலம் பொலியினைக் கேட்டவர் சேரமான் பெருமாளே யன்றி வேறு பிறர் அல்லர் என்பதனை விளக்கு மென்பதற்குப் பெரிய புராணத்தின்கட் காணப்பட்ட அவர் வரலாறே சான்றாயிருந்தலிற் கல்லாடச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேரமான் பெருமாளே யாமெனின். அதுவும் பொருந்தாமை காட்டுதும். பெரிய புராணத்தின்கட் கூறப்பட்ட வரலாறுகள் அதற்கு முற்பட்ட நூல்களிற் காணப்படாமை யோடு, அவற்றோடு மாறு கொண்டும் நிற்குமாயின் அவை கொள்ளாற் பாலன அல்ல வென்பதை மேலே காட்டினாம். சேரமான் பெருமாள் நாடோறும் தாம் இயற்றிய வழிபாட்டு முடிவின்கண் இறைவனார் திருச்சிலம் பொலி கேட்டு வந்ததுண்டாயின் அப் பெருஞ் சிறப்பினைப், பெரிய புராணத்திற்கு முற்பட்டு அதற்கு முதல் நூலாய் விளங்கிய நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி கூறியிருத்தல் வேண்டும்; மற்று அதன்கண் அதைப் பற்றிய குறிப்பினைச் சிறிதுங் கண்டிலேம். ஆதலாற், பரிபுரக் கம்பலை இருசெவி யுண்ணும் என்னுங் கல்லாட அடைமொழித் தொடர் கொண்டு அதன்கட் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்திகளின் தோழரான சேரமான் பெருமாளே யென்று துணிந்துரைத்தல் பொருந்தா தென்க. இனிக், கல்லாடம் பெரிய புராணத்திற்கும் முற்பட்ட நூலாகலின், அதன்கட் காணப்பட்ட பரிபுரக் கம்பலை இரு செவி யுண்ணுங், குடக்கோச் சேரன் என்னுங் குறிப்பினையே பெரியபுராணம் பிழைபடத் திரித்தெடுத்துச் சுந்தரமூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாண் மேல் ஏற்றியுரைப்ப தாயிற்றென்று உணர்ந்து கொள்க. அங்ஙனம் அதன் உண்மை காண்டற்குக் கல்லாடநூல் ஒரு பெருங் கருவியா யிருத்தலின், அது பெரிய புராணத்திற்கும் சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தர் அப்பர் என்னும் மூவர் காலத்திற்கும் மேற்பட்ட தென்பதனை விளக்கிக் காட்டுகவெனின்; அது மேலே காட்டினாமாயினும் இன்னும் சிறிது காட்டுதும். அக் கல்லாட நூல் நரியைக் குதிரை யாக்கியதனை 44-வது செய்யுளினும், பாணபத்திரர் பொருட்டு விறகுதலையனாய்ச் சென்று இசை பாடினதனை 45-வது செய்யுளினும், வையை யடைக்க மண் சுமந்ததனை 49-வது செய்யுளினும், மூர்த்தி நாயனார் முழங்கை தேய்த்த திருத்தொண்டினை 57-வது செய்யுளினும், சாக்கிய நாயனார் திருத்தொண்டினை 68-வது செய்யுளினும், இடைக்காடன் பிணக்குத் தீர்த்தனையும் காரைக்காலம் மையார் திருவாலங் காட்டிற் றிருநடங் கண்டதனையும் 78-வது செய்யுளினும், காரைக்காலம்மை மாங்கனியால் வீடு பெற்றமையினை 101-வது செய்யுளினும், இவற்றினும் பழைய திருவிளையாடல்கள் பலவற்றை இடையிடையே பல செய்யுட் களினும் அன்பால் என்பு நெருக்குருக எடுத்தோதியவாறு போலச், சிவ பெருமான் திருவருள் பெற்றோரிற் றலைசிறந்து நிற்கும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான ஏனைமூவரை ஒரு சிறிதுங் குறிப்பிடாமையால், அக் கல்லாட நூல் அம் மூவர்க்கும் முற்பட்ட தென்பது நன்கு பெறப்படும். அந் நூலாசிரியர் சிவபெருமானிடத்தும், அவனடியாரிடத்தும் பேரன்புடையராகக் காணப்படுதலால், அவர் அம் மூவர்க்கும் பின்னிருந்தனராயின் அவர் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு சிறிதாயினுங் கூறாது விடார். மற்று அம் மூவரைப் பற்றிய குறிப்புச் சிறிதுங் கூறாமை கொண்டே அவர் அவர்க்கு முன்னிருந்தாரென்பது ஒரு தலையாகத் துணியப்படும் என்க. அங்ஙனமாயின், திருஞான சம்பந்தப் பெருமான் வெப்பு நோய் தீர்த்தமை அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் ஒன்றாய் இருந்தலானும், கல்லாடத்துள் எட்டெட்டியற்றிய கட்டமர் சடையோன் என அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் குறிப்பிடப் பட்டிருத்தலானும் அந்நூல் திருஞான சம்பந்தர்க்கும் பிற்பட்டதாதல் பெறப்படுமாலோ வெனின்; மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திற் குறிப்பிடப்பட்ட பல திருவிளை யாடல்கள் பெரும்பற்றப் புலியூர் நம்பியார் திருவிளையாடற் புராணத்தினும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுங் காணப்படாமை யானும், இவ்விரு புராணங் களிற் காணப் பட்டனவும் ஒன்றிலுள்ளவாறு பிறிதொன்றிற் காணப் படாமல் ஒன்றில் ஒருவாறாயும் பிறிதொன்றிற் பிறிதொரு வாறாயும் இருப்பக் காண்டலானும், இறைவனே இயற்றிய திருவிளையாடல்களினிடையே திருஞானசம்பந்தப் பெருமானியற்றிய அற்புதங்களையுங் கோத்தற்கு ஓரியைபு இன்மை யானும் கல்லாடத்துட் குறிப்பிடப்பட்ட பழைய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கனுள் திருஞான சம்பந்தப் பெருமான் அவற்றிற்ப் பிற்காலத்தே நிகழ்த்திய அற்புதங்கள் சேர்ந்தில வென்பது தேற்றமாமென்க. என்றிதுகாறும் ஆராய்ந்து கூறியதுகொண்டு, பாண பத்திரரும் அவர் திருமுகங் கொண்டு சென்ற சேரமானும், திருஞான சம்பந்தப் பெருமானுக்கும் அவர்க்கும் முன்னிருந்த திருவாதவூரடிகட்கும் முற்பட்டவரா மென்பது இனிது பெறப்பட்டமையால், அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் என்பதில் இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசைபாடின திருவிளையாடல் குறிப்பிடப் பட்டதென யாங் கூறியவுரை பொருத்தமுற்று நிலைபெறுதல் காண்க. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு -திருக்குறள் அடிக்குறிப்பு 1. திருப்பெருந்துறைக்குங் கடலுக்கும் இடையிலுள்ள நில அளவினைத் திருப்பெருந்துறைக் கோயில் தருமகர்த்தாவான ஸ்ரீமத் சுந்தரலிங்கத் தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீமான் மகாலிங்கம் அவர்கள் வழியாகத் தெரிவித்தமைக்கு அவர்கள்பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக் கின்றேன். 3. வேதம் மக்கள் வாய்மொழியே என்பது வேதமொழியர் வெண்ணீற்றர் வேதமொடாகமம் மெய்யாம் இறைவனூல் வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதி நூலநாதி யமலன்றரு நூலிரண்டும் என்னும் திருமொழிகளை நண்பர் சிலர் எடுத்துக்காட்டி, இப்போது வடமொழியிற் காணப்படும் வேதாகமங்கள் இறைவன் வாய்மொழி ஆக மாட்டா என்று யாம் திருவாசக விரிவுரையின் அகத்தே விளக்கிய பகுதியை மறுத் துரைப்பதோடு, அவ் விரண்டு நூல்களும் இறைவன் அருளியன ஆகா என்று யாம் கூறுவது பெரிய தொரு குற்றமாம் என்றும் கூறுகின்றார்கள். வேத ஆகமப்பெயரால் இப்போது வடமொழியில் வழங்கும் நூல்களே யாம் நன்கு ஆராயாதகாலத்தே யாமும் அவற்றை இறைவன் வாய்மொழிகளென்றே நம்பிவந்தேம். பின்னர் அவற்றை எம்மால் இயன்றமட்டும் ஆராய்ந்து பார்த்தபின் அவை பண்டைநாளிலிருந்த அறிவுடையோரால் ஆக்கப்பட்டனவே யல்லாமல் இறைவன் வாய்மொழியாதல் ஒருவாற்றானும் ஏலாதென உணர்ந்தேம். உணரவே, எமதாராய்ச்சிக்குப் புலப்பட்டபடி அவை இறைவன்நூல் ஆகா என்பதற்குரிய காரணங்களையும் எடுத்துக் காட்டினேம். யாம் கூறியது பொருந்தாதாயின் யாம் எடுத்துக் காட்டிய காரணங்களை மறுத்து அவையிரண்டும் இறைவன் நூலேஆம் என்பதற்கு இசைந்த காரணங்களை இனிதுவிளக்கி எழுதுதலே அறிவுடையோர்க்கு முறையாகும். அவ்வாறு செய்தலைவிடுத்து வீணே எம்மை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்கு நன்றாகாது. இனி, வேதங்கள் எழுதப்பட்ட காலத்திற்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டு வந்த சான்றோர்கள் அவை இறைவன் வாய் மொழிகள் என்று கூறியதன் கருத்து யாதாயிருக்கலாம் என்பதனைப் பின்னே ஆராய்வாம். மற்று அவ் வேதங்கள் தம்முள்ளும், அவ் வேதங்கள் எழுதப்பட்ட காலத்துக்குச் சிறிது பின்னே வழங்கிய நூலுள்ளும் அவை இறைவன் வாய் மொழியே யென நாட்டுதற்கு ஏதேனுங் காரணம் உண்டா வெனச் சிறிது ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். என்னை? ஒருபொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து கைக் கொள்ளுதலினும் சிறந்த செயல் பிறிது இன்மையி னென்பது. இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களில் இருக்கு வேதம் ஒன்றே எல்லாவற்றினும் பழமையானதும், ஏனை மூன்றற்கும் தாயகமாவதும்ஆம். ஏனை மூன்று வேதங்களில் உள்ள மந்திரங்களிற் பெரும்பாலன இருக்குமா மறையினின்றும் எடுத்துக் கொள்ளப்பட்டன வேயாகும். ஆதலால் இருக்கு வேதத்தின் உண்மையை ஆராயவே ஏனைவேதங்களின் உண்மை தானே விளங்கும். இருக்குவேதம் பத்துமண்டிலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பத்து மண்டிலங்களினும் உள்ளவை ஆயிரத்துப் பதினேழு சூக்தங்கள் ஆகும். ஒரு சூக்தம் என்பது பல செய்யுட் களின் தொகுதி. வாலகில்லிய முனிவரால் எழுதி எட்டாம் மண்டிலத்தின் நடுவிற் சேர்க்கப்பட்டுள்ள பதினொரு சூக்தங்களையுஞ் சேர்த்தால் இவ்விருக்கு வேதத்தின்கண் உள்ளவை மொத்தம் ஆயிரத்து இருபத்தெட்டுச் சூக்தங் களாகும். இச் சூக்தங்கள் இருடிகளாலும் இருடிகளைத் தலைவராய்க் கொண்ட அவ்வக்குடும்பத்திலுள்ள பலராலும் பாடப்பட்டனவாகும். இதன் முதன் மண்டிலத்தின் கண் உள்ள நூற்றுத்தொண்ணுற்றெரு சூக்தங்களும் மதுச் சந்த, ஜேதர், மேதாதிதி, சுனச்சேபர், ஹிரண்யதூபர், கண்வர், ப்ர கண்வர், சவ்யர், நோத, பராசரர், கோதமர், குத்ஸர், காயபர், ரிஜ்ராவர், திரித ஆப்த்யர், கக்ஷிவான், பாவ யவ்யர், ரோமசர், பருச்சேபர், தீர்க்கதம, அகதியர், இந்திர அகதியர், லோபாமுத்ர அகதியர் முதலான இருடியர் களாற் பாடப்பட்டனவாகும். இங்ஙனமே ஏனை ஒன்பது மண்டிலங்களில் உள்ள சூக்தங்களையும் இயற்றின இருடியர் களின் பெயர்களை எடுத்துரைக்கப்புகின் இது மிக விரியு மாதலால், அவ்வம்மண்டிலங்களிற் பெரும்பான்மையான சூக்தங்களை இயற்றிய இருடியர்களின் பெயர்மட்டுமே ஈண்டுக் காட்டுவாம். இரண்டாம் மண்டிலத்தின்கண் உள்ள சூக்தங்கள் பலவற்றை இயற்றினவர் கிரித்ஸமதர்; மூன்றாம் மண்டிலத்தின் கட் பலவற்றை இயற்றினவர் விசுவாமித்திரர்; நான்காம் மண்டிலத்திற் பல இயற்றினவர் வாமதேவர்; ஐந்தாம் மண்டிலத்திற் பல இயற்றினவர் அத்திரி, ஆறாம் மண்டிலத்திற் பல இயற்றினவர் பரத்துவாசர்; ஏழாம் மண்டிலத்திற்பல இயற்றினவர் வசிட்டர்; எட்டாம் மண்டிலத்திற்பல இயற்றின வர் கண்வர்; ஒன்பதாம் மண்டிலத்திற்பல இயற்றினவர் ஆங்கிரசர்; பத்தாம் மண்டிலத்தில் உள்ளவைகள் முதன் மண்டிலத்தில் உள்ளவைகளைப் போலவே பலப்பலரால் இயற்றப்பட்டன. இனி, இச் சூக்தங்களை இயற்றிய இருடியர்களால் வழி படப்பட்ட கடவுளரும் பலர்; அவருள் முதன்மண்டிலத்தின்கண் வழுத்தப்பட்ட கடவுளர் பெயர்மட்டும் ஈண்டெடுத்துக் குறிக்கின்றாம். அவர்: அகதி, வாயு, இந்திரன், வருணன், மித்திரன், அசுவினிகள், விசுவதேவர், சரசுவதி, மருத்துக்கள், ஆப்ரி, ரிது, தூவஷ்டர், பிரஹ்மணபதி, சோமன், தக்ஷிணா, ரிபுக்கள், சவிதர், இந்திராணி, வருணாநி, அக்நாயீ, விஷ்ணு, பூஷன், அர்யமன், ஆதித்தியர், உருத்திரன், சூர்யன், அதிதி, வநயன், பாவயவ்யன், ரோமசன், பிருகபதி, அசுவம், ரதி முதலியோராவர். முதன் மண்டிலத்து நூற்றுப்பதினொரு சூக்தங்களில் இரண்டு சூக்தங்களே உருத்திரனை வழுத்து கின்றன. இருக்குவேதம் முழுதும்உள்ள ஆயிரத்து இருபத் தெட்டு சூக்தங்களில் நான்கு சூக்தங்களே உருத்திரர்க்குத் தனியே காணப்படுகின்றன. ஏனை ஆயிரத்து இருபத்து நான்கு சூக்தங்களும் ஏனைக்கடவுளரை வழுத்துவனவா யிருக்கின்றன. அது நிற்க. இவ் விருக்குவேத முதன் மண்டிலத்தின்கண் உருத்திர மூர்த்திமேற் கண்ணுவ இருடியாற் பாடப்பட்டிருக்கும் 43. ஆம் சூக்தத்தினை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தருகின்றாம். அது கடவுள் வாய்மொழியே யென்று சொல்லத்தக்கதான, அடையாளம் உடையதா என்பதை அன்பர்கள் கருத்தூன்றிப் பார்த்தல்வேண்டும். அச் சூக்தம் வருமாறு. 1. வலியராய் மிக்க ஈகையுடையோராய்ச் சிறந்த அறிவீனராய் இருக்கும் உருத்திரருக்கு அவர் உள்ளத்திற்கு மிக இனியதாக நாம் எதனைப் பாடுவோம்? 2. நம்மைச் சேர்ந்தோர்க்கும் நம்முடைய ஆக்களுக்கும் நம்முடைய எருதுகளுக்கும் நம்பின்னோர்க்கும் அதிதியானவன் உருத்திரரின் அருளை வழங்குதற் பொருட்டும்; 3. மித்திரரும் வருணரும் உருத்திரரும் எல்லாக் கடவுளரும் ஒரே உள்ளத்தினராய் எம்மை நினைவு கூர்தற் பொருட்டும்; 4. களிப்பினையும் நலத்தினையும் வலிமையினையும் பெறுதற் பொருட்டும் வேள்விகட்கும் பாட்டுகட்கும் நோய்நீக்கும் மருந்துகட்கும் தலைவரான உருத்திரரை வேண்டிக் கொள்கின்றேம். 5. நல்லவரும் கடவுளரிற் சிறந்தோருமான அவர் கதிரவனைப் போற் பேரொளியோடு விளங்குகிறார், விளக்கமான பொன்னைப் போல் அவர் மிகுந்த ஒளியுடைய வராய் இருக்கின்றார். 6. பசுபதியான அவர் நம்முடைய போர்க்குதிரைகளுக்கு நலத்தினையும், நம்முடைய செம்மறிக் கிடாய்கள் கிடாரிகள், நம் ஆடவர் பெணடிர் ஆக்கள் என்னும் இவர்கட்கு நல்வாழ்வி னையும் தந்தருள்வாராக. 7. ஓ! சோமரே, நூறு ஆடவர்க்குரிய மாட்சிமை யினையும் வலிமையிற் சிறந்த படைத் தலைவர்க்குரிய பெரும் புகழையும் எங்கள்மேல் வைத்தருள்க. 8. பிறர் தீய எண்ணங்களும் வருத்துவோரும் எம்மைத் தடை செய்யாதிருக்க. இந்துவே வலிமையில் எமக்கு ஒரு பங்கு கொடுத்தருள்க. 9. சோமரே, தலையையும் நடு இடத்தையும் காதல் கூர்ந்தருள்க; சோமரே, மூவாதவரான நும்மக்கள் தூயதான உயர்ந்த உலகத்தில் உமக்குத் தொண்டுசெய்யும்படி அறிந்தருள்க. இந்தச் சூக்தத்தினைப் படித்துப்பார்ப்பவர் எவரேனும் இதனைக் கடவுள் வாய்மொழியென்று கூற ஒருப்படுவரா? இப்பதிகத்தால் வழுத்தப்படும் கடவுள் உருத்திரராகவும் வழுத்துவோர் ஒரு முனிவராகவும் அல்லவோ இருக்கக் காண்கின்றோம்? இப் பதிகத்தினை இயற்றிய முனிவர் பெயர் இதன்கட் குறிக்கப்பட்டிருக்கவும் இதனை விடுத்து, இது கடவுள் வாய்மொழி என்று கூறினால் கடவுள் தம்மைத்தாமே வணங்கி வாழ்த்திக் கொண்டாரென்றன்றோ கொள்ள வேண்டி வரும்? ஓராண்மகன் தனக்குள்ள குறைபாடுகளை அறிவித்து அவற்றை நீக்கிக் கொள்ளல் வேண்டி இறைவனை வழுத்திக்கூறும் இப் பதிகத்தினை ஆராய்ந்துகாணும் அறிவுடையார் கடவுள் வாய்மொழி யென்று கூறுதற்கு முன் வருவரோ? குறை பாடுடைய மக்கள் வாய்மொழியைக் குறைபாடில்லாத இறைவன் வாய்மொழியாகப் போலி நம்பிக்கையால் துணிந்து கூறுதல் குற்றமோ, மக்கள் வாய்மொழியை மக்கள் வாய்மொழி யென்றே ஆராய்ந்து உண்மையை உள்ளவாறு கூறுதல் குற்றமோ என்பதை அன்பர்களே பகுத்தாராய்ந்து கொள்ளல் வேண்டும். இன்னும் இருக்குவேத முதன் மண்டிலத்தின் 63-வது சூக்தத்தின் கடைப்பாட்டில் அம் மந்திரங்கள் கோதமராற் செய்யப்பட்டன வென்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. அம் மண்டிலத்தின் 426-வது சூக்தத்தின் முதற்பாட்டில் சிந்து நதிக்கரையிலிருக்கும் பாவ்ய மன்னனின் உண்மைப் புகழுரைகளாகிய இம் மந்திரங்களை நினக்குத் தருகின்றேன். ஏனென்றால், வெல்லப்படாத அவ் வரசன் பெரும்புகழ் வேண்டி ஆயிரம் வேள்விகளை எனக்குச் செய்யக் கொடுத்தான் எனவும், அதன் இரண்டாம் பாட்டில் அவ்வரசனிடமிருந்து நூறு கழுத்தணி களையும் நூறு போர்க் குதிரைகளையும் வேண்டிப்பெற்றுக் கொண்டேன். கக்ஷிவானாகிய யான் அத்தலைவனுடைய ஆயிரம் ஆக்களையும் அங்ஙனமே பெற்றேன். எனவும், அதன் 127-வது சூக்தத்தின் இரண்டாம் பாட்டில் ஆங்கிரஸரில் மூத்தோராற் பாடப்பட்ட மந்திரங்களைக் கொண்டு நின்னை அழைக்கின்றோம் எனவும், ஏழாம்பாட்டில் வானைநோக்கி மந்திரங்களைப் பாடினோர் போலப் பிருகுக்களும் தங்களாற் பாடப்பட்ட மந்திரங்களையும் புகழுரைகளையுங் கொண்டு அவனை அழைத்தார்கள் எனவும் 123-வது சூக்தத்தின் ஆறாம்பாட்டில் எங்கள் மகிழ்ச்சியோடு கூடிய மந்திரங்களும். தூய நினைவுகளும் மேல்நோக்கி எழுக எனவும் போந்தவைகளையும், இன்னும் இங்ஙனமே இருக்கு வேதத்தும் மற்றை வேதங்களினும் பலப்பலவாய்க் காணப்படும் சொற்றோடர்களையும் உற்று நோக்கவல்ல நடுநிலையாளர்க்கு இவ் ஆரிய வேதங்கள் மக்கள் வாய்மொழியே யாகுமல்லது கடவுள் வாய்மொழியாதல் தினையளவுமாகாதென்பது தெற்றெனப் புலப்படும். இவ் வேதப்பாட்டுகளைப் பாடிய ஆரியமக்கள் இவ் இந்திய நாட்டுக்குப் புறம்பேயுள்ள வடநாடுகளிலிருந்து போந்து, இந்தியாவிற் குடியேறின ரென்பதும், அவர் வருவதற்குமுன் இந்தியாநாடெங்குமிருந்த தமிழ்மக்கள் நாகரிகத்தில் மிகச் சிறந்தவராயிருந்தமையின் அவரோடெ திர்த்துப் போராடமாட்டாமல் ஆரியர் மிகவருந்தித் தாம் வழிபட்ட இந்திரன் என்னும் ஒரு சிறு தெய்வத்தைப் பெரிதாகக் கருதி அதன் றுணையைப் பெரிதும் நாடி வேண்டினரென்பதும், தமக்கு மாறாயிருந்த தமிழ்மக்களைப் பெரிதும் இகழ்ந்து அவர்களைத் தாசர் என்றும் அசுரர் என்றும் வழங்கினாரென்பதும் இருக்குவேதத்தை ஒரு முறை படித்துப் பார்ப்பவர்க்கும் இனிது விளங்கா நிற்கும். பண்டைநாளிலிருந்த தமிழர்கள் சொல்வளமும் அரசியல் வலிமையும் பேராண்மையும் மிகுதியும் உடையரா யிருந்தமை யும், உயிர்களைக் கொன்று செய்யும் வேள்விகட்குப் பகைவரானமையும் பற்றி ஆரியர் அவரை இகழ்ந்துரைத்தல் இருக்குவேத முதல்மண்டிலத்து முப்பத்து மூன்றாஞ் சூக்தத்து இந்திரனே, நீ செல்வத்தாற் சிறந்த தாசர்களை நினது படைக்கலத்தாற் கொன்று, உனக்கு உதவியாய் இருப்பவரோடு உடன் செல்கின்றாய்! வேள்வி செய்யாத அப் பழையோர் வானிடத்திற்கு மிகச்சேயராய்ப் பலமுகமாகச் சென்று அழிந்து படுகின்றனர். என்னும் நான்காம் பாட்டினாலும், பொன்னாலும் மணிக்கலன்களாலும் வரிசை வரிசையாக ஒப்பனை செய்யப் பட்டோராய் அத் தாசர்கள் இந்நிலம் முழுதும் ஒரு மறைப் பினை விரித்தார்கள் என்னும் எட்டாம் பாட்டினாலும், இலிபிசனுக்கு உரிய வலிய கோட்டைகளை யெல்லாம் இந்திரன் இடித்துத் தகர்த்தான் என்னும் பன்னிரண்டாம் பாட்டினாலும், ஐம்பத்தோராம் சூக்தத்திலுள்ள ஆண்மை நெஞ்சமுடையோனே, நீ பிப்ருவின் கோட்டைகளைத் தகர்த்துத் தாசர்களைக் கொன்று வீழ்த்தினபோது ரிஜி வானுக்கு உதவி புரிந்தாய் என்னும் ஐந்தாம் பாட்டினாலும் வலிமையிற் சிறந்த அற்புதங்களையும் நீ நின் அடிக்கீழ் இட்டு மிதித்தாய் என்னும் ஆறாம் பாட்டினாலும், ஆரியரையும் தாசரையும் நீ நன்றாய்ப் பகுத்தறிவாயாக என்னும் எட்டாம் பாட்டினாலும், சுஷ்ணா என்பவனுடைய உறுதியாய்க் கட்டப்பட்ட கோட்டைகளை அவர் துண்டு துண்டாகப் பிளந்தெறிந்தான் என்னும் பதினோராம் பாட்டினாலும் நன்கு தெளியப்படும். 4. தேவூர்த்தென்பால் திகழ்தரு தீவைப் பற்றிய ஒரு குறிப்பு திருநாகைக்கு அணித்தாயுள்ள கீழ்வேளுர்க்குத் தெற்கே திருத்தேவூர் என்னும் ஒரு சிவதலம் இருக்கின்றது. அத்தேவூருக்குத் தென்பக்கத்தே நாற்புறமும் நன்செய் வயலானும் நீரானுஞ் சூழப்பட்டு நடுவே உயர்ந்த ஒரு மண்மேடு அப்பக்கத்துள்ளவர்களால் தீவு என்று பெயரிடப்பட்டு நிற்கின்றது. அத் தீவின்கட் பழைய கல்மண்டபங்களும் இருக்கின்றன. சிவபெருமானிடத்து அன்புமிக்க ஒரு முனிவரர் தம் மனைவியோடும் அத் தீவின்கட் பண்டொரு காலத்தில் உறைந்து வந்தனர். அவர் தமது குழந்தைக்கும் பூசனைக்கும் பயன்படும் பொருட்டுக் கன்று ஈன்ற ஓர் ஆவினை வளர்த்து வந்தனர் அவ் ஆ சில நாட்களின்பின் சடுதியில் இறந்துபடப், பாலின்மையால் தமது பூசனை நடைபெறாததோடு, கன்றுங் குழந்தையும் பசிபெறாமல் மிக வருந்துதல்கண்டு, அம் முனிவரர் உளம்நைந்து சிவபெருமானை நினைந்து உருகினர். அவ் வடியவர் துயர்பொறாத ஆண்டவன் உடனே அவ் ஆவின் வடிவெடுத்து அங்குள்ள துயர்நீக்கினர். இந்நிகழ்ச்சியைக் கல்வடிவில் அமைத்து அத் தீவின்கண் வைத்திருக்கின்றனராம். இந் நிகழ்ச்சியை நமக்கு அன்புகூர்ந்து தெரிவித்தவர் திருச்சிராப் பள்ளியிற் கல்வி கேள்விகளிற் சிறந்த சிவனடியா ராய் விளங்கும் சைவத்திருவாளர் தி. சாம்பசிவம்பிள்ளை யவர்களேயாம். இவர்கள் தெரிவித்த இவ்வரலாற்றைத் தேவூரிலா யினும் அதற்கு அருகிலா யினும் உள்ள அன்பர்கள் ஆராய்ந்தறிந்து அதன் உண்மையை உறுதிப்படுத்துவார் களாயின் அதனைத் திருவாசக விரிவுரையிற் சேர்த்துக் கொண்டு அவர் கட்கு எமது கடமையினைத் தெரிவிப்பேம். இவ் வரலாற்றை நமக்காக அன்புகூர்ந்து தெரிந்தெழுகிய சாம்பசிவம்பிள்ளை யவர்கட்கு யாம் பெரிதும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையோம். இங்ஙனமே கல்லாடம், பஞ்சப்பள்ளி, நந்தம்பாடி, வேலம்புத் தூர், சாந்தம்புத்தூர், வெண்காடு, பாண்டூர், திருவாரூர், திருவிடை மருது, திருவாஞ்சியம், கடம்பூர், ஈங்கோய்மலை, துருத்தி, திருப்பனையூர், கழுமலம், புறம்பயம், குற்றலாம், சந்திரதீபம் முதலான தலங்களில் நிகழ்ந்தனவாகத் திருவாதவூரடிகள் குறித்தருளிய நிகழ்ச்சிகளும் ஆங்காங்குள்ள அன்பர்கள் நன்காராய்ந்து தெரிந்து நமக்குத் தெரிவிப்பர் களாயின் அவர்க்கெல்லாம் நமது கடமைப் பாட்டினைத் தெரிவிப்பேம். திருவாதவூரடிகள் திருவடிக்கும், சிவபெருமான் திருவடிக்கும், சைவசித்தாந்தந்திற்கும் ஒன்றுக்கும் பற்றாதயாம் செய்தற்கு எடுத்துக்கொண்ட இவ் விரிவுரைத் தொண்டானது இனிது நிறைவேறும் வண்ணம் எமக்குப் பலவகையாலும் உதவி புரியும் மெய்யன்பர்களின் உதவியே எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்கும். தாமும் இங்ஙனஞ் செய்ய மாட்டாது அது செய்யும் பிறரையும் அதுசெய்ய வொட்டாது இகழ்ந்து இகழ்ந்து தூற்றித் திரியும் ஏனையோர் செயல் அவர் தமக்கே தீதாய் முடிந்து மறைந்து போமென்பது திண்ணம். நம்மைத் தூற்றித்திரிவார் பொய்யுரைகளால் ஏனையோர் மயங்காமைப் பொருட்டு உண்மையை ஊக்கத்தோடு காட்டிவரும் யாழ்ப்பாணத்துச் சட்டநூல் வல்ல சைவத்திருவாளர் K.S. கனகராயர்க்கும் அவரைச் சார்ந்த நன்பர்க்கும் யாம் பெரிதும் நன்றி கூறுகின்றோம். நாகபட்டினத்திற்கு அருகேயுள்ள அந்தணப்பேட்டைச் சன்மார்க்க சங்கத் துக் காரியதரிசி சைவத் திருவாளர். அகு..FkhurhÄஅவர்கŸந«பொருட்டு¤தேவூர்க்கு¢சென்Wஅத‹தென்பாšஉள்sஇடவரலாற்றைக்கற்றர்கல்லாதhரில்ஆ©டில் மிகமுதி®ந்தபலரிட¤துங்கேட்Lம்,தhமேஅவ்விடத்திYள்ளமண்டபங்கiளப்பார்¤தும் பின்வருkறுநkக்குஎGதித்தெரிவிக்கிறh®: தாங்கள் செந்தமிழ்க் களஞ்சியத்தின் 6-ஆம் பகுதியிற் குறித்துள்ளவை பெரும்பாலும் உண்மையே. எனினும், அவ்விடத்திற்குத் தீவு எனும் பெயர் வழங்கியதின்றென všலாரும்jÇÉக்கின்றனர்.தேவூ®¢ சிவாலயம் அதனைச் சூழ்ந்த தெருக்கள் எல்லாவற்றிற்கும் தென்கீழ்த் திசையில் அரைக்காலே அரைவீசம் மைல் தொலைவிற் பண்டைக்காலத்தனவான, கிழக்கு நோக்கிய செங்கல் மண்டபங்கள் இருக்கின்றன. அம்மண்டபங்களுக்குத் தென்கீழ்த் திசையில் ஓர் இன்சுவைத் தெண்ணீர்த் தடாகமும், தென்மேற் புறங்களில் தென்னை, இருப்பை முதலான பல மரங்கள் அடர்ந்த தோப்புகளும், வட கீழ்ப்புறங்களில் நன்செய் வயல்களும் சூழ்ந்திருக்கின்றன. அம் மண்டபங்களின் ஒன்றிலுள்ள தென்புறச் சுவரில் ஏறக்குறைய நான்கடி நீளமும், இரண்டரையடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் இடபம் ஊர்ந்த அம்மையப்பர் வடிவும், ஒரு சிவலிங்க வடிவும், ஒரு முனிவரர் அவர் தம் மனைவியார் வடிவும், இறந்து பட்ட ஒரு பசுவின் வடிவும், உயிரோடு கூடிய பசு ஒன்று ஒரு கன்றிற்குப் பால் கொடுக்கும் வடிவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு இப்போது பசுபதீசுவரர்க் கோயில் என்னும் பெயர் வழங்கி வருகிறது. ஏறக்குறையப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்க்கூடத் தடாகத்தின் தென்கரையிற் பத்து வீடுகள் இருந்தன என்று சொல்லுகின்றனர். ஆனால், இப்போது அவ் வீடுகள் சிதைவுற்றிருக்கின்றன. அங்கே தவஞ் செய்துவந்த முனிவரர் ஒருவர் ஏதோ சாபம் தீரவேண்டிய பலவகைப்பட்ட உயர்ந்த பசுக்களே ஏராளமாக வைத்துப் பாதுகாத்துக்கொண்டு, சிவபிரானிடத்து மிக்க அன்புடையராய் ஒழுகினர். அப் பசுக்களில் ஒன்று கன்று ஈன்ற சின்னாட்களில் இறந்துபட்டது. அப்போது அம் முனிவரர் உளம் நைந்துருக, இறைவன் திருவுளம் இரங்கி அப் பசுவின் உருவெடுத்துக் கன்றுக்குப் பால்கொடுத்து அம் முனிவரர் சாபமுந் தீர்த்து, அம் முனிவரர் அவர் மனைவியார் இறந்த பசு அதன் கன்று முதலிய எல்லார்க்கும் வீடுபேறு அளித்ததருளினார். எல்லாரும் இவ் வரலாற்றை இங்ஙனமே கூறுகின்றனர். ஆனால், அம் முனிவரருக்கு மகவு ஒன்றிருந்ததென எவருமே சொல்லவில்லை. இவ் வரலாற்றினை நேரே போய்த் தெரிந்தெழுதின அன்பர் குமாரசாமி யவர்கட்கு நாம் பெரிதுங் கடமைப் பட்டிருக்கின்றோம். அன்பர் சாம்பசிவம் பிள்ளை யவர்கள் தெரிவித்த வரலாற்றிற்கும் இதற்கும் சிற்சில வேறு பாடுகள் இருப்பினும், இரண்டும் பெரும்பாலும் ஒத்திருத்தலிற் கோ ஆர் கோலம் என்பதற்கு ஆவின்றன்மை நிறைந்த கோலத்தினை என உரைத்து உரையைத் திருத்திக்கொள்க. புறம்பயமதனில் அறம்பல அருளியும் என்பதன் குறிப்பு சென்னைக் கல்யாணராம ஐயர் புத்தக சாலையில் எழுத்தாளரான ஸ்ரீமான் ரா. மகாலிங்கம் அவர்கள் பலரை உசாவியும், பல நூல்களைப் பார்த்தும், கல்வெட்டுகளை ஆராய்ந்தும் குருமுயற்சியோடு எமக்கு எழுதிய சிவ தலக்குறிப்புகளுள் திருப்புறம் பயத்தைப் பற்றிய குறிப்பும், திருக்கடம்பூரைப் பற்றிய குறிப்பும் மாணிக்கவாசகப் பெருமான் குறித்தருளிய வரலாற்றினை விளக்குதலின் அவற்றை இங்கே வரைகின்றாம். இக் குறிப்புகளை மிக வருந்தித் தேடி நமக்குத் தெரிவித்த ஸ்ரீமான் மகாலிங்கம் அவர்கட்கு யாம் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றேம். சிவபெருமான் தட்சணாமூர்த்தி யுருவாய்த் தோன்றிச் சநகர் முதலான முனிவரர் நால்வர்க்கும் அற நூற் பொருள்களை அறிவுறுத்த காரணத்தால் புறம்பயமதனில் அறம்பல அருளியும் என்று அருளிச் செய்தார். புறம்பயஞ் சந்நிதிக்குக் கிழக்கேயுள்ள திருக்குளத்தின் கரைமேல் எழுந்தருளி யிருக்கும் குருமூர்த்தமே அவ்வுபதேச மூர்த்தியா யிருக்கலாம் என்று கருதுகின்றனர். கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் என்பதன் குறிப்பு திருக்கடம்பூர் என்னுந் தலம் இக் காலத்தில் மேலைக்கடவூர் என வழங்கி வருகின்றது. அங்கே இந்திரன் சிவபெருமானை வழிபட்டுத், தனக்கெழுந்த அன்பின் மேலீட்டாற் சிவலிங்கப் பெருமானைக் கோயிலோடும் அகழ்ந்தெடுத்துக்கொண்டுபோக விழைந்து, தனது கரத்தால் அகழ அகழக் கோயிலின் அடி காணப்படாமற் கீழே நிலத்தினுள் ஊடுருவிக் கொண்டு செல்லக் கண்டு வியந்து, முன்னிருந்தபடியே வைத்து வழிபாடாற்றினன் என்பது. இங்ஙனம் சிவபெருமான் இங்கே இடம் நிலைபெற இருந்த காரணத்தாற் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் என்றருளிச் செய்தார். 5. திருவாசக மூவாநான்மறைச் சொற்றொடர் விரிவுரைமேல் எழுந்த ஆராய்ச்சி திருவாசக போற்றித் திருவகவலிற் போந்த மூவா நான்மறை என்னுஞ் சொற்றொடராற் குறிக்கப்பட்டவை, இஞ்ஞான்று வேதங்கள் என்னும் பெயரால் வழங்கப்பட்டு வரும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரிய மொழி நூல்களா, அன்றி அவற்றின் வேறான தமிழ்நூல்களா என ஆராய்ந்து ஆரிய மொழி நூல்கள் எல்லாவற்றிற்கும் முற்பட்டதாகிய இருக்கு வேதத்தில் தமிழ்ச் சான்றோர் இலைமறைக்காய் போற் சேர்த்துவைத்த உருத்திர வழிபாடு ஒன்றைத் தவிரப், பெரும்பான்மையான அதன் மற்றப் பகுதிகளெல்லாம் இந்திரன் வருணன் மித்திரன் என்னுஞ் சிறு தெய்வ வழிபாடும், அத் தெய்வங்கள் பொருட்டு ஆடு மாடு குதிரை, மக்கள் முதலியோரைக் கொன்று சோமப் பூண்டின் சாறாகிய கள்ளைத் தொட்டி தொட்டியாய் வைத்து வேட்டு அவ்வூனையுங் கள்ளையும் அருந்தி வெறியாடுதற்கு ஏதுவாகிய வேள்விகளும் மலிந்து கிடக்கக் காண்டலின், ஆரியர்க்கே உரியனவாகிய அவ் வேதப் பகுதிகளின் வழியே அவற்றின் பிற்றோன்றிய அந்நூல்கள் வெறும் பூசாரிப் பாட்டுகளேயாகும் அல்லாமற், சிவபிரானால் அருளிச் செய்யப்படுந் தகுதிப்பாடு உடையன அல்ல என்றும், சிவபிரானால் உண்மையில் அருளிச்செய்யப்பட்டவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பெரும்பொருள்களை அறிவுறுத்திக், கொலை குடி முதலான பெரும் பாவங்களிற் செல்லாமல் மக்களைத் தடைசெய்து அவரைப் புனிதராக்கி அவரை வீடுபேற்றின்கண் உய்க்குந் திறத்தவாய்ப் பண்டை நாளிலிருந்த தமிழ்நான்மறை களேயா மென்றும், முழுமுதற் கடவுளான சிவபிரானையும் அம்மையையுமன்றி வேறெத் தெய்வத்தையும் நினையாது கொல்லா அறத்தையே விழுமிதாக் கொண்டு நிலவிய நம் சைவசமய ஆசிரியன்மார் தம் அருட்டிருமொழிகளாற் புகழ்ந்தெடுத்துக் கூறியவை தமிழ்நான்மறைகளையா மென்றும், அம் மறைகள் பண்டைத் தமிழ்நாடு கடல் கொண்டகாலத்து உடன் மறைந்துபோயினும், அவற்றிற் கூறிய மெய்ப்பொருள் களை தொல்காப்பியம் திருக்குறள் திருமந்திரம், தேவார திருவாசகம், சிவஞானபோதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களில் நிலைபெற்றுக் கிடக் கின்றன வென்றும் எமது திருவாசக விரிவுரையில் நன்கெடுத்து விளக்கினேம். அவ்வுரையிற்கண்ட அவ்வாராய்ச்சி முடிபு பொருந் துமா, பொருந்தாதா என்று தெளியவேண்டின், ஆரியமொழி யிலுள்ள இருக்குவேதத்தையும் தமிழில் உள்ள மேற்காட்டிய நூல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து எப்பொருள் விழுமிதென நடுநின்று தேர்ந்து தெளிதல்வேண்டும். அங்ஙனம் தெளிதற் குரிய நன்முறையினை விடுத்து, தேவார திருவாசகம் முதலான தமிழ்நூல்களில் வேதம், மறை, இருக்கு என்னுஞ் சொற்கள் வரும் சொற்றெடர்களைப் பொறுக்கிச் சேர்த்து, இத்துணைச் சொற்றொடர்களும் இருக்கு முதலான ஆரிய வேதங்களையே குறிக்கின்றனவென்றும், இவ்வாறு நம் ஆசிரியர்களாற் புகழ்ந்து ஏத்தப்படும் அவ்வாரிய வேதங்களைப் பழித்தல் நம் ஆசிரியர்களையே பழித்துச் சைவசமய வரம்பை அழித்தலே யாகுமென்றும் ஒரு சிற்றுரைஎழுதி, அதற்கு மற்றொரு தமிழ்ப்புலவர்பாற் புகழ்ச்சியுரை ஒன்றும் வாங்கிச் சேர்த்து நண்பர் ஒருவர் சென்ற ஆண்டு ஒரு சிறு சுவடி வெளியிட்டனர். இந் நண்பரைப்போலவே இவர்க்கு முன்னும் இத்தகைய தடைகள் நிகழ்த்தினார் சிலர் உளர். அவர் நிகழ்த்திய அத் தடைகளுட் கருதிப் பார்க்கத்தக்கவற்றிற் கெல்லாம் விடைகள் எழுதி, அவ்வப்போது வெளிவந்த திருவாசக விரிவுரை மேலேடுகளில் அவைதம்மை வெளியிடு வித்தேம். எடுத்த பொருளை ஆராய்ந்து பார்த்தல் விடுத்து வீணே எம்மேல் வசைமொழிகளை வாரியிறைத்தார் தம் புல்லிய உரைகளை அவ்வளவில் அவன் மகிழுக என்னும் நயமேபற்றி, எம்முடைய நன்முயற்சியையுங் காலத்தையும் வறிதே கழிக்க மனம் ஒருப்படாமையிற் பொருட்படுத்தாது விட்டேம். இனி, மேற் குறிப்பிட்ட நண்பர் சென்ற ஆண்டு வெளியிட்ட சிறுசுவடியிற் கண்ட சிலவற்றைக்கண்டு பிறர் மயங்காமைப் பொருட்டு, அவை தமக்குச் சுருக்கமான விடைகள் ஈண்டளிக்க லாயினேம். அச் சிறு சுவடிக்குப் புகழ்ச்சியுரை எழுதிய புலவர், யாம் சைவவேடம் பூண்டு சைவநூல் வரம்பை அழிக்கின்றேம் என்றும், சைவநூற் கொள்கை எமக்குப் பொருந்தாதெனக் காணப்படின் யாம் அச் சமயத்தைவிட்டு வேறு சமயம் புகுதலே நன்றென்றும், அங்ஙனஞ் செய்யாது சைவத்துள்ளேயே நின்று கொண்டு அதற்கு மாறானவற்றைச் செய்தல் எந்தமக்கே நாணத்தை உண்டாக்கற் பாலதென்றும் எமக்கோர் அறிவுரை கூறினார். சைவசமயக் கொள்கை பொருந்தாதெனக் கண்டே மாயின் யாம் வேறு சமயம் புகுந்திருக்கலாம்; இந்நண்பர் உரையைக் கேட்டுத்தான் யாம் அது செய்தல் வேண்டுமெனக் காத்திரேம். தாம் வயிறு பிழைக்கும் பொருட்டுச் சைவ சமயப் பெயராற் பிறர் கட்டிவைத்த பொருந்தாப் புராணப் பொய்க்கதைகளே சைவசமயத்தின் உண்மைபோலும் என நினைந்து அதனை அருவருத்துக் கூட்டங் கூட்டமாய்க் கிறித்துவசமயம் புகுந்தவர்களெல்லாம் இப் புலவர் சொல்லைக் கேட்டுப் புகுந்தவர் அல்லர். எங்கள் சைவ புராணங்களிற் சொல்லிருப்பவைகளை அப்படியே நம்பினால் தான் நீங்கள் சைவர்கள்; இல்லாவிடின் நீங்கள் எல்லீரும் கிறித்துவம் மகமதியம் முதலான பிறசமயங்களிற் புகுந்திடுதலே நன்று. எமது சைவசமயத்தில் நின்று கொண்டு எம்முடைய புராணப்பொருள் களை நம்பாமல் அதனைப் பழித்தல் கூடாது, என்று இந்தப் புலவரைப் போல இன்னும் சிலர் தோன்றி, இத்துணை நுட்பமான அறிவுரையைச் செய்து வந்திருப்பராயின், கிறித்துவப் பாதிரிமார்க்கு இவ்வளவு பொருட்செலவும் பெரு முயற்சியும் நேர்ந்திரா. மிக எளிதிலே கிறித்து மதம் எங்கும் பரவியிருக்கும்; சைவ சமயம் வேரோடு அழிந்து போயிருக்கும். இத்தகைய சைவப் புலவர் பலர் தோன்றாதது கிறித்துவம் முதலான புறச்சமயத்தின் தவக்குறைவே, சோமநாதத்தில் இருந்த சைவநூற் புத்தகசாலையுட் புகுந்த கசினி யின் மகமதிய அரசன் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஏட்டுச்சுவடிகளைக் கண்டு இவை யாவை? என்று வினவ, இவை சைவசமய நூல்கள் என்று அங்குள்ளார் கூறியபோது, எங்கள் குரானுக்கு மாறான பொருள்கள் அடங்கினவாயின் இவை இருத்தல் ஆகாது; குரானில் உள்ள பொருள்களே இவற்றிலும் இருப்பின் இவை இருத்தலும் மிகை; குரானில் இல்லாத பொருள் இவற்றுள் இருப்பின் அத்தகை யனவும் இருத்தல் ஆகாது; ஆகையால் இவை தம்மைத் தீயிட்டுக் கொளுத்து! என்றனானம். அம்மகமதிய அரசனிலும், இத் தமிழ்ப்புலவர் மிக நல்லவர். மிக்க இரக்கமுடையர். ஏனெனில், அவ்வரசன் தன்மதத்திற்கு இசை யாதவற்றைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னான்; இப் புலவரோ சைவ புராணங்களை நம்பாதவரைத் தீயிட்டுக் கொளுத்தச் சொல்லவில்லை. பிற மதத்திற்குப் போம்படிதானே இனிமையாக வற்புறுத்து கின்றார். இன்னும் சிவதருமோத்தரம எழுதினவரைக் காட்டினும் இத் தமிழ்ப் புலவர் மிக நல்லர். மிக்க இரக்க முடையவர். ஏனென்றால் சிவதரு மோத்திரம் எழுதினவர் சைவநூற் பொருளை நிலநிறுத்தவல்ல ஒருவன் அது செய்யா மற் பிறவழியிற் செல்வானாயின் அவனைக் கொலை செய்து விடு, அஃது அறமேயல்லாமற், குற்றம் அன்று என்கின்றார். மற்று இத்தமிழ்ப் புலவரோ சைவபுராணங்கட்கு மாறாய்ப் பேசுவோரை அங்ஙனம் கொலை செய்யும்படி கற்பித்தாரா? இல்லையே, பிற மதத்திற்குத்தானே அவரைப் போகச் சொல் கின்றார். அதனால் இவர் மிக நல்லர். மிக்க இரக்கமுடையர். ஆனால், இவர் இவ்வளவு இரக்கங் காட்டுவதில் ஓர் இடைஞ்சல் இருக்கின்றது; யாதென்றாற், சிவதருமோத்தரம் இப் புலவரையொத்த சைவர்களால் முழுதும் சிறந்த நூலாகக் கைக் கொள்ளப்படுவது; அத்தகைய சிறந்த நூலோ சைவநூலுக்கு மாறாய்ப் போனவர்களைக் கொன்றுவிடும் படி வற்புறுத்திச் சொல்கின்றது. ஆனால், இந்தப் புலவரோ அத்தகையோரைப் பிற சமயத்திற்குப் போகும்படி மட்டுஞ் சொல்கின்றார்; இவர் தமது சைவநூலுக்கு மாறாய்ப் பேசுவதைக் கண்டு, இவரைவிட அதன்பால் நம்பிக்கை வைத்த மற்றொரு சைவர் இந்தப் புலவரைக் கொன்று விட வந்தால் என் செய்வது, எனது முதலில் அஞ்சினேம்; ஆனாலும் இப் புலவர் கூறும் வெள்ளைப் பெரியார் ஆளும் இவ்வரசாட்சியில் அங்ஙனம் ஒருவரையொருவர் கொலை செய்தல் கூடாமையால் இவரினும் நம்பிக்கையுடைய சைவர் இப் புலவரைக் கொல்லல் முடியாதென்று அச்சம் தவிர்ந்தேம். சிவஞான போத மாபாடியத்தை முதலில் அரைப்பகுதியாக வெளியிட்ட இந்தப் புலவர் இன்னும் நீண்ட காலம் இவ்வுலகத்தில் உயிர் வாழுமாறு சிவபிரான் அருள்புரிக. சிவதரு மோத்தரத்திற்கு மாறாக இவர் இரக்கங் காட்டுவது பற்றி, இவரினுங் கடுஞ் சைவராவார் இவர்க்கு ஏதுந் தீங்கிழைக்க முந்தாது இருப்பராக. இனி, அப் புகழ்ச்சியுரைகாரர், யாம் சைவநூல் வரம்பை அழிக்கின்றேம் என்று அடுத்தடுத்துக் கூறி, ஆற்றமைப் படுகின்றார். சைவநூல் என்று இவராற் கொள்ளப்பட்டன இவை யென்பது இவர்தம் புகழ்ச்சியுரையுள் விளங்கிற்றி லதேனும், ஆராய்ச்சியுரை காரார் எடுத்துக் காட்டியவைகளை யெல்லாம் இவர் சைவ நூல் என்று கொண்டமை உய்த்துணர் வார்க்கு விளங்கும். ஆராய்ச்சியுரை காரர் முதற்கண் திரு மந்திரம் தேவாரம் முதலியவைகளை எடுத்துக்காட்டி அவைகளுட் புகழப்பட்டிருப்பன இஞ்ஞான்று இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வழங்கும் நால் வேதங்களேயா மென்று கூறுகின்றார். திருமந்திரம், தேவாரம் முதலிய நூல்களே எடுத்துக்காட்டினமட்டில் அவற்றிற்கட் சொல்லப்பட்டவை நம்மாற் பெரிதும் ஆராயற் பாலனவேயாம். தேவார திருவாசகங்களை அருளிச்செய்த ஆசிரியன்மார் தாம் பிற நூல்களை உயர்த்துப் பேசப்புகுந்தால் தமது கோட் பாட்டுக்கு இசைந்தவற்றையே உயர்த்துப் பேசுவார்களல் லாமல் அதற்கு முற்றும் மாறாவனவற்றை உயர்த்துப் பேசமாட்டார்கள். அவற்றை இழித்தே பேசுவார்கள். பௌத்த சமண சமய நூல்களில் அறவொழுக்க அருளொழுக்க வகைகளை விரித்து வற்புறுத்தும் சிறந்த பகுதிகள் மிக்கிருந்தும் அவற்றுட் சிவ வழிபாடு கூறப்படாமை பற்றி அவை தம்மை யெல்லாம் நம் ஆசிரியன்மார் இழித்துப் பேசவே கண்டாம். அறவொழுக்க அருளொழுக்க முறைகளை எடுத்து வலியுறுத்து தற்கண் பௌத்த சமண நூல்கள், இருக்குமுதலான ஆரிய நூல்களி னும் பார்க்க எத்தனையோ மடங்கு சிறந்தனவென்பது அவ்விரண்டையும் நடு நின்றாராய்வார்க்கு விளங்காமற் போகாது. இனித் தேவர்கள் எல்லாரினும் மேற்பட்ட முழுமுதற் கடவுளே பிறப்பு இறப்பில்லாச் சிவபெருமானென்பது இவ்வாசிரியன்மா ரெல்லார்க்கும் உரிய சிறந்த கோட்பாடாகும். அது விரைமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராய முதலொருவன் என்று (திருமுதுகுன்றப்பதிகம், 1) திருஞான சம்பந்தப் பெருமானும், மூவுருவின் முதலுருவாய் இரு நான்கான மூர்த்தியே என்று முப்பத்து மூவர், தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ் செம்பவளத் திருமேனிச் சிவனே என்று (மறுமாற்றத் திருத்தாண்டகம் 9) திருநாவுக்கரசு நாயனாரும், மூவரின் முதலாயவன்றனை என்று (திருநீடூர்ப் பதிகம், 5) சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தளிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் என்று (திருவாசகம், திருச்சதகம், 30) மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச்செய்த வாற்றால் நன்கு அறியப்படும். இங்ஙனம் முழுமுதற் கடவு ளென்று தம்மாற் கொள்ளப்பட்ட சிவபெருமானைத் தவிர ஏனைத் தேவர்களெல்லாரும் பிறந்திருக்கும் உயிர்களை யல்லாமல் எத்திறத்தானும் கடவுளாகார் என்பதூஉம் அப்பெற்றியரான அத் தேவர்களை வணங்குதல் குற்றமாம் என்பதூஉம் தாம் சிவபெருமானையன்றி வேறு எத்தேவ ரையும் ஒருபொருட்படுத்தி வணங்குவதில்லை யென்பதூஉம் அவர்களால் நன்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை, செத்துச் செத்துப் பிறப்பதேதேவென்று பக்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே சென்று நாம் சிறுதெய்வஞ் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம் என்று (பொது) திருநாவுக்கரசு நாயனாரும், வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் திருமாந்தில் லையுட் சிற்றம் பலமேய கருமானு ரியாடைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழல் அல்லாற் பேணா துள்ளமே என்று (கோயில்) திருஞானசம்பந்தப்பெருமானும், சுரும்பார் விண்டமலர் அவை தூவித் தூங்குகண்ணீர் அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன், விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற் கரும்பாருங் கழினிக் கழிப்பாலை மேயானே என்று (திருக்கழிப்பாலை) சுந்தரமூர்த்தி நாயனாரும், கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நன்ளேன் நினதுஅடி யாரொடு அல் லால் நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலேஇருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே (திருச்சதகம்) புற்றில்வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே என்று (அச்சப்பத்து) மாணிக்கவாசகப்பெருமானும் அருளிச் செய்த வாற்றாற் கண்டுகொள்க. அப்பருக்கு முற்பட்டவரான திருமூல நாயனாரும் நால்வரோடு ஒப்பவே. சிவனே டொக்குந்தெய்வம் தேடினும் இல்லை அவனெ டொப்பார்இங்கு யாவரும் இல்லை என்றும் அவனே யொழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லை அவனன்றி ஊர்புகும் ஆறு அறியேனே என்றும் (திருமந்திரம், 5, 6) சிவபெருமானே முழுமுதற் கடவுளாதலே நன்கு வலியுறுத்து அருளிச் செய்தார். ஆகவே, சிவபெருமானையன்றி வேறு எத்தேவரையும் முழுமுதற் கடவுளாகக் கொள்ளாமையும், அவர் தம்மை வணங்காமையும் அவர் தம் வணக்கங்கூறும் நூல்களே ஒரு பொருட்படுத் தாமையும் இச் சைவசமய ஆசிரியன்மார்க்கு அரும்பெரும் கடப்பாடாதல் நன்கு பெற்றாம். இவர் இக் கடப்பாட்டினின்று ஒரு தினைத்தனையும் வழுவாராயிருந்தமை அவர் அருளிச் செய்த திருப்பாட்டுக்களிற் சிவபெருமானை யன்றி அவர் வேறு எவ்வகைத் தேவரையும் எவ்வகையானும் வணங்காமையே உறுஞ்சான்றாம். இப்பெற்றியரான இவ்வாசிரியன் மார் ஒருநூலே உயர்த்துக் கூறப்புவராயின் அந்நூல் சிவபெருமான் ஒருவனது புகழையே விளக்குவதாயிருந்தாலன்றி வேறு எவ்வாற்றானும் அதனை உயர்த்துப்பேச ஒருப்படார் என்பது அவர் பாடிய திருப்பாட்டுக்களை ஒரு சிறிது நோக்குவார்க்கும் தெள்ளிதிற் புலனாம். ஓர் ஆசிரியன் ஆக்கிய ஒருநூலில் உள்ள சொல்லுக்குஞ் சொற்றொடர்க்கும் பொருள் செய்யப்புகுவார், முதற்கண் அவ்வாசிரியன் கருத்து இதுவென்று உறுதிப்படுத்திக் கொள்ளுதலே இன்றியமையாது செயற்பாலதாம். அவ்வாறு அவன் கருத்துறுதி பெறப் பட்டபின், அதற்கிணங்கவே அவன்மொழிந்த சொற்குஞ் சொற்றெடர்க்கும் பொருள் செய்தல் முறையாம். இம்முறை ஆசிரியர் நக்கீரனார், இளம்பூரணர், பேராசிரியர் முதலான எல்லா உரைகாரரானும் வற்புறுத்துரைக்கப்பட்டது. ஆதலின் மறை வேதம் இருக்கு, சாமம், ஆறங்கம் முதலான சொற்கள் தேவாரம் திருவாசகம், திருமந்திரம் முதலான அவர் அருளிச்செய்த நூல்களில் அடுத்தடுத்து வருமாயின் அச்சொற்களாற் குறிக்கப்படும் நூல்கள் இவையென்று பொருள் செய்யுங்கால் அவர் கருத்துக்கு இசையப் பொருள் செய்யவேண்டுமே யல்லாமல், அவர் கருத்துக்கு மாறாகத் தாம் கருதிய பொருள்களை அவற்றின்மேல் ஏற்றல் தலைக்குத் தக முடியமையாமல் முடிக்குத்தகத் தலையைச் சிதைத்து அமைத்தலாகவே முடியும். இஞ்ஞான்று இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வழங்கும் ஆரிய மொழி நூல்களில் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கும் வணக்கம் ஒன்றுமே சொல்லப் பட்டிருக்குமாயின், அப் பெருமான் ஒருவனையே எல்லாம் வல்ல இறைவனாகக் கொண்டு வழுத்தம் அவர்கள் மறை, வேதம், இருக்கு, சாமம் முதலியவற்றால் உணர்த்துக் கருதியவை அவ்வாரிய மொழி நூல்களே யென்று பொருள் செய்தல் பொருத்தமாகும். மற்று அந்நூல்கள் சிவவணக்கங் கூறாமற் சிறுதெய்வ வணக்கங்களையே மிக்கெடுத்துக் கூறுமாயின் சென்று நாஞ்சிறுதெய்வஞ் சேர்வோம். அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேம், கொள்ளேன்புரந்தரன் மாலயன் வாழ்வு, குடிகெடினும், நள்ளேன் நினதடியாரொடல்லால் என்றற்றொடக்கத்தனவாகக் கட்டுரைத்துச் சொல்லும் அவர்கள் அவ்வாரியச் சிறுதெய்வ நூல்களை உயர்த்துப் பேசினாரென்று கோடல் யாங்ஙனம் பொருந்தும்? பொருளால் ஒவ்வாத வெறுஞ் சொற்கள் ஒன்றையே கொண்டு ஆராயாது முடிபு கட்டுதல் எங்ஙனம் பொருந்தும்? மேலும், ஒவ்வொரு மொழியுள்ளும் ஒரு சொல்லே ஒவ்வொருகால் ஒவ்வொரு பொருளையுணர்த்தித் தான் தனித்து நின்றக்கால் முன்னர் உணர்த்திய பல பொருளுக்கும் இடனாய் நிற்றலை மொழியாராய்ச்சியுடையார் எல்லாரும் நன்கு உணர்வர். மறை, என்னுஞ் சொல்லுக்குப் பொருள் மறைத்து மொழி கிளவி; அதாவது: முடிந்த பொருளை அது பெறுந்தகுதியுடையானுக்கு ஆசிரியன் மறைத்துச் சொல்லுஞ் சொல்லாகும். இது திவாகரத்தால் உணர்க. நம் ஆசிரியர்கள் இம் மறை என்னுஞ் சொல்லால் இருக்கு முதலிய ஆரிய மொழி நூல்களையே குறித்தனரென்று உரைப்பின், உயர்ந்த தகுதிப் பாடுடைய நன் மாணாக்கனுக்கு மறைவாய்ச் சொல்லுதற்குரிய முடிந்த மறைபொருள்களை அந்நூல்கள் இவ்விவ் விடங்களில் உடையன வென்று பகுத்துக் காட்டல் வேண்டும். நமச்சி வாய என்னும் விழுமிய சிவமந்திரம் எசுர் வேதத்தினிடையில் இருக்கக் காண்டுமாகலின், அஃதொன்றுமே யமையுமெனின்; சிவபெருமானுக்கு வணக்கவுரைகள் பலப்பல சொல்லிக் கொண்டு போதற்கிடையே சிவனுக்கு வணக்கம் என்னும் பொருளைத் தருமாறு அஃது ஆண்டுச் சொல்லப்பட்டிருக் கின்றதேயன்றி, வீட்டுநெறி கூறும் திருமந்திரம் முதலான சைவசித்தாந்த நூல்களில் அவ்வைந்தெழுத்தும் சிவன், அருள், உயிர், மறைப்பு, மலம் என்னும் ஐம்பொருள் இலக்கணங்களும், அவற்றின் முடிந்த நிலையும் உணர்த்துமாறு காட்டுதல் போல் எசுர்வேதங் காட்டாமையின், அது முடிந்த நிலையினை அறிவுறுத்தும் மறை யாதல் ஒருவாற்றானும் ஏலாது. மேலும், அவ்வெசுர் வேதத்தின்கண் உள்ள வணக்க வுரைகள் அவ்வளவும் சிற்றறிவுஞ் சில்வாழ்நாளும் உடைய மக்கள் தாம் நலம் பல பெறல் வேண்டிக் கூறும் இரப்புரைகளா யிருத்தலின் இவை தம்மையெல்லாஞ் சிவபெருமான் அருளிச் செய்தானென்றல் பகுத்துணர்வில்லார் கூற்றாம். உயர்ந்த மெய்யுணர்வின் இயல்புகளையும், இறைவன் திருவருள் பெற்று வீட்டுநெறி தலைக்கூடு மாற்றினையும் எடுத்து அறிவுறுக்கும் நூலாயின், அதனை இறைவன் அருளிச் செய்தானென்றல் ஒருவாற்றான் ஒக்கும். அத்தன்மையவாம் விழுப்பொருள் ஒருசிறிதுமின்றிச், சிவபெருமானையும் ஏனைத் தேவர்களையும் வேண்டி மக்கள் இரந்துரைத்த வழுத்துரைகள் நிறைந்த எசுர் வேதத்தைச் சிவபிரான் அருளினன் என்றுரைப் பின், சிவபிரான் தன்னைத்தான் வணங்கிக் கொண்டமையோடு ஏனைச் சிறு தேவர்களையும் வணங்கி அவர்தம்மை யெல்லாம் வேண்டினான் என்பதுங் கொள்ளப்பட்டு, ‘இத்துணை இழிந்தவனுங் கடவுளோ? என்று நகையாடுதற்கு இடஞ் செய்யுமாகலிற், பேரறிவாளரான நம் சமயாசிரியர் சிற்றறி வினருஞ் சொல்லாத இச் சொல்லை மறந்துஞ் சொல்லா ரென்க. ஆதலின், எசுர்வேதம் சிவபிரான் அருளிச் செய்த தாவது யாங்ஙனமென மறுக்க. எல்லாம் வல்ல சிவபிரான் முழுமுதற் நன்மையை எவரும் மறுத்து ஏளனஞ் செய்தற்கு இடஞ் செய்யும் எசுர் முதலான ஆரியமொழி நூல்களின் உண்மையை யாம் எடுத்துக் காட்டியதுதான் சைவநூல் வரம்பை அழிப்பதோ! அறிவுடையீர் கூறுமின்! எசுர் வேதம் அத்துணைச் சிறந்ததாயின் அதன் பெயரைச் சைவசமயாசிரியர் ஓரிடத்தேனுங் கூறாது விட்ட தென்னை? நடுவுநின்று நோக்குங்கால், சிறு தெய்வங்களை வணங்கும் ஆரியர்களும் சிவபிரானை வணங்குந் தமிழ்ச் சைவர்களும் பாடிய வணக்கவுரைகளைப் பிற்காலத்தில் ஒருங்கு சேர்த்து ஆக்கிய ஆரியமொழி வணக்கவுரைத் திரட்டே எசுர்வேதம் எனப் பின்னையோரால் வழங்கப்படு வதாயிற்றென்க. அற்றன்று, எசுர்வேதத்தைக் கூறிற்றிலராயினும், அதற்கு முதல் நூலாகிய இருக்குவேதப் பெயரை யெடுத்துப், பண்டு இருக்கு ஒரு நால்வர்க்கு நீர் உரை செய்ததே என்று திருவான்மியூர்ப் பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்தலின், இருக்கின் வழிவந்த எசுர் சாம அதர்வண வேதங்களும் சிவபெருமானே அருளிச் செய்தனவாமென்பது பெறப்படுமெனின்; இத் திருப்பாட்டிற் போந்த இருக்கு என்னுஞ் சொல் இஞ்ஞான்று அப் பெயர் கொண்டு உலவும் ஆரிய இருக்கு வேதத்தையே குறிக்குமெனின் நல்லுணவு வேண்டியும், ஆடுமாடுகள் மனைவி மக்கள் வேண்டியும் மழை வேண்டியும், பகைவரை யழித்தல் வேண்டியும் இவ்விருக்கு வேதத்தில் இந்திரன் மேற் பாடப்பட்டிருக்கும் இருநூற்றைம் பது பதிகங்களையும், இங்ஙனமே வருணன், மித்திரன், விஷ்ணு, முதலிய ஏனைச் சிறு தெய்வங்கண்மேற் பாடப் பட்டிருக்கும் ஏனைப் பல பதிகங்களையும் சிவபிரானே பாடினாரென்றன்றோ சொல்லல் வேண்டும்? சிவபிரானே முழுமுதற் கடவுளாயின் அவர் தம்மிற்றாழ்ந்த இந்திரன், வருணன் முதலான சிறுதெய்வங்களின் மேல் அங்ஙனம் பலப்பல பதிகங்களைப் பாடி, உண்டியும் உடையும் ஆடு மாடு மனைவி மக்களும் அவர்கள்பால் வேண்டிக் குறையிரத்தல் என்னை? இங்ஙனம் இத்தெய்வங்களை யெல்லாம் வேண்டியும் உணவு கிடையாமையாற் பசித்துன்பத்திற்கு அஞ்சித்தான் அவர் நஞ்சை யுண்டனரோ? விஷ்ணு மாடு மேய்ப்பவராதலால் அவர் மட்டும் இரங்கி அவர்க்கு ஒரு மாடு கொடுப்பச் சிவபிரான் அதனை விட்டுவிட்டால் ஓடிவிடுமென நினைந்துதான் அதன்மேல் ஏறிக் கொண்டனர் போலும். மாட்டைத்தான் அவர் கொடுத்தார்; உமைப்பிராட்டியை அவர்க்கு மனைவி யாகக் கொடுத்தவர் யார்? இருக்கு வேதத்திற் காணப்படந் தெய்வங்களுள் எதுவும் அவர்க்கு மனைவியை யாவது மக்களையாவது கொடுத்ததை நாம் அறியக்கூட வில்லையே! சிவபிரான் ஒர் ஊரன் அல்லன் என்று அப்பர் பாடியிருக்கின்றார். ஆனால், இருக்கு வேதத்தில் மழையை வேண்டிப் பாடிய பாடல்களைச் சிவபிரானே பாடினார் என்று நண்பர் தமது ஞானக்கண்ணைத் திறந்து பார்த்துச் சொல்லுவதால் அவருடைய சொல்லை நாம் நம்ப வேண்டுவது கட்டாயந்தான்! ஐயோ! சிவபிரானுக்கு எத்தனை காணி நன்செய் புன்செய்ப் பயிர்கள் மழையில்லாமல் வறண்டு போயின.? அதன் பொருட்டு இருநூற்றைம்பது பதிகங்களால் அவர் மழையை வேண்டி இந்திரன் மேற் பாடியும், அவன் மழை பெய்வியாமையாற் போலும் அவர் பித்துப் பிடித்து ஊர்ஊராய்த் திரிவாராயினது! மேலுந் தமக்குப் பகையா யினாரைக் கொன்று தொலைக்கும் பொருட்டுச் சிவபிரான் இந்திரன் முதலான தேவர்களை எத்தனையோ முறை வேண்டியும் அவர்கள் அவர்க்கு உதவி செய்யாமையாற் போலும், அவர் அப் பகைவர்களால் துரத்தப்பட்டு மலை களின்மேற் போய் ஒளிந்து கொண்டதுஞ் சுடுகாட்டிற் போய்க் பேய்களோடு சேர்ந்து கொண்டதும்! இங்ஙனமெல்லாம் தேவர்களை வேண்டிப் பாடியும் தமக்குச் சிறிதும் பயன்படாமையால், தமக்குப் பயன்படாவிடினும் பிறர்க் காவது பயன்பட வேண்டுமென்னும் அருளினாலோ, அல்லது தாம் பாடிய அவ்விருக்குவேதப் பாடல்கள் தமக்கே பயன் படாமையைப் பிறர் அறிந்தால் தம்மை ஏளனம் பண்ணுவ ரென்னும் அச்சத்தினாலோ அவர் சனற்குமாரர் முதலான முனிவர்களை வருவித்து அவர்களின் தலையில் அவற்றைக் கட்டி விட்டனர்! அம் முனிவர்களாவது தம் குரு கற்பித்த அவ்விருக்கு வேதப் பாடல்களை ஓதி எந்தத் தேவரிடத்தேனும் எந்த நன்மையேனும் பெற்றனரா? சிவபிரானே இருக்குவேதப் பாடல்களை அருளிச் செய்து மெய்யாயின், அவ்விருக்கு வேதப் பாடல்களால் அவர் வணங்கிய இந்திரன் முதலான தெய்வங்களையல்லவோ சைவர்களும் சைவ சமய ஆசிரியர் களும் வணங்கல் வேண்டும்? சிவபிரானால் வணங்கப் பெற்ற இந்திரன், விஷ்ணு முதலான தேவர்களைச் சைவர்களும் சைவசமயாசிரியர்களும் இகழ்ந்து பேசுதலும், அத் தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கினார்களென்று கூறுதலும் பொருந் துமா? தமது தெய்வத்தால் வணங்கப் பெற்ற தேவர்களைத் தாமும் வணங்குதலன்றோ முறை? அவ்வாறு அவர்களை வணங்காது ஒழிவது, சிவபிரான் கற்பித்த சொல்லைப் பிழைத்து நடந்த பெருந் தீவினையாய் முடியாதோ! அத் தேவர்களைப் பாடிய இருக்குவேதப் பாட்டுகளைச் சிவபிரானே அருளிச் செய்தது உண்மையாயின், அச் சிவபிரானே முழுமுதற் கடவுளாய்க் கொள்ளாமல் அவரால் வழுத்தப் பெற்ற தேவர்கள் ஒவ்வொரு வரையுமன்றோ முழுமுதற் கடவுளாய்க் கொள்ளல் வேண்டும்! தம் தெய்வங் கற்பித்த முறையைப் பின்பற்றாது தாம் சிவபிரான் ஒருவனையே வழுத்தலானது சைவசமயாசிரியர்க்கு ஆசிரியன் சொற்பிழைத்த பெருங் குற்றமாய் முடியாதோ? சிவபிரான் இருக்கு வேதவுரைகளை இயற்றியது வாய்மையே யாயின், அவனால் வழுத்தப்பட்ட இந்திரன் முதலியோரை உயர்பெருங் கடவுளரெனக் கொள்வதா, சிவபிரான் உரையொடு முரணிச் சிவபிரானையே முழுமுதற் கடவுளென்று கொண்டு வழுத்திய சைவசமய குரவன்மார் உரையினை மெய்யெனக் கொள்வதா ஆராய்ந்து உரைமின்! இருக்குவேதப் பாடல் களைச் சிவபிரான் வாய்மொழியென ஏற்றஞ் சொல்லப் போய்ச் சிவபிரானது முழு முதற்றன்மைக்கு இழுக்குண்டாக அவனுக்குமேற் கடவுளர் பலரை உயர்த்துப் பிழைபடுதலோடு சிவபிரான் மொழிக்கும் சைவசமய குரவன்மார் மொழிக்கும் முரண் உண்டாம் வழியினும் மயங்கச் செலுத்தி இவ்வாறெல்லாம் பெருங் குழறுபடைக்கு இடஞ் செய்வார்தம் உரைகள் தாம் சைவசமயத்தின் வரம்பைப் பாதுகாப்பன போலும்! சிவபிரானது முழுமுதற்றன்மைக்கும், சைவசமய ஆசிரியரின் அருண்மெய் யுரைகட்கும் வடுப்படாமை, இருக்கு வேதப் பாடல்களிற் பெரும்பாலான சிற்றறிவுடைய ஆரியப் பழம்புலவரானும், சிறுபாலன தமிழ்ச் சான்றோ ரானும் இயற்றப்பட்டவையாம் என்று உண்மையை யுள்ள வாறு எடுத்துக்கூறிய எமதுரை சைவ வரம்பைத் தகர்த்து விடுவ தாமோ! ஐயகோ! இத்தகைய மயக்கப் புல்லுரை நிகழ்த்துவார் தாமும் சைவ சமயம் உயர்ந்தவராய்த் தம்மைத் தாமே புகழ்ந்து ரைத்துக் கொண்டு ஆரவாரம் புரிதலும் அவராற் சைவ சமயத்துக்கு நேரும் இழிபினை உணர்ந்து பார்க்கமாட்டாத வெள்ளறிவினார் அவரோடு ஒருங்கு கூடிக் கொண்டு எம்மைப் பழித்தலும் எமது மெய்யுரையினைச் சிறிதும் அசைக்க வல்லனவாகா வென்று பகுத்தறிவுடைய மேன் மக்கள் அறியாமல் போவரோ? இனி, மூவா நான்மறை யாராய்ச்சிச் சிறுசுவடிக்காரர் கூறிய போலியாராய்ச்சி யுரைகளை அவர் கூறிய வரிசைப்படியே யெடுத்துக்காட்டி அவற்றின் பொருந்தாமை தெரிப்பாம். எமது திருவாசக விரிவுரை யின் கண் இந்நிலவுலகத்து மொழிகளுட் பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் இறவாது வழங்குவது தமிழ்மொழி ஒன்றேயல்லது பிற அண்மையானும், என்றும் உளனாகிய இறைவன் தன்போல் என்றும் உளதாகிய தமிழ்மொழிக் கணன்றி இடையே இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில் உண்மை நுண்பொருள்களை அறிவுறுத்தல் உயிர்கட்குப் பயன்படாமையின் அவன் அவற்றை அவற்றின் கண் அருளுதல் ஏலாமையானும் என்று யாம் எழுதிய பகுதியில் அச் சிறு சுவடிக்காரர் தடை நிகழ்த்துவான் புகுந்து, ஆரியம் இறந்து பட்டதென்றால் ஆரிய மொழியா? mšyJ MÇa ntjkh? என்று வினாவிப் பார்ப்பனரும் பிறநாடுகளி லுள்ளாரும் ஆரிய மொழியைப் பயின்றுவருதலின், அதனை இறந்துபட்டதென்றல் பொருந்தாதெனவுந் தமிழ்நூல்களிலும் பல இறந்து பட்டமையால் தமிழ்மொழியும் இறந்துபட்ட தெனக் கூறலாமோவெனவும், ஆரியந் தமிழ் என்னும் இரு மொழிகளுஞ் சிவபெருமானாலேயே அருளப்பட்டன வாகலின் ஆரியத்தைப் பழிப்போர் சிவபெரு மானையும் பழித்தோரே யாவரெனவுங் கூறினார். யாம் மேலே காட்டிய திருவாசகவிரிவுரைச் சொற்றொடரிற் போந்த இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில் எனுஞ் சொற்கள் இறந்துபட்டது ஆரிய மொழியேயல்லாமல் ஆரிய நூல்களல்லவென்னும் எமது கருத்தை நன்கு விளக்குதல் சிறிது கல்வியறிவுடையாகும் உணர்வர். அத்துணைச் சிற்றுணர்ச்சி தானும் இன்றி, இறந்துபட்டது ஆரியமொழியா? ஆரிய வேதமா? என்று வினாநிகழ்த்திய சிறுசுவடிக்காரரை, அவர்க்கு மதிப்புரை தந்தாரும் அவரோ டொத்தாருமே கொண்டாடத் தக்கவர்; அது கிடக்க. இனி, ஆரியமொழி இறந்துபட்டது அன்று என்பதற்கு, அதனைப் பார்ப்பனரும் பிறநாட்டார் பலரும் பயிலுதலே சான்றாமென அவர் கூறினார். இது, மொழியினது பயனை யறியாமையாற் பிறந்த பிழை யுரையாகும். மொழி என்பது கற்றார் முதற் கல்லாதவர் ஈறானா எத்திறத்தவருந் தம்முடைய எண்ணங்களைத் தம்முள் ஒருவர் மற்றொரு வர்க்குத் தெரிவித்துத் தமதுலக வாழ்க்கை யினை நடப்பித்துக் கொள்ளப் பெரிது பயன்படுவதொரு கருவியாகும். எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே மக்கள் தாம் ஒருங்குகூடி யளவளாகி வாழ்தற்கு இன்றியமையாக் கருவியாகப் பேச்சுப்பேசும் முறையினைக் கண்டறிந்தனர். தாயும் பிள்ளையும் தந்தையும் மகனும் மனைவியுங் கணவனும் உடன்பிறந்தாரும் உறவினரும் நண்பரும் பிறருந் தாந்தாம் எண்ணும் எண்ணங்களைத் தம்மவர்க்கு ஒலிகளின் வாயிலாகவே புலப்படுத்தி வந்தனராகலிற் பண்டை நாளில் அவவொலிகளின் தொகுதியாகிய மொழி பேச்சுவழக்கிலேயே இருந்தது. பிறகு, ஒரு மொழியைப் பேசுவார் அறிவிலும் நாகரிகத்திலும் முதிர முதிரத், தமது நாகரிக வாழ்க்கை முட்டின்றி நடைபெறுதற்குக் கருவியாகத், தாம் பேசிவந்த சொற்களை எழுத்திலிட்டு எழுதும் முறையினைக் கண்டறிந்து அதனை வழக்கத்திற்குக் கொணர்ந்தனர்; தாம் பேசிவந்த காலங்களில் தம்மில் அறிவான் மிக்கார் பாடிய பாட்டுக் களையும், உரையளவாய்ச் செய்து வழங்கிவந்த நூல்களையும் பின்னர் எழுத்திலிட்டு எழுதி, அவை நம்மை அழியாமற் பாதுகாக்கலாயினர். எழுத்தெழுதத் தெரியாத காலங்களி லெல்லாம் மொழிகள் பேச்சளவாகவே வழங்கிவந்தன. நாகரிக மக்கள் மிகுந்த இந்நாளிலுங்கூட எழுத்தெழுதத் தெரியாத காட்டுமிராண்டிகளும் வேறுபல மக்கட் பிரிவினரும் ஆங்காங்குத் தொகை தொகையா யிருத்தலை எவருங் காணலாம். நகர்ப்புறங்களிலும் நாட்டுப் புறங்களிலும் இருக்கும் வில்லியர், வேட்டுவர், குறவர், பள்ளர், பறையர், செம்படவர் முதலானவர் களெல்லாந் தமிழ்மொழி பேசத் தெரிந்தவர்க ளேயல்லாமல் அதனை எழுதத் தெரிந்தவர்களும் அல்லர்; அதன்கண் எழுதப்பட்டிருக்கும் நூல்களைக் கற்கத் தெரிந் தவர்களும் அல்லர். தமிழ்நாட்டுக்குப் புறம்பேயுள்ள நீலகிரி மலையிலிருக்குந் தோடர் வடகர் முதலாயினாருந் தமிழ் மொழிபேசத் தெரிந்தவர்களே யல்லாமல் எழுதத் தெரிந்த வர்கள் அல்லர். இன்னும் இந் நாவலந்தீவின்கண் உள்ள மலை களிலுங் காடுகளிலுங் கடற்கரைப் பக்கங்களிலும் உயிர் வாழும் எண்ணிறந்த மக்கட் பிரிவினரெல்லாருந் தமிழ் மொழியைச் சொல்லளவாகவே வழங்கிவருதலை ஒவ்வொரு நாளுங் கண்டறியலாம். இதுபோலவே, நாகரிக வாழ்க்கை யில்லாத மிகப்பழைய காலங்களில் மக்கள் வகுப்பினர் எல்லாருந் தாந்தாம் வழங்கிய மொழிகளை முற்றும் ஒலிவடிவாகவே வழங்கிவந்தனர். அதன்பின் நாகரிகம் வளர வளர அவ்வொலிகளை எழுத்து வடிவிலிட்டு வழங்கிவந்தனர். இஃது அவ்வம் மக்கள் வகுப்பினர் தம் வரலாற்று நூல்களை ஆராய்தலானும், இஞ்ஞான்றும் நாகரிகமின்றி உயிர்வாழும் மக்களினத்தாரை நேரே சென்று காண்டலானும் நன்கு தெளியப்படும். எனவே, ஒரு மொழி யென்பது பண்டுதொட்டு இன்றுகாறும் நாகரிகமுடையாரும், அஃதில்லாருந் தத்தம் உள்ளங்களில் எண்ணிய எண்ணங்களை வெளியே தம்மவர்க்குப் புலப் படுத்தற் பொருட்டு பயன்படுத்தி வரும் ஒலிக்கூட்ட மேயன்றிப் பிறிதன்றென்பது தெற்றென உணரப்படும். இங்ஙனம் பேச்சு வழக்கிலிருப்பதே ஒருமொழியென்று சொல்லப்படுதற்கு இயைந்த சிறப்பியல்பு உடைய தாவதல்லது, மக்கட் கூட்டத்தவரால் வழங்கப்படாமல், நூலளவிற் கற்றார் சிலரால்மட்டும் பயிலப் பட்டுவருவது ஒருமொழியாக மாட்டாது. ஆனால், இவ்வுண்மை யினைப் பகுத்துணர்ந்து பார்க்கமாட்டாத அச் சிறுசுவடிக் காரரும் அவர்க்குத் துணையாயினாருமோ, தமிழைப் போலவே ஆரியமும் வழக்கிலுள்ளதே யாகுமன்றி இறந்து பட்டதாகாது என்று கட்டுறுத்திச் சொல்கின்றார். அற்றேல், தமிழ்மொழி பேசும்மக்கள் எல்லாரிடத்தும், அவர் கற்றவராயினுங் கல்லாதவராயினும், நாகரிகராயினும், அஃதிலராயினும், பெண்டி ராயினும், பிள்ளை களாயினும், அவரெல் லார் மாட்டும் நாம் தமிழில் உரையாடினால் அவரெல்லாரும் நாம் சொல்வ தின்னதென உணர்ந்து நம்மொடு தாமும் நன்குரையாடி மகிழ்வர். இதுபோல், நாம் ஆரியத்தில் எல்லாரோடும் பேசுதல் இயலுமோ? அல்லது அதிற் கடிதமாவது எல்லார்க்கும் எழுதுதல் இயலுமோ? எல்லா வகையான மக்களும் வந்து நிறைந்த ஓரவைக்களத்தில் ஆரியத்திற்சொற்பொழிவு நிகழ்த்தி அதனை அங்குள்ளாரெல்லாரும் உணரும்படி செய்தல் இயலுமோ? மழலைச்சொற்பேசும் எந்தச் சிறுமகாரோ டேனும் ஆரியத்தில் உரையாடி மகிழ்தல் வாய்க்குமோ? வாயாதன்றே. இவ்வாறு உலக வாழ்க்கைக்கண் உள்ள எந்த மக்கட் கூட்டத்தாரேனுந் தமது வாழ்க்கையை நடத்துதற்குப் பயன்படு கருவியாக ஆரியமொழியினை வழங்கக் காணா மையின் அவ்வாரியமொழி உலக வழக்கிலில்லாது இறந்து பட்ட மொழியேயாகுமல்லாமல், எண்ணிறந்த மக்களால் தமதுயிர் வாழ்க்கைக்குச் சிறந்த பெருங் கருவியாகப் பயன் படுத்தப்பட்டு வருந் தமிழ்மொழியைப்போல் உயிருடையதாக மாட்டாது. பார்ப்பனர் சிலரும் அயலார் சிலரும் பல்லாண்டுகளாக வருந்திப் பயில்வதொன்றே கொண்டு ஆரியமொழியை உயிருடைய தென்று கூற அறிவுடையார் எவரும் ஒருப்பட மாட்டார். ஆரிய மொழியைப் போலவே உலகவழக்கிலின்றி இறந்துபட்ட இலத்தீன், கிரீக்கு, ஈபுரு முதலான பண்டை மொழிகளையும் பயில்வார் ஆங்காங்கு உளரேனும், அதுபற்றி அவைதம்மை உயிருடைய மொழிகளென்று கூறுவாரெ வரையும் யாண்டுங் கண்டிலேம். உயிர்போன உடம்பை மணம்ஊட்டி அழியாமற் பாதுகாத்துவைத்து அதனைக் கண்டு ஆறுதல் எய்தும் அதற்குரியார் போல, உயிரில்லாத ஆரியம் முதலான மொழிகளையும் அவற்றிற் குரியார் அம் மொழிகளி லெழுதப்பட்ட நூல்களால் மணம் பெறச்செய்து அவற்றால் அவை தம்மை முழுதும் அழிந்தொழியா வாறு வைத்துப் பாதுகாத்து வருகின்றனரென்க. மற்றுத், தமிழ் மொழியோ அங்ஙனம் ஒரு சிலரால் வருந்திப் பாதுகாக்கப் படும் வெற்றுடம்பு அன்றாய், என்றுமுள தெய்வத்தன்மை வாய்ந்த உயிருடன் உலவுவதென்பதனைச் சிறுமகாரும் இனி துணர்வராகலின், நாடொறும் நம்மைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துவரும் எம் தெய்வத் தமிழ் அன்னையை இழித்துப் பேசி, இறந்துபட்ட ஆரியமாதை உயர்த்துப்பேசுவார்தம் மடமையையுங் குறும்பையும் என்னென்பேம்! அது நிற்க. 6. சேக்கிழாரும் பெரியபுராணமும் பாணபத்திரரும் சேரனும் என்று தலைப் பெயரிட்டு யாம் ஆராய்ந்தெழுதிய பொருட் பகுதியில், பாணபத்திரர் இறைவன் தந்த திருமுகங் கொண்டு சென்றது சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரிடத்து அன்றென்பதூஉம், அதனால் அங்ஙனஞ் சென்றதாகக் கூறும் பெரிய புராணவுரை கொள்ளற்பாலதன் றென்பதூஉம், பாணபத்திரரும் அவர் தாம் திருமுகங் கொண்டு சென்ற சேரமன்னனும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் மிக முற்பட்டவரா மென்பதூஉம் கல்லாடம் முதலான பழைய பல நூலாராய்ச்சி கொண்டு தெற்றென விளக்கினேம். இவ் வாராய்ச்சியில் சேக்கிழாரைப் பற்றிப் பெயரளவாய்க்கூட யாம் ஏதும் எடுத்து மொழிந்திலேம். அங்ஙனமாகவும், யாம் சேக்கிழாரை இகழ்ந்து பேசினேமென்று வருந்திச் சிலர் தமக்கெழுதுவதாக எமது திருவாசக விரிவுரையினை வெளியிடுவோர் எமக்குத் தெரிவித்தனர். ஆனால், நேரே எமக்கு வேறெவரும் அங்ஙனம் எழுதிற்றிலர். அஃதெங்ஙனமாயினும் ஆகுக. யாம் ஆராய்ந் தெழுதிய அப் பகுதியிற் சேக்கிழாரடிகளைப் பற்றி யாம் ஏதுமே கூறிற்றிலம் என்பதை அன்பர்கள் உற்று நோக்குதல் வேண்டும். அஃதுண்மையேயாயினும், பெரியபுராண வரலாறு பொருந் தாது என்றமையால், அது சேக்கிழாரை இகழ்ந்ததாய் முடியா தோவெனின்; முடியாது; பிற்காலத்துவந்த வெள்ளியம்பலத் தம்பிரான் என்பார் தாம் பல செய்யுட்களெழுதி அவைதம்மைப் பெரிய புராணத் திடையிடையே செருகினாரெனவும், அவ்வாறு செருகியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட செய்யுட்களே, வெள்ளிப்பாடல் எனப் பெயர் பெற்றன வெனவுங் கற்றார் பலர் கூறுதலே உற்று ஆராயுங்காற், சேக்கிழார் காலத்திற்குப் பின்னே வந்தார் பலர் தாந்தாம் விரும்பிய செய்யுட்களை எழுதி அதன் முன்னும் பின்னும் நடுவும் செருகிவிட்டாரென்பது புலனாக நிற்கும். இதற்கொரு சான்று இங்கெடுத்துக் காட்டுதும். சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருத் தொண்டத் தொகையை அடியாகக் கொண்டு அதன்கட் கூறப்பட்ட திருத்தொண்டர் வரலாறுகளை விரித்துக் கூறுதலே ஆசிரியர் சேக்கிழார் கருத்து. இனி இவ்வாறு கூறுதற்குமுன், அத் திருத்தொண்டத் தொகை வந்தவாறு கூறவேண்டுதலின் அதன் பொருட்டுச் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு உரைத்தற்குக் கருதி அதனைத் தடுத்தாட் கொண்ட புராணத்தி னின்று துவங்கி அதனைத் திருத்தொண்டத் தொகை அருளிச்செய்த இடம் வரையிற் றொடர்ந்து சொல்லிப், பின்னர் அங்கு நின்று திருத்தொண்டர் வரலாறு களை அப் பதிகத்திற் சொல்லிய அடைவே சொல்லிக் கொண்டு போங்கால், முதலிற் றுவங்கிய சுந்தரமூர்த்தி நாயனார் புராணமும் முற்றக் கூறவேண்டுதலின், அதனைக் கூறுதற்கு இயைபுடைய ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத் தும் சேரமான் பெருமாள் நாயனார் புராணத் தும் இடையிடையே கூறிச் சென்று, பின்னர்த் திருத்தொண்டர் வரலாறுகளெல்லாங் கூறி முடித்தபின், சுந்தரமூர்த்தி நாயனார் புராணமுங் கூறி கூறி முடிக்க வேண்டுதலின் அதனை வெள்ளானைச் சருக்கத்திலே முற்றக் கூறி முடிய வைத்தார் பெரியபுராணம் முற்றும் ஒருவகையால் நோக்குமித்துச் சுந்தரமூர்த்தி நாயனார் புராணமாகவே முடிய, ஏனை நாயன்மார் வரலாறுக ளெல்லாம் அதன்கண் இயைபுபற்றி இடைவந்தனவாகவே கொள்ளப்படும். இனி, இங்ஙனம் விரித்துப் பாடப்படுவதாகிய சுந்தர மூர்த்தி நாயனார் புராணம் கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையும் முடிமேல் வைத்த என்னுஞ் செய்யுளை முதலாகக் கொண்டு துவங்கா நிற்கின்றது. இதுதான் நூலின் துவக்கம். இனி, ஒரு நூலுக்கு இன்றியமையாச் சிறப்பினது பாயிரம் என்று ஆசிரியர் நக்கீரனார் கூறினமையாயினும், ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவலன்றே என்று பிறருங் கூறுதலானும், சேக்கிழார் அடிகளுந் தாமியற்றும் இத் திருத்தொண்டர் புராணத்திற்குப் பாயிரம் உரைப்பான் புகுந்து தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும், எய்த வுரைப்பது தற்சிறப்பாகும் என்னுஞ் சூத்திரமே பற்றி உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னுஞ் செய்யுண் முதல் மதிவளர் சடைமுடி என்ப தீறாகத் தெய்வவணக்கங் கூறி, அளவிலாத பெருமையராகிய என்னுஞ் செய்யுண் முதல் இங்கிதன் நாமங் கூறின் என்ப தீறாகத் தன்னாற் செயப்படு பொருளும், அதனோடியைத்து அவையடக்கமுங் கூறியருளினார். இவ்வாறு பாயிரங் கூறி முடித்தபின், உடனே தொடங்கற்பாலது கங்கையும் மதியும் பாம்பும் என்னுஞ் செய்யுளை முதலாகவுடைய நூலேயாதல் வேண்டும். அவ்வாறிருக்கப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே திருமலைச் சிறப்பு திருநாட்டுச் சிறப்பு திருவாரூர்ச் சிறப்பு திருக்கூட்டச் சிறப்பு என வேறு நான்கு பகுதிகள் நூலுக்குச் சிறிதும் இயைபின்றிக் காணப்படுகின்றன. அற்றன்று, திருமலைச் சிறப்பின்கட் சுந்தரமூர்த்தி நாயனார் பண்டைப் பிறவி வரலாறு கூறப்படுதலின், அது நூலுக்கு இயைபுடைத்தே யாமெனின்; ஆசிரியர் சேக்கிழார் அவ்வாறு அவரது பழம் பிறப்பு வரலாறு கூறல் வேண்டின ராயின் தடுத்தாட் கொண்ட புராணத்தின் முதலிலேயே அது கூறவமையும்; என்னை? தீ தகன்றுலகம் உய்யத் திருவவதாரஞ் செய்தார் என்று சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தருளினமை கூறும் அவ்விடமே அதற்குப் பெரிதும் பொருத்த முடைத் தாகலின் என்பது. அதனை விட்டுத் தனியே திருமலைச் சிறப்பு என ஒன்று வகுத்துக்கொண்டு அதன்கண் அதனைக் கூறினா ரென்றல் சிறிதும் பொருந்தாது. அற்றேல், திருமலைச் சிறப்பு என்னும் அப் பகுதி அதன்கண் எவ்வாறு வந்ததெனிற், பெரிய புராணம் மிகச் சிறந்ததொரு தமிழ் நூலாய் இருத்தல் கண்டு மனம் புழுங்கிய வடமொழி வல்லார் எவரோ ஒருவர் அதிற் சொல்லப்படும் அடியார் வரலாறுகளெல்லாம் முற்றொட்டே வட மொழிக்கண் உபமந்நியு முனிவராற் சொல்லப்பட்டன வாகப் புனைந்து கட்டிச் சொல்லித் தமது மனக் குறையைத் தீர்த்துக் கோடற் பொருட்டுத் திருமலைச் சிறப்பு என்னும் அப் படலத்தைத் தாமாக எழுதியோ அல்லது தமிழறிந்தார் ஒருவரைக் கொண்டு எழுதுவித்தோ பெரிய புராணத்தின்கட் சேர்த்து விட்டாரென் றுணர்ந்துகொள்க. அதனானன்றே இப் படலத்துச் செய்யுட்களின் சொன்னடையும் பொருளமைப்புக் களும் ஆசிரியர் சேக்கிழார் செய்யுணடை பொருளமைப்புக்க ளோடு பெரிதும் மாறுபட்டுச் சுவை குறைந்தனவா யிருக்கின்றன. இவ்வாற்றல் திருமலைச் சிறப்பு என்னும் படலம் சேக்கிழார் அருளிச் செய்ததன்றென்பது துணியப்படும். இனி, அதனை யடுத்துள்ள திரு நாட்டுச் சிறப்பு என்னும் படலமும் ஆசிரியர் சேக்கிழார் செய்த தன்றென்பது காட்டுவாம். ஒவ்வொரு திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலும் அவ்வவரிருந்த நாடு நகரங்களின் வளங் களைக் கூறிச் செல்லும் ஆசிரியர் ஓரியைபுமின்றி இப் படலத்தின் கண்ணும் அவ் வளங்களையே கூறினாரென்றல் மிகைபடக் கூறுதல் என்னுங் குற்றத்திற் கிடனாம். அற்றன்று, நம்பியாரூரர்க்குப் பரவையாரை மணஞ் செய்வித்து இறைவன் அருள்புரிந்த திருவாரூர் என்னும் நகரத்தின் சிறப்பை இதனை யடுத்துக் கூறுகின்றாராகலின், அந்நகரினையுடைய சோழ நாட்டுச் சிறப்பை இப் படலத்தின்கட் கூறுதல் பொருத்தமே யாமெனிற், பரவையாரைப் போலவே சங்கிலியாரை மணஞ் செய்வித்த திருவொற்றியூர் என்னுந் திருநகர் தொண்டை நாட்டின் கண்ணே உள்ளதாகலின் அதன் வளங்களையுங் கூறாது, சோழ நாட்டை மட்டுஞ் சிறந்தெடுத்துக் கூறுதல் யாங்ஙனமென வினாவுவார்க்கு இறுக்க லாகாமையின் அது பொருத்தமாதல் யாண்டைய தென்க. அல்லதூஉம், திருத்தொண்டர் புராணத் திற் சொல்லப்படும் அடியார்களெல்லாம் தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, மலை நாடு, கொங்கு நாடு முதலிய எல்லாவற்றினும் உளராகலின் அவற்றை எல்லாங் கூறாது சோழ நாட்டுக்கு மட்டுந் தனிச் சிறப்புரைத்தல் சேக்கிழார் திருவுள்ளக் கிடையாகா தென்க. ஓரியைபுமின்றி நாட்டுப் படலம் நகரப் படலங் கட்டிச் சொல்லுதலிலேயே மகிழ்ச்சி மீக் கூர்ந்து நிற்கும் பின்றைக் காலத்துப் புலவ ரெவரோ இப் படலத்தைச் சேக்கிழார் பெயராற் புனைந்து கட்டி இதன்கட் சேர்த்துவிட்டா ரென்க. ஆசிரியர் சேக்கிழார் அருளிய செய்யுட் சொற்சுவையும் அவர் கூறும் இயற்கைப் பொருட் சுவையும் இப் படலத்தின்கட் காணப் படாமையும், இதன்கட் காணப்படுவன பல இயற்கைக்கு மாறாதலும் உய்த்துணர மாட்டுவார்க்கு இது சேக்கிழார் அருளிச் செய்த தன்றென்பது தெள்ளிதிற் புலனாம். இனித், திருவாரூர்ச் சிறப்பு என்னும் படலமும் மேற்கூறிய வாற்றாற் சேக்கிழார் செய்ததன்றென்பது தானே பெறப்படும். அற்றன்று, சுந்தரமூர்த்திநாயனார் பரவைநாச்சி யாரை மணங்கூடிப் பெரும்பாலும் வாழ்ந்த இடம் திருவாரூரே யாகலானும், அந்நகரின் கண் உள்ள திருக்கோயிலிற் றேவா சிரியன் என்னுந் திருக்காவணத்துக்கூடிய அடியார்கூட்டத்தாற் பழவடியார்மாட்டு அன்பு மீதூரப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் ஆண்டிருந்தே திருத்தொண்டத் தொகை அருளிச்செய்தன ராகலானும் அந்நகர்ச் சிறப்பைக் கூறுதல் இயைபேயா மெனின், நன்று சொன்னாய், தடுத்தாட்கொண்ட புராணத் திலேயே திருவாரூர்ச் சிறப்பும், அதன்கணுள்ள திருக்கோயிலிற்றே வாசிரியனென்னுந் திருக் காவனத்துக் கூடிய திருத்தொண்டர் தம் திருக்கூட்டச் சிறப்பும் ஆசிரியர் சேக்கிழார் நன்கெடுத்துக் கூறுகின்றராகலின், மறித்தும் அவை தம்மையே திருவாரூர்ச்சிறப்பு எனவும் திருக்கூட்டச் சிறப்பு எனவும் அது வேறிருபடலங்களாக்கி ஈண்டு வாளாகூறுதல் கூறியது கூறல் மிகைபடக்கூறல் என்னுங் குற்றங்கட் கிடனாமென்க. அது வேயுமன்றித், திருத் தொண்டத் தொகையிற் காணப்படாத மநுநீதிகண்ட சோழர் வரலாற்றினை இதன்கட் கூறுதலும் மற்றொன்று விரித்தல் என்னுங் குற்றமாய் முடியும். இக் குற்றங்கட் கிடனாகத் திருவாரூர்ச் சிறப்பு என்னும் இப்படலத் தையும், இதனையடுத்துள்ள திருக்கூட்டச்சிறப்பையும் ஆசிரியர் சேக்கிழார் இயற்றினாரென்று புகலுதல் ஆகாமையில், இவையும் பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பது தேற்றமாமென்க. இங்ஙனமே, திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தா மணியில் அவர்க்குப் பிற்காலத்தவரான கந்தியாரென்பவர் பல செய்யுட்களை எழுதி அதனிடையிடையே செருகிவிட்டன ரென்று நச்சினார்க்கினியார் கூறினார். திருமூலநாயனார் அருளிச்செய்த மூவலயிரஞ் செய்யுட் களுக்கு மேலும் பல செய்யுட்களைப் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்து விட்டன ரென்பதைத் திருவாசகவிரிவுரை யுள்ளும் விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். ஆகவே, பாணபத்திரர் வரலாற்றை அவர்க்குப் பிற்காலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் மேலேற்றியும், இறைவன் பாணபத்திரர் வழி விடுத்த திருமுகம்பெற்ற சேரமன்னன் முற்பட்ட காலத்தவனாயிருக்க அவனுக்குப் பிற்காலத்தவரான சேரமான் பெருமாளே யெனத் திரிபு படுத்தியுங் கூறும் பிழைப் பகுதிகள் ஆசிரியர் சேக்கிழார் செய்தனவாதல் பொருந்தாமையின், அவை பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பது திண்ணமே யாம். அதனால் யாம் ஆசிரியர் சேக்கிழாரைச் சிறிதும் இகழ்ந்திலேமென்று ஆராய்ந்துணர்ந்து கொள்க. யாம் எழுதிய திருவாசக விரிவுரையில் ஆங்காங்குச் சிற்சிலர் நிகழ்த்திய தடைகளுக்கு விடைகளாக எழுதி, அவ்விரிவுரை யிதழின் புறவேட்டில் வெளியிட்ட பல பொருட்பகுதிகளுள், மேற்காட்டிய தலைப்பின்கீழ் வந்ததும் ஒன்று. பெரிய புராணமென்னுந் திருத்தொண்டர் புராணத் தின்கட் காணப்படும் அடியார் வரலாறுகளிற் சில வற்றை யாம் நடுநின்று ஆராய்ந்து, அவற்றுட் பொருத்த மில்லனவாகப் புலப்பட்ட சிலவற்றை, உலகம் மெய்ம்மை யறியும்பொருட்டு, யாம் எடுத்தெழுதியக்கால் அதுகண்டு, முன் நூல்களில் எவற்றைக் காணினும் ஆராய்ந்து பாராது மெய்யென நம்பி உண்மையறிவுவளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும் பொய்ப்பற்று டைய சைவரில் ஒரு சாரார், யாம் சேக்கிழாரை இகழ்ந்து விட்டேமென ஒரு பொய்யுரை படைத்துச் சொல்லிப், பகுத்துணரமாட்டாப் பேதை மக்கள் எம்மை அருவருத்து இகழுமாறு தூண்டிவிட்டார். நடுநிலை பிறழாது நின்று யாம் ஆய்ந்துகண்ட உண்மைகளை உள்ள படியே உலகிற்கு அறிவிக்குங் கடப்பாடு உடையமாதலால், அவரது ஆரவாரங்கண்டு அஞ்சாது, யாம் ஆசிரியர் சேக்கிழாரை இகழ்ந்திலாமையும், அவரருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்திற் காணப்படும் பிழைவரலாறுகள் அவர்க்குப் பிற்காலத்திருந்த பிறரால் எழுதிச் சேர்க்கப் பட்டமையுங் காட்டுகின் றுழி, உலகெலா மெனத் துவங்கும் நூற்பாயிரச் செய்யுட்கள் பத்திற்கும், கங்கையும் மதியும் பாம்பும் எனத்துவங்குந் தடுத்தாட்கொண்ட புராணத்திற்கும் இடையிலுள்ள திருமலைச் சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, மநுநீதிகண்ட புராணம், திருக்கூட்டச்சிறப்பு என்னும் நான்கும் ஆசிரியர் சேக்கிழார் செய்தனவாகா எனவும், அவை அவர்க்குப் பிற்பட்டாராலே எழுதிச் சேர்க்கப்பட்டனவா மெனவும் ஆராய்ந்துரைத்தேம். அதுகண்ட ஒருவர் யாம் அங்ஙனம் உரைத்தது பொருந்தாதெனக் கொண்டு, அதற்குத் தாம் ஆராய்ந்த சான்றுகள் காட்டி ஒரு சிறு புத்தகம் சில திங்களுக்கு முன் வெளியிட்டார். அவர் பெரும்பாலும் எம்மை இகழாது, யாம் எழுதியவற்றை மட்டும் ஆராய்ந்து எழுதினமையால், அவர் ஆராய்ந்துரைத்தவைகளை, யாம் பின்னும் ஆராய்ந்து ஈண்டுரைக்கப் புகுந்தேம். யாம் ஆராய்ந்து உரைத்தவைகளை உண்மைச் சான்றுகளால் தாமும் ஆய்ந்து பார்த்து மாறாமல், தமக்கு வந்தவா றெல்லாம் வீணே எம்மைப் புறம்பழித் தெழுதுவார் பழிப்புரைகளை ஒருபொருட்டாக்கி அவற்றிற் கெல்லாம் மாறு கூறுவாமல்லம். எம்மை வாளா இகழ்ந் தெழுதினார் பலருள் ஞானசம்பந்த பராசக்தி என்னும் புனைவுபெயருள் மறைந்து நின்றாரும் ஒருவர். நடுநிலை வழாது ஆராய்ந்தெழுதுவார் சொற்களையன்றி ஏனைப் புறங் கூற்றுரைகளை அறிவான் மிக்க சான்றோர் கருதாராகலின், அவ்வளவில் அவன் மகிழுக என்னும் நயமேபற்றிப், புறங்கூறு நரை அவர் தம் புறங்கூற்றுரையில் மகிழவிடுத்து, மேலெடுத்துக் காட்டிய பெரிய புராணப் பகுதிகள் பற்றி யாங் கூறியவற்றை மறுத்தார்தம் ஆராய்ச்சியுரைகளை யாம் ஆராய்ந்து பார்ப்பாம். ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்படாமல், அவர்க்குப் பின் வந்தாராற்செய்து சேர்க்கப்பட்ட செய்யுட்கள் பெரிய புராணத்தின் கண் உளவென்பது எமக்கும் எம்மை மறுக்கப் புகுந்தார்க்கும் உடன்பாடேயாம். ஆனாற், சேக்கிழார் புராணம் பாடிய உமாபதி சிவனார்க்குப் பிறகுதான் பெரியபுராணத்தின் கண் 33 செய்யுட்கள் மிகுதியாகச் சேர்க்கப்பட்டிருக் கின்றனவே யல்லாமல் அவராற் தொகை குறிக்கப்பட்டுள்ள நாலாயிரத் திரு நூற்றைம்பத்துமூன்று செய்யுட்களில் ஆசிரியர் சேக்கிழார் தம்மாலன்றிப் பிறரால் அவர் காலத்திற்கு முற்செய்து சேர்க்கப்பட்டன சிறிதுமில்லை யென்பதே நமதுரையை ஆராய்ந்த அவர் தங் கருத்தாம். அவர் அதற்குக் காட்டுஞ் சான்று என்னையெனின்; உமாபதி சிவனார்க்கு முற்பட்ட காலத்தே கற்றறிந்தாரும் சைவப் பெரியாரும் பல்கியிருந் தமை யிற், பிறராற் செய்யப்பட்ட செய்யுட்களை அந்நூலின்கண் இடையிடையே சேர்க்க அவரெல்லாம் ஒருப்பட்டிரார் என்பதூஉம், அங்ஙனம் சேர்க்கப்பட்டிருப் பின் உமாபதி சிவனார் அதனை எடுத்துக் கூறியிருப்பர் என்பதூஉம் யாம். இடைப்பட்ட காலத்தெழுந்த தமிழ் நூல்கள் சிலவற்றை ஆராய்வார்க்கு இவரது கூற்றுப் பொருந்தாமை நன்கு விளங்கும். இடைக்காலத்துத் தோன்றிய செந்தமிழ்க் காப்பியங் களுட் சிறந்ததாகிய சீவகசிந்தாமணியைத் திருத்தக்கதேவர் ஆக்கியபோது அஃது இரண்டாயிரத்து எழுநூறு செய்யுட் களேயுடைய தாயிருந்தது. ஆக்கியோனுக்குப்பின் அதற்கு நல்லுரை வகுத்த நச்சினார்க்கினியர் தங் காலத்தில் அது மூவாயிரத்து ஒருநூற்று நாற்பத்தைந்து செய்யுட் களுடைய தாயிற்று. மிகுதியான இந் நானூற்று நாற்பத்தைந்து செய்யுட் களும் இடையே கந்தியாராற் செய்து சேர்க்கப்பட்டன வென்றும், அங்ஙனம் பின்னரெழுதிச் சேர்க்கப்பட்ட செய்யுட் கள் இவைதாமெனப் பிரித்தறியக்கூட வில்லையென்றும் உரைகாரர் நச்சினார்க் கினியரே வரைந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி தோன்றிய காலத்தும், அது மிக்கு வழங்கிய சேக்கிழார் காலத்துந் தமிழ்க் கல்வியிற் சிறந்த சான்றோர் இத் தென்னாடெங்கும் நிறைந்திருந்ததோடு, செந்தமிழைப் பெரிதும் ஓம்பிவளர்த்த தமிழ் வேந்தரும் மிக்கு விளங்கினார். அவ்வாறிருந்தும், ஆக்கியோனாற் செய்யப்படாத நானூற்று நாற்பத்தைந்து செய்யுட்கள் அவற்குப் பின் அந் நூலின்கண் வந்து கலந்துவிட்டன. நச்சினார்க்கினியர் அந்நூலுக் குரை யெழுதி வையாதொழியின், இன்னும் எத்தனையோ செய்யுட் கள் பின்னும் அதன்கட் சேர்ந்திருக்கும். இவற்றை யெல்லாம் அக் காலத்திருந்த சான்றோர் எங்ஙனம் பொறுத்திருந்தார் என்று வினவுவது முறையாமோ? இனிச் சைவத் திருமுறைகளுட் சேர்ந்த திருமூலர் திருமந்திரம் சேக்கிழார் பெரியபுராணம் அருளிச்செய்த காலத்தில் ஒன்றவன்றானே என்னுஞ் செய்யுண் முதலாக மூவாயிரஞ் செய்யுட்களே உடையதா யிருந்ததென்பது, ஒன்றவன்றான் எனவெடுத்து, முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி என்னுந் திருமொழியால் நன்கு விளங்கும். மற்று இக்காலத்திலோ அது, பின்வந்தோராற் செய்து சேர்க்கப்பட்ட நாற்பத்தேழு செய்யுட்கள் மிகுதியுமுடையதா யிருக்கின்றது. திருமூல நாயனார் காலந்தொட்டு மிக்கு விளங்கிய சான்றோரும் அடியார்களும் வேந்தரும் இவ்வாறு பிறர்செய்ய எங்ஙனம் இடங்கொடுத்தாரென்றும் வினவுவது முறையாமோ? இனித், திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த பழைய காலத்திலேயே பால் இயல்களும் செய்யுட்கள் இவ்வளவு என்னுந் தொகையுங் குறித்து வழங்கப்பெற்ற தெய்வத் திருக்குறளுக்கு உரையா சிரியர் பலர் அடுத்தடுத்துத் தோன்றி உரைவகுத்து வைத்தமையின், பிற்காலத்தவர் அதன்கட் பிற செய்யுட்களை இயற்றி இயைக்க இடம்பெறாமை கண்டு, ஓர் அதிகாரத்திற் குள்ளேயே செய்யுட்களைப் பற்பலவாறாய் முறைபிறழ்த்தி விட்டனர். இவ் வுண்மை, திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையில் அதிகாரத்துச் செய்யுட்களின் வைப்புமுறை ஒருவாறாகவும், பரிமேலழகியார் உரையில் அவ் வைப்புமுறை வேறொருவறாகவும், இருத்தலே போதிய சான்றாம். இவ்வாறாகப், பிற்காலத்து வருவோர் பாக்களையும் உரைகளையும் இயற்றி முன்னுள்ள நூல்களில் நுழைத்து அவற்றைப் பெருகச் செய்தல் தமிழில் மட்டுமன்று; ஆரியம், கிரீக் முதலிய மொழிகளிலுள்ள பழைய நூல்களிலுங் காணப்படுகின்றது. வட மொழியில் இப்போதுள்ள வான்மீகி இராமாயணமும் மாபாரதமும் முதன் முதல் அவற்றை ஆக்கியோர் வகுத்த அளவினும் பின்னுள்ளோரால் எத்தனை யோ மடங்கு பெருக்கி எழுதப்பட்டன வாகு மென்றும், வடமொழிப் புராணங்களெல்லாம் இவ்வியல்பினவேயா மென்றும் அவற்றை நன்காய்ந்தோர் தக்க சான்றுகளுடன் எழுதி யிருக்கின்றனர். கிரீக் மொழியில் ஓமர் இயற்றிய இலியட், ஒடிசி என்னும் இரண்டு காப்பியங்களும் பின் வந்தோர் பலராற் பண்டையளவினும் மிகப் பெருக்கி எழுதப்பட்டனவாகு மென்பதை அவற்றை யாராய்ந்த அறிஞர் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கின்றனர். இனி, ஆங்கில மொழியிற் செகப்பிரியர் (ஷேக்பியர்) என்னும் நல்லிசைப் புலவர் பெயரால் எழுதிச் சேர்க்கப்பட்ட நாடகக் காப்பியங்களும் பல. கம்பர் தமிழில் இயற்றிய இராமாயணம் அவர் காலத்திலேயே பல மாறுதல்களை அடைந்ததெனவும், ஒருகால் அவர் இராமாயணம் கற்கும் ஒரு கூட்டத்திற் போயிருந்துஅதனைக் கேட்டுத், தம்மருகிலுள் ளாரை நோக்கி ‘இஃது யாவர் பாடிய இராமாயணம்? என்று வினவ, அவர்கள் இது கம்பர் பாடியது என்று விடைகூற, அதற்கவர் வியந்து கம்பர் பாடிய பாட்டுக்களும் இதிற் சில உள என்று சொல்லிப் போயின ரெனவும் ஒரு கதை வழங்கு கின்றது. இக் கதை பொய்யோ, மெய்யோ; எங்ஙனமாயினும் கம்பராமாயணம் பின்னுள்ளோராற் பெரிதுந் திரிபுபடுத்தப் பட்டதென்பது மட்டும் இதனாற் போதரும் உண்மையாம். இக் காலத்திற்போல அச்சுப் பொறிகளும், அவற்றிற் பதிப்பிடப்படும் ஆயிரக்கணக்கான புத்தங்கங்களும் அக்காலத் தில்லாமையால், கற்றார் முதற் கல்லார் ஈறாக எல்லாரும் விரும்பிக் கேட்குங் கதைகளும் வரலாறுகளும் நிறைந்த காப்பியங்களைக் கற்றுப் பிறர்க்கு எடுத்துச் சொல்வார், காலங்கடோறும் தமக்கு இனியனவாகத் தோன்றுவனவற்றை இடையிடையே எழுதிச் சேர்த்தலோடு, அவற்றில் தமக்கு இனிய வல்லவாகக் காணப்படுவன வற்றையும் மாறுபடுத்தி விடுதலும் வழக்கமாய் யாண்டும் நடைபெற்று வந்ததொன் றாம். இங்ஙனம் இடையிடையே செய்யப்பட்ட இடைச் செருகல்களும், திரிபுகளும் ஏட்டுச் சுவடிகள் சிலவேயுள்ள அக் காலங்களில் எளிதிற் கண்டறியப்படுவனவல்ல. அதனோடு, எவற்றையும் ஆராயாமலே நம்பிவிடும் இயல்பும் அக் காலத்தவரிற் பெரும்பாலார் உடையர். அதனாற், பின்னுள்ளோர் சேர்த்த இடைச் செருகல்களும், திரிபுகளும் நூலாசிரியன் செய்தன வாகவே பெரும் பாலுங் கொள்ளப் பட்டு வந்தன. இதனாலன்றே; உரையாசிரியர்கள் தாமுரை யெழுதும் நூல்களுக்குப் பல ஏட்டுச் சுவடிகள் வருந்தித் தேடி, அவற்றிற் காணப்படும் பாடவேறு பாடுகளையுந் தம்முரையுள் ஆங்காங்கு குறித்துப் போகின்றனர். திருச்சிற்றம்பலக் கோவை யாருரையிற் பேராசிரியர் பாடவேற்றுமைகள் பல காட்டுதலும், இங்ஙனமே ஏனைப் பல நூல்கட்கு உரை வகுத்தாரும் பாடவேற்றுமைகள் எடுத்துக் காட்டுதலும் எமது மேற் கோளை நிறுவுதற்குப் போதிய சான்றுகளாம். உண்மை இவ்வாறிருப்ப, இதனை ஒரு சிறிதும் ஆய்ந்துணராது, இடைச் செருகல்களும் திரிபுகளும் நிகழ்தற்கு அஞ்ஞான்று எங்கும் நிறைந்த கற்றறிவினர் எங்ஙனம் ஒருப்படுவர்? என்று வினாதல் நகையாடி விடுக்கற் பாலதாமென்க. இனிச், சேக்கிழார் அடிகள் தாம் இயற்றிய அடியார் வரலாறுகளின் தொகுதிக்குத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரே அமைத்தார் என்பது அவர் தாமே பாயிரத்திறுதியிற் கூறிய, இங்கிதன் நாமங் கூறின் இவ்வுல கத்து முன்னாள் தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்கு கின்ற செங்கதிர வன்போல்நீக்குந் திருத்தொண்டர் புராணம் என்பாம் என்னுஞ் செய்யுளால் நன்கு புலப்படும். இங்ஙனம் ஆசிரியர் சேக்கிழார் வைத்தருளிய இப் பெயரையே அடியோடு மாற்றி அந் நூலுக்குப் பெரிய புராணம் என்னும் பெயரை வைத்து வழங்கிய பின்னோர், இடையிடையே தாம் வேண்டிய செய்யுட்களையும் எழுதி அந் நூலின்கட் சேர்த்துவிட்டா ரென்பது ஒரு வியப்பன்று. தொண்டர் என்னுஞ் சொல் அடியர் எனப் பொருடருதலால், அவ் வடியவர்க்கு ஆண்டான் ஒருவன் தனி முதல்வனாய் உளன் என்பது சைவநூற் கொள்கை யாகும். மற்று மாயாவாதமோ ஆண்டவன் எனவும் அடியார் எனவும் இரண்டில்லை அதனால் அடிமைத்திறம் என்பதும் ஒன்றில்லை, இல்லை யாகவே தம்மைப் பிரமமாக உணர்ந்தாரைப் பெரியரெனக் கூறல் வேண்டுமே யல்லாது அடியரெனக் கூறுதல் ஆகாதென்று கொள்வது. அத்தகைய மாயாவாதக் கொள்கை யுடையார் எவரோதாம், திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரைப் பெரிய புராணம் எனக் கரவாய் மாற்றி, ஆசிரியர் சேக்கிழார் வைத்தருளிய அச் சிறந்த பெயர் பெரும் பாலார்க்குள் வழங்காதபடி செய்து விட்டனர். பிற்காலத்திற் சைவசித்தாந்த நுண்ணுலுணர்ச்சி குன்றி மாயாவாதப் பருநூலுணர்ச்சி பெருகச், சைவம் இது, மாயாவாதம் இது எனப் பகுத்துணர மாட்டாமற் சைவரிற் பெரும்பாலாரே மாயாவாதக் கொள்கையினராய் மாறுபட்டமையிற்றிருத் தொண்டர் புராணம் என்னும் பெயரை விடுத்துப், பெரிய புராணம் என்னும் பெயரையே பெரிதும் வழங்கலாயினர். சைவரும் அவர் செய்த அச் சூழ்ச்சியினை அறியாராய்த் தாமும் அப் பெயரையே பெரிதும் வழங்கி விட்டனர். இங்ஙனமே, மாயாவாதிகள் சைவ நூல்களுட் புகுந்து தமக்கிசைந்த பல மாறுதல்களைச் செய்து, அவற்றைச் சைவருங் கைக்கொள்ளுமாறு செய்த ஏமாற்றங்கள் எத்தனையோ பல உள. அவற்றுள் இன்னும் ஒன்றுகாட்டுவாம். இத் திருத் தொண்டர் புராணத்தை உரைநடையில் எழுதிய சைவர் சிலர், சுந்தர மூர்த்தி நாயனாரின் பண்டைவரலாறு கூறுகின்றுழித் திருக்கைலாயத்திற் சிவபெருமான் ஒரு கண்ணாடியை யெடுத்து நோக்க, அதிற்றோன்றிய தமது அழகிய திரு வுருவத்தைக்கண்டு வியந்து சுந்தரமே வா என்று அழைப்ப, உடனே அக் கண்ணாடியினின்றும் புறங்குதித்துவந்த அவ் வுருவமே ஆலால சுந்தரர் எனப் பெயர் பெற்றதென்று ஒருகதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆசிரியர் சேக்கிழார் பாடியதாகச் சேர்க்கப்பட்டுள்ள திருமலைச் சருக்கத் திலுங் கூட இக்கதையைக் காணோம். திருத்தொண்டர் புராணத்தை உரை நடைப் படுத்தி எழுதுகின்றவர், அப் புராணத்திற் சொல்லப்படாதவைகளையுந் தமக்குத் தோன்றியவா றெல்லாஞ் சேர்த்தெழுதுதல் முறையாகுமோ! இங்ஙனஞ் செய்யுளில் இல்லாமல் உரையில் வலிந்துபுகுத்தப் பட்டனவும் சைவர்களால் உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்படுதல் என்னையென்று உற்று நோக்குங்கால், அவர் தம்மிற் பெரும்பாலார்க்குப் பகுத்தறிவில்லா நம்பிக்கை மிகுதியும் உளதாதல் நன்கு புலனாகின்றதன்றோ? இனி, உரைநடையிற் புதிது சேர்க்கப்பட்ட இக்கதை மாயாவாதிகளாற் புதிது படைக்கப்பட்ட தென்பதை யாங்ஙனம் அறிந்தீரெனிற் கூறுதும்: முழு மதியம் ஒன்றே குடங்கடோறுமுள்ள நீரிற் பல மதியங்களாய்த் தோன்றுதல்போலப், பரப்பிரமம் ஒன்றே மாயையிற் பிரதிபலித்து எண்ணிறந்த சீவர்களாய்த் தோன்றுகின்றதென்று மாயாவாதிகள் கூறுநிற்பர். அதனால் அவர் கருத்துப் பரப்பிரமத்தின் வேறாகச் சீவர்கள் இல்லையென்பதூஉம், பரப்பிரமம் ஒன்றே அங்ஙனம் அவர்போற் பலவாய்த் தோன்றுகின்ற தென்பதூஉமே யாம். இனிச் சிவபெருமான் ஒரு கண்ணாடியை நோக்கி அதிற்றோன்றிய தமது சாயலையே சுந்தரராக வருவித்தா ரென்பதனாற், சிவபெருமானுஞ் சுந்தரரும் என இருவரில்லை ஒருவரே உண்மையில் உளர் என்னும் அவரதுகொள்கை அக்கதையின்கட் புகுத்தப்பட்டமை காண்க. மாயையிற் றோன்றும் பரப்பிரம பிரதிபலன நிலையிற் கண்ணாடியிற் றோன்றும் சிவபெருமானது பிரதிபலனம் வைக்கப்பட்டது. சிவ பெருமானாகிய முழு முதற் கடவுளே ஆண்டானெனவும், அவனுக்குத் தாம் அடிமை யெனவுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரே மீளாவடிமை யுமக்கேயாளாய் என்றாற்போற் பலவிடங் களில் வெளிப்படையாய்க் கூறியிருக்கவும், அச் சைவசித்தாந்தக் கருத்தொடு முரணிச் சிவத்தினது பிரதிபலனமே சுந்தரரெனக் கூறிய மாயவாதவுரையுங் கற்றறிவுடைய சைவர் சிலரால் ஆராயாமல் எடுத்தாளப்பட்டதன்றோ? ஒருவரதுடம்பின்கண் உயிர் உளதாதல்போல, அவ்வுடம்பின் எதிரொளி வடிவாய்க் கண்ணாடியிற் றோன்றிய நிழலுக்கு உயிர்உளதாதலும், அது கண்ணாடியினின்றுங் குதித்துச் சுந்தரரெனப் பெயர் பெற்றுவந்த தென்றலும் யாங்ஙனம் பொருந்தும்? இன்னோ ரன்ன பொருந்தாக் கோட்பாடுகள் மாயாவாத நூலுடை யார்க்கே பொருந்துமன்றி, உண்மைநெறிவழாமற் செல்லும் சைவசித்தாந்தத்திற்கு ஒரு சிறிதும் உடன்பாடாகா வென்க. ஆகையால், இவைபோன்ற மாயாவாதப் பொய்க் கதைகள் சைவநூல்களுட் காணப்படுதல் பற்றி அவை சைவ மெய்க் கதைகள் போலுமென நம்பிவிடாது, உண்மைச் சைவராவார் எவற்றையும் ஆராய்ந்து கைக்கொண்டு ஒழுகுதலே செயற்பாலதா மென்க. இனி, ஆசிரியர் சேக்கிழாரியற்றியருளிய திருத் தொண்டர் புராணத்தின்கட் பாயிரத்திற்கும் நூற்றொடக்க மாகிய தடுத்தாட் கொண்ட புராணத்திற்கும் இடையே காணப்படும் திருமலைச் சிறப்பு முதலாகிய நான்கும் சேக்கிழார் இயற்றியன ஆகா என்பதற்கு யாங்கூறிய ஏதுக் களை மறுப்பான் புகுந்தவர், அங்ஙனம் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே நாட்டுச்சிறப்பு முதலியன கூறுதல் தொன்னூற்புலவர் வழக்கு என்கின்றார். ஒரு கதையினைத் தொடர்புபடுத்துக் கூறும் ஒரு காப்பியத்துட் கூறுதற் கெடுத்த கதையினைக் கூறத்தொடங்காமல், இயை பில்லாத நாட்டுச் சிறப்பு நகரச்சிறப்புகளை வாளாவிரித்துப் பாடும் வழக்கம் சமணப் புலவர் காலத்திற்றோன்றிக் கந்த புராணம் இராமாயணம் பாடிய கச்சியப்பர் கம்பர் கால முதற்கொண்டு மிகப் பெருகிய தொன்றாம். ஆசிரியர் சேக்கிழார் சமணர் காலத்திற்குப் பின்னும் கச்சியப்பர் கம்பர் காலத்திற்கு முன்னும் இருந்தவராகலின் அவர் பின்னை யோரைப் பின்பற்றினவர் ஆகார்; சமணர் பொய் கூறுநீரராகலின் அவரைப் பின்பற்றுதலுஞ் சேக்கிழார்க்குக் கருத்தன்று. சமணர்க்கு முற்பட்ட பழைய நூலாசிரியரைப் பின்பற்றுதலே அவர் தந் திருவுள்ளக்கிடையாம். பழைய நல்லிசைப் புலவர் காலத்து எழுந்த தமிழ்ப்பெருங் காப்பியங்களோ எடுத்த பொருளைவிட்டு நாட்டு வளம் நகரவளங்களைப் பாடிக் கொண்டிருப்பன அல்ல. இவ் வுண்மைக்குச், செந்தமிழ் மொழியின் நந்தாமணி விளக்கங்களாய்த் திகழும் ஐந்து பெருங்காப்பியங்களுள் முந்துநிற்குஞ் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே உறுபெருஞ்சான்றம். இப் பழந்தமிழ்க் காப்பியங்களிரண்டுந் தாங் கூறுதற்கெடுத்த கதையை இடையீடு படாமல் உடனே கூறக் காண்டுமன்றிப், பின்றைக் காலத்துச் சமணநூல்களும் புராண நூல்களும் அவ்வவ் வூர்களிற் காணப்படாத நாட்டு வளங்களையும் அவ்வந் நகரங்களிற் காணப்படாத நகர வளங்களையும் பொய்யாகப் புனைந்து கட்டிப் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே வாளாவிரித்துக் கூறுமாறுபோல் ஒரு சிறிதாயினுங் கூறக் காண்கின்றிலேம். இச் செந்தமிழ்ப் பழங்காப்பியங்களைப் போலவே, உண்மையாய் நடந்த கதையை உள்ளவாறெடுத்துச் சொல்லும் உண்மைநெறி மேற்கொண்ட ஆசிரியர் சேக்கிழார், தமது நூலுக்கு ஓரியைபுமில்லாத நாட்டுவள நகரவளங்களைப் பாயிரத்திற்கும் நூலிற்கும் இடையே பாடிவைத்தாரென்றல் சிறிதும் பொருந்தாது. அற்றன்று, சேக்கிழார்க்கு முற்பட்ட காலத்தே வழங்கிய சூளாமணி, சிந்தாமணி என்னுந் தமிழ்க் காப்பியங்கள் சமண முனிவரால் இயற்றப்பட்டனவாயினும் அவற்றிற்கனிந்து விளங்குந் தமிழ்ச்சுவையே பற்றித் தமிழ்ப்புலவரெல்லாரும் அவற்றை மீக்கூறக் காண்டலின் அவற்றின்கட் கூறப்பட்டவாறே சேக்கிழார் தாமும் நாட்டுச்சிறப்பு நகரச் சிறப்பு முதலாயினவற்றைப் பாடி வைத்தாரெனின்; நன்று சொன்னீர், சூளாமணி, சிந்தாமணி யென்னும் அமண்காப்பியங்கள் இல்லோன் றலைவனாக இல்லது புனைந்து கூறும் பொய்க்கதை தழீஇய நாடக வழக்குப்பற்றி வந்தனவாகும்; அநபாய வேந்தன் அவைக்களத்தே இவ் வமண் காப்பியப் பொய்யும் புரட்டும் விரும்பிக் கற்கப்படுதல்கண்டு இரங்கி சேக்கிழார் அவற்றின் பயிற்சி பயன்படாமை அரசற்குத் தேற்றி, உலகிற்கு உண்மை யறிவுச்சுடர் கொளுவுவான் கருதி உள்ளோன் றலைவானக உள்ளது தெளித்துக்கூறும் மெய்ந் நாடக வழக்குப்பற்றி மெய்யடியார் மெய்வரலாறுகளை ஒருங்கு தொகுத்துத் திருத்தொண்டர் புராணம் என்னும் அரும்பெருஞ் செந்தமிழ் மெய்க்காப்பியம் இயற்றி யருளினார். சொற்சுவை பொருட்சுவையோடு பொருளுண்மையும் உண்மையன்பின் விழுப்பமுந் தேற்றுவான் புகுந்த ஆசிரியர் சேக்கிழார்க்கு அவ்வியல்புகள் முற்றமுடைய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பழைய மெய்க்காப்பியங்களைப் பின்பற்றிச் செல்லுதலே திருவுளப் பாங்காமல்லது, உண்மை யல்லாக் கதைமேற் சொற்சுவையுங் காமவின்பச் சுவையும் மட்டுமே முதிரச் சொல்லுஞ் சூளாமணி சிந்தாமணி என்னும் அமண்புரட்டுக் காப்பியங்களைப் பின்பற்றல் கருத்தாகாது. இவ்வுண்மை, கலகமிடும் அமண்முரட்டுக் கையர் பொய்யே கட்டி நடத் தியசிந்தாமணியை மெய்யென், றுலகிலுள்ளோர் சிலர் கற்றுநெற்குற் றுண்ணா துமிக்குற்றிக் கைவருத்திக் கறவைநிற்க, மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ் சோலை வழியிருக்கக் குழியில்விழுந் தளறுபாய்ந்து, விலைதருமென் கரும்பிருக்க இரும்பை மென்று விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்து நொத்தார் எனவும், வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக் கதையை மெய்யென்று வரிசை கூற, உளமகிழ்ந்து பலபடப் பாராட்டிக் கேட்க உபயகுல மணி விளக் காஞ் சேக்கிழார் கண் டிளவரசன் றனைநோக்கிச் சமணர் பொய்ந் நூல் இதுமறுமைக் காகாதிம் மைக்கு மற்றே, வள மருவுகின்ற சிவ கதையிம்மைக்கும் மறுமைக்கும் உறுதியென வளவன்கேட்டு எனவும் உமாபதி சிவனார் அருளிச் செய்யுமாற்றாற் காண்க. அற்றன்று, கதையளவில் அவ்வமண் காப்பியங்களைச் சேக்கிழார் பின் பற்றாராயினும், தமிழ்ச்சுவையளவில் அவர் அவற்றைப் பின்பற்றினாரென்றல் குற்றமன்றலெனின்; தமிழ்ச் சுவையளவிலும் ஏனைப்பல நலங்களினும் இவ் வமண்காப்பியங் களைவிட எத்தனையோ மடங்கு மிக்குயர்ந்து துலங்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பழந்தமிழ்க் காப்பியங் கள் இருப்ப அவற்றை விடுத்துத் தெய்வச் சேக்கிழார் ஏனைய வற்றைப் பின்பற்றினாரென்றல் ஒருவாற்றானும் ஏலாது. நடு நின்று நுணுகி நோக்குவார்க்குச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் சொற்சுவை பொருட்சுவைகளிற் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருச்சிற்றம்பலக் கோவையாரை ஒப்பதன்றி, ஏனைப் பின்றைக்காலத்துக் காப்பியங்களை ஒவ்வாமை நன்கு விளங்கும். பின்றைக்காலத்துக் காப்பியங் களுள் திருத்தொண்டர் புராணத்திற்கு இழிந்தனவேயுள வல்லது, அதற்கு ஒப்பாவதும் மிக்கதும் ஏதுமில்லையெனும் மெய்ம்மையும் நடுநிலையாளர் கடைப்பிடித்துணர்வர். எனவே, பழந்தமிழ்க் காப்பியங்களோ டொவ்வாமல், அமண் காப்பியங்களோடொத்துக் காணப்படும் நாட்டுச் சிறப்பு முதலியன சேக்கிழாராற் செய்யப் படாமல் அவர்க்குப் பிற்பட்டாராற் செய்து சேர்க்கப்பட்டனவா மென்பதே தேற்றமாமென்க. இனிப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே நூலோடு இயைபில்லாத நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்புக்களை விரித்துப் பாடுதல் பழைய புலவர்க்கு வழக்கமேயாம் என்னுந் தமது கொள்கையை நிறுவுதற்கு எதிர்ப்பக்கத்தார் கூறுவது இது. தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் தாம் கூறுதற்கு எடுத்துக்கொண்ட அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப் பால் என்னும் மூன்றற்கும் முதலிலே கடவுள் வாழ்த்தும், வான் சிறப்பும் ஆகிய பாயிரங் கூறுதலோடு, அவற்றிற்கும் நூலுக்கும் இடையிலே நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் என்னும் வேறு இரண்டனையும் வைத்துக் கூறினாற்போலச் சேக்கிழாரும் அங்ஙனம் நாட்டுச் சிறப்பு முதலியவற்றை இடைக்கண் வைத்து ஓதினார் என்பது. இவ்வாறு உரைக்குமாற்றால், திருவள்ளுவனார் இயைபில் லாதனவற்றை இடை விரித்தோதினாரென்பதே இவரது கருத்தாகின்றது. ஆசிரியர் திருவள்ளுவர் கருத்தறியாது கூறினமையின் இவருரை பொருந்தாதென்பது காட்டுவாம். கடவுள் வாழ்த்து முதலாகிய நான்கு இயல்களுமே நூற்பொருளைச் சிறப்பித் தற்கு வந்த சிறப்புப்பாயிரமாமென்று அறிதல் வேண்டும். யாங்ஙன மெனின், நூலோதுதலின் பயன் கடவுளை யுணர்ந்து அவன்றிருவடிகளைத் தொழுது பிறவித் துன்பத்தை அறுத்த லேயாகவின் தாம் இயற்றும் அந் நூலின் பெரும் பயனை உணர்த்தும் பாயிரமாகக் கடவுள் வாழ்த்தினை முதற் கண் வைத்தார். இனித்தாம் அறிவுறுத்துதற்கு எடுத்துக் கொண்ட அறத்தை இல்லறம் எனவுந் துறவறம் எனவும் இரண்டாகப் பகுக்கின்றராகலின், இல்லறம் நடைபெறுதற்கு இன்றிமையாக் கருவியாகிய மழையினது சிறப்பும், துறவறம் நிலைத்தற்கு இன்றிமையாத் தன்மையரான நீத்தாரது சிறப்பும் அதன்பின் முறையே வைத்தார். இனித் தாம் உணர்த்தும் அறம்பொருள் இன்பம் என்னும் முப்பாற்பொருளும் அறத்தையே நிலைக் களனாக் கொண்டு நடப்பனவாமென்று வலியுறுத்துவார் அறத்தின் பொதுவாகிய சிறப்பை அவற்றின் பின், அறன் வலியுறுத்தல் என வைத்தார். இவ்வியல் முப்பாற்கும் பொதுவாகிய அறத்தின் சிறப்பையே உணர்த்துவதென்பது எற்றாற் பெறுதுமெனின்; மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன் என இவ் வியலுட்போந்த செய்யுள் உள்ளத்தின்கண் மாசு தீர்ந்து தூயனாகப் பெறுதலே அறத்தினியல், என முப்பாற்கும் பொதுவாகிய அறத்திணைக் கூறுதலானும் சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் என்னுஞ் செய்யுள் இல்லறவியல் துறவற வியல் களையும், அறத்தாறு இதுவென வேண்டா என்னுஞ் செய்யுளும், ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே என்னுஞ் செய்யுளும் பொருட்பாலையும், அறத்தான் வருவதே இன்பம் என்னுஞ் செய்யுள் இன்பத்துப் பாலையும் நோக்கி நிற்றலானும் பெறுதுமென்பது. எனவே, நூலுட் கூறும் முப்பாற் பொருட்கும் இன்றியமையாச் சிறப்பினவாய நான்கு பொருள்களைக் கூறும் இந் நான்கியல்களும் ஒன்றற்கொன்று இயைபுடையவாய் ஒரு தொகைப்பட்டு நூற் சிறப்புப்பாயிரமாய் அமைந்து நிற்கின்றனவே யல்லாமல் நூற்கு இயைபில்லாத இடைப் பிறவரலாய் நிற்கவில்லை யென்று ஓர்ந்து உணர்க. ஆகவே, இஃது உணராதுரைத்தார் கூற்றுப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே பிறபொருள் வரலாமெனக் கொள்னுந் தமது கொள்கையை நிலை நிறுத்தாதென் றொழிக. இனிச், சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர்தம் திருத்தேவி யாரான பரவையார் சங்கிலியாரும் இந் நிலவுலகில் வந்து பிறந்தருளுதற்கு ஏதுவாய் நின்ற முற்பிறவியின் வரலாறுகளை ஆசிரியர் சேக்கிழார் நூலுட் கூறாமையின், அவற்றை வேறு தனியேசெய்து பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே திருமலைச் சருக்கம் என வைத்துக் கூறினாராகலின் அது நூற்பொருளோடு இயைபுடையதாய்ச் சேக்கிழாரால் ஆக்கப்பட்டதேயாய் முடியும் என்னும் எதிர்ப் பக்கத்தார் கூற்றை ஆராய்வாம். ஒரு பிறவியில் வந்த ஒருவருடைய வரலாறுகளைப் பிழைபடாமல் ஆராய்ந்து எழுதுவதே பெருவருத்தமா யிருக்கின்றது; அங்ஙனமிருக்க அவர் அதற்கு முற்பட்ட பிறவிகளில் இருந்த வரலாறுகளைத் தெரிந் தெழுதுதல் யாங்ஙனங் கூடும்? இப்போதிருக்கும் ஒருவர் மேற்பிறவியில் இவ்விவ்வாறு இருந்தார் என்பதைத் தெரிதற்கு வழி யாது? ஒருவர் பிறக்கும்போது அவர் எங்கிருந்து வருகின்றாரென்பது அவர்க்குந் தெரியாது, அவரை ஈனுந் தாய் தந்தையார்க்குந் தெரியாது அவரைச் சூழ்ந்தார்க்கும் தெரியாது, பிறர் எவருக்குமே தெரியாது அங்ஙனமே அவர் இறக்கும் போதும் அவர் செல்லுமிடம் இதுவென எவருமே அறியார். ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்கும் இடையிலே எவரானும் ஏறிச் செல்ல இயலாத அறியாமைச் சுவர் அத்துணை உயரமாக எழுப்பப்பட்டிருக்கின்றது. எல்லாம்வல்ல இறைவன் ஒருவனுக்கே யல்லாமல் மற்றையோர் எவர்க்கும் உயிர்கள் எடுக்கும் பல பிறவிகளின் வரலாறுகளும் அவற்றின் தொடர்புகளும் உணரலாகா. அற்றன்று, மலமாசு தீர்ந்து இறைவனது திருவருளைச் சார்ந்து நிற்பார்க்கு எல்லாந் தாமே விளங்குமாலெனின்; நன்று கூறினாய், இறைவனருளைச் சார்ந்தார் அவ்வருளையே நோக்கி அவ்வருளின்பத்திற் படிந் திருப்பரல்லது, ஏனையவற்றை ஒரு சிறிதும் நோக்கார். அது மலமாசு முற்றுந் தீர்ந்தார்க்கு ஒக்குமாயினும், உடம்போடு கூடியிருந்தே தூய அருள்வழியராய் நிற்பார்க்கு ஒருவரின் பல பிறவி வரலாறுகளை யறிதல் கூடுமெனின்; அவரும் அருள்வழியராய் நிற்றலால் அருளால் உந்தப்பட்டு ஒரோ வொரு கால் ஒரு பெரும்பயன் கருதி ஒருவரின் பழம் பிறவி வரலாறுகளை உணர்வாரல்லது, எஞ்ஞான்றுமே அவர் தாமாகவே அவற்றை உணரப்பெறார். அற்றன்று, அவர் அவற்றைத் தாமாகவே அறிதல் கூடுமெனிற்;சிற்றம்பலத்திலே செல்லுக்கு இரையாய்ப்போன தேவாரப் பதிகங்களை அவை முன்னிருந்த படியே கண்டறிந்து எழுதிவைப்பார் எவரும் இல்லாமையின் அது பொருந்தாதென்க. மேலும், பெரிய புராணத்தின்கட் கூறப்பட்ட நாயன் மார்களுள் மரபு இன்னதென்று அறியப்படாமற் சொல்லப் பட்டோர் பதின்மூவரும், ஊர் இன்னதென்பது தெரியாமற் சொல்லப்பட்டோர், எழுவரும், பேர் இன்னதென்று உணரப் படாமற் புகலப்பட்டோர் எண்மரும் உளராகலானும், இன்னும் அங்ஙனமே அவ்வவர் வரலாறுகளில் தெரியாமல் விடப்பட்டனவும் பலப்பல உளவாகலானும் அருள்வழி நிற்பார்க்கும் அது காட்டும் அத் துணையின் மேற்பட்டுப் பழம்பிறவியின் வரலாறுகளை யுணர்தல் செல்லாதென்க. ஒரு பிறவியில் நிகழ்ந்த ஒருவரின் வரலாறுகளை இறைவனாற் றரப்பட்ட பகுத்தறிவு கொண்டு பிழைபடாமல் ஆராய்ந்து தெரிந்தவளவு எழுதுதலே அறிவான்மிக்க சான்றோர்க்கு இயல்வதாமென்க. ஆசிரியர் சேக்கிழார் தமக்குள்ள பகுத்தறிவு முதிர்ச்சிகொண்டு, அவ்வந்நாயன்மார் வரலாறுகளைப் பல அடையாளங்களி னுதவியால் ஆராய்ந்து, உண்மை தெரிந்த மட்டில் நன்கெழுதி வைத்தனரே யல்லாமற், சான்றுகள் இல்லாத வரலாறுகளையும், நாயன்மார்கள் பழம்பிறவிகளில் இருந்த வரலாறுகளையும் ஆசிரியர் சேக்கிழார் ஒருசிறிதுங் கூறப்புகுந்தார் அல்லர். திருஞானசம்பந்தர், திருநாவுக் கரையர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எந்த நாயன்மாரின் பழம்பிறப்பு வரலாறுகளையும் எடுத்தோதாத சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனாரின் பழைய பிறவி வரலாற்றை மட்டும் எடுத்து ஓதினாரென்றல் தினைத் துணையும் பொருந்தாத உரையாம். அல்லதூஉம், சுந்தரமூர்த்தி நாயனாரின் பழம்பிறவி நிகழ்ச்சி திருக்கைலாயத்தின் கண்ணே நிகழ்ந்ததொன்றெனக் குறிக்கப் பட்டிருக்கின்றது. திருக்கைலாயமோ இந் நிலவுலகத்தில் யாண்டும் உள்ளதன்று. மக்களாய்ப் பிறந்த நாமோ பிரகிருதிமாயையின் இருபத்து நான்காவது கீழ்ப்படியாயுள்ள மண்ணுலகுகள் பலவற்றுள் ஒன்றில் இருக்கின்றோம். நமக்குமேல் இருபத்து மூன்றாம் படியிற் பிரகிருதிமாயை உளது. அப்பிரகிருதிமாயைக்கு மேல் அராக தத்துவம் உளது; அவ்வராக தத்துவத்திலே சீகண்ட உருத்திரர் எழுந்தருயிருக்கும் திருக்கைலாயம் உளதென்று சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன. அராகதத்துவ மண்டிலங்கள் நமக்கு எவ்வளவு தொலைவில் இருக்கின்றனவோ, அவற்றின் உண்மையை இப்போதுள்ள வான் நூல்கள் கொண்டும் ஒருவாற்றானுந் துணியக்கூடவில்லை. எத்தகைய தொலைவு நோக்கிக் கண்ணாடியின் உதவிகொண்டு நோக்கினும், அவை நம் கட்புலன்களுக்குத் தோன்றாமையின், அவற்றின் இயல்பு நம்மால் அறியக்கூலுடவில்லை. இனித்,தொலைவு நோக்கியின் உதவிகொண்டு நாம் கட்புலன்களாற் கண்டறிந்து கொள்ளத் தக்க எல்லையிலுள்ள செவ்வாய், திங்கள், ஞாயிறு முதலான மண்டிலங்களின் இயல்பும் நிகழ்ச்சியுமாவது நம்மால் விரிவாக அறியப்பட்டிருக்கின்றனவா வென்றால், அதுவும் இல்லை, இல்லை இவற்றுக்கே இங்ஙனமென்றால் நம் கண்ணுக்கும் மனத்துக்கும் எட்டாத அராகதத்துவ மண்டிலத்துள்ள திருக்கைலாயத்தில் நிகழ்ந்தவற்றை இந்நிலவுகத்துள்ளார் உணர்ந்துகொள்வது யாங்ஙனம்? இந் நிலவுலகத் திருந்த ஒருவரின் வரலாறுகளையே முற்றும் அறிந்துரைத்தல் இயலாததாயிருக்கையில், இங்குள்ளார் எவ்வாற்றானுந் தெரிந்துகொள்ளுதற்கு ஏலாத அத்துணைச் சேய்மையிலுள்ள அராகதத்துவ திருக்கைலாய நிகழ்ச்சிகளை ஈண்டையார் கண்டுரைப்பரென்றல் யாங்ஙனம் பொருந்தும்? ஆதலால் தாம் கூறும் உண்மை வரலாறுகளில் எவர்க்கேனும் ஐயப்பாடு உண்டானால் அவர் அவற்றைத் தாமாகவே ஆராய்ந்து உண்மை காணத்தக்க வகையாக, மெய்ச்சான்றுகள் கொண்டு நாயன்மார் வரலாறுகளை வரைந்த ஆசிரியர் சேக்கிழார் அங்ஙனம் ஐயந்தெளிதற்கு ஆகாத கைலாய நிகழ்ச்சிகளை உரைத்தாரென்றல் எள்ளளவும் இசையாது. இதனை ஓரெடுத்துக்காட்டான் விளக்குவாம். சிறுத்தொண்டர் தம் மன்னவன் பொருட்டு வடக்கே யுள்ள வாதாவி நகரத்தின்மேற் படையெடுத்துச் சென்று அந் நகரத்து அரசனை வென்று திரும்பினாரெனக் கூறும் சேக்கிழார் உரையில் எவரேனும் ஐயம் உற்று அதன் உண்மையை ஆராயப்புகுந்தால்,அவ் வாதாவி நகரத்திலுள்ள பழைய கல்வெட்டு ஒன்று சான்றாக நின்று அதன் உண்மையை அவர்க்கு ஐயம் அற நாட்டும். இங்ஙனமே, சேக்கிழார் கூறிய வரலாறுகளை உண்மையெனத் தெளிதற்கு மெய்ச்சான்றுகள் ஆங்காங்கு உள்ளன. இதுபோலவே, திருக்கைலாயத்தில் ஒன்று நடந்ததென ஒருவர் கூறினால் அதனை உண்மையெனத் துணிதற்கு ஒரு மெய்ச்சான்று இல்லையாகலின், அவ்வியல்பின தொன்றை ஆசிரியர் சேக்கிழார் கூறினார் என்றல், அவர் கூறும் வரலாற்று முறைக்குச் சிறிதும் இணங்காதென்க. அற்றன்று, ஒரு வரலாற்றின் உண்மையைத் தெரிதற் பொருட்டு அதற்குரிய சான்றுகளை ஒருவர் தேடிமுயன்று அறிதல்போல, மேலே எட்டாச் சேய்மைக்கண் உள்ள திருக்கைலாய நிகழ்ச்சியினைத் தெரியவேண்டுவாரும் தவங்கிடந்து தமதுயிரைத் தூய்தாக்கி அதனை அருள்வழி நிறுத்த வல்லுநராயின், அவர் அம்மேலுலக நிகழ்ச்சியினை ஐயமின்றித் தெளிந்துகொள்வரெனின் அங்ஙனந் தவத்தால் தூயராய் அருள்வழி நிற்பார், பிறர் எவருங் கூற வேண்டாமலே நாயன்மார் வரலாறுகளையெல்லாம் முற்ற உணர்வராகலின், அன்னவர்க்குப் பெரியபுராண முதலான நூல்களின் வாயிலாக அறியவேண்டுவதொன்று மில்லையென மறுக்க. மேலும், இவ்வுலக நிகழ்ச்சியிற் காணப்படாத பொய்யும் புரட்டுமாகிய கதைகளைக் கட்டிவைப்பாரை நோக்கி, இவற்றுக் கெல்லாம் சான்றுகள் எங்கே உள்ளனவென்று ஓர் அறிவுடையார் கேட்டால், இவையெல்லாம் நுமதறிவுக்கு விளங்கா; நீர் மனந் தூயராய்த் திருவருள்வழி நிற்கும்போதுதான் இவை முற்றும் உமக்கு விளங்கும் என்று அப் பொய்க்கதைப் புரட்டர்கள் விடைசொல்லி ஏமாற்றுவராகலின், சான்றுகள் காட்டாமல் இங்ஙனம் கூறும் மறுமொழிகள் அறிவுடையோரால் ஏற்றுக்கொள்ளற்பாலன அல்லவென்க. எனவே, திருக்கைலாய நிகழ்ச்சி ஈண்டுள்ளாரால் அறிந்துகொள்ளுதற்கு ஆகாமை யானும், ஏனை நாயன்மாரின் முற்பிறவி வரலாறுகள் பெரிய புராணத்தின்கண் யாண்டும் சொல்லப் படாமையானும் திருக்கைலாயத்தின்கண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறுகள் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டன அல்லவென்பது தேற்றமாம். அது நிற்க. இனிக், கைலாயத்தின் நிகழ்ச்தனவாகச் சொல்லப்பட்ட அவ் வரலாற்றின் பெற்றியை ஒரு சிறிது ஆராய்வாம். சிவபிரானை வழிபடுதற்பொருட்டு ஆலால சுந்தரர் என்பார் திருக்கைலாயத்தின் கண்ணதாகிய ஒரு பூங்காவில் மலர்கொய்வான் வேண்டி அதனுட் செல்ல, அங்ஙனமே பிராட்டியார் வழிபாட்டின் பொருட்டு ஆண்டு மலர்கொய்யப் போந்திருந்த கமலினி, அநிநதிதை என்னுந் தேவமாதரார் இருவரையும் அவர் எதிர்ப்பட்டனர் என்றும், அவ்வாறு எதிர்ப்பட்ட அளவானே ஆலாலசுந்தரர் அம் மாதரார் மேலும், அம் மாதரார் அல்வாலால சுந்தரர் மேலும் பெருங்காதல் கொள்வாராயினர் என்றும், அவ்விருதிறத்தார் உள்ள நிகழ்ச்சியையும் உணர்ந்த இறைவன் இவ்விடம் நீர் இன்பந் துய்த்தற்கு உரியதன்று ஆகலான், நீவிர் மண்ணுலகத்துச் சென்று பிறந்து அதனைத் துய்த்து மீளக் கடவீர்களாக! என்று கூறி அவரை விடுத்தனன் என்றும் அக்கதை நுவல்கின்றது. மிக வியக்கத்தக்க அமைப்போடு கூடிய ஆண் உடம்பு பெண் உடம்புகளை வகுத்து அவற்றின்கண் உயிர்களைப் புகுத்தி, அவை ஒன்றோடொன்று மருவி இன்பந் துய்க்குமாறு அவை தம்மை நாடத்தி வருபவன் எல்லாம் வல்ல இறைவனே யல்லாமல் வேறெவரும் அல்லர். இறைவன் வகுத்த இவ்வமைப்புகளிலிருந்து பலதிற இன்பங்களையும் நுகர்ந்து கொண்டே, அவற்றை நுகராதார் போலவும், அவற்றை வெறுத்தார் போலவும் ஆண் பெண் பிறவிகளையும், அவற்றின் சேர்க்கையையும் வெளியே இகழ்ந்து பேசுபவர் கடவுளை நம்பாத பௌத்தரும், நானே கடவுள் என்னும் மாயா வாதிகளுமே ஆவர். கடவுள் வகுத்த இப் பிறவி யமைப்புகளையும், இவற்றை வகுத்த அவ்வாண்டவனது அருள் நோக்கத்தையும் உள்ளவாறு உணர்ந்து காணும் சைவசமயத்தவர் அவ்வாறவற்றை இகழ்தற் குரியார் அல்லர். திருக்கைலாயத்தேயுள்ள தேவர் குழாத்துள் ஆண் பெண் வகுப்புகள் உளவாயின், அவ்விரு திறத்தாரும் உயர்ந்த காதலன்பாற் பிணிப்புண்டு ஒருவரை யொருவர் மருவி இன்புற்றிருத்தற்கே அங்ஙனம் அவ் வகுப்புகளை இறைவன் தோற்றுவித்திருத்தல் வேண்டும். அவ்விடத்தில் ஆணும் பெண்ணும் மருவி இன்புறுதல் குற்றமெனக் கண்டானாயின், இறைவன் அவ் வகுப்புகளை ஆண்டுத் தோற்றுவியானதல் வேண்டும்; ஆணும் பெண்ணும் மருவுதற்கேற்ற அமைப்புகளை ஆண்டு ஒரு பயனுமின்றித் தோற்று வித்தது எதன்பொருட்டு என்றெழும் வினாவுக்கும் விடையின்றாம்; இனி, அவ்வாறவர் ஒருவரையொருவர் மருவி இன்புறுதலிற் போதருங் குற்றந்தான் யாது உளது? இறைவன் இன்ப வுருவினன் ஆகலானும், அவ்வின்பத்தை ஆண் பெண் சேர்க்கையானன்றி வேறு ஒருவாற்றானும் உயிர்கள்பால் தோற்று வித்தல் ஆகாமையானும், அது பற்றியே எல்லா உயிரும் ஆண் பெண் சேர்க்கையைப் பெரிது விழைதலானும், இத்தகைய இன்ப நுகர்ச்சியிற் குற்ற மாகக் கருதத்தக்கது யாது உளது? இன்பத்தையே குற்றமாகத் தள்ளி வெறுத்தாற், பின் அதனினுஞ் சிறந்ததாகக் கருதி அடையற் பாலது யாது? அங்ஙனம் அடையப் படுவதூஉம் இன்பத்தைத் தருவதோ, துன்பத்தைத் தருவதோ? என்றெழும் வினாக்கட்கெல்லாம் வழிவிடுமாறு யாங்ஙனம்? அற்றன்று, மகளிர்பால் துய்க்கும் இன்பம் சிற்றின்பமே யாதலின் அதனை யொழித்து இறைவன்பால் துய்க்கும் பேரின்பமே வேண்டற்பாலதாமெனின்; ஒழிக்கற்பாலதாகிய மகளிரின்பத்தை இறைவன் அவர் வழியே வைத்து அமைத்து விட்ட தென்னை? இறைவனிடத்துத் துய்க்கும் பேரின்பம் அவ் விறைவனைத் தலைக் கூடி அவனோடு இரண்டறக்கலந்து நின்றாலல்லது வாய்க்குமோ? இறைவன் இயல்பை உள்ளவாறு உணர்தலும், அவனோடு பிரிவறக் கூடிநிற்றலும் முற்றப் பெறாதார்க்கு அப்பேரின்பத்தின் இயல்புதான் யாங்ஙனம் அறியப்படும்? என்று இங்ஙனம் எல்லாம் வைத்து நுணுகி யாராயும் வழி, மாசு முழுதுந் தீர்ந்து இறைவனோடு ஒன்றி இரண்டறக் கலக்கும் பேரின்பநிலை வாய்க்கும் வரையில், உயிர்கட்கு இறைவன் பல்வகை யுலங்களையும், அவ் வுலகங்கட்கு ஏற்ற இனிய பல்வகை நுகர்பொருள்களையும், மேன்மேல் உயர்ந்த ஆண் பெண் உடம்புகளையுந் தந்து அவர்களை மேன்மேல் இன்பத்தில் உயர்த்துக்கொண்டு போவன் என்னும் உண்மை நன்கு. விளங்கா நிற்கும். சீகண்டருத்திரர் எழுந்தருளும் அராக தத்துவ வுலகத்தும், அவர்க்கு மேற்பட்ட மகேசர் சதாசிவர் உலகங்களிலும் மேன்மேல் தூயவான உயிர்கள் மேன்மேலுயர்ந்த தூய ஆண் பெண் உடம்புகள் உடையராய்க் கூடி இன்பந் துய்ப்பரெனப் பௌட்காரகமும் இவ்வுண்மையை நன்கெடுத்துக் கூறுதல் காண். கடவுள் வகுத்த அமைப்பின் உண்மை இவ்வாறாகலின், அராக தத்துவுலகத்தின் கண்ணதான திருக்கைலாயத்தில் ஆலால சுந்தரரும் அம் மாதரார் இருவரும் ஒருவர் மேலொருவர் பெருங்காதல் கொண்டமை குற்றமாதலும், அக் குற்றத்தின் பொருட்டாகவே அவர் மண் மேற் பிறந்தாராதலும் உண்மையல்லவாம் என்க. அற்றேல், மாதராற்பாற் பெறுங் காதலின்பம் இறைவனை மறப்பித்து ஒருவனைப் பல தீவினைகளில் வீழ்த்தக் காண்டலின், அதனை உயர்த்துக் கூறுதல் ஆகா தெனின். அறியாது கூறினாய், இறைவன் வகுத்த அவ் வின்ப வழியின் இயல்பை உணர்ந்து, அக் காதலின்பத்தைத் துய்க்குமிடத் தெல்லாம் இறைவனை மேன்மேல் நினைந் துருகி, அக் காதலின்பத்தைத் தமக்கு ஊட்டும் இறைவனது இன்பவுருவினில் தமது இன்ப உணர்வினைத் தோய்வித்துப், பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே, முற்றவரும் பரிசு உந்தீபற என்ற ஆன்றோர் திருமொழிப்படி தம்மைப் புனிதராக்குதலே காதலன்பிற்றிளைக்கும் ஆண் பெண் என்னும் இருபாலாரும் செயற்பாலதொரு பெருங்கடமை யாம். இங்ஙனம் பழகுவார்க்கு இம்மை மறுமை இரண்டும் பேரின்பவுருவேயாவதல்லது சிற்றின்ப மாதல் சிறிதுமில்லை. இவ்வுண்மை தெரித்தற்கே நமது செந்தமிழ் மொழியில் அகப்பொருள் இலக்கணங்களும், திருச்சிற்றம்பலக் கோவை யாரும், திருக்குறட் காமத்துப் பாலும் பேரறிவுடைய சான்றோரால் இயற்றப்பட்டன. உலகத்தின்கட் காணப்படும் அமைப்புகளை உற்றுணருந்தோறும் அவற்றால் வரும் இன்பங்களை நுகருந்தோறும் அவற்றைத் தந்த இறைவனை நினைந்து அவன்பால் அன்புமீதூரப் பெறுதல் ஆறறிவுடைய மக்கட்கு இயற்கையிலே உளதாதல் வேண்டும். இனி, அவர்கள் அவனை நினையாமற் பல பெருந் தீமைகளைச் செய்து ஒழுகுதல் அவர்களுடைய குற்றமே யல்லாமல், இறைவன் வகுத்த அமைப்புகளின் குற்றம் அன்றாம். உண்டற்கினிய பாலும் பழனும் அளவும் பொழுதும் அறிந்து உண்பானுக்கு இன்பத்தைத் தருகின்றன; அவ்வாறன்றி அளவுக்கு மிஞ்சிப் பொருந்தாக் காலத்தே உட்கொள்வானுக்கு அவையே துன்பத்தைத் தருகின்றன; இதனைக் கண்டு பாலும் பழனும் ஆகா என்பார் உளரோ? இங்ஙனமே கல்வியுஞ் செல்வமும் தம்மை முறையறிந்து பயன்படுத்தாதவனுக்குத் தீமையைத் தருகின்றன; அதனால், அவையும் ஆகா என்பார் உளரோ? ஆதலால், இம்மையின்பங்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்ததாகிய காதலின் பத்திற்குரிய மகளிர் சேர்க்கையும் முறையறிந்து பயன்படுத்தாதார்க்குத் துன்பத்தையுந் தரும்; அதுபற்றி அவ் வின்பமும் அதற்குரிய அம் மகளிரும் இகழப்படுவார் அல்லர். உயர்ந்த காதலின்பத்திற் படியுந்தோறும் எல்லாம்வல்ல சிவத்தின் இன்பநிலையே நினைவில் மேன்மேற் சுரந்தெழுதல் வேண்டும். இந்நிலையில் நின்றதுபற்றியே சுந்தரமூர்த்தி நாயனார் இறைவற்கு மிக அணுக்கராய் நின்றனர். உயர்ந்த அறங்களையே செய்வாராயினும் இறைவனே நினையாராயின் அவர்தம் அந் நல்வினைகளுந் தீவினைகளேயாதல் திண்ணம். இதனாலன்றோ இறைவனை நினையாத மீமாஞ்சகர், பௌத்தர், சமணர் முதலியோர் செய்யும் அறங்களும் மறங்களாய் ஒழிந்தன. ஆகவே, மகளிரும் அவரது காதலின்பச் சேர்க்கையும் ஆடவர்தம்மை மென்பதப்படுத்தித் தூயராக்கி அவரை இறைவனது திருவடிப் பேரின்பத்தில் உய்க்குமே யல்லது அதற்கு மாறாய் நில்லாதென்று நுனித்து உணர்க. அற்றேல், ஆன்றோர் சிலர் மகளிரின்பத்தைப் பெரிதும் இகழ்ந்து பேசிய தென்னையெனின்; இறைவனை நினையாதார் நுகரும் எல்லாவகை இன்பங்களும் இழிக்கற் பாலனவே யாதலின், அதுபற்றி இம்மையின்பங்களுட் சிறந்த அதுவும் கடவுள் நினைவோடு நுகரப்படாத வழி அங்ஙனம் இழித்துரைக் கற்பாலதேயாம். அதுபற்றி மெய்யன்பர் நுகரும் இன்ப நுகர்ச்சியும் இகழற்பாலதன்றென்று காண்க. இவ்வாறு கடவுள் வகுத்த வகைகளையும், அவனது அருள் நோக்கத் தையும் பகுத்துணர்ந்து பார்த்தல் விடுத்து, வெற்றாரவாரமாய் மாயாவாதிகள் பற்றறுந்தார்போற் கூறும் பகட்டுரை கேட்டுச், சுந்தரமூர்த்தி நாயனாரை வஞ்சமாய் இகழ்ந்துரைக்குங் குறிப்பால், அவர் காம இன்பத்தின் விழைவால் உயர்ந்த தெய்வப் பிறப்பை இழந்து, இழிந்த மக்கட்பிறவியை எய்தினார் எனக் கட்டிவிட்ட பொய்க்கதை சைவசித்தாந்த உண்மையுணர்ந்தார் கழகத்திற் றலைக் காட்டாதென்றெழிக. இன்னோரன்ன பொய்க்கதைகள் சைவ சித்தாந்தகத்திற்குப் பெருந் தீதுபுரிதலை ஆய்ந்துபாராத சைவர் சிலர் இக் கதைகளை நம்பாதுவிட்டால் நமது சைவம் நிலைபெறாது போமேயென்று பதைபதைத்தல் அறிவுடை யார்க்கு நகையினையே தருகின்றது. அதுகிடக்க. இனி, நாட்டுச்சிறப்பு ஆசிரியர் சேக்கிழார் அருளிச் செய்தது அன்று என்னும் எமது உரையை மறுக்கப்புகுந்த நேயர், சோழநாட்டிற் பிறந்தருளிய நாயன்மார்தம் ஊர் நகர் முதலியவற்றின் சிறப்புக்களை அவ்வந் நாயன்மார் வரலாறு ஒவ்வொன்றிலும் ஆசிரியர் விரித்து ஓதாமையின், அவற்றிற் கெல்லாம் பொதுவாகவைத்து நாட்டுச்சிறப்பு என ஒன்று முதற்கண் அருளிச் செய்வாராயினர் எனக் கூறினார். உள்ளதை உள்ளவாறே எடுத்துக்கூறும் பண்டைத் தமிழின் உண்மைச் செய்யுள் வழக்கையும், அவ் வழக்கையே பின்பற்றி நாயன்மார் உண்மை வரலாறுகளை உள்ளவாறே கூறப்புகுந்த சேக்கிழாரின் திருவுள்ளக் கிடையையும் ஆராய்ந்துகாண வல்லார்க்கு இந்நேயர்கூற்றுப் பொருந்தாமை நன்குவிளங்கும். தாம் பாடக் குறித்த நாடு நகரங்களில் உள்ள சிறப்புக்களை உள்ளவாறே எடுத்துக், கற்போர் உணர்வு சலிப்படையா வகையாய் இயன்ற மட்டுஞ் சுருக்கமாகவும் விளக்கமாகவும் அழகுபடுத்திக் கூறுவதே பண்டைத் தமிழ் நல்லிசைப் புலவர்க்குரிய செய்யுள் வழக்கின் முறையாகும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர்க்குரிய செய்யுள் முறையோ, நாட்டு வளமில்லாத ஊரை எல்லா வளங்களும் உடையதெனவும், நகர அமைப்புகள் இல்லாததொன்றை எல்லா அமைப்புகளும் நால்வகை யரண்களும் உடையதெனவும் புனைந்து பொய் யாகக்கட்டி நூற்றுக்கணக்கான செய்யுட்களாற் கற்போரு ணர்வு சலிப்படையுமாறு வாளா விரித்துக் கூறுவதாம். இவ் விரண்டன் வேறுபாட்டையும் பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப் பாட்டு, கலித்தொகை, முதலியவற்றையும், பின்றைத் தமிழ்க் காப்பியங்களும் புராணங்களுமாகிய கம்பர் ராமாயணம், நைடதம், திருத்தணிகைப் புராணம் முதலியவற்றையும் ஒத்துநோக்கி யாராய்ந்து கண்டுகொள்க. ஆசிரியர் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தைக் கம்பர் பாடப் புகுந்தனராயின் இருபதினாயிரஞ் செய்யுட் களுக்குக் குறையாமல் வாளா விரித்துப் பாடியிருப்பார். இப்போதுள்ள கம்பராமாயணத்திற் காணப்படும் வீணான செய்யுட்களை அகற்றிவிட்டாற் கதைத் தொடர்பும் அழகுங் கெடாமல் அந் நூல் மூன்றில் ஒருபங்காகச் சுருங்கிவிடும். இங்ஙனம் இயற்கைக்கு மாறான பொய்யும் புளுகும் புனைந்துகட்டிச் சொல்லும் பிற்காலத்துப் புலவர் செய்யுள் வழக்கும் பார்த்து, இதனைப்போலவே சேக்கிழாரது செய்யுள் வழக்கும் இருத்தல் வேண்டுமெனத் துணிதல் தன் கண்களுக்கு மஞ்சட்கண்ணாடி இட்டான் ஒருவன் தான் காண்பன வெல்லாம் மஞ்சள் நிறமாகத் தோன்றக்கண்டு, அங்ஙனந் தோன்றுதல் தான் அணிந்திருக்குங் கண்ணாடியால் நேர்ந்ததென அறியாமல், தான் காணும் எல்லாப்பொருள் களும் மஞ்சள் நிறமுடையனவே என்று கூறிப் பிறரோடு அழிவழக்குப் பேசுதற்கே ஒப்பாவதாம் என்க. இனி, ஆசிரியர் சேக்கிழார் பாடுதற்கு எடுத்துக்கொண்ட நாயன்மார்களிற் சோழநாட்டிற் பிறந்தருளியவர்களின் ஊர்க ளெல்லாம் ஒரேவகையான எல்லா வளங்களும் உடையன வாய் இரா. சில ஊர்கள் நாட்டுவள முடையனவாய் இருக்கும்; சில நகரவளமுடையனவாய் இருக்கும்; வேறு சில அவ் வளங்கள் இல்லாதனவாயும் இருக்கும்; நாட்டுவளம் நகரவளம் உடையன வற்றுள்ளும் ஓர் ஊரின் வளத்தைப்போல் மற்றோர் ஊரின் வளம் ஒத்திரா; ஒவ்வோர் ஊரும் வேறு வேறு வளங்களும் வேறு வேறு அமைப்புகளும் உடையனவாய் இருக்கும்; இவை தம்மைப் பாடப்புகும் நல்லிசைப் புலவர்கள் அவ்வவ் விடத்தின் வளங்களையும் அமைப்புக்களையும் ஆங்காங்கு உள்ளவாறே வைத்துத் தம் பாட்டுக்களில் அழகுபடப் பாடுவர். அவ்வாறு பாடப்படுஞ் செய்யுட் பொருள்களை யுணர்ந்தவர் அவ்வவ்வூர்களே நேரே சென்று காண்புழிப், பாட்டிற் சொல்லியவாறே அவை அமைந்திருக் கும் உண்மையைக் கண்டு, அவற்றைப் பாடிய புலவனை வியந்து மகிழ்வர். இஃது எதுபோலவோ வெனின், ஒருவனது வடிவத்தையும் அவனிருக்கும் மாளிகையினையும் ஓவியத்தில் வரைந்து காட்டப் புகுந்த ஓர் ஓவியக்காரன் சிறிதும் வழுவாமல் அவ் விரண்டனையும் திறமையாக வரைந்து காட்டிய வழி அவ்வோவியத்தையும் அதிற் றீட்டப்பட்ட வடிவமுடைய மகனையும் மாளிகையையுங் கண்டு அவை முழுதும் ஒத்திருந்தக் கால், அவற்றை வரைந்தவன் திறத்தை வியந்து மகிழ்தல்போல வென்க மற்று ஓர் ஓவியத்திற் றீட்டிய வடிவம் அதனையுடைய மகனையாதல் மாளிகையையாதல் ஒவ்வாமல் வேறுபட்டுத் தோன்றியவழி அவற்றைக் காண்பார் அவற்றை வரைந்த ஓவியக்காரன் இகழ்ந்து மகிழ்வின்றிப் போதல்போல, ஒரு காப்பியப் புலவனும் தான் பாடிய செய்யுட்பொருள் அதற்கு முதலாயுள்ள இயற்கைப் பொரு ளோடு ஒவ்வாமல் மாறுபட்ட வழி அதனைக் கருத்தூன்றிக் கற்பார் அதன் பொய்மையுணர்ந்து அதனை ஆக்கியோன் பால் வெறுப்புற்று உவகையின்றிச் செல்வரெனவும் உணர்ந்து கொள்க. ஆசிரியர் சேக்கிழாரோ, செந்தமிழ்ப் புலமை மலிந்த நல்லிசைப் புலவராகலின் அவர் பண்டைச் செந்தமிழ் நல்லிசைப் புலவரின் மெய்வழக்கையே தழீஇத் தாம் பாடுதற்கு எடுத்த நாடு நகரங்களில் உள்ள சிறப்புக்களை உள்ளவாறே கூறுதலும், அவ்வளங்கள் மிகுதியாய் இல்லாதவற்றைச் சில சொற்களாற் கூறிப்போதலுமே மேற் கொண்டாரென்பது ஆங்காங்கு அவர் பாடியிருப்பனவற்றை உற்று ஆராய்தலாற் புலப்படும். சோழநாட்டுள்ளேயே ஓரூர் நாட்டுவள முடைய தாயும் மற்றொன்று நகரவள முடையதாயும், வேறொன்று அவையிரண்டும் மிக இலவாயும் இங்ஙனம் பல திறப்பட்டிருத் தலை இஞ்ஞான்றும் அவற்றை நேரே சென்று காண்பார் நன்கு ணர்ந்து கொள்வர். இங்ஙனம் வளத்தானும் அமைப்பானும் ஒன்றோடென்று ஒவ்வா ஊர்கட்கெல்லாம் வளங்கள் கற்பிப்பான் புகுந்து, அவைமாட் டெல்லாம் காணப்படாத வற்றை இயற்கைக்கு மாறாய்ப் புனைந்துகட்டிப் பொதுவாக நாட்டுச் சிறப்பு என ஒன்று பாடிப் பெரிய புராணத்தின் கண் முதலில் வைத்தாரென்றல், ஆசிரியர் சேக்கிழாரின் தெய்வச் செந்தமிழ் நல்லிசைப் புலமைக்கு இழுக்கந் தேடுவதாய் முடியுமென்று ஓர்ந்து கொள்க. இனித் தடுத்தாட்கொண்ட புராணமுதலில் திருமுனைப் பாடி நாட்டிற்கும், அதன்கட் சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தருளிய திருநாவலூர்க்கும் ஆசிரியர் நாட்டுச்சிறப்பு நகரச் சிறப்புகள் விரித்தோதாது, பெருகிய வளத்தான்மிக்க பெருந்திருநாடு என்று மட்டுஞ் சுருங்கச்சொல்லிச் செல்லுதல் என்னை யெனின்; உற்று நோக்கு மிடத்துத் தடுத்தாட் கொண்ட புராணமே திருத்தொண்டர் புராணமாய் முடிந்திடுதலின், அத்துணைப் பெரிதாகிய அப் புராணத்திற் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றையும் திருமணச் சிறப்பையும் கூறுதலிற் கருத்து ஊன்றிய ஆசிரியர் அதனைவிடுத்து, நாடு நகரங் களைப் பாடிக் கொண்டிருப்பராயின், அது, தன்னைக் கற்பார்க்கு இன்பம் பயவாதாகலிற், சிலப்பதிகாரத் திற்போல நாயனார் வரலாற்றைத் துவங்கி முதலிற் றிருமணச்சிறப்பை ஆசிரியர் விரித்துரைப்பராயினா ரென்க. முதன்மையான நாயனார் புராணங் கூறுதற்கெடுத்து, அதனைப் பாடிக் கொண்டு செல்லுதற் கிடையே அமயம் நேர்ந்துழியெல்லாம் நாட்டுவளம் நகரவளம் கூறுதல் கற்போருணர்வு சலிப் புறாமல் இன்புறுதற் கேதுவாமாகலின்,ஆசிரியர் விரித் தோதுதற்கேற்ற இடங்களில் அவைதம்மை இடையிடையே விரிப்பர். சிலப்பதிகாரத்திலும் ஆசிரியர் இளங்கோவடிகள் அந்நூல் முதற்கட் காவிரிப்பூட்டினம் வளங்களை ஓதாது இடையே இந்திரவிழவூரெடுத்த காதையில் அவற்றை ஓதுதல் காண்க. இங்ஙனங் கற்போருணர்வு சலியாமைப் பொருட்டு நல்லிசைப் புலவர் நூல்யாக்குந் திறத்தை எம்முடைய முல்லைப் பாட்டாராய்ச்சியுரை யிலும் பட்டினப்பாலை யாராய்ச்சி யுரையிலும் விரித்தெழுதியிருக்கின்றேம். அதனை ஆண்டுக் கண்டு கொள்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையம்பலத்தை வணங்கச் சென்றுழி, ஆண்டு நாட்டுவளம் நகரவளங் கூறுதற்கு அமயம் வாய்த்தமையின், 92 ஆஞ் செய்யுள் முதல் 102 ஆஞ் செய்யுள் இறுதியாகச் சேக்கிழார் அவற்றை விரித்துப்பாடுதல் காண்க. தில்லைநகர் சோழநாட்டின் கண்ணதேயாகலின், அதற்குக் கூறிய நாட்டு வள நகரவளங்கள் சோழநாட்டிற்கும் உரியனவல்லவோ? இங்ஙனமே, சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தோடு தொடர்புடைய ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்தும் சோழநாட்டின் கண்ணதாகிய திருப்பெரு மங்கலம் என்னும் நகரின் சிறப்பை ஆசிரியர் முதல் நான்கு செய்யுட்களால் அழகுறப் பாடியிருக்கின்றார்; இச் சிறப்பும் சோழநாட்டிற் குரியதன்றே? அற்றேல், திருக்குறிப்புத்தொண்டர் புராணத்தில் 110 செய்யுட்களால் தொண்டைநாட்டின் நாட்டுவள நகரவளங் களை விரித்தோதிய அவ்வளவுக்கு ஆசிரியர் சோழநாட்டு வளங்களை விரித்து ஓதிற்றிலரென்று ஒன்று கொள்ளப் படுமாலெனிற்; சோழ நாடு நீரும் வயலும் நிறைந்த மருத நிலவளம் ஒன்றே பெரும்பாலும் உடையது; மற்றுத் தொண்டை நாடோ, மருத நிலவளத்தோடு, மலையடுத்த குறிஞ்சிநில வளமும், காடு அடுத்த முல்லைநில வளமும், கடலடுத்த நெய்தல்நில வளமும் காஞ்சி நகரச்சிறப்பும் ஒருங்குடைய தாகலின் அவையெல்லாம் 110-ச் செய்யுட்களால் இயன்றமட்டுஞ் சுருக்கியே ஆசிரியர் அருளிச்செய்தனர். இவை தம்மைக் கம்பராவது கச்சியப்ப முனிவராவது பாடப் புகுந்திருந்தால் ஐந்நூறு செய்யுட்களுக்குக் குறையப் பாடியிரார். சேக்கிழார் இல்லது கூறா வாய்மையராகலிற், சோழ நாட்டை அணிந்துரைக்க வேண்டுமளவுக்குச் சோழ நாட்டையும், தொண்டை நாட்டை அணிந்துரைக்க வேண்டுமளவுக்குத் தொண்டை நாட்டையும், இங்ஙனமே மலைநாடு கொங்குநாடுகளையும் உண்மை வழாது புராணங்களினி டையிடையே பாடியருளினாரென்க. அநபாயசோழன் செங்கோ லோச்சிய இடம் என்பது பற்றியாவது, பரவையார் சங்கிலியார் என்னும் பிராட்டிமாரை மணம்புரிந்து கொண்ட இடங்கள் என்பது பற்றியாவது, தாம் பிறந்தருளிய நாடென்பது பற்றியாவது அவ்வந் நாடுநகரங்களுக்கு எப்படியாயினும் சிறப்புச் சொல்லவேண்டுமென்று மடி கட்டிக்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் பாடப்புகுந்தவர் அல்லர். மேற்கூறிய சான்றோர்களால் வந்த சிறப்போடு, அவ்வவற்றிற்கு இயற்கையமைப்பிலேயும் பல சிறப்புகள் காணப்படுமாயின் மட்டும் ஆங்காங்குள்ள நாடுநகரங்களை அணிந்துரைப்பர்; அங்ஙனம் உரைக்கின்றுழியுங், கதைத் தொடர்பைக் கருத்தூன்றிக் கற்றுச் செல்வார்க்கு உணர்வு சலியாவாறு எவ்வளவு கூறுதல் தக்கதோ அவ்வளவே கூறுவர். ஆதலால், இன்னின்னார் பொருட்டு அவ் அவர்தம் நாடுநகரங் களை ஆசிரியர் எங்ஙனமேனும் விரித்துப் பாடியிருத்தல் வேண்டுமென்று, ஆக்கியோன் கருத்தும் அவன் மேற் கொண்ட செய்யுள்வழக்கி னியல்பும் பகுத்துணராது கிளத்தல் ஏதமாமென்க. இனித், தில்லைவாழந்தணர் புராணத்தின்கண் நாட்டுவள நகரவளங் கூறப்படவில்லையென அதனைத் தமது வழக்கிற்கு ஓர் உதவியாகக் கூறவந்த நண்பர், அப்புராணத் திற்குச் சிறிது முன்னே சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைக்குச் சென்றதனைக் கூறுங்கால் அவ்விரண்டு வளங்களையும் விரித்துப்பாடிய ஆசிரியர் மீண்டும் அவற்றைக் கூறியது கூறல் என்னுங் குற்றம் உண்டாகப்பாடார் என்பதனை அறியாமற்போனார். ஓரிடத்து ஒருகால் ஓர் ஊர்க்குக் கூறிய அவ் வளங்களை மீண்டு மீண்டுங் கூறுதல் சுவை பயவாதென்பது கொண்டு, அங்ஙனந் தில்லைவாழந்தணர் புராணத்தில் அவைதம்மைக் கூறாது விட்டதேயல்லாமற், சோழ நாட்டிற் கெல்லாம் பொதுவாக நாட்டுச்சிறப்பு மொழிந்ததுபற்றி அதனை விட்டா ரல்லரென அந் நண்பர் உணரக் கடவராக! இங்ஙனமே, திருநீலகண்டருந் தில்லை நகரிற் பிறந்து அங்கிருப்பவராதலிற், சுந்தரமூர்த்தி புராணத்தில் ஓதிய நாட்டுவள நகர வளங்களை மீண்டும் திருநீலகண்டர் புராணத்தில் எடுத்து உரையாராயினர். இனி, இயற்பகை நாயனார் புராணத்தில் மன்னு தொல் புகழ் மருதநீர் நாட்டு வயல்வளந்தர இயல்பினில் அளித்துப், பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து எனச் சோழநாட்டின் மருதநில வளத்திற் கேதுவான காவிரியாற்றைச் சிறப்பித்துக் கூறிய அவ்வளவு போதாதோ? பிற்காலத்துப் புலவர்போல, உழுதல் எருப்பெய்தல் விதைத்தல் நாறு பிடுங்கிநடுதல் களைகட்டல் விளைந்தவற்றை அறுத்துப் போராக்கல் கடாவடித்தல் நெற்கொண்டு சேர்த்தல் விருந்தினர் சுற்றத்தாரொடு துய்த்தல் முதலியனவாக எவர்க்குந் தெரிந்த இவைகளை வாளாவிரித்துப் பாடிக்கொண்டிருத்தல் எடுத்தபொருளைவிட்டு மற்றொன்று விரித்தல் என்னுங் குற்றமாய், நாயனார் வரலாற்றை அறிதலில் விழைவு மிக்கு அதனைக் கற்கப் புகுந்தார்க்கு அயர்வு தோற்றுவித்தல் பற்றி ஆசிரியர் அதனை விட்டாரல்லது, முன்னரே பொதுப்பட நாட்டுச்சிறப்புக் கூறியது பற்றி அன்று என்க. அஃது ஒக்குமாயினும், காவிரிப்பூம் பட்டினத்து நகரச்சிறப்பை ஆசிரியர் ஒரு சிறிதாயினுங் கூறாதுவிட்ட தென்னை யெனிற்; கரிகாற்சோழன் நிகரற்ற வெற்றிவேந்தனாய் அரசாண்ட காலத்தில் அவனால் ஆக்கப்பட்ட தலை நகராய்க் காவிரிப்பூம் பட்டினம் மிகச்சிறந்து விளங்கிற்று. அவ்வரசற்னுக்குப் பின் வந்த சோழ மன்னன் அதனை நன்கு பாதுகாவாமையின், அதிற் பெரும் பகுதி கடல்வாய்ப்பட்டு அழிந்தது; அது முதல் அந்நகர் சிறப்பின்றி யிருந்தமை கண்டே ஆசிரியர் சேக்கிழார் அதற்கு இல்லாத ஏற்றத்தைக் கூற மனம் இசையாராய், நாயனார் வரலாற்றை மட்டுங் கூறலாயினர். கரிகாற்சோழற்குப் பின் காவிரிப்பூம் பட்டினம் கடல்கோட்பாடு அழிந்தமை மணிமேகலை என்னுஞ் செந்தமிழ்க் காப்பியத்திற் சொல்லப் பட்டிருத்தல் காண்க. அங்ஙனம் அஃது அழிந்தபின், உறையூரே பழைய சோழமன்னர்க்குத் தலை நகராயிற்று. இனிச், சேக்கிழாரடிகள் காலத்திற் சோழமன்னர்க்குத் தலை நகராயிருந்தது காஞ்சிமா நகரேயா மென்பது கல்வெட்டுகளிற் காண்க. இனிச், சோழநாட்டின்கண் மிகச் சிறந்ததாகிய தில்லையின் நாட்டுவள நகரவளங்களைச் சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தின்கண் ஆசிரியர் விரித்துச் சொன்னமை பற்றியே, இளையான் குடிக்கும் திருக்கோவலூர்க்கும் அவ்வளங்கள் கூறிற்றிலர். பழையாறைக்கும் அவ்வாறே. இனி, எறிபத்தரது கருவூர் அநபாயசோழ வேந்தற்குத் தலை நகரானமைபற்றி, அதற்குக் கூறவேண்டும் நகரச்சிறப்பு மட்டுமே எடுத்துரைத்தார். இயைபில்லாத நாட்டுச் சிறப்பைத், தலைநகராகிய அதற்கு ஆசிரியர் கூறாது விட்டது சாலப் பொருத்தமேயாம். ஏனாதியாரது எயினனூர் நாட்டுவளம் மட்டுங் கூறுதற் கேற்றமை கண்டு அதற்கு முதலிரண்டு செய்யுட்களில் அது கூறியிருக்க, அது சொல்லப்படவில்லை யென்று நண்பர் உரைத்தது பொய்யுரையாம். இனிக், காஞ்சிமாநகர் சோழமன்னர்க்குத் தலைநகராய் எல்லா வளங்களும் பொருந்தப்பெற் றிருந்தமையானும், இறைவி இறைவனே வேண்டித் தவஞ்செய்து முப்பத்திரண்டு அறங்களும் வளர்த்த இடமாதலானும், அதனையுடைய தொண்டைநாடு நானிலவளங்களும் மிக்குக் கழிபெருஞ் சிறப்புடைத்தாய் விளங்கினமையானும் ஆசிரியர் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் இருந்த அந் நகரினைப் பாடவந்த விடத்து, அத் தொண்டர் வரலாறு நீளவுரைக்கவேண்டாமை கண்டு. அதனைக் கூறுதற்கு முன் தொண்டைநாட்டு வளங்களை விரித்துரைப் பதற்கு அமயம் பெற்றார்.. தொண்டை நாட்டு வளங் கூறுகின்றுழி நானில வளங்களும் ஆசிரியர் ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்து மொழிதலும், அவர் மொழிந்த அவ்வளங்கள் இன்றுகாறுந் தொண்டை நாட்டின் கண் அங்ஙனமே காணப்படுதலும் நினையவல்லார்க்குச் சேக்கிழார் உள்ளதை உள்ளவாறே கிளக்கும் வாய்மையானராதல் நன்கு புலப்படும். இனிச், சோழநாட்டுக்குப் பொதுவாக வைத்து நாட்டு வளம் நகரவளம் விரித்தோதினமையின், அச் சோழநாட்டின் கண் திருத்தொண்டர் பிறந்தருளிய பல ஊர்கட்குஞ் சேக்கிழார் அவ் விருவகை வளங்களுங் கூறிற்றிலரெனப் புகன்ற நண்பர் உரை பொய்யுரையாதல் காட்டுதும். குங்கிலியக்கலயரிருந்த திருக்கடவூருக்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டு வளமும், மானககஞ்சாறரிருந்த திருக்கஞ்சாறூர்க்கு முதல் ஐந்து செய்யுட்களில் நாட்டுவள நகர வளங்களும், அரிவாட்டரிருந்த திருக்கண மங்கலத்திற்கு முதன் மூன்று செய்யுட்களில் நாட்டுவளமும், முருகரிருந்த திருப்பூம்புகலூர்க்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டுவளம், உருத்திர பசுபதியா ரிருந்த திருத்தலையூர்க்கு முதலிரண்டு செய்யுட்களில் நகர்வளமும், திருநாளைப் போவாரிருந்த திருவாதனூர்க்கு முதல் நான்கு செய்யுட்களில் நாட்டுவள நகரவளங்களும், திருநாவுக்கரையர் பிறந்தருளிய திருமுனைப்பாடி நாட்டுக்கு இரண்டு முதற் பதினோராஞ் செய்யுள் ஈறாக நாட்டுவள நகரவளங்களும், நமிநந்தியடிக ளிருந்த திருவேமப் பேறூர்க்கு முதன் மூன்று செய்யுட்களில் நாட்டுவள நகரவளங்களும், திருஞானசம்பந்தப் பிள்ளையார் பிறந்தருளிய சீர்காழிக்கு இரண்டு முதற் மூன்றாஞ் செய்யுளிறுதியாக நகர வளமும், ஏயர்கோன் கலிக்கமாரிருந்த திருப்பெருமங்கலத்திற்கு முதல் மூன்று செய்யுட்களில் நகரவளமும், புகழ்ச்சோழர் இருந்த உறையூருக்கு இரண்டாஞ் செய்யுள் முதல் ஏழாஞ் செய்யுள் ஈறாக நகரவளமும், அதிபத்தர் இருந்த நாகபட்டினம் கடற்கரை நகரமாதலால் அதற்கு இரண்டாஞ் செய்யுள் முதல் எட்டாஞ் செய்யுளிறுதி யாக நெய்தல் நிலவளமும். முனையடுவாரது திருநீடூர்க்கு முதற் செய்யுளில் நாட்டுவளமும், செருத்துணை யார் தம் தஞ்சாவூர்க்கு முதற் செய்யுளில் நாட்டு வளமும் ஆசிரியர் பாடியிருக்கின்றார். இங்ஙனஞ் சோழநாட்டின் கண் ஆங்காங்குள்ள ஊர்கட்கு ஆசிரியர் சேக்கிழார் பாடியிருக்கும் நாட்டுவள நகரவளச் செய்யுட்களை மட்டுங் கூட்டிப் பார்த்தால் அவை எழுபத்தெட்டுக்குமேற் போகின்றன. இச் செய்யுட்களெல்லாம் பொதுவாகச் சோழநாட்டின் சிறப்புக்களாகவே முடிந்திடுதலால், இவற்றின் வேறாக முப்பத்தைந்து செய்யுட்களால் தனிச் சோழநாட்டுச் சிறப்பும், திருவாரூர் சிறப்பென நகரச்சிறப்பும் இயற்றித் திருத் தொண்டர் புராணத்தின் முதலில் ஆசிரியர் அமைத்திட்டார் எனக் கிளக்கும் நண்பருரை, ஒப்புயர்வில்லா இத் திருத் தொண்டர் புராணத்திற்குக் கூறியது கூறல் மிகைபடக் கூறல் என்னுங் குற்றங்களை ஏற்றுதலால் அவர் தம் போலி யுரை கொள்ளற் பாலதன்றென மறுக்க. அற்றேற், சோழ நாட்டில் திருத்தொண்டர் இருந்த சிற்சில ஊர்கட்கு ஆசிரியர் நாட்டுவள நகரவளங் கூறாது விட்ட தென்னையெனின்; தாம் கூறுதற்கேற்ற தனிச் சிறப்புங்களுடைய ஊர்களின் இயற்கை யமைப்பை உற்றுநோக்கி, நாட்டுவளம் மிக்கவற்றிற்கு நாட்டு வளமும் நகரவளமும் மிக்கவற்றிற்கு நகரவளமும், அவை யிரண்டும் மிக்கவற்றிற்கு, அவையிரண்டுங் கூறி, இத்தகைய தனிச் சிறப்புகள் இல்லாதவற்றிற்கும், முன்வந்த புராணங்களிற் கூறப்பட்ட சிறப்புகளுள் அடங்குவன வற்றிற்கும அவ்விருகை வளங்களுள் ஏதுங் கூறாமலும் ஏகுவர். முந்ற்போந்த மூர்த்தி நாயனார் புராணத்திற் பாண்டி நாட்டு வளம் முதல்ஆறுசெய்யுட்களில் எடுத்துரைத்தமையால், பிற்போந்த குலச்சிறையார் புராணத்தும், நின்றசீர் நெடு மாறர் புராணத்தும், மங்கையர்க்கரசியார் புராணத்தும் ஆசிரியர் பாண்டி நாட்டு வளங்களை மீண்டும் எடுத்தோதாது செல்லும் நுட்பங் கண்டுகொள்க. திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் திருமுனைப் பாடி நாட்டுவள நகரவளங்களை ஓதக் கருதினமையின், புராணத் துவக்கமாகிய தடுத்தாட் கொண்ட புராணத்திலும் பின்வரும் நரசிங்க முனையரையர் புராணத்திலும் அவ் வளங்களை ஆசிரியர் கூறாமையும், மலைநாட்டு வளங்களை முற்போந்த விறன்மிண்டர் புராணத்திற் சொல்லி விட்டமையால் மீண்டும் அவற்றைக் கழறிற்றறிவார் புராணத்திற் சொல்லாது ஆண்டுக் கூறுதற் கேற்ற நகர வளத்தை மட்டுங் கூறிச் செல்லுதலும், இங்ஙனமே சோழநாடு தொண்டை நாட்டிலுள்ள ஊர்கட்கு முதலில் அவ் வளங்கள் சொல்லியிருந்தாற் பின் வரும் புராணங்களில் அவ்வூர்கட்கு அவ்வளங்களை மீண்டும் உரையாமையும் உற்றுநோக்கற் பாலனவாம் என்க. ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறெல்லாஞ், சுவை கெடாமலுங் கற்போர் உணர்வு சலியாமலும் நூல்யாக்குந் திறமும் நுட்பமும் உண்மையே கூறும் பழந்தமிழ் இலக்கியங்களிற் பயின்றார்க்கன்றிப், பொய்யுரை புகலும் பிற்றைநாட் புராணங்களிற் பழகினார்க்கு ஒரு சிறிதும் விளங்கா. இனித், திருத்தொண்டத் தொகை யருளிச்செய்த சுந்தரமூர்த்தி நாயனாரது வரலாறும், திருத்தொண்டத் தொகையிற் காணப்பட்ட தொண்டர்களின் வரலாறுமே பாடப்புகுந்த ஆசிரியர் சேக்கிழார் அவற்றை விடுத்து, மநுநீதி கண்ட சோழனது வரலாற்றினைப் பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே விரித்துக் கூறினாரென்றல், தாங்கூறும் நூற்கு இயைபில்லாத தொன்றனை இடைவிரித்ததாகிய மற்றொன்று விரித்தல் என்னுங் குற்றமாய் முடியுமாதலின், அது சேக்கிழார் செய்தது அன்றெனவும், தம்மனோர் பாராட்டும் மனு நீதிக்கு ஏற்றங் கற்பிக்க விழைந்த ஆரியப் பார்ப்பனர் எவரோ ஒருவர், செங்கோன் முறை வழுவாது செயற்கருஞ் செயல்புரிந்த தமிழ்ச் சோழ மன்னன் ஒருவன் அப் பெயர் பூண்டமையறிந்து அவனது வரலாற்றினைப் பாடி அதன்கட் சேர்த்துவிட்டன ரெனவும் யாங் கூறியதனை மறுக்கப் புகுந்தோர் தாங்கொண்ட கொள்கையினை நிறுத்துதற்கு ஏற்ற சான்று ஒன்றாயினுங் காட்டினாரல்லர். அவர் கூறிய போலிச்சான்றுகள் சிலவற்றையும் ஆராய்வாம். பஞ்சபூத சிவதலங்களில் முதலாவ தாகையினால் திருவாரூர்ச் சிறப்பு முதற்கட் சொல்லப்படுதல் வேண்டுமென்கிறார். மண், புனல், அனல், கால், வெளி என்னும் ஐம்பெரும் பொருள்களின் உருவாய் வயங்குஞ் சிவலிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில் களையே பஞ்சபூத சிவ தலங்கள் என்று வடமொழிப் பெயர்களால் ஆரவாரமாய்க் கூறுவர். மண்ணாலாகிய அருட்குறி திருவாரூரின்கண் மட்டும் உளதன்று; திருக்காஞ்சியிலும் அஃது உளது; அதனால், அவ்வைம்பெருந் திருக்கோயில்களிற் சேர்ந்தது திருக் காஞ்சியே என்று ஒரு சாராரும், அற்றன்று திருவாரூரே யென்று மற்றொரு சாராருங் கூறாநிற்பர். ஆகவே, ஐம்பெருந் திருக்கோயில் களுள் ஒன்றாதல்பற்றித் திருவாரூர்ச் சிறப்பு முற்கூறக்வேண்டு மென்பார்க்கு, அவ்வேதுவே பற்றித் திருக்காஞ்சிச் சிறப்பு முற்கூறாமை என்னை என்னும் வினா முன் நிற்குமன்றே. இனிப், பரவை நாச்சியார் பொருட்டு இறைவனே தூதாகச் சென்ற தெருக்களுடைய சிறப்பினால், திருவாரூர்ச் சிறப்பு முன்ஓதல் வேண்டுமெனின்; அங்ஙனமே, கூந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொள்ளும் பொருட்டு உருவுகொண்டு வெளிப்போந்த திருவெண்ணெய் நல்லூர்ப் பெருமான் திருவடிச் சுவடுகள் பட்ட இடமாதலின் திருவெண் ணெய்நல்லூர்ச் சிறப்பும் அதனோடு சுந்தரமூர்த்திகள் பிறந்தருளிய இடமுமாதலின் திருநாவலூர்ச் சிறப்பும் முன் ஓதல்வேண்டு மென்பார்க்கு விடைகூறுமா றியாங்ஙனமென்க. இனிச், சேக்கிழாரை வேண்டித் திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழவேந்தனைச் சிறப்பித்தற் பொருட்டு, அவன் வழி முன்னோனாகிய மநுநீதிகண்ட சோழனது செங்கோன் மாட்சி தெரிக்கவே அதனைப் பாடி நூற்கு முதலிற் சேக்கிழார் சேர்த்திட்டாரெனின்; அநபாய சோழன் சிறப்பைத் திருத்தொண்டர் புராணத்தின் இடையிடையே ஓதிச்செல்லுஞ் சேக்கிழார் அவ்வளவில் அமையாது, அவன்றன் முன்னோனான மநுநீதிச் சோழன் சிறப்பையும் எடுத்தோதல் வேண்டினாராயின் அதனை ஒரு தனி நூலாகவே செய்திருப்பா ரல்லது, சுந்தரமூர்த்தி நாயனாரது புராணமும் அதனோடியைபு பட்ட ஏனைத் திருத்தொண்டர் புராணமும் பாடுதற்கு மேற்கொண்ட தமது மேற்கோளை விடுத்து, அம்மநுநீதிச் சோழன் பெருமையைப் பாடுவாரல்லர். அற்றேல், மநுநீதிச் சோழன் புராணத்தைச் சேக்கிழார் ஒரு தனிநூலாகவே செய்தார்; மற்றுப் பின்னுள்ளோர் அதனைத் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துவைத்தாரென்று கொள்ளாமோவெனின், அங்ஙனங் கொள்ளுதற்குச் சான்று உண்டெனிற் கொள்க. ஈண்டு யாங் கட்டுரைப்பது: ஆசிரியர் சேக்கிழார் மநுநீதிச் சோழன் புராணத்தைத் திருத்தொண்டர் புராணத்தின் ஓர் உறுப்பாகக் கொண்டு பாடிற்றிலர் என்பதே யாம். சிவபிரான் திருவடித் தொண்டில் உறைத்துநின்ற அடியார் தம் வரலாறுகளையே சேக்கிழார் பாடப் புகுந் தாரல்லது, செங்கோன்முறை திறம்பாத அரசர் தம் வரலாறுகளையும் அவை போல்வன பிறவற்றையும் அவர் பாடப்புகுந்தார் அல்லர். அதனாலும், மநுநீதிச் சோழன் புராணம் இத் திருத்தொண்டர் புராணத்தின்கண் வருதற்கு ஏதோரியைபும் உடைத்தன் றென்பது தேற்றமாம். அற்றன்று, தனது செங்கோள் முறை வழுவாமைப் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலில் ஊர்ந்த மநுநீதிச் சோழனது மனவுறைப்புத் திருத்தொண்டர்தம் மனவுறைப்போடு ஒப்பதாகலின், அதனைத் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துக் கூறுவது பொருத்தமேயா மெனின்; அங்ஙனமே, தனது செங்கோன் முறைமையை நிலைநிறுத்துதற் பொருட்டுத் தனது கையையும் வெட்டியெறிந்த பொற்கைப் பாண்டியன் முதலான பிறரும் உளராகலின், அவருடைய வரலாறுகளையும் திருத்தொண்டர்தம் வரலாறுகளோடு ஒருங்கு வைத்துப் பாடுதல்வேண்டும்; மற்றுச் சேக்கிழார் அங்ஙனம் பாடாமையானும், தாம் பாடுதற்கெடுத்த அரசர் சிலரையும் அவர்தம் செங்கோன்முறை பற்றி எடாது அவர் சிவபிரான் திருவடிக்கண் ஆற்றிய திருத்தொண்டின் உறைப்புப் பற்றியே எடுத்தோதுதலானும் மநுநீதிச் சோழன் புராணம் உரைப்பது சேக்கிழார் கருத்தன்றென்க. இனித், திருக்கூட்டத்தவர்கள் திருவாரூர்க் கோயிலில் உள்ள தேவாசிரியன் என்னுந் திருக்காவணத்திற் கூடியிருக்கு மாறும், அவரைப் பணிதற்கு எழுந்த பேரன்பாற் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை வேண்டுமாறும், அவரது வேண்டு கோளின் படியே சிவபெருமான் அத் திருக்கூட்டத்தார் சிறப்பினை அவர்க்கு நன்கெடுத்தோதி அவர்களைப் பாடுகவெனக் கட்டளையிட நாயனார் திருத்தொண்டத் தொகை அருளிச் செய்தவாறும் ஆசிரியர் சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்தில் 189 ஆம் செய்யுள் முதற்கொண்டு 201 ஆம் செய்யுள்வரையில் விளக்கிச் சொல்ல வேண்டுமளவுக்கு விளக்கிச் சொல்லியிருக்கின்றார். இவை களை இங்ஙனம் சொல்லியிருக்கையில், பெயர்த்தும் இத் திருக்கூட்டத்தார் சிறப்பை ஒரு தனிப் பகுதியாகப் பாடித் தடுத்தாட்கொண்ட புராணத்தின் முதலிற் சேர்த்தல் கூறியது கூறல் மிகைபடக் கூறல் என்னுங் குற்றங்கட்கிடனாமாதலின், இது சேக்கிழார் செய்து சேர்த்ததாகாது என்றாம். இவ் வெமதுகூற்றை மறுக்கப் புகுந்த எதிர்ப்பக்கத்தார், திருக்கூட்டச் சிறப்புத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் உண்டென்பதனை உடம்பட்டாராயினும், அச் சிறப்பு ஒரே செய்யுளாற் கூறப்பட்டிருத்தலோடு சிவபெருமான் அருளிச்செய்ததாகவும் அது காணப்படுதலின், சேக்கிழார் அதனை விரித்துப் பல செய்யுட்களாற் பாடி முன்னமைக்க வேண்டுவது இன்றியமை யாத தாயிற்று என்றனர். அடியார் சிறப்பினைச் சிவபிரானே எடுத்தோதியதாக அச் சிறப்பினைச் செய்யுளாற் பாடினவர் சேக்கிழாரே யல்லாமற் சிவபிரான் அல்லர். அச் செய்யுள் வருமாறு, பெருமையால் தம்மை யொப்பார் பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையுங் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று. இச் செய்யுளில் அடியார்களின் சிறப்பு மிக நன்றாக எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றது. இவ்வொரு செய்யுளிற் சொல்லப்பட்டுள்ள சிறப்புகட்குமேல் வேறு சொல்லத்தக்க பெருஞ்சிறப்பு யாதுளது? வெறும் பாட்டுகள் பத்து நூறு ஆயிரம் என்று பாடிவிடுவதுதானா சிறப்பு? சொல்லத்தக்க சிறப்புகள் செவ்வையாகச் சொல்லப் பட்டால் ஒரு செய்யுளே போதாதோ? நூறு வெள்ளிக்காசுக்கு வாங்குந் தங்கம் எவ்வளவு எடையுள்ளது? ஒரு தங்கக்கட்டி எடையளவிற் குறைந்ததாய் இருத்தல்பற்றி அதனியல்புங் குறைந்ததெனக் கருதுவாரு ண்டோ? அத் தங்கக் கட்டிக்கு ஈடாகக் கொடுக்கும் நூறு வெள்ளிக்காசும் எடையில் மிகுந்திருத்தலால், அவற்றின் இயல்பும் தங்கத்தைவிட மிகுந்த தெனக் கருதுவாருண்டோ? இங்ஙனமே, பாட்டு ஒன்றாயிருந்தாலும் அதன்பொருட் சிறப்பை நோக்கல் வேண்டுமே யன்றி, ஒரு பாட்டுத்தானே யென்று குறைத்துப் பேசுதல் அறிஞர்க்குச் சால்பாகாது. மேலும், அடியவர் பெருமையைக் கூறும் இச் செய்யுட் பொருள் சிவபெருமானே ஓதியதாகப் பெறப்படுதலின் இதற்கு மேலும் சிறப்புக்கூறச் சேக்கிழார் துணிந்தாரெனல் ஆகாது. இச் செய்யுளில் உள்ள பொருளையே, திருக்கூட்டச் சிறப்பின்கண் அடியார் பெருமை கூறுஞ் செய்யுட்களும் புகலுதலின், இவை வேறோர் அன்பராற் செய்து சேர்க்கப் பட்டன வாகுமல்லாற் சேக்கிழாராற் செய்யப்பட்டனவாகா. பெருமையால் தம்மை யொப்பார் என்னுஞ் செய்யுளில் அடியார் பெருமை சாலவும் நன்றாய்ச் சொல்லப்பட்டிருத்தல் சிறிதறிவுடையார்க்கும் விளங்கக் கிடந்ததாகலின், யாம் இதனை யெடுத்துக் காட்டியது கற்போருள்ளத்தை மாறுபடுத்துதற் கன்றெனவும், மற்று அவரதுள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கே ஆமெனவும் எதிர்ப்பக்கத்தவர் உணரக்கடவராக. இனித், திருமலைச்சருக்கம் எனப் பெயர்வைத்து, அப்பெயர்க்கு ஒவ்வாத சோழ நாட்டுச் சிறப்பு திருவாரூர்ச் சிறப்பு மநுநீதிகண்ட சோழன் வரலாறு திருக்கூட்டச் சிறப்பு முதலியவற்றை அதன்கண் வைத்துரைத்தல் மாறுகொளக் கூறல் என்னுங் குற்றமாய் முடிதலின், அத் திருமலைச் சருக்கமும், அதன்கண் உள்ள ஏனை நான்கும் ஆசிரியர் சேக்கிழார் செய்தன அல்ல வென்பது ஒருதலை. இச் சருக்கம் உமாபதி சிவனார் காலத்திற்கு முன்னரே பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டமையின், அவர் இதனையும் உடன்சேர்த்துப் பெரிய புராணத்தின்கண் உள்ள சருக்கங்கள் பதின்மூன்றென எண்ணினார். உமாபதி சிவனார்க்குப் பிற்காலத்தே பெரிய புராணத்திற் பிறராற் சேர்க்கப்பட்ட முப்பத்து மூன்று செய்யுட்கள் உளவாயினாற் போலவே, அவர் காலத்துக்கு முன்னும் மேற் காட்டியவாறு பல செய்யுட்கள் கலந்தன வென்க. இனிப், பாயிரத்திற்கும் நூலுக்கும் இடையே இயை பில்லாத வற்றைக் கூறுதல் பண்டை நல்லிசைப்புலவர் தமிழ்நூல் வழக்கு அன்மையின், அவ் வழக்கே பற்றித் திருத்தொண்டர் புராணம் இயற்றுவான் புகுந்த ஆசிரியர் சேக்கிழார் தெய்வ வணக்கமுஞ் செயப்படுபொருளும், எய்த வுரைப்பதாகிய பாயிரம் உரைத்தபின், இடையீடின்றித் திருத்தொண்டர் புராணந் துவக்கினாரென்றலே வாய்ப் புடைத்து. இப் பாயிரத்தின் கண் முதன்மூன்று செய்யுட்களில் தெய்வவணக்கமும், நான்காஞ் செய்யுளில் திருத்தொண்டர் வாழ்த்தும், ஐந்து ஆறு ஏழாஞ் செய்யுட்களில் அவை யடக்கமும், எட்டாஞ் செய்யுளில் தம்மை இந்நூல் பாடுவித்த அநபாயசோழன் சிறப்பும் அவன்றன் அவையினர்க்கு அடக்கமும், ஒன்பதாஞ் செய்யுளில் இந் நூல் தாம் பாடுதற்கு முதலெடுத்துக் கொடுத்த திருவருளியக்கமும், பத்தாஞ் செய்யுளில் இந் நூற் பெயரும் கூறப்பட்டமை காண்க. அற்றேல், இச் செய்யுட்கள் பத்தும் தெய்வவணக்கம் செயப்படு பொருள் என்பவற்றோடு வேறு பிறவுங் கூறுதலென்னை யெனின்; திருத்தொண்டர் பெருமையும் அவையடக்கமுங் கூறுஞ் செய்யுட்களும் அடியார்க்கும் அவையத்தார்க்கும் வணக்கங் கூறுவனவேயா யிருத்தலின் அவையுந் தெய்வவணக்கத்தின் பாற் படுமென்க; இறைவனருள் வழிப்பட்டாரும், இறைவனருட் டிறங்களை ஆயுங் கற்றார் தொகையுந் தெய்வத்தோடு ஒப்ப ராகலின் அதுபற்றி ஐயுறவென்னையென விடுக்க. இன்னுந், திருக்கூட்டச் சிறப்பு என்பதன்கண் உள்ள செய்யுட்களை நுனித்தாராயுங்கால், இவற்றுள் முதல் எட்டுச் செய்யுட்கள், பாயிரத்தின் கண் உள்ள திருக்கூட்டப் புகழ்ச்சி யையும், பின் இரண்டு செய்யுட்கள் அவையடக்கத்தின் முதலையும், ஈற்றின் நின்ற இந்த மாதவர் என்னுஞ் செய்யுள் பாயிரத்தில் நூற்பெயர் கூறுஞ் செய்யுளையும் அடுத்து நிற்றற் குரியன வென்பது புலனாம். திருமலைச்சிறப்பின் கண் உள்ள கையின் மான் மழுவர் என்னுஞ் செய்யுள், சேக்கிழாராற் றிருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழவேந்தன் மாட்சி கூறுதலின், அது வெள்ளானைச் சருக்கத்தில், யானை மேல் கொண்டு என்னுஞ் செய்யுளின் பின்னே நிற்கற் பாலதாம். சேக்கிழாராற் செய்யப்பட்டுப் பாயிரத்திலும் நூலின் ஈற்றிலும் நின்ற இச் செய்யுட்கள் சிலவற்றைப் பின்வந்தோர் தாம்பாடிய திருமலைச்சருக்கத்தின் இடை யிடையே கோத்தாரெனக் கோடலும் ஒன்றும். இங்ஙனமே நாட்டுச்சிறப்பின் கண் உள்ள செய்யுட்களும், சோழநாட்டு வளங் கூறும் அவ்வந் நாயன்மார் புராணங்களினின்றும் பிரித்தெடுத்துச் சேர்த்து ஒரு படலமாகப் பின்வந்தோரால் வைக்கப்பட்டனவாயு மிருக்கலாம். திருமலைச் சிறப்பு திருவாரூர்ச் சிறப்பின் கண் உள்ள செய்யுட்களை இவ்வாறு கோடல் ஆகாமையின் இவை பின் வந்தோராற் செய்து சேர்க்கப் பட்டமை தேற்றமாம். எங்ஙனமாயினும், ஆசிரியர் சேக்கிழார் திருத் தொண்டர் புராணம் பாடிய காலத்துப், பாயிரத்திற்கும் நூலிற்கும் இடையே ஒருவாற்றானும் இயைபில்லாத இந் நான்கு படலங்களைக் கொண்ட திருமலைச்சருக்கம் வைக்கப்பட வில்லையென்பதூஉம்; சேக்கிழார்க்குப் பின்னும் உமாபதி சிவனார்க்கு முன்னும் வந்த எவரோ சிலர்இப் படலங்கள் நான்கனையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து விட்டன ரென்பதூஉம், தமிழ்நூற் பொருள்களை வடமொழி யிலிருந்து வந்தனவாகக் கூறுதற்கு விழைந்த ஒரு பார்ப்பன ரால் திருமலைச் சிறப்பும் வடமொழியிலுள்ள மனுநூலுக்கு ஏற்றங்கூற ஆவலுற்ற மற்றொரு பார்ப்பனரால் மநுநீதிகண்ட புராணம் என்னும் திருவாரூர்ச் சிறப்பும். பின்றைத் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைப் பார்த்து நாட்டுவளங்கூற விரும்பிய ஒரு தமிழ்ப்புலவரால் நாட்டுச் சிறப்பும் அடியார் பெருமையைத் தனித்தொரு படலமாகக் காண அவாவிய ஒரு அன்பரால் திருக்கூட்டச் சிறப்பும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டனவாதல் வேண்டுமென்பதூஉம்; பார்ப்பனர் இருவரும் பெரும்பாலுந் தாமே பாடிய செய்யுட்களையும் ஏனையிருவருஞ் சேக்கிழார் ஏனையிடங்களிற் பாடிய செய்யுட்களையும் அமைத்துக் கட்டிவிட்ட திருமலைச் சருக்கம் உமாபதி சிவனார்க்கு முன்னரே ஏட்டுச் சுவடிகளிற் கலந்துவிட்டமையின் இந்நாளிற் போல அச்சுப் புத்தகங்கள் இல்லா அந்நாளில் அதனையும் உடன் சேர்த்துச் சருக்கம் பதின்மூன்றென எண்ணிய உமாபதி சிவனார் கணக்கின்படி சேக்கிழார் பாடியனவும் பதின்மூன்று சருக்கங்களேயா மெனக் கோடல் வழுமாமென்பதூஉம்; இடையிடையே பின்னுள்ளோ ராற் செய்து சேர்க்கப்பட்ட செய்யுட்கள் பெரிய புராணத்தின் கண் உளவென்பதற்கு, எம்மை மறுப்பான் புகுந்த எதிர்ப் பக்கத்தவரே தம்மிடம் உள்ளதும் எழுபது ஆண்டு கட்கு முற்பட்டதுமாகிய ஏட்டுச் சுவடியில் இல்லாத இரண்டு செய்யுட்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையார் புராணத்தும், ஒரு செய்யுள் கலியநாயனார் புராணத்துங் காணப்படுகின்றன வென்று தாமே கூறுதலும், அச்சிட்ட பெரியபுராணப் புத்தகங்களிலும் ஆங்காங்குச் சில பல செய்யுட்கள் வெள்ளிப் பாடல்கள் எனக் குறிக்கப்பட்டிருத்தலுமே சான்றாமென்ப தூஉம் இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் நன்கு தெளிவுறுத்தப் பட்டன வென்பது. கருத்தோவியம் - முற்றும் -