தமிழ் இலக்கணப் பேரகராதி பொருள் - மெய்ப்பாடு பொருள் – நாடகம். அளவை, ஆனந்தக் குற்றம். நியாயம். வழுவமைதி, ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் தமிழ்மண் பதிக்கம் TamilÆ Ilakkan|ap Pe#rakara#ti (A Tamil Grammatical Encyclopaedia) Porul@ - Mayppa#t@u Porul@ - Na#t@akam, Al@avai, A#nantakurÆrÆam, Niya#yam, ValÆuvamaiti by T.V. Gopal Iyer Pandit of the Pondicherry Centre of the École Française d’Extrême-Orient (French School of Asian Studies) Published by the TamilÆ Man| Pathippakam, Chennai 2005. Pages: 32+304 = 336 Price: 320/- முன்னுரை 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தமிழ் இலக்கணப் பேரகராதி ஒன்றனைத் தொகுத்து உருவாக்கும் பணியில் புதுச் சேரியில் உள்ள தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியில் அமர்த்தப்பட்டேன். இடையிடையே பணிக்கப்பட்ட ஏனைய பணி களுக்கு இடையிலும் அகராதிப் பணியைத் தொடர்ந்து 1995இல் ஓரளவு அதனை நிறைவு செய்தேன். இப் பணியில் எனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட நாராயணசாமி ஐயர், குமாரசாமிப் பிள்ளை, அப்பாசாமி முதலியோர் பணியிலிருந்து இடையிடையே விடுவிக்கப் பட இப்பணியில் எனக்கு இறுதிவரை என் இளவல் கங்காதரனே உதவும் நிலை ஏற்பட்டது. இப்பணிக்குத் தொல்காப்பியத்தின் பழைய உரைகள் முதல் அண்மையில் வெளிவந்த பாவலரேறு பாலசுந்தரனாரின் தென்மொழி இலக்கணம் முடிய உள்ள பல நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டினவாக வேங்கடராசுலு ரெட்டியாரின் எழுத்ததிகார ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்ததிகாரச் சொல் லதிகாரச் குறிப்புக்கள், பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி காண்டிகையுரை போன்ற சில நூல்களே மேற்கோள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணம் பற்றிய கட்டுரைகள் பல இருப்பினும் அவையெல்லாம் இவ்வகராதி யில் இடம் பெறவில்லை. இவ்வகராதி பல தொகுதிகளாகப் பல தலைப்புப் பற்றிப் பிரித்துக் கூறப்பட்டிருத்தலின், எல்லா இலக்கண வகைகளுக்கும் பொதுவான சொற்கள் எங்கு இடம் பெற்றுள்ளன என்பதனை அறிதலில் சிறு சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ‘வழக்கு’ என்ற சொல் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் முதற்கண் வருவதால் அச்சொல் பாயிரம் பற்றிய பகுதியில் விளக்கப்பட்டிருக்கும். தலைப்புக் களின் அகராதி அமைக்கப்பட்டபின் அத்தகைய சொற்களின் இருப்பிடம் அறிதல் எளிதாகும். இவ்வகராதிப் பணியில் இறுதி மெய்ப்புத் திருத்துதல் முதலிய வற்றில் என் இளவல் கங்காதரனே முழுமையாக ஈடுபட்ட போதி லும், என் தம்பி திருத்துவதற்கு முன்னரே மெய்ப்புக்கள் திருத்தத்தில் ஈடுபட்டுச் செயற்பட்ட சான்றோர் அனைவரையும் நன்றியொடு நோக்குகின்றேன். 17 தொகுதிகளாக அமையும் இந்த நூலினை அமைப்பதற்கு எனக்கு என் தம்பி வலக்கையாக உதவுவது போலவே, இந்நூலைப் பதிப்பிக்கும் இளவழகனாருக்கு உதவிய பதிப்பக உதவியாளர்கள் செல்வன் செ. சரவணன், செல்வன் இ. இனியன், செல்வன் மு. கலையரசன், அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.நா. இராமசுப்பிரமணிய இராசா, நா. வெங்கடேசன், இல. தர்மராசு ஆகியோர் இந்நூல் செம்மையாக வெளிவரப் பெரிதும் முயன்றுள்ள செயலைப் போற்றுகிறேன். இவர்கள் நோய்நொடி இன்றிப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இந்நூலை வெளியிட உதவிய எங்கள் தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளி நிறுவனத்தாருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். தொகுதிகள் 17 : எழுத்து - 2, சொல் - 4 , பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1) தி.வே. கோபாலையர் முகவுரை எழுத்ததிகார இலக்கணப் பேரகராதியில், தொல்காப்பியம் முதலாக இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் இலக்கண இலக்கிய மொழியியல் பேரறிஞராம் ச.பாலசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றிய ‘தென்னூல்’ முடிய, இன்று நமக்குக் கிட்டுவனவாக நிலவி வரும் சிறந்த இலக்கண நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களும் உரைகளும் இடம் பெறுகின்றன. இக்காலத்தில் தொல்காப்பியக் கடல் என்று போற்றப்படும் அந்நூல் இயற்றப்பட்ட காலத்தே அது சிறுநூலாகவே யாக்கப் பெற்றது. அதன் எழுத்துப் படலத்தில் உள்ள 9 இயல்களிலும் விதிக் கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி நூல்மரபு முதலிய நான்கு ஓத்தும், செய்கை தொகைமரபு முதலிய எஞ்சிய ஐந்து ஓத்தும் ஆம். கருவிதானும் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் மூன்று ஓத்தும் பொதுக்கருவி; செய்கை ஒன்றற்கேயுரிய புணரியல் சிறப்புக் கருவி. நூல்மரபு, நூலினது மரபு பற்றிய பெயர்களாகிய எழுத்து - குறில் - நெடில் - உயிர் - மெய் - மெய்யின் வகைகள் - எழுத்துக்களின் மாத்திரை - இன்ன மெய்க்கு இன்னமெய் நட்பெழுத்து, பகை யெழுத்து என்பதனைக் குறிக்கும் மெய்ம்மயக்கம் - மெய்யெழுத் துக்கள், எகர ஒகர உயிர்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னு மிவை புள்ளிபெறுதல் - மகரக் குறுக்கம் உட்பெறு புள்ளியும் கோடல் - சுட்டு - வினா - அளபெடை - என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து, மொழிமரபு கூறும் விதிகள் நூல்மரபின் ஒழிபாக அமைந்துள்ளன. இதன்கண் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை, மொழியாக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், போலியெழுத்துக்கள், மொழி முதலில் வரும் எழுத்துக்கள், மொழியீற்றில் வரும் எழுத்துக்கள் - என்பன இடம் பெறுகின்றன. பிறப்பியல், உயிர் - மெய் - சார்பெழுத்துக்கள் என்பவற்றின் பிறப்பிடங்களும் முயற்சியும் பற்றி மொழிகிறது. புணரியலில், எல்லாமொழிகளின் இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டனுள் அடங்கும்; பெயரும் தொழிலும் என்றோ தொழிலும் பெயரும் என்றோ பெரும்பான்மையும் சொற்கள் புணருமிடத்து இயல்பாகவும் திரிந்தும் புணரும்; புணர்வன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஆகிய இரண்டுமே; சொற்கள் வேற்றுமைப்பொருள் பற்றியும் அல் வழிப்பொருள் பற்றியும் புணரும்; இடையே சாரியை வரப்பெறும்; சில சாரியைகள் உருத்திரிந்தும் புணரும்; எழுத்துச்சாரியைகள் இவை, உடம்படுமெய் இவை - என இச்செய்திகளைக் காணலாம். தொகைமரபு என்னும் ஐந்தாம் ஓத்தின்கண், உயிரீறும் புள்ளியீறும் உயிர்மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் ஈறுகள்தோறும் விரித்து முடிப்பனவற்றை ஒரோவொரு சூத்திரத் தால் தொகுத்து முடிபு கூறப்படுவனவும், உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சியும் விரவுப்பெயர்ப் புணர்ச்சியும் இரண்டாம் மூன்றாம் வேற்றுமையுருபு ஏற்ற பெயர்ப்புணர்ச்சியும், சில இடைச்சொற் களது முடிபும், எண் நிறை அளவுப் பெயருள் சிலவற்றது புணர்ச்சி யும் கூறப்பட்டுள. உருபியல், உருபேற்ற பெயர் சாரியை பெற்றும் பெறாமலும் ஒரோவழி நெடுமுதல் குறுகியும் வருமொழியொடு புணருமாறு கூறுகிறது. உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் அல்வழிப் புணர்ச்சி பெரும்பாலும் எழுவாய்த்தொடர்க்கே கொள்ளப்படு கிறது. வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமையுருபுகள் தொக்க வேற் றுமைப் புணர்ச்சிக்கே கொள்ளப்படுகிறது. இப்புணர்ச்சிகள் பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆசிரியர் உயர்திணைப்பெயர் - விரவுப்பெயர் - கிளைப்பெயர் - நாட்பெயர் - திங்கட் பெயர் - எண் நிறை அளவுப் பெயர் - என்பனவற்றை விதந்தோதியே முடிக்கும் கருத்தினராதலின், இப்புணர்ச்சிகள் அஃறிணையில், கிளை முதலாகச் சொல்லப்பட்ட அப்பெயர்கள் நீங்கலான ஏனையவற் றிற்கே கோடல் ஆசிரியர் கருத்தாம். ஆசிரியர் ஈரெழுத்தொருமொழி என்று கூறியமை ஈரெழுத்துக் குற்றுகரச் சொல்லைத் தம் மனத்துக் கொண்டமையாலாம். குற்றிய லுகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கும். உயிரள பெடை என்பது நெடிலை அடுத்து வரும் ஒத்த இனக்குற்றெழுத்தே. புணர்ச்சியில் தொல்காப்பியனார் குறிப்பிடும் எழுத்துப்பேறள பெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது என்று கோடல் தகும். தொல்காப்பியத்தை அடுத்து நாட்டில் சிறப்பாக வழங்கி வந்ததாகக் கருதப்படும் அவிநயம் இராசபவித்திரப் பல்லவதரையன் உரையொடு 13ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து வந்த செய்தி நன்னூல் மயிலைநாதர் உரையாலேயே பெறப்படுகிறது. அந்நூலும் அதனுரையும் வழக்கிறந்து விட்டன. தொல்காப்பியத்தை அடுத்து இன்று வழக்கில் இருக்கும் ஐந்திலக்கண நூல் பெருந்தேவனார் உரையொடு கூடிய வீர சோழியமே. பல்லவர் காலத்திலே “பாரததேயத்து வழக்கிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் சமற்கிருதமே” என்ற கருத்து மக்க ளிடையே உருவாக, அது 18ஆம் நூற்றாண்டு முடிய உறுதியாகக் கொள்ளப்பட்டு வந்தது. 11 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய வீர சோழியம் இக்கருத்தையுட்கொண்டு இயற்றப்பட்ட இலக்கணமே. வீரசோழியத்தின்கண், உயிரெழுத்துக்களை அடுத்து மெய் யெழுத்துக்களின் முன்னர் நெடுங்கணக்கில் ஆய்தம் இடம் பெற்ற செய்தி கூறப்படுகிறது. மகரக் குறுக்கம் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெறும் என்ற நுட்பமான செய்தி இந்நூலின் உரையின்கண்ணேயே காணப்படுகிறது. வடமொழிப் புணர்ச்சியில் அல்வழி, வேற்றுமை என்ற பொருள் பற்றிய பாகுபாடு இல்லை. ஆகவே, வீரசோழியச் சந்திப் படலத்திலும் அல்வழி வேற்றுமைப் பாகுபாடு குறிப்பிடப்பட்டிலது. வருமொழி முதலில் உயிர்வரின் குற்றியலுகரம் கெடும் என்னும் செய்தி இந்நூலிலேயே முதற்கண் குறிப்பிடப்பட, அச்செய்தி நேமிநாதம் நன்னூல் முதலிய பின் னூல்கள் பலவற்றிலும் இடம்பெறலாயிற்று. வடமொழிச்சொற்கள் தமிழொலிக்கேற்பத் திரித்து வழங்கப்படுமாற்றிற்கு இந்நூல் கூறும் விதிகளே நன்னூல் முதலிய பின்னூல்களிலும் கொள்ளப்படலாயின. வடமொழியிலுள்ள ‘ந’ என்ற எதிர்மறை முன்ஒட்டு வருமொழி யோடு இணையுமிடத்து ஏற்படும் திரிபுகளை இந்நூல் இயம்பிட, அதனை நேமிநாதமும் ஏற்றுக்கொள்ள, நன்னூல் அதனை நெகிழ்த்து விட்டது, ளகரத்திற்குக் கூறும் புணர்ச்சிவிதி ழகரத்திற்கும், இந் நூலாசிரியர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் பின்பற்றப்படவே, இந் நூலாசிரியர் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வரைந்துள்ள செய்தி இந்நூலில் புதிதாக இடம் பெறுகிறது. இச்செய்தியை நேமிநாதம் நன்னூல் போன்ற பின்னூல்கள் குறிப்பிடவில்லை. உடம்படுமெய்யை இந்நூலாசிரியர் ‘இ ஈ ஐ வழி யவ்வும், ஏனை உயிர்வழி வவ்வும், ஏ முன் இவ்விருமையும், என்று முதன்முறையாக வரையறுத்துக் கூறியவராவர். “அளபெடை மூன்று மாத்திரை பெறும்; அது நெடிலும் குறிலும் இணைந் தொலிக்கும் ஓரொலியே” என்ற இவரது கொள்கையே, பெரும்பாலும் பின்னூலார் பலராலும் மேற்கொள்ளப்பட்டது. ஏ யா எ - என்பன சொல் முதலில் வினாவாகும் என்ற இவர் கருத்தைப் பிற்காலத்து நூலார் பலரும் ஏற்றுக்கொண்டவராவர். அடுத்து வந்த நேமிநாதமும், நெடுங்கணக்கு வரிசையை , உயிர் - அடுத்து ஆய்தம் - அடுத்து மெய் - என்றே குறிப்பிடுகிறது. இந் நூலுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம் என்னும் இவற்றோடு ஒளகாரக் குறுக்கமும் குறிக்கப்பட்டுள்ளது. “உயிரள பெடை நெடிலொடு கூடிய ஓரொலியாம் இனக் குற்றெழுத்து; அது மூன்று மாத்திரை பெறும்” என்று வீரசோழியத்தை ஒட்டி நேமிநாதம் நுவல்கிறது. வடமொழித் தத்திதாந்த நாமங்களும் எதிர் மறை யுணர்த்தும் நகர முன்னொட்டுப் புணர்ச்சியும் வீரசோழி யத்தைப் பின்பற்றியே கூறப்படுகின்றன. வீரசோழியம் விதிக்கும் வடமொழியாக்கம் நேமிநாதத்தில் இல்லை. தொல்காப்பியத்தை அடுத்து மக்கள் உள்ளத்தே சிறப்பாக இடம்பெறுவது பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலே. முத லெழுத்தும் சார்பெழுத்தும் என்ற பாகுபாடு - சார்பெழுத்துப் பத்து என்பது - அவை ஒவ்வொன்றும் பற்றிய செய்திகள் - மொழிக்கு முதலில், இடையில், ஈற்றில் வரும் எழுத்துக்கள் - போலியெழுத் துக்கள் - என்பன எழுத்தியலில் இடம்பெற்றுள. உயிரளபெடை நெட்டெழுத்தின் நீட்டமாகிய மூன்று மாத்திரை, குறில் அறிகுறி யாக வருவதே என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. பதவியலில், பகுபதம் பகுதி - விகுதி முதலிய உறுப்புக் களாகப் பிரித்துக் காட்டப் பட்டுள்ளது. பகுபத உறுப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. பதவியல் நன்னூல் குறிப்பிடும் ஒருமொழிப் புணர்ச்சியாகிய புதுச் செய்தியே. இதன் இறுதியில் வடமொழி ஆக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளது. ‘ந’ என்ற எதிர்மறை முன்னொட்டுப் பற்றிய செய்தி பேசப்பட்டிலது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் வரைந்த உரையையும் உட்கொண்டு இயற்றப்பெற்ற நன்னூலில் தொல்காப்பியச் செய்திகள் பலவற்றொடும் அவ்வுரையாசிரியர் குறிப்பிட்ட செய்திகளும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் குறிக்கும் புணரியல் - தொகை மரபு - உயிர்மயங்கியல் - குற்றியலுகரப் புணரியல் - பற்றிய செய்திகள் பலவும் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கப்பட்டுள்ளன. அல்வழி யாவன இவையென விளக்கப்படுகிறது. உடம்படுமெய், குற்றுகரம் உயிர்வரக் கெடுதல் - போன்றவை வீரசோழியத்தைப் பின்பற்றியனவாம். நன்னூலில் காணப்படும் மாற்றங்கள் ‘மரபு நிலை திரியாது’ அமைந்தன என்ப. தொல்காப்பியத்தினின்று நன்னூல் சற்றே வேறுபட்டுக் கூறுமிடங்கள் பொருள்நிலை திரியாமையால் ‘மரபு நிலை திரியா மாட்சிமை’ யுடையவாய் முதல்நூற்கு மலைவுபடாமல் செல்லும் இயற்கைய ஆதலைச் சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறுமாறு ஈண்டுக் கருதல் தகும். இலக்கணவிளக்கம், நன்னூல் தொல்காப்பியத்தொடு மாறு பட்டுக் கூறும் ஒரு சில இடங்களைச் சுட்டி விளக்குகிறது. தனக்கு முற்பட்ட நூல்களில் விளக்கப்படும் வடமொழியாக்கத்தை இவ் விலக்கணநூல் நெகிழ்த்துவிட்டது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்பனவற்றில் சில அரிய புணர்ச்சிவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அ - அந் - ந - நி - கு - வி - புணரப் புணர்ப்பது வடமொழியில் எதிர்மறையாகும் என்ற செய்தி இலக்கணக்கொத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து ஆரியச்சொல் வடசொல்லாகித் தமிழில் வழங்கும் செய்தி இவ்விரண்டு நூல்களிலும் விளக்கப்படு கிறது. இச்செய்தி நன்னூலில் இடம் பெற்றிலது. தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பெரிதும் பின்பற்றியது; வடமொழியாக்கத்திலும் நன்னூலைப் பின்பற்றியுள்ளது. முத்து வீரியத்தில் தீர்க்கசந்தி முதலியவற்றிற்கு விதிகள் தனித்தனியே கூறப் பட்டுள. கோ + இல் = கோயில், மா + இரு = மாயிரு - முதலிய வற்றிற்குத் தனியே விதிகள் வகுக்கப்பட்டுள. சுவாமிநாதத்தில் குறிப்பிடத்தகும் விசேடமாக ஏதும் இன்று. அதன் ஆசிரிய விருத்த யாப்பு நயனுறுமாறு இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகாரத்து இளம்பூரணர் உரை - நச்சினார்க்கினியர் உரை - சென்ற நூற்றாண்டு மொழியியல் வித்தகராம் வேங்கடராசுலு ரெட்டியார், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் இவர்கள்தம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் - சென்ற நூற்றாண்டிறுதியில் வெளிவந்த பாலசுந்தரனார்தம் தொல்காப்பியக் காண்டிகையுரை - சிவஞான முனிவர் அரசஞ்சண்முகனார் வரைந் துள்ள விருத்தியுரைக் குறிப்புக்கள் என்னுமிவையும், வீரசோழியம் பெருந்தேவனார் உரை - நேமிநாதம் வயிரமேகவிருத்தியுரை - நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், இராமாநுசக் கவிராயர், சடகோபராமாநுசாச்சாரியார் ஆறுமுகநாவலர் என்றின்னோர்தம் உரைகள் - என்னும் இவையும் ஏனைய மூல நூல்களின் செய்தி களொடு தொகுக்கப்பட்டு இவ்வெழுத்ததிகார இலக்கணப் பேரகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கண் காணப்படும் குற்றம் குறைகளை நல்லறிஞர் பெருமக்கள் உரிய காரணம் சுட்டிக் காட்டுவாராயின், அப்பிழை பாடுகள் அடுத்த பதிப்பில் களையப்படும். அன்ன திருத்தங்கள் நன்றி யறிதலோடு ஏற்கப்படும். தி.வே. கோபாலையர் Eva Wilden École Française d’Extrême-Orient 16&19 Dumas Street, Pondicherry centre Pondicherry. Aug. 2005 Introduction Tamil grammar and poetics are old and venerable disciplines interwoven into a complex system the beginnings of which are lost in legend. What is fact, however, is that we are looking back on a textual tradition representing the thought of almost two millennia: a continuous discourse on Tamil language and literature, but also a dispute with other systems of knowledge, most notably the Sanskrit grammatical and poetological traditions. To give a rough chronology, for the first millennium, we have one great treatise encompassing the whole field and developing the basic structure that is taken up, with some modifications and extensions, by the whole later tradition. This is the famous Tolka#ppiyam, consisting of three parts, two of them devoted to two different aspects of grammar, which has been ever since split into two sections, namely ElÈuttu (phonology) and Col (morphology and syntax), while the third part treats of Porul@ (poetics). It is followed by a small work specialising in a particular field of poetics, namely that of Akam (love poetry), called the IrÈaiyan_a#r Akapporul@. The second millennium, probably a time of socio-cultural upheaval, sets in with a voluminous commentary tradition not only for the treatises that had been written so far, but also for wide parts of the older literature. In fact our understanding of the meaning of the older texts is basically indebted to these commentaries. Nevertheless, there is a parallel development of new treatises in all sub-disciplines, mirroring the confrontation with the change of language, the arising of new literary forms and the massive impact of North-Indian, i.e. Sanskritic modes of thinking and writing in the Tamilian South. To mention just a few of the most important titles, among the inclusive texts – comprising, just as the Tolka#ppiyam, the whole range of the field – there are the heavily Sanskritised Vi#raco#lÈiyam of the 11th century, and the Tamil-conservative Ilakkan|a Vil@akkam of the 17th century. Both of them extend the original structure of three sections, dealing with ElÈuttu (phonology), Col (morphology and syntax), and Porul@ (poetics), by another two subsumed under Porul@, namely Ya#ppu (metrics) and An|i (figures of speech). Among the influential treatises devoted exclusively to grammar we may list the Nan_n_u#l (12th century), the standard book on Tamil grammar after the Tolka#ppiyam, and the Pirayo#ka Vive#kam (17th century), again very Sanskritic. Poetics, for its part, seems to have been an even more fruitful domain, creating a number of branches with various specia-lisations. The first independent text on metrics is the Ya#pparun)-kalakka#rikai (10th century); the most notable exponent of systematic Akam poetics is the Nampi Akapporul@ (12th century), while the Pur_am genre (heroic poetry) is represented by the Pur_apporul@ven|pa#-ma#lai (9th century). The encyclopaedia presented here is an attempt to render accessible this wealth of materials to specialists and also to non-specialists. The vast topology and terminology of Tamil grammar and poetics are represented by key terms which are explained with reference to the corresponding su#tras in the treatises and additional explication from the various commentaries. The whole work comprises 17 volumes, structured in the traditional way into the three sections ElÈuttu (phonology), Col (morphology and syntax) and Porul@ (poetics), where 2 volumes fall on ElÈuttu, 4 on Col, and 11 on the various sub-disciplines subsumed under poetics: 2 for Ya#ppu (metrics), 2 for An|i (figures of speech), 4 for Akam (love topics), 1 for Pur_am (heroic topics), 1 for Pa#t@t@iyal (literary genres), Pa#yiram (prefaces) and Marapiyal (word usage), and finally 1 for Meyppa#t@u (physical manifestation), Na#t@akam (drama), Al@avai (valid means of knowledge), A#nantakkur|r|am (collocations to be avoided), Niya#yam (logic) and ValÈuvamaiti (poetic licence). The last of these volumes contains a bibliography. This sort of work of synthesis has long been a desideratum of research: it gives erudite references to a vast range of technical Tamil texts which are, for the most part, not well understood today. Some of the texts are hard to come by – unless in the editions of the author of this encyclopaedia (on whom more below) – most of them are not translated into any other language, general introductions into the field are few, and even fewer are written in languages more easily accessible to the general reader (like English or French). There has been more than one project comparable in range in recent years, most prominently the Encyclopaedia of Tamil literature of the Institute of Asian Studies, Chennai (in English language), but sadly this opus has not yet seen more than 3 volumes, the last one already nine years old and reaching only the letter “ai”. All the more reason for scholars interested in Tamil language and literature to be grateful to the author of the present work, the venerable T.V. Gopal Iyer, with his 80 years one of the last living exponents of a great tradition of exegesis. Space permits here no more than a brief account of the highlights of a long and in many respects exemplary career of a Tamil savant in the 20th century. As well as following a traditional path of education, the worldly marks of which are his two titles Vidvan and Panditam conferred by the University of Madras and the Maturai Tamil Cankam respectively (in 1945 and 1953), Gopal Iyer also acquired the “modern” university degrees of Bachelor of Oriental Language and Bachelor of Oriental Language with Honours at the University of Madras (1951 and 1958). From 1965-1978 he taught in Rajah’s College, Thiruvaiyaru, in which period he already took up his activity of editing works of Classical Tamil, especially theoretical texts. The most important publications from that phase are the Ilakkan|a Vil@akkam in 8 volumes (published in Thanjavur by the Sarasvati Mahal from 1971-1974), the Ilakkan|ak Kottu (Sarasvati Mahal 1973) and the Pirayoka Vivekam (Sarasvati Mahal 1973). Ever since 1978, Mr. Gopal Iyer’s sphere of activity has shifted to Pondicherry, where he has been (and still is) employed as a research scholar by the École Française d’Extrême-Orient (EFEO) – i.e., the French School of Asian Studies –, a research institution financed by the French government which has 17 research centres spread across Asia, the westernmost of which is that in Pondicherry, and which has the mission of studying Asian (and notably Indian) languages, cultures and religions. In this environment, designed as a meeting place for international research, the enormous preparatory work for this encyclopedia has been accomplished. Part of the voluminous editorial output of Mr. Gopal Iyer during the last 27 years has appeared in a series co-published by the EFEO and the IFP (the French Institute of Pondicherry, another research Institution of the French government in whose premises T.V. Gopal Iyer worked for several years), such as a 3-volume edition of the Te#va#ram, his major contribution to devotional Tamil literature (1984f., 1991), and the Ma#ran_ Akapporul@ (2005). A number of further publications deserve mention, since they concern fundamental texts of the Tamil grammatical and poetological tradition upon which the encyclopaedia is based. Last year he published a 14-volume edition of the complete Tolka#ppiyam with all the commentaries (through Thiru. G. Ela-vazhagan of TamizhMann Pathippagam, Chennai - 17) and this year editions of the Vi#raco#l@iyam and the Ma#r_an_ Alan)ka#ram. The EFEO is extremely happy that it has been able to contribute its share to this publication of vital importance for the exploration of Tamil literary history, which will be a monument to a most extraordinary man, who has been teacher and adviser, nay, a living encyclopaedia, to so many students of Tamil language, Indian and Western. A final brief note of thanks to three individuals who were important in bringing this large work to the light of day. The first is Mr. T.V. Gopal Iyer’s younger brother, Mr. T.S. Gangadharan, then of the French Institute of Pondicherry and now of the Pondi-cherry Centre of the EFEO, who wrote the work out in a fair hand. The second is Dr. Jean-Luc Chevillard, who, years later, had the encyclopeadia digitally photographed when in its yet more voluminous hand-written state and so by his timely intervention prevented the loss of some of its parts. The third is the publisher, Mr. Ela-vazhagan, of the Thamizh Mann Pathippagam, who had the vision to see the value of this work and took on the task of setting it in type, a labour which took a year and a half and involved five sets of proofs. ஈவா வில்டன் பிரஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி 16&19 டுமாஸ் தெரு புதுச்சேரி மையம் பாண்டிச்சேரி, ஆகஸ்டு 2005. அறிமுகவுரை தமிழ் இலக்கணம் மிகு தொன்மை வாய்ந்தது; பெரு மதிப்பிற் குரியது; தன் கூறுபாடுகள் பிணைந்து நுட்பமான பேரமைப்பாக உருவாகியுள்ள இவற்றின் தொடக்கக் காலம் எளிதில் வரையறுக்க முடியாத பழங்காலமாகும். தமிழ் மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் 2000 ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து வந்துள்ள சிந்தனைகளை நாம் இன்று நமக்குக் கிட்டியுள்ள நூல்களிலிருந்து காண்கிறோம். அச்சிந்தனைகள் பிறமொழிகளின் (குறிப்பாக வட மொழியின்) இலக்கண இலக்கியங்களோடு உறழ்ந்து வந்துள்ளதை யும் காண்கிறோம். தோராயமாகச் சொன்னால் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழிலக்கியத்திற்கு முழுமையான அடிப்படையாக அமைந்துள்ள ஒரே பெரும் பேரிலக்கணம் தொல்காப்பியம் ஆகும். (அஃது அவ்வப்பொழுது சிற்சில மாற்றங்களுடனும் விரிவாக்கங் களுடனும் அவ்வாயிரம் ஆண்டுக்கால இலக்கியத்துக்குமே அடிப் படையாக அமைந்தது.) அந்த ஒரே இலக்கணம்தான் புகழ்மிகு தொல்காப்பியம். அஃது மூன்று அதிகாரங்கள் கொண்டது: எழுத்து (ஞாடிnடிடடிபல) சொல் (ஆடிசயீhடிடடிபல யனே ளுலவேயஒ) பொருள் (ஞடிநவiஉள). சில காலம் கழித்துப் பொருள்இலக்கணத்தின் ஒரு பகுதியான அகம் பற்றி இறையனார் அகப்பொருள் என்னும் சிறுநூல் ஒன்று தோன்றியது. கி.பி. 1000-க்குப் பின்னர் தமிழகத்தில் சமுதாய - கலாசார மாற்றங்கள் விரைவுபெற்றன. அக்காலகட்டத்தில் தோன்றியதே விரிவாக உரையெழுதும் முறையாகும். இலக்கண நூல்களுக்கு மட்டு மன்றி, பழைய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலனவற்றுக்கும் இவ்வாறு உரைகள் தோன்றின. அப்பழநூல்களின் பொருளைத் தெரிந்துகொள்ளப் பெருமளவுக்கு அவ்வுரைகளையே நாம் சார்ந் துள்ளோம். எனினும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகள் பற்றிப் புது நூல்களும் தோன்றலாயின. மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய செய்யுள் வடிவங்களின் தோற்றம், தமிழின்மீது வடநாட்டு அஃதாவது சமற்கிருதம் சார்ந்த சிந்தனை எழுத்து ஆகியவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டுவனவாக அப்புது நூல்கள் தோன்றின. முதன்மையான சிலவற்றைக் காண்போம். தொல் காப்பியம் போல் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் பற்றி எழுதப்பட்டவை வீரசோழியமும் (மிகுந்த சமற்கிருதச் சார்புடையது; 11ஆம் நூற்றாண்டு) இலக்கண விளக்கமும் (தமிழ் இலக்கணத் தொல் மரபுகளைக் கடைப்பிடித்தது; 17ஆம் நூற்றாண்டு) ஆகும். இந்நூல்கள் பொருளை யாப்பு (ஆநவசiஉள) அணி (குபைரசநள டிக ளுயீநநஉh) என்று மேலும் இரு பிரிவுகளாக ஆக்கியுள்ளன. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்தனவற்றுள் மிகுதியும் பயிலப்பட்டவை 12ஆம் நூற்றாண்டு நன்னூலும் (தொல்காப்பியத்துக்குப் பின் தமிழுக்கு இலக்கணம் என்றாலே நன்னூல் தான் என்பதே நிலைமை) 17 ஆம் நூற்றாண்டுப் பிரயோக விவேகமும் (மிகுதியும் சமற்கிருதச் சார்புடையது) ஆகும். பொருளின் பிரிவுகள் பற்றியும் உட் பிரிவுகள் பற்றியும் எழுந்த புது இலக்கணங்கள் மிகப்பல. யாப்பு பற்றித் தனியாக எழுந்த முதல் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகை (10ஆம் நூற்றாண்டு); அகம் பற்றி விரிவாக எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நூல் நம்பி அகப்பொருள் (12ஆம் நூற்றாண்டு); புறம் பற்றியது புறப்பொருள் வெண்பாமாலை (9ஆம் நூற்றாண்டு). இந்த தமிழ் இலக்கணப் பேரகராதி மேற்சொன்ன இலக்கணச் செல்வங்களைத் தமிழ் வல்லுநர்களுக்கும் பிறருக்கும் - ஒரு சேரத் தொகுத்துத் தரும் சிறந்த நூல். தமிழ் இலக் கணத்தின் (பொருளியல் உட்பட) மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தரப்பட்டுத் தெளிவாக விளக்கப்படுகின்றது. எழுத்துக்கு 2, சொல்லுக்கு 4, பொருளுக்கு 11 ஆக 17 தொகுதிகள் கொண்டது இவ் வகராதி. (பொருள் பற்றிய 11 தொகுதிகளின் வகைப்பாடு: அகம் - 4, புறம் - 1, யாப்பு - 2; அணி - 2; பாட்டியல், பாயிரம், மரபியல் - 1; மெய்ப்பாடு, நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆகியவை - 1, என்பனவாகும்) இறுதித் தொகுதில் கருவி நூற்பட்டியலும் உள்ளது. பொருள்களைத் தெள்ளிதின் உணர்ந்து முறைப்படி விளக்கும் இத்தகைய பேரகராதியின் இன்றியமையாத் தேவை நெடுநாளாக ஆய்வுலகத்தால் உணரப்பட்டுவந்ததாகும். மிக விரிந்த இவ் விலக் கணநூல்களும் உரைகளும் திட்ப நுட்பமான நடையிலமைந்தவை யாகையால் இன்று எளிதில் படித்துணரத்தக்கவை அல்ல. அவற்றில் காணத்தகும் இலக்கணச் செல்வங்களுக் கெல்லாம் புலமை சான்ற விளக்கங்களை இங்குக் காணலாம். இவ்விலக்கண நூல்கள், உரைகளிற் சிலவற்றின் அச்சுப்படிகள் கூட எளிதில் கிட்டுவதில்லை (கிட்டினும் அவையும் இவ்வகராதி யாசிரியர் அச்சிட்டவையாகவே இருக்கும்; அவரைப் பற்றி மேலும் சில பின்னர்). அவ்வரிய இலக்கண நூல்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படாதவை; இவற்றைப் பற்றிய பொதுவான விளக்க நூல்களும் சிலவே - அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி களில் வந்துள்ளவை ஒன்றிரண்டேயாகும். அண்மைக் காலங்களில் இவை போன்ற விரிவான நூல்கள் வெளியிடும் திட்டங்கள் சில வற்றுள் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிடத் தொடங்கிய “தமிழ் இலக்கியக் களஞ்சியமும்” ஒன்று. அக்களஞ்சி யத்தில் மூன்று மடலங்களே (ஐ முடிய) வெளிவந்த நிலையில், கடந்த ஒன்பதாண்டுகளாகப் பணி முட்டுப்பட்டு நிற்கிறது என்பது நினைக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஊறிய பேரறிஞர்களில் இன்று நம்மோடு உள்ள மிகச் சிலரில் ஒருவரான, 80 வயது நிறைந்த வணக்கத்துக்குரிய தி.வே. கோபாலையரின் படைப்பான இப் பேரகராதி தமிழ் இலக்கண, இலக்கிய அறிஞர்கள் அவர்பால் நன்றி பாராட்டுதற்குரிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் பல்வகையிலும் போற்றத்தக்கவருள் ஒருவரான இவ்வாசிரியரின் நெடிய தமிழ்ப்பணி குறித்து மிகச் சிறிய அளவிலேயே ஈண்டுக் கூற இயலும். பாரம்-பரியமான தமிழ்ப் புலமை மரபில் அவர் பெற்ற தகுதிகள் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் (1945); மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் (1953) ஆகியவை; அத்தோடு “நவீன”ப் பல்கலைக் கழகப் பட்டங் களாகச் சென்னைப் பல்கலை கழகத்தில் 1951இல் பி.ஓ.எல் பட்டமும், 1958இல் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டமும் பெற்றுள்ளார். 1965 - 1978இல் அவர் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அப்பொழுதே பதிப்புப் பணியை, குறிப்பாக பழந்தமிழ் இலக்கண உரைநூல்களைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் அவர் பதிப்பித்தவை இலக்கண விளக்கம் 8 தொகுதிகள் (தஞ்சை சரசுவதி மகால் 1971-74), இலக்கணக் கொத்து (தஞ்சை சரசுவதி மகால் 1973), பிரயோக விவேகம் (தஞ்சை சரசுவதி மகால் 1973) ஆகியவையாம். 1978இலிருந்து திரு கோபாலையர் அவர்களுடைய அறி வாற்றலைப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி (விஉடிடந குசயnளீயளைந ன’நுஒவசஷீஅந-டீசநைவே ) பயன்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆய்வுப் பணி செய்யும் அந்நிறுவனம் பிரான்சு நாட்டு அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிறது. அவ் வமைப்பிற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 17 ஆய்வுமையங்கள் உள்ளன. பாண்டிச்சேரி மையம் உட்பட. இவை ஆசிய (குறிப்பாக) இந்திய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கின்றன. பன்னாட்டு ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து அறிவுப் பணி செய்யும் இச் சூழல் கொண்ட பாண்டிச்சேரி மையத்தில்தான் இவ்விலக்கணக் களஞ்சியம் தொகுக்கும் மாபெரும் பணி நடந்தது. கடந்த 27 ஆண்டுகளில் திரு கோபாலையர் படைத்த பற்பல நூல்களையும் பாண்டிச்சேரியி லுள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளியும், பிரான்சு நாட்டு அரசின் மற்றொரு கீழைக் கலை ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு நிறுவனமும் (குசநnஉh ஐளேவவைரவந) வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியான அவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பக்தி இலக்கியம் சார்ந்த தேவாரம் (3 தொகுதிகள் 1984 முதல் 1991 வரை), மாறன் அகப் பொருள் (2005) ஆகியவை. இப்பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தவையும் கோபாலையர் பதிப்பித்தவையுமான வேறு சில நூல்களையும் குறிப்பிட்டாகவேண்டும்; அவை (திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 மூலமாக) அவர் 2004இல் பதிப்பித்த தொல்காப்பியமும் (உரைகளுடன் 14 தொகுதிகள்) 2005இல் அவர் பதிப்பித்துள்ள வீரசோழியமும் மாறன் அலங்காரமும் ஆகும். தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றை ஆய்வு செய்திட இன்றி யமையாத கருவி இப் பேரகராதி. இந்திய மற்றும் மேல்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கு ஆசானாகவும் அறிவுரையாள ராகவும், ஏன் நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் அமைந்த அபூர்வ மான ஓர் அறிஞரின் மாபெருஞ் சாதனையாக அமைவதும் இது. எனவே இந்நூல் வெளியீட்டில் தானும் பங்கு பெற்று உதவிட வாய்ப்புப் பெற்றது குறித்துப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி மகிழ்கிறது. இறுதியாக இம்மாபெரும் பணி வெற்றிகரமாக நடைபெறப் பெரும்பங்கு ஆற்றிய மூவருக்கு நன்றி கூறியாக வேண்டும். முதலா மவர் திரு கோபாலையரின் இளவல் திரு கங்காதரன் அவர்கள். அவர் முன்னர்ப் பிரெஞ்சு நிறுவனத்தில் பணி செய்தவர். இப்பொழுது பி.இ.ஆ.ப. பாண்டிச்சேரி மையத்தில் அவர் ஆய்வறிஞர், பணியில் உள்ளார். நூல் முழுவதையும் தம் கைப்பட அழகாக எழுதியவர் அவர். இரண்டாமவர் டாக்டர் ழான்-லுக்-செவியர்; கையெழுத்துப் பிரதி முழுவதையும் டிஜிடல் நிழற்படமாக எடுத்து எப்பகுதியும் சிதிலமாகி அழிந்து விடாதபடி பார்த்துக் கொண்டவர். மூன்றாமவர் திரு கோ. இளவழகன். அவர் இந்நூலின் சிறப்பையும் பயனையும் உணர்ந்து அதை வெளியிட முன்வந்தவர். இப் பெருநூலைச் செம்மை யாகக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுக்கு அணியமாக்கவும், மெய்ப்புக்களை ஐந்து முறை கவனமாகத் திருத்தவும் ஆக ஒன்றரை ஆண்டுகள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உழைத்துள்ளனர். தமிழ் வாழ்க! தலைமாமணியெனத் தமிழிலக்கணப் பேரகராதியை வரைந்தருளிய கலைமாமணி, பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் அவர்களை வாழ்த்தி வழங்கும் “பாராட்டுரை” 1 அன்பும் அருளும் அறிவும் திருவும் இன்பமும் எழிலும் மன்னிய உருவாய்ச் சொல்லொடு பொருள்போல் எல்லும் ஒளியும் புல்லிய வடிவென அம்மை யப்பனாய்ச் 5 செந்தமிழ் மயமாய்த் திகழும் சீர்சால் பொன்மலை மேவிய புரிசடைக் கடவுள் நான்மறை நவிலும் நயன்மிகு நாவால் சிந்தை சிலிர்க்கத் தென்றல் உலாவச் சந்தனம் மணக்கும் தண்ணிய அருவிகூர் 10 பொதியத் தமர்ந்து புவியெலாம் போற்ற மதிநலம் வளர்க்கும் மாண்பமை முத்தமிழ் நிதிவளம் நல்கும் நிகரிலா மாதவன் அகத்தியற் கருளிய தகவமை இலக்கண மிகப்பெருங் கலையைச் சகத்தவர் உணர 15 பல்காப் பியந்தெளி தொல்காப் பியன்முதல் ஒல்காப் புலமை ஒண்டமிழ் நூலோர் இயம்பிய இலக்கணப் பனுவல் யாவையும் உளந்தெரிந் துரைசெய் இளம்பூ ரணர்முதல் சேனா வரையர், தெய்வச் சிலையார், 20 ஆனாப் புலமைப் பேரா சிரியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் விச்சை மிக்கநக் கீர னாரொடு சிவஞான முனிவர், சுவாமி நாதனார் யாப்ப ருங்கல விருத்தி முதலாய 25 உரைவழி யாவையும் புரையறக் கற்றறிந்து, அரியவை யாவையும் சிந்தையிற் றெளிந்து கற்றதை மறவாப் பெற்றியொடு திகழும் அருந்திறற் புலவன், பெரும்பே ராசான், விருந்தென வடமொழி பயின்றறி திறலோன், 30 ஆங்கிலப் புலமைசீர் தாங்கிடும் ஆசான், சங்க இலக்கியச் சால்பொடு இரட்டைக் காப்பிய நுணுக்கமும் சிந்தா மணியினைத் தேர்ந்தறிந் துவந்துரை விரிக்கும் செம்மல், தேங்கமழ் அமிழ்தென மாணவர் செவிகொளப் 35 பாடம் பயிற்றும் பண்பமை ஆசான் திருமுறை, திவ்வியப் பிரபந்த அருள்வளம் நிறைமொழி யாவும் நெஞ்சம் இனிக்க உருச்செய் துவக்கும் ஒளிர்தமிழ்ப் பாவலன், புராண இதிகாசப் புலமையும் நுட்பம் 40 விராவிய கம்பன் கவிதையும் பிறபிற சிற்றிலக் கியக்கடல் திளைத்தநற் கல்விமான், ஆளுடைப் பிள்ளையும் அரசும் நம்பியும் தாளுறச் சூழ்ந்து தலையுறப் பணிந்து தெய்வத் தமிழாற் புனைந்ததே வாரம் 45 மெய்யணிந் துவக்கும் ஐயா றன்திகழ் காவிரித் தாயின் கரைமிசை யொளிசெய் திருவையா றதனிற் செந்தமிழ்த் தாயின் உள்ளம் உவப்ப உதித்த தனயன், அந்தணர் குலத்தில் வந்தநற் சான்றோன் 50 குணத்தால் உயர்ந்த கோபா லையன், அன்பும், அடக்கமும், நண்பமை செயலும், இன்சொலும், எளிமையும், இயல்போ டமைந்தொளிர் போதகா சிரியன், புதியன புனையும் ஆய்வறி வாளன், அரும்பெறற் கட்டுரை 55 தரும்எழுத் தாளன், மூவர்தே வாரச் சொல்வளம் இசைவளம் மல்கிடும் ஞானம், மலர்ந்திடும் கற்பனை, வண்ணனை உள்ளம் கலந்திடும் பக்திக் கவிநயம் யாவையும் உலகுணர்ந் துய்ய உரைவிரித் தியம்பிய 60 பலகலை யுணர்ந்த பண்டிதன் இலக்கணக் கடல்படிந் தெல்லை நிலைகண் டெழுந்த ஆசான், தன்பே ருழைப்பினால் இலக்கணக் கலைச்சொல் யாவையும் கவினுறத் தொகுத்துப் பொருள்நிலை விளங்க அகர நிரல்பட 65 இலக்கணப் பேரக ராதியை வரைந்து பேரா சிரியர்,ஆய் வாளர், மாணவர் யாவரும் பயன்பெறக் காவியம் போலத் தமிழ்த்தாய்க் கணியாத் தகவுற வழங்கும் பண்டித தி.வே. கோபா லையர் 70 வண்டமிழ் போல வளமெலாம் மேவி மண்டலம் புகழப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கெனப் போற்றி வாழ்த்துதும் உவந்தென். தஞ்சாவூர் 22.08.2005 பாவலரேறு ச. பாலசுந்தரனார் “கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” முதுபெரும் புலவர் இலக்கணக் கடல் உயர்திருவாளர் தி.வே. கோபாலனார், தமிழ்வளக் கொடையாக, அரும்பதிப்புப் பெருந்தகை கோ. இளவழகனார் வழங்கும், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ மடலங்கள் பதினேழனையும் ஒருங்கே கண்டதும், “காரே! நேரே தான், வாரியுண்டு; வாரிமொண்டு வாரியுண்டு, வானிருண்டு பேரி கொண்டு நீதிரண்டு பெய்” என்னும், வான்மழைப் பாட்டின் ‘தேன்பிழி’வென எனக்கு அவை இன்ப மூட்டின. கோபாலனார் மூளைக் கூர்ப்பும், இளவழகனார் பதிப்பு ஈர்ப்பும், ஒருங்கே வயப்படுத்திய இன்பத்தில், ‘அன்னை வாழ்க’, ‘அயராத் தொண்டர்களும் வாழ்க’ என என்னுள் வாழ்த்தினேன். கோபாலனார் நினைவின் ஏந்தல்; இலக்கணமா இலக்கியமா, நூலோடு உரையும் நெஞ்சக் களனில் வரப்படுத்தி வைப்பாக வைத்துக் காக்கும் கருவூல வாழ்வர். கற்றது ஒன்றையும் கைவிடாக் ‘கருமி’யெனக் கவர்ந்து கொண்ட தமிழ்வளத்தை, என்றும் எங்கும் எவர்க்கும் ‘தருமி’ என வாரி வழங்கும் வள்ளியர். அவர்தம் இவ்வகராதிக் கொடை, தமிழுலகு காலத்தால் பெற்ற கவின் பரிசிலாம்! என்னை யறியாதே எனக்கொரு பெருமிதம்; ஏக்கழுத்தம்; “இத்தகு பாரிய இலக்கணத் தொகுதிகளை இம்மொழி ஒன்றை யன்றி, எம்மொழிதான் பெறக்கூடும்?” என்னும் எண்ணத்தின் விளைவே அஃதாம்! அம்மம்ம! எழுத்து - இரண்டு மடலங்கள் சொல் - நான்கு மடலங்கள் இவ் ஆறு மடலங்களைத் தானே மற்றை மற்றை மொழிகள் பெறக்கூடும்! பொருளிலக்கணம் என்பதொன்று கொள்ளா மொழிகள், எப்படித் தமிழைப் போல் பொருள் இலக்கண மடலங்களைப் பெற வாய்க்கும்? பொருளிலக்கண மடலங்கள், எழுத்து, சொல் மடலங் களைப் போன்ற எண்ணிக்கையினவோ? அகப்பொருள் - நான்கு மடலங்கள். புறப்பொருள் - ஒரு மடலம் யாப்பு - இரண்டு மடலங்கள் அணி - இரண்டு மடலங்கள் மெய்ப்பாடு முதலன - ஒரு மடலம் பாட்டியல் முதலன - ஒரு மடலம் ஆகப் பதினொரு மடலங்கள். மொத்தமாகக் கூடுதல் 17 மடலங்கள். மொழி ஆர்வலர்க்குப் ‘பெருமிதம்’ உண்டாகுமா? உண்டாகாதா? இப்பெருமிதத்தூடேயே ஓர் ‘ஏக்கம்’: அரிய ஆய்வுக் குறிப்புகள் வழங்கித் தெளிவுறுத்த வல்ல ஆசிரியர், அவற்றை அரிதாக மேற்கொண்டதை அன்றிப் பெரிதாக அல்லது முற்றாக மேற்கொண்டிலரே என்பதே அவ்வேக்கம். எ-டு: ‘அகர முதல் னகர இறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித் தொகை; நச்சினார்க்கினியருக்கு எழுவாய்த் தொடர்கள் - என்று காட்டும் தொகையாசிரியர், “அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாகவும் உடைய என்று பொருள் செய்யின் அகரமுதல் - னகர இறுவாய் என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகை” என்று தம் தெளிவை இயைக்கிறார் (எழுத்து 1:22) நன்னூலார் அளபெடையைச் சார்பெழுத்தாக எண்ணினார். ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையை உயிரெழுத்துள் அடக்கிக் கொண்டார் என்பதைச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி கொண்டு தெளிவிக்கிறார் தொகையாசிரியர். (எழுத்து 1:44) “மகரக் குறுக்கம் மேலால் பெறும் புள்ளியொடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது. ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது” என்று தெளிவிக்கிறார் தொகை யாசிரியர். (எழுத்து 2: 263) ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’, என்னும் தலைப்பில், “தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி அதனால், நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்” என்று விளக்கும் தொகையாசிரியர், நுண் மாண் நுழைபுலம் கற்பவர் தெளிவுக்கு நல்வழி காட்டுகின்றது. (எழுத்து 2:265) ஆனால், இத்தகையவை பெரிதும் இடம் பெறாமல் ‘தொகை யளவொடு’ நின்று விடுகின்றது என்பதே அவ்வேக்கம். தொகை யாவது, தொகுப்பு. ‘குற்றியலுகரம் ஒற்று ஈறே’ என்பதோர் ஆய்வு என்றால், ‘குற்றியலுகரம் உயிர் ஈறே’ என்பதோர் ஆய்வு ஆதல் காட்டப்படவேண்டும் அல்லவோ! எது செவ்விது என்பதைத் தெளிவித்தல் இன்றேனும், தெளிவிக்கக் கருவிதந்தது ஆகும் அன்றோ! இவ்வாறு, பின்னாய்வாளர் எண்ணற்றோர் ஆய்வுகள் கொள்ளப்படாமை மட்டுமன்று; தள்ளப்படுதல் மிகத் தெளி வாகின்றது. தொகையாசிரியரால் சுட்டப்படும் அரசஞ்சண்முகனார் (பாட்டியல் 15) ஆய்வு எத்தகையது எனின், ‘நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்’ எனத் தொகையாசிரியராலேயே பாராட்டப்படும் தகையதாம். அச்சண்முகனார், ‘பிரமாணம் ஆகாத நூல்கள்’ என்பதையும் பதிவு செய்கிறார் தொகையாசிரியர். அது, “சின்னூல்(நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும் ஆசிரியனது கருத்துணராமல் மரபு நிலை திரியச் செய்யப்பட்டமையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம் நூல்நெறிக்குச் சான்றாக - எடுத்துக் காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார் (பா.வி. பக். 104-105)” என்கிறார் (பாட். 142) என்பது. தொகையாசிரியர், இச் சான்றைப் பொன்னே போலப் போற்றியிருப்பின், அதன் பெருஞ்சிறப்பு எப்படி இருந்திருக்கும்? தன் பெயருக்கு ஏற்பத் ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ என்பதற்குத் தானே தன்னிகரிலாத் தலைமை கொண்டிருக்கும்! இப்பிரமாணமாகா நூல்களைத் தள்ளியிருப்பின் இப்பாரிய நிலை இருக்குமோ எனின், அவ்வெண்ணம் பிழைபட்ட எண்ண மாம்! ‘தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்’ என்னும் தலைப்பில் கூறப்படும் அளவுகோல் தானா இன்றும் உள்ளது? சதுரகராதியும் பிரபந்த மரபியலும் கூறுவன 96 மட்டுமே. மற்றை நூல்களால் அறிவன அதற்கும் உட்பட்டனவே. ஆனால், சிற்றிலக்கிய விரிவாக்கப் பரப்பு எத்தனை? 381 வகையென்பதை எம், ‘இலக்கிய வகைமை அகராதி’யில் காணலாம். அவற்றின் மேலும் இதுகால் விரிந் துள்ளன. பொருளதிகார ஆய்வோ, வெள்ளப் பெருக்காகி உள்ளது. கால்டுவெலார், ஞானப் பிரகாச அடிகளார், பாவாணர் அன்னவர்கள் ஆய்வு தமிழிலக்கண ஆய்வுகள் அல்ல எனத் தள்ளப் பட்டுவிடாவே! அவற்றை நோக்கினால், வேண்டாச் சேர்ப்புகளை விலக்கி, வேண்டும் சேர்ப்புகளை இணைத்துக் கொண்டால் இன்னும் பதின் மடலங்கள் மிகும் என்பதை, நினைவின் ஏந்தல் - சோர்வறியாச் சுடர் - கோபாலனார் கொள்வாரே எனின், இத்தமிழ் இலக்கணப்பேரகராதி ஒத்ததோர் அகராதி இன்றாம் என மலைமேல் ஏறி முழக்கமிடலாம் அல்லவோ! இத்தொகையாசிரியப் பெருமகனாரை அல்லார் ஒருவர், இப்பெருங் கடப்பாட்டை மேற்கொண்டு இத்தகு பணி செய்தல் அரிது! அவர்தம் முழுதுறு ஒப்படைப்பின் பேறு அது. அன்றியும், தம்மைப் போலவே தம் உடன்பிறப்புகளையும் அழுந்திப் பயிலவும் ஆர்வக் கடனாற்றவும் பயிற்றி இருக்கும் பயிற்றுதற்பேறு; தமிழ் வாழ்வாகிய அவரைத் தாங்குதலே தம் பிறவிப் பேறு எனக்கொண்டு நயத்தகு துணையாயும் குடும்பமாகியும் நிற்பார் கெழுதகைப் பேறு; இன்னவெல்லாம், இத் தமிழ்ப் பெருங்கொடைக்கு ஊற்றுக் கண்கள் அன்னவாம். இங்குச் சுட்டப்பட்டவை, தமிழ்க் காதலால், தமிழர் பண் பாட்டுக் காதலால் சுட்டப்பட்டவை என்பதைக் கற்பார் உணரின், இத்தொகுதிகளைத் தத்தம் குடிமை வைப்பாகக் கொள்ளக் கடமைப்பட்டவராம். ஆய்வுக்கு இப்படியொரு கருவி எளிதில் வாய்க்குமா? ஆய்வுக்கு எல்லை உண்டா? ‘அறிதோ றறியாமை’ காணும் ஆய்வுக்கு, “மனிதர்காள் இங்கேவம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” என்று அப்பரடிகள் தமிழ்க்கோயில் வாயில் முன் நின்று அழைத்து வழிகாட்டுவது போல, அயராத் தொண் டர்கள் தி.வே. கோபாலனாரும், கோ. இளவழகனாரும் இத் தொகையைக் கைகோத்து நின்று கனிவொடு வழங்குகின்றனர்! நாம் பேறெனப் பெற்றுப் பயன் கொள்வோமாக! தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் ‘குறுந்தட்டாக’ விளங்குபவர் பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் புதுவைக்கு வருகின்றவர்கள் இங்கே இரண்டு கடல்களைப் பார்க்கலாம். ஒன்று உவர்க்கடல்; மற்றொன்று தி.வே. கோபாலையர் என்னும் நூற்கடல். ‘தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துப் பொன்கொழித்து, மணிவரன்றி, மாணிக்கத்தொடு வயிரம் உந்தி வந்து, சல சலவென இழிதரும் அணிகிளர் அருவி’ போன்ற இவரது பொழிவினை ஒரு முறை கேட்கும் எவரும் வியந்து, இவர் ஒரு நூற்கடல்தாம்’ என்பதை எளிதினில் ஏற்றுக்கொள்வர். ‘அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்’ கொண்ட மலையனைய மாண்பின் அறிவினராகிய தி.வே. கோபாலையர் கற்றோர்தமக்கு வரம்பாகிய தகைமையர். தண்டமிழின் மேலாந்தரமான இலக்கிய இலக்கணங்களையும், அவற்றுக்குப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் உரைகளையும் இளமையிலேயே பதிவு செய்துகொண்ட குறுந்தட்டாக விளங்கு பவர் இப் பெருந்தகை. எக்காரணத்தாலாவது இந்நூல்களில் ஒன்றை இழக்க நேரின் கவலைப்பட வேண்டியதில்லை; இவர்தம் உள்ளப் பதிவிலிருந்து அதனை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்க்குப்’ புகழ் சேர்த்த பாரதியார், பாவேந்தர் முதலிய புகழ்மணிகளின் வரிசையில் இன்று கோபாலையர் விண்ணுயர் தோற்றத்துடன் விளங்குகிறார். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பரிமேலழகர், சிவஞான முனிவர், காரிரத்தினக் கவிராயர் முதலிய புலவர் மரபினோர் புகழை யெல்லாம் தம் புகழ் ஆக்கிக்கொண்ட இப்புலவர் பெருந்தகையைப் புதுவைப் புலவருலகம் போற்றி ‘நூற்கடல்’ என்ற சிறப்புப் பட்டமளித்துப் பொன்போற் பொதிந்து கொண்டது. இருபத்தாறாண்டுகளுக்கு மேலாக இவர் புதுவைப் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் (விஉடிடந குசயnளீயளைந) தமிழாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை மேற்கொண்டு அரிய நூல்கள் பலவற்றை ஆய்வுச் செம்பதிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பாரதியாரின் தலைசிறந்த படைப்புகளுக்கு வாய்ப்பாக இருந்த புதுவைமண், கோபாலையரின் புகழை என்றும் நின்று நிலவச் செய்யும் உயர் பதிப்புகள் பல உருவாவதற்கும் வாய்த்த இடமாக இலங்குகிறது. கடந்த பன்னீராண்டுகளாகப் புதுவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தெளிதமிழ்’ என்னும் தமிழ் வளர்ச்சித் திங்களி தழில், இவர்தம் படைப்பினை ஏந்தி வாராத இதழே இல்லை. அதில் ‘இலை மறை கனிகள்’ என்னும் தலைப்பில், தமிழிலக்கண இலக்கிய நூல்களிலும் உரைகளிலும் இலை மறை கனிகளாக மறைந் திருக்கும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகளாகத் தந்து வருகிறார். அலான் தனியேலு (ஹடயனே னுயnநைடடிர) என்னும் மேனாட்டறிஞரின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்குத் துணை செய்ததும், சேனாவரையத்தின் பிரஞ்சு மொழியாக்கத்திற்குத் துணை நின்றதும் இவர்தம் ஆங்கில அறிவுக்குச் சான்று பகரும். ‘தொல்காப்பியப் பழைய உரைகளின் செம்பதிப்பு’, ‘கல் வெட்டுக்களில் நாயன்மார்கள் பற்றிய அருஞ் செய்திகள்’ ஆகியன இனி வெளிவர இருக்கும் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவர்தம் பணிகளில் மிகமிகப் பயன் விளைக்கும் அரிய பெரிய பணி இந்த ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’. தமிழிலக்கணம் கற்போருக்கும், இலக்கண ஆய்வாளர்களுக்கும் கை விளக்காகப் பயன்படக்கூடிய இவ் வகரவரிசை இருபத்தைந்து ஆண்டுக் கால பேருழைப்பால் எழுதி முடிக்கப்பெற்றது. எப்போது வெளிவருமோ என்று தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்திருந்தது. மற்றவர் அரியதென்று கருதும் நல்ல பதிப்புப் பணிகளை எளியதென்று ஏற்று, மடிதற்றுத் தாமே முன்வந்து செய்யும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர், ‘தமிழ்மொழிக் காவலர்’ கோ. இளவழகன் இதனை அழகுறப் பதிப்பித்து வழங்குகிறார். இவ்வரிய செயலால், இன்பத்தமிழ் இருக்குமளவும் இளவழகன் புகழும் இருக்கும் என்பது உறுதி. அன்பன், இரா. திருமுருகன். ‘ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர்’ பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந் தகையார் பெரியார் யார் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுக்கின்றார். மனிதமேம்பாட்டுக்குரியதான, செய்வதற்கு அரியதான செயலை யார் புரிகின்றார்களோ அவர்களே பெரியவர் என்கின்றார். காலங்கள்தோறும் பல்வேறு துறைகளில் மனிதமேம்பாட்டுக் காகப் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் இலக்கணப் பேரகராதி என்னும் இந்நூலை தி.வே.கோபாலையரும், இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகனாரும் அடங்குவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒருசமயம் இல்லாமற் போய் விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர். ஒரு தேன்கூட்டில் பல மலர்களின் தேன்கள் கலந்திருப்பது போல் இந்தப் பேரகராதியில் பல தமிழ்இலக்கண நூல்ஆசிரியர்களின் வரையறைகளும் பல உரையாசிரியர்களின் உரை வளங்களும் கலந்துள்ளன. அறிஞர் திலகம் கோபாலையர் எப்படி எளிமையானவ ராகவும், ஆழமான புலமை உடையவராகவும், பழக இனியவராகவும் இருக்கிறாரோ, அப்படியே ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் திருக்குறளின் கருத்துக்கேற்ப இந்நூலும் நம்மிடம் பழகுகின்றது. இந்த நூல் பேரகராதியாக உள்ளதால் இலக்கணம் கண்டு அஞ்சும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் அகராதிப் பொருளை அறிவது போல் எளிதாகத் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள முடியுமாறு உள்ளது. இந்நூல் தொல்காப்பியர் காலத்திலிருந்து இந்த நாள்வரை உள்ள தமிழ் உலகிற்குக் கிடைத்த புதுமையான முதன்மையான முழுமையான நூலாகும். பலர் முயன்று செய்ய வேண்டிய பணியை தி.வே.கோபா லையரே செய்து முடித்துள்ளார். ஒரு பல்கலைகழகமோ ஒரு பெரிய ஆய்வு நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தமிழ்மண் பதிப்பகம் ஆர்வத்தால் எளிதாகச் செய்துள்ளது. தமிழர்களின் தவப்பயனே இப்படியாய்த் தமிழ் மண்ணில் முகிழ்த்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் வழங்கும் அனைத்து இடங்களிலும் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நூலகங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்நூல் இந்நூல் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக இளவழக னார்க்கு நமது வெற்றி வாழ்த்துக்கள். இந்த நூலை அளித்தருளிய அறிஞர்திலகம் நம்முடைய இலக்கண மாமணி கோபாலையருக்குத் தலையல்லால் கைம்மாறில்லை என்னும் படியான தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு. வெல்க மனிதநேயம். அடியேன். முனைவர் ‘வைணவம்’ பார்த்தசாரதி ‘மாந்தக் கணினி’ பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் நாம் சங்கப் புலவர்களைப் பார்த்திலோம்! இடைக் காலப் புலவர்களையும் உரை வல்லுநர்களையும் பார்த்திலோம்! ஆனால் அவர்களை யெல்லாம் நம் காலத்தில் பார்த்திட விரும்புவோமாயின் அவர்களின் உருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களைக் காணலே சாலும். சாதி, மத, வயது வேறுபாடின்றித் தம்மை அணுகும் யாரே யாயினும் அயர்வுறாது மாற்றம் கொள்ளாது அவர்தம் ஐயங்கட்குத் தெளிவேற்படுத்தலும் வினாக்கட்கு விடையளித்தலுமான சீரிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில், எந்தப் பாகியில், எந்த வரியில் உள்ளது எனத் தெளிந்த உணர்வுடன் எந்தச் சொல்லையும் கருத்தையும் சுட்டிக் காட்டும் வியக்கத்தக்க மாந்தக் கணினியாக விளங்குகிறார். சங்கப் புலவரும் இடைக் காலப் புலவரும் உரை வல்லுநரும் கையாண்ட மொழி முதலெழுத்து, மொழியிறுதி எழுத்து, புணர்ச்சி நெறிகள், பிற மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கல் ஆகிய தமிழ் இலக்கண மரபுகளைப் பொன்னே போல் போற்றிப் பயன்படுத்தி வரும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அப்பெருமகனார் வாழுங்காலத்தில் வாழ்தலும், அவரிடத்து உரையாடி மகிழ்தலும், ஏற்படும் ஐயங்கட்கு அவரின் சொல்லரிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிதலுமாகிய அரிய பேற்றினை நான் எனது வாழ்நாளில் பெற்றுள்ளேன். அவரின் பரந்த இலக்கிய நூலறிவும் தெளிந்த இலக்கண அறிவும் தமிழர்க்கும் உலகுக்கும் மேலும் பயன்படுதல் வேண்டும். அவர் மேற்கொண்டுள்ள எளிய வாழ்வு, சம நோக்கு, இனிய பேச்சு, எல்லார்க்கும் பயன்படல் வேண்டும் என்னும் பெரும்பண்பு ஆகியவை கற்றாரை ஈர்க்கும் தன்மையன. நூற்கடலார் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிடல் வேண்டும் என எனது உள்ளம் நிறைந்த விழைவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் இறைவிழியன் பதிப்புரை தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அனைத்து உரைகளையும் தொகுத்து தொல்காப்பிய நூல் பதிப்பில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் ஒரேவீச்சில் எம் பதிப்பகம் வெளியிட்டதை தமிழுலகம் நன்கு அறியும். தொல்காப்பிய நூல்பதிப்புப் பணிக்கு அல்லும் பகலும் துணை யிருந்து உழைத்தவர் பண்டிதவித்துவான் தி.வே.கோபாலையர் ஆவார். இந்நூல் பதிப்புகளுக்கு இவரே பதிப்பாசிரியராக இருந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்தவர். கூரறிவும், பெரும் புலமையும், நினைவாற்றலும் மிக்க இப்பெருந்தகை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தம் பேருழைப்பால் தொகுத்த தமிழ் இலக் கணத்திற்கான சொல் மூலங்களை ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ எனும் பெரும்படைப்பாக 17 தொகுதிகளை உள்ளடக்கி ‘தமிழ் இலக்கண’க் கொடையாக தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கண நூல் பதிப்பு வரலாற்றில் தமிழ் இலக்கணத் திற்கென ஒரே நேரத்தில் எழுத்து, சொல், பொருள் (அகம், புறம், அணி, யாப்பு, பாட்டியல், பாயிரம், மரபியல், மெய்ப்பாடு, நாடகம், அளவை நியாயம்) எனும் வரிசையில் பேரகராதி வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கம் தருவது. பேரகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் சுட்டுவது. களஞ்சியம் என்பது ஒரு சொல்லுக்குப் பல்பொருள் விளக்கம் காட்டுவது. உங்கள் கைகளில் தவழும் இத் தமிழ் இலக்கணப் பேரகராதித் தொகுதிகள் தமிழுக்குக் கருவூலமாய் அமைவதாகும். தமிழிலக்கணப் பெரும் பரப்பை விரிவு செய்யும் இப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். தமிழ் ஆய்வை மேற்கொள்வார்க்கு வைரச் சுரங்கமாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக் காகவும் இந்நூல் தொகுதிகள் வருகிறது. தொன்மையும், முன்மையும், தாய்மையும், தூய்மையும், மென்மையும், மேன்மையும், பழமையும், புதுமையும், இளமையும், முதுமையும் மிக்கமொழி நம் தமிழ்மொழி. திரவிடமொழிகளுக்குத் தாய்மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பெருமொழிகளுக்கு மூலமொழி நம் தமிழ்மொழி. உலக மொழிகளுக்கு மூத்த மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பேரரசால் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள இந் நேரத்தில், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’யை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இலக்கணச் சுரங்கத்தைத் தந்துள்ள பண்டித வித்துவான் தி.வே. கோபாலையருடன் உடனிருந்து உழைத்தவர் அவர் இளவல் தி.வே. கங்காதரன் ஆவார். இப் பொற்குவியல் பொலிவோடு வெளி வருவதற்கு தம் முழுப் பொழுதையும் செலவிட்டவர் இவர். இரவென்றும், பகலென்றும் பாராது உழைத்த இப் பெருமக்க ளுக்கும், பேரகராதியின் அருமை பெருமைகளை மதிப்பீடு அளித்து பெருமை சேர்த்த புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத் துக்கும், தமிழ்ச் சான்றோர்க்கும் எம் நன்றி. பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் வடிவமைப்பு : செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சுக்கோர்ப்பு : கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, கீதா, சங்கீதா, பிரியா, பத்மநாபன், சே. குப்புசாமி, மு. கலையரசன் மெய்ப்பு : தி.வே. கோபாலையர் தி.வே. கங்காதரனார் ——— உதவி : அ. மதிவாணன் கி. குணத்தொகையன் அரங்க. குமரேசன் வே. தனசேகரன் நா. வெங்கடேசன் மு.ந. இராமசுப்ரமணிய இராசா இல. தர்மராசு ——— அச்சு எதிர்மம் (சூநபயவiஎந) : பிராஸஸ் இந்தியா, சென்னை அச்சு மற்றும் கட்டமைப்பு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை ——— இவர்களுக்கு எம் நன்றி . பொருள் - மெய்ப்பாடு பொருள் - நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் மெய்ப்பாடு அ அகச்சுவை - தலைவனும் தலைவியும் களவும் கற்புமாக நிகழ்த்தும் நல்லற வாழ்வாம் இல்லறமாகிய அகப்பொருளில் மிகுதியாகப் பயின்றுவரும் சுவைகளாகிய உவகை, நகை, மருட்கை என்பன அகச்சுவையாம். (ம. சூ. பக்.6) அகமெய்ப்பாடுகள் - சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம் என்னும் நான்கு நிலைகளை விளைக்கும் மன்மதபாணங்களால் உடல் வருந்துதலால் நிகழ்வன அகமெய்ப்பாடுகள். விளர்ப்பு, பசப்பு, மெலிவு, விதிர்ப்பு, துளக்கம், துயர்தல், தும்மல், சோர்தல், வேர்த்தல், வெருவுதல், விம்முதல், விரும் புதல், ஒப்பிலாமை உருகுதல், மயங்குதல், மூரி, உயிர்ப்பு, மூர்ச்சனை, முறுவல், காரிகை கடத்தல், கழிகண்ணோட்டம், இருந்துழி இராமை, இராகம் இகழ்தல், வருந்திக் காட்டுதல், வாய்நனி உறுதல், சிந்தனை கூர்தல், சேர்துயிலின்மை, கண்டது மறுத்தல், காட்சி விரும்பல், உண்டி விரும்பாமை, உரைத்தது மறுத்தல், கண்ணீர் வழிதல், கனவு நனி காண்டல் - என்பனவாக முப்பத்திரண்டு துறைகளாம். (‘அகமெய்ப் பாடு’ என்பது அகப்பொருளினுக்கு உரை இருபத்தேழனுள் ஒன்றாம். கா. 90) (வீ. சோ. 96. உரை மேற்.) அச்சக்குறிப்பு நான்கு - அச்சத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி, மனத்தில் விளையும் பொருளாவது அச்சம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என்னும் நான்கு பகுதி பற்றியும் அச்சம் பிறக்கும் (தொ. பொ. 256 பேரா.) அச்சம் எப்பொழுதும் பிறிது பொருள் பற்றியே வரும். (பேரா.) ‘என்னைப் பார்த்தால் அச்சமாக உள்ளது’ என்ற கூற்றில் உடலையும், உயிரையும் வேறாகக் கருதி, உடலைக் கண்டு அவ்வுடலகத்துள்ள உயிர் அஞ்சுவதாகக் கோடல் வேண்டும். இந்நான்கு குறிப்பேயன்றிப் புலவி முதலியன பொருளாகவும் அச்சம் பிறக்கும். வீரசோழியவுரையுள், அச்சக்குறிப்பு, மாற்றலர் விலங்கு மன்னவர் சோரர் என்னும் நான்கு பொருள் பற்றியும் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது. (அச்சுப்பிழை திருத்தப்பட்டுள்ளது) இச் சொற்கள், அணங்கு விலங்கு தம்இறை கள்வர் என்பவற்றையே குறிப்பன. (வீ. சோ. 96 உரை. மேற்.) அச்சச்சுவைக்குப் பொருளாவன - கூரிய பற்களையுடைய சிங்கம், வேங்கைப்புலி, முள் போன்ற விடம் பில்கும் பற்களையுடைய அரவு, கொடிய தீ, ஈன்றணிமை யுடைய பசு, மதம் பிடித்த யானை, ஒற்றைக்கால் பூதம், யமதூதர்கள், பிற கொடிய விலங்கு போல்வன. (தொ. பொ. 249. பேரா.) (வடநூலார் சுவைப்பொருளை விபாவம் என்ப) ‘அச்சத்தின் அகறல்’ - களவுக்காலத்தில் தலைவி தலைவன் இரவுக்குறிக்கு வரும் போது அவன் வரும் வழிகளில் உள்ள தீங்குகளை நினைத்து, அவற்றால் அவனுக்கு ஊறு நேருமோ என்று அஞ்சி, அவன் இரவுக்குறிக்கு வாராத வகை அவனை நீக்குதற்கு எழுந்த மெய்ப்பாடு இது. (தொ. பொ. 271. பேரா.) இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகும் என்னும் அலர் அச்சத்தால் தலைவனுடைய கூட்டத்தின் அகன்று ஒழுகுதல். (தொ. பொ. 267 இள.) இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக்காதல் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. பாரதி.) இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (பேரா. 267. இள.) ‘தலைவற்கு வரும் தொழிலால் ஊறு நேருமோ? ‘எனத் தலைவி அஞ்சிக் குறியிடத்துச் செல்லாது சேயளாய் ஒழுகுதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமைவது. (தொ. மெய்ப். 23. ச.பால.) அச்சம் - தெய்வம், விலங்குகள், கள்வர், தமக்குத் தெய்வம் போன்ற தந்தை தாய் அரசன் போன்ற காரணங்களால் தம் உயிர்க்கும் பொருட்கும் துன்பம் நேருமோ என நடுங்கிக் கலங்குதல் ஆகிய சுவையுணர்வு. (நாடக. 53.) அசைவு - இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. அசைவு - தளர்ச்சி ; அது தன் நிலையில் தாழ்தல். (தொல்.மெய்ப். 5 இள.) எ-டு : ‘பொருளும் மனஎழுச்சியும் குறைந்து போதல், சாபம் எய்துதல், பற்றுக்கோடாவாரை இழந்து கலங்குதல், கயவர்களால் மனம் நோவத் துன்புறுத்தப்படுதல், காவல் இன்றிக் கலக்கமொடு திரிதல்,’ என்பன (செயிற்றியம்). அசைவு - பண்டைநிலை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். மடலேறப் போகும் தலைவன், தன் தலைவி மின்னலைப் போலத் தோன்றித் தன் ஒளியையும் வடிவத்தையும் அவனுக்குக் காட்டி அவன் மனத்தைக் கவர்ந்ததால், தான் உறக்கமின்றி வருந்துகின்ற நிலையினைக் கூறுதல் (கலி. 139) தன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை. மகளிர் மனத்தைப் பிணிக்குமாறு இளமை அழகொடு கூடியிருந்தவன் இப்போது தவம் செய்வோனாகி, நீர்பலகால் மூழ்கித் தலைமயிர் செந்நிறச் சடையாக, உணவுக்காகத் தாளிச்செடியின் இலைகளைக் கொய்கிறான் - என்பதனைப் பார்த்த மக்கள் வருந்துதல், பிறன்கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை. (புறநா. 252) (தொல்.பொ.253. பேரா.) அடக்கம் - அடக்கம் என்பது மனம்மொழிமெய்யின் அடங்குதல். அது பணிந்த மொழியும் தணிந்த நடையும், உடையைக் காற்றில் பறக்காமல் ஒதுக்கிக் கொள்ளுதலும், வாயைக் கையால் பொத்திக்கொண்டு பேசுதலும் முதலாயின. ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்’ (குறள். 126) ‘யாகாவா ராயினும் நாகாக்க’ (குறள். 127) ‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்’ (குறள். 124) என்றாற் போல்வன. (தொ. பொ.256. இள.) அடக்கம் என்பது உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை பணிந்த மொழியும், தணிந்த நடையும் தானை மடக்கலும், வாய் புதைத்தலும் போல்வன. (தொ. பொ. 260 பேரா.) இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. அடக்கவுணர்ச்சி மெய்ப்பாடாகும். (247 குழ.) அடக்கமாவது தன்னறிவு அடங்கி ஒடுங்கும் நிலை. உயர்ந்தோர்முன் அடங்கி ஒழுகுவது தேசாசாரம் அல்லது மெய்ப்பாடு ஆகாது. இது வடநூலுள் ‘நிர்வேதம்’ எனப்படும். (தமிழ் வரலாறு. பக். 285.) அணங்கு - அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் ஒன்று. அணங்கு - பேயும், பூதமும், பாம்பும், பதினெண் தேவ கணங்களும், நரகத்துத் தலைவர்களும், துன்புறுத்தும் பிணந் தின்னும் பெண்டிர் முதலாயினோரும், இடியோசை முதலி யனவும் ஆம். எ-டு : ‘யானை தாக்க வரினும், பாம்பு தம்மை நோக்கி வரினும், வானத்தே இடி இரவில் அமைதியான நேரத்தே இடிக்கத்தொடங்கினும் கருக்கொண்ட மகளிர் நடுங்குதல், அணங்கு பொருளான அச்சத்தினாலேயாம்.’ (பெரும் : 134 - 136) (தொ. மெய்ப். 8 பேரா.) காட்சியளவில் காரணம் கூறமுடியாத இடத்துக் கார- ணத்தைக் கடவுள்மேல் ஏற்றிக் கூறுவது உலகியல். அம் முறையில் மலையில் உறையும் தெய்வங்கள் தீண்டி வருத்தும் என்ற நம்பிக்கையால், அணங்கு பொருளாக அச்சம் பிறக்கும். (மெய். 8 பாரதி) அணிந்தவை திருத்தல் - தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மன நெகிழ் வான் உடை நெகிழ, அதனைத் தலைவி கையால் தடுத்துக் கடிசூத்திரம் (-அரைஞாண்) முதலாயினவற்றை அவ்வுடைக் குப் பாதுகாப்பாக மேலே இறுக்கி அணிதல். (தொ. பொ. 263 பேரா.) அரைஞாண் தோள்ஆடை முதலியவற்றை நெகிழ்ச்சி போற்றி இறுக்கி அணிதல் என்றவாறு. இது மூன்றாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (259) களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இது மூன்றாம் கூற்றின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். அணிந்தன களைஇ ஆடை பெயர்த்துடுத்தல் - தலைவன் பிரியப்போவதைக் குறிப்பான் அறிந்த தலைவி, தன் மங்கலஅணி நீங்கலான அணிகலன்களையும் பட்டாடையை யும் நீக்கி எளிய உடை உடுத்து அவன்முன் தோன்றுதல். இது காம நுகர்ச்சியிடத்து வேட்கையான் செய்யும் குறிப் பான செயல்களுள் ஒன்று. இஃது அகத்திணை உரை இருபத்தேழனுள் குறிப்பு என்பதன் பாற்படும். (வீ. சோ. 90) (வீ. சோ. 96 உரை மேற்.) அபிநயம் - அஃதாவது மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் அங்கச் செய்கை. ‘மகளிர் தங்கள் அபிநயம்’ (இரகு. தசரதன் சா. 30) (டு) அரற்று - அரற்றாவது உறக்கத்தில் தன்னை மறந்து பிதற்றல். அது சாதாரண நிலையிற் பேசும் ஏனைய சொற்களினின்று வேறு படுதலின் அரற்று என ஒரு மெய்ப்பாடாயிற்று. அரற்று என்பது ஒரு பொருளைப் பலகால் கூறுதல். அஃது அப்பொருளின்மேலுள்ள காதலால் கூறலின், அதுவும் ஒரு மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.) அரற்று என்பது அழுகையைப் போலாது, தனக்குள்ள குறையைப் பல சொல் வாயிலாகக் கூறிப் புலம்புதல். அது பரணியில் காளிதேவியிடம் பேய்கள் தம் பசிக்கொடுமை பற்றி முறையிடுவது போல வழக்கிலுள்ளோர் கூறுவன. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (தொ. பொ. 260 பேரா.) இதனை வடநூலார் ‘க்லானி’ என்பர். அருள் - தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று. பிறர் வருத்தத்துக்குப் பரியும் கருணையே அருளாகும். (தொ. பொ. 90 இள. உரை) எல்லா உயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருள் உடையராய் இருத்தல். அதுவும் காமத்துக்கு இன்றியமையாததோர் உறுப்பு. (273 பேரா. உரை) அருள் - பிறர் வருத்தம் பொறாப் பரிவுடைமை. (தொ. மெய்ப். 25 பாரதி) பொருள்முற்றி மீளும் தலைவன், தன் தேர்மணி ஒலி இணை யாக இருக்கும் வண்டுகளை அஞ்சுவித்துப் பிரித்துவிடும் என்று கருதி மணிகளின் நாக்களைக் கட்டிவிட்டு ஒலியின்றி வந்தான் (அகநா. 4) என்பது அருளுடைமை. அருள் மிக உடைமை - தலைமகள்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. அஃது இரவுக்குறிக்கு வந்து மீண்ட தலைவன் இடையூறின்றித் தன்னூர் மீண்டு சென்றானோ என்று கவலை கூர்தல் (அகநா. 88) போல்வன. (தொ. பொ. 268 இள.) தலைவி களவுக்காலத்துப் போலத் துன்பம் மிகுதலின்றி அருள் மிகத் தோன்றிய நெஞ்சினளாய்த் தன் கணவர் ‘நின்ற சொல்லர், நீடுதோன்று இனியர் என்றும் என்தோள் பிரிபு அறியலரே’ (நற். 1) என்றாற் போலக் கருதி மகிழ்தல் (272. பேரா.) கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. முன்பு களவில் தலைவன் அருளை வேண்டிநின்ற தலைவி, கற்பில் தான், கணவனை அவன் செய்த தவறுகளையும் புறக்கணித்து அருளொடு பேணும் பெற்றி.(மெய்ப். 24 பாரதி) அருளல் - அஃதாவது எல்லா உயிர்க்கும் அளிசெய்தல். ‘அரிதாய அற னெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி. 11) என்றாற் போல வருவது. (அருளியோர் - நம்மால் அருள் செய்யத் தக்கவர்) (தொ. பொ. இள. 256) மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளுதல். கருணை அழுகை யின்பாற்படும் ஆதலின், அருள் கருணையின் வேறாகும். (260 பேரா.) இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப் பாடாயிற்று. துணைமெய்ப்பாடு 32இல் இதுவும் ஒன்று. இதனை அருளால் விளையும் துக்கமாகிய ‘விஷாதம்’ என்பர். மக்கள் முதலிய சுற்றத்தார்துயர் கண்டு வருந்தி அதனைப் போக்க முயலுதல்; அவ்வருத்தத்தால் பிறந்த வேறுபாடு இங்கு மெய்ப்பாடாகும். (247 குழ.) அல்குல் தைவரல் - தலைவியைத் தலைவன் தீண்டியவழித் தலைவி மனம் நெகிழ்தலின் அதன் செயலாகத் தலைமுடி அவிழ, காதணி ஒன்று கழல, வளையல்கள் நெகிழ, உடையும் சிறிது நெகிழ, அதனைப் பலகாலும் இறுக்கி உடுத்து உடைநெகிழாதவாறு தன்கையால் அதனைப் பாதுகாத்துக் கொள்ளுதல். வயிற்றின் அடிப்பகுதியில் உடுக்கப்பட்ட ஆடை நெகிழாத வாறு கைகளால் போற்றிக் கொள்ளுதல். இது மூன்றாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 259) களவிற் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப் பாடுகளுள் இது மூன்றாம் பகுதியின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.) நெகிழ்ச்சி போற்றி உடுத்த ஆடை உடம்பொடு படியுமாறு இடைக்கீழ் அவ்வுடை உடம்பொடு பொருந்தும் இருப்புறுப் பைத் தடவி உடையின் மடிப்புக்கள் நன்கு படியச் செய்தல். (தொ. பொ. மெய்ப். 15 பாரதி) ‘அல்லல் நீத்த உவகை’ - துன்பம் நீங்கிய உவகை எனவே, பிறர் துன்பம் கண்டு வரும் உவகை உண்மை உவகை ஆகாது. பிறருக்குத் தீங்கு செய்து பெறும் மகிழ்ச்சி எதுவும் அழுகை இளிவரல் முதலிய உணர்வின்வழித்தாம் ஆகலின் அதனை விலக்கி, யாண்டும் எக்காலத்தும் துன்பம் தீர்ந்த இன்ப உவகையே உவகையாகும் என்பதனை ‘அல்லல் நீத்த உவகை’ என்பதனான் பெற வைத்தார். (தொ. பொ. 259 பேரா.) அலை - வெகுளி என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவதாகும். அலை - வைதலும் புடைத்தலும் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 254.) கோல்கொண்டு அலைத்தல் முதலாயின என்பர் பேராசிரியர். (258) புலியால் துன்புறுத்தப்பட்ட யானை புலியொடு பொருது வென்ற பின்னும் அப்போரிடுதலை நினைத்துக் கோபம் கொண்டமை போல, அதிகமான் தன்னூர் வந்து தனக்குப் பிறந்த புதல்வனைக் கண்டபோதும் தான் பகைவருடன் போரிட்ட செயலை நினைத்த கோபம் மாறாமல் கண் சிவந்து காணப்பட்டான் என்பது இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 100) அவலம் (1) - பிறரால் இகழப்பட்டு எளியவனாகும் இளிவும், தந்தை தாய் சுற்றத்தார் போல்வாரை இழந்து வருந்தும் இழவும், பண்டை நல்ல நிலைகெட்டு வருந்தும் அசைவும், வறுமையும் என்னும் இவை காரணமாகத் துயரம் உண்டானபோது, விம்முதலும் ஏங்குதலும், புலம்பி அரற்றுதலும், கண்ணீர்விட்டு அழுத லும், மயங்கி விழுதலும் அவலச் சுவை என்பர். தலைவனைப் பிரிந்து இரங்கும் தலைவியின் துயர் அவலம் ஆகாது. (நாடக. 51, 52) அவலம் (2) - அவலமாவது சோகம். இனிய சுற்றமும் பொருளும் இழந்தத னால் வரும் உள்ளத்தின் உளைவு அவலம் எனப்படும். இஃது அவலச்சுவையின் நிலைக்கருத்து. (நாடக. 54) அவன்தமர் உவத்தல் - தலைவி தலைவன் சுற்றத்தையும், அவன் நாடு மலை ஊர் இவற்றின் தொடர்புடைய உயர்திணை அஃறிணைப் பொருள்களையும் தனிப்பட்ட முறையில் மகிழ்வொடு விரும்புதல். தலைவன்புதல்வனை வழிமுறைத்தாய் கண்டு மகிழ்ந்து வரவேற்றலும் (கலி. 82), தெருவில் செல்லும் பாணன் தலைவ னது ஊரைச் சார்ந்தவன் என்பதனால் தலைவி அவனிடத்தே தனிப்பட்ட கருணை காட்டுதலும், தலைவனது மலையி னின்று அடித்து வரப்பட்ட காந்தள் செடியின் கிழங்கைத் தன்மனைத் தோட்டத்தே வைத்து வளர்த்தலும் (குறுந். 34) போல்வன அவன்தமர் உவத்தலாம். இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266) அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து, களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந் துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாம். (270 பேரா.) அவன் புணர்வு மறுத்தல் - தலைவி அறத்தொடு நின்றபின் தமரை அஞ்சிப் பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்த ‘திளைப்பு வினை மறுத்தல்’ என்ற மெய்ப்பாடு போலன்றி, வரைதல் வேட்கையால் இரவுக்குறி யையும் பகற்குறியையும் மறுத்தல். இங்ஙனம் மறுக்கவே, களவொழுக்கம் தவிர்த்துத் தலைவன் தலைவியை விரைவில் மணப்பான் என்பது பயன். (தொ. பொ. 271. பேரா.) தலைவன் புணர்ச்சிக்கு வாராதவழி, முன்பு போல அன்றி, தலைவிதானும் மனம் வருந்தாது நிற்கும் நிலை என்பர் இளம்பூரணர் (பொ. 267) இஃது ஒளியாது ஒழியாது உடனுறையும் கற்புக் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் பாரதி (271). இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர் (267). அழிவில்கூட்ட மெய்ப்பாடுகள் - அழிவில் கூட்டம் - பின் கெடுதல் இல்லாத கூட்டம். திருமணம் ஆகாமல் நிகழ்த்தும் களவுக்கூட்டம், இடையூறுக ளான் அழிவுறுமோ என்று அஞ்சிக் கூடும் கூட்டம் ஆதலின், வரைந்து எய்தும் கூட்டம் எவ்வித இடையூறுமின்றிக் கூடும் கூட்டம் என்பது புலப்பட, ‘அழிவில் கூட்டம்’ எனப்பட்டது. தான் வரைந்தெய்தும் கூட்டத்தை விரும்பும் வேட்கை புலப் படத் தலைவியின்பால் நிகழும் மெய்ப்பாடுகள் அழிவில் கூட்ட மெய்ப்பாடுகள் எனப்பட்டன. அவை முட்டுவயின் கழறல், முனிவு மெய் நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பனவாம். இவற்றை வரைதல்வேட்கையைப் புலப்படுத்தும் மெய்ப்பாடுகள் என்றும் கூறலாம். (தொ. பொ. 271 பேரா.) அழுகைக் குறிப்பு நான்கு - அழுகை - அழுகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழித் துயரத்தொடு மனச்சோர்வைத் தருவது. இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கு குறிப்புப் பற்றியும் அழுகை நிகழும். இவை, தன்னைப் பிறர் இகழ்ந்தவழி வருந்துதல், ஒருவர் மற்றவரால் இகழப்பட்டதைத் தான் கண்டு வருந்துதல், அரிய பொருள்களைத் தான் இழந்து வருந்துதல், பிறர் இழந்ததைக் கண்டு தான் வருந்துதல், தன்னிலையில் தாழ்ந்த தளர்ச்சி யால் தான் வருந்துதல், பிறர்தளர்ச்சி கண்டு தான் வருந்துதல், தன் நல்குரவு கண்டு தான் வருந்துதல், பிறர் துயர்உறும் நல்குரவு கண்டு தான் வருந்துதல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறர்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய. இவையேயன்றி வீரம்பற்றி உவகைக் கண்ணீர் வடித்தலும் அழுகையின்பாற்படும். (தொ. பொ. 253 பேரா.) தன்கண் தோன்றிய துயரம் பற்றிய சுவையை அழுகை எனவும், பிறன்கண் தோன்றிய துயரம் பற்றித் தன்கண் நிகழும் சுவையைக் கருணை அல்லது இரக்கம் எனவும் கொண்டு சுவையை ஒன்பது கூறாகக் கருதலும் உண்டு. (251 பேரா.) வருத்தம் இகழ்வு வலியின்மை வறுமை என்ற நான்கனையும் இரக்கத்திற்குரிய குறிப்புக்களாக வீரசோழியம் கூறும். (வீ.சோ. 96 உரை மேற்.) அழுகையைத் தோற்றுவிப்பன - தன் செல்வ நிலைமையையும் இழந்து துணைவர்களையும் பிரிதல், மேம்பாடு பொருந்திய தன் தகுதி நீங்குதல், சிறை யிலடைக்கப்பட்டுச் செயலற்றிருத்தல், தேவையான பொருள் களும் இன்றி வாடியிருத்தல், சாபம் எய்துதல், சேர்ந்தவர் களுக்குத் தவறிழைத்து வருந்துதல், மனத்தை அடக்க இயலாது கலக்கமொடு தடுமாறுதல், கடகம் அணிந்த கையில் வெறும் மஞ்சட் கயிற்றோடிருத்தல், முடி சூடிய தலையால் பிறருடைய அடிகளில் வீழ்ந்து வணங்குதல், களிறும் பரியும் ஊர்ந்தவன் கால்கள் விலங்கிடப்பட்டு வருந்துதல், பொன் னணி அணிந்த மார்பு புழுதிபடத் தரையிற் கிடத்தல், கயவர் களால் மனம் நோவுமாறு துன்புறுத்தப்படுதல், கொலைக் களம் போர்முனை இவற்றால் வருந்துதல், பிறர் துன்புற்று அழும் அழுகுரல் கேட்டல், பிறர் தம் குறைகளைக் கூறி வருந்தும் புலம்பலைக் கேட்டல் - ஆகிய செய்திகள் அவலத் தைத் தோற்றுவிப்பனவாம் (செயிற்றியம்). (தொ.பொ. 249 இள.) அறன் அழித்து உரைத்தல் (1) - பிரிவிடைத் தலைவி அறத்தினை அழித்துக் கூறுதல். பிரிந்த தலைவன் கூறிய பருவம் வந்தவழியும் அவனிடமிருந்து தூதுகூட வரக் காணாது வருந்தும் தலைவி, தன்னை ஆற்று விக்க வந்த தோழியிடம், “முன்பெல்லாம் ‘நாமிருவரும் வேறு அல்லம்’ என்று சொல்லிய தலைவர் இப்பொழுது என்னி டம் சிறிதும் அன்பில்லாது பிரிந்து கவலையின்றி இருக்கும் நிலையினை எண்ணி என்னுயிர் கழிகின்றது” (குறள். 1209) என்று கூறி, தலைவன் வருந்துணையும் ஆற்றி இல்லின்கண் இருந்து நல்லறம் செய்யும் மகளிர்க்கு உரிய அறத்தினை அழித்து உயிர் போவதாகக் குறிப்பிடுவது இம்மெய்ப்பாடு. இது பெருந்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளில் ஒன்று. (தொ. பொ. 266 இள.) அறன் அழித்து உரைத்தல் (2) - களவினும் கற்பினும் பிரிவிடைத் தலைவி காதல் மிகுதியால் அறன் அழிய வெறுப்பது போலத் தலைவனை ‘ஏதி லாளன் இவண்வரின் ....................................................................... எம்மும் தொடாஅல் என்குவெம் மன்னே!’ (குறுந். 191) எனவும்‘யாரும் இல்லை தானே கள்வன்’ (குறுந். 25) எனவும் ‘அளித்(து) அஞ்சல் என்றவர் நீத்ததால் அவர்க்கே தவறு’ (குறள். 1154) எனவும், ‘வேறல்லம் என்பார், அளியிலர்’ (குறள். 1209) எனவும் கூறுவனவும், தாயை ‘அறனில் யாய்’ (ஐங். 385) எனவும் ‘அறனில் அன்னை’ (குறுந். 262) எனவும் கூறுவன வும், அறன் அழிவது போலக் கூறினும், காதன்மையால் எழுதலான் மெய்யாக அறனழிக்கும் நோக்குடையன ஆகாதனவாகக் கூறுதல். (தொ. பொ. மெய்ப். 22 பாரதி) அறன் அழித்துரைத்தல் (3) - அறனழித்துரைத்தல் : பிரிவுத் துன்பத்தால் உளம் நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்தில் அறமில்லை என்று வெறுத்துப் பேசுதல். (தொ. மெய்ப். 22 ச.பால.) அறன் அளித்து உரைத்தல் - பிரிவிடைத் தலைவி தலைவன்வரவு குறித்து நினைத் திருக்கையில், பல்லி நல்ல இடத்திலிருந்து நன்னிமித்தமாக ஒலித்தல் முதலிய சகுனம் கண்டு, தனக்கு அச்சகுனங்கள் வாயிலாக அருள் செய்யும் தருமதேவதையை வழிபட்டுப் பரவுதல். அறனளித்து உரைத்தல் - அறக்கிழவனை அன்பு செய்து வழிபாடு கூறல். (தொ. பொ. 270 பேரா.) அறன் - ஞாயிறு திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவும் ஆம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டுமெனப் பல்லியைச் சொல்லும்படியும் காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலும் ஆம். அளித்துரைத்தல் - அன்புடன் பரவுதல். (பொ. 257 குழ.) இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும். (பேரா.) அறிமடம் - ஒரு பொருளையே பற்றி நிற்கும் அறிவுடையராம் தன்மை. விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமடம் என்றது, விளை யாட்டைப் பற்றியே நிற்கும் அறிவுடையளாயிருத்தலை. (தொ. பொ. 264 பேரா.) அன்பு - அன்பு என்பது பயின்றார்மாட்டுச் செல்லும் காதல். அஃது உடம்பிலுள்ள ஏனைய புறத்துறுப்புக்கள் போலாது, உடம் பின் அகத்து உறுப்பாய் நல்வாழ்விற்கு இன்றியமையாதது. (தொ. பொ. 256 இள.) அன்பு என்பது அருளுக்கு அடிப்படையாய் மனத்தின்கண் நிகழும் நேயம். அன்புடையார்க்குப் பிறரிடம் துன்பம் கண்ட வழிக் கண்ணீர் சொரிதலினால் அவரிடத்துள்ள அன்பு டைமை வெளிப்படும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப் படுத்தலால் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 260 பேரா.) இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் சபலதை என்ப. குடத்துள் விளக்கும் உறையினுள் வாளும் போல அன்பு காட்டலாகாப் பொருள். அன்புடையார்கண் நிகழும் சாவின் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கி னிது மொழிதல், புணர்வுநனி வேட்டல், பிரிவு நனி இரங்கல் முதலிய செயல்களைக் கொண்டே அவர்மாட்டு அன்பு உள்ளது என்பதனை அறிந்துகொள்ளல் வேண்டும். (இறை. அ. 1 உரை) ‘அன்பு தொக நிற்றல்’ - தலைவன் தவறு செய்தானாகத் தோழி கூறியவழியும், தலைவி, “கொடியன் ஆயினும் ஆக, அவனே தோழிஎன் உயிர்கா வலனே” (சிற்றெட்டகம்) என்றாற் போலத் தலைவ னிடம் தான் கொண்டுள்ள அன்பு புலப்பட இருத்தல். ‘அன்புமிக’ என்பதும் பாடம். (தொ. பொ. 268 இள.) விரிந்த அன்பெல்லாம் ஒருங்கு கூடிநிற்றல். அஃதாவது களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் கற்புக்காலத்துத் தலைவியிடம் இல்லறம் பேணிப் புதல்வற்பயந்து விருந்தோம் புதற்கண் பெருகிய விருப்பினாலே ஒருங்கு தொக நிற்றல். (தொ. பொ. 272 பேரா.) தலைவன் செய்த கொடுமைகளையும் தவறுகளையும் மனம் கொள்ளாமல் அவன்பால் காதல் குறையாது ஒழுகுதல். (தொ. மெய்ப். 24 பாரதி) இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று. அன்பு தொக நிற்றல் : பொருள் விளக்கம் - புரையறம் தெளிந்த அறிவினளாயினும், புலவியானது புணர்ச்சி வகையைத் தோற்றுவித்தலின், தலைவன்மாட்டுச் செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல். இதுவும் உவகைக்குப் பொருள். (தொ. மெய்ப். 24 ச. பால.) ஆ ஆக்கம் - இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது. (தொ. மெய். 7) ஆக்கமாவது ஒன்றன் வளர்ச்சி கண்டு வியத்தல். எ-டு : நன்னிலம் சார்பாகத் தோன்றும் மரம் முதலாயின தம் அளவின் மீறி வளர்ந்தவழி வியத்தலும், யாதொன்றும் இல்லாத வறியவன் செல்வனாயவழி அதற்குக் காரணம் உணராதான் வியத்தலும், இளையான் வீரம் கண்டு வியத்த லும், பிறவும் உலகியலில் வியக்கத் தகுவன கண்டு வியத்தலும் போல்வன. வினைமுடித்து மீண்ட தலைவன், தேரினைப் பாகன் விரை வில் செலுத்தி ஊர் அடைந்தமை கண்டு வியத்தல் போல்வன. (அகநா. 384 இள.) ஆக்கம் - ஒன்று ஒன்றாய்த் திரிதல் ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட அளவில் தம் நோய் நீங்கி நரிவெரூஉத்தலையார் தம் பழைய உடம்பு பெற்றமை தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பாகும். சிறிய ஆலம்விதை பெரிய மரமாதல் (நாலடி. 38) பிறபொருட்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. (பேரா.) ஆக்கம் - அறிவுடை மக்கள் சமைப்பாலாவது. ஆக்க மருட்கை செயற்கையில் தோன்றும் அரும்பொருள்கள் விளைக்கும் வியப்பாகும். வானஊர்தி, பேசும்படம், வானொலி போல்வன ஆக்க மருட்கை. (பாரதி.) ‘ஆங்கு நெஞ்சு அழிதல்’ தலைவி அறத்தினை அழித்துக் கூறுமிடத்து, “என் நெஞ்சம் தலைவன் வாராவிடில் ‘வரவில்லையே’ என்றும், வந்தால் ‘பிரிந்துவிடுவானே’ என்றும் எப்பொழுதும் துன்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.” (குறள் 1295) என்றாற் போலத் தன்வாழ்க்கை துன்பமாகிவிட்டமை நினைந்து மனம் நோதல். (பொ. 266 இள.) களவிலும் கற்பிலும் பிரிவிடைத் தெய்வத்தை வழிபட்டு உரைக்குங்கால், “ஞாயிறே! என்னை வருந்துமாறு விடுத்துப் பிரிந்த என் தலைவனைத் துன்புறுத்துவது உன் கருத்தாயின், அவனோடு சேர்த்து என்னையும் துன்புறுத்தி அழித்துவிடு” எனத் தலைவி தன் நிலை கலங்கிப் பேசுதல். (கலி. 143) (தொ. பொ. 270 பேரா.) சொல்லளவில் அறன் அழிவது போலக் கூறிய தலைவி, பின் அங்ஙனம் கூறியதற்கு மனம் வருந்தி, “தோழி! நமக்கு நம்தலைவர் நம்தாயும் தந்தையும் போல்வார். நம் உயிர் போவதாயினும் அவரைக் குறை கூறுதல் கூடாது.” (குறுந். 93) என்றாற் போலக் கூறுதல். (மெய்ப். 22. பாரதி) இது பெருந்திணை மெய்ப்பாடு என்பது இளம்பூரணர் கருத்து. களவிற்கும் கற்பிற்கும் பொதுவாகப் பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து. ஆசியம் - ஹாஸ்யம் என்னும் நகைச்சுவை. (டு) ஆண்டு - தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று. ஆண்டு என்பது ஒருவரின் ஒருவர் மூத்தவர் ஆகாமல் ஒத்த பருவத்தர் ஆதல். அது பதினாறு பிராயத்தானும் பன்னி ரண்டு பிராயத்தாளும் ஆதல். (தொ. பொ. 90 இள. உரை)) யாண்டு என்பது ஒத்தவாறு என்னையெனில், பன்னிரண்டு ஆண்டும் பதினாறு ஆண்டுமே பெண்மையும், ஆண்மையும் பிறக்கும் பருவம் என்பது வேத முடிவு ஆதலின், அதுவும் ‘ஒப்பு’ எனவேபடும். (தொ. பொ. 273 பேரா.) ஆண்டு - காமக்குறிப்புத் தோன்றிய பருவம். பொ.260 குழ. ‘என்தோள் எழுதிய தொய்யிலும்’ (கலி. 18) என்பதனால், தலைவி தொய்யில் எழுதிக்கொள்ளும் பருவத் தாள் எனவும் தலைவன் அவள்தோளில் தொய்யில் எழுதும் பருவத்தான் எனவும் இளமைச்செவ்வி ஒத்தவாறு. (தொ. பொ. நச். உரை) ஆண்மை - தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று. ஆண்மையாவது ஆள்வினையுடைமையும் வலி பெயராமை யும் ஆம். தலைவிமாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிருக்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். (தொ. பொ. 90 இள. உரை) ஆண்மை - ஆள்வினை; அஃது ஆண்பாற்கு உரியது. குடி யாண்மை என்புழி, ஆண்மை இருபாலார்க்கும் உரித்து. (273 பேரா.) ஆண்மை - ஆளும் திறம். இது காதலர்க்கு இன்றியமையா ஒப்புவகையுள் ஒன்று எனப்படுதலின், இருபாலார்க்கும் பொது. மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆளும் தொழில் உண்டென்பது தெளியப்படும். (தொ. பொ. மெய்ப். 25 பாரதி) தலைவன் ஊக்கத்தொடு பொருள் தேடப் பிரிய அவன் வருமளவும் தலைவி இல்லிருந்து நல்லறம் செய்தல் இருவ ருக்கு முரிய ஆண்மைச் செயல்களாம். (அகநா. 93) ஆண்மையாவது ஆளுந்தன்மை. அஃது ‘ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்’ (குறுந். 43) என இருபாலையும் உணர்த்திற்று. எனவே, ஆண்மை தலைவற்கும் தலைவிக்கும் ஒப்ப உரித்து. (தொ. சொ. 57 நச்.) ஆராய்ச்சி - ஆராய்ச்சி என்பது ஒருபொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென ஆராய்தல். ஆராய்தல் எனினும், தெரிதல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும். ‘நன்மையும் தீமையும் நாடி’ (குறள். 511) ‘ஆயும் அறிவினர்’ (குறள். 918) என ‘ஆராய்தல்’ தோன்றியவாறு. (தொ. பொ. 256 இள.) ஆராய்ச்சி என்பது ஒரு பொருளை நன்றென்றும் தீதென்றும் ஆராய்தல். அவ்வாராயும் உள்ளக்குறிப்புப் புறத்தே புலனா வது மெய்ப்பாடாம். இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண் டனுள் ஒன்று. (260 பேரா.) ஆறாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் - காட்சி, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப் பட்ட பத்து அவத்தையுள் ஆறாம் அவத்தையாகும் நாணு வரை இறத்தல் என்பதன்கண் தலைமகட்கு நிகழும் மெய்ப் பாடுகள் புறம்செயச் சிதைதல், புலம்பித்தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்னும் நான்குமாம். (தொ. பொ. 262 இள.) இவற்றைக் களவில் புணர்ச்சிக்குப் பின் தலைவிபால் நிகழும் மூன்று பகுதியவான மெய்ப்பாடுகளுள் மூன்றாம் பகுதிக்கு உரியனவும், பொதுவாகக் களவின் ஆறாம் பகுதிக்கு உரியன வும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (266 பேரா., 253 குழ.) இவை நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். (மெய்ப். 18) இ இசைமை - இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. இசைமையாவது இன்பமும் பொருளும் மிகுதியாகக் கிட்டுவன ஆயினும், பழியைத் தரும் செயல்களைச் செய்யாமை. ‘கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ (அகநா. 112 : 11, 12) என இவ்வெஃகாமைக்கு ஏதுவாகிய பெருமிதக் குறிப்பு இவ்வடிகளில் இசைமை எனப்பட்டமை காண்க. (தொ. பொ. 257 பேரா.) இடந்தலைப்பாட்டிற்கு உதவும் துணை மெய்ப்பாடுகள் - கைம்மிகல் முதல் கனவு ஈறாகிய எட்டும் இடந்தலைப் பாட்டுக்கு உதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோம சுந்தர பாரதியார் கருத்து. கைம்மிகல் : அடங்காத காதல் பெருக்கு. ‘காதல் கைம்மிக’ ‘காதல் கைம்மிகல்’ (பொ. 115 நச், 271 பேரா.) என்பன தொல்காப்பியம். நலிதல் : மெலிவு : அஃதாவது வலிஅழிவு. சூழ்ச்சி : நேராக் கூட்டம் (-முன்பு இடையீடுபட்ட களவுப் புணர்ச்சி) நிகழ, வழி ஆராய்தல். வாழ்த்தல் : காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்தல். ‘வாழி என் நெஞ்சே’ (குறள் 1242) ‘நீ வாழி பொழுது’ (குறள் 1221) ‘வாழி அனிச்சமே’ (குறள் 1111) ‘காதலை வாழி மதி’ (குறள் 1118) ‘புன்கண்ணை வாழி மருள்மாலை’ (குறள் 1222) என்பன போல வருவன காண்க. நாணுதல் : வெள்குதல் ‘காமமும் நாணும்’ (குறள் 1163) ‘காண வந்து நாணப் பெயரும்’ (குறுந். 212) என்பன காண்க. துஞ்சல் : காதல் கனவுற உறங்கல் ‘கயலுண்கண் யான்இரப்பத் துஞ்சின்’ (குறள் 1272) ‘துஞ்சுங்கால் தோள்மேல ராகி’ (குறள் 1218) அரற்று : வாய்விடல்; அஃதாவது உறக்கத்தில் தன்னை அறியாது மனத்துள்ள மறைவான கருத்தினை வெளியிடல். கனவு : தூக்கத்தில் தோன்றுவது; இதுவும் காதலின் கனிவினால் உண்டாவதாம். ‘இன்துயில் எடுப்புதி கனவே’ (குறுந். 147) எனத் தலைவன் கனாக் காண்டலும்; ‘கனவினான் என் எம்மைப் பீழிப்பது’ (குறள் 1217) எனத் தலைவி கனாக் காண்டலும் போல்வன. இவை எட்டும் இடந்தலைப்பாடு என்னும் இரண்டாம் காதல் நிலைக்குச் சிறப்பாக உரியனவாம். (தொ. பொ. மெய்ப். 12 பாரதி) இடுக்கண் - இடுக்கண் என்பது துன்புறுதல். கையாறு என்பது இன்பம் பெறாமையால் வரும் துன்பம். இடுக்கண் - துன்பமாயின ஒருவனை வந்தடைதல். ‘இடுக்கண் அடுக்கி வரினும்’ (குறள் 625) என்பதனால் துன்பம் பலவாகத் தொடர்ந்தும் ஒருவனை வந்தடைதல் பெறப்படும். (256. இள.) இடுக்கண் என்பது மலர்ந்த பார்வையின்றி மயங்கிய பார்வை யோடு இருக்குமாறு துன்புறுதலால் உள்ள, பரிதாபமான நிலை. துன்பம் தாக்கியதால் கண் இடுங்கியதால் இடுக்கண் எனப்பட்டது. இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.) கையாறு மனத்தின்கண் நிகழ்வது; இடுக்கண் உடம்பினும் மனத்தினும் சேர்ந்து நிகழ்வது. (தொ. பொ. இள) வடநூலார் இதனைச் ‘சிரமம்’ என்பர். இடுக்கண் - பெருநோக்கின்றிக் குறுகிய நோக்கத்தால் வரும் இரக்கம். (247 குழ.) இயற்கைப்புணர்ச்சிக்கு உதவும் துணைமெய்ப்பாடுகள் - உடைமை முதல் அன்பு ஈறாகிய எட்டும் இயற்கைப் புணர்ச் சிக்குதவும் துணை மெய்ப்பாடுகள் என்பது சோமசுந்தர பாரதியார் கருத்து. உடைமை : அன்பின் வழித்தாகும் உரிமை உணர்வு. தலைவன் தலைவி இருவரும் ஒருவர் மற்றவர்க்குப் பொரு ளாதல் காதலின் முதற்படி. இன்புறல் : ஒருவர் மற்றவர்க்கு உடைமையாகும் உரிமை யுணர்வால் விளையும் மகிழ்ச்சி. நடுவுநிலை : காதலும் கடமையும் ஒன்றோடொன்று மோது மாறு இடம் கொடுக்காத மனச்செம்மை; தன்னை மறக்கும் கற்புக் காதலின் உணர்வு இது. அருளல் : தவறு உணரா அன்பின் பெருக்கம். ‘காணுங்கால் காணேன் தவறாய’ (குறள் 1286) என்னும் மனநிலை. தன்மை : தான் அதுவாகும் இயல்பு; ‘நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்னும் மனமாட்சி (தொ. பொ. 100: 3 நச்.) அடக்கம் : தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யால் பணிதல். மறை பிறர் அறியாமல் காக்கும் நிறை எனினுமாம். வரைதல் : நாணத்தின் எல்லையைக்கடந்து முன் உவந்தன பலவற்றையும் வெறுத்து விலக்கும் மனநிலை. இது காதலின் எழுவது. அன்பு : அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ் வது. இவை எட்டும் காதலின் முதல் நிலையாம் இயற்கைப் புணர்ச்சியொடு தொடர்வன. (தொ. மெய்ப். 12 பாரதி) இரண்டாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் - காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்படும் பத்து அவத்தையுள், இரண்டாம் அவத்தையாகும் வேட் கைக்கண் தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணிதைவரல், உடை பெயர்த்துடுத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 258 இள.) இவற்றைக் களவில் புணர்ச்சி நிகழுமுன் தலைவிக்கு நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்குரிய மெய்ப்பாடுகள் என்பார் பேராசிரியர். (தொ. பொ. 262 பேரா.) இவை நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாம் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பர் பாரதியார். தொ.மெய்ப். 14 இராகம் இகழ்தல் - தலைவனிடம் உள்ள வேட்கை மிகுதியால் அவன் பிரிந்த விடத்துத் தலைவி தான் பண்டு விரும்பிய பொருள்களை யெல்லாம் இப்பொழுது வெறுத்தல்; பூவும் சாந்தும் அகிலும் ஆரமும் முதலாயின விரும்புதலைத் தவிர்தல். இந்நிலைக்குக் காரணம் தலைவியது உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தவர்க்கே புலனாம் ஆதலின் இந்நிலை அகமெய்ப் பாடுகள் 32இல் ஒன்று (கா. 90) (வீ. சோ. 96 உரை மேற்.) இருகையும் எடுத்தல் - தலைவன் தன்னைத் தீண்டியதால் தன்கண் ஏற்பட்ட மனநெகிழ்வைப் போக்கத் தலைவி மிகமுயன்றும் இயலாது போகவே, நிறையழிதலின், கைகள் தாமே தலைவனைத் தழுவ அமைவாக இருப்பனபோலத் தலைவி இருகைகளையும் முன்பக்கத்தே விரித்து அசைத்தல். தலைவனைத் தழுவத் தலைவி இருகைகளையும் விரித்து அசைத்தல். இது மூன்றாம் அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதிப்படும் 12 மெய்ப்பாடுகளுள் இது 3ஆம் பகுதி யின் இறுதி மெய்ப்பாடு என்பர் ஏனையோர். இம்மெய்ப்பாடு தோன்றிய பிறகு தலைவன் தலைவியரிடை இயற்கைப் புணர்ச்சி நிகழும். (தொ. பொ. 263 பேரா.) இருகையும் எடுத்தலாவது, தலைவன் தன்னைத் தழுவும் குறிப்பொடு நெருங்குமிடத்து, தலைவி நாணம் மீதூர்தலான் தனது முகத்தினை மறைத்துக்கொள்ளும் கருத்தொடு கைகளை முகம் நோக்கி எடுத்தல். களவியலுள் ‘இடையூறு கிளத்தல்’ என்னும் கிளவிக்கு உரியதாய் நிகழும் மெய்ப் பாட்டுப் பொருள் இஃதாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். இடைக்காலத்தார் இப்பொருளை ‘நாணிக் கண் புதைத்தல்’ என்ற துறையாகக் கூறுவர். (தொ. மெய்ப். 15 ச. பால) இருந்துழி இராமை - தலைவனிடத்துள்ள வேட்கைமிகவினால் அவனை இன்றி இல்லத்தில் எங்கிருத்தற்கும் அமைதியின்றி எந்த வோரிடத் தும் தொடர்ந்து அமர்ந்திராது அடிக்கடி இடம் பெயர்ந் திருத்தல். இந்நிலைக்குக் காரணம் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந் தார்க்கே புலனாவதாதலின், இஃது அகமெய்ப்பாடுகள் 32இல் ஒன்றாவது. (நா. 90) (வீ. சோ. 96 உரை. மேற்.) இருவகை நிலன்கள் - இருவகை நிலன்களாவன சுவைக்கப்படு பொருளும், அதனைச் சுவைக்கும் பொறிகளின் சுவையுணர்வும் ஆம். வேம்பு என்னும் சுவைக்கப்படுபொருளும், அதனைச் சுவைக்க வேண்டிய நா என்னும் பொறியும் தனித்தனி நின்றவழிக் கைப்புச் சுவை பிறவாது, இரண்டும் சேர்ந்தவழியே கைப்புச் சுவை பிறக்கும். அதுபோல, அச்சத்துக்கு முதலாகிய விலங்கும் அதனைக் காணும் கண்ணின் பார்வையும் தனித் தனி நின்றவழி அச்சச்சுவை பிறவாது, அவையிரண்டும் சேர்ந்தவழியே அச்சச்சுவை பிறக்கும் என்பது. சிலர் அனுபவிப்பவனுடைய அனுபவம் காண்பவர்க்கு எய்துதலே இருவகை நிலம் என்ப. வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பு உணர்வினை நாவுணர் வினால் பிறன் உணர முடியாது. ஆயின் “இவன் வேம்பு சுவைத்தவன்” என, அவன்முகத்தைப் பார்த்து அதன்கண் காணப்படும் மெய்ப்பாடுகளாலேயே அறிவான். அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய புலி முதலியன கண்டு அஞ்சி ஓடி வருகின்றவனை மற்றவன் கண்டவழி, “இவன் அஞ்சி வருகின் றான்” என அறிவதல்லது தான் புலியினைக் கண்டான் போல அச்சம் கொள்ளான். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணை செய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலின், சுவைப்போன் நிகழ்த்திய சுவையைக் கண்டு “இவன் சுவைத்தான்” என்று அறிந்தவன் தன் அறிவுத் தன்மையினால் அச்சுவையினைப் பெறான் ஆதலின், சுவைக் கப்படுபொருளும் அதனை நுகர்ந்த பொறியுணர்வுமே இருவகை நிலம் எனப்படும். (தொ. பொ. 249 பேரா.) இல்லது காய்தல் - தலைவன்பால் இல்லாத குறிப்பினை அவன்மாட்டு உளதாகக் கொண்டு தலைவி வெகுளுதல். தலைவன் சான்றோர்களையே கண்டு தங்கினான் ஆயினும், அவன் கூறியதை நம்பாமல் அவன் பரத்தையரிடம் சென்று தங்கினான் என்று (கலி. 93) தலைவி தலைவனிடம் இல்லாத ஒன்றை அவனிடம் உள்ளதாகக் கொண்டு வெறுத்தலைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு இது. கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் இதுவும் ஒன்று. (தொ. பொ. 272 பேரா.) இல்வலி யுறுத்தல் - இல்வலி - தன்பால் இல்லாத வலிமை. தலைவன் தலைவியைத் தீண்டியவழி ஏற்பட்ட மனநெகிழ்வால் தலைவியின் கூந்தல் அணிகலன்கள் ஆடை முதலியன நெகிழவும், தன்னிடம் இல்லாததொரு வலிமையை இருப்பதாகக் கொண்டு தலைவி ஆடை அணி முதலியவற்றை முன்போல் இருக்குமாறு ஏற்ப அமைத்துக் கொள்ள முயலுதல். இல்லாத வலிமையினைப் படைத்துக் கொண்டு செயற்படல் இற்பிறப்பால் வந்த வலிமை என்று பொருள் செய்வர் இளம்பூரணர். அது பொருந்தாது, இவ்வளவெல்லை சிதைய இடங்கொடுத்த இற்பிறப்பு இனிமேல் வந்து செய்யக் கூடியது ஒன்றுமில்லை யாதலின். (பேரா.) இது மூன்றாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர். இளம்பூரணர் (தொ. பொ. 259.) களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளுள் இது மூன்றாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். (தொ. பொ. 263 பேரா.) இல்வலியுறுத்தல் : பொருள் விளக்கம் - இல்வலியுறுத்தலாவது, தலைவன் தனது மெய்தொட்டுப் பயின்று முன்னிலையாக்கி இடம்பெற்றுத் தழுவ முற்பட் டுழி, பாலது ஆணையான் உள்ளம் அவன்வழிச் சேறலைத் தனது மடப்பத்தான் தகைத்தற்பொருட்டு, எதிலார் போலப் பொதுநோக்கு நோக்கித் தனது இற்பிறப்பின் மாண்பினைத் தலைவி வலியுறுத்தலாம். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். (தொ. மெய்ப். 15 ச. பால.) இழவு - இஃது அழுகை என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது. இழவு - உயிரானும் பொருளானும் இழத்தல். (தொ. பொ. 249 இள.) தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலானவற்றையும் இழத்தல். (53 பேரா.) எ-டு : ‘தன் நிலைமையையும் இழந்து துணைவர்களையும் நீங்குதல்; பிரிதல் துயரத்தால் நீங்காத அழுகுரலும் ஒலியும்.’ (249 இள.) கணவனை இழந்த தலைவி அவனுக்குப் பலிக்கொடை நேர்தற்குக் கண்ணீரே நீராக நிலத்தை மெழுகுதல் (புறநா. 249) தன்கண் தோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலம். தலைவன்பிரிவால் தலைவி வருந்த, அதனைப் பார்த்துத் தோழியும் வருந்துதல் (அகநா. 73) பிறன்கண் தோன்றிய இழவு பற்றிய அவலம். (253 பேரா.) இழிப்பு (1) - மூப்பும் பிணியும் துயரமும் காரணமாக வெறுப்பை யுண்டாக்கும் பொருளற்ற செயலும் மொழியும் இச்சுவை பயப்பன. இழிப்பு - இளிவரல் (நாடக. 50) இழிப்பு (2) - இழிப்பு - அருவருப்பு. பொருள்களிலும் நிகழ்ச்சிகளிலும் குற்றமும் கூச்சமும் விளைவிக்கும் இயல்புகளைக் காண்பதால் நேரும் அருவருப்பு. இஃது இழிப்பு என்னும் சுவையின் நிலைக்கருத்து. இழிப்பினை வடநூலார் குச்சை என்ப. அது ஜுகுப்ஸை எனவும்படும். (நாடக. 54) இழிப்பு அவிநயம் - இழிப்பு, இளிவரல், அருவருப்பு, பீபத்ஸம் என்பன ஒரு பொருட் கிளவி. கூச்சத்தால் சுருங்கி நெருங்கிய கண்களுடை மையும், பற்கள் வெளியே தெரிதலும், முகம் கூம்பி வேறுபட லும், கைகால்கள் செயலற்றுப் போதலும், உடற்சோர்வும் உரை குழறுதலும், இவை போன்ற பிறவும் இழிப்பிற்கான அவிநயங்கள். (நாடக. 249) இளமை - நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது. இளமை - தன் இளமையான் பிறரை நகுதலும், பிறர் இளமை கண்டு தான் நகுதலும் (தொ. பொ. 252 பேரா.) அறிவு முதிராப் பிள்ளைமை - மெய்ப் 4 பாரதி. குழவி கூறும் மழலை (248 இள.) திருமணம் நடந்த அண்மையில் தலைவன் தான் வேற் றூர்க்குப் பிரிந்து செல்லப் போவதாகக் கூறித் தலைவியை நடுங்கவைத்துத் தான் நகுதல், தலைவனிடம் தன் இளமை பொருளாகத் தோன்றிய நகை. (கலி. 13) குழந்தையது இனிய மழலைமொழி கேட்டுத் தாய் நகுதல், பிற பொருட்கண் தோன்றிய இளமை பொருளாகத் தனக்குத் தோன்றிய நகையாம். (அகநா. 16) (252 பேரா.) இளிவரல் - இழிப்புச்சுவை. காண்க (தொ. பொ. 251 பேரா.) இளிவரல் குறிப்பு நான்கு - இளிவரல் - அருவருப்பைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருளாவது. மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்கு குறிப்பும் பற்றி இளிவரல் பிறக்கும். இவை தன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மூப்புப் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய பிணி பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல், தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் பிறன்கண் தோன்றிய மென்மை பற்றிய இளிவரல் - எனத் தன்கண் தோன்றுவன, பிறன்கண் தோன்றுவன என்ற பாகுபாடு பற்றி எட்டாதலும் உரிய. இவையே யன்றி, வீரம் பற்றிய இளிவரலும் உண்டு. (254 பேரா.) உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்ற வரும் இழிநிலையே இளிவரல். (மெய்ப். 6 பாரதி) இளிவரலானது நாற்றம், சுவை, தோற்றம், ஊறு என்ற நான்கு குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96) இளிவு - அழுகை என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இது முதலாவது இளிவு - பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது. (தொ. பொ. 249. இள.) எ-டு : ‘தலைமை சான்ற தன்நிலை அழிதல், சிறைப்படு துயரமொடு செயலற்றிருத்தல், முடியுடைச் சென்னி பிறர் அடியுறப் பணிதல், நிறங்கிளர் அகலம் புழுதி படிய இருத்தல்’ இள. தன்னைத் தலைவன் எள்ளித் தன் தொடர்பினை விட்டு விட்டான் என்பது கருதிப் பரத்தை தன் செயற்கையழகு சிதைய அழுதேங்கிக் கைவிரல்களைத் திருகிக்கொண்டு அவன்பழி தூற்றுதல், அவளுக்குத் தன்கண் தோன்றிய இளிவு பற்றிய அழுகை. (அகநா. 176) தலைவன் தன்பெருமைக்கு ஏலாமல் நடந்து கொள்வதைப் பார்த்துத் தோழி தானும் துயர்உறுவதாகக் கூறுவது பிறன்- கண் தோன்றிய இளிவரல் பற்றிய அழுகை. (கருணையான் நிகழ்வது) (கலி. 37) (253 பேரா.) இளிவு - பிறர் இகழ்வால் பிறக்கும் அவலம்; பழியை வெளிப் படுத்தும் இளிவரலன்று. தலைவனைத் தலைவி ‘பன்மாயக் கள்வன்’ (குறள் 1258) என்றும், தன் மகனை ‘மகனல்லான் பெற்ற மகன்’ (கலி. 86) என்றும் கூறுவது போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (மெய்ப். 5 பாரதி) இன்பத்தை வெறுத்தல் - நிலவும், சாந்தும், பூவும் முதலாக இன்பம் தரும் பொருள் களைத் தலைவி வெறுத்தல் தலைவனுடைய கூட்டத்தின் முன்னும் அவனோடு உடனுறை யும்போதும் தனக்கு இனியவாகிய பொருள்களே தலை வனைப் பிரிந்து களவிலும் கற்பிலும் தனித்திருக்கும் தலைவிக் குத் துன்பம் தருதலின், நிலவு தென்றல் முத்துமாலை கண்ணி முதலிய இன்பப் பொருள்களை வெறுத்துப் பழித்தல். தலைவிமாட்டு நிகழும் இந்நிலை பிரிதல்துன்பமுறும் தலைவற்கும் உண்டு. இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (தொ. பொ. 266) அன்புத் திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்த மாகும். (270 பேரா.) இன்பமுற்றோன் அவிநயம் - துன்பம் நீங்கித் தெளிவுற்ற உடம்பும், நிறைந்து வழியும் பெரு மகிழ்ச்சியும், காரணமின்றி அங்குமிங்கும் மிகவும் அதிகமாய் நடமாடலும், அழகுடைய இன்சொல் பேசலும், நறுமண மலர் கொண்டிருத்தலும், தோளிலும் மார்பிலும் அணிந்து நீக்கிய அணிகளுடைமையும் போன்றவை இன்பம் அனுபவிப் பவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் உரைப்பன. (நாடக. 253) இன்புறல் (1) - இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. இன்புறல் - ஒருவர் ஒருவரின் தாமே இன்புறுகின்றாராக நினைத்தல். இங்ஙனம் நினைக்கும் இன்பம் காதல் இல்லற வாழ்வின் சிறப்பிற்கு ஏதம் பயத்தலின் விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.) இன்புறல் (2) - துணை மெய்ப்பாடு 32-இல் இதுவும் ஒன்று. இன்புறல் - நண்பர்களாகிச் சிலகாலம் பிரிந்து மீண்டும் மருவ வந் தோரைக் கண்டவழி நிகழ்வதொரு மன நிகழ்ச்சி போல்வது. காணாமற்போன பொருள் மீண்டும் கிட்டியக்காலும், எடுத்துக்கொண்ட வினை இடையூறின்றி முடிந்தக்காலும், பிரிந்து சென்ற நண்பரைப் பல ஆண்டுகட்குப் பின்னர்க் கண்டக்காலும் ஏற்படும், காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறல். (தொ. பொ. 256 இள.) தான் செலவிடாது ஈட்டிவைத்துள்ள செல்வத்தை அவ்வப் போது நினைத்துப்பார்க்குமிடத்தெல்லாம் பிறக்கும் மனமகிழ்ச்சி. இதுமனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (இதனை வடநூலார் ‘ஹர்ஷம்’ என்பர்) (260 பேரா.) இன்புறல் (3) - இன்புறலாவது, தம் உடைமைசெயல்களைப் பற்றித் தாமே மகிழ்தல். (தொ. மெய்ப். 12 ச. பால.)) உ உடம்பு நனி சுருங்கல் - உணவு உண்ணாமை உயிரைத் தாக்காது உடம்பைத் தாக்க, பிரிதல்துயரோடு உணவின்மையும் வருத்துவதால் உடல் நாளும் மிக மெலிதல். இது பிரிதல்துயரால் உணவை வெறுத்து உடல் மெலிய நிற்கும் காதலியல்பு கூறுகிறது. இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266) அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.) உடன்பட்டோன் அவிநயம் - பிறர் தான் செய்ய வேண்டிய செயலைத் தாம் செய்வதாகச் சொல்ல, அதற்கு உடன்பட்டவனுடைய அவிநயங்கள். (இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன) 1. அச்செயல் தனக்கு முன் நிகழினும், அதன்கண் ஈடுபா டில்லாத மனநிலை, 2. அச்செயல் செய்ய உடன்பட்டவனது கையைப் பிடித்துக் கொண்டு அச்செயல் செய்வதை அவனிடம் ஒப்படைத்து மகிழ்தல், 3. அச்செயலில் தான் இனி ஈடுபட்டுத் தொடர்ந்து செயற் படாதிருத்தல். 4. அச்செயல் பற்றி மற்றவர் கூறுவனவற்றை மனத்தில் கொள்ளாதிருத்தல் - ஆகிய நிலைகளாகும். (நாடக. 253 உரை) உடைபெயர்த்து உடுத்தல் - முதன்முதல் தலைவன் தன்னைத் தீண்டியவழித் தலைவி அவனது பரிசத்தால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியானே மயிர்முடி நெகிழ, காதணிகளுள் ஒன்று கழல, வளையல் முதலியன நெகிழ, அவற்றை ஏற்ப அமைத்துக்கொண்டவள் தன் உடையும் நெகிழ்வது போலத் தோன்ற அந்நெகிழ்ச்சி தீர உடுத்த உடையினைப் பலமுறை இறுக உடுத்தல். உடுத்த உடையினை நெகிழ்ச்சி நீங்கப் பலகாலும் இறுக்கி உடுத்துக்கோடலாம். (தொ. பொ. 262 பேரா.) இஃது அகத்திணைக்கேயுரிய அவத்தை பத்தனுள் இரண்டாம் அவத்தையின் இறுதி மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (258). களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்று மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் இறுதி மெய்ப்பாடு என்பது ஏனையோர் கருத்து. உடைமை - இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. உடைமை - யாதானும் ஒரு பொருளை உடையனா யிருத்த லால் வரும் மனநிகழ்ச்சி. அது நால்வகைப்படைகளையும் உடையராயிருத்தல் பற்றி (புறநா. 72) மன்னர் மனத்தில் தோன்றும் மெய்ப்பாடு (தொ. பொ. 256 இள.) உடைமை - செல்வம்; செல்வத்தை அனுபவிப்பதாயின் அப்பொழுது செல்வம் உவகை என்ற மெய்ப்பாட்டிற்கு உரிய தாகும். செல்வத்தை அனுபவிக்காமல் அதனை நினைத்து நினைத்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்று; செல்வம் தன் னிடத்து நிறையவுளது என்னும் நினைப்பால் வரும் மெய் வேறுபாடு இவ்வுடைமையாகும். இது மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுத்தலான் மெய்ப்பாடாயிற்று. (260 பேரா.) இதனை வடநூலார் ‘ஒளத்சுக்யம்’ என்ப. உண்டியிற் குறைதல் - பசி அட நிற்றலே யன்றிச் சிறிது உணவு ஊட்டியவழிப் பண்டு போலாது மிகவும் சிறிதுண்ணுதல். அஃதாவது உற்றார் ஊட்டும் உணவை மறுப்பின் அவர்கள் வெகுள்வர் என்று அஞ்சித் தன் வெறுப்பினை மறைத்து உட்கொள்வது போன்ற பாவனையில் மிகக் குறைவாக உண்டுவைத்தல். ‘பசி அட நிற்றல்’ என்பது பிரிதல் துயரான் பசி என்பதனையே உணராத கைகடந்த காதல்நிலையைக் குறிக்கும். இஃது, எல்லைக்குட்பட்ட காதல்துயரால் உணவு சுவைக்காமை யால் மிகக் குறைவாக உண்டலைக் குறிக்கும். (தொ. பொ. 270 பேரா.) இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் . (தொ. பொ. 266) அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம் மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும். (தொ. பொ. 270 பேரா.) உணர்வு (1) - இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று. உணர்வு - அறிவுடைமை; அஃதாவது உலகியலான் செய்யத் தகுவது அறிதல். இரவுக்குறியில் அரிதின் முயன்று வந்த தலைவனைத் தலைவியும் இடையூறுகளைக் கடந்து வந்து சந்தித்துத் ‘தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும்’ (அகநா. 22) என்பதன்கண் இருவர் உணர்வும் ஒத்தவாறு. (தொ. பொ. 273 பேரா.) உணர்வு (2) : பொருள் - உணர்வாவது ஒருவர் ஒருவர்தம் உள்ளக்குறிப்பை அறிந் தொழுகும் நுண்ணுணர்வு. (தொ. மெய்ப். 25 ச. பால.) உயிர்ப்பு - முன்பெல்லாம் விடும் அளவு போலன்றி மிகுதியாக மூச்சு விடுதல். “தலைவியிடம் உள்ளத்தைச் செலுத்திய தலைவன் தனிமை யிற் கிடக்கும் யானை போல மிகுதியாகப் பெருமூச்சு விடுகின்றான்” (குறுந். 142) என்பதனால், அவன் உள்ளத்திருக் கும் காமநோயை அவன் உயிர்ப்பு வெளிப்படுத்தலின் மெய்ப்பாடாயிற்று. (தொ. பொ. 256 இள.) உயிர்ப்பாவது வேண்டிய பொருளைப் பெறாதவழிச் செய லற்று நிற்கும் கருத்து. அது நெட்டுயிர்ப்பாகிய பெருமூச்சுக்கு அடிப்படை ஆதலின் அதனை ‘உயிர்ப்பு’ என்றார். இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.) இதனை வடநூலார் ஜடதை என்ப. உருத்திரம் - 1. பெருங்கோபம் 2. வெகுளிச் சுவை. (தண்டி. 69) உருவு - இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்து வகை ஒப்பினுள் ஒன்று. உரு(வு) என்பது வனப்பு. (தொ. பொ. 90 இள.) பெண்மை வடிவும் ஆண்மைவடிவும் பிறழ்ச்சியின்றி ஒருவர்க்கு ஒருவர் பொருத்தமாக அமைதல். இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும், குணம் பற்றித் தோன்றுவன செயற்கையன்பு ஆகலானும் உருவமே அன்பிற்கு அடிப்படைக் காரணமாம். ‘முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத்தோளும்’ (கலி. 108) என்றாற் போல்வன உருவு. (273 பேரா.) உருவு வெளிப்பாடு - கற்பனையாக வடிவம் கண்முன் தோன்றுதல் என்ற மெய்ப்பாடு. தலைவன் தலைவி யென்னும் இருவரும் பிரிவிடை ஒவ்வொரு வரும் மனக்கண் முன் மற்றவர் உருவத்தைக் கற்பனை செய்துகொண்டு பிரிவுத்துயரம் மிகுதல். இஃது ‘எதிர்பெய்து பரிதல்’ எனவும் (தொ. பொ. 270 பேரா.) கூறப்படும். உவகைக் குறிப்பு நான்கு - உவகையைத் தோற்றுவிக்கும் பொருள்களைக் கண்டவழி மனத்தில் விளையும் பொருள். செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கு குறிப்புப் பற்றியும் உவகை பிறக்கும். உவகை தன்கண் தோன்றிய பொருள் பற்றியே வரும்; சிறுபான்மை பிறன்கண் தோன்றிய இன்பம் பற்றி வருதலு முண்டு. பிறன்கண் தோன்றிய துன்பம் பற்றி உவகை கூர்தல் கடையாயினார் இயல்பு. (தொ. பொ. 259 பேரா.) இவ்வுவகை என்னும் சிருங்காரம், இளமை வனப்பு வளமை கலவி என்ற நாற்குறிப்புப் பற்றி வரும் என்பது வீரசோழிய உரை. (கா. 96 உரைமேற்.) உள்ளது உவர்த்தல் - தலைவன் செய்கின்ற தலையளிiயைத் தலைவி வெறுத்துக் கூறுதல். அஃதாவது தலைமகனான் பெற்ற அன்பு உள்ளதே ஆயினும், அதனை உண்மையென்றே தெளியாது, அதனை அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி. தலைவன் தலைவிபால் அன்பு கொண்டு இல்லத்துக்கு வரவும், தலைவி அவனை நோக்கி, “பரத்தையரைத் தேர் ஏற்றிக் கொண்டு வருமாறு பாகனை விடுத்து, அவன் வரக் காலதாமதம் ஆயினமையான் என்னையும் பார்த்துச் செல்லலாம் என்று இங்கு வந்துள்ளாய்!” (கலி. 69) என்றாற் போலக் கூறுதல். இது கற்பிற்கே சிறந்த பத்து மெய்ப்பாடுகளுள் ஒன்று. (தொ. பொ. 272 பேரா.) உள்ளப்பட்ட நகை - எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு குறிப் பும் பொருளாகப் பிறந்த நகை உள்ளத்தொடு பொருந்திய நகையாம். உள்ளத்தொடு பொருந்திய நகை எனவே, உள்ளத் தொடு பொருந்தாத நகையும் உண்டு என்பது. அது தலைவன் விரைவில், தன்னை விடுத்துப் பிரியப்போவதனை அறிந்த தலைவி தன் அழுகையை மறைத்துக்கொண்டு தலைவன் முன் பொய்ச்சிரிப்புக்கொண்டு வருதலாம். (அகநா. 5) (தொ. பொ. 252 பேரா.) உறங்கினோன் அவிநயம் - இருபுறமும் மாறி மாறிப் படுத்தும் மல்லாந்தும் குப்புறக் கவிழ்ந்தும் உறங்குதலும், மூச்சுப் பெரிதாக விடும் இயல்பும் உறங்கியவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை) உறுப்பறை - இது வெகுளி என்ற மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. உறுப்பறை - அங்கமாயினவற்றை அறுத்தல். 254 இள. - கை குறைத்தலும் கால் குறைத்தலும் கண்ணை நீக்குதலும் முதலாயின. 258 பேரா. - உறுப்பின் ஊறு. மெய்ப். 10 பாரதி. எ-டு : தன் பின்புறமாகத் தன் காதுகளின் மறைவைப் பயன்படுத்தித் தன்னைத் தாக்கிய புலியை வெகுண்டு யானை தாக்கிக் கொன்றது. (கலி. 52) என்றவிடத்து, புலி தன் உறுப்புக்களுக்கு ஊறு செய்த காரணத்தான் யானைக்கு வெறுப்பால் சினம் விளைந்தது; புலி யானையின் உறுப்புக்களுக்கு ஊறுசெய்யாவிடில் யானைக்குப் புலியைத் தாக்கவேண்டிய காரணமே இன்று. (தொ. பொ.258பேரா.) உறுபெயர் கேட்டல் - (களவினும் கற்பினும்) தலைவி தலைவனுடைய பீடார் பெரும்புகழைப் பிறர்வாய்க் கேட்டு மகிழ்தல். (தொ. பொ. 270.பேரா.) எ-டு : நீலமாலை என்னும் தோழி வில்லை வளைத்து முறித்த இராமனைப் பற்றி, ‘மராமரம் இவையென வளர்ந்த தோளினான் அராவணை அமலனென்(று) அயிர்க்கும் ஆற்றலான்’ (கம்பரா. 724) என்றாற்போலக் கூறியன கேட்டுச் சீதை மகிழ்ந்தமை போல்வன. இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 266) அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம் மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்தது; களவிற்கும் கொள்ளப் படும் என்பர் ஏனையார். ஊ ஊழணி தைவரல் - நெகிழும் அணிகளை முறையாக மேல் நோக்கிச் செறித்துக் கொள்ளுதல். தலைவன் முதன் முதல் தலைவியைத் தீண்டிய அளவிலே அந்தப் பரிசத்தால் அவள் மனம் நெகிழ, அந்நெகிழ்ச்சியான் கூந்தல் அவிழக் காதணி ஒன்று கழன்றமையோடு ஏனைய அணிகளும் நெகிழ்வன போலத் தோன்ற, அந்நெகிழ்ச்சி நீங்கத் தலைவி வளையல் மோதிரம் முதலியவற்றை மேல் நோக்கித் தள்ளி இறுகச் செறித்தலாம்.(தொ. பொ. 262 பேரா.) இஃது இரண்டாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (258) களவுப்புணர்ச்சியில், புணர்ச்சிக்கு முற்பட்ட முக்கூற்றுப் பன்னிரண்டு மெய்ப்பாடுகளில் இஃது இரண்டாம் கூற்றின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார். எ எண்ணான்கு நானான்கு ஆதல் - வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்ற எண்வகைச் சுவையும், வீரக் குறிப்பு அச்சக்குறிப்பு இழிப்புக்குறிப்பு வியப்புக்குறிப்பு காமக்குறிப்பு அவலக்குறிப்பு உருத்திரக்குறிப்பு நகைக்குறிப்பு என இவ்வெண்வகைக் குறிப்பும் ஆகிய பதினாறும் எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பொருளையும் (தொ.பொ. 248- 255) குறித்ததன் (குறித்து அவற்றின்) புறத்தே நிகழும். (தொ. பொ. 245 இள.) சுவைக்கப்படுபொருளும் சுவையுணர்வும் வேறு நின்றவழிச் சுவை பிறவாமையானும், குறிப்பும் சத்துவமும் முறையே மனநிகழ்ச்சியும் உடம்பில் தோன்றும் வேறுபாடும் ஆகலா னும், சுவைப்பொருளையும் சுவையுணர்வையும் ஒன்றாக்கி குறிப்பையும் சத்துவத்தையும் ஒன்றாக்கி, இவற்றை வீரம் அச்சம் முதலிய எட்டனோடும் உறழ, முப்பத்திரண்டு பதினாறு ஆம். (தொ. பொ. 249 பேரா.) எள்ளல் முதல் விளையாட்டு ஈறாகக் கூறப்பட்ட முப் பத்திரண்டு பொருளும் நான்கு நான்காய்த் தொகுத்து எண்ணப் படும். (மெய்ப். 1 பாரதி.) எண்ணான்கு பொருளாவன - வீரம் அச்சம் வியப்பு இழிபு காமம் அவலம் நகை வெகுளி என்னும் எட்டுக்குணங்களும் சுவைப்பொருள் - சுவைப் போன் - அவனது சுவையுணர்வு - அவன் வெளிப்படுத்தும் சத்துவம் - ஆகிய நான்கனோடும் உறழ்தலான் வருவன 32 பொருள்களாம். சுவை வெளிப்பாட்டினை விறல் என்னும் தமிழ்ச் சொல்லா னும் சத்துவம் என்னும் வடசொல்லானும் வழங்குவர். ஒருபொருளைச் சுவைத்தவன் வெளிப்படுத்தும் விறல் காண் போரிடத்து எழுப்பும் அவ்வுணர்ச்சியே நாடக நூலார் கூறும் சுவை (ரசம்) ஆகும். (தொ. மெய்ப். 1, 2 ச. பால) எண்வகை மெய்ப்பாடு - நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்பன. இவற்றுள் நகைக்கு மறுதலை அழுகை; இளிவரலுக்கு மறுதலை மருட்கை; அச்சத்துக்கு மறுதலை பெருமிதம்; வெகுளிக்கு மறுதலை உவகை. வாழ்க்கைக்கு இன்றியமையாத நகையை முன்னரும் அதற்கு மறுதலையாகிய அழுகையை அதனை அடுத்தும், அழுகை யுடன் இயைபுடைய இளிவரலை அதனை அடுத்தும், தான் இளிவந்து பிறிதொரு பொருளை வியக்குமாதலின் வியப் பினை அதனை அடுத்தும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்த லின் அச்சத்தை அதனை அடுத்தும், அச்சத்திற்கு மறுதலை யாகிய வீரத்தை அதனை அடுத்தும் வீரத்தின் பயனாகப் பிறக்கும் வெகுளியை அதனை அடுத்தும், வெகுளிக்கு மறுதலையாகிச் சுவைகளுள் நகையைப் போலச் சிறந்த உவகையை அதனை அடுத்து இறுதிக்கண் ணும் வைத்தார். (தொ. பொ. 251 பேரா.) இவற்றுள், நகை வியப்பு உவகை மூன்றும் அகப் பொரு ளுக்கே சிறந்து புறப்பொருளில் அருகி வரும்; ஏனைய அழுகை, இளிவரல், அச்சம். பெருமிதம், வெகுளி - என்பன புறப்பொருளுக்கே சிறந்து அகப்பொருளில் அருகிவரும். (ம. சூ. பக். 6) எதிர்பெய்து பரிதல் - கண்முன்னர்க் கற்பனையில் காணும் உருவெளித்தோற்றம். பிரிவிடைத் தலைவி தலைவனுடைய தேர் முதலானவற்றைத் தன் எதிர் கற்பனையால் ஏற்றுக்கொண்டு வருந்திச் செய லறுதலும், தலைவன் தலைவியின் துயர்தோய்ந்த வடிவைத் தன்னெதிர் பெய்துகொண்டு வருந்தலும் ஆம். (தொ. பொ. 270 பேரா.) இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர் (தொ.பொ. 266). அன்புத்திணையின் தனிப் படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் எனவும், பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச் சிக்கு நிமித்தமாகும் எனவும் கொள்வர் ஏனையோர். ‘எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ - 1. யாதானும் ஒரு பொருள் காணப்பட்டாலும் அதனைத் தன்னோடு ஒப்புமை கொள்ளுதல். தலைவி மாலைக் காலத்தை நோக்கி “மாலையே! நீ வருந்துகின்றாயே; நின் கணவனும் என்தலைவனைப் போலக் கொடியவனோ?” என்று வினவுதல் (குறள் 1222) போல்வன. (தொ. பொ. 266 இள.) 2. யாதானும் ஒரு பொருளைக் கண்டவிடத்தே அதனைத் தலைவனோடு ஒப்பிட்டு அவனிடம் பேசுதல். (கேட்ட பொருள் பற்றியும் ஒப்புமை கொள்வாள்.) பிரிய நினையும் தலைவனிடம் “நீவிர் செல்லும் காட்டில் ஆண்மான்கள் பெண்மான்களைப் பிரிந்து வாழ்கின்ற னவா என்பதை நினைத்துப் பாருமின்” (கலி. 20) என்றாற் போலக் கூறல். (270. பேரா.) 3. தலைவி தான் காணும் பொருள் எதுவும் தலைவன் வண்ணம் வடிவு பண்பு வினைகளுள் ஒன்றற்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு. அசோகவனத்தில் சீதைக்கு இராம னது வண்ணம் பற்றிய நினைவு மிகுந்தமை போல்வது. (கம்பரா. 5075) (மெய்ப். 22 பாரதி) இது பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். ஏனையோர் களவுக்கும் கற்புக்கும் உரிய பிரிவிடை நிகழும் மெய்ப்பாடு என்று கருதுவர். எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல் : பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொரு ளெல்லாம் தன்னைப் போலவே துன்புறுவனவாகக் கருதிக் கோடல். மெய் - பொருள். தலைவன் பிற பொருளைத் தலைவியோடு ஒப்புமை கண்டு கூறுவனவும் இதன்கண் அடங்கும். (தொ. மெய்ப். 22 ச.பால.) ‘எள்ளல்’ - நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. எள்ளல் - பரிகசித்தல்; தான் பிறரைப் பரிகசித்துச் சிரித்தல்; தான் பிறரால் பரிகசிக்கப்பட்டவழித் தான் சிரித்தல். (பழிப்பில்லாப் பரிகாசம் விளையாட்டாக ஏதுவாவது.) எ-டு : முடவர் செல்லும் செலவு, கூனரும் குறளரும் நடக்கும் நடை, ஊமர் பேச முயலும் ஓசை, செவிடர் பிறர் கூறியதை உணராமல் பேசும் பேச்சு, பேதையர் பேசும் பேச்சு, கல்லார் கூறும் கல்வி, கள்ளுண்டு களித்தோர் செயல், அலி பேடி இவர்கள்தம் நடை உடைகள், ஆரியர் கூறும் தமிழ் போல்வன. ( தொ. பொ. 248 இள. மேற்.) தன்னைக் குறை நேர்ந்த தலைவனைத் தோழி எள்ளி நகுதல். (கலி. 61) தன்கண் தோன்றிய எள்ளல் பொருட்டாகிய நகை. தலைவி தன்னை எள்ளித் தலைமைசெய்துகொண்டு களவு ஒழுக்கம் நிகழ்த்துவதை அறிந்த செவிலிக்கு நகை தோன்றல் (அகநா. 248) பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் தோன்றிய நகை. (252 பேரா.) ஏ ஏதம் ஆய்தல் - தலைவி, தலைவனுடைய கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டு என்று பலவும் ஆராய்தல். அவை ஆற்றிடைத் தலைவனது இடையூற்றினுக்கு அழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தார்கொல் எனத் துயர்உறுதல், ஏதிலார்தம் வரைவின் தீதினை அஞ்சல் போல்வனவாம். (தொ. பொ. 270 பேரா.) இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (266) அன்புத் திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும். ஏழைமை - நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை - பேதைமை. (தொ. பொ. 270 இள.) ஏழைமை - நுட்ப உணர்வின்மையால் ஏற்படும் வெண்மை. (274 பேரா.) ஏழைமையான் இல்லறக் கடமைகள் தடைப்படும் ஆதலின் இது விலக்கப்பட்டது. கிட்டாத பொருளில், கிட்டும் பொருள்மீது வைக்கும் ஆசை யினை வைத்தல். (திருவாய். 2-4-10 உரை) ஏழைமை மறப்பு - நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஏழைமை என்பது எளிமை; அஃதாவது தணிவு. தணிவுஉணர்வினை மறப்பது அன்பொழுக்கத்திற்கு ஆகாத தவறாகும். தலைவி பெருமை அனைத்தும் உடையவளாயினும் தலைவனைத் தணிவொடு பணிதலும், தலைவன் தன்னின் தாழ்ந்தவன் எனினும் தலைவன்உயர்வு தன் உள்ளத்து நிறுத்தலும் வேண் டும். தலைவிக்கு உயர்குடிஉவகை விலக்கியதோடு அமை யாது, தன் பணிவு மறவாது தலைவன்உயர்வு நினைத்தலும் இன்றியமையாதது என்று வற்புறுத்தக் குடிமையின்புறலை அடுத்து ஏழைமைமறப்பும் குறிக்கப்பட்டு இவை விலக்கப் பட்டன. (தொ. மெய்ப். 26 பாரதி.) ஏழைமை, மறப்பு எனத் தனித்தனி மெய்ப்பாடாகக் கொள்வர் இளம்பூரணர், பேராசிரியர் முதலியோர். ஐ ஐந்தாம் அவத்தையின் மெய்ப்பாடுகள் - காட்சி வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட பத்து அவத்தையுள் 5ஆம் அவத்தையாம் ஆக்கம் செப்பல் என்பதன்கண், தலைமகளுக்கு நிகழும் மெய்ப்பாடுகள் தெரிந்துடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத் தொழில், கண்டவழி உவத்தல் என்ற நான்குமாம். (தொ. பொ. 26 இள.) இவற்றைக் களவில், புணர்ச்சிக்குப் பின் தலைவியிடம் நிகழும் மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இரண்டாம் பகுதிக்கு உரியனவும் பொதுவாகக் களவின் ஐந்தாம் பகுதிக்கு உரியனவும் ஆகிய மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். (தொ. பொ. 265) பிறரெல்லாம் இக்கருத்தினரே. இவை நான்கும் கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் கூறு பற்றிய மெய்ப்பாடுகள் என்பார் பாரதியார். (தொ. மெய்ப். 17) ஐயம் செய்தல் - பிரிவிடைத் தலைவனிடத்துள்ள காதல்மிகுதியால் வீணே ஐயுற்றுத் தலைவி மனம் வருந்துதல். பிரிந்த தலைவனிடமிருந்து குறித்த பருவம் வந்தவழியும் தூது வாராமையால் தலைவன் தன்னை அடியொடு மறந்து துறந்து விடுவானோ (கலி. 33) எனவும், தலைவன் தலைவியை வழக்கத்துக்கு மிகையாகப் பாராட்டியவிடத்தே விரைவில் தன்னைப் பிரிந்துபோகின்ற குறிப்பினை இப்படி அளவின்மீறிப் பாராட்டித் தெரிவிக்கின்றானோ (கலி. 4) எனவும் பலவாறாகத் தலைவி தானே ஐயங்களை மனத்தே எழுப்பிக் கொண்டு வருந்துதல். (தொ. பொ. 270 பேரா.) இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பார் இளம்பூரணர். அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையோர். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆய்ந்து உணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும். ஒ ஒப்பிலாமை உருகுதல் - தலைவனது பிரிவின்கண் தலைவி தனக்குத் தோழியர் முதலாயினார் செய்யும் இன்பம்தரும் செயல் எதுவும் அவனிடம் பெறும் இன்பத்துக்கு ஒப்பாகாமையின் அவன் இன்பம் குறித்து மனம் உருகுதல். இது தலைவியது உள்ளத்தை உணர்ந்தார்க்கன்றி ஏனை யோர்க்கு உண்மை புலனாகாத நிலையிற்று ஆகலின், அகமெய்ப்பாடு 32இல் ஒன்றாம். (வீ. சோ. 95) (வீ. சோ. 96 உரை மேற்) ஒப்புமை - இது நற்காமத்துக்காகாத மெய்ப்பாடுகளில் ஒன்று. ஒப்புமை - ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகத்தே கீழ்மக்கள்மாட்டும் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என விலக்கப்பட்டது. (தொ. பொ. 270 இள.) “இன்னாளை ஒக்கும் இவள்” என்று தலைவன் தலைவி. மாட்டு அன்பு செய்தல். (தொ.பொ. 274 நச்.) இது தலைமக னுக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. பிறரொடு தலைவனை ஒப்ப நினைப்பது பெண்மைக்கு ஏலாப் பிழையாதலான் தலைவிக்குக் கடியப்பட்டது. பிறரொடு தலைவியை ஒப்ப நினைப்பது காதல் அறவாழ்வின் முழுப்பயன் கோடலைச் சிதைக்கும் ஆதலின் தலைவற்கும் கடியப்பட்டது. (தொ. பொ. மெய்ப். 26 பாரதி) ‘எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ என்பது புதல்வனை யும் மலர், மதி போன்ற பொருள்களையும் காதலர் உடல் உறுப்புப் போன்றவற்றோடு ஒப்புமை கோடலின் அது குற்றமற்ற காதற் குறிப்பு; இஃது அன்னதன்று. (மெய்ப். 26 பாரதி) ஒப்புவழி உவத்தல் - தலைவனோடு ஒப்புமையுடைய பொருளைக் கண்டவழி மனம் மகிழ்தல். எ-டு : தலைவனுடன் வடிவு ஒப்புமையுடைய மகனைக் கண்டு அவனிடம் அன்பு மிகுந்து அவன் தன் தந்தையை வடிவால் ஒத்திருக்கும் செய்தியைக் கூறி மகிழ்தலாம். (கலி. 86) (தொ. பொ. 270. பேரா.) இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ.பொ. 266). அன்புத் திணையில் தனிப்படர் மெலிவின் துனிநனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பது ஏனையார் கருத்து. க கட்டுரையின்மை - தலைவி வரைதல் வேட்கையான் தலைவனது களவொழுக் கத்தை முனிந்தாள் போலத் தலைவன் வினவுவனவற்றிற்கு மறுமாற்றம் ஏதும் கூறாதிருத்தல். கூற்று நிகழ்த்துதலின்றி உள்ளக்கருத்தை மறைத்து அமர்ந் திருத்தல் என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 267) ‘கையி னால்சொலக் கண்களில் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’ (சீவக. 997) என்ற குணமாலை கூற்றில், காதல் மிக்கவழிப் பேச்சுத் தடைபடும் என்பது புலனாகிறது. இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக் காதற் கூட்டவேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (271 பேரா.) இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். துஞ்சி சேர்ந்து கையறவுற்ற நிலையில் பிறரைக் கழறியுரைக் கும் மனஎழுச்சியின்றி வாய்வாளாதிருத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமைவது. (தொ. மெய்ப். 23 ச. பால) கண்டது மறுத்தல் - நினைப்புத் தலைவனிடத்தே இருத்தலின், தன் கண்முன் நெடு நேரம் இருக்கும் பொருளையும் கண்பொருந்திக் காணாமை யால் அவளால் காணப்பட்டவாக மற்றவர் கருதும் பொருள் களைத் தலைவி தான் காணவில்லை என்று மறுத்துக் கூறுதல். இந்நிலைக்குக் காரணம் அவள்அகத்தை நன்குணர்வார்க்கே புலனாம் ஆதலின், இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ.96 உரைமேற்) கண்டவழி உவத்தல் - தமர்க்கு அறத்தொடு நின்று இற்செறிக்கப்பட்டு இல்லத் துள்ளேயே மறைந்து வாழும் தலைவி, தலைவனை ஒருகால் எதிர்பாராவகையால் கண்டவழிப் பெரிதும் மகிழ்தல். இஃது ‘ஆக்கம் செப்பல்’ என்ற ஐந்தாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர்.(தொ. பொ. 261) இது களவுக்காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய நான்காம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர். (265 பேரா.) கண்ணோவு உற்றோன் அவிநயம் - கண்ணில் துளிக்கும் கண்ணீரை அடிக்கடி விரலால் அப்புறப் படுத்துதல், புருவம் வளைதல், முகம்வாடுதல், எப்பொருளையும் நேரே பார்க்க விழிகூசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253 உரை) கண்துயில் மறுத்தல் - இரவும் பகலும் தண்டாக்காதல் கொண்டார் உறங்காமை யாகிய நிலை. இது தலைவன் தலைவி இருவருக்கும் பிரிவிடையே நிகழ்வது. அது ‘நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ (குறுந். 6) ‘பா(டு)இன்றிப் பசந்தகண் பைதல பனிமல்க’ (கலி. 16) என்றாற் போலப் பிரிவிடைக் கண்துயில் ஒல்லாக் காதல் இயல்பாம். இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையின் தனிப்படர் மெலிவின் துனி நனி விளக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். (270 பேரா.) பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும். கரந்திடத்து ஒழிதல் - அறத்தொடு நின்று, தலைவனொடு திளைத்தலை நீக்கிய தலைவி சுரந்து எழு காதலைக் கரந்து அழியும் தனிமையில், தான் செய்ய வேண்டிய செயல்களைத் தவிர்ந்திருத்தல். (மெய்ப். 17 பாரதி) அறத்தொடு நின்றபின் இற்செறிக்கப்பட்ட தலைவி தலைவ னொடு கூடுதற்கு மறுத்த தவற்றிற்கு நாணியும் அஞ்சியும் தலைவன் காண வெளிப்படாது இல்லத்துள்ளேயே தங்கி யிருத்தல். (265 பேரா.) இஃது ஆக்கம் செப்பல் என்ற ஐந்தாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 261) களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்துநான்கு மெய்ப்பாடுகளுள் இது, கூட்டம் பெறாமல் நைந்து அழி தலைவியின் ஐந்தாம் காதற் பகுதிக்குரிய மூன்றாம் மெய்ப் பாடு என்பர் ஏனையோர். கருணை - இஃது அழுகை என்ற மெய்ப்பாடு; தன் துன்பம் கண்டு வருவது அவலம் எனவும், பிறர் துன்பம் கண்டு வருவது கருணை எனவும் இஃது இருவகைத்து. (தொ. பொ. 351. பேரா) கருதல் - கருதல் என்பது குறிப்பு. “தலைவி குறிக்கொண்டு தலைவனை நோக்காது கண்களைச் சுருக்கி நோக்கினாள்” (குறள் 1095) என்றவழி, குறிக்கோள் என்றதொரு மெய்ப்பாடுண்மை அறியப்படுகிறது. (தொ. பொ. 256.இள) கருதல் என்பது மறந்ததனை நினைத்தல். இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260. பேரா.) இதனை வடநூலார் ‘விபோதம்’ என்ப. கல்வி - இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. (தொ. பொ. 257) கல்வி - தவ முதலிய விச்சை. பேரா. நூல் முதலியன பயிறல். (இ. வி. 578 உரை) மடலேறும் தலைவன் தன் பேச்சாற்றலைப் பற்றி, “கல்வியில் வல்ல சான்றோர்முன் அரிய செய்திகளை எடுத்துக் கூறுத லில் வல்லேன் யான்” (கலி. 141) என்று கூறுவது கல்வி பற்றிய பெருமிதம். (தொ. பொ. 257 பேரா.) கலக்கம் - தலைவனுடைய பிரிவைத் தாங்க இயலாத நிலையில் களவிலும் கற்பிலும் தலைவி மனம் கலங்கிக் “கனவில் தோன்றிய கணவனைக் கையால் இறுகப் பற்றி அவனைக் காண்பதற்கு யான் கண்களை விழிக்க அவன் என் கையுள் மறைந்துவிட்டான்” (கலி. 142) என்றாற் போன்ற செய்திகளைப் பிறர் கேட்பக் கூறுதல். தலைவிக்குக் களவிலும் கற்பிலும் பிரிதல் துன்பம் மிக்கவழி நிகழக் கூடிய இறுதி மெய்ப்பாடு இதுவே. இதனைக் கடந்த மெய்ப்பாடுகள் தலைவிக்கு உரிய அல்ல. தலைவனுக்கு இதற்கு மேலே வருவதொரு கலக்கம் உளதாம். அதுபொழுது அவன் மடலேறவும் வரை பாயவும் துணிவன். இதனைப் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு என்பர் இளம் பூரணர். (266) (தொ. பொ. 270 பேரா.) கலக்கப் பொருள் - கலக்கமாவது தலைவி ஆற்றாமையான் மதி திரிந்து, சொல்லுதற்கு ஆகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வா தன செய்தலுமாம். இது சிறுபான்மை தலைவற்கும் உரித்து. (தொ. மெய்ப். 22 ச. பால) கலங்கி மொழிதல் - களவில் தலைவன்பிரிவால் வருந்தி இல்லத்துத் தனித்திருக் கும் தலைவியை நோக்கி உறவினர் அவள்துயரின் காரணம் வினவியவழித் தடுமாற்றம் தோன்றத் தன் இரகசியங்களைத் தன்னையும் அறியாது வெளியிடுதல்; சொல்லுவது அறி யாது தடுமாறும் உணர்வால் மறுமொழி கூறல் என்றவாறு. (தொ. பொ. 266 பேரா.) இது ‘நாணுவரை இறத்தல்’ என்ற ஆறாம் அவத்தையின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (262) களவுக் காலத்துக்குரிய ஆறு பகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இது மாறாக் காதலின் ஆறாம் பகுதியின் மூன்றாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். கழிகண்ணோட்டம் - தலைவனிடத்துக் கொண்ட அன்பு மீதூர்தலால் தலைவி அவன் ஊரினின்று வந்த அஃறிணைப் பொருள்களிடத்தும் பாணன் முதலியோரிடத்தும் அன்பு செலுத்துதல். இது ‘அவன் தமர் உவத்தல்’ (தொ. பொ. 270 பேரா.) போல்வது. தலைவியின் இந்நிலைக்குக் காரணம் அவள் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தார்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா நிலையிற்றாகலின் இஃது அகமெய்ப்பாடு முப்பத்திரண்ட னுள் ஒன்று. (வீ. சோ. 90, 96 உரை மேற்.) கள்வர் - இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் மூன்றாவது. கள்வர் - தீத்தொழில் புரிவார், அலைத்துப் பொருள் வெளவுவார். எ-டு : பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு ஊடிய தலைவி, அவனைக் கள்வர்பாற் சார்த்தி, அவனைக் கண்ட அளவில் தான் நடுங்குவதாகக் கூறல், கள்வர் பொருளாக அச்சம் பிறந்ததாம். (கலி. 87) (தொ. பொ. 56 பேரா.) களவில் புணர்ச்சிக்குப் பிற்பட்ட மெய்ப்பாடுகள் - களவில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு இயற்கைப் புணர்ச்சி நிகழ்த்திய பின்னர்க் களவு வெளிப்படுந் துணையும் முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. அவை நந்நான்கு ஒரு பகுதியாய் மூன்று பகுதிப்பட வருவன. ஒவ்வொரு பகுதியிற் கூறப்படும் மெய்ப்பாட்டுக்கும் அடுத்த பகுதி மெய்ப்பாட்டுக்கும் இடையே கால இடையீடு உண்டு. இம்மெய்ப்பாடுகள் களவுப் புணர்ச்சியின் நான்கு ஐந்து ஆறாம் பகுதிகளாகக் கூறப்பட்டுள. 1. பாராட்டெடுத்தல், 2. மடம்தப உரைத்தல், 3. ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல், 4. கொடுப்பவை கோடல் - இவை நான்காம் பகுதி. 5. தெரிந்துடம்படுதல், 6. திளைப்பு வினை மறுத்தல், 7. கரந்த இடத்தொழிதல், 8. கண்டவழி உவத்தல் - இவை ஐந்தாம் பகுதி. 9. புறம்செயச் சிதைதல், 10. புலம்பித்தோன்றல், 11. கலங்கி மொழிதல், 12. கையறவுரைத்தல். இவை ஆறாம் பகுதி பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கும் ஆதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 16-18 பாரதி.) களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மெய்ப்பாடுகள் - களவின்கண் தலைவன் தலைவியைக் கண்டது முதல் புணர்ச்சி நிகழும் வரை முறையே அமையும் மெய்ப்பாடுகள் பன்னிரண்டு. இவை நந்நான்காய் மூன்று கூறுகளாகக் கொள்ளப்பட்டு ஒன்றை அடுத்து ஒன்றாக நிகழும். 1. புகுமுகம் புரிதல், 2. பொறி நுதல் வியர்த்தல், 3. நகுநயம் மறைத்தல், 4. சிதைவு பிறர்க்கு இன்மை - என இவை நான்கும் முதற்பகுதி. 5. கூழைவிரித்தல், 6. காது ஒன்று களைதல், 7. ஊழ் அணி தைவரல், 8. உடை பெயர்த்து உடுத்தல் - என இவை நான்கும் இரண்டாம் பகுதி. 9. அல்குல் தைவரல், 10. அணிந்தவை திருத்தல், 11. இல் வலியுறுத்தல், 12. இருகையும் எடுத்தல் - என இவை நான்கும் மூன்றாம் பகுதி. பெருமையும் உரனும் உடைய தலைவன் தன் தழையும் காதலை மறையானாக, அச்சமும் நாணும் மடனும் உடைய தலைவி தன் சுரக்கும் காதலைக் கரக்கு மாதலின், இம்மெய்ப் பாடுகள் அவள்மாட்டே பெரும்பாலும் நிகழ்வன. (மெய்ப். 13 - 15 பாரதி. தொ. பொ. 261 - 263 பேரா.) களித்தோன் அவிநயம் - கட்குடித்துக் களி கொண்டோனுக்குரிய அவிநயங்கள்: ஒளிக்கத் தக்கவற்றை ஒளியாது கூறுதலும், ஒரோவழி உரையே இல்லாதிருத்தலும், ஒருகால் குனிந்து தாழ்தலும், மற்றொருகால் சோர்ந்து வீழ்தலும், தளர்ந்து தடுமாறிக் குழறிப் பேசுதலும், சாய்ந்த நடையும் சுழன்று பார்க்கும் பார்வையும் உடைமையும் போன்றவை. அடியார்க்குநல்லார் காட்டுவன இவை. (நாடக. 253 உரை.) கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள் - 1. தெய்வம் அஞ்சல், 2. புரையறம் தெளிதல், 3. இல்லது காய்தல், 4. உள்ளது உவர்த்தல், 5. புணர்ந்துழி உண்மை, 6. பொழுது மறுப்பு ஆக்கம், 7. அருள்மிக உடைமை, 8. அன்பு தொக நிற்றல், 9. பிரிவு ஆற்றாமை, 10. மறைந்தவை உரைத்தல் என்ற பத்தும் புறஞ்சொல் மாணாக்கிளவி என்பதனொடு கூடக் கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகளாம். (தொ. பொ. 272 பேரா.) பத்து என்ற எண்ணிக்கை வருதற்கு இளம்பூரணர் ‘மறைந் தவை உரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி’ என இரண் டனை ஒன்றாக இணைத்தார். (268 இள.) நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘புணர்ந்துழி உண்மைப் பொழுது மறுப்பாக்கம்’ என இரண்டனை ஒன்றாக்கினார். (மெய்ப். 24) இவை நடுவண் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பர் இளம்பூரணர். கனவு - கனவு - உறக்கத்தினிடையே கனவு காணுதல். அக்கனவில் தன் உள்ளத்தில் பொதிந்து கிடக்கும் செய்தியை வெளியிடுதலும் உண்டு ஆதலின் கனவு மெய்ப்பாடாயிற்று. (கலி. 24) (தொ. பொ. 256 இள.) கனவு என்பது உறக்கத்தில் வாய்வெருவுதல். அஃதாவது தன்னை அறியாது, தன் மனத்தில் நினைத்து இரகசியமாக வைத்திருக்கும் செய்தியை வெளியிடுதல். அதனானும் அவள் உள்ளத்து நிகழ்கின்ற இரகசியம் ஒன்று உண்டு என்பது அறியப்படுதலின், கனவு மெய்ப்பாடாயிற்று. இது துணை மெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.) இதனை வடநூலார் ‘°வப்னம்’ என்ப. காமம் இடையீடுபட்டகாலை கனவு காண்டல் தலைவன், தலைவி என்ற இருவருக்கும் நிகழும். தலைவன் கனவு காண்டலை அகநானூறு 39ஆம் பாடலிலும், தலைவி கனவு காண்டலை கலித்தொகை 128ஆம் பாடலிலும் காண்க. கனவானது உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. (தொ. மெய்ப். 12 ச. பால) கனவொடு மயங்கல் - பிரிவிடைத் தலைமகனோ தலைமகளோ அரிதின் துயிலெய் தியவழித் தன் துணையைக் கனவில் கண்டு திடீரென்று கண்விழித்துப் பின் துணையைக் காணாது மனம் தடுமாறுதல். (தொ. பொ. 270 பேரா.) இதுவும் தலைவன் தலைவியர் இருவர்க்கும் நிகழும் மெய்ப்பாடாம். இதனைப் பெருந்திணை மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 266) அன்புத்திணையில் தனிப்படர் மெலிவின் துனி நனி விளைக்கும் இம்மெய்ப்பாடு கற்பிற்குச் சிறந்து களவிற்கும் கொள்ளப்படும் என்பர் ஏனையார். பிரிவிடை நிகழும் இம்மெய்ப்பாடு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமாகும். காதல் கைம்மிகல் - தலைவி, தலைவனுடைய புணர்வும் பெறாமல் அவன் தன்னை மணக்கும் காலமும் பாணிப்பவே, ‘உள்ளின் உள்ளம் வேமே; உள்ளா திருப்பின்எம் அளவைத் தன்றே’ (குறுந். 102) என்றாற்போலக் கையிகந்த காதலால் நைந்துரைத்தல். கைமிகல் - எல்லையைக் கடத்தல். (தொ. பொ. 271 பேரா.) ‘இகலும் தோழிநம் காமத்துப் பகையே’ (குறுந். 257) ‘காமம், மறையிறந்து மன்று படும்’ (குறள் 1254) என்று தலைவி கூறுதற்கு அமைந்த மெய்ப்பாடு இது. இஃது ஒளியாது ஒழியாது உடன்உறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக் குறிப்பை வெளியிடும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று. (மெய்ப். 23 பாரதி) இது நடுவண் ஐந்திணையுள் மனம் அழியாவழி நிகழும் மெய்ப்பாடு எட்டனுள் ஒன்று என்பர் இளம்பூரணர். (பொ. 267) காதொன்று களைதல் - தலைவன் தலைவியைத் தீண்டியவழி இதுகாறும் இல்லாது புதிதாக ஏற்பட்ட பரிசத்தால் நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக்கொள்ள முயலவும், தலைமயிர்முடி அவள் வயப்படாது நெகிழ, காதில் செருகப்பட்ட காதணிகளுள் ஒன்று கழல்வதாயிற்று. இரண்டு தோடுகளும் கழன்று வீழ்கின்ற அளவுக்கு மனத்தில் நெகிழ்ச்சி நிரம்பத் தோன்ற வில்லை என்பது. (தொ. பொ. 262 பேரா.) மனநெகிழ்ச்சியால் காதணிகளுள் ஒன்று கழன்று விழுதல். (பேரா.) காதிலணிந்த தொன்றை விழப்பண்ணி அதனைக் தேடுகின் றாள் போலத் தலைவன் முன் நிற்றல். (258 இள.) இஃது இரண்டாம் அவத்தையின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட மூன்று பகுதியவாகிய மெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் பகுதியின் இரண்டாம் மெய்ப்பாடு என்பர் ஏனையார். குடிகோள் - இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்கு உரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது. குடிகோளாவது - கீழ்வாழ்வாரை நலிதல் (தொ. பொ. 254 இள) தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயினவற்றுக்கண் கேடு சூழ்தல். (258 பேரா.) சுற்ற நலிவு (மெய்ப். 10 பாரதி) வீரத்தாயிடம் ஒருத்தி தன் மகன் போரில் புறங்காட்டினான் என்றுகூற, அதுகேட்ட அவ்வீரத்தாய், தன் குடிப்பிறப்பிற்கு மகன் கேடு சூழ்ந்தானோ என்று வெகுண்டு அவனைக் காணப் போர்க்களம் சென்றமை (புறநா. 278) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. குடிமை (1) - இது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் கூறப்படும் பத்துவகை ஒப்பினுள் ஒன்று. குடிமையாவது குலத்திலுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய நற்குடிவரவு. (தொ. பொ. 90 இள. உரை) குடிப்பிறத்தலுக்குத் தக்க ஒழுக்கம் குடிமை. (273 பேரா.) குடிப்பிறந்தாரது தன்மை குடிமை. (260 குழ.) குடிமை - ஒழுக்கநிலை. ‘ஒழுக்கமுடைமை குடிமை’ (குறள் 133) (மெய்ப். 25 பாரதி) தலைவன் தலைவியை ‘உள்ளிய வினைமுடித் தன்ன இனி யோள்’ (நற்.3) எனத் தனது இல்லறத்தினைத் தலைவிமேல் வைத்துக் கூறுதல் குடிமை. (பேரா.) குடிமை (2) - இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. குடிமை - இவள் இழிந்த பிறப்பினள் என்று தலைவன் தன்னை மதித்தொழுகுதல், தலைவியை இழிந்தாளென்று கருதும் உள்ளம் காதல் இல்லற வாழ்க்கைக்கு ஏதம் தருதலின் ‘குடிமை’ என்பது விலக்கப்பட்டது. (தொ. பொ. 274 பேரா.) குடிமை - குடிமையாவது, குலனுடையார்க்கு உரியவை என்று சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பாகிய பண்பாடு. (தொ. மெய். 25 ச. பால.) குடிமை இன்புறல் - இது நற்காமத்துக்கு ஆகாத துறைகளுள் ஒன்று. குடிமை இன்புறல் - தம் குலத்தினானும் தம் குடிப்பிறப்பா னும் தலைமக்கள் தம்மை மதித்து இன்புறுதல் (தொ. பொ. 270 இள) குடிமை இன்புறலாவது தலைவி தன்குடி உயர்வு உள்ளி உவத்தல். தலைவனே மிக்கோனாயிருத்தல் வேண்டும் என்று வரையறை செய்தது, தலைவி உயர்ந்தவளாயின், என்றாவது ஒரு நாள் தலைவி தன்னுயர்வை உரைக்கும் நிலை ஏற்படின் அது தலைவனுக்கு இழிவு உணர்த்தி ஏதம் விளைக்கும் ஆதலின், அது மெய்க்காதலுக்கு இழிவாயிற்று. தலைவன் உயர்ந்தோனாயினும் அதனை அவன் அடிக்கடித் தலைவி யிடம் சுட்டுதல் அவள் உள்ளத்தை வருத்தி நற்காமத்துக்கு இழுக்குத் தரும் ஆதலின், அவனுக்கும் அது விலக்கப்பட்டது. (மெய்ப். 26 பாரதி) இதனைக் குடிமை என்றும் இன்புறல் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்வர், பேராசிரியர் முதலியோர். (261 குழ) குற்சை - ஜிகுப்ஸை என்னும் இரசம். அஃதாவது இளிவரல் (அருவருப்பு) என்ற மெய்ப்பாடு. (டு) குறிப்பு - குறிப்பு என்பது கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ளநிகழ்ச்சி போல, அஞ்சத்தக்கன கண்டவழி அவற்றை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. (தொ. பொ. 249 பேரா.) (உள்ளக்குறிப்பை வடநூலார் ‘அநுபாவம்’ என்ப.) குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன - தலைவன் தன் கண்களால் குறிப்பிட்ட வேட்கையைத் தலைவியும் உணர்ந்து தானும் தன் வேட்கையைத் தன் கண்பார்வையான் குறிப்பிடுவாளாயின், தலைவன் நோக்கிய நோக்கிற்குத் தலைவி தான் எதிர்நோக்கியதனை முதலாவ தாகக் கொண்டு, நுதல் வியர்ப்பொறித்தல் முதல் இருகையும் எடுத்தல் ஈறாக மெய்ப்பாட்டியலில் மூன்று நூற்பாக்களான் கூறப்படும் ஏனைய பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிகண் நிகழும். (தொ. பொ. 97 நச்., 261 - 263 பேரா.) கூழை விரித்தல் - தலைமயிரினைக் குலைத்து அதனை நேர் செய்பவள் போலச் சிறிதுநேரம் தலைவன் முன் நிற்றற்கு வாய்ப்புத் தேடல். (தொ. பொ. 258 இள.) கைக்கிளைக்குரிய மெய்ப்பாடுகள் - புகுமுகம் புரிதல் முதலாகக் கையறவுரைத்தல் ஈறாக வரும் இருபத்து நான்கு மெய்ப்பாடுகளும், நடுவண் ஐந்திணை அல்லாத கைக்கிளைக்கண்ணும் பாடாண்பாட்டில் வரும் புறத்திணை பற்றிய கைக்கிளைக்கண்ணும் அருகிவரும் என்பர் இளம்பூரணர். கைக்கிளை ஒருதலைக்காமம் எனவே, புகுமுகம் புரிதல் நிகழாதே எனின், தலைவியைத் தலைவன் தான் கண்ட அளவிலேயே தலைவியும் தன்னைப் போலவே தன்னிடம் அன்பு கொண்டிருப்பாள் என்று கருதிக்கொள்வதே ஆண்டுப் புகுமுகம் புரிதலாம். புகுமுகம் புரிதல் முதலியன கைக்கிளைக்கண் வரும் என்ற கருத்து இளம்பூரணரைத் தவிர மற்ற உரையாசிரியர்கட்கு உடன்பாடன்று. (தொ. பொ. 265 இள.) கந்தருவ மணத்தோடு ஒத்து இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் தலைவியைக் கூடுமுன் அவளைக் கண்ட அளவில் அவனிடம் ஒருதலைக்காமமாகிய கைக்கிளை நிகழும். (ந. அ. 28) கைம்மிகல் - கைம்மிகல் என்பது குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல். ‘கை’ என்பது அளவு குறித்ததோர் இடைச்சொல். ‘காதல் கைம்மிகல்’ (தொ. மெய்ப்.23) ‘குணனிலனாய்க் குற்றம் பலவாயின்’ (குறள் 868) என்றாற் போல வருவன. (தொ. பொ. 256 இள.) கைம்மிகல் ஒழுக்கக்கேடு. அது சாதித் தருமத்தினை நீங்கி யமை தன் உள்ள நிகழ்ச்சியானே மற்றவர் அறியுமாறு நடந்து கொள்ளுதல். இஃது ஒருவன் மனநிகழ்ச்சியை வெளிப்படுத்த லின் மெய்ப்பாடாயிற்று. இது துணைமெய்ப்பாடு முப்பத் திரண்டனுள் ஒன்று. (260. பேரா) இதனை வடநூலார் வெறிகொண்டார் செயலாகிய ‘உன்மாதம்’ என்ப. கைம்மிகல் : பொருள் - கைம்மிகலாவது, குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல். (தொ. மெய்ப். 12 ச.பால) கையற உரைத்தல் - கையற உரைத்தல்; அஃதாவது செயலறவு தோன்றச் சொல்லுதல். களவில் தனிமை தாங்காத் தலைவி காதல் கைம்மிகத் தெருமரு நிலையில், வற்புறுத்தி ஆற்றுவிக்கும் தோழிக்கு எதிர் மனம் தளர்ந்து கூறுதல் போல்வன. (தொ. பொ. 266. பேரா.) இது நாணுவரை யிறத்தல் என்ற ஆறாம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு. (262. இள.) களவுக்காலத்துக்குரிய ஆறுபகுதியவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடுகளுள் இஃது இறுதியானது. இதனைக் கடந்து வரும் மெய்ப்பாடுகள் ஐந்திணைக்கு உரியன அல்ல; பெருந்திணைக்கு உரியன. கையாறு - கையாறு என்பது காதலர் பிரிந்ததால் வரும் துன்பமும், அத்துன்பம் போன்ற பிற நிலைகளும். “யான் பிரியின் தலைவி கையாறு கொள்ளாது இல்லறத்தை நன்கு பாதுகாக்கவல்லளோ?” (கலி.24) என்று தலைவன் உறக்கத்தில் அரற்றிய உரையில் கையாறு என்ற மெய்ப்பாடு சுட்டப்படுகிறது. (தொ. பொ. 256.இள.) கையாறு என்பது விரைய மூச்செறிந்து வருத்தத்தைத் தெரி விக்கும் நிலையையும் கடந்து செயலற்று அயர்த்திருத்தல். இது துணை மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. (260 பேரா.) இதனை வடநூலார் மரணம் என்ப. கொடை - இது பெருமிதம் என்ற மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது. கொடை - உடம்பும் உறுப்பும் உயிரும் போல்வன எல்லாப் பொருளும் கொடுத்தல். தன்னை அடைக்கலமாக வந்தடைந்த புறாவைக் காப்பதற் காகத் துலைத்தட்டில் சிபிமன்னன் ஏறிய செயல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு. (புறநா. 43) (தொ. பொ. 257 பேரா.) கொடுப்பவை கோடல் - தான் ஒன்றும் வேண்டாச் செல்வ நிலையையுடைய தலைவி தலைவன் தருவனவற்றைப் பொருட்பொருட்டன்றி அன்புக்கு அறிகுறியாக அவன்பொருட்டு ஏற்றல். தரும் தலைவனது உணர்வில் பெறுந் தலைவி உயர்ந்தவள் என்று எண்ணுவது இயல்பாதலின், ஈவன தருவன என்னாது ‘கொடுப்பவை’ என்றார். (தொ. பொ. 264 பேரா.) இது மெலிதல் என்ற நான்காம் அவத்தையின் நான்காம் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். (தொ. பொ. 260) களவின்கண் புணர்ச்சிக்கு முன்னர் மூன்று, பின்னர் மூன்று என ஆறு பகுதியவாகக் கூறப்படும் இருபத்துநான்கு மெய்ப்பாடு களில் இது தோலாக் காதலின் நாலாம் பகுதியின் நாலாம் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். கொடுமை - இது நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகளுள் ஒன்று. கொடுமை - அறன் அழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. (தொ. பொ. 270 இள.) கேடு சூழ நினையும் தீவினையுள்ளம். (274 பேரா.) இவ்வுள்ளம் உடையாரிடம் நற்காமம் சிறவாதாகலின் இது விலக்கப்பட்டது. கொலை - இது வெகுளி என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியானது. கொலை - கொல்லுதற்கு ஒருப்படுதல். (தொ. பொ. 254 இள.) அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல். (258 பேரா.) நெடுஞ்செழியன் தன்னைச் “சிறுவன்” என்று பகைவர் கூறிய சொற்களை நினைத்தே வெகுளிகொண்டு அவர்களை எதிர்த்தமை (புறநா. 72) கொலை பொருளாகத் தோன்றிய வெகுளி பற்றியேயாம். கோபம் - ‘வெகுளி’ என்ற மெய்ப்பாடு; அது காண்க. ச சத்துவம் - உள்ளத்தில் உள்ள கருத்தைப் பிறர் அறியுமாறு வெளிப் படுத்தும் மெய்ப்பாடு சத்துவம் எனப்படும். சத்துவம் என்பன செந்நூலில் வெண்பளிங்கு கோத்தால் அதன் செம்மை புறம் பொசிந்து தோன்றினாற்போலக் கருதியது புலனாக்கும் குணங்களாம். அவை சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர் நெகிழ்ச்சி, மெய் வெதும்பல், மெய்ம் மயிர் அரும்பல் முதலாயின. (இ. வி. 661 உரை) சமநிலை - (1) வன்மை மென்மை இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம் (தண்டி. 18) (டு) (2) சாந்தம் என்னும் சுவை - ‘மற்றிவ் வெட்டனொடும் சமநிலை கூட்டி’ (தொ. பொ. 251 பேரா) சமநிலை அவிநயம் - பிறர்க்கென எதையும் செய்யாத கொள்கையும், அறம் செறிந்த மனமும, அமைதி நிறைந்த கண்களும், மயக்கமும் கலக்கமுமான பிறழ்ந்த அறிவு நீங்கிய தூய அறிவுநிலையும், எதையும் முயன்றடையும் குறிப்பில்லாத நிலையும், அச்சமற்ற பெருமித நிலையும், உலகத்துயிர்கள்பால் குளிர்ந்த உள்ளமும் செயலும் படைத்திருத்தலும், அளவிட்டு உரைக்க இயலாத அருமையும், அன்பும், கண்ணில் ஒளியுடைமையும் போன்றவை சமநிலை - சாந்தரசம். (நாடக. 246) சமநிலை என்னும் மெய்ப்பாடு (1) - (1) மெய்ப்பாடுகளை ஒன்பது என்று கணக்கிடுவோர் வீரம் அச்சம் முதலிய எண்வகை மெய்ப்பாடுகளொடு நடுவுநிலை யையும் சேர்த்துக் கணக்கிடுவர். நடுவுநிலை மத்திமம் எனவும் சாந்தம் எனவும் கூறப்படும். இதனை நிலையில்லா மெய்ப் பாடுகளில் தொல்காப்பியனார் அடக்கியுள்ளார். (பொ. 260 பேரா.) நடுவுநிலையாவது, கூறப்பட்ட வீரம் அச்சம் முதலாகிய எண்வகைச் சுவையொடும் தான் கலவாது தனித்திருக்கும் சிறப்பினை உடையது. தன்மேல் சந்தனம் பூசுபவர்மாட்டும் தன் உடலை வாள்கொண்டு துணிப்பவர்மாட்டும் ஒரே வித மனநிலையொடு கூடியிருத்தலே நடுவுநிலையாகும். இந்நிலை காமம் வெகுளி மயக்கம் மூன்றும் நீங்கிய தாபதர் சாரணர் சமணர் மாசற்ற முனிவர் அறிவர் முதலியோர்கண் நிகழ்வது. அவர்களிடம் வீரம் அச்சம் முதலிய எண்வகைச் சுவையும் நிகழா. இன்ப துன்பங்களில் சமநோக்குக் கொள்ளும் இச்சுவை தனித்துக் கூறப்பட்டுள்ளது.(245 இளம். உரைமேற்) ‘சமநிலை உலகியல் நீங்கினார் பெற்றி ஆதலின் உலக வழக்குப் பற்றிய இயற்றமிழ் இலக்கணத்தில் இம்மெய்ப்பாடு ஏனையவற்றொடு கூட்டிச் சிறப்பித்து ஓதப்பட்டிலது. (251 பேரா.) சமநிலை என்னும் மெய்ப்பாடு (2) - சமநிலை என்னும் மெய்ப்பாட்டினுள் ஏதேனும் விகாரம் உண்டாயின் அது வீரம் அச்சம் முதலிய ஏனைய எண்வகை மெய்ப்பாட்டினுள் அடங்கும். (தொ. பொ. 251 பேரா.) நடுவுநிலை என்பது ஒன்பது சுவையுள் ஒன்று என நாடக நிலையுள் வேண்டப்படும் சமநிலை. அஃதாவது செஞ்சந் தனத்தைப் பூசினும் உடலைச் செதுக்கினும் பிளப்பினும் மனம் நிலைபேறு குலையாது இன்பதுன்பங்களில் செல்லாது ஒரு நிலையிலேயே இருக்கும் நிலை. அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினார்கண்ணே நிகழ்வது. அது சிறுவரவிற்றாக லின் நிலையில்லா மெய்ப்பாடுகளுடன் சேர்த்தெண்ணப் பட்டது. (தொ. பொ. 260 பேரா.) நடுவுநிலை ஐம்புலன் அடக்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமவெகுளி மயக்கத்தினின்றும் நீங்கியவராதலால் யாவரும் கண்டஞ்சும் இயமனுக்கும் இவர் அஞ்சார்; எத்துணை இளிவரல் காணினும் இழித்துக் கூறார்; கல்வி நிறைந்திருந் தும் அதனைப் பொருளாகக் கொள்ளாத காரணத்தால் பெருமிதம் காட்டார்; புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்பன நிலையில் பொருள்கள் என அறிவராதலின் அவற் றினைக் கண்டு வியப்புறார்; துன்பம் வந்தெய்தாத் தூய உள்ளத்தராகிய இவர் இன்பத்தை விழையார் ஆதலின், சமநிலை எனப்படும் நடுவுநிலை பொருந்தி நிற்கும் நல்லோ ரிடத்து, ‘நகையே அழுகை இளிவரல் மருட்கை, அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று, அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப’ எனத் தொல்லாசிரியர் வகுத்துக் கூறிய எண்வகை மெய்ப்பாடும் நிகழாவாம்; ஒரோவழி நிகழு மிடத்துக் காமமின்றி அருளே பற்றுக்கோடாக நிகழும் என்பது. (ம. சூ. பக். 5, 6) இத்தகைய மனநிலையாகிய நடுவுநிலை உலகில் அருகியே காணப்படுதலின், உலகில் பெருவரவிற்றாக நிகழும் நகை அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டொடும் இதனைச் சேர்க்காது, நிலையில்லா மெய்ப்பாடுகளாகிய ‘உடைமை இன்புறல்’ (தொ. பொ. 260 பேரா.) என்பவற்றொடு தொல் காப்பியனார் சேர்த்துவைத்துள்ளார். சமம் (3) - இது சமநிலை எனவும்படும். ஐம்புலன்களிலும் பற்றற்று விளங்கும் நல்ல நிலைமை. தயையும் பொறுமையும் விளங்கும் இயல்பும் இச்சுவையே. ‘சமநிலை’ எனப்படும் மெய்ப்பாடு காண்க. (நாடக. 46, 47) சாந்தச் சுவை - மகிழ்ச்சிக்குரிய செயற்கண் மகிழ்வும், துயரத்திற்கு உரிய செயற்கண் அவலமும் கொள்ளாது இன்பத்தையும் துன்பத் தையும் சமமாக நோக்கும் மனஅமைதியே சாந்தமாவது. தண்டியலங்காரம் (70) சாந்தம் நீங்கலாக ஏனைய எட்டுச் சுவைகளையே கூறிற்றேனும் சாந்தமும் சுவையணியுள் தழுவப்படும். எ-டு : ‘மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதினும் இத்தி ருத்துறந்(து) ஏகென்ற போதினும் சித்தி ரத்தின் அலர்ந்தசெய் தாமரை ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள்’ (கம்பரா. 5088) நாட்டாட்சியைத் தந்தையார் நல்கியபோதும், “காட்டிற்குச் செல்” என்று தாயார் ஆணையிட்டபோதும், இராமன் மகிழ்ச்சியோ வருத்தமோ உற்றிலனாயிருந்தான் என்னும் இதன்கண் சாந்தச் சுவை அமைந்துளது. இதனை மாறனலங் காரம் சாந்தரதம் என்னும் (மா. அ. 198 உரை) சமநிலை, நடுவுநிலை என்றும் இது பெயர் பெறும். சிங்காரம் - சிருங்காரம்; நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. உவகை என்பதும் அது. சிதைவு பிறர்க்கின்மை - தலைவனை நோக்கித் தன்னுள்ளம் சிதைந்த தன்மையினைப் பிறர் அறிவுறாதவாறு தலைவி மறைத்துக் கோடல். தலைவனைக் கண்டு அச்சத்தாலும் நாணத்தாலும் நெற்றி யில் வியர்வை துளிக்க, அவனுடைய குறிப்புக்களான் தனது சிரிப்பினை வெளிப்படுத்தற்கு வாய்ப்பு நேர்ந்துழியும் அதனை மறைத்துக்கொண்ட தலைவி, தன்னுள்ளம் சிதைந்து நிறை அழிகின்ற செய்தி புறத்தார்க்குப் புலனாகாமல் நெஞ் சினை அடக்கிவைத்துக்கொள்ளுதல். அவள் தன் மனத்தை அடக்கிக் கொண்டிருக்கும் செய்தி தலைவனறிய வெளிப் படும். தலைவன் தன்மனம் சிதைந்ததைத் தலைவிபோல மறைக்க முயலாது வெளிப்படையாக உணர்த்திவிடுவான். (தொ. பொ. 261 பேரா.) இது காட்சி என்ற முதல்அவத்தையின் நான்காம் மெய்ப் பாடு என்பர் இளம்பூரணர் (தொ. பொ. 257) களவு என்னும் கைகோளில் புணர்ச்சிக்கு முன் நானான்காக நிகழும் முக்கூற்றுப் பன்னிரு மெய்ப்பாடுகளில் இது முதல் கூற்றின் நான்காம் மெய்ப்பாடு என்பர் பிறர். சிறப்பொடு வரும் மெய்ப்பாடுகள் - சினம், பேதைமை, சகிப்புத் தன்மை, நல்குரவு என்னும் நான்கும் பொதுவாக மக்களுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் எனினும், ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் காரணத்தான் அவை வரின் அமைவுடையன ஆகும். எ-டு : ‘தொடிய எமக்குநீ யாரை’ (கலி. 88) ‘என்னருகே வந்து என்னைத் தீண்டுதற்கு நீயார்?’ என்று தலைவி சினம் பற்றிக் கூறுவது, அவளது காதலைச் சிறப்பித்தலான் அமைந்தது. ‘செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்(று) அவையெல்லாம் பொய்யாதல் யான்யாங்(கு) அறிகோ?மற்று ஐய! அகல்நகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன் மகள்அல்லை மன்ற இனி.’ (கலி. 19) ‘கழிகாதன்மையால் நின்னை உள்ளவாறு அறிந்திலேன்’ என்ற தலைவியது பேதைமை, அவளது காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது. ‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ பெறவரும் பொழுதொடு பிறங்(கு)இணர்த் துருத்திசூழ்ந்(து) அறல்வாரும் வையைஎன்று அறையுநர் உளராயின்’ (கலி. 30) “இளையவராம் பரத்தையரொடு வையைத்துறையில் விழாக் காலத்தே நீராட்டு அயர்வானோ?” என்று தலைவனிடத்துத் தலைவி கொள்ளும் இந்நிம்பிரி அவரொடும் விளையாடு வான் எனப் பொறாமை கூறியும், “அவன் இவ்விடத்து என்பால் அடைதல் வேண்டும்” எனக் காதலைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது. ‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் ... ... ... ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி ... ... ... கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப் பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே’ (நற். 110) தனது குடும்பம் வறுமையுற்றமையான் என நல்குரவு கூறியும், சிறுவன்மையுடையளாய் இல்லறம் நிகழ்த்தும் காதல் வாழ் வினைச் சிறப்பித்து வருதலின் அமைந்தது. (தொ. பொ. 245 நச்.) சிறுமை - இது மருட்கை என்னும் மெய்ப்பாட்டுக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது. சிறுமை என்பது கடுகின்கண் பல துளை போலும் மிகவும் நுண்ணியன கண்டு வியத்தல். (தொ. பொ. 251 இள.) இறப்பச் சிறியன கண்டு வியத்தல். (255 பேரா.) (எடு) தலைவியின் இடையினைக் கண்ட தலைவன் அது மிகவும் நுண்ணிதாயுள்ளது என்று கருதுவது பிறன்கண் தோன்றிய சிறுமை பற்றிய வியப்பு. (பேரா.) சீதமுற்றோன் அவிநயம் - துன்பம் மிக்க உள்ளத்தொடு தடுமாறுதல், ஈரமாகிய போர்வையை விடுத்துக் காய்ந்த போர்வையை வேண்டல், வெயிலிலும் நெருப்பின் அருகிலும் இருத்தலை விரும்புதல், கைகளை உரசிக் கொள்ளுதல், முனகியும் பெரு மூச்செறிந்து கொண்டும் பேசுதல் முதலாயின. இவை அடியார்க்கு நல்லார் காட்டும் அவிநயம். (நாடக. 253 உரை) சுவை (1) - எப்பொழுது எச்சுவை தோன்றும் என்ற காலவரையறை இன்றியும் பிறர் தூண்டுதல் இன்றியும் இயற்கையாகவே ஒருவனுக்குத் தோன்றும் இச்சுவையுணர்வு மனக்கிளர்ச்சி யால் நேர்ந்து எழும். அது பிறர் மனத்தில் உடனே தோன்றும் உணர்ச்சியால் (அநுதாபத்தால்) வெளிப்படும். இதற்கு வியப்பே உயிர் போன்றது. மனத்தின்கண் தோன்றும் கிளர்ச்சி வெளிப்பட்டுத் தோன்றும் வகையில் சுவை இயலும். அஃது உவகை, பெருமிதம், நகை, சமம், வெகுளி, வியப்பு, இழிப்பு, அவலம், அச்சம் என ஒன்பது. இஃது ஆரியப் புலவோர் கருத்து. (நாடக. 38, 39) இனிச்சுவையென்பது சிருங்காரம் முதலாகவுடைய நாடகச் சுவை ஒன்பதும் எனக் கொள்க. (வீ. சோ. 106 உரை) உவகை - காமம் முதலிய மகிழ்ச்சி. பெருமிதம் - வீரம்; நகை - சிரிப்பு; சமம் - சமநிலை, சாந்தம்; வெகுளி - கோபம்; வியப்பு - அதிசயம்; இழிப்பு - இளிவரல், அவலம் - அழுகை; அச்சம் - பயம். இவற்றை முறையே சிருங்காரம், வீரம், ஆசியம், சாந்தம், ரௌத்திரம், அற்புதம், குச்சை, சோகம், பயானகம் என்பர் வடநூலார். (நாடக. 39 உரை) சுவை (2) - நாவினால் நுகரப்படும் கைப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன. அன்றிக் கண்ணானும் செவி யானும் உணரப்படும் நகை அழுகை இளிவரல் மருட்கை அச்சம் வீரம் உவகை வெகுளி என்னும் எண்வகைப்பட்ட சுவைகள்; இவற்றொடு நடுவுநிலையைச் சேர்த்துச் சுவை ஒன்பது என்றலும் உண்டு. இச்சுவைகோடல் மனித இனத் திற்கேயுரிய தனிச்சிறப்பு ஆதலின் ஏனைய உயிர்களுக்குரிய நாச்சுவையினின்றும் இச்சுவைகள் பிரித்து ஓதப்பட்டன. செவியான் பெரும்பாலும் செய்யுள்கள் வாயிலாக உணரும் இச்சுவைகளை அறியாதார் ‘செவியின் சுவை யுணரா வாயுணவின் மாக்கள்’ (குறள் 420) என இழிக்கப்பட்டனர். சுவையென்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதொரு விகாரம். (தொ. பொ. 245. இள.) சுவையாவது நகைமுதலிய சுவைக்குரிய பொருளும் சுவைப் பேறுடைய பொறியும் கூடியவழி நிகழும் மன உணர்ச்சி என்பார் பேராசிரியர். (தொ. பொ. 249) வடநூலார் சுவையினை இரசம் என்ப. உவகை, அழுகை, சாந்தம் என்னும் மூன்றும் மென்மையான சுவைகள்; வெகுளி, இளிவரல், வீரம் என்னும் மூன்றும் வன்மையான சுவைகள்; நகை, வியப்பு, அச்சம் என்னும் மூன்றும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்ட சுவை என்பது ஒரு சாரார் கருத்து. உவகையும் அழுகையும் மிகுமென்மைச் சுவைகள்; வெகுளி யும் இளிவரலும் மிகு வன்மைச் சுவைகள்; நகையும் நடுவு நிலையும் மருட்கையும் சற்றுமென்மையுடைச் சுவைகள்; பெருமிதமும் அச்சமும் சற்று வன்மையுடைய சுவைகள் என்பது மற்றும் ஒரு சாரார் கருத்தாம். (பேராசிரியர் - கணேசய்யர் முன்னுரை) இவை பாடல்களில் வருமிடத்து, அவ்வச் சுவைக்கு ஏற்ப வன்மை மென்மை இடைப்பட்டன ஆகிய சொற்களாலேயே அவ்வப் பாடல்கள் இயற்றப்படுவது சிறந்தது. (முன்னுரை) நகை, வியப்பு (-மருட்கை), உவகை மூன்றும் பெரும்பாலும் அகத்திணையினைச் சாரும். வீரம், வெகுளி, அவலம், அச்சம் இளிவரல் ஐந்தும் பெரும்பாலும் புறத்திணையைச் சாரும். (ம. சூ. பக். 6) சுவை அவிநயம் - உவகை முதலாய ஒன்பான் சுவைக்கும் உரிய அவிநயங்கள். தனித்தனித் தலைப்பிற் காண்க. (நாடக. 242) சுவை இருவகை நிலத்தின் இயல்வது - சுவைக்கப்படும் பொருளும், சுவைக்கும் பொறியும் ஒன்று சேரின்அன்றி எவ்வகைச் சுவையும் பிறவாது; ஆதலின், சுவைப்பொருள் சுவைக்கும் பொறி என்னும் இரண்டும் சேரும்போது தோன்றுவது சுவை. சுவை, உள்ளத்தில் எழும் குறிப்பு, அது புறத்தார்க்குப் புலனாம் வகை உண்டாகும் விறல் - என இம்மூன்றும் காரண காரிய முறையில் தோன்றுவன. ஆதலின் மெய்ப்பாடுகள் இவை மூன்றனையும் ஒருங்கே பெறும். (நாடக. 231, 232) விறல், மெய்ப்பாடு, சுவை - ஒரு பொருளன. சுவைக்கு நிலைக்களன்கள் - சுவைப்படும் பொருள், சுவைஉணர்வு, குறிப்பு, சத்துவம் என்பன நான்கும் சுவைக்குரிய நிலைக்களன்களாம். பேயையோ புலியையோ கண்ட ஒருவன் அஞ்சியவழி, மயக்கமும் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பும் உண்டாகின்றன. அச்சத்திற்கு ஏதுவாகிய புலியும் பேயும் சுவைப்படுபொருள்; அவற்றைக் கண்டகாலம்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவையுணர்வு; அதன்கண் வரும் மயக்கமும் கண்ணை மூடிக் கொள்ளுதலும் குறிப்பு; நடுக்கமும் வியர்த்தலும் மெய்ப்பாடு. இவற்றுள் நடுக்கமும் வியர்த்தலும் ஆகிய மெய்ப்பாடுகளால் ஒருவனுக்கு உண்டான அச்சம் மற்றவர்க்கும் புலப்படும். (தொ. பொ. 245 இள.) சுவைக்குறிப்புக்கள் ஒன்பது - சுவைப்படுபொருளும் சுவையுணர்வும் ஒன்று கூடியவழி மனத்தின்கண் தோன்றி மலரும் கிளர்ச்சி சுவையாம். சிருங்காரம் முதலாவுள்ளனவே சுவையாவன. அவற்றை வீரக்குறிப்பு, பயக்குறிப்பு, உக்கிரக் குறிப்பு, சிருங்காரக் குறிப்பு, காருணியக் குறிப்பு, அற்புதக் குறிப்பு, புகழ்க் குறிப்பு, நகைக் குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு என ஒன்பதாகக் கூறுவர். (வீ. சோ. 106 உரை) சுவை கோடல் - இது சுவையுணர்வு எனப்படும். நகையும் அச்சமும் முதலாகிய உணர்வுகளை முற்காலத்து உலகியலான் அறிவான்ஒருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள் பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் சுவை எனப்படும் ஆதலின், சுவைப்படும் பொருளொடு சுவைக்கும் பொறி இணைந்து செயற்படுதல் சுவை கோடல் எனப்படும். வேம்பு என்னும் பொருளும் நா என்னும் பொறியும் சேராதவழிக் கைப்புச்சுவை பிறவாத வாறு போல, அப்பொருள்களைக் கண்டவழியல்லது நகையும் அச்சமும் முதலிய சுவைகள் தோன்றா. ஒழிந்த காமம் முதலாயினவும் அன்ன. இதனான் ‘இருவகை நிலத்தின் இயல்வது சுவையே’ என்றார் செயிற்றியனார். (தொ. பொ. 249 பேரா.) சுவைப்பொருளை ‘விபாவம்’ எனவும். சுவைநிலை அவி நயத்தை ‘°தாயிபாவம்’ எனவும் வடநூலார் கூறுப. (ம. சூ. பக். 116) சுவைப்படும் பொருள்களை ஐம்பொறிகளான் நுகர்ந்து சுவைக்குமாற்றிற்கு உதாரணங்கள் பின்வருமாறு. இவள் மேனி அணை போன்றது - இது பரிசத்தால் அறிந்து சுவைத்தது. இக்கனி அமுதம் போலும் - இது நாவால் உணர்ந்து சுவைத்தது. இவள் மேனி மாந்தளிர் போலும் - இது கண்ணால் உணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூவின் மணமுடையது - இது மூக்கால் உணர்ந்து சுவைத்தது. இவள் மொழி யாழிசை போலும் - இது செவியால் உணர்ந்து சுவைத்தது. சுவைகோடல் பற்றி வடநூல்கள் கூறுவன பின்வருமாறு : ஒருவன் ஒருபொருளைக் கண்டவிடத்து அப்பொருள் காரணமாக அவன் மனத்தில் நுண்மையாகத் தோன்றும் காதல் முதலிய சுவையின் முளை ‘°தாயிபாவம்’ (நிலையான மனக்கருத்து) எனப்படும். அச்சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள் ‘விபாவம்’ எனப்படும். அச்சுவைத் தோற்றத்தை வெளியே தெரியப்படுத்தும் உள்ள நிகழ்ச்சியாகிய குறிப்பு ‘அநுபாவம்’ எனப்படும். அச்சுவைத் தோற்றத்தின் விரிவாய் உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களாகிய மெய்ப்பாடுகள் ‘சாத்துவ பாவம்’ என்று பெயர் பெறும். மனவிகாரங்களாகிய மெய்ப் பாடுகள் வளர்வதற்குக் காரணமாய் அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவாகும் துணைமெய்ப்பாடுகள் ‘சஞ்சாரிபாவம்’ எனப்படும். அச்சுவைத் தோற்றம் வளர்ந்து அவனால் சுவைக்கப்படுத லினால் சுவை ‘இரசம்’ எனப் பெயர் பெறும். ஆதலின், ஒருவனிடத்துச் சுவைத்தோற்றமாவது விபாவங்க ளால் தோன்றி, அநுபாவங்களால் வளர்ந்து, சஞ்சாரிபாவங்க ளால் உறுதி பெற்று அவனால் சுவைக்கப்படுதலின் சுவை ஆகின்றது. °தாயிபாவம் எனப்படும் சுவைத்தோற்றம் ஒன்பது வகைப் படும். அவையாவன காதல், சிரிப்பு, துன்பம், கோபம், எழுச்சி (-முயற்சி) அச்சம், அருவருப்பு, வியப்பு, அடக்கம் என்பன. காதல்மாத்திரமன்றி உவப்பும் உவகைக்குக் காரணமாகும். இவை ஒருவனுள்ளத்தில் தோன்றியபோது நிலையாய்த் தடைப்படாமல் வளர்ந்து, பால் தயிரானாற் போலச் சுவை யாக மாற்றப்படுகின்றன. சுவையும், சிருங்காரம் (உவகை), ஹா°யம் (நகை), கருணை (அவலம்) உருத்திரம் (வெகுளி), வீரம் (பெருமிதம்), பயானகம் (அச்சம்), பீபத்சம் (இளிவரல்), அற்புதம் (மருட்கை), சாந்தம் (நடுவுநிலை) என ஒன்பது வகைப்படும். விபாவமும், ஆலம்பந விபாவம், உத்தீபந விபாவம் என இருவகைத்து. ஆலம்பந விபாவமாவது, ஒருவன் உள்ளத்தில் தோன்றும் சுவைத் தோற்றத்திற்கு நேரே காரணமாயுள்ள பொருளாகும். உத்தீபந விபாவமாவது, சுவைத் தோற்றத்திற்குக் காரணமா யுள்ள அடிப்படைப் பொருளைச் சார்ந்தும் சாராமலும் பொருந்தி நுட்பமான சுவைத்தோற்றத்தை வளர்க்கும் பொருள். இளம்பூரணரும் பேராசிரியரும் உள்ளத்தில் நிகழ்வதனைக் குறிப்பு என்றும், குறிப்புக்கள் தோன்றிய உள்ளத்தின் நிகழ்ச்சி யான் உடம்பில் உண்டாகும் வேறுபாடுகளைச் சத்துவம் என்றும் கூறுவர். வடநூலாருள் சிலர், உடம்பின் உருவினின்று தோன்றும் மனோதர்மத்தை அநுபாவம் (குறிப்பு) என்றும், உடம்பின் வழியாக வெளிப்படும் மனவிகாரங்களைச் சாத்துவிகம் என்றும் கூறுவர். சாத்துவிகபாவம் அநுபாவத்தினின்று வேறுபட்டதும் வேறுபடாததுமாய் இருத்தலின், அநுபாவத் தினுள் சாத்துவிகபாவம் அடங்கும் என்ற கருத்தும் உண்டாம். ஆகவே வடநூலார் கருத்துப்படி சுவைகோடல் கீழ்க்கண்டவற்றால் நிகழும். 1. °தாயிபாவம் - மனத்தில் தோன்றும் சுவையின் முளை 2. விபாவம் - சுவை தோன்றுவதற்குக் காரணமான பொருள் 3. அநுபாவம் - சுவையைத் தெரிவிக்கும் உள்ள நிகழ்ச்சி யாகிய குறிப்பு. 4. சாத்துவிக பாவம் - குறிப்பைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு. 5. சஞ்சாரிபாவம் - மெய்ப்பாடுகளை நிறைவுபடுத்தும் துணைமெய்ப்பாடு 6. இரசம் - சுவைத் தோற்றத்தைச் சுவைக்கும் சுவை. இவற்றைப் பாடல் ஒன்றில் காணுமாறு :- எ-டு : ‘ஆளை யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாஎன நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்’. (கம்பரா. 7271) இராமன், இராவணனுடன் நிகழ்த்திய முதல்நாள் போரில் அவன் யாவற்றையும் இழந்து தனியனாய் நின்ற நிலையை நோக்கி “இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று கூறித் திருப்பியனுப்பிய செய்தி கூறும் இராமாயணப்பாடல் இது. இதன்கண் யாவற்றையும் இழந்து தனியே நின்ற இராவ ணனைக் கொல்லாது இராமன் அவனை மறுநாள் போருக்கு வருமாறு சொல்ல எண்ணியது ‘°தாயிபாவம்’ என்ற சுவையின் முளை. இராவணன் - ‘ஆலம்பந விபாவம்’ என்ற சுவைக்கு நேர் சார்பான பொருள். இராணவன் தனிமை - ‘உத்தீபந விபாவம்’ என்ற சுவைக்கு நேரே சார்பான பொருளைச் சார்ந்தது. நாளைவா என்றல் - ‘அநுபாவம்’ என்ற உள்ளக்குறிப்பு. இரக்கம் - ‘சாத்துவிக பாவம்’ என்ற மெய்ப்பாடு. நீதிநெறியைப் பின்பற்றிய ஆராய்ச்சி - ‘சஞ்சாரிபாவம்’ என்ற துணை மெய்ப்பாடு. உயிர்க்கொடை பற்றிய வீரம் - ‘இரசம்’ என்ற சுவை. (பேராசிரியம் கணேசய்யர் முன். பக். 4, 5; 7, 8; 12.) சுவைத்துணை - உவகைச் சுவைக்குப் பொருந்தும் துணை களிப்பு (மகிழ்ச்சி); பெருமிதச் சுவைக்குத் துணை சிறுகோபம்; சமநிலைச் சுவைக்குத் துணை வெறுப்பு; பிறவற்றுக்கும் இவ்வாறே ஆய்ந்து கொள்ளுதல் வேண்டும். அவிநயத்தின் சிறப்பும், காட்சி நலம் அமைந்த களமும், பொருத்தமான காலமும் சுவையினை மேன்மேலும் ஓங்கி விளங்கச் செய்வன. சுவைகளில் சில ஒன்றோடொன்று இணைந்து இயன்றும் இன்பம் பயக்கும். பெருமிதமும் வெகுளியும் இணையும்; வியப்பும் அச்சமும் சேரும்; அவலமும் அச்சமும் கூடும்; உவகையும் நகையும் ஒன்றும். (நாடக. 55-57) தலைமையான சுவையை ‘அங்கி ரஸம்’ என்றும், இணைந்து வருவதை ‘அங்க ரஸம்’ என்றும் வடநூலார் கூறுப. சுவைப்பாகுபாடு - மென்சுவையும் வன்சுவையும் என்பன. 1. உவகைச் சுவையும், அவலச் சுவையும் மிகுமென்சுவைகள். 2. வெகுளியும், இழிப்பும் மிகவும் வன்மையான சுவைகள். 3. நகை, சமம், வியப்பு இம்மூன்றும் மென்சுவையைச் சார்ந்தன. 4. பெருமிதமும் அச்சமும் வன்சுவையினைச் சார்ந்தவை. 3, 4 ஆகிய பிரிவில் வந்தவற்றை மென்மை வன்மைகட்கு இடைப்பட்டவாகிய நடுவுநிலைச் சுவைகள் எனவும் கொள்ளலாம். (நாடக. 59, 60) சுவைப்பொருள் - நாவினால் நுகரும் அறுவகைச் சுவைகளுக்கும் முதலாகிய வேம்பும் மிளகும் புளியும் உப்பும் கடுக்காயும் கரும்பும் போல, நகை அச்சம் முதலிய சுவைகள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருள்கள். சூழ்ச்சி - சூழ்ச்சி - எண்ணம் ‘சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்’ - குறள் 445 என்னும் குறளில் சூழ்தல் எண்ணுதல் என்ற பொருளில் வந்துள்ளது. இதுவும் ஒரு மனநிகழ்ச்சி. (தொ. பொ. 256 இள.) சூழ்ச்சி என்பது சுழற்சி; அஃதாவது மனத்தடுமாற்றம். உலக வழக்கில் சூழ்வருவானைச் சுழல்வரும் என்று கூறுவதுண்டு. மனத்திலுள்ள சூழ்ச்சி யாதானும் ஒரு குறிப்பான் வெளிப் படுதலின் இதுவும் மெய்ப்பாடாயிற்று. (தொ.பொ. பேரா. 260) இது துணைமெய்ப்பாடு முப்பத்திரண்டனுள் ஒன்று. இதனை வடநூலார் கள் முதலியன உண்டார் செயலாகிய ‘மதம்’ என்பர். செத்தோன் அவிநயம் - அச்சமும் இழிப்பும் தரும் நிலையில் கிடத்தலும், பற்கள் இறுகச் சேர்ந்து வெளியே தெரிகின்றமையும், கைகால் முதலிய உறுப்புக்கள் விரைத்து இழுத்துக்கொண்டு இருத்த லும், வயிறு மெலிந்திருத்தலும், வெள்விழி வெளியே தெரியக் கருவிழி மறைந்திருத்தலும் போன்றவை. (நாடக. 253 உரை) இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. செல்வம் - இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டுக்குரிய குறிப்பு நான்கனுள் முதலாவது. செல்வம் - செல்வநுகர்ச்சி (தொ. பொ. 255 இள.) செல்வம் என்பது நுகர்ச்சி (259 பேரா.) “பெரும் பொருளீட்டி அச்செல்வத்தான் இன்புறத்தக்கது இவ்வில்லறம்” (கலி. 12) என்று தலைவன் கூறிய கூற்றில், செல்வம் உவகைப் பொருளாமாறு உணர்த்தப்படுகிறது. (பேரா.) செல்வமாவது மனத்தை மகிழ்விக்கும் பொருள்களுக்குப் பொதுப்பெயர். எக்காலத்தும் பிறரை வருத்திப் பெறும் செல்வம் உவகைப்பொருள் ஆகாது. (தொ. பொ. மெய்ப். 11 பாரதி) சொல்லப்பட்ட பெருமிதம் - ‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றதனால் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்பது. அது, நலங்கிள்ளி தன் வஞ்சினத்தில் “மாசற்ற நெஞ்சத்தான் காதல் கொள்ளாத பரத்தையர் தொடர்பான் என் மார்பின் மாலை வாடுவதாகுக!” (புறநா. 73) என்ற கூற்றில், அவன் தன்னை உள்ளன்புடன் விழையும் மகளிரின் தொடர்பையே விரும்புபவனாகி அன்புடைக் காம வாழ்க்கையே நடத்தினன் என்று அறியப்படும். (தொ. பொ. 257 பேரா.) சோகம் - அவலச் சுவை (வீ. சோ. 96 உரைமேற்.) சோம்பினோன் அவிநயம் - விரல்களை நொடித்தவண்ணம் மிகுதியாகக் கொட்டாவி விடுதலும், சோம்பல் முரித்தலும் (மூரி நிமிர்தலும்), சிடு சிடுவென இருத்தலும், காரணமின்றி முடங்கிப் படுத்துக் கிடத்தலும், நோய் இல்லாவிடினும் சோர்வுடன் நடத்தலும் போன்றவை சோம்பல் உடையவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன. (நாடக. 253) ஞ ஞஞ்ஞையுற்றோன் அவிநயம் - ஞஞ்ஞை - மயக்கம். பற்கள் இறுகிப் பேச்சிழந்த நிலையும், நுரை வழியும் கூம்பிய வாயும், மற்றவர்க்குச் சொல்லுபவன் போலத் தொடங்கிச் சொல்ல உணரா நிலையும், கண்விழிகள் வெளியே தெரிந் தும் எதையும் காணாத நிலையும், துன்பமுற்றுச் செயலற்ற நிலையும், முகத்தின் ஒளி நீங்கலும், இவை போன்றன பிறவும் மயக்கமுற்று விழுந்தவனுக்குரிய அபிநயங்கள். இவை அடியார்க்குநல்லார் காட்டுவன (நாடக. 253 உரை). த தம்இறை - இஃது அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இறுதியாவது. இறையெனப்படுவார் தந்தையும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொ. பொ. 256 பேரா.) எ-டு : ‘அரசன் தம்மை நிமிர்ந்து பார்க்கும் பார்வைக்கு அஞ்சிக் குறுநில மன்னர்கள் அவனுடைய திருவடி களையே நோக்கி இருக்கின்றனர்’ என்பது தம் இறை பொருளாகிய அச்சம். (பேரா.) தம் இறை - தவறு செய்தவரைத் தண்டிக்கும் மன்னன். தாம் செய்யும் தவறுகள் பற்றியும், அத்தவற்றான் அரசன் தம்மைத் தண்டிப்பானே என்ற எண்ணம் பற்றியும் அச்சம் நிகழும். (பேரா.) கொலை களவு கள் காமம் பொய் என்பனவற்றை நிகழ்த்தின வர்களுக்கு அரசனால் அச்சம் வருதலின், அரசன் அஞ்சப் படும் பொருள் ஆயினான். (தொ. எ. 252 இள.) தம்மிறை - தம் இறை = அரசன்; தம் மிறை - தம் தவறுகள் என இருவகையாகப் பொருள் கொள்க. (மெய்ப். 8 பாரதி) தலை நோவு உற்றோன் அவிநயம் - (1) ஒரு நிலையில் இல்லாமல் தலை ஆடிக்கொண்டே இருத்தல், (2) எந்த இடத்திலும் நேராக அமர முடியாத நிலை அடைதல், (3) உற்சாகம் தளர்ந்திருத்தல், (4) நெற்றியை விரல் களுக்கு இடையில் கொண்டு நெருக்குதல், (5) கண்கள் நோவி னால் வருந்திச் சுருங்குதல் முதலியன. இவை அடியார்க்கு நல்லார் காட்டுவன. (நாடக. 253) தலைமயிர் முடிநெகிழ்தல் - தலைவன் தலைவியின் உள்ளம் தன்னிடத்து ஈடுபட்டதனை அறிந்து அவள் மெய்யைத் தீண்டியவழி, இதற்கு முன் அறியாத இப்புதிய பரிசத்தால் தன்னுள்ளத்து நிகழ்ந்த வேறுபாட்டைத் தலைவி அடக்கிக் கொள்ள முயல்வாள். அப்பொழுது உடம்பொடு தொடர்புடைமையும் தொடர் பின்மையும் என்ற நிலையிரண்டு முடைய மயிர்முடி மனத்தில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான் அவிழ்தலாம். (262 பேரா.) இதனை வேட்கை என்ற இரண்டாம் அவத்தையின் முதல் மெய்ப்பாடு என்பர் இளம்பூரணர். களவில் புணர்ச்சிக்கு முற்பட்ட நான்குநான்கு பகுப்பினவாகிய முக்கூற்றுப் பன்னிருமெய்ப்பாடுகளுள் இஃது இரண்டாம் கூற்றின் முதல் மெய்ப்பாடு என்பர் ஏனையோர். தலைவிக்குத் தலைவன் குறிப்பு அறிந்தவழி நிகழ்வன - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே தலைவியும் உள்ளத்துக் கொள்வாளாயின் ஒருவரை ஒருவர் சந்தித்த லாகிய புரிமுகம் புரிந்த பின்னர், (1) பொறிநுதல் வியர்த்தல், (2) நகு நயம் மறைத்தல். (3) சிதைவு பிறர்க்கின்மை, (4) கூழை விரித்தல், (5) காதொன்று களைதல், (6) ஊழணி தைவரல், (7) உடை பெயர்த் துடுத்தல், (8) அல்குல் தைவரல், (9) அணிந்தவை திருத்தல், (10) இல்வலியுறுத்தல், (11) இருகையும் எடுத்தல் என்னும் பதினொரு மெய்ப்பாடுகளும் தலைவிக்கு முறையே நிகழும். (தொ. பொ. 97 நச்.) தலைவனது குறிப்பறிந்து அதற்கு உடன்பாட்டைத் தன் கண்ணினால் தெரிவித்த பின்னரும், தலைவி பெண்மையால் கூற்று நிகழாது. அவள் தன் வேட்கையைக் கண்ணாலேயே குறிப்பிடுவாள். (94 இள.) தறுகண் - இது பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டிற்குரிய குறிப்பு நான்கனுள் இரண்டாவது. தறுகண் - அஞ்சத்தக்கன கண்டவழி அஞ்சாமை. மடலேறும் தலைவன், “யான் போர்க்களத்தில் வலிய யானைமேல் ஏறிப் போர் செய்ய வல்லவன்” (கலி. 141) என்று கூறுவது அவன் தறுகண்மை பற்றிய பெருமிதத்துக்கு எடுத்துக்காட்டு. (தொ. பொ. 257 பேரா.) தன்மை - தன்மை என்பது சாதி இயல்பு. பார்ப்பார், அரசர், இடையர், குறவர் என்று இன்னோர் மாட்டு ஒருவரை ஒருவர் ஒவ்வாமல் கிடக்கும் இயல்பு. அது நடை உடை பாவனைகளால் மெய்க்கண் கிடந்து வெளிப் படுதலின் மெய்ப்பாடாயிற்று. பார்ப்பான் வயலைக்கொடி போன்று வாடிய இடையினை யும், தளர்ந்த நடையினையும் உடையன் (புற நா. 315) எனவும், அரசன் பகைவர் விடுத்த அம்பின் தழும்புபட்ட பரந்த அழகிய மார்பினன் (புறநா. 13) எனவும், இடையன் சாயம் ஏற்றிய ஆடையையும் காயாம் பூவினாலாகிய முடிமாலை யையும் ஆனிரைகளை ஓட்டுதற்குரிய கோலினையும் உடையன் (கலி. 108) எனவும், குறவன் தேனும் மயிற்பீலியும் கொண்டு வருபவன் எனவும் நடைஉடை செயல் முதலியன கொண்டு இன்னான் என்று உணர உதவும் மெய்ப்பாடு. (தொ. பொ. 256 இள.) தன்மை சாதித்தன்மை, அது பார்ப்பாராயின் அழுந்த மிதியாது மெல்லென அடியிட்டுக் குறுநடை கொண்டு வந்து சேறலும், அரசராயின் நிமிர்த்திய கழுத்தொடும் முன் னோக்கிய மார்பொடும் நடந்து சேறலும், இடையராயின் ஆடையில் இலை முதலியன இடுதற்கு வளைந்த மடியை விட்டுக் கட்டிக்கொண்டு கையில்