16 தமிழ் இலக்கிய அகராதி முன்னுரை தமிழ் மொழி அகராதி செய்தவர்கள் மேல் நாட்டவர்களே யாவர். (Percival) பாதிரியார் ஆறாயிரம் தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழி பெயர்ப்போடு வெளியிட்டார். இந்நூலின் இரண்டாவது பதிப்பு 1874-ல் சென்னையில் வெளிவந்தது. யோன் லசர° (John Lazarus) என்பார் பழமொழி அகராதி ஒன்றை 1894-ல் வெளியிட்டார். தமிழ் இலக்கிய அகராதி ஒன்று செய்வதற்கு வேண்டிய முயற்சிகள் நீண்ட காலமாகச் செய்யப்பட்டு வந்தன. இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையிலுள்ள தமிழ்ப் புத்தங்களின் வரிசை ஒன்று டாக்டர் போப், பார்நெட் (L.D. Barnett) என்பவர்களால் எழுதப்பட்டு 1909இல் அச்சிடப்பட்டது. அதில் நூலாசிரியர்களின் பெயர்களும், நூல்களும் அகர வரிசையிற் காணப்படுகின்றன. 1865இல் யோன் மூர்டொச் (Johm Murdoch) என்பார், அச்சிடப்பட்ட தமிழ் நூல்களை வகைப்படுத்தி அச்சிட்டுள்ளார். சென்னை நகர் பொது நூல் நிலையத்தில் 1867 முதல் 1889வரையும் சேகரிக்கப் பட்டிருந்த நூல்கள் வகைப்படுத்தி 1894இல் அச்சிடப்பட்டுள்ளன. இவையெல் லாம் தமிழ் இலக்கிய அகராதி ஒன்று அமைத்தற்கு வேண்டிய எத்தனங்களே யாகும். இப்பணி மிக்க பிரயாசைக்குரிய தாதலாலும், இது போன்ற பணிகளைச் செய்வதால் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லையாதலினாலும் தமிழ் அறிஞர் இம் முயற்சியில் நுழைந்திலர் போலும்! இவ்வகை நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டுமென்னும் ஆவல் நம்மிடத்து நீண்ட காலம் இருந்து வந்ததால் நம் ஆற்றலுக்கேற்பப் பல வகையில் முயன்று இந்நூலை தொகுத்து வெளியிடலானோம். சென்னை 01.01.1953 ந.சி.கந்தையா விளக்கக் குறிப்பு ச.கை. - தஞ்சாவூர் சரசுவதி மகால் புத்தக நிலையக் கையெழுத்துப் பிரதி. * - சென்னை அரசாங்க நூல் நிலையக் கையெழுத்துப் பிரதி. அ.பு. - அச்சிட்ட புத்தகங்கள். இது டாக்டர் போப் பெர்னட் என்போரால் தொகுக்கப்பட்டு 1909-ல் அச்சிடப்பட்ட நூலைக் குறிக்கும். ( ) - இறுதியில் இக்குறியினுள் உள்ள எண் அச்சிடப்பட்ட ஆண்டைக் குறிக்கும். நட்சத்திரக் குறி இருப்பின் நூல் ஆசிரியரை அல்லது பதித்தவரைக் குறிக்கும். - பின் சேர்ப்பில் காணப்படும் நட்சத்திரக் குறி சரசுவதி மகால் கையெழுத்துப் பிரதிகளின் அறிக்கையைக் குறிக்கும். தமிழ் இலக்கிய அகராதி அ அகத்தியம் - அகத்தியர் - ? அகத்தியம் அம்மை சாத்திரம் - வைத்தியம்* அகத்தியம் 600 - (ச.கை) அகத்தியம் அனுபோக சூத்திரம் - வைத்தியம்* அகத்தியம் 1500 - (ச.கை) அகத்தியம் ஆறாதாரம் எட்டு - வைத்தியம்* அகத்தியம் இரசமணி 14 - யோகம்* அகத்தியம் இரசவாதம் 35 - இரசவாதம்* அகத்தியம் இரத்தினச் சுருக்கம் - வைத்தியம்* அகத்தியம் இலட்சண காவியம் - (அ.பு) அகத்தியம் உட்கருவு சூத்திரம் - வைத்தியம்* அகத்தியம் உபதேச ஞானம் 51 - ஞானம்* அகத்தியம் எட்டு - இரசவாதம்* அகத்தியம் கரிசல் 300 - (ச.கை.) அகத்தியம் கருக்கிடைச் சூத்திரம் 12 - இரசவாதம்* அகத்தியம் கர்ம காண்டம் 300 - வைத்தியம்* அகத்தியம் கர்ம காண்டம் 30-(ச.கை) அகத்தியம் கர்ம சூத்திரம்- (ச.கை.) அகத்தியம் கலைஞான சூத்திரம் 1200-யோகம், இரசவாதம்* அகத்தியம் கலைஞான சூத்திரம் 120-யோகம், இரசவாதம்* அகத்தியம் கலைஞானச் சுருக்கம் 12 - இரசவாதம்* அகத்தியம் களங்கு அறுபது - வைத்தியம்* அகத்தியர் கற்பமுறை சூத்திரம் 10 - இரசவாதம்* அகத்தியர் காயச்சித்தி வழலைச் சூத்திரம் 40 -இரசவாதம்* அகத்தியர் கிரமபர அட்ட கர்மா - மந்திரம்* அகத்தியர் குணவாகடம்- (ச.கை.) அகத்தியர் குரு நாடி - (ச.கை.) அகத்தியர் சகல கலை ஞானச் சுருக்கம் 120 - வைத்தியம்* அகத்தியர் சகல கலை ஞானபீடம் 1200 - வைத்தியம்* அகத்தியர் சரக்கு நூறு - வைத்தியம்* அகத்தியர் சர்ப்பாரூடம் - (ச.கை.) அகத்தியர் சவுக்காரத் திறவு கோல் - இரசவாதம்* அகத்தியர் சவுக்காரத் திறவு கோல் 16 - இரசவாதம்* அகத்தியர் சாத்திரம் 20 - வைத்தியம்* அகத்தியர் சாலத் திரட்டு - சாலம்* அகத்தியர் சூத்திர நிகண்டு 116 - வைத்தியம்* அகத்தியர் சூத்திரம் 200 வாதம்- இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 205 - வைத்தியம்* அகத்தியர் சூத்திரம் 5 - இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 50 - இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 48 - வைத்தியம், இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 100 - இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 10 - சாலம்* அகத்தியர் சூத்திரம் 16 - வைத்தியம்* அகத்தியர் சூத்திரம் 12 - இரசவாதம்* அகத்தியர் சூத்திரம் 36 - (ச.கை.) அகத்தியர் செந்தூரம் 300 - (ச.கை.) அகத்தியர் ஞானகாவிய சூத்திரம் - ஞானம்* அகத்தியர் ஞானகாவியம் ஒன்று - ஞானம்* அகத்தியர் ஞான காவியம் 1000 - (அ.பு.) அகத்தியர் ஞானம் 100 - (அ.பு.) அகத்தியர் ஞானம் முதலியன - (அ.பு.) அகத்தியர் ஞானம் 12 - (அ.பு.) அகத்தியர் ஞானம் 36 - (அ.பு.) அகத்தியர் ஞானவுலா - இரசவாதம்* அகத்தியர் தண்டகம் 100 - (ச.கை.) அகத்தியர் தீட்சா விதி 200 - (ச.கை.) அகத்தியர் தீட்சை நாடி சூத்திரம் - வைத்தியம்* அகத்தியர் தீட்சை விதி - சைவம்* அகத்தியர் தேவாரத்திரட்டு - இது சிவாலய முனிவர் பொருட்டு அகத் தியரால் தேவராத்திலிருந்து திரட் டப்பட்ட 25 பதிகங்களை யுடையது. (அப்பர் 8 பதிகம், சுந்தரர் 7 பதிகம், சம்பந்தர் 10 பதிகம்). அகத்தியர் நயன விதி - (ச.கை.) அகத்தியர் நாலு காண்ட வைத்திய காவியம் - (அ.பு.) அகத்தியர் நிகண்டு 116 - இரசவாதம்* அகத்தியர் 125 - மந்திரம்* அகத்தியர் பச்சை 16 - வைத்தியம்* அகத்தியர் பஞ்சபட்சி சூத்திரம் - சோதிடம்* அகத்தியர் பட்சிணி 125 - மந்திரம்* அகத்தியர் பட்சிணி 132 - (ச.கை.) அகத்தியர் பதார்த்த குண சிந்தா மணி - (ச.கை.) அகத்தியர் 16 - வைத்தியம்* அகத்தியர் பரிபாஷை - இரசவாதம்* அகத்தியர் பரிபாஷை ஐந்தாங் காண்டம் - இரசவாதம்* அகத்தியர் பரிபூரணம் 51 - ஞானம்* அகத்தியர் பற்ப முறை 205 - (ச.கை.) அகத்தியர் பின்னூல் 80 - வைத்தியம்* அகத்தியர் புட்ப மாலிகை 51 - இரச வாதம்* அகத்தியர் புராண காவியம் - (அ.பு.) அகத்தியர் புனைசுருட்டு 18 - மந்திரம்* அகத்தியர் பூசாவிதி 200 - (ச.கை.) அகத்தியர் பூரண சூத்திரம் 211 - யோகம் இரசவாதம்* அகத்தியர் பூரண சூத்திரம் 16 - இரசவாதம்* அகத்தியர் பூரணம் 400 - வைத்தியம்* அகத்தியர் மாந்திரிக நிகண்டு - சாலம்* அகத்தியர் மாந்திரீய காவியம் 1000 - (அ.பு.) அகத்தியர் 36 - வைத்தியம்* அகத்தியர் முப்பு 51 - வைத்தியம், இரசவாதம்* அகத்தியர் முப்புச் சூத்திரம் 200- (ச.கை.) அகத்தியர் முப்பு 16 - வைத்தியம்* அகத்தியர் முப்பு வகைப் பாடல் - இரசவாதம்* அகத்தியர் முன்னூல் 80 - வைத்தியம்* அகத்தியர் மெய்ச் சுருக்க சூத்திரம் 51 - இரசவாதம், வைத்தியம்* அகத்தியர் மெய்ஞ்ஞானம் 1000 - யோகம், மந்திரம்* அகத்தியர் யோகம் 6 - யோகம்* அகத்தியர் யோகம் 16 - யோகம்* அகத்தியர் லேகியவகை - வைத்தியம்* அகத்தியர் லோகநிதி 16 - யோகம்* அகத்தியர் வழலை 16 - இரசவாதம்* அகத்தியர் வழலை 30 - இரசவாதம்* அகத்தியர் வாகட சூத்திரம் 300-வைத்தியம்* அகத்தியர் வாத காவியத்திறவு கோலாகிய வாத சௌமியம் -ஆறுமுக நாயினார் பதித்தது, சென்னை, 1893. அகத்தியர் வாத காவியம் 1000 - கந்த சாமி முதலியார் பதிப்பு, சென்னை, 1898. அகத்தியர் வாத சூத்திரம் 100 - இரசவாதம்* அகத்தியர் வாதம் 81 - இரசவாதம்* அகத்தியர் வாதம் 300 - வைத்தியம்* அகத்தியர் வாலை வாகடம் - வைத்தியம்* அகத்தியர் வெண்கார மெழுகு - இரசவாதம்* அகத்தியர் வெண்பா - வைத்தியம்* அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 360 - ஆறுமுகசாமி பதித்தது, சென்னை, 1879. அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் 3000 - (ச.கை.) அகத்தியர் வைத்தியக் கும்மி - * அகத்தியர் வைத்திய சூத்திரம் - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 1500-* அகத்தியர் வைத்திய சூத்திரம் 205 - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 81 - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 50 - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 48 - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 100 - * அகத்தியர் வைத்திய சூத்திரம் 150- * அகத்தியர் வைத்தியச் செந்தூரம் 300 - * அகத்தியர் வைத்திய பரிபூரணம் 400 - * அகத்தியர் வைத்தியம் - * அகத்தியர் வைத்தியம் 2000 - (ச.கை.) அகத்தியர் வைத்தியம் 100 - * அகத்தியர் வைத்தியம் 150 - * அகத்தீசர் சதகம் - மத்தான் சகிப்பு, 19ஆம் நூற்றாண்டு. அகத்தீசுவரர் பதிகம் - சாம்பசிவ கவி ராயர், நுங்கம்பாக்கம், 1867 (அ.பு.) அகநானூறு - (சங்ககாலம்) இதற்கு நெடுந்தொகை என்றும் பெய ருண்டு. இதில் 145 புலவர்கள் பாடிய 400 பாடல்கள் உண்டு. இத் தொகைப் பாட்டிற்கு அளவு, சிறுமை பதின் மூன்றடி, பெருமை முப்பதடி. இதனைத் தொகுப்பித்தார் பாண்டி யன் உக்கிரப் பெருவழுதி; தொகுத் தார் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திர சன்மனார் (கி.பி. 225). இது களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என மூன்று பகுதிகளை உடையது. இதற்கு உரை அகவ லாற் பாடியவர், இடையள நாட்டு மணக்குடியான் பால் வண்ண தேவ னான வில்லவதரையன். இதன் முதல் 90 பாடலுக்கும் பழைய உரை ஒன்றுளது. அகநானூற்று அகவலுரை - பால் வண்ணதேவன், - ? அகநிர்ணயத் தமிழுரை - சங்கர பண்டிதர், 1821 - 1891. அகப்பேய்ச் சித்தர் பாடல் - அகப் பேய்ச் சித்தர், 15ஆம் நூ. ? அகப்பொருள் விளக்கம் - நாற்கவிராச நம்பி, 12ஆம் நூ. அகமே புறம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை, 1872 - 1936. அகராதி நிகண்டு - இரேவண சித்தர், 16ஆம் நூ. அகலிகை வெண்பா - சுப்பிரமணிய முதலியார் வெ.ப. வெள்ளக்கால், 1857 - 1947. அகவிருளொழிக்கும் ஆதித்தன் - மூர்க்க நாயனார் 1876** அகளங்காட்டகம் - சைன தோத்திரம் -?* அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. அகிலாண்டநாயகி மாலை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815 - 1875. அகிலாண்டேசுவரி அம்மன் பதிகம் - சாம்பசிவ கவிராயர் நுங்கம் பாக்கம், 1867. (அ.பு.) அகிலாண்டேசுவரி தோத்திரம் - ?* அக்கியானம் (அஞ்ஞானம்) - இந்நூல் தரங்கம்பாடி டேனி° மிசனால் 1733-ல் வெளியிடப்பட்டது. (அ.பு.) அஹ்காமு°லியாம் - முகமதிய விரதங்களைப் பற்றிக் கூறும் இந்நூல் முகமத்கமால் அல்டின் என்பவரால் வேலூரில் 1905-ல் பதிக்கப்பட்டது. (அ.பு.) அங்க நியாசகரநியாசம் - மந்திரம் - ?* அங்கயற் கண்ணம்மை கலி வெண்பா - ?* அங்காதிபாத சுகரணவாத உற்பாலன நூல் - (anatomy, physiology and higiene) - இது கிரீன் பாதிரியார் ஆங்கில நூலின் மொழிபெயர்ப் பாகச் செய்தது. இரண்டாம் பதிப்பு சென்னை, 1857 (அ.பு.) அங்காதிபாதம் - செகராசசேகரன் செய் வித்த மருத்துவ நூல், 17ஆம் நூ. அங்காளம்மை பதிகம் - ?* அசதிக்கோவை - ஒளவையார், 12ஆம் நூ. அசுவ சாத்திரம் - 1877** அசுவமேதபுராணம் - சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. அசுவமேதயாக அம்மானை -அருணாசலப் பட்டர் 1878** அசோமுகி நாடகம் - அருணாசல கவிராயர், 1712 - 1779 அஞ்சலி வைபவம் - வேதாந்த தேசிகர் 14ஆம் நூ.* அஞ்சன சோரன் கதை-ஒரு சைன நூல் - ? * அஞ்சனம் - இறந்துபட்ட ஒரு பழந் தமிழ் நூல், (யா.வி.ப. 540). அஞ்ஞவதைப் பரணி-தத்துவராயர், 15ஆம் நூ. ஞானபரணி, அஞ் ஞான வதைப் பரணி எனவும் இதன் பெயர் ஏடுகளிற் காணப்படும். இந் நூல் தத்துவராயர் பாடவில்லை யென்றும் அவரது மாணாக்கர் சோதிப்பிரகாசர் இயற்றினாரென் றும் கூறுவர் திரு. மு. இராகவ ஐயங்காரவர்கள் (செந். 1 பக். 288-9). இது வேதாந்த விடயமானது. அஞ்ஞானத்தை ஓரு அரசனாக்கி அகங்காரம் முதலியவற்றை யானை முதலிய சேனைகளாக்கி ஞானமா கிய பகைவன் அவற்றை அழித்த தாக உருவகப்படுத்திக் கூறுவது, கடவுள் வாழ்த்து, கடை பிறப்பு, காடு பாடுதல், காளி கோயிற் பாடுதல், பேய்களைப் பாடுதல், தேவியைப் பாடுதல், காளி கூறுதல் முதலிய பல உறுப்புகளைப் புனைந்து கூறுமுகத் தான் சொரூபானந்தரது கீர்த்தியை யும் சிறப்பையும் நன்கு விளக்குவது. அஞ்ஞானக் கும்மி - ஆறுமுகத் தம்பி ரான், 19ஆம் நூ. (இவர் 1836இல் கிறித்துவ மதத்தைத் தழுவினார்.) அஞ்ஞானம் - பா. வே. மாணிக்க நாயக்கர், 20ஆம் நூ. அடங்கன் முறை - சைவத்திருமுறை கள் பன்னிரண்டில் முதலேழும் தேவார மெனப்படும். இவற்றுள் 1, 2, 3 திருஞானசம்பந்தமூர்த்தி நாய னாராலும், 4, 5, 6 திருநாவுக்கரசரா லும், 7 சுந்தரராலும் பாடப் பெற் றவை. இவற்றுக்கு அடங்கன் முறை என்றும் பெயருண்டு. அடிநூல் - (இலக்கண நூல்) நக்கீரர் - (யா.வி.) அடைக்கலப் பத்து - வேதாந்த தேசிகர், 1269 - 1371 அடைக்கலப் பத்து - வீரராகவர் - ஓர் வைணவ நூல் - ?* அடைக்கல மாலை - வீரமாமுனிவர், 1680 - 1746 அட்ட சுலோக வியாக்கியானம் - சீனிவாசாசாரியர்* அட்ட பதார்த்த சாரம் - சைனம்* அட்டபுட்பம் - இது சைவசமய விடய மானது. கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் அட்டபுட்பங்களைக் கொண்டு ஈசுரனை மனத்தாலருச்சிக்கு முறை மை முதலியவற்றை விளக்குவது. (செ.அ.நூ. கை.) அட்டப்பிரபந்தம் - பிள்ளைப் பெரு மாள் ஐயங்கார், 17ஆம் நூ. அட்டவர்க்கம் - சோதிடம்* அட்டாங்க யோகக் குறள் - ஒளவை யார், 12ஆம் நூ. அட்டாங்க யோகம் - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலில் வந்துள்ளது (செ.அ. நூ.கை). அட்டாட்சர சங்கிரகார்த்த வியாக்கி -யானம் - வீரராகவர். அட்டாட்சர மகிமை- பெரிய வாச்சான் பிள்ளை* அட்டாதசபுராணம்-வீரைத் தலைவர் பரசமயகோளரி 12ஆம் நூ. (சா.த.க.ச.) அட்டா தச ரகசியம் - பிள்ளை லோகா சாரியர் 15ஆம் நூ. அட்டாதசரசம் - பிள்ளை லோகா சாரியர், சிதம்பரம் 15ஆம் நூ. அட்டாவக்கிர கீதை - அட்டாவக்கிர முனிவர் பார்க்கவ முனிவருக்கு உபதேசித்த வடமொழி அட்டா வக்கிர கீதையின் மொழி பெயர்ப் பாகச் செய்யப்பட்டுள்ளது (செ.அ. நூ.கை.) அணி இயல் - இறந்துபட்ட ஓர் இலக் கண நூல் (யா.வி.) அணி இலக்கணம் - விசாகப் பெரு மாளையர் 1875. அணியியல் விளக்கம் - சரவணப் பெருமாள் ஐயர், 19ஆம் நூ. அண்டகோள விலாசம் - இந்நூல் பாதாளம் முதலிய உலகங்களி னியல்பையும் உயரம், அகலம் முதலியவற்றையும் மேரு முதலிய வற்றின் இயல்புகளையும், கங்கை முதலிய ஆறுகளினியல்புகளை யும் கூறுவது. பரமக்குடிக்கு அருகி லுள்ள வேம்பத்தூர் முத்துவேங் கட சுப்பையர் இதனாசிரியர்.* அண்டபிண்ட வியாக்கியானம் - இது ஒரு பௌதிக மொழி பெயர்ப்பு நூல். கொழும்பிலிருந்த பெரிய சஞ்சீவி நாத சுவாமி என்னும் இத்தாலிய பாதிரி, இதன்மொழி பெயர்ப்பாளர், சென்னை 1874 (அ.பு.) அண்டவகை - பூகோளம் - ?* அண்ணாமலைக் கோவை - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. அண்ணாமலையார் சதகம் - மாம் பாக்கம உபாத்தியாயர் திருச்சிற் றம்பல கவிராயர், 1902. (அ.பு.) அண்ணாமலையார் வண்ணம் - சேறைக் கவிராச பிள்ளை, 16ஆம் நூ. அண்ணாமலை வெண்பா - குரு நமச்சிவாயர், 16ஆம் நூ. அதிகார சங்கிரகம் - வேதாந்த தேசிகர், 14ஆம் நூ. அதிகாரப்பிள்ளை அட்டவணை - இது கண்ணுடைய வள்ளலார் அதிகாரப் பிள்ளை என்பவருக் குப் படிப்பதற்கு வசன நடையில் எழுதிய சமய சாத்திரநூல், 18ஆம் நூ. அதிசயமாலை - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. அதிரகசியம் - இது கண்ணுடைய வள்ளலார் செய்த இருபது சாத்தி ரங்களிலொன்று, செய்யுள் நடை யிலுள்ளது, 18ஆம் நூ. அதிரூபாவதி நாடகம் - கணபதி ஐயர், 19ஆம் நூ. அத்திகிரி மான்மியம் - வேதாந்த தேசிகர், 1269 - 1371 அத்துவாக்கட்டளை - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. அத்துவிதக் கலிவெண்பா - இது கண்ணுடைய வள்ளலார் செய்த 20 சாத்திரங்களிலொன்று கலி வெண்பா யாப்பிலமைந்த 30 கண் ணிகளுடையது 18ஆம் நூ. அத்துவிதசாரம் - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. அத்துவிதமஞ்சரி - சதாசிவ பிரமேந்திரர், 1858. (அ.பு.) அத்துவித வுண்மை - குமார தேவர், 18ஆம் நூ. அத்துவித வெண்பா - சித்தர் சிவப் பிரகாசர், 17ஆம் நூ. அத்துவித வேதாந்தக் கட்டளை - இந்நூல் அத்வைத மதத்தைச் சேர்ந்தது; வசன நடையிலமைந் தது. இதனைச் செய்த ஆசிரியர் பெயர் முதலியன புலப்பட வில்லை. (செ.அ. நூ.கை.) அத்துவிதானுபவம் - இராமகவி, 1888. (அ.பு.) அத்வைத சூரியோதயம் - அப்பைய தீட்சிதர் 1884** அத்வைதபோத தீபிகை - இராம சுவாமி சுவாமிகள் 1888** அத்வைத வெண்பா - 1885** அத்வைதானுபவ விளக்கம் - 1888** அநந்தமகிமை - சைன நூல் ?* அநித்திய நித்திய வித்தியாச விவேகம் - கிறித்தவ நூல்* அநிருத நாடகம் - சின்னத் தம்பி, 1830 - 1878 அநீதி நாடகம் - மாரிமுத்துப் பிள்ளை, 18ஆம் நூ. அநுமப்பத்து - ?* அநுட்டான விதி - ?* அந்தப்புர இரகசியம் (நாவல்) - திரு மயிலை இராமலிங்க முதலியார், 1906 (அ.பு.) அந்தாதித் தொடை நிகண்டு - அரசஞ் சண்முகனார், 1869 - 1914 அந்திமோபாய நிட்டை - பட்டர்சீயர்* அந்திரயவனிபடை வெட்டு - இந் நூல் முசிலிம் காவியத்தைச் சார்ந் தது. இது மெக்கா நகரத்திலிருக் கும் இறசூல் என்னும் மன்னவரது ஏவலால் அன்னாரது மருமகனார் அலிநபி என்பவர் உதுமான் என்பரைச் சேனைத் தலைவராக வைத்துக்கொண்டு றுhமு நகரில் அரசு செலுத்திக் கொண்டிருந்த அந்திரயவனி என்னும் வணங் காத ஓரு அரசனைப் போர் முனை யில் வெட்டி வீழ்த்திய கதையினை அம்மானை வகையில் கூறுவது. மகமதுசேன் என்பவர் பாடியது.* அபயப்பிரதான சாரம் - வேதாந்த தேசிகர், 14ஆம் நூ. அபரோட் சான்மானுபவ தீபிகை - இந்நூல் அத்துவைத மதத்தைச் சேர்ந்தது. வடமொழியில் சங்கராச் சாரியார் இயற்றிய நூலின் மொழி பெயர்ப்பு; மொழிபெயர்த்தவர் சுப்பிரமணிய குரு (செ.அ.நூ.கை.) அபிஞ்ஞான சாகுந்தலம் - இராகவ ஐயங்கார், ரா, (மொழி பெயர்ப்பு) - 1946. அபிடேக மாலை - துறைமங்கலம், சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. அபிதானகோசம் - ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை, 1848 - 1917. இந்நூல் 1902இல் அச்சிடப்பட்டது. அபிதானசிந்தாமணி - ஆ. சிங்கார வேலு முதலியார், - 1931 இந்நூல் முதற்பதிப்பு 1910-ல் வெளிவந்தது. அபிதான தனிச்செய்யுள் நிகண்டு - கோபாலசாமிநாயக்கர், 1878* அபிநய சாரசம்புடம் - நாராயண ஐயங்கார், 1888** அபிநய நவநீதம் - நாராயண ஐயங்கார், 1886** அபிமன்னன் சுந்தரி மாலை - புகழேந்திப் புலவர், 13ஆம் நூ. அபிராமிதுதி - ?* அபிராமி யந்தாதி - அபிராமிப்பட்டர், 1711 -. அப்துல் றகிலான் அராபிச் சதகம் - அப்துல் ரஹ்மன் (பவானிப் புலவர்) 1895 (அ.பு.) அப்பாசு நாடகம் - முகமத் ஆபிர காம், 1878** அப்பு அரும்பதம் - குன்றத்தூர் சீயர் - வைணவம்* அப்பூதியடிகள் கீர்த்தனை - சுந்தர ஆச்சாரியார், 1895. (அ.பு.) அப்பையதீட்சிதர் அந்தாதி - இராச கோபால பிள்ளை 1872** அமரர் புராணம் என்னும் தேவர் குல விளக்கம் - கோனேயப்ப நாடார், 1901 (அ.பு.) அமலனாதிப்பிரான் - திருப்பாணாழ் வார், 9ஆம் நூ. அமலனாதிப்பிரான் வியாக்யானம் - பெரியவாச்சான் பிள்ளை* அமிர்தசார வெண்பா - தத்துவராயர், 15ஆம் நூ. அமிர்தசுவாதினி - வேதாந்த தேசிகர், 1269 - 1371 அமிர்த பஞ்சாக்கரம்- (செ.அ.நூ.கை.) - ? அமிர்தபதி - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) அமிர்தரஞ்சனி (வேதாந்த தேசிகர், 14ஆம் நூ.) அமீன் தோத்திரம் - மகமதிய நூல்-?* அமுத நுணுக்கம் (விடவைத்தியம்) - நாகேசையர், 19ஆம் நூ. அமுதாகரம் (விடவைத்தியம்) - வரத பண்டிதர், 1656 - 1716. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் - சிவஞான முனிவர், - 1785 அம்பலவாண தேசிகர் கலம்பகம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. அம்பலவாணன் ஆனந்தக் களிப்பு உரையுடன் - 12 பாடல்கள் அடங் கிய இந்நூல் அம்பலவாணனின் மாணவனால் செய்யப் பட்டதெனக் கருதப்படும் (செ.அ. நூ.கை.) அம்பிகாபதிக்கோவை - அம்பிகாபதி, 12ஆம் நூ. அம்பிகைமாலை - குலசேகர பாண்டியன், 16ஆம் நூ. அம்மங்கியம்மாள் ஐந்து வார்த்தை - அம்மங்கியம்மாள், வைணவம்* அயோத்திமா நகர மான்மியம் - துரை சாமி மூப்பனார், 19ஆம் நூ. இறுதி. அரச சட்டம்- இறந்துப்பட்ட ஒரு தமிழ் நூல். (யா.வி. ப. 528) அரதத்தாசாரியர் சுருதி சூக்கி மாலை தமிழுரை - சிவாக்கிர யோகிகள், 16ஆம் நூ. அரதத்தாசாரியர் சுலோக பஞ்சக மொழி பெயர்ப்பு - சிவஞான முனிவர், 1785. அரன்பதி மாலை - ?* அராபிக்கதை - 3-பாகம், சென்னை 1888. அராபி தமிழ் அகராதி - முகமத் அப்துல்லா, சென்னை, 1905 அரிஅர தாரதம்மியம் - திருஞான சம்பந்தப் பிள்ளை, 1849 - 1901 (இது அரதத்தாசாரியார் வட மொழி யிற் செய்த அரிகரதார தம்மியத் தின் மொழி பெயர்ப்பு.) அரி அர நாம சங்கீர்த்தனம் - பாராங் குச தாசர், சென்னை, 1868 (அ.பு.) அரிசமய தீபம்-சடகோபதாசர், 18ஆம் நூ. முற். அரிச்சந்திர உபாக்கியான அலங் காரம் - மாஞ்சேரி நரசிம்ம ஐயர், 1869** அரிச்சந்திர கும்மி - சுப்பிரமணியச் செட்டி, 1872** அரிச்சந்திர நாடகம் - வரதராசலு நாயுடு, 1875** அரிச்சந்திர நாடகம் - இது சத்திய வாக்கு அரிச்சந்திர நாடகம் எனவும் படும்; முத்தன் ஆச்சாரி இயற்றியது, 1905 அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர், 16ஆம் நூ. அரிச்சந்திர விலாசம் - இரங்கப் பிள்ளை, 1867** அரிச்சந்திர விலாசம் - இது நன்னெறி சத்தியபாஷ அரிச்சந்திர விலாசம் எனவும் அறியப்படும்; இதனை இயற்றியவர் திரிசிரபுரம் திருமலை அப்பாவுபிள்ளை, இரண்டாம் பதிப்பு, 1870. அரிச்சந்திர வெண்பா - ஆறுமுகம் பிள்ளை, 19ஆம் நூ. பிற். அரிட்ட நவதீதம் - சேஷாத்திரி - ?* அரிநாம சங்கீர்த்தனங்கள் - பராங் குச தாசர், சென்னை, 1898. அரிநாமத் தோத்திரப் பாக்கள் - இவை மராத்தி மொழியிலிருந்து சுவுளிக் காரர் முனிசாமி முதலியாரால் மொழி பெயர்க்கப்பட்டவை, 1887. அரிபரமேசுவர தோத்திரப் பாமாலை - நடுக்காவேரி வீரமுத்தண்ண நாட்டார், 1898. அரிமழத்தல புராணம் - சேற்றூர் கந்தசாமிக்கவிராயர், மதுரை 1907. அரிய குடியலூர் மென்மங்கை பிள் ளைத் தமிழ் - வேலாமூர் கிருஷ்ண மாச்சாரியர், சென்னை, 1902. அரிய விதி - பழைய இலக்கண நூல்களி லொன்று. இது வேதகிரி முதலியா ரின் இலக்கணக் களஞ்சியம் என் னும் கட்டுரையில் காணப்படுகிறது. அரிவிளக்கம் - வைணவ நூல் - ?* அருங்கலச்செப்பு-சைன நீதி நூல் - ?* அருச்சுன நாடகம் - நாகேசையர், 19ஆம் நூ. அருட்பா - இராமலிங்க சுவாமிகள், 1823 - 1879. அருட்பாமாலை - அழகிய சிற்றம்பல தேசிகர்*. அருணகிரிநாதர் புராணம் - முருக தாச சுவாமிகள் 1844 - 99. அருணகிரி புராணம் - மறைஞான தேசிகர், 18ஆம் நூ. பிற் அருணகிரியந்தாதி - குகை நமச் சிவாயர், 16ஆம் நூ. அருணாசல கீர்த்தனை - காஞ்சி வீரண்ண புலவர், சென்னை, 1856. (அ.பு.) அருணாசல சதகம் - காஞ்சி சபாபதி முதலியார், சென்னை, 1903 (அ.பு.) அருணாசல புராண உரை - மழவை மகாலிங்கையர், 19ஆம் நூ. அருணாசல புராணம் - எல்லப்ப பூபதி - 1572 அருணை அந்தாதி - எல்லப்ப பூபதி, - 1572 அருணைக் கலம்பகம் - எல்லப்ப நாவலர், 17ஆம் நூ. அருணைச் சிலேடை வெண்பா மாலை - சின்னைய செட்டியார், 19ஆம் நூ. பிற். அருண்மணி மாலை - சேக் இபிரகாம் சாகிப் 1874 ** அருந்தமிழ் மாலை - ஒளவையார், 12ஆம் நூ. அரும்பகைத்தொள்ளாயிரம் - ஒட்டக்கூத்தர் 12ஆம் நூ. அரும் பொருள் விளக்க நிகண்டு - அருமருந்து தேசிகர், - 1760. அருளம்பலக் கோவை - குமாரசுவாமி முதலியார், 19ஆம் நூ. பிற். அருளிச்செயல் இரகசியம் - அழகிய மணவாளப் பெருமாணாயனார், 15ஆம் நூ. அர்ச் அந்தோனியார் பேரில் புலம்பல் - யாழ்ப்பாணம் - ? 1903 ( அ.பு.) அர்ச் அலசம்மானை விருத்தம் - சாந்த குரு° புலவர், 1893 (அ.பு.) அர்ச் அன்னம்மாள் கும்மி - டொன் அந்தோணி, 1885 (அ.பு.) அர்ச் அன்னம்மாள் - திருப்பதியில் பிரசங்க வியாக்கியானக் கும்மி அந்தோனி, யாழ்ப்பாணம், 1885 (அ.பு.) அர்ச்சவதி - பிள்ளை உலோகாசாரி யர், 15ஆம் நூ. அர்ச்சிராதி - பிள்ளை லோகாசிரியர் 15ஆம் நூ.* அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை - அரங்கநாத கவிராயர், - ? அர்த்த சாத்திரம் தமிழுரையுடன் - ?* அர்த்த பஞ்சகம் - பிள்ளை லோகா சாரியர், 15ஆம் நூ. அலங்காரக் கோவை - பொன்னுச் சாமி தேவர், 19ஆம் நூ. பிற். அலங்கார ரூப நாடகம் - கணபதி ஐயர், 19ஆம் நூ. அலிபாதுஷா நாடகம் - வண்ணக் களஞ்சியப் புலவர், வண்ணாரப் பேட்டை, 1887 (அ.பு.) அல்லாப்பிச்சை புலவர் பாடல் - 1878** அல்லி அரசாணி நாடகம் - கந்தசாமிப் பிள்ளை, சென்னை, 1902 (அ.பு.) அல்லிஅரசாணி மாலை - புகழேந்திப் புலவர், 13ஆம் நூ. அல்லி நாடகம் - இராமசுவாமி ஐயர், 19ஆம் நூ. அவதூத கீதை - இது அத்துவித வேதாந்த விஷயமானது. தத்தாத்தி ரேயருக்கும் கோரட்சகருக்கும் நடந்த சம்வாதமாக வடமொழியி லியற்றப்பட்ட 277 சுலோகங்களின் மொழிபெயர்ப்பாகவுள்ளது. மொழி பெயர்த்தவர் பெயர் முதலிய விபரம் தெரியவில்லை (செ.அ. நூ.கை.) அவதூத கீதை யோகரசபாவனை - இந்நூல் அத்துவைதமார்க்கத்தைச் சார்ந்தது. வடமொழியிலமைந்த பத்துச் சுலோகங்களின் மொழி பெயர்ப்பு (செ.அ.நூ.கை.) அவத்தா தரிசனம் - வேதாந்த நூல்* அவத்தாத்திரயம் - வைணவ நூல்.* அவனியம் - வேதகிரி முதலியார் இலக்கணக் களஞ்சிய மென்னும் கட்டுரையில் ஆண்ட இலக்கண நூல்களிலொன்று. அவிநய உரை - இராசபவித்திர பல்லவதரையர், 13ஆம் நூ. அவிநயம் - அவிநயனார் 9ஆம் அல்லது 10ஆம் நூ. (இதன் சூத் திரங்களில் விருத்தப்பா இலக் கணம் காணப்படுகின்றது.) அவிநாசிக் கருணாம்பிகை சதகம் - வாசுதேவ முதலியார், கோயமுத் தூர் 1891. (அ.பு.) அவிநாசி நாதர்துதி - * அவிநாசி நாதர் தோத்திரம் - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப்படுவது (செ.அ.நூ.கை.) அவிநாசிப்பத்து - * அவிநாசிப் புராணம் - இளையான் கவிராயர் - ? அவிரோத போதம் - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலில் காணப் படுவது. (செ.அ.நூ.கை.) அவிரோதவுந்தியார் - சாந்தலிங்க தேசிகர், 18ஆம் நூ. முற் பகுதி. அவிரோதவுந்தியார் உரை - சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. அவிவேக பூரண குருகதை - வீரமா முனிவர், 1680 - 1746 அவினந்தமாலை - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.ப. 528) அழகரகவல் - * அழகரந்தாதி - வில்லிபுத்தூரர், 15 - ஆம் நூ. அழகரந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. அழகர் கலம்பகம் - அரபத்த நாவலர் 16ஆம் நூ. அழகர் கிள்ளை விடுதூது - பல பட்டைச் சொக்கநாதப் புலவர், 18ஆம் நூ. அழகர்சாமி மடல் - கனகசபைப் புலவர், 1829 - 1873. அழகர் பிள்ளைத் தமிழ் - * அழகர் வர்ணிப்பு - இராமசாமி கவி 1889** அழுகிணிச்சித்தர் பாடல் - அழு கிணிச் சித்தர், 15ஆம் நூ. அளகேச கதை - நாலு மந்திரி கதை பார்க்க, அளகேசுவர ராசன் கதை - ?* அளவியலென்னும் தர்க்க விளக்கம் - சோமசுந்தரம் பிள்ளை மயிலாப் பூர், 1907. அளவை அட்டவணை - தர்க்கம் ?* அளவை நூல் - இளைய தம்பி மட்டக் களப்பு 1907. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார், 13ஆம் நூ. அறப்பளீசுரர் சதகம் - அம்பலவாண கவிராயர், 18ஆம் நூ. முற்பகுதி. அறிவானந்த சமுத்திரம் - அழகிய சிற்றம்பல தேசிகர் (செ.அ.நூ.கை.) அறிவானந்த சித்தி - வலங்கை மீகாமன், 18ஆம் நூ.முற். அறிவு நினைவுக் குணர்த்தல் - இது வேதாந்த விஷயமானது. நாற்பத் தொரு கண்ணிகள் உளது. நூலா சிரியர் பெயர் முதலியன விளங்க வில்லை. (செ.அ.நூ.கை.) அறிவுரைக் கொத்து - மறைமலை யடிகள், 1876 - 1950. அறுபது வருட வெண்பா - இடைக் காடர், - ? அறுமுகக் கடவுள் தூதி - அறுவகை இலக்கணம் - முருகதாச சுவாமிகள், 1840-99 அற்புதக் கலைக்கியான மஞ்சரி வசன காவியம் - போதலூர் வீர பிரமேந்திர சுவாமி, சென்னை 1897. அற்புதகோல மஞ்சரி - அம்மணி அம்மாள், சென்னை - 1897. அற்புதத் திருவந்தாதி - காரைக் காலம்மையார், 6ஆம் நூ. அற்புதவல்லி கதை - சின்னவப்புமரக் காயர் தளவாய், சிங்கப்பூர், 1908. அனுட்டான அகவல் - கமலைஞானப் பிரகாசர், 16ஆம் நூ. அனுட்டான இரகசியம் - வைணவ நூல்* அனுட்டான விதி - சங்கரபண்டிதர், 19ஆம் நூ. பிற். அனுபவசித்தி - பலசாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப்படுவது (செ.அ. நூ.கை.) அனுபவ வைத்தியம் - சிறுமணவூர் முனிசாமி முதலியார், 20-ம் நூ. அனுபூதி சாரம் - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப்படுவது (செ.அ.நூ.கை.) அனுபூதிப் பிரகாசம் - வித்தியாரணி யர், 14ஆம் நூ. அனுபூதி பெண்புத்தி மாலை - 1874** அனுபோக வெண்பா - துறைசை அம்பல வாணதேசிகர், 17ஆம் நூ. இந்நூல் 218 வெண்பாக்களுடையது. அனுபோக வைத்திய நவநீதம் - மகமத் அப்துல்லா, 1906 (அ.பு.) அனுபோக வைத்திய பிரமரகசியம் - சிறுமணவூர் முனிசாமி முதலியார், சென்னை, 1896. (அ.பு.) அனுமாரனுபூதி - வெங்கடாசலதாசர் 1889** அனுமார் பிள்ளைத் தமிழ் - அருணாசல கவிராயர், 1712-79. அன்பிலாந்துறை என்னும் பிரம புரித்தல மான்மியம் - நரசிம்ம பாரதி, கிருஷ்ண பாரதி என்போர் வசன நடையிற் செய்தது. திருவாதி 1895. (அ.பு.) ஆ ஆகம நெறியகவல் - குமாரதேவர் செய்த 16 சாத்திரங்களிலொன்று, 18ஆம் நூ. ஆகமப் பிரமாண்யம் - ஆளவந்தார், 11ஆம் நூ. பிற். ஆக்கினேய புராண சார மென்னும் வன்னிய நாடகம் - திருப்பாதிரிப் புலியூர் நாகலிங்கம், சென்னை 1902. (அ.பு.) ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார், 5ஆம் நூ.? ஆசார மாதவம் - வித்தியாரணியர், 13ஆம் நூ. ஆசாரிய இருதயம் - அழகிய மண வாளப் பெருமாணாயனார், 15ஆம் நூ. ஆசாரிய திரு நட்சத்திர மாலை - ஆசாரியப் பிரபாவம் - சோமசுந்தர நாயகர், 1846-1901 ஆசிரிய நிகண்டு - ஆண்டிப் புலவர், 17ஆம் நூ. ஆசிரியமாலை - இது நச்சினார்க்கி னியர் இளம்பூரணர் முதலியோர் தொல்காப்பிய உரையில் மேற் கோள் காட்டிய புறப்பொருள் நூல்களுள் ஒன்று. காலம் - ? ஆசிரியமுறி - இறந்துபட்ட ஒரு தமிழ்நூல் (யா.வி.) ஆசௌசதீபிகை - தமிழாகர முனிவர், 17ஆம் நூ. ஆசௌச விதி-மாப்பாண முதலியார்- 1827. ஆச்சாபுர தலபுராணம் - 1888** ஆடை நூல் - இறந்துபட்ட தமிழ் நூல்களிலொன்று (யா.வி.) ஆண்டவர் பிள்ளைத் தமிழ் - சவ்வாதுப் புலவர், 17ஆம் நூ. ஆதிபுரத்தல புராணம் - பண்டுருட்டி சுப்பராயச் செட்டி, 1896. ஆதியூரவதாளி - (நாவல்) சேஷ அய் யங்கார், சென்னை, 1875. (அ.பு.) ஆத்திசூடி - ஒளவையார், 12ஆம் நூ. ஆத்திசூடி புராணம் - ? ஆத்திசூடி வெண்பா - இராமபாரதி, 19ஆம் நூ. ஆத்தும இராமாயணம் - குமரகுருபர தேசிகர்,18ஆம் நூ. ஆத்மபரம சிவாத்துவித பிரகாசம் - வேதாந்த நூல்,* ஆத்மபோதப் பிரகாசிகை - சரவண முத்துப் புலவர், 19ஆம் நூ. ஆத்மபோதம் - இது வடமொழியிற் சங்கராச்சாரியரால் இயற்றப்பட்ட ஆத்ம போதமென்னும் அத்வைத வேதாந்த நூலின் மொழிபெயர்ப்பு. இம்மொழி பெயர்ப்புச் செய்தவர் இராமநாதபுரம் சோம சுந்தர தேசி கரின் மாணாக்கரும் இரங்கைய கவிராயரின் குமாரருமாகிய இரா மானுசாரியார் என்னும் பெரியார். இப்புத்தகம் 1840-ல் அச்சிட்டப் பட்டது (செ.அ. நூ.கை.) ஆத்மப்பிரகாசவசனம் - இராமநாதப் பிள்ளை - ?* ஆத்மவாச விவரணம் - (a first book of human physiology) சென்னை, 1856. (அ.பு.) ஆத்ம விவாகம் - ?* ஆபத்துக்கிடமான அபவாதம் அல் லது கமலாம்பாள் சரித்திரம் - இரா சம் ஐயர், சென்னை 1896. (அ.பு.) ஆப்பனூர்ப் புராணம் - கந்தசுவாமிப் புலவர், 18ஆம் நூ.பிற். ஆமாத்தூர்க் கலம்பகம் - இரட்டை யர், 15ஆம் நூ. ஆமாத்தூர் புராணம் - முருகதாச சுவாமிகள், 1840-99 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் - கனகசபைப் பிள்ளை, 1855 - 1906. இது ஆங்கில மொழி யிலெழுதப்பட்ட நூல். ஆயிரத்தெட்டுச் சிவாலயப் பாடல் - வேம்பத்தூரார் - * ஆயிரப்பாடல் - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. ஆயுள்வேதசார சங்கிரகம் - குப்புச் சுவாமி ஐயர் ஆயுள் வேதம் - 1876** ஆரவல்லி சூரவல்லி நாடகம் - மீனாட்சி சுந்தர தாசர் 1888** ஆரிய பட்டமார்சாதி வரலாறு - ?* ஆரூட அலங்காரம் - சிதர்களசெஞ்சி ஏகாம்பர முதலியார் உரையுடன் பதித்தது. சென்னை 1907. ஆரூட சாத்திரம் -செயமுனி,1899-ல் பதிக்கப்பட்டது.சென்னை, (அ.பு.) ஆரூட நவநீதம் - சுப்பைய்ய தேசிகர் 1871. ஆர்த்திப் பிரபந்தம் - மணவாள முனி, 16ஆம் நூ. ஆயுள்வேதபாடியம் - அகத்தியர், ? ஆவாசஞான நிரோதம் - சோம சுந்தர நாயகர் 1846 - 1901. ஆவிடையார் கோவில் புராணம் - ?* ஆழ்வா ரகவல் * ஆழ்வார்கள் சரித்திரம் - சடகோப ராமானுசாரியர், 1898. (அ.பு.) ஆழ்வார் திருநகர் திருப்பணி மாலை -? ஆழ்வார்கள் வாழித் திருநாமம் - அப்புள்ளையார், 18ஆம் நூ. ஆளவந்தார் தோத்திரம் - பெரியவாச் சான்பிள்ளை (தமிழ் மொழி பெயர்ப்பு) ஆறாதாரக் கட்டளை * ஆறாதார தர்சனம் * ஆறாயிரப்படி உரை - திருக்குருகைப் பிரான் பிள்ளான்,13ஆம் நூ. ஆறுமுக நாவலர் வரலாறு - (செய்யுள்) மு. ரா. அருணாசலக் கவிராயர், 19ஆம் நூ. பிற். ஆற்றூர்ப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. ஆனந்தக் களிப்பு - சின்ன செட்டி 1894 ஆனந்தக் கீர்த்தனை - முகமட் சுல்தான் இபின் அகமத் உமார் பினாங்கு 1901. ஆனந்த தர்சனம் - இது வசன நடை யிலமைந்த சைவசித்தாந்த நூல். செய்தவர் பெயர் அறியப்பட வில்லை (செ.அ.நூ.கை.) ஆனந்த மடம் - மகேச குமாரசர்மா வங்காளியிலிருந்து மொழி பெயர்த்தது 1908. ஆனந்த மாலை - கவிராச பண்டிதர்.* ஆனந்த மாலை - வீரைக் கவிராச பண்டிதர், 16ஆம் நூ. ஆனந்த ரகசியம் - (செ.அ.நூ.கை.) சைவ சித்தாந்த நூல். ஆனந்த ருத்திரேசர் கீர்த்தனை - ?* ஆனந்தருத்திரேசர் பதிற்றுப் பத்தந் தாதி-கச்சியப்ப முனிவர்* 19ஆம் நூ. ஆனந்தலகரி - (விருத்தப்பாவால் மொழி பெயர்ப்பு) - வீரைக் கவி ராச பண்டிதர், 16ஆம் நூ. ஆனந்த வாக்கு - இது சித்தர் பாடல் கள் போல் எளியநடையிற் பாடப் பட்ட சைவ நூல் (செ.அ. நூ.கை.) ஆனந்தவோத்து - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) ஆனாமானான்ம விவேகம் - இந்நூல் அத்வைத மதத்தைச் சேர்ந்தது. நூலாசிரியர் இன்னாரென விளங்க வில்லை (செ.அ.நூ.கை.) ஆன்ம நிர்ணயம் - கிறிஸ்துமத நூல்* ஆன்மலிங்க மாலை - கமலை ஞானப் பிரகாசரின் சீடர் ஒருவர், 16ஆம் நூ. இந்நூலின் நான்காம் பதிப்பு 1879-ல் பதிக்கப்பட்டது. ஆன்றோர் அனுபோக கைவல்லிய வைத்திய சங்கிரகம் - அமிர்த வாசக தாசர், 1900. (அ.பு.) இ இசைநுணுக்கம் - சிகண்டி, - ? இஸ்தாக்கியார் நாடகம் - ஞானப் பிரகாசம் பிள்ளை, 1896. (இ)ஸ்நாபக சஞ்சுவாம் அம்மானை - இது பரிசுத்த யோவான் மீது பாடப் பட்ட தோத்திரம், புவி மன்ன சிங்க முதலியார், யாழ்ப்பாணம் 1892. (அ.பு.) இடம்பாச்சாரி ஓரடிச் சிந்து - செகநாத முதலியார், 1878** இடம்பாச்சாரி விலாசம் - காசி விசுவ நாத முதலியார், 19ஆம் நூ.பிற். இடும்பன் கவசம் - முத்துச்சாமி முதலியார், 1883** இடும்பாவன புராணம் - பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர், 1862 - 1914. இடைக் காட்டுச் சித்தர் பாடல் - இடைக் காடர்* இட்டகாமிய மாலை* இட்டலிங்க அகவல் - கருணைப் பிரகாசர், 17ஆம் நூ. இட்டலிங்கக்கைத்தலமாலை - வேலைய தேசிகர், 17ஆம் நூ. இட்டலிங்கக் குறில் நெடில் விருத்தம் - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள் 18ஆம் நூ. இட்ட லிங்கப் பெருங்கழி நெடில் விருத்தம் - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள் 18ஆம் நூ. இணுவைச் சிவகாம சுந்தரி யம்மன் பதிகம் - சின்னதம்பிப்புலவர். இணுவை, 19ஆம் நூ. இணுவையந்தாதி - அம்பிகை பாகர், 1884-1904. இதிகாசம் - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலிற்காணப்படுவது (செ.அ.நூ.கை.) இதோபதேச மொழி பெயர்ப்பு - நாகநாத பண்டிதர், மறைவு - 1854. இந்தியா இலங்கை பர்மா தேசங்களி லுள்ள பெரிய ஆலயங்கள் - பீட்டர் சென்னை, 1901; (அ.பு.) இந்திர காவியம் - யாமளேந்திரர், 11-13 நூ. இந்திர குமார நாடகம் - குமாரசுவாமி முதலியார், 1791 - 1874 இந்திரசபா - அப்பாவு பிள்ளை 1886** இந்திரசாலக் கதைகள் - இந்திரசாலக் கதைகள் அல்லது சிறீ இராம இரு தயம் எனப்படும் இக் கதைகள் தெலுங்கி லிருந்து வரதராச நாயுடு வால் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டது 1898. இந்திரசேனைநாடகம் - கணபதிப் புலவர் - 1895. இந்திராயன் படைப்போர் - அலியார் புலவர், 18ஆம் நூ.பிற். இபுனியந்தன் படைப்போர் - அலியார் புலவர், 18ஆம் நூ.பிற். இயற்பா (நாலாயிரப் பிரபந்தம்) - பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிய 817 பாடல்கள். இயற்பா முதற் திருவந்தாதி - பொய்கை யாழ்வார், 8ஆம் நூ. இயற்றமிழ்ச் சுருக்கம் - சரவணப் பெருமாள் ஐயர், 19ஆம் நூ. இயேசு நாதர் திருச் சதகம் - ஆணல், யாழ்ப்பாணம், 1850. இரகுநாத சேதுபதி ஒரு துறைக் கோவை - அமிர்த கவிராயர், 1637 - 72 இரகு வமிசக் கருப்பொருள் - குமார சுவாமிப் புலவர், அ, 1855 - 1922 இரகுவமிசச் சுருக்கம் - கணபதிப் புலவர், 1895. இரகு வமிசம் - அரசகேசரி, 17ஆம் நூ. இரங்கூன் சண்டை நாடகம் - இராமச் சந்திர கவிராயர், 19ஆம் நூ. இரங்கேசர் வெண்பா - சாந்த கவிராயர், 18ஆம் நூ. முற்பகுதி இரட்சகர் அவதாரம் - ஆறுமுகத் தம்பிரான், 19ஆம் நூ. இரட்சணியக்குறள்- கிருட்டிண பிள்ளை - 1827 - 1900 இரட்சணிய மனோகரம் - கிருட்டிண பிள்ளை - 1827 -1900 இரட்சணிய யாத்ரீகம் - கிருட்டிண பிள்ளை, 1827 - 1900 இரட்சயப் பதிகம் - பிரான்சீசுப் பிள்ளை, 19ஆம் நூ. இரட்டை மணிமாலை - தத்துவராயர், 15ஆம் நூ. காரைக்காலம்மையார், நம்பியாண்டார் நம்பி முதலிய பலர் வெவ்வேறு இரட்டைமணிமாலை செய்திருக்கின்றனர். இரணிய நாடகம் - புதுச்சேரி சோம சுந்தர முதலியார், சென்னை, 1888. (அ.பு.) இரணியவாசகப்பா - இராமச்சந்திர கவிராயர், 19ஆம் நூ. இரணிய விலாசம் - குமாரசுவாமி உபாத்தியாயர், 1895. முதற் பதிப்பு சோமசுந்தர முதலி (அ.பு.) இரண்டாம் திருவந்தாதி - பூதத் தாழ்வார், 8ஆம் நூ. இரத்தினகிரியுலா - (வாட்போக்கி நாத ருலா) - சேறைக்கவிராச பிள்ளை, 16ஆம் நூ. இரத்தினச் சுருக்கம் - புகழேந்திப் புலவர், 13ஆம் நூ. இரத்தினவல்லி நாடகம் - கந்தப் பிள்ளை, 1766 - 1842 இரவில் நாழிகை பார்க்கும் விதம் - சோதிடம்* இராகவர் பிள்ளைத்தமிழ் - குற்றாலம் குழந்தை முதலியார்* இராச இராசேசுவர நாடகம் - ? இராச இராசேசுவரி அல்லது காதலின் வெற்றி - முத்தையா முதலியார், சென்னை, 1906. (அ.பு.) இராச இராசேசுவரிபதிகம் - பாண்டித் துரைத் தேவர், மறைவு 1911 இராச இராசேந்திரனுலா - ஒட்டக் கூத்தர் 12ஆம் நூ.* இராசமன்னார் தலபுராணம் - பொன்னு சாமித் தேவர், 19ஆம் நூ. பிற். இராச ராசனுலா - ஒட்டக் கூத்தர், 12ஆம். நூ. இராச வைத்திய மகுடம் - தேரையர், பதித்தவர் முகமத் அப்துல்லா, 1907. (அ.பு.) இராசிபலன் - சோதிடம் இராம சாதகம் - சேஷசாத்திரி 1870. இராமசேது மான்மியம் - குமரகுரு பரதாச சுவாமிகள், சென்னை, 1897. இராமதேவராயிரம் - இராமத்தேவர் (வைத்திய நூல்)* இராம தேவர் அட்டங்க பட்சிணி 50 - யோகம்* இராம தேவர் கருக்கடைச் சுருக்கம் 500 - இரசவாதம்* இராம தேவர் கருமான சூத்திரம் 31 - இரசவாதம்* இராம தேவர் கேசரி 50 - வைத்தியம்* இராம தேவர் சூத்திரம் 81 - வைத்தியம்* இராம தேவர் சூத்திரம் 380 - இரசவாதம்* இராம தேவர் சூத்திரம் 30 - இரச வாதம்* இராம தேவர் சோதிடம் - * இராம தேவர் சோசியம் 16 - * இராம தேவர் சோசியம் 10* இராம தேவர் தண்டகம் - இரச வாதம்* இராம தேவர் நிகண்டு - இராம தேவர் பட்சணி - இராம தேவர் பரஞானகேசரி விரோதம் 100 - இராம தேவர் பாஷை 18 - இராம தேவர் பூசாவிதி சிவயோகம் -200. இராம தேவர் விநோத பட்சிணி இராம தேவர் விநோத பட்சிணி 108 - இராம தேவர் வைத்திய சூத்திரம் 81 இராம தேவர் வைத்தியம் - இராம தேவர், 1870** இராம நாம மகிமை - ? இராமநாடகம் -அருணாசலக் கவிராயர், 1712 - 79. இராம நாடகம் - சுவாமிநாதபிள்ளை 19ஆம் நூ. இராமய்ய னம்மானை - சரித்திரம்* இராமர் அசுவமேத யாகம் - வீம கவிராயர், 1875 (அ.பு.) இராம விலாசம் - கந்தப்பிள்ளை, 19ஆம் நூ. இராமன் கதை - அழக சுந்தரம் (பிராசிஸ் கிங்சு பெரி) 1873 - 1941 இராமாநுசர் துதி - பிள்ளைப் பெருமாளையங்கார் 18ஆம் நூ. இராமாயண அகவல் - பின்னத்தூர் நாராயண சுவாமி ஐயர், 1862 - 1914 இராமாயண அசுவமேதயாகம் - வீம கவிராயர் இராமாயண உத்தரகாண்ட வசனம் - திருச்சிற்றம்பல தேசிகர், 19ஆம் நூ. இராமாயண உள்ளுறைபொருளும் சாதி வரலாறும் - வெள்ளக்கால சுப்பிரமணிய முதலியார், 1860-1947. இராமாயண ஏலப்பாட்டு - சீனிவாச ஐயங்கார் 1871 ** இராமாயண ஓரடிக் கீர்த்தனை - சகந்நாத கவி, 1880. இராமாயண கீர்த்தனம் - அருணாசல கவிராயர், 1712 - 1779 இராமாயணக் கும்பி - அழகிய சொக்கநாத பிள்ளை, திருநெல் வேலி,1870. (அ.பு.) இராமாயண சரித்திரக் கும்மி -கண்ணனூர் பதுமாசனி அம்மாள், சென்னை 1905. (அ.பு.) இராமாயணசாரம் - இது வடமொழி வால்மீக இராமாயணத்தின் சில சுலோகங்களுக்கு சாரமான பொருள் இன்னவென விளக்குவது. மணிப் பிரவாள நடையிலடைந்தது. இயற் றியவர் ஆத்திரேய கோத்திரத்து சீனிவாசாசாரியர். இராமாயணச் சிந்து - குருகை வைகுண்டா. இராமாயண தாற்பரிய சங்கிரகம் - சபாபதி நாவலர், 1844 - 1903. இராமாயணத் திருப்புகழ் - பாலபாரதி இராமாயணம் - கம்பர்; 12ஆம் நூ. இராமாயணம் உத்தரகாண்டம் - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. வெண்பாவானியன்ற இராமாயண மொன்று யா. விருத்தியில் குறிக்கப் பட்டுள்ளது. (யா. வி. ப. 328) இராமாயண வசனம் - திருச்சிற்றம்பல தேசிகர், 19ஆம் நூ. இராமாயண வெண்பா - இது நச்சி னார்க்கினியர் மேற்கோள் எடுத் தாண்ட நூல்களுள் ஒன்று. காலம்-? இராமாயண வெண்பா - கோட்டை யூர் வித்துவான் சுப்பிரமணிய அய்யர் - 1930. இராமானுச நூற்றந்தாதி - திருவரங் கத்தமுதனார், 13ஆம் நூ. இராமானுச நூற்றந்தாதி உரை - அப்பாவு முதலியார், 19ஆம் நூ. இவருக்கு முன் பிள்ளைப் பெரு மாளையங்கார் முதலிய சிலரும் இதற்கு உரை எழுதியுள்ளார்கள். இராமோதந்தம் -அ. குமாரசுவாமிப் புலவர், 1850 - 1922. இராயர் அப்பாசி கதை - இது கொழும்பு சந்தியாபோபிள்ளை யால் கதா சிந்தாமணியில் வெளி யிடப்பட்டது. 1875. (அ.பு.) இரிபு கீதை - இது வேதாந்த நூல்; இரிபு என்னும் முனிவரால் நிதாகர் என்னும் முனிவருக்கு உபதேசிக் கப் பெற்றது. வடமொழியிலிருந்து திருவிடை மருதூர் உலோகநாத கவி தமிழில் மொழி பெயர்த்தது. இருசமய விளக்கம் - அரிதாசர், 1507 - 1530 இருது சாத்திரம் - சோதிடம் இருபத்திநாலாயிரப்படி உரை - பெரியவாச்சான்பிள்ளை, 15ஆம் நூ. இருபா இருபஃது - இந்நூல் சைவ சிந்தாந்த சாத்திரம் பதினான்கனு ளொன்று; திருத்துறையூர் அரு ணந்தி சிவாசாரியர் தமக்குச் சிவ ஞான போதத்தை உபதேசித்த ஆசிரியராகிய மெய்கண்ட தேவரை முன்னிலைப்படுத்தி வினாரூப மாக இயற்றியது. பத்து வெண்பாக் களும் பத்து அகவல்களுமாகிய இருவகைப் பாக்களால் அமைந்தது பற்றி ‘இருபா இருபஃது எனப் பெயர் பெற்று உள்ளது. 13ஆம் நூ. இருபா இருபஃது உரை - திருவாவடு துறைமடத்து நமச் சிவாயத் தம்பிரான், 15ஆம் நூ. இரேகை சாத்திரம் - கமலமுனி, 15ஆம் நூ.? இரேகை சாத்திரம் - சோசியம் சீனி வாசராகவ ஐயங்கார் (1879.) இலக்க சௌமிய சாகரம் - இது அகத்தியர் செய்ததாகச் சொல்லப் படும் வைத்திய நூல்; முகமத் அப்துல்லாசாகிப் பதித்தது. (சென்னை, 1907.) இலக்கணக் களஞ்சியம் - வேதகிரி முதலியார் உதயதாரகையில் இலக்கணம் தொடர்பாக எழுதிய கட்டுரை : (1820 - 1840) இலக்கணக்கொத்து - சுவாமிநாத தேசிகர் (ஈசான தேசிகர்), - 1655 இலக்கணக்கோவை - காமக்கூர் சுந்தர முதலியார். இலக்கண சந்திரிகை - குமார சுவாமிப் புலவர், 1855 - 1922 இலக்கண சாரம் - வேலாயுத முதலி யார் (1905) இலக்கணச் சுருக்கம் - ஆறுமுக நாவலர், 1822 - 1879 இலக்கண தீபம் - இது இலக்கண அமைதியுடைய செய்யுளின் தன்மை இன்னதெனக் கூறுமுகத்தால் தமிழிலுள்ள ஐந்திலக்கணத்தை யும் ஒன்பது விருத்தத்தால் மிகச் சுருங்க உணர்த்துவது. இந்நூல் செய்தவர் இன்னவர் எனத் தெரிய வில்லை. (செ.அ.நூ.கை.) இலக்கண தீபம் - இந்நூல் தமிழ் இலக்கணங்கள் ஐந்தையும் தொகுத்துக் கூறுவதுடன் முச்சங் கங்களின் காலம் இடம் முதலிய வரலாறுகளையும் விளக்குவது; 15 ஆசிரிய விருத்தங்களாலானது. இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. (செ.அ. நூ.கை.) இலக்கணத் திரட்டு - வேதகிரி முதலியார் இலக்கணக் களஞ்சியம் என்னும் கட்டுரையில் எடுத்தாண்ட ஓர் இலக்கண நூல். இலக்கணம் - சௌந்திரராச ஐயங் கார். (1894) இலக்கண விளக்கச் சூறாவளி - சிவஞான முனிவர். மறைவு 1785. இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு - சபாபதி நாவலர், 1844 - 1903. இலக்கண விளக்கம் - வைத்தியநாத நாவலர், 17ஆம். நூ. இலக்கண விளக்கம் 1-ல் பதிப்பு - சி.வை. தாமோதரம் பிள்ளை, (1889) 1882-1901. இலக்கண வினாவிடை - ஆறுமுக நாவலர், 1822 - 1879 இலக்கண வினாவிடை - தாண்டவ ராய முதலியார், சென்னை, (1820) இலக்கண வினாவிடை - ஜி.யூ.போப் பையர் (1887). இலக்கணா விருத்தி - இது வேதாந்த விடயமானது; வசன நடையா லானது. நூலாசிரியர் சிதம்பர ஞானதேசிகர். (செ.அ. நூ.கை.) இலக்கிய சங்கிரகம் - சிதம்பரப் பிள்ளை ( வில்லியம் நெவின்ஸ்), மறைவு 1888. இலக்கிய வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளை, மறைவு 1945. இலக்கின பலன் - சோதிடம்.* இலக்குமி வெண்பா - * இலங்கைக் கும்மி - வேதக்கண் ஐயர், இந்நூல் 1873-ல் பாடப்பட்டது. இலட்சணா விருத்தி - சங்கராச்சாரி யர் செய்ததாகச் சொல்லப்படும் இவ்வடமொழி நூலைக் கோயிலூர் சிதம்பரசாமி தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். (சென்னை, 1888) இலட்சுமிகாந்த சதகம் - சீனிவாசகர்* (இ)லலிதாங்கி - நடராசையர் (சென்னை, 1902.) (அ.பு.) இலிங்க மெழுவகை - வைத்தியம்* இல்லறநொண்டி - அருணாசலம் சதாசிவம்பிள்ளை (Arnold) யாழ்ப்பாணம் 1897. (அ.பு.) இல்லாண்மை - கனக சுந்தரம் பிள்ளை, மறைவு 1922. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி - சிவஞானயோகிகள் - 1785. இளந்தாரி புராணம் - சின்னத்தம்பிப் புலவர், இணுவில் 19ஆம் நூ. இளம்பூரணம் - (தொல்காப்பிய உரை) இளம் பூரணர், 12ஆம் நூ. இளைசைப்புராணம் - கணேச பண்டிதர், 19ஆம் நூ. பிற். இளையதுமார் சாதிவரலாறு - * இறையனார் அகப்பொருளுரை - நக்கீரர். இறையனாரகப் பொருள் - இறைய னார், கி.மு. 1ஆம் நூ. இறையனாராற்றுப் படை - பின்னத் தூர் நாராயணசாமி ஐயர், 1862 - 1914 இறைவனூற்பயன் - மறைஞான சம்பந்தர், 16ஆம் நூ. இனியது நாற்பது - பூதஞ்சேந்தனார் கி.பி. 1ஆம் நூ. இன்பமணி மாலை - தெய்வசிகா மணிப் பிள்ளை, 1802 - 1846 இன்ப மாலை - சுத்தானந்த பாரதி (1936). இன்னாநாற்பது - கபிலர், கி.மு. 87. இன்னிசை இருநூறு - அரசஞ் சண்முகனார், 1869 - 1914. இன்னிலை - பொய்கையார், கி.பி. 7ஆம் நூ. இன்னேச கன்னி எனப் பெயர் வழங் கும் அகினேச கன்னி அம்மானை - கத்தோலிக்க நூல் (யாழ்ப்பாணம் 1893.) (அ.பு.) ஈ ஈசவாசிய உபநிடதம் - இது தமிழ் மொழி பெயர்ப்போடு சீனிவாசா சாரியர் பதித்தது. (சென்னை, 1897.) ஈசுர கீதை - தத்துவராயர், 15ஆம் நூ. ஈச்சுர சுத்தி-ஆளவந்தார் I, 11ஆம் நூ. ஈச்சுரன் மாலை - ஒளவையார், (க. வேற் பிள்ளையவர்கள் பதித்தது) 12ஆம் நூ. ‘ஈடு’ என்னும் உரை - நம்பிள்ளை 14ஆம் நூ. ஈட்டி எழுபது - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் - சி. கணேசைய்யர் (1939) ஈழமண்டல சதகம் - க.வேற்பிள்ளை, 1847 - 1930. ஈழமண்டலத்துத் திருவேரக முருகர் பதிகம் - மானிப்பாய் செல்லையா பிள்ளை, (கொழும்பு 1907). உ உசிதகலா சங்கிரகம் - (சோதிடம்) சீனிவாசராகவ ஐயங்கார் (1888)** உசித சூடாமணி நிகண்டு - சிதம்பரம் பிள்ளை - ? முதற் பதிப்பு கோயம் புத்தூர் (1903) உசுபினாபிமாலை - முகைதின்சாகிப் (1874). உடலறி விளக்கம் - இது வேதாந்த விடயமானது. (செ.அ.நூ.கை.) உடற் கூற்றுத் தத்துவக் கட்டளை - துரைசாமி முதலியார், (1886) உடுதசாபல நிர்ணயம் - கடலங்குடி நடேச சாத்திரி. (1927) உடையவர் அழகில் அடியார்கள் ஈடுபாடு - எம்பிரான் சீயர் (1880) உடையார் பாளையத் தலபுராணம் - சந்திரசேகர நாயகர். உண்ணாமுலையம்மன் பதிகம் - வேலாயுதப் புலவர். உண்மை நெறி விளக்கம் - உமாபதி சிவாச்சாரியார், 14ஆம் நூ. உண்மை நெறி விளக்கம் - இந்நூல் பாயிரம் நீங்க ஆறு விருத்தங் களையுடையது. சீகாழி தத்துவ னார் திருவடி சம்பந்தியாகிய தத்துவ நாதனால் இயற்றப்பெற்றது. (செ. அ. நூ.கை.) உண்மை விளக்கம் -இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்களுள் ஒன்று; பாயிரம் நீங்கலாக ஐம்பத்து நான்கு வெண்பாக்களாலாகியது. ஆசிரியராகிய மெய்கண்ட தேவiர முன்னிலைப்படுத்தி, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம் முதலிய தச காரி யங்களின் திறத்தை விளங்கக் கூறுவது. இவ்வரியநூலை இயற்றி யவர் திருவதிகை மனவாசகங் கடந்தார் என்னும் பெரியார்; இவர் சாலிவாகன சகம் 1177இல் (கி.பி. 1255) இருந்தவரென்று அறிய வருகிறது. உதயண குமார காவியம்-இது கொங்கு வேள்செய்த பெருங்கதையின் வேறானது, இஃது உதயணன் காதை எனவும் வழங்கும்; 367 பாடல்கள் உடையது. உத்தண்டன் கோவை - இந்நூல் தொண்டை மண்டலத்தில் குமிழி நாட்டைச் சார்ந்த ஆமூர்க் கோட் டத்திலுள்ள பாலாற்றின் கரையில் தைகைக் குன்றையடுத்துள்ள இராச கேசரி நல்லூரென்னும் தையூரிற் குன்றுடையான் மகன் உத்தண்ட னைத் தலைவனாகக் கொண்டு பாடிய நூல். (செ.அ. நூ.கை.) உத்தம வாதநூல் - சச்சிதானந்தம் பிள்ளை. (1874.) உத்தர கீதை - இது வேதாந்த விடய மானது; வட மொழிப் பாரதத் திலுள்ள உத்தர கீதையின் மொழி பெயர்ப்பாக (பொழிப்புரையாக) அமைந்துள்ளது. (செ.அ.நூ. கை.) உத்தரகோசமங்கை புராணம் -மாசிலாமணி தேசிகர், 16ஆம் நூ. உத்தர போதகம் - வினாவிடை வடிவில் செய்யுள் நடையில் செய் யப்பட்ட இந்நூலில் 49 பாடல்க ளுண்டு. ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. (செ.அ.நூ.கை.) உத்தர மத்தர கோகுல கோவர்த்தன பிரிந்தாவன மகத்வம் - நரசிம்முலு நாயுடு (1889.) உத்தர ராமாயண சரித்திரம் - (1881) உத்தர ராமாயண கீர்த்தனை - அனந்த பாரதி ஐயங்கார், 1786 - 1846 உத்தேச காரியபலன் - நாராயண சுவாமி சோதிடர், (1888)** உபதேச காண்டம் - ஞானவரோதய பண்டாரம், 16ஆம் நூ. உபதேச காண்டம் - கோனேரியப்ப முதலியார் 12ஆம் நூ. பிற். (18ஆம் நூற்றாண்டெனவும் வழங்கும்) உபதேச சித்தாந்த விளக்கம் - இது பதி, பசு, பாசங்களைக் குறித்து விளக்கும் சித்தாந்த நூல்; பொன் னம்பல சுவாமிகளின் சீடர் காஞ்சி சரவண தேசிகரால் செய்யப்பட் டது. (செ.அ. நூ.கை.) உபதேச சித்தாந்த விளக்கச் சுருக்க வுரை - இது அத்வைத வேதாந்த வசன நூல். உபதேசப்பஃறொடை - தெக்கணா மூர்த்தி தேசிகர், 15ஆம் நூ. உபதேச மாலை - இது வள்ளலார் செய்த இருபது சாத்திரங்களி லொன்று. (செ.அ. நூ.கை.) உபதேச ரத்தின மாலை - மணவாள முனிவர், 16ஆம் நூ. இது ஆழ் வார்கள், அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள், அவற்றைப் பரவச் செய்த ஆசிரியர்களின் வைபவங் களைக் கூறுவது. உபதேசவுண்மை - சிதம்பர தேசிகர், 18ஆம் நூ. உபதேசவுண்மைக் கட்டளை - சிதம்பரதேசிகர்; 18ஆம் நூ. உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. உபதேச வொருபா ஒருபஃது - (செ. அ. நூ. கை.) உபநிஷத் தீபிகை - வித்தியாரணியர், 14ஆம் நூ. உபநிட மாலை - பல சாத்திரத்திரட்டு என்னும் நூலிற் காணப்படுவது. (செ. அ. நூ. கை.) உபாய நிட்டை வெண்பா ஆம்பல வாண தேசிகர், 17ஆம் நூ. உமர்காயம் பாடல் - மின்னா நூருத்தீன், (1937). உமாயேசுர சதகம் -பல சாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப் படுவது. (செ. அ. நூ. கை.) உமைநாம கீர்த்தனம் - கோவிந்தச் செட்டி, (1886). உயிரட்டவணை - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. உயிரெழுத்தந்தாதி - ?* உரிச்சொல் நிகண்டு - காங்கேயர், 17ஆம் நூ. உருத்திராக்கம் - ? தருமபுர ஆதினப் பதிப்பு. (1945) உருக்குமாங்கத சரித்திரம் - * உருக்குமாங்கத விலாசம் - சுப்பிராய முதலி (1882)** உருத்திராக் கவிசிட்டம் - மறைஞான சம்பந்தர், 16ஆம் நூ. உரூபாவதி - வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், 1871 - 1903 உரையறி நன்னூல் - ஆண்டிப் புலவர், 17ஆம் நூ. உரோமமுனி 500 - உரோமமுனி, 15ஆம் நூ. ? உரோமமுனி 100 - உரோமமுனி, 15 ஆம் நூ.? உரோமருஷி கற்பமுறை 20 - உரோம முனி,வைத்தியம். உரோமருஷி சுருக்கம் 16 - யோகம் உரோமருஷி சூத்திரம் 25 - இரச வாதம் உரோமருஷி சூத்திரம் 500-இரச வாதம், யோகம் உரோமருஷி சூத்திரம் 51-இரசவாதம் உரோமருஷி சூத்திரம் 100 - வைத்தியம் உரோமருஷி சூத்திரம் 16 - வைத்தியம் உரோமருஷி நாயனார் சூத்திரம் 50 - யோகம், இரசவாதம். உரோமர் கற்பமுறை 20 - வைத்தியம். உலகநீதி - உலகநாதர், 18ஆம் நூ. பிற். உலகந்தாதி - நமச்சிவாய கவி (காவியம்) உலக குணக்கண்ணாடி - இது விசுவ குண தரிசன சம்பு என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஐயாசாமி, (1906.) (அ.பு.) உலகம்மன் கலித்துறையந்தாதி - நமச்சிவாய கவி. (1885) உலகியல் விளக்கம் - நவநீத கிருட் டிண பாரதியார், (1922). உலகுடையம்மை யந்தாதி - நமச் சிவாயப்புலவர், 1707 - 1761. உவமானசங்கிரகம் - திருவேங்கிட ஐயர், 14ஆம் நூ. உவமைச்சொல் அகராதி - சுப்பிரா யலு நாயகர் (1872)** உவின்சுலோ அகராதி - உவின் சுலோ (Winslow) என்பவர் தென் இந்தியாவில் வாழ்ந்தவர். உவின் சுலோ அகராதி என வழங்கும் தமிழ்-தமிழ் ஆங்கில அகராதியைத் தொகுத்து 1862-ம் அச்சிட்டவர். உள்ள முடையான் - உள்ள முடை யான் செய்வித்த சோதிட நூல்; சூடாமணி உள்ள முடையான் எனப்படுவதும் இதுவே - ? இது உள்ள முடையான் செய்த நூலென வும், திருக்கோட்டி நம்பி செய்த சூடாமணியுள்ளமுடையானில் வேறானதாகவும் கொள்ளப்படு வது முண்டு. உறிதாபஸன் கதை - சைன சரித்திரம்.* உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் - இதில் 120 பாடல்களுண்டு. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை.* உறையூர்ப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. ஊ ஊசிமுறி - இடைக் காடர் - ? “இடைக் காடனார் பாடிய ஊசி முறியுட் கண்டு அலகிட்டுக் கொள்க” (யா. வி.ப. 375) ஊர்வசி இரத்தினச் சுருக்கம் - ஊர்வசி, யோகம்.* ஊழிக்காற்றுச் சூத்திரம் - அகத்தியர், தோத்திரம்.* எ எஸ்தாக்கியார் நாடகம் - தம்பி முத்துப்பிள்ளை, யாழ்ப்பாணம், (1890) (அ.பு.) எடுத்து என்னும் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம் - சிவஞான முனிவர் - 1785. எட்டாயபுரம் இளவரசர்மீது ஒரு துறைக் கோவை - மீனாட்சி சுந்தர கவிராயர், 19ஆம் நூ. எட்டுக்குடி கந்தர் வருகை நவமணி மாலை - ? (1944) எட்டுக்குடிப் பிரபந்தம் - சிவசம்புப் புலவர், 1852 - 1910 எட்டுக்குடி ஏசல் - (1878)** எட்டுத்தொகை - நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. எட்டுவார்த்தை - வைணவ நூல்* எட்டிய நூல் - மந்திரம்* எட்டெட்டந்தாதி - தோத்திரம்* எண்சுவடி - கணிதம்* எண்ணாயிரத்திரட்டில் முதற்குரு துரிசி - இரசவாதம்* எண்பதவிரோதிகள் - வைணவம்* எதிராச பதிகம்- பையனூர் வரதராசப் பிள்ளை* எதிராசரந்தாதி- மணவாள தாசர், (பிள்ளைப் பெருமாளையங்கார்) 17ஆம் நூ. எதிராசர் கட்டியம் - * எதிராசவிம்சதி வியாக்யானம் - * எதீந்திரப் பிரணவப் பிரபாவம் - பிள்ளை லோகாசாரியர்* எந்நாட் கண்ணி முதலியன - வேதாந்தம்* எம்பார் அநுசந்தாநம் - வைணவம்* எம்பார் பத்து வார்த்தை - வைணவம்* எம்பிரான் சதகம் - கோபால கிருட் டிணதாசர், 18ஆம் நூ. எம்பிரான்மார் சாதி வரலாறு - * எம்பெருமானார் 82 வார்த்தை - இராமானுசர்* எம்பெருமானார் துதி - தோத்திரம்* எம்பெருமானார் நெஞ்சுவிடுதூது - காவியம் * எயினனூர் புராணம் - பண்டுருட்டி சுப்பிரமணிய செட்டி, (சென்னை, 1896.) (அ.பு.) எல்லியட் துரைகட்டியம் - வீராசாமி.* எழுமாத்தூர் சத்தியநாதர் சிவக் கொழுந்து மாலை - தெய்வ சிகாமணிக் கவுண்டர், (1943) எழுவகைத் தோற்றம் - மனிதர்களைக் குணத்தாலும் தொழிலாலும் தேவர் மனிதர் விலங்கு பறவை ஊர்வன தவழ்வன நீர்வாழ்வன தாவரம் முதலிய வகுப்பாகப் பிரிக்கப்பட்ட விபரங்கூறும் இந்நூல் அச்சிடப் படவில்லை (செ.அ. நூ.கை.) எறும்பீச்சுரம் வெண்பா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. என் சரித்திரம் - உ.வே.சாமி நாதையர், 1942. என்னை இப்பவத்தில் என்னும் சிவ சமவாத மறுப்பு - சிவஞான முனி வர் - 1785. ஏ ஏகசந்தி - ஏகசந்தி ஆசாரி - ? ஏகபாத நிகண்டு - பழைய நிகண்டு நூல்களிலொன்று - ? ஏகபாத நூற்றந்தாதி மாலை - அரசஞ்சண்முகனார், 1869 - 1914. ஏகாதசிப் புராணம் - வரத பண்டிதர், 18ஆம் நூ. பிற். ஏகாம்பரநாதருலா - இரட்டையர், 15ஆம் நூ. ஏசுமத நிராகரணம் - சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. ஏசு மனுஷாவதாரம் - * ஏசு வரலாறு - அழக சுந்தரம், (பிரான்சிஸ் கிங்சுபெரி), 1873-1941. ஏணி ஏற்றம் - புகழேந்தி புலவர். ஏரெழுபது - கம்பர், 12ஆம் நூ. ஏரோதுநாடகம் - கந்தப் பிள்ளை, 19ஆம்.நூ. ஏலப்பாட்டு (1875)**. சமய சம்பந்த மான இந்நூல் வின்சென் என்பவ ரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டது. (பாரிஸ் 1902). ஏலாதி - மாக்காயனார் மகனார் கணி மேதாவியார், 7ஆம் நூ. ஏழாம் திருமுறை - சுந்தரர், 9ஆம் நூ. ஏழாயிரப் பிரபந்தம் - முருகதாச சுவாமிகள், 1840-99 ஏழுவார சூட்சும விவரம் - சர நூல்* ஏழுவாரத்துப் பலன் - சர நூல்* ஏனாதி சித்தர் பாடல் - ஏனாதி சித்தர்* ஐ ஐங்குறுநூறு (சங்ககாலம்) - இதில் ஐந்து புலவர்கள் பாடிய 500 பாடல் களுள்ளன. ஓரம்போகியார் மருத மும், மூவனார் நெய்தலும், கபிலர் குறிஞ்சியும், ஓதலாந்தையார் நெய் தலும், பேயன் முல்லையும் பாடி யுள்ளார்கள். ஒவ்வொரு திணைக் கும் நூறுபாடல்கள் உள்ளன. இதைத்தொகுத்தார் புலத் துறை முற்றிய கூடலூர்கிழார்; தொகுப்பித் தார் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும் பொறை, இதற்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. ஐதர் சோபனம் - * ஐந்திணை எழுபது - மூவாதியார், சங்ககாலம். ஐந்திணை ஐம்பது - மாறன் பொறை யனார், சங்ககாலம். ஐந்திணைக் கோவை - கருப்பையா பாவலர், 20ஆம் நூ. ஐந்திணை மொழி ஐம்பது - சாத்தந் தையார் மகனார் கண்ணஞ் சேந்த னார், கி.மு. 130 ஐந்தெழுத்து - ? தருமபுர (ஆதீனப் பதிப்பு 1945) ஐந்தெழுத்துண்மை - இந்நூல் சைவ சமயத்தைச் சார்ந்தது. பஞ்சாக்கரத் தின் பெருமையை விளக்குவது. சித்தர்கள் பாட்டைப்போல் திருத்த மில்லாமலிருக்கிறது. (செ.அ.நூ. கை.) ஐயனார் கதை - பாச்சிப் பெருமாள் நாயக்கர் (1871)** ஐயாச்சுவாமீயம் அம்மணீயம் - (சோதி டம்) சிற்றம்பல முதலியார், (1883). ஒ ஒசியத்து அல்லது பொன்னரிய மாலை - நுருதீன் புலவர் (1882)** ஒட்டிய நூல் - ஒட்டியமுனி,மந்திரம்* ஒட்டியமுனி வாக்கியம் - ஒட்டிய முனி.* ஒதெல்லோ என்ற வெனிஸ் மோரியன் - மாதவையர், (சென்னை 1902.) ஒதெல்லோ டெஸ்டிமோனோ - பவானந்தம் பிள்ளை பதிப்பு (1927) ஒத்தாயண மகாராசன் கதை - சைன சரித்திரம்* ஒப்பிலக்கணம் - கால்ட்வெல் (ஆங்கில நூல்), 19ஆம் நூ. ஒயில் கும்மி - (1889)** ஒரு சொற் பல பொருள் நிகண்டு - கனகசபைப் புலவர், 19ஆம் நூ. ஒருதுறைக் கோவை - அமிர்த கவிராயர், 1637 - 72. ஒரு பாவுண்மை உபதேசம் - இது காஞ்சி சரவண தேசிகர் இயற்றிய ஒரு செய்யுளுடைய நூல். (செ. அ. நூ. கை.) ஒருபா ஒருபஃது - கஹாப் உத்தீன் (1873)** ஒரு மொழி யுண்மை யுபதேசம் - இந் நூல் அத்வைத மதத்தைச் சார்ந் தது; வசன நடையாலானது. நூலா சிரியர் இன்னாரெனத் தெரிய வில்லை. (செ.அ.நூ.கை.) ஒங்கார உண்மை - சுவாமி வேதா சலம், (1920) ஒலியலந்தாதி - தண்டபாணி சுவாமிகள். ஒழிவிலொடுக்கம் - கண்ணுடைய வள்ளலார், 18ஆம் நூ, முற். ஒழிவிலொடுக்கவுரை - சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. ஒன்றுமுதல் மூன்று திருமுறைகள் - திருஞானசம்பந்தர் (ஆளுடைய பிள்ளையார்), 7ஆம் நூ. ஓ ஓரடிச் சிந்து - வரதராச முதலியார் (1878)** ஓரெழுத் தந்தாதி - கருப்பையா பாகவதர் 20ஆம் நூ. ஓரெழுத்துண்மை - இது சைவ சமய விஷயமான இரண்டு பாடல்களை யுடையது; திருத்தமான நூலன்று. (செ.அ.நூ.கை). ஓரை சாத்திரம் (ஹோரா சாத்திரம்). இது வடமொழியில் வராகமிகிரர் என்பவர் செய்த மிருகதசாதிக மென்னும் சோதிட நூலின் மொழி பெயர்ப்பாகவுள்ளது; 25 அத்தி யாயங்களாகப் பகுக்கப்பட்ட 400 பாடல்களையுடையது; இதனைத் தமிழிலியற்றியவர் வணிக வகுப் பினராகிய இலிங்கன் என்பவர். இவரூர் மலையாள தேசத்திலுள்ள புது நகரமென்பது. (செ.அ.நூ.கை.) ஒள ஒளிச்சித்திராயனம் Photography - யாகையாபிள்ளை, (சென்னை 1884) ஒளடத முறைகள் - வைத்தியம்* ஒளடத விவரணம் - வைத்தியம்* ஒளவை அருந்தமிழ் - அ. சுப்பிர மணியபாரதி, (1937). ஒளவை நிகண்டு - பழைய நிகண்டு களிலொன்று; வேதகிரி முதலியா ரால் ஆளப்பட்டது. க கசேந்திர மோட்ச நாடகம் - வெங்க டாசல முதலி (1874). கசேந்திர மோட்சம் - முத்துலிங்க தேசிகர் (பாலைக்காடு, 1898.) கச்சி இதழகலந்தாதி-கார்த்திகேய முதலியார் (1907) கச்சிக் கலம்பகம் - காஞ்சி ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. கச்சிக் கலம்பகம் - பூண்டி அரங்கநாத முதலியார், 19ஆம் நூ. கச்சி பதிற்றுப் பத்தந்தாதி - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம் - சிவஞான முனிவர், 1785. கச்சிமாலை - கண்ணுடைய வள்ளல் 18ஆம் நூ. கச்சியப்ப சிவாசாரியர் புராணம் - வாம தேவ முருகப் பட்டாரகர், (1917). கச்சியப்ப தேசிகர் நெஞ்சு விடுதூது* கச்சியானந்த ருத்திரேசர் வண்டு விடு தூது - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். கஞ்சன் காவியம் - முத்துக்குமாரர், 18ஆம் நூ. பிற். கடகண்டு - இது நச்சினார்க்கினியர் மேற்கோள் எடுத்தாண்ட நூல் களுள் ஒன்று. காலம் - ? கடம்பர் கோயில் உலா - ? மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு (1932.) கடம்பவன புராணம் - வீமநாத பண்டிதர் (விக்கிரம ஆண்டு) கடம்பவனம், இரத்தினாசலம், மரக தாசலம், தலமான்மியங்கள் - தாமோதரம் பிள்ளை, பூவை கலி யாண சுந்தர முதலியார் பதித்தது. (1891) கடவுளந்தாதி - (1878.) கடவுளின் சொரூபம் - J.M. நல்ல சாமிப்பிள்ளை (1910) கடவுள் மாலை - (1876.) கடாவிடை யுபதேசம் - கந்தப்பையர்* கடுவெளிச் சித்தர் பாடல் - கடுவெளிச் சித்தர், 15ஆம் நூ. ? கடைக் காண்டம் - கொங்கணர், - ? கடைப் பிள்ளையமிர்த போதகம் 125 - ஞானம் * கட்டளைக் கலித்துறை - சி.வை. தாமோதரம் பிள்ளை, (1872) கட்டளைக் கொத்து - ? (1892) கட்டுக் கதைகள் (Aesops fables) மொழி பெயர்ப்பு, இராச சுப்பிர மணிய முதலியார் (சென்னை 1853.) (அ.பு.) கட்டுரைக் கலம்பகம் - ச.கு. கணபதி ஐயர், (1936). கட்டுரைக் களஞ்சியம் - மு.சி. பூரண லிங்கம் பிள்ளை, (1930) கணக்கதிகாரம் - காரியார், 15ஆம் நூ. கணக்கியல் - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல். (யா.வி.) கணபதி ஆசிரிய விருத்தம் - இது ஒளவையார் செய்தது என வழங் குகின்றது. இதில் 10 விருத்தங்கள் உள்ளன. (செ.அ.நூ.கை.) கணபதியந்தாதி - * கணித நூல். - * கணிதா மிருதம் - இது விருத்தப் பாவாலாகிய ஒரு சோதிட நூல். (செ.அ.நூ.கை.) கணிதாமிருத வெண்பா - இது 80 வெண்பாவினாலாகியது; இலக்கி னம் முதலாகப் பன்னிரண்டு இராசியிலும் கிரகங்கள் நிற்கப் பலன்களின்ன வெனக் கூறுவது. (செ.அ.நூ.கை.) கணிதாமிருதம் வெண்பா - * கண்டதும் கேட்டதும் - உ.வே. சாமிநாதையர், மறைவு 1942. கண்டி அரசன் கிள்ளைவிடுதூது - சிற்றம்பலப் புலவர், 18ஆம் நூ. கண்டி நாடகம் - கந்தப் பிள்ளை, 19ஆம் நூ. கண்டிராச நாடகம் - (கீர்த்தி சிங்க ராசன் சரித்திரம்) சிவசண்முகம் பிள்ளை. (சென்னை, 1900) (அ.பு.) கண்ணகி - செல்வக் கேசவராய முதலியார், மறைவு 1921. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1926). கண்ணப்ப சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனம் - சா. சரவணப் பிள்ளை, (1891) கண்ணப்ப தேவர் மறம் - கல்லாட தேவநாயனார், 9ஆம் நூ.?; பிற்கால நக்கீரரும் இப்பெயருடைய பாடல் செய்தார். கண்ணப்பர் கலம்பகம் - வீ. துரை சாமி முதலியார், (1923) கண்ணப்பர் புகழ் மாலை - (1938) கண்ணாட்டிச்சிந்து - இராமசுவாமிப் பிள்ளை (1888) கண்ணினுட் சிறுதாம்பு - மதுரகவி ஆழ்வார் 8அல்லது 9ஆம் நூ. கண்ணினுட் சிறுதாம்பு உரை - பெரியவாச்சான்பிள்ளை* கண்ணினுட் சிறுதாம்பு உரை - நஞ்சீயர்* கண்ணினுட் சிறுதாம்பு - தம்பிரான் மார்* கதாசிந்தாமணி - தாண்டவராய முதலியார் (1870-1884) கதாசிந்தாமணி - ஆதிமூல முதலியார், 19ஆம் நூ. பிற். கதாமஞ்சரி - தாண்டவராய முதலியார். (சென்னை, 1826) (அ.பு.) கதிரைமலைப் பள்ளு. - ? (1935) கதிரையாத்திரை விளக்கம் - நல்லூர் விநாயகமூர்த்திச் செட்டி. (யாழ்ப் பாணம் 1886.) (அ.பு.) கதிர்காமவேலவர் திருவருட்பா - திருஞானசம்பந்த உபாத்தியாயர், (1906) கதிர்காமவேலவர் திருவருட்பா - சிவஞான தேசிகர், - ? கதிர்காமத் தோத்திரம் - இந்நூலிற் 11 பாடல்களுள்ளன. இயற்றியவர் பெயர் தெரியவில்லை. (செ.அ. நூ.கை.) கத்தியத்திரய வியாக்கியானம் - பெரியவாச்சான்பிள்ளை* கந்தபுராணக் கீர்த்தனை - கவிக் குஞ்சரபாரதி. கந்தபுராண சங்கிகரம் - நெல்லி அப்பாசாமி உடையார் (1910) கந்தபுராண சதகம் - முத்துக் குமார தாசர், (கர வருடம்). கந்தபுராணச் சுருக்கம் - சம்பந்த சரணாலயர், - 16ஆம் நூ. கந்தபுராணச் சுருக்க வசனம் - தங்க வேலுச் சுவாமி தேவர். (சென்னை 1907) (அ.பு.) கந்தபுராணம் - கச்சியப்ப சிவசாரி யார், 11ஆம் அல்லது 12ஆம் நூ. கந்தபுராண வசனம் - சண்முகம் பிள்ளை (1890.) அ.பு. கந்தரந்தாதி - அருணகிரிநாதர், 15ஆம் நூ. கந்தரலங்காரம் - அருணகிரிநாதர், 15ஆம் நூ. கந்தரனுபூதி - அருணகிரிநாதர், 15ஆம் நூ. கந்தர் ஒலியலந்தாதி-குமரகுருதாசர், (விரோதி). கந்தர் கலிவெண்பா - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. கந்தர் காதல் - * கந்தர் சட்டிக் கவசம் - தேவராய சுவாமிகள், 19ஆம் நூ. பிற். கந்தர் சட்டி விரதச் சிறப்பு - வச்சிர வேல் முதலியார், தருமபுர ஆதீனப் பதிப்பு, (1945). கந்தர் நாடகம் - பாலசுப்பிரமணிய கவி* கந்தர் நாடி - (சோதிடம்) (1897). கந்த வருக்கச் சந்த வெண்பா - சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. கந்தவன நாதர் பதிகம் - சிவசம்புப் புலவர், 1852-1910. கந்தவன நாதர் ஊஞ்சல் - குமார சுவாமி முதலியார், 1826-1889. கந்தூரி அலங்காரச் சிந்து - ஷா அல்கமித் இபின்மீரான் மேலைப் பாளையம் அத்தியடித் தெரு, (திருநெல்வேலி 1907) (அ.பு.) கபாலீசுவரர் கீர்த்தனை - * கபிலரகவல் - விசாகப் பெருமாளை யர், 19ஆம் நூ. இது சங்க காலக் கபிலர் செய்ததாக வழங்குகின்றது. இக்கருத்துத் தவறுடையதென்பது அறிஞர் கருத்து. கபில வாசகம் - கருணானந்த சுவாமிகள் (1875). கபிலர் - ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1939). கபிலை காவியம் - குப்புசாமி முதலியார் (1922). கபிலை வாசகம் - இது பசுவின் கதை என வழங்கும் வசன நூல், இயற் றியவர் யாரெனத் தெரியவில்லை. கபீர் கமால்தாஸ் கீர்த்தனைகள் - ? (1899) கபோத வாக்கியம் - காவியம் * கப்பல் சாத்திரம் - சிற்பம் * கப்பற் சிந்து - (1885.) கப்பற்கோவை - இதைப்பாடிய புலவர் பெயர் அறியப்படவில்லை. இப் பாடல்கள் இலக்கணக் கொத்து உரையில் மேற்கோளாக வந் துள்ளன. 397 பாடல்களடங்கியது இந்நூல். இது புதுக்கோட்டையைச் சேர்ந்த கப்பலூர், துவாங்குறிச்சி என்னும் இரு ஊர்களுக்கும் தலை வனாக விருந்த கருமாணிக்கன் என்பவன் மீது பாடப்பட்டது, 13ஆம் நூ. கப்பற்பாட்டு-கணபதி ஐயர்,19ஆம் நூ. கமலமுனி 3000-கமலமுனி,15ஆம் நூ. கமலமுனி ஞானச் சுருக்கு 15- ஞானம்* கமலாலய புராணம் - மறைஞான சம்பந்தர், 16ஆம் நூ. கம்பளிச் சட்டை கைலாய நாதர் சூத்திரம் 201 - இரசவாதம்* கம்ச சந்தேசம் - துரைசாமி மூப்பனார் 1883. கம்பராமாயண அருங்கவிப் பொருட் சுருக்கம் - துரைசாமி மூப்பனார் 19ஆம் நூ. கம்பராமாயணக் கருப் பொருள் - (1882) கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தரவிருத்தி - சிவஞான முனிவர் - 1785. கம்பராமாயணம் - கம்பர் 12ஆம் நூ. கம்பராமாயண வசனம் - திருச் சிற்றம்பல தேசிகர், 19ஆம் நூ. கம்பன் - செல்வக் கேசவராய முதலி யார், மறைவு 1921 கயத்தாற்றரசனுலா - அந்தகக் கவி வீரராகவ முதலியார், 1654-. கயற்கண்ணி மாலை - சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. கயாகர நிகண்டு - பழைய நிகண்டு களிலொன்று; வேதகிரி முதலியா-ராலாளப்பட்டது; கயாகரர் செய்தது. கயிலாயச் சட்டைமுனி வாத நூல் 100 - இரசவாதம், வைத்தியம்* கயிலைபாதி காளத்திபாதி வெண்பா வந்தாதி - நக்கீரர். கரணசிகை - இது ஓங்காரம் முதல் பிண்ட அண்டம் வரையிலுள்ள தத்துவங்களை உணர்த்துவது. (செ.அ.நூ.கை.) கரண சிகை - சைனம்* கரவைவேலன் கோவை - சின்னத் தம்பிப் புலவர், 18ஆம் நூ. கரிகால் வளவன் -உலகநாத பிள்ளை, 20ஆம் நூ. கரிசில் - அகத்தியர். கரிநாளறியும் விதம் முதலியன - சோதிடம்* கரிநாள் விளக்கம் - சோதிடம்* கருக்கிடை நிகண்டு - தன்வந்திரி (1880.) கருக்கிடை வைத்தியம் - தன்வந்திரி கருடநூல் - இறந்துபட்ட தமிழ் நூல் களிலொன்று, யாப்பருங்கல விருத்தி மேற்கோட்பாடலொன்றிற் காணப் படுகிறது. கருட பஞ்சாட்சரம் - மந்திரம்* கருடப் பத்து - (1880)** கருட புராணம் - இறந்தவர்கள் மரணத்தின் பின் செல்லும் இடங் களைப் பற்றிக் கூறும் நூல். கருடன் தோத்திரம் - * கருணாமிருதசாகரம் - கருணானந்த பண்டிதர் (1907), 20ஆம் நூ. கருணானந்தசித்தர் சரித்திரம் - சிதம்பரம் சாமிநாதையர், (1906) (அ.பு.) கரும்பாம்பின் விஷக்கடிக்கு மருந்து - இது புறத்தஸ்தாந்து மதத்தைத் தாக்கும் கத்தோலிக்க நூல். (புதுவை, 1868) (அ.பு.) கருணீகர்ப் புராணம் - அங்கு சாமிப் பிள்ளை. (1887) கருணைத் திருவிருத்தம் - சைவம்* கருணைநிலைப் போதகம் - தோத்திரம்* கருவூரர் சூத்திரம் 116 - இரசவாதம்* கருவூரார் பலதிரட்டு - (1877)** கருவூரர் வைத்தியம் - கருவூர்ச் சித்தர்* கருவூர்த் தேவர் - சி.கே.சுப்பிரமணிய முதலியார், (1936). கருவெளி நாற்பது - கருவெளிச் சித்தர் (1877.) ? கருவையந்தாதி - வரதுங்கராம பாண்டியன், 16ஆம் நூ. கர்த்தரின் சென்ன கீர்த்தனை - சுப்ப வாக்கியம் பிள்ளை, (யாழ்ப் பாணம். 1886,) (அ.பு.) கலாவதி - வி.கோ.சூரியநாராயண சாத்திரியார், 1871-1903 கலி - இறந்துபட்ட பழந்தமிழ் நூல் களிலொன்று. (இ.க.உ.) கலிங்கத்துப்பரணி - சயங்கொண் டார், 11ஆம் நூ. கலிங்கத்துப்பரணி உரை- கன்னையா நாயுடு, (1944) கலிங்கத்துப்பரணி வசனம் - ந.சி. கந்தையா பிள்ளை (1938). கலிங்கப்பரணி - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. இந்நூல் கலிங்கத்துப் பரணியையே குறிக்கின்றதென்றும் கலிங்கப்பரணி அல்லது கலிங்கத் துப்பரணி என்னும் நூலை ஒட்டக் கூத்தர் செய்யவில்லை யென்றும் அறிஞர் கருதுகின்றனர். கலித்துறையந்தாதி - நம்பியாண்டார் நம்பி, 10ஆம் நூ. கலித்தொகை - (சங்ககாலம்) இது 150 பாடல்களைக் கொண்ட அகப் பொருள் இலக்கணம். இவற்றுள் பாலைத் திணையைப் பெருங்கடுங் கோனும், குறிஞ்சித் திணையைக் கபிலரும், மருதத் திணையை மருதனிள நாகனும், முல்லையைச் சோழன் நல்லுத்திரனும், நெய்தலை நல்லந்துவனாரும் பாடியுள்ளார் கள். இந் நூலைத் தொகுத்தவர் நல்லந் துவனார். இதற்கு நச்சினார்க் கினிய ரெழுதிய உரை உண்டு. கலித்தொகை உரை - நச்சினார்க் கினியர், 14ஆம் நூ. கலித்தொகை முதற் பதிப்பு - சி.வை. தாமோதரம் பிள்ளை, (1887) 1832-1901 கலித்தொகை வசனம் - ந.சி. கந்தையா பிள்ளை (1941) கலிப்பா - தத்துவராயர், 15ஆம் நூ. கலிமடல் - தத்துவராயர், 15ஆம் நூ. கலியனருளப்பாடு - பெரியவாச்சான் பிள்ளை - 15ஆம் நூ. கல்யாண ஏசல் - வீராசாமிச் செட்டி (1873) கல்யாணக் கதை - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.பா. 262.) கலியுக அரசர்களட்டவணை - * கலியுக அரசர்களின் பெயர் முதலியன - * கலியுகச் சக்கரவர்த்திகள் அட்ட வணை - இது பரீட்சித்து முதல் டில்லிப் பாஷா வரையிலாண்ட அரசர்களின் பெயரும் அவர் காலத்தில் நடந்த சரித்திரங்களும் இன்னவெனக் கூறுவது (செ. அ. ஆம் நூ. கை.) கலியுக நடக்கை - * கலியாண ஏசல் - வீராசாமிச் செட்டி (1873.) கலியுக விருத்தம் - (1888) கலைக்கோட்டுத்தண்டு - கலைக் கோட்டுத்தண்டர். இறந்துபட்ட நிகண்டு நூல்களிலொன்று. (இ.க.உ.) கலைசைக்கோவை - தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர், (1875.) கலைசைச் சிலேடை வெண்பா - சுப்பிரமணிய முனிவர், 18ஆம் நூ. பிற். கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் - சிவஞான முனிவர், - 1785 கலைசைச் பதிற்றுப்பத் தந்தாதி - சிவஞான முனிவர் - 1785 கலைஞானச் சுருக்கம் - இரசவாதம்* கலைஞான தீபம் - இரசவாதம்* கலைஞானம் - தன்வந்திரி - ? கலைமகள் இரட்டைமணி மாலை - தமிழாகர முனிவர், 17ஆம் நூ. கல்கி புராணம் - இது தேசிகாசாரியர் மொழி பெயர்த்தது, (1902) (அ.பு.) கல்பவிதி - (1881) கல்யாண கீதம் - குன்றத்தூர் அரங் காச்சாரியார். (சென்னை, 1906) (அ.பு.) கல்லடைப்பு வகை முதலியன - வைத்தியம்* கல்லாட உரை - மயிலேறும் பெரு மாள் பிள்ளை,17ஆம் நூ. கல்லாட சாகர கலித்துறை - சிவ சம்புப் புலவர், 18ஆம் நூ. கல்லாடம் - கல்லாடர், 9ஆம் அல்லது 10ஆம் நூ. கல்வளையந்தாதி - சின்னத்தம்பிப் புலவர், 18ஆம் நூ. கல்வி ஒழுக்கம் - ஒளவையார். கல்வி விளக்கம் - சுப்பிரமணிய முதலியார், வெள்ளக்கால், (1899). கவணாவத்தை வயிரவரூஞ்சல் - ஏரம்பையர், 1847 - 1914 கவிசாகரம் - பழைய இலக்கண நூல்களிலொன்று; வேதகிரி முதலி யாரால் எடுத்தாளப்பட்டுள்ளது. திருவள்ளுவமாலைப் பாட லொன்று கவிசாகரப் பெருந்தேவ னார் (கி.பி. 815 - 870) செய்ததாகக் காணப்படுகிறது. கவிச்சுவடி - காவியம்* கவிமயக்கறை - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) கழிநெடிலாசிரிய விருத்தம் - * கழுகுமலைத் திரிபந்தாதி - மீனாட்சி சுந்தர கவிராயர் 19ஆம் நூ. பிற். கழுக்குன்ற புராணம் - அந்தகக்கவி வீரராகவ முதலியார், 1654. கழுக்குன்ற மாலை - அந்தகக்கவி வீரராகவ முதலியார், 1654. கழுமல மும்மணிக்கோவை - பட் டினத்தடிகள், 10ஆம் நூ. களத்தூர்ப் புராணம் - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், 1862 - 1914 களந்தைப் புராணம் - சரவணப் பெருமாள் ஐயர், 19ஆம் நூ. களப்பாழ்ப் புராணம் - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், 1862 - 1914. களரியா விரை - இறந்துபட்ட பழந் தமிழ் நூல்களிலொன்று (இ.க.உ.) களவழி நாற்பது - பொய்கையார், கி.பி.50 கள்வர் தலைவர் (நாவல்) - பி. சம்பந்த முதலியார், (1931). கள்ளர் சரித்திரம் - ந.மு. வேங்கட சாமி நாட்டார், (1923). கள்ளர் சாதி விளக்கம் - * கறுப்பண்ண சுவாமி சதகம் - இராம சுவாமி கவிராயர். (சென்னை, 1897) (அ.பு.) கற்கண்டு மிட்டாய்க்கண்ணி - இராம லிங்கம் பிள்ளை (1876) கற்பகப் பிள்ளையார் துதி - இந்நூல் சிதம்பரம் மேலைக் கோபுரவாயி லிலுள்ள கற்பக விநாயகர் மேலது; பத்துப்பாடல்களுடையது (செ.அ. நூ.கை.) கற்பக வல்லி துதி - * கற்ப விதி - போகர்* கற்பிலக்கண வசனம் - சபாபதி முதலியார் (1864.) கற்பு நிலை - வீராசாமிச் செட்டியார் (1888.) கனக வல்லி - சென்னை வீரப்பச் செட்டியார். (சென்னை, 1906) (அ.பு.) கனகி புராணம்-நட்டுவச் சுப்பைய்யா, யாழ்ப்பாணத்து ஏழாலையினர், 19ஆம் நூ. பிற். கனதண்டிகைக் கனகராயன் பள்ளு - சின்னக்குட்டிப் புலவர், 19ஆம் நூ. முற். கனம் கிருட்டிணையர் - உ.வே. சாமிநாதையர், (1936). கனவு நூல் - (1870) கனா நூல் - பொன்னவன், 14ஆம் நூ. கனா நூல் - ஏரம்பையர், 1847 - 1914. கன்ம நெறி - கன்றும் கனியுதவும் - எல். உலகநாத பிள்ளை, 20ஆம் நூ. கன்னபுரப்பாகம் பிரியான் பிள்ளைத் தமிழ் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1815-75. கன்னமகாராசன் போர் - செஞ்சி ஏகாம்பர முதலியார். (அ.பு.) கன்னியநுசாரம் - இது கிறித்துவ கன்னிமாடப் பெண்களின் சமய ஒழுக்கம் கூறும் நூல். (புதுவை, 1865) (அ.பு.) கன்னியாகுமரித் தலபுராணம் - ? கன்னிவன புராணம் - வீரைத் தலைவன் பரசமய கோளரி மாமுநி. 12ஆம் நூ.(சா.த.க.ச.) கன்னிவாரிசெமீன் கோவை - சுந்தர மூர்த்தி கவிராயர், 18ஆம் நூ. பிற். கா காக்கைபாடினியம் - காக்கைபாடினி யார், இவர் இலக்கணச் சூத்திரங் களாக யாப்பருங்கல விருத்தியிற் காட்டப் பெற்றவற்றுள் விருத்தப்பா கூறப்படுதலால், இவர் காலம் 10ஆம் நூற்றாண்டெனலாம். காங்கேயன் பிள்ளைத்தமிழ் - கொடிக் கொண்டான் பெரியான் அதிச்ச தேவன், 1230 காசி காண்டம் - அதிவீர ராம பாண்டி யன், 16ஆம் நூ. காசிக் கலம்பகம் - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. காசிக் காலபைரவர் பதிகம் - * காசித்துண்டி விநாயகர் பதிகம் - சிவஞான தேசிகர்* காசிம்படை வெட்டு - இசுமால்கான் மரக்காயர்.* கா (ஹா) சியமஞ்சரி - வைகுந்த ஐயங்கார், (1887.) காசி யாத்திராதீபம் - கந்தையாசாமி (1898). காசி யாத்திரை விளக்கம் - மயில் வாகனப் புலவர், 18ஆம் நூ. காசி ரகசியம் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. காசிவாசி சாமிநாத சுவாமிகள் பேரிற் பாடற்றிரட்டு - (1893). காசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் மீது இரட்டை மணிமாலை - எஸ். வேலாயுத முதலியார், (1915) காசிவிசுவநாதர் கீர்த்தனம் -இது தாயொருத்தி தன் மகளுக்குக் கூந்தல் கலைந்திருத்தல் முதலிய வற்றாற் சந்தேகித்துக் காசி விசுவ நாதசுவாமி உன்னை அணைந் தாரோவென்று கேட்க மகள் அவ் வாறன்றிப் பந்தடித்தல் முதலியவற் றால் நேர்ந்ததாகக் கூறி அவளை மதியாது காசி விசுவநாத சுவாமி தயவிருந்தாற் போதுமென அலட் சியம் செய்ததாகக் கூறுமுகத்தால் அந்த மகளுக்கு பத்தி மிகுந்திருத் தலை விளக்குவது; 20 கண்ணி களாலாயது. (செ.அ.நூ. கை.) காசி விசுவேசர் அடைக்கலப் பதிகம் - சொக்கலிங்கம் செட்டியார், (1926). காசி விநாயகர் பதிகம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 75. காஞ்சி சேத்திர மஞ்சரி - காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை, பதித் தது, (1906) (அ.பு.) காஞ்சி புராணக் கலித்துறை - ? (1927). காஞ்சி புராணத்தின் பிற்பகுதி - கச்சி யப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். காஞ்சி புராணம் - (முதற் காண்டம்) சிவஞான முனிவர், மறைவு 1785. காஞ்சி பூரணப் பிரபாவம் - வைணவம்* காஞ்சி வரதராச சுவாமிகோயில் கை பீது - சரித்திரம்* காணாவிஷக் கடிக்கு மருந்து - இது புறஸ்த்தாந்து மதத்தைக் கண்டிக் கும் கத்தோலிக்க நூல். (புதுவை, 1869) (அ.பு.) காதம்பரி - ஆதிவராக விராயர், 18ஆம் நூ. (வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்) காதம்பரி சாரசங்கிரகம் - சடகோபாச் சாரி, (1887.) காத்தவராய சுவாமி சரித்திரம் - புகழேந்தி, (1873.) காத்தவராய நாடகம் - * காந்தசத்தி வைத்தியம் - வி.எஸ். குமாரசாமி முதலியார், (1891). காந்தி அடிகள்மீது நெஞ்சுவிடு தூது - ந.மு. வேங்கடசாமி ரெட்டியார் (1934). காந்தி சதகம் - கா.மு. சுந்தர முதலி யார், (துந்துபி). காமரச மஞ்சரி - கடிகை முத்துப் புலவர், 17ஆம் நூ. காமாட்சி லீலாபிரபாவம் - காஞ்சி ஆலால சுந்தரம் மொழி பெயர்த் தது. 1906, (அ.பு.) காமாட்சியம்மன் பதிகம் - * காமாட்சி - மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, (1915). காமாலை வகை முதலியன - வைத்தியம்* காமிகாமம் - தமிழ் மொழி பெயர்ப்பு 2 பகுதி (சென்னை, 1898.) (அ.பு.) கா (ஹா) ம்லெத் - V. விசுவநாத பிள்ளை பதித்தது. (1917) காயகற்ப முதலியன - இந்நூல் வைத் தியம் தொடர்பானது, காயகற்பம், அண்ட கற்பம், உப்புக் கட்டு, அயக் கற்பம், கெந்திச் செம்பு முதலிய பலவற்றைப் பற்றிய முறைகளைக் கூறுவது. (செ.அ.நூ.கை.) காயாரோகணேசர் துதி - * காரண காரிய தரிசனம் - இந்நூல் சைவ சமயத்தைச் சார்ந்தது. பதினொரு பாடல்களுடையது. நூலாசிரியர் இன்னாரெனத் தெரிய வில்லை. (செ.அ.நூ.கை.) காரணை விழுப் பரையன் மடல் - காரணைவிழுப் பரையன், 1238 காரமடைப் புராணம் - இராமாநுச நாவலர், - ? காரெட்டு - நக்கீரர் ii 10ஆம் நூ. காரைக் குறவஞ்சி - சுப்பையா, மறைவு 1795 காரைக்காலம்மை அந்தாதி - காரைக் காலம்மை, 6ஆம் நூ. * காரைக்காலம்மை சரித்திரக் கீர்த்தனை - (1888). கார் நாற்பது - கண்ணங்கூத்தனார், கி.மு. முதல். நூ. கார்மண்டல சதகம் - ஆறைகிழார்.-? கார்வண்ண மாலை - நமச்சிவாய நாவலர், (1885.) காலகேசி - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) காலசக்கரம் 2 பாகம் - சோதிடம்* காலசரம் - சோதிடம்* காலப் பிரகாசிகை - (சோதிடம்) அரிஅரசாத்திரிகள், (1905). காலமாதவம் - வித்தியாரணியர், 14—ஆம் நூ. காலவிதான பத்தி - சோதிடம்* காலி கதிரேச ரடைக்கலப்பத்து - சிவசிதம்பர ஐயர், (கொழும்பு, 1887) (அ.பு.) காலிங்கராயன் பஞ்சவர்ணத் தூது - சின்னதம்பிப் புலவர் இணுவை, 19ஆம் நூ. காலேஜ் ஓடம் - கோமள வல்லியம் மாள், (1889.) காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார், 19ஆம் நூ.பிற். காவடிச் சிந்து - துர்க்கை முத்துப் புலவர், (1886) காவலப்பன் கதை (Parley the porter) தமிழ்மொழி பெயர்ப்பு. (யாழ்ப் பாணம் 1956) (அ.பு.) காவேரி புராணம் - திருச்சிற்றம்பல முனிவர் (1871). (பிரசோத்பத்தி ஆண்டு). காவேரியாற்றுக் கல்லணை - சரித்திரம்* காழிக் கோவை - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1815 - 75. காழியந்தாதி - அருணாசலக் கவி ராயர், (விக்கிரம). காளச் சித்தர் பாடல் - காளச்சித்தர்* காளத்தி நாதருலா - சேறைக் கவிராச பிள்ளை, 16ஆம் நூ. காளத்தி நாதர் கட்டளைக் கலித் துறை - சேறைக் கவிராசபிள்ளை, 16ஆம் நூ. காளத்தி புராணம் - கருணைப் பிரகாசர், 17ஆம் நூ. காளப்பன் கள்ளத்தனம் - பி. சம்பந்த முதலியார், (1931). காளமேகப் பெருமாள் கட்டியம் - வைணவம்* காளையார் கோயிற் புராணம் -சுப்பிரமணிய ஐயர், (1894) காளப்பேரூர்ப் புராணம் - அகோர தேவர்* கானாடுகாத்தநகர் சௌந்தர நாயகி யம்மன் மும்மணி மாலை - இராம சாமி ஐயர், (1918) கானாட்டுச் சதகம் - சரித்திரம்* கானான்தேச விலாசம் - Schaffter (கானான் தேசபூமி சாத்திரம்) பாளையம் கோட்டை (1849) கான் சகிப் சண்டை - (1870.) கி கித்தேரியாள் சரிதை - கிறித்துவம்* கிரகண கணிதம் - சோதிடம்* கிரகண மாலிகை - ஸ்கடர் (Scudder) போதகமாரின் கைப்புத்தகம், (சென்னை, 1865). கிரக நிலை - சோதிடம்* கிரகஸ்புடம் உரையுடன் - சோதிடம்* கிரணியம் - இறந்துப்பட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) கிரியா தீபிகை - சிவாக்கிர யோகிகள், 16ஆம் நூ. கிருட்டிண சரித்திர பாரிசாத லீலை - கருணைப்பிரகாசர், 17ஆம் நூ. கிருட்டிண தேவராயர் மஞ்சரிப்பா - காஞ்சி ஞானப்பிரகாசர், 16ஆம் நூ. கிருட்டிணலீலைக் கும்மிப் பாடல் - கோபாலையர், (1888) கிருட்டிணன் கும்மி - இலட்சுமணப் பெருமாள் பிள்ளை, (1886) கிருட்டிணன் திருக்கோலக் கவிதை-* கிளவி மணிமாலை - மாறன் கிளவி மாலை பார்க்க. கிளிக்கண்ணி-சம்பந்த தேசிகர், (1885) கிளிப்பாடல் - (1878.) கிள்ளை விடுதூது - சிற்றம்பலப் புலவர், 18ஆம் நூ. கிறித்து சமய கீர்த்தனம் - அந் தோனிக் குட்டி அண்ணாவியார். (யாழ்ப்பாணம் 1891.) கிறித்துமத கண்டனம் - சங்கர பண்டிதர், 1821 - 1891 கிறித்துமத கண்டன வச்சிர தண்டம் - மத்தான் சாகிப்பு, 19ஆம் நூ. பிற். கிறித்துமத சித்தாந்தம் - * கிறித்துவமும் தமிழும் - மயிலை சீனிவேங்கடசாமி, (1940) கிறித்துவர் சுதந்தரம் - * கிறித்துமத நூல் - * கீ கீதபோதகம் - புத்தூர் சவரி நாயக்கர். (1892) கீதாசாரத் தாலாட்டு - * கீதா தாத்பரிய தீபம் - வித்தியாரணி யர், 14ஆம் நூ. கீதாத்திரயம் - முள்ளங்குடி நாரா யண சுவாமிகள் பதிப்பு (1938.) கீதார்த்த சங்கிரக பாட்டுகள் - (1937.) கீதார்த்த சங்கிரகம் - ஆளவந்தார், 11ஆம் நூ. (பாகவதம் செய்த ஆளவந்தாரில் வேறானவர்.) கீதார்த்த சங்கிரக வியாக்கியானம் - வீரராகவாசாரியார் (வைணவம்.)* கீர்த்தனா சங்கிரகம் - அருணாசலம் சதாசிவம் பிள்ளை, (Arnold) மானிப்பாய் (1890) கு குசலவ நாடகம் - * குசலவ நாடகம் - அருணாசலக் கவிராயர். குசலவர் வார்த்தை - * குசேலவிலாசம்-வெங்கடாசல முதலியார் (1873.) குசேலர் சரித்திரம் - செல்வ கேசவ ராய முதலியார், 1864 - 1921. குசேலோபாக்யானம் - வல்லூர் தேவராச பிள்ளை, 19ஆம் நூ. குஞ்சமூசுப்புலவர் பாடல் - செங்கல்வராயச் செட்டி. (1882.) குடந்தைப் பதிற்றுப் பத்தந்தாதி - கும்பநாத செட்டியார். (விய.) குடந்தைப் புராணவசனம் - பு.து. இரத்தினசாமிப் பிள்ளை (1933.) குடந்தைப் பெரிய மடத்துக்குள்ள ஆதரவு - * குடந்தை வெண்பா - முருகேச பண்டிதர், 1830 - 1900. குட்டி ரகசியங்கள் - வைணவம்* குட்டித் தொல்காப்பியம் - இலக்கண விளக்கம் பார்க்க. குணகாரம் - சேச ஐயங்கார், (1870). குணங்குடியார் பதிற்றுப் பத்தந்தாதி -ஐயாச்சாமி முதலியார், 19ஆம் நூ. குணநாற்பது - இது நச்சினார்க்கி னியர் மேற்கோள் எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. காலம் - ? குணநூல் - இறந்துபட்ட பழந்தமிழ் நூல்களிலொன்று, (அடி - உரை). குணமங்கை வருக்கக் கோவை - * குணவாகடம் - கொங்கணர், - ? குண்டலகேசி - ?., 7ஆம் நூ. குதம்பேய்ச் சித்தர் பாடல் - குதம் பேய்ச் சித்தர், 15—ஆம் நூ. ? குதிரைமலைப் பதிகம் - மீனாட்சி சுந்தர கவிராயர், 19ஆம் நூ. குமரகுருதாச சுவாமிகள் பாடல்-(1915) குமரகுருபர சுவாமிகள் சரித்திரம் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1815-1875. குமரகுருபர சுவாமிகள் புராணம் - ரா. சுப்பிரமணிய கவிராயர் (1918.) குமரகுருபர சுவாமிகள் மீது பரபோக சுகவாரிப் பதிகப் பாமாலை - சண்முக முனிவர் (1914.) குமரகுருபர சுவாமிகள் மும்மணிக் கோவை - A.T. இராமலிங்கம் பிள்ளை (1935.) குமணன் கதை - ஒப்பிலாமணிப் புலவர், 19ஆம் நூ. (இவர் சிவ ரகசியம் செய்த ஒப்பிலாமணிப் புலவரில் வேறானவர்) குமரசேனாசிரியர் கோவை - இறந்து பட்ட தமிழ் இலக்கியங்களி லொன்று. (யா.வி.ப. 481) குமரபுரக் குமரன் துதி - * குமரம் - இறந்து பட்டதாகக் கருதப் படும் ஓர் இலக்கணம். குமரனகவல் - * குமரனந்தாதி - மாம்பழக்கவி, (உருது ரோற்காரி.) குமரேச சதகம் - குருபாததாசர், 18ஆம் நூ. முற். குமரேசன் வரப்பிரசாத மாலை - வீரவேற் பிள்ளை. (1943.) குமாரசாமியம் (முருகன் வரலாறு). முருகதாச சுவாமிகள் - பாம்பன், 20ஆம் நூ. குமாரசுவாமி முதலியார் கவித் திரட்டு - குமார சுவாமி முதலியார் வல்லு வெட்டித் துறை, (1887.) குமார சுவாமீயம் - குமாரசுவாமி தேசிகர், 18ஆம் நூ. குமார தாலாட்டு - (1880) குமாரதேவர் சாத்திரம் - அத்துவித வுண்மை, விஞ்ஞான சாரம், பிரமா னுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகம நெறி யகவல், வேத நெறியக வல், பிரமானுபவ வகவல், வேதாந்த தசா அவத்தைக் கட்டளை, வே தாந்த தசகாரியக் கட்டளை, ஞான வம்மானை, பிரம சித்தி யகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சிவ தரிசன வகவல், சமரச வகவல், சுத்த சாகம், சகச நிட்டை முதலி யன, 18ஆம் நூ. குமாரதேவர் ஞானவம்மானை - இது குமாரதேவர் இயற்றிய நூல்களு லொன்று. விருத்தாசலத்துப் பெரிய நாயகியின் திருவருளால் தமக்குப் பேறுநிலை பெற்றதாதலின் அவர் தொடர்பாக அமைந்தது இது. குமாரதேவர் தாலாட்டு - சுப்பிராய சுவாமிகள் (பிரபவ.) குமாரதேவர் நெஞ்சுவிடு தூது - திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் 18ஆம் நூ.* குமார புராணம் - சிதம்பர கவி (1884.) குமாரனகவல் - இது 32 அடிகளா லானது* குமுதவல்லித் தாயார் இரட்டை மணி மாலை - அரங்கசாமி ஐயங்கார். (1913.) குமுதவல்லி - நாகநாட்டரசி - மறை மலையடிகள், மறைவு 1950. கும்பகோணப் புராணம் - ஒப்பிலா மணிப் புலவர், 18ஆம் நூ. கும்பேசர் குறவஞ்சி நாடகம் - முத் தமிழ் கவிராச சேகரர் பாபநாச முதலியார் (1944) கும்மிப் பாடல் - (1869.) கும்மிப் பாடல் கீர்த்தனை - சொக்க நாத பிள்ளை (1883.) குயிற்பத்து - திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் 18ஆம் நூ.* குருகா மான்மியம் - குருகைப் பெருமாள், கவிராயர், 16ஆம் நூ. குருகூர்ப்பள்ளு - சடகோபப்புலவர் (1932). குருச்சேத்திர அம்மானை - 1876. குருச்சேத்திர நாடகம் - முருகையர், மறைவு 1830 குருஞான சம்பந்தர் மாலை - நிரம்ப வழகிய தேசிகர், 16ஆம் நூ. குருஞான வெண்பா - இது வேதாந்த விடயமானது, 39 செய்யுட்க ளுடையது. குருதோத்திரம் - * குருதோத்திர வெண்பா - அருணா சலம் பிள்ளை. குருநமச்சிவாய லீலை - வேலைய தேசிகர், 17ஆம் நூ. குருநாடி - வைத்தியம் * குருநாடி சாத்திரம் 235 - அகத்தியர் (1910.) குருநாதர் சதகம் - கருணையானந்த சுவாமி, - ? குருநாதன் விண்ணப்பம் - * குருநாத சுவாமி கிள்ளை விடுதூது - வரத பண்டிதர், 1656 - 1716. குருந்த வாகனன் கவிதை - * குருபரம்பராப் பிரபாவம் - பின் பழகிய பெருமாள் சீயர்* குருபரம்பரா விவரணம் - * குருபரம்பரை - * குருபரம்பரை (வகுப்பு) - பின்பழகிய பெருமாள்சீயர், 15ஆம் நூ. குருபரம்பரைப் புராணம் - விசய ராகவ பிள்ளை, 18ஆம் நூ. குருபரம்பரை வரலாறு - அழகிய நம்பி, 18ஆம் நூ. முற்பகுதி. குருபூசை மான்மியம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. குருமரபு சிந்தனை - இந்நூல் வள்ள லார் சாத்திரம் இருபதினுள் ஒன்று, வசன நடையாலானது குருமொழி வெண்பா - வேதாந்தம்* குருரத்நாவளி - வேதாந்த தேசிகர், 14ஆம் நூ. * குருலிங்க சங்கம பரம ரகசியத் தலம் - சைவம்* குருலிங்க சங்கம விளக்கம் - * குருவிவாக விளக்கம் - கத்தோலிக்க குருமாரின் துறவுக்கு எதிரான நூல் ஸ்கடர் (யாழ்ப்பாணம், 1844) குரேச விசயம் -அப்பாவு முதலியார், 19ஆம் நூ. குலச்சிறை நாயனார் புராணம் - ஆலால சுந்தரம் பிள்ளை (1923.) குலமாதர் நல்லொழுக்கம் - மாணிக் கம் பிள்ளை (1889.) குலால புராணம் - மச்சமுனி,15ஆம் நூ. ? குலோத்துங்க சரிதை - திருநாராயண பட்டன், 12ஆம் நூ. குலோத்துங்கசோழன் கோவை - ஒட்டக்கூத்தர், 12ஆம் நூ. மு.ரா. அருணாசலக் கவிராயர் பதித்தது. (1910.) குலோத்துங்கன் உலா - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர், 12ஆம் நூ. குவலயானந்தம் (தமிழ் மொழி பெயர்ப்பு) - மீனாட்சிசுந்தர கவிராயர், 19ஆம் நூ. குவலயானந்த உதாரணக் கவிகள் - மீனாட்சி சுந்தர கவிராயர், (1894) குவாலாலம்பூர் சிவபெருமானூஞ்சல் - ஏரம்பையர், 1847 - 1914 குழைக்காதர் அட்டபந்தன கவி - * குழைக்காதர் சரணம் - * குழைக்காதர் பதிகம் - * குழைக்காதர் பாமாலை - * குழைக்காதர் பேரில் பதம் - * குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் - சிவஞான முனிவர் - 1785. குளத்தூர்க் கோவை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875 குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி - சிவஞான முனிவர் - 1785 குளந்தைப் பெருமாள் உபதேசக் கவி-* குறத்திதருக்கள் - (1888) குறவஞ்சி - தாமோதர கவிராயர், (1879) குறள் உரை - பரிமேலழகர், 13ஆம் நூ. தருமர், தாமத்தர், மணக்குடவர், காளிங்கர், பருதி, நச்சர், திருமலை யர், மல்லர், கவிப் பெருமாள் முதலிய பிற ஒன்பதின்மரும் உரை எழுதியுள்ளார்கள். இவர்கள் காலம் 12 முதல் 13 நூற்றாண்டு வரை. குறள் மூலமும் சுகத்தியர் இயற்றிய கருத்துரையட்டவணையும் பொழிப்புரையும் -T.M. Scott துரை (சென்னை - 1889.) குறிஞான வெண்பா - வேதாந்தம் * குறிஞ்சிப்பாட்டு - இது ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடியது. இது பெருங் குறிஞ்சி எனவும்படும், கி.மு. 87. குறுக்குத்துறைச் சிலேடை வெண்பா - மு.ரா. அருணாசலக் கவிராயர், 19ஆம் நூ. குறுந்திரட்டு-தத்துவராயர், 15ஆம் நூ. குறுந்தொகை - (சங்ககாலம்) இது 205 சங்கப் புலவரியற்றிய 401 பாடல்களை உடையது.தொகை முடித்தான் பூரிக்கோ (கி.பி.250). இப்பாடல்களில் 20 பாடல்கள் ஒழிய மற்றவற்றிற்குப் பேராசிரியர் உரையெழுதினாரென்றும் அவர் உரை எழுதாதொழிந்த 20 பாடல் களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதினாரென்றும் தெரிகிறது. குறுந்தொகையிலுள்ள பாடல்கள் நாலடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையு முள்ளன. இதற்கு அரங்கசாமி ஐயங்கார், உ.வே. சாமிநாத ஐயர் என்போர் உரை எழுதியுள்ளனர். குறுந்தொகை உரை - சௌரிப் பெருமாள் அரங்கசாமி ஐயங்கார், 20ஆம் நூ. குறுவேட்டுச் செய்யுள் - இறந்து பட்ட பழந்தமிழ் நூல்களிலொன்று (யா.வி.ப. 486) குற்றால உலா - திரிகூட ராசப்ப கவி ராயர், 18ஆம் நூ. குற்றலா ஊடல் - திரிகூட ராசப்ப கவி ராயர், 18ஆம் நூ. குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர் 18ஆம் நூ. குற்றலாக் கோவை - திரிகூட ராசப்ப கவிராயர், 18ஆம் நூ. குற்றாலச் சிலேடை வெண்பா - திரி கூட ராசப்பகவிராயர், 18ஆம் நூ. குற்றாலத்தல புராணம் - திரிகூட ராசப்ப கவிராயர், 18ஆம் நூ. குற்றால நன்னகர் வெண்பா - திரிகூட ராசப்ப கவிராயர் 18ஆம் நூ. குற்றலாப் பரம்பொருள் மாலை - திரி கூட ராசப்ப கவிராயர், -18ஆம் நூ. குற்றாலப் பிள்ளைத் தமிழ் - திரிகூட ராசப்ப கவிராயர், 18ஆம் நூ. குற்றாலமாலை - திரிகூடராசப்ப கவி ராயர் 18ஆம் நூ. (மதுரைத் த.ச. 1921) குற்றால யமகவந்தாதி - திரிகூட ராசப்ப கவிராயர், 18ஆம் நூ. குற்றால வெண்பா வந்தாதி - திரிகூட ராசப்ப கவிராயர், 18ஆம் நூ. குன்றக்குடிச் சண்முகநாதருலா - சிலேடைப்புலி பிச்சுவையர் (1938) குன்றக்குடிச் சிலேடை வெண்பா - சின்னச் சரவணப் பெருமாள் கவி ராயர், 19ஆம் நூ. பிற். குன்றக்குடிச் சுப்பிரமணியர் தோத் திரப் பதிகம் - இராம சுப்பிரமணி யம் செட்டியார் (சிறீமுக) கூ கூடற்புராணம் -மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு (1929.) கூத்தநூல் - இது மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் எனவும் அறியப்படும். அடியார்க்கு நல்லாரால் ஆளப்பட் டது. சங்க காலம். கூரத்தாழ்வானது பிரபாவம் என்ற குரேசவிசயம் மூலமும் உரையும் - அட்டாங்கி வெங்கடாசாரியார், (1892.) கூர்ம புராணம் - அதிவீர ராம பாண்டியன், 16ஆம் நூ. வரதுங்க ராம பாண்டியன் செய்த தெனவும் சிலர் கூறுவர். கூர்மபுராண விரிவுரை - நா. கதிரை வேற் பிள்ளை, 1844 - 1907 கூர்மானந்த ரைம்பது - கூர்மானந்தர். கூர்மானந்தர் சூத்திரம் 51 - கூர் மானந்தர். கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சிகள் நடிப்பு - காசி விசுவநாத முதலி யார், (1870) கூவப் புராணம் -துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. கூளப்ப நாயக்கன் காதல் - அட்டாவ தானி (சுப்பிரதீபக் கவிராயர்) 18ஆம் நூ. கே கேசரி குரு நூல் - அகத்தியர் (1881) கேசவப் பெருமாள் இரட்டை மணி மாலை - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர், 18ஆம் நூ. கேதாரி நோன்பினால் பேறு பெற்ற கதை-* கேதாரீசுவரர் பூசை - * கேரளசோதிடம் -அகத்தியர் (1899) கேரளதேச வரலாறு - * கேரளவுற்பத்தி - * கேரளியலங்காரம் - சோதிடம் கை கைக்கிளைச் சூத்திரம் - இறந்துபட்ட அகப்பொருள் இலக்கண நூல்களி லொன்று (யா.வி.ப. 240) கைங்கர்யப்படி - வைணவம்* கைசிக புராணம் - இது பட்டர் வியாக் கியானத்துடனுள்ளது; அச்சிடப் பட்டுள்ளது. கைத்தல மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. கைந்நிலை - மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர் காவிதியார் மகனார் புல்லங் காடனார், சங்க காலம். கையனார் யாப்பு நூல் - இறந்துபட்ட யாப்பு நூல்களிலொன்று, (யா.வி.ப. 144) கைலாசத் திருப்பதிகம் - * கைலாச விநாயகர் நான்மணி மாலை - செவு.மெ. மெய்யப்பச் செட்டி யார். (பார்த்திப) கைலாச நாதர் சதகம் - இந்நூல் செய்தவர் சேலஞ் சில்லாவிலிருந்த விசுவலிங்கப் பிள்ளை குமாரர் சிதம்பரவாணர்; வீர சைவர். கைலாச நாதர் தோத்திரம் - * கைலாய மாலை - முத்திராசர், 18ஆம் நூ. கைலைக் கலம்பம் - குமரகுருபர சுவாமிகள், 18ஆம் நூ. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீரர் ii, 9 அல்லது 10ஆம் நூ. கைவல்லிய நவநீதம் - தாண்டவராய சுவாமிகள், 17ஆம் நூ. முற். கொ கொக்கோகம் - வரதுங்க பாண்டியன், 16ஆம் நூ. கொங்கணதேவ ரைந்நூற்றிரண்டு - யோகம். கொங்கண தேவர் கலை - யோகம், இரசவாதம். கொங்கண நாதர் சூத்திரம் - இரசவாதம், வைத்தியம். கொங்கண நாயனார் கடைக் காண்டச் சூத்திரம் - வைத்தியம். கொங்கண கடைக் காண்டம் - மந்திரம், ஞானம். கொங்கண கலைஞான சூத்திரம் - இரசவாதம், யோகம். கொங்கண ஞானம் - ஞானம். கொங்கண தண்டகம் - ஞானம். கொங்கண தத்துவநூல் - ஞானம். கொங்கண துருசுகுரு 31 - இரச வாதம். கொங்கணர் ஞானம் - கொங்கணர் நடுக்காண்டம் - இரச வாதம் கொங்கணர் முதற்காண்டம் 41 - இரச வாதம் கொங்கணர் முப்பூ தீட்சை - இரச வாதம் கொங்கணர் வாக்கியம் - இரசவாதம் கொங்கணவர் தியானம் - யோகம் * கொங்க தேச இராச பரம்பரை - சரித்திரம்.* கொங்குமண்டல சதகம் - விசய மங்கலம் கார்மேகக் கவிஞர் - ? கொங்குவேள் மாக்கதை - பெருங் கதை பார்க்க. கொசுப் பதம் - (1882) கொடிக்கவி - உமாபதி சிவாசாரியார், 14ஆம் நூ. கொடியிடை மாலை - அருணாசல முதலியார், 19ஆம் நூ. கொடுங்குன்ற புராணம் - மங்கை பாக கவிராயர், 19ஆம் நூ. கொடுங்கோடா சூரி - வைத்தியம் * கொடுந்தமிழ் - வீரமாமுனிவர், (இலாத்தின்) 1680-1746 கொடுமுடிப் புராணம் - வெங்கட ரமண தாசர் - ? கொலை மறுத்தல் - சாந்தலிங்க தேசிகர், 18ஆம் நூ. முற். கொலை மறுத்தல் உரை - சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. கொளிஞ்சிவாடி சொக்கநாதர் கோயில் சாசனம் - சரித்திரம்* கொளிஞ்சிவாடி சொக்கநாதர் கோயில் அம்மன் கோயில் சாசனம் - சரித்திரம்.* கொற்றங்குடியார் நெஞ்சுவிடு தூது - உமாபதி சிவம்.* கொன்றைவேந்தன் - ஒளவையார், 12ஆம் நூ. கோ கோகிலாம்பாள் கடிதங்கள் - மறை மலையடிகள், மறைவு 1950. கோசரபல நிர்ணயம் - N.R. திருவேங் கடசாத்திரி (1940.) கோடீச்சுரக் கோவை - கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், 19ஆம் நூ. கோணிக்கால் எடத்துக் கோம்பிய சாசனம் - சரித்திரம்.* கோணேசர் கல்வெட்டு - கவிராசர், 18ஆம் நூ. கோதண்டராம சதகம் - இராமதாசன், (1877.) கோதை நாய்ச்சியார் தாலாட்டு - * கோபிநாதப் பெருமாள் கோயில் சாசனம் - கோமடாசாரம் - நேமிசந்திராசிரியர் (சைனர்) - ? கோமதியம்மை பஞ்சரத்தினம் - வே. இராமநாதன் செட்டியார், (1930) கோமுத்தி மகாத்மியம் - இது தஞ்சாவூர் சில்லாவிலுள்ள திருவா வடு துறையின் பூர்வ வரலாறு களையும், அதற்குக் கோமுத்தித் தலமென்ற பெயர் வந்த காரணத் தையும் விளக்குவது.* கோம்பி விருத்தம் - ப. சுப்பிரமணிய முதலியார் வெள்ளக்கால், 1857 - 1947. கோயிலூர்ப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875 கோயில் திருவாய் மொழி - நம்மாழ் வார். கோயில் நான்மணிமாலை - பட்டி னத்துப் பிள்ளையார், 10ஆம் நூ. கோயிற் கலம்பகம் - மணவாளதாசர் - 17ஆம் நூ. கோயிற் புராணம் - உமாபதி சிவசாரியார், 14ஆம் நூ. கோயிற்றிரு அகவல் - பட்டினத் தடிகள், 16ஆம் நூ. கோயிற்றிருப் பணியர் விருத்தம் - நம்பியாண்டார் நம்பி 10ஆம் நூ. கோயினான்மணி மாலை - பட்டினத் தடிகள் 10ஆம் நூ. கோரக்கர் வைப்பு - கோரக்கர் - ? கோலாசலத் தலபுராணம் - * கோலாட்டப் பாட்டு - சுப்பிரமணிய முதலி, (1874.) கோவப் பிரசாதம் - நக்கீரர் ii, 9 அல்லது 10ஆம் நூ. கோவல நாடகம் - சின்னத்தம்பி, 1830 - 1878. கோவிந்த சதகம் - நாராயண பாரதி, 18ஆம் நூ. கோவிலன் கதை - புகழேந்தி (1873) கோவைசாரம் - அகப்பொருள்* கோளதீபிகை - சரவணப் பெருமாள் ஐயர் - 19ஆம் நூ. கௌ கௌசிகமுனி வகார சூத்திரம் - வைத்தியம். கௌசைப் புராணம் - கந்தசுவாமிகள், - ? கௌபால சிந்தாமணிக் கோவை - இரசவாதம் கௌமுதி கதை - சைனம். கௌரி கல்யாணம் - (1884) கௌளி சாத்திரம் - பாற்கரன்.* கௌளி நூற்றெளிவு - நாராயண பிள்ளை, (1885) கௌளிப்பத்து - * ச சகத்திரநாமம் - பராசரபட்டர், 13ஆம் நூ. சகத்திர முகராவனன்கதை - (ஆறு முக முதலியார் பதிப்பு 1874) சகலகலா பூஷணம் - தியாகராச முதலியார் (1899) சகலகலை ஞானச்சுருக்கம் - இரச வாதம்* சகலாகமசாரம் - மறைஞான சம்பந்தர், 1555 சகலாகமத் திரட்டு - சபாபதி யோகி சென்னை (1894) சகாதேவர் சாத்திரம் - நாகேந்திர குரு (1888) சகுண மருந்தின் கைத்துணை - இது ஹோமியோபதி மருந்தின் வழி காட்டி, ரெவரண்ட் அந்தோனி, (1892) சகுந்தலை விலாசம் - இராமச்சந்திர கவிராயர், 19ஆம் நூ. (1876.) சகுனசாத்திரம் முதலியன - முனி சாமி முதலியார் (1900) சகுனபல நிர்ணயம் - கடலங்குடி நடேச சாத்திரி (1928.) சகோதர பாவகம் - ஆதிசங்கராச் சாரியார் (1895) சக்கிலிச்சிகள் சிங்காரப் பாட்டு - (1878) சக்குபாய் சரித்திரம் - * சக்கூன் படைப்போர் - முகமத் இபிரகாம் சாகிப் (1874) சங்கச்செய்யுள் - காவியம்* சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் - உ.வே.சாமிநாதையர் (1929) சங்கபாரதம் - பெருந்தேவனார் 1, கி.பி. - ? சங்கமேசர் அகிலாண்டநாயகி பதிகம் - கந்தசாமி முதலியார் (1882) சங்கயாப்பு (இறந்துபட்ட ஓர் இலக்கண நூல். (யா.வி.ப. 22) சங்கர சோழனுலா - ஒட்டக்கூத்தர், 12ஆம் நூ. சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரைத்திருத்தம் - சிவ ஞான முனிவர், 1785. சங்கர நயினார் கோயிலந்தாதி-? உ.வே. சுவாமிநாதையர் பதிப்பு (1934) சங்கர நாராயணத் திரட்டு - இது தத்துவ தேசிகர் சந்தானத்தில் 35ஆம் சந்தானமாகிய சுயம்பிர காச யோகியார் தேவாரம் திருவாய் மொழிகளில் 1,100 செய்யுட்களை எடுத்து 52 அதிகாரமாகப் பகுத்து ஆயிரத்திரட்டாகத் தொகுத்தது. (புறத் நூன்முகம். எஸ். வை.) சங்கர நாராயணன் கோயிற்றிரி பந்தாதி - அண்ணாமலை ரெட்டி யார், 19ஆம் நூ. பிற். சங்கர பாஷிய பீடிகை - வித்தியா ரணியர், 14ஆம் நூ. சங்கர மூர்த்திப் புலவர் பாடல் - சங்கரமூர்த்திப் புலவர்* சங்கர மூர்த்தி விறலிவிடுதூது - ?* சங்கரலிங்க உலா - ? உ.வே. சாமி நாதையர் பதித்தது (1933) சங்கர விசயம் - வேலாயுத முதலியார், 19ஆம் நூ. பிற். சங்கர விசயம் என்று வழங்கும் சங்கராச்சாரியர் சரித்திரம் - தொழுவூர் வேலாயுத முதலியார் மொழிபெயர்ப்பு (1879) சங்கர விலாசம் - சிதம்பரநாத பூபதி (1937) சங்கரனந்தாதியும் சிவசங்கர பதிக மும் - சுப்பையா தேசிகர் (1868) சங்கராச்சாரியம் - சங்கராச்சாரியர் சோதிடம்* சங்கராச்சாரியார் சத்தகாண்டம் - சங்கராச்சாரியர், வேதாந்தம்* சங்கற்ப நிராகரண உரை - திருவொற் றியூர் ஞானப்பிரகாசர், 16ஆம் நூ. சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார், 14ஆம் நூ. சங்கற்ப நிராகரணம் - இராமானந்த சுவாமிகள், 19 ஆம் நூ. சங்கிரக இராமாயணம் - நாராயண சாமி ஐயர் மதுரை (1905) சங்கிரம துருவம் - சோதிடம்* சங்கீத சாத்திரம் - பரமேசுவர ஐயர் (சென்னை - 1905) சங்கீத மஞ்சரி - நாராயணசாமிப் பிள்ளை (1888) சசிவர்ண போதம் - தத்துவராயர், 15ஆம் நூ. சச்சிதானந்தமாலை - பாலையானந்த சுவாமி (பிரமாதி) சச்சிதானந்த மாலை - காப்புச் செய்யுள் மூன்று நீங்கலாக முப்பது பாடலாகிய இவ்வேதாந்த நூலின் ஆசிரியர் யாரெனத் தெரிய வில்லை.* சச்சிதானந்த விளக்கம் - வேதாந்த விடயமான பத்துப்பாடல்களுடைய இந்நூலின் ஆசிரியர் பெயர் முதலியன விளங்கவில்லை.* சஞ்சீவி எண்ணெய்கள்- (1862) சடகோப திவ்வியசரித்திரம்-காவியம்* சடகோபரந்தாதி - கம்பர் 12ஆம் நூ. சடகோபரூசல் - ?* சடக்கரக்கோவை-சட்டமுனி மந்திரம்* சடக்கரந்தாதி-அகத்தியர், காவியம்* சடத்தலைக்கட்டளை - சைவம்* சடாக்கர சாரப்பதிகம் - முத்துராம லிங்க சேதுபதி, மறைவு 1783 சடாட்சரக் கோவை-சட்டைமுனி, 15? சடாதார சித்தர் குரூபதேசம் - சடாத் தாரசித்தர், வேதாந்தம்* சடாதார விளக்கமென்னும் திரு மந்திரம் 200 - ஞானசித்த சுவாமி (1894) சட்டிப் புலையன் கதை - சைனம்* சட்டைமுனி 1200 - சட்டைமுனி, 15ஆம் நூ. சட்டைமுனி கற்பம் 200 - வைத்தியம்* சட்டைமுனி சூத்திரம் 16 - ஞானம் சட்டைமுனி ஞான நூல் - ஞானம் சட்டைமுனி ஞானம் - ஞானம் சட்டைமுனி ஞானம் 10 - இரசவாதம் சட்டைமுனி தர்க்கம் - இரசவாதம் சட்டைமுனி நாயனார் 50 - இரச வாதம் சட்டைமுனி நாயனார் சூத்திரம் 8 - இரசவாதம் சட்டைமுனி நாயனார் ஞான வெண்பா - இரசவாதம் காவியம் சட்டைமுனி நிகண்டு - காவியம் சட்டைமுனி பூரண சூத்திரம் 25 - காவியம் சட்டைமுனி வைத்திய நூல் - காவியம் இரசவாதம்* சண்டேசுர நாயனார் திவ்விய சரித்திரம் - (1688) சண்பகச்சேரி இராசவரலாறு - சரித்திரம்* சண்முக சடாட்சர பதிகம் - கணபதி நாயுடு, அம்பலவானநாவலர் பதித்தது (1898) சண்முக சாலம் - அகத்தியர் - ? சதமணிக் கோவை - இது சைவ நூல்களிலொன்று (சென்னை 1898) சதகண்ட ராவணன் கதை - (1873) சதமணிமாலை - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. சதமுக ராவணன் கதை - ஆறுமுக முதலியார் பதித்தது (1874) சதாசிவ ரூபம் - சட்டைநாத வள்ளல், 18ஆம் நூ. சதானந்த சதகம் - பொன்னுசாமி (1872) சதுச்சுலோகி வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை, வைணவம்* சதுட்கோணமாலை - ஞானம்* சதுர அகராதி-வீரமாமுனிவர், 1680-1746 சதுர்யுகப் பிரமாணம் - சோதிடம்* சதுர்விம்ச புராணம் - சைனம்* சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் - சபாபதி நாவலர், 1844-1903 சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் - வீரபத்திரர், சைவம்* சதுர்வேதி சரித்திர சங்கீர்த்தனை -? புதுவை அப்பாசுவாமி முதலியார் பதித்தது (1900) சத்சம்பிரதாய பாடியம் - இராச கோபால பிள்ளை (1889*) சத்தகாதை - விளாஞ்சோலைப் பிள்ளை, 15ஆம் நூ. சத்த சங்கிரகம் - சங்கரபண்டிதர், 19ஆம் நூ. பிற். சத்தப் பிரகரணம்-இது வேதாந்த விட யமான ஒரு நூல். அச்சில் வந்துள் ளது. (1864) சத்தரிஷி வாக்கியம் 5500 - ? (சென்னை 1899) சத்திசாலம் -அகத்தியர் - ? சத்தியகோசன் கதை - சைனம்* சத்திரிய புராணம் - இராமானுச நாவலர், - ? சத்தியவாக்கு அரிச்சந்திர நாடகம் -முத்தனாச்சாரி, (1905) சத்துரு சங்கார மாலை - இது முருகக் கடவுள் மீது பாடப்பட்ட 20 பாடல் களடங்கியது, ?* சந்தந்தோனியார் அம்மானை - அந்தோனி, (யாழ்ப்பாணம் 1892) சந்தான தீபிகை - இராமலிங்க ஐயர், 19ஆம் நூ. சந்தானாசிரியர் சரித்திரம் - கா. சுப்பிர மணிய பிள்ளை, (1925) சந்தானாசாரியார் புராண சங்கிரகம் -சுவாமிநாத தேசிகர், (விசுவாவசு) சந்தானாள் சமுகவிலாசக் கும்மி - பிரான்சிஸ் பக்கிக்கோ (யாழ்ப் பாணம் 1855) சந்தியாவந்தன இரகசியம் - சி.தாமோதரம் பிள்ளை, சார்வரி. சந்தியாவந்தனம் - இராமையா சாத்திரி, (1889*) சந்தியாவந்தனம் விசுவப் பிரம்மம் - திருவேங்கடமுதலி, (1886) சந்தியாவந்தன வியாக்கியானம் - எதிராசலு செட்டி, (1884) சந்திரகலா மாலை - தமிழாகர முனிவர், 17ஆம் நூ. (1930) சந்திர காசம்-கந்தப்பிள்ளை, 19ஆம் நூ. சந்திர காவியம் - சோதிடம், (1883) சந்திர கௌசிகம் (நாவல்) - வேங் கடாச்சாரி, (1887) சந்திரசேகர விநாயக ரூஞ்சல் - முரு கேச பண்டிதர், 19ஆம் நூ. பிற். சந்திரவதனை அல்லது இரண்டு சகோதரர்கள் - விசுவநாத முதலி யார் (1898) சந்திரவாணன்கோவை -அந்தகக் கவி வீரராகவ முதலியார், 17ஆம் நூ. சந்திரிகையின் கதை - சி. சுப்பிர மணிய பாரதி, (1939) சப்தகாதை - விளாஞ் சோலைப் பிள்ளை சப்தப் பிரகரணம் - சப்தரிடி நாடி - சோதிடம் சமதக்கினி நாடகம் - ?* சமயத் தொகுதி - விசாகப் பெருமா ளையர், (1868) சமயோசித செய்யுள் - ஞானம்* சமாதி சகசம் முதலிய பதினொரு திருப்பதிகங்கள் - தொத்தாதரைய சுவாமிகள், (1919) சமுத்திர யாத்திரை விசனம் - சேஷையர், (1889) சமுத்திர விலாசம் - கடிகைமுத்துப் புலவர், (1665) சம்சார சாம்பிராச்சியம் - பிள்ளை உலோகாசாரியர், 15ஆம் நூ. சம்சோன் கதை - அச்சுவேலி தம்பி முத்துப்பிள்ளை, (1892) சம்பந்தர் பிள்ளைத் தமிழ் - மாசிலா மணி தேசிகர், (1926) சம்பிரதாய தீபம் - ? - தருமபுர ஆதினம், (1928) சம்பிரதாய பரிசுத்தி - வேதாந்த தேசிகன் சம்போகநாதர் வாதசித்தி - சம்போக நாதர் - இரசவாதம்* சயகுமாரன் கதை - சைனம்* சயங்கொண்டார் வழக்கம் உரை யுடன் -* சயந்தம்-இறந்துப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் (யா.வி.) சயமுனி வாக்கியம் - (1875) சரக்கின் பெயர் - வைத்தியம்* சரக்குச் சுத்தி - இருபாலைச் செட்டி யார், 19ஆம் நூ. சரக்கு வைப்பு - சரச சல்லாப மாலை - முத்து ராம லிங்க சேதுபதி, 1783 சரசாங்கி - சரசலோசனச் செட்டியார், (1897). சரசாத்திரம் - * சரசுவதி அந்தாதி - கம்பர், 12ஆம் நூ. சரசுவதி மாலை - காளமேகம், 14ஆம் நூ. இறுதியும் 15ஆம் நூ. முற் பகுதியும். சரசுவதி கலிவெண்பா - ?* சரசுவதி துதி - ? சரநூல் உரையுடன் - ?* சரப புராணம் -இது சிவபெருமான் சரப அவதாரமெடுத்து வந்து நர சிங்கத்தை அடக்கியதைக் கூறு வது, அச்சிடப் படவில்லை,(ச.கை.) சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் - சிவக்கொழுந்து தேசிகர். சரபேந்திரர் சன்னிரோக சிகிக்சைகள் - கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். சரபோசிராசன் குறவஞ்சி - இது தஞ்சாவூர் பெரிய கோவில் உற்ச வத்தில் நடிப்பதற்காக சரபோசி மகாராசா பேரிற் பாடப்பட்ட பிரபந்தம். இதனை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். 1 சரபோசியின் ஆட்சிக் காலம் 1800-1832 சரமச் சுலோகம் - வேதாந்த தேசிகர், 14ஆம் நூ. சரமச் சுலோகத்துவ தீபப்பிரகாசம் -வைணவம்* சரமச் சுலோகார்த்தம் - வைணவம்* சரமபாவ சாரசங்கிரகம் - வைணவம்* சரமப்பிரமாணம் - வைணவம்* சரம ரகசியம் - வைணவம்* சரமோபாய தாத்பரியம் - தேவராசர் சரமோபாய நிர்ணயம் - நயினாராச் சான் பிள்ளை* சரமோபாய நிச்சயம் - நைநாரச்சாம் பிள்ளை, 18ஆம் நூ. முற். சரவண சற்குருமாலை - சிதம்பர சுவாமிகள்* சரவண ஞானியா ரொருபா வொரு பஃது - காவியம்* சரவண தேசிகர் கலித்துறை - இதனை இயற்றியவர் இவரது மாணாக்க ராகிய சிதம்பரசுவாமிகள்* சரவண தேசிகர் தோத்திரம் - இது கச்சி நகரிலிருந்த சரவண தேசிகர் மீது புதுவை நகர் குமார பாரதி பாடியது* சரவண தேசிகர் மாலை - * சரவண தேசிகர் வெண்பா -* சரவண தேவரிரட்டை மணிமாலை - * சரவணபவ சண்முகசிவாய அகவல் - * சரவணபவானந்தர் பதிகம் - * சரவணமுத்துக் கலித்துறை - * சரியத்து மாலை - முகமதுப் புலவர் (1876) சரியா பாதம் - சுப்பிரமணிய பிள்ளை, (1883) சருவசன செபம் - வெ.ப. சுப்பிர மணிய முதலியார், (1934) சருவ ஞானோத்தரம் ஞானபாதம் - பொ. முத்தையா பிள்ளை பதித்தது, (1923) சர்வ சாதக சந்தேக நிவர்த்தி - ஏகாம்பர முதலியார். (1906) சர்வ சமய சமரசக் கீர்த்தனை - வேத நாயகம் பிள்ளை, (1878) 1844-89 சர்வ ஞான காலோத்தரம் - இது 28 ஆகமங்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் சிதம்பரம் ஆதியப்ப தேசிகரின் மாணவர் என அனு மானிக்கப் படுகிறது* சர்வ ஞானோத்தரத் தமிழுரை - சிவாக்கிரயோகிகள், 16ஆம் நூ. சர்வ தரிசன சங்கிரகம் - வித்தியா ரணியர்,14ஆம் நூ. சர்வ மத சித்தாந்த விளக்க வினா விடை - சச்சிதானந்தம் பிள்ளை, (1881*) சர்வ வருண நாடகம் - * சர்வ வேதாந்த சித்தாந்த சாரசங் கிரகம் - சந்திர சேகர சுவாமிகள் சர்வார்த்த சாரபூடணம் - பராங்குச தாசர் சர்வார்த்த சிந்தாமணி (சோதிடம்) - விடனூர் முனி, (1869) சர்வார்த்தக சிந்தாமணி வசனம் - சங்கரகவி, சோதிடம்* சலக்கீரிடை - சுப்பிராய முதலியார் 1874* சலவாத்துப் பாட்டு - அல்லாப் பிச்சைப் புலவர், (1875) சலாத் அறுக்கான் மாலை - சமு நயினா லெபை அலிம், (1879) சலாத்துல் அறுக்கான மாலை - சாம் சகிப் அலடின் சுலைமான், (1879) சலப்பிரளய ஏலப் பாட்டு - சுப்பிராயர், (1884) சல்லியநூல் - சல்லியமுனி, மந்திரம்* சற்குரு கீதை - சீனிவாச சர்மா, (1914) சற்குரு மாலை - சிதம்பரசாமி* சற்சம்பிரதாய தீபிகை - அப்பாவு முதலியார், 19ஆம் நூ. சன மனோல்லாசனி (கதை நாடகம்) - ஆதி நாராயண ஐயர், (1896) சனிதுதி - சிவானந்தையர், 1873 - 1916 சனிபகவான் தோத்திரமும் நவக்கிரக தோத்திரமும் - அருணாசல முதலியார், (1880*) சனிபகவான் தோத்திரம் - ? சனீசுவரன் தோத்திரம் - இது 12 பாடல்களுடையது - ?* சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. சா சாகுந்தல நாடகம் -மறைமலை யடிகள், மறைவு 1950 சாணக்கிய தந்திரம் - நாராயண சாமி ஐயர், (1887) சாணக்கிய நீதி வெண்பா - அ. குமாரசுவாமிப் புலவர், 1850 - 1922. சாதக அலங்காரம் - கீரனூர் நடராசர், 17ஆம் நூ. சாதக கர்ம பத்தி - சு.எ.குமாரசுவாமி ஆச்சாரி, (1924) சாதக சந்திரிகை - கடலங்குடி நடேச சாத்திரி, (1926) சாதக சாராம்ச பஞ்சபட்சிச் சுகம் - முத்துச்சுவாமிப் பிள்ளை, (1883) சாதக சிந்தாமணி - தில்லை நாயக சோதிடர், 19ஆம் நூ. சாதக சூடாமணி - (1878) சாதகத் தொகுதி -சோதிடம்* சாதகப் புத்தகம் - பொன்னம்பல பண்டிதர், (1889) சாதக வெண்பா - * சாத வாகனம் - இறந்துப்பட்ட பழைய நூல்களிலொன்று “செய்வித்தா னாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையம் முதலியன, (மயிலை நாதர்) சாதன சதுட்டயம் - வேதாந்தம்* சாதி சமயாசார விளக்கம் - சின்னைய முதலியார் அரிஅரபாடி, (சென்னை 1896) சாதானந்த கணேசர் புராணம் - பாவலப் பாடிய புலவர், (1869) சாதிநிர்ணய புராணம் - வல்வை வயித்தியலிங்கம், 1843 - 1900. சாதிநூல் - நீதிநூல்* சாதிநூற் கவியுரை - உலகநாதன் சாதிபேத விளக்கம் - உலகநாதன், 18ஆம் நூ. சாதிபேதநூல் - * சாதி வேற்றுமையும் போலிச் சைவ ரும் - சுவாமி வேதாசலம், (1926) சாத்திரக் கும்மி - * சாத்திர சூடாமணி - * சாத்திர விசித்திரம் - மங்காணம் நடராச பிள்ளை, (சென்னை 1898) சாத்தூர் நொண்டி நாடகம் - ? சாநந்த கணேசர் புராணம் - சித்தநாதையர்* சாந்தி புராணம் - புறத்திரட்டு மூலம் அறியவரும் ஒரு சைன நூல். சாந்தி விநாயகர் பதிகமும் கும்மிப் பாடலும் - நெல்லையப்பபிள்ளை (1868) சாந்தோக்கிய உபநிடத மொழி பெயர்ப்பு - நாகநாதபண்டிதர், - 1854 சாமந்த ராசாக்கள் சாதிவரலாறு - * சாமளையம்மை நவரத்தினம்- சாமி நாத பிள்ளை* சாமிநாதன் பிள்ளைத் தமிழ் - சாமிநாதபிள்ளை, 18ஆம் நூ. சாமுத்திரியம் - இறந்துபட்ட தமிழ் நூல்களிலொன்று (யா.வி. ப. 461.) சாமுத்திரிக இலட்சணம் - சாமுத்திரியம்* சாமுத்திரிக இலட்சண சாத்திரம் - குருசாமி முதலியார் மொழி பெயர்த்தியற்றியது, (சென்னை 1892) சாமுந்திரிகா இலட்சணம் - கமல முனி (1879) சாம்பசிவ பூசை - பஞ்சாட்சர ஐயர் (1889) சாம்பரி மாலை - மாணிக்கம் பிள்ளை (1883) சாரங்கதர சம்கிதை - (வைத்தியம்) பண்டித எம். துரைசாமி ஐயங்கார், (1915) சாரங்கதர யட்சகானம் - வெள்ளி கந்தப்பையர்* சாரசங்கிரகம் - பிள்ளை லோகாசாரியர் சாரசங்கிரகம் - வேதாந்த தேசிகன் சாரசாரம் - வேதாந்த தேசிகன் சாரங்கதரன் கதை -அருணாசல முதலி, 1975* சாரங்கதரன் சரித்திரப்பா - புதுவை நாராயணசாமிநாயுடு, சென்னை (1899) சாரப் பிரபந்தம் - நமசிவாய சுவாமி சாரார்த்த இரத்தினாவளி - சுந்தராரியர் சாரார்த்த சதுட்டயம் - எங்களாழ் வான். சாராவளி (தமிழ் மொழி பெயர்ப்பு) - (சோதிடம்) (1939) சாரீர கைக்கண்டியம் - அழகிய மணவாளசீயர், வேதாந்தம்* சாலக் கண்ணாடி - முனிசாமி முதலியார் சிறுமணவூர், (1889) சாலத் திரட்டு-புலிப்பாணி முனிவர்-? சாலவிநோதத் திரட்டு - தெய்வேந் திர நாத பண்டிதர், (1884*) சாலிய அந்தணர் புராணம் - ஆறுமுக நாயினார் பிள்ளை, மறைவு 1925 சால்பு முல்லைத்தொடை - ஞான சுந்தரம் ஐயர், (1880*) சாவற்பாட்டு - சுப்பிரமணிய முதலியார், (1875*) சாவித்திரி சரிதை - சரசலோசன செட்டி, (சென்னை 1897) சாவித்திரி நாடகம் - கோவிந்தசாமி இராவ், (1886*) சாற்றுமுறை - வைணவம்* சானகி பரிணயம் - துரைசாமி மூப்பனார், 19ஆம் நூ. பிற். சானகி பரிணய நாடகம் - முத்துச் சுப்பையா, திருநெல்வேலி (1901) சானகி பரிணய நாடகம் - இராம உத்திர தேசிகர், (சென்னை 1903) சான்றோராகிய சூரிய சந்திர வம்ச பரம்பரை சரித்திரம் - இது சாணா ரைப்பற்றிய சரித்திரம், கடலூர் சண்முகக் கிராமணி, சென்னை (1892) சான்றோர் மரபு காத்தல் - Rev. S. Winfred, (1874*) சி சிகர ரத்ன மாலை - சம்பந்த சரணாலய முனிவர் (1930) சிகாமணி வெண்பா - தேரையர் - ? சிகிச்சா இரத்தின தீபம் - சி. கண்ணு சாமிப் பிள்ளை (1935) சிங்காரக் கலைகள் - (1888) சிங்காரக் கும்மிப்பாடல் - சேசாத்திரி ஐயங்கார் (1884)* சிங்காரச் சிந்து - இராமசுவாமிநாயுடு (1884)* சிங்காரப் பாட்டு (முருகர்) - (1888)* சிங்கார மஞ்சரி - (1873)* சிங்கீசுவர சுவாமி பாரிசாத நாடகம் - குமாரசுவாமி* சிங்கைச் சிலேடை வெண்பா - நமச்சிவாய கவிராயர், 18ஆம் நூ. (சிங்கை, வீரசிங்காதனபுரம்) சிங்கை நகரந்தாதி - சதாசிவ பண்டிதர், 20ஆம் நூ. சிங்கை முருகேசர் பேரில் பதிகம் - யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை, (சிங்கப்பூர் 1893) சிசுபால சரிதம் - அ. குமாரசுவாமிப் புலவர், 1850 - 1922. சிதம்பர இரகசியம் - வேதாந்தம்* சிதம்பர கருமம் - மந்திரம்* சிதம்பரக் கும்மி - கோபாலகிருஷ்ண ஐயர், (1878). சிதம்பரக் குறவஞ்சி - செல்லப் பிள்ளை* சிதம்பர சக்கரம் - திருமூலர், மந்திரம்* சிதம்பர சபாநாத புராணம் - சபாபதி நாவலர், 1844 - 1903 சிதம்பர சிவகாமியம்மை பதிகம் - அருணாசல முதலியார், 18ஆம் நூ. சிதம்பர சுவாமிகள் துதி - * சிதம்பரச் செய்யுட் கோவை - குமர குருபர சுவாமிகள், 17ஆம் நூ. சிதம்பர ஞானிபாட்டு - வேதாந்தம்* சிதம்பர நாதர் கீர்த்தனை - முத்துத் தாண்டவர்* சிதம்பரநாதர் பதிகம் - கருணையர், (விரோதி.) சிதம்பரப்பாட்டியல் - பரஞ்சோதியார், 16ஆம் நூ. (இவர் திருவிளையாடற் புராணஞ் செய்த பரஞ்சோதி முனிவரில் வேறானவர்). சிதம்பர புராணம் - திருமலை நாதர், 16ஆம் நூ. முற். சிதம்பர மான்மிய கீர்த்தனை - சுப்பிரமணிய புலவர், (1888) சிதம்பர மான்மியம் - அருணாசலசாமி ஐயர் மொழி பெயர்த்தது. (1897) சிதம்பர மான்மியம் - ஆறுமுக நாவலர், 1823 - 1879 சிதம்பர மும்மணிக் கோவை - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. சிதம்பர முருகவேள் மும்மணிக் கோவை - தில்லை நாயக முதலி யார். (1915). சிதம்பரம் சிவகாமியம்மை பதிகம் - அருணாசல முதலியார், 18ஆம் நூ. சிதம்பரம் 25-புலிப்பாணி, 15ஆம் நூ. சிதம்பர விலாசம் - தாயுமானவர்* சிதம்பர வெண்பா - குரு நமச்சி வாயர், 16ஆம் நூ. சிதம்பரேசர் மாலை - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815-1875 சிதம்பரேசர் வண்ணம் - சுப்பிர மணிய முனிவர், 18ஆம். நூ. பிற். சிதம்பரேசர் விறலிவிடுதூது - மாரிமுத்துப் பிள்ளை, - 18ஆம். நூ. சித்தர்கலிவெண்பா - இராமலிங்க பிள்ளை, (1905). சித்தரந்தாதி - தோத்திரம்* சித்தவடமான்மியம் - சொக்கலிங்கச் செட்டியார், (விசுவாவசு) சித்த வைத்தியத் திரட்டு - என். வாசு தேவா ராவ். சித்தாந்தக் கட்டளை - ? பூவை கலி யாணசுந்தர முதலியார் பதித்தது, (1892). சித்தாந்த சாத்திரம் - திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை நெறி விளக்கம், சிவப்பிரகாசம், திரு வருட் பயன், வினாவெண்பா, போற்றிக் கலிவெண்பா, கொடிக் கவி, நெஞ்சு விடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம். சித்தாந்த சாரகர்மசுவரூபம் - சைனம் சித்தாந்த சிகாமணி - துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், 17ஆம் நூ. சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. சித்தாந்த சித்தாஞ்சனம் - கிருட்டிணா னந்தசாமியார், 17ஆம் நூ. சித்தாந்த சேகரம் - சோமசுந்தர நாயகர், 1846-1901 சித்தாந்த சைவபோதம் - சைவ சித்தாந்த சங்கம் (உருத்ரோத்காரி). சித்தாந்த சைவருண்மைநிலை - சைவம்* சித்தாந்த சைவ வினாவிடை - திருஞான சம்பந்தப் பிள்ளை, (சென்னை, 1899). சித்தாந்த சைவ வினா விடை - ? தருமபுர ஆதீனம், (1941) சித்தாந்த ஞான இரத்தினாவளி - பால்வண்ண முதலியார், (1906). சித்தாந்த ஞானபோதம் - சோம சுந்தர நாயகர், 1846-1901 சித்தாந்த தரிசனம் - இது வள்ளலார் சாத்திரம் இருபதனுள் ஒன்று; 378 குறள் வெண்பாக்களையுடையது. சித்தாந்த தீபிகை - சிவாக்கிரயோகி, 16ஆம் நூ. சித்தாந்தத் தொகை - இது ஒரு பௌத்த தமிழ் நூல்; பௌத்தமத சித்தாந்தங்களைத் தொகுத்துக் கூறுதலினால் இது இப்பெயர் பெற்றது. இதனை இயற்றியவரை யாவது காலத்தையாவது அறிய முடிய வில்லை. சித்தாந்த நிச்சயம் - திருநாவுக்கரசு தேசிகர், தருமபுர ஆதீனம், (1928) சித்தாந்தப் பஃறொடை - அம்பல வாண தேசிகர், 17ஆம் நூ. சித்தாந்தப் பிரகாசிகை - சர்வான் மசம்பு சிவாசாரியர் இயற்றிய சைவசித்தாந்த நூல், சிவஞான முனிவர் தமிழில் மொழி பெயர்த் தது 1785. சித்தாந்த மரபு கண்டனம் - சிவஞான முனிவர் - 1785. சித்தாந்த வசன பூஷணம் - பூவை - கலியாண சுந்தர முதலியார், (பிலவங்க). 1854 - 1918. சித்தாந்த விளக்கம் - * சித்தாந்த வுந்தியார் - சோமசுந்தர நாயக்கர், (1881) சித்தாந்த திருக்கணிதம் - சு.ஏ. முத்து குமார ஆச்சாரி, (1932). சித்தாந்த பித்து - சங்கராச்சாரியர் வட மொழியிற் செய்த இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இராம சந்திரசாத்திரி (1906). சித்தாந்த மரபட்டவணை - (1888). சித்தாரூட நொண்டிச் சிந்து - ? 1897. சித்தா ரூடம் - பாம்பாட்டிச் சித்தர் - ? சித்தானந்த கீதை - அத்துவைத மதத்தைச் சார்ந்த இந்நூல் வசன நடையிலமைந்தது. இது சித்தானந்த சுவாமிக்கு உபதேசம் பண்ணிய நூலாகச் சொல்லப் படுகிறது.* சித்தியார் சுபக்கவுரை - நிரம்ப வழகிய தேசிகர், 16ஆம் நூ. சித்திரகவி உரையுடன் - காவியம்* சித்திர கவித்திரட்டு - கவிக்களஞ்சியப் புலவர், 18ஆம் நூ. சித்திரகூட மகத்துவம் - புராணம்* சித்திரங்காட்டிச் சத்தியம் நிறுத்திய கதை - நாராயணசாமிப் பிள்ளை, பெங்களூர், (1879) சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை - மீனாட்சிசுந்தரம் பிள்ளை* சித்திரபுத்திர நயினார் கதை - (1876). சித்திர மடல் - காளமேகப் புலவர், (1905), 14ஆம் நூ. சித்திராங்கதை விலாசம் - பரசுராம கவி, (1874). சித்திராங்கி விலாசம் - திரிசிரபுரம் திருமலை அப்பாவு பிள்ளை, (1886) சித்திரா வெண்பா - சைவம்* சித்திவிநாயக ரூஞ்சல் - வண்ணை வைத்தியலிங்கம் பிள்ளை, யாழ்ப் பாணம், (1893) சித்திவிநாயகர் இரட்டைமணி மாலை - கூளங்கைத் தம்பிரான், 19ஆம் நூ. சிநேந்திர மாலை - சினேந்திர மாலை பார்க்க சிந்தம் - இறந்துப்பட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) சிந்தனைக் கட்டுரைகள் -மறைமலை அடிகள், மறைவு 1950. சிந்தாகுலத் திரட்டு - (கத்தோலிக்க நூல்). (யாழ்ப்பாணம் 1893). சிந்தாமணி - திருத்தக்க தேவர், 10ஆம் நூ. சிந்தாமணிஉரை - நச்சினார்க்கினயர், 14ஆம் நூ. சிந்தாமணி நிகண்டு - யாழ்ப் பாணத்து வல்வை வயித்திய லிங்கம், 1843 - 1900 சிந்தாமணி விநாயகர் பதிகம் - பிச்சுவையர், (1930) சிந்தாமணீசர் துதி - * சிந்தாமணீசன் கழிநெடில் விண் ணப்பம் - * சிமிட்டு இரத்தினச் சுருக்கம் - தன் வந்திரி - ? சிராமலைக் கோவை - உ.வே. சாமி நாதையர் பதித்தது. சிரார்த்த விதி - ஏரம்பையர், 1847-1914. சிரீகருணர் சரித்திரம் - * சிரோரத்தின வைத்திய பூஷணம் - களத்தூர் அங்கமுத்து முதலியார் பதித்தது, (1896) சிலப்பதிகார அரும்பதவுரை - * சிலப்பதிகார உரை - அடியார்க்கு நல்லார், 13ஆம் நூ. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள், கி.பி. 175 சிலப்பதிகார விளக்கம் - இரா.பி. சேதுப்பிள்ளை (1931). சிலம்பனூருணிக்கரை சிதம்பர விநாயகர் மாலை - முத்துச்சாமி ஐயர், (1943) சிலுவையின் உபதேசம் - நைல்ஸ், வெஸ்லியன் மிசன் அச்சுக் கூடம், (யாழ்ப்பாணம் 1893) சிலேடை உரை - தத்துவராயர், 15ஆம் நூ. சிலேடை வெண்பா (திருவாரூர்) - (1888) சிலேடை வெண்பா நூற்கொத்து - சாமிப்பிள்ளை பதிப்பு. (1893). சிலையெழுபது - கம்பர், 12ஆம் நூ. சில்லறைக் கீர்த்தனை - சங்கீதம்* சிவகர்ணாமிர்தம் - சபாபதி நாவலர், 1844-1903 சிவகலைப்புராணம் - ஆறுமுக நயி னார் பிள்ளை, மறைவு 1925 சிவ கவசம் - இந்நூலியற்றியவர் வரதுங்க பாண்டியர், 16ஆம் நூ. சிவகவச வத்தியாயம் - சங்கீதம்* சிவகாமி அம்மன் பேரில் ஊசல் - தம்பிப் பிள்ளை (1873) சிவகாமி சரித்திரம் - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை (1889). சிவகாமியம்மைதுதி - * சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் - * சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் - கிருட்டிணையர் - ? சிவகிரி சண்முகமாலை - தெய்வ சிகாமணிக் கவுண்டர் (1937). சிவகிரி சமீன்தார் திக்குவிசயம் - கடிகை முத்துப் புலவர், 1665 சிவகிரி வெண்பா - (1881) சிவகிரி வேலாயுதசுவாமி இரட்டை மணி மாலை - இராசலிங்கக் கவி ராயர் (யுவ). சிவ கீதை - அகத்தியர்; பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும் இப்பெய ருடைய நூல் செய்துள்ளார். 1862 - 1914 சிவகீதை வசனம் - இராமசாமி தீட்சிதர் (தஞ்சாவூர், 1896). சிவகுளிகை - அகத்தியர். சிவசங்கர சதகம் - வீராசாமி உபாத்தி யாயர். (1887) சிவசக்தி நவகண்டவாலை - * சிவசக்தி பூசை 306 - கமலமூர்த்தி மௌனகுரு சுவாமிகள் (விகாரி) சிவசமவாத உரை மறுப்பு - சிவஞான சுவாமிகள் - 1785. சிவசாலத்திரட்டு - * சிவசாலம் - அகத்தியர் - ? சிவசிவ வெண்பா - சென்ன மல்லை யர் (சேனாமலையர்) 18ஆம் நூ. சிவசின்னங்கள் அணிவது ஏன் - சச்சிதானந்தம் பிள்ளை, (1923) சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் திருச் செந்தூர் வழிநடைச் சிந்து - திருச் செந்தூர் சுப்பிரமனிய பண்டிதர் (கொழும்பு 1887). சிவசுப்பிரமணிய ரகவல் - (1885). சிவ சேத்திர சிவநாமப் பஃறொடை -இந்நூல் சிவத்தலங்களில் சுவாமிக் கும், தேவிக்குமுள்ள திருநாமங் களைக் கூறித் துதிப்பது. கொற்ற வன்குடி உமாபதி சிவாசாரியர் செய்தது, (அச்சிடப்பட்டுள்ளது)*. சிவ சைலப் பள்ளு - ஆழ்வார்க் குறிச்சி இராமநாதன் கவிராயர், 18ஆம் நூற். சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாசாரியார், 13ஆம் நூ. சிவஞான சித்திப் பொழிப்புரை (சுபக்கம்)-சிவஞான முனிவர்-1785. சிவஞான சித்தியார் சுபக்க உரை - ஞானப்பிரகாச தேசிகர், 17ஆம் நூ. சிவஞான சித்தியார் சுபக்க உரை - மறைஞான தேசிகர், 16ஆம் நூ. சிவஞான சித்தியார் ஞானாபரண உரை - வெள்ளியம்பலத் தம்பி ரான், 17ஆம் நூ. சிவஞான சித்தியார் பதவுரை - சுப்பிரமணிய தேசிகர், 19ஆம் நூ. சிவஞான சித்தியார் பரபக்க உரை - திருவொற்றியூர் ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. சிவஞான சித்தியார் விருத்தியுரை - சிவாக்கிர யோகிகள், 16ஆம் நூ. சிவஞான சுவாமிகள் ஆனந்தக் களிப்பு - சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (பிங்கள.) சிவஞானதீபம் - குமரகுருதாச சுவாமிகள் - பாம்பன், 20ஆம் நூ. சிவஞான தீபம் - இரேவணசித்தர், 16ஆம் நூ. சிவஞானத் தெளிவு உபதேசத் திரயம் - சிதம்பரத் தம்பிரான் (1913). சிவஞான தேசிக சுவாமிகள் மீது திருப்பதிகம் - சிதம்பரநாத முனிவர் (1930). சிவஞானபாலைய தேசிகர் கலம் பகம் - சிவப்பிரகாச சுவாமிகள். 17ஆம் நூ. சிவஞானபோத உதாரண வெண்பா - இது சிவஞான போதத்தின் சூத் திரப் பொருள்களுக்கு உதாரண மாக அமைந்த 81 வெண்பாக் களை உடையது. சிவஞான போத உரை - பாண்டிப் பெருமாள், 17ஆம் நூ. சிவஞானபோத உபந்நியாச பாடம் வி.பி.காந்திமதிநாத பிள்ளை (1918). சிவஞானபோதசாரம் - சிவானந்தய தீந்திர சுவாமிகள் (1937). சிவஞான போதச் சிற்றுரை - சிவஞான முனிவர் - 1785 சிவஞான போதச் சூர்ணிகைக் கொத்து - திருவெண்ணெய் நல்லூர் பொல்லா விநாயகர் மொழிந்தது என வழங்குகிறது. 39 வார்த்திகங் களாலானது.* இது சாமிநாத தேசிகர் செய்ததாகக் கருதப்படும்.* சிவஞானபோதச் சூத்திரக் கருத்து - இது சிவ ஞான போதச் சூத்திரங் களின் கருத்து இன்னதெனக் காட்டுவது. இரண்டு செய்யுட்களா லாகியது.* சிவஞானபோத மாபாடியம் - சிவ ஞான யோகிகள், 1785 சிவஞானபோதம் - மெய்கண்ட தேவர், 13ஆம் நூ. சிவஞானபோத லகுவசனம் - சொக்க லிங்கஞ் செட்டியார் காரைக்குடி, 20ஆம் நூ. சிவஞானப் பிரகாசம் - இது வள்ள லார் சாத்திரம் இருபதுள் ஒன்று; பாயிர முட்பட 100 வெண்பாக்களா லாகியது* சிவஞானமுனிவர் துதி - தோத்திரம்* சிவஞான யோகிகள் இரட்டை மணி மாலை - பாண்டித்துரைத் தேவர், மறைவு 1911. சிவதத்துவக்கட்டளை - * சிவதத்துவ சிந்தாமணி - (1881). சிவதத்துவ விவேகம் - சிவஞான முனிவர், 1785 ஆறுமுக நாவலர் பதித்தது (1882). சிவதருமோத்தரம் - மறைஞான சம்பந்தர் - 1555. சிவ தூடண கண்டனம் - சங்கர பண்டிதர், 1821 - 1891 சிவ தூடண நிரோதம் - சோமசுந்தர நாயகர்; 1845 - 1901 சிவ தூடண பரிகாரம் - நாராயண பிள்ளை (1889). சிவ தூடண பரிகாரம் - ஆறுமுக நாவலர் 1889. சிவத்தல மஞ்சரி - த. சுப்பிரமணிய பிள்ளை (1932). சிவத் துரோக கண்டன நிக்கிரகம் - வைத்தியநாதச் செட்டி, உறையூர் (சென்னை 1896). சிவத்தியானந்த கீர்த்தனை - (1886). சிவநாம அத்வைத கீர்த்தனை - சோமசுந்தரச் செட்டி (1857). சிவநாமக் கலிவெண்பா - சிவஞான முனிவர். சிவநாம சங்கீர்த்தனம் - சுந்தர முதலியார், (சென்னை - 1867.) சிவநாமப் பஃறொடை வெண்பா - சோமசுந்தர நாயகர், 1846-1901 சிவநாம மகிமை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. சிவநாமாவளி - (1882). சிவநாம விளக்கம் - (1889). சிவநெறிப் பிரகாசம் - இது சிவக் கொழுந்து தேசிகரியற்றிய ஒரு சைவ நூல்; 216 செய்யுட்களா லானது* சிவநெறிப்பிரகாசம் - உமாபதிசிவா சாரியார், 14ஆம் நூ. சிவநெறிப் பிரகாசவுரை - நந்தி சிவாக்கிரயோகிகள், 16ஆம் நூ. சிவபரத்துவ நிச்சயம் - ஈசுவர மூர்த்தியா பிள்ளை (1940). சிவப்பிரகாச வெண்பா - தத்துவ ராயர், 15ஆம் நூ. சிவப்பிரகாசம் ஆங்கில மொழி பெயர்ப்பு - அருள் ஹென்றி கொசிங்தன் (Rev. Hentry Hoising-ton) (Boston 1854) சிவ புராணம் - பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் 1862-1944. திருவாசகத் தில் ஒரு பகுதியும் சிவபுராணம் எனப்படும். சிவபூசாவிதி - முத்துவேலாயுத தேசிகர், (தருமபுர ஆதீனம் 1941). சிவபூசாவதி - குமார சுவாமிக் குருக் கள், சம்புலிங்கம்பிள்ளை பதித்தது. சிவபூசைத் திரட்டு - ? (நந்தன.) சிவபூசைத் திரட்டும் பஞ்சபூதத்தல தேவாரப் பதிகங்களும் - (1869) சிவபூசை விளக்கம் - அ. சிதம்பரன், (1940). சிவபூசை அகவல் - கமலைஞானப் பிரகாசர், 16ஆம் நூ. சிவபூசை அகவல் - இது வேதாந்த விடயமானது; திருவாரூர் ஞானப் பிரகாசர் இயற்றிய சிவபூசை அக வலினும் வேறானது; நூலாசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.* சிவ பூசை அந்தாதி - (சுப்பிரமணிய பிள்ளை 1897) சிவ பூசை அந்தாதி உரை - சங்கர பண்டிதர், 1821 - 1891 சிவபூரணாதி தோத்திர மஞ்சரி - திரு வேங்கட நாயுடு, பச்சையப்பன் கல்லூரி, (சென்னை 1899) சிவபெருமான் அலங்காரம் - முத்துக் குமார சுவாமிக் குருக்கள், 1853-1936 சிவபெருமான் அனுக்கிரக விதி - சங்கரலிங்கம் பிள்ளை (1887). சிவபெருமான் இரட்டைமணி மாலை - கபிலதேவநாயனார், 10ஆம் நூ. சிவபெருமான் திருவந்தாதி - கபில தேவ நாயனார், 10ஆம் நூ.? சிவபெருமான்துதி - * சிவபெருமான் மும்மணிக்கோவை - இளம்பெருமானடிகள் (11ஆம் திருமுறை) 10ஆம் நூ.? சிவபோகசாரம் - ஞானசம்பந்த தேசிகர், 16ஆம் நூ. (புட்பரதச் செட்டி 1891) சிவப்பிரகாச உரை - திருப்பதி சாரச் சாமி, 20ஆம் நூ. சிவப்பிரகாச உரை - திருவிளங்கம், 20ஆம் நூ. சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம் - சிற்றம்பல நாடிகள், 15ஆம் நூ. சிவப்பிரகாசக் கட்டளை - இது சைவ சமயத்தைச் சேர்ந்தது, வசன நடை யாலானது. இயற்றியவர் பெயர் முதலியன விளங்கவில்லை.* (தருமபுர ஆ. 1932) சிவப்பிரகாச சிவவீரபத்திரர் துதி - * சிவப்பிரகாசச் சிந்தனையுரை - இது சிவப்பிரகாசர் உரைகளுள் ஒன்று. திருவாவடு துறைச் சங்கரமூர்த்தி தேசிகரின் சீடராகிய நல்ல சிவ தேவனென்னும் பெரியார் இதனை இயற்றினார். அச்சிடப்படவில்லை.* சிவப்பிரகாச மூலக்கருத்து - அம்பல வாணத் தம்பிரான்* சிவப்பிரகாசம் - உமாபதிசிவம், 14ஆம் நூ. சிவப்பிரகாசம் உரை - சிதம்பரநாத முனிவர்* சிவப்பிரகாசம் உரையுடன் - இதற்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் பெயர் காலம் முதலி யன அறிய முடியவில்லை. மதுரை சத்திய ஞானப்பிரகாசர் இயற்றிய உரை ஒன்றுள்ளது. மதுரை ஞானப் பிரகாசத் தம்பிரானின் சீடரான சிவப்பிரகாசர் விரிவான உரை ஒன்றும் எழுதியிருக்கின்றார்.* சிவப்பிரகாச ரூஞ்சல் - * சிவமகா புராணம் - ஈக்காடு இரத்தின வேலு முதலியார் மொழி பெயர்த் தது, (சென்னை 1900.) சிவ மகாமந்திரம் - சிறுமணவூர் முனிசாமி முதலியார், 20ஆம் நூ. சிவமத மடாதிபதிகள் சரித்திரம் - * சிவயோகதீபிகை - இது சைவ நூல்* சிவயோகம் - * சிவயோகம் - சித்தர்* சிவயோகம் - வால்மீகி (1876). சிவரகசியம் - ஒப்பிலாமணி தேசிகர், 19ஆம் நூ. சிவரகசிய காண்டம் - அனந்த வைத்திய நாதசிவன் (விக்ருதி). சிவராத்திரி கற்பம் - மறைஞான சம்பந்தர், 16ஆம் நூ. சிவராத்திரி புராணம் - நெல்லைநாதர், 18ஆம் நூ. சிவராத்திரி புராணம் - வரதபண்டிதர், 18ஆம் நூ. முற். சிவராத்திரி விரத நிர்ணயம் - விசுவ நாதச் செட்டி (1889). சிவலிங்க மகத்துவம் - ஆண்டாளம்-மாள் (1913). சிவாகமக் கச்சிமாலை - சிவஞான வள்ளல்* சிவவாக்கியர் நாமபரீட்சை 33 - சிவவாக்கியர்* சிவவாக்கியர்பாடல் - சிவவாக்கியர் 14ஆம் நூ.? சிவாகமப் பஃறொடை வெண்பா -சோமசுந்தர நாயகர்; 1841 - 1901. சிவாகமார்த்த தரிசனம் * சிவாச்சிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. சிவாதிக்க இரத்தினாவளி - சோம சுந்தர நாயகர், 1846-1901. சிவாதிக்கிய இரத்தினாவளி - சுந்தர சிவாசாரியர் (பவ வருடம்). சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பா லும் - சம்பந்த முதலியார் (1945.) சிவார்ச்சனா சந்திரிகை - அப்பைய தீட்சிதர் (1927). சிவாலய தரிசனவிதி - ஆறுமுக நாவலர் (1873). சிவாலய மகோற்சவ விளக்கம் - நா. கதிரை வேற் பிள்ளை மறைவு 1907. சிவானந்த போதசாரம் - சிவானந்த முனிவர், தருமபுர ஆதீனப் பதிப்பு. (1931). சிவானந்த போதம் - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. சிவானந்த மாலை - சிறந்த சைவ சாத்திரங்களிலொன்று. இந்நூலை இயற்றியவர் பெயர் அறியப்பட வில்லை. இந்நூலில் 389ஆம் செய்யுள் முதல் 410ஆம் செய்யுள் வரையில் உள்ள பாகம் நெஞ்சுக் கமைத்தல் என்ற பெயருடன் தத்துவ தேசிக நாயனார் பாடுதுறை யில் 29ஆம் பிரபந்தமாகக் காட் டப்பட்டுள்ளது.* சிவானந்தலகரி தமிழுரை - சிவப்பிர காச பண்டிதர், 1864-1916 சிவானுபவ சாரம் - பரமசிவ சுவாமி (1872). சிவானுபவ திருவாக்கியங்கள் - இராமசுவாமி (1886). சிவானுபோகத் திரட்டு - * சிவானுட்டான விதி முதலியன - * சிறப்புப் பெயரகாரதி - ஈர்க்காடு இரத் தினவேலு முதலியார், 20ஆம் நூ. சிறியதிருமடல் - திருமங்கை ஆழ் வார், 9ஆம் நூ. சிறிய திருமடல் வியாக்கியானம் - பெரியவாச்சான் பிள்ளை* சிறிய திருமுடியடைவு - * சிறிய பதிப்படி - பிள்ளைலோகா சாரியர் 15ஆம் நூ. சிறீ கிருஷ்ணனேசலல் - சண்பக மன்னார். சிறீ சயந்தீ மகாத்மியம் - வைணவம்* சிறீசாதகாமிர்தம் - நாராயணசாமி சோதிடர், (1888). சிறீ தத்துவ சித்தஞ்சனம் - * சிறீ பாஷ்யார்த்த சங்கிரகம் - * சிறீ முகம் - சைனம்* சிறீரங்கபட்டணம் ராசாக்கள் வரலாறு - சிறீ ரங்க ராசஸ்தவ வியாக்கியானம்- திருமழிசை அண்ணாவப்பங்கார். சிறீராமசாதகம் - சேஷ சாத்தியார் (1870). சிறீ ராமாயண சாரம் - ஆத்திரேய சீனிவாசாசாரியர்* சிறீவசன பூடண ஆய் வியாக்கி யானம் - சநந்யாசாரியர் (ஆய்)* சிறீவசன பூடணம் - பிள்ளை லோகச்சாரியார் 15ஆம் நூ. சிறீவசன பூடண வியாக்கியானம் விசாரம் - * சிறீவைணவ தினசரி வியாக்கி யானத்துடன் - வேதாந்த தேசிகன், வீரராகவாசாரியர். சிறீவைணவ லட்சணம் - * சிறீ இராச இராச விசயம் - நாராயணன் பட்டாதித்தன், 11ஆம் நூ. சிறீதோத்திரம் சதுச்சுலோகி - ஆளவந்தார் I , 11ஆம் நூ. சிறுகாக்கை பாடினியம் - சிறு காக்கை பாடினியார், 10ஆம் நூ. சிறுகுரீஇஉரை - நகை விளைப்பதும் வழக்கு வீழ்ந்ததுமான ஒரு பழைய நூல், நச்சினார்க்கினியர் மேற்கோள் எடுத்தாண்ட நூல்களிலொன்று-? சிறுத்தொண்ட நாயனார் சரித்திரப்பா - நாராயணசாமி நாயுடு. சிறுத்தொண்ட நாயனார் விலாசம் - பரசுராம கவி (1881). சிறுத்தொண்டர் நாடகம் - சாம்ப சிவம் பிள்ளை. (1886). சிறுத்தொண்டர் புராணம் - பரசுராம கவிராயர், 19ஆம் நூ. சிறுத்தொண்டர் யட்சகானம் - ஞானப்பிரகாசர்.* சிறுபஞ்சமூலம்-காரியாசான். 7ஆம் நூ. சிறுபாணாற்றுப்படை-(கி.மு. 30-) இது ஓய்மாநாட்டு நல்லியக் கோடனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்த னார் பாடியது. பாணர் - பாடுவோர். அவர் சிறு பாணரெனவும் பெரும் பாணரெனவும் இருவகைப்படு வர். இதில் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்னும் வள்ளல் எழுவரது கொடைத் திறம் கூறப்பட்டுள்ளது. சிறுபாண னென்பவன் இனிய ஒசையுடைய சிறிய யாழை வாசிப்பவன். சிற்ப சிந்தாமணி - வீராசாமி முதலி யார். (சென்னை 1897.) சிற்பநூலென்னும் மனையடி சாத்தி ரம் - இராமகிருஷ்ணா, ஐயாச்சாமி என்னுமிருவராலும் திரட்டி 1903ஆல் அச்சிடப்பட்டது. சிற்றம்பல சேகரம் (சோதிடம்) - சிற்றம்பல முதலியார், (1887). சிற்றம்பல நாடியார் கலித்துறை - இது சிற்றம்பல நாடிகளின் மாணாக்க ரொருவரால் பாடப்பட்டது; 55 பாடல்களுடையது* சிற்றம்பல நாடியார் தாலாட்டு - இது சிற்றம்பல நாடிகள்மீது பாடப்பட்ட 63 கண்ணிகளையுடைய நூல்.* சிற்றம்பல நாடியார் வெண்பா - இது சீகாழிச் சிற்றம்பல நாடியார் மாண வர் ஒருவராற் பாடப்பட்டது; 66 வெண்பாக்களுடையது.* சிற்றம்பல நாடிகள் திரிகாலத்திரங் கல் - இது காஞ்சிபுரத்திலுள்ள ஞானப்பிரகாச மட முதல்வராய் இருந்த சிற்றம்பல நாடிகள் சம்பந்த மாகப் பாடப்பட்ட நூல்.* சிற்றம்பல நாடிக்கட்டளை - இது சித்தாந்த சாத்திரம் படிக்கக் கருவி யாயுள்ளது. சிற்றம்பலநாடி இதை இயற்றினாரென்பர்; இது வசன நடையாலாயது.* சிற்றடக்கம் - பழைய அகப்பொருள் நூல்களிலொன்று; இளம்பூரணர் முதலிய உரையாசிரியரால் எடுத் தாளப்பட்டது. சிற்றம்பலசுவாமி வாக்கியம் - சிற்றம் பல சுவாமி (ஞானம்) சிற்றம்பலநாடி மாலை - மறைஞான சம்பந்தர் 16ஆம் நூ. சிற்றம்பலநாடி வெண்பா - மறை ஞானசம்பந்தர், 16ஆம் நூ. சிற்றிசை - கடைச்சங்க இசை நூல் களிலொன்று (இ.க.உ.) சினேந்திர பக்தர் கதை - சைனம்* சினேந்திரமாலை - உபேந்திராசிரியர், 18ஆம் நூ. பிற். சின்மய தீபிகை - முத்தையா சுவாமி, (1907). சின்னக்குழந்தை கீர்த்தனம் - * சின்னப்பூ வெண்பா - தத்துவராயர் 15ஆம் நூ. சின்னப்ப நாய்க்கன் வம்சாவளி * சின்னம்மணி பெரியம்மணி கதை - வைத்தியநாதையர், (1889). சின்னூல் - நேமிநாதம் பார்க்க. சின்னூற்றிரட்டு - காவியம்* சீ சீகண்டேசுர மாலை - சிவராம லிங்கம் பிள்ளை, (பிரசோற்பத்தி). சீகாழிக் கோவை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815-1875 சீகாழிப் பெருவாழ்வின் சீவகாருண் ணியமாட்சி - செந்திநாதையர், (1907). சீகாழிப் புராணம் - அருணாசல கவிராயர், 1712-79. சீகாளத்திக் கலம்பகம் - இராமசாமிச் செட்டியார். (ரிப்பன் பிரஸ் 1908). சீகாளத்திப் புராணத்தின் இறுதி 12 சருக்கங்கள் - வேலைய தேசிகர், 17ஆம் நூ. சீகாளத்திப் புராணம் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. சீகாளத்திப் புராண வசனம் - பூவை, கலியாண சுந்தர முதலியார், 1854 - 1918. சீட்டரந்தாதி - காவியம்* சீடாசார மூலமும் பாலபோதினி உரையும் - ? (1930). சீட்டுக் கவிகளும் சிங்காரப் பாடல் களும் - * சீதா கல்யாணம் - வேம்பம்மாள், (1889) சீதாவிசயம் - (1870). சீபுராணம் - (ஸ்ரீபுராணம்) இது ஒரு சைன நூல். இருசபர் முதல் சீவர்த் தமானர் இறுதியாகவுள்ள இருபத்து நான்கு தீர்த்தங்காரர் களுடைய சரித்திரங்களை விரிவாகக் கூறு வது. இது தென்மொழியும் வட மொழியும் கலந்ததான மணிப் பிரவாள நடையிலெழுதப் பட்டது. இக் காலத்து வழங்காத பற்பல தமிழ்ச் சொற்களை இதிற்காண லாம். இந்நூலைச் சைனர் தினந் தோறும் பூசித்துப் பாராயணஞ் செய்வதுண்டு. இதன் ஆசிரியரை யும் செய்யப்பட்ட காலத்தையும் அறிய முடியவில்லை. சீமந்த நாடகம் - முத்துக்குமாரர் 18ஆம் நூ. சீமந்தனி புராணம் - மட்டக் களப்பு வித்துவான் பூபாலபிள்ளை, 20ஆம் நூ. சீயப்பதியபடி - பிள்ளை உலோகா சாரியர், 15ஆம் நூ. சீரங்கநாயகியா ரூசல் - * சீரங்கமகத்துவம் - அப்பியாசார்யர்* சீரங்கமான்மியம் - (1882). சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர் 19 ஆம் நூ. சீவக சிந்தாமணி வசன காவியம் - குமாரசுவாமி முதலியார் திருப்பத் தூர், (1907) சீவகாருண்ணிய ஒழுக்கம் - இராம லிங்க சுவாமிகள், 18.3.1874 சீவகாருண்ணிய விளக்கம் - சச்சி தானந்த சுவாமி, (1888.) சீவசம்போதனை - இது சீவசம் போதனை என்னும் சைன நூலின் மொழிபெயர்ப்பு), தேவேந்திர முனி - ? சீவசோதி சிந்தாமணி - (1887)* சீவரட்சாமிர்தம் - சுப்பிரமணிய பண்டிதர், 19ஆம் நூ. பிற். (1864). சீவரத்தினம் (நாவல்) - மயிலை இராம லிங்க முதலியார், 1900 (அ.பு.) சீவன் முத்திப் பிரகரணம் - சங்கராச் சாரியர், இராமசுவாமி பதித்தது, (1887) சீவன்முத்திப் பிரகரணம் - இது சாயணர் வடமொழியிற் செய்த நூலின் மொழி பெயர்ப்பு. மொழி பெயர்த்தவர் உலகநாத சுவாமி (1887) சீவோற்பத்தி சிந்தாமணி - ? (1892). சீறாச் சதகம் - மகமத் சுல்தான் இபின் அஹ்மத், (1900.) சீறாப் புராணம்-உமறுப்புலவர், 1655-? சீறாப்புராண வண்ணம் - கவிக் களஞ்சியப் புலவர், 18ஆம் நூ. சு சுக சந்தர்சன தீபிகை - (A hand book of Sanitary science) - நடேச சாத்திரி, (மதுரை 1902) சுகந்த பரிமள சாத்திரம் - முனுசாமி முதலியார் (1931.) சுகபேதித் தைலம் - வைத்தியம்* சுகர் கைவல்லியம் - (1881). சுகர்நாடி என்னும் சோதிட சாத்திரம் - ஐயா முத்துப்பிள்ளை உரை எழுதிப் பதித்தது (சென்னை 1897). சுகர்நாடி சோதிடம் - இந்நூல் சுகர் பரிச்சித்துவுக்குச் சொன்னது எனப்படுகிறது (1895). சுகர் பெருநாடி - (சோதிடம்) (1922.) சுகுணசுந்தரி சரித்திரம் - வேத நாயகம் பிள்ளை, (சென்னை 1887) சுகுணன் கதை - சைனம்* சுக்கிரன்யோகபாவம் - சுக்கிரன்* சுக்கிரீவ விசயம் - இராச கோபாலன்* சுசீந்திரத் தல புராணம் - முத்தமிழ்க் கவிராயர், (திருநெல்வேலி 1894). சுத்தகாண்டம் - சங்கராச்சாரியர் * சுத்தசாதகம் - குமாரதேவர்* 18ஆம் நூ. சுத்தாத்துவித சைவ சித்தாந்த தத்துவ படம் - செந்திநாதையர், (சென்னை 1899). சுத்தானந்தப் பிரகாசம் - தமிழிலுள்ள ஒரு பரத நூல் - ? சுந்தர ஆநந்தர் பூசாவிதி - (1881). சுந்தரபாண்டியம் - அந்தாரி,16ஆம் நூ. சுந்தரபாண்டியன் தொகுதி - கொன்றைவேந்தன் பார்க்க. சுந்தரர் - தொழுவூர் வேலாயுத முதலியார். சுந்தர விநாகயர் பதிகம் - பூவை, கலி யாண சுந்தர முதலியார், 1854 - 1918 சுந்தரர் வேடுபறி - காவியம்* சுந்தரானந்தர் சூத்திர 25 - சுந்தரானந்தர் வைத்தியம் -* சுந்தரானந்தர் வைத்தியம் 110 - * சுந்தரானந்தர் ஞானம் 51 - ஞானம், வைத்தியம்* சுந்தரானந்தர் தண்டகம் - சுந்தரானந் தர், வைத்தியம்* சுந்தரானந்தர் தீட்சாவிதி - சுந்தரானந்தர் பூசாவதி - மந்திரம்* சுந்தரானந்தர் விநோத சூத்திரம் - வைத்தியம்* சுந்தரி மாலை - புகழேந்திப் புலவர் சுபத்திரை நாடகம் - நாகேசையர், 19ஆம் நூ. சுபத்திரை மாலை - புகழேந்திப் புலவர், 1ஆம் நூ. சுப்பிரமணியசுவாமி பதிகம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815-1875 சுப்பிரமணிய பராக்ரமம் - நா, கதிரை வேற் பிள்ளை, மறைவு 1907 சுப்பிரமணியர் ஆசிரிய விருத்தம் - காயற்பட்டினம் அருணாசல உபாத்தியாயர், (1867) சுப்பிரமணியர் கலைஞானம் - மந்திரம் வைத்தியம்* சுப்பிரமணியக் கோவை - அகப் பொருள்* சுப்பிரமணிய சுவாமி இருபுராண விருத்தம் - காவியம் * சுப்பிரமணிய சுவாமி பேரில் காதல் -* சுப்பிரமணிய சுவாமி துதி - * சுப்பிரமணிய சுவாமி மந்திரம் - * சுப்பிரமணிய சுவாமி அந்தாதி - * சுப்பிரமணியர் ஞான சூத்திரம் 100 - ஞானம்* சுப்பிரமணியர் துதி - * சுப்பிரமணியர் 36-மந்திரம், வைத்தியம்* சுப்பிரமணியர் வள்ளியம்மையைச் சிறையெடுத்த சரித்திரப் பாடல் - சிதம்பர நாட்டான் (1878) சுப்பிரமணியர் விருத்தம் - சுப்ர மணிய முனிவர் - 18 ஆம் நூ. சுப்பிரமணிய விருத்தம் - * சுப்பிரமணிய விலாசம் - * சுப்பிரமணிய உபதேசஞானம் 200 சுப்பிரமணிய ஞானம்- * சுப்பிரமணிய தோத்திரம்- * சுமதி சதகம் - எழுமூர்ச் சமரபுரி முதலியார், (சென்னை 1904). சுமதி விலாசம் - ஆழ்வாராப்ப பிள்ளை (1868) சுரசாத்திரம் - சோதிடம்* சுருதி சார விளக்கம் - இது வள்ளலார் சாத்திரம் 20-ல் ஒன்று பாயிர முட்பட 96 செய்யுட்களுடையது. சுரோணிதக் கட்டுக்கு விளக்கெண் ணெய் வைப்பு - வைத்தியம்* சுவர்க்க நீக்கம் - 1 ஆம் காண்டம் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (மொழி பெயர்ப்பு (1895). சுவானுபவசாரம் - பரமசிவத் தம்பிரான் (பிரசோற்பத்தி). சுவானுபவ ரசமஞ்சரி - முத்துராம லிங்க சுவாமி (1879). சூ சூடாமணி உள்ளமுடையான் - திருக் -கோட்டி நம்பி, 12ஆம் நூ. சூடாமணி நிகண்டு - மண்டல புருடர், 16ஆம் நூ. சூதக விதி - நீதி* சூதசங்கிதா சாரசங்கிரகம் - கிருஷ்ண பரமாத்மாசாரிய சுவாமிகள்* சூத சங்கிதாசார சங்கிரகம் - * சூதசங்கிதை - வல்லூர் தேவராச பிள்ளை (1851) சூதர் வாக்கியம் - வைத்தியம் சூதுபுராணம் - அப்புக்குட்டி ஐயர், 18ஆம் நூ. சூத்திரக் கலித் துறை - இது ஓர் சைவ நூல், 43 கலித்துறைகளால் ஆனது. ஆசிரியர் பெயர் முதலியன அறியப்படவில்லை.* சூத்திரர்கள் யார் - ஜே.எஸ். கண்ணப்பர் (1923). சூத்திர வெண்பா - இது வேதாந்த விடயமான நூல். இதனை இயற்றி யவர் பெயர் புலப்படவில்லை.* சூரிய சந்திரவம்ச பரம்பரை - சண்முகச் கிராமணி (1889). சூரிய சித்தாந்த சோதிட கணிதம் - சு.ஏ. முத்துக்குமார சுவாமி ஆச் சாரி (1934) சூரிய நமஸ்கார பதிகம் - (1880). சூரிய நமஸ்காரப் பதிகம் - ஆறுமுக சுவாமிகள் (சிறீமுக). சூரியனார் கோயில் குருதோத்திரப் பதிகங்கள் - முத்துக்குமார தேசிகர் (1921). சூரியன் தோத்திரம் - * சூரியன் முற்பிறப்பின் சரித்திரம் - ஏரம்பையர், 1847 - 1914. சூரியானந்தர் சூத்திரம் 25 - இரச வாதம்* சூரியானந்தர் 13 - * சூரைக்குடிப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. சூர்ணிகைக்கொத்து (சிவஞான போத) - சுவாமிநாத தேசிகர், 17ஆம் நூ. சூளாமணி - தோலா மொழித்தேவர், 9ஆம் நூ. சூளாமணி வசனம் - அம்பிகை பாகர், 19ஆம் நூ. செ செகராசசேகரமாலை - செகராச சேகரன், 17ஆம் நூ. செகராச சேகரம் - செகராச சேகரன் சோமையரைக்கொண்டு செய்வித்த சோதிட நூல், 17ஆம் நூ. இப்பெய ருடைய வைத்திய நூல் ஒன்றும் இவ் வரசனால் தொகுப்பிக்கப்பட்டது. செகவுற்பத்தி - ஆறுமுகத் தம்பிரான், 19ஆம் நூ. செங்கழுநீர் விநாயகர் பதிகம் - சதானந்த தாசர், (சர்வசித்து). செங்குந்த மன்னர் குலதீபிகை - மலையப்ப பண்டிதர், (1905) செங்குந்தரூசல் - பொன்னம்பல முதலியார் (1868) செங்குந்தர் பிரபந்தம் - (1926). செங்குந்தர் பிள்ளைத் தமிழ் - ஞானப்பிரகாச சுவாமி, (1869). செங்கோன் தரைச் செலவு - இது மதுரைச் சுந்தர பாண்டியன் ஓதுவா ரால் 1909-ல் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஏழுபாடல்களும் அவற்றுக்கு உரையும் காணப்படுகின்றன. இது முதலூழியிற் பாடப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது. இதற்குப் பாயிரமாக ஏழ் தெங்கு நாட்டு முத்தூரகத்தியன் பாடலென ஒன்று காணப்படுகின்றது. பாயிரம் செய்யும் வழக்கு சங்க காலத்துக்குப் பிற் பட்டதாதலின் இதுமிகப் பழைய நூலென்பதில் ஐயம் உண்டு. செண்பகவல்லி என்னும் பவளக் கொடி நாடகம் - திரிசிரபுரம் தியாக ராச பிள்ளை, (சென்னை 1893). செண்டலங் காரன் விறிலிவிடுதூது - இது செண்டலங்காரன் என்னும் பிரபுவின் மீது பாடப்பட்ட நூல். (ச.கை.) செந்தமிழ்-வீரமாமுனிவர், 1680-1746. செந்திலந்தாதி - குற்றாலலிங்க பிள்ளை, (1884) செந்தில்குமரேசரந்தாதி - சுப்பிர மணிய பிள்ளை (1888) செந்தில்நீரோட்கயமக வந்தாதி உரை - கந்தப்பையர், 18ஆம் நூ. செந்தில்யமக அந்தாதி - சிவசம்புப் புலவர், 18ஆம் நூ. செந்திற் கலம்பகம் - சுவாமிநாத தேசிகர் 17ஆம் நூ. செந்தூரம் - (1882) செந்தூரம் 300 - அகத்தியர் - ? செப மாலை - வேதநாயக சாத்திரி, (தஞ்சாவூர் 1907). செப்பறைப்பதி இராசை அகிலாண் டேசுவரி பதிகம் - சிவஞான முனிவர் (1785). செப்பறைப் பிள்ளைத் தமிழ் - சுப்பிர மணிய கவிராயர், 19ஆம் நூ. செப்பேசர் புராணம் - ஞானக் கூத்தர், (நிரம்ப வழகியரின் சீடர்) 16ஆம் நூ. செம்பொனார் கோயிற் புராணம் - ? செயங்கொண்டார் சதகம் - முத்தப்ப செட்டியார், 19ஆம் நூ. செயமுனிசோதிட சூத்திரம் - க.வ. அப்பாவுபிள்ளை, 19ஆம் நூ. செயன் முறை - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் (யா.வி.ப. 294) செயிற்றியம் - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கணம் (யா.வி.) செய்யுண் மணிமாலை - ? (1943). செய்யுளிலக்கணம் - வீரமாமுனிவர்.* செய்யுளிலக்கணம் - கலியாணசுந்தர யதீந்திரர், (1917). செருப்பு விடுதூது - பின்னத்தூர் நாரா யணசாமி ஐயர், 1862 - 1914. சென்னியோங்கு வியாக்கியானம் - பெரியவாச்சான் பிள்ளை* சென்னை கந்தசாமி பேரிற் கலம்பகம் - தண்டபாணி சுவாமிகள், 1840-99 சென்னைக் கலம்பகம் - முருகதாச சுவாமிகள், 1840-99 சென்னைக் கந்தசுவாமிப் பதிகம் - பண்டிதை மனோன்மணி அம்மை யார், 1863 - 1908. சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் -கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். சே சேக்கிழார் சுவாமிகள் வரலாறு - பூவை, கலியாணசுந்தர முதலியார், 1854-1918 சேக்கிழார் புராணம் - உமாபதி சிவாச் சாரியார், 14ஆம் நூ. சேடசபங்கியும் இரட்டைநாக பந்தமும் - (1888). சேடமலைப் பதிற்றுப் பத்தந்தாதி - (1907) சேடமலை மாலை - வல்லூர்த் தேவ ராச பிள்ளை, 19ஆம் நூ. சேதுபதி ஏலப்பாட்டு - (1874). சேதுபதி வரலாறு - * சேதுநாடும் தமிழும் - ரா. இராகவ ஐயங்கார், (1928). சேதுபர்வதவர்த்தனியம்மை பிள்ளைத் தமிழ் - அருணாசலக் கவிராயர், (மதுரை 1906). சேதுபுராணக் கதை - ஏரம்பையர், 1847 - 1914 சேத்திரத் திருவெண்பா - ஐயடிகள் காடவர் கோன், 9ஆம் நூ. ? சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்-அந்த கக்கவி வீரராகவ முதலியார், 1654. சேயூர் கலம்பகம் - அந்தகக்கவி வீர ராகவ முதலியார் - 1654. செல்லாண்டியம்மன் சதகம் - சக்கரபாணி ஆச்சாரியார் - ? செவ்வந்தி புராணம் - எல்லப்ப நாவலர், 17ஆம் நூ. சேது மஹாத்மியம் - சாமிநாத சாத்திரி உரைநடையில் மொழி பெயர்த் தது. (1903). சேது புராணம் - நிரம்பவழகிய தேசிகர், 16ஆம் நூ. சேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ் - சிதம்பர முனிவர், (1906). சேந்தன் செந்தமிழ் - பாம்பன் குமர குருதாச சுவாமிகள், 20ஆம் நூ. சேனாவரையம் (தொல்காப்பியச் சொல் லதிகார உரை) - சேனாவரையர், 13ஆம் நூ. சேனைக்குளத்தார் பட்டையம் - வாமதேவதீட்சிதர், (1889). சேவூர்ப் புராணம் - கொடுமுடி சிவஞான தேசிகர் - ? சேற்றூர் செமீன் பள்ளு - சங்கர மூர்த்தி கவிராயர், 18ஆம் நூ. சை சைதாத்துப் படைப்போர் - குஞ்சு மூசுப் புலவர் (1878). சையாக்காதி நொண்டி நாடகம் - * சைவ அத்வைத சித்தாந்தம் - J.M. நல்லசாமிப் பிள்ளை (1909). சைவ அனுட்டான அகவல் - (1885). சைவ சந்திரிகை - நா. கதிரைவேற் பிள்ளை, மறைவு 1907 சைவசமயத்தின் சிறப்பியல்பு - ஈ.த. இராசேஸ்வரியம்மாள். சைவ சமயநெறி - மறைஞான சம்பந் தர், 1555 சைவசமய விளக்க வினாவிடை - காஞ்சி, சபாபதி முதலியார், (சென்னை 1879). சைவசன்னியாசபத்ததி - சிவாக்கிர யோகிகள். 16ஆம் நூ. சைவசித்தாந்த ஆராய்ச்சி - J.M. நல்லசாமிப் பிள்ளை, (1915). சைவசித்தாந்த சங்கிரகம் - ? (1908) சைவ சித்தாந்த சந்திரிகை - இது வசன நடையிலுள்ள ஒரு சைவ நூல். இயற்றியவர் இன்னாரெனத் தெரிய வில்லை. சைவசித்தாந்த சாரமான மரபு - தாமோதரம் பிள்ளை (ரிப்பன் பிரஸ், (சோபகிருது). சைவ சித்தாந்தச் சுருக்கம் - நா. கதிரைவேற்பிள்ளை, மறைவு 1907 சைவ சித்தாந்தஞானபோதம் - மறைமலை அடிகள், மறைவு 1950. சைவசித்தாந்த பரிபாஷை - ? (1928). சைவ சித்தாந்தப் பிரகாசக் கட்டளை - சருவான்ம சம்பு சிவாசாரியார் வடமொழியிற் செய்த இந்நூலைத் திருவாவடுதுறைச் சிவஞான முனி வர் தமிழில் மொழி பெயர்த்தனர் என்று முதலிலும் இறுதியிலும் உள்ள அகவற் பாவால் விளங் குகிறது. சிந்தாந்தப் பிரகாசிகை என்றும் இதற்குப் பெயருண்டு.* சைவ சித்தாந்தம் - * சைவசித்தாந்த ரகசியம் - நல்ல தம்பிப் பிள்ளை, 1906. சைவ சித்தாந்த வசனம் - நூலாசிரியர் பெயர் முதலியன விளங்கவில்லை. சைவசித்தாந்த வரலாறு - அநவரத விநாயகம் பிள்ளை, 20ஆம் நூ. சைவசித்தாந்த வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளை (1924) சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் - கா. சுப்பிரமணிய பிள்ளை (1924). சைவச் சிறப்பு - வரத நஞ்சைய பிள்ளை (1933). சைவநூற் சார சங்கிரகம் - சுவாமி நாத பண்டிதர் (1920). சைவநெறித் தெளிவும் சைவர் ஒழுக்கமும் - சுப்பிரமணிய பிள்ளை (1867). சைவ பாடியம் - ஸ்ரீகண்ட சிவாசாரி யரின் பிரம சூத்திர உரை மொழி பெயர்ப்பு - செந்திநாதையர், (1907). சைவப் பிரகாசனம் - சங்கர பண்டிதர், 19ஆம் நூ. சைவப்புராணம் - வேலாயுத பண்டிதர், - ? சைவ மகத்துவதிக்காரம் - இராம சுவாமி சூரிப்பிள்ளை, (1880) சைவ மகத்துவதிக்கார மகத்துவம் - தாமோதரம் பிள்ளை, (1881). ? சைவமகத்துவம் - சி.வை. தாமோதரம் பிள்ளை; 1833 - 1901 சைவ மஞ்சரி - பாண்டித்துரைத் தேவர், மறைவு 1911 சைவ வினா விடை - ஆறுமுக நாவலர், 1823 - 1879 சைவவேதாந்தம் - செந்திநாதையர், (1920). சைவானுட்டான பூசா விதி - இயற்றி யவர் பெயர் முதலியன விளங்க வில்லை.* சைவானுட்டான விதி - வாலை யாநந்த சுவாமிகள், (1929). சைவானுட்டான விதி - ? தருமபுர ஆதீனம், (1941). சைன விரதம் - சைனம்* சொ சொக்கநாதர் இருநாக பந்தம் - கந்தசாமி கவி (1875). சொக்கநாதக் கலித்துறை - ஞான சம்பந்த தேசிகர், 16ஆம் நூ. சொக்கநாதர் சூத்திரம் - சொக்கநாதர் (இரசவாதம், வைத்தியம்) சொக்கநாத வெண்பா - ஞானசம்பந்த தேசிகர், 16ஆம் நூ. சொக்கலிங்கப் பெருமான் மாலை - குமாரவேல் முதலியார், (1875). சொரூப அலங்காரக் கும்மி - (1881). சொரூபசார சாரசங்கிரகத் திரட்டு - சற்குரு சுவாமிகள் (1939). சொரூப சாரம் - சச்சிதானந்த சுவாமி (1889) சொரூப சாரம் - இது வேதாந்த விடய மானது; தடை விடைகளாகச் செய் யப்பட்டுள்ளது. இதை இயற்றியவர் பெயர் முதலியன விளங்கவில்லை.* சொரூபதரிசனம் - இராமபிரம சுவாமி கள் மாணவர் சாமிநாத பிள்ளை, மதுரை 1898.* சொரூபானந்த வுபநிடதம் - * சொல்லகத்தியம் - இப்பொழுது வழக்கிலில்லாத இசை நூல் (தமிழ் லெக்சிக்கன்) சொற்பிறப்பு ஒப்பியலகராதி - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் இதழ் 1- 6 (1938 - 1946.) சோ சோகினம் - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.ப. 461) சோடசப் பிரபந்தம் - ஆதிபூவாறு சுவாமி, (சென்னை 1899). சோணகிரி மாலை - குகை நமச்சி வாயர்,16ஆம் நூ. சோணசைல மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், 17ஆம் நூ. சோதி சாத்திரம் - இது பரகிதம் என்னும் வடமொழி நூலை உள்ளமுடையான் தமிழ்ப்படுத்திய நூல். இதனை H.R. Hoisington ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார், (யாழ்ப்பாணம் 1848.) சோதிட கோட்சார சிந்தாமணி - ஏகாம்பர முதலியார் பதிப்பு, (சென்னை 1904). சோதிட அம்மணியம் ஐயாச்சாமியம் - சிற்றம்பல முதலியார் (1884). சோதிட ஆசிரியன் 4 பாகங்கள் - வெங்கடரமணாச்சார். சோதிடக்கடலகராதி - இரங்கசாமிப் பிள்ளை, (திண்டுக்கல் 1900). சோதிடக் களஞ்சியம் - (1873). சோதிட கிரக சிந்தாமணி - சந்திர சேகர பண்டிதர், (1883) சோதிட கிரக சிந்தாமணி அல்லது வீமேசுர உள்ள முடையான் - மார்க்கலிங்க சோதிடர், (பதித்தது). சோதிட சிகாமணி - 1883. சோதிடச் சுருக்கம் - சின்னத்தம்பி, 1830-1878 சோதிடச் செய்யுள் - * சோதிட நூல் - * சோதிட பிந்து - * சோதிடப் பாடல் - * சோதிடம் -* சோதிட ரத்நமாலை - * சோதிட வாக்கியம் - * சோதிட விஷயம் - * சோதிடப் பத்து - * சோதிட விளக்க சிந்தாமணி - சிறுமணவூர் முனிசாமி முதலியார், 20ஆம் நூ. சோபனப் பாட்டு - சேசாத்திரி ஐயங் கார், (1870). சோபன மாலை - அம்மணி அம்மாள் (1886) சோமகேசரி நாடகம் - மாப்பாண முதலியார், 1827 சோமசுந்தர மாலை - சொக்கலிங்கஞ் செட்டியார், (பிங்கள). சோமவார கற்பம் - மறைஞான சம்பந்தர், 16ஆம் நூ. சோமேசர் முதுமொழி வெண்பா - சிவஞான முனிவர், மறைவு, 1785 சோழக் குறவஞ்சி - கம்பர், 12ஆம் நூ. சோழமண்டல சதகம் - ஆத்மநாத தேசிகர், 1650 - 1728 சௌ சௌந்தரியந்தாதி - * சௌந்தரியந்தாதி - பவழக் கொடி சுவாமிகள், (சித்தார்த்தி). சௌந்தரிய லகரி - இது பிரமாதராயன் என்பவர் மொழி பெயர்த்துச் சொல்ல வீரைக் கவிராச பண்டிதர் பாடியது. 16ஆம் நூ. சௌந்தரிய லகரி உரை - எல்லப்ப பூபதி, 1572 சேளமியசாகரச் சுருக்கம் 300 - அகத்தியர்* சௌம்மிய நாராயணப் பெருமாள் கும்மிப் பாட்டு - * சௌம்மிய சோபனப் பாட்டு சௌம்மிய திருநாள் வாகனக் கவி-* சௌம்மிய பள்ளியுணர்தல்-* சௌம்மிய வண்ணம்-* சௌமியமூர்திக கும்மிப் பாட்டு - * சௌமியமூர்திக தாலாட்டு - * ஞா ஞாயிறு வாழ்த்து - சீனிவாசன், (1938) ஞாயிற்றுக் கிழமை புதுமை விவேகம் - கிறித்தவம்* ஞான கீர்த்தனங்கள் - வேத நாயக சாத்திரி, (சென்னை 1853.) ஞானக் கண்ணாடி - Arndt (1751.) ஞானக் கும்மி - சித்தர் பாடல். ஞானக் கும்மி - பாலானந்த சுவாமிகள், (பார்த்தசாரதி நாயுடு 1901.) ஞானக் கும்மி - முத்துக்குமார கவி ராயர், 19ஆம் நூ. ஞானக் கும்மிப் பாட்டு - இது வேதாந்த விடயமானது. நூலாசிரியர் இன்னா ரென்று விளங்கவில்லை.* ஞானக் குறவஞ்சி - குமரகுருபர தேசிகர், 18ஆம் நூ. ஞானக் குறள் - ஒளவையார், 12ஆம் நூ. ஞானசம்பந்த தேசிகர் சமூக மாலை - வெள்ளியம்பலத் தம்பிரான், (தருமபுர. ஆ. 1914.) ஞான சம்பந்தர் நான்மணிமாலை - சுப்பராய பிள்ளை, (சர்வசித்து.) ஞானசரநூல் - சித்தர்கள். ஞானசரிதை - ? தருமபுர ஆதீனம், (1934) ஞானசவுந்தரியம்மாள் நாடகம் - சேவியர் குரூஸ் (இராமநாதபுரம் 1889). ஞான சவுந்தரி அம்மானை - ? (யாழ்ப்பாணம் 1888.) ஞானசாகரம் (மாத இதழ்) - சுவாமி வேதாசலம் (சென்னை 1902.) ஞானசாகர வெண்பா - சுவாமி வேதாசலமவர்கள் உரையோடு அச்சிட்டது, (1898.) ஞானசாரம் - அருளாளப் பெருமாள்.* ஞான சாரம் - இது சீகாழிக் கண் ணுடைய வள்ளலாரால் இயற்றப் பட்டது. 117 பாடல்கள் உடையது.* ஞானசார வியாக்கியானம் - வைணவம்.* ஞானச் சிங்கி - ஞானம்* ஞானச் சோபனம் - இது வேதாந்த விடயமானது. மாதைப் பெருமாளை யரின் குமாரரான திருவேங்கட நாதையரால் இயற்றப்பட்டது.* ஞான தீட்சைச் சுருக்கம் - அகத் தியர், இரசவாதம்.* ஞான தீப சங்காரம் - கபிப் முகமத் இபின் நைனா முகமத், (கொழும்பு 1893.) ஞானதீபம் - மாத இதழ் -கண்டி (கொழும்பு 1892) ஞானதீபிகை - நைட்டும், வின்சுலோ வும் (Knight & Winslow). (யாழ்ப் பாணம் 1894) ஞானத்தச்சன் நாடகம் - வேதநாயக சாத்திரி, (கிறித்துவ நூல்) யாழ்ப் பாணம், (1897) ஞான நன்மை பஞ்சாக்கரம் - இது பஞ்சாக்கரத்தின் பெருமையைக் கூறும் செய்யுள் நூல்.* ஞானபூஷணி - நடராசையர், (சென்னை 1896). ஞான பூசை - மச்சுச் செட்டியார், 14ஆம் நூ. ஞானபூசை - சைவம்.* ஞானபூசைத் திருவிருத்தம் - மச்சுச் செட்டியார், 14ஆம் நூ. ஞான போசன விளக்கம் - Rhenius (சென்னை 1825) ஞானப் பாட்டுகளின் இராகப் புத்தகம் - (தரங்கம்பாடி 1878). ஞானப் பள்ளு - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. ஞானப் பாடல்கள் - வேதாந்தம்.* ஞானப் பாட்டுக்கள் - (மானிப்பாய் 1854). ஞானப்பாட்டு மாலை - (Tamil hymns from German) (தரங்கம்பாடி 1871.) ஞானப்பிரகாச தீபிகை - ? (சர்வதாரி) ஞானப் பிரகாசர் தோத்திரம் - ?* ஞானப் பிரதீபிகை என்னும் ஆருட சாத்திரம் (யமினி வடமொழியில் செய்த ஆருட சாத்திரத்தின் மொழி பெயர்ப்பு) - சொர்ணசாத்திரி (சென்னை 1899). ஞானப் புலம்பல் - இது வேதாந்தவிட யமானது. 28 பாடல்களாளானது நூலாசிரியர் யார் என விளங்க வில்லை.* ஞானப்பெண் கும்மி - காலி கமித் (காலி 1892). ஞானமணி விளக்கு - ஆதிமூல முதலியார். ஞான முயற்சி - Bertoldi (புதுவை 1843.) ஞானம்நூறு - சட்டைமுனி - ? ஞான ரத்தினாகரம் - முகமத் மீரான் மஸ்தான் இபின் லூக்மான் (சென்னை 1896). ஞான ரத்தினாவளி - செந்திநாதையர், (1888). ஞான ராமாயணக் கப்பல் - சுப்ப லட்சுமியம்மாள் பதித்தது. (1906.) ஞானவம்மானை - சைவம்* ஞானவாசிட்ட உரை - ?* ஞான வாசிட்டச் சுருக்கம் உரை யுடன் - வேதாந்தம்.* ஞான வாசிட்டத் திரட்டு - நமச் சிவாய ஐயர்.* ஞான வாசிட்டம் - ஆளவந்தார், 18ஆம் நூ. ஞான விளக்கம் - இது வள்ளலார் சாத்திரம் இருபதுள் ஒன்று; பாயிரம் உட்பட 101 பாடல்களுடையது.* ஞான விநோதன் கலம்பகம் - தத்துவராயர், 16ஆம் நூ. ஞானவுணர்த்தல் - வீரமா முனிவர் (புதுவை 1842.) ஞானவுபதேச விஸ்தரிப்பு - (தரங்கம்பாடி 1880.) ஞானவுபதேச வசனம் - ?* ஞானவுலா - இது சொரூபானந்தர் விடயமாகத் தத்துவராயர் இயற் றிய நூல்களிலொன்று, 16ஆம் நூ. ஞானவுலா - இதன் இறுதியில் சங்கரா சாரி தமிழாலுரைத்த வுலா என் றிருப்பதனால் சங்கராச்சாரியா ரென்னும் பெயருடைய ஒருவரால் இது இயற்றப்பட்டதெனத் தோன்று கிறது. தத்துவ தேசிக நாயனாரியற் றிய ஞானவுலா வினும் வேறானது* ஞான வெட்டியான் -இது திருவள்ளு வர் பெயரால் வழங்குகின்றது. இதனை எவரோ கி.பி. 10ஆம் நூற் றாண்டுக்குப் பின் செய்தார். 18ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டதாக வும் கூறுவர். ஞான வெட்டியான் நவரத்தின சிந்தாமணி - * ஞானவெண்பா - ?* ஞான வேத்தம் - இராமயோகியின் புதல்வரும் இராசயோகியின் மாணவரும். ஞானாதிக்கராயர் காப்பியம் - சாமிநாதபிள்ளை, 18ஆம் நூ. ஞானாபரணப் பெட்டி - Bogatzky, (தரங்கம்பாடி 1876.) ஞானாமிர்தம் - Liturgies (புதுவை 1858.) ஞானாமிர்தம் - வாகீசர் 13ஆம் நூ. ஞானாமிர்தக் கட்டளை - ? (சைவ சித்தாந்த கழகம் 1923.) ஞானானந்த புராணம் - தொம்பிலிப்பு, 19ஆம் நூ. ஞானானந்தன் அடிமாலை - இசைச் செல்வர் இலக்குமணபிள்ளை. ஞானோப தேசம் - இது 30 பாடல் களுடைய நூல்.* த தகடூர்யாத்திரை - பொன்முடியார் அரிசில் கிழார் என்னும் இரு வரும், கி.மு. 40 தகராலய இரகசியம் - குமரகுருதாச சுவாமிகள் பாம்பன், 20ஆம் நூ. தகைத்தீயத் தீவகத்தார் சரித்திரம் (Conversion of the Taheitans) - மிரன் உவின்சுலோ, (யாழ்ப்பாணம், 1843). தக்கண கைலாச புராணம் - பண்டித ராசர், 18ஆம் நூ. தக்கணத்துப் பூர்வ கதைகள் - கிருஷ்ணமாச்சாரியர் பதித்தது; சென்னை. (1880). இது ஆங்கிலத் தில் (Mary Frere) செய்த நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு. தக்கணாமூர்த்தி கலைஞானம் 1200 - அகத்தியர், யோகம். தக்கணாமூர்த்தி சக்கரம் முதலியன - தக்கணாமூர்த்தி மந்திரம். தக்கணாமூர்த்தி சாயதர்சனம் - மந்திரம், ஞானம் தக்கணாமூர்த்தி சவுமியசாகரம் - மந்திரம், யோகம் தக்கணாமூர்த்தி சாலம் 6 காண்டம் - யோகம் வைத்தியம், சாலம். தக்கணாமூர்த்தி ஞானவடுக்கு நிலை - வைத்தியம் சாலம் தக்கணாமூர்த்தி தீட்சை - வைத்தியம், யோகம், இரசவாதம். தக்கணாமூர்த்தி துதி - ? தக்கணாமூர்த்தி தேசிகர் தசகாரியம் - வேதாந்தம் தக்கணாமூர்த்தி பரிபாடை 500 - இரசவாதம். தக்கணாமூர்த்தி மெய்ச்சுருக்கம் 50 - வேதாந்தம். தக்கணாமூர்த்தி வகார சவுமிய சாகரம் 500 - சாலம், இரசவாதம், வைத்தியம். தக்கணாமூர்த்தி வழலை முப்பது - அகத்தியர், இரசவாதம். தக்கணாமூர்த்தி வாக்கியம் 16. - தக்கயாகப் பரணி - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. தக்கை இராமாயணம் - எம்பெரு மான் பத்தர்பாடி, 307 பாடல் அடங் கிய இந்நூல் மோரூர் நல்லதம்பி என்பவரால் பாடுவிக்கப்பட்டது. தசகாரிய அகவல் - ஞானசம்பந்த தேசிகர், 16ஆம் நூ. தசகாரிய அட்டவணை - ? தசகாரிய அனுபூதி விளக்கம் - இது சைவ சித்தாந்தத்தைச் சேர்ந்தது. 13பாடல் களாலாகியது. நூலின் தலைப்பில் தட்சிணா மூர்த்தியை யர் தசகாரிய மெனவும் இறுதியில் தசகாரிய விளக்கம் முற்றுமென வும் குறிக்கப் பட்டிருக்கிறது.* தசகாரியக் கருத்து - இது தசகாரியம் என்னும் நூலின் 55 செய்யுட்களுக் கும் கருத்துரையாக அமைந்துள் ளது. இக்கருத்துரையை எழுதியவர் இன்னாரெனத் தெரியவில்லை.* தசகாரிய மகா வாக்கியம் - இந்நூல் வேதாந்த விடயமானது; மகா வாக் கியங்கள் நான்கினுடைய உற்பத்தி, பேதம், மகிமை, பிரகாசம், அஞ் ஞானக் குடும்ப நீக்கம், அளவு, நிண்ணயம், பெற்றோர் கதை, சாதகர் தியானம், உரையாகிய பத் தையும் நன்கு விளக்குவது. பாயிர முட்படச் செய்யுட்களின் தொகை 51. நூலாசிரியர் விநாயக பாரதி யென்பவரது மாணாக்கராகிய தெய்வநாயக சுவாமிகள்.* இதற்குச் சிதம்பரத்திலிருந்த அருணாசல தேசிகரென்பவரது சீடரொருவர் உரை இயற்றினாரெனத் தெரிகிறது. தசகாரியம் - இது சைவ சித்தாந்த சாத்திரங்களுள் பண்டார சாத்தி ரங்கள் பதினான்கனுள் ஒன்று; திருவாவடு துறை அம்பலவாண தேசிகர் செய்தது; தசகாரியங் களாகிய தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம் ஆன்மசுத்தி சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பவற்றின் தன்மை யை விரிவாகக் கூறுவது. இதில் கடவுள் வணக்க முட்பட 55 பாடல்களுண்டு. தசகாரியம்-சுவாமிநாத தேசிகர், 1655- தசகாரியம் - திருவண்ணாமலையார், சைவம்.* தசக்கிரமக் கட்டளை - சைவம்.* தசக்கிரமக் கட்டளை - மு. அருணா சலம். (1904) தச தர்சநீ விபேதம் - வானநூல், வீர வீரராகவர்.* தசாபுத்தி பல தீபிகை - சோதிடம்.* தசாபுத்தி பலன் - சோதிடம்.* தசாவதார பதிகம் - துதி.* தசோப நிநிஷத் திராவிட பாடியம் - மொழிபெயர்ப்பு சீனிவாச தாதா சாரியர் சுவாமி (சென்னை 1897.) தஞ்சாவூர் நாயக்கராசவம்ச சரித்திரச் சுருக்கம் - குப்புச்சாமி சாத்திரி (தஞ்சாவூர், 1903). தஞ்சைப் பெருவுடையாருலா - சிவக்கொழுந்து தேசிகர், (அட்சய). தஞ்சைப் பெருவுடையார் பேரிசை - (S. பொன்னையாப் பிள்ளை, 1940). தஞ்சைவாணன் கோவை - பொய்யா மொழிப் புலவர், 13ஆம் நூ. தஞ்சைவாணன் கோவை உரை - சொக்கப்ப நாவலர், 18ஆம் நூ. முற். தடாகைப் பிராட்டியார் திருவவதார சரித்திரம் - இரத்தினச் செட்டி, (1889.) தட்சிணாமூர்த்தி இரசமணி 14 -யோகம்.* தட்சிணாமூர்த்தி திருவருட்பா - ? (தருமபுர ஆதினம், 1945). தட்சிணாமூர்த்தி தோத்திரம் - சிவத்தியானந்த மகருஷி, (1942). தட்சிணாமூர்த்தி தோத்திரம் - தாயுமானவர்.* தணிகாசல பஞ்சரத்தினம் - (1842). தணிகாசல புராணம் - கந்தப்பையர் (உ.வே.சா. 1939). தணிகாசல மாலை - சண்முகம் பிள்ளை, (1874). தணிகாசலர் பஞ்சரத்திரம் - இரத்தின முதலியார், (1881). தணிகைமலைக் கண்ணி - சுப்பிர மணிய பண்டிதர், (சுபகிருது.) தணிகைமலை வடிவேலர் ஆசிரிய விருத்தம் - முத்துக் கறுப்பன் செட்டி (1878.) தண்டகக் கலை ஞானம்- தன் வந்திரி வேங்கடாசல முதலியார் பதிப்பு, (சென்னை, 1874). தணிகை நாற்பாவலங்கல் - ஆறுமுகன்.* தணிகைப் புராணம் - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. முதற்பதிப்பு, சி.வை. தாமோதரம் பிள்ளை (1883). தணிகையாற்றுப் படை - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. தம்மாணாக்கர் கந்தப்பையருக்கு உண்டான குன்ம நோய் நீங்க கச்சியப்ப முனிவர் இதனைப் பாடினாரென்பர். தண்டபாணி பதிற்றுப் பத்தந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. தண்டலையார் சதகம் (பழமொழி விளக்கம்) - சாந்தலிங்க கவிராயர், 18ஆம் நூ. முற். தண்டியலங்காரம்-தண்டி, 12ஆம் நூ. தண்ணீரோது மந்திரம் - மந்திரம்.* தத்துவ உடற்கூறு - வேதாந்தம்.* தத்துவக் கட்டளை - இந்நூல் வேதாந்த விஷயமானது; வசன நடையில மைந்தது. முப்பத்தாறு தத்துவங்களின் தன்மைகள் இன்னின்னவெனத் தெளிவாகத் கூறுவது; நூலாசிரியர் சேஷாத்திரி சிவனார். இது Rev. Hentry R. Hoisington என்பவரால் ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டது. (Boston 1851). தத்துவக் கண்ணி - சகபிள்ளை, (1889). தத்துவக் குறவஞ்சி - முருகேச பண்டிதர் (1875). தத்துவக் கூறு - இந்நூல் தொண்ணூற் றாறு தத்துவங்கள் இன்னின்ன வென்று கூறுவது. அத்வைத மதத்தைச் சார்ந்ததெனத் தோற்று கிறது. வசன நடையிலானது. இதற்கு நந்திதேவர் கட்டளை யென்றும் பெயருண்டு. அகத்தியர் முதலிய இருடிகள் பன்னிருவர் கபில முனிவருக்கு உபதேசித்ததாக இந் நூலின் இறுதி வாக்கியம் கூறுகின் றது.* தத்துவ சந்தேசம் - வேதாந்த தேசிகா. வைணவம்.* தத்துவ சேகரம் - பிள்ளை லோகா சாரியர்.* தத்துவ ஞானபோதம் - இந்நூல் வேதாந்த விஷயமானது. தத்துவங் -கள் இன்னவென்றும் அவற்றை யுணர்ந்து முத்தி பெறலாமென்றுங் கூறுவது. குருவையடுத்து சீடன் வினவ; குரு மொழிந்ததாக வமைக் கப்பட்டுள்ளது. இயற்றியவர் இன்னாரெனத் தெரியவில்லை. காப்பு உட்பட எண்பத்து மூன்று பாடல்களை யுடையது.* தத்துவ தரிசனம் - சிவாக்கிரயோகி, 16ஆம் நூ. தத்துவ தரிசனி - நடராச ஐயர்,மருதூர் (சென்னை 1899). தத்துவ தர்ப்பணம் - ? வைணவம். தத்துவ தீப சங்கிரகம் - மணவாள முனிகள்.* தத்துவ தீபப் பிரகாசம் -அழகிய மணவாள சீயர் வைணவம்.* தத்துவ தீபப் பிரகாசிகை-வைணவம்-* தத்துவத்திரயம் - பிள்ளை லோகா சாரியர்.* தத்துவத்திரய சங்கிரகம் - பெரிய வாச்சான் பிள்ளை, வைணவம்.* தத்துவத்திரய சுளகம் - வேதாந்த தேசிகர்.* தத்துவத்திரயப் பிரமாணத் திரட் டாந்தம் - வேதாந்தம்.* தத்துவத்திரய வியாக்கியான அரும் பத விளக்கம் - வைணவம். தத்துவத்திரய வியாக்கியானம் - மணவாள மாமுனிகள், வைண வம்.* தத்துவ நவநீதம் - வேதாந்த தேசிகர், வைணவம்.* தத்துவ நிசானு பூதிசாரம் - தத்துவ லிங்க தேவர், (1870). தத்துவ நிசானு போதம் - இந்நூல் அத்வைத வேதாந்த விஷயமானது. பல சமய சாத்திரங்களின் உதவி யால் பற்பல மதங்களின் கொள்கை களை எடுத்துக் கூறிப் பின்பு அவற்றைப் பூர்வபட்சஞ் செய்து வேதாந்த மதத்திற்கு அங்கமாக உள்ளனவென்று கூறுவது. இது பூர்வகாண்டம் உத்தரகாண்டம் என்ற இருபெரும் பிரிவினையுடை யதாய் 373 அத்தியாயங்களாலாகி யது. அத்தியாயங்களின் பெயர் களும் சமயங்களின் உட்பிரிவு களும் இப்பிரதியின் முதல் நான்கு ஏடுகளிலும், நூலின் இடையிலும் குறிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் தத்துவலிங்க தேவரின் சீடரென்று தெரிகிறது.* தத்துவ நிசானுபோக சாரம் - இந்நூல் அத்வைத மதத்தைச் சார்ந்தெனத் தோற்றுகிறது. இது ஊனுயிர் வேறு செய்தல் பஞ்சபூதம்வேறு செய்தல், பொறியறிவுணர்தல், இந்திரியம் வேறு செய்தல் முதலிய பல பிரி வினையுடையது. ஞானாசிரியர் சீடருக்கு ஆன்ம ஞானமுணர்த் தியதாக வமைந்துள்ளது. குரு சீட சம்வாத ரூபமானது. வசன நடை யில் இடையிடையே சிற்சில பாடல் கள் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தத்துவ நிரூபணம் -?* தத்துவ நூல் - சைவம்.* தத்துவ பதவி - வேதாந்த தேசிகர், வைணவம்.* தத்துவப் பிரகாசம் - தத்துவப் பிரகாசர், 16ஆம் நூ. தத்துவ பூஷணம் -யமுனாசாரியர், வைணவம். தத்துவமசி வாக்கியம் - இது வேதாந்த சாத்திரங்களுள் ஒன்று. தூல சரீரம், சூக்கும சரீரம், காரண சரீரம், மகா காரண சரீரம், ஆத்மா, அநாத்மா முதலியவற்றையும் தத்துவ மசி மகா வாக்கியத்தின் பொருள் முதலியவற்றையும் கூறு வது. இவற்றை விளக்குவதற்கு அங்கமாக இந்நூலை இயற்றியவர் பெயர் முதலியன விளங்க வில்லை.* தத்துவ மாதருகை - வேதாந்த தேசிகர், வைணவம்.* தத்துவ ரத்தினம் - இரத்தினச் செட்டி, (1889). தத்துவ ரத்நாவலி - வேதாந்த தேசிகர், வைணவம்.* தத்துவ ரத்நாவலீப் பிரதி பாத்திய சங்கிரகம் - வேதாந்த தேசிகர்* வைணவம். தத்துவமசி மகா வாக்கியம் - வேதாந்தம்.* தத்துவ வாதம் - இரத்தினச்செட்டி (1889). தத்துவ விளக்கம் - சீனிவாசாச்சாரியர், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம், 1902). தத்துவாமிர்தக் கட்டளை -வேதாந்தம்.* தத்துவா மிர்தம் - தத்துவராயர், 16ஆம் நூ. தத்துவார்த்தக் கட்டளை - இது அத்வைத மதத்தைச் சார்ந்தது. தத்துவமசி மகாவாக்கியத்தின் பொருளை மாணாக்கனுக்கு ஆசி ரியர் போதித்து அவனை அவ் வழியில் நிறுத்தி இன்பமடையச் செய்ததாக இந்நூலமைந்துள்ளது. சில பாடல்களுடன் வசன நடை விரவியுள்ளது. இயற்றினார் யாரெனத் தெரியவில்லை. தத்துவானுபோக சாரம் - தத்துவ லிங்க சுவாமி (1879). தத்துவோபதேசாமிர்தம் - வேங்கடவன்.* தத்தை விடுதூது - சரவணமுத்துப் பிள்ளை, திரிகோணமலை, (சென்னை 1892). தந்திர வாக்கியம் - இது நச்சினார்க் கினியர் மேற்கோள் எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. காலம் - ? தமயந்தி ஒரு புதியநாடகம் - பிரணா தார்த்திகர சிவனார் (சென்னை, 1902.) தமயந்தி நாடகம் - கிருட்டிணசாமிப் பிள்ளை, (1877). தமிழ் ஆராய்ச்சி - ந.சி. கந்தையா பிள்ளை (1948). தமிழகம் - ந.சி. கந்தையாபிள்ளை, (1935). தமிழகராதி - Levicogrupty* தமிழரும் ஆந்திரரும் - மு. ராகவ ஐயங்கார், (1924). தமிழர் இசை கருவிகள்- பி. கோதண்ட ராமன் (1947). தமிழர் சமயம் - கா. சுப்பிரமணிய பிள்ளை, (1940). தமிழர் சரித்திரம் - ந.சி. கந்தையா பிள்ளை, (1939). தமிழர் சிறப்பு -அ. சிவப்பிரகாசர், (1918). தமிழர் தொன்மை அகவல் - விருதை சிவஞானயோகிகள், 20ஆம் நூ. தமிழர் நாகரிகம் - மறைமலை அடிகள், மறைவு 1950 தமிழர் வீரம் - செகவீர பாண்டியன், (1945). தமிழலங்காரம் தமிழ்த்துதிப் பதிகம் - தண்டபாணி சுவாமிகள், (1915). தமிழறி மடந்தை கதை (தமிழறியும் பெருமாள் கதை) - தமிழிசை முழக்கம் - சுத்தானந்த பாரதியார், (1944). தமிழிலக்கிய வரலாறு - பூரண லிங்கப் பிள்ளை, 1866 - 1946. தமிழும் தமிழரும் - வீரபாகுபிள்ளை எம்.எ. (1944). தமிழைப் பற்றிய இரண்டு கட்டுரை கள் - T. இராமலிங்கம் பிள்ளை (1926) தமிழ் - செல்வக் கேசவராய முதலி யார், மறைவு 1921 (1904) தமிழ் அமைப்புற்ற வரலாறு - நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர் (1927). தமிழ் அலகைத் தொடர் - பா.வே. மாணிக்க நாயகர், 1871 - 1931 தமிழ் ஆங்கில மொழிக் கலைச் சொற்கள் - (A Vocabulary in English and Tamil of Technical terms as used in logic and metaphysics) - யாழ்ப்பாணப் புத்தக சங்கம், (1860.) தமிழ் இந்தியா - ந.சி. கந்தையா பிள்ளை, (1945). தமிழ் இந்தியா - பூரணலிங்கம் பிள்ளை, 1866 - 1946 தமிழ் இலக்கண சிந்தாமணி - ஞானமணி நாடார், (சென்னை, 1893). தமிழ் இலக்கணச் சுருக்கம் - சீனி வாச முதலியார், இராயப்பேட்டை. (சென்னை 1893). தமிழ் இலக்கண தீபம் - ? தமிழ் இலக்கண தீபிiக - அப்பா பிள்ளை, (மட்டக் களப்பு, 1891.) தமிழ் இலக்கண நூற் சுருக்க வினா விடை - ஜி.யு. போப்பையர் (2ஆம் பதிப்பு 1846). தமிழ் இலக்கியம் சங்ககாலம் - ஞா.சா. துரைசாமிப் பிள்ளை (1931). தமிழ் இலக்கியம் தற்காலம் - ஏ.வி. சுப்பிரமணிய ஐயர், (1933). தமிழ் இலக்கிய வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளை, (1930). தமிழ் கவி சரிதம் (தமிழ் இலக்கியம்) - சேஷகிரி சாத்திரி, (சென்னை 1904) தமிழ்க் காப்பியங்கள் - இலக்கணமும் இலக்கியமும். கி.வா. சகந்நாதன், (1940). தமிழ்ச் சுருக்கெழுத்து - அரிகிருட் டிண படையாச்சி, (கும்பகோணம், 1898.) தமிழ்ச் செய்யுட் கலம்பகம் - ஜி.யு.போப்பையர், (இரண்டாம் பதிப்பு, சென்னை 1859). தமிழ்ச் செல்வம் நீதிநூற்றொகை - ஆறுமுக நயினார் தொகுப்பு, (1901). தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி - சுவாமி ஞானபிரகாசர், நல்லூர் (1932). தமிழ்த் தோற்றத் தேற்றம் - T.S. கணேச பிள்ளை, (1937). தமிழ்நாட்டு நவமணிகள் - இரா.பி. சேதுப்பிள்ளை, (1926). தமிழ்நாட்டு மூவேந்தர் - மு.க. செயராம் நாயுடு, (1929). தமிழ் நாவலர் சரித்திரம் - * தமிழ் நாவலர் சரிதை - இது 18ஆம் நூற்றாண்டளவில் தொகுத்தெழுதப் பட்ட புலவர் வரலாறு. இதனைத் தொகுத்தெழுதியவர் யாரெனத் தெரியவில்லை. இதனைத் தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் காலக்குறிப்பு எழுதிப் பதித்துள்ளார். தமிழ்நூல் விளக்கு - (1ஆம் பாகம்) P.R. மீனாட்சிசுந்தர முதலியார், (1939). தமிழ் நெறி விளக்கம் - ? உ.வே.சா. (1937). தமிழ்ப் பாஷை - சரவணமுத்துப் பிள்ளை, திரிகோணமலை, (சென்னை 1892). தமிழ்ப் பாஷை வைபவம் - ஆஸ்பரி (Aasbury) (யாழ்ப்பாணம், 1886). தமிழ்ப் புலவர் (Tamil Plutarch) - சைமன் காசிச்செட்டி, (யாழ்ப் பாணம், 1859). தமிழ்ப் புலவர் சரிதம் - அ. குமார சுவாமிப் புலவர், 1850 - 1922 தமிழ்ப் புலவர் வரலாறு 17ஆம் நூற் றாண்டு எஸ். சோமசுந்தர தேசிகர், (1939) தமிழ்ப் புலவர் வரலாறு 16ஆம் நூற் றண்டு - எஸ். சோமசுந்தர தேசிகர், (1936) தமிழ்ப் பெயரகராதி - P. இராமநாதர், (1909). தமிழ்ப் பெருமக்கள் வரலாறு - அநவரத விநாயகம் பிள்ளை, 1939 தமிழ்ப் பேரகராதி - கு.கதிரை வேற் பிள்ளை மதுரைத் தமிழ்ச் சங்க பதிப்பு (1899) தமிழ்ப் பேரகராதி - Jaffna book Society வெளியீடு யாழ்ப்பாணம், (1842). இது J. Knight என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு அவரின் மரணத்துக்குபின் L. Spauling என்பவரால் முற்றுவிக்கப்பட்டது. தமிழ்மறை விளக்கம் -பா. வே. மாணிக்க நாயக்கர், 1931 தமிழ்மொழி நூல் - P.S. சுப்பிரமணிய சாத்திரி, (1936) தமிழ் மொழியின் வரலாறு - வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், 1871 - 1903 தமிழ்மொழியைக் குறித்த பழைய குறிப்புகள் - எஸ். சோமசுந்தர தேசிகர், (1936). தமிழ்மொழி வளர்ச்சி - ரா. வாசுதேவ சர்மா, (1928). தமிழ் லெக்சிக்கன் - சென்னைப் பல் கலைக் கழகம் 1-6, (1924 - 1939). தமிழ் வரலாறு - சீனிவாச பிள்ளை 20ஆம். நூ. தமிழ் வரலாறு - ரா. இராகவ ஐயங்கார், 1947. தமிழ்வரலாறு - மட்டக்களப்பு வித்து வான் பூபாலபிள்ளை, 20ஆம். நூ. தமிழ்விடுதூது - அமிர்தம் பிள்ளை, 1845-99. இது அச்சில் வந்ததாகத் தெரியவில்லை. மாகறல் கார்த்தி கேய முதலியார் இதிலிருந்து ஒரு செய்யுளைத் தமது மொழி நூலில் எடுத்தாண்டுள்ளார். தமிழ் வித்தியார்த்தி விளக்கம் - செய் யப்ப முதலியார், (சென்னை 1894). தமிழ் வியாசங்கள் - செல்வக்கேசவ ராய முதலியார், (சென்னை 1907). தமிழ் விளக்கம் - ந.சி. கந்தையா பிள்ளை, (1948). தமிழ் விளக்கம் - சுப்பராய முதலி யார், திருவேற்காடு (சென்னை 1811). தமிழ் வெறி - சத்திதாசன் சுப்பிரமணி யன், (1939). தம்பன சங்கார முதலியன - மந்திர சாத்திரம்* தம்பிமார் சாதி வரலாறு - * தம்பிரான்படி - தம்பு சிந்தாமணி - வெங்கட சுப்புப் பிள்ளை, (சென்னை 1905). இது தம்புச் செட்டியார், C.I.E. மீது பாடப் பட்ட நூல். தரங்கம்பாடி திருச்சபையில் வழங்கும் ஞான முறைமைகள் விளக்கம் - லி7துகெரிஸ் (Liturgies) (தரங் கம்பாடி 1781). தரங்கை மிசியோன் சரித்திரம் - சாமு வேல் ஐயர், (தரங்கம்பாடி, 1906). தரிசனப் பத்து (முருகன் துதி) - ? * தருக்க பரிபாடை - சிவப்பிரகாச சுவாமிகள் 17ஆம். நூ. தர்க்கபரி பாடை பார்க்க. தருக்க கௌமுதியும், நியாய பதார்த் தம் பதினாறும் - குப்புச்சாமி இராசு, (சௌமிய). தருக்க சங்கிரகமும் அன்னப் பட்டீய மும்-சிவஞான முனிவர், மறைவு 1785 தருக்க சாத்திரச் சுருக்கம் - சுவாமி ஞானப்பிரகாசர், நல்லூர், யாழ்ப் பாணம், (1933). தருக்க விளக்கம் - சோமசுந்தரம் பிள்ளை, (1907). தருமநூல் - கந்தசாமிப் புலவர், மதுரை (சென்னை 1826). தருமபுத்திர நாடகம் - சாமிநாத முதலியார், (யாழ்ப்பாணம் 1890). தருமேசன் தோத்திரம் - * தருமை சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாசாரியர் ஆற்றுப் படை - இராம. கோவிந்தசாமிப் பிள்ளை (1941). தருமை சொக்கநாத மாலை - முத்துசாமிப் பிள்ளை - (1893). தருமை ஞானசம்பந்த தேசிக மாலை - சண்முக சுவாமிகள், (1893). தருமைச் சந்தான தேசிகர் போற்றிக் கலிவெண்பா - சண்முக சுவாமி கள், (மன்மத). தருமை சுப்பிரமணிய தேசிகர் மீது பதி கம் - பி. சிவசாமி சேர்வை (1935). தர்க்கக் கும்மி - அந்தோணி நாதர் (கிறித்துவநூல்), (புதுவை 1865). இந்நூல் பதிமத் தேசு மறுத்தலாகிய தர்க்கக் கும்மி எனவும் வழங்கும். தர்க்க நாடகம் - நாடகம். * தர்க்க பரிபாடை - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம். நூ. தர்ம சாத்திரச் சுருக்கம் - ஆர். முத்து சாமி ஐயர், (1923). தர்ம பரீட்சை - விசய கம்சமுனிவர், சைனம் * தர்ம விமர்சனம் - இராமானந்த சரசுவதி சுவாமிகள், (1931) தர்மாம்பாள்குறம் - ? தவப்பிரகாசர் துதி - * தவுக்கிடு மாலை - முகமத் உசேன் புலவர், (1874). தவுபாமாலையும் மக்கள் வாசகமும் - (1888). தளசிங்க மாலை - அழகிய சிற்றம் பலக் கவிராயர், 1647 தறுதலைச் சிந்து - ? (1878). தற்காட்சி முப்பத்தாறுக்கு வகை - வேதாந்தம்* தற்கால வைத்திய போதினி - வடி வேலு முதலியார், (சென்னை 1901). தற்செயலழிந்த தகைமை - வேதாந்தம்* தனசிரீயின் கதை - * தனதேவன் கதை - * தனவாகடம் - வைத்தியம்* தனிசிரமம் - பிள்ளை லோகாசார்யர், வைணவம்* தனிச்சுலோகம் - பெரியவாச்சான் பிள்ளை, வைணவம். தனிச்சுலோக வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை, வைணவம். தனிச் செய்யுட் சிந்தாமணி - கந்த சாமிக் கவிராயர், 19ஆம். நூ. பிற். (1908). தனி தவயம் - * தனிப்பாக் கோவை - முத்துச்சாமி ஐயர் (1919). தனிப் பாசுரத் தொகை - வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார்,1871 - 1903 தனிப் பாடல் - தனிப் பாடல்கள் - துதி தனிப்பாடற்றிரட்டு - காவியம் தனிப்பாடற்றிரட்டு 2ஆம் பாகம் - இராமசாமி நாயுடு (1907). தனிப்பாடற்றிரட்டு - கன்னியப்ப முதலியார், (1890). தனிப்பாடற்றிரட்டு - இராமசாமி நாயுடு காஞ்சிபுரம் (சென்னை 1902). தனிப்பாமஞ்சரி - அநந்த கிருட்டிண ஐயங்கார். தனிப் பிரணவம் - பிள்ளை லோகா சாரியர், வைணவம். தனியனியற்றிய ஆசிரியர் பெயர் - வைணவம்.* தனியூர் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம். நூ. தன்வந்திரி கருக்கிடை 200 - தன்வந்திரி. தன்வந்திரி கருக்கிடை நிகண்டு 100 - தன்வந்திரி. தன்வந்திரி கலைஞானம் 500 - தன்வந்திரி, வைத்தியம். தன்வந்திரி சிமிட்டு இரத்தினச் சுருக்கம் 360 - தன்வந்திரி. தன்வந்திரி நாடிசாத்திரம் - தன்வந்திரி. தன்வந்திரி நாயனார் கலைஞானம் 500 - தன்வந்திரி. தன்வந்திரி நிகண்டு - தன்வந்திரி, - ? தன்வந்திரி பச்சை வெட்டு -தன்வந்திரி, - ? தன்வந்திரி வாலை சாத்திரம் - தன்வந்திரி. தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை - நடேச சாத்திரி (சென்னை 1893). தா தாசத்துமாலை - சுல்தான் சகிப் (1874). தாசில்தார் நாடகம் - காசி விசுவநாத முதலியார், 19ஆம் நூ. (1868) தாசில்தார் விலாசம் - காசி விசுவநாத முதலியார், 19ஆம் நூ. பிற். தாண்டவமாலை - இது சோதிடநூல் களிலொன்று. நெல்லிக் குப்பத்தில் ஆண்டியப்பன் தாண்டவனென் பாவன் கேட்டுக் கொண்டபடி அப் பாவையர் இயற்றியது, 19ஆம் நூற். தாமரை நாண் மலர் (பல பாடற் றிரட்டு) - பலராமையர் கடலூர் (சென்னை 1901) தாம வெண்ணெய்க்காரன் கதை - * தாம்பிரபர்ணி மகாத்மியம் - * தாம்பிரபர்ணித் தல புராணம் - சொக்கலிங்கம் பிள்ளை (1886) தாயுமான சுவாமி பாடல் உரை - பூவை கலியாண சுந்தர முதலியார், 1854 - 1918 தாயுமானவர் பாடல் - தாயுமானவர் 1706 - 1744 தாய் மகளேசல் - அகுமது லெவ்வை அலிம் சாகிபு, 18ஆம் நூ. (1881). தாரணயோக மார்க்கம் - யோகம்.* தாராசாங்க நாடகம் - மல்லையர் (சென்னை 1905) தாராசுரக்கோயில் சாசனம் - சாசனம்* தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் சாசனம் - சாசனம்* தாராட்டு - பீட்டர் அடோல்ப° (Peter Adolphus) (1874). தாராட்டு - உலோட்டன் (Lowton) யாழ்ப்பாணம் (1900). தாராபுரத் தலபுராணம் - வேலாயுத பண்டிதர், - ? தாருகாபுரத் தல புராணம் - அ. பிச்சையா நாவலர் (1935). தால புராணம் - காசிநாதப் புலவர், 18ஆம் நூ. தாள சமுத்திரம் - பரத சூடாமணி, இதில் 57 வெண்பாக்களுள்ளன. தி திகிரிவனப்பத்து - தோத்திரம். திக்கற்ற இரு குழந்தைகள் - நடேச சாத்திரி, (சென்னை 1902.) திக்கு விசயம் - கடிகை முத்துப் புலவர், 1665 திசையறிமாலை - காவியம். திணைநூல் - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.ப. 458) திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார், சங்ககாலம். திணைமொழியைம்பது - கண்ணஞ்சேந்தனார், கி.மு. 100 தித்தாறு மாலை - சாகுபீர் முகமது (1874) திம்மசாமி பாட்டு - (1880)* தியாகராச சுவாமி இருபாவிருபது - ப. சோமசுந்தர தேசிகர், (1936). தியாகராச சுவாமி சரித்திரம் - இராம சுவாமி பாகவதசுவாமி, திருநெய் தானம். (கும்பகோணம் 1906) தியாகர் தங்கசிந்து - (1868)* தியாகராசர் துதி - தோத்திரம். தியாகி இராமாயணம் சுந்தர காண்டம் - வடுவூர் இராம சடகோபன் (1941). தியாகேசர் திருவிளையாட்டகவல் - தோத்திரம். தியானானுபூதி - தண்டபாணி சுவாமி கள், (இராட்சத.) திரயக்கட்டு ரகசியம் - பெரியவாச் சான் பிள்ளை. திராவிட இந்தியா - ந.சி. கந்தையா பிள்ளை, 1949. திராவிட இலக்கிய சித்தாந்த தீபிகை முன்ஷி - (சென்னை 1902) திராவிட சத்த தத்துவம் (வினையியல்) - சேஷகிரிசாத்திரி, (சென்னை 1904) திராவிடத் தாய் - ஞா. தேவநேயன் (1944.) திராவிட பல நீதிபோதினி - சிவசங் கர படையாச்சி, (சென்னை 1889.) திராவிட பூர்வகாலக் கதைகள் - நடேச சாத்திரி, (சென்னை 1885.) திராவிடப் பிரகாசிகை - சபாபதி நாவலர், 1844 - 1903 (1899.) திராவிட மத்திய காலக் கதைகள் - நடேச சாத்திரி, (சென்னை 1886.) திராவிட மாபாடியம் - சிவஞான முனிவர், மறைவு 1785 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்ட்வேல் ஐயர், 19ஆம் நூ. திரிகடுகம் - நல்லாதனார், 7ஆம் நூ. திரிகாண்டம் - கொங்கணர், - ? திரிசிராப்பள்ளிப் பதிகங்கள் - ஞான சித்த சுவாமிகள். திரிசிரா மலைக்கோவை - சுந்தர நாதன் திரிசிராமாலை மான்மிய சங்கிரகம் - V. சண்முகம் பிள்ளை, (1889)* திரிபதார்த்தம் - அழகிய திருச்சிற்றம் பலத் தம்பிரான், 17ஆம் நூ. திரிபதார்த்த சிந்தனை - ? திரிபதார்த்த ரூபாதி - ஞானசம்பந்த தேசிகர் 16ஆம் நூ. திரிபுரசுந்தரி துதி - * திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் - முத்துக் குமரன். திரிமூர்த்தி மலைப் புராணம் - வேலாயுத பண்டிதர், - ? திரு இருதய அப்போ°தலன் - ஹிப்போலைட் (Hippolyte) (யாழ்ப் பாணம் 1906.) திரு இலஞ்சி முருகன் உலா - மேலா கரம் பண்டாரக் கவியரசர், ( 1935.) திரு ஈங்கொல்லி மலை எழுபது - நக்கீரத்தேவர். திரு எவ்வளூர் மான்மியம் - ? (சென்னை 1895) திரு எவ்வளூர் திரிபந்தாதி-கிருட்டிண மாச்சாரியார் வேலாமூர், (1902). திரு எவ்வுட் கலம்பகம் - வேங்கட கிருட்டிண தாசர், (அட்சய.) திருக் கடகப் புராணம் - கனக சபாபதி ஐயர், (சார்வரி.) திருக்கச்சி நம்பி ஆறுவார்த்தை - * திருக்கச்சி நம்பி பிரபாவம் - * திருக்கச்சி நம்பி வைபவம் - * திருக்கச்சூர் நொண்டி நாடகம் - மதுரகவிராயர்.* திருக்கடவூருலா - சுப்பிரமணிய கவிராசர், (1917) திருக்கடவூர் அபிராமி அம்மன் தோத்திரப்பா மாலை - முத்துச் சிதம்பரச் செட்டியார். (1934). திருக்கடவூர் அபிராமி யந்தாதி - அபிராமியந்தாதி பார்க்க. திருக்கடவூர் சேத்திர புராணம் - ? (1925.) திருக்கடவூர்த்தல வரலாறு - ? (1943.) திருக்கடவூர் பதிகங்கள் - அபிராம பட்டர், (1938.) திருக்கடவூர்ப் புராணம் - பால கிருட்டிண தீட்சிதர் திரட்டியது, (சென்னை 1905.) திருக்கடன் மல்லைப் பதிற்றுப் பத்தந்தாதி - பையனூர் வரதராச பிள்ளை.* 18ஆம் நூ. திருக்கணமங்கைமாலை - முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார், 19ஆம் நூ. திருக்கணமங்கை மாலை - பிள்ளைப் பெருமாளையங்கார். (1887)* திருக்கண்ணங்குடி மகாத்மியம் - S. சீனிவாச ஐயங்கார், (1941.) திருக்கண்ணப்பத்தேவர் திருமறம் - கல்லாட தேவநாயனர், 9ஆம் நூ. திருக்கண்ணப்பத்தேவர் மறம் - நக்கீரதேவர். திருக்கபாலீசர் இரட்டை மணிமாலை - சுப்பிரமணிய முதலி, (1883)* திருக்கருவைக் கலித் துறையந்தாதி - அதிவீரராம பாண்டியன்* திருக்கருவை வெண்பா வந்தாதி - அதிவீரராம பாண்டியன்.* திருக்கரைசைப் புராணம் - (திருக் கரசை இலங்கையில் திரிகோண மலைக்கு அண்மையில் மகாவலி கங்கைக் கரையிலுள்ள ஒரு சிவத் தலம்) இதனை குமாரசாமிப்பிள்ளை எழுதிய உரையோடு அகிலேச பிள்ளை அச்சிட்டுள்ளார், (யாழ்ப் பாணம் 1890.) திருக் கருவைப் பதிற்றுப்பத்தந் தாதி - அதிவீரராம பாண்டியன், இது குட்டித் திருவாசகம் எனவும் படும், 16ஆம் நூ. திருக்கருவை வெண்பா அந்தாதி - அதிவீரராம பாண்டியன், 1564 - 1609. திருக்கலம்பகமும் அருங்கலச் செப்பும் - (1883)* திருக்கலம்பகம் - உதீசித் தேவர், (சுபானு.) 14ஆம் நூ. திருக்கலம்பகம் - நம்பியாண்டார் நம்பி, 10ஆம் நூ. திருக்கலியாண ஏசல் - ? (1886)* திருக்கலைசைமாலை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருக்கழுக்குன்றக் கோவை - சோமசுந்தர கவிராயர், (1943.) திருக்கழுக்குன்றங் கோயில் பூர்வோத்தரம் - * திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா - சபாபதி முதலியார், (உ.வே.சா. 1933) திருக்கழுக்குன்றம் குருக்கள்மார் வரலாறு - சாசனம்.* திருக்கழுக்குன்றத்தல புராணவசனம் - நமசிவாய ராசயோகி, (1938.) திருக்கழுக்குன்றத் துலா - அந்தகக் கவி வீரராகவ முதலியார், 1938. திருக்கழுக்குன்றப் புரணம் - அந்தகக் கவி வீரராகவ முதலியார், 17ஆம் நூ. திருக்கழுக்குன்றப் பேரம்பலப் பண்டாரத்தின் வரலாறு - ?* திருக்கழுக்குன்ற மாலை - அந்தகக் கவி வீரராகவ முதலியார், 17ஆம் நூ. திருக்கழுமல மும்மணிகோவை - பட் டினத்துப் பிள்ளையார் 10ஆம் நூ. திருக்களர்ப் புராணம் - ஆதி அப்பர், களந்தை, (பின்னத்தூர் நாராயண சாமி பதித்தது 1902.) திருக்கற்குடிக்கோயில் வரலாறு - தருமபுர ஆதீனம், (1943.) திருக்களிற்றுப் படியார் - திருவியலூர் உய்யவந்த தேவர், 1178 திருக்கன்ன புராணம் - இராசப்ப முதலியார், (1880)* திருக்காவலூர் கலம்பகம் - வீரமா முனிவர், 1680 - 1746 திருக்காளத்தி நாதர் இட்ட காமிய மாலை - ? (உ.வே.சா. 1938.) திருக்காளத்தி நாதருலா - சேறைக் கவிராச பிள்ளை. திருக்காளத்தி புராணம் - ஆனந்தக் கூத்தர், 16ஆம் நூ. (உ.வே.சா. 1912) திருக்குடந்தை திரிபந்தாதி - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருக்குடந்தைப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருக்குடந்தை மங்களாம்பிகை அம்மை பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 19ஆம் நூ. திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக் குறம் - ? (1932.) திருக்குருகூர் யமகவந்தாதி - கிருட் டிணமாச்சாரியர், வேலாமூர், (சென்னை 1902.) திருக்குருகூர் ரத்தினம் - வைணவம்* திருக்குருகூர் வல்லிதோத்திரம் - வைணவம்* திருக்குருகூர் வல்லியரூசல் - *. திருக்குருகைப்பிரான் பிள்ளான் பரமரகசியம் - திருக்குருகைப் பிரான் பிள்ளான்.* திருக்குருகை ரத்தினம் - * திருக்குவளை தியாகராச சுவாமியுலா - ? (1912). திருக்குளந்தை முருகக்கடவுள் மீது திருவருண்மாலை - சுந்தர பாண் டிய ஓதுவார் மூர்த்திகள், (1929.) திருக்குறட்பயன் - வீரமாமுனிவர்.* திருக்குறளுரை - பரிதி, 13ஆம் நூ. திருக்குறளுரை - மணக்குடவர், 13ஆம் நூ. திருக்குறளுரை - இராமானுசக் கவிராயர், 19ஆம் நூ. திருக்குறளுரை-தாமத்தர், 13ஆம் நூ. திருக்குறளுரை - கவிப்பெருமாள், 13ஆம் நூ. திருக்குறளுரை-காளிங்கர், 13ஆம் நூ. திருக்குறளுரை - திருமலையர், 13ஆம் நூ. திருக்குறளுரை - சரவணப் பெரு மாளையர், (1875) திருக்குறளுரை - பரிமேலழகர், 13ஆம் நூ. திருக்குறளுரை - நச்சர், 13ஆம் நூ. திருக்குறளுரை - மல்லர், 13ஆம் நூ. திருக்குறளுரை - தருமர், 13ஆம் நூ. திருக்குறள் - திருவள்ளுவர், கி.மு. 1ஆம் நூ. திருக்குறள் அதிகார அடைவு - இது திருவள்ளுவ நாயனாரியற்றிய திருக்குறள் முப்பாலுள் ஒவ்வொரு பாலும் எத்தனை அதிகாரமுடை யது, அவை இன்னின்னவை என நூற்பாவால் அடைவுபடுத்திக் கூறுவது. இதனை இயற்றிய ஆசிரி யர் பெயர் தெரியவில்லை.* திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு போப்பையர், டிரூ (Drew) இலசர°, (போப் - 1820 - 1907) திருக்குறள் ஆராய்ச்சியும் சைன சமய சித்தாந்த விளக்கமும்-தி. அனந்த நாத நாயனார், (1932.) திருக்குறள் உரைவளம் - தருமபுர ஆதீனம், (1950 - 1952.) திருக்குறள் காமத்துப்பால் காலிங் கருரை பரிப் பெருமாளுரை- T.P. பழநியப்ப பிள்ளை (1945.) திருக்குறள் குமரேச வெண்பா - செகவீர பாண்டியன், (1927.) திருக்குறள் பொழிப்புரை - கா. சுப்பிர மணிய பிள்ளை, (1928.) திருக்குறள் வகுத்துரையுடன் - * திருக்குறள் வசனம் - குருசரணாலயர் (1924.) திருக்குறள் வீரமாமுனிவர் உரை யுடன் - வீரமாமுனிவர் திருக்குறுக்கைத் தல வரலாறு - (தருமபுர ஆதீனம் 1943.) திருக்குறுக்கை வீரட்ட புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815 - 75. திருக்குறுங்குடி நம்பி உற்சவப் பாட்டு - ? திருக்குறுந்தாண்டகம் - திருமங்கை யாழ்வார் வைணவம்.* திருக்குறுந்தாண்டகம் வியாக்கி யானம்-பெரிய வாச்சான் பிள்ளை.* திருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் - சுப்பிரமணிய முனிவர், 18ஆம் நூ. பிற்பகுதி திருக்குற்றாலச் சிலேடை வெண்பா - திரிகூட ராசப்ப கவிராயர், (உ.வே.சா. 1940.) திருக்கூடலையாற்றுப் புராண வசனம் - ? (1932.) திருக்கூடலையாற்றுப் புராணம் - சந்திரசேகர நாயகர், (1934.) திருக்கூவ புராணம் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17Mம் நூ. திருக்கேதார யாத்திரை - தி.சு. அவிநாசிலிங்கம், (1941.) திருக்கேதீச்சுர மகிமை - வெளியிட்ட வர் பொன்னம்பல பிள்ளை, (யாழ்ப் பாணம் 1891.) திருக்கை வழக்கம்-கம்பர், 12ஆம் நூ. திருக்கைலாயகிரி யாத்திரை - சித்ப வாநந்த சுவாமிகள், (1939.) திருக்கைலாய ஞானவுலா - சேரமான் பெருமாள் நாயனர், 9 ஆம் நூ. திருக்கோட்டாற்றுக் கலம்பகம் - கோட்டாறு. இது கறுப்பையாப் புலவர் செய்த முகமதிய பாடல் கள். (1898.) திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந் தாதி - சதாவதானி செய்கு தம்பிப் புலவர். திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கும்மி - அரிதாசர்.* திருக்கோட்டியூர் நம்பி வார்த்தை - வைணவம்.* திருக்கோட்டியூர் திடப்பத்தூர்களின் பள்ளி செயல் - ? திருக்கோட்டியூர் திருமாமகள் நாய்ச்சியார் உலா - ? திருக்கோயிலூர்ப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருக்கோவலூர்ப் புராணம் - ? (கும்பகோணம் 1901.) திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம் - வைணவம்.* திருக்கோளூர் வைத்தமா நிதி பெருமாள் திருப்பணி மாலை- ? திருக்கோவையா ருண்மை - சுந்தர தேசிகர், 19ஆம் நூ. திருக்கோவை யாருரை - பேராசிரியர், 12ஆம் நூ. திருசூலகிரிப் புராணம் - ? (விகிருதி.) திருசெல்வராசர் காப்பியம் - பூலோக சிங்க முதலியார், 19ஆம் நூ. திருச் சதகம் - சதாசிவம் பிள்ளை (ஆணல்) 19-ம் நூ. திருச்சந்த விருத்தம் - (1867).* திருச்சந்த விருத்த வியாக்கியானம் - பெரியவாச்சான் பிள்ளை.* திருச்சபை சரித்திரப் பொத்தகம் - வால்த்தர் (Walther) (தரங்கம்பாடி 1799.) திருச்சபை சரித்திரம் - பிளம்° ரான்ட், (Blomstrand) (தரங்கம்பாடி 1867 - 1869.) திருச்சபை சரித்திர வினாவிடை - பின்னக் (Pinnock) (நாகர்கோயில் 1856.) திருச்சிராப்பள்ளி யமகவந்தாதி - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம்நூ. திருச்சிற்றம்பலக் கோவை - மாணிக்க வாசகர், 4-6ஆம் நூ. மாணிக்க வாசகர் காலம் 9ஆம் நூற்றாண்டுக் குப்பின் என்னும் ஒரு கொள்கை யும் நிலவுகின்றது. திருச்சிற்றம்பலக் கோவை யாருண்மை - இது திருச் சிற்றம் பலக் கோவை யாரில் சிற்றின்பப் பொருள்பயப்ப அகத் தமிழிலக்கணப்படி முறையே யமைந்துள்ள துறைகளைக் கூறி அவற்றின் உண்மை இவையெனப் பேரின்பப் பொருள் தோன்ற ஒரு வகைச் செய்யுள் நடையாற் கூறு வது. இச்செய்யுள் கொளுவைப் போன்றது; சில இடத்து ஓரடியா லும் சில இடத்து ஈரடியாலும் ஆக் கப்பட்டிருக்கிறது. இந்நூலில் முத லிலும் இடையிற் சில இடங்களி லும் வசனமுள்ளது. திருச்சிற்றம்பல சுவாமிகள் வாக்கி யம் - இது வேதாந்த விஷயமான எட்டுப் பாடல்களுடையது. திருச் சிற்றம்பல சுவாமிகள் வாக்கிய மென்று முதலிற் குறிக்கப்பட்டிருப் பதால் அப்பெயருடைய ஒருவ ரியற்றிய தெனத் தெரிகிறது. திருச்சிற்றம்பல நாடிக் கட்டளை - இது சித்தாந்த சாத்திரம் படிப்பதற் குக் கருவியாகவுள்ளது. வசன நடையாலாயது. சிற்றம் பல நாடிகள் இதனை இயற்றினா ரென்பர். திருச்சிற்றம்பல யமகவந்தாதி - சபாபதி நாவலர், 1844 - 1903. திருச்சின்ன மாலை - வீரராகவாச் சாரியர் வைணவம்.* திருச்சின்ன மாலை - வேதாந்த தேசிகர்.* திருச்சுழிய லந்தாதி - சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. பிற். திருச்சுழியல் துணைமாலையம்மை பள்ளு - வ.சு. செங்கல்வராய பிள்ளை, (1939.) திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத் தமிழ் - வ.சு. செங்கல்வ ராய பிள்ளை, (1939.) திருச்சுழியற் புராணம் - ஆராவமுத மாசாரியார், திருச் சுழியல் (அம்ப வாண நாவலர் பதித்தது, சென்னை 1901.) திருச்செந்தூர் தல புராணம் - * திருச்செந்தூர் வெண்பா - பகழிக் கூத்தர்.* திருச்செங்காட்டான்குடி புராணம் - எல்லப்ப நாவலர், 17ஆம் நூ. திருச்செங்கோட்டுச் சதகம் - கிருட்டிணசாமி முதலியார், (1894.)* திருச்செங்கோட்டுப் புராணம் - கவிராய பண்டிதர், - ? (1877) திருச்செந்திலந்தாதி - இது செந்தில் முருகக்கடவுள் சார்பானது. இதில் 35 செய்யுட்களை துறை மங்கலம் சிவப்பிரகாசரும் ஏனையவற்றை சின்னயன் என்பவரும் இயற்றிய தாகத் தெரிய வருகிறது.* திருச்செந்தில் ஆறுமுகன் துதி - நல்ல சிவன். திருச்செந்தில் திரிபந்தாதி - கருப்பையா பாவலர், 20ஆம் நூ. திருச்செந்தில் முருகப்பிரான் லீலாசாரத் தாலாட்டு - கணபதி ஆச்சாரி; 1845 - 1928. திருச்செந்தில் யமக வந்தாதி - சிவசம்புப் புலவர், (யாழ்ப்பாணம் 1888.) திருச்செந்தில் சந்தவிருத்தம் - ஆறுமுக நாவலர், (1875.)* திருச்செந்திற் கலம்பகம் - ஈசான தேசிகர், 17ஆம் நூ. திருச்செந்திற் சந்த விருத்தம் - இராமசாமி ஐயர், (பவ.) திருச்செந்திற் பதிற்றுப் பத்தாந்தி - தா. மாணிக்கவாசகம் பிள்ளை (1936) திருச்செந்தூர்க் கலி வெண்பா - ? திருச்செந்தூர்க் கோவை - முருகதாச சுவாமிகள், (1840 - 99) (குரோதன) திருச்செந்தூர் தல புராணம் - வென்றிமாலைக் கவிராயர், (1565) திருச்செந்தூர் திருக்கந்தாதி - சிவ சமயப் புலவர், (வல்லுவெட்டித் துறை 1888) திருச்செந்தூர்த் திருப்புகழ் - முருக தாச சுவாமிகள், (1840 - 99) திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - பகழிக்கூத்தர், 18ஆம் நூ. முற்பகுதி. திருச்செந்தூர் வழிநடைப் பதம் - சுப்பிரமணிய பண்டிதர் திருச்செந் தூர், (கொழும்பு 1887.) திருச்சேறைத் தலபுராணம் - பிச்சை முத்து சேதிராயர், (1944.) திருச்செல்வராயர் சரித்திரம் - யாக்கோப்புப் பிள்ளை, (1889.)* திருச்சேறைத் தலவரலாறு - இராமானுச நாயுடு, (1944) திருஞானசம்பந்தர் இரட்டை மணி மாலை - இராம. சுப்பிர மணியஞ் செட்டியார், (சிறீ முக.) திருஞானசம்பந்த சுவாமிகள் சரித் திரம் - கா. சுப்பிரமணிய பிள்ளை (1926.) திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்-பறங்கிப்பேட்டை முத்துத் தாண்டவராய பிள்ளை (1900.) திருஞானசம்பந்த ரானந்தக் களிப்பு - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருஞானசம்பந்தர் துதி - * திருஞானசம்பந்தர் தோத்திரக் கீர்த்தனை - * திருஞானசம்பந்தர் - சே. சிவஞானம் பிள்ளை, (1926.) திருஞானசம்பந்தர் நவமணி மாலை -பழநி வேற் பிள்ளை (1926.*) திருஞானசம்பந்தர் பதிகம் - இராம சுப்பிரமணியம் செட்டியார், (சிறீமுக) திருஞானசம்பந்தர் பதிற்றுப்பத்தந் தாதி - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருட்டாந்த சங்கிரகம் - பெர்சிவல் (யாழ்ப்பாணம் 1843) இந்நூல் பழமொழித் திரட்டாகவுள்ளது. திருத்தணிகாசல வனுபூதி - கந்தப் பையர், 18ஆம் நூ. பிற்பகுதி. திருத்தணிகைச் சந்நிதிமுறை - கந்தப்ப தேசிகர், 19ஆம் நூ. திருத்தணிகைத் தலவிளக்கம் - செங்கல்வராயப் பிள்ளை, (1944.) திருத்தணிகை நாற்பாவலங்கல் - இது திருத்தணிகையில் எழுந்தருளி யிருக்கும் முருகக்கடவுள் சார் பானது. வெண்பா, கலித்துறை, விருத்தம், கொச்சகக் கலிப்பா, ஆகிய 4-வகைச் செய்யுட்களா லானமையால் இஃது இப்பெயர் பெற்றது. இதனை இயற்றி-யவர் ஆறுமுகன்.* திருத்தணிகைக் கலம்பகம் - * திருத்தணிகைக் குமரன் பதிகம் - * திருத்தணிகைப் பிள்ளைத் தமிழ் - வ.சு. செங்கல்வராய பிள்ளை, (1935.) திருத்தணிகைப் புராணம் - கச்சியப்ப முனிவர், மறைவு 1799. திருத்தணிகை யாற்றுப் படை - கச்சியப்ப முனிவர், மறைவு 1799. திருத்தணிகை வண்ண மஞ்சரி - வண்ணக் களஞ்சியம் காஞ்சி நாக லிங்க முனிவர், (1894.) திருத்தணிகை விருத்தம் - சுப்பிர மணியத் தம்பிரான், (1892) திருத்தணிகை வெண்பா - ? திருத்தணிகை வெண்பா வந்தாதி -* திருத்தப்பட்ட திருச்சபைகளின் வரலாறு - இலிதூர்கீ° (Litrugies) கொழும்பு (1760) திருத்தலை வில்லின் வழி நடைப் பதம் - (தலைவில்லா இலங்கையி லுள்ள கத்தோலிக்க திருப்பதி) பெரீரா (யாழ்ப்பாணம் 1893.) திருத்தாலாட்டு - இது சொரூபானந் தர் மேல் தத்துவராயர் பாடியது, 16ஆம் நூ. திருத்தில்லை நீரோட்டக யமகவந் தாதி - வேலுப் பிள்ளை; இவர் வடகோவை விநாயகத் தம்பியின் புதல்வர், (யாழ்ப்பாணம் 1891) திருத்தில்லை யமக வந்தாதி - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815 1875. திருத்துடிசைப் புராணம் - ? (1913) திருத்துருத்திப் புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815 - 1875. திருத்துருத்தித் தலவரலாறு - ? (தருமபுர ஆதீனம் 1943.) திருத்துவத்துறைப் பெருந்தவப் பிராட்டி பிள்ளைத்தமிழ் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815 - 1875. திருத்தொகை - நம்பியாண்டர் நம்பி, 10ஆம் நூ. திருத்தொண்டர் தொகை - சுந்தரர்* திருத்தொண்டர் ஆனந்தக் களிப்பு - சங்கர நாராயண பிள்ளை. திருத்தொண்டர் செந்துறை - ? (1881)* திருத்தொண்டர் திருநாமக் கோவை - சிவஞான முனிவர், மறைவு 1785. திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி, 11ஆம் நூ. திருத்தொண்டர் புராண சாரம் - உமாபதி சிவாசாரியார், 14ஆம் நூ. திருத்தொண்டர் புராண சார விளக் கம் - சொக்கலிங்கஞ் செட்டியார், (விபவ.) திருத்தொண்டர் போற்றிக் கலி வெண்பா - சுவாமிநாத பிள்ளை, (பிரபவ.) திருத்தொண்டர் வெண்பா - ? (1917.) திருத்தொண்டர் வெண்பா மாலை - குமார பாரதியார், (1869)* திருநடைவழி அலங்காரம் - ஆமித் இபின் காதிர் முகை அல்தின், கீழைக்கரை, (கொழும்பு 1895.) திருநட்சத்திரத் தனியன் - வைணவம்.* திருநந்தி தேவர் சனன சேகரம் - நந்தி தேவர், சோதிடம். திருநாகூர்த் திருவந்தாதி - தசாவ தானம் செய்கு தம்பிப் புலவர். திருநாகேசுவரக் கோவை - * திருநாகேசுவரப் புராணம் - ப. சிங்கார வேற்பிள்ளை, (1929.) திருநாகைக் காரோண புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815-1875. திருநாகைத் திரிபந்தாதி - கிருட்டிண மாச்சரியார் வேலாமூர், (சென்னை 1902). திருநாமக்கோவை - * திருநாமப் பதிகம் - (1874)* திருநாராயணபுரம் வேத நாராயணப் பொருள் திருப்பணி மாலை - * திருநாரையூர் நம்பி மேகவிடு தூது - ? (மதுரைத் தமிழ் சங்கம், 1931.) திருநாவலூர்ப் புராணம் - இராசப்ப கவி, (1889)* திருநாவுக்கரசர் திருஞானம் - மு.சி. பூரணலிங்கம் பிள்ளை. (1944.) திருநாவுக்கரசு நாயனார் மாலை - வேங்கட்ட ரமண தாசர், (1882)* திருநாளைப் போவார் சரித்திரக் கீர்த்தனை - முத்துத் தாண்டவர்.* திருநாள் பிரசங்கம் - கிறித்தவம்.* திருநின்றவூர்த் தல புராணம் - * திருநீலகண்ட நாயனார் சரித்திரம் கீர்த்தனம் - கே. பாலகிருட்டிண பாரதியார். திருநீலகண்ட நாயனார் விலாசம் - வேங்கடசால பிள்ளை, (1875)* திருநீலகண்டன் பள்ளு - * திருநீற்றுப் பெருமை - நடேச தேசிகர். (ரிப்பன் பிர° 1909) திருநீற்றின் உண்மை - ஆண்டாள் அம்மாள், (1913.) திருநூற்றந்தாதி - அவிரோதநாதர், 14ஆம் நூ. திருநெடுந் தாண்டகம் - திருமங்கை யாழ்வார்* திருநெடுந் தாண்டகம் வியாக்கி யானம் - பெரியவாச்சான் பிள்ளை. திருநெல்லை மும்மணிக் கோவை - சிதம்பரநாத கவி, (1867)* திருநெல்வேலித் தலபுராணம் - நெல்லையப்ப பிள்ளை, (1869) திருப்பதிகக் கோவை அரும்பத விளக்கம் - * திருப்பதிகம்-இது ஒரு தமிழ்ப் பௌத்த நூல்; புத்தருடைய அருமை பெரு மைகளைப் பாராட்டிக் கொண்டு பத்துப் பாட்டால் வந்திருப்பதொரு நூல். காலம் - ? (உ.வே.சா.) திருப்பதி வேங்கடேசர் மகாத்மியம் - நரசிம்மலு நாயுடு, சேலம் (கோயம் புத்தூர் 1884.) திருப்பரங்கிரிப் பிள்ளை தமிழ் - மு. அருணாசலக் கவிராயர் (1899.) திருப்பரங்கிரிப் புராணம் - நிரம்ப வழகிய தேசிகர் (பிரமாதி) திருப்பரங்கிரிப் புராண வசனம் - மு. அருணாசலக் கவிராயர் (1889.) திருப்பரங்கிரி மும்மணிக்கோவை - வே. இராமநாதன் செட்டியார், (பவ.) திருப்பரங்கிரி முருகன் வரப்பிரசாத மாலை - மு. வீரவேல், (1946.) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஐயர் மீது ஆனந்தக்களிப்பு பிச்சு வையர், (1926). திருப்பல்லாண்டு - பெரியாழ்வார்.* திருப்பல்லாண்டு - இது ஒன்பதாந் திருமுறைப் பிரபந்தவகை இரண்டி னுள் ஒன்று. சிவபெருமானது தோத்திரரூப மாகவுள்ளது. இதை இயற்றியவர் திருவீழிமிழலையில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இருந்த ஏறன், சயந்தன், சேந்தன் என்னும் மறுபெயர் பூண்ட சிவஞானி யாகிய திருமாளிகைத் தேவர்.* திருப்பல்லாண்டு வியாக்கியானம் - பெரியவச்சான்பிள்ளை.* திருப்பல்லாண்டு வியாக்கியானம் - கோபாலசீயர்* திருப்பல்லாண்டு வியாக்கியானம் அரும்பதம் - ஆத்தான்சீயர்.* திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப் பொடி ஆழ்வார். திருப்பள்ளி எழுச்சி - மாணிக்கவாசக சுவாமிகள். திருப்பள்ளி எழுச்சி வியாக்கியானம் - நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை. திருப்பறியலூர்ப் புராணம் - பின் வேலப் பதேசிகர், 18ஆம் நூ. பிற். திருப்பனந்தாள் உலா - எல்லப்ப பூபதி, (1572) திருப்பனந்தாள் சடையப்பர் மாலை - சண்முக சுவாமிகள், (விகாரி.) திருப்பனந்தாள் தலபுராணச் சுருக்கம் - S. அருண சடேச தேசிகர், (1934.) திருப்பனந்தாள் தலபுராணம் - செஞ்சடை வேதிய தேசிகர், (1944.) திருப்பனந்தாள் விசுவநாதர் தோத் திரப்பா மாலை - பரமசிவ சுவாமி கள், (பிரமாதி) திருப்பா - குமரகுருதாச சுவாமி, பாம்பன், (சென்னை 1899.) திருப்பாகையூர் குறவஞ்சி - * திருப்பாசூர்த் தலப்புராணம் - கச்சி ஞானப் பிரகாசர். திருப்பாசூர்ப் புராண வசனம் - பூவை கலியாணசுந்தர முதலியார். (1854 - 1918) திருப்பாச்சி லாச்சிராமக் கோயில் வரலாறு - சு.பஞ்சநதம் பிள்ளை, (1944) திருப்பாட்டு - இது நச்சினார்க்கினியர் மேற்கோளெடுத்தாண்ட நூல் களுள் ஒன்று, காலம் - ? திருப்பாணாழ்வார் பாடல் - திருப்பா ணாழ்வார், 9ஆம் நூ. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் - இலக்கணம் சிதம்பரநாத முனிவர், 18ஆம் நூ. பிற். (சென்னை 1896.) திருப்பாப்புலியூர்க் கலம்பகம் - தொல் காப்பிய தேவர், 14ஆம் நூ. பிற். திருப்பாவை - சூடிக்கொடுத்த நாச்சி யார் (ஆண்டாள்) 8ஆம் நூற். திருப்பாவை உரை - (ஆறாயிரப்படி) அழகிய மணவாளப் பெருமாணா யனார், 15ஆம் நூ. திருப்பாவை சங்கதி. - ? துதி* திருப்பாவை வியாக்கியானம் ஆறா யிரப்படி- இரங்கநாதாசாரியர். திருப்பாவை வியாக்கியானம் நாலா யிரப்படி - சநந்யாசார்யர். திருப்பாவை வியாக்கியானம் மூவாயிரப்படி - பெரியவாச்சான் பிள்ளை.* திருப்பாவை வியாக்கியான அரும் பத விளக்கம் - * திருப்பிடவூர் கோயில் வரலாறு - சு. பஞ்சநதம் பிள்ளை, (1944.) திருப்புகலூரந்தாதி - நெற்குன்றவாண முதலியார், (சுபகிருது.) திருப்புகலூர்த் தலவரலாறு - G. கலியாணம் பிள்ளை, (1942.) திருப்புகழ்-இது முருகக்கடவுள் துதியாக வமைந்தது. அருணகிரி நாதர் பாடியது. திருப்புகழ் 16,000 என்பர். இப்போது அச்சில் வெளி வந்தவை 1200. திருப்புகழ் பஞ்சரத்தினம் - அருண கிரிநாதர். திருப்புத்தூர்ப் புராணம் - சொக்க லிங்கஞ் செட்டியார், காரைக்குடி இராமநாதன் செட்டியார் புதல்வர், (1898.) திருப்புலியூர் வெண்பா - மாரிமுத்துப் பிள்ளை, (குரோதன.) திருப்புல்லணைத் தெய்வச் சிலைப் பெருமாள் வாகனக் கவி. * திருப்புல்லாணி மாலை - ? (ம.த. சங்கம விபவ.) திருப்புல்லைத் திரிபந்தாதி - கிருட்டிணமாச்சாரியார், வேலாமூர் (சென்னை 1902.) திருப்புளிங்குடி இரகசியம் - வைணவம்.* திருப்புன்கூர்ப் புராணம் - கனக சபைக் கவிராயர், உடையார் பாளையம், (1907.) திருப்பூவண நாதருலா - கந்தசாமிப் புலவர் திருப்பூவணம், (சென்னை 1904.) திருப்பூவணப் புராணம் - கந்தசாமிப் புலவர், 18ஆம் நூ. பிற். திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் விளக்கம் அம்மானை-? (சென்னை 1904.) திருப்பெருமணநல்லூர் திரு நீற் றம்மை பிள்ளைத் தமிழ்- மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815- 1875. திருப்பைஞ்ஞீலி இரத்தினசபாபதி மாலை - ? (1894.) திருப்பஞ்ஞீலிப் புராணம் - ? (1927.) திருப்போரூர் ஆறுமுகக் கடவுள் துதி- திருப்போரூர் ஆறுமுகக் குறுங்கழி நெடில் விருத்தம் - சிதம்பரசுவாமி கள். திருப்போரூர்க் கிள்ளை விடுதூது - கந்தசாமி முதலியார், (சுபானு) திருப்போரூர் மணிப்பிரவாளப் பதிகம்- திருப்போரூர் முருகன் சந்நிதிமுறை - சிதம்பர தேசிகர், 18ஆம் நூ. திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் - குமாரதேவரின் மாணாக்க ராகிய சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. திருப்போரூர் வழிநடைக் கும்மி - சகநாத முதலியார், (1881.)* திருமக்கா திரிபந்தாதி - நாகூர் வித்து வான் வா. குலாம் காதிரு நாவலர், 19ஆம் நூ. திருமங்கை மன்னன் மங்களா சாசனம் - துதி.* திருமங்கை மன்னன் மடிபிடி. * திருமதீனந்தாதி - பிச்சை இபுறாகீம் புலவர். திருமண ஏசல் - சகநாத முதலியார் (1879)* திருமணப் பாடல் - இராயப்ப கெ°த அண்ணாவியார், (1887)* திருமந்திரச் சுருக்கம் வியாக்கி யானத்துடன் - வேதாந்த தேசிகர். திருமந்திர சூத்திரம் - திருமூலர், யோகம், இரசவாதம்.* திருமந்திர மாலை - திருமந்திரத் துக்குத் திருமந்திரமாலை எனவும் பெயர் கையெழுத்துப் பிரதிகளில் உண்டு. “இது சைவத் திருமுறை களுள் பத்தாவது. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூல நாயனாரால் இயற்றப்பட் டது; இவர் கைலையில் நந்தி தேவர் அருள் பெற்றவர். பொதிiக மலையிலுள்ள அகத்தியரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டு வழி யிலுள்ள தலங்கள் பலவற்றையும் தரிசித்து நவகோடி சித்தபுரமாகிய திருவாவடு துறை யிலுள்ள போதி மரத்தடியிற்றங்கி மூவாயிரம் பாடல்களையுடைய 9-தந்திரங் களாலாகிய இத் திருமந்திர மாலையைச் சைவாகம சாரமாக இயற்றினார் என்பர். திருமூல ருடைய சரித்திரத்தைப் பெரிய புராணம், துறைசைப் புராணம் முதலியவற்றிற் காண்க.” திருமந்திரம் - திருமூலர், 5ஆம் நூ. திருமந்திரம் - திருமூலர், வைத்தியம்.* திருமந்திரம் - திருமூலர், இரசவாதம்.* திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் - சுத்தசத்துவம் தொட்டையா சாரியார். திருமந்திரார்த்தப் பிரமாணத் திரட்டு - வைணவம். திருமந்திரார்த்தம் - அழகிய மண வாளப் பெருமாள். திருமந்திரார்த்தம் சாற்றுமுறை - வைணவம்.* திருமந்திரார்த்தானு சந்தானம் - வைணவம்.* திருமயம் ஈசுவரன் கோயில் தல புராணம் - ? (1887)* திருமயிலைக் கபாலீசர் தோத்திரக் கீர்த்தனை - துதி.* திருமயிலைச் சச்சிதானந்த தேசிகர் மாலை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருமயிலைத் தலப்புராணம் - அமிர்தலிங்கத் தம்பிரான். இது காஞ்சி சபாபதி முதலியார் எழுதிய உரையோடு 1893-ல் அச்சிடப் பட்டது. திருமயிலைப் பிள்ளைத்தமிழ் - தாண்டவராயர். திருமயிலைப் புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 1815 - 1875 திருமயிலை யமகவந்தாதி, உரை யுடன் - திருமயிலையுலா - * திருமயிலை யதிபர்பள்ளு - பெரிய வன் கவிராயர். திருமரியாயிபேரில் தோத்திரப் பதிகம் - தம்பையா பிள்ளை, (யாழ்ப் பாணம் 1888.) திருமலை சாகரத் தாம்பிரசாசனப் பிரதி - * திருமருகல் தல வரலாறு - ச. தண்ட பாணி தேசிகர். திருமலைப் பதிகம் - ஞானசித்த சுவாமிகள் திருக்குருகூர், (திரு நெல்வேலி 1902.) திருமலை மகாத்மியம் - அப்பன்சாமி தொகுத்தது (சென்னை 1878.) திருமலை முருகன் பள்ளு - பெரியவன் கவிராயர், (1944.) திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் - கவிராச பண்டாரம், (1929) திருமலை யாண்டவர் குறவஞ்சி - ? (உ.வே.சா. 1938) திருமலை யொழுகு - வைணவம். திருமழிசைப் பதிற்றுப் பத்தந்தாதி, உரையுடன் - பையனூர் வரதராச பிள்ளை. திருமழுவாடிப் புராணம் - கமலை ஞானப் பிரகாசர், 16ஆம் நூ. திருமாலை - தொண்டரடிப் பொடி ஆழ்வார் 9ஆம் நூற்றாண்டு (1868)* திருமாமகள் நாய்ச்சியாருலா - * திருமாமகள் நாய்ச்சியார் தாலாட்டு-* திருமாலை வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை. திருமாலை வியாக்கியான அரும்பத விளக்கம் - * திருமால் திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப் பொடி, 9ஆம் நூ. திருமால் தோத்திரம் - * திருமுகப்படி - வைணவம்.* திருமுகப் பாசுரம் - இது வள்ளலார் சாத்திரம் 20னுள் ஒன்று. சைவ மத சம்பந்தமானது; ஏழுபாடல்களா லாகியது. திருமுக விலாசம் - வில்லியப்ப பிள்ளை, (1900) திருமுக விலாசம் - முத்தப்பச் செட்டி (1882)* திருமுடி அடைவு - தீர்த்தப்பிள்ளை (1894) திருமுடி யடைவு - வைணவம்* திருமும்மணிக் கோவை - நம்பி யாண்டார் நம்பி, 10ஆம் நூ. திருமுருகன் பூண்டித் தலபுராணம் - வித்துவான் வாசுதேவ முதலியார், - ? (1867). திருமுருகாற்றுப் படை (கி.பி. 50) நக்கீரர் இயற்றியது. இது புலவராற் றுப்படை எனவும் படும். “வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொரு வன் முருகனிடத்தே ஆற்றுப் படுத்தியது” என நச்சினார்க்கி னியர் எழுதியிருப்பது இச் செய் யுளுக்குப் பெயர் வாய்ந்ததற்குக் காரணத்தையும், அதிலடங்கியிருக் கும் பொருளையும் விளக்கும். திருமுல்லைவாயிலந்தாதி - சிவஞானமுனிவர் - 1785. திருமுல்லைவாயில் கொடியிடை மாலையந்தாதி - மனோன்மணி அம்மையார், 1863-1908 திருமுல்லைவாயில் மாசிலா மணியீசர் பதிகம் - அருணாசல முதலியார், 19ஆம் நூ. திருமுல்லைவாயில் மாசிலாமணி யீசர் பதிகம் - பூவை கலியாண சுந்தர முதலியார், 1854 -1918 திருமுல்லைவாயிற் புராணம் - வடுகநாததேசிகர், 17ஆம் நூ. திருமுல்லைவாயிற் புராணம் -திரு மயிலை சண்முகம் பிள்ளை, 20ஆம் நூ. திருமுறை இலக்கியங்கள் - முதல் மூன்று திருமுறைகள், திருஞான சம்பந்தர், 184 பதிகங்கள்; நான்கு ஐந்து ஆறாந் திருமுறைகள், அப்பர் 3476 பாடல்கள்; ஏழாந் திருமுறை, சுந்தரர் 100 பதிகங்கள்; 8 ஆம் திருமுறை திருவாசகம்; 9ஆம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு; 10ஆம் திரு முறை, திருமந்திரம்; 11ஆம் திரு முறை தனிப்பதிகங்கள் (நாற்பதின் மர்); 12ஆம் திருமுறை சேக்கிழார் புராணம். திருமுறைகண்ட புராணம் - உமாபதி சிவாசாரியர், 14ஆம் நூ. திருமுறைப் பெருமை - சுவாமிநாத பண்டிதர், (1911) திருமூலர் தத்துவக்கட்டளை - இது சைவ சமயத்தைச் சார்ந்தது. இந் நூல் நந்தி தேவரால் திருமூல நாயனாருக்கு உபதேசிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. இதில் தொண் ணூற்றாறு தத்துவங்களும் அவற் றின் தன்மைகளும் உண்டாகும் முறைமைகள் விளக்கமாகக் கூறப் பட்டுள்ளது.* திருமூலதேவர் பாடல் 103 - திருமூலர், வேதாந்தம்.* திருமூலநாயனார் நிகண்டு 300 - திருமூலர் நிகண்டு.* திருமூலநாயனார் வாதசூத்திரம் 300 - திருமூலர், இரசவாதம்.* திருமூலநாயனார் குருமுறை - திரு மூலர், இரசவாதம்.* திருமூலர் ஞானச்சுருக்கம் - திரு மூலர் ஞானம். திருமூலர் தண்டகம் - திருமூலர் ஞானம். திருமூலர் தத்துவக்கட்டளை - திரு மூலர் ஞானம். திருமூலர் தியானக்குறி - திருமூலர் ஞானம். திருமூலர் வைத்தியம் - திருமூலர் ஞானம். திரு மெய்ஞ்ஞானச் சரநூல் - முகமத் (1907.) திருமேற்றனித் தோத்திரம் - * திருமொழி - சூடிக் கொடுத்த நாச்சி யார் (ஆண்டாள்), 8ஆம் நூ திருவங்கமாலை - திருநாவுக்கரசு நாயனார். திருவட்டாட்சரம் - வைணவம்.* திருவண்ணாமலையார் தசகாரியம் - திருவண்ணாமலையார், சைவம். திருவண்ணாமலைத் தீப தர்சன சரித்திரம் - (1888)* திருவம்பலக் கோவை - காவியம்.* திருவகுப்பு - இது அருணகிரிநாதர் செய்தது. முருகக்கடவுள் பாதம் புயம், வேல், மயில் - வீரம் முதலி யவற்றைத் தனித் தனி சிறப்பித்துக் கூறுவது. இதில் 25 வண்ண விருத் தங்களாகிய 25 வகுப்புகளுள்ளன. சீர்பாத வகுப்பு முதல் 18 அருண கிரிநாதரால் பாடப்பட்டன வென்று பலருஞ் சொல்லுகிறார்கள். அப் படியே பழமையான பலபிரதிக ளிருக்கின்றன. சில பிரதிகளிலே இருபத்தொன்று முப்பத்தொன்று வரையும் அதிகப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்து ஆலோசிக்கும் போது பதினெட்டுக்கு மேற்பட் டவை அவர் வாக்குகளாகத் தோன்றவில்லை. அவைகளிலே சில சந்தச்சிதைவுகளாகவும் அக வல்களாகவுமிருக்கின்றன. இப்படி யிருக்கையால் அப்பதினெட்டை யும் முன்வைத்தும் மற்றவை களியே சந்தமுடைய ஏழு வகுப்பு களைப் பின்வைத்தும் பதிக்கப் பட்டன. இவை திருத்தணிகை சரவணப் பெருமாளை யரவரால் அச்சிடப்பட்டுள்ளன.* திருவதிகைக் கலம்பம் - உத்தண்ட வேலாயுதகவி, 1536 திருவிதிகை வீரட்டானம் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் - த.க. சுப்பிராயச் செட்டியார் (சர்வசித்து,) திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி, 10ஆம் நூ. திருவந்தாதி - திருமழிசை ஆழ்வார், 8ஆம் நூ. திருவந்தாதி உரை - அப்புள்ளையார், 18ஆம் நூ. திருவரங்கக் கலம்பகம் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. திருவரங்கச் சன்னதி முறை - (1876)* திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. திருவரங்கத்தந்தாதி - திருக் குருகைப் பெருமாள் கவிராயர். திருவரங்கத்து மாலை - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. திருவரங்கத்து ஊசற்றிரு நாமம் - பிள்ளை உலோகாச்சாரியார். திருவரங்கத் தூசற்றிரு நாமம் - பிள்ளை பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. திருவரங்கரூசல் - * திருவரங்கர் தோத்திரம் - * திருவரசிலியந்தாதி - அ. சிதம்பரநாத முதலியார், (1929) திருவருட்கோவை - சுப்பிரமணிய ஐயர், (தஞ்சாவூர் 1906). திருவருட்பயன் - இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரம் 14-கனுள் ஒன்று; நூலாசிரியர் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர். மெய் கண்ட தேவர் இயற்றிய சிவஞான போதத்தினும் விரிவாக அருணந்தி சிவாசாரியார் செய்த சிவஞான சித்தியாரென்னும் நூலின் சுருக்க மாகிய சிவப்பிரகாசத்தின் பொருள் களை எளிதில் உணரும் பொருட்டு இந்நூலாசிரியர் இதனை இயற்றி னாரென்று சிறப்புப்பாயிரம் அறி விக்கின்றது. இது பதிமுதுநிலை, பசு நிலை, பாச நிலை, அருளது நிலை, அருளுரு நிலை, அறியு நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, ஐந்தெழுத் தருணிலை, அணைந்தோர் தன்மை எனப்பப் பத்துக் குறள் வெண்பாக்களை யுடைய பத்துப் பிரிவினை யுடையது. இதற்கு நிரம்பவழகிய தேசிகர் உரை யுண்டு. திருவருட்பயன் சிந்தனை - * திருவருட்பயன் பொழிப்புரை - நிரம்பவழகிய தேசிகர். திருவருணை அந்தாதி - எல்லப்ப நாவலர் தாழைநகர்; எல்லப்ப நயினா ரெனவும் வழங்கும். திருவருணை உண்ணாமுலை யம்மை பிள்ளைத் தமிழ் - சோணாசல பாரதி (1919). திருவருணையமக வந்தாதி - திம்மப்ப; அந்தணனார் - (1935) திருவருணை வெண்பா - குகை நமசிவாயர், 16ஆம் நூ. திருவலங்கற்றிரட்டு - குமர குருதாசசுவாமி, பாம்பன், (1901.) திருவலிதாயப் புராணவசனம் - பூவை கலியாணசுந்தர முதலியார், 1854 - 1918. திருவல்லிக்கேணிக் கலம்பகம் - சங்கரலிங்கம் பிள்ளை, முத்தூர் அப்பாவின் புதல்வர், (சென்னை 1898.) திருவல்லிக்கேணி யமகவந்தாதி - ? (துந்துபி.) திருவருள் மாலையும் அந்தாதியும் - எ°. வேதநாயகம் பிள்ளை, (1873.)* திருவருள் விலாச பரசிவ வணக்கம் - தாயுமானவர். திருவள்ளுவ நாயனாரகவல் - திருவள்ளுவர்.* திருவள்ளுவப் புராணம் -சொக்க லிங்கப் புலவர், - ? திருவள்ளுவ மாலை - இது திருக்-குறளைப் புகழ்ந்து கூறும் நூல்; சங்கப் புலவர் செய்ததாகக் கூறப் படுகிறது. இது 10ஆம் நூற்றாண் டளவில் பல புலவர் பெயர் கொடுத்து ஒருவரால் செய்யப் பட்டதெனக் கருதப்படுகிறது. திருவள்ளுவரும் திருக்குறளும் - உ.வே. சாமிநாதையர், (1936). திருவள்ளுவர் - ந.சி. கந்தையா பிள்ளை, (1947.) திருவள்ளுவர் - ச. சோமசுந்தர பாரதியார், (1934.) திருவள்ளுவர் - செல்வக் கேசவராய முதலியார், - 1921 (1904) திருவள்ளுவர் தலைவரவு - திருவள் ளுவர்.* திருவள்ளுவர் நூல் நயம் - இரா.பி. சேதுப் பிள்ளை, (1922.) திருவள்ளுவர் நேரிசை - அரசஞ்சண் முகனார், 1868 - 1911. திருவாக்குப் புராணம் - கனகசபைப் புலவர், 19ஆம் நூ. (யாழ்ப்பாணம் 1866) திருவாங்கோட்டு வரலாறு - சரித்திரம்* திருவாசக அதிகார அடைவு - * திருவாசகக் கும்மி - சாமுவேல் (N. Samuel) (1869.)* திருவாசகத் திருவுள்ளக் கிடக்கை பொழிப்புரை - சைவம். திருவாசக பூசாவிதி - ஆறுமுக நாவ லர், (சாமிநாத பண்டிதர், பிலவங்க.) திருவாசகம் - மாணிக்கவாசகர், 4ஆம் நூற்றாண்டுக்கும் 6ஆம் நூற் றாண்டுக்கும் இடையில். 9ஆம் நூற்றாண்டு எனவும் ஒரு சாரார் கொள்வர். திருவாசகம் ஆங்கிலமொழி பெயர்ப்பு - போப்பையர், 1810, 1907 (1897.) திருவாசக விரிவுரை - மறைமலை அடிகள், (அகவல்கள் மாத்திரம்) - 1950. திருவாசிரியம் - நம்மாழ்வார், (சட கோபர்) திருவாசிரிய வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை. திருவாடிப் புராணம் - இராமலிங்க கவிராயர், - ? திருவாதவூரடிகள் புராண உரை - குமாரதேவர். திருவாதவூரடிகள் புராணம் - கடவுள் முனிவர், 18ஆம் நூ. திருவாப்பனூர்ப் புராணம் - கந்த சாமிப் புலவர். திருவாமாத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம் - மனோன்மணி அம்மையார், 1863 - 1908. திருவாமாத்தூர் கலம்பகம் - இரட் டையர், 15ஆம் நூ. திருவாமாத்தூர்ப் புராணம் - ? திருவாய்மொழி-நம்மாழ்வார், 8ஆம் நூ. திருவாய்மொழி அருஞ்சொல் விளக்கம் - * திருவாய்மொழி உரை - நம்பிள்ளை, 14ஆம் நூ. திருவாய்மொழி எண்பதினாயிரப்படி உரை - நஞ்சீயர், 13ஆம் நூ. திருவாய்மொழி நூற்றந்தாதி - மணவாளமுனி, 16ஆம் நூ. திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக் கியானம் - பிள்ளை லோகஞ்சீயர். திருவாய்மொழி சாரம் - * திருவாய்மொழியின் ஆறாயிரப்படி உரை - திருக்குருகைப் பிரான் பிள்ளான், 13ஆம் நூ. திருவாய்மொழியீட்டரும்பத விளக்கம் - * திருவாய்மொழியீட்டினவதாரிகை-* திருவாய் மொழியீட்டுப் பிரமாணத் திரட்டு - மணவாள முனிகள். திருவாய்மொழியீட்டுப் பிரவேச சங்கிரகம் - திருவாய்மொழியீட்டுப் பிரவேசம் - திருவாய்மொழி வியாக்கியான அடைய வனைந்தானரும்பத விளக்கம் - ஆத்தான்சீயர். திருவாய்மொழி வியாக்கியானம் இருபத்து நாலாயிரப்படி, பெரிய வாச்சான் பிள்ளை. திருவாய்மொழி வியாக்கியானம் ஒன்பதினாயிரப்படி - இரங்க இராமனுச சுவாமி. திருவாய்மொழி வியாக்கியானம் முப்பத்தாறாயிரப்படி நம்பிள்ளை. திருவாராதனக் கிரமம் - * திருவாரூருலா - அந்தகக்கவி வீர ராகவ முதலியார், 17ஆம் நூ. திருவாரூர்க் கமலாலய மாலை - (1875)* திருவாரூர்க் கோவை - எல்லப்ப பூபதி, 1572 திருவாரூர்த் தல வரலாறு - ச. தண்ட பாணி தேசிகர் (1943) திருவாரூர் தியாகராச லீலை - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவாரூர் நான்மணி மாலை - குமர குரபர சுவாமிகள். திருவாரூர்ப்பள்ளு - கமலைஞானப் பிரகாசர். திருவாரூர்ப் பன்மணி மாலை - வைத்தியநாத தேசிகர், 17ஆம் நூ. திருவாரூர்ப் புராணம் - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். திருவாரூர்ப் புராணம் - சம்பந்த முனிவர், 16ஆம் நூ. திருவாலவாய்க் கட்டளை - ? (புட்பரதச் செட்டியார், 1872.) திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் மாலை - வெ.ப. சுப்பிர மணிய முதலியார், (1938). திருவாவடுதுறைக் கலம்பகம்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை, (தன்மதி.) திருவாவடுதுறைக் கோவை - தொட்டிக் கலைச் சுப்பிரமணியத் தம்பிரான். திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மாலை - மீனாட்சிசுந்தரம் பிள்ளை 19ஆம் நூ. திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மும்மணிக் கோவை பரமசிவ சுவாமிகள் (தாது) திருவாவடுதுறைமரபு அட்டவணை- திருவாளொளிப் புற்றூர் புராணம் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருவாவினன்குடிப் பதிற்றுப்பத் தந்தாதி - சுப்பிரமணிய முனிவர். திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருவானைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதி - மனோன்மணி அம்மையார், 1863-1908. திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - மீனாட்சிசுந்தரம் பிள்ளை (வி.சு.) திருவானைக்கா திரிபந்தாதி - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவானைக்கா பதிகங்கள் - தண்ட பாணி சுவாமிகள் (சர்வதாரி.) திருவானைக்காப் புராணம் - கச்சி யப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். திருவானைக்கா மாலை - மீனாட்சி சுந்தம்பிள்ளை, 19ஆம் நூ. திருவானைக்கா வுலா - காளமேகம் 14ஆம் நூ. பிற்பகுதியும் 15ஆம் நூ. முற்பகுதியும். திருவான்மியூர் பதிற்றுப்பத்தந்தாதி - கனகசபை நாயகர், (1884)* திருவான்மியூர்ப் புராணம் - பூவை, கலியாணசுந்தர முதலியார், 1854 - 1918. திருவிசைப்பா - சேந்தனார், 11ஆம் நூ. திருவிசைப்பா - கண்டராதித்தர், 11ஆம் நூ. திருவிசைப்பா - (ஒரு பாடல்) சேதி ராயர், 11ஆம் நூ. திருவிசைப்பாப் பதிகங்கள்சில - கருவூர்த் தேவர், 11ஆம் நூ. திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு - திருவாலியமுதனார், 11ஆம் நூ. திருவிசைப்பா பதிகங்கள் நான்கு - திருமாளிகைத் தேவர், 11ஆம் நூ. திருவிசைப்பாவில் ஒன்று - வேணாட்டடிகள், 11ஆம் நூ. திருவிசைப்பாவிற் பகுதி - பூந்துருத்தி நம்பிகாடவர் நம்பி, 11ஆம் நூ. திருவிரிஞ்சைப் புராண வசனம் - சுப்பிரமணிய ஐயர், தேவயம்பாடி, (சென்னை 1897). திருவிடைக் கழித்தல புராணம் - குரவலிங்கர். திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - பட்டினத்துப் பிள்ளையார். திருவிடைமருதூரந்தாதி - கடிகை முத்துப் புலவர், 1665 திருவிடைமருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 1815 - 1875. திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந் தாதி - சபாபதி நாவலர், 1844 - 1903. திருவிடையூர் தல புராணம் - அசலாம் பிகை அம்மாளும் குழந்தை வேலுப் பிள்ளையும் (கூடலூர் 1899.) திருவியலூர்ப் புராணம் - வேலு சாமிக் கவிராயர், (1934.) திருவிரட்டை மணி மாலை - நம்பி யாண்டார் நம்பி, 10ஆம் நூ. திருவிரட்டை மணி மாலை - காரைக் காலம்மையார், 6ஆம் நூ. திருவிரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் - மார்க்கசகாய தேவர். திருவிரிஞ்சைப் புராணம் - சைவ எல் லப்ப நாவலர், (உருதிரோற் காரி) திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - மார்க்க சகாயர், 18ஆம் நூ. (இரத்தாட்சி). திருவிருதைக் கலம்பகம் - மு. பார்த்த சாரதி நாயுடு. (1914.) திருவிருத்தம் அப்பிள்ளையுரை - அப்பிள்ளை. திருவிருத்த ஈட்டரும்பத விளக்கம்-* திருவிருத்த வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை. திருவிருத்த வியாக்கியானம் - பர கால சுவாமி. திருவிருத்த வியாக்கியான வரும்பத விளக்கம் - அப்பு. திருவிரும்பூளைக் கோயிற் பெருமை - சுவாமி வேலாயுதம் பிள்ளை, (1930) திருவிளையாடல் கீர்த்தனை - (1888)* திருவிளையாடல் சுந்தரமாலை - (1888)* திருவிளையாடல் நாடகம் - கிருட் டிண பாரதி, திருநயம் (மசூலிப் பட்டினம் 1889.) திருவிளையாடற் கருணைத்திரு விருத்தம் - * திருவிளையாடற் கலிவெண்பா - பரஞ்சோதி முனிவர். திருவிளையாடற் கீர்த்தனம் - சுப்பிரமணிய பாரதி, மாழவபுரி சுந்தர ராமையரின் புதல்வர், (1906.) திருவிளையாடற் பயங்கர மாலை - (1887)* திருவிளையாடற் புராண சங்கிரகம் - சண்முகம் பிள்ளை, பாளையங் கோட்டை வேங்கடாசலத்தின் புதல்வர், (1901.) திருவிளையாடற் புராணம் - பரஞ் சோதி முனிவர், 16ஆம் நூ. திருவிளையாடற் புராணம் - வேம் பத்தூரர், 12ஆம் நூற். திருவீங்கோய் மரகதாசலலீசர் பதிகம் - மாரியப்பப் பிள்ளை, (மு. ரா. கந்த சாமிக் கவிராயர், 1907.) திருவுசாத்தானத் தோத்திரம் - அழகிய சிற்றம்பல தேசிகர். திருவுந்தியார் - திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார், 12ஆம் நூ. திருவுலாப்புறம் - இது நச்சினார்க் கினியர் மேற்கோளெடுத்தாண்ட நூல்களு ளொன்று, காலம் - ? திருவுலா மாலை - நம்பியாண்டார் நம்பி, 10ஆம் நூ. திருவுளப்பத்து - * திருவுறந்தை காந்திமதியம்மன் பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. திருவுறந்தைப் புராணம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவெண்காட்டடிகள் பதிகம் - ஞானசித்த சுவாமிகள், (1906) திருவெண்காட்டடிகள் வரலாறு - வேலாயுத முதலியார், 19ஆம் நூ. பிற். (1886). திருவெண்காட்டுப் புராணம் - எல்லப்ப நாவலர், 16ஆம் நூ. திருவெண்காட்டுப் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, (விக்கிரம்) திருவெண்பா - ஐயடிகள் காடவர் கோன் - ? திருவெம்பாவை - மாணிக்கவாசகச் சுவாமிகள். திருவெவ்வளூர் அந்தாதி - நாராயண சாமிப் பிள்ளை (1868). திருவெவ்வுளந்தாதி - நாராயண தாசர். திருவெவ்வுளூர்ப் பதிற்றுப் பத்தந் தாதி - வரதராசப் பிள்ளை. திருவெழுக்கூற்றிருக்கை - திரு மங்கை மன்னன். திருவெழு கூற்றிருக்கை - நக்கீரர், கி.பி. 10ஆம் நூ. திருவெழு கூற்றிருக்கை வியாக்கி யானம் - பெரியவாச்சான் பிள்ளை. திருவெள்ளூர்ப் புராணம் - சொக்க லிங்கப் புலவர், (1927.) திருவேகம்பமாலை - பட்டினத்தார். திருவேகம்ப முடையார் திருவந்தாதி - பட்டினத்தடிகள். திருவேகம்பர் அந்தாதி - சிவஞான முனிவர், மறைவு 1785. திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு - சிவஞான முனிவர், மறைவு 1785. திருவேகாதசமாலை - நம்பியாண் டார் நம்பி, 10ஆம் நூ. திருவேங்கடக் கலம்பகம் - முத் தமிழ்க் கவி வீரராகவ முதலியார், 19ஆம் நூ. திருவேங்கட சதகம் - நாராயணபாரதி, 18ஆம் நூ. முற். திருவேங்கடத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17ஆம் நூ. திருவேங்கடத்தல புராணம் - வீரராகவ ஐயங்கார் (1887). திருவேங்கட மாலை - இராமன் செட்டி, (யாழ்ப்பாணம் 1886) திருவேங்கடமாலை - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 17 ஆம். நூ. திருவேங்கட மாலை - பிள்ளை லோகாசாரியர், 16ஆம் நூ. திருவேங்கடமுடையான் பஞ்ச ரத்தினம் - முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார், 19ஆம் நூ. திருவேங்கட மும்மணிக்கோவை - திம்மப்ப அந்தணனார் (1934) திருவேங்கட வருக்கமாலை - வேங்கடாசலதாசர் (1880). திருவேங்கட வுலா - * திருவேரக நான் மணிமாலை - சுப்பி ராயபிள்ளை, (சர்வசித்து). திருவேரக முருகர் பதிகர் - செல்லையா பிள்ளை, மானிப்பாய் (கொழும்பு, 1907) திருவேரக யமகவந்தாதி - வேலை யர், (1912.) திருவேரக மான்மிய சங்கிரகம் - சுப்பிரமணிய முதலியார், (1889)* திருவேரக வருக்கமாலை - வே. இராமநாதன் செட்டியார், (விக்கிரம). திருவேற்காட்டுப் புராணம் - ? திருவையாறு ஆட்கொண்டேசர் பதிகம் - பொ. சாமிநாத தேசிகர், (1927). திருவைகாவூர்ப் புராணம் - கவித் தலம் வேலையதேசிகர், (கும்ப கோணம், 1894.) திருவையாற்றந்தாதி - தண்டபாணி சுவாமிகள். திருவையாற்றுப் புராணம் - ஞானக் கூத்தர், 16ஆம் நூ. திருவையாற்றுத் தலவரலாறு - (தருமபுர ஆதீனம் 1941.) திருவொற்றியூ ரொருபா வொரு பஃது - பட்டினத்துப் பிள்ளையார். திருவொற்றியூர்த் தலமான்மியம் - சிவானந்த யதீந்திரர், (1936). திருவொற்றியூர் தியாகேசர் பதிகம் - முனிசாமி முதலியார், சிறுமணவூர், (சென்னை, 1892.) திருவொற்றியூர் திரிபுர சுந்தரிமாலை - (1875).* திருவொற்றியூர்ப் பதிற்றுப் பத்தந் தாதி - கனகசபை நாயகர், (1880.) திருவொற்றியூர் புராணம் -திருவொற் றியூர் ஞானப்பிரகாசர், 16ஆம் நூ. திருவொற்றியூர் முருகன் மும்மணிக் கோவை - வேதாசலம் பிள்ளை (மறைமலையடிகள்) (1900). திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம் - ? (பிரசோற் பத்தி). திருவோத்தூர் இளமுலையம்பிகை யந்தாதி - வி. சாமிநாதபிள்ளை, (1928.) திரௌபதை சத்தியபாமா சம்வாதம் - சுந்தரராமையர் பதித்தது. சென்னை (1901.) தில்லை கற்பக விநாயகர் வெண்பா வந்தாதி - சிதம்பரஞ் செட்டியார் (குரோதன.) தில்லைக் கலம்பகம் - இரட்டையர். தில்லைச் சிவகாமி சவுந்தரி திரு விரட்டை மணிமாலை - பொன் னம்பல தாசர், பாதபூசை அம்பலத் தாடும் சுவாமி ஆதீனம், சிதம்பரம் 1895.) தில்லை சிவகாம சவுந்தரி திருநாமா வளி - பொன்னம்பலதாசர், பாத பூசை அம்பலத் தாடும் சுவாமி ஆதீனம் சிதம்பரம், (சிதம்பரம் 1895.) தில்லைத் திருவாயிரம் - தண்டபாணி சுவாமி (1889)* தில்லை யமக வந்தாதி - தில்லைவளாகம் வீரகோதண்ட ராமசாமி உலா - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், (1902). தில்லை வெண்பா மாலை - குமார வேல் முதலியார், (1876) தில்லை மூவாயிரம் - முருகதாச சுவாமிகள், 1840 -99. திவாகரம் - திவாகரர், 10ஆம் நூ. திவிட்ட குமாரன் கதை அல்லது வசன சூளாமணி - சி. வை. தாமோதரம் பிள்ளை, (சென்னை 1889.) திவ்விய சூரிகாதார்த்த வர்ணணம் - சீனிவாசாசாரியர். திவ்விய ஞானபோதம் - தி.மு. மாணிக்கம் பிள்ளை, (1935.) திறான்யவால் யுத்தக் கும்மி - வேலுப் பிளை (கொழும்பு 1902) தினக் கிராமாலங்காரச் சுருக்கம் - இராமலிங்க தேவர் (1907.) தீ தீட்சை விதி - இரசவாதம் யோகம். தீநெறி விளக்கம் - மகதூம் மகமத் இபின் மகதூம பிள்ளை, (சென்னை 1892.) தீர்க்க தரிசிகள் சரித்திரக் கொத்து - C.R. சீனிவாச ஐயங்கார் ( 1925.) தீர்த்தகிரி புராணம் - எல்லப்ப நாவலர், 17ஆம் நூ. (1870). தீர்த்தகிரீசுவரர் பதிகம் - (1880)* தீனதயாளு - நடேச சாத்திரி (சென்னை 1902). து துகளறு போதக் கட்டளை - இந்நூல் சைவ சமயத்தைச் சார்ந்தது. சீகாழி சிற்றம்பலநாடிகளின் சீடர்களில் ஒருவர் தமது ஆசிரியர் தமக்குப் பதி பசு பாசங்களின் தன்மைகளை எடுத்துக் காட்டித் தம்முடைய அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத் தை விளங்கச் செய்தாரென்னும் விஷயத்தை இதில் நன்கு விளக்க மாகக் கூறியுள்ளார். வசன நடை யில் ஆனது. துகளறுபோதம் - சிற்றம்பலநாடிகள், 15ஆம் நூ. துக்காராம் சுவாமிகள் சரித்திரம் - (1887). துடிநூல் - இராமநாதர், 19ஆம் நூ. துதிமஞ்சரி - பாண்டித்துரைத் தேவர், - (1911). துத்தி நாமா என்னும் கிளிக்கதை - முகமத் சாதிரி, (சென்னை 1883). தும்பிப் பாட்டு - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.ப. 458) தும்மல் நூல் - சோதிடம். துய்ய கேரளம் - அகத்தியர், (1877).* துய்ய நடை - Spaulding (2ஆம் பதிப்பு யாழ்ப்பாணம் 1842). துரியாதீதக் கட்டளை - வேதாந்தம். துருவ சரித்திர கீர்த்தனை - சேஷம் மாள், கும்பகோணம், (1891.) துருவ தாசர் சரித்திரம் - குருசாமி சாதன், (1869).* துரௌபதி குறம் - புகழேந்திப் புலவர் (1880).* துலாக்காவேரி புராணம் - சடகோபா சாரியார் (1889.) துரோண பர்வாததாத்பரிய சந்திரிகை - சீலை சீனிவாசாசாரியர். துரோபதை குறம் - * துரோபதை துயிலுரி நாடகம் - * துவாதச லேகியம் - கொங்கணவர். துளசிதாசர் நாடகம் - * துறைசைக் கலம்பகம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, 19ஆம் நூ. துறைசைக் கோவை - சுப்பிரமணிய முனிவர், 18ஆம் நூ. பிற். துறைசைச் சிலேடை வெண்பா - பொன்னுச்சாமி செட்டியார், (1926.) துறைசை சுப்பிரமணிய தேசிகர் நான் மணிமாலை- ஆதிமூலப்பாவலர், (விய). துறைசை மடத்துத் தம்பிரான்மார் களின் பரம்பரை - * துறைசை வெண்பா - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. துன்னெறி விலக்கு - பிலிப்பு (யாழ்ப்பாணம் 1844). தூ தூப்புல் பிள்ளையீடுபாடு - வைணவம். தூமநூல்-கருணானந்த சுவாமிகள் (1874)* தெ தெய்வசிகாமணி மாலை - கிறித் துவம் தெய்வச்சிலைப்பெருமாள் வாகன மாலை - தோத்திரம். தெய்வச்சிலையான் திருப்புகழ் - * தெய்வச்சிலையான் துதி - தெய்வச்சிலையான் வண்ண விருத்தம் - தெய்வச்சிலையான் வாகன மாலை - தெய்வச்சிலையான் விறலிவிடுதூது- தெய்வச் சிலையார் விறலி விடுதூது - குமாரசுவாமி அவதானி 1936. தெய்வத் திருவாயிரம் - முருகதாச சுவாமிகள், 1840 - 99. தெய்வப் பரீட்சை - இது இந்து மத கடவுளர்கள் வரலாற்றை ஆராய்ந்து கண்டிக்கும் கத்தோலிக்க நூல், (புதுவை 1846). தெய்வானை புராணம் - நல்லாப் பிள்ளை, 18ஆம் நூ. முற். தெய்வீக புராணம் என்னும் திருக் கோவலூர் புராணம்-? (கும்ப கோணம் 1901.) தெளிசிங்கர் துதி - * தென்சேரிப் புராணம்அம்மையப்பர்-? தென் திருப்பதி புராணம் - விரூபாக் சிலிங்கையர், (சென்னை 1890.) தென் திருப்பேரை திருக்கோளூர் திருப்பணி மாலைகள் - (எ°. வையாபுரிப் பிள்ளை 1933). தென் திருப்பேரைத் திருப்பணி மாலை - இந்நூல் தென் திருப் பேரையென்னும் திருமால் கோயி லில் எழுந்தருளி யிருக்கும் மகர நெடுங்குழைக் காதரென்னும் திரு மாலின் கோயில் மண்டபம் இரதம், வாகனம், பாதம் முதலி யவற்றை இன்னின்னார் செய்து தவின ரெனக் கூறுவது. திரு மேனிக் கவிராயரியற்றியது. தென்னாசாரிய பிரபாவ கண்டனம் - தென்னாலு ராமன் கதை மொழி பெயர்ப்பு - நடேச சாத்திரி (1900). தென்னாலுராமன் கதை - தாண்ட வராய முதலியாரின் கதாசிந்தா மணியில் வெளி வந்தது, (1875). தென்னிந்திய புகையிரதக் கும்மி - வீரபத்திர முதலியார் (1870)* தென்னிந்திய புகையிரத வழி நடைப் பதம் - சகநாத முதலியார், (1887)* தென்காசி உலோகாம்பிகை பேரில் பசனைக் கீர்த்தனை - நடேச பாரதி. தென்காசி விசுவநாதர் கோயில் வரலாறு - (1944). தே தேச நிர்ணயம் - * தேச வழமை - கென்றி பிரான்சி° முத்துக் கிருஷ்ணா (கொழும்பு 1862) தேசிக நூற்றந்தாதி - மன்னப் பங்கார். தேசிகப் பிரபந்தம் - அனந்தபாரதி ஐயங்கார், 1786 - 1846 தேசிகப் பிரபந்தம் - வெங்கடநாத வேதாந்தாச்சாரியார். தேசிகமாலை - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கியம், உதயணன் கதை போல்வது (யா.வி.ப. 186) தேசிகர் நூற்றந்தாதி - கந்தாடை மன்னப்பங்கார். தேசிங்குராச விலாசம் - மதுரை முத்து கவி, (1869).* தேசிங்குராசன் கதை - புகழேந்திப் புலவர், (1869).* தேசிங்குராசன் நாடகம் - வீரபத்திர ஐயர், (சென்னை 188). தேசியவிநாயகர் பிள்ளைத் தமிழ் - கணபதி ஆச்சாரி, 1845 - 1928. தேசிய கீதங்கள் - சி. சுப்பிரமணிய பாரதி. தேம்பாவணி-வீரமாமுனிவர், 1680-1746 தேம்பாவணி வசன காவியம் - ச.க. இராகவ முதலியார், (1888). தேரூர்ந்த நாடகம் - பெருமாளையர் தேரூர்ந்த புராணம்- இலட்சுமி நாராயணன் தேரூர்ந்த வாசகம் - சரித்திரம். தேரையர் வைத்திய காவியம் 1500 - தேரையர் (1910). தேரையர் வைத்தியம் 1001 - தேரை யர், 1888). தேவகோட்டைத் தலபுராணம் - ஆறுமுகநாவலர், 1823 - 1879 தேவசகாய சிகாமணி மாலை - தேவ சகாயம் பிள்ளை, (யாழ்ப்பாணம் 1897). தேவசகாயம் பிள்ளை வாசகப்பா - முத்தையாப் புலவர், (1894). தேவதையார் கதை - * தேவநல்லூர்த் தலவரலாறு - இ.மு. அருணாசலம், (1942). தேவப்பீரசையின் திருக்கதை - கபிரியல் பாச்சிக்கோ, யாழ்ப் பாணம் (1885) கூழங்கைத் தம்பி ரான் இப்பெயர் தாங்கிக் கிறித்தவ ராயிருந்தார் போலும். தேவ மாதா அம்மானை - ? (யாழ்ப்-பாணம் 1893). தேவலோகக் கிரிமினல்கே° - சதாவதானி செய்கு தம்பிப் புலவர். தேவாங்கர் புராணம் - மாம்பழக் கவிச் சிங்க நாவலர், (சென்னை 1896). தேவார ஒளி நெறிக் கட்டுரை சம்பந்தர் - வ.சு. செங்கல்வராயப் பிள்ளை, (1944). தேவார சிவத்தல வெண்பா - வேலு சாமிப் பிள்ளை, (1921). தேவாரத் திருமுறைத் தொகுதி - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (1943). தேவாரப் பண் சுர அமைப்பு - இ. அப்பா சாமி ஓதுவார் மூர்த்தி, (1928). தேவாரப் பண்கள் - S. பொன் னோதுவா மூர்த்திகள். தேவார வைப்புத்தல விளக்கம் - பு.வே. சுப்பராய முதலியார், (1906). தேவாரம் - சம்பந்தர், அப்பர், சுந்தரர். தேவாலய வழிபாட்டு விளக்கம் - கோமதி அம்மாள், (1944). தேவிகாலோத்தர மகத்துவம் - இது தேவிகாலோத்தரத்தின் பெரு மையை, தீர்த்தகிரிப் புராணம், உப தேச மாலை, பதி பசு பாச விளக் கம், திருவாரூர்ப் புராணம் முதலிய நூல்களின் மேற் கோள்காளாற் சாதிப்பது. இதைத் தொகுத்தவர் பெயர் முதலியன விளங்க வில்லை. தேவி காலோத்தரம் - இது சிவாகமம் இருபத்தெட்டின் சாரமாயுள்ள ஞானசாரப் போதகப் பாடல் 85-வது சூத்திரத்தைத் தமிழில் 69 செய்யுட்களாகத் தேவி காலோத் திர மென்ற பெயருடன் மொழி பெயர்த்ததாகும். இதற்கு ஒரு விருத்தியுரையுண்டு. இவ்வரிய நூலை இயற்றியவர் பெயரும், இதற்கு விருத்தியுரை எழுதியவர் பெயரும் விளங்க வில்லை.இது சரவண தேசிகர் செய்ததாகவும் வழங்கும், 19ஆம் நூ. தேவி சந்திரப் பிரபா (நாவல்) - நட ராசையர், மருதூர், (சென்னை 1902). தேவி துதி - * தேவி மான்மியம் - சோமநாத பாரதி, (1886). தேவி யகவல் - * தேவி யந்திர மாலிகை - கமலமூர்த்தி மௌன குரு சுவாமிகள், (சோப கிருது). தேவைத்திரிபந்தாதி - சின்னைய செட்டியார், 19ஆம் நூ. பிற். தேவையுலா - பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் (உ. வே. சாமிநாதை யர் பதித்தது 1902). தேள்கடி வைத்திய முறைகள் - பு.வே. இராமமூர்த்தி, (1939). தேனீமலைச் சண்முகக் கடவுள் திருப்பதிகம் - செல்லையாச் செட்டியார் (1927). தை தைத்திரேய உபநிடதம் (மொழி பெயர்ப்பு) சீனிவாசாசாரிய தாதா சாரிய சுவாமி, (சென்னை 1897). தைல முறைகள் - வைத்தியம்.* தைல வகை - வைத்தியம்.* தைலவகைச் சுருக்கம் - தேரையர். தொ தொடு குறி சாத்திரம் - சகாதேவர், (1892). தொண்டர் திருவந்தாதி - நம்பி யாண்டார் நம்பி, 11ஆம் நூ. தொண்டைமண்டல சதகம் - படிக்காசுப் புலவர், 1686 - 1723 தொண்டைமான் கதை - * தொண்ணூற்றாறு தத்துவம் முதலியன - இதில் 96 தத்துவங் கள் இன்னவென்பதும், கீடமார்க் கம், பிபீலிகா மார்க்கம், விகங்க மார்க்கம் முதலியவற்றின் தன்மை களும் விளக்கமுறக் கூறப்பட் டுள்ளன.* தொல்காப்பிய உரை - நச்சினார்க் கினியர், 14ஆம் நூ. தொல்காப்பிய உரை - இளம்பூரணர். தொல்காப்பியச் சண்முக விருத்தி - அரசஞ்சண்முகனார் 1869 - 1914 (1905). தொல்காப்பியச் சூத்திர விருத்தி - சிவஞான முனிவர், மறைவு 1785. தொல்காப்பியச் சொல்லதிகார உரை - சேனாவரையர், 13ஆம் நூ. தொல்காப்பியச் சொல்லதிகார உரை -தெய்வச்சிலையார், 13ஆம் நூ. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - வே. முத்துச்சாமி ஐயர், (1914). தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - மு. இராகவ ஐயங்கார் (1920). தொல்காப்பியப் பொருளாதிகார உரை - பேராசிரியர், 12ஆம் நூ. தொல்காப்பியப் பொருளதிகார மேற் கோள் விளக்க அகராதி - ம.ஆ. நாகமணி, (1935). தொல்காப்பியம் - தொல்காப்பியர், கி.மு. 350. தொல்காப்பியம் சொல்லதிகாரம் விருத்தியுரையுடன் - கல்லாட னார். தொழுகை அகீகத்து விளக்கம் - வாலை பாவா சாகிப், (சென்னை 1862). தொழுகை மாலை - (1888)* தொழுகை ரஞ்சித் அலங்காரம் - துராப் முகமத் உசேன் இ°மே யில், (சென்னை 1905). தொனி விளக்கு - P.S. சுப்பிரமணிய சாத்திரிகள், (1944). தொன்னூல் விளக்கம்-வீரமாமுனிவர், (வேதகிரி முதலியார், 1831). தோ தோத்திரக் கும்மி - தெய்வசிகாமணிப் பிள்ளை, 1802 - 1846 தோத்திரச் செய்யுட்கள் - மு.ரா. அருணாசலக் கவிராயர். தோத்திரத் திரட்டு - * தோத்திரப் பதிகம் - முகமத் சுல்தான். தோத்திரப் பாமாலை - அமிர்தலிங்க சுவாமிகள், (விகுர்தி). தோத்திரப் பாமாலை-வீரமுத்தண்ண நாட்டார், (நடுக்காவேரி 1898) தோத்திரப் பிரபந்தத் திரட்டு - சிதம்பர சுவாமிகள், (புட்பரதச் செட்டியார் 1897). தோத்திர மாலை - * தோத்திர மாலை - சிதம்பர தேசிகர், 18ஆம் நூ. ந நகுலமலைக் குறவஞ்சி - விசுவநாத சாத்திரியார், 19ஆம் நூ. நகைப் பைத்தியம் - இராமசுவாமி ஐயர். இந்நூல் பெண்களின் ஆப ரணப் பைத்தியத்தைப்பற்றிக் கூறு வது, (சென்னை 1898). நக்கீரர் - ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1927). நக்கீரர் நாலடி நாற்பது - நக்கீரர், - ? நசரைக் கலம்பகம் - கிறித்துவம். நஞ்ச மகாராசன் கதை - * நஞ்சு நூல் - க.ச. முருகேச முதலி யார், சென்னை அரசாங்க வெளி யீடு (1936). நடராசப்பத்து - சிறுமணவூர் முனி சாமி முதலியார். நடராசர் துதி முதலியன - * நடன நாட்டம் - (Evils of Comedies) - 2 ஆம் பதிப்பு, (யாழ்ப்பாணம் 1842). நடனாதிவாத்திய ரஞ்சனம் - இது பாடல்கள், கூத்துகளைப் பற்றிய நூல், கங்கை முத்துப் பிள்ளை இயற்றியது (திருநெல்வேலி, 1898). நடுவேனிற் கனவு (Midsummer nights dream) - நாராயண சாமி ஐயர், (தஞ்சாவூர் 1893). நட்சத்திரப்பாடல் - சோதிடம்.* நட்சத்திர மாலை - ,,* நத்தகறொலி யாண்டவர் பிள்ளைத் தமிழ் - பிச்சை இபுறாகிம் இராவுத் தர், (1887). நந்தமண்டல சதகம் - இது நந்தன் என்னும் அரசன்மீது பாடப்பட்டது. இதற்குப் பிரமபுரி திருவேங்கடம் பிள்ளை உரை எழுதியுள்ளார். இதன் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை, (1894). நந்தனார் சரித்திரக் கீர்த்தனை - கோபால கிருட்டிணையர், (1915). நந்தன் கீர்த்தனை - கோபால கிருட்டிண பாரதியார், 19ஆம் நூ.. நந்தன் கீர்த்தனைக் கதை வரலாறு-* நந்திக் கலம்பகம் - பெருந்தேவனார் 9ஆம் நூ. நந்திதேவர் தண்டகம் - திருநந்தி தேவர், இரசவாதம். நந்திதேவர் வாத சூத்திரம் - இரச வாதம். நந்தி நூல் இரேகை சாத்திரம் - மார்க்க லிங்க சோதிடர் வெளியிட்டது. (1883). நந்தீசர் சதகம் - மத்தான் சாகிப் 19ஆம் நூ. நந்தீசுவரர் கரகைப்பா 500 - மத்தான் சாகிப் 19ஆம் நூ. நந்தீசுவரர் கைத்தாள சூத்திரம் - மத்தான் சாகிப் 19ஆம் நூ. நந்தீசுவரர் கைத்தாள சூத்திரம் 5 - மத்தான் சாகிப் 19ஆம் நூ. நந்தீசுவரர் கைத்தாள சூத்திரம் 8 - மத்தான் சாகிப் 19ஆம் நூ. நந்தீசுவரர் சூத்திரம் 100 - வைத்தியம், இரசவாதம் நந்தீசுவரர் நடுவினை - நந்தீசுவரர் பாடல் 8 - இரசவாதம் நந்தீசுவரர் பாயிரம் - நபியவதார அம்மானை - கவிக் களஞ்சியப்புலவர்; இவர் சீறாப் புராணம் பாடிய உமாறுப் புலவரின் புதல்வர். இந்நூல் 1713-ல் பாடப் பட்டது. நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. நம்ப்பத்து - தோத்திரம்.* நம்படிமார் சாதி வரலாறு - * நம்பாடுவான் சரித்திரம் - * நம்பாணனுரை - * நம்பியாண்டர் நம்பியந்தாதி -நம்பியாண்டார் நம்பி. நம்பியுலா - * நம்பிள்ளை யுபகார மிருதி - வைணவம்.* நம்பிள்ளை ரகசிய திரயம் - நம் பிள்ளை. நம்பூதிரிமார் சாதி வரலாறு - * நம்மாழ்வாரூஞ்சற் கவிதை - * நம்மாழ்வார் தாலாட்டு - (1900). நம்மாழ்வார் திருக்கோலக்கவி - * நம்மாழ்வார் துதி - * நம்மாழ்வார் பதம் - * நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ் - ? (1932). நயினை நீரோட்டக யமக வந்தாதி - நாகமணிப் புலவர், 1891 - 1933. நரசிங்கப் பத்து - ஞான சம்பந்தர். நரசைக் கலம்பகம் - சாமிநாத பிள்ளை, 18ஆம் நூ. நரவாகன சரிதம் - எ°. சோமசுந்தர தேசிகர், (1935). நரி விருத்தம் - திருத்தக்கதேவர், 19ஆம் நூ. (1902) நல்லதங்காள் கதை - புகழேந்திப் புலவர், (1869). நல்லதங்காள் நாடகம் - ஐயாக் கண்ணுவின் புதல்வர் வையாபுரிப் பிள்ளை, (சென்னை 1875). நல்லறிவு - உவின்சுலோ (யாழ்ப் பாணம், 1844). நல்லாறன் மொழிவரி - இறந்துப்பட்ட ஒரு இலக்கண நூல் (யா. வி. ப. 537) நல்லிசைப் புலமை மெல்லியலார் - ரா. இராகவ ஐயங்கார், 1947 நல்லூர்க் கந்தசுவாமி கிள்ளைவிடு தூது - சந்திரசேகர பண்டிதர் 19ஆம் நூ. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவை - செவ்வந்திநாத தேசிகர், 1907 - 1932. நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் - அப்புக்குட்டி ஐயர், 18ஆம் நூ. நல்லூர்ப் புராணம் - வேலைய தேசிகர், 17ஆம் நூ. நல்லைக் கலித்துறை - குமாரசுவாமி முதலியார், 19ஆம் நூ. பிற். நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் - சபாபதி நாவலர், 1844 - 1903. நல்லை வடிவேலர் ஆசிரிய விருத்தம் - வண்ணைநகர் வைத்தியலிங்க பிள்ளை, (யாழ்ப் பாணம் 1892). நல்வழி - ஒளவையார், 12ஆம் நூ. நவகதிர் நூல் - இது ஆசீவக மத நூல். இது நீலகேசித் திரட்டு உரையாற் தெரிகிறது. இது இன்ன மொழியி லுள்ளதெனத் தெரியவில்லை. (உ.வே.சா.) நவக்கிரக உச்ச நீசம் அறியும் வகை - சோதிடம்.* நவக்கிரக குணம் முதலியன - சோதிடம்.* நவக்கிரக சங்கிரகம் - சோதிடம். நவக்கிரக சிந்தாமணி அல்லது சாதக சூடாமணி - மார்க்கலிங்க சோதி டர், (1871). நவக்கிரக தோத்திரம் - ? (1936). நவக்கிரக நிலை - சோதிடம். நவக்கிரக நூல் சித்தாந்தம் - மதுர நாயகம் பிள்ளை, (1883). நவக்கிரக நூல் - மதுர நாயகம் பிள்ளை, (1883).* நவக்கிரகாம்சம் - மதுர நாயகம் பிள்ளை, (1883).* நவசங்கை விவேகம் - இது சாந்தோக்கிய உபநிடதத்திற் கூறி யுள்ள நவசங்கியா விவேக மென் னும் விஷயத்தை உத்தாலகர் தன் மகனாகிய சுவேத கேதுவிற்குக் கூறுவதாக அமைந்துள்ளது. இந் நூல் அத்துவைத வேதாந்த விஷய மானது. இதை இயற்றியவர் பெயர் முதலியன விளங்கவில்லை.* நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ் - அண்ணாமலை ரெட்டியார் 19ஆம் நூ. நவநீத சாரம் - அப்பாசாமிப் பிள்ளை, (சென்னை 1859). நவநீதப் பாட்டியல் - இது பிரபந்தங் கள் பாடும் முறையையும் அவற் றுக்குரிய பொருத்தம் முதலிய இலக்கணங்களையும் கூறுவது. கட்டளைக் கலித் துறையால் அமைந்தது. நவநீதன் இயற்றியது. நவரத்தின மாலை - பிள்ளை உலோகாச் சாரியர். நவரத்தின வைத்திய சிந்தாமணி - இது ஞான வெட்டியின் பொழிப்பு எனப் படுகிறது. (சென்னை 1889). நவரத்தின வைத்திய சிந்தாமணி - திருவள்ளூர் செங்கல்வராயர் பதித்தது, (1889). நவரேகைப் பிரமாணம் - * நவவித சம்பந்தம் - பிள்ளை உலோ காச்சாரியர். நளகூளப்பன் காதல் - அட்டாவதானி, 18ஆம் நூ. நளச் சக்கரவர்த்தி அம்மானை - வெண்ணிமலைப் பிள்ளை, (மதுரை 1904). நளச் சக்கரவர்த்தி அம்மானை என் னும் தமயந்தி மாலை - ஏகாம்பர முதலியார் செஞ்சி, (சென்னை 1906). நளச் சக்கரவர்த்தி கதை - (1869).* நளச் சக்கரவர்த்தியின் சரித்திரம் - ஜி.யூ. போப், (1859). நளநாடகம் - கிருட்டிணசாமிப் பிள்ளை தஞ்சை , (1883). நளவிலாசம் - தாமோதர முதலியார், (1872).* நளவெண்பா - புகழேந்தி, 13ஆம் நூ. நற்குல தெய்வம் - P. சம்பந்த முதலி யார், (1922). நற்சமயம் (Woodward) - (யாழ்ப்பாணம் 1842). நற்புத்தி (கிறித்துவம்) - (இரண்டாம் பதிப்பு யாழ்ப்பாணம் 1844). நற்றத்தம் - நற்றத்தனார், - ? நற்றிணை - (சங்ககாலம்) இது 175 சங்கப் புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்களையுடையது. இதைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி (கி.பி. 225). இதிலுள்ள அகவற் பாக்கள் ஒன்பதடிச் சிறுமையும் 12 அடிப் பெருமையுமுள்ளன. இதற்குப் பின்னத்தூர் நாராயண சாமி ஐயர் சிறந்த உரை செய்துள்ளார். நற்றிணை உரை - பின்னத்தூர் நாரா யண சாமி ஐயர், 1862 - 1914. நன்மதி தீபம் - ? நன்றியறியா மகன் (நாவல்) - சீனி வாச ஐயங்கார், K.R. (சென்னை 1901). நன்னூல் - பவணந்தி முனிவர், 13ஆம் நூ. நன்னூல் ஆங்கில மொழி பெயர்ப்பு - இலசரசு, மறைவு 1925. நன்னூல் இலகு போதம் - ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை, (1905). நன்னூல் மயிலைநாதர் உரைப் பதிப்பு - உ.வே. சாமிநாதையர், (1942) நன்னூல் விருத்தி - சங்கர நமச்சி வாயப் புலவர். 17ஆம் நூ. பிற். (ஆறுமுக நாவலர் பதிப்பு 1845). நன்னூற் காண்டிகை - இராமானுசக் கவிராயர் 19ஆம் நூ. (1845). நன்னூற் காண்டிகை - விசாகப் பெருமாளையர், 19ஆம் நூ. (1875). நன்னூற் காண்டிகை உரை - ஆறுமுக நாவலர் (1880). நன்னூற் காண்டிகை உரை - சடகோப ராமானுசாசாரியரும் கிருஷ்ணமாச்சாரியரும் (3ஆம் பதிப்பு 1900). நன்னெறி - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. நன்னெறிக் கதாசங்கிரகம் - சதா சிவம் பிள்ளை (ஆணல்), 19ஆம் நூ. பிற். (1893). நன்னெறி சத்திய பாஷா அரிச்சந்திர விலாசம் - அப்பாவு பிள்ளை, (சென்னை 1896). நன்னெறி நீதிக் கதைகள் - அரி கரய்யர், (1937). நா நாகநாட்டு இளவரசி - V.S. வேங்கட ராமன் (1934). நாகானந்தம் - (தமிழ் மொழி பெயர்ப்பு) சடகோபாச்சாரியர் (சென்னை 1900). நாகையந்தாதி - செய்கு அப்துல் காதிறு நயினார் அலிம், 19ஆம் நூ. நாசிகா சூர்ணம் - வைத்தியம்.* நாசிகேது சரித்திரம் - * நாடக நூல் - இது நச்சினார்கினியர் மேற்கோளெடுத்தாண்ட நூல்களு ளொன்று. நாடகமேடை நினைவுகள் - P. சம்பந்த முதலியார், (1932). நாடகவியல் - வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், 1871-1903 (1897). நாடி சாத்திரம் - தன்வந்திரி (1871).* நாடி சிந்தாமணி - காசிவிசுவநாத முதலியார், (1870).* நாடி நிதானம் முதலியன - * நாடி நூல் - * நாட் பலனறியும் வகை - சோதிடம்* நாட்டியல்பு - இரச வாதம்.* நாதாந்தசாரம் - இந்நூல் அத்வைத வேதாந்த விஷயமானது. பிரண வத்தின் சாரமான பொருள் இன்ன தெனத் தெரிவிப்பது. நூலாசிரியர் இன்னாரெனத் தெரியவில்லை.* நாதாந்த தர்சனம் - * நாதாந்தத் திறவுகோல் - இதில் நாத தத்வாதீதமான ஈசுவர சொரூபமும் அதைத் தியானித்து நோக்கி அனு பவிக்கும் விதம் முதலியனவும் விளங்கக் கூறப்பட்டிருக்கின்றன. இதை இயற்றியவர் பெயர் புலப்பட வில்லை.* நாதாந்த நோக்கம்-இந்நூல் வேதாந்த விஷயமானது. யோகத்திலமர்ந்து ஈசுவரனை நோக்கும் விதமும், அவ்வாறு நோக்கினோரடையும் பயனும், ஈசுவரனுடய நிலையும் இதில் விளங்கக் கூறப் பெற்றுள்ளன.* நாதாந்தப் பத்து - இது உலக முழுதும் நாதாந்தமான சிவமயமாயுள்ள தென்றும் அதனையறியச் சற்குரு வை அடைந்து உபதேசம் பெற வேண்டுமென்றும் கூறுவது. இதில் 10 பாடல்களுண்டு. இதனை இயற் றியவர் - ? நாதாந்தப் பிறப்பு - ஞானம். நாதையன் விறலிவிடுதூது - * நாமகளிரட்டைமணி மாலை - கருப்பையாபாவலர், 20ஆம் நூ. நாயர்கள் வரலாறு - * நாயன்மார் திருமரபு - * நாய்ச்சியா ரூசல் - * நாய்ச்சியார் திருமொழி - ஆண்டாள். நாய்ச்சியார் திருமொழி வியாக்கியான அரும்பத விளக்கம் - * நாரத சரிதை - ஒரு சைன நூல் புறத் திரட்டில் அறியவருவது. நாராயண உபநிடதம் - வில்லவபரம் பல் குப்புச்சாமி ஐயர் மொழி பெயர்ப்பு (சென்னை 1898). நாராயண சதகம் - நாராயணபாரதி, 18ஆம் நூ. முற். நாராயண பரத்துவம் உரையுடன்- * நாலடி நாற்பது - இறந்துபட்ட ஒரு தமிழ் இலக்கணநூல் நக்கீரர் (யா. வி.ப. 32) நாலடி நானூறு - இது நக்கீரர் செய்த ஒரு நூல் (யா.வி.ப. 217) நாலடியாருக்குப் பாலியல் வகுப்பு உரை - பதுமனார், 9ஆம் நூ. நாலடியார் (7ஆம் நூ.) - இது 400 வெண் பாக்கள் அடங்கிய ஒரு நூல். இதில் அறத்துப்பால் 13 அதிகாரம், பொருட்பால் 26 அதிகாரம், காமத் துப்பால் ஒரு அதிகாரமுமாக 40 அதிகாரங்கள் உள்ளன. இப்பாடல் கள் பல சைன முனிவரால் ஒரே காலத்திற் செய்யப்பட்டனவென் னும் கதை வழங்குகின்றது. ஒரு வரே இந்நூலைச் செய்தார் என்னும் கருத்தும் உளது. நாலடியார் ஆங்கில மொழி பெயர்ப்பு - போப்பையர், 1820 - 190 7. நாலடியார் நயனப்ப முதலியார் உரை - (குரோதி). நாலடியார் வேதகிரி முதலியாருரை - (1928). நாலடியார் வை. மு. சடகோப ராமானுசருரை - (1914). நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - ஆழ்வார்கள். நாலாயிர திவ்வியப் பிரபந்த சங்கிரகம் - * நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தனியன் - * நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தனி யன் வியாக்கியானம் - பிள்ளை உலோகமசீயர். நாலாயிரப் பிரபந்த விசாரம் - பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 20ஆம் நூ. (1905). நாலாயிரப் பிரபந்தம் பொய்கையார் 100 பூதத்தாழ்வார் 100 பேயாழ்வார் 100 திருமழிசை ஆழ்வார் 216 நம்மாழ்வார் 1296 மதுரகவியாழ்வார் 11 குலசேகர ஆழ்வார் 105 பெரியாழ்வார் 473 ஆண்டாள் 173 தொண்டரடிப் பொடி ஆழ்வார் 55 திருப்பாணாழ்வார் 10 திருமங்கை யாழ்வார் 1253 திருவரங்கத்தமுதனார் 108 4000 நாலுகாண்ட வைத்திய காவியம் -அகத்தியர், (1985). நாலுதண்டிகள் விவாதம் - வைணவம்.* நாலுமந்திரி கதை - பாஞ்சால நாதர்* நாலுமந்திரி கதை - அட்டாவதானம் கிருட்டிணையங்கார், 18ஆம் நூ. பிற். (1869). நாலுமந்திரி கும்மி - கருணானந்த சாமி, (1870). நாலுமுதல் 6 திருமுறைகள் - திருநாவுக்கரசர் (அப்பர்), கி.பி. 570 - 655. நாலுவார்த்தை - வைணவம்* நால்வர் நான்மணி மாலை - துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. நாவாய் சாத்திரம் - சிற்பம்* நாற்கரணவுபதேசம் - இதில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களின் தன்மைகளும் அவற்றை ஒழிக்கும் உபாயங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 27 விருத்தங்களையுடையது. உலகப்ப தம்பிரானியற்றியதெனப் பாயிரத் தால் தெரிகிறது. நாற் சிறு கதைகள் - சிவ கண்ணு சாமிப்பிள்ளை, (1934). நானாதிவாத்திய ரஞ்சனம் - கங்கை முத்துப்பிள்ளை, அம்பலவாண நாவலர் பார்வையிட்டு வெளியிட் டது, (1898). நானார்த்த தீபிகை - கவிராயர் முத்து சாமிப்பிள்ளை (1936.) நான்மணிக் கடிகை - விளம்பி நாகனார். 7ஆம் நூ. ? நான்மணி மாலை - சரவணப் பெருமாள் ஐயர், 19ஆம் நூ. நான்முகன் திருவந்தாதி வியாக்கி யானம் - பரகால சுவாமி. நான்முகன் திருவந்தாதி - சீனிவாச அரங்கநாதர். நி நிகண்டு - * நிகமனப்படி - பெரிய வாச்சான் பிள்ளை வைணவம். நிகாரண திமிரபானு - முத்துக் குமார பிள்ளை, (கும்பகோணம், 1888). நிகார நிகாரண நிக்கிரகம் - இந்துமத கண்டன சபை திரிகோண மலை, (யாழ்ப்பாணம் 1891.) நிகார நிகாரணம் - மிலேச்ச மதாந்தகார பா°கரன், (யாழ்ப்பாணம் 1891). நிசானந்த விலாசம் - திருநெல்வேலி சுந்தரசுவாமி (1904) நி°தார இரத்தினாகரம் - இராமதாசு என்பர் இந்துமதத்துக்கெதிராக வங்காளி மொழியில் செய்த பாடல் களை °கடர் தமிழில் மொழி பெயர்த்தது, (சென்னை 1851). நிட்டானுபூதி - இந்நூல் வீரசைவ மதத்தைச் சார்ந்தது. அம்மதப்படி முத்தியடைவதற்குச் சாதகமாக உள்ள பலவற்றை நன்கு விளக்கு வது. உத்தர வாதுளாகமத்தில் ஏழாம்படலத்தி லுள்ளவற்றைப் பார்வதிக்குச் சிவபெருமான் கூறிய தாக அமைந்துள்ளது. திருக்கோவி லூர் ஆறுமுகசாமிகளென்னும் வீரசைவ அந்தணர் தமிழில் மொழி பெயர்த்தாரென்று இந்நூற் சிறப்புப் பாயிரத்தால் தெரிகிறது. 16ஆம் நூ. நிட்டானுபூதி உரை - முத்துக் கிருட்டிணபிரமம், 16ஆம் நூ. நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர், 17ஆம் நூ. நிட்டை விளக்கம் - திருவாவடுதுறை அம்பலவாணத் தம்பிரான். நிதிநிசேத விவரம் - மந்திர சாத்திரம்* நித்திய கர்ம நெறி - சிதம்பரநாத முனிவர், தருமபுர. ஆ. (1927) நித்திய கன்ம நெறி - சிதம்பரானந்த முனி, (1881).* நித்திய கன்ம விதி - சிதம்பரநாத முனிவர், 18ஆம் நூ. நித்தியது சந்தானம் - துதி* நிமித்த சூடாமணியும் சகாதேவர் சாத்திரமும் - வடிவேலு முதலியார், (1888). நியதிப் பயன் - கண்ணுடைய வள்ள லார், 18ஆம் நூ. நியாச தசக வெண்பா - வேங்கடநாத வேதாந்தாச்சாரியர் வடமொழியிற் செய்த 10 சுலோகங்களைச் சீனி-வாசஐயங்கார் மொழிபெயர்த்தது, (சென்னை 1907). நியாய இலக்கணம் - சிதம்பரப் பிள்ளை (வில்லியம் நெவின்சு), 1888 நியாய தத்துவம்-நாதமுனி, 11ஆம் நூ. நியாயப் பிரகாசம் - இது இந்தி மொழி யிலிருந்து நாகரத்தின நாயகர் மொழி பெயர்த்தது, (சென்னை 1906). நியாய வாதாபாச நிராகரணம் - இராகவாச்சாரியார், சிக்கிலி நாயக் கன் பேட்டை. நிராலம்ப உபநிஷத்து - வில்லவரம் பல் குப்புசாமி ஐயர், (சென்னை 1898). நிர்மலா அல்லது ஒரு பத்திராசிரி யரின் விடுமுறை - (மொழி பெயர்ப்பு) மேஷகுமார சர்மா, (சென்னை 1907). நீ நீடூர்த்தல புராணம் - இரசை வடலை யப்பபிள்ளை, 17ஆம் நூ. நீதி அனுபவ கும்மி - சுப்பிரமணிய ஐயர், (1885)* நீதி சதகம் - வேதகிரி முதலியார், 19ஆம் நூ. நீதிசாரமஞ்சரி - முகமத் நிசாம் முகி-அல்தின் முகமது (சென்னை 1901)* நீதிசாரம் - மூக்கப்பன் (1875)* நீதிசார வாக்கியம் - இராமசாமிப் பிள்ளை, (1871)* நீதிசாரானுபவத் திரட்டு - நாகைச் சத்திய ஞானி* நீதி சிந்தாமணி-வேதகிரி முதலியார், 19ஆம் நூ. நீதி சிந்தாமணி - அரி அர உபாத்தியா யர் திரட்டிய நீதிப்பாடல் களடங்கிய விவேக சிந்தாமணி நீதி சிந்தாமணி எனவும் வழங்கும், (சென்னை 1871). நீதித்திரட்டு - * நீதி நூல் - வேதநாயகம் பிள்ளை, 1824 - 89 (1859). நீதி நூறு - முருகேச பண்டிதர், 19ஆம் நூ. பிற். (கும்பகோணம் 1885). நீதி நூற்றிரட்டு - (சென்னை 1864). நீதநெறி விளக்க கீர்த்தனம் - (1886)* நீதிநெறி விளக்கப் பதவுரை - சபாபதி முதலியார். நீதிபாலன் (நாவல்) - கோபால கிருஷ்ண ஐயர், (சென்னை 1905). நீதிநெறி விளக்கம் - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. நீதி போதம் - முத்துராமலிங்க சேது பதி, - 1787. நீதி போத வெண்பா - முத்துராம லிங்க சேதுபதி, (1869). நீதி விநோதக் கதை - முகமத் நிசாம் முகை அல்தின், (கொழும்பு 1893). நீதிமஞ்சரி தர்ப்பணம் - முருகேச முதலியார், திருமயிலை (சென்னை 1887). நீதிமொழித் திரட்டு - (Walker) (சென்னை 1841). நீதிவிவாத மஞ்சரி என்னும் தமிழ்ச் சட்டப்புத்தகம் - (சென்னை, 1901). நீதிவெண்பா - இது நீதி நூல்களி லொன்று இயற்றியவர் பெயர் முதலியன அறியப்படவில்லை. நீரஞ்சன மாலை - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. நீர்க்குறி நெய்க்குறி சாத்திரம் - தேரையர் சுப்பிரமணிய பண்டிதர், பதித்தது (1868). நீலகண்ட சாத்திரம் - மந்திரம்* நீலகண்ட சிவாசாரியர் பிரமசூத்திர சிவாத்துவித பாடியம் - காசிவாசி செந்திநாதையர், (1917). நீலகண்ட பாடிய மொழிபெயர்ப்பு - செந்திநாதையர், 1848 - 1924 நீலகண்டவாலை சூத்திரம் 50 - சூதமுனிவர், வைத்தியம்* நீலகேசி - ? 7ஆம் நூ. நீலகேசி உரை - வாமனமுனிவர், 16ஆம் நூ. நீலகேசி விருத்தி சமயதிவாகரம் - இது நீலகேசித் திரட்டின் உரை; மணிப்பிரவாள நடையிலமைந்தது; சைன மதத்தினராகிய சமயதிவாகர வாமன முனி யென்பவராலியற்றப் பட்டது. இந்நூலும், இவ்வுரையும் சிவஞான சித்தியார் பரபக்கத் துறையாசிரியருள் ஒருவராகிய திருவொற்றியூர் ஞானப்பிரகாச ருரையிற் பயின்று வருகின்றது. (உ.வே.சா.) நீலாயதாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - கிருஷ்ணசாமி உபாத்தியா யர், (சித்திர பானு). நூ நுங்கம்பாக்கம் வரசித்தி விநாயகர் பஞ்சரத்தினம் - சாம்பசிவக் கவி ராயர், (1867). நூதன அர்ச் இ°தாக்கியார் நாடகம் - ஞானப்பிரகாசம் பிள்ளை, (சென்னை 1896). நூதன பவழேந்திரி சபா - அப்பாவு பிள்ளை, (சென்னை 1893). நூதனமனைக் குறி சாத்திரம் - செஞ்சி ஏகாம்பர முதலியார், அச் சிட்டது. (சென்னை 1894). நூற்றெட்டிலக்கம் - சோதிடம்* நூற்றெட்டு உபநிடதங்கள் - ஆனந்த தீர்த்தர் மொழிபெயர்த்தது, (1887). நூற்றெட்டு உபநிடதங்கள் - சீனி வாச இராகவாசாரியர் மொழி பெயர்ப்பு, (சென்னை 1887). நூற்றெட்டுத் திருப்பதிக் கலித் துறை- நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை - வங்கீபுரத்தாராய்ச்சி* நூற்றெட்டுத் திருப்பதித் தாலாட்டு-* நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ் - குறவை இராமானுசதாசர்* நூற்றெட்டுத் திருப்பதித் துதி - * நூற்றெட்டுத் திருப்பதித்தோத்திரம் - வங்கீபுரத்தாய்ச்சி* நூற்றெட்டுத் திருப்பதி பிரபாவம் - (சென்னை 1898). நூற்றெட்டுத் திருப்பதி யடைவு - * நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி - * நூற்றெட்டுத் திருப்பதி வெண்பா - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 18ஆம் நூ. நூற்றொகை விளக்கம் - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, 1855 - 99 நெ நெஞ்சறி விளக்கம் - கணபதிதாசர், 18ஆம் நூ. பிற். நெஞ்சுபதேசம் - ஞானம்* நெஞ்சுவிடுதூது - சாந்தலிங்க தேசிகர், 18ஆம் நூ. முற்பகுதி நெஞ்சுவிடுதூது - உமாபதி சிவாசாரி யார், 14ஆம் நூ. (சென்னை 1895) நெடுநல் வாடை - இது பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரனார் பாடியது. நெடிதாகிய நல்ல வாடை என விரியும், கி.பி. 50. நெய்தற்கலி - ஆசிரியர் நல்லந்துவ னார், கி.பி. 100 நெல்லைக் குமாரசுவாமி தோத்திரம்-* நெல்லைமாநகர்ப் புராணம் - * நெல்லைவடிவுடையம்மை பதிகம்-* நெல்லைவருக்கக் கோவை - வீரை அம்பிகாபதி 16ஆம் நூ. நெல்லைவேலவருலா - சரவண முத்துப் புலவர், 19ஆம் நூ. நெற்கொழு வைரவர் பதிகம் - உடுப் பிட்டி ஆறுமுகம் பிள்ளை, (யாழ்ப் பாணம் 1889). நே நேமி நாதம் - குணவீரபண்டிதர், 12ஆம் நூ. (1903). நேமிநாதர் பஞ்சரத்தினம் - இது தீர்த்தங்கரருள் ஒருவராகிய நேமிநாதர் மீது பாடப்பட்ட துதி.* நேமிநாதர் பதிகம் - * நை நைடத மென்னும் நளச்சக்கரவர்த்தி அம்மானை - வெண்ணிமலைப் பிள்ளை சிவகங்கை, (மதுரை 1904). நொ நொண்டி நாடகம் - கந்தசாமிப் புலவர்.* நொண்டி நாடகம் - அப்துல் கரிம் சகிப், (1874). நோ நோயணுகா விதி - தேரையர், - ? நோன்பு கதை - சைனம்* ப பகல் சுக்கான் இராச்சுக்கான் கதை - சீனிவாச சாத்திரி, (1869)* பகவத் கீதார்த்த பங்கம் - பூவை கலியாண சுந்தர முதலியார், (1902). பகவத் கீதா வியாக்கியானம் - வாதி கேசரி, அழகிய மணவாள சீயர்.* பகவத்கீதை தமிழுரையுடன் - கரிசங்கால் சீனிவாசாசாரியார். பகவத்கீதை மொழி பெயர்ப்பு - நாகநாத பண்டிதர், - 1854. பகவத்கீதை வெண்பா - முத்து ஐயர் (மொழிபெயர்ப்பு) (சென்னை 1907). பகவத்கீதை (விருத்தம்) - சீபட்டர், 13ஆம் நூ. பகவத் தியான கீர்த்தனை - கோவிந்தராசு, (1869)* பகவத் விடயத் தனியன்கள் - திருமலை யாழ்வான் முதலானோர். பகையதமென்னும் படு தோஷி விலாசம் - கதிர்வேல் நாடார், (சென்னை 1905). பக்த லீலாம்ருத வசனம் - காஞ்சி புரம் இராமசுவாமி நாயுடு, (1899) பங்கசவல்லி கதை - இராமலிங்க முதலியார் திருமயிலை. (1899.) பசந்தம் - இறந்துபட்ட ஒரு பழந்தமிழ் நூல் (யா.வி.) பசுபதி பாச விளக்கம் - * பச்சையம்மாள் கதை - கிருஷ்ணமாச் சாரி, (1887)* பச்சைவெட்டு 16 - அகத்தியர்.* பஞ்ச காவிய நிகண்டு - அகத்தியர் (1871)* பஞ்சக்கும்மி - நாகப்பக் கவுண்டர், (1879)* பஞ்சதச பிரகரணம் - இந்நூல் வட மொழியில் வித்தியாரணியரியற்றிய பஞ்சதசியென்னும் நூலைப் பின் பற்றிச் செய்யப்பட்டுள்ளது. அத் வைத மதத்தைச் சார்ந்தது. தடை விடை ரூபமாகவுள்ளது. இயற்றிய வரின் னாரெனத் தெரிய வில்லை. பஞ்சநத மான்மியம் - ? (1937). பஞ்சதந்திரம் - தாண்டரவராய முதலி யார் மராட்டி மொழியிலிருந்து மொழி பெயர்த்தது, (சென்னை 1826) பஞ்சதந்திரம் - (செய்யுள்) அட்டாவ தானம் கிருட்டிணயங்கார், 19ஆம் நூ. பிற். பஞ்சதந்திரம் ஆங்கில மொழி பெயர்ப்பு - Rev. Winfred, (சென்னை 1873). பஞ்சதந்திர விருத்தம் - வீரமார்த் தாண்ட தேவர், 19ஆம் நூ. பஞ்சதந்திர வெண்பா - அரசஞ்சண் முகனார். பஞ்ச பட்சி சாத்திரம் - சோதிடம். பஞ்சபதசோப நிஷத்து - வில்லவரம பால் குப்புசுவாமி ஐயர் மொழி பெயர்ப்பு, (சென்னை 1898). பஞ்சபத மகா வாக்கியம் - தௌட சாமி மொழி பெயர்த்தது, (சென்னை 1862). பஞ்சபாண்டவர் வனவாசம் - புகழேந்திப் புலவர், 13ஆம் நூ. பஞ்சமலக் கழற்சி - பழனிமாமுனிவர் பஞ்சமலக்கழற்சி கண்ணுடைய வள்ளலார். பஞ்சரத்தினத் திருப்புகழ் - சைவம். பஞ்சரத்தினப் பதசாவளி - நாகப்ப கவுண்டர் (1887). பஞ்சரத்தின மாலை - சுப்பிரமணிய முனிவர், 18ஆம் நூ. பிற். பஞ்சாக்கரக் குறள் - சிவாயநம வென்னும் பஞ்சாக்கரங்களை இறுதியிலுடைமையின் இஃது இப் பெயர் பெற்றதென்பர். நூலாசிரியர் பெயர் முதலியன விளங்க வில்லை.* பஞ்சாக்கர தரிசனம் - இந்நூல் சிவாய நம வென்னும் தூலபஞ் சாக்கரம் தோன்றின முறைமையும் அவற் றின் பெருமை முதலியனவும் இன்னவென விளக்குவது. வசன நடையிலமைந்தது. நூலாசிரியர் இன்னாரென விளங்க வில்லை. பஞ்சாக்கர தேசிகரந்தாதி - ?* பஞ்சாக்கரதேசிகர் மாலை - சிவஞான முனிவர், 1785 பஞ்சாக்கரப் பஃறொடை - வேலப்ப தேசிகர், 16ஆம் நூ. பஞ்சாக்கர மாலை உரையுடன் - இந் நூல் பஞ்சாக்கரத்தின் பெருமை முதலியவற்றையும் அம்மந்தரத் திற்கு அதிதேவதையாகிய சிவ பெருமானுடைய இறைமைத் தன்மையையும் விரிவாகக் கூறு வது. கண்ணுடைய வள்ளலாரருள் பெற்ற ஒருவர் இதை இயற்றினா ரென்று இறுதிச் செய்யுளால் தெரி கிறது; இதுவரையிற் பதிப்பிக்கப் படவில்லை. பஞ்சாக்கர ரகசியம் - ஞானானந்த சுவாமி, (சென்னை 1900). பஞ்சாக்கர வகவல் - ? பஞ்சாக்கர வந்தாதி - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ.பிற். பஞ்சாக்கர வனுபூதி - சரவண தேசிகர். பஞ்சாதிகார விளக்கம் - இது இறைவ னுடைய சிருட்டி, திதி முதலிய ஐந் தொழில்களைப் பற்றிக் கூறுவது. இது திருப்போரூர் சிதம்பர சுவாமி யால் இயற்றப்பட்டது. பஞ்சாங்க கணன வகை - சோதிடம். பஞ்சாங்க கணனம் - கிருஷ்ண சோதிடர் மயிலாடுபுரம், (திருநெல் வேலி 1897). பஞ்சாங்கம் - சோதிடம். பஞ்சாட்சரப் பத்து - ?* பஞ்சாட்சர மாலை - சிவஞான முனிவர், மறைவு 1785 பஞ்சாட்சரம் - ?* பஞ்சராத்திர மதச பீடிகை - சிவாக்கிர, யோகி, 16ஆம் நூ. பஞ்சார்த்த ரகசியம் - பின்பழகிய பெருமாள் சீயர். பஞ்சாவரண தோத்திரங்கள் - ? (தருமபுர ஆ. 1945). பஞ்சீகரணக் கட்டளை - இந்நூல் வேதாந்த விஷயமானது. வேதாந்தி களாற் கூறப்படும் பஞ்ச பூதகாரிய மாகிய பஞ்சீகரணமும், தூலசூக் குமமாதி சரீர விலக்கண முதலியன வும் இந்நூலிற் கூறப்பட் டுள்ளன. நூல் வசன நடையாலானது. ஆசிரி யர் இன்னாரெனத் தெரியவில்லை. பஞ்சீகரண மகா வாக்கியம் - எழும்பூர் வாலாம்பாள் அச்சிட்டது, (சென்னை 1907). பஞ்சீகரண வேதாந்த சித்தாந்தம்-? படிக்கத்தக்க பக்காக் கதை - (சென்னை 1906). படைவேட்டைம்பது - சாமிநாத பிள்ளை, தோத்திரம். பட்டர் பத்தர்த்தம் - பட்டர்.* பட்டர் பத்து வார்த்தை - பட்டர்.* பட்டன்மார் சாதிவரலாறு - பட்டினத்தார் பாடல் - பட்டினத்து பிள்ளையார். பட்டினத்துப் பிள்ளையார் சரித்திர சங்கிரகம் - நமசிவாயம் பிள்ளை, (சென்னை 1898.) பட்டினப் பாலை - (கி.மு. 220) இது சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாhர் பாடியது. இது வஞ்சி நெடும் பாட்டு எனவும் பெயர் பெறும். கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதி னாறு நூறாயிரம் பொன் பரிசளித்து இப்பாட்டைக் கரிகாற் பெருவளத் தான் கொண்டானென்பது “தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்பத்தோடாறு நூறாயிரம் பெறப், பண்டுபட்டினப் பாலை கொண்டதும்” என்னும் கலிங்கத் துப்பரணி அடிகளால் அறியக் கிடக்கின்றது. பட்டினப்பாலை ஆராய்ச்சி - மறை மலை அடிகள், மறைவு 1950 (1905). பட்டீச்சுரப் பதிற்றுப் பத்தந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 18ஆம் நூ. பட்டீச்சுரப் புராணம் - இரேவண சித்தர், 16ஆம் நூ. பணவிடுதூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை, 17ஆம் நூ. பண்டார சாத்திரம் - (1) அதிசய மாலை, (2) உபதேச வெண்பா, (3) உபாய நிட்டை வெண்பா, (4) சன்மார்க்க சித்தியார், (5) சித்தாந்த சிகாமணி, (6) சித்தாந்தப் பஃறொடை, (7) சிவாச் சிரமத் தெளிவு, (8) தசகாரி யம், (9) நமச் சிவாய மாலை, (10) நிட்டை விளக்கம், (இவை அம்பல வான தேசிகரியற்றியன). (11) உப தேசப் பஃறொடை, (12) தச காரியம், (இவை இரண்டும் தட்சிணா மூர்த்தி தேசிகரி யற்றியன.) (13) பஞ்சாக் கரப் பஃறொடை, (பின் வேலப்ப தேசிகரியற்றியது) (14) தசகாரியம், (இது சாமிநாத தேசிக ரியற்றியது.) பண்டார மும்முணிக் கோவை - குமர குருபர சுவாமிகள், 17ஆம் நூ. பண்டைக்காலத் தமிழர் ஆசிரியர் - மறைமலை அடிகள், மறைவு 1950 பதஞ்சலி மதி வெண்பா - பதஞ்சலி* பதஞ்சலி முனி ஞானம் 50 - * பதஞ்சலியார் பாடல் - பதஞ்சலியார்.* பதஞ்சலியார் பாடல் 50 - பதஞ்சலி* பதஞ்சலியார் வாதத் திறவு கோல் -பதஞ்சலி.* பதமஞ்சரி - Bower, இந்நூல் கிறித்துவ சமய சம்பந்தமான சொற்களுக்கும், இந்து சமய புராண சார்பான சொற் களுக்கும் விளக்கம் கூறுவது, (சென்னை 1852.) பதார்த்த குண சிந்தாமணி - தேரை யர், 11ஆம் நூ. சுப்பிரமணிய பண்டிதர், (1867). பதார்த்த குணக்கொத்து - சேனா பதிப் பிள்ளை, இந்நூல் பதார்த்தங் களின் குணங்களைக் கூறுவது; செய்யுள் நடையிலமைந்தது, (கூடலூர் 1895.) பதார்த்த தீபிகை - முருகேச பண்டி தர், (1897.) பதார்த்த விஞ்ஞானம் - சுப்பிர மணிய பிள்ளை, மானிப்பாய் (யாழ்ப்பாணம் 1887) பதிகத் திரட்டு - முத்துசுப்பபாரதி, (1917). பதிபசு பாசத்தொகை - ? (தருமபுர - ஆ. 1940.) பதிபசு பாசநிலையறிதல் - இது சைவ சித்தாந்த விஷயமானது. பதிபசு பாசங்களின் நிலை முதலியன இன்னவென விளக்குவது. இயற்றி யவர் பெயர் முதலியன விளங்க வில்லை.* பதிபசு பாசப் பனுவல் - அம்பல வாணத் தம்பிரான். பதிபசு பாச விளக்கம் - இது வள்ள லார் சாத்திரம் இருபதிலொன்று; 256 பாடல்களுடையது; குருகாரு ணியம், குருவுபதேசம்; நின்மல துரியாதீதம்; பதிவிளக்கம்; பாச விளக்கம் முதலிய பல பிரிவினை யுடையது. இது வடமொழி வாது ளாகமத்தைச் சேர்ந்த பதிபசுபாச விளக்கத்தின் மொழி பெயர்ப் பென்று “மைப்போலி” என்னும் இந்நூலின் இறுதிச் செய்யுளால் விளங்குகிறது.* பதிபசு பாசு விளக்கம் - D. கோபாலச் செட்டியார் (1930.) பதிபசு பாச விளக்கம் - சிவஞான தேசிகர். (1903.) பதிப்பிலக்கண வினாவிடை - முனிசாமி நாயுடு, (சென்னை 1892.) பதிற்றுப் பத்தந்தாதி (கலைசை) - கச்சி யப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். பதிற்றுப் பத்தந்தாதி (மதுரை) - பரஞ்சோதி முனிவர், 16ஆம் நூ. பதிற்றுப் பத்து - (சங்ககாலம்) இது பத்துப் புலவர்களியற்றிய 100 பாடல்களுடைய புறத்திணை இலக்கியம், பாடப்பட்டோர் சேர மரபினர். முதலாம் பத்தும், 10ஆம் பத்தும் கிடைத்தில; இரண்டு முதல் ஒன்பது பத்துக்களைப் பாடி னோர் குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப் பியனார், பரணர், காக்கை பாடினி யார், நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் என்போர். இதற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. உரை செய்த வர் ஊர் பெயர் முதலியன தெரிய வில்லை. அவர் சின்னூலைக் குறிப்பிட்டிருத்தலால் சின்னூ லியற்றிய நேமி நாதருக்குப் பிற் பட்டவராதல் வேண்டும். பதினெட்டு வார்த்தை - * பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் - நாலடியார், நான்மணிக் கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, ஐந் திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, இன்னிலை, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முது மொழிக்காஞ்சி, ஏலாதி. இவற்றுள் திருக்குறள், கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என் னும் நூற்கள் சங்ககாலத்தன. மற் றவை கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின் செய்யப் பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயரி லடங்கிய தொகுப்பு 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் விளங்கிய எவராலோ செய்யப்பட்டு இப் பெயர் கொடுக்கப்பட்டது. பதினெண்ணாயிரப்படி (திருவாய் மொழி உரை) - * பதினொராந்திருமுறை - இதில் திரு வாலவாயுடையார் முதலிய பன் னிருவரால் அருளப்பட்ட 40 பிர பந்தங்கள் உள்ளன. அவை யாவன : 1) திருமுகப் பாசுரம், 2) திருவாலங்காட்டு மூத்த திருபதிகம் 11, 3) திருவிரட்டை மணிமாலை, 4) அற்புதத் திருவந்தாதி, 5) சேத்திரத் திருவெண்பா, 6) பொன்வண்ணத்தந்தாதி, 7) திருவாரூர் மும்மணிக்கோவை, 8) திருக்கைலாய ஞானவுலா, 9) கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, 10) திருவீங்கோய்மலையெழுபது, 11) திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, 12) திருவெழு கூற்றிருக்கை, 13) பெருந் தேவபணி, 14) கோபப்பிரசாதம், 15) காரெட்டு, 16) போற்றித் திருக்கலிப்பா, 17) திருமுருகாற்றுப் படை, 18) திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (நக்கீரதேவர்), 19) திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (கல்லாடனார்), 20) மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, 20) சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை 22) சிவபெருமான் திருவந்தாதி (பரண தேவர்), 23) சிவபெருமான் திருவந்தாதி (கபில தேவர்), 24) சிவபெருமான் திருமும்மணிக் கோவை, 25) மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை, 26) கோயின் நான்மணிமாலை, 27) திருக்கழுமல மும்மணிக்கோவை, 28) திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, 29) திருவேகம்பமுடையார் திருவந்தாதி 30) திருவொற்றியூ ரொருபாவொரு பஃது, 31) விநாயகர் திருவிரட்டைமணி மாலை, 32) கோயிற்றிருப்பணியர் விருத்தம், 33) திருத்தொண்டர் திருவந்தாதி, 34) ஆளுடைய பிள்ளையார் (ஞான சம்பந்தர்) திருவந்தாதி, 35) ஆளுடைய பிள்ளையார் (ஞான சம்பந்தர்) திருச்சண்பை விருத்தம், 36) ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை, 37) ஆளுடைய பிள்ளையார் திரு வுலாமாலை, 38) ஆளுடைய பிள்ளையார் திருக் கலம்பகம் 39) ஆளுடைய பிள்ளையார் (ஞான சம்பந்தர்) திருத்தொகை, 40) திருநாவுக்கரசர் திருவேகாதச மாலை. இவற்றுள் 1-திருவால வாயுடையாரா (சிவபெருமானா) லும், 2-4 காரைக் காலம்மையாரா லும், 5-ஐயடிகள் காடவர் கோனா ராலும், 6-8 சேரமான் பெருமா ணாயனாராலும், 9-18 நக்கீர தேவ ராலும், 19-கல்லாட னாராலும், 20-22 கபிலதேவராலும், 23- பரண தேவராலும், 24-இளம் பெருமா னடிகளாலும், 25-அதிகாரவடிக ளாலும், 26-30 பட்டினத்துப் பிள்ளையாலும், 31-40 நம்பியாண் டார் நம்பியாலும் பாடப் பெற்றவை. பத்திரகிரியார் புலம்பல் - பத்திரகிரி யார், 10ஆம் நூ. பத்தி மார்க்கம் - சுவாமி பரமாநந்தர் - இராமகிருட்டிண மடம் (1944). பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப் படை, பெரும்பாணாற் றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப் படை) என்னும் பத்து. பத்து வார்த்தை - வைணவம். பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், (உ.வே.சா. 1932.) பத்மாசல மகிமை - புராணம். பத்மினி சபா - அப்பாவு பிள்ளை, (1886)* பந்தனந்தாதி - ஒளவையார். பப்பரத்தியார் அம்மானை - செயிது மீறாப் புலவர். இது 1704-ல் பாடப் பட்டது. பரகிதம் - இப்பெயருடைய வட மொழி நூலை உள்ளமுடையான் தமிழில் மொழிபெயர்த்து சூடா மணி உள்ளாடையான் என்னும் பெயரிட்டார். இதனை H.R. Hoesington ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். (யாழ்ப்பாணம் 1848.) இரகுநாதையர் பரகிதம் என்னும் நூலை 1892-இல் அச்சிட்டார். பரத சாத்திர இலக்கணம் - அரபத்த நாவலர், 16ஆம் நூ. பரத சாத்திரம் உரையோடு - சந்திர சேகர பண்டிதர், (1876)* பரத சேனாபதீயம் - ஆதிவாயிலார், 11-13ஆம் நூ. பரதேசி இந்த லோகத்தை விட்டு மறுமைக்கு நடந்தேறினது சொற் பனம். Bunyan (வேப்பரி 1793.) பரத்தையர்மாலை - மதன சிகாமணி. பரந்தபடி - பிள்ளை உலோகாசாரியர். பரந்த ரகசியம்-பெரியவாச்சான் பிள்ளை. பரம இச்சாஞான தீபிகை - D. கோபால செட்டியார், (1928.) பரம கைவல்லியப் பாமாலை - அரங்கப்ப செட்டியார், (விரோதி.) பரமண்டலங்களில் தங்கள் பொக்கி ஷம் - தானியேல் பிள்ளை (மொழி பெயர்ப்பு), (வேப்பரி 1800). பரமதசோபனம் - தானியேல் பிள்ளை (மொழிபெயர்ப்பு), (வேப்பரி 1800.)* பரமபத சோபனம் - வேதாந்த தேசிகர், 15ஆம் நூ. பரமததிமிரபானு - இது ஒரு தமிழ் நூல்; பிறமதக் கொள்கையைக் கூறி மறுத்துச் சைவசித்தாந்தத்தையே நாட்டுவது. இந்நூலாசிரியர் மறை ஞான சம்பந்தர் என்று கூறுவர் (உ. வே. சா.) பரமதபங்கம் - வேதாந்த தேசிகர். பரமரகசிய மாலை - குருநமச்சிவாயர், 16ஆம் நூ. பரமார்த்த குருவின் கதை - வீரமா முனிவர், (புதுவை 1859.) பரமானந்த தீபம் - அனுகூல மாமுனிவர், (1860) பரமானந்த விளக்கம் - ஞானசம்பந்த தேசிகர், 16ஆம் நூ. பரவ°து நிர்ணயம் - வைணவம். பரவ°து வைபவம் - சீவத்து சீனிவாசர். பராங்குச நாடகம் - சேஷகவி. பராசக்தி அகவல் - (1885)* பராசர மிருதி - ஆற்றூர் ஈச்சம்பாடி தேசிகாச்சாரியர் மொழிபெயர்த் தது. (1902). பராசாரியம் - (சோதிடம்) பராசரமுனி, (1875)* பராபரக்கண்ணி - தாயுமானவர் பராபரநிலை - தாயுமானவர் பராபரனுடைய பிள்ளைகளின் ஆபரணப் பெட்டி - தானியேல் பிள்ளை மொழி பெயர்ப்பு, (வேப்பரி 1800). பராபரை மாலை - வேம்பத்தூர் அம்பிகாபதி, (1924.) பரிபாஷைத் திரட்டு - அகத்தியர் (1866.) பரிபாடல் - (சங்ககாலம்) பரிபாட லென்பது ஒருவகைப் பாடலின் பெயர். அப்பாடல்கள் அடங்கிய தொகை பரிபாடல் எனப்பட்டது. இது புலவர்கள் பாடிய 70 பாடல் களை உடையது. இப்பொழுது கிடைத்துள்ளவை 24 பாடல்களும் சில பாடல்களின் பகுதிகளும். இதனைத் தொகுத்தார் தொகுப்பித் தார் யாரெனத் தெரியவில்லை. திருமாலுக்கு 8-உம், முருகக் கடவுளுக்கு 31-உம், காடுகிழாளுக் கொன்றும், வையைக்கு 26-உம் மதுரைக்கு நான்குமாக 70-பாடல்கள் இருந்தன எனப்பழைய பாடல் ஒன்றால் தெரியவருகிறது. இதன் உரை பரிமேலழகரது என்றும் கந்தியார் என்னும் புலவர் இடைச் செருகலாகச் சிலவற்றைப் பாடி இதனுள் சேர்த்திருந் தனரென் றும் உரைசெய்யுமுன் அவர் அவற்றைக் களைந்துள்ளாரென் றும் செய்திகள் அறியப்படுகின்றன. பரிபாடல் வசனம் - ந.சி. கந்தையா பிள்ளை, (1938). பரிபூரணசுத்தி - இந்நூல் வேதாந்த விடயமானது. விருத்தாசலத்தைச் சார்ந்த மணிமுத்தாநதிக்கு வடக்கே யுள்ள கரனூரிலிருந்த பரிபூரண ரென்பவராலியற்றப்பட்ட தென்பது இந்நூற்பாடல்களால் தெரிகிறது. பரிபூரணம் - இதில் எங்கும் நிறைந்த பிரம சொரூபமும், அதனின்றும் மாயை, பஞ்சபூதம் முதலியன தோன்றும் விதமும், பஞ்சபூதக் கலப்பும் பிராமாண்ட லட்சணமும் இவை போல்வன பிறவும் விளங்கக் கூறப்பெற்றிருக்கின்றன.* பரிபூரணம் - அகத்தியர், (1880)* பரிபூரணானந்தபோதம் - பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், 20ஆம் நூ. பரிமளகாச நாடகம் - மாப்பாண முதலியார், - 1927 பரிமேலழகர் உரைநுண் பொருண் மாலை - காரி இரத்தினக் கவிராயர், 17ஆம் நூ. பருந்தும் நிழலும் - ஆ. பாலகிருஷ்ண பிள்ளை, (1826.) பரை தோத்திரம் - * பர்வ வர்த்தனி கலம்பகம் - சுப்பிர மணி ஐயர். பல கவித்திரட்டு - தனிப்பாடல்* பலசந்தக் கும்மி - பாராங்குச நாவலர், (1880.) பலசரக்கு ஏலப்பாட்டு - (1874)* பலசாத்திரத் திரட்டு - இது வீரசைவ சம்பந்தமானது; பத்தி காண்டம் ஞான காண்டமென்ற இரண்டு பெரும் பிரிவாலாகியது. ஆறுமுக சாமிகளது சீடராகிய திருப்பாதிரிப் புலியூர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் சீடர் ஒருவர் இதைத் தொகுத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.* பலதிரட்டு - தனிப்பாடல்.* பலதிரட்டு சால சிதம்பரம் - புலிப்பாணி, (1873).* பலதீபிகை (சோதிடம்) - மந்திரேச முனிவர், (1927.) பலதுறைக் காரிகை - அம்பிகாபதி, (1930.) பலதேச கு°திச் சிந்து - சுப்பிரமணிய உவாத்தியாயர் (1870)* பலதேசச் சரித்திரச் சுருக்கம் - (சென்னை 1857.) பலதேவர்கள் துதி - ?* பலபல வாக்கியம் - ஞானம்.* பலபாடல் - ஞானம்.* பலபாடற்றிரட்டு - அபத் அல் காதிரி நயினார் காயற்பட்டினம், ( 1896.) பலபாடற்றிரட்டு - தனிப்பாடல். பலபேரிற் பாடிய வண்ணம் -தனிப்பாடல்.* பலவான்குடி குமார விநாயகர் பதிகம் - பொன்னம்பல சிவம், (விபவ.) பலவித கீர்த்தனங்கள் - பொன்னம் பல சிவம், (விபவ.) பல வித்துவான்கள் பாடிய பாடல்கள் - (1878)* பல்காயம் - இறந்துப்பட்ட ஓர் இலக் கண நூல் (யா.வி.) பல்பொருட் சூடாமணி நிகண்டு - ஈசுரபாரதியார், 17ஆம் நூ. பவழக்கொடி மாலை - புகழேந்திப் புலவர், (13ஆம் நூ.) பவழேந்திரி சபா - அப்பாவு பிள்ளை திரிசிரபுரம், (சென்னை 1893.) பவனி அலங்காரம் - சுல்தான் முகை அல்தின் (கொழும்பு 1893). பவானிப் புராணம் - வித்துவான் வாசுதேவ முதலியார், - ? பவுல் அப்போ°தலன் நடபடி விளக் கம் - Macduff, (நாகர்கோயில் 1863) பழநடை விளக்கம் - வைணவம்.* பழநி இரட்டைமணி மாலை - ? (உ.வே.சா.) பழநிக் காதல் - ?* பழநிக் குமாரப்பண்டாரம் பிரபந்தங் கள் -மேற்படி(?*) மு.ரா. அருணா சலக் கவிராயர் 1911. பழநி சிவசுப்பிரமணியர் பதிகம் - * பழநித்தல வரலாறு - J.M. சோம சுந்தரம் பிள்ளை (1944). பழநித் திருவாயிரம் - தண்டபாணி சுவாமி, (1915.) பழநி நொண்டி நாடகம் - * பழநிப் பதிற்றுப்பத்தந்தாதி - * பழநிப் பத்து - * பழநிப் பாமாலை - சிவசுந்தர மூர்த்திப் பிள்ளை, பறங்கிப்பேட்டை (சென்னை 1904.) பழநி மலைக் குமரன் துதி - * பழநிமலை யந்தாதி - சிவப்பிரகாச சுவாமிகள், (17ஆம் நூ.) பழநிமலை யந்தாதி - பாலசுப் பிரமணியர். பழநிமலை வடிவேலவர் பதிகம் - * பழநியாண்டவர் கீர்த்தனை - துரை சாமி கவி (1877.) பழநியாண்டவர் கீர்த்தனை - சின்ன வீரப்பச் செட்டி,(சென்னை, 1894). பழனியாண்டவர் பதிகம் - செல்லையாச் செட்டியார், (கீலக.) பழநிவேலர்துதி - * பழநித் தலபுராணம் - திருவாவினன் குடி பாலசுப்பிரமணிய கவிராயர்; (1893). பழநித் தலபுராண வசனம் - மு. கந்த சாமிக் கவிராயர் (சென்னை 1905.) பழமுதிர் சோலைப் பதிகம் - சுவாமி T.S. கேவஜி, (விரோதி) பழமொழி - முன்றுரை யரையனார், 7ஆம் நூ.? பழமொழி அகராதி - இலசரசு, மறைவு 1925 பழமொழிக் கதைகள் - இராமலிங்க முதலியார் திருமயிலை (சென்னை 1902.) பழமொழிகள் - Asbury (சென்னை 1887.) பழமொழித் திரட்டு - இதில் உலக வழக்கிலுள்ள 5000 பழமொழிகள் தொகுத்தெழுதப்பட்டுள்ளன. ஆசி ரியர் வராகநகர் அண்ணாவையர். பழமொழி விளக்கம் - (தண்டலையார் சதகம்) - சாந்தலிங்கக் கவிராயர். பழைய அரசர்கள் ஆண்ட வரு டங்கள் - * பழைய ஏற்பாடு - மொழி பெயர்ப்பு J.P. Fabricius (தரங்கம்பாடி 1893.) பள்ளத்தூர் மீனாட்சி சுந்தரேசர் செந்தமிழ்ப் பாமாலைத் திரட்டு - அ. நரசிம்ம பாரதி, (பரிதாபி.) பள்ளிகள் வாயாப்பு - சண்முகக் கிராமணி கடலூர்; (சென்னை 1892.) பள்ளியிற் பிள்ளையார் (சிந்தனை) - துதி. பள்ளியேசல் - * பறியலூர்ப் புராணம் - வேலப்ப தேசிகர், 16ஆம் நூ. பறாளை விநாயகர் பள்ளு - சின்னத் தம்பிப் புலவர், (சம்புலிங்கம் பிள்ளை, 1932.) பறையர் உற்பத்தி விளக்கம் - இராகவ மூர்த்திப் பிள்ளை, (சென்னை 1894.) பனசை விசுவலிங்கநாதர் பதிகம் - கந்தசாமிக் கவிராயர், (1899.) பனசை வீரியம்மாள் பதிகம் - சுவாமி நாதன், (1935) பனிநீல நங்கை கதை - * பனைமர சோபனம் - (1874)* பன்னிரண்டு மாலை - அப்த் அல் காதர் லெபை, (இறங்கூன் 1907.) பன்மணிக் கொத்து - இராசரத்தினம் பிள்ளை, சென்னை கிறி°துவ கலாசாலை, (சென்னை 1902.) பன்மணி மாலை - இறந்துபட்ட ஒரு தொடர் செய்யுள் நூல் (யா.வி.ப. 186) பன்னிரண்டு ராசாக்கள் கதை - சேஷாசலம் நாயுடு, (சென்னை 1897.) பன்னிரு நாமப் பாட்டு வியாக்கி யானத்துடன்-வேதாந்த தேசிகன், வீரராகவாச்சர்யர். பன்னிரு படலம் - அகத்தியர் மாண வர் பன்னிருவர் செய்தது எனப் படும் புறப்பொருள் இலக்கணம் (யா.வி.ப. 120) பன்னிரு பாட்டியல் - இந்திர காளியார் முதலிய பன்னிருவர். பன்னிரு புலவர் சரித்திரம் - வேம் பாக்கம் கிருஷ்ணமாச்சாரியர், (சென்னை 1906.) பன்னூற்பா - தனிப்பாடல். பன்னூற்றிரட்டு - பாண்டித்துரைத் தேவர், (இராமநாதபுரம் 1898.) பா பாகசாத்திரம் - காசி விசுவநாத முதலியார் (1868).* பாகவத அம்மானை - மாரியப்ப கவிராயர், (சென்னை 1893.) பாகவத கீர்த்தனை - அநந்த பாரதிசாமி, (1877.) பாகவத சமத்தகந்த நாடகம் - அனந்த பாரதி ஐயங்கார், 1786 - 1846 பாகவத சாரம் - தாண்டவ சாத்திரிகள். பாகவத புராணம் - ஆரியப்ப புலவர், 18ஆம் நூ. பாகவத வசனம் - உவாத்தி சின்னையன். பாகவத வினாவிடை - க°தூரி ரங்கையா, (1931.) பாகவதம் - அருளாளதாசர், 1543 பாகம் பரியான் மாலை - சர்க்கரை பாரதி, (1924). பாகம் பிரியாவம்மை பிள்ளைத் தமிழ் - இது தூத்துக்குடி என்னும் திருமந்திர நகரத்தில் அமர்ந்துள்ள பாகம் பிரியா வம்மையென்னும் பார்வதி மேலது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 101 பாடல்க ளுண்டு, நூலாசிரியர் இன்னா ரெனத் தெரியவில்லை. பாசவதைப் பரணி - தத்துவராயர், (பிரபவ.) பாசுரப்படி ராமாயணம் - பெரியவாச் சான் பிள்ளை. பாச்சிகை சாத்திரம் - சகாதேவர் (செஞ்சி ஏகாம்பர முதலியார் அச்சிட்டது 1905). பாடற்றிரட்டு (பழநி) - பழனியப்ப ஐயர், (சென்னை 1898). பாடுதுறை - தத்துவராயர், 15ஆம் நூ. பாட்டியல் (இலக்கண விளக்கப்பாட் டியல்) - தியாகராச தீட்சிதர் செய்த தாகக் கருதப்படும். 17ஆம் நூ. பாட்டியல் வசனம் - ? பாண சாத்திரம் நூறு - போகர் (வாணவகை). பாண்டவர் சூதாட்ட நாடகம் - * பாண்டியகுல விளக்கம் - பொன்னு சுவாமி நாடார், (1887).* பாண்டிய சரித்திரம் - * பாண்டிய தேசவரலாறு - * பாண்டி மண்டல சதகம் - ஐயம் பெருமாள் ஆசிரியர், (1932). பாத்ம புராணம் - ? பாத்மோத்தர புராணம் - புதுவை இராமனுச நாவலர், (1870.) பாப்பாராத்தியார் அம்மானை - சைட் மீராபுலவர், (1875).* பாப்பு வேத விகற்பம் - கிறித்துவம். பாப்பைய பிள்ளை யுலாமடல் - ? பாம்பாட்டிச் சித்தர் பாடல் - (1870.)* பாம்பாளம்மன் கும்மி - (1880).* பாம்பு முதலை முதலிய ஊர்வன - (சென்னை 1898.) பாரத கீர்த்தனம் - முத்துராம முதலியார், 19ஆம் நூ. பாரத தாற்பரிய சங்கிரகம் - சபாபதி நாவலர், 1844 - 1903 பாரத நாடகம் - பாரத வசனம் - கரிசங்கால் சீனிவாச் சாரியர். பாரத வம்மானை - * பாரதம் - வில்லிபுத்தூரர், 15ஆம் நூ. பாரதம் - நல்லாப் பிள்ளை, 18ஆம் நூ. முற். பாரதம் ஆதிபருவ உரை - பொன்னம் பல பிள்ளை, 19ஆம் நூ. பிற். பாரத விலாசம் சூது துகிலுரிதல் - இராமசந்திர கவி, (1870).* பாரத வெண்பா - பெருந்தேவனார், 9ஆம் நூ. பாராசாரியம் (சோதிடம்)-பராசர், (1899). பராபரநிலை - இது கடவுளுடைய பராபர நிலையைக் கூறுவது. பதி னொருபாடலுடையது.* பாரிகாதை - ரா. இராகவ ஐயங்கார், (1937). பாரி சேண குமாரன் கதை - * பார்க்கவ புராணம் - துறைசை கச்சியப்ப முனிவர். பார்த்தசாரதி துதி - ?* பார்த்தசாரதி மாலை - இராமானுசக் கவிராயர், 19ஆம் நூ. பார்ப்பரம்மாள் அம்மானை - (A Poem in the legend of St. Barbara) தேவ சகாயம் பெங்களூர், (1907). பார்வதி தேவியார் பனுவல் திரட்டு - துரைக்கண்ணுப்பிள்ளை, (1930). பார்வதி பதிகம் - ?* பாலசிகிச்சை வசனம் - ?* பாலபாடம் - சிவப்பிரகாச பண்டிதர், (யாழ்ப்பாணம் 1886). பாலபாடம் - சைவப் பிரகாசசபை, (யாழ்ப்பாணம் 1893). பால போதம் (வேதாந்த நூல்) - குப்புச்சாமிராசு, (சென்னை 1902). பால போத விலக்கணம் - இலக்கணம். பால போத விளக்கம் (இலக்கணம்) - விசாகப் பெருமாளையர், (சென்னை 1852.) பாலர் சுவடி - புதுச்சேரி. பாலவாகட மென்னும் சிமிட்டு இரத் தினச் சுருக்கம் - தன்வந்திரி, (சென்னை 1874) பாலவாகடம் - தன்வந்திரி, (1874). பாலவாகடம் - க.ச. முருகேச முதலியார், (1936). பால வைத்தியம் - சுப்பிரமணிய பிள்ளை, (யாழ்ப்பாணம் 1889). பால வைத்தியம் முதலியன - * பாலாம்பிகை அகவல் - ? பாலரட்சை விதி - மந்திரம். பாலியக்கும்மி - தம்பி முத்துப் பிள்ளை (யாழ்ப்பாணம் 1886). பாலைய சுவாமிகள் பதிற்றுப்பத் தந்தாதி - பையனூர் வரதராச பிள்ளை. பாலையானந்த சுவாமிகள் ஞானக் கும்மி - * பாவபல கணித நிர்ணய சோதிப்பிரம ஞான தீபிகை - T.S. நாராயண சாமி சோதிட பண்டிதர், (1887). பாவநாசப் புராணம் - சொக்கலிங்கப் புலவர், - ? பாவலர் சரித்திர தீபகம் - சதாசிவம் பிள்ளை, 19ஆம் நூ. பிற். (யாழ்ப் பாணம் 1896). பாவலர் விருந்து - வி.கோ. சூரியநாரா யண சாத்திரியார், 1871 - 1903. பாவைப் பாட்டு - இறந்துபட்ட ஒரு பழந்தமிழ் நூல் (யா.வி.ப. 394) பானந்த மாலை - முகமத் சுல்தான் (பினாங்கு 1890.) பி பிங்கலகேசி - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) பிங்கல நிகண்டு-பிங்கலர், 10ஆம் நூ. பிட்சாடன நவமணி மாலை - துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. பிரகலாத நாடகம் - * பிரகலாத விலாசம் - அரங்கநாத கவி, (1876).* பிரசங்க இலக்கணம் - பாணீ° (Barnes) என்பவரால் ஆங்கில மொழியி லிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. (பாளையங் கோட்டை 1868). பிரசங்க புத்தகம் - கிறித்துவம்.* பிரசங்க வியாக்கியானக் கும்மி - (யாழ்ப்பாணம், 1892). பிரசன்ன இராகவம் - துரைசாமி மூப்பனார், (1883).* பிரசாத அகவல் - காவை. அம்பல வாணத் தம்பிரான், (1934). பிரசாத தீபம் - சைவம்.* பிரசாத மாலை - கமலை ஞானப்பிர காசர், 16ஆம் நூ. பிரணய கலகம் - அகப்பொருள்* பிரணவ விவரணம் - வைணவம்* பிரதாப முதலியார் சரித்திரம் - வேத நாயகம் பிள்ளை, 1824-89 பிரதான சதகம் - வைணவம்* பிரதிவாதி பயங்கர அண்ணன் பிரபந்தம் - பிரதிவாதி பயங்கர அண்ணன். பிரத்திய பிஞ்ஞா இருதயம் - V.R. சுப்பிர மணிய ஐயர், (பிங்கள.) பிரத்யும்ந சரிதம் - சைனசரித்திரம். பிரபஞ்ச உற்பத்தி - சிறுமணவூர் முனிசாமி முதலியார், 20ஆம் நூ. பிரபந்தகிருத்தியம் - உடையவர். பிரபந்தக்கொத்து - பிச்சை யிபுறாகீம் புலவர், (1894). பிரபந்த நிர்வாகம் - சீனிவாச்சாரியர். பிரபந்த பரித்திராணம் - பிள்ளை உலோகாச்சாரியார். பிரபந்த மரபியல் - இலக்கணம். பிரபன்ன பரித்திராணம் - பிள்ளை உலோகாச்சாரியார். பிரபன்ன பாரிசாதம் - தமிழ்மொழி பெயர்ப்பு, வரதாச்சாரியர் (1895). பிரபாதசந்திர விலாசம் - இராமசாமி இராசு, (1877). பிரபுசாமி சடுத்தலம் - பலசாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப் படுவது. பிரபுலிங்க லீலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. பிரபுலிங்க லீலை வசனம் - காஞ்சி புரம் இராமசாமி நாயுடு (சென்னை 1902). பிரபோத சந்திரோதய வசனம் - ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை (1889)*. பிரபோத சந்திரோதய வசனம் - இராமயோகி காஞ்சிபுரம், (1902.) பிரபோத சந்திரோதயம்-திருவேங்கட நாத ஐயர், 17ஆம் நூ. பிரமகீதை - இது வேதாந்த விஷய மானது. ஆதியில் பிரமன் தேவர் களுக்கு உபதேசித்ததைச் சூத முனிவர் நைமிசாரனிய இருடி களுக்குச் சொன்னதாக அமைந் துள்ளது.* பிரம சூத்திரம் - விருதை சிவஞான யோகிகள், 20ஆம் நூ. பிரமதருக்க°தவம் - அப்பைய தீட்சிதர். பிரமபுரித் தல மான்மியம் (வசனம்) - நரசிம்ம பாரதியும் கிருட்டிண பாரதியும், (திருவாதி 1895). பிரமமுனி சூத்திரம் 360 - பிரமமுனி பிரமமுனி வைத்தியம் - பிரமமுனி பிரம வப்பியாச வட்டாங்கம் - யோகம். பிரமானந்தப் பிரகாசிகை - பிரமானந்தானுபவம் - பிரமானுபவ விவேக சமுத்திரம் - பிரமேயசாரம் - அருளாள பெருமாள், 14ஆம் நூ. பிரமேயசேகரம் - பிள்ளை உலோகாச் சாரியர். பிரமோத்தர காண்டம் - வரதுங்க பாண்டியன், 16ஆம் நூ. பிரமோத்தர காண்ட வசனம் - சுப்பிர மணிய பிள்ளை கூடலூர், (1892). பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர், 17ஆம் நூ. (ஆறுமுக நாவலர் சென்னை 1882). பிரலாபசாகரம் (Lyrics upon the passion of Christ) புத்தளம் சந்தியாகோ பிள்ளை, (கொழும்பு 1893). பிரவாகமாலை - முத்துராமலிங்க சேதுபதி - 1783 பிருகச்சாதகம் - வைத்தியலிங்கப் பத்தர், (மொழி பெயர்ப்பு 1905). பிருகத்சாதகம் தமிழுரையுடன் - கடலங்குடி நடேச சாத்திரி (1925). பிள்ளைக்குத் தண்ணீரோது மந்திரம்-* பிள்ளைப் பிணி வாகடம் - * பிள்ளையந்தாதி - நயினாராசாரியர்* பிள்ளையாரகவல் - ஒளவையார். பிள்ளையுறங்கா வில்லிதாசரந்திம தசை - வைணவம். பின் எண்பது - அகத்தியர், (1880).* பிரங்கி ஞானித் திரட்டு - பீரங்கி ஞானி, சோதிடம். பு புகழ் பெறந்தாதி - க. கந்தசாமிப் பிள்ளை, (1896). புகையிலை விடுதூது - சீனிச் சர்க்கரைப் புலவர், (உ.வே.சா. 1939). புகைவண்டி ஏலப்பாட்டு - (1873)* புசண்டர் நாடி - (1897). புசுண்ட மகரிஷ ஞானம் 80-புசுண்டார். புட்பகன்மார் சாதி வரலாறு - * புட்ப பந்தம் (சோதிடம்) - ? (1913) - புட்ப விதி - கமலை ஞானப்பிரகாசர், 16ஆம் நூ. புணர்ப்பாவை - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) புதிய ஏற்பாடு - Fabricius (மூன்றாம் பதிப்பு சென்னை 1824). புதியதும் பழையதும் - உ.வே. சாமி நாதையர் - 1942. புதுவை அருணாசலம் பிள்ளைத் தமிழ் - * புதுவை சரணவமுத்துக் கலித் துறை - * புதுவைப்பள்ளு-பொன்னுச்செட்டியார், புதுவை (சிறீவில்லிபுத்தூருக்கண் மையில்), 19ஆம் நூ. புதுவை மணற்குள விநாயகர் துதி - புராண சாகரம் - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.ப. 238.) புராண சூத்திரம் - அகத்தியர், (1874). புருஷ சாமுந்திரிகா லட்சணம் - அகத்தியர், (சென்னை 1879). புருஷ சாமுந்திரிகா லட்சணம் - தியாகராசமுனி (1868).* புருஷ சாமுந்திரிகம் - (வராகமிகிரரின் நூல் மொழி பெயர்ப்பு) ஈகை வரதாசாரியார், (1892). புருட விராக சாவளிகள் - பரமேசுவர ஐயர், (1888).* புரூரவச் சக்கரவர்த்தி கதை - (1870).* புரூரவச் சக்கரவர்த்தி நாடகம் - இராமச்சந்திரர், (சென்னை 1897) புலந்திரன் கனவு மாலை - புகழேந்திப் புலவர். புலந்திரன் தூது - புகழேந்திப் புலவர். புலவராற்றுப்படை - திருக்குருகூர் சிறிய இரத்தினக் கவிராயர், 17ஆம் நூ. முற். புலவராற்றுப்படை - நாகூர் வித்து வான் வா. குலாம்காதிரு நாவலர், 19ஆம் நூ. புலவர் உலகம் - 1ஆம் பாகம், செக வீர பாண்டியனார், (1941). புலவர் புராணம் - முருகதாச சுவாமி கள், 1840 - 99 (சென்னை 1901). புலவர் விருந்து - வி.கோ. சூரிய நாரா யண சாத்திரியார். (சென்னை 1901). புலிப்பாணி சோதிடம் - புலிப்பாணி. புலிப்பாணி பலதிரட்டு 100 * புலியூரந்தாதி-சிவானந்தையர், 1873-1911 புலியூரந்தாதி - மயில்வாகனப் புலவர். புலியூர்ப் புராணம் - சிவானந்தையர், 1873 - 1916. புலியூர் வெண்பா - மாரிமுத்துப் பிள்ளை, 18ஆம் நூ. (சென்னை 1888). புலோலி நாண்மணி மாலை - சிவ சம்புப் புலவர், 18ஆம் நூ. புல்லாணி யெம்பெருமான் கதவு திறத்தற் பாட்டு - * புல்லாணி யெம்பெருமான் நலங்கு - வேதாந்தகவி. புல்லையந்தாதி - இது திருமால்மீது பாடப்பட்ட நூல்; ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. புவனகிரி புராண வசனம் - ? (1916). புவனகோசம் - பூகோளம். புவனாம்பிகை சோட யாகோத்பவ மாலை - சண்முகம் பிள்ளை, (சோபகிருது) புவனேசுவரி அகவல் முதலியன - * புவனேசுவரி சதகம் - * புவனேந்திரனம்மாளை - சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. பிற். புள்ளிருக்கும் வேளூர்த் தல வரலாறு - தருமபுர - ஆ. (1943). புறக்கோள முள்ளழிவு - * புறத்திரட்டு - அறத்தையும் பொரு ளையும் பற்றிச் சொல்லும் செய்யுட் களைப் பலநூல்களினின்றும் எடுத்துத் தொகுக்கப்பட்டிருத் தலால் இது திரட்டெனப்படும். இதனைத் தொகுத்தார் தொகுப் பித்தாரின்னாரெனத் தெரிய வில்லை.* புறநானூறு - (சங்க காலம்) இது 159 புலவர்கள் பாடிய 400 பாடல்களை யுடைய புறப்பொருள் இலக்கியம். இதனைத் தொகுத்தார் தொகுப்பித் தார் பெயர்கள் காணப்படவில்லை. இதற்குப் பழைய சிறந்த உரை ஒன்றுள்ளது. செய்தவர் பெயர் ஊர் முதலியன அறியப்பட வில்லை. புறப்பொருள் விளக்கம் வசனம் - ந.சி. கந்தையாபிள்ளை, (1935). புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார், 9ஆம் நூ. புறப்பொருள் வெண்பாமாலை உரை - சாமுண்டித் தேவநாயனார் அல்லது மாகலூர் கிழான். புனர்சனம் லோகாந்தரம் - கடலங்குடி நடேச சாத்திரி (1926). பூ பூகோளப் பிரமாணம் - * பூகோளப் பிரமாண வசனம் - பூங்காவன பிரளயம் - (Paradise lost) Samuel Thomas மொழிபெயர்ப்பு அம்மானை யாப்பு, (திருச்சி 1887). பூசாவிதி - சிவபெருமானைப் பூசிக்க வேண்டுவனவற்றிற்குரிய பல விஷயங்கள் இதிற் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இதனைச் செய்தவர் பெயர் தெரியவில்லை.* பூதசுத்தி - உரையுடன். பூதபுராணம் - இது பழைய இலக்கண நூல்களுளொன்று; நச்சினார் கினியரா லெடுத்தாளப்பட்டது, காலம் - ? பூதர விலாசம் - தெய்வசுவாமி கவி. பூதத்தம்பி விலாசம் - கொ°தான் மாந்தை, (யாழ்ப்பாணம் 1888). பூதத்தாரவை யடக்கு-இது நச்சினார்க் கினியர் எடுத்தாண்ட நூல்களு ளொன்று, காலம் - ? பூதி ருத்திராதூடண கண்டனம் - விருiத சிவஞான யோகிகள் (1901) பூமாலை - கமலை ஞானப்பிரகாசர் 16ஆம் நூ. பூரணாநந்தோதயம் - சிவலிங்க நாயனார் (வீரக்கண் வேலாயுத முதலியார் பதிப்பு, சென்னை 1897.) பூர்வ காண்டம் - சைவம். பூர்வ சரித்திரம் - * பூர்வா பராநு சந்தானம் - * பூலோக விநோதக் கதைகள் - இராசேந்திரம் பிள்ளை, (சென்னை 1879). பூவளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 19ஆம் நூ. பூவைக்கோவை - இது அம்பாசமுத் திரத்தைச் சேர்ந்த ஊற்றுக்காட்டில் கோயில் கொண்டருளியிருக்கும் சிவ பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக அகப் பொருட்டுறை யிலமைந்தது. 469 பாடல்க ளுடையது. பெ பெண்களின் சரித்திரம் - நரசிம்மலு நாயுடு (கோயம்புத்தூர் 1883). பெண் புத்தி மாலை - வேதநாயகம் பிள்ளை, 1824 - 89. பெண் புத்தி மாலை - மகமது உசெயின், 18ஆம் நூ. பெண்மை நெறி விளக்கம் - அமிர்தம் பிள்ளை 1845 - 99 பெத்தலேம் குறவஞ்சி - வேதநாயக சாத்திரி (1882).* பெரிய கைங்கர்யப்படி - * பெரிய சீயர் வார்த்தை - மணவாள முனிகள். பெரிய ஞானக் கோவை (தொகுப்பு) - பதினெண் சித்தர், (முருகேச நாயகர் 1899.) பெரிய திருமடல் வியாக்கியானம் -பெரிய வாச்சான் பிள்ளை. பெரிய திருமுடியடைவு - ஆண் பிள்ளை கந்தாடையப்பன். பெரிய திருமொழி - திருமங்கை ஆழ்வார், 9ஆம் நூ. பெரிய திருமொழி அரும்பத விளக்கம்- பெரிய திருமொழி சாரம் - * பெரிய திருவடி தோத்திரம் - * பெரிய திருமொழி வியாக்கியானம் - பெரிய வாச்சான் பிள்ளை. பெரிய நாகேந்திரன் காதல் - இது கூளப்ப நாயக்கன் புதல்வன் பெரிய நாகேந்திரன் மீது சுப்பிரதீபக் கவிராயர் பாடிய நூல். பெரிய நாயகியம்மை பதிகம் - குமார தேவர். பெரிய பம்மம் - இறந்துபட்ட ஒர் இலக்கண நூல் (யா.வி.ப. 32) பெரிய புராண உரை - ஆறுமுகத் தம்பிரான், (1885). பெரிய புராண உரை - C.K. சுப்பிர மணிய முதலியார், (1937). பெரிய புராண சாரம் - * பெரிய புராணச் சரித்திர வெண்பா - மாலை - ? (1916). பெரிய புராணச் சுருக்கம் - சே. சிவ ஞானம் பிள்ளை, (1930). பெரிய புராணம்-சேக்கிழார், 12ஆம் நூ. பெரிய புராணம் வசன சங்கிரகம் - பெரிய புராண வசனம் - ஆறுமுக நாவலர், 1823 - 1879. பெரிய வாச்சான் பிள்ளை ரகசியம் - பெரியவாச்சான் பிள்ளை. பெரியலூர் புராணம் - முன்வேலப்ப தேசிகர், 16ஆம் நூ. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ் வார். பெரியாழ்வார் திருமொழி வியாக்கி-யானம் - பெரியவாச்சான் பிள்ளை, மணவாள முனிகள். பெரியாழ்வார் திருமொழி வியாக்கி யான வரும்பத விளக்கம் - பெருகுழி - கணிதம் பெருங் கதை-கொங்குவேள், 7ஆம் நூ. பெருத்தளிச் சிந்து - (1870).* பெருந்திரட்டு-தத்துவராயர், 15ஆம் நூ. பெருந்தேவபாணி - நக்கீரதேவர், கி.பி. 6ஆம் நூ. பெருந்தேவனார் பாரத வெண்பா - பெருந்தேவனார். பெருந்தேவித் தாயார் பஞ்சரத்தினம் - முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார், 19ஆம் நூ. பெருமாள் தண்டகம் - துதி. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார். பெருமாள் திருமொழி வியாக்கியான வரும்பத விளக்கம் - பெரிய வாச்சான் பிள்ளை. பெரும்பாணாற்றுப்படை - (கி.மு. 220) இது தொண்டைமான் இளந் திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பெரும்பொருள் விளக்கம் - இது நச்சினாக்கினியர் தொல்காப்பிய வுரையில் மேற்கோள் காட்டிய புறப்பொருள் நூல்களுளொன்று, காலம் - ? பெருவல்லம் - இறந்துபட்ட ஓரிலக் கியம் (யா.வி.ப. 238) பே பேதக மறுத்தல் - வீரமாமுனிவர், (புதுவை 1942). பேதிதைலம் - வைத்தியம். பேரகராதி - (Jaffna book society) பதித்தது. (யாழ்ப்பாணம் 1842). இதன் மறுபதிப்புகள் 1893-லும் 1899-லும் சென்னையில் வெளி வந்தன. பேரகத்தியத் திரட்டு - S. பவானந்தம் பிள்ளை, (1912). பேரம்பல பண்டாரத்தின் வரலாறு - பேரானந்த சித்தியார் - சிவானுபூதிச் செல்வர், (1905). பேரின்பக் கடல் - அந்தோனிக்குட்டி அண்ணாவியார், (1880)* பேரின்பத் தெம்மாங்கு - வரதராச முதலி (1878)*. பேரூர்க்கோவை - ? பேரூர்ப் புராணம் - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. பிற். பேரை குழைக்கா தழகிய பெருமாள் நமப்பத்து - பேரை வேலாயுதர் மாலை - பொ பொப்பிலி ராசன் கதை - கன்னையா நாயுடு, (சென்னை 1907). பொய்யா மொழிப் புலவர் சரித்திரம் - நாராயணசாமி முதலியார், (சென்னை 1908). பொய்யாமொழீசர் அட்டகம் - பொய்யாமொழீசர் கலித்துறை - பொய்யாமொழீசர் குறவஞ்சி - பொருத்தநூல் - இந்நூல் திருமணஞ் செய்தற்குப் பார்க்கும் கலியாணப் பொருத்தம் முதலியவற்றைக் கூறு வது. இயற்றியவர் போத நயனார். பொருநராற்றுப்படை - (கி.மு. 220) இது சோழன் கரிகாற் பெருவளத் தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. பொருநர் ஏர்க்களம் பாடு வோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோ ரெனப்படுவர். அவருள் இச்செய்யுளிற் காணப் படும் பொருநன் போர்க்களம் பாடு வோன். பொருநராற்றுப் படைப் பொருள் விளக்கம் - கோபாலாச்சாரியாரும் மகாதேவ முதலியாரும் (சென்னை 1907). பொள்ளாச்சி சுப்பிரமணியர் நான் மணி மாலை - சபாபதிப்பிள்ளை. பொறாமை வெட்டி அல்லது சந்திர காசக் கட்டியம் - செனார்த்தனம் பிள்ளை, (வேலூர் 1893). பொற்றொடி - சுந்தரம் பிள்ளை, குரு மலை (திருநெல்வேலி 1906) பொன்னரர் சங்கரர்நாடகம் - தியாக ராச பிள்ளை, திரிசிரபுரம் (திருச்சி னாப்பள்ளி 1902). பொன்னுருவி மசக்கை - புகழேந்திப் புலவர். போ போக இருடி சூத்திரம் 100 - போகஇருடி இரசவாதம். போகர் அகார சூர்ணம் - போகர். போக நாயனார் 700 - போகநாயனார் சூத்திரம் 8-இரசவாதம். போகநாயனார் பாடல் 762 - இரச வாதம். போகநாயனார் யோக நூல்-இரசவாதம். போகநாயனார் வெண்பா - இரச வாதம், ஞானம். போகர் சூத்திரம் 101 - ஞானம் பரண சாத்திரம். போகர் சூத்திரம் 16 - போகர் ஞானம். போகர் நாலாங்காண்டம் - போகர் இரசவாதம். போகர் நிகண்டு - போகர், 8ஆம் நூ. போகர் பூசாவிதி - போகர் பூசை. போகர் பூசாவிதி 44 - போகர் பூசை. போகர் வழலை சூத்திரம் - போகர், இரசவாதம். போகர் வாலை பூசாவிதி - போகர், இரசவாதம். போக்கியம் - இறந்துபட்ட ஒரு தமிழ் நூல் (யா.வி.) போசசரித்திரம் - நாராயண சாத்திரி (சென்னை 1900). போதகரிலக்கணம் - Mault (2ஆம் பதிப்பு யாழ்ப்பாணம் 1844). போதக வித்தியாசம் - Blomstrand மொழி பெயர்த்தது (2ஆம் பதிப்பு தரங்கம்பாடி 1882). போதகாபிஷேக பிரசங்கம் - Stickney (யாழ்ப்பாணம் 1888). போப்பையர் இலக்கணம் - டாக்டர் போப், 1820 - 1907. போரூர் ஆறுமுகன் குறுங்கழி நெடில் விருத்தம் - * போற்றிக் கலி வெண்பா - பரஞ்சோதி முனிவர், 16ஆம் நூ. போற்றித் திருவிருத்தம் - ?* போற்றிப் பஃறொடை - உமாபதி சிவாசாரியர், 14ஆம் நூ. பௌ பௌட்கராகமம் - சமக்கிருதத்தி லெழுதப்பட்டுள்ள நூல் சொல் லுக்குச் சொல் தமிழ் பெயர்ப்போடு 1890-ல் சென்னையில் அச்சிடப் பட்டது. பௌட்கர ஆகமத் தமிழுரை - வெள்ளியம்பலவாணத் தம்பிரான். பௌட்கர ஆகம விரிவுரை - ஞானப் பிரகாச தேசிகர், 17ஆம் நூ. பிற். ம மகபதி - P. சம்பந்த முதலியார், 1928.) மகர நெருங்குழைக் காதர் பாமாலை - நாராயண தீட்சிதர், (1939.) மகர நெடுங் குழைக் காதர் பிள்ளைத் தமிழ் - ?* மகவிந்த நாடகம் - கயிலாய சுப்பிரமணிய ஐயர், (1889). மகா காரண பஞ்சாக்கரம் - ?* மகர கோடா குளிகை-வைத்தியர் - ?* மகாசன மண்டலி - சாமிநாதையர் T.A. (சென்னை 1904). மகாசாலரகசிய விளக்கம்-முகமத் நிசாம் முகை அல்தின் சென்னை, 1901). (சென்னை 1904). மகாபக்த விசயம் - (சென்னை 1893) மகாபாரத அம்மானை - அதிவீர ராமன் பட்டினம் அண்ணாவியார், (தஞ்சாவூர் 1903). மகாபாரத ஆதிபர்வ ஓடம் - கண்ண தாசன், (சென்னை 1907). மகாபாரத கீர்த்தனை (நாடகம்) - முத்துவீர கவிராயரும் கதிர்வேல் கவிராயரும் சுப்பராய முதலியா ரும், (1905). மகாபாரதக் கீர்த்தனம் - முத்துக் குமார முதலியார், 19ஆம் நூ. பிற். மகாபாரதக் கும்மி - இராமசாமிக் கவி (1877)* மகாபாரத வசனம் (நல்லாப் பிள்ளை பாரத வசனம்) - தரங்காபுரம் சண் முகக் கவிராயர், (சென்னை 1847). மகாபாரத விலாசம் சூது துகி லுருதல் - இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், (சென்னை 1870). மகாபாரத வினாவிடை - க°தூரி ரங்கையர், (சென்னை 1869). மகா புராணம் - சைனம்* மகாமேரு யாத்திரை - ஆர். அனந்த கிருஷ்ணசாத்தரி, (1936) மகாராசா துறவு - சாந்தலிங்க சுவாமிகள், (விசுவநாத பிள்ளை. ரௌத்திரி). மகாராணி அம்மானை - பால்வனம் பெரிய சுப்பராய ரெட்டியார், (சென்னை, 1901). மகாலிங்கையர் இலக்கணம் - மழவை மகாலிங்கையர், 19ஆம் நூ. (சென்னை 1900). மகாவாக்கிய தசகாரியக் கட்டளை - இந்நூல் வேதாந்தச் சார்பானது. நான்கு வேதங்களின் சாரமான நான்கு வாக்கியங்கட்கும் உற்பத்தி பேதம், முக்கியம் முதலிய பத்தும் இன்னின்னவென்று விளக்கிக் காட்டுவது. வசன நடையில மைந்தது.* மகாவாக்கியம் - வேதாந்தம்* மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வதெப் படி - மறைமலை அடிகள், 1950 மகாவுக்கிர வீரபத்திரா°திரம் - செந்தி நாதையர் (1915). மகா வைத்தியந்தையர் - உ.வே.சா. (1936). மக்பத் - பவானந்தம் பிள்ளை, (1917). மங்களவல்லி விலாசம் - திரிசுரபுரம் நாராயணசாமிப் பிள்ளை, (பெங்க ளூர் 1882). மங்களேசுவரி பிள்ளைத் தமிழ் - சூரியநாராயண சாத்திரியார் பார் வையிட்டு அச்சிட்டது (சென்னை 1905). மங்களேசுவரியம் - இந்நூல் பிருஷா° சாதகம் எனவும்படும். வராகமிகிரர் வடமொழியிற் செய்தது. இதனைத் தமிழில் மொழி பெயர்த்தவர் வைத்திலிங்கப் பத்தர் (சென்னை 1905). மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ் - கு. நடேசக் கவுண்டர், (1901.) மச்ச புராணம் - இரசை வடமலை யப்ப பிள்ளையன், 17ஆம் நூ. மச்சமுனி சூத்திர விதி - மச்சமுனி ஞானம்* மச்சமுனி ஞானம் மூன்று காண்டம் - மச்சமுனி. மச்சமுனி திருமந்திரம் - மச்சமுனி இரசவாதம்* மச்சமுனி நிகண்டு - மச்சமுனி, இரசவாதம்* மச்சமுனி பாடல் - மச்சமுனி, சோதிடம்* மச்ச முனியார் பெருநூல் - மச்சமுனி, சோதிடம்* மச்ச முனி வாக்கியம் - மச்சமுனி, இரசவாதம், வைத்தியம்* மச்ச முனி விவரணம் - மச்சமுனிநாயனார் திருமந்திரம் - (1869). மச்சேந்திரய்யர் ஞானக் கலிப்பா - மச்சேந்திரையர், ஞானம்.* ம°கொல்லை அர்ச் ஆனாளீசுவரி பேரில் பதிகம் - பிலிப்பு, (யாழ்ப்பாணம் 1891). மடை நூல்-சிறுபாணாற்றுப் படையில், “காவெரி யூட்டிய கவர் கணைத் தூணிப் பூவிரிகச்சைப் புகழோன் றன் முன், பனி வரை மார்பன் பயந்த நுண் பொருட், பனுவலின் வழாஅப்பல் வேறடி சில்” என்பத னால் வீமசேனனி யற்றிய மடை நூல் ஒன்று உண்டெனத் தெரிகிறது. மணவாள நாராயண சதகம்-நாராயண பாரதி; இது திருவேங்கட சதகம் எனவும்படும், (சென்னை, 1905). மணவாள மாமுனிகள் - திருவல்லிக் கேணித் தமிழ்ச் சங்கம், (1944.) மணவாள மாமுனிகள் திருவந்தாதி - வேங்கடரங்க ராமானுசதாசர்; (சென்னை, 1869). மணவாள முனிகள் பாதாதி கேசாந்த வர்ணனை - * மணவை திருவேங்கட முடையான் பிள்ளைத் தமிழ் - * மணவை திருவேங்கட முடையான் மேகவிடு தூது - * மணிப்பாகை நகர் சுப்பிரமணியன் பதிகம் - * மணிப்பிரவாள விராடபர்வம் - களமூர் விசுவநாத சூரி, (சென்னை, 1905). மணிமேகலை - மதுரைக் கூலவாணி கன் சீத்தலைச் சாத்தனார், கி.பி. 140 (சண்முகம் பிள்ளை பதிப்பு சென்னை 1894; உ.வே.சா. பதிப்பு 1898). மணிமேகலை ஆராய்ச்சி - ஒளவை துரைச்சாமிப் பிள்ளை, (1942.) மணியாரம் - இறந்துபட்ட தமிழ் நூல்களுளொன்று (யா.வி.ப. 540.) மண்ணிப் படிக்கரைப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திரிசிரபுரம், (விவப.) மண்ணியல் சிறுதேர் - மு. கதிரேசன் செட்டியார் தமிழ் மொழிபெயர்ப்பு, (1933.) மதங்க சூளாமணி - விபுலானந்தர், (மதுரை - த.ச. 1926) மதன காமராசன் கதை - சீலை பொன் னம்பல கவிராயர் அச்சிட்டது, (சென்னை 1855). மதன கிரிராசன் கதை - * மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம் - இதனை இயற்றியவர் அருணாசலக் கவி, 19ஆம் நூ. மதன சுந்தரி ஓரடிச்சிந்து - சகந்நாத முதலி, (1888)* மதன லீலாவதி - குமார சுவாமி முதலியார், (சென்னை 1901). மதன வித்தார மாலை - கடிகை முத்துப் புலவர்.* மதிகெட்ட நாடகம் - கும்மட்டிப் பூண்டி வீராசாமி உபாத்தியாயர், (சென்னை 1902). மதிகெட்ட மனைவி - நடேச சாத்திரி, (சென்னை 1903). மதிமோச விளக்கம்- இராசகோபால பூபதி(சென்னை 1907). மதிவாணம் - மதிவாணனார், - ? மதிவாணன் கதை - வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் 1871 - 1903. மதி வெண்பா - அகத்தியர்* மதீனந்தாதி - சர்க்கரைப் புலவர், 17ஆம் நூ. மதுரகவி பதங்கள் - மதுரகவி பாரதி, (1886). மதுரகவி பிரசன்னமும் வியாக்கி யானமும் - வைணவம்.* மதுரகவி யாழ்வா ரூசல் - * மதுரகவி யாழ்வார் பேரிற் கவிதை- * மதுரவாக்கிய கீர்த்தன ரத்தினம் - முகதூம் முகமட் இபின்பூர் முகமத். மதுரை அறுபத்து நான்கு திரு விளை யாடற் சற்குரு மாலை - திருத் தொட்டிக்கலை கிருஷ்ண சுவாமி புதல்வர் கேசவ முதலியார், (சென்னை 1861). மதுரை அறுபத்து நான்கு திருவிளை யாடல் போற்றிக்கலி வெண்பா - பரஞ்சோதி முனிவர், 16ஆம் நூ. மதுரைக் கலம்பகம் - குமர குருபர சுவாமிகள். மதுரைக் காஞ்சி - (கி.மு. 60) இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது. மதுரைக் காஞ்சி என்பதற்கு மதுரையிடத்து அரசருக்குக் கூறிய காஞ்சி என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். மதுரைக் கோவை - சங்கர நாரணர் (S. வையாபுரிப் பிள்ளை 1934.) மதுரைச் சங்கத்தர் சரித்திரம் - * மதுரைச் சிலேடை வெண்பா - அரசஞ் சண்முகனார், 1868 - 1911. மதுரைச் சீமை விருத்தாந்தம் - மதுரை அமெரிக்கன் மிசன், (பாளையம் கோட்டை 1863). மதுரைச் சொக்கநாதருலா - திருமலை நாதர், 16ஆம் நூ. முற். மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - ? (உ.வே.சா. 1930.) மதுரைத் தமிழ்ச் சங்க அகராதி - கு. கதிரைவேற்பிள்ளை (உவைமன் கதிரைவேற் பிள்ளை) 20ஆம் நூ. முற். மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி - அநந்த கவிராயர். மதுரை மீனாட்சியம்மை கொம்மைத் தமிழ்ப் பாட்டு - சே.ரா. சுப்பிர மணியக் கவிராயர். (1919.) மதுரை மீனாட்சியம்மை சந்ததி திரு வடி மாலை - அரசஞ் சண்முக னார், 1868 - 1911. மதுரை மீனாட்சியம்மை நாடகம் - சுந்தரம் பிள்ளை, (சென்னை 1889) மதுரை மீனாட்சியம்மை பதிகம் - மாணிக்கவாசகத் தம்பிரான், (1946.) மதுரை மும்மணிக்கோவை - பல பட்டடைச் சொக்கநாதபிள்ளை (மதுரைத் த.ச. 1932) மதுரை யமக அந்தாதி - ஆறுமுகம் பிள்ளை, 19ஆம் நூ. பிற். மதுரைவீர அலங்காரம் - செஞ்சி ஏகாம்பர முதலியார், சென்னை 1892). மதுரை வீர நாடகம் - குட்டி உவாத் தியாயர், (1870)* மதுரை வீரசாமி கதை - கருணானந்த சாமி, (1870)* மதுரை வீரன் கும்மி - (1880).* மதுரை வெண்பா மாலை - ஆரணி அண்ணாமலை முதலியார், (இரங்கூன் 1891). மத்தான் சகிபு பாடல் - மத்தான் சகிபு 19ஆம் நூ. பிற். மந்திர சாத்திரம் - * மந்திரச் சுவடி வசனம் - * மந்திரநூல்-புட்கரனார், (யா.வி. ப. 352) மந்தரப் பிரபாவம் - * மந்திரம் (செபம்) - Scudder (யாழ்ப் பாணம், 1844). மந்திரசாரார்த்த இரத்தினாவளி - * மந்திர விவரணம் - இராமானுசர்* மந்திரார்த்த சங்கிரக விளக்கம் - சிவ அருணகிரி யோகி, (திருப்பனந் தாள் காசி மடம் 1944.) மயிலணிச் சிலேடை வெண்பா - முரு கேச பண்டிதர், 19ஆம் நூ. பிற். மயிலாசலத்தந்தாதி - பொய்கைப் பாக்கம் சின்னைய தேசிகர்* மயிலாசல மாலை - முத்துராசக் கவிராயர், (1939) மயிலிராவணன் கதை - ? (1875)* மயிலிராவணன் நாடகம் - செஞ்சி ஏகாம்பர முதலியார், சென்னை 1904). மயிலைக் கலம்பகம் - முருகதாச சுவாமிகள், 1840 - 99 மயிலைச் சிலேடை வெண்பா - கிருஷ்ணானந்த யோகிகள், (ஏ விளம்பி) மயிலை யமகவந்தாதி - தாண்டவ ராயர்* மயில் விருத்தம் - இந்நூல் முருகக் கடவுளின் வாகனமாகிய மயிலின் தோத்திரரூபமானது. காப்புச் செய்யுளி ரண்டும் நூற்பயன் கூறும் இறுதிச் செய்யுளொன்றும் நீங்க லாகப் பத்து விருத்தங்களுடையது. மயூரகிரிக் கலம்பம் - வயி. நாக. ராம. அ. இராமநாதஞ் செட்டியார், (ரிப்பன் பிர° 1908). மயூரகிரிக் கோவை - சாந்துப் புலவர், 18ஆம் நூ. மயூரகிரி யுலா - சு.மு. இராமசுப்பிர மணியஞ் செட்டியார், (சிறீமுக.) மயூராசல புராணம் - தியாகராசக் கவிராயர், (1931) மயேச்சுர யாப்பு - மயேச்சுரன் 11 - 13ஆம் நூ. (யாப்பருங்கல விருத்தி யில் இந்நூற் சூத்திரங்கள் மேற் கோளாக வந்துள்ளன.) மரக்கல முகூர்த்தம் - (கப்பல் சாத் திரம்).* மரண கண்டிகை என்னும் சோதிட சாத்திரம் - மார்க்கலிங்க சோதிடர், (1871). மரணசாசனம் - திரிசிரபுரம் மரியநாய கம் பிள்ளை, (திருச்சினாப்பள்ளி, 1891). மரணத்தின்பின் மனிதநிலை - மறை மலையடிகள், 1950 மரபாள புராணம் என்னும் வேளாள புராணம் - வீராச்சி மங்கலம் கந்தசாமி பிள்ளை, (ஈரோடு 1907) மரியாதைராமன் கதை - கதாசிந்தா மணியில் வெளி வந்தது, (1875). மருங்காபுரி அரசர்மீது குறவஞ்சி உலா, கோவை - வெறுமங்கை பாகக் கவிராயர், 19ஆம் நூ. மருட்பா மறுப்பு - பாலசுந்தர நாயக்கர், (சென்னை 1904). மருதமடு மரி அம்மன் பேரில் தோத் திர கீர்த்தனம் (யாழ்ப்பாணம் 1891). மருதடி அந்தாதி - அப்பாத்துரைப் பிள்ளை, (யாழ்ப்பாணம் 1891) மருதூர் யமகவந்தாதி - தலைமலை கண்டதேவர், 18ஆம் நூ. மருதூர் வெண்பா - அனந்த பாரதி ஐயங்கார், 1786 - 1846. மருத்துப் பாரதம் - தேரையர். மருந்தில்லா வைத்தியம் - கி. லட்சுமணசர்மா, (1936). மர்ம சாத்திரம் - வேங்கட சுப்பராவ் (சென்னை 1894). மலரும் மாலையும் - தேசிகவிநாயகம் பிள்ளை. மலுக்மலுக்கு ராசன் கதை - அபுர் காதர் சகிப். (1880)* மலைபடுகடாம் - இது பல்குன்றக் கோட்டத்து நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. இதற்குக் கூத்தராற்றுப் படையென் றும் பெயருண்டு. கூத்தரை நன்ன னிடத்துப் பரிசில் பெற ஆற்றுப் படுத்தியதாகும். கூத்தர் கூத்தாடு வோர். இச் செய்யுளில் மலைக்கு யானையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடா மெனச் சிறப்பித்ததனால் இப் பாட்டிற்கு மலைபடுகடாம் எனப் பெயர் வந்தது. மலையகந்தினி நாடகம் - கணபதி ஐயர் - 19ஆம் நூ. மலையாளங் கண்ணூற்கார் வம்சா வளி - * மலையாள தேசத்து சாதிகள் வரலாறு முதலியன - * மலையாள தேசத்து நம்பூதிரிகள் வரலாறு - * மலையாள தேச வரலாறு - * மல்லிகார்ச்சுன மாலை - * மல்லிகார்ச்சுன வந்தாதி - பல சாத்திரத்திரட்டு என்னும் நூலிற் காணப்படுவது.* மல்கட்டு மங்கையர் சிந்து - சுப்பிர மணிய முதலியார், (1868). மழவை சிங்கார சதகம் - மகாலிங் கையர், (1868)* மண்டூக்கிய உபநிடதம் - மொழி பெயர்ப்பு, (சென்னை 1898). மறவர் சாதி விளக்கம் - * மறு பிறப்பு - ? (புதுவை மாதா கோயில் பிர°, 1926.) மறைசைக் கலம்பம் - பீதாம்பரப் புலவர், 20ஆம் நூ. மறைசைத் திருப்புகழ் - பீதாம்பரப் புலவர், 20ஆம் நூ. மறைசையந்தாதி - சின்னத்தம்பிப் புலவர், 18ஆம் நூ. முற். மறைசையந்தாதி உரை - சிவசம்புப் புலவர், 18ஆம் நூ. மறைந்த நாகரிகங்கள் - ந.சி. கந்தையா பிள்ளை, (1949.) மறைந்த மாநகரம் - வித்துவான் கனகராசையர். மறைமுடி தேசிகனார் - திருவல்லிக் கேணி தமிழ்ச் சங்கம், (1944.) மனங்குழம்பிய மாதவத்தோன் - இராமசந்திர ஐயர், (தஞ்சாவூர் 1904). மனவுல்லாசக் கதை - நாராயண ஐயர், (சென்னை 1901). மனன வகை - இந்நூல் தூல சூக்கும சரீராதிகளின் தன்மையை ஆராய்ந்து அறியும் வகையைக் கூறுவது. இயற்றியவர் இன்னாரெனத் தெரியவில்லை.* மனித சரீரத்தின் இரசாயனம் - P.N. அப்புச்சாமி. மனித வாழ்க்கையும் காந்தியடி களும் - திரு. வி. க. (1921.) மனுச் சோழ சரித்திரப்பா - நாராயண சாமி நாயுடு. (1894). மனுதர்ம சாத்திரம் - குருசாமி முதலியார் மொழி பெயர்ப்பு, (3ஆம் பதிப்பு சென்னை 1896) மனுநீதி காதல் - ? (1911.) மனுநீதி சதகம் - வேதகிரி முதலியார், 1795 - 1852. மனுமுறை கண்ட வாசகம் - இராம லிங்க சுவாமிகள். மனுவியாக்கியான சதகம் - வேதகிரி முதலியார், 1795 - 1852. மனைகுறி சாத்திரம்-செஞ்சி ஏகாம்பர முதலியார், (சென்னை, 1894). மனை சாத்திரம் - * மனை நூல் - மயன் (சென்னை 1874). மனையடி சாத்திரம் - மயன் (இராம கிருஷ்ண சித்தாந்தியாரும் ஐயா சாமிப்பிள்ளையும் பதித்தது, (சென்னை 1885). மனைவா°து இலட்சணம் - * மனோதத்துவ தீபிகை - விச்சூர் முத்துக் குமாரசுவாமி முதலியார், (1908.) மனோபோதை மூலமும் உரையும் - இது வேதாந்தசார சமரசமானது. புரியட்டகம் தொண்ணூற்றாறு தத்துவம் முதலிய வற்றிற்குரிய இலக்கணம் முதலியன இன்னின்ன வென விளக்குவது, ஒன்று முதல் நூறு எண்கள் இறுதியாக ஒவ்வொரு எண்ணையும் தனித் தனியமைத்த நூறு பாடல்களாலாகியது.* மனோரஞ்சிதத் திரட்டு - முகமது தம்பி என்பவர் பாரசீக மொழியி லிருந்து மொழி பெயர்த்த கதைத் திரட்டு. (சென்னை 1901). மனோரம்மிய சிங்காரப் பதம் - கோவிந்தராசு முதலியார், (சென்னை 1893). மனோன்மணீயம் (மருந்து நூல்) - பண்டிதை மனோன்மணி அம்மாள், 1863 - 1908. மனோன்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, 1855 - 97 மன்மத நாடகம் - திருமலை தாசர், (1871)* மன்னார்கோயிற் புராணம் - வி. கோவிந்தப்பிள்ளை, (1868). மா மாக புராணம் - அதிவீரராம பாண்டி யன்; இராமலிங்க குரு பார்வையிட்டு அச்சிட்டது. (சென்னை 1904). மாங்குடி ஆண்டவர் பாடல் - ? மாடுபிடி சண்டை - பாணப்பட்டி இராகவமூர்த்தி, (சென்னை 1907). மாட்டின் அநுபோக வைத்திய சிந்தா மணி - கந்தசாமிப் பிள்ளை, (சென்னை 1895). மாட்டின் வாகடக் கண்ணாடி - முனிசாமி முதலியார், (1889)* மாட்டு வாகடம் - (1870)* மாட்டு வைத்தியம் - * மாணவனாற்றுப் படை - அ. சிதம்பர நாதன், (1931.) மாணாக்கராற்றுப் படை - பின்னத் தூர் நாராயணசாமி ஐயர், (கும்ப கோணம் 1900). மாணிக்க சுவாமி வெண்பா - மாணிக்க சுவாமிகள்*. மாணிக்கப் பாட்டு - சுத்தானந்த பாரதியார், (1946). மாணிக்கப் பிள்ளையார் திருவருட்பா - திருஞானசம்பந்த உவாத்தியாயர், 19ஆம் நூ. மாணிக்க மாலை-அழகிய மணவாளப் பெருமாணாயனார், 15ஆம் நூ. மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - (1932.) மாணிக்கவாசக சுவாமிகள் புராண வசனம் - வாசுதேவ முதலியார், (1897.) மாணிக்கவாசக சுவாமி விலாசம் - குப்புச்சாமி கிராமணி, (1869)* மாணிக்கவாசக ரம்மானை - நல்லூர்ச் சங்கரமூர்த்தி* மாணிக்கவாசகர் - கா. சுப்பிரமணிய பிள்ளை, (1928). மாணிக்கவாசகர் - கோயம்புத்தூர் திருச்சிற்றம்பலம் பிள்ளை, (சென்னை 1900.) மாணிக்கவாசகர் காலம் - மறைமலை அடிகள், - 1950. மாணிக்கவாசகர் ஞானத் தாழிசை - மாணிக்கவாசகர்* மாணிக்கவாசகர் திருமணி யகவல் -மாணிக்கவாசகர்* மாணிக்கவாசகர் பதம் - மாணிக்க வாசகர் மாதப்பதிகம் வாரப்பதிகம் - (1901) மாதர் ஒழுக்கம் - சுப்பிரமணிய உவாத் தியாயர், (1888)* மாதர் ஒழுக்கவிளக்கம் - ஐயாக் கண்ணு முதலியார், (1885) மாதர் நீதி - ஆரணி முருகேச முதலியார், (ஆரணி 1894). மாதர் நீதிக் கலிவெண்பா - வேங்கட சாமி ரெட்டியார், (1933.) மாபுராணம் - இறந்துபட்ட இலக்கண நூல்களுளொன்று (யா.வி.) மாமி கொலு விருக்கை - நடேச சாத்திரி, (சென்னை 1903). மாமிசபோசன விலக்கு - கிருத்துமத கண்டன சபை, (யாழ்ப்பாணம் 1889.) மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந் தம் - (பழநிச்சாமி 1908.) மாயாப்பிரலாபம் - கண்ணுடைய வள்ளல். மாயாவரத் தலபுராணம் - ஆதியப்ப நாவலர், 1580 மாயா விவரணம் - சிவயோக நாவலர்*. மாயூரத்தல புராணம் - பொன் விளைந்த களத்தூராதியப்பன்.* மாயூரநாதரந்தாதி - வே. முத்துச்சாமி அய்யர், (1944.) மாயூரப் புராணம் - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, (விபவ.) மாரக தசையறியும் வகை - சோதிடம்* மாரனேரி நம்பி யந்திமதசை - வைணவம்.* மாரான்மார் சாதி வரலாறு - * மாரியம்மன் தாலாட்டு - ? (சென்னை 1882.) மாரியம்மன் வர்ணிப்பு - * மாரியம்மன் விருத்தம் - * மாரியம்மை கலி வெண்பா - * மாரியம்மை தாலாட்டு - * மாரியம்மை துதி - * மாரியம்மை பதம் - * மாரியம்மை பதிகம் - * மாரியம்மை யூஞ்சல் - * மாரியம்மை வர்ணிப்பு - * மாரிவாயில் - சோமசுந்தர பாரதி, (1936.) மாருதிபிள்ளைத் தமிழ் - * மார்க்கசகாயர் துதி - * மார்க்கண்டேய நாடக அலங்காரம் - நரசிம்மையர், (1868*) மார்க்கண்டேய புராண வசனம் - ? (1909.) மார்க்கண்டேயர் - P. சம்பந்த முதலியார், (1929.) மார்க்கண்டேயர் சங்கீதசார ஒயில் - கும்மி - அப்பாவு முதலி, (1887)* மார்க்கண்டேயர் சிந்து - கந்தலிங்கையர், (1886)* மார்க்கண்டேயர் நாடகம் - ? (1881).* மார்க்கண்டேயர் புராணம் - குழந்தை வேலு கவிராயர், (1871)* மார்க்கண்டேயர் விலாசம் - வேங்கட ராம உவாத்தியார், (சென்னை 1869) மார்க்கண்டேயனார் காஞ்சி - இறந்து பட்ட தமிழ் நூல்களுளொன்று (யா.வி.) மார்க்க விளக்கம் - இராமசாமியார் தமிழ் மொழி பெயர்ப்பு, (சென்னை 1885). மாலை மாற்று - அரசஞ் சண்முக னார், 1869 - 1914 மாலை யகராதி - அருணாசல முதலியார், (1881).* மாவை யந்தாதி - சபாபதி நாவலர், 1844 - 1903 மாளவி காக்னிமித்திரம் - P. சம்பந்த முதலியார், (1931.) மாறனலங்கார உரை - காரி இரத்தினக் கவிராயர், 17ஆம் நூ. மாறனலங்காரம் - குருகைப் பெருமாள் கவிராயர், 16ஆம் நூ. மாறன் கலம்பகம் - * மாறன் சிங்காதனக் கவிதை - * மாறன் திருவவதாரச் சரிதை - இரத்தினக் கவிராயர்* மாறன் பதிகம் - * மாறன் பிள்ளைத் தமிழ் - * மாறன் கிளவி மாலை - குருகைப் பெருமாள் கவிராயர், 16ஆம் நூ . மானச விசயம் - வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், 1871 - 1903. மானிடக் கும்மி - நாராயணசாமி நாயுடு, (1876).* மான்விடு தூது - குழந்தைக் கவி ராயர், (உ.வே.சா. 1939.) மி மிருகேந்திரம் தமிழ் மொழி பெயர்ப்பு - வெள்ளியம்பலவாண தம்பிரான். (தருமபுர ஆ. 1946.) மிருச்சகடி நாடகம் - நடேச சாத்திரி வடமொழியிலிருந்து மொழி பெயர்த்த நாடகம், (சென்னை 1887). மிருதங்க போதினி 1ஆம் பாகம் - S. எதிராசன், (1934.) மிழலைச் சதகம் - சர்க்கரைப் புலவர்.* மிளகாய்ச் சுவாமிகள் புராணம் - செல்லையாப்பாவலர், (சிதம்பரஞ் செட்டியார், 1931) மின்னொளியாள் குறம் - புகழேந்திப் புலவர், (1874).* மீ மீரான்சகிப் ஆண்டவர் அவர்கள் காரண சரித்திரம் - முகமத் இமாம்கசலி இபின்முஹ் அலி (காரைக்கால் 1876). மீனாட்சிசுந்தர மாலை - ? மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் - உ.வே.சா. (1933 - 1934.) மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தம் - உ.வே.சா. (1920.) மீனாட்சியம்மை இரட்டைமணி மாலை - ச. சகநாதையர், (துந்துபி.) மீனாட்சியம்மை கலிவெண்பா - மதுரைச் சிதம்பர சுவாமிகள்* மீனாட்சியம்மை குறம் - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. மீனாட்சியம்மை சதகம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை.* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. மீனாட்சியம்மை யகவல் - * மு முகமதியர் காவியம் - இது மதுரைக் கீழைப்பாவிலிருக்கும் சிலைமா நகரிலிருந்த ஒல் லாமியா சயத் முகமத் என்பவர் அரபு மொழியில் இயற்றியதை அன்னவரது மகனார் வண்ணப் பரிமளம் என்பவரால் தமிழில் மொழி பெயர்த் தியற்றப் பட்டது.* முகமது சரித்திர காவியம் - இது முசிலிம் நூல்களைச் சார்ந்ததாய் பெருங்காப்பிய முறையிலே யமைந்துள்ளது. இதில் கடவுள் வாழ்த்துப்படலம், நாட்டுப் படலம், நகரப்படலம், நபியவதாரப் படலம், அலிமாமுலையூட்டுப்படலம் முதலிய பல பிரிவுகளையுடைய தாய் நபி சரித்திரத்தைக் கூறு கின்றது.* முகரப்பத்துவாக்கின் சரித்திரம் - சேக் அப்துல் காதிர் சகிப் (1881.)* முகியித்தின் புராணம் - பாடிர் அல்தின் புலவர், (வண்ணக் களஞ்சியப் புலவர்,) 18ஆம் நூ. சேகுத் தம்பிப் பாவலர் வெளி யிட்டது, (1901). முகுந்த மாலை - குலசேகரப் பெருமாள், 9ஆம் நூ. முகைதீன் மாலை - நயினாமுகமது புலவர், 18ஆம் நூ. முக்கூடற் பள்ளு - என்னயினா புலவர், 17 அல்லது 18ஆம் நூ. முக்கூட்டுப்பள்ளு - பழநிசாமி பிள்ளை. முக்தபோகாவளி - நயினாராச்சான் பிள்ளை.* முண்டக உபநிடதம் - (மொழி பெயர்ப்பு) சீனிவாச தாத்தாசாரிய சுவாமி பதித்தது), (சென்னை 1897). முதலாயிரம் - நாலாயிரப் பிரபந்தம் ஆழ்வார்கள்.* முதலாம் வேதோபதேச வினா விடை - (சென்னை 1865). முதல் இலக்கணம் - * முதல் திருவந்தாதி வியாக்கியானம் - பெரியவாச்சான் பிள்ளை, கௌசிக சீனிவாச அரங்கநாதா சாரியர் - * முதற்குருதுருசி (எண்ணாயிரத் திரட்டு) திருமூலர், வைத்தியம்* முதற்குறள் வாத நிராகரணம் - சுவாமி வேதாசலம், (சென்னை 1898.) முதற்குறள் வாதம் - ? (சென்னை 1897). முதற்றிருவந்தாதி - பொய்கை யாழ்வார், 8ஆம் நூ. முதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார், கி.மு. 62. முதுமொழிமாலை - உமாறுப்புலவர், 18ஆம் நூ. முத்தகபஞ்சக விஞ்சதி - முத்துக் குமார கவிராயர், 19ஆம் நூ. முத்தமிழ் மறை - T.A. சம்பந்த மூர்த்தி ஆச்சாரி, (1941.) முத்தல நாயக மும்மணிக்கோவை - ராம. சோ. சொக்கலிங்கம் செட்டி யார் (1920.) முத்தல வரலாறு - சுப்பிரமணிய சிவம். (1943.) முத்தா நந்தர் குறவஞ்சி - ஆற்றூர் முத்தா நந்தர்.* முத்தி நிச்சயம் - ஞானசம்பந்த தேசிகர், 16ஆம் நூ. முத்தி நிச்சயம் - வெள்ளியம்பலத் தம்பிரான் 17ஆம் நூ. முத்தி முடிவு - இந்நூல் மோட்சத் துக்குப் பக்குவமான நிலையுடைய ஒருவன் தனக்குப் பிரமமே குரு மூர்த்தியாய்த் தோன்றி ஞானோப தேசஞ்செய்யப் பெற்றுச் சிந்தித்துத் தெளிந்து பிரமநிட்டையைப் பொருந்தி மோட்சத்தையடைந்து தான் பெற்ற வானந்தம் இத்தகை யது எனக்கூறியதாக அமைந்தது. 25 பாடல்களையுடையது. திருப் போரூர் சிதம்பர சுவாமிகளின் சீடரான சரவண தேசிகர் செய்தது.* முத்திரா ராட்சசம் (மொழி பெயர்ப்பு) - நடேச சாத்திரி (சென்னை 1885). முத்திருளப்பிள்ளை காதல் - சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. முத்துக்குமாரசுவாமி பதிகம் - சதானந்த தாசர், (சர்வசித்து.) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபர சுவாமிகள், 17ஆம் நூ. முத்துசாமிக் கவிராயர் இயற்றிய பத்திரச கீர்த்தனங்கள் - (1923.) முத்துத்தாண்டவர் தமிழிசைப் பாடல் கள் - (1943) முத்துத்தாண்டவர் பதம் - முத்துத் தாண்டவர், 18ஆம் நூ. முத்துமாரியம்மன் நவரத்தினம் - செல்லையா பிள்ளை, (யாழ்ப் பாணம் 1893). முத்து வீரியம் - முத்து வீரியபாண்டி யன், 19ஆம் நூ. பிற். முத்தையன் விலாசமென்னும் வள்ளி யம்மன் விலாசம்-? (சென்னை 1885). முத்தொள்ளாயிரம் - இது சேரசோழ பாண்டியர் என்னும் மூவரசருக் கும் தனித்தனி தொளாயிரம் பாட லாகப் பாடப்பட்ட நூல், உரையா சிரியர்கள் எடுத்தாண்ட சில (105) பாடல்களே கிடைத்துள்ளன. முப்பத்தாறாயிரப்படி உரை - வடக்கு வீதிப்பிள்ளை. 15ஆம் நூ. முப்பத்திரண்டு பதுமை கதை - (1869)* முப்பத்திரண்டு ரகசியங்கள் - வேதாந்த தேசிகர் - வைணவம்* முப்பந்தோட்டி யுலா - * முப்பாற்றிரட்டு - அனந்த பாரதி ஐயங்கார், 1786 - 1846 முப்பு சூத்திரம் - (1881)* முப்பொருட் போதம் - Scott (சென்னை 1889). முப்பொருளுறவு - D. கோபால செட்டியார், (1921.) முமூட்சு கிருத்தியம் - வைணவம்* முமூட்சு சேத நாலு சந்தானம் - நடுவிலாழ்வான் பிள்ளை* முமூட்சுப்படி - பிள்ளை உலோகாசாரியர்* முமூட்சுப்படி வியாக்கியானம் - மணவாள மாமுனிகள்* முமூட்சுப்படி வியாக்கியான வரும் பத விளக்கம் - * மும்மணிக் கோவை - வேதாந்த தேசிகர், 1269 - 1371- மும்மணிக் கோவை - இறந்து பட்ட தமிழ் இலக்கியங்களுள் ஒன்று (யா.வி.) மும்மூர்த்தி லட்சணம் - உவின் சுலோ, (யாழ்ப்பாணம் 1844.) முருகப்ப நவரச சிலேடை - அங்கப்ப பிள்ளை. (கோயம்புத்தூர், 1894) முருகரகவல் (வரு முருகாற்றுப் படை) - மந்திரம்* முருகரந்தாதி - திருப்பாதிரிப் புலியூர் சண்முக ஞானியார், (1890.) முருகரனுபூதி - மீனாட்சிசுந்தர கவி ராயர், 19ஆம் நூ. பிற். முருகர் ஒயில் கும்மிப் பாட்டு - கந்த சாமி முதலியார், (1871)* முருகர் குறவஞ்சி - நல்ல வீரப்ப பிள்ளை, 19ஆம் நூ. முருகர் பள்ளு - நல்ல வீரப்ப பிள்ளை, 19ஆம் நூ. முருகர் விசித்திர சாவளிகள் - ஆலந்தூர் இரத்தின சபாபதி முதலியார், (சென்னை 1888.) முருகன் அடைக்கலப்பத்து - சிதம்பர சுவாமிகள்* முருகன் ஊசல் - சிதம்பர சுவாமிகள்* முருகன் எச்சரிக்கை - சிதம்பர சுவாமிகள்* முருகன் கலி விருத்தம் - சிதம்பர சுவாமிகள்* முருகன் குயிற்பத்து - சிதம்பர சுவாமிகள்* முருகன் சின்னகட்டியம் - சிதம்பர சுவாமிகள்* முருகன் தாலாட்டு - சிதம்பர சுவாமி கள்* முருகன் தாலாட்டு - கந்தப்பையர் 19ஆம் நூ. முருகன் திருப்பள்ளி எழுச்சி - கந்தப் பையர் 19ஆம் நூ. முருகன் துதி - ? முருகன் பதம் - ? முருகன் பிள்ளைத்தமிழ் - மார்க்க சகாய தேவர், 18ஆம் நூ. முற். முருகன் பெரிய கட்டியம் - சிதம்பர சுவாமிகள்* முருகன் பெருங்கழி நெடில் விருத்தம் - சிதம்பர சுவாமிகள்* முருகன் மட்டு விருத்தம் - சிதம்பர சுவாமிகள்* முருகன் மதுரகீர்த்தனை - மாயூரம் T.R. விசுவநாதசாத்திரி, (1940.) முருகன் வண்ணத்தாழிகை - மாயூரம் T.R. விசுவநாதசாத்திரி, (1940.) முருகன் வாகனபோகம் - வேதாந்த தேசிகன் - வைணவம்* முருகேசர் அனுபூதி - முத்துராமலிங்க சேதுபதி - 1783 முல்லைப் பாட்டு - (கி.பி. 50) இது காவிரிப்பூம்பட்டினத்து நப்பூதனார் பாடியது. இதில் தலைவன் பெயர் சுட்டப்படவில்லை. முல்லைப் பாட்டு ஆராய்ச்சி - மறை மலை அடிகள் - 1950. முற்பகல் செய்யின் பிற்பகல் விளை யும் - P. சம்பந்த முதலியார், (1932) முனிமொழி - (தெய்வசிகாமணிக் கவுண்டர் 1937.) முனீசுவரர் நவமணிமாலை - சிவ சிதம்பர ஐயர், (கொழும்பு 1887.) முன்னெண்பது - அகத்தியர்* மூ மூசத்தார் சாதி வரலாறு - மூடினமுத்து (கிறித்தவ கதைகள்) - (சென்னை 1896.) மூதுரை - ஒளவையார், 12ஆம் நூ. மூத்ததிருப்பதிகம் - காரைக்காலம்மையார், 6ஆம் நூ. மூத்ததுமார் சாதி வரலாறு - * மூத்த நாயனார் இரட்டைமணி மாலை - கபிலதேவர்.* மூத்த பிள்ளையார் பிள்ளைத் தமிழ் - அதிராவடிகள், 6ஆம் நூ. மூப்பெட்டுச் செய்யுள் - இறந்து போன தமிழ் இலக்கியங்களுளொன்று (யா.வி.) மூலகுரு சுருக்கம் - இரசவாதம்* மூலசரம் - சரசாத்திரம்* மூல மந்திரார்த்த சாரம் - யதிராசசீயர்* மூலிகை மர்மம் - சிறுமணவூர் முனி சாமி முதலியார், (சென்னை 1899) மூவடி முப்பது - இடைக்காடார் - ? மூவரம்மானை - துதி* மூவருலா பழைய உரை குறிப்புரை களுடன் - (கலியாணசுந்தரமையர் 1946) மூவர் முப்பது - சுப்பிரமணியச் செட்டியார், (1927). மூன்றாம் குலோத்துங்க சோழன் - வி.ரா. இராமச்சந்திரன் தீட்சிதர் (1943.) மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார், 8ஆம் நூ. மெ மெய்கண்ட சாத்திரக் கட்டளை - மு. அருணாசலம். மெய்கண்ட சாத்திர மூலம் - சைவ சித்தாந்தக் கழகம், (1925.) மெய்கண்ட சாத்திரம் - (1) திருவுந்தி யார், (2) திருக்களிற்றுப் படியார், (3) சிவஞான போதம் (4) சிவஞான சித்தியார், (5) இருபா இருபஃது, (6) உண்மை விளக்கம், (7) சிவப் பிரகாசம், (8) திருவருட்பயன், (9) வினா வெண்பா, (10) போற்றிப் பஃறொடை, (11) கொடிக் கவி, (12) நெஞ்சுவிடு தூது, (13) உண்மை நெறிவிளக்கம், (14) சங்கற்ப நிராகரணம். மெய்கண்ட தேவ முதலியார் கீர்த்தி மாலை - நாராயண சாமிப் பிள்ளை (பெங்களூர் 1879.) மெய்கண்ட வேலாயுத சதகம் - அழகு முத்துப் புலவர், (தஞ்சாவூர் 1900.) மெய்கண்ட வேலாயுத திருப்புகழ் - அழகு முத்துப்புலவர் (தஞ்சாவூர் 1900) மெய்க்காதல் - P. சம்பந்த முதலியார், (1923.) மெய்ச்சுருக்கம் 50 - தட்சிணா மூர்த்தி* மெய்ஞ்ஞானக் குறவஞ்சி - * மெய்ஞ்ஞானக் குறள் - ஒளவையார் மெய்ஞ்ஞான நிலையம் - * மெய்ஞ்ஞான போதம் - கோ. வடிவேலு செட்டியார், (1918.) மெய்ஞ்ஞானப் பாடற்றிரட்டு - முகை அல்தின் மலுக் முதலியார், கோட் டாறு, (சென்னை 1898.) மெய்ஞ்ஞானப் புலம்பல் - பத்திர கிரியார், (பெரிய ஞானக் கோவை 1899.) மெய்ஞ்ஞானம் - (தரங்கம்பாடி 1880.) மெய்ஞ்ஞான விளக்கம் - இது அத்வைத வேதாந்தச் சார்பானது. வடமொழியிலுள்ள பிரபோத சந்திரோதயமென்னும் நாடக நூலே போல், ஞானம், மோகம், விவேகம், இடம்பம், மித்தை முதலியவற்றைப் பாத்திரங்களாக உருவகப்படுத்தி அமைத்துக் காப்பிய ரூபமாகச் செய்யப்பட்டுள்ளன. இதனைச் செய்தார் திருவேங்கடநாதர் என் னும் அந்தணர். இவர் சோழ நாட் டிலே மாதை என்னுமூரிலிருந்த °மார்த்தப் பிராமணராகிய பெரு மாளையர் என்பவரது புதல்வர். கி.பி. 1682-ல் பாண்டி நாட்டை ஆண்டு வந்த முத்துவீரப்ப நாயக ரின் பிரதிநிதியாகத் திருநெல் வேலியை ஆண்டு வந்தவர். திரு வாரூர் வைத்தியநாத நாவலரைக் கொண்டு இலக்கண விளக்கஞ் செய்வித்தவர். மெய்ஞான விளக் கம் வைத்தியநாத நாவலரால் செய்யப்பட்டு திரு வேங்கடநாத ருக்குக் கொடுக்கப்பட்டதெனவும் வழங்கும். மெய்ஞ்ஞான விளக்கம் - முகை அல்தீன் மலுக்கு முதலியார் கோட் டாறு, (சென்னை 1898.) மெய்ஞ்ஞான வேத ஒளி - பாளையம் கோட்டை இராயப்ப உபதேசியார், (சென்னை 1904) மெய்ஞ்ஞானோதய விருத்தி - Dodridgo, (யாழ்ப்பாணம் 1848.) மெய்ப் போதக சாரம் - (தரங்கம்பாடி 1882) மெய்மொழி சரிதை - பல சாத்திரத் திரட்டு என்னும் நூலிற் காணப் படுவது.* மெய்யரிச்சந்திர நாடகம் - முதுகுளத் தூர் அட்டாவதானம் கலியாண சுந்தரம் பிள்ளை (சென்னை 1905.) மெய்யறம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை, (1936.) மெய்யறிவு உரையுடன் - வ.உ. சிதம்பரம் பிள்ளை, (1936.) மெய்யுபதேச பத்திரம் - உவின்சுலோ, (யாழ்ப்பாணம் 1843.) மெய்வழி - வேத நாயக சாத்திரியும் உவின் சுலோவும் (1852.) மே மேகதூதக் காரிகை - அ. குமார சுவாமிப் புலவர், 1850 - 1922. மேகதூத மொழி பெயர்ப்பு - நாகநாத பண்டிதர், - 1854 மேக வெள்ளைக்கு மேலான பரிகாரம் - காசி விசுவநாத முதலியார், (சென்னை 1869) மேதீனந்தாதி - சருக்கரைப் புலவர், 17ஆம் நூ. மேரி கருதம்மாளம்மானை - கிறித் துவம்.* மேருமந்தர புராணம் - வாமன முனிவர், 14ஆம் நூ. மேருமந்தர மாலை - இது மேரு மந்தர புராணத்தின் சுருக்கமா யுள்ள சைன நூல்* மேலக்காவேரி வரதராசப் பெருமாள் மகாத்மியம் - V.S. கிஷ்ணசாமி ஐயங்கார், (1942.) மேற்காவலம்மை பதிகம் - பையனூர் சாமிநாதபிள்ளை.* மேனாட்டு வணிக மன்னர் - மா. சுப்பிரமணிய பிள்ளை, (1939.) மை மைசூர் துரைகள் பேர் - * மைராவணன் கதை - * மைராவண நாடகம் - * மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கி யானம் - பட்டர்* மொ மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - மா. இராசமாணிக்கம், (1941.) மொழி நூல் - மாகறல் கார்த்திகேய முதலியார் - 1907. மோ மோகவதைப் பரணி - இதில் அறி வின்மை யென்னும் மாதினிடத்து மனமென்னும் மைந்தன் தோன்ற அவனுக்கு அபேட்சை, உபேட்சை என்னுமிரு மனைவியரிடத்து முறையே மோகன், விவேகன் என்ற மாந்தரிருவர் தோன்ற மன மென்பவன் அபேட்சை என்னும் மனைவி யிடத்து அன்பு வைத்தத னால் அவள் மைந்தனாகிய மோக னுக்கு அரசுத் தன்மை முற்றுமளிக்க அதனால் அவன் விவேகனுக்குச் சிறிதும் இடந்தராது அரசு செலுத் தும் போது அவனை விவேகன் உபாயத்தினாற் செயித் தனனென் னும் விஷயம் அழகாகக் கூறப்பட் டுள்ளது. ஆசிரியர் தத்துவராயர், சொரூபானந்தர் செய்ததாகவும் வழங்கும். மோகன சேத்திர மகாத்மியம் - * மோகனாங்கி - திருக்கோணமலை சர வணமுத்துப் பிள்ளை, (சென்னை 1895) மோகனாங்கி விலாசம் - திருச் செந்தூர் சுப்பிரமணிய பண்டிதர் (சென்னை 1899) மோட்ச காரணம் - உவின்சுலோ (யாழ்ப்பாணம் 1844.) மோட்ச சாதன விளக்கம் - இராமா னந்த சுவாமி, (சென்னை 1906.) மோட்ச சூக்குமம் அல்லது விட்டுணு நாமாவளி - இராகவலு இராமானு சதாசர். (1903) மோட்சத்துக்குப் போற வழியை வெளிப்படுத்துகிற ஞான உபதேசம் - ? (தரங்கம்பாடி, 1777.) மோதிரப் பாட்டு - இது நச்சினார்க் கினியர் எடுத்தாண்ட நூல்களி லொன்று, காலம் - ? ய யசோதர காவியம் - ? இது யசோதர சரித்திரம் என்னும் வடமொழி நூலை அடிப்படையாகக் கொண்டு செய்யப் பட்டது. வடமொழி நூல் 1025-ல் செய்யப்பட்டது. இது 12ஆம் நூற்றாண்டளவில் செய்யப் பட்டதாகக் கருதப்படும். யதீந்திரப் பிரவண பிரபாவம் - பிள்ளை உலோகாசாரியார். யவனயமினி விநோதங்கள் - திருவேங்கடப் பிள்ளை, (1887). யா யாக்ஞ்ஞ வல்கிய மிருதி - * யாத்திரைக் கீர்த்தனை - சந்தியாகோ பிள்ளை, (கொழும்பு 1893.) யாப்பருங்கலக் காரிகை - அமிர்த சாகர முனிவர், 11ஆம் நூ. யாப்பருங்கலக் காரிகை உரை - குணசாகரர், 12ஆம் நூ. யாப்பருங்கலக் காரிகை உரை - சிவசம்புப் புலவர், 18ஆம் நூ. யாப்பருங்கலம் - அமிர்தசாகர், 11ஆம் நூ. யாப்பிலக்கண அணியிலக்கண வினா விடை - விசாகப் பெருமாளையர், 19ஆம் நூ. யாப்பிலக்கணச் சுருக்கம் - முத்திச் சிதம்பரம் பிள்ளை சென்யோசப் கல்லூரி, திருச்சினாப்பள்ளி, (1898.) யாப்பிலக்கணம் - சரவணப் பெரு மாளையர், (சென்னை 1900.) யாப்பிலக்கண வினாவிடை - காசி விசுவநாத முதலியார், 19ஆம் நூ. பிற். யாழ் நூல் - இது நச்சினார்க்கினியர் எடுத்தாண்ட நூல்களிலொன்று, காலம் - ? யாழ் நூல் - சுவாமி விபுலானந்தர் செய்த ஒரு நூல், மறைவு 1947. யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலங்கை நகர் தண்டபாணி விருத்தம் - உ.வே.சா. (1944.) யாழ்ப்பாண வைபவம் - மயில் வாகனப் புலவர், 19ஆம் நூ. (1889.) யானைக் காதல் - முகை அல்தின் கற்புடையார் - யானைக் காதல் (யாழ்ப்பாணம் 1891.) யானைமேலழகர் நொண்டிச்சிந்து - அனந்தபாரதி ஐயங்கார், 1786 - 1846 யூ யூகிமுனி ஆயுள்வேதம் அல்லது சிகிச்சா சாரசங்கிரகம் - (1866).* யூனானி வைத்திய முறை - * யே யேசுமத சங்கற்ப நிராகரணம்- சபாபதி நாவலர் 1844 - 1903 யோ யோகநித்திரை - மறைமலையடிகள் - 1950. யோகப்பொருள் அகராதி - அரங்க சாமிப் பிள்ளை, (திண்டுக்கல் 1900.) யோகரகசியம் - நாதமுனி, 11ஆம் நூ. யோசேப் புராணம் - கூழங்கைத் தம்பிரான், 19ஆம் நூ. பிற். வ வங்காரு துரைசாமி விருத்தம் - வசவ புராணம் - (ஆறுமுக நாவலர் 1873.) வசன சம்பிரதாயக் கதை - சிவகங்கை முத்துக்குட்டி ஐயர் (திருவாதி 1895). வசன சூளாமணி - (சூளாமணி வசனம்) - சி.வை. தாமோதரம் பிள்ளை (சென்னை 1898.) வசைக்கடம் - இது நச்சினார்க்கினியர் எடுத்தாண்ட நூல்களிலொன்று, காலம் - ? வசைக்கூத்து - இது நச்சினார்க்கி னியர் எடுத்தாண்ட நூல்களி லொன்று, காலம் - ? வச்சலா கல்யாணம் - வேம்பு அம்மாள் (கும்பகோணம் 1906). வச்சிர தண்டம் - செந்திநாதையர். வஞ்சிமாநகர் - ரா. இராகவ ஐயங்கார், - 1947. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் - தி. நீலாம்பிகை (1939). வடவேங்கட நாராயண சதகம் - நாராயண தாசர்* வடிவுடை மாணிக்க மாலை - குப்பாரை சுவாமி (1887).* வடிவுடையம்மன் உயிர் வர்க்க மாலை - சிறுமணவூர் முனிசாமி முதலியார். வடிவுடையம்மை ஆசிரிய விருத்தம் - சுப்பிரமணிய சுவாமி (1868). வடிவுடையம்மை துதி - * வடிவுடையம்மை நவரத்தினம் - (1880).* வடிவுடையம்மைபதிகம் - சபாபதி முதலியார் (1868)* வடிவுடையம்மை விருத்தம் - * வணிக கணிதம் - (Ready Reconer) யுசுவ் முகமட் முகி அல்தின் (சென்னை 1891). வண்டு விடுதூது - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. வண்ண சந்த மாலை - (1881).* வண்ணத்தியல்பும் வண்ணமும் - முருகதாச சுவாமி (1868). வண்ணத்திரட்டு - (1926). வண்ணத்திலக்கணம் - முருகதாச சுவாமிகள், 1840 - 99 வண்ணைக் குறவஞ்சி - விசுவநாத சாத்திரியார், 19ஆம் நூ. வண்ணை நகரூஞ்சல் - சதாசிவப் பண்டிதர், 20ஆம் நூ. (சிங்கப்பூர் 1887). வண்ணையந்தாதி - சதாசிவ பண்டிதர் 20ஆம் நூ. சிங்கப்பூர் (1887). வதரீசர் பிரபந்தத் திரட்டு (வினாயகர் பிரபந்தத் திரட்டு) (சென்னை 1902). வதுவிச்சை - இறந்துபோன தமிழ் நூல்களுளொன்று (யா.வி.) வந்தேமாதரம் (சுதேச கீதங்கள்) - சி. சுப்பிரமணிய பாரதி (சென்னை 1908). வயித்தியலிங்கக் குறவஞ்சி - கணபதி ஐயர், 19ஆம் நூ. வயிரவக்கடவுள் கீர்த்தனம் - பருத்தித் துறை சிதம்பரப் பிள்ளை (வல்வை 1887). வயோலா சரித்திரம் - நடேச சாத்திரி, (கோயம்புத்தூர் 1892). வரசித்தி விநாயகர் பஞ்சரத்தினம் - சாம்பசிவ கவிராயர் (நுங்கம் பாக்கம் 1867). வரதராசப் பெருமாள் பதிற்றுப் பத்தந் தாதி - இராமானுசக் கவிராயர், 19ஆம் நூ. வரதராசப் பெருமாள் பேரில் காதல் பிரபந்தம் - வீரராகவ ஐயங்கார் (1887)* வரதராசர் துதி - * வரமங்கை நாதன் துதி - * வரவரமுனி சதக வியாக்கியானம் - வராக உபநிடதம் - வில்லவராம்பல் குப்புச்சாமி ஐயர் மொழிபெயர்ப்பு (சென்னை 1898.) வராக சூத்திரம் - (1881.)* வராகிய மாலை - கவிராச பண்டிதர், 16ஆம் நூ. வராங்கன் கதை - சைனம்.* வருடாதி நூல் - சந்திரசேகர கவிராச பண்டிதர், 19ஆம் நூ. பிற். (1868). வருடாதி நூற் சித்தாந்த விளக்கம் - சந்திரசேகர கவிராச பண்டிதர் (சென்னை 1875). வருண குலாதித்தன் மடல் - தாசி காளிமுத்து, 18ஆம் நூ. இது நாகை யில் வாழ்ந்த காத்தான் குலாதித்தன் மேலது. வருண சிந்தாமணி - கூடலூர் கனக சபாபதிப் பிள்ளை (சென்னை 1901.) வருண தருப்பணம் - காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் (சென்னை 1907). வருத்தமானம் - இறந்துபோன தமிழ் நூல்களுளொன்று (யா.வி.ப. 528) வரையறுத்த பாட்டியல் - இது சம்பந்த முனிவர் மாணாக்கர் செய்த நூல். செய்யுளின் பொருத் தம் சொன்ன செய்யுளிலக்கணம், 16ஆம் நூ. வரையுரை மாட்சித் திருமந்திரம் - * வர்ணாச்சிரம தர்மம் - சமரபுங்கவ சாத்திரி (1874).* வர்த்தமான சுவாமி தோத்திரம் - சைனம். வலங்கைச் சரித்திரம் - * வலிமைக்கு மார்க்கம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை, (1872 - 1936). வலிவல மும்மணிக் கோவை - ? (உ.வே.சா. 1934.) வலைவீசு புராணம் - முத்துக்குமாரர் 18ஆம் நூ. வல்லக் கொண்ட நாயகன் வம்சாவளி - வல்லத்தல புராணம் - சிவானந்த மூர்த்தி (1881)* வல்லாள மகாராசன் கதை - (1879).* வல்லாளராசன் யட்சகானம் - * வழிநடைப்பதம் - (1868). வழிநடைப்பதம் (காஞ்சிபுரம்) சிவ சுப்பிரமணிய வாடியார். வழிநடைப்பதம் திருப்போரூர் - (1870). வழிநடைப்பதம் திருவிரிஞ்சைபுரம் - காளத்தி ஐயர் (1874)*. வழிநடைப்பதம் திருவொற்றியூர் - வேங்கடாசல ஆச்சாரி (1874).* வளையாபதி - ? 10ஆம் நூ. வள்ளலார் சாத்திரம் - சிவஞான வள்ளல், 18ஆம் நூ. (1869). வள்ளிகாந்தன் தோத்திர மஞ்சரி - ? (1924). வள்ளிச் சிந்து - (1888).* வள்ளி நாடகம் - நமச்சிவாயப் புலவர் (1872).* வள்ளி புராணம் - புலிப்பாகை மூர்த்தியார். வள்ளி மணிமாலை - முத்துராமலிங்க சேதுபதி - 1783. வள்ளி மணம் - P. சம்பந்த முதலியார், (1929). வள்ளியம்மை ஆயலோட்டுங் குற வஞ்சி - கந்தசாமி முதலியார், (1876).* வள்ளியம்மை நாடகம் - முத்துவீரிய கவி (1875*). வள்ளியம்மை நாடகம் - குமரப் பிள்ளை. வள்ளியூர்த் தலபுராணம்-ஆழ்வாரப்ப பிள்ளை, (1839 - 1924) வனவாசம் - கருணானந்தசாமி (1870).* வன்னியகுல விளக்கம் - ஐயாக் கண்ணு நாயக்கர் (சென்னை 1891). வன்னியகுல கலியாணக் கொத்து-? (சேலம் 1894). வன்னியகுல நாடகம் - திருப்பாதிரிப் புலியூர் பாலசுப்பிரமணிய பிள்ளை, (சென்னை 1902). வன்னியப்பர் மான்மியம் - (1882). வன்னியப்பர் புராணம் - வீரபிள்ளை, (சென்னை 1905). வ°து நிர்ணயம் - பெரியாழ்வார்* வா வாகட சாத்திரம் - வைத்தியம்* வாகட சுர நூல் - * வாகட சூத்திரம் 300 - * வாகட நூல் - (-?) திருமூலர் வாகை வனத் தாலாட்டு - * வாக்கியத் திரய வியாக்கியானம் - * வாக்குண்டாம்-ஒளவையார் 12ஆம் நூ. வாசக இலக்கணம் - அறிவானந்தம் பிள்ளை, (சென்னை 1886). வாசகத் திரட்டு - எம்.எ°. பூரண லிங்கம் பிள்ளை (சென்னை 1896). வாசிட்டத் திரட்டு, பகவத் கீதைத் திரட்டு, பாகவதத் திரட்டு இராம சுவாமி (1886). வாசுதேவ மனனம் - சைன முனிவர் (1870)* வாட்போக்கிக் கலம்பகம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை, (1815 - 1875). வாணாசுர நாடகம் - க°தூரி ஐயங்கார், (1889).* வாணாசுர நாடகம் - கரடிவாவி அப் பண்ண நாயகம் (சென்னை 1890). வாத காவியம் - அகத்தியர். வாதக் கோவை - சித்தர்கள். வாதச் சுருக்கம் - சித்தர்கள். வாதச் சூத்திரம் - அகத்தியர். வாத நிகண்டு - மச்சமுனி, 8ஆம் நூ. வாதபுரீசர் பதிற்றுப் பத்தந்தாதி - நாகலிங்க சுவாமி (1868)*. வாதம் 300 இரண்டாம் காண்டம் - இரசவாதம்*. வாதவூர ரானந்தக் களிப்பு - * வாதவூரர் புராணம் - கடவுள் முனி வர், 18ஆம். நூ. பிற். வாத்ஸயாயன சூத்திரம் - தமிழ்மொழி பெயர்ப்பு சுந்தரராச சர்மா (1901). வாயு சங்கிதை - இது வடமொழியில் வியாச முனிவர் செய்த சிவமகா புராணத்தின் ஐந்தாவதாகிய வாயு சங்கிதையின் மொழி பெயர்ப்பு. இந்நூலாசிரியர் வரகுண பாண்டி யர். இது பூர்வ காண்டம் உத்தர காண்டம் என இரண்டு பிரிவினை யும் 1334 செய்யுட்களையுமுடையது. வாய்ப்பியம் - இறந்துபட்ட இலக்கண நூல்களுள் ஒன்று (யா. வி. ப. 536) வார்த்தாமாலை - வைணவ ஆசாரியர்கள்.* வாலி மோட்சம் - (1883).* வாலைக் கும்மி - கொங்கணர். வாலைக் கும்மிப் பாடல் - வாலையர், ஞானம்.* வாலை தீட்சை - மந்திரம் * வாலை பஞ்சாட்சர விளக்கம் - திருமூலதேவர், மந்திரம்.* வாலை பூசாவிதி- மந்திரம் * வாழித் திருநாமம் - அப்பிள்ளை வாழித் திருநாமம் - அப்புள்ளான்* வாழித் திருநாமம் முதலியன - வைணவம்.* வாள பிமன் நாடகம் - கணபதி ஐயர், 19ஆம் நூ. வான சாத்திரம் - ஆணல் (யாழ்ப் பாணம் 1861.) வான சாத்திரச் சுருக்கம் - (1869).* வானமா மலை சதகம் - தெய்வ நாயகப் பெருமாள் நயினார் (1873). வானர மதுரைத் தலபுராண வசனம் - வ.த. சுப்பிரமணிய பிள்ளை, (1934). வானவன் விடுதூது - யாகப்பபிள்ளை, (1873).* வான்மீகி ராமாயண சாரம் - இராமா னுச தாசன் (1936). வி விகட சுந்தரி - (Taming of the Shrew) கந்தசாமிப்பிள்ளை, (1906). விக்கிரக பத்திக்குந் தெய்வபத் திக்குஞ் சம்பாஷணை - Robarts சென்னை. (1823). விக்கிரம சோழன் உலா - ஒட்டக் கூத்தர், 12ஆம் நூ. விக்கிரமாதித்தன் கதை - முகமட் இபிரகாம் சகிப் (1877).* விக்கிராதனையும் சுரூபவணக்கமும் - ஞானப்பிரகாசர், (யாழ்ப்பாணம் 1906). விக்கினேசுவ ராட்டகம் - மந்திரம்*. விக்டோரியா சக்கரவத்தினியார் சரித்திரம் - சண்முகம் பிள்ளை, (சென்னை, 1902). விக்டோரியா பேரரசிரியர் வரலாறு - கருப்பையா பாவலர், 20ஆம் நூ. விக்டோரியா மகாராணி யவர்கள் ஞாபக சின்னம் - சாமி செட்டியார், (சென்னை, 1901.) விக்டோரியாள் பட்டாபிஷேகத்தைக் குறித்து - பெங்களூர் கந்தசாமிப் புலவர், (இறங்கூன், 1877). விசயாலய சோளீசுவரம் - S.R. பால சுப்பிரமணிய ஐயர். விசயேசித கலாபோதினி - சோசியம் சீனிவாச ராகவ ஐயங்கார், (1866). விசார சங்கிரகம் - மொழிபெயர்ப்பு (தஞ்சை, 1904). விசிட்டவாசகம் - செர்மையா, (யாழ்ப் பாணம், 1886). விசிட்டாத்துவைத தீபிகை - (1874)* விசுவநாதம் - முத்துச் சுவாமி ஐயர், (தஞ்சை, 1906). விசுவ புராண வசனம் - * விசுவப்பிரம புராணம் - விசுவநாத பாரதியார் மொழி பெயர்ப்பு, (சென்னை, 1864). விசுவாச பத்தி (Moses the Pious Negro) - மொழி பெயர்ப்பு, (யாழ்ப் பாணம், 1844). விசுவாச விளக்கம் அல்லது ஞானா னந்த புராணம் - (1874).* விசுவாமித்திர வாக்கியம் - * விஞ்ஞானசாரம் - குமாரதேவர், சைவம்.* விஞ்ஞான தீபம் - (1884).* விஞ்ஞான தீபமும் ஆனந்தக் கும்மியும்- அரங்கசாமிப் பிள்ளை, (1881).* விடநிக்கிரக நிகண்டு - அட்டா வதானம் கிருட்டிணையங்கார், 19ஆம் நூ. பிற். விட்டுணு தத்துவ விளக்கம் - அப்பாவு முதலியார், 19ஆம் நூ. பிற். விட்டுணு தலமஞ்சரி - கொ. பட்டாபி ராம முதலியார், (1927). விட்டுணு தூடண பரிகாரம் - நாராயண பிள்ளை, யாழ்ப்பாணம், (1885).* விட்டுணு நாமாவளி - இராகவலு ராமானுச தாசர், (1903). விட்டுணு புராணம் - சுப்பிராய ஐயர் மொழி பெயர்ப்பு, (சென்னை, 1904) 1883-ல் ஒரு பதிப்பு வெளிவந் துள்ளது. விஷ்ணு குமாரர் கதை - சைனம்.* விஷ்ணு சகத்திரநாம வியாக்கி யானம் - * விஷ்ணு புராண வசனம் - * விண்ணப்பத் தோத்திரமாலை - சேவு. மெய்யப்பச் செட்டியார், (பார்த்திப). விண்ணப்பப் பத்திரிகை - வைண வம்*. விதவோ விவாக கண்டனம் - அரங்காசாரிய பெருமாள் கோயில் கிடாம்பி. (1890). விதான மாலை - நாராயணசாமி (1881).* வித்தியாபி விருத்தி சம்பாஷணம் - திருப்பத்தூர், தாசரதிச்செட்டி (பெங்களூர், 1895). வித்தியாரணிய நகரம் - C.R. சீனிவாச ஐயங்கார், (சென்னை, 1901). வித்தியா விநோதினி - இராமசாமி நாயுடு, சண்முகம் பிள்ளை, வாசு தேவ முதலியார் (சென்னை, 1899.) வித்துவான் தியாகராசச் செட்டியார் - உ.வே.சா. (1927). விநாடி பஞ்சபட்சி - உரோமரிஷி (1881.) விநாயக கவசம் - (ஆறுமுக நாவலர், 1868).* விநாயக சதுர்த்தி விரத சரித்திர சங்கிரகம் - சுப்பிராய முதலியார், (1878). விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர், 18ஆம் நூ. விநாயக ரூஞ்சல் - சிவசம்புப் புலவர், (1875)* விநாயகர் அகவல் - ஒளவையார். விநாயகர் அனுபூதி - (1870).* விநாயகர் கலிவெண்பா - சுந்தர முதலியார், (1889)* விநாயகர் திருமுக விலாசம் - சரவணப் பெருமாள் கவிராயர், 19ஆம் நூ. விநாயகர் திருப்புகழ் போற்றிக் கலி வெண்பா - சுந்தரமூர்த்தி, (1876)* விநாயகர் பஞ்சரத்தினம் - * விநாயகர் பதிற்றுப் பத்தந்தாதி - சிதம்பரஞ் செட்டியார், (1913) விநாயகர் மான்மிய சாரம் - ஆறுமுக முதலியார், (1877)* விநோத கதை சங்கிரகம் - சுந்தர ராகவ ஐயங்கார், (கும்பகோணம், 1892). விநோத சரித்திரம் (நாவல்) - நாரா யணசாமிப்பிள்ளை, (1888)* விநோத ரசமஞ்சரி - வீராசாமி செட்டி யார், 19ஆம் நூ. பிற். இது 1865-க்கு மேல் செய்யப்பட்டது. விநோத விடுகதை-? (சென்னை, 1892). விபூதி ருத்திராட்ச தாரண நிரூபணம் - மன்னார்குடி, தியாகராச தீட்சிதர், (சென்னை, 1901). விப்பிரம விஹாசம் - (Shakespear’s comedy of Errors) - அன்பில் வேங்கடாச்சாரியார் மொழி பெயர்ப்பு, (1905). விம்பசாகர கதை - இது ஒரு தமிழ்ப் பௌத்த நூல். இது கௌதம புத்த ருடைய மாணாக்கருளொருவனும் இராசக் கிருகநகரத்தரசனுமாகிய பிம்பசாகரனுடைய சரித்திரத்தை விரித்துக் கூறுகின்றது. இதைப் பற்றிய மறு செய்திகள் ஒன்றும் அறியப்படவில்லை (உ. வே. சா.) வியாகுலக் கடல் - அடைக்கலம் பிள்ளை, (1878).* வியாகுலப் பிரசங்கம் - (Sermons on the passion of Christ) (யாழ்ப் பாணம், 1886). வியாக்கிரபாத ஞான சூத்திரம் 300 - ஞானம், இரசவாதம்.* வியாக்கிரபாத புராணம் - வைத்திய நாத தம்பிரான், 17ஆம் நூ. விராடபர்வ நாடகம் - பாணம்பட்டி இராகவ மூர்த்தி, (சென்னை, 1907). விருத்தலேசுவரர் நவரத்தின மாலை- விருத்தலேசுவரர் பஞ்சரத்தின மாலை - வேலாயுத புலவர், (1880)* விருத்தாசல புராணம் - ஞானக் கூத்தர். விருத்தி இரத்தினாவளி - குப்புச்சுவாமி இராசுவின் மொழி பெயர்ப்பு, (சென்னை, 1902). விருத்திப் பிரபாகரம் - குப்புச் சுவாமி இராசுவின் மொழிபெயர்ப்பு, (சென்னை, 1901.) விருபாக்ஷி பாளையப்பட்டு மலையிற் குன்றுவர் சாதி விவரம் - * விரும்பிய விதமே - P. சம்பந்த முதலி யார், (1919). விரோதி பரிகாரம் - வேதாந்த தேசிகன், வைணவம்.* விலட்சண மோட்சாதிகாரி நிர்ணயம் - எறும்பியப்பா*. வில்கணியம் - கணபதிப் பிள்ளை, (1875)*. வில்லிபாரத வசனம் - கோவிந்த ராசைய்யங்கார், (1921). வில்லிபாரதத் திறவுகோல் - ச.கு. கணபதி ஐயர், (1940). வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரர், 15ஆம் நூ. வில்லிபுத்தூரர் பாரதப் பாயிரம் - வரந்தருவார், 15ஆம் நூ. வில்லிபுத்தூரர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - (சென்னை, 1904) வில்வராயத் தல புராணம் - (1875.) வில்வளைத்து மாலையிடுதல் - இராமச்சந்திரகவி, (1874)* விவகார சாரசங்கிரகம் - மதுரை கந்த சாமிப் புலவர், (சென்னை, 1826). விவசாய விளக்கம் - இராசகோபால நாயுடு, (சென்னை, 1902) விவித பதார்த்த சஞ்சாயம் - (சமூகப் பேச்சு) சென்னை. விவிலிய குற்சிதம் - செந்திநாதையர் விவிலிய நூல் வரலாறு - உடுப்பிட்டி ஆறுமுக பிள்ளை, (யாழ்ப்பாணம் 1899) விவேக சந்திரிகை - T.A. சாமிநாத ஐயர், (சென்னை, 1904) விவேக சாகரம் - சண்முகக்கவி (1883).* விவேகசாரம் - வேதாந்தம்.* விவேகசாரம் - குருவாசு தேவேந்திர சுவாமிகள்* விவேக சிந்தாமணி - நிசகுணயோகி, 19ஆம் நூ. முற். விவேக சிந்தாமணி - மாம்பாக்கம் அரிகர உவாத்தியாயர் (1870).* விவேக சுந்தரம் - நமசிவாயச் செட்டி, (சென்னை, 1888). விவேக விளக்க கீர்த்தனை - (1878)* விவேக விளக்கம் - குலா அலி (சென்னை, 1870). விளக்கத்தனார் கூத்து - இது நச்சி னார்க்கினியர் எடுத்தாண்ட நூல் களிலொன்று, காலம் - ? விறலிவிடுதூது - அட்டாவதானி, 18ஆம் நூ. வினாடி புஞ்சபட்சி - உரோமர் ப.வி. வினா வெண்பா - உமாபதி சிவா சாரியார், 14ஆம் நூ. வினா வெண்பா - சிற்றம்பலநாடிகள், 15ஆம் நூ. வினா வெண்பா உரை-நமச்சிவாயர்.* வீ வீட்டு நெறி உண்மை - சரவண தேசிகர், 19ஆம் நூ. வீட்டுநெறியுண்மைக்கு அடிவரவு * வீமேசுர உள்ளமுடையான் - ? (மார்க்கலிங்க சோதிடர், 1877) வீரகுமார நாடகம் - அட்டாவதானம் கிருட்டிணையங்கார், 19ஆம்நூ. பிற். வீரகுமார நாடகம் - மார்க்கண்ட முனி சாமி பிள்ளை, (சென்னை 1868). வீரசாரக் கட்டளை - நாகிச்செட்டியார், (1931). வீரசிங்காதன புராணச் சுருக்கம் - வேலைய சுவாமிகள்.* வீரசைவ நூல் - உமாபாகர்.* வீரசைவப் பிரகரணம் - ? (1935.) வீரசைவ விளக்க வினா விடை - நாகி செட்டியார், (1933.) வீரசைவாகமம் - இது பாயிரமுட்பட நூற்றுப் பதினெட்டுப் பாடல்களா லாகியது. நூலாசிரியர் பெயரும் நூற்பெயரும் தெரியவில்லை. முதலில் ‘வீர சைவாகம்’ எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.* வீரசோழிய உரை - பெருந்தேவனார் 12ஆம் நூ. - சி. வை. தாமோதரம் பிள்ளை (1887). வீரசோழியம் 1ஆம் பதிப்பு - சி.வை. தாமோதரம் பிள்ளை 1832 - 1901. வீரசோழியம்-புத்தமித்திரர், 11ஆம் நூ. வீரசோழியவுரையின் உதாரணச் செய்யுளகராதி - * வீரதுரங்க ராசன் கதை - * வீரபதிகம்-அருணாசல முதலியார், (1879) வீரபத்திர சதகம் - சின்னத்தம்பி, 1830 - 1878 வீரபத்திர சுவாமி பதிகம் - சுவாமி நாதர்.* வீரபோக வசந்தராயர் பத்திரிகை - சரித்திரம்.* வீரமாகாளியம்மை பேரில் தோத்திரம் - இராமசாமிச் செட்டி, (1877.)* வீரமாநகர் - ஆர்.பி. சேதுப்பிள்ளை, (1933.) வீரமாறன் கதை - * வீரய்யனம்மானை - * வீரராகவர் துதி - * வீரவனப் புராணம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, (1815 - 1875.) வீரவன்மன் வென்றி - P.V. சபாபதி முதலியார் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தது, (சென்னை 1903) வீரைப் பூமிநாதர் கலித்துறை அந்தாதி - அருணாசல முதலியார் (1883)* வீரைவனப் புராணம் - குணவீர பண்டிதர், 12ஆம் நூ. வீல நாடகம் - இலக்குமண பிள்ளை மொழி பெயர்ப்பு, (சென்னை 1894.) வெ வெங்கிட்டராயவர்கள் படுகளச் சிந்து - கோயிற்பட்டி கணபதி நாயுடு (திருநெல்வேலி 1895). வெண்கவிப்பாவும் அடைக்கல மாலையும் - (1880.) வெண்பாப் பாட்டியல் - குணவீர பண்டிதர்.* வெல்லையந்தாதி - சதாசிவம் பிள்ளை (ஆணல்) 19ஆம் நூ. பிற். வெள்ளாட்டி மாசால மறுமொழி விலாசம் - முகமத் லெப்பை அலிம் சாகிப், (1884.) வெள்ளாட்டி மாசால விளக்கம் - முகமத் இபிரகாம் சாகிப் (1883.)* வெள்ளிக்கிழமைத் தியானம் - கிறித்துவம்.* வெள்ளை சிந்தாமணி - மாம்பாக்கம் அரிகர உபாத்தியாயர். தொத்த விவேக சிந்தாமணி, வெள்ளை சிந்தாமணி எனவும் வழங்கும் (சென்னை 1871.) வெற்றிவேற்கை (நறுந்தொகை) - அதிவீரராம பாண்டியன், 1564-1604. வெனி° வர்த்தகன் - S. பவானந்தம் பிள்ளை, (1917.) வெனி° வர்த்தகன் - S.V. கள்ளர் பிரான் பிள்ளை, (சென்னை 1904.) வே வேங்கடமாலை - பிள்ளைப் பெரு மாள் ஐயங்கார், 17ஆம் நூ. வேங்கடவனுபூதி - இராமானுச கவிராயர், 19ஆம் நூ. வேங்கடாசலமகிமன் வண்ணம் - * வேங்கடேசப் பெருமாள் பதிகமும் கீர்த்தனமும் - முத்துக்கிருஷ்ண நாயக்கர், (1883)* வேங்கடேச தோத்திரம் - வேங்கடேச ரெட்டன் சோபனம் - தெய்வசுவாமி.* வேங்கடேசரெட்டன் பிள்ளைத் தமிழ் - தெய்வநாயகர்.* வேங்கடேசரெட்டன் பூரவிலாசம் - தெய்வநாயகர்* வேங்கடேசர் திருவனந்தல் - * வேங்கை அலங்காரம் - துறைமங் கலம் சிவப்பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. வேங்கைக் கலம்பகம் - துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 17ஆம் நூ. வேங்கைக் கோவை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 17ஆம். நூ. வேங்கையுலா - துறைமங்கலம் சிவப் பிரகாச சுவாமிகள், 17ஆம் நூ. வேசியர் மாலை - வேங்கடசாமி நாயுடு, (1889). வேணுவன இலிங்கோற்பவம் - அம்பலவாண பிள்ளை (1888)* வேண்டும் பத்து - * வேத அகராதி (பைபிள் அகராதி)- Bower (சென்னை 1841.) வேதகிரி ஈசுவரர் பதிகம் - சிதம்பர சுவாமி. வேதகிரீசர் துதி - * வேத சாத்திரச் சுருக்கம் (கிறித்துவ நூல்)- (நெய்யூர் 1838.) வேத சார வினாவிடை - வெ°லி யன் மிசன், (மட்டக் களப்பு 1892,) வேத சிவாகமப் பிரமாணியம் - சோம சுந்தர நாயகர், 1846 - 1901. வேதத்தைக் குறித்த வியாசம் - குமர குருதாச சுவாமி, (சென்னை 1903.) வேதபுராணம் - பெரியநூ லெப்பை (சென்னை 1894.) வேதபுரித் தல புராணம் - கருணா கரன்.* வேதபுரி யந்தாதி - திருக்குடந்தை துரைசாமி முதலியார் (புதுவை 1868.) வேதபுரீச ரந்தாதி - * வேதபுரீசர் துதி - * வேதப் பொருள் சார சங்கிரகம் - நரசிம்முலு நாயுடு, (கோயம்புத்தூர், 1896.) வேதப் பொருள் விளக்கம்-காசிவிசுவ நாத முதலியார், 19ஆம் நூ. பிற். வேத வாக்கிய பூமாலை - (1869)* வேத விளக்க பேத மறுத்தல் - * வேத விளக்கம் - வீரமாமுனிவர், (புதுவை 1842.) வேதாகம சங்கத்தின் மகோற் சவத்தைப் பற்றிய புத்தகம் (யாழ்ப்பாணம் 1853.) வேதாகம தர்ம வித்தியா - நா. சாம்பசிவ சாத்திரி, (1932.) வேதாகம வாத தீபிகை - திருஞான சம்பந்தப்பிள்ளை, 20ஆம் நூ. வேதாந்தக் குறம் - * வேதாந்த சாத்திரம் - * வேதாந்த சார சங்கிரகம் - முதலி யாண்டான் தாசர், (சென்னை 1898) வேதாந்த சாரம் - சந்திர சேகரசாமி, (சென்னை 1862). வேதாந்த சார்ய வைபவப் பிரகாசிகை - சிறீவதசமகாரியர்.* வேதாந்த சுயச்சோதி - சரவண முத்துப் புலவர், 19ஆம் நூ வேதாந்த சூடாமணி - இது கன்னட மொழியில் நிசகுண யோகி என் னும் பெரியாரியற்றிய விவேக சிந்தா மணியிலுள்ள வேதாந்த பரிச்சேதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகத் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமி களியற்றியது. வேதாந்த சூரியோதயம் - (கோயம்புத் -தூர், 1882). வேதாந்த சூளாமணி - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமி* வேதாந்த தத்துவக் கட்டளை - திருமூல சுவாமிகள்.(1871)* வேதாந்த தீபிகை - சிவாக்கிரயோகி, 16ஆம் நூ. வேதாந்த தேசிக ரூசல் - ? (1939) வேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனை - அனந்த பாரதி, (செங்கல்பட்டு 1890.) வேதாந்த பரிபாஷை - மொழி பெயர்ப்பு, தர்மராச தீட்சிதர், (சென்னை 1907.) வேதாந்த விளக்க கீர்த்தனை - திருச்சிற்றம்பல நாடார். (1878.)* வேதாந்த விளக்கம் - சச்சிதானந்த சுவாமி, (1889)* வேதாந்த வுரைப்படிக் கட்டளை - * வேதாந்தப் பள்ளு - ஆவிடை அம்மாள், (திருவாதி 1896.) வேதாந்தப் பாட்டுகள் - எழும்பூர் வாலாம்பாள், (சென்னை 1907) வேதாந்தம் - ராம சொ. சொக்கலிங்க செட்டியார், (1917.) வேதாந்த பத்ததி - * வேதாந்த வம்மானை - * வேதாந்த வாக்கியம் - * வேதாந்தோபந்யாசம் - * வேதாரணிய புராணம் - பரஞ்சோதி முனிவர், (16ஆம் நூ.) வேதாரணிய புராணம் - அகோர முனிவர், (17ஆம் நூ.) வேதாளக்கதை - கவிக்களஞ்சியம்* வேதாளக்கதை வசனம் - * வேதியர் ஒழுக்கச் சோதனை - கிறித்துவம்.* வேதியர் ஒழுக்கம் - வீரமாமுனிவர் (சென்னை 1844.) வேமன்ன பத்தியங்கள் - வேமன்னர் செய்த தெலுங்குப் பத்தியங்கள் தமிழ் எழுத்தில் தமிழ் உரையோடு, (சென்னை 1892.) வேம்பத்தூரார் திருவிளையாடல் - வேம்பத்தூர் நம்பி, 12ஆம் நூ. வேலணை இலந்தைக் காட்டுச் சித்தி விநாயகர் இரட்டைமணி மாலை - பேரம்பலப் புலவர், 1859-1935 வேலப்பன் ஞான சூத்திர வெண்பா-* வேலாயுத சதகம் - அழகுமுத்துப் புலவர், (1914.) வேல் விருத்தம் - இது முருகக் கடவுளின் ஆயுதமாகிய வேலின் சிறப்பைக் கூறுவது; 10 சந்தவிருத் தங்களாலாகியது. இதனை இயற்றிய வர் அருணகிரிநாதர், (15ஆம். நூ.) வேழமுகம் - இந்நூல் 12 உயிரெழுத் துக்களையும், 18 மெய் யெழுத்துக் களையும் முறையே ஒவ்வோரடி யின் முதலில் வைத்துச் செய்யப் பட்டுள்ளது. விநாயகர் சார்பானது. இந் நூற்காப்பின் முதலில் வேழ முகம் என்று தொடங்குதலால் இது வேழமுக மென்னும் பெயருடைய தாயிற்று. வேளாண் மரபியல் - வேலாயுத முதலியார், 19ஆம் நூ. பிற். வேளாண்மைக் கடன் - பி.ஜே. தாம°, (1935). வேளாளர் நாகரிகம் - மறைமலை அடிகள். வேளாளர் புராணம் - வீராச்சிமங்கலம் கந்தசாமிப் பிள்ளை, (ஈரோடு 1907.) வேளாளர் யாவர் - மறைமலை யடிகள், 1950 வை வைகுந்த அம்மானை - பரசுராம முதலியார், (1866)* வைகுந்த சதகம் உரையுடன் - வரதராசப்பிள்ளை.* வைகுந்த நாதன் பிள்ளைத் தமிழ் - * வைசிய புராணம் - இராசகோபால பிள்ளை, (1874)* வைசூரிக வச்சிரதண்டம் - வேங்கட சாமி நாயுடு, (1880)* வைணவ சம்பிரதாய தீபிகை - அழகர்சுவாமி, (1881)* வைணவ தத்துவம் - இராமானுச நாவலர், (1875)* வைதிக காவிய தூடண மறுப்பு - சபாபதி நாவலர், 1844-1903. வைத்தமாநிதி சுவாமி திருப்பணி மாலை - * வைத்தமாநிதித் திருப்பணி மாலை - இது தாமிரபரணிக் கரையிலுள்ள திருக்கோளூரென்னும் கோயிலில் வீற்றிருக்கும் வைத்தமா நிதி என் னும் திருமாலின் கர்ப்பக்கிருகம், மண்டபம், மதில், விமானம் முதலி யவற்றையும் வாகனம் ஆபரணம் முதலியவற்றையும் செய்வித்தார், இன்னின்னாரெனத் தெரிவிப்பது. வைத்தமாநிதிப் பொருமாளூசல் - * வைத்தமாநிதிப் பெருமாள் விடு கவிதை - * வைத்தமாநிதி வல்லியாரூசல் - * வைத்திய அகராதி - கந்தசாமி முதலியார், (1880)* வைத்திய அகராதி - காசி விசுவநாத முதலியார். (1870)* வைத்திய அனுபோக சார சங்கிரகம் - திருவள்ளூர் திருவேங்கடாச் சாரி, (பாலைக்காடு 1893.) வைத்திய காவியம் - அகத்தியர் வைத்தியக் கும்மி - அகத்தியர், (1870). வைத்தியக் குறிப்புகள் - * வைத்திய சங்கிரகம் - அப்துல்லா இபின் அப்துல்கரீம் (பெங்களூர் 1900.) வைத்திய சந்தான சிந்தாமணி - அப்பர் சுவாமிகள் பிள்ளை,(1894). வைத்திய சாத்திரம் - * வைத்திய சார சங்கிரகம் - முத்துக் கருப்பப் பிள்ளை, (ம.த. சங்கம், 1927.) வைத்திய சார சங்கிரகம் - சித்தர்கள். வைத்தியம் (மருந்துவகை) - * வைத்திய சிந்தாமணி - யூகிமுனி -? வைத்திய சிந்தாமணி - தன்வந்திரி. வைத்திய சிந்தாமணி - இராஜ கோபாலப்பிள்ளை, (பெங்களூர் 1899.) வைத்திய சிரோரத்தின நடன காண்டம் - (1870)* வைத்திய சில்லறைக் கோவை - அகத்தியர். வைத்திய தர்க்க சங்கிரகம் - அகத்தியர் (1880)* வைத்தியத் திறவுகோல் - சித்தர். வைத்திய நசகாண்டம் - வீரமா முனிவர், (1874)* வைத்திய நூல் - * வைத்திய நூற்பாடல்கள் - * வைத்திய பாடல் -* வைத்திய புராணம் 205 - (1883)* வைத்திய போதினி - வடிவேலு முதலியார், (சென்னை 1900). வைத்திய மாலை அகராதி - (1879)* வைத்திய முறை - * வைத்திய ரத்தினச் சுருக்கம் - அகத்தியர், (1877)* வைத்திய வகராதி - அகத்தியர்* வைத்திய விருதுநூல் தர்க்கம் - * வைத்திய விலக்கணம் - * வைத்தீசர் பதிகம் - (1867)* வைத்தீசுவரன் கோயிற் புராணம் - சொக்கலிங்கம் முதலியார், (1866.) வைரமும் அதன் குணாதிசயங்களும் - P.N. அப்புசாமி. வைராக்கிய சதக உரை - சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. வைராக்கிய சதகம் - இது திருத் துறையூர்ச் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய நூல். ஆன்ம ஞானமுண் டாகும் பொருட்டு உடம்பினையும் இந்திரியங்களையும் களைந்த பின் அந்தக் கரணத்தைக்களையத் தொடங்கி அவற்றுள் முதன்மை யான மனத்தை நீக்குந்தோறும் அது பழைய வாசனையால் விவேகத்தைத் தன்மயப் படுத்தி ஐம்புலன்களி லிழுத்துச் செல்ல, விவேகம் அதனை அறிந்து அம் மனத்தைத் தன் மயமாக்கக் கருதி மனத்தை முன்னிலைப்படுத்திக் கூறுவதாக அமைந்துள்ளது. வைராக்கிய தீப உரை - சிதம்பர சுவாமிகள், 18ஆம் நூ. வைராக்கியம் தீபம் - இது சாந்தலிங்க சுவாமிகளியற்றியது. யான், எனது என்னும் மயக்கமாகிய இருளைத் துறவாகிய ஒளியினால் நீக்கி மன மாகிய வீட்டினை விளக்கஞ் செய் தலினால் இந் நூற்கு வைராக்கிய தீபம் எனப் பெயரமைந் துள்ளது; பாயிரமுட்பட நூற்றொரு விருத்தப் பாக்களை யுடையது. பின் சேர்ப்பு அகத்தீச்சுரப் புராணம் - ராம. சொ. சொக்கலிங்கஞ் செட்டியார் (1917). அகநானூறு மூலமும் பழைய உரையும் - (அனந்த நாராயணர்) (1931). அகிலாண்ட மாலை - * அகிலாண்டேசுவரி அட்சர மாலிகா-? (1933). அங்கயற் கண்ணம்மை அடைக் கலப் பத்து - * அசபா நடனப் பதிகம் - சிவஞான தேசிக சுவாமிகள் (1941). அடைவு திருப்பதிக் கோவை - * அட்டாதிக்கின் ஆரூடம் முதலியன - ? (1887). அண்டத்துப் பரணி - * அண்ட வெளிக்குறம் - ? (1938). அதிகாலை செபம் - * அத்யாத்ம யோகம் அல்லது ஆத்மப் பயிற்சி - குகதா° (1936). அநுசூயை வெண்பா - ந. குப்புச்சாமி முதலியார் (1901). அநுமந்தர் பாட்டு - துதி * அநுமான விளக்கம் - நாராயணை யங்கார் (மதுரை. த.ச. 1935). அப்பர் ஐம்மணி மாலை - வை. சுந்தரவாண்டையார் (1943). அப்பர் சுவாமிகள் சரித்திரம் - கா. சுப்பிரமணிய பிள்ளை (1927). அமானல்லா கதை - ?* அமீன் தோத்திரம் - ?* அமெரிக்கா - ஏ.கெ. செட்டியார் (விஷு). அம்மை திருவந்தாதி - ( பல சாத்திரத் திரட்டு). அயிந்திரமதத் தமிழுரை (சோதிடம்) - அ. கிருஷ்ணசாமிப் பிள்ளை (1928.) அரதத்தாசாரியர் சரித்திரம் - ப. சிதம்பர ராமலிங்க பிள்ளை (1925). அரிகரதாரதம்மியம் - தர்க்ககுடார தாலுதாரி (1895). அரிச்சந்திரன் கதை - (வசனம்)- ? அரிட்ட நவநீதம் - நவநீத கவி R.S. இரகுநாதையர் (1940). அரியலூர் பால சுப்பிரமணிய சுவாமி பதிகம் - பொ. சாமிநாத தேசிகர் (1927). அருச்சுனன் தீர்த்த யாத்திரை - அரங்கநாத கவி (சித்தார்த்தி). அருட்பிரகாசம்-(பல சாத்திரத்திரட்டு). அருட்பிரகாச வள்ளலார் திவ்விய பாதார்ச்சனை கீர்த்தனை - ச. மு. கந்தசாமிப் பிள்ளை (1923). அருணாசலக் கவிராயர் சரித்திரம் - லாங்மன்° கிரீன் & கம்பனி (1915). அருந்தமிழ்த் திரட்டு - * அரும்பைத் தொள்ளாயிரம் - * அருளானந்த கீர்த்தனை - முத்துக் கிருஷ்ண பிரமம் (இராட்சத). அருளானந்த முறை - முத்துக் கிருஷ்ண பிரமம் (1778). அர்த்த நாரீசுவரர் - C.K. சுப்பிரமணிய முதலியார் (இரத்தாட்சி). அலகை ஆரூடம் - ? (1902). அவிநாசி நாதர் வாக்கு - (பல சாத்திரத்திரட்டு) அழகர் பேரில் கமல விடுதூது - வெங்கிடகிருஷ்ண பாரதி (1892). அழகிய நம்பி உலா - ? (S. வையாபுரிப் பிள்ளை 1932). அளகாபுரி உமையம்மை பிள்ளைத் தமிழ் - சி.தியாகராசச் செட்டியார். அறநெறி விளக்க சங்கிரகம் - துரைசாமி சுவாமிகள் (1908). அறநெறி வெண்பா - கணபதி சுப்பிர மணிய அய்யர் (1939). அறம் வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ் - தொட்டிக்கலைச் சுப்பிர மணிய முனிவர். அறிவு நெறி - ? (1934). அறிவுரைக் கோவை - ந.சி கந்தையா பிள்ளை (1941). அறிவுரைத் திரட்டு - தி.பொ. சிவராம பிள்ளை (1923). அறிவுரை மாலை - ந.சி. கந்தையா பிள்ளை (1940). அறிவு விளக்க வாசகம் - கா. சுப்பிர மணிய பிள்ளை (1940). அறுபத்து மூவர் மரபின் அடைவு- * அறுமுகன் அருள் விளையாடல் - ? (1940). அற்புத உலகம்- P.N. அப்புசாமி (1939). அனுகீதை-பகவத்கீதைக்கு அங்கமா யுள்ளது. (சென்னை 1907). அனுபவ மெய்ஞ்ஞானத் தங்கம் நூறு - சாமிநாத முதலியார், (1932). அனுபவானந்த தீபிகை - நாராயண சாமி நாயகர் (1893). அனுபோக சாதக ரகசியம் - ? ஏகாம்பர முதலியார் (1889). அனுமந்த வாசகம் - * அன்பர் போற்றிக் கலிவெண்பா - தியாகராச தேசிகர் (1930). அன்பு முடி - தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1935). அன்பு விடுதூது - P.N. இராச மாணிக்கம் பிள்ளை (1942). அன்னதான மகிமை - * அன்னம்மாள் பிரார்த்தனை - * ஆசிரியர் துதிப்பாக் கோவை - வே. முத்துச்சாமி ஐயர் (1944). ஆச்சாபுரத் தலபுராணம் - சிவக் கொழுந்து தேசிகர். ஆச்சாபுரம் கோயில்வரலாறு - ? (தருமபுர. ஆ. 1941). ஆதி உயிர்கள் - ந.சி. கந்தையா பிள்ளை, (1948). ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1875). ஆதிகும்பேசுவரர் தோத்திரப் பதிகங் கள் - கும்பநாதச் செட்டியார் (பார்த்திப). ஆதித்த புராணம் - * ஆதிமனிதன் - ந.சி. கந்தையா பிள்ளை, (1947). ஆதியுலா - * ஆதிவயலூர் வெண்பா வந்தாதி - சுந்தரநாத பிள்ளை (1918). ஆத்ம இதிகாச சாகை - வைத்திய லிங்க சுவாமிகள் (1935). ஆத்ம இரட்சாமிர்தம் - சுப்பிரமணிய பண்டிதர். ஆயுட் பாவகம் - ஆதி சங்கராச் சாரியார் (1895). ஆயுர்வேத ஆசான் - பண்டிட் C.R. நமசிவாய இராசயோகி. ஆராய்ச்சி - மா. சாம்பசிவம் பிள்ளை (1923). ஆராய்ச்சி யுரைத்தொகை - S. வையா புரிப் பிள்ளை (1930). ஆரிய வேதங்கள் - ந.சி. கந்தையா பிள்ளை (1948). ஆரோக்கிய நூல் - சென்னை சரசுவதி சங்கம் (1937). ஆலங்குடித் தலபுராணம் - ? (1915) ஆலயமணி - R.K. விசுவநாதன் (1946). ஆவடுதுறை வைத்திலிங்க தேசிகர் மாலை - தெ. பெரிய சாமிப் பிள்ளை (1925). ஆவினன்குடி யந்தாதி - வே. இராமநாதன் செட்டியார் (1939). ஆளுடைய பிள்ளையார் திருக்கலம் பகம் - நம்பியாண்டார் நம்பி. ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம் - நம்பி யாண்டாhர் நம்பி. ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை - நம்பியாண்டார் நம்பி. ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி - நம்பியாண்டார் நம்பி. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை - நம்பியாண்டார் நம்பி. ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு - (த. கைலாச பிள்ளை) ஆறெழுத்தந்தாதி - அகத்தியர். ஆனந்தத் திரட்டு - (பல சாத்திரத் திரட்டு) இங்கித மாலை - இராமலிங்க சுவாமி கள் (1904) இடும்பன் கவசம் - கலியாண சுந்தர முதலியார் (1929) இந்தியா உண்டானது எப்படி - டி. எ°. முத்துசாமி ஐயர். இந்துபாக சாத்திரம் - தொ.கி. இராமச்சந்திர ராயர் (1891). இயற்கைத் தத்துவ நூலும் சைவ சமயமும் - E.T. இராசே°வரி (சைவசிந்தாந்த சமாசம்) (1930) இயற்கையும் செயற்கையும் - வேலன் (1944). இரணியவதைப் பரணி - ? இரத்தின கிரியப்பர் வண்ணம் - * இராசகோபாலர் திருவனந்தல் - * இராசகோபாலன் தாலாட்டு - * இராசகோபாலன் திருப்பள்ளி எழுச்சி - * இராசராசேசுவரி தோத்திர மாலை - ? (1944). இராசவைத்திய போதினி - (அங்க முத்து முதலியார் 1907). இராசைக் கோவை - * இராசைமுத்து வீரேந்திரர் பதம் - * இராமபத்திர சுவாமி தோத்திரம் - * இராமநாதர் வண்ணம் - * இராமனம்மானை - * இராமலிங்கர் வண்ணம் - * இராமாயண இரகசியம் - அ. சுப்பிர மணிய பாரதி (1922). இராமாயனக் கழிநெடில் - * இராமாவதாரம் - * இராமாயணம்மானை - * இருசமயத் தராசு - * இருசமய விளக்க சோதி - பொன்னம் பல சுவாமிகள் (பிங்கள) இருதயத்தின் பிரார்த்தனை - * இரும்பல காஞ்சி - * இலக்கணச் சுருக்கம் - த. வாசுதேவ முதலியார் (1913). இலக்கியச் சொல்லகராதி - அ. குமார சுவாமிப் புலவர் (ஆனந்த.) இலக்குமி தோத்திரம் - * இலிங்க புராணம் - இது பதினெண் புராணங்களுள் ஒன்று; பூர்வ காண் டம், உத்தர காண்டம் என்னும் பெரும் பகுப்புகள் இரண்டினை யும் சிறு பகுப்புக்களாகிய 154 அத்தியாயங்களையும் 2506 செய் யுட்களையுமுடையது; இது சிவ புராணம். இந் நூலாசிரியர் குல சேகர பாண்டியராவர். இளசை யந்தாதி - (முத்தி முடிவு உரை மேற்கொள்.) இறைஞான போதச் சிற்றுரை - சூரியனார் கோவில் ஆதீனம் (1943). இன்ப வாழ்வு - ப. நீலகண்டன் (1943). இன்று மனிதனும் இனிவரும் மனித னும் - சுவாமி சுத்தானந்த பாரதி யார் (1937). இன்றைய தமிழ் வசன நடை - மு. அருணாசலம் (1945). இன்னாசியார் பிரார்த்தனை - * ஈசுவராச்சிய பரிபாலனப் பிரபாவம் - D. கோபாலச் செட்டியார் (1933). உண்மை நாயன்மார் மகிமை - ராம. சொ. சொக்கலிங்கம் செட்டியார் (1910). உண்மை முத்திநிலை ஆராய்ச்சி - பொ. முத்தையா பிள்ளை (பிரபவ.) உண்மையுலா - (பல சாத்திரத் திரட்டு). உதயண குமார காவியம் குறிப்புரை யுடன் - ? சி. வை. தாமோதரம் பிள்ளை (1889). உதயதிவாகர தோத்திரம் - * உத்தரிய மாதாவின் பிரார்த்தனை-* உபதேசத் திருமந்திரம் - * உபதேச நூன்மாலை - இரமணர் (1934). உபநிடதம் - ? மாணிக்க முதலியார் (சுபானு). உபவாச தத்துவம் - கி. இலட்சுமண சர்மா (1939). உம்மர் கையாம் பாடல் - மின்னா நூருத்தீன் (1937). உயிரிளங் குமரன் (நாடகம்) - யாழ்ப் பாணம் க. சோமசுந்தரப் புலவர். உயிர்ஞான சரநூல் - ஒளவையார் (சென்னை 1906). உயிரும் உடம்பும் - வெ. சோம சுந்தரன் (1942). உருத்திராக்கம் - ? (தருமபுர ஆதீனம் 1945.) உலகப் பெருமக்கள் - பாகம் 1-2 - கா. சுப்பிரமணிய பிள்ளை (1940). உ.வே. சாமி நாதையர் சரித்திரம் - கே. சுந்தரராகவன். உள்ளது நாற்பது - இரமணர் (1936). எலி விருத்தம் - வீர சோழியம் யாப்புப் படலம் 21ஆம் கலித் துறையின் விசேஷ உரையில் “குண்டலகேசி விருத்தம், நரி விருத்தம், கலி விருத்தம், எலி விருத்தம் முதலாக வுள்ளவற்றுட் கலித்துறைகளு முளவாமாதலாற் குற்றமாகாது” என்று காணப்படுதலால் எலி விருத்தமென ஒரு நூலிருந்த தாகத் தெரிகிறது. எழுபத்துநாலு சிம்மாசனத் திரு நாமம் - * ஏசு நாதர் திருநாமப் பிரார்த்தனை - * ஏசு நாதர் பெரிய பிரார்த்தனை - * ஐந்தெழுத்து - ? (தருமபுர ஆதீனம் 1945.) ஒப்பியன் மொழிநூல் - ஞா. தேவ நேயன் (1940). ஒலிய லந்தாதி - தண்டபாணி சுவாமி கள் (விரோதி.) ஒளியும் ஒலியும் - K.R. விசுவநாதன் (1942.) ஒளவையார் திருவுள்ளம் - சு. இளவழகனார் (1943). ஒளவை வாக்கு - (பல சாத்திரத் திரட்டு). கங்கையாயிர நாமம் - * கஞ்சனம்மானை - * கதிர்காம வேலன் தோத்திரம் - * கந்தராரூடம் - (திருச்சிராப்பள்ளி 1907). கபிலர் - வே.வேங்கடராசுலு ரெட்டி யார், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு. கமலாலயம்மன் பிள்ளைத் தமிழ் - * கயிலாசநாதர் வண்ணம் - * கலியுக மாலை - * கலைசைச் சிதம்பரேசுவரர் பரணி - தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் 18ஆம் நூ. பிற். கவுளி காதல் - ? காசி இராமேசுவர மசிலிக் கதைகள் - கண்ணையா நாயுடு, (சென்னை 1908). காஞ்சிமன்னன் அம்மானை - * காலசக்கரம் - இது சோதிடத்தைச் சார்ந்தது. நட்சத்திரம் இராசி முதலியவற்றையும் நவக்கிரகங் களையும் கொண்டு பலன்களை விரித்துக் கூறுவது* குசலவ ராமாயணம் - * குசலவர் கதை - * குடந்தையந்தாதி - * குமாரசாம்புவன் வண்ணம் - * கும்மித்திரட்டு - பலசாத்திரத் திரட்டு குயில் ராமாயணம் - * குருச்சேத்திர மாலை - * குருநாத பூபதி அட்டமங்கலம் - * குற்றாலக் கோவை - இது திரிகூட ராசப்ப கவிராயர் செய்த நூலின் வேறானது; திருவிதாங்கூர் பல் கலைக்கழகத்தார் பதித்தது, (1949). கூபசாத்திரம் (கிணறு தோண்டு வதைக் கூறும் நூல்) - (1907). கேதராகவுளி விரத மகத்துவம் - * கேதார பூசை - * கொட்டையூர்ப் புராணம் -கொட்டை யூர் சிவக்கொழுந்து பண்டாரம். கோகசாத்திரம் - (மலட்டை பற்றிக் கூறும் வைத்திய நூல்) கணபதிப் பண்டிதர் (மொழி பெயர்ப்பு கொழும்பு) (1907). கோமதியம்மை பிள்ளைத்தமிழ் - புளியங்குடிப் புலவர். சங்க இலக்கியம் - சைவ சமாசப் பதிப்பு பாலசுப்பிரமணிய முதலி யார் தொகுப்பு. சங்கராச்சாரியார் சோதிடம் - இது 522 பாடல்களுடையது; சங்கராச்சாரி யார் செய்தது; அச்சிடப் பட் டுள்ளது.* சங்கீத ரத்தினாகர வகுப்பு - * சட்டை நாதர் தோத்திரம் - * சதுரலிங்க சதகம் - பல சாத்திரத் திரட்டு சத்தியஞான பண்டாரம் பிள்ளைத் தமிழ் - * சந்திரமதி வண்ணம் - * சமயந்தோன்றிய முறைமை - * சமாதிலிங்கப் பிரதிட்டை விளக்கம்-* சம்பராரி புராணம் - * சயங்கொண்டார் வழக்கம் உரை யுடன் - இந்நூல் தென்னியம் நகரில் கோயில் கொண்ட சயங் கொண்டாரென்னும் சிவபிரான் மீது பாடப்பட்ட 1000 பாடல்க ளுடையது. இதன் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு உலக வழக்கம் சொல்லும் பழமொழியும் அதற்குரிய பழைய கதையும் அமைந்துள்ளன. இயற்றியவர் முத்தையா என்பவர்* சரசுவதி தோத்திரம் - * சரீர தத்துவம் - * சர்ப்பாரூடம் - * சவரிராயர் பிரார்த்தனை - * சனிபகவான் அகவல் - * சாமிநாதய்யர் சரித்திரம் (உ.வே.) - K. சுந்தரராகவன். சாரங்கதர நாடகம் - * சிங்கார பதம் - * சிதம்பர தோத்திரம் - * சித்தாரூடம் - இது விட வைத்திய நூல்; சீவகசிந்தாமணி மதுமையா ரிலம்பகப் பாடலுரையில் உரை ஆசிரியர் நச்சினார்க்கினியரால் எடுத்தாளப் பட்டது. சித்திரபுத்திர நயினாரம்மானை - * சித்திரைக் கவியுரை - * சிராமலைக் கோவை - அமிர்தசுந்தர நாதம் பிள்ளை. சிருங்கார பத்தியம் - * சிவகாமியம்மை அகவல் - சிவகுருலீலை - பல சாத்திரத் திரட்டு. சிவசூரிய தோத்திரம் - * சிவஞானயோகிகள் சரித்திரம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-1875. சிவதரிசனம் - * சிவத்தலக் கோவை - * சிவபுண்ணியத் தெளிவு - * சிவபூசா பத்தி - * சிவபெருமாள் திருவந்தாதி - கபிலதேவர். சிவபெருமான் திருவந்தாதி - பரண தேவர். சிவப்பிரகாச விகாசம் - * சிவப்பேறு - * சிவன் - ந.சி. கந்தையா பிள்ளை, (1946). சிவாசிபேரில் பாடல் - * சிவாசி மகாராசன் பேரில் சிங்கார பதம் - * சிற்றிலிங்கேசர் தோத்திரம் - * சின்னியம்மாள் இரகசியம் - இந்நூல் மணவாளமுனிக்கும் சின்னியம் மாளுக்கும் நடந்த சம்பாஷணை ரூபமானது. இறுதியில் அவ் வம்மைக்குப் பரமபதம் பிரசாதித்த தாகவுள்ளது. இது தென் கலைச் சம்பிரதாயத்தினரால் இரகசிய மாகப் போற்றப்படுகிறது - * சீதை கலியாணம் - * சீரங்கராசரம்மானை - * சீராமன் தாலாட்டு - * சுபத்திரை கலியாணம் - * சுப்பிரமணியசுவாமி பேரிலிரு புராண விருத்தம் - இது திருச் செந்தூர் முருகக் கடவுள்மேற் பாடப்பட்ட தோத்திரம். 65 பாடல்களாலாகியது. இயற்றியவர் பெயர் தெரியவில்லை. சுப்பிரமணியர் கவசம் - * சும்மன்சுகன் பிரார்த்தனை - * சுருதி கீதை - * சுருதி கீதை வசனம் - * சூத்திரவகராதி - * சூரன் வதைப் பரணி - * சூரிய பூஜை - செங்கமல நாச்சியார் தாலாட்டு - * செண்டலங்காரன் வண்ணம் - * செந்தில் வேலவர் தோத்திரம் - * செபரத்தினம் - போப்பையர், (1907). சேதமலை பதிற்றுப்பத்தந்தாதி - தேவராசர் சீடர், வல்லூர். சைவ சித்தாந்த சாத்திரம் மூலமு முரையும் - நாகலிங்க முனிவர், (1897.) சைவானுட்டான விதி - * சொக்கநாதர் வண்ணம் - * சோதிடத் திரட்டு - * சோதிடம் நசப்பொருத்தம் - * சோழன் வண்ணம் - * சௌமிய நாராயணப் பெருமாள் கும்மிப் பாட்டு - இது திருக் கோட்டியூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் சௌமியப் பெருமாள் மீது பாடப்பட்டது. இயற்றியவர் அரிதாசர். ஞான மந்திர செல்வ பூங்காவனம் - Andt, (1749). தஞ்சை விநாயகர் தோத்திரம் - * தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி - * தணிகை முப்பூ - வ.சு. செங்கல்வராய பிள்ளை M.A. ததிசீ புராணம் - * தமிழர் யார் - ந.சி.க. (1947). தமிழ்ப் புலவர் சரித்திரம் - வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார்; இதன் கண் சயங்கொண்டான், புகழேந்திப் புலவர், வைத்திய நாத நாவலர், சுப்பிரமணிய தீட்சிதர், மயிலேறும் பெருமாள் பிள்ளை, சுவாமிநாத தேசிகர், அருணாசல கவிராயர், கடிகை முத்துப் புலவர், தாமோதரம் பிள்ளை முதலானோர் வரலாறுகள் காணப்படு கின்றன. தர்க்க சூடாமணி - * தியாகராசர் கழி நெடில் - * தியாகராசர் குறவஞ்சி - * தியாகராசர் பள்ளு - * தியாகராசர் வண்ணம் - * திராவிடர் நாகரிகம் - ந.சி. கந்தையா பிள்ளை. (1948). திருக்கும்பேச்சுர மாலை - * திருக்குறள் சொல்லடைவு - சாமி வேலாயுதம் பிள்ளை, B.A. L.T. திருச்செங்கோட் டகவல் - * திருச்செந்தூர் உலா - தண்டபாணி சுவாமிகள். திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ்-* திருநள்ளாற்றுப் புராணம் - * திருப்பதி வேங்கடேசர் பதிகம் - * திருப்பாளீசன் தோத்திரம் - * திருப்பெருந்துறை ஆளுடையார் வண்ணம் - * திருமணம் - ந.சி. கந்தையா பிள்ளை, (1948) திருமூல ரகவல் - திருமூலர் * திருவாலங்காட்டுப் பண் - * திருவானைக்கா அகிலாண்டேசுவரி தோத்திரம் - * திரௌபதை அலங்காரம் - * தில்லையுலா - * திவாகரத் தோத்திரம் - * தினகர வெண்பா - * தெய்வீக உலா - * தென்பாக ஆனந்த பூபன் சீட்டுக் கவி-* தேரூர்ந்த சோழன் கதை - * தேரூர்ந்த சோழன் புராணம் - * தேவதாரு வன மகத்துவம் - * தேவமாதாவின் அம்மானை - * தேவமாதாவின் ஏழு வியாகுலத்தின் செபம் - * தேவரியாண்டான் இரகசியம் - தேவரியாண்டான். தேவாரம் தலமுறை - * தேவி வச்சிர பஞ்சர கவசம் - * தைலவருக்கச்சுருக்கம் - தேரையர் . நடராசர் வண்ணம் - * நமது நாடு - ந.சி. கந்தையா பிள்ளை, (1946). நமது மொழி - ந.சி. கந்தையா பிள்ளை, (1946). நவநீத கிருட்டிணன் கலம்பகம் - முருகதாச சுவாமிகள். நற்கருணைப் பிரார்த்தனை - * நாலாயிரக் கோவை - * நானாரோக சிகிச்சை - * நித்திய கன்ம அகவல் - * நித்திய சர விபரம் - * நித்திய தீபன சல்லாபம் - * நியம வகவல் - * நியாய சதகம் - * நிரஞ்சனமாலை - * நீதிமஞ்சரி - திரு. இராகவாசாரியர். நூலகங்கள் - ந.சி. கந்தையா பிள்ளை, (1948). நூற்றெட்டுத் தாளம் - * நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - * நெல்லை நாதர் வண்ணம் - * நெல்விடு தூது - ? (S. வையாபுரிப் பிள்ளை 1933). பஞ்சதசி - ஒரு வேதாந்த நூல் பஞ்ச நதீச்வரர் தோத்திரம் - * பஞ்ச பட்சி வசனம் - * பஞ்சாக்கரவுண்மை - * பதினெண் சித்தர் ஆணிக் கோவை-* பத்மாவதி சரித்திரம் - பாலக்காடு மாதவையா (1898). பழநி மாலை - * பள்ளிப் பிள்ளையார் சிந்தனை - * பாண்டி கேளி விலாச நாடகம் - * பாரத அம்மானை - * பார்வதிக்கும் இலக்குமிக்கும் ஏசல்-* பிராயச்சித்த சமுச்சயம் - * புக்கொளியூ ரவிநாசிச் சிவபுராணம் - * புட்பாஞ்சலி - * பூசைத் திருவகவல் - * பூமிலட்சண வகுப்பு - * பூவனூர்ப் புராணம் - * பெண்களும் சமூகமும் - ந.சி.க. (1948.) பெண்களுலகம் (அன்று மின்றும்) - ந.சி. கந்தையா பிள்ளை, (1947). பெண்கள் போராட்டம் - ந.சி.க. (1948). போசன விதி - * மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம் - * மதுரை உலா - * மயில் ராவணன் கதை - மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815 - 1875. மரணத்தின் பின் - ந.சி. கந்தையா பிள்ளை, (1948). மரணமென்றா லென்ன - ந.சி. கந்தையா பிள்ளை, (1948). மருமக்கள் வழிமான்மியம் - சி. தேசிக விநாயகம் பிள்ளை. மல்லிகார்ச்சுன மாலை - * மனிதன் எப்படித் தோன்றினான்- ந.சி. கந்தையாபிள்ளை (1947). மன்னார் மோகனப் பள்ளு - * மாணிக்க வாசகர் தோத்திரம் - * மாயாராவணன் கதை - * முத்திரையிலக்கணம் - * முத்து வீரேந்திரர் பதிகம் - * மூவர் திருப்பாடலின் பெருமை - * மெயக்கன் வண்ணம் - * யூகிமுனி வைத்திய சிந்தாமணி - * யோக நாயகியம்மன் பிள்ளைத்தமிழ் - * யோசையப்பர் பிரார்த்தனை - * வடிவுடையம்மை பிள்ளைத் தமிழ்-* வண்ணத் திரட்டு - * வராககிரி வீர சின்னையன் வண்ணம் - * வல்லபேந்திரர் வைத்திய சிந்தாமணி- வள்ளியம்மை கதை - * வன்னிவன சேத்திர மகிமை - * வாசிட்ட ராமாயணம் - * வாண முறைகள் - * வான்மீகர் நாடி - * விசுவ புராணம் - திருவையாறு முத்துக்குமாரசாமி பாரதி. விபீடணன் புத்தி - தேரழுந்தூரன். விபூதி மகத்துவம் - * விபூதி ருத்திராட்ச மகிமை - விவேக சிந்தாமணி புவனகோசம் - * வினாவிடைப் புராணம் - * வீரசைவ மகாத்மியம் - * வீரப்ப நாயக்கன் வண்ணம் - * வீரராகவ முதலியார் வண்ணம் - * வீரவேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ் - * வெங்கடேசுவரர் வண்ணம் - * வெள்ளிச் செட்டி வண்ணம் - * வேங்கடபதி வண்ணம் - * வேதாந்த சிந்தாமணி - * வைத்தீசுரர் பதிகம் - * வைத்தியநாத சுவாமி திருவிளை யாடல் - * புலவர்களும் அவர்கள் இயற்றிய நூல்களும் (உடுக்குறி சென்னை அரசாங்க நூல் நிலைய கையெழுத்துப் பிரதிகளைப் பற்றிய அறிக்கை மூலம் அறியவருவது என்பதைக் குறிக்கும்) அகத்தியர் - (-?) - அகத்தியம், மற்றைய நூல்களை முதலாம் பக்கத்திற் காண்க. அகப்பேய்ச் சித்தர் - அகப்பேய் சித்தர் பாடல். அகோர தேவர் (முனிவர்) - (17-ம் நூ.) (1) கானப்பேர்ப் புராணம், (2) கும்பகோணப் புராணம், (3) வேதாரணியப் புராணம். அடியார்க்கு நல்லார் - (13-ம் ஆம் நூ.) சிலப்பதிகார உரை. அட்டாவதானம் கிருட்டிணை யங்கார் (19-ம் நூ.பிற்) - நாலு மந்திரிகதை, பஞ்சதந்திரம் வீர குமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி. அட்டாவதானி - (18-ம் நூ.) - விறலி விடுதூது, கூளப்ப நாயக்கன் காதல், பெரிய நாகேந்திரன் காதல். அண்ணாமலை ரெட்டியார் -(19-ம் நூ.பிற்) - காவடிசிந்து, சங்கர நாராயண கோயிற்றிரிபந்தாதி, நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ். அண்ணாவியார், வராகநகர் - பழமொழித் திரட்டு - * அதிராவடிகள் - (6-ம் நூ.) - மூத்த நயினார்பிள்ளைத் தமிழ். அதிவீரராம பாண்டியன் - (1564-1604) நைடதம், காசிகாண்டம், இலிங்க புராணம், கூர்ம புராணம், திருக்கருவைக் கலிவிருத்தம் ³ பதிற்றுப்பத்தந்தாதி, ³ பதிற்றுப் பத்து, வெண்பா வந்தாதி, வெற்றி வேற்கை. அநதாசி - (1564) - சுந்தரபாண்டியம். அநந்தகவிராயர், மானூர் - (1) மதுரை பதிற்றுப் பத்தந்தாதி.* அநந்தபாரதி ஐயங்கார் - (1786 - 1846) - மருதூர் வெண்பா, முப்பாற்றிரட்டு, உத்தர ராமாயண கீர்த்தனை, யானை மேலழகர் நொண்டிச் சிந்து, பாகவத சம்°கந்த நாடகம். அநந்தவீடன் - உத்தர ராமாயண நாடகம்.* அநவரத விநாயகம்பிள்ளை எம்.ஏ., எல்.டி. (1939) தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, சைவ சிந்தாந்த வரலாறு, திராவிட ஆராய்ச்சி. அந்தகக்கவி வீரராகவ முதலியார் - (1654) கழுக்குன்றப் புராணம், கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர்க் கலம்பகம், திருவாரூருலா, சந்திர வாணன் கோவை. அபிராமிப் பட்டர், திருக்கடவூர் - (18-ம் நூ.முற்.) அபிராமி அந்தாதி. அப்பர் - (570 - 655) தேவாரம் 311, பதி கங்கள் 4 முதல் 6 திருமுறைகள். அப்பாவு முதலியார் - (19-ம் நூ.) குரேச விசயம், தென்னாசிரியப் பிரபாவ தீபிகை, சற்சம் பிரதாப தீபிகை, விட்டுணு தத்துவ விளக் கம், இராமாநுச நூற்றந்தாதி உரை அப்பாவையர் - (19ஆம் நூ.) தாண்டவ மாலை. அப்பி ஆச்சாரியர் - (1) சீரங்க மகத்து வம், (வசனம்).* அப்புக்குட்டி ஐயர் - (19ஆம் நூ.) சூது புராணம், நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ். அப்புள்ளையார் - (18ஆம் நூ.) ஆழ் வார்கள் வாழித் திருநாமம், திருவந் தாதியுரை, திருவிருத்தவுரை. அமிர்த கவிராயர், பாலூர் - (1) கோகுல சதகம்.* அமிர்த கவிராயர் - (1637 - 72) ஒரு துறைக்கோவை. அமிர்தசாகரர் - (11-ம் நூ.) யாப்பருங் கலம், யாப்பருங்கலக் காரிகை. அமுதனார் - (1017) இராமானுச நூற்றந்தாதி அம்பலத்தாடுமையன், தொண்டை மான் துறை - (1) வசு சரித்திரம். அம்பலவாண கவிராயர் - (18-ம் நூ.) அறப்பள்ளீசுர சதகம். அம்பலவாண தேசிகரின் சீடர் - (1) பதிபசு பாச அட்டவணை.* அம்பலவாண தேசிகர் - (17-ம் நூ.) தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டைவெண்பா, உபதேச வெண்பா, நிட்டை விளக்கம், அதிசய மாலை, நமச்சிவாய மாலை, பூப்பிள்ளை அட்டவணை. அம்பலவாணத் தம்பிரான், காவை - (1) குறள்வெண்பா, (சிவப்பிரகாச மூலக்கருத்து) அம்பலவாண பண்டிதர் - (19-ம் நூ.) நல்லை வெண்பா, நீராவி வெண்பா முதலியவற்றை அச்சிட்டவர். அம்பிகாபதி - (12ஆம் நூ.) அம்பிகா பதிக் கோவை. அம்பிகாபதி, வேம்பத்தூர்ச் சங்கப் புலவர் (1) - நெல்லை வருக்கக் கோவை. அம்பிகானந்தர் (போகரின் நாலாவது சகோதரர்)- முப்புச் சூத்திரம் 25. அம்பிகைபாகர் - (19ஆம் நூ.) சூளாமணி வசனம். அம்மங்கி அம்மாள் - (1) அம்மங்கி அம்மாள் ஐஞ்சு வார்த்தை.* அரங்கநாத முதலியார் எம்.ஏ. இராவ் பகதூர் - (1837 - 93) கல்விக் கலம்பகம். அரசகேசரி - (17-ம் நூ.) இரகுவமிசம். அரசஞ் சண்முகனார் - (1869 - 1914) தொல்காப்பியப் பாயிர விருத்தி, ஏகபாத நூற்றந்தாதிமாலை, மாலை மாற்று, இன்னிசை இருநூறு, அந்தாதித் தொடை நிகண்டு. அரபத்த நாவலர் (16-ம் நூ.) - பரதசாத்திர இலக்கணம். அரிசில்கிழார் - (கி.மு.40.) தகடூர் யாத்திரை, பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்து. அரிதாசர் - (1507 - 1530) இருசமய விளக்கம், சௌமிய நாராயணப் பெருமாள் கும்மிப்பாட்டு, மேற்படி சோபனப் பாட்டு, திருநாள் வாகனக் கவி. அருணகிரி நாதர் - (15-ம் நூ.) கந்தரனுபூதி, கந்தரலங்காரம், கந்த ரந்தாதி, வேல்விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருப்புகழ். அருணந்தி சிவாச்சாரியர் - (13-ம் நூ.) சிவஞான சித்தியார், இருபா இருபஃது. அருணாசல உவாத்தியாயர் - (1) சிங்கார பத்தியம்* அருணாசலக் கவிராயர் - (19-ம் நூ.) குறுக்குத்துறைச் சிலேடை வெண்பா, ஆறுமுக நாவலர் வரலாறு, திருச்செந்தூர்ப் புராண உரைநடை, திருப்பரங்குன்றப் புராண உரைநடை, திருக்குற்றாலத் தலப் புராண உரை நடை. அருணாசலக் கவிராயர் - (1712 - 1779) அசோமுகி நாடகம், சீகாழிக் கோவை, சீகாழிப் புராணம், அனு மார் பிள்ளைத்தமிழ், இராம நாடகம். அருமருந்து தேசிகர், திருச்செந்தூர் - (1760) அரும்பொருள் விளக்க நிகண்டு. அருளாளப் பெருமாள் (14-ம் நூ.) பிரமேய சாரம், ஞானசாகரம். அலியார் புலவர் - (18-ம் நூ. பிற்.) இந்திராயன் படைப்போர், இபுனி ஆண்டான் படைப்போர். அவிநயனார் - (9 அல்லது 10-ம் நூற்.) அவிநயம், இவர் இலக்கணச் சூத் திரங்கள் யாப்பருங்கல விருத்தி யில் வந்துள்ளன. அவிரோத நாதர் - (14-ம் நூ.) திரு நூற்றந்தாதி. அவ்வையார் - (12-ம் நூ) ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக் கோவை, அட் டாங்கயோகக் குறள், பந்தனந்தாதி, வாக்குண்டாம், விநாயக ரகவல், வேழமுகம், கணபதி ஆசிரிய விருத்தம், ஈச்சுரன் மாலை. சங்க காலத்தொருவரும், 12ஆம் நூற்றாண் டில் ஒருவரும் சுந்தர மூர்த்தி சுவாமி காலத்திலொருவருமாக ஒளவையார் பெயர் பெற்றவர் பலர் இருந்தனர். அழகிய சிற்றம்பலக் கவிராயர் (1647) தளசிங்கமாலை. அழகிய சொக்கநாத பிள்ளை - (19-ம் நூ.) முத்துசாமிப் பிள்ளை காதல். அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் - (17ஆம் நூ.) திரிபதார்த்தம். அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் - (1) அறிவானந்த சமுத்திரம், (2) அருட் பாமாலை, (3) திருவு சாத்தானத் தோத்திரம். அழகிய நம்பி - (18ஆம் நூ. பி.) குரு பரம்பரை வரலாறு. அழகிய மணவாள சீயர் - திருவாய் மொழி பன்னீராயிரப்படி உரை.* அழகிய மணவாள தாசர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பார்க்க. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் - (15-ம் நூ.) திருப்பாவை உரை, ஆறாயிரப்படி உரை, மாணிக் கமாலை, ஆசாரிய இருதயம், அருளிச்செயல் இரகசியம், கண் ணினுட் சிறுதாம்பு உரை. அறிவானந்தர், வலங்கைமான் - அறிவானந்த சித்தி.* ஆசிரியர் நல்லந்துவனார் - (கி.பி. 100) கலித் தொகையைத் தொகுத் தவர். இதன் கடவுள் வாழ்த்தும், நெய்தற் கலியும் பாடியவரும் இவரே. (கடவுள் வாழ்த்து நல்லந்துவனார் பாடியது என்பது ஐயத்துக் கிடம்) ஆடியபாத தேசிகாசாரியர், சிதம்பரம் - சர்வஞான காலோத்தரம்.* ஆடியபாதர், பொன் விளைந்த களத் தூர் - (1) மாயூரத்தல புராணம்.* ஆண்டாள் - (8-ம் நூ.) நாய்ச்சியார் திருமொழி, திருப்பாவை. ஆண்டிப் புலவர் - (17-ம் நூ.) ஆசிரிய நிகண்டு, உரையறி நன்னூல். ஆதிமூல முதலியார் - (19-ம் நூ. பிற்.) கதாசிந்தாமணி. ஆதியப்ப நாவலர் - (1580) மாயவரத் தல புராணம். ஆதிவாயிலார் - (10-13ம் நூ.) பரதசேனாபதீயம். ஆத்மநாத தேசிகர் - (1650 - 1728) சோழமண்டல சதகம். ஆரியப்ப புலவர் - (18-ம் நூ.) பாகவத புராணம். ஆளவந்தார் - (18ஆம் நூ.) ஞானவா சிட்டம். ஆறுமுக சுவாமிகள் - (16ஆம் நூ.) நிட்டானுபூதி, சிவஞானசித்தியார் சுபக்க உரை. ஆறுமுகத் தம்பிரான் - (19ஆம் நூ.) செகவுற்பத்தி, இரட்சகர் அவதாரம், மோட்சம், நரகம், வாழ்த்து, பெரிய புராண உரை. ஆறுமுக நயினார் பிள்ளை - (1925) சாலிய அந்தணர் புராணம், சிவ கலைப் புராணம். ஆறுமுக நாவலர் - (1823 - 1879) பாலபாடம், சைவ வினாவிடை, இலக்கணச் சுருக்கம், பெரிய புராணம், திருவிளையாடற் புராண வசனம், நன்னூற் காண்டிகை உரை, சிதம்பர மான்மியம், தேவ கோட்டைத் தல புராணம். ஆறுமுகம் பிள்ளை - (19ஆம் நூ. பிற்.) அரிச்சந்திர வெண்பா, மதுரை யமகவந்தாதி. ஆறுமுகன்-தணிகை நாற்பாவலங்கல்.* ஆனந்தக் கூத்தர் - (16ஆம் நூ.) திருக் காளத்திப் புராணம். இடைக்காடர் - (-?) ஊசிமுறி, மூவடி முப்பது, அறுபது வருடப் பலன், இடைக்காடர் சூத்திரம், இடைக் காட்டுச் சித்தர் பாடல். இந்திர காளியார் முதலானோர் - பன்னிரு பாட்டியல்.* இரட்டையர் - (15-ம் நூ.) ஏகாம்பர நாதருலா, தில்லைக்கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம். இரணியமுட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங்கௌசியனார் - (கி.மு. 125) மலைபடுகடாம். இரத்தினக் கவிராயர் - (17ஆம் நூ.) புலவராற்றுப்படை, மாறன் திருவ வதார சரிதை, மாறனலங்கார உரை. இராகவ ஐயங்கார் - (-1947) வஞ்சிமா நகர், சேது நாடுந்தமிழும், நல்லிசைப் புலமை மெல்லியலார், தமிழ் வரலாறு, பாரிகதை, அபிஞ்ஞான சாகுந்தலம், தொழிற் சிறப்பு. இராசபவித்திர பல்லவ தரையர் - (13-ம் நூ.) அபிநய உரை. இராசப்ப கவிராயர் - (18-ம் நூ.) குற்றாலக் குறவஞ்சி, குற்றாலத் தல புராணம், குற்றால மாலை, குற் றாலச்சிலேடை வெண்பா, யமக வந்தாதி, குற்றால உலா, குற்றால ஊடல், பரம் பொருள் மாலை, குற்றாலக் கோவை, குழல்வாய் மொழி கலிப்பா, கோமள மாலை, குற்றால வெண்பா, அந்தாதி, குற் றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால நன்னகர் வெண்பா குற்றலாக் குறவஞ்சி, குற்றாலத் தல புராணம். பின் இரு நூல்களல்லாத மற்றவை அச்சில் வரவில்லை. இராமகவி (சரவண கவியின் புதல் வர்) - (1) அத்துவைதானுபவம். இராமசாமி ஐயர் - (19ஆம் நூ.) அல்லி நாடகம். இராமச்சந்திர கவிராயர் - (19ஆம் நூ.) சகுந்தலை விலாசம், பாரத விலாசம், இரணிய வாசகப்பர், தாருக விலாசம், இரங்கூன் சண்டை நாடகம், நடு வெழுத்தலங்காரம், சத்தபங்கி, நவபங்கி, திரிபங்கி. இராமதாசர், பாயநகர் - சக்குபாய் சரித்திரம்.* இராமதேவர் - 19-வது பக்கம் பார்க்க. இராமநாதர் - (-?) துடிநூல். இராமபாரதி - (19-ம் நூ.) ஆத்திசூடி வெண்பா. இராமயோகி தனயர் - ஞானவேதம்.* இராமலிங்க சுவாமிகள் - (1823 - 1874) அருட்பா. இராமலிங்கையர் - (19-ம் நூ.) சந்தான தீபிகை. இராமானந்த சுவாமிகள் - (18-ம் நூ.) சங்கற்ப நிராகரணம். இராமானுசக் கவிராயர் - (19-ம் நூ.) நன்னூற்காண்டிகை, பார்த்தசாரதி மாலை, வேங்கடவனுபூதி, வரத ராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந் தாதி, ஆத்மபோதம். இராமானுச தாசர் - (1) நூற்றெட்டுத் திருப்பதிப் பாடல்.* இரேவணசித்தர் - (16-ம் நூ.) சிவ ஞானதீபம், பட்டீச்சுர புராணம், அகராதி நிகண்டு. இலட்சுமி நாராயணன் - (1) தேரூர்ந்த புராணம்.* இலிங்கன் -ஓசை சாத்திரம். இளங்கோவடிகள் - (கி.பி. 175) சிலப்பதிகாரம். இளம்பூரணர் - (12-ம் நூ.) தொல்காப் பிய உரை. இறையனார் - (கி.மு. 1-ம் நூ.) அகப் பொருள். இன்பகவி - (மறைவு 1835) கச்சேரி முதலியார் குறவஞ்சி. ஈசான தேசிகர் - (1665-) தசகாரியம், திருச்செந்திற் கலம்பகம், இலக் கணக் கொத்து, இவரது மாணாக்க ராகிய சுப்பிரணிய தேசிகர் பிர யோகவிவேகம் என்னும் நூல் இயற்றினார். நீதி சதகம்*, சிருங்கார சதகம்* முதலிய நூல்களை இவர் செய்ததாகவும் கூறுவர். ஈசுர பாரதியார் - (17ஆம் நூ.) பல் பொருட் சூடாமணி நிகண்டு. உதீசித் தேவர் - (14ஆம் நூ.) திருக் கலம்பகம். உபேந்திராசிரியர் - (18ஆம் நூ.) சிநேந்தர மாலை. உமாபதி சிவாசாரியார் - (14-ம் நூ.) சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், நெஞ்சு விடுதூது, வினா வெண்பா, திரு வருட்பயன், சங்கற்ப நிராகரணம், போற்றிப் பஃறொடை, கோயிற் புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக்கோவை, சிவப் பிரகாசம், சிவஞானப் பஃறொடை. உமாபதி சிவாசாரியார் மாணவர் - (1) சிதம்பர புராணம். உமாறுப் புலவர்-(1665) சீறாப்புராணம். உய்யவந்த தேவநாயனார் - திருக்கட வூர் உய்யவந்த தேவநாயனார், திருவியலூர் உய்யவந்த தேவநாய னார் பார்க்க. உருத்திரங் கண்ணனார்- (1) பட்டினப் பாலை, (2) பெரும்பாணாற்றுப்படை. உருத்திரசன்மர் - (கி.பி. 225) அகநானூறு தொகுத்தவர். உரோமருஷி - 21ஆம் பக்கம் பார்க்க. உரோமமுனி - (15-ம் நூ.) உரோம முனி நூறு, உரோம முனி ஐந்நூறு, ஐம்புள் நூல். உலக நாதகவி திருவிடை மருதூர் - (1) இரிபு கீதை, (2) சாதி நூற் கவி, (3) உலகந்தாதி* உலகநாதபிள்ளை - (20-ம் நூ.) கரி கால்வளவன், கன்றுங்கனியுகவும். உலகநாதன் - (18-ம் நூ. பி.) உலகநீதி, சாதிபேத விளக்கம். எல்லப்ப நாவலர் - (17-ம் நூ.) அருணைக் கலம்பகம், திருவெண் காட்டுப் புராணம், தீர்த்தகிரிப் புராணம், திருச்செங்காட்டான் குடிப்புராணம், செவ்வந்திப் புராணம். எல்லப்ப பூபதி - (1572 - ) அருணாசல புராணம், திருவிரிஞ்சைப் புராணம், அருணை அந்தாதி, திருவாரூர்க் கோவை, திருப்பனந்தாள் உலா, சௌந்தரியலகரி உரை. ஏகசந்தக்கிராகி (17ஆம் நூ.) வடமலை வெண்பா. ஏரம்பையர் - (1847 - 1914) சேது புராணக் கதை, சிரார்த்த விதி, கனாநூல், நாகேசுவரி தோத்திரம். ஏனாதி சித்தர் - (1) ஏனாதி சித்தர் பாடல்.* ஐயடிகள் காடவர்கோன் - (10ஆம் நூ.) திருவெண்பா. ஐயனாரிதனார் - (9ஆம் நூ.) புறப் பொருள் வெண்பா மாலை. ஒட்டக்கூத்தர் - (12ஆம் நூ.) ஈட்டி எழுபது, தக்கயாகப் பரணி, இராமா யண உத்தர காண்டம், விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழ னுலா, இராச இராசேந்திர சோழனுலா. ஒப்பிலாமணிப் புலவர் - (18ஆம் நூ.) மு. சிவரகசியம். ஒப்பிலாமணிப் புலவர் II - (19ஆம் நூ.) குமணன் கதை. ஓரம்போகியார் - (கி.மு. 220) ஐங்குறு நூற்றில் மருதத்திணை. ஒளவையார் - அவ்வையார் பார்க்க. கச்சியப்ப சிவாசாரியார் - (12ஆம் நூ.) கந்த புராணம். கச்சியப்ப முனிவர் - (18ஆம் நூ. பிற்.) விநாயக புராணம், காஞ்சி புராணம், ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூது. தணிகை யாற்றுப்படை. கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், திருத் தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவானைக் காப் புராணம், பஞ்சாட்சர வந்தாதி, பூவாளூர் புராணம். கடவுள் மாமுனிவர் - (18ஆம் நூ. பிற்.) திருவாத வூரடிகள் புராணம். கடிகை முத்துப் புலவர் - (1665-) சமுத்திர விலாசம், திக்கு விசயம், திருவிடைமருதூரந்தாதி. கடியலூர் உருத்திரங் கண்ணனார் - (கி.மு. 220) பெரும்பாணாற்றுப்படை. கடைப்பிள்ளை - (1) கடைப்பிள்ளை அமிர்த போதம், (2) கடைப் பிள்ளை அமிர்த யோகம்.* கணபதி ஐயர் - (19ஆம் நூ.) வாள பிமன் நாடகம், வயித்திலிங்கக் குறவஞ்சி, மலையகந்தி நாடகம், அலங்காரரூப நாடகம், அதிரூபா வதி நாடகம். கணபதிக்குருக்கள்-(-?) கப்பற்பாட்டு. கணபதிதாசர் - (18ஆம் நூ.) நெஞ்சறி விளக்கம். கணபதிப் புலவர் - (மறைவு 1895) வில்கணீயம் (மொழிபெயர்ப்பு) இரகுவமிசச் சுருக்கம், இந்திர சேனை நாடகம், வாதபுரேசர் கதை. கணிமேதாவியார் - (சங்ககாலம்) திணைமாலை நூற்றைம்பது. கணேச பண்டிதர் - (19ஆம் நூ. பிற்.) இளைசைப் புராணம். கண்டராதித்தர் - (11ஆம் நூ.) திரு விசைப்பாப் பாடல்கள் சில. கண்ணங்கூத்தனார் - (கி.பி. 1ஆம் நூ.) கார்நாற்பது. கண்ணஞ்சேந்தனார் - (சங்க காலம்) திணைமொழி ஐம்பது. கண்ணுடை சம்பந்தமூர்த்தி தேசிகர் - (1) நியதிப் பயன். கண்ணுடைய வள்ளல் (18ஆம் நூ. மு.) ஒழிவிலொடுக்கம், கச்சிமாலை, மாயப்பிரலாபம், அதிகாரப்பிள்iள அட்டவணை, அத்வைதக் கலி வெண்பா, அதிரகசியம், குரு மரபு சிந்தனை, ஞானசாரம், ஞான விளக்கம், சித்தாந்த தரிசனம், சிவஞானப் பிரகாசம், சுருதிசார விளக்கம், திருமுகப்பாசுரம், உபதேச மாலை, தேவார உரை. கதிரைவேற் பிள்ளை. நா. (மறைவு 1907) கூர்ம புராணவுரை, பழநித்தல புராணவுரை, சைவ சந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், சிவா லய மஹோற்சவ விளக்கம், சுப் பிரமணிய பராக்கிரமம். கந்தசாமிக் கவிராயர் - (19ஆம் நூ. பிற்.) தனிச் செய்யுட் சிந்தாமணி. கந்தசாமிப் புலவர் - (18ஆம் நூ. பிற்.) திருப்பூவணப் புராணம், அப்ப னூர்ப் புராணம். கந்தப்ப தேவர் (சரவண தேசிகரின் மாணவர்) - (1)கடாவிடை உபதேசம்.* கந்தப்பிள்ளை - (19ஆம் நூ.) இராம நாடகம், சந்திரகாசம். கந்தப்பையர் - (18ஆம் நூ. பிற்.) திருத் தணிகாசல வனுபூதி, வேல்பத்து, முருகன் தாலாட்டு, தயாநிதிமாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், மாலை வெண்பா, சிலேடை வெண்பா, வெண்பா வந்தாதி, சந்நிதிமுறை, தலபுராணம், வேலாயுத சதகம், சிலேடையந்தாதி, அபிடேக மாலை, பழநிமலையந்தாதி உரை, திருச் செந்தில் நிரோட்டகயமகவந் தாதி உரை சாரங்கதரயன் காலம். கந்தாடையாண்டான் - (1) மந்திர ரத்தினம்.* கபிலர் - (கி.மு. 87) இன்னா நாற்பது. கபிலரகவல் என வழங்குவது விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்போரால் செய்யப்பட்ட தெனக்கருதப்படு கிறது. மூத்த நாயனார் இரட்டை மணி மாலை. கமல முனி - (1) கமலமுனி ஞானச் சுருக்கம்.* கமலைஞானப் பிரகாசர் - (16ஆம் நூ.) அனுட்டானவிதி அகவல், புட்ப விதி, பூமாலை, சிவபூசை அகவல், பிரசாதமாலை, சிவானந்த போதம், ஞானப்பள்ளு, அத்துவாக் கட்டளை அண்ணாமலைக் கோவை, ஆயிரப் பாடல், திருமழு வாடிப் புராணம். கம்பர் - (12ஆம் நூ.) இராமாயணம், சடகோபரந்தாதி, சரசுவதி மாலை, சோழக் குறவஞ்சி, சிலை எழுபது, ஏரெழுபது, திருக்கை வழக்கம். கருணாகரன் - (1) வேதபுரித் தல புராணம்.* கருணைப் பிரகாசர் - (17ஆம் நூ.) சீகாளத்திப் புராணம், இட்டலிங்க அகவல். கருணையானந்த சுவாமி - (-?) குருநாதர் சதகம். கருப்பையா பாவலர் - (20- ம் நூ.) திருச்செந்தில் திரிபந்தாதி, ஓரெழுத் தந்தாதி, நாமகளிரட்டை மணி மாலை, ஐந்திணைக் கோவை, திருக்கோட்டாற்றுக் கலம்பகம், விக்டோரியா பேரரசிரியார் வரலாறு. கருவூர்ச் சித்தர் - (1) கருவூரர் நொண்டி, (2) கருவூரர் சூத்திரம் 116, (3) கருவூரர் வெண்பா. கருவூர்த் தேவர் - (11ஆம் நூ.) திருவிசைப்பாப் பதிகங்கள். கலியாணசுந்தர முதலியார் பூவை - தாயுமானவர் பாடல் உரை. கல்லாடதேவ நாயனார் - (9ம் நூ.) திருக்கண்ணப்ப தேவர் திருமறம். கல்லாடர் - (10ஆம் நூ.) கல்லாடம், தொல்காப்பியச் சொல்லதிகார உரை. கவிக்களஞ்சியப் புலவர் - (19ஆம் நூ. பிற்.) சீறாப்புராண வண்ணம், சித்திர கவித்திரட்டு. கவிக்களஞ்சியம் (புதுப்பாகை கறுப் பன் புலவர்) - வேதாளக் கதைகள், (செய்யுள்).* கவிராசர் பண்டிதர் - சௌந்தரிய லகரி, வராகி மாலை, ஆனந்த மாலை. கவிராச பிள்ளை, சேறை - காளத்தி நாதருலா.* கவிராசர் - (18ஆம் நூ.) கோணேச சாசனபாடல் உரை. கவுபால சித்தர் - கவுபால சித்தர் ஆணிக்கோவை. கனகசபைப் பண்டாரம் - இராமாயண வசனம்.* கனகசுந்தரம் பிள்ளை தி.த. - (மறைவு 1922) இல்லாண்மை, தமிழ் நாவலர் சரிதைப் பதிப்பு. காக்கை பாடினியார் - (சங்க காலம்) சிறு காக்கை பாடினியம், காக்கை பாடினியார் இலக்கணச் சூத்திரங் கள் யாப்பருங்கல விருத்தியிற் காணப்படுகின்றன. சிலவற்றுள் விருத்தப்பா இலக்கண வருவதால் அவை 10ஆம் நூ. அளவிலாகலாம். காங்கேயர் (இம்முடிப்பட்டம் பெற்ற காங்கேயர்) - (17ஆம் நூற்.) உரிச் சொல் நிகண்டு. காசிநாதப் புலவர் - (-?) தால புராணம். காசி விசுவநாத முதலியார் - (19ஆம் நூ. பிற்.) யாப்பிலக்கண வினா விடை, இடம்பாச்சாரி விலாசம், பாகசாத்திரம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், தாசில்தார் விலாசம், தாருகா விலாசம். காஞ்சி ஞானப்பிரகாசர் - (16ஆம் நூ.) கச்சிக்கலம்பகம், கிருட்டிண தேவராயர் மஞ்சரிப்பா. காப்பியாற்றுக் காப்பியனார் - (கி.மு. 245) பதிற்றுப் பத்தின் நான்காம் பத்து. காரி இரத்தினக் கவிராயர் - (17ஆம் நூ.) மாறனலங்கார உரை, பரிமே லழகர் உரை நுண்பொருள் மாலை. காரியாசான் - (7ஆம் நூ.) சிறுபஞ்ச மூலம். காரியார் (15ஆம். நூ) கணக்கதிகாரம். காரைக்காலம்மையார் - (6ஆம் நூ.) அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, மூத்த திருப்பதிகம். கார்த்திகேய முதலியார் - மாகறல் (1907) மொழி நூல். கால்ட்வேல் - (19ஆம் நூ.) ஒப்பிலக் கணம். காளசித்தர் - (1) காளசித்தர் பாடல்.* காளமேகம் - (14ஆம் நூ. பிற். 15ஆம் நூ. மு.) திருவானைக்காவுலா, சரசுவதி மாலை, பாப்பிரம விளக்க சித்திர மடல். காளிங்கர் - (14ஆம் நூ.) திருக்குறள் உரை. கிருட்டிண பிள்ளை - (19ஆம் நூ. பிற்.) இரட்சணிய யாத்திரியம். குகை நமச்சிவாயர் - (16ஆம் நூ.) அருணகிரியந்தாதி, சோணகிரி மாலை. குணசாகரர் - (12ஆம் நூ.) யாப்பருங் கலக்காரிகை உரை. குணவீர பண்டிதர் - (12ஆம் நூ.) நேமி நாதம், வஞ்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல். குதம்பைச் சித்தர் - (1) குதம்பைச் சித்தர் பாடல்.* குமரகுருபர தேசிகர் - (18ஆம் நூ. முற்.) ஆத்தும இராமாயணம், ஞானக்குறவஞ்சி. குமரகுருபரர் (17ஆம் நூ.) - கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பண்டார மும் மணிக் கோவை, சிதம்பர மும் மணிக் கோவை, முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, நீதிநெறி விளக்கம். குமரப் பிள்ளை - (1) வள்ளியம்மை நாடகம்.* குமாரசுவாமி (திருச்செந்தூர் வீரையன்) - குமார சுவாமீயம்.* குமாரசுவாமிப் புலவர் - (1850 - 1922) மேக தூதக்காரிகை, இராமோ தந்தம், சாணக்கிய நீதி வெண்பா, தமிழ்ப்புலவர் சரித்திரம். குமாரசுவாமி முதலியார் - (19ஆம் நூ. இறுதி) அருளம்பலக்கோவை, திரு விற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய் சித்தி விநாயக ரூஞ்சல், நல்லைக் கலித்துறை, கந்தவன நாதர் ஊஞ்சல், இந்திர குமார நாடகம். குமார சுவாமியார் - (1) சிங்கீசுவர சுவாமி பாரிசாத நாடகம்* குமார பாரதியார் - புதுவை (1) சரவண தேசிகர், தோத்திரம், (2) திருத் தொண்டர் மாலை* குரவலிங்கர் - திருவிடைக் கழித்தல புராணம்.* குருகைப்பெருமாள் கவிராயர் - (16ஆம் நூ.) மாறனலங்காரம், மாறன் கிளவிமாலை. குருநமச்சிவாயர் - (18ஆம் நூ. முற்.) சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா, பரமரகசிய மாலை. குருபாத தாசர் - (18ஆம் நூ. முற்.) குமரேச சதகம். குலசேகர பாண்டியன் - (1) அம்பிகை மாலை* குலசேகரப் பெருமாள் - (9ஆம் நூ.) முகுந்த மாலை. குலசேகர வரகுண பாண்டியன் - (1) வாயுசங்கிதை.* குழந்தை முதலியார், குற்றாலம் - இராகவர் பிள்ளைத் தமிழ்* கூடலூர் கிழார் - (கி.மு. 62) முது மொழிக் காஞ்சி, ஐங்குறு நூற்றுத் தொகுப்பு. கூர்மானந்தர் - (1) கூர்மானந்தர் சூத்திரம் 51* கூழங்கைத் தம்பிரான் - (19ஆம் நூ. பிற்.) தேவப்பிரசையின் திருக் கதை, யோசேப்பு புராணம். கையனார் - பழைய இலக்கண நூலாருளொருவர். கைலாச நாதர் - (?) கைலாசநாதர் சூத்திரம் 211.* கைலாச நாதர் மாணவர் - கைலாச நாதர் தோத்திரம்.* கைலாயச் சட்டைமுனி - கைலாயச் சட்டைமுனி வாதநூல் 1000* கொக்கோகர் - (1) மதனநூல். கொங்கணர் - (-?) கொங்கணர் ஞானம், கடைக்காண்டம், திரி காண்டம். கொங்குவேள் - (7ஆம் நூ.) உதயணன் கதை (பெருங்கதை) கோதமனார் - (கி.மு. 270) பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்து. கோதை - ஆண்டாள் பார்க்க. கோபால கிருட்டிண பாரதியார் - (19ஆம் நூ.) நந்தன் கீர்த்தனம். கோபால கிருட்டிண தாசர் - (18ஆம் நூ. பிற்.) எம்பிரான் சதகம். கோரக்கர் - (10ஆம் நூ.) கோரக்கர் வைப்பு. கோனேரியப்ப முதலியார் - (18ஆம் நூ. முற்.) உபதேச காண்டம். கௌசிக முனி - (1) கௌசிக முனி வராக சூத்திரம்.* சங்கத்தார் - (1) அழகர் பிள்ளைத் தமிழ். சங்கர நமச்சிவாயர் - (17ஆம் நூ. பிற்.) நன்னூல் விருத்தி. சங்கர பண்டிதர் - (19ஆம் நூ. பிற்.) சைவப்பிரகாசனம், சத்தசங்கிரகம், கிறித்துமத கண்டனம், சிவதூடண கண்டனம், அனுட்டான விதி, சிவ பூசை அந்தாதி உரை அகநிர்யணத் தமிழுரை. சங்கரமூர்த்தி கவிராயர் - (18ஆம் நூ. பிற்.) கன்னிவாரி செமீன் கோவை, சேற்றூர் செமீன் பள்ளு. சங்கரமூர்த்திப் புலவர்- நல்லூர் - (1) மாணிக்கவாசக ரம்மானை.* சங்கராச்சாரியார் - (-?) சிவானந்த லகரி, உடலறி விளக்கம், நாதாந்த விளக்கம். சங்கராச்சாரியர் - (1) ஞானவுலா (2) சங்கராச்சாரியம் (சோதிடம்), (3) சத்தகாண்டம்.* சச்சிதானந்த சுவாமிகள் - சித்தானந்த கீதை.* சடகோபதாசர் - (18ஆம் நூ.) அரிசமய தீபம். சடகோபன் - நம்மாழ்வார் பார்க்க சட்டைநாத வள்ளல் - (18ஆம் நூ. மு.) சதாசிவரூபம். சட்டைமுனி - (-?) ஞானநூறு, கல்ப நூறு, வாகநிகண்டு, சடாட்சரக் கோவை, சட்டைமுனி ஆயிரத் திரு நூறு, நவரத்தின வைப்பு, வாத வைப்பு. சண்முக ஞானியார் - (-?) முருகரந் தாதி. சண்முகம் பிள்ளை, மயிலை - (20ஆம் நூ.) திருமுல்லைப் புராணம். சதாசிவ சோதிடர் - (1) சோதிட சந்திர காவியம்.* சதாசிவ நாவலர் (வைத்தியநாத நாவலரின் புதல்வர்) - (1) இலக் கண விளக்க உரை.* சதாசிவ பண்டிதர் - (20ம் நூ.) வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி. சதாசிவம் பிள்ளை (ஆணல்) - (19ஆம் நூ. பிற்.) பாவலர் சரித்திர தீபகம், வெல்லையந்தாதி, திருச் சதகம், நன்னெறிச் கதா சங்கிரகம். சத்திய ஞானி, நாகை - (1) நீதிசார அனுபவத் திரட்டு. சந்திரசேகர கவிராயர் - (19ஆம் நூ. பிற்.) வருடாதி நூல், துலங்காணத் தம்மன் பதிகம். சந்திரசேகர பண்டிதர் - (19ஆம் நூ.) நல்லூர்க் கந்தசுவாமி கிள்ளை விடுதூது. சந்திரசேகர பண்டிதர் - (மறைவு 1878) மானிப்பாய் பேரகராதி பதித்தவர் (1842). சபாபதி நாவலர் - (மறைவு 1903) யேசுமத சங்கற்ப நிராகரணம், சிதம்பர சபாநாதபுராணம், சிவகர் ணாமிர்தம், பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், திருச்சிற்றம்பல யமக வந்தாதி, திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, மாவையந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, வைதிக காவிய தூடண மறுப்பு, திராவிடப் பிரகாசிகை. சபாபதி முதலியார் காஞ்சிபுரம் - நீதிநெறி விளக்க உரை.* சம்பந்த சரணாலயர் - (1) கந்த புராணச் சுருக்கம்.* சம்பந்த முனிவர் - (16ஆம் நூ.) திருவாரூர்ப் புராணம். சம்பந்தர் - (7ஆம் நூ.) 384 தேவாரப் பதிகங்கள் (1-3 திருமுறை). சம்போகநாதர் - (1) சம்போக நாதர் வாதசித்தி.* சயங்கொண்டார் - (11ஆம் நூ.) கலிங்கத்துப் பரணி. சரவண தேசிகரின் மாணவர் - (1) சரவண தேசிகர் தோத்திரம், (2) சிவானந்த மாலை.* சரவண தேசிகர் - (19ஆம் நூ.) வீட்டு நெறியுண்மை, தேவிகாலோத்தரம், பஞ்சாக்கரவனுபூதி. சரவண தேசிகர், காஞ்சி - (1) முத்தி முடிவு.* சரவணப் பெருமாளையர் - (19ஆம் நூ.) ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, மூதுரை, வேங்கைக் கோவை, பிரபுலிங்க லீலை, திரு வள்ளுவமாலை, நைடதத்தின் ஒரு பகுதி முதலியவற்றின் உரை; பாலபோத இலக்கண வினாவிடை இயற்றமிழ்ச் சுருக்கம், அணியியல் விளக்கம், களத்தூர்ப் புராணம். சரவணப் பெருமாள் கவிராயர் - (19ஆம் நூ.) பணவிடுதூது, அசுவ மேதயாக புராணம், விநாயகர் திருமுக விலாசம், முத்திருளப்ப பிள்ளை காதல். சரவண முத்துப் பிள்ளை பி.ஏ. - (20ம் நூ.) மோகனாங்கி. சரவணமுத்துப் புலவர் - (19ஆம் நூ.) ஆத்மபோதப் பிரகாசிகை, வேதாந்த சுயச்சோதி, நெல்லை வேலவருலா. சருக்கரைப் புலவர் - (17ஆம் நூ.) மெதீனந்தாதி. சர்க்கரைப் புலவர் - (1) மிழலைச் சதகம்.* சல்லியமுனி - (1) சல்லிய நூல். சவ்வாதுப் புலவர் - (17ஆம் நூ.) ஆண்டவன் பிள்ளைத் தமிழ். சாந்த கவிராயர்-அரங்கேசவெண்பா.* சாந்தலிங்கக் கவிராயர் - (18ஆம் நூ. முற்.) தண்டலையார் சதகம். சாந்தலிங்க சுவாமிகள் - (18ஆம் நூ. முற்.) வைராக்கிய சதகம், வைராக் கிய தீபம், அவிரோத வுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடுதூது. சாந்துப் புலவர் - (18ஆம் நூ.) மயூர கிரிக்கோவை. சாமிநாத தேசிகர் - ஈசான தேசிகர் பார்க்க. சாமிநாத பண்டிதர் - (20ஆம் நூ.) சிவஞானபோதபாடியம், தேவாரம் முதலிய நூல்களை அச்சிட்டவர். சாமிநாதைய்யர் உ.வே. (மறைவு 1942) பத்துப்பாட்டு, சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை, புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறு நூறு, பெருங்கதை, வேம்பத்தூரர் திருவிளையாடல், நன்னூல் மயிலை நாதர் உரை, திருக்காளத்திப் புராணம் பதிப்பு, புத்த சரித்திரம், உதயணன் கதை, சிலப்பதிகாரம், முதலியவற்றின் கதைச்சுருக்கம், சங்க காலத்தமிழும் பிற்காலத்த மிழும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், என் வாழ்க்கை வரலாறு, கண்டதும் கேட்டதும், புதியவும் பழையவும். சிகண்டி - (-?) - இசை நுணுக்கம். சிதம்பர சுவாமிகள் - (18ஆம் நூ.) உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, பஞ்சதிகார விளக்கம், திருப்போரூர் சந்நிதிமுறை, தோத் திரமாலை, திருப் பாதிரிப் புலியூர்ப் புராணம், வீட்டு நெறி யுண்மை, உபதேச ஒருபா ஒருபஃது, உபதேச சித்தாந்த விளக்கம். சிதம்பர ஞானியார் - (1) சிதம்பர ஞானி பாட்டு,* சிதம்பர தத்துவலிங்கையன் - (1) பொய்யா மொழி யீசர் குறவஞ்சி.* சிதம்பரநாத முனிவர் - (18ஆம் நூ.) நித்தியகன்ம நெறி. சிதம்பரநாத முனிவர் - (18ஆம் நூ.) திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம். சிதம்பரநாத முனிவர் (மணிகண்ட முதலியாரின் புதல்வர்) -(1) சிவப் பிரகாச உரை.* சிதம்பரப் பிள்ளை (வில்லியம் நெவின்சு) - (மறைவு 1888) நியாய இலக்கணம், இலக்கிய சங்கிரகம். சிதம்பரம் பிள்ளை (ஊற்றுக்குளி சம°தானவித்துவான், திருநெல் வேலிச்சங்கரமூர்த்தியின் புதல்வர்) - (1) உசித சூடாமணி.* சித்தனாதியார் - (1) சானாந்த கணேசர் புராணம்.* சித்தானந்த சுவாமி - சித்தானந்த கீதை.* சிவக்கொழுந்து தேசிகர் - (19ஆம் நூ.) கோடீச்சுரக் கோவை. சிவக்கொழுந்து தேசிகர் - (1) சிவ நெறிப் பிரகாசம்.* சிவசண்முக மெய்ஞ்ஞான சிவா சாரியார் - (1) பலசாத்திரத் திர ட்டு.* சிவசம்புப் புலவர்-(19ஆம் நூ.) கல்லாட சாக்கரக் கலித்துறை, செந்தில்யமக வந்தாதி, புலோலி நான்மணி மாலை, யாப்பருங்கலக் காரிகை உரை, மறைசை யந்தாதி உரை. சிவஞான முனிவர் - (18ஆம் நூ.) தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, தருக்க சங்கீரக தீபிகை, அன்னப் பட்டீயம், காஞ்சி புராணம், சோமேசர் முதுமொழி வெண்பா, திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, திருத்தொண்டர் திருநாமக் கோவை, திராவிடமா பாடியம், திருவேகம்பரந்தாதி. சிவஞானயோகிகள், விருதை - (20ஆம் நூ.) பிரமசூத்திரம், யோக சூத்திரம், கோயிற்புரி புராணம், தமிழக ஒழுக்கு, விபூதி உருத்தி ராக்கதாரண நிரூபணம், தேவோ பாசனம், சிவஞான விளக்கம், வேதா கம உண்மை, தமிழர் தொன்மை அகவல், சிவகலைப் புராணம். சிவஞானவள்ளல் - (18ஆம் நூ. முற்.) வள்ளலார் சாத்திரம், சிவாகமக் கச்சிமாலை. சிவஞானி கருணாலயன் -(1) போப்பு வேத விவகாரம்.* சிவப்பிரகாச சுவாமிகள் - (17ஆம் நூ.) பிரபுலிங்க லீலை, திருக்கூவ புராணம், சிவநாம மகிமை, சோண சைல மாலை, வேங்கைக் கலம் பகம், வேங்கை உலா, வேங்கைக் கோவை, வேங்கை யலங்காரம், திருச்செந்திலந்தாதி, நால்வர் நான்மணி மாலை, கைத்தல மாலை, சித்தாந்த சிகாமணி, வேதாந்த சூடாமணி, தர்க்கபரி பாடை, சத மணி மாலை, நிரஞ்சன மாலை, இட்டலிங்கப் பெருங்கழி நெடில் விருத்தம், இட்டலிங்கக் குறுங்கழி நெடில் விருத்தம், அபிடேக மாலை, நன்னெறி, பிட்சாடன நவமணி மாலை, துறைசைக் கோவை. சிவப்பிரகாச தேசிகர் (ஞானக்கூத்தர்) - விருத்தாசல புராணம், (விருத்த கிரி புராணம்). சிவவாக்கியர் - (8ஆம் நூ.) சிவவாக்கி யர் பாடல், நாடிப் பரீட்சை 33. சிவாக்கிர யோகிகள் - (16ஆம் நூ.) சைவசன்னியாச பத்ததி, வட மொழிச் சிவஞான போத வியாக்கி யானம், கிரியா தீபிகை, சைவ பரிபாஷை, சர்வக்ஞானோத்தரத் தமிழுரை, தேவி காலோத்தரத் தமிழுரை, சுருதிசூக்தி மாலை தமிழுரை, சிவஞான சித்தியா ருரை, சிவநெறிப் பிரகாசம். சிவானந்தி தேசிகர், தருமபுரம் - காசித்துண்டி விநாயகர் பதிகம். சிவானந்தையர் - (1873-1916) புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனி துதி. சிறியவாச்சான் பிள்ளை - ஆத்ம சமர்ப்பணம்.* சிறுகாக்கை பாடினியார் - பழைய இலக்கண நூலாசிரியர்களுளொரு வர். இவர் சூத்திரங்களில் விருத் தப்பாவின் இலக்கணம் காணப் படுதலால் இவர் காலம் 10ம் நூற் றாண்டளவிலாகும். சிற்றம்பல நாடிகள் - (15ஆம் நூ.) துகளறுபோதம், திருச்செந்தூரக வல், சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம். சிற்றம்பல நாடிகள் மாணவர் - (1) சிற்றம்பலநாடியார் கலித்துறை (2) சிற்றம்பலநாடியார் தாலாட்டு, (3) சிற்றம்பல நாடியார் திரிகாலத் திரங் கல், (4) துகளறுபோதக் கட்டளை.* சிற்றம்பலப் புலவர் - (18ஆம் நூ.) கண்டியரசன் கிள்ளைவிடுதூது. சின்மயானந்தர் மாணவர் - (1) நாதப்பத்து.* சின்னக்குட்டிப் புலவர் - (19ஆம் நூ. முற்.) கனக தண்டிகைக் கனகரா யன் பள்ளு. சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர் - (19ஆம் நூ. பிற்.) திருச்சுழியலந் தாதி, புவனேந்திரனம்மானை, கயற்கண்ணி மாலை, கந்தவருக் கச் சந்தவெண்பா, குன்றக்குடிச் சிலேடை வெண்பா. சின்னத்தம்பி - (1830 - 1878) வீரபத் திரர் சதகம், மதனவல்லி விலாசம், நில அளவை சூத்திரம், சோதிடச் சுருக்கம். சின்னத்தம்பிப் புலவர் - (18ஆம் நூ.) மறைசையந்தாதி, கல்வளை யந்தாதி, பறாளைப் பள்ளு, கரவை வேலன் கோவை. சின்னத்தம்பிப் புலவர் இணுவில் - (19ம் நூ.) இணுவைச் சிவகாமி சுந்தரி பதிகம், காலிங்கராயன் பஞ்சவர்ணத் தூது. சின்னைய செட்டியார்-(19ஆம் நூ. பிற்.) தேவைத் திரிபந்தாதி, அருணைச் சிலேடை வெண்பா மாலை. சின்னைய தேசிகர் - (1) மயிலாசலத் தந்தாதி.* சின்னையன் - (1) பாகவத வசனம்.* சீத்தலைச் சாத்தனார் - (கி.பி. 140) மணிமேகலை. சீபட்டர் - (13ஆம் நூ.) பகவத்கீதை (செய்யுள்.) சீனிவாச பிள்ளை - (20ஆம் நூ.) தமிழ் வரலாறு. சுந்தர தேசிகர் - (19ஆம் நூ.) திருக்கோவையாருண்மை. சுந்தரம்பிள்ளை எம்.ஏ., எம்.எல். - (1855 - 97) மனோன்மணீயம், நூற் றொகை விளக்கம், Mile Stones in Tamil Literature சுந்தரர் - தேவாரம் (7ஆம் திரு முறை). சுப்பிரமணிய கவிராயர் - (19ஆம் நூ. பிற்.) செப்பறை பிள்ளைத் தமிழ். சுப்பிரமணிய தீட்சிதர் - (17ஆம் நூ.) பிரயோக விவேகம். சுப்பிரமணிய பண்டிதர் - (19ஆம் நூ. பிற்.) சீவரட்சாமிர்தம். சுப்பிரமணிய பாரதியார் - ( ) பாரதியார் பாடல். சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எல். (1945) - இலக்கிய வரலாறு, தாயு மானவர். சுப்பிரமணிய முதலியார் - வெள்ளக் கால் - (1857 - 1947) இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந் திய சாதி வரலாறும், அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா, சுவர்க்க நீக்கம். சுப்பிரமணிய முனிவர் - (18ஆம் நூ. பிற்.) துறைசைக் கோவை, கலைசைச் சிலேடை வெண்பா, சிதம்பரேசர் வண்ணம், பஞ்சரத் தின மாலை, திருக்குற்றாலச் சித்திர சபைத் திருவிருத்தம், சுப்பிர மணியர் திருவிருத்தம். சுப்பையர் - (19ஆம் நூ. பிற்.) கனகி புராணம். சுவாமிநாத தேசிகர் - ஈசான தேசிகர் பார்க்க. சூடிக்கொடுத்த நாச்சியார் - ஆண்டாள் பார்க்க. சூரியநாராயண சாத்திரியார் வி. கோ. - (1871 - 1903) ரூபாவதி, மானச விசயம், தனிப்பாசுரத்தொகை, தமிழ் மொழியின் வரலாறு, மதி வாணன் கதை, பாவலர் விருந்து, நாடகவியல், தமிழ்ப் புலவர் சரித்திரம். செகராச சேகரன், சிங்கை - (17ஆம் நூ.) செகராச சேகரமாலை, (சோதி டம்) தக்கண கைலாய மாலை, செகராச சேகரம், (வைத்தியம்). செண்பக மன்னார் - (1) சிறீகிருட்டிண னேசல்.* செயங்கொண்ட மாமுனி - ஆதி நாதன் வளமடல்.* செல்லப் பிள்ளை - (1) சிதம்பரக் குறவஞ்சி.* செல்வக் கேசவராய முதலியார்-(-1921) திருவள்ளுவர், கம்பன், குலேசர் சரித்திரம், கண்ணகி, தமிழ்ப் பழ மொழி பழைய உரை (பதிப்பு). செவ்வந்திநாத தேசிகர் - (1907 - 1932) மாவைக் கந்தசாமி மும்மணி மாலை, நல்லூர்க் கந்தசாமிக் கோவை. செவ்வைச் சூடுவார் - (16ஆம் நூ.) பாகவதம். சென்னமல்லையர், தில்லை வளாகம் - (18ஆம் நூ. பிற்.) சிவசிவ வெண்பா.) சேக்கிழார் (12ஆம் நூ.) - பெரிய புராணம். சேசாத்திரி சிவனார் - (1) இலக்கண விருத்தி தத்துவக் கட்டளை (2) நானாசீவவாதக்கட்டளை (தத்துவக் கட்டளை).* சேஷகவி - (1) பராங்குச நாடகம்.* சேதிராயர்-(11ஆம் நூ.) திருவிசைப்பா ஒன்று. சேந்தனர்-(11ஆம் நூ.) திருவிசைப்பா. சேரமான் பெருமாள் - (9ஆம் நூ.) திருவாரூர் மும்மணிக் கோவை, பொன் வண்ணத் தந்தாதி, திருவந் தாதி, திருக்கைலாச ஞானவுலா. சேறைக் கவிராச பிள்ளை - (19ஆம் நூ.) சேயூர் முருகனுலா, வாட் போக்கி நாதருலா, அண்ணா மலை யார் வண்ணம். சேனாதிராயர் - (19ஆம் நூ.) நல்லை வெண்பா, நல்லைக் குறவஞ்சி. சேனாவரையர் - (13ஆம் நூ.) தொல் காப்பியச் சொல்லதிகார உரை. சைமன் காசிச்செட்டி - (19ஆம் நூ.) தமிழ்ப் புலவர் (1859-ல் பதிக்கப் பட்டது). சொக்கநாதர் - (1) சொக்கநாதர் சூத்திரம்.* சொக்கப்ப நாவலர் - (18ஆம் நூ. முற்.) தஞ்சை வாணன் கோவை உரை. சொக்கப்ப புலவர் - அரசூர் (1) கும்பகோணப் புராணம்.* சோதிட சார்வ பௌமர் - (19ஆம் நூ. பிற்.) சாதக அலங்காரம். சோதிப் பிரகாசர் - (அஞ்ஞவதைப் பரணி, (ஞானவதைப் பரணி), (2) மோகவதைப் பரணி, (3) சசி வண்ண போதம். இவை தத்துவப் பிரகாசர் செய்ததாகவும் வழங்கும். சோமசுந்தர நாயகர் - (1846 - 1901) ஆசாரியப் பிரபாவம், சிவாதிக்க இரத்தினாவளி, மெய்கண்ட சிவ தூடண நிரோதம், சித்தாந்த சேகரம், ஆவாச ஞான நிரோதம், வேதசிவாகமப் பிரமாணியம், பிரமானுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா. ஞானக்கூத்தர் - (16ஆம் நூ.) திருவை யாற்றுப் புராணம். ஞானக்கூத்தர் - (17ஆம் நூ.) விருத் தாசல புராணம். ஞானசம்பந்த தேசிகர் - (16ஆம் நூ.) சிவபோக சாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த ரூபாதி, தசகாரிய அகவல் பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி. ஞானப்பிரகாச தேசிகர், யாழ்ப் பாணம் நல்லூர் - (17ஆம் நூ.) பௌட்கர ஆகம விரிவுரை, சிவஞான சித்தி சுபக்க உரை. ஞானப்பிரகாசர் (நல்லூர்) (Rev) - (1875 - 1947) தமிழ் அமைப்புற்றவரலாறு, தமிழ் ஒப்பியல் அகராதி. ஞானவரோதய பண்டாரம் - (16ஆம் நூ.) உபதேச காண்டம். தண்டி-(12ஆம் நூ.) தண்டியலங்காரம். தத்துவப்பிரகாசர் - (16 நூ.) சிவஞான சித்தியார் பரபக்க உரை. தத்துவப்பிரகாசர் - (16ஆம் நூ.) தத்துவப் பிரகாசம். தத்துவ ராயர் - (15ஆம் நூ.) சிவப்பிரகாச வெண்பா, தத்துவா மிர்தம், திருத் தாலாட்டு, பிள்ளைத் திருநாமம், வெண்பா வந்தாதி, கலித்துறையந் தாதி, சின்னப்பூ வெண்பா, தசாங்கம், இரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலை, திருவடி மாலை, ஞான வினோதன் கலம்பகம், உலா, சிலேடையுலா, நெஞ்சுவிடு தூது, கலிமடல், அஞ்வைதைப் பரணி, மோகவதைப் பரணி, அமிர்தசார வெண்பா, திருவருட் கழன்மாலை, சசிவர்ண போதம், பெருந்திரட்டு, குறுந்திரட்டு, பாடுதுறை. தமிழறியும் பெருமாள் கதை - இது காளிதாசன் கதை போன்றதோர் கற்பனைக் கதை. தருமர் - (13ஆம் நூ.) திருக்குறளுரை. தலைமலைகண்ட தேவர் - (18ஆம் நூ.) மருதூர் யமகவந்தாதி. தன்வந்திரி - (- ?) நிகண்டு, வைத்திய சிந்தாமணி, கலைக்கியானம், சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பச்சைவெட்டு. தாசி காளிமுத்து - (18ஆம் நூ.) வருணகுலாதித்தன் மடல். தாச்சி அருணாசல முதலியார் - (19ஆம் நூ.) திருமயிலைக் கபாலீசர் கற்பகாம்பிகை பதிகம், திரு முல்லை வாயில் மாசிலாமணி யீசர் பதிகம். தாண்டவராய சுவாமிகள் (17ஆம் நூ. முற்.) - கைவல்லிய நவநீதம். தாண்டவராய முதலியார் - (17ஆம் நூ. முற்.) பஞ்சதந்திரம் (மொழி பெயர்ப்பு) இலக்கண வினாவிடை, கதாமஞ்சரி. தாமோதரம் பிள்ளை சி.வை. - (1832 - 1901) வீரசோழியம், இறையனா ரகப் பொருள், தொல்காப்பியப் பொருளதிகாரம், சூளாமணி, கலித் தொகை, தணிகைப் புராணம், தொல்காப்பியம் சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம் முதலிய நூல் களின் பதிப்பு. தாயுமான சுவாமிகள் - (1706 - 1741) தாயுமானவர் பாடல்கள். திரிகூட ராசப்ப கவிராயர் - இராசப்ப கவிராயர் பார்க்க. திருக்கடவூர் உய்யவந்த தேவ நாய னார் - (12ஆம் நூ.) திருக்களிற்றுப் படியார். திருக்குருகூர் சிறிய இரத்தினக் கவிராயர் - (16ஆம் நூ.) புலவராற் றுப்படை , மச்சபுராணம். திருக்குருகைப்பிரான் பிள்ளான் - (13ஆம் நூ.) ஆறாயிரப்படி உரை. திருக்கோட்டி நம்பி - (12ஆம் நூ.) சூடாமணி உள்ளமுடையான். திருச்சிற்றம்பல தேசிகர் - (19ஆம் நூ.) கம்பராமாயண வசனம், உத்தர காண்ட வசனம். திருச்சிற்றம்பல முனிவர் - (?) திருக் காவிரி புராணம். திருஞானசம்பந்த உபாத்தியாயர் - (19ஆம் நூ.) மாணிக்கப் பிள்ளை யார் திருவருட்பா, கதிர்காமவேல வர் திருவருட்பா. திருத்தக்கதேவர்- (19ஆம் நூ.) சீவக சிந்தாமணி, நரிவிருத்தம். திருப்பதிசாரச்சாமி - (20ஆம் நூ.) சிவப்பிரகாச விரிவுரை. திருமங்கை ஆழ்வார் அல்லது திருமங்கை மன்னன்-(9ஆம் நூ.) பெரிய திருமொழி. திருக்குறுத் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை. திருமலை நம்பி - ( ) வைணவப் புலவருள் ஒருவர். திருமலை நாதர் - (16ஆம் நூ.) மதுரைச் சொக்கநாத ருலா, சிதம்பர புராணம். திருமழிசையாழ்வார் - (8ஆம் நூ.) திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி. திருமாளிகைத் தேவர் - (11ஆம் நூ.) நான்கு திருவிசைப்பாப் பதிகங்கள். திருமூலர் - (5ஆம் நூ.) திருமந்திரம். திருவரங்கத்தமுதனார் - (13ஆம் நூ.) இராமானுச நூற்றந்தாதி. திருவள்ளுவர் - (கி.மு. 1ஆம் நூ.) திருக்குறள், ஞானவெட்டியான் என்னும் நூலும் இவர் பெயரால் வழங்கும். இது பிற்காலத்து எவரோ செய்தது. திருவாலியமுதனார் - (11ஆம் நூ.) நான்கு திருவிசைப்பாப் பதிகங்கள். திருவியலூர் உய்யவந்த தேவ நாய னார் - (12ஆம் நூ.) திருவுந்தியார். திருவிளங்கம் - (20ஆம் நூ.) சிவப் பிரகாச உரை) திருவேங்கட ஐயர் - (14ஆம் நூ.) உவமான சங்கிரகம். திருவேங்கடநாத ஐயர் - (17ஆம் நூ.) பிரபோத சந்திரோதயம். திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் - (16ஆம் நூ.) சங்கற்ப நிராகரண உரை, திருவொற்றியூர்ப் புராணம். தில்லை நாயக சோதிடர் - (19ஆம் நூ.) சாதக சிந்தாமணி திவாகரர் - (10ஆம் நூ.) திவாகர நிகண்டு. திவ்விய கவி நாராயண தாசர் - (18ஆம் நூ.) நாராயண சதகம். துரைசாமி மூப்பனார் - (19ஆம் நூ. பிற்.) அயோத்திமாநகர மான்மியம், மகாபாரதச் சுருக்கம். கம்பராமா யண அருங்கவிப் பொருள் விளக் கம், சானகி பரிணயம். தெக்கணாமூர்த்தி தேசிகர் - (15ஆம் நூ.) தசகாரியம், உபதேசப் பஃறொடை தெய்வசிகாமணிப் பிள்ளை - (1800 - 1846) இன்பமணிமாலை, தோத் திரக் கும்மி. தெய்வச்சிலையார் - (12ஆம் நூ.) தொல்காப்பியச் சொல்லதிகார உரை. தேரையர் - (11ஆம் நூ.) நோயணு காவிதி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், பதார்த்த குண சிந்தாமணி, தைலவருக்கச் சுருக்கம், சிகாமணி வெண்பா, சிகிச்சை ஆயிரம், மருத்துப் பாரதம். தேவராச பிள்ளை, வல்லூர் - (19ஆம் நூ.) சூதசங்கிதை, குசேலோ பாக்கி யானம், தணிகாசலமாலை, பஞ்சரத் தினம். தேவராய சுவாமி - (19ஆம் நூ.) கந்தசட்டிக் கவசம். தேவன் - (?) அகநானூற்றுக்கு அகவல் உரை. தொண்டரடிப் பொடி ஆழ்வார் - (9ஆம் நூ.) திருமால் திருப்பள்ளி எழுச்சி. தொம்பிலிப்பு - (19ஆம் நூ.) ஞானா னந்த புராணம். தொல்காப்பிய தேவர் - (14ஆம் நூ.) திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம். தொல்காப்பியர் - (கி.மு. 350) தொல்காப்பியம். தோலாமொழித் தேவர் - (10ஆம் நூ.) சூளாமணி. நக்கீரர் - (கி.பி. 50) திருமுருகாற்றுப் படை, பெருந்தேவபாணி திரு வெழுகூற்றிருக்கை, கைலை பாதி காளத்தி பாதி யந்தாதி, திருஈங் கோய்மலை யெழுபது, திருவலஞ் சுழி மும்மணிக் கோவை, கோவப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலி வெண்பா, திருக்கண்ணப்ப தேவர் மறம். இவற்றுள் திருமுருகாற்றுப் படை யொழிந்த பிறகு பிற்காலத்த வரான ஒரு நக்கீரராற் பாடப்பட் டவை. நச்சினார்க்கினியர் - (14ஆம் நூ.) சிந்தாமணி, பத்துப்பாட்டு, கலித் தொகை, குறுந்தொகையில் இருபது பாட்டு, தொல்காப்பியம் முதலிய நூல்களின் உரை. நடராசர் - (17ஆம் நூ.) சாதக அலங் காரம். நந்தி சிவாக்கிர யோகிகள் - (16ஆம் நூ.) சிவநெறிப்பிரகாச உரை. நமச்சிவாய தேசிகர் - (15ஆம் நூ.) இருபா இருபஃது, வினாவெண்பா என்னும் நூல்களின் உரை. நமச்சிவாயப் புலவர் - (1707 - 1761) உலகம்மை யந்தாதி. நம்பியாண்டார் நம்பி - (10ஆம் நூ.) திருவிரட்டைமணி மாலை, கலித்துறை யந்தாதி, திருவுலா மாலை, திருக்கலம்பகம், திருத் தொகை, திருமும்மணிக் கோவை, திருவேகாதச மாலை. நம்பிள்ளை - (14ஆம் நூ.) திருவாய் மொழியுரை, திருவிருத்தவுரை, பெரிய திருமொழியுரை. நம்மாழ்வார் - (8ஆம் நூ.) திரு விருத்தம், திருவாசிரியம் பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. நயினா மகம்மதுப் புலவர் - (18ஆம் நூ. பிற்.) முகைதீன் மாலை. நல்லந்துவனார் - (கி.பி. 50) கலி நெய்தற்றிணை. நல்லாதனார் - (7ஆம் நூ. ?) திரிகடுகம். நல்லாப்பிள்ளை - (18ஆம் நூ. முற்.) பாரதம், தெய்வானை புராணம். நாகநாத பண்டிதர் - (1826 - 1854) இதோபதேசம், மேகதூதம், பகவத் கீதை, சாந்தோக்கிய உபநிடதம் முதலியவற்றின் மொழி பெயர்ப்பு. நாதமுனி - (11ஆம் நூ. முற்.) யோக இரகசியம், நியாய தத்துவம். நாரதர் - ( - ?) பஞ்ச பாரதீயம். நாராயணசாமி ஐயர், பின்னத்தூர் - (1862 - 1914) நற்றிணை உரை . நாராயணபாரதி-(18ஆம் நூ.) கோவிந்த சதகம், திருவேங்கட சதகம் (மண வாள நாராயண சதகம்). நாற்கவிராச நம்பி - (12ஆம் நூ. பிற்.) அகப் பொருள் இலக்கணம். நிசகுண யோகி - (19ஆம் நூ. முற்.) விவேக சிந்தாமணி. (வேதாந்த நூல்). நிரம்பவழகிய தேசிகர் - (16ஆம் நூ.) சேதுபுராணம், சிவஞான சித்தி சுபக்க உரை, திருவருட்பயன் உரை. நெல்லைநாதர் - (18ஆம் நூ.) சிவ ராத்திரி புராணம். நைநாரச்சாம் பிள்ளை - (18ஆம் நூ. முற்.) சரமோபாயம். பகழிக்கூத்தர் - (18ஆம் நூ. முற்) திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ். படிக்காசுப் புலவர் - (1686 - 1723) தொண்டை மண்டல சதகம், வேலூர்க் கலம்பகம். பட்டினத்தடிகள்-(10ஆம் நூ.) கோயின் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, திரு வேகம்ப முடையார், திருவந்தாதி, திருவொற்றியூர், ஒருபா ஒரு பஃது, கோயிற்றிரு அகவல், கச்சித்திரு அகவல், திருவேகம்ப மாலை, உடற்கூற்று வண்ணம். பண்டிதராசர் - (18ஆம் நூ.) சோணா சைல புராணம் (தட்சண கைலாச புராணம்) பண்டிதர் சவரிராயப் பிள்ளை - (20ம் நூ.) தமிழர் பழமை (Tamilian antiquary) இதழ் ஆசிரியர். பதுமனார் - (9ஆம் நூ.) நாலடி யாருக்குப் பாலியல் வகுத்தவர். பத்திரிகிரியார் - (10ஆம் நூ.) பத்திரகிரியார் புலம்பல். பரசுராம கவிராயர் - (19ஆம் நூ.) சிறுத்தொண்டர் புராணம். பரஞ்சோதி முனிவர்-(16ஆம் நூ.) திரு விளையாடற் புராணம், போற்றிக் கலிவெண்பா, பதிற்றுப் பத்தந்தாதி. பரஞ்சோதியார் - (16ஆம் நூ. முற்.) சிதம்பரப் பாட்டியல். பரத சூடாமணி - (-?) தாள சமுத்திரம். பராசபட்டர்-(13ஆம் நூ.) சகத்திர நாமம். பரிதியார்-(13ஆம் நூ.) திருக்குறளுரை பரிமேலழகர் - (13ஆம் நூ.) திருக்குற ளுரை, பரிபாடலுரை. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் - (18ஆம் நூ. முற்.) அழகர் கிள்ளை விடுதூது. பவணந்தி முனிவர் - (13ஆம் நூ.) நன்னூல் பனம்பாரனார் - ( - ?) தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், பனம்பாரனார் சூத்திரம். பன்னாடுதந்த மாறன் வழுதி - (கி.பி. 225) நற்றிணை தொகுப்பித்தவன். பாண்டித்துரைத் தேவர் - (மறைவு 1911) சைவமஞ்சரி, துதிமஞ்சரி, பன்னூற்றிரட்டு, சிவஞான யோகிகள் இரட்டைமணி மாலை, இராச இராசேசுவரி பதிகம். பாண்டிப் பெருமாள் - (17ஆம் நூ.) சிவஞானபோத உரை. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி - (கி.பி. 225) அகநானூறு தொகுப் பித்தவன். பாலைக் கௌதமனார் - (கி.மு. 270) பதிற்றுப் பத்து மூன்றாம் பத்து பாலையானந்த சுவாமி (-?) ஞானக் கும்மி, சச்சிதானந்த மாலை. பிங்கல முனிவர் - (10ஆம் நூ.) பிங் கலந்தை நிகண்டு. பிரமமுனி-(-?) பிரமமுனி வைத்தியம். பிரான்சீசுப் பிள்ளை - (19ஆம் நூ.) மூவிராசர் வாசகப்பா, வாக்கிய விளக்கப் பதிகம், இரட்சயப் பதிகம், திருவாகம், பிள்ளைக்கவி. பிலிப்பு மெல்லோ - (1723 - 1790) பைபளின் பலபகுதிகள் தமிழ் மொழி பெயர்ப்பு. சூடாமணி நிகண்டுக்கு 120 பாடல்கள் பாடிச் சேர்த்துள்ளார். பிள்ளை உலோகாசாரியர் - (15ஆம் நூ.) அட்டாதசாரம், தத்துவசேகரம், தத்துவத்திரயம், தனிப்பிரணவம், தனிசரமம், நவிதசம்பந்தம், நவரத் தினமாலை பரந்தபடி, முமூட்சுப் படி, யாதருச்சிகபடி, சீயப் பதியபடி, பிரபந்த பரித்திராணம், பிரயோக சேகரம், சாரசங்கிரகம், அர்ச்சுவதி, அர்த்தபஞ்சகம், சம்சார சாம்ராச் சியம். பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - (17ஆம் நூ.) அழகரந்தாதி, திரு வரங்கக் கலம்பகம், திருவரங்கத் தந்தாதி, திருவரங்க மாலை, திரு வரங் கத்தூசற்றிரு நாமம். திரு வேங்கடத் தந்தாதி, திருவேங்கட மாலை, 10 திருப்பதி யந்தாதி. பின்பழகிய பெருமாள் சீயர் - (15ஆம் நூ.) குருபரம்பரை. பின்வேலப்ப தேசிகர் - (18ஆம் நூ. பிற்.) திருப்பறியலூர்ப் புராணம். தாம்பரப் புலவர் - (19ஆம் நூ. பிற்.) மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம். புகழேந்திப் புலவர் - (13ஆம் நூ.) நளவெண்பா, அல்லி அரசி மாலை, பவளக்கொடிமாலை, புலந்திரன் களவு மாலை, சுபத்திரைமாலை, வித்துவான் குறம், கர்னன் சண்டை, நல்லதங்காள் கதை, ஏணி ஏற்றம், காத்தவராயர் கதை. புத்தமித்திரர்-(11ஆம் நூ.) வீரசோழியம். புருடோத்தம நம்பி-(11ஆம் நூ.) 11ஆம் திருமுறையில் இரு பதிகங்கள். புலிப்பாணி - (-?) வைத்தியம் ஐந்நூறு, சிதம்பரம் இருபத்தைந்து, சாலத் திரட்டு, பலதிரட்டு நூறு. பூதஞ்சேந்தனார் - (சங்க காலம்) இனியவை நாற்பது. பூதத்தாழ்வார் - (8ஆம் நூ.) இரண் டாம் திருவந்தாதி. பூந்துருத்தி நம்பி காடவர் நம்பி - (11ஆம் நூ.) திருவிசைப்பாப் பாடியவருள் ஒருவர். பூபால பிள்ளை மட்டக்களப்பு-(20ஆம் நூ.) சீமந்தனி புராணம், விநாயக மான்மியம், தமிழ் வரலாறு. பூரணலிங்கம் பிள்ளை எம். எ°. - (1866 - 1946) தமிழ் இந்தியா, தமிழ் இலக்கிய வரலாறு, இராவணப் பெரியார், தப்பிலி. பூரிக்கோ - (கி.பி. 250) குறுந்தொகை தொகுப்பித்தவர். பூலோகசிங்க முதலியார் - (19ஆம் நூ.) திருச்செல்வராசர் காப்பியம். பெரியவாச்சான் பிள்ளை - (15ஆம் நூ. முற்.) 24 ஆயிரப்படி உரை, கத்திய உரை. பெருங்குன்றூர் கிழார் - (கி.மு. 25) பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து. பெருந்தேவனார் - II (815 - 870) பாரத வெண்பா, நந்திக்கலம்பகம், கவிசாகரம். பெருந்தேவனார்-III (12ஆம் நூ.) வீரசோழிய உரை. பெரும்பற்றப் புலியூர் நம்பி - (12ஆம் நூ.) திருவிளையாடற்புராணம். பெருவாயின் முள்ளியார் - (10ஆம் நூ.) ஆசாரக் கோவை பேரம்பலப் புலவர் - (1859 - 1935) வண்ணைச் சிலேடை வெண்பா, கடம்பரந்தாதி, சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை. பொய்கையார் I - (கி.பி. 50 - ) களவழி நாற்பது. பொய்கையார் II - (கி.பி 7ஆம் நூ.) இன்னிலை. பொய்கை யாழ்வார் - (8ஆம் நூ.) முதற்றிருவந்தாதி. பொய்யாமொழிப் புலவர் - (13ஆம் நூ.) தஞ்சைவாணன் கோவை. பொன்முடியார் - (கி.மு. 42) தகடூர் யாத்திரை. பொன்னம்பல பிள்ளை - (1837 - 1903) பாரதம் ஆதி பருவ உரை. மயூர கிரிப் புராண உரை. பொன்னவன் - (14ஆம் நூ.) கனாநூல். பொன்னுச்சாமித் தேவர் - (19ஆம் நூ. பிற்.) இராசமன்னார் தல புராணம், இராசமன்னார் அலங்காரக் கோவை. போகர் - (8ஆம் நூ.) வைத்தியம் ஏழா யிரம், யோகம் எழுநூறு, நிகண்டு பதினேழாயிரம், போகர் திருமந்திரம். போப்பையர் ஜி.யூ. - (1820 - 1907) போப்பையர் இலக்கணம், திருக் குறள், நாலடியார், திருவாசகம், புறப் பொருள் வெண்பாமாலை - ஆங்கில மொழிபெயர்ப்பு. மகமது உசெயின் - (18ஆம் நூ. பிற்.) பெண்புத்திமாலை. மகாலிங்கையர் மழவை - (19ஆம் நூ. பிற்.) போதவசனம், அருணாசல புராணம் உரை, இலக்கணம், தொல் காப்பியம், நச்சினார்க்கினியம் பதிப்பு. மங்கை பாக கவிராயர் - (19ஆம் நூ. ?) கொடும் குன்ற புராணம், இவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் மரபில் வந்தவர். மச்சமுனி - ( - ?) திவாகரம் எண்ணூறு, வைத்தியம் எண்ணூறு. மச்சுச்செட்டியார் - (14ஆம் நூ.) ஞான பூசைத் திருவிருத்தம். மணக்குடவர் - (13ஆம் நூ.) திருக் குறள் உரை. மணவாள தாசர் - (17ஆம் நூ.) கோயிற் கலம்பகம். மணவாள முனிவர் - (15ஆம் நூ.) உபதேச ரத்தினமாலை, திருவாய் மொழி நூற்றந்தாதி, பிரமேயசாரம், ஆர்த்திப் பிரபந்தம், கீதாதாத்பரிய தீபம், திருவாராதனைக் கிரமம், விரோதி பரிகாரம். மண்டல புருடர் - (16ஆம் நூ.) சூடாமணி நிகண்டு. மதாறு சாகிபு புலவர் - (18ஆம் நூ. பிற்.) மிதுறுசு நாமா என்னும் காப்பியம். மதிவாணனார் - ( ? ) மதிவாணம். மதுரகவிராயர் - (18ஆம் நூ.) திருக் கச்சூர் நொண்டி நாடகம். மதுரைப் பூதனார் - இன்னிலை என்னும் நூல் தொகுத்தவர். மத்தான் சாய்பு - (19ஆம் நூ. முற்). அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், கிறித்து மத கண்டன வச்சிர தண்டம். மயிலேறும் பெருமாள் பிள்ளை - (17ஆம் நூ.) கல்லாட உரை. மயில்வாகனப் புலவர் - (19ஆம் நூ.) புலியூர் யமக வந்தாதி, யாழ்ப்பாண வைபவம், ஞானாலங்கார நாடகம், காசியாத்திரை விளக்கம். மயேச்சுரர் - பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர் (யா.வி.) மறைஞான சம்பந்தர் - (1555.) சிவதருமோத்தரம், சைவசமய நெறி. மறைஞான தேசிகர் - (18ஆம் நூ. மு.) அருணகிரி புராணம். மனவாசகங் கடந்தார் - (13ஆம் நூ.) உண்மை விளக்கம். மாக்காயனார் மகனார் கணிமேதாவி யார் - (7ஆம் நூ.) ஏலாதி மாங்குடி மருதனார் - (கி.மு. 62) மதுரைக்காஞ்சி. மாசிலாமணித் தேசிகர் - (16ஆம் நூ.) உத்தரகோசமங்கை புராணம். மாணிக்க நாயக்கர் பா.வே. - (20ஆம் நூ.) தமிழ் மறை விளக்கம். தமிழ் அலகைத் தொடர், அஞ்ஞானம். மாணிக்கவாசகர்-(4-6ம் நூ.) திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை. மாப்பாண முதலியார் - (மறைவு 1827) சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம், விரத நிச்சயம், ஆசௌச விதி, திருச்செந்தூர்ப் புராண உரை. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் - (1836 - 1884) பலதனிப் பாடல்கள். மாரிமுத்துப் பிள்ளை - (18ஆம் நூ.) புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது. மார்க்கசகாய தேவர் - (18ஆம் நூ. முற்) திருவிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ். மாறன் பொறையனார் - (சங்ககாலம்) ஐந்திணை ஐம்பது. மாறன்வழுதி - (கி.பி. 225) நற்றிணை தொகுப்பித்தவர். மீகாமன் - (18ஆம் நூ. மு.) அறிவா னந்த சித்தி. மீனாட்சிசுந்தர கவிராயர் - (19ஆம் நூ.) முருகரனுபூதி, குதிரை மலைப் பதிகம், கழுகுமலைத் திரிபந்தாதி, குவல யானந்த மொழி பெயர்ப்பு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை - (19ஆம் நூ.) திருநாகைக்காரோண புராணம், திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், திருத்துவத் துறைப் பெருந்தவப் பிராட்டி பிள்ளைத் தமிழ், திருவுறந்தை காந்தியம்மன் பிள்ளைத் தமிழ், திருபெருமண நல்லூர் திருநீற் றம்மை பிள்ளைத் தமிழ், திருக் குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ், கன்னபுரப்பாகம் பிரியாள பிள்ளைத்தமிழ், திரு வெண்காட்டுப் பெரிய நாயகி யம்மை பிள்ளைத் தமிழ், திரு விடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ், திருவாவடுதுறை அம்பல வாண தேசிகர் பிள்ளைத் தமிழ், வாட் போக்குக் கலம்பகம், துறை சைக் கலம்பகம், திருத்தில்லை யமக வந்தாதி, திருச்சிராப்பள்ளி யமகவந்தாதி, திருக் குடந்தைத் திரிபந்தாதி, திருவானைக் காத் திரிபந்தாதி பட்டீச்சுரப் பதிற்றுப் பத்தந்தாதி, பூவளூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப் பத்தந்தாதி, தண்டபாணி பதிற்றுப் பத்தந்தாதி, திருஞான சம்பந்தர் பதிற்றுப் பத்தந்தாதி, எறும்பீச்சுரம் வெண்பா, திருவானைக்கா மாலை, திருகலைசை மாலை, திருவாவடு துறை சுப்பிரமணிய தேசிகர்மாலை, திருஞான சம்பந்தரானந்தக் களிப்பு, திருமயிலை சச்சிதானந்த தேசிகர் மாலை, திருவுறந்தைப் புராணம், திருக் குடந்தைப் புராணம், மயூர புராணம், திருத்துருத்திப் புராணம், திருக் குறுக்கை வீரட்ட புராணம், திருவாளொளிப் புற்றூர் புராணம், விளத்தொட்டிப் புராணம், ஆற் றூர்ப் புராணம், தனியூர்ப் புராணம், மணிபட்டிக்கரைப் புராணம், கோயி லூர்ப் புராணம், கண்டதேவிப் புராணம், சூரைக் குடிப் புராணம், வீரைவனப் புராணம், திருமயிலைப் புராணம், காசி ரகசியப் புராணம், திருவாரூர் தியாகராசர் லீலை, காழிக்கோவை, திருவிடை மரு தூர் உலா. முத்தப்பச் செட்டியார் - (19ஆம் நூ.) செயங்கொண்டார் சதகம். முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார் - (19ஆம் நூ.) திருவேங்கடக் கலம் பகம், திருக்கணமங்கை மாலை, திருவேங்கட முடையான் பஞ்ச ரத்தினம், பெருந் தேவித் தாயார் பஞ்சரத்தினம். முத்தானந்தசாமி - (18ஆம் நூ.) ஞானமதியுள்ளான். முத்திராசர் - (18ஆம் நூ.) கைலாய மாலை. முத்துக்குமார கவிராயர் - (19ஆம் நூ.) முத்தக பஞ்சக விஞ்சதி. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் - (1853-1936) பசுபதீச்சுரன் அந்தாதி, சிவபெருமான் அலங்காரம். முத்துக் குமாரர் - (18ஆம் நூ. இறுதி) கஞ்சன் காவியம், வலைவீசு புராணம். முத்துத்தாண்டவர் - (18ஆம் நூ.) முத்துத்தாண்டவர் கீர்த்தனம். முத்துராம முதலியார் - (19ஆம் நூ. பிற்.) மகாபாரதக் கீர்த்தனம். முத்துராமலிங்க சேதுபதி - (மறைவு 1783) முருகர் அனுபூதி, பிரவாகர மாலை, வள்ளி மணமாலை, சரச சல்லாபமாலை, சடாக்கர சாரப் பதிகம், நீதிபோதம். முத்து வீரபாண்டியன் - (19ஆம் நூ. இறுதி) முத்துவீரியம். முருகதாச சுவாமிகள் - (1840 -99) தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திருச் செந்தூர்த் திருப்புகழ், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம், தமிழலங்காரம், அருணகிரி நாதர் புராணம், புலவர் புராணம், வண் ணத்திலக்கணம், அறுவகை இலக் கணம். முருகேச பண்டிதர் - (19ஆம் நூ. பிற்.) மயிலணிச் சிலேடை வெண்பா, நீதி நூறு, சந்திரசேகர விநாயகரூஞ் சல், பதார்த்ததீபிகை. முருகேசையர் - (மறைவு 1830) தன்னை யமகவந்தாதி, தன்னை விநாயகரூஞ்சல், குருச்சேத்திர நாடகம். முனிசாமி முதலியார், சிறுமணவூர் - (20ஆம் நூ.) பிரபஞ்சவுற்பத்தி, நாரதர் கலகம், வைத்திய இரத்தி னாகரம், மூலிகைமர்மம், அனுபவ வைத்தியம், சிவ மகா மந்திரம், நவக்கிரக மந்திரம், சோதிட விளக்க சிந்தாமணி, நவகண்ட ஆரூடம், முனைப்பாடியார் - (13ஆம் நூ.) அறநெறிச் சாரம். மூவாதியார் - (சங்க காலம்) ஐந்திணை எழுபது. மெய்கண்டார் - (13ஆம் நூ.) சிவஞானபோதம், வார்த்திகம். யசோதரகாவிய ஆசிரியர் - (11ஆம் நூ.) யசோதரகாவியம். யாமளேந்திரர் - (11-13ஆம் நூ.) இந்திரகாளியம். யூகிமுனி - ( - ?) வைத்திய சிந்தாமணி. வடக்குவீதிப் பிள்ளை - (15ஆம் நூ.) 36 ஆயிரப்படி உரை. வடமலைப்பிள்ளையன் - ( ) மச்ச புராணம். வடுகநாத தேசிகர் - (17ஆம் நூ.) திருமுல்லைப் புராணம். வண்ணக் களஞ்சியப் புலவர் - (18ம் நூ. பிற்.) முகைதீன் புராணம். வரதபண்டிதர் - (18ஆம் நூ. முற்.) சிவராத்திரி புராணம், கிள்ளை விடுதூது, ஏகாதசிப் புராணம். வரதுங்கராம பாண்டியன் - (16ஆம் நூ.) பிரமோத்தர காண்டம், கொக் கோகம். வரந்தருவார் - (15ஆம் நூ.) வில்லி பாரதப் பாயிரம். வயித்தியலிங்கம், வல்வை - (1843 - 1900) சிந்தாமணி நிகண்டு செல்வச் சந்நிதிமுறை, சாதி நிர்ணய புராணம், வல்வை வைத்தியேசர் பதிகம். வாகீச முனிவர் - (14ஆம் நூ.) மேருமந்தர புராணம். வாமன முனிவர் - (16ஆம் நூ.) நீலகேசி உரை. வாமனாச்சாரியர் - (15ஆம் நூ.) மேரு மந்தர புராணம் 1406 பாடலுடை யது. இது மேரு, மந்திர என்னும் இரு சகோதரரின் வரலாற்றைக் கூறுவது. வாய்ப்பியனார் - பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர் (யா.வி.) விசயராகவ பிள்ளை - (18ஆம் நூ.) குருபரம்பரைப் புராணம். விசாகப் பெருமாளையர் - (19ஆம் நூ.) நன்னூல் காண்டிகை உரை, யாப்பிலக்கண அணியிலக்கண வினா விடை. விசுவநாத சாத்திரியார் - (19ஆம் நூ.) வண்ணைக் குறவஞ்சி, நகுல மலைக் குறவஞ்சி. வில்லிபுத்தூரர் - (15ஆம் நூ.) பாரதம். விளம்பி நாகனார் - (7ஆம் நூ.) நான் மணிக்கடிகை. விளாஞ்சோலைப் பிள்ளை - (15ஆம் நூ.) சத்தகாதை. வீர கவிராயர் - (16ஆம் நூ.) அரிச் சந்திர புராணம் 1524-ல் அரங்கேற் றப்பட்டது. வீரமாமுனிவர் - (1680 - 1746) தேம்பா வணி, வேதியரொழுக்கம், சதுர அகராதி, செந்தமிழ், கொடுந்தமிழ், தொன்னூல் விளக்கம், அவிவேக பூராண குருகதை, திருக்காவலூர் கலம்பகம், வேத விளக்கம், அடைக்கல மாலை. வீரமார்த்தாண்ட தேவர் - (19ஆம் நூ.) பஞ்சதந்திர விருத்தம். வீராசாமிச் செட்டியார் - (19ஆம் நூ. பிற்) விநோத ரசமஞ்சரி. வீரைஅம்பிகாபதி - (16ஆம் நூ.) நெல்லை வருக்கக்கோவை. வெள்ளியம்பலத் தம்பிரான் - (17ஆம் நூ.) முத்தி நிச்சய உரை, சிவஞான சித்தியார் ஞானாபரண விளக்க உரை. வென்றிமாலைக் கவிராயர் - (1565) திருச்செந்தூர்ப் புராணம், இவர் திருச்செந்தூர் கோயிலில் மடைப் பள்ளி வேலையிலிருந்துபாடும் திறமை பெற்றவர். வேணாட்டடிகள் - (11ஆம் நூ.) திரு விசைப்பாப் பாடியவருள் ஒருவர். வேதகிரி முதலியார் - (19ஆம் நூ.) மனுநீதி சதகம், நீதிசிந்தாமணி, இலக்கணக் களஞ்சியம். வேதக்கண் ஐயர் - (19ஆம் நூ.) இலங்கைக் கும்மி வேதநாயகம் பிள்ளை - (1824 - 89) பெண்புத்தி மாலை, நீதிநூல், சர்வசமசர கீர்த்தனை, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம். வேதாந்த தேசிகர் - (15ஆம் நூ.) அத்தகிரி மான்மியம், அடைக் கலப்பத்து, நவரத்தின மாலை, திருச்சின்னமாலை, கீதார்த்த சங் கிரகம், பரம பதங்கம், அர்த்த பஞ் சகம், பிரபந்த சாரம், மும்மணிக் கோவை, துவயச் சுருக்கு, பரம சோபனம், சர்ம சுலோகம், அமிர்த ரஞ்சினி, அமிர்தா சுவாதினி, பதி னேழு சுலோகம், பன்னிரு நாமம். வேதாசலம் சுவாமி - (மறைமலை அடிகள்) - (- 1950) முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, சிந்தனைக் கட்டுரை கள், அறிவுரைக் கொத்து, பண்டைத் தமிழர் ஆரியர், கோகிலாம்பாள் கடிதங்கள், சாகுந்தல நாடகம், குமுதவல்லி - நாகநாட்டரசி, தமிழர் நாகரிகம், சைவ சித்தாந்த ஞானபோதம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருவாசக விரிவுரை, யோக நித்திரை, திரு வொற்றியூர் முருகன் மும்மணிக் கோவை, வேளாளர் யாவர்? தமிழர் சமயம், மரணத்துக்குப்பின் மக்கள் நிலை, மக்கள் நூறாண்டுயிர் வாழ்வதெப்படி, பொருந்துமுண வும் பொருந்தா உணவும், தமிழ் மொழி பிற மொழிக் கலப்பு, சிவ ஞான போத ஆராய்ச்சி (இது முற் றுறவில்லை.) வேலப்ப தேசிகர் - (16ஆம் நூ.) பறியலூர்ப் புராணம். வேலப்ப தேசிகர் 2 - (16ஆம் நூ.) பஞ்சாக்கரப் பஃறொடை. வேலாயுத முதலியார் - (19ஆம் நூ. பிற்.) திருவெண்காட்டடிகள் வர லாறு, வேளாண் மரபியல், சங்கர விசயம், சுந்தரர். வேலுப் பண்டாரம் - சிவஞான சித்தி பரபக்க உரை. வேலைய தேசிகர் - (17ஆம் நூ.) நல்லூர்ப் புராணம், வீரசிங்காதன புராணம், இட்டலிங்கக் கைத்தல மாலை, நமச்சிவாய மாலை, பாரிசாத லீலை, மயிலத்திரட்டை மணி மாலை, சீகாளத்திப் புராணத்தின் இறுதி 12 சருக்கம். வேற்பிள்ளை - (1847 - 1930) திருவாத வூரர் புராண உரை, புலியூரந்தாதி உரை, அபிராமி அந்தாதி உரை, கெவுளி நூலுரை, புலோலி பர்வ தர்த்தனியம்மை தோத்திரம், புரோலி வயிரவக் கடவுள் தோத்திரம், ஈழ மண்டல சதகம். வைத்தியநாதத் தம்பிரான் - (17ஆம் நூ.) வியாக்கிரபாத புராணம். வைத்தியநாதத் தேசிகர் - (17ஆம் நூ.) இலக்கண விளக்கம், திருவா ரூர் பன்மணிமாலை, மயிலம்மை பிள்ளைத் தமிழ். எஎஎஎ ஆன்றோர் அனுபோக... 1 2 15 ஆன்மலிங்க மாலை 14 ஆசாரக்கோவை அகத்தியர் சாலத்... 3 4 அகத்தியர் சூத்திர... 13 ஆக்கினேய புராண... 12 அலிபாதுஷா நாடகம் 5 அகநானூறு 6 அகநானூற்று... 11 அலங்கார ரூப... 10 அமீன் தோத்திரம் 7 அண்டகோள விலாசம் 8 அண்ட பிண்ட... அமிர்தரஞ்சனி 9 32 கவிச்சுவடி 17 இராம தேவர்... 18 இராம தேவர்... 31 கவிசாகரம் 30 கரணசிகை 19 இலக்கண தீபம் 20 இலக்கணத் திரட்டு 29 கயிலைபாதி... 28 கண்ணகி வரலாறும்... 21 உதயண குமார காவியம் 22 உத்தண்டன் கோவை கண்ணகி 27 26 ஒதெல்லோ என்ற... 23 உறையூர்க் காந்தியம்மை... 24 உறையூர்ப் புராணம் 25 ஒட்டியமுனி வாக்கியம் 48 சாதிபேத விளக்கம் 33 காத்தவராய நாடகம் 34 சாந்தசக்தி வைத்தியம் சாதிநூற் கவியுரை 47 46 சரசாத்திரம் கீதா தாத்பரிய தீபம் 35 36 கீதாத்திரயம் 45 சரசாங்கி 44 சடாக்கர சாரப்பதிகம் 37 குரு வாகனன் கவிதை 38 குருபரம்பராப் பிரபாவம் 43 சடத்தலைக் கட்டளை 42 கோயிற் கலம்பகம் 39 கூர்ம புராணம் 40 கூர்மபுராண விரிவுரை 41 கோயில் நான்மணிமாலை 64 சொக்கநாதர் இருநாக... 49 சிதம்பரம் சிவகாமி... 50 சிதம்பரம் 63 சைன விரதம் 62 செய்யுளிலக்கணம் 51 சிலப்பதிகார விளக்கம் 52 சிலம்பனூருணிக்கரை... 61 செய்யுளிலக்கணம் 60 சுப்பிரமணியர் ஞான... 53 சிவ தூடண நிரோதம் 54 சிவ தூடண பரிகாரம் 59 சுப்பிரமணிய சுவாமி... 58 சீகாழிக் கோவை 55 சிவாலயங்கள் இந்தியா... 56 சிவார்ச்சனா சந்திரிகை 57 சீகண்டேசுர மாலை 80 திருக்கோட்டியூர் சௌமிய... 65 ஞான சாரம் 66 ஞானசார வியாக்கியாணம் 79 திருக்கோட்டாற்றுப்... 78 திருக்கலைசைமாலை 67 தக்கணாமூர்த்தி துதி 68 தக்கணாமூர்த்தி தேசிகர் 77 திருக்கலியாண ஏசல் 76 தாராபுரத் தலபுராணம் 69 தத்துவ சந்தேசம் 70 தத்துவ சேகரம் 75 தாராட்டு 74 தரங்கை மிசியோன்... 71 தமிழலங்காரம் 72 தமிழறி மடந்தை கதை 73 தரங்கம்பாடி திருச்சபை... 96 துறைசைக் கோவை 81 திருஞானசம்பந்தர் துதி 82 திருஞானசம்பந்தர்... 95 துறைசைக் கலம்பகம் 94 திருவேங்கட மாலை 83 திருப்பதி வேங்கடேசர்... 84 திருப்பரங்கிரிப் பிள்ளை... 93 திருவேங்கடத்தல புராணம் 92 திருவான்மியூர்... 85 திருமண ஏசல் 86 திருமணப் பாடல் 91 திருவானைக்கா வுலா 90 திருவள்ளுவரும்... 87 திருமுறை கண்ட புராணம்... 88 திருமுறைப் பெருமை 89 திருவள்ளுவ மாலை 112 பதினொராந்திருமுறை 97 தேவகாலோத்தர மகத்துவம் 98 தேவி காலோத்தரம் 111 பதினொராந்திருமுறை 110 பட்டினப்பாலை 99 நந்தன் கீர்த்தனை 100 நந்தன் கீர்த்தனைக் கதை... 109 பட்டினத்துப் பிள்ளையார்... 108 பகல் சுக்கான்... 101 நள நாடகம் 102 நளவிலாசம் 107 நோன்பு கதை 106 நீதி சிந்தாமணி 103 நாலாயிர திவ்வியப்... 104 நாலாயிர திவ்விய... நீதிசாரானுபவத் திரட்டு 105 128 மந்திர நூல் 113 பரிபாஷை திரட்டு 114 பரிபாடல் 127 மந்திரச் சுவடி வசனம் 126 மச்ச முனி வாக்கியம் 115 பழமொழித் திரட்டு 116 பழமொழி விளக்கம் 125 மச்சமுனியார் பெருநூல் 124 பொன்னரர் சங்கரர்... 117 பாலபாடம் 118 பாலபாடம் 123 பொற்றொடி 122 பூவைக்கோவை 119 பின் எண்பது 120 பிரங்கி ஞானித் திரட்டு 121 பூவளூர்ப் பதிற்றுப்பந்தாதி 144 விம்பசாகர கதை 129 மனுநீதி சதகம் 130 மனுமுறை கண்ட வாசகம் 143 விப்பிர விஹாசம் 142 வாலைக் கும்மி 131 மார்க்கண்டேயர் புராணம் 132 மார்க்கண்டேயர் விலாசம் 141 வாலி மோட்சம் 140 வயோலா சரித்திரம் 133 முத்தி முடிவு 134 முத்திரா ராட்சசம் 139 வயிரக்கடவுள் கீர்த்தனம் 138 மோகனாங்கி விலாசம் 135 மூன்றாம் குலோத்துங்க... 136 மூன்றாம் திருவந்தாதி 137 மோகனாங்கி 160 அப்பர் 145 வெண்கலிப்பாவும்... 146 வெண்பாப் பாட்டியல் 159 158 வடிவுடையம்மை பிள்ளைத்... 147 வேமன்ன பத்தியங்கள் 148 வேம்பத்தூரார்... 157 யோசையப்பர் பிரார்த்தனை 156 சேதமலை பதிற்றுப்பத்தந்தாதி 149 வைராக்கியம் தீபம் 150 155 செபரத்தினம் 154 ஒலிய லந்தாதி 151 ஆயுட் பாவகம் 152 ஆயுர்வேத ஆசான் 153 ஒப்பியன் மொழிநூல் 176 நடராசர் 161 ஆடியபாதர், பொன்... 162 ஆண்டாள் 175 நச்சினார்க்கினியர் 174 தமிழறியும் பெருமாள் கதை 163 உரோமருஷி 164 உரோமமுனி 173 தத்துவ ராயர் 172 சின்னையன் 165 கருணையானந்த சுவாமி 166 கருப்பையா பாவலர் 171 சின்னைய தேசிகர் 170 சிகண்டி 167 சைலாயச் சட்டைமுனி 168 கொக்கோகர் 169 சாமிநாதைய்யர் உ.வே. 184 குறிப்புகள் 177 புகழேந்திப் புலவர் 178 புத்தமித்திரர் வைத்தியநாதத் தேசிகர் 183 182 விசுவநாத சாத்திரியார் 179 மீகாமன் 180 மீனாட்சிசுந்தர கவிராயர் 181 விசாகப் பெருமாளையர் xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் 1. தமிழ் இலக்கிய அகராதி . . . 1 தமிழ் இலக்கிய அகராதி ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : தமிழ் இலக்கிய அகராதி ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 184 = 200 படிகள் : 1000 விலை : உரு. 90 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix