16 தமிழர் சமயம் எது? முன்னுரை இன்று பலவகைக் கிரியைகளோடும் ஆடம்பரங் களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமயத் தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திரவித்தைக்காரர், பூசாரிமார்களால் கையாளப் பட்ட சில பழக்க வழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுள், உயிர் என்னும் முப் பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அறிவால் உயர் வெய்துவது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுவரும் தமிழரின் மதக்கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தமது திருவாசக மொழிபெயர்ப் பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடத்தனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல், பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவைகளைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப் பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியாதிருக்கும் படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும், சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும், இச் சிறு நூல் வெளியாகின்றது. சென்னை 23.1.1947 ந.சி.கந்தையா. தமிழர் சமயம் எது? தோற்றுவாய் சமயம் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றிற்று? இவ்வுலகில் சமயங்கள் பலவாகக் காணப்படுதல் ஏன்? அவைகள் தனித்தனியே தோன்றி வளர்ந்தனவா? இன்றேல், ஒரு தொடக்கத்தினின்றும் பிரிந்து வளர்ச்சியடைந்தனவா? என்பன போன்ற கேள்விகள் மத ஆராய்ச்சி செய்யும் பொழுது - எழுகின்றன. இவைகளுக்கு இறுக்கப்படும் விடைகள் சமய வரலாறாக அமையும். தமிழரின் சமயம் எது என்று விளங்கிக் கொள்வதற்குச் சமய வரலாற்றைப் பற்றிய அறிவு இன்றியமையாதது. சமயத்தின் வரலாற்றை அறியும்போது தமிழரின் சமயம் எது என்பது நன்கு புலப்படுமன்றோ? ஆகவே முதலில் சமயம் எவ்வாறு தோன்றிற்று என்பதைக் குறித்து ஆராய்வோம். சமயத் தோற்றம் எல்லா உயிர்களுக்கும் பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த் தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி, உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன், ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற் புகுந்து உயிர்த்து எழும். அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்த்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக் கங்கள் சில இன்றும் சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங் களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது, பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த் தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய்த் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டுகொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தைப் புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவை களே. கிறித்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர். பிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றது. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்த்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப் பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள். இறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்குத் தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களைப் புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள்; பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர். இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ தீமையை யோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில், அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராமத் தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்த வரின் ஆவிகள் இல்லுறை தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப் பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென்புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வ மாயினர். இதுபற்றியே வள்ளுவனார் “தென்புலத்தார் தெய்வம்” எனக் கூறினாரென்க. இன்றும் மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின் சாம்பர், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப் படுகின்றன. பூசாரியின் தோற்றம் இறந்தவர்களின் ஆவிகளுக்கு அவர்களின் கிட்டிய உறவினர் பலி செலுத்தி வந்தனர். அதிகாரி, அரசன் முதலிய பெருமக்களின் ஆவிகளுக் கும் அவ்வாறு செய்யப்பட்டது. பெரும்பாலும் வேலையாட்களும் அடிமைகளும் அவ்வேலையைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட்டது. அவர்கள் செய்துவரும் பணிவிடை கால் வழியாகத் தொடர்ந்து நடைபெறும் பொருட்டும், அவர்களின் கூலி எளிதிற் கிடைக்கும் பொருட்டும் அச்சமாதிகளுக்கு மானியங்கள் விடப்பட்டன. நாட்கள் கழிந்தன. பூசாரிகளின் தொடக் கத்தைப் பற்றிய வரலாறுகள் மறக்கப்பட்டன. பூசாரியும் அவன் குடும்பத்தினரும், சமாதியும் அதற்குரிய மானியங்களும் தமக்குச் சொந்தம் எனக் கருதினார்கள். சமாதி தெய்வமானபோது பலி இட்டு வழிபடும் பொருட்டு மக்கள் அவ்விடங்களிற் கூடினார்கள். அவை பொதுமக்கள் வழிபடும் இடங்களாக மாறின. கோவில்களின் தொடக்கம் தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களைக் குகையில் அடக்கஞ் செய்தார்கள். இது ஒரு குடிசை அல்லது பந்தரின் கீழ் அவர்களை விடுவதை ஒத்தது. எல்லா நாடுகளிலும் குகைகள் காணப்படுவதில்லை. ஆகவே செயற்கைக் குகைகள் செய்யப்பட்டு, அவைகளில் பிரேதங்கள் அடக்கஞ் செய்யப்பட்டன. எகிப்திய அரசர் உடல்கள் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள கூர்நுதிச் சமாதிகள் இவ்வகைச் செயற்கைக் குன்று களேயாகும். புத்தர் சேடங்களை வைத்துக் கட்டப்பட்ட “டாகபா” எனப்படும் சமாதிகளும் இவ் வகையினவே. எகிப்திய சமாதிகளைப் போன்றவை தென் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.1 தெய்வம் உறையும் கற்களைச் சுற்றிக் கட்டடம் எழுந்தது. அக் கட்டடம் முற்காலச் சமாதிகள் போன்ற குகைகள் வடிவாகக் கட்டப் பட்டன. சில சமயங்களில் இறந்தவரின் குடிசையும், இறந்தவரைப் புதைத்த இடத்தின் அயலே பலி செலுத்தும் பொருட்டும், நிழலின் பொருட்டும், இடப்பட்ட பந்தரும் கோயிலாக மாறியுள்ளன. மக்கள் நாகரிகம் அடைந் தார்கள். கட்டடங்கள் அழகாகக் கட்டப்பட்டன. கோயில் பெருக்கப் பெருக்க வழிபடு மக்களும் பலராயினர். அவர்கள் தெய்வத்துக்குக் காணிக்கை அளித்தனர். பூசாரி அக் காணிக்கைகளைப் பெற்று செல்வன் ஆனான். கோயில் எவ்வளவுக்குப் பெரிதாகின்றதோ அவ்வளவுக்குத் தெய்வத்தின் உயர்வும் உண்டாகின்றது. அப்பொழுது வழிபடுவோரும் அதிகரிக்கின்றனர். அதனால் அதிக வருவாய் உண்டாகின்றது. இவை களை அறிந்த பூசாரி ஆலயத்தைப் பெரிதாகவும் அழகாகவும் அமைக்க லானான். மக்கள் தாம் வழிபடும் தெய்வம் தம்மைப்போல முன் மனித வடிவில் இருந்ததென்பதை இப்போது நம்பமாட்டார்கள். சமய நூல்கள் கோயில் எவ்வளவு பெரிதாகின்றதோ அவ்வளவுக்குப் பூசாரியும் பெருமை அடைகின்றான்; தெய்வமும் பெருமை அடைகின்றது. தெய்வத் தின் பெருமையைப் பொறுத்ததே பூசாரியின் பெருமையாகும். பூசாரி தெய்வத்தைப் பெருமைப்படுத்த எண்ணினான். அவன் தெய்வத்தைப் பற்றிப் பல கற்பனைக் கதைகளைப் புனைந்தான். அவைகளோடு சில உண்மை வரலாறுகளையும் கலந்துகொண்டான். தெய்வத் தின் பெருமை களைக் கூறும் கதைகளின் இடையிடேயே அவன் தனது பெருமைகளை யும் நாட்ட மறந்துவிடவில்லை. இவ்வாறு தெய்வங்களைப் பற்றிய “புரா ணங்கள்” தோன்றின. பூசாரி, தான், தனதும் பலி செலுத்தும் தெய்வத்தி னதும் பெருமைகளைக் கற்பித்து எழுதிவைத்த நூல்களே முற்காலச் சமய நூல்களாகும். சமயம் என்பதில் அடங்கியவை சமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையே சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற் பதியலாயிற்று. தெய்வங்களின் வடிவம் சமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாகவைத்து வழிபடப் பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களைக் கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு. மர வணக்கத்தின் தோற்றம் இறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப, மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை; அம் மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தபின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம் மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன. பாம்பு வணக்கம் சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவரின் பிறப்பு என்று கருதப்பட்டது. இக் கருத்து அல்லது நம்பிக்கை இன்றும் உலகின் பல பாகங்களிலுள்ள மக்களிடையே காணப்படுகின்றன. ஆகவே பாம்புகள் இறந்தவர்களின் மறு உருவங்களாகக் கருதப்பட்டன. 1ஆகவே மக்கள் அதனைக் கொல்லாது அதற்குப் பால் வைத்தும் பிற உணவுகளைக் கொடுத்தும் வழிபடலாயினர். உலகில் பாம்பு வணக்கம் காணப்படாத இடம் இல்லை எனக் கூறலாம். இதனால் பாம்பு வழிபாடும் இறந்தவர் வழிபாட்டின் ஒருவகை எனத் தெரிகின்றது. கிணறுகள் முற்காலச் சமாதிகள் ஆறுகளின் அருகே எடுக்கப்பட்டன. சமாதிகள் கோயில்களானபோது அவைகளின் பக்கத்திற் செல்லும் நீர் ஊற்றுக்கள் தெய்வத்தன்மை உடையனவாகக் கொள்ளப்பட்டன. அவ்வாறுகளுக்குப் பலிகள் இட்டு வணங்கப்பட்டன. அவை பாவத்தைத் தீர்க்கும் தீர்த்தங்களாகக் கொள்ளப்பட்டன. எல்லா இடங்களிலும் ஆறு இருப்பதில்லை. ஆறு இல்லாத இடத்தில் ஆற்றுக்குப் பதில் கிணறு தோண்டப்பட்டது. கிணற்றுக்குப் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு கோயில்களுக்குப் பக்கத்தே உள்ள கிணறுகள் தீர்த்தங்களாயின. குறிப்பு: இதுவரைவிற் கூறியவை சமயம் தோன்றியதின் ஒரு வகை. சமயம் வேறு வகை யிலும் தோன்றியுள்ளது. வெவ்வேறு வகையாகத் தோன்றிய சமயக் கொள்கைகள் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. அவைகளை இன்றைய சமயங்களுட் காணலாம். தாய் வணக்கம் மக்களின் முற்பருவத்தில் தாயே அதிகாரமுடையவளாயிருந் தாள்; 1 ஆட்சி அவள் கையில் இருந்தது. தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொத்து பெண்களுக்கே உடையதாயிருந்தது. அக் காலத்தில் மக்கள் தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில், முதல் தோன்றி நடைபெற்றது தாய்வணக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர். தரைத்தெய்வம் இப் பூமியினின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதைப் பழங்கால மக்கள் கண்டார்கள். அவர்களுக்கு அது மிக வியப்பாயிருந்தது. பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கின்ற இத் தரையை அவர்கள் தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடலானார்கள். விதைப்புக் காலங்களில் அவர்கள் இக் கடவுளுக்குப் பலிகள் இட்டு வழிபட்டார்கள். விழாக் காலங்களில் இடக்கரான கிரியைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு தோன்றி நடைபெற்ற தாய்க் கடவுள் வழிபாடே, சத்திவணக்கம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. கோயிற் கிரியைகள் ஆவிகளுக்குப் பலியிட்டோர் ஒருவருக்கு உணவு அளிக்கும் போது செய்யும் உபசாரங்களைத் தெய்வத்துக்குச் செய்தார்கள். தாய்க் கடவுளை வழிபட்டோர் ஒரு தாய்க்குச் செய்யப்படும் பணிவிடைகளை ஒத்த கிரியைகளைச் செய்தார்கள். இவ்வாறு கிரியைகள் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டன. பிற்காலத்தில் தாம் செய்யும் கிரியைகளின் பொருள், மறைவாயிருக்கும்படி சில மாற்றங் களையும் செய்யலானார்கள். ஞாயிற்று வணக்கம் முற்கூறிய வழிபாடுகள் தோன்றி நடைபெறும்போது இன்னொரு வழிபாடு தோன்றிற்று. இவ் வுலகில் நிறைந்துள்ள இருளைப் போக்குவ தாகிய ஞாயிற்றின் தோற்றம் மக்கள் கருத்திற்பட்டது. அவர்கள் இவ்வொளியுடையதாகிய பொருளே எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானது என்று எண்ணினார்கள்; பலி செலுத்தி அதனை வழிபட் டார்கள். இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ளது. ஞாயிற்றை மக்கள் மலை முகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். ஆகவே கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என மக்களால் நம்பப் பட்டது. ஆகவே ஞாயிற்று வணக்கம் மலை சூழ்ந்த நாடுகள் ஒன்றில் தோன்றியிருத்தல் ஆகலாம். செய் குன்றுகள் எல்லா நாடுகளிலும் மலைகள் இருப்பதில்லை. மலையில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் மலைகளுக்குப் பதில் செய்குன்றுகள் எழுப்பி னார்கள். அச் செய் குன்றுகள் மீது ஞாயிற்றின் வடிவான வடிவங்களை வைத்தார்கள். அங்கு ஞாயிற்றுக் கடவுளை வழிபட்டார்கள். இவ் வகையான ஞாயிற்றின் கோயில்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. முக்கோணக் கற்கள் செய் குன்றுகளை எழுப்புவது எளிதன்று. ஆகவே மக்கள் செய்குன்று அல்லது மலைவடிவமான முக்கோணக் கற்களை நிழல் மரங்களின் கீழ் நிறுத்தினார்கள். அவைகளை ஞாயிற்றின் வடிவங்களாக வழிபட்டார்கள். முக்கோணக் கற்கள் நாளடைவில் அடி அகன்று நுனி ஒடுங்கிய ‘ஆதீண்டு குற்றி’களின் வடிவை அடைந்தன. தீ, திங்கள் வழிபாடுகள் ஒளியுடைய ஞாயிற்றை வழிபட்ட மக்கள் ஒளியுடையனவாகிய திங்கள், தீ என்பவைகளையும் வழிபடலாயினர். கோயில்களில் ஒரு போதும் அவிந்து போகாதபடி தீ எரித்துக் காப்பாற்றப்பட்டது. எல்லாக் காலங்களிலும் ஞாயிறு திங்கள் என்பவைகளைக் காண்டல் அரிது. ஆகவே மக்கள் ஞாயிறு, திங்கள், தீ என்பவைகளைக் குறிக்க வட்டம், பிறை, முக்கோண வடிவான குண்டங்களில் தீ வளர்த்து, மூன்று ஒளி யுடைப் பொருள்களையும் வழி படுவார்கள். அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்கள் முச்சுடர்களைக் குறிக்கும் வடிவங்களாகவும் கருதப்பட்டன. பல உற்பத்தியுடைய கற்றூண்கள் ஞாயிற்றின் குறியாக மாறுதல் சமாதிகளின் மீது நிறுத்தப்பட்ட கற்றூண்கள், ஆவிகள் உறையும் இடங்கள் எனக் கொள்ளப்பட்டு, வழிபடப்பட்டன என்று முன் கூறினோம். பழைய பலி பீடங்களும் தூண்களின் வடிவைப் பெற்று வழிபடப்பட்டன. இவ்வாறு வணக்கத்துக் குரியனவாகிய கற்றூண்கள் இப்பொழுது ஞாயிற்றின் வடிவம் எனக் கொள்ளப்படலாயின. இது பற்றியே ஞாயிற்றின் வடிவாகிய இலிங்க உற்பத்திக் குரிய பழங்கதை பலவாகக் காணப்படுகின்றன. மிகப் பழைய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுளின் வடிவம் மிகப் பழைய மக்கள் ‘சோகி’ என்னும் ஒரு வகைக்கடல் உயிரின் ஓட்டினைத் தாய்க் கடவுளின் வடிவாகக் கொண்டு வழிபட்டனர். இதற்குக் காரணம் அவ்வோடு பெண்கள் இரகசிய உறுப்பு போன்ற வடிவுடையது. இம் முறையிலிருந்து தாய்க்கடவுளைக் குறிக்கப் பெண்ணுறுப்பின் வடிவங்களும் அமைத்து வழிபடப் படலாயின. இவ்வகை வடிவங்கள் ‘மொகஞ்சதரோ’விற் காணப்பட்டன. தந்தை ஆட்சி உண்டாதல் உலகில் தாயாட்சியே முதலில் இருந்ததென்று ஓரிடத்திற் கூறினோம். சிறிது சிறிதாக நிலைமை மாறத் தொடங்கிற்று. தந்தை ஆட்சி உண்டா யிற்று. அப்பொழுது எல்லாக் கடவுளுக்கும் தலைவராகிய ஞாயிற்றுக் கடவுளை ஆண் கடவுள் எனக் கருதப்படலாயினர். அதுவே ஞாயிற்றின் வடிவமாகிய இலிங்கம், ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. வானக் கடவுள் தரைக்கடவுளைத் தாய்க்கடவுளாகக் கொண்டு வழிபட்ட மக்கள், வானத்தைத் தந்தைக் கடவுள் எனக் கொண்டார்கள். இவ்வாறு கொண்ட மக்கள், இலிங்கங்களை வான்கடவுளின் வடிவாகக் கொண்ட னர். நாளடைவில் வான் கடவுள் ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப் பட்டது. தரைக் கடவுள், வான்கடவுள்களை வழிபட்ட மக்கள், தரைக் கடவுளை பெண்வல்லமை (உயிர்களைக் கருக்கொண்டு ஈனுகின்ற வல்லமை) என்றும், வான் கடவுளை ஆண்வல்லமை (உயிர்களை உண் டாக்குகின்ற வல்லமை) என்றும் கருதினார்கள். அவர்கள் இலிங்கங் களை ஆண் வல்லமை எனவும் கொண்டனர். இலிங்கத்தின் வடிவு மாறுபடுதல் இவ்வாறு கொண்ட மக்கள் இலிங்கங்களை ஆண் உறுப்பு வடிவாக அமைக்கலாயினர். ஆண் பெண் வல்லமைகள் சேர்வதால், படைப்புக்கள் தோன்றுகின்றன என்பதை உணர்ந்த அவர்கள், இரு வடிவங்களையும் இணைத்து ஒரு வடிவமாகக் கொண்டும் வழிபட லாயினர். இவ்வாறு இணைந்த வடிவங்கள் மேற்கு ஆசியாவில் ‘எல்லோகிம்’ என்னும் பெயர் பெற்றன. தனி வடிவம் பெத்தெல், அல்லா, பால் முதலிய பெயர்களைப் பெற்றது. இந்திய நாட்டில் அதற்கு ஆவுடையார் என்று பெயர். ஞாயிறும் திங்களும் ஆண் பெண் தெய்வங்களாதல் இந்திய மக்கள் திங்களை ஆண் தெய்வமாகவே கொண்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாக கொள்ளப்பட்டது. இலிங்கங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிழல் மரம், பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. ஞாயிறும் திங்களும் கணவன் மனைவியர் எனக் கொள்ளப்படலாயின. சமாதியின் மீது வளர்ந்த மரம் வழிபடப்பட்ட தென முன்பு கூறினோம். அவ் வழிபாட்டுக்குரிய வரலாறுகளும் இப் பொழுது மர வணக்கத்துக் குரியனவோடு கலந்தன. நாளடைவில் மரத்துக்குப் பதில் மரத்தூண், கற்றூணுக்குப் பக்கத்தே நிறுத்தி வழிபடப் பட்டது. இம் மரத்தூண் வணக்கத்தையும் ஒன்றாக வைத்து மயங்கற்க. இப்பொழுது இறந்தவர்களின் ஆவி சம்பந்தமான வணக்கங்கள் எல்லாம் மறக்கப்பட்டு அவை ஞாயிறு திங்கள் தொடர்பான வணக்கங்கள் எனக் கொள்ளப்பட்டன. அரசக் கடவுள் மக்களின் அறிவு இன்னொரு நிலையை அடைந்தபோது அவர்கள் ஞாயிறே இவ் வுலகத்துக்கெல்லாம் அரசன். அவனால் மக்களை ஆளும் பொருட்டு அனுப்பப்பட்ட அவன் புதல்வனே அரசன் என எண்ணத் தலைப்பட்டார்கள். அப்பொழுது மக்கள் அரசனுக்குக் கடவுளுக்குச் செய்யும் வழிபாட்டைச் செய்து வந்தனர். அவர்களும் தாம் கடவுளின் அதிகாரத்தைப் பெற்று ஆளப் பிறந்தவர்கள் என நம்பி மக்கள் மீது அதிகாரம் செலுத்தினர். இறந்தபின் அவர்கள் ஞாயிற்றை அடைந்து ஞாயிற்றுக் கடவுளாக மாறுகின்றார்கள் என மக்கள் நம்பினார்கள். அவர்களைப் புதைத்த இடத்தில் ஞாயிற்றின் குறியாகிய கல் நட்டு வழிபட்டார்கள். இவ்வாறு தோன்றிய ஞாயிற்றுக் கடவுளரே எகிப்தில் “ரா” எனப்படுவர். அரசன் ஆண் கடவுளாகக் கருதப்பட்டது போல, அரசியர் பெண் கடவுளருக்குரிய மரியாதையைப் பெற்றனர். ஞாயிற்றுக் கடவுளின் கோயிலில் அரசனே பூசாரியாக இருந்தான் அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனக் கொள்ளப்பட்ட போது ஞாயிற்றுக் கடவுளின் ஆலயம் அரசனுக்கு உறைவிடமான அரண்மனை யின் வடிவை அடைந்தது. ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி அரசனாக இருந்தான். சில சமயங்களில் அரச குடும்பத்தினரே பூசாரிய ராக இருந்து வந்தனர். ஞாயிற்றுக் கடவுளின் வடிவு மாறுபடுதல் ஞாயிற்றுக் கடவுள், அரசனுக்கு அரசனாகக் கருதப்பட்டபோது, மக்கள் அவரைப் பேரரசன் வடிவில் வழிபடத் தொடங்கினார்கள். ஞாயிற்றுக் கடவுளுக்கு முற்கால மக்கள் இட்டு வழங்கிய இரு சிறந்த பெயர்கள் இவ் வுலகில் நாகரிகம் பெற்று விளங்கிய மக்கள் எல்லோரும் நம் முழு முதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய பெயர்களை ஆராயின், அவை ஒளி, அல்லது ஒளியுடையவன் என்னும் பொருள்களுடையனவாகக் காணப் படுகின்றன. அப் பெயர்களுள் ‘எல்’ என்னும் பெயர் மிக விரிவு அடைந்திருந்தது. எல் என்பது ஒளி என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். மேற்கு ஆசிய நாடுகளில் கடவுளைக் குறிக்க எல் என்னும் பெயர் சிறப்பாக வழங்கிற்று. அராபியர் மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் எல் தொடர்பான இடப் பெயர்கள் நூற்றுக் கணக்கிற் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் எல் கடவுளின் கோயில்கள் இருந்த இடங்களாகும். முகமதியர் வணங்கும் கடவுளின் பெயராகிய அல்லா என்னும் பெயர் எல் அடியாகப் பிறந்தது. “எல்லா” என்பது அல்லா என வழங்கும். கிறிஸ்துவ வேதத்திலும் எல் எலியன், எலோகிம், எல்சடை முதலிய பெயர்கள் ‘யேகோவா’ கடவுளைக் குறிக்க வழங்கின. அரசர் கடவுளின் பிறப்புகளாக (அவதாரங்கள்) கொள்ளப்பட்ட போது அவர்களும் தமது பெயர்களின் இறுதியில் ‘எல்’ என்னும் பெயரைச் சேர்த்து வழங்கினார்கள். ‘எல்’ என்னும் பெயரே ‘பால்’ (Baal) பெல் (Bel) எனத் திரிந்தும் வழங்கிற்று. கடவுளின் அடிய வர்களும் தம் பெயர்களுடன் எல், பால், பெல் முதலிய பெயர்களைச் சேர்த்துக் கொண்டனர். இது இந்திய மக்கள் சிலர் தம் பெயர்களுடன் சிவம், பிரமம் முதலிய பெயர்களைச் சேர்த்து வழங்குவதை ஒத்தது. இலங்கை அரசர் பலர், தம் பெயர்களின் இறுதியில் சிவன் என்னும் பெயரை இட்டு வழங்கினார்கள். மேற்கு ஆசியாவிலன்றி இந்திய நாட்டிலும் எல்லென்னும் பெயர் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. இன்றும் மலைச்சாதியினர் சிலர் எல்லம்மா, எல்லப்பன் (எல்லையன்) முதலிய கடவுளரை வழிபடுகின்ற னர். மனுவின் பேழை சென்று தங்கியதெனப்படும் மலை, இளா விருதம் எனப்படுகின்றது. இளாவிருதம் என்பதில் இளா என்பது எல் என்பதன் திரிபு. இலங்கைத் தீவின் பழைய பெயர் எல்லம். எல்லம் என்பதன் அடி எல். எல்லே பின்பு இல் ஆகி இலங்கை ஈழம் முதலிய திரிபுகளைப் பெற்றது. எல் தொடர்பான இடப் பெயர்கள் பல, இலங்கையிற் காணப் படுகின்றன. ‘நுவர எலியா’ என்பது அவைகளுள் ஒன்று. எல்லை ஒப்ப மிகப் பழமை உடையதாய், ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர் சிவன். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இதற்கு அடி சிவ(ப்பு). இன்றும் பிலிப்பைன் தீவுகள் சிலவற்றிலுள்ள மக்கள் கடவுளைச் சிவப்பன் என வழங்குவர். சிவன் என்னும் பெயர், மக்களிடையே தந்தை ஆட்சி தோன்றிப், பெரிய கடவுள் ஆண் என்னும் கொள்கை உண்டாயிருந்த காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். மெக்சிகோவில் “கொலறடோ” ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள குன்று ஒன்றில், சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. சிவன் ஆலயம் என்பது மலை உச்சியிலுள்ள தட்டையான பகுதியேயாகும். அச் சிவன் ஆலயத்தின் காலம், குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேண்டு மென மேல் நாட்டு அறிஞர் கூறியிருக்கின்றனர். எபிரேயரின் (Hebrew) மூன்றாவது மாதம் சிவன் எனப்பட்டது. மோசே என்பவர் இம் மாதத் தின் ஆறாவது நாள் கடவுளால் தனக்கு உணர்த்தப்பட்ட ஏழு கட்டளை களை மக்களுக்கு வெளியிட்டார். மோசேயின் காலம் இற்றைக்கு 17000 ஆண்டுகளின் முன். கிரீஸ் நாட்டுக்கு அயலே உள்ள கிரேத்தா (crete) என்னும் தீவில், சிவன் என்னும் பழைய நகரம் ஒன்று இருந்தது. அங்கு சிந்துவெளியிற் கிடைத்த புதை பொருள்களை ஒத்தவை காணப்பட்டன. சகரா வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை உண்டு. அங்கு ஞாயிற்றுக் கடவுளின் அழிபாடுகள் காணப்படுகின்றன. சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் ஓர் இடமுண்டு. சுமேரிய மக்கள் சிலர் சிவன் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். கிறிஸ்துவ மறையில் சொல் லப்படும் சியன் (Cian) வழிபாடு சிவன் வழிபாடே என மேற் புல அறிஞரால் நாட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சிவன் ஒளிமலை என ஒன்று உள்ளது. இவை போன்ற பல சான்றுகளால் எல் என்னும் பெயரை ஒப்பச் சிவன் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளின் சாலச் சிறந்த பெயராக இவ்வுலக மக்களால் வழங்கப்பட்டதெனத் தெரிகின்றது. எல் அல்லது சிவன் கடவுளின் வடிவங்கள் இவ் வுலகம் முழுமையிலும் எல் அல்லது சிவன் கடவுள் கற்றூண் வடிவில் வழிபடப்பட்டார். மக்கள் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி யாளர் இதனை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பேரரசன் வடிவில் வழிபட்ட காலம் ஒன்று உண்டு எனக் கூறினோம். அவ் வழக்கு இந்திய நாட்டிலே தொடங்கி மேற்கு நோக்கிப் பரவியிருந்ததெனத் தெரிகின்றது. சிவன் கடவுளின் ஊர்தி இடபம். இந்திய மக்கள் ஆரியரின் வருகைக்குப் பின்னரே குதிரையைப் பற்றி அறிந்தார்கள். அதன் முன் கழுதை, எருது என்பன மக்களின் ஊர்திக ளாக இருந்தன. அக் கால அரசர் மாட்டையே சிறந்த ஊர்தியாகக் கொண்டனர். பிற்காலங்களில் கடவுளின் ஊர்தியாகிய இடபமும் கடவுளாக வணங்கப்பட்டது. இவ் வணக்கம் மேற்குத் தேசங்களுக்குப் பரவிற்று. அப்போது நாணயங்களிலும் முத்திரைகளிலும் இடபங்கள் பொறிக்கப்பட்டன. அவ்விடபங்களுக்கு இமில் காணப்படுகிறது. இமில் உள்ள இடபங்கள் இந்திய நாட்டுக்கே உரியன. இதுபற்றி இடப வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங்களுக்குச் சென்ற தெனத் துணியப்படுகின்றது. இந்திய மக்கள் சிவன் கடவுளை இடப ஊர்தி உடையவராயும், ஒரு கையில் முத்தலைச்சூலம், உடையவராயும் மற்றக் கையில் கைக்கோடரி (மழு)யை உடையவராயும் வழிபடுகின்ற னர். இவ் வகை வடிவங்கள் மேற்குத் தேசங்களிற் காணப்பட்டனவாயின் அவை இந்திய நாட்டினின்றும் சென்றன என்று துணியப்படுமன்றோ? பபிலோன் நாட்டிலும், சிரியா நாட்டிலும், சின்ன ஆசியாவிலுள்ள கிதைதி நாட்டிலும் இவ்வகை வடிவங்கள் காணப்பட்டன. இவ்வகை வடிவங்கள் கிரேக்க நாட்டிலும் பிரித்தன் (இங்கிலாந்து) நாட்டிலும் வழிபடப்பட்டன என்று மேற்புல அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எகிப்திய மக்கள் இடபத்தை வணங்கினார்கள். அவர்களின் அமன், ஒசிறிஸ் என ஞாயிற்றைக் குறிக்கும் கடவுளரின் ஊர்தி இடபமாகவே இருந்தது. கடவுள் பேரரசன் வடிவினனான போது பழைய வழிபாட்டுச் சின்னங்கள் வந்து அடைதல் கடவுள் பேரரசன் வடிவினனானபோது, ஆவி வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருந்த பாம்பு, அக் கடவுளின் அணிகலமாயிற்று. ஆவிகள் உறையும் சுடலையில் திரிவன என்று கருதப்பட்ட பிசாசுகளும் பூதங்களும் அவர் பரிவாரங்களாயின. ஞாயிறு, திங்கள், நெருப்பு என்னும் முச்சுடர் வழிபாட்டினரின் மூன்று சுடர்களும் கடவுளின் கண்களாயின. சுடலையில் கிடக்கும் எலும்புகள் அவர் மாலைகளாயின. சுடலையில் உண்டாகும் ஊமத்தை எருக்கு என்பவை, அவர் சூடும் பூக்களாயின. மண்டை அவர் ஏந்தும் ஓடு ஆயிற்று. தாய்க்கடவுள் இந்திய மக்கள் தாய்க்கடவுளைச் சிங்கவாகன முடையவளாகவும், ஒரு கையில் தண்டையும் இன்னொரு கையில் கேடகத்தையும் வைத்திருப் பவளாகவும் கொண்டு வழிபடுகின்றனர். எகிப்திய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின்மேல் நிற்பதாகும். இதனை ஒத்தனவே சின்ன ஆசியா, சிரியா முதலிய நாடுகளில் வழிபடப்பட்ட, தாய்க் கடவுளரின் வடிவங்களுமாகும். சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் இடத்திலே கிடைத்த பழைய நாணயம் ஒன்றில், ஒரு பக்கத்தே இரு இடபங்கள் தாங்கும் கட்டிலின் மீது தந்தைக் கடவுளும், இரு சிங்கங்கள் தாங்கும் கட்டிலின்மீது தாய்க் கடவுளும் இருக்கும் வடிவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. தாய்க்கடவுள் வழிபாட்டுக்குரிய இவ்வடிவம், இந்திய நாட்டினின்றே சென்றிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வுலக நாகரிகம் இந்திய நாட்டினின்றே மற்றத் திசைகளுக்குப் பரந்திருத்தல் வேண்டுமென ஜி.ஆர். ஹன்டர் (G. R.Hunter) ஹெரஸ் பாதிரியார், றைஸ் டேவிட்ஸ், சில்டி முதலிய பல மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் கருதினார்கள். மும்மூர்த்திகள் முற்கால மக்கள் எல்லோரிடையும் மும்மூர்த்திகள் வழிபாடு இருந்து வந்தது. மும்மூர்த்திகளில் தாய், தந்தை, குமாரன் என்று மூன்று கடவுளரும் அடங்கும். ஆரியமக்கள் இந்தியநாடு வந்த பின்பு மும்மூர்த்தி கள் பிரமா, விட்டுணு, உருத்திரன் எனப்பட்டனர். இது தமிழ் மக்களும், பிற மக்களும் கொண்ட முறையன்று. செவ்வாடை உடுத்துதல் ஞாயிறு செந்நிறக்கடவுள் ஆதலின், ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி சிவந்த உடையை உடுத்தான். அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டமையின் அவனும் செவ்வாடையை உடுத்தான். ஞாயிற்றுக் கடவுளின் பூசாரிகளும் அரசர்களும் அல்லாமல் அரச குடும்பத்தினரும் சிவப்பு ஆடையை உடுத்தனர். எகிப்து பபிலோன் முதலிய நாடுகளில் தெய்வங்களுக்கு உடுத்தப்படும் உடை சிவப்பு நிறம் உடையதாக இருந்தது. கிரீஸ், உரோம் முதலிய நாடுகளில் குருமார், அரச குடும்பத்தினர், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடையை உடுத்தல் ஆகாது என்னும் சட்டம் இருந்து வந்தது. இன்றும் உரோமன் கத்தோலிக்க உயர்ந்த குருமார் சிவப்பு அங்கியையே அணிவர். இந்திய நாட்டிலும் இவ்வழக்கே இருந்து வந்தது. மத்திய தரைக்கடலின் கிழக்கு ஓரங்களில் வாழ்ந்த பினீசியர் சிவப்பு ஆடைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து வாணிகம் புரிந்தார்கள். அவ்வாடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. பிற்காலங்களில் அரசர் பூசாரிகள் பெருமக்கள் மாத்திரம் சிவப்பு ஆடையை அணிதலாகிய வழக்கு மறக்கப்பட்டது. கடவுளின் அடியார் எனத் தம்மைக் காட்டிக்கொள்ள விரும்பிய மக்கள் எல்லோரும் சிவப்பு ஆடை உடுத்தினர். சிவப்பு ஆடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. ஆகவே சிவப்புக்குப் பதில் காவி தோய்த்த ஆடைகள் பயன்படுத்தப் பட்டன. புத்த குருமார் தம்மை முன்னையவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு மஞ்சள் உடை உடுத்தனர். இதுவே காவி உடை அணிவதின் வரலாறாகும். சங்குவாத்தியம் இவ்வுலக மக்கள் எல்லோரும் சங்கைப் புனிதமுடையதாகக் கொண்டனர். சங்குவாத்தியம் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்தப் பட்டது. கிறித்துவ வேதத்திலும் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்ட செய்தி காணப்படுகின்றது. இன்றும் சில கிறித்துவ ஆலயங்களில் சில சிறப்புக் காலங்களில் சங்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்தியா, சப்பான், அமெரிக்கா, கிரேத்தா, கிரீஸ் மத்தியதரை நாடுகளிலெல்லாம் கோயில் களில் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்டது. முத்து முத்து உயிர்ச்சத்தியை அளிப்பதாக எல்லா மக்களாலும் கொள்ளப் பட்டது. அது அரசராலும் பெருமக்களாலும் பூசாரிகளாலும் அணியப் பட்டது. தெய்வங்களுக்கும் அவை அணியப்பட்டது. முத்துக்குடை, முத்துப்பல்லக்கு முதலியன சிறப்புடையன. முத்து மிகவும் விலை ஏறப் பெற்றது. பிற்காலங்களில் கடவுள் தொண்டர் எனத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்பிய இந்திய நாட்டு மக்கள், முத்துக்குப் பதில் உருத்திராக் கத்தை அணிந்தாராகலாம். இது ஆராய்ச்சிக்குரியது. சுவத்திகம் சுவத்திகம் என்பது ஞாயிற்றின் குறி. இவ் வடையாளம் இலிங்க வணக்கம், பாம்பு வணக்கங்களைப் போல உலகம் முழுமையிலும் வழங்கின. உலகின் பல பாகங்களில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய சுவத்திகம் பொறித்த பொருள்கள் இந்திய நாட்டிலும், உலகின் பல பாகங்களிலும் காணப்பட்டன. புத்த மதத்தினர் ஞாயிற்று வழிபாட்டினராகவே முன் இருந்தார்கள். ஆகவே சுவத்திகத்தை அவர்கள் மதச்சின்னமாகக் கொண்டனர். காஞ்சியிலுள்ள புத்த ஆலயத் தின் அழிபாடுகளில் சிவலிங்கங்கள் பல காணப்பட்டன. புத்ததந்தம் என வைத்து இலங்கை மக்களால் வழிபடப்படுவது புத்தரின் பல்லன்று; சிறிய இலிங்கமே என்றும், புத்தர் கோயில்களில் வைக்கப்படும் முடி, இலிங்கமேயென்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். சுவத்திக அடை யாளத்தின் இன்னொரு வகையே சிலுவைக் குறியாகும். கிறித்து நாதருக்கு முன்பும் சிலுவைக் குறி சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. அது கிறித்து நாதர் சிலுவையில் அறையப்பட்டமையால் தோன்றியதன்று. தேவதாசிகள் தென்னிந்தியக் கோயில்களில் தேவதாசிகளைக் காண்கின்றோம். இவர்களின் கடமைகளும் ஒழுக்கங்களும் எவை என்பதை ஈண்டு விரிக்க வேண்டியதில்லை. இவ்வகைத் தேவதாசிகள் பபிலோன், பாலஸ்தீனம், சிரியா, சின்ன ஆசியா, ஆபிரிக்கா, கிரீஸ், ரோம் முதலிய நாடுகளிலுள்ள கோயில்களிலும் இருந்தார்கள். தேவதாசி வழக்கம் தோன்றியதற்குப் பல காரணங்கள் உண்டு. முன் ஓரிடத்தில் தரைக் கடவுள் தாய்க் கடவுளாக வழிபடப்பட்டது எனக் கூறினோம். அக் கடவுளுக்குப் பெண் பூசாரிகளே பூசை செய்தார்கள். அங்குப் பெண் தொண்டர்களும் வந்து கூடினார்கள். அக் கடவுளுக்குச் சந்ததி உற்பத்திக்குரிய நேர்த்திக் கடன்களால் மகிழ்ச்சி உண்டாகின்றதெனக் கருதப்பட்டது. ஆகவே கோயில்களில் ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் அம் மகிழ்ச்சிக்குரிய செயலை அவ் விடத்தில் நிகழ்த்துவாராயினர். அரசனே கடவுளான போது, ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களில் செய்யப்படும் கிரியைகள், ஓர் அரண்மனையில் அரசனுக்கு அவன் ஏவலாளர் செய்யும் பணிகளாக நடத்தப்பட்டன. அரசனது அரண்மனையில் ஆடலாலும் பாடலாலும் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் பலர் இருந்தனர். இதுபற்றியே தசரதனுக்கும் அறுபதினாயிரம் தேவியர். இன்னும் பழைய நூல்களில் சொல்லப்படும் அரசருக்கும் நூற்றுக்கணக்கான மனைவியர் இருந் தார்கள் எனக் கூறப்படுதல் காண்க. அரசன் நிறைவேற்றும் கிரியை களைக் கடவுளின் சார்பாளர் (பிரதிநிதி)களாகிய குருமாரே நிறைவேற்றி வந்தனர். பின்பு கோயில்கள் வியபிசார விடுதிகளாக மாறின. ஆலயங் களில் குன்றாத் தீ வளர்த்தலும் வழக்காயிருந்தது. மேற்குத் தேசங்களில் அரச குமாரிகளும், உயர்குலப் பெண்களுமே இதற்காக நியமிக்கப் பட்டார்கள். கடவுட்பணி விடை செய்யும் பொருட்டு, ஆலயங்களில் விடப்பட்ட பெண்கள், கூடா ஒழுக்கமுடையவர்களாக மாறியதும் உண்டு. பலி பலியிடும் வழக்கு எவ்வாறு உண்டாயிற்று என்று முன் குறிப்பிட்டுள் ளோம். மனித பலியே தெய்வங்களுக்குப் பிரியமானது என்று மக்கள் கருதினார்கள். மனிதர், மனித ஊன் புசிப்பவர்களாயிருந்த ஒரு காலம் இருந்ததென்பதைப் பற்றி, நாம் வரலாறுகளில் படிக்கின்றோமன்றோ? போரில் சிறை பிடிக்கப்பட்டோர், அடிமைகள், விலைக்கு வாங்கப்பட் டோர், குற்றவாளிகள் என்போர் பெரும்பாலும் தெய்வங்களுக்குப் பலியாக வெட்டப்பட்டனர். அவர்களின் இரத்தம் கலங்களில் ஏந்தி தெய்வச் சிலை மீதும், மக்கள் மீதும் தெளிக்கப்பட்டது. சில சமயங்களில் பலியிடப்பட்டவர்களின் ஊன் புசிக்கப்பட்டது. அவ்வுடல்களை நெருப்பில் இடுதலும், கோயிலின் பக்கத்தே உள்ள மரங்களிற் கட்டித் தூக்குவதும் வழக்கமாயிருந்து வந்தது. சில சமயங்களில் அரசர் தம் பிள்ளைகளைத் தெய்வங்களுக்குப் பலி செலுத்தி இருக்கிறார்கள். இவ்வகைப் பலியைப் பற்றிக் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணலாம். அரசனே தெய்வத்துக்குச் சிறந்த பலி என மக்கள் ஒரு காலத்திற் கருதினார்கள். இவ்வாறு அரசனையே மக்கள் கொன்று பலி செலுத்திய வரலாறுகள் பல சரித்திரங்களில் காணப்படுகின்றன. கள்ளிக்கோட்டை அரசர் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்கொலை புரிய வேண்டு மென்னும் வழக்கு இருந்ததை மேல்நாட்டுச் சரித்திரக்காரர் கூறியிருக் கின்றனர். அரசனுக்குப் பதில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட ஒருவனை, அரசனாகப் பாவித்து பலியிடுவதும் வழக்காக இருந்து வந்தது. இன்னும் மக்கள் அறிவு சிறிது பண்பட்ட போது மனிதனுக்குப் பதில் எருமை, மாடு, ஆடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகள் பலியிடப்பட்டன. உரோமையில் இலக்கிய காலத்திலும் மனிதரைப் பலியிடும் வழக்கம் இருந்தது. பலியிடுவதைப் பற்றியும் ஒரு வகையான தத்துவ ஞானம் உண்டா யிருந்தது. பலரின் பாவத்துக்காக ஒருவனைப் பலியிடுதலே அதுவாகும். இவ்வாறு மக்களின் பாவத்துக்காக ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ அவர்களால் தெரிந்தெடுத்த மக்கள் பலியிடப்பட்டார்கள். கிறித்து நாதர் மக்களின் பாவத்துக்காகச் சிலுவையில் அறையுண்டு இறந்தார் எனப்படுவதும் இவ் வழக்கைப் பற்றியதே. ஒருவனின் பாவத் துக்காக இன்னொருவன் கடவுளைத் தொழுதல் போன்ற வழக்கும், மேற்படி கொள்கையின் நிழலேயாகும். செகந்நாதத்தில் பலர் தேர்ச்சக்கரங்களின் கீழ் பலியாக விழுந்து இறந்தனர். கொண்ட் மக்கள் தரைக் கடவுளின் பொருட்டு மனித பலி செலுத்தி வந்தனர். இவை ஆங்கில அரசாட்சியாரால் நிறுத்தப்பட்டன. புராணங்களில் நரபலியால் தெய்வம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் திருப்தி யுறுகின்றது என்று எழுதப்பட்டுள்ளது. இறந்தவர் பொருட்டும் பலிகள் செலுத்தப்பட்டன. இறந்தவனைத் தீயிலிட்டுக் கொளுத்தும்போது அவன் மனைவி, நாய், அடிமைகள் போன்றவர்களும் கொளுத்தப்பட்டார்கள். இறந்த கணவருடன் மனைவி யையும் பதைக்கப் பதைக்கத் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் (ஆங்கில ஆட்சியினரால் நிறுத்தப்படும் வரை) இந்திய நாட்டில் இருந்துவந்தது. அதற்கு வைதீகர் மந்திரங்களோடு கூடிய கிரியைகளையும் எழுதி வைத்திருந்தார்கள். ஆப்பிரிக்காவில் இறந்தவன் ஒருவனுக்குச் செய்தி அனுப்ப வேண்டி இருந்தால் அச் செய்தியை அடிமை ஒருவன் காதில் சொல்லியபின் அவன் கழுத்துக் கொய்யப்பட்டது. மக்கள் இவ்வாறு தெய்வங்களுக்கு மனிதரையும் விலங்குகள் பறவைகளையும் வெட்டிக் கொன்று பலியிடுவதே, தாம் செய்யத் தகுந்த மேலான கடவுட்பணி என நீண்டகாலம் நம்பி வந்தார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்னும் உணர்ச்சி அவர்கள் உள்ளத்திற் பிறக்க வில்லை. மேற்குத் தேசங்களில் கிறித்துவ மதம் தோன்றிப் பரவிற்று. அக் காலங்களில் பழைய பலியிடும் வழக்கங்கள் சிறிது சிறிதாக நின்று போயின. கிறித்துவ சமயத்துக்குப் பின் முகமதிய சமயம் தோன்றிற்று. அப்பொழுதும் இவ் வழக்கம் மேல் நாடுகளில் நின்று போயிற்று. இந்திய நாட்டில் அறியாமையுடைய மக்களிடையே பலியிடும் வழக்கம் இருந்து வருவதாயிற்று. ஆரியரின் மதத்தில் பலியிடுவதே முக்கிய கொள்கை. பலியிட்டு யாகங்கள் செய்வதால், மனிதன் தேவர் களுக்கு அரசனான பதவியை அடைகின்றான் என்னும் கொள்கை வலிபெற்றிருந்தது. ஆகவே குதிரையாகம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம், நரமேத யாகம் போன்ற பல யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. குருக்களாயிருந்து அவ்வகை யாகங்களைச் செய்வதற்கு ஏற்பட்டோரே பிராமணர் என்னும் குழுவினராவர். மக்களின் அறிவு பண்பட்டது; பாவ புண்ணியங்களைப் பற்றிய அறிவு உண்டாயிற்று. பண்டு தாம் அறியாமையாற் புரிந்து வந்த பலிகளை, அவர்களால் விடமுடியவில்லை. ஆகவே அவர்கள் மாவி னால் மிருகங்களையும் பறவைகளையும் மனிதரையும் செய்து தெய்வங் களுக்குப் பலியிட்டார்கள். மாவினாற் செய்த பணியாரங்களைப் படைத்தார்கள். சிலர் இரத்தத்தின் குறி இல்லாமல் செய்யப்படும் பலியில் திருப்தி உறவில்லை. ஆகவே மிருக பலிக்குப் பதில் பூசினிக்காய் வெட்டப்பட்டது. இரத்தத்துக்குப் பதில் குங்குமம் பூசப்பட்டது. இன்று இடப்பட்டு வரும் பூசினிக்காய்ப் பலி, மிருகபலியின் தேய்வேயாகும். பூசாரிகள் பலமடைதல் பூசாரிகள் எவ்வாறு தோன்றினார்கள் என்று முன் கூறினோம். கோயில்கள் பல தோன்றின. கோயில்களில் புரியும் பணிவிடைகள் பல இருந்தன. ஒருவன் மேலான பூசாரியாக இருந்தான். அவனுக்கு உட் பட்டுப் படிப்படியே தாழ்ந்த பணிகளைச் செய்வதற்குப் பல படியான பூசாரிகள் இருந்தனர். உரோமன் கத்தோலிக்க பூசாரி வரிசையில் இதனைக் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் ஆறுவகைப் பார்ப்பார் எனப் பட்டோரும் இவ்வகையினரே. ஒரு கிராமத்தில் அல்லது ஒரு ஊரில் கோயிலே முக்கியம். கோயிலைச் சூழ்ந்து மக்கள் இருந்தார்கள். கிராமம் அல்லது ஊர், கோயிலில் இருக்கும் கடவுள் சார்பான பெயரைப்பெற்றது. மக்களுக்காகக் கோயில் இருப்பது என்னும் கருத்து மாறுபட்டுக் கோயிலுக்காக மக்கள் இருக்கிறார்கள் என்னும் கொள்கை உண்டா யிற்று. பூசாரி கடவுளின் விருப்பங்களை அறிந்து சொல்லவும், மக்களின் தேவைகளைக் கடவுளுக்கு உணர்த்தவும், வல்லவன் என்று மக்கள் நம்பினர். அதற்கேற்ப அவன் கடவுளின் வாக்கு என வெளிப்பாடு (oracle) சொன்னான். மக்கள் அவனிடம் மிகவும் பயபத்தி உள்ளவர்களாக இருந்தனர். பஞ்சம் பிணி போன்ற காலங்களில் மக்கள் அவனை யோசனை கேட்டார்கள். அவன் தெய்வம் ஆடிக், கடவுளின் எண்ணங் களைத் தெரிவித்தான். சில சமயங்களில் தெய்வம் அரசனையே பலியாகக் கேட்கின்றது என்று அவன் சொன்னான். உடனே மக்கள் அரசனைக் கொன்று பலியிட்டார்கள்.1 மோட்ச நரகங்களின் திறவுகோல் தமது கையில் இருப்பதாகவும், அவர்கள் மக்களை நம்ப வைத்து நடு நடுங்கச் செய்தார்கள். இவர்கள் அரசரையும் அடி வணங்கும்படி செய்யும் வலிமையைப் பெற்றனர். சக்கர வர்த்திகளும் அவன் கால் அடிகளை முத்தமிட்டார்கள்.2 12 ஆம் நூற் றாண்டில் போப்பாண்டவர் அரசருக்காவது விசுப்பாண்டவருக்காவது ஒரு அதிகாரமும் இல்லை என்றும், அவர்கள் பெற்றுள்ள அதிகாரம் தன்னிடத்தினின்று கிடைத்ததாகுமென்றும், தாம் உலகத்துக்குத் தலைவன் என்றும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பூசாரிகள் மந்திரவாதிகள் பொதுமக்கள் உயர்ந்த அறிவுக்குக் கட்டுப்படமாட்டார்கள்; மருந்து, மாந்திரீகம் போன்ற வித்தைகளுக்கே அடிமைப்படுவார்கள். இதனை முற்காலப் பூசாரி அறியாதவனல்லன். அவன் சில தந்திரங் களைக் கையாண்டு மக்களை வசப்படுத்தினான். அவன் மற்றவர்கள் விளங்கிக் கொள்ளாத வகையில் சில கிரியைகளைச் செய்தான். மற்றவர்கள் விளங்க மாட்டாத சில சொற்றொடர்களை மந்திரமென முணுமுணுத்தான். அவன் செய்யும் கிரியைகளிலும், சொல்லும் மந்திரங் களிலும் பெரிய வல்லமை இருப்பதாக மக்கள் நம்பினார்கள், இன்னும் நம்பி வருகிறார்கள். இன்னும் பூசாரி நோய்களுக்கு நூல் கட்டுதல், குழை அடித்து மந்திரம் (பாடம்) போடுதல், தண்ணீரில் மந்திரம் ஓதிக் கொடுத்தல், தெய்வம் ஏறி ஆடி வெளிப்பாடு கூறுதல் போன்றவை, பழமை தொட்டுப் பூசாரிகள் கையாண்டு வரும் தந்திரங்களேயாகும். சமய சம்பந்தமானவையும், கடவுள் அருளால் சொல்லப்பட்டன வென்று அவர்களால் எழுதப்பட்டனவுமான நூல்களை மற்றவர்கள் அறியாவகை மறைத்து வைத்தார்கள், பழைய கிறித்தவர்கள், ஆரியர், தமிழர், எகிப்தியர் எல்லோரிடையும் இவ் வழக்கு இருந்தது. குருமார்கள், மற்றவர்களுக்கு விளங்காத ஒரு மொழியை வைத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறு இல்லாவிடில் பொதுமக்களை ஏமாற்றுவது கடினமாகும். தொகுப்புரை இதுவரையும் கூறியவற்றால், முற்காலத்துத் தொடங்கி நடை பெற்ற சமயம் என்ன என்று நமக்கு விளங்குகின்றது. இறந்தவர்களின் ஆவி வணக்கத்தில் தொடங்கிய சமயம், பூசாரிகளின் ஆட்சி வரையில் படிப்படியே வளர்ச்சி அடைந்ததை நாம் நன்கு அறிந்துகொண்டோம். பூசாரிகளின் அதிகாரம் மேல் ஓங்கியிருந்த காலத்தில், அவர்கள் தமது வருவாயை நாடிப் பல மூடப் பழக்கவழக்கங்களை மக்களிடையே தோற்றுவித்தனர். அப் பழக்கங்களை நிலைநாட்டும் பொருட்டுக் கடவுள் சொன்னதாகப் பல கற்பனை நூல்களை எழுதி, மக்களிடையே பரவச் செய்தனர். மறுமையில் தனது நிலைமை என்ன ஆகுமோ என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த மக்கள், மறுமையில் தமக்கு நேரக்கூடிய துன்பங்களைத் தாண்டுவதற்குத் தெப்பம் கிடைத்ததென நினைத்து அப்பொய் நூல்களிற் சொல்லப்பட்டவாறு ஒழுகத் தலைப்பட்டார்கள். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அம் மூடப் பழக்கங்களை மக்கள் சடுதியில் நிறுத்துவது அரிது. மாசிமகத் தீர்த்தம் என்று மக்கள் கோடிக்கணக்கில் கும்பலாய்க் கூடிக் குளத்தில் குளிக்கின்றனர். இதற்குக் காரணம் குறிக்கப்பட்ட ஒரு குளத்தில், குறிக்கப்பட்ட ஒரு நாளில் குளித்தால் மனிதன் புரிந்த பாவங்கள் கழியும் எனப் பூசாரிகள் எழுதி வைத்த கதையே ஆகும். மக்கள் எல்லோரும் பாவம் செய்பவர்களே. பாவம் செய்யும் மூடமக்கள் அதனை எளிதில் கழுவிவிடலாமெனத் திரள்கின்றனர். சுகாதாரக் குறைவினால் வாந்திபேதி போன்ற தொத்து நோய் கண்டு உடனே இறக்கின்றனர். பூசாரிக்குப் பணம் கொடுத்துக் கடவுளுக்குக் குடமுழுக்காட்டுதல், ஆயிரந் திருநாமங்களைச் சொல்லச் செய்தல் போல்வன, பூசாரியின் “உண்டியலை” நிரப்பும்படி செய்யப் பட்டுள்ள சூழ்ச்சிகளே அன்றிப் பிறவல்ல. திருப்பதிக்குக் குடை கொண்டு போதல் போன்ற வழக்கமும் இவ் வகையினதே. உண்மையாக ஈடேறும் வழியை மக்கள் அறிந்துகொள்ளாது, முட்டாள் தனமாக வீதி வீதியாக அலைந்து அல்லோல கல்லோலப் படுவது மிக மிக இரங்கத் தக்கது. மக்கட் சமூகம் ஈடேறுவதற்கு இன்று அறிஞர் செய்யத்தக்கது பூசாரி ஆட்சியை ஒழிப்பதும், மக்கள் சமயம் என்னும் பெயரால் விழலுக்கிறைத்த நீரை ஒப்ப, பொருளையும் காலத்தையும் விரயம் செய்வதையும் தடுப்பதுமேயாகும். இன்றைய சமயத்தின் முடிவு எத்தத்துவக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொள்ளாது. சோம்பேறிகளாகிய பூசாரிகளைக் கொழுக்க வைப்பதேயாகும். சமய சீர்திருத்தம் மேற்கு உலகில் சமயம் மிகவும் சீரழிந்திருந்தது. சமயம் என்னும் பெயரால் பல கொடுமைகள் நடந்தன; கொலைகள் அதிகரித்தன; வியபிசாரங்கள் பெருகின. பூசாரி ஆட்சி உச்சநிலை அடைந்திருந்தது. அக்காலத்திலேயே பாலஸ்தீன் நாட்டில் கிறித்துநாதர் தோன்றினார். அவர் தெய்வம் ஒன்று என்னும் கொள்கையை உபதேசித்தார்; “தன்னைப் போல் பிறரை நேசி” என மக்களுக்கு நல்லறிவு கொளுத்தினார். கிறித்துநாதரின் நல்லுபதேசங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தன. பலர் அவருக்கு மாணாக்கரானார்கள். நல்லறிவு பெற ஆவல்கொண்ட மக்கள் அவரைச் சூழ்ந்தார்கள். குருமார் இதனைக் கண்டு பொறாராயினர். அவரை எவ்வகையிலேனும் கொன்றுவிடக் கருதினார்கள்; அவர், தானே அரசன் என மக்களுக்குப் போதித்தார் என, நீதிபதியின் முன் குற்றஞ்சாட்டினர். அவன் அவரை அவமானப்படுத்திச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி கட்டளை இட்டான். அக் காலத்தில் மத சீர்த்திருத்தஞ் செய்ய எழுவோரின் முடிவு இவ்வாறாக இருந்தது. பூசாரிகள், அல்லது குருமார் தமது அதிகாரத்துக்குப் பங்கம் விளையாத வாறு மேற்கூறப்பட்டது போன்ற அடக்குமுறைச் செயல்களைக் கை யாண்டு வந்தனர். போப்பு ஆட்சியில் இவ்வகையான பல கொடுமைகள் நடந்தன. அவைகள் வரலாறுகளிற் காணப்படுகின்றன. மத்திய காலத் தில் உயர்ந்த கல்வி அறிவுடைய ஒரு பிரபு, போப்பு ஆட்சிக்கு மாறாக நூல் வெளியிட்டதன் விளைவாக, காது மூக்கு முதலிய உறுப்புக்கள் அறுக்கப்பட்டும், சவுக்கால் அடிக்கப்பட்டும் சிறையிலிட்டும் சித்திர வதை செய்யப்பட்ட வரலாறு, நூல்களிற் காணப்படுகின்றது. 1கிறித்து நாதர் பிற்கால மக்கள்களால் வழிபடப்பட்டார். கிறித்து மதம் போப் ஆட்சிக்கு உட்பட்டுப் பழைய பூசாரி ஆட்சியின் கடுமையை அடைந்த போது, மார்டின் லூதர் என்னும் பேரறிஞர் தோன்றி சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். மார்டின் லூதரின் சீர்திருத்த முறைகளைப் பலர் பின்பற்றினர். அவர்கள் போப்பு ஆட்சியினின்றும் நழுவி இப் புதிய மதத்தில் சேர்ந்தனர். கிறித்துநாதருக்குப் பின் முகமது நபி என்னும் ஒரு பெரியார் அராபிய நாட்டில் தோன்றினார். அக்காலத்தில் பூசாரி ஆட்சியும் சிறு தெய்வ வழிபாடுகளும், பெரிதும் தலையெடுத்திருந்தன. அப்பொழுது ‘நபி கடவுள் ஒருவரே உளர்; அவர் அல்லா. விக்கிரக வழிபாடுகள் அழிக்கத் தக்கன, என்று மக்களிடையே போதித்தார். அதனால் கோயில்களில் வருவாய் குறையத் தொடங்கிற்று. பூசாரிகள் நபியைக் கொல்ல முயன்றார்கள். நபி சிறந்த போர்வீரன். அவர் பலரைத் தமக்குப் பக்க பலமாகத் திரட்டிக் கொண்டு படை பலத்தினால் நாட்டையே தம் வசப்படுத்திக் கொண்டு தனது கொள்கைகளை நிலைநாட்டினார். கிறித்து மதம், முகமது மதம் என்பவை மிகப் பரவினமையால், மக்க ளிடையே சமயம் என்னும் பெயருடன் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்கள் பல மறைந்தன. இந்திய நாட்டை ஆரியர் அடைந்தபோது, விலங்குகளைக் கொன்று இயற்றப்படும் யாகங்களால் மாத்திரம் மக்கள் ஈடேறலாம் என்னும் பொல்லாத கொள்கை மக்களிடையே பரவிற்று. எண்ணிறந்த விலங்குகள் யாகம் என்னும் பெயரினால் கொல்லப்பட்டன. அப் பொழுது புத்தர் என்னும் பெரியவர் வடநாட்டில் தோன்றினார். அவர் ஆரியரின் பொல்லாத கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் உண்மை உபதேசங்களைக் கேட்ட மக்கள் அவரைப் பின்பற்றினர். இவர் அரச குடும்பத்தவராய் இருந்தார். இவருக்குப் பொதுமக்களின் ஆதரவு பெரிதாக இருந்தது. ஆகவே கிறித்து நாதரைக் கொன்றது போலப் பூசாரிமாரால் புத்தரையும் கொல்ல முடியவில்லை. புத்தமதம் உலகம் எங்கும் பரவிற்று. மக்கள் புத்தரையே கடவுளாக வணங்கத் தலைப்பட் டார்கள். பிற்காலத்தில் தோன்றிய சைவ சமய குரவர்கள், ஒரு தெய்வ வழிபாட்டையே வற்புறுத்தினார்கள். இன்று தமிழருடைய சமயம் உண்மைப் போக்கினின்றும் விலகியுள்ளது. பருப்பை எறித்துவிட்டுக் கோதைக் கைப்பற்றியவனைப் போல மக்கள் உண்மை வழியை நாடாது வீண் ஆரவாரங்களையே பொருளெனக் கருதிச் சீரழிகின்றனர். இன்று பெரும் புரட்சி தோன்றிச் சமயத்தில் சீர்திருத்தம் உண்டாக்க வேண்டியது அவசியமாகும். தத்துவஞானம் உதயமாதல் மக்களின் அறிவு காலத்துக்குக் காலம் பண்பட்டுவந்தது, ஆயினும் பெரும்பாலோரின் போக்கு பழைய போக்கிலேயே சென்றது. சிறுபான்மை யோர் மனஅமைதியுடன் இருந்தனர். அவர்கள் சமயம் என்னும் பெயரால் உலகில் நடப்பவைகளை நோக்கினர். அவைகளில் உயர்ந்த கொள்கைகள் எவையும் இருப்பதைக் காணாராயினர். ஆகவே உண்மை காணுவதில் அவர்களின் உள்ளம் ஆழ்ந்து சென்றது. மனிதனின் மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. அதனை ஓர் இடத்தில் நிறுத்தினால் பெரிய ஆற்றல் உண்டாகின்றது. மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் மனோவசியம் (ஹிப்நாட்டிசிம்) அறிதுயில் (மாக்நட்டிசிம்) முதலிய வித்தைகளிற் பயின்றோர், நாம் வியக்கத்தக்க அருஞ்செயல்களைச் செய்து காட்டுகின்றனரன்றோ? மனதை ஒரு வழிப்படுத்திய மக்கள், தம்மைப் பற்றியும் உலகைப்பற்றியும் இவ்விரண்டையும் இயக்கும் கடவுளைப் பற்றியும் உண்மைகளைக் காண முயன்று வந்தார்கள். இவ் வுண்மைகளை ஆரவாரங்களாற் காணமுடியாது. மொகஞ்சதரோவில் யோகத்தில் வீற்றிருக்கும் கடவுள் வடிவுடைய முத்திரை ஒன்று காணப்படு கின்றது. இதனால் மிக முற்காலத்தில் அறிஞர் சிலர், மனத்தை ஒருவழிப் படுத்தப் பழகி உண்மைகளை அறிய முயன்று வந்தார்கள் எனத் தெரிகின்றது. அவ்வாறு மனதை ஒருவழிப்படுத்திய அறிஞர் உயிர், உலகம், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்தார்கள். தாம் அறிந்தவற்றைப் பக்குவம் வாய்ந்த சிலருக்குக் கூறினார்கள். இவ்வுண் மைகள் இவ்வாறு நீண்டகாலம் குரு மாணாக்க முறையில் வந்தன. அவர்கள் பொது மக்கள் சமயம் எனக்கொண்டு உழலும் புறவிடயங் களில் மனம் பற்றாதிருந்தனர். இவ்வாறு உலகில் இருவகைச் சமயங்கள் நிலவின. முன்னதைப் புறச்சமயம் என்று கூறலாம். அதனைத் தேங்காயைச் சுற்றி மூடியுள்ள தோலுக்கு ஒப்பிடலாம். பிந்தியதைத் தோலின்கீழும், வயிரமான ஓட்டின் கீழும் உள்ள அதன் பருப்புக்கு ஒப்பிடலாம். மனம், வளர்ச்சி அடைவதினாலே மக்கள் உயர்நிலை எய்துதல் கூடும். மூடப் பழக்க வழக்கங்களினால் மனிதன் தாழ்நிலை எய்துவான். நமது நாட்டில் மக்கள் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் எல்லாத் துறைகளிலும் தாழ்ந்து, உலக மக்களிலேயே தாழ்ந்த நிலையினர் என்னும்படி நாள் வீதம் ஒடுங்கி வருகின்றனர். தத்துவ ஞானங்களோடு கூடிய சமயம், மேற்கு உலகத்தவரால் அறியப்படாமல் இருந்தது. கிரேக்க நாட்டிலே கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் பிதாகாரஸ் என்னும் அறிஞர் இருந்தார். அவர் உயிர், உலகம், கடவுள் போன்ற உண்மைகளை விளக்கும் ஞானத்தை முதன் முதல் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார். இவர் இந்திய நாட்டுக்கு யாத்திரை செய்து கபிலரின் சாங்கிய மதக்கொள்கைகளைப் பயின்று சென்றார் என்று கோல்புரூக் (Colebrooke) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். கிரேக்கரின் தத்துவ ஞானக் கொள்கைகள் பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் சித்தாந்த சாத்திர நூற்பொருள்களை ஒத்தன. தமிழரின் சமயம் இதுவரையில் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ள சமயக்கொள்கைகளைக் கூறிவந்தோம். முற்காலச் சமயம் என்பது மக்களின் பலவகைப்பட்ட அறிவு வளர்ச்சிப் பருவங்களில் தோன்றி வழங்கிய பழக்க வழக்கங்களின் தொகுதிகளாகக் காணப்படுகின்றன. இன்று கல்வி அறிவில்லாத பொதுமக்களின் சமயம் இதுவே. கல்வி யறிவுள்ளவர்களில் பலரும் இதுவே உண்மையான சமயம் எனக் கருதி வருகின்றனர். “பழக்கங் கொடிதுகாண்” என ஒரு தத்துவஞானி கூறியுள் ளார். சித்தாந்த நூல்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கொள்கையுடைய சமயம் காணப்படவில்லை. மொகஞ்சதரோ மக்களின் சமயம் மொகஞ்சதரோ மக்களின் சமயம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு பழைய சிந்துவெளித் தமிழரின் சமயம் எவ் வகையினது என்று நம்மால் அறியக்கூடியதாய் இருக்கின்றது. ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சதரோச் சமயத்தைப்பற்றி ஆராய்ந்து கூறி யிருப்பதை இங்குத் தருகின்றோம்.1 மொகஞ்சதரோ முத்திரை ஒன்றில், “இறுவன் கொம்மின்னனீர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குக் கொம்பு (வாத்தியம்) ஊதுகின்ற மீனவர் என்பது அதன் பொருள். இன்னொரு முத்திரையில் “கோயில் எல்லாக் கடவுள் அது” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலிலுள்ள எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுள் என்பது அதன் பொருள். இரண்டு பட்டையங்கள் நாலூரில் இருக்கும் விடுகண் என்னும் கடவுளைப்பற்றிக் கூறுகின்றன, கடவுளருக்கு கண்ணிமை இல்லை என வழங்கும் இந்திய மக்களின் ஐதீகக்தோடு இது பெரிதும் ஒத்திருக்கின்றது. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றமையால், கண்ணை மூடமாட்டார்கள் என்பதே கண்ணை இமையாதவர்கள் என்பதன் பொருளாகும். ஒரு முத்திரையில் மூன்று முகங்கள் உடையதும், யோகத்தில் அமர்ந் திருப்பதும் ஆகிய ஓர் கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சூழ்ந்து யானை, காண்டாமிருகம், புலி, எருது முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. சேர்யோன் மார்சல் என்பார் அவ்வடி வம் சிவனைப் பசுபதி என்று காட்டும் பொருட்டு அமைக்கப்பட்ட தென்று கூறியுள்ளார். ஓர் இடத்தில் கடவுளைக் குறிக்க எண்மை என்னும் பெயர் காணப்படுகின்றது. ஒரு பட்டையம் கடவுளின் மூன்று கண்களைப் பற்றிக் கூறுகின்றது. மூன்று பட்டையங்கள் கடவுளின் ஓர் கண்ணைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிட்டுள்ள “ஓர் கண்” கடவுளின் மூன்றாவது கண்ணையாகும். கடவுள் பேராண் என்னும் பெயராலும் வழிபடப்பட்டார். பேராண் என்பதே பெருமான் என்று ஆயிற்றுப்போலும். கடவுள் தாண்டவம் செய்பவர் என்னும் கருத்தும், அக்கால மக்களிடையே பரவி இருந்தது. இது “தாண்டவன் இர் நால் மரம்” என்னும் பட்டையத்தால் நன்கு விளங்குகின்றது. கடவுள் சிவலிங்க வடிவிலும் வழிபடப்பட்டாரென்பது அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் கிடைத்த அவ்வகைப் பொருள்கள் பலவற்றால் நன்கு விளங்குகின்றது. இலிங்கம் உயரத்தில் உள்ள சூரியனாகக் கருதப்பட்டது என்பதைக் குறிக்கும் பட்டையங்களும் காணப்படுகின்றன. சுமேரிய மக்கள் ஆண் அம்மா என்லில் என்னும் மும்மூர்த்திகளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளின் வடிவங்கள் பல, மொகஞ்சொதரோ அரப்பா என்னும் இடங்களிற் காணப்பட்டன. அரப்பாப் பட்டையங் களில், அம்மனை மீன் கண்ணி எனக் குறிக்கின்றன. “உயர் எல்தேர் ஓர் அம்மன்” எனப் பொறிக்கப்பட்ட பட்டையத்திற் காணப்படும் கடவுள் வடிவின், பாதி (இடப்புறம்) ஆண் வடிவாகவும், பாதி (வலப் புறம்) பெண் வடிவாகவும் காணப்படுகின்றன. இவ்வகையான கடவுள் சுமேரியாவிலும் அம்மா (amma) என்னும் பெயருடன் காணப்படுகின்றது. இக் கடவுளைச் சைவர் அர்த்தநாரீசுரர் எனக் கூறுவர். ஒரு சாசனத்தில் ஓரிடத்தில் மாத்திரம் கடவுள் பாம்பு வடிவினராகக் கூறப்பட்டுள்ளார். “மீனவர் மூன்று கண்ணுள்ள பாம்பைத் தியானிக்கின் றார்கள்” என ஒரு பட்டையம் கூறுகின்றது. இதைப்போலவே இன் னொரு பட்டையம், கைக்கோடரி (மழு) யைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மறியற் படுத்தப்பட்ட மீனவர் பெரிய கடவுளின் மூன்று கண்களைத் தியானிக்கின்றார்கள் என ஒரு பட்டையம் கூறுகின்றது. மொகஞ்சதரோ மக்கள் நாட்டுக்கு அரசன் கடவுள் என்றும், அவர் சார்பில் அரசன் ஆள்கின்றான் என்றும் நம்பினார்கள். மொகஞ் சதரோ நண்டூர் எனப்பட்டது அரசன் நண்டூர் உழவன் அல்லது நண்டில் உழவன் எனப்பட்டான். அரசன் பூசாரியாகவும் இருந்தான். இது, “மீனனீர் மாறு அடு ஐயன் செறிதல் தல் எல்லா” என்னும் பட்டையத் தால் விளங்குகின்றது. இதன் பொருள் “மீனவரின் பகைக் குரியவன் சிறைப்படுத்தப்பட்ட அரசனாகிய பூசாரி” என்பதாகும். ஞாயிற்றின் கோயில்கள் சதுரவடிவாகக் காணப்படுகின்றன. அதற்கு முன்னால் திறந்த தலைவாயில் இருந்தது. ஞாயிற்றைக் குறிக்கும் வட்ட வடிவம் கட்டிலின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. இங்குக் கூறப்பட்டவைகளால் 5000 ஆண்டுகளுக்கு முன்னும், மக்களின் வழிபாடு இன்றைய வழிபாட்டை ஒத்திருந்ததென்றே தெரி கின்றது. அக் காலத்திலேயே மக்கள் மனத்தை ஒருவழிப்படுத்திச் செய்யப் படுவதாகிய யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். அசுரர் என ஆரியரால் வழங்கப்பட்ட மக்கள், சிவனை நோக்கிக் கடிய தவங்களைப் புரிந்து பெரிய வரங்களைப் பெற்றார்கள் எனப் புராணங்களில் கூறப்படும் பழங்கதைகள், தமிழர் மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் யோகத்தினால் பெரிய ஆற்றலைப் பெற்று விளங்கினார்கள் என்னும் உண்மையை விளக்குவனவே. கிறிஸ்துநாதர், புத்தர், மகாவீரர், முகமது முதலியோர் தனிமையிலிருந்து சிந்தையை ஒடுக்கித் தவஞ் செய்தமையினாலேயே ஞானத்தைப் பெற்று, மற்றவர்கள் ஈடேறும் வழியைக் காட்டினார்கள் என உலகம் நம்பிவருகின்றது. 1சங்க காலத்தில் தமிழர் வழிபாடு சங்க காலம் என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன், சங்க இலக்கியங்களில் தமிழர் வழிபாடு எவ்வாறு இருந்ததென்று நன்கு கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவரவர் வாழும் இடங்களுக்கேற்றவாறிருந்தது. அதற்கேற்பவே அவர்களின் வழிபாடுகளும் இருந்தன. சங்க கால நூல்கள் நாட்டை, மலை, காடு, வயல், கடற்கரை, மணல் வெளி என ஐவகையாகக் கூறுகின்றன. ஒவ்வொரு நிலத்தும் வாழும் மக்கள், உணவு தேடும் பொருட்டுக் கொண்ட தொழில்கள் வெவ்வேறு வகையின. அவைகளுக்கேற்ப அவர்கள் வாழ்க்கையும் இருந்தது. முருக வணக்கம் மலை நாட்டில் வாழ்ந்த மக்கள் முருகக்கடவுளைத் தமது குல தெய்வமாகக் கொண்டிருந்தனர். முருக வணக்கம் என்பது ஞாயிற்று வணக்கத்தின் இன்னொருவகை. காடுகிழாள் அல்லது துர்க்கையே முற்காலத்தில் போர்க் கடவுளாக இருந்தாள். பின்பு முருகன் போர்க் கடவுளாகக் கொள்ளப்பட்டார். கடலிடத்தே காலையிற்றோன்றும் இளஞாயிறு, மயில்மீது எழும் இளங் கடவுளாகக் கொள்ளப்பட்டது. பாலஸ்தின் நாட்டு மக்களும் ஞாயிற்றை முதிய பகல் (old baal) என்றும் இளைய பகல் (young baal) என இருவகையில் வழிபட்டார்கள். இவ்விளம் பகலையே கிரேக்கர் “மார்ஸ்” என்னும் போர்க் கடவுளாகக் கொண்டனர். மலைகளில் வாழும் மக்கள் முருகனின் வடிவாக வேலை நட்டும், கடப்ப மரத்தை அலங்கரித்தும், மறியறித்துப் பலி தூவி வழிபட்டார்கள். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் ஆலயங்களில் மக்கள் பூவும் புகையும் கையுறைகளும் கொடுத்துத் தாம் எண்ணும் எண்ணங்கள் பலிக்கவேண்டுமென முருகக் கடவுளை நினைந்து வழி பட்டனர். ஆலயங்களில் பெரிய விழாக்கள் நடைபெற்றன. திருமால் வணக்கம் முல்லை நிலம் அல்லது காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த மக்கள் திருமாலை வழிபட்டனர். மால் ஞாயிற்றுக் கடவுளின் இன்னொருவகை. மால் என்பது பெரிய எல் (மா+எல்) என்னும் பொருள் தரும் பெயர். எல் என்பது அல் ஆயிற்று. இக் கடவுள் முன்பு தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டதாகவும், பின்பு தந்தைக் கடவுளாகக் கொள்ளப்பட்ட தென்றும் கருத இடமுண்டு. “அரியலாற் றேவியில்லை ஐயாறனார்க்கே” எனத் தேவாரத்தில் வருதலும் காண்க. பாரதப் போருக்குப் பின் கிருட்டிண வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்றாகக் கொள்ளப்பட லாயின. திருமாலின் கையிலிருக்கும் சக்கரம் ஞாயிற்றைக் குறிப்பது. உலகை மூவடிகளால் அளந்தார் எனச் சொல்லப்படுவதிலுள்ள திருமால் ஞாயிறு. அவரின் மூன்று அடிகள், உதயம், உச்சி, சாய்வு என்னும் மூன்று இடங்களில் செல்லும் செலவுகள் ஆகும். இவ்வாறே திருமால் மூவடிக ளால் உலகை அளந்தார் என்னும் கதைக்குப் பொருள் உரைக்கப்படு கின்றது. முல்லை நிலத்து ஆயர், திருமாலுக்குப் பாற்பொங்கல் பொங்கிப் படைத்து வழிபடுவர், இடைச்சியர் கைகோர்த்து நின்று குரவைக் கூத்தாடுவர். திருமாலுக்கு உயிர்ப் பலிகள் இடப்பட்டதாகச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ‘திருவனந்தபுரத்திலும், திருவெஃகாவி லும் திருமால் கோயில்கள் மிகச் சிறப்புற்று விளங்கின. திருவனந்தபுரத்தி லுள்ள திருமால் கோயிலில் மக்கள் சென்று வழிபடும் இயல்பு பதிற்றுப் பத்து என்னும் நூலிற் காணப்படுகின்றது. தம் விண் என்பது விஷ்ணு வாயிற்று என ஆராய்ச்சியாளர் அறைவர். வேந்தன் வணக்கம் மருதம் அல்லது வயல் சார்ந்த இடங்களில் வாழ்ந்தோர், இந்திரனை வழிபட்டார்கள். இந்திரன் என்பது இறைவன் என்பதன் திரிபாகலாம். முற்கால மக்கள் மழை பெய்தற்கும், உலகம் செழிப்பதற்கும் அரசனே காரணம் எனக் கருதினார்கள். ஆகவே அவர்கள் அரசனையே தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். உலக வரலாற்றில் இது புதுமை யன்று. முன்னோரிடத்தில் அரச வணக்கம் தோன்றியதற்குப் பிறிதோர் காரணமும் கூறினோம். அரசனால் மழை பெய்கின்றது என்னும் கருத்தைக் கொண்டே, இந்திரன் முகிலை வாகனமாக உடையவன் என்னும் ஐதீகம் உண்டாயித்தல் வேண்டும். இந்திய நாட்டை அடைந்த ஆரிய மக்களும் தாம் வந்தடைந்த நாட்டில் மக்கள் இறைவனை வழிபடுதலைக் கண்டு தாமும் அவ்வாறு செய்தனராகலாம். அவர்கள் இறைவனையே இந்திரன் எனத் திரித்தும் வழங்கினார்களாகலாம். பிற்காலத்தில் இத் தெய்வம் திக்குப்பாலகரில் ஒன்றாகக் கொள்ளப் பட்டது. வயலை அடுத்தே பெரிய பட்டினங்களும் அரசன் தலைநகரும் இருந்தன. விதைப்புக் காலத் தொடக்கத்திலும், அறுப்புக் காலத்தின் பின்பும், இந்திரனுக்குப் பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. அக் காலங் களில் ஆலயத்தில் ஆடல் பாடல் போன்ற பலவகைப் பொழுது போக்குகள் நடைபெற்றன. இந்திரனின் வடிவம் இரும்புத் தண்டா யுதத்தைப் பிடித்து நிற்பவனாக அமைக்கப்பட்டிருந்தது. கடற்கரைகளில் வாழ்ந்தவர்களின் குல தெய்வம் வருணன். வருணன் அசுரன் என வடமொழி வேதங்களில் கூறப்படுவதால், அக் கடவுள் தமிழர் கடவுளே என ஆராய்ச்சியாளர் முடிவு செய்திருக்கின்ற னர். தமிழரின் வருணன் என்னும் கடவுளையே ஆரியமக்களும் வழி பட்டனர். வருணன் ஆதித்தருள் ஒருவன் எனப்படுகின்றமையால், ஞாயிற்றைக் குறிக்கும் அருணனே வருணனாயிற்று எனக் கருத இட முண்டு. வருணனுக்குப் பெரிய கோயில்கள் இருந்தனவென்று தெரிய வில்லை. கடற்கரைகளில் வாழும் மீன் பிடிப்போர், பூரணைக் காலங் களில் தாழைகளின் கீழ் சுறாக் கொம்புகளை நட்டு மலர்களைத் தூவி வருணனை வழிபட்டார்கள். காளி வணக்கம் பாலை நிலங்கள் அல்லது வெய்யிலால் புல் பூண்டுகள் கரிந்து போன காட்டு, மலை ஒதுக்குகளில் வேட்டையாடி வாழும் பிற்போக் குடைய மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் உயிர்ப் பலியிட்டுக் காளியை வழிபட்டார்கள். இக் காளி வழிபாட்டைப் பற்றிப் பரணி நூல்கள் நன்கு விரித்துக் கூறுகின்றன. கிருட்டிண, பலதேவ வழிபாடுகளும் மருத நிலங்களிலும் முல்லை நிலங்களிலும் இருந்துவந்தன. இன்னும் வீர, வணக்கங்களும் பல சிறு தெய்வ வணக்கங்களும் இருந்து வந்தன. சிவ வணக்கம் தொல்காப்பியத்தில் முற்கூறிய ஐம்பெருந் தெய்வங்களின் வழி பாடுகளே கூறப்படுகின்றன. சிவ வழிபாடு கூறப்படவில்லை. ஆதலின் தொல்காப்பியர் காலத்தில் சிவவழிபாடு தோன்றவில்லை எனச் சிலர் கூறுவர். தொல்காப்பிய காலம் கி.மு. 350 வரையில் என்று கூறியுள் ளோம். அதற்கு மிக முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு தோன்றி யிருந்தது. ஐந்து நிலங்களில் வாழும் மக்களும் தத்தம் குல தெய்வங் களாகக் கொண்டு வழிபட்ட தெய்வங்களைப் பற்றியே தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் எல்லா மக்களும் சிவனையே குல தெய்வங் களுக்கும் மேலான பெருந் தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். இது தமிழ் நாட்டவர் மாத்திரம் கொண்ட முறையன்று; உலக மக்கள் எல்லோரும் கொண்ட முறையாகும். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பனரே கோயிலை மேற்பார்த்தனர். அக் காலத்தில் பார்ப்பனர் பிராமண சமயத்தைக் கைக் கொள்ளவில்லை. தொல்காப்பியத்தில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனக் கூறப்பட்டது. கோயிற் பணிவிடைகளைப் பார்க்கும் உயர்ந்த பார்ப்பான் முதல், படிப்படியே தாழ்ந்த பார்ப்பனரேயாகும். பார்ப்பனர் பிராமண மதத்தைக் கைக் கொண்டபோது ஆலயங்களில் ஆரியம் பாடினர்; அதனை வெறுத்துத் தமிழ் மக்கள் கண்டித்திருக்கின்றனர். இன்று ஆலயங்களில் பிராமணப் பார்ப்பான் ஆரியம் ஓதிக்கொண்டு வெளியே நிற்கும் பண்டாரத்தைத் தமிழ் பாடச் செய்கின்றான். இது தமிழைப் பெரிதும் இழிவு படுத்துவதாகும். உண்மை ஞானம் மக்களில் பெரும்பாலோர் பழமை தொட்டு வருகின்ற சில பழக்க வழக்கங்களுக்குச் சமயம் என்னும் பெயர் கொடுத்து வழங்கினர். மிகப் பழமை தொட்டே உயிர், உலகம், இறை என்னும் முப்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து, உயிர்கள் உயர் நிலை அடையும் உயர்ந்த வழி களைக் கைக்கொண்டு ஒழுகும் மக்களும் இருந்தார்கள். இவர்கள் அறிந்த உண்மைகள் ஏட்டில் எழுதி வைக்கப்படவில்லை. இவ் வுண்மைகள் ஆசிரிய மாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. இவ்வுண்மை ஞானங்களை அறிந்திருந்தோர் பூசாரிகளல்லர். உண்மை ஞானத்தை உபதேசிப்பவர்களுக்கு இட்டு வழங்கப்பட்ட “குரு” என்னும் பெயர், பிற் காலத்தில் பூசாரிகளுக்குத் தவறுதலாக வழங்கப்படலாயிற்று. பூசாரிகள் குருமார் அல்லர். இவ் வுண்மை ஞானத்தைப்பற்றி இந்திய நாட்டை அடைந்த ஆரியர் அறிந்திருக்கவில்லை. ஆரியர், தமிழர்களுக்கிடையே கலப்பு உண்டாகி, இரு மக்களும் ஒன்றுபோற் கலந்த காலத்தில், வேள்வி செய்வதே சமயத்தின் உயர்ந்தபடி எனக் கருதியிருந்த ஆரிய மக்கள், தமிழ் மக்களிடையே உயர்ந்த ஞானம் வழங்குவதாகக் கேள்வியுற்று, அதனை அறிவதற்குப் பலவாறு முயன்று வந்தனர். வேள்விகளைச் செய்து கொண்டிருந்த பிராமணரிற் பலர், தாம் செய்யும் வேள்விகள் பயன் விளைப்பனவல்ல என்று நன்கு உணர்ந்தனர். அவர்கள் உயிரை உயர் நிலைப்படுத்தும் உண்மை ஞானங்களை அறியும் தாகத்தினால் உந்தப் பட்டு, அதனைப் பெறும் மார்க்கம் தேடி அலைந்தார்கள். உபநிடதங்கள் அவ்வாறு அலைந்தவர்கள் தமிழ் அரச மரபினர் பாதங்களின் கீழ் மாணாக்கராயிருந்து, உண்மை ஞானங்களைக் கற்றுணர்ந்தார்கள். யாக்ஞவல்கி என்னும் பிராமணர் விதேக நாட்டரசனாகிய சனகனிடத் தில் உண்மை ஞானத்தைக் கேட்டறிந்த வரலாறு அறியப்படுகின்றது. ஆரிய வேதங்களை எந்த வருணத்துப் பெண்களாவது சூத்திரராவது படிக்கவோ கேட்கவோ கூடாது; பிராமணன் மாத்திரம் ஆசானாக இருந்து மூன்று வருணத்தவர்களுக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என ஆரியரின் நீதி நூல்கள் வற்புறுத்துகின்றன. அரச வகுப்பினரும், பெண் களும், அரச வகுப்பினரல்லாதாரும் உபநிடத ஞானங்களை அறிந்திருந் தனர். இதனால் உபநிடதங்கள் ஆரியரின் நூல்களல்ல என்பது துணிபா கும். உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்பது என்பது பொருள். கிட்ட இருந்து கேட்பது என்பதற்குக் குரு மாணாக்க முறையில் வருவது எனக் கூறலாம். “இம் மறையைத் தந்தை தனது மூத்த குமாரனுக்கு, அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ் வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாயிருந்து பல முறை வருந்திக் கேட்டபோது, இந்த ஞானம் வெளியிடப்பட்டது” என்று உபநிடதம் கூறுகின்றது. உபநிடதங்களிலுள்ள உண்மைகளே ஆகமங் களிலும் பொதிந்துள்ளன. ஆகமத்திற் கூறப்படும் பொருள்களை ஆசிரிய னிடத்துக் கேட்டு அறிந்தாலன்றி விளங்காது என்னும் கருத்து இருந்து வந்தது.1 இவ்வாறு மறைவாக இருந்து வந்த உண்மைகளே முற்காலத்தில் மறைகள் எனப்பட்டன. ஆரியரின் வேதங்களுக்கும் இம் மறைகளுக்கும் யாதும் தொடர்பு இல்லை. இவைகளுக்கும் வேதங்களுக்கும் உள்ள தூரம் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் உள்ளது போலாகும். ஆரிய வேதங்களைப் பற்றி மக்கள் அறியாதிருந்தனர். வைசிய பிராமண வகுப்பினரால் மாத்திரம் வாய்ப்பாடஞ் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் வேதங்களில் இல்லாத அறிவு உலகில் இல்லை என்றும், அதில் எல்லா வகையான அறிவுகளும் உண்டென்றும் மக்களுக்குச் சொல்லி வந்தனர். பிறர் அவைகளை அறிந்தால் தாம் சொல்வதின் பொய்மை வெளியாகி விடும் என்று கருதி, அவைகளைப் பிறர் பயிலுதல் ஆகாது எனக் கூறி வந்தனர். காலத்தில் மறைகள் என்பன ஆரிய வேதங்களே என்றும், அவ்வேதங்களே தமிழ் மதத்தினருக்கும் முதல் நூல்கள் என்றும் தவறான கருத்து உண்டாயிற்று. சைவ சமயத்தை நாட்ட எழுந்த சமய குரவர்களே இக் குருட்டுத் தனமான கொள்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள். “சைவ சமய வினா விடை” என்னும் நூல் எழுதிய ஆறுமுக நாவலரே, சைவ சமயத்தவர்களுக்கு முதல் நூல்கள், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நூல்கள் எனக் குறிப்பிட்டார். இவ் வகைக் கருத்துக்களே பள்ளிக்கூடங்களில் சிறுவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. வேதங்கள் என்றால் என்ன? அவை தமிழ் மக்களின் சமய நூல்களல்ல என்பன போன்ற உண்மைகள் தமிழ்ச் சிறுவருக்கு இளமையில் கற்பிக்கப் படுதல் வேண்டும். தமிழர் சமயக் கருத்துக்கள் திருமூலர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண் டுக்கும் இடையில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுவர், இவர் பழைய தமிழர் சமயக் கொள்கைகளைக் கூறும் ஆகமங்கள் உபநிடதங்களில் பொதிந் துள்ள பொருள்களைத் தொகுத்துத் திருமந்திரம் என்னும் நூலாகச் செய்தார். புராண காலத்தில் பிராமண மதத்தினர், தமது உயர்வு கருதிப் பழைய நூல்கள் பலவற்றை அழித்தும், புதிய நூல்களைச் செய்தும், பழைய நூல்களைத் திருத்தியும் பல தீமைகளைப் புரிந்து வைத்தனர். அவர்களின் பார்வை திருமந்திரத்தின்மீது விழவில்லையே எனக் கருது வது சந்தேகம். திருமந்திரத்திற் கூறப்படும் தத்துவ சாத்திரக் கொள்கை களே, தமிழரின் பழைய மதக் கொள்கைகள் என்பதில் ஐயம் இன்று. சைவ வைணவ ஆசிரியர்கள் இவர்கள் சிவன், திருமால் என்னும் கடவுளரை முறையே தலைமை மிக்க கடவுளராகக் கொண்டு துதிபாடியுளரேனும், தமிழரின் பழைய சமயஞானக் கருத்துக்களை இடையிடையே விளக்கிப் போந்தனர். சித்தாந்த சாத்திரங்கள் சைவ சித்தாந்த நூல்கள் எனப்படும் நூல்கள் 13ஆம் நூற்றாண் டில் தோன்றின. இவை நூல் வழக்கிலும் உபதேச முறையிலும் தமிழ் மக்க ளிடையே வழங்கிய சமய உண்மைக்குத் தக்கவாறு யாத்துச் செய்யப் பட்டனவாகும். டாக்டர் போப்பு (Dr.Pope) என்னும் பாதிரியார், சித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் சமயக் கருத்துக்கள், வரலாற்றுக் காலத்துக்கு முன்னரேயே தமிழரிடை தோன்றி வளர்ச்சியுற்ற சமயக் கருத்துக்கள் எனக்கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதன் சுருக்கம் வருமாறு. “இந்தியாவில் வழங்கும் சமய தத்துவக் கொள்கைகளுள் எல்லாவற்றுள்ளும், சைவ சித்தாந்த நூற்கொள்கைகள் மிக விரிவும், சிறப்பும், உண்மை யும் அடங்கியுள்ளன. இக் கொள்கைகள் தென்னிந்திய தமிழரின் கொள்கைகளாகும். தென்னிந்திய உயர்ந்த மக்களைப்பற்றி அறிய விரும்பும் எல்லோரும் அவைகளைப் பயிலுதல் வேண்டும். சிவமதம் என்பது தென்னிந்திய மக்களின் வரலாற்றுக் காலத்துக்கு முன் தோன்றிய மதம். அது ஆரியர் வருகைக்குமுன் தொட்டுத் தோன்றி வழங்குவது. இக் கொள்கைகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொண்டுள்ளவை. உலகம், உயிர், நல்வினை, தீவினை, மறு பிறப்புப் போன்ற உண்மைகளை, நன்கு எடுத்துக் கூறும் இம் மத உண்மைகள் ஆங்கிலத்தில் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அவைகளைக் கூறும் நூல்கள் தமிழ் மொழியில் மாத்திரம் எழுதப்பட்டுள்ளன”.1 முன் ஓரிடத்தில் ஞாயிறே சிவன் என்னும் பெயருடன் வழிபடப் பட்டதெனக் கூறினோம். மக்கள் அறிவு விரிவடைந்தபோது, அவர்கள் ஞாயிறு கடவுளன்று என்றும், ஞாயிற்றை இயக்கச் செய்வதும், அதனுக்கு ஒளியினை உதவுவதும், உள்ளத்தினால் உணராததுமாகிய ஒரு பெரும் ஆற்றல் உள்ளதெனக் கண்டு, அப்பெரிய ஆற்றல்மிக்க பொருளைக் கடவுள் (உள்ளத்தைக் கடந்தது) என்று அழைத்தார்கள். ஆயினும், சிவன் என்னும் பழைய பெயரே கடவுளுக்குச் சிறப்பாக வழங்குவதாயிற்று. இந்திய மக்கள் எல்லோரும் தத்துவக் கொள்கைக ளோடு கூடிய தமது சமயத்தையும் சிவமதம் என்றே கூறினர். சைன மதத்தவர்களும் தமது சமயத்திற் சொல்லப்படும் மேலான பதவியைச் சிவகதி எனக் கூறுவர். புத்த சைன மதத்தினர் தம் சமய அடையாளமாக ஞாயிற்றைக் குறிக்கும் சுவத்திகம் (சிவத்திகம்) இலிங்கம் என்பவைகளைச் சமயச் சின்னங்களாகக் கொண்டனர். சிவலிங்கங்களே புத்த தூபிகள். சமாதிகளும் அவ்வடிவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியநாட்டிலும், இவ்வுலகத்திலும் காணப்படும் மதங்களெல்லாம் சிவ மதத்தின் வேறு பாடுகளே யாகும். சாங்கியம், புத்தம், சமணம் முதலிய நூல்களிற் சொல்லப்படும் தத்துவக் கொள்கைகள், இச் சைவசித்தாந்தக் கொள்கைகளுள் அடங் கும். ஆனால் அவை சைவ சித்தாந்தக் கொள்கையிலுள்ளவற்றில் சிற்சில வற்றைக் கூறாது விடுத்தன. வேதாந்த சூத்திரத்துக்குச் சங்கரர் பொருள் கொண்டு விரித்த ஏகான்ம வாதமும், சைவ சித்தாந்தக் கொள்கையைத் தழுவியதே. ஆனால் உயிர்கள் என்பவை கடவுளின் பொய்த் தோற்றங் கள் என அவர் மயங்கிக் கூறுவராயினர். இவ் வகையான கருத்துக்கள் தென்னிந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இக் கருத்துக் களையே அடிப்படையாகக் கொண்ட விவேகானந்தரின் போதனைகள் தென்னாட்டில் நிலைபெறவில்லை. தத்துவ ஞானங்களைப் பற்றி அதிகம் கேள்விப்படாதிருந்த மேற்குத் தேசங்களில் அவர் கருத்துக்கள் பாராட்டப்பட்டன. முடிவுரை இதுவரையும் கூறப்பட்டவற்றால் இன்று சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெறுவன, பெரும்பாலும் மூடச் செயல்கள் என, நமக்கு நன்கு தெரிகின்றது. ஆயினும் நெடுங்காலம் தொடர்ந்து வரும் பயனற்ற பழக்க வழக்கங்களைக் கைவிட மக்கள் எளிதில் ஒருப்படுவ தில்லை. அறிஞர் அடிக்கடி அறியாமை உள்ள மக்களிடையே பகுத் தறிவை எழுப்பக் கூடிய கருத்துக்களை எடுத்துச் சொல்வதால் அவர்களின் உள்ளம் பண்பாட்டையும், மார்ட்டின் லூதர் (1483-1546) கிறித்துவ மதத்தில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தார். லூதர் சொன்னவைகள் மக்களின் பகுத்தறிவுக்கு ஏற்றனவாயிருந்தமையின், மக்கள் பலர் பழம் போக்குகளைக் கைவிட்டுச் சீர்திருத்த முறைகளைப் பின்பற்றினர். லூதர் கடவுள் இல்லை என்று கூறவில்லை. மதம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டுப்படக் கூடாது. கடவுள் நல்லவர்; அன்பே வடிவாயுள்ளவர் எனப்படுதலின், நாம் அச்சத்தினால் கடவுளை வழிபடவோ, “கடவுளை அடையச் செய்வோம், அவரை மகிழ்விப் போம்” எனக் கூறித் தரகராக நடிக்கும் பூசாரிகளின் உதவியை நாடவோ வேண்டியதில்லை. பூசாரி நம்மைவிடச் சிறந்தவன் எனக்கொள்ளும் மடமை ஒழிய வேண்டும். இவ் வுலகங்க ளெல்லாவற்றையும், நம்மையும் படைத்துத் தொழிற்படுத்தும் பெரிய ஆற்றல் வாய்ந்த கடவுள் எனப் போற்றப்படுபவர் நாம் அளிக்கும் உணவுக்கும், குடைக்கும், பிற காணிக்கைகளுக்கும் ஆசைப்பட்டு விடமாட்டார். மனிதன் தனது நிலையில் கடவுளை வைத்துப் பார்ப்பது அறியாமை. அறிவு உண்டாவதற்குக் கல்வி வேண்டும். லூதர் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி வேண்டுமென்று வற்புறுத்தினார். உலக மக்களில் பாதிப்பேர் பெண்கள். ஒரு படித்த பெண் என்பது, ஒரு படித்த குடும்பம். படிப்பினால் அறிவு உண்டாகும். அறிவு உண்டாகப் பகுத்தறிவு உண்டாகும் பகுத்தறிவு உண்டாக, மூட நம்பிக்கைகள் ஒழியும், இன்று நமது நாட்டில் பல லூதர்கள் வேண்டும். அவர்கள் மக்களுக்குச் சமயத்தின் உண்மை இயல்புகளை எடுத்து விளக்க வேண்டும். ஆலயங்கள் கடவுளுக்குக் கைக் கூலி கொடுக்குமிடமும், வரி செலுத்துமிடங்களுமாய் இருத்தல் கூடாது. சிலந்தி இரைக்காக வலையைப் பயன்படுத்துவது போல, ஆலயங்களைப் பயன்படுத்தும் மடிகள் ஒழிய வேண்டும். ஆலயங்கள் பள்ளிக் கூடங்களும், விரிவுரை மேடைகளுமாய் இருக்க வேண்டும். கடவுள் மனிதன் செய்யும் மரியாதைகளை விரும்புகிறார் என நினைத்தல், மிக்க அறியாமையே ஆகும். மனிதனே உருவங்களை அமைத்து வைத்து அவைகளைப் பொன்னாலும் மணியாலும் புனைந்து, பின்பு அவைகளைத் திருடர் திருடுவார்கள் எனப் பயந்து பெரிய பூட்டுக்களாற் பூட்டி வைத்தல் எத்துணைப் பேதமை என்பதை எண்ணிப் பாருங்கள்.  சைவ சமய வரலாறு முன்னுரை சைவசமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன. சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல்நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடுகளுக்கு முரியனவாயிருந்தன வென்பதை அறிகின்றோம். இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்க மாகக் கூறியுள்ளோம். இந் நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்கமளிப்பதாக இருக்கும். சென்னை 03.05.1958 ந.சி.கந்தையா இருபது ஆண்டுகளின் முன் டாக்டர் ஐசாக் தம்பையா அவர்கள், இந் நூலாசிரியரைப் பற்றி எழுதிய கருத்துரை. ஞநுசூஹசூழு ழடீருளுநு துயககயே, 8வா துயரேயசல, 1938. Mr.N.S.Kandiah of Navaly is a very agreable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learning by his prose rendering in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias. (Sd.) T. ISAAC THAMBYAH, னு.கூழ. President, Jaffna Association. சைவ சமய வரலாறு தோற்றுவாய் சைவமே மிகப் பழைய சமயமென நாம் எல்லோரும் நம்பி வருகின்றோம். நம் முன்னோர்களும் அப்படியே நம்பி வந்தார்கள். உலகில் நாகரிகம் பெற்று ஆங்காங்கு வாழ்ந்த பழங்கால மக்களும் தத்தம் மதங்களே மிகப் பழையன வென்று நம்பிவந்தார்கள். இவ்வாறு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மூலகாரணம் ஒன்றுண்டு. அது எல்லாச் சமயங்களுக்கும் ஆதியில் வேர் ஒன்றாக இருந்ததென்பதாகும். பழைய நாகரிக சாதியாரின் வரலாறுகளை ஒருங்கு வைத்து ஒப்பிட்டு நோக்கு மிடத்து இவ்வுண்மை மிகத் தெளிவாகின்றது. மனித சமூகத்தில் சாதி, சமயம், மொழி என்னும் மூன்றும் முதன்மை யுடையன. இவை ஆதியில் ஒன்றாகவிருந்தன. இதனை மானிடவியல், மொழிஇயல், சமயஇயல் ஆராய்ச்சிகள் வெளியிடுகின்றன. மக்கள் இயற்கை முறையில் வாழாது நாகரிகமடைந்து செயற்கை முறையில் வாழத்தொடங்குவதற்கு முன் அவர்களின் வாழ்க்கை முறை உலகம் முழுமையிலும் ஒரே வகையிலிருந்தது. மக்களிற் பெரும்பாலினர் வேடன், இடையன் என்னும் நிலைகளைக் கடந்து உழவன் என்னும் நிலையை அடைந்து நாகரிகமும் பண்பாடும் அடைந்துள்ளார்கள். முன் இரு நிலைகளைக் கடவாது வாழும் மக்களும் ஆங்காங்கு காணப்படு கிறார்கள். பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம் என்பனவும் மக்கள் தாண்டி வந்துள்ள பண்பாட்டுப் படிகளாகும். இரும்புக் காலத்தில் நாகரிகம் விரைவில் முன்னேறிற்று. கற்காலப் பண்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இன்றும் உலகின் சில பகுதிகளிற் காணப்படுகிறார்கள். மஞ்சள், கறுப்பு, வெண்மை, கபிலம் முதலிய நிறங்களும் இவற் றிற்கு இடைப்பட்ட நிறங்களுமுள்ள மக்கள் உலகின் வெவ்வேறு பாகங் களிற் காணப்படினும், இவ்வின மக்களெல்லோரும் ஒரு கூட்டத்தினின்று பிரிந்து சென்று இடங்களின் வெப்பதட்பநிலை, சூழ்நிலைகள், உண்ணும் உணவு, உணவுதேட மேற்கொள்ளும் முயற்சி, வாழுமிடங்களுக்கேற்ப இயற்கை உதவும் பாதுகாப்புகள் போன்ற பல காரணங்களால் பல்வேறு குணங்குறிகளுடையராயினர் என மனிதவியலார் கூறுவர். இக் காரணங் களால் தொடக்கத்தில் மக்கட்குலம் ஒன்றாகவிருந்ததெனத் தோன்று கின்றது. மக்கள் ஆதியிற் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கையாண்ட முறைகள் ஒரே அடிப்படையுடையனவாக விருந்தன. எல்லா மக்களும் தொடக்கத்தில் ஓவிய எழுத்துக்களையும் பின் அவற்றின் சிதைவு களையும், பின் அச்சிதைவுகளினின்று அமைத்துக்கொண்ட குறியீடு களையும் வழங்கினார்கள். இவ் வுலகில் வழங்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளும் ஆரியம், ஆரியமல்லாதவை என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்குமென்றும், அவ்விரு பிரிவுகளும் மிகத் தொலைவான ஒரு இடத்தில் சந்திக்குமென்றும் மொழி ஆராய்ச்சி யாளர் கூறுவர். ஆகவே ஆதியில் மொழி ஒன்றாகவிருந்ததென்பதும் புலனாகின்றது. இசை, கூத்து, ஓவியம், சிற்பம், கட்டடம், மருத்துவம் போன்ற நற் கலைகள் மிகச் சிறிய தொடக்கங்களாக எல்லா மக்களிடையும் ஒரே வகையில் தோன்றிச் சூழ்நிலைகளுக்கேற்ப வளர்ச்சியடைந்து உள்ளன. மக்கள் இவ்வுலகில் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய மக்களின் அறிவென்பது பல இலட்சக்கணக் கான ஆண்டுகளாகத் தலைமுறைகள் தோறும் சிறிது சிறிதாகத் திரண்டு வந்ததாகும். மனிதனொழிந்த மற்றைய உயிர்களின் புதிய அறிவுகள் அப் பிராணிகள் இறக்கும்போது அவற்றோடு மறைந்து விடுகின்றன. அவை அவற்றைச் சமூகத்துக்கு வெளியிட முடிவதில்லை. மனிதன் தான் புதிதாகக் கண்டறிந்ததொன்றைத் தனது சமூகத் துக்கு அறிவிக்கிறான். இதனால் ஒருவனுடைய அறிவென்பது சமூகத்தின் அறிவாக நிலைபெறுகின்றது. சமூகத்திலுள்ள பலர் கண்டறியும் அறிவுகள் சமூக அறிவுகளாகத் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு தொடர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்தனவே மக்களின் கலைகள், பண்பாடுகள், நாகரிகங்கள் என்பன. சமயமும் கலைகளைப் போலவே சிறிய தொடக்கத்திலிருந்து பல்லாயிரமாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கின்றது. சமயமென்பதையும் ஒரு கலை என்றே கூறலாம். சமயம் எல்லா மக்களிடையும் ஒரே அடிப் படையிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்துள்ளது. காடுகளிலும், மலை களிலும் தனித்துவாழும் பிற்போக்கான மக்களின் சமயக் கொள்கை களும், சமயத் தொடர்பான நம்பிக்கைகளும் பெரும்பாலும் ஒரேவகை யாகவுள்ளன. மக்கள் தோன்றிய காலம் முதல் ஒரே போக்கில் வளர்ந்து கொண்டு வந்தசமயம் என்னும் மரம் அவர்கள் நாகரிகம் பெற்று விளங்கிய ஒரு காலத்தில் பல பெருங்கிளைகள் விட்டு விரியத் தொடங்கிற்று என்பதைப் பழங்காலத்தில் நாகரிகம் பெற்று விளங்கிய எகிப்து, மேற்கு ஆசியா, ஆசியா மைனர், இந்தியா முதலிய நாடுகளின் பழைய வரலாறு களை நோக்கின் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். மேற்கூறியன ஆதியில் சமயம் ஒன்றாகவே இருந்ததென்பதைப் புலப்படுத்தும். சமயத் தோற்றம் ஆதிகால மக்கள் தமக்கு வியப்பளித்த காற்று, மழை, இடி, மின்னல், மலை, ஆறு, கடல் போன்ற இயற்கைப் பொருள்களை வழி பட்டார்கள். தமக்கு மேலான வல்லமையோ வல்லமைகளோ உண்டு என நம்பிக்கை கொண்ட மக்கள் தமது சிந்தனையினாலும் அனுபவத்தி னாலும் அவற்றை அறிய முயன்றுவந்தார்கள். இவ்வாறு சிந்தனை செய்து வந்த மக்கள் உலகுக்கெல்லாம் ஒளி செய்கின்ற ஞாயிறே முழு முதற் கடவுளெனத் துணிந்தார்கள். அக்காலத்தில் மக்கள் வழங்கிய மொழிகள் பலவாகவிருந்தன. இரா, இல், எல், எலோசு, பால், அல், அல்லா, எலோகிம், ஒசிரிஸ், யுபிதர், அசுர், சிவன், தேவன் போன்ற பெயர்கள் வெவ்வேறு பல சமூகங்களால் முழுமுதற் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களாகக் காணப்படுகின்றன. இப் பெயர்கள் ஒளியுடை யது அல்லது ஞாயிறு என்னும் பொருளுடையனவாக இருக்கின்றன வென்று அவற்றை ஆராய்ந்தோர் கூறியுள்ளனர். ஒரு காலத்தில் உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. வெள்ளப் பெருக்குக்குமுன் ஞாயிற்று வழிபாடு ஒரு காலத்தில் பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்று உண்டானதாகப் பழங்கால மக்கள் எல்லோரிடையும் பழங்கதை வழங்கிற்று. இவ் வெள்ளப் பெருக்கைப்பற்றி விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடும் குறிப் பிடுகின்றது. இந்தியாவில் மனு என்னும் முனிவர் வெள்ளப்பெருக்குக்குப் பிழைத்திருந்து உலகில் மனுக்குலத்தைத் தோற்றுவித்த வரலாற்றைப் புராணங்கள் கூறுகின்றன. உலகின் பல பாகங்களில் வழங்கும் வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழங்கதைகளை எல்லாம் திரட்டி வைத்து மேல் நாட்டறிஞர் ஆராய்ச்சி செய்துள்ளனர். விவிலிய வேதத்திற் கூறப்படும் சலப்பிரளய வரலாறு எபிரேய மக்களுக்குப் பாபிலோனியர் வழியாகக் கிடைத்ததென்றும், இந்தியாவினின்றும் சென்று பாபிலோனியாவிற் குடியேறிய மக்கள் இக் கதையையும் தம்மோடு கொண்டு சென்று அந் நாட்டிற் பரப்பினார்களென்றும் ஆராய்ச்சியாளர் கருதுவர். சலப்பிரளயத் துக்குப் பிழைத்திருந்து மனுக்குலத்தைத் தோற்றுவித்தவர்களாகச் சொல் லப்படும் மனுக்கள் எல்லோரும் சூரியனின் புதல்வர் அல்லது சூரிய னோடு சம்பந்தப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் சலப் பிரளயத்துக்கு முன்னும் பின்னும் ஞாயிற்று வழிபாடு உலகில் பரவி முதன்மை பெற்றிருந்ததெனத் தெரிகிறது. சிவன் பழங்கால மக்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் எல், சிவன் என்னும் பெயர்கள் மிகப்பழமை உடையன. எல் என்பதற்கு இலங்குவது என்பது பொருள் “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியச் சூத்திரம். எல் என்பது அல், இல் எனவும் உச்சரிப்பு வேறுபட்டு வழங்கிற்று. இலங்கை, ஈழம் முதலிய பெயர்களும் எல் அடியாகப் பிறந்தவை. அராபியாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல் தொடர்பான மிகப் பல இடப்பெயர்கள் காணப்படுகின்றன. மக்களும் தமது பெயர்களினிறுதியில் எல் என்பதைச் சேர்த்து வழங்கினார்கள். இவ்வகைப் பெயர்கள் பலவற்றை விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் காணலாம். எல் என்பதைப் போலவே பால் (பகல்) என்னும் பெயரையும் மேற்கு ஆசிய மக்கள் வழங்கினார்கள். ஹனி பால், அசுர்பானிப்பால் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இன்றும் தமிழ் நாட்டில் சிவன் என்பதைப் பெயரினிறுதியிலிட்டு வழங்கும் வழக்குண்டு. பழங்கால இலங்கை அரசருட் பலரும் இவ்வழக்கை மேற்கொண் டிருந்தனர். எல் என்னும் பெயரிலும் பார்க்கச் சிவன் என்னும் பெயரே பழமையுடையது. சிவனென்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருளுண்டு. எபிரேயரின் மாதங்களிலொன்றின் பெயர் சிவன். முற்கால மக்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு கடவுளுக்குரியதாகக் கொண்டு மாதங்களுக்குக் கடவுளரின் பெயர்களை இட்டு வழங்கினார்கள். மொசே, கடவுளருளிய பத்துக் கட்டளைகளைச் சிவன் மாதத்தில் சினாய் மலையினின்றும் வெளியிட்டார். மொசேக்கு நெடுங்காலம் முன் தொட்டு எபிரேய நாட்டில் சிவன் வழிபாடு இருந்ததாகத் தெரிகிறது. பெத்தெல், பால் என விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் கூறப் படுவன சிவன் வழிபாடுகளே. பாபிலோனியரின் மாதங்களிலொன்றும் சிவன் எனப்பட்டது. இது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் தட்டு களிலெழுதப்பட்ட சாசனங்களால் அறியப்படுகின்றது. எகிப்திலுள்ள பாலைவனப் பசுந்தரை ஒன்று சிவன் எனப் பெயர் பெற்றிருந்தது. இப் பசுந்தரையில் பழைய ஞாயிற்றுக் கோயிலின் இடிபாடு ஒன்றுள்ளது. முற்காலத்தில் மக்கள் கோயிலைச் சுற்றிக் குடியேறியிருந் தார்கள். கோயில் கொண்டுள்ள கடவுளின் பெயரால் இடங்கள் அறியப் பட்டன. இன்றும் தென்னிந்திய இடப்பெயர்களில் பெரும்பாலன கோயிற் பெயர்களாகவே இருக்கின்றன. சிவன் கோயிலிருந்தமையால் அப் பாலை நிலப் பசுந்தரை சிவன் எனப்பட்ட தென்பது பிழையாகாது. பழைய நாகரிகம் பெற்று விளங்கியதெனவும், தமிழ் மக்கள் குடியேறி வாழப்பெற்றதெனவும் கருதப்படும் கிரீத்துத் (Crete) தீவில் அகழ்ந்து ஆராயப்பட்ட இடங்களிலொன்று சிவன் என்னும் பெயர் பெற்றிருந்தது. இவ்விடத்தில் தூபக்கால்கள் போன்ற பழம்பொருள்கள் அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்தன. அமெரிக்காவிலே கொலராடோ ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள பீடபூமி ஒன்று சிவன்கோயில் என அறியப்பட்டு வந்தது. இதன் பக்கத்தை அரித்துக் கொண்டு ஒரு மைல் ஆழத்தில் கொலராடோ ஆறு ஓடுகின்றது. இவ்வாற்று அரிப்பைக் கொண்டு அப் பீடபூமி மிகப் பழமையுடையதெனக் கருதப்படுகின்றது. அங்கு சிவன் வழிபாடு நடை பெற்றமையால் அது சிவன் கோயில் என நீண்ட காலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பழமை குறைந்தபட்சம் பத்தாயிரமாண்டுகளாகலா மெனத் தொல்பொருளியலார் கூறுகின்றனர். சிவன் வழிபாடு அமெரிக்கா வில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது அறியப்படுகின்றது. அமெரிக்காவில் சிவலிங்கங்கள், விநாயகர் முதலிய சிலைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆதிக்குடிகளின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடையதாகவிருத்தல், பழைய மாயா மக்களின் சிற்பக் கலையும், உருவ அமைப்புக்களும் தென் இந்தியாவோடு தொடர்புடையனவாகக் காணப்படுதல், இன்கா மக்களின் நாகரிகப் பகுதிகள் சில பழந்தமிழர் நாகரிகத்தோடு ஒத்திருத்தல் போன்ற சில அடையாளங்கள் மிகப் பழங்காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பிருந்ததை விளக்குகின்றன. கொலராடோவில் காணப்பட்ட சிவன் வழிபாடு இக் கருத்தை மேலும் வலியுறுத்துகின்றது. சிவனென்னும் பெயருடைய இடப்பெயர்கள் பிறவுமுண்டு. இப் பெயரொற்றுமைகள் தற்செயலாக ஏற்பட்டவையல்ல. சிவ வழிபாடு மொகஞ்சதரோ காலத்தில் (கி.மு.3500) மிகப் பிரபலம் பெற்றிருந்தது.1 தமிழ்நாட்டு மக்கள் எவ் வடிவில் சிவனை வழிபட்டார்களோ அவ் வடிவில் ஆசியா மைனர் மக்களும் மேற்கு ஆசிய மக்களும் சிவனை வழிபட்டார்கள். ஆசியா மைனரில் இடபத்தின் மீது நின்று கையில் இடியேற்றைப் பிடித்துக் கொண்டு நிற்பதாகிய உருவச்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடியேறென்பது கீழும் மேலும் மூன்று வேல் (முத்தலைவேல்) உள்ள ஆயுதம். இடபத்தின் மேல் நின்று கொண்டு அம்பெய்யும் வடிவுள்ள இன்னொரு உருவச் சிலையும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இடபத்திலிருக்கும் தந்தைக் கடவுளும், தந்தைக்கட வுளுக்குப் பக்கத்தில் சிங்கவாகனத்தின் மீதிருக்கும் தாய்க்கடவுளும் பொறிக்கப்பட்ட நாணயமொன்றும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கடவுளின் உடைகள் நம்நாட்டுச் சிவனின் உடைபோலல்லாது வேறு வகையிலுள்ளது. ஆசியா மைனர் மக்கள் கிரீத்துத் தீவினின்றும் சென்று குடியேறியவர்களென பழஞ்சரித்திரக்காரர் கூறுவர். கிரீத்து நாட்டு மக்கள் தமிலி எனப்பட்டார்களென எரதோதசு (கி.மு.470) என்னும் பழைய வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். இலைசியாவில் (ஆசியா மைனர்) தமிலி என்னும் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. கிரீத்து மக்களும் இலைசிய மக்களும் தமிழ்நாட்டினின்றும் சென்றவர்க ளெனக் கருதப்படுவர். சிவ வழிபாடு தமிழ் நாட்டினின்றுஞ் சென்று மேற்கு ஆசிய நாடுகளிற் பரவியதென இப்பொழுது அறியப்படுகின்றது. 1சிரியா நாட்டில் இடபத்தின் மீது நின்று கீழும் மேலும் முத்தலை களுள்ள படைக்கலத்தைப் பிடிக்கும் உருவம் வரையப்பட்ட செப்புத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகிறது. இவ்விடபமும் சிவன் வடிவமும், தமிழ்நாட்டு இடபத் தையும் சிவன் வடிவத்தையும் பெரிதும் ஒத்துள்ளன. இவ்வழிபாடு சிரியா விலிருந்து உரோமைப் போர்வீரர்களால் உரோமுக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்கும் கொண்டு போகப்பட்டதென்றும், பாடி வீடுகளில் உரோமைப் போர்வீரர் இக் கடவுளை வழிபட்டனரெனவும் ஆராய்ச்சி யாளர் கூறியுள்ளனர். இடியேற்றைப் பிடித்துக்கொண்டு இடபத்தின்மீது நிற்கும் கடவுளின் உருவம் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்கர் வழிபட்ட சியஸ் (Zeus) கடவுள் நெற்றிக் கண்ணுடையவராயும், ஒலிம்பஸ் மலையில் உறைபவராகவும், இடியேற்றை கையிற் பிடித்தவ ராகவுமிருந்தார். பின்லாந்து மக்களின் காத்தற்கடவுள் சிவன் எனப் பட்டது. சிவலிங்கம்1 ஞாயிற்று வழிபாட்டைப் போலவே இலிங்க வழிபாடும் மிகப் பழமையுடையது. பழங்கால மக்கள் ஞாயிற்றை மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். மலைகள் புனித இடங்களாகவும் கடவுளரின் இருப் பிடங்களாகவும் கொள்ளப்பட்டன. கிரேக்க தெய்வங்களின் உறைவிடம் ஒலிம்பஸ் மலை; இந்துக்களின் கடவுளுக்கு உறைவிடம் மேரு; இமயம் முதலிய மலைகள் எல்லாக் குன்றுகளும் முருகக் கடவுளுக்கு உறைவிடம். இதனைக் குன்றுதோறாடல் எனத் திருமுருகாற்றுப்படை கூறுதலா லறிக. மெசபெதேமி யாவில் வாழ்ந்த மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பால் (பகல்) என்னும் பெயரிட்டு வழிபட்டார்கள். ஆகவே அந் நாட்டுக்குப் பாபிலோன் என்னும் பெயருண்டாயிற்று. பகல் வழிபாடு பாலஸ்தீனத் தில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்ததை விவிலிய வேதம் குறிப்பிடு கின்றது. மலைகளில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் செய்குன்றுகளையும் உயர்ந்த கோபுரங்களையும் அமைத்து அவைமீது பகற்கடவுளை வழி பட்டார்கள். பின்னர் செய்குன்றுகளுக்கும் கோபுரங்களுக்கும் பதிலாக, அடிநிமிர்ந்து நுனிகுவிந்த கற்றூண்கள் நட்டு வழிபடப்பட்டன. இவ்வாறு கற்றூண்களை நட்டு வழிபடும் முறை மனிதன் கற்காலத்தில் இருந்த போதே வழக்கிலிருந்தது. இவ்வகை இலிங்கங்கள் மொகஞ்சதரோ விலும் சிவாலிக் மலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட் குறி இலிங்கம் எனப்பட்டது. இலிங்கம் என்பதற்கு இலங்குவது என்பது பொருள். இலங்குவதாகிய ஞாயிற்றின் அடையாளமாக அமைந்தமை யின் இது இலிங்கம் என்னும் பெயர்பெற்றது. இலிங்கம் ஞாயிற்றின் கதிரைக் குறிக்கும் எனவும் சிலர் கூறியுள்ளனர். வெவ்வேறு வகைகளில் கற்றூண் வழிபாடுகள் தோன்றி, ஞாயிற்று வழிபாட்டோடு சம்பந்தப் பட்ட இலிங்க வழிபாட்டோடு கலந்தன. இக்காரணத்தினாலேயே இலிங்க வழிபாட்டுக்கு வெவ்வேறு காரணங்கள் அல்லது கருத்துக்கள் கூறப்படுகின்றன. இலிங்க வழிபாடு இங்கிலாந்து தொடக்கமும் யப்பான் இறுதி யாகவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியக்கடல் தீவுகள், பசிபிக்கடல் தீவுகளிலும் காணப்பட்டது. இலிங்க வழிபாட்டைக் குறித்து ஆங்கில மொழியில் தனி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் உலகின் எல்லாப் பாகங்களிலும் எவ்வகைகளில் இலிங்க வழிபாடு செய்யப்பட்ட தென்பதன் விபரங்கள் காணப்படுகின்றன. இலிங்க வழிபாட்டினராய் நாகரிகமடைந்து உலகின் பலபாகங்களில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் ஒரே குலமுறையிலுள்ளவர்களா யிருந்தார்களென்பது சில ஆராய்ச்சி யாளரின் கருத்தாகும். இலிங்க வழிபாடு எங்கு காணப்பட்டதோ அங்கெல்லாம் பாம்பு வழிபாடும் காணப்பட்டது. பாம்பு வழிபாடு எப்படித் தோன்றிற்றென்பது ஆராய்ச்சிக் கெட்டவில்லை. இதுபோலவே, இலிங்க வழிபாட்டுக்கும் பாம்பு வழிபாட்டுக்குமுள்ள தொடர்பும் அறியமுடியாமலிருக்கின்றது. ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் தூண்கள் மரங்களின் கீழும், திறந்த வெளிகளிலும், சோலைகளிலும் நட்டு வழிபடப்பட்டன. அக் காலத்தில் கோயில்கள் கட்டப்படவில்லை. வழிபடுவோர் நீருண்ணும் பொருட்டும், நீரைக் கொண்டு கால், கை, உடல் முதலியவற்றைச் சுத்தஞ் செய்யும் பொருட்டும் இலிங்கத்துக்கு அயலில் கிணறு அகழப்பட்டது. இலிங்கம், மரம், கிணறு என்னும் மூன்றுமுள்ளது வழிபாட்டிடமாக விருந்தது. வன்னியும், கிணறும், இலிங்கமும் அழைத்த திருவிளையாடற் கதை பழைய காலத்தில் இவ்வகை வழிபாட்டிடங்கள் காணப்பட்டன வென்பதை விளக்கும். இலிங்கத்தைச் சுற்றிக் கட்டடம் அமைக்கப்பட்ட போது மரம் தலத்துக்குரிய மரமாகக் கொள்ளப்பட்டது. தென்னிந்தியா விலுள்ள எல்லாப் பழைய கோயில்களுக்கும் ஒவ்வோர் தலமரம் உண்டு. மறைக்காடு, தில்லைவனம், திருவாலங்காடு, திருவெண்காடு முதலிய பெயர்கள் இலிங்கங்கள் காடுகளிலும் தோப்புகளிலும் நிறுத்தப்பட் டிருந்தமையைத் தெரிவிக்கின்றன. பலஸ்தீன் நாட்டு மக்கள் இலிங்கங்களைப் பெத்தல் என வழங் கினர். அவை வீதிகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. வழிபடுவோர் இலிங்கத்தின் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர். இலிங்கவடிவான சிறிய கற்கள் தாயத்துக்களாகவும் அணியப்பட்டன. வீரசைவர் இலிங்க தாரணம் செய்து கொள்கின்றனர். வீரசைவமென்பது வைதீக மதமும் சைவமதமும் கலந்து வைதீக சைவம் தோன்றுவதன் முன் இருந்த சைவ சமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்துவரும் மதம் எனப்படுகின்றது. வைதீக மதத்துக்கு மடங்காமல் அல்லது வளைந்து கொடாமல் இருந் தமையின் இது வீரசைவமெனப் பட்டதென அறிஞர் கூறுகின்றனர். வீர சைவர் இலிங்கங்கட்டிகள் எனவும் அறியப்படுவர். திங்கள் வணக்கமும் தீ வணக்கமும் ஞாயிற்று வணக்கம் தோன்றி வளர்ந்தபின் ஒளியுடைப் பொரு ளாகிய திங்களையும் மக்கள் வழிபட்டார்கள். திங்களை வழிபட்ட மக்கள் திங்களின் அருட்குறியாக மரத்தூணை இலிங்கத்துக்கு (கற்றூணுக்கு) அருகில் நட்டு வழிபட்டார்கள். இவ்வருட் குறிகளின் தொடக்கங்கள் மறக்கப்பட்ட காலத்தில் அவர்கள் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாகவும், திங்களைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபட்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் இதனை ஆண் தெய்வமாகக் கொண்டார்கள். திங்கள் வழிபாடு மேற்கு ஆசிய நாடுகளில் அஸ்தரெத் என்னும் பெண் தெய்வ வழிபாடாகச் சோலைகளில் நடைபெற்றது. இத் தெய்வத்தைப் பெண் பூசாரிகளே மேற்பார்த்தார்கள். இதன்பின் ஒளியுடைப் பொருளாகிய தீ வழிபடப்பட்டது. நிம்ரொட் அரசன் காலத்தில் தீ வழிபாடு தொடங்கியதென விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. தீ வழிபாடு இன்றும் பார சீகத்தில் இருந்து வருகின்றது. இந்திய ஆரியர் தீயை அக்கினி என்னும் பெருந்தெய்வமாக வழிபட்டனர். ஞாயிறு, திங்கள், தீ என்பன தீ ஒன்று வாயிலாகவும் வழிபடப்பட்டன. மூன்று ஒளியுடைப் பொருள்களையும் குறிக்க முறையே வட்டம், பிறை முக்கோண வடிவான குண்டங்களை அமைத்துத் தீ மூட்டி அவை வழிபடப்பட்டன. ஞாயிற்றுக் கடவுளும் திங்கட்கடவுளும் ஆணும் பெண்ணும் என்னும் கொள்கை எழுந்தபின் அவை கணவனும் மனைவியும் என்னும் நம்பிக்கை மேற்கு நாடுகளில் எழுந்தது. இவ்வகையில் சிவலிங்கங்கள், கடவுளுக்கு ஆண் தன்மை பெண் தன்மை என்னும் தன்மைகள் உண் டென்பதை உணர்த்துகின்றன வென்னும் கருத்து எழுந்தது. தாய்க்கடவுள் வழிபாடு ஞாயிற்று வணக்கத்தையும் இலிங்க வணக்கத்தையும் போலவே தாய்க்கடவுள் வணக்கமும் பழமையுடையது. இன்று தந்தை குடும்பத் துக்குத் தலைவனாயிருப்பதுபோல், தாய் குடும்பத்துக்குத் தலைவியாக ஒரு காலத்திலிருந்தாள். அக் காலத்தில் தந்தையின் முதன்மை உண் டாகவில்லை. பிள்ளைகள் தாய்வழியாக அறியப்பட்டார்கள். தாயே சொத்துக்குரியவளாக இருந்தாள். சொத்து, தாய் வழியாகப் பிள்ளை களை அடைந்தது. பிள்ளைகள் தாயைச் சூழ்ந்து இருந்தார்கள். அவர்கள் தாயே எல்லா வல்லமையும் உடையவள் என நினைத்தார்கள். ஆகவே, அவர்கள் கடவுளைத் தாய்வடிவில் வழிபட்டார்கள். தாய்க்கடவுள் வீரதெய்வமாக இருந்தது. செல்வம், கல்வி முதலிய வற்றுக்கு தாய்க்கடவுளரே தெய்வங்களாகக் கொள்ளப்பட்டனர். பாரதப் போரில் வீரதெய்வமாகிய தாய்க்கடவுளுக்குக் களப்பலி கொடுக்கப்பட்ட தென மாபாரதம் கூறுகின்றது. போருக்குச் செல்லும் போது படைவீரர் வீர தெய்வமாகிய தாய்க்கடவுளின் வடிவமெழுதிய கொடியை முன்னே எடுத்துச் சென்றனர். இதனைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்மக்கள் தாய்க்கடவுளைக் காடுகிழாள், காடு கெழுசெல்வி, கொற்றவை, காளி முதலிய பெயர்கள் கொடுத்து வழிபட் டார்கள். காளி என்பதற்குக் கறுத்தவள் அல்லது இருண்டவளென்பது பொருள். காடுகிழாள் வழிபாடு மக்கள் மிகத் தாழ்நிலையில் வேடர்களாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் உண்டாயிற்று. காடுகிழாள் பாலை நிலத் தெய்வம். இவ் வழிபாடு நரபலி, விலங்குப் பலிகளோடு நடை பெற்றது. இவ் வழிபாட்டின் தன்மைகளைப் பரணி நூல்கள் கூறுகின் றன. மக்கள் படிப்படியே திருத்தமடைந்து வாழ்க்கையிற் பண்பட்டுவந்த காலங்களில் இவ்வழிபாட்டின் பயங்கரத் தன்மைகள் படிப்படியே குறைவடைந்து வந்தன. சிலப்பதிகாரத்தில் காடுகிழாள் வழிபாடு கூறப் பட்டுள்ளது. அதில் இவ்வழிபாட்டைப் பற்றிய விபரம் பயங்கரமாகத் தோன்றவில்லை. விலங்குகளில் வீரமுள்ள சிங்கம், தாய்க்கடவுளின் வாகனமாக்கப் பட்டது. அவள் வாள், வேல், கதை போன்ற ஆயுதங்களைக் கையில் பிடித் திருந்தாள். அவள் போர்களில் அசுரரைக் கொன்றதாகப் பழங்கதைகள் வழங்குகின்றன. அப் பழங்கதைகளின் நினைவாக மான் அம்பு என்னும் விழா இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் நடைபெறுகின்றது. தசரா என்பதும் இதுவே. தமிழ்நாட்டில் காணப்படுவதுபோலவே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலும் இவ்வழிபாடு பரவியிருந்தது. கிரீத்து, எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர் முதலிய நாடுகளில் சிங்க வாகனியாய் ஆயுதந்தாங்கிய தாய்க்கடவுளின் உருவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மக்களின் குலமுறை, நாகரிகம், மொழி, எழுத்து முதலிய ஆராய்ச்சி களால், மத்தியதரை நாடுகளில் வாழ்ந்த மக்களும் தமிழ் மக்களும் ஒரே இனத்தவர்களென ஆராய்ச்சியாளர் அனுமானித்திருந்தார்கள். அந் நாடுகளில் தாய்க் கடவுளின் வழிபாடு தென்னிந்தியாவில் காணப்பட்டது போல இருந்ததென்பது, மேலும் அவர்களின் அனுமானங்களை வலி செய்வதாகவுள்ளது. எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர், கிரீத்து, முதலிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படுவார்கள். இந் நாடுகளில் ஒரு காலத்தில் தாயாட்சி இருந்ததென் பதற்கு வரலாற்றுச் சான்றுகளுமுள்ளன. இன்று இந்திய மக்கள் மலாயா, தென்னாப்பிரிக்கா போன்ற தூரநாடுகளிற் சென்று குடியேறியிருப்பது போலவே, முற்காலத் தமிழரும் எகிப்து, ஆசியாமைனர், மெசபெ தேமியா முதலிய நாடுகளில் சென்று குடியேறியிருந்தார்கள். குடியேறிய மக்கள் தம்மோடு சமயத்தையும் கொண்டு சென்றார்கள். மக்களின் அறிவு பண்பட்ட காலத்தில் தாய்க்கடவுள் அன்பு மயமான கடவுளாகக் கொள்ளப்பட்டது. காடு கிழாள் உமாதேவியார் என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. முருகக் கடவுளைக் “கொற் றவை சிறுவன்” எனத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. கடவுளுக்குக் குணங்குறிகளில்லை என்றும், அவருக்கு ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இருவகைச் சக்திகளுண்டென்றும் தத்துவக் கருத்துக்கள் எழுந்தன. அப்பொழுது தாய்க் கடவுள் ஆண் வடிவாகக் கொள்ளப் பட்ட கடவுளின் பாதியாகக் கொள்ளப்பட்டது. பின் சக்தியும் சிவமும் பூவும் மணமும் போன்று ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்றும் “சிவமின்றேல் சக்தியில்லை” “சக்தியின்றேல் சிவமில்லை” என்றும் உயர்ந்த கருத்துக்கள் எழுந்தன. இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு அல்லது சக்தி வழிபாடு மிகப் பரவி முக்கியம் பெற்றிருந்தது. அக் காலத்தில் சக்தி வழிபாடு களைக் கூறும் சாக்த ஆகமங்கள் எழுந்தன. சாக்த ஆகமங்கள் 77 உண்டு. அவை மற்றெல்லா வழிபாடுகளிலும் பார்க்கச் சக்தி வழிபாடே சிறந்த தெனக் கூறும். ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இரு தன்மைகள் கடவுளுக்கு உண்டென்னும் கருத்து இப்போது சிவலிங்கத்துக்குக் கூறப் பட்டது. இதனைப் பீடமும் இலிங்கமுமாகவுள்ள சிவலிங்க வடிவங்கள் உணர்த்துகின்றன. மால் வழிபாடு சிவ வழிபாட்டை ஒப்ப மால் வழிபாடும் மிகப் பழமையுடையது. சிவ வழிபாடும் மால் வழிபாடும் ஒரே தொடக்கத்தை உடையன. மேற்கு ஆசிய மக்களைப் போலவே தமிழ் மக்களும் கடவுளுக்கு எல் எனும் பெயர் கொடுத்து வணங்கினர். இன்றும் தமிழ்நாட்டில் எல்லப்பன், எல்லம்மா முதலிய பெயர்கள் வழங்குகின்றன. மால் வழிபாடு எல் வழிபாடே யாகும். மா-எல் என்பது மால் என வழங்குகின்றது. மா என்பது பெருமையைக் குறிக்க எல் என்பதன் முன் இடப்பட்டது. மா என்பது கருமையையு முணர்த்தும். ஞாயிற்று வணக்கத்தோடு பாம்பு, சங்கு, முத்துத் தாமரை, சுவத்திகம் முதலியன தொடர்பு பெற்றிருந்தன. திருமால் பாம்பின் மீது பள்ளி கொள்வதாகப் பழங்கதை வழங்குகின்றது. திருமால் கையில் இருப்பது சங்கு. சங்கைச் சமய சின்னங்களுள் ஒன்றாகக் கொள்ளும் வழக்கம் ஞாயிற்றுக் கடவுளை வணங்கிய எல்லா மக்களிடையும் இருந்தது. முற்காலத்தில் கிறித்துவ கோயில்களிலும், பௌத்தர் சைத்தியங் களிலும் சங்கு ஒலிக்கப்பட்டது. சிவபெருமானின் காதுகளிலிருப்பது “சங்க வெண்குழை” திருமாலின் கையிலிருக்கும் சக்கரமும் ஞாயிற்றைக் குறிக்கின்றது. சங்கு எப்படிச் சிறந்த சமய சின்னமாகக் கொள்ளப் பட்டதோ அப்படியே முத்தும் சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. கடவுளின் உருவங்களுக்கு முத்துமாலை அணியப்பட்டது. அரசரும் பெரு மக்களும் முத்துமாலை அணிந்தார்கள். திருமாலின் கழுத்திலிருப்பது முத்து மாலை. முத்து விலையேறப் பெற்றதாதலின் முத்துக்குப் பதில் உருத்திராக்கம் அணியும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. திருமால் வணக்கமும் சிவ வணக்கமும் வேறானவையல்ல என்னும் கருத்து பழங் காலம் முதல் இருந்து வருகின்றது. “அரியும் சிவனும் ஒன்று” என்னும் முதுமொழி இதனை விளக்கும். “அரியலாற் றேவியில்லை ஐயாற னார்க்கே” என வரும் தேவாரத்தால் திருமால் வழிபாடு ஒருகாலத்தில் தாய்க்கடவுள் வழிபாடாக இருந்ததோவெனக் கருதக்கிடக்கின்றது. 1திருமால் வழிபாடு முல்லைநில மக்களுக்குரியதாகத் தொல் காப்பியங் கூறுகின்றது. பிற்காலத்தில் விட்டுணு வழிபாடு, கண்ணன் வழி பாடு, இராமர் வழிபாடு முதலியன திருமால் வழிபாட்டோடு கலந்தன. ஆகவே கண்ணன், இராமர் முதலியவர்களின் பிறப்புகள் திருமாலின் அவதாரங்களாகக் கொள்ளப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன் கண்ணன் வழிபாடு மிகப் புகழ் பெற்றிருந்தது. கி.மு. இரண்டாம் நூற் றாண்டில் தமிழ் நாட்டினின்றும் சென்று ஆர்மேனியாவிற் குடியேறிய தமிழர் அங்கு கிருட்டிண, பலதேவ வழிபாட்டை நாட்டியிருந் தார்கள். விட்டுணு வழிபாடென்பது வடநாட்டு ஆரிய மக்களிடையே தோன்றிய ஞாயிற்று வழிபாடு. பிற்காலத்தில் இவ் வழிபாடு திருமால் வழிபாட்டோடு இணைந்தது. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாகவுள்ளது. திருமாலின் ஊர்தி பருந்து. எகிப்திய மக்கள் பருந்தை ஞாயிற்றுக் கடவுளின் சின்னமாகக் கொண்டு வழிபட்டார்கள். முருக வழிபாடு சிவ வழிபாட்டைப்போலவே முருக வழிபாடும் மிகப் பழமை யுடையது. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு இருந்ததைக் காட்டும் சான்றுகள் காணப்பட்டதுபோல முருக வழிபாட்டைக் காட்டும் சான்றுகள் காணப்படவில்லை. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக் கப்பட்டிருந்த எழுத்துக்களின் வாசிப்பொன்றில் முருகன் என்னும் பெயர் காணப்படுவதாக ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார். முருக வழிபாடு தொடக்கத்தில் கதிரவன் வழிபாடாக இருந்தது. இலங்கையிலுள்ள முருகன் கோயில் கதிர்காமம் எனப்படும். கதிர்க்கடவு ளின் வழிபாட்டுக்குரிய இடம் கதிர்காமம் எனப்பட்டது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் ஒன்று எனவே மக்களின் நம்பிக்கை இருந்து வருகிறது. சிவ வழிபாடு தொடக்கத்தில் சிவலிங்க வழிபாடாகவிருந்தது. முருக வழிபாடும் இவ்வாறே இருந்தது. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் இருப்பது போலவே முருகனைக் குறிக்கும் சேய், சேயோன், செவ்வேள் என்னும் பழைய பெயர்கள் சிவந்தவன் என்றும் பொரு ளுடையன. சிவவழிபாடு உலகின் பல்வேறு பாகங்களில் காணப்பட்டது போலவே முருக வழிபாடும் பலஸ்தீன நாட்டில் காணப்பட்டது. அங்கு சிவன் என்னும் கடவுள் பால் (பகல்) என்னும் பெயரில் வழிபடப் பட்டார். பாற் கடவுளுக்கு இரண்டு வடிவுகளுண்டு. ஒன்று முதியபால், மற்றது இளம்பால். இவ்விரண்டு வடிவங்களும் முதிய தோற்றமும் இளந் தோற்றமுமாக இருந்தன. வடிவங்கள் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டும் ஒரு கடவுளின் தோற்றங்களாகவே கொள்ளப்பட்டன. நீல வானிலே கடலில் தோன்றும் ஞாயிற்றின் தோற்றம் மயில் ஊர்தியில் காட்சியளிக்கும் குழந்தை வடிவான கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு முருகக் கடவுளை வழிபட்டார்களென் பதைத் திருமுருகாற்றுப்படை என்னும் நூல் நன்கு கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் முருகக் கடவுளுக்கு ஆறு திருமுகங்களிருப்பதாகக் கூறுகின்றன. முருகக்கடவுள் வீரதெய்வ மாகக் கூறப்படுகின்றார். சங்ககால மக்கள் முருகக் கடவுளை மயிலூர்தி யுடையவராகவே வழிபட்டார்களென்பது “மணி மயிலுயரிய மாறா வென்றிப் - பிணிமுகவூர்தி ஒண் செய்யோனும்” (56) என்னும் புற நானூற்றுப் பாடலால் தெரியவருகின்றது. ஸ்கந்தர், கார்த்திகேயர், சுப்பிரமணியர், குகன் முதலிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப் படவில்லை. இப் பெயர்கள் வடநாட்டினின்றும் வந்து பிற்காலங்களில் தமிழ் நாட்டில் வழங்கின. கந்தன் என்பதே ஸ்கந்த என வடமொழியில் உச்சரிப்பு வேறுபட்டது. கந்தனென்பதற்குக் கந்திலுறைபவன் அல்லது கந்தில் வழிபடப்படுபவன் என்னும் பொருளுண்டு. மும்மூர்த்திகள் தொடக்கத்தில் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள், குமாரக் கடவுள் என்னும் மூவருமே மும்மூர்த்திகள் எனப்பட்டார்கள். இவ்வழக்கே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலுமிருந்து வந்தது. பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் ஆரிய மக்களிடையே வடநாட்டில் தோன்றியவை. பிராமண மதத்தினர் தென்னாட்டுக்கு வந்து தமது மதக் கொள்கைகளைப் பரப்பிய காலத்தில் பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் மும்மூர்த்திகளாயின. உருத்திர வணக்க மும் சிவ வணக்கமும் வெவ்வேறு தொடக்கமுடையனவாயினும் பிற் காலத்தில் இரண்டும் ஒன்றாகக் கொள்ளப்பட்டன.1 சிவவழிபாட்டினர் சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர் எனக் கொண்டு வந்தனர். அவர்கள் சிவனை “மூவர்கோன்” என்பர். கோயிலும் கோயிற்கிரியையும் மக்கள் அருள்தறி, தந்தை, தாய் என்னும் வடிவுகளில் கடவுளை வழிபட்டு வந்தார்கள். இவற்றைச் சுற்றிக் கட்டடங்களெழுந்தன. கடவுளுக்கு இருப்பிடமாகிய கட்டடம் அரசனுடைய வீடு போன்ற அமைப்பில் எடுக்கப்பட்டது. கோயிலென்பது அரசன் இருக்கும் வீட்டையும் கடவுள் இருக்கும் வீட்டையும் குறிக்கும். மக்கள் கீழ்நிலையி லிருந்து மேல்நிலை அடைந்த போது கோயிலும் பெரியதாக எடுக்கப் பட்டது. அரசன் கடவுளின் அவதாரம் எனக் கருதப்பட்ட காலத்து அரசனே தலைமைக் குருவாக இருந்தான். பின் அரசனுக்குப் பதில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிற் குருக்களாக இருந்தார்கள். இக் காரணத்தினாலேயே குருமாருக்கு முற்காலங்களில் அதிக மதிப்பு உண்டாகியிருந்தது. பிற்காலங்களில் அரசருக்கும் அரச குடும்பத்தினருக் கும் பதில் உயர் குடும்பங்களிலுள்ளவர்கள் கோயிற் குருக்களாக நியமிக் கப்பட்டார்கள். தந்தை புரிந்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குரு வகுப்பினர் பெருகினர். இவர்களல்லாது ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த அருட் குறிகளை மேற்பார்த்த பலதிற வகுப்பினரும் பூசாரிக் குடும்பங்களாகப் பெருகினர். அரண்மனையில் அரசனும் அரசனைச் சூழ்ந்த அவனுடைய அமைச்சர், சேனாபதியர், தலைமை அதிகாரிகள், உறவினர் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே கோயிலிலும் பரிவார தெய்வங்கள் இருந்தன. அரசனுடைய அரண்மனையைச் சூழ்ந்து மதிலும் அகழும் இருந்தது போலக் கோயிலுக்கும் மதிலும் அகழும் இருந்தன. கோயில் ஒரு கோட்டையின் அமைப்பு உடையது. தஞ்சாவூர்ப் பெரிய கோயில் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. தென்னிந்தியா, அசீரியா, எகிப்து, மெசபெதேமியா முதலிய நாடுகளில் கோயில்களின் அமைப்பு ஒரே வகையாக இருந்தது. எகிப்திலே கர்நாக் என்னுமிடத்தில் பழங் காலக் கோயில்கள் காணப்படுகின்றன. இக் கோயில்களுக்குத் தென்னிந்திய கோயில்களுக்குக் காணப்படுவது போன்று வாயில்கள், கோபுரங்கள் காணப்படுகின்றன. கோபுரங்களில் அடிமுதல் நுனிவரை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய சிற்பக்கலைக்கும் எகிப்திய கட்டடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைச் சிற்பக் கலை ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர். எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வங்களுக்குரியதாகக் கொண்டனர். கட்டடத் தூண்களில் தாமரை மொட்டின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மெசபெதேமியா விலும் அசீரியாவிலுமுள்ள கோயிலமைப்பு தென்னிந்தியக் கோயி லமைப்பை ஒத்துள்ளது. பலஸ்தீன நாட்டு அரசனாகிய சாலமன் கட்டிய கோயில் தென்னிந்தியக் கோயில் போன்றதே. கோயில்கள் சூரிய னுதிக்கும் திசையை நோக்கி நின்றன. கோயிற் கிரியைகள் என்பன அரசனுக்கு அவனுடைய பணியாளர் காலை முதல் அவன் நித்திரைக்குச் செல்லும் வரை என்னென்ன உப சாரங்களைச் செய்கிறார்களோ அவற்றை எல்லாம் செய்து காட்டுவ தாகும். கிறித்துவ வேதத்திலே சாலமனின் கோயிலில் செய்யப்பட்ட கிரியைகளை நோக்கினால் அக் கிரியைகள் பெரும்பாலும் தென் னிந்தியக் கோயில்களில் நடைபெறும் கிரியைகளை ஒத்திருத்தலைக் காணலாம். கோயில் அமைக்கவேண்டிய விதிகள், அளவுகள், கிரியைகள் என்பவற்றைக் கடவுள் அருளிச் செய்தார் என்னும் நம்பிக்கை தென் னிந்தியாவிலிருப்பது போலவே மெசபெதேமியாவிலு மிருந்தது. இவ் விதிகளை உண்டாக்கினோர் உண்மையில் கோயிற் குருமார்களே ஆவர். தமிழ் நாட்டினின்றுஞ் சென்று எகிப்து மெசபெதேமியா முதலிய நாடுகளிற் குடியேறிய மக்களே கோயிலெடுக்கும் விதிகளையும் சமயக் கிரியைகளையும் கொண்டு சென்று அந் நாடுகளில் பரப்பினார்களென்ப தற்குரிய சான்றுகள் மேல்நாட்டாராய்ச்சியாளர் செய்துள்ள ஆராய்ச்சி களில் கிடைக்கின்றன. ஆகமங்கள் சமயத்துக்குக் கோயில்களும் கோயில் கிரியைகளும் முதன்மை உடையனவாக இருந்தன. கோயிலமைக்க வேண்டிய மாதிரி, நீளம், அகலம், உயரம் போன்றனவும் கோயிற் கிரியை முறைகளும் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தன. இவற்றை அறிந்திருந்த வர்கள் கோயிற் குருமார்களாக இருந்தார்கள். இவையும் இவை போன்று சமயத்தோடு தொடர்பு பெற்றிருந்த பல செய்திகளும் நீண்ட காலம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன; இவற்றின் தொகுப்பே ஆதியில் ஆகமமாக இருந்து வந்தது. எகிப்து, மெசபெதேமியா, இந்தியா முதலிய நாடுகளில் ஆகமக் கருத்துக்கள் ஒரே வகையாக இருந்தன. ஆரிய மக்கள் இந்திய நாட்டை வந்தடைவதன் முன் ஆகமக் கொள்கைகள் இந்தியாவிலிருந்தன.1 தமிழ் மக்கள் கடவுளைக் கோயில் களில் வழிபட்டார்கள். ஆரிய மக்கள் கடவுளைக் கோயில்களில் வழிபட வில்லை. அவர்கள் யாகங்கள் புரிந்து அவற்றில் தேவர்களுக்கு உணவு அளித்து அவர்களை மகிழ்வித்தார்கள். உயிர்களின் மறுபிறப்புக் கொள்கையைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை என்றும், அவர்கள் மறுபிறப்பைப் பற்றி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடத்தில் பிற்காலங்களில் அறிந்து கொண்டார்கள் என்றும் வேத ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். ஆகவே கோயில், கோயிற் கிரியைகள் சம்பந்தமான அறிவும், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களின் ஆராய்ச்சி யும் தமிழர்களுடையனவாகும். தமிழரிடத்து வழங்கிய தத்துவ ஞானங்கள் உபநிடதங்கள் (உபதேசங்கள்) என்னும் பெயர்களுடன் பிற்காலங்களில் வெளியிடப் பட்டன. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்டல் என்பது பொருள். உபநிடதங்களில் கூறப்படும் மறைபொருள் குருமாணாக்க முறையிற் கேட்டு அறிதற்குரியன. ஆகவே அவை எழுதிவைக்கப்பட வில்லை. இஞ்ஞானங்களைக் கேட்டறிவதில் தாகங்கொண்டிருந்த ஆரிய மக்களுட் சிலர் அவற்றைத் தமிழறிஞரிடம் கேட்டறிந்த பின் தாம் அவற்றைப் பிறருக்கு உபதேசிக்கும் பொருட்டு எழுதி வைக்கலாயினர். வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைக்கும் மரபு தமிழ்நாட்டில் இருக்கவில்லை எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. பிற்கால உரை யாசிரியர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானோரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். உபநிடதங்களும் ஆகமங்கள் எனப் படும். இதனால் உபநிடதங்களிலுள்ள கருத்துக்கள் ஆகமக் கருத்துக் களே எனப் புலப்படும். வேதங்களைச் சூத்திரரும், பெண்களும் ஓதுதலும் கேட்டலும் கூடாது. உபநிடத ஞானங்களைப் பெண்களும் எல்லாக் குலத்தினரும் பெறலாம். “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்பது உபநிடதக் கருத்துக்கள் பற்றி எழுந்ததே. உபநிடதங்கள் ஆரியரல்லாத மக்களுடையன வென்பதை விண்டர் நிட்ஸ் என்னும் செர்மன் பேராசிரியர் இந்திய இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலில் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். சைவ சமயத்துக்கு ஆதாரம் எனப்படும் நூல்கள் 28 சிவ ஆகமங்கள். இவ்வாகமங்களில் சில அச்சிடப்பட்டுள்ளன. பல அச்சிடப் படவில்லை. பல பெயரளவிலேயே இருந்து வருகின்றன. ஆகமங்கள் தமிழருக்கும் சைவத்துக்கும் உரியனவாயின் அவை ஏன் வடமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்னும் கேள்வி எழலாம். ஆகமக் கருத்துக்கள் செவி வழக்கில் இருந்து வந்தன வென்று கூறினோம். ஆகமங்கள் எழுதப் பட்ட “பாஷா” என்னும் நடை கி.பி.1000 வரையில் வழங்கியதென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென் னாட்டில் படிப்படியே வடமொழி ஆதிக்கம் ஏற்பட்டு வந்தது. அப் பொழுது1 தமிழிலிருந்த ஆகமங்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருத்தல் வேண்டும் அல்லது செவி வழக்கிலிருந்த ஆகமக் கருத்துக் கள் திரட்டப்பட்டு வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழில் ஆகமங்கள் பல இருந்தன வென்று கி.பி.5 ஆம் நூற்றாண்டள வில் செய்யப்பட்ட திருமந்திரம் கூறுகின்றது. சைவத்துக்கு 28 ஆகமங்களும்2 வைணவத்துக்கு 108 ஆகமங்களும், சாக்தத்துக்கு 77 ஆகமங்களுமுண்டு. இவற்றுட் சிலவற்றுக்கு எழுதப் பட்ட உரைகளில் இவையல்லாத நூற்றுக்கணக்கான ஆகமங்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஆகமங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என நம்பப்பட்டு வருகின்றன. ஆகமங்கள் பொதுவாக ஞானம், யோகம், கிரியை, சரியை என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. அது வீடு எனப்படும். யோகம் என்பது மனத்தை ஒரு செயலில் பற்ற வைத்து நிற்பது. கிரியை என்பது கோயில் கட்டுவதற்கு, நிலத்தை உழுதல், தளமிடுதல் முதல் விக்கிரகத்தை நாட்டுதல் வரையிலுள்ள செயல்கள். சரியை என்பது கடவுளை வழிபட வேண்டிய முறைகள். சரியை, கிரியை, யோகம் முதலிய மூன்றும் ஆசிரியனிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியன வென்றும், பக்குவமடைந்தவர்களுக்கு ஞானத்தை அளிக்க இறைவன் குரு முகூர்த்தத்தில் நேரில் வருவான் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. உலகம் பொய்த் தோற்றமாக உள்ளது என்னும் கொள்கையை (மாயா வாதத்தை) ஆகமங்கள் எதிர்க்கின்றன. ஆகமங்கள் உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கொள்ள வில்லை. கடவுளிடத்தில் பத்தி செலுத்துவதையே ஆகமங்கள் சிறப்பாக வலியுறுத்துகின்றன. பாடுதல், ஆடுதல் போன்ற உள்ளக் கிளர்ச்சி தரும் செயல்கள் பக்தி காரணமாக எழுந்தனவே. தமிழிலும் சமக்கிருதத்திலும் பக்திமயமான பாடல்கள் பல உள்ளன. இசை, நாட்டியம், அபிநயம் என்பனவும் சமய பக்தி காரணமாக வளர்ச்சி அடைந்தன. அபிநயம் காரணமாகத் தேவதாசிகள் கோயில்களில் அமர்த்தப்பட்டார்கள். சைவ ஆகமங்களும் சாக்த ஆகமங்களும் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமை யுடையன. சைவ சித்தாந்தக் கொள்கைகள் 28 ஆகமங்களிலும் வேதாந்த சூத்திரங்களுக்கு நீலகண்ட சிவாசாரியார் செய்த சைவ பாடியத்திலும், சென்ற 1500, ஆண்டுகளாகச் செய்யப்பட்ட சைவ நூல்களிலும் காணப் படுகின்றன. சைவசித்தாந்தக் கொள்கைகள் சிவாகமங்களுள் முதன்மை யுடையதான காமிகாகமத்தின் ஞான பாதமாகிய மிருகேந்திரத்தில் கூறப்படுகின்றன. (இவ்வாகமங்களும் வேறு சிவாகமங்களும் தமிழுரை யோடு அச்சிடப்பட்டுள்ளன). சிவம் தொடக்கமில்லாதது. அது எல்லா வற்றையும் அறிவது, எல்லாவற்றையும் செய்வது, உயிர்களின் அறிவை மூடியிருக்கும் மலத்தை நீக்குவது என மிருகேந்திராகமங் கூறுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் (துரோதானம்) எல்லாம் சிவத்தின் செயல்கள். உலகம், உயிர், இறைவன் என்னும் முப் பொருள்களும் உட்பொருள்கள். சைவ சித்தாந்தக் கொள்கைகளை, 13ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்ட சைவ சித்தாந்த நூல்கள் நுட்பமாக எடுத்து விளக்கு கின்றன. சைவ சித்தாந்தம் சாதி, வருணாச்சிரம தருமம் போன்றவற்றை அனுமதிக்கவில்லை. பெரிய புராணத்திற் கூறப்படும் மெய்யடியார்கள் வரலாறுகள் இதற்குச் சான்றாக உள்ளன. வைணவ மதத்தினரும் இதே கொள்கையுடையராகவிருந்தனர். வைணவ அடியார்களுள் ஒருவர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். சாதி பேதம், வருணாச்சிரம தருமம் போன்ற கொள்கைகள் தலையெடுத்த காலத்தில் கன்னட தேசத்தில் வசவர் தோன்றினார். இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி. இவரால் கொண்டுவரப்பட்ட சைவம் இலிங்கங்கட்டி மதம் அல்லது இலிங் காயதம் அல்லது வீரசைவம் எனப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பிராமண ஆதிக்கத்தையும் சாதி பேதத்தையும் ஒழிப்பதாக இருந்தது. பிராமண சாதியிற் பிறந்தவராகிய வசவர் இக் கொள்கையை நிலைநாட்ட முன்வந்தது வியப்புக்குரியதாக இருந்தது. இவருக்கு முன் விளங்கிய புத்தர் முதலிய சமய சீர்திருத்தக்காரர்களைப் போலவே இவரும் தமது போதனைகளை உள்நாட்டு மொழிகளில் செய்தார். வழக்கம்போலப் பிராமணர் இம் மதத்தவரிடையே சாதிபேதக் கொள்கையை நுழைத்து அதன் சீவசத்தை வாங்கிவிட்டார்கள். இலிங்காயத மதம் பௌத்த மதத்தைப் போலச் சாதிபேதத்துக் கெதிராக எழுந்ததாயினும் இன்று இலிங்காயதப் பிராமணர், இலிங்காயத சூத்திரர் முதலியோர் காணப் படுகின்றனர். யோகமார்க்கம் கடவுள் புலன்களாலறிய முடியாதவர், நினைவுக்கு எட்டாதவர் எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் உண்மைகளையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே குணங்குறியில்லாத முழுமுதற் கடவுளைக் குறிக்கக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை அவர்கள் இட்டுவழங்கி னார்கள். கடவுளென்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் என்பதும் இயவுள் என்பதற்கு எல்லாவற்றையும் இயக்குபவர் என்பதும் பொருள்களாகும். புலன்களாலறியப்படாத பொருளை அறிவதற்குப் புலன்களை அடக்குதல் வேண்டுமென்னும் கொள்கை எழுந்தது. புலன்களை ஒடுக்கி (ஐந்தடக்கி) மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு வாய்ப்பான முறைகள் கண்டுபிடிக் கப்பட்டன. இவ்வழி யோக மார்க்கம் எனப்பட்டது. 5000 ஆண்டுகளின் முன் மொகஞ்சதரோ மக்கள் இம் முறைகளை அறிந்திருந்தார்கள்.1 அங்கு கிடைத்த தொல்பொருள் ஒன்றில் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு அட்டணைக் காலிட்டு யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையிலுள்ள உருவமொன்று வெட்டப்பட்டுள்ளது. மிக முற்காலத்தில் தமிழ் மக்க ளிடையே தோன்றியிருந்த இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே சமண, பௌத்த மதங்கள் எழுந்தன. சமண, பௌத்த மதங்கள் ஆரியர் வருகைக்கு முன் இந்தியநாட்டிலிருந்த சமயக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தவை என ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். சமண, பௌத்த மதங்களின் மூலாதாரக்கொள்கை புலன்களை வென்று ஆசை யற்றிருப்பது. “திரையற்றகடல் போற் சிந்தை தெளிந்தார்க்குப் - புரையற் றிருந்தான் திரிசடையோனே” எனத் திருமூலரும் குறிப்பிடுதல் காண்க. கடவுளைப் பற்றி ஆராயத் தொடங்கிய மக்கள் இவ்வுலகைப் பற்றியும் உலகில் வாழும் உயிர்களைப்பற்றியும், உலகுக்கும் உயிருக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றியும் ஆராயத் தொடங்கினர். இவ் வாராய்ச்சிகள் தொடர்பான நூல்கள் தத்துவ சாத்திரங்கள் எனப் படுகின்றன. கௌதம புத்தருக்கும் மகாவீரருக்கும் முன்னிருந்தவர் கபிலர். இவர் செய்த தத்துவ நூல் சாங்கியம். சாங்கிய மதக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சமண பௌத்த மதங்கள் எழுந்தனவெனக் கூறுவர் ஆராய்ச்சி வல்லார். வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும் தொடக்கத்தில் வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும் வேறுபட்டன வாக இருந்தன. இருக்குவேத காலத்தில் தாசுக்களுக்கும் ஆரியருக்கும் நேர்ந்த பிணக்குகளென்பன சமயத்தை அடிப்படையாகக் கொண்டி ருந்தன வென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சமண, பௌத்த மதங்களை விழுத்தும் பொருட்டு வேத மதத்தினரும் ஆகம மதத்தினரும் தமிழ்நாட்டில் ஒத்துழைத்தனர். சமணபௌத்த மதங்கள் விழுந்தபின் ஆகம மார்க்கமும் வேத மார்க்கமும் இணைந்து பல நூற்றாண்டுகளாக வருகின்றன. இவை இவ்வாறு நீண்டகாலமாக வருகின்றமையின் இக் காலத்தவர் அவற்றின் வேறு பாட்டை உணர்வதில்லை. ஆகமங்கள் வேதங்களினின்றும் பிறந்தனவெனவும் சிலர் நம்பி வருகின்றனர். வேதங்கள் செய்யப்பட்டுச் சில காலத்தின் பின் அவை எவராலும் செய்யப்படாமல் தாமாக உள்ளன என்னும் நம்பிக்கை இருந்துவந்தது. ஆகமங்களைச் சிவபெருமான், திருமால் முதலிய கடவுளர் செய்தனர் என்னும் நம்பிக்கையும் இருந்துவருகிறது.1 வேத மந்திரங்கள் வைதீகக் கிரியைகளில் ஓதுதற்குரியன. ஆகமங்கள் சைவ, வைணவக் கிரியை முறைகளையும், யோகசாதனைகளையும் தத்துவக் கூறுபாடுகளையும் கூறுகின்றன. வைதீகக் கிரியைகள் தீ வளர்த்துச் செய்யப்படுவன. அப்போது உணவு தீயிலிடப்படுகின்றது. ஆகமக்கிரியை களில் வழிபடுவோர் உணவுகளைப் படைத்துப் பின் எடுக்கின்றனர். வைதீகக் கிரியைகளில் வெவ்வேறு தொழில்களைச் செய்கின்ற பல தேவர் அழைக்கப்படுகின்றனர். ஆகமக்கிரியைகளில் ஒரு தெய்வத் துக்கே வழிபாடு செய்யப்படுகின்றது. வேதக்கிரியைகளில் வேள்வியாசி ரியன் செய்யும் ஒவ்வொரு கிரியையும் ஒவ்வொரு மந்திரஞ் சொல்லிச் செய்யப்படுகிறது. ஆகமங்களில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. வேத மந்திரங்கள் சில ஆகமக்கிரியைகளில் சொல்லப்படுகின்றன. இம் மந்திரங்கள் பொருளற்றனவாகவிருக்கின்றன. தூப எனத்தொடங்கும் மந்திரமொன்று தூபங் காட்டும் போது சொல்லப்படுகிறது. இம் மந்திரம் மாட்டை வண்டியிற் பூட்டுவதைக் குறிக்கிறது. ஆகமக் கிரியைகளில் பெரும் பகுதி கடவுளுக்குள்ள பல பெயர்களை ஈற்றில் நம என்பதை வைத்துத் துதிப்பதாகவுள்ளது. வைதீகக் கிரியைகளின் நோக்கம் தீயில் உணவைச் சொரிவது. ஆகமக்கிரியைகளின் நோக்கம் ஒரு அரசனுக்குச் செய்வது போன்ற உபசாரங்களைச் செய்வது. வேதக்கிரியைகளுக்குத் தெய்வத்தினுருவம் வேண்டப்படவில்லை. எல்லாத் தேவர்களையும் குறிக்கத் தீ ஒன்றே போதுமானது. ஆகமக் கிரியைகளுக்குக் கடவுளின் திருவுருவம் அல்லது கடவுளை குறிக்கும் ஒரு பொருள் வேண்டப்படும். வைதீகக் கிரியைகள் மக்களை நான்கு வருணங்களாகப் பிரிக் கின்றன. கடைசி வருணத்தவருக்கு வேத, வேதாந்தக் கல்விகள் மறுக்கப் பட்டன. நான்கு வருணப் பிரிப்பிலிருந்து வருணாச்சிரம தருமங்கள் வளர்ச்சியடைந்தன. வருணங்களுக்கேற்ப வருணாச்சிரம தருமங்களும் வேறுபட்டன. இச் சாதனைகளால் சன்னியாசம் பிராமணருக்கு மாத்திரம் உரியதாக இருந்தது. சன்னியாசத்தினால் மாத்திரம் மோட்சம் அடையக் கூடியதாகவும் இருந்தது. ஆகமங்கள் இக் கொள்கைகளை எதிர்த்தன. ஆகமங்கள் நான்கு வருணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகமமார்க்கத்தின்படி சண்டாளனாயினும் சிவன், திருமால் முதலிய உருவங்களை வைத்துப் பூசிக்கலாம். வேதாந்தம் வேதத்தின் பகுதியாக இருந்தமையின் அது நான்காம் வருணத்தவருக்கு மறுக்கப்பட்டது. ஆகமங்களை எவரும் ஓதலாம். சிவதீட்சை பெற்ற புலையனும் பிராமணனுக்குத் தீட்சை செய்து அவனுக்குக் குருவாகலாம். ஆகமக் கொள்கையினரிடையே சன்னியாசமும் பரவிற்று. வைணவ சன்னி யாசிகள் ஏகாந்திகளெனவும், சைவ சன்னியாசிகள் சிவயோகிகள் எனவும் பட்டனர். ஆகமக் கொள்கையின்படி மோட்சமடைவதற்குச் சன்னியாசம் அத்தியாவசியமன்று. எல்லாருக்குமுரிய பத்திமார்க்கமே முக்கியமுடையது. ஆகமக் கொள்கையினர் கடவுளின் பெயரால் உயிர்க் கொலை செய்வதைக் கண்டித்தனர். ஆகவே தானிய மாவினால் செய்யப் பட்ட விலங்கின் வடிவங்கள் விலங்குகளுக்குப் பதில் பலியிடப்பட்டன. சிறிது சிறிதாக வேதாந்தக் கொள்கைகள் ஆகமக் கொள்கைகளோடு இணைந்தன. புராணங்களில் இவை ஒன்றாக இணையவில்லை. சைவ மடங்கள் சமண பௌத்த மதங்களை ஒழிக்கும் பொருட்டுத் தோளொடு தோள் நின்று போராடிய வைதீக, ஆகம மதங்களுக்கிடையில் சிறிது சிறிதாக மாறுபாடுகள் எழுந்தன. உயர்ந்த சமய ஞானங்களைப் பற்றிய அறிவு சமக்கிருத மொழி மூலம் நூல்களைப் பயின்று பெறப்படுதல் வேண்டும். உள் நாட்டு மொழிகள் மூலம் அவற்றைப் பயில்வது பயனற்றது. பிராமணர் ஒழிந்தோர் துறவிகள் ஆதல் கூடாது. சமக்கிருதம் தெய்வ மொழி. தமிழ், மனிதர் பேசும் மொழி என்னும் கொள்கைகள் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கின. இந் நிலை 16ஆம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்திருந்தது. மேற் கூறப்பட்ட கொள்கைகள் தோன்றிப் பரவத் தொடங்கிய காலத்திலேயே திருமந்திரம், சித்தர் பாடல்கள், மெய்கண்ட சாத்திரங்கள் முதலிய நூல்கள் எழுந்தன. எல்லாக் காரியங் களிலும் மொழி, சமூகம் என்பவற்றைப் பற்றிய அபிமானம் முதன்மை பெற்றிருந்தது. இவற்றின் உரிமைக்கு இழுக்கு நேர்ந்த காலங்களில் மக்களிடையே உள்ளக் கொதிப்பு எழுந்தது. ஒவ்வொரு சமூகத்தினரும் தமது மொழியின் உரிமை, சமூக உரிமைகளுக்குப் போராடி வந்தனர். உள் நாட்டு மொழிகள் மூலம் சமய ஞானங்களைக் கற்றறிதல் பயனற்ற தென ஒரு சாரார் கூறுதலும் தமிழ் மொழியில் பல சமய நூல்கள் இயற்றப்பட்டன. பிராமணரல்லாதார் துறவு அடைதல் கூடாது என ஒரு சாரார் கூறுதலும் பிராமணரல்லாத பலர் துறவு பூண்டனர். இவ்வகைக் குழப்பங்களுண்டாகும்போது அரசாங்கமும் இவற்றில் பங்கு பற்றுவ துண்டு. பிராமணரல்லாத துறவிகள் மடங்களமைத்துக் கொண்டு இருத்தல் கூடாது என ஒரு சாரார் கூறிக் கலகம் விளைவித்துக் கலகக் காரரை ஏவிப் பல பிராமணரல்லாதார் மடங்களை அழித்தனர்.1 ஆகவே சைவத் துறவிகள் குகைகளை நாடிச் செல்ல நேர்ந்தது. குகை நமச் சிவாயர் முதலிய பெயர்கள் இதற்குச் சான்றுகளாகும். இந் நெருக்கடியான 16ஆம் நூற்றாண்டிலும் அதனை அடுத்தும் சைவ மடங்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. சைவமடத்தலைவர் எப்பொழு தும் பிராமணரல்லாதாராகவே இருந்து வருவர். சங்கராச்சாரியார் மடங்களின் தலைவர்கள் எப்பொழுதும் பிராமணராக விருப்பர். அரசர் பெரும்பாலும் வைதீக சமயத்தவர்களைச் சார்ந்து நின்ற மையின் கோயில்கள் சிறிது சிறிதாக வைதீக மதத்தினரின் கைப்பட்டன. அக் காலத்திலேயே கிரியை முறைகள் வடமொழியில் எழுதப்பட்டு அம் மொழியில் வழங்கலாயின. வடமொழிச் சொற்றொடர்களைச் சொல்லிச் செய்யும் கிரியைகளின் இடையிலும் தமிழிசை பாடுவதாகிய ஒரு பகுதியும் இருந்து வந்தது. முற்காலத்தில் தமிழ்த்துதி பாடிப் பூசை புரியப்பட்டதன் நிழலாக இது இப்பொழுதும் இருந்து வருகின்றது. தமிழிசை பாடுவோர் பிராமணரல்லாதாராவர். மொழிபற்றிய உணர்ச்சி ஒருபோதும் மக்களுள்ளத்தை விட்டு அகன்று விட மாட்டாது. மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலும் இவ்வுணர்ச்சி எவ்வளவுக்கு மக்களுள்ளத்தில் பதிந்திருந்ததென்பதை அவர் மனோன்மணீயத்துக்குச் செய்துள்ள தமிழ்த் தெய்வ வணக்கத்தைக் கொண்டு அறியலாம். இன்றும் இவ் வுணர்ச்சி மறைந்துவிடவில்லை. தமிழ் மொழியே தமிழரின் சமய மொழியாக இருக்க வேண்டு மென்னும் கிளர்ச்சி தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. வேதாந்த சித்தாந்த சமரசம் பௌத்த, சமண மத ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட பின் அரி பெரிது, சிவன் பெரிது என்னும் கொள்கைகள் பற்றி வைணவ, சைவ மதங் களுக்கிடையில் பூசல்கள் எழுந்தன. அக்காலத்தில் தத்தம் கடவுளரே பெரியர் என்று சாதிக்கும் பொருட்டுப் பல புராணக் கதைகள் எழுந்தன. வைணவர்களுக்குள் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் தோன்றி அவைகளும் ஒன்றோடு ஒன்று தருக்கிப் பூசல் விளைத்தன. சைவரும் வைணவரும் மாறுபடுவதை விரும்பாத சிலர் “அரியும் சிவனுமொன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று சொல்லிச் சந்து செய்தனர். பிராமண மதத்தினர் சைவ சித்தாந்தக் கொள்கையினராக இருக்க வில்லை. அவர்கள் வேதாந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தனர். வேதாந்தமென்பது பிரமமொன்றே உள்ளது. உலகம். உயிர் என்பன பிரமத்தின் போலித் தோற்றங்கள் எனக் கொள்ளும் கொள்கை. சங்கராச் சாரியார் இக் கொள்கையைப் பின்பற்றி வேதாந்த சூத்திரத்துக்குப் பாடியஞ் செய்தார். இக் கொள்கை சங்கராச்சாரியருக்குப் பின் தமிழ் நாட்டில் பெரிதும் பரவத் தொடங்கிற்று. வேதாந்த கொள்கைகளை மெய்கண்ட சாத்திரங்கள் கண்டிக்கின்றன. வேதாந்த சித்தாந்தக் கொள்கைகள் சம்பந்தமான வாதங்கள் நடந்து வந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள் இவ்விரு கொள்கையின ரையும் சந்துப்படுத்தும் பொருட்டு “வேதாந்த சித்தாந்த சமரச முன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” எனக் கூறினர். குமரகுருபரசுவாமிகள் “வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த-ஆராவின்ப அருங்கனி பிழிந்த-சாரங் கொண்ட சைவ சித்தாந்தம்” எனக் கூறினர். தமிழ் நாட்டில் பிராமணரல் லாத பலர் வேதாந்தக் கொள்கைகளைப் பயின்று அக் கொள்கைகளை விளக்க நூல்கள் பல தமிழிற் செய்தனர். வேதாந்தக் கொள்கைகள் மாயா வாதம் எனச் சித்தாந்திகளால் கண்டித்து ஒதுக்கப்பட்டன. வேதாந்தக் கொள்கைகள் பரவியிருந்த காலத்திலேயே அருள் திரு.ஆறுமுக நாவலரவர்கள் தோன்றிச் சைவ சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பொருட்டுப் பல ஆக்க வேலைகள் புரிந்து வந்தார். அக் காலத்தில் மாணவரும் பொது மக்களும் சமயக் கொள்கை களைக் கற்றறிவதற்கேற்ற வசன நூல்கள் எழுதப்படவில்லை. ஆகவே நாவலரவர்கள் மாணவரும் பொது மக்களும் கற்கும் பொருட்டுச் சைவ வினா விடை போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்கள். நாவலர் காலத்தில் இக்கால முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அக் காலத்தில் பொதுவாக நம்பப்பட்டு வந்த சில கொள்கைகளையும் அவர்கள் தழுவியுள்ளார்கள். சைவ சமயத்துக்கு வடமொழி வேதங்கள் ஆதாரம், சமக்கிருதம் தெய்வமொழி என்பவை போன்ற கொள்கைகள் இப்பொழுது ஏற்றுக் கெள்ளப்படவில்லை. நாவலர் காலத்தில் அறியப்படாதிருந்த பல சரித்திர உண்மைகள் இப்பொழுது அறியப்பட்டுள்ளன. அவை மேல்நாட்டறிஞர் வெளியிட் டுள்ள மனிதவியல் நூல்களிலும் பிறவற்றிலும் காணப்படுகின்றன. சமயத்தின் நோக்கம் மனிதன் எப்படி வேடன், இடையன் முதலிய, படிகளைத் தாண்டிப் படிப்படியே நாகரிகமடைந்தானோ அவ்வாறே சமயமும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கடவுள், உயிர் உலகம் முதலிய வற்றின் தொடர்பு, வினைப்பயன் போன்ற தத்துவக் கொள்கைகள் இந்திய நாட்டிலேயே தொடங்கி கிரேக்க நாட்டுக்குச் சென்றனவென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்தியாவினின்றும் சென்று பிற நாடுகளில் குடியேறிய மக்களும் அசோகச் சக்கரவர்த்தியால் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சமயபோதகர்களும் இக் கொள்கைகளைப் பிறநாடுகளில் பரவச் செய்தனர். கிரேக்க தத்துவ சாத்திரிகளில் முந்தியவ ராகிய பிதகோரஸ் இந்தியாவுக்கு வந்தோ, அல்லது பாரசீகத்திலிருந்தோ கபிலரின் சாங்கியக் கொள்கைகளை அறிந்து அக் கருத்துக்களைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டாரெனச் சிலர் கருதுகின்றனர். கபிலர் காலம் முதல் தத்துவ சம்பந்தமான மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ச்சியடைந்தன. சமயத்தின் முடிவு பிறப்பை ஒழிப்பது என்பது பலசமயங்களின் கோட்பாடாக இருந்து வந்தது. நாளேற நாளேறத் தத்துவமுறையான சமயக் கொள்கைகள் மறக்கப்பட்டன. தத்துவமுறை யில் சமயத்தை அனுட்டிப்பவர் இக் காலத்தில் அரியர். சமயங்கள் என்பன சமூகங்கள் என்பன போல ஒவ்வொரு கூட்டத்தினராலும் பெய ரளவில் கைக்கொள்ளப்படுவனவாக இருந்துவருகின்றன. சமயத்தின் பெயரால் சமூகங்களின் இணைப்பு உண்டாகிறது. சமயத்தில் கூறியபடி நடத்தல் வேண்டுமென்னும் கடப்பாடு ஒரு சமயத்தவராலும் கொள்ளப் படுவதில்லை. சமயம் ஒரு புறமும் மக்களின் நடத்தை இன்னொரு புறமாகவுமிருந்து வருகின்றன. பௌத்தமோ, சமணமோ, சைவமோ உள்ள நாட்டில் ஒரு பௌத்தன், சைவன், அல்லது சமணன் கடல் தொழில் அதிகாரியாக இருக்க முடியாது. ஆனால் இன்று அப்படியல்ல. ஒருவன் அச்சமய சின்னங்களை அணிந்து கொள்ளலாம், அச் சமயக் கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் கடப்பாடு வேண்டியதில்லை. சமயங்கள் உயர்ந்த நோக்கத்தோடு வளர்ந்தன. இன்று சமயங்களின் நிழல்களே உலாவுகின்றன. மதங்கள் மறைந்துவிட்டன வென்று கூறலாம். சங்கரர் வேதாந்த அத்வைதக் கொள்கையைக் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் போதித்துப் பரவச்செய்தவர் சங்கரர். இவர் மலை யாளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் நம்பூதிரிப் பிராமணர் குலத்திற் பிறந்தார். இவர் குடும்பத்தினரின் சமயம் சிவமதமென்று சிலரும், சாக்த மதமென வேறு சிலரும் கூறுவர். இவர் கௌடபாதரின் மாணாக்கராகிய கோவிந்தரிடத்தில் வேதங்களைக் கற்றார். கோவிந்தர் இவருக்கு அத் வைதக் கொள்கைகளைக் கற்பித்தார். எட்டு வயதாகவிருக்கும்போதே இவர் வேதங்களை எல்லாம் கற்றுக் கரைகண்டார். இவர் இடங்கள் தோறுஞ் சென்று வேறு மதக்கொள்கையுடைய மதத் தலைவர்களோடு வாதம் புரிந்தார். இவர் குமாரிலர், மந்தனமிசிரர் முதலியவர்களோடு வாதம் புரிந்ததாக ஐதீகமுண்டு. மந்தனமிசிரர் சங்கரரின் மாணவராகிச் சுரேஸ்வர ஆசிரியர் என அறியப்பட்டார். சங்கரர் நான்கு மடங்களைத் தாபித்தார். இவற்றில் முதன்மைபெற்றது மைசூரிலுள்ள சிரிங்ககிரி மடம். சன்னியாசிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குமாறாக இவர் தாயின் அந்தியக் கிரியைகளைச் செய்தார். அவர் கூட்டத்தினர் இதற்காக அவரை எதிர்த்தனர். இவர் 32ஆவது வயதில் காலமானார் என்று ஐதீகமுண்டு. இவர் கி.பி. 778-820 வரை வாழ்ந்தாரெனச் சிலரும் 9ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தாரென வேறு சிலருங் கூறுவர். இவர் சமயகுரவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தருக்குப் பின் வாழ்ந்தவ ரென்பது இவர் திருஞான சம்பந்தரைத் திராவிட சிசு எனச் சௌந்தரிய லகரியிற் குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியப்படுகின்றது. 1புதுமுறை இந்துமதம் இவர் பழைய சமயநூல்களுக்கு அத்வைதமுறையான உரை கண்டார். 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டில் புதுமுறையான இந்துமதம் தோன் றிற்று. தெற்கில் பௌத்தமதம் வீழ்ச்சி அடைந்தது. சமணம் உச்சநிலை யடைந்தது. வைதீகக் கிரியைகள் மங்கிக்கொண்டிருந்தன. சைவ அடியார் களும், வைணவ ஆழ்வார்களும் பக்திமார்க்கத்தைப்பரப்பிக் கொண் டிருந்தார்கள். புராண சம்பந்தமான இந்துமதமும், புராண சம்பந்தமான விழாக்களும் எங்கும் பரவின. தெற்கில் பல்லவ அரசர்கள் உச்ச அதிகாரம் பெற்று விளங்கினார்கள். அக் காலத்தில் பிராமணமதம் புராண இந்து மதமாக மாறிற்று. பல்லவர் ஆட்சியின் தொடக்கத்தில் அரசர் பௌத்த மதத்தினராக விருந்தனர். பிற்காலத்தவர்கள் வைணவர்களாகவும், சைவர் களாகவுமிருந்தார்கள். பௌத்த மதத்தினரின் துறவுக் கொள்கையை எதிர்ப்பதற்காகவும், கடவுட் கொள்கையில் பக்தியை உண்டாக்குவதற் காகவும் மீமாம்சகர் வேதக்கிரியைகளின் முதன்மையை மிகைப்படுத்தி னர். குமாரிலரும் மந்தனமிசிரரும் ஞானத்தையும் சன்னியாசத்தையும் பழித்து இல்லாச்சிரமத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். (குமாரிலர் மீமாம்சை சூத்திரத்துக்கும் அதன் பாடியத்துக்கும் உரைசெய்தவர். இவர் பீகார் பிராமணர். பௌத்த மதத்திலிருந்து இந்து மதத்தைத் தழுவியவர்). அத்வைதம் இக் காலத்தில் சங்கரர் சமய சீர்திருத்தக்காரராகத் தோன்றினார். அவர் புராணகாலக் கொள்கைகளையும் உபநிடதங்களின் உண்மை களையும் பரப்ப முயன்றார். இம் முயற்சியில் அவர் உயிரை உயர் வழிப் படுத்தக்கூடிய ஒரு தத்துவக் கொள்கையைக் கொண்டு போராடினார். பௌத்தம், மீமாம்சை, பத்தி முதலிய கொள்கைகளிலும் பார்க்க மக்களின் ஆன்மீக தேவைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய தத்துவ ஞானம் வேண்டப்பட்டது. மீமாம்சை கிரியைகளால் உயிர்களை உயர் நிலைப்படுத்தலாமென்றது. அக் காலத்தில் பிளவு பட்டிருந்த சமயக் கொள்கைகளை எல்லாம் திருப்திப்படுத்துவதற்கு உயிர் பிரமத்தோடு ஐக்கியப்பட்டுப் பிறப்பொழிவதாகிய வழியைக் கூறும் அத்வைதஞானம் சிறந்ததென அவர் கண்டார். அவர் அதனை மக்களுக்குப் போதித்தார். மலையாளத்திலிருந்து இமயத்துக்குச் செல்லும் வரையில் அவர் பல சமயங்களைக் கண்டார். விட்டுணு, சிவன், சக்தி, சூரியன் முதலிய கடவுளர் மீது அழகிய பாடல்கள் செய்தார். அவர் தென்னிந்தியாவில் சக்தி வழிபாட்டைக் கீழ்ப்படுத்தினார். கல்கத்தாவிலுள்ள காளிகோயி லில் இது முடியவில்லை. வைணவர் சங்குசக்கரம் சுட்டுக்கொள்வதை இவர் கண்டித்தார். இவர் பகவத்கீதை, வேதாந்த சூத்திரம், உபநிடதம் முதலியவற்றுக்கு உரைசெய்தார். தக்கணாமூர்த்தி தோத்திரம், ஆனந்தலகரி, சௌந்தரியலகரி, விட்ணுசகத்திரநாமம் போன்ற பல தோத்திர நூல்களையும் செய்தார். சங்கரருக்குப் பின்பே மாயாவாதம் என்னும் வேதாந்தக் கொள்கை தென்னாட்டிற் பரவிற்று. மாயாவாதம் பிரமத்தை விட உயிர் உலகம் என்பன பொய் (மித்தை) எனக் கூறுவது. சூரியன் ஒன்றே குடங்களில் நிறைக்கப்பட்ட நீரில் பல சூரியராகத் தோன்றுவது போலப் பிரம மொன்றே பல உயிர்களாகத் தோன்றுகின்றதெனக் கூறுகின்றது. இக் கொள்கை பதி, பசு, பாசம் என்னும் முப் பொருள்களும் உட் பொருள்கள் எனக்கூறும் சைவ, வைணவ மதக்கொள்கைகளுக்கு முரணானது. பக்தி மார்க்கத்துக்கு மாறாகவிருந்தமையின் இது தென்னாட்டில் தலை யெடுக்கவில்லை. இக் கொள்கைகளை சந்தானாசிரியர்களும் பிறரும் கண்டித்திருக்கின்றனர். “யானே பிரமனென்றிடும் பாதகத்தவரும்” “ஒன்றென்ற தொன்றேகாண் பதி, பசுவாம் - ஒன்றென்ற நீ பாசத்தோ டுனைகாண்” “பதி, பசு, பாசமெனப் பகர் மூன்றினிற் பதியினைப்போற் பசு பாசமனாதி” போன்ற வாக்கியங்கள் மாயாவாதக் கொள்கையை மறுத்துக் கூறுபவற்றுட் சில. “மாயாவாதமென்னுஞ் சண்டமாருதஞ் சுழித்தடித் தார்ப்ப” என்னும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கும் அதனைக் கண்டிப்பதாக இருக்கலாம். விவேகானந்தரும் சங்கரர் மதக் கொள்கைகளைக் கடைப் பிடித்தவராவர். இராமகிருஷ்ண சபை, விவேகானந்த சபைகளை மேற் பார்க்கும் சுவாமிகளாக உள்ளவர்களும் இம் மதக்கொள்கையினரே ஆவர். மாயாவாத வேதாந்தத்தைத் தழுவியிருந்த வைதீகர் திருக்கோயில் வழிபாட்டையும் கோயிற்பூசை செய்யும் புரோகிதரையும் தாழ்ந்தவர் களாகக் கருதினர். அக் காலத்திலேயே தமிழில் சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள் எழுந்தன. வைணவ ஆசாரியார்கள் சங்கரர் கொள்கைக்கு மாறாக வேதாந்த சூத்திரம், பகவத்கீதை முதலிய சூத்திரங் களுக்கு விசிட்டாத் துவைத, துவைத உரைகள் செய்தனர்; ஆகமங்களைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினர். சந்தான குரவர் சமயாசாரியர்கள் மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப் பினார்கள். சந்தானாசிரியர்கள் தத்துவ ஞானத்தைப் பரப்பினார்கள். மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமா பதி சிவாசாரியர் என்னும் நால்வரும் சந்தானாசிரியர்கள் எனப்படுவர். மெய்கண்டார் சடையப்ப வள்ளலின் மகளின் மகன் என்னும் ஐதீகமுளது. சிவஞானபோதம் மெய்கண்டாரால் 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது. திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரு நூல்கள் மெய்கண்ட தேவருக்கு முன் வாழ்ந்த குருவும் மாணவருமாகிய உய்யவந்ததேவர் என்னும் பெயருடைய இருவரால் செய்யப்பட்டவை. மெய்கண்டாரின் மாணவரிலொருவர் அருணந்தி சிவாசாரியர். இவர் அந்தண குலத்தவர். இவர் செய்த நூல் சிவஞான சித்தி, இருபாஇருபஃது என்னும் இரு நூல்கள். சிவஞானசித்தி சிவஞான போதத்துக்கு விரிவுரை போல அமைந்துள்ளது. மறைஞான சம்பந்தர் வேளாண்மரபினர். இவருடைய மாணவர் உமாபதி சிவாசாரியர். உமா பதி சிவாசாரியர் அந்தண மரபினர். அந்தணரல்லாதாரிடம் அந்தண வகுப்பினர் உபதேசம் பெறுவதும், அவர்களிடம் மாணாக்கராகவிருந்து உண்மை ஞானங்களைப் பெறுதலும், தமிழ்நாட்டு வழக்காக விருந்தன வென்பதும், வருணாச்சிர தருமங்கள் என்பன தமிழ் நாட்டுக்குப் புறம் பானவை என்பதும் இதனால் தெரியவருகின்றன. மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்யவில்லை. உமாபதி சிவாசாரியர் திருவருட்பயன், போற்றிப்பஃறொடை, வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், நெஞ்சு விடுதூது, சிவப்பிரகாசம் முதலிய நூல்களைச் செய்தார். சங்கற்ப நிராகரணம் கி.பி. 1313இல் செய்யப்பட்டது. சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தவர் மனவாசகங் கடந்தார். இவர் மெய்கண்டாரின் மாணவருளொருவர். சைவ சித்தாந்தம் உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள் களும் உட்பொருள்களென்றும், உயிர்கள் எண்ணிலாதன, அனாதியே மும்மலங்களால் பந்திக்கப்பட்டவை என்றும், இறைவன் உலகம் எல்லாமாகியும், உலகத்துக்கு வேறாகியும், எண்ணில்லாத உயிர்கள் கன்மத்தின் ஆணையில் அமர்ந்துசெல்ல அவற்றுக்கெல்லாந் தலைவ னாகவுமிருப்பவன் என்றும் மும்மூர்த்திகளுக்கு மேலானவன் என்றும் கூறுகின்றது. சிவனுக்கு அவதாரங்களில்லை. அவர் அடியார் வழிபடும் உருவில் குருவாகத் தோன்றி அவர்களை ஆட்கொள்பவர். உயிர்களின் போக போக்கியங்களுக்கு ஏதுவாகிய மாயை உட்பொருள். உபநிடதங்கள், ஆகமங்கள், திருமந்திரம், திருமுறை நூல்களிற் கூறப்படுவன சைவ சித்தாந்தக் கொள்கைகளே. சைவ சித்தாந்தக் கொள்கையே மிகப் பழங்காலம் முதல் தமிழரிடையே இருந்துவந்த சமயக் கொள்கையெனத் தெரிகின்றது. வசவர் இவர் கன்னட நாட்டில் பாகவாடி என்னுமிடத்தில் பிராமண குலத்தில் கி.பி. 1125இல் பிறந்தார். இவர் கல்யாணி அரசனாகிய பிச்சால னுக்கு (1156-1166) மந்திரியாக இருந்தார். இவர் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தமையால் அரசன் இவருடைய சகோதரியை மணஞ்செய்தான். வசவர் இன்னொரு சகோதரியின் மகனாகிய சன்னபச வருடன் வீர சைவமதக் கொள்கைகளை வேகமாகப் பரப்பி வந்தார். வீரசைவக் கொள்கை தெலுங்கு நாட்டிலும் தென் பகுதிகளிலும் பரவிற்று. அனுபவ மண்டபமென்னும் சமய கூடத்தை இவர் அமைத்தார். இதன் தலைவர் அல்லமாப் பிரபுவாக இருந்தார். சாதியை ஒழிப்பது, தொழிலுக்கு மதிப்பளிப்பது, பெண்களுக்கு ஆண்களை ஒத்த மதிப்பளிப்பது என்பன இம்மதக் கொள்கைகளுட் சில. வீர சைவ மதத்தைத் தொடக்கியவ ரல்லராயினும் அம்மதக் கொள்கைகளைப் பரப்பியவர் என்னும் வகையில் வசவர் புகழ் பெறுவர். வீர சைவம் வீர சைவம் என்பதற்கு வீறான அல்லது வீரமுள்ள சைவமென்பது பொருள். இம்மதம் மிகப் பழங்காலத்தில் ஐந்து ஞானாசிரியர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாசியர்கள் கலியுகத் தொடக்கத்தில் இரேவண சித்தர், மருள சித்தர், ஏகோராமர், பண்டிதாரத்தியர், விசுவாராத்தியர் என்னும் குரவர்களாக அவதாரஞ் செய்து இக் கொள்கைகளை மறுபடி யும் வெளியிட்டார்கள். இவ்வாறு வீர சைவர்களின் ஐதீகம் இருந்து வருகிறது. இவர்கள் சாமான்ய, மிர்ச, சித்தாந்த சைவர்களுக்கு வேறான வர்கள். முன் இரு பிரிவினரும் சிவனையும் விட்டுணுவையும் வழிபடுவர். சித்தாந்த சைவரும், வீர சைவரும் சிவனை மாத்திரம் வழிபடுவர். இலிங்க தாரணஞ் செய்து கொள்வது வீர சைவரைச் சித்தாந்த சைவரிலிருந்து வேறுபடுத்துகின்றது. ஆகவே இவர்கள் இலிங்காயதர் என்னும் பெயர் பெறுவர். வீர சைவம் ஆகமங்களைத் தழுவும் மதம். இது அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுக்குப் பக்தி செலுத்துகின்றது. இவர்கள் மத்திய கால அடியார்களெனப்படுவர். மத்திய கால அடியார்களும் 770 பேர் உளர். இவர்களுள் வசவரும் அவரது முக்கிய சீடர்களும் சேர்க்கப்பட் டுள்ளனர். வீர சைவ தத்துவ ஞானம் சக்தி விசிட்டாத்துவைதம் எனப் படும். இக் கொள்கையின்படி உயிரும் கடவுளும் ஒன்றை விட்டொன்று பிரிக்க முடியாத பொருள்கள். பிரிக்க முடியாது இணைத்துக் கொண் டிருக்கும் ஆற்றல் சக்தி எனப்படும். உயிர் கடவுளுமன்று, கடவுளில் வேறு மன்று. சக்தி பரமசிவத்தோடு எப்பொழுதுமிருக்கும் பிரிக்க முடியாத பொருள். இச் சக்தியே மூலப்பிரகிருதி அல்லது மாயையாகப் பிரிந்து உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. சூரியனுக்கு ஒளியும், நெருப்புக்குச் சூடும் இருப்பதுபோலக் கடவுளுக்குச் சக்தி இருக்கிறது. அவித்தை ஒழியும்போது சீவன் சிவனுடன் கலந்து ஒன்றாகி விடுகிறது. வைதீக சமயம் கி.மு.2000 வரையில் ஒரு புதிய மக்கட் கூட்டத்தினர் வடஇந்தியா வின் தென்மேற்குப் புறத்தை அடைந்தனர். இவர்கள் ஆரியரெனப்பட் டார்கள். இவர்கள் வரும்போது இந்தியாவில் நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களின் வருகைக்கு முற்பட்டது மொகஞ்சதரோ நாகரிகம். புதியவர்களாக வந்த ஆரியர் மந்தை மேய்ப்ப வர்களாக இருந்தனர். இவர்களின் வழிபாடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வழிபாட்டைவிட வேறு வகையாக இருந்தது. இவர்கள் இடி, மின்னல், காற்று, நெருப்புப் போன்ற இயற்கைப் பொருள்களைக் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டார்கள். அக் கடவுளர் மீது பாடப்பட்ட துதிப்பாடல்கள் பல அவர்கள் நினைவில் மிதந்து கொண்டிருந்தன. எழுதும் முறையை அறியாதிருந்தமையால் அவர்கள் அவற்றை எழுதி வைக்கவில்லை. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடஞ் செய்யும் முறையில் அவை காப்பாற்றப்பட்டு வந்தன. இந்திய நாட்டை அடைந்த பின்பும் அவர்களில் பலர் தெய் வங்கள் மீது பல பாடல்களைச் செய்தார்கள். பாடல்களைச் செய்த வர்கள் இருடிகள் எனப்பட்டார்கள். இவர்கள் வேறு வகை நாகரிகமும் மொழியுமுடைய மக்களின் மத்தியிலிருந்தமையால் தமது பாடல்கள் அழிந்து போகாமல் இருக்கும் பொருட்டு, நினைவில் மிதந்து கொண் டிருந்த பாடல்களெல்லாவற்றையும் திரட்டிப் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட பாடல்களின் தொகுப்பு வேதமெனப்பட்டது. வேள்விகளில் வேத பாடல்கள் பாடப்பட்டன. வெவ்வேறு கிரியைகளில் வேதபாடல்களில் சிற்சில பகுதிகளே பாடப்பட்டன. இவ்வாறு வெவ்வேறு கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட தொகுதிகள் வெவ்வேறு பெயர்கள் பெற்றன. வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்கு. முதல் மூன்றும் மொழி, பொருள்களில் பெரிதும் ஒற்றுமையுடையன. இவற்றுள் இருக்கு முதன்மையுடையது. சாமவேதம் துதிப் பாடல்களாக அமைந்துள்ளது. இப் பாடல்களில் பல இருக்கு வேதத்தில் காணப்படு கின்றன. சாமவேதப் பாடல்கள் யாகங்களில் பாடுவதற்காகத் திரட்டப் பட்டவை. எசுர்வேதப் பாடல்கள் கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக் கப்பட்டவை. வேதங்களை வியாச முனிவர் நான்காகப் பிரித்தார் என்னும் ஐதீகம் இருந்து வருகிறது.1 வேதங்களை மந்திரம், பிராமணம் என இரண்டாகப் பிரிக்கலாம். யாகக் கிரியைகளுக்காக மாத்திரம் திரட்டப்பட்ட பாடல்கள் மந்திர மெனப்பட்டன. அதற்கு மற்றொரு பெயர் சங்கிதை. மந்திரங்கள் இருக்கு வேத சங்கிதை, எசுர்வேத சங்கிதை முதலிய பெயர்கள் பெறும். யாகக் கிரியைகளை விரித்துக் கூறும் பாடல்களும் பல உரைநடைப் பகுதிகள் கொண்ட பகுதிகளும் பிராமணங்கள் எனப்பட்டன. பிராமணங்களை வேதங்களின் மிகப் பழைய உரைகள் எனக் கூறலாம். பிராமன் எனப் படுவது வேதம். பிராமனோடு சம்பந்தப்பட்டது பிராமணம். பிராமணங் களில்2 கிரியை முறைகளும் தத்துவ ஞானங்களும் அடங்கியுள்ளன. தத்துவார்த்தமான ஞானங்களடங்கிய பகுதி ஆரணியகங்களெனப் பட்டன.3 அவை எல்லோருக்கும் கற்பிக்கப்படுவதில்லை. அவற்றை விளங்கிக்கொள்வதற்குத் தனிமையும் அமைதியும் வேண்டும். உபநிட தங்களில் பல ஆரணியகங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வேதத்திலும் மந்திரங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் என்னும் மூன்று பிரிவுகளிருக்கின்றன. வேதத்தினிறுதியில் சேர்க்கப்பட்டிருப்பதால் உபநிடதங்கள் வேத முடிவு அல்லது வேதாந்தம் எனப்பட்டன. வேதங்களில் வருணன், மித்திரன், சூரியன், பூசன், அசுவினி, சோமன், இந்திரன், உசாக்கள், அதிதி, அக்கினி, உருத்திரன், மருத்துக்கள், பிரமன், பிரகஸ்பதி முதலிய பல தெய்வங்களுக்குத் துதிகள் காணப் படுகின்றன. வேதகாலச் சமயம் விக்கிரக வணக்கத்தைக் கைக்கொள்ள வில்லை. தெய்வங்களுக்குக் கோயில்களிருக்கவில்லை. தெய்வங்கள் வழிபடுவோரின் நண்பர்களாக இருந்தன. தமது தேவைகளை உதவுமாறு மக்கள் தெய்வங்களைத் துதித்தார்கள். வேள்விகளில் உணவும் நீரும் பெறும் பொருட்டு பிதிரர் (இறந்தவர்களின் ஆவிகள்) அழைக்கப் பட்டனர். தேவர்களை மகிழ்விப்பதற்கு யாகங்கள் செய்யப்பட்டன. மறு பிறப்பைப்பற்றி அறியப்படவில்லை. மரணத்துக்குப் பின் உயிர்கள் நரகம் அல்லது சுவர்க்கம் போன்ற உலகங்களில் வாழ்கின்றன என்னும் நம்பிக்கை இருந்து வந்தது. பிராமணங்கள் வேதத்தின் இரண்டாவது பகுதி பிராமணங்கள். இவை சதபதம், ஐதரேயம் என்பன. வேள்விக் கிரியைகளையும் வேள்விகளிற் படிக்கும் மந்திரங்களையும் அறிந்தவன் பிராமணன் எனப்பட்டான். யாகங்களால் இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்னும் நம்பிக்கை உறுதி பெற்றிருந்தது. நூறு யாகங்களைச் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரச னாகிய இந்திரனையும் பதவியிலிருந்து விழுத்தலாமென நம்பப்பட்டது. உலகில் எல்லாம் நடைபெறுவது யாகங்களினால்; யாகங்களில்லாவிடில் சூரியனும் உதிக்கமாட்டாது என்பது போன்ற நம்பிக்கைகளும் இருந் தன. யாகங்கள் அதிகப்பட்டதும் புரோகிதரின் மதிப்பும் அளவு கடந்து வளர்ந்தது. உபநிடதங்கள்1 உபநிடதமென்பதற்குக் கிட்ட இருத்தல் என்பது பொருள். இதன் கருத்து கிட்ட இருந்து கற்கப்படுவதென்பது. உபநிடத ஞானத்தைக் குரு தகுதியுள்ள தமது மாணாக்கனுக்கு உபதேசித்தார். உபநிடதங்கள் எத்தனை என்பதைக் குறித்து அறிஞர் ஒரே வகையாகக் கூறவில்லை. சிலர் 150 என்றும், சிலர் 108 என்றும் கூறு கின்றனர். முத்திகோப உபநிடதம் 108 உபநிடதங்களைக் குறிப்பிடுகின் றது. இப்பொழுது 108 உபநிடதங்களுள்ளன. 1656இல் உபநிடதங்கள் சில பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் 50 உபநிடதங்க ளுள்ளன. அவ்வைம்பதும் இன்று கிடைக்கவில்லை. 14 உபநிடதங்களே வேதங்களைச் சேர்ந்தனவென்று சங்கராச்சாரியர் (கி.பி.8ஆம் நூ.) கூறியுள்ளார். மற்றைய ஆச்சாரியார்கள் 102 உபநிடதங்களே பிரமாண மாக உள்ளவை என்று கூறியுள்ளார்கள். ஈச, கேன, கதா, முண்டக, மண்டூக்கிய, ஐதரேய, தைத்திரீய, பிராஸ்ன, சாந்தோக்கிய, பிரிதாரண்யக முதலிய உபநிடதங்களிற் காணப்படாத புதிய கருத்துக்கள் மற்றைய உபநிடதங்களிற் காணப்படவில்லை. ஈசா, கேனா என்னும் சொற்களோடு தொடங்குகின்ற உபநிடதங்கள் ஈச, கேன என்னும் பெயர்களைப் பெற்றன. கதா என்பது எசுர் வேதத்தி லுள்ள பிராமணத்தின் ஒரு பகுதியில் இப்பெயருடன் காணப்படு கின்றது. முண்டகம் மழிக்கப்பட்ட தலையைக் குறிக்கும். இது சன்னியாசி களைக் குறிக்கின்றது. சன்னியாசிகளுக்குரியதாதலின் இது இப் பெயர் பெற்றது. மண்டூகர் என்னும் இருடி செய்த உபநிடதம் மண்டூக உபநிடதமெனப்பட்டது. பிராஸ்ன என்பது கேள்வியைக் குறிக்கும். இதில் ஆறு கேள்விகள் இருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட்டது. ஐதிரேய உபநிடதம் ஐதிரேயராற் செய்யப்பட்டது. தைத்திரீய உபநிடத்தைப் பற்றிப் புதுமையான கதை வழங்குகிறது. யாக்ஞவல்கி தமது மாணவ ரொருவருடன் யாதோ காரணமாக வெறுப்படைந்தார். அவர் கோபா வேசத்தில் தாம் கற்பித்தவற்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார். மாணாக்கர் அதனை வாந்தி செய்தார். இருடிகளிற் சிலர் கௌதாரி வடிவங் கொண்டு அதனை உண்டனர். கௌதாரி தித்திரீஸ் எனப்படும். சாந்தோக்கியமென்னும் பெயர்வந்த காரணம் அறிய முடியவில்லை. பிர்கத் ஆரணியமென்பதற்கு ஆரணியத்திற் செய்யப்பட்ட பெரிய கதை என்பது பொருள். இவ்வுபநிடதங்களின் காலங்களைக் குறிப்பிட முடியாது. இவை புத்தர் காலத்துக்கு முற்பட்டவை எனக் கூறலாம். உபநிடதங்களின் காலம் கி.மு. 1000க்கும் 500க்குமிடையில். உபநிடதங்கள் ஒருவரால் எழுதப்பட்டவையல்ல. அவை உபதேசங்களின் குறிப்புகளாகும். உபதேசங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கேள்விமுறையில் வந்தன. நீண்ட காலத்தின் பின் அவை பல்வேறு ஆச்சிரமங்களில் மாணவருக்கு உபதேசிக்கும் பொருட்டுக் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டவை. இக் குறிப்புகளே உபநிடதங்கள் என்னும் வடிவில் வெளி வந்துள்ளன. உபநிடதங்கள் வேதங்களின் பகுதிகளாகவுள்ளன. நால்வேதங் களினிறுதியிலும் பத்து உபநிடதங்களுள்ளன. ஆகவே, உபநிடதங்கள் வேதாந்தம் எனப்படும். அவை ஞானங்களைக் கூறுகின்றன. சங்கராச் சாரியர் உரையெழுதிய உபநிடதங்கள் பௌத்த மதத்துக்குப் பிற்பட் டவை. பழைய உபநிடதங்கள் உரைநடையிலுள்ளன. இவை ஒரு கட்சியைச் சேர்ந்தவையல்ல. உபநிடதங்கள் செய்தவர்களைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை. அவர்கள் தமது பெயர்களை வெளிப் படுத்தவில்லை. உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன. பிற்காலத் தில் உபநிடதம் என்னும் பெயருடன் பல நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் அல்லா உபநிடதம் என்பதும் ஒன்று. உபநிடத ஞானங்கள் ஆரியரின் வருகைக்குமுன் மொகஞ்சதரோ மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தவை. இஞ்ஞானங்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை.1 அரசவகுப்பினரே இவற்றை அறிந் திருந்தார்கள். அவர்களிடமிருந்து பிராமணர் இஞ்ஞானங்களைப் பெற்றார்கள். சாங்கியம், வேதாந்தம், பௌத்தம், சமணம் போன்ற மதக் கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாகவுள்ளவை உபநிடத ஞானங்களே. தரிசனங்கள் பௌத்தமும், சமணமும் தோன்றி வேதமார்க்கத்தை எதிர்த்தன. பௌத்த மதத்துக்குத் தர்க்கம் ஆயுதமாக இருந்தது. பௌத்த மதத்துக்கு முன் பலதத்துவ ஞானக் கொள்கைகள் தோன்றி ஆங்காங்கு நிலை பெற்றிருந்தன. இப்பொழுது இத் தத்துவஞானக் கொள்கைகளைத் தர்க்க முறையாக ஒழுங்கு செய்ய வேண்டிய அவசியமுண்டாயிற்று. நியாயம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையிலிருந்தால் கொள்கைகளின் முடிவுகளில் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். அக்காலத்தில் தத்துவமுறையான ஆறு தரிசனங்கள் இருந்தன. அவை கௌதமரின் நியாயமும், கணாதரின் வைசேடிகமும், கபிலரின் சாங்கியமும், பதஞ்சலியின் யோகமும், யமினியின் பூர்வமீமாம்சையும், வாதநாராயணரின் உத்தரமீமாம்சையு மாகும். இவை எல்லாம் வேதங்களைத் தமக்குப் பிரமாணமாகக் கூறுகின்றன. ஆத்திகமும் நாத்திகமும் அக்காலத்தில் வேதங்களைப் பிரமாணமாகக் கொண்ட சமயங்கள் ஆத்திகமென்றும், அவற்றைப் பிரமாணமாகக் கொள்ளாத சமயங்கள் நாத்திகமென்றும் அறியப்பட்டன. ஆத்திகம், நாத்திகம் என்பவற்றின் முடிவு வேதத்தை ஆதாரமாகக் கொள்வதிலேயே தங்கியிருந்தது. ஆத்திகத் துக்குக் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் நியதி இருக்கவில்லை. பௌத்த மதத்தின் தொடக்கமும் உபநிடதங்களிலுள்ளது. வேதங்களைப் பிரமாணமாகக் கொள்ளாமையால் அது நாத்திகம் எனப்பட்டது. வேதங்களை ஒப்புக்கொள்வது அனுபூதி, தர்க்க முடிவு களிலும் பார்க்க மேற்பட்ட முடிவு எனக் கருதப்பட்டது. வைசேடிகமும் நியாயமும் கடவுளை அனுமானத்தினால் ஒப்புக்கொள்கின்றன. சாங்கி யம் கடவுட் கொள்கையுடையதன்று. யோகம் வேதத்துக்குப் புறம்பே நிற்கின்றது. இரண்டு மீமாம்சைகளும் வேதங்களை ஆதாரமாகக் கொள் பவை. பூர்வமீமாம்சை தெய்வங்களை வேதங்களிலிருந்து கொள்கிறது. அது தலைமையான ஒரு முழுமுதற் கடவுளைப்பற்றி அக்கறை கொள்ள வில்லை. உத்தரமீமாம்சை சுருதி அனுமானங்களால் கடவுளை ஒப்புக் கொண்டு தியானத்தினாலும், ஞானத்தினாலும் கடவுளை அடையலா மெனக் கூறுகின்றது. கடவுட் கொள்கையுள்ள பிற்கால அறிஞர் சாங்கியத்தைத் தரிசனங்களிலொன்றாகக் கொள்ள மறுத்தனர். சூத்திர வடிவில் தத்துவ ஞான நூல்கள் ஒவ்வொரு தத்துவ ஞானக் கொள்கையினரும் தத்தமக்கு ஏற்றவாறு வேதவாக்கியங்களுக்குப் பொருள் கண்டார்கள். அவர்கள் தத்தம் கொள்கைகளை முறைப்படுத்திக் கூற முயன்றபோது சூத்திரங்கள் எழுந்தன. சூத்திரமென்பது பரந்த பொருளைச் சுருங்கக் கூறும் ஒரு வகைப் பா. சூத்திரங்கள் செய்யப்பட்ட பின் தத்துவ ஞானங்களைப் பற்றிய கொள்கைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. தத்துவ ஞானங் களைப் பற்றிய சூத்திரங்கள் ஏறக்குறைய ஒரே காலத்தில் தோன்றியன வாகக் காணப்படுகின்றன. சூத்திரங்களைச் செய்தவர்கள் இத் தத்துவ ஞானங்களைத் தொடக்கியவர்களல்லர். இத்தத்துவ ஞானங்கள் சூத்திரங்கள் செய்யப்படுவதன் முன் தனித்தனியே வளர்ந்தன. தத்துவ ஞானங்கள் குருமாணாக்க முறையில் பயிலப்பட்டுவந்தன. எல்லாத் தத்துவஞானங்களும் வேதத்தைப் பிரமாணமாகக் கொள்வதால் அவை எல்லாம் ஒரு தொடக்கத்தை உடையனவென்று தெரிகிறது. மாயை, புருடன், சீவன், அவித்தை போன்ற சொற்களை எல்லாத் தரிசனகாரரும் ஆளுகின்றனர். ஆனால் இச் சொற்களை ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு கருத்துக்களில் ஆண்டுள்ளனர். எல்லாத் தரிசனங்களும் பௌத்தரின் நிரீச்சுரக் கொள்கையைக் கண்டிருக்கின்றன. பூர்வ மீமாம்சையைத் தவிர மற்றைய தரிசனங் களெல்லாம் பிறப் பொழிப்பை (வீட்டை) குறிக்கோளாக உடையன.1 “ஒவ்வொரு தத்துவ ஞானத்தைப் பற்றியும் சூத்திர வடிவில் நூல்கள் செய்யப்பட்டன. இச் சூத்திரங்கள் ஒவ்வொன்றிலும் மற்றைய தத்துவஞானங்களைக் கண்டிக்கும் பகுதிகளுண்டு. இப் பகுதிகள் மற்றைய தத்துவஞான நூல்கள் எழுதி முடிந்தபின்பே எழுதப்பட்டிருத் தல் வேண்டும். எல்லாத் தத்துவ ஞானங்களும் ஒரே காலத்தில் தோன்றி ஒன்றன் பக்கத் தொன்றாக வளர்ச்சி அடைந்தன என்று கூற முடியாது. முதலில் தத்துவஞானக் கொள்கைகளுக்குக் கருவாகவுள்ள சூத்திரங்கள் செய்யப்பட்டன. பின்பு மற்றைய கொள்கைகளைக் கண்டிக்கும் சூத் திரங்கள் செய்யப்பட்டன. சில காலத்தின் பின் இச் சூத்திரங்கள் மாற்றத்துக் கிடமில்லாமல் நிலைத்து விட்டன. ஆறு தரிசனங்களையும் சில ஒற்றுமைகளால் இவ்விரண்டாக (மூன்று சோடிகளாகப்) பிரிக்க லாம். நியாயமும் வைசேடிகமும் ஒரு சோடியும், சாங்கியமும் யோகமும் இன்னொன்றும், பூர்வமீமாம்சையும் உத்தரமீமாம்சையும் மற்றொன்று மாகும். பின் கூறப்பட்ட சோடி பிற்காலத்தில் பிரிந்தது. இத்தத்துவ ஞானங்கள் புத்தர் காலத்துக்கு முன் இருந்தன. அவற்றின் முடிவைக் கூறும் சூத்திரங்கள் பிற்காலத்திற் செய்யப்பட்டன.” (The history and culture of Indian people, Vvol.2) சாங்கியம் சாங்கியத்துக்குக் கர்த்தா கபிலர். இவர் கௌதம புத்தருக்கு முன் வாழ்ந்த அரச மரபினர் என்றும், இவர் பெயர் சம்பந்தமாகவே கபிலவாஸ்து என்னும் பெயர் உண்டானதென்றும், கௌதம புத்தர் கபிலர் மரபைச் சேர்ந்தவரென்றும் நம்பப்பட்டு வருகின்றன. கபிலர் செய்த நூல்கள் மறைந்துபோயின. சாங்கிய சூத்திரம், சாங்கிய பிரவசனா என்னும் நூல்கள் இவர் செய்தனவாக வழங்குகின்றன. அவை சமீப காலத்தில் செய்யப்பட்டவை எனக் கொள்ளப்படுகின்றன. இப்பொழுது கிடைக்கும் சாங்கிய மதக்கொள்கைகளை விளக்கும் நூல். கி.பி.3ஆம் நூற்றாண்டளவில் ஈசுவர கிஷ்ணர் என்பவரால் செய்யப்பட்ட சாங்கிய காரிகை என்னும் நூல். சாங்கிய காரிகைக்குக் கௌடபாதர் ஒரு உரை எழுதினார். இவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம் சடத் தோடு ஆதிமுதல் சம்பந்தப்பட்டு வருகின்ற உயிர் பின் சடத்தோடு சேராதிருக்கும் நிலையை அடையும் மார்க்கத்தைக் கூறுகின்றது. இது கடவுள் ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே அது நிரீச்சுர வாதம் எனப்படுகின்றது. சாங்கியம் என்பதற்கு எண், கணக்கிடுதல், ஞானம் என்னும் பொருள்களுண்டு. யோகம் 1யோகத்தைப் பற்றிக் கூறும் நூல்களுள் பதஞ்சலியின் யோக சூத்திரம் பழமையுடையது. இது நான்கு பகுதிகளுடையது. முதற்பகுதி நிட்டை கூடியிருப்பதைப் (சமாதி) பற்றிக் கூறுகின்றது. இரண்டாவது நிட்டை கூடுவதற்குரிய சாதனைகளையும், மூன்றாவது யோக சித்திகளை யும் நான்காவது வீட்டையும் (கைவல்லியம்) கூறுகின்றன. யாக்ஞவல்கிய மிருதி யோக முறையைக் கண்டவர் இரணிய கர்ப்பர் எனக் கூறுகின்றது. பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மாதவர் யோக சூத்திரத்தைச் செய்தவர் பதஞ்சலி எனக் கூறியுள்ளார். இலக்கண நூலாசிரியராகிய பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். யோக சூத்திரஞ் செய்தவரும் பாணினியின் நூலுக்குப் பாடியஞ் செய்தவரும் ஒருவரோ என்பது நிர்ணயிக்கப்படவில்லை. வியாசாசிரியர் (கி.பி.4ஆம் நூ.) இதற்கு உரை செய்துள்ளார். வாசஸ்பதி (9ஆம் நூ.) தத்துவ சாரடீ என்னும் அட்டவணை ஒன்று இந் நூலுக்கு எழுதியுள்ளார். போச இராசமார்த்தாண்டா என்பது யோகத்தைப் பற்றிய சிறந்த நூல். பிற்கால உபநிடதங்கள் பல யோக சாதனங்களுக்கு முதன்மை கொடுக்கின்றன. போசர் யோக சூத்திரத்துக்கு இராச மார்த் தாண்டா என்னும் உரை எழுதியுள்ளார். பதஞ்சலி இலக்கணம், யோகம், மருந்து முதலியவற்றைப் பற்றியும் எழுதினார் என அவர் கூறியுள்ளார். புத்தர் யோகப் பயிற்சி செய்தார். இலலித விஸ்தாரா என்னும் நூல் (கி.பி.3 ஆம் நூ.) புத்தர் காலத்தில் பலவகை யோகப் பயிற்சிகள் இருந்தன வென்று கூறும். சாங்கியம், யோகம் என்னும் தரிசனங்களுக்கு அதிக ஒற்றுமை உண்டு. யோகமதமும் கடவுளைப் பற்றிக் கூறாமையின் அது நிரீச்சுர மதம் எனப்படும். சாங்கியமும், யோகமும் சடம் சம்பந்தமான உலகம் முழுவதையும் பிரகிருதி எனக் கூறும். இராசதம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. இக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதி னால் உலகிலுள்ள பொருள்களெல்லாம் உண்டாகின்றன. ஆன்மாவென் பதை இம்மதங்கள் புருடன் என்று கூறும். ஆன்மா, அந்தக் கரணம் போன்ற பௌதிகக் கூறுகளோடு சேர்ந்தபோதும் தனித்து நிற்கும் இயல்புடையது. ஆன்மாக்கள் பல உண்டு. இவை சாங்கிய யோகக் கொள்கைகளாகும். வைசேடிகம் வைசேடிக சூத்திரம் செய்தவர் கணாதர். இவரது, உண்மையான பெயர் காசியப்பர் எனத் தெரிகிறது. வைசேடிக சூத்திரம் பத்துப் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வைசேடிக சூத்திரம் நியாய சூத்திரத்துக்கு முற்பட்டது. இது பிரம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்) செய்யப்பட்ட காலத்ததாகலாம். இது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது எனக் கருதப்படும். கணாதர் வேதங்கள் இருடிகளாற் செய்யப்பட்டவை யென்று கூறுவர். மீமாம்சைகர் அவை நித்தியமெனக் கூறுவர். வைசேடிகம் பௌத்த மதத்தின் எதிர்ப்பாகத் தோன்றியது. வைசேடிக மும், நியாயமும் பல கொள்கைகளில் ஒத்து நிற்கின்றன. வைசேஷ என்பதற்கு குறிக்கப் பட்ட என்பது பொருள். அது ஆராயப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளின் தன்மைகளையும் கூறுகின்றது. வைசேடிகம் அணுக் கொள்கையைக் கூறுகிறது. வைசேடிக சூத்திரமும் நியாய சூத்திரமும் செய்தவர்கள் சிவ வழிபாட்டினர்1 என வரலாறுளது. பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் (அட்சபாதர்) சிதம்பரத்தில் தவங்கிடந்து சிவபெருமானின் திருக் கூத்தைக் கண்டவர்களாகத் திருவிளையாடற் புராணம் கூறும். நியாயம் நியாய சூத்திரம் என்னும் தத்துவ ஞான நூலைச் செய்தவர் கௌதமர். நியாயம், தர்க்கம், வாதம் என்பன ஒரு பொருளன. யமினிக்கு முன் மீமாம்சை இருந்தது போலக் கௌதமருக்கு முன் நியாயம் இருந்தது. நியாயம் பிராமணக்கருத்துக்களைத் தர்க்க மூலம் தத்துவ ஞானக் கொள்கைகளோடு சம்பந்தப்படுத்துகிறது. நியாய சூத்திரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நியாய சூத்திரத்தின் சில பகுதிகள் கிறித்துவ சகாப்தத் தொடக்கத்தின் பின் செய்யப்பட்டவை. இதற்கு வற்சயாயனர் பாடியஞ் செய்துள்ளார். வற்சயாயனர் கி.பி.400 வரையில் வாழ்ந்த தெலுங்கு நாட்டவர். இவர் தமிழ்நாட்டவரெனவும் கருதப் படுவர். நியாயம், வைசேடிகம், மீமாம்சை என்னும் மூன்றும் சடப்பொருள் அணுவாலாகியது; அவ் வணுக்கள் பல இனங்களாகும்; அணுக்கள் சேர்ந்து பிரபஞ்சமுண்டாகிறது; நித்தியமான ஆன்மாவும் பலதிறப் பட்டது; ஆன்மா தனது தனிப் பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சடத்துடன் உறவு கொள்ளும்போது உடலும் பொறிகளும் பெற்று எல்லையுணர்ச்சி பெறுகின்றது எனக் கூறும். பூர்வ மீமாம்சை மீமாம்சை சூத்திரம் யமினியாற் செய்யப்பட்டது. இது வேதங் களில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணங்களைத் (நியாயங்களை) திரட்டிக் கூறுகின்றது. அது பல வகை யாகங்களையும் அவற்றின் பயன்களையும் சில தத்துவ ஞானக் கொள்கைகளையுங் கூறுகின்றது. அதற்கு 12 அதிகாரங் களுண்டு. வேதங்களிற் கூறப்படுவனவெல்லாம் தழுவப்படத்தக்கன வென்று யமினி வாதிக்கின்றார். யமினியின் நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. நியாய, யோக சூத்திரக் கருத்துக்கள் இதில் காணப்படுகின்றன. யமினி யின் நூலுக்கு சபரர் உரை எழுதியுள்ளார். பட்டர், பாவதாசர், அரி, உபவாசர் என்போர் சபரருக்கு முன் உரை எழுதியிருக்கின்றனர். சபரர் கி.பி.200 க்கும் 500 க்கும் இடைப்பட்ட காலத்தவர். சபரரின் உரையே எல்லாப் பிற்கால மீமாம்சை நூல்களுக்கும் ஆதாரமாக உள்ளது. புரோகிதரின் முதன்மையையும் வேதங்களின் பிரமாணத்தையும் வற்புறுத்தும் உரை குமாரிலரால் (8 ஆம் நூ.) எழுதப்பட்டது. குமாரிலர் சங்கரரின் கொள்கைகளை மறுக்கிறார். உத்தர மீமாம்சையிலிருந்து பிரித்தறிவதற்காக யமினி செய்த நூல் பூர்வ மீமாம்சையெனப்பட்டது. உபநிடதங்களைத் தவிர ஏனைய வேதங்களின் பகுதிகள் வேள்வி முதலிய கிரியைகளைக் கூறுகின்றன. கிரியைகளில் சந்தேகங்களையும் சந்தேக நிவர்த்திகளையும் உணர்த்தும் வினாக்களும் விடைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களும் நிவர்த்திகளும் பற்றிய செய்திகள் பிரமாணங்களில் காணப்படுகின்றன. பிரமாணங்களெனப்படுவன முடிவு பெறாதனவும் விளக்கமில்லாதனவு மாகக் காணப்படுகின்றன. பலர் கிரியைகளைப் பலவாறு செய்து வந்தனர். ஆகவே அவற்றுக்கு ஆதாரம் ஆராயப்பட்டது. பௌத்த மதம் தோன்றிய பின் அறியப்பட்ட உண்மைகளையெல்லாம் திரட்டிச் சூத்திரமாக நூல் செய்யப்பட்டது.1 பூர்வ மீமாம்சையில் ஞானத்திலும் பார்க்கக் கிரியை முதல் இடம் பெறுகின்றது. கிரியைகளைத் தாக்காத அளவில் பூர்வ மீமாம்சை மற்றைய தத்துவ ஞானங்களை ஏற்றுக் கொள்கின்றது; வேதங்களை ஆதாரமாகக் கொண்டு பௌத்த மதத்தை எதிர்க்கின்றது; பௌத்த மதக் கொள்கைக்கு மாறாக உலகத்தை உட்பொருளெனக் கொள்கின்றது. இக்கால இந்து மத சட்டங்கள் மீமாம்ச மதக்கொள்கை யின் செல்வாக்குப் பெற்றுச் செய்யப்பட்டவை. 2வேத இலக்கியங்கள் பல காலங்களில் செய்யப்பட்டவை. இவற்றி லுள்ள பாடல்கள் கால ஒழுங்கில் இல்லாமல் பலவாறு குழப்பமடைந் திருக்கின்றன. தொடக்கத்தில் கிரியைகள் இலகுவாக இருந்தன. வேள்வி களில் இந்திரன், வருணன், மித்திரன், விட்டுணு முதலிய தேவருக்கு உணவும் சோம பானமும் அளிக்கப்பட்டன. அப்பொழுது இருடிகள் அத்தேவர்கள் மீது பல துதிப் பாடல்களைப் பாடித் தமக்கு நேரக்கூடிய ஆபத்துக்களைத் தடுக்கும் படியும், தமக்கு வேண்டியவற்றைக் கொடுக் கும்படியும் வேண்டினார்கள். யாகங்கள் வளர்ச்சி அடைந்து கிரியைகள் சிக்கலடைந்த போதும் பல பாடல்கள் பாடப்பட்டன. பாடல்கள் செய்யப்பட்டபின் சிறிது காலங்கழிந்தது. பாடல்கள் மக்களின் நினைவில் இருந்துகொண்டிருந்தன. அப்பொழுது இவற்றை எல்லாம் திரட்டும் முயற்சி நடைபெற்றது. பாடல் வகையான தொகுப்பு இருக்கு எனவும் வசன நடையான தொகுப்பு எசுர் எனவும் அறியப் பட்டன. வேதங்கள் செய்யப்பட்டதற்கும் பாடல்கள் தொகுக்கப்பட்டதற் கும் இடைப்பட்ட காலம், அப் பாடல்கள் எவ்வெத் தேவர்களைக் குறித்துப் பாடப்பட்டன வென்பதையும், எப்பொழுது பாடுவதற்குரியன வென்பதையும் மறந்துவிடக் கூடிய நீண்டதாக விருந்தது. இப்பொழுது வேத இலக்கியம் சுருதி என்னும் முறையில் சிறிதும் விடாமல் கிரியை களிற் படிக்கப்பட்டு வந்தது. மிகப் பழங்காலத்திலும் பாடல்களின் பகுதிகள் பிரித்தெடுக்கப் பட்டு மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை இலக்கிய மாகக் கருதப்படவில்லை. தொடக்கத்தில் வேதம் ஒன்றாகவிருந்த தென்றும் பின்பு அது நான்காகப் பிரிக்கப்பட்டதென்றும், ஒவ்வொன்றும் வெவ்வேறு புரோகிதரால் யாகங்களில் பாடப்பட்டனவென்றும் விட்டுணு புராணம் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றது. யாகங்களை நடத்தும் புரோகிதன் அத்வாரு எனப்பட்டான். அவன் பயன்படுத்துவதற்காக எசுர் வேதம் தொகுக்கப்பட்டது. இது இருக்கு (பாடல்)களும் வசனமும் அடங்கிய பகுதி. இதைக் கொண்டு அவன் பூரணை அமாவாசிக் காலங்களில் செய்யப்படும் இலகுவான யாகங்கள் முதல் சிக்கலான கிரியைகளடங்கிய அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. யாகங்கள் புரியும் முறைகள் அடங்கியிருப்பதினாலும் அத்வாருவுக் குரியதாதலாலும் எசுர் வேதம் மிகச் சிக்கலுடையது. ஹோதா என்னும் புரோகிதன் யாகங்களில் தேவர்களை அழைத்து அவர்களைப் பாடல்களால் துதித்தான். ஒவ்வொரு கிரியையைச் செய்யும் போதும் அவ்வக்கிரியைக்குரிய பாடல்களை மாத்திரம் பாடும் அத்வாருவின் செயல்போலல்லாது இவனுடைய செயல் பாடல்களைத் தொடர்பாகப் பாடுதலளவிலிருந்தது. ஆகவே இவனுக்காகத் தொகுக்கப் பட்ட பாடல்கள், பகுதிகள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுதி இருக்கு வேதமெனப்பட்டது. இருக்கு வேத பாடல்கள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாக இருப்பதி னாலேயே ஐரோப்பிய அறிஞர் இருக்குவேதம் முதலில் தொகுக்கப்பட்ட தென்றும், அது எசுர் வேதத்துக்கு முந்தியதெனவுங் கருதினார்கள். உத்காதா என்னும் புரோகிதர், தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடல்களை மாத்திரம் பாடினார். இவருக்காகச் சாமவேதம் தொகுக்கப்பட்டது. இவ்வாறு மூன்று வேதங்கள் அமைந்துள்ளன. வீடுகளில் செய்யப்படும் கிரியைகளிற் பயன்படுத்தப்படும் பாடல்களும் மந்திர வித்தைகளும் திரட்டப்பட்ட தொகுப்பு அதர்வண வேதமெனப்பட்டது. யாகங்களிற் செய்யப்படும் கிரியைகள் பெருகிக் குழப்பமான போது யாகக் கிரியைகளை மேற்பார்த்து நடத்துதற்கு பிரம என்னும்1 புரோகிதரும், வீட்டுக் கிரியைகளை நடத்துவதற்குக் கிரியா என்னும் புரோகிதரும் வேண்டப்பட்டார்கள். இக்காலத்தின் பின் மக்கள் பண்பாட்டு முறையில் சில மாறுதல்கள் உண்டாயிருத்தல் வேண்டும். அப்பொழுது சங்கிதைகள் எழுதப்பட்டிருந்த மொழியை மக்கள் மறந் தார்கள். பிராமணங்கள் எழுதப்பட்டுள்ள மொழி தோன்றலாயிற்று. இது வேத கால மொழிக்கும் சமக்கிருதத்துக்கும் இடைப்பட்டது. பாடல் களின் பொருள் விளங்க முடியாதிருந்த காலத்தில் அவை யாகங்களில் முறை தவறிப் பாடப்பட்டன. அவற்றின் பொருள்களும் தவறாகக் கொள்ளப்பட்டு வந்தன. கிரியைகளின் விபரங்கள் அவற்றிலுச்சரிக்க வேண்டிய மந்திரங்களைப் பற்றிச் சபைகளில் வாதங்கள் நடந்தன. அவ் வகை வாதங்களுக்கு முடிவுகாண நியாயம் ஆளப்பட்டது. நியாயங்கள் என்பன ஏற்றுக்கொள்ளக் கூடிய அனுமானங்களைத் தரக்கூடிய முது மொழிகளும் உவமைகளும். அகிகுண்டல நியாயமென்பது பாம்பையும் அதன் மண்டலங்களையும் போல எனக் கூறும் வாதம். தாலிபுளக நியாயமென்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ்பதம் எனக் கூறுவது. இவை நியாயம் எப்படித் தோன்றியதென்பதற்கு எடுத்துக்காட்டுக் களாகும். காலத்தில் பிராமணங்களும் வேதங்களோடு சேர்க்கப்பட்டன. மந்திரங்களும் பிராமணங்களும் சேர்ந்து வேதம் பெரிதானபோது வேதத்திலுள்ளவற்றுக்கு விளக்கங்கூறுவது கடினமாகவும் சிக்கலாகவு மிருந்தன. வேதங்களிற் கூறப்படும் கிரியைகளில் நேரும் தவறுகளை அறிந்து கூறுவது, அவற்றை விளக்குவது என்னும் முறைகள் மீமாம்ச சாத்திரமெனப்பட்டன. இவ்வகையிலமைந்த பல சூத்திரங்களே யமினி சூத்திரம். யமினியின் கொள்கை தர்மத்தைத் தெளிவாக்குவது. தர்மம் என்பது கடமை. தர்மங்கள் சமய சாத்திரங்களின் கட்டளைகள். வேதங் களில் சொல்லப்பட்ட கட்டளைகள் மனிதருக்கும் தேவருக்கும் அப்பாற் பட்டவை. ஆகவே மீமாம்சையில் கடவுளுக்கு இடமில்லை. மீமாம்சை, பிறப்பு, இறப்பு, மறுபிறப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் சொல்ல வில்லை. யமினி, வேதம் நித்தியம் அது எவராலும் செய்யப்படவில்லை என்று நாட்டுவதற்குப் பல நியாயங்களைக் கூறுகின்றார். வேதாந்த சூத்திரம் வேதாந்த சூத்திரம் வாதநாராயணரால் செய்யப்பட்டதெனச் சங்கரர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். சூத்திரங்களில் வாதநாராயணரின் பெயர் படர்க்கையிற் கூறப்பட்டிருத்தலால் வேதாந்த சூத் திரத்தைச் செய்தவர் அவரல்லர் எனவும் கருதப்படுகின்றது. நூலாசிரி யர்கள் தமது பெயரைப் படர்க்கைப்படுத்திக் கூறுதல் இந்தியமரபாதலின் அதனைப் பிற ஆசிரியர் செய்ததாகக் கொள்ள வேண்டியதில்லை. வேதாந்த சூத்திரத்தைச் செய்தவர் வாதநாராயணர் என்றும், வியாசர் என்றும் ஐதீகம் இருந்து வருகின்றது. சங்கரரின் மாணவர்களாகிய வாசஸ்பதி, ஆனந்தகிரி என்போர் வாதநாராயணர், வியாசர் என்போரை ஒருவாராகக் கொண்டனர். இராமானுசர், வல்லபர், பலதேவர் என்போர் வேதாந்த சூத்திரத்தை வியாசர் செய்ததாகக் கூறுவர். வாதநாராயணர் பலவிடங்களில் யமினியைப் பிரமாணமாகக் குறிப்பிட்டுள்ளார். யமனி வியாசரின் மாணவரெனக் கொள்ளப்படுவர். மகாபாரதம், விட்டுணு புராணம், பகவத் கீதை முதலிய நூல்களை நாம் நம்பினாலும், வாத நாரா யணர் யமினியின் நூலைக் குறிப்பிட்டிருப்பதாலும் யமினி வியாசரின் மாணவரென்பது உறுதிப்படமாட்டாது. சபரர், கோவிந்தர், ஆனந்தர், ஆனந்தகிரி என்போர், வியாசரும் வாதநாராயணரும் ஒருவர் எனக் கொள்வதற்கு யாதும் சந்தேகமில்லையெனக் கொள்வர். சங்கரரின் கொள்கை யாது என்பது தெளிவாகவில்லை. சாங்கியம், வைசேடிகம், சமணம், பௌத்தம் முதலிய மதக் கொள்கைகளை வேதாந்த சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சங்கரர், இராமானுசர், மாதவர், வல்லபர் என்போர் வேதாந்த சூத்திரம் கீதையைக் குறிப்பிடுவதை அறிந்துள்ளனர். சூத்திரத்தில் காணப்படும் பல பெயர்கள் ஆஸ்வலாயனம், காத்தியாயனம், தைத்திரிய, பிராதி சாக்கிய சூத்திரம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன. போதாயனரின் கிரியா சூத்திரங்களிலும் இப்பெயர்கள் காணப்படுகின்றன. கருட புராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் வேதாந்த சூத்திரத்தை யும், அரிவம்சத்தையும் குறிப்பிடுகின்றன. கருடபுராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் கி.பி.200ஐச் சேர்ந்தவை. வேதாந்த சூத்திரம் கி.மு.500-க்கும், கி.பி.200-க்கும்மிடையில் செய்யப்பட்டதெனக் கொள்ளப்படுகின்றது. வேதாந்தம் 1வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிவு என்பது பொருள். இது வேதத்தின் நான்காவது பகுதியாகிய உபநிடதங்களைக் குறிக்கும். வேதாந்த சூத்திரம், பிரம சூத்திரமெனவும் அறியப்படும். யமினியின் கர்ம மீமாம்சை வேதங்களில் சொல்லப்பட்ட தர்மங்களையும் (கடமைகள்) அவற்றின் பலன்களையும் ஆராய்கின்றது. வாதநாராயணரின் உத்தர மீமாம்சை உபநிடத ஞானங்களை விரித்துக் கூறுகின்றது. வேதாந்த சூத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களடங்கிய 555 சூத்திரங் களுண்டு. இவற்றிலிருந்து வேதாந்த ஞானம் விரிவடைந்தது. இச் சூத்திரங்கள் பொருள் விளங்க முடியாதவை. உரையாசிரியர்களின் உரைகளைக்கொண்டே இவற்றின் பொருள்கள் அறியப்படுகின்றன. இதற்குப் பலர் பலவாறு உரைகண்டுள்ளனர். சங்கரர், பாஸ்கரர், யாதவப் பிரகாசர், இராமானுசர், கேசவர், நீலகண்டர், மாதவர், பலதேவர், வல்லபர், விஞ்ஞான பிட்சு முதலியோர் வெவ்வேறு கொள்கைகளை நாட்டி, உரை செய்துள்ளனர். வேதாந்தக் கொள்கையில் மாறுபட்ட கருத்துக்களும் தடுமாற்றங்களும் உண்டான காலத்திலேயே உரைகள் எழுந்தன. பகவத்கீதை பகவத்கீதை மாபாரதத்தில் வீட்டும பருவத்திலுள்ளது. இதில் தத்துவஞானம், சமயம், நீதி முதலியன அடங்கியுள்ளதால் இது மற்றைய தத்துஞான நூல்களிலும் பார்க்கச் சிறப்பாகக் கொண்டாடப்படு கின்றது. கீதை செய்யப்படுவதன் முன் செல்வர் யாகங்களால் தேவர்களை விலைக்கு வாங்கி விடலாம். அறிவாளிகள் மாத்திரம் ஞானமடையலாம் என்னுங்கொள்கைகளிருந்தன. கீதை பக்திமார்க்கத்தால் எல்லோரும் கடவுளை அடையக் கூடிய வழியைக் கூறுகின்றது. பாண்டவருக்கும் கௌரவருக்கும் நேர்ந்த பாரதப்போரில் போர்க் களத்திற் போய் நின்ற அருச்சுனன் தனது உறவினரையும் ஆசிரியரையும் கொல்ல மனமில்லாதவனாகத் தயங்கிய போது கண்ணன் அவனுக்குப் போதித்த ஞானமே பகவத்கீதை எனப்படுகின்றது. 700 பாடல்கள் கொண்ட இந் நூலைக் கண்ணன் போர்க்களத்தில் அருச்சுனனுக்குப் போதித்தார் என்பது நம்பக் கூடியதாக விருக்கவில்லை. இது எவரோ ஒரு புலவரால் கி.மு.200-க்கும் கி.பி.200க்கு மிடையில் செய்யப்பட்டதென ஆராய்ச்சியாளர் கருதுவர். இந் நூலில் கண்ணன் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கூறியிருப்பது காணப்படுகின்றது. பகவத் கீதை, வேதாந்த, சாங்கிய, ஆகமக் கொள்கைகளை ஒன்று சேர்க்கும் பொருட்டுச் செய்யப் பட்டதெனக் கருதப்படுகின்றது. இதற்கு சங்கரர், இராமானுசர், வல்லபர், மாதவர் முதலிய பலர் உரை செய்திருக்கின்றனர். உரையாசிரியர்கள் நூலின் உண்மைப் பொருளைக் காணும் நோக்கமில்லாமல் தத்தம் கொள்கைகளைப் பலப் படுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளார்கள். உரையாசிரியரின் கொள்கைக்கு மாறான பகுதிகள் காணப்பட்டால், அவை இலக்கணவிதி, சொல்லிலக்கணம் முதலிய உபாயங்களால் திரித்துப் பொருள் விளக்கப் பட்டன. இராமானுசர் உயிர், உலகம் என்னும் பொருள்கள் கடவுளைவிட வேறானவை என்றும் இவ்விரண்டும் கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இக் கொள்கை விசிட்டாத்துவைதம் எனப்படும். மாதவர் உயிரும், கடவுளும் வெவ்வேறு பொருள்களென்பதை ஒப்புக்கொள்வர். சங்கரர் பிரமமொன்றே உட்பொருள்; உயிர்கள் பிரமத்தின் பிரதிபலிப்புகள்; உலகம் பொய்த்தோற்றம் என்பர். இக் கொள்கைகளை வலியுறுத்தி இவர்கள் பகவத்கீதைக்கு உரை செய்துள்ளனர். பகவத் கீதை உலகம் ஈசுவரனுடைய சக்தியாகிய மாயையிலிருந்து தோன்றுகிறதென்று கூறும்.1 சமணம் சமணர் 24 தீர்த்தங்கரரைப் பற்றிக் கூறுகின்றார்கள். தீர்த்தங்கரர் என்பதற்கு வழியைக் கண்டுபிடித்தவர்கள் என்பது பொருள். ஒவ்வொரு தீர்த்தங்கரரும் அவரவர் வாழ்ந்த காலங்களுக்கு வேண்டிய சமண தருமங்களைப் போதித்தார்கள். தீர்த்தங்கரரின் வரலாறுகள் பழங்கதை வடிவிலுள்ளன. பார்சவர், மகாவீரர் என்னும் பின் இரு தீர்த்தங்கரரின் வரலாறு களும் அறியத்தக்கனவாகவுள்ளன. பார்சவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இவர் காசி அரசன் அசுவசேனனுக்கும், மனைவி வாமிக்கும் புதல்வனாகப் பிறந்தார். இவர் முப்பது ஆண்டுகளின் பின் துறவு பூண்டார்; 84 நாட்கள் தவமிருந்தபின் ஞானமடைந்தார். இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின் கி.மு.776 இல் மரணமடைந்தார். இவருக்குப்பின் வாழ்ந்த மகாவீரரைப்போலவே இவர் சடப் பொருளின் நித்தியத்தைப் பற்றி நம்பினார். தன்னடக்கம் கன்மத்தை முடி வுறுத்துகிறதென்றும், தவம் கன்மத்தை அழிக்கிறதென்றும் பார்சவரைப் பின்பற்றியவர்கள் நம்பினார்கள். சமணத்துறவிகள் வெள்ளாடை உடுப்பதைப் பார்சவர் அனுமதித்தார். மகாவீரர் இதைத் தடுத்தார். ஆகவே, சமணருள் வெள்ளாடை உடுப்பவர்கள் என்னும் பொருளில் சுவேதாம்பரர் என்றும், காற்றை உடுப்பவர்கள் என்னும் பொருளில் திகம்பரர் என்றும் இருபிரிவினர்கள் தோன்றினார்கள். மகாவீரர் மகாவீரர் வைசாலியிலுள்ள குண்டக்கிராமத்தில் கி.மு.599இல் பிறந்தார். குண்டக்கிராமம் இப்பொழுது பரசுகுண்டமெனப்படுகிறது. இவர் நாய என்னும் குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சித்தார்த்தர்; தாய் வைசாலி அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிசாலை. மகாவீரருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் வர்த்தமானர். புகழ் பெற்ற மகாவீரரென்னும் இப்பெயர் இவருக்குத் தேவர்களாலிடப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. மகாவீரர் யசோதரையை மணந்தார். அவருக்கு அருணோசா அல்லது பிரியதரிசனா என்னும் புதல்வியிருந்தாள். தாய் தந்தையரிறந்த பின் மகாவீரர் தமது தமையன் நந்திவர்தானாவின் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். அப்பொழுது அவர் முப்பது வயதினராகவிருந்தார். 13 மாதங்களின் பின், இவர் உடையின்றி நிர்வாணத் துறவியாகத் திரிந்தார். இவர் பிராணிகளுக்கு மாத்திரமல்லாமல் நிலம், நீர் போன்ற சடப் பொருள்களுக்கும் உயிர் இருப்பதாகக் கொண்டார். 72வது வயதில் இவர் மசிம்மபாவா என்னுமிடத்தில் அத்திபாலா என்னும் சிற்றரசன் வீட்டில் காலமானார். இவ்விடம் இப்பொழுது பாட்னா மாகாணத்தில் பாவாபுரி எனப்படுகின்றது. பௌத்த மதத்தைப் போலவே, சமண மதமும் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தது. பெரும் பஞ்சமொன்று நேரவிருப்பதை அறிந்த பௌத்திரபாகு என்னும் சமணமுனிவர், மயூரசந்திரகுப்தனோடும் பெருந்தொகையான மாணவரோடும் மைசூரிலுள்ள சரவணபெலகொள என்னுமிடத்துக்கு வந்திருந்தாரென்றும், அவர்கள் மூலம் திகம்பரசமணம் தென்னிந் தியாவிற் பரவியதென்றும் தென்னிந்திய வரலாறு கூறுகின்றது. மகா வீரர் இறந்து ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.பி.464இல் வல்லபி என்னு மிடத்தில் கூடிய சமணசங்கத்தில் சுவேதாம்பரரிடமிருந்த சைன ஆகமங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமணர் மேலான ஒரு கடவுளை மறுத்தாலும் நிர்வாணமடைந்து விடுதலை பெற்றவர்களாகிய தீர்த்தங் கரர்களுடைய உருவங்களை வணங்குவர். தீர்த்தங்கரர் இருஷபர் முதல் மகாவீரர் வரை இருபத்து நால்வர். புத்தர் புத்தர் என்பதற்கு ஞானமடைந்தவர் என்பது பொருள். இவர் கி.மு.547இல் பிறந்தார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் சித்தார்த்தர். கௌதமர் என்பது இவர் தோன்றிய குலத்தின் பெயர். இவர் தந்தையின் பெயர் சுத்தோதனர். தாயின் பெயர் மாயை, இவர்களின் சமயம் சைவமாக இருந்ததென்பது ஐதீகம்.1 சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாள் தாய் இறந்தார். தாயின் சகோதரியால் இவர் வளர்க்கப்பட்டார். இவர் தமது மைத்துனியாகிய யசோதரையை மணந்தார். யசோதரை வயிற்றில் இராகுலன் என்னும் புதல்வன் பிறந்தான். கபிலவாஸ்து நகர் வீதியில் இவர் ஒருநாள் கூனி வளைந்த ஒரு கிழவனையும், ஒரு நோயாளி யையும், பிச்சைக்காரனையும், அழுது கொண்டு பலர் பின்னே செல்லக் கொண்டு போகப்படும் ஒரு பிணத்தையும் கண்டார். அவர் இவ்வுலகில் உள்ள துன்பங்களைக் கண்டு துறவுகொள்ள முடிவுசெய்தார். அவர் துறவு பூண்டு மஞ்சளாடையணிந்து பிச்சையேற்று உண்டு, உண்மையை நாடி அலைந்து திரிந்தார். இவர் உருவலா என்னும் காட்டுக்குத் தமது ஐந்து நம்பிக்கையுள்ள நண்பர்களுடன் சென்று அரசமரத்தின் கீழ் நிட்டையி லமர்ந்தார். ஏழுவாரங்கள் தவஞ்செய்த பின் அவருக்கு ஞானம் உதய மாயிற்று. அவர் தமது நண்பர்களாகவிருந்த ஐவரையும் முதலில் தமது மாணாக்கராகத் தெரிந்தெடுத்தார். மாணவர்கள் நாள்தோறும் அதிகப் பட்டு வந்தார்கள். புதிய பௌத்த தருமங்களைப் போதிப்பதற்கு எல்லாத் திசைகளுக்கும் போதகர்களனுப்பப்பட்டார்கள். நாற்பது ஆண்டுகள் துறவியாக வாழ்க்கை நடத்தியபின் அவர் காலமானார். புத்தர் இறந்து இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பே புத்தரின் வரலாறு எழுதப்பட்டது. அவ் வரலாற்றில் பல கற்பனைகள் நுழைந்து உள்ளன. பௌத்த ஆகமம் திரிபிடகம் எனப்படும். இதிற் கூறப் பட்டவையே புத்தரால் போதிக்கப்பட்டவை என நம்பப்படுகின்றன. புத்தரின் போதனைகள் நீண்ட காலமாகச் செவி வழக்கில் இருந்து வந்தன. இலங்கை அரசனாகிய வட்டகமினியின் காலத்தில் (கி.மு. 80) இவை பாலி மொழியில் எழுதப்பட்டன. பாலி நூலில் கதைகள், ஒழுக்கங்கள் (விநாயா), கொள்கைகள் என மூன்று பிரிவுகளுள்ளன. பௌத்தமதம் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கூறுகிறது. கன்மத்தை ஏற்றுக்கொள்கின்றது. தேவர்கள் பிறப்பு, இறப்புக்குரியவர்களெனக் கூறுகின்றது. பௌத்த மதத்தின் முடிவு நிர்வாணமடைதல். நிர்வாணமென்பது, பிறப்பு இறப்புக் கேதுவாகிய காரணத்தை ஒழித்தல். இதற்கு விருப்பு வெறுப்புகளின்றி யிருத்தல் வேண்டும். பௌத்தமதமும், சமண மதமும் வேதங்களைக் கண்டிக்கின்றன. யாகங்களை வெறுக்கின்றன. சமணமும், பௌத்தமும் வேதங்களை ஒப்புக் கொள்ளாதபடியால் அவை நிரீச்சுர மதங்களெனக் கொள்ளப்பட்டன. மகாபாரதம் மகாபாரதம் கௌரவர் பாண்டவர்களுக்கிடையில் நடந்த போரைப் பற்றிக் கூறுகின்றது. பாரதப் போர் நடந்த காலம் கி.மு.1400 எனக் கணக்கிடப்படுகின்றது. வேதங்களில் பாரத இராமாயண நிகழ்ச்சி களைப் பற்றியோ அவற்றில் வரும் வீரர்களைப் பற்றியோ கூறப்பட வில்லை. பாரதப் போர் தொடர்பான பழைய வரலாறு திராவிட நாட்டுக் கதை என்றும், பின் அது ஆரியரின் கதையாக மாற்றப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 இந்திய நாட்டின் பல பகுதிகளில் வழங்கிய கதைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு மகாபாரதம் செய்யப்பட்டது. இது அக் கால வழிபாடுகளையும் பழக்க ஒழுக்கங்களையும் கூறுகின்றது. முன் பாரதமென வழங்கிய கன்னபரம்பரை வரலாற்றை விரித்துச் செய்யப்பட்டதே மகாபாரதம். வியாசரால் செய்யப்பட்ட பாரத சம்கிதையில் 24,000 சுலோகங்களுள்ளன. அவை மறுபடியும் அவரால் 6,000,000 சுலோகங்களாகச் செய்யப்பட்டன. அவற்றுள் இப்பொழுது ஒரு இலட்சம் சுலோகங்களே உள்ளன. பாரதத்துக்கு முன் பாணர் போன்ற பாடகர்களால் இசையோடு பாடப்படும் பாடல்களும், பிற பாட்டுக்களும் இருந்தன. இந்திய நாடுகளில் அரசரின் வீரச் செயல் களைப் புகழ்ந்து பாடகர்கள் பாடுவது அக் கால வழக்காக இருந்தது. ஞாபகத்திலிருந்து பாடப்பட்டமையின், இவை காலத்துக்குக் காலம் பல மாறுதல்களை அடைந்தன. இவற்றோடு சம்பந்தம் பெறாத பிராமண மதக் கொள்கைகளையும் இவற்றோடு சேர்க்க வேண்டி இருந்தது. ஆகவே, ஆரியர், ஆரியரல்லாதாரின் பண்பாடுகள், பழங்கதைகள், வழிபாடுகள் முதலியவற்றுக்கு வேற்றுமை தெரியாதபடி ஒன்று சேர்த்து நூல் செய்யப்பட வேண்டியிருந்தது. பாரத காலத்துக்கு அண்மையில் இப் பாடல்கள் சமயத்தோடு கலவாமல் வீரரைப் புகழும் பாடல்களாக மாத்திரம் இருந்தன. மகாபாரதம் செய்யப்பட்ட பின் மேலும் பல செய்திகள் கிடைத்தன. அவற்றை அதனோடு ஒட்ட வைத்தல் முடியாம லிருந்தது. அவ்வாறிருந்த போதும் அவற்றை ஒட்டவைக்கச் செய்த முயற்சியினால் உருவானதே மகாபாரதம். பாரதம் செய்யப்படுகின்ற காலத்தில் பல தெய்வ வழிபாடுகளிருந்தன. மகாபாரதத்தில் வரும் இந்திர, அக்கினி வழிபாடுகள் வேத வழிபாட்டின் சின்னங்களாகும். அக் காலத்தில் அவதாரங்கள் அறியப்படவில்லை. சிருட்டி வரலாறு சரித்திர சம்பந்தமான வரலாறாகக் காணப்படுகின்றது. மகாபாரதத்தின் பிந்திய பகுதியில் யவனர், பாலவர் (Parthians), சகர் குறிப்பிடப்படுகின்றனர். அப்பொழுது பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள், ஒரு கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல் களைச் செய்யும் வடிவங்களென்னும் கொள்கை காணப்படுகிறது. இந்திரனுக்குக் கூறப்பட்ட வலிமை இப்பொழுது விட்டுணுவுக்கும், சில சமயங்களில் சிவனுக்கும் கூறப்படுகின்றது. வீரப்பாடல்களாகிய மகா பாரதம் பிராமண மத சம்பந்தம் பெற்று விட்டுணு, சிவனென்னும் தெய்வங்களை முதன்மையாகக் கொண்ட மத நூலாக மாறியது. பகவத் கீதை இக் காலத்தைச் சேர்ந்ததாகலாம். உள்நாட்டு வழிபாடுகளைத் தழுவிச் சிலர் பிராமண மதத்தைக் கைவிட்ட காலத்தில் மறுமலர்ச்சி வேண்டியதாகவிருந்தது. மகாபாரதம் 5ஆம் வேதமெனப்படும். வேதங்கள் மூன்று வருணத் தாருக்கு முரியனவாகவிருந்தன. ஐந்தாம் வேதம் எல்லாருக்கும் உரியதாக விருந்தது. மகாபாரதம் கி.மு.500இல் தொடங்கி கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை வளர்ச்சி அடைந்து வந்ததென நம்பப்படுகின்றது. இராமாயணம் இராமாயணம் வான்மீக முனிவராற் செய்யப்பட்டது. இது மகாபாரதத்தைப் போலப் பலவகைப் பொருள்களைப் பற்றிக் கூறாது கதையையே கூறுகின்றது. இராமர் எல்லா நல்ல குணங்களும் நிரம்பி யவராக கூறப்படுகின்றார். ஆகவே, அவர் கடவுளின் அவதாரமாக்கப் பட்டார். தொடக்கத்தில் அது பழங்கதையைக் கூறுவதாயிருந்து பின் வைணவரின் நூலாக மாற்றமடைந்தது. அதன் தொடக்கமும் போக்கும் முடிபும் அதனைப் பலர் செய்தார்கள் என்று கூறுவதற்கு இடந்தர வில்லை. அதைக் கதையடங்கிய பழைய பகுதி (II -VI), சமயங்கலந்த புதிய பகுதி (II-ம் VII-ம்) என இரண்டாகப் பிரிக்கலாம். வான்மீகர், இராமர் நற்குணங்களும் வீரமும் நிறைந்தவரெனக் கூறுகிறாரேயன்றி அவரை விட்டுணுவின் அவதாரமாகக் கூறவில்லை. சமயம் பல தெய்வ வழிபாடாக இருந்தது. இந்திரன் தெய்வங்களுக்குத் தலைமை வகித்தான். காமன், குபேரன், கார்த்திகேயன், கங்கை, விட்டுணு, சிவன், இலக்குமி, உமை முதலிய தெய்வங்களும் தெய்வங்களாக்கப்பட்ட சேடன், சடாயு, நந்தி முதலியனவும் கூறப்படுகின்றன. வழிபாடு வேள்வி முறையாக இருந்தது. விட்டுணுவும் சிவனும் தலைமை இடம் பெறுகின்றனர். ஆறுகள், பாம்புகள் வழிபாடும் கூறப்படுகின்றன. இரண்டாம் பிரிவில் கிரேக்கர், பாலவர், சகர் முதலியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இராமரை அவதாரமாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. தத்தவஞானத்துக்கும் சமயத்துக்கும் இராமாயணம் மகாபார தத்தைப் போல் சிறந்ததன்று. அது இல்லறத்தைப் பெருமைப்படுத்து கிறது. விடுதலை பெறுவதற்குத் துறவு வேண்டியதன்று என்பதை உணர வைக்கின்றது. புத்தரை நாத்திகன் எனக் கூறுகின்றது. இராமாயணக் கதை பாரதக் கதைக்கு முற்பட்டதாயினும் பாரதத்துக்குப் பின் இராமாயணஞ் செய்யப்பட்டதென்பதை இது உணர்த்துகின்றது. இராமாயணம் பாரதகாலத்துக்குப்பின் தொடங்கி, கிறித்துவ சகாப்தத்தின் பின் சில நூற்றாண்டுகள் வரையில் வளர்ச்சி அடைந்து வந்ததென ஆராய்ச்சி யாளர் கூறுவர். சீதாபிராட்டியின் தந்தையாகிய சனகன் யாக்ஞவல்கி காலத்திருந்தவராகக் கூறப்படுதலாலும், யாக்ஞவல்கி சனமேசயன் காலத்தவராதலாலும், இராமாயண நிகழ்ச்சி பாரதப் போருக்குப் பிற் பட்டதெனக் கருதப்படுகின்றது. தென்னாட்டில் வழங்கிய பழங்கதை ஒன்றையும் வடநாட்டில் வழங்கிய கதையையுமிணைத்து, இராமாயணஞ் செய்யப்பட்ட தென்னும் கருத்து இருந்து வருகிறது.1 புராணங்கள் புராணங்களை வியாசர் செய்தாரென்னும் நம்பிக்கை இருந்து வருகின்றது. அவை இதிகாசங்களுக்குப் பின் செய்யப்பட்டவை. புராணங்கள் உலகம், உயிர் என்பவற்றுக்கு வேறாகக் கடவுள் உண்டு என்னும் கொள்கை உடையன. அவற்றில் திரிமூர்த்திகள் முதன்மை யடைகின்றார்கள். சிவ புராணங்கள் சிவனை மேலாகவும், விட்டுணு புராணங்கள் விட்டுணுவை மேலாகவும், பிரம புராணங்கள் பிரமாவை மேலாகவும் கூறுகின்றன. அவை வேதமுறையான யாகங்களையும், துதிகளையும் தழுவவில்லை; உருவ வணக்கத்தையும், பக்தி மார்க்கத்தை யும் தழுவுகின்றன. கன்மம், மறுபிறப்பு, ஞானத்தினால் மோட்சம் என்னும் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன; தத்துவ ஞானங்களி லும் பார்க்கப் பத்தி மார்க்கஞ் சிறந்ததெனக் கூறுகின்றன. வேத மார்க்கம், உருவ வழிபாடு, பத்தி மார்க்கம், உபநிடதக் கொள்கைகள் என்பவற்றை எல்லாம் ஒன்றுபடுத்திச் செய்யப்பட்டனவே புராணங்களாகும். புராணங் களில் முதன்மையுடையவை பதினெட்டு. விட்டுணு, பாகவதம், நாரதீயம், கருடம், பதுமம், வராகம் என்பன விட்டுணு புராணங்கள். சிவ, இலிங்க, ஸ்கந்த, அக்கினி, மச்ச, கூர்ம என்பன சிவ புராணங்கள். பிரம, பிரமாண்ட, வைவர்த்த, மார்க்கண்டேய, பாவிச்ஸ்யா, வாமன என்பன பிரம புராணங் கள். இவையன்றி உப புராணங்களுமுள்ளன. எல்லாப் புராணங்களும் உலகப்படைப்பு, பிரளயம், மனுவந்தரம், அரச பரம்பரை, அரசர்களின் வரலாறுகளைக் கூறும். அரச பரம்பரைகளைப்பற்றியும், அரசர்கள் வரலாற்றுக்களைப் பற்றியும் சூதர் எனப்பட்டோர் அரச சபைகளில் பாடுவது அக்கால வழக்கமாகவிருந்தது. அவர்கள் நினைவில் காப்பாற்றி வந்தவற்றைக் கொண்டே அரசர் வரலாறுகள் எழுதப்பட்டன. புராணங் கள் கி.மு.500 முதல் கி.பி. 500 வரையில் எழுதப்பட்டனவென்று கருதப் படுகின்றன.1 “வேதமொழி வழக்கிறந்து வேதக் கொள்கைகள் விளங்க முடியாமலிருந்தன. ஆகவே பிராமண மதக் கொள்கைகளை மக்கள் அறியாதிருந்தார்கள். அப்பொழுது வியாசரும் வேறு பலரும் சேர்ந்து ஆயிரமாண்டுகளாக (கி.மு.500 - கி.பி. 500) பதினெட்டுப் புராணங்களைச் செய்தார்கள். அவை 400,000 இரண்டடிப் பாடல்களாக உள்ளன. அவை உலகப் படைப்பு, உலகம் வளர்ச்சி அடைந்து மாறுதல்களுக்குள்ளாகி அழிந்தது, தெய்வங்களின் வமிசம், வீரர்காலக் கதைகள் என்பவற்றைக் கூறுகின்றன. அவை தர்க்க முறைகளையோ காலக் கணக்குகளையோ பொருட்படுத்தவில்லை. புரூரவர் ஊர்வசியோடு அறுபத்தோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரெனப் புராணங்கள் கூறுகின்றன.” “கற்பமென்பது கால முடிவு. உலகப் படைப்பின் காலம் 1000 மகா உகம். ஒவ்வொரு மகாஉகமும் 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்டது. ஒவ்வொரு மகாஉகத்திலும் நான்கு உகங்களுண்டு. இப்பொழுது நடக்கின்ற மகாஉகத்தில் மூன்று உகங்கள் கழிந்துவிட்டன (3,888,388 ஆண்டுகள்). நாம் இப்பொழுது கலியுகத்தில் 5,535-ல் வாழ்கின்றோம். இன்னும் கலியுகத்தில் 426,965 ஆண்டுகளிருக்கின்றன. இவ்வுக இறுதியில் பிரளயமுண்டாகும். பின் பிரமாவுக்கு ஒரு நாள் உண்டாகும். அது 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்ட மகா உகமாகும்.”1 இராமானுசர் இராமானுசர் சிறீபிரம்பூரில் 1027இல் பிறந்தார். இளமைக் காலத்தில் தந்தை காலமானார். இவர் இளமையில் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தக் கல்வி பயின்றார். யாதவரின் வேதாந்தக் கருத்துக்கள் எல்லாவற்றையும் இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறீரங்கத்தில் மடத்தலைவராகவிருந்த ஆளவந்தார் இராமானுசரின் கல்வித் திறமையைக் கேள்வியுற்று அவரைத் தமக்குப் பின் மடத்தலைவ ராக்க விரும்பினார். ஆளவந்தார் தமது அந்திய காலம் அணுகியதும் இராமானுசரை அழைத்து வரும்படி பெரியநம்பியை விடுத்தார். இராமா னுசர் வந்தபோது ஆளவந்தார் காலமடைந்து விட்டார். பிரேதத்தின் மூன்று வலது கைவிரல்கள் மடித்தபடி இருந்தன. அவர் மாணாக்கர் அவருக்கு மூன்று விருப்பங்கள் நிறைவேற்றப்படாமலிருந்தனவென்று அதற்குப் பொருள் கூறினார்கள். நிறைவேற்றப்படாமலிருந்தவற்றுள் வேதாந்த சூத்திரத்துக்கு உரை எழுதுவது ஒன்று. இராமானுசர் காஞ்சீ புரத்துக்குத் திரும்பிச் சென்று வழக்கம்போல் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் இவர் கோயில் பட்டரிடம் வருங்காலத்தில் தாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளைக் கேட்கும்படி சொன் னார். இறுதியில் வீடுபேறு கிட்டுமென அவருக்குக் கடவுள் வாக்குக் கிடைத்தது. அவர் மதுராந்தகத்தில் பெரியநம்பியைக் கண்டு, அவரிடம் வேதாந்த இரகசியங்களைக் கேட்டுத் தெளிந்தார். அவர் இல்லறத்தில் நுழையாது துறவு பூண்டார். துறவு பூண்டபின் எங்கும் இவருக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. அவர் துறவிகளின் அரசன் எனப்பட்டார். அவர் சிறீரங்கத்தில் தங்கியிருந்து திருவாய்மொழியை ஓதிப் புலமை யடைந்தார். போதாயன விருத்தியை மனப்பாடஞ் செய்திருந்த தனது மாணவர் கூரத்தாழ்வாரின் துணையோடு இவர் வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், வேதாந்த தீபம், பிரம சூத்திர உரை, பகவத்கீதை உரை முதலியவற்றைச் செய்தார். வைணவர்கள் இராமானுசரின் பிரம சூத்திர உரையை ஒப்புக்கொண்டு, அதனைச் சிறீபாடியமென வழங்குவர். இவர் 1137இல் காலமானார். இவர் கடவுளுக்குப் புறம்பான உயிர்களும் உலகமும் (சடம்) உண் டென்றும், அவை கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இவர் வெளி யிட்ட தத்துவஞானம் விசிட்டாத்துவைதம் எனப்படும். மாதவர் மாதவர் தென் கன்னடத்திலுள்ள உடுப்பிக்கு அண்மையில் ஒரு கிராமத்தில் 1199இல் பிறந்தார். இவர் இளமையில் வேதங்களைக் கற்றறிந்து சன்னியாசத்தை மேற்கொண்டார். இவர் திருமாலை முழு முதலாகக் கொண்டு துவைத மதத்தைப் போதித்தார். இராமானுசரைப் போலவே இவரும் தோளில் சங்கு, சக்கரம் முதலிய அடையாளங்களைச் சுட்டுக்கொள்வதை அனுமதித்தார். இவர் உடுப்பியில் கிருட்டிணன் கோயிலைக் கட்டினார்; உயிர்ப் பலியிடுவதைத் தடுத்தார். பிரம சூத்திரத் துக்கு உரை எழுதினார். தமது உரைக்குச் சமாதானங் கூறுவதாக அனு வியாக்கியானம் என்னும் நூலையும் இவர் வெளியிட்டார். இவரியற்றிய பாரத தாற்பரிய நிர்ணயம், பகவத்கீதை உரை, உபநிடத உரை என்பன இவருடைய மதக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கின்றன. இவர் இருக்கு வேதத்தின் நாற்பது பாடல்களுக்கு உரை எழுதினார். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம சூத்திரம் என்பவற்றிலும் பார்க்க இவர் புராணங்களில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் வைணவ மதத்தையும், சைவ மதத்தை யும் ஒன்றுபடுத்த முயன்று வந்தார். வைணவக் கோயில்கள் சிலவற்றில் சிவன், பார்வதி, கணேசர் முதலிய கடவுளரின் உருவங்கள் வைத்து வழிபடப்பட்டன.1 14ஆம் நூற்றாண்டில் விசய நகரத்தில் வாழ்ந்த வித்தியாரணியரும் மாதவர் (மத்துவர்) எனப்படுவர். இவரும் தத்துவஞானியாக இருந்து பல நூல்கள் செய்துள்ளார். இவர் சங்கரரின் அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றியவர். இவருடைய தம்பி சாயணர் வேதங்களுக்கு உரை எழுதியுள்ளார். ஸ்கந்த வழிபாடு வடநாட்டு மக்கள் முருகக் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களிட்டு வழிபட்டார்கள். வடநாட்டில் முருகக்கடவுளுக்கு வழங்கிய பெயர்கள் ஸ்கந்தர், கார்த்திகேயர், மகாசேனர், குகர், விசாகர், ஸ்கந்த குமரர், பிரமணியர், முதலியன. பிரமணியரென்பதே சுப்பிரமணியரெனத் தமிழ்நாட்டில் மத்திய காலம் முதல் வழங்குகின்றது. இப் பெயர்கள் வடநாட்டில் வாழ்ந்த வெவ்வேறு கூட்டத்தினர் முருகக்கடவுளை வெவ்வேறு பெயர்களில் வழிபட்டதனால் வந்திருக்கலாம் அல்லது ஒரு கடவுளின் வெவ்வேறு தன்மைகளை உணர்ந்த வெவ்வேறு திருவுருவங் களை அமைத்து, அவர்கள் வழிபட்டதனால் உண்டாயிருக்கலாம். இதிகாசங்களில் ஸ்கந்த, கார்த்திகேய வழிபாடுகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. வேதங்களில் இவ் வழிபாடுகள் காணப்படவில்லை. பாணினியின் இலக்கணத்துக்குப் பாடியஞ் செய்த பதஞ்சலி (கி.மு. 2ஆம் நூ.) ஸ்கந்த வழிபாட்டைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மௌரிய அரசர் ஸ்கந்த, சிவ, விசாக விக்கிரகங்களை விற்றுப் பணத்தைக் கருவூலத்தில் சேர்த்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் முருக வழிபாடு வட இந்தியாவில் பரவியிருந்ததெனத் தெரிகிறது. குவிஷ்கா (Huviska) அரசன் ஸ்கந்தர், மகாசேனர், குமரர், விசாகர் என்னும் முகூர்த்தங்களில் முருகக்கடவுளின் வடிவங்களை நாணயங்களில் பொறித்தான். உருவங்களின் கீழ் கிரேக்க எழுத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந் நாணயங்கள் கி.மு. 2 ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஏறத்தாழ இக் காலத்தைச் சேர்ந்த நாணயமொன்றில் ஒரு பக்கத்தில் ஆறுமுகங்களுடைய கடவுளும் மறுபுறத்தில் பெண் தெய்வத்தின் வடிவமும் பொறிக்கப்பட் டுள்ளன. மறுபக்கத்திலுள்ள பெண் தெய்வம் முருகக்கடவுளின் பாரி யாகிய தேவசேனை எனக் கருதப்படுகின்றது. காளிதாசர் (கி.பி.4ஆம் அல்லது 6ஆம் நூ.) குமாரக் கடவுளின் பிறப்பைக் கூறும் குமாரசம்பவம் என்னும் நூல் செய்துள்ளார். வெவ்வேறு வடிவுகளில் வடநாட்டில் வழிபடப்பட்ட முருகக்கடவுளைச் சுற்றித் திரண்ட பழங்கதைகளும், தென்னாட்டில் தோன்றிய பழங்கதைகளும் திரண்டு இன்று முருகக் கடவுளைப்பற்றிய புராணமாக வழங்குகின்றன. இவ்வாறு இன்றைய முருக வழிபாடு வடநாட்டின் தொடர்பு பெற்றது. விட்டுணு மதம் வைணவ மதத்துக்குப் பாகவதம், பஞ்சராத்திரம் முதலிய பெயர்களும் வழங்கும். விட்டுணுவைத் தலைமையாகக் கொண்டு வழி படும் சமயம் வைணவம் எனப்படும். இருக்கு வேதத்தில் விட்டுணு பெரிய தெய்வமாகக் bகாள்ளப்படவில்லை. அவர் சூரியனைக் குறிப்பதாகவும், சிறு தெய்வங்களிலொன்றாகவுமிருந்தார். அப்பொழுது அவர் மும் மூர்த்திகளில் ஒருவர் என்னும் நிலையை அடையவில்லை. விட்டுணு மூவடிகளால் உலகை அளந்தாரென்பது சூரியனின் உதயம், நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களிலும் விண்ணில் செல்லும் செலவைக் குறிக்கின்றது. கி.மு. 4ஆம் நூற்றாண்டளவில் வாசுதேவனை (கிருட்டிணன்) வழி படும் சமயமொன்று தோன்றியிருந்தது. யாதவ வமிசத்தில் வசுதேவருக்கு வாசுதேவர் என்னும் புதல்வரிருந்தார். புராணங்களும், இதிகாசங்களும் இவரை வாசுதேவகிருட்டிணர் எனக்கூறும். யாதவ வகுப்பினரின் தலை வராக இருந்த இவர் பிற்காலத்தில் பகவத் அல்லது பகவான் என்னும் பெயரால் வழிபடப்பட்டார். இச் சமயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பெரிதும் கைக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தியாவில் பெஸ்நகரில் (Besnagar) கிரேக்க தூதராகவிருந்த எலியோதோரஸ் என்னும் கிரேக்க கடவுளரின் கடவுளாகிய வாசு தேவருக்குக் கருடத்தம்பமொன்றை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நாட்டினார். சாந்தோக்கிய உபநிடதம், தேவகி மைந்தனாகிய கிருட்டிணன் கோரர் என்னும் இருடியின் மாணவர் எனக் கூறுகின்றது. கோரரின் போதனைகளிற் சில கீதையிற் கூறப்படுவனபோற் காணப்படுகின்றன. கோரரும் கிருட்டிணரும் சூரிய வழிபாட்டினர். கிருட்டிணர் கீதையிற் கூறியவற்றுக்குக் கரு, கோரரின் உபதேசங்களாக லாம். வாசுதேவ மதத்தினர் இத் தத்துவஞானத்தை விரிவுப்படுத்தி யிருத்தல் கூடும். வாசுதேவரால் நாட்டப்பட்ட சமயம் வைணவ மதத்துக்கு ஆதாரமாக வுள்ளது. இது சூரிய வணக்கத்தின் வளர்ச்சியாக இருக்க லாம். கீதையைக் கண்ணன் சூரியனுக்கு உபதேசிக்க, சூரியன் அதை மனுவுக்கும், மனு அதை இஷ்வாகுவுக்கும் உபதேசித்ததாகக் கீதை கூறு கின்றது. அரி வம்சம், வாயு புராணம், பாகவத புராணம் முதலியன கிருட்டிணன் ஆயர்குலத்திற் பிறந்து, கோபிகளோடு விளையாடியது முதலிய கதைகளைக் கூறுகின்றன. பிற்காலத்தில் வாசுதேவ கிருட்டிணரும், வேதகால விட்டுணுவும் ஒருவராகக் கொள்ளப்பட்டனர். இக் கொள்கை பகவத் கீதை செய் வதற்கு முன் வலிபெற்றுவிட்டது. பின்பு வாசுதேவ - கிருட்டிண-விட்டுணு வழிபாட்டோடு நாராயணர் என்னும் இருடி வழிபாடும் இணைக்கப்பட்டது. நாராயணர் ஐந்து இரவுகள் யாகம் புரிந்தவராகச் சொல்லப்படுவர். இதனால் பஞ்ச ராத்திரா அல்லது பஞ்ச ராத்திரிகா என்பது வைணவ மதத்தைக் குறிக்க வழங்கும். போதாயன தரும சூத்திரம் (கி.மு.3ஆம் நூ.) நாராயணரைக் கடவுளாகக் கூறுகின்றது. தைத்திரிய ஆரணியகம் நாராயணர், வாசுதேவர், விட்டுணு என்போரை ஒரே கடவுளாகக் கூறுகின்றது. நாராயணர் அரி எனவும் அறியப்பட்டார். நாராயணரை வழிபட்டோர் ஆதியில் பஞ்ச ராத்திரிகர் எனப்பட்டனர். நாராயண வழிபாடு இமயமலைப் பகுதிகளில் தொடங்கியது. தென்னாட்டில் திருமால் வழிபாடு மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இது எப்படித் தொடங்கியதென்பது அறிந்து கொள்ளமுடியாதது. இவ் வழிபாடு காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழ்ந்த மக்களிடையே தொடங்கியதாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்தில் திருமால் மாயோன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இது கரியமால் என்னும் பொருள் தருவதாகலாம். மாயோன் வழிபாடு சூரிய வழிபாட்டோடு சம்பந்தம் பெற்றுள்ளது. சங்கும் சக்கரமும் சூரியனைக் குறிப்பன. பாற்பொங்கல் செய்து படைத்து, பெண்கள் கை கோத்து நின்று பாடிக் குரவையாடித் திருமாலை வழிபடுவது பண்டை வழக்கு. இவ் வழிபாட்டுக்கும், வடநாட்டில் தோன்றிய பஞ்சராத்திர பாகவத வைணவத்துக்கும் ஒருவகைத் தொடர்பும் இருக்கவில்லை. வடநாட்டில் நிலவிய பாகவத-வைணவம் தெற்கு நோக்கிப் பரவியது. அப்பொழுது திருமால் மதமும், வடநாட்டு வைணவ மதமும் ஒன்று கலந்தன. பழங்கதைகளும் கலந்தன. அப்பொழுது திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியது. தென்னாட்டில் கண்ணன் பலதேவ வழிபாடுகள் மிக்கிருந்தன. இதனைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. பரிபாடலில் திருமாலுக்கு எட்டுப் பாடல்களுண்டு. அவற்றுள் இப்பொழுது ஏழு பாடல்களுள்ளன. அவற்றுள் திருமால் தொடர்பாக வழங்கிய பழங்கதைகள் பல காணப்படுகின்றன. தென்னாட்டில் திருமாலுக்குக் கோயில்களிருந்தன. 12 ஆழ்வார்கள் காலத்தில் கோயில் வழிபாடு மிகச் சிறப்புற்றிருந்தது. பல சாதிகளைச் சேர்ந்த இவ்வடியார்கள் (கி.பி. 6-9ஆம் நூ.) திருமால் மீது பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரப் பிரபந்தம் எனப்படும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தும், முதலாம் இராசேந்திர சோழதேவர் காலத்தும் (985-1030) வாழ்ந்த நாதமுனி என்பார் இப் பாடல்களைத் தொகுத்தார். இவர் காலத்தின் முன் சமயத்துக்கு வேதங்களே ஆதாரம் என்னும் கொள்கை தலை எடுத்திருந்தது. வேதாந்தக் கொள்கைகளும் பரவிக் கொண்டிருந்தன. நாதமுனியின் பேரனாகிய ஆளவந்தார் (யமுனா சாரியர்) வைணவ வேதாந்தத்தை (விசிட்டாத்துவைதம்) விளக்கும் சித்தித்திரயம் என்னும் நூலையும், ஆகமப் பிரமாணியமென்னும் நூலை யும் செய்து பஞ்சராத்திர ஆகமங்களையும் வேதாந்தத்தையும் இணைத் தார். இராமானுசர் விசிட்டாத்துவைதமாகவும், மாதவர் துவைதமாக வும் வேதாந்த சூத்திரத்துக்கு உரை செய்தார்கள். வைணவமதத்தினர் பெரும்பாலும் வடமொழியையே முதன்மையாகக் கொண்டு, வட மொழியில் சமய நூல்களும் உரைகளும் இயற்றிவந்தனர். இவர்கள் சரிக்குச் சரி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு நடையையும் கையாண் டார்கள். இந் நடை மணிப்பிரவாளமெனப்பட்டது. சைவர்கள் தமிழில் சமய சாத்திரங்களும் அவற்றுக்கு தமிழுரைகளும் செய்து வந்தார்கள். வைணவ சமய வளர்ச்சி தொடக்கத்தில் ஆரிய சம்பந்தம் பெறாத வாசுதேவகிருஷ்ண மதம் கி.மு.300 வரையிலிருந்தது. வாசுதேவகிருஷ்ண மதம் பின்பு விட்டுணுவைத் தலைமையாகக் கொண்ட பிராமண மதமாக்கப்பட்டது. விட்டுணு வழி பாட்டினரின் பெயராக வைணவம் என்பது மகாபாரதத்தில் காணப்படு கின்றது. வேதத்தில் கூறப்படும் விட்டுணுவுக்கு அவரின் சக்தி கூறப்பட வில்லை. வைணவ சமயத்தின் மூன்றாவது படி வேதாந்தம், சாங்கியம், யோகங்களோடு சம்பந்தப்பட்டது. இது கிறித்துவ சகாப்தம் முதல் கி.பி. 1200 வரையில் நடைபெற்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் முழுமுதற் கடவுளாக்கப்பட்டுள்ளார். சில சமயங்களில் அவர் மகாதேவனை வழிபட்டார். வைணவ ஆகமங்கள் 108. இவற்றிற் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. இவை பாகவத, பஞ்சராத்திர, சத்வாதக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு தோன்றியவை. இக்கொள்கைகளைப் பற்றி மகாபாரதம் கூறுகின்றது. இவற்றின் வேறுபாடு சமயத்தைப் பின்பற்றுவோரின் மந்திரத்தைப் பற்றியது. பாகவதர் பன்னிரெண்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும், பஞ்சராத்திரர் எட்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும் வழங்குவர். பாகவதர் என்னும் பிரிவினர் இப்பொழுது சிறுதொகையின ராக உள்ளனர். இவர்கள் தெலுங்கு நாட்டிலும், மகாராட்டிரத்திலும் காணப்படுகின்றனர். இராமானுசர் தமது வேதாந்த பாடியத்தில் பாகவதர், பஞ்சராத்திரர், சத்வாதர் என்போர் ஒரே கொள்கையுடையவர் களெனக் கூறியுள்ளனர். வைணவரின் 108 ஆகமங்களும் பஞ்சராத்திர ஆகமங்களெனப்படும். பத்ம சம்கிதை அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. அவ்வாகமங்களு ளொன்றாகிய பரத்துவாச என்பது பத்ம சம்கிதைக்குப் பிற்பட்டது. இதனால் பழையவை மறைந்து போக, அவற்றுக்குப் பதில் புதியன எழுதப்பட்டன வென்பது தெரியவருகிறது. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் தமது காலத்தில் அவற்றுட் பல மறைந்து போயினவெனக் கூறியுள்ளார். ஆகமங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையால் அவற்றைப் புதியனவாக எழுதுவ தற்கும் அவற்றிற் பலவற்றைப் புகுத்துவதற்கும் வாய்ப்புக்களிருந்தன. பத்ம சம்கிதை, இலக்குமி தந்திரமென்பன பழமையுடையன. அவை இராமானுசருக்குப் பிற்பட்ட வைணவக் கொள்கைகளிலும் பார்க்கச் சாக்த, சைவக் கொள்கைகளுக்கு அண்மையிலுள்ளன. பத்ம சம்கிதையில் பஞ்ச ராத்திரமென்பதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பொருள், சிவன், பிரமா, கபிலர், புத்தர் அருகரால் வெளியிடப் பட்ட சைவ, யோக, சாங்கிய, யோக, பௌத்த, அருகதக் கொள்கைகளை இரவு ஆக்குவது எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இக்கால வைணவர் ஆகமக் கொள்கைகளை விட்டு விலகிச் சென்று விட்டனர். இக்கால விசிட்டாத்துவைதர் இராமானுசரின் வேதாந்த ஞானத்தையும், ஆகமத்தில் கூறப்படும் உலகப் படைப்பு வரலாறுகளையும், கிரியை முறைகளையும் கைக்கொள்கின்றனர். பஞ்ச ராத்திரத்தை விளக்குவதாகக் கூறிய இராமானுசர் வேதாந்தக் கொள்கை களையே விளக்கியுள்ளார். இராமானுசரைப் பின்பற்றினோர் அவருடைய தத்துவ ஞானத்தை அலட்சியஞ் செய்து ஆகமக் கொள்கைகளையும் அவற்றுட் கூறும் அனுட்டானங்களையுமே கடைப்பிடித்தனர். இராமா னுசருக்கு முன்னிருந்த யமுனாச்சாரியருக்கு முன் வேதங்களே பிரமாண மாகக் கொள்ளப்பட்டு வந்தன. வைணவ அத்துவைதக் கொள்கையைப் (விசிட்டாத்துவைதம்) போதித்த யமுனாச்சாரியர் வேதங்களைப் போல் ஆகமங்களும் பிரமாணமாகக் கொள்ளப்படுதல் வேண்டுமென வற் புறுத்தி, வேதங்களையும் ஆகமங்களையுமிணைத்தார். முற்பட்ட ஆகமங்கள் கடவுளைப் பரப்பிரமமென்றும், அவர் உலகைக் காத்தல் முதலிய கடமைகளை அவருடைய சக்தி புரிவதாகவும் கூறியுள்ளன. புராணங்களின்படி விட்டுணு திரிமூர்த்திகளுள் ஒருவராக வுள்ளனர். இவர் சிறீ, பூ, நில என்னும் மூன்று மனைவியருடன் ஆதி சேடனாகிய படுக்கையில் பாற்கடலில் பள்ளிகொள்வர். அவர் புதல்வ னாகிய பிரமா வேண்டிக் கொள்ளும் போது அவர் பூமியில் அவதாரஞ் செய்வர். சாக்தம் இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு ஆரியர் வருகைக்கு முற் பட்டது. தாய்க்கடவுள் வழிபாடு மக்களின் அநாகரிக காலத்தில் தோன்றி வளர்ச்சியடைந்து வந்தது. ஆகவே, இவ்வழிபாட்டில் அநாகரிக முறைகள் முதல் நாகரிக முறைகள் வரையில் காணப்படும். இத்தெய்வம் வடநாட்டில் துர்க்கை எனப்பட்டது. இது பிறகு சிவன் கடவுளின் பாரியாகிய உமை எனக்கொள்ளப்பட்டது. சிவனோடு சம்பந்தம் பெறாது தனித்து வழிபடப்பட்ட துர்க்கை அல்லது காளி வழிபாட்டி லிருந்து சக்தி வழிபாடு தொடங்கியது. தைத்திரிய ஆரணியகம், கேன உபநிடதங்களில் உமை, பார்வதி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் குவிஷ்க (Huvishka) அரசன் காலத்தில் சிவனோடும் சிவனில்லாமலும் உமையின் வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கின. அசெஸ் (Azos) என்னும் இந்து-சித்திய அரசனின் (கி.பி. 2ஆம் நூ.) நாணயங்களில் சிங்க வாகனத்திலிருக்கும் துர்க்கை வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் வீட்டும பருவப்பாடல்களிலும், விராட பருவத் தில் வரும் பாடல்களிலும் உமைக்குப் புதிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. விராட பருவத்தில் துர்க்கை நாராயணனின் பாரி என்றும், வீட்டும பருவத்தில் சிவனின் மனைவி என்றும், மகிடாசுரநாசினி என்றும் கூறப் பட்டுள்ளன. அரிவம்சம் அவள் விந்தியமலையிலிருப்பவளாகக் கூறு கின்றது. குமரி, காளி, கபாலி, மகாகாளி, சண்டி, காத்தியாயனி, விசையி, காராளி, கௌசிகி, காந்தர் வாசினி முதலிய பெயர்கள் பிற்காலத்து வழங்கின. சைவமும் சாக்தமும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. சாக்த ஆகமங்கள் 77. இவற்றுள் ஐந்து சுபாகமங்கள் எனப்படும். அவை வசிட்ட, சனக, சுக, சனாதன, சனத்குமார என்பன. இவை ஞானத்துக்கும் வீடு பேற்றுக்குமுரிய வழிகளைக்கூறும். அவை வலதுகை மார்க்கமெனவும் சமயாசாரமெனவும்படும். 64 ஆகமங்கள் கௌள ஆகமங்களெனப்படும். அவை மந்திர வித்தைகளையும் இடக்கரான வழிபாடுகளையும் கூறும். 8 மிசிர காமங்களெனப்படும் இவை இரண்டையும் கூறும். கௌள ஆகமக் கொள்கைகள் இடதுகை மார்க்கமெனவும், மிசிர ஆகம மார்க்கம் கலப்பு மார்க்கமெனவும்படும். மிசிராமங்களாவன: சந்திரகலை, சோதீஸ்வதி, புவனேசுவரி, துர்வாச மாதா, பர்கஸ் பதியா என்பன. சக்தி சூத்திரங்கள் என்னும் நூல் சாக்த தத்துவ ஞானத்தை விரிவாகக் கூறுகின்றது. பாஸ்கராச்சாரியார் தமது இலலித விஸ்வதாரபாடியம் என்னும் நூலில் இதிலிருந்து ஒன்பது சூத்திரங்களை எடுத்தாண்டுள்ளார். சக்தி சிவத் தோடு சேராவிடில் சிவத்தால் ஒரு தொழிலும் புரிய முடியாது என்பது இம்மதத்தின் கொள்கை. கடவுளைப் பெண் வடிவில் வழிபடும் மதம் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தது. வேதாந்த சூத்திரத்துக்கு அத்வைத உரை கண்ட சங்கராச்சாரியர் சாக்த மதத் தினரே ஆவர். சக்தியும் சிவமும், குணமும் குணியும் போன்றவை; ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்பது சைவர்களது கொள்கை. இது பற்றி எழுந்ததே சிவனின் பாகம் பெண் வடிவான வடிவு. சக்தி வழிபாட்டினர் சக்தியை வெவ்வேறு வடிவுகளில் உபாசிப்பர். கன்னி, வாலை, மனோன்மணி, திரிபுரை முதலியன சக்திகள் சிலவற்றின் பெயர்களாகும். சக்தி வழிபாட்டில் வேதங்களில் கூறப்படும் தெய்வங்கள் ஒன்றும் வணங்கப்படுவதில்லை. உருத்திர சிவன் சிவ வழிபாடு ஆரியரின் வருகைக்கு முன் இந்தியாவிலிருந்தது. ஆரியர் தெய்வங்களுளொன்று உருத்திரனாக இருந்தது. இது தொடக்கத் தில் மற்றத் தெய்வங்களோடு ஒத்த உயர்வுடையதாகக் கொள்ளப்பட வில்லை. மற்றத் தெய்வங்களுக்கு உணவு தீயிலிடப்பட்டது; உருத்திரனுக் கும் அதன் பரிவாரங்களுக்கும் மக்களுலாவாத நாற்சந்திகளிலெறியப் பட்டது. இத் தெய்வம் நாளடைவில் ஒரு கூட்டத்தினர் வழிபடும் நிலைமைக்கு உயர்வடைந்தது. உருத்திரன் ஊளையிடும் தெய்வமாகவும் பயம் விளைப்பதாகவுமிருந்தது. இது நாளடைவில் சிவனுக்குரிய பண்பு களைச் சிறிது சிறிதாக ஏற்றுக்கொண்டு சிவனாக மாறுதலடைந்தது.1 உபநிடதங்கள் வேதகாலத் தெய்வங்களுக்கு மேலான தெய்வம் எனக் கூறுகின்றன. கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவனெனத் தெரிகிறது. சிவ வழிபாட்டுக்குப் பாசு பதம் என்னும் பெயருமுண்டு. கடவுள் பசுபதி என்னும் கொள்கை உடைமையால் இப் பெயர் வந்ததெனச் சிலர் கூறுவர். சிவனைப் பசுபதி வடிவில் மக்கள் வழிபட்டமையால் இப்பெயர் தோன்றியதெனவும் கருதப்படுகிறது. மகாபாரதம் பாசுபதத்தைப் பற்றிக் கூறுகிறது. அருச்சுனன் சிவனிடத்தில் பெற்றது பாசுபத அத்திரம். நையாயிக, வைசேடிக சூத்திரங்களைச் செய்த கௌதமரும், கணாதரும் சிவ மதத்தினர் எனச் சொல்லப்படுகின்றனர். இராமாயணம், சீகந்த, மகாதேவ, உருத்திரன், திரியம்பகன் முதலிய பெயர்களால் சிவனைக் குறிப்பிடுகின்றது. சிவன் காமனை எரித்தது, பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சைச் சிவன் உண்டது, தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தது, சிவன் திரிபுரங்களை எரித்தது முதலிய கதைகளும் இராமாயணத்திற் காணப்படுகின்றன. மகாபாரத காலத்தில் சைவமும் வைணவமும் முதன்மை பெற் றிருந்தன. இராமாயணத்தில் சிவனைப் பற்றிக் கூறப்படும் கதைகள் மகா பாரதத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன. சிவன் திரிபுரங்களை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது முதலிய கதைகள் விரித்துக் கூறப்பட் டுள்ளன. வீட்டும பருவத்தில் அருச்சுனன் துர்க்கையை வழிபட்ட செய்தி காணப்படுகின்றது. கண்ணன் சிவனைக் கேட்ட வரங்களுள் ஒன்று தான் சிவபக்தனாக இருக்கவேண்டுமென்பது, பாரதம் தொடக்கத்தில் வைணவ சம்பந்தப்பட்ட நூலாக இருக்கவில்லை. கி.பி. 1ஆம் 2ஆம் நூற்றாண்டள வில் பிராமண மதக் கொள்கையினரால் இது வைணவ நூலாக்கப் பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வட இந்தியாவில் ஆட்சி புரிந்த இந்திய - சித்திய, இந்து - பட்டாணிய, குசான் அரசர் காலங்களில் இடபத்தோடு கூடிய சிவன் வடிவம் நாணயங்களில் பொறிக்கப்பட்டன. பௌத்த, சமண சமயங்கள் தோன்றும்போது வடநாட்டிலிருந்த சமயம் சைவம் எனக் கருதப்படு கிறது. வடஇந்தியாவினின்றும் இலங்கைக்கு வந்தவன் எனப்படும் விசயனும் அவனுக்குப் பின் அரசராக இருந்தோரும் சிவவழி பாட்டின ராக இருந்தார்கள். காசுமீர சைவம் சைவ சமயம் வட நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வேத காலத்தில் சிவாக்கள் என்னும் ஒரு கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். இவர்கள் சிவ வழிபாட்டினர் எனக் கருதப்படுகிறார்கள். வட நாட்டில் சைவமதம் பிரபலம் பெற்றிருந்த தென்பதை விளக்குவதற்குப் பல வலிய சான்றுகளுள்ளன. காசுமீரத்தில் சைவ சமய தத்துவ ஞானம் பற்றிய வரலாறு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வாசுகுப்தர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். இது சிவபெருமானால் வாசுகுப்தருக்கு உபதேசிக்கப்பட்டதென்றும், இது சிவபெருமானால் பாறையில் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் பழங்கதைகளுள்ளன. வாசுகுப்தர் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்து அதனைக் கல்லாடருக்கு உபதேசித்தார். வாசுகுப்தர் அல்லது கல்லாடரால் செய்யப்பட்ட ஸ்கந்த காரிகை, சோமதேவரால் செய்யப் பட்ட (கி.பி.900) சிவ திருஷ்டி, உத்பலரால் செய்யப்பட்ட பிரதிபிஞ்ஞா சூத்திரம் முதலியன காசுமீர தத்துவஞான நூல்களுட் சில. காசுமீர சைவம் ஆகமங்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் ஒப்புக் கொள்கின்றது. இது சங்கரரின் அத்துவைதக் கொள்கைச் சார்புடையது. காசுமீரத்தைச் சேர்ந்தவரெனக் கருதப்படும் பாணினி முனிவர் சிவ வழிபாட்டினர். இவர் வடமொழி இலக்கணத்தைச் சிவபெருமானிடம் கேட்டுணர்ந்தபின் செய்தாரென்னும் ஐதீகமிருந்து வருகிறது. “வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி” என்பது அதை உணர்த்துகின்றது. இந்து சமயம் சைவ சமயம் உட்பட, பௌத்தம், சமணம் அல்லாத இந்திய நாட்டில் தோன்றிய சமயங்களெல்லாம் இப்பொழுது இந்து சமயம் எனப்படுகின்றன. இந்து, இந்து சமயம் என்பன ஆரியத் தொடர்புடைய வடநாட்டு மக்களையும் அவர்களின் வேத சம்பந்தமான மதத்தையும் குறிக்க மேல்நாட்டவர் வழங்கிய பெயர்களாகும். சாக்தம், சைவம் முதலிய மதங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பிருப்பதாக வரலாறு கூறவில்லை. வேத மார்க்கமும் ஆகம மார்க்கமும் தம்முள் மாறுபாடு டையன. ஆகவே, சைவத்தை இந்து மதம் என்னும் கூட்டத்துள் அடக்குவது வரலாற்றுக்கும் கொள்கைக்கும் முரணுடையதாகும். சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு சைவத்துக்கும் தமிழுக்கும் மிக மிகப் பழங்காலம் முதல் தொடர்பிருந்து வருகின்றது. சிவபெருமான், முருகக்கடவுள் முதலிய கடவுளர் சங்கமிருந்து தமிழ் ஆய்ந்தது, சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அருளிச் செய்தது; தருமிக்குக் “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பாட்டை எழுதி உதவியது; நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறியது; சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்துக் கொடுத்தது; பெற்றான் சாம்பானுக்கு “அடியார்க்கெளியன்” என்னும் கைச்சீட்டெழுதி அளித்தது, சமயகுரவர் தமது செழும் பாடல்களால் புதுமைகள் பல விளைத்தது போன்ற ஐதீகங்கள் வழங்குகின்றன. இவ்வைதீகங்கள் தமிழ் மொழியைப் பேசிய மக்களிடையே சிவ வழிபாடு தோன்றித் தமிழோடு நெருங்கிய உறவு கொண்டு செழித்து வளர்ந்ததென்பதை உணர்த்துகின்றன. தொன்மை தொட்டுச் சமய சம்பந்தமான தோத்திரங்களும், சாத்திரங்களும் இம்மொழியிலேயே இருந்து வந்தன. ஆகவே, சிவ வழிபாடும் தமிழும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதபடி சதையும் நகமும் போல ஒன்றுபட்டிருந் தன. பிற்காலத்தில் சமயம், மொழியினின்று பிரிக்கப்பட்டது. தமிழல் லாத மொழி சமயமொழியாக்கப்பட்டது. அப்பொழுது சைவமும், தமிழும் பிரிக்கப்பட்ட சதையும் நகமும் போலாயின. சமய வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் குன்றின. மொழி சம்பந்தமான பூசல்கள் எழுந்தன. பேச்சு மொழி ஒன்றாகவும், சமய மொழி ஒன்றாகவும் இருத்தல் பல குழப்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஏதுவாகும். பழமை தொட்டு ஆரியம், தமிழ் என்னும் போராட் டங்கள் அல்லது பொறாமைகள் இருந்து வருகின்றன. சமய சீர்திருத்தம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றுக்குப் பணியாற்றும் உத்தமர்கள் இதனைக் கருத்திற் கொள்ளுதல் நன்று. சைவம் வாழ்க! தமிழ் வாழ்க!! BIBLIOGRAPHY 1. A Literary History of India - R.W. Frazer. 2. A short history of India - E.B. Havell. 3. Buddhists way of life its philosophy and history - Harold Smith. 4. Castes in India - its nature, function and origins - J. Hatton. 5. Encyclopaedia Britannica, 15th Ed. 6. History of civilization - Will Durant. 7. History of the Tamils - P.T. Srinivasa Aiyengar. 8. Indian Philosophy parts I & II - Dr. S. Radhakrishnan. 9. Literary achievements in India - Mrs. Hensa Metha. 10. Local Government in ancient India - R.K. Mookerji. 11. Mohenjo - Daro and Indus Civilization - Sir John Marshall. 12. Orient and Linguistic studies - William Dwlight. 13. Outlines of Indian philosophy - P.T. Srinivasa Aiyengar. 14. Pre-Aryan Tamil culture - Do. 15. Pre-historic ancient and Hindu India. - R.D. Banerji. 16. Sanskrit Literature - Professor Macdonell. 17. Short Studies in comparative religions - J.G.R. Forlong. 18. The Hindu view of art - Mulk Raj Anand Ph.D. 19. The History and Culture of Indian People - Bharatiya Vidya Bhavan, Bombay. 20. The Indus Civilization - Earnest Mackay. 21. The systems of Vedanta Philosophy - Dr.Paul Duessen. 22. Upanishads - R.D. Diwakar, Bombay 1950. 23. Zeus - Arthur Bernard Cook. PERIODICALS 1. Annals of Bhandarkar - Oriental Research Institute - Vol. XIX. 2. Bulletin of the School of oriental studies. Vol.VIII. 3. Indian culture. Vol.VII. 4. Indo-Asian culture. Vol.I. 5. Journal of Indian History. Vol.XII. 6. Memoir No.41 Arch. Survey (India). 7. New Review. Vol.X பொருட் குறிப்பு அ அகிகுண்டல நியாயம், 67 அக்கினி, 13 அசுர்பானிப்பால், 10 அதர்வணம், 6 அத்வாரு 64 அமெரிக்காவில் சிவன் கோயில், 6 அரச வகுப்பினர் உபநிடத ஞானத்தை அறிந்திருந்தனர், 52 அரசனே தலைமைக்குரு, 21 அரசன் கடவுளின் அவதாரம், 21 அருச்சுனன், 70 அவதாரங்கள், 77 அருணந்தி சிவாசாரியார், 42 ஆ ஆகமங்கள், 22 ஆசியா மைனரில் சிவ வழிபாடு, 8 ஆதிசேடன், 91 ஆத்திகமும் நாத்திகமும், 53 ஆர்மேனியாவில் கண்ணன் வழிபாடு, 18 ஆழ்வார்கள், 88 ஆளவந்தார், 82,88 ஆறுதரிசனங்களை இவ்விரண் டாகப் பிரிக்கலாம், 58 ஆறு தரிசனங்கள், 53 ஆறுமுக நாவலர், 36 ஆனந்தகிரி, 68 இ இந்து சமயம், 97 இராமாயணம், 77 இராமானுசர், 68,82 இருக்கு, 63 இருக்கு வேதம், 65 இருபா இருபஃது, 42 இருஷபர், 74 இலக்குமி தந்திரம், 90 இலிங்கம் - இலங்குவது, 10 இலிங்க வழிபாடும் பாம்பு வழிபாடும், 11 இலிங்காயதம், 28 இலைசியாவில் தமிலி என்னும் மக்கள், 8 இளம்பால் (பகல்), 19 இஷ்வாகு, 87 (இ) ஸ்கந்த வழிபாடு, 84 ஈசுவர கிஷ்ணர், 56 உ உண்மைநெறி விளக்கம், 43 உத்தரமீமாம்சை, 53, 62, 69 உபநிடக் கருத்துக்கள், ஆகமக் கருத்துக்கள், 24 உபநிடதங்களின் காலம், 51 உபநிடதங்களின் பாரசீக மொழிபெயர்ப்பு, 50 உபநிடதங்கள் - உபதேசங்கள், 24,49 உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன, 52 உபநிடத ஞானங்கள் மொகஞ்சதரோ காலத்தவை, 52 உமாதேவியார், 15 உமாபதி சிவாசாரியார், 42 உய்யவந்த தேவர், 42 உருத்திரசிவன், 93 உருத்திரன், 20,93 எ எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வம்,21 எசுர், 63 எபிரேய நாட்டில் சிவன், 6 ஏ ஏகாந்திகள், 32 ஒ ஒலிம்பஸ் மலை, 10 ஒ (ஹோ) தா, 64 ஐ ஐந்தாம் வேதம், 77 க கடவுள், இயவுள் என்னும் பெயர்கள், 28 கடைசி வருணத்தவருக்கு வேத வேதாந்தங்கள் மறுக்கப்பட்டன, 31 கண்ணன் சிவபத்தனாயிருக்க வரம் கேட்டது, 96 கண்ணன் வழிபாடு, 17 கந்தன் = கந்திலுறைபவன், 19 கதிர்காமம், 18 கபிலர், 30 கபிலவாஸ்து, 56 கருடத்தம்பம், 86 கர்மமீமாம்சை, 69 கலியுகம், 82 களப்பலி, 14 கற்பம், 81 காசுமீர சைவம், 96 காஞ்சீபுரக் கைலாசநாதர் கோயிற் சாசனம், 26 காடு கிழாள், 14 காமிகாகமம், 27 கார்த்திகேயர் 19, 85 காளிதாசர், 85 கிரியா என்னும் புரோகிதர், 66 கிரியை, 26 கிருட்டிணன் மகாதேவரை வழிபடல், 89 குகர், 84 குமார சம்பவம், 85 குமாரிலர், 62 கூரத்தாழ்வார், 83 கோயிலுக்கு மதிலும் அகழும், 21 கோயிலும் கோயிற் கிரியையும் 20 கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவன், 94 கௌரவர், 70 ச சக்தியின் பெயர்கள், 93 சங்கரர், 30 சங்கரர் உரை எழுதிய உபநிடதங்கள், 52 சங்கிதை, 67 சங்கு, 16 சடையப்ப வள்ளல், 42 சந்தான குரவர், 43 சமணம், 72 சமயத் தோற்றம், 4 சரியை, 26 சனகன், 79 சாக்த ஆகமங்கள் 27, 77, 92 சாக்தத்துக்கு 77, ஆகமங்கள், 26 சாக்தம், 91 சாங்கிய காரிகை, 56 சாங்கியத்துக்கு ஞானம் எண் என்னும் பொருள், 56 சாங்கியம், 53, 56 சாமவேதம், 65 சாலமனின் கோயில், 22 சிங்க வாகனத்திலிருக்கும் தாய்க் கடவுள், 8 சித்தர் பாடல்கள் 32 சித்தார்த்தர், 74 சித்தித்திரயம், 88 சியஸ் கடவுளுக்கு மூன்று கண், 9 சிரியா நாட்டுத் தந்தைக் கடவுள், 8 சிலப்பதிகாரம், 18 சிவசூத்திரம், 97 சிவஞான போதம், 42 சிவஞான சித்தி, 42 சிவப்ரகாசம், 43 சிவயோகிகள், 32 சிவ வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்று, 17 சிவலிங்கம், 9 சிவலிங்க வழிபாடு 18 சிவன், 5,18 சிவன் மதம், 6 சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர், 20 சிவாக்கள், 96 சிறீ, பூ, நில என்னும் விட்டுணுவின் மனைவியர், 91 சுப்பிரமணியர், 19,84 சுவத்திகம், 16 சுவேதாம்பரர், 72 சூத்திர வடிவில் தத்துவ ஞானம், 54 செவ்வேள், 19 சேக்கிழார், 98 சேயோன், 19 சைவ சித்தாந்தக் கொள்கை, 27 சைவத்துக்கு 28 ஆகமங்கள் 26 சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு, 97 சைவமடங்கள் 34 சோம பானம், 63 ஞா ஞாயிறு முழுமுதற் கடவுள், 4 ஞான நூல்களை எழுதிவைத்தல் தமிழ் மரபன்று, 24 ஞானம், 26 த தக்கன் வேள்வி, 96 தரிசனங்கள், 53 தர்மம்-கடமை, 67 தலமரம், 11 தாமரை மொட்டின் வடிவங்கள், 22 தாய் குடும்பத்துக்குத் தலைவி, 13 தாலிபுளக நியாயம், 67 திகம்பரர், 72 திங்கள் வணக்கம், 12 திரிபிடகம், 75 திரியம்பகன், 95 திருக்களிற்றுப்பாடியார், 42 திருமந்திரம், 25,32 திருமுருகாற்றுப்படை, 19 திருவுந்தியார், 42 திருவருட் பயன், 43 திரையற்ற கடல்போல் சிந்தை, 29 தீர்த்தங்கரர், 72 தீவணக்கம், 12 துரோதானம், 27 துர்க்கை, 91 துர்க்கையின் பெயர்கள், 92 தென்னிந்திய சிற்பமும் எகிப்திய சிற்பமும், 21 தேவசேனை, 85 தேவதாசிகள், 27 தொல்காப்பியம் ந நச்சினார்க்கினியர், 24 நாணயங்களில் சிவ வடிவம், 96 நாதமுனி, 88 நாராயணர், 87 நாலாயிரப் பிரபந்தம், 88 நான்கு வருணங்கள், 37 நிம்ரொட் அரசன், 13 நியாயங்கள், 67 நிரீச்சுர வாதம், 56, 75 நியாயம், 60 நிர்வாணம், 73 நீலகண்ட சிவாசாரியார், 27 நீலகண்டர், 70 நூறுயாகங்கள் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரசன், 49 ப பகவத்கீதை, 70 பகவான், 86 பகற் கடவுள் சம்பந்தமாக பாபிலோன்,10 பசுபதி, 94 பஞ்சராத்திரம் என்பதன் பொருள், 90 பஞ்சராத்திரரின் 8 எழுத்து மந்திரம், 89 பஞ்சராத்திரிகா, 87 பதஞ்சலி, 59 பதினெண் புராணங்கள், 81 பத்மசங்கிதை, 90 பரணி நூல்கள், 14 பரிபாடல், 19,88 பரிமேலழகர், 24 பரிவார தெய்வங்கள், 21 பலதேவ வழிபாடு, 88 பாகவதம், 85 பாகவதரின் 12 எழுத்து மந்திரம், 89 பாசுபத அத்திரம், 95 பாசுபதம், 91 பாணினி, 97 பாண்டவர், 70 பாரதப்போர், 76 பாரதம் திராவிட நாட்டுக் கதை, 76 பார்சவர், 72 பாலவர், 77 பால் கடவுள், 19 பாஷா என்னும் நடை, 25 பாற்கடல், 91 பிணிமுகவூர்தி, 19 பிரம என்னும் புரோகிதர், 65 பிரம சூத்திரம், 60, 69 பிரமணியர், 84 பிரமா, விட்டுணு, உருத்திரன், 20 பிராமணங்கள், 49,87 பிராமணரல்லாத துறவிகள், 33 புத்தர், 28,74 புராணங்களின் காலம், 80 புராணங்கள், 18, 79. பூசாரிக் குடும்பங்கள், 21 பூர்வமீமாம்சை, 53,61 பூர்வமீமாம்சை முழு முதற்கடவுளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, 54 பெத்தெல், 12 பெரியநம்பி, 82 பெரிய புராணம் 27 போசராச மார்த்தாண்டா, 59 போதாயன கிரியா சூத்திரம், 60 போற்றிப் பஃறொடை, 43 பௌத்திர பாகு, 73. ம மகாஉகம், 81 மகாசேனர், 84 மகாபாரதம், 76 மகாவீரர், 72 மணிப்பிரவாளம், 89 மயூர சந்திரகுப்தன், 73 மறு பிறப்பைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை, 23 மறைஞான சம்பந்தர், 42, 43 மனுக்கள், 5 மாதவர், 83 மாயா மக்கள், 7 மால் வழிபாடு, 16 மிருகோத்திரம், 27 மீமாம்சை, 61 முண்டகம் மழிக்கப்பட்ட தலை, 51 முதியபால் (பகல்), 19 மும்மூர்த்திகள், 20 முருகக் கடவுளுக்கு ஆறுமுகம், 19 முருகக் கடவுள், 19 முழிக வழிபாடு, 18 முருகவழிபாடு கதிரவன் வழிபாடு, 18 மூவடிகளால் உலகளந்தது, 86 ய யமினி, 61 யமினி சூத்திரம், 67 யமுனாசாரியர், 88,90 யவனர், 77 யாக்ஞவல்கிய மிகுதி, 58 யாதவப் பிரகாசர், 70,82 யோகம், 26,53,56 வ வசவர், 27 வருணாச்சிரம தருமம், 27 வல்லபர், 68 வற்சயாயனர், 61 வன்னியும், கிணறும் இலிங்கமும், 11 வாசஸ்பதி, 68 வாசுகுப்தர், 96 வாசுதேவ கிருட்டிணர், 96 வாசுதேவ கிருட்டிண விட்டுணு, 87 வாசுதேவன், 86 வாத நாராயணர், 68 வார்த்தமானர், 73 விசாகர், 84 விசிடாத்துவைதம், 71,83 விட்டுணு மதம், 85 விட்டுணு வழிபாடு, 17 விட்டணுவின் அவதாரம், 78 விட்டுணுவும் சிவனும், 78 வித்தியாரணியர், 84 விநாயா, 75 வியாக்கிர பாதர், 60 வியாசர், 76,81 வினா வெண்பா, 43 வீட்டும பருவம், 70 வீரசைவம், 12, 28 வெள்ளப் பெருக்கு, 4 வேதங்களில் பத்து உபநிடதங்கள், 51 வேதங்களைப் பெண்கள் கேட்டலும் ஓதலும் கூடாது, 29 வேதங்கள், 46 வேதமார்க்கமும் ஆகம மார்க்கமும், 30 வேதம் ஒன்றாகவிருந்தது, 64 வேதம் நித்தியம், 68 வேதாந்த சூத்திரம், 68 வேதாந்த தேசிகர், 90 வேதாந்தம், 69 வைசேடிகம், 53,59 வைசேஷ, 60 வைணவ ஆகமங்கள், 108, 89 வைணவ சமய வளர்ச்சி, 89 வைதீக சமயம், 45.  இந்து சமய வரலாறு முன்னுரை இந்தியாவில் வடமொழி, தென்மொழி என இரு மொழிகளும் வேதமார்க்கம், சைவமார்க்கம் என்னும் சமயங்களும் பழங்காலத்தி லிருந்தன. இவற்றினின்று தோன்றியனவே இன்று இந்திய நாட்டில் காணப்படும் மொழிகளும் சமயங்களும் ஆகும், வேதமார்க்கம் வைதீக மதம் என அறியப்படும். இது சில மாற்றங்களுக்கு உள்ளாகிப் பிற்காலத் தில் இந்து மதம் என்னும் பெயர் பெற்றது. இந்து மதம் வேதங்களைத் தொடக்கமாக உடையதாதலின் அதன் சமய நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. அந் நூல்களைப் படித்தறிவதற்கு உயர்ந்த சமக்கிருத அறிவு வேண்டும். வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை, தரும சூத்திரங்கள், மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் முதலிய நூல்களை எல்லாம் மேல்நாட்டறிஞர் கற்று, அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதி அச்சிட்டிருக்கின்றனர்; அந்நூல்களைப் பற்றி ஆராய்ச்சிகளையும் வெளியிட்டிருக்கின்றனர். இந்தியப் பேராசிரியர் களும் அம்மொழி பெயர்ப்பு நூல்களையும் ஆராய்ச்சிகளையும் வழி காட்டிகளாகக் கொண்டு தமது ஆராய்ச்சிகளை எழுதி இருக்கின்றனர்; எழுதி வருகின்றனர். இந்து சமயம் என்னும் இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களையும் ஆராய்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது. ஐயப்பாட்டுக்குரிய பகுதிகள் தக்க மேற்கோள்களால் விளக்கப்பட்டிருக்கின்றன. சரித்திர ஆராய்ச்சித் துறையில் மேல்நாட்டறிஞர் செய்திருக்கும் பணியை நாம் பாராட்டாதிருக்க முடியாது.1 சமய ஆராய்ச்சியையும் அவர்கள் ஒரு கலையாகக் கொண்டு காய்தல் உவத்தலின்றி எழுதியிருக் கின்றனர். மேல்நாட்டாசிரியர்கள் இந்திய சமயங்களைப் பற்றி எழுதியவை ஏற்கத்தக்கனவல்ல என ஒருசிலர் கூறி வருகின்றனர். இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.” நூலின் இறுதியில் குறிப்புகள் (Notes) என்னும் ஆங்கிலப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இக் குறிப்பிலுள்ளவை பிரபல வரலாற்றாசி ரியர்களின் கூற்றுக்கள். இந்து சமயம், சைவ சமயங்களைப் பற்றிய பல மயக்கங்கள் இருந்து வருகின்றன. அவற்றுக்கெல்லாம் இம் மேற் கோள்கள் சிறந்த விளக்கம் அளிக்கின்றன. ந.சி. கந்தையா இந்து சமய வரலாறு தோற்றுவாய் இந்து சமயமென்பது வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமயம். அது வைதீகம் எனவும் பெயர் பெறும். மிகமிக முற்காலத்தில் இந்திய நாடு முழுமையிலும் தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தார்கள். கி.மு.2000 வரையில் ஒரு புதிய சாதியார் இந்தியாவை அடைந்தார்கள். இவர்களைப் பற்றி அறிந்து கொள்வது இந்து சமயத்தைப்பற்றி விளக்கிக் கொள்வதற்கு இன்றியமையாததாக இருக்கின்றது. கஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையில் வெண்ணிற முடைய ஒரு சாதியார் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஆடு மாடுகளை ஒம்பி அவை கொடுக்கும் பயன்களைக் கொண்டு வாழ்பவர் களாக இருந்தார்கள். கி.மு.2500 வரையில் இயற்கை மாறுபாட்டால் பெருவறட்சி உண்டாயிற்று; புல்வெளிகள் கரிந்து போயின. ஆகவே அவர்கள் பல கூட்டங்களாகப் பிரிந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரசீகத்துக்கும் சென்றார்கள். பாரசீகத்துக்குச் சென்றவர்கள் அங்கு சில நூற்றாண்டுகள் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களிற் சிலர் கூட்டங்களாகப் பிரிந்து கைபர்க் கணவாய் வழியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியை அடைந்தார்கள். இவர்கள் ஆரியர் எனப்பட்டார்கள். இவர்கள் வரும்போது இந்திய நாடு மக்கள் நடமாடாத காடாக இருக்கவில்லை. அங்கு உயர்ந்த நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் நாகரிக உயர்வைப்பற்றி அரப்பா மொகஞ்சதரோவிற் கிடைத்த தொல் பொருள்களும் ஆரியர்களின் பழைய பாடல்களாகிய வேதங்களும் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ நாகரிக காலம் கி.மு.3500 முதல் கி.மு.2000 வரை. இருக்கு வேதத்தின் மொழிக்கும் பழைய பாரசீக செண்டு மொழிக்குமுள்ள ஒற்றுமைகளைக் கொண்டு (இந்திய) ஆரியர் இந்தியா விற் புகுமுன் சில நூற்றாண்டுகள் பாரசீக ஆரியர்களுடன் ஒன்றாக வாழ்ந்தார்களென்று உய்த்தறியப்படுகின்றது. நான்கு வருணங்கள், உப நயனம், முப்பத்துமூன்று தேவர்கள் யாகங்கள் அவைகளில் உபயோகிக் கப்படும் யக்ஞம், மந்திரம், சோமம், ஹோதா முதலியன இந்திய ஆரியருக் கும் பாரசீகருக்கும் பொதுவாகக் காணப்படுகின்றன. *இந்தியாவில் பேசப் படும் ஆரிய மொழிக்கும் பாரசீகத் திலும் ஐரோப்பாவிலும் பேசப்படும் ஆரிய மொழிக்கும் தொடர்பிருப்பதால் இம்மொழிகள் எல்லாவற் றுக்கும் இந்து - ஐரோப்பிய வமிசம் எனக் கூறுவது வழக்கம். ஆரியரின் சமயம், பண்பாடு, மொழி முதலியன அவர்கள் வரும் போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் சமயம், பண்பாடு, மொழிகளிலும் வேறுபட்டிருந்தன. தமிழர் சிவ வழிபாட்டினர். ஆரியர் இயற்கைப் பொருள்களையும் வியப்பளிக்கும் இயற்கை நிகழ்ச்சிகளை யும் தேவர்களாகக் கொண்டு வழிபடுவோராக இருந்தனர்; அவர்கள் சிவனை வழிபடவில்லை. தமிழர் கோயில்கள் அமைத்துத் திருவுருவங்கள் வைத்துப் பூசைகளும் விழாக்களும் நடத்திக் கடவுளை வழிபட்டனர்.# ஆரியர் யாகசாலைகளில் தீ வளர்த்து மந்திரங்களைச் சொல்லித் தேவர் களை அழைத்துப் பலியாக உணவைத் தீயிலிட்டு அவர்களை மகிழ்வித் தனர். ஆரியரின் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் உள் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியருக்கு வேதம் பிராமண மாக இருந்தது. தமிழருக்கு ஆகமம் பிராமணமாக இருந்தது. வெளியினின்றும் வந்த மக்கள் சிறு தொகையினரும் உள்நாட்டு மக்கள் அவர்களை விழுங்கிவிடக் கூடிய பெருந்தொகையினருமாக இருந்தார்கள். இருவேறு மக்களும் உறவாடிக் கலந்தார்கள். வடக்கே மொழி ஆரியமாகிக் கொண்டு வந்தது; சமயமும் பண்பாடும் தமிழ் மய மாகிக் கொண்டு வந்தன. பழைய மக்களின் பழங்கதைகள், தெய்வங்கள், கிரியை முறைகள் என்பன ஆரியர் சமயத்திற் புகுந்தன. தமிழர் அறிந்திருந்த தத்துவ ஞானங்களையும் அவர்கள் சிறிது சிறிதாக அறிந்தார்கள். அவர்களின் சமயம் யாகம் புரிவதிலிருந்து தத்துவ ஞானக்கொள்கை உடையதாக மாறிக்கொண்டும் சைவ சித்தாந்த ஞானத்தை அணுகிக் கொண்டும் வந்தது. வேதம், பிராமணம், ஆரணியகம், உபநிடதம் தரிச னங்கள், பகவத்கீதை, வேதாந்த சூத்திரத்துக்கு சங்கரர், இராமானுசர், மாதவர், நீலகண்ட சிவாசாரியர் முதலானோர் செய்த உரைகள் என்பவை வேதத்தில் தொடங்கி மேல்நோக்கிச் செல்லும் ஏணிப் படிகள் போல அமைந்திருக்கின்றன. ஆரியர் வருகைக்கு முந்திய சமயம் அரப்பா மொகஞ்சதரோ என்னுமிடங்களில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் ஒரு வகை மாக்கல்லில் வெட்டப் பட்ட முத்திரைகள் பல கிடைத்தன. ஒரு முத்திரையில் மூன்று முகங்களுடைய ஒரு வடிவம் அட்டணைக்கால் இட்டுக்கொண்டும், மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டும், ஆல் அல்லது அரசு போன்ற மரத்தின் கீழ் இருக் கின்றது. அதனைச் சூழ்ந்து பல விலங்குகள் காணப்படுகின்றன. பாம்பும், புலியும், மானும் அதனோடு தொடர்பு பெற்றிருக்கின்றன. அவ்வுருவம் பசுபதிக்கடவுளைக் குறிப்பதாக சர் யோன்மார்சல் கூறியுள்ளார். பின் வந்த கீழ்நாட்டு மேல்நாட்டு ஆராய்ச்சியாளரும் இக் கூற்றினையே வழிமொழிந்துள்ளார்கள். கோயில் என்று கருதப்படும் ஒரு கட்டடமும் மொகஞ்சதரோவில் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பக்கத்தே செங்கல்லாற் கட்டப்பட்ட கேணியும் பக்கத்தே பல அறைகள் கொண்ட கட்டடமும் காணப் பட்டன. கட்டடம் கோயில் வழிபாட்டுக்குச் செல்வோர் நீராடியபின் தங்கியிருக்கும் பொருட்டு எடுக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றது. கோயில் இக்காலத் தென்னிந்தியக் கோயிலை அமைப்பில் ஒத்திருந்த தென்று தெரிகிறது. கோயிலிருந்தால் அதனுள் மூர்த்தி இருத்தல் வேண்டும். கடவுளுருவங்களைச் செய்யும் விதிகளும், கோயிலமைக்கும் விதிகளும், பூசைகள் விழாக்கள் ஆற்றும் முறைகளும் அவற்றுக்கு விளக் கங்களும் பிறவும் அக் காலத்தில் அறியப்பட்டிருந்தன என நாம் உய்த் தறிதல் கூடும். கோயில்களை மேற்பார்த்துப் பூசை செய்யும் பார்ப்பனரும் அக் காலத்திலிருந்தனர். வேதகாலப் பிராமண வகுப்பினர் ஆரியருக்கு முற்பட்ட பார்ப்பனக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என ஆராய்ச்சி வல்ல2 பார்கிதர் கூறியிருக்கின்றார். சிவபெருமான் தென்முகக் கடவுளாகக் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வருக்கு நான்மறைகளை அருளிச் செய்தாரென்னும் ஐதீகம் சைவ சமயத்தவர்களிடையே பழங்காலம் முதல் இருந்து வருகிறது. தேவாரம், திருவாசகம்* திருமந்திரம்* முதலிய நூல்கள் இதனை ஆங்காங்கு குறிப்பிடுகின்றன. இவ் வைதீகத்துக்கும் மொகஞ்சதரோ முத்திரையில் காணப்படும் வடிவத்துக்கும் தொடர்பு காணப்படுகின்றது. நான்மறைகளும் ஆகமங் களும் ஆரிய மக்கள் இந்தியாவை வந்தடைவதன் முன் இருந்தனவென்று நாம் அனுமானிக்கலாம். தமிழ் வழங்கிய மக்கள் அரப்பா, மொகஞ்சதரோ முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மொகஞ் சதரோ கால வழக்கங்களில் சிலவும், அணிகலன்களிற் சிலவும் தென்னிந் தியாவில் இன்றும் வழங்கி வருகின்றன. பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் பேசும் பிராகூய் மொழிக் கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது. மொகஞ்சதரோ நாகரிக காலத்தின் பின் வந்த வேத பாடங்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.3 இவை ஆரியரின் வருகைக்கு முன் வடக்கில் தமிழ் வழக்கிருந்த தென்பதைக் காட்டுகின்றன. வேதங்கள் வேதங்கள் வைதீகரின் புனித நூல்கள். இவை பிராமண சமூகத் தினரால் பிறரறியாவண்ணம் மறைத்து வைத்து நீண்டகாலம் பயிலப் பட்டு வந்தன. அக்பர் அரசன் வேதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அவற்றை அறிந்து கொள்ள முயன்றானென்றும் அவனுக்கு அது கை கூடவில்லையென்றும் சரித்திரகாரர் கூறியிருக்கின்றனர். பொது மக்கள் வேதங்களைப் பெயரளவில் அறிந்திருந்தார்கள். ஐரோப்பிய மக்களின் குன்றாத உழைப்பினால், வேதங்களின் மூலங்கள், உரைகள், மொழி பெயர்ப்புகள், விளக்கங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பவை வெளி வந்தன.* கோல்புரூக் என்னும் அறிஞர் வேத ஆராய்ச்சிகள் அடங்கிய கட்டுரை ஒன்றை 1805இல் வெளியிட்டார். இதன் சர்மன் மொழி பெயர்ப்பு 1847இல் அச்சிடப்பட்டது. வேதங்களின் ஒரு பகுதி 1838இல் இலண்டனில் அச்சிடப்பட்டது. 1849-க்கும் 1875-க்குமிடையில் மாக்ஸ் முல்லர் இருக்கு வேத பாடல்களைச் சாயணர் உரையோடு அச்சிட்டார். 1851-க்கும் 1863-க்குமிடையில் இருக்குவேத மூலம் முழுமையும் அச்சிடப் பட்டது. வேதமொழி பழைய சர்மன் மொழிக்கு இனமுடையதாகக் காணப்பட்டமையின் மொழி ஆராய்ச்சியின் பொருட்டு மேல்நாட்டவர் சமக்கிருதத்தைப் பயின்றனர். இலத்தின், சர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய வேதமொழி பெயர்ப்புகள் அச்சிடப்பட்டன. வேத ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சிகளில் உழைத்து வரும் பிராமணரும், பிராமணர் அல்லா தாரும் மேல் நாட்டவர்கள் அச்சிட்டுள்ள மொழிபெயர்ப்புகளையும் அவர்கள் எழுதியிருக்கும் விளக்கங்களையும் எடுத்து ஆண்டு வருகின்ற னர். மேல்நாட்டவர்களின் மொழிபெயர்ப்புகள், விளக்கங்கள், சாயணர் உரை முதலியவற்றைக் கொண்டு சிவத்தியானந்த மகரிஷி என்பார் வேதங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இன்று வேதங்களைப் பற்றி எல்லோரும் அறியும் வாய்ப்பு இருக்கின்றது. இந்திய நாட்டை அடைந்த ஆரியர் தமிழ் மக்களின் மத்தியில் வாழ்ந்தார்கள். தமிழர் பண்பாடுகள் ஆரியர் பண்பாடுகளுடன் கலந்தன.4 ஆரியர் பல தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள்.# போர்களில் வெற்றி அளிக்கும் படியும் நோய், பஞ்சம், முதலியவற்றினின்று தம்மைக் காக்கும் படியும், மழை பெய்ய வேண்டியும், இவ்வுலக வாழ்வில் தமக்கு வாய்ப்பு அளிப்பவற்றை உதவும்படியும் வேண்டிப் பலர் கடவுளர்மீது பாடல்களைப் பாடினார்கள்.5 பாடல்களைச் செய்தவர்கள் இருடிகள் எனப்பட்டார்கள். அவர்கள் எழுதும் முறையை அறிந்திருக்கவில்லை. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடம் செய்யும் முறையில் வேத பாடல்கள் தலைமுறைகளாகத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தன. வேற்று மொழியும், வேறு பண்பாடும் வேறு சமயமுமுடைய மக்க ளிடையே வாழ்ந்து கொண்டிருந்த ஆரிய மக்கள் தமது சமயப் பாடல்கள் சிதைந்து மறைந்து போகும் என அஞ்சினார்கள்; மக்கள் நினைவில் மிதந்து கொண்டிருந்த பாடல்களை எல்லாம் திரட்டினார்கள்.6 அத் திரட்டு இருக்கு எனப்பட்டது. இருக்கு என்பதற்குப் பாடல் என்பது பொருள்.# தொடக்கத்தில் இருக்கு என்னும் ஒரு வேதம் இருந்தது. இருக்கு வேதத்தில் 1028 சூக்தங்களுண்டு. சூக்தமென்பது பதிகம் போன்று பல பாடல்களடங்கிய தொகுப்பு. சூக்தங்களில் ஒன்று முதல் நூற்றுக்கு மேல் கூடியும் குறைந்தும் பாடல்கள் உள்ளன. இவைகளுள் பதினொரு சூக்தங்கள் வாலகில்லியராற் பாடப்பட்டன வென்றும் அவை பிற்காலத் தனவென்றும் கருதப்படுகின்றன. அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத்திலுள்ளவை 1017 சூக்தங்களே. 1017 சூக்தங்களிலும் 10,600 பாடல்களுள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால் இருக்கு வேத பாடல்கள் முழுமையும் 600 பக்கங்களிலடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமரின் இல்லியாட் என்னும் நூலளவு ஆகும். இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல மல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிவும் உண்டு. முதல் மண்டலத்தில் 191 சூக்தங்களுண்டு. இவை 15 இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டு வரையிலுள்ள சூக்தங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தாராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள் இருடிகள் பலராற் பாடப்பட்டவை. அப்பாடல்கள் முழுமை யும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத் துக்கும் பத்தாம் மண்டலத்துக்கும் இடையில் வாலகில்லியரின் பாடல் களாகிய பதினொரு சூக்தங்கள் காணப்படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளாற் செய்யப்பட்டவை. இப்பாடல்களின் நடை பொருள்களைக் கொண்டு இவை பிற்காலத்தனவாக வேத ஆராய்ச்சி யாளர் கூறியிருக்கின்றனர்.* 8ஆம் 9ஆம் மண்டலங்களிலுள்ள பாடல்கள் பெரும்பாலும் சாம வேதத்திற் காணப்படுகின்றன. தொடக்கத்தில் புரோகிதர் என்னும் தனி வகுப்பினர் இருக்க வில்லை. குடும்பத் தலைவனே புரோகிதனாக இருந்து தீ வளர்த்துத் தீயில் உணவைத் தேவருக்குப் பலியாக இட்டான். இவ்வாறு எளிதாக இருந்த யாகக்கிரியை நாளடைவில் வளர்ந்து கொண்டு சென்று சிக்கலடைந்தது. யாகங்களை நடத்துவதற்குப் புரோகிதரின் உதவி வேண்டியிருந்தது. யாகங்களில் வெவ்வேறு கிரியைகள் புரியும் புரோகிதர் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டனர். அத்வார்யுக்கள் என்னும் புரோகிதர் யாகக்கிரியைகளில் தலைமைப் புரோகிதராக இருந்து கிரியைகளைச் செய்தார்கள். இவர்கள் யாகங்களில் படிப்பதற்காக வசனமும் பாடல்களு மடங்கிய எசுர் வேதமென்னும் தொகுப்புச் செய்யப்பட்டது. எசுர் வேதத்தில் காணப்படும் பாடல்களில் பாதிவரை இருக்கு வேதத்தி லுள்ளன. உத்காதா என்னும் புரோகிதன் இசையோடு சோம யாகங்களில் பாடுவதற்குத் தொகுக்கப்பட்டது சாமவேதம். இவ் வேதத்தில் 1550 சூக்தங்கள் வரையிலுள்ளன. இவைகளுள் பெரும்பாலன இருக்கு வேதத் தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. ஹோதாக்கள் என்னும் புரோகிதர் பாடித் தேவர்களை அழைப் பதற்காகவுள்ளது இருக்கு வேதம். அதர்வண வேதம் நான்காவதாகவுள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுள் சேர்க்க லாமா விடலாமா என்னும் சந்தேகம் நீண்ட காலம் இருந்து வந்தது.# ஆகவே சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் சில இடங்களில் நான்கு வேதங்களென்றும் நூல்கள் கூறுதலைக் காணலாம். மனுமிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது. “இதிலுள்ள மந்திரங்களில் பல, ஆரியர் இந்தியாவில் புகுமுன் பழக்கத்திலிருந்து சிறிது மாற்றப்பட்டு அதர்வணத்துள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக நினைக்க இடமுண்டு”. வேதங்களுக்கு அனுக்கிரமணி என்னும் பதிகம் (அட்டவணை) எழுதப்பட்டுள்ளது. அது வேத பாடல்களைச் செய்த இருடிகளின் பெயர்கள், பாடல்களின் யாப்புவகை, பாடல்கள் துதிக்கும் தெய்வங் களின் பெயர்கள் முதலியவற்றைக் கூறுகின்றது.7 விசயநகர அரசர் காலத்து அரிஅரனின் மந்திரியாக விளங்கிய சாயணர் (14ஆம் நூ.) சமக்கிருத பண்டிதர்களைக் கூட்டித் தாம் அவர்களுக்குத் தலைவராக விருந்து வேதங்களுக்குச் சிறந்த உரை எழுதினார். வேதங்கள் துதிக்கும் தேவர்கள் வேதங்களில் கூறப்படும் தேவர் தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தன், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அசுவினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு அல்லது வாதா, பிருதிவி, அக்கினி, பிரகஸ்பதி சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சதுட்ரி (Sutlej) ஆறு, சரசுவதி ஆறு முதலியோராவர். தேவர்களும் இறப்பவர்களாக இருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தேவர், வடிவில் மனிதனைப் போன்றவர். அக்கினி தேவனின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன் அவ்வகையினன். தேவர் குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கின்றனர். அவர்களின் உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு உணவுகள் யாகங்கள் வாயிலாகக் கிடைக் கின்றன. அக்கினி அவைகளைக் கொண்டு சென்று அவர்களிடம் சேர்க்கி றான். சில சமயங்களில் தேவர்கள் தேரில் சென்று பலிகளை ஏற்பர். அவர்களின் உறைவிடம் வானத்திலிருக்கும் சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்வித்தால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குவர். உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் அவர்களுக்கு ஆதிக்கம் உண்டு. வேத அங்கங்கள் வேதாங்கங்கள் வேதங்களோடு தொடர்புடையவை. அவை வேதங்க ளல்ல. அவை சிட்சை (சிக்கை), கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் என ஆறு. வேதாங்கங்களுள் (1) சிட்சை முதலிடம் பெறுகிறது. சிட்சை என்பதற்குக் கற்பித்தல் என்னும் பொருள் தொடக்கத்திலிருந்தது. பின்பு அதற்கு வேத பாடங்களைத் திருத்தமாக எடுத்தும் படுத்தும் உச்சரித்தல் என்னும் பொருள் வழங்குவதாயிற்று. ஆகவே சிட்சை சங்கிதைகளோடும் யாகக் கிரியைகளோடும் தொடர்புடையது. யாகங் களில் விதி பிறழாத கிரியைகள் எவ்வாறு முக்கியமோ அவ்வாறே மந்திரங்களின் திருத்தமான உச்சரிப்பும் முக்கியமுடையது. தைத்திரீய உபநிடதம் முதன் முதல் வேதhந்தங்களைப் பற்றிக் கூறுகின்றது. சிட்சையைப் பற்றிக் கூறும் பழைய நூல்கள் பிரதிசாக்கியங்கள் எனப்பட்டன. சௌனகர், காத்தியாயனர், பாரத்துவாசர், வியாசர், வசிட்டர், யாக்ஞ வல்கியர் முதலியவர் பிரதிசாக்கிய நூல்கள் செய்தனர். அனுக்கிரமணி என்னும் இருக்குவேத பாடல்களின் அட்டவணை யும் வேதாங்கங்களோடு தொடர்புடையது. இதனைச் செய்தவர் சௌனகர். இது வேத பாடல்களையும் அவற்றைச் செய்த முனிவர் பெயர்களையும், பாடல்கள் துதிக்கும் தெய்வங்களின் பெயர்களையும் கூறுகின்றன. காத்தியாயனர் (கி.மு.400). சர்வ அனுக்கிரமணி என்னும் நூல் செய்துள்ளார். அது இருக்கு வேத பாடல்கள் ஒவ்வொன்றின் முதல் சொற்களையும், பாடங்களின் எண்களையும், பாடல்கள் செய்த முனிவர்களின் குடும்பத்தையும், துதிக்கப்படும் தேவர்களின் பெயர்களை யும், பாடலின் சந்தத்தையும் கூறுகின்றது. சௌனகர் பிரிகத் தேவதா என்னும் நூல் செய்தார். இஃது இருக்குவேத பாடல்கள் துதிக்கும் தெய்வங்களின் பெயர்களைக் கூறுவதோடு தெய்வங்களோடு சம்பந்தப் பட்ட பழங்கதைகளையும் கூறுகின்றது. இருக்கு விதான என்னும் நூலும் சௌனகரால் செய்யப்பட்டது. இஃது இருக்குவேத பாடல்களை ஓதுவதால் பெறக்கிடக்கும் மந்திர சித்திகளைப் பற்றிக் கூறுகின்றது. (2) கற்பசூத்திரங்கள் வேதாங்கங்களுள் பழமையுடையவை. அவை பிராமணங்களோடும் ஆரணியகங்களோடும் தொடர்புடையன. அவை பொருள் பற்றி சிரௌத சூத்திரம் கிரிக சூத்திரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிரௌத சூத்திரங்கள் புரோகிதர் பலரின் உதவியால் செய்யப்படும் கிரியைகளைப் பற்றிக் கூறுகின்றன. சுருதியை (வேதத்தை) ஆதாரமாகக் கொண்டிருப்பதால் இது சிரௌதம் எனப் பட்டது. கிரிக சூத்திரங்கள் ஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டிருத்தலின் ஸ்மார்த்த எனப்பட்டன. மூன்று வகைத் தீ வளர்த்தல், அமாவாசி பூரணைக் காலங்களில் பலி செலுத்துதல், விலங்குகளைப் பலியிடுதல், சோம யாகஞ் செய்தல் முதலிய கிரியைகளைப் பற்றிச் சிரௌதச் சூத்திரங்கள் கூறுகின்றன. பெண்கள் கருப்பமடைந்தது முதல் கருவுயிர்த்தல் வரையிலுள்ள கிரியைகள், பிள்ளை பிறந்த பின் அன்ன மூட்டுதல் (அன்னப் பிராசனம்) சூடாகரணம் (முடியிறக்குதல்), மரணக் கிரியைகள், உபநயனம் முதலிய கிரியைகளைப்பற்றிக் கிரிக சூத்திரங்கள் கூறுகின்றன. வீடு கட்டுதல், பயிரிடுதல், குளம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், தீய சகுனங்களுக்குப் பிராயச்சித்தமாகச் செபிக்கும் மந்திரங்கள் முதலியவற்றையும் அவை கூறுகின்றன. கிரிக சூத்திரங்களோடு தொடர்புடையவை தரும சூத் திரங்கள். இவை வருணம், வருணாச் சிரம தருமங்கள், சாதிகளுக்கேற்ற படி குற்றங்களுக்குக் கூட்டியும் குறைத்தும் தண்டனை விதித்தல் முதலிய வற்றைக் கூறும். அபஸ்தம்பர், ஆஸ்வலாயனர், போதாயனர், காத்தியா யனர், சாங்காயனர், இலாத்வாயனர், திரயயானர் முதலிய பலர் கற்ப நூல் செய்தனர். இவை செய்யப்பட்ட காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குமிடையில். (3) வியாகரணம் எழுத்து சொல் பொருளியல்புகளுணர்த்துவது. வியா கரணங்களுள் (இலக்கணம்) கிடைத்திருப்பது பாணினி முனிவர் செய்த அட்டாத்தியாயி ஒன்றுமே. இது வேதமொழியின் இலக் கணத்தைக் கூறாது பொது வழக்கிலுள்ள மொழியைப் பற்றிக் கூறியிருக் கின்றது. பாணினி முனிவர் சிவபெருமானிடம் இலக்கணத்தைக் கற்றா ரென்னும் ஐதீகம் வழங்குகிறது. (4) நிருத்தம் : சங்கிதைகள் செய்யப்பட்ட பின் சில காலத்தில் மொழி மாறுபட்டது. சங்கிதைகளின் பொருள் விளங்க முடியாமலிருந்தது. அவைகளை விளங்கிக் கொள்வதற்குப் பொருள் விளங்குதற்கரிய சொற்களின் தொகுப்பும், அவற்றுக்கு விளக்கங்களும் வேண்டப்பட்டன. இவ்வகைத் தொகுப்பு, நிகண்டு எனப்பட்டது. யாஸ்கர் செய்துள்ள நிருத்தம் அவருக்கு முன் விளங்கியவர்கள் செய்த சொல் தொகுப்புகளுக்கு உரையாக அமைந்துள்ளது. யாஸ்கருக்கு முன் இருந்த நிருத்த நூல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. (5) சந்தம் : இது சந்தோவிசிதி எனவும் அறியப்படும். இது செய்யுட்களை அல்லது யாப்பைப்பற்றிக் கூறுகின்றது. நிதான சூத்திரம் என்னும் சந்த நூல் பதஞ்சலி முனிவரால் (கி.மு.150) செய்யப்பட்டதெனக் கொள்ளப்படுகிறது. பிங்கலரால் செய்யப்பட்ட சந்த நூல் இருக்கு வேதத்துக்கும் எசுர் வேதத்துக்கும் வேதாங்கமாகவுள்ளது. (6) சோதிடம் வேதத்தில் சொல்லப்படும் கருமங்களை (கிரியை களைச்) செய்வதற்குரிய காலங்களை உணர்த்துவது. ஆராய்ச்சி (1) வேதங்கள் எவ்விடத்தும் சிவ வழிபாட்டைப் பற்றிக் கூறவில்லை; சிவனென்னும் சொல்லும் அதில் காணப்படவில்லை. சிவ என்னும் சொல் இரண்டொரு இடங்களில் வந்துள்ளது. அது சிவனையோ தெய்வங்களையோ குறிக்கவில்லை. அது மங்கலம் என்னும் பொருளில் வந்துள்ளது.9 வேத பாடல்களில் சொல்லப்படும் உருத்திரன் சிவன் கடவுளல்லர். அவர் புயல் கடவுள். பிற்காலத்தில் உருத்திரன் சிவனுக் குரிய தன்மைகளை ஏற்றுக் கொண்டு உருத்திர சிவனாக மாறினார்.* விட்டுணு சூரியனைக் குறிப்பதாக இருந்தது. கண்ணன் வழிபாடும் திருமாலின் அவதாரங்களும் வேதங்களில் காணப்படவில்லை. (2) வேதங்கள் மறு பிறப்பைப்பற்றி அறியா.10 யாகங்கள் புரிவதே வேத மதத்தின் முடிவு. யாகம் புரிந்தவர்கள் சுவர்க்கத்தில் என்றும் இன்பமாக வாழ்வர். (3) பிற்காலத்துத் தோன்றிய உபநிடதங்களில் காணப்படுவன போன்ற உயிர், உலகம், கடவுளென்னும் முப்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியும் வேதங்கள் அறியாதது. பிராமணங்கள் வேதங்களிலுள்ள பாடல்கள் மந்திரங்கள் எனப்பட்டன. மந்திரங் கள் செய்யப்பட்ட பின் கிரியைகள் வளர்ந்தன. ஆகவே மந்திரங்கள் கிரியைகளுக்கு ஏற்ற முறையில் தொகுக்கப்பட்டன. அத் தொகுப்புகள் சங்கிதை எனப்பட்டன. பிராமணங்கள் என்பவை கிரியை முறைகளை விளக்கி எழுதப்பட்ட வசன பாகங்கள். ஒவ்வொரு வேதத்துக்கும் தனித் தனி பிராமணங்களுண்டு. இருக்கு வேதத்தைச் சேர்ந்தவை ஐதரேயம், கௌசீதகி; சாம வேதத்தைச் சேர்ந்தவை சைமினியமும், தாண்டிய மகா பிராமணமும்; எசுர் வேதத்தைச் சேர்ந்தது சதபதப் பிராமணம்; அதர்வ வேதத்தைச் சேர்ந்தது கோபாத பிராமணம். பிராமணங்கள் வேதங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே வேதங்களில் மந்திரம் பிராமணம் என்னும் இரு பகுதிகளுள்ளன. யாகங்களால் இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்னும் நம்பிக்கை உறுதி பெற்றிருந்தது. நூறு யாகங்களைச் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரசனாகிய இந்திரனையும்; பதவியிலிருந்து வீழ்த்திச் சுவர்க்கத்துக் கதிபதியாவான். யாகங்கள் நடைபெறாவிட்டால் சூரியனும் உதிக்கமாட்டான் என்பவை போன்ற மூட நம்பிக்கைகளும் இருந்தன. யாகங்கள் அதிகப்பட்டன. அரசரும் பெருஞ்செல்வரும் மாத்திரம் யாகங்களைச் செய்யக் கூடியவர்களாக இருந்தனர். யாகங்கள் எட்டுத் திங்கள், பத்துத் திங்கள், ஒரு ஆண்டு என்னும் வகையில் நடைபெற்றன. யாகங்கள் புரிவதற்குப் பெருஞ் செல்வம் வேண்டியிருந்தது. யாகங்கள் அதிகப்படுதலும் புரோகிதர் பலர் வேண்டப்பட்டனர். அவர்களின் மதிப்பும் அதிகப்பட்டது. பலர் பிராமணங்களைப் பயின்று புரோகிதரா யினர். பிராமணங்களைப் பயின்றவர்கள் பிராமணர் எனப்பட்டர்கள். யாகங்களைப் புரோகிதராக இருந்து நடத்தும் பிராமணரே வேதங்களை யும் பிராமணங்களையும் பயின்றார்கள். புரோகிதத் தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியது. அவர்கள் ஒரு வகுப்பினர் அல்லது சாதியினராக மாறினர். இந்தியாவில் வாழ்ந்த பழைய மக்களின் கிரியை முறைகளும் பழக்க வழக்கங்களும் பிராமணங்களில் நுழைந்தன.11 வேதகாலத்தில் புயல் கடவுளாகவும் சிறு தெய்வமாகவும் கொள்ளப்பட்ட உருத்திரன் சிவன் கடவுளின் வடிவையும் குணங்களையும் பெற்று உருத்திர சிவனாக மாறினார்.12 யாகம் *யாகம் என்பது தேவர் பொருட்டு அவர்களின் உணவைத் தீயிலிடுவது. நெருப்பு அக்கினி என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. அது தன்னிடத்தில் இடப்பட்ட உணவுகளை ஏற்றுத் தேவர்களிடம் சேர்க்கிறதென்னும் நம்பிக்கை உறுதிப்பட்டிருந்தது. அக்கினியைத் துதித்துப் பாடப்பட்ட பல பாடல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. யாகத்தில் மந்திரங்களை ஓதித் தேவர்களை அழைப்பவர் ஹோதா என் றும், மந்திரங்களைப் பாடிக்கொண்டு சோமரசத்தைப் பலி செலுத்து கின்றவர் உத்காதா என்றும், யாகக் கிரியைகளைச் செய்பவர் அத்வார்யு எனவும் பெயர் பெற்றிருந்தனர். தலைமைப் புரோகிதர் பிரமா எனப்பட் டார். அவர் துட்ட தேவதைகளால் யாகத்துக்கு இடையூறு நேராமல் தென் திசையிலிருந்து காவல் புரிந்தார். #வீட்டில் செய்யப்படும் யாகத்தில், குடும்பத் தலைவன் காலையில் தீ வளர்த்து ஒரு பகலில் மூன்று முறை சோமரசத்தைப் பலியாகத் தீயில் சொரிந்தான். காலையில் இடும் பலி அக்கினிக்கும், மத்தியானத்தி லிடுவது இந்திரனுக்கும், மாலையிலிடுவது மருத்துக்களுக்கும் அசுவினி தேவருக்குமாக இருந்தன. பலி இட்டபின் அவன் இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து அக்கினியைக் குனிந்து வணங்கினான். சோமரசத்தைப் பலி செலுத்தும் யாகத்தில் பெரும்பாலும் விலங்கு பலி இடப்பட்டது. கால்களைக் கட்டியபின் விலங்கு கொல்லப்பட்டது. அதன் வபை (நாபியைச் சூழ்ந்துள்ள நிணம்) தேவருக்குப் பலியாகத் தீயிலிடப்பட்டது. அப்பொழுது தேவர்களின் இரகசியமான (மறை) பெயர்கள் சொல்லி அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு அழையாவிடில் பலியிடப் பட்ட உணவு தேவர்களைச் சேராது. சில சமயங்களில் வீட்டுத்தலை வனும் மனைவியும் பிள்ளைகளும் சோற்றையும் நெய்தெளித்த இறைச்சி யையும், சோம ரசத்தையும் பிராமணருக்குக் கொடுத்து தேவர்களின் ஆசியைப் பெற்றார்கள்; பூதபைசாசங்களையும் ஓட்டினார்கள். பூரணைக் காலத்தும் அமாவாசிக் காலத்தும் பலியிடப்பட்டது. வீட்டில் செய்யப்படும் யாகக் கிரியைகளை விடப் பொது இடங் களில் செய்யப்படும் யாகக் கிரியைகள் மிகப் பலவாக இருந்தன. யாகங்கள் மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் நடைபெற்றன. பலவகை யாகங்கள் நடத்தப்பட்டன. அவற்றுள் முதலிடம் பெற்றது சோமயாகம். யாகம் நடத்துவதற்குப் பெரிய கொட்டில் இடப்பட்டது. அது யாகசாலை எனப்பட்டது. சோமக் கொடி சோம அரசன் எனப்பட்டது. சோமக்கொடி யாகசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. அது பல பாடல்களால் துதிக்கப்பட்டது. ஏழு அத்வார்யுக்கள் அதன் மீது நீர் தெளித்தார்கள். அது மாட்டுத் தோலின் மீது வைத்து இரண்டு கற்களால் நசுக்கப்பட்டது அல்லது உரலிலிட்டு உலக்கையால் துவைக்கப்பட்டது. நசுக்கப்பட்ட அல்லது துவைக்கப்பட்ட சோமக்கொடி சல்லடையில் வைத்துப் பிழியப்பட்டது. மங்கல் நிறமுடைய அதன்சாறு கம்பளித் துணியால் வடிக்கப்பட்டது. அதர்வணப் புரோகிதன் அதன் மீது பாலை வார்த்துப் பத்து விரல்களாலும் அதைக் கலக்கினான். சோமச்சாறு மரச்சாடிகளில் ஊற்றிப் பலி பீடத்தில் வைக்கப்பட்டது.* தேவர்களுக்கு நைவேத்தியம் செய்த பின் அது கிண்ணங்களில் ஊற்றிப் புரோகிதருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாளில் மூன்று முறை சோமரசம் பலியிடப்பட்டது. சில சமயங்களில் விலங்கு பலியிடப்பட்டது. யூபம் என்னும் யாகத்தூண் தருப்பைப் புல்லின் மீது வைக்கப் பட்டது. அது வளையங்களாலும் பூமாலைகளாலும் பல நிறப் பூச்சுக்க ளாலும் அலங்கரிக்கப்பட்டது. அது யாக குண்டத்துக்குக் கிழக்கில் நடப்பட்டது. விலங்கின் தலை, இடுப்பு கால்கள் என்பவை யூபத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டப்பட்டன. அதன் மீது நெய் பூசிய பின் அது ஆடையால் அலங்கரிக்கப்பட்டது. ஒன்பது வாயில்களையும் அடைத் துப் பிடித்து அது கொல்லப்பட்டது. விலங்கின் உடல் பட்டடையில் வைத்துப் பக்குவமாக வெட்டப்பட்டது. வெட்டும் போது அதன் உறுப்புகளின் பெயர்கள் சொல்லிப் புகழப்பட்டன. மூட்டுகள் பக்குவ மாகப் பிரித்தெடுக்கப்பட்டன. இறைச்சி சமைக்கப்பட்டது. தேவர் களுக்கு நைவேத்தியம் செய்த பின் யாகசாலையிலுள்ளோர் அதனை உண்டனர். வேதத்தில் சோமரசத்தைக் கடவுளாகத் துதிக்கும் 120 சூக்தங்கள் உள்ளன. இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலப் பாடல்கள் முழுமையும் சோமரசத்தைத் துதிக்கின்றன. #சோமக்கொடி ஆதியில் சுவர்கத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்டதென நம்பப்பட்டது. அதன் பொருமிய தண்டுகளிலிருந்து சாறு பிழியப்பட்டது. இது பருகுவதற்கு மிக்க சுவையையும் மயக்கத்தை யும் கொடுத்தது. இருக்கு வேதத்தில் இருபத்து நான்கு வகைச் சோமக் கொடிகள் கூறப்படுகின்றன. இவற்றுள் மேலான ஒரு வகையை ‘இரு பிறப்பாளர்’ பயன்படுத்தினர். மற்றவைகளைப் பிராமணரல்லாதார் பயன்படுத்தினர். இக்கொடி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்திய ஆரியர் சோம யாகங்களைச் செய்தது போலவே பாரசீக ஆரிய ரும் சோம யாகங்கள் செய்தனர். இக் கொடி மூவாயிரம் ஆண்டுகளின் முன் பற்றறுந்து போயிற்று. பிற்காலத்தில் சோமன் என்பது சந்திரனைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது பொருத்தமற்றது.13 அசுவமேதயாகத்தில் குதிரைக்கு முன்னால் புள்ளியிடப்பட்ட வெள்ளாடு ஒன்று நடத்திக் கொண்டு செல்லப்பட்டது. குதிரையும் பலி செலுத்தப்படும் சோமபானமும் விலை உயர்ந்த அலங்காரங்களால் மூடப்பட்டன. ஆடும் குதிரையும் மூன்று முறை யூபத்தைச் சுற்றிக் கொண்டு வரப்பட்டன. புரோகிதர் சமைக்கும் ஏனங்களுடன் பின்னே சென்றார்கள். பலியிடுமிடத்தில் குதிரைக்குப் புல் இடப்பட்டது. குதிரை கம்பத்தோடு கட்டி வைத்துக் கொல்லப்பட்டது. அதனிறைச்சி மற்றைய விலங்குகளின் இறைச்சியைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை. அது தேவர்களிடம் சென்றது என நம்பப் பட்டது. புருடமேத யாகங்களும் அருமையாக நடத்தப்பட்டன. நால் வேதங்களும் சைவ நான்மறைகளும் வேதாகமங்கள் வந்த வரலாற்றைப் பற்றிச் சைவ நூல்கள் கூறியிருப்பது வருமாறு: “மகா சங்கார கால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற் பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கிய வழி வேதாகமங்கள் குடிலையினின்று நாதவடிவாகவும், அதன் பின் அக்கரவடிவாயும் அதன் பின் விந்து (புள்ளி) வடிவாயும் முறையே தோன்றின. பின்னர் அவற்றைச் சொற் றொடர்ப்படுத்திச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்வதற் பொருட்டுப் பரமசிவன் ஈசான முதலிய பஞ்சப்பிரம சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகள நிட்களத் திருமேனி கொண்டருளிச் *சதாசிவ மூர்த்தியாய் நின்று தற்புருட முதலிய நான்கு முகங்களால் வேதங்களைத் தோற்றுவித்து மேற்கண்ணதாகிய ஈசான முதலிய ஐந்து முகங்களாலும் காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து வேதங்களை அநந்த தேவர் வழியானே பிரமனுக்கு அருளிச் செய்து, ஆகமங்களை பிரதி சங்கிதை (ஒரு விடயத்தை வேறு வேறு வகுத்துக் கூறுதல்) முறையாலே பிரணவர் முதலிய பதின்மரும் மகாருத்திரர் முதலிய பதினெண்மருமாகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம், உருத்திர பேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொரு வருக்கு அருளிச் செய்து பின்பும் கௌக முறையானே (வேறு வேறு வகுக் கப்பட்டவற்றைத் தொகுத்துக் கூறுதல்) அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்த தேவருக்கு அருளிச் செய்தான். அவற்றை அநந்த தேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரன் முதல்வராகிய அநந்த தேவருக்கு அருளிச் செய்தான். அவற்றை அநந்த தேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரன் முதல்வராகிய சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் அளித்தற் பொருட்டு முதற்கண் நந்தி பெருமானுக்கு அருளிச் செய்தார். இதுவே வேதாகம் வந்த வரலாறு என்று காண்க. இதனை விரிக்கிற் பெருகும். ஆகமங்களில் காண்க”*. (சிவஞான போதமா பாடியச் சிறப்புப் பாயிரம்). “யாம் வேதத்திற்கும் சிவாகமத்திற்கும் வேற்றுமை கண்டிலம்; சிவனாற் செய்யப்படுதலின் வேதமும் சிவாகமமென வழங்கப்படும்; இவ் விரண்டுஞ் செய்த கருத்தன் சிவன் ஒருவனே யாம். இவ்வாறு சுருதியினும், புராணங்களினும் சிவாகமங்களினும் கூறப்பட்டது பஞ்சப்பிரமம். பிரணவம், பஞ்சாக்கரம், பிராசா முதலிய மந்திரங்களும் பதி, பசு, பாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனம், திரிபுண்டரீகம், உருத்திராக்கம் தரித்தல், சிவலிங்க பூசை முதலிய தருமங்களும் பிறவும் வேதம் சிவாகமம் என்னும் இரண்டினும் ஒப்பக் காண்டலான், அவ் விரண்டும் பிரமாணமாகலானும், கருத்தன் ஒருவனே ஆதலின் அவ் விரண்டிற்கும் பொருள் ஒன்றே ஆதலின், அவற்றுள்ளும் மாறுபாடின் மையாலும் ... என்று இவ்வாறு நீலகண்ட சிவாசாரியராற் கூறப்பட்டது.” (மேற்படி - சிறப்புப் பாயிரம்). வடமொழி வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டனவாக வரலா றில்லை. வேதம் நித்தியம் எனக்கூறும் பூர்வமீமாம்சகரும் அது கடவுளாற் சொல்லப்பட்டதெனக் கூறவில்லை. வேதங்கள் சிவலிங்க வழி பாட்டை இழித்துக் கூறுகின்றன.14 பஞ்சாக்கரம், சிவபூசை முதலியன அவற்றுட் கூறப்படவில்லை. ஆகவே சிவஞானமுனிவர் வேதம் எனக் குறிப்பிடுவது இருக்கு முதலிய வேதங்களல்லவென்பது நன்கு விளங்கு கின்றது.# வேதங்களைச் சிவபெருமான் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வருக்கு அருளிச் செய்தார் என்னும் ஐதீகம் சைவசமயத்தவர் களிடையே வழங்குவது முன்னோ ரிடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இருக்கு முதலியவற்றைவிட வேறு நான்மறைகள் இருந்தனவெனக் கொண்டாரெனத் தெரிகிறது. “நான்கு கூறாய் மறைந்த பொருளுடைமையை நான் மறையென் றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவராகமும், சாமவேதமு மாம். இனி இருக்கும் எசுவும் சாமமும் அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது” (நச். உரை) “இருக்கு முதல் வேதம் பௌடிகம் எனப்படும்” “இரண்டாம் வேதம் தைத்திய மென்ப” “மூன்றாவது சாமம் கீதநடை சாரும்” “நான்காம் வேதம் அதர்வண மென்ப” (திவாகரம்) “சாந்தோகா, பௌழியா தைத்தியா சாமவேதியனே” (நாலாயிரப் பிரபந்தம் - பெரிய திருமொழி). மேற்காட்டப்பட்டவை இருக்கு முதலியவற்றைவிட வேறு பெயருடன் வழங்கிய வேதங்களிலிருந்தன வென்பதை விளக்குகின்றன. வேதங்கள் என்பதை இருக்கு முதலியனவாகக் கொள்ளுதல், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழர் நாற்குலங்கள் வடநாட்ட வரின் நால்வருணங்களோடு ஒன்றாக வைத்துக் கருதப்பட்டது போன்ற தோர் மயக்கமாகலாம். ஆரிய நான்மறைகள் தமிழரிடையே நிலவிய நான்மறை என்னும் முறையைப் பின்பற்றிப் பிரிக்கப்பட்டனவே என்று ஊகிக்கலாம். ஆசிரியர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தமது தமிழ் இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு : “இமயமலை கடலிலிருந்து எழுவதன் முன் குமரி நாட்டில் மகேந்திரம் என்னும் மலையிருந்தது. அது கடலுள் மூழ்கி மறைந்து போயிற்று. அங்கு தமிழ் மறைகள் கடவுளால் நான்கு முனிவர்களுக்கு வெளியிடப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களைக் கூறினமையின் நான்மறைகள் எனப்பட்டன. பிற்காலத்தெழுந்த ஆரிய நான்மறைகளிலிருந்து வேறுபடுத்துவதற்கு இது பண்டாய நான்மறை எனப்பட்டது. வெள்ளப் பெருக்குகளாலும் நீண்ட பழமையாலும் அவை மறைந்துபோயின. குமரி நாட்டின் அழிவி னால் தத்தளித்து வடக்கு நோக்கிச் சென்று கரையேறிய மக்கள் பண்டாய நான்மறைப் பொருள்களை நினைவில் வைத்துக் காப்பாற்றி வந்தனர். அம் மறைகளைப் பற்றிய குறிப்புகள் சமயாசாரியர்கள், ஆழ்வார்கள் பாடல்களில் ஆங்காங்கு சிதறிக் காணப்படுகின்றன. தமிழரின் தத்துவ ஞானம் ஆகமங்களில் காணப்படுகின்றது.” வேத மொழி ஆரிய மக்கள் வெளியிலிருந்து ஒவ்வோர் தலைவரின் கீழ் பல கூட்டங்களாக இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்வாறு வந்தோர் ஏறக் குறைய நாற்பது கூட்டத்தினர். இக் கூட்டத்தினர் பேசிய மொழிகள் ஒரு இனத்தைச் சேர்ந்தனவாய் இருந்தபோதும் அவற்றில் சிறு வேறுபாடுக ளிருந்தன. இவர்களில் முதன்மை பெற்றிருந்த ஒரு கூட்டத்தினர் பேசிய மொழியில் வேத பாடல்கள் செய்யப்பட்டன. மக்கள் பேசிய மொழிகள் திரிபடைந்து மாறுபட்டன. வேத பாடல்கள் செய்யப்பட்ட மொழியும் வழக்கொழிந்து போயிற்று. ஒரு கூட்டத்தினர் சமய சம்பந்தமாக வேத பாடல்களை மனப்பாடஞ் செய்து காப்பாற்றி வந்தனர். அவர்களுக்கு மாத்திரம் அம்மொழி பொருள் விளங்கக் கூடியதாக இருந்தது. அம் மொழியை வழங்கிய மக்கள் தமிழ்பேசும் மக்களோடு கலந்து உறவாடிய தால் வேதமொழி உச்சரிப்பு முறையிலும் பிறவகையிலும் தமிழ்ப் போக்கை அடைந்து கொண்டு வந்தது. தமிழ்ச் சொற்களும் அம்மொழி யிற் புகுந்தன. ஐரோப்பிய, பாரசீக ஆரிய மொழிகளில் காணப்படாத புதிய சொற்களும், உச்சரிப்புகளும், சொல்லடுக்கு, வசன அமைப்பு முதலியனவும் தமிழரின் கூட்டுறவால் நேர்ந்தனவென்று ஆராய்ச்சி யாளர் கூறியுள்ளனர். இவ்வாறு வேதமொழி சிதைந்து மறைந்து விடாம லிருக்கும் பொருட்டு நிருத்தம், வியாகரணம், சந்தம் முதலிய நூல்கள் செய்யப்பட்டன. செய்யப்பட்ட இலக்கணங்களுள் பாணினி முனிவர் செய்த பாணினீயம் முதன்மையுடையது. பாணினி முனிவரின் இலக் கணத்துக்கு அமைவுபடுத்தப்பட்ட வடமொழி சமக்கிருதமெனப் பட்டது. சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்ட தென்பது பொருள். பிராமணங்கள் எழுதப்பட்டிருக்கும் மொழி மந்திர மெழுதப் பட்ட மொழிக்கும் சமக்கிருதத்துக்கும் இடைப்பட்டதெனச் சொல்லப் படுகிறது.* வேதகாலத்து வழங்கிய ஆரிய மொழிகள் உள்நாட்டு மக்களின் மொழிகளோடு கலந்து புதிய பேச்சு மொழிகள் தோன்றின. வேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி வழக்கொழிந்தது. புதிய மொழிகள் பிராகிருதங்கள் எனப்பட்டன.# பிராகிருத மொழிகள் மக்களின் பேச்சுமொழியாகவும் ஆரிய மொழி இலக்கிய மொழியாகவும் இருந்து வந்தன. அக் காலத்தில் வழங்கிய பிராகிருத மொழிகளில் ஒன்று பாளி.15 வேதங்களில் உள்நாட்டுத் தெய்வங்கள் ஆரியர் இந்திய நாட்டை அடைந்த பின் அவர்கள் இந்திய நாட்டுப் பூர்வகுடிகள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைத் தமது கடவுளருட் சேர்த்துக் கொண்டனர். பழைய ஆரியக் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று ஐரோப்பிய நாடுகளிலும் பாரசீகத்திலும் குடியேறிய ஆரியரிடத்திற் காணப்படாதவற்றை அவர்கள் இந்தியப் பூர்வ மக்களிட மிருந்து பெற்றார்கள். இவ்வாறு பெற்ற கடவுளரில் சிவன் கடவுள் ஒருவர். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். சிவன் என்பதே சிவந்தவன் என்னும் பொருளின் உருத்திரன் என மொழிபெயர்க்கப்பட்டு வேதங் களில் வழங்குவதாயிற்று. சிவனை ஒத்த கடவுளை மற்றைய ஆரிய மக்கள் அறியாதிருந்தார்கள். சிவன் என்னும் சொல்லுக்கு இந்து ஐரோப்பிய மொழிகளில் உற்பத்திகாண முடியவில்லை. “வருணன், உருத்திரன், துவட்டா அதிதி முதலிய கடவுளரை ஆரிய மக்கள் திராவிடமொழி வழங்கிய மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். தமிழ் மொழி வேதமொழியைப் பெரிதும் மாற்றமடையச் செய்ததெனக் காட்டியுள்ளோம். இதனை ஒப்பவே பூர்வமக்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்கள் ஆரியச் சொல் வடிவங்களை அடைந்து வேதகாலத் தெய்வப் பெயர்களுள் இடம் பெற்றன. அப் பெயர்களுக்கு ஒப்பானவை இந்து - சர்மானியத்திற் காணப்படவில்லை. அவ்வகைப் பெயர்கள் இந்தியப் பெயர்கள் என்றே கொள்ளுதல் தகுதியுடைத்து.”16 அதிதி என்னும் சொல் உற்பத்தி மயக்கமுடையதாக இருக்கின்றது. அப் பெயரின் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை. விஷ்ணு என்னும் பெயர் விண் என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். சிவன், விஷ்ணு, அம்மன் என்போர் இந்திய மக்களின் உயர்ந்த கடவுளராவர், இருடி களுக்கு இக்கடவுளர் சிறு தெய்வங்களாகக் காணப்பட்டனர். இருடிகள் விருப்பக் குறையோடு இவர்களைத் தமது தெய்வங்களோடு சேர்த் தார்கள். ஆனால், மக்கள் அக்கடவுளரை வணங்கினர்; அதனால் அவர்கள் பெரிய கடவுளர் ஆயினர். வருணன் என்னும் பெயர் விரி என்னும் அடியாகப் பிறந்ததெனக் கூறுவர்* கோவின் என்னுமாசிரியர். ஆரணியகங்கள் பிராமணங்களுக்குப் பின் ஆரணியகங்கள் தோன்றின. ஆரணி யகங்கள் என்பவை பிராமணர் காட்டிற்சென்று தவஞ்செய்யும்போது படிக்க வேண்டியவை.17 பிராமணங்களில் காணப்படும் கிரியைகளுக்கு இன்னொரு வகைக் கருத்துக் கொடுப்பதற்கு இவை தொடக்கத்தில் எழுந்தனவாகத் தெரிகிறது. பிரிண்ட ஆரணியகத்தில் காணப்படுவது வருமாறு. *”ஓம் விடியற் காலம் யாகக் குதிரையின் தலை; சூரியன் அதன் கண்; வாயு அதன் மூச்சு; அதன் வாய் எங்கும் நிறைந்த நெருப்பு; ஆண்டுகள் அதன் உடல்; வானம் முதுகு; வெளி வயிறு; பூமி பாதங்கள்; பருவகாலங்கள் உறுப்புக்கள்; மாதமும் அதன் பக்கங்களும் மூட்டுக்கள்; இரவும் பகலும் கால்கள்; நட்சத்திரங்கள் எலும்புகள்; முகில்கள் தசை; பாலைவனங்கள் உணவு; ஆறுகள் குடல்; மலைகள் ஈரலும் நுரையீ ரலும்; பூண்டுகளும் மரங்களும் மயிர்கள்; உதய ஞாயிறு முன்பக்கம்; அந்திஞாயிறு பின்பக்கம்; அதன் கொட்டாவி மின்னல்; கனைப்பு இடி; மூத்திரம் மழை; சத்தம் பேச்சு; பகல்யாகப் பாத்திரம் போல் எழுந்து முன்னே நிற்கின்றது; அதன் பிறப்பிடம் கீழ் கடல்; இரவு யாக பாத்திரம்; அதன் பிறப்பிடம் மேல் கடல்; இராப் பகல் என்னும் யாக பாத்திரங்கள் குதிரையைச் சூழ்ந்துள்ளன; பந்தயக் குதிரையைப் போல அது தேவரைக் கொண்டு செல்கின்றது; போர்க் குதிரையைப்போல அது கந்தருவரைக் கொண்டு செல்கிறது; சாதாரண குதிரையைப் போன்று மனிதரைக் கொண்டு செல்கின்றது. கடல் அதன் நண்பன்; அஃது அதற்குப் பிறப்பிடம்.”# பிராமணங்களில் கூறப்படும் கிரியைகளால் பயனில்லை எனக் கண்ட பிராமணர் ஆரணியகங்கள் மூலம் பிராமணக் கிரியைகளுக்கு வேறு பொருள் கற்பிப்பாராயினர். இவ்வகையில் அவை பிராமணங் களுக்கு மாறுபட்டனவாக இருந்தன.# இருக்கு வேத காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தலாகிய வழக்கு ஆரியரிடையே காணப்படவில்லை எனத் தத்தர் கூறுகிறார். இவ் வழக்கம் பழைய மக்களிடையே காணப்பட் டிருக்கலாம். முதுமையில் குடும்ப பாரத்தைப் புதல்வர்களிடம் கொடுத்து விட்டு தனிமையிலிருந்து தவஞ்செய்தல் தமிழர் வழக்கு எனத் தொல்காப் பியங் கூறுகின்றது. இருடிகள், முனிவர்களை அரசரும் பிறரும் சாபங் களுக்கு அஞ்சி அவர்கள் வேண்டுவன புரிந்தார்களெனப் புராணங்கள் கூறுகின்றன. தென்னாட்டு முனிவர் யாருக்கும் அஞ்சுவ தில்லை என்றும் அவர்களைக் கண்டு எவரும் அஞ்சுவதில்லை என்றும் விண்டர் நிட்ஸ் (Winternitz) என்னும் சர்மன் அறிஞர் கூறியுள்ளார். உபநிடதங்கள் ஆரணியகங்களுக்குப் பின் உபநிடதங்கள் தோன்றின. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது என்பது பொருள். உபநிட தம் உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராய் கின்றது. பிறப்பறுக்கும் வழியைக் கூறுகின்றது. ஓங்காரத்தை உச்சரிக்கும் படி வலியுறுத்துகின்றது. உபநிடத ஞானம் தர்க்கத்தினாலறியத் தக்கதன்று; அனுபூதியினால் அறியப்படுவது. உபநிடத ஞானங்கள் குரு மாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. நாட்டின் பல்வேறு ஆச்சிரமங்களிலிருந்த குரவர்கள் மாணாக்கருக்கு உபதேசிக்கும் பொருட்டு எழுதி வைத்திருந்த குறிப்புகளே உபநிடதங்கள் எனப் பட்டன. இவை நூல் எழுத வேண்டுமென்னும் திட்டம் வகுத்து எழுதப் பட்டவையல்ல. உபநிடதங்களை எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை. அவர்கள் தம் பெயர்களை வெளிப்படுத்த விரும்ப வில்லை. உபநிடதங்கள் வசனம் செய்யுள் என்னும் இரு நடைகளிலும் எழுதப்பட்டுள்ளன. உபநிடத ஞானங்களைப் பிராமண வகுப்பினர் அறிந்திருக்கவில்லை. உண்மை ஞானங்களை அறிய ஆர்வங்கொண் டிருந்த பிராமணர் அரச வகுப்பினரிடமிருந்து அவற்றைக் கேட்டறிந் தார்கள். கேட்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களுக்கு மாத்திரம் உபநிடத ஞானம் உபதேசிக்கப்பட்டது. வேதங்களைப் பிராமணர், சத்திரியர் வைசியர் என்னும் மூன்று வருணத்தவர்கள் மாத்திரம் ஓதலாம்; பெண் களும் சூத்திரரும் அவற்றை ஓதவும் கேட்கவும் கூடாது. உபநிடத ஞானங் களைக் கேட்பதற்கு சாதித்தடை இருக்கவில்லை. “ஆவுரித்துத் தின்றுழ லும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கு உபநிடதக் கருத்தைப் பின்பற்றியது. உபநிடத ஞானங்கள் ஆரியர் வருகைக்கு முன் இந்திய நாட்டில் வழங்கின என்றும் அவை வேதங்களுக்குப் புறம்பானவை என்றும் இஞ்ஞானமே சாங்கியம், யோகம், வேதாந்த சூத்திரம், பௌத்தம் சமணம் முதலிய மதங்களின் தத்துவ ஞானத்துக்கு வேராக இருந்தனவென்றும் ஆராய்ச்சி வல்லார் கூறியிருக்கின்றனர். நால் வேதங்களிலும் பத்து உபநிடதங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. சங்கராச்சாரியார் வேதங்களைச் சேர்ந்த உபநிடதங்கள் பதினான்கு என்று கூறியிருக்கின்றார். உபநிடதங்கள் 150 என்று சிலரும் 108 என்று சிலரும் கூறியிருக்கின்றனர். கி.பி. 1656-இல் ஐம்பது உப நிடதங்கள் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. *அவற்றுள் ஒன்றும் இப்பொழுது கிடைக்கவில்லை. உபநிடதங்கள் கௌதம புத்தருக்கு முற்பட்டவை. பிற்காலத்தில் உபநிடதங்கள் என்னும் பெயரில் பல நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று அக்பர் காலத்தில் எழுதப்பட்ட அல்லா உபநிடதம். விண்டர் நிட்ஸ் என்னும் அறிஞர் கூறியிருப்பது வருமாறு; உபநிடத ஞானம் அரச வகுப்பினரிடம் மாத்திரமன்று இன்ன குலத்தின ரென்று அறிய முடியாதவர்களிடையும் இருந்தது. ஆரியரின் நீதி நூல்கள், பிராமணன் ஆசிரியனாக இருந்து முதல் மூன்று வருணத்த வருக்கும் வேதங்களைக் கற்பிக்கலாமெனக் கூறுகின்றன. அரச வகுப் பினரே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தனரென்றும் அவர்களின் கீழிருந்து பிராமண வகுப்பினர் ஞானத்தைப் பயின்றனரென்றும் உபநிட தங்கள் கூறுகின்றன. அரச வகுப்பினர் அவர்களுக்கு அளித்த ஞானம் மறுபிறப்புத் தொடர்புடையது. உபநிடத மென்பதற்கு அருகிலிருந்து கேட்பது என்பது பொருள். ஆசிரியன் ஒருவ னிடத்தில் சில மறைவான உண்மைகளைப் படிப்பதற்கு மாணாக்கனாக இருப்பதென்று இதன் பொருள். இவ்வாறு அளிக்கப்படும் ஞானம் மறை அல்லது இரகசியம் எனப்பட்டது. அம்மறையைத் தகுதியில்லாதவருக்கு அளித்தல் கூடாதென உபநிடதங்கள் கூறுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, இம் மறையைத் தந்தை தனது மூத்த குமாரனுக்கு அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ்வுலகம் முழுவதையும் பெறுவதாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாகவிருந்து பலமுறை வருந்திக்கேட்டபோது இஞ்ஞானம் வெளியிடப்பட்டது. உபநிடதங்கள் யாகங்களை ஏற்றுக் கொள்ள வில்லை. ஈச, கேன, கதா, முண்டக, மண்டூக்கிய, ஐதரேய, தைத்திரீய, பிராஸ்ன, சாந்தோக்கிய, பிரிதாரண்யக முதலியன உபநிடதங்களுள் முதன்மை பெற்றவை. பிற்காலச் சைவ நூல்களில் வேதம் எனக் குறிக்கப்படுவன உபநிடதங்களைக் குறிக்கின்றனவென்பது “அதர்வ சிகை முதலிய உபநிடதங்களும் சிவாகமப் பொருளை நோக்குழிச் சூத்திரமும் பொருளும் போலத் தூலாருந்ததி முறைமையாதலின் வேதம் பொது நூலெனவும் ஆகமம் சிறப்பு நூலெனவும் பட்டன” (சிவஞான போதமா பாடியம்) என்பதனால் தெரிகின்றது. “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்” என்றார். ஈண்டு வேதாந்தமென்றது வேதத்தின் முடிவுகளாகிய உபநிடதங்களை; வேதாந்த மென்னும் பெயர் பெற்ற ஏகான்ம வாத நூலையன்று” (மேற்படி). “உபநிடதங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் பல. அவை களுட் சில மற்றவைகளைப் போலப் பழமையுடையனவல்ல. பழைய உப நிடதங்களிற் சில ஆரணியகங்களிற் சேர்ந்திருக்கின்றன; சில அவற்றின் பின் சேர்ப்பாக உள்ளன. உபநிடதங்களில் சில பிராமணங்களின் பகுதி களாக உள்ளன. ஐதரேய உபநிடதம், கௌசீதகி உபநிடதம், தைத்திரீய உபநிடதம், மகா நாராயண உபநிடதம், பிரிகதாரணிய உபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம், கேன உபநிடதம் என்பவை இவ்வகையின. மகா நாராயண உபநிடதத்தைத் தவிர மற்றவை இந் நூல்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவை. அவை எழுதப்பட்டிருக்கும் நடை பிராமணங் கள் எழுதப்பட்ட நடையை ஒத்திருக்கின்றன. ஆகவே அவை புத்தருக்கும் பாணினிக்கும் முற்பட்டவை.” இரண்டாவது இனத்தைச் சேர்ந்த உபநிடதங்கள் சிறிது பிற் காலத்தன வாயினும் பௌத்த மதத்துக்கு முந்தியவை. இவை முன்னைய உபநிடதங்களினின்றும் பொருள் வகையில் வேறுபடுகின்றன. கதா, சுவேதாஸ் வதரா, மகாநாராயணாய, ஈச, மண்டூக்கிய, பிரஸ்னா உப நிடதங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவை வேதாந்தக் கொள்கை யையும் விளக்குகின்றன. அவற்றுள் யோகமத, சாங்கிய மதக் கொள்கை கள் காணப்படாமவில்லை. கிருட்டிண எசுர் வேதத்தைச் சேர்ந்த மைத்திராரணிய உபநிடத மும், அதர்வண வேதத்தைச் சேர்ந்த மண்டூக்கிய உபநிடதமும் பௌத்த மதத்துக்குப் பிற்பட்டவை. இவை எழுதப்பட்டுள்ள மொழியும், நடையும், பொருளும் இவை பிற்காலத்தனவென்பதைக் காட்டுகின்றன. சங்கரர் இவற்றைக் குறிப்பிடவில்லை. முன் கூறப்பட்ட பன்னிரண்டோடு இவற்றையும் வேதங்களுட் சேர்ந்த உபநிடதங்களெனக் கூறலாம். மற்றைய உபநிடதங்கள் வேதங்களோடு சம்பந்தம் பெறவில்லை. சிலவற்றில் கூறப்படுவன தத்துவ ஞானங்களெனச் சொல்லத் தக்கனவாகவில்லை. சில தந்திரங்களையும் புராணங்களையும் சேர்ந்தனவாகக் காணப்படு கின்றன. வேதங்களைச் சேராத உபநிடதங்களை அறுவகையாகப் பிரிக்க லாம். (1) இக்கால வேதாந்தக் கொள்கைகளைக் கூறுவன. (2) யோகத்தைப் படிப்பிப்பன (3) சன்னியாசத்தைப் புகழ்வன (4) விட்டுணுவை மேலான கடவுளாகப் புகழ்வன (5) சிவனை உயர்ந்த கடவுளாகக் கொள்வன (6) சாத்த உபநிடதங்களும் வேறு சிறு மதங்களின் உபநிடதங்களும். இவற்றுள் சில சங்கரர் குறிப்பிடும் சாபல உபநிடதம், பரமகாமச உபநிடதம், இராமானுசர் மேற்கோளாக ஆளும் சுபால உபநிடதம், காப உபநிடதம், அதர்வாசிராஸ் உபநிடதம், வச்சிரசூசிக உபநிடதம் என்பவை அதர்வண வேதத்தைச் சேர்ந்தனவாகச் சொல்லப்படும். முத்திக உபநிடதம் 108 உபநிடதங்களைக் குறிப்பிடுகின்றது. உபநிடதங்கள் யாகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; அவற்றைப் புணையாகக் கொள்வது ஓட்டை மரக் கலத்தைத் துணைக் கொள்வது போலுமெனக் கூறுகின்றன.”* தரிசனங்கள் பௌத்த சமண மதங்கள் தோன்றி வேத மார்க்கத்தை எதிர்த்தன. அப்பொழுது தரிசனங்கள் என்னும் நூல்கள் எழுந்தன. சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, நியாயம், வைசேடிகம் என்பவை தரிசனங்கள் என்பதில் அடங்கும். இஞ்ஞானங்கள் பௌத்த சமண சமயங்களுக்கு முன் தோன்றி ஆங்காங்கு குருமாணாக்க முறை யில் நிலவின. பின்பு அவை தருக்க முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டுச் சூத்திரங்களாகச் செய்யப்பட்டன. இவை ஏறக்குறைய ஒரே காலத்திற் செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றை ஒன்று மறுக்கும் பகுதிகள் காணப் படுகின்றன. ஆகவே பின்வந்தவர்கள் புதிய சூத்திரங்களை எழுதி இவற் றோடு சேர்த்தார்கள் என அறிஞர் கூறுவர். தரிசனங்கள் வேதங்களைத் தமக்கு ஆதாரமாகக் கொள்வதாகக் கூறிக்கொள்கின்றன. உத்தரமீமாம்சை, பூர்வமீமாம்சை என்னுமிரண்டை விட மற்றைய தரிசனங்கள் தமது நியாயங்களை வேதங்களிலிருந்து கொள்ளவில்லை. பூர்வமீமாம்சையைத் தவிர மற்றைய தரிசனங்களின் முடிவு பிறப்பறுத்தலாகிய வீட்டை எய்துவது. பௌத்தசமண மதங்களின் கொள்கையும் இஃதாக விருந்த போதும் வேதங்களை ஒப்புக்கொள்ளாமையால் அவை நாத்திக மதங்கள் எனப்பட்டன. மாயை, புருடன், சீவன், அவித்தை போன்ற சொற்களை எல்லாத் தரிசனங்களும் ஆளுகின்றன. ஒவ்வொரு பிரிவினரும் அவற்றை வெவ்வேறு கருத்துக்களில் ஆண்டுள்ளனர். இக் காரணத்தினாலும், அவை வேதங்களைத் தமக்கு ஆதாரமெனக் கூறுவதாலும் அவை பொது வான ஒரு தொடக்கத்திலிருந்து பிரிந்தவையாகக் கருதப்படுகின்றன. சாங்கியம் சாங்கிய மதக் கொள்கைகளை விளக்கும் சாங்கிய நூல்கள் கபிலரால் செய்யப்பட்டன. அவை மறைந்து போயின. இப்பொழுது கிடைக்கும் சாங்கிய நூல்களுட் பழமையுடையது ஈசுவர கிருஷ்ணரால் செய்யப்பட்ட சாங்கிய காரிகை என்னும் நூல் (கி.பி. 3ஆம் நூ.) சாங்கிய மதக் கருத்துக்கள் ஒருவருடையதன்று. பலகாலங்களாக வந்த கருத்துக் களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி நூல் செய்தவரே கபிலராவர். இவர் கௌதம புத்தருக்கு முன் வாழ்ந்தவர். சாங்கிய மதக் கொள்கைக்கு அடிநிலை உபநிடதங்கள் என்பது அறிஞர் கருத்து. #சாங்கியமதம் சற்காரிய வாதம் எனவும்படும். இது ஆன்மாக்கள் பல எனவும் உலகம் உள்பொருளெனவும் கூறுகிறது. அநாதியே சடத்தோடு சம்பந்தப்பட்டத னால் ஆன்மாவுக்கு இறப்புப் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மா சடத்தினின்றும் விடுபட்டுப் பின் சடத்தோடு கூடாமல் இருந்து வீடடையும் உபாயங்களைச் சாங்கியம் கூறுகின்றது. சாங்கிய மதம் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இது நிரீச்சுர மதம் எனப்படும். சாங்கிய மதத்தைப் பற்றிச் சிவஞான முனிவர் கூறியிருப்பது வருமாறு : “மூலப் பகுதி நித்தமாய், வியாபகமாய், எல்லாப் பொருட்கும் காரணமாய், முப்பொருள்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவா யுள்ளது. இது இருபத்து நாலாந் தத்துவம்; இதன்கட்டோன்றும் காரியம் புத்திமுதல் நிலமீறாக இருபத்து மூன்று தத்துவமுள. இத் தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய், நித்தமாய், வியாபகமாய், அருவாய்ப் பலவாய், அறிவதுஞ் செய்வதுமின்றி, அறிவு மாத்திரமாய் ஒன்றற்குக் காரணமாதலுங் காரியமாதலுமின்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத் தைந்தாந் தத்துவ மெனப்படும். இவ்விருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியிலும் பெத்தத்திலும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலின மென்பதில்லை; தாமரையிலை நீர்போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தனெனப் பட்டு இன்ப துன்ப உணர்வு தோன்றா நின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும் அந்தக் கரணமென்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும் புருடன் செய்வானென்பதும், புத்தி அறியு மென்பதும் வேற்றுமை உணரா மையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்துணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவனொருவ னுண்டென்பது பொய்யென்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இது கூறும் சற்காரியவாதம் சைவம் முதலிய சற்காரிய வாத நூல்கட்கெல்லாம் உபகாரமாம். இதற்கட் கூறப்படும் அத்தியாச வாதம் மாயாவாதத்துக்கு உபகாரமாம்”. (சிவஞான போதமா பாடியம்). இது யாகங்களையும் புரோகிதரையும் ஒப்புக் கொள்ளவில்லை.20 சித்தார்த்தர் பிறந்த கபிலவஸ்து என்னும் இடப் பெயர் கபிலர் சம்பந்தமானது என்று கருதப்படுகிறது. சித்தார்த்தர் கபிலர் மரபில் உதித்தவராகக் கருதப்படுவர். சகர குமாரரின் வேள்விக் குதிரையைப் பிடித்துக் கட்டி அவரை எரித்த கபில இருடியைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. கபிலர் விஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவரெனவும் கொள்ளப்படுவர். கபிலரின் காலம் கி.மு. 800க்கும் கி.மு. 600க்கும் இடையில் எனப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. யோகம் யோக சூத்திரம் பதஞ்சலி முனிவரால் (கி.மு.150) செய்யப்பட்டது. பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் (அட்சபாதர்) சிதம்பரத்தில் தவங் கிடந்து சிவபெருமானின் திருக்கூத்தைத் தரிசித்ததாகப் புராணங் கூறும். பாணினீயத்துக்கு உரை செய்த ஒருவரின் பெயர் பதஞ்சலி. இருவரும் ஒருவரோ வெவ்வேறினரோ என்று அறிய முடியவில்லை. பதஞ்சலி முனிவருக்கு முன் யோகத்தைப் பற்றிய அறிவு இருந்தது. மொகஞ்சதரோ மக்கள் யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். உபநிடதங்களில் யோகப் பயிற்சி கூறப்படுகின்றது. கௌதம புத்தர் யோகப் பயிற்சி செய்தார். சாங்கியத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய உறவுண்டு. இது சாங் கியத்தைப் போலவே ஆன்மாக்கள் பலவென்றும், சடம் உள்பொரு ளென்றும் கூறுகின்றது. யோகத்தில் ஈசுரன் கூறப்படுகிறது. ஆகவே, இது சேஸ்வர சாங்கியம் எனவும் கூறப்படும். சிவஞான முனிவர் யோகத்தைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு : “யோகமாவது - நிலமுதற் புருடனீறாகிய இருபத்தைந்து தத்துவம் பெத்த முத்திகளும் நிரீச்சுர சாங்கியர் கூறியவாறேயாம். மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்துணரும் விவேக உணர்வுபோல எண்வகை உறுப் பிற்றாகிய யோகமும் முத்திக்கேதுவாம். அவன் முற்றுணர்வுடையனாகிச் சாத்திரங்களை அருளிச் செய்து புருடருக்கு ஞானத்தை அறிவுறுப் பனாதலின் இவ்வான்மாவுக்கு வேறொன்றுரைக்கப்படுமென்பதாம். இந்நூல் செய்தவன் பதஞ்சலி முனிவன்.” (சிவஞான போதமா பாடியம்). யோகத்தில் கூறப்படும் ஈசுவரன் புருடருள் ஒருவர் என்றும், உலகத்தைப் படைத்து, அளித்து, அழிக்கும் கடவுளல்லரெனவும், அவர் அறியாமை, கிலேசம், விருப்பு, வெறுப்பு, கன்மம், கன்மப்பயன் ஒன்று மில்லாதவரும் எல்லாமறிபவருமாகிய புருடரென்றும், அவர் யோகப் பயிற்சி செய்பவரின் கடவுளாக ஓங்கார வடிவில் இருதயத்திலிருப்பவ ரென்றும், ஆகவே யோகமும் நிரீச்சுர மதமென்றும் சிலர் கூறுகின்றனர். சாங்கியமும் யோகமும் சடம் சம்பந்தமான உலகம் முழுவதையும் பிரகிருதி எனக் கூறும். இராசதம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்குண்டு. இக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதினால் உலகிலுள்ள பொருள்களெல்லாம் உண்டாகின்றன. ஆன்மா என்பதை இம்மதங்கள் புருடன் என்று கூறும். ஆன்மா அந்தக் கரணம் போன்ற பௌதிகக் கூறுகளோடு சேர்ந்த போதும் தனித்து நிற்குமியல்புடையது. ஆன்மாக்கள் பல உண்டு. இவை சாங்கிய யோகக் கொள்கைகளாகும். வைசேடிகம் *வைசேடிக சூத்திரம் செய்தவர் கணாதர். இவரது இயற்பெயர் காசியப்பர். இவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில். கணாதர் வேதங்கள் இருடிகளாற் செய்யப்பட்டவை என்று கூறுவர். வைசேடிகம் பௌத்த மதத்தின் எதிர்ப்பாகத் தோன்றியது. அது ஆராய்ச்சிக்கெடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு பொருளின் தன்மைகளை ஆராய்கிறது. வைசேடிக சூத்திரஞ் செய்த கணாதரும், நியாய சூத்திரஞ்செய்த கௌத மரும் சிவ வழிபாட்டினர்.22 நியாய சூத்திரஞ் செய்த கௌதமர் அட்ச பாதர் (வியாக்கிரபாதர்) எனவுமறியப் படுவர். சிவஞான முனிவர் வைசேடிக மதத்தைப்பற்றிக் கூறி இருப்பது வருமாறு. “தருக்கமாவது - வைசேடிக மும் நையாயிகமுமென இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை எனப் பதார்த்தம் எழு வகைப்படும். அவற்றுள் திரவியம், நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், காலம், திசை, ஆன்மா மனமென ஒன்பது வகைப்படும். அவற்றுள் நில முதலிய நான்கும் அநித்தியப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால் வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தியப் பொருள் கள். அவற்றுள் ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாயுள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கடோறும் வெவ்வேறாயிருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவன் இச்சை வயத்தானே உலகந்தோன்றி யொடுங்கும். அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள் சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்ப துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் பத்துங் கண்டுகொள்க. இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக் கோடாக நிகழ்வன. அவை உருவம், சுவை, ஊறு, நாற்றம் முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள் புத்தி, இன்பம், துன்பம், வெறுப்பு, முயற்சி , அறம், பாவம் என எட்டுக் குணமும் பாவனை (அனுபவத்தின் காரியமாய் நினைவிற்குக் காரணமாக உள்ளது) என்னும் வாதனையும் சீவான்மாக் களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி, விருப்பு, முயற்சி மூன்றும் பரமான்மாவுக்குச் சிறப்புக் குணங்கள். பரமான்மாவுக்காகிய புத்தி முதலிய மூன்றும் பரமான்மாவுக்குச் சிறப்புக் குணங்கள். பரமான்மா வின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். தொழிலாவன - எழும்பல், வீழ்தல், வளைதல், நிமிர்தல், நடத்தலென ஐவகைப்படும். சாதியாவது - பல பொருட்களுக்குப் பொதுவாகிய தன்மை - அது பரம் அபரம் என இரு வகைப்படும். விசேடமாவது - ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை நில அணு முதலிய பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்து மாகிய நித்தியப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். சமவாயமாவது - அவயவ முதலியவற்றுக்கு அவயவ முதலியவற்றோடும் நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். இன்மையாவது - முன்னின்மையும், அழிவு பாட்டின்மையும், என்று மின்மையும், ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். இங்ஙனங் கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு, பொது வியல்பு, வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நானென்றெண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சி யின்மையின் அறம் பாவங்களின்மையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின் உடம்பு முகந்து கொண்ட வினைப்பயன் அறிவின்றிப் பாடாணம் போற் கிடப்பதே முத்தி யென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.” (சிவஞான போத மாபாடியம்). கணாதர் என்னும் பெயர் கணபுக் (அணுவைத் தின்பவர்) என்னும் பொருளில் இடப்பட்ட புனைபெயர் எனச் சிலர் கூறுகின்றனர். நியாயம் *நியாய சூத்திரஞ் செய்தவர் கௌதமர். இவருக்கு அட்சபாதர் என்பதும் பிறிதொருபெயர் உண்டு. அட்சபாதர் என்பதற்குப் பாதத்தில் கண்ணுடையவர் என்பது பொருள். புராணங்களில் சொல்லப்படும் வியாக்கிரபாதர் இவரென்பது சிலர் கருத்து. நியாய சூத்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிவஞான முனிவர் நையாயிகத்தைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “நையாயிகமாவது வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறு பான்மை வேறுபடுத்தும் பிராமணம், பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விரித்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தான் அக்கபாத முனிவன். தர்க்கிகரும் சௌந்திகரும், வைபாடிகரும் நிலவணு, நீரணு, தீயணு, வளியணு வெனப் பரமாணுக்களெல்லாம் ஒரு தன்மையவே என்பர் ... இங்ஙனமாயினும் தர்க்கிகர் வேதநெறியினொழுகி வேதத் துக்குப் பிராமணங் கோடலிற் புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகரோடு வைத்தெண்ணப்பட்டாரென்க.” நியாயம் வைசேடிகம் மீமாம்சை என்னும் மூன்றும் சடப் பொருள் அணுவாலாகியது; அவ்வணுக்கள் பல இனங்களாகும்; அணுக்கள் சேர்ந்து பிரபஞ்ச முண்டாகிறது; நித்தியமான ஆன்மாவும் பலதிறப்பட்டது. ஆன்மா தனது தனிப்பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சடத்துடன் உறவு கொள்ளும் போது உடலும் பொறிகளும் பெற்று எல்லை உணர்ச்சி பெறும் எனக் கூறும்.”# பூர்வமீமாம்சை பூர்வமீமாம்சை சைமினியாரால் செய்யப்பட்டது. இது வேதங்களிற் கொடுக்கப்பட்டுள்ள பிராமணங்களைத் திரட்டிக் கூறுகின்றது. பூர்வ மீமாம்சையைப் பற்றிச் சிவஞானமுனிவர் கூறியிருப்பது வருமாறு : “மீமாம்சையாவது வேதத்திற் கரும காண்ட ஆராய்ச்சி செய்தற்கெழுந்த நூலாதலின் அதுவும் வேதமெனப்படும். அது பன்னிரண்டத்தியாய மாகச் சைமினி முனிவனாற் செய்யப்பட்டது. அந்நூலிற் கூறும் பொரு ளாவது - வினை செய்தவர்க்கு வினையே துறக்க முதலிய பயன்களை உதவும். காமிகப் பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அப்பயனை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து வேள்வி செய்யின் அவ்வினை முத்தியை உதவும். இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவனுண்டு என்பதூஉம் உலகம் தோன்றி அழியுமென்பதூஉம் பொய்; உலகம் என்றும் நிலைபெறும் என்பதாம். இங்ஙனஞ் செய்யப்பட்ட சைமினி சூத்திரங்கட்குப் பாடியஞ் செய்தான் சரபமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடு கொண்டு பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடிய மதம்பற்றி வழிநூல் செய்தான். இங்ஙனமாதலின் மீமாம்சை மதம் இருவகைப் பட்டது. பட்டாச்சாரியன் கன்மமே பயன் கொடுக்குமென்றும் முத்தியில் iநயாயிகர் போல் ஆனந்த முண்டென்றுங் கொள்வன் பிரபாகரன். பிரபாகரன் கன்மநாசத்தில் அபூர்வமே ஒன்று தோன்றி நின்று பயன் கொடுக்குமென்றும், வைசேடிகம் போலப் பாடாணம் போற்கிடப்பதே முத்தி என்றும் கூறுவன். பொருட்டன்மையினும் சிறுபான்மை பட்டாச் சாரியன் வேறுபடுத்துக் கூறுவன். பிரபாகர மதமெனினும் குருமத மெனினு மொக்கும். மீமாம்சை நூலிற் கூறும் நியாயங்களும் எல்லா மதங்களுக்கும் முபகாரமா மெனக்கொள்க.” உத்தரமீமாம்சை 23வேதாந்த சூத்திரம் உத்தரமீமாம்சை எனப்படும்; இனைச் செய்தவர் வாதராயணர்; வியாசர் செய்ததாகவும் இது வழங்கும்.* வாதராயணரும் வியாசரும் ஒருவரென்று சிலரும் வேறானவர்கள் என்று வேறு சிலரும் கூறுவர். வேதாந்த சூத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களடங்கிய 555 சூத்திரங்களுண்டு. இவற்றிலிருந்து வேதாந்த ஞானம் விரிவடைந்தது. இச் சூத்திரங்களின் பொருள் அரிதில் விளங்கக் கூடியது. உரையாசிரியரின் உரைகளைக் கொண்டே அவற்றின் பொருளை விளங்க வேண்டும். வேதாந்த சூத்திரங்களுக்குப் பலர் உரை கண்டுள்ளார்கள். அவற்றுள் சங்கரர், இராமானுசர், மாதவர், நீலகண்ட சிவாச்சாரியர் என்போர் செய்த உரைகள் முதன்மை பெறும். ஒவ்வொரு வரும் தத்தம் கொள்கைகளை நாட்டி உரை செய்திருக்கின்றனர். சங்கரர் அத்துவைதக் கொள்கையையும், இராமானுசர் விசிட்டாத்துவைதக் கொள்கையையும், மாதவர் துவைதக் கொள்கையையும் நாட்டியுள்ளனர். நீலகண்டர் சிவபரமாக வேதாந்த சூத்திரங்களுக்குப் பொருள் கண்டார். அவர் உரை சைவ அத்துவைத உரை எனப்படும். வேதாந்த சூத்திரங் களுக்கு முப்பது உரைகள் வரையிலுண்டு. இவ்வுரைகளுக்கு உரை நூற்றுக்கு மேலுள்ளன. வேதாந்த சூத்திரங்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரையிலெனக் கொள்ளப்படுகிறது. இந்திய தத்துவ ஞானங்களின் சுருக்கம் என்னும் நூலிற் குறிக்கப் பட்டிருப்பது வருமாறு: வாதராயணரின் வேதாந்த சூத்திரம் உபநிடதக் கருத்துக்களை விளக்குவதற் கெழுந்தது. உபநிடதங்கள் தியான முறைகளைக் கூறும் குறிப்புகளடங்கிய நூல்கள். வாதராயணர் இருடிகள் பயன்படுத்தியுள்ள பரிபாடைச் சொற்களுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டுமென் றும், தியானம் எப்படிச் செய்யப்பட வேண்டுமென்றும், தமது சூத்திரங்களில் கூறுகிறார். வேதாந்த சூத்திரங்கள் மேலான விளக்கம் கூறும் நூலாகவன்றித் தத்துவஞான நூலாக இருக்கவில்லை. வாதரா யணர் அக்காலத்து நிலவிய சாங்கிய வைசேடிக பௌத்த பாகவத பாசு பதக் கொள்கைகளை ஆங்காங்கு கண்டிக்கின்றார்; அவை கொடுக்கும் தத்துவக் கருத்துக்கள் சுருதிக்கும் நியாயத்துக்கும் பொருத்தமற்றவையென் றும் காட்டுகிறார். இந்தியாவில் நடைபெறும் தத்துவஞானம் தொடர் பான தர்க்கங்களில் உபநிடதங்களிலிருந்தும் வேதாந்த சூத்திரங்களி லிருந்தும் சிறுவாக்கியங்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்படு கின்றன. ஆகவே அவை தத்துவஞான நூல்களெனக் கருதப்படுகின்றன. ஆனால் அவை அவ்வாறமையவில்லை. உபநிடதங்கள் உபாசனை முறைகளையும் பலவகைத் தியான முறைகளையும் தியானத்தில் காணும் இரகசியமான அனுபவங்களையும் கூறுகின்றன. வேதாந்த சூத்திரமும் அவைகளைப் பற்றிக் கூறுகின்றது. சூத்திரங்கள் என்பன சொற்கள், வசனத்தின் பகுதிகள் அல்லது வசனத்தின் கோப்புகள் எனக் கூறலாம். அவை குரவரின் போதனைகளை நினைவுக்குக் கொண்டு வரும் குறிப்புகள் போன்றவை. வேதாந்த சூத்திரங்களிற் பல, கூறப்படும் பொருளைப் பற்றியோ மேற்கூற விருப்பனவற்றைப் பற்றியோ கூற வில்லை. காலத்தில் குரவர்கள் கொடுத்த விளக்கவுரைகள் மறக்கப் பட்டன. மணிகள் கோக்கப்பட்ட நூல்போன்ற சூத்திரங்கள் மாத்திரம் நிலை பெற்றன. உரையாசிரியர்கள் இந் நூல்களில் (சூத்திரங்களில்) தாம் விரும்பிய கருத்துக்களைக் கோத்துத் தொங்கவிட்டார்கள். இதனால் எக் கட்சியையும் சாராத ஒருவருக்கு வேதாந்த சூத்திரம் கூறும் உண்மைப் பொருளை அறிய முடியாமலிருக்கிறது. சங்கரர் பிரமமொன்றே உள்பொருள் மற்றவை கானல் நீர் போன்று இல்பொருள்களென்பர். இராமனுசர் உயிர், உலகம், இறைவன் என்பவை உள் பொருள்கள்; உயிரும் உலகமும் இறைவனுக்கு உடல் என்பர். மாதவர் உயிரும் உலகமும் இறைவனும் வெவ்வேறு பொருள்களென்பர். சங்கரர் சாக் மதத்தினர். இராமானுசரும், மாதவரும் வைணவ மதத்தினர். வைணவ சமயத்தின் தத்துவஞானக் கொள்கைகள் இராமானுசர், மாதவரின் வேதாந்த சூத்திர, பகவத் கீதை உரைகளை அடிப்படையாகக் கொண்டு வடமொழி நூல் வழியில் வருபவை. யமுனாச்சாரியர் காலம் வரையில் வைணவர் வேதங்களையே பிரமாணமாகக் கொண்டு, ஆகமங்களைப் பிரமாண மாகக் கொள்ள மறுத்தனர். சைவசமயத்தவர் தமது தத்துவ ஞானத்தை வடமொழியுள்ள நூல்களிலிருந்து கொள்ளவில்லை. இப்பொழுதுள்ள ஆகமநூல்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. மொழி பெயர்ப்பில் வைதீகக் கருத்துக்களும் இடையிடையே நுழைந்துள்ளன.* சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், வேதாந்தம் (ஏகான்ம வாதம்) முதலியவற்றைச் சைவர் புறச் சமயங்களாகக் கொள்வர். சாங்கியம் கடவுளைப் பற்றிக் கூறவில்லை; யோகம் ஈசுவரனைப்பற்றிக் கூறுகின்றது; அது உலகைப் படைத்து அழிக்கும் ஈசுவரனன்று; நியாயம் கூறும் ஈசுவரன் செயல்களுக்குப் பலனளிக்குமளவிலுள்ளது; உயிர்கள் விடுதலை பெற்றுச் சென்றடையும் ஈசுவரனன்று. வைசேடிகம் கடவுளைப் பற்றிக் கூறவில்லை; பிற்காலத்தில் சைவ சமயத்தின் செல்வாக்கினால் படைப்புக்களைச் செய்பவராகிய கடவுளை ஏற்றுக்கொண்டது. ஏகான்மவாதம் பிரமமே உயிர்கள், (உயிர்கள் பிரமத்தின் உயிர்கள்) எனக் கூறுகின்றது. தரிசனங்களில் அடங்கிய தத்துவ ஞானங்கள் ஒருவகை நிரீச்சுர மதங்களாக உள்ளன. இவை வேதங்களை ஆதாரமாகக் கொள்வ தாகக் கூறுவதால் இவை ஆத்திக மதங்களெனப்பட்டன. சங்கரரின் வேதாந்தக் கொள்கையைப் பின்பற்றும் பிராமணர் ஸ்மார்த்தர் என அறியப்படுவர் .# பகவத் கீதை பகவத் கீதை மாபாரதத்தில் வீட்டும பருவத்திலுள்ளது. இந்நூலில் தத்துவஞானம், சமயம், நீதி முதலியவை அடங்கியிருப்பதால் இது மற்றைய தத்துவ ஞான நூல்களிலும் சிறந்ததாகக் கொள்ளப்படு கின்றது. இது பக்தி மார்க்கத்தால் எல்லோராலும் அடையக் கூடிய வழியைக் கூறுகின்றது. பாண்டவருக்கும் கௌரவருக்குமிடையில் நேர்ந்த பாரதப் போர்க் களத்தில் போய் நின்ற அருச்சுனன் தனது உறவினரையும் குரவரையும் கொல்ல மனமின்றிக் கலங்கியபோது கண்ணன் அவனுக்குப் போதித்த ஞானமே பகவத் கீதை எனப்படுகிறது. எழுநூறு பாடல்க ளடங்கிய இந்நூல் கண்ணனால் போர்க்களத்தில் அருச்சுனனுக்குப் போதிக்கப்பட்டதென்பது நம்பக் கூடியதாக இருக்கவில்லை. இந்நூல் எவரோ ஒரு புலவரால் கி.மு. 200-க்கும் கி.பி.200-க்கு மிடையில் செய்யப் பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இந் நூலில் கண்ணன் தான் கடவுளினவதாரமெனக் கூறுகின்றனர். இது வேதாந்த, சாங்கியக் கொள்கைகளையும் ஆகமக் கொள்கைகளையும் ஒன்று சேர்க்கும் படி செய்யப்பட்டதெனக் கருதப்படுகிறது. இதற்குச் சங்கரர், இராமானுசர், மாதவர், வல்லபர் முதலிய பலர் தத்தம் கொள்கைகளை நாட்டி உரை செய்திருக்கின்றனர். இவ்வுரைகளைப் பின்பற்றியே இதன் மொழி பெயர்ப்புகளும் செய்யப்பட்டுள்ளன. உரையாசிரியர்கள் பகவத் கீதையின் உண்மைப் பொருளைக் காணவேண்டுமென்னும் நோக்கம் கொள்ளவில்லை; அதனைத் தமது கொள்கைகளுக்கு அரணாகப் பயன்படுத்தியுள்ளனர்.24 மகாபாரதம் *மகாபாரதம் கௌரவருக்கும் பாண்டவருக்குமிடையில் நேர்ந்த போரைப் பற்றிக் கூறுகின்றது. பாரதப் போர் குருச்சேத்திரத்தில் நிகழ்ந்தது. இது தில்லிக்கு வடமேற்கிலுள்ள பானிபாத்# எனச் சொல்லப் படுகிறது. பாரதப்போர் கி.மு.1400 இல் நிகழ்ந்தது. மாபாரதம் தொடக்கத் தில் திராவிட சம்பந்தம் பெற்ற கதையாக இருந்ததென்றும் பின் அது ஆரிய நாட்டுக் கதையாக மாற்றப்பட்டதென்றும் கலாநிதி இராதாகிருஷ் ணன் போன்ற அறிஞர் கருதுகின்றனர்.25 வேதங்களைக் கேட்கவோ படிக்கவோ அருகரல்லாத பெண்களும் சூத்திரரும் படித்தற்காக இதி காசங்கள் செய்யப்பட்டனவெனச் சாயணர் கிருட்டிண எசுர் வேத உரையிற் கூறியிருக்கின்றார்.26 பாரதத்தைச் செய்தவர் வியாசமுனிவர் என வழங்குகிறது. இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி கிறித்து வுக்குப்பின் பல நூற்றாண்டுகள் வரை வளர்ந்து கொண்டு சென்றதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பாரதம் வியாசரால் 24,000 சுலோகங் களாகச் செய்யப்பட்டுப் பின் 6,000,000 சுலோகங்களாக விரித்தெழுதப் பட்டதென்றும் இப்பொழுது ஒரு லட்சம் சூத்திரங்கள் வரையிலுள்ளன என்றும் கூறப்படுகின்றன. மகாபாரதத்தின் பிந்திய பகுதிகளில் யவனர், பாலவர் (Parthians) சகர் முதலியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள் ஒரு கடவுளின் வெவ்வேறு வடிவங்களெனக் கொள்ளப்பட்டன. சிவன் திருமால் வழிபாடுகள் முதன்மை பெற்றிருந்தன. இராமாயணத்தில் சிவனைப் பற்றிக் கூறப்படும் கதைகள் மகாபாரதத்தில் விரித்துக் கூறப்படுகின்றன. சிவன் திரிபுரங்களை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது முதலிய கதைகள் கூறப்படுகின் றன. வீட்டும பருவத்தில் அருச்சுனன் துர்க்கையை வழிபட்ட செய்தி காணப்படுகின்றது. கண்ணன் சிவனிடம் கேட்ட வரங்களிலொன்று தான் சிவபக்தனாக இருக்க வேண்டுமென்பது. பாரதம் தொடக்கத்தில் திருமால் வழிபாடு சம்பந்தப்பட்ட நூலாக இருக்கவில்லை. கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டளவில் பிராமண மதத்தினரால் இது வைணவ நூலாக்கப்பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுவர். இராமாயணம் இராமாயணம் வான்மீகராற் செய்யப்பட்டது. நாட்டுப்பாடல்கள் போலிருந்த பழைய பாடல்களிலிருந்து இராமயணஞ் செய்யப்பட்ட தெனக் கருதப்படுகின்றது. இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற் றாண்டில் தொடங்கி கிறித்துவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் வரை வளர்ந்து கொண்டு சென்றது. தொடக்கத்தில் இது பழைய கதையைக் கூறுவதாக இருந்தது. பின்பு அது வைணவ நூலாக மாற்றப்பட்டது. சீதாபிராட்டியின் தந்தையாகிய சனகன் யாக்ஞவல்கி காலத்தவராகக் கூறப்படுவதாலும், யாக்ஞவல்கி சனமேசயன் காலத்தவராதலாலும் இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதெனக் கருதப் படுகின்றது. பாரத நிகழ்ச்சிகளைப்பற்றியோ இராமாயண நிகழ்ச்சியைப் பற்றியோ வேதங்கள் கூறவில்லை. வேதகால மக்கள் உழவு சாலைச் சீதை என்னும் பெயரால் வழிபட்டார்கள். இராமாயணம் ஆரியக் கொள்கைகள் தென்னாட்டிற் பரப்பப் பட்ட வரலாற்றைக் கூறுகிறதெனச் சிலர் கூறுகின்றனர். இராமாயணப் போர் தென்னாட்டினருக்கும் இராவணனுக்கும் நேர்ந்த போராகக் காணப்படுகிறது. இராமர் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டுக்கொண்டு உடனே திரும்பி விட்டார். அவர் வழியில் சிவலிங்கம் வைத்துப் பூசித்த தலம் இராமேசுவரம் எனப்படுகிறது. இராமரால் நேர் நின்று போரில் வெல்லுதற்கரியனாயிருந்த வாலி பூசித்த தலம் குரங்காடு துறை. இராவணன் சிவலிங்க பூசை செய்யும் சிவ பத்தனாக இருந்தான். இராமாயணத்திற் கூறப்படும் சமயம் சிவலிங்க வழிபாடாக இருந்தது. இந்திரன் தெய்வங்களுக்குத் தலைவனாக இருந்தான். காமன், குபேரன், கார்த்திகேயன், விட்டுணு, சிவன், இலக்குமி, உமை முதலிய தெய்வங்களும், தெய்வங்களாக்கப்பட்ட சேடன், சடாயு, நந்தி முதலிய வும் கூறப்படுகின்றன. வழிபாடு வேள்வி முறையாக இருந்தது. விட்டுணு வும் சிவனும் தலை இடம் பெறுகின்றனர். சிவன் காமனை எரித்தது, பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது, பாற்கடலிலெழுந்த நஞ்சைச் சிவனுண்டது, தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தது, சிவன் திரிபுரங் களை எரித்தது முதலிய கதைகள் இராமாயணத்திற் காணப்படுகின்றன. இராமர் அவதாரமாகக் கூறப்படவில்லை. வட நாட்டுக்கதை ஒன்றையும் தென்னாட்டுக்கதை ஒன்றையும் இணைத்துச் செய்யப்பட்டது இராமா யணம் என்னும் கருத்தும் இருந்து வருகின்றது.27 புராணங்கள் இதிகாசங்கள் தோன்றியபின் புராணங்கள் தோன்றின. இவை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றின. அபத்தம்பரும் (கி.மு.400) கௌடலியரும் புராணங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். ஆகவே அக் காலத்தில் புராணங்கள் இருந்தனவென்பது தெரிகிறது. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோயில் புரோகிதர்களால் எழுதிவைக்கப்பட்ட வரலாறுகளும் செவி வழக்கில் வந்த பழங்கதைகளும் திரட்டப்பட்டுப் புராணங்கள் செய்யப்பட்டன. இவை பல காலங்களில் கூட்டியும், குறைத்தும், மாற்றியும் எழுதப்பட்டுள்ளன.28 பதினெட்டுப் புராணங் களும், பதினெட்டு உபபுராணங்களுமுள்ளன. பாகவதம், நாரதீயம், கருடம், பதுமம், வராகம் என்பவை விட்டுணு புராணங்கள். சிவ, இலிங்க, இஸ்கந்த, அக்கினி, மற்ச, கூர்ம என்பன சிவ புராணங்கள்; பிரம, பிரமாண்ட, வைவர்த்த, மார்க்கண்டேய, வாமன, பாவிச்ஸ்யா என்பன பிரம புராணங்கள். இவற்றுள் பல பத்து அல்லது பன்னிரண்டு நூற் றாண்டுகளுக்கு முன் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன. புரா ணங்கள் பிரபஞ்சப் படைப்பு, சலப்பிரளயம், மனுவந்தரம், மனுக்கள், தேவர்களின் பிறப்பு, அவர்களின் வரலாறு முதலியவற்றைக் கூறுகின் றன. புராணங்களைச் செய்தவர் வியாசர் என்னும் ஐதீகம் வழங்குகின்றது. புராண காலத்தில் பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுளர் மும்மூர்த்தி களாக்கப்பட்டனர். வழிபாடு கோயில் வழிபாடாக இருந்தது.* நாதனாரருள் பெறு நந்தி தந்திடக் கோதிலா துணர் சனற் குமரன் கூறிட வாதராயண முனி வகுப்ப வோர்ந்துணர் சூதனோதியது மூவாறு தொல்கதை (கந்த புராணம்) #“மகாபாரதப் போருக்குப்பின் ஆங்காங்கு நாட்டுக் கதைகளாக வழங்கியவை எல்லாம் திரட்டப்பட்டன. அத்திரட்டு, புராண சங்கிதை என்னும் பெயர் பெற்றிருந்தது. புராணசங்கிதையை ஆதாரமாகக் கொண்டு பல புராணங்கள் எழுந்தன. காலந்தோறும் இவற்றுள் பின் சேர்ப்புகளாகப் பல எழுதிப் புகுத்தப்பட்டன. பிரமாண்ட, வாயு, மற்ச என்பவை காலத்தால் முற்பட்டவை; பிரம வைவர்த்த, சிவ, வாமன, பாகவதம் என்பவை மிகப் பிற்காலத்தவை; மற்றவை இடைக்காலத்தவை. இவற்றுள் பழையவை மார்க் கண்டேயமும் பிரமமும். பிரம புராணத் தின் பகுதி பழையது அன்றாயினும் அது ஆதி புராணமெனப்பட்டது. பத்மபுராணம் மற்சபுராணத்துக்கு உறவுடையதாகக் காணப்படுகின்றது. அதன் பெரும் பகுதி பிற்காலத்தது. அதில் பஞ்சதந்திரக்கதை, இதோப தேசக்கதை போன்ற நீதிக் கதைகள் காணப்படுகின்றன. புராணங் களாவன : பிரம, பத்ம, விட்டுணு, சிவ, பாகவத, நாரதீய, மார்க்கண்டேய, அக்கினி, பாவிசிய, பிரமவைவர்த்த, இலிங்க, வராக, இஸ்கந்த, வாமன, கூர்ம, மற்ச, கருட, பிராமண்ட. இவ்வரிசையில் புகழ்பெற்ற வாயு புராணங் காணப்படவில்லை. தொடக்கத்தில் வாயுபுராணமும் பிரமாண் டமும் ஒன்றாக இருந்தன. இவ்விரு புராணங்களும் சொல்லுக்குச் சொல் ஒத்திருக்கின்றன. வாயுபுராணம் கூர்மபுராணம் இவ்விரண்டையும் ஒன்றாகக் கொண்டு வாயாவிய பிரமாண்ட எனக் கூறுகின்றன.” “பதினெட்டுப் புராணங்களைத் தவிரப் பதினெட்டு உப புராணங் களுமுண்டு. இவை முனிவர்களாற் செய்யப்பட்டவை எனக் கூர்மபுரா ணமுங் கருடபுராணமுங் கூறுகின்றன. அவற்றுக்கு மிக்க பழமையைக் கொடுப்பதற்காக அவை மனுவால் செய்யப்பட்டவை என்று பத்மபுரா ணம் கூறுகின்றது. உப புராணங்களாவன : சனற்குமார, நரசிம்ம, ஸ்கந்த, சிவதர்ம, துர்வாச, மார்க்கண்டேய, கபில, வாமன, உசான, பிரமாண்ட, வருண, காளிகா, மகேசுவர, சாம்ப, சௌர, பரசுராம, மாரீச, பார்க்கவ என்பன.” தரும சாத்திரங்கள் 29வேதங்களில் சொல்லப்படும் தருமங்களை அல்லது ஒழுக்கங் களைத் திரட்டிக் கூறும் நூல்கள்* தரும சாத்திரங்கள் எனப்பட்டன. ஆசுவலாயனம், போதாயனம், அபஸ்தம்பம் முதலியன சூத்திர வடிவில் செய்யப்பட்ட பழைய நூல்கள். தரும சூத்திரங்களைத் தொடர்ந்து மிகுதி நூல்கள் தோன்றின. மனு மிருதியும் யாக்ஞவல்கிய மிருதியும் மிருதிகளில் முதன்மையுடையவை. தரும சாத்திரங்கள் பதினெட்டு எனப்படுகின்றன. மனு, யாக்ஞவல்கியம், நாரதீயம், பராசரம், பிரகஸ்பதி முதலியவும் பிறவுமாகிய மிருதிகள் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த இருடிகளின் பெயர்களைப் பெற்றிருப்பினும் அவை கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகளின் பின் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன.# விசயநகர அரசர் காலத்தில் வித்தியாரணியர் பராசர மிருதிக்கு விரிவுரை செய்தார். அம்மிருதி நூலை ஆதாரமாகக் கொண்டு விசயநகர அரசரின் சட்டங்கள் செய்யப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் செய்யப்பட்ட இந்துச் சட்டம் (இந்து லா) என்பது மீமாம்சை நூலையும் மிருதி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு பிராமணராற் செய்யப் பட்டது. சூத்திர வடிவில் செய்யப்பட்ட தரும நூல்கள் கௌதமம், போதாயனம், ஆபஸ்தம்பம், வசிட்டம், விஷ்ணு என்பன. மிருதி நூல்கள் பின்வருவன : மனு, அத்திரி, விஷ்ணு, ஹாரிதர், *யாக்ஞவல்கியர், உசனர், ஆங்கீரசர், யமர், ஆபஸ்தம்பர், சம்வர்த்தர், காத்தியாயனர் , பிரகஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், விகிதர், தக்கர், கௌதமர், சாதாதபர், வசிட்டர் முதலியவர்களின் பெயர் பெற்றவை. வைதீகத்தில் வருணமும் வருணாச்சிரம தருமங்களும் முக்கிய முடையன. பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நான்கு வருணங் களும் பிறப்பினால் உண்டானவை. இவர்களுக்குள்ள நீதிகளும் வெவ் வேறானவை. தமிழ்நாட்டு நீதி அவ்வாறிருக்கவில்லை. பிறப்பினால் எல்லாரும் ஒரு குலத்தினர்; செய்யும் தொழில் வேற்றுமையால் அவர்கள் வெவ்வேறு குலத்தினர். ஆயினும் “பிறப்பொக்கு மெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா - செய்தொழில் வேற்றுமையால்” (திருக்குறள்) “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்” (திருமந்திரம்) என்கின் றன தமிழ் மறைகள். வடநாட்டு நீதிக்கும் தென்னாட்டு நீதிக்குமுள்ள வேறுபாட்டை, “வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந் தோர்கள் - உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என்னும் மனோன்மணீயச் செய்யுள் இனிது விளக்குகின்றது. தென்னாட்டில் வைதீகம் வடநாட்டில் ஆரியர் தமிழர் என்னும் இரு இனத்தினரும் கலந்து ஒன்றுபட்டனர். வைதீகமும் உள்நாட்டு மதமும் கலப்படைந்தன. பிராமண மதத்தினர், தாம் புதிதாகச் சென்று வாழ நேர்ந்த இடங்களுக் கேற்ப அம் மக்களின் ஒழுக்கங்களையும் தெய்வங்களையும் தம்மவை போலத் தழுவிக் கொண்டார்கள். வேத மதத்தையும் வேள்விகளையும் எதிர்க்கும் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரையே அவர்கள் விட்டுணுவின் அவதாரமாக்கித் தமது கடவுளருள் சேர்த்துக் கொண்டார்கள்.# பத்திரபாகு என்னும் சமண முனிவரின் தலைமையில் மௌரிய சந்திரகுப்தனும் பல சமண முனிவர்களும் மைசூரிலுள்ள பெலகொள என்னுமிடத்துக்குச் சென்று தங்கினார்களெனத் தென்னிந்திய சமணர் களின் வரலாறு கூறுகின்றது. இவர்களை அடுத்துப் பிராமணர்களும் பௌத்தரும் தெற்கே வந்திருக்கலாம்.31 பிராமணர் தமது மதத்தைப் பரப்பும் நோக்கமாகவோ, அதிகாரத்தை நாட்டவிரும்பியோ இங்கு வரவில்லை. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் இவர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள். வடநாட்டுப் பிராமணர் வழக்குகள் சிலவற்றோடு தமிழ் வழக்குகள் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கின்றன. சங்க காலத்தில் அங்குமிங்கும் சில வைதீக மதத்தினர் வாழ்ந்து கொண்டிருந் தார்கள். அவர்கள் தமிழர் சமயக் கொள்கைகளில் மாற்றத்தைச் செய்யக்கூடிய அவ்வளவு பெருந்தொகையினராக இருக்கவில்லை.32 யாகங்கள் செய்வதால் பகைவரைப் போரில் வெல்லலாம், செல்வம் அதிகரிக்கும், ஆயுள் பெருகும் என்னும் நம்பிக்கைகள் இருந்தன. தமிழ் அரசருட் சிலர் இந் நம்பிக்கைகளில் தோய்ந்து பிராமணப் புரோகிதர் வாயிலாக யாகங்கள் செய்தனர்.33 இது சங்க கால அரசர்கள் சிலருக்கு “இராசசூயம் வேட்டட”, “பல்யாக சாலை” முதலிய அடை மொழிகள் வழங்கியமை கொண்டு அறிய வருகின்றது. ஆங்கிலத்தில் வரலாறு எழுதியவர்கள் தமிழில் அந்தணர் என்னும் சொற் காணப்பட்டால் அதை பிராமணர் என்று மொழிபெயர்த்திருக் கிறார்கள். மற்றைய நாடுகளில் போலவே தமிழ் நாட்டில் சமய கருமங்களைக் கண்காணிக்கும் குருமார் இருந்தார்கள். இவர்கள் அந்தணர் எனவும், பார்ப்பனரெனவும், புரோகிதர் எனவும் அறியப்பட்டார்கள். இப்பெயர்களை எல்லாம் பிராமணன் என்று மொழிபெயர்த்ததினால் தமிழ் நாட்டில் சமயமிருக்கவில்லை, குருமாரிருக்கவில்லை, குருமார் வடநாட்டினின்றும் வந்தனர்; சமயமும் வடநாட்டினின்று வந்தது என்றும் தவறான கொள்கைகள் எழுகின்றன. வட நாட்டார் படையெடுப்பு முற்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வடக்கே தண்டகம் என்னும் பெருங்காடு இருந்தது. அது இப்போதைய ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பவற்றை அடக்கிய பரப்பாக இருந்தது. தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களே வடக்கு நோக்கிச் சென்று விந்திய மலைத்தொடர் வரையில் குடியேறினார்கள். விந்தியத்துக்குத் தெற்கில் வாழ்ந்த எல்லா மக்களும் தொடக்கத்தில் ஒரே மொழியும் பண்பாடும் உடையவர்களாக இருந்தார்கள். வைதீக மதம் வடநாட்டி னின்றும் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தது. வைதீகரின் மொழி சமக்கிருதமாக இருந்தது. பௌத்த சமண மதங்களும் தெற்கு நோக்கி வந்தன. இம்மதங்களின் மொழிகள், பிராகிருதங்களும் சமக்கிருதமுமாக இருந்தன. பிராகிருதங்களும் சமக்கிருதமும் தெற்கே வாழ்ந்த மக்களின் மொழியோடு கலந்தன. அதனால் கன்னடம், தெலுங்கு, துளு, மலை யாளம் முதலிய மொழிகள் தோன்றின. கலிங்கம் ஆந்திரம் முதலிய நாடுகள் நந்தர் மௌரியர் முதலிய வட நாட்டார் ஆளுகைக்குட்பட்டிருந்தன. மௌரிய ஆட்சி வீழ்ந்தபின் சாதவாகனர் என்னும் அரசர் ஆந்திர நாட்டை ஆண்டனர். மௌரியர் ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள் அவ்வாட்சி ஒழிந்தபின் கட்டுப்பாடற்ற சிற்றரசர்களாயினர். இவர்கள் பிராமணராகவும் வைதீக மதத்திலும் சமக்கிருதத்திலும் பற்றுடையவர்களாகவுமிருந்தார்கள். அசுவமேதம் முதலிய வேள்விகளைச் செய்து வந்தார்கள்.34 தமிழ் நாட்டினின்றும் சென்று வடக்கே குடியேறிய ஆரியமயமானவர்களே ஆந்திரர் என வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். சிறீ சாதகர்ணி என்னும் சாதவாகன அரசன் (கி.மு.189) பெரிய யாகங்களைச் செய்தா னென்றும் யாகத்திற் புரோகிதராக இருந்த பிராமணருக்குப் பத்தாயிரக் கணக்கான பசுக்களையும் , ஆயிரக்கணக்கான குதிரைகளையும், அநேகம் யானைகளையும் பல கிராமங்களையும், பத்தாயிரக்கணக்கான கார்சப் பணத்தையும் தானமாகக் கொடுத்தானென்றும் ஒரு சாசனம் கூறுகின்றது. இவ்வாறு ஆந்திர நாடு வைதீகமயமாக இருந்தது. சாதவாகனர் வீழ்ச்சி அடைந்த போது அவர்களின் கீழ் அதிகாரி களாக இருந்தோர் கட்டுப்பாடற்ற சிற்றரசர்களாக மாறினர். இவர்களில் சிலர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின்மீது படை எடுத் தார்கள். இவர்கள் சோழ நாட்டின் ஒரு பகுதியாகிய தொண்டை நாட்டைவென்று காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்தார்கள். இவர்கள் பல்லவர் என அறியப் பட்டார்கள். இவர்கள் தமிழறியாதவர்; வைதீக மதத்தினர்; சமக்கிருதக் கல்விக்குப் பேராதரவு அளித்தவர்.35 பல்லவர்காலச் சாசனமொன்று இஸ்கந்தவர்மன் பாரத்துவாச கோத்திரத்தவன் எனக் கூறுகின்றது. பல்லவரைத் தொடர்ந்து வடக்கில் நின்றும் தெற்கே படை எடுத்து வந்தவர்கள் இராட்டிர கூடர், கதம்பர், கங்கர், ஹோய்சலர், சாளுக்கியர், காகதீயர் எனப் பலராவர். இவர்களில் பௌத்தம் அல்லது சமணத்தைத் தழுவாத அரசர் வைதீகராகவும் வடமொழிப் பற்றுடையராய் அதனை ஆதரிப்போராகவும் இருந்தனர். கடம்ப அரசர் பிராமண வமிசத்தவராக இருந்தனர்.36 மயூரவர்மன் என்னும் கதம்ப அரசன் (கி.பி.345-360) பதினெட்டு அசுவமேதயாகங்கள் புரிந்து பல கிராமங்களைப் பிராமண ருக்குத் தானம் வழங்கியதைப் பற்றிச் சாசனம் ஒன்று கூறுகிறது. விசயநகர அரசாங்கம் வைதீகமயமாக இருந்தது. வித்தியரணியர் பராசரமிருதிக்கு உரை எழுதினார். அவர் உரையையும், மிருதியையும் தழுவி அரசாங்கச் சட்டங்கள் செய்யப்பட்டன. சமக்கிருதக் கல்வியை வளர்ப் பதற்கு பெருமுயற்சி செய்யப்பட்டது.* பிற்காலத்தில் ஆரியக் கொள்கை களைத் தழுவிய தென்னாட்டரசர் தம்மைச் சத்திரியர் எனக் கூறிக் கொண்டு பூணூல் தரித்தனர்# பண்டைத் தமிழரசர் இவ்வாறு செய்து கொள்ளவில்லை. கோயில்கள் வைதீகரின் வழிபாடு யாக முறையாகவும், தென்னாட்டினர் வழிபாடு கோயில் முறையாகவும் இருந்தன. வேதங்களில் கோயிலமைத் தல், கோயில் கிரியைகள் செய்தல், திருவைந்தெழுத்து ஓதுதல், திருநீறு பூசுதல் போன்றவற்றுக்கு விதிகளும் விளக்கங்களும் கிடையா. கோயில் வழிபாடு, விழாக்கள் அவற்றின் விளக்கங்கள் போல்வன ஆகமங்களில் கூறப்படுகின்றன. கோயில் கிரியைகள் சில கருத்துக்களை விளக்கும் அபிநயங்கள் என அறிஞர் கூறுகின்றனர். இது காரணமாகவே தேவதாசி வழக்கம் கோயில்களில் இருந்து வந்தது. முற்காலத்தில் கல்லாலெடுக் கப்பட்ட கோயில்கள் நகரங்களிலேயே இருந்தன. ஏனைய இடங்களில் நிழல் மரங்களின் கீழ் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. பிற் காலத்தில் அவ்வருட் குறிகளைச் சுற்றிக் கட்டடமமைக்கப்பட்டது. குத்தா லத்தில் ஆலும் பலாவும், திருநெல்வேலியில் மூங்கிலும், மதுரையில் கடம்பும், திருவானைக்காவில் நாவலும், சிதம்பரத்தில் தில்லையும், திருவொற்றியூரில் மகிழமும் தலமரங்களாக இருத்தல் இதற்குச் சான் றாகும். எல்லா மக்களும் உயர்வு தாழ்வு என்னும் வேறுபாடின்றி அருள் தறிகளை வழிபட்டார்கள். அருட்குறியையும் அதனைச் சூழ்ந்த இடத் தையும் மேற்பார்த்துக் கடவுளை அர்ச்சித்தவர்கள் பார்ப்பார் எனப் பட்டனர். பார்ப்பார் என்பதற்கு மேற்பார்ப்பவர் என்பது பொருள். வடநாட்டினின்றும் வந்த பல்லவர் ஹோய்சளர், கங்கர், சாளுக் கியர், இராட்டிர கூடர் முதலிய அரசர் வைதீக சமயத்தவர்களாக இருந் தார்கள்; சிவன் திருமால் முதலிய கடவுளரையும் வழிபட்டார்கள். கோயில் களில் வேளாண் மரபைச் சேர்ந்த தேசிகர் போன்றவர்கள் அர்ச்சகராக இருந்து வந்தார்கள். அவர்கள் தமிழில் துதிபாடிக் கடவுளைப் பூசித் தார்கள். கோயில் வழிபாடுகளைக் கூறும் ஆகமங்கள் தமிழிலேயே இருந்தன. “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை” “தமிழ்மண் டலமைந்துந் தாவிய ஞான முமிழ்வது போல வுலகந் திரிவர் அவிழு மனமுமெம் மாதி யறிவும் தமிழ்மண் டலமைந்துந் தத்துவமாமே” “சதாசிவந் தத்துவ முத்தமிழ் வேதம்” “செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தியிதனை நவமுரைத்தானே” “ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் பேறான வேதாகமமே பிறத்த லான் மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே” எனவரும் திருமந்திரச் செய்யுட்கள் சைவசித்தாந்த ஞானமும் ஆகமங் களும் தமிழிலிருந்தன என்பதைத் தெரிவிக்கின்றன. வைதீக சமயத்தை மேலாகக் கொண்ட அரசர் பார்ப்பாரை விலக்கிப் பிராமணரை அர்ச்சக ராக அமர்த்தினர். அவர்கள் தமிழறியாதவரும் கோயில் கிரியைகளை அறியாதவருமாக இருந்தார்கள். ஆகவே கோயில் வழிபாட்டுக்கு விளக்கம் கூறும் ஆகமங்கள் வடமொழிப்படுத்தப்பட்டன.* இப்பொழுது வட மொழியில் காணப்படும் ஆகமங்கள் எழுதப்பட்டுள்ள சமக்கிருத நடை கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததென ஆராய்ச்சி அறிஞர் கூறுகின் றனர். வட மொழிப்படுத்தப்பட்ட ஆகமங்களினிடையிடையே வைதீகக் கருத்துக்களும் புகுத்தப்பட்டன. வடமொழிப்படுத்தப்பட்டபின் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. தில்லையில் தேவாரங்கள் பூட்டிவைக்கப்பட் டிருந்த வரலாறு இவ்வகை முயற்சிகளிலொன்றாகும். புத்தகோசர் என்பார் சிங்கள மொழியிலிருந்த பௌத்த நூல்களைப் பாளியில் மொழி பெயர்த்தபின் சிங்கள நூல்களை எல்லாம் திரட்டி எரித்துவிட்டாரென வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். இது போன்ற கதியே தமிழுக் கும் நேர்ந்தது.# சைவத்துக்கு மாறுபட்ட வைதீகர் கோயில் பூசகராக அமர்ந் ததைத் தமிழறிஞர் விரும்பவில்லை. “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை யர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே சீர்கொண்ட நந்தி தெரிந்து ரைத்தானே.” “சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம் விட்டோரு முணர்வின்றி பத்தியுமின்றிப் பரனுண்மை யின்றியூண் பித்தேறு மூடர் பிராமணர் தாமன்றே.” “நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது காற்பாச நுண்சிகை கேசமா நூலது வேதாந்த நுண்சிகை ஞானமா நூலிடை யந்தணர் காண நுவலினே.” என்னும் திருமந்திரச் செய்யுட்கள் வைதீகப் பிராமணரை நோக்கிக் கூறப் பட்டவை என அறிஞர் கருதுகின்றனர். அருள்தறிகள் அல்லது சிவலிங்கங்களைச் சுற்றிக் கோயில்கள் எழுந்தன. தமிழ் நாட்டிற் பிராமணர் பலர் இருக்கவில்லை. இக் கோயில் களில் பூசகராக அமர்த்துவதற்கு அரசர் வடநாட்டினின்றும் மூவாயிர வர் நாலாயிரவர் எனப் பிராமணக் குடும்பங்களைக் கொண்டு வந் தார்கள். அவர்களைக் கோயிலைச் சூழவும் கிராமங்களிலும் குடியேற் றினார்கள்.* அவர்களுக்கு நிலங்களும் வீடுகளும் மானியமாக அளிக்கப் பட்டன. அவர்களுக்கு எல்லா வரிகளும் நீக்கப்பட்டிருந்தன. போதிய பிராமணர் தென்னாட்டிலில்லாமையால் பிராமண ரல்லாதாரும் பிராமணராக்கப்பட்டார்கள். பிராமண வகுப்பினர் தமிழ் நாட்டுக் குருக்கள் குடும்பங்களிலும் திருமணஞ் செய்து கொண்டார்கள். சைவ வைதீக மதங்களின் கலப்பு தமிழர் சமயத்தைக் குறித்து சேஷ ஐயங்காரவர்கள் திராவிட இந்தியா என்னும் தமது நூலிற் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: தமிழர்களிடையே அழகுக் கலைகளும் சமயமும் வளர்ச்சியடைந்திருந் தன. “தென்னிந்தியாவில் தத்துவஞான நூல்கள் இருக்கின்றன. அவற்றில் வடநாட்டுச் செல்வாக்கு ஓரளவு காணப்பட்டாலும் நாட்டுக்குச் சொந்தமான தத்துவஞானம் காணப்படுகின் றது. வரலாறு சம்பந்தமான ஆராய்ச்சிக்கு அவை பெரிதும் பயன்படத்தக்கன” என்று மாக்ஸ்மூலர் ஆறு தத்துவஞானங்கள் என்னும் நூலில் கூறியுள்ளார். தென்னிந்திய சமயம் தனிப்பட்ட தொடக்கமுடையது; பிற்காலத்தில் அது ஆரியச் செல்வாக்குப் பெற்றது. தமிழரின் சமயம் சில வகைகளில் ஆரியச் செல்வாக்குக்கு உட்படவில்லை என்றும், அது ஆரியர் சமயத்தின் மீது செல்வாக்கு நடத்தியதென்றும் காட்ட முடியும். வேதக் கொள்கைகளையும், வேதக் கிரியைகளையும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவைகளின் முதன்மையைக் கங்கை யமுனை ஆறுகள் பாயும் பலம் பொருந்திய அவர்கள் நாடுகளிலும் பௌத்தமும் சமணமும் அறைகூவி எதிர்த்தன. உயர்ந்த சாதியினர் எனப்பட்ட சிறுபான்மையினரே வேதக் கொள்கை களைப் பின்பற்றினர்; பெரும்பாலோர் பழைய உள்நாட்டு மதக் கொள்கைகளைப் பின்பற்றினார்கள். வேதகாலத் தெய்வங்களின் பெயர் மூலங்கள் தெளிவாகக் காணப் படவில்லை. அப்பெயர் மூலங்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் காணப்படவில்லை. ஆகவே அத் தெய்வங்கள் தமிழரின் தெய்வங்க ளாதல் வேண்டும். ஆரியர் வழிப்பட்ட வருணன் தமிழர் தெய்வமாதல் வேண்டும். கடற்கரைகளில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட இத் தெய்வத்தை ஆரிய இருடிகள் தமது தெய்வங்களுள் சேர்த்து வழிபட்டார்கள். ஆரியரின் உருத்திரன் தமிழர் வழிபட்ட இன்னொரு தெய்வம். உருத்திரன் என்பது சிவந்தவன் (சிவன்) என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பு. வெற்றியைக் கொடுக்கும் கொற்றவை தமிழர் தெய்வம். ஆரியரின் துவட்டா என்னும் தெய்வம் தமிழ்க் கம்மியரின் தெய்வமாகலாம். தமிழ் உழவரின் தெய்வம் இந்திர வணக்கத்துள் மறைந்து விட்டது. சிவ, முருக வணக்கங்கள் ஆரியரின் வருகைக்கு முன் இந்திய நாட்டில் இருந்தன. இந்து மதத்திலுள்ள சிவன், கிருட்டிணன், இராமர், துர்க்கை முதலிய தெய்வங்களும், தெய்வங்களின் அவதாரங்களும், மறு பிறப்புக் கொள்கை களும் வேதங்கள் அறியாதவை. வேத மதத்தில் காணப்படும் இவை அல்லாத பிற போக்குகள் பாரசீகம், கிரீஸ் முதலிய நாடுகளில் காணப் படுவன போன்றவை. பழந்தமிழரின் சமயம் சிவ வழிபாடாக இருந்ததெனப் போப்பையர் போன்ற அறிஞர் கருதினர். சிவன் அரூபமான தியான வடிவிலும், இலிங்க வடிவிலும் வழிபடப்பட்டார் என்று டாக்டர் இஸ்டிபின்சன் கூறியுள்ளார். *பூவும் புகையும் கொண்டு வழிபடுதல் பழைய தமிழரின் வழிபாட்டு முறை. பூ இதயத்தையும் புகை அஃது உருகுவதையும் குறிப் பிடுகின்றன. இராவணன் பொன்# இலிங்கத்தைத் தன்னுடன் கொண்டு சென்று பூவும் புகையும் கொண்டு வழிபட்டான். இராவணனும் வாலி யும் பெரிய சிவபக்தர்கள். வாலி பூசித்த தலம் குரங்காடு துறை என்னும் சிவத்தலம் எனப்படுகிறது. இமயம் முதல் குமரி வரையில் கோயில்களில் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாபாரதம் சிவலிங்க வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றது. அசுவத்தாமாவை அருச்சுனன் வெல்லும் வலிமையைப் பெற்று அவன் சிவனை இலிங்க வடிவில் வழிபட்டதென வியாசர் கூறியிருக்கின்றார். அசுவத்தாமா கடவுளை மனித வடிவில் வழிபட்டார். வேதங்களும் உபநிடதங்களும் இலிங்க வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றன. புதிய கற்காலக் குடியிருப்புகளில் இலிங்கங்கள் காணப் பட்டன. சிவனை இலிங்க வடிவில் வழிபடுதல் கற்காலத்திலிருந்த தென்பது இதனால் தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் சிவன் என்னும் சொல் காணப்படவில்லை என இரமண சாத்திரி கூறியுள் ளார். 36சிவன் என்னும் பெயர் வழக்கிலிருந்தது. அகத்தியர் சிவனிடத்தில் தமிழைக் கற்றார். இதனால் சிவன் தமிழர் கடவுளெனத் தெரிகிறது. இருக்கு வேதம் இலிங்க வணக்கத்தைக் கண்டிக்கிறது. இதனால் சிவ வணக்கம் வேத காலத்துக்கு முன் இருந்ததெனத் தெரிகிறது. தமிழரின் கடவுளர் மலை முகடுகளிலுறைபவர். தமிழர் கடவுள் மலை அரசன். பிற்காலத்தில் சிவன் தென் முகக்கடவுள் (தக்கணாமூர்த்தி) எனப்பட்டார். ஆகமங்கள் தமிழ்த் தொடக்க முடையன. அவை சைவ சித்தாந்த ஞானத்துக்கு ஆதாரமாகவுள்ளன; அவை தமிழரின் முதிர்ந்த அறிவிற் பிறந்தவை. அவை மகேந்திர மலையிலிருந்து சிவனால் வெளியிடப் பட்டவை. மகேந்திரம் திருநெல்வேலிக்கும் திருவிதாங்கூருக்கும் இடை யிலுள்ள பொதிய மலையின் ஒரு சிகரம். திருவாசகம் சிவபெருமானை “மந்திர மாமலை மகேந்திர வெற்பன்” “தென் பாண்டி நாட்டான்” எனக் கூறுகின்றது. சிவன் தலைச் சங்கமிருந்த புலவர்களுள் ஒருவர். இறை வனைக் குறிக்கும் பழைய சொல் கடவுள். உள்ளத்தைக் கடந்தவன் என்பது இதன் பொருள். பொது மக்களிடையே முழுமுதல் வணக்கத் தோடு சிறு தெய்வ வணக்கமும் பாம்பு வணக்கமும் இருந்தன. இன்றும் அறிவு மயமான தத்துவ ஞானங்களோடு மூட நம்பிக்கைகளுமிருந்து வருகின்றன. ஆரியர் இடி, காற்றுப் போன்ற இயற்கைப் பொருள்களையும் இயற்கை நிகழ்ச்சிகளையும் தெய்வங்களெனக் கொண்டு அவற்றுக்குப் பலியிட்டு வழிபட்டார்கள். இவ்வழிபாடு தமிழருக்குத் தெய்வ நிந்தை போலவிருந்தது. ஆரியரின் தெய்வங்கள் தாழ்ந்தனவாகக் கொள்ளப் பட்டன. அவை பொருட்டுச் செய்யப்பட்ட வேள்விகள் தடுக்கப்பட்டன. மிகப் பழைய காலத்தில் தமிழர் தத்துவஞானமுடையவர்களாக இருந்தனர். இருக்கு வேதகால ஆரியர் மறுபிறப்புக் கொள்கையை அறிந்திருக்கவில்லை. அவர்கள் இக் கொள்கையைத் தமிழரிடமிருந்து அறிந்தார்கள். தமிழரிடையே முதன் முதல் கொண்டு வரப்பட்ட அயல்நாட்ட வர் செல்வாக்கு வேதமதமாகும். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படாத சமயங்களும் நாகரிகங்களும் ஒன்றுபடும்போது என்ன நிகழ்கிறது? சொந்த வழிபாடும் தத்துவ ஞானமுடையவர்களாக இருந்த தமிழ ரிடையே ஆரியர் தமது மதத்தையும் தத்துவ ஞானத்தையும் பரப்ப முயன் றார்கள். வேதமதம் வழக்கம்போல் உள்நாட்டு வழக்கங்களையும் சமயக் கொள்கைகளையும் தழுவிக் கொண்டது. தமிழரின் வீரத் தெய்வங்களும் (தெய்வங்களாக்கப்பட்ட வீரர்) பிறதெய்வங்களும் பிராமணரின் தெய்வங்களாக்கப்பட்டன. இரு மதங்களுக்கும் கலப்பு உண்டாயிற்று. தமிழர் சமயத்தின் மீது அயலவர் செல்வாக்கிருந்ததைப் பற்றி நாம் சங்க நூல்களில் சிறிது அறிகின்றோம். உருத்திரன் வேதங்களில் சிவனென்று கூறப்படவில்லை என்றும் அவர் புயற் கடவுளாகக் கூறப்பட்டுள்ளாரென்றும் வேத ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். சிவ என்னும் சொல் வேதத்திற் காணப்படுகிற தென்றும் அது கடவுளைக் குறியாமல் அருள், சாந்தம் என்பவற்றைக் குறிக்கிறதென்றும் டாக்டர் போப் கூறியுள்ளார். வேதத்தில் சிவனென்னும் பெயர் காணப்படவில்லை என டாக்டர் இஸ்டிபின்சனும் காட்டியுள் ளார். உருத்திரனை அக்கினி எனக் காட்ட முடியுமாயினும் அக்கினியை யும் உருத்திரனையும் சிவனெனக் காட்டமுடியாது. உருத்திரன் ஒரு மூர்க்க தெய்வம். அது மற்றைய வேத தெய்வங்களோடு கூறப்பட் டுள்ளது. வேதங்களுக்குப் பிற்பட்ட காலத்தில் அது மும்மூர்த்திகளுள் ஒன்றான சிவனாகக் கொள்ளப்பட்டது. உருத்திரனையும் மூர்த்திகளுள் ஒன்றாகக் கொண்ட தமிழர் சிவனை மும்மூர்த்திகளிலும் மேலான கடவுளாகக் கொண்டனர். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகளைத் தமிழ் மறைகளிலிருந்து காட்டலாம். “மூவர் கோனாய் நின்ற முதல்வன்” “முழுமுதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும் வழி முதலே” என்று திருவாசகம் கூறகின்றது. தமிழரின் சைவமதம் வடநாட்டுச் செல்வாக்குக்குட்பட்டது. அப்பொழுது தமிழர் சைவத்துள் வேதமதத்துக்கு இடமளித்தார்கள். வேதத்தில் காணப்படும் உருத்திரனாகிய புயல் கடவுளைப் பிரித்தெடுத்து அதற்குச் சிவனுக்குரிய தொழில்களைக் கொடுத்துச் சிவனாகக் கொண் டார்கள். ஆரியர் சிவனை உருத்திரன் எனக் கொண்டனர். இவ்வாறு இணைக்கப்பட்ட உருத்திர - சிவன் ஆரியர் தமிழர் கடவுளாக இருந்தார். தமிழர் தெய்வங்கள் ஆரியர் தெய்வங்களுள் இடம் பெற்றதும் சிவன் மும்மூர்த்திகளுள் ஒன்றாக்கப்பட்டார். வேதங்கள் நான்காக்கப்பட்ட போது உருத்திரன் தேவர்களின் தேவனாக இருந்தார். உபநிடத காலத்தில் வேத தெய்வங்களுக்குப் பதில் உருத்திர சிவ வழிபாடு இருந்தது. அவர் மங்களகரமாக இருந்தபோது மகேசுவரன் என்றும், மூர்க்க மாகவும் மாமிசம் புசிப்பவராகவும் இருந்தபோது உருத்திரரெனவும், உலகத்தைக் காப்பவராக இருக்கும் போது மகாதேவரெனவும் அறியப் பட்டார். வழிபடுவோருக்கு வேண்டிய சித்தி அளித்தலின் சிவன் என்னும் பெயருண்டான தென்று மாபாரதம் கூறுகின்றது. எலும்பு மாலை அணிதல் முதல் யோகியாகிய தோற்றமளித்தல் வரையில் சொல்லப்படும் சிவனின் வடிவங்கள் மனிதனின் அறிவு படிப்படியே வளர்ச்சியடைந்த காலங்களில் அவர்கள் கடவுளுக்குக் கொடுத்து வழிபட்ட வடிவங்களைக் குறிக்கின்றன.* வேதங்களுக்கும் ஆகமங்களுக்கு முள்ள வேறுபாடுகள் #இந்துக்களிடையே இன்று நடை முறையிலிருக்கும் சமயமும் தத்துவ ஞானமும் ஏறக்குறைய முழுமையும் ஆகமங்களை ஆதாரமாகக் கொண்டவை. இவற்றுக்கும் வேதங்களுக்கும் தொடர்பிருக்கவில்லை. மகாபாரதத்துக்குப் பின் வைதீகசமயம் சீரணமடையத் தொடங்கி இன்று முற்றாக இறந்து விட்டது. சிரௌத கிரியைகளின் பெரும்பகுதி மறைந்து விட்டது. அக்கினி ஆதானம் போன்ற அற்ப கிரியைகள் மிகச் சிலரால் செய்யப்படுகின்றன. ஸ்மார்த்தக் கிரியைகளும் விரைவில் மறைந்து கொண்டு வருகின்றன. எக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மூன்று தலை முறைகள் தீ ஓம்பத் தவறுகிறார்களோ அக் குடும்பத்தினர் பிராமணத் தன்மையை இழந்து விடுகின்றனர் என்று தரும சாத்திரம் கூறுகின்றது. இவ் விதியின்படி மிகச்சில குடும்பங்களையே பிராமண வகுப்பைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம். இந்தியா, சமயத்தை மிகப் பின்பற்றும் நாடு. சமயம் ஆகம சம்பந்தமாக இருக்கிறதே அன்றி வேத சம்பந்தமாக இருக்க வில்லை. வேதங்களுக்கும் ஆகமங்களுக்குமுள்ள மாறுபாடு பழைய காலத்தில் நன்கு அறியப்பட்டிருந்தது. ஆகமக் கொள்கையும் வைதீகக் கொள்கையும் எதிரானவை. சில நூற்றாண்டுகளின் முன் இவை ஒன்று சேர்க்கப்பட்டன. ஆகவே இக் காலத்தவர் இரண்டு கொள்கைகளுக்கு முள்ள வேறுபாடுகளை உணராமல் இருக்கின்றனர். ஆகமங்கள் வேதங் களிலிருந்து பிறந்தவை என்றும், அவை வேதங்களில் கூறப்பட்டவற்றை விளக்க இக் காலத்துக்கேற்பச் செய்யப் பட்டவை என்றும் கொள்கைகள் நிலவுகின்றன. வேத மந்திரங்கள் தொகுக்கப்பட்டபின், அவை எவரா லும் செய்யப்படாமல் தாமாக உள்ளன என்னும் நம்பிக்கை இருந்தது. ஆகமங்களைக் கடவுள் கூறியதாக அந்நூல்கள் கூறுகின்றன. வேத சங்கிதை களிலுள்ள மந்திரங்கள் வைதீகக் கிரியைகளில் ஓத வேண்டியவை. ஆகமங்கள் சிவவழிபாடு திருமால் வழிபாடுகளில் கைக்கொள்ள வேண்டிய கிரியைகளைப் பற்றியும், யோக சாதனைகளைப் பற்றியும், தத்துவ ஞானங்களைப் பற்றியும் கூறுகின்றன. வேதங்கள் மந்திர பாகம் பிராமணபாகம் அல்லது கன்ம காண்டம் ஞான காண்டம் என இரு பகுதிகளுடையன. இவற்றுக்கு மீமாம்சை வேண்டப்படும். ஆகமங்களுக்கு விளக்க உரைகள் மாத்திரம் வேண்டப்படும். வேதங்கள் சந்தம் என்னும் நடையில் எழுதப்பட்டுள்ளன. பாஷா என்னும் நடையின் காலம் கி.பி.1000. வைதீகக் கிரியைகள் தீ சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு கிரியை யின் போதும் தீ மூட்டி எரிக்கப்படுகிறது. தீ, சுவாலையாக எரியும் போது தேவர்களுக்கு அளிக்கும் உணவு சுவாலையில் இடப்படுகின்றது. ஆகமக் கிரியைகளுக்குத் தீ வேண்டப்படுவதில்லை. உணவு படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட உணவின் சத்தைத் தெய்வம் ஆவியாக நின்று உண்கிறது; படைத்தவர் உணவை எடுத்துச் சுற்றத்தவருக்கும் நண்பருக்கும் கொடுத்து உண்கிறார். வேதக்கிரியைகளில் தேவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தேவனுக்கும் பிரபஞ்சத்தில் ஒவ்வோர் அதிகாரமுண்டு. ஆகமக் கிரியைகளில் ஒரு முழு முதற் கடவுளே உண்டு. அவருக்கு படைப்பு முதலிய எல்லா அதிகாரங்களுமுண்டு. வேதக்கிரியைகளில் புரோகிதர் புரியும் ஒவ்வொரு கிரியைக்கும் வெவ்வேறு மந்திரங்களுண்டு. சோமக் கொடி கொண்டு வரும் வண்டியில் எருதுகளைப் பூட்டுதல், எருதுகளை ஓட்டுவதற்கு கம்பு வெட்டுதல், பலி செலுத்தும் பொருளைக் கையா லெடுத்தல், பால் காய்ச்சுதல், தயிர் கடைதல் இவை போன்ற பெரிய அல்லது சிறிய கிரியைகள் ஒவ்வொன்றுக்கும் பாடல் அல்லது வசன வடிவிலுள்ள மந்திரங்கள் சொல்லப்பட்டன. ஆகமக்கிரியைகளில் வேதமந்திரங்களுக்கு இடமில்லை; அங்கு மிங்கும் சில வேதமந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பொருத்தமானவையல்ல. தூ எனத் தொடங்கும் ஒரு மந்திரம் தூபங் காட்டும்போது சொல்லப்படுகின்றது. இம் மந்திரம் வண்டியின் நுகத்தை உயர்த்துவதைக் குறிக்கின்றது. ஆகமக் கிரியைகளில் போற்றி என முடியும் துதிகள் பாடப்படுகின்றன. வேதக் கிரியைகளின் நோக்கம் தீயில் பலிப் பொருள்களை இடுவது. ஆகமக் கிரியைகள் ஒரு அரசனுக்கு அல்லது ஒரு விருந்தினனுக்குச் செய்வது போன்ற உபசாரங்களைச் செய்கின்றன. வைதீகக் கிரியைகளுக்குக் கடவுளின் திரு உருவம் வேண்டப்படவில்லை. தீ எல்லாக் கடவுளரையும் குறிப்பதாக இருந்தது. ஆகமக் கிரியையில் வழிபடும் தெய்வத்தைக் குறிக்கும் திருவுருவம் இன்றியமையாதது. வேதத்தின் சிகரம் வேதாந்தம். வேதாந்தம் என்பது பிரபஞ்சத் தோற்றத்துக்குக் காரணமாகவுள்ள பிரமத்தை அறிந்து தானே பிரமமாய் பிறப்பை ஒழிப்பது. ஆகம முறை பத்திமார்க்கம். சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் படி முறைகளால் கடவுளை அடைய வேண்டுமென அது கூறுகின் றது. ஆகமங்களில் கூறப்படும் தத்துவஞானம் வேதாந்த ஞானத்துக்குப் புறம் பானது. வேதாந்தம் கடவுளொன்றே உள் பொருள் என்கிறது. ஆகமங்களில் யோக மார்க்கம் ஞானமார்க்கமென்னும் பகுதிகளிருப்பினும் பத்திமார்க்கமே முதன்மை உடையது. வைதீகக் கிரியைகள் மக்களை வருணங்களாகப் பிரிக்கின்றது. கடைசி வருணத்தவருக்கு வேதாந்தக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. வருணங்களிலிருந்து வருணாச்சிரம தருமங்கள் வளர்ந்தன. துறவு பிராமணருக்கு மாத்திரம் உரியதென்றும், சன்னியாசம் அனுட்டிப்பதால் மாத்திரம் முத்தி அடையலாமென்றும் கொள்ளப்பட்டன. ஆகவே வைதீக நெறியிலொழுகும் பிராமணருக்கு மாத்திரம் முத்தி கைகூடும் எனக் கொள்ளப்பட்டது. ஆகமங்கள் இக் கொள்கையைப் பொருட் படுத்தவில்லை; சண்டாளனாயினும் கடவுளுருவங்களை வைத்துப் பூசிக் கலாமென்றன. கண்ணப்பர் திருக்காளத்தியில் கடவுளுக்கு இறைச்சி வைத்து நைவேத்தியம் செய்தார். திருநாளைப்போவார் பறைக் குலத்தி னர். வைணவ அடியாருள் ஒருவர் பாண வகுப்பினர். ஆகமங்கள் நால் வருணக் கொள்கையை அனுமதிக்கவில்லை. சூத்திரர் வேதங்களைக் கேட்டல் கூடாதென வாதராயணர் கூறியிருக்கின்றார். ஆகமங்களை எவரும் பயிலலாம். சிவதீட்சை பெற்ற பறைக் குலத்தினனும் பிராமண னுக்குத் தீட்சை கொடுத்து அவனுக்குக் குருவாகலாம். ஆகமக் கொள்கை யினரிடையே சன்னியாசமும் பரவியது. வைணவ சன்னியாசிகள் ஏகாந்தி களெனவும், சைவசன்னியாசிகள் சிவயோகிகள் எனவும் அறியப்பட் டார்கள். சன்னியாசத்திலும் பத்திமார்க்கம் சிறந்ததெனவும், சன்னி யாசம் பத்திமார்க்கத்துக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கொள்ளப்பட்டன. முற்காலத்தில் வைதீகருக்கும் ஆகமக் கொள்கையினருக்குமிடை யில் வெறுப்பு இருந்து வந்தது. ஆகமக் கொள்கையினர் கடவுள் பெயரால் இரத்தப் பலியிடுவதையும், இறைச்சி உண்பதையும் - சிறப்பாக மாட்டிறைச்சி உண்பதை - விலக்கினார்கள். இரத்தப்பலியையும் வேள்வி களையும் பற்றிய எதிரொலி மாபாரதத்தில் காணப்படுகின்றது. இக் கண்டனங்களின் பலனாக விலங்குகளைப் பலியிடுவதற்குப் பதில் மாவி னால் செய்யப்பட்ட விலங்கினுருவங்கள் பலியிடப்பட்டன. பாகவத மதத்தினரின் சிறந்த நூல் ஆகமக் கொள்கைகளைத் தழுவிய பகவத்கீதை. இந்நூல் வேதாந்த ஞானத்தையும் சாங்கிய ஞானத்தையும் சம்பந்தப் படுத்திக் கூறுகின்றது. இஞ்ஞானங்கள் ஒரு உண்மையை விளக்கும் இரு வழிகளாகவும் ஆகமக் கருத்துடையனவாகவும் காணப்படுகின்றன. பகவத்கீதை வேதத்தின் கரும கண்டத்தைத் தள்ளுகின்றது. அந்நூலுள் ஆகமங்களுக்குரிய பல பரிபாடைச் சொற்கள் காணப்படுகின்றன. வைதீகர் ஆகமக் கொள்கையினரை மிக வெறுப்புடன் நோக்கி னர். வேத மந்திரங்களில் ஆரியர் தாசுக்களை ‘மிரித்திரவாச’ என இகழ்ந் தார்கள். அவ் விகழ்ச்சியின் தொடர்பே வைதீகர் ஆகமிகரிடம் காட்டிய வெறுப்பாகும். யமுனாச்சாரியர் காலம் முதல் வைதீகக் கொள்கைகளும் ஆகமக் கொள்கைகளும் இணைக்கப்பட்டபோதும் இன்றும் அவ் வெறுப்பை நாம் காணலாம். வேதாந்திகள், சைவ வைணவ ஆலயங் களில் பூசை செய்யும் பிராமணரை மற்றைய பிராமணரிலும் தாழ்ந்தவ ராகக் கருதுவர். ஐம்பது ஆண்டுகளின் முன்னும் அத்வைத வேதாந்திகள் கோயில்களுள் நுழையாதிருந்தமையை யாம் அறிவோம். வேதத்தின் சிரசு எனப்படும் வேதாந்தம் ஆகமத்தைக் கண்டிக்கிறது. வாதராயணர் பாசுபதத்தையும் பாஞ்சராத்திரத்தையும் கண்டித்திருக்கிறார். ஆரியரின் வேதங்கள் தோன்றுமுன் தாசுக்களின் மதம் வட நாட்டிலும் தென்னாட்டிலுமிருந்தது. சிரௌத கிரியைகள் பிராமணர், அரசர், புரோகிதருக்கு அதிக தக்கணை கொடுக்கக்கூடிய செல்வம் படைத்த வணிகருக்கு மாத்திரம் உரியனவாயிருந்தன; பொது மக்கள் தமது சொந்தக் கிரியைகளை உடையவர்களாக இருந்தார்கள். அக் கிரியைகள் தாசுக்களின் கிரியைகளாக இருந்தன. அவை இன்று சாந்தால் மக்களிடையே காணப்படுவனபோல் தெய்வத்துக்கு உணவு படைத்தல் ஆடுதல் பாடுதல் வகைகளிலிருந்தன. வால்மீகர் சுக்கிரீபனின் முடி சூட்டைப் பற்றிக் கூறியிருப்பது இதனை விளக்குகின்றது. மகாபாரதத்தின் பின் ஆரியரின் தீ வழிபாடு வீழ்ச்சி அடைந்தது. பிராமணரின் பார்வை நடைமுறையிலிருந்த கிரியைகளில் சென்றது. அவர்கள் பிராமணங்களைப் பத்தி வழியில் திருப்பினார்கள்; திருமூர்த்தி என்னும் கொள்கையைத் தோற்றுவித்தார்கள்; சாங்கியத்தில் கூறப்படும் முக்குணத்தைத் திருமூர்த்திகளோடு தொடர்பு படுத்தினார்கள். சிறிது சிறிதாக 108 வைணவ ஆகமங்களையும் 28 சைவ ஆகமங்களையும் செய்தபின் 77 சக்தி ஆகமங்களையும் செய்தார்கள். பாணினி முனிவர் சிவ வழிபாட்டையும் கிருட்டிண வழிபாட்டையும் குறிப்பிட்டிருக்கின்றார். வேதாந்தமும் ஆகமமும் மிக மெதுவாக இணைந்து கொண்டு வந்தன. புராணங்களில் அவை ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக வருகின்றன; ஒன்றாக இணையவில்லை; சங்கராச்சாரியர் காலத்திலும் அவை இணையாமலே இருந்தன. அவர் வாதராயணரைப் பின்பற்றி பாசுபத பாஞ்சராத்திர மதங்களைப் புறச் சமயங்களெனக் கொள்கின்றார். சங்கரர் செய்த பிரபஞ்ச இருதயம் என்பது ஆகமத்தைத் தழுவிய நூல். அவர் சட்மத தாபனாசாரியர் எனப்பட்டார். அவர் விஷ்ணு, சிவன், சத்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் என்னும் வழிபாடுகளைத் தாம் தொடங்கிய மடங்களில் ஏற்படுத்தினார். விசிட்டாத்துவைதம் என்னும் வைணவ வேதாந்தத்தை தொடங்கிய யமுனாச்சாரியர் வைணவ ஆகமங்களை வேதங்களைப் போலப் பிரமாணமாக்க வேண்டுமெனக் கட்டளையிட்டு இரண்டையும் ஒன்று சேர்த்தார். சமக்கிருத ஆதிக்கம் தெற்கே வைதீக மதம் பரவத் தொடங்கிற்று. வைதீக நூல்கள் சமக் கிருதத்தில் எழுதப்பட்டிருந்தன. தென்னாட்டவர் சமக்கிருதம் பயின்றனர். பாணினி முனிவருக்குப் பின் சிறந்த வடமொழி நூல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் தென்னாட்டினராகவே காணப்படுகின் றனர்.37 அபஸ்தம்பர், போதாயனர், கௌடலியர், காத்தியாயனர், குமாரிலர், வற்சயாயனர், சாயணர், சங்கரர், இராமானுசர், மாதவர், வித்தியாரணியர் முதலிய தென்னாட்டினர் செய்த வடமொழி நூல்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. புராணங்கள் பலவற்றைச் செய்தவர்களும் தென்னாட்டினரே. பல்லவரும் அவருக்குப் பின் வந்த வடநாட்டு அரச பரம்பரை யினரும் சமக்கிருதத்துக்குப் பேராதரவு அளித்தார்கள். பிராமணர் வாழும் இடங்கள் தோறும் கடிகைகள் அல்லது பிரமபுரிகள் என்னும் சமக்கிருதக் கலாசாலைகள் நிறுவினார்கள். அவைகளில் கல்வி பயிலும் மாணவருக்கும் கல்வி பயிற்றும் ஆசிரியருக்கும் உணவு உடை முதலியன வழங்கினர். கலா சாலைகளில் வேதங்கள், வேதாங்கங்கள், தரும சாத்திரங்கள், அர்த்தசாத்திரம் முதலிய கல்விகள் கற்பிக்கப்பட்டன. சமக்கிருதக் கல்வி பிராமணரின் ஏகபோக உரிமையாக இருந்தது. கடிகைகளில் கற்றுத் தேறிய பிராமணர் இராசகுருக்கள் என்னும் பெயருடன் நாடு முழுமையிலும் சென்று வைதீக மதத்தை மக்களுக்குப் போதித்தார்கள். இராச குருக்களே அரச குடும்பத்தினருக்குக் கல்வி கற்பித்தார்கள்.* பிராமணரின் சேவை வேண்டப்பட்ட இடங்களில் அவர்கள் சென்று வாழ்வதற்குத் தூண்டுதலாக நிலமும் வீடும் மானியமாக வழங்கப்பட்டன. இவ்வாறு வைதீகத்துக்கும் சமக்கிருதத்துக்கும் செல் வாக்கு வளர்ந்து கொண்டு சென்றது. சமய சம்பந்தமானவை எல்லாம் சமக்கிருதத்தில் இருத்தல் வேண்டும். சமக்கிருதத்துக்கு அதிகாரிகள் பிராமணர் என்பவை போன்ற கருத்துக்கள் நாள் வீதம் பலமடைந்து கொண்டு வந்தன. ஆகவே, தமிழில் சமயசம்பந்தமான தல புராணங் களோ, வேறு புராணங்களோ எழுதுவோரும் தாம் எழுதுவன ஏதோ வடமொழி நூலிலுள்ளன எனக் கூறும் வழக்கு ஏற்பட்டது. சமக்கிருதத் திலிருந்து தான் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின. அம் மொழியிலில்லாத அறிவு வேறெதிலுமில்லை எனவும் கூறப்பட்டன.38 பல்லவரும் அவருக்குப் பிற்பட்ட அரசரும் தமிழ்க் கல்வியின் பொருட்டு ஆதரவளித்ததைப் பற்றிய கல்வெட்டுச் சாசனம் ஒன்றேனும் காணப் படவில்லை. கல்வி என்பது சமக்கிருதக் கல்வி ஒன்றுமே எனக் கருதப் பட்டது. சமக்கிருதக் கலா சாலைகளில் ஆகமங்கள் பயிலப்பட்டதாகக் கூறப்படவில்லை. வைதீகர் ஆகமங்களையும், வேதங்களையும் வேதத் தோடு சம்பந்தப்பட்ட நூல்களையும் போல் சிறந்தனவாக மதிக்க வில்லை. கோயில் பூசை செய்யும் பிராமணர் ஏனைய பிராமணரிலும் தாழ்ந்தவர்களாக நோக்கப்பட்டனர்.* சைவ மடங்கள் 40தமிழ் நாட்டில் வைதிகம் சம்பந்தம் பெறாத சைவ மடங்க ளிருந்தன. அவற்றில் குரவரிடத்தில் மhணhக்கர் பாடங்கேட்டல் சமய சாதனைகள் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில்கள் பிராமணரின் கைக்கு மாறியபோது கோயில்களுக்குப் பக்கத்தில் மடங்க ளமைக்கப்பட்டன. கோயிலை மேற்பார்க்கும் பிராமணர் மடத்திலிருந்து கோயில் கிரியைகள் ஒழுங்காக நடைபெறுவதைக் கவனித்து வந்தார். இவ்வாறிருந்து வரும்போது பிராமணரல்லாதவர் துறவிகளாவதற்கும் (சன்னியாசம் கொள்வதற்கும்) அவர்கள் மடங்களுக்குத் தலைவராவ தற்கும் தடை எழுந்தது. ஆகவே, பிராமணரல்லாத துறவிகள் குகைகளை நாடிச் சென்றனர். பிராமணரல்லாதாரின் குகை மடங்கள் அதிகப்பட்டு அவற்றின் செல்வாக்கும் அதிகப்பட்ட போது அம்மடங்களை அழித்துத் தரைமட்டப்படுத்தும்படி பிராமணர் தம்மை ஆதரிப்போரைத் தூண்டினர்.41 ‘குகை இடி கலகம்’ என்னும் பெயரில் பெரிய கலகங்கள் நேர்ந்தன. குகை இடி கலகங்களைப்பற்றிச் சாசனங்கள் கூறுகின்றன. பிராமணரல்லாதாரின் மடங்கள் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் பிராமண மதத்தவர் பிராமண ரல்லாதாரின் மடமொன்றுக்குக் கொடுத்த சொத்து பிடுங்கப்பட்டதைப் பற்றி ஒரு சாசனங் கூறுகின்றது. விசய நகர அரசர் காலத்தில் பிராமண ரல்லாதார் துறவு பூணுவதற்கு எதிரான வழக்கொன்று நேர்ந்தது, அப்பொழுது விசய நகர அரசரின் கீழ் அதிகாரியாக இருந்த சின்ன செவ்வப்ப நாயக்கர் அவ் வழக்குக்குத் தீர்ப்பளிக்கும் படி சிவாக்கிர யோகிகளைக் கேட்டுக்கொண்டார். அவர் தமது தீர்ப்பை ‘சைவசமய சன்னியாச பத்ததி’ என்னும் நூல் வடிவில் கூறினார். அது பிராமண ரல்லாதாருக்கு அனு கூலமானது. கோயில்கள் பிராமணர் கைப்பட்டபின் இன்னொரு கொள்கை யும் தலை எடுத்தது. சமய அறிவை வேதங்களிலிருந்து நேரே அறிவதல்லது உள் நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைக் கற்று அவை மூலம் அறிவதால் பயனில்லை என்னும் கொள்கை எழுந்தது. வடமொழிக் கல்வி பிராமணருக்கு மாத்திரம் ஏக போக உரிமையாக இருந்தது. 42இக் கொள்கையைத் தமிழறிஞர் எதிர்த்தனர். வைணவரில் தென்கலையினர் இதற்குத் தலைசாய்க்கவில்லை. அக் காலத்தில் தமிழ் மறுமலர்ச்சி பெற்றது. உரையாசிரியர்கள் தோன்றிப் பழந்தமிழ் நூல்களுக்கு உரைகள் செய்தனர். சந்தான குரவர்கள் சமய நூல்களைத் தமிழில் செய்தனர். சித்தர் நூல்களும் இக் காலத்தை அடுத்து எழுந்தன. சித்தர் நூல்கள் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க எழுந்தவை. சைவ மடங்கள் பல தோன்றின. சைவ மடங்களின் தலைவர் பிராமணரல்லாதாராகவே இருந்து வருவர். பிராமணர் கோயில்களுக்குத் தலைவரான போது கோயில் பெயர்கள் வடமொழிப்படுத்தப்பட்டன. திருமறைக்காடு வேதாரணிய மெனவும், முதுகுன்று விருத்தாசலம் எனவும், குடமூக்கு கும்பகோணமென வும், வெண்காடு சுவேதவன மெனவும், திருப்புகலூர் சரணயபுரம் எனவும், திருவையாறு பஞ்சநதம் எனவும் பட்டன. கோயில்கள் தொடர்பாகச் சாசனங்களில் காணப்படும் சில பெயர்கள்; தளிச்சேரி - கோயிலைச் சூழ்ந்த குடியிருப்பு; கற்றளி-கற் கோயில்; நட்டுவன், அண்ணாவி நடனங் கற்றுக் கொடுப்போர்; ஆடுவார்; கனபாடி; முகவீணைக்காரர்; உடுக்கை வாசிக்கிறவர்; வீணை வாசிப் போர்; ஆரியம் பாடுவார்; தமிழ் பாடுவார்; கொட்டி மத்தளக் காரர்; முத்திரை சங்கு ஊதுவோர்; பக்க வாத்தியகாரர்; கட்டியங்கூறு வோர்; மேளம் வாசிப்பவர்; காந்தருவர்; விளக்குப்போடுகிறவர்; நீர் தெளிப்பவர்; எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள்; வண்ணான்; நாவிதன்; கொல்லன்; தையான்; பாடுகிறவன்; சோதிடன்; கன்னான்; ஓச்சன்; தட்டான்; பாணன்; கணக்கன். வைதீகத்துக்கு எதிர்ப்பு சங்க காலத்திறுதி முதல் சில நூற்றாண்டுகள் பௌத்த சமண மதங்கள் தெற்கில் செல்வாக்குப் பெற்றிருந்தன. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வச்சிர நந்தி என்னும் சமண முனிவரின் தலைமையில் மதுரையில் ஓர் தமிழ்ச் சங்கம் இருந்தது. இச் சங்கத்திலேயே பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல்கள் பல செய்யப்பட்டன வென்று கருதப்படுகின்றன. திருஞான சம்பந்தர் காலத்துக் கூன் பாண்டியனும், அப்பர் சுவாமிகள் காலத்தில் பல்லவமாறவர்மனும் சமண மதத்தைத் தழுவியிருந்தார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் பௌத்தரோடு வாதுசெய்து வென்றதாகப் புராணம் கூறுகின்றது. பௌத்த சமண மதங்கள் செல்வாக்குப் பெற் றிருந்த காலத்து சைவரும் வைணவ சமயத்தவரும் ஒருங்கு சேர்ந்து பௌத்த சமண மதங்களை எதிர்த்தார்கள். வைதீக சமயத்தினரும் இவர் களுடன் சேர்ந்தனர். அப்பொழுது வைதீகர் ஆகமக் கொள்கைகள் பல வற்றைத் தழுவினர்; தமது வேதங்கள் சைவ வைணவ சமயங்களும் முதல் நூல்களென்றனர். இக்கொள்கை பெயரளவிலிருந்ததன்றிச் செயலளவி லிருக்கவில்லை. வேதங்களும் ஆகமங்களும் மாறுபட்டனவென்னும் கொள்கை இருந்து வந்தது. வேதங்களும் ஆகமங்களும் மாறுபட்டவை யல்ல எனப் பிற்காலத்தவர் கூறிவந்தனர். பிற்காலத்தவர்கள் வேதம் எனக் கூறியவற்றை நோக்கினால் அவை வேதங்களைக் குறியாது பிற்கால உப நிடதங்களைக் குறிப்பனவாகத் தெரிகின்றன. இதனை சிவஞான முனிவரின் சிவஞான போதமா பாடியத்தில் ஆங்காங்கு கூறப்படுவன வற்றைக் கொண்டு நன்கு உய்த்தறியலாம். கோயில்களில் வைதீகர் தலைமை எய்துதலையும் அங்கு ஆரியம் பாடப்படுவதையும் அறிஞர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை” “ஆரியந் தமிழோ டிசையானவன்” எனத் திருநாவுக்கரசு நாயனார் தமது திருப்பாடல்களில் கூறி இருசாராரையும் சந்து செய்தார். “ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பிற்று” என நக்கீரர் தாம் பாடிய கோபப் பிரசாத்தில் வடமொழிப் பாடல்களைப் பாடுதலை வெறுத்துக் கூறுகின்றார். தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (பொருள் 490) ஆரிய நன்று தமிழ் தீதென வுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால் செந்தமிழே தீர்க்க சுவாகா. என்னும் வெண்பா ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அக் காலத்தில் ஆரியம் தமிழ் என்பவற்றுக்கு இடையிலிருந்த மாறுபாடு களை இவ் வெண்பா உணர்த்துகின்றது. வைதீகமும் சமக்கிருதமும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதனவாகவுள்ளன. வடமொழிக்குப் பாதகமாகக் கூறுவதென்பது வைதீகத்துக்கு எதிராகக் கூறப்படுவது என்னும் கொள்கை இருந்து வந்தது. தமிழறிஞர் தமிழ்மொழி வடமொழிக்கு எவ்வகையிலும் தாழ்ந்த தன்று, சிலவகைகளில் அதனிலும் உயர்ந்தது எனக் கூறி வந்தனர். தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலனை அழைத்தது மென்பு பெண்ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலே மறுபுலச் சொற்களோ காற்றீர் விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கன மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலைய மாமுனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராம்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. (பரஞ். திருவி) வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கினையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார் இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே ஒழீயினார் என்றால் இவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ கடுக்கவின்பெறு கண்டனுந் தென்திசை நோக்கி அடுக்கவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்கவாரமென் காறிரு முகத்திடை வீசி மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ (காஞ்சிப் புராணம்) மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடை யென்றுரு வேற்றிக் கண்மூடிக் கதறுவரோ (மனோன்மணீயம்) மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும் வென்றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த் தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் (சீகாளத்திப் புராணம்) பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே. (மீ. பிள்ளைத் தமிழ்) இவ்வாறு கூறிய செய்யுள்களுக்கு விடைநிறுப்பது போலச் சாமி நாத தேசிகர் அவர்கள் தமது இலக்கணக் கொத்தில் “ஒன்றேயாயினும் தனித் தமிழ் உண்டோ” எனவும் “ஐந்தெழுத்தாலொரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே” எனவும் கூறினர். பிரயோக விவேகமுடையார் வடமொழிக்குந் தமிழுக்கும் இலக்கண மொன்றென்றனர். சிவஞான முனிவர் இருமொழிகளின் இலக்கணங் களும் வேறு என்றனர். சமீப காலத்தில் சிலர் தொல்காப்பியச் சூத்திரங் களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதெனக் காட்டினர். வடமொழி இலக்கணம் தொடக்கத்தில் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றிச் செய்யப் பட்டதனால் இரு மொழி இலக்கணங்களுக்கும் சில ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றனவென்பதே உண்மை. வடமொழிக்கு இலக்கணம் வகுக்கத் துணை புரிந்தவர்கள் தமிழ்மக்களே என்பது அறிஞர் கருத்தாகும். “இருமொழியும் நிகர் என்று கருதிய இப் பெரியார் காலத்துக்குப் பின் வடமொழி தெய்வ மொழி என்னும் கருத்து மெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் நுழைவதாயிற்று. வடமொழியில் அமைந்த இதிகாசங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. வான்மீகர் வடமொழியில் எழுதிய ஆதி காவியத்தைத் தமிழில் அமைக்கப் போந்த கல்வியிற் பெரியர் கம்பர் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) “தேவ பாடையின் இக்கதை செய்தவர்” என முதனூல் செய்த புலவரைப் புகழ்ந்துரைத்தார்; வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் - தீங்கவி செவிகளாரத் தேவரும் விரும்பச் செய்தான்” என்று வடமொழிப் புலவரை வாயார வாழ்த்தினார். வட மொழி வானவர் மொழி ஆதலால் விழுமியமொழியென்றும் தமிழ் மொழியாதலால் தாழ்ந்த மொழியென்றும் கருதும் வழக்கம் மெல்ல மெல்ல எழுந்தது. வடமொழியிலமைந்த புராண நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கப்புகுந்தார் சிலர்; முதல் நூல்களாகத் தமிழிலெழுந்த நூல்களுக்கும் வடமொழியில் நூல் உண்டென்று கூற முற்பட்டார் சிலர்; நன்னூல் செய்த பவணந்தியாரும், சின்னூல் செய்த குணவீரனாரும் வீரசோழியமியற்றிய புத்தமித்தனாரும் வடமொழி இலக்கணப் போக்கைத் தழுவி எழுதுவராயினர். தமிழ்நாட்டிலமைந்த இடப்பெயர் ஊர்ப் பெயர்களையும் வடமொழியில் பெயர்த்து வழங்கத்தலைப் பட்டார் பலர். இதைக் குறித்துத் தமிழ் நாட்டுச் சாசனங்களை ஆராய்ந்து பர்ணல் என்பார் கூறும் மொழி ஈண்டு கருதத் தக்கனவாம். சில தமிழ்ப் பெயர்கள் தவறாக வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன என்றும், மற்றும் சில தமிழ்ப் பெயர்கள் அரைகுறையாக வட மொழியில் பெயர்க் கப்பட்டுள்ளன என்றும் இன்னும் சில தமிழ்ப் பெயர்கள் இயற்பொரு ளிழந்து வடநூல் கதைகளை ஏற்றுத் திரித்து வழங்குகின்றனவென்றும் டாக்டர் பர்ணல் கூறுகின்றார். பழந்தமிழ் நாட்டில் குடமூக்கு என்று வழங்கிய ஊர் கும்பகோணமாயிற்று. மறைக்காடு வேதாரணியமாயிற்று. வெண்காடு சுவேதாரண்யமாயிற்று. ஐயாறு பஞ்சநதமாகவும், அண்ணா மலை அருணாசலமாகவும் அமைந்தன ... இவ்வாறான வடமொழி உயர்ந்ததென்றும் தமிழ் தாழ்ந்ததென்றும் கற்றாரும் கல்லாதாரும் கருதினமையால் தமிழென்னும் சொல்லே வடமொழிச் சிதைவென்னும் கொள்கை வடநாட்டில் பரவுவதாயிற்று. திராவிடம் என்னும் சொல்லே திராவிடம், திராமிளம், திரமிளம், தமிளம், தமிழ் என்று ஆயிற்றென்று இலக்கண நூலோர் எடுத்துரைப்பாராயினர். இன்றும் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுந்ததென்று பிரயோக விவேகம் கூறுவதாயிற்று. தமிழ் தனிமொழி யன்றென்றும் இலக்கணக் கொத்துரைத்த தேசிகர் எழுதுவராயினர். “ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே வடமொழி தமிழ்மொழி யெனுமிருமொழியினும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக (இலக்கணக் கொத்து) என்று தமிழ் மொழியைத் தனி மொழியென்று கருதும் கொள்கையைத் தேசிகர் இழித்துரைத்தார்.”* இன்றைய இந்து மதம் வேதமதம் மறைந்து போயிற்று. இன்று யாகங்கள் நடத்தப்படுவ தில்லை. ஆகம சம்பந்தமான சிவ வழிபாடு திருமால் வழிபாடுகளோடு வைதீகக் கொள்கைகள் கலந்த மதமே இன்றைய இந்து சமயமாக இருந்து வருகின்றது.45 வடமொழியைச் சமய மொழியாகக் கொண்டவர்களும் வேதங்க ளை ஆதாரமாகக் கொள்பவருமாகிய வைதீகரே சைவ வைணவ கோயில் களுக்குப் பூசகராகவும், புரோகிதர்களாகவும் இடம் பெற்றமையால் தென்னாட்டில் பல மயக்கங்கள் இருந்து வருகின்றன. புரோகித வகுப்பினர் சமய வரலாறுகள், இந்திய வரலாறுகள் எழுதும்போது வைதீகரின் பெருமைகளை அதிகப்படுத்தியும் தமிழரின் பெருமைகளை அற்பப்படுத்தியும் கூறுவர்.46 ஆகவே சமயசம்பந்தமானவும், மொழி சம்பந்தமானவும் உண்மை வரலாறுகளை அறிவதற்கு மேல்நாட்டவர் அல்லது புரோகித வகுப்பினரல்லாதார் எழுதிய நூல்களையே நாம் நாட வேண்டியிருக்கிறது. உண்மை வரலாறுகளை வெளியிடுதல் ஒரு வகுப்பினருக்கு எதிராக நூலெழுதுதல் என்பது போலவும் தோன்று கிறது. கோயில்களிலும் அரசியல் துறைகளிலும் அதிகாரத்திலுமிருக்கும் ஒருவகுப்பினரின் வெறுப்பை ஈட்டிக் கொள்ள விரும்பாத சிலரும் உண்மை வரலாறுகளை வெளியிடப் பின்னிற்பர். மேல்நாட்டவரின் ஆராய்ச்சிகளை நம்புதல் கூடாது, ஆரியர் வெளியிலிருந்து வரவில்லை, வடமொழியும் தமிழும் இந்திய நாட்டில் என்றுமுள்ளன எனவும் சிலர் கூறிவருகின்றனர். இக் கூற்றுக்கள் ஆராய்ச்சியின் முன் வலிபெற்று நிற்க# முடியவில்லை. NOTES (Quotations from eminent authors in support of the statements found in this book) 1. The original home of the Indo-Germanic language was the long stretch of grass-land extending from the north of the Carpathians and the Lower Danube to the foot-hills below Altai and Tianshan in Central Asia skirting the shores of the Black Sea and Caspian, and extending south to Cacasus and the steep north edge of Persia. This was the area of characterization of a race of tall, fair-skinned, blue-eyed, narrow-headed giants to whom the name Proto-Nodics has been given. The grass-land made them develop a pastoral life, modified by some hunting on the one hand and some very primitive agriculture on the other. Their one noteable contribution to the growth of world civilization was that the domesticated horse. About 2,500 B.C., a great wave of descciation seems to have passed over Asia which converted steppes of the north as well as the Semites of Arabian grass-land in search of pastures new. This great displacement of tribes included the “Ganaanite” invasion of Syria referred to in the Genesis as the Semite migration into Mesapotamia leading to the establishment of a powerful Babylonian monarchy. From the northern steppes, the Nordics went out in many branches. - The age of the mantras pp. 103, 105. - P.T.S. Iyengar. 2. Pargiter adduces considerable evidence to show that the true Brahman families were of pre-Rigvedic origin, and the Aryan kings of Madhya Desa were their own priests in the earliest times had no Brahmans. - Castes in India its nature, function and origins. – J.H.Hutton. 3. The language of the Rig-Veda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit but its phonetics is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and Kol. Among the words of probable Dravidian origin in the Rig-Veda the following may be noted. anu – particle; arani – rubbing wood for fire; kapi – monkey; karmara – smith; kala – time; kunda – hole; gana – band; nana – several; nila – blue; pushpa – flower; puja – worship; pala – fruit; majura – peafowl; ratri – night; rupa – form. - The origin and development of Bengali p.42. - S.K. Chaterji. 4. … the aboriginal Dravidian culture which certainly assimilated by them, and may thus be considered as their inheritance lending itself to more convenient consideration as part and parcel of our Vedic heritage rather than as distinct from it. - Hindu view in art. p. 9 – Maluk Raj Anand (Asia Publishing house, 1957). 5. The whole of the Veda, Sruti (heard or revealed was compiled during the long period from about 1,500 B.C. to 500 B.C.) and includes the following extensive literature: (1) The four Vedas proper Rig, Yajur, Sama, Atharva which are hymns, prayers, and sacred formulas offered by priests to the gods on behalf of rich lay-sacrificers, charms for witchcraft, medicine and other homely practices, manipulated by magicians and medicine men in main for the plainer people. - Ibid p. 10. 5. The authors of the hymns, called Rishis, composed them for the purpose of invoking the help of gods in events that immediately interested them to secure success in impending battles (R.V. XIX – 4), to avert drought (R.V.68), to help to raise crops (A.V.VI. 142) to enable them to live a “hundred autums” till their sons became fathers in their turn (R.V.I. 89. 9), to satisfy all possible wants (A.V.XV.9), and to escape all kinds of dangers and difficulties (A.V.XIX.7) - The age of the mantras p.4. - P.T.S. Iyengar. 6. The shock of intercourse with the alien culture of the Dravidians awaked in the conquerors the desire to preserve their literary inheritance, and although during the time it took to give it a permanent shape it became strongly mixed with aboriginal Dravidian belief, this was the way that the Vedas, the oldest books of the Hindus came to be composed. - Hindu view of art p. 10. – Maluk Raj Anand. 7. Of the writings called Anukramani in which the metre, the deity and author of each song are given in their proper order. - The history of Indian literature p. 61. - A Weber. 8. Of the gods invoked in the Vedas the following are chief. Dyaus or Dyaus Pitar, sky or father of sky; Surya and Savitir, Vishnu, the sun-god; ushas the dawn; Agni the fire; Pritivi the earth; Soma, the intoxicating vegetable juice used in ritual; Indra the god of lightning and thunder; Varuna the universal embracer and encompasser; Adityas, boundless ones; Asvins, horse men; Vayu, the wind; Rudra, the fierce god of distruction and waste etc. This list was considerably enlarged as the Aryans continued to assimilate the gods and goddnesses of the non-Aryan inhabitants of India. - Hindu view in art. – p.11. 9. Civa is a god unknown to the Vedas; his name is a word of not frequent occurrence in the hymns, indeed but means simply prosperous, not even in the Atharvan it is the epithet of a particular divinity or distinguished by the usage, from any other adjectives. The precise relation between Civa and Rudra is not yet satisfactorily traced out. - Oriental linguistic studies. P.30. - William Dwlight Whitney. 10. Practically no traces of it (rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero like the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the proto-man, and returns no more to earth. - India and the Western World. - H.G. Rawlinson. 10. The doctrine of transmigration is entirely absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryans borrowed the idea from the aboriginals. - Cambridge History of India, p. 108. - Prof. Macdonald. 11. The simple ritual of the Rig-Veda had now under the influence of Dravidian methods of worship, became an elaborate system of mechanical rites and ceremonies in Brahmanas. - Hindu view in art. p. 18. … although the religion of the Rig-Veda hymns (composed before the Hindus crossed the Satlej) owed nothing to Indian aboriginal influence, the same is not true of later Samhitas and Brahmanas. - The riddles of Mohenjo-daro. - G.R. Hunter – New Review Vol.3, p. 314. 12. During the Brahmana period we notice the beginning of the regular worship of Siva … in this period Sivan or Rudra gradually become to be one of the most important figures of the reformed Indo-Aryan pantheon. - Pre-historic ancient and Hindu India, p.43 – R.D. Banerji. The worship of Siva or Mahadeva towards the close of this period … the deity being identified with Rudra of the Vedic poets, the howling god of tempests and the father of Maruts. - The philosophy of the Upanishads, p. 18 – A. Edward Gough. 13. The transference of the same Soma to the moon which appears in the later history of Indian religion, is hitherto-obscure; the Vedas hardly know it neither do they seem to prepare the way for it - Oriental and linguistic studies, p.10 – William Dwlight Whitney. 14. The cult of the Linga is older than the Calcolithic period of Mohenjo – Daro will be evident if we only take back our research into the domain of pre-historic archaeology. It seems probable that these pre-Aryan phallic worshippers are identical with the peoples who in later times dwelt in the Indus valley, and prejudice and indignation against whom find most eloquent expressions in the following two passages of the Rig-Veda - Pre-aryan elements in Indian Culture – K. Sur. - Indian Historical Journal 1934. 15. The vowel system of Vedic language is much simpler and its consonant system more developed than those of the parent Indo-Germanic or of its European branches. A large portion of the vocabulary of the Vedic tongue is not found in the allied languages and must have been picked up in India; and even in matters of syntax and sentence-structure it underwent special developments in Indian soil. - The age of the Mantras – p. 4. The Dravidian dialects effected profoundly the sounds, the structure, the idiom and the vocabulary of the former and the differences already alluded to between Vedic language and its hypothetic parent, called or its European decendants, Greek, Latin, etc., are due to the influence of the Dravidian dialects of India. In the course of its growth in India, on account of the constant influence of Dravidian tongues, this language lost the subjunctive mood, many infinitive forms and several noun declensions, forgot its richly varied system of real verb tenses and adopted turns of expressions peculiar to the Dravidian idiom. - Ibid, p.6. The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (i.e., borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from the Dravidian. It is not surprising, therefore, that this Indo-Germanic language was profoundly affected when it spread among the people of ancient India, that it shed some of its vowels, Indo-Germanic a,e,o all being leveled down to one uniform a, that it developed new consonants, e.g., the sibilants, s’, s, sh, hopelessly confused in the pronunciation of Sanskrit in various parts of India and that its grammar was slowly but surely modified. - Ibid p. 15. 16. All other Vedic gods (1) Savita, Pusha, Vayu, Surya, Ushas, the Maruts, Soma and Yama (2) Varuna, Rudra, Tvashta and Aditi (3) Brahaspathi, Prajapati, Skamba and Bramhanaspati are all purely Indian deities. Of these, the first group seems to have been evolved from germs of ideas brought along the current of the Indo-Germanic dialect that evolved into the language of the Mantras. The etymology of most of these names is plain, but deities corresponding to them in name and function are not found outside India. The gods of the second group seem to have been taken over from the Dravidian-speaking tribes of India. It has been already pointed out that the Dravidian languages profoundly affected the Vedic language, similarly the gods worshipped by the tribes that gradually accepted this language must have been “Aryanized” and adopted the Vedic pantheon. Those Vedic gods the etymology of whose names is not patent and who have no analogues in other Indo – Germanic dialects must have been Indian gods to whom such treatment was accorded. - Ibid pp. 123, 4. 17. Brahmanas contain discussions on both work and knowledge. Those sections of the Brahmanas which contain symbolic or spiritual discussions on both ‘work and knowledge are called Aranyakas, for these were read in the aranya (woods, forest) because owing to the obtruse character, they were not imparted everywhere to everybody indiscriminately’ and because great seclusion was needed for their comprehension. Many of the Upanishads are included among the Aranyakas; only one Upanishad is included in mantras or Samhita Viz., in Isopanishad which forms the last (fortieth) chapter of the white Yajur Veda. – What are the Upanishads? – Indo Asian Culture Vol.1 p. 53 (1952). 18. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of the Kshatriyas. Again and again in the Upanishads we meet the situation that the Brahman begs the Kshatrya for instruction which the latter after several representations of the unseemliness of such a proceeding imparts to him. – The system of Vedanta. Dr. Paul Deussen. 18. Another meaning of the word Upanishad is mystery because its teachings or contents are not revealed or imparted to anybody or everybody at any place or every place without discrimination. That is how the two words Upanishad and mystery came to be synonimus. How great a mystery the Upanishads were supposed to be gathered from this that they were not taught to any one except the eldest son or the most favourite pupil even for the gift of world kingdom – What are the Upanishads – Indo-Asian Culture Vol.1 p.53. 18. The oral methods of communication was held all the more sacred as we find in the ancient priesthood, whose ritual and gnosis depend on the living memory for their truth and sanctity. It was the mode of communication from mouth to ear combined in all the mysteries including masonry – Nature Genesis Vol.2 p. 10 – Gerald Massay. 18. On the grounds indicated above, we may infer the Upanishadic speculations originated wholly outside the pale of Vedic Brahmanism and had their source in the religio – philosophical thought currents already prevalent in India since Pre-aryan days. That a rich culture which had been flourishing in India for at least two millena before the advent of the Vedic Aryans, should produce philosophical thinking and religious ideas of refined types is no difficult to make, for, it is but normal to expect this evolution – the pre-Vedic elements constituted the texture while the Vedic did probably no more than to imprint the stamp Upanishads. It would be historically more correct, therefore, to regard Upanishadic as much as Jaina and Buddhist thought as having their roots more in non-Vedic than in Vedic ideas. We also find the basic ideas of the Samkhya and Yoga permiate Jaina, Buddhist as well as the Upanishadic outlook and it is probable that the primitive Samkhya consisted the philosophical back ground par excellence of pre-Vedic Indian thought and Yoga consisted an essential element in the cultivation of matters concerning the spirit. Both Samkhya and Yoga had developed probably already in pre-Aryan India …, the origin of Upanishads was not at all Vedic. We must not forget the priestly classes and philosophical thinkers with their religious practices and ideas who existed in India from before the coming of the Indian Aryans. By Buddha’s time they have probably been absorbed in the part of the Vedic society and came to be called Brahmans – Back ground of Buddhist Philosophy – Prof. Dr. B.B. Bhattacharia M.A.D. Ph.D. – Indo Asian Culture No.1. Upanishads (Skt. upa – unto, ni – down, sad – to sit and so literally a sitting down by, sitting one self at the feet of another, confidential communication, esoteric doctrine) With the Aranyakas the oldest speculative treatise of the Hindus; they lie at the root of the philosophical side of Hinduism equally with the mantras and Brahmanas, but they are practically the only Veda of all educated Hindus at the present day. Properly each Brahmana had its Aranyakas, or forest treatise, intended for the Vanaprasthas, or dwellers in the forest (that is Brahman who having passed the two earlier stages of the bramacharin, or student and grihastha or householder retire into the forest, to devote themselves to self mortification and religious meditations); but the mythical doctrines of the latter were so mingled with extraneous matter that the chapters called Upanishads appear to have been added to investigate more exclusively and definitely such problems as the origin of the universe, the nature of deity, the nature of soul and the connection of spirit and matter. Some of the most important are the Aitareya Upanishad and Kaushitakibrahmana Upanishad of Rigveda; the Taittriya belonging the Taittriya samhita of the Yajur Veda; the Brihadaranyaka attached to the Shatapathabrahmana of Vajasaneyisanhitha of that Veda and the Isha or Ishavasya, forming the 40th Chapter of the latter sanhita; the Chandogya and Kena belonging to the Sama Veda, and Prasana, Mundaka, Mandukya and Katha belong to the atharvaveda. Following the stratificatory principle in general the only guide in determining the age of Sanskrit works, the ancient Upanishads – that of those which occupy a place in the Sankitas, Brahmanas and Aranyakas – are believed to be older than 600 B.C. or anterior to Buddhism though the germs of the doctrines contained in them are to be in some of the latest hymns. The others range through long period, and very numerous. The ancient vedic-literature first became known outside India through these Upanishads. - The century encyclopaedia of names. 18. Dravidian Pandits composed some Upanishads and Brahmanas and why not Vedas Upanishads and Darsanas; six schools each with its text book and sutra sundry, Brahmanas and philosophies, theistical and atheistical, all of which preceded Buddah, and were founded by Kapila a quasi divine incarnation of Vishnu, but in reality a stolid Dravidian Pandit – Short Studies in the science of comparative Religions p. 250 – Forlong. 18. In a word we may say that as we pass from the Vedas to Upani-shads, we pass from prayer to philosophy from hymnology to reflections, from polytheism to monotheistic mysticism – Constructive Survey of Upanishadic Philosophy p. 3 – R.D. Ranade. 18. In the Upanishads however we find no only kings but also women and even people of dubious descent taking part in the literary philosophical aspirations of the highest knowledge – The History of Indian literature p. 220 – Winternitz. Upanishadic age to have been placed somewhere between 1,200 B.C. and 600 B.C. Ibid – p. 13. 19. Two of them (Darsanas) are wholly based on the Vedic texts and are called the two Mimamsas; they are Purva and Uttara otherwise Karma mimamsa and Brahma mimamsa, investigation of Dharma and of Brahma. The other four are based on reasoning and while paying homage to the supreme authority of the Veda do not derive their substance from Vedic texts viz., Sankhya, Yoga, Nyaya and Vaiseshika the disciplines of enumeration effort reasoning and definition respectively – Outlines of Indian Philosophy. P. 2 – P.T.S. Iyengar. 20. There is one passage only in which decided by hostile feeling towards the Brahmanic priest-hood may be discovered in Kapila’s sutras and it seems full of meaning. Among the different kinds of bondage to which men are liable but ought not to be, is one called Dakshina banda, bondage rising having to offer gifts to priests which seems to be condemned as superstitious and mischievous – Indian Philosophy – Max-Muller 21. Among the innumerable Purushas that are in the world there is one called Isvara. The mention of Isvara in the Yoga sutras has made many people describe the Yoga as a school of theism; but this is extremely inaccurate; for the Isvara mentioned in the Yoga is in no sense God. He is neither the ruler of nature nor the moral governor of the Universe. Out of the multitude of Purushas in the Universe, he is a special Purusha who was never touched by Klesa, the defects of ignorance, egoism, desire, aversion, and clinging of life, and by the mental deposits left by Karma and their fruition. In Him is fully developed the seed of omniscience which every Purusha has. He is the ancient teacher whose life is unbroken by time as ours is. The Isvara of Yoga Darsana, therefore, is neither the reality behind nature, nor any universal being which human selves find their unity. Except omniscience and mastery over time, he has no other divine attribute, His only function being that of an ancient teacher. Hence Yoga is in its tenets as atheistic as Sankya … For the Isvara here referred to is not the lord of the world, but the lord of his devotee, and He is his lord only in the sense that he figures Him in the heart as the mystic syllable ‘Om’ and this makes it easy for him to reach his own inner consciousness – Outlines of Indian Philosophy pp. 115, 116. 22. According to Haribadra’s Shaddarsanasamuchchaya Gautama and Kanada founders respectively of Nyaya and Vaiseshika systems, were of Saiva persuation. Ganaratna, in his commentary of Haribadra’s work says that the Naiyayikas were called Saivas and the Vaiseshikas, Pasupathas among the successors of Asoka we come across one Galanka who was a Saiva – The History and Culture of Indian People Vol.2 p. 456. 23. The Vedanta was a great reformation which began at least four centuries B.C. when Buddhism had obtained a firm hold in upper India … It is clearly a Dravidian reformation of the crude Aryan elemental teaching, a building up of a new - Hindusm purified by the ancient Turano philosophic schools of Kapila and embracing the piety and ethics of the followers of the great Jaina saint Mahavira and his probable disciple Sakya muni – Short Studies in the Science of Comparative Religions. P 265. Dravidians as we many conveniently designate the great rulers of India then, and from 2,000 to 3,000 B.C. Long expected evidence is now appearing that they – Dravid pandits composed some Upanishads and Brahmanas and why not Vedas, engrafting there is the hymns prayers and faith of illiterate Aryans? All these scriptures are inferior and easy compositions to philosophical works which issued from the schools of Kapila before Buddah’s day there was or any Aryan settlement in the middle Ganges. Nor would Vedic compositions prove difficult to learned Dravidian Brahmans e.g. Apastamba to Sangaracharya 800 A.D. who wrote on complicated philosophies of the Vedanta, the Bashya or Commentaries on the Sutras and Upanishads –aphorisms and hymns which are all still the admiration of even European metaphysicians, thosophists and most pious thinkers. - Short studies in the Science of Comparative Religions, p. 241. 24. The teachings of the Bhagavad Gita have suffered more than those of any other Indian book from the hands of the commentator. It is not cryptic in style like the sutras; but yet, from the great veneration paid to it on accounts of its supposed authorship and on account of its real superiority to every other scripture Indian or non-Indian, so many Bashyakaras have attempted to use it for butteressing up their special theories and expended their tender mercies on it. Its teachings and its locutions technical or otherwise have been violently tampered with by the commentators who did not possess what we call a literary conscience. The commentator did not aim to discover what exactly his author thought or attempted to express, but used the text for supporting his own special theories. If any passages were inconveniently opposed to the commentator’s theories, they were to be explained away by utalizing grammatical and etymological tricks - Outlines of Indian Philosophy. P. 246. 25. The original event Mahabharata seems to be a non-Aryan one, if we judge from the blood thirst of Bhima, the polyandry of Draupada and such other incidents, but it was soon converted into an Aryan story. - Indian Philosophy Vol.II, p.479. - Prof. S. Radhakrishnan. 26. Sayana in his commentary on the Black Yajur Veda says that the Mahabharata and the Puranas are designed to teach the law of duty to women and the sudras who were not allowed to read the Vedas. - Ibid. Vol.II, p. 452. 27. This event, it appears to be connected with the life of another Rama, who is distinguished as the Rama of the Dekhan. - Wheeler’s History of India Vol.II. Part IV. 27. The Ramayana contains an account of the exile which belongs to a much later period and cannot apparently have any connection with the earliest tradition. According to the later story Rama spent thirteen years of his exile in wandering with his wife and brother from one Brahmanical hermitage to another, in the country between the river Ganges and the river Godavari. These journeyings extended from the hill Chitra-Kuta in Bundelkhand, to the modern town of Nasik, near the sources of the Godavari, about seventy five miles to the north - west of the modern town of Bombay. The hermitages are said to have been occupied by the old Rishies who composed the Vedic hymns, and who are represented as Brahmans although they must have flourished ages before the appearance of Brahmns. The whole narrative may therefore be dismissed as aprocryphal. - Ibid. 27. Brahman tales are generally untrustworthy for traditional history. The Ramayana is highly Brahamanical and its stories are fanciful and often absurd. - Ancient Indian Historical Traditions. - F.E. Pargiter. 28. Immediately following the epics about the first century A.D. the Puranas, mythological and speculative histories of universe began to be written. They were intended to promote several particular Brahmanical beliefs which had been developing since Vedic time. - Hindu View in Art. p. 35. 28. It is now generally admitted that a great deal of the ancient medieval myth and legend enshrined in Sanskrit epics and Puranas is of non-Aryan origin and even in Vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes and sages in the form in which we find them in the Sanskrit works represent undoubted by a considerable amount of modification from their original forms whether Aryan or non-Aryan. The non-Aryan speaking masses of northern India became Aryanized in language and their tales and legends were retold as a matter of course in an Aryan language of their adoption. - S.K. Chatterji – Bulletin of the school of oriental studies, Vol.VIII (1935-1937). 28. In the earlier epoch prior to A.D. 1000 pre-Aryan legends were rendered from current Prakrit versions into Sanskrit and found a place in one or the other of the numerous Puranas, Upapuranas, Stalapuranas, and Mahatmyas and Tantras or even in Mahabharata and so were raised up to a level of pan Indian acceptance. - The history and culture of Indian People Vol.V., p.379. 28. In the 4th century A.D. Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans reedited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old Puranas were also recasted about period and good many new ones written. - Collected works of R.G. Bhandarkar, Vol.II., p. 444. 28. The Puranas naturally lent themselves to augmentations and the Puranic Brahmans used their opportunities to the full, partly with further genuine traditions, but mostly with additions of Brahmanical stories and fables and doctrine and ritual matter. Brahmanic tradition speaks from the Brahmanical stand point, describes events and expresses, feelings as they would appear to Brahmans, illustrates Brahmanical ideas, maintains and incalculates the dignity, sanctity, supremacy and even superhuman character of Brahmans, enunciates Brahmanical doctrines whatever subserved the interest of the Brahmans often enforcing the moral by means of marvellous incidents that not seldom are made up of absurd and utterly impossible details. It often introduces kings because kings were their patrons, yet even so the Brahman’s dignity is never forgotten. It is mainly the Brahmanical mistakes and absurdities that have discredited Puranas. - Ancient Indian Historical Traditions pp. 37-39. - F.E. Pargeiter. 28. Agni Purana : A Purana (so named as supposed to have been communicated by Agni to Vasishtha) devoted to the glorification of Siva but of very various contents ritual, cosmical, ethical, military, legal, medical, rhetorical, grammatical, taken largely from earlier works. It is quite modern and has no legitimate claim to be regarded as a Purana. - The Century Cyclopaedia of Names, Edited by Benjamin E. Smith. 28. Brahma Purana : One of the eighteen Puranas: so called as revealed by Brahma to Daksha. This Purana is placed first and therefore called adipurana. Its main object appears to be the promotion of the worship of Krishna. It describes the creation, the manvanthras of the life or period of Manu, the history of solar and lunar dynasties to the time of Krishna, Orissa with its temples and groves the life of Krishna, the mode of Yoga or contemplative devotion. It was not compiled earlier than the 13th or 14th century. - Ibid. 28. Brahmanda Purana : One of the eighteen Puranas so called as revealed by Brahma and containing an account of “the egg of Brahma” the mundane egg, and the future kalpas or days of Brahma. It is extent only in a number of un-authentic fragments. - Ibid. 28. Matsya Purana – A purana between fourteen and fifteen thousand stanzas complied from various materials; many chapters are identical with from Mahabharata. It is so called as narrated to Manu by Vishnu in the form of a fish. - Ibid. 28. Bagavata Purana – The Purana of Bhagavata or Vishnu, a book of great celebrity in India, exercising a more powerful influence upon the opinions of the people than any of the other Puranas. It consists 18,00 verses and is ascribed by Colebrooke to the grammarian Vopadeva, of about the 13th century A.D. Its most popular part the tenth book, which narrates the history of Krishna, has been translated into many vernaculars of India.-Ibid. 28. Skanda Purana – A Purana in which skanda is the narrator. It is said to contain 81,800 stanzas and is an aggregation of many originally unrelated works and fragments. The most celebrated is the “Kashi Kandha” “Benares section” describing minutely the temples of Shiva at or near Benares, and giving direction for Shiva worship and greater part of Kasi Kandha antedates the first attack upon Benares by Mohmud Gazni – who reigned 997 – 1030 A.D. The Utkala khanda is the section explaining the holiness of Orissa the inhabitants of which were known as Utkalas. - Ibid. 28. Linga Purana – The Purana in which Shiva explains the object of life : virtue, wealth, pleasure and final liberation. It contains 11,000 stanzas and is not earlier than the 8th or 9th century. 28. Vamana Purana – A Purana extended to about 7000 stanzas, and containing among other things, an account of the dwarf incarnation of Vishnu. It is of very recent origin having been compiled apparently only three or four centuries ago. - Ibid. 30. The social distinctions of Vedic times were those of occupation and of colour (Varna) which imposed race marked by difference of dress – white for Brahmans, red for Kshatrias, yellow for Vaisias and black for Sudras. The Aryan ethnical type which had closely intermingled with the non-Aryan population before the caste system was fully developed never continued more than a small fraction even of the population of the north. - A Short History of Indian – p. 29 – Havell. 29. Dharmashastra – The whole body of Hindu law; more specially the laws ascribed to Manu; Yajnavalkya and other inspired sages. These works are generally in three parts : (1) Achara, rules of conduct (2) Vyavahara, judicature, prayashchitta, penance. The inspired law givers are spoken as eighteen but forty two are mentioned. Manu and Yajnavalkya stand at their head. – Century Cyclopaedia of names. 31. Brahman priests, Buddhists and Jaina ascetics must have reached the land before the Christian era, and established themselves at the courts of ruling princes where they found schools of learning and exercised their influence on the thought of the times. The local gods, national deified heroes, and sacrificial cults of the people became in time absorbed into Brahmanism – A Literary History of India p. 310 – R.W. Frazer. 33. When the Brahmans settled in Southern India and the ancient Tamil Rajahs desiring to secure the benefit of the Yagas, accepted to the fire priests a supreme position to the society, the Brahmans naturally tried to introduce Socio – religious organization in Tamil religion – pre-aryan Tamil Culture p.20 – P.T.S. Iyengar. 32. Even in the first century B.C. very little Aryan influence had penetrated to the extreme south. Some Brahman colonists settled in the Dravidian countries and intermarried with the priest caste of the natives, but on the whole they made very little impression on the race. South Indian tradition records numerous instances of the Brahman as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahmana caste as sufficient Brahmans were not available when the reformed Indo Aryan religion obtained preference. The non-aryan magicians and the Dravidian priests became Brahmans – Prehistoric Ancient and Hindu India pp. 30, 37, 120 – R.D. Banerje. 32. There have been three classes of Brahmans throughtout Indian history namely (1) the ascetic devote and teacher, the Rishi or Muni (2) The priest and spiritual guide of kings, nobles and people (3) The minister of state royal officer and those who followed secular employments – Ancient Indian Historical Traditions – p. 62 – F.E. Pargiter. 32. Though in the long years that preceded the first century A.D. a few Aryans had penetrated the natural barrier of the Vindhyas and traversed the region beyond, there was not a definite attempt in founding fresh empires or settlements in the Dekhan till the date. The Pallavas were almost the first people to acquire dominians in the south. Their success in the direction seems to have attracted their followers in the north. The Rashtrakutas and the Gangas were not slow to take similar advantages – Pallavas had their own alphabet which is now known to us as the Pallava-Grantha – Dr. Burnel calls it the Eastern Chera characters and states that it should have first come to be employed in Thondaimandalam in the 4th century A.D. – Historical sketches of ancient Dekhan. p.20 – K.V. Subramanya Iyer (Madras 1917). 34. Brahmanism also flourished and most of the Satavahana rulers were devoted to it. The third king of the line performed a number of Vedic sacrifices and even named one of his sons Vedisri – A history of South India p. 95. – K.A. Nilakanta Sastri. 35. The Pallavas were followers of the Brahmanical religion and made gifts of land to gods and Brahmans in the belief that they would thereby secure health, prosperity and victory in war. Excemption of tax-action was allowed on all gifts of land to Brahmins who were held, in theory at any rate, to be entitled to a total of eighteen such immunities. This is a continuation and development of Satavahana practice, for the pallava kings also followed the Brahmanical religion, worshipped Siva and Vishnu and performed sacrifies - Ibid. 36. Religious condition that followed in the Kadamba and Ganga kingdoms were very much the same as those in contemporary Pallava kingdom – Ibid p. 105. 36. The Kadambas were a Brahman family which derived its descent from Hariti and belonged to the Manavya gotra. They were devoted to the study of the Vedas and the performance of vedic sacrifices. The Kadamba king Mayurasarman entered ghatika (college) at Kanchipuram with the intention of studying the entire Veda – Ibdi p. 105. 36. In Egypt the names of the gods were never uttered. It was a crime among the Jews to utter the name of Jawah – The mothers Vol. III p. 109. The great name of god Jhwh was commonly called tetra gamma which was never pronounced and only written was associated with the twelve tribes of Israel – Amulets and superstition, p. 379. – Sir. E.A. Wallis & Budge K.T. 37. Katyayana, the grammarian, Baudhayana the smirthi writer, and possibly Apastamba also were south Indians, but we do not know to which part of south India they exactly belonged – Malayalam and other Languages p. 1249 – Proceedings and Transactions of the 9th All India Oriental Conference, Trivandram Dec. 1937. 38. It was for many years universally believed the Sanskrit was the mother tongue of which all languages could be traced. The theory was not by far as absurd as that which had been set up some time previously by religious zealots who from an exaggerated regard untutored by science for all that is connected with the inspired books of our creed went so far as to assert that Hebrew was the mother of all the languages in the world – Vedic India p. 58 – Regozen. 39. Less than a thousand years ago the Agamas were looked on as unauthoritative and Yamuna, in founding the modern Vaishnava Visishtadvaita School felt it necessary to write the Agamapramanya the authoritativeness of the Agamas. Today, however freely scraps of Upanishads are quoted in discussions, the actual opinions and religious practices of the Hindus are taken entirely from the Agamas. For this and other reasons the Agamas have been kept secret – Outlines of Indian Philosophy p. IV. – P.T.S. Iyengar. 39. The worship of Siva or Vishnu or Sakti in temples or houses was considered a heresy by the Vedantis till in the tenth century Yamunacharya wrote the Agama Pramanya and Ramanucharya in the next century blended the Vaishnava rites and concepts and Vedic practices tents on the whole – Stone age in Inda p. 52. – P.T.S. Iyengar. 40. Saivat radition as preserved in Periyapuranam has memories of mutts organized by Appar and other non-Brahman Saiva saints. These were their spiritual homes. When the temple cult came to be codified and conventionalized with the help of *Gauda Brahmins and other north Indian Saivites during the Chola revival the mutt became the necessary adjunct of the temple presided over by Brahman for regulating and supervising the rituals. Slowly the objection to non- Brahmans renouncing the world and becoming the heads of mutts came to be established. The non-Brahman ascetics had to resort to caves and their mutts came to be known as “Kugai”. When the number and power of these non-Brahman mutts increased the orthodox people inspired a group of their followers to raze to ground these non-Brahman mutts and this is mentioned as Kugai idi kalagam in inscriptions of the reign of Kulotunga III. A theory was enunciated that the philosophic truths should be learnt from the Vedas direct and not through vernacular works. The Vaishnavite philosophers specially of the Tenkalai persuation exposed the hollowness of these pretensions. The Guru Namachivayar of the 16th century (S.I.I.Vol.I No.58) shows that this distinction of Kugai and mutt was still prevalent as late as the 16th century. In this century a dispute arose whether the non-Brahmans were entitled to become Sanyasins and Chinna Chevvappa Nayak, the chieftain of the Vijayanagar emperors Krishnadevaraya and Accuta Raya referred this to Sivagra Yogi, a Brahman ascetic. He gave his decision in favour of the non-Brahmans in the form of an elaborate thesis “Saiva Sannyasa Paddhati” Krishnadevaraya a Vaishnavite, could not have tolerated the arrogance of caste in the spiritual sphere. We find therefore the great non-Brahman mutts growing and developing in the 16th century – The notes on the Tamil Plutarch. – Prof. T.P. Meenakshisundaram. 41. No.471 of 1912 records the gift of such a monastary for a Saiva saint by a village, which also provided for the feeding of all strangers who might visit it. The property of this monastry was confiscated in the twenty second year of Kulotunga Chola III when there was a general crusade against the non-Brahmanical Saiva mathas instigated by the Brahmans – Local Government in Ancient India p. 279 – R.K. Mookerji. 42. Sanskrit learning tended to be monopoly of Brahmins, though there were exceptions, and it was particularly encouraged by means of large special endowments – A History of South India, p. 312. 44. The scheme of four varunas could not well spread among the Tamils. It only led to the confusion of caste and prevalence of social jealousies and have characterized the life of South India for a thousand five hundred years; for we learn from Thevaram of Thirunavukkarasu Nayanar that there was in his day, as there is to-day, a consciousness of rivarlry, between Brahman and non-Brahmans as they were then called Aryan and Tamilian – Pre-aryan Tamil Culture. P. 20 – P.T.S. Iyengar. 43. But when the subject matter and the contents of the Agamas and the Vedas are closely examined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles as under. – The Philosophy of the Lingayats – S.K. Sakhare. 45. We might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders. For the great deities in Hinduism Siva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines such as metempsychosis and divine incarnations are either totally unknown to the Veda or obscurely adumbrated in it. The chief characterstics of mature Indian religion are characterstics of an area not of a race, and they are not the characterstics of religion of Persia, Greece or other Aryan lands. – Hinduism and Buddhism, p. XV. Sir. Charles Elliot. 46. The influence of the Dravidians on the Culture of India has been ignored, because the literature which records the development of the Hindu religion in India was the work of a hostile priesthood, whose only object was to magnify its own pretentions and decry everything Dravidian – Dravidian India, p. 119.– T.R. Sesha Iyengar. 46. At any rate we may be on our guard against looking at everything through Aryan or Brahmanical spectacles … that almost everything has passed into written form has been cast in an Aryan mould. For real history Brahmanic writers never cared anything; early events and family origins invariably assume a mythic guise; everything about non-Aryan race is either omitted or only noticed the conquest of the ‘twice’ over the ‘demons’ and ‘barberians’ – The Indian Village Community, p. 91 – B.H.Barden Powell. M.A., C.I.E. 46. A variety of causes partly political and partly literary, has tended to the belittlement of peninsular India’s contribution of the history both of India and of the whole world in large. The time is ripe for South India to champion her own cause and assert her claims to recognition – F.R.Richards I.C.S., M.A., M.R.A.S., F.R.A.S. – The quarterly Journal of the Mythic Socity Vol. IV. The early tribes of Bengal Dravidian speakers mainly were well organized, and seem to have possessed a culture of their own. The early history of Burma and Siam tells us that at a time when the Tibeto – Chinese tribes, Burmese and Tai had not yet arrived on the scene, and these centres were inhabited by only Monkhmer peoples, Dravidians from Bengal and Kalinga were emigrating into these lands, and becoming the ruling race there. Later when these non-Aryans from India assimilated Brahmanic culture, their princes claimed connection with the ancient royal house of Aryan upper India (a thing which was repeated in the case of the new Rajput clans at a later period) and introduced among the Mons and Khmers in times post Christ the Sanskrit language as well as traditions connected with Hastinapura and Ayodya – The Development of Bengali Language p.41 – S.K. Chatterji. The modern dialects of Northern India now called Sanskritic or Gaudian, have a fundamental grammatical frame work and a scheme of syntax, the same as that of the Dravidian dialects, so much so that sentences from the one set of dialects can be translated into one of the other set of dialects by the substitution of word for word, without causing any breach of idium. – History of the Tamils, p.2 – P.T.S. Iyengar (1929). Dravidian stratum in Sanskrit has been discussed by several scholars and Kittel in Kannada dictionary has shown 450 Sanskrit words with possible Dravidian connections. A few other words in both Sanskrit and Prakrit and vernaculars have subsequently been suggested as being of Dravidian origin by other scholars – The Journal of the Greater India Society Vol. III (1936) Prof. Sunitii Kumar Chatterji. காலக் குறிப்பு கி.மு. திராவிடர் நாகரிகம் 4000 சிந்துவெளி நாகரிகம் 3500 - 2500 வைசுவதமனு (சலப்பிரளயம்) 3100 பாரசீகத்திலிருந்து இந்து ஆரியன் பிரிவு 2500 ஆரியரின் வருகை 2000 - 1500 இருக்கு வேதம் 1500 - 1000 பிராமணங்கள் 800 உபநிடதங்கள் 800 - 500 கற்ப சூத்திரங்கள் (சிரௌத சூத்திரங்கள் கிரிக சூத்திரங்கள்) 800 - 600 யாஸ்கர் (நிருத்தம்) 700 தரும சூத்திரங்கள் 600 - 300 கபிலரும் சாங்கியமும் 600 மகாவீரர் 599 - 527 கௌதம புத்தர் 563 - 483 பிற்கால உபநிடதங்கள் 500 - 200 கி.பி. இதிகாசங்களின் தொடக்கம் பகவத்கீதை புராணங்கள் 500 - 500 கி.பி. புராணங்கள் (இன்று காணப்படுவன தத்தரின் கணிப்பு) கி.பி. 500 - 1500 பாணினி கி.மு. 400 ஆசுவலாயனர் 400 பூர்வமீமாம்சை 400 அபஸ்தம்பர் 400 சைமினி 400 காத்தியாயனர் 350 போதாயனர் 350 கௌதமர் (நியாய சூத்திரம்) 300 மிருதி 300 - 700 கி.பி. பௌத்திரபாகு (மைசூர் நாட்டுக்கு வந்த சமண முனிவர்) 307 சந்திரகுப்தன் (மௌரியன்) 322 - 298 கௌடிலியர் ” மெகஸ்தீனஸ் (பாடலிபுரத்தில்) 302 - 298 கணாதர் 300 வாதராயணர் 300 அசோகர் 274 - 237 சாதவாகனர் 250 - 200 கி.பி. பதஞ்சலி (யோக சூத்திரம்) 140 நாகார்ச்சுனர் (சூனியவாதம்) கி.பி. 300 ஈசுவர கிருட்டிணர் (சாங்கியகாரிகை) 300 குப்த அரச பரம்பரை 320-650 கதம்பர் (கடம்பர்) 345 - 575 காளிதாசர் 400 வத்சயாயனர் 400 பல்லவர் 6 ஆம் நூ- 10ஆம் நூ. சாளுக்கியர் (பாதாமி) 550 - 1190 குமாரிலர் 590 - 650 முகமதிய சகம் 622 கௌட பாதர் 8 ஆம் நூ. சங்கரர் 788 - 820 இராட்டிரகூடர் 8ஆம் நூ - 10ஆம் நூ. சோழர் (பிற்காலம்) 907 - 1310 சாளுக்கிய அரச பரம்பரை (கல்யாணி) 973 - 1198 காகதீயர் 1000 - 1326 இராமாநுசர் 1017 - 1137 போஜராசர் 1060 - 1118 ஹோய்சலர் 1110 - 1327 மாதவர் 1119 - 1197 விசயநகர அரச பரம்பரை 1336 - 1649 சாயணர் 14 ஆம் நூ. வித்தியாரணியர் (மாதவர் - சாயணரின் சகோதரர்) 14 ஆம் நூ. அப்பைய தீட்சிதர் 1552 - 1624 BIBLIOGRAPHY 1. A history of Indian literature – H. Goven. 2. A history of South India – K.A. Nilakanta Sastri. 3. A literary history of India – R.W. Frazer. 4. Amulets and superstition – E.A. Wallis, Budge K.T. 5. Ancient Indian historical tradition – F.E. Pargiter. 6. A short history of India – Havell. 7. Asia and western dominance – K.M. Panikar. (London 1954) 8. Cambridge History of India – Prof. Macdonald. 9. Castes in India Its Nature Functions and Origin – J.H. Hutton. 10. Collected works of R.G. Bhandarkar Vol.II. 11. Constructive survey of Upanishadic philosophy – R.D. Ranade. 12. Dravidian India – T.R. Sesha Iyengar. 13. Encylopaedia of religion an ethics – (1918) 14. Glimpses of world history – Jawaharlal Nehru. 15. Hinduism and Buddhism – Sir Charles Elliot. 16. Hindu view in art–Maluk Ray Anand. (Asia Publishing House 1957) 17. Hindu view in life – Dr.S.Radhakrishnan. 18. Historical sketches of ancient Dekhan – K.V.Subramanya Iyer. 19. History of civilization – Will Durant. 20. History of the Tamils – P.T. Sreenivasa Iyengar. 21. India and the western world – H.G. Rawlinson. 22. India philosophy – Max Muller. 23. Indian philosophy Vol. I & II – Prof. S.Radhakrishnan. 24. Junior History of India – R.D. Banerji. 25. Local Government in Acnient India – R.K. Mukerji. 26. Oriental and Linguistic Studies – William Dwlight Whitney. 27. Outlines of Indian Philosophy – P.T.S. Iyengar. 28. Pre-Aryan Tamil culture – P.T.S. Iyenger. 29. Proceedings and transactions of the 9th All India Oriental Conference, Travandrum 1937. 30. Short studies in the science of comparative religions – J.R. Forlong. 31. Stone age in India – P.T. Sreenivasa Iyengar. 32. Tamil Plutarch (2nd edition) – Simon Kasi Chetty. 33. The age of the mantras – P.T. Sreenivasa Iyengar. 34. The century cyclopaedia of names – Edited by Benjam in E. Smith. 35. The History and culture of Indian people Vol.II-V – Bharata Vidya Bhavan Publication. 36. The History of Indian literature – A. Weber. 37. The History of Indian literature – Winternitz. 38. The Indian Village Community – B.A. Barden Powell. 39. The Mother Vol. III – 40. The Origin and development of Bengali – S.K Chatterji. 41. The philosophy of the Lingayats – S.K.Sakhare. 42. The philosophy of the Upanishads – A. Edward Gough. 43. The Saiva Siddhanta in the Meykanda Sastra – Violet Paranjothi M.A.L.T., Ph.D. 44. The System of Vedanta – Dr. Paul Deussen. 45. Vedic India – Regozen. 46. Wheeler’s History of India Vol.II. 47. Wisdom of the East – Barnett M.A. LITT. PERIODICALS 1. Bulletin of the school of Oriental Studies Vol.VII (1935-36). 2. Indian Historical Journal – 1934. 3. Indo Asian Culture Vol.I 4. New Review – Vol. III. 5. The Journal of the Greater India Vol.III (1936) 6. The Journal of the Oriental Research – Madras 1924.  சிவன் முன்னுரை இவ்வுலகின் ஆங்காங்கு வழங்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழைய வரலாறுகளைக் கொண்டு மக்கட் குலம், ஆதியில் ஒரு நடு இடத்திற் பெருகியிருந்து பின்பு உலகின் பல இடங்களுக்குப் பிரிந்து சென்று பற்பல குலங்கள் போற் பெருகிற்று எனப் பழஞ் சரித்திரக் காரரும், மொழி ஆராய்ச்சியாளரும் கருதுகின்றனர். உலக மக்களின் சமயத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்த வெஸ்ரப் (Westropp) என்னும் ஆசிரியர் முற்கால மக்களின் சமயம் தனித்தனியே தோன்றி வளர்ச்சி யடைந்ததன்று; எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படை ஒன்றே எனக் கூறியுள்ளார். உலகில் தோன்றியிருந்த பழைய நாகரிகங்களுக்கெல்லாம் மிகப் பழைமை உடையது சிந்து வெளி நாகரிகமெனப் பழைமை ஆராய்ச்சியில் தலைசிறந்த அமெரிக்கப் பேராசிரியர்களாகிய பிராங் போர்ட் (Professor Frankfort), வில் துறண்ட் (Wil Durant) முதலியோர் கூறி யுள்ளனர். உலக நாகரிகத்துக்கு அடிப்படை யிலுள்ளது இந்திய நாகரிக மென்பதும், இந்திய நாகரிகமென்பது திராவிட நாகரிகமென்பதும் மேற்புல ஆராய்ச்சி அறிஞர்களால் நன்கு ஆராய்ந்து காட்டப்பட் டுள்ளன. உலக மொழிகள், உலக நாகரிகங்களுக்குள் தொடர்பு காணப்படுவது போலவே, தமிழருடைய சிவ வணக்கத்துக்கும் உலக சமயங்களுக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. பழைய தமிழ் மக்களின் சிவ வணக்கத்தின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக மதங்களாகும் என்பதைக் காட்டுவது கடினமாக இருக்கவில்லை. அவ்வாறிருந்தும் இத்துறையில் தமிழ் அறிஞர் ஊன்றி ஆராய்ச்சி செய்து, அக் கருத்தை உலகுக்கு வெளியிடாதிருப்பது பெருங்குறையாகும். சிவமதமே உலக மதம் என்பதை, நாம், பற்பல மேற்புல ஆராய்ச்சி அறிஞர் கண்ட முடிவுகளை ஏற்ற ஏற்ற இடங்களில் மேற்கோள்களாக எடுத்துக் காட்டியும், ஆங்காங்கு உலகின் பல பாகங்களில் காணப்படுகின்ற, இன்றும் நமது நாட்டில் வழிபடப் படுவனபோன்ற தாய்க்கடவுள், தந்தைக் கடவுளர்களின் வடிவங்களை படங்களமைத்துக் காட்டியும் தெள்ளிதின் விளக்கியுள்ளோம். “சைவ சமயமே சமயம் சமயா தீதப் பழம்பொருள்” என்னுந் தாயுமான அடிகளின் கூற்று இன்றைய ஆராய்ச்சியில் உண்மையாகவே திகழ்கின்றது. சென்னை 15.2.1947 ந.சி.கந்தையா. சிவன் தோற்றுவாய் மிக முற்காலத்தில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் பொதுவான கொள்கைகள் பல இருந்தன. அவைகளுள் சமயமும் ஒன்று. எல்லா மக்களும் ஒரேவகையாகக் கைக்கொண்ட சமயமே நாளடைவில் சிறிது சிறிதாக வேறுபட்டு இன்றைய பல சமயங்களாகக் காணப்படுகின்றது. எல்லா சமயங்களின் பழைமையை நோக்கி ஆராய்ந்து செல்லின் அவை எல்லாம் ஒரு தனி மதத்திற் சென்று முடிவடைதலைக் காணலாம். மக்கள் தோன்றி உருவாலும், அறிவாலும், நாகரிகத்தாலும் படிப் படியே வளர்ச்சியடைந்து வந்துள்ளார்கள்; ஆயினும், அறிவாலும், நாகரிகத்தாலும் மேல்நிலையுறாது பல வகை வாழ்க்கைப் படிகளில் வாழ்ந்து வரும் மக்கட் கூட்டத்தினரும் இடை இடையே காணப்படுகின் றனர். எல்லா மக்களிடையும் கடவுட் கொள்கை இருந்து வருதலைக் காண்கின்றோம். கடவுட் கொள்கை மக்கட் படைப்புக்கு இயல்பாக அமைந்துள்ள ஓர் அறிவுபோலும்! மக்கள் தோன்றிய காலத்தே அரும்பிய இக்கொள்கை காலச் செலவில் வளர்ச்சியடைந்து உயர்ந்த தத்துவக் கொள்கைகளோடு கூடிய சமயங்களாயிற்று. காலத்துக்குக் காலம் மக்கள் கடவுளைப்பற்றிப் பல்வேறு வகையான கொள்கைகள் உடையவர்களாக இருந்தார்கள். ஆதியில் மக்கள் தென்புலத்தார் (இறந்தவர்) வணக்கமுடையவர்களாயிருந்தனர். திருவள்ளுவனாரும், “தென்புலத்தார் தெய்வம்” எனத் தென்புலத்தாரை முதற்கண் வைத்துக் கூறுதல் காண்க. தென்புலத்தார் வழிபாட்டுக்குப் பின் மக்கள் எல்லோரும் ஓர் அளவு நாகரிக உயர்வு எய்தியிருந்தனர். அக்காலத்தில் ஞாயிற்று வழிபாடு ஓங்கியிருந்தது.1 அயர்லாந்து முதல் சப்பான் தீவுகள் வரையில் இவ்வழிபாடு பரவியிருந்தமையை எச்.சி.வெல்ஸ் (H.G. Wells) என்பார் தமது வரலாற்றுக் காட்சி (Outline of History) என்னும் நூலில் படம் வரைந்து விளக்கியுள்ளார். புதிய கண்டத்திலும், ஞாயிற்று வழிபாட்டுக்குரிய பழைய ஆலயங்களும் செய்குன்றுகளும் காணப்படுகின்றன. இஞ்ஞாயிற்று வழிபாடு படிப்படி வளர்ச்சியடைவதாயிற்று. ஞாயிற்றுக்கு ஆதியில் வழங்கிய பெயர் சிவன். சிவன் வழிபாட்டின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக சமயங்கள் என்பதை இச் சிறிய நூல் நன்கு எடுத்து விளக்குகின்றது. சிவன் வழிபாடு இந்திய மக்களுக்கு மாத்திரமன்று; உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மனு ஞாயிற்றின் புதல்வன் உலகில் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு நேர்ந்ததென்றும், அதற்குப் பிழைத்திருந்த ஒருவரிலிருந்து மக்கள் பெருகினார்கள் என்றும் இவ் வுலகின் ஆங்காங்கு வாழும் மக்கள் எல்லோரிடையும் ஓர் ஐதீகம் வழங்கு கின்றது.1 இதனால் உலக மக்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தினராக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு உண்டா யிற்றென்றும், அவ் வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்திருந்த மக்கள் சிலரிடமிருந்து மீண்டும் இவ் வுலகில் மக்கள் பெருகினார்கள் என்றும் நாம் உய்த்துணர வேண்டியிருக்கின்றது. வெள்ளப்பெருக்குக்குப் பிழைத் திருந்த மனு ஞாயிற்றின் புதல்வனென்று சொல்லப்படுகின்றார். இதனால் பெரிய வெள்ளப்பெருக்கு உண்டான காலத்திலேயே ஞாயிற்று வணக்கம் மக்களிடையே நன்கு வேரூன்றி இருந்ததென அறிகின்றோம். இவ் வெள்ளப் பெருக்கு எப்பொழுது உண்டாயிற்று என்று அறிய முயலுதல் பயனற்றது. வெள்ளப் பெருக்கு உண்டான காலத்தில் மக்கள் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்கள் என்பது மனுவைப் பற்றிச் சொல்லப்படும் வரலாற்றினால் நன்கு அறிதும். வரலாற்று ஆரம்ப காலத்தில் உலக மக்களுக்கிடையே காணப்பட்ட தொடர்பு தொல்பொருள், புதைபொருள் ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசிய, இந்திய, கிழக்குத் தீவு, அமெரிக்க மக்களின் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலுள்ள வரலாற்றுச் செய்திகள் சில தெரிய வருகின்றன. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் இவ்வுலகம் முழுமையிலும் ஒரே வகை நாகரிகம் நிலவிற்றென்பதற்குப் பல சான்றுகள் உள.1 கிழக்குத் தீவுகள், அரப்பா, மொகஞ்சொதரோ, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, அரேபியா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துக்கள் ஒரேவகையின.2 இதனை மேல்நாட்டு ஆசிரியர்கள் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். எழுத் துக்கள் ஒரேவகையாய் இருந்தன என்று கொள்ளுமிடத்து, மொழிகளும் ஒரேவகையாக இருந்தன வென்றே கொள்ளுதல் வேண்டும். ஆஸ்தி ரேலிய மொழிச் சொற்களுக்கும், சுமேரிய மொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது.3 நியூசீலந்து மக்களின் மொழிச் சொற்கள் பல எகிப்திய சொற்களோடு ஒற்றுமை உடையனவாகக் காணப்படுகின்றன.4 டெயிலர் என்னும் பாதிரியார் தமிழுக்கும் மயோரிய (நியூசீலரது) மொழிக்குமுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் கால்டுவெல் தமிழுக்கும் துரானிய மொழிகளுக்குமுள்ள ஒற்றுமையை எடுத்து விளக்கியுள்ளார். பழைய அமெரிக்க மொழி ஒட்டுச் சொற் களுடையதாய் இருந்தது. பழைய அமெரிக்க மொழி திராவிட மொழி யோடு மிக ஒற்றுமையுடையதாய் இருக்கின்றது.5 கோரியா தேசமொழி இலக்கணம் திராவிடமொழி இலக்கணத்தோடு ஒற்றுமையுடையதா யிருக்கின்றது. இச் சான்றுகளால் வரலாற்றுக் காலத்துக்குச் சிறிது தொலையில் உலகம் முழுமையிலும் ஒரே மொழி வழங்கிற்றெனத் துணிதல் சாலும். மனுவின் வரலாற்றையும், பிற்காலப் பிற சான்றுகளை யும் கொண்டு உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடே இருந்த தெனத் துணிதல் அமையும். ஞாயிற்று வழிபாடே சிவன் வழிபாடு எகிப்திய மக்கள் ஞாயிற்றை அமன், ஒசிறிஸ், ரா முதலிய பெயர் களால் வழிபட்டார்கள். சுமேரியர் ஆண், எல் முதலிய பெயராலும், பாபிலோனியர், பால் (Baal) பேல் (Bel) மார்டுக் முதலிய பெயர்களாலும், அசீரியர், அசுர் என்னும் பெயராலும், பினீசியர் பால் என்னும் பெயரா லும், சின்ன ஆசிய மக்கள் சூரியா, அதாத் என்னும் பெயர்களாலும் இந்திய மக்கள் ஆண், சிவன், எல் முதலிய பெயர்களாலும் ஞாயிற்றை வழிபட்டனர். உலக மக்களின் பழைய சமய வரலாறுகளை நன்கு ஆராய்ந்த ஆசிரியர்கள் எல்லோரும் உலக மக்கள் எல்லோரும் தொடக் கத்தில் ஞாயிற்றையே வெவ்வேறு பெயர்களால் வழிபட்டார்கள் எனக் கூறியிருக்கின்றனர்.1 மொழி மாறுபட்டது போல அவர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்களும் மாறுபடலாயின. மொழி வேறுபாடு முன்னரே எல்லா மக்களுக்கும் பொதுவாகிய சில கடவுட் பெயர்கள் மாத்திரம் வழங்கியிருத்தல் சாலும். அவை எல், சிவன், பகல், ஆண் என்பன. மேற்கு ஆசிய, அரேபிய, இலங்கை மக்கள் எல் தொடர்பான பெயர்களைக் கடவுளுக்கு இட்டு வழங்கினார்கள். பாபிலோன், இந்தியா, சுமேரியா முதலிய நாடுகளில் ஆண் என்பதே கடவுளின் சாலப் பழைய பெயராகக் காணப்படுகின்றது. ஆண் என்பது தொடக்கத்தில் ஞாயிற்றையும், பின் கடவுளையும், பின் உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமையையும் குறிக்க வழங்கிற்று. எல் என்பது தமிழில் காணப்படும் பழைய சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். சிவன் என்னும் பெயர் இவ்வுலகில் மிகப் பழைமையே வழங்கியதற்குரிய ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. மற்றப் பெயர்களை விடச் சிவனையே சாலச்சிறந்த பெயராக மக்கள் ஞாயிற்றுக்குத் தொடக்கத்தில் இட்டு வழங்கினார்கள் ஆகலாம். சிவன் என்னும் சொற்பிறப்பு சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். ஞாயிற்றுக்குச் செங்கதிர் என்பதும் மற்றொரு பெயர். மொகஞ்சொதரோ முத்திரைகளின் ஆண் தலைமையான தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது. சிவனைக் குறிக்கும் பசுபதிக் கடவுளும் ஆண் கடவுளரே ஆவர். ஞாயிறு ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடும் ஒவ்வொரு வடிவுடையதாகக் கொள்ளப் பட்டு மக்களால் வழிபடப்பட்டது.1 இறைவனை அட்ட மூர்த்தி எனக் கொள்வது இப்பழைய வழக்குப்பற்றிப் போலும். பிலிப்பைன் தீவுகளில் சிலவற்றில் இன்றும் மக்கள் சிவனைச் சிவப்பன் என வழங்குவர்.2 இதனால் முற்கால மக்கள் ஆண் என்பதற்குச் சிவப்பு என்னும் அடைகொடுத்து வழங்கினார்கள் எனக் கருதலாம். ஆண், அன் ஆனபோது சிவப்பு ஆண், சிவப்பன் ஆகிப் பின் சிவப்பன் சிவன் என மருவிற்றெனக் கூறுதல் பிழை யாகாது. சிவன் என்னும் சொல்லின் உற்பத்தியைக் கூறவந்த ஆசிரியர்கள் எல்லோரும் சிவன் என்பதற்குச் சிவந்த கடவுள் என்னும் பொருளே கூறியுள்ளார்கள்.3 இற்றைஞான்றை வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றிப் பிறநாடுகளுக்குச் சென்றது எனக் கருதுகின்றார்கள். ஆகவே, ஆதியில் மக்கள் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழுக்குரியனவாயிருத்தல் பொருத்தமானதே. முற்கால இடப்பெயர்கள் பழைய காலத்தில் மக்களின் குடியிருப்பு பெரும்பாலும் கோயிலைச் சுற்றியிருந்தது. ஆகவே, ஒவ்வொரு பட்டினமும் அல்லது இடமும் கடவுள் தொடர்பான பெயர் பெற்றிருந்தது.1 இதனைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். இவ் வுலகில் ஒன்றில் ஒன்று தொலைவிலுள்ள இடங்களில் சிவன் தொடர்புடைய இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வுலகின் அகன்ற இடப்பரப்பில் சிவன் ஆலயங்கள் பல இருந்தனவென்று நாம் நன்கு அறிதல் கூடும். சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை எகிப்திலே இலிபிய வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. இவ்விடம் அமன்யூ பிதர் என்னும் கடவுள் வழிபாட்டுக்குப் பேர் போனது என்று சொல்லப்படுகின்றது. அமன், ரா, ஒசிறிஸ் என்னும் பெயர்கள் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பன.2 இக் கடவுளுக்கு வாகனம் இடபம். யூபிதர் என்னும் பெயரும் சுயஸ்பிதர் என்பதினின்றும் பிறந்ததென்று சொல்லப்படுகின்றது . யூபிதர் என்னும் சொல் சிவா என்பது போன்ற ஒரு சொல்லினின்று பிறந்ததென இன்னோர் ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.3 யூபிதர் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பதே ஆகும். கிரேக்கரது சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. சிவன் பாலைநிலப் பசுந்தரையில் இன்றும் அமன் கடவுளின் கோயில்களின் வழிபாடுகள் காணப்படுகின்றன.4 இப்பாலை நிலப் பசுந்தரை சிவன் வழிபாடு காரணமாகச் சிவன் என்னும் பெயர் பெற்றிருந்ததென்றும், பின்பு சிவன் கடவுளின் பெயர் அமன்யூபிதர் என மாறியுள்ளதென்றும், நாம் நன்கு ஊகித்தறியலாம். இடப்பெயர் மாத்திரம் அன்று முதல் இன்று வரையும் சிறிதும் மாறுபடாமலே இருந்து வருகின்றது. அமன் கடவுளுக்கு இடபம் வாகனமாதல், ஆலயங்களினுள் சிவலிங்கங்கள் வைத்து வணங்கப்படுதல்1 முதலிய காரணங்களால் அமன் சிவனே என்பது தேற்றமாகும். பாபிலோனில் சிவன் என்னும் பட்டினம் பாபிலோன் நாட்டிலே, களிமண் ஏட்டில் எழுதப்பட்டுச் சூளை யிட்டுக் காப்பாற்றப்பட்ட பல பழைய பட்டயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளுள் பல, மக்கள் அடிமைகளையும், நிலங்களையும் விற்றதும் வாங்கியதும் தீட்டிய ஆவணங்களாகக் காணப்பட்டன. அவைகளில் இன்ன மாதத்தின், இன்ன இடத்தில், இன்ன நாளில் ஆவணம் எழுதப்பட்டதெனக் குறிக்கப்பட்டள்ளது. அவ்வாவணங்கள் சிலவற்றுள்2 சிவன் என்னும் இடப்பெயர் காணப்படுகின்றது. இதனால் பாபிலோனில் சிவன் வழிபாடும், சிவன் ஆலயமும் இருந்தனவென்று நாம் நன்கு அறிகின்றோம்.3 பாபிலோனரின் கடவுளுக்கு எல்சடை என்பதும் மற்றொரு பெயர். எல்சடை என்பது சிவபிரானைக் குறிக்க வழங்கும் சடையன் என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. அவர்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர் மார்டுக், யேகோவா, சிவா போன்ற ஒரு சொல்லி னின்று பிறந்தது. வட அமெரிக்காவில் சிவன் ஆலயம் வட அமெரிக்காவிலே கொலரடோ என்னும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும் குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்டகாலம் அங்குள்ள மக்கள் ஞாபகத்திலிருந்து வந்தது. இவ்விடத்தை ஒருவரும் ஏறிக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. 1937 ஆம் ஆண்டு அமெரிக்கப் பழம் பொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடத்தைக் கண்டுபிடித்துத் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.4 இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சிலரும், இதற்கு இன்னும் மிகப் பழைமையுடையது என்று வேறு சிலரும் தமது கருத்தைத் தெரிவித் துள்ளார்கள். இதனால் வட அமெரிக்காவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் சிவன் ஆலயமும், சிவன் வழிபாடும் இருந்தனவென்று நாம் துணிந்து கூறலாம். *இந்து அமெரிக்கா என்னும் நூல் எழுதிய சமன்லால் என்பவர் அமெரிக்காவின் பல பாகங்களில் இன்றும் சிவலிங்க வழிபா டிருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார். கிரேத்தா (Crete) வில் சிவன் நகர் கிரேத்தா என்னும் தீவு பழந்தமிழருடைய குடியேற்ற நாடாகக் கருதப்பட்டது. வரலாற்றுப் பிதா எனப்பட்ட ஹெரதோதசு (Heradotus) என்பார், கிரேத்தா மக்கள் தமிழர் (தமிழி) எனப்பட்டார்கள் என்றே கூறியுள்ளார். கிரேத்தா நாட்டுப் பழைய நாகரிகமும், சிந்து வெளித் தமிழரின் நாகரிகமும் ஒரே வகையின. கிரேத்தா மக்கள் மீனவர் எனப் பட்டார்கள். அவர்களின் எழுத்துக்கும், அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.1 நாகரிகத் தொடர்பும் இவ்வகையினதே. அங்குள்ள பழைய நகரம் ஒன்றுக்குச் சிவன் என்பது பெயர். அங்குச் சிந்துவெளியிற் கிடைத்தவை போன்ற பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கிரேத்தாவில் சிவன் வழிபாடும் சிவன் ஆலயமும் இருந்தனவென்று நன்கு அறிலாம். கிரேத்தாவில் சிவலிங்க வழிபாடு சங்கு வாத்தியம் முதலியனவும் காணப்பட்டன. சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் நகர் சின்ன ஆசியாவிலே (ஆசியா மைனர்) சிவாஸ் என்னும் பழைய நகர் ஒன்று உண்டு. இது பழைய அழிபாடுகளுடைய அழிந்த நகரம் எனப்படுகின் றது. இதன் பழைய வரலாறு ஒன்றும் அறியப்படவில்லை. சின்ன ஆசியாவில் சிவலிங்க வழிபாடும், இடபத்தின் மீது வீற்றிருக்கும் சிவன் வழிபாடு, இடப வழிபாடு முதலியனவும் காணப்பட்டமையின் சிவாஸ் என்பது சிவன் ஆலயத்துக்குப் பேர்போன ஒரு பழைய நகரம் எனக் கூறுதல் தவறாகமாட்டாது. வட இந்தியாவில் சிவபுரம் ஆரிய வேதங்கள், “சிவாக்கள்” என்னும் ஒரு கூட்டத்தினரைப் பற்றிக் கூறுகின்றன.1 பாணினி, சிவபுரம் என்னும் இடப்பெயரைக் குறிப் பிட்டுள்ளார். இது வட இந்தியாவில் சிவாக்கள் வாழ்ந்த நகரமாகலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். ஆரியர்கள் தங்கள் சிவலிங்க வழி பாட்டை வெறுத்துத் தள்ளியமையின், வட நாட்டில் சிவனை வழிபடும் பிறிதொரு மக்கள் இருந்தார்கள் என்று நாம் நன்கு அறிதல் கூடும். இலங்கையில் சிவன் மலை இலங்கையில் சிவன் மலை அல்லது சிவன் ஒளி மலை என்னும் ஒரு மலை உள்ளது. இம் மலை உச்சியில் ஞாயிறு உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகின்றது. இது புத்தர் காலத் துக்கு முன்தொட்டுச் சிவன் ஒளி மலை எனவே வழங்குவதாயிற்று.2 இம் மலை இலிங்க வடிவாயிருந்தமையின் அராபியர் இதனை ஆதம் மலை என்றார்கள். ஆதம் என்னும் ஆதிப்பிதாவைக் குறிக்க இலிங்க வடிவமே கையாளப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது.3 “சிவன்” மாதப் பெயர் முற்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சிறப் புடையதாயிருந்தது.4 மலையாளத்தில் இன்றும் இராசிப் பெயர்களே மாதங்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடு ஒவ்வொரு வடிவுடையதாகக் கொண்டு வழிபடப்பட்ட தென்று மொகஞ்சொதரோ பழம் பொருள் ஆராய்ச்சியினால் விளங்கு கின்றது. மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் எனத் தெரிகின்றது.5 பாபிலோனில் கிடைத்த களிமண் ஏடுகளில் சிவன் மாதம் குறிக்கப்பட்டுள்ளது. சிவன் மாதம் சிமானு எனவும் பட்டது. மொசே என்பவர் யேகோவா அருளிய பத்துக்கட்டளைகளைச் சிவன் மாதத்தின் ஆறாவது நாள் சினாய் மலைமீது நின்று மக்களுக்கு வெளி யிட்டார்1 என்று கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. மொசேயின் காலம் கி.மு.1500 வரையில் இத்துணைப் பழைய காலத்தி லேயே, சிவன், மாதத்தின் பெயராயிருந்ததெனக் கொள்ளின் அப்பெயர் மக்களிடையே அதனினும் பன்னெடுங்காலம் முன்தொட்டு வழக்கி லிருந்திருத்தல் வேண்டும். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் மக்கள் மொசேக்கு மிக நீண்டகாலம் முன்தொட்டே சிவன் என்னும் ஒரு கடவுளை வழிபட்டார்கள் என்று நாம் நன்கு துணிதல் கூடும். சிவன் பின்லாந்து மக்களின் காத்தற் கடவுள் பின்லாந்தில் வாழும் மக்கள் துரானிய வகுப்பைச் சேர்ந்தோர். இம் மக்களின் காத்தற் கடவுள் சிவன். விவிலிய மறையில் சிவன் கடவுள் விவிலிய மறையின் பழைய ஏற்பாடு சிவன் (Chien) என்னும் கடவுளைப் பற்றிக் கூறுகின்றது.2 இக் கடவுளை நன்கு ஆராய்ந்த மேல் நாட்டு அறிஞர் சிவன் என்பது சிவனே என்றும், அது விவிலிய மறையில் சிறிது வேறுபாட்டுடன் திரித்து வழங்கப்பட்டுள்ளதென்றும் காட்டியுள் ளார்கள்.3 சிவன் வழிபாடு மேற்கு ஆசியா கிரீஸ் உரோம் முதலிய நாடு களில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்ததென்றும் பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போயினமையின், தங்கள் தேசத்துக்கும், இடங்களுக்கும் மனப்பான்மைக்கும் பொருத்தமான பழங்கதைகளைப் புனைந்து கட்டினார்கள் என்றும் ஆதர்லில்லி என்பார் கூறுகின்றார். அக்கேடிய மக்களின் விண்மீன் சிவன் அக்கேடிய மக்களின் ஏழு முக்கிய விண்மீன்களில் மூன்றாவது, சிவன் எனப்பட்டது.1 சப்பானிய மக்களின் சிவோ சப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று சிவோ எனப் பட்டது.2 அது வேட்டை ஆடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள். சப்பானிய மக்கள் கோரியா நாட்டினின்றும் சென்று சப்பான் தீவுகளில் குடியேறியவர்களாவர். இவர்கள் சிவலிங்கங்களை முச்சந்தி நாற்சந்தி களில் நட்டு வழிபட்டார்கள். இவர்கள் முற்காலத்தில் இலக்கங்களைத் தமிழ் எழுத்துக்களால் எழுதினார்கள் என்று வடல் (Waddell) என்பார் குறிப்பிட்டுள்ளார். இவை போன்ற பல ஏதுக்களால் சப்பானியரின் சிவோ என்னும் பெயர் சிவன் என்பதன் திரிபு ஆகலாமென நாம் உய்த்துணரலாகும். “சன்” (Sun) சிவன் என்பதன் திரிபு ஞாயிற்றைக் குறிக்க ஆங்கில மொழியில் வழங்கும் “சன்” என்னும் சொல் சிவன் என்பதன் திரிபு எனக்கருத இடமுண்டு.3 இச்சொல்லின் மூலம் அறியப்படவில்லை. கிழக்குத் திசையினின்றும் இச்சொல் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீனியர் “சிவன்” என்பதைச் சியன் என வழங்கினார்கள் என்பது முன் விளக்கப்பட்டது. சிவனே ஆங்கில மொழியில் சன் ஆயிற்று எனக் கருதுதல் பிழையாக மாட்டாது. ‘சிவன்’ மக்கட் பெயர் முற்கால மக்கள் சிவன் எனவும் தமக்குப் பெயரிட்டு வழங்கினர். இவ்வகைப் பெயர்கள் பழைய இலங்கை அரசரிடையே காணப்பட்டது. செய்றோரேயிஸ் என்னும் சுமேரிய அரசனின் மனைவியின் பெயர் சிவன்.1 சிவன் என்னும் பொருள் தரும் எல், பால் என்னும் பெயர்களை மேற்கு ஆசிய மக்கள் தமக்குச் சூட்டியிருந்தார்கள். சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல் ஆதியில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலை முகடு களில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளுக்கு உறைவிடம் என்று கருதப்பட்டன. மலை இல்லாத நாடுகளில் மக்கள் மலைபோன்ற முக்கோணமான செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவமான வடிவத்தை வைத்து வழி பட்டார்கள். எகிப்தியரின் கூர்நுதிச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே ஆகும். எல்லா இடங்களிலும் பெரிய செய்குன்றுகளை எழுப்புவது எளிதன்று; ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்பது பொருள்.2 முக்கோணவடிவான கற்களே பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றுத் தூண்க ளாகும்.3 சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மாத்திரமன்று; இவ்வுலகம் முழுமையிலும் ஒரு காலத்தில் காணப்பட்டமையைப் பற்பலர் நன்கு ஆராய்ந்து காட்டி உள்ளார்கள். விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லப்படுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களே யாகும். கைலை, என்பது பாரத காலத்தில் சிவன் கோயில் கொண் டிருக்கும் மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத் தெரிகிறது. இது பாரதப் போர் நிகழ்ந்தபோது ஒரு நாள் இரவில் கண்ண னும் அருச்சுனனும் குருச்சேத்திரத்தினின்றும் கைலைக்குச்சென்று மீண் டார்கள் எனப்படுவதால் அறியலாம். இலங்கையில் மனுவின் பேழை தங்கியதாகக் கருதப்படும் மலை ஹமெல் எல் (தமெல் எல்) எனப்பட்ட தெனக் தெரிகிறது.4 இன்னும் எல் தொடர்பான பல இடப்பெயர்கள் இலங்கையில் காணப்படுகின்றன. இதனால் ஆதியில் திருக்கோண மலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருந்ததெனக் கருத இடமுண்டு. அது தென் கைலை எனப்படுகின்றது. கைலாய மலை, திருக்கோண மலை முதலியன மற்ற மலைகளிலும் பார்க்கச் சிவலிங்க வடிவம் பெற்றிருத்தலினாலேயே அவை சிவனின் சிறந்த இருப்பிடங்கள் எனப்படுகின்றன.1 வடக்கேயுள்ள சிவன் மலை வடகைலை என்றும் தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை எனவும் படலாயின. ஆதியில் இவ்விடங்களின் பெயர் *எல்+ஐ+அம் = எல்ஐ அம் என்று இருந்ததாதல் கூடும். பின்பு இவ்விடங்களைப் பிரித்தறியும் பொருட்டு வடகை (வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்தி லுள்ள) என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டனவாகலாம். அப் பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வட கைலாயம் தென் கைலாயம் என்று வழங்கலாயின என்று யாம் கருதுகின்றோம். பல்பூர் என்னும் ஆசிரியர் இலிங்க வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “இலிங்க வணக்கம் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது ஒன்று அன்று. முற்காலத்தில் அஃது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் எகிப்தி லும் காணப்பட்டது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கரின் இலிங்கக் கடவுள் இதுவே யாகும். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாபஸ் என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை உடைத்தெறிந்தானென்று கூறுகின்றது.” இலிங்கத்துக்கு முன்னால் பலி பீடத்தின் மீது சாம்பி ராணி எரிக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாவது நாளில் பலி செலுத் தப்பட்டது. இஃது இந்துக்கள் பரிசுத்த நாளாகக் கொள்ளும் அமா வாசைத் தினமாகும். இஸ்ரவேலர் வழிபட்ட இடபக்கன்று நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரிஸ் கடவுளின் வாகனமாகிய அப்பிஸ் என்னும் இடபமும் இந்நந்தியேயாகும். கொலோனல் டொட் என்பார் இலிங்க வழிபாட்டை அராபிய ரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள் ளார். இலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. இன்றும் இலிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறித்துவ ஆலயக் கட்டடங் களில் காணலாகும். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய விழாவில் 129 முழ உயரமுடைய இலிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டது. இஸ்ரவேலரின் பால் கடவுள் சிவலிங்கமே என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. விவிலிய மறையில் சொல்லப்படும் சியன் (Amos v.) சிந்து நதிக்கரையில் உறையும் மக்கள் சிவா அல்லது சிவன் எனக்கூறும் கடவுளேயாவர். இந்தியாவுக்கு எந்தச்சாதி இலிங்க வழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.” இந்திய நாகரிகமும் அதன் பழைமையும் என்னும் நூலில் முக்கேசி என்பார் இலிங்க வழிபாட்டின் வியாபகத்தைப்பற்றிக் கூறியிருப்பது பின் வருமாறு: “இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத்தைக் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ்வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு காற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத் துள்ளன. சீனா, சப்பான், இந்துக் கடற்றீவுகள், பசிபிக் கடற்றீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு முற்றிலும் மறைந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க மக்களிடையும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பாபிலோனிய மக்களிடையும் இது காணப்பட்டதென்பதைக் கிறித்துவ மறைவாயிலாக அறிகின்றோம். சின்னாள்களின் முன் பாபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோரஸ், இஸ்ரஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக் கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ்வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஒழிப்பதற்குக் கிறித்துவ குருமார் மிக ஊக்கம் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள் கிறித்துவ ஆலயங்கள் பலவற்றுட் காணப்படுகின்றன. அவை `சீலநாகிக்’ (Sheila na-geg) என வழங்குகின்றன. இப்பெயர் ஒரு பொது சிவலிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்தி லும் ஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தனர். இவை கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல் கூடும். சர்மனியிலும் இவ் வணக்கம் தழைத்திருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இலிதுவேனிய மக்கள் (Lithuanians) 14 ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, பூத்தான் (Bhutan) என்னுமிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசம் (Shentoism) என்னும் யப்பானிய மதத்தில் சிவ இலிங்கம் முதன்மையானது.1 அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெக்சிக்கோ, பேரு, கைதித்தீவு (Hyte)களில் சிவ இலிங்கம் வழிபடப்பட்டது. இஸ்பானியர் முதன் முதல் அமெரிக் காவிற்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழி பட்டதைக் கண்டார்கள்.1 ஆபிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது.” இலிங்க வணக்கம் ஆசியாவில் தோன்றி அயல் நாடுகளில் பரவிற்று எனச் சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ் (Bacchus) தயோனிசஸ் (Dionisus) வழிபாடுகள் தொடர்பில் சிவலிங் கங்கள் வழிபடப்பட்டன. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிவலம் செய்யப்பட்டது. எகிப்தியரின் ஒசிரிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்ப தன் இன்னொரு வேறுபாடே. பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரவியிருந்தது பக்கஸ் கெபன் (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் என்னும் கடவுள் கெபி (Hebe) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக் கடவுளுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் புலித்தோலை உடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். இக்காரணத்தைக் கொண்டு கெபன் சிவன் என்றும் கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின் தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் நீர் அருந்தும் மண்டை யும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch) மெரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சிபாஃசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பகேஒஸ் (Bagaios) என்னும் பெயர் களுடன் வழிபடப்பட்டார். வெஸ்ட்ரொப் (Westropp) என்பார் ஆதோனிசஸ் அர்த்த நாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின் முன் எகிப்திலே துர்க்கம்மா என அடியில் எழுதிய துர்க்கையின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சேஸ் என்னும் ஆராய்ச்சி அறிஞரின் கூற்று பின் வருவது; யூதரின் பெத்தெல் (Bethel) அல்லது “கடவுளின் வீடு” புனிதமான கல்லாக இருந்தது. அது கடவுளின் ஆவி உறையும் இடமாக மாத்திரம் கருதப்பட வில்லை. அது கடவுளாகவே கருதப்பட்டது. இக்கற்கள் செமித்திய மக்களுக்கும் அவர்களின் கிளையினருக்கும் புனிதமுடையன. மெக்காவிற் காணப்படும் காபா (Kaba) என்னும் கறுப்புக் கல் இவ்வுண்மைக்குக் காட்சியளிக்கும் சான்றாகும். அராபிய மக்கள் இக்கல்லின் மேல் அளவு கடந்த கடவுள் பக்தி கொண்டிருந்தார்கள்; ஆதலின் மகமது அதனை அழித்துவிட முடியவில்லை. ஆகவே அவர் அதனை விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டுக் கதைகளோடு தொடர்புபடுத்தி அதனைப் புனித முடையதாகக் கொண்டார். ஞாயிற்றுத் தூண்களையும் சந்திரத் தூண்களையும் பற்றி விவிலிய மறையில் பல்லிடங்களில் காண்கிறோம். ஓவியங்களிலும், நாணயங்களி லும், பாஃபியன் அஃப்ரோடைட் (Paphian aphrodite) ஆலயத்தின் ஆதி மூலத்தில் (கருவில்) காணப்பட்ட அடி நிமிர்ந்து தலைகுவிந்த கல்லின் வடிவம் காணப்படுகின்றது. துசிடஸ் (Tucitus) என்பவரும் அதனைப் பற்றிக் கூறியிருக்கின் றார். சாலமனுக்குப் பினீசிய வேலையாட்கள் கட்டிய ஆலயத்தின் முன் மண்டபத்தின் இருபுறங்களிலும் போஃஸ் (Boaz) யாகின் (Yakin) என்னும் இரு கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன. (I King, VII 21) இவை பினீசிய மக்களால் தையர் நகரில் மெல்கார்த் (Melkarth) என்னும் ஆலயத்தில் பொன்னாலும் மரகதத்தாலும் செய்து நிறுத்தப் பட்டிருந்தனவென்று ஹெரதோதசு கூறிய (Herodat - II - 44) அவைகளை ஒத்தன.1 பௌத்தமதத்தினரும் இலிங்க வழிபாட்டினரே பௌத்த மதத்தின் அடிப்படை ஞாயிற்று வழிபாடே என்பது அவர்களின் மதக்குறியாகிய சுவத்திகத்தைக்கொண்டு நன்கு அறிய லாகும். சுவத்திகம், சிலுவை முதலியன ஞாயிற்றைக் குறிக்கும் அடை யாளங்களே என்று உலக மதவரலாறுகளை ஆராய்ந்தோர் நன்கு கூறி யிருக்கின்றனர்.1 பௌத்த ஆலங்களின் மீது வைக்கப்படும் தூபிகளும், அவர்கள் தகோபா (Dagoba)க்களும் இலிங்க வடிவினவே. இலங்கையிலுள்ள சிவன் ஒளிமலை இலிங்க வடிவமாக (முக்கோணமாக) இருந்தமையினாலேயே புத்த மதத்தினர் அதனைப் புனிதமுடையதாகக் கொண்டனர். அசோக மன்னர் எழுப்பிய சாஞ்சிப் பௌத்த ஆலயத்தில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன.1 சிவலிங்க வழிபாடு இவ்வுலகின் நாகரிக மக்கள், நாகரிக மற்ற மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டதென்பதை ஆராய்ச்சியாளர் நன்கு எடுத்து விரித்து விளக்கியுள்ளார்கள். அவர் தம் கூற்றுக்களை எல்லாம் எடுத்து இங்கு தரப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியு மாதலின் அவைகளை ஈண்டுக் காட்டிற்றிலேம். பெரும்பாலும் மனித இயலாரே (Anthropologist) சிவலிங்க வணக்கம், மக்கள் கூட்டத்தினர் எல்லோரிடையும் காணப்படுவதை நன்கு எடுத்துக் கூறுகின்றனர். சிவலிங்க வணக்கத்தின் வெவ்வேறு வகை வளர்ச்சி ஆதியில் கற்றூண்களே கடவுளின் அருட்குறிகளாக நட்டு வழிபடப்பட்டன. பெரும்பாலும் அவை நிழல் மரங்களின் கீழ் நடப் பட்டன. நிழல் மரத்தின் அயலே கிணறு அல்லது கேணி இருந்தது. முற் கால மக்கள் அவைகளைச் சாதிபேதம் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு களின்றி வழிபட்டார்கள். மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம் முதலிய நாடு களில் மக்கள் சிவலிங்கங்கள் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர்.2 சிவலிங்க வணக்கம் தலை எடுத்திருந்த காலத்தில் தாய்க் கடவுள் வணக்கமும் ஓங்கியிருந்தது. ஒரு காலத்தில் தாயே எல்லா அதிகாரமும் உடையவளாக இருந்தாள். அக்காலத்தில் மக்களிடையே தாய்க்கடவுள் வழிபாடு உண்டாயிற்று. பின்பு தந்தைக்கடவுள் வழிபாடு மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தது. அப்போது மக்கள் தாய்க்கடவுள் தந்தைக் கடவுளரைச் சம பெருமையுடையவர்களாகவே கருதி வழிபட்டார்கள். அஞ்ஞான்று அவர்கள் சிவலிங்கங்களைத் தந்தைக் கடவுளாகவும் மரத்தைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபடலாயினர். சோலைகள் தாய்க்கடவுளின் புனித இடங்களாகக் கருதப்பட்டன. சோலைகளின் நடுவே தாய்க்கடவுளின் அருட்குறியாகவே மரத்தூண் நடப்பட்டு வழிபடலாயிற்று. இவ்வாறு அருள்தறிகள் ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்கலாயின. இன்னொரு வகையில் தாய் தந்தைக் கடவுளரின் தொடக்கம் மக்கள் மண்ணில் நின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதையும், பெண் உயிர்களின் வயிற்றினின்று உயிர்கள் பிறப்பதையும் கண்டார்கள். அவர்கள் பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கும் நிலத்தைத் தாய்க் கடவுளாகக் கொண்டு பலி செலுத்தி அதனை வழிபடுவாராயினர். பின்பு அவர்கள் வானத்தைத் தந்தைக்கடவுளாகக் கொண்டு அதனையும் வழிபட்டனர். வானக்கடவுள் ஞாயிற்றுக் கடவுளாக மாறிற்று. ஞாயிறும் திங்களும் கணவனும் மனைவியும் மேற்கு ஆசிய நாடுகளில், மக்கள், தந்தைக் கடவுளாகக் கருதப் பட்ட கற்றூண்களை ஞாயிறென்றும் தாய்க்கடவுளாகக் கருதப்பட்ட மரத்தூண்களைத் திங்கள் என்றும் கொண்டு திங்களை ஞாயிற்றின் மனைவியாக்கினர். ஆகவே, கற்றூண்களுக்குப் பக்கத்தில் மரத்தூண்கள் நடப்பட்டு வழிபடப்பட்டன. மேற்கு ஆசிய நாடுகளில் திங்கட்கடவுள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. பூமியையும் வானத்தையும் தாய்தந்தைக் கடவுளராய்க் கொண்ட மக்கள் கற்றூண்களையும் மரத்தூண்களையும் ஆண் பெண் வல்லமைகளாகக் கொண்டனர் பூமியைத் தாய்க் கடவுளாகவும் வானத்தைத் தந்தைக் கடவுளாக வும் கொள்ளும் மதமும் இலிங்க வழிபாட்டை ஒப்ப உலகம் முழுமையி லும் பரவியிருந்தது. அவர்கள் ஞாயிற்றை அல்லது தந்தைக் கடவுளைக் குறிக்க வழங்கிய கற்றூண்களைக் கடவுளின் படைக்கும் வல்லமை (Generative power) எனக் கொண்டார்கள்; மரத்தறிகளைப் படைப்புக்களை ஈனும் வல்லமை எனக்கொண்டார்கள். அவர்கள் இலிங்கங்களை ஆண்குறி வடிவாக அமைத்து வழிபடலாயினர். ஆண்குறி மக்களால் மிகவும் புனிதமுடையதாகக் கருதப்பட்டது.1 பெண்குறிகளும் அவ்வாறே. பின்பு தாய்க் கடவுளைக் குறிக்க வழங்கிய மரத்தூண்கள் பெண்குறி வடிவமாக வழிபடப்பட்டன. ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்க வழங்கிய ஆண் பெண் குறிகள் வடிவான உருவங்கள் மேற்கு ஆசியா, அமெரிக்கா, அரப்பா, மொகஞ்சொதரோ முதலிய இடங்களில் காணப்பட்டன. பின்பு இவ்வுலகப் படைப்புகள் எல்லாம் கடவுளின் ஆண் பெண் தன்மைகளால் உண்டாகின்றன என்பதை விளக்கும் பொருட்டும், கடவுள் ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் உடையவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், இருவகை வடிவங்கள் இணைத்துவைத்து வழிபடப்பட்டன.1 அவைகள் பலஸ்தின் மக்களால் எலோகிம் எனப்பட்டன. இதுவே சிவ இலிங்கங்கள் ஆவுடையார் வடிவிற் காணப்படுதற்குரிய காரணமாகும். பூமியைத் தாய்க் கடவுளாக வும் வானத்தைத் தந்தைக் கடவுளாகவும் கொள்ளும் வழக்கு இவ்வுலக முழுமையிலும் ஒருகால் பரவியிருந்தது. படைப்புக்குரிய தொழிலாகிய ஆண் பெண் சேர்க்கை புனிதமுடையதாகவும் அது கடவுளால் விரும்பப் படுவதாகவும் மக்கள் நம்பி வந்தார்கள்.2 மேற்கு ஆசிய நாடுகளில் மக்களால் இவ்வகை நேர்த்திக் கடன்கள் செய்யப்பட்டன. அக்காட்டு நாட்டில் எரெச் என்னும் பட்டினத்தில் ஆலயங்களில் வியபிசாரம் செய்வது சமயக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வகை வழக்கங்களும் தேவதாசிகளின் தொடக்கத்துக்கு ஒரு காரணமாகும். வான் தெய்வம், நிலத்தெய்வங்களின் அவதாரம் அரசரும் அரசியரும் என மக்கள் கருதி அவர்களை உயிருடைய தெய்வங்களாகவும் வழிபடு வாராயினர். இது பற்றியே அரசர் தாம் இராச்சியமேற்று நடத்துவதற்குத் தமக்குக் கடவுள் உரிமை உண்டு எனக் கருதினர் (Devine right of Kings).3 இலிங்கதாரணம் நமது நாட்டில் வீரசைவ மதத்தினர் இலிங்கங்களை அணிகின் றனர். இது வீரசைவ மக்கள் புதிதாகக் கையாண்ட வழக்கன்று; பண்டை நாட்களில் எகிப்து பாபிலோன் கிரீஸ் உரோமை முதலிய நாடுகளிலும் இலிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் இலிங்கங்களைப் பெண்களே அணிந்தனர். இலிங்கங்களை அணிவதால் மலடு நீங்கும் என்றும் தீய ஆவிகள் அணுகா என்றும் மக்கள் நம்பி வந்தார்கள். இலிங்கம் என்னும் சொல் இலிங்கம் என்னும் சொல் வடசொல் எனச் சிலர் கருதுகின்றனர். இது முற்றும் தவறான நினைவு. இலிங்கம் என்னும் சொல் இலங்கு என்னும் அடியாகப் பிறந்தது. எல் என்னும் சொல்லே இல்1 அல் முதலிய சொற்களாக மாறியுள்ளது. மால் என்பதிலுள்ள அல் எல்லேயாகும். எல் என்னும் சொல் இல் இலோஸ், இலியம் முதலிய சொற்களாக மாறி மேற்கு ஆசிய நாடுகளில் வழங்குவதாயிற்று. கடவுளை எலியன் என்பதும் மேற்கு ஆசிய மக்கள் வழக்கு.1 இலிங்கம் என்பது இலங்குவது என்னும் பொருள் தரும் தூய தனித் தமிழ்ச்சொல்.2 இச்சொல்லை வடமொழிச் சொல்லெனக் கருதிப் பலர் ‘லிங்கம்’ என எழுதுவர். தமிழ்ச் சொற்கள் லகரமுதலாக வராவாக லான் இகரம் மொழிக்கு முன் வருதல் வேண்டும். இன்று தமிழில் வழக் கொழிந்து தமிழின் சிதைவுகளாகிய கன்னடம் தெலுங்கு துளு மலை யாளம் முதலிய மொழிகளில் வழங்கும் பல தமிழ்ச் சொற்களுள. அதனை ஒப்பத் தமிழ் வழக்கிலில்லாதனவும், தமிழின் சிதைவுகளுமாகிய பல சொற்கள் வடமொழிக்கண் உள்ளன என்பது மொழி ஆராய்ச்சியாளர் துணிவு. 29. சிவன் மக்கள் வடிவினராதல் ஆதியில் தோன்றிய தாய் தந்தையர் வழிபாடுகளில் தாய்க்கடவுள் பெண்மகள் வடிவாகவும் தந்தைக் கடவுள் ஆண்மகன் வடிவாகவும் கொள்ளப்பட்டார்கள். ஞாயிற்று வணக்கம் ஓங்கிய காலத்தில் அம்மை அப்பர்க் கடவுளர் கற்றூண் மரத்தூண் வடிவுகள் வாயிலாக வழிபடப் பட்டனர்.3 “பின்பு அரசன் ஞாயிற்றின் புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் கொண்டு அரசனை அவர்கள் ஞாயிற்றுக் கடவுளாக வழிபட்ட காலத்தில் மக்கள் சிவனை அரச வடிவினராகக் கொண்டு வழிபடலாயினர். மக்கள் அரசனைக் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசி தாய்க்கடவுளாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டாள். ஆகவே, தாய்க்கடவுள் அரசியின் வடிவைப் பெற்றாள். அரசன் அரசி வடிவான அப்பர் அம்மை வழிபாடு இந்திய நாட்டிலேயே முதற்றோன்றிற்று “அரப்பா மொகஞ்சதரோ முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்ட பழம் பொருள்கள் ஆரியர் இந்திய நாட்டுக்கு வருமுன் அங்கு சைவசமயம் இருந்ததென்பதை ஐயம் அற விளக்குகின்றன. அவ்விடங் களில் காணப்பட்ட பட்டயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஹெரஸ் பாதிரியார் படித்துள்ளார். அதனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சிவமதம் இந்திய நாட்டில் இருந்ததென்பது நன்கு வலியுறு கின்றது. அவ்விடங்களில் வழிபடப்பட்ட இலிங்கங்கள், கடவுளுக்கு உடையனவாகப் பட்டயங்களில் கூறப்படும் மூன்று கண்கள், முத்தலை வேல், பாம்பு, கைக்கோடரி முதலியன ஆரியர் வருகைக்கு முன்னரே நமது நாட்டில் சிவமதம் நன்கு வேரூன்றி இருந்ததென்பதை விளக்குவன.”1 மொகஞ்சதரோ நாகரிகம் இற்றைக்கு 6000 ஆண்டுகள் வரையில் உள்ளது. மேற்குறிக்கப்பட்ட வடிவுகள் சிலவற்றோடு சிவன் மேற்கு ஆசிய நாடுகளில் வழிபடப்பட்டார். இக்கடவுளின் வாகனம் எல்லா நாடுகளிலும் இடபமாகவே காணப்படுகின்றது. கிரேத்தா (Crete) மேற்கு ஆசிய நாடுகளில் இடபங்களுக்கு இமில் இல்லை. இந்திய இடபங் களுக்கே இமில் உண்டு. மேற்கு ஆசிய நாடுகள், சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் இடபங்கள் வழிபடப்பட்டன. அவ்விடபங்களுள் சில இமிலுடையனவாகக் காணப்படுகின்றன. இதனால் இடபவாகன முடைய சிவக் கடவுள் வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங் களுக்குச் சென்றதென ஐயமறப் புலப்படுகின்றது. சிறந்த வரலாற்று ஆசிரியர்களும் இதே ஒத்துடையர்.2 இடப ஊர்தி ஆரியர் வருகைக்குப் பின்னரே இந்திய மக்கள் குதிரையைப்பற்றி அறிந்தார்கள். ஆரியர், தாசுக்கள் எனப்பட்ட தமிழரை வென்றதற்கு ஒரு காரணம் அவர்களிடத்தில் குதிரை இருந் தமையேயாகும். இந்திய மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்த காலத்தில் அவர்கள் மாடு களையே ஊர்திகளாகப் பயன்படுத்தினர். இன்றும் மாடுகளைப் பொதி சுமப்பதற்கு மக்கள் பயன்படுத்துவதை நாம் காணலாம். ஆலயங் களில் கடவுள் வீதிவலம் வரும்போது பேரிகை கொட்டுவோன் இடபத்தின் மீது இருந்து பேரிகை கொட்டுவதைக் காண்கின்றோம். இதனால் ஒரு காலத்தில் இடபங்கள் மக்களுக்கு ஊர்தியாகப் பயன் பட்டனவெனத் தெரிகின்றது. “இடபம் இந்திரனையும் சிவனையும் குறிப்பதாக வழங்கிற்று. செமித்திய சாதிகளுள் இடப வடிவான கடவுள் தலைமையுடையது. இடபத்தோடு தொடர்புபடுத்தப்படாத செமித்திய கடவுள் இல்லை யென்று கூறலாம். திங்கள் கடவுள் கொம்புகளைத் தரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. வலியைக் குறிக்கும் “அபிர்” என்னும் சொல் இடபத்தை உணர்த்தி நிற்கின்றது. எபிரேய மொழியிலுள்ள விவிலிய மறை வாக்கியங்களில் “வலிமையுடையது” என்று வரும் பகுதிகளை இடபம் என்று மாற்றிப் படிக்க வேண்டும். யேகோவாக் கடவுள் முற் காலத்தில் இடபக் கடவுளாக வழிபடப்பட்டார்; அவர் இசிரவேலரின் இடபக் கடவுளாவார். கடவுளை இடபவடிவில் வழிபடுவது எகிப்திய மதத்தினரின் ஒரு பகுதியாரின் கொள்கை. கிரேக்கரின் தயோனிசஸ் என்னும் கடவுள் இடபக் கடவுளாகவே இருந்தார். புலுத்தாக் என்னும் வரலாற்றாசிரியர் தயோனிசஸ், இடபக் கடவுள் எனவே கூறியுள்ளார் எனக் கிரேக்கர் பலர் கூறியுள்ளார்கள்.”1 இடபம் ஞாயிற்றின் குறியாக எல்லாப் பழைய மக்களாலும் கொள்ளப்பட்டது. கிரேக்கர் இடபத்தை ‘எபாபஸ்’ என்னும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றது. பக்கஸ் கடவுள் சிலவேளைகளில் இடபமாக அல்லது மனிதனுக்கும் இடபத்துக்கும் இடையிலுள்ள சிலுவைவடிவாக வழிபடப்பட்டார். இஸ்ரவேலரும், கிரேக்கரும், உரோமரும் ஐயமின்றி இடபத்தை வணங்கினார்கள். புலுத்தா என்பவர் கிரேக்கில் பக்கஸ் கடவுள் இடபத்தின் தலைவடிவாக வழிபடப்பட்டார் எனக் கூறியிருக்கின்றனர்; அமொனியரின் மொலொச் என்னும் கடவுளின் வடிவம் இதுவே அசீரியரின் இடப வணக்கம் எகிப்தி னின்றும் சென்றது எனக் கருதப்படுகின்றது (இலிங்க வணக்கம்).1 “யூதமக்கள் இடபத்தை வணங்கி னார்கள். அரன் (Aaron) என்பவர் இவ் வணக்கத் திற்கு ஆதரவளித்தார். தெரபோ அம் (Teroboam) என்பவர் இரண்டு இடபக்கன்றுகளைச் செய்து ஒன்றைப் பெத்தெலிலும் மற்றதை “தாய்” “Dai” என்னும் இடத்திலும் வைத்தார். இஸ்ரவேலரை எகிப்தினின்றும் தப்ப வைத்த கடவுளாக இடபம் கருதப்பட்டது.”2 “முற்காலத்தில் இங்கிலாந்தில் ஒருவகை வழக்கமிருந்தது. அப்பொழுது கைபிர்டன் (Hybyrdan) மைதானம் என்னும் இடத்தில் ஓர் இடபம் விடப்பட் டிருந்தது. அது வண்டியிலோ ஏரிலோ பூட்டப்படுவதில்லை. மணமான ஒரு பெண் பிள்ளைச் செல்வத்தை விரும்பினால் அவ் விடபமும் பெண்ணும் முன்னே செல்லக் குருமார் பாடிக்கொண்டு முக்கியமான வீதிகளைச் சுற்றி ஆலயவாயிலை அடைவார்கள். பின்பு இடபத்தை அதன் விருப்பம்போல் எங்காவது செல்லும்படி விட்டுவிடுவார்கள். பின்பு பரிசுத்த எட்மொண் (St.Edmond)டில் நாட்டப்பட்டுள்ள கல்லை அப்பெண் முத்தமிடுவாள்.”3 “இடபம் மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் வழிபடப்பட்டது. இந்த இடபத்தின் மீது ஆணையிட இவ்வுலக மக்கள் எல்லோருமே அஞ்சினார்கள் என லிதுவியன் என்பவர் கூறி யிருக்கின்றார்.”1 கிதைதி நாட்டிலே எயுக் என்னுமிடத் தில் இடபத்துக்குத் தனி ஆலயமும் அதன் வழிபாட்டுக்குத் தனிக் குருமாரும் இருந் தார்கள். எங்கெங்கு ஞாயிறு வழிபடப்பட்ட தோ அங்கெல்லாம் இடபம் புனிதமுடைய தாகக் கொள்ளப்பட்டது. பாம்பு சிவன் பாம்பை அணிபவராகக் காணப் படுகின்றார். மொகஞ்சதரோவிலும் பசுபதி எனச் சொல்லப் படும் சிவன் கடவுள் பாம்போடு தொடர்புடையவராகக் காணப்படுகின்றார். இடப வணக்கத்தை ஒப்பப் பாம்பு வணக்கமும் இவ்வுலகம் முழுமையி லும் வியாபகம் அடைந்திருந்தது. பாம்பு வணக்கத்தின் தொடக்கத்துக்குக் காரணம் எவராலும் நன்கு கூற முடியாமல் இருக்கின் றது. ஞாயிற்று வணக்கமும், சிவ இலிங்க வணக்கமும் உள்ள எல்லா நாடுகளி லும் பாம்பு வணக்கமும் காணப்படுகின்றது. பாம்புகள் சிவ இலிங்கங்களோடு தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. பாம்பு வணக்கம் இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்டன. அவைகளைப் பற்றி ஆராய்ந்து பல தனி நூல்கள் வெளி வந்துள்ளன. இவ் வணக்கம் ஒரு மத்திய இடத்தினின்றும் சென்று உலகின் எல்லாப் பாகங்களிலும் பரவிற்று எனக் கருதப்படுகின்றது. தேயிலை, காப்பிப் பானவகைகளும் புகையிலைச் சுருட்டைப் பயன் படுத்துதலும் சில காலத்தில் இவ்வுலக முழுமையிலும் பரவியுள்ளன வாயின், இவ் வழிபாடு ஓரிடத்தினின்றும் உலகின் எல்லாப் பாகங்களுக் கும் சென்றதெனக் கூறுதல் ஒவ்வாத கூற்றாக மாட்டாது. “இவ்வழிபாடு எகிப்து, பலஸ்தின், தையர், பாபிலோன், கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிலும், ஐரோப்பாவில் கெல்தியர், இஸ்காந்து நேவியர்களிடையேயும் காணப்பட்டது; பாரசீகம், அராபியா, இந்தியா, சீனா, திபெத்து, மெக்சிக்கோ, பெரு, அபிசீனியா, யாவா, இலங்கை, பியூசித்தீவு, ஒசேனியாவின் பல பாகங்கள் என்னும் நாடுகளிலும் இவ்வழிபாடு ஓங்கியிருந்தது. சில இடங்களில் உயிருள்ள பாம்பும் வேறு சில இடங்களில் பல பாம்புகளும் கடவுளராக வழிபடப்பட்டன. கிரேக்கரின் முதல் அரசன் பாம்பு மரபிலுள்ளவனென்று கருதப் பட்டான். அபிசீனியர் தம் அரச பரம்பரையின் முதல்வனைப் பாம்பு எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பெருவில் பாம்பு வணக்கம் ஞாயிற்று வணக்கத்தோடு இணைந்து இருந்தது.”1 சூலம் சிவனுடைய கைகளில் இருப்பது சூலம், மழு (கைக் கோடரி) என்னும் இரு ஆயுதங்கள், மேற்கு ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளி லும் கடவுளின் ஆயுதங்கள் சூலம், மழு என்பனவாகவே இருந்தன. மேற்கு ஆசிய மக்கள் சூலத்தை இடியேறு எனக் கொண்டனர். “எல்லாச் சாதியினரும் இடியேற்றை ஓர் ஆயுதம் எனக் கொண்டனர். சால்தீய மக்கள் அதனை முத்தலைவேல் அல்லது கைக்கோடரி எனக் கொண்டனர். அசீரிய, சால்திய கடவுளர் மூன்று கவர் உள்ளதும் நெளிவுடையதுமாகிய இடியேறு என்னும் சூலத்தைக் கையில் பிடித் திருந்தனர். பழைய சால்திய சிற்பங்கள் சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயுள் விழுவதாகக் காட்டுகின்றன. மொகஞ்ச தரோ, அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளில் வழிபாட்டுக் குரிய சூலங்கள் காணப்படுகின்றன. மேற்கு ஆசியா கிரேத்தா முதலிய நாடுகளில் கைக்கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன. இது, வேலை நட்டு முருகக்கடவுளை வழிபடுவதை ஒத்ததாகும். மொகஞ்சதரோவிலும் கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன.1 முற்காலக் கடவுளர் வடிவங்களுக்கு இரண்டு கைகளே இருந்தன இந்திய நாடல்லாத மற்றைய நாடு களின் கடவுளர்கள் இரண்டு கைகள் உடையவர்களாகவே கொள்ளப்பட்டனர். அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங் களில் கடவுளரின் வடிவங்கள் பொறிக்கப் பட்ட பல முத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளில் காணப்படும் அவ் வடிவங்களில் இரண்டு கைகளே உள்ளன. சிவனைக் குறிப்பது என்று சொல்லப்படும் பசுபதியின் வடிவமும் இரண்டு கைகள் உடையதாகவே காணப் படுகின்றது. புத்தர் காலச் சிற்பங்களிலும் கடவுளருக்கு இரு கைகளே காணப்படுகின்றன. கி.பி. 50 வரையில் வட நாட்டில் அடிக்கப்பட்ட பொற்காசில் காணப்படும் சிவன் வடிவத்துக்கு இரண்டு கைகளே உள்ளன. இயற்கைக்கு மாறான கதைகளைப் புனைந்து மக்களுக்குச் சொல்லும் இயல்பு வாய்ந்த புராணிகர் காலங்களில் இயற்கைக்கு மாறாகக் கடவுளருக்கு நான்கு கைகள் கற்பித்துச் சிற்பங்கள் அமைக்கும் வழக்கும் உண்டாயிருக்கலாம். பிற்காலங் களில் நான்கு கைகளளவில் நில்லாது பத்து இருபது கைகள் அமைத்துச் செய்யப்பட்ட பல கடவுட் சிற் பங்கள் கம்போதியாவில் காணப்படுகின்றன. மாக்டானல் என்னும் ஆசிரியர் இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து கூறியிருப்பதாவது: “முதலாம் நூற் றாண்டின் முடிவில் இந்துக் கடவுளரைச் சிற்பங் களில் அமைக்கும் முறையில் புதியமாறுதல் ஒன்று உண்டாயிற்று. அதற்கு முன் பௌத்த சிற்பங்களில் கடவுளர் இரண்டு கைகள் உடைய வர்களாகவே காணப்படுகின்றனர். கி.பி. 50 வரையில் இரண்டாம் கட்பிசிஸ் என்பவன் அடித்த பொன் நாணயத்தில் காணப்படும் சிவன் வடிவம் இரண்டு கைகள் உடையதாகவே காணப்படுகின்றது.”1 முற்காலக் கடவுளருக்குக் கொம்புகள் மேற்கு ஆசியா இங்கிலாந்து பிரான்சு எகிப்து இந்தியா முதலிய நாடுகளில் முற்காலக் கடவுளரின் தலைகளில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. அரசரும் பெருமக்களும் இரண்டு கொம்புகளை அணிந்திருந்தார்கள். கொம்புகள் கடவுள் தன்மையையும் அதிகாரத்தை யும் குறிப்பனவாகும். மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள பசுபதிக் கடவுளின் தலையில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. “கொம்புள்ள கடவுளர் பாபிலோன், அசீரியா என்னும் இடங் களில் பெரிதும் காணப்பட்டனர். பெரிய தந்தைக் கடவுளும், பெரிய தாய்க் கடவுளும் கொம்புகளை அணிந்திருந்தனர். இதனாலேயே விவிலிய வேதத்தில் கடவுள் தன்மையுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகளுண்டு என்று சொல்லப்பட்டது. கொம்புகள் கடவுள் தன்மையின் அடையாளமாகும் ... அரசனும் அரசியும் தந்தைக் கடவுளாக வும் தாய்க் கடவுளாகவும் வெளியே வந்தபோது முடிமீது கொம்புகளை அணிந்திருந்தார்கள். அரசனும் அரசியும், தந்தைக்கடவுள் தாய்க்கடவு ளரின் பிறப்பினராகக் கருதப்பட்டனர்.” இந்தியாவிலே வெண்கலக் கால முத்திரை ஒன்றில் கொம்புகள் அணிந்த மனித வடிவம் பொறிக்கப்பட் டுள்ளது. அவ்வடிவம் சிவன் எனப்பட்ட பசுபதி எனப்படுகின்றது. அது மூன்று முகமுடையதென்று சொல்லப்படுகின்றது. மறைவாயுள்ள புறத்தில் இன்னொரு முகம் இருப்பதாகத் தெரிகின்றது. கடவுள் எல்லாத் திசைகளையும் பார்ப்பவர் என்னும் கருத்தை அமைத்து அவ்வடிவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் ‘யானுஸ்’ (Janus) என்னும் பெயருடன் நாலுமுகங்கள் உடையகடவுள் காணப்படுகின்றது. நாலு முகங்கள் உடைய வடிவங்கள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் தனித்தனி உண்டாயினவோ என்பது ஐயத்துக்கு இடமானது. ஐரோப்பா வில் காணப்படுவது மொகஞ்சதரோ வடிவத்துக்குப் பின்னுள்ள தாகலாம்.1 சிவப்பு உடை ஞாயிற்று வணக்கமுள்ள நாடுகளில் சிவப்பு ஆடை மிகவும் உயர்ந்த உடையாகக் கருதப்பட்டது. சிவப்பு நிறம் ஒருவகைக் கடவுள் வாழ் உயிர்களினின்றும் எடுக்கப்பட்டது. ஞாயிறு சிவந்த நிறமுடைய தாதலின் ஞாயிற்றுக் கடவுளை வழிபடும் குருமார் ஆதியில் செக்கர் வானம் போன்ற நிறமுடைய ஆடைகளை உடுத்தினர். முற்காலத்தில் அரசனே சிவன் ஆலயக் குருவாயிருந்தானாகலின் அரசரும், அவனுக்கு அடுத்தபடியில் ஆலயக் குருக்களாக வந்த பெருமக்களும் செவ்வுடையை அணிந்தனர். இவ்வகை ஆடைகள் மிக விலையுயர்ந்தனவாயிருந்தன. அரசரும் பெருமக்களுமல்லாத பிறர் இவ் வாடையை அணிய அனுமதிக்கப் பெற்றிலர். எகிப்து பாபிலோன் முதலிய நாடுகளில் கடவுள் விக்கிரங்களுக்குச் சிவப்பு ஆடைகளே உடுக்கப்பட்டன.1 கிரேக்க நாட்டில் குருமார், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடைகளை அணிந்ததனால் கடுந்தண்டனை அடைந்தனர். சில வேளைகளில் கொலைத் தண்டனையும் அடைந்தனர். சிவப்புச்சாயம் பெரும்பாலும் மத்தியதரைக் கடலை அடுத்த நாடுகளில் கிடைத்தது. பினீசியர் அச்சாயம் ஊட்டிய துணிகளைப் பிறநாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். அவர்கள் இந்திய நாட்டுக்குக் கொண்டு வந்து விற்ற அவ்வகை ஆடைகள் பச்சை வடம் எனப் பெயர் பெற்றன. உயர்ந்த மக்கள் அணிதற்கு உரிய இவ் வாடைகள் துறவிகளாலும் பிற கடவுள் அடியாராலும் அணியப்பட்டன. முற்காலத்தில் அணியப்பட்ட சிவப்பு நிற உடைகள் மிக விலை உயர்ந்தனவாயிருந்தமையின் காவிதோய்த்த உடைகள் பிற் காலத்தில் அணியப்படலாயின. இன்று உரோமன் கத்தோலிக்க nபாப் பாண்டவர் “ஸ்கார்லெட்” (Scarlet) என்னும் சிவப்பு ஆடையையே அணிவர். இம் முறையைப் பின்பற்றியே பௌத்த சமயத்தினரும் மஞ்சள் ஆடை உடுப்பது. “தையர் நாட்டுச் சிவப்பு ஆடைகள் உல்லாச வாழ்க்கைப் பொருள்களாக இருந்தன. அவை தரங்களுக்கும் காலங்களுக்குமேற்பப் பலவாறு விற்கப்பட்டன. அவை பெரும்பாலும் விலையேறப்பெற்றன வாயும் பொன்னின் நிறைக்குச் சமமான விலையுடையனவாயும் இருந்தன! அவை ஆலயங்களில் தூக்கவும், குருமார் அரசர்கள் உடுக்க வும் பயன்படுத்தப்பட்டன. மொசே என்பவர் தாம் செய்த கடவுளின் கூட்டுக்கும் (விமானம்) குருமாரின் உடைக்கும் இவ்வாடைகளையே பயன்படுத்தினார். பாபிலோனியர் தம் ஆலய விக்கிரங்களுக்கு இவ் வாடைகளையே உடுத்தினர். தேர் தூலியன் என்பார் எகிப்திய பாபி லோனிய அரசர் இதனைப் பயன்படுத்தியதைக் குறித்துக் கூறி யுள்ளார். கிரேக்கரும் உரோமரும் இதனை நீதிபதிகள், இராணுவ அதிகாரிகள், குருமார் என்பவர்களின் உடையாக மாத்திரம் கொண்டனர். பொது சனங்கள் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை அணியும் பொதுசனங்களுக்கு மரணதண் டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக் கும் சட்டங்கள் செய்யப்பட்டிருந்தன.” சங்கு ஞாயிற்று வழிபாடு காணப்பட்ட எல்லா நாடுகளிலும் சங்கு புனிதமுடைய தாகக் கருதப்பட்டது. அஃது ஆலயங்களில் சிறந்த வாத்தியமாகவும் பயன்படுத்தப் பட்டது. யூத மக்கள் சங்கு வாத்தியத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. சின்ன ஆசியா, மேற்கு ஆசியா, எகிப்து, மத்திய தரை நாடுகள், இந்தியா, சீனா, யப்பான் கிழக்குத் தீவுகள் அமெரிக்கா முதலிய நாடுகளில் எல்லாம் இது பரிசுத்த முடையதாகக் கொள்ளப்பட்டு வந்தமையை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார் கள். சங்கு வாத்தியமும் சங்கும் சிவ பெருமானுக்கு உகந்தன வாக இன்றும் கொள்ளப்பட்டு வருகின்றன. திருமால் கையில் கொண்டிருப்பது சங்கு. சங்கை மக்கள் புனிதமுடையதாகக் கருதினமையினால் போலும் அதனை அறுத்துச் செய்த வளைகளைப் பெண்கள் அணிந்தனர். அவை தீமையை ஓட்டும் வல்லமையுடையன என்று கருதப்பட்டமையின் சங்கு வளைகள் காப்பு என்னும் பெயர் பெற்றன. மக்கள் ஒரு காலத்தில் “சோகி” அல்லது கவடி எனப்படும் கடல் பிராணி யின் ஓட்டைத் தாய்க்கடவு ளின் அடையாளமாக வைத்து வழிபட்டனர். சங்கு புனித முடையதாகக் கொள்ளப்பட்டமையின் அதனிடத்துப் பிறக்கும் முத்து மிகப் புனிதமுடையதாகவும் சீவசத்து அளிப்பதாகவும் கொள்ளப்பட்டு மக்களால் அணியப்பட்டன. முத்துக்கள் முற்கால ஆலயக் குருமாரா யிருந்த அரசர் அரசியராலும், பெருமக்களாலும் அணியப்பட்டன. முத்துக்கள் விலையுயர்ந்தனவாகவும், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியனவல்லாமல் இருந்தபடியினாலும் அவைகளுக்குப் பதில் சீவசத்து அளிப்பவனாகிய உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப் பட்டன. உருத்திராக்கம் அணிதல் கடவுள் தொழும்பர் என்பதைக் குறிப்பதாக இன்று கருதப்பட்டு வருகின்றது. இவ்வாறு சமயத் தொடர் பாக எல்லா மக்களுக்கும் பொதுவில் உள்ள பல கொள்கைகளை நாம் அறிய முடிகின்றது. “சங்கு ஓடு மிகவும் விலை ஏறப்பெற்றது. விவிலிய மறை (Psalm XXVI, 3) அமாவாசைக் காலத்தும் பரிசுத்த விருந்து நாளிலும் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட்டது எனக் கூறுகின்றது. இந்துக்கள் தம் விழாக்களைச் சங்கு ஊதி அறிவிக்கின்றார்கள்”.1 “சிவப்புச் சாயத்தைக் கண்டு பிடித்தவர்களே முதலில் சங்கு வாத்தியங்களைப் பயன்படுத்தினார்கள்”. சங்கு வாத்தியம் கிறித்துவ, யூத, பிராமண, பௌத்த, சிந்தோ மதத்தினராலும், மத்தியதரை இந்திய, மத்திய ஆசிய, இந்தோனேசிய, யப்பான், ஆசேனிய அமெரிக்க நாடுகளின் மக்களாலும் ஆலயங்களில் ஒலிக்கப்பட்டன.”1 சீரிய நாட்டில் சிவன் கடவுள் சீரியா என்பது மேற்கு ஆசியாவிலே மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள நாடு. அங்கிருந்து வந்து மலையாளத்தில் குடியேறிய கிறித்தவர்களே ‘சீரிய கிறித்தவர்கள் எனப்படுகின் றனர். சீரிய நாட்டில் ஒரு காலத்தில் சிவன் கடவுளும் காளியுமே முழுமுதற் கடவுளர் களாக வழிபடப்பட்டனர். இந்திய நாட்டில் சிவன் கடவுள் எவ்வடிவுடன் வழிபடப்பட்டதோ, அவ் வடிவுடனேயே சீரிய மக்களின் தந்தைக் கடவுளும் வழிபடப்பட்டது. சீரிய நாட்டிலே வெண்கலத் தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்ட தந்தைக் கடவுளின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சீரிய மக்கள் தாம் முழுமுதலாகக் கொண்டு வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு அதாத்து (ஆதி?) என்னும் பெயர் இட்டு வழங்கினார்கள். அக்கடவுள் தாடியுடையதாகவும் அடி அகன்று நுனி ஒடுங்கிக் கூராக முடியும் முடியை உடையதாகவும், வலக்கையில் இரண்டு அலகுடைய மழுவை உடையதாகவும் இடக்கையில் கீழ் மூன்றும் மேல் மூன்றுமாக (மும்மூன்று) கவர்களையுடைய இடியேற்றை வைத்திருப்பதாகவும் காணப்படுகின்றது. அக்கடவுளைத் தாங்கி நிற்கும் இடப ஊர்தியின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.1 இக்கடவுள் கையில் பிடித்திருப் பதை நேர் ஒத்த இரட்டைச் சூலம், வேலூர்க் கோட்டைக்குள் இருக்கும் சிவன் ஆலயத்தின் வாயிலிலே சிவன் வடிவாகக் கருங்கல்லில் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ள காவல்கடவுளின் கையில் இருப்பதைப் பார்க்கலாம். கிதைதி நாட்டில் சிவன் கடவுள் சீரிய நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு சின்ன ஆசியா எனப்படும். அங்கு கிதைதி என்னும் பழைய நாடு ஒன்று உள்ளது. கிதைதி மொழி தமிழ்மொழிக்கு மிக இனமுடையதென்றும் அந்நாட்டின் பழைய மொழிக்குரிய எழுத்துக்கள் மொகஞ்சதரோ எழுத்துக்களை ஒத்துள்ளன என்றும், ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். கிதைதி நாட்டிலே பழைய அழிபாடுகளின் சுவர் ஒன்றில் வரையப்பட்டிருந்த பல ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வடிவங்களுள் ஒன்று சீரிய மக்கள் வழிபட்ட அதாத்து என்னும் தந்தைக் கடவுள் போன்றது. இன்னோர் ஓவியத்தில் காணப்படும் வடிவம் இடபத்தின் மீது நிற்கின்றது. இடபத் தின் கொம்புகளில் பூமாலை சூட்டப்பட்டிருக்கின்றது. அது முக்கோண வடிவான வில்லைத் தோளில் வைத்திருக்கின்றது; நீட்டிய கையில் இடியேறு போன்ற கவருள்ள பொருளை வைத்திருக்கின்றது.2 சிங்க ஊர்தியில் வீற்றிருக்கும் தாய்க் கடவுளும் இடப ஊர்தியில் எழுந்தருளியிருக்கும் தந்தைக் கடவுளும் பொறிக்கப்பட்ட பழைய நாணயமொன்றும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது.3 இத் தந்தைக் கடவுள் இடபத்தின் மீது வீற்றிருக்கின்றார். கூரிய முடி அணிந்து இருக்கும் தாய்க்கடவுள் அவருக்குப் பக்கத்தே தண்டும் கேடகமுந்தாங்கிச் சிங்காசனத்தின் மீது இருக்கின்றார். தாய் தந்தைக் கடவுளர் கணவன் மனைவியர்களாவர். இடபத்திலிருக் கும் கடவுளுக்கு இடக்கைப் புறத்தே தாய்க் கடவுள் அல்லது தாய்க் கடவுளுக்கு வலக்கைப் புறத்தே தந்தைக் கடவுளாகக் கிதைதிநாட்டுக் கடவுளர் வைக்கப்பட்டுள்ளார்கள். கிதைதிக் கடவுளர்கள் சிவன் என்னும் கடவுளை மிக ஒத்திருத்தல் நம் கருத்தை மிகக் கவரத்தக்கதாய் இருக்கின்றது. சீரிய மக்கள் இக்கடவுளுக்கு அதாத்து (Adad) என்னும் பெயர் கொடுத்துத் தாம் வழிபடும் கடவுளர் எல்லோருக்கும் தலைவராகக் கொண்டனர். அவர்கள் இக்கடவுளைத் “தனி முதல்” அல்லது “முழு முதல்” என்று வணங்கினர். இக்கடவுள் எல்லா வல்லமையும் உடையவ ராகக் கருதப்பட்டார். இக் கடவு ளின் பாரி அதர்கேட்ஸ் (adar-gates) எனப்பட்டார். இவ்விரு வருமே எல்லாக் கடவுளர்க்கும் தலைவர்களாவர். பாபிலோனி யரும் செமித்தியரும் இத்தாய்க் கடவுளை இஸ்தர் (ஈசுவரி) என்றும் பினீசியர் அஸ்தொ றாதி (astorate) என்றும் பழைய யூதர் அஸ்தறொத்து (astoreth) என்றும் வழங்கினர். கிதைதியிலே சான்கோவர் என்னும் கிராமத்தில் கிட்டிய காலம் வரையில் சுற்று மதில் உடையதும் பரிசுத்த மீன் உறைவதுமாகிய குளம் ஒன்று இருந்தது. இது தொலுக் பாபா என்னும் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு யூபிதர் தொலிசினஸ் என்னும் கடவுளின் ஆலய மொன்று உள்ளது. இவ்வாலயத்திலுள்ள கடவுளே அங்குள்ள மற்றைய கடவுளர் களுக்கு எல்லாம் தலைமை உடையவ ரெனத் தெரிகின்றது. இக்கடவுள் ஒரு கையில் இடியேற்றையும் மற்றக் கையில் இருமுனைகளுள்ள கண்ட கோடரியை (மழுவை)யும் தாங்கி நிற்கின்றார். அவரின் மனைவி சிங்க ஊர்தியுடைய எராசான்ரா என்பவராவர். தாடியுடைய கடவுள் நீட்டிய இடதுகரத்தில் சூலத்தைப் பிடித்துக் கொண்டு நிறையாகச் செல்லும் ஆடவருக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். அவர் ஒருபோது தந்தைக் கடவுளாயிருக்காலம். கிதைதி மக்களின் வான் தெய்வத்தின் அடையாளங்கள் இடபமும் சூலமும் ஆகும். இக்கடவுளின் இரு கற்சிலைகள் வட சீரியாவிலுள்ள சென் யெறிலி என்னும் இடத்திலும் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு சிலைகளிலும் இக்கடவுள் கிதைதி உடைதரித்து, குறுகிய வட்டுடை உடுத்து, முன் வளைந்த செருப்புத்தொட்டு, பிறை வடிவான உடைவாளைப் பக்கத்தே தூங்கும்படி அரையிற் கட்டிய வடிவுடன் காணப்படுகின்றார். தூக்கிய அவருடைய கைகளில் வலக்கை கண்ட கோடரியைப் பிடித்து இருக்கின்றது. இடக்கை சூலத்தைப் பிடித் துள்ளது. பாபிலோனிற் கண்டுபிடிக்கப்பட்ட சிலையில் கடவுள் முடிமீது இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. இவை ஒரு போது இடபத் துடையவாகலாம். யூபிராதஸ் பக்கங்களில் உள்ள மலாதியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிலையில் இடபத்தின் மீது நின்று கையில் சூலத்தைப் பிடித்து இருக்கும் ஒரு கடவுள் காணப் படுகின்றது. கையில் வளைந்த தடி பிடித்தவரும், நீண்ட அங்கி அணிந்த வருமாகிய பூசாரி, ஒரு கையினால் கடவுளை நோக்கி நின்று பலி செலுத்துகின்றார். கிதைதியிற் காணப்பட்ட இன்னொரு சிற்பத்தில் முக்கோண வடிவான வில்லைப் பிடித்து இடபத்தின் மீது நிற்கும் கடவுள் ஒன்று காணப்படுகின்றது. இக் கடவுளைப் பற்றிக் கிற்றுசில் என்னும் கிதைதி அரசனுக் கும் இராம்சே என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் கி.மு. 1290இல் எழுதப்பட்ட சமாதான உடன்படிக்கை ஒன்றால் தெரிய வருகின்றது. இச் சமாதான உடன்படிக்கைப் படிகள் கிதைதி மொழியிலும் எகிப்திய மொழியிலும் எழுதப்பட்ட பட்டையங் களுள் காணப்படுகின்றன. கிதைதிப் பட்டையம் களி மண்ணில் எழுதிச் சூளையில் இடப்பட்டுள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை வாசகங்கள் எகிப்திலே தீப்ஸ் நகரிலுள்ள ஆலயச் சுவர்களில் எகிப்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அப்பட்டையத்தினால் ஞாயிற்றுக் கடவுளே அவர்களின் முதன்மைத் தெய்வம் எனத் தெரிகின்றது. கிதைதி சாசனம் எழுதப்பட்ட களிமண் தட்டில் கிதைதி முத்திரை ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அரசன் இடிக்கடவுளால் தழுவப்பட்டிருக்கிறான். அரசி, அரன்னா என்னும் தாய்க் கடவுளால் தழுவப்பட்டிருக்கிறாள். கிதைதி மக்களின் இவ்வான் கடவுள் கொம்மாசீனிலுள்ள டொலிச்சி என்னுமிடத்தில் நீண்ட காலம் வணங்கப்பட்டவராதல் வேண்டும். ரோமச் சிற்பங்களில் இக்கடவுள் யூபிதர்தொலிசின்ஸ் என்னும் பெயருடன் உயர்ந்த கூரிய முடியணிந்து இடபத்தின் மீது நின்று ஒரு கையில் சூலமும் ஒரு கையில் மழுவும் தாங்கியுள்ளார். இவ்வடிவில் இக்கடவுள் வழிபாடு சீரியா நாட்டில் இருந்து போர் வீரர்களாலும் அடிமைகளாலும் உரோமச் சக்கராதி பத்தியத்துக்குக் கொண்டு சென்று பரப்பப்பட்டது. பெரும்பாலும் எல்லைப் புறங்களிலும் போர்வீரரின் கூடாரங்களிலும் இவ்வழிபாடு ஓங்கி இருந்தது. மக்கள் இவ்வடிவத்துடன் கடவுளை வழிபடும் முறை அரப்பா, மொகஞ்சதரோ காலத்தில் மிகப்பழைமை அடைந்திருந்ததெனத் தெரிகின்றது. சேர்யோன், மார்சல், என்பார் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் நடத்திய ஆராய்ச்சியில் மக்களும் பலவகை விலங்குகளும் சூழ்ந்திருக்க மத்தியில் யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடைய சிவன் பொறித்த முத்திரை ஒன்று காணப்பட்டது. மக்கே என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் மேலும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் பின்பு நடத்திய ஆராய்ச்சியில் இன்னும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் கிடைத்த இவ்வகை முத்திரைகளே மொகஞ்சதரோ முத்திரைகளைவிடக் காலத்தால் முற்பட்டன என்று கருதப்படுகின்றன. இம் முத்திரைகளில் காணப்படும் வடிவங்கள் மக்கள் இறைவனைப் பசுபதி எனக்கொண்டு வழிபட்ட தன்மையை விளக்குகின்றனவென்று எல்லா ஆராய்ச்சியாளரும் ஒரே வகையாகக் கூறியுள்ளனர். சில முத்திரைகளில் சிவன் மூன்று முக முடையவராகவும் வெட்டப்பட்டுள்ளார். முற்காலத்தில் இடியேற் றுடன் இடபத்தையும் இக் கடவுளின் அடையாளமாகக் கொண்டனர். மிருகத்தின் மூர்க்க குணத்திற்கு மாத்திரமன்று, ஆனால் அதன் குரல் இடியேற்றின் குரலை ஒத்திருத்தல் நோக்கியேயாகலாம் என யாம் ஊகித்தல் கூடும். ஆதிகால மனிதன் வானத்தேயுள்ள இடபத்தின் குரலே இடியேறு எனக் கருதியிருக்கலாம். பெண்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற பெண் தெய்வம் பொகாஸ் கூவி (Bogharskui) என்னுமிடத்தில் வான் கடவுளுக்குப் பக்கத்தே இருக்கின்றது. இஃது ஆசிய மக்களின் தாய்க் கடவுளாகலாம். இக்கடவுள் அணிந்து இருக்கும் கூரிய முடியும், அவள் ஏறிச் செல்லும் சிங்கம் அல்லது புலியும், சிங்கங்களால் இழுக்கப்படும் தேருடைய சிலிபி என்னும் தெய்வத்தை நமக்கு நினைவு ஊட்டுகின்றன. சீரிய மக்களின் அதகிராதி என்னும் பெண் தெய்வம் உயர்ந்த முடியணிந்து சிங்கத்தின் மீது இருப்பதாக பாபிலோனில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்வுரு வத்தைக் கிரேக்கர் ரியா (Rea) என வழங்கினர். அவருடைய முழங்கால் களில் இரண்டு சிங்கங்கள் நிற்பதாக அவர்கள் அவர் வடிவைச் சித்திரித்துள்ளார்கள். சின்ன ஆசியாவில் உள்ள தார்சஸ் (Tarsas) என்னும் இடபத்தில் பால்கடவுளுடன் ஆதி என்னும் தாய்க் கடவுளும் வணங்கப்பட்டது. அவர்களின் வடிவங்கள் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின் மீது இருக்கிறாள். தந்தைக் கடவுளைக் கிரேக்கர் சியஸ் (Zeus) கடவுளாகக் கருதினார்கள். உலூசியன் (Lucian) என்பார் இக்கடவுளின் தோற்றம் சியஸ் (Zeus) வடிவை ஒத்துள்ளதெனக் கூறியுள்ளார். ஆனால் சியஸ் கடவுளைப்போலல்லாமல் பால்கடவுள் இடபத்தின் மீது இருந்தார். இவ்வகையான இடிக்கடவுள் பாபிலோனிய ராலும் அசீரியராலும் மிகப் பழைமைதொட்டு வழிபடப்பட்டார். அவருக்கும் அடாட் என்னும் பெயர் உண்டு. அசீரிய சிற்பமொன்றில் முடியில் இரண்டு கொம்புகளை அணிந்து கையில் சூலமும், கண்ட கோடரியும் தாங்கியவ ராக இவர் காணப்படுகின்றார். “அரப்பா புதை பொருள் ஆராய்ச்சி” என்னும் நூலில் வற்ஸ என்பார் கூறுவது : “அவர் (சிவன்) அட்ட ணைக் காலிட்டு ஒரு பீடத்தின் மீது இருக்கின்றார். காற்பெரு விரல்கள் கீழ்ப் பக்கம் வளைந்து நிற்கின்றன; கைகள் விரிந்து இருக்கின்றன; அவை முழங்காலில் தங்கி இருக்கின்றன. மணிக்கட்டு முதல் தோள் வரையும் வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சூலமும் இடபமுமுடைய சிவனின் முற்கால வடிவமே மொகஞ்ச தரோவில் காணப்பட்டதாகும்.1 மொகஞ்சதரோவில் பின்னும் செய்யப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சி என்னும் நூலில் மக்கே என்பவர் கூறியுள்ளது; 22வது இலக்க முத்திரையில் அட்டணைக் காலிட்டுப் பீடம் ஒன்றின் மீது இருக்கும் ஒரு வடிவம் காணப்படுகின்றது. பீடங்களின் கால்கள் இடபத்தின் கால்கள் போல் இருக்கின்றன. கைகளுக்கும் கால்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்தல் பொருட்டு முத்திரை வெட்டுவோன் கைகளை முழங்கால் களில் தங்குமாறு வெட்டியிருத்தல் கூடும். கைகளில் பல வளையங்கள் காணப்படுகின்றன. தலையில் இலைகளுடைய மரக்கிளை காணப்படு கின்றது. அக்கிளை ஆல் இனத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. கொம்பு களாயின் அவை மரக்கிளையின் அடியில் கட்டப்பட்டுள்ளனவாகும். அவ்வடிவத்துக்குப் பக்கத்துக்கு இரண்டும், முன் ஒன்றுமாக மூன்று முகங்கள் உள்ளன. 235ஆவது முத்திரையில் இதே வகையான வடிவம் காணப்படு கின்றது. இதில் பீடமில்லை. வடிவம் நிலத்தின்மீது இருக்கின்றது. தலை அணி இரண்டு கொம்புகளாகவும் கொம்புகளின் இடையே பூங்கொத் தாகவும் காணப்படுகின்றது. தலைமயிர் பின்னால் தொங்குகின்றது. இதற்கு ஒரு முகம்மாத்திரம் இருக்கிறது. 420ஆம் இலக்க முத்திரை பெருப்பித்துக் [Pl. C.(F)] காட்டப் பட்டுள்ளது. இது பெரிதும் பழுதின்றியிருக்கின்றது. சேர் யோன் மார்சல் என்பார் இதனைச் சிவன் என்று குறிப்பிட்டு உள்ளார். இம் மூன்று முத்திரைகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கௌபீன மொன்றைத் தவிர இவ்வடிவங்கள் வேறு ஆடையின்றியே காணப்படு கின்றன. கௌபீனம் இக்காலம் அணியப்படும் இலங்கோடு போன்றது. 222 ஆவது முத்திரையில் இந்த வடிவத்துக்கு ஒரு முகம்தான் உண்டு. 235, 420 முத்திரைகளில் உள்ள வடிவங்களுக்கு மூன்று முகங்கள் உண்டு. 222, 420இல் உள்ள உருவங்கள் பதிந்த பீடத்தின் மீது இருக்கின்றன. ஒரு பீடத்தின் கால்கள் இடபத்தின் பாதங்கள் போன்றன. இவ்வுருவங்கள் எல்லாம் பல வளையங்களை மணிக்கட்டு முதல் தோள்வரையும் அணிந் துள்ளன. 420இல் காட்டப்பட்ட வடிவம் முக்கோண வடிவான அணி அல்லது மணிகள் கோத்த பல வடங்களை அணிந்து இருக்கின்றது. தலை மயிர் எப்படி முடிந்து இருக்கின்றது என்று அறிவது கடினமாக இருக் கிறது, 235 ஆவதில் காட்டப்பட்டுள்ள உருவத்தின் மயிர் கயிறுபோல் பின்னே தொங்குகின்றது.1 420 ஆவது முத்திரையில் மனித வடிவத்தைச் சூழ்ந்து ஆறு விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. இடப்பக்கத்தில் யானை யும் புலியும் நிற்கின்றன. அவைகளுக்கு இடையில் மனிதன் ஒருவன் நிற்கின்றான். வலப்புறத்தில் காண்டாமிருகமும் எருமையும் நிற்கின்றன. கடவுள் வீற்றிருக்கும் பீடத்தின் கீழ் இரண்டு மான்கள் அல்லது மலை யாடுகள் நிற்கின்றன. சேர்யோன் மார்சல் என்பார் இவ்வடிவம் சிவனின் பசுபதி என்னும் தன்மையை விளக்குவதெனக் கூறியுள்ளார். சேர்யோன் மார்சல் கூறியுள்ளது வருமாறு; நிலக்கடவுள் தாய்க் கடவுளர்களின் பக்கத்தில் மொகஞ்சதரோவில் நிர்வாணமான ஒரு வடிவம் காணப்படு கின்றது. அதனைப் பார்த்தவுடன் அது வரலாற்றுக் காலத்தைய சிவனுக்கு முற்பட்ட வடிவம் எனத் தெரிகின்றது. மூன்று முகமுடைய அவ் வடிவம் பதிந்த ஒரு பீடத்தின் மீது யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையில் இருக்கின்றது. சிவமதத்தை ஒப்ப யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே ஆரம்பமாகி இருந்தது. இந்து ஐரோப்பியர் காலத்திலே இதிகாச காலம் வரையில் யோகத்தைப்பற்றி ஏன் அதிகம் கூறப்பட வில்லை என்பதையும் இது விளக்குகின்றது. மக்கே என்பாரால் இம் முத்திரை கண்டுபிடிக்கப்படு முன்பே இராம பிரசாத்து சந்திரா XCVIII முத்திரையிலுள்ள வடிவின் தலையை நோக்கி அதன் கண்கள் மூக்கு நுனியை நோக்குகின்றன என்றும், அது யோகத்தின் அடையாளம் என்றும் முடிவுசெய்து உள்ளார். அக்கடவுள் யோகிகளால் தேடி அறியப் படுபவர் மாத்திரம் அல்லாமல் பசுபதியாகவும் விளங்கினார். இஃது அக்கடவுளைச் சூழ்ந்து காணப்படும் புலி, காண்டாமிருகம், யானை, எருமை முதலியவைகளைக் கொண்டு இனிதறிகின்றோம்.1 ஆரியர் சிவ வணக்கத்தைத் தமிழரிடமிருந்து பெற்றார்கள் சிவ வழிபாடு ஆரிய மக்களுக்கு உரியதன்று. அதனை அவர்கள் திராவிட மக்களிடமிருந்து பெற்றார்கள். ஆரியமக்களின் வேதங்களில் கடவுளின் பெயர் சிவன் எனக் காணப்படவில்லை.2 பாரசீகம் கிரீசு முதலிய மற்றைய ஆரியர் நாடுகளில் சிவ வணக்கம் காணப்படாமையால் அஃது இந்து ஆரியர் அறியாதிருந்து பின்பு ஆதி மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளப்பட்டதென நன்கு துணிதல் சாலும். இதனைச் சார்லஸ் எலியட் என்னும் ஆசிரியர் திறம்பட ஆராய்ந்து விளக்கி யுள்ளார்.3 திராவிட இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: ஆரியரின் உருத்திரன் திராவிட மக்களின் கடவுளாவர். உருத்திரன் என்பதற்குச் “சிவந்தவன்” என்பது பொருள். இது சிவன் என்பதன் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. வீலர் (Wheeler) என்பார், சிவன் துரானிய மக்களின் கடவுள் எனக் கூறியுள்ளார். ரெகோசின் என்பார் தமது “மர வணக்கமும், பாம்பு வணக்கமும்” என்னும் நூலில் சிவ வணக்கம் இந்திய நாட்டுக்கே உரியதென்றும் அது வடநாட்டினும் பார்க்கத் தென்னாட்டுக்கே உரிமையுடையது என்றும் கூறியுள்ளார். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr.Stephenson) சிவன் தமிழரின் கடவுள் எனப் புகன்றார். இருக்கு வேதம் இலிங்க வணக்கத்தை இழித்துக் கூறுவதால் வேதகாலத்துக்கு முன் சிவ வணக்கம் திராவிடரிடையே வளர்ச்சியடைந் திருந்ததென கில்பேர்ட் சிலாட்டர் (Dr.Gilbert Slater) என்பார் கூறியிருக் கின்றார். இருக்கு வேதத்தில் உருத்திரன், சிவன் என்னும் பெயரால் அறியப்படவில்லை என்றும் உருத்திரன் உறைபனி மூடிய மலைகளி னின்று இடி முழக்கங்களோடு வரும் இடிக் கடவுளைக் குறித்ததென்றும் வேத ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr. Step-henson) என்பாரே பழைய வேதப் பாடல்களில் சிவன் என்னும் பெயர் காணப் படவில்லை என முதல் முதல் எடுத்துக் காட்டியவராவர். உருத் திரனை அக்கினி எனக் காட்டலாம். அக்கினியையும் உருத்திரனையும் சிவன் எனக் காட்டுதல் முடியாது. தக்கன் சிவனை யாகத்துக்கு அழைக்க வில்லை என்றும் ஆனால் பதினொரு உருத்திரரும் யாகத்தில் வந்திருந் தார்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இந்திய வரலாற்று ஆசிரியருள் ஒரு சாரார் சிவவழிபாடு ஆரிய மக்களால் அறியப்பட்டு இருந்தது என்றும் அது மொகஞ்சதரோ மக்களுக்கு அல்லது தமிழருக்கு உரியதன்றென்றும் வழக்கிடுவாராயினர். ஆரியரே தமிழரின் சமயத் தொடர்புகளுக்கு அதிகாரிகள் என்றும், அவர்கள் வேதங்களில் எல்லாப்பொருள்களும் கூறப்பட்டுள்ளன என்றும் சொல்லும் மூடநம்பிக்கை நீண்டகாலம் நிலவுவதாயிற்று. இக்கருத்தினாலேயே பிராமண மதத்தைக் கைக்கொண்ட தமிழர் வடநாட்டுக் கோத்திரப் பெயர்களை இட்டு வழங்குவதும், வட மொழியைத் தமது மொழி எனக்கொண்டு அச்சொற்றொடர்களைச் சமயக் கிரியைகளில் பயன்படுத்துவதும், தாம் பூதேவர் என இறுமாப்புக் கொள்வதுமாகும். சிவ வழிபாடு தமிழருடைய தென்று உறுதிப்பட்டால் மேற்கூறிய மூடக் கொள்கைகளுக்கு ஆபத்து நேரக்கூடும். அது கருதியே ஒரு கூட்டத்தினர் தமது ஆக்கத்துக்கு மாறுபட்டனவாகத் தோன்றும் வரலாற்று உண்மைகளை எதிர்த்து வருகின்றனர். இந்திய நாகரிகம்1 என்னும் வெளியீட்டில் அமலானந்த கோஷ் என்பார் கூறியிருப்பது பின் வருமாறு: யோகத்தைப்பற்றிய சாதனையும் கொள்கையும் முற்காலப் பிற் கால வேத மதத்துக்கு முற்றும் அன்னியமானவை. இப்பொழுது சண்டா என்பவர் யோகத்தைப்பற்றிப் பழைய சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அறிந்து இருந்தார்கள் என மொகஞ்சதரோப் பழம் பொருட் சிற்பங்களைக் கொண்டு நன்கு விளக்கி உள்ளார்கள். சிந்துவெளி மக்கள் தங்கள் கடவு ளுக்கு ஒரு யோகிக்குரிய எல்லாப் பண்புகளையும் கொடுத்து இருந்தார்கள். படைத்தல் தொழில் செய்வதற்குக் கடவுள் தவம் செய்ய வேண்டும் என அவர்கள் நம்பினார்கள்; தமது போக்கின்படி மனிதர் கடவுளையும் நினைப்பா ரானார். மனிதனை உயர்நிலைப்படுத்தக் கூடிய செயல்களைக் கடவுள ரும் செய்ய வேண்டுமென்பது அவர்களுடைய கருத்து. இந் நம்பிக் கையைக் கொண்டு போலும் சிந்துவெளி மக்கள் கடவுளை யோகத் திருக்கும் வடிவில் வழிபடுவாராயினர். சாங்கிய மதத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாங்கியம் வேதமதத்துக்குப் புறம்பானது. யோகத்தைப்பற்றிய கொள்கை கள் வேத காலத்துக்கு முற்பட்டன. சிவ வணக்கம், ஆரியத் தொடர்பில்லாததா? என்று நீண்ட காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியர் சம்பந்தமான எல்லாம் உயர்வுடையன என்றும் இவ் வுயர்ந்த வழிபாட்டு முறை ஆரிய மதத் தொடர்பு உடையது என்றும் தவறாகக் கருதப்படலாயின. இவ்வணக்கத்தில் ஆரியச் சார்பு உள்ளதென்று காட்டுவதற்கு எவ்வகை ஆதாரமும் கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வழிபாடு இருந்ததென்பதற்கு நல்ல சான்றுகள் உண்டு. இருக்கு வேதத்தில் இரு இடங்களில் ஆரியரின் பகைவரைக் குறிக்கச் சிசினதேவர்கள் என்னும் பிரயோகம் காணப்படு கின்றது. இதனால் ஆரியருக்குச் சிவவணக்கம் உடையதன்று என நன்கு விளங்கும். சம்புத்தீவு நாவற்றீவு அன்று, சிவன் தீவு இந்திய நாட்டோடு தொடர்புற்றுத் தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாயிருந்த பெரிய நிலப்பரப்புக்குச் சம்புத்தீவு என்னும் பெயர் இருந்ததெனப்படுகின்றது. அதற்குக் காரணம் மேருவைச் சார்ந்து பெரிய நாவல் மரம் நின்றமை எனப்படுகின்றது. இக் காரணம் சிறந்ததாகக் காணவில்லை எனத் திராவிட ஆராய்ச்சி (Darvidic Studies) என்னும் நூலுக்குக் குறிப்பு வரைந்த கொலின்ஸ் (M.Collins) என்பார் கூறியிருப்பது பின் வருமாறு : 1சம்பு என்னும் சொல் வேதத்தில் ஆளப்பட்டுள்ளது. அது மங்களம், செல்வம் முதலிய பொருள்களைத் தரும் ‘சம்’ என்னும் அடியாகப் பிறந்தது. ‘பு’ என்பது உண்டாவது என்னும் பொருளைத் தருவது. பிற்காலத்தில் சம்பு சிவனைக் குறிக்கின்றது. செம் (சிவப்பு) என்பது போன்ற ஒரு திராவிடச் சொல்லை நினைவில் வைத்துக் கொண்டே அப்பொருளில் அச்சொல் பயன் படுத்தப்படுவதாயிற்று. சிவப்பு எப்பொழுதும் சிவன் கடவுளோடு தொடர்பு உடையது. மிக முற்காலத்தில் வட இந்தியாவிலும் தென் இந்திய மக்களை ஒத்தோர் வாழ்ந்தார்கள் என்று எனது கருத்திற்படுகின்றது. செம்பு (சிவப்பு) என்னும் தமிழ்ச்சொல்லே சம்பு என உச்சரிக்கப்பட்டது. செம்பு என்னும் திராவிடச் சொல்லின் சமக்கிருத உச்சரிப்பாகிய சம்பு என்பதே சிவப்பு அல்லது சிவப்பன் என்னும் பொருளில் சிவனைக் குறிக்கும் பெயராக வழங்கப்பட்டது. ஆரியர் குடியேறி இருந்த இடத்துக்குத் தெற்கிலேயே சிவ வணக்கம் பரவியிருந்ததாதல் வேண்டும். ஆரியர் தாம் அறியாதிருந்த தெற்கில் உள்ள நாடுகளைச் “சிவன் நாடுகள் என்னும் பொருளில் சம்புத் தீவு என வழங்கினராதல் வேண்டும்”. சிவனும் தமிழும் தமிழ், சிவன் என்னும் இரு சொற்களும் ஒரே பொருளுடையன. சிவன் என்னும் சொல் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிற்று என்பது முன்னோரிடத்தில் காட்டப்பட்டது. ‘தமிழ்’ ஞாயிற்றையே குறித்த சொல்லின் திரிபாதல் வேண்டும். தமிழ் தாமம் என்னும் சொல்லினின்று தோன்றியது என மாகறல் கார்த்திகேய முதலியார் தமது மொழி நூலின் ஓரிடத்தே குறிப்பிட்டுள்ளார். தாமம் என்பதற்கு ஞாயிறு, ஒளி என்னும் பொருள்கள் உள்ளன. மேற்கு ஆசிய நாடுகளில் தாமுஸ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டார். தமிழ்மொழியின் வரலாறு எழுதிய வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தமிழ் என்பதற்கு தாமுஸ் என்னும் பெயர்த் தொடர்பு இருக்கலாமோ என ஐயுற்றார். தாமுஸ், தாமம், எல் என்னும் பெயர்கள் ஆதி மக்களால் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் சில. எல் என்பது பிற்காலத்தே பொதுவில் கடவுளைக் குறிக்க வழங் கிற்று. ஆகவே, மக்கள் ஞாயிற்றுக் கடவுள் என்னும் பொருளில் தாமம் என்பதோடு எல்லையும் சேர்த்து வழங்கினார்கள் ஆகலாம். அது தாமம் எல்லென மருவித் தமெலாகிப் பின் தமிழ் ஆயிற்று என்று நாம் உய்த்து அறியலாம். இவ் வுண்மை மறக்கப்பட்ட காலத்திலேயே மக்களிடையே தமிழ் ஞாயிற்றினின்றும் பிறந்தது; அதன் இலக்கணத்தைச் சிவபெரு மானும், முருகக்கடவுளும், முனிவர்களுக்கு அருளிச் செய்தனர், என்பன போன்ற பழங்கதைகள் தோன்றின. நாட்டுக்குப் பெயர் மக்கள் வழிபடும் கடவுள் பெயர்த் தொடர்பாகத் தோன்றுதலும்; பின்பு நாட்டின் பெயரால் மக்களும் மொழியும் அறியப்படுதலும் இயல்பு. இது பற்றியே சிவன், தமிழோடும், தமிழரின் மதமாகிய சைவத்தோடும் நெருங்கிய தொடர்பு உடையன் என்று சொல்லப்படுகின்றனன். “தமிழ்சிவ மினிமை யெனுந் தனிப்பொருளாம் அமிழ்தெனும் அநாதி யியற்கையாய்ப் பன்னிரு கலையினை யுடைய கதிரவ னென்னத் தலைமையா யமைந்த தனியியற் பிதாமொழி”. பேரிசைச் சூத்திரம். குறிப்பு: நீண்ட காலம் ஆரியம் தமிழ் என்னும் இரு கட்சிகளுக்கிடையில் போராட்டங்கள் நடந்து வந்தன. அக்காலத்தில் பெரும்பாலும் தமிழ்க் கொள்கையுடைய நூல்கள் ஆரியக் கட்சியினரால் அழிக்கப்பட்டு பழைய நூல்களின் பெயர்களால் புதிய நூல்கள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் பழைய கருத்துக்கள் சிலவும் உண்டு. பேரிசைத் சூத்திரம் என்னும் நூலும் பிற்காலத்தவர் எவராலோ பழைய பெயரைக் கொடுத்து எழுதப்பட்ட நூலாகும். சாவகம் மலாயா கம்போதியா பசிபிக் தீவுகளில் சிவன் சாவகம் மலாயா கம்போதியா கிழக்குத் தீவுகள் முதலிய இடங்களிலெல்லாம் சிவமதமே தழைத்தோங்கி இருந்தது. கிறித்துநாதர் பிறப்பதற்குச் சிறிதுகாலத்துக்கு முன்தொட்டுத் தமிழ் மக்கள் மேற் குறித்த நாடுகளில் சென்று குடியேறியுள்ளார்கள். அவர்கள் அவ்விடங் களில் மறுபடியும் தமது சிவ மதத்தை நாட்டினார்கள். சமீப காலத்தில் போர்னியோவிலுள்ள ஒரு மலைக்குகையில் சிவன், யானைமுகக் கடவுள் முதலிய தமிழ்நாட்டில் வழிபடப்படும் கடவுளரின் சிலைகள் பல கண்டு எடுக்கப்பட்டன. அவைகளின் படங்கள் “இலண்டன் இலஸ்ரேட்டட் நியூஸ்” என்னும் மாத வெளியீட்டில் வெளி வந்துள்ளன. அவ்வுருவப் படங்கள் சிலவற்றை யாம் இலங்கையில் நடத்தப்படும் வீரகேசரிப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளோம். சாவகத் தீவுக்கு அயலே உள்ள பாலித் தீவில் இன்றும் சைவமதமும் சைவசித்தாந்தக் கொள்கைகளும் நிலைபெற்றிருக்கின்றன.1 “சாவகத்தீவிற் காணப்படும் அழிபாடுகளுட் பல கோயில்கள் சிவனுக்குரியன. சாவக மக்களின் அமர மாலை என்னும் நூல் பழைமை உடையது. அஃது அம்மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறு கின்றது. அந்நூலினால் அம்மக்கள் சிவனையே தலைமையாகக் கொண்டு வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது. குரு, ஈசுவரன் என்னும் பெயர்கள் சிவனுக்குப் பெயர்களாக வழங்கின. சுமத்திராவில் லாரா யோங்ராங் (Lara Yon-grang) என்னும் இடத்தில் பல அழிபாடுகள் இருக்கின்றன. அவைகளின் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இரு மருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங் களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி அம்மனுமுள்ள அர்த்தநாரீச்சுரத் திரு வடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல அங் குள்ளன. இவை தென்னிந்தியக் கோயில் களில் காணப்படும் உருவங்களை மிக ஒத்தன. போர்க்கடவுளாகியகார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் சாவகத்திற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில் மீது ஏறிச் செல்வது போன்ற வடிவங் களே உள்ளன. ஆறு தலையும் பன்னிரு கைகளுமுள்ள வடிவங்கள் சிலவும் காணப் படுகின்றன. இலிங்கமும் சிவன் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்து நிற்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவடிவங் களும் கிடைத்துள்ளன. பாம்பின் மீது பள்ளி கொள்ளும் திருவுருவங்களும் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இருபக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலித் தீவிற்கண்டு பிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை காகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகங்களுடைய பிரமாவின் சிலையும் சாவகத்தில் காணப்பட்டது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் நடராச மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற் செய்யப்பட்ட சிவன் உருவம் ஒன்றும் கிடைத்தது. “செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபர்ட் (Crawford) என்பார் நியூகினியில் காணப்படும் சமயக் கிரியைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுள் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.” “மலாய்க்குடா நாட்டிலே கோபுராசுவம் (Hopuralsuom) என்னும் இடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அகத்தியர், நடராசர் திரு உருவங்கள் காணப்பட்டன.” கம்போதியாவிலே காணப்படும் நடராசர் திருவுருவங்களும் பிற சான்று களும் அங்குக் குடியேறினோர் தென் னிந்திய மக்களே என்பதை விளக்குகின் றன. கம்போதிய அரசருள் பாலவர்மன் என்பவன் சிறந்த சிவபத்தன். இவன் கி.பி.616 இல் கம்பீரவாணர் என்னும் சிவலிங் கத்தை நாட்டி வழிபட்டான். கம்போதியர் கடவுளருள் சிவனே தலைமை பெற்றிருந் தார்; பிராசர், சினெங், கருபி முதலிய இடங்களில் சிவன் உமையோடு இடபத் தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப் படுகின்றன. இடபத்தின் மீது இருக்கும் வடிவத்தினும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் பல கம்போதியாவில் கிடைத்துள்ளன. “சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன. அவைகளின் எதிரே பொதுமக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவ இலிங்கம் ஒன்று உளது. பெண்கள் இதனை வலம் வந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதில் ஐயம் சிறிதும் இல்லை. மலாயர், யாவகர், மகம்மதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வது போலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ்வாலயத்தில் வழிபடு கின்றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயம் கட்டி அங்குச் சிவஇலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டில் காணப்படுகின்றது.” கம்போதியாவிலே சிவன்கோயில் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காணும் விபரம் பின்வருமாறு : “யோகவர்மன் ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காசு, குதிரை, எருமை, யானை, ஆடவர், மகளிர் பூமாலை முதலியவற்றை அரசர் கவர்ந்து கொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசனின் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளே செல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொது மக்களும் ஆடம்பர உடையுடன் உள்ளே செல்லலாம். அவர்கள் நந்தியாவர்த்த மாலை அல்லாத மாலைகளை அணிந்துகொண்டு உள்ளே செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் எவரேனும் வெற்றிலை போட்டுக் கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர் களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம்; அரசனையன்றி வேறெவராவது ஆலயத் துக்கு முன்னாற் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது, நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட் டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள், திருமாலை வழிபடும் குருக்கள், பொதுமக்களில் சிறந்தோர் முதலிய வர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலை மைக் குரு இவர்களை வரவேற்றுச் சொல்லப் பட்டுள்ள முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண் டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக் கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவு காலம் நரகத்தில் உறைவார்கள்; இக்கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவைகளை உறுதிப் படுத்துகின்றவர்கள் இத்தருமத்தை உண்டாக்கியவர்கள் பெறும் பயனில் பாதியைப் பெறுவர்”. இராவணன் காலத்துக்கு முன்தொட்டு இலங்கைத் தீவில் பல சிவன் ஆலயங்கள் இருந்தனவென்பது ஐதீகம். அசுரரும், இராக்கதரும் சிவனையே வழிபட்டார்கள். திருக்கோணமலையில் இராவணனைப் பற்றிச் சொல்லப்படும் ஐதீகங்களுக்கு அடையாளங்கள் காணப்படு கின்றன. அங்கு இராவணன் வெட்டு என்னும் மலையில் வெட்டப்பட்ட பகுதி காணப்படுகின்றது. சிலாபப் பகுதியில் உள்ள முன் ஈசுவரம் இராவணன் காலத்தது எனப்படுகின்றது. கலிங்க இராசகுமாரனாகிய விசயன் இலங்கைக்கு அரசனான போது (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) அவன் அங்குச் சிவன் ஆலயங்களை எடுத்தான். சில குறிப்புக்கள் ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுள் பிற்காலத்தில் சிவனின் வடிவை அடைந்துள்ளது. இலக்கிய காலத்தில் சிவனைப்பற்றிச் சொல்லப்படுகின்றவை வேதங்களால் அறியப்படாமல் இருந்தன. ஆரியரின் புயல் கடவுளாகிய உருத்திரனுக்குச் சிவனுக்குச் சொல்லப் படும் தன்மைகள் ஒன்றும் கூறப்படவில்லை. பிற்காலங்களில் கூறப்பட்ட வடிவை ஒத்த சிவனின் வணக்கம் கி.மு.2500 வரையில் இருந்தது. செலன்லோயிட் என்பவர் மொகஞ்சதரோ நாகரிகம் அக்காலத்த தென்று உறுதிப்படுத்தியுள்ளார். தெல் அஸ்மார் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொகஞ்சதரோ முத்திரையில் இந்திய யானை, இந்தியக் காண்டாமிருகம், முதலை முதலியன காணப்படுகின்றன.1 “மர வணக்கம், பாம்பு வணக்கம், ஆலமர வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம் முதலியவைகளின் தொடக்கத்தை நாம் கி.மு. 4000 வரையில் காணலாம்.”2 “ஆரியர் கொண்ட உலகத்தைப்பற்றிய கருத்துக்கள் திராவிட ருடையன போல் இருக்கின்றன. திராவிடரின் கடவுளர் ஆரியரின் தெய் வங்களுடன் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பெயர்களும் ஆரியரின் கடவுளர்களுக்கு இடப்பட்டன. இவ்வகை இணைப்பினால் புதிய மதம் உண்டாயிற்று.”3 “திராவிட மக்களின் மலையிலுறையும் சிவந்த கடவுள் என்னும் பொருள் தரும் சிவன் என்னும் பெயர் உருத்திரன் என்று ஆரியத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆரியரால் கொள்ளப்பட்ட திராவிடரின் கடவுள், புராண காலத்தில் உருத்திர சிவன் எனப்பட்டது. ஆரியரின் விஷ்ணு என்னும் கடவுள் தமிழரின் வானக் கடவுளைக் குறிக்கும் விண் என்பதன் மொழிபெயர்ப் பாகும்.”4 “நெருங்கிய திராவிடக் கூட்டத்தினரிடையே சிறிய ஆரியக் கூட்டத்தினரின் கலப்பினால் அதிக மாறுதல்கள் உண்டாயிருக்க மாட்டா. திராவிட அதிகாரிகள், வீரர்கள், கடவுளர் முதலியவர்களை யும், வரலாறுகளையும் ஆரியர் எடுத்துத் தம்முடையனவாக ஆண்டிருக் கின்றனர். இவ்வாறே உலகின் பலபாகங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக பாபிலோனிய அக்கேடிய அசீரிய நாடுகளின் வரலாறுகளை நோக்குங்கள். சிறு தொகையினராகிய ஆரியருக்குக் கங்கைக் கரையை அடைவதற்குப் பலநூறு ஆண்டுகள் ஆயின. அவர்கள் விந்தியமலையைக் கடப்பதற்குப் பல ஆண்டுகளாயின.”1 “சிவ என்ற சொல் தமிழ்ச்சொல்” என்று டாக்டர் கிரையர்சன் (Dr.Grierson) தமது பெருநூலுட் கூறியுள்ளார். அது வடமொழியிற் புகுந்து சைவம் என்பதற்கு அடிப்படையாயிற்று. அது செம்மை என்ற பண்புச் சொல்லடியாகப் பிறந்தது. செம்மை என்பது செந்நிறத்தையும், நேர்மை, நன்மை, மங்க ளம் என்ற பண்புகளை யும் குறிக்கும் சிவப்பு என்னும் சொல் செம்மை யடியாகப் பிறந்ததென் பது தெளிவு. அதுபோல நேர்மை, நன்மை, மங்கலம் என்பவற்றைக் குறிக்கும் சிவம் என்ற சொல்லும் செம்மை யடியாகப் பிறந்ததே. சிந்தாமணியுள் `சிவம்புரிநெறி’ என்ற சொற்றொடர் அப்பொருளிலே வந்துள்ளமை காண்க. பேரின்ப வீடு என்னும் பொருளில் சிவகதி என்ற சொற்றொடர் சிந்தாமணியாசிரியரால் வழங்கப்பட்டுள்ளது.” - கா.சுப்பிரமணிய பிள்ளை M.A., M.L. மெச்சிக்கோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் கோவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.2 ஹெரஸ் பாதிரியார் சிவன் வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது டாக்டர் இலக்ஸ்மன் சரப் (Dr.Laxman Sarap) என்பார் அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதென்றும், அவ்விடங்களில் காணப்பட்ட நாகரிகம் ஆரியருடையது என்றும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாராய்ச்சியை அறிஞர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாராய்ச்சி, இந்திய நாகரிகம் ஆரியருடையது அல்லாததாக இருக்க முடியாது என்னும் கருத்துடைய பழம் போக் காளர் சார்பில் வெளிவந்தது. அக் கட்டுரையில் கூறப்படுவன திராவிடர் நாகரிகத்தையும், சிவன் திராவிடரின் கடவுள் என்பதையும் நிலை நிறுத்தப் போதுமானவை என ஹெரஸ் பாதிரி யார் ஆராய்ந்து கூறியுள்ளவை மிகவும் பாராட்டத் தகுந்தன. அவர் கூறுவது: “மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்துக்குப் பார்க்கப் பிராமண காலத்துக்கு அண்மையிலுள்ள தென சரப் என்பார் கூறுகின்றார். அதனை நாட்டுவதற்கு அவர் சிவனைப் பற்றி எடுத்துக்கொண்டார். சிவனைப் பற்றிய அடையாளங்கள் மொகஞ்ச தரோவில் காணப்படுகின்றன. அவர், சிவன் இருக்கு வேத காலத்தில் சிறு தெய்வமாக இருந்தாரெனக் காட்டி விட்டு, சிவன், புராணகாலம் வரையில் எப்படிப் பெரிய தெய்வமாக வளர்ச்சி யடைந்தார் எனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் சிவ வழிபாடு இருந்ததென்று எந்த ஆராய்ச்சியாள ராலும் இன்று வரையும் காட்டமுடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகத் தானும் இருக்கு வேதத்தில் காணப்பட வில்லை. சிவன் என்னும் சொல் உருத்திர னுக்கு அடையாக இருக்கு வேதத்தின் ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இஃது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்று ஆகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள் படுகின்றான். இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் சிவன் மூர்க்க முடையவராகவும் சிலவேளை சாந்தமுடையவராகவும் கூறப்பட்டுள் ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேச மூர்த்திக்கு உரியதாகச் சொல்லப்படுகின்றது. இருக்கு வேத காலத்தில் இதற்கு இணைகாண முடியவில்லை.” மொகஞ்சதரோவில் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத் தில் காணப்பட்டவை என்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியர் சார்பான சிவமதம் வளர்ச்சி அடைந்திருந்தது. அங்குக் காணப் பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லாதவர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்டவை எவையேனும் ஆரிய ருக்கு உரியவை அல்ல. அங்குக் காணப்பட்ட சிவ அடையாளங்கள் பிராமண காலத்தனவாயின் அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரனின் தண்டு என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி? வேதகால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின் றனர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்ததென்று கூறமுடியாது. வேதகால இருடிகள் இலிங்கத்தைக் கண்டித்தார்கள். ஆனால் அவர் களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சி அடைந் திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குப் போக வேண்டிய தில்லை. அஃது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த திராவிட மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ் சதரோ மக்களின் வணக்கத்தைக் கண்டித்தவர்கள் அங்கு வாழ்ந்த மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவமேதயாகங் கள் இலிங்க சம்பந்த மானவை என்று கூறமுடியாது. அவை இடக் கரானவை. மேல்நாட்டுச் சிறந்த ஆராய்ச்சி யாளரும் கீழ்நாட்டு ஆசிரியரும் சிவ வணக்கம் தமிழருடையதே என்றும், அது பிற்காலத்தில் ஆரிய மக்களால் தழுவப்பட்டதென்றும் ஐயமறக் கூறியுள்ளார்கள். அவைகளைத் தனித்தனி எடுத்து இங்குக் காட்டப் புகின், அவை ஒரு தனி நூலாக விரியுமென அஞ்சி விடுத்தாம். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மாணிக்க வாசக அடிகள் போன்ற பெரியார் கூறிய கருத்துக்கள் பெரிதும் வாய்மையுடை யன வென்பது இன்றைய ஆராய்ச்சிகளால் தெளிவுபடுத்தியமையைப் பார்த்துப் பலர் வியப்படையலாம். வழிபாடு ஆசியா, ஐரோப்பா, ஆப் பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் பண்டு எவ்வாறு காணப்பட்ட தென்றும், காலப்போக்கில் எவ்வாறு உறழ்ந்தும் பிறழ்ந்தும் மாறுபட் டுள்ளன என்றும் பற்பல சான்றுகள் கொண்டு இந்நூலகத்து இயன்ற அளவு நிறுவியுள்ளோம். “குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்”.  தமிழர் பண்பாடு முன்னுரை ஐந்து ஆண்டுகளின் முன் “இந்து சாதனம்” எனும் வார இதழில் தமிழர் பண்பாடு தொடர் புள்ள பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தோம். அக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழர் பண்பாடு” என்னும் நூலாக இப்பொழுது வெளி வந்துள்ளது. தமிழர் பண்பாடு இந்திய நாட்டில் மாத்திரமல்லாமல் உலகின் பலபாகங்களிலும் பரவியிருந்தது. இது சம்பந்தமாகப் பற்பல நூல் களிற் காணப்படும் கருத்துக்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து இந் நூலகத்துக் கூறியுள்ளோம். இந் நூலிற் காணப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சி யாளர் கொண்டுள்ள முடிவுகளைத் தழுவியனவாகும். யாழ்ப்பாணம் 15.3.66 ந.சி. கந்தையா தமிழர் பண்பாடு தோற்றுவாய் தமிழகம் மிகப் பழமை வாய்ந்த நாடு. தமிழகத்தைப் பற்றிய பழைய வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. பழங்கதைகள் போன்ற சில செய்திகளே வரலாறாக இருந்து வருகின்றன. மேல்நாட்டறிஞர் சிலரது அயரா உழைப்பினால் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறுகள் சிறிது சிறிதாக வெளிவந்து கொண்டிருந்தன. அகழ்பொருள் ஆராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சிகளும் பல உண்மைகளை வெளியிட்டன. தமிழக வரலாறு கழிந்த நூறாண்டுகளாகப் படிப்படியே வளர்ந்து கொண்டு வந்திருக்கின்றது. கால்டுவெல் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திரு. வி. கனகசபைப் பிள்ளை அவர்களின் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர், எம். சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழாராய்ச்சி ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களின் தென் மொழி வரலாறு, சேஷ ஐயங்கார் எழுதிய திராவிட இந்தியா, பி.தி. சீனிவாச ஐயங்காரின் “ஆரியருக்கு முந்திய தமிழர் பண்பாடு”, “தமிழர் வரலாறு”, “இந்தியாவிற் கற்காலம்”, சர் ஜாண் மார்சலின் “மொகஞ்ச தாரோ அரப்பா நாகரிகம்” முதலிய நூல்களை நோக்கினால் தமிழக வரலாறு எவ்வாறு படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நன்கு புலனாகும். 1. பண்டைக் காலத் தமிழகம் தமிழ் மக்கள் இந்திய நாட்டில் ஆதிமுதல் வாழ்ந்து வருகிறார் களா? அல்லது பிற நாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டில் குடியேறி னார்களா? என்னும் கேள்விகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரு கின்றன. அவர்கள் ஆதிமுதல் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்களென ஒரு சாரார் கூறினர்: இன்னொரு சாரார் அவர்கள் அயல் நாடுகளினின் றும் வந்து இந்தியாவில் குடியேறினர் என மொழிந்தனர். இக் கருத்துக் கள் பற்றிய ஆராய்ச்சிகள் பல, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு வெளி வந்துள்ளன. தமிழ் மக்கள் அயல் நாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்னும் கொள்கை அரை நூற்றாண்டின் முன் பெரிதுங் கைக்கொள்ளப்பட்டது. இவ்வரலாற்று ஆராய்ச்சிகளை நடத்தினோர் மேல்நாட்டுக் கிறித்தவர்களாக இருந்தனர். ஆதித் தாய் தந்தையர் தோன்றி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஏதேன் தோட்டம் மேற்கு ஆசியாவிலுள்ளதாக அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர் களில் பலர், ஆதித்தாய் தந்தையரினின்றும் தோன்றிய மக்கள் மேற்கு ஆசியாவில் பெருகிப்பின் பிறநாடுகளைச் சென்றடைந்தார்கள் என்னும் கொள்கைகளைத் தழுவி எழுதி வந்தார்கள். அக்காலத்தில் எகிப்திய, பாபிலோனிய, அசீரிய நாகரிகங்களே மிகப் பழமை பெற்றவை எனக் கொள்ளப்பட்டன. மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பரவினார்கள் என்னும் கொள்கை ஆதரவு பெறுவதற்கு இஃதும் ஒரு காரணமாக இருந்தது. 1921ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரை சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் பின் சிந்து நாகரிகம் மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களிலும் பழமையுடையது என்று அறியப்பட்டது. இதன்பின் மேற்கு ஆசிய, எகிப்திய மக்கள் இந்தியாவினின்றும் சென்ற வர்களாகக் காணப்படுகிறார்கள் எனக் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். மிக மிகப் பழைய காலத்தில் இந்தியா முதல் மேற்கு ஆசியா எகிப்து வரை ஒரே இன மக்கள் வாழ்ந்தார்களென்றும், மக்கள் அங்கு நின்று இங்கும், இங்கு நின்று அங்கும் பல தடவைகள் சென்று கொண்டிருந்தார்களென்றும், ஆகவே இந்திய மக்களுக்கும் மேற்கு ஆசிய எகிப்திய மக்களுக்குமிடையில் நாகரிகம் வழிபாடுகளில் ஒற்றுமை காணப்படுகின்றதென்றும் சிலர் கூறுகின்றனர். தமிழ் மக்களின் தாயகம் தென்னிந்தியா. மிக மிகப் பழங்காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பரப்பு நீண்டு விரிந்து கிடந்தது. தென்னிந்தியா அதன் பகுதியாக இருந்தது. அந்நிலப்பரப்பு இலங்கைத் தீவை உட்படுத்திக்கொண்டு இந்தியக் கடலுள் வெகுதூரம் பரந்து கிடந்தது. அதன் பரப்பு தெற்கே நியுசீலந்து வரையும், கிழக்கே தென் சீனா வரையும் மேற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வரையும் பரவிக் கிடந்தது. அப்பொழுது இமயமலை எழவில்லை; கங்கை, சிந்து என்னும் பேராறுகளும் தோன்றவில்லை. விந்திய மலைக்கு வடக்கே கடல் கிடந்தது. அதனைப் புவியியலார் ‘இரெதே’ (Rethey) கடல் எனக் கூறுவர். பிற்காலத்தில் இமயமலை கடலினின்று எழுந்தது. அம்மலையினின்றும் ஊற்றெடுத்துச் சிந்து கங்கை முதலிய ஆறுகள் ஓடின. அவ்வாறுகள் மலையினின்று வாரிக்கொண்டு வந்த வண்டலினால் சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றின. சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றிய பின்பும் விந்திய மலைக்கு வடக்கில் ஒடுங்கிய கடல் கிடந்தது. புவி இயலார் அதனை இராச புத்தானாக் கடல் எனக் கூறினர். 2. கடல்கோள் கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரி, பஃறுளி என்னும் ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. தமிழகத்தின் பெரும்பகுதி இவ்வாறுகளுக் கிடையில் கிடந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கில் நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கிடந்தன. இவற்றைக் குறித்துச் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறுகின்றது. இந்தியக் கடலில் கிடந்த பெரிய நிலப்பரப்பில் ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள். மேல்நாட்டுப் பௌதிக நூலார் இப் பூகண்டத்துக்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். இலெமூர் என்னுஞ் சொல்லுக்குத் தேவாங்கு என்பது பொருள். அங்கு தேவாங்கு போன்ற உயிர்கள் வாழ்ந்தன எனக்கொண்டு அவர்கள் அந்நிலப்பரப்புக்கு இலெமூரியா எனப் பெயரிட்டார்கள். புராணங்கள் அப்பூகண்டத்தைக் குமரிகண்டம் எனக் குறிப்பிடுகின்றன. கடல் பெருக்கெடுத்தல் எரிமலை குமுறுதல் போன்ற இயற்கைக் குழப்பங்கள் இடை இடையே நேர்ந்தன. இக் குழப்பங்களால் பெரிய நிலப்பரப்பின் பகுதிகள் கடலுள் மறைந்து போயின. அங்கு வானுற ஓங்கி நின்ற மலைகளின் சிகரங்களே இந்தியக் கடலுள் கிடக்கும் தீவுக் கூட்டங்கள் எனக் கருதப்படுகின்றன. இலெமூரியாக் கண்டம் மிக அகன்று பரந்துகிடந்தது. ஆகவே அதன் பகுதிகளின் வெப்பதட்ப நிலைகள் மாறுபட்டிருந்தன. வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப, நிறம் மயிரின் தன்மை, உடற் கூறுகளால் மாறு பட்ட மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களே பிற்காலத்தில் மங்கோலியர், நிகிரோக்கள், ஆஸ்திரலோயிட்டுகள், ஆரியர் போன்று நிறத்தாலும் உடற் கூற்றாலும் மாறுபட்ட மக்களாகப் பிரிந்தார்கள். இலெமூரியாக் கண்டம் இயற்கைக் குழப்பங்களால் அழிவெய் திற்று. அப்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் பலர் உயிர் பிழைத்தனர். அவர்கள் சிதறி நாலா திசைகளையும் நோக்கிச் சென்று பற்பல நாடுகளில் குடியேறினார்கள்; ஒரு கூட்டத்தாரோடு இன்னொரு கூட்டத்தார் தொடர்பின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர். காலப்போக்கில் இவர்கள் வெவ்வேறு தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் படியாக மாறுபட்டார்கள். இவ்வாறு மாறுபட்டுப் பெருகிய பல கூட்டத்தினரின் நாகரிகம், சமயம், மொழி, பழங்கதைகள் முதலியன அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதை அறிவிக்கின்றன. உலக மக்கள் எல்லோரிடையும் கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை நினைவிலிருந்தது. அப்பழங்கதையின் முக்கியப் பகுதிகள் ஒரே வகையாக உள்ளன. பல்வேறு கூட்டத்தினரிடையே வழங்கும் இப் பழங்கதையும் அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. இலெமூரியாக் கண்டம் இருந்த காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே கடலிருந்தது. இலெமூரியாக் கண்டம் அழிவெய்தியபோது இமயமலை கடலாழத்திலிருந்து எழுந்தது. அதன் சிகரங்களில் கடல் வாழ் உயிர்களின் படிவங்கள் (fossils) காணப்படுகின்றன. அவை இம் மலைத் தொடர் கடலாழத்தினின்றும் எழுந்ததென்பதைத் தெரிவிக் கின்றன. 1“நிலைபெற் றோங்குந் தமிழகத் தாற்றி வுடைமைப் பேறுறுமக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்திப் பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்” 3. மக்கள் வடக்கு நோக்கிச் சென்று குடியேறுதல் இலெமூரியாக் கண்டத்தின் அழிவின் பின்னரும் கன்னியா குமரிக்குத் தெற்கில் இலங்கையை உட்படுத்திய நிலப்பரப்புக் கிடந்தது. இந் நிலப்பரப்பின் தெற்கில் பஃறுளியாறும், வடக்கில் குமரியாறும் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு இப்போதுள்ள கன்னியாகுமரியை அடுத்துச் சிறிது தெற்கில் இருந்ததாகலாம். தாமிரபரணி (பொருநை) ஒரு காலத்தில் இலங்கைக் கூடாக ஓடிக் கொண்டிருந்தமையின் இலங்கை தாமிரபரணி நாடு என அறியப்பட்டதென்றும், தாமிரபரணி என்பதே தபிரபேன் எனச் சிதைந்து வழங்கியதென்றும் சிலர் கூறுவர். கன்னியா குமரிக்குத் தெற்கே கிடந்த நாடுகளைக் கடல் கொண்டது. இதனைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கடல்கோளுக் குப் பிழைத்தோர் வடக்கு நோக்கிச் சென்று குடியேறினர். காலச் செலவில் மக்கட் பெருக்கம் அதிகப்பட்டது. மக்கள் மேலும் மேலும் வடக்கு நோக்கிச் சென்று தங்கினர். வடக்கில் தண்டகம் என்னும் இருண்டு அடர்ந்த பெருங்காடும் விந்தம் என்னும் நீண்டு உயர்ந்த மலைத் தொடரும் கிடந்தன. தண்டகம் என அறியப்பட்ட பெரிய காடு இன்றைய ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா முதலிய நாடு களை அடக்கியிருந்தது. இம்மூன்று நாடுகளின் பரப்பு ஏறத்தாழ எண் பதினாயிரம் சதுரமைல். பெரிய காட்டையும் மலைத்தொடரையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கிச் சென்று குடியேற அவர்களால் முடிய வில்லை. கடற்கரையை அடுத்து வாழ்ந்த மக்கள் கட்டு மரங்களிலும் ஓடங்களிலும் கடலில் செல்லும் பழக்கம் பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர் மேற்குக் கடற்கரை வழியாகக் கடலில் சென்று செழிப்பு மிக்க சிந்து நதிச் சமவெளிகளிற் குடியேறினார்கள். இவர்கள் அங்கு நின்று கங்கைச் சமவெளி வரை சென்று தங்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் பலுச்சித்தானம் வழியாக மேற்கு ஆசியாவை அடைந்தார்கள். பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ் கிறார்கள். அவர்கள் குல முறையில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வழங்கும் பிராகூய் மொழி தமிழ் இனத்தைச் சேர்ந்தது. அம்மொழிக்குரிய பல சொற்கள் தமிழ்ச் சொற்களாகவுமிருக்கின்றன. ஒரு காலத்தில் வடக்கில் தமிழ் வழங்கியதென்பதற்குச் சான்றாகப் பிராகூய் மொழி இருக்கின்றது. பிராகூய் மக்கள் இந்தியாவின்றும் வெளியே சென்றவர்களில் பின் தங்கியவர்கள் எனக் கருதப்படுவார்கள். ஆரியர் மத்திய ஆசியாவினின்றும் புறப்பட்டு இந்தியாவிலும், பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் நுழைவதன் முன், பாரசீகம், இஸ்பெயின், இத்தாலி, ஐசியன் தீவுகள், மேற்கு ஆசியா, ஆசியாமைனர் முதலிய நாடுகளிலெல்லாம் தமிழினத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அபிசீனியர், பிரிட்டனில் கெல்த் மக்கள், எகிப்தியர் முதலானோரும் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களாகப் பழஞ் சரித்தர வல்லார் கூறுவர். நருமதைப் பள்ளத்தாக்கில் உலோதால் என்னுமிடத்தில் அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமிருந்ததாக அறிய வந்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியில் பரவி வாழ்ந்து பழைய சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தார்களெனத் தெரிகிறது. “மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள் ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர் தெற்கட் பஃறுளி யாறு சீர்சால் நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்”1 4. கற்காலம் தொடக்கத்தில் மக்கள் உலோகங்களைப் பற்றி அறிந்திருக்க வில்லை. அக்காலத்தில் அவர்கள் முரடான கற்களையும் தடிகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலப்பகுதி பழங்கற்காலம் எனப் பெயர் பெறும். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் வட இந்தியாவில் சில இடங்களிலும் கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லாயுதங் கள் காணப்பட்ட இடங்கள் கற்கால மக்களின் குடியிருப்புகள் எனக் கருதப்படுகின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடந்து கடற்கோட் பட்ட நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்கால மக்களே வடக்கு நோக்கிச் சென்று குடியேறினார்கள். அக்கால மக்கள் ஆடு மாடுகளைப் பழக்கி வளர்க்கவும் பயிரிடவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வேட்டையாடுவோராகவும் உணவின் பொருட்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிவோராகவுமிருந்தார்கள். முரடான கல்லாயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் படிப்படியே திருந்திய ஆயுதங்களைச் செய்யும் பழக்கம் பெற்றார்கள். அவர்கள் கல்லாயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தஞ் செய்தார்கள். அவை பார்வைக்கு அழகும் வேலை செய்யும் திறனும் பெற்றிருந்தன. இவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதி புதிய கற்காலம் என அறியப்படும். தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் புதிய கற்காலக் குடியிருப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்கால மக்கள் மர நிழல்களிலும் மலைத் தாழ்வாரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்தார்கள். குகைகளில் வாழ்ந்த மக்கள் குகைச் சுவர்களில் அழகிய ஓவியங்களை எழுதினார்கள். ஓவியம் தீட்டும் மை நிற மண்களைக் கல்லிலிட்டரைத்து நீர் விட்டுக் கரைத்துச் செய்யப் பட்டது. ஓவியங்கள், விலங்குகளை மக்கள் வேட்டையாடும் காட்சி களாக அமைந்துள்ளன. இவ்வகை ஓவியங்கள் இந்தியாவில் விந்திய மலைக் குகைகளிலும் மிர்சாப்பூர் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில ஓவியங்களில் கங்காரு, ஒட்டைச்சிவிங்கி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவில் வாழும் விலங்கு. ஒட்டைச்சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படுவது. இந்தியா ஆஸ்திரே லியா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கிடையில் தரை இணைப்பு இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலுமிருந்து வந்த மக்கள் அவ்வோவியங்களை வரைந்திருத்தல் கூடும். ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய பூகண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்திருந்தனவென்றும் பூமியின் கீழிருக்கும் நெருப்புக் குழம்புப் படலத்தை அடுத்த மேலோட்டின் அடியில் வெடிப்பு உண்டானமை யால் இக்கண்டங்கள் நெருப்பில் மிதந்து விலகிச் சென்றன என்றும் 1வெசினர் என்னும் ஜெர்மன் விஞ்ஞானி கூறியுள்ளார். இக்கருத்தைப் பலர் ஆதரித்திருக்கின்றனர். நீகிரோ மக்கட் சார்பும், ஆஸ்திரேலியர்களின் சார்புமுடைய மக்களில் ஒரு சிலர் ஆதிக் குடிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர். முதற் காலத்தில் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா முதலிய கண்டங்கள் இந்தியா வோடு தொடர்பு பெற்றிருந்தமையே அவ்வகை மக்கள் இந்தியாவில் காணப்படுவதற்கு ஏதுவாகலாம். கடல் கோட்பட்ட இலெமூரியாக் கண்டம் மிக விசாலமுடையதாகவிருந்தது. அக்கண்டத்தின் பல்வே றிடங்கள் பல்வேறு வெப்பதட்ப நிலையுடையனவாக இருந்தன. இடங் களின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்ப மக்கள் நிறத்தால் வேறுபட்டிருந் தார்கள். கடல்கோளின்போது பிழைத்திருந்து இந்தியாவில் குடியேறிய மக்களே இந்தியாவில் காணப்படும் நீக்கிரோயிட்டு, ஆஸ்திரலோயிட்டு மக்களென ஒரு சாரார் கூறுவர். புதிய கற்கால மக்கள் புல்லாலும் வைக்கோலாலும் வேய்ந்த சிறு குடிசைகளில் வாழ்ந்தார்கள்; நாய், வெள்ளாடு, செம்மறியாடு, மாடு, எருமை முதலிய விலங்குகளை வளர்த்தார்கள்; பிணங்களை ஈமத்தாழி களில் வைத்துப் புதைத்தார்கள்; மரவுரி, தோல், பஞ்சு ஆடை முதலிய வற்றை உடுத்தார்கள்; மணிகள், சங்குவளைகள், எலும்புகள், சோகிகளை அணிந்தார்கள். மிகப் பழங்காலம் முதல் நெருப்பின் பயன் அறியப்பட் டிருந்தது. தீக்கடை கோல்களைக் கடைந்து தீ உண்டாக்கப்பட்டது. வாணிகம் பண்டமாற்று முறையாக இருந்தது. 5. சிந்துவெளி நாகரிகம் சிந்து ஆற்றுவெளியில் மண்மேடுகள் பல காணப்படுகின்றன. அவை பழங்காலத்திலிருந்த நகரங்களின் இடிபாடுகள். 1921-க்கும் 1922 -க்குமிடையில் மொகஞ்சதாரோ அரப்பா என்னுமிடங்களில் இரு மண்மேடுகள் அகழ்ந்து ஆராயப்பட்டன. அவை அழிந்து போன பழைய நகரங்களாகக் காட்சியளித்தன. இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தொலைவு நானூறு மைல். அந்நகரங்கள் ஆற்றுக்கு அண்மையிலிருந்தன. காலத்துக்குக் காலம் ஆற்றின் படுகை உயர்ந்துகொண்டு சென்றது. நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் வீடுகளையும் பிற கட்டிடங் களையும் அழித்து மேடு செய்து அம்மேட்டில் புதிய கட்டிடங்களை எழுப்பி வந்தார்கள். இரு நகரங்களிலும் இவ்வாறமைந்த ஏழு அடுக்குகள் வெட்டி ஆராயப்பட்டன. ஏழாவது படைக்குக் கீழ் நிரூற்று வந்தமை யால் மேலும் அகழ்ந்து பார்க்க முடியவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்த தொல்பொருள்களை ஆதாரமாகக்கொண்டு அந் நகரங்களின் நாகரிக வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இரு நகரங்களும் ஒரே வகை யாக இருந்தன. இந்நாகரிகம் நருமதை ஆற்றுப் பள்ளத்தாக்கு வரையில் பரவியிருந்ததென்பது உலோதல் அகழ்வு ஆராய்ச்சியால் தெரியவந்தது. மைசூரில் சித்தல்தக் அங்கில்மத் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமென்று அங்கு இருந்ததாகத் தெரியவருகின்றது. ஐதராபாத்திலும் திருநெல்வேலிப் பகுதியிலும் சமாதிக் குழிகளில் கிடைத்த மட்பாண்டங்களில் மொகஞ்சதாரோ முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இலங்கை யில் கேகாலையிலுள்ள பாறை ஒன்றிலும் இவ்வகை எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட மரக்கட்டைகள் பசிபிக்கடலிலுள்ள ஈஸ்டர் தீவிற் காணப்பட்டன. மொகஞ்சதாரோ மக்களின் சமயம் ஆபரணவகை முதலியன இன்னும் தென்னிந்தியாவில் வழங்குகின்றன. மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் இந்தியா முழுமையிலும் மேற்கு ஆசியா, ஆசியாமைனர், எகிப்து, ஐசியன் கடல் தீவுகளிலும் பரவியிருந்ததெனத் தெரிகிறது. இவை போன்ற சில அடிநிலைகளை அநுமானமாகக் கொண்டே உலகம் முழுமையிலும் தமிழ் வழங்கியதெனச் சிலர் கூறியிருக்கின்றனர். “சதுமறை ஆரியம்வருமும் சகமுழுதும் நினதாயின் முதுமொழி நீயனாதியென மொழிகுவதும் வியப்பாமே” (மனோன்மணீயம்) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக காலத்தின் மேலெல்லை கி.மு. 3300; கீழ் எல்லை கி.மு. 2500. சிந்து நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் ஆரியரென்னும் சாதியார் இந்தியாவை அடைந்தனர். சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்கு ஏதுவாக இருந்தவர்கள் ஆரியராகலாமென்றும், வேதங்களில் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் இடையே நடந்தனவாகச் சொல்லப்படும் போர்கள் மொகஞ்சதாரோ மக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் நடந்த போர்களாகலாமென்றும் சிலர் கருதுகின்றனர். முற்காலத்தில் நாகரிகமடைந்த சாதியாரை நாகரிகம் எய்தாத முரட்டுச் சாதியினர் வெற்றிகொண்டனர். மொகஞ்சதாரோ மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்தார்கள். ஆரியரின் குதிரைப் படையே அவர்கள் வெற்றிக்குக் காரணமெனச் சிலர் கூறியுள்ளனர். இஸ்பானியப் போர்வீரர், நாகரிகத்தில் உயர்ந்த மெக்சிக்கரை வெற்றிகொள்வதற்குக் காரணமாக இருந்ததும் குதிரைப் படையே. நாகரிகமெய்திய மக்கள் உல்லாச வாழ்க்கையில் அமர்ந்து போர் செய்யும் திறமையை இழந்தவர் களாக மாறிவிடுகிறார்கள். அக்காலப் போர்முறையில் முரட்டுச் சாதி யினருக்கு நாகரிக சாதியினரை வெற்றிகொள்வது எளிதாக இருந்தது. 6. ஆரியர் வருகை இந்துமாக் கடலுள் கிடந்த பெரிய நிலப்பரப்பு அழிவு எய்திய போது உயிர் பிழைத்திருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் வடதுருவ நாடுகளில் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். குளிர் மிகுந்த நாடுகளில் நீண்டகாலம் வாழ்ந்தமையால் அவர்களின் நிறம் வெண்மையடைந்தது. துருவ நாடுகளில் ஆறுமாத காலம் பகலும் ஆறுமாத காலம் இரவும் உண்டு. வேதங்கள் தேவருக்குப் பகல் ஆறு மாதம் என்றும், இரவு ஆறு மாதம் என்றும் குறிப்பிடுகின்றன. இஃது ஆரியர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றதெனப் பாலகங்காதர திலகர் தமது “வேதங்களில் வடதுருவ உறைவிடம்”1 என்னும் நூலில் குறிப்பிட்டுள் ளார். வடதுருவ நாடுகளில் சில இயற்கை வேறுபாடுகள் தோன்றின. ஆகவே அவை மக்கள் வாழ்க்கைக்குத் தகுதியற்றனவாக மாறின. இயற்கை மாறுபாடுகளால் மக்கள் வாழும் இடங்கள் அவர்கள் உயிர் வாழ முடியாத இடங்களாகவும், மக்கள் வாழ்வதற்கு ஏற்றனவாகாத இடங்கள் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறுவதுண்டு. கோபி வனாந்தரம், சகாரா வனாந்தரம்1 முதலியன முன்னொரு காலத்தில் செழிப்பு மிக்கனவாயும் மக்கள் உறைவிடங்களாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். வடதுருவ நாடு மக்கள் வாழ்ந்துகொண் டிருந்த மக்கள் தெற்கு நோக்கிச் சென்று காஸ்பியன் கடலுக்கும் கருங் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் மந்தை மேய்ப்பவர்களாகவும், மந்தைகள் மேய்வதற்குப் புல் வெளிகளைத்தேடி அலைபவர்களாகவும் இருந்தார்கள். ஒரு காலத்தில் கடும் வறட்சி உண்டாயிற்று. அப்போது அவர் களில் ஒரு கூட்டத்தினர் மத்திய கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று பாரசீகத்தில் தங்கினர். அவர்களின் வருகைக்கு முன் இந்தியா முதல் மேற்கு ஆசியா வரை ஒரே இன மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். சில காலத்தின் பின் அவர்களில் ஒரு கூட்டத்தினர் பாரசீகத்தினின்றும் பெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவின் வட மேற்குப் பகுதியை அடைந்தார்கள். காஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்குமிடை யில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய குழுவினர் பல கிளைகளாகப் பிரிந்து ஐரோப்பாக் கண்டத்தின் பல பகுதிகளை அடைந்தார்கள். காலப் போக்கில் அவர்கள் உள்நாட்டு மக்களோடு கலந்து ஒன்றுபட்டார்கள். இந்தியாவை அடைந்த புதிய மக்கள் ஆரியர் என அறியப்பட் டார்கள். இவர்கள் இந்தியாவை அடைந்தது கி.மு. 1,500க்கும் கி.மு. 1,000க் கும் இடையிலெனப் பெரும்பாலும் கொள்ளப்படுகிறது. ஆரியரின் வருகையின்போது இந்திய நாட்டில் உயர்ந்த நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புதிய மக்கள் சிறிது காலம் தனிமையாக வாழ்ந்தார்கள். அவருட் போர்க்குணமுடைய சிலர் உள்நாட்டு மக்க ளோடு போர் தொடுத்தார்கள். ஆரியருக்கும் உள்நாட்டு மக்களுக்கு மிடையில் நடந்த போர்களைப் பற்றி வேத பாடல்கள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டு மக்கள் மதில் சூழ்ந்த கோட்டைகளில் வாழ்வோராகவும், செல்வச் சிறப்புடைவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் இருசார் மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள். உள்நாட்டு மொழிகளில் ஆரியச் சொற்கள் சில கலந்தன. உள்நாட்டு மொழிகளோடு ஆரியச் சொற்கள் கலந்த பேச்சுமொழிகள் பிராகிருதங்கள் எனப்பட்டன. பௌத்தரும் சமணரும் தொடக்கத்தில் பிராகிருத மொழிகளையே பயன்படுத்தினர். அக்காலத்து வழங்கிய மொழிகளுள் ஒன்று பாளி. விந்தத்துக்கு வடக்கில் வாழ்ந்த மக்கள், மொழி அளவில் ஓரளவு ஆரிய ராக்கப்பட்டார்கள். விந்தத்துக்கு வடக்கிலுள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என அறியப்பட்டன. அங்கு வழங்கிய மொழிகள் பிராகிருத மொழி களாக மாறுபட்டன. பிராகிருதங்கள் இக்காலத்தில் வட நாட்டில் வழங்கும் மொழிகளாக உருவாயின. இம்மாற்றம் கி.பி. பத்தாம் நூற் றாண்டளவில் நேர்ந்தது. 1சேர். எர்பேர்ட் இரிஸ்லி என்னும் இந்திய மேல்நாட்டறிஞர் 2“இந்திய மக்கள்” என்னும் இந்திய மக்களின நூல் ஒன்று எழுதியுள்ளார். அப்பெரு நூலில் இந்தியாவில் ஆதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், அயல் நாடுகளினின்றும் வந்த சிறுபான்மை மக்கள் தமிழர் களோடு கலந்தமையால் திராவிட ஆரியர், திராவிட மங்கோலியர், திராவிட சித்தியர் முதலிய பல சாதியினர் இந்தியாவில் தோன்றினார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இவ்வகை மக்கள் வாழும் இடங் களைப் படம் வரைந்து காட்டியிருக்கின்றார். அவர் கூற்றினையே “என் சைகிளோ பீடியா பிரித்தானிக்கா” என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சி யம் மேற்கோளாக எடுத்து ஆண்டிருக்கின்றது. 7. இதிகாசங்களும் தமிழ் நாடும் பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் என வழங்குகின்றன. இவை வீரரின் வரலாறுகளைக் கூறும் ஒருவகைப் புராணங்கள். இவை தொடக்கத்தில் சிறியவாக இருந்து காலந்தோறும் பின்சேர்ப்புகள் சேர்க்கப்பட்டு வளர்ச்சியடைந்தவை. ஆகவே இதிகாசங்களைக் கொண்டு வரலாற்று உண்மைகளை அறியமுடியாது. இராமாயணக் கதை நிகழ்ச்சி பாரதக் கதை நிகழ்ச்சிக்கு முற்பட்டதென நம்பப்பட்டு வருகின்றது. இராமர் காலத்தில் இராவணன் இலங்கையை ஆண்டான். கோதாவரி ஆற்றுக்குக் கீழே ஞானத்தானம் என்னும் பகுதி இருந்தது. அஃது இராவணனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தண்டகாரணியத்தில் விராதன், கவந்தன், துந்துபி, கரன் முதலியவர்களின் தலைமையில் இராக்கதர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமரும், இலக்குமணரும், இலங்கைக்குச் சென்ற வழியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களை எதிர்ப்பட்டதாக இராமாயணம் கூறவில்லை. சீதாபிராட்டியைத் தேடும் படி சுக்கிரீவன் வானர வீரருக்குச் சொல்லும் பகுதியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களும், பாண்டியர் தலைநகராகிய கவாடபுரமும் குறிக்கப்பட்டுள்ளன. இராமாயண காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கில் மக்கள் குடியேறாத பெருங்காடுகள் கிடந்தன. அவற்றின் இடைஇடையே நாகரிகமற்ற சிறு சிறு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமாயணத்தில் காடடர்ந்தனவாகக் கூறப்படும் இடங்கள் பாரத காலத்தில் மக்கள் குடியேறி வாழும் இடங்களாக மாறியுள்ளன. அருச்சுனன் மலையத்துவச பாண்டியனது மகளாகிய சித்திராங்கதையை மணந்ததாகப் பாரதங் கூறுகின்றது. துரௌபதியின் சுயம் வரத்துக்குச் சென்றிருந்தவர்களுள் பாண்டிய அரசனும் ஒருவனாவன். உதியன் சேரலாதன் என்னும் சேர அரசன் பாரதப்போரில் கலந்துகொண்ட பாண்டவ, கௌரவ படைகளுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகப் புறநானூறு கூறுகின்றது. பாரதப்போர் கி.மு. 1400இல் நிகழ்ந்ததாகக் காலக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாரத காலத்தும் இராமாயண காலத்தும் சிவவழிபாடு உயர்வு பெற்றிருந்தது. அசுரர், இராக்கதர், வானரர் எனப்பட்டோர் சிவ வழிபாட்டினராகவிருந்தார்கள். 8. புராணங்களும் தமிழ் நாடும் பழங்காலத்தில் நாகரிகமடைந்த மக்கள் தமது அரசரின் வரலாறு களை எழுதி வைத்தார்கள். இவ்வரலாறுகளை எழுதியவர்கள் கோயில் பூசகர்களாக இருந்தார்கள். அவர்கள் கோவில்களை எழுப்பியவர்கள், கோவில்களுக்கு மானியம் வழங்கியவர்கள், சமயத்தை ஆதரித்தவர்கள் என்போரைப் புகழ்ந்தும், தம்மோடு மாறுபட்டவர்களை இகழ்ந்தும் எழுதிவைத்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டு இலங்கைப் பௌத்த பிக்குகள் எழுதிவைத்த மகாவம்சமாகும். இவ்வகை வரலாறுகள் புராணங்கள் எனப்பட்டன. புராணங்கள் சிலவற்றில் கூறப்படும் அரசர் காலங்கள் மிகப் பொருத்தமாகவுள்ளன. புராணங்களில் உண்மை வரலாறு களோடு உண்மையல்லாத கற்பனைகளும் விரவியுள்ளன. பழைய புராணங்கள் இறந்து போயினவென்றும் குப்தர் காலத்தில் இப்போதுள்ள புராணங்கள் தொகுத்து எழுதப்பட்டனவென்றும் வரலாற்றாசிரி யர்கள் கூறுவர். அரச அவையில் அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசனோடு போர்க்களஞ்சென்று அவனது வீரம், வெற்றி, புகழ், கொடை முதலியவற்றையும் புகழ்ந்து பாடினார்கள். அரண்மனைப் புலவர் இவ்வகைப் பாடல்களையும் அரசனது முன் னோர் புகழ்களையும் சிறப்புக் காலங்களில் அரண்மனையில் பாடினார் கள். இவ்வகைப் பாடல்கள் சமய சம்பந்தம் பெறாதனவாக இருந்தன. அரசரின் அரண்மனைகளிலிருந்து அரசனின் புகழ்களைப் பாடி னோர் சூதர் என அறியப்பட்டனர். சூத முனிவர் புராணங்களைச் சொன்னார் என வரும் ஐதீகம் இது பற்றியதேயாகும். சூதர் தேரோட்டு வோராகவும் இருந்தார்கள். தமிழ் நாட்டில் புரோகிதரும், அரண்மனையிலிருந்து அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களுமிருந்தார்கள். அவர்கள் அரசர் வரலாறு களையும் அவர் புரிந்த புகழ்ச்சிக்குரிய செயல்களையும் எழுதிவைத் தார்கள். அவை நமக்குக் கிடைக்காதவாறு மறைந்து போயின. மெகஸ் தனீஸ் என்னும் கிரேக்கர் மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் தூதராக இருந்தார். சிவன் முதல் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியரின் எண் 154 என்றும் அவர்களின் மொத்த ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேலவர பாண்டியன் இறுதியாக எழுபத்து நான்கு பாண்டிய அரசரைக் குறிப்பிடு கின்றது. அக்காலத்தில் தமிழ் அரசர்கள் வரலாறுகளைக் கூறும் புராணங்கள் இருந்தன என்பதற்கு இது சான்றாகவுள்ளது. பிற்காலங் களில் நேர்ந்த சாதிச் சண்டை, சமயச் சண்டை, படை எடுப்புகளாலும், நெருப்பு, நீர், செல்லு என்பவற்றாலும் மாண்டுபோன தமிழ் நூல் களோடு அவையும் மறைந்து போயினவாகலாம். 9. தமிழ் நாட்டெல்லை இமயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழ் வழங்கியதென்றும் ஆரியர் வருகைக்குப் பின் வடக்கே வழங்கிய தமிழ் பிராகிருத மொழி களாக மாறுபட்டதென்றும் முன் கூறினோம். ஆரியரின்பழைய பாடற் றிரட்டு எனப்படும் வேதத்தில் அச்சு, ஆணி, உலக்கை, ஊசி, கச்சை, ஓடம், கலம், கணக்கன், குடி, முத்து முதலிய பல சொற்கள் காணப்படு வதை ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர்.1 வடக்கில் தமிழ் பேசும் மக்களும், தமிழும் இருக்கவில்லையாயின் வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் புகுதல் எவ்வாறியலும்? ஆரியரின் வருகைக்குப் பின் பாரசீகர், பாரசீக கிரேக்கர், கிரேக்கர், மங்கோலியர் முதலிய பல சாதியினர் இந்தியா மீது படை எடுத்து வந்தனர். அவர்கள் வடநாட்டின் சில பகுதிகளை ஆட்சி புரிந்தார்கள். சில காலத்தில் அவர்கள் உள்நாட்டு மக்களின் சமயம் ஒழுக்கம் என்ப வற்றைத் தழுவி இந்திய மக்களாகவே வாழ்ந்தார்கள். இக் காரணத் தினாலும் வடக்கில் வழங்கிய மொழிகள் பெரிதும் திரிபடைந்தன. அசோகச் சக்கரவர்த்திக்குப்பின் கலிங்கம் தனி இராச்சியமாகப் பிரிந்தது. மௌரிய ஆட்சிக்குப் பின் ஆந்திர அரசு எழுந்தது. கலிங்க நாட்டை ஆண்ட சேதி அரசரும் ஆந்திர நாட்டை ஆண்ட சாதவாகன ரும் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பிராமணர்களாகிய சாதவாகன அரசர் காலத்தில் ஆந்திர நாடு ஆரிய மயமாயிற்று. கலிங்கம், ஆந்திரம் முதலிய நாடுகளில் வழங்கிய மொழி தெலுங்காக மாறுபட் டது. பழைய தெலுங்கும் கன்னடமும் முன் ஒன்றாக இருந்தனவென்றும், பழந்தமிழுக்கும் பழங்கன்னடத்துக்கும் நெருங்கிய உறவு உண்டென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆந்திர இராச்சியம் வீழ்ச்சியடைந்தபோது பல்லவர், சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர், கதம்பர், பாணர், காகதீயர் முதலிய தமிழையறியாத பல அயல் நாட்டினர் தமிழ்நாட்டின் பகுதிகளை ஆண்டார்கள். இதனால் தமிழ் மொழி வடக்கினின்றும் தெற்கு நோக்கி மாறுபட்டுக்கொண்டு வந்தது. தமிழிற் பிறமொழிச் சொற்கள் பல நுழைந்தன. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே திருப்பதியும் கிழக்கும் மேற்கும் கடலும் தமிழ்நாட்டெல்லை களாக இருந்தன. குமரி என்பதற்குக் குமரி ஆறு என்று உரை ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளார்கள். தொல்காப்பியம் செய்யப்பட்டது சிறிது ஏறக்குறைய கி.மு. 350இல் எனக் கொள்ளப்படுகின்றது. வட வேங்கடம் தென்குமரி என்ற எல்லைக்குள் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் பதின் மூன்று குறுநில நாடுகளும் இருந்தன. பாண்டியர் தலைநகராகிய மதுரையைச் சூழ்ந்த நாடு செந்தமிழ்நாடு என அறியப்பட்டது. தென் பாண்டி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வட தலைநாடு, சீதநாடு, மலாடு (மலை நாடு), புனல் நாடு என்பன ஏனைய நாடுகள். 10. தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பு தமிழ்நாடு மலையும் காடும் கடற்கரையும் வயலுமாகிய இயற்கை அமைப்புகளுடையது. ஆகவே மக்களின் வாழ்க்கை முறைகள் அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப மாறுபட்டிருந்தன. மக்கள் தொடக்கத்தில் மலையும் மலைசார்ந்த இடங்களிலும் குடியேறி வாழ்ந்தார்கள். அவர்கள் காட்டில் கிடைக்கும் காய் கனிகள், கிழங்கு வகைகள், தேன் முதலியவற்றையும் வேட்டையாடுவதாற் கிடைக்கும் விலங்குகள், பறவைகளின் இறைச்சியையும் உண்டார்கள்; சாமை, மலை நெல் முதலியவற்றைப் பயிரிட்டார்கள். விலங்குகளின் தோலையும், மரவுரியையும், இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள். காடு சார்ந்த நிலங்களில் வாழ்ந்தோர் ஆடு, மாடு, எருமை முதலிய வற்றை வளர்த்தார்கள். அவை கொடுக்கும் பால், தயிர், நெய், இறைச்சி முதலியவற்றையும், அவற்றின் விலைக்குப் பண்டமாற்றாகக் கிடைக்கும் நெல்லையும், பிற உணவுப் பொருள்களையும் பெற்றார்கள். காடு சார்ந்த நிலங்களில் வரகு பயிரிடப்பட்டது. கடலோரங்களில் வாழ்ந்தோர் கட்டுமரங்களில் கடல் மீது சென்று மீன் பிடித்தார்கள்; உவர் நிலத்தில் பாத்திகட்டி உப்பு விளைவித் தார்கள். கழுதைகள் மீதும், மாடு பூட்டிய வண்டிகளிலும் உப்பை ஏற்றிச் சென்று அதனை நெல்லுக்கு விலையாக விற்றார்கள். கடலோரங்களில் பனை செழித்து வளர்ந்தது. பனைச் செறிவுகளில் கட்டப்பட்ட குடிசை களில் மக்கள் வாழ்ந்தார்கள்; பனையிலிருந்து கள் எடுத்தார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்தோர்கள் வயல்களுக்கு ஆற்று நீரைப் பாய்ச்சி நெல் விளைவித்தார்கள். ஆற்றுக்குத் தொலைவில் வாழ்ந்தோர் மழை நீரைக் குளங்களில் தேக்கி வைத்து அதனை வயலுக்குப் பாய்ச் சினார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கவும் அவர்கள் அறிந்தார்கள். வெள்ளத்தை ஆள அறிந்தமை யால் அவர்கள் வெள்ளாளர் எனப்பட்டார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்த அறிந்தவர்கள் காராளர் என அறியப்பட் டார்கள். வெள்ளாளர் பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினர். ஆகவே அவர்கள் வேளாளர் எனவும் அறியப்பட்டார்கள். வேள்வி என்பதற்கு உபகாரம் என்னும் பொருளுமுண்டு. வேள் என்பதற்கு மண் என்னும் பொருளுமுண்டு. குயவனுக்கு வேளான், வேட்கோ என்னும் பெயர் களும் வழங்கும். வேளான் என்பதற்கு மண்ணில் வேலை செய்பவன் என்பது பொருள். வேளாளன் என்பதற்கு மண்ணை ஆள்பவன் என்னும் பொருளும் கூறலாம். மலை ஒதுக்குகளிலும் காட்டு ஒதுக்குகளிலும் பாலை நிலம் போன்று ஆங்காங்கு புதர்கள் அடர்ந்த சில பகுதிகளிருந்தன. அங்கு வேட்டை யாடியும் வழிச் செல்வோரைக் கொள்ளையடித்தும் எறும்புகள் புற்றுகளில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தும் உண்டு வாழும் மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் எயினர் என அறியப்பட் டார்கள். 11. பாண்டி நாடு வரலாற்றுக் கெட்டாத பழங்காலம் முதல் தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மரபுகளிலுள்ள அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூன்று மரபுகளுள் பாண்டியர் மரபே மிகப் பழமை யுடையது. “பாண்டி நாடே பழம்பதி” எனத் திருவாசகம் கூறுகின்றது. பின்னர் பாண்டிய மரபின் கிளைகளாக மற்றிரு மரபுகள் தோன்றின. பாண்டியர் மரபு பழமையுடையதாதலின் அம்மரபில் வந்தோர் பண்டையர் என அறியப்பட்டனர். பண்டையர் என்னும் பெயர் திரிந்து பாண்டியராயிற்று. எகிப்தியர் தாம் பண்டு நாட்டினின்றும் சென்று நீல ஆற்றங்கரையில் குடியேறினார்கள் என நம்பி வந்தார்கள் அவர்கள் பண்டு நாடெனக் குறிப்பிட்டது பாண்டி நாடு எனக் கருதப்படுகின்றது. மெகஸ்தீனஸ் என்பவர் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூல் பக்கஸ் (சிவன்) தொடக்கம் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியர் 154 பேர் என்றும் அவர்களின் ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறுகின்றது. இதனாலும் பாண்டியர் மரபு மிகப் பழமையுடையதெனத் தெரிகிறது. மதுரைத் தல புராணம் எழுபதுக்கு மேற்பட்ட பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றது. பாண்டு என்பதிலிருந்து பாண்டியர் என்னும் பெயர் வந்ததெனச் சிலர் கூறியிருக்கின்றனர். பாண்டுவுக்கு முன் பாண்டியர் ஆட்சியிருந்தது. பாரதப்போரில் கலந்து கொண்ட பாண்டவர், கௌரவர் படைகளுக்குத் தமிழரசர் பெருஞ்சோறு வழங்கியதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பாண்டவர் காலத்தில் பாண்டிய இராச்சியம் இருந்ததாகப் பாரதமும் இராமாயணமும் கூறுகின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருப்பதி மலையாகவிருந்தது. திருப்பதிக்குத் தெற்கில் உள்ள நாடுகள் சேர சோழ பாண்டியர்களாலும் குறுநில மன்னராலும் ஆளப் பட்டன. பாண்டி நாடு இக்கால இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி முதலிய நாட்டின் எல்லைகள் வடக்குத் தெள்ளாறும், மேற்குப் பெருவெளியும், தெற்குக் குமரிமுனையும், கிழக்குக் கடலும் என்றும் அதன் பரப்பு ஐம்பத்தாறு காதம் என்றும் இடைக்காலத் தனிப்பாடல் கூறுகின்றது. “வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாந் தெள்ளாறாம் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத்தறு காதம் பாண்டி நாட்டெல்லைப் பதி” பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. பொருநை (தாமிரபரணி) முகத்துவாரத்திலிருந்த கொற்கை என்னும் துறைமுகம் அதன் தலைமைப் பட்டினமாகவிருந்தது. “சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப.” 12. சேர நாடு இக்காலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, மலையாளம் கோயம்புத் தூர் என்று வழங்கும் பகுதிகளும் சேலத்தின் ஒரு பகுதியும் சேர்ந்த நாடு பழங்காலச் சேர நாடாக இருந்தது. கொடுந் தமிழ்நாடு எனப்பட்டவற் றுள் குட்டம், குடம், கற்கா, பூழி எனப்பட்டவை சேர நாட்டைச் சேர்ந்தவை. இந் நாட்டின் எல்லைகள் வடக்குப் பழநியும், கிழக்குத் தென்காசியும், மேற்குக் கள்ளிக்கோட்டையும், தெற்குக் கடலுமென மத்திய காலத் தனிப்பாடல் கூறுகின்றது. “வடக்குத் திசைபழநி வான்கீழ் தென்காசி குடக்குத்திசை கோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமே தெற்கு(ம்) உள்ளேண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு” இதன் தலைநகர் வஞ்சி. வஞ்சி என்பது கருவூரென்று சிலரும், கொடுங்கோளூரென வழங்கும் திருவஞ்சைக்கள மென்று சிலரும் கருதுவர். முசிறி, தொண்டி முதலியன இதன் முக்கிய துறைமுகப் பட்டினங்களாகவிருந்தன. சேர என்னும் பெயர் எப்படி வந்ததெனக் கூற முடியவில்லை. சேர நாட்டில் நாக வழிபாடு பண்டுதொட்டுப் பெருவழக்கிலிருந்து வருகிறது. வேதங்களுக்கு உரை எழுதிய சாயணர் (14-ஆம் நூ.) சாரை என்பதி லிருந்து சேர என்னும் பெயர் வந்ததாகக் கூறியுள்ளார். 13. சோழ நாடு தமிழ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ளது சோழ நாடு. இது கிழக்கே கடலையும், தெற்கே வெள்ளாற்றையும், மேற்கே கோட்டைக் கரையையும், வடக்கே ஏணாட்டுப் பண்ணையையும் எல்லையாகக் கொண்டிருந்ததெனத் தனிப் பாடலொன்று கூறுகின்றது. “கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை யிருபது நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்” இது பெருக்கொழியாத காவிரியாற்றாலும் அதன் துணை ஆறு களாலும் நீர்வளம் பெறும் செழித்த நாடு. சோழ நாடு சோறுடைத்து” என ஒளவையார் சோழ நாட்டைப் புகழ்ந்துள்ளார். காவிரிப்பூம்பட்டி னம், உறையூர், தஞ்சாவூர், குடமூக்கு (கும்பகோணம்), கங்கைகொண்ட சோழபுரம் முதலியவை இதன் சிறந்த நகரங்களாக இருந்தன. இவற்றுள் காவிரிப்பூம்பட்டினமும் உறையூரும் சங்ககாலச் சோழ அரசரின் தலைநகர்களாக இருந்தன. தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்களுக்குத் தலைநகர்களாகும். 14. தொண்டை நாடு தொண்டை நாடு சோழ நாட்டின் பகுதியாக இருந்தது. இது தொண்டையர் எனப்பட்ட சோழ அரசரால் ஆளப்பட்டது. பல்லவர் இராச்சியம் தொண்டை நாட்டிலிருந்தது. சோழ அரசன் ஒருவன் நாக கன்னிகையை மணந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்றும், நாககன்னி தொண்டைக் (கொவ்வை) கொடியை அடையாளமாகக் கட்டிப் புதல் வனைக் கடல் வழியே அனுப்பினாளென்றும், அரசன் அப்புதல்வ னுக்குத் தொண்டையன் என்றும் திரையன் என்றும் பெயரிட்டானென் றும் பழங்கதை இருந்து வருகிறது. தொண்டை நாட்டின் எல்லைகள் மேற்குப் பவழமலை, வடக்கு வேங்கடம், கிழக்குக் கடல், தெற்குப் பெண்ணையாறு என்பன. இதன் பரப்பு இருபது காதம். “மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா(ம்) ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்கு பினாகி திகழிரு பதின்காத நற்றொண்டை நாடெனவே நாட்டு” 15. கொங்கு நாடு இஃது இன்றைய கோயம்புத்தூர் சேலம் மாவட்டங்கள் அடங்கிய நிலவெளிகள். கொங்கு நாடு சேர நாட்டில் அடங்கியிருந்தது. இதன் எல்லைகள் வடக்குத் தலைமலை, தெற்குப் பழநிலை, மேற்கு வெள்ளியங்கிரி மலை, வடக்கு காவிரி நீர் பாய்ச்சும் குழித்தலை. “வடக்குத்தலை மலையாம் 1வையாவூர் தெற்கு குடக்கு வெள்ளிப் பொருப்புக்-குன்று குழித்தண்டலை சூழும் காவிரி நன்னாடாம் குழித்தண்டலை யளவுங் கொங்கு” 16. ஈழ நாடு மிக முற்காலத்தில் இலங்கைத் தீவு தென்னிந்தியாவோடு இணைந் திருந்தது. மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் தூதராக விருந்தார். அவர் இந்தியாவைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அது இறந்து போயிற்று. அதன் பகுதிகள் கிடைத் துள்ளன. அப் பகுதிகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒடுங்கிய ஆறு பிரிக்கிறதென மெகஸ்தீனஸ் குறிப்பிட்டுள்ளார். அனுமார் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றது, இராமரணை கட்டப்பட்டது முதலிய செய்திகள் இராமாயணத்தில் கூறப்படுகின்றன. இவை இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறிய நீரிணையிருந்ததென்பதைத் தெரிவிக்கின்றன. இராமரணை இந்தியாவையும் இலங்கையையும் பிரித்துக்கொண்டிருந்தது. 1480இல் இவ்விணைப்பில் உடைப்புக் கண்ட தாகக் கோயிற் சாசனங்கள் கூறுகின்றன. இலங்கைத்தீவு தென்னிந்தியா வுக்கு அண்மையில் இருந்தமையால் அங்கு தென்னிந்திய மக்களே குடியேறியிருந்தார்கள். புதுக்கோட்டைப் பகுதியிலும் பிற சில இடங்களிலும் ஈமத்தாழிப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வகை ஈமத்தாழிப் பிணப் புதை யல்கள் இலங்கையில் புத்தளத்துக்கு அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவ்வீமத்தாழிகள் வரலாற்றுக்கு முற்பட்டவை. வரலாற்றுக்கு முன் தென்னிந்தியப் பண்பாடுடைய மக்களே இலங்கையிலும் வாழ்ந்தார்கள் என்பதை இவ்வீமத்தாழிப் புதையல்கள் அறிவிக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் இலங்கைத்தீவை ஈழநாடு எனக் குறிப் பிடுகின்றன. சிங்களம் என்னும் பெயர் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியங்களிலும் காணப்படவில்லை. ஈழநாட்டின் வடக் கிலும் மேற்கிலும் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இயக்கர் எனப்பட்டார்கள். இயக்கர் என்பது இராக்கதரைக் குறிக்க வழங்கிய இன்னொரு பெயர். இயக்கர், நாகர் என்னும் இரு பிரிவினரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். தேவ நம்பியதிசன் காலத்தில் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது பௌத்த மதத்தின் சமயமொழி பாளியாக விருந்தது பௌத்த மதத்தைத் தழுவிய மக்கள் வழங்கிய மொழியில் பாளிச்சொற்கள் கலந்தன. பௌத்த நூல்கள் சமக்கிருதத்திலும் எழுதப்பட்டன. பாளி, சமக்கிருதம் என்னும் இரு மொழிகளையும் பயின்ற பௌத்த குருமார் வழியாக பௌத்த மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதப்போக்கை எய்திற்று. சிங்கள மொழி யில் முதன் முதல் இலக்கியம் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் என்று சொல்லப்படுகிறது. சிங்கள மொழியைப்பற்றி ஆராய்ந்த மேல் நாட்டறிஞரும் சிங்கள அறிஞரும் சிங்களம் தென்னிந்திய மொழிக் கூட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறியிருக்கின்றனர். கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்து இலங்கைத் தீவு ஆங்கிலர் கைக்கு மாறும்வரை தமிழரசர் பலர் இலங்கையை ஆண் டார்கள். இலங்கை அரசர் பெரும்பாலும் தென்னிந்திய அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள். இவ்வாறு தென்னிந்திய அரச குடும்பங் களுக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்து வந்தது. இலங்கையில் அரசாங்க மதம் பௌத்தமாக இருந்த போதும் அரசரின் மதம் சைவ மாகவும் அரண்மனை மொழி தமிழாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சி வல்ல சேர். பொ. அருணாசலமவர்கள் கூறியுள்ளார்கள். இலங்கை அரச அவையில் பிராமணப் புரோகிதர் இருந்தார். தாம் சத்திரியர் என்னும் நம்பிக்கையினால் இலங்கை அரசர் பூணூலணிந்தனர். இலங்கையை ஆண்ட முதல் அரசனாகிய விசயன் தமிழ் பேசிய சைவ சமயத்தவ னென்பது தமிழரின் ஐதீகம். 17. மீனோவர் நாடும் தமிழகமும் பண்டைக்காலத் தமிழர் இந்தியாவில் மாத்திரம் அடைப்பட்டு இருக்கவில்லை. அவர்கள் கிழக்கே பிலிப்பைன் தீவுகள் வரையும் மேற்கே இங்கிலாந்து வரையும் கடல் வழியாகச் சென்று வாணிகம் நடத்தி னார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சென்ற மக்கள் அந்நாடுகளில் குடி யேறி அங்கு தமது பண்பாடுகளைப் பரப்பினார்கள்; சில சமயங்களில் தாம் குடியேறிய நாடுகளுக்குத் தாமே அதிபதிகளுமானார்கள். மத்தியதரைக் கடலின் ஒரு பகுதி ஐசியன் கடல் என வழங்கும். அக்கடலில் கிரீஸ் நாட்டுக்குத் தெற்கில் கிரேத்தா (Crete) என்னும் தீவுளது. அங்கு வாழ்ந்த பழைய மக்கள் மீனோவர் (மீனோஸ்) என அறியப்பட்டார்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த நாடு மீனோஸ் நாடு எனவும் அறியப்பட்டது. அங்கு அரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிந்துவெளி நாகரிகம் மறைந்து போயிற்று. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்குக் கிடந்த மண்மேடுகளை அகழ்ந்து பார்த்தார்கள். மீனோவ அரசரின் அரண்மனைகளும், கட்டடங்களும், தொல்பொருள்களும் அங்குக் காணப்பட்டன. அவற்றைத் துணைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ எழுத்துக்களின் தோற்றத்தில் ஒத்த எழுத்துகளும் அங்கு காணப்பட்டன. அவ்வெழுத் துகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. கிரேத்தா மக்களின் நாகரிகத்துக் கும் தென்னிந்திய மக்களின் நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. ஆகவே மீனோவர் நாட்டினின்றும் வந்து தென்னிந்தி யாவில் குடியேறியவர்களே தமிழராவர் எனப் பழஞ்சாத்திரக்காரர் சிலர் கருதினர். உண்மை இதற்கு நேர்மாறானது. கிரீஸ் நாட்டில் எரதோதஸ் (கி.மு. 470) என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் வாழ்ந்தார். அவர் பல நாடுகளுக்குப் பயணஞ்செய்து அந்நாடுகளின் பழைய வரலாறுகளைத் திரட்டினார்; அவற்றையும் தாம் நேரில் கண்டவற்றையும் ஆதாரமாகக்கொண்டு வரலாற்று நூல் ஒன்றை எழுதினார். அந்நூலில் அவர் மீனோவரைப் பற்றியும் கூறியிருக்கின்றார். அவர் கூறியிருக்கும் ஒரு பகுதியின் சுருக்கம் வருமாறு: “இங்கு வாழும் மக்கள் சூழல்களில் வாழும் சாதியினரிலும் வேறுபட்ட பழக்க வழக்க முடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தந்தை வழியிலும் பார்க்கத் தாய்வழியே முதன்மையுடையது. பிள்ளைகள் தந்தை வழியால் அறியப்படாது தாய் வழியால் அறியப்படுகிறார்கள். இவர்கள் ‘தமிலே’ என அறியப்படுகிறார்கள்”. ‘தமிலே’ என்பது தமிழ் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் துணிந்திருக்கின்றனர். மலையாளத்தில் மருமக்கள் தாயம் என்னும் தாய்வழிச் சொத்துரிமை இருந்துவருகிறது. தாயம் என்பது தாய் வழியிலிருந்து வருவதென்பதைக் குறிக்கும் சொல். மெகஸ் தீனஸ் என்பவர் பாண்டி நாடு பெண்ணால் ஆளப்படுகிறது எனக் கூறியிருப்பது பழைய நாளில் தமிழ்நாட்டில் தாய்வழியே சொத்துரிமை செல்லும் வழக்கிருந்ததென்பதைக் தெரிவிக்கின்றது. இன்றும் மலைகளி லும், குன்றுகளிலும், காடுகளிலும் வாழும் ஆதிக்குடிகள் சிலரிடையும் இவ்வழக்கு இருந்து வருகிறது. மீனோவர் ஆசியா மைனரிலுள்ள இலைசியா நாட்டில் சென்று குடியேறினார்கள். அந்நாட்டுக் கல்வெட்டுச் சாசனங்களிலும் ‘தமிலி’ என்னும் பெயர் காணப்படுகிறது. இலைசியாவில் குடியேறியவர்களில் ஒரு பகுதியினர் இத்தாலியில் குடியேறி எத்ருஸ் கானியர் என அறியப் பட்டார்கள். இஸ்பேயின் நாட்டில் வாழ்ந்த பாஸ்க்கு மக்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாஸ்க்குகள் மொழியாலும் இரத்தத் தாலும் இந்திய திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என எச்.ஜி. வெல்ஸ் போன்ற அறிஞர் கூறியிருக்கின்றனர். கிரேத்தா மக்களின் வழிபாடுகளில் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட் டது. சிங்கவாகனத்தோடு சம்பந்தப்பட்டதாய்க் கடவுளும் (காளியும்) பாம்பும் வழிபடப்பட்டன. சங்க இலக்கியங்களில் முல்லைநில மக்களின் விளையாட்டாகச் சொல்லப்படும் ஏறுதழுவுதலை ஒத்த விளையாட்டு கிரேத்தாவில் நடத்தப்பட்டது. அவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை வரலாற்றுக்கு முந்திய தென்னிந்திய ஈமத்தாழிப் பிணப் புதையல்களை ஒத்துள்ளது. அங்கு அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஓரிடத்தின் பெயர் சிவன். அங்கு தூபக்கால் போன்ற சில தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விடம் சிவன் கோயில் ஒன்று இருந்த இடமாகலாம். ஆசியா மைனரில் அனோரேலியா என்னும் மாகாணத்திலுள்ள ஒரு இடத்துக்கும் சிவன் என்னும் பெயரிருந்தது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கிராதர், கிரீத் தீவில் குடியேறினார்கள் என்றும் கிராதர் என்பதிலிருந்து கிரேத்தா என்னும் பெயர் வந்ததென் றும் சிலர்1 கூறுவர். ஆசியா மைனரில் காரியா (Caria) என்னும் பழைய நாடு ஒன்றிருந்தது. சேரர் அங்கு குடியேறினார்களென்றும் ஆராய்ச்சி யாளர்1 கூறுகின்றனர். பாறையில் குடைந்து செய்யப்பட்ட பழங்காலப் பிண அடக்கம் மலையானத்தல் குழி என அறியப்படும். இவ்வகைப் பழங் காலப் பிண அடக்கம் கரேத்தாவிலும் குழி என அறியப்பட்டது1. 18. ஈழமும், தமிழகமும் ஐபிராத்து தைகிரஸ் ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக் கடலுள் விழுகின்றன. முற்காலத்தில் இவ்வாறுகளின் கழிமுகம் ஏறக் குறைய இருநூறு மைல் தொலைவு மேலே இருந்தது. இக் கழிமுகத் துக்குத் தென்கிழக்கில் ஈழம் என்னும் பழைய நாடு இருந்தது. அங்கு பழைய நாகரிகமொன்றிருந்து மறைந்து போயிற்று. அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடை யது. எழுத்து மொகஞ்சதாரோ எழுத்தைப் போன்றது. இவ்வெழுத்துப் பொறிக்கப்பட்ட சாசனங்கள் இன்னும் வாசிக்கப்படவில்லை. அந்நாக ரிகத்துக்கும் தென்னிந்திய பழைய நாகரிகத்திற்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. தென்னிந்திய மக்களே வட இந்தியா வழியாகச் சென்று ஈழத் தில் தங்கிப் பின் பிற இடங்களுக்குச் சென்றார்கள் என இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் தலைவராகவிருந்த டாக்டர் ஹால் தமது ‘கிட்டிய கிழக்கு நாடுகளின் வரலாறு’ என்னும் நூலில் எழுதியிருக் கின்றார் காலஞ்சென்ற கௌரவ பாலசிங்கமவர்கள் “பழைய உலக நாகரிகத்தில் தமிழர் பகுதி” என்னும் தமது விரிவுரையில் இலங்கை (ஈழம்) மக்களே ஈழம் நாட்டில் சென்று குடியேறினார்களெனக் காரணங் காட்டிக் கூறினர். பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதரவர்களும் இக் கருத்தைத் “தமிழரின் தொடக்கமும் அவர்கள் பரவுதலும்” என்னும் தமது நூலில் வெளியிட்டிருக்கிறார். ஈழம் நாட்டு மக்கள் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களெனப் பலர் எழுதியிருக்கின்றனர். ஈழம் மிகப் பழங்காலத்தில் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்ததென்பது கந்த புராணம், இராமாயணம் முதலிய நூல்களால் நன்கு அறியக் கிடக்கிறது. புராணங்களில் சொல்லப்படும் இளாவிருதம் இலங்கை என்பது சிலர் கருத்து. பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பது வருமாறு: “ஈழம் என்னும் பெயர் மெசபெத்தேமியாவில் காணப்படு கிறது. இலங்கையினின்றும் சென்றவர்கள் அப் பட்டினம் வளர்ச்சியடை வதற்கு ஏதுவாக இருந்தார்களா? சாசனங்களிலும், இலக்கியங்களிலும் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயர் காணப்படுகிறது. வட ஈழம் மக்கள் அரேபியரைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை, சுமேரியரின் பண்பா டுடையவர்களாக இருந்தார்கள். வட ஈழம் மொழி சுமேரியத்தைப் போல அலாரோடியன் (Alarodian) என்னும் கூட்டத்தைச் சேர்ந்ததன்று. சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும், நெருங்கிய உறவு காணப்படுகிறது கவனிக்கத்தக்கது. பழைய திராவிடர் உலகப் பண்பாட்டுக்குத் தமது மொழியைக் கொடுத்து உதவினார்களா?” ஈழத்துக்கு மேற்கே கழிமுகத்தின் மறுகரையில் குடியேறி வாழ்ந்த மக்கள் சுமேரியர் என அறியப்பட்டார்கள். அங்குக் காணப்பட்ட உருவச் சிலைகளிலும் படைப்புச் சிற்பங்களிலும் காணப்படும் மனித வடிவங் களின் முகவெட்டு தோற்றத்தில் தமிழரின் முகத்தை ஒத்திருக்கின்றது. அம்மக்கள் வழங்கிய மொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. தமிழ்ச் சொற்கள் பல சுமேரிய மொழியில் காணப்படு கின்றன. சுமேரியர் தென்னிந்தியாவினின்று சென்றவர்களென வரலாற் றாசிரியர்கள் பலர் எழுதியிருக்கின்றார்கள். சுமேரியா நாட்டின் முக்கிய நகர்கள் சூசா, இலகாஷ் என்பவை. இவ்விடங்களில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ முத்திரைகள் சில கிடைத்தன. சுமேரியா பாபிலோனிய இராச்சியத்தில் சேர்ந்து விட்டது. பாபிலோனி யர் காலத்தில் சுமேரிய மொழி உலக வழக்கிலில்லாது போய்விட்டது. அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது. அது சமய மொழியாகவும் இருந்தது. சட்டங்கள் அம் மொழியில் எழுதப்பட்டிருந்தன. அக்காட் நகரைத் தலைநகராகக் கொண்டு சுமேரிய இராச்சியத் தின் ஒரு பகுதியை ஓர் அரச பரம்பரை ஆண்டு வந்தது. அவ்விராச்சியம் அக்கேடியா என அறியப்பட்டது. அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைப் பேசினர். ஊர்ப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட பாபிலோனியாவின் பகுதியைப் பிறிதோர் அரச பரம்பரை ஆண்டது. அவ்விராச்சியம் சால்தியா எனப்பட்டது. சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிவு என அபினஸ்சந்திஸ்தாஸ் என்னும் வரலாற் றறிஞர் ‘இருக்கு வேத இந்தியா’ (Rigvedic india) என்னும் நூலில் கூறியுள் ளார். இக் கூற்றினைப் பலர் வழிமொழிந்திருக்கின்றனர். அசீரியா, பாபிலோனியாவுக்கு வடக்கில் தைகிரஸ் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்தது. அதன் தலைநகர் நினேவே. அசீரியா பாபிலோனியா வின் குடியேற்ற நாடாகவிருந்தது. அது கி.மு. 1450இல் விடுதலை பெற்றுத் தனி நாடாகப் பிரிந்தது. அது பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகள் அடங்கிய பேரரசாக விளங்கிற்று. கி.மு. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்போது பாபிலோனியர் விடுதலை அடைந்தனர். இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்போது அது பாரசீகத்தின் ஒரு பகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலெக்சாந்தரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது. அசுர்பானிப்பால் என்னும் அசீரிய அரசன் நாட்டிய கற்றூண் ஒன்றில் இந்திய யானைகளும் குரங்குகளும் காணப்படுகின்றது. சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, சால்திய, அசீரிய நாகரிகங் களுக்கும், தென்னிந்திய நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவிருப்பதை வரலாற்றாசிரியர்கள் காட்டுவர். தமிழர் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நாடுகளின் பழைய வரலாறுகள் உதவியளிக்கின்றன. 19. பினீசிய நாடும் தமிழகமும் பாலஸ்தீனத்துக்கு வடக்கே மத்தியதரைக் கடலோரத்திலிருந்த நாடு முற்காலத்தில் பினீசியா என அறியப்பட்டது. வேதங்கள் பாணிகள் என்னும் மக்களைப் பற்றிக் கூறுகின்றன. பாணிகள் என்பது வணிகர் எனும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்றும் இவர்கள் தமிழ் வகுப்பினரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்கள் சென்று குடியேறிய நாடு பினீசியா எனப்பட்டது. பினீசியா என்பதற்குப் பனை (ஈந்து) நாடு என்னும் பொருள் கூறப்படுகிறது. அப்பகுதியில் பல்மைரா என்னும் புராதன நகரும் உண்டு. பினீசியர் புகழ்பெற்ற மாலுமிகளாக வும், வணிகராகவும் இருந்தார்கள். விவிலிய வேதத்தில் கூறப்படும் சாலமன் அரசன் (கி.மு. 900) ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு அவனுடைய மாலுமிகள் மூலம் மரக்கலங்களை ஒபிர் என்னும் இந்தியத் துறைமுகத்துக்குப் போக்கித் தந்தம், பொன், மயில், அகிற்கட்டை, குரங்கு முதலிய அரும் பண்டங்களைப் பெற்றான். ஒபிரென்னும் துறைமுகம் மலையாளக் கரையிலிருந்ததாகக் கருதப்படு கின்றது. ஒபிரினின்றும் பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள் எபிரேய மொழியில் காணப்படுகின்றன. பினீசியாவில் மோப் (Moab) நாட்டு அரசனாகிய மெசு (Meshu - கி.மு. 850) நாட்டிய கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத் தூணில் சாசனம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அச் சாசனத்தில் காணப் படும் எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு காணப்படுகிறது. இதனால், பினீசியரிடம் எழுத்தெழுதும் முறையைப் பயின்ற திராவிட வணிகர் இந்தியாவில் எழுத்தெழுதும் முறையைப் பரப்பினார்கள் என வரலாற்றாசிரியர்கள் எழுதி வந்தார்கள். மொகஞ்சதாரோ புதை பொருளாராய்ச்சிக்குப் பின் இந்தியாவினின்றே எழுத்தெழுதும் முறை பினீசியாவுக்குச் சென்றதெனக் கருதப்படுகிறது. பினீசிய மக்கள் முற்காலத்தில் பரதர் என அறியப்பட்டார்களென் றும், இவர்கள் பாரத நாட்டினின்றும் சென்றவர்களென்றும், பினீசியர் அல்பியன் எனப்பட்ட பிரிட்டன் தீவில் குடியேறினார்களென்றும், பரதர் குடியேறினமையால் அல்பியன் தீவு பிரிட்டன் எனப்பட்டதென் றும் வடல் (Waddell) என்னும் ஆராய்ச்சி அறிஞர் எழுதியுள்ளார். பினீசியர் ஞாயிற்றுக் கடவுளை பால் (பகல்?) (Baal) என்னும் பெயரால் வழிபட்டார்கள். பினீசிய நாட்டின் முக்கிய பட்டினங்கள் தயர், சிடோன் என்பன. தயர்ப் பட்டினத்தில் பெரிய பகலவன் கோயிலிருந்தது. அங்கு இரு இலிங்கங்கள் நாட்டப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று பொன்னி னாலும், மற்றது மரகதத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. இவ்விலிங்கங் கள் பின் சிபிரால்டரில் நாட்டப்பட்டமையால் அவ்விடம் எர்குலிசின் தூண்கள்1 எனப் பெயர் பெற்றது. பினீசியர் இலிங்கங்களையும், இடபத் தையும் வழிபட்டார்கள். கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் பினீசியர் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த எல்லா நாடுகளுக்கும் வாணிகத்தின் பொருட்டுச் சென்றார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர் சிடோன் என்பவை அழியாப் புகழ் பெற்றிருந்தன. சுதேச் என்பது பினீசியரின் ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடு. இங்கு அனிபால் (Hannibal) என்னும் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று கொண் டிருந்தான். உரோமர் கடும்போர் செய்து அவனைத் தோற்கடித்தனர். பினீசியர் இந்தியாவுக்குக் கொண்டு சென்று விற்ற சிவப்புச் சாயமூட்டிய துணி பச்சவடம் என வழங்கிற்று. பச்சவடம் என்பது பினீசிய மொழியில் வழங்கிய பப்புரா (Paupra) என்னும் சொல்லின் திரிபெனக் கருதப்படுகிறது. பப்புரா என்பதிலிருந்து கருஞ்சிவப்பை உணர்த்தும் பேர்ப்பிள் (Purple) என்னும் ஆங்கிலச் சொல் தோன்றிற்று. பினீசியர் எழுத்தெழுதும் முறையை இந்தியாவினின்றும் கொண்டு சென்றார்கள். இவர்கள் கிரேக்கருக்கு எழுத்தெழுதும் முறையைக் கற்பித்தார்கள். கிரேக்கர் அதனை உரோமருக்குக் கற்பித்தனர் இவ்வெழுத்திலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகள் தோன்றின. 20. ஆசியா மைனரும் தமிழ் நாடும் ஓமர் காவியத்தில் கூறப்படும் திராய் நகரில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் இலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இல்லி யாட், ஒடிசி என்னும் கிரேக்க காவியங்களில் கூறப்படும் கதைகள் இந்திய புராணக் கதைகள்போலவே இருக்கின்றன. பஞ்சதந்திரக் கதைகள் தென்னிந்தியாவில் தோன்றியவை எனக் கருதப்படுகின்றன. இவை கி.மு. 600 வரையில் ஆசியா மைனரில் வழங்கின. இக்கதைகள் இலைடியா நாட்டு அரசனாகிய குரோசசின் அரண்மனையிலிருந்த ஈசோப் என்பவ ரால் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன. எரதோ தஸின் (கி.மு. 500) நூலிலும் இக் கதைகளுள் சில காணப்படுகின்றன. கிரேத்தாத் தீவில் வாழ்ந்த மீனோவரே ஆசியா மைனரிலுள்ள இலைசியா வில் குடியேறியிருந்தார்கள். இவர்களும் ‘தமிலே’ என அறியப்பட்டார் கள். தமிலே என்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு. ஆசியா மைனரின் ஒரு பகுதி ஹிதைதி என்னும் பெயரால் அறியப்பட்டது. இவ் விடத்திலும் சிரியாவிலும் சிவ வழிபாட்டு, இடப வழிபாட்டுச் சின்னங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்துவுக்கு முன் இரண்டாம் மூன் றாம் நூற்றாண்டுகளில் ஆர்மேனியாவில் கிருட்டிண பலதேவ வழிபாடு களிருந்தன. வான் ஏரிக்கு அயலில் பெரிய கிருட்டிணன் கோவிலிருந்தது. இது கிறித்தவர்களால் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அங்கு ஐயாயிரம் கிருட்டிண வழிபாட்டினர் இருந்தனர் என்று செனோப் (Zenob) என்னும் சிரிய நாட்டுச் சரித்திர ஆசிரியர் கூறி யுள்ளார். ஆர்மேனிய மொழிக்கும் தமிழுக்கும் ஒற்றுமை காணப்படுகின் றது. இவை போன்ற சில காரணங்களால் ஐபிராத்து தைரிகிரசுக் கழி முகத்திலிருந்து ஆசியா மைனர் வரையும், ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரையும் ஒரே மொழி வழங்கிய ஓரின மக்கள் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று பழஞ் சரித்திரக்காரர் கருதுகின்றனர். ஹெரஸ் பாதிரியார் கூறியிருப்பது வருமாறு: 1“பழங்காலத்தில் திராவிடக் கூட்டத்தினர் உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இப்பெயர்களை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரோசஸ் என்னும் பாபிலோனிய கோயில் குரு குறிப்பிட்டிருக்கின்றார். பாரசீக வளைகுடாவை அடுத்த நாடுகளில் குடியேறிய தமிழர் சுமேரியர் என அறியப்பட்டார்கள். ஆதியாகமத்தில் காணப்படுகின்றபடி இவர்கள் மொகஞ்சதாரோ அல்லது இந்தியாவின் வேறு நகரங்களில் காணப்பட்டவை போன்ற வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் சிரியா நாட்டில் குடியேறிப் பெரிய ஹிதைதிச் சக்கராதி பத்தியத்துக்குத் தளமிட்டார்கள். இவர்கள் அங்கு நின்று மத்தியதரைக் கடற்கரைகளை அடைந்து பினீசியர் என்னும் பெயர் பெற்றார்கள். அவர்கள் பெரிய கடலோடிகளாகவிருந்து முற்காலத்தில் வாணிகம் நடத்தினார்கள். மற்றவர்கள் கிரீசிலும், ஐசியன் கடல் தீவுகளிலும், இத்தாலி நாட்டிலும் குடியேறினார்கள். இவர்கள் இத்தாலியில் எத்துருஸ்கானியர் எனப்பெயர் பெற்றார்கள். இந்தியாவினின்று வேறு கூட்டத்தினரும் கடல் வழியாகச் சென்று அரேபியாவில் ஏமெனில் குடியேறினார்கள். ஏமனிலிருந்து இவர்கள் நீலஆறு நீர் பாய்ச்சும் நாட்டை அடைந்து வியப்புமிக்க எகிப்திய நாகரிகத்தைத் தோற்றுவித் தார்கள். பின் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று அங்கு குடியேறி நுகர்மெதியர் பேர்பேரியர் எனப் பெயர் பெற்றார்கள். அவர்கள் ஐபீரியக்குடா நாட்டில் சென்று வாழ்ந்த போது, உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களை ஐபீரியர் என அழைத்தனர். இறுதி யில் ஐபீரியர் சிலர் வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் குடியேறினார்கள். பிரிட்டனில் இவர்கள் துரீயிட்ஸ் என அறியப்பட்டார்கள். இந் நாகரிகங்களெல்லாம் ஒரு இடத்தினின்றும் சென்றமையால் அவைகளுக்கிடையில் இணைப்புக் காணப்படுகின்றது.1 21. சீனாவும் இந்தியாவும் அசோகச் சக்கரவர்த்தி பௌத்த சமய போதகர்களைச் சீனாவுக்கு அனுப்பினார். அக்காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை மிகப் பல யாத்திரிகர்களும், அறிஞர்களும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போக்கு வரத்துச் செய்தார்கள். அவர்கள் இமயமலையையும் மத்திய ஆசியாவி லுள்ள மலைகளையும் தாண்டி கோபிவனாந்தரத்துக்கு ஊடாகப் பயணம் செய்தார்கள். இப் பயணங்களில் பெரும்பாலான யாத்திரிகர்கள் இறந்தார்கள். ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்தை அடைந்தவர்கள் மறுபடி தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை; தாம் சென்ற நாட்டிலேயே தங்கி வாழ்ந்தார்கள். இந்துச்சீனம், சாவகம், சுமத்திரா, மலாயா முதலிய நாடுகள் வழியாகக் கடல் வழி ஒன்றும் இருந்தது. தரை வழியாகச் சென்ற பிரயாணிகள் சில சமயங்களில் கடல் வழியாக மீண்டார்கள். மத்திய ஆசியாவிலும் இந்தோனேசியாவிலும் இந்தியப் பண்பாடும் பௌத்த மதமும் சைவ, வைணவ மதங்களும் பரவியிருந்தன. அவ்விடங்களில் பல பௌத்த மடங்களும் போதனா சாலைகளும் நிறுவப்பட்டிருந்தன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணம் செய்வோர் இம்மடங்களில் தங்கிச் சென்றார்கள். இந்தியாவினின்றும் சீனாவுக்குச் சென்ற காசியப்ப மதங்கர் என்னும் இந்தியர் கி.பி. 67இல் சீனாவை அடைந்து உலோயாங் என்னுமிடத்தில் வாழ்ந்தார். இருவருக்குப் பின் பல இந்திய அறிஞர் சீனாவுக்குச் சென்றனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனாவிலே உலோயான் மாகாணத்தில் 3,000 இந்திய பௌத்த குருமாரும் 1,000 இந்தியக் குடும்பத்தினரும் இருந்தார்கள். சீனாவுக்குச் சென்ற இந்திய அறிஞர் சமக்கிருதத்தில் எழுதப்பட்ட பல பௌத்த நூல்களைத் தம்முடன் கொண்டு சென்று அவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தனர். புதிய நூல்களையும் அவர்கள் சீன மொழியில் எழுதினார்கள். கி.பி. 401-இல் சீனாவுக்குச் சென்ற குமார விசயர் என்னும் இந்தியர் 47 நூல்களைச் சீன மொழியில் எழுதினார். இவை இன்றும் உள்ளன. அவர் நாகார்ச்சுனர் வரலாற்றையும் சீனத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். சீன குப்தர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 37 சமக்கிருத நூல்களைச் சீனத்தில் மொழி பெயர்த்தார். சில சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவர்களில் மிகப் புகழ் பெற்றவர்கள் பாகியன், ஹ]வான் சுவாங், இத்சிங் (I-tsing) என்போர். பாகியன் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த குமாரசிவா என்பவரின் மாணவன். பாகியன் பாடலிபுத்திரப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றான். ஹூவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகன் ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அக்காலத்தில் ஹர்சவர்தனன் என்னும் அரசன் வட இந்தியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தான். ஹூவான் சுவாங் கோபிவனாந்தரம் வழியாக வந்து இமயமலையைக் கடந்து இந்தியாவை அடைந்தான். இவன் இந்தியா முழுமையிலும் யாத்திரை செய்தான். இவன் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டுகள் கல்வி பயின்று சட்டக் கல்வி பயின்று சட்டக் கல்வியில் தேறி அக்கலாசாலையிலேயே சில காலம் துணைத் தலைவராகக் கடமையாற்றினான். நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் இக்கலாசாலையில் கல்வி பயில்வதற்குச் சென்றனர். அவன் காலத்தில் மாணவரும் குருமாருமாக ஏறக்குறைய ஆயிரவர் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்றனர். நாளந்தாக் கலாசாலை யில் நுண்கலைகள், கைத்தொழில், மருந்து, தர்க்கம், தத்துவ ஞானம் முதலிய கல்விகள் கற்பிக்கப்பட்டன. துறவிகளும் குருமாரும் ஆசிரியர் களாக இருந்து கடமையாற்றினர். ஹூவான் சுவாங் பல கையெழுத்து நூல்களை எடுத்துக் கொண்டு தான் வந்த பாதை வழியாக மீண்டும் சென்றான்; சென்றதும் தான் கொண்டு சென்ற நூல்களில் பலவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தான். அவன் மரணமடைந்த பின் இத்சிங் என்னும் சீன யாத்திரிகன் இந்தியா வுக்கு வந்தான். இவன் கி.பி. 671இல் பயணத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளின் பின் இந்தியாவை அடைந்தான். சமக்கிருதம் பயிலும் பொருட்டுச் சில காலம் சுமத்திராவில் தங்கியிருந்த பின்பே அவன் இந்தியாவை அடைந்தான். அக் காலத்தில் சுமத்திரா, மலாயா, இந்தியா, பாரசீகம் முதலிய நாடுகளுக்கிடையில் ஒழுங்காக மரக்கலப் போக்கு வரத்து நடைபெற்றது. இத்சிங்கும் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் கல்வி பயின்றான். அவன் செல்லும்போது தன்னுடன் பல நூல்களைக் கொண்டு சென்றான். இந்தியாவில் பௌத்த மதம் வீழ்ச்சியடைந்ததும் இந்திய அறிஞர் சீனாவுக்குச் செல்லுதல் நின்று போயிற்று. பௌத்த தலங்களைத் தரிசிப்பதற்குச் சீன யாத்திரிகர் இடையிடையே இந்தியாவுக்கு வந்தனர். 10ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தோன்றிய அரசியல் புரட்சிகள் காரணமாகப் பௌத்த பிக்குகள் தம்மிடமிருந்த கையெழுத்து நூல் களை எடுத்துக் கொண்டு நேபாளம், திபெத்து முதலிய நாடுகளுக்குச் சென்றார்கள். சீனாவில் இந்தியாவினின்றும் கொண்டு போகப்பட்ட 8000 கையெழுத்து நூல்கள் வரை காப்பாற்றப் பட்டுள்ளன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சீனாவில் மரக்கட்டை யில் வெட்டிய எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சமக்கிருத நூலொன்று காணப் படுகிறது. இத்சிங் என்னும் யாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு: “விருந்தளிப்பவர்கள் பௌத்த குருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சாம்பலிட்டுச் சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பௌத்த குருவுக்கும் ஒவ்வொரு மணை இடப்படுகிறது. ஒருவர் மற்றவரோடு முட்டாமல் இருக்கும்படி மணைகள் இடப்படுகின்றன. மண் பாத்திரங்கள் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட மட்பாத்தி ரங்கள் குழியில் எறியப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட மட்பாத்திரங் களை ஒருபோதும் வைத்திருத்தல் கூடாது. பிச்சையிடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாவில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாண்டங்கள், பயன்படுத்தப்பட்ட பின் சுத்தம் செய்து வைக்கப்படுகின்றன. விருந்தினர் உண்ணும் இடம் பசுவின் சாணியால் மெழுகப்படுகின்றது. விருந்தினர் சம தூரத்தில் இடப்பட்ட மணைகளில் இருப்பார்கள். பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தமது மேலுடைகளைக் கழற்றுவார்கள். தண்ணீரில் பூச்சிகள் அல்லது புழுக்கள் இருக்கின்றனவோ என்று பார்த்து அவை இல்லாவிடில் அந்நீரில் கைகளைக் கழுவுவார்கள். பின்பு சிறிது இளைப்பாறி இருப்பார்கள். குருமார் தமது கைகளைப் பயற்றை மாவு அல்லது மண்ணைத் தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் குண்டிகையி லிருக்கும் நீரைப் பயன்படுத்துவர் அல்லது விருந்துக்கு அழைத்தவர் வார்க்கும் நீரைப் பயன்படுத்துவர். பின் அவர்கள் பீடங்களில் அமர் வார்கள். உண்ணும் தட்டுகள் அவர்களிடம் கொடுக்கப்படும். உண்ணு முன் கடவுளைத் துதித்தல் வழக்கமன்று. விருந்துக்கழைத்தவர் உணவைப் பரிமாறுவர். உணவைப் பரிமாற முன்முதலில் பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒரு கரண்டி நிறைந்த உப்பும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகின்றன. உணவைக் கொடுப்பவர் தலைமைக் குருவின் முன் கைகட்டி முழங்கால் மடித்து நின்று அவருக்கு வணக்கம் கூறுவார். குரு, “உணவை எல்லோருக்கும் ஒரே வகையாகப் பரிமாறு” என்று கூறுவார். உணவு படைக்கப்பட்டதும் விருந்தினர் உணவை உண்பர். எல்லோருக்கும் உணவு படைத்த பின் உண்ண வேண்டுமென்று பொறுத்திருக்கவேண்டியதில்லை. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பழங்காலம் முதல் உறவு இருந்து வந்தது. பட்டைப்பற்றி மாபாரதம் குறிப்பிடுகின்றது. சீனம் என்பது பட்டுக்கு மற்றொரு பெயர். கீசகம் (மூங்கில்) சிந்தூரம், (செங்காவி) முதலிய சொற்கள் சீன மொழிக்குரியனவாகச் சொல்லப்படு கின்றன. வெள்ளைச் சர்க்கரை முற்காலத்தில் சீனாவிலிருந்து வந்தமை யால் அது சீனி எனப் பெயர் பெற்றது. 22. தென்னிந்தியர் குடியேறிய நாடுகள் இந்தியக் கடற்கரைகளில் வாழ்ந்த மக்கள் பெருங் கடலோடி களாக இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்தில் மேற்கு நாடுகளோடு கடல் வழியாக வாணிகம் செய்தார்கள். வட இந்தியர்களிலும் பார்க்கத் தென்னிந்திய மக்களே கடல் வாணிகத்தில் அதிக பங்கு பற்றினார்கள். யவன நாட்டு வாணிகப் பண்டங்களைப் பற்றிச் சங்க காலத் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. கிழக்கிலுள்ள தீவுக் கூட்டங்களில் சென்று குடியேறுவதில் தென்னிந்தியர் அதிகப் பங்கு எடுத்தனர். தொடக்கத்தில் நாடு கண்டுபிடிக்கும் பொருட்டுப் பலர் தென்னிந்தியாவினின்றும் அங்குச் சென்றார்கள். வாணிகம் வளர்ச்சியடைந்த பின் பல குடும் பங்கள் அவர்கள் வாணிகம் நடத்திய நாடுகளுக்குச் சென்றன. குடியேறிய மக்கள் பெரும்பாலும் கலிங்க நாட்டிலும் கிழக்குக் கடலோரங்களிலும் வாழ்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பல்லவ நாட்டினின்றும் பலர் சென்றனர். இக்குடியேற்றம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிச் சில காலம் நடைபெற்றது. பர்மா, சீயம், இந்துச் சீனம் முதலிய நாடு களினின்றும் சுமத்திரா, யாவா, போர்ணியோ, செலிபிஸ், பிலிப்பைன் முதலிய தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்; தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு இந்தியப் பெயர்களை இட்டார்கள். இந்நாடுகளிலும் தீவுக் கூட்டங்களிலும் குடியேறிய மக்கள் உள்நாட்டு மக்களோடு கலவாது சில காலம் தனித்து வாழ்ந்தார்கள்; சிறிது காலத் தின் பின் சிறிது சிறிதாக உள்நாட்டு மக்களோடு கலந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவோடு தொடர்பு கொள்வதை மறந்தார்கள். இந்தியர் குடியேறி வாழ்ந்த தீவுக் கூட்டங்களிலும் நாடுகளிலும் இந்து இராச்சி யங்கள் எழுந்தன. இவற்றை அடுத்துப் பௌத்த இராச்சியங்களும் தோன்றின. பௌத்தரும் இந்துக்களும் அதிகாரத்துக்காகப் போராடி னார்கள். குடியேறிய மக்கள் கட்டி எழுப்பிய பட்டினங்கள் கோயில் களின் இடிபாடுகள் அந்நாடுகளில் காணப்படுகின்றன. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இந்து பௌத்த மதங்கள் இந்நாடுகளில் நிலை பெற்றன. பதினைந்தாம் நூற்றாண்டில் முசுலிம்கள் இந்நாடுகளில் தலைமை எய்தினர். இவர்களை அடுத்து இஸ்பானியரும், ஒல்லாந்தரும், ஆங்கிலரும், அமெரிக்கரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். 23. பர்மா கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியர் பர்மாவில் குடியேறி இருந் தார்களென்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதற்கு மிகப் பழங்காலம் முதல் இந்தியர் பர்மாவில் குடியேறியிருந்தார் களெனப் பழங்கதைகள் கூறுகின்றன. பர்மாவின் பல இடங்களில் பல சாசனங்கள் கிடைத்தன. அச் சாசனங்களால் அங்கு சைவ, வைணவ மதங்களையும், மகாயான, ஹீனயான, பௌத்த மதங்களையும் மேற் கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகின்றது. புரோம் என் னும் ஊர் அப்பொழுது சிறீ சேத்திரம் என்னும் பெயர் பெற்றிருந்தது. ஆற்றிடைக்குறைகளை அடுத்து வாழ்ந்த மக்கள் பெரிதும் கலிங்கம் ஆந்திரம் முதலிய நாடுகளினின்றும் சென்றவர்களாக இருந்தனர். காசியினின்றும் சென்ற அரச குமாரனொருவன் அக்காலத்தில் வைசாலி என அறியப்பட்ட அரக்கனில் தனது இராச்சியத்தைக் கோலினான். பர்மாவை ஆண்ட அரசர் பலர் தமது பட்டினங்களுக்கு இந்தியப் பட்டினப் பெயர்களைச் சூட்டினர். பல்லவர் கதம்பர் கல்வெட்டுகளும் தென்னிந்திய எழுத்துப் பொறிக்கப்பட்ட தொல்பொருள்கள் சிலவும் பர்மாவில் கிடைத்துள்ளன. பகான் என்னுமிடத்தில் தமிழில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அக் கல்வெட்டால் அங்குத் திருமால் கோயில் இருந்ததென்றும் அங்குத் தமிழர் வாழ்ந்தனர் என்றும் தெரியவருகின்றன. பெகு என்னுமிடத்திலுள்ள ஆனந்தா என்னும் கோயில் தென்னிந்திய சிற்பிகளால் அமைக்கப்பட்டதெனச் சிற்ப வல்லார் கருதுகின்றனர். 24. மலாயா தென்னிந்தியர் மலாயாவில் நீண்ட காலத்தின் முன் குடியேறி யிருந்தார்கள். சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மலாய தீபகற்பத்திலிருந்தோ மலாய்த் தீவுகளிலிருந்தோ வெற்றிலை தமிழ் நாட்டுக்கு முதன்முதல் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகின்றது. மலாயாவிற் கிடைத்த கல்வெட்டுக்கள் தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மலாயாவில் வாழ்ந்த இந்திய மக்கள் கிளிங் என அறியப்பட்டார்கள். கிளிங் என்பது கலிங்கம் என்பதன் திரிபு. சிங்கப்பூர் என்பது சாவக நாட்டிற் குடியேறி அங்கு நின்றும் வெளியேறிய மக்களால் மலாய்த் தீபகற்பத்தைச் சேர்ந்த தீவுக்கு இடப்பட்ட பெயர். கலிங்க நாட்டில் சிங்கபுரமென்னும் பட்டினமிருந்தது. மலாயாவில் கோபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தல் விநாயகர் சிலை ஒன்றும் காணப்பட்டது. அதன்மீது தென்னிந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு நடராசத் திருவுருவம் ஒன்றும் கிடைத்தது. வியோங்ஸ்நா என்னுமிடத்தி லுள்ள கோயிலில் திருமாலின் திருவடிவமும் வயிரவக் கடவுளின் திருவடிவங்களும் காணப்படுகின்றன. கெடா என்னுமிடத்தில் நடத்தப் பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் பழைய சிவன் கோயிலின் பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக் கட்டிடம் பல்லவர் காலத்துத் தென்னிந்திய கோயிலமைப்பை ஒத்திருக்கின்றது. அதன் அண்மையில் காணப்படும் மற்றொரு கோயிலின் கூரை மாமல்லபுரத்து இரதங்களின் கூரைகளைப் போல அமைந்திருக்கின்து. தாதுகோபுரமொன்றில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கிடைத்தது. நந்திவர்மன் பெயரால் (கி.பி. 826-50) நாங்கூர் தலைவர் ஒருவர் ஆவணி நாரணம் என்னும் ஏரி ஒன்றை அமைத்ததாக அக் கல்வெட்டு கூறுகின் றது. மலாய் மக்களின் வாழ்க்கை முறைகள் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்திருக்கின்றன. மலாய் மொழியில் பல சமக் கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் காணப்படுகின்றன. தென்னிந் திய பண்பாடுகள் அதிகம் காணப்படும் கெடா (Kedah) என்னுமிடமும் சோழர் சாசனங்களில் காணப்படும் கடாரமும், சமக்கிருத இலக்கியங் களில் காணப்படும் கடாரமும் ஒன்று என்று சிலர் துணிகின்றனர். 25. சுமத்திராவும் சாவகமும் மணிமேகலை என்னும் நூல் ஆயிரத்து எண்ணூறு ஆண்டு களுக்கு முற்பட்டது. அந் நூல் சாகவ நாட்டைப் பற்றியும் அதன் முக்கிய நகரமான நாகபுரத்தைப் பற்றியும் அந்நாட்டு அரசர்களாக இருந்த பூமிச்சந்திரன் புண்ணியராசன் என்பவர்களைப் பற்றியும் கூறுகின்றது. அக்காலத்தில் சுமத்திரா சாவகம் என்னும் தீவுகளுக்கும் தமிழகத்துக்கும் இடையில் மரக்கலப் போக்குவரத்தும் வாணிகமும் இருந்தன. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய மக்கள் சுமத்திராவில் குடியேறி இருந்தார்கள். இக் காலத்திலும் சுமத்திராவில் வாழும் சுரோ, படக் என்னும் நாகரிகமற்ற மக்களிடையே சோழிய, பாண்டிய, மெலியாள, பெலவி (பல்லவ) தெகங் (தெலுங்க?) முதலிய பெயர்கள் வழங்குகின்றன. அப் பெயர்கள் அம்மக்களுக்கும் தென்னிந்தியாவுக்கு முள்ள தொடர்பைக் காட்டுகின்றன. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் சுமத்திராவில் இந்து சமயம் பரவியிருந்தது. சுமத்திராவில் சிறீவிசயா என்ற அரசு கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் உயர்நிலை எய்தியிருந்தது. மலாயா, போர்ணியோ, பிலிப்பைன், செலிபிசி, யாவாவின் பாதி, பர்மோ சாவின் பாதி என்பன இவ் விராச்சியத்தில்அடங்கியிருந்தன. இன்று பெரிய பட்டினமாகக் காட்சியளிக்கும் சிங்கப்பூர் சுமத்தரா மக்களின் குடியேற்றத் தீவாகவிருந்தது. சிறீவிசயா என்னும் பேரரசு 8-ஆம் நூற் றாண்டில் சைலேந்திரப் பேரரசு எனப் பெயர் பெற்றிருந்தது. சைலேந்திர அரசருக்கும் சோழ அரசருக்குமிடையில் நட்பு இருந்துவந்தது. மாற விசயோத்துங்கவர்மன் என்னும் சைலேந்திர அரசன் 1007-இல் தமிழ் நாட்டில் ஒரு பௌத்த ஆச்சிரமம் கட்டிவைத்தான். தமிழர் குடியேறிய இடங்களில் பெரிய கட்டிடங்கள் எழுந்து கொண்டிருந்தன. இந்தியாவினின்றும் சென்ற சிற்பிகள் கட்டிடங்களைத் திறமையாக அமைத்தார்கள். கட்டிடங்கள் எடுப்பதில் போட்டிகள் உண்டாயின. ஆகவே உயர்ந்த அமைப்புடைய கட்டடங்கள் எடுக்கப் பட்டன. சுமத்திராவில் இலாரா யோங்ராங் (Lara Yongrang) என்னுமிடத் தில் பல ஆலயங்கள் கூட்டமாக அழிந்து கிடக்கின்றன. இக் கோயில்கள் சிவன், பிரமன், திருமால், நந்தி முதலிய கடவுளருக்குரியவை. இங்கு விநாயகக் கடவுளின் திருவடிவங்களும் பாதி சிவனும் பாதி அம்மனுமாக அமைந்த உருவமும் காணப்படுகின்றன. “ஜாவகத் தீவில் அகப்பட்டுள்ள சிவன், விட்டுணு, பிரமன் ஆகிய திருமூர்த்திகளின் கற்சிலைகளின் முக்கிய அமிசங்களை ஆராயும்போது அவை தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவர்கள் அல்லது சாளுக்கியர் களின் சிற்ப சாத்திரத்துடன் தொடர்புள்ளனவாக இருத்தல் வேண்டு மெனச் சிற்ப சாத்திர நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அகத்திய கோத்திரத்தினரோ அவரது கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ ஜாவகத் தீவிற் குடியேறி இந்தியக் கலாசாரத்தைப் பரப்பினார்கள் எனத் தோன்றுகிறது. கலிங்க நாட்டினின்றும் 20,000 இந்தியக் குடும்பங்கள் சாவகத்திற் குடியேறினார்களென்று இடைக் காலச் செய்திகள் கூறுகின்றன. அங்கு கிடைத்த கல்வெட்டுகளின் எழுத்து பல்லவ கால எழுத்தாகக் காணப்படு கிறது. சாவக மக்களின் மொழி, இலக்கியம், அரசியல் சமூக அமைப்பு என்பன இந்தியக் கருத்துக்களைப் பின்பற்றியவை. சாவக மக்களின் நுண் கலை வளர்ச்சிக்கு மாபாரதமும் இராமாயணமும் உதவியளித்தன. இந்துக்களின் இதிகாசங்களும், புராணங்கள் சிலவும் இன்று பாலி மொழியில் உள்ளன. சாவக மக்கள் சிவனையே மேலான கடவுளாகக் கொண்டு வழி பட்டார்கள். அவ்வாறே அம்மனையும் வழிபட்டார்கள். விநாயகர், முருகக் கடவுளரின் திருவுருவங்களும் அங்கு காணப்பட்டன. கருட வாகனத்திலிருக்கும் திருமாலும் அவருடைய பத்து அவதாரங் களும் சிற்பங்களிற் காணப்படுகின்றன. இடி எவ்க்கில் (Dievvg plateau) கட்டப் பட்டுள்ள கோயில்களின் அமைப்பு குப்தர் காலக் கட்டிடச் சிற்பக் கலையைச் சேர்ந்தது. போராபுதூர் என்னுமிடத்தில் பெரிய பௌத்த கோயிலின் அழிபாடு காணப்படுகிறது. இக்கோயிற் சிற்பங்கள் புத்தரின் செயல்களையும் சாதகக் கதைகளையும் விளக்குகின்றன. பாகியன் கி.பி. 414இல் சாவகத்துக்குச் சென்றபோது அங்கு இந்து மதம் ஓங்கியிருந்ததைக் கண்டான். கிழக்கு ஜாவாவில் ஐந்நூறு கோயில் களுக்குமேல் இருந்தன. அவை ஏழாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற் றாண்டுக்குமிடையிற் கட்டப்பட்டவை. 26. போர்ணியோவும் பாலியும் போர்ணியோவில் இந்தியப் பண்பாடு பரவியிருந்தது என்பதை அங்குக் கிடைத்த சாசனங்கள் வெளியிடுகின்றன. இவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமக்கிருதத்தில் பொறிக்கப்பட்டவை. பிராமணருக்குப் பசுக்களும் பொன்னும் தானமாக வழங்கப்பட்டதை இவை குறிப்பிடு கின்றன. பிராமணர் போர்ணியோவில் முதன்மை பெற்றிருந்தார்கள். அரண்மனையில் இவர்களின் கிரியைகள் முக்கியம் பெற்றிருந்தன. போர்ணியோவில் கல்லிற் செதுக்கப்பட்ட உருவச் சிலைகள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவை சிவன், கணேசர், நந்தி, அகத்தியர், பிரமா, மகா காலர் முதலியவர்களின் திருவுருவங்களாக உள்ளன. மேற்குப் போர்ணி யோவில் புத்தரின் ஏழு உருவங்களும் பல போதி சத்துவரின் உருவங் களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இந்தியச் சிற்பிகளின் வேலைப் பாடுகளாக உள்ளன. கிழக்குப் போர்ணியோவில் மரத்தினால் எடுக்கப் பட்ட பழைய கோவிலில் சிவ பெருமான், புத்தர் பெருமான் ஆகியோ ரின் அழகிய சிலைகள் உள்ளன. அவை கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். போர்ணியோ மக்கள் பல்லவர்களிடமிருந்து எழுத்தெழுதும் முறையைப் பயின்றனர். “போர்ணி யோவின் கூட்டை (Koetai) பிராந்தியத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களின் எழுத்து பல்லவ மன்னரான மகேந்திரவர்மனின் மகேந்திரவாடி தளவனூர் சாசனங்களின் எழுத்தை ஒத்திருப்பது இங்கு நோக்கத்தக்கது. பல்லவ சாசனங்களில் வழங்கி வந்த கிரந்த எழுத்து போர்ணியோ, ஜாவகத் தீவுகளில் பழங் கல்வெட்டுகளில் வழங்கிவந்த கிரந்த எழுத்துகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கவேண்டும் என்று ஹாலந்து நாட்டு வரலாற்றுச் சாசன ஆராய்ச்சி நிபுணரான டாக்டர் வோகெல் (Dr. Vogal) கருதுகிறார்.”1 பாலித்தீவு இன்றும் இந்தியப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காப்பாற்றி வருகின்றது. பாலி மக்களில் ஆடவரும் மகளிரும் மாலைக் காலத்து இராமாயணம் பாரதம் என்னும் நூல்களைப் படிப்பதைக் கேட்பதற்குக் கோயில்களுக்குச் செல்கிறார்கள். இலக்குமியும் சத்திய பாமையும் இரு பக்கங்களில் நிற்கும் திருமாலின் திருவடிவமொன்றும் பாலித் தீவிற் கண்டுபிடிக்கப்பட்டன. 27. பிலிப்பைன் தீவுகள் பிலிப்பைன் தீவுகளில் குடியேறியவர்கள் தென்னிந்திய மக்கள் என்பதைச் சான்றுபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. பிலிப்பைன்தீவு எழுத்துக்கும் தென்னிந்திய எழுத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. உரோமு வால்டேஸ் என்னும் புகழ்பெற்ற பிலிப்பைன் நாட்டு ஆராய்ச்சியாளர், “எங்கள் எழுத்து திராவிட இனத்தைச் சேர்ந்தது” என்று கூறியுள்ளார். உலூசன், மின்டானோ என்னும் மலைகளில் வாழும் மக்கள் இந்தியக் கடவுளராகிய மும் மூர்த்தி களை வழிபடுகிறார்கள். அட்டின்னோ டி மனிலா என்னுமிடத்தில் பழம் பொருளாராய்ச்சியாளர் ஒருவர் கணேச உருவச்சிலை ஒன்றை வைத் திருக்கிறார். பிலிப்பைன் மக்களின் நாட்டுக் கதைகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு உரியவை. பொருள்களின் கைவேலைப்பாடுகளும், அங்கு வழங்கிய நாணயங்களும், பழைய பெயர்களும் இந்தியச் செல்வாக்கைப் புலப்படுத்துகின்றன. செலிபிஸ் தீவில் சிவ வழிபாட்டைக் குறிக்கும் பல அடையாளங்கள் காணப்படுகின்றன. செலிபிஸ் மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு என வழங்கப்படுகிறார். நியூகினியில் நடைபெறும் சமயக் கிரியைகள் சிவவழிபாட்டின் சிதைவுகள் என குரோபேட் என்னும் ஆராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். பசிபிக் கடலிலுள்ள பொலினீசியத் தீவுகளிலும் இந்தியப் பண்பாடு பரவியுள்ளது. பொலினீசியரின் மொழி முண்டர், சந்தால் என்னும் மக்கள் பேசும் மொழிக்கு இனமுடையது. அவர்களின் சங்கு வாத்தியம் மூக்கால் ஊதும் குழல் முதலியன இந்தியாவினின்றும் சென்றவை. ஹாவேத்தீவாரின் குலா ஆட்டமும் சாமோத்தீவாரின் சிவன் ஆட்டமும் வங்காள நாட்டு ஆடல்கள் போன்றவை. பொலினீசியரின் சோடிப்பு வகைகளை இந்தியாவிலும் கம்போடியாவிலும் காணலாம். பொலினீசிய மக்களின் முக்கிய உணவுப் பொருள்கள் சிலவும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளும் இந்திய நாட்டுக்குரியன. அவர்களின் கோயில்களும் கிரியைகளும் பிறவும் அவர்களுக்கும் இந்தியாவுக்கு முள்ள தொடர்பை விளக்குகின்றன. “கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சீன வணிகர் இந்தியப் பண்டங் களைக் கடல்வழியாகச் சீனாவுக்குக் கொண்டு சென்றார்கள் என்பதற்குச் சீன நூல்களில் ஆதாரங் காணப்படுகின்றது. கிறித்துவுக்குமுன் முதல் ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த இரும்புக் காலப்பொருள்கள் பல பிலிப்பைன் தீவுகளிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அதே காலத்தைச் சேர்ந்த தமிழக இரும்புக் காலப் பொருள்களை ஒத்திருக் கின்றன. அங்கு கிடைத்த பொருள்கள் கத்திகள், கோடரிகள், குத்து வாள்கள், ஈட்டி முனைகள், கண்ணாடி மணிகள், கண்ணாடிக் காப்புகள், சூதுபவளம், போலி இரத்தினக் கற்கள், பளிங்குகள் என்பவற்றால் செய்யப்பட்ட மணிகள் என்பன. இவ் வகைப் பொருள்கள் மலாயாவி லும் வடக்குப் போர்ணியோவிலும், சாவகம் முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இதனால் கிறித்துவ ஆண்டு ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்தின் முன்னரே தென்னிந்திய மக்கள் மலாயாவுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் சென்றிருந்தார்களென்பது நன்கு புலனாகின்றது. கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தின் பின் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் தென்னிந்திய மக்களின் இரண்டாவது தொடர்புகளைக் குறிக்கின்றன.”.1 28. சீயம் (தாய்லாந்து) கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்கள் சீயம் நாட்டில் குடியேறியிருந்தார்கள். குப்தர் காலக் கட்டடக் கலை அமைப்பிற் கட்டப் பட்ட பிராமண மத, பௌத்த மதக் கோயில்கள் நாடு முழுமையிலும் காணப்பட்டன. மங்சிதெப் என்னுமிடத்தில் சிவன், விட்டுணு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றோடு சமக்கிருதத்தில் எழுதப்பட்ட சாசனமொன்று காணப்பட்டது. இவை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. சீயத்தில் எடுக்கப்பட்ட கோயில்கள் வடஇந்திய தென்னிந்திய சிற்பக் கலைக் கலப்புடையன. நன்சோ என்னும் பகுதியை ஆண்ட அரசன் மகாராசா என்னும் பட்டப்பெயர் பெற்றிருந்தான். சீயம் மக்களின் சமய நூல்களிலும் ஓவியங்களிலும் மாமேரு உலகுக்கு மையமாகவுள்ளது என்னும் கொள்கை காணப்படு கிறது. பாங்காக்கிலுள்ள அரசனின் கோவிற் சுவர்களில் இராமாயணக் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. அங்கு வசந்த காலத்தில் இன்றும் ஊஞ்சல் விழா கொண்டாடப்படுகிறது. அரசர்களுக்குப் புரோகிதர் இருந்து வந்தனர். “பிராமணர்கள் சீயம் நாட்டில் முதன் முதல் குடியேறிய காலமாக நம்பப்படுகின்ற கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, இராமேஸ்வரத்தி லிருந்து கி.பி.15ஆம் நூற்றாண்டிலேயே சிலர் அந்நாட்டுக்குச் சென் றிருக்கக் கூடும் என்று நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன் கிராபர்ட்டு என்னுமறிஞர் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இவ்வாறு வந்த பிராமணர் தமது குடும்பங்களோடு வராமல் குடியேறிய நாட்டிலுள்ள பெண்களை மணந்து கொண்டனர். அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களிற் சிலர் குருமாராகவும், சிலர் போர் வீரர்களாகவும் மற்றும் சிலர் அரசாங்க சோதிடர்களாகவும் சேவை செய்து வந்தனர். கோயில்களில் பூசைக் காலங்களில் ஓதுவதற்கான மந்திரங்கள் சமக் கிருதத்திலும் தமிழிலும் இப்பொழுதும் வழங்கிவருகின்றன. ஆனால் இம் மந்திரங்களின் பொருளை அறியாமலே அவர்கள் அவற்றைச் செபித்து வருகின்றனர். இந்தப் பிராமணர் பூசை வேளைகளிலும் அரசாங்க விழாக்களிலும் இம்மந்திரங்களை ஓதியும் பிராமண மதச் சடங்குகளை அனுசரித்தும் வருகின்றனர். “சீயம் மன்னரின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப் பாடல் ஒன்று பாடப்படுகிறது. பாங்காக் கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம் பாவைப் பாடல்களைப் புரோகிதர் இன்றும் பாடி வருகின்றனர். சீயம் கோயில்களில் நடக்கும் கிரியைகள் தென்னிந்திய கோயில்களில் நடப்பன போலவே இருக்கின்றன. தென்னிந்தியாவில் நடப்பது போலவே மார்கழி மாதத்தில் கோயில்களில் திருவெம்பாவை விழா நடைபெறுகிறது”.2 29. கம்போடியா இப்பொழுது கம்போடியா என வழங்கும் நாடு முற்காலத்தில் கம்போசம் என அறியப்பட்டது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கௌண்டியனியன் என்னும் பிராமணர் நாகினி சோமா என்னும் பெண்ணை மணந்து கி.பி. முதல் நூற்றாண்டில் அந்நாட்டின் அரசனா னார் எனப் பழங்கதை வழங்குகிறது. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் தென்னிந்திய மக்கள் கம்போடியாவில் குடியேறினர். பல்லவ எழுத்தில் பொறிக்கப்பட்ட பல சாசனங்கள் அங்குக் கிடைத்துள்ளன. வைணவம், பௌத்தம் என்னும் மதங்களிலும் பார்க்கச் சைவ மதமே அங்கு முதன்மை பெற்றிருந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்கள், இதிகாசங்கள் சம்பந்தமானவை. பாலவர்மனென்னும் அரசன் நான்கு சிவாலயங் களைப் பிரதிட்டை செய்தான். கம்போடிய அரசர் வர்மன் என்னும் பெயர் புனைந்து முடிசூடினார். பல்லவ அரசரும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். பவ வர்மன் 616இல் கம்பீரவர்ணர் என்னும் சிவலிங்கத்தை நாட்டி வழிபட்டான். பிசார், சினெங், கராபி முதலிய இடங்களில் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் சிவன் உருவங்கள் காணப்படுகின்றன. இடபத்தில் வீற்றிருக்கும் சிவ வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபட்டது. சூரியவர்மன் என்னும் அரசன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாடி என்னும் சிறந்த திருமால் கோயிலைத் தென்னிந்திய சிற்ப முறையிற் கட்டினான். 30. அங்கோர்வாடி கம்போடியாவில் அங்கோர்வாடி என்னும் ஓர் இடமுண்டு. அங்கு பெரிய இடிபாடுகள் காணப்படுகின்றன. அக் கட்டிடங்கள் பழைய இந்திய மக்களால் இந்தியக் கட்டிட அமைப்பு முறையிற் கட்டப் பட்டவை. அவ்வகை அழிபாடுகள் யாவாவிலும் காணப்படுகின்றன. இந்திய மக்களின் சமயம் இந்தியாவில் மாத்திரம் உண்டு என எண்ணி யிருக்கும் இந்தியன் ஒருவனுக்கு இவைகளைப் பார்க்கும்போது வியப்பு உண்டாகும். அங்குக் காணப்படும் இடிபாட்டின் கட்டிடங்கள் இந்திய நாகரிகம் உயர்நிலையில் இருந்த காலத்தில் தோன்றியவை அவ்வழிபாட் டின் வரலாறு அங்கு காணப்படும் பொருள்களைக் கொண்டு ஆராய வேண்டியவை. பிரெஞ்சுக்காரர் பலர் இவ்வாராய்ச்சியை நடத்தியுள் ளார்கள். அவைகளைப் பற்றி நம்மவரிற் சிலரே அறிவர். கம்போடியாவில் எப்பொழுது இந்தியர் போய்க் குடியேறி னார்கள் என்பதற்குச் சரித்திரத் தொடர்பான ஆதாரம் கிட்டவில்லை. எத்தனை இந்தியர் அலை அலையாகச் சென்றனர் என்பதும் தெரியாது. செவி வழிச் செய்தியின்படி கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியர் அங்குச் சென்றார்கள். மெங்கொங் ஆற்றுக்குக் கீழ்ப் பகுதியிலுள்ள வோனான் என்னுமிடத்தில் கௌண்டினியன் என்னும் பிராமண னொருவன் ஓர் இராச்சியத்தை ஆரம்பித்தான். அவன் அந்நாட்டு இராசகுமாரியை மணந்தான். கௌண்டினியனின் பரம்பரையில் பல அரசர் தோன்றினர். வோனானுக்கு வடக்கே கம்பு என்னும் இந்திய அரசன் இன்னொரு இராச்சியத்தைத் தொடங்கினான். இவன் வோனான் இராச்சியத்தை வென்று கைப்பற்றும் வரை கௌண்டினிய பரம்பரை யினரின் வரலாறு யாதும் அறியப்படவில்லை. கம்பு என்பவன் கம்பு சுவாயம்பு என அறியப்பட்டான். கம்பு, தேவ கன்னியாகிய மேராவை மணந்தான். கம்புயா என்பதிலிருந்து கம்போடியா என்னும் பெயர் உண்டாயிற்று. கம்போடியாவை முதலில் ஆண்ட சரித்திர சம்பந்தப் பட்ட அரசன் உருத்திரவர்மன். அங்கோரின் அழிபாடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதன்மையுடையது அங்கோர் நாட்டிலுள்ள பெரிய திருமால் கோயில். இஃது அங்கர்தோம் என்னுமிடத்திலுள்ளது. இவ் விடத்துக்கு அயலில் பதினைந்து மைல் சுற்றில் அங்குமிங்குமாகப் பல அழிபாடுகள் காணப்படுகின்றன. கோயிலிலிருந்து ஒரு கல் தொலைவில் அங்கர்தோம் என்னும் பழைய நகர் இருக்கின்றது. திருமால் கோயிலின் நாற்புறங்களிலும் உள்ளே செல்லும் வழிகள் இருக்கின்றன. அங்கோர் என்பதற்கு நகரம் என்பது பொருள். கோயிலைச் சுற்றி வெட்டு வாய்க்காலிருக்கிறது. கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. நகரின் பெரிய வீதி தெற்கிலிருந்து வடக்கே செல்வதாலும் கோயில் வீதியை நோக்கியிருக்க வேண்டியிருந்தமையாலும் அது அவ்வாறு அமைக்கப்பட்டது. கோவிலின் வெளி வீதியின் நீளம் 1716 அடி; அகலம் 1386 அடி. மதிலுக்கு உட்பட்ட அதன் விசாலம் மதுரைக் கோவிலை விட இருமடி. கோபுரங்களிலும், சுவர்களிலும் தேவரும், அசுரரும் அமுதங் கடைவதுபோல் புராண வரலாறுகளும் பிறவும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவர் கௌரவர்களின் போர்களும் காணப்படுகின்றன. தேவரும் அசுரரும் வேறு வேறு வகையான பாகைகள் தரித்திருக்கின்றனர். கோபுரங்களின் உயரம் 213 அடி மதுரைக் கோயிற் கோபுரத்தின் உயரம் 152 அடி. அங்கோர்வாட் கோயில் கருங்கல்லா லெடுக்கப்பட்ட தென்னிந்திய கோயில்களைப் போல அழகிய அமைப் புடையது. அங்கர்தோமின் நான்கு வாயில்களிலுள்ள கட்டிடங்களிலும் பெரிய மனித முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகத்தின் உயரம் ஒன்பது அடி. இவ்வாறு 160 முகங்கள் கூட்டங்களாகக் காணப்படு கின்றன. வாயிலின் இரு புறங்களிலும் இரண்டு நாகங்கள் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. நாகத்தை இராக்கதர் பிடித்திருக்கின்றனர். நாகத்தின் நீளம் 100 அடி. 31. சம்பா இப்பொழுது அன்னாம் என வழங்கும் மாநிலம் முற்காலத்தில் சம்பா எனப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்து சமயமும் இந்தியப் பண்பாடும் சம்பாவில் பரவின. வர்மன் என்பது பல நூற்றாண்டுகளாக நாட்டை ஆண்ட அரசர்களின் பெயராகவுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட சமக்கிருத சாசனங்கள் அங்குக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பத்திர வர்மன், இந்திரவர்மன், இந்திரவர்மதேவன் முதலிய அரசர் சமக்கிருத இலக்கியங்களிற் புலமை பெற்றிருந்தனர். சம்பாவில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. பத்திரேசுவரர் என்னும் பெயரில் சிவன் நாட்டுக்குரிய கடவுளாகக் கொள்ளப்பட்டார். மகாதேவி என்னும் பெயரில் மக்கள் அம்மனை வழிபட்டார்கள். விட்டுணுவை வழிபடும் மக்களும் அங்கு இருந்தார்கள். அவரில் சிலர் தாம் விட்டுணுவின் அவதாரம் எனக் கூறினர். சம்பாவில் பௌத்த மதமும் ஓங்கியிருந்தது. சீனத் தளபதி ஒருவன் சம்பாவிலிருந்து 1350 பௌத்த நூல்களை எடுத்துச் சென்றான். சம்பாவிலிருந்த கோயில்கள் மாமல்லபுரத் தேர்களையும் காஞ்சிபுரக் கோயில்களையும் பார்த்து அமைக்கப்பட்டவை. சம்பாவிற் கிடைத்த மிகப் பழைய கல்வெட்டு தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. பழைய கல்வெட்டுகளிற் காணப்படும் எழுத்தும் இலக்கண மும் தெலுங்கு மொழியிலுள்ளவை போன்றிருத்தலால் ஆதியிற் சம்பா விற் குடியேறியவர்கள் ஆந்திரராக இருக்கலாம். “பொன்னாகரிலுள்ள உமாபகவதி ஆலயம் பற்பல மாற்றங் களுக்கு உட்பட்ட போதிலும் அது இன்றும் தழைத்திருப்பது காணலாம். முற்காலம் தொட்டே ‘சமஸ்’ என்ற கம்பா நாட்டு மக்கள் விழாக் கொண்டாட்டங்களில் சந்தனத்தை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவைப் போலவே ஆங்கும் சமய நூல்கள் யாவையும் பனை ஓலையில் வரைந்து பாதுகாத்தனர். சம்பாவிலுள்ள கோயில்களின் சிற்ப வேலை திராவிட முறையை ஒட்டியதென்பதற்கு ஐயமில்லை. உயரப் போகப்போக அகலம் குறைந்து ஒன்றின்மேல் ஒன்றாக மாடி போல் அமைக்கப்பெற்றிருக்கும் மாடங்களும், கோயில்களும், அடிப்படைக் கொத்தளங்களும் காஞ்சீபுரம், வாதாபி முதலிய ஊர்களிற் காணப்படுப வற்றை ஒத்திருக்கின்றன”.1 32. ஊர் மக்கள் இடங்கள்தோறும் வீடுகள் அமைத்துக்கொண்டு கூட்டங் களாக வாழ்ந்தார்கள். பல வீடுகள் கொண்ட இடம் குடியிருப்பு அல்லது கிராமம் என அறியப்பட்டது. ஊர் என்னுஞ் சொல் கிராமத்தையும் பட்டினத்தையும் குறிக்கும். ஓர் ஊரில் நூறு முதல் ஐந்நூறு பயிரிடும் குடும்பங்களிருந்தன. ஒரு கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் இடையில் அல்லது அவற்றைச் சூழ்ந்து குறுங்காடு இருந்தது. காடு சார்ந்த நிலங்களிலுள்ள குடியிருப்பு பாடி, சேரி எனவும், வயல் சார்ந்த இடங்களின் குடியிருப்பு ஊர் எனவும், கடற்கரைக் குடியிருப்பு சிறு குடி எனவும், பாலை நிலக்குடியிருப்புப் பறந்தலை எனவும் அறியப்பட்டன. ஆறு இருப்பது ஊருக்கு அழகாகக் கொள்ளப்பட்டது. “ஆறில்லா ஊருக்கழகு பாழ்” என்பது முதுமொழி. ஊரின்முன் அல்லது நடுவில் பெரிய ஆலமரம் அல்லது வேறு நிழல் மரம் நின்றது. அதனைச் சூழ்ந்து திண்ணை இடப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஓய்வு நேரங்களில் அவ்விடத்தில் கூடி ஒருவரோடு ஒருவர் அளவளாவிப் பொழுதுபோக்கினார்கள்; ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களை ஆராய்ந்தார்கள். அவ்விடம் மன்றம் எனப்பட்டது. சிறுவர் மன்றத்தே சென்று கல்வி பயின்றார்கள். முதியோர் அவ்விடத்தில் கூடி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தார்கள். கடவுளைக் குறிக்கும் அருள்வடிவாக மன்றத்தே கற்றூண் நடப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி மெழுக்கிடப்பட்டது. மக்கள் பூவையும் பலியையும் தூவிக் கடவுளை வழிபட்டார்கள். கந்துக் கடவுளுக்கு விளக்கு ஏற்றப்பட்டது. கோயி லிருப்பது ஊருக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. “திருக்கோயிலில்லாத திருவிலூரும்” எனத் திருநாவுக்கரசு சுவாமி களும், “கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்” என உலகநாத னாரும் கூறியிருக்கின்றார்கள். கோயிலைச் சுற்றிக் கிராமம் வளர்ந்தது. கிராம நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் மன்றமே மத்திய இடமாக இருந்தது. கிராமத்தில் பலவகைத்தொழில் புரிவோரிருந்தனர். ஒவ்வொரு தொழில் புரிவோரும் தனித்தனி வீதியில் வாழ்ந்தனர். கிராம மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை முதலிய பொருள்களெல்லாம் கிராமத்திலேயே கிடைத்தன. ஊர்க் கருமங்கள் ஒழுங்காக நடைபெறு வதை ஊர்ச்சபை மேற்பார்த்தது. கிராமம் சிறிய அளவில் ஒரு இராச்சி யம் போலிருந்தது. இவ்வாறு அமைந்த கிராம ஆட்சியிலிருந்தே பெரிய நகர் ஆட்சிமுறை வளர்ச்சியடைந்தது கிராம ஆட்சிக்கு கிராமச்சபை பொறுப்பாக இருந்தது. கிராமச் சபைகளுக்கு மேல் அரசன் ஆணை இருந்தது. செல்வர் வீடுகளைச் செங்கல்லாலும் மரங்களாலும் கட்டி னார்கள்; வறியவர் மண்ணினாலும் தடிகளாலும் அவற்றை அமைத் தார்கள். செங்கல் வீடுகள் ஓடுகளாலும், மண் குடிசைகள் பனை ஓலை, தென்னங்கீற்று, வைக்கோல், புல் என்பவற்றாலும் வேயப்பட்டன. வீடு களுக்கு முக்கோண வடிவான மாடங்களிருந்தன. மாடங்களில் மண் விளக்கு அல்லது உலோக விளக்கு வைத்து எரிக்கப்பட்டது. வீட்டுக்கு முன் திண்ணையும், திண்ணைக்கு முன் ஒட்டுத் திண்ணையுமிருந்தன. வீட்டுக்குப் பின்புறத்தில் கிணறும் கிணற்றுக்கு அப்பால் கொல்லையில் மாட்டுத் தொழுவமும் அப்பால் வயலுமிருந்தன. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம் எனவும், கூற்றம் பல சேர்ந்தது நாடு எனவும், நாடு பல சேர்ந்தது கோட்டம் எனவும், கோட்டம் பல சேர்ந்தது மண்டலமெனவும் அறியப்பட்டன. 33. சிறுகுடி மலையும் மலை சார்ந்த இடங்களிலுமுள்ள ஊர் சிறுகுடி என அறியப்பட்டது. சிறுகுடியில் வாழும் ஆடவர் குறவரெனவும் மகளிர் குறத்தியர் எனவும் பெயர் பெற்றிருந்தனர். மலை இடங்களில் பலா மரங்கள் செழித்து வளர்ந்தன. அவை மீது மிளகுக் கொடிகள் கிழங்குகளை வீழ்த்தின. மலை முகடுகளில் தேன் கூடுகள் தொங்கின. காட்டில் பன்றி, மான், கரடி முதலிய விலங்குகள் திரிந்தன. குறவர் வேட்டை நாய்களை வளர்த்தார்கள். அவர்கள் நாய் பின் தொடர வில்லையும் அம்பையும் கொண்டு காட்டிற் சென்று மான் பன்றி முதலிய விலங்குகளை வேட்டையாடினார்கள்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியைச் சிறுகுடியிலுள்ளவர்களுக்குப் பகிர்ந் தளித்துத் தாமுமுண்டார்கள்; மூங்கிலை வெட்டி உயர்ந்த ஏணிகள் செய்து அவற்றை நேர்குத்தான மலைகளில் சார்த்தித் தேன்கூடுகளை அழித்துத் தேன் சேகரித்தார்கள்; பலா மரங்களில் பழுத்துத் தொங்கும் குடம்போன்ற பழங்களைப் பறித்துப் பலாச் சுளைகளைத் தேனில் தொட்டு உண்டார்கள்; கொடிகள் வீழ்த்திய கிழங்குகளை அகழ்ந் தெடுத்து அவித்து உண்டார்கள்; மலைப் பக்கங்களை உழுது தினை விதைத்தார்கள். தினை கதிர்வந்து முற்றியபோது கதிர்களைக் கவரப் பறவைகள் வந்தன. குறச் சிறுமியர்கட்டுப் பரண் மீதிருந்து தழல், தட்டை என்னும் கிளிகடி கருவிகளைச் சுழற்றியும் தட்டியும் ஆயோ எனச் சத்தமிட்டும் பறவைகளை ஓட்டினார்கள். தினை அறுத்தபின் அவரை விதைக்கப்பட்டது. மலையிடத்தே சுனை நீர் பாய்ச்சி ஐவன நெல்லும் விளைவிக்கப்பட்டது. குறவரின் சிறந்த உணவு தேனும் தினைமாவுமாக இருந்தது. மலையிடத்தே வேங்கை, கொன்றை, பலா முதலிய மரங்கள் செழித்து வளர்ந்தன. குறவர் அம் மரங்களின் கீழ் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள்; குடிசைகளைப் புல்லினால் வேய்ந்தார்கள். தினை, தேன் முதலியவற்றில் மது வடிக்கப்பட்டது. மது மூங்கிற் குழாய்களிலிட்டுக் காரமேறும்படி வைக்கப்பட்டது. நாட்பட்ட மது தேள் கடுப்புப் போன்று காரமுடையதாக இருந்தது. குறவரும் குறத்தியரும் முற்றத்தி லிருந்து கள்ளை வார்த்துப் பருகி, நெருப்பில் இறைச்சியைச் சுட்டு உண்டார்கள். பின் இருபாலினரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து நின்று குரவை ஆடினார்கள். புலித்தோலும் மான்தோலும் பாயாகப் பயன்படுத்தப்பட்டன. தந்தத்திற்காக ஆண் யானைகள் வேட்டையாடப்பட்டன. வீட்டைச் சுற்றி நொச்சி வேலியிருந்தது. நொச்சி வேலியில் மல்லிகைக் கொடி படர்ந்து பூத்தது. குறச்சிறுமியர் முன் கையில் சங்கு வளை அணிந்தனர்; கூந்தலை ஐந்து வகையாகப் பின்னிமுடிந்தனர். அசோகு, வேங்கை முதலியவற்றில் கட்டிய ஊஞ்சல்களில் ஆடினர்; சுனை நீராடினர்; தழைகளைக் கொய்து உடையாக உடுத்தனர். 34. பாடி காட்டிலும் காடு சார்ந்த நிலத்திலுமுள்ள ஊர் பாடி அல்லது சேரி என அறியப்பட்டது. அங்கு வாழும் மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பெயர்கள் பெற்றிருந்தனர். இவர்கள் தடி களாற் கட்டி மண்ணினாற் சுவரெடுத்துப் புல்லால் வேய்ந்த கொட்டில் களில் வாழ்ந்தார்கள். முற்றத்தே ஆடுகளையும் மாடுகளையும் கட்டும் முளைகள் நாட்டப்பட்டிருந்தன. இடையர் ஆட்டிடையர், மாட்டிடை யர் என இரு பிரிவினராக இருந்தனர். மாட்டிடையர் எருமைகளையும் வளர்த்தனர். இடையனுடைய கையில் தலைவளைந்த கோல் அல்லது கொளுவுதடி இருந்தது. ஆட்டிடையன் வளைவு தடியில் பறியைக் கொளுவி முதுகுப் புறத்தே தொங்கும்படி விட்டுச் சென்றான். இடையர் காலையில் ஆடுகளையும், மாடுகளையும் மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென்றார்கள்; அவை மேயும்போது அவர்கள் மர நிழல்களிலிருந்து வேய்ங்குழல், கொன்றைப் பழத்தைக் கோதிச் செய்த குழல், ஆம்பற் றண்டுக் கழல் என்பவற்றில் இனிய இராகங்களைப் பாடினார்கள். மாலைக் காலத்தில் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டன. பாற் பசுக்கள் வீட்டுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. மாடுகளின் கழுத்தில் மணிகள் ‘தெள்’ என்று ஓசை செய்தன. இடையர் பசுக்களின் பின்னே வேய்ங் குழல் ஊதிச் சென்றனர். மாடுகள் தொழுவங்களிற் கட்டப்பட்டன அல்லது மன்றங்களில் அடைக்கப்பட்டன. பசுக்களில் கறக்கப்பட்ட பால் பிரையிட்டுத் தயிராக்கப்பட்டது. இடைச்சி தாழியிலுறைந்த தயிரை மத்தால் கயிறு பூட்டிக் கடைந்தாள்; வெண்ணெயை எடுத்தபின் மோரைப் பானையில் ஊற்றி அதனைத் தலையில் சும்மாட்டின் மீது வைத்துச் சுமந்து அயலிடங்களிற் சென்று நெல்லுக்கு விலையாக விற்றாள். இடையன் நிலத்தை உழுது வரகு விதைத்தான். இடையரின் குடியிருப்பைச் சுற்றி முள்வேலியிடப்பட்டிருந்தது. 35. பாக்கம் கடற்கரை ஊர் பாக்கம் என அறியப்பட்டது. அங்கு வாழ்ந்தோர் பரதவர் என அறியப்பட்டனர். மணல் செறிந்த கடலோரங்களில் பனை மரங்கள் செழித்து வளர்ந்தன. குடிசைகள் புல், தாழை ஓலை, அல்லது பனை ஓலையால் வேயப்பட்டன. வீட்டைச் சுற்றித் தாழை வேலியிருந் தது. முற்றத்தில் மீன் பிடிக்கும் வலைகள் காயவிடப்பட்டிருந்தன. பரதவர் கட்டுமரம், திமில் என்பவற்றில் மீன் பிடிக்கக் கடலில் சென் றார்கள். வலை, எறி, உளி என்பனவற்றை அவர்கள் எடுத்துச் சென் றார்கள்; காலையில் தாம் பிடித்த மீன்களுடன் கரையை அடைந்தார்கள். அவர்களின் மனைவியர் அவற்றைக் கூடைகளில் இட்டு எடுத்துச் சென்று அயலிடங்களில் நெல்லுக்கு விலையாக விற்றார்கள்; மீனுக்கு விலையாகக் கிடைத்த நெல்லைக் குற்றிய அரிசியை உலையிட்டுச் சோறட்டுத் தமது சுற்றத்தோடு இருந்து உண்டார்கள். கடற்கரைகளில் புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்தன. அவற்றின் அயலில் மீன், இறால் முதலியன காய விடப்பட்டன. பரதவச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து அவற்றைக் கவரவரும் புட்களை ஓட்டினார்கள். உப்பளங்களில் பாத்தி கட்டி உப்பு விளைவிக்கப்பட்டது. உப்பு வாணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தொலைவிடங் களுக்குச் சென்றார்கள். அவர்களோடு வீட்டில் வளர்க்கப்படும் குரங்கும் சென்றது. தொலைவிடங்களுக்குக் கொண்டு சென்ற உப்பை அவர்கள் நெல்லுக்கு விலையாகக் கூவி விற்றார்கள். உப்பு வணிகரோடு சென்ற குரங்கு வீடுகளில் விளையாடும் சிறுவரின் கிலுகிலுப்பையை எடுத்து விளையாடும். வண்டியிற் பூட்டிய எருதுகள் இளைத்தால் மாற்றிப் பூட்டுதற்கு உப்பு வாணிகர் எருதுகளை வண்டியின் பக்கத்தே ஓட்டிச் சென்றனர். அவர்கள் வெளியிடத்தே தங்கி அடுப்பு மூட்டிச் சமையல் செய்து உணவு கொண்ட பின் மறுபடியும் பயணஞ் செய்தனர். உப்பு வாணிகர் கழுதைகள் மீதும் உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்றனர். பெண்கள் கூடைகளில் உப்பை எடுத்துச் சென்று நெல்லுக்கு விலையாக விற்றனர். பரதவச் சிறுமியர் கடற்கரை மணலில் பாவை செய்தும் சிறு வீடு கட்டியும், சிறு சோறட்டும் விளையாடினர். மரக்கலங்கள் திசையறிந்து துறை பிடிக்கும் பொருட்டு கடற்கரையில் உயர்ந்த கலங்கரை விளக்கங் களிருந்தன. பரதவர் தமது குடிசைகளில் மண் விளக்கில் அல்லது சிப்பி விளக்கில் மீனெண்ணெயைவிட்டு எரித்தார்கள். 36. மருத நிலத்து ஊர் வயலும் வயல்சார்ந்த நிலத்திலுமுள்ள கிராமம் ஊர் என அறியப் பட்டது. ஊரில் வாழும் மக்களுக்கு உழவுத்தொழில் முக்கியமுடையதாக விருந்தது. வயல்களின் இடையிடையே தோட்டங்களிருந்தன. தோட்டங் களில் பழ மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன; கரும்பும் பயிரிடப் பட்டது. ஏர்த் தொழிலுக்குத் துணையாக மாடுகளும் எருமைகளும் வளர்க்கப்பட்டன. வயல்களில் பருத்தியும் பயிரிடப்பட்டது. உழவரில் உழுவோர் உழுவித்துண்போர் என இரு பிரிவினர் இருந்தனர். உழுவித்துண்போர் காணியாளராகிய செல்வராகவிருந்தனர். வயலில் வேலை செய்வோர் களமர் எனப்பட்டார்கள். இவர்கள் உழுதல், நாற்றுநடுதல், களைகட்டல், நெல்லரிதல், சூடடுக்குதல், கதிர் மிதித்தல் போன்ற வயல் வேலைகளைச் செய்தார்கள். நாற்று நடுதல் முதலிய வேலைகளைச் செய்யும் இருபாலாரும் பாடல்களைப் பாடினார்கள். வயல் செய் எனப்பட்டது. நெல் விளையும் நிலம் நன்செய் எனவும், பிற பயிர்களிடப்படும் நிலம் புன்செய் எனவும், பயிரிடப்படாத நிலம் தரிசு எனவும் அறியப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேளாண்மை எனப்பட்டது. வேள் = நிலம்; ஆண்மை = அரசு அல்லது ஆளுந்தன்மை. தானியங்களைச் சேர்த்து வைப்பதற்கு வீட்டு முற்றத்தில் பெரிய நெற்குதிர்கள் கிடந்தன. ஊரில் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளிருந்தன. வீடுகளின் சுவர்கள் சுண்ணாம்பு தீட்டப் பட்டிருந்தன. சில வீடுகளின் சுவர் செம்மண்ணால் மெழுகப் பட்டிருந்தது. இங்கு பல கைத்தொழில் புரிவோரும் வாழ்ந் தனர். விதைப்புக் காலத்தின் பின்னும் அறுப்புக் காலத்தின் பின்னும் மக்களுக்கு அதிக ஓய்வு இருந்தது. அக்காலங்களில் அவர்கள் பலவகை களில் பொழுது போக்கினார்கள். உரல், உலக்கை, அம்மி, குழவி, திரிகை, ஆட்டுக் கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மணை, கட்டுப் பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல், (வீசுபலகை), உறி (சுமை தூக்கு), காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி), பரண், நிறைகோல், கவண், பாய் முதலியன வீட்டுப் பொருள்களுட் சில. 37. பறந்தலை பாலை நிலத்து ஊர் பறந்தலை எனவும் சீறூர் எனவும் அறியப் பட்டது. வெயில் வெப்பத்தால் மரங்கள் கருகி நீரும் நிழலுமில்லாதிருந்த இடங்கள் பாலை நிலம் எனப்பட்டன. பறந்தலையில் வாழ்வோர் எயினர் எனப்பட்டனர். இவர்கள் வாழும் குடிசைகள் ஈந்தின் ஓலைகளால் வேயப்பட்டவை. இவர்கள் தானியங்களை விளைவிக்கவில்லை. பெண்கள் வெளியே சென்று எறும்புகள் புற்றுக்களில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தார்கள்; அதனை முற்றத்திலிருக்கும் நில உரலி லிட்டு உலக்கையாற் குற்றி உமியைப் போக்கினார்கள். கிணற்றிலே நீரெடுத்துப் பாலையில் உலை வார்த்து வைத்து ஆக்கிய சோற்றைத் தேக்கிலையிலிட்டு உப்புக் கண்டத்தோடு உண்டார்கள். ஆடவரின் மீசை ஆட்டுக் கடாவின் கொம்புபோல் முறுக்கியிருந்தது. அவர்கள் காலிற் செருப்புத் தரித்து, சோகி சிப்பி முதலியவற்றைக் கோத்த மாலையை மார்பில் அணிந்திருந்தார்கள்; இரும்புமுனை இறுக்கிய அம்புகளால் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினார்கள். எயினரின் குடியிருப்பைச் சுற்றி மண்மதிலிருந்தது. மதில் புல்லினால் வேயப்பட்டிருந்தது. அம்புக்கட்டும் பறையும் தொங்கும். எயினர் தலைவனின் வீட்டு வாயிலில் நாய் சங்கிலியிற் கட்டி நின்றது. எயினர் முல்லை நிலத்திலுள்ள பசுக்களைக் கொள்ளையிடச் செல்லும் போது ஏறுகோட் பறையை முழக்கினர். பறை ஒலியைக் கேட்ட எயினர் வந்து கூடினர். அவர்கள் தாம் கவர்ந்து சென்ற பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர். 38. நாடும் நகரும் ஆற்றோரங்கள் நீர்வளம் பெற்றுச் செழிப்படைந்திருந்தன. மக்கள் பலர் அவ்விடங்களிற் குடியேறிப் பயிரிட்டுத் தானியங்களை விளை வித்தனர். அதிக தானியம் வைத்திருப்போன் செல்வனாக மதிக்கப்பட் டான். ஒரு பருவ காலத்தில் ஒருவன் விளைவிக்கும் தானியம் பலருக்குப் பல கால உணவுக்குப் போதுமானதாகவிருந்தது. அக்காலச் செல்வம் உணவு வகைகளாக விருந்தது. வயல் சார்ந்த இடங்களில் செல்வம் திரண்டது. மக்கள் அறுவடைக் காலத்தின் பின் ஓய்ந்திருந்தார்கள். அக் காலத்தில் அவர்கள் ஆடல் பாடல், விளையாட்டுகள், விழாக்கள் என்ப வற்றில் பொழுது போக்கினார்கள். பொழுதுபோக்குக் கலையில் தேர்ந்த நடிகரும், பாடகர்களும், பலவகைக் கைத்தொழில் புரிவோரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு தொழில் புரிவோரும் வெவ்வேறு வீதி களில் வாழ்ந்தார்கள். தொழிலாளர் தாம் செய்துதரும் தொழில்களுக்குக் கூலியாகத் தானியத்தைப் பெற்றார்கள். ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒரு முன்னோரிலிருந்து பெருகிய கூட்டத்தினராகக் கருதப்பட்டனர். பின் வந்து குடியேறியவர்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டனர். அயலிடங்களிலுள்ளவர்கள் இங்கு திரண்டுள்ள செல்வத்தைப் பற்றி அறிந்தார்கள். அதனைக் கவர்தற்கு அவர்கள் திரண்டு வந்தார்கள். இடையன் தனது செல்வமாகிய ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டும், கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டும், இன்னொரு இடத்தை நோக்கிச் சென்றுவிடலாம். வேளாளர் தமது வீடுகளோடும், தானியக் களஞ்சியங் களோடும், தமது செல்வத்தைக் கொள்ளையிட வருவோரை எதிர்த்து போர் செய்ய உடல் வலிமிக்க பலர் திரண்டார்கள். அவர்களை வீரமும் திறமையுமுடைய ஒருவன் போருக்கு நடத்திச் சென்றான். பகைவரை எதிர்த்து வெற்றிபெற்ற படைத் தலைவன் அரசனானான். தந்தைக்குப் பின் மகன் என்னும் முறையில் வழிமுறையாக அரசுரிமை வந்த காலத் தும், பொதுமக்கள் அரசனைத் தெரிந்தெடுப்பது போன்ற உபசார வழக்கு பல நாடுகளில் இருந்து வந்தது. இஃது இலங்கையில் கடைசிக் கண்டி அரசன் காலம் வரையிலிருந்து வந்தது. குடியிருப்பைச் சுற்றிப் பாதுகாப்பாக முள்வேலி இடப்பட் டிருந்தது. பின் இவ் வேலி கொள்ளக்காரர் எளிதில் நுழைய முடியாத மண் மதில் அல்லது செங்கல் மதிலாக மாறிற்று. பகைவர் மதிலை எளிதில் அடைய முடியாதபடி மதிலைச் சுற்றி ஆழ்ந்த அகழி வெட்டப் பட்டது. அகழுக்கு வெளியே முள் மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன. மதிலினுள் உள்ள குடியிருப்பு இடம் நகர் என அறியப்பட்டது. நகர் பெரும்பாலும் செவ்வக வடிவிலிருந்தது. மௌரிய சந்திரகுப்தன் காலத்தில் வட இந்தியாவிலிருந்த பாடலிபுத்திரா (பாட்னா) என்னும் நகர் பத்து மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுமுடையதாக இருந்தது. நகரைச் சூழ்ந்து நாடு இருந்தது. பல ஊர்கள் சேர்ந்தது நாடு எனப்பட்டது. நாடு என்பது நடு என்னும் அடியாகப் பிறந்து நட்டு உண்டாக்கப்பட்டதென்னும் பொருள் தருவது. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கரியது என்பது பொருள். இதற்கு அடி கட. நாட்டின் பெரும் பகுதி நெல் வயல்களாகவிருந்தது. கரும்பும் ஆங்காங்கு பயிரிடப்பட்டது. தெங்கு, மா, பலா முதலியவும் உணவுக்கு வேண்டிய காய் கனிகளை உதவும் செடி கொடிகளும் வயல்களில் நட்டு உண்டாக்கப்பட்டன. நாட்டின் செழிப்பும் விளைவும் அரசனுடைய செல்வத்துக்கு ஏதுவாகவிருந்தன. முற்கால அரசர் வேளாண்மை உயரும் பொருட்டுக் குளங்கள் தொட்டும் ஆற்று நீரை மறித்து அணைக்கட்டுகள் கட்டியும் வந்தார்கள். உழவர் உழுதல், நாற்று நடுதல், களை கட்டல், நெல்லறுத்தல், சூட்டுக்குதல் போன்ற செயல்களைப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடியிருக்கின்றன. பாரதம், இராமாயணம், பிற்காலப் புராணங்கள் என்பவை நாட்டுவளம் நகர்வளங்களைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகின் றன. நாட்டின் எல்லையில் அல்லது இயற்கை அரண் உள்ள இடத்தில் நகர் இருந்தது. ஊர்கள் அல்லது கிராமங்கள் வளர்ந்து நகரங்களாக மாறின. மெசபெதேமியாவின் பழைய நகரமொன்றின் பெயர் ஊர். இது தொடக்கத்தில் ஊர் அல்லது கிராமமாகவிருந்து பின் நகரமாக மாறிய தெனக் கருதப்படுகிறது. 1225இல் சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி தமிழ்நாட்டுக்கு வந்தான். அவன் சோழர் தலைநகரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: “இங்கு ஏழு சுற்று மதில்களுடைய நகரமுண்டு. சுவர்களின் உயரம் ஏழு அடி. வெளிச்சுவர் வடக்கிலிருந்து தெற்கே பன்னிரண்டு ‘லி’1யும் கிழக்கிலிருந்து மேற்கே ஏழு ‘லி’1யும் செல்கின்றது. ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியிருக்கிறது. இவற்றில் நான்கு சுவர்கள் செங்கல்லால் எழுப்பப்பட்டவை; இரண்டு களிமண்ணாலானவை. மத்தியிலுள்ள ஒன்று மரத்தினால் கட்டப்பட்டது. அங்கு பழ மரங்களும் பிற மரங்களும் நடப்பட்டுள்ளன. முதலிரண்டு சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் மக்கள் வாழும் வீடுகள் இருக்கின்றன. மூன்றாம் நான்காம் சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் அரசனுடைய அதிகாரிகள் வாழ் கின்றனர். ஆறாவது சுற்றுக்குள் கோயில்களும் பூசகர்களின் இல்லங்களு மிருக்கின்றன. ஏழாவது சுற்றுக்குள் நானூறு வீடுகளடங்கிய அரசன் வாழும் மாளிகை இருக்கின்றது. 39. பட்டினம் பண்டங்கள் வாணிகத்தின் பொருட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மாடுபூட்டிய வண்டிகளிலேற்றியும், கழுதைகளிலும் பொதிமாடுகளிலும் சுமத்தியும் பண்டங்கள் தரைவழியே கொண்டு செல்லப்பட்டன. வாணிகம் வளர வளரப் பாதைகளும் வளர்ந்து கொண்டு சென்றன. பண்டங்களை விற்பதற்கும் வாங்குதற்கும் சந்தைகள் கூடின. சந்தை கூடுமிடங்களில் கடைகளும் கடைத்தெருக்களும் எழுந்தன. மக்கட்பெருக்கமும் வாணிக மும் அதிகப்பட்டன. அவ்விடங்கள் பட்டினங்களாக மாறின. பட்டினங்கள் தொடக்கத்தில் கடற்கரைகளில் எழுந்தன. கடற்கரை ஊர்கள் பாக்கம் என்றும் பட்டினம் என்றும் அறியப்பட்டன. உள் நாட்டுக்கு வேண்டிய உப்பு கடற்கரைகளிலிருந்து கொண்டு போகப் பட்டது. உப்பு வணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டும், கழுதை களிற் சுமத்திக் கொண்டும் செல்வதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வயலும் வயல்சார்ந்த இடங்களிலும் நெல்லை வாங்கும் பொருட்டு வணிகர் சென்றனர்; நெல்லுக்கு விலையாகத் தாம் கொண்டு சென்ற பண்டங்களைக் கொடுத்தார்கள். இவ்வாறு வணிகர் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடிய இடங்கள் பட்டினங்களாக மாறின. மக்கள் பண்டங்களை மரக்கலங்களில் கடல்வழியே பிற நாடு களுக்குக் கொண்டு சென்று வணிகம் நடத்தினார்கள். அப்பொழுது அயல் நாட்டுப் பண்டங்களும் உள்நாட்டுப் பண்டங்களும் கடற்கரையிற் குவிந்தன. அப் பண்டங்களை விற்கவும் வாங்கவும் அயல்நாட்டவரும் உள்நாட்டவரும் கடற்கரைகளிற் கூடினார்கள். அவ்வகை இடங்களும் பட்டினங்களாக மாறின. முசிறி, கொற்கை, தொண்டி, புகார் என்பன முற்காலத் துறைப் பட்டினங்களுட் சில. கருவூர், உறையூர், மதுரை முதலியன சேர சோழ பாண்டிய அரசரின் தலைநகர்கள். இவை பெரிய உள்நாட்டுப் பட்டினங் களாகவிருந்தன. “பட்டினம் நீண்ட சதுர வடிவுடையதாக விருந்தது. அது எண்பத் தொரு நீண்ட சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் சுற்றி வீதி சென்றது. பொது இடங்கள் மரங்கள் நாட்டப்பட்டும் விளக்குத் தூண்கள் நாட்டப் பட்டுமிருந்தன. முக்கிய கோயில் சிறு பட்டினமாகவிருந்தது. வீதிகள் பரற்கற்களிடப்பட்டிருந்தன. அவற்றின் அகலம் நான்கு முதல் இருபது முழமுடையதாக விருந்தது. பூங்காக்கள், விளையாட்டு வெளிகள், இடுகாடு, சுடுகாடு, முதலியவை பட்டினத்துக்கு வெளியேயிருந்தன. அங்கு சண்டாளர் முதலிய இழிந்தோர் வாழ்ந்தனர். புதிய பட்டினம் பெரும்பாலும் ஆற்றின் வலது புறத்தில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிச் சரிந்திருக்கும் நிலம் பொதுவாக விரும்பப்பட்டது. திசை சூரியநிழலைக் கொண்டு அறியப்பட்டது. கிராமம் நூறு முதல் ஐந்நூறு வேளாண்மை செய்யும் குடும்பங்களுடையதாக விருந்தது”.1 40. மக்கட் பாகுபாடு பழங்காலத்தில் மக்கள் தாம் வாழும் இடங்களுக்கேற்ப வெவ்வேறு பெயர்களாலறியப்பட்டார்கள். ஒவ்வொரு நிலத்திலும் வாழ்வோர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டார்கள். அவர்களிடையே உயர்வு - தாழ்வு, செல்வமும் அதிகாரமும் காரணமாக உண்டாயிருந்தன. ஒவ்வொரு சமுதாயத்தினரும் ஒரு குலத்தவராகவும் ஒரு மூதாதையரினின்று பெருகியவர்களாகவும் கொள்ளப்பட்டார்கள். மலைநாட்டுத் தலைவன் சிலம்பன், வெற்பன் எனவும், தலைவி கொடிச்சி, குறத்தி எனவும், ஏனையோர் குறவர், இறவுளர், குன்றவர், வேட்டுவர் எனவும் அறியப்பட்டார்கள். முல்லை நிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் எனவும் தலைவி கிழத்தி எனவும், ஏனையோர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனவும் பெயர் பெற்றிருந்தார்கள். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனவும், தலைவி கிழத்தி எனவும் ஏனையோர் கடையர் உழவர், உழத்தியரெனவும் அறியப்பட்டனர். நெய்தல் நிலத் தலைவன் துறைவன், கொண்கன், சேர்ப்பன், மெல்லம் புலம்பன் எனவும் தலைவி நுளைத்தி, பரத்தி எனவும் ஏனையோர் பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனவும் பெயர் பெற்றனர். பாலை நிலத்தலைவன் மீளி, விடலை, காளை எனவும் தலைவி எயிற்றி, பேதை எனவும் பொது மக்கள் எயினர், மறவர், மறத்தியர் எனவும் அறியப்பட்டனர். இவர்கள் திணை மக்கள் எனப்பட்டார்கள். திணை என்பது நிலம். ஒரு நிலத்தில் வாழ்வோர் இன்னொரு நிலத்திற் சென்று குடியேறி வாழ்ந்தால் அவர்கள் தாம் வாழும் இடத்துக்குரிய திணைப் பெயரைப் பெற்றார்கள். மக்கள் பட்டினங்களிலும் நகரங்களிலும் சென்று குடியேறி வாழ்ந்து நாகரிகம் தோன்றிய போது பார்ப்பார். அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் பற்றிய சாதிப் பிரிவினராயினர். கோயில்களை மேற்பார்த்தோர் பார்ப்பார் எனப்பட்டனர். நாட்டை ஆள்வோர் அரசர் எனவும், பண்டங்களை வாங்கி விற்போர் வணிகரெனவும், உழுதுண் போரும், உழுவித் துண்போரும் வேளாளரெனவும் அறியப்பட்டார்கள். இவர்களேயன்றிப் பலவகைக் கைத்தொழில் புரிவோரும், பிறர் ஏவிய தொழில்களைப் புரிவோரும் வாழ்ந்தார்கள். தொழில் புரிவோர் தொடக் கத்தில் வேளாண் மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவிக் கொண் டிருந்தார்கள். ஆகவே பதினெண் குடி மக்கள் என்னும் பிரிவில் கைத் தொழில் புரிவோர் அடங்கினர். தந்தை செய்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குடும்பங்கள் பெருகின. ஒவ்வொரு தொழில் புரியும் கூட்டத்தினரும் தனித்தனிச் சாதியினராகப் பிரிந்து வாழ்ந்தனர். தொடக்கத்தில் உயர்வு தாழ்வு என்னும் கொள்கையில் சாதி எழவில்லை; தொழில் பற்றி எழுந்தது. “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா - செய் தொழில் வேற்றுமையால்” எனத் திருக்குறள் கூறுகின்றது. வருணமென்பது வடநாட்டில் தோன்றியது. வருணமென்பதற்கு நிறம் என்பது பொருள். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணங்கள் நான்கு. சூத்திரரென்போர் முதல் மூன்று குலத்தினருக்கும் ஏவல் பூண்டொழுகுவோர். வருணங்களுக்கேற்ப ஒழுக்கங்கள் வகுக்கப் பட்டிருந்தன. வடநாட்டுச் செல்வாக்கு தென்னாட்டில் இடம் பெற் றிருந்த போது வருணம் வருணாச்சிரம தருமம் என்னும் கொள்கைகள் தென்னாட்டை அடைந்தன. இவை கொள்கையளவிலிருந்தனவே யன்றிச் செயலளவிலிருக்கவில்லை. வேளாளர் சூத்திரராகக் கொள்ளப் பட்டார்கள். இவ்வவமானத்திலிருந்து தப்புவதற்கு வேளாளர் தம்மைப் பூவைசியர் எனக் கூறினர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐவகை நிலங் களிலும் இயற்கை அமைப்புகளுக்கேற்பப் பண்பாடுகள் வேறுபட் டிருந்தன. இப் பண்பாடுகளைப் பெற்ற மக்கள் நகர்களில் சென்று தங்கி வாழ்ந்தபோது ஐவகை நிலங்களின் பண்பாடுகளும் கலப்புற்றுத் திருந்திய நிலையை அடைந்தன. இவ்வாறு தோன்றிய வாழ்க்கை முறைகள், கலைகள் என்பது நாகரிகம் எனப்பட்டன. பண்பாடு என்பது சமூகத்தில் உயர்ந்தோரின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமய ஒழுக்கங்களைக் குறிக்கும்.1 41. அரசன் எல்லா நாடுகளிலும் போலவே அரசன் வீரம் பொருந்தியவனாக வும் பெரிய ஆடம்பரங்களுடையவனாகவும் இருந்தான். அவனுடைய அதிகாரம் வரம்புபடாததாக விருந்தது. அவன், தலையில் மணிகளழுத்திய முடியையும், கையில் மணிகள் பதித்த கடகத்தையும் காதிற்குழையையும், மார்பில் முத்து அல்லது பவழ மாலையையும், காலில் வீர தண்டையை யும், விரலில் பெயர் பொறித்த மோதிரத்தையும் அணிந்திருந்தான். அவனும் பெருமக்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அவனைச் சூழ்ந்து அமைச்சர், சேனாதிபதியர், புலவர், புரோகிதர் முதலானோர் இருந்தனர்; பரிசனர், இருந்தேத்துவோர், நின்றேத்துவோர் சூழ்ந்து நின்றனர். பெண்கள் இரு பக்கங்களிலும் நின்று கவரி வீசினர். நறும் புகை இடப்பட்டது. அரசன் வீற்றிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அது சிங்கம் சுமப்பது போன்ற கால்களையுடையதாக இருந்தது. ஆகவே அது அரி ஆசனம் எனப்பட்டது. அவன் சாய்வதற்கு அணை இருந்தது. அது அரி அணை எனப்பட்டது. அரசு கட்டில் பொன்னாலும் யானைத் தந்தத் தாலும் மணிகளழுத்திச் செய்யப்பட்டிருந்தது. அவன் அரசிருக்கும் மண்டபம் ஓலக்கம், நாளவை, நாளிருக்கை, கொலுவிருக்கை, அர சிருக்கை என அறியப்பட்டது. அது துகில், தோகை, பூ, இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்புக் காலங்களில் அரசன் வீதியிற் பவனி சென்றான். அப் பொழுது சிற்றாலவட்டம், பேரால வட்டம், விதானம், வெண் கொற்றக் குடை முதலியன பிடிக்கப்பட்டன. விருது முன்னே சென்றது. சிற்றரசரும் பெருமக்களும் அவனைச் சூழ்ந்து சென்றார்கள். சங்கு, கொம்பு, எக்காளம் முதலிய வாத்தியங்களும் மேளங்களும் ஆர்த்தன. விழாக் காலங்களில் அரசி அவனுடன் இருந்தாள். அவள் முடிசூடிக் கொள்ளவில்லை. அரசனது பிறந்த நாள் விழா வெள்ளணி நாள் எனப்பட்டது. அக்காலத்தில் அவன் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தான். அவன் அரண்மனையில் மாத்திரமிருக்கவில்லை. போர்க் காலங்களில் அவனே படையை நடத்திச் சென்று பாசறையில் தங்கினான். அவன் வேட்டை ஆடவுஞ் சென்றான். அக் காலத்தில் மெய்க்காவலர் அவனைக் காத்து நின்றனர். அரசனுக்கு எதிரில் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்யாமல் விடுவது சிறு குற்றமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் அரசியும் பெண்களும் தனி இடத்தில் வாழ்ந்தார்கள். அரசனுடைய வெற்றிக்காகவும், நீண்ட வாழ்நாளுக்காகவும் துதிகள் செலுத்தப்பட்டன. அரசன் தங்கியிருக்கும் மாளிகைகள் நாட்டின் பல இடங்களிலிருந்தன. சமாதான காலத்தில் அரசன் பெருமக்களோடு நாடு முழுமையும் சுற்றி வந்தான். ஆட்சி தன் னதிகாரமாக இருந்தபோதும் நாட்டில் ஒழுங்கும் நீதியும் நிலவின. பதின் மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி இலங்கை அரசனைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “இலங்கை அரசனின் நிறம் கறுப்பு. அவன் தலை மயிரை வாரி முடிவதில்லை. அவன் பலவகை நிறங்களுடைய ஆடையை உடுக்கிறான்; சிவப்புத் தோலினாற் செய்து பொன் வாரிட்ட செருப்பை அணிகிறான். அவன் யானை மீது அல்லது பல்லக்கின் மீது செல்கிறான். நாள் முழுதும் அவன் வெற்றிலையையும் பாக்கையும் முத்தைச் சுட்ட சுண்ணாம்பையும் மெல்கிறான். அவனுடைய அரண்மனை வைடூரியம், நீலம், சிவப்பு முதலிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் அரண்மனைகளிருக்கின்றன. இரண்டு அரண்மனைகளிலும் பொன்னாற் செய்யப்பட்ட மரங்கள் இருக்கின்றன. மரத்தின் அடியும் கொம்புகளும் பொன்மயமானவை. அதன் பூக்களும் இலைகளும் காய்களும் நீலம், சிவப்பு, வைடூரியம் முதலியவற்றால் அமைக்கப்பட்டிருக் கின்றன. அரசன் நடக்கும் தரையும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரங்களின் அடியில் பொன்னாற் செய்யப்பட்ட சிங்காசனங்களிருக் கின்றன. அவற்றுக்கு ஒளிபுகக் கூடிய கண்ணாடி மறைப்பு உண்டு. அரசன் காலையில் கிழக்கு அரண்மனையிலும், மாலையில் மேற்கு அரண்மனையிலும் கொலுவிருப்பான். கொலுவிருக்கும்போது அலங் காரங்கள் வெளியே மின்னும். பொன் மரங்களும் அலங்காரங்களும் கண்ணாடி மறைப்புகளும் ஒன்றில் ஒன்று பிரதிபலித்து விளங்கிச் சூரிய உதயம் போல் தோன்றும். “இரண்டு வேலையாட்கள் அரசன் வெற்றிலையை மென்று உமிழும் எச்சிலை ஏந்துவதற்குப் பொன் காளாஞ்சிகளை ஏந்திக் கொண்டு எப்பொழு தும் இரண்டு பக்கங்களிலும் நிற்பார்கள். அரசன் ஐந்து அங்குலக் குறுக்களவுள்ள ஒரு ஆபரணத்தைக் கையில் வைத்திருக் கின்றான். அதை நெருப்பினால் எரிக்க முடியாது. அது இரவில் சூள் போல் மின்னுகிறது. அரசன் தனது முகத்தை அதனால் தினமும் தடவு கிறான். அப்படிச் செய்வதால் தொண்ணூறு வயதடைந்தாலும் அவன் வாலிபத் தோற்றத்தோடிருப்பான்.” கோன், ஏந்தல், மன்னன், குரிசில், இறைவன், அண்ணல், குறுநில மன்னன் முதலிய பெயர்களால் மிகப் பழங்காலம் முதல் அரசனின் ஆட்சி தமிழ் நாட்டில் இருந்து வருகின்றதென்பதை அறிய முடிகிறது. 42. ஆட்சி அரசன் குடிகளைக் காப்பது ஆட்சி எனப்பட்டது. நீதி ஆட்சி செங்கோல் எனவும், கொடிய ஆட்சி கொடுங்கோல் எனவும் அறியப் பட்டன. நல்லாட்சியைப் பெற்ற நாட்டில் வானம் பொய்யாது மழை பெய்யும் என மக்கள் நம்பினார்கள். அரசன் வரம்பில்லா அதிகார முடையவனாக இருந்தபோதும் ஆட்சி சம்பந்தப்பட்டவற்றை அவன் அமைச்சரோடும் பெரு மக்களோடும் கலந்து ஆலோசித்தான். அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கு 1ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் சபைகளிருந்தன. மாசனம், பார்ப்பார், மருத்துவர், நிமித்திகர், அமைச்சர் என்போர் ஐம்பெருங் குழுவில் அடங்குவர். மாசனம் என்போர் மக்கள் சார்பாக அங்கம் வகிப்போர். இவர்கள் மக்களின் சுதந்திரத்துக்குப் பங்கம் நேராமற் பார்த்தனர். பார்ப்பார் சமய சம்பந்தப்பட்ட கிரியை களை மேற்பார்த்தனர். மருத்துவர் அரசனதும் நாட்டு மக்களதும் உடல் நலத்தைக் கவனித்தனர். நிமித்திகர் விழாக்களுக்கு முகூர்த்தமறிந்து கூறினர். அமைச்சர் நாட்டின் வரவு செலவுகளையும் நீதி ஆட்சி நடை பெறுவதையும் கவனித்தனர். எண்பேராயம் என்னும் சபையில் கரணத்தியலவர் (செயலாற்று வோர்), கரும விதிகள் (புரோகிதர்), கனகச் சுற்றம் (பொருளறைக்குப் பொறுப்பாளர்), கடை காப்பாளர் (அரண்மனையைக் காப்போர்), நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் முதலியோ ரிருந்தனர். அரசனுடைய ஆட்சிக்குட்பட்ட நிலம், கிராமம், கூற்றம், நாடு, கோட்டம், மண்டலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் ஒன்று சேர்ந்தது கூற்றம்; கூற்றம் பல சேர்ந்தது நாடு; நாடு பல சேர்ந்தது கோட்டம்; கோட்டம் பல சேர்ந்தது மண்டலம்; மண்டலத்தை அரச குமாரன் அல்லது அரச குடும்பத்திலுள்ள ஒருவன் ஆட்சி புரிந்தான். விளைவில் ஆறிலொரு பகுதி வரியாக அரசனுக்குக் கொடுக்கப்பட்டது. கிராம சபைகளுக்கு உறுப்பினர் குடஓலையால் தெரியப்பட்டனர். ஒவ்வொரு குடும்பு அல்லது வட்டத்திலும் உறுப்பினராகத் தேர்வுக்கு நிற்கத் தகுதியுடையவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு குடத்துள் போடப்பட்டன. கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தடியில் சபை கூடிற்று. அப்போது விபரமறியாத சிறுவனொருவனை ஓலை நறுக்கில் ஒன்றை எடுக்கச் செய்து அதில் எழுதப்பட்டுள்ள பெயர் சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இவ்வாறு உறுப்பினர் தெரியப்பட்டனர். ஊர்ப் பெருமக்கள் ஓரிடத்தில் கூடி ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள். மக்களுக்கிடையில் நேரும் பிணக்குகளைக் கேட்டுத் தீர்ப்பளிக்கும் சபைகளிருந்தன. அவை அறங்கூறு அவை என அறியப்பட்டன. சுங்கம் நிலவரி முதலியன அரசனுடைய வருவாயில் பெரும்பகுதி யாக இருந்தன. ஏற்றுமதி, இறக்குமதிப் பண்டங்கள் மீது வரி விதிக்கப் பட்டது. குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது. திருடிய பொருட்களுடன் கண்டு பிடிக்கப்பட்டவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டில் வழங்கும் சமூக வழக்கங்கள் சட்டங்களாக இருந்தன. மா, வேலி என்னும் அளவுகள் அறியப்பட்டிருந்தன. வரி செலுத்தாமல் கொண்டு செல்லும் பண்டங்களைத் தடுப்பதற்குப் பாதைகள் கிளை விட்டுச் செல்லும் இடங்களில் போர் வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். தலைநகரின் வீதிகளை இராக் காலத்தில் நகர் காவலர் வெளிச்சங்களைக் கொண்டு திரிந்து காவல் காத்தனர். 43. உணவு மக்கள் வாழும் இடங்களுக்கேற்ப அவர்கள் கொள்ளும் உணவுகள் மாறுபட்டன. அவ்வாறிருந்தபோதும் மக்கள் உண்ணும் உணவு வகைகள் ஓரளவில் ஒரு தன்மையுடையனவாக இருந்தன. நெல் புழுக்கி உலர்த்தி உரலிலிட்டு அரிசியாக்கப் பட்டது. சோற்றைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்கின. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழும்பு, உணா, ஊண், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி முதலியன சோற்றைக் குறிக்கும் பெயர்களுட் சில. இவை வெவ்வேறு வகையாக அடப்பட்ட சோற்றைக் குறிப்பானவாகலாம். பால், மோர் என்பவற்றை உலை வார்த்தும் சோறு அடப்பட்டது. புழுக்காத நெல்லைக் குற்றிய அரிசியோடு பருப்பு இட்டுச் சமைக்கப்பட்ட சோறு பொங்கல் எனப்பட்டது. அப்பம், பிட்டு, தோசை, வடை, அஃகுல்லி முதலிய பலவகைப் பணி காரங்கள் செய்யப்பட்டன. கறிகள் மிளகுத் தூளிட்டு ஆக்கப்பட்டன. ஆகவே மிளகுக்குக் கறி என்னும் பெயர் வழங்கிற்று. மிளகாய் ஐரோப் பிய சாதியாரால் அண்மையில் கொண்டு வரப்பட்டது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. அதன்காய் மிளகு போலக் காரமாகவிருந் தமையால் அது மிளகாய் (மிளகுகாய்) என அறியப்பட்டது. உடல் நலத்தைக் காக்கக் கூடியவும், உணவைச் செரிக்கச் செய்யக்கூடியவும் கொத்து மல்லி, சீரகம், மிளகு, புளி போன்ற சரக்குகள் அளவறிந்து இட்டுக் கறிகள் ஆக்கப்பட்டன. இஃது அக்காலத்தில் மக்கள் மருத்துவத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தைக் காட்டுகின்றது. முற்காலத்தில் அரண்மனைகளில் மருத்துவர் இருந்தனர். அவர்கள் தினமும் அரச னுடைய உடல் நிலையை அறிந்து ஏற்ற சரக்கு வகைகளைக் சேர்த்து உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிக் கொடுத்தார்கள். இன்று நாம் உண்ணும் கறி வகைகள் ஒருவகை மருந்தாகவும் இருக் கின்றன. காய், கனி, கிழங்கு, பூ, பிஞ்சு, கீரை வகைகளிலிருந்து அறுசுவைக் கறிகள் ஆக்கப்பட்டன. வறை, துவட்டல், துவை, புளிங்கறி, காடி, ஊறுகாய், பொரிக்கறி முதலியன கறி வகைகளுட் சில. கருவேப்பிலை, கடுகு முதலியவற்றையிட்டுக் கறிகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது. 1தாவர உணவு கொள்வோர், தாவர உணவும் ஊன் உணவும் கலந்து உண்போர் என மக்கள் இரு வகையினராக இருந்தார்கள். இவ்வாறு இரு வகை உணவுகளைக் கொள்ளும் பழக்கம் சூழல் காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் உண்டாயிற்று. சில விலங்குகள் தாவரங்களை உண்கின்றன. சில தாவர உணவையும் ஊண் உணவையும் கலந்து உண்கின்றன. கலப்பு உணவைக் கொள்ளும் விலங்குகள் தாவர உணவையோ, ஊன் உணவையோ கொண்டு வாழவும் பழக்கம் பெறு கின்றன. சமயத் தொடர்பில் அல்லாது இம் முறையில் இரு வகை உணவு களைக் கொள்வோராகவும் மக்கள் வாழ்ந்தனர். மேல்நாட்டவர் பலர் முற்காலத்தில் தாவர உணவு கொள்வோராக இருந்தனர்; இக்காலத்தும் பலர் இருக்கின்றனர். பிதகோரஸ் என்னும் கிரேக்க அறிஞர் தாவர உணவையே கொண்டார். போர் வீரர், அரசர், பாணர், வயல் வேலை செய்யும் தொழிலாளர், மீன் பிடிப்போர் இருவகை உணவுகளையும் கலந்து உண்டனர். சமய அடிப்படையில் ஊன் உணவு கொள்ளாத வழக்கம் பௌத்தர் சமணர் காலத்துக்குப்பின் உண்டானதெனக் கருதப்படுகிறது. 44. உடை மிகப் பழங்காலத்தில் மக்கள் மரவுரி, தோல் என்பவற்றையும் இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள். இலைகளால் தொடுத்த உடைகளைப் பற்றிப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பஞ்சு ஆடையும் கம்பளி ஆடையும் பழக்கத்துக்கு வந்தபோது தோலுடையும் மரவுரியும் முனிவருக்குரிய பரிசுத்த உடையாகக் கொள்ளப்பட்டன. புலித்தோல் மான்தோல் என்பவை இன்றும் புனிதமுடையனவாகக் கொள்ளப்படுகின்றன. புலித்தோலை உடுத்திருப்பவராகச் சிவபெரு மான் பாவனை செய்யப்படுகிறார். மொகஞ்சதாரோவிற் கிடைத்த மனித சிற்பம் ஒன்று வேலைப் பாடுடைய மேலாடையைப் போர்த்தி இருக்கின்றது. தலையைச் சுற்றி ஒரு நாடாவைக் கட்டியிருக்கின்றது. தலையில் கட்டப்பட்ட நாடா (மயிர்க்கட்டு) பாகையாக வளர்ச்சியடைந்தது. ஆடவர் அரையில் நான்கு முழ ஆடை உடுத்தனர். ஆடை நாபிக்குக் கீழ் உடுக்கப்பட்டது. பொதுமக்கள் முழங்காலுக்குச் சிறிது கீழ் நீண்டிருக்கும்படி ஆடையை உடுத்தார்கள்; அரசரும் பெருமக்களும் கெண்டைக்கால் வரை நீண்டிருக்கும்படி உடுத்தனர். அரையிலொன்றும் தலையிலொன்றும் தோளிலொன்றுமாக மூன்று உடைகள் அணியப் பட்டன. முற்காலத்தில் உயர்ந்தோர் சட்டை தரிக்கவில்லை. சட்டை தரித்துக் கொள்வது ஊழியம் புரிவோர் என்பதற்கு அடையாளமாக விருந்தது. பழைய கோவில் சிற்பங்கள்; ஆடவரும் மகளிரும் எவ்வாறு உடை அணிந்தார்கள் என்பதை விளக்குகின்றன. போர் வீரர் வட்டுடை என்னும் ஒருவகை உடை அணிந்தனர். பெண்கள் இறவுக்கை அணிய வில்லை. கச்சு அணிந்தார்கள். 45. நெசவு பருத்தி இந்திய நாட்டுக்குரிய செடி. தமிழ் மக்கள் கற்காலத்தி லேயே பஞ்சிலிருந்து நூல் நூற்கவும், நூலிலிருந்து ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள். அக்காலத்தில் மற்றைய நாடுகளில் மக்கள் உடை யின்றியிருந்தார்கள், அல்லது தோலை உடுத்தார்கள். மொகஞ்சதாரோ அழிபாடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் வேலைப்பாடுடைய அழகிய ஆடைகளை நெய்து உடுத் தார்கள். மிகப் பழங்காலத்திலேயே ஆடைகள் எகிப்து, பாபிலோன் முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. கி.மு. 1800இல் வாழ்ந்த எகிப்திய அரசனின் பாடஞ் செய்யப்பட்ட சடலம் இந்திய சல்லாத் துணியினால் போர்க்கப்பட்டிருந்தது. இந்தியாவினின்றும் சென்ற பஞ்சு ஆடை பாபிலோனில் சிந்து என அறியப்பட்டது. சிந்து என்பது கன்னட மொழியில் ஆடைத் துண்டையும் தமிழில் கொடியையும் குறிக்கின்றது. கடைந்து கொட்டை நீக்கப்பட்ட சுகிர்ந்த பருத்திப் பஞ்சினின் றும் பெண்கள் கதிர்களால் நூல் நூற்றார்கள். “பருத்திப் பெண்டின் பனுவலன்ன” எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மகளிர் நூற்ற நூலை ஆடவர் பாவோடி ஆடை நெய்தனர். இவ்வேலையில் பெண்களும் பங்கு பற்றினர். ஆடை நெய்யும் ஆடவர் காருகரெனவும், மகளிர் காருக மடந்தையர் எனவும் அறியப்பட்டார்கள். முற்காலத்தில் ஆடையைக் குறிக்க ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கின. இச் சொற்கள் அக்காலத்து வழங்கிய வெவ்வேறு வகை ஆடைகளைக் குறிப்பனவாக விருந்தன. ஆடைகள் நீளமாக நெய்யப்பட்டுப் பின் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே துண்டு, துணி, அறுவை என்னும் சொற்கள் ஆடையின் பெயர்களாக வழங்கின. மணிமேகலை என்னும் சிறந்த தமிழ் நூலைச் செய்த சீத்தலைச் சாத்தனார் அறுவை வாணிகன் என அறியப் பட்டார். திருவள்ளுவர் ஆடை நெய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தா ரென்னும் செவி வழிச் செய்தி நிலவுகிறது. பாம்புரி, மூங்கிலுரி போன்று நூல் சென்ற இடம் அறிய முடியாதனவும் பாலாவி, புகை போன்று நுண்ணியனவும் பூத்தொழில் போன்ற வேலைப்பாடுடையனவுமாகிய அழகிய ஆடைகளைப் பற்றிச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. முல்லை நிலங்களில் வாழும் குறும்பர் குறும்பு ஆடுகளை வளர்த் தார்கள். இவ்வாடுகளின் மயிரிலிருந்து அழகிய ஆடைகள் நெய்யப் பட்டன. ஆட்டு மயிரில் நெய்யப்படட ஆடை கம்பளி எனப்பட்டது. பட்டு சீன நாட்டுக்குரியது. பட்டுகளாக மடித்துத் தோளிலணியப் பட்டமையின் அது பட்டு எனப் பெயர் பெற்றது. பட்டுக்குச் சீனம் என்னும் பெயரும் வழங்கிற்று. சங்க காலத்தில் பருத்தி, மயில், பட்டு என்பவற்றில் நெசவுத் தொழில் நடைபெற்றது. “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் - கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கரம்பு, பணி, பரணம், பாளிதம் முதலியன பட்டாடையைக் குறிக்கும் பெயர்களுட் சில. பிற்காலத்தில் சௌராட்டிரர் தென்னாட்டையடைந்து பட்டு நெசவுத் தொழிலை அதிகப்படுத்தினர். கிரேக்கரும், உரோமரும், அரேபியரும் தமிழ் நாட்டினின்றும் ஆடைகளை வாங்கிச் சென்றனர். கொரநாடு, உறையூர், காஞ்சி, ஆரணி முதலியவிடங்கள் நெசவுக்குப் பேர்போன இடங்களாக இருந்தன. 46. உழவு புதிய கற்காலத்தில் மக்கள் உழவுத்தொழிலைத் தொடங்கி னார்கள். கற்கால இறுதியில் உழவு தொழில் நன்கு வளர்ச்சியடைந் திருந்தது. மக்களில் பெரும்பாலினர் உழவுத் தொழிலையே மேற்கொண் டிருந்தனர். சிலர் பெரிய வயல் நிலமுடையவராக இருந்தனர். அவர் களின் கீழ் நிலத்தை உழுது பயிரிடும் குடிகளிருந்தார்கள். அவர்களுக்குக் கூலி தானியமாகக் கொடுக்கப்பட்டது. நாற்றுநடுதல்,களைகட்டல் போன்ற வேலைகளைப் பெரும்பாலும் பெண்கள் செய்தார்கள். வயல் வேலை செய்வோர் களைப்புத் தோன்றாதிருக்கும் பாடல்கள் பிற்காலத் தில் பள்ளு எனப்பட்டன. பள்ளுப் பாடல்கள் உழவரின் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகின்றன. உழவுத்தொழிலுக்கு அதிக மதப்பு இருந்து வந்தது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றும் “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை” எனவும் வள்ளுவரும், ஒளவையாரும் கூறியிருக்கின்றனர். பயிரிடும் நிலத் துக்கு எரு இடப்பட்டது. நிலத்தை உழுது வெயிலும் காற்றும் பட்டு மண் உலரும்படி விடுதல் எரு விடுதலிலும் சிறந்ததெனக் கொள்ளப்பட்டது. உழவர் விருந்தினரை ஓம்பியும் இரப்போர்க்கிட்டும் உபகாரி களாக இருந்தார்கள். காணியாளராகிய வேளாளருக்கு அரசர் காவிதி, அரசு முதலிய பட்டங்கள் வழங்கினார்கள். “வீட்டு வேலைக்காரரைத் தவிரக் காணியாளராலும் அமர்த்தப் பட்ட வேலையாளரிருந்தார்கள். அவர்கள் தலைவனின் வீட்டுக்கு வெளியே குடியிருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு உணவுக்கும் உடைக்கும் வேண்டிய கூலி தலைவனால் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரே தலைவ னுடைய வழியில் தலைமுறையாக வந்தார்கள். ஆடுமாடு களை மேய்ப்ப வர்களுக்குப் பத்துப் பால் மாடுகளில் ஒன்றின் பாலைப் பெற்றுக் கொள்வது போன்ற கூலி கொடுக்கப்பட்டது. வயல் வேலை செய்வோர்க்கு விளைவின் பகுதி கூலியாகக் கொடுக்கப்பட்டது. உணவும் உடையும் கொடுக்கப்பட்டால் விளைவில் ஐந்திலொன்றும் அல்லாவிடில் மூன்றி லொரு பங்கும் கொடுக்கப்பட்டது. 47. வாணிகம் வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்றாகவிருந்தது. மக்கள் தமது தேவைகளுக்கு அதிகமாகவிருந்த பண்டங்களைப் பிற பொருள்களுக்கு மாற்றினார்கள். நாணயம், புழக்கத்தில் வந்தபோது வாணிகம் பண்ட மாற்று, நாணயம் என்னும் இருவகைகளில் நடைபெற்றது. கா, வண்டி, பொதிமாடு என்பவற்றில் உள்நாட்டுப் பண்டங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. வாணிகம் வளர்ந்தபோது பாதைகளும் வளர்ந்தன. உள்நாட்டுப் பண்டங்கள் அயல்நாடுகளுக்கு மரக்கலங்களில் கொண்டு செல்லப்பட்டன. அயல்நாட்டுப் பண்டங்கள் மரக்கலங்களில் வந்து இறங்கின. “திரைகடல் ஓடியுந் திரவியந் தேடு” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் முற்காலத்தில் அயல்நாடுகளுக்குக் கடல் வழியாகச் சென்ற தமிழர் தம்மோடு மகளிரைக் கொண்டு செல்ல வில்லை எனத் தெரிகிறது. எகிப்திய அரசர் பண்டு நாட்டுக்கு மரக்கலங்களைப் போக்கி அரும் பண்டங்களைப் பெற்றார்கள். பண்டை எகிப்தியரின் பாடஞ் செய்யப்பட்ட பிணங்கள் இந்திய அவுரிச்சாய மூட்டப்பட்ட சல்லாத் துணிகளால் போர்க்கப்பட்டிருந்தன. அப்பிணங்களின் காலம் ஏறக் குறைய கி.மு. 1700 வரையில். பைபிளிற் கூறப்படும் சாலமன் அரசன் ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு தனது மரக்கலங்களை இந்தியாவுக்கு விடுத்து அகில், சந்தனக்கட்டை, யானைத் தந்தம், பொன், குரங்கு முதலியவற்றைப் பெற்றான். இப் பண்டங்கள் தம்மோடு தமது தமிழ்ப் பெயர்களையும் கொண்டு சென்றன. எபிரேய மொழியில் வழங்கிய அல்கம், கபிம், துகிம் என்னும் சொற்கள் அகில், கவி, தோகை என்னும் தமிழ்ச் சொற்களிள் திரிபுகளாகும். கிரேக்க மொழியில் வழங்கிய சிஞ்சிபெர், பிப்பிலி, கபிரியொன் என்னும் சொற்கள் இஞ்சிவேர், திப்பிலி, கருவா என்னும் சொற்களின் திரிபுகளாகும். சாலமன் அரசனின் காலம் கி.மு. 900 வரையில் இந்திய மரக்கலங்கள் பண்டங்களையும் வணிகரையும் ஏற்றிக் கொண்டு தொலைவிடங்களுக்குச் சென்றன. கம்போடியாவிலும், யாவாவிலும் காணப்படும் இந்துக் கோயில்களின் அழிபாடுகளில் இந்திய மரக்கலங்களைக் காட்டும் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. கிரேக்கர் ஆடி மாதத்தில் புறப்பட்டு நாற்பது நாளில் முசிறிப் பட்டினத்தை அடைந்தார்கள். மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கிய பின் அவர்கள் மார்கழி அல்லது தை மாதத்தில் புறப்பட்டார்கள். இந்தியக் கரைகளில் கடற்கொள்ளைக் கூட்டத்தினர் நடமாடினமையின் அவர்கள் தமது மரக் கலங்களில் வில் வீரரைக் கொண்டு சென்றனர். உரோமர் தமிழகத்தோடு பெருமளவில் வாணிகம் புரிந்தனர். மது, பித்தளை, ஈயம், கண்ணாடி முதலிய பண்டங்களை அவர்கள் முசிறி, வக்கறை முதலிய இந்தியத் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்து விற்றார்கள். மிளகு, தந்தம், முத்து, சல்லாத் துணி, இரத்தினக் கற்கள், வாசனைச் சரக்குகள் என்பனவற்றை வாங்கிச் சென் றார்கள். பாண்டிய அரசன் ஒருவன் ஒருமுறை ஆகஸ்தஸ்சீசரிடம் தூதரை அனுப்பினான். பாண்டிய அரசரும் பிற அரசரும் உரோமைப் போர் வீரரைத் தமது படையில் சேர்த்திருந்தனர். மதுரையில் கோட்டைக் கோபுரவாயிற் கதவுகளை உரோமப் போர் வீரர் காவல் புரிந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. யவனர் செய்த பேழைகளும், அன்ன விளக்கு களும், பாவை விளக்குகளும், அணிகலச் செப்புகளும் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. யவனர் செய்த மதிற் பொறிகள் கோட்டை மதில்களில் வைக்கப்பட்டிருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் யவன வணிகர் வாழும் யவனச் சேரி ஒன்றிருந்தது. உரோமை நாடு ஆண்டில் 986,979 தங்க நாணயம் பெறுமதியுள்ள இந்தியப் பண்டங் களை இந்திய நாட்டினின்று வாங்கிச் சென்றது. இப் பண்டங்கள் உரோமை நாட்டில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. 48. வழிபாடு தமிழ்நாடு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐவகை இயற்கைப் பிரிவுகளுடையது. அந் நிலங்களில் வாழும் மக்கள் முறையே திருமால், முருகன், வேந்தன், வருணன், காளி என்னும் தெய்வங்களை வழிபட்டார்கள். மக்களின் நாகரிக வளர்ச்சி பண்பாடுகளுக்கேற்ப வழிபாட்டு முறைகள் வேறுபட்டிருந்தன. காளி அல்லது கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபடப்பட்டது. முருக வழிபாடு வெறி ஆடி, மறி அறுத்துச் செய்யப்பட்டது. திருமால் வழிபாடு பாற் பொங்கல் படைத்து ஆடவரும் மகளிரும் கை கோத்துக் குரவை ஆடி நடத்தப்பட்டது. வேந்தன் வழிபாட்டினர் பொங்கிப் படைத்து விழா எடுத்து வழிபட்ட னர். நெய்தல் நில மக்கள் தாழை நிழலில் சுறாக் கோடு நட்டு ஆடிப்பாடி வருணனை வழிபட்டனர். நீதி அரசனின் ஆட்சியில் மழை பெய்து நாடு செழிக்கிறது என மக்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் அரசனைத் தெய்வமாக வழி பட்டார்கள். அரசன் கடவுளின் சார்பாளனாக நாட்டை ஆளுகிறான் என்னும் நம்பிக்கை ஏறக்குறைய உலகில் எல்லா மக்களிடையும் இருந்து வந்தது. தெற்கே பௌத்த மதம் பரவிற்று. பௌத்தர் வழிபட்ட சக்கரக் கடவுள் வழிபாடு தெற்கே வந்தது. சக்கரக் கடவுள் என்பது இந்திரனைக் குறிப்பதாக இருந்தது. சக்கரக் கடவுள் வழிபாடும், வேந்தன் வழிபாடும் ஒன்றுபட்டு இந்திர வழிபாடு ஆயின. மரங்கள், தூண்கள், ஆறுகள், காடுகள், மலைகளில் தெய்வங்கள் உறைவதாகக் கொண்டு அவைகளை மக்கள் வணங்கினர். வீடுகளில் தெய்வங்களின் திருவுருவங்கள் வைத்து வழிபடப்பட்டன. மாலைக் காலத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவி வழிபட்டார்கள். வீரருக்கு நாட்டப்பட்ட நடுகற்கள் வழிபடப் பட்டன. அவற்றுக்கு ஆடும் மதுவும் பலியாகக் கொடுக்கப்பட்டன. காத்தவராயன், மதுரைவீரன், கறுப்பண்ணன், பாவாடை ராயன் போன்ற வழிபாடுகள் இவ் வகையில் வந்த வீரர் வணக்கங்களே. ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் நகர்களிலும், பட்டினங் களிலும் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். அப்பொழுது பலவகை வழிபாடுகள் நகரங்களிலும் பட்டினங்களிலும் ஒன்று சேர்ந்தன. இவ்வழிபாடுகள் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாடுகளாக வளர்ச்சியடைந்தன. இக் கடவுளருக்குக் கோயில்கள் எடுக்கப்பட்டன; குளங்களும் தொடப்பட்டன. எல்லா நிலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய இன்னொரு வழிபாடு இருந்தது. அது சிவ வழிபாடு. அஃது ஒரு நிலத் துக்கு உரியதன்றாயிருந்தமையாலும் எல்லா மக்களுக்கும் பொதுவாக இருந்தமையாலும், அது தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் உண்டு என அறிஞர் கூறுவர். கடவுள் ஒளி வடிவினன் எனக் கொண்ட மக்கள் ஒளியின் குறியாக அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்றூண்களை நட்டு வழிபட்டார்கள். இஃது ஒளி வடிவினதாகிய தீயின் சின்னம் என அறிஞர் கூறுவர். திருவண்ணா மலையில் கடவுள் சோதி வடிவாக நின்று பின் இலிங்க வடிவமானார் என்னும் பழங்கதை இக்கூற்றை வலியுறுத்துகின்றது. கற்றூண்கள் மர நிழல்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இம்மரங்கள் பிற்காலத்தில் தல விருட்சங்கள் என அறியப்பட்டன. திருவானைக்காவில் நாவலும், சிதம்பரத்தில் தில்லையும், திருவொற்றியூரில் மகிழும், குத்தாலத்தில் பலாவும், ஆலும், மதுரையில் கடம்பும், திருநெல்வேலியில் மூங்கிலும், தல விருட்சங்களாக உள்ளன. மர நிழலில் நடப்பட்டிருந்த கற்றூண் சிவலிங்கமென அறியப்பட்டது. சிலலிங்கங்கள் பெரும்பாலும் ஆல நிழலில் நடப்பட்டிருந்தன. ஆகவே பழைய இலக்கியங்கள் சிவபெரு மானை ஆலமர் செல்வன் எனக் குறிப்பிடுகின்றன. நகரங்களிலும் பட்டினங்களிலும் சிவலிங்கத்தைச் சுற்றிக் கோவில் எடுக்கப்பட்டது. ஏனைய இடங்களில் மக்கள் மர நிழலிற் சென்று சிவ லிங்கத்தை வழிபட்டார்கள். வழிபாட்டில் சாதி உயர்வு தாழ்வு என்னும் கொள்கைகள் நுழையவில்லை. தென்னிந்தியாவில் பழைய கோயில் களின் அழிபாடுகள் காணப்படவில்லை. முற்காலத் தென்னிந்திய மக்கள் கோயில்களையும் வீடுகளையும் மரங்களினாற் கட்டினார்கள்; ஆகவே அவற்றின் அழிபாடுகள் காணப்படவில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல் களிலும் செங்கல்லால் எடுக்கப்பட்ட உயர்நிலை மாடங்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மொகஞ்சதாரோவில் கோயிலெனக் கருதப்படும் பெரிய கட்டிடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முற்கால மக்கள் கடவுள் வழிபாட்டுக்குப் பெரிய கட்டிட அமைப்பு வேண்டியதில்லை எனக் கருதினார்கள். சோழ எழுச்சிக் காலத்திலேயே பெரிய கோயில்கள் எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 49. கோயில் கோயில், வணக்கத்துக்குரிய இடமாக இருந்ததல்லாமல் பொருளா தாரம் பண்பாடு என்பவற்றோடு தொடர்பும் பெற்றிருந்தது. கோயில் எடுக்கத் தொடங்கியபோது, கோயில் அமைப்பு முறைகளை அறிந் தோரும், சிற்பிகளும் தொழிலாளரும் தத்தம் திறமைகளைக் காட்டுவதில் போட்டியிட்டார்கள். கடவுள் உருவங்கள் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டன. பின் கல்லிற் செதுக்கப்பட்டன; பிற்காலத்தில் அவை வெண்கலத்தில் வார்க்கப்பட்டன. சோழ அரசர் காலத்து வார்க்கப்பட்ட உருவங்கள் அழகும் சிற்ப நுட்பமும் பொலிந்தவை. பெரிய கோயில் களில் மிகப் பலர் கடமை ஆற்றினர். கல்லெழுத்துக்களில் கோயிலிற் கடமை ஆற்றுவோரின் விபரம் காணப்படுகிறது. கோவிலருச்சகர் நீங்கலாக அவர்கள், “நட்டுவன், அண்ணாவி, (நடனங் கற்றுக் கொடுப் போன்) ஆடுவார், கனபாடி, முகவீணைக்காரர், உடுக்கை வாசிக்கிறவர், வீணை வாசிப்போர், ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர், கொட்டி மத்தளக்காரர், முத்திரைச் சங்கு ஊதுவோர், பக்க வாத்தியக்காரர், கட்டியங் கூறுவோர், மேளம் வாசிப்பவர், காந்தருவர், விளக்குப் போடுகிறவர், நீர் தெளிப்பவர், எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள், வண்ணான், நாவிதன், கொல்லன், தையான், பாடுகிறவன், சோதிடன், கன்னான், ஓச்சன், தட்டான், பாணன், கணக்கன்” என்போர். மடைப் பள்ளியில் பலர் ஏவல் புரிந்தனர். விழாக் காலங்களில் கோயில் கடைத்தெருவாகக் காட்சியளித்தது. கல்வி சம்பந்தமான போட்டிகள், மற்போர் முதலியன காட்சிகளாக விருந்தன. கோயில் எல்லைக்குள் பள்ளிக்கூடமும் மருத்துவமனையு மிருந்தன. பொது மக்கள் நாட்டுக் கருமங்களைப் பற்றி ஆலோசிக்கக் கோயிலிற் கூடினார்கள். புராணம் படித்தல், சமய சம்பந்தப்பட்ட நூல் களுக்குப் பொருள் கூறுதல் முதலிய நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. பத்தர்கள் கோவிலுக்குத் தலைமுறை தலைமுறையாக நிலங்களையும் பொருள்களையும் தானம் செய்து வந்தார்கள். நிலமும் பணமும் சேர்ந்தன. பணம் வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. நிலம் பயிர்ச் செய்கைக்கு விடப்பட்டது. கடவுளுருவங்களை ஆபரணங்களால் அலங்கரிப்பது வழக்கி லிருந்தது. ஆபரணங்கள் இரத்தினக் கற்கள் அழுத்திச் செய்யப்பட்டவை. பொற்கொல்லர் ஆபரணங்கள் செய்வதில் தமது திறமையைக் காட்டினர். இராசராசன் என்னும் சோழ மன்னன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைப் பற்றிய பல கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. போரில் கிடைத்த கொள்ளைப் பொருள்களில் பெரும்பகுதியை அவன் கோவிலுக்குக் கொடுத்தான். 4150 கழஞ்சு அல்லது 500 இராத்தல் எடையுள்ள தங்கத்தையும் 5065 கழஞ்சு அல்லது 600 இராத்தல் எடை யுள்ள வெள்ளியையும் அவன் கோவிலுக்குக் கொடுத்தான். கோவிலிற் சேவிப்பதற்கு 400 தேவதாசிகளை நியமித்தான். ஒவ்வொரு தேவதாசிக் கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் விடப்பட்டது. ஒரு வேலி நிலத்தில் நூறு கலம் நெல் விளைந்தது. 212 நட்டுவர், வாத்தியக்காரர், பொற் கொல்லர் என்பவர்களின் ஊதியத்துக்குத் தேவதாசிகளுக்கு விடப் பட்டது போல 180 வீடுகளும் நிலமும் விடப்பட்டிருந்தன. வாத்தியங்க ளோடு திருப்பதிகம் ஓதுதற்கு ஐம்பது பேர் இருந்தார்கள். கோயிற் பணம் கிராம சபைகளுக்கு வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. கோயிலமைப்பு அரண்மனை அமைப்பைப் போலிருந்தது. அது ஒரு கோட்டையைப் போலவுமிருந்தது. 50. பார்ப்பார் தென்னிந்திய ஊர்கள் கோவிலைச் சுற்றியிருந்தன. பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் கோவில்களின் பெயர்களாகவே அமைந்துள்ளன. எல்லா நாடுகளிலும் போலவே இங்கும் கோயில்களை மேற்பார்ப்போர் இருந்தனர். கோயிலை மேற்பார்த்தமையின் அவர்கள் பார்ப்பார் என அறியப்பட்டார்கள். இவர்கள் வேளாண் மரபைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிற்காலத்தில் இவர்கள் ஆதிசைவர் என அறியப்பட்டார்கள். இவர்கள் சோதிடம், மருத்துவம், மாந்திரீகம் முதலியன அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு பொது மக்களிடையே அதிகம் இருந்து வந்தது. அவர்கள் அரசனின் மதிப்புக்குரியவர்களாகவும் இருந்தார்கள். பார்ப்பனருள் சிறந்தவர் அரசனது உறுதிச் சுற்றம் என்னும் குழுவில் ஒருவராக இருந்தார். “அடுத்த நட்பாளரும் அந்த ணாளரும் படைத் தொழி லாளரும் மருத்துவக் கலைஞரும் நிமித்த காரரும் நீணில வேந்தர்க் குரைத்த வைம்பெயர் உறுதிச்சுற்றம்” அரசனுடைய முடிசூட்டின்போது பார்ப்பானே முடியை எடுத்து அவனுக்குச் சூட்டினான். இவ்வாறு முடிசூட்டிக் கொள்ளாத அரசன் முறையான அரசன் எனக் கொள்ளப்படமாட்டான். பார்ப்பார் மக்களைத் தீமைகளினின்றும் நீக்கி நல்வழியில் செலுத்துவோர் எனப் பொதுமக்கள் நம்பினார்கள். ஆகவே பார்ப்பார் புரோகிதர் எனவும் அறியப்பட்டனர். புரோகிதன் என்னும் சொல் காத்தல் என்னும் பொருள்படும் புர என்னும் அடியாகப் பிறந்தது. ஒருவன் செய்து வந்த தொழிலை அவன் கால் வழியினர் செய்து வருதல் என்னும் முறையில் குடும்பங்கள் பெருகிச் சாதிகள் பலவாயின. இதனை ஒப்பப் பார்ப்பன வகுப்பும் தனிக் குலமாக வளர்ந்தது. சாதிகள் பிறப்பினால் உண்டானவை எனப் பொது மக்கள் நம்பத் தலைப் பட்டார்கள். இவ்வகை நம்பிக்கை திருவள்ளுவர் காலத்தில் இருந்தது. “பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” என்னும் திருக்குறளால் இது விளங்குகின்றது. புத்தகக்கட்டு, மணை, முக்கோல், தூக்கு (உறி) என்பவற்றைக் கொண்டு இடமிருந்து இடம் செல்லும் ஒரு வகைத் துறவிகள் வாழ்ந் தார்கள். அவர்கள் காவி தோய்த்த உடை அணிந்தார்கள். அவர்கள் சமணத் துறவிகளைப் போன்று எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடைய வர்களாக இருந்தார்கள். அவர்கள் அந்தணர் என அறியப்பட்டார்கள். அந்தணர் என்பதற்கு எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவர் என்பது பொருள். பிற்காலங்களில் அந்தணர் என்னும் சொல் பார்ப்பனரையும் குறிப்பதாக இருந்தது. பிற்காலத்தில் பிராமணர் என்னும் ஒரு கூட்டத்தினர் வடக்கினின் றும் தெற்கே வந்தனர். இவர்கள் வேதங்களின் பகுதிகளாகிய பிராமணங் களைப் பயின்று கிரியைகளைப் புரிபவர்களாக இருந்தார்கள். பல்லவர், சாளுக்கியர், ஹோய்சளர் முதலிய பல வடநாட்டினர் தென்னிந்தியா மீது படை எடுத்து வந்து நாட்டின் சில பகுதிகளைச் சிற்சில காலம் ஆண்டனர். அக்காலத்தில் பிராமண மதத்தினருக்கு அரசரின் ஆதரவு கிடைத்தது. கோயில்கள் பார்ப்பனரிலிருந்து பிராமணர் கைக்கு மாறின. தமிழுக்குப் பதில் வடமொழி ஆலயங்களில் வழங்கத் தலைப்பட்டது. இவ்வாறான குழப்பங்களால் பிராமணர், பார்ப்பார், அந்தணர் என்னும் பெயர்கள் ஒரே பொருளில் வழங்கி வருகின்றன. உண்மையில் இம் மூன்று பெயர்களும் குறிப்பிடுவோர் வெவ்வேறு தொழிலுடையவர் களாக இருந்தவர்களாவர். தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிற்காலத்து ஆதி சைவர் என அறியப்பட்டனர். 51. தத்துவ ஞானம் மக்களில் ஒரு சிலர் கடவுள், உயிர், உலகம், இறப்பு, பிறப்பு, வினை இவைகளுக்குள்ள தொடர்பு போன்ற நுண் கருத்துக்களை ஆராய்ந்து வந்தார்கள். இவ்வாராய்ச்சிகளின் முடிபே தமிழர் கண்ட தத்துவ ஞானமாகும். உயிர், மெய், உயிர்மெய், வேற்றுமை போன்ற சொற்கள் மிகப் பழங்காலம் முதல் தமிழ் இலக்கணத்தில் ஆளப்பட்டு வருகின்றன. இதனால் மிகப் பழங் காலத்திலேயே தத்துவஞானம் தமிழர்களிடையே வளர்ச்சியடைந்திருந்ததெனத் தெரிகிறது. தமிழர் கண்ட தத்துவ ஞானம் ஒரு நாட்டினருக்கு அல்லது ஒரு சாதியினருக்கு மாத்திரம் உரியதன்று; அது உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. தொல்காப்பியர், திருவள்ளுவர் என்னும் பண்டைய ஆசிரியர்கள் எச் சமயத்தைச் சேர்ந்த வர்களென்று அறிய முடியாமலிருக்கின்றது. இதற்குக் காரணம் தமிழரின் தத்துவஞானம் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதா லாகும். தத்துவ ஞானம் மிகப் பழங்காலம் முதல் குருமாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தது. அது இரகசியம் அல்லது உபதேசம் எனப்பட்டது. வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைப்பது தமிழ் மரபன்று. இறைவன் தென்முகக் கடவுளாக அமர்ந்து முனிவர்களுக்கு ஞானத்தை மௌனமாகவிருந்து உபதேசித்தார் எனச் சொல்லப்படு கிறது. வீட்டு நூல்கள் எழுதி வைக்கப்படுவதில்லை என்பதைத் தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்களும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றனர். குரு மாணாக்க முறையில் வந்த தத்துவஞான நூல்கள் வட நாட்டில் உபநிடதங்கள் என வழங்கின. உபநிடதங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் ஆகமங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு என அறிஞர் கூறுவர். ஆகம ஞானக் கருத்துக்கள் தமிழ ரிடையே மிகப் பழங்காலம் முதல் இருந்து வருவன. உபநிடத ஞானங் களை அடிநிலையாகக் கொண்டு சாங்கியம், பௌத்தம், யோகம், சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் எழுந்தன. கபிலர், புத்தர், மகாவீரர் முதலியோர் திராவிடமரபைச் சேர்ந்தவர்களென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. உபநிடதக் கருத்துக்களைத் தெளிவுப்படுத்துவதற்கு வேதாந்த சூத்திரங்கள் செய்யப்பட்டன. பிற்காலத்தவர் இச்சூத்திரங்களுக்குத் தத்தம் கொள்கைகளைப் புகுத்தி உரை கண்டனர். பௌத்தம் சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் வடக்கினின்றும் தெற்கு நோக்கிப் பரவிக் கொண்டிருந்தன. அதனால் தெற்கில் பரவியிருந்த தத்துவ ஞானக் கருத்துக்களில் தடுமாற்றங்கள் எழுந்தன. அக் காலத்தில் திருமூலர், தமிழர் தத்துவ ஞானக் கருத்துக்களை விளக்கித் திருமந்திரம் என்னும் ஞான நூலைச் செய்தார்: சமயகுரவர்களும், ஆழ்வார்களும் தமிழரது தத்துவ ஞானக் கருத்துக்களைத் தமது பாடல்களில் இடைஇடையே எடுத்துக் கூறியிருக்கின்றனர். சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரங்களுக்கு உரை செய்தார். அவர் தமது உரையில் கடவுள் ஒன்றே உள்பொருள்; மற்றவை பொய்த் தோற்றங்கள் எனக் கூறினார். இக்கொள்கை கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களை உள் பொருள்களெனவும், இறைவனையும், உயிரையும் ஆண்டான் அடிமை எனவும் கொள்ளும் தமிழர் ஞானமாகிய சைவ சிந்தாந்தக் கொள்கைக்கு முரணாக விருந்தது. ஆகவே மெய்கண்டார், உமாபதி சிவம், அருணந்தி சிவாச்சாரியார் முதலிய அறிஞர் சைவ சித்தாந்த ஞானங்களை விளக்கித் தமிழில் நூல்கள் செய்தனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தோத்திர வடிவான சைவத் திருமுறைகளிலும், நாலாயிரப் பிரபந்தத்திலும் இடையிடையே கூறப்பட்டுள்ளன. 52. கல்வி மரத்தடி, கோயிலின் பத்தி அல்லது ஆசிரியனின் வீட்டுத் திண்ணை என்பவை பள்ளிகளாக இருந்தன. கல்வி ஐந்து வயதில் தொடங்கியது. நாட்டுப்புறங்களில் காணப்படுவது போலச் சிறுவர் மணலில் எழுத்தெழுதப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் மாணவருக்குக் கல்வி பயிற்றுவதில் உதவியாக இருந்தான். ஒரு மாணவன் சொல்ல மற்ற மாணவர்கள் கேட்டுச் சொல்லும் முறையில் நெடுங் கணக்குப் பயிலப்பட்டது. மாணவர் ஆசிரியனுக்குப் பணிவும் மரியாதை யும் காட்டினர். “எழுத்தறி வித்தவன் இறைவனாவான்” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. மாணவர் பாடங்களைப் பனை ஓலை ஏடுகளில் எழுதிப் பயின்றார்கள். எழுதுவதற்குப் பனை ஓலையும் எழுத்தாணியும் பயன்படுத்தப்பட்டன. பழங்காலச் சாசனங்கள் அக்காலத்தில் எழுத்து முறையான கல்வி எவ்வளவு திருத்தம் பெற்றிருந்ததென்பதைக் காட்டு கின்றன. கோவில்களிலும், மரத்தடிகளிலும் அல்லாமல் சமண மடங்களி லும், பௌத்த விகாரைகளிலும் மாணவர் கல்வி பயின்றார்கள். கல்வி கற்பிக்கப்படும் இடங்களுக்குப் பள்ளி என்னும் பெயர் வழங்கு கின்றது. இது பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பெயர். பள்ளியில் மாணவர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நன்னூல் கூறுகின் றது. மாணவர் ஆசிரியருக்கு ஊதியமாக வயல்களில் விளையும் பொருள் களை ஆண்டில் ஒரு முறை அல்லது பல முறைகளில் கொடுத்தார்கள். பிற்காலத்தில் ஊர் ஆசிரியனுக்கு ஊதியமாக மானியங்கள் விடப்பட் டிருந்தன. கோயில்களில் துதிப்பாடல்கள் பாடுவதற்கு மாணவர் பயிற்றப் பட்டார்கள். மடங்கள் தோன்றியபோது மடங்களும் கல்விச் சாலை களாக விளங்கின. உயர்ந்த கல்வி கற்க விரும்பினோர் நாட்டில் ஆங்காங்கு புகழ் பெற்று விளங்கிய ஆசிரியர்களை அடைந்து அவர்களுடன் தங்கியிருந்து கல்வி பயின்றார்கள். ஆசிரியர்கள் மாணவருக்கு எளிதில் கல்வி பயிற் றற்கு உதவியாகப் புதிய நூல்களைச் செய்வதும் வழக்கமாக இருந்தது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவருக்காகச் செய்யப்பட்டவை. ஆசிரியனுடன் தங்கி யிருந்து கல்வி பயிலும் மாணவர் அவனுடைய வீட்டுப் பணிகளைச் செய்து அவனுக்கு உதவியாக இருந்தனர். அரச குமாரர் ஆட்சிக்குரிய கல்வியையும், போர்க் கல்வியையும் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயின்றார்கள். முற்கால மாணவர் இலக்கியங்களையும், இலக்கணங் களையும் மாத்திரமல்லாமல் இசை, கூத்து, ஓவியம் போன்ற பல வகைக் கல்விகளையும் பயின்றனர். அரசர், அரசியர் முதலானோர் இசை, நடனம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என இலக்கியங்கள் கூறுகின்றன. பெண்களில் சில வகுப்பினர் அறுபத்து நான்கு வகைக் கல்வி பயின்றனர். அவை “எண்ணென் கலை” அல்லது அறுபத்து நான்கு கலைகள் எனப்பட்டன. கைத்தொழில் பற்றிய கலைகள் தனித்தனி வகுப்பினரிடையே எழுதாக்கலையாக இருந்து வந்தன. தொழில் சம்பந்தப்பட்ட கல்வி பயில்வோர் அவ்வத் தொழிலில் திறமை பெற்றவர்களிடம் பயின்றார்கள். பெரும்பாலும் தந்தையே தனது மகனுக்குத் தொழிற்கல்வி கற்பித்தான். 53. கைத்தொழில்கள் “நெசவு குடிசைத் தொழிலாக இருந்தது. நெசவு வேலை செய்வோர் பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள். கம்பளி, பஞ்சு, மரப்பட்டை, சணல், இலவம் பஞ்சு முதலியவற்றில் நூற்கப்பட்ட நூலால் துணிகள் நெய்யப்பட்டன. பலவகைச் சணல் நார், பட்டு, இரலை மான் மயிர் என்பவற்றிலிருந்தும் ஆடைகள் செய்யப்பட்டன. கயிறுகள், கவசங்கள், வார்கள் செய்வோரும் இருந்தனர். “தச்சர், கம்மியர், குயவர், மதுவடிப்போர், வாத்தியக்காரர், கூத்தர் முதலிய பல தொழில் புரிவோரிருந்தனர். வண்டிகள், தேர்கள் போன்ற வற்றைச் தச்சர் செய்தனர். பொற்கொல்லர் முக்கிய தொழிலாளராக இருந்தார்கள். இராச நிகண்டு என்னும் வட மொழி நூல் 42 வகைப் பொன்னைப் பற்றிக் கூறுகின்றது. ஆபரணங்களும் நாணயங்கள் சிலவும் பொன்னாற் செய்யப்பட்டன. பொன்னோடு வேறு உலோகங்களைக் கலந்து வேலை செய்தல், முலாம் பூசுதல், பொன்னில் இரத்தினக் கற் களைப் பதித்தல், உரை கல்லைக் கொண்டு பொன்னைச் சோதித்தல் முதலியன அறியப்பட்டிருந்தன. இரும்பு, செம்பு, ஈயம், தகரம் முதலியவை கீழான உலோகங்களாகக் கொள்ளப்பட்டன. தில்லியில் சந்திரகுப்த னால் (கி.பி. 5ஆம் நூ.) நாட்டப்பட்ட இரும்புத்தூண், அக்காலத்தில் உலோகங்களை உருக்கிவார்க்கும் தொழில் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது. பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் மரத்தினால் செய்யப்பட்டன. பழைய வாகடங்களில் பாதரசம் கூறப்படவில்லை. அது கௌடலியர் காலத்திலும் அறியப்பட வில்லை. சுசுருதர் காலத்தில் அது அறியப்பட்டிருந்தது. நிலக்கீல், மலையிலிருக்கும் நான்கு உலோகங்களை வெயில் சூடேறச் செய்வதால் வடியும் களிம்பு எனக் கருதப்பட்டது. முத்து, பவழம், இரத்தினக்கற்கள் என்பன மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்தன. வைரங்கள் வெட்டிச் சாணை பிடித்துச் சுத்தஞ் செய்யப்பட்டன. போலி இரத்தினக் கற்களும், இரசக் கலவையைக் கொண்டு செய்யப்படும் போலி முத்துக் களும் அறியப்பட்டிருந்தன”.1 உலோக வேலை செய்வோர் அக்கசாலையர், கம்மாளர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் முதலிய பெயர் களால் அறியப்பட்டனர். உலோகத் துண்டை அடித்துச் செய்த தகடு அடர் எனப்பட்டது. அடரினால் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டன. சங்குகள் அறுத்து வளைகளாகச் செய்யப்பட்டன. இரத்தினக் கற்களில் துளையிடுவோர் என அறியப்பட்டனர். ஒவ்வொரு கூட்டத்தினரும் பரம்பரைத் தொழிலையே செய்து வந்தார்கள். தொழில்களில் மாற்றமுண்டாகவில்லை. கூத்தர், மேளமடிப் போர், சங்கு ஊதுவோர், கம்பங் கூத்தாடிகள், யானை பழக்குவோர் என்பவர்களைப் பற்றி நூல்கள் குறிப்பிடுகின்றன. மனிதருக்கும் விலங்கு களுக்கும் வைத்தியம் செய்யும் மருத்துவரும் இருந்தனர். 54. ஆபரண அலங்காரங்கள் ஆடவரும் மகளிரும் பலவகை ஆபரணங்களால் தம்மை அலங் கரித்தார்கள். அவர்கள் தம்மை அலங்கரித்து கொண்டதல்லாமல் தாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களையும் அலங்கரித்தார்கள். வீடு களின் கதவுகள், நிலைகள், முற்றங்கள் என்பனவும் பல வேலைப்பாடு களால் அலங்கரிக்கப்பட்டன. கத்தி, வாள் போன்வற்றின் பிடிகளும் பலவாறு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மகளிர் முற்றத்திலும், வீட்டு வாயிலிலும் வியக்கத்தக்க அழகிய கோலங்களை இட்டார்கள். வீட்டின் சுவர்களிலும் கோயில் சுவர்களிலும் மனத்தையும் கண்ணையும் கவரும் அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. கோயில் கட்டடங்களிலும் தேர்களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மணமாகாத மகளிர் தமது கூந்தலை ஐந்து வகையாகக் கோதி முடித்தார்கள். பெண்கள் நெற்றியில் திலகமிட்டார்கள்; தலையில் பல வகைப் பூக்களைச் சூடினார்கள்; சுறாமீன், வலம்புரிச் சங்கு, பிறை போன்ற அணிகலன்களை அணிந்தார்கள்; கொண்டையிலும் கழுத்தி லும் பூ மாலைகள் அணிந்தார்கள்; சந்தனம் குங்குமம் முதலிய நிறப் பொடிகளைப் பயன்படுத்தி மேனியை அலங்கரித்தார்கள்; உதடுகளுக்கு அரக்கினால் செய்யப்பட்ட சாயம் ஊட்டினார்கள், மார்பிலும் தோளி லும் தொய்யிலென்னும் ஒருவகைக் குழம்பு பூசினார்கள்; அதன் மீது கரும்பு, பூங்கொடி என்பவற்றை அழகுபெற எழுதினார்கள்; காதில் தோடு அணிந்தார்கள்; காலில் சிலம்பும், கை விரலில் மோதிரமும் அரையில் மேகலையும் அணிந்தார்கள். ஆடவரும் குழை, கடகம், தண்டை முதலிய பலவகை அணிகளை அணிந்தார்கள். பெண்கள் அணிந்த அணிகள் மிகப் பல. சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக் கியங்களிலும் பலவகை அணிவகைகள் கூறப்படுகின்றன. அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மிலைவேய், முதலிய பல சொற்கள் காணப்படுகின்றன. பழைய சிற்பங்களில் முற்கால ஆடவர் மகளிர் அணிந்த அணிவகைகள் காணப்படுகின்றன. பிற்காலத்தும் முற்காலத்தும் வழங்கிய அணிவகைகளுள் சில பின் வருவன: தோடு, காரோலை, முத்துமாலை, பவழ மாலை, சங்கிலி, குறங்கு செறி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை, திருப்பதம், திருமுடி, பள்ளித் தொங்கல், கொற்றக்குடை, தவள சத்திரம், பொற்பூ, திரள்மணி வடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச் சிடுக்கு, சோனகச் சிடுக்கின் கூடு, மகுடம், வாளி, வடுகவாளி, கண்மலர் (நயனம்), பொட்டு, பதக்கம், ஏகவலி, கால்வடம், கமலம், வாகு வலயம், துடர், திருப்பட்டி, திருமணி வடம், கைக்காறை (புயவளை), பாதசாலம், பத்திரம், கண்டதுடர் (மாலை), கொக்குவாய் (கழுத்து ஆபரணங்களை எல்லாம் சேர்த்துப் பிடிக்கும்படி அணியும் சங்கிலி), கட்டகம் (பவளம் பதித்த கைவளை), இரத்தின வளையல், சிறு சந்தம், பாசமாலை, சப்தசாரி, பதக்கம், கலாவம் (பதக்கத்தின் பகுதி), பிரபை, கமலம், செடி, சரப்பள்ளி, தெய்வவுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, கடுக்கன், கடகம், சன்னவீரம், உதரபந்தம். 55. பொழுதுபோக்கு அரசர் பெரும்பாலும் வேட்டையாடுவதிலும் ஆயுதப்பயிற்சி போர்ப் பயிற்சிகளிலும் பொழுது போக்கினர்; யானை ஏற்றம் குதிரை ஏற்றம் என்பனவும் அவர்களின் பொழுதுபோக்காக இருந்தன. போர் வீரர் மற்போர், குத்துச் சண்டை, சிலம்பம், வாட்போர், விற்போர் முதலியன புரிந்து பொழுது போக்கினர். மகளிர் அம்மானை, பந்து, கழங்கு முதலிய விளையாட்டுகளிலும், தெள்ளேணம், சாழல், கோலாட் டம், குரவை, கும்மி முதலிய ஆடல்களிலும் யாழ் வாசித்தல் பாடுதல் முதலியவற்றிலும் பொழுதுபோக்கினர். பொது மக்கள் காடைப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர், யாiனை ஓட்டம், குதிரை ஓட்டம், தேரோட்டம், நாட்டுக் கூத்து, கழைக் கூத்து என்பவற்றைப் பார்த்துப் பொழுது போக்கினர். சிறுவரும் சிறுமியரும் சிறு தேரோட்டியும், சிறு பறை அறைந்தும், சிற்றில் புனைந்தும், ஊசலாடியும், வில் கொண்டு அம்பு எய்தும் பொழுது போக்கினர். ஊசலாடுதல் வளர்ந்தவர்களின் பொழுதுபோக்காகவும் இருந்ததது. ஆயர்குல வாலிபர் ஏறு தழுவிப் பொழுது போக்கினர். ஏறு தழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்பது போன்றது. முதியோர் தாயம் ஆடினர். விழாக்கள், உண்டாட்டுகள், களியாட்டுகள், என்பனவும் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன. பெண்கள் செல்லும் தேரையும் யானையையும் பெண்கள் ஓட்டிச் செல்வதும் அக்கால வழக்காக இருந்தது. ஆற்றில் புது வெள்ளம் வரும் போது நீராட்டு விழா எடுக்கப் பட்டது. அப்பொழுது ஆடவரும் மகளிரும் தேர்கள், வண்டிகள், யானைகளை ஊர்ந்து சென்று பலவகை ஆடம்பரங்களோடு நீராடுவர்; ஆற்றங்கரைகளில் இடப்பட்டுள்ள கூடாரங்களுள் தங்கும் போது மதுவுண்டும், நறும் பண்டங்களைச் சுவைத்தும், ஆடியும் பாடியும் களிப்பர். கார்த்திகை விழாவில் வீட்டுக்கு விளக்கேற்றப் பட்டது. தைமாதப் பிறப்பில் மகளிர் விடியற் காலையில் நீராடி விரதமிருந்தனர். சிறுவர் நெல்லிக்காயை வைத்து வட்டாடுதல், கிணற்றுள் குதித்து நீர் அடியிலிருக்கும் கல்லை எடுத்து வருதல் போன்ற பொழுது போக்குகள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. விழாக் காலங்களில் புலவர்கள் பட்டி மண்டபத்திலேறித் தத்தம் புலமையைக் காட்டும் சொற்பொழிவாற்றினர். விசய நகர அரசர் காலத்தில் அரண்மனைக்குள் பொழுதுபோக்கு அரங்கு இருந்தது. அரசனதும் அரண்மனையிலுள்ள வர்களதும் பொழுதுபோக்குக்காக விலங்குகள் போர் செய்யும்படி விடப்பட்டன; மற்போர் நடத்தப்பட்டன. மற்போரில் பெண்களும் கலந்து கொண்டார்கள். 56. இசை ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசைகளிருந்தன. குறிஞ்சி நில மக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள்1. முல்லை நில மக்கள் முல்லைப் பண் பாடினார்கள். அஃது இன்று மத்தியமாவதி என அறியப்படுகின் றது. மருதநில மக்கள் மருதப் பண் பாடினார்கள். அது இன்று கேதாரம் என அறியப் படுகின்றது. நெய்தல் நிலத்துக்குரிய பண் இன்று புன்னாகவ ராளி என அறியப்படுகின்றது. பாடி ஆடும்போது கொட்டப்படும் மேளங்கள் இருந்தன. வெவ்வேறு ஓசைகளை எழுப்பும் பறைகள் வெவ்வேறு செயல் புரியும் காலங்களில் கொட்டப்பட்டன. நிரை கவரும்போது கொட்டப்படுவது ஏறு கோட் பறை. வெறியாடும்போது ஒலிக்கப்படும் பறை முருகியம். மணக் காலத்தில் முழக்கப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது கொட்டப்படுவது தேரோட்டுப் பறை. நெல்லறுக்கும் போது அறையில் பாடுவது நெல்லரிகிணை. அரசன் வெளியே புறப்படும் போது தட்டப்படுவது புறப்பாட்டுப் பறை. மீன் பிடிக்கச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட் பறை. சூறையாடும் போது கொட்டப்படுவது சூறை கோட்பறை. போர்க்காலத்து யானை குதிரை காலாட் படைகளுக்கு ஊக்க மூட்டும் பொருட்டுப் பல்வகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. இவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நால்வகைப் பட்டன. தமிழுக்குரிய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவைக்குரிய எழுத்துக்கள் ஆ முதலிய நெடில் ஏழும். ச, ரி, க, ம, ப, த, நி என்னும் எழுத்துக்கள் பிற்காலத்தில் வழக்குக்கு வந்தன. மூங்கில், கொன்றைப் பழத்தனி கோது, ஆம்பற் றண்டு, மரம் முதலியவற்றில் செய்யப்பட்ட குழல்களிருந்தன. எக்காள வகைகளில் தாரை, காளம், காகளம், அம்மியம், சின்னம் என்பனவும் கொம்பு வகைகளில் கோடு, இரலை, வயிர் முதலியனவும் இருந்தன. நரம்புக் கருவிகளில் சிறப்புடையது யாழ். அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன. பறை, முரசு, பேரிகை, மத்தளம், ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேள வகைகளுள் சில. இன்று, இலங்கைத் தீவில் எழுபதுக்கு மேற்பட்ட மேள வகைகள் வழங்குகின்றன. இதனால் அக்காலத்தில் பலவகை மேளங்கள் இருந்தனவென்று அறிய வருகிறது. பாணர் கையில் கொண்டு திரிந்து அடித்துப் பாடும் சிறிய மேளங்கள் தாரை, உடுக்கை முதலியன. தமிழர் நூல்களைப் பாடல் வடிவில் செய்து இசையோடு பாடி வந்தனர். ஆடல்களோடு பாடல்களும் பாடப்பட்டன. பெண்கள், இழவுக் காலத்தில் தமது துக்கத்தை ஒப்பாரி என்னும் பாடல்களாகப் பாடினர். “பந்தாடுவதிலும் பாட்டு, ஊசலாடுவதிலும் பாட்டு, நெற்குற்று வதிலும் பாட்டு, உழவிலும் பாட்டு, போரிலும் பாட்டு தமிழரிடையே மலிந்து காணப் படும். தமிழர்க்கு அழுகையும் பாட்டாய் வரும். மணமும் பாட்டாய் நிகழும். தொழுகையும் பாட்டால் விளங்கும். தமிழர் தெய் வத்தைப்பாட்டும் இசையும் பயிலவே வணங்குவர். ஏற்றப் பாட்டு, கப்பற் பாட்டு, இறவைப்பாட்டு, பள்ளி யெழுச்சிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, பாவைப்பாட்டு, மறத்தியர்பாட்டு, குறத்தியர்பாட்டு, இரேகைப்பாட்டு, குறிப்பாட்டு, பள்ளுப்பாட்டு, பறைப்பாட்டு, வள்ளுவர்பாட்டு, வண்டிப் பாட்டு, அம்மானைப்பாட்டு, கழங்குப் பாட்டு, பல்லாங்குழிப்பாட்டு, தோழிப்பாட்டு, பாண்டிப்பாட்டு, கடை திறப்புப்பாட்டு, சிந்துப்பாட்டு, சந்தப்பாட்டு, பிள்ளைப்பாட்டு, கொள்ளைப்பாட்டு, கள்ளர்பாட்டு, வெற்றிப்பாட்டு, வாழ்த்துப்பாட்டு, மங்கலப்பாட்டு, மணப்பாட்டு, காதற்பாட்டு, காவடிப்பாட்டு, பகடுரப்பற்பாட்டு, இடையர்பாட்டு, வேடுவர்பாட்டு, நடைப்பாட்டு, கும்மிப்பாட்டு, குரவைப்பாட்டு, கைவீசற்பாட்டு, சப்பாணிப்பாட்டு, கீரைப்பாட்டு, கோலப்பாட்டு, கோலடிப்பாட்டு, சிலம்பப்பாட்டு, வில்லுப்பாட்டு, தல்லுப்பாட்டு (ஒருவர்ப் பாட எதிர்த்துப் பாடும் பாட்டு - மலை நாட்டு வழக்கு), கோயில் பாட்டு, குழற்பாட்டு, கூத்திற் பாட்டு முதலிய இசைப் பாட்டுகள் எல்லாம் தமிழருடையவை”. முற்காலத்தில் இசை வளர்த்த குடும்பத்தார் பாணர் என அறியப் பட்டனர். அக்காலத்திலிருந்த இசை அறிஞர் துளைக் கருவிவாசிப் போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி வாசிப்போர், கண்டத் தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த் தார்கள். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாசித்த யாழ் சகோட யாழ். தேவார திருவாசகங்கள் அக்காலத்தில் சிறந்த இசைப்பாடல்களாக விளங்கின. சோழ நாட்டில் உறையூரில் தோன்றிய திருப்பண்ணாழ்வார் திருவரங்கக் கடவுளுக்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து பெரும்பேறு பெற்றார். திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் ஆனாயனார் வேய்ங்குழலில் இறைவனின் ஐந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து இறைவனருள் பெற்றார். அருணகிரி நாதர் பாடிய பாக்கள் சந்த இசை யில் சிறந்தவை. திருமுறை கண்ட சோழன், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பாடினியாரைக் கொண்டு தேவாரங்களுக்குப் பண்ணமைதி யினை வகுத்தமைத்தான். சேந்தனார் முதலிய ஒன்பதின்மராற் பாடப் பெற்ற பாடல்கள் தேவாரத்தை ஒப்பப் பண்ணடைவு பெற்றுள்ளன. இராசராச சோழன் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கும் இசை பாடுதற் கும் பலரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் நியமித்தான். முத்துத் தாண்ட வர் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை முதலியன பிற்கால இசைப் பாடல்களாகும். யாழும் வீணையும் இருவேறு இசைக் கருவிகள். இசையின் காலத்தை அளப்பதற்குத் தாளம் வழக்கில் இருந்தது. தாளத்தைப் பற்றிக் கூறும் தாள ஓத்து, தாள சமுத்திரம் முதலிய நூல்கள் இருந்தன. இசையைப் பற்றிக் கூறும் இசை நுணுக்கம், முது நாரை, முது குருகு, இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம் முதலிய பல நூல்கள் இருந்தன. இவை இப்பொழுது இறந்து விட்டன. 57. போர் தமிழரசர் பெரும்பாலும் தமது ஆணையைப் பிற அரசர் மீது செலுத்தும் பொருட்டுப் போர் செய்தனர். போர் பெரும்பாலும் அறுப்புக் காலத்தின் பின் நிகழ்ந்தது. மேற்கொள்ளப்பட்ட போர்களின் தன்மை நோக்கி அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பெயர் பெற்றன. போர் வீரர் அவ்வக் காலத்தில் முடியில் சூடிக் கொண்ட பூக்கள் காரணமாக அப்பெயர்கள் தோன்றின. தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தருக்கும் வெவ்வேறு பூக்கள் இருந்தன. பாண்டியனுக்கு வேப்பம் பூவும், சோழனுக்கு ஆத்திப் பூவும் சேரனுக்குப் பனங்குருத்தும் அடையாளப் பூக்களாகும். இவ் வரசர்களின் படை வீரர் தம்மரசரின் பூவைச் சூடுதல் மரபு. சில சமயங்களில் அவர்கள் அப் பூக்களைப் பொன்னினால் செய்து சூடினர். வெட்சி என்பது ஒரு அரசன் மாற்றானுடைய பசுக் கூட்டங் களைக் கவர்தல். பசுக்களை மீட்டல் கரந்தை என அறியப்படும். வஞ்சி, மாற்றான் மீது படை எடுத்துச் செல்லுதல். உழிஞை, ஓர் அரசன் இன் னொரு அரசனின் கோட்டையை முற்றுகையிடுதல். தும்பை, இரு படை களும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பொருதல். வாகை, வெற்றியைக் குறிக்கும். காஞ்சி, உலக நிலையாமையைக் கூறுவது. பாடாண், அரசர் பெரு மக்களின் வெற்றியையும் புகழையும் புலவர்கள் பாடுவது. முற்காலப் போர்கள் வீரம், திறமை, வலிமை முதலியவற்றைக் காட்டுதற்குச் செய்யப் பட்டமையால் அவை அரசரின் பொழுது போக்குகளாகவும் இருந்தன. போர்க்களம், களரி, பறந்தலை, முதுநிலம் என அறியப்பட்டது. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முன்னணி, ஆக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரைப் படை எனப்பட்டது. பின் படை கூழை எனப்பட்டது. யானை, தேர், குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டிருந்தது. யானை வீரன் புலித்தோல் கவசம் அணிந்து சென்றான். அவனைச் சூழ்ந்து சில வீரர் சென்றனர். யானை பாகனால் நன்கு பழக்கப்பட்டிருந்தது. அது கந்து அல்லது தறியில் கட்டப்பட்டது. அதற்கு அரிசியும் சர்க்கரையும் கலந்த சோற்றுக் கவளம் கொடுக்கப்பட்டது. அதற்கு நீராட்டிக் குங்குமம் பூசி நெற்றிப்பட்டங் கட்டப்பட்டது. சூழி, ஓடை என்பன நெற்றிப் பட்டத்தைக் குறிக்கும் பெயர்கள். தேர்கள் நிறமூட்டிய துணிகளாலும், பூமாலைகள், இலைகளா லும் அலங்கரிக்கப்பட்டன. அவை நிரை நிரையாகப் போர்க்களத்துக்குச் சென்றன. போரில் வில், அம்பு, வளைதடி, ஈட்டி, வேல், வாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தடி, தண்டு, எறுழ், குணில் முதலியன தண்டு வகைகளில் சில. வில், கொக்கரை, சிலை, தடி, தவர், முனி, கொடு மரம் முதலியன வில் வகைகளில் சில. வாள், உவணி, ஏறி, கடுத்தலை, துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், சுறும்பிடி, சுரிகை, முதலியன ஈட்டி வகையில் சில. வேல், எயில், அரணம், எஃகம், குந்தம், ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு முதலியன வேல்வகையுள் சில. அம்பு, கணை, கதிரம், கோ, கோல், தொடை, தோணி, பகழி, பள்ளம், புடை, வண்டு, வாளி முதலியன அம்பு வகையுள் சில. நாணி, நாண், பூரம், ஆவம், கொடை, நாரி, நரம்பு, பூட்டு, உடு முதலியன வில் நாணின் பெயர்கள். கேடகம், கிடுகு, கடகம், தட்டு, பரிசை, பலகை, மறை, வட்டணம், வட்டம், தோல், தோற்பரம் முதலியன பரிசை வகையுள் சில. மேலகம், அரணி, ஆசு, கந்தளம், மெய் யுறை என்பன கவச வகைகளுள் சில. கைக் கவசம் கைப்புடை எனப் பட்டது. அரசனிடத்தில் போர் முரசு இருந்தது. அது நீராட்டி, நெற்கதி ரால் அலங்கரித்து உயிர்ப் பலியிட்டு வழிபடப்பட்டது. மாற்றரசனின் காவல் மரத்தை வெட்டித் துண்டாடி அதனால் போர் முரசு செய்யப் பட்டது. போரில் இறப்போர் வீர சொர்க்கம் செல்கிறார்கள் என மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது முதுமை அடைந்து அல்லது நோய் வாய்ப்பட்டு இறக்கும் அரசரின் உடலைத் தருப்பையில் கிடத்திவாளால் போழ்ந்து பின் சுடுவது அல்லது நல்லடக்கம் செய்வது அக்கால வழக் காக இருந்தது. போர் தொடங்கும் முன் அந்தணர், பெண்கள், நோயா ளர், வயோதிகர், சிறுவர் என்போரை அப்புறப்படுத்தும்படி பகைவர் முன்னறிவிப்புச் செய்வர். ஒத்த படைக் கலங்களில்லாதவனுடன் போர் செய்வது, தோற் றோடுவோன், குடுமி குலைந்தோன், தூதர் முதலானோரைக் கொல்வது நீதிக்கு மாறு எனக் கொள்ளப்பட்டது. போரில் காயம்பட்டவர்கள் பலகையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டார்கள். காயங்கள் ஊசியி னால் தைக்கப்பட்டன. அவ்வூசி நெடு வெள்ளூசி என அறியப்பட்டது. போரில் வீரம் காட்டியவர்களுக்கு அரசன் பட்டங்கள் வழங்கினான். படைத் தலைவன் ஏனாதிப் பட்டத்துக்கு அடையாளமாக மோதிரம் வழங்கப்பட்டது. வென்ற அரசன் தோற்ற அரசனின் முடியை உருக்கிய பொன்னால் வீர தண்டை அல்லது மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் தோற்ற அரசனின் நீர்த் துறையில் தனது கொற்றக் குடையை நீராட்டு தலும் அவனுடைய காவல் மரத்தில் தனது யானையைக் கட்டுதலும் சிறந்த செயல்களாகக் கருதப்பட்டன. 58. படை மூலப் படை, கூலிப் படை, நட்புப் படை, பகைப் படை, நாட்டுப் படை, வேட்டுவப் படை எனப் படைகள் அறு வகையின. தலைமுறை யாக அரசனிடமிருந்து வருவதும், போர்ப் பயிற்சியில் தலை சிறந்தது மாகிய படை மூலப்படை எனப்பட்டது. திருக்குறள் இதனைத் தொல் படை எனக் கூறுகின்றது. அரசன் இவர்களை எப்பொழுதும் போருக்கு ஆயத்தமாக வைத்திருந்தான். தனக்கு உதவியாகவுள்ள நட்பு அரசர் உதவிய படை நட்புப் படை எனப்பட்டது. இப்படையினர் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்களோ என்பதில் சந்தேகம் இருந்தது. ஆகவே இப்படையினர் முன் எச்சரிக்கையோடு பயன்படுத்தப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து அகப்படுத்தப்பட்டார்கள் அல்லது எதிரியின் படையை விட்டு விலகி வந்தவர்கள் பகைப்படையினர் எனப்பட் டார்கள். நாட்டுப் படையோடு இவர்களைச் சேர்த்துப் போருக்கு அனுப்பு வதில் கவனம் செலுத்தப்பட்டது. வேட்டுவப் படையினர் போரில் கிடைக்கும் கொள்ளைப் பொருள்களுக்காகப் போர் செய்தனர். போர்க் காலத்தில் நாட்டிலிருந்து திரட்டப்பட்டவர்கள் அடங்கிய படை நாட்டுப் படை எனப்பட்டது. கூலியின் பொருட்டுப் போர் செய்வோர் கூலிப் படையினர் என அறியப்பட்டனர். படை அலகு பத்தி எனப்பட்டது. இஃது ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாள் கொண்டது. 59. யானைப் படை யானைகள் போர்முனையில் நின்று போர் செய்யும்படியும், அணியை விட்டு விலகிக் குழப்பம் செய்யாதிருக்கும் படியும் பயிற்றப் பட்டன. அவற்றின் உடல் தோல் போர்வையால் காக்கப்பட்டது. யானை களை வெப்ப காலத்தில் பயன்படுத்தாமல் விடுவது விரும்பப்பட்டது. அவை எதிரியின் படையைத் தாக்கி அணியைக் குலைத்தது மாத்திர மல்லாமல் வேலிகளையும், கூடாரங்களையும், அரண் செய்யப்பட்ட இடங்களையும் அழித்தன. போர் யானைகளின் கொம்புகளில் இரும்பி னால் செய்யப்பட்ட பூண்கள் இறுக்கப்பட்டன. பூண்கள் கிம்புரி எனப் பட்டன. சில சமயங்களில் கொம்புகளில் கூரிய வாள்கள் கட்டப்பட்டன. மதில் கதவின் மீது பாய்ந்து அதனை உடைத்தற்குப் பூண்கள் உதவியாக இருந்தன. பாகனைத் தவிர இருவர் அல்லது மூவர் அதன் மீதிருந்தார்கள். ஒவ்வொரு யானையும் சிறு காலாட் படையால் பாதுகாக்கப்பட்டது. போர் செய்யாதவர்கள் வண்டிகளுடன் பின்னே சென்றார்கள். யானைகள் மிக அரிய உடைமைகளாகக் கருதப்பட்டன. அரசனுடைய வெற்றி யானைப் படையின் திறமையைப் பொறுத்ததாக இருந்தது. கோபங் கொண்ட ஒரு யானை ஆயிரம் குதிரைகளுக்குச் சமம் எனக் கருதப் பட்டது. அரச வகுப்பினர் யானையைப் பயன்படுத்தினர். போர் தொடங் குவதற்கு முன் யானைக்கு மது ஊட்டுதலும் வழக்காக இருந்தது. யானை மீது கொடி நாட்டப்பட்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது வருமாறு: “சோழ அரசனிடத்தில் அறுபதினாயிரம் போர் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டடி உயரமுடையது. போர் செய்யும் போது யானைகள் முதுகின் மேல் வீடு1களைக் கொண்டு செல்கின்றன. அவற்றுள் போர் வீரர் இருந்து தொலைவில் நிற்பவர்கள் மீது அம்பு எய்தும், அண்மையில் நிற்பவர்களை ஈட்டியால் குத்தியும் போர் செய்வர்”. 60. குதிரைப் படை குதிரைகள் இரும்புக் கவசமிட்டுக் காக்கப்பட்டன. வீரர், வில், ஈட்டி, வாள் என்பவற்றைத் தாங்கியிருந்தனர். குதிரைகளுக்குக் கடிவாள மிடப்பட்டது என்றும், சேணம் இடப்படவில்லை என்றும் கிரேக்கர் கூறியிருக்கின் றனர். வேவு பார்ப்பதற்கும் எதிரியின் படையை ஊடுருவிச் செல்வதற்கும் குதிரைப் படை பயன்படுத்தப்பட்டது. குதிரைப் படையில் குதிரைகளைப் பழக்குவோரும் வேலைக்காரரும் இருந்தனர். கௌட லியர் குதிரைகளின் பதினாறு சாரியைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பதினாறு வகைக் கடி வாளங்களும் ஆறு வகை முட்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒட்டகங்கள் பிற்காலங்களில் பயன்படுத்தப்பட்டன. 61. தேர்ப் படை தேர்களில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவற்றில் போர் செய்பவனும் தேர்ப்பாகனும் நிற்கக் கூடியதாக இருந்தது. போர் செய்பவன் இடப்புறத்தில் நின்றான். தேர்களின் வடிவம் இக்காலம் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் தேர்களின் வடிவை ஒத்திருந்தது. அவை விரைவில் செல்லக் கூடியன. கலிங்கத்துப் பரணி முதலிய இலக் கியங்களிற் கூறப்படுவன கொண்டு இதனை அறிய முடிகிறது. தேர்கள் சம நிலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டன. தேரில் சாரதியைத் தவிர இரண்டு போர் செய்யும் வீரர் இருந்தனர் என்று மெகஸ்தீனஸ் கூறியுள்ளனர். தேர்ப்பாகன் கவசமணிந்து கையில் வில்லைப் பிடித் திருந்தான். வடநாட்டில் தேர் செலுத்துவோன் சூதன் என அறியப் பட்டான். அவன் போர்க்களத்தில் கண்ட காட்சிகளையும், வெற்றி களையும் பாடல்களாகப் பாடினான். அவன் அரசரின் வரலாற் றாசிரியனாகவும் பெருமை அடைந்தான். 62. காலாட் படை காலாட் படையினர் பவனி செல்லவும் அகழ் வெட்டவும், மதில்கள் எழுப்பவும், இராக்காலத் தாக்குதல்களைச் சமாளிக்கவும், எக்காலத்தும் எவ்வகை இடத்தும் போர் செய்யவும் ஆயத்தமாக இருக்கும்படி பழக்கப்பட்டிருந்தார்கள். கட்டாய வேலைக்காகத் திரட்டப்பட்டோர் பண்டங்களையும், போர்க் கருவிகளையும், காயப்பட்டோரையும் எடுத்துச் சென்றனர். 63. போர்க் கட்டளைகள் பத்து, நூறு, ஆயிரம் என்னும் கூட்டங்களாகப் படை பிரிக்கப்பட் டிருந்தது. யானைகள், குதிரைகள், தேர்களுக்குப் பொறுப்பான அதி காரிகள் இருந்தார்கள். சேனாதிபதி படைகளின் தலைவனாக இருந்தான். இப்பெயர் பத்துப் பேரடங்கிய படைப் பிரிவின் தலைவனைக் குறிப்ப தாவும் இருந்தது. மகா சேனாதிபதி, நாயகன் என்னும் தலைவர் முடிக் குரிய இராச குமாரனை ஒத்த உயர்ந்த நிலையிலுள்ளவர்களாக இருந்தனர். அரசன் பெயரளவில் எல்லாரிலும் மேலான தளபதியாக இருந்தான். கட்டளைகள் சமிக்கைகளாலும், வாத்தியங்களை வேறுபட ஒலிக்கும் ஒலிகளாலும் அறிவிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஓலைச் சுருளை அம்பில் கட்டி எய்து செய்திகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு சிறிய இராணுவ அலகுக்கும் அதன் கொடி இருந்தது. முதன்மையான வீரர் தனித்தனி அடையாளமுள்ள கொடியை வைத்திருந்தனர் என்று மாபாரதம் கூறுகின்றது. சகுனங் கூறுவோரும் புலவர்களும் எதிரியைத் தாக்குவதற்கு ஏற்ற நேரத்தைக் கூறினார்கள். அப்போது அவர்கள் போர் வீரருக்கு உற்சாகம் ஊட்டினார்கள். போர் தொடங்கு முன் படைக்குமுன் வெளிச்சம் காட்டப்பட்டது. படை, நாளொன்றுக்கு இரண்டு யோசனை தூரம் சென்றது. யோசனை என்பது 32,000 முழம் கொண்ட தூரம். சங்கு, கொம்பு முதலிய வாத்தியங்களும் பலவகைப் பறைகளும் போரில் ஒலிக்கப்பட்டன. 64. அணிவகுப்பு சாதாரண அணிவகுப்பு சமவியூகம் எனப்பட்டது. அதற்கு மத்தி, இரு சிறகுகள், இரு சிறகுகளையும் அடுத்த இரு பக்கங்கள் என ஐந்து பகுதிகளுண்டு. இவற்றில் மொத்தம் 45 தேர், 45 யானை, 225 குதிரை, 675 காலாட்கள் உண்டு. இவற்றோடு காவற் படை துணைப் படை அடங்கிய 4,050 வீரர்கள் கொண்ட சேனையை ஒரு படை எனலாம். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் ஐந்து முழத்தூரமும், ஒரு வீரனுக்கும் மற்ற வீரனுக்கும் இடையில் பத்து அங்குல வெளியுமிருந்தன. யானைகள் மத்தியின் முன் நிறுத்தப்பட்டன. தேர்கள் இரண்டு சிறகு களின் முன் அல்லது பின் நின்றன. தேர்களில்லாவிடில் குதிரைப் படை அணியின் பக்கங்களைக் காத்தது. யானைப் படையினொரு பகுதி சேமப் படையாக நிறுத்தப்பட்டிருந்தது. கவசமணிந்தவர்கள் முன்னணியிலும், மற்றவர்கள் பக்க அணிகளிலும், வில்லாளர் இரண்டாம் அணியிலும் நின்றார்கள். கம்ப அணி எதிரியை நேர் வரிசையாகத் தாக்குவது. கழுகு அணி, கழுகு போல் இரண்டு பக்க அணிகளுடன் சென்று தாக்குவது. ஊசி முனை அணி பக்க அணிகளையும், விலா அணிகளையும் உள்ளுக் கிழுத்துக் கொண்டு தன்னிலும் அதிக எண்ணுள்ள எதிரியின் படையைத் தாக்குவது. பாம்பு வளைவு அணி, பாம்பு போல வளைந்து சென்று பகை வரைத் தாக்குவது. வட்ட அணி எங்கும் படைமுகம் இருப்பது போலத் தோன்றும்படி வட்டமாக அமைக்கப்படுவது. இவ்வாறு பல அணி வகுப்புக்களிருந்தன. எதிரியின் தலைவர்களைக் கொல்வதற்கு வெகுமதிகள் வழங்கப் பட்டன. அரசனைக் கொல்பவனுக்கு 100,000 பணமும், படைத்தலை வனைக் கொல்பவனுக்கு 50,000 பணமும், யானையைக் கொல்பவனுக்கு 5,000 பணமும், குதிரையைக் கொல்பவனுக்கு 1000 பணமும், சிறு அதிகாரிகளைக் கொல்பவனுக்கு 100 பணமும், காவலர்களைக் கொல் பவனுக்கு 20 பணமும் வழங்கப்பட்டன. படையின் பின் மருந்து உதவும் படை இருந்ததென்றும், பணி செய்யும் பெண்கள் பின்னே நின்று உற்சாகம் ஊட்டினார்கள் என்றும் கௌடலியர் கூறியுள்ளார். தனிப்பட்ட படை, படைக்கு வேண்டிய பொருளை முன்னமே கொண்டு சென்று சேர்த்தது.1 65. போர் ஆயுதங்கள் பலவகைப் பேராயுதங்கள் இருந்தன. முன்னால் எந்திரக் கருவிகள் சென்றன. சக்கரங்கள் சுழலும்போது கவணில் கற்களை எறிந்தன. முள் இரும்புத் தண்டாயுதங்கள் (நூற்று வரைக்கொல்லி) இதிகாச காலத்தில் அறியப்பட்டிருந்தன. கோட்டை மதில்களில் கல் எறியும் எந்திரங்கள் நாட்டப் பட்டிருந்தன. நெருப்புப் படைக்கலங்கள் பயன்படுத்தப் பட்டன. நெருப்புப் படைக் கலங்கள் என்பன நெருப்பைப் கொண்டு செல்லும் அம்புகள். ஈட்டிகளில் பலவகைகள் இருந்தன. பொதுவான ஈட்டி முற்றிலும் உலோகத்தினால் செய்யப்பட்டிருந்தது. அதன் நீளம் ஐந்தடி எட்டு அங்குலம். சில மரக்கைப் பிடியும் உலோகமுனையும் உடையவை. தோமரம் என்பது யானைப் படையின் முக்கிய ஆயுதம்; அது நீண்ட ஈட்டி. திரிசூலம், சக்கரம், கவண், தண்டு, சம்மட்டி, மூன்று முனைகளுடைய கண்ட கோடாரி முதலிய ஆயுதங்களும் பயன்படுத்தப் பட்டன. வச்சிரமென்பது எறிபடை. வாள்களில் பல வகைகள் இருந்தன. அவை நீண்டும் ஒடுங்கியும் இருந்தன. கைப்பிடிகள் கொம்பு, தந்தம், மரம், மூங்கில் என்பவைகளாலிடப்பட்டன. வில் உயர் வகுப்பினரால் பயன் படுத்தப்பட்டது. அது பனை, பிரம்பு, வயிரமரம், கொம்பு என்பவற்றால் செய்யப்பட்டது. நல்ல வில் ஐந்தடி எட்டு எங்குல நீளமுடையது. நாண், சணல், மூங்கில் நார், விலங்குகளின் நரம்புகளாக இருந்தன. அம்பை விடுமுன் அது நாணில் வைத்துக் காது வரை இழுக்கப்பட்டது. சுயம்வரத்தில் அம்பெய்வது முதலிடம் பெற்றிருந்தது. தற்காப்புக்குரிய கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. தலை, தோள், உடல், முழங்கால் களைக் காக்கும் கவசங்கள் இருந்தன. 66. கோட்டையும் பாசறையும் கோட்டைகளின் அமைப்பு இடங்களுக்கேற்ப வேறுபட்டிருந்தன. கோட்டையை அகழ் அல்லது மலை அரண் செய்தது. சிற்பநூல் பத் தொன்பது வகைக் கோட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கோட்டை பெரும்பாலும் நாட்டின் எல்லையில் கட்டப்பட்டிருந்தது. அதற்கு மூன்று அகழ்களிருந்தன. அவை முறையே 56, 48, 40 முழ அகலமுடை யவை. ஒவ்வொரு அகழிக்குமிடையில் நான்கு முழ வெளியிருந்தது. அகழ்களின் ஆழம் அகலத்திலும் பாதி அளவினதாக இருந்தது. உள் அகழின் பின் 24 முழம் உயர்ந்த மேடை இருந்தது. இதுபோல் இருமடி அகலத்தில் நஞ்சு முள் மரங்களும் செடிகளும் நடப்பட்டிருந்தன. அதன் பின் 24 முழ உயரமும், 12 அடி அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்களினிடையே இரண்டு மாடிகளுடைய கட்டிடங்கள் இருந்தன. அவற்றின் மேல் மாடியில் மூன்று வில்லாட்கள் மறைந்து நிற்கக் கூடியதாக இருந்தது. மதிலைச் சுற்றி உட்புறத்தில் வீதி சென்றது. பகைவர் முற்றுகை இடுங்காலங்களில் சடுதியில் சென்று அவரைத் தாக்குதற்கு வெளியே செல்லும் இடங்கள் இருந்தன. கோட்டை வாயிற்கதவுகள் பல மரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துப் பொருத்திச் செய்யப்பட் டிருந்தன. அவை இரண்டு சிறகுகளாக அமைக்கப் பட்டிருந்தன. அவை இரும்புச் சலாகைகளால் தாழிடப்பட்டன. கோட்டையுள் சுருங்கை வழிகளிருந்தன. பாசறை என்பது படங்குகளாலிடப்பட்ட அரண் செய்யப்பட்ட கூடாரம். இது சோதிடரின் ஆலோசனையோடு சிற்பிகளால் கருத்தோடு வகுக்கப்பட்டது. இஃது இடங்களுக்கேற்ப வட்டமாக, நீண்ட சதுரமாக அல்லது சதுரமாக அமைக்கப்பட்டது. இதற்கு நான்கு வாயில்களும் பின்னே இலேசான அரண்களுமிருந்தன. இஃது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசனுறையுமிடம் முதலிரண்டு அறைகளாக இருந்தது. அதிகாரிகள் தெற்கில் இருந்தார்கள். யானைகளும் குதிரை களும் கட்டுமிடம் வடக்கிலிருந்தது. அது ஒரு சிறிய பட்டினமாக இருந்தது. வாத்தியக்காரரும், வேட்டுவரும் கூடாரத்துக்கு வெளியில் தங்கினார்கள். 67. நம்பிக்கைகள் சோதிடத்திலும் சகுனத்திலும் நம்பிக்கை இருந்தது. எரி கொள்ளி விழுவது நாட்டிலுள்ள பெரியவரின் மரணத்துக்கு அறிகுறி எனக் கருதப் பட்டது. கூந்தல் விரித்திருக்கும் பெண்ணைப் பார்த்தல் தீது எனக் கருதப் பட்டது. சிறுவரைத் தீமைகளிலிருந்து காப்பதற்காக ஐம்படைத்தாலி கட்டப்பட்டது. பேய்களை ஓட்டுதற்கு வெண்கடுகு புகைக்கப்பட்டது. ஆலமரத்திலும் வேறு சில மரங்களிலும் பேயுறைவதாகக் கருதப்பட்டது. பாம்பு சந்திர சூரியரை விழுங்குவதால் கிரகண முண்டாகிறதெனக் கருதப்பட்டது. காகம் கரைவது விருந்தினர் வருவதற்கு அறிகுறி என நம்பப்பட்டது. தொலைவிடத்திலுள்ள ஒருவர் ஒருவரை நினைப்பதால் தும்மலுண்டாகிறதெனக் கருதப்பட்டது. நாகத்தின் தலையில் இரத்தினம் இருக்கிறதென நம்பப்பட்டது. பல்லி சொல்வது நற்சகுன மாகவோ தீய சகுனமாகவோ கொள்ளப்பட்டது. உன்னமரம் (இலவு) வாடுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. போர்க்களத்தில் பேய் திரிவ தாகவும், பேய்கள் பிணம் தின்பதாகவும் நம்பிக்கை இருந்தது. வேப்பிலை சிறுவரைப் பேய்களிலிருந்து காக்கும் என நம்பப்பட்டது. போரில் இறந்தவர் வீர சொர்க்கமடைவர் என்னும் நம்பிக்கை இருந்தது. வலக் கண் துடிப்பது நற்சகுனமாகவும். இடக்கண் துடிப்பது தீய சகுனமாகவும் கொள்ளப்பட்டன. சிறுவருக்குக் கண்ணூறு படாமல் அவர் தலை மயிரில் நெய்யும் வெண் சிறு கடுகும் பூசப்பட்டன. 68. போக்குவரத்து பெரும்பாலும் மக்கள் கால் நடையாகப் போக்குவரத்துச் செய் தார்கள். பலவகை வண்டிகள், பல்லக்கு, தேர், கழுதை, எருது, யானை முதலியனவும் முற்காலப் போக்குவரத்துச் சாதனங்களாக இருந்தன. ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலியன வண்டியைக் குறிக்கும் பெயர்கள். வண்டிகளும் கழுதைகளும் பொதிமாடுகளும் பண்டங்களை ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்பட்டன. அரசரும் பெருமக்களும் தேர், யானை, பல்லக்கு முதலியவைகளில் சென்றார்கள். நீரில் செல்வோர் ஓடங்களில் சென்றனர். ஓடங்களில் பல வகைகள் இருந்தன. ஓடம், அம்பி, தோணி, தெப்பம், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பாட்டிமார், படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலியன ஓடங்களைக் குறிக்கும் பெயர்கள். இவை வெவ்வேறு வகை ஓடங்களைக் குறிப்பனவாகலாம். மரக்கலங் களின் முன்புறம் யானை முகம், குதிரை முகம், அரிமுகம் போன்று செய்யப்பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் படங்கும் (பாயும்) இருந்தன. 69. ஓவியம் மிக முற்காலம் முதல் ஓவியக் கலையில் திறமை பெற்று விளங் கினார்கள். முற்கால எழுத்து முறை ஓவிய வடிவிலேயே அமைந்திருந்தது. கற்கால வாழ்க்கையிலிருந்த மக்கள் குகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை திறமையாக எழுதப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ மக்களின் முத்திரைகளில் அழகிய ஓவியங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவை இக்காலம் வரையப்படும் சிறந்த ஓவியங் களோடு ஒத்த கலைத்திறமை உடையனவாக இருக்கின்றன. அசந்தாக் குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. சங்ககால நூல்களில் ஓவியக் கலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரண்மனைச் சுவர் களிலும், கோயில் சுவர்களிலும், செல்வரின் மாளிகைச் சுவர்களிலும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அக்காலக் கோயில்களில் எழுத்து நிலை மண்டபம் என ஒரு பகுதி இருந்தது. அங்கு பெரும்பாலும் புராண சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இதனை, “இந்திரன் பூசை யிவளகலிகை யிவள் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு வொன்றிய படியிதென் றுரைசெய் வோரு மின்னம் பலபல வெழுத்து நிலைமண்டபம்” எனப் பரிபாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. “சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு மையறு படிவத்து வானவர் முனிவர் எவ்வகை யுயிர்களு வுவமங் காட்டி கண்கல ரோவியங் கண்டு நிற்குநரும்” என்னும் மணிமேகலை அடிகள் அக்கால மனைகளில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தமையை நன்கு விளக்குகின்றன. பழந்தமிழ் இலக்கியங் களில் மடலேறுதல் என்னும் ஒரு வழக்கம் கூறப்படுகின்றது. ஒருவன் தான் காதலித்த பெண்ணைப் பெறமுடியாத போது அவன் அவளைப் போன்ற படமொன்றை எழுதி, உயர்த்திக் கொண்டு பனை மட்டையால் செய்த குதிரையிலேறி வீதியில் வருவான். இதனால் அவன் காதலிக்கும் பெண் யாரென அறியக் கூடியதாக இருந்தது. இதனால் பொதுமக்களும் ஓவியம் வரையும் திறமை பெற்றிருந்தார்கள் எனத் தெரிகிறது. 70. சிற்பம் சிற்பக் கலை இந்தியாவில் மிகப் பழைய காலத்தில் வளர்ச்சி யடைந்திருந்தது. மொகஞ்சதாரோவில் பல அழகிய சுடுமண் பாவை களும், கல்லில் செதுக்கப்பட்ட மனித உருவங்களும், உலோகத்தில் வார்க்கப்பட்ட நாட்டியப் பெண்ணின் உருவமும் கண்டுபிடிக்கப் பட்டன. கல்லில் செதுக்கப்பட்ட சிலை ஒன்று கைகளும் தலையும் இல்லாமல் காணப்பட்டது. இது கிரேக்க சிற்பக் கலையை ஒத்த கலைத் திறமை பெற்றதாக அறிஞர் புகழ்ந்துள்ளார்கள். உலோகத்தில் வார்க்கப் பட்ட நடனமாது உருவத்தைப் பலர் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். ஏறத்தாழ கி.மு. 3000-இல் இந்திய மக்கள் சிற்பக் கலையில் மிக முன்னேற் றம் பெற்றிருந்தார்கள். தமிழர் பெற்றிருந்த திறமையைக் குறித்துச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். “கல்லு முலோகமும் செங்கலு மரமும் மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன” எனத் திவாகரம் கூறுகின்றது. தென்னிந்தியக் கோயில்களில் கருவறையிலிருக்கும் திருவுருவங் கள் கல்லில் செதுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் செம்பும் பிற உலோ கங்களும் சேர்த்து உருக்கி வார்க்கப்பட்டன. உலோகத்தில் வார்க்கப் பட்ட உருவங்கள் திருவிழாக் காலங்களில் வெளியே கொண்டு செல்லப் பட்டன. இவ்வகை உருவங்களும் நடராசத் திருவுருவமும் உலக மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இன்று தென்னிந்தியா இலங்கை முதலிய நாடுகளில் நூதன பொருட்காட்சி சாலைகளில் வைக்கப்பட் டிருக்கும் பழங்காலச் சிற்பங்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள் தமிழரின் சிற்பத் திறமையை வெளியிடுகின்றன. சோழர், பல்லவர் காலங்களில் எடுக்கப்பட்ட கற்கோயில்களும், மலைக்குடைவுக் கோயில்களும் கற் களில் செதுக்கப்பட்டிருக்கும் விலங்கு, மனிதர், பறவைகள், மரஞ் செடிகளின் வடிவங்களும் தமிழரின் சிற்பத் திறனை என்றும் காட்டிக் கொண்டிருக்கும் அழியாச் சின்னங்களாகும் 71. மருந்து மருத்துவக்கலை நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டு பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது. மூலிகைகளின் குணங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன. வாதமடக்கி, வண்டு கொல்லி, கிரந்திநாயன், பொன்னாங்கண்ணி போன்று அவ்வம் மூலிகைகளுக்குள்ள குணங்களே அவற்றுக்குப் பெயர்களாக வழங்கின. மூலிகை அகராதிகளில் மிகப் பல மூலிகைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. பதார்த்தகுண சிந்தாமணி என்னும் நூல் பிற்காலத்திற் செய்யப்பட்டதாயினும், அது மக்கள் மூலிகைகளைப் பற்றி முன்னமே அறிந்திருந்தவற்றைத் தழுவிச் செய்யப் பட்ட நூலாகும். கியாழம், குளிகை, சூரணம், இலேகியம், தைலம், செந்தூரம் என்னும் பல வகைகளில் மருந்தாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது. அசோகச் சக்கரவர்த்தி விலங்குகளுக்கும் மக்களுக்கும் மருத்துவ நிலையங்களை நிறுவினார் எனச் சரித்திரம் கூறுகின்றது. இவ்வகை நிலையங்கள் இலங்கையிலும் நிறுவப்பட்டிருந்தனவென்று மகாவமிசம் கூறுகின்றது. அசோகர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளின் முன் மருத்துவக்கலை இந்தியாவில் வளர்ச்சியடைந்திருந்தது. அலெக்சாந்தர் இந்தியாவிலிருந்து பாம்புக்கடி வைத்தியர்களைக் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு சென்றார் எனக் கிரேக்க ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கிப்பகிரிட்டஸ் என்னும் கிரேக்கர் இந்தியரின் மருத்துவ முறைகளைக் கற்று அவற்றைக் கையாண்டார் எனச் சொல்லப்படுவதுண்டு. தமிழர் கையாண்ட வைத்திய முறை பிற்காலத்தில் சித்த முறை என வழங்குகிறது. இராசயன முறையான தமிழரின் மருத்துவக்கலை பழைமையானதும், பயனளிக்கக் கூடியதும், தமிழ்நாட்டின் பொருளா தார நிலை, கால நிலைகளுக்கு ஏற்றதுமாகும். அது சித்த வைத்தியம் எனப்படும். அதன் நோக்கம், தடுப்பு, குணப்படுத்துவது, இழந்து போன வலிமையைத் திரும்பப் பெறுவது என்னும் மூன்று கூறுகளை உடையது. திடமான உடலில் திடமான மனம் என்னும் கொள்கை உறுதிப்பட் டிருந்தது. உடல் இல்லாவிடில் ஒரு பேறும் கிட்டாது; உடலில்லா விட்டால் வீடு கிட்டாது எனச் சித்தர் கூறினர். “தேகமிருதா லல்லோ தித்தெல்லா மாடலாம் தேகமிருந் தாக்காற் சேரலாம் பூரணம் தேகமிருந் தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம் தேகமிருந் தாக்காற் சேரலாம் முத்தியே” (திருமூலர் கருக்கிடை வைத்தியம்) ஆதியிலே சித்தனாராகிய சிவனார் செய்த மருத்துவ நூல் ஏழு லட்சம் பாடல்களுடையது. பின் நந்தி, சனகர், சனாதர், சனாந்தனர், சனற்குமாரர், திருமூலர், பதஞ்சலி, அகத்தியர், புலத்தியர், புசுண்டர், கருவூரர், தன்வந்திரி, சட்டைமுனி, தேரையர், யூகிமுனி முதலிய பலர் நூல் செய்தனர். இவை மணி (இரசமணி), மந்திரம், மருந்து முதலிய வற்றைக் கூறுகின்றன. மூலிகை, உப்பு, தீநீர்1, உபவாசம், 2உடற்பொருள், பாடாணம், உலோகம், சத்து3, இரசக்குளிகை, யோகம் என்னும் பத்துச் சிகிச்சை முறைகளைத் திருமூலர் கூறியிருக்கின்றார். மந்திரமென்பது யோகத்திலும் மணி என்பது இரசக் குளிகைகளிலும் அடங்கும். மூலிகைகள் சூரணம், இழகியம் (இலேகியம்), மெழுகு என்பன. இவை மக்களுறை எனப்படும். கட்டிகளுக்கு மருந்தாகும் தைலம், சாராயத்தில் ஊற விடப்பட்ட மருந்துகள் அறுவை சம்பந்தமானவை; செந்தூரம், சுண்ணம், செய்நீர், தீநீர், சத்து, மணி முதலியன, பஸ்பம் (சாம்பல்) என்பதில் அடங்கும். இம்முறை சித்த மருத்துவத்தில் மாத்திரமுண்டு. ஒப்புறை (ஓமியோபதி போன்றது), எதிருறை (அலோபதி), கலப் புறை என மூன்று வகை மருந்து முறைகள் உண்டு. உப்பு வகைகள் 25, பாடாணம் 64, உலோகம் 9, உலோகச் சத்துகள் 120, மருந்து மூலிகைகள் 1008. நாடி பார்த்து வைத்தியம் செய்தல் சித்தமுறை. இடகலை, பிங்கலை, சுழி முனை என நாடி மூன்று. மருத்துவன் நாடியைப் பார்த்து வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் இயல்பாய் இருக்கின்றனவா அல்லது இயல்புக்கு மாறாக இருக்கின்றனவா என அறிகிறான். அடுத்த படியில் கண், நாக்கு, உடல், மலம், மூத்திரம், சத்தம் முதலியவற்றைப் பார்த்தலோடு உடலைத் தொட்டுப் பார்த்தும் அறியப்படும். சித்த வைத்தியத்தைப் பின்பற்றும் திருவள்ளுவர், நோயைக் கண்டுபிடி, அதற்குக் காரணத்தை அறி, அதற்கு மருந்தை ஆராய்ந்து பார், கால நிலையைக் கவனி, மிகப் பயனளிப்பவற்றைச் செய் எனக் கூறுகின்றார். மருந்துக் கலை, நோயாளி, மருத்துவன், மருந்துகளை அரைத்தோ இடித்தோ பிழிந்தோ கலந்து செய்பவன் என்னும் நான்கு பகுதிகளை உடையது. மருத்துவசாலை நிறுவுவது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆன்ம சக்தியினால் அல்லது மனோசக்தியினால் மாற்றுவது இன்னொரு முறை. இது சமயகுரவர்கள் முனிவர்களால் கையாளப்பட்ட முறை. பார்வை பார்த்தல், நீரோதிக் கொடுத்தல், மந்திரம் செபித்தல் போன்றவை ஆன்ம சத்தியால் நோயை ஆற்றும் முறையில் அடங்கும். சாரகம், சுசுரருதம், தன்வந்திரி நிகண்டு என்பன வட நாட்டாரின் மருத்துவ நூல்கள். இவற்றில் முன் கூறப்பட்ட மூன்று உறைகளையும் காண முடியாது. ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியமாகும். ஆயுர்வேதம் என்னும் பெயருடைய நூல் ஆரிய மொழியில் இல்லை. தன்வந்திரி கி.பி. 500இல் விக்கிரமாதித்தனின் அரச சபையிலிருந்தவர். சுசுருதர் அவர் காலத்தவர். சாரகர் அவருக்கு முன் விளங்கியவர். அட்டாங்க இருதயம் வாக்பாதரால் 9ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. பிற்கால மருத்துவ நூலார் சித்தர் நூல்களைப் பயின்றும் பஸ்பம், நாடி, புடம் போடுதல் முதலிய முறைகளை மொழி பெயர்த்துத் தமது நூலில் சேர்த்தனர். சாரங்கதரரின் சங்கிதை 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. இந்நூல், அது சித்த வைத்தியத்துக்குக் கடமைப்பட்டிருப்பதைக் கூறுகின்றது. சென்னையில் பண்டிதர் கோபாலாச்சாரியரின் தலைமையில் கூடிய ஆயுர்வேத மாநாட்டில் அவரும் இது போன்ற கருத்தைத் தெரிவிக்கின் றார். கண்ணால் பார்த்தல், தொட்டுப் பார்த்தல், சத்தத்தைக் கேட்டுப் பார்த்தல் என்னும் மூன்று சோதனைகளைச் செய்வதே வடநாட்டு முறை. அதர்வண வேதத்தைத் தொகுத்து முடித்தபின் ஆயுர், அர்த்த, தனுர், காந்தர்வ வேதங்களை எழுதுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆயுர் வேதமென்னும் நூல் ஒருபோதும் எழுதப்படவில்லை. தமிழரசரின் விழுகைக்குப் பின் சித்த வைத்தியம் வீழ்ச்சி யடைந்தது (தமிழ் இந்தியா - மு.சி.பூ.). 72. இரேகை நூல் அகத்தியரின் இரேகை நூல் சாமுத்திரிகம் எனப்படும். இந்நூலின் முழுப் பெயரும் புருட சாமுத்திரிக இலட்சணம். இது சுப்பிரமணியக் கடவுள் அகத்தியருக்குக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இது உள்ளங் கை மணிக்கட்டுகளிலுள்ள இரேகைகள், வரைகள், மச்சம், ஆளின் உயரம், நெடுப்பம், கைகள், கால்களின் நீளங்களைப் பார்த்து மனிதரின் குணா குணங்களை அறியும்படியான விதிகளைக் கூறுகின்றது. ஒருவனது உள்ளங்கை சிவப்பேறியும், சிறிதாகவும் இருந்தால் அவனுக்குச் செல்வமும் நீண்ட ஆயுளும் உண்டு; தடிப்பாக இருந்தால் அவன் கவலை உடையவனாவான். சங்கைப் போலும், சக்கரத்தைப் போலும் இரேகைகள் இருந்தால் அவன் அதிக வருவாய் உடையவனாயும், தருமம் செய்பவனாயும், தன்னை அடைந்தவர்களிடத்தில் தயாளம் உடையவ னாகவும் இருப் பான். ஒருவனுடைய கையில் மச்ச இரேகை அல்லது மீன் போன்ற அடையாளம் இருந்தால் அவன் தயாளமுடையவனாக இருப்பான். மூச்சுக்குழாய் போன்ற இரேகை இருந்தால் புகழ் அடை வான். அரிவாள் போன்ற இரேகை இருந்தால் அவன் தைரியமும் ஊக்கமும் உடையவ னாவான். சாடிபோல இருந்தால் சாந்தமானவனாக இருப்பான். சந்திரனைப் போல இருந்தால் கல்விமானாவான். இவ்வாறு அந்நூல் பல செய்திகளைக் கூறுகின்றது. இக்கலை பாண்டி நாட்டி லிருந்து அரேபியாவுக்குச் சென்று அங்கு நின்றும் ஐரோப்பாவுக்குச் சென்றது. (மு.சி.பூ.) 73. வானாராய்ச்சி தமிழர் பெரிய கடல் பயணக்காரராக இருந்தனர். அவர்கள் தமது பயணங்களில் இராக்காலத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் நிற்கும் இடங்களைப் பார்ப்பது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் மாதம் தேதிகளைக் காட்டும் குறிப்புகளை எழுதி வைத்தபோது சூரியனும் சந்திரனும் பெரியனவாகத் தோன்றும்படி குறிப்பிடப்பட்ட னர். வெளிச்சமான கிரகங்கள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் நிற்கின்றனவென்பதும் குறிப்பிடப்பட்டது. மாதத்துக்குத் திங்கள் எனப் பெயரிடப்பட்டதும் 28 நட்சத்திரக் கூட்டங்கள் கொள்ளப்படுவதும் தமிழரின் மாதம் தேதிக் கணக்கு சந்திரமான அளவையாக இருந்ததெனத் தெரிவிக்கிறது. பழைய வடநாட்டு இலக்கியங்களில் நாட்களை வாரமாகக் கொண்டு குறிப்பிடும் முறை காணப்படவில்லை. வாரமுறை யான கணித முறை தமிழருடையது. தமிழர் மேற்கு நோக்கிச் சென்ற போது யூப்ரிட்டிசு தைகிரீசு ஆற்றோரங்களில் குடியேறினார்கள். ஆகவே வார முறையான கணித முறையை இவர்கள் அந்நாட்டில் பரப்பி னார்கள். கிரகங்களும் நட்சத்திரக் கூட்டங்களும் மனிதனுடைய பலாபலன் களில் ஆட்சி செலுத்துகின்றன என்பது மிகப் பழங்காலத்தில் அறியப் பட்டிருந்தது. சூரியனுடைய செல்வாக்கு இயற்கைப் பொருள்களிலும் சந்திரனுடைய செல்வாக்கு கடல்வற்றுப் பெருக்குகளிலும் இருந்து வருவதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வடிப்படையில் வரலாற் றுக்கு முன் சோதிடக் கலை தொடங்கிற்று. எரிகொள்ளி எரிந்து விழுவது வரவிருக்கும் தீமையைக் காட்டுவதாகவும், சந்திர, சூரிய கிரகணங்கள் கெடுதலானவை என்றும் கருதப்பட்டன. கருப்பமான பெண் எவளாவது கிரகணத்தைப் பார்க்கமாட்டாள். பழந்தமிழர் பருவ காலத்தைக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இள வேனில், முதுவேனில் என ஆறு பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். சூரியன் சிங்க ராசியில் செல்லும் காலம் ஆவணியாக இருந்தது. முற் காலத்தில் ஆவணி ஆண்டு தொடங்கும் மாதமாகவும், ஆடி ஆண்டின் இறுதி மாதமாகவும் இருந்தன. ஆவணி மாதத்தில் சூரியனை முகில்கள் மறைப்பதால் மந்தாரமுண்டாகத் தொடங்குகிறது. குளிர் காலம் கழிந்து வெயில் காயத் தொடங்கும் காலமாகிய தைத் தொடக்கத்தில் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள். சங்க இலக்கியங்களில் கணிகள் என்போரால் கலியாணங்களுக்கு நாள் குறித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. “மூவகைக் காலமும் நெறியிலாற்று வதாவது பகலுமிரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்க்கோளும், தூமமும், மின் வீழ்வும், கோள் நிலையும், மழை நிலையும் பிறவும் பார்த்துக் கூறுதல்” என இவர்களைக் குறித்து இளம்பூரணர் கூறியுள்ளார். கட்டிலுக்கு மேலே யுள்ள மேற்கட்டியில் பன்னிரண்டு இராசிகளும் எழுதப்பட்டிருந்தன வென்று நெடுநல்வாடை கூறுகிறது. குறிஞ்சி நில மக்கள் சந்திரன் பரிவட்டங்கொள்ளும் காலத்தில் மணம் செய்வார்கள். பரிபாடல், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களில் ஆங்காங்கு வான நூற் குறிப்புகள் காணப்படுகின்றன. 74. செல்வன் வாழும் மாளிகை 1செல்வன் வாழும் மாளிகை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முன் புறத்தில் ஆடவரும் பின்பறத்தில் மகளிரும் வாழ்ந்தனர். வீட்டுத் தலைவன் தனது கருமங்களைக் கவனித்துக் கொண்டு மீள்வோரை உபசரித்தான். வீட்டில் ஒவ்வொரு தேவைக்கும் வேண்டிய பல அறைக ளிருந்தன. வீட்டை அடுத்து விசாலமான தோட்டமிருந்தது. தோட்டத் தில் பூஞ்செடிகளும் பழமரங்களும் உணவுக்கு வேண்டிய காய் பிஞ்சுகள் கொடுக்கும் செடி கொடிகளும் உண்டாக்கப்பட்டிருந்தன. அதன் மத்தியில் கிணறிருந்தது. தோட்டம் வீட்டின் பின் புறத்தில் இருந்தமை யின் வீட்டின் தலைவியே அதனைக் கவனித்தாள். பூந்தோட்டத்தில் நறுமண மலர்களைப் பூக்கும் மல்லிகை முல்லை முதலிய கொடிகள் படர்ந்திருந்தன. அவைகளினிடையே அமைக்கப்பட்டிருந்த மேடை மீதிருந்து அவள் உல்லாசமாகப் பொழுது போக்கினாள். வீடு மிகச் சுத்தமாக இருந்தது. வீட்டில் தெய்வங்கள் வைத்து வழிபடப்பட்டன. கணவனும் மனைவியும் நிலா முற்றத்தில் இருந்து வெண் மதியையும் விண்மீன்களையும் நோக்கி மகிழ்ந்தார்கள். வீட்டுச் சுவர்கள் ஆளினுரு வம் பிரதிபலிக்கும்படி மினுக்கஞ் செய்யப்பட்டிருந்தன. வீட்டுக் கூரை களை அழகிய தூண்கள் தாங்கி நின்றன. தோட்டத்தில் நீரால் சூழப் பட்ட நீராழி மண்டபம் இருந்தது. அது கோடைகாலத்தில் உறைவதற்கு ஏற்றது. பெண்கள் தங்கும் பகுதியின் நாற்புறங்களிலும் அறைகள் இருந்தன. தலைவன் உறையும் அறையில் பஞ்சு மெத்தைகள் இடப்பட்ட இரண்டு கட்டில்கள் இருந்தன. மெத்தையின் நாற்பக்கங்களிலும் அணைகள் இடப்பட்டிருந்தன. தலைப் பக்கத்துக்கு அண்மையில் உலர்ந்த மரத்தட்டு இருந்தது. காலையில் அலங்கரித்துக் கொள்வதற்கு வேண்டிய சந்தனம், வாசனைத் தைலம், பூமாலை முதலியன அதன்மீது வைக்கப்பட்டிருந்தன. தரையில் எச்சில் உமிழும் காளாஞ்சி இருந்தது. அறைக்கு வெளியே வளர்க்கும் கிளிகள் கூடுகளில் இருந்தன. தலைவன் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் தன்னை அலங்கரித்தான். அலங்காரப் பொருள்களில் சிறந்தவை சந்தனம், வாசனைத் திரவியங்கள் என்பன. அவன் வாசனைப் புகை ஊட்டப்பட்ட ஆடையை உடுத்துப் பூமாலையை அணிந்தான். கண்ணுக்கு மை தீட்டினான்; தாம்பூலமிட்டுச் சிவந்த இதழ்களுக்கு அரக்குக் கூட்டிச் செய்த சாயம் பூசினான். தலையை வாரினான். விரல்களுக்கு மோதிரங் களை அணிந்தான். மேலே உத்தரிகம் தரித்தான். காலையில் பார்க்கும் கடமைகள் முடிந்ததும் அவன் தினமும் நீராடினான். ஒவ்வொரு இரண்டாவது நாளும் அவன் உடம்பு பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு மூன்றாவது நாளும் ஒருவகைப் பொருளைப் பூசி நீராடினான். நகங்கள் மினுக்கமாக இருக்கும்படி அவன் அவற்றை அழகு செய்து கொண்டான். வியர்வையைத் துடைப்பதற்கு அவன் எப்பொழுதும் ஒரு சிறிய துணியை வைத்திருந்தான். முன் பொழுதில் ஒன்றும் பின்பொழுதில் ஒன்றுமாக நாளிருமுறை உணவு கொண்டான். இறைச்சி பொரித்தும், சமைத்தும், அவித்த நீராகவும் கொள்ளப்பட்டது. நண்பகல் உணவுக்குப் பின் அவன் நண்பர்களோடு அளவளாவினான். மாலை நேரத்தில் கோழிப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர் களைக் கண்டு பொழுது போக்கினான். கூடுகளில் வளர்க்கும் சிங்கங் களும் புலிகளும் நின்றன. இரவின் முற்பகுதியில் அவன் இசையைக் கேட்டும் நடனங்களைப் பார்த்தும் மகிழ்ந்தான். அறைகளில் நறுமணம் கமழ்ந்தது. செல்வனின் மனைவி உரத்துச் சிரிக்கவும் உரத்துப் பேசவும் மாட்டாள். கணவனின் பெற்றோர் குறை கூறினால் அவள் எதிர்த்துப் பேச மாட்டாள்; பெரிய செல்வத்திலும் உல்லாச வாழ்க்கையிலும் திளைத்தபோதும் அகந்தை கொள்ளமாட்டாள்; விழாக்களுக்குச் செல்லும்போது ஆடம்பரமாகச் செல்வாள். சில அணிகலன்களை அணிந்து கொள்வாள். கணவன் தூரதேசம் சென்றிருந்தால் அவள் சங்கு வளைகளையும் தாலியையும்தவிரப் பிற அணிகலன்களை அணியமாட் டாள். அவள் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று நேரங்களிலும் இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவுவாள். 75. கூத்து ஆதிகால மக்கள் தம்மிடம் தோன்றும் உணர்ச்சிகளை ஆடிக் காட்டினார்கள். பிற்போக்கிலுள்ள மக்களிடையே இன்றும் இவ்வாட் டங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆட்டங்களிலிருந்து கூத்துக் கலை வளர்ச்சியடைந்தது. அது இன்று நடைபெறும் நாடகம் போலல் லாது, ஒரு கருத்தினை, உடல்நிலை, பார்வை, அபிநயங்களால் நடித்துக் காட்டும் கலையாக இருந்தது. அது பிற்காலத்தில் பரத நாட்டியம் எனவும் சதிராட்டம் எனவும் பெயர் பெற்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இது நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. சிந்துவெளியில் கிடைத்த தொல்பொருள்களில் நடராசரைப் போன்று நடனமாடும் மூன்று கொம்புகளுடைய ஒரு கடவுள் உருவமும், நட்டமாடும் நிலையில் நிற்கும் பெண் தெய்வத்தின் உருவமும், நாட்டியமாடும் நிலையில் நிற்கும் ஒரு நாட்டியப் பெண்ணின் உருவமும் காணப்பட்டன1. நாட்டியக் கலையை பௌத்தரும், சமணரும், பிராமணரும் வெறுத்தார்கள். இக்கலை தென்னிந்தியாவிலேயே வளர்ச்சியடைந்தது. பரதநாட்டிய நூலைச் செய்த பரதர் திராவிட வகுப்பினராவர்2. பரதர் செய்த நூல் வடமொழியிலிருப்பதால் கூத்துக்கலை ஆரியநாட்டினின்று தெற்கே வந்ததெனப் பலர் தவறாகக் கருதுவர். எஎஎஎ 1 2 15 14 3 4 13 12 1. மக்கள் பிரேதங்களை நிலத்திற் புதைத்தகாலத்தில் உண்டான கல்லறைகள் வடிவிலும், ஆலயங்கள் அமைக்கப்பட்டன. கிறித்துவ ஆலயங்கள், நிலத்தின் கீழ் உள்ள கிறித்து நாதரின் கல்லறையின் வடிவை நிலத்தின் மேலே தோன்றும்படி எடுக்கப்பட்டவை யாகும் எனப்படுகின்றன. 1. Serpents are looked by these peoples as embodiments of their departed ancestors and an analogous notion is entertained by various Hindu tribes - Phallism in ancient worship p.41 - HM. WESTROPP. 1. The deity was originally female, for under matrilincal rules the mother alone is of kin to her children, but with the descent in the male line, the god was transformed into a male - Encyclopaedia Britanica - See sacrifice. 1. Pretended interpriters of the divine wills dared even to demand, in the name of heaven the blood of kings themselves and obtained it... In this manner the king of Vermland was burnt in honour of Odin to put away a great death - Popular History of priest craft in all ages and nations - pp. 26. 28 William Howett. 2. It is certain in every age of Indian empire aspiring Brahmins have usurphed and swayed the imperial sceptre. But in fact there was no necessity for the Brahmin to gasp at empire. He wielded both empire and an the monarch. - Ibid P. 135 - Ibid p. 90. 1. Dr. Leigton was treated in such a manner that could டிடேல hயஎந நெநn நஒயீநஉவநன கசடிஅ ய ளயஎயபந. ழந hயன யீரடெiளாநன a pamphlet called Zion’s plea against prelacy, wherein he had shown their own likeness telling them that they were men of blood. No king can make laws for the house of God. This was sure to raise all the prelatical fury accordingly they soon had him in the high Commission Court and Condemned him to prison for life; to pay a fine of ten thousand pounds; to be degraded from his ministry; whipped; sent on the pillory; have one of his ears cut off; one side of his slit; and to be branded on the forehead with double S.S. for a sower of sedition; then to be carried back to prison, and after a few days be pilloried again; whipped; have the other side of the nose slit; the other or cut off; and shut up in his dungeon to be released only by death. All this was inflected on the learned and excellent man formerly Professor of moral philosophy in the university of Edinburgh. Popular History of Priest Craft in all ages and nations P. 222 William Howitt. 1.The journal of the university of Bombay, 1936. 1. மக்கள் உயர்ந்த நாகரிகம் அடைந்திருந்த காலத்திலும், மக்களில் பெரும்பாலோர் சமயத்தொடர்பாகச் சவலைகளாகவே இருந்தனர். அவர்கள் பூசாரிகளையே சமயத் தொடர்பாக எல்லாவற்றுக்கும் நம்பி இருந்தமையின், அவர்கள் அது தொடர்பாகத் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறினர். பிற்காலத்தில் பூசாரிகள் இல்லாத தத்துவ சாத்திரிகள் தோன்றியே உண்மை ஞானங்களை மக்களுக்கு வெளியிட்டனர். கபிலர், புத்தர், மகாவீரர், பதஞ்சலி, திருமூலர், சமய குரவர், சந்தான குரவர் முதலியோர் பூசாரிகளல்லர். 1. The Tantra in some of its aspects is a secret doctrine (Guptavidya) to be gathered not from the written record but verbally from those who hold the key to it - Principles of Tantra - A Avalon part - IP. XXXVI. 1. The Saiva siddhanta system is the most elaborate influential and most intrin sically valuable of all the religions of India. It is peculiarly the South Indian and Tamil religion and must be studied by every one who hopes to understand the influence of the great South Indian people. Saivaism is the old prehistorical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of the Tamil people. But this attempt to solve the problems of god, and soul, humanity nature, evil suffering and the unseen world, has never been expounded in English. Its text books exist in Tamil only - Translation of Thiruvasagam - Dr. Pope. 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 1. Sir John marshall has indentified this figure as the Indian God Shiva, in his aspect of Pasupathi, or Lord of beasts. The fact that the god is shown on the seal amulet with three faces and perhaps even a fourth on the side turned away gives strong proof for supporting Sir John’s theory, for Shiva was, and is, pitched in India with as many as five faces. It was always been suspected that he was one Indian God, and that his worship dated from the pre-historic period, a supposition which is now justified by this interpretation of the figure on the seal amulet - The Indus Civilization, p.71 Earnest Mackay. 1. At his (Jupiter of Syria) side hangs his sword in its scabbord; his right hand brandishes a double axe; his left grasps a thunderbolt consisting of six spirally twisted lines each of which is tipped with arrow head. The bull that supports the god has a rosette on the forehead between the eyes-Zeus, p.619 - Arthur Bernard Cook. 1. Vishnu, Shiva and Kali, the great gods of Hinduism, are not Rigvedic deities at all. Sakti is probably a cult derived from the great mother goddess of Asia Minor, and the cult of Shiva is evidently associated with it, the two being bound up with phallic religion of Southern Asia and of Eastern Mediterranean. It is probably significant that the word Lingam is definitely of non-Aryan origin, as Przyluski has demonstrated. while the word puja is also believed to be a non-Samskritic loan word. With the worshippers of Shiva too, it is to be associated the snake cult of which there are so many survivals in Southern India and which appears to have been at an early date in definite opposition of Brahmanic Hinduism - Castes in India, its nature, functions and origins - J.H.H. Hatton, p.227. 1. The Upanishads were not originally recognised as part of the Vedic cannon at all and had their origin outside Vedic Hinduism ... Pancharatra and Pasupatha systems were condemned by Kumarila as non-Vedic, and that the Vaisnavite and Saivite sects are derived respectively from these two systems; that contact with Pasupathas, Saivas, Jains involved purification; that by the time of the Mahabharata, however, Pancharatra and Pasupatha are placed on a footing of recognised and orthodox religious authority. His general conclusion is of Vishnu, Shiva and Sakti originated among people of different ethnic origins from the midlandic Aryans - Castes in India its nature, functions and origins - p.228, J.H.H. Hatton. 1. Rudra is the lord of animals, and forms the point of linkage between the Vedic religion and the later Siva worship. Siva in the Rig-Veda means auspicious, but it is not the name of a god; the Rudra in Rig-Veda is a malignant cattle destroying deity. Here he is the Lord of all cattle, Pasupathe - Indian Philosophy, p.122, S. Radhakrishnan. 1. Apart from these archaeological evidences there has gradually accumulated a mass of evidence tending to show that the early Indian and Mesopotamian culture represent cognate developments. This applies especially to considerations derived from a study of the history of design (particularly in connection with the animal style and architecture) and to the analogies between Babylonean mythology and cult and those of the Dravidian (Agamic) tradition of India such as the use of the same formulee representing mountains, clouds and water; the motif of animals with long necks, interlaced and hiraldilc ... symbol of flowing vase in Babylonia and brimming vase of plenty (Purana Kalasa) of India - Indian and Singhalese art and archaeology - Encyclopaedia Britannica. 1. We may infer that unpanishadic speculations originated wholly outside pale of Vedic Brahmanism and had their source in religio-philosophical thought currents already prevalent in India since pre-Aryan days. Both Samkya and Yoga had developed probably already in pre-Aryan India - Back ground of Buddhist Philosophy - Dr.B.B.Bhattacharya - Indo asian Culture Vol.1. The living Hindu regions of today from capecomorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e.g.Samdya have been modified by the addition of the Tantric practices - Outlines of Indian philosophy - p. 130, P.T.S. lyengar. 2. காஞ்சீபுரத்தில் கைலாசநாதர் கோவிலிலுள்ளதும் இராசேந்திர வர்மனால் பொறிக்கப் பட்டதுமாகிய சாசனமொன்றில் 28 ஆகமங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இச் சாசனம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது. 1. That contact between Vedism and the indigenous religion of Indus valley modified both by making the cult of Yoga acceptable to Vedism, which formerly believed only in sacrifice and (b) by the retention of non-Vedic elements in popular religion as to the cult of Yoga its indigenous origin is seen in certain stone statuettes discovered at Mohenjo-Daro showing ascetics with eyes half shut in contemplation and fixed on the tip of the nose. These according to Chanda supply the missing links between the prehistoric Indus valley civilization and the later civilization of India, Buddhist, Jain or Brahmanical - Memoir, No.41 of Arch. Survey. (India). Among the many revalations that Mohenjo-Daro and Harappa had in store for us, none perhaps is more remarkable than that this discovery that Saivaism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world - Mohenjo - Daro and the Indus civilization, Vol. I, p. VII - Sir John Marshall. 1. History of the Tamils - T.S. Iyengar 1. No. 471 of 1912 records the gift of such a monastery for a Saiva saint by a village, which also provided for the feeding of all strangers who might visit it. The property of this monastary was confiscated in the twenty-second year of Kulotunga Chola III when there was a general crusade against the non-Brahmanical Saiva mathas instigated by the Brahmans - Local Government in ancient India, p. 273, R.K. Mookerji. The scheme of four Varnas - could not well spread among the Tamils - It only led to the confusion of caste and prevalence of social jealousies and have characterized the life of South India for a thousand five hundred years; for we learn from Thevaram of Thirunavukkarasu Nayanar that there was in his day, as there is to-day, a consciousness of rivalry, if not jealousy between the Brahman and non-Brahmans as they were then called Aryan and Tamilian. “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை” “ஆரியந் தமிழோடிசையானவன்”. - Pre Aryan Tamil Culture, p.20, P.T.S. Aiyengar. When the Brahmans settled in Southern India and the ancient Tamil Rajahs desiring to secure the benefit of the Yagas, accepted to the fire priests, a supreme position to the society, the Brahmans naturally tried to introduce socio religious organization in Tamil religion - Ibid, p.20. 1. The progress of research into various phases of Indian antiquities is helping to pile up evidences to demonstrate the fact that the texure of Indian culture is made of the work of non-Aryan and pre-Aryan threads crossed with the woof of Aryan Hinduistic character. In the light of these evidences the conviction has been gaining ground that the great process popularly known as Hinduism is nothing but a synthesis and harmonization of complex elements of Aryan, pre-Aryan, non-Aryan and aboriginal culture, a good deal of which must have been autocthonus and indigenous, that is to say, was born on, or sprung from the soil of Indian continent. It has become impossible to contradict the fact that aboriginal and Indian Aryan cultures have greatly contributed to the development of what has become to be known during historical times as characteristically Indian civilization. Sometimes the elements and types of aboriginal culture has been transformed and modified so as to fit into the ideals and systems of Aryan thought and culture. Sometimes the aboriginal elements have been bodily annexed and appropriated into Indian system by removing the property mark of earlier aboriginal ownership and origins - Non.Aryan contribution to Indian Music - O.C.Ganguly - Annals of Bhandarkar - Oriental Research Institute - Vol. XIX (1938-1939). 1. Mr.Thomas, a good numismatist agrees with Sir Walter Elliot a distinguished Dravidian scholar, that the Vedas were not co-ordinated by any Aryan Rishi, but first arranged and compiled by Veda Vyasa Krishna. Dwaipayana, who was born on an islet of the Jamuna According to Aryans he was inspired by a Rishi Parasar and was called Kanina “the bastard” implying that he was a half Aryan; but no Aryan has reached the Jamuna, and all learning was in the hands of the Turano-Dravidians then undoubtedly, as now, a highly religious and philosophic people with their own Gods, heroes and rites and a great sacrificial system - Short studies in comparative religions p.252 - J.G.R. Forlong. 2. The simple ritual of the Rig-Veda had now, under the influence of Dravidian methods of worship, became an eloborate system of mechanical rites and ceremonies in Brahmanas - The Hindu View in art - p.14. 3. Brahmanas contain discussions on both work and knowledge. Those sections of the Brahmanas which contain symbolic or spiritual discussions on both ‘work’ and knowledge are called Aranyakas, for these were read in the Aranya (woods, forest) because owing to the obstruse character, they were not imparted everywhere to everybody indescriminately and because great seclusion was needed for their comprehension. Many of the Upanishads are included among the Aranyakas; only one Upanishad is included in mantras or samhita viz., in Isopanishad which forms the last (fortieth) chapter of the white Yajur Veda. What are the Upanishads - Indo Asian Culture - Vol. I (1952) p.53. 1. Dravidian pandits composed some Upanishads and Brahmanas, and why not Vedas ... Short studies of comparative religions, p.251. Forlong. Rig-Veda contains no traces of the beyond; a couple of passages in the last book which speak of the soul of the dead man as going to the waters on plants. It seems hardly likely that for reaching a theory should have been developed from the stray fancies of one or two later vedic poets. It seems more probable that Aryan settlers received the first impulse in the direction from the original inhabitants of India - Sanskrit Literature - p.387 - Prof. Macdonell. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of Kshatriyas. Again and again in the Upanishads we meet the situation which the later after several representations of the unseemliness of such a proceeding impart to him. ... The systems of Vedanta - Dr. Paul Duessen. 1. They accepted the Dravidian doctrine of Karma (deeds) as governing the nature of birth and rebirth in samsara (the universe) and declared moksha (release from the cycle of birth and rebirth) realised through direct spiritual experience brought about by contemplation to the goal of life - Hindu view in art, p.14. Another meaning of the word upanishad is mystery because its teachings or contents are not revealed or imparted to anybody or everybody at any place or every place without discrimination. That is how the two words Upanishad and mystery came to be synonimous. How great a mystery the Upanishads were supposed to be can be gathered from this that they were not taught to any one except the eldest son or the most favourite pupil even for the gift of world kingdom - What are the upanishads - Indo-asian culture, Vol. No.1 (1952) p.53. 1. We have seen in India the Aryan and Dravidian racial elements had intermingled and produced a type of mentality peculiarly Indian. In the super strata of Indo-Aryan society the Dravidian contributed his fine intutive faculties to the logical thinking of the Aryan, so that the Hocus-pocus of primitive magic had developed into a scientific investigation of metaphysical problems into which the intellectuals of Aryavartha were keenly interested - A short history of India, p.37 - E.B. Havell. 1. யோகத்தைப் பற்றிய சாதனையும் கருத்தும் முற்கால பிற்கால வேதமதத்துக்குப் புறம்பானவை. சண்டா அவர்கள் (Chanda) சிந்துவெளி மக்கள் யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்களென்பதை அங்குக் கிடைத்த முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் வடிவத்தைக் கொண்டு தெள்ளிதில் அறிந்து கொள்ளலாம் எனக் கூறி யுள்ளார். அக்கால மக்கள் தம் கடவுளுக்கு யோகி ஒருவரின் வடிவைக் கொடுத்த தோடு அவருக்குத் தவத்தையும் உரிமையாக்கினார்கள். கடவுள் படைத்தலாகிய தொழிலைப் பெறுவதற்குத் தவம் செய்ய வேண்டுமென அவர்கள் நம்பி இருக்கலாம். மனிதன் தன்னைப்போல் கடவுளையும் நினைக்கலானான். தவஞ் செய்தலால் கடவுளர் உயர்நிலை அடைந்தனர் என அவன் நினைத்தான். இக்கருத்தினாலேயே இந்திய மக்கள் கடவுளை யோகியின் வடிவில் வழிபடலானார்கள். சாங்கியத்துக்கும் யோகத் துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. யோகத்தைப் பற்றிய தத்துவக் கொள்கை கடவுட் கொள்கையோடு சாங்கியக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. யோகத்தைப் போலச் சாங்கியமும் வேத சம்பந்தமில்லாததெனக் கருதப்படுகிறது. யோகத்தில் ஆரியரல்லாத மக்களின் கருத்துக்கள் உள்ளன என்று நெடுங்காலஞ் சந்தேகிக்கப்பட்டது. ஆரியரின் கருத்துக்களெல்லாம் மேலானவை, அல்லாதன இழிந் தவை என்னும் தவறான கருத்தினால் இம்மேலான கருத்துக்கள் ஆரியரிடமிருந் தன்றி வரமுடியாதென மக்கள் நம்புவாராயினர். யோகக் கருத்துக்களில் ஆரியர் சார்பு இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வணக்க மிருந்ததென்பதற்குத் தெளிவான சான்று உண்டு. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல இலிங்கங்களைக் கொண்டு இருக்கு வேத சங்கிதையில் சிசின தேவர் எனக் குறிப் பிடப்பட்டுள்ளோர் ஆரியரின் பகைவர்கள் எனத் தெரிகிறது. Siva-His pre-Aryan Origin-Amalananda-Ghosh-Indian Culture, Vol.VII. On the grounds indicated above, we may infer the, Upanishadic speculations originated wholly outside the pale of Vedic Brahmanism and had their source in the religio-philosophical thought currents already prevalent in India since pre-Aryan days. That a rich culture which had been flourishing in India for at least two millena before the advent of the Vedic Aryans, should produce philosophical thinking and religious ideas of refined types is no difficult to make, for, it is but normal to expect this evolution ... the pre-Vedic elements constituted the texure while the Vedic did probably no more than imprint the stamp. It would be historically more correct, therefore, to regard Upanishadic as much as Jaina and Buddhist thoughts as having their roots more in non-Vedic than in Vedic ideas. We also find the basic ideas of the Samkhya and Yoga permeate Jaina, Buddhist as well as the Upanishadic outlook and it is probable that the primitive Samkhya consisted the philosophical background par excellence of pre-Vedic Indian thought and Yoga consisted an essential element in the cultivation of matters concerning the spirit. Both Samkhya and Yoga had developed probably already in pre-Aryan India ... the origin of Upanishads was not at all Vedic. We must not forget the priestly classes and philosophical thinkers with their religious practices and ideas who existed in India from before the coming of the Indian Aryans. By Buddhas time they have probably been absorbed in the part of the Vedic society and came to called Brahmans - Back ground of Buddhist philosophy - Prof. Dr.B.B.Bhattacharia, M.A.D., Ph.D. Indo Asian Culture, No.1. 1. According to Haribadra’s Shaddarsanasa-much-chaya Gautama and Kanada, founders, respectively of Nyaya and Vaiseshika systems, were of Saiva persuasion. Ganaratna, in his commentary of Haribadra’s work says that the Naiyayikas were called Saivas and the Vaiseshikas, Pasupathas. Among the successors of Asoka we come across one Jalanka who was a Saiva - The History and culture of the Indian People, Vol.2-p.456. 1. Upanishads and Darsans; six schools each with its text book and sutra-sundry, Brahmanas and philosophies, theistical and atheistical, all of which preceded Buddah, and were founded by Kapila, a quasi divine incarnation of Vishnu, but in reality a stolid Dravidian Pandit. Dravidians as we may conveniently designate the great rulers of India then, and from 2,000 to 3,000 B.C. Long expected evidence is now appearing that they - Dravid Pandits - composed some Upanishads and Brahmanas and why not Vedas, engrafting there in the hymns, prayers and faith of illiterate Aryans? All these scriptures are inferior and easy compositions to philosophical works which issued from the schools of - Kapila before Buddah’s day there was or any Aryan settlement in the middle Ganges. Nor would Vedic compositions prove difficult to learned Dravidian Brahmans e.g., from Apastamba to Sankaracharya of 800 A.D. who wrote on complecated philosophies of the Vedanta, the Bashya or Commentaries on the sutras and Upanishads - aphorisms and hymns which are all still the admirations of even European metaphysicians, theosophists and most pious thinkers - Short studies in comparative religions, p.241, Major General J.G.R. Forlong. 2. Outlines of Indian Philosophy - P.T. Srinivasa Iyengar. (இப்பகுதி மேற்படி நூலிலிருந்து எடுக்கப்பட்டது). 1. Pargiter adduces considerable evidence to show that the true Brahman families were of pre-Rigvedic origin; and the Aryan kings of Madhya Desa were their own priests in the earliest time had no Brahmans Castes in India - its nature function and Origins - J.H.Hatton, C.I.E., M.A.D.Sc. The composers of the Vedic Hymns or Brahmans, as they were called belonged to no one class or order. He, whom the gift of the song has fallen became the poet priest. One poet tells how that although he is maker of the hymn he says, yet his father was a physician, while his mother ground grain between the mills - A literary History of India, p.23, R.W.Fraser. The recent study of ancient Indus civilization suggests that the Brahman priests were originally of non-Aryan stock, but this conclusion still awaits conformation - Buddhists way of life - its philosophy and history, p.18 Harold smith, M.A., D.D., London, 1951. The most important of these dark skinned tribes were Yadus and Turvasas. Even the Rishis or the chief priests of the Indo-Aryan tribes had to admit into their order the priests of these dark-skinned Aryans. The Vedic literature contains descriptions of white skinned and golden haired Rishis and dark skinned Rishis. After this admixure the Indo-Aryans became powerful enough to push on towards the east and south. They conquered the Dravidian kingdoms of the united provinces and northern Rajaputana, but did not succeed in penetrating further South or East. The Dravidian remained independent in Bihar, Bengal, Orissa, and Central Provinces, Gujarat, and Sindh; while the country to the south of Vindhya remained entirely uneffected by the invasion of the Indo-Aryans-Junior History of India - R.D.Banerji, M.A. The non-Aryan magicians and Dravidians became Brahmans. South Indian tradition records numerous instances of Brahmans as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahman castes as sufficient Brahmans were not available when the reformed Indo-Aryan religion obtained preferance - Prehistoric ancient and Hindu India, p.88, R.D. Banerji. With Buddhism dawned a new era in the history of India. Buddhism arose as a revolt against the tyranny of the priests who were Brahmanas. Brahmanism in its later stages had assumed very arrogant air. Learning became the monopoly of these human gods, for in the ignorance of the other three castes lay their power-Literary achievements of Indian women, Mrs. Hansa Metha, B.A., J.P. 1. The Vedanta was a great reformation which began at least four centuries B.C. when Buddhism had obtained a firm hold in upper India ... It is clearly a Dravidian reformation of the crude Aryan elemental teaching, a building up of a new-Hinduism purified by the ancient Turano philosophic schools of Kapila and embracing the piety and ethics of the followers of the great Jaina saint Mahavira and his probable disciple Sakya Muni-Short studies in the science of comparative religions, p.265. 1. Maya is the power which enables him to produce mutable nature. It is sakti, or the energy of Iswara, or atmaviriti, the power of self-becoming. Iswara and maya in this sense are mutually dependent and are both beginingless. The power of the supreme is called maya in the Gita. Since the Lord is able to produce the universe by means of the two elements of his being, prakriti and purusa, matter and consciousness, they are said to be higher and lower of god. Gradually, Maya becomes to mean the lower prakriti, since Purusa is said to be the seed which the Lord casts into the womb of prakriti for the germination of the universe - Indian philosophy, vol.I, p.547 Radhakrishnan. 1. That the worship of Siva is more ancient than the time of the founder of Buddhism is rendered probable by the tradition that the Sakyas were worshippers of Siva. The Chinese pilgrim Hieuen Tsang was shown near the eastern gate of Kapilavastu the old temple of Iswara where the infant Siddhartha was taken by the father because “the Sakyya children who he seek divine protection always obtain what they ask”. According to the legend the stone image raised itself and saluted the prince. That this legend is very ancient is proved by the fact that the scene is represented on the Amaravathi stupa (Ep.Ind.V.3) which has probably assigned to the Maurya Period - Outlines of Indian Philosopky, p.193 - P.T.S. Iyengar, 1909. 1. Indian Philosophy, Vol.1 p.478. 1. The Ramayana also narrates an important event known as the war between Rama and the Rakshasas on account of the abduction of the wife of Rama by Ravana the demon Rajah of Lanka or Ceylon. This event, it appears to be connected with the life of another Rama, who is distinguished as the Rama of the Deccan - Wheelers History of India, Vol.II, Part IV. The hermitages are said to have been occupied by the Rishies who composed the Vedic hymns and who are represented as Brahmans although they might have flourished ages before the appearance of the Brahmans. The whole story may therefore be dismissed as apocryphal, Ibid. 1. Immediately following the epics about the first century A.D. the Puranas, mythological and speculative histories of universe began to be written. They were intended to promote several particular Brahmanical beliefs, which had been developing since Vedic times - Hindu View in Art., p.35. It is now generally admitted that a great deal of the ancient and medieval myth and legend enshrined in the Sanskrit epics and Puranas is of non-Aryan origin and even in Vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes and sages in the form in which we find them in the Sanskrit works represent undoubted by a considerable amount of modification from other original forms whether Aryan or non-Aryan. The non-Aryan speaking massநள டிக nடிசவாநசn ஐனேயை நெஉயஅந ஹசலயnணைநன in டயபேரயபந யனே their tales and legends were retold as a matter of course in an Aryan language of their adoption- S.K.Chatterji, Bulletin of the school of Oriental Studies, Vol.VII, (1935-1937). In the earlier epoch prior to A.D.1000 pre-Aryan legends were rendered from current Prakrit versions into Sanskrit and found a place in one or the other of the numerous Puranas, Upapuranas, Stalapuranas and Mahatmyas and Tantras or even in Mahabharata and so were raised upto a level of pan Indian acceptance - The History and Culture of Indian people - Vol.V, p.379. 1. Will Durant. 1. Madavachares favour Krishna and his consont as their special object of adoration, while image of Sivan Parvati and their son Ganesa are admitted and worshipped in some of their temples, the most important of which is at Udupi in South Kanara with eight monastaries connected with it - Encyclopaedia Britannica. 1. Siva is a god unknown to the Vedas; his name is a word of not frequent occurrence in hymns, indeed, but means simply ‘prosperous’; not even in the Atharvan it is the epithet of a particular divinity, or distinguished by the useage from any other adjectives. The precise relation between Siva and Rudra is not yet satisfactorily traced out - Orient and linguistic studies, p.30 - William Dwlight Whitney. It is an established fact that the god Siva was the form which the Vedic god Rudra later assumed. In other words the god Siva, at least as he has been described in classical times, was unknown to the Vedas, and Rudra the Tempest God of the Vedas is not given any of the distinctive epithets which later came to be associated with the god Siva. If we accept the alleged identification we have to date the god Siva or his proto type in the middle of the third millenium B.C. For, that is the date of the Mohenjo-Daro finds, as has been proved by Professor Selon Lloyd on the strength of the happy discovery of the cylindrical seal at Tel-as-mar which contains a representation of a typically mohenjo-Daro scene-an Indian elephant, rhinoceros and a crocodile. Identification of Mohenjo-Daro figure-B.A. Saletore-New review X, July - Dec. 1939. Now it seems possible that Rudra in the Rig-Veda was an Aryanised form from the pre-Aryan proto-Siva. This supposition to a certain extent finds support in the fact that the word Rudra in Sanskrit meaning ‘Red’ is identical with Dravidian word ‘red’ Siva, Rudra, it must be noted, was not a very important deity in the Rig-Veda. Only three hymns have been given to him, and he is identified with Agni. It seems probable that these pre-Aryan phallic worshippers are identical with the people who in later times dwelt in rich and prosperous cities in the Indus valley, and prejudice and indignation against whom find most eloquent expression in the following two passages of the Rig-Veda ... The cult of linga in three faced Siva is common among represen- tations of Siva. It is ordinarily Agamic principle that Siva in his aspect of Maheswara or Sadasiva can be represented with one, three, four or five faces but not with two. But the fact is there, the image represented with three faces and other associations are clearly Saivaic in character. The conclusion there fore seems to be thoroughly justified that it is the figure of Siva that is represented on this. This would only be confirmed by the yogic posture of Siva in one aspect is represented as Mahayoge and sometimes called Yoge - Daks hanamurthi. In such, his associations are naturally with the forest and the surrounding elements indicated in the picture are sylvan life ... We may therefore state with confidence, that the god represented on the seal and others similar to Siva the proto type of the historical Siva according to Sir John Marshall - Journal of Indian History, Vol. XII, (1933) p.271. 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 1. From the identification of Chandragupta Maurya to the excavations of Mohenjo Daro and Harappa, from the deciphering of the inscriptions of Asoka to the comparative survey of epigraphic records over India, the material for the writing of Indian history was provided by the work of European scholars. Even more striking is the case of Indonesia, where few European scholars, mostly Dutch reconstructed from inscriptions the history of the great empires of Java and Sumatra which provided Indonesian nationalism with a solid historical basis. In this sense it cannot be denied that European scholars and thinkers, by their labour in the interest of knowlge, enabled India, Ceylon and Indonesia to think on terms of historical continuity. - Asia and Western Dominance K.M. Panikkar (London - 1954) * Of European tongues, the nearest congeners to Sanskrit are the Samaritain languages of the Russian Empire, then the classical tongues of Rome and Greece, then those of Germany and the Keltic, this class of languages being called Indo-Germanic, of the sclavonic and Lithuanian, the two branches of samaritain, the affinities of the sanskrit are closer in the Lithuanian than with any other known tongue. Sanskrit next to Lithuanian is most like Sclavonic. It will thus be observed that the Aryan or Sanskrit speakig races of India seem to have been closely connected with the Zend speaking, Greek speaking, Latin speaking races and not at all with Arabic, Phoenician and Hebrew families. - The cyclopaedia of India - Balfour # The Vedic Aryans possessed no temples and used no images. The Dravidian culture promoted image worship, and insisted puja in the place of yajna... the inspiring genius of the seers fused the Vedic and the non-Vedic elements and gave to the Agamas equal authority with the Vedas. - Religion and scociety p.111. - Dr.S.Radhakrishnan. * “விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லாலினிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை யோராப் பழிமொழியாளர்” (திருமந்திரம்) * Frederic Rosen Jane என்பவர் இருக்கு வேதத்தை இலத்தின் மொழி பெயர்ப்போடு 1838-இல் இலண்டனில் அச்சிட்டார். # First of all, there are the very ancient hymns in praise of Indra and Vishnu, Mitra and Varuna as occassion arose for them and propitated them with meat and soma to avert a calamity that immediately threatened them in their individual lives or to gain some urgent desires of their hearts - Outlines of Indian Philosophy p. 214. # வேதங்கள் முதலில் பிரமாவின் மனதில் தோன்றினவென்றும், பிரமா அவற்றில் கூறியபடி உலகைப் படைத்தாரென்றும், பிரமா அவற்றை மரீசி, அத்திரி, அங்கீரசர் போன்ற முனிவர்களின் உள்ளங்களில் தோன்றும்படி செய்தாரென்றும், அவர்கள் மூலம் வேதங்கள் மக்களுக்குக் கிடைத்தனவென்றும், வியாசர் அவற்றை நான்காகச் செய்து அவற்றைப் பயிலகர், வைசம்பாயனர், சைமினி, சுமுந்தர் என்னும் நான்கு முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் அவர்கள் அவற்றைத் தமது குமாரருக்கும் மாணாக்கருக்கும் போதித்தார்கள் என்றும் கூறும் பழங்கதை உளது. * இருக்கு வேதம் 21 சாகைகள் அல்லது கிளைகள் உடையதென்றும், எசுர் வேதம் 109 சாகைகளுடையதென்றும், சாம வேதம் ஆயிரம் சாகைகளுடையதென்றும் விட்டுணு புராணங் கூறுகின்றது. அவற்றில் நூற்றில் 90 பகுதியும் இன்று மறைந்து போயின - Upanishads - Dewakar. # Atharva Veda for a long time was without the prestige of Veda-Indian Philos ophy Vol.1. p.65. * Rudra has a very subordinate position in Rig-Veda being celebrated only in three entire hymns. He holds a thunderbolt in his arms and discharges lightning shafts from the skys. Siva the benignant with a whole tradition developed round him. - Indian Philosophy Vol. I. p.81 Dr.S.Radhakrishnan. Rudra is the lord of animals, and forms the point of linkage between the Vedic religion and the later Siva worship. Siva in the Rig-veda means auspicious , but is not the name of a God; the Rudra in Rig-veda is a malignant cattle destroying deity. Here he is the lord of all cattle Pasupathi. - Indian Philosophy p. 12. Dr. S. Radhakrishnan. * The early Vedic religion was a cult of magic, a system of propitation or constraint of Nature-powers (Devas) by means of sacrifices (Yajnas), offerings of animal fat, (ghee vapa, etc) and fermented liquor (Soma) poured into fire regarded as the mouth of the Gods, and accompanied with the chanting of mantras. Some of these mantras were incantations of praise, and others combinations of sounds having no meaning, being sometimes inarticulate cries (“like the bellowing of a bull etc.”) They were believed to please or constrain the Devas and thus to secure the fulfilment of the sacrificers desires, whether these were the acquisition of material objects in this life or the enjoyment of pleasures in post-mortem states. - Outlines of Indian Philosophy p.118. # *இப்பகுதி “Life in Ancient India” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. * யாகத்தில் நைவேதிக்கப்பட்டவற்றைப் புரோகிதரல்லாத மற்றவர்களுக்குப் பரிமாறுதல் ஆகாதென்றும் அவற்றைப் புரோகிதர் மாத்திரமே உட்கொள்ளலாமென்றும் விதிக ளிருந்தன. # Drinking in Ancient India - The Illustrated weekly Sep. 27-1959. * *சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் (திருமந்திரம்). * It was the usual thing for ancient law-codes to be of divine origin. We have seen how the laws of Egypt were given by The God Thoth, and how the Sun god Samash begot Hammurabi’s code. In like manner the diety gave to king Minos of Mt. Dicta the laws that were to given Crete; the Creeks represented Dionysus. Persians tell how one day as Zoraster prayed on a high mountain, Ahura-mazida appeared to him amid thunder and lightning and delivered to him the book of the law. History of Civilization P.331 - Will Durant. # வேதங்கள் எனப்பட்டன பிற்கால உபநிடதங்கள் எனத் தெரிகின்றன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத்திறன்” (சிவப்பிரகாசம்) “வேதநூல் சைவ நூல் என இரண்டே நூல்கள்” என்பவற்றுக்கும் இவ்வாறே பொருள் கொள்ளுதல் வேண்டும். * After this period there must have occured a break of culture long enough to allow of the language of the Samhita to become obscure to a later generation . The language changed during this period to that of the Brahmanas which is midway between Vedic and Classical Sanskrit - Outlines of Indian Philosopy P .211. # ஆரியமொழி உள்நாட்டு மொழியோடு கலந்து சிதைந்து பிராகிருதங்களாக மாறின வென்றும் பிராகிருதங்கள், ஆரிய மொழியைச் சேர்ந்தனவென்றும் கொள்ளப்படுகின் றன. பிராகிருதமொழிகளும் இன்று ஆரியத்தைச் சேர்ந்தனவென்று கொள்ளப்படும் வடஇந்திய மொழிகளும் இலக்கண அமைப்பில் திராவிடமாக இருக்கின்றன என்று, பி.தி.சீனிவாச ஐயங்காரவர்கள் கற்கால இந்தியா என்னும் நூலில் கூறியிருக்கின்றார். அவ்வாறாயின், பிராகிருதங்கள் என்பன வடமொழியோடு கலந்து திரிபடைந்து மாறுபட்ட திராவிடமொழிகள் எனக் கருதப்பட வேண்டியுள்ளது. *. A History of Indian literature p.52 Herbert H. Goven. # The system of the Vedanta p.8 - Paul Deussen. # Wisdom of the East p.13 - L.D. Barnett M.A. Litt.D. * They were translated from Sanskrit into Persian by or for Dara Shukoh, the eldest son of the Mugal emperor Shah Jehan who held the liberal religious views of Akbar. He had heard of the Upanishads in Kashmir in 1640 invited several Pandits to Delhi to assist in their translation and finished the work in 1657. Translated into Persian then the most widely read language of the East, they became generally accessible. In 1775 a manuscript of this Persian translation was sent by the French resident at the court of Shujaud Daula to Anquetil Duperron the discoverer of the Avesta; and later another manuscript. Anquetil Duperron collected the two and translated the work into French and into Latin publishing the latter version in 1801 and 1802 under the title of Oupnekhat a corruption of upanishad. This Latin translation was studied by Schopenhaner. Twelve of them are translated by Maxmuller with introduction and notes in the “Sacred books of the East”. - The century cyclopaedia of names. * The History and Culture of Indian People Vol.I. # The ethical end of the Sankhya system is to effect the liberation of the purusha or soul from the fetters in which it is evolved by union with Prakriti. This is done by prama or correct knowledge of the 24 constituent principles of creation and discriminating the soul from them its pramanas or means of obtaining the correct means of existing things ... some adherents of Sankhya maintain the existence of a supreme soul Heranyagarbha. The Sankhya proper not so much denies the existence of supreme being as ignores it as incapable of dialectical demonstration. “He must be free from desires and not bound by troubles. If he were bound by desires of any kind he would be under bondage and deficient in power”. - The Century Cyclopaedia of Names. * The work of explaining the various discrepancies of the Veda and solving the various difficulties of the ritual became a profession and the scheme of Nyayas was developed into Mimamsa Sastra-Outlines of Indian Philosophy p.222. * Kanadha does not mention a God or a supreme creator among his ultimate substances. When Vaiseshika philosophy in much later days chiefly under the Siva cult developed the idea of personal creator, the commentators attempted to derive the notion of a supreme god from a misinterpretation of one sutra - outlines of Indian Philosophy - P.T.S. Iyengar. * The meanings of the hymns having become obscure they began to be applied indiscriminately for sacrificial purposes and interpreted in fanciful ways. Discussions frequently arose in the assemblies of the priests, about details of the rituals applications of mantras, etc. To settle such questions, what were called Nyayas were frequently utilized. The Nyayas are analogies or inferences or proverbs which make statements probable to or acceptable and are even now largely used for argumentation - Outlines of Indian Philosophy p. 221. # As the Yoga added to the Sankhya the conception of an Isvara, so the Nyaya to the Vaiseshika. But the Isvara of the Nyaya Sutras concerned only with the adjustment of fruits of action. Some actions are followed by consequences immediate and visible; but others are not. Later Nyaya developed the notion of god the Creator - Ibid p. 208. * Vedanta - The most Common designation of the Uttaramimamsa school of Hindu philosophy given to it either as teaching the ultimate aim of Veda or as founded on the Upanishads, came at the end of the Veda as the last stage in its historic evolution. It is ascribed to Vyasa or Badarayana. The first of the names (‘arranger’) is also given to the legendary person who is supposed to have arranged the Vedas and written the Mahabharata, Puranas and Dharmasastra and was doubtless applied to various great writers or compliers as a kind of title. In this sense it seems to have been given to the founder of the Vedanta. Its principles are propounded in Sutras, but Badarayana’s Sutras are generally called Brahmasutras or sometimes Sharirakasutra. The text of the celebrated commentary of Sankaracharya have been edited in the “Bibliotheca Indica” and a portion translated, and also the commentary known as Vedanta Sara. The most authoritative recent works on the Vedanta are however paul Deussen’s “Die Sutras des Vedanta” - The Century Cyclopaedia of Names. * Out lines of Indian Philosophy. # Smartas: Smarta Brahmins - one of the three principal classes into which the Hindus proper of the present day may be divided as to religion, the other two being the Saivas and the Vaisnavas. The Smarta believe that the man’s spirit is identical with the one spirit which is the essence of the universe and only cognizable through the three personal gods Brahma, Shiva and Vishnu with their subordinate dieties but only as co-equal manifestations of one impersonal spirit and as destined to be reabsorbed into the spirit. They are followers of Sankara - The Century Cyclopaedia of Names. * It contains more than 100,000 distichs divided into Parvas. It is eight times as the Illard and Oddessey. Krisna Dvaipayana is said to have taught the poem to his pupil Vaishampayana who recited it at a festival before King Janamejaya - The Century Cyclopaedia of Names. # Panipath * Puranas - The name of each of a class of Sanskrit works important in their connection with the later phases of Brahmanism, as exhibited in the doctrines of emanation, incarnation and triple manifestation. They are the Vedas of popular Hinduism and contain the history of the Gods, interwoven with every variety of legendary tradition on other subjects. Though nominally tritheistic, they are practically polytheistic and essentially pantheistic. Their form is in general that of dialogues in which a well known sage answers the questions of his disciples, while others are monologues. They are written in sloka matter of the Mahabharata, with occassional passages in prose. They are 18 in number. There are also 18 Upapuranas or Subordinate Puranas - The Century Cyclopaedia of Names. # Encyclopaedia of Religion and Ethics * The Dharma Sutras were manuals written by the teachers of the Vedic Schools for the guidance of their pupils. Their use was therefore, at first restricted to these schools alone and it was not till a later period that they were acknowledged as authority all over India. The Smirthis on the other hand were declared to be of divine origin and hence claimed from the very beginning to be authentic sources of law for all Aryans - “The History and Culture of the Indian People - Vol.II p.225.” # Perhaps one half of the present work consists, however, of additions to the original, drawn from the popular material maxims, and made as Buhler thinks, at the date of the recast which he considers to be between 100 B. C. and the 2nd century A.D. - The Century Cyclopaedia of Names. * விஷ்ணு மிருதியின் காலம் கி.பி. 3 ஆம் நூ. யாக்ஞவல்கிய மிருதியின் காலம் கி.பி. 4 ஆம் நூ. பிரகஸ்பதி மிருதியின் காலம் கி.பி. 6-7 ஆம் நூ. காத்தியாயன மிருதியின் காலம் கி.பி. 7 ஆம் நூ. # The old leaders of Brahmanism were much cleverer and form of old it had been their practice to absorb and assimilate. When the Aryans first came to India they assimilated much of Dravidian culture and customs and all though their history consciously or unconsciously acted in this way. They did like wise with Buddhims and made Buddha an Avatar and a God-Glimpses of World History - Jawaharlal Nehru. * No.99 in vol.ii. part V. of South Indian inscriptions gives an interesting account of a gift of a village for the purpose of supporting 308 learned Brahmans in persuit of their sacred vocations of studying and teaching as prescribed in the Sastras. Regarding the qualifications of the select body of Brahman scholars it is stated in the inscription that they had all studied the three Vedas and Smiritis. The inscription applies to them various learned designations such as Cathurvedin, Triveden, Somajajin, Sadangavid, Bhatta, Kramavid (proficient in the Krama - patha of the Rig Veda & C.) A similar gift for establishing a similar colony of 308 Brahmans is also Registered in No.7 of 1912 No.277 of 1913 refers to the establishment of another cultured colony of 108 Brahman families equipped with all necessaries of life and even with library called Saraswathi Bhandara. No.278 of 1913 registers a similar grant for the same number of Brahman colonists. No.198 of 1919 records the interesting case of an assembly holding a special meeting in response to a royal order which requested them to adjudge the merits of a literary work composed by a poet. The work was recited before the assembly and the author obtained as a reward for his labours a grant of land to be held in perpetual ownership. Students of Tamil literature may find here a lingering literary tradition of the more ancient Dravidian Sangam established in Madura to scrutinze the works of Tamil poets and advance the cause of Tamil literature (mid. Ep. Rep. for 1919. p.98) - Local Government in Ancient India p.283. Radhakumud Mookerji M.A. Ph.D. # Gradually the Dravidians adopted Aryan manners customs and religion. The Dravidian priests became Brahmanas and the kings of all tribes claimed to be Kshatriyas - Junior History of India p.17 R.D. Banerji. * The Agamas represent the oldest products of Dravidian literature, that in prehistoric times they were written in the Dravidian (Tamil) language, and a great part of them was lost in a flood which swept over the land south of the present Cape Comorin, the chief dwelling place of the old Dravidians. Only remnants of the older Agamas were translated into Sanskrit and preserved in this form. But as has been urged, all that one can say is that the home of the Agamas was in the land of the Dravidians i.e. the south of India. From the south they seem to have pushed up north, and later to have turned back to the south where they helped to drive out Jainsm and Buddhism. It has been further said that should one incline towards the theory that Agama literature was of Dravidian origin, one must at the same time admit that it came under the influence of Sanskrit literature very early. What is preserved to us of the Agamas bears unmistakably the stamp of Sanskrit literature, for the Agamas that are preserved are in the Sanskrit language, and the systems based in the Agama and written in the non-Sanskrit language employ Sanskrit terms so that as matters now stand, we have to consider the Agama literature as a part of the Sanskrit literature - The Saiva Siddhanta in the Meykanda Sastra - Violet Paranjothi M.A.L.T.Ph.D. (Isabella Thouburn College, Lucknow - 1938) quoted as an English translation from Der Saiva Siddhanta, a German book by H.W. Schormerus. # As soon as Buddhagosa completed the Pali version of the Singhalese commentaries the manuscripts of the later are said to have been collected together and burnt. As a matter of fact the Singhalese commentaries are irretrievably lost. This complete suppression of the native language by Pali as vehicle of religious thought explain the vast growth of Pali literature and the high position that the Pali language occupied in Ceylon - Indo Asian Culture Vol. 1. No.1. India and Ceylon Dr. R.C.Majumdar. The ruthless manner in which Buddhist and Jain literature in Sanskrit as well as the vernaculars was suppressed and destroyed through the Brahmanical reaction is the greatest tragedy in the Indian culture - The History of the Telugu Language - P. Chenchiah. * Sk. 186 records the interesting story that a king, not finding a Viprakula or Brahman family in Daksinapatha imported from the north thirty two Brahman families whom he settled in the agrahara of Jalguna near Belgami. Sk. 177, 178, 185 show how the educated impulse given by the grant of Sk. 186 resulted in the growth considerable literary activity centering in an Agrahara of considerable dimensions during its maintenance from no less than 144 villages, all acquired as fees for as many as eighteen horse sacrifices performed by the K adamba King Mayuravarman - Local Government in Ancient India - p. 283. * “நவிற்றுநாள் நன்மலர் தூபங் கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம் (திருமந்திரம் 1242) # “*இலிங்க நற்பீட மிசையு மோங்கார மிலிங்கநற் கண்ட நிறையு மகார மிலிங்கத்துள் வட்ட நிறையு முகார மிலிங்க மகார நிறைவிந்து நாதமே. (திருமந்திரம்) * The Vedic culture which resembles that of the Homeric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutans and Slaves becomes transformed in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on the Father sky or some other shining one to look from on high on the sacrificer and receive from him the offerings of fat or flesh, cakes and drink. But soon puja or worship takes the place of Homa or sacrifice. Image worship which was a striking feature of the Dravidian faith was accepted by the Aryans. The ideals of vegetarianism and non-violence (ahimsa) also developed. The Vedic tradition has dominated by the Agamic and today Hindu culture shows the influences of the Agama as much as that of the Vedas. The Aryan and the Dravidian do not exist side by side in Hinduism. “contact with the highly civilized Dravidians led to the transformation of Vedism into theistic religion.” - Hindu view in life - Dr.S.Radhakrishnan. # *இது பி.தி. சீனிவாச ஐயங்காரின் History of the Tamils (பக். 105-115) என்னும் நூலிலுள்ளவற்றிலிருந்து எடுக்கப்பட்டது. * Brahmins learned in many of these sciences served as Rajagurus (teachers of kings) and spread themselves all over the land edifying the lives of the in habitants of every town and village. Gifts of land and houses were frequently offered as inducements to Brahmins to come and settle where they were wanted. In several places they were organized into co-operate colleges called brahmapuris and ghatikas, like the brahmapuri at Belgaum or the ghatika at Kanchi ... at Salatge was another eminent college to which pupils came from different janapadas (countries) and whose vidyarth sangai was richly endowed in 945 by Narayana, a minister of Krishna III, with the revenues of houses, land, and levies on marriage and other ceremonies. We also hear (1058) of a ghatika at Nagai with ample provision for 200 Veda students, 50 students of the sastras, three teachers of the santras ... besides a librarian who brings up the strength to 257 in all. At Ennayram in South Arcot the Chola Rajendra I endowed a large college of (1) 270 junior students of whom 40 studied the sutras of Bodhayana, and the rest learnt the Vedas by wrote (2) 70 seniors students, 10 studying vedanta, 25 Vyakarna and the rest Prabhakara - mimamsa and (3) teaching staff of 14. In another college in the same neighbourhood at Tribhuvanit, there were 260 students and 12 teachers - A History of South India pp. 312, 318 K.A.N. # The temple - priests, both of the Saiva and Vaishnava variety, are regarded as inferior Brahmanas by strict Vedantis; infact, even fifty years ago there existed to my knowledge followers of the Advaita Vedanta, who would not enter any temples. The Vedanta, which was the culmination of the Veda, also severely condemned the Agamina path; Badarayana denounced both the Pasupatha and the Pancaratra in the Sutras - History of the Tamils - p. 110 P.T.S. Iyengar. * “வேதம் பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர் ஓது தமிழ் அதனுள் ளுறைநெய் - நெய்யி னுறுசுவையாம் போத மிகுமெய் கண்டான் செய்தமிழ் நூலின் திறம்.” * ஐரோப்பிய அறிஞரும் தமிழ்மொழியும் டாக்டர் R.P. சேதுப்பிள்ளை B.A. B.L. # Hinduism is not based on any racial factor. Though the civilization has its roots in spiritual life of the Vedic Aryans and has not lost the traces of its origin, it has taken so much from the social life of the Dravidian and ot her native inhabitants that it is difficult to disentangle in modern Hinduism the Vedic and the non Vedic elements - Religion and society p.111 Dr.S.Radha krishnan. 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 143 142 131 132 141 140 133 134 139 138 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 176 1. In the words of Diadorus Siculos ‘Man in earliest times struck with the beauty of the universe, with the splendour and regularity which everywhere were in evidence made, no doubt, that there was some divinity who therein presided and then presented the Sun as expressing the like nees of the deity - Sun Lore of All Ages - p. 42 - willia Tyler Olcott. 1. Many other nations mention, in the mythological part of their history, in undations which in their essential particulars, agree with the scriptural account of Noah’s preservation. Hence many persons have inferred the universality of this inundation. To this it has been replied that each nation localizes the chief events and actors as connected with itself, necessitating an Ararat, an ark and a Noah in each instance. Fohi in the Chinese mythology, Satyavrata in the Indian, Xisuthrus in the Chaldaean, Ogyges and Deucation in t he Greek, have each been recognised by many as the Noah of the sacred scripture under different names. Even the American Indians have a tradition of a similar deluge, and a renewal of the race from the family of one individual. All these individuals are said be their respective nation to have been saved , and to have become the father of mankind.’ - A New Popular Encyclopaedia Vol.IV p.325. நோவா ஞாயிற்றின் உயிராக அதனிடத்து உறைகின்றார் என யூத மக்கள் நம்பினார்கள். “But they adorned in conjunction with him and perpetually distinguished by his name the Patriach Noah, whose soul after death they feigned to have migrated into that orb, and to have become the intellectual regent of it. The person worshipped in the sun was not simply Noah but Noah reviewed as a transmigratory reappearance of Adam.” - Sun Lore of All Ages - p.149. 1. The world is old enough and time has existed long enough for the widest divergencies to have been made from one common centre of mankind and the proofs of a unity of origin are plentiful enough. What has been wanted is the common centre of the premeval unity. - A Book of the Beginnings - p.26 ... Gerald Masey. 2. There can be no doubt concerning the identity of the Indus and the Easter Island scripts. Whether we are thus confronted by the astonishing historical accident or whether this ancient Indian script has mysteriously travelled to the remote islands of the pacific none can say. The age of the easter Islands tablets made of wood is totally unknown and all knowledge of their writing has been lost. This same script has been found in seals precisely similar to Indian scals in various parts of ancient Sumar, in Susa and the border Island east of Tigris ... here is a civilization of whose history nothing has survived - Script of Harappa and Mohanjo Daro and its connection with other scripts - Introduction by Professor S. Langdon. Their underlying principles are the same, and there is very likelihood that they all derived from one common origin and went back to neolithic times. Mohenjo Daro and Indus Civilization - Sir John Marshall. 3. Prof. Prizy Luski has compared a series of Austro-Asiatic words with Sumerian and has discovered important analogies. Rivet also in the articles already referred to suggests that the Sumerian had probably played an important role as agents of transmission of culture elements between Oceania and Europe and Africa - Pre-Aryan and Pre-Dravidian in India. p. X. 4. This list of words by itself is sufficient to prove the primal indentity of the Maori and Egyptian languages - A Book of the Beginnings - p. 17. 5. The languages of the native races of America has already been described as agglutinative or polysynthetic abounding in combinations and refinements of grammer which throw into Shade even the language of classic Greece. Thus while differing in many minor particulars the grammatical structure of the Indian languages is so much alike as to indicate a common origin at some time in the distant past - Origin and antiquity of Man - p. 80 - Fredric Wright. 2. Of Ra, 11, El, Ils, Helos, Bel, Baal, Al, Allah, Ellohim, I cannot get any further information than that they were names given to the sun as the representative of the creator who was spoken of reverently as My Lord, the Lord, the King etc. - Ancient Faiths, p. 78 - Thomas inman. It may be noted at the outset that the sun was identified with Siva (perhaps also with Vishnu and the Suriasevana really means the worship of Siva in the form of sun. It is interesting as showing the identity of Siva and Surya and thereby explaining the inner significance of the Surya worship. - Ancient Indian Colonies in the Far East - Vol.2, pp. 106-7 - Dr.R.C. Mazumdar. அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனாவான் அரனுரு வல்லனோ (திருஞா-தே) சிவனெனு நாமம் தனக்கேயுரிய செம்மேனி எம்மான் (திருவா) 1. Ann (ஆண்) is supposed to be the highest God, the God of Heaven. In fact he is, as we shall see later on, identified with the sun. Now the sun in the course of the year travels through the constellations of the Zodiac, which were called houses. Accordingly each month of the sun being in a different house was supposed to take a different form and since the constellations of the Poto - Indians as said above were only eight, the forms of the sun i.e., the Supreme Being were eight. The eight forms of the Supreme Being were the eight constellations which were the following: The Ram, the Harp, the Crab, the Mother, the Scale, the Arrow, the Jar and the Fish or the two Fishes. Images of the supreme being under these forms were worshipped in different parts of the country. The most popular of these forms of God, seem to have been the Fish. Several inscriptions refer to this - Father Heras. 2. The chief God of Tanalog was Bathala derived from Sanskrit Battara - Javanese Batara - Guru (-Siva). The Sambol folk name their God Akasi the Visagans have as God Sivapa corresponding to Hindu Pasupathi - India and the Pacific World. p 78. - Kalidas Nag. M.A., D.Litt. 3. Siva is a hunter God and numerous legends concerning him suggest palaeolithic and early neolithic modes of life; hence his worship probably comes down from the lithic stage of development of human culture in India. Sanskrit grammarians have not been able to discover a satisfactory etmology for the name of the God. It has been suggested that the name is derived from the Tamil word for ‘Red’ (சிவ) because he is red God and that name Rudra the red one” is a Sanskrit translation of the Tamil name. - Stone Age in India - pp. 48 and 49 - P.T.S. Iyengar. The relationship between the red colour and Siva, so prominent a diction specially in Southern Hinduism has also been mentioned by Marshall, who considers Siva as a religious feature originally derived form the Indian civilization - Mother Right in India - p. 184. Baron Rolf Ehsenfels. 1. The names of towns have continually been derived from those of God there worshipped as has been pointed out by several archaelogists - The Syrian Stone Lore - p. 18. 2. Encyclopaedia Britannica - Index. The attributes of Osiris under his several forms, correspond with those of Jupiter, Sol Baechus, Pluto, Oceanas & c. He will be accordingly Associated with Siva in his majestic and vindicative character - Mythology of the Hindu - p. 174. 3. Jupiter is traced to Fervo. The direct Assyrian denomination however of the planet is the gulf of lost in time and it is traced from the Chaldie Sevah-History of Hindustan - p. 239 - Author of Indian Antiquities. 4. Zeas Ammon Still haunts the Oasis (Sivah) at least in the modified and unrecognised Shapes ... where smaller temples of Ammon are still to be seen Zeus - Arthur Bernard Cook. 1. The idol of Lingam, a deity familiar to the Phallus of the Egyptians, is always to the found in the interior and most sacred part of the temples of Shiva - Sketches Chiefly relating to the Hindu Religion - History and Manners of the Hindus - A. Craufund - p. 203. 2. The Civilization of Babylon and Assyria - pp. 434 and 512 - Morris Jastow. 3. Marduk is sometimes so pronounced that if one substitutes Jehovah - Zeus - p.217. According to Hebrew scholars the name Jehovah is to be derived from the Stem Havah and thus we take for the modified form Chava - A Book of the Biginnings - p. 150. No essential distinction was felt to exist between Jehovah and El, any more than between Assur and El. Jehovah was only a special name of El. which had become current within a powerful circle and which on the account was all the more fitted to become the designation of national God - See, Israel - E. Britanica. 4. “In September the world was thrilled by the story of the American scientists who scaled the ‘lost world’ of Siva’s temples in the Canyon of Arizona. Siva’s temple explorers found flint at row head and white headed mice” Cavaleade - London. - Dec., 18, 1937. “In the wild mountainous state of Colorado, seventh largest in America, scintists of the U.S. Museum of Natural History three months ago announced discovery of a ‘lost world’. The focal point was Siva’s Grand Temple a half square mile of solid rock plateau, isolated from the mainland by 9000 feet Canyons eroded by rivers some 200,000 years ago” - News Review - London : Sept., 23, 1937. “Siva’s temple is one of the surface points which have been felt high and dry by water on four sides, conservative estimates put the date when animal was cut off from the rest of the world as atleast 100,000 years ago - Times of Ceylon, Sunday Illustrated - June, 17, 1937. * Hindu America - Saman Lal. 1. .A similar object (Candle Stick) of early Minoan ago has, Sir Arthur Evans points out, been found at Siva near Phaestos - Further Excavations at Mohenjo - Daro - Mackay. 1. The place Sivapura connected with Panini might have been named after them. Mr.A.C.Das suggests that they might have been worshippers of Siva or Phallus - History of Pre-Musalman India - p. 185. 2. The peak (Adam’s peak) was their (Buddhists) Buda, ages before Sakya Muni was born, and a Karn God or Bud continued to be the Siva ‘les Indes’ down to our 9th century - Rivers of Life - Part II - p. 485. 3. The Arab sailors who saw the Phallic Cone of Ceylon calling it al maka and ‘the Adam’, a common Indo Mosalman name or euphemism for the Lingam Short Studies in the Science of Comparative Religions. 4. Assyrians had twelve great Gods clearly corresponding to the twelve houses or months - Rivers in Life - p.2. 5. See Calendar - E. Britannica. The name (Sivan is variously pronounced and written Siva, Shiva, Sivin, Seo, Sheo, Sed, Sihin and Chivin, and the earliest mention of this God is in the books of Amos (Ch. V. 25, 26) “Have Ye offered unto me sacrifices and offerings in the wilderness forty years; O house of the Israel? But Ye have borne the tibernacle of your Moloch, and chien, your images, and star of your God which Ye made yourselves; therefore will I cause Ye to go into captivity bef ore Damascus” and it is evident from this that even then (B.C.955) the emble ms under which Siva is still worshipped and the marks which its followers put on their foreheads were well known - E.Balfours, Encyclopaedia of India. 1. The events occured on the 6th day of the third month Sivan - Analysis of Scripture History - p.77. Sivan may - Historians’ History of the world Vol.I. p.283. The Civilization of Babylon and Assyria - p.434. 2. In Ugro - Finnic and other Turanian dialects ZIVO - or Sivo - and Siva is protecting deity armong the Lapps. The Turkish sev - kind; Akkadian Se-favour; sub-heart. - Faiths of man p.308. The worship of the God siva or his counter part of deity finding its birthplace among the fiercer Scythian Tribes and then accepted into Brahmanism as a form of the Vedic Rudra - The Literary History of India p. 182 R.W. Frazer. 3. Another singularly able orientalist Mr. Paterson wrote that in the Asiatic researches, “The doctrines of Siva’s seem to have extended themselves over the greatest portion of mankind. They spread amongst remote nations who were ignorant of the origin and meaning of the rites they adopted, and the ignorance may be considered as the cause of the mixture and confusion of images and ideas which characterised the mythology of ancient Greeks and Romans. Siva in his creative power become Zeus Triopthalmos the three eyed (a special characteristic of Siva) Jupiter and Osiris - Prof. Maspero shows a curious point of conduct between the worshippers of Baal in Syria and the worshipper of Siva - when Saivaism went abroad on its strange missionary career, this Bull worship was promient. We must all differ to an Indian authority as shrewed as Colonel Tod. He holds that this Bull worship was the strongest evidence in Palastine, Egypt etc. of Sivan derivation - India in Primitive Christianity - Arthur Lillie. 1. The Indian God Shiva or Shiba father of Sebo appears in the Ural Altaik astronomy of the Ackkadian the third star of their seven parent stars - History of Chronology of Myth Making Age - p.85 - J.F. Hewitt. 2. Suwa - A Japanese deity, who is the God and protector of the huntsmen - A Dictionary of the Religions and Ceremonies of the Eastern Nations. 3. Wacher is influenced by this circumstance, among others to conclude that our ancestors brought the word (Sun) with them from the East ... Chaucer uses sunnish i.e. golden like the sun - English Dictionary - Richardson. 1. Wife of Chosroros II - Twin Rivers - p. 129 - Seton Lloyds. 2. It is worthy to note that the Sanskrit word Linga means literally a sign , a pole or a staff as also does the Great word Phallos; so that is unlikely that many supposed illustrated of Indian and Greek Phallic worship may be based upon on ancient Ankos, which really refer to sun-pillars or emblamic poles carried in religious processions - Sanchi and its Remain - p.50 General F .C. Maisey. 3. The word Obelisk according to Bryant is derived from Obel, the name of the God to whom they are dedicated ... Obel was the Appolo of Syria and proba bly Heluogabalus was the same deity, for this God was represented by a black symbol of conical form, which was said to have dropped from heaven, and was revered as an image of the sun, at Emeca Worship of the Serpent - J.B.Deane. 4. Mount Kailasa is the highest peak of the portion of the Tibetian Himalayas lying to the north of lake Manasarovar. It is supposed to resemble Linga in shape and an appropriate dwelling place for Siva and Parvathi - C. Tawney - Liberator - Aug. 26-1945. 1. Adam’s speak - A mountain in the island of Ceylon, the inhabitants call it Hamalel and the Europeans ‘peak’ because the highest part of it is in a pyramidal form - A Dictionary of Religious Ceremonies of the Eastern Nations. * எல்+ஐ+அம் = எல் ஆகிய கடவுளின் இடம். 1. The Phallic emblems were generally worshipped in ancient time. The Phallic cult of ancient Shinto really forms an integral part of its essential naturalism and as it considers patiently the religious mission of the Gods - Since 1868 most Phallic emblems have been removed from public places by order of the Government but Dr.Kats says that even now in the secluded parts of the land public Phallic worship is continued - Shentoism - The Indigenous Religion of Japan - p. 41. A.C. Underwood. 1. The worship of the Phallus passed from India or from Ethiopia into Egypt , from Egypt into Asia-Minor and into Greece is not so much a matter of astonishment - these nations communicated with each other; but that this worship existed in countries a long time unknown to the rest of the world in many parts of America, with which the people of the eastern continent had formerly no communication is an astonishing but well attested fact, when in Mexico, was discovered there was found in the City of Panuco the peculiar worship of the Phallus well established, its image was adorned in the temples, there were in the public places the reliefs which like those of India represented the various manners and the union of the two sexes. - If we turn to the temple s of Central America which in many respects exhibit a strict correspondence with those of India, we find precisely the same symbols, separately and in combination - Opiolatreia - pp. 19, 20. 1. The sacred stone was Bathel or house of God; no habitation of a mere spirit, but the dwelling place of deity itself. The worship of these sacred stones was common to all the races of the Semetic family. The famous Black stone of the Kaaba at Mecca is a standing witnees of the fact. So firmly rooted was the belief in its divine character among the Arabs of the Mohammed’s day that he was unable to eradicate it, but was forced to make a compromise with the old faith by attaching to the stone the traditions of the Old Testament. The sun pillars and Asherim meet with frequent mention in the Bibilical records; and we may gain some idea as to what the latter were, like from the pictures we have on coins and gems of the conical stone that stood within the porch of the Holies in the temple of the Pahian Aphrodite, as well as from the description given of it by Tucitus ... we cannot forget that even in Solomon’s temple built as it was by Phoenician workmen, there were two columns, of stones Boaz and Yakin set on either sides of the porch (1 king VII 21) like the two columns of gold and emarald glass which heradotus saw in the temple of Melkarth at Tyre (Heradt - ii. 44.) - The Herbert lectures 1887. - Origin and Growth of Religion - Ancient Bobylon p. 408 - A. H. Sayce. 1. Filfot cross a type formerly identical with the Swasthika of the Hindus. The later was long ago suspected by Edward Thomas to be a sun symbol, but this was not positively proved until Percy Gardiner found a coin of the ancient City of Mesamira struck with a Gammadion bearing on its open centre an image of the sun - The Migration of Symbols - p. IX. Chief among these ecclesiastical solar symbol that antidated the birth of Chirst and one that found its origin in solar worship. It occurs upon the monuments and utensils of every Primitive people from, China to Yucatan - The Non-christian Cross p. 300 - John Denham Parsons. 1. Inside it was I conclude still is a Fakir’s cell, with an adjoining Shiwala, or temple of Mahadeva containing the Linga and Yoni emblem of Siva and Parvathi and several fragments from the adjacent Buddhist ruins - Sanchi and its Remains - p.8. - General Maisey. I shall endeavour to prove elsewhere that large and small Stupas alike; the pyramid and the pagoda; the pillars near caves, temples and shrines; the Linga of Siva, the ring encircled figures and emblems of Assyria, Persia and Greece; and the pillars of Baal are one and all analogous and of the same origin and significance - Ibid p. 14. 2. Theophrasius in the 4th century B.C., depicts the superstitious Greek passing the anointed stones in the streets, taking out his phial and pouring oil on them falling on his knees to adore and going his way - Primitive Culture - Part 2 p. 14 - E.B. Tylor. 1. When Abraham as mentioned in the Genesis, in asking his servant to take a solemn oath makes him to lay his hand on his parts of generations in the common verson “under his thigh”. It was that he required as a token of his sincerity by placing his hand on the most revered part of his body, as at the present day a man would place his hand on his heart in order to evidence his sincerity. A similar custom is still retained among the Arabs at the present day. An Arab on taking a solemn oath, will place his hand on his membrum verile in attestation of his sincerity - Ancient Symbol Worship in the Religions of Antiquity p. 30 W.M. Westropp. 1. At Tlasalla, another City of Mexico they revered the act of generation under the symbols of the characteristic organs of the two sexes. If we turn to the temples of Central America which in many respects exhibit a strict correspondence whith those (Phallus) of India, we find precisely the same symbols, separate and in combination - Ibid p. 19. 2. In Cyprus it appears that before marriage all women were formerly obliged by custom to prostitue themselves to strangers at the Sanctury of Goddess where she went by the name of Aphrodite ... similar customs prevailed in many parts of Western Asia. Whatever its motive, the practice was clearly regarded not as an orgy of lust, but as solemn religious duty performed in the service of that great Mother Goddess of Western Asia whose name varied while her type remained constant from place to place ... The goddess Ma was served by a multitude of sacred harlots in Camera and crowd of men and women flocked to her sanctuary from the neighbouring Cities and Countries to attend the biennial festivals or to pay their vows to the Goddes - Golden Bough - Part IV - p. 39. - J.G. Frazer. In the temple of Aesculapus near Titporaea, there was always in readiness a bed prepared for the purpose of incubation, which was practised there, as in the other sanctuaries of that God - Phallic worship, p.65 - George Ryley Scott. In Erech and Accad prostitution became a religious duty, whose wages were consecrated to the Goddess of love. She was served by Eunuchs and by trains of men and boys who dressed like women and gave themselves to women pursuit. The Herbert Lectures - Orgin and Growth of Religion in Ancient Babylonia, p. 206. A.H. Sayce. 3. The early monarchs of Babylon were worshipped as Gods in their life time . Mesha, King of Moab called himself the son of the God Kemosh - Josephus tells us that down his own time, in the first century of our era, Berd Haded I , whom he calls simply Adad and his successor Hazel, continued to be wor- shipped as Gods by the people of Damascus who held processions daily in their honour. Some of the Kings of Edom seem to have gone a step further and identified themselves with the God in their life time. The kings of Tyre traced their descent from Baal, and apparently professed to be Gods in their own person several of them bore names which are purely composed of names of Baal Astarte; one of them bore the name of Baal pure and simple certainly we hear of kings of Tyre and Siddon who were priests of Astarte - Lolden Bough, Vol.IV, p. 13. 1. There is the same uncertainty about numerous small Phalli that have been found ... many of these small figures and objects were very possibly talismans, amulets or charms - The Archaeology of the Holy Land - P.S.P. Handcock. The vast antiquity of the Phallic necklace can be easily demonstrated. The Phallus as an amulet is shown by the number found among Egyptian sculptures. No visitor to Egyptian antiquities needs to be told this ... Indeed it was held to have been consecrated by Isis herself. The Phallus was the most sacred amulet worn by the vested virgins of ancient Rome. Moreover we find that sesortres of the early twelveth dynasty, who conquered Asia set up memorials of Phallic nature among the people who had acted bravely; but among the degenerate, female emblems engraved. On stelae were set up. Who shall say these objects may not have been the origin of those still to be found so universally throughout India. In the ruins of Zimbawe in Central Africa, are to be seen Phalli carved upon stone; similar to those found in Sardina which are said to be Phoenecean. The like have been seen by the writer on the so called Phoenecian ruins of Hujar Kham in Malta again numbers of Phallic amulets in Bronze are found in the museums of the Collegio Romano of Cortona and Bologna - The Evil Eye P. 151. Frederick Thomas Elworthy. We see in the sculptures and paintings a series of the most varied formations of the Phallus extending from their monsterous works to the amulets for suspension in wedding the newly married woman was obliged to sit on the Phailus in order to present as if it were her chastity to it - Ilios, the city of the Trojans P. 276 - Henery Selihmann. ... It was a protecting power against evil influences of various kinds, and as a charm amulet, against enemy and the evil eye, as at the postern gate of at Alatri and Pompaii and as frequently occurs in amulets of Porcelain found in Egypt, and of Bronze in Italy ... at Pompaii, was found a gold ring with the representation of the Phallus in its Bezel, supposed to have been worn by a barren women. To propitate the deity and to obtain offspring, offerings of this symbol were made in Rome temples by women and this custom has been retained even in modern times at Isernea near Naples. Stone offerings of Phallus are also made at the present day in a Buddhist temple in Peking and for the same object Mohammadan women kiss with reverence. In the 16th century, St. Foutin in the south of France, St. Ters at Antwerp and in the last century saints Cusmo and Damiano at Isernea near Naples, were worshipped for the same purpose by young girls and barren women. Sir Gardiner, Wilkinson records similar superstitious practices at the present day at Ekhmin in Egypt - Religions of Antiquity - H.M. Westropp. P. 28. 1. Elah, is the name of God in Arabia, from whence with adding the article is for- med Al Elah, and by abbriviation Allah which signifies the true and only God, creator of the universe - A Dictionary of the Religious Ceremonies of the East. Melcbezedek worshipped God under a different names evoking him as Elian - Chips from the German workshop - p 374 Maxmuller. 2. இலிங்கம் - Tamil Ilanku ‘what shines’ - இலங்குவது. Etymological and comparative Lexicon of the Tamil Language (சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி) Rev. S. Gnanaprakasar - O.M.L. 3. Among the Semites sacred pillar is universal ... for the God and Goddess were often worshipped together, and than each would have a pillar - Lectures in the Religions of the Semites P. 21 - Herbert Lectures - W. Robertson Smith. 1. The Mohenjo Daro Harappa finds defintiely prove that Shaivaism existed before the arrival of the Aryans in India, and the inscriptions found at the sites and read and interpreted by Father Heras, remove all doubts about the existence of Shaivaism in prehistoric times. The linga worship and the charcteristic attributes of Siva like the three eyes, the trident, the snake, the axe etc. found in the inscriptions prove definitely that Shiva was worshipped by the Indian people before the influence of the Aryans - The Philosophy of the Lingayats. 2. The humped Indian Bull (Box Indicus) all of which are freely figured in Sumerian, Hitto, ‘Phoneacian and Kassi seals as sacred animal of the East - Indo-Sumerian seals deciphered P.20 L.A. Waddell. In connecting with a vase design, including a bull ... showing a humped bull of Indian type unknown in Mesopotamia........ he said that although no scene of animal worship had yet been found of in Mesopotamian sites, it was a common motive of ancient Indian seal stones. ‘Our vase fragments’ he added put the problem on Indo-Sumerian connection on entirely new basis - Frankbont, Field Director of the Iran expedition of the Oriental Institute of the university of Chicago - The Illustrated London News 6th Nov. 1937. In two small bronze coins of the town (in Syria) which exhibit respectively humped bull with a crescent above it - ZEUS. P. 587. 1. The bull was also an impersonation of India and of siva among the Semites the bull form of God is peculiarly prominent, there is not a God in semitic religions who is assimilated to and represented as a bull. The God moon Sin is specially termed, the bearer of the mighty horns. The word mighty “abbir signifies bull and the passage in which it occurs in the scriptures should be rendered ‘bull’ rather than mighty one. Yahweh who throughout earlier times worshipped in the form of a bull, was the bull of Israel. In Egypt the bull worship, that is, the representation of Gods as bulls, was one of the features of religious cult ... The typical representative of the archaic God of Greece Dionysus remained however a bull God. Many of the Greeks say Plutarch “represented Dionysus in the form of bull” - The mothers - Vol. III . 191. 1. In ali lands he (bull) was the personification of the primitive and basic sun God. The Greeks worshipped him under the name of Epaphus. His image is to be found upon a large number of their ancient coins and monuments. Bacchus was depicted with the head of a bull, as was too Moloch, the God of the Ammonites. It is through the bull worship was of Egyptian orgin - Phallust Worship - P. 79. 2. The bull figures in the heavens and bulls, bisons minolitours and parts of these are too numerous for specification. The animal was worshipped under symbols on as represented by images. We see this illustrated in the case of the Jews who fell into the idolatory with the sanction of Aaron himself. The idolatory was probaly never fully suppressed. It was openly removed under Teroboam, who made two calves and set one in Bethel and the other in Dai ... In this case as in the preceding, the calf was recognised as the God that had brought the people out of the land of Egypt. - Studies in ancient History . 3. A vivid reminiscence of sacred Zoogany survived in England down to Tuder time. In the meadows of Manor of Habyrdon now known as Bury St. Edmonds, a white bull was kept, which was never yoked to a plough and enjoyed ease and plenty. Whenever a married maid was desirous of offspring the bull was led i n procession through the principal streets of the town to the principal gates of monastery attended by all the monks singing and a shouting crowed of women walking by him and striking his milk white sides and pendulous dew laps. The bull being dismissed the women entered the church and paid her vows at the altar of St. Edmond kissing the stone and entreating with tears for the blessing of a child - The Mothers Vol. III p. 190. 1. Osiris Apis (Bull) under the name of Sarapis was worshipped for and wide throughout the countries bordering Mediterranean during the Hellanic age; till Tetullian exclaimed indignantly it is not Egypt now - a - days so no Greece but the whole world swears by this African as in Crete the fertilizing bull was the long run identified with the sun - ZEUS, p.49. 1. Its (Serpent worship) place in Egypt, and in Palastine, even among the Hebrews, in Tyre and Babylon; in Greece and Rome; among the Celts and Scandi navians in Europe; in Persia and Arabia in Cashmere and India; in China and Tibet; in Mexico and Peru; in Abysinia and generally throughout Africa. Where it still flourishes in Java and Ceylon, among the Figians as we saw it still prev-ails and in various parts of Oceania. In one place the God was a living serpent; in another a collection of serpents as if the whole species was religiously regarded. The Thebans esteemed serpante genae; Acatus one of the Athenian king was reputed of serpent breed and the honour of having been first king of Athens was assigned to a dragon or to Cecrops, who was half a snake - probably as being on the mother side not of serpent stock. The kings of Abysinia put the serpent first on their list of kings as the progeneter of the Royal line. In Peru where the worship of the serpent was conjoined with sun worship - The Studies in Ancient History - p. 522. Another emblem of God only one referred to is the snake. The snake is one of the most common symbols of Shiva in modern Hinduism. Thus one of the inscriptions of Mohenjo - Daro informs us that “Meena meditates on the snake of the three eyed one” - Fr. Heras. Ophiolatria, the worship of the serpent next to the adoration of the Phallus , is one of the most remarkable and at first sight unaccountable forms of religions the world has ever known. Until the true source from whence it sprung can be reached and understood, its nature will remain at mysterious as its universality, for what man could see in an object so repulsive and forbidding in its habits, as this reptile, to render worship to its one of the most difficult of problems to find a solution to. There is hardly a country of the ancient world, however where it cannot be traced pervading every known system of mythology, and having proofs of its existence and extant in the shape of monuments, temples and earthworks of the most elaborate and curious character. Babylon, Persia, Hindustan, Ceylon, China, Japan, Burmah, Java, Arabia, Syria, Asiya minor, Egypt, Ethiopia, Greece, Italy, North and Western Europe, Mexico, Peru, America all yeild abundant testimony to the same effect and point to the common origin of Pagan system wherever found Ophiolatria - p.1. 1. Almost all nations have represented the lightning by a weapon. Among the Chaldian it was depicted by a trident as well as a pitch fork and an axe. The trident with transces zigzag with lightning is frequently exhibited in the hands of Assyro Chaldic Gods. On a cylinder dating back to all oldest times of Chaldian and the handle of the trident held by the God of storm lets fall a yet of water into the mouth of a deer - The Migration of Symbols. - p. IX. 1. In the sculptural representation of the Hindu Gods a remarkable innovation took place by the end of the first century. Before that time they appeared in ordinary human form with two arms and one head in Buddhist sculptures - on the coin of the Greece - Indian king Kadphises II dating about from 50 A.D. Siva still appeared as a two armed deity - India’s Past - p. 85. 1. Horned Gods were common in Mesopotamia, both in Babylon and Assyria. The great Gods and Goddesses had seven horns, which is the reason that the divine lamb in the book of revelation was said to have seven horns ... The horns were a sign of divinity. When king or high priest appeared as the God Asshur with the queen or high priestess as his consort Ishtar, the appropriate number of horns was worn on the royal pair being then regarded as the incarnat e deities. When Alexander the Great raised himself above the king of the earth and made himself a God, he wore horns in sign of his divinity hence his name in the Koran Dhu’l Karnan, the two horned ... The Indian figures of the horned Gods found at Mohenjo - Daro, are of the earliest bronze - age. The most remarkable is that of a man with bull’s horns on his head sitting crosslegged, surrounded with animals the representative was regarded in historic times as a form of Siva and is called Pasupathi ... When in relief sculpture Pasupathi is three faced, as here; but in figures in the round he has four faces. Such a representation in a native attempt to show the all seeing God, as is found in Europe in the four faced of Janus. It is still uncertain whether the four faced form arose independently in India and Europe, or whether one is the prototype of the other if the later, the India appears to be the earlier - The God of the witches p. 15 - Margret Allice Murray. 1. The Babylonions are said to have devoted purple to the dress of their idols and Tertullian speaks of its use among the ancient kings of Egypt and Babylon ... The Tyrian purple and purple stuff were esesntially articles of luxury varying in price according to times and quality. They were always costly and vied in value even with gold itself; consequently we find them reserved for the hanging of temples or employed for the robes of priests and kings. Moses, it is said, used purple stuffs for the tebernacle as well as for the habits of high priests and kings ... By the Greeks and Romans purple was regarded as the peculiar insignia of royalty, or of official distintction such as Magistrates, Millitary officials, Priests etc. It use was forbidden to the common people, and laws were made inflicting severe penalties and even death itself upon all under the dignity of an Emperor who should presume to wear it - Shells as Evidence of the Migrations of Early Culture - p. 7 - J. Welfrid Jackson. The Romish Church the prevalent colours for sacred dresses etc. are purple or scarlet - Faiths of Man p. 470. 1. Sacred shell is the chank shell of which fetch great prices. Psalm (XXVI , 3) says blow up the trumpet in the new moon in time appointed, on our solemn feast day. The Hindus similarly announce some of their festivals by the sound of the sacred shell - Cyclopaedia of India - E. Balfour. 1. It spread for and wide, until it came to play a part in religious services of Christian and Jewish, Brahman and Buddhist and Shamaniste, in widely different parts of the world. In Mediterranian, In India, in Central ஹளயை, in ஐனேடிநேளயை யனே துயயீயn. டீஉஉநயnயை யனே ஹஅநசica. In Many of these places it was supposed to have the definite ritual object summoning the deity. Chank shells especially celestial specimens are held in special veneration by the Chinese and are kept in the Pagodas by the priests for use in special occasion ... Mosso relates that the Triton is still sounded in church at Pied Mount during the services in holy week at Chieri. Mrs. Zelia Muttall has published a remarkable scene from an unpublished manu script of Sahagun’s now at Florence, representing the ancient Maxican’s act of homgae to the sun. Two priests offer blood by piercing their ears, two others burn incence in a characteristically Egyptian fashion, and another pair below conch shell trumpets. The use of the shell trumpet in a similar ceremonial for sun worship in Indonesia indicates one stage in the route before from Crete to America. One might multiple such illustrations almost without limit to demonstrate the reality of the culture bonds between these shell elements and the rest of the sun cult both in the new world and in the old - shells as evidents of the migrations of early culture. 1. He (the Jupiter of Syria) is represented as a bearded God with phrygian cap ... At his side hangs his sword in its scabbard. His right hand brandishes a double axe; his left gashes a thunderbolt consisting of six spirally twisted lines each of which tipped with arrow head. The bull that supports the God has a resette on the head between his eyes - Zeus - p. 619 - Arthur Bernard Cook. 2. The first of the series a deity wearing a conical head dress decorated with rings stands upon the back of a bull, the horns of which are wreathed with garlands. His left leg is forward (as the faces to the right). In his right hand which is drawn back there is a triangular bow, and in his outstretched hand he holds up a forked emblem, like the lightning trident, and graps at the same time a code which is attached to the nose of the bull. His dress is a short bordered tunic - The Hittitie Empire, p. 202 - John Garstang. The Syrian Hadad is sometimes represented standing on the back of a bull whi ch he glides with a code. Compare also the statement of Lucian, Zeus the chief God of Hicropolis which replaces Carchemish was supported on a bull. The same God was called Hadad by Maorobias. On the bull is Hittitie symbolism... garlanded bulls are informed are a familiar sight in the streets of Benares at the festivals of Siva, and it is from the Indian mythology that we get our nearest insight into the character of these deities and the meanings of those sculptures. For the bull represents Siva whose emblem was a trident and also an axe - Ibid. 3. This God is seated on the bull throne and the Goddess wearing the mural crown sits on a lion throne with staff and mace forming a pair. There on the left hand of the image of the bull God and on the right that of the mother Goddess both deities are enshrined representing the mated pair of the established Hittite divinities. But that which arrests the attention and may throw light upon the broader question of the Hittite orgins is the obvious parallelism with the symbolism of Siva - The Hittite Empire - p. 205 - J. Garstang . The Syrians gave the name Adad to the god whom they revere as first and greater of all. His name signifies. ‘The One’ They hடிnடிரச வாளை ழுடின யள யடட யீடிறநசகரட, ரெவ வாநல யளளடிciate with him Adargates and assign to these two divinities supreme power over every body ... all were below this deity among the Babylonians and northern Semitcs. She was called Ister the Astoreth of Bible and Astarate of Phoenica - Ibid. At the neighbouring village of San-However there was preserved until quite recently a walled pool containing a sacred fish regarded locally with reverence as great its situation at the foot of the Doluk Baba hill suggests the posession of the famous shrine, the one local monument recorded. It (Jupiter Dolichenus) seems more the less to represent the chief deity of the place. He stands on a bull holding the emblem of lightning and a double axe. His consort was a lion Goddess described on inscriptions as Herasanta - Ibid p. 305. “The beared God who grasping a trident in his extended left hands heads, the procession of male figures is probably the father deity. The great Hittite God of thundering sky, whose emblems were the thunderbolt and the bull; for the trident which he carries may resonably be interpreted as thunderbolt. The deity is represented in two stone monuments of Hittite art which were found at Zenjirli in Northern Syria and Bobylonia repectively. On both we see a male God wearing the usual Hittite costume of tall cap, short tunic, and shoes turned up to the toes, a crescent hilted sword in girt at his side; his hands are raised in the right, he holds a single headed axe or hammar, in his left a trident of wavy lines, which is thought to stand for forked lightning or a bundle of thunderbolts. On the Babylonian slab which bears a long Hittite inscription the God’s cap is ornamented with a pair of horns. The horns on the cap are probably those of a bull; for in another Hittite monument found at Malatia on the Euphrates there is carried a deity on the usual Hittite costume standing on a bull grasping a trident or thunderbolt in his left hand, while facing him stands a priest clothed in long robe holding a crook or curved staff in one hand and pouring a libation with the other.” In the sculpture the God on the bull holds in his right hand what is discribed as a triangular bow instead of a mace or an axe or a hammer. The Hittite Thunder God also is known to us from a treaty of alliance which about the year 1290 B.C. was contracted between Huttusil, King of Hittites and Remeses II, King of Egypt. By a singular piece of good fortune we possess copies of this treaty both in Hittite and in Egyptian languages. The Hittite copy was found some years ago inscribed in cuniform characters in a clay tablet at Borgazkeni; the copies of the treaty of Egyptian language are engraved on the walls of the temples of Thebes. From the Egyptian copies which have been read and translated, we gather that the sun God was principal deity, of the Hittites and the Hittite scales which appended to the treaty exhibited the king embraced by the Thunder - God and the queen embraced the sun goddess Arenna. The Hittite divinity of thundering sky appears to have long survived at Doliche in Commagene, forin late Roman art he reappears under the title of Jupiter. Dolichenus wearing a phrygian cap, standing on a bull and weilding double axe in one hand and a thunder bolt in the other. In this form his worship was transported from the native Syrian home by soldiers and slaves, till it had spread over a large part of the Roman Empire especially in the frontiers, while it flourished in the camps of the legions. The combination of the bull with the thunderbolt as emblems of the deity suggests that the animal may have been chosen to represent the sky God not merely of its virility but of its voice; for in the peal of thunder primitive man may well have heard the bellowing of a celestial bull. The Goddess who at the head of the procession of women confronts the great sky God in the sanctuary at Boghazkai is generally recognised as the Divine Mother, the great Asiatic Goddess of life of fertility. The tall flat totted hat with perpendicular grooves which she wears, and lioness or panther in which she stands, remind as the turetted crown and lion drawn car of Cybele, who was worshipped in the neighbouring land of Phrygia across the Halys so stagnates the great Syrian Goddess Hierapolis Bambyce, was portrayed sitting on lions and wearing a tower on her head. At Babilon, image of a Goddes whom the Greeks called Rea had the figures of two lions standing on her knces - Golden Bough - IV - pp. 134 - 137. 1. He is seated on a low Indian throne in a typical attitude of yoga with legs bent double beneath him, heel to heel and toes turned downwards. His arms are outstretched (presumably) with thumbs to front resting on knees. From waist to shoulder the arms are covered with bangles. The structure is probably of a sacred character and in view of the trident post and bull which are peculiarly associated with Siva whose prototype has been found in Mohenjo Daro - Excavations at Harappa, - Vol. 1 - p. 120, Madho Sarup Vats. 1. Seal No.22 depicts of a figure probably that of a deity seated in, which may be a yogic attitute with the heels pressed together on a low dais, whose legs represent those of a bull. The arms are outstretched on either side; but it is possible that the hands are intended to rest on the knees and the seal cutter merely raised them slightly to obviate any confusion of the arms with the legs. On each arm there is a large number of bracelets. The head dress is a twig with leaves like these of the pipal. The horns if indeed they are horns are difinitely separated from the head they are moreover represented as fastened to the base of the twig. The figure has threee faces, one in front and two in profile. On seal 235, there is somewhat similar figure, the stool is omitted however, and the figure is apparently seated upon the ground. The head dress consists of two horn like objects between which there appears to be a spike of flowers. A pigtail hangs down on one side of the head which has one face only in profile facing to the right. Seal No. 420, an enlargement of whcih is shown in Pl.C. (F) is particularly well preserved; it has been described by Sir John Marshall who has identified the figure with the God Siva; comparison of these three seals shows many points in common apart from the ornaments they wear. The figures are made save for langet worn round the waist and apparently also passed between the legs. A garment very similar to the langet worn at the present day in India. On seal 222, the figure has only one face but on Nos. 235 and 420 it has three. On No. 420, there are six beasts and the figure of a man around the God, on the left of the impression an elephant and a tiger with a man between on the right, a rhinocerous and a buffalo, and below the dais on which the God is seated there are either two antelopes or mountain goats as before mentioned. Sir John Marshall has identified this deity with Siva in his aspect as Pasupathi - Further Excavations at Mohanjo - Daro - p. 33 - Mackay. Side by side with earth and Mother Goddess there appears at Mohanjo - Daro a nude God who is recognisable at once as a proto-type of the Historic Siva. He is strikingly portrayed on the roughly carved seal illustrated in Pl. XII ; 17, which has been recently brought to light by Mr. Mackay. The god who is three faced is seated on a low Indian throne in a typical attitude of Yoga-like Saivaism itself Yoga had its origin among the pre-Aryan population and this explains why it was not until epic period, that it came to play an important part in the Indo-Aryan religion. Even before the discovery of this seal Ramaprasad Chanda had pointed out that the head of the male statue from Mohenjo Daro illustrated in Pl. XCVIII has the eyes concentrated in an attitude of Yoga ... He is not only the prince of yogies; he is also lord of beasts (ஞயளரயீயவாi) யனே ளை ளநநஅiபேடல in சநகநசநnஉந வடி வாளை யளயீநஉவ டிக this nature that the four animals tiger, rhinocerous, elephant and buffalo are group about him - Sir John Marshall. 1. His (Siva’s) name does not occur in the Vedas, but in later Hinduism he is an important divinity. Sivan does not occur in the Vedic Hymns as the name of a God, but only adjectives in the sense of kind auspicious - Encyclopaedia Britannica. 2. Indian religion is commonly regarded as the offspring of an Aryan religion brought into India by invaders from the north, and modified by the contact with Dravidan civilization - but - we might tell that it would be more cor rect to describe the Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of foreign invaders. For the greatest deities of Hinduis m such as Shiva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines are either totally unknown in the Vedas or obscurely adumbrated in it. The chief characteristics of the nature of Indian are not the characteristics of religions in Persia, Greece, or other Aryan lands. - Hinduism and Buddhism - Vol. 1 - p. XX. - Sir Charles Elliot. 3. Indian Culture - Vol. II - Siva - His Pre Aryan origins - Amallananda Ghosh. 1. The theory and practice of yoga are entirely foreign to the trend of early and later Vedic religious thoughts and inclinations. It has now been definitely shown by Mr. Chanda with the help of some Mohenjo - Daro sculptures that the idea can be traced to Indus people. It is but natural that the people should have attributed to their God all the characteristics of a yogie including austerities and self - mortification. It is common to believe that the creator himself must perform austerities in order to aualify himself for the capacity of creating manthought Gods, in his own light; process which could bring destruction on man must have been gone thoroughly by Gods to attain their exalted position. It must have been such a belief which led the Indus people to conceive of and depict their God as a meditator. The intimate connection between Samkhya and yoga are too well known to require repetition. The philosophy of the yoga system may be regarded as practically the same as that of the Samkhya with conception of a personal God super imposed upon it. It therefore appears certain that Samkhya too, which orthodox Hindu opinion has regarded as non-Vedic in character, was, like yoga, a system of thought which had a pre-Vedic origin. It has been suspected for a long time by scholars that some non-Aryan tracts are contained in the later-day. Siva worship the tract assumption that everything. Aryan must have been nobler than and superior to the non-Aryan led them to think that the uncanny features which the worship involves, could not have come out of the Aryan religion without the impact of some alien ideas. But so long there was no evidence to lend force to the conjecture or to asce rtain what was the nature of the Aryan influences - Indian Culture - Vol.II - Siva, His Pre-Aryan Origins - Amalananda Ghosh. 1. The word Sambu - as a Vedic epithet, is well known to be derived from Sam; blessing, welfare, prosperity plus the radical bhu; ‘be, become and to mean’ being a blessing beneficient as a name in later times, of Siva. I feel that it is likely to have been chosen because it suggested in the minds of the speakers some Dravidian word akin to the Tamil Cem, ‘redness’ (of Tamil cempoo ‘copper’) the colour red being always associated with this deity. That is to say, the application of the epithet to Siva - seems to me to become more intelligible under the above assumption of the existence in northern India at an early period of a race or races related to the Dravidians of the South, Sambu as a name of Siva becomes in Tamil Campu which, if an early importation, would as I argue, have been originally pronounced with an initial sound like that of the English Church. I venture the suggestion that this word has reverted to Sanskrit from some Dravidic dialect in the form of Jambu, as a name of Siva bearing the connection of ‘reddishness’. Both Jambuka and Siva are used to denote a jackal, possibly because of the tawny colour of the animal and when it is considered that the area characterized pre-eminently by the worship of Siva must have been originally south of the zone into which Aryan civilization had advanced, it will not, I think, be felt to be impossible that it was to this unkown region that the expression Jambu-dvipa, ‘the Siva-country first had a reference - Sanskrit Element in the Vocabularies of the Dravidian Languages pp.61,62 - Remarks by M.Collins. 1. Saiva Siddhanta the most important group, to which the majority of the priests belong, characteristic of the group is the use of formulas ... Pasupathi now totally disappeared with but a trace of it in the cult of the Linga, the Phallus, as a symbol of Siva - Batara Guru identified with Siva of Bali. - Miguel Covarrubias. 1. It is an established fact that the God Siva was the form which the Vedic God Rudra later assumed. In other words, the God Siva at least as he has been described in classical times was unknown to the Vedas; and Rudra, the tempest God of the Vedas, is not given any of the distinctive epithets which later came to be associated with the God Siva. If we accept the alleged identification, we have to date the God Siva to his Proto-Type in the middle of the third millennium B.C. For that is the date of the Mohenjo - Daro finds as has been proved by Selon Lloyd on the strength of the happy discovery of representation of a typically Mohenjo - Daro scene - an Indian elephant, a rhinocerous and a crocodile - Identification of Mohenjo - Daro figure - B.A. Saletore - The New Review Vol. X 1939. 2. Indeed it is possible to trace the beginning of the tree and serpent worship, the pipal tree cult, the Phallus cult as well as Siva of our time to the fourth millennium B.C. - Creative India - p.2 - B.K. Sarkar. 3. Some of the cosmic notions seem to be Dravidian. Gods, were being added to the Aryan pantheon, Dravidian or rather their attributes and motives, and some-times even their names, were transferred to the Aryan Gods, and a new and composite creation resulted gradually from this sort of union - Origin and Development of Bengali Language - p. 41. 4. A Dravidian God of the mountains and wastes, a red God, probably had his name translated to Aryan as Rudra and then identified with the Aryan God. ‘Rudra’ the roarer, and later on, his Dravidian names (cf, Tamil ‘Siva’ red) have been adopted to Siva and Sambu and this synthesis, sub-limited by Hindu thought in their times gave rise to the puranic Rudra-Siva or Mahadeva, one of the greatest conceptions of mythology. The Aryan Vishnu seems to have been identified with a Dravidian sky God Vin. - Dravidian Religion in Hasting’s Cyclopaedia of Religions and Ethcis. 1. Among such dense Dravidian masses the small Aryan influxes, would make slow progress and we must not be misled by their adopting as their own; the chiefs, heroes, Gods, histories of the Turanians, for all peoples have so acted whether they arrived as conquerers or colonists among settled communities are specially the histories of Babylonia, or Akkada, Assyria, etc. It took long centuries before even a few Aryans got south of the basin of the Ganges, and still longer over the Vindhyas, the deserts of Rajaputana, and Malwa and of Guzarat - Short studies in the Science of Comparative Religions, p. 2 47 - G.R. Forlong. 2. Scientists in England are interested in the announcement that an American expedition is to explore the lost world of Shiva’s Temple, a high plateau in the Grand Canyon, Colarado. The expedition is organised by the American Museum of Natural History ... Shiva’s temple is one of the several plateau isolated by Sheer cliffs a mile high in the Canyon - Times of Ceylon Illustrated, June 27, 1937. ‘Shiva Temple’ is more mysterous than ever with the discovery of ants half an inch long and mosquitoes, which have forgotten how to sting - Ibid. 161 162 175 174 163 164 173 172 * Brahmans of India are divided in comparatively recent Sanskrit usage into five Dravidas and the five Gaudas. The Dravida Brahmans are distinguished from the Gaudas by the fact the former do not eat meat but the latter do eat the meat of the five nailed animal - The Journal of the Oriental Research, Madras 1924 - P.T.S. Iyengar. 165 166 171 170 167 168 169 192 177 178 191 190 பாபிலோன் மக்கள் வழிபட்ட தந்தைக் கடவுள் 179 180 10, 000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில்; அமெரிக்காவில் உள்ளது. Colarado was practically unknown until 1858 when gold was discovered in the plain near Denver. Before the coming of whitemen tow types of Indians inhabited the Country, Shiva’s Temple belongs to a much more ancient Indian culture. Before the end of this year Shiva’s Temple will again be lost to the world. New Review, London; Sep. 23, 1937 189 188 181 182 187 186 183 184 185 208 193 194 சீரிய மக்களின் அதாத்து என்னும் தந்தைக் கடவுள் 207 206 மீனவர் (கிரேத்தர்) பழைய அரண்மனையிற் காணப்பட்ட ஓவியம்; கடவுள் வழிபாட்டில் சங்கு ஊதுவதைக் காட்டுவது 195 196 அசந்தா குகை ஓவியம் கி.பி. 500 205 204 197 198 கிரேக்கத்தில் காணப்பட்ட இமில் உள்ள இடபம் பொறித்த பழைய நாணயம் இரண்டாம் கட்பிசிஸ் அரசன் கி.பி. 50 வரையில் அடித்து வழங்கிய பொற்காசு 203 202 கிரேத்தாவில் வழிபடப்பட்ட தாய்க்கடவுள் (காளி) எகிப்தியரின் தாய்க் கடவுள் சாஞ்சிப் பௌத்த கோயிலிற் காணப்பட்ட சிவ இலிங்கம் 199 200 அயர்லாந்தில் காணப்பட்ட &#E html> 16 தமிழர் சமயம் எது? முன்னுரை இன்று பலவகைக் கிரியைகளோடும் ஆடம்பரங் களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமயத் தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திரவித்தைக்காரர், பூசாரிமார்களால் கையாளப் பட்ட சில பழக்க வழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுள், உயிர் என்னும் முப் பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அறிவால் உயர் வெய்துவது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுவரும் தமிழரின் மதக்கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தமது திருவாசக மொழிபெயர்ப் பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடத்தனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல், பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவைகளைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப் பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியாதிருக்கும் படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும், சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும், இச் சிறு நூல் வெளியாகின்றது. சென்னை 23.1.1947 ந.சி.கந்தையா. தமிழர் சமயம் எது? தோற்றுவாய் சமயம் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றிற்று? இவ்வுலகில் சமயங்கள் பலவாகக் காணப்படுதல் ஏன்? அவைகள் தனித்தனியே தோன்றி வளர்ந்தனவா? இன்றேல், ஒரு தொடக்கத்தினின்றும் பிரிந்து வளர்ச்சியடைந்தனவா? என்பன போன்ற கேள்விகள் மத ஆராய்ச்சி செய்யும் பொழுது - எழுகின்றன. இவைகளுக்கு இறுக்கப்படும் விடைகள் சமய வரலாறாக அமையும். தமிழரின் சமயம் எது என்று விளங்கிக் கொள்வதற்குச் சமய வரலாற்றைப் பற்றிய அறிவு இன்றியமையாதது. சமயத்தின் வரலாற்றை அறியும்போது தமிழரின் சமயம் எது என்பது நன்கு புலப்படுமன்றோ? ஆகவே முதலில் சமயம் எவ்வாறு தோன்றிற்று என்பதைக் குறித்து ஆராய்வோம். சமயத் தோற்றம் எல்லா உயிர்களுக்கும் பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த் தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி, உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன், ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற் புகுந்து உயிர்த்து எழும். அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்த்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக் கங்கள் சில இன்றும் சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங் களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது, பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த் தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய்த் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டுகொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தைப் புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவை களே. கிறித்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர். பிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றது. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்த்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப் பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள். இறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்குத் தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களைப் புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள்; பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர். இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ தீமையை யோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில், அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராமத் தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்த வரின் ஆவிகள் இல்லுறை தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப் பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென்புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வ மாயினர். இதுபற்றியே வள்ளுவனார் “தென்புலத்தார் தெய்வம்” எனக் கூறினாரென்க. இன்றும் மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின் சாம்பர், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப் படுகின்றன. பூசாரியின் தோற்றம் இறந்தவர்களின் ஆவிகளுக்கு அவர்களின் கிட்டிய உறவினர் பலி செலுத்தி வந்தனர். அதிகாரி, அரசன் முதலிய பெருமக்களின் ஆவிகளுக் கும் அவ்வாறு செய்யப்பட்டது. பெரும்பாலும் வேலையாட்களும் அடிமைகளும் அவ்வேலையைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட்டது. அவர்கள் செய்துவரும் பணிவிடை கால் வழியாகத் தொடர்ந்து நடைபெறும் பொருட்டும், அவர்களின் கூலி எளிதிற் கிடைக்கும் பொருட்டும் அச்சமாதிகளுக்கு மானியங்கள் விடப்பட்டன. நாட்கள் கழிந்தன. பூசாரிகளின் தொடக் கத்தைப் பற்றிய வரலாறுகள் மறக்கப்பட்டன. பூசாரியும் அவன் குடும்பத்தினரும், சமாதியும் அதற்குரிய மானியங்களும் தமக்குச் சொந்தம் எனக் கருதினார்கள். சமாதி தெய்வமானபோது பலி இட்டு வழிபடும் பொருட்டு மக்கள் அவ்விடங்களிற் கூடினார்கள். அவை பொதுமக்கள் வழிபடும் இடங்களாக மாறின. கோவில்களின் தொடக்கம் தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களைக் குகையில் அடக்கஞ் செய்தார்கள். இது ஒரு குடிசை அல்லது பந்தரின் கீழ் அவர்களை விடுவதை ஒத்தது. எல்லா நாடுகளிலும் குகைகள் காணப்படுவதில்லை. ஆகவே செயற்கைக் குகைகள் செய்யப்பட்டு, அவைகளில் பிரேதங்கள் அடக்கஞ் செய்யப்பட்டன. எகிப்திய அரசர் உடல்கள் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள கூர்நுதிச் சமாதிகள் இவ்வகைச் செயற்கைக் குன்று களேயாகும். புத்தர் சேடங்களை வைத்துக் கட்டப்பட்ட “டாகபா” எனப்படும் சமாதிகளும் இவ் வகையினவே. எகிப்திய சமாதிகளைப் போன்றவை தென் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.1 தெய்வம் உறையும் கற்களைச் சுற்றிக் கட்டடம் எழுந்தது. அக் கட்டடம் முற்காலச் சமாதிகள் போன்ற குகைகள் வடிவாகக் கட்டப் பட்டன. சில சமயங்களில் இறந்தவரின் குடிசையும், இறந்தவரைப் புதைத்த இடத்தின் அயலே பலி செலுத்தும் பொருட்டும், நிழலின் பொருட்டும், இடப்பட்ட பந்தரும் கோயிலாக மாறியுள்ளன. மக்கள் நாகரிகம் அடைந் தார்கள். கட்டடங்கள் அழகாகக் கட்டப்பட்டன. கோயில் பெருக்கப் பெருக்க வழிபடு மக்களும் பலராயினர். அவர்கள் தெய்வத்துக்குக் காணிக்கை அளித்தனர். பூசாரி அக் காணிக்கைகளைப் பெற்று செல்வன் ஆனான். கோயில் எவ்வளவுக்குப் பெரிதாகின்றதோ அவ்வளவுக்குத் தெய்வத்தின் உயர்வும் உண்டாகின்றது. அப்பொழுது வழிபடுவோரும் அதிகரிக்கின்றனர். அதனால் அதிக வருவாய் உண்டாகின்றது. இவை களை அறிந்த பூசாரி ஆலயத்தைப் பெரிதாகவும் அழகாகவும் அமைக்க லானான். மக்கள் தாம் வழிபடும் தெய்வம் தம்மைப்போல முன் மனித வடிவில் இருந்ததென்பதை இப்போது நம்பமாட்டார்கள். சமய நூல்கள் கோயில் எவ்வளவு பெரிதாகின்றதோ அவ்வளவுக்குப் பூசாரியும் பெருமை அடைகின்றான்; தெய்வமும் பெருமை அடைகின்றது. தெய்வத் தின் பெருமையைப் பொறுத்ததே பூசாரியின் பெருமையாகும். பூசாரி தெய்வத்தைப் பெருமைப்படுத்த எண்ணினான். அவன் தெய்வத்தைப் பற்றிப் பல கற்பனைக் கதைகளைப் புனைந்தான். அவைகளோடு சில உண்மை வரலாறுகளையும் கலந்துகொண்டான். தெய்வத் தின் பெருமை களைக் கூறும் கதைகளின் இடையிடேயே அவன் தனது பெருமைகளை யும் நாட்ட மறந்துவிடவில்லை. இவ்வாறு தெய்வங்களைப் பற்றிய “புரா ணங்கள்” தோன்றின. பூசாரி, தான், தனதும் பலி செலுத்தும் தெய்வத்தி னதும் பெருமைகளைக் கற்பித்து எழுதிவைத்த நூல்களே முற்காலச் சமய நூல்களாகும். சமயம் என்பதில் அடங்கியவை சமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையே சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற் பதியலாயிற்று. தெய்வங்களின் வடிவம் சமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாகவைத்து வழிபடப் பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களைக் கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு. மர வணக்கத்தின் தோற்றம் இறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப, மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை; அம் மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தபின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம் மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன. பாம்பு வணக்கம் சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவரின் பிறப்பு என்று கருதப்பட்டது. இக் கருத்து அல்லது நம்பிக்கை இன்றும் உலகின் பல பாகங்களிலுள்ள மக்களிடையே காணப்படுகின்றன. ஆகவே பாம்புகள் இறந்தவர்களின் மறு உருவங்களாகக் கருதப்பட்டன. 1ஆகவே மக்கள் அதனைக் கொல்லாது அதற்குப் பால் வைத்தும் பிற உணவுகளைக் கொடுத்தும் வழிபடலாயினர். உலகில் பாம்பு வணக்கம் காணப்படாத இடம் இல்லை எனக் கூறலாம். இதனால் பாம்பு வழிபாடும் இறந்தவர் வழிபாட்டின் ஒருவகை எனத் தெரிகின்றது. கிணறுகள் முற்காலச் சமாதிகள் ஆறுகளின் அருகே எடுக்கப்பட்டன. சமாதிகள் கோயில்களானபோது அவைகளின் பக்கத்திற் செல்லும் நீர் ஊற்றுக்கள் தெய்வத்தன்மை உடையனவாகக் கொள்ளப்பட்டன. அவ்வாறுகளுக்குப் பலிகள் இட்டு வணங்கப்பட்டன. அவை பாவத்தைத் தீர்க்கும் தீர்த்தங்களாகக் கொள்ளப்பட்டன. எல்லா இடங்களிலும் ஆறு இருப்பதில்லை. ஆறு இல்லாத இடத்தில் ஆற்றுக்குப் பதில் கிணறு தோண்டப்பட்டது. கிணற்றுக்குப் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு கோயில்களுக்குப் பக்கத்தே உள்ள கிணறுகள் தீர்த்தங்களாயின. குறிப்பு: இதுவரைவிற் கூறியவை சமயம் தோன்றியதின் ஒரு வகை. சமயம் வேறு வகை யிலும் தோன்றியுள்ளது. வெவ்வேறு வகையாகத் தோன்றிய சமயக் கொள்கைகள் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. அவைகளை இன்றைய சமயங்களுட் காணலாம். தாய் வணக்கம் மக்களின் முற்பருவத்தில் தாயே அதிகாரமுடையவளாயிருந் தாள்; 1 ஆட்சி அவள் கையில் இருந்தது. தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொத்து பெண்களுக்கே உடையதாயிருந்தது. அக் காலத்தில் மக்கள் தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில், முதல் தோன்றி நடைபெற்றது தாய்வணக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர். தரைத்தெய்வம் இப் பூமியினின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதைப் பழங்கால மக்கள் கண்டார்கள். அவர்களுக்கு அது மிக வியப்பாயிருந்தது. பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கின்ற இத் தரையை அவர்கள் தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடலானார்கள். விதைப்புக் காலங்களில் அவர்கள் இக் கடவுளுக்குப் பலிகள் இட்டு வழிபட்டார்கள். விழாக் காலங்களில் இடக்கரான கிரியைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு தோன்றி நடைபெற்ற தாய்க் கடவுள் வழிபாடே, சத்திவணக்கம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. கோயிற் கிரியைகள் ஆவிகளுக்குப் பலியிட்டோர் ஒருவருக்கு உணவு அளிக்கும் போது செய்யும் உபசாரங்களைத் தெய்வத்துக்குச் செய்தார்கள். தாய்க் கடவுளை வழிபட்டோர் ஒரு தாய்க்குச் செய்யப்படும் பணிவிடைகளை ஒத்த கிரியைகளைச் செய்தார்கள். இவ்வாறு கிரியைகள் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டன. பிற்காலத்தில் தாம் செய்யும் கிரியைகளின் பொருள், மறைவாயிருக்கும்படி சில மாற்றங் களையும் செய்யலானார்கள். ஞாயிற்று வணக்கம் முற்கூறிய வழிபாடுகள் தோன்றி நடைபெறும்போது இன்னொரு வழிபாடு தோன்றிற்று. இவ் வுலகில் நிறைந்துள்ள இருளைப் போக்குவ தாகிய ஞாயிற்றின் தோற்றம் மக்கள் கருத்திற்பட்டது. அவர்கள் இவ்வொளியுடையதாகிய பொருளே எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானது என்று எண்ணினார்கள்; பலி செலுத்தி அதனை வழிபட் டார்கள். இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ளது. ஞாயிற்றை மக்கள் மலை முகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். ஆகவே கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என மக்களால் நம்பப் பட்டது. ஆகவே ஞாயிற்று வணக்கம் மலை சூழ்ந்த நாடுகள் ஒன்றில் தோன்றியிருத்தல் ஆகலாம். செய் குன்றுகள் எல்லா நாடுகளிலும் மலைகள் இருப்பதில்லை. மலையில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் மலைகளுக்குப் பதில் செய்குன்றுகள் எழுப்பி னார்கள். அச் செய் குன்றுகள் மீது ஞாயிற்றின் வடிவான வடிவங்களை வைத்தார்கள். அங்கு ஞாயிற்றுக் கடவுளை வழிபட்டார்கள். இவ் வகையான ஞாயிற்றின் கோயில்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. முக்கோணக் கற்கள் செய் குன்றுகளை எழுப்புவது எளிதன்று. ஆகவே மக்கள் செய்குன்று அல்லது மலைவடிவமான முக்கோணக் கற்களை நிழல் மரங்களின் கீழ் நிறுத்தினார்கள். அவைகளை ஞாயிற்றின் வடிவங்களாக வழிபட்டார்கள். முக்கோணக் கற்கள் நாளடைவில் அடி அகன்று நுனி ஒடுங்கிய ‘ஆதீண்டு குற்றி’களின் வடிவை அடைந்தன. தீ, திங்கள் வழிபாடுகள் ஒளியுடைய ஞாயிற்றை வழிபட்ட மக்கள் ஒளியுடையனவாகிய திங்கள், தீ என்பவைகளையும் வழிபடலாயினர். கோயில்களில் ஒரு போதும் அவிந்து போகாதபடி தீ எரித்துக் காப்பாற்றப்பட்டது. எல்லாக் காலங்களிலும் ஞாயிறு திங்கள் என்பவைகளைக் காண்டல் அரிது. ஆகவே மக்கள் ஞாயிறு, திங்கள், தீ என்பவைகளைக் குறிக்க வட்டம், பிறை, முக்கோண வடிவான குண்டங்களில் தீ வளர்த்து, மூன்று ஒளி யுடைப் பொருள்களையும் வழி படுவார்கள். அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்கள் முச்சுடர்களைக் குறிக்கும் வடிவங்களாகவும் கருதப்பட்டன. பல உற்பத்தியுடைய கற்றூண்கள் ஞாயிற்றின் குறியாக மாறுதல் சமாதிகளின் மீது நிறுத்தப்பட்ட கற்றூண்கள், ஆவிகள் உறையும் இடங்கள் எனக் கொள்ளப்பட்டு, வழிபடப்பட்டன என்று முன் கூறினோம். பழைய பலி பீடங்களும் தூண்களின் வடிவைப் பெற்று வழிபடப்பட்டன. இவ்வாறு வணக்கத்துக் குரியனவாகிய கற்றூண்கள் இப்பொழுது ஞாயிற்றின் வடிவம் எனக் கொள்ளப்படலாயின. இது பற்றியே ஞாயிற்றின் வடிவாகிய இலிங்க உற்பத்திக் குரிய பழங்கதை பலவாகக் காணப்படுகின்றன. மிகப் பழைய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுளின் வடிவம் மிகப் பழைய மக்கள் ‘சோகி’ என்னும் ஒரு வகைக்கடல் உயிரின் ஓட்டினைத் தாய்க் கடவுளின் வடிவாகக் கொண்டு வழிபட்டனர். இதற்குக் காரணம் அவ்வோடு பெண்கள் இரகசிய உறுப்பு போன்ற வடிவுடையது. இம் முறையிலிருந்து தாய்க்கடவுளைக் குறிக்கப் பெண்ணுறுப்பின் வடிவங்களும் அமைத்து வழிபடப் படலாயின. இவ்வகை வடிவங்கள் ‘மொகஞ்சதரோ’விற் காணப்பட்டன. தந்தை ஆட்சி உண்டாதல் உலகில் தாயாட்சியே முதலில் இருந்ததென்று ஓரிடத்திற் கூறினோம். சிறிது சிறிதாக நிலைமை மாறத் தொடங்கிற்று. தந்தை ஆட்சி உண்டா யிற்று. அப்பொழுது எல்லாக் கடவுளுக்கும் தலைவராகிய ஞாயிற்றுக் கடவுளை ஆண் கடவுள் எனக் கருதப்படலாயினர். அதுவே ஞாயிற்றின் வடிவமாகிய இலிங்கம், ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. வானக் கடவுள் தரைக்கடவுளைத் தாய்க்கடவுளாகக் கொண்டு வழிபட்ட மக்கள், வானத்தைத் தந்தைக் கடவுள் எனக் கொண்டார்கள். இவ்வாறு கொண்ட மக்கள், இலிங்கங்களை வான்கடவுளின் வடிவாகக் கொண்ட னர். நாளடைவில் வான் கடவுள் ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப் பட்டது. தரைக் கடவுள், வான்கடவுள்களை வழிபட்ட மக்கள், தரைக் கடவுளை பெண்வல்லமை (உயிர்களைக் கருக்கொண்டு ஈனுகின்ற வல்லமை) என்றும், வான் கடவுளை ஆண்வல்லமை (உயிர்களை உண் டாக்குகின்ற வல்லமை) என்றும் கருதினார்கள். அவர்கள் இலிங்கங் களை ஆண் வல்லமை எனவும் கொண்டனர். இலிங்கத்தின் வடிவு மாறுபடுதல் இவ்வாறு கொண்ட மக்கள் இலிங்கங்களை ஆண் உறுப்பு வடிவாக அமைக்கலாயினர். ஆண் பெண் வல்லமைகள் சேர்வதால், படைப்புக்கள் தோன்றுகின்றன என்பதை உணர்ந்த அவர்கள், இரு வடிவங்களையும் இணைத்து ஒரு வடிவமாகக் கொண்டும் வழிபட லாயினர். இவ்வாறு இணைந்த வடிவங்கள் மேற்கு ஆசியாவில் ‘எல்லோகிம்’ என்னும் பெயர் பெற்றன. தனி வடிவம் பெத்தெல், அல்லா, பால் முதலிய பெயர்களைப் பெற்றது. இந்திய நாட்டில் அதற்கு ஆவுடையார் என்று பெயர். ஞாயிறும் திங்களும் ஆண் பெண் தெய்வங்களாதல் இந்திய மக்கள் திங்களை ஆண் தெய்வமாகவே கொண்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாக கொள்ளப்பட்டது. இலிங்கங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிழல் மரம், பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. ஞாயிறும் திங்களும் கணவன் மனைவியர் எனக் கொள்ளப்படலாயின. சமாதியின் மீது வளர்ந்த மரம் வழிபடப்பட்ட தென முன்பு கூறினோம். அவ் வழிபாட்டுக்குரிய வரலாறுகளும் இப் பொழுது மர வணக்கத்துக் குரியனவோடு கலந்தன. நாளடைவில் மரத்துக்குப் பதில் மரத்தூண், கற்றூணுக்குப் பக்கத்தே நிறுத்தி வழிபடப் பட்டது. இம் மரத்தூண் வணக்கத்தையும் ஒன்றாக வைத்து மயங்கற்க. இப்பொழுது இறந்தவர்களின் ஆவி சம்பந்தமான வணக்கங்கள் எல்லாம் மறக்கப்பட்டு அவை ஞாயிறு திங்கள் தொடர்பான வணக்கங்கள் எனக் கொள்ளப்பட்டன. அரசக் கடவுள் மக்களின் அறிவு இன்னொரு நிலையை அடைந்தபோது அவர்கள் ஞாயிறே இவ் வுலகத்துக்கெல்லாம் அரசன். அவனால் மக்களை ஆளும் பொருட்டு அனுப்பப்பட்ட அவன் புதல்வனே அரசன் என எண்ணத் தலைப்பட்டார்கள். அப்பொழுது மக்கள் அரசனுக்குக் கடவுளுக்குச் செய்யும் வழிபாட்டைச் செய்து வந்தனர். அவர்களும் தாம் கடவுளின் அதிகாரத்தைப் பெற்று ஆளப் பிறந்தவர்கள் என நம்பி மக்கள் மீது அதிகாரம் செலுத்தினர். இறந்தபின் அவர்கள் ஞாயிற்றை அடைந்து ஞாயிற்றுக் கடவுளாக மாறுகின்றார்கள் என மக்கள் நம்பினார்கள். அவர்களைப் புதைத்த இடத்தில் ஞாயிற்றின் குறியாகிய கல் நட்டு வழிபட்டார்கள். இவ்வாறு தோன்றிய ஞாயிற்றுக் கடவுளரே எகிப்தில் “ரா” எனப்படுவர். அரசன் ஆண் கடவுளாகக் கருதப்பட்டது போல, அரசியர் பெண் கடவுளருக்குரிய மரியாதையைப் பெற்றனர். ஞாயிற்றுக் கடவுளின் கோயிலில் அரசனே பூசாரியாக இருந்தான் அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனக் கொள்ளப்பட்ட போது ஞாயிற்றுக் கடவுளின் ஆலயம் அரசனுக்கு உறைவிடமான அரண்மனை யின் வடிவை அடைந்தது. ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி அரசனாக இருந்தான். சில சமயங்களில் அரச குடும்பத்தினரே பூசாரிய ராக இருந்து வந்தனர். ஞாயிற்றுக் கடவுளின் வடிவு மாறுபடுதல் ஞாயிற்றுக் கடவுள், அரசனுக்கு அரசனாகக் கருதப்பட்டபோது, மக்கள் அவரைப் பேரரசன் வடிவில் வழிபடத் தொடங்கினார்கள். ஞாயிற்றுக் கடவுளுக்கு முற்கால மக்கள் இட்டு வழங்கிய இரு சிறந்த பெயர்கள் இவ் வுலகில் நாகரிகம் பெற்று விளங்கிய மக்கள் எல்லோரும் நம் முழு முதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய பெயர்களை ஆராயின், அவை ஒளி, அல்லது ஒளியுடையவன் என்னும் பொருள்களுடையனவாகக் காணப் படுகின்றன. அப் பெயர்களுள் ‘எல்’ என்னும் பெயர் மிக விரிவு அடைந்திருந்தது. எல் என்பது ஒளி என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். மேற்கு ஆசிய நாடுகளில் கடவுளைக் குறிக்க எல் என்னும் பெயர் சிறப்பாக வழங்கிற்று. அராபியர் மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் எல் தொடர்பான இடப் பெயர்கள் நூற்றுக் கணக்கிற் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் எல் கடவுளின் கோயில்கள் இருந்த இடங்களாகும். முகமதியர் வணங்கும் கடவுளின் பெயராகிய அல்லா என்னும் பெயர் எல் அடியாகப் பிறந்தது. “எல்லா” என்பது அல்லா என வழங்கும். கிறிஸ்துவ வேதத்திலும் எல் எலியன், எலோகிம், எல்சடை முதலிய பெயர்கள் ‘யேகோவா’ கடவுளைக் குறிக்க வழங்கின. அரசர் கடவுளின் பிறப்புகளாக (அவதாரங்கள்) கொள்ளப்பட்ட போது அவர்களும் தமது பெயர்களின் இறுதியில் ‘எல்’ என்னும் பெயரைச் சேர்த்து வழங்கினார்கள். ‘எல்’ என்னும் பெயரே ‘பால்’ (Baal) பெல் (Bel) எனத் திரிந்தும் வழங்கிற்று. கடவுளின் அடிய வர்களும் தம் பெயர்களுடன் எல், பால், பெல் முதலிய பெயர்களைச் சேர்த்துக் கொண்டனர். இது இந்திய மக்கள் சிலர் தம் பெயர்களுடன் சிவம், பிரமம் முதலிய பெயர்களைச் சேர்த்து வழங்குவதை ஒத்தது. இலங்கை அரசர் பலர், தம் பெயர்களின் இறுதியில் சிவன் என்னும் பெயரை இட்டு வழங்கினார்கள். மேற்கு ஆசியாவிலன்றி இந்திய நாட்டிலும் எல்லென்னும் பெயர் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. இன்றும் மலைச்சாதியினர் சிலர் எல்லம்மா, எல்லப்பன் (எல்லையன்) முதலிய கடவுளரை வழிபடுகின்ற னர். மனுவின் பேழை சென்று தங்கியதெனப்படும் மலை, இளா விருதம் எனப்படுகின்றது. இளாவிருதம் என்பதில் இளா என்பது எல் என்பதன் திரிபு. இலங்கைத் தீவின் பழைய பெயர் எல்லம். எல்லம் என்பதன் அடி எல். எல்லே பின்பு இல் ஆகி இலங்கை ஈழம் முதலிய திரிபுகளைப் பெற்றது. எல் தொடர்பான இடப் பெயர்கள் பல, இலங்கையிற் காணப் படுகின்றன. ‘நுவர எலியா’ என்பது அவைகளுள் ஒன்று. எல்லை ஒப்ப மிகப் பழமை உடையதாய், ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர் சிவன். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இதற்கு அடி சிவ(ப்பு). இன்றும் பிலிப்பைன் தீவுகள் சிலவற்றிலுள்ள மக்கள் கடவுளைச் சிவப்பன் என வழங்குவர். சிவன் என்னும் பெயர், மக்களிடையே தந்தை ஆட்சி தோன்றிப், பெரிய கடவுள் ஆண் என்னும் கொள்கை உண்டாயிருந்த காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். மெக்சிகோவில் “கொலறடோ” ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள குன்று ஒன்றில், சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. சிவன் ஆலயம் என்பது மலை உச்சியிலுள்ள தட்டையான பகுதியேயாகும். அச் சிவன் ஆலயத்தின் காலம், குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேண்டு மென மேல் நாட்டு அறிஞர் கூறியிருக்கின்றனர். எபிரேயரின் (Hebrew) மூன்றாவது மாதம் சிவன் எனப்பட்டது. மோசே என்பவர் இம் மாதத் தின் ஆறாவது நாள் கடவுளால் தனக்கு உணர்த்தப்பட்ட ஏழு கட்டளை களை மக்களுக்கு வெளியிட்டார். மோசேயின் காலம் இற்றைக்கு 17000 ஆண்டுகளின் முன். கிரீஸ் நாட்டுக்கு அயலே உள்ள கிரேத்தா (crete) என்னும் தீவில், சிவன் என்னும் பழைய நகரம் ஒன்று இருந்தது. அங்கு சிந்துவெளியிற் கிடைத்த புதை பொருள்களை ஒத்தவை காணப்பட்டன. சகரா வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை உண்டு. அங்கு ஞாயிற்றுக் கடவுளின் அழிபாடுகள் காணப்படுகின்றன. சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் ஓர் இடமுண்டு. சுமேரிய மக்கள் சிலர் சிவன் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். கிறிஸ்துவ மறையில் சொல் லப்படும் சியன் (Cian) வழிபாடு சிவன் வழிபாடே என மேற் புல அறிஞரால் நாட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சிவன் ஒளிமலை என ஒன்று உள்ளது. இவை போன்ற பல சான்றுகளால் எல் என்னும் பெயரை ஒப்பச் சிவன் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளின் சாலச் சிறந்த பெயராக இவ்வுலக மக்களால் வழங்கப்பட்டதெனத் தெரிகின்றது. எல் அல்லது சிவன் கடவுளின் வடிவங்கள் இவ் வுலகம் முழுமையிலும் எல் அல்லது சிவன் கடவுள் கற்றூண் வடிவில் வழிபடப்பட்டார். மக்கள் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி யாளர் இதனை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பேரரசன் வடிவில் வழிபட்ட காலம் ஒன்று உண்டு எனக் கூறினோம். அவ் வழக்கு இந்திய நாட்டிலே தொடங்கி மேற்கு நோக்கிப் பரவியிருந்ததெனத் தெரிகின்றது. சிவன் கடவுளின் ஊர்தி இடபம். இந்திய மக்கள் ஆரியரின் வருகைக்குப் பின்னரே குதிரையைப் பற்றி அறிந்தார்கள். அதன் முன் கழுதை, எருது என்பன மக்களின் ஊர்திக ளாக இருந்தன. அக் கால அரசர் மாட்டையே சிறந்த ஊர்தியாகக் கொண்டனர். பிற்காலங்களில் கடவுளின் ஊர்தியாகிய இடபமும் கடவுளாக வணங்கப்பட்டது. இவ் வணக்கம் மேற்குத் தேசங்களுக்குப் பரவிற்று. அப்போது நாணயங்களிலும் முத்திரைகளிலும் இடபங்கள் பொறிக்கப்பட்டன. அவ்விடபங்களுக்கு இமில் காணப்படுகிறது. இமில் உள்ள இடபங்கள் இந்திய நாட்டுக்கே உரியன. இதுபற்றி இடப வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங்களுக்குச் சென்ற தெனத் துணியப்படுகின்றது. இந்திய மக்கள் சிவன் கடவுளை இடப ஊர்தி உடையவராயும், ஒரு கையில் முத்தலைச்சூலம், உடையவராயும் மற்றக் கையில் கைக்கோடரி (மழு)யை உடையவராயும் வழிபடுகின்ற னர். இவ் வகை வடிவங்கள் மேற்குத் தேசங்களிற் காணப்பட்டனவாயின் அவை இந்திய நாட்டினின்றும் சென்றன என்று துணியப்படுமன்றோ? பபிலோன் நாட்டிலும், சிரியா நாட்டிலும், சின்ன ஆசியாவிலுள்ள கிதைதி நாட்டிலும் இவ்வகை வடிவங்கள் காணப்பட்டன. இவ்வகை வடிவங்கள் கிரேக்க நாட்டிலும் பிரித்தன் (இங்கிலாந்து) நாட்டிலும் வழிபடப்பட்டன என்று மேற்புல அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எகிப்திய மக்கள் இடபத்தை வணங்கினார்கள். அவர்களின் அமன், ஒசிறிஸ் என ஞாயிற்றைக் குறிக்கும் கடவுளரின் ஊர்தி இடபமாகவே இருந்தது. கடவுள் பேரரசன் வடிவினனான போது பழைய வழிபாட்டுச் சின்னங்கள் வந்து அடைதல் கடவுள் பேரரசன் வடிவினனானபோது, ஆவி வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருந்த பாம்பு, அக் கடவுளின் அணிகலமாயிற்று. ஆவிகள் உறையும் சுடலையில் திரிவன என்று கருதப்பட்ட பிசாசுகளும் பூதங்களும் அவர் பரிவாரங்களாயின. ஞாயிறு, திங்கள், நெருப்பு என்னும் முச்சுடர் வழிபாட்டினரின் மூன்று சுடர்களும் கடவுளின் கண்களாயின. சுடலையில் கிடக்கும் எலும்புகள் அவர் மாலைகளாயின. சுடலையில் உண்டாகும் ஊமத்தை எருக்கு என்பவை, அவர் சூடும் பூக்களாயின. மண்டை அவர் ஏந்தும் ஓடு ஆயிற்று. தாய்க்கடவுள் இந்திய மக்கள் தாய்க்கடவுளைச் சிங்கவாகன முடையவளாகவும், ஒரு கையில் தண்டையும் இன்னொரு கையில் கேடகத்தையும் வைத்திருப் பவளாகவும் கொண்டு வழிபடுகின்றனர். எகிப்திய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின்மேல் நிற்பதாகும். இதனை ஒத்தனவே சின்ன ஆசியா, சிரியா முதலிய நாடுகளில் வழிபடப்பட்ட, தாய்க் கடவுளரின் வடிவங்களுமாகும். சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் இடத்திலே கிடைத்த பழைய நாணயம் ஒன்றில், ஒரு பக்கத்தே இரு இடபங்கள் தாங்கும் கட்டிலின் மீது தந்தைக் கடவுளும், இரு சிங்கங்கள் தாங்கும் கட்டிலின்மீது தாய்க் கடவுளும் இருக்கும் வடிவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. தாய்க்கடவுள் வழிபாட்டுக்குரிய இவ்வடிவம், இந்திய நாட்டினின்றே சென்றிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வுலக நாகரிகம் இந்திய நாட்டினின்றே மற்றத் திசைகளுக்குப் பரந்திருத்தல் வேண்டுமென ஜி.ஆர். ஹன்டர் (G. R.Hunter) ஹெரஸ் பாதிரியார், றைஸ் டேவிட்ஸ், சில்டி முதலிய பல மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் கருதினார்கள். மும்மூர்த்திகள் முற்கால மக்கள் எல்லோரிடையும் மும்மூர்த்திகள் வழிபாடு இருந்து வந்தது. மும்மூர்த்திகளில் தாய், தந்தை, குமாரன் என்று மூன்று கடவுளரும் அடங்கும். ஆரியமக்கள் இந்தியநாடு வந்த பின்பு மும்மூர்த்தி கள் பிரமா, விட்டுணு, உருத்திரன் எனப்பட்டனர். இது தமிழ் மக்களும், பிற மக்களும் கொண்ட முறையன்று. செவ்வாடை உடுத்துதல் ஞாயிறு செந்நிறக்கடவுள் ஆதலின், ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி சிவந்த உடையை உடுத்தான். அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டமையின் அவனும் செவ்வாடையை உடுத்தான். ஞாயிற்றுக் கடவுளின் பூசாரிகளும் அரசர்களும் அல்லாமல் அரச குடும்பத்தினரும் சிவப்பு ஆடையை உடுத்தனர். எகிப்து பபிலோன் முதலிய நாடுகளில் தெய்வங்களுக்கு உடுத்தப்படும் உடை சிவப்பு நிறம் உடையதாக இருந்தது. கிரீஸ், உரோம் முதலிய நாடுகளில் குருமார், அரச குடும்பத்தினர், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடையை உடுத்தல் ஆகாது என்னும் சட்டம் இருந்து வந்தது. இன்றும் உரோமன் கத்தோலிக்க உயர்ந்த குருமார் சிவப்பு அங்கியையே அணிவர். இந்திய நாட்டிலும் இவ்வழக்கே இருந்து வந்தது. மத்திய தரைக்கடலின் கிழக்கு ஓரங்களில் வாழ்ந்த பினீசியர் சிவப்பு ஆடைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து வாணிகம் புரிந்தார்கள். அவ்வாடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. பிற்காலங்களில் அரசர் பூசாரிகள் பெருமக்கள் மாத்திரம் சிவப்பு ஆடையை அணிதலாகிய வழக்கு மறக்கப்பட்டது. கடவுளின் அடியார் எனத் தம்மைக் காட்டிக்கொள்ள விரும்பிய மக்கள் எல்லோரும் சிவப்பு ஆடை உடுத்தினர். சிவப்பு ஆடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. ஆகவே சிவப்புக்குப் பதில் காவி தோய்த்த ஆடைகள் பயன்படுத்தப் பட்டன. புத்த குருமார் தம்மை முன்னையவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு மஞ்சள் உடை உடுத்தனர். இதுவே காவி உடை அணிவதின் வரலாறாகும். சங்குவாத்தியம் இவ்வுலக மக்கள் எல்லோரும் சங்கைப் புனிதமுடையதாகக் கொண்டனர். சங்குவாத்தியம் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்தப் பட்டது. கிறித்துவ வேதத்திலும் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்ட செய்தி காணப்படுகின்றது. இன்றும் சில கிறித்துவ ஆலயங்களில் சில சிறப்புக் காலங்களில் சங்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்தியா, சப்பான், அமெரிக்கா, கிரேத்தா, கிரீஸ் மத்தியதரை நாடுகளிலெல்லாம் கோயில் களில் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்டது. முத்து முத்து உயிர்ச்சத்தியை அளிப்பதாக எல்லா மக்களாலும் கொள்ளப் பட்டது. அது அரசராலும் பெருமக்களாலும் பூசாரிகளாலும் அணியப் பட்டது. தெய்வங்களுக்கும் அவை அணியப்பட்டது. முத்துக்குடை, முத்துப்பல்லக்கு முதலியன சிறப்புடையன. முத்து மிகவும் விலை ஏறப் பெற்றது. பிற்காலங்களில் கடவுள் தொண்டர் எனத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்பிய இந்திய நாட்டு மக்கள், முத்துக்குப் பதில் உருத்திராக் கத்தை அணிந்தாராகலாம். இது ஆராய்ச்சிக்குரியது. சுவத்திகம் சுவத்திகம் என்பது ஞாயிற்றின் குறி. இவ் வடையாளம் இலிங்க வணக்கம், பாம்பு வணக்கங்களைப் போல உலகம் முழுமையிலும் வழங்கின. உலகின் பல பாகங்களில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய சுவத்திகம் பொறித்த பொருள்கள் இந்திய நாட்டிலும், உலகின் பல பாகங்களிலும் காணப்பட்டன. புத்த மதத்தினர் ஞாயிற்று வழிபாட்டினராகவே முன் இருந்தார்கள். ஆகவே சுவத்திகத்தை அவர்கள் மதச்சின்னமாகக் கொண்டனர். காஞ்சியிலுள்ள புத்த ஆலயத் தின் அழிபாடுகளில் சிவலிங்கங்கள் பல காணப்பட்டன. புத்ததந்தம் என வைத்து இலங்கை மக்களால் வழிபடப்படுவது புத்தரின் பல்லன்று; சிறிய இலிங்கமே என்றும், புத்தர் கோயில்களில் வைக்கப்படும் முடி, இலிங்கமேயென்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். சுவத்திக அடை யாளத்தின் இன்னொரு வகையே சிலுவைக் குறியாகும். கிறித்து நாதருக்கு முன்பும் சிலுவைக் குறி சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. அது கிறித்து நாதர் சிலுவையில் அறையப்பட்டமையால் தோன்றியதன்று. தேவதாசிகள் தென்னிந்தியக் கோயில்களில் தேவதாசிகளைக் காண்கின்றோம். இவர்களின் கடமைகளும் ஒழுக்கங்களும் எவை என்பதை ஈண்டு விரிக்க வேண்டியதில்லை. இவ்வகைத் தேவதாசிகள் பபிலோன், பாலஸ்தீனம், சிரியா, சின்ன ஆசியா, ஆபிரிக்கா, கிரீஸ், ரோம் முதலிய நாடுகளிலுள்ள கோயில்களிலும் இருந்தார்கள். தேவதாசி வழக்கம் தோன்றியதற்குப் பல காரணங்கள் உண்டு. முன் ஓரிடத்தில் தரைக் கடவுள் தாய்க் கடவுளாக வழிபடப்பட்டது எனக் கூறினோம். அக் கடவுளுக்குப் பெண் பூசாரிகளே பூசை செய்தார்கள். அங்குப் பெண் தொண்டர்களும் வந்து கூடினார்கள். அக் கடவுளுக்குச் சந்ததி உற்பத்திக்குரிய நேர்த்திக் கடன்களால் மகிழ்ச்சி உண்டாகின்றதெனக் கருதப்பட்டது. ஆகவே கோயில்களில் ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் அம் மகிழ்ச்சிக்குரிய செயலை அவ் விடத்தில் நிகழ்த்துவாராயினர். அரசனே கடவுளான போது, ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களில் செய்யப்படும் கிரியைகள், ஓர் அரண்மனையில் அரசனுக்கு அவன் ஏவலாளர் செய்யும் பணிகளாக நடத்தப்பட்டன. அரசனது அரண்மனையில் ஆடலாலும் பாடலாலும் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் பலர் இருந்தனர். இதுபற்றியே தசரதனுக்கும் அறுபதினாயிரம் தேவியர். இன்னும் பழைய நூல்களில் சொல்லப்படும் அரசருக்கும் நூற்றுக்கணக்கான மனைவியர் இருந் தார்கள் எனக் கூறப்படுதல் காண்க. அரசன் நிறைவேற்றும் கிரியை களைக் கடவுளின் சார்பாளர் (பிரதிநிதி)களாகிய குருமாரே நிறைவேற்றி வந்தனர். பின்பு கோயில்கள் வியபிசார விடுதிகளாக மாறின. ஆலயங் களில் குன்றாத் தீ வளர்த்தலும் வழக்காயிருந்தது. மேற்குத் தேசங்களில் அரச குமாரிகளும், உயர்குலப் பெண்களுமே இதற்காக நியமிக்கப் பட்டார்கள். கடவுட்பணி விடை செய்யும் பொருட்டு, ஆலயங்களில் விடப்பட்ட பெண்கள், கூடா ஒழுக்கமுடையவர்களாக மாறியதும் உண்டு. பலி பலியிடும் வழக்கு எவ்வாறு உண்டாயிற்று என்று முன் குறிப்பிட்டுள் ளோம். மனித பலியே தெய்வங்களுக்குப் பிரியமானது என்று மக்கள் கருதினார்கள். மனிதர், மனித ஊன் புசிப்பவர்களாயிருந்த ஒரு காலம் இருந்ததென்பதைப் பற்றி, நாம் வரலாறுகளில் படிக்கின்றோமன்றோ? போரில் சிறை பிடிக்கப்பட்டோர், அடிமைகள், விலைக்கு வாங்கப்பட் டோர், குற்றவாளிகள் என்போர் பெரும்பாலும் தெய்வங்களுக்குப் பலியாக வெட்டப்பட்டனர். அவர்களின் இரத்தம் கலங்களில் ஏந்தி தெய்வச் சிலை மீதும், மக்கள் மீதும் தெளிக்கப்பட்டது. சில சமயங்களில் பலியிடப்பட்டவர்களின் ஊன் புசிக்கப்பட்டது. அவ்வுடல்களை நெருப்பில் இடுதலும், கோயிலின் பக்கத்தே உள்ள மரங்களிற் கட்டித் தூக்குவதும் வழக்கமாயிருந்து வந்தது. சில சமயங்களில் அரசர் தம் பிள்ளைகளைத் தெய்வங்களுக்குப் பலி செலுத்தி இருக்கிறார்கள். இவ்வகைப் பலியைப் பற்றிக் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணலாம். அரசனே தெய்வத்துக்குச் சிறந்த பலி என மக்கள் ஒரு காலத்திற் கருதினார்கள். இவ்வாறு அரசனையே மக்கள் கொன்று பலி செலுத்திய வரலாறுகள் பல சரித்திரங்களில் காணப்படுகின்றன. கள்ளிக்கோட்டை அரசர் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்கொலை புரிய வேண்டு மென்னும் வழக்கு இருந்ததை மேல்நாட்டுச் சரித்திரக்காரர் கூறியிருக் கின்றனர். அரசனுக்குப் பதில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட ஒருவனை, அரசனாகப் பாவித்து பலியிடுவதும் வழக்காக இருந்து வந்தது. இன்னும் மக்கள் அறிவு சிறிது பண்பட்ட போது மனிதனுக்குப் பதில் எருமை, மாடு, ஆடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகள் பலியிடப்பட்டன. உரோமையில் இலக்கிய காலத்திலும் மனிதரைப் பலியிடும் வழக்கம் இருந்தது. பலியிடுவதைப் பற்றியும் ஒரு வகையான தத்துவ ஞானம் உண்டா யிருந்தது. பலரின் பாவத்துக்காக ஒருவனைப் பலியிடுதலே அதுவாகும். இவ்வாறு மக்களின் பாவத்துக்காக ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ அவர்களால் தெரிந்தெடுத்த மக்கள் பலியிடப்பட்டார்கள். கிறித்து நாதர் மக்களின் பாவத்துக்காகச் சிலுவையில் அறையுண்டு இறந்தார் எனப்படுவதும் இவ் வழக்கைப் பற்றியதே. ஒருவனின் பாவத் துக்காக இன்னொருவன் கடவுளைத் தொழுதல் போன்ற வழக்கும், மேற்படி கொள்கையின் நிழலேயாகும். செகந்நாதத்தில் பலர் தேர்ச்சக்கரங்களின் கீழ் பலியாக விழுந்து இறந்தனர். கொண்ட் மக்கள் தரைக் கடவுளின் பொருட்டு மனித பலி செலுத்தி வந்தனர். இவை ஆங்கில அரசாட்சியாரால் நிறுத்தப்பட்டன. புராணங்களில் நரபலியால் தெய்வம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் திருப்தி யுறுகின்றது என்று எழுதப்பட்டுள்ளது. இறந்தவர் பொருட்டும் பலிகள் செலுத்தப்பட்டன. இறந்தவனைத் தீயிலிட்டுக் கொளுத்தும்போது அவன் மனைவி, நாய், அடிமைகள் போன்றவர்களும் கொளுத்தப்பட்டார்கள். இறந்த கணவருடன் மனைவி யையும் பதைக்கப் பதைக்கத் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் (ஆங்கில ஆட்சியினரால் நிறுத்தப்படும் வரை) இந்திய நாட்டில் இருந்துவந்தது. அதற்கு வைதீகர் மந்திரங்களோடு கூடிய கிரியைகளையும் எழுதி வைத்திருந்தார்கள். ஆப்பிரிக்காவில் இறந்தவன் ஒருவனுக்குச் செய்தி அனுப்ப வேண்டி இருந்தால் அச் செய்தியை அடிமை ஒருவன் காதில் சொல்லியபின் அவன் கழுத்துக் கொய்யப்பட்டது. மக்கள் இவ்வாறு தெய்வங்களுக்கு மனிதரையும் விலங்குகள் பறவைகளையும் வெட்டிக் கொன்று பலியிடுவதே, தாம் செய்யத் தகுந்த மேலான கடவுட்பணி என நீண்டகாலம் நம்பி வந்தார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்னும் உணர்ச்சி அவர்கள் உள்ளத்திற் பிறக்க வில்லை. மேற்குத் தேசங்களில் கிறித்துவ மதம் தோன்றிப் பரவிற்று. அக் காலங்களில் பழைய பலியிடும் வழக்கங்கள் சிறிது சிறிதாக நின்று போயின. கிறித்துவ சமயத்துக்குப் பின் முகமதிய சமயம் தோன்றிற்று. அப்பொழுதும் இவ் வழக்கம் மேல் நாடுகளில் நின்று போயிற்று. இந்திய நாட்டில் அறியாமையுடைய மக்களிடையே பலியிடும் வழக்கம் இருந்து வருவதாயிற்று. ஆரியரின் மதத்தில் பலியிடுவதே முக்கிய கொள்கை. பலியிட்டு யாகங்கள் செய்வதால், மனிதன் தேவர் களுக்கு அரசனான பதவியை அடைகின்றான் என்னும் கொள்கை வலிபெற்றிருந்தது. ஆகவே குதிரையாகம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம், நரமேத யாகம் போன்ற பல யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. குருக்களாயிருந்து அவ்வகை யாகங்களைச் செய்வதற்கு ஏற்பட்டோரே பிராமணர் என்னும் குழுவினராவர். மக்களின் அறிவு பண்பட்டது; பாவ புண்ணியங்களைப் பற்றிய அறிவு உண்டாயிற்று. பண்டு தாம் அறியாமையாற் புரிந்து வந்த பலிகளை, அவர்களால் விடமுடியவில்லை. ஆகவே அவர்கள் மாவி னால் மிருகங்களையும் பறவைகளையும் மனிதரையும் செய்து தெய்வங் களுக்குப் பலியிட்டார்கள். மாவினாற் செய்த பணியாரங்களைப் படைத்தார்கள். சிலர் இரத்தத்தின் குறி இல்லாமல் செய்யப்படும் பலியில் திருப்தி உறவில்லை. ஆகவே மிருக பலிக்குப் பதில் பூசினிக்காய் வெட்டப்பட்டது. இரத்தத்துக்குப் பதில் குங்குமம் பூசப்பட்டது. இன்று இடப்பட்டு வரும் பூசினிக்காய்ப் பலி, மிருகபலியின் தேய்வேயாகும். பூசாரிகள் பலமடைதல் பூசாரிகள் எவ்வாறு தோன்றினார்கள் என்று முன் கூறினோம். கோயில்கள் பல தோன்றின. கோயில்களில் புரியும் பணிவிடைகள் பல இருந்தன. ஒருவன் மேலான பூசாரியாக இருந்தான். அவனுக்கு உட் பட்டுப் படிப்படியே தாழ்ந்த பணிகளைச் செய்வதற்குப் பல படியான பூசாரிகள் இருந்தனர். உரோமன் கத்தோலிக்க பூசாரி வரிசையில் இதனைக் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் ஆறுவகைப் பார்ப்பார் எனப் பட்டோரும் இவ்வகையினரே. ஒரு கிராமத்தில் அல்லது ஒரு ஊரில் கோயிலே முக்கியம். கோயிலைச் சூழ்ந்து மக்கள் இருந்தார்கள். கிராமம் அல்லது ஊர், கோயிலில் இருக்கும் கடவுள் சார்பான பெயரைப்பெற்றது. மக்களுக்காகக் கோயில் இருப்பது என்னும் கருத்து மாறுபட்டுக் கோயிலுக்காக மக்கள் இருக்கிறார்கள் என்னும் கொள்கை உண்டா யிற்று. பூசாரி கடவுளின் விருப்பங்களை அறிந்து சொல்லவும், மக்களின் தேவைகளைக் கடவுளுக்கு உணர்த்தவும், வல்லவன் என்று மக்கள் நம்பினர். அதற்கேற்ப அவன் கடவுளின் வாக்கு என வெளிப்பாடு (oracle) சொன்னான். மக்கள் அவனிடம் மிகவும் பயபத்தி உள்ளவர்களாக இருந்தனர். பஞ்சம் பிணி போன்ற காலங்களில் மக்கள் அவனை யோசனை கேட்டார்கள். அவன் தெய்வம் ஆடிக், கடவுளின் எண்ணங் களைத் தெரிவித்தான். சில சமயங்களில் தெய்வம் அரசனையே பலியாகக் கேட்கின்றது என்று அவன் சொன்னான். உடனே மக்கள் அரசனைக் கொன்று பலியிட்டார்கள்.1 மோட்ச நரகங்களின் திறவுகோல் தமது கையில் இருப்பதாகவும், அவர்கள் மக்களை நம்ப வைத்து நடு நடுங்கச் செய்தார்கள். இவர்கள் அரசரையும் அடி வணங்கும்படி செய்யும் வலிமையைப் பெற்றனர். சக்கர வர்த்திகளும் அவன் கால் அடிகளை முத்தமிட்டார்கள்.2 12 ஆம் நூற் றாண்டில் போப்பாண்டவர் அரசருக்காவது விசுப்பாண்டவருக்காவது ஒரு அதிகாரமும் இல்லை என்றும், அவர்கள் பெற்றுள்ள அதிகாரம் தன்னிடத்தினின்று கிடைத்ததாகுமென்றும், தாம் உலகத்துக்குத் தலைவன் என்றும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். பூசாரிகள் மந்திரவாதிகள் பொதுமக்கள் உயர்ந்த அறிவுக்குக் கட்டுப்படமாட்டார்கள்; மருந்து, மாந்திரீகம் போன்ற வித்தைகளுக்கே அடிமைப்படுவார்கள். இதனை முற்காலப் பூசாரி அறியாதவனல்லன். அவன் சில தந்திரங் களைக் கையாண்டு மக்களை வசப்படுத்தினான். அவன் மற்றவர்கள் விளங்கிக் கொள்ளாத வகையில் சில கிரியைகளைச் செய்தான். மற்றவர்கள் விளங்க மாட்டாத சில சொற்றொடர்களை மந்திரமென முணுமுணுத்தான். அவன் செய்யும் கிரியைகளிலும், சொல்லும் மந்திரங் களிலும் பெரிய வல்லமை இருப்பதாக மக்கள் நம்பினார்கள், இன்னும் நம்பி வருகிறார்கள். இன்னும் பூசாரி நோய்களுக்கு நூல் கட்டுதல், குழை அடித்து மந்திரம் (பாடம்) போடுதல், தண்ணீரில் மந்திரம் ஓதிக் கொடுத்தல், தெய்வம் ஏறி ஆடி வெளிப்பாடு கூறுதல் போன்றவை, பழமை தொட்டுப் பூசாரிகள் கையாண்டு வரும் தந்திரங்களேயாகும். சமய சம்பந்தமானவையும், கடவுள் அருளால் சொல்லப்பட்டன வென்று அவர்களால் எழுதப்பட்டனவுமான நூல்களை மற்றவர்கள் அறியாவகை மறைத்து வைத்தார்கள், பழைய கிறித்தவர்கள், ஆரியர், தமிழர், எகிப்தியர் எல்லோரிடையும் இவ் வழக்கு இருந்தது. குருமார்கள், மற்றவர்களுக்கு விளங்காத ஒரு மொழியை வைத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறு இல்லாவிடில் பொதுமக்களை ஏமாற்றுவது கடினமாகும். தொகுப்புரை இதுவரையும் கூறியவற்றால், முற்காலத்துத் தொடங்கி நடை பெற்ற சமயம் என்ன என்று நமக்கு விளங்குகின்றது. இறந்தவர்களின் ஆவி வணக்கத்தில் தொடங்கிய சமயம், பூசாரிகளின் ஆட்சி வரையில் படிப்படியே வளர்ச்சி அடைந்ததை நாம் நன்கு அறிந்துகொண்டோம். பூசாரிகளின் அதிகாரம் மேல் ஓங்கியிருந்த காலத்தில், அவர்கள் தமது வருவாயை நாடிப் பல மூடப் பழக்கவழக்கங்களை மக்களிடையே தோற்றுவித்தனர். அப் பழக்கங்களை நிலைநாட்டும் பொருட்டுக் கடவுள் சொன்னதாகப் பல கற்பனை நூல்களை எழுதி, மக்களிடையே பரவச் செய்தனர். மறுமையில் தனது நிலைமை என்ன ஆகுமோ என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த மக்கள், மறுமையில் தமக்கு நேரக்கூடிய துன்பங்களைத் தாண்டுவதற்குத் தெப்பம் கிடைத்ததென நினைத்து அப்பொய் நூல்களிற் சொல்லப்பட்டவாறு ஒழுகத் தலைப்பட்டார்கள். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அம் மூடப் பழக்கங்களை மக்கள் சடுதியில் நிறுத்துவது அரிது. மாசிமகத் தீர்த்தம் என்று மக்கள் கோடிக்கணக்கில் கும்பலாய்க் கூடிக் குளத்தில் குளிக்கின்றனர். இதற்குக் காரணம் குறிக்கப்பட்ட ஒரு குளத்தில், குறிக்கப்பட்ட ஒரு நாளில் குளித்தால் மனிதன் புரிந்த பாவங்கள் கழியும் எனப் பூசாரிகள் எழுதி வைத்த கதையே ஆகும். மக்கள் எல்லோரும் பாவம் செய்பவர்களே. பாவம் செய்யும் மூடமக்கள் அதனை எளிதில் கழுவிவிடலாமெனத் திரள்கின்றனர். சுகாதாரக் குறைவினால் வாந்திபேதி போன்ற தொத்து நோய் கண்டு உடனே இறக்கின்றனர். பூசாரிக்குப் பணம் கொடுத்துக் கடவுளுக்குக் குடமுழுக்காட்டுதல், ஆயிரந் திருநாமங்களைச் சொல்லச் செய்தல் போல்வன, பூசாரியின் “உண்டியலை” நிரப்பும்படி செய்யப் பட்டுள்ள சூழ்ச்சிகளே அன்றிப் பிறவல்ல. திருப்பதிக்குக் குடை கொண்டு போதல் போன்ற வழக்கமும் இவ் வகையினதே. உண்மையாக ஈடேறும் வழியை மக்கள் அறிந்துகொள்ளாது, முட்டாள் தனமாக வீதி வீதியாக அலைந்து அல்லோல கல்லோலப் படுவது மிக மிக இரங்கத் தக்கது. மக்கட் சமூகம் ஈடேறுவதற்கு இன்று அறிஞர் செய்யத்தக்கது பூசாரி ஆட்சியை ஒழிப்பதும், மக்கள் சமயம் என்னும் பெயரால் விழலுக்கிறைத்த நீரை ஒப்ப, பொருளையும் காலத்தையும் விரயம் செய்வதையும் தடுப்பதுமேயாகும். இன்றைய சமயத்தின் முடிவு எத்தத்துவக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொள்ளாது. சோம்பேறிகளாகிய பூசாரிகளைக் கொழுக்க வைப்பதேயாகும். சமய சீர்திருத்தம் மேற்கு உலகில் சமயம் மிகவும் சீரழிந்திருந்தது. சமயம் என்னும் பெயரால் பல கொடுமைகள் நடந்தன; கொலைகள் அதிகரித்தன; வியபிசாரங்கள் பெருகின. பூசாரி ஆட்சி உச்சநிலை அடைந்திருந்தது. அக்காலத்திலேயே பாலஸ்தீன் நாட்டில் கிறித்துநாதர் தோன்றினார். அவர் தெய்வம் ஒன்று என்னும் கொள்கையை உபதேசித்தார்; “தன்னைப் போல் பிறரை நேசி” என மக்களுக்கு நல்லறிவு கொளுத்தினார். கிறித்துநாதரின் நல்லுபதேசங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தன. பலர் அவருக்கு மாணாக்கரானார்கள். நல்லறிவு பெற ஆவல்கொண்ட மக்கள் அவரைச் சூழ்ந்தார்கள். குருமார் இதனைக் கண்டு பொறாராயினர். அவரை எவ்வகையிலேனும் கொன்றுவிடக் கருதினார்கள்; அவர், தானே அரசன் என மக்களுக்குப் போதித்தார் என, நீதிபதியின் முன் குற்றஞ்சாட்டினர். அவன் அவரை அவமானப்படுத்திச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி கட்டளை இட்டான். அக் காலத்தில் மத சீர்த்திருத்தஞ் செய்ய எழுவோரின் முடிவு இவ்வாறாக இருந்தது. பூசாரிகள், அல்லது குருமார் தமது அதிகாரத்துக்குப் பங்கம் விளையாத வாறு மேற்கூறப்பட்டது போன்ற அடக்குமுறைச் செயல்களைக் கை யாண்டு வந்தனர். போப்பு ஆட்சியில் இவ்வகையான பல கொடுமைகள் நடந்தன. அவைகள் வரலாறுகளிற் காணப்படுகின்றன. மத்திய காலத் தில் உயர்ந்த கல்வி அறிவுடைய ஒரு பிரபு, போப்பு ஆட்சிக்கு மாறாக நூல் வெளியிட்டதன் விளைவாக, காது மூக்கு முதலிய உறுப்புக்கள் அறுக்கப்பட்டும், சவுக்கால் அடிக்கப்பட்டும் சிறையிலிட்டும் சித்திர வதை செய்யப்பட்ட வரலாறு, நூல்களிற் காணப்படுகின்றது. 1கிறித்து நாதர் பிற்கால மக்கள்களால் வழிபடப்பட்டார். கிறித்து மதம் போப் ஆட்சிக்கு உட்பட்டுப் பழைய பூசாரி ஆட்சியின் கடுமையை அடைந்த போது, மார்டின் லூதர் என்னும் பேரறிஞர் தோன்றி சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். மார்டின் லூதரின் சீர்திருத்த முறைகளைப் பலர் பின்பற்றினர். அவர்கள் போப்பு ஆட்சியினின்றும் நழுவி இப் புதிய மதத்தில் சேர்ந்தனர். கிறித்துநாதருக்குப் பின் முகமது நபி என்னும் ஒரு பெரியார் அராபிய நாட்டில் தோன்றினார். அக்காலத்தில் பூசாரி ஆட்சியும் சிறு தெய்வ வழிபாடுகளும், பெரிதும் தலையெடுத்திருந்தன. அப்பொழுது ‘நபி கடவுள் ஒருவரே உளர்; அவர் அல்லா. விக்கிரக வழிபாடுகள் அழிக்கத் தக்கன, என்று மக்களிடையே போதித்தார். அதனால் கோயில்களில் வருவாய் குறையத் தொடங்கிற்று. பூசாரிகள் நபியைக் கொல்ல முயன்றார்கள். நபி சிறந்த போர்வீரன். அவர் பலரைத் தமக்குப் பக்க பலமாகத் திரட்டிக் கொண்டு படை பலத்தினால் நாட்டையே தம் வசப்படுத்திக் கொண்டு தனது கொள்கைகளை நிலைநாட்டினார். கிறித்து மதம், முகமது மதம் என்பவை மிகப் பரவினமையால், மக்க ளிடையே சமயம் என்னும் பெயருடன் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்கள் பல மறைந்தன. இந்திய நாட்டை ஆரியர் அடைந்தபோது, விலங்குகளைக் கொன்று இயற்றப்படும் யாகங்களால் மாத்திரம் மக்கள் ஈடேறலாம் என்னும் பொல்லாத கொள்கை மக்களிடையே பரவிற்று. எண்ணிறந்த விலங்குகள் யாகம் என்னும் பெயரினால் கொல்லப்பட்டன. அப் பொழுது புத்தர் என்னும் பெரியவர் வடநாட்டில் தோன்றினார். அவர் ஆரியரின் பொல்லாத கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் உண்மை உபதேசங்களைக் கேட்ட மக்கள் அவரைப் பின்பற்றினர். இவர் அரச குடும்பத்தவராய் இருந்தார். இவருக்குப் பொதுமக்களின் ஆதரவு பெரிதாக இருந்தது. ஆகவே கிறித்து நாதரைக் கொன்றது போலப் பூசாரிமாரால் புத்தரையும் கொல்ல முடியவில்லை. புத்தமதம் உலகம் எங்கும் பரவிற்று. மக்கள் புத்தரையே கடவுளாக வணங்கத் தலைப்பட் டார்கள். பிற்காலத்தில் தோன்றிய சைவ சமய குரவர்கள், ஒரு தெய்வ வழிபாட்டையே வற்புறுத்தினார்கள். இன்று தமிழருடைய சமயம் உண்மைப் போக்கினின்றும் விலகியுள்ளது. பருப்பை எறித்துவிட்டுக் கோதைக் கைப்பற்றியவனைப் போல மக்கள் உண்மை வழியை நாடாது வீண் ஆரவாரங்களையே பொருளெனக் கருதிச் சீரழிகின்றனர். இன்று பெரும் புரட்சி தோன்றிச் சமயத்தில் சீர்திருத்தம் உண்டாக்க வேண்டியது அவசியமாகும். தத்துவஞானம் உதயமாதல் மக்களின் அறிவு காலத்துக்குக் காலம் பண்பட்டுவந்தது, ஆயினும் பெரும்பாலோரின் போக்கு பழைய போக்கிலேயே சென்றது. சிறுபான்மை யோர் மனஅமைதியுடன் இருந்தனர். அவர்கள் சமயம் என்னும் பெயரால் உலகில் நடப்பவைகளை நோக்கினர். அவைகளில் உயர்ந்த கொள்கைகள் எவையும் இருப்பதைக் காணாராயினர். ஆகவே உண்மை காணுவதில் அவர்களின் உள்ளம் ஆழ்ந்து சென்றது. மனிதனின் மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. அதனை ஓர் இடத்தில் நிறுத்தினால் பெரிய ஆற்றல் உண்டாகின்றது. மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் மனோவசியம் (ஹிப்நாட்டிசிம்) அறிதுயில் (மாக்நட்டிசிம்) முதலிய வித்தைகளிற் பயின்றோர், நாம் வியக்கத்தக்க அருஞ்செயல்களைச் செய்து காட்டுகின்றனரன்றோ? மனதை ஒரு வழிப்படுத்திய மக்கள், தம்மைப் பற்றியும் உலகைப்பற்றியும் இவ்விரண்டையும் இயக்கும் கடவுளைப் பற்றியும் உண்மைகளைக் காண முயன்று வந்தார்கள். இவ் வுண்மைகளை ஆரவாரங்களாற் காணமுடியாது. மொகஞ்சதரோவில் யோகத்தில் வீற்றிருக்கும் கடவுள் வடிவுடைய முத்திரை ஒன்று காணப்படு கின்றது. இதனால் மிக முற்காலத்தில் அறிஞர் சிலர், மனத்தை ஒருவழிப் படுத்தப் பழகி உண்மைகளை அறிய முயன்று வந்தார்கள் எனத் தெரிகின்றது. அவ்வாறு மனதை ஒருவழிப்படுத்திய அறிஞர் உயிர், உலகம், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்தார்கள். தாம் அறிந்தவற்றைப் பக்குவம் வாய்ந்த சிலருக்குக் கூறினார்கள். இவ்வுண் மைகள் இவ்வாறு நீண்டகாலம் குரு மாணாக்க முறையில் வந்தன. அவர்கள் பொது மக்கள் சமயம் எனக்கொண்டு உழலும் புறவிடயங் களில் மனம் பற்றாதிருந்தனர். இவ்வாறு உலகில் இருவகைச் சமயங்கள் நிலவின. முன்னதைப் புறச்சமயம் என்று கூறலாம். அதனைத் தேங்காயைச் சுற்றி மூடியுள்ள தோலுக்கு ஒப்பிடலாம். பிந்தியதைத் தோலின்கீழும், வயிரமான ஓட்டின் கீழும் உள்ள அதன் பருப்புக்கு ஒப்பிடலாம். மனம், வளர்ச்சி அடைவதினாலே மக்கள் உயர்நிலை எய்துதல் கூடும். மூடப் பழக்க வழக்கங்களினால் மனிதன் தாழ்நிலை எய்துவான். நமது நாட்டில் மக்கள் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் எல்லாத் துறைகளிலும் தாழ்ந்து, உலக மக்களிலேயே தாழ்ந்த நிலையினர் என்னும்படி நாள் வீதம் ஒடுங்கி வருகின்றனர். தத்துவ ஞானங்களோடு கூடிய சமயம், மேற்கு உலகத்தவரால் அறியப்படாமல் இருந்தது. கிரேக்க நாட்டிலே கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் பிதாகாரஸ் என்னும் அறிஞர் இருந்தார். அவர் உயிர், உலகம், கடவுள் போன்ற உண்மைகளை விளக்கும் ஞானத்தை முதன் முதல் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார். இவர் இந்திய நாட்டுக்கு யாத்திரை செய்து கபிலரின் சாங்கிய மதக்கொள்கைகளைப் பயின்று சென்றார் என்று கோல்புரூக் (Colebrooke) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். கிரேக்கரின் தத்துவ ஞானக் கொள்கைகள் பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் சித்தாந்த சாத்திர நூற்பொருள்களை ஒத்தன. தமிழரின் சமயம் இதுவரையில் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ள சமயக்கொள்கைகளைக் கூறிவந்தோம். முற்காலச் சமயம் என்பது மக்களின் பலவகைப்பட்ட அறிவு வளர்ச்சிப் பருவங்களில் தோன்றி வழங்கிய பழக்க வழக்கங்களின் தொகுதிகளாகக் காணப்படுகின்றன. இன்று கல்வி அறிவில்லாத பொதுமக்களின் சமயம் இதுவே. கல்வி யறிவுள்ளவர்களில் பலரும் இதுவே உண்மையான சமயம் எனக் கருதி வருகின்றனர். “பழக்கங் கொடிதுகாண்” என ஒரு தத்துவஞானி கூறியுள் ளார். சித்தாந்த நூல்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கொள்கையுடைய சமயம் காணப்படவில்லை. மொகஞ்சதரோ மக்களின் சமயம் மொகஞ்சதரோ மக்களின் சமயம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு பழைய சிந்துவெளித் தமிழரின் சமயம் எவ் வகையினது என்று நம்மால் அறியக்கூடியதாய் இருக்கின்றது. ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சதரோச் சமயத்தைப்பற்றி ஆராய்ந்து கூறி யிருப்பதை இங்குத் தருகின்றோம்.1 மொகஞ்சதரோ முத்திரை ஒன்றில், “இறுவன் கொம்மின்னனீர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குக் கொம்பு (வாத்தியம்) ஊதுகின்ற மீனவர் என்பது அதன் பொருள். இன்னொரு முத்திரையில் “கோயில் எல்லாக் கடவுள் அது” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலிலுள்ள எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுள் என்பது அதன் பொருள். இரண்டு பட்டையங்கள் நாலூரில் இருக்கும் விடுகண் என்னும் கடவுளைப்பற்றிக் கூறுகின்றன, கடவுளருக்கு கண்ணிமை இல்லை என வழங்கும் இந்திய மக்களின் ஐதீகக்தோடு இது பெரிதும் ஒத்திருக்கின்றது. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றமையால், கண்ணை மூடமாட்டார்கள் என்பதே கண்ணை இமையாதவர்கள் என்பதன் பொருளாகும். ஒரு முத்திரையில் மூன்று முகங்கள் உடையதும், யோகத்தில் அமர்ந் திருப்பதும் ஆகிய ஓர் கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சூழ்ந்து யானை, காண்டாமிருகம், புலி, எருது முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. சேர்யோன் மார்சல் என்பார் அவ்வடி வம் சிவனைப் பசுபதி என்று காட்டும் பொருட்டு அமைக்கப்பட்ட தென்று கூறியுள்ளார். ஓர் இடத்தில் கடவுளைக் குறிக்க எண்மை என்னும் பெயர் காணப்படுகின்றது. ஒரு பட்டையம் கடவுளின் மூன்று கண்களைப் பற்றிக் கூறுகின்றது. மூன்று பட்டையங்கள் கடவுளின் ஓர் கண்ணைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிட்டுள்ள “ஓர் கண்” கடவுளின் மூன்றாவது கண்ணையாகும். கடவுள் பேராண் என்னும் பெயராலும் வழிபடப்பட்டார். பேராண் என்பதே பெருமான் என்று ஆயிற்றுப்போலும். கடவுள் தாண்டவம் செய்பவர் என்னும் கருத்தும், அக்கால மக்களிடையே பரவி இருந்தது. இது “தாண்டவன் இர் நால் மரம்” என்னும் பட்டையத்தால் நன்கு விளங்குகின்றது. கடவுள் சிவலிங்க வடிவிலும் வழிபடப்பட்டாரென்பது அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் கிடைத்த அவ்வகைப் பொருள்கள் பலவற்றால் நன்கு விளங்குகின்றது. இலிங்கம் உயரத்தில் உள்ள சூரியனாகக் கருதப்பட்டது என்பதைக் குறிக்கும் பட்டையங்களும் காணப்படுகின்றன. சுமேரிய மக்கள் ஆண் அம்மா என்லில் என்னும் மும்மூர்த்திகளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளின் வடிவங்கள் பல, மொகஞ்சொதரோ அரப்பா என்னும் இடங்களிற் காணப்பட்டன. அரப்பாப் பட்டையங் களில், அம்மனை மீன் கண்ணி எனக் குறிக்கின்றன. “உயர் எல்தேர் ஓர் அம்மன்” எனப் பொறிக்கப்பட்ட பட்டையத்திற் காணப்படும் கடவுள் வடிவின், பாதி (இடப்புறம்) ஆண் வடிவாகவும், பாதி (வலப் புறம்) பெண் வடிவாகவும் காணப்படுகின்றன. இவ்வகையான கடவுள் சுமேரியாவிலும் அம்மா (amma) என்னும் பெயருடன் காணப்படுகின்றது. இக் கடவுளைச் சைவர் அர்த்தநாரீசுரர் எனக் கூறுவர். ஒரு சாசனத்தில் ஓரிடத்தில் மாத்திரம் கடவுள் பாம்பு வடிவினராகக் கூறப்பட்டுள்ளார். “மீனவர் மூன்று கண்ணுள்ள பாம்பைத் தியானிக்கின் றார்கள்” என ஒரு பட்டையம் கூறுகின்றது. இதைப்போலவே இன் னொரு பட்டையம், கைக்கோடரி (மழு) யைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மறியற் படுத்தப்பட்ட மீனவர் பெரிய கடவுளின் மூன்று கண்களைத் தியானிக்கின்றார்கள் என ஒரு பட்டையம் கூறுகின்றது. மொகஞ்சதரோ மக்கள் நாட்டுக்கு அரசன் கடவுள் என்றும், அவர் சார்பில் அரசன் ஆள்கின்றான் என்றும் நம்பினார்கள். மொகஞ் சதரோ நண்டூர் எனப்பட்டது அரசன் நண்டூர் உழவன் அல்லது நண்டில் உழவன் எனப்பட்டான். அரசன் பூசாரியாகவும் இருந்தான். இது, “மீனனீர் மாறு அடு ஐயன் செறிதல் தல் எல்லா” என்னும் பட்டையத் தால் விளங்குகின்றது. இதன் பொருள் “மீனவரின் பகைக் குரியவன் சிறைப்படுத்தப்பட்ட அரசனாகிய பூசாரி” என்பதாகும். ஞாயிற்றின் கோயில்கள் சதுரவடிவாகக் காணப்படுகின்றன. அதற்கு முன்னால் திறந்த தலைவாயில் இருந்தது. ஞாயிற்றைக் குறிக்கும் வட்ட வடிவம் கட்டிலின் மீது வைக்கப்பட்டிருக்கிறது. இங்குக் கூறப்பட்டவைகளால் 5000 ஆண்டுகளுக்கு முன்னும், மக்களின் வழிபாடு இன்றைய வழிபாட்டை ஒத்திருந்ததென்றே தெரி கின்றது. அக் காலத்திலேயே மக்கள் மனத்தை ஒருவழிப்படுத்திச் செய்யப் படுவதாகிய யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். அசுரர் என ஆரியரால் வழங்கப்பட்ட மக்கள், சிவனை நோக்கிக் கடிய தவங்களைப் புரிந்து பெரிய வரங்களைப் பெற்றார்கள் எனப் புராணங்களில் கூறப்படும் பழங்கதைகள், தமிழர் மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் யோகத்தினால் பெரிய ஆற்றலைப் பெற்று விளங்கினார்கள் என்னும் உண்மையை விளக்குவனவே. கிறிஸ்துநாதர், புத்தர், மகாவீரர், முகமது முதலியோர் தனிமையிலிருந்து சிந்தையை ஒடுக்கித் தவஞ் செய்தமையினாலேயே ஞானத்தைப் பெற்று, மற்றவர்கள் ஈடேறும் வழியைக் காட்டினார்கள் என உலகம் நம்பிவருகின்றது. 1சங்க காலத்தில் தமிழர் வழிபாடு சங்க காலம் என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன், சங்க இலக்கியங்களில் தமிழர் வழிபாடு எவ்வாறு இருந்ததென்று நன்கு கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவரவர் வாழும் இடங்களுக்கேற்றவாறிருந்தது. அதற்கேற்பவே அவர்களின் வழிபாடுகளும் இருந்தன. சங்க கால நூல்கள் நாட்டை, மலை, காடு, வயல், கடற்கரை, மணல் வெளி என ஐவகையாகக் கூறுகின்றன. ஒவ்வொரு நிலத்தும் வாழும் மக்கள், உணவு தேடும் பொருட்டுக் கொண்ட தொழில்கள் வெவ்வேறு வகையின. அவைகளுக்கேற்ப அவர்கள் வாழ்க்கையும் இருந்தது. முருக வணக்கம் மலை நாட்டில் வாழ்ந்த மக்கள் முருகக்கடவுளைத் தமது குல தெய்வமாகக் கொண்டிருந்தனர். முருக வணக்கம் என்பது ஞாயிற்று வணக்கத்தின் இன்னொருவகை. காடுகிழாள் அல்லது துர்க்கையே முற்காலத்தில் போர்க் கடவுளாக இருந்தாள். பின்பு முருகன் போர்க் கடவுளாகக் கொள்ளப்பட்டார். கடலிடத்தே காலையிற்றோன்றும் இளஞாயிறு, மயில்மீது எழும் இளங் கடவுளாகக் கொள்ளப்பட்டது. பாலஸ்தின் நாட்டு மக்களும் ஞாயிற்றை முதிய பகல் (old baal) என்றும் இளைய பகல் (young baal) என இருவகையில் வழிபட்டார்கள். இவ்விளம் பகலையே கிரேக்கர் “மார்ஸ்” என்னும் போர்க் கடவுளாகக் கொண்டனர். மலைகளில் வாழும் மக்கள் முருகனின் வடிவாக வேலை நட்டும், கடப்ப மரத்தை அலங்கரித்தும், மறியறித்துப் பலி தூவி வழிபட்டார்கள். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் ஆலயங்களில் மக்கள் பூவும் புகையும் கையுறைகளும் கொடுத்துத் தாம் எண்ணும் எண்ணங்கள் பலிக்கவேண்டுமென முருகக் கடவுளை நினைந்து வழி பட்டனர். ஆலயங்களில் பெரிய விழாக்கள் நடைபெற்றன. திருமால் வணக்கம் முல்லை நிலம் அல்லது காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த மக்கள் திருமாலை வழிபட்டனர். மால் ஞாயிற்றுக் கடவுளின் இன்னொருவகை. மால் என்பது பெரிய எல் (மா+எல்) என்னும் பொருள் தரும் பெயர். எல் என்பது அல் ஆயிற்று. இக் கடவுள் முன்பு தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டதாகவும், பின்பு தந்தைக் கடவுளாகக் கொள்ளப்பட்ட தென்றும் கருத இடமுண்டு. “அரியலாற் றேவியில்லை ஐயாறனார்க்கே” எனத் தேவாரத்தில் வருதலும் காண்க. பாரதப் போருக்குப் பின் கிருட்டிண வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்றாகக் கொள்ளப்பட லாயின. திருமாலின் கையிலிருக்கும் சக்கரம் ஞாயிற்றைக் குறிப்பது. உலகை மூவடிகளால் அளந்தார் எனச் சொல்லப்படுவதிலுள்ள திருமால் ஞாயிறு. அவரின் மூன்று அடிகள், உதயம், உச்சி, சாய்வு என்னும் மூன்று இடங்களில் செல்லும் செலவுகள் ஆகும். இவ்வாறே திருமால் மூவடிக ளால் உலகை அளந்தார் என்னும் கதைக்குப் பொருள் உரைக்கப்படு கின்றது. முல்லை நிலத்து ஆயர், திருமாலுக்குப் பாற்பொங்கல் பொங்கிப் படைத்து வழிபடுவர், இடைச்சியர் கைகோர்த்து நின்று குரவைக் கூத்தாடுவர். திருமாலுக்கு உயிர்ப் பலிகள் இடப்பட்டதாகச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ‘திருவனந்தபுரத்திலும், திருவெஃகாவி லும் திருமால் கோயில்கள் மிகச் சிறப்புற்று விளங்கின. திருவனந்தபுரத்தி லுள்ள திருமால் கோயிலில் மக்கள் சென்று வழிபடும் இயல்பு பதிற்றுப் பத்து என்னும் நூலிற் காணப்படுகின்றது. தம் விண் என்பது விஷ்ணு வாயிற்று என ஆராய்ச்சியாளர் அறைவர். வேந்தன் வணக்கம் மருதம் அல்லது வயல் சார்ந்த இடங்களில் வாழ்ந்தோர், இந்திரனை வழிபட்டார்கள். இந்திரன் என்பது இறைவன் என்பதன் திரிபாகலாம். முற்கால மக்கள் மழை பெய்தற்கும், உலகம் செழிப்பதற்கும் அரசனே காரணம் எனக் கருதினார்கள். ஆகவே அவர்கள் அரசனையே தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். உலக வரலாற்றில் இது புதுமை யன்று. முன்னோரிடத்தில் அரச வணக்கம் தோன்றியதற்குப் பிறிதோர் காரணமும் கூறினோம். அரசனால் மழை பெய்கின்றது என்னும் கருத்தைக் கொண்டே, இந்திரன் முகிலை வாகனமாக உடையவன் என்னும் ஐதீகம் உண்டாயித்தல் வேண்டும். இந்திய நாட்டை அடைந்த ஆரிய மக்களும் தாம் வந்தடைந்த நாட்டில் மக்கள் இறைவனை வழிபடுதலைக் கண்டு தாமும் அவ்வாறு செய்தனராகலாம். அவர்கள் இறைவனையே இந்திரன் எனத் திரித்தும் வழங்கினார்களாகலாம். பிற்காலத்தில் இத் தெய்வம் திக்குப்பாலகரில் ஒன்றாகக் கொள்ளப் பட்டது. வயலை அடுத்தே பெரிய பட்டினங்களும் அரசன் தலைநகரும் இருந்தன. விதைப்புக் காலத் தொடக்கத்திலும், அறுப்புக் காலத்தின் பின்பும், இந்திரனுக்குப் பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. அக் காலங் களில் ஆலயத்தில் ஆடல் பாடல் போன்ற பலவகைப் பொழுது போக்குகள் நடைபெற்றன. இந்திரனின் வடிவம் இரும்புத் தண்டா யுதத்தைப் பிடித்து நிற்பவனாக அமைக்கப்பட்டிருந்தது. கடற்கரைகளில் வாழ்ந்தவர்களின் குல தெய்வம் வருணன். வருணன் அசுரன் என வடமொழி வேதங்களில் கூறப்படுவதால், அக் கடவுள் தமிழர் கடவுளே என ஆராய்ச்சியாளர் முடிவு செய்திருக்கின்ற னர். தமிழரின் வருணன் என்னும் கடவுளையே ஆரியமக்களும் வழி பட்டனர். வருணன் ஆதித்தருள் ஒருவன் எனப்படுகின்றமையால், ஞாயிற்றைக் குறிக்கும் அருணனே வருணனாயிற்று எனக் கருத இட முண்டு. வருணனுக்குப் பெரிய கோயில்கள் இருந்தனவென்று தெரிய வில்லை. கடற்கரைகளில் வாழும் மீன் பிடிப்போர், பூரணைக் காலங் களில் தாழைகளின் கீழ் சுறாக் கொம்புகளை நட்டு மலர்களைத் தூவி வருணனை வழிபட்டார்கள். காளி வணக்கம் பாலை நிலங்கள் அல்லது வெய்யிலால் புல் பூண்டுகள் கரிந்து போன காட்டு, மலை ஒதுக்குகளில் வேட்டையாடி வாழும் பிற்போக் குடைய மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் உயிர்ப் பலியிட்டுக் காளியை வழிபட்டார்கள். இக் காளி வழிபாட்டைப் பற்றிப் பரணி நூல்கள் நன்கு விரித்துக் கூறுகின்றன. கிருட்டிண, பலதேவ வழிபாடுகளும் மருத நிலங்களிலும் முல்லை நிலங்களிலும் இருந்துவந்தன. இன்னும் வீர, வணக்கங்களும் பல சிறு தெய்வ வணக்கங்களும் இருந்து வந்தன. சிவ வணக்கம் தொல்காப்பியத்தில் முற்கூறிய ஐம்பெருந் தெய்வங்களின் வழி பாடுகளே கூறப்படுகின்றன. சிவ வழிபாடு கூறப்படவில்லை. ஆதலின் தொல்காப்பியர் காலத்தில் சிவவழிபாடு தோன்றவில்லை எனச் சிலர் கூறுவர். தொல்காப்பிய காலம் கி.மு. 350 வரையில் என்று கூறியுள் ளோம். அதற்கு மிக முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு தோன்றி யிருந்தது. ஐந்து நிலங்களில் வாழும் மக்களும் தத்தம் குல தெய்வங் களாகக் கொண்டு வழிபட்ட தெய்வங்களைப் பற்றியே தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் எல்லா மக்களும் சிவனையே குல தெய்வங் களுக்கும் மேலான பெருந் தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். இது தமிழ் நாட்டவர் மாத்திரம் கொண்ட முறையன்று; உலக மக்கள் எல்லோரும் கொண்ட முறையாகும். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பனரே கோயிலை மேற்பார்த்தனர். அக் காலத்தில் பார்ப்பனர் பிராமண சமயத்தைக் கைக் கொள்ளவில்லை. தொல்காப்பியத்தில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனக் கூறப்பட்டது. கோயிற் பணிவிடைகளைப் பார்க்கும் உயர்ந்த பார்ப்பான் முதல், படிப்படியே தாழ்ந்த பார்ப்பனரேயாகும். பார்ப்பனர் பிராமண மதத்தைக் கைக் கொண்டபோது ஆலயங்களில் ஆரியம் பாடினர்; அதனை வெறுத்துத் தமிழ் மக்கள் கண்டித்திருக்கின்றனர். இன்று ஆலயங்களில் பிராமணப் பார்ப்பான் ஆரியம் ஓதிக்கொண்டு வெளியே நிற்கும் பண்டாரத்தைத் தமிழ் பாடச் செய்கின்றான். இது தமிழைப் பெரிதும் இழிவு படுத்துவதாகும். உண்மை ஞானம் மக்களில் பெரும்பாலோர் பழமை தொட்டு வருகின்ற சில பழக்க வழக்கங்களுக்குச் சமயம் என்னும் பெயர் கொடுத்து வழங்கினர். மிகப் பழமை தொட்டே உயிர், உலகம், இறை என்னும் முப்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து, உயிர்கள் உயர் நிலை அடையும் உயர்ந்த வழி களைக் கைக்கொண்டு ஒழுகும் மக்களும் இருந்தார்கள். இவர்கள் அறிந்த உண்மைகள் ஏட்டில் எழுதி வைக்கப்படவில்லை. இவ் வுண்மைகள் ஆசிரிய மாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. இவ்வுண்மை ஞானங்களை அறிந்திருந்தோர் பூசாரிகளல்லர். உண்மை ஞானத்தை உபதேசிப்பவர்களுக்கு இட்டு வழங்கப்பட்ட “குரு” என்னும் பெயர், பிற் காலத்தில் பூசாரிகளுக்குத் தவறுதலாக வழங்கப்படலாயிற்று. பூசாரிகள் குருமார் அல்லர். இவ் வுண்மை ஞானத்தைப்பற்றி இந்திய நாட்டை அடைந்த ஆரியர் அறிந்திருக்கவில்லை. ஆரியர், தமிழர்களுக்கிடையே கலப்பு உண்டாகி, இரு மக்களும் ஒன்றுபோற் கலந்த காலத்தில், வேள்வி செய்வதே சமயத்தின் உயர்ந்தபடி எனக் கருதியிருந்த ஆரிய மக்கள், தமிழ் மக்களிடையே உயர்ந்த ஞானம் வழங்குவதாகக் கேள்வியுற்று, அதனை அறிவதற்குப் பலவாறு முயன்று வந்தனர். வேள்விகளைச் செய்து கொண்டிருந்த பிராமணரிற் பலர், தாம் செய்யும் வேள்விகள் பயன் விளைப்பனவல்ல என்று நன்கு உணர்ந்தனர். அவர்கள் உயிரை உயர் நிலைப்படுத்தும் உண்மை ஞானங்களை அறியும் தாகத்தினால் உந்தப் பட்டு, அதனைப் பெறும் மார்க்கம் தேடி அலைந்தார்கள். உபநிடதங்கள் அவ்வாறு அலைந்தவர்கள் தமிழ் அரச மரபினர் பாதங்களின் கீழ் மாணாக்கராயிருந்து, உண்மை ஞானங்களைக் கற்றுணர்ந்தார்கள். யாக்ஞவல்கி என்னும் பிராமணர் விதேக நாட்டரசனாகிய சனகனிடத் தில் உண்மை ஞானத்தைக் கேட்டறிந்த வரலாறு அறியப்படுகின்றது. ஆரிய வேதங்களை எந்த வருணத்துப் பெண்களாவது சூத்திரராவது படிக்கவோ கேட்கவோ கூடாது; பிராமணன் மாத்திரம் ஆசானாக இருந்து மூன்று வருணத்தவர்களுக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என ஆரியரின் நீதி நூல்கள் வற்புறுத்துகின்றன. அரச வகுப்பினரும், பெண் களும், அரச வகுப்பினரல்லாதாரும் உபநிடத ஞானங்களை அறிந்திருந் தனர். இதனால் உபநிடதங்கள் ஆரியரின் நூல்களல்ல என்பது துணிபா கும். உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்பது என்பது பொருள். கிட்ட இருந்து கேட்பது என்பதற்குக் குரு மாணாக்க முறையில் வருவது எனக் கூறலாம். “இம் மறையைத் தந்தை தனது மூத்த குமாரனுக்கு, அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ் வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாயிருந்து பல முறை வருந்திக் கேட்டபோது, இந்த ஞானம் வெளியிடப்பட்டது” என்று உபநிடதம் கூறுகின்றது. உபநிடதங்களிலுள்ள உண்மைகளே ஆகமங் களிலும் பொதிந்துள்ளன. ஆகமத்திற் கூறப்படும் பொருள்களை ஆசிரிய னிடத்துக் கேட்டு அறிந்தாலன்றி விளங்காது என்னும் கருத்து இருந்து வந்தது.1 இவ்வாறு மறைவாக இருந்து வந்த உண்மைகளே முற்காலத்தில் மறைகள் எனப்பட்டன. ஆரியரின் வேதங்களுக்கும் இம் மறைகளுக்கும் யாதும் தொடர்பு இல்லை. இவைகளுக்கும் வேதங்களுக்கும் உள்ள தூரம் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் உள்ளது போலாகும். ஆரிய வேதங்களைப் பற்றி மக்கள் அறியாதிருந்தனர். வைசிய பிராமண வகுப்பினரால் மாத்திரம் வாய்ப்பாடஞ் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் வேதங்களில் இல்லாத அறிவு உலகில் இல்லை என்றும், அதில் எல்லா வகையான அறிவுகளும் உண்டென்றும் மக்களுக்குச் சொல்லி வந்தனர். பிறர் அவைகளை அறிந்தால் தாம் சொல்வதின் பொய்மை வெளியாகி விடும் என்று கருதி, அவைகளைப் பிறர் பயிலுதல் ஆகாது எனக் கூறி வந்தனர். காலத்தில் மறைகள் என்பன ஆரிய வேதங்களே என்றும், அவ்வேதங்களே தமிழ் மதத்தினருக்கும் முதல் நூல்கள் என்றும் தவறான கருத்து உண்டாயிற்று. சைவ சமயத்தை நாட்ட எழுந்த சமய குரவர்களே இக் குருட்டுத் தனமான கொள்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள். “சைவ சமய வினா விடை” என்னும் நூல் எழுதிய ஆறுமுக நாவலரே, சைவ சமயத்தவர்களுக்கு முதல் நூல்கள், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நூல்கள் எனக் குறிப்பிட்டார். இவ் வகைக் கருத்துக்களே பள்ளிக்கூடங்களில் சிறுவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. வேதங்கள் என்றால் என்ன? அவை தமிழ் மக்களின் சமய நூல்களல்ல என்பன போன்ற உண்மைகள் தமிழ்ச் சிறுவருக்கு இளமையில் கற்பிக்கப் படுதல் வேண்டும். தமிழர் சமயக் கருத்துக்கள் திருமூலர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண் டுக்கும் இடையில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுவர், இவர் பழைய தமிழர் சமயக் கொள்கைகளைக் கூறும் ஆகமங்கள் உபநிடதங்களில் பொதிந் துள்ள பொருள்களைத் தொகுத்துத் திருமந்திரம் என்னும் நூலாகச் செய்தார். புராண காலத்தில் பிராமண மதத்தினர், தமது உயர்வு கருதிப் பழைய நூல்கள் பலவற்றை அழித்தும், புதிய நூல்களைச் செய்தும், பழைய நூல்களைத் திருத்தியும் பல தீமைகளைப் புரிந்து வைத்தனர். அவர்களின் பார்வை திருமந்திரத்தின்மீது விழவில்லையே எனக் கருது வது சந்தேகம். திருமந்திரத்திற் கூறப்படும் தத்துவ சாத்திரக் கொள்கை களே, தமிழரின் பழைய மதக் கொள்கைகள் என்பதில் ஐயம் இன்று. சைவ வைணவ ஆசிரியர்கள் இவர்கள் சிவன், திருமால் என்னும் கடவுளரை முறையே தலைமை மிக்க கடவுளராகக் கொண்டு துதிபாடியுளரேனும், தமிழரின் பழைய சமயஞானக் கருத்துக்களை இடையிடையே விளக்கிப் போந்தனர். சித்தாந்த சாத்திரங்கள் சைவ சித்தாந்த நூல்கள் எனப்படும் நூல்கள் 13ஆம் நூற்றாண் டில் தோன்றின. இவை நூல் வழக்கிலும் உபதேச முறையிலும் தமிழ் மக்க ளிடையே வழங்கிய சமய உண்மைக்குத் தக்கவாறு யாத்துச் செய்யப் பட்டனவாகும். டாக்டர் போப்பு (Dr.Pope) என்னும் பாதிரியார், சித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் சமயக் கருத்துக்கள், வரலாற்றுக் காலத்துக்கு முன்னரேயே தமிழரிடை தோன்றி வளர்ச்சியுற்ற சமயக் கருத்துக்கள் எனக்கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதன் சுருக்கம் வருமாறு. “இந்தியாவில் வழங்கும் சமய தத்துவக் கொள்கைகளுள் எல்லாவற்றுள்ளும், சைவ சித்தாந்த நூற்கொள்கைகள் மிக விரிவும், சிறப்பும், உண்மை யும் அடங்கியுள்ளன. இக் கொள்கைகள் தென்னிந்திய தமிழரின் கொள்கைகளாகும். தென்னிந்திய உயர்ந்த மக்களைப்பற்றி அறிய விரும்பும் எல்லோரும் அவைகளைப் பயிலுதல் வேண்டும். சிவமதம் என்பது தென்னிந்திய மக்களின் வரலாற்றுக் காலத்துக்கு முன் தோன்றிய மதம். அது ஆரியர் வருகைக்குமுன் தொட்டுத் தோன்றி வழங்குவது. இக் கொள்கைகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொண்டுள்ளவை. உலகம், உயிர், நல்வினை, தீவினை, மறு பிறப்புப் போன்ற உண்மைகளை, நன்கு எடுத்துக் கூறும் இம் மத உண்மைகள் ஆங்கிலத்தில் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அவைகளைக் கூறும் நூல்கள் தமிழ் மொழியில் மாத்திரம் எழுதப்பட்டுள்ளன”.1 முன் ஓரிடத்தில் ஞாயிறே சிவன் என்னும் பெயருடன் வழிபடப் பட்டதெனக் கூறினோம். மக்கள் அறிவு விரிவடைந்தபோது, அவர்கள் ஞாயிறு கடவுளன்று என்றும், ஞாயிற்றை இயக்கச் செய்வதும், அதனுக்கு ஒளியினை உதவுவதும், உள்ளத்தினால் உணராததுமாகிய ஒரு பெரும் ஆற்றல் உள்ளதெனக் கண்டு, அப்பெரிய ஆற்றல்மிக்க பொருளைக் கடவுள் (உள்ளத்தைக் கடந்தது) என்று அழைத்தார்கள். ஆயினும், சிவன் என்னும் பழைய பெயரே கடவுளுக்குச் சிறப்பாக வழங்குவதாயிற்று. இந்திய மக்கள் எல்லோரும் தத்துவக் கொள்கைக ளோடு கூடிய தமது சமயத்தையும் சிவமதம் என்றே கூறினர். சைன மதத்தவர்களும் தமது சமயத்திற் சொல்லப்படும் மேலான பதவியைச் சிவகதி எனக் கூறுவர். புத்த சைன மதத்தினர் தம் சமய அடையாளமாக ஞாயிற்றைக் குறிக்கும் சுவத்திகம் (சிவத்திகம்) இலிங்கம் என்பவைகளைச் சமயச் சின்னங்களாகக் கொண்டனர். சிவலிங்கங்களே புத்த தூபிகள். சமாதிகளும் அவ்வடிவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியநாட்டிலும், இவ்வுலகத்திலும் காணப்படும் மதங்களெல்லாம் சிவ மதத்தின் வேறு பாடுகளே யாகும். சாங்கியம், புத்தம், சமணம் முதலிய நூல்களிற் சொல்லப்படும் தத்துவக் கொள்கைகள், இச் சைவசித்தாந்தக் கொள்கைகளுள் அடங் கும். ஆனால் அவை சைவ சித்தாந்தக் கொள்கையிலுள்ளவற்றில் சிற்சில வற்றைக் கூறாது விடுத்தன. வேதாந்த சூத்திரத்துக்குச் சங்கரர் பொருள் கொண்டு விரித்த ஏகான்ம வாதமும், சைவ சித்தாந்தக் கொள்கையைத் தழுவியதே. ஆனால் உயிர்கள் என்பவை கடவுளின் பொய்த் தோற்றங் கள் என அவர் மயங்கிக் கூறுவராயினர். இவ் வகையான கருத்துக்கள் தென்னிந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இக் கருத்துக் களையே அடிப்படையாகக் கொண்ட விவேகானந்தரின் போதனைகள் தென்னாட்டில் நிலைபெறவில்லை. தத்துவ ஞானங்களைப் பற்றி அதிகம் கேள்விப்படாதிருந்த மேற்குத் தேசங்களில் அவர் கருத்துக்கள் பாராட்டப்பட்டன. முடிவுரை இதுவரையும் கூறப்பட்டவற்றால் இன்று சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெறுவன, பெரும்பாலும் மூடச் செயல்கள் என, நமக்கு நன்கு தெரிகின்றது. ஆயினும் நெடுங்காலம் தொடர்ந்து வரும் பயனற்ற பழக்க வழக்கங்களைக் கைவிட மக்கள் எளிதில் ஒருப்படுவ தில்லை. அறிஞர் அடிக்கடி அறியாமை உள்ள மக்களிடையே பகுத் தறிவை எழுப்பக் கூடிய கருத்துக்களை எடுத்துச் சொல்வதால் அவர்களின் உள்ளம் பண்பாட்டையும், மார்ட்டின் லூதர் (1483-1546) கிறித்துவ மதத்தில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தார். லூதர் சொன்னவைகள் மக்களின் பகுத்தறிவுக்கு ஏற்றனவாயிருந்தமையின், மக்கள் பலர் பழம் போக்குகளைக் கைவிட்டுச் சீர்திருத்த முறைகளைப் பின்பற்றினர். லூதர் கடவுள் இல்லை என்று கூறவில்லை. மதம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டுப்படக் கூடாது. கடவுள் நல்லவர்; அன்பே வடிவாயுள்ளவர் எனப்படுதலின், நாம் அச்சத்தினால் கடவுளை வழிபடவோ, “கடவுளை அடையச் செய்வோம், அவரை மகிழ்விப் போம்” எனக் கூறித் தரகராக நடிக்கும் பூசாரிகளின் உதவியை நாடவோ வேண்டியதில்லை. பூசாரி நம்மைவிடச் சிறந்தவன் எனக்கொள்ளும் மடமை ஒழிய வேண்டும். இவ் வுலகங்க ளெல்லாவற்றையும், நம்மையும் படைத்துத் தொழிற்படுத்தும் பெரிய ஆற்றல் வாய்ந்த கடவுள் எனப் போற்றப்படுபவர் நாம் அளிக்கும் உணவுக்கும், குடைக்கும், பிற காணிக்கைகளுக்கும் ஆசைப்பட்டு விடமாட்டார். மனிதன் தனது நிலையில் கடவுளை வைத்துப் பார்ப்பது அறியாமை. அறிவு உண்டாவதற்குக் கல்வி வேண்டும். லூதர் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி வேண்டுமென்று வற்புறுத்தினார். உலக மக்களில் பாதிப்பேர் பெண்கள். ஒரு படித்த பெண் என்பது, ஒரு படித்த குடும்பம். படிப்பினால் அறிவு உண்டாகும். அறிவு உண்டாகப் பகுத்தறிவு உண்டாகும் பகுத்தறிவு உண்டாக, மூட நம்பிக்கைகள் ஒழியும், இன்று நமது நாட்டில் பல லூதர்கள் வேண்டும். அவர்கள் மக்களுக்குச் சமயத்தின் உண்மை இயல்புகளை எடுத்து விளக்க வேண்டும். ஆலயங்கள் கடவுளுக்குக் கைக் கூலி கொடுக்குமிடமும், வரி செலுத்துமிடங்களுமாய் இருத்தல் கூடாது. சிலந்தி இரைக்காக வலையைப் பயன்படுத்துவது போல, ஆலயங்களைப் பயன்படுத்தும் மடிகள் ஒழிய வேண்டும். ஆலயங்கள் பள்ளிக் கூடங்களும், விரிவுரை மேடைகளுமாய் இருக்க வேண்டும். கடவுள் மனிதன் செய்யும் மரியாதைகளை விரும்புகிறார் என நினைத்தல், மிக்க அறியாமையே ஆகும். மனிதனே உருவங்களை அமைத்து வைத்து அவைகளைப் பொன்னாலும் மணியாலும் புனைந்து, பின்பு அவைகளைத் திருடர் திருடுவார்கள் எனப் பயந்து பெரிய பூட்டுக்களாற் பூட்டி வைத்தல் எத்துணைப் பேதமை என்பதை எண்ணிப் பாருங்கள்.  சைவ சமய வரலாறு முன்னுரை சைவசமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன. சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல்நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடுகளுக்கு முரியனவாயிருந்தன வென்பதை அறிகின்றோம். இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்க மாகக் கூறியுள்ளோம். இந் நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்கமளிப்பதாக இருக்கும். சென்னை 03.05.1958 ந.சி.கந்தையா இருபது ஆண்டுகளின் முன் டாக்டர் ஐசாக் தம்பையா அவர்கள், இந் நூலாசிரியரைப் பற்றி எழுதிய கருத்துரை. ஞநுசூஹசூழு ழடீருளுநு துயககயே, 8வா துயரேயசல, 1938. Mr.N.S.Kandiah of Navaly is a very agreable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learning by his prose rendering in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias. (Sd.) T. ISAAC THAMBYAH, னு.கூழ. President, Jaffna Association. சைவ சமய வரலாறு தோற்றுவாய் சைவமே மிகப் பழைய சமயமென நாம் எல்லோரும் நம்பி வருகின்றோம். நம் முன்னோர்களும் அப்படியே நம்பி வந்தார்கள். உலகில் நாகரிகம் பெற்று ஆங்காங்கு வாழ்ந்த பழங்கால மக்களும் தத்தம் மதங்களே மிகப் பழையன வென்று நம்பிவந்தார்கள். இவ்வாறு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மூலகாரணம் ஒன்றுண்டு. அது எல்லாச் சமயங்களுக்கும் ஆதியில் வேர் ஒன்றாக இருந்ததென்பதாகும். பழைய நாகரிக சாதியாரின் வரலாறுகளை ஒருங்கு வைத்து ஒப்பிட்டு நோக்கு மிடத்து இவ்வுண்மை மிகத் தெளிவாகின்றது. மனித சமூகத்தில் சாதி, சமயம், மொழி என்னும் மூன்றும் முதன்மை யுடையன. இவை ஆதியில் ஒன்றாகவிருந்தன. இதனை மானிடவியல், மொழிஇயல், சமயஇயல் ஆராய்ச்சிகள் வெளியிடுகின்றன. மக்கள் இயற்கை முறையில் வாழாது நாகரிகமடைந்து செயற்கை முறையில் வாழத்தொடங்குவதற்கு முன் அவர்களின் வாழ்க்கை முறை உலகம் முழுமையிலும் ஒரே வகையிலிருந்தது. மக்களிற் பெரும்பாலினர் வேடன், இடையன் என்னும் நிலைகளைக் கடந்து உழவன் என்னும் நிலையை அடைந்து நாகரிகமும் பண்பாடும் அடைந்துள்ளார்கள். முன் இரு நிலைகளைக் கடவாது வாழும் மக்களும் ஆங்காங்கு காணப்படு கிறார்கள். பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம் என்பனவும் மக்கள் தாண்டி வந்துள்ள பண்பாட்டுப் படிகளாகும். இரும்புக் காலத்தில் நாகரிகம் விரைவில் முன்னேறிற்று. கற்காலப் பண்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இன்றும் உலகின் சில பகுதிகளிற் காணப்படுகிறார்கள். மஞ்சள், கறுப்பு, வெண்மை, கபிலம் முதலிய நிறங்களும் இவற் றிற்கு இடைப்பட்ட நிறங்களுமுள்ள மக்கள் உலகின் வெவ்வேறு பாகங் களிற் காணப்படினும், இவ்வின மக்களெல்லோரும் ஒரு கூட்டத்தினின்று பிரிந்து சென்று இடங்களின் வெப்பதட்பநிலை, சூழ்நிலைகள், உண்ணும் உணவு, உணவுதேட மேற்கொள்ளும் முயற்சி, வாழுமிடங்களுக்கேற்ப இயற்கை உதவும் பாதுகாப்புகள் போன்ற பல காரணங்களால் பல்வேறு குணங்குறிகளுடையராயினர் என மனிதவியலார் கூறுவர். இக் காரணங் களால் தொடக்கத்தில் மக்கட்குலம் ஒன்றாகவிருந்ததெனத் தோன்று கின்றது. மக்கள் ஆதியிற் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கையாண்ட முறைகள் ஒரே அடிப்படையுடையனவாக விருந்தன. எல்லா மக்களும் தொடக்கத்தில் ஓவிய எழுத்துக்களையும் பின் அவற்றின் சிதைவு களையும், பின் அச்சிதைவுகளினின்று அமைத்துக்கொண்ட குறியீடு களையும் வழங்கினார்கள். இவ் வுலகில் வழங்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளும் ஆரியம், ஆரியமல்லாதவை என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்குமென்றும், அவ்விரு பிரிவுகளும் மிகத் தொலைவான ஒரு இடத்தில் சந்திக்குமென்றும் மொழி ஆராய்ச்சி யாளர் கூறுவர். ஆகவே ஆதியில் மொழி ஒன்றாகவிருந்ததென்பதும் புலனாகின்றது. இசை, கூத்து, ஓவியம், சிற்பம், கட்டடம், மருத்துவம் போன்ற நற் கலைகள் மிகச் சிறிய தொடக்கங்களாக எல்லா மக்களிடையும் ஒரே வகையில் தோன்றிச் சூழ்நிலைகளுக்கேற்ப வளர்ச்சியடைந்து உள்ளன. மக்கள் இவ்வுலகில் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய மக்களின் அறிவென்பது பல இலட்சக்கணக் கான ஆண்டுகளாகத் தலைமுறைகள் தோறும் சிறிது சிறிதாகத் திரண்டு வந்ததாகும். மனிதனொழிந்த மற்றைய உயிர்களின் புதிய அறிவுகள் அப் பிராணிகள் இறக்கும்போது அவற்றோடு மறைந்து விடுகின்றன. அவை அவற்றைச் சமூகத்துக்கு வெளியிட முடிவதில்லை. மனிதன் தான் புதிதாகக் கண்டறிந்ததொன்றைத் தனது சமூகத் துக்கு அறிவிக்கிறான். இதனால் ஒருவனுடைய அறிவென்பது சமூகத்தின் அறிவாக நிலைபெறுகின்றது. சமூகத்திலுள்ள பலர் கண்டறியும் அறிவுகள் சமூக அறிவுகளாகத் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு தொடர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்தனவே மக்களின் கலைகள், பண்பாடுகள், நாகரிகங்கள் என்பன. சமயமும் கலைகளைப் போலவே சிறிய தொடக்கத்திலிருந்து பல்லாயிரமாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கின்றது. சமயமென்பதையும் ஒரு கலை என்றே கூறலாம். சமயம் எல்லா மக்களிடையும் ஒரே அடிப் படையிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்துள்ளது. காடுகளிலும், மலை களிலும் தனித்துவாழும் பிற்போக்கான மக்களின் சமயக் கொள்கை களும், சமயத் தொடர்பான நம்பிக்கைகளும் பெரும்பாலும் ஒரேவகை யாகவுள்ளன. மக்கள் தோன்றிய காலம் முதல் ஒரே போக்கில் வளர்ந்து கொண்டு வந்தசமயம் என்னும் மரம் அவர்கள் நாகரிகம் பெற்று விளங்கிய ஒரு காலத்தில் பல பெருங்கிளைகள் விட்டு விரியத் தொடங்கிற்று என்பதைப் பழங்காலத்தில் நாகரிகம் பெற்று விளங்கிய எகிப்து, மேற்கு ஆசியா, ஆசியா மைனர், இந்தியா முதலிய நாடுகளின் பழைய வரலாறு களை நோக்கின் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். மேற்கூறியன ஆதியில் சமயம் ஒன்றாகவே இருந்ததென்பதைப் புலப்படுத்தும். சமயத் தோற்றம் ஆதிகால மக்கள் தமக்கு வியப்பளித்த காற்று, மழை, இடி, மின்னல், மலை, ஆறு, கடல் போன்ற இயற்கைப் பொருள்களை வழி பட்டார்கள். தமக்கு மேலான வல்லமையோ வல்லமைகளோ உண்டு என நம்பிக்கை கொண்ட மக்கள் தமது சிந்தனையினாலும் அனுபவத்தி னாலும் அவற்றை அறிய முயன்றுவந்தார்கள். இவ்வாறு சிந்தனை செய்து வந்த மக்கள் உலகுக்கெல்லாம் ஒளி செய்கின்ற ஞாயிறே முழு முதற் கடவுளெனத் துணிந்தார்கள். அக்காலத்தில் மக்கள் வழங்கிய மொழிகள் பலவாகவிருந்தன. இரா, இல், எல், எலோசு, பால், அல், அல்லா, எலோகிம், ஒசிரிஸ், யுபிதர், அசுர், சிவன், தேவன் போன்ற பெயர்கள் வெவ்வேறு பல சமூகங்களால் முழுமுதற் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களாகக் காணப்படுகின்றன. இப் பெயர்கள் ஒளியுடை யது அல்லது ஞாயிறு என்னும் பொருளுடையனவாக இருக்கின்றன வென்று அவற்றை ஆராய்ந்தோர் கூறியுள்ளனர். ஒரு காலத்தில் உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. வெள்ளப் பெருக்குக்குமுன் ஞாயிற்று வழிபாடு ஒரு காலத்தில் பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்று உண்டானதாகப் பழங்கால மக்கள் எல்லோரிடையும் பழங்கதை வழங்கிற்று. இவ் வெள்ளப் பெருக்கைப்பற்றி விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடும் குறிப் பிடுகின்றது. இந்தியாவில் மனு என்னும் முனிவர் வெள்ளப்பெருக்குக்குப் பிழைத்திருந்து உலகில் மனுக்குலத்தைத் தோற்றுவித்த வரலாற்றைப் புராணங்கள் கூறுகின்றன. உலகின் பல பாகங்களில் வழங்கும் வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழங்கதைகளை எல்லாம் திரட்டி வைத்து மேல் நாட்டறிஞர் ஆராய்ச்சி செய்துள்ளனர். விவிலிய வேதத்திற் கூறப்படும் சலப்பிரளய வரலாறு எபிரேய மக்களுக்குப் பாபிலோனியர் வழியாகக் கிடைத்ததென்றும், இந்தியாவினின்றும் சென்று பாபிலோனியாவிற் குடியேறிய மக்கள் இக் கதையையும் தம்மோடு கொண்டு சென்று அந் நாட்டிற் பரப்பினார்களென்றும் ஆராய்ச்சியாளர் கருதுவர். சலப்பிரளயத் துக்குப் பிழைத்திருந்து மனுக்குலத்தைத் தோற்றுவித்தவர்களாகச் சொல் லப்படும் மனுக்கள் எல்லோரும் சூரியனின் புதல்வர் அல்லது சூரிய னோடு சம்பந்தப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் சலப் பிரளயத்துக்கு முன்னும் பின்னும் ஞாயிற்று வழிபாடு உலகில் பரவி முதன்மை பெற்றிருந்ததெனத் தெரிகிறது. சிவன் பழங்கால மக்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் எல், சிவன் என்னும் பெயர்கள் மிகப்பழமை உடையன. எல் என்பதற்கு இலங்குவது என்பது பொருள் “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியச் சூத்திரம். எல் என்பது அல், இல் எனவும் உச்சரிப்பு வேறுபட்டு வழங்கிற்று. இலங்கை, ஈழம் முதலிய பெயர்களும் எல் அடியாகப் பிறந்தவை. அராபியாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல் தொடர்பான மிகப் பல இடப்பெயர்கள் காணப்படுகின்றன. மக்களும் தமது பெயர்களினிறுதியில் எல் என்பதைச் சேர்த்து வழங்கினார்கள். இவ்வகைப் பெயர்கள் பலவற்றை விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் காணலாம். எல் என்பதைப் போலவே பால் (பகல்) என்னும் பெயரையும் மேற்கு ஆசிய மக்கள் வழங்கினார்கள். ஹனி பால், அசுர்பானிப்பால் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இன்றும் தமிழ் நாட்டில் சிவன் என்பதைப் பெயரினிறுதியிலிட்டு வழங்கும் வழக்குண்டு. பழங்கால இலங்கை அரசருட் பலரும் இவ்வழக்கை மேற்கொண் டிருந்தனர். எல் என்னும் பெயரிலும் பார்க்கச் சிவன் என்னும் பெயரே பழமையுடையது. சிவனென்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருளுண்டு. எபிரேயரின் மாதங்களிலொன்றின் பெயர் சிவன். முற்கால மக்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு கடவுளுக்குரியதாகக் கொண்டு மாதங்களுக்குக் கடவுளரின் பெயர்களை இட்டு வழங்கினார்கள். மொசே, கடவுளருளிய பத்துக் கட்டளைகளைச் சிவன் மாதத்தில் சினாய் மலையினின்றும் வெளியிட்டார். மொசேக்கு நெடுங்காலம் முன் தொட்டு எபிரேய நாட்டில் சிவன் வழிபாடு இருந்ததாகத் தெரிகிறது. பெத்தெல், பால் என விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் கூறப் படுவன சிவன் வழிபாடுகளே. பாபிலோனியரின் மாதங்களிலொன்றும் சிவன் எனப்பட்டது. இது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் தட்டு களிலெழுதப்பட்ட சாசனங்களால் அறியப்படுகின்றது. எகிப்திலுள்ள பாலைவனப் பசுந்தரை ஒன்று சிவன் எனப் பெயர் பெற்றிருந்தது. இப் பசுந்தரையில் பழைய ஞாயிற்றுக் கோயிலின் இடிபாடு ஒன்றுள்ளது. முற்காலத்தில் மக்கள் கோயிலைச் சுற்றிக் குடியேறியிருந் தார்கள். கோயில் கொண்டுள்ள கடவுளின் பெயரால் இடங்கள் அறியப் பட்டன. இன்றும் தென்னிந்திய இடப்பெயர்களில் பெரும்பாலன கோயிற் பெயர்களாகவே இருக்கின்றன. சிவன் கோயிலிருந்தமையால் அப் பாலை நிலப் பசுந்தரை சிவன் எனப்பட்ட தென்பது பிழையாகாது. பழைய நாகரிகம் பெற்று விளங்கியதெனவும், தமிழ் மக்கள் குடியேறி வாழப்பெற்றதெனவும் கருதப்படும் கிரீத்துத் (Crete) தீவில் அகழ்ந்து ஆராயப்பட்ட இடங்களிலொன்று சிவன் என்னும் பெயர் பெற்றிருந்தது. இவ்விடத்தில் தூபக்கால்கள் போன்ற பழம்பொருள்கள் அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்தன. அமெரிக்காவிலே கொலராடோ ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள பீடபூமி ஒன்று சிவன்கோயில் என அறியப்பட்டு வந்தது. இதன் பக்கத்தை அரித்துக் கொண்டு ஒரு மைல் ஆழத்தில் கொலராடோ ஆறு ஓடுகின்றது. இவ்வாற்று அரிப்பைக் கொண்டு அப் பீடபூமி மிகப் பழமையுடையதெனக் கருதப்படுகின்றது. அங்கு சிவன் வழிபாடு நடை பெற்றமையால் அது சிவன் கோயில் என நீண்ட காலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பழமை குறைந்தபட்சம் பத்தாயிரமாண்டுகளாகலா மெனத் தொல்பொருளியலார் கூறுகின்றனர். சிவன் வழிபாடு அமெரிக்கா வில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது அறியப்படுகின்றது. அமெரிக்காவில் சிவலிங்கங்கள், விநாயகர் முதலிய சிலைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஆதிக்குடிகளின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடையதாகவிருத்தல், பழைய மாயா மக்களின் சிற்பக் கலையும், உருவ அமைப்புக்களும் தென் இந்தியாவோடு தொடர்புடையனவாகக் காணப்படுதல், இன்கா மக்களின் நாகரிகப் பகுதிகள் சில பழந்தமிழர் நாகரிகத்தோடு ஒத்திருத்தல் போன்ற சில அடையாளங்கள் மிகப் பழங்காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பிருந்ததை விளக்குகின்றன. கொலராடோவில் காணப்பட்ட சிவன் வழிபாடு இக் கருத்தை மேலும் வலியுறுத்துகின்றது. சிவனென்னும் பெயருடைய இடப்பெயர்கள் பிறவுமுண்டு. இப் பெயரொற்றுமைகள் தற்செயலாக ஏற்பட்டவையல்ல. சிவ வழிபாடு மொகஞ்சதரோ காலத்தில் (கி.மு.3500) மிகப் பிரபலம் பெற்றிருந்தது.1 தமிழ்நாட்டு மக்கள் எவ் வடிவில் சிவனை வழிபட்டார்களோ அவ் வடிவில் ஆசியா மைனர் மக்களும் மேற்கு ஆசிய மக்களும் சிவனை வழிபட்டார்கள். ஆசியா மைனரில் இடபத்தின் மீது நின்று கையில் இடியேற்றைப் பிடித்துக் கொண்டு நிற்பதாகிய உருவச்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடியேறென்பது கீழும் மேலும் மூன்று வேல் (முத்தலைவேல்) உள்ள ஆயுதம். இடபத்தின் மேல் நின்று கொண்டு அம்பெய்யும் வடிவுள்ள இன்னொரு உருவச் சிலையும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இடபத்திலிருக்கும் தந்தைக் கடவுளும், தந்தைக்கட வுளுக்குப் பக்கத்தில் சிங்கவாகனத்தின் மீதிருக்கும் தாய்க்கடவுளும் பொறிக்கப்பட்ட நாணயமொன்றும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கடவுளின் உடைகள் நம்நாட்டுச் சிவனின் உடைபோலல்லாது வேறு வகையிலுள்ளது. ஆசியா மைனர் மக்கள் கிரீத்துத் தீவினின்றும் சென்று குடியேறியவர்களென பழஞ்சரித்திரக்காரர் கூறுவர். கிரீத்து நாட்டு மக்கள் தமிலி எனப்பட்டார்களென எரதோதசு (கி.மு.470) என்னும் பழைய வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். இலைசியாவில் (ஆசியா மைனர்) தமிலி என்னும் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. கிரீத்து மக்களும் இலைசிய மக்களும் தமிழ்நாட்டினின்றும் சென்றவர்க ளெனக் கருதப்படுவர். சிவ வழிபாடு தமிழ் நாட்டினின்றுஞ் சென்று மேற்கு ஆசிய நாடுகளிற் பரவியதென இப்பொழுது அறியப்படுகின்றது. 1சிரியா நாட்டில் இடபத்தின் மீது நின்று கீழும் மேலும் முத்தலை களுள்ள படைக்கலத்தைப் பிடிக்கும் உருவம் வரையப்பட்ட செப்புத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகிறது. இவ்விடபமும் சிவன் வடிவமும், தமிழ்நாட்டு இடபத் தையும் சிவன் வடிவத்தையும் பெரிதும் ஒத்துள்ளன. இவ்வழிபாடு சிரியா விலிருந்து உரோமைப் போர்வீரர்களால் உரோமுக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்கும் கொண்டு போகப்பட்டதென்றும், பாடி வீடுகளில் உரோமைப் போர்வீரர் இக் கடவுளை வழிபட்டனரெனவும் ஆராய்ச்சி யாளர் கூறியுள்ளனர். இடியேற்றைப் பிடித்துக்கொண்டு இடபத்தின்மீது நிற்கும் கடவுளின் உருவம் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்கர் வழிபட்ட சியஸ் (Zeus) கடவுள் நெற்றிக் கண்ணுடையவராயும், ஒலிம்பஸ் மலையில் உறைபவராகவும், இடியேற்றை கையிற் பிடித்தவ ராகவுமிருந்தார். பின்லாந்து மக்களின் காத்தற்கடவுள் சிவன் எனப் பட்டது. சிவலிங்கம்1 ஞாயிற்று வழிபாட்டைப் போலவே இலிங்க வழிபாடும் மிகப் பழமையுடையது. பழங்கால மக்கள் ஞாயிற்றை மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். மலைகள் புனித இடங்களாகவும் கடவுளரின் இருப் பிடங்களாகவும் கொள்ளப்பட்டன. கிரேக்க தெய்வங்களின் உறைவிடம் ஒலிம்பஸ் மலை; இந்துக்களின் கடவுளுக்கு உறைவிடம் மேரு; இமயம் முதலிய மலைகள் எல்லாக் குன்றுகளும் முருகக் கடவுளுக்கு உறைவிடம். இதனைக் குன்றுதோறாடல் எனத் திருமுருகாற்றுப்படை கூறுதலா லறிக. மெசபெதேமி யாவில் வாழ்ந்த மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பால் (பகல்) என்னும் பெயரிட்டு வழிபட்டார்கள். ஆகவே அந் நாட்டுக்குப் பாபிலோன் என்னும் பெயருண்டாயிற்று. பகல் வழிபாடு பாலஸ்தீனத் தில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்ததை விவிலிய வேதம் குறிப்பிடு கின்றது. மலைகளில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் செய்குன்றுகளையும் உயர்ந்த கோபுரங்களையும் அமைத்து அவைமீது பகற்கடவுளை வழி பட்டார்கள். பின்னர் செய்குன்றுகளுக்கும் கோபுரங்களுக்கும் பதிலாக, அடிநிமிர்ந்து நுனிகுவிந்த கற்றூண்கள் நட்டு வழிபடப்பட்டன. இவ்வாறு கற்றூண்களை நட்டு வழிபடும் முறை மனிதன் கற்காலத்தில் இருந்த போதே வழக்கிலிருந்தது. இவ்வகை இலிங்கங்கள் மொகஞ்சதரோ விலும் சிவாலிக் மலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட் குறி இலிங்கம் எனப்பட்டது. இலிங்கம் என்பதற்கு இலங்குவது என்பது பொருள். இலங்குவதாகிய ஞாயிற்றின் அடையாளமாக அமைந்தமை யின் இது இலிங்கம் என்னும் பெயர்பெற்றது. இலிங்கம் ஞாயிற்றின் கதிரைக் குறிக்கும் எனவும் சிலர் கூறியுள்ளனர். வெவ்வேறு வகைகளில் கற்றூண் வழிபாடுகள் தோன்றி, ஞாயிற்று வழிபாட்டோடு சம்பந்தப் பட்ட இலிங்க வழிபாட்டோடு கலந்தன. இக்காரணத்தினாலேயே இலிங்க வழிபாட்டுக்கு வெவ்வேறு காரணங்கள் அல்லது கருத்துக்கள் கூறப்படுகின்றன. இலிங்க வழிபாடு இங்கிலாந்து தொடக்கமும் யப்பான் இறுதி யாகவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியக்கடல் தீவுகள், பசிபிக்கடல் தீவுகளிலும் காணப்பட்டது. இலிங்க வழிபாட்டைக் குறித்து ஆங்கில மொழியில் தனி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் உலகின் எல்லாப் பாகங்களிலும் எவ்வகைகளில் இலிங்க வழிபாடு செய்யப்பட்ட தென்பதன் விபரங்கள் காணப்படுகின்றன. இலிங்க வழிபாட்டினராய் நாகரிகமடைந்து உலகின் பலபாகங்களில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் ஒரே குலமுறையிலுள்ளவர்களா யிருந்தார்களென்பது சில ஆராய்ச்சி யாளரின் கருத்தாகும். இலிங்க வழிபாடு எங்கு காணப்பட்டதோ அங்கெல்லாம் பாம்பு வழிபாடும் காணப்பட்டது. பாம்பு வழிபாடு எப்படித் தோன்றிற்றென்பது ஆராய்ச்சிக் கெட்டவில்லை. இதுபோலவே, இலிங்க வழிபாட்டுக்கும் பாம்பு வழிபாட்டுக்குமுள்ள தொடர்பும் அறியமுடியாமலிருக்கின்றது. ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் தூண்கள் மரங்களின் கீழும், திறந்த வெளிகளிலும், சோலைகளிலும் நட்டு வழிபடப்பட்டன. அக் காலத்தில் கோயில்கள் கட்டப்படவில்லை. வழிபடுவோர் நீருண்ணும் பொருட்டும், நீரைக் கொண்டு கால், கை, உடல் முதலியவற்றைச் சுத்தஞ் செய்யும் பொருட்டும் இலிங்கத்துக்கு அயலில் கிணறு அகழப்பட்டது. இலிங்கம், மரம், கிணறு என்னும் மூன்றுமுள்ளது வழிபாட்டிடமாக விருந்தது. வன்னியும், கிணறும், இலிங்கமும் அழைத்த திருவிளையாடற் கதை பழைய காலத்தில் இவ்வகை வழிபாட்டிடங்கள் காணப்பட்டன வென்பதை விளக்கும். இலிங்கத்தைச் சுற்றிக் கட்டடம் அமைக்கப்பட்ட போது மரம் தலத்துக்குரிய மரமாகக் கொள்ளப்பட்டது. தென்னிந்தியா விலுள்ள எல்லாப் பழைய கோயில்களுக்கும் ஒவ்வோர் தலமரம் உண்டு. மறைக்காடு, தில்லைவனம், திருவாலங்காடு, திருவெண்காடு முதலிய பெயர்கள் இலிங்கங்கள் காடுகளிலும் தோப்புகளிலும் நிறுத்தப்பட் டிருந்தமையைத் தெரிவிக்கின்றன. பலஸ்தீன் நாட்டு மக்கள் இலிங்கங்களைப் பெத்தல் என வழங் கினர். அவை வீதிகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. வழிபடுவோர் இலிங்கத்தின் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர். இலிங்கவடிவான சிறிய கற்கள் தாயத்துக்களாகவும் அணியப்பட்டன. வீரசைவர் இலிங்க தாரணம் செய்து கொள்கின்றனர். வீரசைவமென்பது வைதீக மதமும் சைவமதமும் கலந்து வைதீக சைவம் தோன்றுவதன் முன் இருந்த சைவ சமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்துவரும் மதம் எனப்படுகின்றது. வைதீக மதத்துக்கு மடங்காமல் அல்லது வளைந்து கொடாமல் இருந் தமையின் இது வீரசைவமெனப் பட்டதென அறிஞர் கூறுகின்றனர். வீர சைவர் இலிங்கங்கட்டிகள் எனவும் அறியப்படுவர். திங்கள் வணக்கமும் தீ வணக்கமும் ஞாயிற்று வணக்கம் தோன்றி வளர்ந்தபின் ஒளியுடைப் பொரு ளாகிய திங்களையும் மக்கள் வழிபட்டார்கள். திங்களை வழிபட்ட மக்கள் திங்களின் அருட்குறியாக மரத்தூணை இலிங்கத்துக்கு (கற்றூணுக்கு) அருகில் நட்டு வழிபட்டார்கள். இவ்வருட் குறிகளின் தொடக்கங்கள் மறக்கப்பட்ட காலத்தில் அவர்கள் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாகவும், திங்களைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபட்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் இதனை ஆண் தெய்வமாகக் கொண்டார்கள். திங்கள் வழிபாடு மேற்கு ஆசிய நாடுகளில் அஸ்தரெத் என்னும் பெண் தெய்வ வழிபாடாகச் சோலைகளில் நடைபெற்றது. இத் தெய்வத்தைப் பெண் பூசாரிகளே மேற்பார்த்தார்கள். இதன்பின் ஒளியுடைப் பொருளாகிய தீ வழிபடப்பட்டது. நிம்ரொட் அரசன் காலத்தில் தீ வழிபாடு தொடங்கியதென விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. தீ வழிபாடு இன்றும் பார சீகத்தில் இருந்து வருகின்றது. இந்திய ஆரியர் தீயை அக்கினி என்னும் பெருந்தெய்வமாக வழிபட்டனர். ஞாயிறு, திங்கள், தீ என்பன தீ ஒன்று வாயிலாகவும் வழிபடப்பட்டன. மூன்று ஒளியுடைப் பொருள்களையும் குறிக்க முறையே வட்டம், பிறை முக்கோண வடிவான குண்டங்களை அமைத்துத் தீ மூட்டி அவை வழிபடப்பட்டன. ஞாயிற்றுக் கடவுளும் திங்கட்கடவுளும் ஆணும் பெண்ணும் என்னும் கொள்கை எழுந்தபின் அவை கணவனும் மனைவியும் என்னும் நம்பிக்கை மேற்கு நாடுகளில் எழுந்தது. இவ்வகையில் சிவலிங்கங்கள், கடவுளுக்கு ஆண் தன்மை பெண் தன்மை என்னும் தன்மைகள் உண் டென்பதை உணர்த்துகின்றன வென்னும் கருத்து எழுந்தது. தாய்க்கடவுள் வழிபாடு ஞாயிற்று வணக்கத்தையும் இலிங்க வணக்கத்தையும் போலவே தாய்க்கடவுள் வணக்கமும் பழமையுடையது. இன்று தந்தை குடும்பத் துக்குத் தலைவனாயிருப்பதுபோல், தாய் குடும்பத்துக்குத் தலைவியாக ஒரு காலத்திலிருந்தாள். அக் காலத்தில் தந்தையின் முதன்மை உண் டாகவில்லை. பிள்ளைகள் தாய்வழியாக அறியப்பட்டார்கள். தாயே சொத்துக்குரியவளாக இருந்தாள். சொத்து, தாய் வழியாகப் பிள்ளை களை அடைந்தது. பிள்ளைகள் தாயைச் சூழ்ந்து இருந்தார்கள். அவர்கள் தாயே எல்லா வல்லமையும் உடையவள் என நினைத்தார்கள். ஆகவே, அவர்கள் கடவுளைத் தாய்வடிவில் வழிபட்டார்கள். தாய்க்கடவுள் வீரதெய்வமாக இருந்தது. செல்வம், கல்வி முதலிய வற்றுக்கு தாய்க்கடவுளரே தெய்வங்களாகக் கொள்ளப்பட்டனர். பாரதப் போரில் வீரதெய்வமாகிய தாய்க்கடவுளுக்குக் களப்பலி கொடுக்கப்பட்ட தென மாபாரதம் கூறுகின்றது. போருக்குச் செல்லும் போது படைவீரர் வீர தெய்வமாகிய தாய்க்கடவுளின் வடிவமெழுதிய கொடியை முன்னே எடுத்துச் சென்றனர். இதனைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்மக்கள் தாய்க்கடவுளைக் காடுகிழாள், காடு கெழுசெல்வி, கொற்றவை, காளி முதலிய பெயர்கள் கொடுத்து வழிபட் டார்கள். காளி என்பதற்குக் கறுத்தவள் அல்லது இருண்டவளென்பது பொருள். காடுகிழாள் வழிபாடு மக்கள் மிகத் தாழ்நிலையில் வேடர்களாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் உண்டாயிற்று. காடுகிழாள் பாலை நிலத் தெய்வம். இவ் வழிபாடு நரபலி, விலங்குப் பலிகளோடு நடை பெற்றது. இவ் வழிபாட்டின் தன்மைகளைப் பரணி நூல்கள் கூறுகின் றன. மக்கள் படிப்படியே திருத்தமடைந்து வாழ்க்கையிற் பண்பட்டுவந்த காலங்களில் இவ்வழிபாட்டின் பயங்கரத் தன்மைகள் படிப்படியே குறைவடைந்து வந்தன. சிலப்பதிகாரத்தில் காடுகிழாள் வழிபாடு கூறப் பட்டுள்ளது. அதில் இவ்வழிபாட்டைப் பற்றிய விபரம் பயங்கரமாகத் தோன்றவில்லை. விலங்குகளில் வீரமுள்ள சிங்கம், தாய்க்கடவுளின் வாகனமாக்கப் பட்டது. அவள் வாள், வேல், கதை போன்ற ஆயுதங்களைக் கையில் பிடித் திருந்தாள். அவள் போர்களில் அசுரரைக் கொன்றதாகப் பழங்கதைகள் வழங்குகின்றன. அப் பழங்கதைகளின் நினைவாக மான் அம்பு என்னும் விழா இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் நடைபெறுகின்றது. தசரா என்பதும் இதுவே. தமிழ்நாட்டில் காணப்படுவதுபோலவே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலும் இவ்வழிபாடு பரவியிருந்தது. கிரீத்து, எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர் முதலிய நாடுகளில் சிங்க வாகனியாய் ஆயுதந்தாங்கிய தாய்க்கடவுளின் உருவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மக்களின் குலமுறை, நாகரிகம், மொழி, எழுத்து முதலிய ஆராய்ச்சி களால், மத்தியதரை நாடுகளில் வாழ்ந்த மக்களும் தமிழ் மக்களும் ஒரே இனத்தவர்களென ஆராய்ச்சியாளர் அனுமானித்திருந்தார்கள். அந் நாடுகளில் தாய்க் கடவுளின் வழிபாடு தென்னிந்தியாவில் காணப்பட்டது போல இருந்ததென்பது, மேலும் அவர்களின் அனுமானங்களை வலி செய்வதாகவுள்ளது. எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர், கிரீத்து, முதலிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படுவார்கள். இந் நாடுகளில் ஒரு காலத்தில் தாயாட்சி இருந்ததென் பதற்கு வரலாற்றுச் சான்றுகளுமுள்ளன. இன்று இந்திய மக்கள் மலாயா, தென்னாப்பிரிக்கா போன்ற தூரநாடுகளிற் சென்று குடியேறியிருப்பது போலவே, முற்காலத் தமிழரும் எகிப்து, ஆசியாமைனர், மெசபெ தேமியா முதலிய நாடுகளில் சென்று குடியேறியிருந்தார்கள். குடியேறிய மக்கள் தம்மோடு சமயத்தையும் கொண்டு சென்றார்கள். மக்களின் அறிவு பண்பட்ட காலத்தில் தாய்க்கடவுள் அன்பு மயமான கடவுளாகக் கொள்ளப்பட்டது. காடு கிழாள் உமாதேவியார் என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. முருகக் கடவுளைக் “கொற் றவை சிறுவன்” எனத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. கடவுளுக்குக் குணங்குறிகளில்லை என்றும், அவருக்கு ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இருவகைச் சக்திகளுண்டென்றும் தத்துவக் கருத்துக்கள் எழுந்தன. அப்பொழுது தாய்க் கடவுள் ஆண் வடிவாகக் கொள்ளப் பட்ட கடவுளின் பாதியாகக் கொள்ளப்பட்டது. பின் சக்தியும் சிவமும் பூவும் மணமும் போன்று ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்றும் “சிவமின்றேல் சக்தியில்லை” “சக்தியின்றேல் சிவமில்லை” என்றும் உயர்ந்த கருத்துக்கள் எழுந்தன. இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு அல்லது சக்தி வழிபாடு மிகப் பரவி முக்கியம் பெற்றிருந்தது. அக் காலத்தில் சக்தி வழிபாடு களைக் கூறும் சாக்த ஆகமங்கள் எழுந்தன. சாக்த ஆகமங்கள் 77 உண்டு. அவை மற்றெல்லா வழிபாடுகளிலும் பார்க்கச் சக்தி வழிபாடே சிறந்த தெனக் கூறும். ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இரு தன்மைகள் கடவுளுக்கு உண்டென்னும் கருத்து இப்போது சிவலிங்கத்துக்குக் கூறப் பட்டது. இதனைப் பீடமும் இலிங்கமுமாகவுள்ள சிவலிங்க வடிவங்கள் உணர்த்துகின்றன. மால் வழிபாடு சிவ வழிபாட்டை ஒப்ப மால் வழிபாடும் மிகப் பழமையுடையது. சிவ வழிபாடும் மால் வழிபாடும் ஒரே தொடக்கத்தை உடையன. மேற்கு ஆசிய மக்களைப் போலவே தமிழ் மக்களும் கடவுளுக்கு எல் எனும் பெயர் கொடுத்து வணங்கினர். இன்றும் தமிழ்நாட்டில் எல்லப்பன், எல்லம்மா முதலிய பெயர்கள் வழங்குகின்றன. மால் வழிபாடு எல் வழிபாடே யாகும். மா-எல் என்பது மால் என வழங்குகின்றது. மா என்பது பெருமையைக் குறிக்க எல் என்பதன் முன் இடப்பட்டது. மா என்பது கருமையையு முணர்த்தும். ஞாயிற்று வணக்கத்தோடு பாம்பு, சங்கு, முத்துத் தாமரை, சுவத்திகம் முதலியன தொடர்பு பெற்றிருந்தன. திருமால் பாம்பின் மீது பள்ளி கொள்வதாகப் பழங்கதை வழங்குகின்றது. திருமால் கையில் இருப்பது சங்கு. சங்கைச் சமய சின்னங்களுள் ஒன்றாகக் கொள்ளும் வழக்கம் ஞாயிற்றுக் கடவுளை வணங்கிய எல்லா மக்களிடையும் இருந்தது. முற்காலத்தில் கிறித்துவ கோயில்களிலும், பௌத்தர் சைத்தியங் களிலும் சங்கு ஒலிக்கப்பட்டது. சிவபெருமானின் காதுகளிலிருப்பது “சங்க வெண்குழை” திருமாலின் கையிலிருக்கும் சக்கரமும் ஞாயிற்றைக் குறிக்கின்றது. சங்கு எப்படிச் சிறந்த சமய சின்னமாகக் கொள்ளப் பட்டதோ அப்படியே முத்தும் சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. கடவுளின் உருவங்களுக்கு முத்துமாலை அணியப்பட்டது. அரசரும் பெரு மக்களும் முத்துமாலை அணிந்தார்கள். திருமாலின் கழுத்திலிருப்பது முத்து மாலை. முத்து விலையேறப் பெற்றதாதலின் முத்துக்குப் பதில் உருத்திராக்கம் அணியும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. திருமால் வணக்கமும் சிவ வணக்கமும் வேறானவையல்ல என்னும் கருத்து பழங் காலம் முதல் இருந்து வருகின்றது. “அரியும் சிவனும் ஒன்று” என்னும் முதுமொழி இதனை விளக்கும். “அரியலாற் றேவியில்லை ஐயாற னார்க்கே” என வரும் தேவாரத்தால் திருமால் வழிபாடு ஒருகாலத்தில் தாய்க்கடவுள் வழிபாடாக இருந்ததோவெனக் கருதக்கிடக்கின்றது. 1திருமால் வழிபாடு முல்லைநில மக்களுக்குரியதாகத் தொல் காப்பியங் கூறுகின்றது. பிற்காலத்தில் விட்டுணு வழிபாடு, கண்ணன் வழி பாடு, இராமர் வழிபாடு முதலியன திருமால் வழிபாட்டோடு கலந்தன. ஆகவே கண்ணன், இராமர் முதலியவர்களின் பிறப்புகள் திருமாலின் அவதாரங்களாகக் கொள்ளப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன் கண்ணன் வழிபாடு மிகப் புகழ் பெற்றிருந்தது. கி.மு. இரண்டாம் நூற் றாண்டில் தமிழ் நாட்டினின்றும் சென்று ஆர்மேனியாவிற் குடியேறிய தமிழர் அங்கு கிருட்டிண, பலதேவ வழிபாட்டை நாட்டியிருந் தார்கள். விட்டுணு வழிபாடென்பது வடநாட்டு ஆரிய மக்களிடையே தோன்றிய ஞாயிற்று வழிபாடு. பிற்காலத்தில் இவ் வழிபாடு திருமால் வழிபாட்டோடு இணைந்தது. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாகவுள்ளது. திருமாலின் ஊர்தி பருந்து. எகிப்திய மக்கள் பருந்தை ஞாயிற்றுக் கடவுளின் சின்னமாகக் கொண்டு வழிபட்டார்கள். முருக வழிபாடு சிவ வழிபாட்டைப்போலவே முருக வழிபாடும் மிகப் பழமை யுடையது. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு இருந்ததைக் காட்டும் சான்றுகள் காணப்பட்டதுபோல முருக வழிபாட்டைக் காட்டும் சான்றுகள் காணப்படவில்லை. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக் கப்பட்டிருந்த எழுத்துக்களின் வாசிப்பொன்றில் முருகன் என்னும் பெயர் காணப்படுவதாக ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார். முருக வழிபாடு தொடக்கத்தில் கதிரவன் வழிபாடாக இருந்தது. இலங்கையிலுள்ள முருகன் கோயில் கதிர்காமம் எனப்படும். கதிர்க்கடவு ளின் வழிபாட்டுக்குரிய இடம் கதிர்காமம் எனப்பட்டது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் ஒன்று எனவே மக்களின் நம்பிக்கை இருந்து வருகிறது. சிவ வழிபாடு தொடக்கத்தில் சிவலிங்க வழிபாடாகவிருந்தது. முருக வழிபாடும் இவ்வாறே இருந்தது. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் இருப்பது போலவே முருகனைக் குறிக்கும் சேய், சேயோன், செவ்வேள் என்னும் பழைய பெயர்கள் சிவந்தவன் என்றும் பொரு ளுடையன. சிவவழிபாடு உலகின் பல்வேறு பாகங்களில் காணப்பட்டது போலவே முருக வழிபாடும் பலஸ்தீன நாட்டில் காணப்பட்டது. அங்கு சிவன் என்னும் கடவுள் பால் (பகல்) என்னும் பெயரில் வழிபடப் பட்டார். பாற் கடவுளுக்கு இரண்டு வடிவுகளுண்டு. ஒன்று முதியபால், மற்றது இளம்பால். இவ்விரண்டு வடிவங்களும் முதிய தோற்றமும் இளந் தோற்றமுமாக இருந்தன. வடிவங்கள் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டும் ஒரு கடவுளின் தோற்றங்களாகவே கொள்ளப்பட்டன. நீல வானிலே கடலில் தோன்றும் ஞாயிற்றின் தோற்றம் மயில் ஊர்தியில் காட்சியளிக்கும் குழந்தை வடிவான கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு முருகக் கடவுளை வழிபட்டார்களென் பதைத் திருமுருகாற்றுப்படை என்னும் நூல் நன்கு கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் முருகக் கடவுளுக்கு ஆறு திருமுகங்களிருப்பதாகக் கூறுகின்றன. முருகக்கடவுள் வீரதெய்வ மாகக் கூறப்படுகின்றார். சங்ககால மக்கள் முருகக் கடவுளை மயிலூர்தி யுடையவராகவே வழிபட்டார்களென்பது “மணி மயிலுயரிய மாறா வென்றிப் - பிணிமுகவூர்தி ஒண் செய்யோனும்” (56) என்னும் புற நானூற்றுப் பாடலால் தெரியவருகின்றது. ஸ்கந்தர், கார்த்திகேயர், சுப்பிரமணியர், குகன் முதலிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப் படவில்லை. இப் பெயர்கள் வடநாட்டினின்றும் வந்து பிற்காலங்களில் தமிழ் நாட்டில் வழங்கின. கந்தன் என்பதே ஸ்கந்த என வடமொழியில் உச்சரிப்பு வேறுபட்டது. கந்தனென்பதற்குக் கந்திலுறைபவன் அல்லது கந்தில் வழிபடப்படுபவன் என்னும் பொருளுண்டு. மும்மூர்த்திகள் தொடக்கத்தில் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள், குமாரக் கடவுள் என்னும் மூவருமே மும்மூர்த்திகள் எனப்பட்டார்கள். இவ்வழக்கே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலுமிருந்து வந்தது. பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் ஆரிய மக்களிடையே வடநாட்டில் தோன்றியவை. பிராமண மதத்தினர் தென்னாட்டுக்கு வந்து தமது மதக் கொள்கைகளைப் பரப்பிய காலத்தில் பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் மும்மூர்த்திகளாயின. உருத்திர வணக்க மும் சிவ வணக்கமும் வெவ்வேறு தொடக்கமுடையனவாயினும் பிற் காலத்தில் இரண்டும் ஒன்றாகக் கொள்ளப்பட்டன.1 சிவவழிபாட்டினர் சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர் எனக் கொண்டு வந்தனர். அவர்கள் சிவனை “மூவர்கோன்” என்பர். கோயிலும் கோயிற்கிரியையும் மக்கள் அருள்தறி, தந்தை, தாய் என்னும் வடிவுகளில் கடவுளை வழிபட்டு வந்தார்கள். இவற்றைச் சுற்றிக் கட்டடங்களெழுந்தன. கடவுளுக்கு இருப்பிடமாகிய கட்டடம் அரசனுடைய வீடு போன்ற அமைப்பில் எடுக்கப்பட்டது. கோயிலென்பது அரசன் இருக்கும் வீட்டையும் கடவுள் இருக்கும் வீட்டையும் குறிக்கும். மக்கள் கீழ்நிலையி லிருந்து மேல்நிலை அடைந்த போது கோயிலும் பெரியதாக எடுக்கப் பட்டது. அரசன் கடவுளின் அவதாரம் எனக் கருதப்பட்ட காலத்து அரசனே தலைமைக் குருவாக இருந்தான். பின் அரசனுக்குப் பதில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிற் குருக்களாக இருந்தார்கள். இக் காரணத்தினாலேயே குருமாருக்கு முற்காலங்களில் அதிக மதிப்பு உண்டாகியிருந்தது. பிற்காலங்களில் அரசருக்கும் அரச குடும்பத்தினருக் கும் பதில் உயர் குடும்பங்களிலுள்ளவர்கள் கோயிற் குருக்களாக நியமிக் கப்பட்டார்கள். தந்தை புரிந்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குரு வகுப்பினர் பெருகினர். இவர்களல்லாது ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த அருட் குறிகளை மேற்பார்த்த பலதிற வகுப்பினரும் பூசாரிக் குடும்பங்களாகப் பெருகினர். அரண்மனையில் அரசனும் அரசனைச் சூழ்ந்த அவனுடைய அமைச்சர், சேனாபதியர், தலைமை அதிகாரிகள், உறவினர் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே கோயிலிலும் பரிவார தெய்வங்கள் இருந்தன. அரசனுடைய அரண்மனையைச் சூழ்ந்து மதிலும் அகழும் இருந்தது போலக் கோயிலுக்கும் மதிலும் அகழும் இருந்தன. கோயில் ஒரு கோட்டையின் அமைப்பு உடையது. தஞ்சாவூர்ப் பெரிய கோயில் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. தென்னிந்தியா, அசீரியா, எகிப்து, மெசபெதேமியா முதலிய நாடுகளில் கோயில்களின் அமைப்பு ஒரே வகையாக இருந்தது. எகிப்திலே கர்நாக் என்னுமிடத்தில் பழங் காலக் கோயில்கள் காணப்படுகின்றன. இக் கோயில்களுக்குத் தென்னிந்திய கோயில்களுக்குக் காணப்படுவது போன்று வாயில்கள், கோபுரங்கள் காணப்படுகின்றன. கோபுரங்களில் அடிமுதல் நுனிவரை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய சிற்பக்கலைக்கும் எகிப்திய கட்டடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைச் சிற்பக் கலை ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர். எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வங்களுக்குரியதாகக் கொண்டனர். கட்டடத் தூண்களில் தாமரை மொட்டின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மெசபெதேமியா விலும் அசீரியாவிலுமுள்ள கோயிலமைப்பு தென்னிந்தியக் கோயி லமைப்பை ஒத்துள்ளது. பலஸ்தீன நாட்டு அரசனாகிய சாலமன் கட்டிய கோயில் தென்னிந்தியக் கோயில் போன்றதே. கோயில்கள் சூரிய னுதிக்கும் திசையை நோக்கி நின்றன. கோயிற் கிரியைகள் என்பன அரசனுக்கு அவனுடைய பணியாளர் காலை முதல் அவன் நித்திரைக்குச் செல்லும் வரை என்னென்ன உப சாரங்களைச் செய்கிறார்களோ அவற்றை எல்லாம் செய்து காட்டுவ தாகும். கிறித்துவ வேதத்திலே சாலமனின் கோயிலில் செய்யப்பட்ட கிரியைகளை நோக்கினால் அக் கிரியைகள் பெரும்பாலும் தென் னிந்தியக் கோயில்களில் நடைபெறும் கிரியைகளை ஒத்திருத்தலைக் காணலாம். கோயில் அமைக்கவேண்டிய விதிகள், அளவுகள், கிரியைகள் என்பவற்றைக் கடவுள் அருளிச் செய்தார் என்னும் நம்பிக்கை தென் னிந்தியாவிலிருப்பது போலவே மெசபெதேமியாவிலு மிருந்தது. இவ் விதிகளை உண்டாக்கினோர் உண்மையில் கோயிற் குருமார்களே ஆவர். தமிழ் நாட்டினின்றுஞ் சென்று எகிப்து மெசபெதேமியா முதலிய நாடுகளிற் குடியேறிய மக்களே கோயிலெடுக்கும் விதிகளையும் சமயக் கிரியைகளையும் கொண்டு சென்று அந் நாடுகளில் பரப்பினார்களென்ப தற்குரிய சான்றுகள் மேல்நாட்டாராய்ச்சியாளர் செய்துள்ள ஆராய்ச்சி களில் கிடைக்கின்றன. ஆகமங்கள் சமயத்துக்குக் கோயில்களும் கோயில் கிரியைகளும் முதன்மை உடையனவாக இருந்தன. கோயிலமைக்க வேண்டிய மாதிரி, நீளம், அகலம், உயரம் போன்றனவும் கோயிற் கிரியை முறைகளும் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தன. இவற்றை அறிந்திருந்த வர்கள் கோயிற் குருமார்களாக இருந்தார்கள். இவையும் இவை போன்று சமயத்தோடு தொடர்பு பெற்றிருந்த பல செய்திகளும் நீண்ட காலம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன; இவற்றின் தொகுப்பே ஆதியில் ஆகமமாக இருந்து வந்தது. எகிப்து, மெசபெதேமியா, இந்தியா முதலிய நாடுகளில் ஆகமக் கருத்துக்கள் ஒரே வகையாக இருந்தன. ஆரிய மக்கள் இந்திய நாட்டை வந்தடைவதன் முன் ஆகமக் கொள்கைகள் இந்தியாவிலிருந்தன.1 தமிழ் மக்கள் கடவுளைக் கோயில் களில் வழிபட்டார்கள். ஆரிய மக்கள் கடவுளைக் கோயில்களில் வழிபட வில்லை. அவர்கள் யாகங்கள் புரிந்து அவற்றில் தேவர்களுக்கு உணவு அளித்து அவர்களை மகிழ்வித்தார்கள். உயிர்களின் மறுபிறப்புக் கொள்கையைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை என்றும், அவர்கள் மறுபிறப்பைப் பற்றி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடத்தில் பிற்காலங்களில் அறிந்து கொண்டார்கள் என்றும் வேத ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். ஆகவே கோயில், கோயிற் கிரியைகள் சம்பந்தமான அறிவும், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களின் ஆராய்ச்சி யும் தமிழர்களுடையனவாகும். தமிழரிடத்து வழங்கிய தத்துவ ஞானங்கள் உபநிடதங்கள் (உபதேசங்கள்) என்னும் பெயர்களுடன் பிற்காலங்களில் வெளியிடப் பட்டன. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்டல் என்பது பொருள். உபநிடதங்களில் கூறப்படும் மறைபொருள் குருமாணாக்க முறையிற் கேட்டு அறிதற்குரியன. ஆகவே அவை எழுதிவைக்கப்பட வில்லை. இஞ்ஞானங்களைக் கேட்டறிவதில் தாகங்கொண்டிருந்த ஆரிய மக்களுட் சிலர் அவற்றைத் தமிழறிஞரிடம் கேட்டறிந்த பின் தாம் அவற்றைப் பிறருக்கு உபதேசிக்கும் பொருட்டு எழுதி வைக்கலாயினர். வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைக்கும் மரபு தமிழ்நாட்டில் இருக்கவில்லை எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. பிற்கால உரை யாசிரியர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானோரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். உபநிடதங்களும் ஆகமங்கள் எனப் படும். இதனால் உபநிடதங்களிலுள்ள கருத்துக்கள் ஆகமக் கருத்துக் களே எனப் புலப்படும். வேதங்களைச் சூத்திரரும், பெண்களும் ஓதுதலும் கேட்டலும் கூடாது. உபநிடத ஞானங்களைப் பெண்களும் எல்லாக் குலத்தினரும் பெறலாம். “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்பது உபநிடதக் கருத்துக்கள் பற்றி எழுந்ததே. உபநிடதங்கள் ஆரியரல்லாத மக்களுடையன வென்பதை விண்டர் நிட்ஸ் என்னும் செர்மன் பேராசிரியர் இந்திய இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலில் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். சைவ சமயத்துக்கு ஆதாரம் எனப்படும் நூல்கள் 28 சிவ ஆகமங்கள். இவ்வாகமங்களில் சில அச்சிடப்பட்டுள்ளன. பல அச்சிடப் படவில்லை. பல பெயரளவிலேயே இருந்து வருகின்றன. ஆகமங்கள் தமிழருக்கும் சைவத்துக்கும் உரியனவாயின் அவை ஏன் வடமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்னும் கேள்வி எழலாம். ஆகமக் கருத்துக்கள் செவி வழக்கில் இருந்து வந்தன வென்று கூறினோம். ஆகமங்கள் எழுதப் பட்ட “பாஷா” என்னும் நடை கி.பி.1000 வரையில் வழங்கியதென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென் னாட்டில் படிப்படியே வடமொழி ஆதிக்கம் ஏற்பட்டு வந்தது. அப் பொழுது1 தமிழிலிருந்த ஆகமங்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருத்தல் வேண்டும் அல்லது செவி வழக்கிலிருந்த ஆகமக் கருத்துக் கள் திரட்டப்பட்டு வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழில் ஆகமங்கள் பல இருந்தன வென்று கி.பி.5 ஆம் நூற்றாண்டள வில் செய்யப்பட்ட திருமந்திரம் கூறுகின்றது. சைவத்துக்கு 28 ஆகமங்களும்2 வைணவத்துக்கு 108 ஆகமங்களும், சாக்தத்துக்கு 77 ஆகமங்களுமுண்டு. இவற்றுட் சிலவற்றுக்கு எழுதப் பட்ட உரைகளில் இவையல்லாத நூற்றுக்கணக்கான ஆகமங்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஆகமங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என நம்பப்பட்டு வருகின்றன. ஆகமங்கள் பொதுவாக ஞானம், யோகம், கிரியை, சரியை என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. அது வீடு எனப்படும். யோகம் என்பது மனத்தை ஒரு செயலில் பற்ற வைத்து நிற்பது. கிரியை என்பது கோயில் கட்டுவதற்கு, நிலத்தை உழுதல், தளமிடுதல் முதல் விக்கிரகத்தை நாட்டுதல் வரையிலுள்ள செயல்கள். சரியை என்பது கடவுளை வழிபட வேண்டிய முறைகள். சரியை, கிரியை, யோகம் முதலிய மூன்றும் ஆசிரியனிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியன வென்றும், பக்குவமடைந்தவர்களுக்கு ஞானத்தை அளிக்க இறைவன் குரு முகூர்த்தத்தில் நேரில் வருவான் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. உலகம் பொய்த் தோற்றமாக உள்ளது என்னும் கொள்கையை (மாயா வாதத்தை) ஆகமங்கள் எதிர்க்கின்றன. ஆகமங்கள் உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கொள்ள வில்லை. கடவுளிடத்தில் பத்தி செலுத்துவதையே ஆகமங்கள் சிறப்பாக வலியுறுத்துகின்றன. பாடுதல், ஆடுதல் போன்ற உள்ளக் கிளர்ச்சி தரும் செயல்கள் பக்தி காரணமாக எழுந்தனவே. தமிழிலும் சமக்கிருதத்திலும் பக்திமயமான பாடல்கள் பல உள்ளன. இசை, நாட்டியம், அபிநயம் என்பனவும் சமய பக்தி காரணமாக வளர்ச்சி அடைந்தன. அபிநயம் காரணமாகத் தேவதாசிகள் கோயில்களில் அமர்த்தப்பட்டார்கள். சைவ ஆகமங்களும் சாக்த ஆகமங்களும் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமை யுடையன. சைவ சித்தாந்தக் கொள்கைகள் 28 ஆகமங்களிலும் வேதாந்த சூத்திரங்களுக்கு நீலகண்ட சிவாசாரியார் செய்த சைவ பாடியத்திலும், சென்ற 1500, ஆண்டுகளாகச் செய்யப்பட்ட சைவ நூல்களிலும் காணப் படுகின்றன. சைவசித்தாந்தக் கொள்கைகள் சிவாகமங்களுள் முதன்மை யுடையதான காமிகாகமத்தின் ஞான பாதமாகிய மிருகேந்திரத்தில் கூறப்படுகின்றன. (இவ்வாகமங்களும் வேறு சிவாகமங்களும் தமிழுரை யோடு அச்சிடப்பட்டுள்ளன). சிவம் தொடக்கமில்லாதது. அது எல்லா வற்றையும் அறிவது, எல்லாவற்றையும் செய்வது, உயிர்களின் அறிவை மூடியிருக்கும் மலத்தை நீக்குவது என மிருகேந்திராகமங் கூறுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் (துரோதானம்) எல்லாம் சிவத்தின் செயல்கள். உலகம், உயிர், இறைவன் என்னும் முப் பொருள்களும் உட்பொருள்கள். சைவ சித்தாந்தக் கொள்கைகளை, 13ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்ட சைவ சித்தாந்த நூல்கள் நுட்பமாக எடுத்து விளக்கு கின்றன. சைவ சித்தாந்தம் சாதி, வருணாச்சிரம தருமம் போன்றவற்றை அனுமதிக்கவில்லை. பெரிய புராணத்திற் கூறப்படும் மெய்யடியார்கள் வரலாறுகள் இதற்குச் சான்றாக உள்ளன. வைணவ மதத்தினரும் இதே கொள்கையுடையராகவிருந்தனர். வைணவ அடியார்களுள் ஒருவர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். சாதி பேதம், வருணாச்சிரம தருமம் போன்ற கொள்கைகள் தலையெடுத்த காலத்தில் கன்னட தேசத்தில் வசவர் தோன்றினார். இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி. இவரால் கொண்டுவரப்பட்ட சைவம் இலிங்கங்கட்டி மதம் அல்லது இலிங் காயதம் அல்லது வீரசைவம் எனப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பிராமண ஆதிக்கத்தையும் சாதி பேதத்தையும் ஒழிப்பதாக இருந்தது. பிராமண சாதியிற் பிறந்தவராகிய வசவர் இக் கொள்கையை நிலைநாட்ட முன்வந்தது வியப்புக்குரியதாக இருந்தது. இவருக்கு முன் விளங்கிய புத்தர் முதலிய சமய சீர்திருத்தக்காரர்களைப் போலவே இவரும் தமது போதனைகளை உள்நாட்டு மொழிகளில் செய்தார். வழக்கம்போலப் பிராமணர் இம் மதத்தவரிடையே சாதிபேதக் கொள்கையை நுழைத்து அதன் சீவசத்தை வாங்கிவிட்டார்கள். இலிங்காயத மதம் பௌத்த மதத்தைப் போலச் சாதிபேதத்துக் கெதிராக எழுந்ததாயினும் இன்று இலிங்காயதப் பிராமணர், இலிங்காயத சூத்திரர் முதலியோர் காணப் படுகின்றனர். யோகமார்க்கம் கடவுள் புலன்களாலறிய முடியாதவர், நினைவுக்கு எட்டாதவர் எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் உண்மைகளையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே குணங்குறியில்லாத முழுமுதற் கடவுளைக் குறிக்கக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை அவர்கள் இட்டுவழங்கி னார்கள். கடவுளென்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் என்பதும் இயவுள் என்பதற்கு எல்லாவற்றையும் இயக்குபவர் என்பதும் பொருள்களாகும். புலன்களாலறியப்படாத பொருளை அறிவதற்குப் புலன்களை அடக்குதல் வேண்டுமென்னும் கொள்கை எழுந்தது. புலன்களை ஒடுக்கி (ஐந்தடக்கி) மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு வாய்ப்பான முறைகள் கண்டுபிடிக் கப்பட்டன. இவ்வழி யோக மார்க்கம் எனப்பட்டது. 5000 ஆண்டுகளின் முன் மொகஞ்சதரோ மக்கள் இம் முறைகளை அறிந்திருந்தார்கள்.1 அங்கு கிடைத்த தொல்பொருள் ஒன்றில் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு அட்டணைக் காலிட்டு யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையிலுள்ள உருவமொன்று வெட்டப்பட்டுள்ளது. மிக முற்காலத்தில் தமிழ் மக்க ளிடையே தோன்றியிருந்த இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே சமண, பௌத்த மதங்கள் எழுந்தன. சமண, பௌத்த மதங்கள் ஆரியர் வருகைக்கு முன் இந்தியநாட்டிலிருந்த சமயக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தவை என ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். சமண, பௌத்த மதங்களின் மூலாதாரக்கொள்கை புலன்களை வென்று ஆசை யற்றிருப்பது. “திரையற்றகடல் போற் சிந்தை தெளிந்தார்க்குப் - புரையற் றிருந்தான் திரிசடையோனே” எனத் திருமூலரும் குறிப்பிடுதல் காண்க. கடவுளைப் பற்றி ஆராயத் தொடங்கிய மக்கள் இவ்வுலகைப் பற்றியும் உலகில் வாழும் உயிர்களைப்பற்றியும், உலகுக்கும் உயிருக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றியும் ஆராயத் தொடங்கினர். இவ் வாராய்ச்சிகள் தொடர்பான நூல்கள் தத்துவ சாத்திரங்கள் எனப் படுகின்றன. கௌதம புத்தருக்கும் மகாவீரருக்கும் முன்னிருந்தவர் கபிலர். இவர் செய்த தத்துவ நூல் சாங்கியம். சாங்கிய மதக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சமண பௌத்த மதங்கள் எழுந்தனவெனக் கூறுவர் ஆராய்ச்சி வல்லார். வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும் தொடக்கத்தில் வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும் வேறுபட்டன வாக இருந்தன. இருக்குவேத காலத்தில் தாசுக்களுக்கும் ஆரியருக்கும் நேர்ந்த பிணக்குகளென்பன சமயத்தை அடிப்படையாகக் கொண்டி ருந்தன வென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சமண, பௌத்த மதங்களை விழுத்தும் பொருட்டு வேத மதத்தினரும் ஆகம மதத்தினரும் தமிழ்நாட்டில் ஒத்துழைத்தனர். சமணபௌத்த மதங்கள் விழுந்தபின் ஆகம மார்க்கமும் வேத மார்க்கமும் இணைந்து பல நூற்றாண்டுகளாக வருகின்றன. இவை இவ்வாறு நீண்டகாலமாக வருகின்றமையின் இக் காலத்தவர் அவற்றின் வேறு பாட்டை உணர்வதில்லை. ஆகமங்கள் வேதங்களினின்றும் பிறந்தனவெனவும் சிலர் நம்பி வருகின்றனர். வேதங்கள் செய்யப்பட்டுச் சில காலத்தின் பின் அவை எவராலும் செய்யப்படாமல் தாமாக உள்ளன என்னும் நம்பிக்கை இருந்துவந்தது. ஆகமங்களைச் சிவபெருமான், திருமால் முதலிய கடவுளர் செய்தனர் என்னும் நம்பிக்கையும் இருந்துவருகிறது.1 வேத மந்திரங்கள் வைதீகக் கிரியைகளில் ஓதுதற்குரியன. ஆகமங்கள் சைவ, வைணவக் கிரியை முறைகளையும், யோகசாதனைகளையும் தத்துவக் கூறுபாடுகளையும் கூறுகின்றன. வைதீகக் கிரியைகள் தீ வளர்த்துச் செய்யப்படுவன. அப்போது உணவு தீயிலிடப்படுகின்றது. ஆகமக்கிரியை களில் வழிபடுவோர் உணவுகளைப் படைத்துப் பின் எடுக்கின்றனர். வைதீகக் கிரியைகளில் வெவ்வேறு தொழில்களைச் செய்கின்ற பல தேவர் அழைக்கப்படுகின்றனர். ஆகமக்கிரியைகளில் ஒரு தெய்வத் துக்கே வழிபாடு செய்யப்படுகின்றது. வேதக்கிரியைகளில் வேள்வியாசி ரியன் செய்யும் ஒவ்வொரு கிரியையும் ஒவ்வொரு மந்திரஞ் சொல்லிச் செய்யப்படுகிறது. ஆகமங்களில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. வேத மந்திரங்கள் சில ஆகமக்கிரியைகளில் சொல்லப்படுகின்றன. இம் மந்திரங்கள் பொருளற்றனவாகவிருக்கின்றன. தூப எனத்தொடங்கும் மந்திரமொன்று தூபங் காட்டும் போது சொல்லப்படுகிறது. இம் மந்திரம் மாட்டை வண்டியிற் பூட்டுவதைக் குறிக்கிறது. ஆகமக் கிரியைகளில் பெரும் பகுதி கடவுளுக்குள்ள பல பெயர்களை ஈற்றில் நம என்பதை வைத்துத் துதிப்பதாகவுள்ளது. வைதீகக் கிரியைகளின் நோக்கம் தீயில் உணவைச் சொரிவது. ஆகமக்கிரியைகளின் நோக்கம் ஒரு அரசனுக்குச் செய்வது போன்ற உபசாரங்களைச் செய்வது. வேதக்கிரியைகளுக்குத் தெய்வத்தினுருவம் வேண்டப்படவில்லை. எல்லாத் தேவர்களையும் குறிக்கத் தீ ஒன்றே போதுமானது. ஆகமக் கிரியைகளுக்குக் கடவுளின் திருவுருவம் அல்லது கடவுளை குறிக்கும் ஒரு பொருள் வேண்டப்படும். வைதீகக் கிரியைகள் மக்களை நான்கு வருணங்களாகப் பிரிக் கின்றன. கடைசி வருணத்தவருக்கு வேத, வேதாந்தக் கல்விகள் மறுக்கப் பட்டன. நான்கு வருணப் பிரிப்பிலிருந்து வருணாச்சிரம தருமங்கள் வளர்ச்சியடைந்தன. வருணங்களுக்கேற்ப வருணாச்சிரம தருமங்களும் வேறுபட்டன. இச் சாதனைகளால் சன்னியாசம் பிராமணருக்கு மாத்திரம் உரியதாக இருந்தது. சன்னியாசத்தினால் மாத்திரம் மோட்சம் அடையக் கூடியதாகவும் இருந்தது. ஆகமங்கள் இக் கொள்கைகளை எதிர்த்தன. ஆகமங்கள் நான்கு வருணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகமமார்க்கத்தின்படி சண்டாளனாயினும் சிவன், திருமால் முதலிய உருவங்களை வைத்துப் பூசிக்கலாம். வேதாந்தம் வேதத்தின் பகுதியாக இருந்தமையின் அது நான்காம் வருணத்தவருக்கு மறுக்கப்பட்டது. ஆகமங்களை எவரும் ஓதலாம். சிவதீட்சை பெற்ற புலையனும் பிராமணனுக்குத் தீட்சை செய்து அவனுக்குக் குருவாகலாம். ஆகமக் கொள்கையினரிடையே சன்னியாசமும் பரவிற்று. வைணவ சன்னி யாசிகள் ஏகாந்திகளெனவும், சைவ சன்னியாசிகள் சிவயோகிகள் எனவும் பட்டனர். ஆகமக் கொள்கையின்படி மோட்சமடைவதற்குச் சன்னியாசம் அத்தியாவசியமன்று. எல்லாருக்குமுரிய பத்திமார்க்கமே முக்கியமுடையது. ஆகமக் கொள்கையினர் கடவுளின் பெயரால் உயிர்க் கொலை செய்வதைக் கண்டித்தனர். ஆகவே தானிய மாவினால் செய்யப் பட்ட விலங்கின் வடிவங்கள் விலங்குகளுக்குப் பதில் பலியிடப்பட்டன. சிறிது சிறிதாக வேதாந்தக் கொள்கைகள் ஆகமக் கொள்கைகளோடு இணைந்தன. புராணங்களில் இவை ஒன்றாக இணையவில்லை. சைவ மடங்கள் சமண பௌத்த மதங்களை ஒழிக்கும் பொருட்டுத் தோளொடு தோள் நின்று போராடிய வைதீக, ஆகம மதங்களுக்கிடையில் சிறிது சிறிதாக மாறுபாடுகள் எழுந்தன. உயர்ந்த சமய ஞானங்களைப் பற்றிய அறிவு சமக்கிருத மொழி மூலம் நூல்களைப் பயின்று பெறப்படுதல் வேண்டும். உள் நாட்டு மொழிகள் மூலம் அவற்றைப் பயில்வது பயனற்றது. பிராமணர் ஒழிந்தோர் துறவிகள் ஆதல் கூடாது. சமக்கிருதம் தெய்வ மொழி. தமிழ், மனிதர் பேசும் மொழி என்னும் கொள்கைகள் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கின. இந் நிலை 16ஆம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்திருந்தது. மேற் கூறப்பட்ட கொள்கைகள் தோன்றிப் பரவத் தொடங்கிய காலத்திலேயே திருமந்திரம், சித்தர் பாடல்கள், மெய்கண்ட சாத்திரங்கள் முதலிய நூல்கள் எழுந்தன. எல்லாக் காரியங் களிலும் மொழி, சமூகம் என்பவற்றைப் பற்றிய அபிமானம் முதன்மை பெற்றிருந்தது. இவற்றின் உரிமைக்கு இழுக்கு நேர்ந்த காலங்களில் மக்களிடையே உள்ளக் கொதிப்பு எழுந்தது. ஒவ்வொரு சமூகத்தினரும் தமது மொழியின் உரிமை, சமூக உரிமைகளுக்குப் போராடி வந்தனர். உள் நாட்டு மொழிகள் மூலம் சமய ஞானங்களைக் கற்றறிதல் பயனற்ற தென ஒரு சாரார் கூறுதலும் தமிழ் மொழியில் பல சமய நூல்கள் இயற்றப்பட்டன. பிராமணரல்லாதார் துறவு அடைதல் கூடாது என ஒரு சாரார் கூறுதலும் பிராமணரல்லாத பலர் துறவு பூண்டனர். இவ்வகைக் குழப்பங்களுண்டாகும்போது அரசாங்கமும் இவற்றில் பங்கு பற்றுவ துண்டு. பிராமணரல்லாத துறவிகள் மடங்களமைத்துக் கொண்டு இருத்தல் கூடாது என ஒரு சாரார் கூறிக் கலகம் விளைவித்துக் கலகக் காரரை ஏவிப் பல பிராமணரல்லாதார் மடங்களை அழித்தனர்.1 ஆகவே சைவத் துறவிகள் குகைகளை நாடிச் செல்ல நேர்ந்தது. குகை நமச் சிவாயர் முதலிய பெயர்கள் இதற்குச் சான்றுகளாகும். இந் நெருக்கடியான 16ஆம் நூற்றாண்டிலும் அதனை அடுத்தும் சைவ மடங்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. சைவமடத்தலைவர் எப்பொழு தும் பிராமணரல்லாதாராகவே இருந்து வருவர். சங்கராச்சாரியார் மடங்களின் தலைவர்கள் எப்பொழுதும் பிராமணராக விருப்பர். அரசர் பெரும்பாலும் வைதீக சமயத்தவர்களைச் சார்ந்து நின்ற மையின் கோயில்கள் சிறிது சிறிதாக வைதீக மதத்தினரின் கைப்பட்டன. அக் காலத்திலேயே கிரியை முறைகள் வடமொழியில் எழுதப்பட்டு அம் மொழியில் வழங்கலாயின. வடமொழிச் சொற்றொடர்களைச் சொல்லிச் செய்யும் கிரியைகளின் இடையிலும் தமிழிசை பாடுவதாகிய ஒரு பகுதியும் இருந்து வந்தது. முற்காலத்தில் தமிழ்த்துதி பாடிப் பூசை புரியப்பட்டதன் நிழலாக இது இப்பொழுதும் இருந்து வருகின்றது. தமிழிசை பாடுவோர் பிராமணரல்லாதாராவர். மொழிபற்றிய உணர்ச்சி ஒருபோதும் மக்களுள்ளத்தை விட்டு அகன்று விட மாட்டாது. மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலும் இவ்வுணர்ச்சி எவ்வளவுக்கு மக்களுள்ளத்தில் பதிந்திருந்ததென்பதை அவர் மனோன்மணீயத்துக்குச் செய்துள்ள தமிழ்த் தெய்வ வணக்கத்தைக் கொண்டு அறியலாம். இன்றும் இவ் வுணர்ச்சி மறைந்துவிடவில்லை. தமிழ் மொழியே தமிழரின் சமய மொழியாக இருக்க வேண்டு மென்னும் கிளர்ச்சி தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. வேதாந்த சித்தாந்த சமரசம் பௌத்த, சமண மத ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட பின் அரி பெரிது, சிவன் பெரிது என்னும் கொள்கைகள் பற்றி வைணவ, சைவ மதங் களுக்கிடையில் பூசல்கள் எழுந்தன. அக்காலத்தில் தத்தம் கடவுளரே பெரியர் என்று சாதிக்கும் பொருட்டுப் பல புராணக் கதைகள் எழுந்தன. வைணவர்களுக்குள் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் தோன்றி அவைகளும் ஒன்றோடு ஒன்று தருக்கிப் பூசல் விளைத்தன. சைவரும் வைணவரும் மாறுபடுவதை விரும்பாத சிலர் “அரியும் சிவனுமொன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று சொல்லிச் சந்து செய்தனர். பிராமண மதத்தினர் சைவ சித்தாந்தக் கொள்கையினராக இருக்க வில்லை. அவர்கள் வேதாந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தனர். வேதாந்தமென்பது பிரமமொன்றே உள்ளது. உலகம். உயிர் என்பன பிரமத்தின் போலித் தோற்றங்கள் எனக் கொள்ளும் கொள்கை. சங்கராச் சாரியார் இக் கொள்கையைப் பின்பற்றி வேதாந்த சூத்திரத்துக்குப் பாடியஞ் செய்தார். இக் கொள்கை சங்கராச்சாரியருக்குப் பின் தமிழ் நாட்டில் பெரிதும் பரவத் தொடங்கிற்று. வேதாந்த கொள்கைகளை மெய்கண்ட சாத்திரங்கள் கண்டிக்கின்றன. வேதாந்த சித்தாந்தக் கொள்கைகள் சம்பந்தமான வாதங்கள் நடந்து வந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள் இவ்விரு கொள்கையின ரையும் சந்துப்படுத்தும் பொருட்டு “வேதாந்த சித்தாந்த சமரச முன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” எனக் கூறினர். குமரகுருபரசுவாமிகள் “வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த-ஆராவின்ப அருங்கனி பிழிந்த-சாரங் கொண்ட சைவ சித்தாந்தம்” எனக் கூறினர். தமிழ் நாட்டில் பிராமணரல் லாத பலர் வேதாந்தக் கொள்கைகளைப் பயின்று அக் கொள்கைகளை விளக்க நூல்கள் பல தமிழிற் செய்தனர். வேதாந்தக் கொள்கைகள் மாயா வாதம் எனச் சித்தாந்திகளால் கண்டித்து ஒதுக்கப்பட்டன. வேதாந்தக் கொள்கைகள் பரவியிருந்த காலத்திலேயே அருள் திரு.ஆறுமுக நாவலரவர்கள் தோன்றிச் சைவ சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பொருட்டுப் பல ஆக்க வேலைகள் புரிந்து வந்தார். அக் காலத்தில் மாணவரும் பொது மக்களும் சமயக் கொள்கை களைக் கற்றறிவதற்கேற்ற வசன நூல்கள் எழுதப்படவில்லை. ஆகவே நாவலரவர்கள் மாணவரும் பொது மக்களும் கற்கும் பொருட்டுச் சைவ வினா விடை போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்கள். நாவலர் காலத்தில் இக்கால முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அக் காலத்தில் பொதுவாக நம்பப்பட்டு வந்த சில கொள்கைகளையும் அவர்கள் தழுவியுள்ளார்கள். சைவ சமயத்துக்கு வடமொழி வேதங்கள் ஆதாரம், சமக்கிருதம் தெய்வமொழி என்பவை போன்ற கொள்கைகள் இப்பொழுது ஏற்றுக் கெள்ளப்படவில்லை. நாவலர் காலத்தில் அறியப்படாதிருந்த பல சரித்திர உண்மைகள் இப்பொழுது அறியப்பட்டுள்ளன. அவை மேல்நாட்டறிஞர் வெளியிட் டுள்ள மனிதவியல் நூல்களிலும் பிறவற்றிலும் காணப்படுகின்றன. சமயத்தின் நோக்கம் மனிதன் எப்படி வேடன், இடையன் முதலிய, படிகளைத் தாண்டிப் படிப்படியே நாகரிகமடைந்தானோ அவ்வாறே சமயமும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கடவுள், உயிர் உலகம் முதலிய வற்றின் தொடர்பு, வினைப்பயன் போன்ற தத்துவக் கொள்கைகள் இந்திய நாட்டிலேயே தொடங்கி கிரேக்க நாட்டுக்குச் சென்றனவென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்தியாவினின்றும் சென்று பிற நாடுகளில் குடியேறிய மக்களும் அசோகச் சக்கரவர்த்தியால் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சமயபோதகர்களும் இக் கொள்கைகளைப் பிறநாடுகளில் பரவச் செய்தனர். கிரேக்க தத்துவ சாத்திரிகளில் முந்தியவ ராகிய பிதகோரஸ் இந்தியாவுக்கு வந்தோ, அல்லது பாரசீகத்திலிருந்தோ கபிலரின் சாங்கியக் கொள்கைகளை அறிந்து அக் கருத்துக்களைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டாரெனச் சிலர் கருதுகின்றனர். கபிலர் காலம் முதல் தத்துவ சம்பந்தமான மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ச்சியடைந்தன. சமயத்தின் முடிவு பிறப்பை ஒழிப்பது என்பது பலசமயங்களின் கோட்பாடாக இருந்து வந்தது. நாளேற நாளேறத் தத்துவமுறையான சமயக் கொள்கைகள் மறக்கப்பட்டன. தத்துவமுறை யில் சமயத்தை அனுட்டிப்பவர் இக் காலத்தில் அரியர். சமயங்கள் என்பன சமூகங்கள் என்பன போல ஒவ்வொரு கூட்டத்தினராலும் பெய ரளவில் கைக்கொள்ளப்படுவனவாக இருந்துவருகின்றன. சமயத்தின் பெயரால் சமூகங்களின் இணைப்பு உண்டாகிறது. சமயத்தில் கூறியபடி நடத்தல் வேண்டுமென்னும் கடப்பாடு ஒரு சமயத்தவராலும் கொள்ளப் படுவதில்லை. சமயம் ஒரு புறமும் மக்களின் நடத்தை இன்னொரு புறமாகவுமிருந்து வருகின்றன. பௌத்தமோ, சமணமோ, சைவமோ உள்ள நாட்டில் ஒரு பௌத்தன், சைவன், அல்லது சமணன் கடல் தொழில் அதிகாரியாக இருக்க முடியாது. ஆனால் இன்று அப்படியல்ல. ஒருவன் அச்சமய சின்னங்களை அணிந்து கொள்ளலாம், அச் சமயக் கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் கடப்பாடு வேண்டியதில்லை. சமயங்கள் உயர்ந்த நோக்கத்தோடு வளர்ந்தன. இன்று சமயங்களின் நிழல்களே உலாவுகின்றன. மதங்கள் மறைந்துவிட்டன வென்று கூறலாம். சங்கரர் வேதாந்த அத்வைதக் கொள்கையைக் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் போதித்துப் பரவச்செய்தவர் சங்கரர். இவர் மலை யாளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் நம்பூதிரிப் பிராமணர் குலத்திற் பிறந்தார். இவர் குடும்பத்தினரின் சமயம் சிவமதமென்று சிலரும், சாக்த மதமென வேறு சிலரும் கூறுவர். இவர் கௌடபாதரின் மாணாக்கராகிய கோவிந்தரிடத்தில் வேதங்களைக் கற்றார். கோவிந்தர் இவருக்கு அத் வைதக் கொள்கைகளைக் கற்பித்தார். எட்டு வயதாகவிருக்கும்போதே இவர் வேதங்களை எல்லாம் கற்றுக் கரைகண்டார். இவர் இடங்கள் தோறுஞ் சென்று வேறு மதக்கொள்கையுடைய மதத் தலைவர்களோடு வாதம் புரிந்தார். இவர் குமாரிலர், மந்தனமிசிரர் முதலியவர்களோடு வாதம் புரிந்ததாக ஐதீகமுண்டு. மந்தனமிசிரர் சங்கரரின் மாணவராகிச் சுரேஸ்வர ஆசிரியர் என அறியப்பட்டார். சங்கரர் நான்கு மடங்களைத் தாபித்தார். இவற்றில் முதன்மைபெற்றது மைசூரிலுள்ள சிரிங்ககிரி மடம். சன்னியாசிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குமாறாக இவர் தாயின் அந்தியக் கிரியைகளைச் செய்தார். அவர் கூட்டத்தினர் இதற்காக அவரை எதிர்த்தனர். இவர் 32ஆவது வயதில் காலமானார் என்று ஐதீகமுண்டு. இவர் கி.பி. 778-820 வரை வாழ்ந்தாரெனச் சிலரும் 9ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தாரென வேறு சிலருங் கூறுவர். இவர் சமயகுரவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தருக்குப் பின் வாழ்ந்தவ ரென்பது இவர் திருஞான சம்பந்தரைத் திராவிட சிசு எனச் சௌந்தரிய லகரியிற் குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியப்படுகின்றது. 1புதுமுறை இந்துமதம் இவர் பழைய சமயநூல்களுக்கு அத்வைதமுறையான உரை கண்டார். 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டில் புதுமுறையான இந்துமதம் தோன் றிற்று. தெற்கில் பௌத்தமதம் வீழ்ச்சி அடைந்தது. சமணம் உச்சநிலை யடைந்தது. வைதீகக் கிரியைகள் மங்கிக்கொண்டிருந்தன. சைவ அடியார் களும், வைணவ ஆழ்வார்களும் பக்திமார்க்கத்தைப்பரப்பிக் கொண் டிருந்தார்கள். புராண சம்பந்தமான இந்துமதமும், புராண சம்பந்தமான விழாக்களும் எங்கும் பரவின. தெற்கில் பல்லவ அரசர்கள் உச்ச அதிகாரம் பெற்று விளங்கினார்கள். அக் காலத்தில் பிராமணமதம் புராண இந்து மதமாக மாறிற்று. பல்லவர் ஆட்சியின் தொடக்கத்தில் அரசர் பௌத்த மதத்தினராக விருந்தனர். பிற்காலத்தவர்கள் வைணவர்களாகவும், சைவர் களாகவுமிருந்தார்கள். பௌத்த மதத்தினரின் துறவுக் கொள்கையை எதிர்ப்பதற்காகவும், கடவுட் கொள்கையில் பக்தியை உண்டாக்குவதற் காகவும் மீமாம்சகர் வேதக்கிரியைகளின் முதன்மையை மிகைப்படுத்தி னர். குமாரிலரும் மந்தனமிசிரரும் ஞானத்தையும் சன்னியாசத்தையும் பழித்து இல்லாச்சிரமத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். (குமாரிலர் மீமாம்சை சூத்திரத்துக்கும் அதன் பாடியத்துக்கும் உரைசெய்தவர். இவர் பீகார் பிராமணர். பௌத்த மதத்திலிருந்து இந்து மதத்தைத் தழுவியவர்). அத்வைதம் இக் காலத்தில் சங்கரர் சமய சீர்திருத்தக்காரராகத் தோன்றினார். அவர் புராணகாலக் கொள்கைகளையும் உபநிடதங்களின் உண்மை களையும் பரப்ப முயன்றார். இம் முயற்சியில் அவர் உயிரை உயர் வழிப் படுத்தக்கூடிய ஒரு தத்துவக் கொள்கையைக் கொண்டு போராடினார். பௌத்தம், மீமாம்சை, பத்தி முதலிய கொள்கைகளிலும் பார்க்க மக்களின் ஆன்மீக தேவைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய தத்துவ ஞானம் வேண்டப்பட்டது. மீமாம்சை கிரியைகளால் உயிர்களை உயர் நிலைப்படுத்தலாமென்றது. அக் காலத்தில் பிளவு பட்டிருந்த சமயக் கொள்கைகளை எல்லாம் திருப்திப்படுத்துவதற்கு உயிர் பிரமத்தோடு ஐக்கியப்பட்டுப் பிறப்பொழிவதாகிய வழியைக் கூறும் அத்வைதஞானம் சிறந்ததென அவர் கண்டார். அவர் அதனை மக்களுக்குப் போதித்தார். மலையாளத்திலிருந்து இமயத்துக்குச் செல்லும் வரையில் அவர் பல சமயங்களைக் கண்டார். விட்டுணு, சிவன், சக்தி, சூரியன் முதலிய கடவுளர் மீது அழகிய பாடல்கள் செய்தார். அவர் தென்னிந்தியாவில் சக்தி வழிபாட்டைக் கீழ்ப்படுத்தினார். கல்கத்தாவிலுள்ள காளிகோயி லில் இது முடியவில்லை. வைணவர் சங்குசக்கரம் சுட்டுக்கொள்வதை இவர் கண்டித்தார். இவர் பகவத்கீதை, வேதாந்த சூத்திரம், உபநிடதம் முதலியவற்றுக்கு உரைசெய்தார். தக்கணாமூர்த்தி தோத்திரம், ஆனந்தலகரி, சௌந்தரியலகரி, விட்ணுசகத்திரநாமம் போன்ற பல தோத்திர நூல்களையும் செய்தார். சங்கரருக்குப் பின்பே மாயாவாதம் என்னும் வேதாந்தக் கொள்கை தென்னாட்டிற் பரவிற்று. மாயாவாதம் பிரமத்தை விட உயிர் உலகம் என்பன பொய் (மித்தை) எனக் கூறுவது. சூரியன் ஒன்றே குடங்களில் நிறைக்கப்பட்ட நீரில் பல சூரியராகத் தோன்றுவது போலப் பிரம மொன்றே பல உயிர்களாகத் தோன்றுகின்றதெனக் கூறுகின்றது. இக் கொள்கை பதி, பசு, பாசம் என்னும் முப் பொருள்களும் உட் பொருள்கள் எனக்கூறும் சைவ, வைணவ மதக்கொள்கைகளுக்கு முரணானது. பக்தி மார்க்கத்துக்கு மாறாகவிருந்தமையின் இது தென்னாட்டில் தலை யெடுக்கவில்லை. இக் கொள்கைகளை சந்தானாசிரியர்களும் பிறரும் கண்டித்திருக்கின்றனர். “யானே பிரமனென்றிடும் பாதகத்தவரும்” “ஒன்றென்ற தொன்றேகாண் பதி, பசுவாம் - ஒன்றென்ற நீ பாசத்தோ டுனைகாண்” “பதி, பசு, பாசமெனப் பகர் மூன்றினிற் பதியினைப்போற் பசு பாசமனாதி” போன்ற வாக்கியங்கள் மாயாவாதக் கொள்கையை மறுத்துக் கூறுபவற்றுட் சில. “மாயாவாதமென்னுஞ் சண்டமாருதஞ் சுழித்தடித் தார்ப்ப” என்னும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கும் அதனைக் கண்டிப்பதாக இருக்கலாம். விவேகானந்தரும் சங்கரர் மதக் கொள்கைகளைக் கடைப் பிடித்தவராவர். இராமகிருஷ்ண சபை, விவேகானந்த சபைகளை மேற் பார்க்கும் சுவாமிகளாக உள்ளவர்களும் இம் மதக்கொள்கையினரே ஆவர். மாயாவாத வேதாந்தத்தைத் தழுவியிருந்த வைதீகர் திருக்கோயில் வழிபாட்டையும் கோயிற்பூசை செய்யும் புரோகிதரையும் தாழ்ந்தவர் களாகக் கருதினர். அக் காலத்திலேயே தமிழில் சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள் எழுந்தன. வைணவ ஆசாரியார்கள் சங்கரர் கொள்கைக்கு மாறாக வேதாந்த சூத்திரம், பகவத்கீதை முதலிய சூத்திரங் களுக்கு விசிட்டாத் துவைத, துவைத உரைகள் செய்தனர்; ஆகமங்களைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினர். சந்தான குரவர் சமயாசாரியர்கள் மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப் பினார்கள். சந்தானாசிரியர்கள் தத்துவ ஞானத்தைப் பரப்பினார்கள். மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமா பதி சிவாசாரியர் என்னும் நால்வரும் சந்தானாசிரியர்கள் எனப்படுவர். மெய்கண்டார் சடையப்ப வள்ளலின் மகளின் மகன் என்னும் ஐதீகமுளது. சிவஞானபோதம் மெய்கண்டாரால் 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது. திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரு நூல்கள் மெய்கண்ட தேவருக்கு முன் வாழ்ந்த குருவும் மாணவருமாகிய உய்யவந்ததேவர் என்னும் பெயருடைய இருவரால் செய்யப்பட்டவை. மெய்கண்டாரின் மாணவரிலொருவர் அருணந்தி சிவாசாரியர். இவர் அந்தண குலத்தவர். இவர் செய்த நூல் சிவஞான சித்தி, இருபாஇருபஃது என்னும் இரு நூல்கள். சிவஞானசித்தி சிவஞான போதத்துக்கு விரிவுரை போல அமைந்துள்ளது. மறைஞான சம்பந்தர் வேளாண்மரபினர். இவருடைய மாணவர் உமாபதி சிவாசாரியர். உமா பதி சிவாசாரியர் அந்தண மரபினர். அந்தணரல்லாதாரிடம் அந்தண வகுப்பினர் உபதேசம் பெறுவதும், அவர்களிடம் மாணாக்கராகவிருந்து உண்மை ஞானங்களைப் பெறுதலும், தமிழ்நாட்டு வழக்காக விருந்தன வென்பதும், வருணாச்சிர தருமங்கள் என்பன தமிழ் நாட்டுக்குப் புறம் பானவை என்பதும் இதனால் தெரியவருகின்றன. மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்யவில்லை. உமாபதி சிவாசாரியர் திருவருட்பயன், போற்றிப்பஃறொடை, வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், நெஞ்சு விடுதூது, சிவப்பிரகாசம் முதலிய நூல்களைச் செய்தார். சங்கற்ப நிராகரணம் கி.பி. 1313இல் செய்யப்பட்டது. சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தவர் மனவாசகங் கடந்தார். இவர் மெய்கண்டாரின் மாணவருளொருவர். சைவ சித்தாந்தம் உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள் களும் உட்பொருள்களென்றும், உயிர்கள் எண்ணிலாதன, அனாதியே மும்மலங்களால் பந்திக்கப்பட்டவை என்றும், இறைவன் உலகம் எல்லாமாகியும், உலகத்துக்கு வேறாகியும், எண்ணில்லாத உயிர்கள் கன்மத்தின் ஆணையில் அமர்ந்துசெல்ல அவற்றுக்கெல்லாந் தலைவ னாகவுமிருப்பவன் என்றும் மும்மூர்த்திகளுக்கு மேலானவன் என்றும் கூறுகின்றது. சிவனுக்கு அவதாரங்களில்லை. அவர் அடியார் வழிபடும் உருவில் குருவாகத் தோன்றி அவர்களை ஆட்கொள்பவர். உயிர்களின் போக போக்கியங்களுக்கு ஏதுவாகிய மாயை உட்பொருள். உபநிடதங்கள், ஆகமங்கள், திருமந்திரம், திருமுறை நூல்களிற் கூறப்படுவன சைவ சித்தாந்தக் கொள்கைகளே. சைவ சித்தாந்தக் கொள்கையே மிகப் பழங்காலம் முதல் தமிழரிடையே இருந்துவந்த சமயக் கொள்கையெனத் தெரிகின்றது. வசவர் இவர் கன்னட நாட்டில் பாகவாடி என்னுமிடத்தில் பிராமண குலத்தில் கி.பி. 1125இல் பிறந்தார். இவர் கல்யாணி அரசனாகிய பிச்சால னுக்கு (1156-1166) மந்திரியாக இருந்தார். இவர் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தமையால் அரசன் இவருடைய சகோதரியை மணஞ்செய்தான். வசவர் இன்னொரு சகோதரியின் மகனாகிய சன்னபச வருடன் வீர சைவமதக் கொள்கைகளை வேகமாகப் பரப்பி வந்தார். வீரசைவக் கொள்கை தெலுங்கு நாட்டிலும் தென் பகுதிகளிலும் பரவிற்று. அனுபவ மண்டபமென்னும் சமய கூடத்தை இவர் அமைத்தார். இதன் தலைவர் அல்லமாப் பிரபுவாக இருந்தார். சாதியை ஒழிப்பது, தொழிலுக்கு மதிப்பளிப்பது, பெண்களுக்கு ஆண்களை ஒத்த மதிப்பளிப்பது என்பன இம்மதக் கொள்கைகளுட் சில. வீர சைவ மதத்தைத் தொடக்கியவ ரல்லராயினும் அம்மதக் கொள்கைகளைப் பரப்பியவர் என்னும் வகையில் வசவர் புகழ் பெறுவர். வீர சைவம் வீர சைவம் என்பதற்கு வீறான அல்லது வீரமுள்ள சைவமென்பது பொருள். இம்மதம் மிகப் பழங்காலத்தில் ஐந்து ஞானாசிரியர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாசியர்கள் கலியுகத் தொடக்கத்தில் இரேவண சித்தர், மருள சித்தர், ஏகோராமர், பண்டிதாரத்தியர், விசுவாராத்தியர் என்னும் குரவர்களாக அவதாரஞ் செய்து இக் கொள்கைகளை மறுபடி யும் வெளியிட்டார்கள். இவ்வாறு வீர சைவர்களின் ஐதீகம் இருந்து வருகிறது. இவர்கள் சாமான்ய, மிர்ச, சித்தாந்த சைவர்களுக்கு வேறான வர்கள். முன் இரு பிரிவினரும் சிவனையும் விட்டுணுவையும் வழிபடுவர். சித்தாந்த சைவரும், வீர சைவரும் சிவனை மாத்திரம் வழிபடுவர். இலிங்க தாரணஞ் செய்து கொள்வது வீர சைவரைச் சித்தாந்த சைவரிலிருந்து வேறுபடுத்துகின்றது. ஆகவே இவர்கள் இலிங்காயதர் என்னும் பெயர் பெறுவர். வீர சைவம் ஆகமங்களைத் தழுவும் மதம். இது அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுக்குப் பக்தி செலுத்துகின்றது. இவர்கள் மத்திய கால அடியார்களெனப்படுவர். மத்திய கால அடியார்களும் 770 பேர் உளர். இவர்களுள் வசவரும் அவரது முக்கிய சீடர்களும் சேர்க்கப்பட் டுள்ளனர். வீர சைவ தத்துவ ஞானம் சக்தி விசிட்டாத்துவைதம் எனப் படும். இக் கொள்கையின்படி உயிரும் கடவுளும் ஒன்றை விட்டொன்று பிரிக்க முடியாத பொருள்கள். பிரிக்க முடியாது இணைத்துக் கொண் டிருக்கும் ஆற்றல் சக்தி எனப்படும். உயிர் கடவுளுமன்று, கடவுளில் வேறு மன்று. சக்தி பரமசிவத்தோடு எப்பொழுதுமிருக்கும் பிரிக்க முடியாத பொருள். இச் சக்தியே மூலப்பிரகிருதி அல்லது மாயையாகப் பிரிந்து உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. சூரியனுக்கு ஒளியும், நெருப்புக்குச் சூடும் இருப்பதுபோலக் கடவுளுக்குச் சக்தி இருக்கிறது. அவித்தை ஒழியும்போது சீவன் சிவனுடன் கலந்து ஒன்றாகி விடுகிறது. வைதீக சமயம் கி.மு.2000 வரையில் ஒரு புதிய மக்கட் கூட்டத்தினர் வடஇந்தியா வின் தென்மேற்குப் புறத்தை அடைந்தனர். இவர்கள் ஆரியரெனப்பட் டார்கள். இவர்கள் வரும்போது இந்தியாவில் நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களின் வருகைக்கு முற்பட்டது மொகஞ்சதரோ நாகரிகம். புதியவர்களாக வந்த ஆரியர் மந்தை மேய்ப்ப வர்களாக இருந்தனர். இவர்களின் வழிபாடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வழிபாட்டைவிட வேறு வகையாக இருந்தது. இவர்கள் இடி, மின்னல், காற்று, நெருப்புப் போன்ற இயற்கைப் பொருள்களைக் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டார்கள். அக் கடவுளர் மீது பாடப்பட்ட துதிப்பாடல்கள் பல அவர்கள் நினைவில் மிதந்து கொண்டிருந்தன. எழுதும் முறையை அறியாதிருந்தமையால் அவர்கள் அவற்றை எழுதி வைக்கவில்லை. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடஞ் செய்யும் முறையில் அவை காப்பாற்றப்பட்டு வந்தன. இந்திய நாட்டை அடைந்த பின்பும் அவர்களில் பலர் தெய் வங்கள் மீது பல பாடல்களைச் செய்தார்கள். பாடல்களைச் செய்த வர்கள் இருடிகள் எனப்பட்டார்கள். இவர்கள் வேறு வகை நாகரிகமும் மொழியுமுடைய மக்களின் மத்தியிலிருந்தமையால் தமது பாடல்கள் அழிந்து போகாமல் இருக்கும் பொருட்டு, நினைவில் மிதந்து கொண் டிருந்த பாடல்களெல்லாவற்றையும் திரட்டிப் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட பாடல்களின் தொகுப்பு வேதமெனப்பட்டது. வேள்விகளில் வேத பாடல்கள் பாடப்பட்டன. வெவ்வேறு கிரியைகளில் வேதபாடல்களில் சிற்சில பகுதிகளே பாடப்பட்டன. இவ்வாறு வெவ்வேறு கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட தொகுதிகள் வெவ்வேறு பெயர்கள் பெற்றன. வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்கு. முதல் மூன்றும் மொழி, பொருள்களில் பெரிதும் ஒற்றுமையுடையன. இவற்றுள் இருக்கு முதன்மையுடையது. சாமவேதம் துதிப் பாடல்களாக அமைந்துள்ளது. இப் பாடல்களில் பல இருக்கு வேதத்தில் காணப்படு கின்றன. சாமவேதப் பாடல்கள் யாகங்களில் பாடுவதற்காகத் திரட்டப் பட்டவை. எசுர்வேதப் பாடல்கள் கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக் கப்பட்டவை. வேதங்களை வியாச முனிவர் நான்காகப் பிரித்தார் என்னும் ஐதீகம் இருந்து வருகிறது.1 வேதங்களை மந்திரம், பிராமணம் என இரண்டாகப் பிரிக்கலாம். யாகக் கிரியைகளுக்காக மாத்திரம் திரட்டப்பட்ட பாடல்கள் மந்திர மெனப்பட்டன. அதற்கு மற்றொரு பெயர் சங்கிதை. மந்திரங்கள் இருக்கு வேத சங்கிதை, எசுர்வேத சங்கிதை முதலிய பெயர்கள் பெறும். யாகக் கிரியைகளை விரித்துக் கூறும் பாடல்களும் பல உரைநடைப் பகுதிகள் கொண்ட பகுதிகளும் பிராமணங்கள் எனப்பட்டன. பிராமணங்களை வேதங்களின் மிகப் பழைய உரைகள் எனக் கூறலாம். பிராமன் எனப் படுவது வேதம். பிராமனோடு சம்பந்தப்பட்டது பிராமணம். பிராமணங் களில்2 கிரியை முறைகளும் தத்துவ ஞானங்களும் அடங்கியுள்ளன. தத்துவார்த்தமான ஞானங்களடங்கிய பகுதி ஆரணியகங்களெனப் பட்டன.3 அவை எல்லோருக்கும் கற்பிக்கப்படுவதில்லை. அவற்றை விளங்கிக்கொள்வதற்குத் தனிமையும் அமைதியும் வேண்டும். உபநிட தங்களில் பல ஆரணியகங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வேதத்திலும் மந்திரங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் என்னும் மூன்று பிரிவுகளிருக்கின்றன. வேதத்தினிறுதியில் சேர்க்கப்பட்டிருப்பதால் உபநிடதங்கள் வேத முடிவு அல்லது வேதாந்தம் எனப்பட்டன. வேதங்களில் வருணன், மித்திரன், சூரியன், பூசன், அசுவினி, சோமன், இந்திரன், உசாக்கள், அதிதி, அக்கினி, உருத்திரன், மருத்துக்கள், பிரமன், பிரகஸ்பதி முதலிய பல தெய்வங்களுக்குத் துதிகள் காணப் படுகின்றன. வேதகாலச் சமயம் விக்கிரக வணக்கத்தைக் கைக்கொள்ள வில்லை. தெய்வங்களுக்குக் கோயில்களிருக்கவில்லை. தெய்வங்கள் வழிபடுவோரின் நண்பர்களாக இருந்தன. தமது தேவைகளை உதவுமாறு மக்கள் தெய்வங்களைத் துதித்தார்கள். வேள்விகளில் உணவும் நீரும் பெறும் பொருட்டு பிதிரர் (இறந்தவர்களின் ஆவிகள்) அழைக்கப் பட்டனர். தேவர்களை மகிழ்விப்பதற்கு யாகங்கள் செய்யப்பட்டன. மறு பிறப்பைப்பற்றி அறியப்படவில்லை. மரணத்துக்குப் பின் உயிர்கள் நரகம் அல்லது சுவர்க்கம் போன்ற உலகங்களில் வாழ்கின்றன என்னும் நம்பிக்கை இருந்து வந்தது. பிராமணங்கள் வேதத்தின் இரண்டாவது பகுதி பிராமணங்கள். இவை சதபதம், ஐதரேயம் என்பன. வேள்விக் கிரியைகளையும் வேள்விகளிற் படிக்கும் மந்திரங்களையும் அறிந்தவன் பிராமணன் எனப்பட்டான். யாகங்களால் இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்னும் நம்பிக்கை உறுதி பெற்றிருந்தது. நூறு யாகங்களைச் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரச னாகிய இந்திரனையும் பதவியிலிருந்து விழுத்தலாமென நம்பப்பட்டது. உலகில் எல்லாம் நடைபெறுவது யாகங்களினால்; யாகங்களில்லாவிடில் சூரியனும் உதிக்கமாட்டாது என்பது போன்ற நம்பிக்கைகளும் இருந் தன. யாகங்கள் அதிகப்பட்டதும் புரோகிதரின் மதிப்பும் அளவு கடந்து வளர்ந்தது. உபநிடதங்கள்1 உபநிடதமென்பதற்குக் கிட்ட இருத்தல் என்பது பொருள். இதன் கருத்து கிட்ட இருந்து கற்கப்படுவதென்பது. உபநிடத ஞானத்தைக் குரு தகுதியுள்ள தமது மாணாக்கனுக்கு உபதேசித்தார். உபநிடதங்கள் எத்தனை என்பதைக் குறித்து அறிஞர் ஒரே வகையாகக் கூறவில்லை. சிலர் 150 என்றும், சிலர் 108 என்றும் கூறு கின்றனர். முத்திகோப உபநிடதம் 108 உபநிடதங்களைக் குறிப்பிடுகின் றது. இப்பொழுது 108 உபநிடதங்களுள்ளன. 1656இல் உபநிடதங்கள் சில பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் 50 உபநிடதங்க ளுள்ளன. அவ்வைம்பதும் இன்று கிடைக்கவில்லை. 14 உபநிடதங்களே வேதங்களைச் சேர்ந்தனவென்று சங்கராச்சாரியர் (கி.பி.8ஆம் நூ.) கூறியுள்ளார். மற்றைய ஆச்சாரியார்கள் 102 உபநிடதங்களே பிரமாண மாக உள்ளவை என்று கூறியுள்ளார்கள். ஈச, கேன, கதா, முண்டக, மண்டூக்கிய, ஐதரேய, தைத்திரீய, பிராஸ்ன, சாந்தோக்கிய, பிரிதாரண்யக முதலிய உபநிடதங்களிற் காணப்படாத புதிய கருத்துக்கள் மற்றைய உபநிடதங்களிற் காணப்படவில்லை. ஈசா, கேனா என்னும் சொற்களோடு தொடங்குகின்ற உபநிடதங்கள் ஈச, கேன என்னும் பெயர்களைப் பெற்றன. கதா என்பது எசுர் வேதத்தி லுள்ள பிராமணத்தின் ஒரு பகுதியில் இப்பெயருடன் காணப்படு கின்றது. முண்டகம் மழிக்கப்பட்ட தலையைக் குறிக்கும். இது சன்னியாசி களைக் குறிக்கின்றது. சன்னியாசிகளுக்குரியதாதலின் இது இப் பெயர் பெற்றது. மண்டூகர் என்னும் இருடி செய்த உபநிடதம் மண்டூக உபநிடதமெனப்பட்டது. பிராஸ்ன என்பது கேள்வியைக் குறிக்கும். இதில் ஆறு கேள்விகள் இருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட்டது. ஐதிரேய உபநிடதம் ஐதிரேயராற் செய்யப்பட்டது. தைத்திரீய உபநிடத்தைப் பற்றிப் புதுமையான கதை வழங்குகிறது. யாக்ஞவல்கி தமது மாணவ ரொருவருடன் யாதோ காரணமாக வெறுப்படைந்தார். அவர் கோபா வேசத்தில் தாம் கற்பித்தவற்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார். மாணாக்கர் அதனை வாந்தி செய்தார். இருடிகளிற் சிலர் கௌதாரி வடிவங் கொண்டு அதனை உண்டனர். கௌதாரி தித்திரீஸ் எனப்படும். சாந்தோக்கியமென்னும் பெயர்வந்த காரணம் அறிய முடியவில்லை. பிர்கத் ஆரணியமென்பதற்கு ஆரணியத்திற் செய்யப்பட்ட பெரிய கதை என்பது பொருள். இவ்வுபநிடதங்களின் காலங்களைக் குறிப்பிட முடியாது. இவை புத்தர் காலத்துக்கு முற்பட்டவை எனக் கூறலாம். உபநிடதங்களின் காலம் கி.மு. 1000க்கும் 500க்குமிடையில். உபநிடதங்கள் ஒருவரால் எழுதப்பட்டவையல்ல. அவை உபதேசங்களின் குறிப்புகளாகும். உபதேசங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கேள்விமுறையில் வந்தன. நீண்ட காலத்தின் பின் அவை பல்வேறு ஆச்சிரமங்களில் மாணவருக்கு உபதேசிக்கும் பொருட்டுக் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டவை. இக் குறிப்புகளே உபநிடதங்கள் என்னும் வடிவில் வெளி வந்துள்ளன. உபநிடதங்கள் வேதங்களின் பகுதிகளாகவுள்ளன. நால்வேதங் களினிறுதியிலும் பத்து உபநிடதங்களுள்ளன. ஆகவே, உபநிடதங்கள் வேதாந்தம் எனப்படும். அவை ஞானங்களைக் கூறுகின்றன. சங்கராச் சாரியர் உரையெழுதிய உபநிடதங்கள் பௌத்த மதத்துக்குப் பிற்பட் டவை. பழைய உபநிடதங்கள் உரைநடையிலுள்ளன. இவை ஒரு கட்சியைச் சேர்ந்தவையல்ல. உபநிடதங்கள் செய்தவர்களைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை. அவர்கள் தமது பெயர்களை வெளிப் படுத்தவில்லை. உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன. பிற்காலத் தில் உபநிடதம் என்னும் பெயருடன் பல நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் அல்லா உபநிடதம் என்பதும் ஒன்று. உபநிடத ஞானங்கள் ஆரியரின் வருகைக்குமுன் மொகஞ்சதரோ மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தவை. இஞ்ஞானங்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை.1 அரசவகுப்பினரே இவற்றை அறிந் திருந்தார்கள். அவர்களிடமிருந்து பிராமணர் இஞ்ஞானங்களைப் பெற்றார்கள். சாங்கியம், வேதாந்தம், பௌத்தம், சமணம் போன்ற மதக் கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாகவுள்ளவை உபநிடத ஞானங்களே. தரிசனங்கள் பௌத்தமும், சமணமும் தோன்றி வேதமார்க்கத்தை எதிர்த்தன. பௌத்த மதத்துக்குத் தர்க்கம் ஆயுதமாக இருந்தது. பௌத்த மதத்துக்கு முன் பலதத்துவ ஞானக் கொள்கைகள் தோன்றி ஆங்காங்கு நிலை பெற்றிருந்தன. இப்பொழுது இத் தத்துவஞானக் கொள்கைகளைத் தர்க்க முறையாக ஒழுங்கு செய்ய வேண்டிய அவசியமுண்டாயிற்று. நியாயம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையிலிருந்தால் கொள்கைகளின் முடிவுகளில் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். அக்காலத்தில் தத்துவமுறையான ஆறு தரிசனங்கள் இருந்தன. அவை கௌதமரின் நியாயமும், கணாதரின் வைசேடிகமும், கபிலரின் சாங்கியமும், பதஞ்சலியின் யோகமும், யமினியின் பூர்வமீமாம்சையும், வாதநாராயணரின் உத்தரமீமாம்சையு மாகும். இவை எல்லாம் வேதங்களைத் தமக்குப் பிரமாணமாகக் கூறுகின்றன. ஆத்திகமும் நாத்திகமும் அக்காலத்தில் வேதங்களைப் பிரமாணமாகக் கொண்ட சமயங்கள் ஆத்திகமென்றும், அவற்றைப் பிரமாணமாகக் கொள்ளாத சமயங்கள் நாத்திகமென்றும் அறியப்பட்டன. ஆத்திகம், நாத்திகம் என்பவற்றின் முடிவு வேதத்தை ஆதாரமாகக் கொள்வதிலேயே தங்கியிருந்தது. ஆத்திகத் துக்குக் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் நியதி இருக்கவில்லை. பௌத்த மதத்தின் தொடக்கமும் உபநிடதங்களிலுள்ளது. வேதங்களைப் பிரமாணமாகக் கொள்ளாமையால் அது நாத்திகம் எனப்பட்டது. வேதங்களை ஒப்புக்கொள்வது அனுபூதி, தர்க்க முடிவு களிலும் பார்க்க மேற்பட்ட முடிவு எனக் கருதப்பட்டது. வைசேடிகமும் நியாயமும் கடவுளை அனுமானத்தினால் ஒப்புக்கொள்கின்றன. சாங்கி யம் கடவுட் கொள்கையுடையதன்று. யோகம் வேதத்துக்குப் புறம்பே நிற்கின்றது. இரண்டு மீமாம்சைகளும் வேதங்களை ஆதாரமாகக் கொள் பவை. பூர்வமீமாம்சை தெய்வங்களை வேதங்களிலிருந்து கொள்கிறது. அது தலைமையான ஒரு முழுமுதற் கடவுளைப்பற்றி அக்கறை கொள்ள வில்லை. உத்தரமீமாம்சை சுருதி அனுமானங்களால் கடவுளை ஒப்புக் கொண்டு தியானத்தினாலும், ஞானத்தினாலும் கடவுளை அடையலா மெனக் கூறுகின்றது. கடவுட் கொள்கையுள்ள பிற்கால அறிஞர் சாங்கியத்தைத் தரிசனங்களிலொன்றாகக் கொள்ள மறுத்தனர். சூத்திர வடிவில் தத்துவ ஞான நூல்கள் ஒவ்வொரு தத்துவ ஞானக் கொள்கையினரும் தத்தமக்கு ஏற்றவாறு வேதவாக்கியங்களுக்குப் பொருள் கண்டார்கள். அவர்கள் தத்தம் கொள்கைகளை முறைப்படுத்திக் கூற முயன்றபோது சூத்திரங்கள் எழுந்தன. சூத்திரமென்பது பரந்த பொருளைச் சுருங்கக் கூறும் ஒரு வகைப் பா. சூத்திரங்கள் செய்யப்பட்ட பின் தத்துவ ஞானங்களைப் பற்றிய கொள்கைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. தத்துவ ஞானங் களைப் பற்றிய சூத்திரங்கள் ஏறக்குறைய ஒரே காலத்தில் தோன்றியன வாகக் காணப்படுகின்றன. சூத்திரங்களைச் செய்தவர்கள் இத் தத்துவ ஞானங்களைத் தொடக்கியவர்களல்லர். இத்தத்துவ ஞானங்கள் சூத்திரங்கள் செய்யப்படுவதன் முன் தனித்தனியே வளர்ந்தன. தத்துவ ஞானங்கள் குருமாணாக்க முறையில் பயிலப்பட்டுவந்தன. எல்லாத் தத்துவஞானங்களும் வேதத்தைப் பிரமாணமாகக் கொள்வதால் அவை எல்லாம் ஒரு தொடக்கத்தை உடையனவென்று தெரிகிறது. மாயை, புருடன், சீவன், அவித்தை போன்ற சொற்களை எல்லாத் தரிசனகாரரும் ஆளுகின்றனர். ஆனால் இச் சொற்களை ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு கருத்துக்களில் ஆண்டுள்ளனர். எல்லாத் தரிசனங்களும் பௌத்தரின் நிரீச்சுரக் கொள்கையைக் கண்டிருக்கின்றன. பூர்வ மீமாம்சையைத் தவிர மற்றைய தரிசனங் களெல்லாம் பிறப் பொழிப்பை (வீட்டை) குறிக்கோளாக உடையன.1 “ஒவ்வொரு தத்துவ ஞானத்தைப் பற்றியும் சூத்திர வடிவில் நூல்கள் செய்யப்பட்டன. இச் சூத்திரங்கள் ஒவ்வொன்றிலும் மற்றைய தத்துவஞானங்களைக் கண்டிக்கும் பகுதிகளுண்டு. இப் பகுதிகள் மற்றைய தத்துவஞான நூல்கள் எழுதி முடிந்தபின்பே எழுதப்பட்டிருத் தல் வேண்டும். எல்லாத் தத்துவ ஞானங்களும் ஒரே காலத்தில் தோன்றி ஒன்றன் பக்கத் தொன்றாக வளர்ச்சி அடைந்தன என்று கூற முடியாது. முதலில் தத்துவஞானக் கொள்கைகளுக்குக் கருவாகவுள்ள சூத்திரங்கள் செய்யப்பட்டன. பின்பு மற்றைய கொள்கைகளைக் கண்டிக்கும் சூத் திரங்கள் செய்யப்பட்டன. சில காலத்தின் பின் இச் சூத்திரங்கள் மாற்றத்துக் கிடமில்லாமல் நிலைத்து விட்டன. ஆறு தரிசனங்களையும் சில ஒற்றுமைகளால் இவ்விரண்டாக (மூன்று சோடிகளாகப்) பிரிக்க லாம். நியாயமும் வைசேடிகமும் ஒரு சோடியும், சாங்கியமும் யோகமும் இன்னொன்றும், பூர்வமீமாம்சையும் உத்தரமீமாம்சையும் மற்றொன்று மாகும். பின் கூறப்பட்ட சோடி பிற்காலத்தில் பிரிந்தது. இத்தத்துவ ஞானங்கள் புத்தர் காலத்துக்கு முன் இருந்தன. அவற்றின் முடிவைக் கூறும் சூத்திரங்கள் பிற்காலத்திற் செய்யப்பட்டன.” (The history and culture of Indian people, Vvol.2) சாங்கியம் சாங்கியத்துக்குக் கர்த்தா கபிலர். இவர் கௌதம புத்தருக்கு முன் வாழ்ந்த அரச மரபினர் என்றும், இவர் பெயர் சம்பந்தமாகவே கபிலவாஸ்து என்னும் பெயர் உண்டானதென்றும், கௌதம புத்தர் கபிலர் மரபைச் சேர்ந்தவரென்றும் நம்பப்பட்டு வருகின்றன. கபிலர் செய்த நூல்கள் மறைந்துபோயின. சாங்கிய சூத்திரம், சாங்கிய பிரவசனா என்னும் நூல்கள் இவர் செய்தனவாக வழங்குகின்றன. அவை சமீப காலத்தில் செய்யப்பட்டவை எனக் கொள்ளப்படுகின்றன. இப்பொழுது கிடைக்கும் சாங்கிய மதக்கொள்கைகளை விளக்கும் நூல். கி.பி.3ஆம் நூற்றாண்டளவில் ஈசுவர கிஷ்ணர் என்பவரால் செய்யப்பட்ட சாங்கிய காரிகை என்னும் நூல். சாங்கிய காரிகைக்குக் கௌடபாதர் ஒரு உரை எழுதினார். இவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம் சடத் தோடு ஆதிமுதல் சம்பந்தப்பட்டு வருகின்ற உயிர் பின் சடத்தோடு சேராதிருக்கும் நிலையை அடையும் மார்க்கத்தைக் கூறுகின்றது. இது கடவுள் ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே அது நிரீச்சுர வாதம் எனப்படுகின்றது. சாங்கியம் என்பதற்கு எண், கணக்கிடுதல், ஞானம் என்னும் பொருள்களுண்டு. யோகம் 1யோகத்தைப் பற்றிக் கூறும் நூல்களுள் பதஞ்சலியின் யோக சூத்திரம் பழமையுடையது. இது நான்கு பகுதிகளுடையது. முதற்பகுதி நிட்டை கூடியிருப்பதைப் (சமாதி) பற்றிக் கூறுகின்றது. இரண்டாவது நிட்டை கூடுவதற்குரிய சாதனைகளையும், மூன்றாவது யோக சித்திகளை யும் நான்காவது வீட்டையும் (கைவல்லியம்) கூறுகின்றன. யாக்ஞவல்கிய மிருதி யோக முறையைக் கண்டவர் இரணிய கர்ப்பர் எனக் கூறுகின்றது. பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மாதவர் யோக சூத்திரத்தைச் செய்தவர் பதஞ்சலி எனக் கூறியுள்ளார். இலக்கண நூலாசிரியராகிய பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். யோக சூத்திரஞ் செய்தவரும் பாணினியின் நூலுக்குப் பாடியஞ் செய்தவரும் ஒருவரோ என்பது நிர்ணயிக்கப்படவில்லை. வியாசாசிரியர் (கி.பி.4ஆம் நூ.) இதற்கு உரை செய்துள்ளார். வாசஸ்பதி (9ஆம் நூ.) தத்துவ சாரடீ என்னும் அட்டவணை ஒன்று இந் நூலுக்கு எழுதியுள்ளார். போச இராசமார்த்தாண்டா என்பது யோகத்தைப் பற்றிய சிறந்த நூல். பிற்கால உபநிடதங்கள் பல யோக சாதனங்களுக்கு முதன்மை கொடுக்கின்றன. போசர் யோக சூத்திரத்துக்கு இராச மார்த் தாண்டா என்னும் உரை எழுதியுள்ளார். பதஞ்சலி இலக்கணம், யோகம், மருந்து முதலியவற்றைப் பற்றியும் எழுதினார் என அவர் கூறியுள்ளார். புத்தர் யோகப் பயிற்சி செய்தார். இலலித விஸ்தாரா என்னும் நூல் (கி.பி.3 ஆம் நூ.) புத்தர் காலத்தில் பலவகை யோகப் பயிற்சிகள் இருந்தன வென்று கூறும். சாங்கியம், யோகம் என்னும் தரிசனங்களுக்கு அதிக ஒற்றுமை உண்டு. யோகமதமும் கடவுளைப் பற்றிக் கூறாமையின் அது நிரீச்சுர மதம் எனப்படும். சாங்கியமும், யோகமும் சடம் சம்பந்தமான உலகம் முழுவதையும் பிரகிருதி எனக் கூறும். இராசதம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. இக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதி னால் உலகிலுள்ள பொருள்களெல்லாம் உண்டாகின்றன. ஆன்மாவென் பதை இம்மதங்கள் புருடன் என்று கூறும். ஆன்மா, அந்தக் கரணம் போன்ற பௌதிகக் கூறுகளோடு சேர்ந்தபோதும் தனித்து நிற்கும் இயல்புடையது. ஆன்மாக்கள் பல உண்டு. இவை சாங்கிய யோகக் கொள்கைகளாகும். வைசேடிகம் வைசேடிக சூத்திரம் செய்தவர் கணாதர். இவரது, உண்மையான பெயர் காசியப்பர் எனத் தெரிகிறது. வைசேடிக சூத்திரம் பத்துப் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வைசேடிக சூத்திரம் நியாய சூத்திரத்துக்கு முற்பட்டது. இது பிரம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்) செய்யப்பட்ட காலத்ததாகலாம். இது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது எனக் கருதப்படும். கணாதர் வேதங்கள் இருடிகளாற் செய்யப்பட்டவை யென்று கூறுவர். மீமாம்சைகர் அவை நித்தியமெனக் கூறுவர். வைசேடிகம் பௌத்த மதத்தின் எதிர்ப்பாகத் தோன்றியது. வைசேடிக மும், நியாயமும் பல கொள்கைகளில் ஒத்து நிற்கின்றன. வைசேஷ என்பதற்கு குறிக்கப் பட்ட என்பது பொருள். அது ஆராயப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளின் தன்மைகளையும் கூறுகின்றது. வைசேடிகம் அணுக் கொள்கையைக் கூறுகிறது. வைசேடிக சூத்திரமும் நியாய சூத்திரமும் செய்தவர்கள் சிவ வழிபாட்டினர்1 என வரலாறுளது. பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் (அட்சபாதர்) சிதம்பரத்தில் தவங்கிடந்து சிவபெருமானின் திருக் கூத்தைக் கண்டவர்களாகத் திருவிளையாடற் புராணம் கூறும். நியாயம் நியாய சூத்திரம் என்னும் தத்துவ ஞான நூலைச் செய்தவர் கௌதமர். நியாயம், தர்க்கம், வாதம் என்பன ஒரு பொருளன. யமினிக்கு முன் மீமாம்சை இருந்தது போலக் கௌதமருக்கு முன் நியாயம் இருந்தது. நியாயம் பிராமணக்கருத்துக்களைத் தர்க்க மூலம் தத்துவ ஞானக் கொள்கைகளோடு சம்பந்தப்படுத்துகிறது. நியாய சூத்திரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நியாய சூத்திரத்தின் சில பகுதிகள் கிறித்துவ சகாப்தத் தொடக்கத்தின் பின் செய்யப்பட்டவை. இதற்கு வற்சயாயனர் பாடியஞ் செய்துள்ளார். வற்சயாயனர் கி.பி.400 வரையில் வாழ்ந்த தெலுங்கு நாட்டவர். இவர் தமிழ்நாட்டவரெனவும் கருதப் படுவர். நியாயம், வைசேடிகம், மீமாம்சை என்னும் மூன்றும் சடப்பொருள் அணுவாலாகியது; அவ் வணுக்கள் பல இனங்களாகும்; அணுக்கள் சேர்ந்து பிரபஞ்சமுண்டாகிறது; நித்தியமான ஆன்மாவும் பலதிறப் பட்டது; ஆன்மா தனது தனிப் பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சடத்துடன் உறவு கொள்ளும்போது உடலும் பொறிகளும் பெற்று எல்லையுணர்ச்சி பெறுகின்றது எனக் கூறும். பூர்வ மீமாம்சை மீமாம்சை சூத்திரம் யமினியாற் செய்யப்பட்டது. இது வேதங் களில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணங்களைத் (நியாயங்களை) திரட்டிக் கூறுகின்றது. அது பல வகை யாகங்களையும் அவற்றின் பயன்களையும் சில தத்துவ ஞானக் கொள்கைகளையுங் கூறுகின்றது. அதற்கு 12 அதிகாரங் களுண்டு. வேதங்களிற் கூறப்படுவனவெல்லாம் தழுவப்படத்தக்கன வென்று யமினி வாதிக்கின்றார். யமினியின் நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. நியாய, யோக சூத்திரக் கருத்துக்கள் இதில் காணப்படுகின்றன. யமினி யின் நூலுக்கு சபரர் உரை எழுதியுள்ளார். பட்டர், பாவதாசர், அரி, உபவாசர் என்போர் சபரருக்கு முன் உரை எழுதியிருக்கின்றனர். சபரர் கி.பி.200 க்கும் 500 க்கும் இடைப்பட்ட காலத்தவர். சபரரின் உரையே எல்லாப் பிற்கால மீமாம்சை நூல்களுக்கும் ஆதாரமாக உள்ளது. புரோகிதரின் முதன்மையையும் வேதங்களின் பிரமாணத்தையும் வற்புறுத்தும் உரை குமாரிலரால் (8 ஆம் நூ.) எழுதப்பட்டது. குமாரிலர் சங்கரரின் கொள்கைகளை மறுக்கிறார். உத்தர மீமாம்சையிலிருந்து பிரித்தறிவதற்காக யமினி செய்த நூல் பூர்வ மீமாம்சையெனப்பட்டது. உபநிடதங்களைத் தவிர ஏனைய வேதங்களின் பகுதிகள் வேள்வி முதலிய கிரியைகளைக் கூறுகின்றன. கிரியைகளில் சந்தேகங்களையும் சந்தேக நிவர்த்திகளையும் உணர்த்தும் வினாக்களும் விடைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களும் நிவர்த்திகளும் பற்றிய செய்திகள் பிரமாணங்களில் காணப்படுகின்றன. பிரமாணங்களெனப்படுவன முடிவு பெறாதனவும் விளக்கமில்லாதனவு மாகக் காணப்படுகின்றன. பலர் கிரியைகளைப் பலவாறு செய்து வந்தனர். ஆகவே அவற்றுக்கு ஆதாரம் ஆராயப்பட்டது. பௌத்த மதம் தோன்றிய பின் அறியப்பட்ட உண்மைகளையெல்லாம் திரட்டிச் சூத்திரமாக நூல் செய்யப்பட்டது.1 பூர்வ மீமாம்சையில் ஞானத்திலும் பார்க்கக் கிரியை முதல் இடம் பெறுகின்றது. கிரியைகளைத் தாக்காத அளவில் பூர்வ மீமாம்சை மற்றைய தத்துவ ஞானங்களை ஏற்றுக் கொள்கின்றது; வேதங்களை ஆதாரமாகக் கொண்டு பௌத்த மதத்தை எதிர்க்கின்றது; பௌத்த மதக் கொள்கைக்கு மாறாக உலகத்தை உட்பொருளெனக் கொள்கின்றது. இக்கால இந்து மத சட்டங்கள் மீமாம்ச மதக்கொள்கை யின் செல்வாக்குப் பெற்றுச் செய்யப்பட்டவை. 2வேத இலக்கியங்கள் பல காலங்களில் செய்யப்பட்டவை. இவற்றி லுள்ள பாடல்கள் கால ஒழுங்கில் இல்லாமல் பலவாறு குழப்பமடைந் திருக்கின்றன. தொடக்கத்தில் கிரியைகள் இலகுவாக இருந்தன. வேள்வி களில் இந்திரன், வருணன், மித்திரன், விட்டுணு முதலிய தேவருக்கு உணவும் சோம பானமும் அளிக்கப்பட்டன. அப்பொழுது இருடிகள் அத்தேவர்கள் மீது பல துதிப் பாடல்களைப் பாடித் தமக்கு நேரக்கூடிய ஆபத்துக்களைத் தடுக்கும் படியும், தமக்கு வேண்டியவற்றைக் கொடுக் கும்படியும் வேண்டினார்கள். யாகங்கள் வளர்ச்சி அடைந்து கிரியைகள் சிக்கலடைந்த போதும் பல பாடல்கள் பாடப்பட்டன. பாடல்கள் செய்யப்பட்டபின் சிறிது காலங்கழிந்தது. பாடல்கள் மக்களின் நினைவில் இருந்துகொண்டிருந்தன. அப்பொழுது இவற்றை எல்லாம் திரட்டும் முயற்சி நடைபெற்றது. பாடல் வகையான தொகுப்பு இருக்கு எனவும் வசன நடையான தொகுப்பு எசுர் எனவும் அறியப் பட்டன. வேதங்கள் செய்யப்பட்டதற்கும் பாடல்கள் தொகுக்கப்பட்டதற் கும் இடைப்பட்ட காலம், அப் பாடல்கள் எவ்வெத் தேவர்களைக் குறித்துப் பாடப்பட்டன வென்பதையும், எப்பொழுது பாடுவதற்குரியன வென்பதையும் மறந்துவிடக் கூடிய நீண்டதாக விருந்தது. இப்பொழுது வேத இலக்கியம் சுருதி என்னும் முறையில் சிறிதும் விடாமல் கிரியை களிற் படிக்கப்பட்டு வந்தது. மிகப் பழங்காலத்திலும் பாடல்களின் பகுதிகள் பிரித்தெடுக்கப் பட்டு மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை இலக்கிய மாகக் கருதப்படவில்லை. தொடக்கத்தில் வேதம் ஒன்றாகவிருந்த தென்றும் பின்பு அது நான்காகப் பிரிக்கப்பட்டதென்றும், ஒவ்வொன்றும் வெவ்வேறு புரோகிதரால் யாகங்களில் பாடப்பட்டனவென்றும் விட்டுணு புராணம் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றது. யாகங்களை நடத்தும் புரோகிதன் அத்வாரு எனப்பட்டான். அவன் பயன்படுத்துவதற்காக எசுர் வேதம் தொகுக்கப்பட்டது. இது இருக்கு (பாடல்)களும் வசனமும் அடங்கிய பகுதி. இதைக் கொண்டு அவன் பூரணை அமாவாசிக் காலங்களில் செய்யப்படும் இலகுவான யாகங்கள் முதல் சிக்கலான கிரியைகளடங்கிய அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. யாகங்கள் புரியும் முறைகள் அடங்கியிருப்பதினாலும் அத்வாருவுக் குரியதாதலாலும் எசுர் வேதம் மிகச் சிக்கலுடையது. ஹோதா என்னும் புரோகிதன் யாகங்களில் தேவர்களை அழைத்து அவர்களைப் பாடல்களால் துதித்தான். ஒவ்வொரு கிரியையைச் செய்யும் போதும் அவ்வக்கிரியைக்குரிய பாடல்களை மாத்திரம் பாடும் அத்வாருவின் செயல்போலல்லாது இவனுடைய செயல் பாடல்களைத் தொடர்பாகப் பாடுதலளவிலிருந்தது. ஆகவே இவனுக்காகத் தொகுக்கப் பட்ட பாடல்கள், பகுதிகள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுதி இருக்கு வேதமெனப்பட்டது. இருக்கு வேத பாடல்கள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாக இருப்பதி னாலேயே ஐரோப்பிய அறிஞர் இருக்குவேதம் முதலில் தொகுக்கப்பட்ட தென்றும், அது எசுர் வேதத்துக்கு முந்தியதெனவுங் கருதினார்கள். உத்காதா என்னும் புரோகிதர், தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடல்களை மாத்திரம் பாடினார். இவருக்காகச் சாமவேதம் தொகுக்கப்பட்டது. இவ்வாறு மூன்று வேதங்கள் அமைந்துள்ளன. வீடுகளில் செய்யப்படும் கிரியைகளிற் பயன்படுத்தப்படும் பாடல்களும் மந்திர வித்தைகளும் திரட்டப்பட்ட தொகுப்பு அதர்வண வேதமெனப்பட்டது. யாகங்களிற் செய்யப்படும் கிரியைகள் பெருகிக் குழப்பமான போது யாகக் கிரியைகளை மேற்பார்த்து நடத்துதற்கு பிரம என்னும்1 புரோகிதரும், வீட்டுக் கிரியைகளை நடத்துவதற்குக் கிரியா என்னும் புரோகிதரும் வேண்டப்பட்டார்கள். இக்காலத்தின் பின் மக்கள் பண்பாட்டு முறையில் சில மாறுதல்கள் உண்டாயிருத்தல் வேண்டும். அப்பொழுது சங்கிதைகள் எழுதப்பட்டிருந்த மொழியை மக்கள் மறந் தார்கள். பிராமணங்கள் எழுதப்பட்டுள்ள மொழி தோன்றலாயிற்று. இது வேத கால மொழிக்கும் சமக்கிருதத்துக்கும் இடைப்பட்டது. பாடல் களின் பொருள் விளங்க முடியாதிருந்த காலத்தில் அவை யாகங்களில் முறை தவறிப் பாடப்பட்டன. அவற்றின் பொருள்களும் தவறாகக் கொள்ளப்பட்டு வந்தன. கிரியைகளின் விபரங்கள் அவற்றிலுச்சரிக்க வேண்டிய மந்திரங்களைப் பற்றிச் சபைகளில் வாதங்கள் நடந்தன. அவ் வகை வாதங்களுக்கு முடிவுகாண நியாயம் ஆளப்பட்டது. நியாயங்கள் என்பன ஏற்றுக்கொள்ளக் கூடிய அனுமானங்களைத் தரக்கூடிய முது மொழிகளும் உவமைகளும். அகிகுண்டல நியாயமென்பது பாம்பையும் அதன் மண்டலங்களையும் போல எனக் கூறும் வாதம். தாலிபுளக நியாயமென்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ்பதம் எனக் கூறுவது. இவை நியாயம் எப்படித் தோன்றியதென்பதற்கு எடுத்துக்காட்டுக் களாகும். காலத்தில் பிராமணங்களும் வேதங்களோடு சேர்க்கப்பட்டன. மந்திரங்களும் பிராமணங்களும் சேர்ந்து வேதம் பெரிதானபோது வேதத்திலுள்ளவற்றுக்கு விளக்கங்கூறுவது கடினமாகவும் சிக்கலாகவு மிருந்தன. வேதங்களிற் கூறப்படும் கிரியைகளில் நேரும் தவறுகளை அறிந்து கூறுவது, அவற்றை விளக்குவது என்னும் முறைகள் மீமாம்ச சாத்திரமெனப்பட்டன. இவ்வகையிலமைந்த பல சூத்திரங்களே யமினி சூத்திரம். யமினியின் கொள்கை தர்மத்தைத் தெளிவாக்குவது. தர்மம் என்பது கடமை. தர்மங்கள் சமய சாத்திரங்களின் கட்டளைகள். வேதங் களில் சொல்லப்பட்ட கட்டளைகள் மனிதருக்கும் தேவருக்கும் அப்பாற் பட்டவை. ஆகவே மீமாம்சையில் கடவுளுக்கு இடமில்லை. மீமாம்சை, பிறப்பு, இறப்பு, மறுபிறப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் சொல்ல வில்லை. யமினி, வேதம் நித்தியம் அது எவராலும் செய்யப்படவில்லை என்று நாட்டுவதற்குப் பல நியாயங்களைக் கூறுகின்றார். வேதாந்த சூத்திரம் வேதாந்த சூத்திரம் வாதநாராயணரால் செய்யப்பட்டதெனச் சங்கரர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். சூத்திரங்களில் வாதநாராயணரின் பெயர் படர்க்கையிற் கூறப்பட்டிருத்தலால் வேதாந்த சூத் திரத்தைச் செய்தவர் அவரல்லர் எனவும் கருதப்படுகின்றது. நூலாசிரி யர்கள் தமது பெயரைப் படர்க்கைப்படுத்திக் கூறுதல் இந்தியமரபாதலின் அதனைப் பிற ஆசிரியர் செய்ததாகக் கொள்ள வேண்டியதில்லை. வேதாந்த சூத்திரத்தைச் செய்தவர் வாதநாராயணர் என்றும், வியாசர் என்றும் ஐதீகம் இருந்து வருகின்றது. சங்கரரின் மாணவர்களாகிய வாசஸ்பதி, ஆனந்தகிரி என்போர் வாதநாராயணர், வியாசர் என்போரை ஒருவாராகக் கொண்டனர். இராமானுசர், வல்லபர், பலதேவர் என்போர் வேதாந்த சூத்திரத்தை வியாசர் செய்ததாகக் கூறுவர். வாதநாராயணர் பலவிடங்களில் யமினியைப் பிரமாணமாகக் குறிப்பிட்டுள்ளார். யமனி வியாசரின் மாணவரெனக் கொள்ளப்படுவர். மகாபாரதம், விட்டுணு புராணம், பகவத் கீதை முதலிய நூல்களை நாம் நம்பினாலும், வாத நாரா யணர் யமினியின் நூலைக் குறிப்பிட்டிருப்பதாலும் யமினி வியாசரின் மாணவரென்பது உறுதிப்படமாட்டாது. சபரர், கோவிந்தர், ஆனந்தர், ஆனந்தகிரி என்போர், வியாசரும் வாதநாராயணரும் ஒருவர் எனக் கொள்வதற்கு யாதும் சந்தேகமில்லையெனக் கொள்வர். சங்கரரின் கொள்கை யாது என்பது தெளிவாகவில்லை. சாங்கியம், வைசேடிகம், சமணம், பௌத்தம் முதலிய மதக் கொள்கைகளை வேதாந்த சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சங்கரர், இராமானுசர், மாதவர், வல்லபர் என்போர் வேதாந்த சூத்திரம் கீதையைக் குறிப்பிடுவதை அறிந்துள்ளனர். சூத்திரத்தில் காணப்படும் பல பெயர்கள் ஆஸ்வலாயனம், காத்தியாயனம், தைத்திரிய, பிராதி சாக்கிய சூத்திரம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன. போதாயனரின் கிரியா சூத்திரங்களிலும் இப்பெயர்கள் காணப்படுகின்றன. கருட புராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் வேதாந்த சூத்திரத்தை யும், அரிவம்சத்தையும் குறிப்பிடுகின்றன. கருடபுராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் கி.பி.200ஐச் சேர்ந்தவை. வேதாந்த சூத்திரம் கி.மு.500-க்கும், கி.பி.200-க்கும்மிடையில் செய்யப்பட்டதெனக் கொள்ளப்படுகின்றது. வேதாந்தம் 1வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிவு என்பது பொருள். இது வேதத்தின் நான்காவது பகுதியாகிய உபநிடதங்களைக் குறிக்கும். வேதாந்த சூத்திரம், பிரம சூத்திரமெனவும் அறியப்படும். யமினியின் கர்ம மீமாம்சை வேதங்களில் சொல்லப்பட்ட தர்மங்களையும் (கடமைகள்) அவற்றின் பலன்களையும் ஆராய்கின்றது. வாதநாராயணரின் உத்தர மீமாம்சை உபநிடத ஞானங்களை விரித்துக் கூறுகின்றது. வேதாந்த சூத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களடங்கிய 555 சூத்திரங் களுண்டு. இவற்றிலிருந்து வேதாந்த ஞானம் விரிவடைந்தது. இச் சூத்திரங்கள் பொருள் விளங்க முடியாதவை. உரையாசிரியர்களின் உரைகளைக்கொண்டே இவற்றின் பொருள்கள் அறியப்படுகின்றன. இதற்குப் பலர் பலவாறு உரைகண்டுள்ளனர். சங்கரர், பாஸ்கரர், யாதவப் பிரகாசர், இராமானுசர், கேசவர், நீலகண்டர், மாதவர், பலதேவர், வல்லபர், விஞ்ஞான பிட்சு முதலியோர் வெவ்வேறு கொள்கைகளை நாட்டி, உரை செய்துள்ளனர். வேதாந்தக் கொள்கையில் மாறுபட்ட கருத்துக்களும் தடுமாற்றங்களும் உண்டான காலத்திலேயே உரைகள் எழுந்தன. பகவத்கீதை பகவத்கீதை மாபாரதத்தில் வீட்டும பருவத்திலுள்ளது. இதில் தத்துவஞானம், சமயம், நீதி முதலியன அடங்கியுள்ளதால் இது மற்றைய தத்துஞான நூல்களிலும் பார்க்கச் சிறப்பாகக் கொண்டாடப்படு கின்றது. கீதை செய்யப்படுவதன் முன் செல்வர் யாகங்களால் தேவர்களை விலைக்கு வாங்கி விடலாம். அறிவாளிகள் மாத்திரம் ஞானமடையலாம் என்னுங்கொள்கைகளிருந்தன. கீதை பக்திமார்க்கத்தால் எல்லோரும் கடவுளை அடையக் கூடிய வழியைக் கூறுகின்றது. பாண்டவருக்கும் கௌரவருக்கும் நேர்ந்த பாரதப்போரில் போர்க் களத்திற் போய் நின்ற அருச்சுனன் தனது உறவினரையும் ஆசிரியரையும் கொல்ல மனமில்லாதவனாகத் தயங்கிய போது கண்ணன் அவனுக்குப் போதித்த ஞானமே பகவத்கீதை எனப்படுகின்றது. 700 பாடல்கள் கொண்ட இந் நூலைக் கண்ணன் போர்க்களத்தில் அருச்சுனனுக்குப் போதித்தார் என்பது நம்பக் கூடியதாக விருக்கவில்லை. இது எவரோ ஒரு புலவரால் கி.மு.200-க்கும் கி.பி.200க்கு மிடையில் செய்யப்பட்டதென ஆராய்ச்சியாளர் கருதுவர். இந் நூலில் கண்ணன் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கூறியிருப்பது காணப்படுகின்றது. பகவத் கீதை, வேதாந்த, சாங்கிய, ஆகமக் கொள்கைகளை ஒன்று சேர்க்கும் பொருட்டுச் செய்யப் பட்டதெனக் கருதப்படுகின்றது. இதற்கு சங்கரர், இராமானுசர், வல்லபர், மாதவர் முதலிய பலர் உரை செய்திருக்கின்றனர். உரையாசிரியர்கள் நூலின் உண்மைப் பொருளைக் காணும் நோக்கமில்லாமல் தத்தம் கொள்கைகளைப் பலப் படுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளார்கள். உரையாசிரியரின் கொள்கைக்கு மாறான பகுதிகள் காணப்பட்டால், அவை இலக்கணவிதி, சொல்லிலக்கணம் முதலிய உபாயங்களால் திரித்துப் பொருள் விளக்கப் பட்டன. இராமானுசர் உயிர், உலகம் என்னும் பொருள்கள் கடவுளைவிட வேறானவை என்றும் இவ்விரண்டும் கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இக் கொள்கை விசிட்டாத்துவைதம் எனப்படும். மாதவர் உயிரும், கடவுளும் வெவ்வேறு பொருள்களென்பதை ஒப்புக்கொள்வர். சங்கரர் பிரமமொன்றே உட்பொருள்; உயிர்கள் பிரமத்தின் பிரதிபலிப்புகள்; உலகம் பொய்த்தோற்றம் என்பர். இக் கொள்கைகளை வலியுறுத்தி இவர்கள் பகவத்கீதைக்கு உரை செய்துள்ளனர். பகவத் கீதை உலகம் ஈசுவரனுடைய சக்தியாகிய மாயையிலிருந்து தோன்றுகிறதென்று கூறும்.1 சமணம் சமணர் 24 தீர்த்தங்கரரைப் பற்றிக் கூறுகின்றார்கள். தீர்த்தங்கரர் என்பதற்கு வழியைக் கண்டுபிடித்தவர்கள் என்பது பொருள். ஒவ்வொரு தீர்த்தங்கரரும் அவரவர் வாழ்ந்த காலங்களுக்கு வேண்டிய சமண தருமங்களைப் போதித்தார்கள். தீர்த்தங்கரரின் வரலாறுகள் பழங்கதை வடிவிலுள்ளன. பார்சவர், மகாவீரர் என்னும் பின் இரு தீர்த்தங்கரரின் வரலாறு களும் அறியத்தக்கனவாகவுள்ளன. பார்சவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இவர் காசி அரசன் அசுவசேனனுக்கும், மனைவி வாமிக்கும் புதல்வனாகப் பிறந்தார். இவர் முப்பது ஆண்டுகளின் பின் துறவு பூண்டார்; 84 நாட்கள் தவமிருந்தபின் ஞானமடைந்தார். இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின் கி.மு.776 இல் மரணமடைந்தார். இவருக்குப்பின் வாழ்ந்த மகாவீரரைப்போலவே இவர் சடப் பொருளின் நித்தியத்தைப் பற்றி நம்பினார். தன்னடக்கம் கன்மத்தை முடி வுறுத்துகிறதென்றும், தவம் கன்மத்தை அழிக்கிறதென்றும் பார்சவரைப் பின்பற்றியவர்கள் நம்பினார்கள். சமணத்துறவிகள் வெள்ளாடை உடுப்பதைப் பார்சவர் அனுமதித்தார். மகாவீரர் இதைத் தடுத்தார். ஆகவே, சமணருள் வெள்ளாடை உடுப்பவர்கள் என்னும் பொருளில் சுவேதாம்பரர் என்றும், காற்றை உடுப்பவர்கள் என்னும் பொருளில் திகம்பரர் என்றும் இருபிரிவினர்கள் தோன்றினார்கள். மகாவீரர் மகாவீரர் வைசாலியிலுள்ள குண்டக்கிராமத்தில் கி.மு.599இல் பிறந்தார். குண்டக்கிராமம் இப்பொழுது பரசுகுண்டமெனப்படுகிறது. இவர் நாய என்னும் குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சித்தார்த்தர்; தாய் வைசாலி அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிசாலை. மகாவீரருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் வர்த்தமானர். புகழ் பெற்ற மகாவீரரென்னும் இப்பெயர் இவருக்குத் தேவர்களாலிடப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. மகாவீரர் யசோதரையை மணந்தார். அவருக்கு அருணோசா அல்லது பிரியதரிசனா என்னும் புதல்வியிருந்தாள். தாய் தந்தையரிறந்த பின் மகாவீரர் தமது தமையன் நந்திவர்தானாவின் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். அப்பொழுது அவர் முப்பது வயதினராகவிருந்தார். 13 மாதங்களின் பின், இவர் உடையின்றி நிர்வாணத் துறவியாகத் திரிந்தார். இவர் பிராணிகளுக்கு மாத்திரமல்லாமல் நிலம், நீர் போன்ற சடப் பொருள்களுக்கும் உயிர் இருப்பதாகக் கொண்டார். 72வது வயதில் இவர் மசிம்மபாவா என்னுமிடத்தில் அத்திபாலா என்னும் சிற்றரசன் வீட்டில் காலமானார். இவ்விடம் இப்பொழுது பாட்னா மாகாணத்தில் பாவாபுரி எனப்படுகின்றது. பௌத்த மதத்தைப் போலவே, சமண மதமும் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தது. பெரும் பஞ்சமொன்று நேரவிருப்பதை அறிந்த பௌத்திரபாகு என்னும் சமணமுனிவர், மயூரசந்திரகுப்தனோடும் பெருந்தொகையான மாணவரோடும் மைசூரிலுள்ள சரவணபெலகொள என்னுமிடத்துக்கு வந்திருந்தாரென்றும், அவர்கள் மூலம் திகம்பரசமணம் தென்னிந் தியாவிற் பரவியதென்றும் தென்னிந்திய வரலாறு கூறுகின்றது. மகா வீரர் இறந்து ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.பி.464இல் வல்லபி என்னு மிடத்தில் கூடிய சமணசங்கத்தில் சுவேதாம்பரரிடமிருந்த சைன ஆகமங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமணர் மேலான ஒரு கடவுளை மறுத்தாலும் நிர்வாணமடைந்து விடுதலை பெற்றவர்களாகிய தீர்த்தங் கரர்களுடைய உருவங்களை வணங்குவர். தீர்த்தங்கரர் இருஷபர் முதல் மகாவீரர் வரை இருபத்து நால்வர். புத்தர் புத்தர் என்பதற்கு ஞானமடைந்தவர் என்பது பொருள். இவர் கி.மு.547இல் பிறந்தார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் சித்தார்த்தர். கௌதமர் என்பது இவர் தோன்றிய குலத்தின் பெயர். இவர் தந்தையின் பெயர் சுத்தோதனர். தாயின் பெயர் மாயை, இவர்களின் சமயம் சைவமாக இருந்ததென்பது ஐதீகம்.1 சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாள் தாய் இறந்தார். தாயின் சகோதரியால் இவர் வளர்க்கப்பட்டார். இவர் தமது மைத்துனியாகிய யசோதரையை மணந்தார். யசோதரை வயிற்றில் இராகுலன் என்னும் புதல்வன் பிறந்தான். கபிலவாஸ்து நகர் வீதியில் இவர் ஒருநாள் கூனி வளைந்த ஒரு கிழவனையும், ஒரு நோயாளி யையும், பிச்சைக்காரனையும், அழுது கொண்டு பலர் பின்னே செல்லக் கொண்டு போகப்படும் ஒரு பிணத்தையும் கண்டார். அவர் இவ்வுலகில் உள்ள துன்பங்களைக் கண்டு துறவுகொள்ள முடிவுசெய்தார். அவர் துறவு பூண்டு மஞ்சளாடையணிந்து பிச்சையேற்று உண்டு, உண்மையை நாடி அலைந்து திரிந்தார். இவர் உருவலா என்னும் காட்டுக்குத் தமது ஐந்து நம்பிக்கையுள்ள நண்பர்களுடன் சென்று அரசமரத்தின் கீழ் நிட்டையி லமர்ந்தார். ஏழுவாரங்கள் தவஞ்செய்த பின் அவருக்கு ஞானம் உதய மாயிற்று. அவர் தமது நண்பர்களாகவிருந்த ஐவரையும் முதலில் தமது மாணாக்கராகத் தெரிந்தெடுத்தார். மாணவர்கள் நாள்தோறும் அதிகப் பட்டு வந்தார்கள். புதிய பௌத்த தருமங்களைப் போதிப்பதற்கு எல்லாத் திசைகளுக்கும் போதகர்களனுப்பப்பட்டார்கள். நாற்பது ஆண்டுகள் துறவியாக வாழ்க்கை நடத்தியபின் அவர் காலமானார். புத்தர் இறந்து இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பே புத்தரின் வரலாறு எழுதப்பட்டது. அவ் வரலாற்றில் பல கற்பனைகள் நுழைந்து உள்ளன. பௌத்த ஆகமம் திரிபிடகம் எனப்படும். இதிற் கூறப் பட்டவையே புத்தரால் போதிக்கப்பட்டவை என நம்பப்படுகின்றன. புத்தரின் போதனைகள் நீண்ட காலமாகச் செவி வழக்கில் இருந்து வந்தன. இலங்கை அரசனாகிய வட்டகமினியின் காலத்தில் (கி.மு. 80) இவை பாலி மொழியில் எழுதப்பட்டன. பாலி நூலில் கதைகள், ஒழுக்கங்கள் (விநாயா), கொள்கைகள் என மூன்று பிரிவுகளுள்ளன. பௌத்தமதம் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கூறுகிறது. கன்மத்தை ஏற்றுக்கொள்கின்றது. தேவர்கள் பிறப்பு, இறப்புக்குரியவர்களெனக் கூறுகின்றது. பௌத்த மதத்தின் முடிவு நிர்வாணமடைதல். நிர்வாணமென்பது, பிறப்பு இறப்புக் கேதுவாகிய காரணத்தை ஒழித்தல். இதற்கு விருப்பு வெறுப்புகளின்றி யிருத்தல் வேண்டும். பௌத்தமதமும், சமண மதமும் வேதங்களைக் கண்டிக்கின்றன. யாகங்களை வெறுக்கின்றன. சமணமும், பௌத்தமும் வேதங்களை ஒப்புக் கொள்ளாதபடியால் அவை நிரீச்சுர மதங்களெனக் கொள்ளப்பட்டன. மகாபாரதம் மகாபாரதம் கௌரவர் பாண்டவர்களுக்கிடையில் நடந்த போரைப் பற்றிக் கூறுகின்றது. பாரதப் போர் நடந்த காலம் கி.மு.1400 எனக் கணக்கிடப்படுகின்றது. வேதங்களில் பாரத இராமாயண நிகழ்ச்சி களைப் பற்றியோ அவற்றில் வரும் வீரர்களைப் பற்றியோ கூறப்பட வில்லை. பாரதப் போர் தொடர்பான பழைய வரலாறு திராவிட நாட்டுக் கதை என்றும், பின் அது ஆரியரின் கதையாக மாற்றப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 இந்திய நாட்டின் பல பகுதிகளில் வழங்கிய கதைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு மகாபாரதம் செய்யப்பட்டது. இது அக் கால வழிபாடுகளையும் பழக்க ஒழுக்கங்களையும் கூறுகின்றது. முன் பாரதமென வழங்கிய கன்னபரம்பரை வரலாற்றை விரித்துச் செய்யப்பட்டதே மகாபாரதம். வியாசரால் செய்யப்பட்ட பாரத சம்கிதையில் 24,000 சுலோகங்களுள்ளன. அவை மறுபடியும் அவரால் 6,000,000 சுலோகங்களாகச் செய்யப்பட்டன. அவற்றுள் இப்பொழுது ஒரு இலட்சம் சுலோகங்களே உள்ளன. பாரதத்துக்கு முன் பாணர் போன்ற பாடகர்களால் இசையோடு பாடப்படும் பாடல்களும், பிற பாட்டுக்களும் இருந்தன. இந்திய நாடுகளில் அரசரின் வீரச் செயல் களைப் புகழ்ந்து பாடகர்கள் பாடுவது அக் கால வழக்காக இருந்தது. ஞாபகத்திலிருந்து பாடப்பட்டமையின், இவை காலத்துக்குக் காலம் பல மாறுதல்களை அடைந்தன. இவற்றோடு சம்பந்தம் பெறாத பிராமண மதக் கொள்கைகளையும் இவற்றோடு சேர்க்க வேண்டி இருந்தது. ஆகவே, ஆரியர், ஆரியரல்லாதாரின் பண்பாடுகள், பழங்கதைகள், வழிபாடுகள் முதலியவற்றுக்கு வேற்றுமை தெரியாதபடி ஒன்று சேர்த்து நூல் செய்யப்பட வேண்டியிருந்தது. பாரத காலத்துக்கு அண்மையில் இப் பாடல்கள் சமயத்தோடு கலவாமல் வீரரைப் புகழும் பாடல்களாக மாத்திரம் இருந்தன. மகாபாரதம் செய்யப்பட்ட பின் மேலும் பல செய்திகள் கிடைத்தன. அவற்றை அதனோடு ஒட்ட வைத்தல் முடியாம லிருந்தது. அவ்வாறிருந்த போதும் அவற்றை ஒட்டவைக்கச் செய்த முயற்சியினால் உருவானதே மகாபாரதம். பாரதம் செய்யப்படுகின்ற காலத்தில் பல தெய்வ வழிபாடுகளிருந்தன. மகாபாரதத்தில் வரும் இந்திர, அக்கினி வழிபாடுகள் வேத வழிபாட்டின் சின்னங்களாகும். அக் காலத்தில் அவதாரங்கள் அறியப்படவில்லை. சிருட்டி வரலாறு சரித்திர சம்பந்தமான வரலாறாகக் காணப்படுகின்றது. மகாபாரதத்தின் பிந்திய பகுதியில் யவனர், பாலவர் (Parthians), சகர் குறிப்பிடப்படுகின்றனர். அப்பொழுது பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள், ஒரு கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல் களைச் செய்யும் வடிவங்களென்னும் கொள்கை காணப்படுகிறது. இந்திரனுக்குக் கூறப்பட்ட வலிமை இப்பொழுது விட்டுணுவுக்கும், சில சமயங்களில் சிவனுக்கும் கூறப்படுகின்றது. வீரப்பாடல்களாகிய மகா பாரதம் பிராமண மத சம்பந்தம் பெற்று விட்டுணு, சிவனென்னும் தெய்வங்களை முதன்மையாகக் கொண்ட மத நூலாக மாறியது. பகவத் கீதை இக் காலத்தைச் சேர்ந்ததாகலாம். உள்நாட்டு வழிபாடுகளைத் தழுவிச் சிலர் பிராமண மதத்தைக் கைவிட்ட காலத்தில் மறுமலர்ச்சி வேண்டியதாகவிருந்தது. மகாபாரதம் 5ஆம் வேதமெனப்படும். வேதங்கள் மூன்று வருணத் தாருக்கு முரியனவாகவிருந்தன. ஐந்தாம் வேதம் எல்லாருக்கும் உரியதாக விருந்தது. மகாபாரதம் கி.மு.500இல் தொடங்கி கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை வளர்ச்சி அடைந்து வந்ததென நம்பப்படுகின்றது. இராமாயணம் இராமாயணம் வான்மீக முனிவராற் செய்யப்பட்டது. இது மகாபாரதத்தைப் போலப் பலவகைப் பொருள்களைப் பற்றிக் கூறாது கதையையே கூறுகின்றது. இராமர் எல்லா நல்ல குணங்களும் நிரம்பி யவராக கூறப்படுகின்றார். ஆகவே, அவர் கடவுளின் அவதாரமாக்கப் பட்டார். தொடக்கத்தில் அது பழங்கதையைக் கூறுவதாயிருந்து பின் வைணவரின் நூலாக மாற்றமடைந்தது. அதன் தொடக்கமும் போக்கும் முடிபும் அதனைப் பலர் செய்தார்கள் என்று கூறுவதற்கு இடந்தர வில்லை. அதைக் கதையடங்கிய பழைய பகுதி (II -VI), சமயங்கலந்த புதிய பகுதி (II-ம் VII-ம்) என இரண்டாகப் பிரிக்கலாம். வான்மீகர், இராமர் நற்குணங்களும் வீரமும் நிறைந்தவரெனக் கூறுகிறாரேயன்றி அவரை விட்டுணுவின் அவதாரமாகக் கூறவில்லை. சமயம் பல தெய்வ வழிபாடாக இருந்தது. இந்திரன் தெய்வங்களுக்குத் தலைமை வகித்தான். காமன், குபேரன், கார்த்திகேயன், கங்கை, விட்டுணு, சிவன், இலக்குமி, உமை முதலிய தெய்வங்களும் தெய்வங்களாக்கப்பட்ட சேடன், சடாயு, நந்தி முதலியனவும் கூறப்படுகின்றன. வழிபாடு வேள்வி முறையாக இருந்தது. விட்டுணுவும் சிவனும் தலைமை இடம் பெறுகின்றனர். ஆறுகள், பாம்புகள் வழிபாடும் கூறப்படுகின்றன. இரண்டாம் பிரிவில் கிரேக்கர், பாலவர், சகர் முதலியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இராமரை அவதாரமாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. தத்தவஞானத்துக்கும் சமயத்துக்கும் இராமாயணம் மகாபார தத்தைப் போல் சிறந்ததன்று. அது இல்லறத்தைப் பெருமைப்படுத்து கிறது. விடுதலை பெறுவதற்குத் துறவு வேண்டியதன்று என்பதை உணர வைக்கின்றது. புத்தரை நாத்திகன் எனக் கூறுகின்றது. இராமாயணக் கதை பாரதக் கதைக்கு முற்பட்டதாயினும் பாரதத்துக்குப் பின் இராமாயணஞ் செய்யப்பட்டதென்பதை இது உணர்த்துகின்றது. இராமாயணம் பாரதகாலத்துக்குப்பின் தொடங்கி, கிறித்துவ சகாப்தத்தின் பின் சில நூற்றாண்டுகள் வரையில் வளர்ச்சி அடைந்து வந்ததென ஆராய்ச்சி யாளர் கூறுவர். சீதாபிராட்டியின் தந்தையாகிய சனகன் யாக்ஞவல்கி காலத்திருந்தவராகக் கூறப்படுதலாலும், யாக்ஞவல்கி சனமேசயன் காலத்தவராதலாலும், இராமாயண நிகழ்ச்சி பாரதப் போருக்குப் பிற் பட்டதெனக் கருதப்படுகின்றது. தென்னாட்டில் வழங்கிய பழங்கதை ஒன்றையும் வடநாட்டில் வழங்கிய கதையையுமிணைத்து, இராமாயணஞ் செய்யப்பட்ட தென்னும் கருத்து இருந்து வருகிறது.1 புராணங்கள் புராணங்களை வியாசர் செய்தாரென்னும் நம்பிக்கை இருந்து வருகின்றது. அவை இதிகாசங்களுக்குப் பின் செய்யப்பட்டவை. புராணங்கள் உலகம், உயிர் என்பவற்றுக்கு வேறாகக் கடவுள் உண்டு என்னும் கொள்கை உடையன. அவற்றில் திரிமூர்த்திகள் முதன்மை யடைகின்றார்கள். சிவ புராணங்கள் சிவனை மேலாகவும், விட்டுணு புராணங்கள் விட்டுணுவை மேலாகவும், பிரம புராணங்கள் பிரமாவை மேலாகவும் கூறுகின்றன. அவை வேதமுறையான யாகங்களையும், துதிகளையும் தழுவவில்லை; உருவ வணக்கத்தையும், பக்தி மார்க்கத்தை யும் தழுவுகின்றன. கன்மம், மறுபிறப்பு, ஞானத்தினால் மோட்சம் என்னும் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன; தத்துவ ஞானங்களி லும் பார்க்கப் பத்தி மார்க்கஞ் சிறந்ததெனக் கூறுகின்றன. வேத மார்க்கம், உருவ வழிபாடு, பத்தி மார்க்கம், உபநிடதக் கொள்கைகள் என்பவற்றை எல்லாம் ஒன்றுபடுத்திச் செய்யப்பட்டனவே புராணங்களாகும். புராணங் களில் முதன்மையுடையவை பதினெட்டு. விட்டுணு, பாகவதம், நாரதீயம், கருடம், பதுமம், வராகம் என்பன விட்டுணு புராணங்கள். சிவ, இலிங்க, ஸ்கந்த, அக்கினி, மச்ச, கூர்ம என்பன சிவ புராணங்கள். பிரம, பிரமாண்ட, வைவர்த்த, மார்க்கண்டேய, பாவிச்ஸ்யா, வாமன என்பன பிரம புராணங் கள். இவையன்றி உப புராணங்களுமுள்ளன. எல்லாப் புராணங்களும் உலகப்படைப்பு, பிரளயம், மனுவந்தரம், அரச பரம்பரை, அரசர்களின் வரலாறுகளைக் கூறும். அரச பரம்பரைகளைப்பற்றியும், அரசர்கள் வரலாற்றுக்களைப் பற்றியும் சூதர் எனப்பட்டோர் அரச சபைகளில் பாடுவது அக்கால வழக்கமாகவிருந்தது. அவர்கள் நினைவில் காப்பாற்றி வந்தவற்றைக் கொண்டே அரசர் வரலாறுகள் எழுதப்பட்டன. புராணங் கள் கி.மு.500 முதல் கி.பி. 500 வரையில் எழுதப்பட்டனவென்று கருதப் படுகின்றன.1 “வேதமொழி வழக்கிறந்து வேதக் கொள்கைகள் விளங்க முடியாமலிருந்தன. ஆகவே பிராமண மதக் கொள்கைகளை மக்கள் அறியாதிருந்தார்கள். அப்பொழுது வியாசரும் வேறு பலரும் சேர்ந்து ஆயிரமாண்டுகளாக (கி.மு.500 - கி.பி. 500) பதினெட்டுப் புராணங்களைச் செய்தார்கள். அவை 400,000 இரண்டடிப் பாடல்களாக உள்ளன. அவை உலகப் படைப்பு, உலகம் வளர்ச்சி அடைந்து மாறுதல்களுக்குள்ளாகி அழிந்தது, தெய்வங்களின் வமிசம், வீரர்காலக் கதைகள் என்பவற்றைக் கூறுகின்றன. அவை தர்க்க முறைகளையோ காலக் கணக்குகளையோ பொருட்படுத்தவில்லை. புரூரவர் ஊர்வசியோடு அறுபத்தோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரெனப் புராணங்கள் கூறுகின்றன.” “கற்பமென்பது கால முடிவு. உலகப் படைப்பின் காலம் 1000 மகா உகம். ஒவ்வொரு மகாஉகமும் 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்டது. ஒவ்வொரு மகாஉகத்திலும் நான்கு உகங்களுண்டு. இப்பொழுது நடக்கின்ற மகாஉகத்தில் மூன்று உகங்கள் கழிந்துவிட்டன (3,888,388 ஆண்டுகள்). நாம் இப்பொழுது கலியுகத்தில் 5,535-ல் வாழ்கின்றோம். இன்னும் கலியுகத்தில் 426,965 ஆண்டுகளிருக்கின்றன. இவ்வுக இறுதியில் பிரளயமுண்டாகும். பின் பிரமாவுக்கு ஒரு நாள் உண்டாகும். அது 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்ட மகா உகமாகும்.”1 இராமானுசர் இராமானுசர் சிறீபிரம்பூரில் 1027இல் பிறந்தார். இளமைக் காலத்தில் தந்தை காலமானார். இவர் இளமையில் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தக் கல்வி பயின்றார். யாதவரின் வேதாந்தக் கருத்துக்கள் எல்லாவற்றையும் இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறீரங்கத்தில் மடத்தலைவராகவிருந்த ஆளவந்தார் இராமானுசரின் கல்வித் திறமையைக் கேள்வியுற்று அவரைத் தமக்குப் பின் மடத்தலைவ ராக்க விரும்பினார். ஆளவந்தார் தமது அந்திய காலம் அணுகியதும் இராமானுசரை அழைத்து வரும்படி பெரியநம்பியை விடுத்தார். இராமா னுசர் வந்தபோது ஆளவந்தார் காலமடைந்து விட்டார். பிரேதத்தின் மூன்று வலது கைவிரல்கள் மடித்தபடி இருந்தன. அவர் மாணாக்கர் அவருக்கு மூன்று விருப்பங்கள் நிறைவேற்றப்படாமலிருந்தனவென்று அதற்குப் பொருள் கூறினார்கள். நிறைவேற்றப்படாமலிருந்தவற்றுள் வேதாந்த சூத்திரத்துக்கு உரை எழுதுவது ஒன்று. இராமானுசர் காஞ்சீ புரத்துக்குத் திரும்பிச் சென்று வழக்கம்போல் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் இவர் கோயில் பட்டரிடம் வருங்காலத்தில் தாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளைக் கேட்கும்படி சொன் னார். இறுதியில் வீடுபேறு கிட்டுமென அவருக்குக் கடவுள் வாக்குக் கிடைத்தது. அவர் மதுராந்தகத்தில் பெரியநம்பியைக் கண்டு, அவரிடம் வேதாந்த இரகசியங்களைக் கேட்டுத் தெளிந்தார். அவர் இல்லறத்தில் நுழையாது துறவு பூண்டார். துறவு பூண்டபின் எங்கும் இவருக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. அவர் துறவிகளின் அரசன் எனப்பட்டார். அவர் சிறீரங்கத்தில் தங்கியிருந்து திருவாய்மொழியை ஓதிப் புலமை யடைந்தார். போதாயன விருத்தியை மனப்பாடஞ் செய்திருந்த தனது மாணவர் கூரத்தாழ்வாரின் துணையோடு இவர் வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், வேதாந்த தீபம், பிரம சூத்திர உரை, பகவத்கீதை உரை முதலியவற்றைச் செய்தார். வைணவர்கள் இராமானுசரின் பிரம சூத்திர உரையை ஒப்புக்கொண்டு, அதனைச் சிறீபாடியமென வழங்குவர். இவர் 1137இல் காலமானார். இவர் கடவுளுக்குப் புறம்பான உயிர்களும் உலகமும் (சடம்) உண் டென்றும், அவை கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இவர் வெளி யிட்ட தத்துவஞானம் விசிட்டாத்துவைதம் எனப்படும். மாதவர் மாதவர் தென் கன்னடத்திலுள்ள உடுப்பிக்கு அண்மையில் ஒரு கிராமத்தில் 1199இல் பிறந்தார். இவர் இளமையில் வேதங்களைக் கற்றறிந்து சன்னியாசத்தை மேற்கொண்டார். இவர் திருமாலை முழு முதலாகக் கொண்டு துவைத மதத்தைப் போதித்தார். இராமானுசரைப் போலவே இவரும் தோளில் சங்கு, சக்கரம் முதலிய அடையாளங்களைச் சுட்டுக்கொள்வதை அனுமதித்தார். இவர் உடுப்பியில் கிருட்டிணன் கோயிலைக் கட்டினார்; உயிர்ப் பலியிடுவதைத் தடுத்தார். பிரம சூத்திரத் துக்கு உரை எழுதினார். தமது உரைக்குச் சமாதானங் கூறுவதாக அனு வியாக்கியானம் என்னும் நூலையும் இவர் வெளியிட்டார். இவரியற்றிய பாரத தாற்பரிய நிர்ணயம், பகவத்கீதை உரை, உபநிடத உரை என்பன இவருடைய மதக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கின்றன. இவர் இருக்கு வேதத்தின் நாற்பது பாடல்களுக்கு உரை எழுதினார். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம சூத்திரம் என்பவற்றிலும் பார்க்க இவர் புராணங்களில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் வைணவ மதத்தையும், சைவ மதத்தை யும் ஒன்றுபடுத்த முயன்று வந்தார். வைணவக் கோயில்கள் சிலவற்றில் சிவன், பார்வதி, கணேசர் முதலிய கடவுளரின் உருவங்கள் வைத்து வழிபடப்பட்டன.1 14ஆம் நூற்றாண்டில் விசய நகரத்தில் வாழ்ந்த வித்தியாரணியரும் மாதவர் (மத்துவர்) எனப்படுவர். இவரும் தத்துவஞானியாக இருந்து பல நூல்கள் செய்துள்ளார். இவர் சங்கரரின் அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றியவர். இவருடைய தம்பி சாயணர் வேதங்களுக்கு உரை எழுதியுள்ளார். ஸ்கந்த வழிபாடு வடநாட்டு மக்கள் முருகக் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களிட்டு வழிபட்டார்கள். வடநாட்டில் முருகக்கடவுளுக்கு வழங்கிய பெயர்கள் ஸ்கந்தர், கார்த்திகேயர், மகாசேனர், குகர், விசாகர், ஸ்கந்த குமரர், பிரமணியர், முதலியன. பிரமணியரென்பதே சுப்பிரமணியரெனத் தமிழ்நாட்டில் மத்திய காலம் முதல் வழங்குகின்றது. இப் பெயர்கள் வடநாட்டில் வாழ்ந்த வெவ்வேறு கூட்டத்தினர் முருகக்கடவுளை வெவ்வேறு பெயர்களில் வழிபட்டதனால் வந்திருக்கலாம் அல்லது ஒரு கடவுளின் வெவ்வேறு தன்மைகளை உணர்ந்த வெவ்வேறு திருவுருவங் களை அமைத்து, அவர்கள் வழிபட்டதனால் உண்டாயிருக்கலாம். இதிகாசங்களில் ஸ்கந்த, கார்த்திகேய வழிபாடுகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. வேதங்களில் இவ் வழிபாடுகள் காணப்படவில்லை. பாணினியின் இலக்கணத்துக்குப் பாடியஞ் செய்த பதஞ்சலி (கி.மு. 2ஆம் நூ.) ஸ்கந்த வழிபாட்டைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மௌரிய அரசர் ஸ்கந்த, சிவ, விசாக விக்கிரகங்களை விற்றுப் பணத்தைக் கருவூலத்தில் சேர்த்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் முருக வழிபாடு வட இந்தியாவில் பரவியிருந்ததெனத் தெரிகிறது. குவிஷ்கா (Huviska) அரசன் ஸ்கந்தர், மகாசேனர், குமரர், விசாகர் என்னும் முகூர்த்தங்களில் முருகக்கடவுளின் வடிவங்களை நாணயங்களில் பொறித்தான். உருவங்களின் கீழ் கிரேக்க எழுத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந் நாணயங்கள் கி.மு. 2 ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஏறத்தாழ இக் காலத்தைச் சேர்ந்த நாணயமொன்றில் ஒரு பக்கத்தில் ஆறுமுகங்களுடைய கடவுளும் மறுபுறத்தில் பெண் தெய்வத்தின் வடிவமும் பொறிக்கப்பட் டுள்ளன. மறுபக்கத்திலுள்ள பெண் தெய்வம் முருகக்கடவுளின் பாரி யாகிய தேவசேனை எனக் கருதப்படுகின்றது. காளிதாசர் (கி.பி.4ஆம் அல்லது 6ஆம் நூ.) குமாரக் கடவுளின் பிறப்பைக் கூறும் குமாரசம்பவம் என்னும் நூல் செய்துள்ளார். வெவ்வேறு வடிவுகளில் வடநாட்டில் வழிபடப்பட்ட முருகக்கடவுளைச் சுற்றித் திரண்ட பழங்கதைகளும், தென்னாட்டில் தோன்றிய பழங்கதைகளும் திரண்டு இன்று முருகக் கடவுளைப்பற்றிய புராணமாக வழங்குகின்றன. இவ்வாறு இன்றைய முருக வழிபாடு வடநாட்டின் தொடர்பு பெற்றது. விட்டுணு மதம் வைணவ மதத்துக்குப் பாகவதம், பஞ்சராத்திரம் முதலிய பெயர்களும் வழங்கும். விட்டுணுவைத் தலைமையாகக் கொண்டு வழி படும் சமயம் வைணவம் எனப்படும். இருக்கு வேதத்தில் விட்டுணு பெரிய தெய்வமாகக் bகாள்ளப்படவில்லை. அவர் சூரியனைக் குறிப்பதாகவும், சிறு தெய்வங்களிலொன்றாகவுமிருந்தார். அப்பொழுது அவர் மும் மூர்த்திகளில் ஒருவர் என்னும் நிலையை அடையவில்லை. விட்டுணு மூவடிகளால் உலகை அளந்தாரென்பது சூரியனின் உதயம், நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களிலும் விண்ணில் செல்லும் செலவைக் குறிக்கின்றது. கி.மு. 4ஆம் நூற்றாண்டளவில் வாசுதேவனை (கிருட்டிணன்) வழி படும் சமயமொன்று தோன்றியிருந்தது. யாதவ வமிசத்தில் வசுதேவருக்கு வாசுதேவர் என்னும் புதல்வரிருந்தார். புராணங்களும், இதிகாசங்களும் இவரை வாசுதேவகிருட்டிணர் எனக்கூறும். யாதவ வகுப்பினரின் தலை வராக இருந்த இவர் பிற்காலத்தில் பகவத் அல்லது பகவான் என்னும் பெயரால் வழிபடப்பட்டார். இச் சமயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பெரிதும் கைக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தியாவில் பெஸ்நகரில் (Besnagar) கிரேக்க தூதராகவிருந்த எலியோதோரஸ் என்னும் கிரேக்க கடவுளரின் கடவுளாகிய வாசு தேவருக்குக் கருடத்தம்பமொன்றை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நாட்டினார். சாந்தோக்கிய உபநிடதம், தேவகி மைந்தனாகிய கிருட்டிணன் கோரர் என்னும் இருடியின் மாணவர் எனக் கூறுகின்றது. கோரரின் போதனைகளிற் சில கீதையிற் கூறப்படுவனபோற் காணப்படுகின்றன. கோரரும் கிருட்டிணரும் சூரிய வழிபாட்டினர். கிருட்டிணர் கீதையிற் கூறியவற்றுக்குக் கரு, கோரரின் உபதேசங்களாக லாம். வாசுதேவ மதத்தினர் இத் தத்துவஞானத்தை விரிவுப்படுத்தி யிருத்தல் கூடும். வாசுதேவரால் நாட்டப்பட்ட சமயம் வைணவ மதத்துக்கு ஆதாரமாக வுள்ளது. இது சூரிய வணக்கத்தின் வளர்ச்சியாக இருக்க லாம். கீதையைக் கண்ணன் சூரியனுக்கு உபதேசிக்க, சூரியன் அதை மனுவுக்கும், மனு அதை இஷ்வாகுவுக்கும் உபதேசித்ததாகக் கீதை கூறு கின்றது. அரி வம்சம், வாயு புராணம், பாகவத புராணம் முதலியன கிருட்டிணன் ஆயர்குலத்திற் பிறந்து, கோபிகளோடு விளையாடியது முதலிய கதைகளைக் கூறுகின்றன. பிற்காலத்தில் வாசுதேவ கிருட்டிணரும், வேதகால விட்டுணுவும் ஒருவராகக் கொள்ளப்பட்டனர். இக் கொள்கை பகவத் கீதை செய் வதற்கு முன் வலிபெற்றுவிட்டது. பின்பு வாசுதேவ - கிருட்டிண-விட்டுணு வழிபாட்டோடு நாராயணர் என்னும் இருடி வழிபாடும் இணைக்கப்பட்டது. நாராயணர் ஐந்து இரவுகள் யாகம் புரிந்தவராகச் சொல்லப்படுவர். இதனால் பஞ்ச ராத்திரா அல்லது பஞ்ச ராத்திரிகா என்பது வைணவ மதத்தைக் குறிக்க வழங்கும். போதாயன தரும சூத்திரம் (கி.மு.3ஆம் நூ.) நாராயணரைக் கடவுளாகக் கூறுகின்றது. தைத்திரிய ஆரணியகம் நாராயணர், வாசுதேவர், விட்டுணு என்போரை ஒரே கடவுளாகக் கூறுகின்றது. நாராயணர் அரி எனவும் அறியப்பட்டார். நாராயணரை வழிபட்டோர் ஆதியில் பஞ்ச ராத்திரிகர் எனப்பட்டனர். நாராயண வழிபாடு இமயமலைப் பகுதிகளில் தொடங்கியது. தென்னாட்டில் திருமால் வழிபாடு மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இது எப்படித் தொடங்கியதென்பது அறிந்து கொள்ளமுடியாதது. இவ் வழிபாடு காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழ்ந்த மக்களிடையே தொடங்கியதாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்தில் திருமால் மாயோன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இது கரியமால் என்னும் பொருள் தருவதாகலாம். மாயோன் வழிபாடு சூரிய வழிபாட்டோடு சம்பந்தம் பெற்றுள்ளது. சங்கும் சக்கரமும் சூரியனைக் குறிப்பன. பாற்பொங்கல் செய்து படைத்து, பெண்கள் கை கோத்து நின்று பாடிக் குரவையாடித் திருமாலை வழிபடுவது பண்டை வழக்கு. இவ் வழிபாட்டுக்கும், வடநாட்டில் தோன்றிய பஞ்சராத்திர பாகவத வைணவத்துக்கும் ஒருவகைத் தொடர்பும் இருக்கவில்லை. வடநாட்டில் நிலவிய பாகவத-வைணவம் தெற்கு நோக்கிப் பரவியது. அப்பொழுது திருமால் மதமும், வடநாட்டு வைணவ மதமும் ஒன்று கலந்தன. பழங்கதைகளும் கலந்தன. அப்பொழுது திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியது. தென்னாட்டில் கண்ணன் பலதேவ வழிபாடுகள் மிக்கிருந்தன. இதனைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. பரிபாடலில் திருமாலுக்கு எட்டுப் பாடல்களுண்டு. அவற்றுள் இப்பொழுது ஏழு பாடல்களுள்ளன. அவற்றுள் திருமால் தொடர்பாக வழங்கிய பழங்கதைகள் பல காணப்படுகின்றன. தென்னாட்டில் திருமாலுக்குக் கோயில்களிருந்தன. 12 ஆழ்வார்கள் காலத்தில் கோயில் வழிபாடு மிகச் சிறப்புற்றிருந்தது. பல சாதிகளைச் சேர்ந்த இவ்வடியார்கள் (கி.பி. 6-9ஆம் நூ.) திருமால் மீது பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரப் பிரபந்தம் எனப்படும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தும், முதலாம் இராசேந்திர சோழதேவர் காலத்தும் (985-1030) வாழ்ந்த நாதமுனி என்பார் இப் பாடல்களைத் தொகுத்தார். இவர் காலத்தின் முன் சமயத்துக்கு வேதங்களே ஆதாரம் என்னும் கொள்கை தலை எடுத்திருந்தது. வேதாந்தக் கொள்கைகளும் பரவிக் கொண்டிருந்தன. நாதமுனியின் பேரனாகிய ஆளவந்தார் (யமுனா சாரியர்) வைணவ வேதாந்தத்தை (விசிட்டாத்துவைதம்) விளக்கும் சித்தித்திரயம் என்னும் நூலையும், ஆகமப் பிரமாணியமென்னும் நூலை யும் செய்து பஞ்சராத்திர ஆகமங்களையும் வேதாந்தத்தையும் இணைத் தார். இராமானுசர் விசிட்டாத்துவைதமாகவும், மாதவர் துவைதமாக வும் வேதாந்த சூத்திரத்துக்கு உரை செய்தார்கள். வைணவமதத்தினர் பெரும்பாலும் வடமொழியையே முதன்மையாகக் கொண்டு, வட மொழியில் சமய நூல்களும் உரைகளும் இயற்றிவந்தனர். இவர்கள் சரிக்குச் சரி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு நடையையும் கையாண் டார்கள். இந் நடை மணிப்பிரவாளமெனப்பட்டது. சைவர்கள் தமிழில் சமய சாத்திரங்களும் அவற்றுக்கு தமிழுரைகளும் செய்து வந்தார்கள். வைணவ சமய வளர்ச்சி தொடக்கத்தில் ஆரிய சம்பந்தம் பெறாத வாசுதேவகிருஷ்ண மதம் கி.மு.300 வரையிலிருந்தது. வாசுதேவகிருஷ்ண மதம் பின்பு விட்டுணுவைத் தலைமையாகக் கொண்ட பிராமண மதமாக்கப்பட்டது. விட்டுணு வழி பாட்டினரின் பெயராக வைணவம் என்பது மகாபாரதத்தில் காணப்படு கின்றது. வேதத்தில் கூறப்படும் விட்டுணுவுக்கு அவரின் சக்தி கூறப்பட வில்லை. வைணவ சமயத்தின் மூன்றாவது படி வேதாந்தம், சாங்கியம், யோகங்களோடு சம்பந்தப்பட்டது. இது கிறித்துவ சகாப்தம் முதல் கி.பி. 1200 வரையில் நடைபெற்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் முழுமுதற் கடவுளாக்கப்பட்டுள்ளார். சில சமயங்களில் அவர் மகாதேவனை வழிபட்டார். வைணவ ஆகமங்கள் 108. இவற்றிற் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. இவை பாகவத, பஞ்சராத்திர, சத்வாதக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு தோன்றியவை. இக்கொள்கைகளைப் பற்றி மகாபாரதம் கூறுகின்றது. இவற்றின் வேறுபாடு சமயத்தைப் பின்பற்றுவோரின் மந்திரத்தைப் பற்றியது. பாகவதர் பன்னிரெண்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும், பஞ்சராத்திரர் எட்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும் வழங்குவர். பாகவதர் என்னும் பிரிவினர் இப்பொழுது சிறுதொகையின ராக உள்ளனர். இவர்கள் தெலுங்கு நாட்டிலும், மகாராட்டிரத்திலும் காணப்படுகின்றனர். இராமானுசர் தமது வேதாந்த பாடியத்தில் பாகவதர், பஞ்சராத்திரர், சத்வாதர் என்போர் ஒரே கொள்கையுடையவர் களெனக் கூறியுள்ளனர். வைணவரின் 108 ஆகமங்களும் பஞ்சராத்திர ஆகமங்களெனப்படும். பத்ம சம்கிதை அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. அவ்வாகமங்களு ளொன்றாகிய பரத்துவாச என்பது பத்ம சம்கிதைக்குப் பிற்பட்டது. இதனால் பழையவை மறைந்து போக, அவற்றுக்குப் பதில் புதியன எழுதப்பட்டன வென்பது தெரியவருகிறது. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் தமது காலத்தில் அவற்றுட் பல மறைந்து போயினவெனக் கூறியுள்ளார். ஆகமங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையால் அவற்றைப் புதியனவாக எழுதுவ தற்கும் அவற்றிற் பலவற்றைப் புகுத்துவதற்கும் வாய்ப்புக்களிருந்தன. பத்ம சம்கிதை, இலக்குமி தந்திரமென்பன பழமையுடையன. அவை இராமானுசருக்குப் பிற்பட்ட வைணவக் கொள்கைகளிலும் பார்க்கச் சாக்த, சைவக் கொள்கைகளுக்கு அண்மையிலுள்ளன. பத்ம சம்கிதையில் பஞ்ச ராத்திரமென்பதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பொருள், சிவன், பிரமா, கபிலர், புத்தர் அருகரால் வெளியிடப் பட்ட சைவ, யோக, சாங்கிய, யோக, பௌத்த, அருகதக் கொள்கைகளை இரவு ஆக்குவது எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இக்கால வைணவர் ஆகமக் கொள்கைகளை விட்டு விலகிச் சென்று விட்டனர். இக்கால விசிட்டாத்துவைதர் இராமானுசரின் வேதாந்த ஞானத்தையும், ஆகமத்தில் கூறப்படும் உலகப் படைப்பு வரலாறுகளையும், கிரியை முறைகளையும் கைக்கொள்கின்றனர். பஞ்ச ராத்திரத்தை விளக்குவதாகக் கூறிய இராமானுசர் வேதாந்தக் கொள்கை களையே விளக்கியுள்ளார். இராமானுசரைப் பின்பற்றினோர் அவருடைய தத்துவ ஞானத்தை அலட்சியஞ் செய்து ஆகமக் கொள்கைகளையும் அவற்றுட் கூறும் அனுட்டானங்களையுமே கடைப்பிடித்தனர். இராமா னுசருக்கு முன்னிருந்த யமுனாச்சாரியருக்கு முன் வேதங்களே பிரமாண மாகக் கொள்ளப்பட்டு வந்தன. வைணவ அத்துவைதக் கொள்கையைப் (விசிட்டாத்துவைதம்) போதித்த யமுனாச்சாரியர் வேதங்களைப் போல் ஆகமங்களும் பிரமாணமாகக் கொள்ளப்படுதல் வேண்டுமென வற் புறுத்தி, வேதங்களையும் ஆகமங்களையுமிணைத்தார். முற்பட்ட ஆகமங்கள் கடவுளைப் பரப்பிரமமென்றும், அவர் உலகைக் காத்தல் முதலிய கடமைகளை அவருடைய சக்தி புரிவதாகவும் கூறியுள்ளன. புராணங்களின்படி விட்டுணு திரிமூர்த்திகளுள் ஒருவராக வுள்ளனர். இவர் சிறீ, பூ, நில என்னும் மூன்று மனைவியருடன் ஆதி சேடனாகிய படுக்கையில் பாற்கடலில் பள்ளிகொள்வர். அவர் புதல்வ னாகிய பிரமா வேண்டிக் கொள்ளும் போது அவர் பூமியில் அவதாரஞ் செய்வர். சாக்தம் இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு ஆரியர் வருகைக்கு முற் பட்டது. தாய்க்கடவுள் வழிபாடு மக்களின் அநாகரிக காலத்தில் தோன்றி வளர்ச்சியடைந்து வந்தது. ஆகவே, இவ்வழிபாட்டில் அநாகரிக முறைகள் முதல் நாகரிக முறைகள் வரையில் காணப்படும். இத்தெய்வம் வடநாட்டில் துர்க்கை எனப்பட்டது. இது பிறகு சிவன் கடவுளின் பாரியாகிய உமை எனக்கொள்ளப்பட்டது. சிவனோடு சம்பந்தம் பெறாது தனித்து வழிபடப்பட்ட துர்க்கை அல்லது காளி வழிபாட்டி லிருந்து சக்தி வழிபாடு தொடங்கியது. தைத்திரிய ஆரணியகம், கேன உபநிடதங்களில் உமை, பார்வதி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் குவிஷ்க (Huvishka) அரசன் காலத்தில் சிவனோடும் சிவனில்லாமலும் உமையின் வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கின. அசெஸ் (Azos) என்னும் இந்து-சித்திய அரசனின் (கி.பி. 2ஆம் நூ.) நாணயங்களில் சிங்க வாகனத்திலிருக்கும் துர்க்கை வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் வீட்டும பருவப்பாடல்களிலும், விராட பருவத் தில் வரும் பாடல்களிலும் உமைக்குப் புதிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. விராட பருவத்தில் துர்க்கை நாராயணனின் பாரி என்றும், வீட்டும பருவத்தில் சிவனின் மனைவி என்றும், மகிடாசுரநாசினி என்றும் கூறப் பட்டுள்ளன. அரிவம்சம் அவள் விந்தியமலையிலிருப்பவளாகக் கூறு கின்றது. குமரி, காளி, கபாலி, மகாகாளி, சண்டி, காத்தியாயனி, விசையி, காராளி, கௌசிகி, காந்தர் வாசினி முதலிய பெயர்கள் பிற்காலத்து வழங்கின. சைவமும் சாக்தமும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. சாக்த ஆகமங்கள் 77. இவற்றுள் ஐந்து சுபாகமங்கள் எனப்படும். அவை வசிட்ட, சனக, சுக, சனாதன, சனத்குமார என்பன. இவை ஞானத்துக்கும் வீடு பேற்றுக்குமுரிய வழிகளைக்கூறும். அவை வலதுகை மார்க்கமெனவும் சமயாசாரமெனவும்படும். 64 ஆகமங்கள் கௌள ஆகமங்களெனப்படும். அவை மந்திர வித்தைகளையும் இடக்கரான வழிபாடுகளையும் கூறும். 8 மிசிர காமங்களெனப்படும் இவை இரண்டையும் கூறும். கௌள ஆகமக் கொள்கைகள் இடதுகை மார்க்கமெனவும், மிசிர ஆகம மார்க்கம் கலப்பு மார்க்கமெனவும்படும். மிசிராமங்களாவன: சந்திரகலை, சோதீஸ்வதி, புவனேசுவரி, துர்வாச மாதா, பர்கஸ் பதியா என்பன. சக்தி சூத்திரங்கள் என்னும் நூல் சாக்த தத்துவ ஞானத்தை விரிவாகக் கூறுகின்றது. பாஸ்கராச்சாரியார் தமது இலலித விஸ்வதாரபாடியம் என்னும் நூலில் இதிலிருந்து ஒன்பது சூத்திரங்களை எடுத்தாண்டுள்ளார். சக்தி சிவத் தோடு சேராவிடில் சிவத்தால் ஒரு தொழிலும் புரிய முடியாது என்பது இம்மதத்தின் கொள்கை. கடவுளைப் பெண் வடிவில் வழிபடும் மதம் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தது. வேதாந்த சூத்திரத்துக்கு அத்வைத உரை கண்ட சங்கராச்சாரியர் சாக்த மதத் தினரே ஆவர். சக்தியும் சிவமும், குணமும் குணியும் போன்றவை; ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்பது சைவர்களது கொள்கை. இது பற்றி எழுந்ததே சிவனின் பாகம் பெண் வடிவான வடிவு. சக்தி வழிபாட்டினர் சக்தியை வெவ்வேறு வடிவுகளில் உபாசிப்பர். கன்னி, வாலை, மனோன்மணி, திரிபுரை முதலியன சக்திகள் சிலவற்றின் பெயர்களாகும். சக்தி வழிபாட்டில் வேதங்களில் கூறப்படும் தெய்வங்கள் ஒன்றும் வணங்கப்படுவதில்லை. உருத்திர சிவன் சிவ வழிபாடு ஆரியரின் வருகைக்கு முன் இந்தியாவிலிருந்தது. ஆரியர் தெய்வங்களுளொன்று உருத்திரனாக இருந்தது. இது தொடக்கத் தில் மற்றத் தெய்வங்களோடு ஒத்த உயர்வுடையதாகக் கொள்ளப்பட வில்லை. மற்றத் தெய்வங்களுக்கு உணவு தீயிலிடப்பட்டது; உருத்திரனுக் கும் அதன் பரிவாரங்களுக்கும் மக்களுலாவாத நாற்சந்திகளிலெறியப் பட்டது. இத் தெய்வம் நாளடைவில் ஒரு கூட்டத்தினர் வழிபடும் நிலைமைக்கு உயர்வடைந்தது. உருத்திரன் ஊளையிடும் தெய்வமாகவும் பயம் விளைப்பதாகவுமிருந்தது. இது நாளடைவில் சிவனுக்குரிய பண்பு களைச் சிறிது சிறிதாக ஏற்றுக்கொண்டு சிவனாக மாறுதலடைந்தது.1 உபநிடதங்கள் வேதகாலத் தெய்வங்களுக்கு மேலான தெய்வம் எனக் கூறுகின்றன. கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவனெனத் தெரிகிறது. சிவ வழிபாட்டுக்குப் பாசு பதம் என்னும் பெயருமுண்டு. கடவுள் பசுபதி என்னும் கொள்கை உடைமையால் இப் பெயர் வந்ததெனச் சிலர் கூறுவர். சிவனைப் பசுபதி வடிவில் மக்கள் வழிபட்டமையால் இப்பெயர் தோன்றியதெனவும் கருதப்படுகிறது. மகாபாரதம் பாசுபதத்தைப் பற்றிக் கூறுகிறது. அருச்சுனன் சிவனிடத்தில் பெற்றது பாசுபத அத்திரம். நையாயிக, வைசேடிக சூத்திரங்களைச் செய்த கௌதமரும், கணாதரும் சிவ மதத்தினர் எனச் சொல்லப்படுகின்றனர். இராமாயணம், சீகந்த, மகாதேவ, உருத்திரன், திரியம்பகன் முதலிய பெயர்களால் சிவனைக் குறிப்பிடுகின்றது. சிவன் காமனை எரித்தது, பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சைச் சிவன் உண்டது, தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தது, சிவன் திரிபுரங்களை எரித்தது முதலிய கதைகளும் இராமாயணத்திற் காணப்படுகின்றன. மகாபாரத காலத்தில் சைவமும் வைணவமும் முதன்மை பெற் றிருந்தன. இராமாயணத்தில் சிவனைப் பற்றிக் கூறப்படும் கதைகள் மகா பாரதத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன. சிவன் திரிபுரங்களை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது முதலிய கதைகள் விரித்துக் கூறப்பட் டுள்ளன. வீட்டும பருவத்தில் அருச்சுனன் துர்க்கையை வழிபட்ட செய்தி காணப்படுகின்றது. கண்ணன் சிவனைக் கேட்ட வரங்களுள் ஒன்று தான் சிவபக்தனாக இருக்கவேண்டுமென்பது, பாரதம் தொடக்கத்தில் வைணவ சம்பந்தப்பட்ட நூலாக இருக்கவில்லை. கி.பி. 1ஆம் 2ஆம் நூற்றாண்டள வில் பிராமண மதக் கொள்கையினரால் இது வைணவ நூலாக்கப் பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வட இந்தியாவில் ஆட்சி புரிந்த இந்திய - சித்திய, இந்து - பட்டாணிய, குசான் அரசர் காலங்களில் இடபத்தோடு கூடிய சிவன் வடிவம் நாணயங்களில் பொறிக்கப்பட்டன. பௌத்த, சமண சமயங்கள் தோன்றும்போது வடநாட்டிலிருந்த சமயம் சைவம் எனக் கருதப்படு கிறது. வடஇந்தியாவினின்றும் இலங்கைக்கு வந்தவன் எனப்படும் விசயனும் அவனுக்குப் பின் அரசராக இருந்தோரும் சிவவழி பாட்டின ராக இருந்தார்கள். காசுமீர சைவம் சைவ சமயம் வட நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வேத காலத்தில் சிவாக்கள் என்னும் ஒரு கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். இவர்கள் சிவ வழிபாட்டினர் எனக் கருதப்படுகிறார்கள். வட நாட்டில் சைவமதம் பிரபலம் பெற்றிருந்த தென்பதை விளக்குவதற்குப் பல வலிய சான்றுகளுள்ளன. காசுமீரத்தில் சைவ சமய தத்துவ ஞானம் பற்றிய வரலாறு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வாசுகுப்தர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். இது சிவபெருமானால் வாசுகுப்தருக்கு உபதேசிக்கப்பட்டதென்றும், இது சிவபெருமானால் பாறையில் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் பழங்கதைகளுள்ளன. வாசுகுப்தர் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்து அதனைக் கல்லாடருக்கு உபதேசித்தார். வாசுகுப்தர் அல்லது கல்லாடரால் செய்யப்பட்ட ஸ்கந்த காரிகை, சோமதேவரால் செய்யப் பட்ட (கி.பி.900) சிவ திருஷ்டி, உத்பலரால் செய்யப்பட்ட பிரதிபிஞ்ஞா சூத்திரம் முதலியன காசுமீர தத்துவஞான நூல்களுட் சில. காசுமீர சைவம் ஆகமங்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் ஒப்புக் கொள்கின்றது. இது சங்கரரின் அத்துவைதக் கொள்கைச் சார்புடையது. காசுமீரத்தைச் சேர்ந்தவரெனக் கருதப்படும் பாணினி முனிவர் சிவ வழிபாட்டினர். இவர் வடமொழி இலக்கணத்தைச் சிவபெருமானிடம் கேட்டுணர்ந்தபின் செய்தாரென்னும் ஐதீகமிருந்து வருகிறது. “வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி” என்பது அதை உணர்த்துகின்றது. இந்து சமயம் சைவ சமயம் உட்பட, பௌத்தம், சமணம் அல்லாத இந்திய நாட்டில் தோன்றிய சமயங்களெல்லாம் இப்பொழுது இந்து சமயம் எனப்படுகின்றன. இந்து, இந்து சமயம் என்பன ஆரியத் தொடர்புடைய வடநாட்டு மக்களையும் அவர்களின் வேத சம்பந்தமான மதத்தையும் குறிக்க மேல்நாட்டவர் வழங்கிய பெயர்களாகும். சாக்தம், சைவம் முதலிய மதங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பிருப்பதாக வரலாறு கூறவில்லை. வேத மார்க்கமும் ஆகம மார்க்கமும் தம்முள் மாறுபாடு டையன. ஆகவே, சைவத்தை இந்து மதம் என்னும் கூட்டத்துள் அடக்குவது வரலாற்றுக்கும் கொள்கைக்கும் முரணுடையதாகும். சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு சைவத்துக்கும் தமிழுக்கும் மிக மிகப் பழங்காலம் முதல் தொடர்பிருந்து வருகின்றது. சிவபெருமான், முருகக்கடவுள் முதலிய கடவுளர் சங்கமிருந்து தமிழ் ஆய்ந்தது, சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அருளிச் செய்தது; தருமிக்குக் “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பாட்டை எழுதி உதவியது; நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறியது; சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்துக் கொடுத்தது; பெற்றான் சாம்பானுக்கு “அடியார்க்கெளியன்” என்னும் கைச்சீட்டெழுதி அளித்தது, சமயகுரவர் தமது செழும் பாடல்களால் புதுமைகள் பல விளைத்தது போன்ற ஐதீகங்கள் வழங்குகின்றன. இவ்வைதீகங்கள் தமிழ் மொழியைப் பேசிய மக்களிடையே சிவ வழிபாடு தோன்றித் தமிழோடு நெருங்கிய உறவு கொண்டு செழித்து வளர்ந்ததென்பதை உணர்த்துகின்றன. தொன்மை தொட்டுச் சமய சம்பந்தமான தோத்திரங்களும், சாத்திரங்களும் இம்மொழியிலேயே இருந்து வந்தன. ஆகவே, சிவ வழிபாடும் தமிழும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதபடி சதையும் நகமும் போல ஒன்றுபட்டிருந் தன. பிற்காலத்தில் சமயம், மொழியினின்று பிரிக்கப்பட்டது. தமிழல் லாத மொழி சமயமொழியாக்கப்பட்டது. அப்பொழுது சைவமும், தமிழும் பிரிக்கப்பட்ட சதையும் நகமும் போலாயின. சமய வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் குன்றின. மொழி சம்பந்தமான பூசல்கள் எழுந்தன. பேச்சு மொழி ஒன்றாகவும், சமய மொழி ஒன்றாகவும் இருத்தல் பல குழப்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஏதுவாகும். பழமை தொட்டு ஆரியம், தமிழ் என்னும் போராட் டங்கள் அல்லது பொறாமைகள் இருந்து வருகின்றன. சமய சீர்திருத்தம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றுக்குப் பணியாற்றும் உத்தமர்கள் இதனைக் கருத்திற் கொள்ளுதல் நன்று. சைவம் வாழ்க! தமிழ் வாழ்க!! BIBLIOGRAPHY 1. A Literary History of India - R.W. Frazer. 2. A short history of India - E.B. Havell. 3. Buddhists way of life its philosophy and history - Harold Smith. 4. Castes in India - its nature, function and origins - J. Hatton. 5. Encyclopaedia Britannica, 15th Ed. 6. History of civilization - Will Durant. 7. History of the Tamils - P.T. Srinivasa Aiyengar. 8. Indian Philosophy parts I & II - Dr. S. Radhakrishnan. 9. Literary achievements in India - Mrs. Hensa Metha. 10. Local Government in ancient India - R.K. Mookerji. 11. Mohenjo - Daro and Indus Civilization - Sir John Marshall. 12. Orient and Linguistic studies - William Dwlight. 13. Outlines of Indian philosophy - P.T. Srinivasa Aiyengar. 14. Pre-Aryan Tamil culture - Do. 15. Pre-historic ancient and Hindu India. - R.D. Banerji. 16. Sanskrit Literature - Professor Macdonell. 17. Short Studies in comparative religions - J.G.R. Forlong. 18. The Hindu view of art - Mulk Raj Anand Ph.D. 19. The History and Culture of Indian People - Bharatiya Vidya Bhavan, Bombay. 20. The Indus Civilization - Earnest Mackay. 21. The systems of Vedanta Philosophy - Dr.Paul Duessen. 22. Upanishads - R.D. Diwakar, Bombay 1950. 23. Zeus - Arthur Bernard Cook. PERIODICALS 1. Annals of Bhandarkar - Oriental Research Institute - Vol. XIX. 2. Bulletin of the School of oriental studies. Vol.VIII. 3. Indian culture. Vol.VII. 4. Indo-Asian culture. Vol.I. 5. Journal of Indian History. Vol.XII. 6. Memoir No.41 Arch. Survey (India). 7. New Review. Vol.X பொருட் குறிப்பு அ அகிகுண்டல நியாயம், 67 அக்கினி, 13 அசுர்பானிப்பால், 10 அதர்வணம், 6 அத்வாரு 64 அமெரிக்காவில் சிவன் கோயில், 6 அரச வகுப்பினர் உபநிடத ஞானத்தை அறிந்திருந்தனர், 52 அரசனே தலைமைக்குரு, 21 அரசன் கடவுளின் அவதாரம், 21 அருச்சுனன், 70 அவதாரங்கள், 77 அருணந்தி சிவாசாரியார், 42 ஆ ஆகமங்கள், 22 ஆசியா மைனரில் சிவ வழிபாடு, 8 ஆதிசேடன், 91 ஆத்திகமும் நாத்திகமும், 53 ஆர்மேனியாவில் கண்ணன் வழிபாடு, 18 ஆழ்வார்கள், 88 ஆளவந்தார், 82,88 ஆறுதரிசனங்களை இவ்விரண் டாகப் பிரிக்கலாம், 58 ஆறு தரிசனங்கள், 53 ஆறுமுக நாவலர், 36 ஆனந்தகிரி, 68 இ இந்து சமயம், 97 இராமாயணம், 77 இராமானுசர், 68,82 இருக்கு, 63 இருக்கு வேதம், 65 இருபா இருபஃது, 42 இருஷபர், 74 இலக்குமி தந்திரம், 90 இலிங்கம் - இலங்குவது, 10 இலிங்க வழிபாடும் பாம்பு வழிபாடும், 11 இலிங்காயதம், 28 இலைசியாவில் தமிலி என்னும் மக்கள், 8 இளம்பால் (பகல்), 19 இஷ்வாகு, 87 (இ) ஸ்கந்த வழிபாடு, 84 ஈசுவர கிஷ்ணர், 56 உ உண்மைநெறி விளக்கம், 43 உத்தரமீமாம்சை, 53, 62, 69 உபநிடக் கருத்துக்கள், ஆகமக் கருத்துக்கள், 24 உபநிடதங்களின் காலம், 51 உபநிடதங்களின் பாரசீக மொழிபெயர்ப்பு, 50 உபநிடதங்கள் - உபதேசங்கள், 24,49 உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன, 52 உபநிடத ஞானங்கள் மொகஞ்சதரோ காலத்தவை, 52 உமாதேவியார், 15 உமாபதி சிவாசாரியார், 42 உய்யவந்த தேவர், 42 உருத்திரசிவன், 93 உருத்திரன், 20,93 எ எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வம்,21 எசுர், 63 எபிரேய நாட்டில் சிவன், 6 ஏ ஏகாந்திகள், 32 ஒ ஒலிம்பஸ் மலை, 10 ஒ (ஹோ) தா, 64 ஐ ஐந்தாம் வேதம், 77 க கடவுள், இயவுள் என்னும் பெயர்கள், 28 கடைசி வருணத்தவருக்கு வேத வேதாந்தங்கள் மறுக்கப்பட்டன, 31 கண்ணன் சிவபத்தனாயிருக்க வரம் கேட்டது, 96 கண்ணன் வழிபாடு, 17 கந்தன் = கந்திலுறைபவன், 19 கதிர்காமம், 18 கபிலர், 30 கபிலவாஸ்து, 56 கருடத்தம்பம், 86 கர்மமீமாம்சை, 69 கலியுகம், 82 களப்பலி, 14 கற்பம், 81 காசுமீர சைவம், 96 காஞ்சீபுரக் கைலாசநாதர் கோயிற் சாசனம், 26 காடு கிழாள், 14 காமிகாகமம், 27 கார்த்திகேயர் 19, 85 காளிதாசர், 85 கிரியா என்னும் புரோகிதர், 66 கிரியை, 26 கிருட்டிணன் மகாதேவரை வழிபடல், 89 குகர், 84 குமார சம்பவம், 85 குமாரிலர், 62 கூரத்தாழ்வார், 83 கோயிலுக்கு மதிலும் அகழும், 21 கோயிலும் கோயிற் கிரியையும் 20 கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவன், 94 கௌரவர், 70 ச சக்தியின் பெயர்கள், 93 சங்கரர், 30 சங்கரர் உரை எழுதிய உபநிடதங்கள், 52 சங்கிதை, 67 சங்கு, 16 சடையப்ப வள்ளல், 42 சந்தான குரவர், 43 சமணம், 72 சமயத் தோற்றம், 4 சரியை, 26 சனகன், 79 சாக்த ஆகமங்கள் 27, 77, 92 சாக்தத்துக்கு 77, ஆகமங்கள், 26 சாக்தம், 91 சாங்கிய காரிகை, 56 சாங்கியத்துக்கு ஞானம் எண் என்னும் பொருள், 56 சாங்கியம், 53, 56 சாமவேதம், 65 சாலமனின் கோயில், 22 சிங்க வாகனத்திலிருக்கும் தாய்க் கடவுள், 8 சித்தர் பாடல்கள் 32 சித்தார்த்தர், 74 சித்தித்திரயம், 88 சியஸ் கடவுளுக்கு மூன்று கண், 9 சிரியா நாட்டுத் தந்தைக் கடவுள், 8 சிலப்பதிகாரம், 18 சிவசூத்திரம், 97 சிவஞான போதம், 42 சிவஞான சித்தி, 42 சிவப்ரகாசம், 43 சிவயோகிகள், 32 சிவ வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்று, 17 சிவலிங்கம், 9 சிவலிங்க வழிபாடு 18 சிவன், 5,18 சிவன் மதம், 6 சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர், 20 சிவாக்கள், 96 சிறீ, பூ, நில என்னும் விட்டுணுவின் மனைவியர், 91 சுப்பிரமணியர், 19,84 சுவத்திகம், 16 சுவேதாம்பரர், 72 சூத்திர வடிவில் தத்துவ ஞானம், 54 செவ்வேள், 19 சேக்கிழார், 98 சேயோன், 19 சைவ சித்தாந்தக் கொள்கை, 27 சைவத்துக்கு 28 ஆகமங்கள் 26 சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு, 97 சைவமடங்கள் 34 சோம பானம், 63 ஞா ஞாயிறு முழுமுதற் கடவுள், 4 ஞான நூல்களை எழுதிவைத்தல் தமிழ் மரபன்று, 24 ஞானம், 26 த தக்கன் வேள்வி, 96 தரிசனங்கள், 53 தர்மம்-கடமை, 67 தலமரம், 11 தாமரை மொட்டின் வடிவங்கள், 22 தாய் குடும்பத்துக்குத் தலைவி, 13 தாலிபுளக நியாயம், 67 திகம்பரர், 72 திங்கள் வணக்கம், 12 திரிபிடகம், 75 திரியம்பகன், 95 திருக்களிற்றுப்பாடியார், 42 திருமந்திரம், 25,32 திருமுருகாற்றுப்படை, 19 திருவுந்தியார், 42 திருவருட் பயன், 43 திரையற்ற கடல்போல் சிந்தை, 29 தீர்த்தங்கரர், 72 தீவணக்கம், 12 துரோதானம், 27 துர்க்கை, 91 துர்க்கையின் பெயர்கள், 92 தென்னிந்திய சிற்பமும் எகிப்திய சிற்பமும், 21 தேவசேனை, 85 தேவதாசிகள், 27 தொல்காப்பியம் ந நச்சினார்க்கினியர், 24 நாணயங்களில் சிவ வடிவம், 96 நாதமுனி, 88 நாராயணர், 87 நாலாயிரப் பிரபந்தம், 88 நான்கு வருணங்கள், 37 நிம்ரொட் அரசன், 13 நியாயங்கள், 67 நிரீச்சுர வாதம், 56, 75 நியாயம், 60 நிர்வாணம், 73 நீலகண்ட சிவாசாரியார், 27 நீலகண்டர், 70 நூறுயாகங்கள் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரசன், 49 ப பகவத்கீதை, 70 பகவான், 86 பகற் கடவுள் சம்பந்தமாக பாபிலோன்,10 பசுபதி, 94 பஞ்சராத்திரம் என்பதன் பொருள், 90 பஞ்சராத்திரரின் 8 எழுத்து மந்திரம், 89 பஞ்சராத்திரிகா, 87 பதஞ்சலி, 59 பதினெண் புராணங்கள், 81 பத்மசங்கிதை, 90 பரணி நூல்கள், 14 பரிபாடல், 19,88 பரிமேலழகர், 24 பரிவார தெய்வங்கள், 21 பலதேவ வழிபாடு, 88 பாகவதம், 85 பாகவதரின் 12 எழுத்து மந்திரம், 89 பாசுபத அத்திரம், 95 பாசுபதம், 91 பாணினி, 97 பாண்டவர், 70 பாரதப்போர், 76 பாரதம் திராவிட நாட்டுக் கதை, 76 பார்சவர், 72 பாலவர், 77 பால் கடவுள், 19 பாஷா என்னும் நடை, 25 பாற்கடல், 91 பிணிமுகவூர்தி, 19 பிரம என்னும் புரோகிதர், 65 பிரம சூத்திரம், 60, 69 பிரமணியர், 84 பிரமா, விட்டுணு, உருத்திரன், 20 பிராமணங்கள், 49,87 பிராமணரல்லாத துறவிகள், 33 புத்தர், 28,74 புராணங்களின் காலம், 80 புராணங்கள், 18, 79. பூசாரிக் குடும்பங்கள், 21 பூர்வமீமாம்சை, 53,61 பூர்வமீமாம்சை முழு முதற்கடவுளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, 54 பெத்தெல், 12 பெரியநம்பி, 82 பெரிய புராணம் 27 போசராச மார்த்தாண்டா, 59 போதாயன கிரியா சூத்திரம், 60 போற்றிப் பஃறொடை, 43 பௌத்திர பாகு, 73. ம மகாஉகம், 81 மகாசேனர், 84 மகாபாரதம், 76 மகாவீரர், 72 மணிப்பிரவாளம், 89 மயூர சந்திரகுப்தன், 73 மறு பிறப்பைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை, 23 மறைஞான சம்பந்தர், 42, 43 மனுக்கள், 5 மாதவர், 83 மாயா மக்கள், 7 மால் வழிபாடு, 16 மிருகோத்திரம், 27 மீமாம்சை, 61 முண்டகம் மழிக்கப்பட்ட தலை, 51 முதியபால் (பகல்), 19 மும்மூர்த்திகள், 20 முருகக் கடவுளுக்கு ஆறுமுகம், 19 முருகக் கடவுள், 19 முழிக வழிபாடு, 18 முருகவழிபாடு கதிரவன் வழிபாடு, 18 மூவடிகளால் உலகளந்தது, 86 ய யமினி, 61 யமினி சூத்திரம், 67 யமுனாசாரியர், 88,90 யவனர், 77 யாக்ஞவல்கிய மிகுதி, 58 யாதவப் பிரகாசர், 70,82 யோகம், 26,53,56 வ வசவர், 27 வருணாச்சிரம தருமம், 27 வல்லபர், 68 வற்சயாயனர், 61 வன்னியும், கிணறும் இலிங்கமும், 11 வாசஸ்பதி, 68 வாசுகுப்தர், 96 வாசுதேவ கிருட்டிணர், 96 வாசுதேவ கிருட்டிண விட்டுணு, 87 வாசுதேவன், 86 வாத நாராயணர், 68 வார்த்தமானர், 73 விசாகர், 84 விசிடாத்துவைதம், 71,83 விட்டுணு மதம், 85 விட்டுணு வழிபாடு, 17 விட்டணுவின் அவதாரம், 78 விட்டுணுவும் சிவனும், 78 வித்தியாரணியர், 84 விநாயா, 75 வியாக்கிர பாதர், 60 வியாசர், 76,81 வினா வெண்பா, 43 வீட்டும பருவம், 70 வீரசைவம், 12, 28 வெள்ளப் பெருக்கு, 4 வேதங்களில் பத்து உபநிடதங்கள், 51 வேதங்களைப் பெண்கள் கேட்டலும் ஓதலும் கூடாது, 29 வேதங்கள், 46 வேதமார்க்கமும் ஆகம மார்க்கமும், 30 வேதம் ஒன்றாகவிருந்தது, 64 வேதம் நித்தியம், 68 வேதாந்த சூத்திரம், 68 வேதாந்த தேசிகர், 90 வேதாந்தம், 69 வைசேடிகம், 53,59 வைசேஷ, 60 வைணவ ஆகமங்கள், 108, 89 வைணவ சமய வளர்ச்சி, 89 வைதீக சமயம், 45.  இந்து சமய வரலாறு முன்னுரை இந்தியாவில் வடமொழி, தென்மொழி என இரு மொழிகளும் வேதமார்க்கம், சைவமார்க்கம் என்னும் சமயங்களும் பழங்காலத்தி லிருந்தன. இவற்றினின்று தோன்றியனவே இன்று இந்திய நாட்டில் காணப்படும் மொழிகளும் சமயங்களும் ஆகும், வேதமார்க்கம் வைதீக மதம் என அறியப்படும். இது சில மாற்றங்களுக்கு உள்ளாகிப் பிற்காலத் தில் இந்து மதம் என்னும் பெயர் பெற்றது. இந்து மதம் வேதங்களைத் தொடக்கமாக உடையதாதலின் அதன் சமய நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. அந் நூல்களைப் படித்தறிவதற்கு உயர்ந்த சமக்கிருத அறிவு வேண்டும். வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை, தரும சூத்திரங்கள், மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள் முதலிய நூல்களை எல்லாம் மேல்நாட்டறிஞர் கற்று, அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதி அச்சிட்டிருக்கின்றனர்; அந்நூல்களைப் பற்றி ஆராய்ச்சிகளையும் வெளியிட்டிருக்கின்றனர். இந்தியப் பேராசிரியர் களும் அம்மொழி பெயர்ப்பு நூல்களையும் ஆராய்ச்சிகளையும் வழி காட்டிகளாகக் கொண்டு தமது ஆராய்ச்சிகளை எழுதி இருக்கின்றனர்; எழுதி வருகின்றனர். இந்து சமயம் என்னும் இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களையும் ஆராய்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது. ஐயப்பாட்டுக்குரிய பகுதிகள் தக்க மேற்கோள்களால் விளக்கப்பட்டிருக்கின்றன. சரித்திர ஆராய்ச்சித் துறையில் மேல்நாட்டறிஞர் செய்திருக்கும் பணியை நாம் பாராட்டாதிருக்க முடியாது.1 சமய ஆராய்ச்சியையும் அவர்கள் ஒரு கலையாகக் கொண்டு காய்தல் உவத்தலின்றி எழுதியிருக் கின்றனர். மேல்நாட்டாசிரியர்கள் இந்திய சமயங்களைப் பற்றி எழுதியவை ஏற்கத்தக்கனவல்ல என ஒருசிலர் கூறி வருகின்றனர். இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.” நூலின் இறுதியில் குறிப்புகள் (Notes) என்னும் ஆங்கிலப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இக் குறிப்பிலுள்ளவை பிரபல வரலாற்றாசி ரியர்களின் கூற்றுக்கள். இந்து சமயம், சைவ சமயங்களைப் பற்றிய பல மயக்கங்கள் இருந்து வருகின்றன. அவற்றுக்கெல்லாம் இம் மேற் கோள்கள் சிறந்த விளக்கம் அளிக்கின்றன. ந.சி. கந்தையா இந்து சமய வரலாறு தோற்றுவாய் இந்து சமயமென்பது வேதத்தை ஆதாரமாகக் கொண்ட சமயம். அது வைதீகம் எனவும் பெயர் பெறும். மிகமிக முற்காலத்தில் இந்திய நாடு முழுமையிலும் தமிழ் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தார்கள். கி.மு.2000 வரையில் ஒரு புதிய சாதியார் இந்தியாவை அடைந்தார்கள். இவர்களைப் பற்றி அறிந்து கொள்வது இந்து சமயத்தைப்பற்றி விளக்கிக் கொள்வதற்கு இன்றியமையாததாக இருக்கின்றது. கஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையில் வெண்ணிற முடைய ஒரு சாதியார் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஆடு மாடுகளை ஒம்பி அவை கொடுக்கும் பயன்களைக் கொண்டு வாழ்பவர் களாக இருந்தார்கள். கி.மு.2500 வரையில் இயற்கை மாறுபாட்டால் பெருவறட்சி உண்டாயிற்று; புல்வெளிகள் கரிந்து போயின. ஆகவே அவர்கள் பல கூட்டங்களாகப் பிரிந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரசீகத்துக்கும் சென்றார்கள். பாரசீகத்துக்குச் சென்றவர்கள் அங்கு சில நூற்றாண்டுகள் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களிற் சிலர் கூட்டங்களாகப் பிரிந்து கைபர்க் கணவாய் வழியாக இந்தியாவின் வடமேற்குப் பகுதியை அடைந்தார்கள். இவர்கள் ஆரியர் எனப்பட்டார்கள். இவர்கள் வரும்போது இந்திய நாடு மக்கள் நடமாடாத காடாக இருக்கவில்லை. அங்கு உயர்ந்த நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் நாகரிக உயர்வைப்பற்றி அரப்பா மொகஞ்சதரோவிற் கிடைத்த தொல் பொருள்களும் ஆரியர்களின் பழைய பாடல்களாகிய வேதங்களும் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ நாகரிக காலம் கி.மு.3500 முதல் கி.மு.2000 வரை. இருக்கு வேதத்தின் மொழிக்கும் பழைய பாரசீக செண்டு மொழிக்குமுள்ள ஒற்றுமைகளைக் கொண்டு (இந்திய) ஆரியர் இந்தியா விற் புகுமுன் சில நூற்றாண்டுகள் பாரசீக ஆரியர்களுடன் ஒன்றாக வாழ்ந்தார்களென்று உய்த்தறியப்படுகின்றது. நான்கு வருணங்கள், உப நயனம், முப்பத்துமூன்று தேவர்கள் யாகங்கள் அவைகளில் உபயோகிக் கப்படும் யக்ஞம், மந்திரம், சோமம், ஹோதா முதலியன இந்திய ஆரியருக் கும் பாரசீகருக்கும் பொதுவாகக் காணப்படுகின்றன. *இந்தியாவில் பேசப் படும் ஆரிய மொழிக்கும் பாரசீகத் திலும் ஐரோப்பாவிலும் பேசப்படும் ஆரிய மொழிக்கும் தொடர்பிருப்பதால் இம்மொழிகள் எல்லாவற் றுக்கும் இந்து - ஐரோப்பிய வமிசம் எனக் கூறுவது வழக்கம். ஆரியரின் சமயம், பண்பாடு, மொழி முதலியன அவர்கள் வரும் போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் சமயம், பண்பாடு, மொழிகளிலும் வேறுபட்டிருந்தன. தமிழர் சிவ வழிபாட்டினர். ஆரியர் இயற்கைப் பொருள்களையும் வியப்பளிக்கும் இயற்கை நிகழ்ச்சிகளை யும் தேவர்களாகக் கொண்டு வழிபடுவோராக இருந்தனர்; அவர்கள் சிவனை வழிபடவில்லை. தமிழர் கோயில்கள் அமைத்துத் திருவுருவங்கள் வைத்துப் பூசைகளும் விழாக்களும் நடத்திக் கடவுளை வழிபட்டனர்.# ஆரியர் யாகசாலைகளில் தீ வளர்த்து மந்திரங்களைச் சொல்லித் தேவர் களை அழைத்துப் பலியாக உணவைத் தீயிலிட்டு அவர்களை மகிழ்வித் தனர். ஆரியரின் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் உள் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியருக்கு வேதம் பிராமண மாக இருந்தது. தமிழருக்கு ஆகமம் பிராமணமாக இருந்தது. வெளியினின்றும் வந்த மக்கள் சிறு தொகையினரும் உள்நாட்டு மக்கள் அவர்களை விழுங்கிவிடக் கூடிய பெருந்தொகையினருமாக இருந்தார்கள். இருவேறு மக்களும் உறவாடிக் கலந்தார்கள். வடக்கே மொழி ஆரியமாகிக் கொண்டு வந்தது; சமயமும் பண்பாடும் தமிழ் மய மாகிக் கொண்டு வந்தன. பழைய மக்களின் பழங்கதைகள், தெய்வங்கள், கிரியை முறைகள் என்பன ஆரியர் சமயத்திற் புகுந்தன. தமிழர் அறிந்திருந்த தத்துவ ஞானங்களையும் அவர்கள் சிறிது சிறிதாக அறிந்தார்கள். அவர்களின் சமயம் யாகம் புரிவதிலிருந்து தத்துவ ஞானக்கொள்கை உடையதாக மாறிக்கொண்டும் சைவ சித்தாந்த ஞானத்தை அணுகிக் கொண்டும் வந்தது. வேதம், பிராமணம், ஆரணியகம், உபநிடதம் தரிச னங்கள், பகவத்கீதை, வேதாந்த சூத்திரத்துக்கு சங்கரர், இராமானுசர், மாதவர், நீலகண்ட சிவாசாரியர் முதலானோர் செய்த உரைகள் என்பவை வேதத்தில் தொடங்கி மேல்நோக்கிச் செல்லும் ஏணிப் படிகள் போல அமைந்திருக்கின்றன. ஆரியர் வருகைக்கு முந்திய சமயம் அரப்பா மொகஞ்சதரோ என்னுமிடங்களில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் ஒரு வகை மாக்கல்லில் வெட்டப் பட்ட முத்திரைகள் பல கிடைத்தன. ஒரு முத்திரையில் மூன்று முகங்களுடைய ஒரு வடிவம் அட்டணைக்கால் இட்டுக்கொண்டும், மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டும், ஆல் அல்லது அரசு போன்ற மரத்தின் கீழ் இருக் கின்றது. அதனைச் சூழ்ந்து பல விலங்குகள் காணப்படுகின்றன. பாம்பும், புலியும், மானும் அதனோடு தொடர்பு பெற்றிருக்கின்றன. அவ்வுருவம் பசுபதிக்கடவுளைக் குறிப்பதாக சர் யோன்மார்சல் கூறியுள்ளார். பின் வந்த கீழ்நாட்டு மேல்நாட்டு ஆராய்ச்சியாளரும் இக் கூற்றினையே வழிமொழிந்துள்ளார்கள். கோயில் என்று கருதப்படும் ஒரு கட்டடமும் மொகஞ்சதரோவில் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பக்கத்தே செங்கல்லாற் கட்டப்பட்ட கேணியும் பக்கத்தே பல அறைகள் கொண்ட கட்டடமும் காணப் பட்டன. கட்டடம் கோயில் வழிபாட்டுக்குச் செல்வோர் நீராடியபின் தங்கியிருக்கும் பொருட்டு எடுக்கப்பட்டதெனக் கருதப்படுகின்றது. கோயில் இக்காலத் தென்னிந்தியக் கோயிலை அமைப்பில் ஒத்திருந்த தென்று தெரிகிறது. கோயிலிருந்தால் அதனுள் மூர்த்தி இருத்தல் வேண்டும். கடவுளுருவங்களைச் செய்யும் விதிகளும், கோயிலமைக்கும் விதிகளும், பூசைகள் விழாக்கள் ஆற்றும் முறைகளும் அவற்றுக்கு விளக் கங்களும் பிறவும் அக் காலத்தில் அறியப்பட்டிருந்தன என நாம் உய்த் தறிதல் கூடும். கோயில்களை மேற்பார்த்துப் பூசை செய்யும் பார்ப்பனரும் அக் காலத்திலிருந்தனர். வேதகாலப் பிராமண வகுப்பினர் ஆரியருக்கு முற்பட்ட பார்ப்பனக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என ஆராய்ச்சி வல்ல2 பார்கிதர் கூறியிருக்கின்றார். சிவபெருமான் தென்முகக் கடவுளாகக் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வருக்கு நான்மறைகளை அருளிச் செய்தாரென்னும் ஐதீகம் சைவ சமயத்தவர்களிடையே பழங்காலம் முதல் இருந்து வருகிறது. தேவாரம், திருவாசகம்* திருமந்திரம்* முதலிய நூல்கள் இதனை ஆங்காங்கு குறிப்பிடுகின்றன. இவ் வைதீகத்துக்கும் மொகஞ்சதரோ முத்திரையில் காணப்படும் வடிவத்துக்கும் தொடர்பு காணப்படுகின்றது. நான்மறைகளும் ஆகமங் களும் ஆரிய மக்கள் இந்தியாவை வந்தடைவதன் முன் இருந்தனவென்று நாம் அனுமானிக்கலாம். தமிழ் வழங்கிய மக்கள் அரப்பா, மொகஞ்சதரோ முதலிய இடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மொகஞ் சதரோ கால வழக்கங்களில் சிலவும், அணிகலன்களிற் சிலவும் தென்னிந் தியாவில் இன்றும் வழங்கி வருகின்றன. பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் பேசும் பிராகூய் மொழிக் கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது. மொகஞ்சதரோ நாகரிக காலத்தின் பின் வந்த வேத பாடங்களில் பல தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன.3 இவை ஆரியரின் வருகைக்கு முன் வடக்கில் தமிழ் வழக்கிருந்த தென்பதைக் காட்டுகின்றன. வேதங்கள் வேதங்கள் வைதீகரின் புனித நூல்கள். இவை பிராமண சமூகத் தினரால் பிறரறியாவண்ணம் மறைத்து வைத்து நீண்டகாலம் பயிலப் பட்டு வந்தன. அக்பர் அரசன் வேதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அவற்றை அறிந்து கொள்ள முயன்றானென்றும் அவனுக்கு அது கை கூடவில்லையென்றும் சரித்திரகாரர் கூறியிருக்கின்றனர். பொது மக்கள் வேதங்களைப் பெயரளவில் அறிந்திருந்தார்கள். ஐரோப்பிய மக்களின் குன்றாத உழைப்பினால், வேதங்களின் மூலங்கள், உரைகள், மொழி பெயர்ப்புகள், விளக்கங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பவை வெளி வந்தன.* கோல்புரூக் என்னும் அறிஞர் வேத ஆராய்ச்சிகள் அடங்கிய கட்டுரை ஒன்றை 1805இல் வெளியிட்டார். இதன் சர்மன் மொழி பெயர்ப்பு 1847இல் அச்சிடப்பட்டது. வேதங்களின் ஒரு பகுதி 1838இல் இலண்டனில் அச்சிடப்பட்டது. 1849-க்கும் 1875-க்குமிடையில் மாக்ஸ் முல்லர் இருக்கு வேத பாடல்களைச் சாயணர் உரையோடு அச்சிட்டார். 1851-க்கும் 1863-க்குமிடையில் இருக்குவேத மூலம் முழுமையும் அச்சிடப் பட்டது. வேதமொழி பழைய சர்மன் மொழிக்கு இனமுடையதாகக் காணப்பட்டமையின் மொழி ஆராய்ச்சியின் பொருட்டு மேல்நாட்டவர் சமக்கிருதத்தைப் பயின்றனர். இலத்தின், சர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய வேதமொழி பெயர்ப்புகள் அச்சிடப்பட்டன. வேத ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சிகளில் உழைத்து வரும் பிராமணரும், பிராமணர் அல்லா தாரும் மேல் நாட்டவர்கள் அச்சிட்டுள்ள மொழிபெயர்ப்புகளையும் அவர்கள் எழுதியிருக்கும் விளக்கங்களையும் எடுத்து ஆண்டு வருகின்ற னர். மேல்நாட்டவர்களின் மொழிபெயர்ப்புகள், விளக்கங்கள், சாயணர் உரை முதலியவற்றைக் கொண்டு சிவத்தியானந்த மகரிஷி என்பார் வேதங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இன்று வேதங்களைப் பற்றி எல்லோரும் அறியும் வாய்ப்பு இருக்கின்றது. இந்திய நாட்டை அடைந்த ஆரியர் தமிழ் மக்களின் மத்தியில் வாழ்ந்தார்கள். தமிழர் பண்பாடுகள் ஆரியர் பண்பாடுகளுடன் கலந்தன.4 ஆரியர் பல தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள்.# போர்களில் வெற்றி அளிக்கும் படியும் நோய், பஞ்சம், முதலியவற்றினின்று தம்மைக் காக்கும் படியும், மழை பெய்ய வேண்டியும், இவ்வுலக வாழ்வில் தமக்கு வாய்ப்பு அளிப்பவற்றை உதவும்படியும் வேண்டிப் பலர் கடவுளர்மீது பாடல்களைப் பாடினார்கள்.5 பாடல்களைச் செய்தவர்கள் இருடிகள் எனப்பட்டார்கள். அவர்கள் எழுதும் முறையை அறிந்திருக்கவில்லை. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடம் செய்யும் முறையில் வேத பாடல்கள் தலைமுறைகளாகத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தன. வேற்று மொழியும், வேறு பண்பாடும் வேறு சமயமுமுடைய மக்க ளிடையே வாழ்ந்து கொண்டிருந்த ஆரிய மக்கள் தமது சமயப் பாடல்கள் சிதைந்து மறைந்து போகும் என அஞ்சினார்கள்; மக்கள் நினைவில் மிதந்து கொண்டிருந்த பாடல்களை எல்லாம் திரட்டினார்கள்.6 அத் திரட்டு இருக்கு எனப்பட்டது. இருக்கு என்பதற்குப் பாடல் என்பது பொருள்.# தொடக்கத்தில் இருக்கு என்னும் ஒரு வேதம் இருந்தது. இருக்கு வேதத்தில் 1028 சூக்தங்களுண்டு. சூக்தமென்பது பதிகம் போன்று பல பாடல்களடங்கிய தொகுப்பு. சூக்தங்களில் ஒன்று முதல் நூற்றுக்கு மேல் கூடியும் குறைந்தும் பாடல்கள் உள்ளன. இவைகளுள் பதினொரு சூக்தங்கள் வாலகில்லியராற் பாடப்பட்டன வென்றும் அவை பிற்காலத் தனவென்றும் கருதப்படுகின்றன. அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத்திலுள்ளவை 1017 சூக்தங்களே. 1017 சூக்தங்களிலும் 10,600 பாடல்களுள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால் இருக்கு வேத பாடல்கள் முழுமையும் 600 பக்கங்களிலடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமரின் இல்லியாட் என்னும் நூலளவு ஆகும். இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல மல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிவும் உண்டு. முதல் மண்டலத்தில் 191 சூக்தங்களுண்டு. இவை 15 இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டு வரையிலுள்ள சூக்தங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தாராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள் இருடிகள் பலராற் பாடப்பட்டவை. அப்பாடல்கள் முழுமை யும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத் துக்கும் பத்தாம் மண்டலத்துக்கும் இடையில் வாலகில்லியரின் பாடல் களாகிய பதினொரு சூக்தங்கள் காணப்படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளாற் செய்யப்பட்டவை. இப்பாடல்களின் நடை பொருள்களைக் கொண்டு இவை பிற்காலத்தனவாக வேத ஆராய்ச்சி யாளர் கூறியிருக்கின்றனர்.* 8ஆம் 9ஆம் மண்டலங்களிலுள்ள பாடல்கள் பெரும்பாலும் சாம வேதத்திற் காணப்படுகின்றன. தொடக்கத்தில் புரோகிதர் என்னும் தனி வகுப்பினர் இருக்க வில்லை. குடும்பத் தலைவனே புரோகிதனாக இருந்து தீ வளர்த்துத் தீயில் உணவைத் தேவருக்குப் பலியாக இட்டான். இவ்வாறு எளிதாக இருந்த யாகக்கிரியை நாளடைவில் வளர்ந்து கொண்டு சென்று சிக்கலடைந்தது. யாகங்களை நடத்துவதற்குப் புரோகிதரின் உதவி வேண்டியிருந்தது. யாகங்களில் வெவ்வேறு கிரியைகள் புரியும் புரோகிதர் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டனர். அத்வார்யுக்கள் என்னும் புரோகிதர் யாகக்கிரியைகளில் தலைமைப் புரோகிதராக இருந்து கிரியைகளைச் செய்தார்கள். இவர்கள் யாகங்களில் படிப்பதற்காக வசனமும் பாடல்களு மடங்கிய எசுர் வேதமென்னும் தொகுப்புச் செய்யப்பட்டது. எசுர் வேதத்தில் காணப்படும் பாடல்களில் பாதிவரை இருக்கு வேதத்தி லுள்ளன. உத்காதா என்னும் புரோகிதன் இசையோடு சோம யாகங்களில் பாடுவதற்குத் தொகுக்கப்பட்டது சாமவேதம். இவ் வேதத்தில் 1550 சூக்தங்கள் வரையிலுள்ளன. இவைகளுள் பெரும்பாலன இருக்கு வேதத் தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. ஹோதாக்கள் என்னும் புரோகிதர் பாடித் தேவர்களை அழைப் பதற்காகவுள்ளது இருக்கு வேதம். அதர்வண வேதம் நான்காவதாகவுள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுள் சேர்க்க லாமா விடலாமா என்னும் சந்தேகம் நீண்ட காலம் இருந்து வந்தது.# ஆகவே சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் சில இடங்களில் நான்கு வேதங்களென்றும் நூல்கள் கூறுதலைக் காணலாம். மனுமிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது. “இதிலுள்ள மந்திரங்களில் பல, ஆரியர் இந்தியாவில் புகுமுன் பழக்கத்திலிருந்து சிறிது மாற்றப்பட்டு அதர்வணத்துள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக நினைக்க இடமுண்டு”. வேதங்களுக்கு அனுக்கிரமணி என்னும் பதிகம் (அட்டவணை) எழுதப்பட்டுள்ளது. அது வேத பாடல்களைச் செய்த இருடிகளின் பெயர்கள், பாடல்களின் யாப்புவகை, பாடல்கள் துதிக்கும் தெய்வங் களின் பெயர்கள் முதலியவற்றைக் கூறுகின்றது.7 விசயநகர அரசர் காலத்து அரிஅரனின் மந்திரியாக விளங்கிய சாயணர் (14ஆம் நூ.) சமக்கிருத பண்டிதர்களைக் கூட்டித் தாம் அவர்களுக்குத் தலைவராக விருந்து வேதங்களுக்குச் சிறந்த உரை எழுதினார். வேதங்கள் துதிக்கும் தேவர்கள் வேதங்களில் கூறப்படும் தேவர் தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தன், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அசுவினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு அல்லது வாதா, பிருதிவி, அக்கினி, பிரகஸ்பதி சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சதுட்ரி (Sutlej) ஆறு, சரசுவதி ஆறு முதலியோராவர். தேவர்களும் இறப்பவர்களாக இருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தேவர், வடிவில் மனிதனைப் போன்றவர். அக்கினி தேவனின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன் அவ்வகையினன். தேவர் குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கின்றனர். அவர்களின் உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு உணவுகள் யாகங்கள் வாயிலாகக் கிடைக் கின்றன. அக்கினி அவைகளைக் கொண்டு சென்று அவர்களிடம் சேர்க்கி றான். சில சமயங்களில் தேவர்கள் தேரில் சென்று பலிகளை ஏற்பர். அவர்களின் உறைவிடம் வானத்திலிருக்கும் சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்வித்தால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குவர். உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் அவர்களுக்கு ஆதிக்கம் உண்டு. வேத அங்கங்கள் வேதாங்கங்கள் வேதங்களோடு தொடர்புடையவை. அவை வேதங்க ளல்ல. அவை சிட்சை (சிக்கை), கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் என ஆறு. வேதாங்கங்களுள் (1) சிட்சை முதலிடம் பெறுகிறது. சிட்சை என்பதற்குக் கற்பித்தல் என்னும் பொருள் தொடக்கத்திலிருந்தது. பின்பு அதற்கு வேத பாடங்களைத் திருத்தமாக எடுத்தும் படுத்தும் உச்சரித்தல் என்னும் பொருள் வழங்குவதாயிற்று. ஆகவே சிட்சை சங்கிதைகளோடும் யாகக் கிரியைகளோடும் தொடர்புடையது. யாகங் களில் விதி பிறழாத கிரியைகள் எவ்வாறு முக்கியமோ அவ்வாறே மந்திரங்களின் திருத்தமான உச்சரிப்பும் முக்கியமுடையது. தைத்திரீய உபநிடதம் முதன் முதல் வேதhந்தங்களைப் பற்றிக் கூறுகின்றது. சிட்சையைப் பற்றிக் கூறும் பழைய நூல்கள் பிரதிசாக்கியங்கள் எனப்பட்டன. சௌனகர், காத்தியாயனர், பாரத்துவாசர், வியாசர், வசிட்டர், யாக்ஞ வல்கியர் முதலியவர் பிரதிசாக்கிய நூல்கள் செய்தனர். அனுக்கிரமணி என்னும் இருக்குவேத பாடல்களின் அட்டவணை யும் வேதாங்கங்களோடு தொடர்புடையது. இதனைச் செய்தவர் சௌனகர். இது வேத பாடல்களையும் அவற்றைச் செய்த முனிவர் பெயர்களையும், பாடல்கள் துதிக்கும் தெய்வங்களின் பெயர்களையும் கூறுகின்றன. காத்தியாயனர் (கி.மு.400). சர்வ அனுக்கிரமணி என்னும் நூல் செய்துள்ளார். அது இருக்கு வேத பாடல்கள் ஒவ்வொன்றின் முதல் சொற்களையும், பாடங்களின் எண்களையும், பாடல்கள் செய்த முனிவர்களின் குடும்பத்தையும், துதிக்கப்படும் தேவர்களின் பெயர்களை யும், பாடலின் சந்தத்தையும் கூறுகின்றது. சௌனகர் பிரிகத் தேவதா என்னும் நூல் செய்தார். இஃது இருக்குவேத பாடல்கள் துதிக்கும் தெய்வங்களின் பெயர்களைக் கூறுவதோடு தெய்வங்களோடு சம்பந்தப் பட்ட பழங்கதைகளையும் கூறுகின்றது. இருக்கு விதான என்னும் நூலும் சௌனகரால் செய்யப்பட்டது. இஃது இருக்குவேத பாடல்களை ஓதுவதால் பெறக்கிடக்கும் மந்திர சித்திகளைப் பற்றிக் கூறுகின்றது. (2) கற்பசூத்திரங்கள் வேதாங்கங்களுள் பழமையுடையவை. அவை பிராமணங்களோடும் ஆரணியகங்களோடும் தொடர்புடையன. அவை பொருள் பற்றி சிரௌத சூத்திரம் கிரிக சூத்திரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிரௌத சூத்திரங்கள் புரோகிதர் பலரின் உதவியால் செய்யப்படும் கிரியைகளைப் பற்றிக் கூறுகின்றன. சுருதியை (வேதத்தை) ஆதாரமாகக் கொண்டிருப்பதால் இது சிரௌதம் எனப் பட்டது. கிரிக சூத்திரங்கள் ஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டிருத்தலின் ஸ்மார்த்த எனப்பட்டன. மூன்று வகைத் தீ வளர்த்தல், அமாவாசி பூரணைக் காலங்களில் பலி செலுத்துதல், விலங்குகளைப் பலியிடுதல், சோம யாகஞ் செய்தல் முதலிய கிரியைகளைப் பற்றிச் சிரௌதச் சூத்திரங்கள் கூறுகின்றன. பெண்கள் கருப்பமடைந்தது முதல் கருவுயிர்த்தல் வரையிலுள்ள கிரியைகள், பிள்ளை பிறந்த பின் அன்ன மூட்டுதல் (அன்னப் பிராசனம்) சூடாகரணம் (முடியிறக்குதல்), மரணக் கிரியைகள், உபநயனம் முதலிய கிரியைகளைப்பற்றிக் கிரிக சூத்திரங்கள் கூறுகின்றன. வீடு கட்டுதல், பயிரிடுதல், குளம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், தீய சகுனங்களுக்குப் பிராயச்சித்தமாகச் செபிக்கும் மந்திரங்கள் முதலியவற்றையும் அவை கூறுகின்றன. கிரிக சூத்திரங்களோடு தொடர்புடையவை தரும சூத் திரங்கள். இவை வருணம், வருணாச் சிரம தருமங்கள், சாதிகளுக்கேற்ற படி குற்றங்களுக்குக் கூட்டியும் குறைத்தும் தண்டனை விதித்தல் முதலிய வற்றைக் கூறும். அபஸ்தம்பர், ஆஸ்வலாயனர், போதாயனர், காத்தியா யனர், சாங்காயனர், இலாத்வாயனர், திரயயானர் முதலிய பலர் கற்ப நூல் செய்தனர். இவை செய்யப்பட்ட காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குமிடையில். (3) வியாகரணம் எழுத்து சொல் பொருளியல்புகளுணர்த்துவது. வியா கரணங்களுள் (இலக்கணம்) கிடைத்திருப்பது பாணினி முனிவர் செய்த அட்டாத்தியாயி ஒன்றுமே. இது வேதமொழியின் இலக் கணத்தைக் கூறாது பொது வழக்கிலுள்ள மொழியைப் பற்றிக் கூறியிருக் கின்றது. பாணினி முனிவர் சிவபெருமானிடம் இலக்கணத்தைக் கற்றா ரென்னும் ஐதீகம் வழங்குகிறது. (4) நிருத்தம் : சங்கிதைகள் செய்யப்பட்ட பின் சில காலத்தில் மொழி மாறுபட்டது. சங்கிதைகளின் பொருள் விளங்க முடியாமலிருந்தது. அவைகளை விளங்கிக் கொள்வதற்குப் பொருள் விளங்குதற்கரிய சொற்களின் தொகுப்பும், அவற்றுக்கு விளக்கங்களும் வேண்டப்பட்டன. இவ்வகைத் தொகுப்பு, நிகண்டு எனப்பட்டது. யாஸ்கர் செய்துள்ள நிருத்தம் அவருக்கு முன் விளங்கியவர்கள் செய்த சொல் தொகுப்புகளுக்கு உரையாக அமைந்துள்ளது. யாஸ்கருக்கு முன் இருந்த நிருத்த நூல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. (5) சந்தம் : இது சந்தோவிசிதி எனவும் அறியப்படும். இது செய்யுட்களை அல்லது யாப்பைப்பற்றிக் கூறுகின்றது. நிதான சூத்திரம் என்னும் சந்த நூல் பதஞ்சலி முனிவரால் (கி.மு.150) செய்யப்பட்டதெனக் கொள்ளப்படுகிறது. பிங்கலரால் செய்யப்பட்ட சந்த நூல் இருக்கு வேதத்துக்கும் எசுர் வேதத்துக்கும் வேதாங்கமாகவுள்ளது. (6) சோதிடம் வேதத்தில் சொல்லப்படும் கருமங்களை (கிரியை களைச்) செய்வதற்குரிய காலங்களை உணர்த்துவது. ஆராய்ச்சி (1) வேதங்கள் எவ்விடத்தும் சிவ வழிபாட்டைப் பற்றிக் கூறவில்லை; சிவனென்னும் சொல்லும் அதில் காணப்படவில்லை. சிவ என்னும் சொல் இரண்டொரு இடங்களில் வந்துள்ளது. அது சிவனையோ தெய்வங்களையோ குறிக்கவில்லை. அது மங்கலம் என்னும் பொருளில் வந்துள்ளது.9 வேத பாடல்களில் சொல்லப்படும் உருத்திரன் சிவன் கடவுளல்லர். அவர் புயல் கடவுள். பிற்காலத்தில் உருத்திரன் சிவனுக் குரிய தன்மைகளை ஏற்றுக் கொண்டு உருத்திர சிவனாக மாறினார்.* விட்டுணு சூரியனைக் குறிப்பதாக இருந்தது. கண்ணன் வழிபாடும் திருமாலின் அவதாரங்களும் வேதங்களில் காணப்படவில்லை. (2) வேதங்கள் மறு பிறப்பைப்பற்றி அறியா.10 யாகங்கள் புரிவதே வேத மதத்தின் முடிவு. யாகம் புரிந்தவர்கள் சுவர்க்கத்தில் என்றும் இன்பமாக வாழ்வர். (3) பிற்காலத்துத் தோன்றிய உபநிடதங்களில் காணப்படுவன போன்ற உயிர், உலகம், கடவுளென்னும் முப்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியும் வேதங்கள் அறியாதது. பிராமணங்கள் வேதங்களிலுள்ள பாடல்கள் மந்திரங்கள் எனப்பட்டன. மந்திரங் கள் செய்யப்பட்ட பின் கிரியைகள் வளர்ந்தன. ஆகவே மந்திரங்கள் கிரியைகளுக்கு ஏற்ற முறையில் தொகுக்கப்பட்டன. அத் தொகுப்புகள் சங்கிதை எனப்பட்டன. பிராமணங்கள் என்பவை கிரியை முறைகளை விளக்கி எழுதப்பட்ட வசன பாகங்கள். ஒவ்வொரு வேதத்துக்கும் தனித் தனி பிராமணங்களுண்டு. இருக்கு வேதத்தைச் சேர்ந்தவை ஐதரேயம், கௌசீதகி; சாம வேதத்தைச் சேர்ந்தவை சைமினியமும், தாண்டிய மகா பிராமணமும்; எசுர் வேதத்தைச் சேர்ந்தது சதபதப் பிராமணம்; அதர்வ வேதத்தைச் சேர்ந்தது கோபாத பிராமணம். பிராமணங்கள் வேதங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே வேதங்களில் மந்திரம் பிராமணம் என்னும் இரு பகுதிகளுள்ளன. யாகங்களால் இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்னும் நம்பிக்கை உறுதி பெற்றிருந்தது. நூறு யாகங்களைச் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரசனாகிய இந்திரனையும்; பதவியிலிருந்து வீழ்த்திச் சுவர்க்கத்துக் கதிபதியாவான். யாகங்கள் நடைபெறாவிட்டால் சூரியனும் உதிக்கமாட்டான் என்பவை போன்ற மூட நம்பிக்கைகளும் இருந்தன. யாகங்கள் அதிகப்பட்டன. அரசரும் பெருஞ்செல்வரும் மாத்திரம் யாகங்களைச் செய்யக் கூடியவர்களாக இருந்தனர். யாகங்கள் எட்டுத் திங்கள், பத்துத் திங்கள், ஒரு ஆண்டு என்னும் வகையில் நடைபெற்றன. யாகங்கள் புரிவதற்குப் பெருஞ் செல்வம் வேண்டியிருந்தது. யாகங்கள் அதிகப்படுதலும் புரோகிதர் பலர் வேண்டப்பட்டனர். அவர்களின் மதிப்பும் அதிகப்பட்டது. பலர் பிராமணங்களைப் பயின்று புரோகிதரா யினர். பிராமணங்களைப் பயின்றவர்கள் பிராமணர் எனப்பட்டர்கள். யாகங்களைப் புரோகிதராக இருந்து நடத்தும் பிராமணரே வேதங்களை யும் பிராமணங்களையும் பயின்றார்கள். புரோகிதத் தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியது. அவர்கள் ஒரு வகுப்பினர் அல்லது சாதியினராக மாறினர். இந்தியாவில் வாழ்ந்த பழைய மக்களின் கிரியை முறைகளும் பழக்க வழக்கங்களும் பிராமணங்களில் நுழைந்தன.11 வேதகாலத்தில் புயல் கடவுளாகவும் சிறு தெய்வமாகவும் கொள்ளப்பட்ட உருத்திரன் சிவன் கடவுளின் வடிவையும் குணங்களையும் பெற்று உருத்திர சிவனாக மாறினார்.12 யாகம் *யாகம் என்பது தேவர் பொருட்டு அவர்களின் உணவைத் தீயிலிடுவது. நெருப்பு அக்கினி என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. அது தன்னிடத்தில் இடப்பட்ட உணவுகளை ஏற்றுத் தேவர்களிடம் சேர்க்கிறதென்னும் நம்பிக்கை உறுதிப்பட்டிருந்தது. அக்கினியைத் துதித்துப் பாடப்பட்ட பல பாடல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. யாகத்தில் மந்திரங்களை ஓதித் தேவர்களை அழைப்பவர் ஹோதா என் றும், மந்திரங்களைப் பாடிக்கொண்டு சோமரசத்தைப் பலி செலுத்து கின்றவர் உத்காதா என்றும், யாகக் கிரியைகளைச் செய்பவர் அத்வார்யு எனவும் பெயர் பெற்றிருந்தனர். தலைமைப் புரோகிதர் பிரமா எனப்பட் டார். அவர் துட்ட தேவதைகளால் யாகத்துக்கு இடையூறு நேராமல் தென் திசையிலிருந்து காவல் புரிந்தார். #வீட்டில் செய்யப்படும் யாகத்தில், குடும்பத் தலைவன் காலையில் தீ வளர்த்து ஒரு பகலில் மூன்று முறை சோமரசத்தைப் பலியாகத் தீயில் சொரிந்தான். காலையில் இடும் பலி அக்கினிக்கும், மத்தியானத்தி லிடுவது இந்திரனுக்கும், மாலையிலிடுவது மருத்துக்களுக்கும் அசுவினி தேவருக்குமாக இருந்தன. பலி இட்டபின் அவன் இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து அக்கினியைக் குனிந்து வணங்கினான். சோமரசத்தைப் பலி செலுத்தும் யாகத்தில் பெரும்பாலும் விலங்கு பலி இடப்பட்டது. கால்களைக் கட்டியபின் விலங்கு கொல்லப்பட்டது. அதன் வபை (நாபியைச் சூழ்ந்துள்ள நிணம்) தேவருக்குப் பலியாகத் தீயிலிடப்பட்டது. அப்பொழுது தேவர்களின் இரகசியமான (மறை) பெயர்கள் சொல்லி அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு அழையாவிடில் பலியிடப் பட்ட உணவு தேவர்களைச் சேராது. சில சமயங்களில் வீட்டுத்தலை வனும் மனைவியும் பிள்ளைகளும் சோற்றையும் நெய்தெளித்த இறைச்சி யையும், சோம ரசத்தையும் பிராமணருக்குக் கொடுத்து தேவர்களின் ஆசியைப் பெற்றார்கள்; பூதபைசாசங்களையும் ஓட்டினார்கள். பூரணைக் காலத்தும் அமாவாசிக் காலத்தும் பலியிடப்பட்டது. வீட்டில் செய்யப்படும் யாகக் கிரியைகளை விடப் பொது இடங் களில் செய்யப்படும் யாகக் கிரியைகள் மிகப் பலவாக இருந்தன. யாகங்கள் மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் நடைபெற்றன. பலவகை யாகங்கள் நடத்தப்பட்டன. அவற்றுள் முதலிடம் பெற்றது சோமயாகம். யாகம் நடத்துவதற்குப் பெரிய கொட்டில் இடப்பட்டது. அது யாகசாலை எனப்பட்டது. சோமக் கொடி சோம அரசன் எனப்பட்டது. சோமக்கொடி யாகசாலைக்குக் கொண்டுவரப்பட்டது. அது பல பாடல்களால் துதிக்கப்பட்டது. ஏழு அத்வார்யுக்கள் அதன் மீது நீர் தெளித்தார்கள். அது மாட்டுத் தோலின் மீது வைத்து இரண்டு கற்களால் நசுக்கப்பட்டது அல்லது உரலிலிட்டு உலக்கையால் துவைக்கப்பட்டது. நசுக்கப்பட்ட அல்லது துவைக்கப்பட்ட சோமக்கொடி சல்லடையில் வைத்துப் பிழியப்பட்டது. மங்கல் நிறமுடைய அதன்சாறு கம்பளித் துணியால் வடிக்கப்பட்டது. அதர்வணப் புரோகிதன் அதன் மீது பாலை வார்த்துப் பத்து விரல்களாலும் அதைக் கலக்கினான். சோமச்சாறு மரச்சாடிகளில் ஊற்றிப் பலி பீடத்தில் வைக்கப்பட்டது.* தேவர்களுக்கு நைவேத்தியம் செய்த பின் அது கிண்ணங்களில் ஊற்றிப் புரோகிதருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாளில் மூன்று முறை சோமரசம் பலியிடப்பட்டது. சில சமயங்களில் விலங்கு பலியிடப்பட்டது. யூபம் என்னும் யாகத்தூண் தருப்பைப் புல்லின் மீது வைக்கப் பட்டது. அது வளையங்களாலும் பூமாலைகளாலும் பல நிறப் பூச்சுக்க ளாலும் அலங்கரிக்கப்பட்டது. அது யாக குண்டத்துக்குக் கிழக்கில் நடப்பட்டது. விலங்கின் தலை, இடுப்பு கால்கள் என்பவை யூபத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டப்பட்டன. அதன் மீது நெய் பூசிய பின் அது ஆடையால் அலங்கரிக்கப்பட்டது. ஒன்பது வாயில்களையும் அடைத் துப் பிடித்து அது கொல்லப்பட்டது. விலங்கின் உடல் பட்டடையில் வைத்துப் பக்குவமாக வெட்டப்பட்டது. வெட்டும் போது அதன் உறுப்புகளின் பெயர்கள் சொல்லிப் புகழப்பட்டன. மூட்டுகள் பக்குவ மாகப் பிரித்தெடுக்கப்பட்டன. இறைச்சி சமைக்கப்பட்டது. தேவர் களுக்கு நைவேத்தியம் செய்த பின் யாகசாலையிலுள்ளோர் அதனை உண்டனர். வேதத்தில் சோமரசத்தைக் கடவுளாகத் துதிக்கும் 120 சூக்தங்கள் உள்ளன. இருக்கு வேதத்தின் ஒன்பதாம் மண்டலப் பாடல்கள் முழுமையும் சோமரசத்தைத் துதிக்கின்றன. #சோமக்கொடி ஆதியில் சுவர்கத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்டதென நம்பப்பட்டது. அதன் பொருமிய தண்டுகளிலிருந்து சாறு பிழியப்பட்டது. இது பருகுவதற்கு மிக்க சுவையையும் மயக்கத்தை யும் கொடுத்தது. இருக்கு வேதத்தில் இருபத்து நான்கு வகைச் சோமக் கொடிகள் கூறப்படுகின்றன. இவற்றுள் மேலான ஒரு வகையை ‘இரு பிறப்பாளர்’ பயன்படுத்தினர். மற்றவைகளைப் பிராமணரல்லாதார் பயன்படுத்தினர். இக்கொடி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்திய ஆரியர் சோம யாகங்களைச் செய்தது போலவே பாரசீக ஆரிய ரும் சோம யாகங்கள் செய்தனர். இக் கொடி மூவாயிரம் ஆண்டுகளின் முன் பற்றறுந்து போயிற்று. பிற்காலத்தில் சோமன் என்பது சந்திரனைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது பொருத்தமற்றது.13 அசுவமேதயாகத்தில் குதிரைக்கு முன்னால் புள்ளியிடப்பட்ட வெள்ளாடு ஒன்று நடத்திக் கொண்டு செல்லப்பட்டது. குதிரையும் பலி செலுத்தப்படும் சோமபானமும் விலை உயர்ந்த அலங்காரங்களால் மூடப்பட்டன. ஆடும் குதிரையும் மூன்று முறை யூபத்தைச் சுற்றிக் கொண்டு வரப்பட்டன. புரோகிதர் சமைக்கும் ஏனங்களுடன் பின்னே சென்றார்கள். பலியிடுமிடத்தில் குதிரைக்குப் புல் இடப்பட்டது. குதிரை கம்பத்தோடு கட்டி வைத்துக் கொல்லப்பட்டது. அதனிறைச்சி மற்றைய விலங்குகளின் இறைச்சியைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை. அது தேவர்களிடம் சென்றது என நம்பப் பட்டது. புருடமேத யாகங்களும் அருமையாக நடத்தப்பட்டன. நால் வேதங்களும் சைவ நான்மறைகளும் வேதாகமங்கள் வந்த வரலாற்றைப் பற்றிச் சைவ நூல்கள் கூறியிருப்பது வருமாறு: “மகா சங்கார கால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற் பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கிய வழி வேதாகமங்கள் குடிலையினின்று நாதவடிவாகவும், அதன் பின் அக்கரவடிவாயும் அதன் பின் விந்து (புள்ளி) வடிவாயும் முறையே தோன்றின. பின்னர் அவற்றைச் சொற் றொடர்ப்படுத்திச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்வதற் பொருட்டுப் பரமசிவன் ஈசான முதலிய பஞ்சப்பிரம சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகள நிட்களத் திருமேனி கொண்டருளிச் *சதாசிவ மூர்த்தியாய் நின்று தற்புருட முதலிய நான்கு முகங்களால் வேதங்களைத் தோற்றுவித்து மேற்கண்ணதாகிய ஈசான முதலிய ஐந்து முகங்களாலும் காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து வேதங்களை அநந்த தேவர் வழியானே பிரமனுக்கு அருளிச் செய்து, ஆகமங்களை பிரதி சங்கிதை (ஒரு விடயத்தை வேறு வேறு வகுத்துக் கூறுதல்) முறையாலே பிரணவர் முதலிய பதின்மரும் மகாருத்திரர் முதலிய பதினெண்மருமாகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம், உருத்திர பேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொரு வருக்கு அருளிச் செய்து பின்பும் கௌக முறையானே (வேறு வேறு வகுக் கப்பட்டவற்றைத் தொகுத்துக் கூறுதல்) அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்த தேவருக்கு அருளிச் செய்தான். அவற்றை அநந்த தேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரன் முதல்வராகிய அநந்த தேவருக்கு அருளிச் செய்தான். அவற்றை அநந்த தேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரன் முதல்வராகிய சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் அளித்தற் பொருட்டு முதற்கண் நந்தி பெருமானுக்கு அருளிச் செய்தார். இதுவே வேதாகம் வந்த வரலாறு என்று காண்க. இதனை விரிக்கிற் பெருகும். ஆகமங்களில் காண்க”*. (சிவஞான போதமா பாடியச் சிறப்புப் பாயிரம்). “யாம் வேதத்திற்கும் சிவாகமத்திற்கும் வேற்றுமை கண்டிலம்; சிவனாற் செய்யப்படுதலின் வேதமும் சிவாகமமென வழங்கப்படும்; இவ் விரண்டுஞ் செய்த கருத்தன் சிவன் ஒருவனே யாம். இவ்வாறு சுருதியினும், புராணங்களினும் சிவாகமங்களினும் கூறப்பட்டது பஞ்சப்பிரமம். பிரணவம், பஞ்சாக்கரம், பிராசா முதலிய மந்திரங்களும் பதி, பசு, பாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனம், திரிபுண்டரீகம், உருத்திராக்கம் தரித்தல், சிவலிங்க பூசை முதலிய தருமங்களும் பிறவும் வேதம் சிவாகமம் என்னும் இரண்டினும் ஒப்பக் காண்டலான், அவ் விரண்டும் பிரமாணமாகலானும், கருத்தன் ஒருவனே ஆதலின் அவ் விரண்டிற்கும் பொருள் ஒன்றே ஆதலின், அவற்றுள்ளும் மாறுபாடின் மையாலும் ... என்று இவ்வாறு நீலகண்ட சிவாசாரியராற் கூறப்பட்டது.” (மேற்படி - சிறப்புப் பாயிரம்). வடமொழி வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டனவாக வரலா றில்லை. வேதம் நித்தியம் எனக்கூறும் பூர்வமீமாம்சகரும் அது கடவுளாற் சொல்லப்பட்டதெனக் கூறவில்லை. வேதங்கள் சிவலிங்க வழி பாட்டை இழித்துக் கூறுகின்றன.14 பஞ்சாக்கரம், சிவபூசை முதலியன அவற்றுட் கூறப்படவில்லை. ஆகவே சிவஞானமுனிவர் வேதம் எனக் குறிப்பிடுவது இருக்கு முதலிய வேதங்களல்லவென்பது நன்கு விளங்கு கின்றது.# வேதங்களைச் சிவபெருமான் கல்லாலின் கீழிருந்து சனகாதி நால்வருக்கு அருளிச் செய்தார் என்னும் ஐதீகம் சைவசமயத்தவர் களிடையே வழங்குவது முன்னோ ரிடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் இருக்கு முதலியவற்றைவிட வேறு நான்மறைகள் இருந்தனவெனக் கொண்டாரெனத் தெரிகிறது. “நான்கு கூறாய் மறைந்த பொருளுடைமையை நான் மறையென் றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவராகமும், சாமவேதமு மாம். இனி இருக்கும் எசுவும் சாமமும் அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது” (நச். உரை) “இருக்கு முதல் வேதம் பௌடிகம் எனப்படும்” “இரண்டாம் வேதம் தைத்திய மென்ப” “மூன்றாவது சாமம் கீதநடை சாரும்” “நான்காம் வேதம் அதர்வண மென்ப” (திவாகரம்) “சாந்தோகா, பௌழியா தைத்தியா சாமவேதியனே” (நாலாயிரப் பிரபந்தம் - பெரிய திருமொழி). மேற்காட்டப்பட்டவை இருக்கு முதலியவற்றைவிட வேறு பெயருடன் வழங்கிய வேதங்களிலிருந்தன வென்பதை விளக்குகின்றன. வேதங்கள் என்பதை இருக்கு முதலியனவாகக் கொள்ளுதல், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழர் நாற்குலங்கள் வடநாட்ட வரின் நால்வருணங்களோடு ஒன்றாக வைத்துக் கருதப்பட்டது போன்ற தோர் மயக்கமாகலாம். ஆரிய நான்மறைகள் தமிழரிடையே நிலவிய நான்மறை என்னும் முறையைப் பின்பற்றிப் பிரிக்கப்பட்டனவே என்று ஊகிக்கலாம். ஆசிரியர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தமது தமிழ் இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு : “இமயமலை கடலிலிருந்து எழுவதன் முன் குமரி நாட்டில் மகேந்திரம் என்னும் மலையிருந்தது. அது கடலுள் மூழ்கி மறைந்து போயிற்று. அங்கு தமிழ் மறைகள் கடவுளால் நான்கு முனிவர்களுக்கு வெளியிடப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களைக் கூறினமையின் நான்மறைகள் எனப்பட்டன. பிற்காலத்தெழுந்த ஆரிய நான்மறைகளிலிருந்து வேறுபடுத்துவதற்கு இது பண்டாய நான்மறை எனப்பட்டது. வெள்ளப் பெருக்குகளாலும் நீண்ட பழமையாலும் அவை மறைந்துபோயின. குமரி நாட்டின் அழிவி னால் தத்தளித்து வடக்கு நோக்கிச் சென்று கரையேறிய மக்கள் பண்டாய நான்மறைப் பொருள்களை நினைவில் வைத்துக் காப்பாற்றி வந்தனர். அம் மறைகளைப் பற்றிய குறிப்புகள் சமயாசாரியர்கள், ஆழ்வார்கள் பாடல்களில் ஆங்காங்கு சிதறிக் காணப்படுகின்றன. தமிழரின் தத்துவ ஞானம் ஆகமங்களில் காணப்படுகின்றது.” வேத மொழி ஆரிய மக்கள் வெளியிலிருந்து ஒவ்வோர் தலைவரின் கீழ் பல கூட்டங்களாக இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்வாறு வந்தோர் ஏறக் குறைய நாற்பது கூட்டத்தினர். இக் கூட்டத்தினர் பேசிய மொழிகள் ஒரு இனத்தைச் சேர்ந்தனவாய் இருந்தபோதும் அவற்றில் சிறு வேறுபாடுக ளிருந்தன. இவர்களில் முதன்மை பெற்றிருந்த ஒரு கூட்டத்தினர் பேசிய மொழியில் வேத பாடல்கள் செய்யப்பட்டன. மக்கள் பேசிய மொழிகள் திரிபடைந்து மாறுபட்டன. வேத பாடல்கள் செய்யப்பட்ட மொழியும் வழக்கொழிந்து போயிற்று. ஒரு கூட்டத்தினர் சமய சம்பந்தமாக வேத பாடல்களை மனப்பாடஞ் செய்து காப்பாற்றி வந்தனர். அவர்களுக்கு மாத்திரம் அம்மொழி பொருள் விளங்கக் கூடியதாக இருந்தது. அம் மொழியை வழங்கிய மக்கள் தமிழ்பேசும் மக்களோடு கலந்து உறவாடிய தால் வேதமொழி உச்சரிப்பு முறையிலும் பிறவகையிலும் தமிழ்ப் போக்கை அடைந்து கொண்டு வந்தது. தமிழ்ச் சொற்களும் அம்மொழி யிற் புகுந்தன. ஐரோப்பிய, பாரசீக ஆரிய மொழிகளில் காணப்படாத புதிய சொற்களும், உச்சரிப்புகளும், சொல்லடுக்கு, வசன அமைப்பு முதலியனவும் தமிழரின் கூட்டுறவால் நேர்ந்தனவென்று ஆராய்ச்சி யாளர் கூறியுள்ளனர். இவ்வாறு வேதமொழி சிதைந்து மறைந்து விடாம லிருக்கும் பொருட்டு நிருத்தம், வியாகரணம், சந்தம் முதலிய நூல்கள் செய்யப்பட்டன. செய்யப்பட்ட இலக்கணங்களுள் பாணினி முனிவர் செய்த பாணினீயம் முதன்மையுடையது. பாணினி முனிவரின் இலக் கணத்துக்கு அமைவுபடுத்தப்பட்ட வடமொழி சமக்கிருதமெனப் பட்டது. சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்ட தென்பது பொருள். பிராமணங்கள் எழுதப்பட்டிருக்கும் மொழி மந்திர மெழுதப் பட்ட மொழிக்கும் சமக்கிருதத்துக்கும் இடைப்பட்டதெனச் சொல்லப் படுகிறது.* வேதகாலத்து வழங்கிய ஆரிய மொழிகள் உள்நாட்டு மக்களின் மொழிகளோடு கலந்து புதிய பேச்சு மொழிகள் தோன்றின. வேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி வழக்கொழிந்தது. புதிய மொழிகள் பிராகிருதங்கள் எனப்பட்டன.# பிராகிருத மொழிகள் மக்களின் பேச்சுமொழியாகவும் ஆரிய மொழி இலக்கிய மொழியாகவும் இருந்து வந்தன. அக் காலத்தில் வழங்கிய பிராகிருத மொழிகளில் ஒன்று பாளி.15 வேதங்களில் உள்நாட்டுத் தெய்வங்கள் ஆரியர் இந்திய நாட்டை அடைந்த பின் அவர்கள் இந்திய நாட்டுப் பூர்வகுடிகள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைத் தமது கடவுளருட் சேர்த்துக் கொண்டனர். பழைய ஆரியக் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று ஐரோப்பிய நாடுகளிலும் பாரசீகத்திலும் குடியேறிய ஆரியரிடத்திற் காணப்படாதவற்றை அவர்கள் இந்தியப் பூர்வ மக்களிட மிருந்து பெற்றார்கள். இவ்வாறு பெற்ற கடவுளரில் சிவன் கடவுள் ஒருவர். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். சிவன் என்பதே சிவந்தவன் என்னும் பொருளின் உருத்திரன் என மொழிபெயர்க்கப்பட்டு வேதங் களில் வழங்குவதாயிற்று. சிவனை ஒத்த கடவுளை மற்றைய ஆரிய மக்கள் அறியாதிருந்தார்கள். சிவன் என்னும் சொல்லுக்கு இந்து ஐரோப்பிய மொழிகளில் உற்பத்திகாண முடியவில்லை. “வருணன், உருத்திரன், துவட்டா அதிதி முதலிய கடவுளரை ஆரிய மக்கள் திராவிடமொழி வழங்கிய மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். தமிழ் மொழி வேதமொழியைப் பெரிதும் மாற்றமடையச் செய்ததெனக் காட்டியுள்ளோம். இதனை ஒப்பவே பூர்வமக்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்கள் ஆரியச் சொல் வடிவங்களை அடைந்து வேதகாலத் தெய்வப் பெயர்களுள் இடம் பெற்றன. அப் பெயர்களுக்கு ஒப்பானவை இந்து - சர்மானியத்திற் காணப்படவில்லை. அவ்வகைப் பெயர்கள் இந்தியப் பெயர்கள் என்றே கொள்ளுதல் தகுதியுடைத்து.”16 அதிதி என்னும் சொல் உற்பத்தி மயக்கமுடையதாக இருக்கின்றது. அப் பெயரின் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை. விஷ்ணு என்னும் பெயர் விண் என்னும் அடியாகப் பிறந்திருக்கலாம். சிவன், விஷ்ணு, அம்மன் என்போர் இந்திய மக்களின் உயர்ந்த கடவுளராவர், இருடி களுக்கு இக்கடவுளர் சிறு தெய்வங்களாகக் காணப்பட்டனர். இருடிகள் விருப்பக் குறையோடு இவர்களைத் தமது தெய்வங்களோடு சேர்த் தார்கள். ஆனால், மக்கள் அக்கடவுளரை வணங்கினர்; அதனால் அவர்கள் பெரிய கடவுளர் ஆயினர். வருணன் என்னும் பெயர் விரி என்னும் அடியாகப் பிறந்ததெனக் கூறுவர்* கோவின் என்னுமாசிரியர். ஆரணியகங்கள் பிராமணங்களுக்குப் பின் ஆரணியகங்கள் தோன்றின. ஆரணி யகங்கள் என்பவை பிராமணர் காட்டிற்சென்று தவஞ்செய்யும்போது படிக்க வேண்டியவை.17 பிராமணங்களில் காணப்படும் கிரியைகளுக்கு இன்னொரு வகைக் கருத்துக் கொடுப்பதற்கு இவை தொடக்கத்தில் எழுந்தனவாகத் தெரிகிறது. பிரிண்ட ஆரணியகத்தில் காணப்படுவது வருமாறு. *”ஓம் விடியற் காலம் யாகக் குதிரையின் தலை; சூரியன் அதன் கண்; வாயு அதன் மூச்சு; அதன் வாய் எங்கும் நிறைந்த நெருப்பு; ஆண்டுகள் அதன் உடல்; வானம் முதுகு; வெளி வயிறு; பூமி பாதங்கள்; பருவகாலங்கள் உறுப்புக்கள்; மாதமும் அதன் பக்கங்களும் மூட்டுக்கள்; இரவும் பகலும் கால்கள்; நட்சத்திரங்கள் எலும்புகள்; முகில்கள் தசை; பாலைவனங்கள் உணவு; ஆறுகள் குடல்; மலைகள் ஈரலும் நுரையீ ரலும்; பூண்டுகளும் மரங்களும் மயிர்கள்; உதய ஞாயிறு முன்பக்கம்; அந்திஞாயிறு பின்பக்கம்; அதன் கொட்டாவி மின்னல்; கனைப்பு இடி; மூத்திரம் மழை; சத்தம் பேச்சு; பகல்யாகப் பாத்திரம் போல் எழுந்து முன்னே நிற்கின்றது; அதன் பிறப்பிடம் கீழ் கடல்; இரவு யாக பாத்திரம்; அதன் பிறப்பிடம் மேல் கடல்; இராப் பகல் என்னும் யாக பாத்திரங்கள் குதிரையைச் சூழ்ந்துள்ளன; பந்தயக் குதிரையைப் போல அது தேவரைக் கொண்டு செல்கின்றது; போர்க் குதிரையைப்போல அது கந்தருவரைக் கொண்டு செல்கிறது; சாதாரண குதிரையைப் போன்று மனிதரைக் கொண்டு செல்கின்றது. கடல் அதன் நண்பன்; அஃது அதற்குப் பிறப்பிடம்.”# பிராமணங்களில் கூறப்படும் கிரியைகளால் பயனில்லை எனக் கண்ட பிராமணர் ஆரணியகங்கள் மூலம் பிராமணக் கிரியைகளுக்கு வேறு பொருள் கற்பிப்பாராயினர். இவ்வகையில் அவை பிராமணங் களுக்கு மாறுபட்டனவாக இருந்தன.# இருக்கு வேத காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தலாகிய வழக்கு ஆரியரிடையே காணப்படவில்லை எனத் தத்தர் கூறுகிறார். இவ் வழக்கம் பழைய மக்களிடையே காணப்பட் டிருக்கலாம். முதுமையில் குடும்ப பாரத்தைப் புதல்வர்களிடம் கொடுத்து விட்டு தனிமையிலிருந்து தவஞ்செய்தல் தமிழர் வழக்கு எனத் தொல்காப் பியங் கூறுகின்றது. இருடிகள், முனிவர்களை அரசரும் பிறரும் சாபங் களுக்கு அஞ்சி அவர்கள் வேண்டுவன புரிந்தார்களெனப் புராணங்கள் கூறுகின்றன. தென்னாட்டு முனிவர் யாருக்கும் அஞ்சுவ தில்லை என்றும் அவர்களைக் கண்டு எவரும் அஞ்சுவதில்லை என்றும் விண்டர் நிட்ஸ் (Winternitz) என்னும் சர்மன் அறிஞர் கூறியுள்ளார். உபநிடதங்கள் ஆரணியகங்களுக்குப் பின் உபநிடதங்கள் தோன்றின. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது என்பது பொருள். உபநிட தம் உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராய் கின்றது. பிறப்பறுக்கும் வழியைக் கூறுகின்றது. ஓங்காரத்தை உச்சரிக்கும் படி வலியுறுத்துகின்றது. உபநிடத ஞானம் தர்க்கத்தினாலறியத் தக்கதன்று; அனுபூதியினால் அறியப்படுவது. உபநிடத ஞானங்கள் குரு மாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. நாட்டின் பல்வேறு ஆச்சிரமங்களிலிருந்த குரவர்கள் மாணாக்கருக்கு உபதேசிக்கும் பொருட்டு எழுதி வைத்திருந்த குறிப்புகளே உபநிடதங்கள் எனப் பட்டன. இவை நூல் எழுத வேண்டுமென்னும் திட்டம் வகுத்து எழுதப் பட்டவையல்ல. உபநிடதங்களை எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை. அவர்கள் தம் பெயர்களை வெளிப்படுத்த விரும்ப வில்லை. உபநிடதங்கள் வசனம் செய்யுள் என்னும் இரு நடைகளிலும் எழுதப்பட்டுள்ளன. உபநிடத ஞானங்களைப் பிராமண வகுப்பினர் அறிந்திருக்கவில்லை. உண்மை ஞானங்களை அறிய ஆர்வங்கொண் டிருந்த பிராமணர் அரச வகுப்பினரிடமிருந்து அவற்றைக் கேட்டறிந் தார்கள். கேட்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களுக்கு மாத்திரம் உபநிடத ஞானம் உபதேசிக்கப்பட்டது. வேதங்களைப் பிராமணர், சத்திரியர் வைசியர் என்னும் மூன்று வருணத்தவர்கள் மாத்திரம் ஓதலாம்; பெண் களும் சூத்திரரும் அவற்றை ஓதவும் கேட்கவும் கூடாது. உபநிடத ஞானங் களைக் கேட்பதற்கு சாதித்தடை இருக்கவில்லை. “ஆவுரித்துத் தின்றுழ லும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கு உபநிடதக் கருத்தைப் பின்பற்றியது. உபநிடத ஞானங்கள் ஆரியர் வருகைக்கு முன் இந்திய நாட்டில் வழங்கின என்றும் அவை வேதங்களுக்குப் புறம்பானவை என்றும் இஞ்ஞானமே சாங்கியம், யோகம், வேதாந்த சூத்திரம், பௌத்தம் சமணம் முதலிய மதங்களின் தத்துவ ஞானத்துக்கு வேராக இருந்தனவென்றும் ஆராய்ச்சி வல்லார் கூறியிருக்கின்றனர். நால் வேதங்களிலும் பத்து உபநிடதங்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. சங்கராச்சாரியார் வேதங்களைச் சேர்ந்த உபநிடதங்கள் பதினான்கு என்று கூறியிருக்கின்றார். உபநிடதங்கள் 150 என்று சிலரும் 108 என்று சிலரும் கூறியிருக்கின்றனர். கி.பி. 1656-இல் ஐம்பது உப நிடதங்கள் பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. *அவற்றுள் ஒன்றும் இப்பொழுது கிடைக்கவில்லை. உபநிடதங்கள் கௌதம புத்தருக்கு முற்பட்டவை. பிற்காலத்தில் உபநிடதங்கள் என்னும் பெயரில் பல நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று அக்பர் காலத்தில் எழுதப்பட்ட அல்லா உபநிடதம். விண்டர் நிட்ஸ் என்னும் அறிஞர் கூறியிருப்பது வருமாறு; உபநிடத ஞானம் அரச வகுப்பினரிடம் மாத்திரமன்று இன்ன குலத்தின ரென்று அறிய முடியாதவர்களிடையும் இருந்தது. ஆரியரின் நீதி நூல்கள், பிராமணன் ஆசிரியனாக இருந்து முதல் மூன்று வருணத்த வருக்கும் வேதங்களைக் கற்பிக்கலாமெனக் கூறுகின்றன. அரச வகுப் பினரே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தனரென்றும் அவர்களின் கீழிருந்து பிராமண வகுப்பினர் ஞானத்தைப் பயின்றனரென்றும் உபநிட தங்கள் கூறுகின்றன. அரச வகுப்பினர் அவர்களுக்கு அளித்த ஞானம் மறுபிறப்புத் தொடர்புடையது. உபநிடத மென்பதற்கு அருகிலிருந்து கேட்பது என்பது பொருள். ஆசிரியன் ஒருவ னிடத்தில் சில மறைவான உண்மைகளைப் படிப்பதற்கு மாணாக்கனாக இருப்பதென்று இதன் பொருள். இவ்வாறு அளிக்கப்படும் ஞானம் மறை அல்லது இரகசியம் எனப்பட்டது. அம்மறையைத் தகுதியில்லாதவருக்கு அளித்தல் கூடாதென உபநிடதங்கள் கூறுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, இம் மறையைத் தந்தை தனது மூத்த குமாரனுக்கு அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ்வுலகம் முழுவதையும் பெறுவதாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாகவிருந்து பலமுறை வருந்திக்கேட்டபோது இஞ்ஞானம் வெளியிடப்பட்டது. உபநிடதங்கள் யாகங்களை ஏற்றுக் கொள்ள வில்லை. ஈச, கேன, கதா, முண்டக, மண்டூக்கிய, ஐதரேய, தைத்திரீய, பிராஸ்ன, சாந்தோக்கிய, பிரிதாரண்யக முதலியன உபநிடதங்களுள் முதன்மை பெற்றவை. பிற்காலச் சைவ நூல்களில் வேதம் எனக் குறிக்கப்படுவன உபநிடதங்களைக் குறிக்கின்றனவென்பது “அதர்வ சிகை முதலிய உபநிடதங்களும் சிவாகமப் பொருளை நோக்குழிச் சூத்திரமும் பொருளும் போலத் தூலாருந்ததி முறைமையாதலின் வேதம் பொது நூலெனவும் ஆகமம் சிறப்பு நூலெனவும் பட்டன” (சிவஞான போதமா பாடியம்) என்பதனால் தெரிகின்றது. “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்” என்றார். ஈண்டு வேதாந்தமென்றது வேதத்தின் முடிவுகளாகிய உபநிடதங்களை; வேதாந்த மென்னும் பெயர் பெற்ற ஏகான்ம வாத நூலையன்று” (மேற்படி). “உபநிடதங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் பல. அவை களுட் சில மற்றவைகளைப் போலப் பழமையுடையனவல்ல. பழைய உப நிடதங்களிற் சில ஆரணியகங்களிற் சேர்ந்திருக்கின்றன; சில அவற்றின் பின் சேர்ப்பாக உள்ளன. உபநிடதங்களில் சில பிராமணங்களின் பகுதி களாக உள்ளன. ஐதரேய உபநிடதம், கௌசீதகி உபநிடதம், தைத்திரீய உபநிடதம், மகா நாராயண உபநிடதம், பிரிகதாரணிய உபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம், கேன உபநிடதம் என்பவை இவ்வகையின. மகா நாராயண உபநிடதத்தைத் தவிர மற்றவை இந் நூல்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவை. அவை எழுதப்பட்டிருக்கும் நடை பிராமணங் கள் எழுதப்பட்ட நடையை ஒத்திருக்கின்றன. ஆகவே அவை புத்தருக்கும் பாணினிக்கும் முற்பட்டவை.” இரண்டாவது இனத்தைச் சேர்ந்த உபநிடதங்கள் சிறிது பிற் காலத்தன வாயினும் பௌத்த மதத்துக்கு முந்தியவை. இவை முன்னைய உபநிடதங்களினின்றும் பொருள் வகையில் வேறுபடுகின்றன. கதா, சுவேதாஸ் வதரா, மகாநாராயணாய, ஈச, மண்டூக்கிய, பிரஸ்னா உப நிடதங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவை வேதாந்தக் கொள்கை யையும் விளக்குகின்றன. அவற்றுள் யோகமத, சாங்கிய மதக் கொள்கை கள் காணப்படாமவில்லை. கிருட்டிண எசுர் வேதத்தைச் சேர்ந்த மைத்திராரணிய உபநிடத மும், அதர்வண வேதத்தைச் சேர்ந்த மண்டூக்கிய உபநிடதமும் பௌத்த மதத்துக்குப் பிற்பட்டவை. இவை எழுதப்பட்டுள்ள மொழியும், நடையும், பொருளும் இவை பிற்காலத்தனவென்பதைக் காட்டுகின்றன. சங்கரர் இவற்றைக் குறிப்பிடவில்லை. முன் கூறப்பட்ட பன்னிரண்டோடு இவற்றையும் வேதங்களுட் சேர்ந்த உபநிடதங்களெனக் கூறலாம். மற்றைய உபநிடதங்கள் வேதங்களோடு சம்பந்தம் பெறவில்லை. சிலவற்றில் கூறப்படுவன தத்துவ ஞானங்களெனச் சொல்லத் தக்கனவாகவில்லை. சில தந்திரங்களையும் புராணங்களையும் சேர்ந்தனவாகக் காணப்படு கின்றன. வேதங்களைச் சேராத உபநிடதங்களை அறுவகையாகப் பிரிக்க லாம். (1) இக்கால வேதாந்தக் கொள்கைகளைக் கூறுவன. (2) யோகத்தைப் படிப்பிப்பன (3) சன்னியாசத்தைப் புகழ்வன (4) விட்டுணுவை மேலான கடவுளாகப் புகழ்வன (5) சிவனை உயர்ந்த கடவுளாகக் கொள்வன (6) சாத்த உபநிடதங்களும் வேறு சிறு மதங்களின் உபநிடதங்களும். இவற்றுள் சில சங்கரர் குறிப்பிடும் சாபல உபநிடதம், பரமகாமச உபநிடதம், இராமானுசர் மேற்கோளாக ஆளும் சுபால உபநிடதம், காப உபநிடதம், அதர்வாசிராஸ் உபநிடதம், வச்சிரசூசிக உபநிடதம் என்பவை அதர்வண வேதத்தைச் சேர்ந்தனவாகச் சொல்லப்படும். முத்திக உபநிடதம் 108 உபநிடதங்களைக் குறிப்பிடுகின்றது. உபநிடதங்கள் யாகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; அவற்றைப் புணையாகக் கொள்வது ஓட்டை மரக் கலத்தைத் துணைக் கொள்வது போலுமெனக் கூறுகின்றன.”* தரிசனங்கள் பௌத்த சமண மதங்கள் தோன்றி வேத மார்க்கத்தை எதிர்த்தன. அப்பொழுது தரிசனங்கள் என்னும் நூல்கள் எழுந்தன. சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, நியாயம், வைசேடிகம் என்பவை தரிசனங்கள் என்பதில் அடங்கும். இஞ்ஞானங்கள் பௌத்த சமண சமயங்களுக்கு முன் தோன்றி ஆங்காங்கு குருமாணாக்க முறை யில் நிலவின. பின்பு அவை தருக்க முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டுச் சூத்திரங்களாகச் செய்யப்பட்டன. இவை ஏறக்குறைய ஒரே காலத்திற் செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றை ஒன்று மறுக்கும் பகுதிகள் காணப் படுகின்றன. ஆகவே பின்வந்தவர்கள் புதிய சூத்திரங்களை எழுதி இவற் றோடு சேர்த்தார்கள் என அறிஞர் கூறுவர். தரிசனங்கள் வேதங்களைத் தமக்கு ஆதாரமாகக் கொள்வதாகக் கூறிக்கொள்கின்றன. உத்தரமீமாம்சை, பூர்வமீமாம்சை என்னுமிரண்டை விட மற்றைய தரிசனங்கள் தமது நியாயங்களை வேதங்களிலிருந்து கொள்ளவில்லை. பூர்வமீமாம்சையைத் தவிர மற்றைய தரிசனங்களின் முடிவு பிறப்பறுத்தலாகிய வீட்டை எய்துவது. பௌத்தசமண மதங்களின் கொள்கையும் இஃதாக விருந்த போதும் வேதங்களை ஒப்புக்கொள்ளாமையால் அவை நாத்திக மதங்கள் எனப்பட்டன. மாயை, புருடன், சீவன், அவித்தை போன்ற சொற்களை எல்லாத் தரிசனங்களும் ஆளுகின்றன. ஒவ்வொரு பிரிவினரும் அவற்றை வெவ்வேறு கருத்துக்களில் ஆண்டுள்ளனர். இக் காரணத்தினாலும், அவை வேதங்களைத் தமக்கு ஆதாரமெனக் கூறுவதாலும் அவை பொது வான ஒரு தொடக்கத்திலிருந்து பிரிந்தவையாகக் கருதப்படுகின்றன. சாங்கியம் சாங்கிய மதக் கொள்கைகளை விளக்கும் சாங்கிய நூல்கள் கபிலரால் செய்யப்பட்டன. அவை மறைந்து போயின. இப்பொழுது கிடைக்கும் சாங்கிய நூல்களுட் பழமையுடையது ஈசுவர கிருஷ்ணரால் செய்யப்பட்ட சாங்கிய காரிகை என்னும் நூல் (கி.பி. 3ஆம் நூ.) சாங்கிய மதக் கருத்துக்கள் ஒருவருடையதன்று. பலகாலங்களாக வந்த கருத்துக் களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி நூல் செய்தவரே கபிலராவர். இவர் கௌதம புத்தருக்கு முன் வாழ்ந்தவர். சாங்கிய மதக் கொள்கைக்கு அடிநிலை உபநிடதங்கள் என்பது அறிஞர் கருத்து. #சாங்கியமதம் சற்காரிய வாதம் எனவும்படும். இது ஆன்மாக்கள் பல எனவும் உலகம் உள்பொருளெனவும் கூறுகிறது. அநாதியே சடத்தோடு சம்பந்தப்பட்டத னால் ஆன்மாவுக்கு இறப்புப் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மா சடத்தினின்றும் விடுபட்டுப் பின் சடத்தோடு கூடாமல் இருந்து வீடடையும் உபாயங்களைச் சாங்கியம் கூறுகின்றது. சாங்கிய மதம் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இது நிரீச்சுர மதம் எனப்படும். சாங்கிய மதத்தைப் பற்றிச் சிவஞான முனிவர் கூறியிருப்பது வருமாறு : “மூலப் பகுதி நித்தமாய், வியாபகமாய், எல்லாப் பொருட்கும் காரணமாய், முப்பொருள்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவா யுள்ளது. இது இருபத்து நாலாந் தத்துவம்; இதன்கட்டோன்றும் காரியம் புத்திமுதல் நிலமீறாக இருபத்து மூன்று தத்துவமுள. இத் தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய், நித்தமாய், வியாபகமாய், அருவாய்ப் பலவாய், அறிவதுஞ் செய்வதுமின்றி, அறிவு மாத்திரமாய் ஒன்றற்குக் காரணமாதலுங் காரியமாதலுமின்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத் தைந்தாந் தத்துவ மெனப்படும். இவ்விருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியிலும் பெத்தத்திலும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலின மென்பதில்லை; தாமரையிலை நீர்போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தனெனப் பட்டு இன்ப துன்ப உணர்வு தோன்றா நின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும் அந்தக் கரணமென்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும் புருடன் செய்வானென்பதும், புத்தி அறியு மென்பதும் வேற்றுமை உணரா மையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்துணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவனொருவ னுண்டென்பது பொய்யென்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இது கூறும் சற்காரியவாதம் சைவம் முதலிய சற்காரிய வாத நூல்கட்கெல்லாம் உபகாரமாம். இதற்கட் கூறப்படும் அத்தியாச வாதம் மாயாவாதத்துக்கு உபகாரமாம்”. (சிவஞான போதமா பாடியம்). இது யாகங்களையும் புரோகிதரையும் ஒப்புக் கொள்ளவில்லை.20 சித்தார்த்தர் பிறந்த கபிலவஸ்து என்னும் இடப் பெயர் கபிலர் சம்பந்தமானது என்று கருதப்படுகிறது. சித்தார்த்தர் கபிலர் மரபில் உதித்தவராகக் கருதப்படுவர். சகர குமாரரின் வேள்விக் குதிரையைப் பிடித்துக் கட்டி அவரை எரித்த கபில இருடியைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. கபிலர் விஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவரெனவும் கொள்ளப்படுவர். கபிலரின் காலம் கி.மு. 800க்கும் கி.மு. 600க்கும் இடையில் எனப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. யோகம் யோக சூத்திரம் பதஞ்சலி முனிவரால் (கி.மு.150) செய்யப்பட்டது. பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் (அட்சபாதர்) சிதம்பரத்தில் தவங் கிடந்து சிவபெருமானின் திருக்கூத்தைத் தரிசித்ததாகப் புராணங் கூறும். பாணினீயத்துக்கு உரை செய்த ஒருவரின் பெயர் பதஞ்சலி. இருவரும் ஒருவரோ வெவ்வேறினரோ என்று அறிய முடியவில்லை. பதஞ்சலி முனிவருக்கு முன் யோகத்தைப் பற்றிய அறிவு இருந்தது. மொகஞ்சதரோ மக்கள் யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். உபநிடதங்களில் யோகப் பயிற்சி கூறப்படுகின்றது. கௌதம புத்தர் யோகப் பயிற்சி செய்தார். சாங்கியத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய உறவுண்டு. இது சாங் கியத்தைப் போலவே ஆன்மாக்கள் பலவென்றும், சடம் உள்பொரு ளென்றும் கூறுகின்றது. யோகத்தில் ஈசுரன் கூறப்படுகிறது. ஆகவே, இது சேஸ்வர சாங்கியம் எனவும் கூறப்படும். சிவஞான முனிவர் யோகத்தைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு : “யோகமாவது - நிலமுதற் புருடனீறாகிய இருபத்தைந்து தத்துவம் பெத்த முத்திகளும் நிரீச்சுர சாங்கியர் கூறியவாறேயாம். மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்துணரும் விவேக உணர்வுபோல எண்வகை உறுப் பிற்றாகிய யோகமும் முத்திக்கேதுவாம். அவன் முற்றுணர்வுடையனாகிச் சாத்திரங்களை அருளிச் செய்து புருடருக்கு ஞானத்தை அறிவுறுப் பனாதலின் இவ்வான்மாவுக்கு வேறொன்றுரைக்கப்படுமென்பதாம். இந்நூல் செய்தவன் பதஞ்சலி முனிவன்.” (சிவஞான போதமா பாடியம்). யோகத்தில் கூறப்படும் ஈசுவரன் புருடருள் ஒருவர் என்றும், உலகத்தைப் படைத்து, அளித்து, அழிக்கும் கடவுளல்லரெனவும், அவர் அறியாமை, கிலேசம், விருப்பு, வெறுப்பு, கன்மம், கன்மப்பயன் ஒன்று மில்லாதவரும் எல்லாமறிபவருமாகிய புருடரென்றும், அவர் யோகப் பயிற்சி செய்பவரின் கடவுளாக ஓங்கார வடிவில் இருதயத்திலிருப்பவ ரென்றும், ஆகவே யோகமும் நிரீச்சுர மதமென்றும் சிலர் கூறுகின்றனர். சாங்கியமும் யோகமும் சடம் சம்பந்தமான உலகம் முழுவதையும் பிரகிருதி எனக் கூறும். இராசதம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்குண்டு. இக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதினால் உலகிலுள்ள பொருள்களெல்லாம் உண்டாகின்றன. ஆன்மா என்பதை இம்மதங்கள் புருடன் என்று கூறும். ஆன்மா அந்தக் கரணம் போன்ற பௌதிகக் கூறுகளோடு சேர்ந்த போதும் தனித்து நிற்குமியல்புடையது. ஆன்மாக்கள் பல உண்டு. இவை சாங்கிய யோகக் கொள்கைகளாகும். வைசேடிகம் *வைசேடிக சூத்திரம் செய்தவர் கணாதர். இவரது இயற்பெயர் காசியப்பர். இவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில். கணாதர் வேதங்கள் இருடிகளாற் செய்யப்பட்டவை என்று கூறுவர். வைசேடிகம் பௌத்த மதத்தின் எதிர்ப்பாகத் தோன்றியது. அது ஆராய்ச்சிக்கெடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு பொருளின் தன்மைகளை ஆராய்கிறது. வைசேடிக சூத்திரஞ் செய்த கணாதரும், நியாய சூத்திரஞ்செய்த கௌத மரும் சிவ வழிபாட்டினர்.22 நியாய சூத்திரஞ் செய்த கௌதமர் அட்ச பாதர் (வியாக்கிரபாதர்) எனவுமறியப் படுவர். சிவஞான முனிவர் வைசேடிக மதத்தைப்பற்றிக் கூறி இருப்பது வருமாறு. “தருக்கமாவது - வைசேடிக மும் நையாயிகமுமென இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம், இன்மை எனப் பதார்த்தம் எழு வகைப்படும். அவற்றுள் திரவியம், நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், காலம், திசை, ஆன்மா மனமென ஒன்பது வகைப்படும். அவற்றுள் நில முதலிய நான்கும் அநித்தியப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால் வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தியப் பொருள் கள். அவற்றுள் ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாயுள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கடோறும் வெவ்வேறாயிருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவன் இச்சை வயத்தானே உலகந்தோன்றி யொடுங்கும். அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள் சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்ப துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் பத்துங் கண்டுகொள்க. இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக் கோடாக நிகழ்வன. அவை உருவம், சுவை, ஊறு, நாற்றம் முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள் புத்தி, இன்பம், துன்பம், வெறுப்பு, முயற்சி , அறம், பாவம் என எட்டுக் குணமும் பாவனை (அனுபவத்தின் காரியமாய் நினைவிற்குக் காரணமாக உள்ளது) என்னும் வாதனையும் சீவான்மாக் களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி, விருப்பு, முயற்சி மூன்றும் பரமான்மாவுக்குச் சிறப்புக் குணங்கள். பரமான்மாவுக்காகிய புத்தி முதலிய மூன்றும் பரமான்மாவுக்குச் சிறப்புக் குணங்கள். பரமான்மா வின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். தொழிலாவன - எழும்பல், வீழ்தல், வளைதல், நிமிர்தல், நடத்தலென ஐவகைப்படும். சாதியாவது - பல பொருட்களுக்குப் பொதுவாகிய தன்மை - அது பரம் அபரம் என இரு வகைப்படும். விசேடமாவது - ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை நில அணு முதலிய பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்து மாகிய நித்தியப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம். சமவாயமாவது - அவயவ முதலியவற்றுக்கு அவயவ முதலியவற்றோடும் நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம். இன்மையாவது - முன்னின்மையும், அழிவு பாட்டின்மையும், என்று மின்மையும், ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும். இங்ஙனங் கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு, பொது வியல்பு, வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நானென்றெண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சி யின்மையின் அறம் பாவங்களின்மையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின் உடம்பு முகந்து கொண்ட வினைப்பயன் அறிவின்றிப் பாடாணம் போற் கிடப்பதே முத்தி யென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.” (சிவஞான போத மாபாடியம்). கணாதர் என்னும் பெயர் கணபுக் (அணுவைத் தின்பவர்) என்னும் பொருளில் இடப்பட்ட புனைபெயர் எனச் சிலர் கூறுகின்றனர். நியாயம் *நியாய சூத்திரஞ் செய்தவர் கௌதமர். இவருக்கு அட்சபாதர் என்பதும் பிறிதொருபெயர் உண்டு. அட்சபாதர் என்பதற்குப் பாதத்தில் கண்ணுடையவர் என்பது பொருள். புராணங்களில் சொல்லப்படும் வியாக்கிரபாதர் இவரென்பது சிலர் கருத்து. நியாய சூத்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிவஞான முனிவர் நையாயிகத்தைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “நையாயிகமாவது வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறு பான்மை வேறுபடுத்தும் பிராமணம், பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விரித்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தான் அக்கபாத முனிவன். தர்க்கிகரும் சௌந்திகரும், வைபாடிகரும் நிலவணு, நீரணு, தீயணு, வளியணு வெனப் பரமாணுக்களெல்லாம் ஒரு தன்மையவே என்பர் ... இங்ஙனமாயினும் தர்க்கிகர் வேதநெறியினொழுகி வேதத் துக்குப் பிராமணங் கோடலிற் புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகரோடு வைத்தெண்ணப்பட்டாரென்க.” நியாயம் வைசேடிகம் மீமாம்சை என்னும் மூன்றும் சடப் பொருள் அணுவாலாகியது; அவ்வணுக்கள் பல இனங்களாகும்; அணுக்கள் சேர்ந்து பிரபஞ்ச முண்டாகிறது; நித்தியமான ஆன்மாவும் பலதிறப்பட்டது. ஆன்மா தனது தனிப்பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சடத்துடன் உறவு கொள்ளும் போது உடலும் பொறிகளும் பெற்று எல்லை உணர்ச்சி பெறும் எனக் கூறும்.”# பூர்வமீமாம்சை பூர்வமீமாம்சை சைமினியாரால் செய்யப்பட்டது. இது வேதங்களிற் கொடுக்கப்பட்டுள்ள பிராமணங்களைத் திரட்டிக் கூறுகின்றது. பூர்வ மீமாம்சையைப் பற்றிச் சிவஞானமுனிவர் கூறியிருப்பது வருமாறு : “மீமாம்சையாவது வேதத்திற் கரும காண்ட ஆராய்ச்சி செய்தற்கெழுந்த நூலாதலின் அதுவும் வேதமெனப்படும். அது பன்னிரண்டத்தியாய மாகச் சைமினி முனிவனாற் செய்யப்பட்டது. அந்நூலிற் கூறும் பொரு ளாவது - வினை செய்தவர்க்கு வினையே துறக்க முதலிய பயன்களை உதவும். காமிகப் பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அப்பயனை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து வேள்வி செய்யின் அவ்வினை முத்தியை உதவும். இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவனுண்டு என்பதூஉம் உலகம் தோன்றி அழியுமென்பதூஉம் பொய்; உலகம் என்றும் நிலைபெறும் என்பதாம். இங்ஙனஞ் செய்யப்பட்ட சைமினி சூத்திரங்கட்குப் பாடியஞ் செய்தான் சரபமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடு கொண்டு பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடிய மதம்பற்றி வழிநூல் செய்தான். இங்ஙனமாதலின் மீமாம்சை மதம் இருவகைப் பட்டது. பட்டாச்சாரியன் கன்மமே பயன் கொடுக்குமென்றும் முத்தியில் iநயாயிகர் போல் ஆனந்த முண்டென்றுங் கொள்வன் பிரபாகரன். பிரபாகரன் கன்மநாசத்தில் அபூர்வமே ஒன்று தோன்றி நின்று பயன் கொடுக்குமென்றும், வைசேடிகம் போலப் பாடாணம் போற்கிடப்பதே முத்தி என்றும் கூறுவன். பொருட்டன்மையினும் சிறுபான்மை பட்டாச் சாரியன் வேறுபடுத்துக் கூறுவன். பிரபாகர மதமெனினும் குருமத மெனினு மொக்கும். மீமாம்சை நூலிற் கூறும் நியாயங்களும் எல்லா மதங்களுக்கும் முபகாரமா மெனக்கொள்க.” உத்தரமீமாம்சை 23வேதாந்த சூத்திரம் உத்தரமீமாம்சை எனப்படும்; இனைச் செய்தவர் வாதராயணர்; வியாசர் செய்ததாகவும் இது வழங்கும்.* வாதராயணரும் வியாசரும் ஒருவரென்று சிலரும் வேறானவர்கள் என்று வேறு சிலரும் கூறுவர். வேதாந்த சூத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களடங்கிய 555 சூத்திரங்களுண்டு. இவற்றிலிருந்து வேதாந்த ஞானம் விரிவடைந்தது. இச் சூத்திரங்களின் பொருள் அரிதில் விளங்கக் கூடியது. உரையாசிரியரின் உரைகளைக் கொண்டே அவற்றின் பொருளை விளங்க வேண்டும். வேதாந்த சூத்திரங்களுக்குப் பலர் உரை கண்டுள்ளார்கள். அவற்றுள் சங்கரர், இராமானுசர், மாதவர், நீலகண்ட சிவாச்சாரியர் என்போர் செய்த உரைகள் முதன்மை பெறும். ஒவ்வொரு வரும் தத்தம் கொள்கைகளை நாட்டி உரை செய்திருக்கின்றனர். சங்கரர் அத்துவைதக் கொள்கையையும், இராமானுசர் விசிட்டாத்துவைதக் கொள்கையையும், மாதவர் துவைதக் கொள்கையையும் நாட்டியுள்ளனர். நீலகண்டர் சிவபரமாக வேதாந்த சூத்திரங்களுக்குப் பொருள் கண்டார். அவர் உரை சைவ அத்துவைத உரை எனப்படும். வேதாந்த சூத்திரங் களுக்கு முப்பது உரைகள் வரையிலுண்டு. இவ்வுரைகளுக்கு உரை நூற்றுக்கு மேலுள்ளன. வேதாந்த சூத்திரங்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரையிலெனக் கொள்ளப்படுகிறது. இந்திய தத்துவ ஞானங்களின் சுருக்கம் என்னும் நூலிற் குறிக்கப் பட்டிருப்பது வருமாறு: வாதராயணரின் வேதாந்த சூத்திரம் உபநிடதக் கருத்துக்களை விளக்குவதற் கெழுந்தது. உபநிடதங்கள் தியான முறைகளைக் கூறும் குறிப்புகளடங்கிய நூல்கள். வாதராயணர் இருடிகள் பயன்படுத்தியுள்ள பரிபாடைச் சொற்களுக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டுமென் றும், தியானம் எப்படிச் செய்யப்பட வேண்டுமென்றும், தமது சூத்திரங்களில் கூறுகிறார். வேதாந்த சூத்திரங்கள் மேலான விளக்கம் கூறும் நூலாகவன்றித் தத்துவஞான நூலாக இருக்கவில்லை. வாதரா யணர் அக்காலத்து நிலவிய சாங்கிய வைசேடிக பௌத்த பாகவத பாசு பதக் கொள்கைகளை ஆங்காங்கு கண்டிக்கின்றார்; அவை கொடுக்கும் தத்துவக் கருத்துக்கள் சுருதிக்கும் நியாயத்துக்கும் பொருத்தமற்றவையென் றும் காட்டுகிறார். இந்தியாவில் நடைபெறும் தத்துவஞானம் தொடர் பான தர்க்கங்களில் உபநிடதங்களிலிருந்தும் வேதாந்த சூத்திரங்களி லிருந்தும் சிறுவாக்கியங்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்படு கின்றன. ஆகவே அவை தத்துவஞான நூல்களெனக் கருதப்படுகின்றன. ஆனால் அவை அவ்வாறமையவில்லை. உபநிடதங்கள் உபாசனை முறைகளையும் பலவகைத் தியான முறைகளையும் தியானத்தில் காணும் இரகசியமான அனுபவங்களையும் கூறுகின்றன. வேதாந்த சூத்திரமும் அவைகளைப் பற்றிக் கூறுகின்றது. சூத்திரங்கள் என்பன சொற்கள், வசனத்தின் பகுதிகள் அல்லது வசனத்தின் கோப்புகள் எனக் கூறலாம். அவை குரவரின் போதனைகளை நினைவுக்குக் கொண்டு வரும் குறிப்புகள் போன்றவை. வேதாந்த சூத்திரங்களிற் பல, கூறப்படும் பொருளைப் பற்றியோ மேற்கூற விருப்பனவற்றைப் பற்றியோ கூற வில்லை. காலத்தில் குரவர்கள் கொடுத்த விளக்கவுரைகள் மறக்கப் பட்டன. மணிகள் கோக்கப்பட்ட நூல்போன்ற சூத்திரங்கள் மாத்திரம் நிலை பெற்றன. உரையாசிரியர்கள் இந் நூல்களில் (சூத்திரங்களில்) தாம் விரும்பிய கருத்துக்களைக் கோத்துத் தொங்கவிட்டார்கள். இதனால் எக் கட்சியையும் சாராத ஒருவருக்கு வேதாந்த சூத்திரம் கூறும் உண்மைப் பொருளை அறிய முடியாமலிருக்கிறது. சங்கரர் பிரமமொன்றே உள்பொருள் மற்றவை கானல் நீர் போன்று இல்பொருள்களென்பர். இராமனுசர் உயிர், உலகம், இறைவன் என்பவை உள் பொருள்கள்; உயிரும் உலகமும் இறைவனுக்கு உடல் என்பர். மாதவர் உயிரும் உலகமும் இறைவனும் வெவ்வேறு பொருள்களென்பர். சங்கரர் சாக் மதத்தினர். இராமானுசரும், மாதவரும் வைணவ மதத்தினர். வைணவ சமயத்தின் தத்துவஞானக் கொள்கைகள் இராமானுசர், மாதவரின் வேதாந்த சூத்திர, பகவத் கீதை உரைகளை அடிப்படையாகக் கொண்டு வடமொழி நூல் வழியில் வருபவை. யமுனாச்சாரியர் காலம் வரையில் வைணவர் வேதங்களையே பிரமாணமாகக் கொண்டு, ஆகமங்களைப் பிரமாண மாகக் கொள்ள மறுத்தனர். சைவசமயத்தவர் தமது தத்துவ ஞானத்தை வடமொழியுள்ள நூல்களிலிருந்து கொள்ளவில்லை. இப்பொழுதுள்ள ஆகமநூல்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. மொழி பெயர்ப்பில் வைதீகக் கருத்துக்களும் இடையிடையே நுழைந்துள்ளன.* சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், வேதாந்தம் (ஏகான்ம வாதம்) முதலியவற்றைச் சைவர் புறச் சமயங்களாகக் கொள்வர். சாங்கியம் கடவுளைப் பற்றிக் கூறவில்லை; யோகம் ஈசுவரனைப்பற்றிக் கூறுகின்றது; அது உலகைப் படைத்து அழிக்கும் ஈசுவரனன்று; நியாயம் கூறும் ஈசுவரன் செயல்களுக்குப் பலனளிக்குமளவிலுள்ளது; உயிர்கள் விடுதலை பெற்றுச் சென்றடையும் ஈசுவரனன்று. வைசேடிகம் கடவுளைப் பற்றிக் கூறவில்லை; பிற்காலத்தில் சைவ சமயத்தின் செல்வாக்கினால் படைப்புக்களைச் செய்பவராகிய கடவுளை ஏற்றுக்கொண்டது. ஏகான்மவாதம் பிரமமே உயிர்கள், (உயிர்கள் பிரமத்தின் உயிர்கள்) எனக் கூறுகின்றது. தரிசனங்களில் அடங்கிய தத்துவ ஞானங்கள் ஒருவகை நிரீச்சுர மதங்களாக உள்ளன. இவை வேதங்களை ஆதாரமாகக் கொள்வ தாகக் கூறுவதால் இவை ஆத்திக மதங்களெனப்பட்டன. சங்கரரின் வேதாந்தக் கொள்கையைப் பின்பற்றும் பிராமணர் ஸ்மார்த்தர் என அறியப்படுவர் .# பகவத் கீதை பகவத் கீதை மாபாரதத்தில் வீட்டும பருவத்திலுள்ளது. இந்நூலில் தத்துவஞானம், சமயம், நீதி முதலியவை அடங்கியிருப்பதால் இது மற்றைய தத்துவ ஞான நூல்களிலும் சிறந்ததாகக் கொள்ளப்படு கின்றது. இது பக்தி மார்க்கத்தால் எல்லோராலும் அடையக் கூடிய வழியைக் கூறுகின்றது. பாண்டவருக்கும் கௌரவருக்குமிடையில் நேர்ந்த பாரதப் போர்க் களத்தில் போய் நின்ற அருச்சுனன் தனது உறவினரையும் குரவரையும் கொல்ல மனமின்றிக் கலங்கியபோது கண்ணன் அவனுக்குப் போதித்த ஞானமே பகவத் கீதை எனப்படுகிறது. எழுநூறு பாடல்க ளடங்கிய இந்நூல் கண்ணனால் போர்க்களத்தில் அருச்சுனனுக்குப் போதிக்கப்பட்டதென்பது நம்பக் கூடியதாக இருக்கவில்லை. இந்நூல் எவரோ ஒரு புலவரால் கி.மு. 200-க்கும் கி.பி.200-க்கு மிடையில் செய்யப் பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இந் நூலில் கண்ணன் தான் கடவுளினவதாரமெனக் கூறுகின்றனர். இது வேதாந்த, சாங்கியக் கொள்கைகளையும் ஆகமக் கொள்கைகளையும் ஒன்று சேர்க்கும் படி செய்யப்பட்டதெனக் கருதப்படுகிறது. இதற்குச் சங்கரர், இராமானுசர், மாதவர், வல்லபர் முதலிய பலர் தத்தம் கொள்கைகளை நாட்டி உரை செய்திருக்கின்றனர். இவ்வுரைகளைப் பின்பற்றியே இதன் மொழி பெயர்ப்புகளும் செய்யப்பட்டுள்ளன. உரையாசிரியர்கள் பகவத் கீதையின் உண்மைப் பொருளைக் காணவேண்டுமென்னும் நோக்கம் கொள்ளவில்லை; அதனைத் தமது கொள்கைகளுக்கு அரணாகப் பயன்படுத்தியுள்ளனர்.24 மகாபாரதம் *மகாபாரதம் கௌரவருக்கும் பாண்டவருக்குமிடையில் நேர்ந்த போரைப் பற்றிக் கூறுகின்றது. பாரதப் போர் குருச்சேத்திரத்தில் நிகழ்ந்தது. இது தில்லிக்கு வடமேற்கிலுள்ள பானிபாத்# எனச் சொல்லப் படுகிறது. பாரதப்போர் கி.மு.1400 இல் நிகழ்ந்தது. மாபாரதம் தொடக்கத் தில் திராவிட சம்பந்தம் பெற்ற கதையாக இருந்ததென்றும் பின் அது ஆரிய நாட்டுக் கதையாக மாற்றப்பட்டதென்றும் கலாநிதி இராதாகிருஷ் ணன் போன்ற அறிஞர் கருதுகின்றனர்.25 வேதங்களைக் கேட்கவோ படிக்கவோ அருகரல்லாத பெண்களும் சூத்திரரும் படித்தற்காக இதி காசங்கள் செய்யப்பட்டனவெனச் சாயணர் கிருட்டிண எசுர் வேத உரையிற் கூறியிருக்கின்றார்.26 பாரதத்தைச் செய்தவர் வியாசமுனிவர் என வழங்குகிறது. இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி கிறித்து வுக்குப்பின் பல நூற்றாண்டுகள் வரை வளர்ந்து கொண்டு சென்றதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பாரதம் வியாசரால் 24,000 சுலோகங் களாகச் செய்யப்பட்டுப் பின் 6,000,000 சுலோகங்களாக விரித்தெழுதப் பட்டதென்றும் இப்பொழுது ஒரு லட்சம் சூத்திரங்கள் வரையிலுள்ளன என்றும் கூறப்படுகின்றன. மகாபாரதத்தின் பிந்திய பகுதிகளில் யவனர், பாலவர் (Parthians) சகர் முதலியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள் ஒரு கடவுளின் வெவ்வேறு வடிவங்களெனக் கொள்ளப்பட்டன. சிவன் திருமால் வழிபாடுகள் முதன்மை பெற்றிருந்தன. இராமாயணத்தில் சிவனைப் பற்றிக் கூறப்படும் கதைகள் மகாபாரதத்தில் விரித்துக் கூறப்படுகின்றன. சிவன் திரிபுரங்களை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது முதலிய கதைகள் கூறப்படுகின் றன. வீட்டும பருவத்தில் அருச்சுனன் துர்க்கையை வழிபட்ட செய்தி காணப்படுகின்றது. கண்ணன் சிவனிடம் கேட்ட வரங்களிலொன்று தான் சிவபக்தனாக இருக்க வேண்டுமென்பது. பாரதம் தொடக்கத்தில் திருமால் வழிபாடு சம்பந்தப்பட்ட நூலாக இருக்கவில்லை. கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டளவில் பிராமண மதத்தினரால் இது வைணவ நூலாக்கப்பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுவர். இராமாயணம் இராமாயணம் வான்மீகராற் செய்யப்பட்டது. நாட்டுப்பாடல்கள் போலிருந்த பழைய பாடல்களிலிருந்து இராமயணஞ் செய்யப்பட்ட தெனக் கருதப்படுகின்றது. இது கி.மு. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற் றாண்டில் தொடங்கி கிறித்துவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் வரை வளர்ந்து கொண்டு சென்றது. தொடக்கத்தில் இது பழைய கதையைக் கூறுவதாக இருந்தது. பின்பு அது வைணவ நூலாக மாற்றப்பட்டது. சீதாபிராட்டியின் தந்தையாகிய சனகன் யாக்ஞவல்கி காலத்தவராகக் கூறப்படுவதாலும், யாக்ஞவல்கி சனமேசயன் காலத்தவராதலாலும் இராமாயண நிகழ்ச்சி பாரத நிகழ்ச்சிக்குப் பிற்பட்டதெனக் கருதப் படுகின்றது. பாரத நிகழ்ச்சிகளைப்பற்றியோ இராமாயண நிகழ்ச்சியைப் பற்றியோ வேதங்கள் கூறவில்லை. வேதகால மக்கள் உழவு சாலைச் சீதை என்னும் பெயரால் வழிபட்டார்கள். இராமாயணம் ஆரியக் கொள்கைகள் தென்னாட்டிற் பரப்பப் பட்ட வரலாற்றைக் கூறுகிறதெனச் சிலர் கூறுகின்றனர். இராமாயணப் போர் தென்னாட்டினருக்கும் இராவணனுக்கும் நேர்ந்த போராகக் காணப்படுகிறது. இராமர் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டுக்கொண்டு உடனே திரும்பி விட்டார். அவர் வழியில் சிவலிங்கம் வைத்துப் பூசித்த தலம் இராமேசுவரம் எனப்படுகிறது. இராமரால் நேர் நின்று போரில் வெல்லுதற்கரியனாயிருந்த வாலி பூசித்த தலம் குரங்காடு துறை. இராவணன் சிவலிங்க பூசை செய்யும் சிவ பத்தனாக இருந்தான். இராமாயணத்திற் கூறப்படும் சமயம் சிவலிங்க வழிபாடாக இருந்தது. இந்திரன் தெய்வங்களுக்குத் தலைவனாக இருந்தான். காமன், குபேரன், கார்த்திகேயன், விட்டுணு, சிவன், இலக்குமி, உமை முதலிய தெய்வங்களும், தெய்வங்களாக்கப்பட்ட சேடன், சடாயு, நந்தி முதலிய வும் கூறப்படுகின்றன. வழிபாடு வேள்வி முறையாக இருந்தது. விட்டுணு வும் சிவனும் தலை இடம் பெறுகின்றனர். சிவன் காமனை எரித்தது, பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது, பாற்கடலிலெழுந்த நஞ்சைச் சிவனுண்டது, தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தது, சிவன் திரிபுரங் களை எரித்தது முதலிய கதைகள் இராமாயணத்திற் காணப்படுகின்றன. இராமர் அவதாரமாகக் கூறப்படவில்லை. வட நாட்டுக்கதை ஒன்றையும் தென்னாட்டுக்கதை ஒன்றையும் இணைத்துச் செய்யப்பட்டது இராமா யணம் என்னும் கருத்தும் இருந்து வருகின்றது.27 புராணங்கள் இதிகாசங்கள் தோன்றியபின் புராணங்கள் தோன்றின. இவை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றின. அபத்தம்பரும் (கி.மு.400) கௌடலியரும் புராணங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். ஆகவே அக் காலத்தில் புராணங்கள் இருந்தனவென்பது தெரிகிறது. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோயில் புரோகிதர்களால் எழுதிவைக்கப்பட்ட வரலாறுகளும் செவி வழக்கில் வந்த பழங்கதைகளும் திரட்டப்பட்டுப் புராணங்கள் செய்யப்பட்டன. இவை பல காலங்களில் கூட்டியும், குறைத்தும், மாற்றியும் எழுதப்பட்டுள்ளன.28 பதினெட்டுப் புராணங் களும், பதினெட்டு உபபுராணங்களுமுள்ளன. பாகவதம், நாரதீயம், கருடம், பதுமம், வராகம் என்பவை விட்டுணு புராணங்கள். சிவ, இலிங்க, இஸ்கந்த, அக்கினி, மற்ச, கூர்ம என்பன சிவ புராணங்கள்; பிரம, பிரமாண்ட, வைவர்த்த, மார்க்கண்டேய, வாமன, பாவிச்ஸ்யா என்பன பிரம புராணங்கள். இவற்றுள் பல பத்து அல்லது பன்னிரண்டு நூற் றாண்டுகளுக்கு முன் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன. புரா ணங்கள் பிரபஞ்சப் படைப்பு, சலப்பிரளயம், மனுவந்தரம், மனுக்கள், தேவர்களின் பிறப்பு, அவர்களின் வரலாறு முதலியவற்றைக் கூறுகின் றன. புராணங்களைச் செய்தவர் வியாசர் என்னும் ஐதீகம் வழங்குகின்றது. புராண காலத்தில் பிரமா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுளர் மும்மூர்த்தி களாக்கப்பட்டனர். வழிபாடு கோயில் வழிபாடாக இருந்தது.* நாதனாரருள் பெறு நந்தி தந்திடக் கோதிலா துணர் சனற் குமரன் கூறிட வாதராயண முனி வகுப்ப வோர்ந்துணர் சூதனோதியது மூவாறு தொல்கதை (கந்த புராணம்) #“மகாபாரதப் போருக்குப்பின் ஆங்காங்கு நாட்டுக் கதைகளாக வழங்கியவை எல்லாம் திரட்டப்பட்டன. அத்திரட்டு, புராண சங்கிதை என்னும் பெயர் பெற்றிருந்தது. புராணசங்கிதையை ஆதாரமாகக் கொண்டு பல புராணங்கள் எழுந்தன. காலந்தோறும் இவற்றுள் பின் சேர்ப்புகளாகப் பல எழுதிப் புகுத்தப்பட்டன. பிரமாண்ட, வாயு, மற்ச என்பவை காலத்தால் முற்பட்டவை; பிரம வைவர்த்த, சிவ, வாமன, பாகவதம் என்பவை மிகப் பிற்காலத்தவை; மற்றவை இடைக்காலத்தவை. இவற்றுள் பழையவை மார்க் கண்டேயமும் பிரமமும். பிரம புராணத் தின் பகுதி பழையது அன்றாயினும் அது ஆதி புராணமெனப்பட்டது. பத்மபுராணம் மற்சபுராணத்துக்கு உறவுடையதாகக் காணப்படுகின்றது. அதன் பெரும் பகுதி பிற்காலத்தது. அதில் பஞ்சதந்திரக்கதை, இதோப தேசக்கதை போன்ற நீதிக் கதைகள் காணப்படுகின்றன. புராணங் களாவன : பிரம, பத்ம, விட்டுணு, சிவ, பாகவத, நாரதீய, மார்க்கண்டேய, அக்கினி, பாவிசிய, பிரமவைவர்த்த, இலிங்க, வராக, இஸ்கந்த, வாமன, கூர்ம, மற்ச, கருட, பிராமண்ட. இவ்வரிசையில் புகழ்பெற்ற வாயு புராணங் காணப்படவில்லை. தொடக்கத்தில் வாயுபுராணமும் பிரமாண் டமும் ஒன்றாக இருந்தன. இவ்விரு புராணங்களும் சொல்லுக்குச் சொல் ஒத்திருக்கின்றன. வாயுபுராணம் கூர்மபுராணம் இவ்விரண்டையும் ஒன்றாகக் கொண்டு வாயாவிய பிரமாண்ட எனக் கூறுகின்றன.” “பதினெட்டுப் புராணங்களைத் தவிரப் பதினெட்டு உப புராணங் களுமுண்டு. இவை முனிவர்களாற் செய்யப்பட்டவை எனக் கூர்மபுரா ணமுங் கருடபுராணமுங் கூறுகின்றன. அவற்றுக்கு மிக்க பழமையைக் கொடுப்பதற்காக அவை மனுவால் செய்யப்பட்டவை என்று பத்மபுரா ணம் கூறுகின்றது. உப புராணங்களாவன : சனற்குமார, நரசிம்ம, ஸ்கந்த, சிவதர்ம, துர்வாச, மார்க்கண்டேய, கபில, வாமன, உசான, பிரமாண்ட, வருண, காளிகா, மகேசுவர, சாம்ப, சௌர, பரசுராம, மாரீச, பார்க்கவ என்பன.” தரும சாத்திரங்கள் 29வேதங்களில் சொல்லப்படும் தருமங்களை அல்லது ஒழுக்கங் களைத் திரட்டிக் கூறும் நூல்கள்* தரும சாத்திரங்கள் எனப்பட்டன. ஆசுவலாயனம், போதாயனம், அபஸ்தம்பம் முதலியன சூத்திர வடிவில் செய்யப்பட்ட பழைய நூல்கள். தரும சூத்திரங்களைத் தொடர்ந்து மிகுதி நூல்கள் தோன்றின. மனு மிருதியும் யாக்ஞவல்கிய மிருதியும் மிருதிகளில் முதன்மையுடையவை. தரும சாத்திரங்கள் பதினெட்டு எனப்படுகின்றன. மனு, யாக்ஞவல்கியம், நாரதீயம், பராசரம், பிரகஸ்பதி முதலியவும் பிறவுமாகிய மிருதிகள் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த இருடிகளின் பெயர்களைப் பெற்றிருப்பினும் அவை கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகளின் பின் செய்யப்பட்டனவாகக் காணப்படுகின்றன.# விசயநகர அரசர் காலத்தில் வித்தியாரணியர் பராசர மிருதிக்கு விரிவுரை செய்தார். அம்மிருதி நூலை ஆதாரமாகக் கொண்டு விசயநகர அரசரின் சட்டங்கள் செய்யப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் செய்யப்பட்ட இந்துச் சட்டம் (இந்து லா) என்பது மீமாம்சை நூலையும் மிருதி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு பிராமணராற் செய்யப் பட்டது. சூத்திர வடிவில் செய்யப்பட்ட தரும நூல்கள் கௌதமம், போதாயனம், ஆபஸ்தம்பம், வசிட்டம், விஷ்ணு என்பன. மிருதி நூல்கள் பின்வருவன : மனு, அத்திரி, விஷ்ணு, ஹாரிதர், *யாக்ஞவல்கியர், உசனர், ஆங்கீரசர், யமர், ஆபஸ்தம்பர், சம்வர்த்தர், காத்தியாயனர் , பிரகஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், விகிதர், தக்கர், கௌதமர், சாதாதபர், வசிட்டர் முதலியவர்களின் பெயர் பெற்றவை. வைதீகத்தில் வருணமும் வருணாச்சிரம தருமங்களும் முக்கிய முடையன. பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நான்கு வருணங் களும் பிறப்பினால் உண்டானவை. இவர்களுக்குள்ள நீதிகளும் வெவ் வேறானவை. தமிழ்நாட்டு நீதி அவ்வாறிருக்கவில்லை. பிறப்பினால் எல்லாரும் ஒரு குலத்தினர்; செய்யும் தொழில் வேற்றுமையால் அவர்கள் வெவ்வேறு குலத்தினர். ஆயினும் “பிறப்பொக்கு மெல்லாவுயிர்க்குஞ் சிறப்பொவ்வா - செய்தொழில் வேற்றுமையால்” (திருக்குறள்) “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்” (திருமந்திரம்) என்கின் றன தமிழ் மறைகள். வடநாட்டு நீதிக்கும் தென்னாட்டு நீதிக்குமுள்ள வேறுபாட்டை, “வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந் தோர்கள் - உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என்னும் மனோன்மணீயச் செய்யுள் இனிது விளக்குகின்றது. தென்னாட்டில் வைதீகம் வடநாட்டில் ஆரியர் தமிழர் என்னும் இரு இனத்தினரும் கலந்து ஒன்றுபட்டனர். வைதீகமும் உள்நாட்டு மதமும் கலப்படைந்தன. பிராமண மதத்தினர், தாம் புதிதாகச் சென்று வாழ நேர்ந்த இடங்களுக் கேற்ப அம் மக்களின் ஒழுக்கங்களையும் தெய்வங்களையும் தம்மவை போலத் தழுவிக் கொண்டார்கள். வேத மதத்தையும் வேள்விகளையும் எதிர்க்கும் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரையே அவர்கள் விட்டுணுவின் அவதாரமாக்கித் தமது கடவுளருள் சேர்த்துக் கொண்டார்கள்.# பத்திரபாகு என்னும் சமண முனிவரின் தலைமையில் மௌரிய சந்திரகுப்தனும் பல சமண முனிவர்களும் மைசூரிலுள்ள பெலகொள என்னுமிடத்துக்குச் சென்று தங்கினார்களெனத் தென்னிந்திய சமணர் களின் வரலாறு கூறுகின்றது. இவர்களை அடுத்துப் பிராமணர்களும் பௌத்தரும் தெற்கே வந்திருக்கலாம்.31 பிராமணர் தமது மதத்தைப் பரப்பும் நோக்கமாகவோ, அதிகாரத்தை நாட்டவிரும்பியோ இங்கு வரவில்லை. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் இவர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள். வடநாட்டுப் பிராமணர் வழக்குகள் சிலவற்றோடு தமிழ் வழக்குகள் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கின்றன. சங்க காலத்தில் அங்குமிங்கும் சில வைதீக மதத்தினர் வாழ்ந்து கொண்டிருந் தார்கள். அவர்கள் தமிழர் சமயக் கொள்கைகளில் மாற்றத்தைச் செய்யக்கூடிய அவ்வளவு பெருந்தொகையினராக இருக்கவில்லை.32 யாகங்கள் செய்வதால் பகைவரைப் போரில் வெல்லலாம், செல்வம் அதிகரிக்கும், ஆயுள் பெருகும் என்னும் நம்பிக்கைகள் இருந்தன. தமிழ் அரசருட் சிலர் இந் நம்பிக்கைகளில் தோய்ந்து பிராமணப் புரோகிதர் வாயிலாக யாகங்கள் செய்தனர்.33 இது சங்க கால அரசர்கள் சிலருக்கு “இராசசூயம் வேட்டட”, “பல்யாக சாலை” முதலிய அடை மொழிகள் வழங்கியமை கொண்டு அறிய வருகின்றது. ஆங்கிலத்தில் வரலாறு எழுதியவர்கள் தமிழில் அந்தணர் என்னும் சொற் காணப்பட்டால் அதை பிராமணர் என்று மொழிபெயர்த்திருக் கிறார்கள். மற்றைய நாடுகளில் போலவே தமிழ் நாட்டில் சமய கருமங்களைக் கண்காணிக்கும் குருமார் இருந்தார்கள். இவர்கள் அந்தணர் எனவும், பார்ப்பனரெனவும், புரோகிதர் எனவும் அறியப்பட்டார்கள். இப்பெயர்களை எல்லாம் பிராமணன் என்று மொழிபெயர்த்ததினால் தமிழ் நாட்டில் சமயமிருக்கவில்லை, குருமாரிருக்கவில்லை, குருமார் வடநாட்டினின்றும் வந்தனர்; சமயமும் வடநாட்டினின்று வந்தது என்றும் தவறான கொள்கைகள் எழுகின்றன. வட நாட்டார் படையெடுப்பு முற்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வடக்கே தண்டகம் என்னும் பெருங்காடு இருந்தது. அது இப்போதைய ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பவற்றை அடக்கிய பரப்பாக இருந்தது. தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களே வடக்கு நோக்கிச் சென்று விந்திய மலைத்தொடர் வரையில் குடியேறினார்கள். விந்தியத்துக்குத் தெற்கில் வாழ்ந்த எல்லா மக்களும் தொடக்கத்தில் ஒரே மொழியும் பண்பாடும் உடையவர்களாக இருந்தார்கள். வைதீக மதம் வடநாட்டி னின்றும் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தது. வைதீகரின் மொழி சமக்கிருதமாக இருந்தது. பௌத்த சமண மதங்களும் தெற்கு நோக்கி வந்தன. இம்மதங்களின் மொழிகள், பிராகிருதங்களும் சமக்கிருதமுமாக இருந்தன. பிராகிருதங்களும் சமக்கிருதமும் தெற்கே வாழ்ந்த மக்களின் மொழியோடு கலந்தன. அதனால் கன்னடம், தெலுங்கு, துளு, மலை யாளம் முதலிய மொழிகள் தோன்றின. கலிங்கம் ஆந்திரம் முதலிய நாடுகள் நந்தர் மௌரியர் முதலிய வட நாட்டார் ஆளுகைக்குட்பட்டிருந்தன. மௌரிய ஆட்சி வீழ்ந்தபின் சாதவாகனர் என்னும் அரசர் ஆந்திர நாட்டை ஆண்டனர். மௌரியர் ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள் அவ்வாட்சி ஒழிந்தபின் கட்டுப்பாடற்ற சிற்றரசர்களாயினர். இவர்கள் பிராமணராகவும் வைதீக மதத்திலும் சமக்கிருதத்திலும் பற்றுடையவர்களாகவுமிருந்தார்கள். அசுவமேதம் முதலிய வேள்விகளைச் செய்து வந்தார்கள்.34 தமிழ் நாட்டினின்றும் சென்று வடக்கே குடியேறிய ஆரியமயமானவர்களே ஆந்திரர் என வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள். சிறீ சாதகர்ணி என்னும் சாதவாகன அரசன் (கி.மு.189) பெரிய யாகங்களைச் செய்தா னென்றும் யாகத்திற் புரோகிதராக இருந்த பிராமணருக்குப் பத்தாயிரக் கணக்கான பசுக்களையும் , ஆயிரக்கணக்கான குதிரைகளையும், அநேகம் யானைகளையும் பல கிராமங்களையும், பத்தாயிரக்கணக்கான கார்சப் பணத்தையும் தானமாகக் கொடுத்தானென்றும் ஒரு சாசனம் கூறுகின்றது. இவ்வாறு ஆந்திர நாடு வைதீகமயமாக இருந்தது. சாதவாகனர் வீழ்ச்சி அடைந்த போது அவர்களின் கீழ் அதிகாரி களாக இருந்தோர் கட்டுப்பாடற்ற சிற்றரசர்களாக மாறினர். இவர்களில் சிலர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின்மீது படை எடுத் தார்கள். இவர்கள் சோழ நாட்டின் ஒரு பகுதியாகிய தொண்டை நாட்டைவென்று காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்தார்கள். இவர்கள் பல்லவர் என அறியப் பட்டார்கள். இவர்கள் தமிழறியாதவர்; வைதீக மதத்தினர்; சமக்கிருதக் கல்விக்குப் பேராதரவு அளித்தவர்.35 பல்லவர்காலச் சாசனமொன்று இஸ்கந்தவர்மன் பாரத்துவாச கோத்திரத்தவன் எனக் கூறுகின்றது. பல்லவரைத் தொடர்ந்து வடக்கில் நின்றும் தெற்கே படை எடுத்து வந்தவர்கள் இராட்டிர கூடர், கதம்பர், கங்கர், ஹோய்சலர், சாளுக்கியர், காகதீயர் எனப் பலராவர். இவர்களில் பௌத்தம் அல்லது சமணத்தைத் தழுவாத அரசர் வைதீகராகவும் வடமொழிப் பற்றுடையராய் அதனை ஆதரிப்போராகவும் இருந்தனர். கடம்ப அரசர் பிராமண வமிசத்தவராக இருந்தனர்.36 மயூரவர்மன் என்னும் கதம்ப அரசன் (கி.பி.345-360) பதினெட்டு அசுவமேதயாகங்கள் புரிந்து பல கிராமங்களைப் பிராமண ருக்குத் தானம் வழங்கியதைப் பற்றிச் சாசனம் ஒன்று கூறுகிறது. விசயநகர அரசாங்கம் வைதீகமயமாக இருந்தது. வித்தியரணியர் பராசரமிருதிக்கு உரை எழுதினார். அவர் உரையையும், மிருதியையும் தழுவி அரசாங்கச் சட்டங்கள் செய்யப்பட்டன. சமக்கிருதக் கல்வியை வளர்ப் பதற்கு பெருமுயற்சி செய்யப்பட்டது.* பிற்காலத்தில் ஆரியக் கொள்கை களைத் தழுவிய தென்னாட்டரசர் தம்மைச் சத்திரியர் எனக் கூறிக் கொண்டு பூணூல் தரித்தனர்# பண்டைத் தமிழரசர் இவ்வாறு செய்து கொள்ளவில்லை. கோயில்கள் வைதீகரின் வழிபாடு யாக முறையாகவும், தென்னாட்டினர் வழிபாடு கோயில் முறையாகவும் இருந்தன. வேதங்களில் கோயிலமைத் தல், கோயில் கிரியைகள் செய்தல், திருவைந்தெழுத்து ஓதுதல், திருநீறு பூசுதல் போன்றவற்றுக்கு விதிகளும் விளக்கங்களும் கிடையா. கோயில் வழிபாடு, விழாக்கள் அவற்றின் விளக்கங்கள் போல்வன ஆகமங்களில் கூறப்படுகின்றன. கோயில் கிரியைகள் சில கருத்துக்களை விளக்கும் அபிநயங்கள் என அறிஞர் கூறுகின்றனர். இது காரணமாகவே தேவதாசி வழக்கம் கோயில்களில் இருந்து வந்தது. முற்காலத்தில் கல்லாலெடுக் கப்பட்ட கோயில்கள் நகரங்களிலேயே இருந்தன. ஏனைய இடங்களில் நிழல் மரங்களின் கீழ் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. பிற் காலத்தில் அவ்வருட் குறிகளைச் சுற்றிக் கட்டடமமைக்கப்பட்டது. குத்தா லத்தில் ஆலும் பலாவும், திருநெல்வேலியில் மூங்கிலும், மதுரையில் கடம்பும், திருவானைக்காவில் நாவலும், சிதம்பரத்தில் தில்லையும், திருவொற்றியூரில் மகிழமும் தலமரங்களாக இருத்தல் இதற்குச் சான் றாகும். எல்லா மக்களும் உயர்வு தாழ்வு என்னும் வேறுபாடின்றி அருள் தறிகளை வழிபட்டார்கள். அருட்குறியையும் அதனைச் சூழ்ந்த இடத் தையும் மேற்பார்த்துக் கடவுளை அர்ச்சித்தவர்கள் பார்ப்பார் எனப் பட்டனர். பார்ப்பார் என்பதற்கு மேற்பார்ப்பவர் என்பது பொருள். வடநாட்டினின்றும் வந்த பல்லவர் ஹோய்சளர், கங்கர், சாளுக் கியர், இராட்டிர கூடர் முதலிய அரசர் வைதீக சமயத்தவர்களாக இருந் தார்கள்; சிவன் திருமால் முதலிய கடவுளரையும் வழிபட்டார்கள். கோயில் களில் வேளாண் மரபைச் சேர்ந்த தேசிகர் போன்றவர்கள் அர்ச்சகராக இருந்து வந்தார்கள். அவர்கள் தமிழில் துதிபாடிக் கடவுளைப் பூசித் தார்கள். கோயில் வழிபாடுகளைக் கூறும் ஆகமங்கள் தமிழிலேயே இருந்தன. “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை” “தமிழ்மண் டலமைந்துந் தாவிய ஞான முமிழ்வது போல வுலகந் திரிவர் அவிழு மனமுமெம் மாதி யறிவும் தமிழ்மண் டலமைந்துந் தத்துவமாமே” “சதாசிவந் தத்துவ முத்தமிழ் வேதம்” “செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தியிதனை நவமுரைத்தானே” “ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் பேறான வேதாகமமே பிறத்த லான் மாறாத தென்றிசை வையகஞ் சுத்தமே” எனவரும் திருமந்திரச் செய்யுட்கள் சைவசித்தாந்த ஞானமும் ஆகமங் களும் தமிழிலிருந்தன என்பதைத் தெரிவிக்கின்றன. வைதீக சமயத்தை மேலாகக் கொண்ட அரசர் பார்ப்பாரை விலக்கிப் பிராமணரை அர்ச்சக ராக அமர்த்தினர். அவர்கள் தமிழறியாதவரும் கோயில் கிரியைகளை அறியாதவருமாக இருந்தார்கள். ஆகவே கோயில் வழிபாட்டுக்கு விளக்கம் கூறும் ஆகமங்கள் வடமொழிப்படுத்தப்பட்டன.* இப்பொழுது வட மொழியில் காணப்படும் ஆகமங்கள் எழுதப்பட்டுள்ள சமக்கிருத நடை கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததென ஆராய்ச்சி அறிஞர் கூறுகின் றனர். வட மொழிப்படுத்தப்பட்ட ஆகமங்களினிடையிடையே வைதீகக் கருத்துக்களும் புகுத்தப்பட்டன. வடமொழிப்படுத்தப்பட்டபின் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன. தில்லையில் தேவாரங்கள் பூட்டிவைக்கப்பட் டிருந்த வரலாறு இவ்வகை முயற்சிகளிலொன்றாகும். புத்தகோசர் என்பார் சிங்கள மொழியிலிருந்த பௌத்த நூல்களைப் பாளியில் மொழி பெயர்த்தபின் சிங்கள நூல்களை எல்லாம் திரட்டி எரித்துவிட்டாரென வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். இது போன்ற கதியே தமிழுக் கும் நேர்ந்தது.# சைவத்துக்கு மாறுபட்ட வைதீகர் கோயில் பூசகராக அமர்ந் ததைத் தமிழறிஞர் விரும்பவில்லை. “பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை யர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே சீர்கொண்ட நந்தி தெரிந்து ரைத்தானே.” “சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடயம் விட்டோரு முணர்வின்றி பத்தியுமின்றிப் பரனுண்மை யின்றியூண் பித்தேறு மூடர் பிராமணர் தாமன்றே.” “நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது காற்பாச நுண்சிகை கேசமா நூலது வேதாந்த நுண்சிகை ஞானமா நூலிடை யந்தணர் காண நுவலினே.” என்னும் திருமந்திரச் செய்யுட்கள் வைதீகப் பிராமணரை நோக்கிக் கூறப் பட்டவை என அறிஞர் கருதுகின்றனர். அருள்தறிகள் அல்லது சிவலிங்கங்களைச் சுற்றிக் கோயில்கள் எழுந்தன. தமிழ் நாட்டிற் பிராமணர் பலர் இருக்கவில்லை. இக் கோயில் களில் பூசகராக அமர்த்துவதற்கு அரசர் வடநாட்டினின்றும் மூவாயிர வர் நாலாயிரவர் எனப் பிராமணக் குடும்பங்களைக் கொண்டு வந் தார்கள். அவர்களைக் கோயிலைச் சூழவும் கிராமங்களிலும் குடியேற் றினார்கள்.* அவர்களுக்கு நிலங்களும் வீடுகளும் மானியமாக அளிக்கப் பட்டன. அவர்களுக்கு எல்லா வரிகளும் நீக்கப்பட்டிருந்தன. போதிய பிராமணர் தென்னாட்டிலில்லாமையால் பிராமண ரல்லாதாரும் பிராமணராக்கப்பட்டார்கள். பிராமண வகுப்பினர் தமிழ் நாட்டுக் குருக்கள் குடும்பங்களிலும் திருமணஞ் செய்து கொண்டார்கள். சைவ வைதீக மதங்களின் கலப்பு தமிழர் சமயத்தைக் குறித்து சேஷ ஐயங்காரவர்கள் திராவிட இந்தியா என்னும் தமது நூலிற் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: தமிழர்களிடையே அழகுக் கலைகளும் சமயமும் வளர்ச்சியடைந்திருந் தன. “தென்னிந்தியாவில் தத்துவஞான நூல்கள் இருக்கின்றன. அவற்றில் வடநாட்டுச் செல்வாக்கு ஓரளவு காணப்பட்டாலும் நாட்டுக்குச் சொந்தமான தத்துவஞானம் காணப்படுகின் றது. வரலாறு சம்பந்தமான ஆராய்ச்சிக்கு அவை பெரிதும் பயன்படத்தக்கன” என்று மாக்ஸ்மூலர் ஆறு தத்துவஞானங்கள் என்னும் நூலில் கூறியுள்ளார். தென்னிந்திய சமயம் தனிப்பட்ட தொடக்கமுடையது; பிற்காலத்தில் அது ஆரியச் செல்வாக்குப் பெற்றது. தமிழரின் சமயம் சில வகைகளில் ஆரியச் செல்வாக்குக்கு உட்படவில்லை என்றும், அது ஆரியர் சமயத்தின் மீது செல்வாக்கு நடத்தியதென்றும் காட்ட முடியும். வேதக் கொள்கைகளையும், வேதக் கிரியைகளையும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவைகளின் முதன்மையைக் கங்கை யமுனை ஆறுகள் பாயும் பலம் பொருந்திய அவர்கள் நாடுகளிலும் பௌத்தமும் சமணமும் அறைகூவி எதிர்த்தன. உயர்ந்த சாதியினர் எனப்பட்ட சிறுபான்மையினரே வேதக் கொள்கை களைப் பின்பற்றினர்; பெரும்பாலோர் பழைய உள்நாட்டு மதக் கொள்கைகளைப் பின்பற்றினார்கள். வேதகாலத் தெய்வங்களின் பெயர் மூலங்கள் தெளிவாகக் காணப் படவில்லை. அப்பெயர் மூலங்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் காணப்படவில்லை. ஆகவே அத் தெய்வங்கள் தமிழரின் தெய்வங்க ளாதல் வேண்டும். ஆரியர் வழிப்பட்ட வருணன் தமிழர் தெய்வமாதல் வேண்டும். கடற்கரைகளில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட இத் தெய்வத்தை ஆரிய இருடிகள் தமது தெய்வங்களுள் சேர்த்து வழிபட்டார்கள். ஆரியரின் உருத்திரன் தமிழர் வழிபட்ட இன்னொரு தெய்வம். உருத்திரன் என்பது சிவந்தவன் (சிவன்) என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பு. வெற்றியைக் கொடுக்கும் கொற்றவை தமிழர் தெய்வம். ஆரியரின் துவட்டா என்னும் தெய்வம் தமிழ்க் கம்மியரின் தெய்வமாகலாம். தமிழ் உழவரின் தெய்வம் இந்திர வணக்கத்துள் மறைந்து விட்டது. சிவ, முருக வணக்கங்கள் ஆரியரின் வருகைக்கு முன் இந்திய நாட்டில் இருந்தன. இந்து மதத்திலுள்ள சிவன், கிருட்டிணன், இராமர், துர்க்கை முதலிய தெய்வங்களும், தெய்வங்களின் அவதாரங்களும், மறு பிறப்புக் கொள்கை களும் வேதங்கள் அறியாதவை. வேத மதத்தில் காணப்படும் இவை அல்லாத பிற போக்குகள் பாரசீகம், கிரீஸ் முதலிய நாடுகளில் காணப் படுவன போன்றவை. பழந்தமிழரின் சமயம் சிவ வழிபாடாக இருந்ததெனப் போப்பையர் போன்ற அறிஞர் கருதினர். சிவன் அரூபமான தியான வடிவிலும், இலிங்க வடிவிலும் வழிபடப்பட்டார் என்று டாக்டர் இஸ்டிபின்சன் கூறியுள்ளார். *பூவும் புகையும் கொண்டு வழிபடுதல் பழைய தமிழரின் வழிபாட்டு முறை. பூ இதயத்தையும் புகை அஃது உருகுவதையும் குறிப் பிடுகின்றன. இராவணன் பொன்# இலிங்கத்தைத் தன்னுடன் கொண்டு சென்று பூவும் புகையும் கொண்டு வழிபட்டான். இராவணனும் வாலி யும் பெரிய சிவபக்தர்கள். வாலி பூசித்த தலம் குரங்காடு துறை என்னும் சிவத்தலம் எனப்படுகிறது. இமயம் முதல் குமரி வரையில் கோயில்களில் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாபாரதம் சிவலிங்க வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றது. அசுவத்தாமாவை அருச்சுனன் வெல்லும் வலிமையைப் பெற்று அவன் சிவனை இலிங்க வடிவில் வழிபட்டதென வியாசர் கூறியிருக்கின்றார். அசுவத்தாமா கடவுளை மனித வடிவில் வழிபட்டார். வேதங்களும் உபநிடதங்களும் இலிங்க வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றன. புதிய கற்காலக் குடியிருப்புகளில் இலிங்கங்கள் காணப் பட்டன. சிவனை இலிங்க வடிவில் வழிபடுதல் கற்காலத்திலிருந்த தென்பது இதனால் தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் சிவன் என்னும் சொல் காணப்படவில்லை என இரமண சாத்திரி கூறியுள் ளார். 36சிவன் என்னும் பெயர் வழக்கிலிருந்தது. அகத்தியர் சிவனிடத்தில் தமிழைக் கற்றார். இதனால் சிவன் தமிழர் கடவுளெனத் தெரிகிறது. இருக்கு வேதம் இலிங்க வணக்கத்தைக் கண்டிக்கிறது. இதனால் சிவ வணக்கம் வேத காலத்துக்கு முன் இருந்ததெனத் தெரிகிறது. தமிழரின் கடவுளர் மலை முகடுகளிலுறைபவர். தமிழர் கடவுள் மலை அரசன். பிற்காலத்தில் சிவன் தென் முகக்கடவுள் (தக்கணாமூர்த்தி) எனப்பட்டார். ஆகமங்கள் தமிழ்த் தொடக்க முடையன. அவை சைவ சித்தாந்த ஞானத்துக்கு ஆதாரமாகவுள்ளன; அவை தமிழரின் முதிர்ந்த அறிவிற் பிறந்தவை. அவை மகேந்திர மலையிலிருந்து சிவனால் வெளியிடப் பட்டவை. மகேந்திரம் திருநெல்வேலிக்கும் திருவிதாங்கூருக்கும் இடை யிலுள்ள பொதிய மலையின் ஒரு சிகரம். திருவாசகம் சிவபெருமானை “மந்திர மாமலை மகேந்திர வெற்பன்” “தென் பாண்டி நாட்டான்” எனக் கூறுகின்றது. சிவன் தலைச் சங்கமிருந்த புலவர்களுள் ஒருவர். இறை வனைக் குறிக்கும் பழைய சொல் கடவுள். உள்ளத்தைக் கடந்தவன் என்பது இதன் பொருள். பொது மக்களிடையே முழுமுதல் வணக்கத் தோடு சிறு தெய்வ வணக்கமும் பாம்பு வணக்கமும் இருந்தன. இன்றும் அறிவு மயமான தத்துவ ஞானங்களோடு மூட நம்பிக்கைகளுமிருந்து வருகின்றன. ஆரியர் இடி, காற்றுப் போன்ற இயற்கைப் பொருள்களையும் இயற்கை நிகழ்ச்சிகளையும் தெய்வங்களெனக் கொண்டு அவற்றுக்குப் பலியிட்டு வழிபட்டார்கள். இவ்வழிபாடு தமிழருக்குத் தெய்வ நிந்தை போலவிருந்தது. ஆரியரின் தெய்வங்கள் தாழ்ந்தனவாகக் கொள்ளப் பட்டன. அவை பொருட்டுச் செய்யப்பட்ட வேள்விகள் தடுக்கப்பட்டன. மிகப் பழைய காலத்தில் தமிழர் தத்துவஞானமுடையவர்களாக இருந்தனர். இருக்கு வேதகால ஆரியர் மறுபிறப்புக் கொள்கையை அறிந்திருக்கவில்லை. அவர்கள் இக் கொள்கையைத் தமிழரிடமிருந்து அறிந்தார்கள். தமிழரிடையே முதன் முதல் கொண்டு வரப்பட்ட அயல்நாட்ட வர் செல்வாக்கு வேதமதமாகும். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படாத சமயங்களும் நாகரிகங்களும் ஒன்றுபடும்போது என்ன நிகழ்கிறது? சொந்த வழிபாடும் தத்துவ ஞானமுடையவர்களாக இருந்த தமிழ ரிடையே ஆரியர் தமது மதத்தையும் தத்துவ ஞானத்தையும் பரப்ப முயன் றார்கள். வேதமதம் வழக்கம்போல் உள்நாட்டு வழக்கங்களையும் சமயக் கொள்கைகளையும் தழுவிக் கொண்டது. தமிழரின் வீரத் தெய்வங்களும் (தெய்வங்களாக்கப்பட்ட வீரர்) பிறதெய்வங்களும் பிராமணரின் தெய்வங்களாக்கப்பட்டன. இரு மதங்களுக்கும் கலப்பு உண்டாயிற்று. தமிழர் சமயத்தின் மீது அயலவர் செல்வாக்கிருந்ததைப் பற்றி நாம் சங்க நூல்களில் சிறிது அறிகின்றோம். உருத்திரன் வேதங்களில் சிவனென்று கூறப்படவில்லை என்றும் அவர் புயற் கடவுளாகக் கூறப்பட்டுள்ளாரென்றும் வேத ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். சிவ என்னும் சொல் வேதத்திற் காணப்படுகிற தென்றும் அது கடவுளைக் குறியாமல் அருள், சாந்தம் என்பவற்றைக் குறிக்கிறதென்றும் டாக்டர் போப் கூறியுள்ளார். வேதத்தில் சிவனென்னும் பெயர் காணப்படவில்லை என டாக்டர் இஸ்டிபின்சனும் காட்டியுள் ளார். உருத்திரனை அக்கினி எனக் காட்ட முடியுமாயினும் அக்கினியை யும் உருத்திரனையும் சிவனெனக் காட்டமுடியாது. உருத்திரன் ஒரு மூர்க்க தெய்வம். அது மற்றைய வேத தெய்வங்களோடு கூறப்பட் டுள்ளது. வேதங்களுக்குப் பிற்பட்ட காலத்தில் அது மும்மூர்த்திகளுள் ஒன்றான சிவனாகக் கொள்ளப்பட்டது. உருத்திரனையும் மூர்த்திகளுள் ஒன்றாகக் கொண்ட தமிழர் சிவனை மும்மூர்த்திகளிலும் மேலான கடவுளாகக் கொண்டனர். இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகளைத் தமிழ் மறைகளிலிருந்து காட்டலாம். “மூவர் கோனாய் நின்ற முதல்வன்” “முழுமுதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும் வழி முதலே” என்று திருவாசகம் கூறகின்றது. தமிழரின் சைவமதம் வடநாட்டுச் செல்வாக்குக்குட்பட்டது. அப்பொழுது தமிழர் சைவத்துள் வேதமதத்துக்கு இடமளித்தார்கள். வேதத்தில் காணப்படும் உருத்திரனாகிய புயல் கடவுளைப் பிரித்தெடுத்து அதற்குச் சிவனுக்குரிய தொழில்களைக் கொடுத்துச் சிவனாகக் கொண் டார்கள். ஆரியர் சிவனை உருத்திரன் எனக் கொண்டனர். இவ்வாறு இணைக்கப்பட்ட உருத்திர - சிவன் ஆரியர் தமிழர் கடவுளாக இருந்தார். தமிழர் தெய்வங்கள் ஆரியர் தெய்வங்களுள் இடம் பெற்றதும் சிவன் மும்மூர்த்திகளுள் ஒன்றாக்கப்பட்டார். வேதங்கள் நான்காக்கப்பட்ட போது உருத்திரன் தேவர்களின் தேவனாக இருந்தார். உபநிடத காலத்தில் வேத தெய்வங்களுக்குப் பதில் உருத்திர சிவ வழிபாடு இருந்தது. அவர் மங்களகரமாக இருந்தபோது மகேசுவரன் என்றும், மூர்க்க மாகவும் மாமிசம் புசிப்பவராகவும் இருந்தபோது உருத்திரரெனவும், உலகத்தைக் காப்பவராக இருக்கும் போது மகாதேவரெனவும் அறியப் பட்டார். வழிபடுவோருக்கு வேண்டிய சித்தி அளித்தலின் சிவன் என்னும் பெயருண்டான தென்று மாபாரதம் கூறுகின்றது. எலும்பு மாலை அணிதல் முதல் யோகியாகிய தோற்றமளித்தல் வரையில் சொல்லப்படும் சிவனின் வடிவங்கள் மனிதனின் அறிவு படிப்படியே வளர்ச்சியடைந்த காலங்களில் அவர்கள் கடவுளுக்குக் கொடுத்து வழிபட்ட வடிவங்களைக் குறிக்கின்றன.* வேதங்களுக்கும் ஆகமங்களுக்கு முள்ள வேறுபாடுகள் #இந்துக்களிடையே இன்று நடை முறையிலிருக்கும் சமயமும் தத்துவ ஞானமும் ஏறக்குறைய முழுமையும் ஆகமங்களை ஆதாரமாகக் கொண்டவை. இவற்றுக்கும் வேதங்களுக்கும் தொடர்பிருக்கவில்லை. மகாபாரதத்துக்குப் பின் வைதீகசமயம் சீரணமடையத் தொடங்கி இன்று முற்றாக இறந்து விட்டது. சிரௌத கிரியைகளின் பெரும்பகுதி மறைந்து விட்டது. அக்கினி ஆதானம் போன்ற அற்ப கிரியைகள் மிகச் சிலரால் செய்யப்படுகின்றன. ஸ்மார்த்தக் கிரியைகளும் விரைவில் மறைந்து கொண்டு வருகின்றன. எக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மூன்று தலை முறைகள் தீ ஓம்பத் தவறுகிறார்களோ அக் குடும்பத்தினர் பிராமணத் தன்மையை இழந்து விடுகின்றனர் என்று தரும சாத்திரம் கூறுகின்றது. இவ் விதியின்படி மிகச்சில குடும்பங்களையே பிராமண வகுப்பைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம். இந்தியா, சமயத்தை மிகப் பின்பற்றும் நாடு. சமயம் ஆகம சம்பந்தமாக இருக்கிறதே அன்றி வேத சம்பந்தமாக இருக்க வில்லை. வேதங்களுக்கும் ஆகமங்களுக்குமுள்ள மாறுபாடு பழைய காலத்தில் நன்கு அறியப்பட்டிருந்தது. ஆகமக் கொள்கையும் வைதீகக் கொள்கையும் எதிரானவை. சில நூற்றாண்டுகளின் முன் இவை ஒன்று சேர்க்கப்பட்டன. ஆகவே இக் காலத்தவர் இரண்டு கொள்கைகளுக்கு முள்ள வேறுபாடுகளை உணராமல் இருக்கின்றனர். ஆகமங்கள் வேதங் களிலிருந்து பிறந்தவை என்றும், அவை வேதங்களில் கூறப்பட்டவற்றை விளக்க இக் காலத்துக்கேற்பச் செய்யப் பட்டவை என்றும் கொள்கைகள் நிலவுகின்றன. வேத மந்திரங்கள் தொகுக்கப்பட்டபின், அவை எவரா லும் செய்யப்படாமல் தாமாக உள்ளன என்னும் நம்பிக்கை இருந்தது. ஆகமங்களைக் கடவுள் கூறியதாக அந்நூல்கள் கூறுகின்றன. வேத சங்கிதை களிலுள்ள மந்திரங்கள் வைதீகக் கிரியைகளில் ஓத வேண்டியவை. ஆகமங்கள் சிவவழிபாடு திருமால் வழிபாடுகளில் கைக்கொள்ள வேண்டிய கிரியைகளைப் பற்றியும், யோக சாதனைகளைப் பற்றியும், தத்துவ ஞானங்களைப் பற்றியும் கூறுகின்றன. வேதங்கள் மந்திர பாகம் பிராமணபாகம் அல்லது கன்ம காண்டம் ஞான காண்டம் என இரு பகுதிகளுடையன. இவற்றுக்கு மீமாம்சை வேண்டப்படும். ஆகமங்களுக்கு விளக்க உரைகள் மாத்திரம் வேண்டப்படும். வேதங்கள் சந்தம் என்னும் நடையில் எழுதப்பட்டுள்ளன. பாஷா என்னும் நடையின் காலம் கி.பி.1000. வைதீகக் கிரியைகள் தீ சம்பந்தப்பட்டவை. ஒவ்வொரு கிரியை யின் போதும் தீ மூட்டி எரிக்கப்படுகிறது. தீ, சுவாலையாக எரியும் போது தேவர்களுக்கு அளிக்கும் உணவு சுவாலையில் இடப்படுகின்றது. ஆகமக் கிரியைகளுக்குத் தீ வேண்டப்படுவதில்லை. உணவு படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட உணவின் சத்தைத் தெய்வம் ஆவியாக நின்று உண்கிறது; படைத்தவர் உணவை எடுத்துச் சுற்றத்தவருக்கும் நண்பருக்கும் கொடுத்து உண்கிறார். வேதக்கிரியைகளில் தேவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தேவனுக்கும் பிரபஞ்சத்தில் ஒவ்வோர் அதிகாரமுண்டு. ஆகமக் கிரியைகளில் ஒரு முழு முதற் கடவுளே உண்டு. அவருக்கு படைப்பு முதலிய எல்லா அதிகாரங்களுமுண்டு. வேதக்கிரியைகளில் புரோகிதர் புரியும் ஒவ்வொரு கிரியைக்கும் வெவ்வேறு மந்திரங்களுண்டு. சோமக் கொடி கொண்டு வரும் வண்டியில் எருதுகளைப் பூட்டுதல், எருதுகளை ஓட்டுவதற்கு கம்பு வெட்டுதல், பலி செலுத்தும் பொருளைக் கையா லெடுத்தல், பால் காய்ச்சுதல், தயிர் கடைதல் இவை போன்ற பெரிய அல்லது சிறிய கிரியைகள் ஒவ்வொன்றுக்கும் பாடல் அல்லது வசன வடிவிலுள்ள மந்திரங்கள் சொல்லப்பட்டன. ஆகமக்கிரியைகளில் வேதமந்திரங்களுக்கு இடமில்லை; அங்கு மிங்கும் சில வேதமந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பொருத்தமானவையல்ல. தூ எனத் தொடங்கும் ஒரு மந்திரம் தூபங் காட்டும்போது சொல்லப்படுகின்றது. இம் மந்திரம் வண்டியின் நுகத்தை உயர்த்துவதைக் குறிக்கின்றது. ஆகமக் கிரியைகளில் போற்றி என முடியும் துதிகள் பாடப்படுகின்றன. வேதக் கிரியைகளின் நோக்கம் தீயில் பலிப் பொருள்களை இடுவது. ஆகமக் கிரியைகள் ஒரு அரசனுக்கு அல்லது ஒரு விருந்தினனுக்குச் செய்வது போன்ற உபசாரங்களைச் செய்கின்றன. வைதீகக் கிரியைகளுக்குக் கடவுளின் திரு உருவம் வேண்டப்படவில்லை. தீ எல்லாக் கடவுளரையும் குறிப்பதாக இருந்தது. ஆகமக் கிரியையில் வழிபடும் தெய்வத்தைக் குறிக்கும் திருவுருவம் இன்றியமையாதது. வேதத்தின் சிகரம் வேதாந்தம். வேதாந்தம் என்பது பிரபஞ்சத் தோற்றத்துக்குக் காரணமாகவுள்ள பிரமத்தை அறிந்து தானே பிரமமாய் பிறப்பை ஒழிப்பது. ஆகம முறை பத்திமார்க்கம். சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் படி முறைகளால் கடவுளை அடைய வேண்டுமென அது கூறுகின் றது. ஆகமங்களில் கூறப்படும் தத்துவஞானம் வேதாந்த ஞானத்துக்குப் புறம் பானது. வேதாந்தம் கடவுளொன்றே உள் பொருள் என்கிறது. ஆகமங்களில் யோக மார்க்கம் ஞானமார்க்கமென்னும் பகுதிகளிருப்பினும் பத்திமார்க்கமே முதன்மை உடையது. வைதீகக் கிரியைகள் மக்களை வருணங்களாகப் பிரிக்கின்றது. கடைசி வருணத்தவருக்கு வேதாந்தக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. வருணங்களிலிருந்து வருணாச்சிரம தருமங்கள் வளர்ந்தன. துறவு பிராமணருக்கு மாத்திரம் உரியதென்றும், சன்னியாசம் அனுட்டிப்பதால் மாத்திரம் முத்தி அடையலாமென்றும் கொள்ளப்பட்டன. ஆகவே வைதீக நெறியிலொழுகும் பிராமணருக்கு மாத்திரம் முத்தி கைகூடும் எனக் கொள்ளப்பட்டது. ஆகமங்கள் இக் கொள்கையைப் பொருட் படுத்தவில்லை; சண்டாளனாயினும் கடவுளுருவங்களை வைத்துப் பூசிக் கலாமென்றன. கண்ணப்பர் திருக்காளத்தியில் கடவுளுக்கு இறைச்சி வைத்து நைவேத்தியம் செய்தார். திருநாளைப்போவார் பறைக் குலத்தி னர். வைணவ அடியாருள் ஒருவர் பாண வகுப்பினர். ஆகமங்கள் நால் வருணக் கொள்கையை அனுமதிக்கவில்லை. சூத்திரர் வேதங்களைக் கேட்டல் கூடாதென வாதராயணர் கூறியிருக்கின்றார். ஆகமங்களை எவரும் பயிலலாம். சிவதீட்சை பெற்ற பறைக் குலத்தினனும் பிராமண னுக்குத் தீட்சை கொடுத்து அவனுக்குக் குருவாகலாம். ஆகமக் கொள்கை யினரிடையே சன்னியாசமும் பரவியது. வைணவ சன்னியாசிகள் ஏகாந்தி களெனவும், சைவசன்னியாசிகள் சிவயோகிகள் எனவும் அறியப்பட் டார்கள். சன்னியாசத்திலும் பத்திமார்க்கம் சிறந்ததெனவும், சன்னி யாசம் பத்திமார்க்கத்துக்கு வாய்ப்பு அளிப்பதாகவும் கொள்ளப்பட்டன. முற்காலத்தில் வைதீகருக்கும் ஆகமக் கொள்கையினருக்குமிடை யில் வெறுப்பு இருந்து வந்தது. ஆகமக் கொள்கையினர் கடவுள் பெயரால் இரத்தப் பலியிடுவதையும், இறைச்சி உண்பதையும் - சிறப்பாக மாட்டிறைச்சி உண்பதை - விலக்கினார்கள். இரத்தப்பலியையும் வேள்வி களையும் பற்றிய எதிரொலி மாபாரதத்தில் காணப்படுகின்றது. இக் கண்டனங்களின் பலனாக விலங்குகளைப் பலியிடுவதற்குப் பதில் மாவி னால் செய்யப்பட்ட விலங்கினுருவங்கள் பலியிடப்பட்டன. பாகவத மதத்தினரின் சிறந்த நூல் ஆகமக் கொள்கைகளைத் தழுவிய பகவத்கீதை. இந்நூல் வேதாந்த ஞானத்தையும் சாங்கிய ஞானத்தையும் சம்பந்தப் படுத்திக் கூறுகின்றது. இஞ்ஞானங்கள் ஒரு உண்மையை விளக்கும் இரு வழிகளாகவும் ஆகமக் கருத்துடையனவாகவும் காணப்படுகின்றன. பகவத்கீதை வேதத்தின் கரும கண்டத்தைத் தள்ளுகின்றது. அந்நூலுள் ஆகமங்களுக்குரிய பல பரிபாடைச் சொற்கள் காணப்படுகின்றன. வைதீகர் ஆகமக் கொள்கையினரை மிக வெறுப்புடன் நோக்கி னர். வேத மந்திரங்களில் ஆரியர் தாசுக்களை ‘மிரித்திரவாச’ என இகழ்ந் தார்கள். அவ் விகழ்ச்சியின் தொடர்பே வைதீகர் ஆகமிகரிடம் காட்டிய வெறுப்பாகும். யமுனாச்சாரியர் காலம் முதல் வைதீகக் கொள்கைகளும் ஆகமக் கொள்கைகளும் இணைக்கப்பட்டபோதும் இன்றும் அவ் வெறுப்பை நாம் காணலாம். வேதாந்திகள், சைவ வைணவ ஆலயங் களில் பூசை செய்யும் பிராமணரை மற்றைய பிராமணரிலும் தாழ்ந்தவ ராகக் கருதுவர். ஐம்பது ஆண்டுகளின் முன்னும் அத்வைத வேதாந்திகள் கோயில்களுள் நுழையாதிருந்தமையை யாம் அறிவோம். வேதத்தின் சிரசு எனப்படும் வேதாந்தம் ஆகமத்தைக் கண்டிக்கிறது. வாதராயணர் பாசுபதத்தையும் பாஞ்சராத்திரத்தையும் கண்டித்திருக்கிறார். ஆரியரின் வேதங்கள் தோன்றுமுன் தாசுக்களின் மதம் வட நாட்டிலும் தென்னாட்டிலுமிருந்தது. சிரௌத கிரியைகள் பிராமணர், அரசர், புரோகிதருக்கு அதிக தக்கணை கொடுக்கக்கூடிய செல்வம் படைத்த வணிகருக்கு மாத்திரம் உரியனவாயிருந்தன; பொது மக்கள் தமது சொந்தக் கிரியைகளை உடையவர்களாக இருந்தார்கள். அக் கிரியைகள் தாசுக்களின் கிரியைகளாக இருந்தன. அவை இன்று சாந்தால் மக்களிடையே காணப்படுவனபோல் தெய்வத்துக்கு உணவு படைத்தல் ஆடுதல் பாடுதல் வகைகளிலிருந்தன. வால்மீகர் சுக்கிரீபனின் முடி சூட்டைப் பற்றிக் கூறியிருப்பது இதனை விளக்குகின்றது. மகாபாரதத்தின் பின் ஆரியரின் தீ வழிபாடு வீழ்ச்சி அடைந்தது. பிராமணரின் பார்வை நடைமுறையிலிருந்த கிரியைகளில் சென்றது. அவர்கள் பிராமணங்களைப் பத்தி வழியில் திருப்பினார்கள்; திருமூர்த்தி என்னும் கொள்கையைத் தோற்றுவித்தார்கள்; சாங்கியத்தில் கூறப்படும் முக்குணத்தைத் திருமூர்த்திகளோடு தொடர்பு படுத்தினார்கள். சிறிது சிறிதாக 108 வைணவ ஆகமங்களையும் 28 சைவ ஆகமங்களையும் செய்தபின் 77 சக்தி ஆகமங்களையும் செய்தார்கள். பாணினி முனிவர் சிவ வழிபாட்டையும் கிருட்டிண வழிபாட்டையும் குறிப்பிட்டிருக்கின்றார். வேதாந்தமும் ஆகமமும் மிக மெதுவாக இணைந்து கொண்டு வந்தன. புராணங்களில் அவை ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக வருகின்றன; ஒன்றாக இணையவில்லை; சங்கராச்சாரியர் காலத்திலும் அவை இணையாமலே இருந்தன. அவர் வாதராயணரைப் பின்பற்றி பாசுபத பாஞ்சராத்திர மதங்களைப் புறச் சமயங்களெனக் கொள்கின்றார். சங்கரர் செய்த பிரபஞ்ச இருதயம் என்பது ஆகமத்தைத் தழுவிய நூல். அவர் சட்மத தாபனாசாரியர் எனப்பட்டார். அவர் விஷ்ணு, சிவன், சத்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் என்னும் வழிபாடுகளைத் தாம் தொடங்கிய மடங்களில் ஏற்படுத்தினார். விசிட்டாத்துவைதம் என்னும் வைணவ வேதாந்தத்தை தொடங்கிய யமுனாச்சாரியர் வைணவ ஆகமங்களை வேதங்களைப் போலப் பிரமாணமாக்க வேண்டுமெனக் கட்டளையிட்டு இரண்டையும் ஒன்று சேர்த்தார். சமக்கிருத ஆதிக்கம் தெற்கே வைதீக மதம் பரவத் தொடங்கிற்று. வைதீக நூல்கள் சமக் கிருதத்தில் எழுதப்பட்டிருந்தன. தென்னாட்டவர் சமக்கிருதம் பயின்றனர். பாணினி முனிவருக்குப் பின் சிறந்த வடமொழி நூல்களைச் செய்தவர்கள் பெரும்பாலும் தென்னாட்டினராகவே காணப்படுகின் றனர்.37 அபஸ்தம்பர், போதாயனர், கௌடலியர், காத்தியாயனர், குமாரிலர், வற்சயாயனர், சாயணர், சங்கரர், இராமானுசர், மாதவர், வித்தியாரணியர் முதலிய தென்னாட்டினர் செய்த வடமொழி நூல்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. புராணங்கள் பலவற்றைச் செய்தவர்களும் தென்னாட்டினரே. பல்லவரும் அவருக்குப் பின் வந்த வடநாட்டு அரச பரம்பரை யினரும் சமக்கிருதத்துக்குப் பேராதரவு அளித்தார்கள். பிராமணர் வாழும் இடங்கள் தோறும் கடிகைகள் அல்லது பிரமபுரிகள் என்னும் சமக்கிருதக் கலாசாலைகள் நிறுவினார்கள். அவைகளில் கல்வி பயிலும் மாணவருக்கும் கல்வி பயிற்றும் ஆசிரியருக்கும் உணவு உடை முதலியன வழங்கினர். கலா சாலைகளில் வேதங்கள், வேதாங்கங்கள், தரும சாத்திரங்கள், அர்த்தசாத்திரம் முதலிய கல்விகள் கற்பிக்கப்பட்டன. சமக்கிருதக் கல்வி பிராமணரின் ஏகபோக உரிமையாக இருந்தது. கடிகைகளில் கற்றுத் தேறிய பிராமணர் இராசகுருக்கள் என்னும் பெயருடன் நாடு முழுமையிலும் சென்று வைதீக மதத்தை மக்களுக்குப் போதித்தார்கள். இராச குருக்களே அரச குடும்பத்தினருக்குக் கல்வி கற்பித்தார்கள்.* பிராமணரின் சேவை வேண்டப்பட்ட இடங்களில் அவர்கள் சென்று வாழ்வதற்குத் தூண்டுதலாக நிலமும் வீடும் மானியமாக வழங்கப்பட்டன. இவ்வாறு வைதீகத்துக்கும் சமக்கிருதத்துக்கும் செல் வாக்கு வளர்ந்து கொண்டு சென்றது. சமய சம்பந்தமானவை எல்லாம் சமக்கிருதத்தில் இருத்தல் வேண்டும். சமக்கிருதத்துக்கு அதிகாரிகள் பிராமணர் என்பவை போன்ற கருத்துக்கள் நாள் வீதம் பலமடைந்து கொண்டு வந்தன. ஆகவே, தமிழில் சமயசம்பந்தமான தல புராணங் களோ, வேறு புராணங்களோ எழுதுவோரும் தாம் எழுதுவன ஏதோ வடமொழி நூலிலுள்ளன எனக் கூறும் வழக்கு ஏற்பட்டது. சமக்கிருதத் திலிருந்து தான் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தோன்றின. அம் மொழியிலில்லாத அறிவு வேறெதிலுமில்லை எனவும் கூறப்பட்டன.38 பல்லவரும் அவருக்குப் பிற்பட்ட அரசரும் தமிழ்க் கல்வியின் பொருட்டு ஆதரவளித்ததைப் பற்றிய கல்வெட்டுச் சாசனம் ஒன்றேனும் காணப் படவில்லை. கல்வி என்பது சமக்கிருதக் கல்வி ஒன்றுமே எனக் கருதப் பட்டது. சமக்கிருதக் கலா சாலைகளில் ஆகமங்கள் பயிலப்பட்டதாகக் கூறப்படவில்லை. வைதீகர் ஆகமங்களையும், வேதங்களையும் வேதத் தோடு சம்பந்தப்பட்ட நூல்களையும் போல் சிறந்தனவாக மதிக்க வில்லை. கோயில் பூசை செய்யும் பிராமணர் ஏனைய பிராமணரிலும் தாழ்ந்தவர்களாக நோக்கப்பட்டனர்.* சைவ மடங்கள் 40தமிழ் நாட்டில் வைதிகம் சம்பந்தம் பெறாத சைவ மடங்க ளிருந்தன. அவற்றில் குரவரிடத்தில் மhணhக்கர் பாடங்கேட்டல் சமய சாதனைகள் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில்கள் பிராமணரின் கைக்கு மாறியபோது கோயில்களுக்குப் பக்கத்தில் மடங்க ளமைக்கப்பட்டன. கோயிலை மேற்பார்க்கும் பிராமணர் மடத்திலிருந்து கோயில் கிரியைகள் ஒழுங்காக நடைபெறுவதைக் கவனித்து வந்தார். இவ்வாறிருந்து வரும்போது பிராமணரல்லாதவர் துறவிகளாவதற்கும் (சன்னியாசம் கொள்வதற்கும்) அவர்கள் மடங்களுக்குத் தலைவராவ தற்கும் தடை எழுந்தது. ஆகவே, பிராமணரல்லாத துறவிகள் குகைகளை நாடிச் சென்றனர். பிராமணரல்லாதாரின் குகை மடங்கள் அதிகப்பட்டு அவற்றின் செல்வாக்கும் அதிகப்பட்ட போது அம்மடங்களை அழித்துத் தரைமட்டப்படுத்தும்படி பிராமணர் தம்மை ஆதரிப்போரைத் தூண்டினர்.41 ‘குகை இடி கலகம்’ என்னும் பெயரில் பெரிய கலகங்கள் நேர்ந்தன. குகை இடி கலகங்களைப்பற்றிச் சாசனங்கள் கூறுகின்றன. பிராமணரல்லாதாரின் மடங்கள் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் பிராமண மதத்தவர் பிராமண ரல்லாதாரின் மடமொன்றுக்குக் கொடுத்த சொத்து பிடுங்கப்பட்டதைப் பற்றி ஒரு சாசனங் கூறுகின்றது. விசய நகர அரசர் காலத்தில் பிராமண ரல்லாதார் துறவு பூணுவதற்கு எதிரான வழக்கொன்று நேர்ந்தது, அப்பொழுது விசய நகர அரசரின் கீழ் அதிகாரியாக இருந்த சின்ன செவ்வப்ப நாயக்கர் அவ் வழக்குக்குத் தீர்ப்பளிக்கும் படி சிவாக்கிர யோகிகளைக் கேட்டுக்கொண்டார். அவர் தமது தீர்ப்பை ‘சைவசமய சன்னியாச பத்ததி’ என்னும் நூல் வடிவில் கூறினார். அது பிராமண ரல்லாதாருக்கு அனு கூலமானது. கோயில்கள் பிராமணர் கைப்பட்டபின் இன்னொரு கொள்கை யும் தலை எடுத்தது. சமய அறிவை வேதங்களிலிருந்து நேரே அறிவதல்லது உள் நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைக் கற்று அவை மூலம் அறிவதால் பயனில்லை என்னும் கொள்கை எழுந்தது. வடமொழிக் கல்வி பிராமணருக்கு மாத்திரம் ஏக போக உரிமையாக இருந்தது. 42இக் கொள்கையைத் தமிழறிஞர் எதிர்த்தனர். வைணவரில் தென்கலையினர் இதற்குத் தலைசாய்க்கவில்லை. அக் காலத்தில் தமிழ் மறுமலர்ச்சி பெற்றது. உரையாசிரியர்கள் தோன்றிப் பழந்தமிழ் நூல்களுக்கு உரைகள் செய்தனர். சந்தான குரவர்கள் சமய நூல்களைத் தமிழில் செய்தனர். சித்தர் நூல்களும் இக் காலத்தை அடுத்து எழுந்தன. சித்தர் நூல்கள் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க எழுந்தவை. சைவ மடங்கள் பல தோன்றின. சைவ மடங்களின் தலைவர் பிராமணரல்லாதாராகவே இருந்து வருவர். பிராமணர் கோயில்களுக்குத் தலைவரான போது கோயில் பெயர்கள் வடமொழிப்படுத்தப்பட்டன. திருமறைக்காடு வேதாரணிய மெனவும், முதுகுன்று விருத்தாசலம் எனவும், குடமூக்கு கும்பகோணமென வும், வெண்காடு சுவேதவன மெனவும், திருப்புகலூர் சரணயபுரம் எனவும், திருவையாறு பஞ்சநதம் எனவும் பட்டன. கோயில்கள் தொடர்பாகச் சாசனங்களில் காணப்படும் சில பெயர்கள்; தளிச்சேரி - கோயிலைச் சூழ்ந்த குடியிருப்பு; கற்றளி-கற் கோயில்; நட்டுவன், அண்ணாவி நடனங் கற்றுக் கொடுப்போர்; ஆடுவார்; கனபாடி; முகவீணைக்காரர்; உடுக்கை வாசிக்கிறவர்; வீணை வாசிப் போர்; ஆரியம் பாடுவார்; தமிழ் பாடுவார்; கொட்டி மத்தளக் காரர்; முத்திரை சங்கு ஊதுவோர்; பக்க வாத்தியகாரர்; கட்டியங்கூறு வோர்; மேளம் வாசிப்பவர்; காந்தருவர்; விளக்குப்போடுகிறவர்; நீர் தெளிப்பவர்; எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள்; வண்ணான்; நாவிதன்; கொல்லன்; தையான்; பாடுகிறவன்; சோதிடன்; கன்னான்; ஓச்சன்; தட்டான்; பாணன்; கணக்கன். வைதீகத்துக்கு எதிர்ப்பு சங்க காலத்திறுதி முதல் சில நூற்றாண்டுகள் பௌத்த சமண மதங்கள் தெற்கில் செல்வாக்குப் பெற்றிருந்தன. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வச்சிர நந்தி என்னும் சமண முனிவரின் தலைமையில் மதுரையில் ஓர் தமிழ்ச் சங்கம் இருந்தது. இச் சங்கத்திலேயே பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல்கள் பல செய்யப்பட்டன வென்று கருதப்படுகின்றன. திருஞான சம்பந்தர் காலத்துக் கூன் பாண்டியனும், அப்பர் சுவாமிகள் காலத்தில் பல்லவமாறவர்மனும் சமண மதத்தைத் தழுவியிருந்தார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் பௌத்தரோடு வாதுசெய்து வென்றதாகப் புராணம் கூறுகின்றது. பௌத்த சமண மதங்கள் செல்வாக்குப் பெற் றிருந்த காலத்து சைவரும் வைணவ சமயத்தவரும் ஒருங்கு சேர்ந்து பௌத்த சமண மதங்களை எதிர்த்தார்கள். வைதீக சமயத்தினரும் இவர் களுடன் சேர்ந்தனர். அப்பொழுது வைதீகர் ஆகமக் கொள்கைகள் பல வற்றைத் தழுவினர்; தமது வேதங்கள் சைவ வைணவ சமயங்களும் முதல் நூல்களென்றனர். இக்கொள்கை பெயரளவிலிருந்ததன்றிச் செயலளவி லிருக்கவில்லை. வேதங்களும் ஆகமங்களும் மாறுபட்டனவென்னும் கொள்கை இருந்து வந்தது. வேதங்களும் ஆகமங்களும் மாறுபட்டவை யல்ல எனப் பிற்காலத்தவர் கூறிவந்தனர். பிற்காலத்தவர்கள் வேதம் எனக் கூறியவற்றை நோக்கினால் அவை வேதங்களைக் குறியாது பிற்கால உப நிடதங்களைக் குறிப்பனவாகத் தெரிகின்றன. இதனை சிவஞான முனிவரின் சிவஞான போதமா பாடியத்தில் ஆங்காங்கு கூறப்படுவன வற்றைக் கொண்டு நன்கு உய்த்தறியலாம். கோயில்களில் வைதீகர் தலைமை எய்துதலையும் அங்கு ஆரியம் பாடப்படுவதையும் அறிஞர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை” “ஆரியந் தமிழோ டிசையானவன்” எனத் திருநாவுக்கரசு நாயனார் தமது திருப்பாடல்களில் கூறி இருசாராரையும் சந்து செய்தார். “ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பிற்று” என நக்கீரர் தாம் பாடிய கோபப் பிரசாத்தில் வடமொழிப் பாடல்களைப் பாடுதலை வெறுத்துக் கூறுகின்றார். தொல்காப்பியப் பொருளதிகார உரையில் (பொருள் 490) ஆரிய நன்று தமிழ் தீதென வுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால் செந்தமிழே தீர்க்க சுவாகா. என்னும் வெண்பா ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அக் காலத்தில் ஆரியம் தமிழ் என்பவற்றுக்கு இடையிலிருந்த மாறுபாடு களை இவ் வெண்பா உணர்த்துகின்றது. வைதீகமும் சமக்கிருதமும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதனவாகவுள்ளன. வடமொழிக்குப் பாதகமாகக் கூறுவதென்பது வைதீகத்துக்கு எதிராகக் கூறப்படுவது என்னும் கொள்கை இருந்து வந்தது. தமிழறிஞர் தமிழ்மொழி வடமொழிக்கு எவ்வகையிலும் தாழ்ந்த தன்று, சிலவகைகளில் அதனிலும் உயர்ந்தது எனக் கூறி வந்தனர். தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை உண்ட பாலனை அழைத்தது மென்பு பெண்ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலே மறுபுலச் சொற்களோ காற்றீர் விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கன மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலைய மாமுனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராம்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. (பரஞ். திருவி) வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கினையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார் இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே ஒழீயினார் என்றால் இவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ கடுக்கவின்பெறு கண்டனுந் தென்திசை நோக்கி அடுக்கவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்கவாரமென் காறிரு முகத்திடை வீசி மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ (காஞ்சிப் புராணம்) மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடை யென்றுரு வேற்றிக் கண்மூடிக் கதறுவரோ (மனோன்மணீயம்) மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும் வென்றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த் தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் (சீகாளத்திப் புராணம்) பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலே. (மீ. பிள்ளைத் தமிழ்) இவ்வாறு கூறிய செய்யுள்களுக்கு விடைநிறுப்பது போலச் சாமி நாத தேசிகர் அவர்கள் தமது இலக்கணக் கொத்தில் “ஒன்றேயாயினும் தனித் தமிழ் உண்டோ” எனவும் “ஐந்தெழுத்தாலொரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே” எனவும் கூறினர். பிரயோக விவேகமுடையார் வடமொழிக்குந் தமிழுக்கும் இலக்கண மொன்றென்றனர். சிவஞான முனிவர் இருமொழிகளின் இலக்கணங் களும் வேறு என்றனர். சமீப காலத்தில் சிலர் தொல்காப்பியச் சூத்திரங் களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதெனக் காட்டினர். வடமொழி இலக்கணம் தொடக்கத்தில் தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றிச் செய்யப் பட்டதனால் இரு மொழி இலக்கணங்களுக்கும் சில ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றனவென்பதே உண்மை. வடமொழிக்கு இலக்கணம் வகுக்கத் துணை புரிந்தவர்கள் தமிழ்மக்களே என்பது அறிஞர் கருத்தாகும். “இருமொழியும் நிகர் என்று கருதிய இப் பெரியார் காலத்துக்குப் பின் வடமொழி தெய்வ மொழி என்னும் கருத்து மெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் நுழைவதாயிற்று. வடமொழியில் அமைந்த இதிகாசங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. வான்மீகர் வடமொழியில் எழுதிய ஆதி காவியத்தைத் தமிழில் அமைக்கப் போந்த கல்வியிற் பெரியர் கம்பர் (கி.பி.12ஆம் நூற்றாண்டு) “தேவ பாடையின் இக்கதை செய்தவர்” என முதனூல் செய்த புலவரைப் புகழ்ந்துரைத்தார்; வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் - தீங்கவி செவிகளாரத் தேவரும் விரும்பச் செய்தான்” என்று வடமொழிப் புலவரை வாயார வாழ்த்தினார். வட மொழி வானவர் மொழி ஆதலால் விழுமியமொழியென்றும் தமிழ் மொழியாதலால் தாழ்ந்த மொழியென்றும் கருதும் வழக்கம் மெல்ல மெல்ல எழுந்தது. வடமொழியிலமைந்த புராண நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கப்புகுந்தார் சிலர்; முதல் நூல்களாகத் தமிழிலெழுந்த நூல்களுக்கும் வடமொழியில் நூல் உண்டென்று கூற முற்பட்டார் சிலர்; நன்னூல் செய்த பவணந்தியாரும், சின்னூல் செய்த குணவீரனாரும் வீரசோழியமியற்றிய புத்தமித்தனாரும் வடமொழி இலக்கணப் போக்கைத் தழுவி எழுதுவராயினர். தமிழ்நாட்டிலமைந்த இடப்பெயர் ஊர்ப் பெயர்களையும் வடமொழியில் பெயர்த்து வழங்கத்தலைப் பட்டார் பலர். இதைக் குறித்துத் தமிழ் நாட்டுச் சாசனங்களை ஆராய்ந்து பர்ணல் என்பார் கூறும் மொழி ஈண்டு கருதத் தக்கனவாம். சில தமிழ்ப் பெயர்கள் தவறாக வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன என்றும், மற்றும் சில தமிழ்ப் பெயர்கள் அரைகுறையாக வட மொழியில் பெயர்க் கப்பட்டுள்ளன என்றும் இன்னும் சில தமிழ்ப் பெயர்கள் இயற்பொரு ளிழந்து வடநூல் கதைகளை ஏற்றுத் திரித்து வழங்குகின்றனவென்றும் டாக்டர் பர்ணல் கூறுகின்றார். பழந்தமிழ் நாட்டில் குடமூக்கு என்று வழங்கிய ஊர் கும்பகோணமாயிற்று. மறைக்காடு வேதாரணியமாயிற்று. வெண்காடு சுவேதாரண்யமாயிற்று. ஐயாறு பஞ்சநதமாகவும், அண்ணா மலை அருணாசலமாகவும் அமைந்தன ... இவ்வாறான வடமொழி உயர்ந்ததென்றும் தமிழ் தாழ்ந்ததென்றும் கற்றாரும் கல்லாதாரும் கருதினமையால் தமிழென்னும் சொல்லே வடமொழிச் சிதைவென்னும் கொள்கை வடநாட்டில் பரவுவதாயிற்று. திராவிடம் என்னும் சொல்லே திராவிடம், திராமிளம், திரமிளம், தமிளம், தமிழ் என்று ஆயிற்றென்று இலக்கண நூலோர் எடுத்துரைப்பாராயினர். இன்றும் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுந்ததென்று பிரயோக விவேகம் கூறுவதாயிற்று. தமிழ் தனிமொழி யன்றென்றும் இலக்கணக் கொத்துரைத்த தேசிகர் எழுதுவராயினர். “ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே வடமொழி தமிழ்மொழி யெனுமிருமொழியினும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக (இலக்கணக் கொத்து) என்று தமிழ் மொழியைத் தனி மொழியென்று கருதும் கொள்கையைத் தேசிகர் இழித்துரைத்தார்.”* இன்றைய இந்து மதம் வேதமதம் மறைந்து போயிற்று. இன்று யாகங்கள் நடத்தப்படுவ தில்லை. ஆகம சம்பந்தமான சிவ வழிபாடு திருமால் வழிபாடுகளோடு வைதீகக் கொள்கைகள் கலந்த மதமே இன்றைய இந்து சமயமாக இருந்து வருகின்றது.45 வடமொழியைச் சமய மொழியாகக் கொண்டவர்களும் வேதங்க ளை ஆதாரமாகக் கொள்பவருமாகிய வைதீகரே சைவ வைணவ கோயில் களுக்குப் பூசகராகவும், புரோகிதர்களாகவும் இடம் பெற்றமையால் தென்னாட்டில் பல மயக்கங்கள் இருந்து வருகின்றன. புரோகித வகுப்பினர் சமய வரலாறுகள், இந்திய வரலாறுகள் எழுதும்போது வைதீகரின் பெருமைகளை அதிகப்படுத்தியும் தமிழரின் பெருமைகளை அற்பப்படுத்தியும் கூறுவர்.46 ஆகவே சமயசம்பந்தமானவும், மொழி சம்பந்தமானவும் உண்மை வரலாறுகளை அறிவதற்கு மேல்நாட்டவர் அல்லது புரோகித வகுப்பினரல்லாதார் எழுதிய நூல்களையே நாம் நாட வேண்டியிருக்கிறது. உண்மை வரலாறுகளை வெளியிடுதல் ஒரு வகுப்பினருக்கு எதிராக நூலெழுதுதல் என்பது போலவும் தோன்று கிறது. கோயில்களிலும் அரசியல் துறைகளிலும் அதிகாரத்திலுமிருக்கும் ஒருவகுப்பினரின் வெறுப்பை ஈட்டிக் கொள்ள விரும்பாத சிலரும் உண்மை வரலாறுகளை வெளியிடப் பின்னிற்பர். மேல்நாட்டவரின் ஆராய்ச்சிகளை நம்புதல் கூடாது, ஆரியர் வெளியிலிருந்து வரவில்லை, வடமொழியும் தமிழும் இந்திய நாட்டில் என்றுமுள்ளன எனவும் சிலர் கூறிவருகின்றனர். இக் கூற்றுக்கள் ஆராய்ச்சியின் முன் வலிபெற்று நிற்க# முடியவில்லை. NOTES (Quotations from eminent authors in support of the statements found in this book) 1. The original home of the Indo-Germanic language was the long stretch of grass-land extending from the north of the Carpathians and the Lower Danube to the foot-hills below Altai and Tianshan in Central Asia skirting the shores of the Black Sea and Caspian, and extending south to Cacasus and the steep north edge of Persia. This was the area of characterization of a race of tall, fair-skinned, blue-eyed, narrow-headed giants to whom the name Proto-Nodics has been given. The grass-land made them develop a pastoral life, modified by some hunting on the one hand and some very primitive agriculture on the other. Their one noteable contribution to the growth of world civilization was that the domesticated horse. About 2,500 B.C., a great wave of descciation seems to have passed over Asia which converted steppes of the north as well as the Semites of Arabian grass-land in search of pastures new. This great displacement of tribes included the “Ganaanite” invasion of Syria referred to in the Genesis as the Semite migration into Mesapotamia leading to the establishment of a powerful Babylonian monarchy. From the northern steppes, the Nordics went out in many branches. - The age of the mantras pp. 103, 105. - P.T.S. Iyengar. 2. Pargiter adduces considerable evidence to show that the true Brahman families were of pre-Rigvedic origin, and the Aryan kings of Madhya Desa were their own priests in the earliest times had no Brahmans. - Castes in India its nature, function and origins. – J.H.Hutton. 3. The language of the Rig-Veda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit but its phonetics is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and Kol. Among the words of probable Dravidian origin in the Rig-Veda the following may be noted. anu – particle; arani – rubbing wood for fire; kapi – monkey; karmara – smith; kala – time; kunda – hole; gana – band; nana – several; nila – blue; pushpa – flower; puja – worship; pala – fruit; majura – peafowl; ratri – night; rupa – form. - The origin and development of Bengali p.42. - S.K. Chaterji. 4. … the aboriginal Dravidian culture which certainly assimilated by them, and may thus be considered as their inheritance lending itself to more convenient consideration as part and parcel of our Vedic heritage rather than as distinct from it. - Hindu view in art. p. 9 – Maluk Raj Anand (Asia Publishing house, 1957). 5. The whole of the Veda, Sruti (heard or revealed was compiled during the long period from about 1,500 B.C. to 500 B.C.) and includes the following extensive literature: (1) The four Vedas proper Rig, Yajur, Sama, Atharva which are hymns, prayers, and sacred formulas offered by priests to the gods on behalf of rich lay-sacrificers, charms for witchcraft, medicine and other homely practices, manipulated by magicians and medicine men in main for the plainer people. - Ibid p. 10. 5. The authors of the hymns, called Rishis, composed them for the purpose of invoking the help of gods in events that immediately interested them to secure success in impending battles (R.V. XIX – 4), to avert drought (R.V.68), to help to raise crops (A.V.VI. 142) to enable them to live a “hundred autums” till their sons became fathers in their turn (R.V.I. 89. 9), to satisfy all possible wants (A.V.XV.9), and to escape all kinds of dangers and difficulties (A.V.XIX.7) - The age of the mantras p.4. - P.T.S. Iyengar. 6. The shock of intercourse with the alien culture of the Dravidians awaked in the conquerors the desire to preserve their literary inheritance, and although during the time it took to give it a permanent shape it became strongly mixed with aboriginal Dravidian belief, this was the way that the Vedas, the oldest books of the Hindus came to be composed. - Hindu view of art p. 10. – Maluk Raj Anand. 7. Of the writings called Anukramani in which the metre, the deity and author of each song are given in their proper order. - The history of Indian literature p. 61. - A Weber. 8. Of the gods invoked in the Vedas the following are chief. Dyaus or Dyaus Pitar, sky or father of sky; Surya and Savitir, Vishnu, the sun-god; ushas the dawn; Agni the fire; Pritivi the earth; Soma, the intoxicating vegetable juice used in ritual; Indra the god of lightning and thunder; Varuna the universal embracer and encompasser; Adityas, boundless ones; Asvins, horse men; Vayu, the wind; Rudra, the fierce god of distruction and waste etc. This list was considerably enlarged as the Aryans continued to assimilate the gods and goddnesses of the non-Aryan inhabitants of India. - Hindu view in art. – p.11. 9. Civa is a god unknown to the Vedas; his name is a word of not frequent occurrence in the hymns, indeed but means simply prosperous, not even in the Atharvan it is the epithet of a particular divinity or distinguished by the usage, from any other adjectives. The precise relation between Civa and Rudra is not yet satisfactorily traced out. - Oriental linguistic studies. P.30. - William Dwlight Whitney. 10. Practically no traces of it (rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero like the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the proto-man, and returns no more to earth. - India and the Western World. - H.G. Rawlinson. 10. The doctrine of transmigration is entirely absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryans borrowed the idea from the aboriginals. - Cambridge History of India, p. 108. - Prof. Macdonald. 11. The simple ritual of the Rig-Veda had now under the influence of Dravidian methods of worship, became an elaborate system of mechanical rites and ceremonies in Brahmanas. - Hindu view in art. p. 18. … although the religion of the Rig-Veda hymns (composed before the Hindus crossed the Satlej) owed nothing to Indian aboriginal influence, the same is not true of later Samhitas and Brahmanas. - The riddles of Mohenjo-daro. - G.R. Hunter – New Review Vol.3, p. 314. 12. During the Brahmana period we notice the beginning of the regular worship of Siva … in this period Sivan or Rudra gradually become to be one of the most important figures of the reformed Indo-Aryan pantheon. - Pre-historic ancient and Hindu India, p.43 – R.D. Banerji. The worship of Siva or Mahadeva towards the close of this period … the deity being identified with Rudra of the Vedic poets, the howling god of tempests and the father of Maruts. - The philosophy of the Upanishads, p. 18 – A. Edward Gough. 13. The transference of the same Soma to the moon which appears in the later history of Indian religion, is hitherto-obscure; the Vedas hardly know it neither do they seem to prepare the way for it - Oriental and linguistic studies, p.10 – William Dwlight Whitney. 14. The cult of the Linga is older than the Calcolithic period of Mohenjo – Daro will be evident if we only take back our research into the domain of pre-historic archaeology. It seems probable that these pre-Aryan phallic worshippers are identical with the peoples who in later times dwelt in the Indus valley, and prejudice and indignation against whom find most eloquent expressions in the following two passages of the Rig-Veda - Pre-aryan elements in Indian Culture – K. Sur. - Indian Historical Journal 1934. 15. The vowel system of Vedic language is much simpler and its consonant system more developed than those of the parent Indo-Germanic or of its European branches. A large portion of the vocabulary of the Vedic tongue is not found in the allied languages and must have been picked up in India; and even in matters of syntax and sentence-structure it underwent special developments in Indian soil. - The age of the Mantras – p. 4. The Dravidian dialects effected profoundly the sounds, the structure, the idiom and the vocabulary of the former and the differences already alluded to between Vedic language and its hypothetic parent, called or its European decendants, Greek, Latin, etc., are due to the influence of the Dravidian dialects of India. In the course of its growth in India, on account of the constant influence of Dravidian tongues, this language lost the subjunctive mood, many infinitive forms and several noun declensions, forgot its richly varied system of real verb tenses and adopted turns of expressions peculiar to the Dravidian idiom. - Ibid, p.6. The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (i.e., borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from the Dravidian. It is not surprising, therefore, that this Indo-Germanic language was profoundly affected when it spread among the people of ancient India, that it shed some of its vowels, Indo-Germanic a,e,o all being leveled down to one uniform a, that it developed new consonants, e.g., the sibilants, s’, s, sh, hopelessly confused in the pronunciation of Sanskrit in various parts of India and that its grammar was slowly but surely modified. - Ibid p. 15. 16. All other Vedic gods (1) Savita, Pusha, Vayu, Surya, Ushas, the Maruts, Soma and Yama (2) Varuna, Rudra, Tvashta and Aditi (3) Brahaspathi, Prajapati, Skamba and Bramhanaspati are all purely Indian deities. Of these, the first group seems to have been evolved from germs of ideas brought along the current of the Indo-Germanic dialect that evolved into the language of the Mantras. The etymology of most of these names is plain, but deities corresponding to them in name and function are not found outside India. The gods of the second group seem to have been taken over from the Dravidian-speaking tribes of India. It has been already pointed out that the Dravidian languages profoundly affected the Vedic language, similarly the gods worshipped by the tribes that gradually accepted this language must have been “Aryanized” and adopted the Vedic pantheon. Those Vedic gods the etymology of whose names is not patent and who have no analogues in other Indo – Germanic dialects must have been Indian gods to whom such treatment was accorded. - Ibid pp. 123, 4. 17. Brahmanas contain discussions on both work and knowledge. Those sections of the Brahmanas which contain symbolic or spiritual discussions on both ‘work and knowledge are called Aranyakas, for these were read in the aranya (woods, forest) because owing to the obtruse character, they were not imparted everywhere to everybody indiscriminately’ and because great seclusion was needed for their comprehension. Many of the Upanishads are included among the Aranyakas; only one Upanishad is included in mantras or Samhita Viz., in Isopanishad which forms the last (fortieth) chapter of the white Yajur Veda. – What are the Upanishads? – Indo Asian Culture Vol.1 p. 53 (1952). 18. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of the Kshatriyas. Again and again in the Upanishads we meet the situation that the Brahman begs the Kshatrya for instruction which the latter after several representations of the unseemliness of such a proceeding imparts to him. – The system of Vedanta. Dr. Paul Deussen. 18. Another meaning of the word Upanishad is mystery because its teachings or contents are not revealed or imparted to anybody or everybody at any place or every place without discrimination. That is how the two words Upanishad and mystery came to be synonimus. How great a mystery the Upanishads were supposed to be gathered from this that they were not taught to any one except the eldest son or the most favourite pupil even for the gift of world kingdom – What are the Upanishads – Indo-Asian Culture Vol.1 p.53. 18. The oral methods of communication was held all the more sacred as we find in the ancient priesthood, whose ritual and gnosis depend on the living memory for their truth and sanctity. It was the mode of communication from mouth to ear combined in all the mysteries including masonry – Nature Genesis Vol.2 p. 10 – Gerald Massay. 18. On the grounds indicated above, we may infer the Upanishadic speculations originated wholly outside the pale of Vedic Brahmanism and had their source in the religio – philosophical thought currents already prevalent in India since Pre-aryan days. That a rich culture which had been flourishing in India for at least two millena before the advent of the Vedic Aryans, should produce philosophical thinking and religious ideas of refined types is no difficult to make, for, it is but normal to expect this evolution – the pre-Vedic elements constituted the texture while the Vedic did probably no more than to imprint the stamp Upanishads. It would be historically more correct, therefore, to regard Upanishadic as much as Jaina and Buddhist thought as having their roots more in non-Vedic than in Vedic ideas. We also find the basic ideas of the Samkhya and Yoga permiate Jaina, Buddhist as well as the Upanishadic outlook and it is probable that the primitive Samkhya consisted the philosophical back ground par excellence of pre-Vedic Indian thought and Yoga consisted an essential element in the cultivation of matters concerning the spirit. Both Samkhya and Yoga had developed probably already in pre-Aryan India …, the origin of Upanishads was not at all Vedic. We must not forget the priestly classes and philosophical thinkers with their religious practices and ideas who existed in India from before the coming of the Indian Aryans. By Buddha’s time they have probably been absorbed in the part of the Vedic society and came to be called Brahmans – Back ground of Buddhist Philosophy – Prof. Dr. B.B. Bhattacharia M.A.D. Ph.D. – Indo Asian Culture No.1. Upanishads (Skt. upa – unto, ni – down, sad – to sit and so literally a sitting down by, sitting one self at the feet of another, confidential communication, esoteric doctrine) With the Aranyakas the oldest speculative treatise of the Hindus; they lie at the root of the philosophical side of Hinduism equally with the mantras and Brahmanas, but they are practically the only Veda of all educated Hindus at the present day. Properly each Brahmana had its Aranyakas, or forest treatise, intended for the Vanaprasthas, or dwellers in the forest (that is Brahman who having passed the two earlier stages of the bramacharin, or student and grihastha or householder retire into the forest, to devote themselves to self mortification and religious meditations); but the mythical doctrines of the latter were so mingled with extraneous matter that the chapters called Upanishads appear to have been added to investigate more exclusively and definitely such problems as the origin of the universe, the nature of deity, the nature of soul and the connection of spirit and matter. Some of the most important are the Aitareya Upanishad and Kaushitakibrahmana Upanishad of Rigveda; the Taittriya belonging the Taittriya samhita of the Yajur Veda; the Brihadaranyaka attached to the Shatapathabrahmana of Vajasaneyisanhitha of that Veda and the Isha or Ishavasya, forming the 40th Chapter of the latter sanhita; the Chandogya and Kena belonging to the Sama Veda, and Prasana, Mundaka, Mandukya and Katha belong to the atharvaveda. Following the stratificatory principle in general the only guide in determining the age of Sanskrit works, the ancient Upanishads – that of those which occupy a place in the Sankitas, Brahmanas and Aranyakas – are believed to be older than 600 B.C. or anterior to Buddhism though the germs of the doctrines contained in them are to be in some of the latest hymns. The others range through long period, and very numerous. The ancient vedic-literature first became known outside India through these Upanishads. - The century encyclopaedia of names. 18. Dravidian Pandits composed some Upanishads and Brahmanas and why not Vedas Upanishads and Darsanas; six schools each with its text book and sutra sundry, Brahmanas and philosophies, theistical and atheistical, all of which preceded Buddah, and were founded by Kapila a quasi divine incarnation of Vishnu, but in reality a stolid Dravidian Pandit – Short Studies in the science of comparative Religions p. 250 – Forlong. 18. In a word we may say that as we pass from the Vedas to Upani-shads, we pass from prayer to philosophy from hymnology to reflections, from polytheism to monotheistic mysticism – Constructive Survey of Upanishadic Philosophy p. 3 – R.D. Ranade. 18. In the Upanishads however we find no only kings but also women and even people of dubious descent taking part in the literary philosophical aspirations of the highest knowledge – The History of Indian literature p. 220 – Winternitz. Upanishadic age to have been placed somewhere between 1,200 B.C. and 600 B.C. Ibid – p. 13. 19. Two of them (Darsanas) are wholly based on the Vedic texts and are called the two Mimamsas; they are Purva and Uttara otherwise Karma mimamsa and Brahma mimamsa, investigation of Dharma and of Brahma. The other four are based on reasoning and while paying homage to the supreme authority of the Veda do not derive their substance from Vedic texts viz., Sankhya, Yoga, Nyaya and Vaiseshika the disciplines of enumeration effort reasoning and definition respectively – Outlines of Indian Philosophy. P. 2 – P.T.S. Iyengar. 20. There is one passage only in which decided by hostile feeling towards the Brahmanic priest-hood may be discovered in Kapila’s sutras and it seems full of meaning. Among the different kinds of bondage to which men are liable but ought not to be, is one called Dakshina banda, bondage rising having to offer gifts to priests which seems to be condemned as superstitious and mischievous – Indian Philosophy – Max-Muller 21. Among the innumerable Purushas that are in the world there is one called Isvara. The mention of Isvara in the Yoga sutras has made many people describe the Yoga as a school of theism; but this is extremely inaccurate; for the Isvara mentioned in the Yoga is in no sense God. He is neither the ruler of nature nor the moral governor of the Universe. Out of the multitude of Purushas in the Universe, he is a special Purusha who was never touched by Klesa, the defects of ignorance, egoism, desire, aversion, and clinging of life, and by the mental deposits left by Karma and their fruition. In Him is fully developed the seed of omniscience which every Purusha has. He is the ancient teacher whose life is unbroken by time as ours is. The Isvara of Yoga Darsana, therefore, is neither the reality behind nature, nor any universal being which human selves find their unity. Except omniscience and mastery over time, he has no other divine attribute, His only function being that of an ancient teacher. Hence Yoga is in its tenets as atheistic as Sankya … For the Isvara here referred to is not the lord of the world, but the lord of his devotee, and He is his lord only in the sense that he figures Him in the heart as the mystic syllable ‘Om’ and this makes it easy for him to reach his own inner consciousness – Outlines of Indian Philosophy pp. 115, 116. 22. According to Haribadra’s Shaddarsanasamuchchaya Gautama and Kanada founders respectively of Nyaya and Vaiseshika systems, were of Saiva persuation. Ganaratna, in his commentary of Haribadra’s work says that the Naiyayikas were called Saivas and the Vaiseshikas, Pasupathas among the successors of Asoka we come across one Galanka who was a Saiva – The History and Culture of Indian People Vol.2 p. 456. 23. The Vedanta was a great reformation which began at least four centuries B.C. when Buddhism had obtained a firm hold in upper India … It is clearly a Dravidian reformation of the crude Aryan elemental teaching, a building up of a new - Hindusm purified by the ancient Turano philosophic schools of Kapila and embracing the piety and ethics of the followers of the great Jaina saint Mahavira and his probable disciple Sakya muni – Short Studies in the Science of Comparative Religions. P 265. Dravidians as we many conveniently designate the great rulers of India then, and from 2,000 to 3,000 B.C. Long expected evidence is now appearing that they – Dravid pandits composed some Upanishads and Brahmanas and why not Vedas, engrafting there is the hymns prayers and faith of illiterate Aryans? All these scriptures are inferior and easy compositions to philosophical works which issued from the schools of Kapila before Buddah’s day there was or any Aryan settlement in the middle Ganges. Nor would Vedic compositions prove difficult to learned Dravidian Brahmans e.g. Apastamba to Sangaracharya 800 A.D. who wrote on complicated philosophies of the Vedanta, the Bashya or Commentaries on the Sutras and Upanishads –aphorisms and hymns which are all still the admiration of even European metaphysicians, thosophists and most pious thinkers. - Short studies in the Science of Comparative Religions, p. 241. 24. The teachings of the Bhagavad Gita have suffered more than those of any other Indian book from the hands of the commentator. It is not cryptic in style like the sutras; but yet, from the great veneration paid to it on accounts of its supposed authorship and on account of its real superiority to every other scripture Indian or non-Indian, so many Bashyakaras have attempted to use it for butteressing up their special theories and expended their tender mercies on it. Its teachings and its locutions technical or otherwise have been violently tampered with by the commentators who did not possess what we call a literary conscience. The commentator did not aim to discover what exactly his author thought or attempted to express, but used the text for supporting his own special theories. If any passages were inconveniently opposed to the commentator’s theories, they were to be explained away by utalizing grammatical and etymological tricks - Outlines of Indian Philosophy. P. 246. 25. The original event Mahabharata seems to be a non-Aryan one, if we judge from the blood thirst of Bhima, the polyandry of Draupada and such other incidents, but it was soon converted into an Aryan story. - Indian Philosophy Vol.II, p.479. - Prof. S. Radhakrishnan. 26. Sayana in his commentary on the Black Yajur Veda says that the Mahabharata and the Puranas are designed to teach the law of duty to women and the sudras who were not allowed to read the Vedas. - Ibid. Vol.II, p. 452. 27. This event, it appears to be connected with the life of another Rama, who is distinguished as the Rama of the Dekhan. - Wheeler’s History of India Vol.II. Part IV. 27. The Ramayana contains an account of the exile which belongs to a much later period and cannot apparently have any connection with the earliest tradition. According to the later story Rama spent thirteen years of his exile in wandering with his wife and brother from one Brahmanical hermitage to another, in the country between the river Ganges and the river Godavari. These journeyings extended from the hill Chitra-Kuta in Bundelkhand, to the modern town of Nasik, near the sources of the Godavari, about seventy five miles to the north - west of the modern town of Bombay. The hermitages are said to have been occupied by the old Rishies who composed the Vedic hymns, and who are represented as Brahmans although they must have flourished ages before the appearance of Brahmns. The whole narrative may therefore be dismissed as aprocryphal. - Ibid. 27. Brahman tales are generally untrustworthy for traditional history. The Ramayana is highly Brahamanical and its stories are fanciful and often absurd. - Ancient Indian Historical Traditions. - F.E. Pargiter. 28. Immediately following the epics about the first century A.D. the Puranas, mythological and speculative histories of universe began to be written. They were intended to promote several particular Brahmanical beliefs which had been developing since Vedic time. - Hindu View in Art. p. 35. 28. It is now generally admitted that a great deal of the ancient medieval myth and legend enshrined in Sanskrit epics and Puranas is of non-Aryan origin and even in Vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes and sages in the form in which we find them in the Sanskrit works represent undoubted by a considerable amount of modification from their original forms whether Aryan or non-Aryan. The non-Aryan speaking masses of northern India became Aryanized in language and their tales and legends were retold as a matter of course in an Aryan language of their adoption. - S.K. Chatterji – Bulletin of the school of oriental studies, Vol.VIII (1935-1937). 28. In the earlier epoch prior to A.D. 1000 pre-Aryan legends were rendered from current Prakrit versions into Sanskrit and found a place in one or the other of the numerous Puranas, Upapuranas, Stalapuranas, and Mahatmyas and Tantras or even in Mahabharata and so were raised up to a level of pan Indian acceptance. - The history and culture of Indian People Vol.V., p.379. 28. In the 4th century A.D. Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans reedited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old Puranas were also recasted about period and good many new ones written. - Collected works of R.G. Bhandarkar, Vol.II., p. 444. 28. The Puranas naturally lent themselves to augmentations and the Puranic Brahmans used their opportunities to the full, partly with further genuine traditions, but mostly with additions of Brahmanical stories and fables and doctrine and ritual matter. Brahmanic tradition speaks from the Brahmanical stand point, describes events and expresses, feelings as they would appear to Brahmans, illustrates Brahmanical ideas, maintains and incalculates the dignity, sanctity, supremacy and even superhuman character of Brahmans, enunciates Brahmanical doctrines whatever subserved the interest of the Brahmans often enforcing the moral by means of marvellous incidents that not seldom are made up of absurd and utterly impossible details. It often introduces kings because kings were their patrons, yet even so the Brahman’s dignity is never forgotten. It is mainly the Brahmanical mistakes and absurdities that have discredited Puranas. - Ancient Indian Historical Traditions pp. 37-39. - F.E. Pargeiter. 28. Agni Purana : A Purana (so named as supposed to have been communicated by Agni to Vasishtha) devoted to the glorification of Siva but of very various contents ritual, cosmical, ethical, military, legal, medical, rhetorical, grammatical, taken largely from earlier works. It is quite modern and has no legitimate claim to be regarded as a Purana. - The Century Cyclopaedia of Names, Edited by Benjamin E. Smith. 28. Brahma Purana : One of the eighteen Puranas: so called as revealed by Brahma to Daksha. This Purana is placed first and therefore called adipurana. Its main object appears to be the promotion of the worship of Krishna. It describes the creation, the manvanthras of the life or period of Manu, the history of solar and lunar dynasties to the time of Krishna, Orissa with its temples and groves the life of Krishna, the mode of Yoga or contemplative devotion. It was not compiled earlier than the 13th or 14th century. - Ibid. 28. Brahmanda Purana : One of the eighteen Puranas so called as revealed by Brahma and containing an account of “the egg of Brahma” the mundane egg, and the future kalpas or days of Brahma. It is extent only in a number of un-authentic fragments. - Ibid. 28. Matsya Purana – A purana between fourteen and fifteen thousand stanzas complied from various materials; many chapters are identical with from Mahabharata. It is so called as narrated to Manu by Vishnu in the form of a fish. - Ibid. 28. Bagavata Purana – The Purana of Bhagavata or Vishnu, a book of great celebrity in India, exercising a more powerful influence upon the opinions of the people than any of the other Puranas. It consists 18,00 verses and is ascribed by Colebrooke to the grammarian Vopadeva, of about the 13th century A.D. Its most popular part the tenth book, which narrates the history of Krishna, has been translated into many vernaculars of India.-Ibid. 28. Skanda Purana – A Purana in which skanda is the narrator. It is said to contain 81,800 stanzas and is an aggregation of many originally unrelated works and fragments. The most celebrated is the “Kashi Kandha” “Benares section” describing minutely the temples of Shiva at or near Benares, and giving direction for Shiva worship and greater part of Kasi Kandha antedates the first attack upon Benares by Mohmud Gazni – who reigned 997 – 1030 A.D. The Utkala khanda is the section explaining the holiness of Orissa the inhabitants of which were known as Utkalas. - Ibid. 28. Linga Purana – The Purana in which Shiva explains the object of life : virtue, wealth, pleasure and final liberation. It contains 11,000 stanzas and is not earlier than the 8th or 9th century. 28. Vamana Purana – A Purana extended to about 7000 stanzas, and containing among other things, an account of the dwarf incarnation of Vishnu. It is of very recent origin having been compiled apparently only three or four centuries ago. - Ibid. 30. The social distinctions of Vedic times were those of occupation and of colour (Varna) which imposed race marked by difference of dress – white for Brahmans, red for Kshatrias, yellow for Vaisias and black for Sudras. The Aryan ethnical type which had closely intermingled with the non-Aryan population before the caste system was fully developed never continued more than a small fraction even of the population of the north. - A Short History of Indian – p. 29 – Havell. 29. Dharmashastra – The whole body of Hindu law; more specially the laws ascribed to Manu; Yajnavalkya and other inspired sages. These works are generally in three parts : (1) Achara, rules of conduct (2) Vyavahara, judicature, prayashchitta, penance. The inspired law givers are spoken as eighteen but forty two are mentioned. Manu and Yajnavalkya stand at their head. – Century Cyclopaedia of names. 31. Brahman priests, Buddhists and Jaina ascetics must have reached the land before the Christian era, and established themselves at the courts of ruling princes where they found schools of learning and exercised their influence on the thought of the times. The local gods, national deified heroes, and sacrificial cults of the people became in time absorbed into Brahmanism – A Literary History of India p. 310 – R.W. Frazer. 33. When the Brahmans settled in Southern India and the ancient Tamil Rajahs desiring to secure the benefit of the Yagas, accepted to the fire priests a supreme position to the society, the Brahmans naturally tried to introduce Socio – religious organization in Tamil religion – pre-aryan Tamil Culture p.20 – P.T.S. Iyengar. 32. Even in the first century B.C. very little Aryan influence had penetrated to the extreme south. Some Brahman colonists settled in the Dravidian countries and intermarried with the priest caste of the natives, but on the whole they made very little impression on the race. South Indian tradition records numerous instances of the Brahman as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahmana caste as sufficient Brahmans were not available when the reformed Indo Aryan religion obtained preference. The non-aryan magicians and the Dravidian priests became Brahmans – Prehistoric Ancient and Hindu India pp. 30, 37, 120 – R.D. Banerje. 32. There have been three classes of Brahmans throughtout Indian history namely (1) the ascetic devote and teacher, the Rishi or Muni (2) The priest and spiritual guide of kings, nobles and people (3) The minister of state royal officer and those who followed secular employments – Ancient Indian Historical Traditions – p. 62 – F.E. Pargiter. 32. Though in the long years that preceded the first century A.D. a few Aryans had penetrated the natural barrier of the Vindhyas and traversed the region beyond, there was not a definite attempt in founding fresh empires or settlements in the Dekhan till the date. The Pallavas were almost the first people to acquire dominians in the south. Their success in the direction seems to have attracted their followers in the north. The Rashtrakutas and the Gangas were not slow to take similar advantages – Pallavas had their own alphabet which is now known to us as the Pallava-Grantha – Dr. Burnel calls it the Eastern Chera characters and states that it should have first come to be employed in Thondaimandalam in the 4th century A.D. – Historical sketches of ancient Dekhan. p.20 – K.V. Subramanya Iyer (Madras 1917). 34. Brahmanism also flourished and most of the Satavahana rulers were devoted to it. The third king of the line performed a number of Vedic sacrifices and even named one of his sons Vedisri – A history of South India p. 95. – K.A. Nilakanta Sastri. 35. The Pallavas were followers of the Brahmanical religion and made gifts of land to gods and Brahmans in the belief that they would thereby secure health, prosperity and victory in war. Excemption of tax-action was allowed on all gifts of land to Brahmins who were held, in theory at any rate, to be entitled to a total of eighteen such immunities. This is a continuation and development of Satavahana practice, for the pallava kings also followed the Brahmanical religion, worshipped Siva and Vishnu and performed sacrifies - Ibid. 36. Religious condition that followed in the Kadamba and Ganga kingdoms were very much the same as those in contemporary Pallava kingdom – Ibid p. 105. 36. The Kadambas were a Brahman family which derived its descent from Hariti and belonged to the Manavya gotra. They were devoted to the study of the Vedas and the performance of vedic sacrifices. The Kadamba king Mayurasarman entered ghatika (college) at Kanchipuram with the intention of studying the entire Veda – Ibdi p. 105. 36. In Egypt the names of the gods were never uttered. It was a crime among the Jews to utter the name of Jawah – The mothers Vol. III p. 109. The great name of god Jhwh was commonly called tetra gamma which was never pronounced and only written was associated with the twelve tribes of Israel – Amulets and superstition, p. 379. – Sir. E.A. Wallis & Budge K.T. 37. Katyayana, the grammarian, Baudhayana the smirthi writer, and possibly Apastamba also were south Indians, but we do not know to which part of south India they exactly belonged – Malayalam and other Languages p. 1249 – Proceedings and Transactions of the 9th All India Oriental Conference, Trivandram Dec. 1937. 38. It was for many years universally believed the Sanskrit was the mother tongue of which all languages could be traced. The theory was not by far as absurd as that which had been set up some time previously by religious zealots who from an exaggerated regard untutored by science for all that is connected with the inspired books of our creed went so far as to assert that Hebrew was the mother of all the languages in the world – Vedic India p. 58 – Regozen. 39. Less than a thousand years ago the Agamas were looked on as unauthoritative and Yamuna, in founding the modern Vaishnava Visishtadvaita School felt it necessary to write the Agamapramanya the authoritativeness of the Agamas. Today, however freely scraps of Upanishads are quoted in discussions, the actual opinions and religious practices of the Hindus are taken entirely from the Agamas. For this and other reasons the Agamas have been kept secret – Outlines of Indian Philosophy p. IV. – P.T.S. Iyengar. 39. The worship of Siva or Vishnu or Sakti in temples or houses was considered a heresy by the Vedantis till in the tenth century Yamunacharya wrote the Agama Pramanya and Ramanucharya in the next century blended the Vaishnava rites and concepts and Vedic practices tents on the whole – Stone age in Inda p. 52. – P.T.S. Iyengar. 40. Saivat radition as preserved in Periyapuranam has memories of mutts organized by Appar and other non-Brahman Saiva saints. These were their spiritual homes. When the temple cult came to be codified and conventionalized with the help of *Gauda Brahmins and other north Indian Saivites during the Chola revival the mutt became the necessary adjunct of the temple presided over by Brahman for regulating and supervising the rituals. Slowly the objection to non- Brahmans renouncing the world and becoming the heads of mutts came to be established. The non-Brahman ascetics had to resort to caves and their mutts came to be known as “Kugai”. When the number and power of these non-Brahman mutts increased the orthodox people inspired a group of their followers to raze to ground these non-Brahman mutts and this is mentioned as Kugai idi kalagam in inscriptions of the reign of Kulotunga III. A theory was enunciated that the philosophic truths should be learnt from the Vedas direct and not through vernacular works. The Vaishnavite philosophers specially of the Tenkalai persuation exposed the hollowness of these pretensions. The Guru Namachivayar of the 16th century (S.I.I.Vol.I No.58) shows that this distinction of Kugai and mutt was still prevalent as late as the 16th century. In this century a dispute arose whether the non-Brahmans were entitled to become Sanyasins and Chinna Chevvappa Nayak, the chieftain of the Vijayanagar emperors Krishnadevaraya and Accuta Raya referred this to Sivagra Yogi, a Brahman ascetic. He gave his decision in favour of the non-Brahmans in the form of an elaborate thesis “Saiva Sannyasa Paddhati” Krishnadevaraya a Vaishnavite, could not have tolerated the arrogance of caste in the spiritual sphere. We find therefore the great non-Brahman mutts growing and developing in the 16th century – The notes on the Tamil Plutarch. – Prof. T.P. Meenakshisundaram. 41. No.471 of 1912 records the gift of such a monastary for a Saiva saint by a village, which also provided for the feeding of all strangers who might visit it. The property of this monastry was confiscated in the twenty second year of Kulotunga Chola III when there was a general crusade against the non-Brahmanical Saiva mathas instigated by the Brahmans – Local Government in Ancient India p. 279 – R.K. Mookerji. 42. Sanskrit learning tended to be monopoly of Brahmins, though there were exceptions, and it was particularly encouraged by means of large special endowments – A History of South India, p. 312. 44. The scheme of four varunas could not well spread among the Tamils. It only led to the confusion of caste and prevalence of social jealousies and have characterized the life of South India for a thousand five hundred years; for we learn from Thevaram of Thirunavukkarasu Nayanar that there was in his day, as there is to-day, a consciousness of rivarlry, between Brahman and non-Brahmans as they were then called Aryan and Tamilian – Pre-aryan Tamil Culture. P. 20 – P.T.S. Iyengar. 43. But when the subject matter and the contents of the Agamas and the Vedas are closely examined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles as under. – The Philosophy of the Lingayats – S.K. Sakhare. 45. We might see that it would be more correct to describe Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of Aryan invaders. For the great deities in Hinduism Siva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines such as metempsychosis and divine incarnations are either totally unknown to the Veda or obscurely adumbrated in it. The chief characterstics of mature Indian religion are characterstics of an area not of a race, and they are not the characterstics of religion of Persia, Greece or other Aryan lands. – Hinduism and Buddhism, p. XV. Sir. Charles Elliot. 46. The influence of the Dravidians on the Culture of India has been ignored, because the literature which records the development of the Hindu religion in India was the work of a hostile priesthood, whose only object was to magnify its own pretentions and decry everything Dravidian – Dravidian India, p. 119.– T.R. Sesha Iyengar. 46. At any rate we may be on our guard against looking at everything through Aryan or Brahmanical spectacles … that almost everything has passed into written form has been cast in an Aryan mould. For real history Brahmanic writers never cared anything; early events and family origins invariably assume a mythic guise; everything about non-Aryan race is either omitted or only noticed the conquest of the ‘twice’ over the ‘demons’ and ‘barberians’ – The Indian Village Community, p. 91 – B.H.Barden Powell. M.A., C.I.E. 46. A variety of causes partly political and partly literary, has tended to the belittlement of peninsular India’s contribution of the history both of India and of the whole world in large. The time is ripe for South India to champion her own cause and assert her claims to recognition – F.R.Richards I.C.S., M.A., M.R.A.S., F.R.A.S. – The quarterly Journal of the Mythic Socity Vol. IV. The early tribes of Bengal Dravidian speakers mainly were well organized, and seem to have possessed a culture of their own. The early history of Burma and Siam tells us that at a time when the Tibeto – Chinese tribes, Burmese and Tai had not yet arrived on the scene, and these centres were inhabited by only Monkhmer peoples, Dravidians from Bengal and Kalinga were emigrating into these lands, and becoming the ruling race there. Later when these non-Aryans from India assimilated Brahmanic culture, their princes claimed connection with the ancient royal house of Aryan upper India (a thing which was repeated in the case of the new Rajput clans at a later period) and introduced among the Mons and Khmers in times post Christ the Sanskrit language as well as traditions connected with Hastinapura and Ayodya – The Development of Bengali Language p.41 – S.K. Chatterji. The modern dialects of Northern India now called Sanskritic or Gaudian, have a fundamental grammatical frame work and a scheme of syntax, the same as that of the Dravidian dialects, so much so that sentences from the one set of dialects can be translated into one of the other set of dialects by the substitution of word for word, without causing any breach of idium. – History of the Tamils, p.2 – P.T.S. Iyengar (1929). Dravidian stratum in Sanskrit has been discussed by several scholars and Kittel in Kannada dictionary has shown 450 Sanskrit words with possible Dravidian connections. A few other words in both Sanskrit and Prakrit and vernaculars have subsequently been suggested as being of Dravidian origin by other scholars – The Journal of the Greater India Society Vol. III (1936) Prof. Sunitii Kumar Chatterji. காலக் குறிப்பு கி.மு. திராவிடர் நாகரிகம் 4000 சிந்துவெளி நாகரிகம் 3500 - 2500 வைசுவதமனு (சலப்பிரளயம்) 3100 பாரசீகத்திலிருந்து இந்து ஆரியன் பிரிவு 2500 ஆரியரின் வருகை 2000 - 1500 இருக்கு வேதம் 1500 - 1000 பிராமணங்கள் 800 உபநிடதங்கள் 800 - 500 கற்ப சூத்திரங்கள் (சிரௌத சூத்திரங்கள் கிரிக சூத்திரங்கள்) 800 - 600 யாஸ்கர் (நிருத்தம்) 700 தரும சூத்திரங்கள் 600 - 300 கபிலரும் சாங்கியமும் 600 மகாவீரர் 599 - 527 கௌதம புத்தர் 563 - 483 பிற்கால உபநிடதங்கள் 500 - 200 கி.பி. இதிகாசங்களின் தொடக்கம் பகவத்கீதை புராணங்கள் 500 - 500 கி.பி. புராணங்கள் (இன்று காணப்படுவன தத்தரின் கணிப்பு) கி.பி. 500 - 1500 பாணினி கி.மு. 400 ஆசுவலாயனர் 400 பூர்வமீமாம்சை 400 அபஸ்தம்பர் 400 சைமினி 400 காத்தியாயனர் 350 போதாயனர் 350 கௌதமர் (நியாய சூத்திரம்) 300 மிருதி 300 - 700 கி.பி. பௌத்திரபாகு (மைசூர் நாட்டுக்கு வந்த சமண முனிவர்) 307 சந்திரகுப்தன் (மௌரியன்) 322 - 298 கௌடிலியர் ” மெகஸ்தீனஸ் (பாடலிபுரத்தில்) 302 - 298 கணாதர் 300 வாதராயணர் 300 அசோகர் 274 - 237 சாதவாகனர் 250 - 200 கி.பி. பதஞ்சலி (யோக சூத்திரம்) 140 நாகார்ச்சுனர் (சூனியவாதம்) கி.பி. 300 ஈசுவர கிருட்டிணர் (சாங்கியகாரிகை) 300 குப்த அரச பரம்பரை 320-650 கதம்பர் (கடம்பர்) 345 - 575 காளிதாசர் 400 வத்சயாயனர் 400 பல்லவர் 6 ஆம் நூ- 10ஆம் நூ. சாளுக்கியர் (பாதாமி) 550 - 1190 குமாரிலர் 590 - 650 முகமதிய சகம் 622 கௌட பாதர் 8 ஆம் நூ. சங்கரர் 788 - 820 இராட்டிரகூடர் 8ஆம் நூ - 10ஆம் நூ. சோழர் (பிற்காலம்) 907 - 1310 சாளுக்கிய அரச பரம்பரை (கல்யாணி) 973 - 1198 காகதீயர் 1000 - 1326 இராமாநுசர் 1017 - 1137 போஜராசர் 1060 - 1118 ஹோய்சலர் 1110 - 1327 மாதவர் 1119 - 1197 விசயநகர அரச பரம்பரை 1336 - 1649 சாயணர் 14 ஆம் நூ. வித்தியாரணியர் (மாதவர் - சாயணரின் சகோதரர்) 14 ஆம் நூ. அப்பைய தீட்சிதர் 1552 - 1624 BIBLIOGRAPHY 1. A history of Indian literature – H. Goven. 2. A history of South India – K.A. Nilakanta Sastri. 3. A literary history of India – R.W. Frazer. 4. Amulets and superstition – E.A. Wallis, Budge K.T. 5. Ancient Indian historical tradition – F.E. Pargiter. 6. A short history of India – Havell. 7. Asia and western dominance – K.M. Panikar. (London 1954) 8. Cambridge History of India – Prof. Macdonald. 9. Castes in India Its Nature Functions and Origin – J.H. Hutton. 10. Collected works of R.G. Bhandarkar Vol.II. 11. Constructive survey of Upanishadic philosophy – R.D. Ranade. 12. Dravidian India – T.R. Sesha Iyengar. 13. Encylopaedia of religion an ethics – (1918) 14. Glimpses of world history – Jawaharlal Nehru. 15. Hinduism and Buddhism – Sir Charles Elliot. 16. Hindu view in art–Maluk Ray Anand. (Asia Publishing House 1957) 17. Hindu view in life – Dr.S.Radhakrishnan. 18. Historical sketches of ancient Dekhan – K.V.Subramanya Iyer. 19. History of civilization – Will Durant. 20. History of the Tamils – P.T. Sreenivasa Iyengar. 21. India and the western world – H.G. Rawlinson. 22. India philosophy – Max Muller. 23. Indian philosophy Vol. I & II – Prof. S.Radhakrishnan. 24. Junior History of India – R.D. Banerji. 25. Local Government in Acnient India – R.K. Mukerji. 26. Oriental and Linguistic Studies – William Dwlight Whitney. 27. Outlines of Indian Philosophy – P.T.S. Iyengar. 28. Pre-Aryan Tamil culture – P.T.S. Iyenger. 29. Proceedings and transactions of the 9th All India Oriental Conference, Travandrum 1937. 30. Short studies in the science of comparative religions – J.R. Forlong. 31. Stone age in India – P.T. Sreenivasa Iyengar. 32. Tamil Plutarch (2nd edition) – Simon Kasi Chetty. 33. The age of the mantras – P.T. Sreenivasa Iyengar. 34. The century cyclopaedia of names – Edited by Benjam in E. Smith. 35. The History and culture of Indian people Vol.II-V – Bharata Vidya Bhavan Publication. 36. The History of Indian literature – A. Weber. 37. The History of Indian literature – Winternitz. 38. The Indian Village Community – B.A. Barden Powell. 39. The Mother Vol. III – 40. The Origin and development of Bengali – S.K Chatterji. 41. The philosophy of the Lingayats – S.K.Sakhare. 42. The philosophy of the Upanishads – A. Edward Gough. 43. The Saiva Siddhanta in the Meykanda Sastra – Violet Paranjothi M.A.L.T., Ph.D. 44. The System of Vedanta – Dr. Paul Deussen. 45. Vedic India – Regozen. 46. Wheeler’s History of India Vol.II. 47. Wisdom of the East – Barnett M.A. LITT. PERIODICALS 1. Bulletin of the school of Oriental Studies Vol.VII (1935-36). 2. Indian Historical Journal – 1934. 3. Indo Asian Culture Vol.I 4. New Review – Vol. III. 5. The Journal of the Greater India Vol.III (1936) 6. The Journal of the Oriental Research – Madras 1924.  சிவன் முன்னுரை இவ்வுலகின் ஆங்காங்கு வழங்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழைய வரலாறுகளைக் கொண்டு மக்கட் குலம், ஆதியில் ஒரு நடு இடத்திற் பெருகியிருந்து பின்பு உலகின் பல இடங்களுக்குப் பிரிந்து சென்று பற்பல குலங்கள் போற் பெருகிற்று எனப் பழஞ் சரித்திரக் காரரும், மொழி ஆராய்ச்சியாளரும் கருதுகின்றனர். உலக மக்களின் சமயத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்த வெஸ்ரப் (Westropp) என்னும் ஆசிரியர் முற்கால மக்களின் சமயம் தனித்தனியே தோன்றி வளர்ச்சி யடைந்ததன்று; எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படை ஒன்றே எனக் கூறியுள்ளார். உலகில் தோன்றியிருந்த பழைய நாகரிகங்களுக்கெல்லாம் மிகப் பழைமை உடையது சிந்து வெளி நாகரிகமெனப் பழைமை ஆராய்ச்சியில் தலைசிறந்த அமெரிக்கப் பேராசிரியர்களாகிய பிராங் போர்ட் (Professor Frankfort), வில் துறண்ட் (Wil Durant) முதலியோர் கூறி யுள்ளனர். உலக நாகரிகத்துக்கு அடிப்படை யிலுள்ளது இந்திய நாகரிக மென்பதும், இந்திய நாகரிகமென்பது திராவிட நாகரிகமென்பதும் மேற்புல ஆராய்ச்சி அறிஞர்களால் நன்கு ஆராய்ந்து காட்டப்பட் டுள்ளன. உலக மொழிகள், உலக நாகரிகங்களுக்குள் தொடர்பு காணப்படுவது போலவே, தமிழருடைய சிவ வணக்கத்துக்கும் உலக சமயங்களுக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. பழைய தமிழ் மக்களின் சிவ வணக்கத்தின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக மதங்களாகும் என்பதைக் காட்டுவது கடினமாக இருக்கவில்லை. அவ்வாறிருந்தும் இத்துறையில் தமிழ் அறிஞர் ஊன்றி ஆராய்ச்சி செய்து, அக் கருத்தை உலகுக்கு வெளியிடாதிருப்பது பெருங்குறையாகும். சிவமதமே உலக மதம் என்பதை, நாம், பற்பல மேற்புல ஆராய்ச்சி அறிஞர் கண்ட முடிவுகளை ஏற்ற ஏற்ற இடங்களில் மேற்கோள்களாக எடுத்துக் காட்டியும், ஆங்காங்கு உலகின் பல பாகங்களில் காணப்படுகின்ற, இன்றும் நமது நாட்டில் வழிபடப் படுவனபோன்ற தாய்க்கடவுள், தந்தைக் கடவுளர்களின் வடிவங்களை படங்களமைத்துக் காட்டியும் தெள்ளிதின் விளக்கியுள்ளோம். “சைவ சமயமே சமயம் சமயா தீதப் பழம்பொருள்” என்னுந் தாயுமான அடிகளின் கூற்று இன்றைய ஆராய்ச்சியில் உண்மையாகவே திகழ்கின்றது. சென்னை 15.2.1947 ந.சி.கந்தையா. சிவன் தோற்றுவாய் மிக முற்காலத்தில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் பொதுவான கொள்கைகள் பல இருந்தன. அவைகளுள் சமயமும் ஒன்று. எல்லா மக்களும் ஒரேவகையாகக் கைக்கொண்ட சமயமே நாளடைவில் சிறிது சிறிதாக வேறுபட்டு இன்றைய பல சமயங்களாகக் காணப்படுகின்றது. எல்லா சமயங்களின் பழைமையை நோக்கி ஆராய்ந்து செல்லின் அவை எல்லாம் ஒரு தனி மதத்திற் சென்று முடிவடைதலைக் காணலாம். மக்கள் தோன்றி உருவாலும், அறிவாலும், நாகரிகத்தாலும் படிப் படியே வளர்ச்சியடைந்து வந்துள்ளார்கள்; ஆயினும், அறிவாலும், நாகரிகத்தாலும் மேல்நிலையுறாது பல வகை வாழ்க்கைப் படிகளில் வாழ்ந்து வரும் மக்கட் கூட்டத்தினரும் இடை இடையே காணப்படுகின் றனர். எல்லா மக்களிடையும் கடவுட் கொள்கை இருந்து வருதலைக் காண்கின்றோம். கடவுட் கொள்கை மக்கட் படைப்புக்கு இயல்பாக அமைந்துள்ள ஓர் அறிவுபோலும்! மக்கள் தோன்றிய காலத்தே அரும்பிய இக்கொள்கை காலச் செலவில் வளர்ச்சியடைந்து உயர்ந்த தத்துவக் கொள்கைகளோடு கூடிய சமயங்களாயிற்று. காலத்துக்குக் காலம் மக்கள் கடவுளைப்பற்றிப் பல்வேறு வகையான கொள்கைகள் உடையவர்களாக இருந்தார்கள். ஆதியில் மக்கள் தென்புலத்தார் (இறந்தவர்) வணக்கமுடையவர்களாயிருந்தனர். திருவள்ளுவனாரும், “தென்புலத்தார் தெய்வம்” எனத் தென்புலத்தாரை முதற்கண் வைத்துக் கூறுதல் காண்க. தென்புலத்தார் வழிபாட்டுக்குப் பின் மக்கள் எல்லோரும் ஓர் அளவு நாகரிக உயர்வு எய்தியிருந்தனர். அக்காலத்தில் ஞாயிற்று வழிபாடு ஓங்கியிருந்தது.1 அயர்லாந்து முதல் சப்பான் தீவுகள் வரையில் இவ்வழிபாடு பரவியிருந்தமையை எச்.சி.வெல்ஸ் (H.G. Wells) என்பார் தமது வரலாற்றுக் காட்சி (Outline of History) என்னும் நூலில் படம் வரைந்து விளக்கியுள்ளார். புதிய கண்டத்திலும், ஞாயிற்று வழிபாட்டுக்குரிய பழைய ஆலயங்களும் செய்குன்றுகளும் காணப்படுகின்றன. இஞ்ஞாயிற்று வழிபாடு படிப்படி வளர்ச்சியடைவதாயிற்று. ஞாயிற்றுக்கு ஆதியில் வழங்கிய பெயர் சிவன். சிவன் வழிபாட்டின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக சமயங்கள் என்பதை இச் சிறிய நூல் நன்கு எடுத்து விளக்குகின்றது. சிவன் வழிபாடு இந்திய மக்களுக்கு மாத்திரமன்று; உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மனு ஞாயிற்றின் புதல்வன் உலகில் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு நேர்ந்ததென்றும், அதற்குப் பிழைத்திருந்த ஒருவரிலிருந்து மக்கள் பெருகினார்கள் என்றும் இவ் வுலகின் ஆங்காங்கு வாழும் மக்கள் எல்லோரிடையும் ஓர் ஐதீகம் வழங்கு கின்றது.1 இதனால் உலக மக்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தினராக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு உண்டா யிற்றென்றும், அவ் வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்திருந்த மக்கள் சிலரிடமிருந்து மீண்டும் இவ் வுலகில் மக்கள் பெருகினார்கள் என்றும் நாம் உய்த்துணர வேண்டியிருக்கின்றது. வெள்ளப்பெருக்குக்குப் பிழைத் திருந்த மனு ஞாயிற்றின் புதல்வனென்று சொல்லப்படுகின்றார். இதனால் பெரிய வெள்ளப்பெருக்கு உண்டான காலத்திலேயே ஞாயிற்று வணக்கம் மக்களிடையே நன்கு வேரூன்றி இருந்ததென அறிகின்றோம். இவ் வெள்ளப் பெருக்கு எப்பொழுது உண்டாயிற்று என்று அறிய முயலுதல் பயனற்றது. வெள்ளப் பெருக்கு உண்டான காலத்தில் மக்கள் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்கள் என்பது மனுவைப் பற்றிச் சொல்லப்படும் வரலாற்றினால் நன்கு அறிதும். வரலாற்று ஆரம்ப காலத்தில் உலக மக்களுக்கிடையே காணப்பட்ட தொடர்பு தொல்பொருள், புதைபொருள் ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசிய, இந்திய, கிழக்குத் தீவு, அமெரிக்க மக்களின் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலுள்ள வரலாற்றுச் செய்திகள் சில தெரிய வருகின்றன. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் இவ்வுலகம் முழுமையிலும் ஒரே வகை நாகரிகம் நிலவிற்றென்பதற்குப் பல சான்றுகள் உள.1 கிழக்குத் தீவுகள், அரப்பா, மொகஞ்சொதரோ, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, அரேபியா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துக்கள் ஒரேவகையின.2 இதனை மேல்நாட்டு ஆசிரியர்கள் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். எழுத் துக்கள் ஒரேவகையாய் இருந்தன என்று கொள்ளுமிடத்து, மொழிகளும் ஒரேவகையாக இருந்தன வென்றே கொள்ளுதல் வேண்டும். ஆஸ்தி ரேலிய மொழிச் சொற்களுக்கும், சுமேரிய மொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது.3 நியூசீலந்து மக்களின் மொழிச் சொற்கள் பல எகிப்திய சொற்களோடு ஒற்றுமை உடையனவாகக் காணப்படுகின்றன.4 டெயிலர் என்னும் பாதிரியார் தமிழுக்கும் மயோரிய (நியூசீலரது) மொழிக்குமுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் கால்டுவெல் தமிழுக்கும் துரானிய மொழிகளுக்குமுள்ள ஒற்றுமையை எடுத்து விளக்கியுள்ளார். பழைய அமெரிக்க மொழி ஒட்டுச் சொற் களுடையதாய் இருந்தது. பழைய அமெரிக்க மொழி திராவிட மொழி யோடு மிக ஒற்றுமையுடையதாய் இருக்கின்றது.5 கோரியா தேசமொழி இலக்கணம் திராவிடமொழி இலக்கணத்தோடு ஒற்றுமையுடையதா யிருக்கின்றது. இச் சான்றுகளால் வரலாற்றுக் காலத்துக்குச் சிறிது தொலையில் உலகம் முழுமையிலும் ஒரே மொழி வழங்கிற்றெனத் துணிதல் சாலும். மனுவின் வரலாற்றையும், பிற்காலப் பிற சான்றுகளை யும் கொண்டு உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடே இருந்த தெனத் துணிதல் அமையும். ஞாயிற்று வழிபாடே சிவன் வழிபாடு எகிப்திய மக்கள் ஞாயிற்றை அமன், ஒசிறிஸ், ரா முதலிய பெயர் களால் வழிபட்டார்கள். சுமேரியர் ஆண், எல் முதலிய பெயராலும், பாபிலோனியர், பால் (Baal) பேல் (Bel) மார்டுக் முதலிய பெயர்களாலும், அசீரியர், அசுர் என்னும் பெயராலும், பினீசியர் பால் என்னும் பெயரா லும், சின்ன ஆசிய மக்கள் சூரியா, அதாத் என்னும் பெயர்களாலும் இந்திய மக்கள் ஆண், சிவன், எல் முதலிய பெயர்களாலும் ஞாயிற்றை வழிபட்டனர். உலக மக்களின் பழைய சமய வரலாறுகளை நன்கு ஆராய்ந்த ஆசிரியர்கள் எல்லோரும் உலக மக்கள் எல்லோரும் தொடக் கத்தில் ஞாயிற்றையே வெவ்வேறு பெயர்களால் வழிபட்டார்கள் எனக் கூறியிருக்கின்றனர்.1 மொழி மாறுபட்டது போல அவர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்களும் மாறுபடலாயின. மொழி வேறுபாடு முன்னரே எல்லா மக்களுக்கும் பொதுவாகிய சில கடவுட் பெயர்கள் மாத்திரம் வழங்கியிருத்தல் சாலும். அவை எல், சிவன், பகல், ஆண் என்பன. மேற்கு ஆசிய, அரேபிய, இலங்கை மக்கள் எல் தொடர்பான பெயர்களைக் கடவுளுக்கு இட்டு வழங்கினார்கள். பாபிலோன், இந்தியா, சுமேரியா முதலிய நாடுகளில் ஆண் என்பதே கடவுளின் சாலப் பழைய பெயராகக் காணப்படுகின்றது. ஆண் என்பது தொடக்கத்தில் ஞாயிற்றையும், பின் கடவுளையும், பின் உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமையையும் குறிக்க வழங்கிற்று. எல் என்பது தமிழில் காணப்படும் பழைய சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். சிவன் என்னும் பெயர் இவ்வுலகில் மிகப் பழைமையே வழங்கியதற்குரிய ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. மற்றப் பெயர்களை விடச் சிவனையே சாலச்சிறந்த பெயராக மக்கள் ஞாயிற்றுக்குத் தொடக்கத்தில் இட்டு வழங்கினார்கள் ஆகலாம். சிவன் என்னும் சொற்பிறப்பு சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். ஞாயிற்றுக்குச் செங்கதிர் என்பதும் மற்றொரு பெயர். மொகஞ்சொதரோ முத்திரைகளின் ஆண் தலைமையான தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது. சிவனைக் குறிக்கும் பசுபதிக் கடவுளும் ஆண் கடவுளரே ஆவர். ஞாயிறு ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடும் ஒவ்வொரு வடிவுடையதாகக் கொள்ளப் பட்டு மக்களால் வழிபடப்பட்டது.1 இறைவனை அட்ட மூர்த்தி எனக் கொள்வது இப்பழைய வழக்குப்பற்றிப் போலும். பிலிப்பைன் தீவுகளில் சிலவற்றில் இன்றும் மக்கள் சிவனைச் சிவப்பன் என வழங்குவர்.2 இதனால் முற்கால மக்கள் ஆண் என்பதற்குச் சிவப்பு என்னும் அடைகொடுத்து வழங்கினார்கள் எனக் கருதலாம். ஆண், அன் ஆனபோது சிவப்பு ஆண், சிவப்பன் ஆகிப் பின் சிவப்பன் சிவன் என மருவிற்றெனக் கூறுதல் பிழை யாகாது. சிவன் என்னும் சொல்லின் உற்பத்தியைக் கூறவந்த ஆசிரியர்கள் எல்லோரும் சிவன் என்பதற்குச் சிவந்த கடவுள் என்னும் பொருளே கூறியுள்ளார்கள்.3 இற்றைஞான்றை வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றிப் பிறநாடுகளுக்குச் சென்றது எனக் கருதுகின்றார்கள். ஆகவே, ஆதியில் மக்கள் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழுக்குரியனவாயிருத்தல் பொருத்தமானதே. முற்கால இடப்பெயர்கள் பழைய காலத்தில் மக்களின் குடியிருப்பு பெரும்பாலும் கோயிலைச் சுற்றியிருந்தது. ஆகவே, ஒவ்வொரு பட்டினமும் அல்லது இடமும் கடவுள் தொடர்பான பெயர் பெற்றிருந்தது.1 இதனைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். இவ் வுலகில் ஒன்றில் ஒன்று தொலைவிலுள்ள இடங்களில் சிவன் தொடர்புடைய இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வுலகின் அகன்ற இடப்பரப்பில் சிவன் ஆலயங்கள் பல இருந்தனவென்று நாம் நன்கு அறிதல் கூடும். சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை எகிப்திலே இலிபிய வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. இவ்விடம் அமன்யூ பிதர் என்னும் கடவுள் வழிபாட்டுக்குப் பேர் போனது என்று சொல்லப்படுகின்றது. அமன், ரா, ஒசிறிஸ் என்னும் பெயர்கள் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பன.2 இக் கடவுளுக்கு வாகனம் இடபம். யூபிதர் என்னும் பெயரும் சுயஸ்பிதர் என்பதினின்றும் பிறந்ததென்று சொல்லப்படுகின்றது . யூபிதர் என்னும் சொல் சிவா என்பது போன்ற ஒரு சொல்லினின்று பிறந்ததென இன்னோர் ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.3 யூபிதர் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பதே ஆகும். கிரேக்கரது சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. சிவன் பாலைநிலப் பசுந்தரையில் இன்றும் அமன் கடவுளின் கோயில்களின் வழிபாடுகள் காணப்படுகின்றன.4 இப்பாலை நிலப் பசுந்தரை சிவன் வழிபாடு காரணமாகச் சிவன் என்னும் பெயர் பெற்றிருந்ததென்றும், பின்பு சிவன் கடவுளின் பெயர் அமன்யூபிதர் என மாறியுள்ளதென்றும், நாம் நன்கு ஊகித்தறியலாம். இடப்பெயர் மாத்திரம் அன்று முதல் இன்று வரையும் சிறிதும் மாறுபடாமலே இருந்து வருகின்றது. அமன் கடவுளுக்கு இடபம் வாகனமாதல், ஆலயங்களினுள் சிவலிங்கங்கள் வைத்து வணங்கப்படுதல்1 முதலிய காரணங்களால் அமன் சிவனே என்பது தேற்றமாகும். பாபிலோனில் சிவன் என்னும் பட்டினம் பாபிலோன் நாட்டிலே, களிமண் ஏட்டில் எழுதப்பட்டுச் சூளை யிட்டுக் காப்பாற்றப்பட்ட பல பழைய பட்டயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளுள் பல, மக்கள் அடிமைகளையும், நிலங்களையும் விற்றதும் வாங்கியதும் தீட்டிய ஆவணங்களாகக் காணப்பட்டன. அவைகளில் இன்ன மாதத்தின், இன்ன இடத்தில், இன்ன நாளில் ஆவணம் எழுதப்பட்டதெனக் குறிக்கப்பட்டள்ளது. அவ்வாவணங்கள் சிலவற்றுள்2 சிவன் என்னும் இடப்பெயர் காணப்படுகின்றது. இதனால் பாபிலோனில் சிவன் வழிபாடும், சிவன் ஆலயமும் இருந்தனவென்று நாம் நன்கு அறிகின்றோம்.3 பாபிலோனரின் கடவுளுக்கு எல்சடை என்பதும் மற்றொரு பெயர். எல்சடை என்பது சிவபிரானைக் குறிக்க வழங்கும் சடையன் என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. அவர்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர் மார்டுக், யேகோவா, சிவா போன்ற ஒரு சொல்லி னின்று பிறந்தது. வட அமெரிக்காவில் சிவன் ஆலயம் வட அமெரிக்காவிலே கொலரடோ என்னும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும் குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்டகாலம் அங்குள்ள மக்கள் ஞாபகத்திலிருந்து வந்தது. இவ்விடத்தை ஒருவரும் ஏறிக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. 1937 ஆம் ஆண்டு அமெரிக்கப் பழம் பொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடத்தைக் கண்டுபிடித்துத் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.4 இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சிலரும், இதற்கு இன்னும் மிகப் பழைமையுடையது என்று வேறு சிலரும் தமது கருத்தைத் தெரிவித் துள்ளார்கள். இதனால் வட அமெரிக்காவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் சிவன் ஆலயமும், சிவன் வழிபாடும் இருந்தனவென்று நாம் துணிந்து கூறலாம். *இந்து அமெரிக்கா என்னும் நூல் எழுதிய சமன்லால் என்பவர் அமெரிக்காவின் பல பாகங்களில் இன்றும் சிவலிங்க வழிபா டிருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார். கிரேத்தா (Crete) வில் சிவன் நகர் கிரேத்தா என்னும் தீவு பழந்தமிழருடைய குடியேற்ற நாடாகக் கருதப்பட்டது. வரலாற்றுப் பிதா எனப்பட்ட ஹெரதோதசு (Heradotus) என்பார், கிரேத்தா மக்கள் தமிழர் (தமிழி) எனப்பட்டார்கள் என்றே கூறியுள்ளார். கிரேத்தா நாட்டுப் பழைய நாகரிகமும், சிந்து வெளித் தமிழரின் நாகரிகமும் ஒரே வகையின. கிரேத்தா மக்கள் மீனவர் எனப் பட்டார்கள். அவர்களின் எழுத்துக்கும், அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.1 நாகரிகத் தொடர்பும் இவ்வகையினதே. அங்குள்ள பழைய நகரம் ஒன்றுக்குச் சிவன் என்பது பெயர். அங்குச் சிந்துவெளியிற் கிடைத்தவை போன்ற பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கிரேத்தாவில் சிவன் வழிபாடும் சிவன் ஆலயமும் இருந்தனவென்று நன்கு அறிலாம். கிரேத்தாவில் சிவலிங்க வழிபாடு சங்கு வாத்தியம் முதலியனவும் காணப்பட்டன. சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் நகர் சின்ன ஆசியாவிலே (ஆசியா மைனர்) சிவாஸ் என்னும் பழைய நகர் ஒன்று உண்டு. இது பழைய அழிபாடுகளுடைய அழிந்த நகரம் எனப்படுகின் றது. இதன் பழைய வரலாறு ஒன்றும் அறியப்படவில்லை. சின்ன ஆசியாவில் சிவலிங்க வழிபாடும், இடபத்தின் மீது வீற்றிருக்கும் சிவன் வழிபாடு, இடப வழிபாடு முதலியனவும் காணப்பட்டமையின் சிவாஸ் என்பது சிவன் ஆலயத்துக்குப் பேர்போன ஒரு பழைய நகரம் எனக் கூறுதல் தவறாகமாட்டாது. வட இந்தியாவில் சிவபுரம் ஆரிய வேதங்கள், “சிவாக்கள்” என்னும் ஒரு கூட்டத்தினரைப் பற்றிக் கூறுகின்றன.1 பாணினி, சிவபுரம் என்னும் இடப்பெயரைக் குறிப் பிட்டுள்ளார். இது வட இந்தியாவில் சிவாக்கள் வாழ்ந்த நகரமாகலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். ஆரியர்கள் தங்கள் சிவலிங்க வழி பாட்டை வெறுத்துத் தள்ளியமையின், வட நாட்டில் சிவனை வழிபடும் பிறிதொரு மக்கள் இருந்தார்கள் என்று நாம் நன்கு அறிதல் கூடும். இலங்கையில் சிவன் மலை இலங்கையில் சிவன் மலை அல்லது சிவன் ஒளி மலை என்னும் ஒரு மலை உள்ளது. இம் மலை உச்சியில் ஞாயிறு உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகின்றது. இது புத்தர் காலத் துக்கு முன்தொட்டுச் சிவன் ஒளி மலை எனவே வழங்குவதாயிற்று.2 இம் மலை இலிங்க வடிவாயிருந்தமையின் அராபியர் இதனை ஆதம் மலை என்றார்கள். ஆதம் என்னும் ஆதிப்பிதாவைக் குறிக்க இலிங்க வடிவமே கையாளப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது.3 “சிவன்” மாதப் பெயர் முற்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சிறப் புடையதாயிருந்தது.4 மலையாளத்தில் இன்றும் இராசிப் பெயர்களே மாதங்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடு ஒவ்வொரு வடிவுடையதாகக் கொண்டு வழிபடப்பட்ட தென்று மொகஞ்சொதரோ பழம் பொருள் ஆராய்ச்சியினால் விளங்கு கின்றது. மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் எனத் தெரிகின்றது.5 பாபிலோனில் கிடைத்த களிமண் ஏடுகளில் சிவன் மாதம் குறிக்கப்பட்டுள்ளது. சிவன் மாதம் சிமானு எனவும் பட்டது. மொசே என்பவர் யேகோவா அருளிய பத்துக்கட்டளைகளைச் சிவன் மாதத்தின் ஆறாவது நாள் சினாய் மலைமீது நின்று மக்களுக்கு வெளி யிட்டார்1 என்று கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. மொசேயின் காலம் கி.மு.1500 வரையில் இத்துணைப் பழைய காலத்தி லேயே, சிவன், மாதத்தின் பெயராயிருந்ததெனக் கொள்ளின் அப்பெயர் மக்களிடையே அதனினும் பன்னெடுங்காலம் முன்தொட்டு வழக்கி லிருந்திருத்தல் வேண்டும். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் மக்கள் மொசேக்கு மிக நீண்டகாலம் முன்தொட்டே சிவன் என்னும் ஒரு கடவுளை வழிபட்டார்கள் என்று நாம் நன்கு துணிதல் கூடும். சிவன் பின்லாந்து மக்களின் காத்தற் கடவுள் பின்லாந்தில் வாழும் மக்கள் துரானிய வகுப்பைச் சேர்ந்தோர். இம் மக்களின் காத்தற் கடவுள் சிவன். விவிலிய மறையில் சிவன் கடவுள் விவிலிய மறையின் பழைய ஏற்பாடு சிவன் (Chien) என்னும் கடவுளைப் பற்றிக் கூறுகின்றது.2 இக் கடவுளை நன்கு ஆராய்ந்த மேல் நாட்டு அறிஞர் சிவன் என்பது சிவனே என்றும், அது விவிலிய மறையில் சிறிது வேறுபாட்டுடன் திரித்து வழங்கப்பட்டுள்ளதென்றும் காட்டியுள் ளார்கள்.3 சிவன் வழிபாடு மேற்கு ஆசியா கிரீஸ் உரோம் முதலிய நாடு களில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்ததென்றும் பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போயினமையின், தங்கள் தேசத்துக்கும், இடங்களுக்கும் மனப்பான்மைக்கும் பொருத்தமான பழங்கதைகளைப் புனைந்து கட்டினார்கள் என்றும் ஆதர்லில்லி என்பார் கூறுகின்றார். அக்கேடிய மக்களின் விண்மீன் சிவன் அக்கேடிய மக்களின் ஏழு முக்கிய விண்மீன்களில் மூன்றாவது, சிவன் எனப்பட்டது.1 சப்பானிய மக்களின் சிவோ சப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று சிவோ எனப் பட்டது.2 அது வேட்டை ஆடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள். சப்பானிய மக்கள் கோரியா நாட்டினின்றும் சென்று சப்பான் தீவுகளில் குடியேறியவர்களாவர். இவர்கள் சிவலிங்கங்களை முச்சந்தி நாற்சந்தி களில் நட்டு வழிபட்டார்கள். இவர்கள் முற்காலத்தில் இலக்கங்களைத் தமிழ் எழுத்துக்களால் எழுதினார்கள் என்று வடல் (Waddell) என்பார் குறிப்பிட்டுள்ளார். இவை போன்ற பல ஏதுக்களால் சப்பானியரின் சிவோ என்னும் பெயர் சிவன் என்பதன் திரிபு ஆகலாமென நாம் உய்த்துணரலாகும். “சன்” (Sun) சிவன் என்பதன் திரிபு ஞாயிற்றைக் குறிக்க ஆங்கில மொழியில் வழங்கும் “சன்” என்னும் சொல் சிவன் என்பதன் திரிபு எனக்கருத இடமுண்டு.3 இச்சொல்லின் மூலம் அறியப்படவில்லை. கிழக்குத் திசையினின்றும் இச்சொல் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீனியர் “சிவன்” என்பதைச் சியன் என வழங்கினார்கள் என்பது முன் விளக்கப்பட்டது. சிவனே ஆங்கில மொழியில் சன் ஆயிற்று எனக் கருதுதல் பிழையாக மாட்டாது. ‘சிவன்’ மக்கட் பெயர் முற்கால மக்கள் சிவன் எனவும் தமக்குப் பெயரிட்டு வழங்கினர். இவ்வகைப் பெயர்கள் பழைய இலங்கை அரசரிடையே காணப்பட்டது. செய்றோரேயிஸ் என்னும் சுமேரிய அரசனின் மனைவியின் பெயர் சிவன்.1 சிவன் என்னும் பொருள் தரும் எல், பால் என்னும் பெயர்களை மேற்கு ஆசிய மக்கள் தமக்குச் சூட்டியிருந்தார்கள். சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல் ஆதியில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலை முகடு களில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளுக்கு உறைவிடம் என்று கருதப்பட்டன. மலை இல்லாத நாடுகளில் மக்கள் மலைபோன்ற முக்கோணமான செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவமான வடிவத்தை வைத்து வழி பட்டார்கள். எகிப்தியரின் கூர்நுதிச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே ஆகும். எல்லா இடங்களிலும் பெரிய செய்குன்றுகளை எழுப்புவது எளிதன்று; ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்பது பொருள்.2 முக்கோணவடிவான கற்களே பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றுத் தூண்க ளாகும்.3 சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மாத்திரமன்று; இவ்வுலகம் முழுமையிலும் ஒரு காலத்தில் காணப்பட்டமையைப் பற்பலர் நன்கு ஆராய்ந்து காட்டி உள்ளார்கள். விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லப்படுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களே யாகும். கைலை, என்பது பாரத காலத்தில் சிவன் கோயில் கொண் டிருக்கும் மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத் தெரிகிறது. இது பாரதப் போர் நிகழ்ந்தபோது ஒரு நாள் இரவில் கண்ண னும் அருச்சுனனும் குருச்சேத்திரத்தினின்றும் கைலைக்குச்சென்று மீண் டார்கள் எனப்படுவதால் அறியலாம். இலங்கையில் மனுவின் பேழை தங்கியதாகக் கருதப்படும் மலை ஹமெல் எல் (தமெல் எல்) எனப்பட்ட தெனக் தெரிகிறது.4 இன்னும் எல் தொடர்பான பல இடப்பெயர்கள் இலங்கையில் காணப்படுகின்றன. இதனால் ஆதியில் திருக்கோண மலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருந்ததெனக் கருத இடமுண்டு. அது தென் கைலை எனப்படுகின்றது. கைலாய மலை, திருக்கோண மலை முதலியன மற்ற மலைகளிலும் பார்க்கச் சிவலிங்க வடிவம் பெற்றிருத்தலினாலேயே அவை சிவனின் சிறந்த இருப்பிடங்கள் எனப்படுகின்றன.1 வடக்கேயுள்ள சிவன் மலை வடகைலை என்றும் தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை எனவும் படலாயின. ஆதியில் இவ்விடங்களின் பெயர் *எல்+ஐ+அம் = எல்ஐ அம் என்று இருந்ததாதல் கூடும். பின்பு இவ்விடங்களைப் பிரித்தறியும் பொருட்டு வடகை (வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்தி லுள்ள) என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டனவாகலாம். அப் பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வட கைலாயம் தென் கைலாயம் என்று வழங்கலாயின என்று யாம் கருதுகின்றோம். பல்பூர் என்னும் ஆசிரியர் இலிங்க வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “இலிங்க வணக்கம் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது ஒன்று அன்று. முற்காலத்தில் அஃது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் எகிப்தி லும் காணப்பட்டது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கரின் இலிங்கக் கடவுள் இதுவே யாகும். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாபஸ் என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை உடைத்தெறிந்தானென்று கூறுகின்றது.” இலிங்கத்துக்கு முன்னால் பலி பீடத்தின் மீது சாம்பி ராணி எரிக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாவது நாளில் பலி செலுத் தப்பட்டது. இஃது இந்துக்கள் பரிசுத்த நாளாகக் கொள்ளும் அமா வாசைத் தினமாகும். இஸ்ரவேலர் வழிபட்ட இடபக்கன்று நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரிஸ் கடவுளின் வாகனமாகிய அப்பிஸ் என்னும் இடபமும் இந்நந்தியேயாகும். கொலோனல் டொட் என்பார் இலிங்க வழிபாட்டை அராபிய ரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள் ளார். இலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. இன்றும் இலிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறித்துவ ஆலயக் கட்டடங் களில் காணலாகும். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய விழாவில் 129 முழ உயரமுடைய இலிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டது. இஸ்ரவேலரின் பால் கடவுள் சிவலிங்கமே என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. விவிலிய மறையில் சொல்லப்படும் சியன் (Amos v.) சிந்து நதிக்கரையில் உறையும் மக்கள் சிவா அல்லது சிவன் எனக்கூறும் கடவுளேயாவர். இந்தியாவுக்கு எந்தச்சாதி இலிங்க வழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.” இந்திய நாகரிகமும் அதன் பழைமையும் என்னும் நூலில் முக்கேசி என்பார் இலிங்க வழிபாட்டின் வியாபகத்தைப்பற்றிக் கூறியிருப்பது பின் வருமாறு: “இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத்தைக் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ்வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு காற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத் துள்ளன. சீனா, சப்பான், இந்துக் கடற்றீவுகள், பசிபிக் கடற்றீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு முற்றிலும் மறைந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க மக்களிடையும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பாபிலோனிய மக்களிடையும் இது காணப்பட்டதென்பதைக் கிறித்துவ மறைவாயிலாக அறிகின்றோம். சின்னாள்களின் முன் பாபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோரஸ், இஸ்ரஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக் கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ்வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஒழிப்பதற்குக் கிறித்துவ குருமார் மிக ஊக்கம் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள் கிறித்துவ ஆலயங்கள் பலவற்றுட் காணப்படுகின்றன. அவை `சீலநாகிக்’ (Sheila na-geg) என வழங்குகின்றன. இப்பெயர் ஒரு பொது சிவலிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்தி லும் ஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தனர். இவை கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல் கூடும். சர்மனியிலும் இவ் வணக்கம் தழைத்திருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இலிதுவேனிய மக்கள் (Lithuanians) 14 ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, பூத்தான் (Bhutan) என்னுமிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசம் (Shentoism) என்னும் யப்பானிய மதத்தில் சிவ இலிங்கம் முதன்மையானது.1 அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெக்சிக்கோ, பேரு, கைதித்தீவு (Hyte)களில் சிவ இலிங்கம் வழிபடப்பட்டது. இஸ்பானியர் முதன் முதல் அமெரிக் காவிற்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழி பட்டதைக் கண்டார்கள்.1 ஆபிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது.” இலிங்க வணக்கம் ஆசியாவில் தோன்றி அயல் நாடுகளில் பரவிற்று எனச் சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ் (Bacchus) தயோனிசஸ் (Dionisus) வழிபாடுகள் தொடர்பில் சிவலிங் கங்கள் வழிபடப்பட்டன. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிவலம் செய்யப்பட்டது. எகிப்தியரின் ஒசிரிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்ப தன் இன்னொரு வேறுபாடே. பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரவியிருந்தது பக்கஸ் கெபன் (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் என்னும் கடவுள் கெபி (Hebe) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக் கடவுளுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் புலித்தோலை உடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். இக்காரணத்தைக் கொண்டு கெபன் சிவன் என்றும் கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின் தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் நீர் அருந்தும் மண்டை யும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch) மெரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சிபாஃசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பகேஒஸ் (Bagaios) என்னும் பெயர் களுடன் வழிபடப்பட்டார். வெஸ்ட்ரொப் (Westropp) என்பார் ஆதோனிசஸ் அர்த்த நாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின் முன் எகிப்திலே துர்க்கம்மா என அடியில் எழுதிய துர்க்கையின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சேஸ் என்னும் ஆராய்ச்சி அறிஞரின் கூற்று பின் வருவது; யூதரின் பெத்தெல் (Bethel) அல்லது “கடவுளின் வீடு” புனிதமான கல்லாக இருந்தது. அது கடவுளின் ஆவி உறையும் இடமாக மாத்திரம் கருதப்பட வில்லை. அது கடவுளாகவே கருதப்பட்டது. இக்கற்கள் செமித்திய மக்களுக்கும் அவர்களின் கிளையினருக்கும் புனிதமுடையன. மெக்காவிற் காணப்படும் காபா (Kaba) என்னும் கறுப்புக் கல் இவ்வுண்மைக்குக் காட்சியளிக்கும் சான்றாகும். அராபிய மக்கள் இக்கல்லின் மேல் அளவு கடந்த கடவுள் பக்தி கொண்டிருந்தார்கள்; ஆதலின் மகமது அதனை அழித்துவிட முடியவில்லை. ஆகவே அவர் அதனை விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டுக் கதைகளோடு தொடர்புபடுத்தி அதனைப் புனித முடையதாகக் கொண்டார். ஞாயிற்றுத் தூண்களையும் சந்திரத் தூண்களையும் பற்றி விவிலிய மறையில் பல்லிடங்களில் காண்கிறோம். ஓவியங்களிலும், நாணயங்களி லும், பாஃபியன் அஃப்ரோடைட் (Paphian aphrodite) ஆலயத்தின் ஆதி மூலத்தில் (கருவில்) காணப்பட்ட அடி நிமிர்ந்து தலைகுவிந்த கல்லின் வடிவம் காணப்படுகின்றது. துசிடஸ் (Tucitus) என்பவரும் அதனைப் பற்றிக் கூறியிருக்கின் றார். சாலமனுக்குப் பினீசிய வேலையாட்கள் கட்டிய ஆலயத்தின் முன் மண்டபத்தின் இருபுறங்களிலும் போஃஸ் (Boaz) யாகின் (Yakin) என்னும் இரு கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன. (I King, VII 21) இவை பினீசிய மக்களால் தையர் நகரில் மெல்கார்த் (Melkarth) என்னும் ஆலயத்தில் பொன்னாலும் மரகதத்தாலும் செய்து நிறுத்தப் பட்டிருந்தனவென்று ஹெரதோதசு கூறிய (Herodat - II - 44) அவைகளை ஒத்தன.1 பௌத்தமதத்தினரும் இலிங்க வழிபாட்டினரே பௌத்த மதத்தின் அடிப்படை ஞாயிற்று வழிபாடே என்பது அவர்களின் மதக்குறியாகிய சுவத்திகத்தைக்கொண்டு நன்கு அறிய லாகும். சுவத்திகம், சிலுவை முதலியன ஞாயிற்றைக் குறிக்கும் அடை யாளங்களே என்று உலக மதவரலாறுகளை ஆராய்ந்தோர் நன்கு கூறி யிருக்கின்றனர்.1 பௌத்த ஆலங்களின் மீது வைக்கப்படும் தூபிகளும், அவர்கள் தகோபா (Dagoba)க்களும் இலிங்க வடிவினவே. இலங்கையிலுள்ள சிவன் ஒளிமலை இலிங்க வடிவமாக (முக்கோணமாக) இருந்தமையினாலேயே புத்த மதத்தினர் அதனைப் புனிதமுடையதாகக் கொண்டனர். அசோக மன்னர் எழுப்பிய சாஞ்சிப் பௌத்த ஆலயத்தில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன.1 சிவலிங்க வழிபாடு இவ்வுலகின் நாகரிக மக்கள், நாகரிக மற்ற மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டதென்பதை ஆராய்ச்சியாளர் நன்கு எடுத்து விரித்து விளக்கியுள்ளார்கள். அவர் தம் கூற்றுக்களை எல்லாம் எடுத்து இங்கு தரப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியு மாதலின் அவைகளை ஈண்டுக் காட்டிற்றிலேம். பெரும்பாலும் மனித இயலாரே (Anthropologist) சிவலிங்க வணக்கம், மக்கள் கூட்டத்தினர் எல்லோரிடையும் காணப்படுவதை நன்கு எடுத்துக் கூறுகின்றனர். சிவலிங்க வணக்கத்தின் வெவ்வேறு வகை வளர்ச்சி ஆதியில் கற்றூண்களே கடவுளின் அருட்குறிகளாக நட்டு வழிபடப்பட்டன. பெரும்பாலும் அவை நிழல் மரங்களின் கீழ் நடப் பட்டன. நிழல் மரத்தின் அயலே கிணறு அல்லது கேணி இருந்தது. முற் கால மக்கள் அவைகளைச் சாதிபேதம் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு களின்றி வழிபட்டார்கள். மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம் முதலிய நாடு களில் மக்கள் சிவலிங்கங்கள் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர்.2 சிவலிங்க வணக்கம் தலை எடுத்திருந்த காலத்தில் தாய்க் கடவுள் வணக்கமும் ஓங்கியிருந்தது. ஒரு காலத்தில் தாயே எல்லா அதிகாரமும் உடையவளாக இருந்தாள். அக்காலத்தில் மக்களிடையே தாய்க்கடவுள் வழிபாடு உண்டாயிற்று. பின்பு தந்தைக்கடவுள் வழிபாடு மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தது. அப்போது மக்கள் தாய்க்கடவுள் தந்தைக் கடவுளரைச் சம பெருமையுடையவர்களாகவே கருதி வழிபட்டார்கள். அஞ்ஞான்று அவர்கள் சிவலிங்கங்களைத் தந்தைக் கடவுளாகவும் மரத்தைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபடலாயினர். சோலைகள் தாய்க்கடவுளின் புனித இடங்களாகக் கருதப்பட்டன. சோலைகளின் நடுவே தாய்க்கடவுளின் அருட்குறியாகவே மரத்தூண் நடப்பட்டு வழிபடலாயிற்று. இவ்வாறு அருள்தறிகள் ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்கலாயின. இன்னொரு வகையில் தாய் தந்தைக் கடவுளரின் தொடக்கம் மக்கள் மண்ணில் நின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதையும், பெண் உயிர்களின் வயிற்றினின்று உயிர்கள் பிறப்பதையும் கண்டார்கள். அவர்கள் பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கும் நிலத்தைத் தாய்க் கடவுளாகக் கொண்டு பலி செலுத்தி அதனை வழிபடுவாராயினர். பின்பு அவர்கள் வானத்தைத் தந்தைக்கடவுளாகக் கொண்டு அதனையும் வழிபட்டனர். வானக்கடவுள் ஞாயிற்றுக் கடவுளாக மாறிற்று. ஞாயிறும் திங்களும் கணவனும் மனைவியும் மேற்கு ஆசிய நாடுகளில், மக்கள், தந்தைக் கடவுளாகக் கருதப் பட்ட கற்றூண்களை ஞாயிறென்றும் தாய்க்கடவுளாகக் கருதப்பட்ட மரத்தூண்களைத் திங்கள் என்றும் கொண்டு திங்களை ஞாயிற்றின் மனைவியாக்கினர். ஆகவே, கற்றூண்களுக்குப் பக்கத்தில் மரத்தூண்கள் நடப்பட்டு வழிபடப்பட்டன. மேற்கு ஆசிய நாடுகளில் திங்கட்கடவுள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. பூமியையும் வானத்தையும் தாய்தந்தைக் கடவுளராய்க் கொண்ட மக்கள் கற்றூண்களையும் மரத்தூண்களையும் ஆண் பெண் வல்லமைகளாகக் கொண்டனர் பூமியைத் தாய்க் கடவுளாகவும் வானத்தைத் தந்தைக் கடவுளாக வும் கொள்ளும் மதமும் இலிங்க வழிபாட்டை ஒப்ப உலகம் முழுமையி லும் பரவியிருந்தது. அவர்கள் ஞாயிற்றை அல்லது தந்தைக் கடவுளைக் குறிக்க வழங்கிய கற்றூண்களைக் கடவுளின் படைக்கும் வல்லமை (Generative power) எனக் கொண்டார்கள்; மரத்தறிகளைப் படைப்புக்களை ஈனும் வல்லமை எனக்கொண்டார்கள். அவர்கள் இலிங்கங்களை ஆண்குறி வடிவாக அமைத்து வழிபடலாயினர். ஆண்குறி மக்களால் மிகவும் புனிதமுடையதாகக் கருதப்பட்டது.1 பெண்குறிகளும் அவ்வாறே. பின்பு தாய்க் கடவுளைக் குறிக்க வழங்கிய மரத்தூண்கள் பெண்குறி வடிவமாக வழிபடப்பட்டன. ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்க வழங்கிய ஆண் பெண் குறிகள் வடிவான உருவங்கள் மேற்கு ஆசியா, அமெரிக்கா, அரப்பா, மொகஞ்சொதரோ முதலிய இடங்களில் காணப்பட்டன. பின்பு இவ்வுலகப் படைப்புகள் எல்லாம் கடவுளின் ஆண் பெண் தன்மைகளால் உண்டாகின்றன என்பதை விளக்கும் பொருட்டும், கடவுள் ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் உடையவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், இருவகை வடிவங்கள் இணைத்துவைத்து வழிபடப்பட்டன.1 அவைகள் பலஸ்தின் மக்களால் எலோகிம் எனப்பட்டன. இதுவே சிவ இலிங்கங்கள் ஆவுடையார் வடிவிற் காணப்படுதற்குரிய காரணமாகும். பூமியைத் தாய்க் கடவுளாக வும் வானத்தைத் தந்தைக் கடவுளாகவும் கொள்ளும் வழக்கு இவ்வுலக முழுமையிலும் ஒருகால் பரவியிருந்தது. படைப்புக்குரிய தொழிலாகிய ஆண் பெண் சேர்க்கை புனிதமுடையதாகவும் அது கடவுளால் விரும்பப் படுவதாகவும் மக்கள் நம்பி வந்தார்கள்.2 மேற்கு ஆசிய நாடுகளில் மக்களால் இவ்வகை நேர்த்திக் கடன்கள் செய்யப்பட்டன. அக்காட்டு நாட்டில் எரெச் என்னும் பட்டினத்தில் ஆலயங்களில் வியபிசாரம் செய்வது சமயக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வகை வழக்கங்களும் தேவதாசிகளின் தொடக்கத்துக்கு ஒரு காரணமாகும். வான் தெய்வம், நிலத்தெய்வங்களின் அவதாரம் அரசரும் அரசியரும் என மக்கள் கருதி அவர்களை உயிருடைய தெய்வங்களாகவும் வழிபடு வாராயினர். இது பற்றியே அரசர் தாம் இராச்சியமேற்று நடத்துவதற்குத் தமக்குக் கடவுள் உரிமை உண்டு எனக் கருதினர் (Devine right of Kings).3 இலிங்கதாரணம் நமது நாட்டில் வீரசைவ மதத்தினர் இலிங்கங்களை அணிகின் றனர். இது வீரசைவ மக்கள் புதிதாகக் கையாண்ட வழக்கன்று; பண்டை நாட்களில் எகிப்து பாபிலோன் கிரீஸ் உரோமை முதலிய நாடுகளிலும் இலிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் இலிங்கங்களைப் பெண்களே அணிந்தனர். இலிங்கங்களை அணிவதால் மலடு நீங்கும் என்றும் தீய ஆவிகள் அணுகா என்றும் மக்கள் நம்பி வந்தார்கள். இலிங்கம் என்னும் சொல் இலிங்கம் என்னும் சொல் வடசொல் எனச் சிலர் கருதுகின்றனர். இது முற்றும் தவறான நினைவு. இலிங்கம் என்னும் சொல் இலங்கு என்னும் அடியாகப் பிறந்தது. எல் என்னும் சொல்லே இல்1 அல் முதலிய சொற்களாக மாறியுள்ளது. மால் என்பதிலுள்ள அல் எல்லேயாகும். எல் என்னும் சொல் இல் இலோஸ், இலியம் முதலிய சொற்களாக மாறி மேற்கு ஆசிய நாடுகளில் வழங்குவதாயிற்று. கடவுளை எலியன் என்பதும் மேற்கு ஆசிய மக்கள் வழக்கு.1 இலிங்கம் என்பது இலங்குவது என்னும் பொருள் தரும் தூய தனித் தமிழ்ச்சொல்.2 இச்சொல்லை வடமொழிச் சொல்லெனக் கருதிப் பலர் ‘லிங்கம்’ என எழுதுவர். தமிழ்ச் சொற்கள் லகரமுதலாக வராவாக லான் இகரம் மொழிக்கு முன் வருதல் வேண்டும். இன்று தமிழில் வழக் கொழிந்து தமிழின் சிதைவுகளாகிய கன்னடம் தெலுங்கு துளு மலை யாளம் முதலிய மொழிகளில் வழங்கும் பல தமிழ்ச் சொற்களுள. அதனை ஒப்பத் தமிழ் வழக்கிலில்லாதனவும், தமிழின் சிதைவுகளுமாகிய பல சொற்கள் வடமொழிக்கண் உள்ளன என்பது மொழி ஆராய்ச்சியாளர் துணிவு. 29. சிவன் மக்கள் வடிவினராதல் ஆதியில் தோன்றிய தாய் தந்தையர் வழிபாடுகளில் தாய்க்கடவுள் பெண்மகள் வடிவாகவும் தந்தைக் கடவுள் ஆண்மகன் வடிவாகவும் கொள்ளப்பட்டார்கள். ஞாயிற்று வணக்கம் ஓங்கிய காலத்தில் அம்மை அப்பர்க் கடவுளர் கற்றூண் மரத்தூண் வடிவுகள் வாயிலாக வழிபடப் பட்டனர்.3 “பின்பு அரசன் ஞாயிற்றின் புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் கொண்டு அரசனை அவர்கள் ஞாயிற்றுக் கடவுளாக வழிபட்ட காலத்தில் மக்கள் சிவனை அரச வடிவினராகக் கொண்டு வழிபடலாயினர். மக்கள் அரசனைக் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசி தாய்க்கடவுளாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டாள். ஆகவே, தாய்க்கடவுள் அரசியின் வடிவைப் பெற்றாள். அரசன் அரசி வடிவான அப்பர் அம்மை வழிபாடு இந்திய நாட்டிலேயே முதற்றோன்றிற்று “அரப்பா மொகஞ்சதரோ முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்ட பழம் பொருள்கள் ஆரியர் இந்திய நாட்டுக்கு வருமுன் அங்கு சைவசமயம் இருந்ததென்பதை ஐயம் அற விளக்குகின்றன. அவ்விடங் களில் காணப்பட்ட பட்டயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஹெரஸ் பாதிரியார் படித்துள்ளார். அதனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சிவமதம் இந்திய நாட்டில் இருந்ததென்பது நன்கு வலியுறு கின்றது. அவ்விடங்களில் வழிபடப்பட்ட இலிங்கங்கள், கடவுளுக்கு உடையனவாகப் பட்டயங்களில் கூறப்படும் மூன்று கண்கள், முத்தலை வேல், பாம்பு, கைக்கோடரி முதலியன ஆரியர் வருகைக்கு முன்னரே நமது நாட்டில் சிவமதம் நன்கு வேரூன்றி இருந்ததென்பதை விளக்குவன.”1 மொகஞ்சதரோ நாகரிகம் இற்றைக்கு 6000 ஆண்டுகள் வரையில் உள்ளது. மேற்குறிக்கப்பட்ட வடிவுகள் சிலவற்றோடு சிவன் மேற்கு ஆசிய நாடுகளில் வழிபடப்பட்டார். இக்கடவுளின் வாகனம் எல்லா நாடுகளிலும் இடபமாகவே காணப்படுகின்றது. கிரேத்தா (Crete) மேற்கு ஆசிய நாடுகளில் இடபங்களுக்கு இமில் இல்லை. இந்திய இடபங் களுக்கே இமில் உண்டு. மேற்கு ஆசிய நாடுகள், சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் இடபங்கள் வழிபடப்பட்டன. அவ்விடபங்களுள் சில இமிலுடையனவாகக் காணப்படுகின்றன. இதனால் இடபவாகன முடைய சிவக் கடவுள் வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங் களுக்குச் சென்றதென ஐயமறப் புலப்படுகின்றது. சிறந்த வரலாற்று ஆசிரியர்களும் இதே ஒத்துடையர்.2 இடப ஊர்தி ஆரியர் வருகைக்குப் பின்னரே இந்திய மக்கள் குதிரையைப்பற்றி அறிந்தார்கள். ஆரியர், தாசுக்கள் எனப்பட்ட தமிழரை வென்றதற்கு ஒரு காரணம் அவர்களிடத்தில் குதிரை இருந் தமையேயாகும். இந்திய மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்த காலத்தில் அவர்கள் மாடு களையே ஊர்திகளாகப் பயன்படுத்தினர். இன்றும் மாடுகளைப் பொதி சுமப்பதற்கு மக்கள் பயன்படுத்துவதை நாம் காணலாம். ஆலயங் களில் கடவுள் வீதிவலம் வரும்போது பேரிகை கொட்டுவோன் இடபத்தின் மீது இருந்து பேரிகை கொட்டுவதைக் காண்கின்றோம். இதனால் ஒரு காலத்தில் இடபங்கள் மக்களுக்கு ஊர்தியாகப் பயன் பட்டனவெனத் தெரிகின்றது. “இடபம் இந்திரனையும் சிவனையும் குறிப்பதாக வழங்கிற்று. செமித்திய சாதிகளுள் இடப வடிவான கடவுள் தலைமையுடையது. இடபத்தோடு தொடர்புபடுத்தப்படாத செமித்திய கடவுள் இல்லை யென்று கூறலாம். திங்கள் கடவுள் கொம்புகளைத் தரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. வலியைக் குறிக்கும் “அபிர்” என்னும் சொல் இடபத்தை உணர்த்தி நிற்கின்றது. எபிரேய மொழியிலுள்ள விவிலிய மறை வாக்கியங்களில் “வலிமையுடையது” என்று வரும் பகுதிகளை இடபம் என்று மாற்றிப் படிக்க வேண்டும். யேகோவாக் கடவுள் முற் காலத்தில் இடபக் கடவுளாக வழிபடப்பட்டார்; அவர் இசிரவேலரின் இடபக் கடவுளாவார். கடவுளை இடபவடிவில் வழிபடுவது எகிப்திய மதத்தினரின் ஒரு பகுதியாரின் கொள்கை. கிரேக்கரின் தயோனிசஸ் என்னும் கடவுள் இடபக் கடவுளாகவே இருந்தார். புலுத்தாக் என்னும் வரலாற்றாசிரியர் தயோனிசஸ், இடபக் கடவுள் எனவே கூறியுள்ளார் எனக் கிரேக்கர் பலர் கூறியுள்ளார்கள்.”1 இடபம் ஞாயிற்றின் குறியாக எல்லாப் பழைய மக்களாலும் கொள்ளப்பட்டது. கிரேக்கர் இடபத்தை ‘எபாபஸ்’ என்னும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றது. பக்கஸ் கடவுள் சிலவேளைகளில் இடபமாக அல்லது மனிதனுக்கும் இடபத்துக்கும் இடையிலுள்ள சிலுவைவடிவாக வழிபடப்பட்டார். இஸ்ரவேலரும், கிரேக்கரும், உரோமரும் ஐயமின்றி இடபத்தை வணங்கினார்கள். புலுத்தா என்பவர் கிரேக்கில் பக்கஸ் கடவுள் இடபத்தின் தலைவடிவாக வழிபடப்பட்டார் எனக் கூறியிருக்கின்றனர்; அமொனியரின் மொலொச் என்னும் கடவுளின் வடிவம் இதுவே அசீரியரின் இடப வணக்கம் எகிப்தி னின்றும் சென்றது எனக் கருதப்படுகின்றது (இலிங்க வணக்கம்).1 “யூதமக்கள் இடபத்தை வணங்கி னார்கள். அரன் (Aaron) என்பவர் இவ் வணக்கத் திற்கு ஆதரவளித்தார். தெரபோ அம் (Teroboam) என்பவர் இரண்டு இடபக்கன்றுகளைச் செய்து ஒன்றைப் பெத்தெலிலும் மற்றதை “தாய்” “Dai” என்னும் இடத்திலும் வைத்தார். இஸ்ரவேலரை எகிப்தினின்றும் தப்ப வைத்த கடவுளாக இடபம் கருதப்பட்டது.”2 “முற்காலத்தில் இங்கிலாந்தில் ஒருவகை வழக்கமிருந்தது. அப்பொழுது கைபிர்டன் (Hybyrdan) மைதானம் என்னும் இடத்தில் ஓர் இடபம் விடப்பட் டிருந்தது. அது வண்டியிலோ ஏரிலோ பூட்டப்படுவதில்லை. மணமான ஒரு பெண் பிள்ளைச் செல்வத்தை விரும்பினால் அவ் விடபமும் பெண்ணும் முன்னே செல்லக் குருமார் பாடிக்கொண்டு முக்கியமான வீதிகளைச் சுற்றி ஆலயவாயிலை அடைவார்கள். பின்பு இடபத்தை அதன் விருப்பம்போல் எங்காவது செல்லும்படி விட்டுவிடுவார்கள். பின்பு பரிசுத்த எட்மொண் (St.Edmond)டில் நாட்டப்பட்டுள்ள கல்லை அப்பெண் முத்தமிடுவாள்.”3 “இடபம் மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் வழிபடப்பட்டது. இந்த இடபத்தின் மீது ஆணையிட இவ்வுலக மக்கள் எல்லோருமே அஞ்சினார்கள் என லிதுவியன் என்பவர் கூறி யிருக்கின்றார்.”1 கிதைதி நாட்டிலே எயுக் என்னுமிடத் தில் இடபத்துக்குத் தனி ஆலயமும் அதன் வழிபாட்டுக்குத் தனிக் குருமாரும் இருந் தார்கள். எங்கெங்கு ஞாயிறு வழிபடப்பட்ட தோ அங்கெல்லாம் இடபம் புனிதமுடைய தாகக் கொள்ளப்பட்டது. பாம்பு சிவன் பாம்பை அணிபவராகக் காணப் படுகின்றார். மொகஞ்சதரோவிலும் பசுபதி எனச் சொல்லப் படும் சிவன் கடவுள் பாம்போடு தொடர்புடையவராகக் காணப்படுகின்றார். இடப வணக்கத்தை ஒப்பப் பாம்பு வணக்கமும் இவ்வுலகம் முழுமையி லும் வியாபகம் அடைந்திருந்தது. பாம்பு வணக்கத்தின் தொடக்கத்துக்குக் காரணம் எவராலும் நன்கு கூற முடியாமல் இருக்கின் றது. ஞாயிற்று வணக்கமும், சிவ இலிங்க வணக்கமும் உள்ள எல்லா நாடுகளி லும் பாம்பு வணக்கமும் காணப்படுகின்றது. பாம்புகள் சிவ இலிங்கங்களோடு தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. பாம்பு வணக்கம் இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்டன. அவைகளைப் பற்றி ஆராய்ந்து பல தனி நூல்கள் வெளி வந்துள்ளன. இவ் வணக்கம் ஒரு மத்திய இடத்தினின்றும் சென்று உலகின் எல்லாப் பாகங்களிலும் பரவிற்று எனக் கருதப்படுகின்றது. தேயிலை, காப்பிப் பானவகைகளும் புகையிலைச் சுருட்டைப் பயன் படுத்துதலும் சில காலத்தில் இவ்வுலக முழுமையிலும் பரவியுள்ளன வாயின், இவ் வழிபாடு ஓரிடத்தினின்றும் உலகின் எல்லாப் பாகங்களுக் கும் சென்றதெனக் கூறுதல் ஒவ்வாத கூற்றாக மாட்டாது. “இவ்வழிபாடு எகிப்து, பலஸ்தின், தையர், பாபிலோன், கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிலும், ஐரோப்பாவில் கெல்தியர், இஸ்காந்து நேவியர்களிடையேயும் காணப்பட்டது; பாரசீகம், அராபியா, இந்தியா, சீனா, திபெத்து, மெக்சிக்கோ, பெரு, அபிசீனியா, யாவா, இலங்கை, பியூசித்தீவு, ஒசேனியாவின் பல பாகங்கள் என்னும் நாடுகளிலும் இவ்வழிபாடு ஓங்கியிருந்தது. சில இடங்களில் உயிருள்ள பாம்பும் வேறு சில இடங்களில் பல பாம்புகளும் கடவுளராக வழிபடப்பட்டன. கிரேக்கரின் முதல் அரசன் பாம்பு மரபிலுள்ளவனென்று கருதப் பட்டான். அபிசீனியர் தம் அரச பரம்பரையின் முதல்வனைப் பாம்பு எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பெருவில் பாம்பு வணக்கம் ஞாயிற்று வணக்கத்தோடு இணைந்து இருந்தது.”1 சூலம் சிவனுடைய கைகளில் இருப்பது சூலம், மழு (கைக் கோடரி) என்னும் இரு ஆயுதங்கள், மேற்கு ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளி லும் கடவுளின் ஆயுதங்கள் சூலம், மழு என்பனவாகவே இருந்தன. மேற்கு ஆசிய மக்கள் சூலத்தை இடியேறு எனக் கொண்டனர். “எல்லாச் சாதியினரும் இடியேற்றை ஓர் ஆயுதம் எனக் கொண்டனர். சால்தீய மக்கள் அதனை முத்தலைவேல் அல்லது கைக்கோடரி எனக் கொண்டனர். அசீரிய, சால்திய கடவுளர் மூன்று கவர் உள்ளதும் நெளிவுடையதுமாகிய இடியேறு என்னும் சூலத்தைக் கையில் பிடித் திருந்தனர். பழைய சால்திய சிற்பங்கள் சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயுள் விழுவதாகக் காட்டுகின்றன. மொகஞ்ச தரோ, அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளில் வழிபாட்டுக் குரிய சூலங்கள் காணப்படுகின்றன. மேற்கு ஆசியா கிரேத்தா முதலிய நாடுகளில் கைக்கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன. இது, வேலை நட்டு முருகக்கடவுளை வழிபடுவதை ஒத்ததாகும். மொகஞ்சதரோவிலும் கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன.1 முற்காலக் கடவுளர் வடிவங்களுக்கு இரண்டு கைகளே இருந்தன இந்திய நாடல்லாத மற்றைய நாடு களின் கடவுளர்கள் இரண்டு கைகள் உடையவர்களாகவே கொள்ளப்பட்டனர். அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங் களில் கடவுளரின் வடிவங்கள் பொறிக்கப் பட்ட பல முத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளில் காணப்படும் அவ் வடிவங்களில் இரண்டு கைகளே உள்ளன. சிவனைக் குறிப்பது என்று சொல்லப்படும் பசுபதியின் வடிவமும் இரண்டு கைகள் உடையதாகவே காணப் படுகின்றது. புத்தர் காலச் சிற்பங்களிலும் கடவுளருக்கு இரு கைகளே காணப்படுகின்றன. கி.பி. 50 வரையில் வட நாட்டில் அடிக்கப்பட்ட பொற்காசில் காணப்படும் சிவன் வடிவத்துக்கு இரண்டு கைகளே உள்ளன. இயற்கைக்கு மாறான கதைகளைப் புனைந்து மக்களுக்குச் சொல்லும் இயல்பு வாய்ந்த புராணிகர் காலங்களில் இயற்கைக்கு மாறாகக் கடவுளருக்கு நான்கு கைகள் கற்பித்துச் சிற்பங்கள் அமைக்கும் வழக்கும் உண்டாயிருக்கலாம். பிற்காலங் களில் நான்கு கைகளளவில் நில்லாது பத்து இருபது கைகள் அமைத்துச் செய்யப்பட்ட பல கடவுட் சிற் பங்கள் கம்போதியாவில் காணப்படுகின்றன. மாக்டானல் என்னும் ஆசிரியர் இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து கூறியிருப்பதாவது: “முதலாம் நூற் றாண்டின் முடிவில் இந்துக் கடவுளரைச் சிற்பங் களில் அமைக்கும் முறையில் புதியமாறுதல் ஒன்று உண்டாயிற்று. அதற்கு முன் பௌத்த சிற்பங்களில் கடவுளர் இரண்டு கைகள் உடைய வர்களாகவே காணப்படுகின்றனர். கி.பி. 50 வரையில் இரண்டாம் கட்பிசிஸ் என்பவன் அடித்த பொன் நாணயத்தில் காணப்படும் சிவன் வடிவம் இரண்டு கைகள் உடையதாகவே காணப்படுகின்றது.”1 முற்காலக் கடவுளருக்குக் கொம்புகள் மேற்கு ஆசியா இங்கிலாந்து பிரான்சு எகிப்து இந்தியா முதலிய நாடுகளில் முற்காலக் கடவுளரின் தலைகளில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. அரசரும் பெருமக்களும் இரண்டு கொம்புகளை அணிந்திருந்தார்கள். கொம்புகள் கடவுள் தன்மையையும் அதிகாரத்தை யும் குறிப்பனவாகும். மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள பசுபதிக் கடவுளின் தலையில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. “கொம்புள்ள கடவுளர் பாபிலோன், அசீரியா என்னும் இடங் களில் பெரிதும் காணப்பட்டனர். பெரிய தந்தைக் கடவுளும், பெரிய தாய்க் கடவுளும் கொம்புகளை அணிந்திருந்தனர். இதனாலேயே விவிலிய வேதத்தில் கடவுள் தன்மையுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகளுண்டு என்று சொல்லப்பட்டது. கொம்புகள் கடவுள் தன்மையின் அடையாளமாகும் ... அரசனும் அரசியும் தந்தைக் கடவுளாக வும் தாய்க் கடவுளாகவும் வெளியே வந்தபோது முடிமீது கொம்புகளை அணிந்திருந்தார்கள். அரசனும் அரசியும், தந்தைக்கடவுள் தாய்க்கடவு ளரின் பிறப்பினராகக் கருதப்பட்டனர்.” இந்தியாவிலே வெண்கலக் கால முத்திரை ஒன்றில் கொம்புகள் அணிந்த மனித வடிவம் பொறிக்கப்பட் டுள்ளது. அவ்வடிவம் சிவன் எனப்பட்ட பசுபதி எனப்படுகின்றது. அது மூன்று முகமுடையதென்று சொல்லப்படுகின்றது. மறைவாயுள்ள புறத்தில் இன்னொரு முகம் இருப்பதாகத் தெரிகின்றது. கடவுள் எல்லாத் திசைகளையும் பார்ப்பவர் என்னும் கருத்தை அமைத்து அவ்வடிவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் ‘யானுஸ்’ (Janus) என்னும் பெயருடன் நாலுமுகங்கள் உடையகடவுள் காணப்படுகின்றது. நாலு முகங்கள் உடைய வடிவங்கள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் தனித்தனி உண்டாயினவோ என்பது ஐயத்துக்கு இடமானது. ஐரோப்பா வில் காணப்படுவது மொகஞ்சதரோ வடிவத்துக்குப் பின்னுள்ள தாகலாம்.1 சிவப்பு உடை ஞாயிற்று வணக்கமுள்ள நாடுகளில் சிவப்பு ஆடை மிகவும் உயர்ந்த உடையாகக் கருதப்பட்டது. சிவப்பு நிறம் ஒருவகைக் கடவுள் வாழ் உயிர்களினின்றும் எடுக்கப்பட்டது. ஞாயிறு சிவந்த நிறமுடைய தாதலின் ஞாயிற்றுக் கடவுளை வழிபடும் குருமார் ஆதியில் செக்கர் வானம் போன்ற நிறமுடைய ஆடைகளை உடுத்தினர். முற்காலத்தில் அரசனே சிவன் ஆலயக் குருவாயிருந்தானாகலின் அரசரும், அவனுக்கு அடுத்தபடியில் ஆலயக் குருக்களாக வந்த பெருமக்களும் செவ்வுடையை அணிந்தனர். இவ்வகை ஆடைகள் மிக விலையுயர்ந்தனவாயிருந்தன. அரசரும் பெருமக்களுமல்லாத பிறர் இவ் வாடையை அணிய அனுமதிக்கப் பெற்றிலர். எகிப்து பாபிலோன் முதலிய நாடுகளில் கடவுள் விக்கிரங்களுக்குச் சிவப்பு ஆடைகளே உடுக்கப்பட்டன.1 கிரேக்க நாட்டில் குருமார், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடைகளை அணிந்ததனால் கடுந்தண்டனை அடைந்தனர். சில வேளைகளில் கொலைத் தண்டனையும் அடைந்தனர். சிவப்புச்சாயம் பெரும்பாலும் மத்தியதரைக் கடலை அடுத்த நாடுகளில் கிடைத்தது. பினீசியர் அச்சாயம் ஊட்டிய துணிகளைப் பிறநாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். அவர்கள் இந்திய நாட்டுக்குக் கொண்டு வந்து விற்ற அவ்வகை ஆடைகள் பச்சை வடம் எனப் பெயர் பெற்றன. உயர்ந்த மக்கள் அணிதற்கு உரிய இவ் வாடைகள் துறவிகளாலும் பிற கடவுள் அடியாராலும் அணியப்பட்டன. முற்காலத்தில் அணியப்பட்ட சிவப்பு நிற உடைகள் மிக விலை உயர்ந்தனவாயிருந்தமையின் காவிதோய்த்த உடைகள் பிற் காலத்தில் அணியப்படலாயின. இன்று உரோமன் கத்தோலிக்க nபாப் பாண்டவர் “ஸ்கார்லெட்” (Scarlet) என்னும் சிவப்பு ஆடையையே அணிவர். இம் முறையைப் பின்பற்றியே பௌத்த சமயத்தினரும் மஞ்சள் ஆடை உடுப்பது. “தையர் நாட்டுச் சிவப்பு ஆடைகள் உல்லாச வாழ்க்கைப் பொருள்களாக இருந்தன. அவை தரங்களுக்கும் காலங்களுக்குமேற்பப் பலவாறு விற்கப்பட்டன. அவை பெரும்பாலும் விலையேறப்பெற்றன வாயும் பொன்னின் நிறைக்குச் சமமான விலையுடையனவாயும் இருந்தன! அவை ஆலயங்களில் தூக்கவும், குருமார் அரசர்கள் உடுக்க வும் பயன்படுத்தப்பட்டன. மொசே என்பவர் தாம் செய்த கடவுளின் கூட்டுக்கும் (விமானம்) குருமாரின் உடைக்கும் இவ்வாடைகளையே பயன்படுத்தினார். பாபிலோனியர் தம் ஆலய விக்கிரங்களுக்கு இவ் வாடைகளையே உடுத்தினர். தேர் தூலியன் என்பார் எகிப்திய பாபி லோனிய அரசர் இதனைப் பயன்படுத்தியதைக் குறித்துக் கூறி யுள்ளார். கிரேக்கரும் உரோமரும் இதனை நீதிபதிகள், இராணுவ அதிகாரிகள், குருமார் என்பவர்களின் உடையாக மாத்திரம் கொண்டனர். பொது சனங்கள் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை அணியும் பொதுசனங்களுக்கு மரணதண் டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக் கும் சட்டங்கள் செய்யப்பட்டிருந்தன.” சங்கு ஞாயிற்று வழிபாடு காணப்பட்ட எல்லா நாடுகளிலும் சங்கு புனிதமுடைய தாகக் கருதப்பட்டது. அஃது ஆலயங்களில் சிறந்த வாத்தியமாகவும் பயன்படுத்தப் பட்டது. யூத மக்கள் சங்கு வாத்தியத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. சின்ன ஆசியா, மேற்கு ஆசியா, எகிப்து, மத்திய தரை நாடுகள், இந்தியா, சீனா, யப்பான் கிழக்குத் தீவுகள் அமெரிக்கா முதலிய நாடுகளில் எல்லாம் இது பரிசுத்த முடையதாகக் கொள்ளப்பட்டு வந்தமையை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார் கள். சங்கு வாத்தியமும் சங்கும் சிவ பெருமானுக்கு உகந்தன வாக இன்றும் கொள்ளப்பட்டு வருகின்றன. திருமால் கையில் கொண்டிருப்பது சங்கு. சங்கை மக்கள் புனிதமுடையதாகக் கருதினமையினால் போலும் அதனை அறுத்துச் செய்த வளைகளைப் பெண்கள் அணிந்தனர். அவை தீமையை ஓட்டும் வல்லமையுடையன என்று கருதப்பட்டமையின் சங்கு வளைகள் காப்பு என்னும் பெயர் பெற்றன. மக்கள் ஒரு காலத்தில் “சோகி” அல்லது கவடி எனப்படும் கடல் பிராணி யின் ஓட்டைத் தாய்க்கடவு ளின் அடையாளமாக வைத்து வழிபட்டனர். சங்கு புனித முடையதாகக் கொள்ளப்பட்டமையின் அதனிடத்துப் பிறக்கும் முத்து மிகப் புனிதமுடையதாகவும் சீவசத்து அளிப்பதாகவும் கொள்ளப்பட்டு மக்களால் அணியப்பட்டன. முத்துக்கள் முற்கால ஆலயக் குருமாரா யிருந்த அரசர் அரசியராலும், பெருமக்களாலும் அணியப்பட்டன. முத்துக்கள் விலையுயர்ந்தனவாகவும், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியனவல்லாமல் இருந்தபடியினாலும் அவைகளுக்குப் பதில் சீவசத்து அளிப்பவனாகிய உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப் பட்டன. உருத்திராக்கம் அணிதல் கடவுள் தொழும்பர் என்பதைக் குறிப்பதாக இன்று கருதப்பட்டு வருகின்றது. இவ்வாறு சமயத் தொடர் பாக எல்லா மக்களுக்கும் பொதுவில் உள்ள பல கொள்கைகளை நாம் அறிய முடிகின்றது. “சங்கு ஓடு மிகவும் விலை ஏறப்பெற்றது. விவிலிய மறை (Psalm XXVI, 3) அமாவாசைக் காலத்தும் பரிசுத்த விருந்து நாளிலும் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட்டது எனக் கூறுகின்றது. இந்துக்கள் தம் விழாக்களைச் சங்கு ஊதி அறிவிக்கின்றார்கள்”.1 “சிவப்புச் சாயத்தைக் கண்டு பிடித்தவர்களே முதலில் சங்கு வாத்தியங்களைப் பயன்படுத்தினார்கள்”. சங்கு வாத்தியம் கிறித்துவ, யூத, பிராமண, பௌத்த, சிந்தோ மதத்தினராலும், மத்தியதரை இந்திய, மத்திய ஆசிய, இந்தோனேசிய, யப்பான், ஆசேனிய அமெரிக்க நாடுகளின் மக்களாலும் ஆலயங்களில் ஒலிக்கப்பட்டன.”1 சீரிய நாட்டில் சிவன் கடவுள் சீரியா என்பது மேற்கு ஆசியாவிலே மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள நாடு. அங்கிருந்து வந்து மலையாளத்தில் குடியேறிய கிறித்தவர்களே ‘சீரிய கிறித்தவர்கள் எனப்படுகின் றனர். சீரிய நாட்டில் ஒரு காலத்தில் சிவன் கடவுளும் காளியுமே முழுமுதற் கடவுளர் களாக வழிபடப்பட்டனர். இந்திய நாட்டில் சிவன் கடவுள் எவ்வடிவுடன் வழிபடப்பட்டதோ, அவ் வடிவுடனேயே சீரிய மக்களின் தந்தைக் கடவுளும் வழிபடப்பட்டது. சீரிய நாட்டிலே வெண்கலத் தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்ட தந்தைக் கடவுளின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சீரிய மக்கள் தாம் முழுமுதலாகக் கொண்டு வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு அதாத்து (ஆதி?) என்னும் பெயர் இட்டு வழங்கினார்கள். அக்கடவுள் தாடியுடையதாகவும் அடி அகன்று நுனி ஒடுங்கிக் கூராக முடியும் முடியை உடையதாகவும், வலக்கையில் இரண்டு அலகுடைய மழுவை உடையதாகவும் இடக்கையில் கீழ் மூன்றும் மேல் மூன்றுமாக (மும்மூன்று) கவர்களையுடைய இடியேற்றை வைத்திருப்பதாகவும் காணப்படுகின்றது. அக்கடவுளைத் தாங்கி நிற்கும் இடப ஊர்தியின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.1 இக்கடவுள் கையில் பிடித்திருப் பதை நேர் ஒத்த இரட்டைச் சூலம், வேலூர்க் கோட்டைக்குள் இருக்கும் சிவன் ஆலயத்தின் வாயிலிலே சிவன் வடிவாகக் கருங்கல்லில் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ள காவல்கடவுளின் கையில் இருப்பதைப் பார்க்கலாம். கிதைதி நாட்டில் சிவன் கடவுள் சீரிய நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு சின்ன ஆசியா எனப்படும். அங்கு கிதைதி என்னும் பழைய நாடு ஒன்று உள்ளது. கிதைதி மொழி தமிழ்மொழிக்கு மிக இனமுடையதென்றும் அந்நாட்டின் பழைய மொழிக்குரிய எழுத்துக்கள் மொகஞ்சதரோ எழுத்துக்களை ஒத்துள்ளன என்றும், ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். கிதைதி நாட்டிலே பழைய அழிபாடுகளின் சுவர் ஒன்றில் வரையப்பட்டிருந்த பல ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வடிவங்களுள் ஒன்று சீரிய மக்கள் வழிபட்ட அதாத்து என்னும் தந்தைக் கடவுள் போன்றது. இன்னோர் ஓவியத்தில் காணப்படும் வடிவம் இடபத்தின் மீது நிற்கின்றது. இடபத் தின் கொம்புகளில் பூமாலை சூட்டப்பட்டிருக்கின்றது. அது முக்கோண வடிவான வில்லைத் தோளில் வைத்திருக்கின்றது; நீட்டிய கையில் இடியேறு போன்ற கவருள்ள பொருளை வைத்திருக்கின்றது.2 சிங்க ஊர்தியில் வீற்றிருக்கும் தாய்க் கடவுளும் இடப ஊர்தியில் எழுந்தருளியிருக்கும் தந்தைக் கடவுளும் பொறிக்கப்பட்ட பழைய நாணயமொன்றும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது.3 இத் தந்தைக் கடவுள் இடபத்தின் மீது வீற்றிருக்கின்றார். கூரிய முடி அணிந்து இருக்கும் தாய்க்கடவுள் அவருக்குப் பக்கத்தே தண்டும் கேடகமுந்தாங்கிச் சிங்காசனத்தின் மீது இருக்கின்றார். தாய் தந்தைக் கடவுளர் கணவன் மனைவியர்களாவர். இடபத்திலிருக் கும் கடவுளுக்கு இடக்கைப் புறத்தே தாய்க் கடவுள் அல்லது தாய்க் கடவுளுக்கு வலக்கைப் புறத்தே தந்தைக் கடவுளாகக் கிதைதிநாட்டுக் கடவுளர் வைக்கப்பட்டுள்ளார்கள். கிதைதிக் கடவுளர்கள் சிவன் என்னும் கடவுளை மிக ஒத்திருத்தல் நம் கருத்தை மிகக் கவரத்தக்கதாய் இருக்கின்றது. சீரிய மக்கள் இக்கடவுளுக்கு அதாத்து (Adad) என்னும் பெயர் கொடுத்துத் தாம் வழிபடும் கடவுளர் எல்லோருக்கும் தலைவராகக் கொண்டனர். அவர்கள் இக்கடவுளைத் “தனி முதல்” அல்லது “முழு முதல்” என்று வணங்கினர். இக்கடவுள் எல்லா வல்லமையும் உடையவ ராகக் கருதப்பட்டார். இக் கடவு ளின் பாரி அதர்கேட்ஸ் (adar-gates) எனப்பட்டார். இவ்விரு வருமே எல்லாக் கடவுளர்க்கும் தலைவர்களாவர். பாபிலோனி யரும் செமித்தியரும் இத்தாய்க் கடவுளை இஸ்தர் (ஈசுவரி) என்றும் பினீசியர் அஸ்தொ றாதி (astorate) என்றும் பழைய யூதர் அஸ்தறொத்து (astoreth) என்றும் வழங்கினர். கிதைதியிலே சான்கோவர் என்னும் கிராமத்தில் கிட்டிய காலம் வரையில் சுற்று மதில் உடையதும் பரிசுத்த மீன் உறைவதுமாகிய குளம் ஒன்று இருந்தது. இது தொலுக் பாபா என்னும் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு யூபிதர் தொலிசினஸ் என்னும் கடவுளின் ஆலய மொன்று உள்ளது. இவ்வாலயத்திலுள்ள கடவுளே அங்குள்ள மற்றைய கடவுளர் களுக்கு எல்லாம் தலைமை உடையவ ரெனத் தெரிகின்றது. இக்கடவுள் ஒரு கையில் இடியேற்றையும் மற்றக் கையில் இருமுனைகளுள்ள கண்ட கோடரியை (மழுவை)யும் தாங்கி நிற்கின்றார். அவரின் மனைவி சிங்க ஊர்தியுடைய எராசான்ரா என்பவராவர். தாடியுடைய கடவுள் நீட்டிய இடதுகரத்தில் சூலத்தைப் பிடித்துக் கொண்டு நிறையாகச் செல்லும் ஆடவருக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். அவர் ஒருபோது தந்தைக் கடவுளாயிருக்காலம். கிதைதி மக்களின் வான் தெய்வத்தின் அடையாளங்கள் இடபமும் சூலமும் ஆகும். இக்கடவுளின் இரு கற்சிலைகள் வட சீரியாவிலுள்ள சென் யெறிலி என்னும் இடத்திலும் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு சிலைகளிலும் இக்கடவுள் கிதைதி உடைதரித்து, குறுகிய வட்டுடை உடுத்து, முன் வளைந்த செருப்புத்தொட்டு, பிறை வடிவான உடைவாளைப் பக்கத்தே தூங்கும்படி அரையிற் கட்டிய வடிவுடன் காணப்படுகின்றார். தூக்கிய அவருடைய கைகளில் வலக்கை கண்ட கோடரியைப் பிடித்து இருக்கின்றது. இடக்கை சூலத்தைப் பிடித் துள்ளது. பாபிலோனிற் கண்டுபிடிக்கப்பட்ட சிலையில் கடவுள் முடிமீது இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. இவை ஒரு போது இடபத் துடையவாகலாம். யூபிராதஸ் பக்கங்களில் உள்ள மலாதியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிலையில் இடபத்தின் மீது நின்று கையில் சூலத்தைப் பிடித்து இருக்கும் ஒரு கடவுள் காணப் படுகின்றது. கையில் வளைந்த தடி பிடித்தவரும், நீண்ட அங்கி அணிந்த வருமாகிய பூசாரி, ஒரு கையினால் கடவுளை நோக்கி நின்று பலி செலுத்துகின்றார். கிதைதியிற் காணப்பட்ட இன்னொரு சிற்பத்தில் முக்கோண வடிவான வில்லைப் பிடித்து இடபத்தின் மீது நிற்கும் கடவுள் ஒன்று காணப்படுகின்றது. இக் கடவுளைப் பற்றிக் கிற்றுசில் என்னும் கிதைதி அரசனுக் கும் இராம்சே என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் கி.மு. 1290இல் எழுதப்பட்ட சமாதான உடன்படிக்கை ஒன்றால் தெரிய வருகின்றது. இச் சமாதான உடன்படிக்கைப் படிகள் கிதைதி மொழியிலும் எகிப்திய மொழியிலும் எழுதப்பட்ட பட்டையங் களுள் காணப்படுகின்றன. கிதைதிப் பட்டையம் களி மண்ணில் எழுதிச் சூளையில் இடப்பட்டுள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை வாசகங்கள் எகிப்திலே தீப்ஸ் நகரிலுள்ள ஆலயச் சுவர்களில் எகிப்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அப்பட்டையத்தினால் ஞாயிற்றுக் கடவுளே அவர்களின் முதன்மைத் தெய்வம் எனத் தெரிகின்றது. கிதைதி சாசனம் எழுதப்பட்ட களிமண் தட்டில் கிதைதி முத்திரை ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அரசன் இடிக்கடவுளால் தழுவப்பட்டிருக்கிறான். அரசி, அரன்னா என்னும் தாய்க் கடவுளால் தழுவப்பட்டிருக்கிறாள். கிதைதி மக்களின் இவ்வான் கடவுள் கொம்மாசீனிலுள்ள டொலிச்சி என்னுமிடத்தில் நீண்ட காலம் வணங்கப்பட்டவராதல் வேண்டும். ரோமச் சிற்பங்களில் இக்கடவுள் யூபிதர்தொலிசின்ஸ் என்னும் பெயருடன் உயர்ந்த கூரிய முடியணிந்து இடபத்தின் மீது நின்று ஒரு கையில் சூலமும் ஒரு கையில் மழுவும் தாங்கியுள்ளார். இவ்வடிவில் இக்கடவுள் வழிபாடு சீரியா நாட்டில் இருந்து போர் வீரர்களாலும் அடிமைகளாலும் உரோமச் சக்கராதி பத்தியத்துக்குக் கொண்டு சென்று பரப்பப்பட்டது. பெரும்பாலும் எல்லைப் புறங்களிலும் போர்வீரரின் கூடாரங்களிலும் இவ்வழிபாடு ஓங்கி இருந்தது. மக்கள் இவ்வடிவத்துடன் கடவுளை வழிபடும் முறை அரப்பா, மொகஞ்சதரோ காலத்தில் மிகப்பழைமை அடைந்திருந்ததெனத் தெரிகின்றது. சேர்யோன், மார்சல், என்பார் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் நடத்திய ஆராய்ச்சியில் மக்களும் பலவகை விலங்குகளும் சூழ்ந்திருக்க மத்தியில் யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடைய சிவன் பொறித்த முத்திரை ஒன்று காணப்பட்டது. மக்கே என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் மேலும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் பின்பு நடத்திய ஆராய்ச்சியில் இன்னும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் கிடைத்த இவ்வகை முத்திரைகளே மொகஞ்சதரோ முத்திரைகளைவிடக் காலத்தால் முற்பட்டன என்று கருதப்படுகின்றன. இம் முத்திரைகளில் காணப்படும் வடிவங்கள் மக்கள் இறைவனைப் பசுபதி எனக்கொண்டு வழிபட்ட தன்மையை விளக்குகின்றனவென்று எல்லா ஆராய்ச்சியாளரும் ஒரே வகையாகக் கூறியுள்ளனர். சில முத்திரைகளில் சிவன் மூன்று முக முடையவராகவும் வெட்டப்பட்டுள்ளார். முற்காலத்தில் இடியேற் றுடன் இடபத்தையும் இக் கடவுளின் அடையாளமாகக் கொண்டனர். மிருகத்தின் மூர்க்க குணத்திற்கு மாத்திரமன்று, ஆனால் அதன் குரல் இடியேற்றின் குரலை ஒத்திருத்தல் நோக்கியேயாகலாம் என யாம் ஊகித்தல் கூடும். ஆதிகால மனிதன் வானத்தேயுள்ள இடபத்தின் குரலே இடியேறு எனக் கருதியிருக்கலாம். பெண்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற பெண் தெய்வம் பொகாஸ் கூவி (Bogharskui) என்னுமிடத்தில் வான் கடவுளுக்குப் பக்கத்தே இருக்கின்றது. இஃது ஆசிய மக்களின் தாய்க் கடவுளாகலாம். இக்கடவுள் அணிந்து இருக்கும் கூரிய முடியும், அவள் ஏறிச் செல்லும் சிங்கம் அல்லது புலியும், சிங்கங்களால் இழுக்கப்படும் தேருடைய சிலிபி என்னும் தெய்வத்தை நமக்கு நினைவு ஊட்டுகின்றன. சீரிய மக்களின் அதகிராதி என்னும் பெண் தெய்வம் உயர்ந்த முடியணிந்து சிங்கத்தின் மீது இருப்பதாக பாபிலோனில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்வுரு வத்தைக் கிரேக்கர் ரியா (Rea) என வழங்கினர். அவருடைய முழங்கால் களில் இரண்டு சிங்கங்கள் நிற்பதாக அவர்கள் அவர் வடிவைச் சித்திரித்துள்ளார்கள். சின்ன ஆசியாவில் உள்ள தார்சஸ் (Tarsas) என்னும் இடபத்தில் பால்கடவுளுடன் ஆதி என்னும் தாய்க் கடவுளும் வணங்கப்பட்டது. அவர்களின் வடிவங்கள் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின் மீது இருக்கிறாள். தந்தைக் கடவுளைக் கிரேக்கர் சியஸ் (Zeus) கடவுளாகக் கருதினார்கள். உலூசியன் (Lucian) என்பார் இக்கடவுளின் தோற்றம் சியஸ் (Zeus) வடிவை ஒத்துள்ளதெனக் கூறியுள்ளார். ஆனால் சியஸ் கடவுளைப்போலல்லாமல் பால்கடவுள் இடபத்தின் மீது இருந்தார். இவ்வகையான இடிக்கடவுள் பாபிலோனிய ராலும் அசீரியராலும் மிகப் பழைமைதொட்டு வழிபடப்பட்டார். அவருக்கும் அடாட் என்னும் பெயர் உண்டு. அசீரிய சிற்பமொன்றில் முடியில் இரண்டு கொம்புகளை அணிந்து கையில் சூலமும், கண்ட கோடரியும் தாங்கியவ ராக இவர் காணப்படுகின்றார். “அரப்பா புதை பொருள் ஆராய்ச்சி” என்னும் நூலில் வற்ஸ என்பார் கூறுவது : “அவர் (சிவன்) அட்ட ணைக் காலிட்டு ஒரு பீடத்தின் மீது இருக்கின்றார். காற்பெரு விரல்கள் கீழ்ப் பக்கம் வளைந்து நிற்கின்றன; கைகள் விரிந்து இருக்கின்றன; அவை முழங்காலில் தங்கி இருக்கின்றன. மணிக்கட்டு முதல் தோள் வரையும் வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சூலமும் இடபமுமுடைய சிவனின் முற்கால வடிவமே மொகஞ்ச தரோவில் காணப்பட்டதாகும்.1 மொகஞ்சதரோவில் பின்னும் செய்யப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சி என்னும் நூலில் மக்கே என்பவர் கூறியுள்ளது; 22வது இலக்க முத்திரையில் அட்டணைக் காலிட்டுப் பீடம் ஒன்றின் மீது இருக்கும் ஒரு வடிவம் காணப்படுகின்றது. பீடங்களின் கால்கள் இடபத்தின் கால்கள் போல் இருக்கின்றன. கைகளுக்கும் கால்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்தல் பொருட்டு முத்திரை வெட்டுவோன் கைகளை முழங்கால் களில் தங்குமாறு வெட்டியிருத்தல் கூடும். கைகளில் பல வளையங்கள் காணப்படுகின்றன. தலையில் இலைகளுடைய மரக்கிளை காணப்படு கின்றது. அக்கிளை ஆல் இனத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. கொம்பு களாயின் அவை மரக்கிளையின் அடியில் கட்டப்பட்டுள்ளனவாகும். அவ்வடிவத்துக்குப் பக்கத்துக்கு இரண்டும், முன் ஒன்றுமாக மூன்று முகங்கள் உள்ளன. 235ஆவது முத்திரையில் இதே வகையான வடிவம் காணப்படு கின்றது. இதில் பீடமில்லை. வடிவம் நிலத்தின்மீது இருக்கின்றது. தலை அணி இரண்டு கொம்புகளாகவும் கொம்புகளின் இடையே பூங்கொத் தாகவும் காணப்படுகின்றது. தலைமயிர் பின்னால் தொங்குகின்றது. இதற்கு ஒரு முகம்மாத்திரம் இருக்கிறது. 420ஆம் இலக்க முத்திரை பெருப்பித்துக் [Pl. C.(F)] காட்டப் பட்டுள்ளது. இது பெரிதும் பழுதின்றியிருக்கின்றது. சேர் யோன் மார்சல் என்பார் இதனைச் சிவன் என்று குறிப்பிட்டு உள்ளார். இம் மூன்று முத்திரைகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கௌபீன மொன்றைத் தவிர இவ்வடிவங்கள் வேறு ஆடையின்றியே காணப்படு கின்றன. கௌபீனம் இக்காலம் அணியப்படும் இலங்கோடு போன்றது. 222 ஆவது முத்திரையில் இந்த வடிவத்துக்கு ஒரு முகம்தான் உண்டு. 235, 420 முத்திரைகளில் உள்ள வடிவங்களுக்கு மூன்று முகங்கள் உண்டு. 222, 420இல் உள்ள உருவங்கள் பதிந்த பீடத்தின் மீது இருக்கின்றன. ஒரு பீடத்தின் கால்கள் இடபத்தின் பாதங்கள் போன்றன. இவ்வுருவங்கள் எல்லாம் பல வளையங்களை மணிக்கட்டு முதல் தோள்வரையும் அணிந் துள்ளன. 420இல் காட்டப்பட்ட வடிவம் முக்கோண வடிவான அணி அல்லது மணிகள் கோத்த பல வடங்களை அணிந்து இருக்கின்றது. தலை மயிர் எப்படி முடிந்து இருக்கின்றது என்று அறிவது கடினமாக இருக் கிறது, 235 ஆவதில் காட்டப்பட்டுள்ள உருவத்தின் மயிர் கயிறுபோல் பின்னே தொங்குகின்றது.1 420 ஆவது முத்திரையில் மனித வடிவத்தைச் சூழ்ந்து ஆறு விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. இடப்பக்கத்தில் யானை யும் புலியும் நிற்கின்றன. அவைகளுக்கு இடையில் மனிதன் ஒருவன் நிற்கின்றான். வலப்புறத்தில் காண்டாமிருகமும் எருமையும் நிற்கின்றன. கடவுள் வீற்றிருக்கும் பீடத்தின் கீழ் இரண்டு மான்கள் அல்லது மலை யாடுகள் நிற்கின்றன. சேர்யோன் மார்சல் என்பார் இவ்வடிவம் சிவனின் பசுபதி என்னும் தன்மையை விளக்குவதெனக் கூறியுள்ளார். சேர்யோன் மார்சல் கூறியுள்ளது வருமாறு; நிலக்கடவுள் தாய்க் கடவுளர்களின் பக்கத்தில் மொகஞ்சதரோவில் நிர்வாணமான ஒரு வடிவம் காணப்படு கின்றது. அதனைப் பார்த்தவுடன் அது வரலாற்றுக் காலத்தைய சிவனுக்கு முற்பட்ட வடிவம் எனத் தெரிகின்றது. மூன்று முகமுடைய அவ் வடிவம் பதிந்த ஒரு பீடத்தின் மீது யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையில் இருக்கின்றது. சிவமதத்தை ஒப்ப யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே ஆரம்பமாகி இருந்தது. இந்து ஐரோப்பியர் காலத்திலே இதிகாச காலம் வரையில் யோகத்தைப்பற்றி ஏன் அதிகம் கூறப்பட வில்லை என்பதையும் இது விளக்குகின்றது. மக்கே என்பாரால் இம் முத்திரை கண்டுபிடிக்கப்படு முன்பே இராம பிரசாத்து சந்திரா XCVIII முத்திரையிலுள்ள வடிவின் தலையை நோக்கி அதன் கண்கள் மூக்கு நுனியை நோக்குகின்றன என்றும், அது யோகத்தின் அடையாளம் என்றும் முடிவுசெய்து உள்ளார். அக்கடவுள் யோகிகளால் தேடி அறியப் படுபவர் மாத்திரம் அல்லாமல் பசுபதியாகவும் விளங்கினார். இஃது அக்கடவுளைச் சூழ்ந்து காணப்படும் புலி, காண்டாமிருகம், யானை, எருமை முதலியவைகளைக் கொண்டு இனிதறிகின்றோம்.1 ஆரியர் சிவ வணக்கத்தைத் தமிழரிடமிருந்து பெற்றார்கள் சிவ வழிபாடு ஆரிய மக்களுக்கு உரியதன்று. அதனை அவர்கள் திராவிட மக்களிடமிருந்து பெற்றார்கள். ஆரியமக்களின் வேதங்களில் கடவுளின் பெயர் சிவன் எனக் காணப்படவில்லை.2 பாரசீகம் கிரீசு முதலிய மற்றைய ஆரியர் நாடுகளில் சிவ வணக்கம் காணப்படாமையால் அஃது இந்து ஆரியர் அறியாதிருந்து பின்பு ஆதி மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளப்பட்டதென நன்கு துணிதல் சாலும். இதனைச் சார்லஸ் எலியட் என்னும் ஆசிரியர் திறம்பட ஆராய்ந்து விளக்கி யுள்ளார்.3 திராவிட இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு: ஆரியரின் உருத்திரன் திராவிட மக்களின் கடவுளாவர். உருத்திரன் என்பதற்குச் “சிவந்தவன்” என்பது பொருள். இது சிவன் என்பதன் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. வீலர் (Wheeler) என்பார், சிவன் துரானிய மக்களின் கடவுள் எனக் கூறியுள்ளார். ரெகோசின் என்பார் தமது “மர வணக்கமும், பாம்பு வணக்கமும்” என்னும் நூலில் சிவ வணக்கம் இந்திய நாட்டுக்கே உரியதென்றும் அது வடநாட்டினும் பார்க்கத் தென்னாட்டுக்கே உரிமையுடையது என்றும் கூறியுள்ளார். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr.Stephenson) சிவன் தமிழரின் கடவுள் எனப் புகன்றார். இருக்கு வேதம் இலிங்க வணக்கத்தை இழித்துக் கூறுவதால் வேதகாலத்துக்கு முன் சிவ வணக்கம் திராவிடரிடையே வளர்ச்சியடைந் திருந்ததென கில்பேர்ட் சிலாட்டர் (Dr.Gilbert Slater) என்பார் கூறியிருக் கின்றார். இருக்கு வேதத்தில் உருத்திரன், சிவன் என்னும் பெயரால் அறியப்படவில்லை என்றும் உருத்திரன் உறைபனி மூடிய மலைகளி னின்று இடி முழக்கங்களோடு வரும் இடிக் கடவுளைக் குறித்ததென்றும் வேத ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr. Step-henson) என்பாரே பழைய வேதப் பாடல்களில் சிவன் என்னும் பெயர் காணப் படவில்லை என முதல் முதல் எடுத்துக் காட்டியவராவர். உருத் திரனை அக்கினி எனக் காட்டலாம். அக்கினியையும் உருத்திரனையும் சிவன் எனக் காட்டுதல் முடியாது. தக்கன் சிவனை யாகத்துக்கு அழைக்க வில்லை என்றும் ஆனால் பதினொரு உருத்திரரும் யாகத்தில் வந்திருந் தார்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இந்திய வரலாற்று ஆசிரியருள் ஒரு சாரார் சிவவழிபாடு ஆரிய மக்களால் அறியப்பட்டு இருந்தது என்றும் அது மொகஞ்சதரோ மக்களுக்கு அல்லது தமிழருக்கு உரியதன்றென்றும் வழக்கிடுவாராயினர். ஆரியரே தமிழரின் சமயத் தொடர்புகளுக்கு அதிகாரிகள் என்றும், அவர்கள் வேதங்களில் எல்லாப்பொருள்களும் கூறப்பட்டுள்ளன என்றும் சொல்லும் மூடநம்பிக்கை நீண்டகாலம் நிலவுவதாயிற்று. இக்கருத்தினாலேயே பிராமண மதத்தைக் கைக்கொண்ட தமிழர் வடநாட்டுக் கோத்திரப் பெயர்களை இட்டு வழங்குவதும், வட மொழியைத் தமது மொழி எனக்கொண்டு அச்சொற்றொடர்களைச் சமயக் கிரியைகளில் பயன்படுத்துவதும், தாம் பூதேவர் என இறுமாப்புக் கொள்வதுமாகும். சிவ வழிபாடு தமிழருடைய தென்று உறுதிப்பட்டால் மேற்கூறிய மூடக் கொள்கைகளுக்கு ஆபத்து நேரக்கூடும். அது கருதியே ஒரு கூட்டத்தினர் தமது ஆக்கத்துக்கு மாறுபட்டனவாகத் தோன்றும் வரலாற்று உண்மைகளை எதிர்த்து வருகின்றனர். இந்திய நாகரிகம்1 என்னும் வெளியீட்டில் அமலானந்த கோஷ் என்பார் கூறியிருப்பது பின் வருமாறு: யோகத்தைப்பற்றிய சாதனையும் கொள்கையும் முற்காலப் பிற் கால வேத மதத்துக்கு முற்றும் அன்னியமானவை. இப்பொழுது சண்டா என்பவர் யோகத்தைப்பற்றிப் பழைய சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அறிந்து இருந்தார்கள் என மொகஞ்சதரோப் பழம் பொருட் சிற்பங்களைக் கொண்டு நன்கு விளக்கி உள்ளார்கள். சிந்துவெளி மக்கள் தங்கள் கடவு ளுக்கு ஒரு யோகிக்குரிய எல்லாப் பண்புகளையும் கொடுத்து இருந்தார்கள். படைத்தல் தொழில் செய்வதற்குக் கடவுள் தவம் செய்ய வேண்டும் என அவர்கள் நம்பினார்கள்; தமது போக்கின்படி மனிதர் கடவுளையும் நினைப்பா ரானார். மனிதனை உயர்நிலைப்படுத்தக் கூடிய செயல்களைக் கடவுள ரும் செய்ய வேண்டுமென்பது அவர்களுடைய கருத்து. இந் நம்பிக் கையைக் கொண்டு போலும் சிந்துவெளி மக்கள் கடவுளை யோகத் திருக்கும் வடிவில் வழிபடுவாராயினர். சாங்கிய மதத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாங்கியம் வேதமதத்துக்குப் புறம்பானது. யோகத்தைப்பற்றிய கொள்கை கள் வேத காலத்துக்கு முற்பட்டன. சிவ வணக்கம், ஆரியத் தொடர்பில்லாததா? என்று நீண்ட காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியர் சம்பந்தமான எல்லாம் உயர்வுடையன என்றும் இவ் வுயர்ந்த வழிபாட்டு முறை ஆரிய மதத் தொடர்பு உடையது என்றும் தவறாகக் கருதப்படலாயின. இவ்வணக்கத்தில் ஆரியச் சார்பு உள்ளதென்று காட்டுவதற்கு எவ்வகை ஆதாரமும் கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வழிபாடு இருந்ததென்பதற்கு நல்ல சான்றுகள் உண்டு. இருக்கு வேதத்தில் இரு இடங்களில் ஆரியரின் பகைவரைக் குறிக்கச் சிசினதேவர்கள் என்னும் பிரயோகம் காணப்படு கின்றது. இதனால் ஆரியருக்குச் சிவவணக்கம் உடையதன்று என நன்கு விளங்கும். சம்புத்தீவு நாவற்றீவு அன்று, சிவன் தீவு இந்திய நாட்டோடு தொடர்புற்றுத் தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாயிருந்த பெரிய நிலப்பரப்புக்குச் சம்புத்தீவு என்னும் பெயர் இருந்ததெனப்படுகின்றது. அதற்குக் காரணம் மேருவைச் சார்ந்து பெரிய நாவல் மரம் நின்றமை எனப்படுகின்றது. இக் காரணம் சிறந்ததாகக் காணவில்லை எனத் திராவிட ஆராய்ச்சி (Darvidic Studies) என்னும் நூலுக்குக் குறிப்பு வரைந்த கொலின்ஸ் (M.Collins) என்பார் கூறியிருப்பது பின் வருமாறு : 1சம்பு என்னும் சொல் வேதத்தில் ஆளப்பட்டுள்ளது. அது மங்களம், செல்வம் முதலிய பொருள்களைத் தரும் ‘சம்’ என்னும் அடியாகப் பிறந்தது. ‘பு’ என்பது உண்டாவது என்னும் பொருளைத் தருவது. பிற்காலத்தில் சம்பு சிவனைக் குறிக்கின்றது. செம் (சிவப்பு) என்பது போன்ற ஒரு திராவிடச் சொல்லை நினைவில் வைத்துக் கொண்டே அப்பொருளில் அச்சொல் பயன் படுத்தப்படுவதாயிற்று. சிவப்பு எப்பொழுதும் சிவன் கடவுளோடு தொடர்பு உடையது. மிக முற்காலத்தில் வட இந்தியாவிலும் தென் இந்திய மக்களை ஒத்தோர் வாழ்ந்தார்கள் என்று எனது கருத்திற்படுகின்றது. செம்பு (சிவப்பு) என்னும் தமிழ்ச்சொல்லே சம்பு என உச்சரிக்கப்பட்டது. செம்பு என்னும் திராவிடச் சொல்லின் சமக்கிருத உச்சரிப்பாகிய சம்பு என்பதே சிவப்பு அல்லது சிவப்பன் என்னும் பொருளில் சிவனைக் குறிக்கும் பெயராக வழங்கப்பட்டது. ஆரியர் குடியேறி இருந்த இடத்துக்குத் தெற்கிலேயே சிவ வணக்கம் பரவியிருந்ததாதல் வேண்டும். ஆரியர் தாம் அறியாதிருந்த தெற்கில் உள்ள நாடுகளைச் “சிவன் நாடுகள் என்னும் பொருளில் சம்புத் தீவு என வழங்கினராதல் வேண்டும்”. சிவனும் தமிழும் தமிழ், சிவன் என்னும் இரு சொற்களும் ஒரே பொருளுடையன. சிவன் என்னும் சொல் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிற்று என்பது முன்னோரிடத்தில் காட்டப்பட்டது. ‘தமிழ்’ ஞாயிற்றையே குறித்த சொல்லின் திரிபாதல் வேண்டும். தமிழ் தாமம் என்னும் சொல்லினின்று தோன்றியது என மாகறல் கார்த்திகேய முதலியார் தமது மொழி நூலின் ஓரிடத்தே குறிப்பிட்டுள்ளார். தாமம் என்பதற்கு ஞாயிறு, ஒளி என்னும் பொருள்கள் உள்ளன. மேற்கு ஆசிய நாடுகளில் தாமுஸ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டார். தமிழ்மொழியின் வரலாறு எழுதிய வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தமிழ் என்பதற்கு தாமுஸ் என்னும் பெயர்த் தொடர்பு இருக்கலாமோ என ஐயுற்றார். தாமுஸ், தாமம், எல் என்னும் பெயர்கள் ஆதி மக்களால் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் சில. எல் என்பது பிற்காலத்தே பொதுவில் கடவுளைக் குறிக்க வழங் கிற்று. ஆகவே, மக்கள் ஞாயிற்றுக் கடவுள் என்னும் பொருளில் தாமம் என்பதோடு எல்லையும் சேர்த்து வழங்கினார்கள் ஆகலாம். அது தாமம் எல்லென மருவித் தமெலாகிப் பின் தமிழ் ஆயிற்று என்று நாம் உய்த்து அறியலாம். இவ் வுண்மை மறக்கப்பட்ட காலத்திலேயே மக்களிடையே தமிழ் ஞாயிற்றினின்றும் பிறந்தது; அதன் இலக்கணத்தைச் சிவபெரு மானும், முருகக்கடவுளும், முனிவர்களுக்கு அருளிச் செய்தனர், என்பன போன்ற பழங்கதைகள் தோன்றின. நாட்டுக்குப் பெயர் மக்கள் வழிபடும் கடவுள் பெயர்த் தொடர்பாகத் தோன்றுதலும்; பின்பு நாட்டின் பெயரால் மக்களும் மொழியும் அறியப்படுதலும் இயல்பு. இது பற்றியே சிவன், தமிழோடும், தமிழரின் மதமாகிய சைவத்தோடும் நெருங்கிய தொடர்பு உடையன் என்று சொல்லப்படுகின்றனன். “தமிழ்சிவ மினிமை யெனுந் தனிப்பொருளாம் அமிழ்தெனும் அநாதி யியற்கையாய்ப் பன்னிரு கலையினை யுடைய கதிரவ னென்னத் தலைமையா யமைந்த தனியியற் பிதாமொழி”. பேரிசைச் சூத்திரம். குறிப்பு: நீண்ட காலம் ஆரியம் தமிழ் என்னும் இரு கட்சிகளுக்கிடையில் போராட்டங்கள் நடந்து வந்தன. அக்காலத்தில் பெரும்பாலும் தமிழ்க் கொள்கையுடைய நூல்கள் ஆரியக் கட்சியினரால் அழிக்கப்பட்டு பழைய நூல்களின் பெயர்களால் புதிய நூல்கள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் பழைய கருத்துக்கள் சிலவும் உண்டு. பேரிசைத் சூத்திரம் என்னும் நூலும் பிற்காலத்தவர் எவராலோ பழைய பெயரைக் கொடுத்து எழுதப்பட்ட நூலாகும். சாவகம் மலாயா கம்போதியா பசிபிக் தீவுகளில் சிவன் சாவகம் மலாயா கம்போதியா கிழக்குத் தீவுகள் முதலிய இடங்களிலெல்லாம் சிவமதமே தழைத்தோங்கி இருந்தது. கிறித்துநாதர் பிறப்பதற்குச் சிறிதுகாலத்துக்கு முன்தொட்டுத் தமிழ் மக்கள் மேற் குறித்த நாடுகளில் சென்று குடியேறியுள்ளார்கள். அவர்கள் அவ்விடங் களில் மறுபடியும் தமது சிவ மதத்தை நாட்டினார்கள். சமீப காலத்தில் போர்னியோவிலுள்ள ஒரு மலைக்குகையில் சிவன், யானைமுகக் கடவுள் முதலிய தமிழ்நாட்டில் வழிபடப்படும் கடவுளரின் சிலைகள் பல கண்டு எடுக்கப்பட்டன. அவைகளின் படங்கள் “இலண்டன் இலஸ்ரேட்டட் நியூஸ்” என்னும் மாத வெளியீட்டில் வெளி வந்துள்ளன. அவ்வுருவப் படங்கள் சிலவற்றை யாம் இலங்கையில் நடத்தப்படும் வீரகேசரிப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளோம். சாவகத் தீவுக்கு அயலே உள்ள பாலித் தீவில் இன்றும் சைவமதமும் சைவசித்தாந்தக் கொள்கைகளும் நிலைபெற்றிருக்கின்றன.1 “சாவகத்தீவிற் காணப்படும் அழிபாடுகளுட் பல கோயில்கள் சிவனுக்குரியன. சாவக மக்களின் அமர மாலை என்னும் நூல் பழைமை உடையது. அஃது அம்மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறு கின்றது. அந்நூலினால் அம்மக்கள் சிவனையே தலைமையாகக் கொண்டு வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது. குரு, ஈசுவரன் என்னும் பெயர்கள் சிவனுக்குப் பெயர்களாக வழங்கின. சுமத்திராவில் லாரா யோங்ராங் (Lara Yon-grang) என்னும் இடத்தில் பல அழிபாடுகள் இருக்கின்றன. அவைகளின் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இரு மருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங் களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி அம்மனுமுள்ள அர்த்தநாரீச்சுரத் திரு வடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல அங் குள்ளன. இவை தென்னிந்தியக் கோயில் களில் காணப்படும் உருவங்களை மிக ஒத்தன. போர்க்கடவுளாகியகார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் சாவகத்திற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில் மீது ஏறிச் செல்வது போன்ற வடிவங் களே உள்ளன. ஆறு தலையும் பன்னிரு கைகளுமுள்ள வடிவங்கள் சிலவும் காணப் படுகின்றன. இலிங்கமும் சிவன் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்து நிற்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவடிவங் களும் கிடைத்துள்ளன. பாம்பின் மீது பள்ளி கொள்ளும் திருவுருவங்களும் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இருபக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலித் தீவிற்கண்டு பிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை காகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகங்களுடைய பிரமாவின் சிலையும் சாவகத்தில் காணப்பட்டது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் நடராச மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற் செய்யப்பட்ட சிவன் உருவம் ஒன்றும் கிடைத்தது. “செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபர்ட் (Crawford) என்பார் நியூகினியில் காணப்படும் சமயக் கிரியைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுள் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.” “மலாய்க்குடா நாட்டிலே கோபுராசுவம் (Hopuralsuom) என்னும் இடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அகத்தியர், நடராசர் திரு உருவங்கள் காணப்பட்டன.” கம்போதியாவிலே காணப்படும் நடராசர் திருவுருவங்களும் பிற சான்று களும் அங்குக் குடியேறினோர் தென் னிந்திய மக்களே என்பதை விளக்குகின் றன. கம்போதிய அரசருள் பாலவர்மன் என்பவன் சிறந்த சிவபத்தன். இவன் கி.பி.616 இல் கம்பீரவாணர் என்னும் சிவலிங் கத்தை நாட்டி வழிபட்டான். கம்போதியர் கடவுளருள் சிவனே தலைமை பெற்றிருந் தார்; பிராசர், சினெங், கருபி முதலிய இடங்களில் சிவன் உமையோடு இடபத் தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப் படுகின்றன. இடபத்தின் மீது இருக்கும் வடிவத்தினும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் பல கம்போதியாவில் கிடைத்துள்ளன. “சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன. அவைகளின் எதிரே பொதுமக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவ இலிங்கம் ஒன்று உளது. பெண்கள் இதனை வலம் வந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதில் ஐயம் சிறிதும் இல்லை. மலாயர், யாவகர், மகம்மதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வது போலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ்வாலயத்தில் வழிபடு கின்றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயம் கட்டி அங்குச் சிவஇலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டில் காணப்படுகின்றது.” கம்போதியாவிலே சிவன்கோயில் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காணும் விபரம் பின்வருமாறு : “யோகவர்மன் ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காசு, குதிரை, எருமை, யானை, ஆடவர், மகளிர் பூமாலை முதலியவற்றை அரசர் கவர்ந்து கொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசனின் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளே செல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொது மக்களும் ஆடம்பர உடையுடன் உள்ளே செல்லலாம். அவர்கள் நந்தியாவர்த்த மாலை அல்லாத மாலைகளை அணிந்துகொண்டு உள்ளே செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் எவரேனும் வெற்றிலை போட்டுக் கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர் களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம்; அரசனையன்றி வேறெவராவது ஆலயத் துக்கு முன்னாற் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது, நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட் டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள், திருமாலை வழிபடும் குருக்கள், பொதுமக்களில் சிறந்தோர் முதலிய வர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலை மைக் குரு இவர்களை வரவேற்றுச் சொல்லப் பட்டுள்ள முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண் டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக் கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவு காலம் நரகத்தில் உறைவார்கள்; இக்கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவைகளை உறுதிப் படுத்துகின்றவர்கள் இத்தருமத்தை உண்டாக்கியவர்கள் பெறும் பயனில் பாதியைப் பெறுவர்”. இராவணன் காலத்துக்கு முன்தொட்டு இலங்கைத் தீவில் பல சிவன் ஆலயங்கள் இருந்தனவென்பது ஐதீகம். அசுரரும், இராக்கதரும் சிவனையே வழிபட்டார்கள். திருக்கோணமலையில் இராவணனைப் பற்றிச் சொல்லப்படும் ஐதீகங்களுக்கு அடையாளங்கள் காணப்படு கின்றன. அங்கு இராவணன் வெட்டு என்னும் மலையில் வெட்டப்பட்ட பகுதி காணப்படுகின்றது. சிலாபப் பகுதியில் உள்ள முன் ஈசுவரம் இராவணன் காலத்தது எனப்படுகின்றது. கலிங்க இராசகுமாரனாகிய விசயன் இலங்கைக்கு அரசனான போது (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) அவன் அங்குச் சிவன் ஆலயங்களை எடுத்தான். சில குறிப்புக்கள் ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுள் பிற்காலத்தில் சிவனின் வடிவை அடைந்துள்ளது. இலக்கிய காலத்தில் சிவனைப்பற்றிச் சொல்லப்படுகின்றவை வேதங்களால் அறியப்படாமல் இருந்தன. ஆரியரின் புயல் கடவுளாகிய உருத்திரனுக்குச் சிவனுக்குச் சொல்லப் படும் தன்மைகள் ஒன்றும் கூறப்படவில்லை. பிற்காலங்களில் கூறப்பட்ட வடிவை ஒத்த சிவனின் வணக்கம் கி.மு.2500 வரையில் இருந்தது. செலன்லோயிட் என்பவர் மொகஞ்சதரோ நாகரிகம் அக்காலத்த தென்று உறுதிப்படுத்தியுள்ளார். தெல் அஸ்மார் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொகஞ்சதரோ முத்திரையில் இந்திய யானை, இந்தியக் காண்டாமிருகம், முதலை முதலியன காணப்படுகின்றன.1 “மர வணக்கம், பாம்பு வணக்கம், ஆலமர வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம் முதலியவைகளின் தொடக்கத்தை நாம் கி.மு. 4000 வரையில் காணலாம்.”2 “ஆரியர் கொண்ட உலகத்தைப்பற்றிய கருத்துக்கள் திராவிட ருடையன போல் இருக்கின்றன. திராவிடரின் கடவுளர் ஆரியரின் தெய் வங்களுடன் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பெயர்களும் ஆரியரின் கடவுளர்களுக்கு இடப்பட்டன. இவ்வகை இணைப்பினால் புதிய மதம் உண்டாயிற்று.”3 “திராவிட மக்களின் மலையிலுறையும் சிவந்த கடவுள் என்னும் பொருள் தரும் சிவன் என்னும் பெயர் உருத்திரன் என்று ஆரியத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆரியரால் கொள்ளப்பட்ட திராவிடரின் கடவுள், புராண காலத்தில் உருத்திர சிவன் எனப்பட்டது. ஆரியரின் விஷ்ணு என்னும் கடவுள் தமிழரின் வானக் கடவுளைக் குறிக்கும் விண் என்பதன் மொழிபெயர்ப் பாகும்.”4 “நெருங்கிய திராவிடக் கூட்டத்தினரிடையே சிறிய ஆரியக் கூட்டத்தினரின் கலப்பினால் அதிக மாறுதல்கள் உண்டாயிருக்க மாட்டா. திராவிட அதிகாரிகள், வீரர்கள், கடவுளர் முதலியவர்களை யும், வரலாறுகளையும் ஆரியர் எடுத்துத் தம்முடையனவாக ஆண்டிருக் கின்றனர். இவ்வாறே உலகின் பலபாகங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக பாபிலோனிய அக்கேடிய அசீரிய நாடுகளின் வரலாறுகளை நோக்குங்கள். சிறு தொகையினராகிய ஆரியருக்குக் கங்கைக் கரையை அடைவதற்குப் பலநூறு ஆண்டுகள் ஆயின. அவர்கள் விந்தியமலையைக் கடப்பதற்குப் பல ஆண்டுகளாயின.”1 “சிவ என்ற சொல் தமிழ்ச்சொல்” என்று டாக்டர் கிரையர்சன் (Dr.Grierson) தமது பெருநூலுட் கூறியுள்ளார். அது வடமொழியிற் புகுந்து சைவம் என்பதற்கு அடிப்படையாயிற்று. அது செம்மை என்ற பண்புச் சொல்லடியாகப் பிறந்தது. செம்மை என்பது செந்நிறத்தையும், நேர்மை, நன்மை, மங்க ளம் என்ற பண்புகளை யும் குறிக்கும் சிவப்பு என்னும் சொல் செம்மை யடியாகப் பிறந்ததென் பது தெளிவு. அதுபோல நேர்மை, நன்மை, மங்கலம் என்பவற்றைக் குறிக்கும் சிவம் என்ற சொல்லும் செம்மை யடியாகப் பிறந்ததே. சிந்தாமணியுள் `சிவம்புரிநெறி’ என்ற சொற்றொடர் அப்பொருளிலே வந்துள்ளமை காண்க. பேரின்ப வீடு என்னும் பொருளில் சிவகதி என்ற சொற்றொடர் சிந்தாமணியாசிரியரால் வழங்கப்பட்டுள்ளது.” - கா.சுப்பிரமணிய பிள்ளை M.A., M.L. மெச்சிக்கோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் கோவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.2 ஹெரஸ் பாதிரியார் சிவன் வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது டாக்டர் இலக்ஸ்மன் சரப் (Dr.Laxman Sarap) என்பார் அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதென்றும், அவ்விடங்களில் காணப்பட்ட நாகரிகம் ஆரியருடையது என்றும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாராய்ச்சியை அறிஞர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாராய்ச்சி, இந்திய நாகரிகம் ஆரியருடையது அல்லாததாக இருக்க முடியாது என்னும் கருத்துடைய பழம் போக் காளர் சார்பில் வெளிவந்தது. அக் கட்டுரையில் கூறப்படுவன திராவிடர் நாகரிகத்தையும், சிவன் திராவிடரின் கடவுள் என்பதையும் நிலை நிறுத்தப் போதுமானவை என ஹெரஸ் பாதிரி யார் ஆராய்ந்து கூறியுள்ளவை மிகவும் பாராட்டத் தகுந்தன. அவர் கூறுவது: “மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்துக்குப் பார்க்கப் பிராமண காலத்துக்கு அண்மையிலுள்ள தென சரப் என்பார் கூறுகின்றார். அதனை நாட்டுவதற்கு அவர் சிவனைப் பற்றி எடுத்துக்கொண்டார். சிவனைப் பற்றிய அடையாளங்கள் மொகஞ்ச தரோவில் காணப்படுகின்றன. அவர், சிவன் இருக்கு வேத காலத்தில் சிறு தெய்வமாக இருந்தாரெனக் காட்டி விட்டு, சிவன், புராணகாலம் வரையில் எப்படிப் பெரிய தெய்வமாக வளர்ச்சி யடைந்தார் எனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் சிவ வழிபாடு இருந்ததென்று எந்த ஆராய்ச்சியாள ராலும் இன்று வரையும் காட்டமுடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகத் தானும் இருக்கு வேதத்தில் காணப்பட வில்லை. சிவன் என்னும் சொல் உருத்திர னுக்கு அடையாக இருக்கு வேதத்தின் ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இஃது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்று ஆகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள் படுகின்றான். இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் சிவன் மூர்க்க முடையவராகவும் சிலவேளை சாந்தமுடையவராகவும் கூறப்பட்டுள் ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேச மூர்த்திக்கு உரியதாகச் சொல்லப்படுகின்றது. இருக்கு வேத காலத்தில் இதற்கு இணைகாண முடியவில்லை.” மொகஞ்சதரோவில் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத் தில் காணப்பட்டவை என்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியர் சார்பான சிவமதம் வளர்ச்சி அடைந்திருந்தது. அங்குக் காணப் பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லாதவர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்டவை எவையேனும் ஆரிய ருக்கு உரியவை அல்ல. அங்குக் காணப்பட்ட சிவ அடையாளங்கள் பிராமண காலத்தனவாயின் அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரனின் தண்டு என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி? வேதகால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின் றனர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்ததென்று கூறமுடியாது. வேதகால இருடிகள் இலிங்கத்தைக் கண்டித்தார்கள். ஆனால் அவர் களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சி அடைந் திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குப் போக வேண்டிய தில்லை. அஃது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த திராவிட மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ் சதரோ மக்களின் வணக்கத்தைக் கண்டித்தவர்கள் அங்கு வாழ்ந்த மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவமேதயாகங் கள் இலிங்க சம்பந்த மானவை என்று கூறமுடியாது. அவை இடக் கரானவை. மேல்நாட்டுச் சிறந்த ஆராய்ச்சி யாளரும் கீழ்நாட்டு ஆசிரியரும் சிவ வணக்கம் தமிழருடையதே என்றும், அது பிற்காலத்தில் ஆரிய மக்களால் தழுவப்பட்டதென்றும் ஐயமறக் கூறியுள்ளார்கள். அவைகளைத் தனித்தனி எடுத்து இங்குக் காட்டப் புகின், அவை ஒரு தனி நூலாக விரியுமென அஞ்சி விடுத்தாம். “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மாணிக்க வாசக அடிகள் போன்ற பெரியார் கூறிய கருத்துக்கள் பெரிதும் வாய்மையுடை யன வென்பது இன்றைய ஆராய்ச்சிகளால் தெளிவுபடுத்தியமையைப் பார்த்துப் பலர் வியப்படையலாம். வழிபாடு ஆசியா, ஐரோப்பா, ஆப் பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் பண்டு எவ்வாறு காணப்பட்ட தென்றும், காலப்போக்கில் எவ்வாறு உறழ்ந்தும் பிறழ்ந்தும் மாறுபட் டுள்ளன என்றும் பற்பல சான்றுகள் கொண்டு இந்நூலகத்து இயன்ற அளவு நிறுவியுள்ளோம். “குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்”.  தமிழர் பண்பாடு முன்னுரை ஐந்து ஆண்டுகளின் முன் “இந்து சாதனம்” எனும் வார இதழில் தமிழர் பண்பாடு தொடர் புள்ள பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தோம். அக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழர் பண்பாடு” என்னும் நூலாக இப்பொழுது வெளி வந்துள்ளது. தமிழர் பண்பாடு இந்திய நாட்டில் மாத்திரமல்லாமல் உலகின் பலபாகங்களிலும் பரவியிருந்தது. இது சம்பந்தமாகப் பற்பல நூல் களிற் காணப்படும் கருத்துக்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து இந் நூலகத்துக் கூறியுள்ளோம். இந் நூலிற் காணப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சி யாளர் கொண்டுள்ள முடிவுகளைத் தழுவியனவாகும். யாழ்ப்பாணம் 15.3.66 ந.சி. கந்தையா தமிழர் பண்பாடு தோற்றுவாய் தமிழகம் மிகப் பழமை வாய்ந்த நாடு. தமிழகத்தைப் பற்றிய பழைய வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. பழங்கதைகள் போன்ற சில செய்திகளே வரலாறாக இருந்து வருகின்றன. மேல்நாட்டறிஞர் சிலரது அயரா உழைப்பினால் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறுகள் சிறிது சிறிதாக வெளிவந்து கொண்டிருந்தன. அகழ்பொருள் ஆராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சிகளும் பல உண்மைகளை வெளியிட்டன. தமிழக வரலாறு கழிந்த நூறாண்டுகளாகப் படிப்படியே வளர்ந்து கொண்டு வந்திருக்கின்றது. கால்டுவெல் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திரு. வி. கனகசபைப் பிள்ளை அவர்களின் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர், எம். சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழாராய்ச்சி ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்களின் தென் மொழி வரலாறு, சேஷ ஐயங்கார் எழுதிய திராவிட இந்தியா, பி.தி. சீனிவாச ஐயங்காரின் “ஆரியருக்கு முந்திய தமிழர் பண்பாடு”, “தமிழர் வரலாறு”, “இந்தியாவிற் கற்காலம்”, சர் ஜாண் மார்சலின் “மொகஞ்ச தாரோ அரப்பா நாகரிகம்” முதலிய நூல்களை நோக்கினால் தமிழக வரலாறு எவ்வாறு படிப்படியே வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நன்கு புலனாகும். 1. பண்டைக் காலத் தமிழகம் தமிழ் மக்கள் இந்திய நாட்டில் ஆதிமுதல் வாழ்ந்து வருகிறார் களா? அல்லது பிற நாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டில் குடியேறி னார்களா? என்னும் கேள்விகள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரு கின்றன. அவர்கள் ஆதிமுதல் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்களென ஒரு சாரார் கூறினர்: இன்னொரு சாரார் அவர்கள் அயல் நாடுகளினின் றும் வந்து இந்தியாவில் குடியேறினர் என மொழிந்தனர். இக் கருத்துக் கள் பற்றிய ஆராய்ச்சிகள் பல, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு வெளி வந்துள்ளன. தமிழ் மக்கள் அயல் நாடுகளினின்றும் வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்னும் கொள்கை அரை நூற்றாண்டின் முன் பெரிதுங் கைக்கொள்ளப்பட்டது. இவ்வரலாற்று ஆராய்ச்சிகளை நடத்தினோர் மேல்நாட்டுக் கிறித்தவர்களாக இருந்தனர். ஆதித் தாய் தந்தையர் தோன்றி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஏதேன் தோட்டம் மேற்கு ஆசியாவிலுள்ளதாக அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர் களில் பலர், ஆதித்தாய் தந்தையரினின்றும் தோன்றிய மக்கள் மேற்கு ஆசியாவில் பெருகிப்பின் பிறநாடுகளைச் சென்றடைந்தார்கள் என்னும் கொள்கைகளைத் தழுவி எழுதி வந்தார்கள். அக்காலத்தில் எகிப்திய, பாபிலோனிய, அசீரிய நாகரிகங்களே மிகப் பழமை பெற்றவை எனக் கொள்ளப்பட்டன. மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பரவினார்கள் என்னும் கொள்கை ஆதரவு பெறுவதற்கு இஃதும் ஒரு காரணமாக இருந்தது. 1921ஆம் ஆண்டு முதல் 1922ஆம் ஆண்டு வரை சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் பின் சிந்து நாகரிகம் மேற்கு ஆசிய எகிப்திய நாகரிகங்களிலும் பழமையுடையது என்று அறியப்பட்டது. இதன்பின் மேற்கு ஆசிய, எகிப்திய மக்கள் இந்தியாவினின்றும் சென்ற வர்களாகக் காணப்படுகிறார்கள் எனக் கீழ்நாட்டு மேல்நாட்டு அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். மிக மிகப் பழைய காலத்தில் இந்தியா முதல் மேற்கு ஆசியா எகிப்து வரை ஒரே இன மக்கள் வாழ்ந்தார்களென்றும், மக்கள் அங்கு நின்று இங்கும், இங்கு நின்று அங்கும் பல தடவைகள் சென்று கொண்டிருந்தார்களென்றும், ஆகவே இந்திய மக்களுக்கும் மேற்கு ஆசிய எகிப்திய மக்களுக்குமிடையில் நாகரிகம் வழிபாடுகளில் ஒற்றுமை காணப்படுகின்றதென்றும் சிலர் கூறுகின்றனர். தமிழ் மக்களின் தாயகம் தென்னிந்தியா. மிக மிகப் பழங்காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பரப்பு நீண்டு விரிந்து கிடந்தது. தென்னிந்தியா அதன் பகுதியாக இருந்தது. அந்நிலப்பரப்பு இலங்கைத் தீவை உட்படுத்திக்கொண்டு இந்தியக் கடலுள் வெகுதூரம் பரந்து கிடந்தது. அதன் பரப்பு தெற்கே நியுசீலந்து வரையும், கிழக்கே தென் சீனா வரையும் மேற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வரையும் பரவிக் கிடந்தது. அப்பொழுது இமயமலை எழவில்லை; கங்கை, சிந்து என்னும் பேராறுகளும் தோன்றவில்லை. விந்திய மலைக்கு வடக்கே கடல் கிடந்தது. அதனைப் புவியியலார் ‘இரெதே’ (Rethey) கடல் எனக் கூறுவர். பிற்காலத்தில் இமயமலை கடலினின்று எழுந்தது. அம்மலையினின்றும் ஊற்றெடுத்துச் சிந்து கங்கை முதலிய ஆறுகள் ஓடின. அவ்வாறுகள் மலையினின்று வாரிக்கொண்டு வந்த வண்டலினால் சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றின. சிந்து கங்கைச் சமவெளிகள் தோன்றிய பின்பும் விந்திய மலைக்கு வடக்கில் ஒடுங்கிய கடல் கிடந்தது. புவி இயலார் அதனை இராச புத்தானாக் கடல் எனக் கூறினர். 2. கடல்கோள் கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரி, பஃறுளி என்னும் ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. தமிழகத்தின் பெரும்பகுதி இவ்வாறுகளுக் கிடையில் கிடந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கில் நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கிடந்தன. இவற்றைக் குறித்துச் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறுகின்றது. இந்தியக் கடலில் கிடந்த பெரிய நிலப்பரப்பில் ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள். மேல்நாட்டுப் பௌதிக நூலார் இப் பூகண்டத்துக்கு இலெமூரியா எனப் பெயரிட்டனர். இலெமூர் என்னுஞ் சொல்லுக்குத் தேவாங்கு என்பது பொருள். அங்கு தேவாங்கு போன்ற உயிர்கள் வாழ்ந்தன எனக்கொண்டு அவர்கள் அந்நிலப்பரப்புக்கு இலெமூரியா எனப் பெயரிட்டார்கள். புராணங்கள் அப்பூகண்டத்தைக் குமரிகண்டம் எனக் குறிப்பிடுகின்றன. கடல் பெருக்கெடுத்தல் எரிமலை குமுறுதல் போன்ற இயற்கைக் குழப்பங்கள் இடை இடையே நேர்ந்தன. இக் குழப்பங்களால் பெரிய நிலப்பரப்பின் பகுதிகள் கடலுள் மறைந்து போயின. அங்கு வானுற ஓங்கி நின்ற மலைகளின் சிகரங்களே இந்தியக் கடலுள் கிடக்கும் தீவுக் கூட்டங்கள் எனக் கருதப்படுகின்றன. இலெமூரியாக் கண்டம் மிக அகன்று பரந்துகிடந்தது. ஆகவே அதன் பகுதிகளின் வெப்பதட்ப நிலைகள் மாறுபட்டிருந்தன. வெப்ப தட்ப நிலைகளுக்கேற்ப, நிறம் மயிரின் தன்மை, உடற் கூறுகளால் மாறு பட்ட மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களே பிற்காலத்தில் மங்கோலியர், நிகிரோக்கள், ஆஸ்திரலோயிட்டுகள், ஆரியர் போன்று நிறத்தாலும் உடற் கூற்றாலும் மாறுபட்ட மக்களாகப் பிரிந்தார்கள். இலெமூரியாக் கண்டம் இயற்கைக் குழப்பங்களால் அழிவெய் திற்று. அப்பொழுது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களில் பலர் உயிர் பிழைத்தனர். அவர்கள் சிதறி நாலா திசைகளையும் நோக்கிச் சென்று பற்பல நாடுகளில் குடியேறினார்கள்; ஒரு கூட்டத்தாரோடு இன்னொரு கூட்டத்தார் தொடர்பின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர். காலப்போக்கில் இவர்கள் வெவ்வேறு தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் படியாக மாறுபட்டார்கள். இவ்வாறு மாறுபட்டுப் பெருகிய பல கூட்டத்தினரின் நாகரிகம், சமயம், மொழி, பழங்கதைகள் முதலியன அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதை அறிவிக்கின்றன. உலக மக்கள் எல்லோரிடையும் கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை நினைவிலிருந்தது. அப்பழங்கதையின் முக்கியப் பகுதிகள் ஒரே வகையாக உள்ளன. பல்வேறு கூட்டத்தினரிடையே வழங்கும் இப் பழங்கதையும் அவர்கள் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்கள் என்பதைத் தெரிவிக்கின்றது. இலெமூரியாக் கண்டம் இருந்த காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே கடலிருந்தது. இலெமூரியாக் கண்டம் அழிவெய்தியபோது இமயமலை கடலாழத்திலிருந்து எழுந்தது. அதன் சிகரங்களில் கடல் வாழ் உயிர்களின் படிவங்கள் (fossils) காணப்படுகின்றன. அவை இம் மலைத் தொடர் கடலாழத்தினின்றும் எழுந்ததென்பதைத் தெரிவிக் கின்றன. 1“நிலைபெற் றோங்குந் தமிழகத் தாற்றி வுடைமைப் பேறுறுமக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்திப் பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்” 3. மக்கள் வடக்கு நோக்கிச் சென்று குடியேறுதல் இலெமூரியாக் கண்டத்தின் அழிவின் பின்னரும் கன்னியா குமரிக்குத் தெற்கில் இலங்கையை உட்படுத்திய நிலப்பரப்புக் கிடந்தது. இந் நிலப்பரப்பின் தெற்கில் பஃறுளியாறும், வடக்கில் குமரியாறும் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு இப்போதுள்ள கன்னியாகுமரியை அடுத்துச் சிறிது தெற்கில் இருந்ததாகலாம். தாமிரபரணி (பொருநை) ஒரு காலத்தில் இலங்கைக் கூடாக ஓடிக் கொண்டிருந்தமையின் இலங்கை தாமிரபரணி நாடு என அறியப்பட்டதென்றும், தாமிரபரணி என்பதே தபிரபேன் எனச் சிதைந்து வழங்கியதென்றும் சிலர் கூறுவர். கன்னியா குமரிக்குத் தெற்கே கிடந்த நாடுகளைக் கடல் கொண்டது. இதனைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கடல்கோளுக் குப் பிழைத்தோர் வடக்கு நோக்கிச் சென்று குடியேறினர். காலச் செலவில் மக்கட் பெருக்கம் அதிகப்பட்டது. மக்கள் மேலும் மேலும் வடக்கு நோக்கிச் சென்று தங்கினர். வடக்கில் தண்டகம் என்னும் இருண்டு அடர்ந்த பெருங்காடும் விந்தம் என்னும் நீண்டு உயர்ந்த மலைத் தொடரும் கிடந்தன. தண்டகம் என அறியப்பட்ட பெரிய காடு இன்றைய ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா முதலிய நாடு களை அடக்கியிருந்தது. இம்மூன்று நாடுகளின் பரப்பு ஏறத்தாழ எண் பதினாயிரம் சதுரமைல். பெரிய காட்டையும் மலைத்தொடரையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கிச் சென்று குடியேற அவர்களால் முடிய வில்லை. கடற்கரையை அடுத்து வாழ்ந்த மக்கள் கட்டு மரங்களிலும் ஓடங்களிலும் கடலில் செல்லும் பழக்கம் பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர் மேற்குக் கடற்கரை வழியாகக் கடலில் சென்று செழிப்பு மிக்க சிந்து நதிச் சமவெளிகளிற் குடியேறினார்கள். இவர்கள் அங்கு நின்று கங்கைச் சமவெளி வரை சென்று தங்கினார்கள். வடக்கிலும் தெற்கிலும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் பலுச்சித்தானம் வழியாக மேற்கு ஆசியாவை அடைந்தார்கள். பலுச்சித்தானத்தில் பிராகூய் என்னும் மக்கள் வாழ் கிறார்கள். அவர்கள் குல முறையில் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வழங்கும் பிராகூய் மொழி தமிழ் இனத்தைச் சேர்ந்தது. அம்மொழிக்குரிய பல சொற்கள் தமிழ்ச் சொற்களாகவுமிருக்கின்றன. ஒரு காலத்தில் வடக்கில் தமிழ் வழங்கியதென்பதற்குச் சான்றாகப் பிராகூய் மொழி இருக்கின்றது. பிராகூய் மக்கள் இந்தியாவின்றும் வெளியே சென்றவர்களில் பின் தங்கியவர்கள் எனக் கருதப்படுவார்கள். ஆரியர் மத்திய ஆசியாவினின்றும் புறப்பட்டு இந்தியாவிலும், பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் நுழைவதன் முன், பாரசீகம், இஸ்பெயின், இத்தாலி, ஐசியன் தீவுகள், மேற்கு ஆசியா, ஆசியாமைனர் முதலிய நாடுகளிலெல்லாம் தமிழினத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அபிசீனியர், பிரிட்டனில் கெல்த் மக்கள், எகிப்தியர் முதலானோரும் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களாகப் பழஞ் சரித்தர வல்லார் கூறுவர். நருமதைப் பள்ளத்தாக்கில் உலோதால் என்னுமிடத்தில் அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமிருந்ததாக அறிய வந்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் வட இந்தியாவின் பெரும்பகுதியில் பரவி வாழ்ந்து பழைய சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தார்களெனத் தெரிகிறது. “மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள் ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர் தெற்கட் பஃறுளி யாறு சீர்சால் நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்”1 4. கற்காலம் தொடக்கத்தில் மக்கள் உலோகங்களைப் பற்றி அறிந்திருக்க வில்லை. அக்காலத்தில் அவர்கள் முரடான கற்களையும் தடிகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்திய காலப்பகுதி பழங்கற்காலம் எனப் பெயர் பெறும். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் வட இந்தியாவில் சில இடங்களிலும் கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லாயுதங் கள் காணப்பட்ட இடங்கள் கற்கால மக்களின் குடியிருப்புகள் எனக் கருதப்படுகின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடந்து கடற்கோட் பட்ட நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்கால மக்களே வடக்கு நோக்கிச் சென்று குடியேறினார்கள். அக்கால மக்கள் ஆடு மாடுகளைப் பழக்கி வளர்க்கவும் பயிரிடவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வேட்டையாடுவோராகவும் உணவின் பொருட்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து திரிவோராகவுமிருந்தார்கள். முரடான கல்லாயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் படிப்படியே திருந்திய ஆயுதங்களைச் செய்யும் பழக்கம் பெற்றார்கள். அவர்கள் கல்லாயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தஞ் செய்தார்கள். அவை பார்வைக்கு அழகும் வேலை செய்யும் திறனும் பெற்றிருந்தன. இவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதி புதிய கற்காலம் என அறியப்படும். தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் புதிய கற்காலக் குடியிருப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கற்கால மக்கள் மர நிழல்களிலும் மலைத் தாழ்வாரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்தார்கள். குகைகளில் வாழ்ந்த மக்கள் குகைச் சுவர்களில் அழகிய ஓவியங்களை எழுதினார்கள். ஓவியம் தீட்டும் மை நிற மண்களைக் கல்லிலிட்டரைத்து நீர் விட்டுக் கரைத்துச் செய்யப் பட்டது. ஓவியங்கள், விலங்குகளை மக்கள் வேட்டையாடும் காட்சி களாக அமைந்துள்ளன. இவ்வகை ஓவியங்கள் இந்தியாவில் விந்திய மலைக் குகைகளிலும் மிர்சாப்பூர் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில ஓவியங்களில் கங்காரு, ஒட்டைச்சிவிங்கி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. கங்காரு ஆஸ்திரேலியாவில் வாழும் விலங்கு. ஒட்டைச்சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படுவது. இந்தியா ஆஸ்திரே லியா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கிடையில் தரை இணைப்பு இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலுமிருந்து வந்த மக்கள் அவ்வோவியங்களை வரைந்திருத்தல் கூடும். ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய பூகண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்திருந்தனவென்றும் பூமியின் கீழிருக்கும் நெருப்புக் குழம்புப் படலத்தை அடுத்த மேலோட்டின் அடியில் வெடிப்பு உண்டானமை யால் இக்கண்டங்கள் நெருப்பில் மிதந்து விலகிச் சென்றன என்றும் 1வெசினர் என்னும் ஜெர்மன் விஞ்ஞானி கூறியுள்ளார். இக்கருத்தைப் பலர் ஆதரித்திருக்கின்றனர். நீகிரோ மக்கட் சார்பும், ஆஸ்திரேலியர்களின் சார்புமுடைய மக்களில் ஒரு சிலர் ஆதிக் குடிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர். முதற் காலத்தில் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா முதலிய கண்டங்கள் இந்தியா வோடு தொடர்பு பெற்றிருந்தமையே அவ்வகை மக்கள் இந்தியாவில் காணப்படுவதற்கு ஏதுவாகலாம். கடல் கோட்பட்ட இலெமூரியாக் கண்டம் மிக விசாலமுடையதாகவிருந்தது. அக்கண்டத்தின் பல்வே றிடங்கள் பல்வேறு வெப்பதட்ப நிலையுடையனவாக இருந்தன. இடங் களின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்ப மக்கள் நிறத்தால் வேறுபட்டிருந் தார்கள். கடல்கோளின்போது பிழைத்திருந்து இந்தியாவில் குடியேறிய மக்களே இந்தியாவில் காணப்படும் நீக்கிரோயிட்டு, ஆஸ்திரலோயிட்டு மக்களென ஒரு சாரார் கூறுவர். புதிய கற்கால மக்கள் புல்லாலும் வைக்கோலாலும் வேய்ந்த சிறு குடிசைகளில் வாழ்ந்தார்கள்; நாய், வெள்ளாடு, செம்மறியாடு, மாடு, எருமை முதலிய விலங்குகளை வளர்த்தார்கள்; பிணங்களை ஈமத்தாழி களில் வைத்துப் புதைத்தார்கள்; மரவுரி, தோல், பஞ்சு ஆடை முதலிய வற்றை உடுத்தார்கள்; மணிகள், சங்குவளைகள், எலும்புகள், சோகிகளை அணிந்தார்கள். மிகப் பழங்காலம் முதல் நெருப்பின் பயன் அறியப்பட் டிருந்தது. தீக்கடை கோல்களைக் கடைந்து தீ உண்டாக்கப்பட்டது. வாணிகம் பண்டமாற்று முறையாக இருந்தது. 5. சிந்துவெளி நாகரிகம் சிந்து ஆற்றுவெளியில் மண்மேடுகள் பல காணப்படுகின்றன. அவை பழங்காலத்திலிருந்த நகரங்களின் இடிபாடுகள். 1921-க்கும் 1922 -க்குமிடையில் மொகஞ்சதாரோ அரப்பா என்னுமிடங்களில் இரு மண்மேடுகள் அகழ்ந்து ஆராயப்பட்டன. அவை அழிந்து போன பழைய நகரங்களாகக் காட்சியளித்தன. இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தொலைவு நானூறு மைல். அந்நகரங்கள் ஆற்றுக்கு அண்மையிலிருந்தன. காலத்துக்குக் காலம் ஆற்றின் படுகை உயர்ந்துகொண்டு சென்றது. நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் வீடுகளையும் பிற கட்டிடங் களையும் அழித்து மேடு செய்து அம்மேட்டில் புதிய கட்டிடங்களை எழுப்பி வந்தார்கள். இரு நகரங்களிலும் இவ்வாறமைந்த ஏழு அடுக்குகள் வெட்டி ஆராயப்பட்டன. ஏழாவது படைக்குக் கீழ் நிரூற்று வந்தமை யால் மேலும் அகழ்ந்து பார்க்க முடியவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்த தொல்பொருள்களை ஆதாரமாகக்கொண்டு அந் நகரங்களின் நாகரிக வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இரு நகரங்களும் ஒரே வகை யாக இருந்தன. இந்நாகரிகம் நருமதை ஆற்றுப் பள்ளத்தாக்கு வரையில் பரவியிருந்ததென்பது உலோதல் அகழ்வு ஆராய்ச்சியால் தெரியவந்தது. மைசூரில் சித்தல்தக் அங்கில்மத் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்தை ஒத்த பழைய நாகரிகமென்று அங்கு இருந்ததாகத் தெரியவருகின்றது. ஐதராபாத்திலும் திருநெல்வேலிப் பகுதியிலும் சமாதிக் குழிகளில் கிடைத்த மட்பாண்டங்களில் மொகஞ்சதாரோ முத்திரைகளில் வெட்டப்பட்டுள்ள எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இலங்கை யில் கேகாலையிலுள்ள பாறை ஒன்றிலும் இவ்வகை எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட மரக்கட்டைகள் பசிபிக்கடலிலுள்ள ஈஸ்டர் தீவிற் காணப்பட்டன. மொகஞ்சதாரோ மக்களின் சமயம் ஆபரணவகை முதலியன இன்னும் தென்னிந்தியாவில் வழங்குகின்றன. மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் இந்தியா முழுமையிலும் மேற்கு ஆசியா, ஆசியாமைனர், எகிப்து, ஐசியன் கடல் தீவுகளிலும் பரவியிருந்ததெனத் தெரிகிறது. இவை போன்ற சில அடிநிலைகளை அநுமானமாகக் கொண்டே உலகம் முழுமையிலும் தமிழ் வழங்கியதெனச் சிலர் கூறியிருக்கின்றனர். “சதுமறை ஆரியம்வருமும் சகமுழுதும் நினதாயின் முதுமொழி நீயனாதியென மொழிகுவதும் வியப்பாமே” (மனோன்மணீயம்) மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிக காலத்தின் மேலெல்லை கி.மு. 3300; கீழ் எல்லை கி.மு. 2500. சிந்து நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் ஆரியரென்னும் சாதியார் இந்தியாவை அடைந்தனர். சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்கு ஏதுவாக இருந்தவர்கள் ஆரியராகலாமென்றும், வேதங்களில் ஆரியருக்கும் தாசுக்களுக்கும் இடையே நடந்தனவாகச் சொல்லப்படும் போர்கள் மொகஞ்சதாரோ மக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் நடந்த போர்களாகலாமென்றும் சிலர் கருதுகின்றனர். முற்காலத்தில் நாகரிகமடைந்த சாதியாரை நாகரிகம் எய்தாத முரட்டுச் சாதியினர் வெற்றிகொண்டனர். மொகஞ்சதாரோ மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்தார்கள். ஆரியரின் குதிரைப் படையே அவர்கள் வெற்றிக்குக் காரணமெனச் சிலர் கூறியுள்ளனர். இஸ்பானியப் போர்வீரர், நாகரிகத்தில் உயர்ந்த மெக்சிக்கரை வெற்றிகொள்வதற்குக் காரணமாக இருந்ததும் குதிரைப் படையே. நாகரிகமெய்திய மக்கள் உல்லாச வாழ்க்கையில் அமர்ந்து போர் செய்யும் திறமையை இழந்தவர் களாக மாறிவிடுகிறார்கள். அக்காலப் போர்முறையில் முரட்டுச் சாதி யினருக்கு நாகரிக சாதியினரை வெற்றிகொள்வது எளிதாக இருந்தது. 6. ஆரியர் வருகை இந்துமாக் கடலுள் கிடந்த பெரிய நிலப்பரப்பு அழிவு எய்திய போது உயிர் பிழைத்திருந்த மக்களில் ஒரு கூட்டத்தினர் வடதுருவ நாடுகளில் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். குளிர் மிகுந்த நாடுகளில் நீண்டகாலம் வாழ்ந்தமையால் அவர்களின் நிறம் வெண்மையடைந்தது. துருவ நாடுகளில் ஆறுமாத காலம் பகலும் ஆறுமாத காலம் இரவும் உண்டு. வேதங்கள் தேவருக்குப் பகல் ஆறு மாதம் என்றும், இரவு ஆறு மாதம் என்றும் குறிப்பிடுகின்றன. இஃது ஆரியர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றதெனப் பாலகங்காதர திலகர் தமது “வேதங்களில் வடதுருவ உறைவிடம்”1 என்னும் நூலில் குறிப்பிட்டுள் ளார். வடதுருவ நாடுகளில் சில இயற்கை வேறுபாடுகள் தோன்றின. ஆகவே அவை மக்கள் வாழ்க்கைக்குத் தகுதியற்றனவாக மாறின. இயற்கை மாறுபாடுகளால் மக்கள் வாழும் இடங்கள் அவர்கள் உயிர் வாழ முடியாத இடங்களாகவும், மக்கள் வாழ்வதற்கு ஏற்றனவாகாத இடங்கள் அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறுவதுண்டு. கோபி வனாந்தரம், சகாரா வனாந்தரம்1 முதலியன முன்னொரு காலத்தில் செழிப்பு மிக்கனவாயும் மக்கள் உறைவிடங்களாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். வடதுருவ நாடு மக்கள் வாழ்ந்துகொண் டிருந்த மக்கள் தெற்கு நோக்கிச் சென்று காஸ்பியன் கடலுக்கும் கருங் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் மந்தை மேய்ப்பவர்களாகவும், மந்தைகள் மேய்வதற்குப் புல் வெளிகளைத்தேடி அலைபவர்களாகவும் இருந்தார்கள். ஒரு காலத்தில் கடும் வறட்சி உண்டாயிற்று. அப்போது அவர் களில் ஒரு கூட்டத்தினர் மத்திய கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று பாரசீகத்தில் தங்கினர். அவர்களின் வருகைக்கு முன் இந்தியா முதல் மேற்கு ஆசியா வரை ஒரே இன மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். சில காலத்தின் பின் அவர்களில் ஒரு கூட்டத்தினர் பாரசீகத்தினின்றும் பெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவின் வட மேற்குப் பகுதியை அடைந்தார்கள். காஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்குமிடை யில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய குழுவினர் பல கிளைகளாகப் பிரிந்து ஐரோப்பாக் கண்டத்தின் பல பகுதிகளை அடைந்தார்கள். காலப் போக்கில் அவர்கள் உள்நாட்டு மக்களோடு கலந்து ஒன்றுபட்டார்கள். இந்தியாவை அடைந்த புதிய மக்கள் ஆரியர் என அறியப்பட் டார்கள். இவர்கள் இந்தியாவை அடைந்தது கி.மு. 1,500க்கும் கி.மு. 1,000க் கும் இடையிலெனப் பெரும்பாலும் கொள்ளப்படுகிறது. ஆரியரின் வருகையின்போது இந்திய நாட்டில் உயர்ந்த நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புதிய மக்கள் சிறிது காலம் தனிமையாக வாழ்ந்தார்கள். அவருட் போர்க்குணமுடைய சிலர் உள்நாட்டு மக்க ளோடு போர் தொடுத்தார்கள். ஆரியருக்கும் உள்நாட்டு மக்களுக்கு மிடையில் நடந்த போர்களைப் பற்றி வேத பாடல்கள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டு மக்கள் மதில் சூழ்ந்த கோட்டைகளில் வாழ்வோராகவும், செல்வச் சிறப்புடைவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் இருசார் மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள். உள்நாட்டு மொழிகளில் ஆரியச் சொற்கள் சில கலந்தன. உள்நாட்டு மொழிகளோடு ஆரியச் சொற்கள் கலந்த பேச்சுமொழிகள் பிராகிருதங்கள் எனப்பட்டன. பௌத்தரும் சமணரும் தொடக்கத்தில் பிராகிருத மொழிகளையே பயன்படுத்தினர். அக்காலத்து வழங்கிய மொழிகளுள் ஒன்று பாளி. விந்தத்துக்கு வடக்கில் வாழ்ந்த மக்கள், மொழி அளவில் ஓரளவு ஆரிய ராக்கப்பட்டார்கள். விந்தத்துக்கு வடக்கிலுள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என அறியப்பட்டன. அங்கு வழங்கிய மொழிகள் பிராகிருத மொழி களாக மாறுபட்டன. பிராகிருதங்கள் இக்காலத்தில் வட நாட்டில் வழங்கும் மொழிகளாக உருவாயின. இம்மாற்றம் கி.பி. பத்தாம் நூற் றாண்டளவில் நேர்ந்தது. 1சேர். எர்பேர்ட் இரிஸ்லி என்னும் இந்திய மேல்நாட்டறிஞர் 2“இந்திய மக்கள்” என்னும் இந்திய மக்களின நூல் ஒன்று எழுதியுள்ளார். அப்பெரு நூலில் இந்தியாவில் ஆதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், அயல் நாடுகளினின்றும் வந்த சிறுபான்மை மக்கள் தமிழர் களோடு கலந்தமையால் திராவிட ஆரியர், திராவிட மங்கோலியர், திராவிட சித்தியர் முதலிய பல சாதியினர் இந்தியாவில் தோன்றினார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இவ்வகை மக்கள் வாழும் இடங் களைப் படம் வரைந்து காட்டியிருக்கின்றார். அவர் கூற்றினையே “என் சைகிளோ பீடியா பிரித்தானிக்கா” என்னும் ஆங்கிலக் கலைக்களஞ்சி யம் மேற்கோளாக எடுத்து ஆண்டிருக்கின்றது. 7. இதிகாசங்களும் தமிழ் நாடும் பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் என வழங்குகின்றன. இவை வீரரின் வரலாறுகளைக் கூறும் ஒருவகைப் புராணங்கள். இவை தொடக்கத்தில் சிறியவாக இருந்து காலந்தோறும் பின்சேர்ப்புகள் சேர்க்கப்பட்டு வளர்ச்சியடைந்தவை. ஆகவே இதிகாசங்களைக் கொண்டு வரலாற்று உண்மைகளை அறியமுடியாது. இராமாயணக் கதை நிகழ்ச்சி பாரதக் கதை நிகழ்ச்சிக்கு முற்பட்டதென நம்பப்பட்டு வருகின்றது. இராமர் காலத்தில் இராவணன் இலங்கையை ஆண்டான். கோதாவரி ஆற்றுக்குக் கீழே ஞானத்தானம் என்னும் பகுதி இருந்தது. அஃது இராவணனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. தண்டகாரணியத்தில் விராதன், கவந்தன், துந்துபி, கரன் முதலியவர்களின் தலைமையில் இராக்கதர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமரும், இலக்குமணரும், இலங்கைக்குச் சென்ற வழியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களை எதிர்ப்பட்டதாக இராமாயணம் கூறவில்லை. சீதாபிராட்டியைத் தேடும் படி சுக்கிரீவன் வானர வீரருக்குச் சொல்லும் பகுதியில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களும், பாண்டியர் தலைநகராகிய கவாடபுரமும் குறிக்கப்பட்டுள்ளன. இராமாயண காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கில் மக்கள் குடியேறாத பெருங்காடுகள் கிடந்தன. அவற்றின் இடைஇடையே நாகரிகமற்ற சிறு சிறு மக்கட் கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமாயணத்தில் காடடர்ந்தனவாகக் கூறப்படும் இடங்கள் பாரத காலத்தில் மக்கள் குடியேறி வாழும் இடங்களாக மாறியுள்ளன. அருச்சுனன் மலையத்துவச பாண்டியனது மகளாகிய சித்திராங்கதையை மணந்ததாகப் பாரதங் கூறுகின்றது. துரௌபதியின் சுயம் வரத்துக்குச் சென்றிருந்தவர்களுள் பாண்டிய அரசனும் ஒருவனாவன். உதியன் சேரலாதன் என்னும் சேர அரசன் பாரதப்போரில் கலந்துகொண்ட பாண்டவ, கௌரவ படைகளுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகப் புறநானூறு கூறுகின்றது. பாரதப்போர் கி.மு. 1400இல் நிகழ்ந்ததாகக் காலக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளது. பாரத காலத்தும் இராமாயண காலத்தும் சிவவழிபாடு உயர்வு பெற்றிருந்தது. அசுரர், இராக்கதர், வானரர் எனப்பட்டோர் சிவ வழிபாட்டினராகவிருந்தார்கள். 8. புராணங்களும் தமிழ் நாடும் பழங்காலத்தில் நாகரிகமடைந்த மக்கள் தமது அரசரின் வரலாறு களை எழுதி வைத்தார்கள். இவ்வரலாறுகளை எழுதியவர்கள் கோயில் பூசகர்களாக இருந்தார்கள். அவர்கள் கோவில்களை எழுப்பியவர்கள், கோவில்களுக்கு மானியம் வழங்கியவர்கள், சமயத்தை ஆதரித்தவர்கள் என்போரைப் புகழ்ந்தும், தம்மோடு மாறுபட்டவர்களை இகழ்ந்தும் எழுதிவைத்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டு இலங்கைப் பௌத்த பிக்குகள் எழுதிவைத்த மகாவம்சமாகும். இவ்வகை வரலாறுகள் புராணங்கள் எனப்பட்டன. புராணங்கள் சிலவற்றில் கூறப்படும் அரசர் காலங்கள் மிகப் பொருத்தமாகவுள்ளன. புராணங்களில் உண்மை வரலாறு களோடு உண்மையல்லாத கற்பனைகளும் விரவியுள்ளன. பழைய புராணங்கள் இறந்து போயினவென்றும் குப்தர் காலத்தில் இப்போதுள்ள புராணங்கள் தொகுத்து எழுதப்பட்டனவென்றும் வரலாற்றாசிரி யர்கள் கூறுவர். அரச அவையில் அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசனோடு போர்க்களஞ்சென்று அவனது வீரம், வெற்றி, புகழ், கொடை முதலியவற்றையும் புகழ்ந்து பாடினார்கள். அரண்மனைப் புலவர் இவ்வகைப் பாடல்களையும் அரசனது முன் னோர் புகழ்களையும் சிறப்புக் காலங்களில் அரண்மனையில் பாடினார் கள். இவ்வகைப் பாடல்கள் சமய சம்பந்தம் பெறாதனவாக இருந்தன. அரசரின் அரண்மனைகளிலிருந்து அரசனின் புகழ்களைப் பாடி னோர் சூதர் என அறியப்பட்டனர். சூத முனிவர் புராணங்களைச் சொன்னார் என வரும் ஐதீகம் இது பற்றியதேயாகும். சூதர் தேரோட்டு வோராகவும் இருந்தார்கள். தமிழ் நாட்டில் புரோகிதரும், அரண்மனையிலிருந்து அரசனைப் புகழ்ந்து பாடும் புலவர்களுமிருந்தார்கள். அவர்கள் அரசர் வரலாறு களையும் அவர் புரிந்த புகழ்ச்சிக்குரிய செயல்களையும் எழுதிவைத் தார்கள். அவை நமக்குக் கிடைக்காதவாறு மறைந்து போயின. மெகஸ் தனீஸ் என்னும் கிரேக்கர் மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் தூதராக இருந்தார். சிவன் முதல் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியரின் எண் 154 என்றும் அவர்களின் மொத்த ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேலவர பாண்டியன் இறுதியாக எழுபத்து நான்கு பாண்டிய அரசரைக் குறிப்பிடு கின்றது. அக்காலத்தில் தமிழ் அரசர்கள் வரலாறுகளைக் கூறும் புராணங்கள் இருந்தன என்பதற்கு இது சான்றாகவுள்ளது. பிற்காலங் களில் நேர்ந்த சாதிச் சண்டை, சமயச் சண்டை, படை எடுப்புகளாலும், நெருப்பு, நீர், செல்லு என்பவற்றாலும் மாண்டுபோன தமிழ் நூல் களோடு அவையும் மறைந்து போயினவாகலாம். 9. தமிழ் நாட்டெல்லை இமயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழ் வழங்கியதென்றும் ஆரியர் வருகைக்குப் பின் வடக்கே வழங்கிய தமிழ் பிராகிருத மொழி களாக மாறுபட்டதென்றும் முன் கூறினோம். ஆரியரின்பழைய பாடற் றிரட்டு எனப்படும் வேதத்தில் அச்சு, ஆணி, உலக்கை, ஊசி, கச்சை, ஓடம், கலம், கணக்கன், குடி, முத்து முதலிய பல சொற்கள் காணப்படு வதை ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர்.1 வடக்கில் தமிழ் பேசும் மக்களும், தமிழும் இருக்கவில்லையாயின் வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் புகுதல் எவ்வாறியலும்? ஆரியரின் வருகைக்குப் பின் பாரசீகர், பாரசீக கிரேக்கர், கிரேக்கர், மங்கோலியர் முதலிய பல சாதியினர் இந்தியா மீது படை எடுத்து வந்தனர். அவர்கள் வடநாட்டின் சில பகுதிகளை ஆட்சி புரிந்தார்கள். சில காலத்தில் அவர்கள் உள்நாட்டு மக்களின் சமயம் ஒழுக்கம் என்ப வற்றைத் தழுவி இந்திய மக்களாகவே வாழ்ந்தார்கள். இக் காரணத் தினாலும் வடக்கில் வழங்கிய மொழிகள் பெரிதும் திரிபடைந்தன. அசோகச் சக்கரவர்த்திக்குப்பின் கலிங்கம் தனி இராச்சியமாகப் பிரிந்தது. மௌரிய ஆட்சிக்குப் பின் ஆந்திர அரசு எழுந்தது. கலிங்க நாட்டை ஆண்ட சேதி அரசரும் ஆந்திர நாட்டை ஆண்ட சாதவாகன ரும் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பிராமணர்களாகிய சாதவாகன அரசர் காலத்தில் ஆந்திர நாடு ஆரிய மயமாயிற்று. கலிங்கம், ஆந்திரம் முதலிய நாடுகளில் வழங்கிய மொழி தெலுங்காக மாறுபட் டது. பழைய தெலுங்கும் கன்னடமும் முன் ஒன்றாக இருந்தனவென்றும், பழந்தமிழுக்கும் பழங்கன்னடத்துக்கும் நெருங்கிய உறவு உண்டென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆந்திர இராச்சியம் வீழ்ச்சியடைந்தபோது பல்லவர், சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர், கதம்பர், பாணர், காகதீயர் முதலிய தமிழையறியாத பல அயல் நாட்டினர் தமிழ்நாட்டின் பகுதிகளை ஆண்டார்கள். இதனால் தமிழ் மொழி வடக்கினின்றும் தெற்கு நோக்கி மாறுபட்டுக்கொண்டு வந்தது. தமிழிற் பிறமொழிச் சொற்கள் பல நுழைந்தன. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே திருப்பதியும் கிழக்கும் மேற்கும் கடலும் தமிழ்நாட்டெல்லை களாக இருந்தன. குமரி என்பதற்குக் குமரி ஆறு என்று உரை ஆசிரியர்கள் உரை எழுதியுள்ளார்கள். தொல்காப்பியம் செய்யப்பட்டது சிறிது ஏறக்குறைய கி.மு. 350இல் எனக் கொள்ளப்படுகின்றது. வட வேங்கடம் தென்குமரி என்ற எல்லைக்குள் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் பதின் மூன்று குறுநில நாடுகளும் இருந்தன. பாண்டியர் தலைநகராகிய மதுரையைச் சூழ்ந்த நாடு செந்தமிழ்நாடு என அறியப்பட்டது. தென் பாண்டி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, பன்றி நாடு, அருவா நாடு, அருவா வட தலைநாடு, சீதநாடு, மலாடு (மலை நாடு), புனல் நாடு என்பன ஏனைய நாடுகள். 10. தமிழ் நாட்டின் இயற்கை அமைப்பு தமிழ்நாடு மலையும் காடும் கடற்கரையும் வயலுமாகிய இயற்கை அமைப்புகளுடையது. ஆகவே மக்களின் வாழ்க்கை முறைகள் அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப மாறுபட்டிருந்தன. மக்கள் தொடக்கத்தில் மலையும் மலைசார்ந்த இடங்களிலும் குடியேறி வாழ்ந்தார்கள். அவர்கள் காட்டில் கிடைக்கும் காய் கனிகள், கிழங்கு வகைகள், தேன் முதலியவற்றையும் வேட்டையாடுவதாற் கிடைக்கும் விலங்குகள், பறவைகளின் இறைச்சியையும் உண்டார்கள்; சாமை, மலை நெல் முதலியவற்றைப் பயிரிட்டார்கள். விலங்குகளின் தோலையும், மரவுரியையும், இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள். காடு சார்ந்த நிலங்களில் வாழ்ந்தோர் ஆடு, மாடு, எருமை முதலிய வற்றை வளர்த்தார்கள். அவை கொடுக்கும் பால், தயிர், நெய், இறைச்சி முதலியவற்றையும், அவற்றின் விலைக்குப் பண்டமாற்றாகக் கிடைக்கும் நெல்லையும், பிற உணவுப் பொருள்களையும் பெற்றார்கள். காடு சார்ந்த நிலங்களில் வரகு பயிரிடப்பட்டது. கடலோரங்களில் வாழ்ந்தோர் கட்டுமரங்களில் கடல் மீது சென்று மீன் பிடித்தார்கள்; உவர் நிலத்தில் பாத்திகட்டி உப்பு விளைவித் தார்கள். கழுதைகள் மீதும், மாடு பூட்டிய வண்டிகளிலும் உப்பை ஏற்றிச் சென்று அதனை நெல்லுக்கு விலையாக விற்றார்கள். கடலோரங்களில் பனை செழித்து வளர்ந்தது. பனைச் செறிவுகளில் கட்டப்பட்ட குடிசை களில் மக்கள் வாழ்ந்தார்கள்; பனையிலிருந்து கள் எடுத்தார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்தோர்கள் வயல்களுக்கு ஆற்று நீரைப் பாய்ச்சி நெல் விளைவித்தார்கள். ஆற்றுக்குத் தொலைவில் வாழ்ந்தோர் மழை நீரைக் குளங்களில் தேக்கி வைத்து அதனை வயலுக்குப் பாய்ச் சினார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கவும் அவர்கள் அறிந்தார்கள். வெள்ளத்தை ஆள அறிந்தமை யால் அவர்கள் வெள்ளாளர் எனப்பட்டார்கள். பருவ காலத்தை அறிந்து மழை நீரைப் பயன்படுத்த அறிந்தவர்கள் காராளர் என அறியப்பட் டார்கள். வெள்ளாளர் பிறருக்கு உபகாரம் செய்யும் இயல்பினர். ஆகவே அவர்கள் வேளாளர் எனவும் அறியப்பட்டார்கள். வேள்வி என்பதற்கு உபகாரம் என்னும் பொருளுமுண்டு. வேள் என்பதற்கு மண் என்னும் பொருளுமுண்டு. குயவனுக்கு வேளான், வேட்கோ என்னும் பெயர் களும் வழங்கும். வேளான் என்பதற்கு மண்ணில் வேலை செய்பவன் என்பது பொருள். வேளாளன் என்பதற்கு மண்ணை ஆள்பவன் என்னும் பொருளும் கூறலாம். மலை ஒதுக்குகளிலும் காட்டு ஒதுக்குகளிலும் பாலை நிலம் போன்று ஆங்காங்கு புதர்கள் அடர்ந்த சில பகுதிகளிருந்தன. அங்கு வேட்டை யாடியும் வழிச் செல்வோரைக் கொள்ளையடித்தும் எறும்புகள் புற்றுகளில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தும் உண்டு வாழும் மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் எயினர் என அறியப்பட் டார்கள். 11. பாண்டி நாடு வரலாற்றுக் கெட்டாத பழங்காலம் முதல் தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மரபுகளிலுள்ள அரசர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூன்று மரபுகளுள் பாண்டியர் மரபே மிகப் பழமை யுடையது. “பாண்டி நாடே பழம்பதி” எனத் திருவாசகம் கூறுகின்றது. பின்னர் பாண்டிய மரபின் கிளைகளாக மற்றிரு மரபுகள் தோன்றின. பாண்டியர் மரபு பழமையுடையதாதலின் அம்மரபில் வந்தோர் பண்டையர் என அறியப்பட்டனர். பண்டையர் என்னும் பெயர் திரிந்து பாண்டியராயிற்று. எகிப்தியர் தாம் பண்டு நாட்டினின்றும் சென்று நீல ஆற்றங்கரையில் குடியேறினார்கள் என நம்பி வந்தார்கள் அவர்கள் பண்டு நாடெனக் குறிப்பிட்டது பாண்டி நாடு எனக் கருதப்படுகின்றது. மெகஸ்தீனஸ் என்பவர் எழுதிய இந்திய வரலாறு என்னும் நூல் பக்கஸ் (சிவன்) தொடக்கம் அலெக்சாந்தரின் படையெடுப்பு வரை ஆட்சி புரிந்த பாண்டியர் 154 பேர் என்றும் அவர்களின் ஆட்சிக்காலம் 6431 ஆண்டு மூன்று திங்கள் என்றும் கூறுகின்றது. இதனாலும் பாண்டியர் மரபு மிகப் பழமையுடையதெனத் தெரிகிறது. மதுரைத் தல புராணம் எழுபதுக்கு மேற்பட்ட பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றது. பாண்டு என்பதிலிருந்து பாண்டியர் என்னும் பெயர் வந்ததெனச் சிலர் கூறியிருக்கின்றனர். பாண்டுவுக்கு முன் பாண்டியர் ஆட்சியிருந்தது. பாரதப்போரில் கலந்து கொண்ட பாண்டவர், கௌரவர் படைகளுக்குத் தமிழரசர் பெருஞ்சோறு வழங்கியதாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பாண்டவர் காலத்தில் பாண்டிய இராச்சியம் இருந்ததாகப் பாரதமும் இராமாயணமும் கூறுகின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருப்பதி மலையாகவிருந்தது. திருப்பதிக்குத் தெற்கில் உள்ள நாடுகள் சேர சோழ பாண்டியர்களாலும் குறுநில மன்னராலும் ஆளப் பட்டன. பாண்டி நாடு இக்கால இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி முதலிய நாட்டின் எல்லைகள் வடக்குத் தெள்ளாறும், மேற்குப் பெருவெளியும், தெற்குக் குமரிமுனையும், கிழக்குக் கடலும் என்றும் அதன் பரப்பு ஐம்பத்தாறு காதம் என்றும் இடைக்காலத் தனிப்பாடல் கூறுகின்றது. “வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாந் தெள்ளாறாம் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத்தறு காதம் பாண்டி நாட்டெல்லைப் பதி” பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. பொருநை (தாமிரபரணி) முகத்துவாரத்திலிருந்த கொற்கை என்னும் துறைமுகம் அதன் தலைமைப் பட்டினமாகவிருந்தது. “சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும் மங்கலப் பாண்டி வளநா டென்ப.” 12. சேர நாடு இக்காலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, மலையாளம் கோயம்புத் தூர் என்று வழங்கும் பகுதிகளும் சேலத்தின் ஒரு பகுதியும் சேர்ந்த நாடு பழங்காலச் சேர நாடாக இருந்தது. கொடுந் தமிழ்நாடு எனப்பட்டவற் றுள் குட்டம், குடம், கற்கா, பூழி எனப்பட்டவை சேர நாட்டைச் சேர்ந்தவை. இந் நாட்டின் எல்லைகள் வடக்குப் பழநியும், கிழக்குத் தென்காசியும், மேற்குக் கள்ளிக்கோட்டையும், தெற்குக் கடலுமென மத்திய காலத் தனிப்பாடல் கூறுகின்றது. “வடக்குத் திசைபழநி வான்கீழ் தென்காசி குடக்குத்திசை கோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமே தெற்கு(ம்) உள்ளேண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு” இதன் தலைநகர் வஞ்சி. வஞ்சி என்பது கருவூரென்று சிலரும், கொடுங்கோளூரென வழங்கும் திருவஞ்சைக்கள மென்று சிலரும் கருதுவர். முசிறி, தொண்டி முதலியன இதன் முக்கிய துறைமுகப் பட்டினங்களாகவிருந்தன. சேர என்னும் பெயர் எப்படி வந்ததெனக் கூற முடியவில்லை. சேர நாட்டில் நாக வழிபாடு பண்டுதொட்டுப் பெருவழக்கிலிருந்து வருகிறது. வேதங்களுக்கு உரை எழுதிய சாயணர் (14-ஆம் நூ.) சாரை என்பதி லிருந்து சேர என்னும் பெயர் வந்ததாகக் கூறியுள்ளார். 13. சோழ நாடு தமிழ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ளது சோழ நாடு. இது கிழக்கே கடலையும், தெற்கே வெள்ளாற்றையும், மேற்கே கோட்டைக் கரையையும், வடக்கே ஏணாட்டுப் பண்ணையையும் எல்லையாகக் கொண்டிருந்ததெனத் தனிப் பாடலொன்று கூறுகின்றது. “கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை யிருபது நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்” இது பெருக்கொழியாத காவிரியாற்றாலும் அதன் துணை ஆறு களாலும் நீர்வளம் பெறும் செழித்த நாடு. சோழ நாடு சோறுடைத்து” என ஒளவையார் சோழ நாட்டைப் புகழ்ந்துள்ளார். காவிரிப்பூம்பட்டி னம், உறையூர், தஞ்சாவூர், குடமூக்கு (கும்பகோணம்), கங்கைகொண்ட சோழபுரம் முதலியவை இதன் சிறந்த நகரங்களாக இருந்தன. இவற்றுள் காவிரிப்பூம்பட்டினமும் உறையூரும் சங்ககாலச் சோழ அரசரின் தலைநகர்களாக இருந்தன. தஞ்சாவூரும், கங்கை கொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்களுக்குத் தலைநகர்களாகும். 14. தொண்டை நாடு தொண்டை நாடு சோழ நாட்டின் பகுதியாக இருந்தது. இது தொண்டையர் எனப்பட்ட சோழ அரசரால் ஆளப்பட்டது. பல்லவர் இராச்சியம் தொண்டை நாட்டிலிருந்தது. சோழ அரசன் ஒருவன் நாக கன்னிகையை மணந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்றும், நாககன்னி தொண்டைக் (கொவ்வை) கொடியை அடையாளமாகக் கட்டிப் புதல் வனைக் கடல் வழியே அனுப்பினாளென்றும், அரசன் அப்புதல்வ னுக்குத் தொண்டையன் என்றும் திரையன் என்றும் பெயரிட்டானென் றும் பழங்கதை இருந்து வருகிறது. தொண்டை நாட்டின் எல்லைகள் மேற்குப் பவழமலை, வடக்கு வேங்கடம், கிழக்குக் கடல், தெற்குப் பெண்ணையாறு என்பன. இதன் பரப்பு இருபது காதம். “மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா(ம்) ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்கு பினாகி திகழிரு பதின்காத நற்றொண்டை நாடெனவே நாட்டு” 15. கொங்கு நாடு இஃது இன்றைய கோயம்புத்தூர் சேலம் மாவட்டங்கள் அடங்கிய நிலவெளிகள். கொங்கு நாடு சேர நாட்டில் அடங்கியிருந்தது. இதன் எல்லைகள் வடக்குத் தலைமலை, தெற்குப் பழநிலை, மேற்கு வெள்ளியங்கிரி மலை, வடக்கு காவிரி நீர் பாய்ச்சும் குழித்தலை. “வடக்குத்தலை மலையாம் 1வையாவூர் தெற்கு குடக்கு வெள்ளிப் பொருப்புக்-குன்று குழித்தண்டலை சூழும் காவிரி நன்னாடாம் குழித்தண்டலை யளவுங் கொங்கு” 16. ஈழ நாடு மிக முற்காலத்தில் இலங்கைத் தீவு தென்னிந்தியாவோடு இணைந் திருந்தது. மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் தூதராக விருந்தார். அவர் இந்தியாவைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அது இறந்து போயிற்று. அதன் பகுதிகள் கிடைத் துள்ளன. அப் பகுதிகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒடுங்கிய ஆறு பிரிக்கிறதென மெகஸ்தீனஸ் குறிப்பிட்டுள்ளார். அனுமார் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றது, இராமரணை கட்டப்பட்டது முதலிய செய்திகள் இராமாயணத்தில் கூறப்படுகின்றன. இவை இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறிய நீரிணையிருந்ததென்பதைத் தெரிவிக்கின்றன. இராமரணை இந்தியாவையும் இலங்கையையும் பிரித்துக்கொண்டிருந்தது. 1480இல் இவ்விணைப்பில் உடைப்புக் கண்ட தாகக் கோயிற் சாசனங்கள் கூறுகின்றன. இலங்கைத்தீவு தென்னிந்தியா வுக்கு அண்மையில் இருந்தமையால் அங்கு தென்னிந்திய மக்களே குடியேறியிருந்தார்கள். புதுக்கோட்டைப் பகுதியிலும் பிற சில இடங்களிலும் ஈமத்தாழிப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வகை ஈமத்தாழிப் பிணப் புதை யல்கள் இலங்கையில் புத்தளத்துக்கு அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவ்வீமத்தாழிகள் வரலாற்றுக்கு முற்பட்டவை. வரலாற்றுக்கு முன் தென்னிந்தியப் பண்பாடுடைய மக்களே இலங்கையிலும் வாழ்ந்தார்கள் என்பதை இவ்வீமத்தாழிப் புதையல்கள் அறிவிக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் இலங்கைத்தீவை ஈழநாடு எனக் குறிப் பிடுகின்றன. சிங்களம் என்னும் பெயர் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியங்களிலும் காணப்படவில்லை. ஈழநாட்டின் வடக் கிலும் மேற்கிலும் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்தார்கள். ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இயக்கர் எனப்பட்டார்கள். இயக்கர் என்பது இராக்கதரைக் குறிக்க வழங்கிய இன்னொரு பெயர். இயக்கர், நாகர் என்னும் இரு பிரிவினரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். தேவ நம்பியதிசன் காலத்தில் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது பௌத்த மதத்தின் சமயமொழி பாளியாக விருந்தது பௌத்த மதத்தைத் தழுவிய மக்கள் வழங்கிய மொழியில் பாளிச்சொற்கள் கலந்தன. பௌத்த நூல்கள் சமக்கிருதத்திலும் எழுதப்பட்டன. பாளி, சமக்கிருதம் என்னும் இரு மொழிகளையும் பயின்ற பௌத்த குருமார் வழியாக பௌத்த மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதப்போக்கை எய்திற்று. சிங்கள மொழி யில் முதன் முதல் இலக்கியம் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் என்று சொல்லப்படுகிறது. சிங்கள மொழியைப்பற்றி ஆராய்ந்த மேல் நாட்டறிஞரும் சிங்கள அறிஞரும் சிங்களம் தென்னிந்திய மொழிக் கூட்டத்தைச் சேர்ந்ததெனக் கூறியிருக்கின்றனர். கிறித்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்து இலங்கைத் தீவு ஆங்கிலர் கைக்கு மாறும்வரை தமிழரசர் பலர் இலங்கையை ஆண் டார்கள். இலங்கை அரசர் பெரும்பாலும் தென்னிந்திய அரச குடும்பப் பெண்களை மணந்தார்கள். இவ்வாறு தென்னிந்திய அரச குடும்பங் களுக்குமிடையில் நெருங்கிய உறவு இருந்து வந்தது. இலங்கையில் அரசாங்க மதம் பௌத்தமாக இருந்த போதும் அரசரின் மதம் சைவ மாகவும் அரண்மனை மொழி தமிழாகவும் இருந்தனவென்று ஆராய்ச்சி வல்ல சேர். பொ. அருணாசலமவர்கள் கூறியுள்ளார்கள். இலங்கை அரச அவையில் பிராமணப் புரோகிதர் இருந்தார். தாம் சத்திரியர் என்னும் நம்பிக்கையினால் இலங்கை அரசர் பூணூலணிந்தனர். இலங்கையை ஆண்ட முதல் அரசனாகிய விசயன் தமிழ் பேசிய சைவ சமயத்தவ னென்பது தமிழரின் ஐதீகம். 17. மீனோவர் நாடும் தமிழகமும் பண்டைக்காலத் தமிழர் இந்தியாவில் மாத்திரம் அடைப்பட்டு இருக்கவில்லை. அவர்கள் கிழக்கே பிலிப்பைன் தீவுகள் வரையும் மேற்கே இங்கிலாந்து வரையும் கடல் வழியாகச் சென்று வாணிகம் நடத்தி னார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சென்ற மக்கள் அந்நாடுகளில் குடி யேறி அங்கு தமது பண்பாடுகளைப் பரப்பினார்கள்; சில சமயங்களில் தாம் குடியேறிய நாடுகளுக்குத் தாமே அதிபதிகளுமானார்கள். மத்தியதரைக் கடலின் ஒரு பகுதி ஐசியன் கடல் என வழங்கும். அக்கடலில் கிரீஸ் நாட்டுக்குத் தெற்கில் கிரேத்தா (Crete) என்னும் தீவுளது. அங்கு வாழ்ந்த பழைய மக்கள் மீனோவர் (மீனோஸ்) என அறியப்பட்டார்கள். ஆகவே அவர்கள் வாழ்ந்த நாடு மீனோஸ் நாடு எனவும் அறியப்பட்டது. அங்கு அரப்பா மொகஞ்சதாரோ நாகரிகத்தை ஒத்த நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிந்துவெளி நாகரிகம் மறைந்து போயிற்று. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்குக் கிடந்த மண்மேடுகளை அகழ்ந்து பார்த்தார்கள். மீனோவ அரசரின் அரண்மனைகளும், கட்டடங்களும், தொல்பொருள்களும் அங்குக் காணப்பட்டன. அவற்றைத் துணைக்கொண்டு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ எழுத்துக்களின் தோற்றத்தில் ஒத்த எழுத்துகளும் அங்கு காணப்பட்டன. அவ்வெழுத் துகள் இன்னும் வாசிக்கப்படவில்லை. கிரேத்தா மக்களின் நாகரிகத்துக் கும் தென்னிந்திய மக்களின் நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. ஆகவே மீனோவர் நாட்டினின்றும் வந்து தென்னிந்தி யாவில் குடியேறியவர்களே தமிழராவர் எனப் பழஞ்சாத்திரக்காரர் சிலர் கருதினர். உண்மை இதற்கு நேர்மாறானது. கிரீஸ் நாட்டில் எரதோதஸ் (கி.மு. 470) என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் வாழ்ந்தார். அவர் பல நாடுகளுக்குப் பயணஞ்செய்து அந்நாடுகளின் பழைய வரலாறுகளைத் திரட்டினார்; அவற்றையும் தாம் நேரில் கண்டவற்றையும் ஆதாரமாகக்கொண்டு வரலாற்று நூல் ஒன்றை எழுதினார். அந்நூலில் அவர் மீனோவரைப் பற்றியும் கூறியிருக்கின்றார். அவர் கூறியிருக்கும் ஒரு பகுதியின் சுருக்கம் வருமாறு: “இங்கு வாழும் மக்கள் சூழல்களில் வாழும் சாதியினரிலும் வேறுபட்ட பழக்க வழக்க முடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குத் தந்தை வழியிலும் பார்க்கத் தாய்வழியே முதன்மையுடையது. பிள்ளைகள் தந்தை வழியால் அறியப்படாது தாய் வழியால் அறியப்படுகிறார்கள். இவர்கள் ‘தமிலே’ என அறியப்படுகிறார்கள்”. ‘தமிலே’ என்பது தமிழ் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் துணிந்திருக்கின்றனர். மலையாளத்தில் மருமக்கள் தாயம் என்னும் தாய்வழிச் சொத்துரிமை இருந்துவருகிறது. தாயம் என்பது தாய் வழியிலிருந்து வருவதென்பதைக் குறிக்கும் சொல். மெகஸ் தீனஸ் என்பவர் பாண்டி நாடு பெண்ணால் ஆளப்படுகிறது எனக் கூறியிருப்பது பழைய நாளில் தமிழ்நாட்டில் தாய்வழியே சொத்துரிமை செல்லும் வழக்கிருந்ததென்பதைக் தெரிவிக்கின்றது. இன்றும் மலைகளி லும், குன்றுகளிலும், காடுகளிலும் வாழும் ஆதிக்குடிகள் சிலரிடையும் இவ்வழக்கு இருந்து வருகிறது. மீனோவர் ஆசியா மைனரிலுள்ள இலைசியா நாட்டில் சென்று குடியேறினார்கள். அந்நாட்டுக் கல்வெட்டுச் சாசனங்களிலும் ‘தமிலி’ என்னும் பெயர் காணப்படுகிறது. இலைசியாவில் குடியேறியவர்களில் ஒரு பகுதியினர் இத்தாலியில் குடியேறி எத்ருஸ் கானியர் என அறியப் பட்டார்கள். இஸ்பேயின் நாட்டில் வாழ்ந்த பாஸ்க்கு மக்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாஸ்க்குகள் மொழியாலும் இரத்தத் தாலும் இந்திய திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என எச்.ஜி. வெல்ஸ் போன்ற அறிஞர் கூறியிருக்கின்றனர். கிரேத்தா மக்களின் வழிபாடுகளில் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட் டது. சிங்கவாகனத்தோடு சம்பந்தப்பட்டதாய்க் கடவுளும் (காளியும்) பாம்பும் வழிபடப்பட்டன. சங்க இலக்கியங்களில் முல்லைநில மக்களின் விளையாட்டாகச் சொல்லப்படும் ஏறுதழுவுதலை ஒத்த விளையாட்டு கிரேத்தாவில் நடத்தப்பட்டது. அவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை வரலாற்றுக்கு முந்திய தென்னிந்திய ஈமத்தாழிப் பிணப் புதையல்களை ஒத்துள்ளது. அங்கு அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஓரிடத்தின் பெயர் சிவன். அங்கு தூபக்கால் போன்ற சில தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விடம் சிவன் கோயில் ஒன்று இருந்த இடமாகலாம். ஆசியா மைனரில் அனோரேலியா என்னும் மாகாணத்திலுள்ள ஒரு இடத்துக்கும் சிவன் என்னும் பெயரிருந்தது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கிராதர், கிரீத் தீவில் குடியேறினார்கள் என்றும் கிராதர் என்பதிலிருந்து கிரேத்தா என்னும் பெயர் வந்ததென் றும் சிலர்1 கூறுவர். ஆசியா மைனரில் காரியா (Caria) என்னும் பழைய நாடு ஒன்றிருந்தது. சேரர் அங்கு குடியேறினார்களென்றும் ஆராய்ச்சி யாளர்1 கூறுகின்றனர். பாறையில் குடைந்து செய்யப்பட்ட பழங்காலப் பிண அடக்கம் மலையானத்தல் குழி என அறியப்படும். இவ்வகைப் பழங் காலப் பிண அடக்கம் கரேத்தாவிலும் குழி என அறியப்பட்டது1. 18. ஈழமும், தமிழகமும் ஐபிராத்து தைகிரஸ் ஆறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக் குடாக் கடலுள் விழுகின்றன. முற்காலத்தில் இவ்வாறுகளின் கழிமுகம் ஏறக் குறைய இருநூறு மைல் தொலைவு மேலே இருந்தது. இக் கழிமுகத் துக்குத் தென்கிழக்கில் ஈழம் என்னும் பழைய நாடு இருந்தது. அங்கு பழைய நாகரிகமொன்றிருந்து மறைந்து போயிற்று. அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடை யது. எழுத்து மொகஞ்சதாரோ எழுத்தைப் போன்றது. இவ்வெழுத்துப் பொறிக்கப்பட்ட சாசனங்கள் இன்னும் வாசிக்கப்படவில்லை. அந்நாக ரிகத்துக்கும் தென்னிந்திய பழைய நாகரிகத்திற்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. தென்னிந்திய மக்களே வட இந்தியா வழியாகச் சென்று ஈழத் தில் தங்கிப் பின் பிற இடங்களுக்குச் சென்றார்கள் என இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் தலைவராகவிருந்த டாக்டர் ஹால் தமது ‘கிட்டிய கிழக்கு நாடுகளின் வரலாறு’ என்னும் நூலில் எழுதியிருக் கின்றார் காலஞ்சென்ற கௌரவ பாலசிங்கமவர்கள் “பழைய உலக நாகரிகத்தில் தமிழர் பகுதி” என்னும் தமது விரிவுரையில் இலங்கை (ஈழம்) மக்களே ஈழம் நாட்டில் சென்று குடியேறினார்களெனக் காரணங் காட்டிக் கூறினர். பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதரவர்களும் இக் கருத்தைத் “தமிழரின் தொடக்கமும் அவர்கள் பரவுதலும்” என்னும் தமது நூலில் வெளியிட்டிருக்கிறார். ஈழம் நாட்டு மக்கள் இந்திய நாட்டினின்றும் சென்றவர்களெனப் பலர் எழுதியிருக்கின்றனர். ஈழம் மிகப் பழங்காலத்தில் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்ததென்பது கந்த புராணம், இராமாயணம் முதலிய நூல்களால் நன்கு அறியக் கிடக்கிறது. புராணங்களில் சொல்லப்படும் இளாவிருதம் இலங்கை என்பது சிலர் கருத்து. பேராசிரியர் ஆர்.வி. இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பது வருமாறு: “ஈழம் என்னும் பெயர் மெசபெத்தேமியாவில் காணப்படு கிறது. இலங்கையினின்றும் சென்றவர்கள் அப் பட்டினம் வளர்ச்சியடை வதற்கு ஏதுவாக இருந்தார்களா? சாசனங்களிலும், இலக்கியங்களிலும் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயர் காணப்படுகிறது. வட ஈழம் மக்கள் அரேபியரைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை, சுமேரியரின் பண்பா டுடையவர்களாக இருந்தார்கள். வட ஈழம் மொழி சுமேரியத்தைப் போல அலாரோடியன் (Alarodian) என்னும் கூட்டத்தைச் சேர்ந்ததன்று. சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும், நெருங்கிய உறவு காணப்படுகிறது கவனிக்கத்தக்கது. பழைய திராவிடர் உலகப் பண்பாட்டுக்குத் தமது மொழியைக் கொடுத்து உதவினார்களா?” ஈழத்துக்கு மேற்கே கழிமுகத்தின் மறுகரையில் குடியேறி வாழ்ந்த மக்கள் சுமேரியர் என அறியப்பட்டார்கள். அங்குக் காணப்பட்ட உருவச் சிலைகளிலும் படைப்புச் சிற்பங்களிலும் காணப்படும் மனித வடிவங் களின் முகவெட்டு தோற்றத்தில் தமிழரின் முகத்தை ஒத்திருக்கின்றது. அம்மக்கள் வழங்கிய மொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு காணப் படுகின்றது. தமிழ்ச் சொற்கள் பல சுமேரிய மொழியில் காணப்படு கின்றன. சுமேரியர் தென்னிந்தியாவினின்று சென்றவர்களென வரலாற் றாசிரியர்கள் பலர் எழுதியிருக்கின்றார்கள். சுமேரியா நாட்டின் முக்கிய நகர்கள் சூசா, இலகாஷ் என்பவை. இவ்விடங்களில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் மொகஞ்சதாரோ முத்திரைகள் சில கிடைத்தன. சுமேரியா பாபிலோனிய இராச்சியத்தில் சேர்ந்து விட்டது. பாபிலோனி யர் காலத்தில் சுமேரிய மொழி உலக வழக்கிலில்லாது போய்விட்டது. அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது. அது சமய மொழியாகவும் இருந்தது. சட்டங்கள் அம் மொழியில் எழுதப்பட்டிருந்தன. அக்காட் நகரைத் தலைநகராகக் கொண்டு சுமேரிய இராச்சியத் தின் ஒரு பகுதியை ஓர் அரச பரம்பரை ஆண்டு வந்தது. அவ்விராச்சியம் அக்கேடியா என அறியப்பட்டது. அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைப் பேசினர். ஊர்ப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட பாபிலோனியாவின் பகுதியைப் பிறிதோர் அரச பரம்பரை ஆண்டது. அவ்விராச்சியம் சால்தியா எனப்பட்டது. சால்தியா என்பது சோழ தேசம் என்பதன் திரிவு என அபினஸ்சந்திஸ்தாஸ் என்னும் வரலாற் றறிஞர் ‘இருக்கு வேத இந்தியா’ (Rigvedic india) என்னும் நூலில் கூறியுள் ளார். இக் கூற்றினைப் பலர் வழிமொழிந்திருக்கின்றனர். அசீரியா, பாபிலோனியாவுக்கு வடக்கில் தைகிரஸ் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்தது. அதன் தலைநகர் நினேவே. அசீரியா பாபிலோனியா வின் குடியேற்ற நாடாகவிருந்தது. அது கி.மு. 1450இல் விடுதலை பெற்றுத் தனி நாடாகப் பிரிந்தது. அது பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகள் அடங்கிய பேரரசாக விளங்கிற்று. கி.மு. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்போது பாபிலோனியர் விடுதலை அடைந்தனர். இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்போது அது பாரசீகத்தின் ஒரு பகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலெக்சாந்தரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது. அசுர்பானிப்பால் என்னும் அசீரிய அரசன் நாட்டிய கற்றூண் ஒன்றில் இந்திய யானைகளும் குரங்குகளும் காணப்படுகின்றது. சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, சால்திய, அசீரிய நாகரிகங் களுக்கும், தென்னிந்திய நாகரிகத்துக்கும் நெருங்கிய உறவிருப்பதை வரலாற்றாசிரியர்கள் காட்டுவர். தமிழர் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நாடுகளின் பழைய வரலாறுகள் உதவியளிக்கின்றன. 19. பினீசிய நாடும் தமிழகமும் பாலஸ்தீனத்துக்கு வடக்கே மத்தியதரைக் கடலோரத்திலிருந்த நாடு முற்காலத்தில் பினீசியா என அறியப்பட்டது. வேதங்கள் பாணிகள் என்னும் மக்களைப் பற்றிக் கூறுகின்றன. பாணிகள் என்பது வணிகர் எனும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்றும் இவர்கள் தமிழ் வகுப்பினரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்கள் சென்று குடியேறிய நாடு பினீசியா எனப்பட்டது. பினீசியா என்பதற்குப் பனை (ஈந்து) நாடு என்னும் பொருள் கூறப்படுகிறது. அப்பகுதியில் பல்மைரா என்னும் புராதன நகரும் உண்டு. பினீசியர் புகழ்பெற்ற மாலுமிகளாக வும், வணிகராகவும் இருந்தார்கள். விவிலிய வேதத்தில் கூறப்படும் சாலமன் அரசன் (கி.மு. 900) ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு அவனுடைய மாலுமிகள் மூலம் மரக்கலங்களை ஒபிர் என்னும் இந்தியத் துறைமுகத்துக்குப் போக்கித் தந்தம், பொன், மயில், அகிற்கட்டை, குரங்கு முதலிய அரும் பண்டங்களைப் பெற்றான். ஒபிரென்னும் துறைமுகம் மலையாளக் கரையிலிருந்ததாகக் கருதப்படு கின்றது. ஒபிரினின்றும் பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள் எபிரேய மொழியில் காணப்படுகின்றன. பினீசியாவில் மோப் (Moab) நாட்டு அரசனாகிய மெசு (Meshu - கி.மு. 850) நாட்டிய கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத் தூணில் சாசனம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அச் சாசனத்தில் காணப் படும் எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் உறவு காணப்படுகிறது. இதனால், பினீசியரிடம் எழுத்தெழுதும் முறையைப் பயின்ற திராவிட வணிகர் இந்தியாவில் எழுத்தெழுதும் முறையைப் பரப்பினார்கள் என வரலாற்றாசிரியர்கள் எழுதி வந்தார்கள். மொகஞ்சதாரோ புதை பொருளாராய்ச்சிக்குப் பின் இந்தியாவினின்றே எழுத்தெழுதும் முறை பினீசியாவுக்குச் சென்றதெனக் கருதப்படுகிறது. பினீசிய மக்கள் முற்காலத்தில் பரதர் என அறியப்பட்டார்களென் றும், இவர்கள் பாரத நாட்டினின்றும் சென்றவர்களென்றும், பினீசியர் அல்பியன் எனப்பட்ட பிரிட்டன் தீவில் குடியேறினார்களென்றும், பரதர் குடியேறினமையால் அல்பியன் தீவு பிரிட்டன் எனப்பட்டதென் றும் வடல் (Waddell) என்னும் ஆராய்ச்சி அறிஞர் எழுதியுள்ளார். பினீசியர் ஞாயிற்றுக் கடவுளை பால் (பகல்?) (Baal) என்னும் பெயரால் வழிபட்டார்கள். பினீசிய நாட்டின் முக்கிய பட்டினங்கள் தயர், சிடோன் என்பன. தயர்ப் பட்டினத்தில் பெரிய பகலவன் கோயிலிருந்தது. அங்கு இரு இலிங்கங்கள் நாட்டப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று பொன்னி னாலும், மற்றது மரகதத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. இவ்விலிங்கங் கள் பின் சிபிரால்டரில் நாட்டப்பட்டமையால் அவ்விடம் எர்குலிசின் தூண்கள்1 எனப் பெயர் பெற்றது. பினீசியர் இலிங்கங்களையும், இடபத் தையும் வழிபட்டார்கள். கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் பினீசியர் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த எல்லா நாடுகளுக்கும் வாணிகத்தின் பொருட்டுச் சென்றார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர் சிடோன் என்பவை அழியாப் புகழ் பெற்றிருந்தன. சுதேச் என்பது பினீசியரின் ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடு. இங்கு அனிபால் (Hannibal) என்னும் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று கொண் டிருந்தான். உரோமர் கடும்போர் செய்து அவனைத் தோற்கடித்தனர். பினீசியர் இந்தியாவுக்குக் கொண்டு சென்று விற்ற சிவப்புச் சாயமூட்டிய துணி பச்சவடம் என வழங்கிற்று. பச்சவடம் என்பது பினீசிய மொழியில் வழங்கிய பப்புரா (Paupra) என்னும் சொல்லின் திரிபெனக் கருதப்படுகிறது. பப்புரா என்பதிலிருந்து கருஞ்சிவப்பை உணர்த்தும் பேர்ப்பிள் (Purple) என்னும் ஆங்கிலச் சொல் தோன்றிற்று. பினீசியர் எழுத்தெழுதும் முறையை இந்தியாவினின்றும் கொண்டு சென்றார்கள். இவர்கள் கிரேக்கருக்கு எழுத்தெழுதும் முறையைக் கற்பித்தார்கள். கிரேக்கர் அதனை உரோமருக்குக் கற்பித்தனர் இவ்வெழுத்திலிருந்து ஐரோப்பிய மொழிகளின் எழுத்துகள் தோன்றின. 20. ஆசியா மைனரும் தமிழ் நாடும் ஓமர் காவியத்தில் கூறப்படும் திராய் நகரில் நடத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் இலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இல்லி யாட், ஒடிசி என்னும் கிரேக்க காவியங்களில் கூறப்படும் கதைகள் இந்திய புராணக் கதைகள்போலவே இருக்கின்றன. பஞ்சதந்திரக் கதைகள் தென்னிந்தியாவில் தோன்றியவை எனக் கருதப்படுகின்றன. இவை கி.மு. 600 வரையில் ஆசியா மைனரில் வழங்கின. இக்கதைகள் இலைடியா நாட்டு அரசனாகிய குரோசசின் அரண்மனையிலிருந்த ஈசோப் என்பவ ரால் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டன. எரதோ தஸின் (கி.மு. 500) நூலிலும் இக் கதைகளுள் சில காணப்படுகின்றன. கிரேத்தாத் தீவில் வாழ்ந்த மீனோவரே ஆசியா மைனரிலுள்ள இலைசியா வில் குடியேறியிருந்தார்கள். இவர்களும் ‘தமிலே’ என அறியப்பட்டார் கள். தமிலே என்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு. ஆசியா மைனரின் ஒரு பகுதி ஹிதைதி என்னும் பெயரால் அறியப்பட்டது. இவ் விடத்திலும் சிரியாவிலும் சிவ வழிபாட்டு, இடப வழிபாட்டுச் சின்னங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறித்துவுக்கு முன் இரண்டாம் மூன் றாம் நூற்றாண்டுகளில் ஆர்மேனியாவில் கிருட்டிண பலதேவ வழிபாடு களிருந்தன. வான் ஏரிக்கு அயலில் பெரிய கிருட்டிணன் கோவிலிருந்தது. இது கிறித்தவர்களால் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அங்கு ஐயாயிரம் கிருட்டிண வழிபாட்டினர் இருந்தனர் என்று செனோப் (Zenob) என்னும் சிரிய நாட்டுச் சரித்திர ஆசிரியர் கூறி யுள்ளார். ஆர்மேனிய மொழிக்கும் தமிழுக்கும் ஒற்றுமை காணப்படுகின் றது. இவை போன்ற சில காரணங்களால் ஐபிராத்து தைரிகிரசுக் கழி முகத்திலிருந்து ஆசியா மைனர் வரையும், ஆசியா மைனரிலிருந்து இந்தியா வரையும் ஒரே மொழி வழங்கிய ஓரின மக்கள் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று பழஞ் சரித்திரக்காரர் கருதுகின்றனர். ஹெரஸ் பாதிரியார் கூறியிருப்பது வருமாறு: 1“பழங்காலத்தில் திராவிடக் கூட்டத்தினர் உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இப்பெயர்களை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரோசஸ் என்னும் பாபிலோனிய கோயில் குரு குறிப்பிட்டிருக்கின்றார். பாரசீக வளைகுடாவை அடுத்த நாடுகளில் குடியேறிய தமிழர் சுமேரியர் என அறியப்பட்டார்கள். ஆதியாகமத்தில் காணப்படுகின்றபடி இவர்கள் மொகஞ்சதாரோ அல்லது இந்தியாவின் வேறு நகரங்களில் காணப்பட்டவை போன்ற வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் சிரியா நாட்டில் குடியேறிப் பெரிய ஹிதைதிச் சக்கராதி பத்தியத்துக்குத் தளமிட்டார்கள். இவர்கள் அங்கு நின்று மத்தியதரைக் கடற்கரைகளை அடைந்து பினீசியர் என்னும் பெயர் பெற்றார்கள். அவர்கள் பெரிய கடலோடிகளாகவிருந்து முற்காலத்தில் வாணிகம் நடத்தினார்கள். மற்றவர்கள் கிரீசிலும், ஐசியன் கடல் தீவுகளிலும், இத்தாலி நாட்டிலும் குடியேறினார்கள். இவர்கள் இத்தாலியில் எத்துருஸ்கானியர் எனப்பெயர் பெற்றார்கள். இந்தியாவினின்று வேறு கூட்டத்தினரும் கடல் வழியாகச் சென்று அரேபியாவில் ஏமெனில் குடியேறினார்கள். ஏமனிலிருந்து இவர்கள் நீலஆறு நீர் பாய்ச்சும் நாட்டை அடைந்து வியப்புமிக்க எகிப்திய நாகரிகத்தைத் தோற்றுவித் தார்கள். பின் இவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று அங்கு குடியேறி நுகர்மெதியர் பேர்பேரியர் எனப் பெயர் பெற்றார்கள். அவர்கள் ஐபீரியக்குடா நாட்டில் சென்று வாழ்ந்த போது, உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களை ஐபீரியர் என அழைத்தனர். இறுதி யில் ஐபீரியர் சிலர் வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் குடியேறினார்கள். பிரிட்டனில் இவர்கள் துரீயிட்ஸ் என அறியப்பட்டார்கள். இந் நாகரிகங்களெல்லாம் ஒரு இடத்தினின்றும் சென்றமையால் அவைகளுக்கிடையில் இணைப்புக் காணப்படுகின்றது.1 21. சீனாவும் இந்தியாவும் அசோகச் சக்கரவர்த்தி பௌத்த சமய போதகர்களைச் சீனாவுக்கு அனுப்பினார். அக்காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை மிகப் பல யாத்திரிகர்களும், அறிஞர்களும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போக்கு வரத்துச் செய்தார்கள். அவர்கள் இமயமலையையும் மத்திய ஆசியாவி லுள்ள மலைகளையும் தாண்டி கோபிவனாந்தரத்துக்கு ஊடாகப் பயணம் செய்தார்கள். இப் பயணங்களில் பெரும்பாலான யாத்திரிகர்கள் இறந்தார்கள். ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தத்தை அடைந்தவர்கள் மறுபடி தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை; தாம் சென்ற நாட்டிலேயே தங்கி வாழ்ந்தார்கள். இந்துச்சீனம், சாவகம், சுமத்திரா, மலாயா முதலிய நாடுகள் வழியாகக் கடல் வழி ஒன்றும் இருந்தது. தரை வழியாகச் சென்ற பிரயாணிகள் சில சமயங்களில் கடல் வழியாக மீண்டார்கள். மத்திய ஆசியாவிலும் இந்தோனேசியாவிலும் இந்தியப் பண்பாடும் பௌத்த மதமும் சைவ, வைணவ மதங்களும் பரவியிருந்தன. அவ்விடங்களில் பல பௌத்த மடங்களும் போதனா சாலைகளும் நிறுவப்பட்டிருந்தன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணம் செய்வோர் இம்மடங்களில் தங்கிச் சென்றார்கள். இந்தியாவினின்றும் சீனாவுக்குச் சென்ற காசியப்ப மதங்கர் என்னும் இந்தியர் கி.பி. 67இல் சீனாவை அடைந்து உலோயாங் என்னுமிடத்தில் வாழ்ந்தார். இருவருக்குப் பின் பல இந்திய அறிஞர் சீனாவுக்குச் சென்றனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சீனாவிலே உலோயான் மாகாணத்தில் 3,000 இந்திய பௌத்த குருமாரும் 1,000 இந்தியக் குடும்பத்தினரும் இருந்தார்கள். சீனாவுக்குச் சென்ற இந்திய அறிஞர் சமக்கிருதத்தில் எழுதப்பட்ட பல பௌத்த நூல்களைத் தம்முடன் கொண்டு சென்று அவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தனர். புதிய நூல்களையும் அவர்கள் சீன மொழியில் எழுதினார்கள். கி.பி. 401-இல் சீனாவுக்குச் சென்ற குமார விசயர் என்னும் இந்தியர் 47 நூல்களைச் சீன மொழியில் எழுதினார். இவை இன்றும் உள்ளன. அவர் நாகார்ச்சுனர் வரலாற்றையும் சீனத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். சீன குப்தர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 37 சமக்கிருத நூல்களைச் சீனத்தில் மொழி பெயர்த்தார். சில சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவர்களில் மிகப் புகழ் பெற்றவர்கள் பாகியன், ஹ]வான் சுவாங், இத்சிங் (I-tsing) என்போர். பாகியன் ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த குமாரசிவா என்பவரின் மாணவன். பாகியன் பாடலிபுத்திரப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றான். ஹூவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகன் ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அக்காலத்தில் ஹர்சவர்தனன் என்னும் அரசன் வட இந்தியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தான். ஹூவான் சுவாங் கோபிவனாந்தரம் வழியாக வந்து இமயமலையைக் கடந்து இந்தியாவை அடைந்தான். இவன் இந்தியா முழுமையிலும் யாத்திரை செய்தான். இவன் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டுகள் கல்வி பயின்று சட்டக் கல்வி பயின்று சட்டக் கல்வியில் தேறி அக்கலாசாலையிலேயே சில காலம் துணைத் தலைவராகக் கடமையாற்றினான். நாட்டின் பல பாகங்களிலிருந்து பலர் இக்கலாசாலையில் கல்வி பயில்வதற்குச் சென்றனர். அவன் காலத்தில் மாணவரும் குருமாருமாக ஏறக்குறைய ஆயிரவர் அங்கு தங்கியிருந்து கல்வி பயின்றனர். நாளந்தாக் கலாசாலை யில் நுண்கலைகள், கைத்தொழில், மருந்து, தர்க்கம், தத்துவ ஞானம் முதலிய கல்விகள் கற்பிக்கப்பட்டன. துறவிகளும் குருமாரும் ஆசிரியர் களாக இருந்து கடமையாற்றினர். ஹூவான் சுவாங் பல கையெழுத்து நூல்களை எடுத்துக் கொண்டு தான் வந்த பாதை வழியாக மீண்டும் சென்றான்; சென்றதும் தான் கொண்டு சென்ற நூல்களில் பலவற்றைச் சீனத்தில் மொழி பெயர்த்தான். அவன் மரணமடைந்த பின் இத்சிங் என்னும் சீன யாத்திரிகன் இந்தியா வுக்கு வந்தான். இவன் கி.பி. 671இல் பயணத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளின் பின் இந்தியாவை அடைந்தான். சமக்கிருதம் பயிலும் பொருட்டுச் சில காலம் சுமத்திராவில் தங்கியிருந்த பின்பே அவன் இந்தியாவை அடைந்தான். அக் காலத்தில் சுமத்திரா, மலாயா, இந்தியா, பாரசீகம் முதலிய நாடுகளுக்கிடையில் ஒழுங்காக மரக்கலப் போக்கு வரத்து நடைபெற்றது. இத்சிங்கும் நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் கல்வி பயின்றான். அவன் செல்லும்போது தன்னுடன் பல நூல்களைக் கொண்டு சென்றான். இந்தியாவில் பௌத்த மதம் வீழ்ச்சியடைந்ததும் இந்திய அறிஞர் சீனாவுக்குச் செல்லுதல் நின்று போயிற்று. பௌத்த தலங்களைத் தரிசிப்பதற்குச் சீன யாத்திரிகர் இடையிடையே இந்தியாவுக்கு வந்தனர். 10ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் தோன்றிய அரசியல் புரட்சிகள் காரணமாகப் பௌத்த பிக்குகள் தம்மிடமிருந்த கையெழுத்து நூல் களை எடுத்துக் கொண்டு நேபாளம், திபெத்து முதலிய நாடுகளுக்குச் சென்றார்கள். சீனாவில் இந்தியாவினின்றும் கொண்டு போகப்பட்ட 8000 கையெழுத்து நூல்கள் வரை காப்பாற்றப் பட்டுள்ளன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சீனாவில் மரக்கட்டை யில் வெட்டிய எழுத்துக்களால் அச்சிடப்பட்ட சமக்கிருத நூலொன்று காணப் படுகிறது. இத்சிங் என்னும் யாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு: “விருந்தளிப்பவர்கள் பௌத்த குருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சாம்பலிட்டுச் சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பௌத்த குருவுக்கும் ஒவ்வொரு மணை இடப்படுகிறது. ஒருவர் மற்றவரோடு முட்டாமல் இருக்கும்படி மணைகள் இடப்படுகின்றன. மண் பாத்திரங்கள் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட மட்பாத்தி ரங்கள் குழியில் எறியப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட மட்பாத்திரங் களை ஒருபோதும் வைத்திருத்தல் கூடாது. பிச்சையிடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாவில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாண்டங்கள், பயன்படுத்தப்பட்ட பின் சுத்தம் செய்து வைக்கப்படுகின்றன. விருந்தினர் உண்ணும் இடம் பசுவின் சாணியால் மெழுகப்படுகின்றது. விருந்தினர் சம தூரத்தில் இடப்பட்ட மணைகளில் இருப்பார்கள். பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தமது மேலுடைகளைக் கழற்றுவார்கள். தண்ணீரில் பூச்சிகள் அல்லது புழுக்கள் இருக்கின்றனவோ என்று பார்த்து அவை இல்லாவிடில் அந்நீரில் கைகளைக் கழுவுவார்கள். பின்பு சிறிது இளைப்பாறி இருப்பார்கள். குருமார் தமது கைகளைப் பயற்றை மாவு அல்லது மண்ணைத் தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் குண்டிகையி லிருக்கும் நீரைப் பயன்படுத்துவர் அல்லது விருந்துக்கு அழைத்தவர் வார்க்கும் நீரைப் பயன்படுத்துவர். பின் அவர்கள் பீடங்களில் அமர் வார்கள். உண்ணும் தட்டுகள் அவர்களிடம் கொடுக்கப்படும். உண்ணு முன் கடவுளைத் துதித்தல் வழக்கமன்று. விருந்துக்கழைத்தவர் உணவைப் பரிமாறுவர். உணவைப் பரிமாற முன்முதலில் பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒரு கரண்டி நிறைந்த உப்பும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகின்றன. உணவைக் கொடுப்பவர் தலைமைக் குருவின் முன் கைகட்டி முழங்கால் மடித்து நின்று அவருக்கு வணக்கம் கூறுவார். குரு, “உணவை எல்லோருக்கும் ஒரே வகையாகப் பரிமாறு” என்று கூறுவார். உணவு படைக்கப்பட்டதும் விருந்தினர் உணவை உண்பர். எல்லோருக்கும் உணவு படைத்த பின் உண்ண வேண்டுமென்று பொறுத்திருக்கவேண்டியதில்லை. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மிகப் பழங்காலம் முதல் உறவு இருந்து வந்தது. பட்டைப்பற்றி மாபாரதம் குறிப்பிடுகின்றது. சீனம் என்பது பட்டுக்கு மற்றொரு பெயர். கீசகம் (மூங்கில்) சிந்தூரம், (செங்காவி) முதலிய சொற்கள் சீன மொழிக்குரியனவாகச் சொல்லப்படு கின்றன. வெள்ளைச் சர்க்கரை முற்காலத்தில் சீனாவிலிருந்து வந்தமை யால் அது சீனி எனப் பெயர் பெற்றது. 22. தென்னிந்தியர் குடியேறிய நாடுகள் இந்தியக் கடற்கரைகளில் வாழ்ந்த மக்கள் பெருங் கடலோடி களாக இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்தில் மேற்கு நாடுகளோடு கடல் வழியாக வாணிகம் செய்தார்கள். வட இந்தியர்களிலும் பார்க்கத் தென்னிந்திய மக்களே கடல் வாணிகத்தில் அதிக பங்கு பற்றினார்கள். யவன நாட்டு வாணிகப் பண்டங்களைப் பற்றிச் சங்க காலத் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. கிழக்கிலுள்ள தீவுக் கூட்டங்களில் சென்று குடியேறுவதில் தென்னிந்தியர் அதிகப் பங்கு எடுத்தனர். தொடக்கத்தில் நாடு கண்டுபிடிக்கும் பொருட்டுப் பலர் தென்னிந்தியாவினின்றும் அங்குச் சென்றார்கள். வாணிகம் வளர்ச்சியடைந்த பின் பல குடும் பங்கள் அவர்கள் வாணிகம் நடத்திய நாடுகளுக்குச் சென்றன. குடியேறிய மக்கள் பெரும்பாலும் கலிங்க நாட்டிலும் கிழக்குக் கடலோரங்களிலும் வாழ்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பல்லவ நாட்டினின்றும் பலர் சென்றனர். இக்குடியேற்றம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிச் சில காலம் நடைபெற்றது. பர்மா, சீயம், இந்துச் சீனம் முதலிய நாடு களினின்றும் சுமத்திரா, யாவா, போர்ணியோ, செலிபிஸ், பிலிப்பைன் முதலிய தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்; தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு இந்தியப் பெயர்களை இட்டார்கள். இந்நாடுகளிலும் தீவுக் கூட்டங்களிலும் குடியேறிய மக்கள் உள்நாட்டு மக்களோடு கலவாது சில காலம் தனித்து வாழ்ந்தார்கள்; சிறிது காலத் தின் பின் சிறிது சிறிதாக உள்நாட்டு மக்களோடு கலந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவோடு தொடர்பு கொள்வதை மறந்தார்கள். இந்தியர் குடியேறி வாழ்ந்த தீவுக் கூட்டங்களிலும் நாடுகளிலும் இந்து இராச்சி யங்கள் எழுந்தன. இவற்றை அடுத்துப் பௌத்த இராச்சியங்களும் தோன்றின. பௌத்தரும் இந்துக்களும் அதிகாரத்துக்காகப் போராடி னார்கள். குடியேறிய மக்கள் கட்டி எழுப்பிய பட்டினங்கள் கோயில் களின் இடிபாடுகள் அந்நாடுகளில் காணப்படுகின்றன. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இந்து பௌத்த மதங்கள் இந்நாடுகளில் நிலை பெற்றன. பதினைந்தாம் நூற்றாண்டில் முசுலிம்கள் இந்நாடுகளில் தலைமை எய்தினர். இவர்களை அடுத்து இஸ்பானியரும், ஒல்லாந்தரும், ஆங்கிலரும், அமெரிக்கரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். 23. பர்மா கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியர் பர்மாவில் குடியேறி இருந் தார்களென்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதற்கு மிகப் பழங்காலம் முதல் இந்தியர் பர்மாவில் குடியேறியிருந்தார் களெனப் பழங்கதைகள் கூறுகின்றன. பர்மாவின் பல இடங்களில் பல சாசனங்கள் கிடைத்தன. அச் சாசனங்களால் அங்கு சைவ, வைணவ மதங்களையும், மகாயான, ஹீனயான, பௌத்த மதங்களையும் மேற் கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் என்பது புலனாகின்றது. புரோம் என் னும் ஊர் அப்பொழுது சிறீ சேத்திரம் என்னும் பெயர் பெற்றிருந்தது. ஆற்றிடைக்குறைகளை அடுத்து வாழ்ந்த மக்கள் பெரிதும் கலிங்கம் ஆந்திரம் முதலிய நாடுகளினின்றும் சென்றவர்களாக இருந்தனர். காசியினின்றும் சென்ற அரச குமாரனொருவன் அக்காலத்தில் வைசாலி என அறியப்பட்ட அரக்கனில் தனது இராச்சியத்தைக் கோலினான். பர்மாவை ஆண்ட அரசர் பலர் தமது பட்டினங்களுக்கு இந்தியப் பட்டினப் பெயர்களைச் சூட்டினர். பல்லவர் கதம்பர் கல்வெட்டுகளும் தென்னிந்திய எழுத்துப் பொறிக்கப்பட்ட தொல்பொருள்கள் சிலவும் பர்மாவில் கிடைத்துள்ளன. பகான் என்னுமிடத்தில் தமிழில் பொறிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அக் கல்வெட்டால் அங்குத் திருமால் கோயில் இருந்ததென்றும் அங்குத் தமிழர் வாழ்ந்தனர் என்றும் தெரியவருகின்றன. பெகு என்னுமிடத்திலுள்ள ஆனந்தா என்னும் கோயில் தென்னிந்திய சிற்பிகளால் அமைக்கப்பட்டதெனச் சிற்ப வல்லார் கருதுகின்றனர். 24. மலாயா தென்னிந்தியர் மலாயாவில் நீண்ட காலத்தின் முன் குடியேறி யிருந்தார்கள். சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மலாய தீபகற்பத்திலிருந்தோ மலாய்த் தீவுகளிலிருந்தோ வெற்றிலை தமிழ் நாட்டுக்கு முதன்முதல் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகின்றது. மலாயாவிற் கிடைத்த கல்வெட்டுக்கள் தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மலாயாவில் வாழ்ந்த இந்திய மக்கள் கிளிங் என அறியப்பட்டார்கள். கிளிங் என்பது கலிங்கம் என்பதன் திரிபு. சிங்கப்பூர் என்பது சாவக நாட்டிற் குடியேறி அங்கு நின்றும் வெளியேறிய மக்களால் மலாய்த் தீபகற்பத்தைச் சேர்ந்த தீவுக்கு இடப்பட்ட பெயர். கலிங்க நாட்டில் சிங்கபுரமென்னும் பட்டினமிருந்தது. மலாயாவில் கோபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தல் விநாயகர் சிலை ஒன்றும் காணப்பட்டது. அதன்மீது தென்னிந்திய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு நடராசத் திருவுருவம் ஒன்றும் கிடைத்தது. வியோங்ஸ்நா என்னுமிடத்தி லுள்ள கோயிலில் திருமாலின் திருவடிவமும் வயிரவக் கடவுளின் திருவடிவங்களும் காணப்படுகின்றன. கெடா என்னுமிடத்தில் நடத்தப் பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் பழைய சிவன் கோயிலின் பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக் கட்டிடம் பல்லவர் காலத்துத் தென்னிந்திய கோயிலமைப்பை ஒத்திருக்கின்றது. அதன் அண்மையில் காணப்படும் மற்றொரு கோயிலின் கூரை மாமல்லபுரத்து இரதங்களின் கூரைகளைப் போல அமைந்திருக்கின்து. தாதுகோபுரமொன்றில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கிடைத்தது. நந்திவர்மன் பெயரால் (கி.பி. 826-50) நாங்கூர் தலைவர் ஒருவர் ஆவணி நாரணம் என்னும் ஏரி ஒன்றை அமைத்ததாக அக் கல்வெட்டு கூறுகின் றது. மலாய் மக்களின் வாழ்க்கை முறைகள் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்திருக்கின்றன. மலாய் மொழியில் பல சமக் கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் காணப்படுகின்றன. தென்னிந் திய பண்பாடுகள் அதிகம் காணப்படும் கெடா (Kedah) என்னுமிடமும் சோழர் சாசனங்களில் காணப்படும் கடாரமும், சமக்கிருத இலக்கியங் களில் காணப்படும் கடாரமும் ஒன்று என்று சிலர் துணிகின்றனர். 25. சுமத்திராவும் சாவகமும் மணிமேகலை என்னும் நூல் ஆயிரத்து எண்ணூறு ஆண்டு களுக்கு முற்பட்டது. அந் நூல் சாகவ நாட்டைப் பற்றியும் அதன் முக்கிய நகரமான நாகபுரத்தைப் பற்றியும் அந்நாட்டு அரசர்களாக இருந்த பூமிச்சந்திரன் புண்ணியராசன் என்பவர்களைப் பற்றியும் கூறுகின்றது. அக்காலத்தில் சுமத்திரா சாவகம் என்னும் தீவுகளுக்கும் தமிழகத்துக்கும் இடையில் மரக்கலப் போக்குவரத்தும் வாணிகமும் இருந்தன. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய மக்கள் சுமத்திராவில் குடியேறி இருந்தார்கள். இக் காலத்திலும் சுமத்திராவில் வாழும் சுரோ, படக் என்னும் நாகரிகமற்ற மக்களிடையே சோழிய, பாண்டிய, மெலியாள, பெலவி (பல்லவ) தெகங் (தெலுங்க?) முதலிய பெயர்கள் வழங்குகின்றன. அப் பெயர்கள் அம்மக்களுக்கும் தென்னிந்தியாவுக்கு முள்ள தொடர்பைக் காட்டுகின்றன. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் சுமத்திராவில் இந்து சமயம் பரவியிருந்தது. சுமத்திராவில் சிறீவிசயா என்ற அரசு கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் உயர்நிலை எய்தியிருந்தது. மலாயா, போர்ணியோ, பிலிப்பைன், செலிபிசி, யாவாவின் பாதி, பர்மோ சாவின் பாதி என்பன இவ் விராச்சியத்தில்அடங்கியிருந்தன. இன்று பெரிய பட்டினமாகக் காட்சியளிக்கும் சிங்கப்பூர் சுமத்தரா மக்களின் குடியேற்றத் தீவாகவிருந்தது. சிறீவிசயா என்னும் பேரரசு 8-ஆம் நூற் றாண்டில் சைலேந்திரப் பேரரசு எனப் பெயர் பெற்றிருந்தது. சைலேந்திர அரசருக்கும் சோழ அரசருக்குமிடையில் நட்பு இருந்துவந்தது. மாற விசயோத்துங்கவர்மன் என்னும் சைலேந்திர அரசன் 1007-இல் தமிழ் நாட்டில் ஒரு பௌத்த ஆச்சிரமம் கட்டிவைத்தான். தமிழர் குடியேறிய இடங்களில் பெரிய கட்டிடங்கள் எழுந்து கொண்டிருந்தன. இந்தியாவினின்றும் சென்ற சிற்பிகள் கட்டிடங்களைத் திறமையாக அமைத்தார்கள். கட்டிடங்கள் எடுப்பதில் போட்டிகள் உண்டாயின. ஆகவே உயர்ந்த அமைப்புடைய கட்டடங்கள் எடுக்கப் பட்டன. சுமத்திராவில் இலாரா யோங்ராங் (Lara Yongrang) என்னுமிடத் தில் பல ஆலயங்கள் கூட்டமாக அழிந்து கிடக்கின்றன. இக் கோயில்கள் சிவன், பிரமன், திருமால், நந்தி முதலிய கடவுளருக்குரியவை. இங்கு விநாயகக் கடவுளின் திருவடிவங்களும் பாதி சிவனும் பாதி அம்மனுமாக அமைந்த உருவமும் காணப்படுகின்றன. “ஜாவகத் தீவில் அகப்பட்டுள்ள சிவன், விட்டுணு, பிரமன் ஆகிய திருமூர்த்திகளின் கற்சிலைகளின் முக்கிய அமிசங்களை ஆராயும்போது அவை தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவர்கள் அல்லது சாளுக்கியர் களின் சிற்ப சாத்திரத்துடன் தொடர்புள்ளனவாக இருத்தல் வேண்டு மெனச் சிற்ப சாத்திர நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அகத்திய கோத்திரத்தினரோ அவரது கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ ஜாவகத் தீவிற் குடியேறி இந்தியக் கலாசாரத்தைப் பரப்பினார்கள் எனத் தோன்றுகிறது. கலிங்க நாட்டினின்றும் 20,000 இந்தியக் குடும்பங்கள் சாவகத்திற் குடியேறினார்களென்று இடைக் காலச் செய்திகள் கூறுகின்றன. அங்கு கிடைத்த கல்வெட்டுகளின் எழுத்து பல்லவ கால எழுத்தாகக் காணப்படு கிறது. சாவக மக்களின் மொழி, இலக்கியம், அரசியல் சமூக அமைப்பு என்பன இந்தியக் கருத்துக்களைப் பின்பற்றியவை. சாவக மக்களின் நுண் கலை வளர்ச்சிக்கு மாபாரதமும் இராமாயணமும் உதவியளித்தன. இந்துக்களின் இதிகாசங்களும், புராணங்கள் சிலவும் இன்று பாலி மொழியில் உள்ளன. சாவக மக்கள் சிவனையே மேலான கடவுளாகக் கொண்டு வழி பட்டார்கள். அவ்வாறே அம்மனையும் வழிபட்டார்கள். விநாயகர், முருகக் கடவுளரின் திருவுருவங்களும் அங்கு காணப்பட்டன. கருட வாகனத்திலிருக்கும் திருமாலும் அவருடைய பத்து அவதாரங் களும் சிற்பங்களிற் காணப்படுகின்றன. இடி எவ்க்கில் (Dievvg plateau) கட்டப் பட்டுள்ள கோயில்களின் அமைப்பு குப்தர் காலக் கட்டிடச் சிற்பக் கலையைச் சேர்ந்தது. போராபுதூர் என்னுமிடத்தில் பெரிய பௌத்த கோயிலின் அழிபாடு காணப்படுகிறது. இக்கோயிற் சிற்பங்கள் புத்தரின் செயல்களையும் சாதகக் கதைகளையும் விளக்குகின்றன. பாகியன் கி.பி. 414இல் சாவகத்துக்குச் சென்றபோது அங்கு இந்து மதம் ஓங்கியிருந்ததைக் கண்டான். கிழக்கு ஜாவாவில் ஐந்நூறு கோயில் களுக்குமேல் இருந்தன. அவை ஏழாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற் றாண்டுக்குமிடையிற் கட்டப்பட்டவை. 26. போர்ணியோவும் பாலியும் போர்ணியோவில் இந்தியப் பண்பாடு பரவியிருந்தது என்பதை அங்குக் கிடைத்த சாசனங்கள் வெளியிடுகின்றன. இவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமக்கிருதத்தில் பொறிக்கப்பட்டவை. பிராமணருக்குப் பசுக்களும் பொன்னும் தானமாக வழங்கப்பட்டதை இவை குறிப்பிடு கின்றன. பிராமணர் போர்ணியோவில் முதன்மை பெற்றிருந்தார்கள். அரண்மனையில் இவர்களின் கிரியைகள் முக்கியம் பெற்றிருந்தன. போர்ணியோவில் கல்லிற் செதுக்கப்பட்ட உருவச் சிலைகள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவை சிவன், கணேசர், நந்தி, அகத்தியர், பிரமா, மகா காலர் முதலியவர்களின் திருவுருவங்களாக உள்ளன. மேற்குப் போர்ணி யோவில் புத்தரின் ஏழு உருவங்களும் பல போதி சத்துவரின் உருவங் களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை இந்தியச் சிற்பிகளின் வேலைப் பாடுகளாக உள்ளன. கிழக்குப் போர்ணியோவில் மரத்தினால் எடுக்கப் பட்ட பழைய கோவிலில் சிவ பெருமான், புத்தர் பெருமான் ஆகியோ ரின் அழகிய சிலைகள் உள்ளன. அவை கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். போர்ணியோ மக்கள் பல்லவர்களிடமிருந்து எழுத்தெழுதும் முறையைப் பயின்றனர். “போர்ணி யோவின் கூட்டை (Koetai) பிராந்தியத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களின் எழுத்து பல்லவ மன்னரான மகேந்திரவர்மனின் மகேந்திரவாடி தளவனூர் சாசனங்களின் எழுத்தை ஒத்திருப்பது இங்கு நோக்கத்தக்கது. பல்லவ சாசனங்களில் வழங்கி வந்த கிரந்த எழுத்து போர்ணியோ, ஜாவகத் தீவுகளில் பழங் கல்வெட்டுகளில் வழங்கிவந்த கிரந்த எழுத்துகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கவேண்டும் என்று ஹாலந்து நாட்டு வரலாற்றுச் சாசன ஆராய்ச்சி நிபுணரான டாக்டர் வோகெல் (Dr. Vogal) கருதுகிறார்.”1 பாலித்தீவு இன்றும் இந்தியப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காப்பாற்றி வருகின்றது. பாலி மக்களில் ஆடவரும் மகளிரும் மாலைக் காலத்து இராமாயணம் பாரதம் என்னும் நூல்களைப் படிப்பதைக் கேட்பதற்குக் கோயில்களுக்குச் செல்கிறார்கள். இலக்குமியும் சத்திய பாமையும் இரு பக்கங்களில் நிற்கும் திருமாலின் திருவடிவமொன்றும் பாலித் தீவிற் கண்டுபிடிக்கப்பட்டன. 27. பிலிப்பைன் தீவுகள் பிலிப்பைன் தீவுகளில் குடியேறியவர்கள் தென்னிந்திய மக்கள் என்பதைச் சான்றுபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. பிலிப்பைன்தீவு எழுத்துக்கும் தென்னிந்திய எழுத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. உரோமு வால்டேஸ் என்னும் புகழ்பெற்ற பிலிப்பைன் நாட்டு ஆராய்ச்சியாளர், “எங்கள் எழுத்து திராவிட இனத்தைச் சேர்ந்தது” என்று கூறியுள்ளார். உலூசன், மின்டானோ என்னும் மலைகளில் வாழும் மக்கள் இந்தியக் கடவுளராகிய மும் மூர்த்தி களை வழிபடுகிறார்கள். அட்டின்னோ டி மனிலா என்னுமிடத்தில் பழம் பொருளாராய்ச்சியாளர் ஒருவர் கணேச உருவச்சிலை ஒன்றை வைத் திருக்கிறார். பிலிப்பைன் மக்களின் நாட்டுக் கதைகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு உரியவை. பொருள்களின் கைவேலைப்பாடுகளும், அங்கு வழங்கிய நாணயங்களும், பழைய பெயர்களும் இந்தியச் செல்வாக்கைப் புலப்படுத்துகின்றன. செலிபிஸ் தீவில் சிவ வழிபாட்டைக் குறிக்கும் பல அடையாளங்கள் காணப்படுகின்றன. செலிபிஸ் மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு என வழங்கப்படுகிறார். நியூகினியில் நடைபெறும் சமயக் கிரியைகள் சிவவழிபாட்டின் சிதைவுகள் என குரோபேட் என்னும் ஆராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். பசிபிக் கடலிலுள்ள பொலினீசியத் தீவுகளிலும் இந்தியப் பண்பாடு பரவியுள்ளது. பொலினீசியரின் மொழி முண்டர், சந்தால் என்னும் மக்கள் பேசும் மொழிக்கு இனமுடையது. அவர்களின் சங்கு வாத்தியம் மூக்கால் ஊதும் குழல் முதலியன இந்தியாவினின்றும் சென்றவை. ஹாவேத்தீவாரின் குலா ஆட்டமும் சாமோத்தீவாரின் சிவன் ஆட்டமும் வங்காள நாட்டு ஆடல்கள் போன்றவை. பொலினீசியரின் சோடிப்பு வகைகளை இந்தியாவிலும் கம்போடியாவிலும் காணலாம். பொலினீசிய மக்களின் முக்கிய உணவுப் பொருள்கள் சிலவும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளும் இந்திய நாட்டுக்குரியன. அவர்களின் கோயில்களும் கிரியைகளும் பிறவும் அவர்களுக்கும் இந்தியாவுக்கு முள்ள தொடர்பை விளக்குகின்றன. “கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சீன வணிகர் இந்தியப் பண்டங் களைக் கடல்வழியாகச் சீனாவுக்குக் கொண்டு சென்றார்கள் என்பதற்குச் சீன நூல்களில் ஆதாரங் காணப்படுகின்றது. கிறித்துவுக்குமுன் முதல் ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த இரும்புக் காலப்பொருள்கள் பல பிலிப்பைன் தீவுகளிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அதே காலத்தைச் சேர்ந்த தமிழக இரும்புக் காலப் பொருள்களை ஒத்திருக் கின்றன. அங்கு கிடைத்த பொருள்கள் கத்திகள், கோடரிகள், குத்து வாள்கள், ஈட்டி முனைகள், கண்ணாடி மணிகள், கண்ணாடிக் காப்புகள், சூதுபவளம், போலி இரத்தினக் கற்கள், பளிங்குகள் என்பவற்றால் செய்யப்பட்ட மணிகள் என்பன. இவ் வகைப் பொருள்கள் மலாயாவி லும் வடக்குப் போர்ணியோவிலும், சாவகம் முதலிய இடங்களிலும் காணப்பட்டன. இதனால் கிறித்துவ ஆண்டு ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்தின் முன்னரே தென்னிந்திய மக்கள் மலாயாவுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் சென்றிருந்தார்களென்பது நன்கு புலனாகின்றது. கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தின் பின் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் தென்னிந்திய மக்களின் இரண்டாவது தொடர்புகளைக் குறிக்கின்றன.”.1 28. சீயம் (தாய்லாந்து) கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்கள் சீயம் நாட்டில் குடியேறியிருந்தார்கள். குப்தர் காலக் கட்டடக் கலை அமைப்பிற் கட்டப் பட்ட பிராமண மத, பௌத்த மதக் கோயில்கள் நாடு முழுமையிலும் காணப்பட்டன. மங்சிதெப் என்னுமிடத்தில் சிவன், விட்டுணு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றோடு சமக்கிருதத்தில் எழுதப்பட்ட சாசனமொன்று காணப்பட்டது. இவை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படுகின்றன. சீயத்தில் எடுக்கப்பட்ட கோயில்கள் வடஇந்திய தென்னிந்திய சிற்பக் கலைக் கலப்புடையன. நன்சோ என்னும் பகுதியை ஆண்ட அரசன் மகாராசா என்னும் பட்டப்பெயர் பெற்றிருந்தான். சீயம் மக்களின் சமய நூல்களிலும் ஓவியங்களிலும் மாமேரு உலகுக்கு மையமாகவுள்ளது என்னும் கொள்கை காணப்படு கிறது. பாங்காக்கிலுள்ள அரசனின் கோவிற் சுவர்களில் இராமாயணக் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. அங்கு வசந்த காலத்தில் இன்றும் ஊஞ்சல் விழா கொண்டாடப்படுகிறது. அரசர்களுக்குப் புரோகிதர் இருந்து வந்தனர். “பிராமணர்கள் சீயம் நாட்டில் முதன் முதல் குடியேறிய காலமாக நம்பப்படுகின்ற கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, இராமேஸ்வரத்தி லிருந்து கி.பி.15ஆம் நூற்றாண்டிலேயே சிலர் அந்நாட்டுக்குச் சென் றிருக்கக் கூடும் என்று நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன் கிராபர்ட்டு என்னுமறிஞர் ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார். இவ்வாறு வந்த பிராமணர் தமது குடும்பங்களோடு வராமல் குடியேறிய நாட்டிலுள்ள பெண்களை மணந்து கொண்டனர். அவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களிற் சிலர் குருமாராகவும், சிலர் போர் வீரர்களாகவும் மற்றும் சிலர் அரசாங்க சோதிடர்களாகவும் சேவை செய்து வந்தனர். கோயில்களில் பூசைக் காலங்களில் ஓதுவதற்கான மந்திரங்கள் சமக் கிருதத்திலும் தமிழிலும் இப்பொழுதும் வழங்கிவருகின்றன. ஆனால் இம் மந்திரங்களின் பொருளை அறியாமலே அவர்கள் அவற்றைச் செபித்து வருகின்றனர். இந்தப் பிராமணர் பூசை வேளைகளிலும் அரசாங்க விழாக்களிலும் இம்மந்திரங்களை ஓதியும் பிராமண மதச் சடங்குகளை அனுசரித்தும் வருகின்றனர். “சீயம் மன்னரின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப் பாடல் ஒன்று பாடப்படுகிறது. பாங்காக் கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம் பாவைப் பாடல்களைப் புரோகிதர் இன்றும் பாடி வருகின்றனர். சீயம் கோயில்களில் நடக்கும் கிரியைகள் தென்னிந்திய கோயில்களில் நடப்பன போலவே இருக்கின்றன. தென்னிந்தியாவில் நடப்பது போலவே மார்கழி மாதத்தில் கோயில்களில் திருவெம்பாவை விழா நடைபெறுகிறது”.2 29. கம்போடியா இப்பொழுது கம்போடியா என வழங்கும் நாடு முற்காலத்தில் கம்போசம் என அறியப்பட்டது. தென்னிந்தியாவினின்றும் சென்ற கௌண்டியனியன் என்னும் பிராமணர் நாகினி சோமா என்னும் பெண்ணை மணந்து கி.பி. முதல் நூற்றாண்டில் அந்நாட்டின் அரசனா னார் எனப் பழங்கதை வழங்குகிறது. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் தென்னிந்திய மக்கள் கம்போடியாவில் குடியேறினர். பல்லவ எழுத்தில் பொறிக்கப்பட்ட பல சாசனங்கள் அங்குக் கிடைத்துள்ளன. வைணவம், பௌத்தம் என்னும் மதங்களிலும் பார்க்கச் சைவ மதமே அங்கு முதன்மை பெற்றிருந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்கள், இதிகாசங்கள் சம்பந்தமானவை. பாலவர்மனென்னும் அரசன் நான்கு சிவாலயங் களைப் பிரதிட்டை செய்தான். கம்போடிய அரசர் வர்மன் என்னும் பெயர் புனைந்து முடிசூடினார். பல்லவ அரசரும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். பவ வர்மன் 616இல் கம்பீரவர்ணர் என்னும் சிவலிங்கத்தை நாட்டி வழிபட்டான். பிசார், சினெங், கராபி முதலிய இடங்களில் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் சிவன் உருவங்கள் காணப்படுகின்றன. இடபத்தில் வீற்றிருக்கும் சிவ வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபட்டது. சூரியவர்மன் என்னும் அரசன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அங்கோர்வாடி என்னும் சிறந்த திருமால் கோயிலைத் தென்னிந்திய சிற்ப முறையிற் கட்டினான். 30. அங்கோர்வாடி கம்போடியாவில் அங்கோர்வாடி என்னும் ஓர் இடமுண்டு. அங்கு பெரிய இடிபாடுகள் காணப்படுகின்றன. அக் கட்டிடங்கள் பழைய இந்திய மக்களால் இந்தியக் கட்டிட அமைப்பு முறையிற் கட்டப் பட்டவை. அவ்வகை அழிபாடுகள் யாவாவிலும் காணப்படுகின்றன. இந்திய மக்களின் சமயம் இந்தியாவில் மாத்திரம் உண்டு என எண்ணி யிருக்கும் இந்தியன் ஒருவனுக்கு இவைகளைப் பார்க்கும்போது வியப்பு உண்டாகும். அங்குக் காணப்படும் இடிபாட்டின் கட்டிடங்கள் இந்திய நாகரிகம் உயர்நிலையில் இருந்த காலத்தில் தோன்றியவை அவ்வழிபாட் டின் வரலாறு அங்கு காணப்படும் பொருள்களைக் கொண்டு ஆராய வேண்டியவை. பிரெஞ்சுக்காரர் பலர் இவ்வாராய்ச்சியை நடத்தியுள் ளார்கள். அவைகளைப் பற்றி நம்மவரிற் சிலரே அறிவர். கம்போடியாவில் எப்பொழுது இந்தியர் போய்க் குடியேறி னார்கள் என்பதற்குச் சரித்திரத் தொடர்பான ஆதாரம் கிட்டவில்லை. எத்தனை இந்தியர் அலை அலையாகச் சென்றனர் என்பதும் தெரியாது. செவி வழிச் செய்தியின்படி கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியர் அங்குச் சென்றார்கள். மெங்கொங் ஆற்றுக்குக் கீழ்ப் பகுதியிலுள்ள வோனான் என்னுமிடத்தில் கௌண்டினியன் என்னும் பிராமண னொருவன் ஓர் இராச்சியத்தை ஆரம்பித்தான். அவன் அந்நாட்டு இராசகுமாரியை மணந்தான். கௌண்டினியனின் பரம்பரையில் பல அரசர் தோன்றினர். வோனானுக்கு வடக்கே கம்பு என்னும் இந்திய அரசன் இன்னொரு இராச்சியத்தைத் தொடங்கினான். இவன் வோனான் இராச்சியத்தை வென்று கைப்பற்றும் வரை கௌண்டினிய பரம்பரை யினரின் வரலாறு யாதும் அறியப்படவில்லை. கம்பு என்பவன் கம்பு சுவாயம்பு என அறியப்பட்டான். கம்பு, தேவ கன்னியாகிய மேராவை மணந்தான். கம்புயா என்பதிலிருந்து கம்போடியா என்னும் பெயர் உண்டாயிற்று. கம்போடியாவை முதலில் ஆண்ட சரித்திர சம்பந்தப் பட்ட அரசன் உருத்திரவர்மன். அங்கோரின் அழிபாடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதன்மையுடையது அங்கோர் நாட்டிலுள்ள பெரிய திருமால் கோயில். இஃது அங்கர்தோம் என்னுமிடத்திலுள்ளது. இவ் விடத்துக்கு அயலில் பதினைந்து மைல் சுற்றில் அங்குமிங்குமாகப் பல அழிபாடுகள் காணப்படுகின்றன. கோயிலிலிருந்து ஒரு கல் தொலைவில் அங்கர்தோம் என்னும் பழைய நகர் இருக்கின்றது. திருமால் கோயிலின் நாற்புறங்களிலும் உள்ளே செல்லும் வழிகள் இருக்கின்றன. அங்கோர் என்பதற்கு நகரம் என்பது பொருள். கோயிலைச் சுற்றி வெட்டு வாய்க்காலிருக்கிறது. கோயில் மேற்கு முகமாக இருக்கிறது. நகரின் பெரிய வீதி தெற்கிலிருந்து வடக்கே செல்வதாலும் கோயில் வீதியை நோக்கியிருக்க வேண்டியிருந்தமையாலும் அது அவ்வாறு அமைக்கப்பட்டது. கோவிலின் வெளி வீதியின் நீளம் 1716 அடி; அகலம் 1386 அடி. மதிலுக்கு உட்பட்ட அதன் விசாலம் மதுரைக் கோவிலை விட இருமடி. கோபுரங்களிலும், சுவர்களிலும் தேவரும், அசுரரும் அமுதங் கடைவதுபோல் புராண வரலாறுகளும் பிறவும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பாண்டவர் கௌரவர்களின் போர்களும் காணப்படுகின்றன. தேவரும் அசுரரும் வேறு வேறு வகையான பாகைகள் தரித்திருக்கின்றனர். கோபுரங்களின் உயரம் 213 அடி மதுரைக் கோயிற் கோபுரத்தின் உயரம் 152 அடி. அங்கோர்வாட் கோயில் கருங்கல்லா லெடுக்கப்பட்ட தென்னிந்திய கோயில்களைப் போல அழகிய அமைப் புடையது. அங்கர்தோமின் நான்கு வாயில்களிலுள்ள கட்டிடங்களிலும் பெரிய மனித முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகத்தின் உயரம் ஒன்பது அடி. இவ்வாறு 160 முகங்கள் கூட்டங்களாகக் காணப்படு கின்றன. வாயிலின் இரு புறங்களிலும் இரண்டு நாகங்கள் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. நாகத்தை இராக்கதர் பிடித்திருக்கின்றனர். நாகத்தின் நீளம் 100 அடி. 31. சம்பா இப்பொழுது அன்னாம் என வழங்கும் மாநிலம் முற்காலத்தில் சம்பா எனப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்து சமயமும் இந்தியப் பண்பாடும் சம்பாவில் பரவின. வர்மன் என்பது பல நூற்றாண்டுகளாக நாட்டை ஆண்ட அரசர்களின் பெயராகவுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட சமக்கிருத சாசனங்கள் அங்குக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பத்திர வர்மன், இந்திரவர்மன், இந்திரவர்மதேவன் முதலிய அரசர் சமக்கிருத இலக்கியங்களிற் புலமை பெற்றிருந்தனர். சம்பாவில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. பத்திரேசுவரர் என்னும் பெயரில் சிவன் நாட்டுக்குரிய கடவுளாகக் கொள்ளப்பட்டார். மகாதேவி என்னும் பெயரில் மக்கள் அம்மனை வழிபட்டார்கள். விட்டுணுவை வழிபடும் மக்களும் அங்கு இருந்தார்கள். அவரில் சிலர் தாம் விட்டுணுவின் அவதாரம் எனக் கூறினர். சம்பாவில் பௌத்த மதமும் ஓங்கியிருந்தது. சீனத் தளபதி ஒருவன் சம்பாவிலிருந்து 1350 பௌத்த நூல்களை எடுத்துச் சென்றான். சம்பாவிலிருந்த கோயில்கள் மாமல்லபுரத் தேர்களையும் காஞ்சிபுரக் கோயில்களையும் பார்த்து அமைக்கப்பட்டவை. சம்பாவிற் கிடைத்த மிகப் பழைய கல்வெட்டு தென்னிந்திய எழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. பழைய கல்வெட்டுகளிற் காணப்படும் எழுத்தும் இலக்கண மும் தெலுங்கு மொழியிலுள்ளவை போன்றிருத்தலால் ஆதியிற் சம்பா விற் குடியேறியவர்கள் ஆந்திரராக இருக்கலாம். “பொன்னாகரிலுள்ள உமாபகவதி ஆலயம் பற்பல மாற்றங் களுக்கு உட்பட்ட போதிலும் அது இன்றும் தழைத்திருப்பது காணலாம். முற்காலம் தொட்டே ‘சமஸ்’ என்ற கம்பா நாட்டு மக்கள் விழாக் கொண்டாட்டங்களில் சந்தனத்தை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவைப் போலவே ஆங்கும் சமய நூல்கள் யாவையும் பனை ஓலையில் வரைந்து பாதுகாத்தனர். சம்பாவிலுள்ள கோயில்களின் சிற்ப வேலை திராவிட முறையை ஒட்டியதென்பதற்கு ஐயமில்லை. உயரப் போகப்போக அகலம் குறைந்து ஒன்றின்மேல் ஒன்றாக மாடி போல் அமைக்கப்பெற்றிருக்கும் மாடங்களும், கோயில்களும், அடிப்படைக் கொத்தளங்களும் காஞ்சீபுரம், வாதாபி முதலிய ஊர்களிற் காணப்படுப வற்றை ஒத்திருக்கின்றன”.1 32. ஊர் மக்கள் இடங்கள்தோறும் வீடுகள் அமைத்துக்கொண்டு கூட்டங் களாக வாழ்ந்தார்கள். பல வீடுகள் கொண்ட இடம் குடியிருப்பு அல்லது கிராமம் என அறியப்பட்டது. ஊர் என்னுஞ் சொல் கிராமத்தையும் பட்டினத்தையும் குறிக்கும். ஓர் ஊரில் நூறு முதல் ஐந்நூறு பயிரிடும் குடும்பங்களிருந்தன. ஒரு கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் இடையில் அல்லது அவற்றைச் சூழ்ந்து குறுங்காடு இருந்தது. காடு சார்ந்த நிலங்களிலுள்ள குடியிருப்பு பாடி, சேரி எனவும், வயல் சார்ந்த இடங்களின் குடியிருப்பு ஊர் எனவும், கடற்கரைக் குடியிருப்பு சிறு குடி எனவும், பாலை நிலக்குடியிருப்புப் பறந்தலை எனவும் அறியப்பட்டன. ஆறு இருப்பது ஊருக்கு அழகாகக் கொள்ளப்பட்டது. “ஆறில்லா ஊருக்கழகு பாழ்” என்பது முதுமொழி. ஊரின்முன் அல்லது நடுவில் பெரிய ஆலமரம் அல்லது வேறு நிழல் மரம் நின்றது. அதனைச் சூழ்ந்து திண்ணை இடப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஓய்வு நேரங்களில் அவ்விடத்தில் கூடி ஒருவரோடு ஒருவர் அளவளாவிப் பொழுதுபோக்கினார்கள்; ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களை ஆராய்ந்தார்கள். அவ்விடம் மன்றம் எனப்பட்டது. சிறுவர் மன்றத்தே சென்று கல்வி பயின்றார்கள். முதியோர் அவ்விடத்தில் கூடி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தார்கள். கடவுளைக் குறிக்கும் அருள்வடிவாக மன்றத்தே கற்றூண் நடப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி மெழுக்கிடப்பட்டது. மக்கள் பூவையும் பலியையும் தூவிக் கடவுளை வழிபட்டார்கள். கந்துக் கடவுளுக்கு விளக்கு ஏற்றப்பட்டது. கோயி லிருப்பது ஊருக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. “திருக்கோயிலில்லாத திருவிலூரும்” எனத் திருநாவுக்கரசு சுவாமி களும், “கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்” என உலகநாத னாரும் கூறியிருக்கின்றார்கள். கோயிலைச் சுற்றிக் கிராமம் வளர்ந்தது. கிராம நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் மன்றமே மத்திய இடமாக இருந்தது. கிராமத்தில் பலவகைத்தொழில் புரிவோரிருந்தனர். ஒவ்வொரு தொழில் புரிவோரும் தனித்தனி வீதியில் வாழ்ந்தனர். கிராம மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய உணவு, உடை முதலிய பொருள்களெல்லாம் கிராமத்திலேயே கிடைத்தன. ஊர்க் கருமங்கள் ஒழுங்காக நடைபெறு வதை ஊர்ச்சபை மேற்பார்த்தது. கிராமம் சிறிய அளவில் ஒரு இராச்சி யம் போலிருந்தது. இவ்வாறு அமைந்த கிராம ஆட்சியிலிருந்தே பெரிய நகர் ஆட்சிமுறை வளர்ச்சியடைந்தது கிராம ஆட்சிக்கு கிராமச்சபை பொறுப்பாக இருந்தது. கிராமச் சபைகளுக்கு மேல் அரசன் ஆணை இருந்தது. செல்வர் வீடுகளைச் செங்கல்லாலும் மரங்களாலும் கட்டி னார்கள்; வறியவர் மண்ணினாலும் தடிகளாலும் அவற்றை அமைத் தார்கள். செங்கல் வீடுகள் ஓடுகளாலும், மண் குடிசைகள் பனை ஓலை, தென்னங்கீற்று, வைக்கோல், புல் என்பவற்றாலும் வேயப்பட்டன. வீடு களுக்கு முக்கோண வடிவான மாடங்களிருந்தன. மாடங்களில் மண் விளக்கு அல்லது உலோக விளக்கு வைத்து எரிக்கப்பட்டது. வீட்டுக்கு முன் திண்ணையும், திண்ணைக்கு முன் ஒட்டுத் திண்ணையுமிருந்தன. வீட்டுக்குப் பின்புறத்தில் கிணறும் கிணற்றுக்கு அப்பால் கொல்லையில் மாட்டுத் தொழுவமும் அப்பால் வயலுமிருந்தன. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம் எனவும், கூற்றம் பல சேர்ந்தது நாடு எனவும், நாடு பல சேர்ந்தது கோட்டம் எனவும், கோட்டம் பல சேர்ந்தது மண்டலமெனவும் அறியப்பட்டன. 33. சிறுகுடி மலையும் மலை சார்ந்த இடங்களிலுமுள்ள ஊர் சிறுகுடி என அறியப்பட்டது. சிறுகுடியில் வாழும் ஆடவர் குறவரெனவும் மகளிர் குறத்தியர் எனவும் பெயர் பெற்றிருந்தனர். மலை இடங்களில் பலா மரங்கள் செழித்து வளர்ந்தன. அவை மீது மிளகுக் கொடிகள் கிழங்குகளை வீழ்த்தின. மலை முகடுகளில் தேன் கூடுகள் தொங்கின. காட்டில் பன்றி, மான், கரடி முதலிய விலங்குகள் திரிந்தன. குறவர் வேட்டை நாய்களை வளர்த்தார்கள். அவர்கள் நாய் பின் தொடர வில்லையும் அம்பையும் கொண்டு காட்டிற் சென்று மான் பன்றி முதலிய விலங்குகளை வேட்டையாடினார்கள்; வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியைச் சிறுகுடியிலுள்ளவர்களுக்குப் பகிர்ந் தளித்துத் தாமுமுண்டார்கள்; மூங்கிலை வெட்டி உயர்ந்த ஏணிகள் செய்து அவற்றை நேர்குத்தான மலைகளில் சார்த்தித் தேன்கூடுகளை அழித்துத் தேன் சேகரித்தார்கள்; பலா மரங்களில் பழுத்துத் தொங்கும் குடம்போன்ற பழங்களைப் பறித்துப் பலாச் சுளைகளைத் தேனில் தொட்டு உண்டார்கள்; கொடிகள் வீழ்த்திய கிழங்குகளை அகழ்ந் தெடுத்து அவித்து உண்டார்கள்; மலைப் பக்கங்களை உழுது தினை விதைத்தார்கள். தினை கதிர்வந்து முற்றியபோது கதிர்களைக் கவரப் பறவைகள் வந்தன. குறச் சிறுமியர்கட்டுப் பரண் மீதிருந்து தழல், தட்டை என்னும் கிளிகடி கருவிகளைச் சுழற்றியும் தட்டியும் ஆயோ எனச் சத்தமிட்டும் பறவைகளை ஓட்டினார்கள். தினை அறுத்தபின் அவரை விதைக்கப்பட்டது. மலையிடத்தே சுனை நீர் பாய்ச்சி ஐவன நெல்லும் விளைவிக்கப்பட்டது. குறவரின் சிறந்த உணவு தேனும் தினைமாவுமாக இருந்தது. மலையிடத்தே வேங்கை, கொன்றை, பலா முதலிய மரங்கள் செழித்து வளர்ந்தன. குறவர் அம் மரங்களின் கீழ் சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள்; குடிசைகளைப் புல்லினால் வேய்ந்தார்கள். தினை, தேன் முதலியவற்றில் மது வடிக்கப்பட்டது. மது மூங்கிற் குழாய்களிலிட்டுக் காரமேறும்படி வைக்கப்பட்டது. நாட்பட்ட மது தேள் கடுப்புப் போன்று காரமுடையதாக இருந்தது. குறவரும் குறத்தியரும் முற்றத்தி லிருந்து கள்ளை வார்த்துப் பருகி, நெருப்பில் இறைச்சியைச் சுட்டு உண்டார்கள். பின் இருபாலினரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து நின்று குரவை ஆடினார்கள். புலித்தோலும் மான்தோலும் பாயாகப் பயன்படுத்தப்பட்டன. தந்தத்திற்காக ஆண் யானைகள் வேட்டையாடப்பட்டன. வீட்டைச் சுற்றி நொச்சி வேலியிருந்தது. நொச்சி வேலியில் மல்லிகைக் கொடி படர்ந்து பூத்தது. குறச்சிறுமியர் முன் கையில் சங்கு வளை அணிந்தனர்; கூந்தலை ஐந்து வகையாகப் பின்னிமுடிந்தனர். அசோகு, வேங்கை முதலியவற்றில் கட்டிய ஊஞ்சல்களில் ஆடினர்; சுனை நீராடினர்; தழைகளைக் கொய்து உடையாக உடுத்தனர். 34. பாடி காட்டிலும் காடு சார்ந்த நிலத்திலுமுள்ள ஊர் பாடி அல்லது சேரி என அறியப்பட்டது. அங்கு வாழும் மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பெயர்கள் பெற்றிருந்தனர். இவர்கள் தடி களாற் கட்டி மண்ணினாற் சுவரெடுத்துப் புல்லால் வேய்ந்த கொட்டில் களில் வாழ்ந்தார்கள். முற்றத்தே ஆடுகளையும் மாடுகளையும் கட்டும் முளைகள் நாட்டப்பட்டிருந்தன. இடையர் ஆட்டிடையர், மாட்டிடை யர் என இரு பிரிவினராக இருந்தனர். மாட்டிடையர் எருமைகளையும் வளர்த்தனர். இடையனுடைய கையில் தலைவளைந்த கோல் அல்லது கொளுவுதடி இருந்தது. ஆட்டிடையன் வளைவு தடியில் பறியைக் கொளுவி முதுகுப் புறத்தே தொங்கும்படி விட்டுச் சென்றான். இடையர் காலையில் ஆடுகளையும், மாடுகளையும் மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென்றார்கள்; அவை மேயும்போது அவர்கள் மர நிழல்களிலிருந்து வேய்ங்குழல், கொன்றைப் பழத்தைக் கோதிச் செய்த குழல், ஆம்பற் றண்டுக் கழல் என்பவற்றில் இனிய இராகங்களைப் பாடினார்கள். மாலைக் காலத்தில் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டன. பாற் பசுக்கள் வீட்டுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. மாடுகளின் கழுத்தில் மணிகள் ‘தெள்’ என்று ஓசை செய்தன. இடையர் பசுக்களின் பின்னே வேய்ங் குழல் ஊதிச் சென்றனர். மாடுகள் தொழுவங்களிற் கட்டப்பட்டன அல்லது மன்றங்களில் அடைக்கப்பட்டன. பசுக்களில் கறக்கப்பட்ட பால் பிரையிட்டுத் தயிராக்கப்பட்டது. இடைச்சி தாழியிலுறைந்த தயிரை மத்தால் கயிறு பூட்டிக் கடைந்தாள்; வெண்ணெயை எடுத்தபின் மோரைப் பானையில் ஊற்றி அதனைத் தலையில் சும்மாட்டின் மீது வைத்துச் சுமந்து அயலிடங்களிற் சென்று நெல்லுக்கு விலையாக விற்றாள். இடையன் நிலத்தை உழுது வரகு விதைத்தான். இடையரின் குடியிருப்பைச் சுற்றி முள்வேலியிடப்பட்டிருந்தது. 35. பாக்கம் கடற்கரை ஊர் பாக்கம் என அறியப்பட்டது. அங்கு வாழ்ந்தோர் பரதவர் என அறியப்பட்டனர். மணல் செறிந்த கடலோரங்களில் பனை மரங்கள் செழித்து வளர்ந்தன. குடிசைகள் புல், தாழை ஓலை, அல்லது பனை ஓலையால் வேயப்பட்டன. வீட்டைச் சுற்றித் தாழை வேலியிருந் தது. முற்றத்தில் மீன் பிடிக்கும் வலைகள் காயவிடப்பட்டிருந்தன. பரதவர் கட்டுமரம், திமில் என்பவற்றில் மீன் பிடிக்கக் கடலில் சென் றார்கள். வலை, எறி, உளி என்பனவற்றை அவர்கள் எடுத்துச் சென் றார்கள்; காலையில் தாம் பிடித்த மீன்களுடன் கரையை அடைந்தார்கள். அவர்களின் மனைவியர் அவற்றைக் கூடைகளில் இட்டு எடுத்துச் சென்று அயலிடங்களில் நெல்லுக்கு விலையாக விற்றார்கள்; மீனுக்கு விலையாகக் கிடைத்த நெல்லைக் குற்றிய அரிசியை உலையிட்டுச் சோறட்டுத் தமது சுற்றத்தோடு இருந்து உண்டார்கள். கடற்கரைகளில் புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்தன. அவற்றின் அயலில் மீன், இறால் முதலியன காய விடப்பட்டன. பரதவச் சிறுமியர் புன்னை நிழலிலிருந்து அவற்றைக் கவரவரும் புட்களை ஓட்டினார்கள். உப்பளங்களில் பாத்தி கட்டி உப்பு விளைவிக்கப்பட்டது. உப்பு வாணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தொலைவிடங் களுக்குச் சென்றார்கள். அவர்களோடு வீட்டில் வளர்க்கப்படும் குரங்கும் சென்றது. தொலைவிடங்களுக்குக் கொண்டு சென்ற உப்பை அவர்கள் நெல்லுக்கு விலையாகக் கூவி விற்றார்கள். உப்பு வணிகரோடு சென்ற குரங்கு வீடுகளில் விளையாடும் சிறுவரின் கிலுகிலுப்பையை எடுத்து விளையாடும். வண்டியிற் பூட்டிய எருதுகள் இளைத்தால் மாற்றிப் பூட்டுதற்கு உப்பு வாணிகர் எருதுகளை வண்டியின் பக்கத்தே ஓட்டிச் சென்றனர். அவர்கள் வெளியிடத்தே தங்கி அடுப்பு மூட்டிச் சமையல் செய்து உணவு கொண்ட பின் மறுபடியும் பயணஞ் செய்தனர். உப்பு வாணிகர் கழுதைகள் மீதும் உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்றனர். பெண்கள் கூடைகளில் உப்பை எடுத்துச் சென்று நெல்லுக்கு விலையாக விற்றனர். பரதவச் சிறுமியர் கடற்கரை மணலில் பாவை செய்தும் சிறு வீடு கட்டியும், சிறு சோறட்டும் விளையாடினர். மரக்கலங்கள் திசையறிந்து துறை பிடிக்கும் பொருட்டு கடற்கரையில் உயர்ந்த கலங்கரை விளக்கங் களிருந்தன. பரதவர் தமது குடிசைகளில் மண் விளக்கில் அல்லது சிப்பி விளக்கில் மீனெண்ணெயைவிட்டு எரித்தார்கள். 36. மருத நிலத்து ஊர் வயலும் வயல்சார்ந்த நிலத்திலுமுள்ள கிராமம் ஊர் என அறியப் பட்டது. ஊரில் வாழும் மக்களுக்கு உழவுத்தொழில் முக்கியமுடையதாக விருந்தது. வயல்களின் இடையிடையே தோட்டங்களிருந்தன. தோட்டங் களில் பழ மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன; கரும்பும் பயிரிடப் பட்டது. ஏர்த் தொழிலுக்குத் துணையாக மாடுகளும் எருமைகளும் வளர்க்கப்பட்டன. வயல்களில் பருத்தியும் பயிரிடப்பட்டது. உழவரில் உழுவோர் உழுவித்துண்போர் என இரு பிரிவினர் இருந்தனர். உழுவித்துண்போர் காணியாளராகிய செல்வராகவிருந்தனர். வயலில் வேலை செய்வோர் களமர் எனப்பட்டார்கள். இவர்கள் உழுதல், நாற்றுநடுதல், களைகட்டல், நெல்லரிதல், சூடடுக்குதல், கதிர் மிதித்தல் போன்ற வயல் வேலைகளைச் செய்தார்கள். நாற்று நடுதல் முதலிய வேலைகளைச் செய்யும் இருபாலாரும் பாடல்களைப் பாடினார்கள். வயல் செய் எனப்பட்டது. நெல் விளையும் நிலம் நன்செய் எனவும், பிற பயிர்களிடப்படும் நிலம் புன்செய் எனவும், பயிரிடப்படாத நிலம் தரிசு எனவும் அறியப்பட்டன. வயல், அகணி, கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செறு, தடி, பண்ணை, பழனம், பானல், புலம் முதலியன வயலின் பெயர்கள். பயிர்ச் செய்கை வேளாண்மை எனப்பட்டது. வேள் = நிலம்; ஆண்மை = அரசு அல்லது ஆளுந்தன்மை. தானியங்களைச் சேர்த்து வைப்பதற்கு வீட்டு முற்றத்தில் பெரிய நெற்குதிர்கள் கிடந்தன. ஊரில் நன்கு அமைக்கப்பட்ட வீடுகளிருந்தன. வீடுகளின் சுவர்கள் சுண்ணாம்பு தீட்டப் பட்டிருந்தன. சில வீடுகளின் சுவர் செம்மண்ணால் மெழுகப் பட்டிருந்தது. இங்கு பல கைத்தொழில் புரிவோரும் வாழ்ந் தனர். விதைப்புக் காலத்தின் பின்னும் அறுப்புக் காலத்தின் பின்னும் மக்களுக்கு அதிக ஓய்வு இருந்தது. அக்காலங்களில் அவர்கள் பலவகை களில் பொழுது போக்கினார்கள். உரல், உலக்கை, அம்மி, குழவி, திரிகை, ஆட்டுக் கல், முறம், சல்லடை, சட்டி, பானை, அகப்பை, மணை, கட்டுப் பெட்டி, கட்டில், தொட்டில், ஊஞ்சல், (வீசுபலகை), உறி (சுமை தூக்கு), காவடி, சும்மாடு, கணப்பு (தீச்சட்டி), பரண், நிறைகோல், கவண், பாய் முதலியன வீட்டுப் பொருள்களுட் சில. 37. பறந்தலை பாலை நிலத்து ஊர் பறந்தலை எனவும் சீறூர் எனவும் அறியப் பட்டது. வெயில் வெப்பத்தால் மரங்கள் கருகி நீரும் நிழலுமில்லாதிருந்த இடங்கள் பாலை நிலம் எனப்பட்டன. பறந்தலையில் வாழ்வோர் எயினர் எனப்பட்டனர். இவர்கள் வாழும் குடிசைகள் ஈந்தின் ஓலைகளால் வேயப்பட்டவை. இவர்கள் தானியங்களை விளைவிக்கவில்லை. பெண்கள் வெளியே சென்று எறும்புகள் புற்றுக்களில் சேர்த்து வைத்திருக்கும் புல்லரிசியைச் சேகரித்தார்கள்; அதனை முற்றத்திலிருக்கும் நில உரலி லிட்டு உலக்கையாற் குற்றி உமியைப் போக்கினார்கள். கிணற்றிலே நீரெடுத்துப் பாலையில் உலை வார்த்து வைத்து ஆக்கிய சோற்றைத் தேக்கிலையிலிட்டு உப்புக் கண்டத்தோடு உண்டார்கள். ஆடவரின் மீசை ஆட்டுக் கடாவின் கொம்புபோல் முறுக்கியிருந்தது. அவர்கள் காலிற் செருப்புத் தரித்து, சோகி சிப்பி முதலியவற்றைக் கோத்த மாலையை மார்பில் அணிந்திருந்தார்கள்; இரும்புமுனை இறுக்கிய அம்புகளால் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடினார்கள். எயினரின் குடியிருப்பைச் சுற்றி மண்மதிலிருந்தது. மதில் புல்லினால் வேயப்பட்டிருந்தது. அம்புக்கட்டும் பறையும் தொங்கும். எயினர் தலைவனின் வீட்டு வாயிலில் நாய் சங்கிலியிற் கட்டி நின்றது. எயினர் முல்லை நிலத்திலுள்ள பசுக்களைக் கொள்ளையிடச் செல்லும் போது ஏறுகோட் பறையை முழக்கினர். பறை ஒலியைக் கேட்ட எயினர் வந்து கூடினர். அவர்கள் தாம் கவர்ந்து சென்ற பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர். 38. நாடும் நகரும் ஆற்றோரங்கள் நீர்வளம் பெற்றுச் செழிப்படைந்திருந்தன. மக்கள் பலர் அவ்விடங்களிற் குடியேறிப் பயிரிட்டுத் தானியங்களை விளை வித்தனர். அதிக தானியம் வைத்திருப்போன் செல்வனாக மதிக்கப்பட் டான். ஒரு பருவ காலத்தில் ஒருவன் விளைவிக்கும் தானியம் பலருக்குப் பல கால உணவுக்குப் போதுமானதாகவிருந்தது. அக்காலச் செல்வம் உணவு வகைகளாக விருந்தது. வயல் சார்ந்த இடங்களில் செல்வம் திரண்டது. மக்கள் அறுவடைக் காலத்தின் பின் ஓய்ந்திருந்தார்கள். அக் காலத்தில் அவர்கள் ஆடல் பாடல், விளையாட்டுகள், விழாக்கள் என்ப வற்றில் பொழுது போக்கினார்கள். பொழுதுபோக்குக் கலையில் தேர்ந்த நடிகரும், பாடகர்களும், பலவகைக் கைத்தொழில் புரிவோரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு தொழில் புரிவோரும் வெவ்வேறு வீதி களில் வாழ்ந்தார்கள். தொழிலாளர் தாம் செய்துதரும் தொழில்களுக்குக் கூலியாகத் தானியத்தைப் பெற்றார்கள். ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஒரு முன்னோரிலிருந்து பெருகிய கூட்டத்தினராகக் கருதப்பட்டனர். பின் வந்து குடியேறியவர்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டனர். அயலிடங்களிலுள்ளவர்கள் இங்கு திரண்டுள்ள செல்வத்தைப் பற்றி அறிந்தார்கள். அதனைக் கவர்தற்கு அவர்கள் திரண்டு வந்தார்கள். இடையன் தனது செல்வமாகிய ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டும், கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டும், இன்னொரு இடத்தை நோக்கிச் சென்றுவிடலாம். வேளாளர் தமது வீடுகளோடும், தானியக் களஞ்சியங் களோடும், தமது செல்வத்தைக் கொள்ளையிட வருவோரை எதிர்த்து போர் செய்ய உடல் வலிமிக்க பலர் திரண்டார்கள். அவர்களை வீரமும் திறமையுமுடைய ஒருவன் போருக்கு நடத்திச் சென்றான். பகைவரை எதிர்த்து வெற்றிபெற்ற படைத் தலைவன் அரசனானான். தந்தைக்குப் பின் மகன் என்னும் முறையில் வழிமுறையாக அரசுரிமை வந்த காலத் தும், பொதுமக்கள் அரசனைத் தெரிந்தெடுப்பது போன்ற உபசார வழக்கு பல நாடுகளில் இருந்து வந்தது. இஃது இலங்கையில் கடைசிக் கண்டி அரசன் காலம் வரையிலிருந்து வந்தது. குடியிருப்பைச் சுற்றிப் பாதுகாப்பாக முள்வேலி இடப்பட் டிருந்தது. பின் இவ் வேலி கொள்ளக்காரர் எளிதில் நுழைய முடியாத மண் மதில் அல்லது செங்கல் மதிலாக மாறிற்று. பகைவர் மதிலை எளிதில் அடைய முடியாதபடி மதிலைச் சுற்றி ஆழ்ந்த அகழி வெட்டப் பட்டது. அகழுக்கு வெளியே முள் மரங்கள் நட்டு உண்டாக்கப்பட்டன. மதிலினுள் உள்ள குடியிருப்பு இடம் நகர் என அறியப்பட்டது. நகர் பெரும்பாலும் செவ்வக வடிவிலிருந்தது. மௌரிய சந்திரகுப்தன் காலத்தில் வட இந்தியாவிலிருந்த பாடலிபுத்திரா (பாட்னா) என்னும் நகர் பத்து மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுமுடையதாக இருந்தது. நகரைச் சூழ்ந்து நாடு இருந்தது. பல ஊர்கள் சேர்ந்தது நாடு எனப்பட்டது. நாடு என்பது நடு என்னும் அடியாகப் பிறந்து நட்டு உண்டாக்கப்பட்டதென்னும் பொருள் தருவது. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கரியது என்பது பொருள். இதற்கு அடி கட. நாட்டின் பெரும் பகுதி நெல் வயல்களாகவிருந்தது. கரும்பும் ஆங்காங்கு பயிரிடப்பட்டது. தெங்கு, மா, பலா முதலியவும் உணவுக்கு வேண்டிய காய் கனிகளை உதவும் செடி கொடிகளும் வயல்களில் நட்டு உண்டாக்கப்பட்டன. நாட்டின் செழிப்பும் விளைவும் அரசனுடைய செல்வத்துக்கு ஏதுவாகவிருந்தன. முற்கால அரசர் வேளாண்மை உயரும் பொருட்டுக் குளங்கள் தொட்டும் ஆற்று நீரை மறித்து அணைக்கட்டுகள் கட்டியும் வந்தார்கள். உழவர் உழுதல், நாற்று நடுதல், களை கட்டல், நெல்லறுத்தல், சூட்டுக்குதல் போன்ற செயல்களைப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துப் பாடியிருக்கின்றன. பாரதம், இராமாயணம், பிற்காலப் புராணங்கள் என்பவை நாட்டுவளம் நகர்வளங்களைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகின் றன. நாட்டின் எல்லையில் அல்லது இயற்கை அரண் உள்ள இடத்தில் நகர் இருந்தது. ஊர்கள் அல்லது கிராமங்கள் வளர்ந்து நகரங்களாக மாறின. மெசபெதேமியாவின் பழைய நகரமொன்றின் பெயர் ஊர். இது தொடக்கத்தில் ஊர் அல்லது கிராமமாகவிருந்து பின் நகரமாக மாறிய தெனக் கருதப்படுகிறது. 1225இல் சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி தமிழ்நாட்டுக்கு வந்தான். அவன் சோழர் தலைநகரைப் பற்றி எழுதியிருப்பது வருமாறு: “இங்கு ஏழு சுற்று மதில்களுடைய நகரமுண்டு. சுவர்களின் உயரம் ஏழு அடி. வெளிச்சுவர் வடக்கிலிருந்து தெற்கே பன்னிரண்டு ‘லி’1யும் கிழக்கிலிருந்து மேற்கே ஏழு ‘லி’1யும் செல்கின்றது. ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியிருக்கிறது. இவற்றில் நான்கு சுவர்கள் செங்கல்லால் எழுப்பப்பட்டவை; இரண்டு களிமண்ணாலானவை. மத்தியிலுள்ள ஒன்று மரத்தினால் கட்டப்பட்டது. அங்கு பழ மரங்களும் பிற மரங்களும் நடப்பட்டுள்ளன. முதலிரண்டு சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் மக்கள் வாழும் வீடுகள் இருக்கின்றன. மூன்றாம் நான்காம் சுவர்களுக்கிடையிலுள்ள வெளியில் அரசனுடைய அதிகாரிகள் வாழ் கின்றனர். ஆறாவது சுற்றுக்குள் கோயில்களும் பூசகர்களின் இல்லங்களு மிருக்கின்றன. ஏழாவது சுற்றுக்குள் நானூறு வீடுகளடங்கிய அரசன் வாழும் மாளிகை இருக்கின்றது. 39. பட்டினம் பண்டங்கள் வாணிகத்தின் பொருட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. மாடுபூட்டிய வண்டிகளிலேற்றியும், கழுதைகளிலும் பொதிமாடுகளிலும் சுமத்தியும் பண்டங்கள் தரைவழியே கொண்டு செல்லப்பட்டன. வாணிகம் வளர வளரப் பாதைகளும் வளர்ந்து கொண்டு சென்றன. பண்டங்களை விற்பதற்கும் வாங்குதற்கும் சந்தைகள் கூடின. சந்தை கூடுமிடங்களில் கடைகளும் கடைத்தெருக்களும் எழுந்தன. மக்கட்பெருக்கமும் வாணிக மும் அதிகப்பட்டன. அவ்விடங்கள் பட்டினங்களாக மாறின. பட்டினங்கள் தொடக்கத்தில் கடற்கரைகளில் எழுந்தன. கடற்கரை ஊர்கள் பாக்கம் என்றும் பட்டினம் என்றும் அறியப்பட்டன. உள் நாட்டுக்கு வேண்டிய உப்பு கடற்கரைகளிலிருந்து கொண்டு போகப் பட்டது. உப்பு வணிகர் உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டும், கழுதை களிற் சுமத்திக் கொண்டும் செல்வதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வயலும் வயல்சார்ந்த இடங்களிலும் நெல்லை வாங்கும் பொருட்டு வணிகர் சென்றனர்; நெல்லுக்கு விலையாகத் தாம் கொண்டு சென்ற பண்டங்களைக் கொடுத்தார்கள். இவ்வாறு வணிகர் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடிய இடங்கள் பட்டினங்களாக மாறின. மக்கள் பண்டங்களை மரக்கலங்களில் கடல்வழியே பிற நாடு களுக்குக் கொண்டு சென்று வணிகம் நடத்தினார்கள். அப்பொழுது அயல் நாட்டுப் பண்டங்களும் உள்நாட்டுப் பண்டங்களும் கடற்கரையிற் குவிந்தன. அப் பண்டங்களை விற்கவும் வாங்கவும் அயல்நாட்டவரும் உள்நாட்டவரும் கடற்கரைகளிற் கூடினார்கள். அவ்வகை இடங்களும் பட்டினங்களாக மாறின. முசிறி, கொற்கை, தொண்டி, புகார் என்பன முற்காலத் துறைப் பட்டினங்களுட் சில. கருவூர், உறையூர், மதுரை முதலியன சேர சோழ பாண்டிய அரசரின் தலைநகர்கள். இவை பெரிய உள்நாட்டுப் பட்டினங் களாகவிருந்தன. “பட்டினம் நீண்ட சதுர வடிவுடையதாக விருந்தது. அது எண்பத் தொரு நீண்ட சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் சுற்றி வீதி சென்றது. பொது இடங்கள் மரங்கள் நாட்டப்பட்டும் விளக்குத் தூண்கள் நாட்டப் பட்டுமிருந்தன. முக்கிய கோயில் சிறு பட்டினமாகவிருந்தது. வீதிகள் பரற்கற்களிடப்பட்டிருந்தன. அவற்றின் அகலம் நான்கு முதல் இருபது முழமுடையதாக விருந்தது. பூங்காக்கள், விளையாட்டு வெளிகள், இடுகாடு, சுடுகாடு, முதலியவை பட்டினத்துக்கு வெளியேயிருந்தன. அங்கு சண்டாளர் முதலிய இழிந்தோர் வாழ்ந்தனர். புதிய பட்டினம் பெரும்பாலும் ஆற்றின் வலது புறத்தில் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிச் சரிந்திருக்கும் நிலம் பொதுவாக விரும்பப்பட்டது. திசை சூரியநிழலைக் கொண்டு அறியப்பட்டது. கிராமம் நூறு முதல் ஐந்நூறு வேளாண்மை செய்யும் குடும்பங்களுடையதாக விருந்தது”.1 40. மக்கட் பாகுபாடு பழங்காலத்தில் மக்கள் தாம் வாழும் இடங்களுக்கேற்ப வெவ்வேறு பெயர்களாலறியப்பட்டார்கள். ஒவ்வொரு நிலத்திலும் வாழ்வோர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவராகக் கொள்ளப்பட்டார்கள். அவர்களிடையே உயர்வு - தாழ்வு, செல்வமும் அதிகாரமும் காரணமாக உண்டாயிருந்தன. ஒவ்வொரு சமுதாயத்தினரும் ஒரு குலத்தவராகவும் ஒரு மூதாதையரினின்று பெருகியவர்களாகவும் கொள்ளப்பட்டார்கள். மலைநாட்டுத் தலைவன் சிலம்பன், வெற்பன் எனவும், தலைவி கொடிச்சி, குறத்தி எனவும், ஏனையோர் குறவர், இறவுளர், குன்றவர், வேட்டுவர் எனவும் அறியப்பட்டார்கள். முல்லை நிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் எனவும் தலைவி கிழத்தி எனவும், ஏனையோர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனவும் பெயர் பெற்றிருந்தார்கள். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனவும், தலைவி கிழத்தி எனவும் ஏனையோர் கடையர் உழவர், உழத்தியரெனவும் அறியப்பட்டனர். நெய்தல் நிலத் தலைவன் துறைவன், கொண்கன், சேர்ப்பன், மெல்லம் புலம்பன் எனவும் தலைவி நுளைத்தி, பரத்தி எனவும் ஏனையோர் பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனவும் பெயர் பெற்றனர். பாலை நிலத்தலைவன் மீளி, விடலை, காளை எனவும் தலைவி எயிற்றி, பேதை எனவும் பொது மக்கள் எயினர், மறவர், மறத்தியர் எனவும் அறியப்பட்டனர். இவர்கள் திணை மக்கள் எனப்பட்டார்கள். திணை என்பது நிலம். ஒரு நிலத்தில் வாழ்வோர் இன்னொரு நிலத்திற் சென்று குடியேறி வாழ்ந்தால் அவர்கள் தாம் வாழும் இடத்துக்குரிய திணைப் பெயரைப் பெற்றார்கள். மக்கள் பட்டினங்களிலும் நகரங்களிலும் சென்று குடியேறி வாழ்ந்து நாகரிகம் தோன்றிய போது பார்ப்பார். அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் பற்றிய சாதிப் பிரிவினராயினர். கோயில்களை மேற்பார்த்தோர் பார்ப்பார் எனப்பட்டனர். நாட்டை ஆள்வோர் அரசர் எனவும், பண்டங்களை வாங்கி விற்போர் வணிகரெனவும், உழுதுண் போரும், உழுவித் துண்போரும் வேளாளரெனவும் அறியப்பட்டார்கள். இவர்களேயன்றிப் பலவகைக் கைத்தொழில் புரிவோரும், பிறர் ஏவிய தொழில்களைப் புரிவோரும் வாழ்ந்தார்கள். தொழில் புரிவோர் தொடக் கத்தில் வேளாண் மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவிக் கொண் டிருந்தார்கள். ஆகவே பதினெண் குடி மக்கள் என்னும் பிரிவில் கைத் தொழில் புரிவோர் அடங்கினர். தந்தை செய்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குடும்பங்கள் பெருகின. ஒவ்வொரு தொழில் புரியும் கூட்டத்தினரும் தனித்தனிச் சாதியினராகப் பிரிந்து வாழ்ந்தனர். தொடக்கத்தில் உயர்வு தாழ்வு என்னும் கொள்கையில் சாதி எழவில்லை; தொழில் பற்றி எழுந்தது. “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா - செய் தொழில் வேற்றுமையால்” எனத் திருக்குறள் கூறுகின்றது. வருணமென்பது வடநாட்டில் தோன்றியது. வருணமென்பதற்கு நிறம் என்பது பொருள். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணங்கள் நான்கு. சூத்திரரென்போர் முதல் மூன்று குலத்தினருக்கும் ஏவல் பூண்டொழுகுவோர். வருணங்களுக்கேற்ப ஒழுக்கங்கள் வகுக்கப் பட்டிருந்தன. வடநாட்டுச் செல்வாக்கு தென்னாட்டில் இடம் பெற் றிருந்த போது வருணம் வருணாச்சிரம தருமம் என்னும் கொள்கைகள் தென்னாட்டை அடைந்தன. இவை கொள்கையளவிலிருந்தனவே யன்றிச் செயலளவிலிருக்கவில்லை. வேளாளர் சூத்திரராகக் கொள்ளப் பட்டார்கள். இவ்வவமானத்திலிருந்து தப்புவதற்கு வேளாளர் தம்மைப் பூவைசியர் எனக் கூறினர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐவகை நிலங் களிலும் இயற்கை அமைப்புகளுக்கேற்பப் பண்பாடுகள் வேறுபட் டிருந்தன. இப் பண்பாடுகளைப் பெற்ற மக்கள் நகர்களில் சென்று தங்கி வாழ்ந்தபோது ஐவகை நிலங்களின் பண்பாடுகளும் கலப்புற்றுத் திருந்திய நிலையை அடைந்தன. இவ்வாறு தோன்றிய வாழ்க்கை முறைகள், கலைகள் என்பது நாகரிகம் எனப்பட்டன. பண்பாடு என்பது சமூகத்தில் உயர்ந்தோரின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், சமய ஒழுக்கங்களைக் குறிக்கும்.1 41. அரசன் எல்லா நாடுகளிலும் போலவே அரசன் வீரம் பொருந்தியவனாக வும் பெரிய ஆடம்பரங்களுடையவனாகவும் இருந்தான். அவனுடைய அதிகாரம் வரம்புபடாததாக விருந்தது. அவன், தலையில் மணிகளழுத்திய முடியையும், கையில் மணிகள் பதித்த கடகத்தையும் காதிற்குழையையும், மார்பில் முத்து அல்லது பவழ மாலையையும், காலில் வீர தண்டையை யும், விரலில் பெயர் பொறித்த மோதிரத்தையும் அணிந்திருந்தான். அவனும் பெருமக்களும் முகத்தை மழித்திருந்தார்கள். அவனைச் சூழ்ந்து அமைச்சர், சேனாதிபதியர், புலவர், புரோகிதர் முதலானோர் இருந்தனர்; பரிசனர், இருந்தேத்துவோர், நின்றேத்துவோர் சூழ்ந்து நின்றனர். பெண்கள் இரு பக்கங்களிலும் நின்று கவரி வீசினர். நறும் புகை இடப்பட்டது. அரசன் வீற்றிருக்கும் ஆசனம் கட்டில் எனப்பட்டது. அது சிங்கம் சுமப்பது போன்ற கால்களையுடையதாக இருந்தது. ஆகவே அது அரி ஆசனம் எனப்பட்டது. அவன் சாய்வதற்கு அணை இருந்தது. அது அரி அணை எனப்பட்டது. அரசு கட்டில் பொன்னாலும் யானைத் தந்தத் தாலும் மணிகளழுத்திச் செய்யப்பட்டிருந்தது. அவன் அரசிருக்கும் மண்டபம் ஓலக்கம், நாளவை, நாளிருக்கை, கொலுவிருக்கை, அர சிருக்கை என அறியப்பட்டது. அது துகில், தோகை, பூ, இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்புக் காலங்களில் அரசன் வீதியிற் பவனி சென்றான். அப் பொழுது சிற்றாலவட்டம், பேரால வட்டம், விதானம், வெண் கொற்றக் குடை முதலியன பிடிக்கப்பட்டன. விருது முன்னே சென்றது. சிற்றரசரும் பெருமக்களும் அவனைச் சூழ்ந்து சென்றார்கள். சங்கு, கொம்பு, எக்காளம் முதலிய வாத்தியங்களும் மேளங்களும் ஆர்த்தன. விழாக் காலங்களில் அரசி அவனுடன் இருந்தாள். அவள் முடிசூடிக் கொள்ளவில்லை. அரசனது பிறந்த நாள் விழா வெள்ளணி நாள் எனப்பட்டது. அக்காலத்தில் அவன் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தான். அவன் அரண்மனையில் மாத்திரமிருக்கவில்லை. போர்க் காலங்களில் அவனே படையை நடத்திச் சென்று பாசறையில் தங்கினான். அவன் வேட்டை ஆடவுஞ் சென்றான். அக் காலத்தில் மெய்க்காவலர் அவனைக் காத்து நின்றனர். அரசனுக்கு எதிரில் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்யாமல் விடுவது சிறு குற்றமாகக் கருதப்பட்டது. அரண்மனையில் அரசியும் பெண்களும் தனி இடத்தில் வாழ்ந்தார்கள். அரசனுடைய வெற்றிக்காகவும், நீண்ட வாழ்நாளுக்காகவும் துதிகள் செலுத்தப்பட்டன. அரசன் தங்கியிருக்கும் மாளிகைகள் நாட்டின் பல இடங்களிலிருந்தன. சமாதான காலத்தில் அரசன் பெருமக்களோடு நாடு முழுமையும் சுற்றி வந்தான். ஆட்சி தன் னதிகாரமாக இருந்தபோதும் நாட்டில் ஒழுங்கும் நீதியும் நிலவின. பதின் மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சௌ-யு-குவா என்னும் சீனப் பிரயாணி இலங்கை அரசனைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: “இலங்கை அரசனின் நிறம் கறுப்பு. அவன் தலை மயிரை வாரி முடிவதில்லை. அவன் பலவகை நிறங்களுடைய ஆடையை உடுக்கிறான்; சிவப்புத் தோலினாற் செய்து பொன் வாரிட்ட செருப்பை அணிகிறான். அவன் யானை மீது அல்லது பல்லக்கின் மீது செல்கிறான். நாள் முழுதும் அவன் வெற்றிலையையும் பாக்கையும் முத்தைச் சுட்ட சுண்ணாம்பையும் மெல்கிறான். அவனுடைய அரண்மனை வைடூரியம், நீலம், சிவப்பு முதலிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் அரண்மனைகளிருக்கின்றன. இரண்டு அரண்மனைகளிலும் பொன்னாற் செய்யப்பட்ட மரங்கள் இருக்கின்றன. மரத்தின் அடியும் கொம்புகளும் பொன்மயமானவை. அதன் பூக்களும் இலைகளும் காய்களும் நீலம், சிவப்பு, வைடூரியம் முதலியவற்றால் அமைக்கப்பட்டிருக் கின்றன. அரசன் நடக்கும் தரையும் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரங்களின் அடியில் பொன்னாற் செய்யப்பட்ட சிங்காசனங்களிருக் கின்றன. அவற்றுக்கு ஒளிபுகக் கூடிய கண்ணாடி மறைப்பு உண்டு. அரசன் காலையில் கிழக்கு அரண்மனையிலும், மாலையில் மேற்கு அரண்மனையிலும் கொலுவிருப்பான். கொலுவிருக்கும்போது அலங் காரங்கள் வெளியே மின்னும். பொன் மரங்களும் அலங்காரங்களும் கண்ணாடி மறைப்புகளும் ஒன்றில் ஒன்று பிரதிபலித்து விளங்கிச் சூரிய உதயம் போல் தோன்றும். “இரண்டு வேலையாட்கள் அரசன் வெற்றிலையை மென்று உமிழும் எச்சிலை ஏந்துவதற்குப் பொன் காளாஞ்சிகளை ஏந்திக் கொண்டு எப்பொழு தும் இரண்டு பக்கங்களிலும் நிற்பார்கள். அரசன் ஐந்து அங்குலக் குறுக்களவுள்ள ஒரு ஆபரணத்தைக் கையில் வைத்திருக் கின்றான். அதை நெருப்பினால் எரிக்க முடியாது. அது இரவில் சூள் போல் மின்னுகிறது. அரசன் தனது முகத்தை அதனால் தினமும் தடவு கிறான். அப்படிச் செய்வதால் தொண்ணூறு வயதடைந்தாலும் அவன் வாலிபத் தோற்றத்தோடிருப்பான்.” கோன், ஏந்தல், மன்னன், குரிசில், இறைவன், அண்ணல், குறுநில மன்னன் முதலிய பெயர்களால் மிகப் பழங்காலம் முதல் அரசனின் ஆட்சி தமிழ் நாட்டில் இருந்து வருகின்றதென்பதை அறிய முடிகிறது. 42. ஆட்சி அரசன் குடிகளைக் காப்பது ஆட்சி எனப்பட்டது. நீதி ஆட்சி செங்கோல் எனவும், கொடிய ஆட்சி கொடுங்கோல் எனவும் அறியப் பட்டன. நல்லாட்சியைப் பெற்ற நாட்டில் வானம் பொய்யாது மழை பெய்யும் என மக்கள் நம்பினார்கள். அரசன் வரம்பில்லா அதிகார முடையவனாக இருந்தபோதும் ஆட்சி சம்பந்தப்பட்டவற்றை அவன் அமைச்சரோடும் பெரு மக்களோடும் கலந்து ஆலோசித்தான். அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கு 1ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் சபைகளிருந்தன. மாசனம், பார்ப்பார், மருத்துவர், நிமித்திகர், அமைச்சர் என்போர் ஐம்பெருங் குழுவில் அடங்குவர். மாசனம் என்போர் மக்கள் சார்பாக அங்கம் வகிப்போர். இவர்கள் மக்களின் சுதந்திரத்துக்குப் பங்கம் நேராமற் பார்த்தனர். பார்ப்பார் சமய சம்பந்தப்பட்ட கிரியை களை மேற்பார்த்தனர். மருத்துவர் அரசனதும் நாட்டு மக்களதும் உடல் நலத்தைக் கவனித்தனர். நிமித்திகர் விழாக்களுக்கு முகூர்த்தமறிந்து கூறினர். அமைச்சர் நாட்டின் வரவு செலவுகளையும் நீதி ஆட்சி நடை பெறுவதையும் கவனித்தனர். எண்பேராயம் என்னும் சபையில் கரணத்தியலவர் (செயலாற்று வோர்), கரும விதிகள் (புரோகிதர்), கனகச் சுற்றம் (பொருளறைக்குப் பொறுப்பாளர்), கடை காப்பாளர் (அரண்மனையைக் காப்போர்), நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் முதலியோ ரிருந்தனர். அரசனுடைய ஆட்சிக்குட்பட்ட நிலம், கிராமம், கூற்றம், நாடு, கோட்டம், மண்டலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் ஒன்று சேர்ந்தது கூற்றம்; கூற்றம் பல சேர்ந்தது நாடு; நாடு பல சேர்ந்தது கோட்டம்; கோட்டம் பல சேர்ந்தது மண்டலம்; மண்டலத்தை அரச குமாரன் அல்லது அரச குடும்பத்திலுள்ள ஒருவன் ஆட்சி புரிந்தான். விளைவில் ஆறிலொரு பகுதி வரியாக அரசனுக்குக் கொடுக்கப்பட்டது. கிராம சபைகளுக்கு உறுப்பினர் குடஓலையால் தெரியப்பட்டனர். ஒவ்வொரு குடும்பு அல்லது வட்டத்திலும் உறுப்பினராகத் தேர்வுக்கு நிற்கத் தகுதியுடையவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு குடத்துள் போடப்பட்டன. கோயில் மண்டபத்தில் அல்லது மரத்தடியில் சபை கூடிற்று. அப்போது விபரமறியாத சிறுவனொருவனை ஓலை நறுக்கில் ஒன்றை எடுக்கச் செய்து அதில் எழுதப்பட்டுள்ள பெயர் சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இவ்வாறு உறுப்பினர் தெரியப்பட்டனர். ஊர்ப் பெருமக்கள் ஓரிடத்தில் கூடி ஊர் நலனுக்கு வேண்டிய கருமங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள். மக்களுக்கிடையில் நேரும் பிணக்குகளைக் கேட்டுத் தீர்ப்பளிக்கும் சபைகளிருந்தன. அவை அறங்கூறு அவை என அறியப்பட்டன. சுங்கம் நிலவரி முதலியன அரசனுடைய வருவாயில் பெரும்பகுதி யாக இருந்தன. ஏற்றுமதி, இறக்குமதிப் பண்டங்கள் மீது வரி விதிக்கப் பட்டது. குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது. திருடிய பொருட்களுடன் கண்டு பிடிக்கப்பட்டவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டில் வழங்கும் சமூக வழக்கங்கள் சட்டங்களாக இருந்தன. மா, வேலி என்னும் அளவுகள் அறியப்பட்டிருந்தன. வரி செலுத்தாமல் கொண்டு செல்லும் பண்டங்களைத் தடுப்பதற்குப் பாதைகள் கிளை விட்டுச் செல்லும் இடங்களில் போர் வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். தலைநகரின் வீதிகளை இராக் காலத்தில் நகர் காவலர் வெளிச்சங்களைக் கொண்டு திரிந்து காவல் காத்தனர். 43. உணவு மக்கள் வாழும் இடங்களுக்கேற்ப அவர்கள் கொள்ளும் உணவுகள் மாறுபட்டன. அவ்வாறிருந்தபோதும் மக்கள் உண்ணும் உணவு வகைகள் ஓரளவில் ஒரு தன்மையுடையனவாக இருந்தன. நெல் புழுக்கி உலர்த்தி உரலிலிட்டு அரிசியாக்கப் பட்டது. சோற்றைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் வழங்கின. அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அவிழ், அழும்பு, உணா, ஊண், சதி, சாதம், சொன்றி, சோறு, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுக்கு, புற்கை, பொம்மல், பொருகு, மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி முதலியன சோற்றைக் குறிக்கும் பெயர்களுட் சில. இவை வெவ்வேறு வகையாக அடப்பட்ட சோற்றைக் குறிப்பானவாகலாம். பால், மோர் என்பவற்றை உலை வார்த்தும் சோறு அடப்பட்டது. புழுக்காத நெல்லைக் குற்றிய அரிசியோடு பருப்பு இட்டுச் சமைக்கப்பட்ட சோறு பொங்கல் எனப்பட்டது. அப்பம், பிட்டு, தோசை, வடை, அஃகுல்லி முதலிய பலவகைப் பணி காரங்கள் செய்யப்பட்டன. கறிகள் மிளகுத் தூளிட்டு ஆக்கப்பட்டன. ஆகவே மிளகுக்குக் கறி என்னும் பெயர் வழங்கிற்று. மிளகாய் ஐரோப் பிய சாதியாரால் அண்மையில் கொண்டு வரப்பட்டது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. அதன்காய் மிளகு போலக் காரமாகவிருந் தமையால் அது மிளகாய் (மிளகுகாய்) என அறியப்பட்டது. உடல் நலத்தைக் காக்கக் கூடியவும், உணவைச் செரிக்கச் செய்யக்கூடியவும் கொத்து மல்லி, சீரகம், மிளகு, புளி போன்ற சரக்குகள் அளவறிந்து இட்டுக் கறிகள் ஆக்கப்பட்டன. இஃது அக்காலத்தில் மக்கள் மருத்துவத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தைக் காட்டுகின்றது. முற்காலத்தில் அரண்மனைகளில் மருத்துவர் இருந்தனர். அவர்கள் தினமும் அரச னுடைய உடல் நிலையை அறிந்து ஏற்ற சரக்கு வகைகளைக் சேர்த்து உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிக் கொடுத்தார்கள். இன்று நாம் உண்ணும் கறி வகைகள் ஒருவகை மருந்தாகவும் இருக் கின்றன. காய், கனி, கிழங்கு, பூ, பிஞ்சு, கீரை வகைகளிலிருந்து அறுசுவைக் கறிகள் ஆக்கப்பட்டன. வறை, துவட்டல், துவை, புளிங்கறி, காடி, ஊறுகாய், பொரிக்கறி முதலியன கறி வகைகளுட் சில. கருவேப்பிலை, கடுகு முதலியவற்றையிட்டுக் கறிகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது. 1தாவர உணவு கொள்வோர், தாவர உணவும் ஊன் உணவும் கலந்து உண்போர் என மக்கள் இரு வகையினராக இருந்தார்கள். இவ்வாறு இரு வகை உணவுகளைக் கொள்ளும் பழக்கம் சூழல் காரணமாகவும், பழக்கம் காரணமாகவும் உண்டாயிற்று. சில விலங்குகள் தாவரங்களை உண்கின்றன. சில தாவர உணவையும் ஊண் உணவையும் கலந்து உண்கின்றன. கலப்பு உணவைக் கொள்ளும் விலங்குகள் தாவர உணவையோ, ஊன் உணவையோ கொண்டு வாழவும் பழக்கம் பெறு கின்றன. சமயத் தொடர்பில் அல்லாது இம் முறையில் இரு வகை உணவு களைக் கொள்வோராகவும் மக்கள் வாழ்ந்தனர். மேல்நாட்டவர் பலர் முற்காலத்தில் தாவர உணவு கொள்வோராக இருந்தனர்; இக்காலத்தும் பலர் இருக்கின்றனர். பிதகோரஸ் என்னும் கிரேக்க அறிஞர் தாவர உணவையே கொண்டார். போர் வீரர், அரசர், பாணர், வயல் வேலை செய்யும் தொழிலாளர், மீன் பிடிப்போர் இருவகை உணவுகளையும் கலந்து உண்டனர். சமய அடிப்படையில் ஊன் உணவு கொள்ளாத வழக்கம் பௌத்தர் சமணர் காலத்துக்குப்பின் உண்டானதெனக் கருதப்படுகிறது. 44. உடை மிகப் பழங்காலத்தில் மக்கள் மரவுரி, தோல் என்பவற்றையும் இலைகளால் தொடுத்த உடைகளையும் உடுத்தார்கள். இலைகளால் தொடுத்த உடைகளைப் பற்றிப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பஞ்சு ஆடையும் கம்பளி ஆடையும் பழக்கத்துக்கு வந்தபோது தோலுடையும் மரவுரியும் முனிவருக்குரிய பரிசுத்த உடையாகக் கொள்ளப்பட்டன. புலித்தோல் மான்தோல் என்பவை இன்றும் புனிதமுடையனவாகக் கொள்ளப்படுகின்றன. புலித்தோலை உடுத்திருப்பவராகச் சிவபெரு மான் பாவனை செய்யப்படுகிறார். மொகஞ்சதாரோவிற் கிடைத்த மனித சிற்பம் ஒன்று வேலைப் பாடுடைய மேலாடையைப் போர்த்தி இருக்கின்றது. தலையைச் சுற்றி ஒரு நாடாவைக் கட்டியிருக்கின்றது. தலையில் கட்டப்பட்ட நாடா (மயிர்க்கட்டு) பாகையாக வளர்ச்சியடைந்தது. ஆடவர் அரையில் நான்கு முழ ஆடை உடுத்தனர். ஆடை நாபிக்குக் கீழ் உடுக்கப்பட்டது. பொதுமக்கள் முழங்காலுக்குச் சிறிது கீழ் நீண்டிருக்கும்படி ஆடையை உடுத்தார்கள்; அரசரும் பெருமக்களும் கெண்டைக்கால் வரை நீண்டிருக்கும்படி உடுத்தனர். அரையிலொன்றும் தலையிலொன்றும் தோளிலொன்றுமாக மூன்று உடைகள் அணியப் பட்டன. முற்காலத்தில் உயர்ந்தோர் சட்டை தரிக்கவில்லை. சட்டை தரித்துக் கொள்வது ஊழியம் புரிவோர் என்பதற்கு அடையாளமாக விருந்தது. பழைய கோவில் சிற்பங்கள்; ஆடவரும் மகளிரும் எவ்வாறு உடை அணிந்தார்கள் என்பதை விளக்குகின்றன. போர் வீரர் வட்டுடை என்னும் ஒருவகை உடை அணிந்தனர். பெண்கள் இறவுக்கை அணிய வில்லை. கச்சு அணிந்தார்கள். 45. நெசவு பருத்தி இந்திய நாட்டுக்குரிய செடி. தமிழ் மக்கள் கற்காலத்தி லேயே பஞ்சிலிருந்து நூல் நூற்கவும், நூலிலிருந்து ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள். அக்காலத்தில் மற்றைய நாடுகளில் மக்கள் உடை யின்றியிருந்தார்கள், அல்லது தோலை உடுத்தார்கள். மொகஞ்சதாரோ அழிபாடுகளில் நூல் நூற்கும் கதிர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் வேலைப்பாடுடைய அழகிய ஆடைகளை நெய்து உடுத் தார்கள். மிகப் பழங்காலத்திலேயே ஆடைகள் எகிப்து, பாபிலோன் முதலிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. கி.மு. 1800இல் வாழ்ந்த எகிப்திய அரசனின் பாடஞ் செய்யப்பட்ட சடலம் இந்திய சல்லாத் துணியினால் போர்க்கப்பட்டிருந்தது. இந்தியாவினின்றும் சென்ற பஞ்சு ஆடை பாபிலோனில் சிந்து என அறியப்பட்டது. சிந்து என்பது கன்னட மொழியில் ஆடைத் துண்டையும் தமிழில் கொடியையும் குறிக்கின்றது. கடைந்து கொட்டை நீக்கப்பட்ட சுகிர்ந்த பருத்திப் பஞ்சினின் றும் பெண்கள் கதிர்களால் நூல் நூற்றார்கள். “பருத்திப் பெண்டின் பனுவலன்ன” எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மகளிர் நூற்ற நூலை ஆடவர் பாவோடி ஆடை நெய்தனர். இவ்வேலையில் பெண்களும் பங்கு பற்றினர். ஆடை நெய்யும் ஆடவர் காருகரெனவும், மகளிர் காருக மடந்தையர் எனவும் அறியப்பட்டார்கள். முற்காலத்தில் ஆடையைக் குறிக்க ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கின. இச் சொற்கள் அக்காலத்து வழங்கிய வெவ்வேறு வகை ஆடைகளைக் குறிப்பனவாக விருந்தன. ஆடைகள் நீளமாக நெய்யப்பட்டுப் பின் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டன. ஆகவே துண்டு, துணி, அறுவை என்னும் சொற்கள் ஆடையின் பெயர்களாக வழங்கின. மணிமேகலை என்னும் சிறந்த தமிழ் நூலைச் செய்த சீத்தலைச் சாத்தனார் அறுவை வாணிகன் என அறியப் பட்டார். திருவள்ளுவர் ஆடை நெய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தா ரென்னும் செவி வழிச் செய்தி நிலவுகிறது. பாம்புரி, மூங்கிலுரி போன்று நூல் சென்ற இடம் அறிய முடியாதனவும் பாலாவி, புகை போன்று நுண்ணியனவும் பூத்தொழில் போன்ற வேலைப்பாடுடையனவுமாகிய அழகிய ஆடைகளைப் பற்றிச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. முல்லை நிலங்களில் வாழும் குறும்பர் குறும்பு ஆடுகளை வளர்த் தார்கள். இவ்வாடுகளின் மயிரிலிருந்து அழகிய ஆடைகள் நெய்யப் பட்டன. ஆட்டு மயிரில் நெய்யப்படட ஆடை கம்பளி எனப்பட்டது. பட்டு சீன நாட்டுக்குரியது. பட்டுகளாக மடித்துத் தோளிலணியப் பட்டமையின் அது பட்டு எனப் பெயர் பெற்றது. பட்டுக்குச் சீனம் என்னும் பெயரும் வழங்கிற்று. சங்க காலத்தில் பருத்தி, மயில், பட்டு என்பவற்றில் நெசவுத் தொழில் நடைபெற்றது. “பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் - கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்” எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. கரம்பு, பணி, பரணம், பாளிதம் முதலியன பட்டாடையைக் குறிக்கும் பெயர்களுட் சில. பிற்காலத்தில் சௌராட்டிரர் தென்னாட்டையடைந்து பட்டு நெசவுத் தொழிலை அதிகப்படுத்தினர். கிரேக்கரும், உரோமரும், அரேபியரும் தமிழ் நாட்டினின்றும் ஆடைகளை வாங்கிச் சென்றனர். கொரநாடு, உறையூர், காஞ்சி, ஆரணி முதலியவிடங்கள் நெசவுக்குப் பேர்போன இடங்களாக இருந்தன. 46. உழவு புதிய கற்காலத்தில் மக்கள் உழவுத்தொழிலைத் தொடங்கி னார்கள். கற்கால இறுதியில் உழவு தொழில் நன்கு வளர்ச்சியடைந் திருந்தது. மக்களில் பெரும்பாலினர் உழவுத் தொழிலையே மேற்கொண் டிருந்தனர். சிலர் பெரிய வயல் நிலமுடையவராக இருந்தனர். அவர் களின் கீழ் நிலத்தை உழுது பயிரிடும் குடிகளிருந்தார்கள். அவர்களுக்குக் கூலி தானியமாகக் கொடுக்கப்பட்டது. நாற்றுநடுதல்,களைகட்டல் போன்ற வேலைகளைப் பெரும்பாலும் பெண்கள் செய்தார்கள். வயல் வேலை செய்வோர் களைப்புத் தோன்றாதிருக்கும் பாடல்கள் பிற்காலத் தில் பள்ளு எனப்பட்டன. பள்ளுப் பாடல்கள் உழவரின் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகின்றன. உழவுத்தொழிலுக்கு அதிக மதப்பு இருந்து வந்தது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றும் “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை” எனவும் வள்ளுவரும், ஒளவையாரும் கூறியிருக்கின்றனர். பயிரிடும் நிலத் துக்கு எரு இடப்பட்டது. நிலத்தை உழுது வெயிலும் காற்றும் பட்டு மண் உலரும்படி விடுதல் எரு விடுதலிலும் சிறந்ததெனக் கொள்ளப்பட்டது. உழவர் விருந்தினரை ஓம்பியும் இரப்போர்க்கிட்டும் உபகாரி களாக இருந்தார்கள். காணியாளராகிய வேளாளருக்கு அரசர் காவிதி, அரசு முதலிய பட்டங்கள் வழங்கினார்கள். “வீட்டு வேலைக்காரரைத் தவிரக் காணியாளராலும் அமர்த்தப் பட்ட வேலையாளரிருந்தார்கள். அவர்கள் தலைவனின் வீட்டுக்கு வெளியே குடியிருத்தப்பட்டார்கள். அவர்களுக்கு உணவுக்கும் உடைக்கும் வேண்டிய கூலி தலைவனால் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரே தலைவ னுடைய வழியில் தலைமுறையாக வந்தார்கள். ஆடுமாடு களை மேய்ப்ப வர்களுக்குப் பத்துப் பால் மாடுகளில் ஒன்றின் பாலைப் பெற்றுக் கொள்வது போன்ற கூலி கொடுக்கப்பட்டது. வயல் வேலை செய்வோர்க்கு விளைவின் பகுதி கூலியாகக் கொடுக்கப்பட்டது. உணவும் உடையும் கொடுக்கப்பட்டால் விளைவில் ஐந்திலொன்றும் அல்லாவிடில் மூன்றி லொரு பங்கும் கொடுக்கப்பட்டது. 47. வாணிகம் வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்றாகவிருந்தது. மக்கள் தமது தேவைகளுக்கு அதிகமாகவிருந்த பண்டங்களைப் பிற பொருள்களுக்கு மாற்றினார்கள். நாணயம், புழக்கத்தில் வந்தபோது வாணிகம் பண்ட மாற்று, நாணயம் என்னும் இருவகைகளில் நடைபெற்றது. கா, வண்டி, பொதிமாடு என்பவற்றில் உள்நாட்டுப் பண்டங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. வாணிகம் வளர்ந்தபோது பாதைகளும் வளர்ந்தன. உள்நாட்டுப் பண்டங்கள் அயல்நாடுகளுக்கு மரக்கலங்களில் கொண்டு செல்லப்பட்டன. அயல்நாட்டுப் பண்டங்கள் மரக்கலங்களில் வந்து இறங்கின. “திரைகடல் ஓடியுந் திரவியந் தேடு” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் முற்காலத்தில் அயல்நாடுகளுக்குக் கடல் வழியாகச் சென்ற தமிழர் தம்மோடு மகளிரைக் கொண்டு செல்ல வில்லை எனத் தெரிகிறது. எகிப்திய அரசர் பண்டு நாட்டுக்கு மரக்கலங்களைப் போக்கி அரும் பண்டங்களைப் பெற்றார்கள். பண்டை எகிப்தியரின் பாடஞ் செய்யப்பட்ட பிணங்கள் இந்திய அவுரிச்சாய மூட்டப்பட்ட சல்லாத் துணிகளால் போர்க்கப்பட்டிருந்தன. அப்பிணங்களின் காலம் ஏறக் குறைய கி.மு. 1700 வரையில். பைபிளிற் கூறப்படும் சாலமன் அரசன் ஹிரம் என்னும் பினீசிய அரசனைத் துணைக்கொண்டு தனது மரக்கலங்களை இந்தியாவுக்கு விடுத்து அகில், சந்தனக்கட்டை, யானைத் தந்தம், பொன், குரங்கு முதலியவற்றைப் பெற்றான். இப் பண்டங்கள் தம்மோடு தமது தமிழ்ப் பெயர்களையும் கொண்டு சென்றன. எபிரேய மொழியில் வழங்கிய அல்கம், கபிம், துகிம் என்னும் சொற்கள் அகில், கவி, தோகை என்னும் தமிழ்ச் சொற்களிள் திரிபுகளாகும். கிரேக்க மொழியில் வழங்கிய சிஞ்சிபெர், பிப்பிலி, கபிரியொன் என்னும் சொற்கள் இஞ்சிவேர், திப்பிலி, கருவா என்னும் சொற்களின் திரிபுகளாகும். சாலமன் அரசனின் காலம் கி.மு. 900 வரையில் இந்திய மரக்கலங்கள் பண்டங்களையும் வணிகரையும் ஏற்றிக் கொண்டு தொலைவிடங்களுக்குச் சென்றன. கம்போடியாவிலும், யாவாவிலும் காணப்படும் இந்துக் கோயில்களின் அழிபாடுகளில் இந்திய மரக்கலங்களைக் காட்டும் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகின்றன. கிரேக்கர் ஆடி மாதத்தில் புறப்பட்டு நாற்பது நாளில் முசிறிப் பட்டினத்தை அடைந்தார்கள். மலையாளக் கரைகளில் மூன்று மாதங்கள் தங்கிய பின் அவர்கள் மார்கழி அல்லது தை மாதத்தில் புறப்பட்டார்கள். இந்தியக் கரைகளில் கடற்கொள்ளைக் கூட்டத்தினர் நடமாடினமையின் அவர்கள் தமது மரக் கலங்களில் வில் வீரரைக் கொண்டு சென்றனர். உரோமர் தமிழகத்தோடு பெருமளவில் வாணிகம் புரிந்தனர். மது, பித்தளை, ஈயம், கண்ணாடி முதலிய பண்டங்களை அவர்கள் முசிறி, வக்கறை முதலிய இந்தியத் துறைமுகங்களுக்குக் கொண்டு வந்து விற்றார்கள். மிளகு, தந்தம், முத்து, சல்லாத் துணி, இரத்தினக் கற்கள், வாசனைச் சரக்குகள் என்பனவற்றை வாங்கிச் சென் றார்கள். பாண்டிய அரசன் ஒருவன் ஒருமுறை ஆகஸ்தஸ்சீசரிடம் தூதரை அனுப்பினான். பாண்டிய அரசரும் பிற அரசரும் உரோமைப் போர் வீரரைத் தமது படையில் சேர்த்திருந்தனர். மதுரையில் கோட்டைக் கோபுரவாயிற் கதவுகளை உரோமப் போர் வீரர் காவல் புரிந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. யவனர் செய்த பேழைகளும், அன்ன விளக்கு களும், பாவை விளக்குகளும், அணிகலச் செப்புகளும் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. யவனர் செய்த மதிற் பொறிகள் கோட்டை மதில்களில் வைக்கப்பட்டிருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் யவன வணிகர் வாழும் யவனச் சேரி ஒன்றிருந்தது. உரோமை நாடு ஆண்டில் 986,979 தங்க நாணயம் பெறுமதியுள்ள இந்தியப் பண்டங் களை இந்திய நாட்டினின்று வாங்கிச் சென்றது. இப் பண்டங்கள் உரோமை நாட்டில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. 48. வழிபாடு தமிழ்நாடு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐவகை இயற்கைப் பிரிவுகளுடையது. அந் நிலங்களில் வாழும் மக்கள் முறையே திருமால், முருகன், வேந்தன், வருணன், காளி என்னும் தெய்வங்களை வழிபட்டார்கள். மக்களின் நாகரிக வளர்ச்சி பண்பாடுகளுக்கேற்ப வழிபாட்டு முறைகள் வேறுபட்டிருந்தன. காளி அல்லது கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபடப்பட்டது. முருக வழிபாடு வெறி ஆடி, மறி அறுத்துச் செய்யப்பட்டது. திருமால் வழிபாடு பாற் பொங்கல் படைத்து ஆடவரும் மகளிரும் கை கோத்துக் குரவை ஆடி நடத்தப்பட்டது. வேந்தன் வழிபாட்டினர் பொங்கிப் படைத்து விழா எடுத்து வழிபட்ட னர். நெய்தல் நில மக்கள் தாழை நிழலில் சுறாக் கோடு நட்டு ஆடிப்பாடி வருணனை வழிபட்டனர். நீதி அரசனின் ஆட்சியில் மழை பெய்து நாடு செழிக்கிறது என மக்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் அரசனைத் தெய்வமாக வழி பட்டார்கள். அரசன் கடவுளின் சார்பாளனாக நாட்டை ஆளுகிறான் என்னும் நம்பிக்கை ஏறக்குறைய உலகில் எல்லா மக்களிடையும் இருந்து வந்தது. தெற்கே பௌத்த மதம் பரவிற்று. பௌத்தர் வழிபட்ட சக்கரக் கடவுள் வழிபாடு தெற்கே வந்தது. சக்கரக் கடவுள் என்பது இந்திரனைக் குறிப்பதாக இருந்தது. சக்கரக் கடவுள் வழிபாடும், வேந்தன் வழிபாடும் ஒன்றுபட்டு இந்திர வழிபாடு ஆயின. மரங்கள், தூண்கள், ஆறுகள், காடுகள், மலைகளில் தெய்வங்கள் உறைவதாகக் கொண்டு அவைகளை மக்கள் வணங்கினர். வீடுகளில் தெய்வங்களின் திருவுருவங்கள் வைத்து வழிபடப்பட்டன. மாலைக் காலத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவி வழிபட்டார்கள். வீரருக்கு நாட்டப்பட்ட நடுகற்கள் வழிபடப் பட்டன. அவற்றுக்கு ஆடும் மதுவும் பலியாகக் கொடுக்கப்பட்டன. காத்தவராயன், மதுரைவீரன், கறுப்பண்ணன், பாவாடை ராயன் போன்ற வழிபாடுகள் இவ் வகையில் வந்த வீரர் வணக்கங்களே. ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் நகர்களிலும், பட்டினங் களிலும் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். அப்பொழுது பலவகை வழிபாடுகள் நகரங்களிலும் பட்டினங்களிலும் ஒன்று சேர்ந்தன. இவ்வழிபாடுகள் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாடுகளாக வளர்ச்சியடைந்தன. இக் கடவுளருக்குக் கோயில்கள் எடுக்கப்பட்டன; குளங்களும் தொடப்பட்டன. எல்லா நிலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய இன்னொரு வழிபாடு இருந்தது. அது சிவ வழிபாடு. அஃது ஒரு நிலத் துக்கு உரியதன்றாயிருந்தமையாலும் எல்லா மக்களுக்கும் பொதுவாக இருந்தமையாலும், அது தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் உண்டு என அறிஞர் கூறுவர். கடவுள் ஒளி வடிவினன் எனக் கொண்ட மக்கள் ஒளியின் குறியாக அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்றூண்களை நட்டு வழிபட்டார்கள். இஃது ஒளி வடிவினதாகிய தீயின் சின்னம் என அறிஞர் கூறுவர். திருவண்ணா மலையில் கடவுள் சோதி வடிவாக நின்று பின் இலிங்க வடிவமானார் என்னும் பழங்கதை இக்கூற்றை வலியுறுத்துகின்றது. கற்றூண்கள் மர நிழல்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இம்மரங்கள் பிற்காலத்தில் தல விருட்சங்கள் என அறியப்பட்டன. திருவானைக்காவில் நாவலும், சிதம்பரத்தில் தில்லையும், திருவொற்றியூரில் மகிழும், குத்தாலத்தில் பலாவும், ஆலும், மதுரையில் கடம்பும், திருநெல்வேலியில் மூங்கிலும், தல விருட்சங்களாக உள்ளன. மர நிழலில் நடப்பட்டிருந்த கற்றூண் சிவலிங்கமென அறியப்பட்டது. சிலலிங்கங்கள் பெரும்பாலும் ஆல நிழலில் நடப்பட்டிருந்தன. ஆகவே பழைய இலக்கியங்கள் சிவபெரு மானை ஆலமர் செல்வன் எனக் குறிப்பிடுகின்றன. நகரங்களிலும் பட்டினங்களிலும் சிவலிங்கத்தைச் சுற்றிக் கோவில் எடுக்கப்பட்டது. ஏனைய இடங்களில் மக்கள் மர நிழலிற் சென்று சிவ லிங்கத்தை வழிபட்டார்கள். வழிபாட்டில் சாதி உயர்வு தாழ்வு என்னும் கொள்கைகள் நுழையவில்லை. தென்னிந்தியாவில் பழைய கோயில் களின் அழிபாடுகள் காணப்படவில்லை. முற்காலத் தென்னிந்திய மக்கள் கோயில்களையும் வீடுகளையும் மரங்களினாற் கட்டினார்கள்; ஆகவே அவற்றின் அழிபாடுகள் காணப்படவில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய நூல் களிலும் செங்கல்லால் எடுக்கப்பட்ட உயர்நிலை மாடங்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மொகஞ்சதாரோவில் கோயிலெனக் கருதப்படும் பெரிய கட்டிடமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முற்கால மக்கள் கடவுள் வழிபாட்டுக்குப் பெரிய கட்டிட அமைப்பு வேண்டியதில்லை எனக் கருதினார்கள். சோழ எழுச்சிக் காலத்திலேயே பெரிய கோயில்கள் எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. 49. கோயில் கோயில், வணக்கத்துக்குரிய இடமாக இருந்ததல்லாமல் பொருளா தாரம் பண்பாடு என்பவற்றோடு தொடர்பும் பெற்றிருந்தது. கோயில் எடுக்கத் தொடங்கியபோது, கோயில் அமைப்பு முறைகளை அறிந் தோரும், சிற்பிகளும் தொழிலாளரும் தத்தம் திறமைகளைக் காட்டுவதில் போட்டியிட்டார்கள். கடவுள் உருவங்கள் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டன. பின் கல்லிற் செதுக்கப்பட்டன; பிற்காலத்தில் அவை வெண்கலத்தில் வார்க்கப்பட்டன. சோழ அரசர் காலத்து வார்க்கப்பட்ட உருவங்கள் அழகும் சிற்ப நுட்பமும் பொலிந்தவை. பெரிய கோயில் களில் மிகப் பலர் கடமை ஆற்றினர். கல்லெழுத்துக்களில் கோயிலிற் கடமை ஆற்றுவோரின் விபரம் காணப்படுகிறது. கோவிலருச்சகர் நீங்கலாக அவர்கள், “நட்டுவன், அண்ணாவி, (நடனங் கற்றுக் கொடுப் போன்) ஆடுவார், கனபாடி, முகவீணைக்காரர், உடுக்கை வாசிக்கிறவர், வீணை வாசிப்போர், ஆரியம் பாடுவோர், தமிழ் பாடுவோர், கொட்டி மத்தளக்காரர், முத்திரைச் சங்கு ஊதுவோர், பக்க வாத்தியக்காரர், கட்டியங் கூறுவோர், மேளம் வாசிப்பவர், காந்தருவர், விளக்குப் போடுகிறவர், நீர் தெளிப்பவர், எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள், வண்ணான், நாவிதன், கொல்லன், தையான், பாடுகிறவன், சோதிடன், கன்னான், ஓச்சன், தட்டான், பாணன், கணக்கன்” என்போர். மடைப் பள்ளியில் பலர் ஏவல் புரிந்தனர். விழாக் காலங்களில் கோயில் கடைத்தெருவாகக் காட்சியளித்தது. கல்வி சம்பந்தமான போட்டிகள், மற்போர் முதலியன காட்சிகளாக விருந்தன. கோயில் எல்லைக்குள் பள்ளிக்கூடமும் மருத்துவமனையு மிருந்தன. பொது மக்கள் நாட்டுக் கருமங்களைப் பற்றி ஆலோசிக்கக் கோயிலிற் கூடினார்கள். புராணம் படித்தல், சமய சம்பந்தப்பட்ட நூல் களுக்குப் பொருள் கூறுதல் முதலிய நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. பத்தர்கள் கோவிலுக்குத் தலைமுறை தலைமுறையாக நிலங்களையும் பொருள்களையும் தானம் செய்து வந்தார்கள். நிலமும் பணமும் சேர்ந்தன. பணம் வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. நிலம் பயிர்ச் செய்கைக்கு விடப்பட்டது. கடவுளுருவங்களை ஆபரணங்களால் அலங்கரிப்பது வழக்கி லிருந்தது. ஆபரணங்கள் இரத்தினக் கற்கள் அழுத்திச் செய்யப்பட்டவை. பொற்கொல்லர் ஆபரணங்கள் செய்வதில் தமது திறமையைக் காட்டினர். இராசராசன் என்னும் சோழ மன்னன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைப் பற்றிய பல கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. போரில் கிடைத்த கொள்ளைப் பொருள்களில் பெரும்பகுதியை அவன் கோவிலுக்குக் கொடுத்தான். 4150 கழஞ்சு அல்லது 500 இராத்தல் எடையுள்ள தங்கத்தையும் 5065 கழஞ்சு அல்லது 600 இராத்தல் எடை யுள்ள வெள்ளியையும் அவன் கோவிலுக்குக் கொடுத்தான். கோவிலிற் சேவிப்பதற்கு 400 தேவதாசிகளை நியமித்தான். ஒவ்வொரு தேவதாசிக் கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் விடப்பட்டது. ஒரு வேலி நிலத்தில் நூறு கலம் நெல் விளைந்தது. 212 நட்டுவர், வாத்தியக்காரர், பொற் கொல்லர் என்பவர்களின் ஊதியத்துக்குத் தேவதாசிகளுக்கு விடப் பட்டது போல 180 வீடுகளும் நிலமும் விடப்பட்டிருந்தன. வாத்தியங்க ளோடு திருப்பதிகம் ஓதுதற்கு ஐம்பது பேர் இருந்தார்கள். கோயிற் பணம் கிராம சபைகளுக்கு வட்டிக்குக் கொடுக்கப்பட்டது. கோயிலமைப்பு அரண்மனை அமைப்பைப் போலிருந்தது. அது ஒரு கோட்டையைப் போலவுமிருந்தது. 50. பார்ப்பார் தென்னிந்திய ஊர்கள் கோவிலைச் சுற்றியிருந்தன. பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் கோவில்களின் பெயர்களாகவே அமைந்துள்ளன. எல்லா நாடுகளிலும் போலவே இங்கும் கோயில்களை மேற்பார்ப்போர் இருந்தனர். கோயிலை மேற்பார்த்தமையின் அவர்கள் பார்ப்பார் என அறியப்பட்டார்கள். இவர்கள் வேளாண் மரபைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிற்காலத்தில் இவர்கள் ஆதிசைவர் என அறியப்பட்டார்கள். இவர்கள் சோதிடம், மருத்துவம், மாந்திரீகம் முதலியன அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் செல்வாக்கு பொது மக்களிடையே அதிகம் இருந்து வந்தது. அவர்கள் அரசனின் மதிப்புக்குரியவர்களாகவும் இருந்தார்கள். பார்ப்பனருள் சிறந்தவர் அரசனது உறுதிச் சுற்றம் என்னும் குழுவில் ஒருவராக இருந்தார். “அடுத்த நட்பாளரும் அந்த ணாளரும் படைத் தொழி லாளரும் மருத்துவக் கலைஞரும் நிமித்த காரரும் நீணில வேந்தர்க் குரைத்த வைம்பெயர் உறுதிச்சுற்றம்” அரசனுடைய முடிசூட்டின்போது பார்ப்பானே முடியை எடுத்து அவனுக்குச் சூட்டினான். இவ்வாறு முடிசூட்டிக் கொள்ளாத அரசன் முறையான அரசன் எனக் கொள்ளப்படமாட்டான். பார்ப்பார் மக்களைத் தீமைகளினின்றும் நீக்கி நல்வழியில் செலுத்துவோர் எனப் பொதுமக்கள் நம்பினார்கள். ஆகவே பார்ப்பார் புரோகிதர் எனவும் அறியப்பட்டனர். புரோகிதன் என்னும் சொல் காத்தல் என்னும் பொருள்படும் புர என்னும் அடியாகப் பிறந்தது. ஒருவன் செய்து வந்த தொழிலை அவன் கால் வழியினர் செய்து வருதல் என்னும் முறையில் குடும்பங்கள் பெருகிச் சாதிகள் பலவாயின. இதனை ஒப்பப் பார்ப்பன வகுப்பும் தனிக் குலமாக வளர்ந்தது. சாதிகள் பிறப்பினால் உண்டானவை எனப் பொது மக்கள் நம்பத் தலைப் பட்டார்கள். இவ்வகை நம்பிக்கை திருவள்ளுவர் காலத்தில் இருந்தது. “பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” என்னும் திருக்குறளால் இது விளங்குகின்றது. புத்தகக்கட்டு, மணை, முக்கோல், தூக்கு (உறி) என்பவற்றைக் கொண்டு இடமிருந்து இடம் செல்லும் ஒரு வகைத் துறவிகள் வாழ்ந் தார்கள். அவர்கள் காவி தோய்த்த உடை அணிந்தார்கள். அவர்கள் சமணத் துறவிகளைப் போன்று எல்லா உயிர்களிடத்தும் இரக்கமுடைய வர்களாக இருந்தார்கள். அவர்கள் அந்தணர் என அறியப்பட்டார்கள். அந்தணர் என்பதற்கு எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவர் என்பது பொருள். பிற்காலங்களில் அந்தணர் என்னும் சொல் பார்ப்பனரையும் குறிப்பதாக இருந்தது. பிற்காலத்தில் பிராமணர் என்னும் ஒரு கூட்டத்தினர் வடக்கினின் றும் தெற்கே வந்தனர். இவர்கள் வேதங்களின் பகுதிகளாகிய பிராமணங் களைப் பயின்று கிரியைகளைப் புரிபவர்களாக இருந்தார்கள். பல்லவர், சாளுக்கியர், ஹோய்சளர் முதலிய பல வடநாட்டினர் தென்னிந்தியா மீது படை எடுத்து வந்து நாட்டின் சில பகுதிகளைச் சிற்சில காலம் ஆண்டனர். அக்காலத்தில் பிராமண மதத்தினருக்கு அரசரின் ஆதரவு கிடைத்தது. கோயில்கள் பார்ப்பனரிலிருந்து பிராமணர் கைக்கு மாறின. தமிழுக்குப் பதில் வடமொழி ஆலயங்களில் வழங்கத் தலைப்பட்டது. இவ்வாறான குழப்பங்களால் பிராமணர், பார்ப்பார், அந்தணர் என்னும் பெயர்கள் ஒரே பொருளில் வழங்கி வருகின்றன. உண்மையில் இம் மூன்று பெயர்களும் குறிப்பிடுவோர் வெவ்வேறு தொழிலுடையவர் களாக இருந்தவர்களாவர். தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிற்காலத்து ஆதி சைவர் என அறியப்பட்டனர். 51. தத்துவ ஞானம் மக்களில் ஒரு சிலர் கடவுள், உயிர், உலகம், இறப்பு, பிறப்பு, வினை இவைகளுக்குள்ள தொடர்பு போன்ற நுண் கருத்துக்களை ஆராய்ந்து வந்தார்கள். இவ்வாராய்ச்சிகளின் முடிபே தமிழர் கண்ட தத்துவ ஞானமாகும். உயிர், மெய், உயிர்மெய், வேற்றுமை போன்ற சொற்கள் மிகப் பழங்காலம் முதல் தமிழ் இலக்கணத்தில் ஆளப்பட்டு வருகின்றன. இதனால் மிகப் பழங் காலத்திலேயே தத்துவஞானம் தமிழர்களிடையே வளர்ச்சியடைந்திருந்ததெனத் தெரிகிறது. தமிழர் கண்ட தத்துவ ஞானம் ஒரு நாட்டினருக்கு அல்லது ஒரு சாதியினருக்கு மாத்திரம் உரியதன்று; அது உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. தொல்காப்பியர், திருவள்ளுவர் என்னும் பண்டைய ஆசிரியர்கள் எச் சமயத்தைச் சேர்ந்த வர்களென்று அறிய முடியாமலிருக்கின்றது. இதற்குக் காரணம் தமிழரின் தத்துவஞானம் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதா லாகும். தத்துவ ஞானம் மிகப் பழங்காலம் முதல் குருமாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தது. அது இரகசியம் அல்லது உபதேசம் எனப்பட்டது. வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைப்பது தமிழ் மரபன்று. இறைவன் தென்முகக் கடவுளாக அமர்ந்து முனிவர்களுக்கு ஞானத்தை மௌனமாகவிருந்து உபதேசித்தார் எனச் சொல்லப்படு கிறது. வீட்டு நூல்கள் எழுதி வைக்கப்படுவதில்லை என்பதைத் தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது. பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்களும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றனர். குரு மாணாக்க முறையில் வந்த தத்துவஞான நூல்கள் வட நாட்டில் உபநிடதங்கள் என வழங்கின. உபநிடதங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் ஆகமங்களிற் சொல்லப்படும் தத்துவ ஞானத்துக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு என அறிஞர் கூறுவர். ஆகம ஞானக் கருத்துக்கள் தமிழ ரிடையே மிகப் பழங்காலம் முதல் இருந்து வருவன. உபநிடத ஞானங் களை அடிநிலையாகக் கொண்டு சாங்கியம், பௌத்தம், யோகம், சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் எழுந்தன. கபிலர், புத்தர், மகாவீரர் முதலியோர் திராவிடமரபைச் சேர்ந்தவர்களென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. உபநிடதக் கருத்துக்களைத் தெளிவுப்படுத்துவதற்கு வேதாந்த சூத்திரங்கள் செய்யப்பட்டன. பிற்காலத்தவர் இச்சூத்திரங்களுக்குத் தத்தம் கொள்கைகளைப் புகுத்தி உரை கண்டனர். பௌத்தம் சமணம் முதலிய தத்துவ ஞானங்கள் வடக்கினின்றும் தெற்கு நோக்கிப் பரவிக் கொண்டிருந்தன. அதனால் தெற்கில் பரவியிருந்த தத்துவ ஞானக் கருத்துக்களில் தடுமாற்றங்கள் எழுந்தன. அக் காலத்தில் திருமூலர், தமிழர் தத்துவ ஞானக் கருத்துக்களை விளக்கித் திருமந்திரம் என்னும் ஞான நூலைச் செய்தார்: சமயகுரவர்களும், ஆழ்வார்களும் தமிழரது தத்துவ ஞானக் கருத்துக்களைத் தமது பாடல்களில் இடைஇடையே எடுத்துக் கூறியிருக்கின்றனர். சங்கராச்சாரியார் வேதாந்த சூத்திரங்களுக்கு உரை செய்தார். அவர் தமது உரையில் கடவுள் ஒன்றே உள்பொருள்; மற்றவை பொய்த் தோற்றங்கள் எனக் கூறினார். இக்கொள்கை கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களை உள் பொருள்களெனவும், இறைவனையும், உயிரையும் ஆண்டான் அடிமை எனவும் கொள்ளும் தமிழர் ஞானமாகிய சைவ சிந்தாந்தக் கொள்கைக்கு முரணாக விருந்தது. ஆகவே மெய்கண்டார், உமாபதி சிவம், அருணந்தி சிவாச்சாரியார் முதலிய அறிஞர் சைவ சித்தாந்த ஞானங்களை விளக்கித் தமிழில் நூல்கள் செய்தனர். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தோத்திர வடிவான சைவத் திருமுறைகளிலும், நாலாயிரப் பிரபந்தத்திலும் இடையிடையே கூறப்பட்டுள்ளன. 52. கல்வி மரத்தடி, கோயிலின் பத்தி அல்லது ஆசிரியனின் வீட்டுத் திண்ணை என்பவை பள்ளிகளாக இருந்தன. கல்வி ஐந்து வயதில் தொடங்கியது. நாட்டுப்புறங்களில் காணப்படுவது போலச் சிறுவர் மணலில் எழுத்தெழுதப் பயின்றார்கள். ஆசிரியனின் முதல் மாணவன் மாணவருக்குக் கல்வி பயிற்றுவதில் உதவியாக இருந்தான். ஒரு மாணவன் சொல்ல மற்ற மாணவர்கள் கேட்டுச் சொல்லும் முறையில் நெடுங் கணக்குப் பயிலப்பட்டது. மாணவர் ஆசிரியனுக்குப் பணிவும் மரியாதை யும் காட்டினர். “எழுத்தறி வித்தவன் இறைவனாவான்” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. மாணவர் பாடங்களைப் பனை ஓலை ஏடுகளில் எழுதிப் பயின்றார்கள். எழுதுவதற்குப் பனை ஓலையும் எழுத்தாணியும் பயன்படுத்தப்பட்டன. பழங்காலச் சாசனங்கள் அக்காலத்தில் எழுத்து முறையான கல்வி எவ்வளவு திருத்தம் பெற்றிருந்ததென்பதைக் காட்டு கின்றன. கோவில்களிலும், மரத்தடிகளிலும் அல்லாமல் சமண மடங்களி லும், பௌத்த விகாரைகளிலும் மாணவர் கல்வி பயின்றார்கள். கல்வி கற்பிக்கப்படும் இடங்களுக்குப் பள்ளி என்னும் பெயர் வழங்கு கின்றது. இது பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பெயர். பள்ளியில் மாணவர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நன்னூல் கூறுகின் றது. மாணவர் ஆசிரியருக்கு ஊதியமாக வயல்களில் விளையும் பொருள் களை ஆண்டில் ஒரு முறை அல்லது பல முறைகளில் கொடுத்தார்கள். பிற்காலத்தில் ஊர் ஆசிரியனுக்கு ஊதியமாக மானியங்கள் விடப்பட் டிருந்தன. கோயில்களில் துதிப்பாடல்கள் பாடுவதற்கு மாணவர் பயிற்றப் பட்டார்கள். மடங்கள் தோன்றியபோது மடங்களும் கல்விச் சாலை களாக விளங்கின. உயர்ந்த கல்வி கற்க விரும்பினோர் நாட்டில் ஆங்காங்கு புகழ் பெற்று விளங்கிய ஆசிரியர்களை அடைந்து அவர்களுடன் தங்கியிருந்து கல்வி பயின்றார்கள். ஆசிரியர்கள் மாணவருக்கு எளிதில் கல்வி பயிற் றற்கு உதவியாகப் புதிய நூல்களைச் செய்வதும் வழக்கமாக இருந்தது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவருக்காகச் செய்யப்பட்டவை. ஆசிரியனுடன் தங்கி யிருந்து கல்வி பயிலும் மாணவர் அவனுடைய வீட்டுப் பணிகளைச் செய்து அவனுக்கு உதவியாக இருந்தனர். அரச குமாரர் ஆட்சிக்குரிய கல்வியையும், போர்க் கல்வியையும் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயின்றார்கள். முற்கால மாணவர் இலக்கியங்களையும், இலக்கணங் களையும் மாத்திரமல்லாமல் இசை, கூத்து, ஓவியம் போன்ற பல வகைக் கல்விகளையும் பயின்றனர். அரசர், அரசியர் முதலானோர் இசை, நடனம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என இலக்கியங்கள் கூறுகின்றன. பெண்களில் சில வகுப்பினர் அறுபத்து நான்கு வகைக் கல்வி பயின்றனர். அவை “எண்ணென் கலை” அல்லது அறுபத்து நான்கு கலைகள் எனப்பட்டன. கைத்தொழில் பற்றிய கலைகள் தனித்தனி வகுப்பினரிடையே எழுதாக்கலையாக இருந்து வந்தன. தொழில் சம்பந்தப்பட்ட கல்வி பயில்வோர் அவ்வத் தொழிலில் திறமை பெற்றவர்களிடம் பயின்றார்கள். பெரும்பாலும் தந்தையே தனது மகனுக்குத் தொழிற்கல்வி கற்பித்தான். 53. கைத்தொழில்கள் “நெசவு குடிசைத் தொழிலாக இருந்தது. நெசவு வேலை செய்வோர் பெரும்பாலும் பெண்களாக இருந்தார்கள். கம்பளி, பஞ்சு, மரப்பட்டை, சணல், இலவம் பஞ்சு முதலியவற்றில் நூற்கப்பட்ட நூலால் துணிகள் நெய்யப்பட்டன. பலவகைச் சணல் நார், பட்டு, இரலை மான் மயிர் என்பவற்றிலிருந்தும் ஆடைகள் செய்யப்பட்டன. கயிறுகள், கவசங்கள், வார்கள் செய்வோரும் இருந்தனர். “தச்சர், கம்மியர், குயவர், மதுவடிப்போர், வாத்தியக்காரர், கூத்தர் முதலிய பல தொழில் புரிவோரிருந்தனர். வண்டிகள், தேர்கள் போன்ற வற்றைச் தச்சர் செய்தனர். பொற்கொல்லர் முக்கிய தொழிலாளராக இருந்தார்கள். இராச நிகண்டு என்னும் வட மொழி நூல் 42 வகைப் பொன்னைப் பற்றிக் கூறுகின்றது. ஆபரணங்களும் நாணயங்கள் சிலவும் பொன்னாற் செய்யப்பட்டன. பொன்னோடு வேறு உலோகங்களைக் கலந்து வேலை செய்தல், முலாம் பூசுதல், பொன்னில் இரத்தினக் கற் களைப் பதித்தல், உரை கல்லைக் கொண்டு பொன்னைச் சோதித்தல் முதலியன அறியப்பட்டிருந்தன. இரும்பு, செம்பு, ஈயம், தகரம் முதலியவை கீழான உலோகங்களாகக் கொள்ளப்பட்டன. தில்லியில் சந்திரகுப்த னால் (கி.பி. 5ஆம் நூ.) நாட்டப்பட்ட இரும்புத்தூண், அக்காலத்தில் உலோகங்களை உருக்கிவார்க்கும் தொழில் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது. பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் மரத்தினால் செய்யப்பட்டன. பழைய வாகடங்களில் பாதரசம் கூறப்படவில்லை. அது கௌடலியர் காலத்திலும் அறியப்பட வில்லை. சுசுருதர் காலத்தில் அது அறியப்பட்டிருந்தது. நிலக்கீல், மலையிலிருக்கும் நான்கு உலோகங்களை வெயில் சூடேறச் செய்வதால் வடியும் களிம்பு எனக் கருதப்பட்டது. முத்து, பவழம், இரத்தினக்கற்கள் என்பன மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்தன. வைரங்கள் வெட்டிச் சாணை பிடித்துச் சுத்தஞ் செய்யப்பட்டன. போலி இரத்தினக் கற்களும், இரசக் கலவையைக் கொண்டு செய்யப்படும் போலி முத்துக் களும் அறியப்பட்டிருந்தன”.1 உலோக வேலை செய்வோர் அக்கசாலையர், கம்மாளர், அறிவர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், கருமார், தட்டார், துவட்டர், புலவர், புனையர், வித்தகர், வித்தியர் முதலிய பெயர் களால் அறியப்பட்டனர். உலோகத் துண்டை அடித்துச் செய்த தகடு அடர் எனப்பட்டது. அடரினால் பெரிய ஏனங்கள் செய்யப்பட்டன. சங்குகள் அறுத்து வளைகளாகச் செய்யப்பட்டன. இரத்தினக் கற்களில் துளையிடுவோர் என அறியப்பட்டனர். ஒவ்வொரு கூட்டத்தினரும் பரம்பரைத் தொழிலையே செய்து வந்தார்கள். தொழில்களில் மாற்றமுண்டாகவில்லை. கூத்தர், மேளமடிப் போர், சங்கு ஊதுவோர், கம்பங் கூத்தாடிகள், யானை பழக்குவோர் என்பவர்களைப் பற்றி நூல்கள் குறிப்பிடுகின்றன. மனிதருக்கும் விலங்கு களுக்கும் வைத்தியம் செய்யும் மருத்துவரும் இருந்தனர். 54. ஆபரண அலங்காரங்கள் ஆடவரும் மகளிரும் பலவகை ஆபரணங்களால் தம்மை அலங் கரித்தார்கள். அவர்கள் தம்மை அலங்கரித்து கொண்டதல்லாமல் தாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களையும் அலங்கரித்தார்கள். வீடு களின் கதவுகள், நிலைகள், முற்றங்கள் என்பனவும் பல வேலைப்பாடு களால் அலங்கரிக்கப்பட்டன. கத்தி, வாள் போன்வற்றின் பிடிகளும் பலவாறு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மகளிர் முற்றத்திலும், வீட்டு வாயிலிலும் வியக்கத்தக்க அழகிய கோலங்களை இட்டார்கள். வீட்டின் சுவர்களிலும் கோயில் சுவர்களிலும் மனத்தையும் கண்ணையும் கவரும் அழகிய ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. கோயில் கட்டடங்களிலும் தேர்களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மணமாகாத மகளிர் தமது கூந்தலை ஐந்து வகையாகக் கோதி முடித்தார்கள். பெண்கள் நெற்றியில் திலகமிட்டார்கள்; தலையில் பல வகைப் பூக்களைச் சூடினார்கள்; சுறாமீன், வலம்புரிச் சங்கு, பிறை போன்ற அணிகலன்களை அணிந்தார்கள்; கொண்டையிலும் கழுத்தி லும் பூ மாலைகள் அணிந்தார்கள்; சந்தனம் குங்குமம் முதலிய நிறப் பொடிகளைப் பயன்படுத்தி மேனியை அலங்கரித்தார்கள்; உதடுகளுக்கு அரக்கினால் செய்யப்பட்ட சாயம் ஊட்டினார்கள், மார்பிலும் தோளி லும் தொய்யிலென்னும் ஒருவகைக் குழம்பு பூசினார்கள்; அதன் மீது கரும்பு, பூங்கொடி என்பவற்றை அழகுபெற எழுதினார்கள்; காதில் தோடு அணிந்தார்கள்; காலில் சிலம்பும், கை விரலில் மோதிரமும் அரையில் மேகலையும் அணிந்தார்கள். ஆடவரும் குழை, கடகம், தண்டை முதலிய பலவகை அணிகளை அணிந்தார்கள். பெண்கள் அணிந்த அணிகள் மிகப் பல. சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக் கியங்களிலும் பலவகை அணிவகைகள் கூறப்படுகின்றன. அணிதல் அழகு செய்தலை உணர்த்த ஆர், சூடு, புனை, பூண், மிலைவேய், முதலிய பல சொற்கள் காணப்படுகின்றன. பழைய சிற்பங்களில் முற்கால ஆடவர் மகளிர் அணிந்த அணிவகைகள் காணப்படுகின்றன. பிற்காலத்தும் முற்காலத்தும் வழங்கிய அணிவகைகளுள் சில பின் வருவன: தோடு, காரோலை, முத்துமாலை, பவழ மாலை, சங்கிலி, குறங்கு செறி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை, திருப்பதம், திருமுடி, பள்ளித் தொங்கல், கொற்றக்குடை, தவள சத்திரம், பொற்பூ, திரள்மணி வடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச் சிடுக்கு, சோனகச் சிடுக்கின் கூடு, மகுடம், வாளி, வடுகவாளி, கண்மலர் (நயனம்), பொட்டு, பதக்கம், ஏகவலி, கால்வடம், கமலம், வாகு வலயம், துடர், திருப்பட்டி, திருமணி வடம், கைக்காறை (புயவளை), பாதசாலம், பத்திரம், கண்டதுடர் (மாலை), கொக்குவாய் (கழுத்து ஆபரணங்களை எல்லாம் சேர்த்துப் பிடிக்கும்படி அணியும் சங்கிலி), கட்டகம் (பவளம் பதித்த கைவளை), இரத்தின வளையல், சிறு சந்தம், பாசமாலை, சப்தசாரி, பதக்கம், கலாவம் (பதக்கத்தின் பகுதி), பிரபை, கமலம், செடி, சரப்பள்ளி, தெய்வவுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, கடுக்கன், கடகம், சன்னவீரம், உதரபந்தம். 55. பொழுதுபோக்கு அரசர் பெரும்பாலும் வேட்டையாடுவதிலும் ஆயுதப்பயிற்சி போர்ப் பயிற்சிகளிலும் பொழுது போக்கினர்; யானை ஏற்றம் குதிரை ஏற்றம் என்பனவும் அவர்களின் பொழுதுபோக்காக இருந்தன. போர் வீரர் மற்போர், குத்துச் சண்டை, சிலம்பம், வாட்போர், விற்போர் முதலியன புரிந்து பொழுது போக்கினர். மகளிர் அம்மானை, பந்து, கழங்கு முதலிய விளையாட்டுகளிலும், தெள்ளேணம், சாழல், கோலாட் டம், குரவை, கும்மி முதலிய ஆடல்களிலும் யாழ் வாசித்தல் பாடுதல் முதலியவற்றிலும் பொழுதுபோக்கினர். பொது மக்கள் காடைப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர், யாiனை ஓட்டம், குதிரை ஓட்டம், தேரோட்டம், நாட்டுக் கூத்து, கழைக் கூத்து என்பவற்றைப் பார்த்துப் பொழுது போக்கினர். சிறுவரும் சிறுமியரும் சிறு தேரோட்டியும், சிறு பறை அறைந்தும், சிற்றில் புனைந்தும், ஊசலாடியும், வில் கொண்டு அம்பு எய்தும் பொழுது போக்கினர். ஊசலாடுதல் வளர்ந்தவர்களின் பொழுதுபோக்காகவும் இருந்ததது. ஆயர்குல வாலிபர் ஏறு தழுவிப் பொழுது போக்கினர். ஏறு தழுவுதல் என்பது சல்லிக்கட்டு என்பது போன்றது. முதியோர் தாயம் ஆடினர். விழாக்கள், உண்டாட்டுகள், களியாட்டுகள், என்பனவும் சிறந்த பொழுது போக்குகளாக இருந்தன. பெண்கள் செல்லும் தேரையும் யானையையும் பெண்கள் ஓட்டிச் செல்வதும் அக்கால வழக்காக இருந்தது. ஆற்றில் புது வெள்ளம் வரும் போது நீராட்டு விழா எடுக்கப் பட்டது. அப்பொழுது ஆடவரும் மகளிரும் தேர்கள், வண்டிகள், யானைகளை ஊர்ந்து சென்று பலவகை ஆடம்பரங்களோடு நீராடுவர்; ஆற்றங்கரைகளில் இடப்பட்டுள்ள கூடாரங்களுள் தங்கும் போது மதுவுண்டும், நறும் பண்டங்களைச் சுவைத்தும், ஆடியும் பாடியும் களிப்பர். கார்த்திகை விழாவில் வீட்டுக்கு விளக்கேற்றப் பட்டது. தைமாதப் பிறப்பில் மகளிர் விடியற் காலையில் நீராடி விரதமிருந்தனர். சிறுவர் நெல்லிக்காயை வைத்து வட்டாடுதல், கிணற்றுள் குதித்து நீர் அடியிலிருக்கும் கல்லை எடுத்து வருதல் போன்ற பொழுது போக்குகள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. விழாக் காலங்களில் புலவர்கள் பட்டி மண்டபத்திலேறித் தத்தம் புலமையைக் காட்டும் சொற்பொழிவாற்றினர். விசய நகர அரசர் காலத்தில் அரண்மனைக்குள் பொழுதுபோக்கு அரங்கு இருந்தது. அரசனதும் அரண்மனையிலுள்ள வர்களதும் பொழுதுபோக்குக்காக விலங்குகள் போர் செய்யும்படி விடப்பட்டன; மற்போர் நடத்தப்பட்டன. மற்போரில் பெண்களும் கலந்து கொண்டார்கள். 56. இசை ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசைகளிருந்தன. குறிஞ்சி நில மக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள்1. முல்லை நில மக்கள் முல்லைப் பண் பாடினார்கள். அஃது இன்று மத்தியமாவதி என அறியப்படுகின் றது. மருதநில மக்கள் மருதப் பண் பாடினார்கள். அது இன்று கேதாரம் என அறியப் படுகின்றது. நெய்தல் நிலத்துக்குரிய பண் இன்று புன்னாகவ ராளி என அறியப்படுகின்றது. பாடி ஆடும்போது கொட்டப்படும் மேளங்கள் இருந்தன. வெவ்வேறு ஓசைகளை எழுப்பும் பறைகள் வெவ்வேறு செயல் புரியும் காலங்களில் கொட்டப்பட்டன. நிரை கவரும்போது கொட்டப்படுவது ஏறு கோட் பறை. வெறியாடும்போது ஒலிக்கப்படும் பறை முருகியம். மணக் காலத்தில் முழக்கப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது கொட்டப்படுவது தேரோட்டுப் பறை. நெல்லறுக்கும் போது அறையில் பாடுவது நெல்லரிகிணை. அரசன் வெளியே புறப்படும் போது தட்டப்படுவது புறப்பாட்டுப் பறை. மீன் பிடிக்கச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட் பறை. சூறையாடும் போது கொட்டப்படுவது சூறை கோட்பறை. போர்க்காலத்து யானை குதிரை காலாட் படைகளுக்கு ஊக்க மூட்டும் பொருட்டுப் பல்வகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. இவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நால்வகைப் பட்டன. தமிழுக்குரிய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவைக்குரிய எழுத்துக்கள் ஆ முதலிய நெடில் ஏழும். ச, ரி, க, ம, ப, த, நி என்னும் எழுத்துக்கள் பிற்காலத்தில் வழக்குக்கு வந்தன. மூங்கில், கொன்றைப் பழத்தனி கோது, ஆம்பற் றண்டு, மரம் முதலியவற்றில் செய்யப்பட்ட குழல்களிருந்தன. எக்காள வகைகளில் தாரை, காளம், காகளம், அம்மியம், சின்னம் என்பனவும் கொம்பு வகைகளில் கோடு, இரலை, வயிர் முதலியனவும் இருந்தன. நரம்புக் கருவிகளில் சிறப்புடையது யாழ். அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன. பறை, முரசு, பேரிகை, மத்தளம், ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேள வகைகளுள் சில. இன்று, இலங்கைத் தீவில் எழுபதுக்கு மேற்பட்ட மேள வகைகள் வழங்குகின்றன. இதனால் அக்காலத்தில் பலவகை மேளங்கள் இருந்தனவென்று அறிய வருகிறது. பாணர் கையில் கொண்டு திரிந்து அடித்துப் பாடும் சிறிய மேளங்கள் தாரை, உடுக்கை முதலியன. தமிழர் நூல்களைப் பாடல் வடிவில் செய்து இசையோடு பாடி வந்தனர். ஆடல்களோடு பாடல்களும் பாடப்பட்டன. பெண்கள், இழவுக் காலத்தில் தமது துக்கத்தை ஒப்பாரி என்னும் பாடல்களாகப் பாடினர். “பந்தாடுவதிலும் பாட்டு, ஊசலாடுவதிலும் பாட்டு, நெற்குற்று வதிலும் பாட்டு, உழவிலும் பாட்டு, போரிலும் பாட்டு தமிழரிடையே மலிந்து காணப் படும். தமிழர்க்கு அழுகையும் பாட்டாய் வரும். மணமும் பாட்டாய் நிகழும். தொழுகையும் பாட்டால் விளங்கும். தமிழர் தெய் வத்தைப்பாட்டும் இசையும் பயிலவே வணங்குவர். ஏற்றப் பாட்டு, கப்பற் பாட்டு, இறவைப்பாட்டு, பள்ளி யெழுச்சிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, பாவைப்பாட்டு, மறத்தியர்பாட்டு, குறத்தியர்பாட்டு, இரேகைப்பாட்டு, குறிப்பாட்டு, பள்ளுப்பாட்டு, பறைப்பாட்டு, வள்ளுவர்பாட்டு, வண்டிப் பாட்டு, அம்மானைப்பாட்டு, கழங்குப் பாட்டு, பல்லாங்குழிப்பாட்டு, தோழிப்பாட்டு, பாண்டிப்பாட்டு, கடை திறப்புப்பாட்டு, சிந்துப்பாட்டு, சந்தப்பாட்டு, பிள்ளைப்பாட்டு, கொள்ளைப்பாட்டு, கள்ளர்பாட்டு, வெற்றிப்பாட்டு, வாழ்த்துப்பாட்டு, மங்கலப்பாட்டு, மணப்பாட்டு, காதற்பாட்டு, காவடிப்பாட்டு, பகடுரப்பற்பாட்டு, இடையர்பாட்டு, வேடுவர்பாட்டு, நடைப்பாட்டு, கும்மிப்பாட்டு, குரவைப்பாட்டு, கைவீசற்பாட்டு, சப்பாணிப்பாட்டு, கீரைப்பாட்டு, கோலப்பாட்டு, கோலடிப்பாட்டு, சிலம்பப்பாட்டு, வில்லுப்பாட்டு, தல்லுப்பாட்டு (ஒருவர்ப் பாட எதிர்த்துப் பாடும் பாட்டு - மலை நாட்டு வழக்கு), கோயில் பாட்டு, குழற்பாட்டு, கூத்திற் பாட்டு முதலிய இசைப் பாட்டுகள் எல்லாம் தமிழருடையவை”. முற்காலத்தில் இசை வளர்த்த குடும்பத்தார் பாணர் என அறியப் பட்டனர். அக்காலத்திலிருந்த இசை அறிஞர் துளைக் கருவிவாசிப் போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக் கருவி வாசிப்போர், கண்டத் தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த் தார்கள். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாசித்த யாழ் சகோட யாழ். தேவார திருவாசகங்கள் அக்காலத்தில் சிறந்த இசைப்பாடல்களாக விளங்கின. சோழ நாட்டில் உறையூரில் தோன்றிய திருப்பண்ணாழ்வார் திருவரங்கக் கடவுளுக்கு இசைத் தமிழ்த் தொண்டு செய்து பெரும்பேறு பெற்றார். திருத்தொண்டர் புராணத்தில் கூறப்படும் ஆனாயனார் வேய்ங்குழலில் இறைவனின் ஐந்தெழுத்தை இசைச் சுரங்களாகக் கொண்டு வாசித்து இறைவனருள் பெற்றார். அருணகிரி நாதர் பாடிய பாக்கள் சந்த இசை யில் சிறந்தவை. திருமுறை கண்ட சோழன், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த பாடினியாரைக் கொண்டு தேவாரங்களுக்குப் பண்ணமைதி யினை வகுத்தமைத்தான். சேந்தனார் முதலிய ஒன்பதின்மராற் பாடப் பெற்ற பாடல்கள் தேவாரத்தை ஒப்பப் பண்ணடைவு பெற்றுள்ளன. இராசராச சோழன் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கும் இசை பாடுதற் கும் பலரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் நியமித்தான். முத்துத் தாண்ட வர் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை முதலியன பிற்கால இசைப் பாடல்களாகும். யாழும் வீணையும் இருவேறு இசைக் கருவிகள். இசையின் காலத்தை அளப்பதற்குத் தாளம் வழக்கில் இருந்தது. தாளத்தைப் பற்றிக் கூறும் தாள ஓத்து, தாள சமுத்திரம் முதலிய நூல்கள் இருந்தன. இசையைப் பற்றிக் கூறும் இசை நுணுக்கம், முது நாரை, முது குருகு, இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம் முதலிய பல நூல்கள் இருந்தன. இவை இப்பொழுது இறந்து விட்டன. 57. போர் தமிழரசர் பெரும்பாலும் தமது ஆணையைப் பிற அரசர் மீது செலுத்தும் பொருட்டுப் போர் செய்தனர். போர் பெரும்பாலும் அறுப்புக் காலத்தின் பின் நிகழ்ந்தது. மேற்கொள்ளப்பட்ட போர்களின் தன்மை நோக்கி அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பெயர் பெற்றன. போர் வீரர் அவ்வக் காலத்தில் முடியில் சூடிக் கொண்ட பூக்கள் காரணமாக அப்பெயர்கள் தோன்றின. தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தருக்கும் வெவ்வேறு பூக்கள் இருந்தன. பாண்டியனுக்கு வேப்பம் பூவும், சோழனுக்கு ஆத்திப் பூவும் சேரனுக்குப் பனங்குருத்தும் அடையாளப் பூக்களாகும். இவ் வரசர்களின் படை வீரர் தம்மரசரின் பூவைச் சூடுதல் மரபு. சில சமயங்களில் அவர்கள் அப் பூக்களைப் பொன்னினால் செய்து சூடினர். வெட்சி என்பது ஒரு அரசன் மாற்றானுடைய பசுக் கூட்டங் களைக் கவர்தல். பசுக்களை மீட்டல் கரந்தை என அறியப்படும். வஞ்சி, மாற்றான் மீது படை எடுத்துச் செல்லுதல். உழிஞை, ஓர் அரசன் இன் னொரு அரசனின் கோட்டையை முற்றுகையிடுதல். தும்பை, இரு படை களும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் பொருதல். வாகை, வெற்றியைக் குறிக்கும். காஞ்சி, உலக நிலையாமையைக் கூறுவது. பாடாண், அரசர் பெரு மக்களின் வெற்றியையும் புகழையும் புலவர்கள் பாடுவது. முற்காலப் போர்கள் வீரம், திறமை, வலிமை முதலியவற்றைக் காட்டுதற்குச் செய்யப் பட்டமையால் அவை அரசரின் பொழுது போக்குகளாகவும் இருந்தன. போர்க்களம், களரி, பறந்தலை, முதுநிலம் என அறியப்பட்டது. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முன்னணி, ஆக்கம், கொடிப்படை, தார், தூசி, நிரைப் படை எனப்பட்டது. பின் படை கூழை எனப்பட்டது. யானை, தேர், குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டிருந்தது. யானை வீரன் புலித்தோல் கவசம் அணிந்து சென்றான். அவனைச் சூழ்ந்து சில வீரர் சென்றனர். யானை பாகனால் நன்கு பழக்கப்பட்டிருந்தது. அது கந்து அல்லது தறியில் கட்டப்பட்டது. அதற்கு அரிசியும் சர்க்கரையும் கலந்த சோற்றுக் கவளம் கொடுக்கப்பட்டது. அதற்கு நீராட்டிக் குங்குமம் பூசி நெற்றிப்பட்டங் கட்டப்பட்டது. சூழி, ஓடை என்பன நெற்றிப் பட்டத்தைக் குறிக்கும் பெயர்கள். தேர்கள் நிறமூட்டிய துணிகளாலும், பூமாலைகள், இலைகளா லும் அலங்கரிக்கப்பட்டன. அவை நிரை நிரையாகப் போர்க்களத்துக்குச் சென்றன. போரில் வில், அம்பு, வளைதடி, ஈட்டி, வேல், வாள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தடி, தண்டு, எறுழ், குணில் முதலியன தண்டு வகைகளில் சில. வில், கொக்கரை, சிலை, தடி, தவர், முனி, கொடு மரம் முதலியன வில் வகைகளில் சில. வாள், உவணி, ஏறி, கடுத்தலை, துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், சுறும்பிடி, சுரிகை, முதலியன ஈட்டி வகையில் சில. வேல், எயில், அரணம், எஃகம், குந்தம், ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு முதலியன வேல்வகையுள் சில. அம்பு, கணை, கதிரம், கோ, கோல், தொடை, தோணி, பகழி, பள்ளம், புடை, வண்டு, வாளி முதலியன அம்பு வகையுள் சில. நாணி, நாண், பூரம், ஆவம், கொடை, நாரி, நரம்பு, பூட்டு, உடு முதலியன வில் நாணின் பெயர்கள். கேடகம், கிடுகு, கடகம், தட்டு, பரிசை, பலகை, மறை, வட்டணம், வட்டம், தோல், தோற்பரம் முதலியன பரிசை வகையுள் சில. மேலகம், அரணி, ஆசு, கந்தளம், மெய் யுறை என்பன கவச வகைகளுள் சில. கைக் கவசம் கைப்புடை எனப் பட்டது. அரசனிடத்தில் போர் முரசு இருந்தது. அது நீராட்டி, நெற்கதி ரால் அலங்கரித்து உயிர்ப் பலியிட்டு வழிபடப்பட்டது. மாற்றரசனின் காவல் மரத்தை வெட்டித் துண்டாடி அதனால் போர் முரசு செய்யப் பட்டது. போரில் இறப்போர் வீர சொர்க்கம் செல்கிறார்கள் என மக்கள் நம்பினார்கள். போரில் இறவாது முதுமை அடைந்து அல்லது நோய் வாய்ப்பட்டு இறக்கும் அரசரின் உடலைத் தருப்பையில் கிடத்திவாளால் போழ்ந்து பின் சுடுவது அல்லது நல்லடக்கம் செய்வது அக்கால வழக் காக இருந்தது. போர் தொடங்கும் முன் அந்தணர், பெண்கள், நோயா ளர், வயோதிகர், சிறுவர் என்போரை அப்புறப்படுத்தும்படி பகைவர் முன்னறிவிப்புச் செய்வர். ஒத்த படைக் கலங்களில்லாதவனுடன் போர் செய்வது, தோற் றோடுவோன், குடுமி குலைந்தோன், தூதர் முதலானோரைக் கொல்வது நீதிக்கு மாறு எனக் கொள்ளப்பட்டது. போரில் காயம்பட்டவர்கள் பலகையில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டார்கள். காயங்கள் ஊசியி னால் தைக்கப்பட்டன. அவ்வூசி நெடு வெள்ளூசி என அறியப்பட்டது. போரில் வீரம் காட்டியவர்களுக்கு அரசன் பட்டங்கள் வழங்கினான். படைத் தலைவன் ஏனாதிப் பட்டத்துக்கு அடையாளமாக மோதிரம் வழங்கப்பட்டது. வென்ற அரசன் தோற்ற அரசனின் முடியை உருக்கிய பொன்னால் வீர தண்டை அல்லது மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் மாலை செய்து அணிந்தான். வெற்றி பெற்ற அரசன் தோற்ற அரசனின் நீர்த் துறையில் தனது கொற்றக் குடையை நீராட்டு தலும் அவனுடைய காவல் மரத்தில் தனது யானையைக் கட்டுதலும் சிறந்த செயல்களாகக் கருதப்பட்டன. 58. படை மூலப் படை, கூலிப் படை, நட்புப் படை, பகைப் படை, நாட்டுப் படை, வேட்டுவப் படை எனப் படைகள் அறு வகையின. தலைமுறை யாக அரசனிடமிருந்து வருவதும், போர்ப் பயிற்சியில் தலை சிறந்தது மாகிய படை மூலப்படை எனப்பட்டது. திருக்குறள் இதனைத் தொல் படை எனக் கூறுகின்றது. அரசன் இவர்களை எப்பொழுதும் போருக்கு ஆயத்தமாக வைத்திருந்தான். தனக்கு உதவியாகவுள்ள நட்பு அரசர் உதவிய படை நட்புப் படை எனப்பட்டது. இப்படையினர் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்களோ என்பதில் சந்தேகம் இருந்தது. ஆகவே இப்படையினர் முன் எச்சரிக்கையோடு பயன்படுத்தப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து அகப்படுத்தப்பட்டார்கள் அல்லது எதிரியின் படையை விட்டு விலகி வந்தவர்கள் பகைப்படையினர் எனப்பட் டார்கள். நாட்டுப் படையோடு இவர்களைச் சேர்த்துப் போருக்கு அனுப்பு வதில் கவனம் செலுத்தப்பட்டது. வேட்டுவப் படையினர் போரில் கிடைக்கும் கொள்ளைப் பொருள்களுக்காகப் போர் செய்தனர். போர்க் காலத்தில் நாட்டிலிருந்து திரட்டப்பட்டவர்கள் அடங்கிய படை நாட்டுப் படை எனப்பட்டது. கூலியின் பொருட்டுப் போர் செய்வோர் கூலிப் படையினர் என அறியப்பட்டனர். படை அலகு பத்தி எனப்பட்டது. இஃது ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாள் கொண்டது. 59. யானைப் படை யானைகள் போர்முனையில் நின்று போர் செய்யும்படியும், அணியை விட்டு விலகிக் குழப்பம் செய்யாதிருக்கும் படியும் பயிற்றப் பட்டன. அவற்றின் உடல் தோல் போர்வையால் காக்கப்பட்டது. யானை களை வெப்ப காலத்தில் பயன்படுத்தாமல் விடுவது விரும்பப்பட்டது. அவை எதிரியின் படையைத் தாக்கி அணியைக் குலைத்தது மாத்திர மல்லாமல் வேலிகளையும், கூடாரங்களையும், அரண் செய்யப்பட்ட இடங்களையும் அழித்தன. போர் யானைகளின் கொம்புகளில் இரும்பி னால் செய்யப்பட்ட பூண்கள் இறுக்கப்பட்டன. பூண்கள் கிம்புரி எனப் பட்டன. சில சமயங்களில் கொம்புகளில் கூரிய வாள்கள் கட்டப்பட்டன. மதில் கதவின் மீது பாய்ந்து அதனை உடைத்தற்குப் பூண்கள் உதவியாக இருந்தன. பாகனைத் தவிர இருவர் அல்லது மூவர் அதன் மீதிருந்தார்கள். ஒவ்வொரு யானையும் சிறு காலாட் படையால் பாதுகாக்கப்பட்டது. போர் செய்யாதவர்கள் வண்டிகளுடன் பின்னே சென்றார்கள். யானைகள் மிக அரிய உடைமைகளாகக் கருதப்பட்டன. அரசனுடைய வெற்றி யானைப் படையின் திறமையைப் பொறுத்ததாக இருந்தது. கோபங் கொண்ட ஒரு யானை ஆயிரம் குதிரைகளுக்குச் சமம் எனக் கருதப் பட்டது. அரச வகுப்பினர் யானையைப் பயன்படுத்தினர். போர் தொடங் குவதற்கு முன் யானைக்கு மது ஊட்டுதலும் வழக்காக இருந்தது. யானை மீது கொடி நாட்டப்பட்டிருந்தது. 13ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது வருமாறு: “சோழ அரசனிடத்தில் அறுபதினாயிரம் போர் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டடி உயரமுடையது. போர் செய்யும் போது யானைகள் முதுகின் மேல் வீடு1களைக் கொண்டு செல்கின்றன. அவற்றுள் போர் வீரர் இருந்து தொலைவில் நிற்பவர்கள் மீது அம்பு எய்தும், அண்மையில் நிற்பவர்களை ஈட்டியால் குத்தியும் போர் செய்வர்”. 60. குதிரைப் படை குதிரைகள் இரும்புக் கவசமிட்டுக் காக்கப்பட்டன. வீரர், வில், ஈட்டி, வாள் என்பவற்றைத் தாங்கியிருந்தனர். குதிரைகளுக்குக் கடிவாள மிடப்பட்டது என்றும், சேணம் இடப்படவில்லை என்றும் கிரேக்கர் கூறியிருக்கின் றனர். வேவு பார்ப்பதற்கும் எதிரியின் படையை ஊடுருவிச் செல்வதற்கும் குதிரைப் படை பயன்படுத்தப்பட்டது. குதிரைப் படையில் குதிரைகளைப் பழக்குவோரும் வேலைக்காரரும் இருந்தனர். கௌட லியர் குதிரைகளின் பதினாறு சாரியைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பதினாறு வகைக் கடி வாளங்களும் ஆறு வகை முட்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒட்டகங்கள் பிற்காலங்களில் பயன்படுத்தப்பட்டன. 61. தேர்ப் படை தேர்களில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவற்றில் போர் செய்பவனும் தேர்ப்பாகனும் நிற்கக் கூடியதாக இருந்தது. போர் செய்பவன் இடப்புறத்தில் நின்றான். தேர்களின் வடிவம் இக்காலம் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் தேர்களின் வடிவை ஒத்திருந்தது. அவை விரைவில் செல்லக் கூடியன. கலிங்கத்துப் பரணி முதலிய இலக் கியங்களிற் கூறப்படுவன கொண்டு இதனை அறிய முடிகிறது. தேர்கள் சம நிலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டன. தேரில் சாரதியைத் தவிர இரண்டு போர் செய்யும் வீரர் இருந்தனர் என்று மெகஸ்தீனஸ் கூறியுள்ளனர். தேர்ப்பாகன் கவசமணிந்து கையில் வில்லைப் பிடித் திருந்தான். வடநாட்டில் தேர் செலுத்துவோன் சூதன் என அறியப் பட்டான். அவன் போர்க்களத்தில் கண்ட காட்சிகளையும், வெற்றி களையும் பாடல்களாகப் பாடினான். அவன் அரசரின் வரலாற் றாசிரியனாகவும் பெருமை அடைந்தான். 62. காலாட் படை காலாட் படையினர் பவனி செல்லவும் அகழ் வெட்டவும், மதில்கள் எழுப்பவும், இராக்காலத் தாக்குதல்களைச் சமாளிக்கவும், எக்காலத்தும் எவ்வகை இடத்தும் போர் செய்யவும் ஆயத்தமாக இருக்கும்படி பழக்கப்பட்டிருந்தார்கள். கட்டாய வேலைக்காகத் திரட்டப்பட்டோர் பண்டங்களையும், போர்க் கருவிகளையும், காயப்பட்டோரையும் எடுத்துச் சென்றனர். 63. போர்க் கட்டளைகள் பத்து, நூறு, ஆயிரம் என்னும் கூட்டங்களாகப் படை பிரிக்கப்பட் டிருந்தது. யானைகள், குதிரைகள், தேர்களுக்குப் பொறுப்பான அதி காரிகள் இருந்தார்கள். சேனாதிபதி படைகளின் தலைவனாக இருந்தான். இப்பெயர் பத்துப் பேரடங்கிய படைப் பிரிவின் தலைவனைக் குறிப்ப தாவும் இருந்தது. மகா சேனாதிபதி, நாயகன் என்னும் தலைவர் முடிக் குரிய இராச குமாரனை ஒத்த உயர்ந்த நிலையிலுள்ளவர்களாக இருந்தனர். அரசன் பெயரளவில் எல்லாரிலும் மேலான தளபதியாக இருந்தான். கட்டளைகள் சமிக்கைகளாலும், வாத்தியங்களை வேறுபட ஒலிக்கும் ஒலிகளாலும் அறிவிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஓலைச் சுருளை அம்பில் கட்டி எய்து செய்திகள் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு சிறிய இராணுவ அலகுக்கும் அதன் கொடி இருந்தது. முதன்மையான வீரர் தனித்தனி அடையாளமுள்ள கொடியை வைத்திருந்தனர் என்று மாபாரதம் கூறுகின்றது. சகுனங் கூறுவோரும் புலவர்களும் எதிரியைத் தாக்குவதற்கு ஏற்ற நேரத்தைக் கூறினார்கள். அப்போது அவர்கள் போர் வீரருக்கு உற்சாகம் ஊட்டினார்கள். போர் தொடங்கு முன் படைக்குமுன் வெளிச்சம் காட்டப்பட்டது. படை, நாளொன்றுக்கு இரண்டு யோசனை தூரம் சென்றது. யோசனை என்பது 32,000 முழம் கொண்ட தூரம். சங்கு, கொம்பு முதலிய வாத்தியங்களும் பலவகைப் பறைகளும் போரில் ஒலிக்கப்பட்டன. 64. அணிவகுப்பு சாதாரண அணிவகுப்பு சமவியூகம் எனப்பட்டது. அதற்கு மத்தி, இரு சிறகுகள், இரு சிறகுகளையும் அடுத்த இரு பக்கங்கள் என ஐந்து பகுதிகளுண்டு. இவற்றில் மொத்தம் 45 தேர், 45 யானை, 225 குதிரை, 675 காலாட்கள் உண்டு. இவற்றோடு காவற் படை துணைப் படை அடங்கிய 4,050 வீரர்கள் கொண்ட சேனையை ஒரு படை எனலாம். ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் ஐந்து முழத்தூரமும், ஒரு வீரனுக்கும் மற்ற வீரனுக்கும் இடையில் பத்து அங்குல வெளியுமிருந்தன. யானைகள் மத்தியின் முன் நிறுத்தப்பட்டன. தேர்கள் இரண்டு சிறகு களின் முன் அல்லது பின் நின்றன. தேர்களில்லாவிடில் குதிரைப் படை அணியின் பக்கங்களைக் காத்தது. யானைப் படையினொரு பகுதி சேமப் படையாக நிறுத்தப்பட்டிருந்தது. கவசமணிந்தவர்கள் முன்னணியிலும், மற்றவர்கள் பக்க அணிகளிலும், வில்லாளர் இரண்டாம் அணியிலும் நின்றார்கள். கம்ப அணி எதிரியை நேர் வரிசையாகத் தாக்குவது. கழுகு அணி, கழுகு போல் இரண்டு பக்க அணிகளுடன் சென்று தாக்குவது. ஊசி முனை அணி பக்க அணிகளையும், விலா அணிகளையும் உள்ளுக் கிழுத்துக் கொண்டு தன்னிலும் அதிக எண்ணுள்ள எதிரியின் படையைத் தாக்குவது. பாம்பு வளைவு அணி, பாம்பு போல வளைந்து சென்று பகை வரைத் தாக்குவது. வட்ட அணி எங்கும் படைமுகம் இருப்பது போலத் தோன்றும்படி வட்டமாக அமைக்கப்படுவது. இவ்வாறு பல அணி வகுப்புக்களிருந்தன. எதிரியின் தலைவர்களைக் கொல்வதற்கு வெகுமதிகள் வழங்கப் பட்டன. அரசனைக் கொல்பவனுக்கு 100,000 பணமும், படைத்தலை வனைக் கொல்பவனுக்கு 50,000 பணமும், யானையைக் கொல்பவனுக்கு 5,000 பணமும், குதிரையைக் கொல்பவனுக்கு 1000 பணமும், சிறு அதிகாரிகளைக் கொல்பவனுக்கு 100 பணமும், காவலர்களைக் கொல் பவனுக்கு 20 பணமும் வழங்கப்பட்டன. படையின் பின் மருந்து உதவும் படை இருந்ததென்றும், பணி செய்யும் பெண்கள் பின்னே நின்று உற்சாகம் ஊட்டினார்கள் என்றும் கௌடலியர் கூறியுள்ளார். தனிப்பட்ட படை, படைக்கு வேண்டிய பொருளை முன்னமே கொண்டு சென்று சேர்த்தது.1 65. போர் ஆயுதங்கள் பலவகைப் பேராயுதங்கள் இருந்தன. முன்னால் எந்திரக் கருவிகள் சென்றன. சக்கரங்கள் சுழலும்போது கவணில் கற்களை எறிந்தன. முள் இரும்புத் தண்டாயுதங்கள் (நூற்று வரைக்கொல்லி) இதிகாச காலத்தில் அறியப்பட்டிருந்தன. கோட்டை மதில்களில் கல் எறியும் எந்திரங்கள் நாட்டப் பட்டிருந்தன. நெருப்புப் படைக்கலங்கள் பயன்படுத்தப் பட்டன. நெருப்புப் படைக் கலங்கள் என்பன நெருப்பைப் கொண்டு செல்லும் அம்புகள். ஈட்டிகளில் பலவகைகள் இருந்தன. பொதுவான ஈட்டி முற்றிலும் உலோகத்தினால் செய்யப்பட்டிருந்தது. அதன் நீளம் ஐந்தடி எட்டு அங்குலம். சில மரக்கைப் பிடியும் உலோகமுனையும் உடையவை. தோமரம் என்பது யானைப் படையின் முக்கிய ஆயுதம்; அது நீண்ட ஈட்டி. திரிசூலம், சக்கரம், கவண், தண்டு, சம்மட்டி, மூன்று முனைகளுடைய கண்ட கோடாரி முதலிய ஆயுதங்களும் பயன்படுத்தப் பட்டன. வச்சிரமென்பது எறிபடை. வாள்களில் பல வகைகள் இருந்தன. அவை நீண்டும் ஒடுங்கியும் இருந்தன. கைப்பிடிகள் கொம்பு, தந்தம், மரம், மூங்கில் என்பவைகளாலிடப்பட்டன. வில் உயர் வகுப்பினரால் பயன் படுத்தப்பட்டது. அது பனை, பிரம்பு, வயிரமரம், கொம்பு என்பவற்றால் செய்யப்பட்டது. நல்ல வில் ஐந்தடி எட்டு எங்குல நீளமுடையது. நாண், சணல், மூங்கில் நார், விலங்குகளின் நரம்புகளாக இருந்தன. அம்பை விடுமுன் அது நாணில் வைத்துக் காது வரை இழுக்கப்பட்டது. சுயம்வரத்தில் அம்பெய்வது முதலிடம் பெற்றிருந்தது. தற்காப்புக்குரிய கருவிகள் பல பயன்படுத்தப்பட்டன. தலை, தோள், உடல், முழங்கால் களைக் காக்கும் கவசங்கள் இருந்தன. 66. கோட்டையும் பாசறையும் கோட்டைகளின் அமைப்பு இடங்களுக்கேற்ப வேறுபட்டிருந்தன. கோட்டையை அகழ் அல்லது மலை அரண் செய்தது. சிற்பநூல் பத் தொன்பது வகைக் கோட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கோட்டை பெரும்பாலும் நாட்டின் எல்லையில் கட்டப்பட்டிருந்தது. அதற்கு மூன்று அகழ்களிருந்தன. அவை முறையே 56, 48, 40 முழ அகலமுடை யவை. ஒவ்வொரு அகழிக்குமிடையில் நான்கு முழ வெளியிருந்தது. அகழ்களின் ஆழம் அகலத்திலும் பாதி அளவினதாக இருந்தது. உள் அகழின் பின் 24 முழம் உயர்ந்த மேடை இருந்தது. இதுபோல் இருமடி அகலத்தில் நஞ்சு முள் மரங்களும் செடிகளும் நடப்பட்டிருந்தன. அதன் பின் 24 முழ உயரமும், 12 அடி அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்களினிடையே இரண்டு மாடிகளுடைய கட்டிடங்கள் இருந்தன. அவற்றின் மேல் மாடியில் மூன்று வில்லாட்கள் மறைந்து நிற்கக் கூடியதாக இருந்தது. மதிலைச் சுற்றி உட்புறத்தில் வீதி சென்றது. பகைவர் முற்றுகை இடுங்காலங்களில் சடுதியில் சென்று அவரைத் தாக்குதற்கு வெளியே செல்லும் இடங்கள் இருந்தன. கோட்டை வாயிற்கதவுகள் பல மரங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துப் பொருத்திச் செய்யப்பட் டிருந்தன. அவை இரண்டு சிறகுகளாக அமைக்கப் பட்டிருந்தன. அவை இரும்புச் சலாகைகளால் தாழிடப்பட்டன. கோட்டையுள் சுருங்கை வழிகளிருந்தன. பாசறை என்பது படங்குகளாலிடப்பட்ட அரண் செய்யப்பட்ட கூடாரம். இது சோதிடரின் ஆலோசனையோடு சிற்பிகளால் கருத்தோடு வகுக்கப்பட்டது. இஃது இடங்களுக்கேற்ப வட்டமாக, நீண்ட சதுரமாக அல்லது சதுரமாக அமைக்கப்பட்டது. இதற்கு நான்கு வாயில்களும் பின்னே இலேசான அரண்களுமிருந்தன. இஃது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசனுறையுமிடம் முதலிரண்டு அறைகளாக இருந்தது. அதிகாரிகள் தெற்கில் இருந்தார்கள். யானைகளும் குதிரை களும் கட்டுமிடம் வடக்கிலிருந்தது. அது ஒரு சிறிய பட்டினமாக இருந்தது. வாத்தியக்காரரும், வேட்டுவரும் கூடாரத்துக்கு வெளியில் தங்கினார்கள். 67. நம்பிக்கைகள் சோதிடத்திலும் சகுனத்திலும் நம்பிக்கை இருந்தது. எரி கொள்ளி விழுவது நாட்டிலுள்ள பெரியவரின் மரணத்துக்கு அறிகுறி எனக் கருதப் பட்டது. கூந்தல் விரித்திருக்கும் பெண்ணைப் பார்த்தல் தீது எனக் கருதப் பட்டது. சிறுவரைத் தீமைகளிலிருந்து காப்பதற்காக ஐம்படைத்தாலி கட்டப்பட்டது. பேய்களை ஓட்டுதற்கு வெண்கடுகு புகைக்கப்பட்டது. ஆலமரத்திலும் வேறு சில மரங்களிலும் பேயுறைவதாகக் கருதப்பட்டது. பாம்பு சந்திர சூரியரை விழுங்குவதால் கிரகண முண்டாகிறதெனக் கருதப்பட்டது. காகம் கரைவது விருந்தினர் வருவதற்கு அறிகுறி என நம்பப்பட்டது. தொலைவிடத்திலுள்ள ஒருவர் ஒருவரை நினைப்பதால் தும்மலுண்டாகிறதெனக் கருதப்பட்டது. நாகத்தின் தலையில் இரத்தினம் இருக்கிறதென நம்பப்பட்டது. பல்லி சொல்வது நற்சகுன மாகவோ தீய சகுனமாகவோ கொள்ளப்பட்டது. உன்னமரம் (இலவு) வாடுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. போர்க்களத்தில் பேய் திரிவ தாகவும், பேய்கள் பிணம் தின்பதாகவும் நம்பிக்கை இருந்தது. வேப்பிலை சிறுவரைப் பேய்களிலிருந்து காக்கும் என நம்பப்பட்டது. போரில் இறந்தவர் வீர சொர்க்கமடைவர் என்னும் நம்பிக்கை இருந்தது. வலக் கண் துடிப்பது நற்சகுனமாகவும். இடக்கண் துடிப்பது தீய சகுனமாகவும் கொள்ளப்பட்டன. சிறுவருக்குக் கண்ணூறு படாமல் அவர் தலை மயிரில் நெய்யும் வெண் சிறு கடுகும் பூசப்பட்டன. 68. போக்குவரத்து பெரும்பாலும் மக்கள் கால் நடையாகப் போக்குவரத்துச் செய் தார்கள். பலவகை வண்டிகள், பல்லக்கு, தேர், கழுதை, எருது, யானை முதலியனவும் முற்காலப் போக்குவரத்துச் சாதனங்களாக இருந்தன. ஊர்தி, ஒழுகை, சகடு, சாகாடு, வையம் முதலியன வண்டியைக் குறிக்கும் பெயர்கள். வண்டிகளும் கழுதைகளும் பொதிமாடுகளும் பண்டங்களை ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்பட்டன. அரசரும் பெருமக்களும் தேர், யானை, பல்லக்கு முதலியவைகளில் சென்றார்கள். நீரில் செல்வோர் ஓடங்களில் சென்றனர். ஓடங்களில் பல வகைகள் இருந்தன. ஓடம், அம்பி, தோணி, தெப்பம், படகு, கலம், பஃறி, சதா, போதம், தொள்ளம், பகடு, பட்டிகை, பாட்டிமார், படுவை, புணை, மிதவை, வள்ளம், திமில் முதலியன ஓடங்களைக் குறிக்கும் பெயர்கள். இவை வெவ்வேறு வகை ஓடங்களைக் குறிப்பனவாகலாம். மரக்கலங் களின் முன்புறம் யானை முகம், குதிரை முகம், அரிமுகம் போன்று செய்யப்பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் படங்கும் (பாயும்) இருந்தன. 69. ஓவியம் மிக முற்காலம் முதல் ஓவியக் கலையில் திறமை பெற்று விளங் கினார்கள். முற்கால எழுத்து முறை ஓவிய வடிவிலேயே அமைந்திருந்தது. கற்கால வாழ்க்கையிலிருந்த மக்கள் குகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை திறமையாக எழுதப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ மக்களின் முத்திரைகளில் அழகிய ஓவியங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவை இக்காலம் வரையப்படும் சிறந்த ஓவியங் களோடு ஒத்த கலைத்திறமை உடையனவாக இருக்கின்றன. அசந்தாக் குகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. சங்ககால நூல்களில் ஓவியக் கலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரண்மனைச் சுவர் களிலும், கோயில் சுவர்களிலும், செல்வரின் மாளிகைச் சுவர்களிலும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அக்காலக் கோயில்களில் எழுத்து நிலை மண்டபம் என ஒரு பகுதி இருந்தது. அங்கு பெரும்பாலும் புராண சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இதனை, “இந்திரன் பூசை யிவளகலிகை யிவள் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு வொன்றிய படியிதென் றுரைசெய் வோரு மின்னம் பலபல வெழுத்து நிலைமண்டபம்” எனப் பரிபாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. “சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு மையறு படிவத்து வானவர் முனிவர் எவ்வகை யுயிர்களு வுவமங் காட்டி கண்கல ரோவியங் கண்டு நிற்குநரும்” என்னும் மணிமேகலை அடிகள் அக்கால மனைகளில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தமையை நன்கு விளக்குகின்றன. பழந்தமிழ் இலக்கியங் களில் மடலேறுதல் என்னும் ஒரு வழக்கம் கூறப்படுகின்றது. ஒருவன் தான் காதலித்த பெண்ணைப் பெறமுடியாத போது அவன் அவளைப் போன்ற படமொன்றை எழுதி, உயர்த்திக் கொண்டு பனை மட்டையால் செய்த குதிரையிலேறி வீதியில் வருவான். இதனால் அவன் காதலிக்கும் பெண் யாரென அறியக் கூடியதாக இருந்தது. இதனால் பொதுமக்களும் ஓவியம் வரையும் திறமை பெற்றிருந்தார்கள் எனத் தெரிகிறது. 70. சிற்பம் சிற்பக் கலை இந்தியாவில் மிகப் பழைய காலத்தில் வளர்ச்சி யடைந்திருந்தது. மொகஞ்சதாரோவில் பல அழகிய சுடுமண் பாவை களும், கல்லில் செதுக்கப்பட்ட மனித உருவங்களும், உலோகத்தில் வார்க்கப்பட்ட நாட்டியப் பெண்ணின் உருவமும் கண்டுபிடிக்கப் பட்டன. கல்லில் செதுக்கப்பட்ட சிலை ஒன்று கைகளும் தலையும் இல்லாமல் காணப்பட்டது. இது கிரேக்க சிற்பக் கலையை ஒத்த கலைத் திறமை பெற்றதாக அறிஞர் புகழ்ந்துள்ளார்கள். உலோகத்தில் வார்க்கப் பட்ட நடனமாது உருவத்தைப் பலர் புகழ்ந்து எழுதியுள்ளார்கள். ஏறத்தாழ கி.மு. 3000-இல் இந்திய மக்கள் சிற்பக் கலையில் மிக முன்னேற் றம் பெற்றிருந்தார்கள். தமிழர் பெற்றிருந்த திறமையைக் குறித்துச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். “கல்லு முலோகமும் செங்கலு மரமும் மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன” எனத் திவாகரம் கூறுகின்றது. தென்னிந்தியக் கோயில்களில் கருவறையிலிருக்கும் திருவுருவங் கள் கல்லில் செதுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் செம்பும் பிற உலோ கங்களும் சேர்த்து உருக்கி வார்க்கப்பட்டன. உலோகத்தில் வார்க்கப் பட்ட உருவங்கள் திருவிழாக் காலங்களில் வெளியே கொண்டு செல்லப் பட்டன. இவ்வகை உருவங்களும் நடராசத் திருவுருவமும் உலக மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இன்று தென்னிந்தியா இலங்கை முதலிய நாடுகளில் நூதன பொருட்காட்சி சாலைகளில் வைக்கப்பட் டிருக்கும் பழங்காலச் சிற்பங்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள் தமிழரின் சிற்பத் திறமையை வெளியிடுகின்றன. சோழர், பல்லவர் காலங்களில் எடுக்கப்பட்ட கற்கோயில்களும், மலைக்குடைவுக் கோயில்களும் கற் களில் செதுக்கப்பட்டிருக்கும் விலங்கு, மனிதர், பறவைகள், மரஞ் செடிகளின் வடிவங்களும் தமிழரின் சிற்பத் திறனை என்றும் காட்டிக் கொண்டிருக்கும் அழியாச் சின்னங்களாகும் 71. மருந்து மருத்துவக்கலை நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டு பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது. மூலிகைகளின் குணங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன. வாதமடக்கி, வண்டு கொல்லி, கிரந்திநாயன், பொன்னாங்கண்ணி போன்று அவ்வம் மூலிகைகளுக்குள்ள குணங்களே அவற்றுக்குப் பெயர்களாக வழங்கின. மூலிகை அகராதிகளில் மிகப் பல மூலிகைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. பதார்த்தகுண சிந்தாமணி என்னும் நூல் பிற்காலத்திற் செய்யப்பட்டதாயினும், அது மக்கள் மூலிகைகளைப் பற்றி முன்னமே அறிந்திருந்தவற்றைத் தழுவிச் செய்யப் பட்ட நூலாகும். கியாழம், குளிகை, சூரணம், இலேகியம், தைலம், செந்தூரம் என்னும் பல வகைகளில் மருந்தாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது. அசோகச் சக்கரவர்த்தி விலங்குகளுக்கும் மக்களுக்கும் மருத்துவ நிலையங்களை நிறுவினார் எனச் சரித்திரம் கூறுகின்றது. இவ்வகை நிலையங்கள் இலங்கையிலும் நிறுவப்பட்டிருந்தனவென்று மகாவமிசம் கூறுகின்றது. அசோகர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளின் முன் மருத்துவக்கலை இந்தியாவில் வளர்ச்சியடைந்திருந்தது. அலெக்சாந்தர் இந்தியாவிலிருந்து பாம்புக்கடி வைத்தியர்களைக் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு சென்றார் எனக் கிரேக்க ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். கிப்பகிரிட்டஸ் என்னும் கிரேக்கர் இந்தியரின் மருத்துவ முறைகளைக் கற்று அவற்றைக் கையாண்டார் எனச் சொல்லப்படுவதுண்டு. தமிழர் கையாண்ட வைத்திய முறை பிற்காலத்தில் சித்த முறை என வழங்குகிறது. இராசயன முறையான தமிழரின் மருத்துவக்கலை பழைமையானதும், பயனளிக்கக் கூடியதும், தமிழ்நாட்டின் பொருளா தார நிலை, கால நிலைகளுக்கு ஏற்றதுமாகும். அது சித்த வைத்தியம் எனப்படும். அதன் நோக்கம், தடுப்பு, குணப்படுத்துவது, இழந்து போன வலிமையைத் திரும்பப் பெறுவது என்னும் மூன்று கூறுகளை உடையது. திடமான உடலில் திடமான மனம் என்னும் கொள்கை உறுதிப்பட் டிருந்தது. உடல் இல்லாவிடில் ஒரு பேறும் கிட்டாது; உடலில்லா விட்டால் வீடு கிட்டாது எனச் சித்தர் கூறினர். “தேகமிருதா லல்லோ தித்தெல்லா மாடலாம் தேகமிருந் தாக்காற் சேரலாம் பூரணம் தேகமிருந் தாக்காற் செயலெல்லாம் பார்க்கலாம் தேகமிருந் தாக்காற் சேரலாம் முத்தியே” (திருமூலர் கருக்கிடை வைத்தியம்) ஆதியிலே சித்தனாராகிய சிவனார் செய்த மருத்துவ நூல் ஏழு லட்சம் பாடல்களுடையது. பின் நந்தி, சனகர், சனாதர், சனாந்தனர், சனற்குமாரர், திருமூலர், பதஞ்சலி, அகத்தியர், புலத்தியர், புசுண்டர், கருவூரர், தன்வந்திரி, சட்டைமுனி, தேரையர், யூகிமுனி முதலிய பலர் நூல் செய்தனர். இவை மணி (இரசமணி), மந்திரம், மருந்து முதலிய வற்றைக் கூறுகின்றன. மூலிகை, உப்பு, தீநீர்1, உபவாசம், 2உடற்பொருள், பாடாணம், உலோகம், சத்து3, இரசக்குளிகை, யோகம் என்னும் பத்துச் சிகிச்சை முறைகளைத் திருமூலர் கூறியிருக்கின்றார். மந்திரமென்பது யோகத்திலும் மணி என்பது இரசக் குளிகைகளிலும் அடங்கும். மூலிகைகள் சூரணம், இழகியம் (இலேகியம்), மெழுகு என்பன. இவை மக்களுறை எனப்படும். கட்டிகளுக்கு மருந்தாகும் தைலம், சாராயத்தில் ஊற விடப்பட்ட மருந்துகள் அறுவை சம்பந்தமானவை; செந்தூரம், சுண்ணம், செய்நீர், தீநீர், சத்து, மணி முதலியன, பஸ்பம் (சாம்பல்) என்பதில் அடங்கும். இம்முறை சித்த மருத்துவத்தில் மாத்திரமுண்டு. ஒப்புறை (ஓமியோபதி போன்றது), எதிருறை (அலோபதி), கலப் புறை என மூன்று வகை மருந்து முறைகள் உண்டு. உப்பு வகைகள் 25, பாடாணம் 64, உலோகம் 9, உலோகச் சத்துகள் 120, மருந்து மூலிகைகள் 1008. நாடி பார்த்து வைத்தியம் செய்தல் சித்தமுறை. இடகலை, பிங்கலை, சுழி முனை என நாடி மூன்று. மருத்துவன் நாடியைப் பார்த்து வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் இயல்பாய் இருக்கின்றனவா அல்லது இயல்புக்கு மாறாக இருக்கின்றனவா என அறிகிறான். அடுத்த படியில் கண், நாக்கு, உடல், மலம், மூத்திரம், சத்தம் முதலியவற்றைப் பார்த்தலோடு உடலைத் தொட்டுப் பார்த்தும் அறியப்படும். சித்த வைத்தியத்தைப் பின்பற்றும் திருவள்ளுவர், நோயைக் கண்டுபிடி, அதற்குக் காரணத்தை அறி, அதற்கு மருந்தை ஆராய்ந்து பார், கால நிலையைக் கவனி, மிகப் பயனளிப்பவற்றைச் செய் எனக் கூறுகின்றார். மருந்துக் கலை, நோயாளி, மருத்துவன், மருந்துகளை அரைத்தோ இடித்தோ பிழிந்தோ கலந்து செய்பவன் என்னும் நான்கு பகுதிகளை உடையது. மருத்துவசாலை நிறுவுவது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆன்ம சக்தியினால் அல்லது மனோசக்தியினால் மாற்றுவது இன்னொரு முறை. இது சமயகுரவர்கள் முனிவர்களால் கையாளப்பட்ட முறை. பார்வை பார்த்தல், நீரோதிக் கொடுத்தல், மந்திரம் செபித்தல் போன்றவை ஆன்ம சத்தியால் நோயை ஆற்றும் முறையில் அடங்கும். சாரகம், சுசுரருதம், தன்வந்திரி நிகண்டு என்பன வட நாட்டாரின் மருத்துவ நூல்கள். இவற்றில் முன் கூறப்பட்ட மூன்று உறைகளையும் காண முடியாது. ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியமாகும். ஆயுர்வேதம் என்னும் பெயருடைய நூல் ஆரிய மொழியில் இல்லை. தன்வந்திரி கி.பி. 500இல் விக்கிரமாதித்தனின் அரச சபையிலிருந்தவர். சுசுருதர் அவர் காலத்தவர். சாரகர் அவருக்கு முன் விளங்கியவர். அட்டாங்க இருதயம் வாக்பாதரால் 9ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. பிற்கால மருத்துவ நூலார் சித்தர் நூல்களைப் பயின்றும் பஸ்பம், நாடி, புடம் போடுதல் முதலிய முறைகளை மொழி பெயர்த்துத் தமது நூலில் சேர்த்தனர். சாரங்கதரரின் சங்கிதை 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. இந்நூல், அது சித்த வைத்தியத்துக்குக் கடமைப்பட்டிருப்பதைக் கூறுகின்றது. சென்னையில் பண்டிதர் கோபாலாச்சாரியரின் தலைமையில் கூடிய ஆயுர்வேத மாநாட்டில் அவரும் இது போன்ற கருத்தைத் தெரிவிக்கின் றார். கண்ணால் பார்த்தல், தொட்டுப் பார்த்தல், சத்தத்தைக் கேட்டுப் பார்த்தல் என்னும் மூன்று சோதனைகளைச் செய்வதே வடநாட்டு முறை. அதர்வண வேதத்தைத் தொகுத்து முடித்தபின் ஆயுர், அர்த்த, தனுர், காந்தர்வ வேதங்களை எழுதுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆயுர் வேதமென்னும் நூல் ஒருபோதும் எழுதப்படவில்லை. தமிழரசரின் விழுகைக்குப் பின் சித்த வைத்தியம் வீழ்ச்சி யடைந்தது (தமிழ் இந்தியா - மு.சி.பூ.). 72. இரேகை நூல் அகத்தியரின் இரேகை நூல் சாமுத்திரிகம் எனப்படும். இந்நூலின் முழுப் பெயரும் புருட சாமுத்திரிக இலட்சணம். இது சுப்பிரமணியக் கடவுள் அகத்தியருக்குக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இது உள்ளங் கை மணிக்கட்டுகளிலுள்ள இரேகைகள், வரைகள், மச்சம், ஆளின் உயரம், நெடுப்பம், கைகள், கால்களின் நீளங்களைப் பார்த்து மனிதரின் குணா குணங்களை அறியும்படியான விதிகளைக் கூறுகின்றது. ஒருவனது உள்ளங்கை சிவப்பேறியும், சிறிதாகவும் இருந்தால் அவனுக்குச் செல்வமும் நீண்ட ஆயுளும் உண்டு; தடிப்பாக இருந்தால் அவன் கவலை உடையவனாவான். சங்கைப் போலும், சக்கரத்தைப் போலும் இரேகைகள் இருந்தால் அவன் அதிக வருவாய் உடையவனாயும், தருமம் செய்பவனாயும், தன்னை அடைந்தவர்களிடத்தில் தயாளம் உடையவ னாகவும் இருப் பான். ஒருவனுடைய கையில் மச்ச இரேகை அல்லது மீன் போன்ற அடையாளம் இருந்தால் அவன் தயாளமுடையவனாக இருப்பான். மூச்சுக்குழாய் போன்ற இரேகை இருந்தால் புகழ் அடை வான். அரிவாள் போன்ற இரேகை இருந்தால் அவன் தைரியமும் ஊக்கமும் உடையவ னாவான். சாடிபோல இருந்தால் சாந்தமானவனாக இருப்பான். சந்திரனைப் போல இருந்தால் கல்விமானாவான். இவ்வாறு அந்நூல் பல செய்திகளைக் கூறுகின்றது. இக்கலை பாண்டி நாட்டி லிருந்து அரேபியாவுக்குச் சென்று அங்கு நின்றும் ஐரோப்பாவுக்குச் சென்றது. (மு.சி.பூ.) 73. வானாராய்ச்சி தமிழர் பெரிய கடல் பயணக்காரராக இருந்தனர். அவர்கள் தமது பயணங்களில் இராக்காலத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் நிற்கும் இடங்களைப் பார்ப்பது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் மாதம் தேதிகளைக் காட்டும் குறிப்புகளை எழுதி வைத்தபோது சூரியனும் சந்திரனும் பெரியனவாகத் தோன்றும்படி குறிப்பிடப்பட்ட னர். வெளிச்சமான கிரகங்கள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் நிற்கின்றனவென்பதும் குறிப்பிடப்பட்டது. மாதத்துக்குத் திங்கள் எனப் பெயரிடப்பட்டதும் 28 நட்சத்திரக் கூட்டங்கள் கொள்ளப்படுவதும் தமிழரின் மாதம் தேதிக் கணக்கு சந்திரமான அளவையாக இருந்ததெனத் தெரிவிக்கிறது. பழைய வடநாட்டு இலக்கியங்களில் நாட்களை வாரமாகக் கொண்டு குறிப்பிடும் முறை காணப்படவில்லை. வாரமுறை யான கணித முறை தமிழருடையது. தமிழர் மேற்கு நோக்கிச் சென்ற போது யூப்ரிட்டிசு தைகிரீசு ஆற்றோரங்களில் குடியேறினார்கள். ஆகவே வார முறையான கணித முறையை இவர்கள் அந்நாட்டில் பரப்பி னார்கள். கிரகங்களும் நட்சத்திரக் கூட்டங்களும் மனிதனுடைய பலாபலன் களில் ஆட்சி செலுத்துகின்றன என்பது மிகப் பழங்காலத்தில் அறியப் பட்டிருந்தது. சூரியனுடைய செல்வாக்கு இயற்கைப் பொருள்களிலும் சந்திரனுடைய செல்வாக்கு கடல்வற்றுப் பெருக்குகளிலும் இருந்து வருவதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வடிப்படையில் வரலாற் றுக்கு முன் சோதிடக் கலை தொடங்கிற்று. எரிகொள்ளி எரிந்து விழுவது வரவிருக்கும் தீமையைக் காட்டுவதாகவும், சந்திர, சூரிய கிரகணங்கள் கெடுதலானவை என்றும் கருதப்பட்டன. கருப்பமான பெண் எவளாவது கிரகணத்தைப் பார்க்கமாட்டாள். பழந்தமிழர் பருவ காலத்தைக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இள வேனில், முதுவேனில் என ஆறு பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். சூரியன் சிங்க ராசியில் செல்லும் காலம் ஆவணியாக இருந்தது. முற் காலத்தில் ஆவணி ஆண்டு தொடங்கும் மாதமாகவும், ஆடி ஆண்டின் இறுதி மாதமாகவும் இருந்தன. ஆவணி மாதத்தில் சூரியனை முகில்கள் மறைப்பதால் மந்தாரமுண்டாகத் தொடங்குகிறது. குளிர் காலம் கழிந்து வெயில் காயத் தொடங்கும் காலமாகிய தைத் தொடக்கத்தில் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள். சங்க இலக்கியங்களில் கணிகள் என்போரால் கலியாணங்களுக்கு நாள் குறித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. “மூவகைக் காலமும் நெறியிலாற்று வதாவது பகலுமிரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்க்கோளும், தூமமும், மின் வீழ்வும், கோள் நிலையும், மழை நிலையும் பிறவும் பார்த்துக் கூறுதல்” என இவர்களைக் குறித்து இளம்பூரணர் கூறியுள்ளார். கட்டிலுக்கு மேலே யுள்ள மேற்கட்டியில் பன்னிரண்டு இராசிகளும் எழுதப்பட்டிருந்தன வென்று நெடுநல்வாடை கூறுகிறது. குறிஞ்சி நில மக்கள் சந்திரன் பரிவட்டங்கொள்ளும் காலத்தில் மணம் செய்வார்கள். பரிபாடல், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களில் ஆங்காங்கு வான நூற் குறிப்புகள் காணப்படுகின்றன. 74. செல்வன் வாழும் மாளிகை 1செல்வன் வாழும் மாளிகை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முன் புறத்தில் ஆடவரும் பின்பறத்தில் மகளிரும் வாழ்ந்தனர். வீட்டுத் தலைவன் தனது கருமங்களைக் கவனித்துக் கொண்டு மீள்வோரை உபசரித்தான். வீட்டில் ஒவ்வொரு தேவைக்கும் வேண்டிய பல அறைக ளிருந்தன. வீட்டை அடுத்து விசாலமான தோட்டமிருந்தது. தோட்டத் தில் பூஞ்செடிகளும் பழமரங்களும் உணவுக்கு வேண்டிய காய் பிஞ்சுகள் கொடுக்கும் செடி கொடிகளும் உண்டாக்கப்பட்டிருந்தன. அதன் மத்தியில் கிணறிருந்தது. தோட்டம் வீட்டின் பின் புறத்தில் இருந்தமை யின் வீட்டின் தலைவியே அதனைக் கவனித்தாள். பூந்தோட்டத்தில் நறுமண மலர்களைப் பூக்கும் மல்லிகை முல்லை முதலிய கொடிகள் படர்ந்திருந்தன. அவைகளினிடையே அமைக்கப்பட்டிருந்த மேடை மீதிருந்து அவள் உல்லாசமாகப் பொழுது போக்கினாள். வீடு மிகச் சுத்தமாக இருந்தது. வீட்டில் தெய்வங்கள் வைத்து வழிபடப்பட்டன. கணவனும் மனைவியும் நிலா முற்றத்தில் இருந்து வெண் மதியையும் விண்மீன்களையும் நோக்கி மகிழ்ந்தார்கள். வீட்டுச் சுவர்கள் ஆளினுரு வம் பிரதிபலிக்கும்படி மினுக்கஞ் செய்யப்பட்டிருந்தன. வீட்டுக் கூரை களை அழகிய தூண்கள் தாங்கி நின்றன. தோட்டத்தில் நீரால் சூழப் பட்ட நீராழி மண்டபம் இருந்தது. அது கோடைகாலத்தில் உறைவதற்கு ஏற்றது. பெண்கள் தங்கும் பகுதியின் நாற்புறங்களிலும் அறைகள் இருந்தன. தலைவன் உறையும் அறையில் பஞ்சு மெத்தைகள் இடப்பட்ட இரண்டு கட்டில்கள் இருந்தன. மெத்தையின் நாற்பக்கங்களிலும் அணைகள் இடப்பட்டிருந்தன. தலைப் பக்கத்துக்கு அண்மையில் உலர்ந்த மரத்தட்டு இருந்தது. காலையில் அலங்கரித்துக் கொள்வதற்கு வேண்டிய சந்தனம், வாசனைத் தைலம், பூமாலை முதலியன அதன்மீது வைக்கப்பட்டிருந்தன. தரையில் எச்சில் உமிழும் காளாஞ்சி இருந்தது. அறைக்கு வெளியே வளர்க்கும் கிளிகள் கூடுகளில் இருந்தன. தலைவன் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் தன்னை அலங்கரித்தான். அலங்காரப் பொருள்களில் சிறந்தவை சந்தனம், வாசனைத் திரவியங்கள் என்பன. அவன் வாசனைப் புகை ஊட்டப்பட்ட ஆடையை உடுத்துப் பூமாலையை அணிந்தான். கண்ணுக்கு மை தீட்டினான்; தாம்பூலமிட்டுச் சிவந்த இதழ்களுக்கு அரக்குக் கூட்டிச் செய்த சாயம் பூசினான். தலையை வாரினான். விரல்களுக்கு மோதிரங் களை அணிந்தான். மேலே உத்தரிகம் தரித்தான். காலையில் பார்க்கும் கடமைகள் முடிந்ததும் அவன் தினமும் நீராடினான். ஒவ்வொரு இரண்டாவது நாளும் அவன் உடம்பு பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு மூன்றாவது நாளும் ஒருவகைப் பொருளைப் பூசி நீராடினான். நகங்கள் மினுக்கமாக இருக்கும்படி அவன் அவற்றை அழகு செய்து கொண்டான். வியர்வையைத் துடைப்பதற்கு அவன் எப்பொழுதும் ஒரு சிறிய துணியை வைத்திருந்தான். முன் பொழுதில் ஒன்றும் பின்பொழுதில் ஒன்றுமாக நாளிருமுறை உணவு கொண்டான். இறைச்சி பொரித்தும், சமைத்தும், அவித்த நீராகவும் கொள்ளப்பட்டது. நண்பகல் உணவுக்குப் பின் அவன் நண்பர்களோடு அளவளாவினான். மாலை நேரத்தில் கோழிப் போர், கௌதாரிப் போர், ஆட்டுப் போர் களைக் கண்டு பொழுது போக்கினான். கூடுகளில் வளர்க்கும் சிங்கங் களும் புலிகளும் நின்றன. இரவின் முற்பகுதியில் அவன் இசையைக் கேட்டும் நடனங்களைப் பார்த்தும் மகிழ்ந்தான். அறைகளில் நறுமணம் கமழ்ந்தது. செல்வனின் மனைவி உரத்துச் சிரிக்கவும் உரத்துப் பேசவும் மாட்டாள். கணவனின் பெற்றோர் குறை கூறினால் அவள் எதிர்த்துப் பேச மாட்டாள்; பெரிய செல்வத்திலும் உல்லாச வாழ்க்கையிலும் திளைத்தபோதும் அகந்தை கொள்ளமாட்டாள்; விழாக்களுக்குச் செல்லும்போது ஆடம்பரமாகச் செல்வாள். சில அணிகலன்களை அணிந்து கொள்வாள். கணவன் தூரதேசம் சென்றிருந்தால் அவள் சங்கு வளைகளையும் தாலியையும்தவிரப் பிற அணிகலன்களை அணியமாட் டாள். அவள் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று நேரங்களிலும் இல்லுறை தெய்வங்களுக்குப் பலி தூவுவாள். 75. கூத்து ஆதிகால மக்கள் தம்மிடம் தோன்றும் உணர்ச்சிகளை ஆடிக் காட்டினார்கள். பிற்போக்கிலுள்ள மக்களிடையே இன்றும் இவ்வாட் டங்கள் காணப்படுகின்றன. இவ்வகை ஆட்டங்களிலிருந்து கூத்துக் கலை வளர்ச்சியடைந்தது. அது இன்று நடைபெறும் நாடகம் போலல் லாது, ஒரு கருத்தினை, உடல்நிலை, பார்வை, அபிநயங்களால் நடித்துக் காட்டும் கலையாக இருந்தது. அது பிற்காலத்தில் பரத நாட்டியம் எனவும் சதிராட்டம் எனவும் பெயர் பெற்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இது நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. சிந்துவெளியில் கிடைத்த தொல்பொருள்களில் நடராசரைப் போன்று நடனமாடும் மூன்று கொம்புகளுடைய ஒரு கடவுள் உருவமும், நட்டமாடும் நிலையில் நிற்கும் பெண் தெய்வத்தின் உருவமும், நாட்டியமாடும் நிலையில் நிற்கும் ஒரு நாட்டியப் பெண்ணின் உருவமும் காணப்பட்டன1. நாட்டியக் கலையை பௌத்தரும், சமணரும், பிராமணரும் வெறுத்தார்கள். இக்கலை தென்னிந்தியாவிலேயே வளர்ச்சியடைந்தது. பரதநாட்டிய நூலைச் செய்த பரதர் திராவிட வகுப்பினராவர்2. பரதர் செய்த நூல் வடமொழியிலிருப்பதால் கூத்துக்கலை ஆரியநாட்டினின்று தெற்கே வந்ததெனப் பலர் தவறாகக் கருதுவர். எஎஎஎ 1 2 15 14 3 4 13 12 1. மக்கள் பிரேதங்களை நிலத்திற் புதைத்தகாலத்தில் உண்டான கல்லறைகள் வடிவிலும், ஆலயங்கள் அமைக்கப்பட்டன. கிறித்துவ ஆலயங்கள், நிலத்தின் கீழ் உள்ள கிறித்து நாதரின் கல்லறையின் வடிவை நிலத்தின் மேலே தோன்றும்படி எடுக்கப்பட்டவை யாகும் எனப்படுகின்றன. 1. Serpents are looked by these peoples as embodiments of their departed ancestors and an analogous notion is entertained by various Hindu tribes - Phallism in ancient worship p.41 - HM. WESTROPP. 1. The deity was originally female, for under matrilincal rules the mother alone is of kin to her children, but with the descent in the male line, the god was transformed into a male - Encyclopaedia Britanica - See sacrifice. 1. Pretended interpriters of the divine wills dared even to demand, in the name of heaven the blood of kings themselves and obtained it... In this manner the king of Vermland was burnt in honour of Odin to put away a great death - Popular History of priest craft in all ages and nations - pp. 26. 28 William Howett. 2. It is certain in every age of Indian empire aspiring Brahmins have usurphed and swayed the imperial sceptre. But in fact there was no necessity for the Brahmin to gasp at empire. He wielded both empire and an the monarch. - Ibid P. 135 - Ibid p. 90. 1. Dr. Leigton was treated in such a manner that could டிடேல hயஎந நெநn நஒயீநஉவநன கசடிஅ ய ளயஎயபந. ழந hயன யீரடெiளாநன a pamphlet called Zion’s plea against prelacy, wherein he had shown their own likeness telling them that they were men of blood. No king can make laws for the house of God. This was sure to raise all the prelatical fury accordingly they soon had him in the high Commission Court and Condemned him to prison for life; to pay a fine of ten thousand pounds; to be degraded from his ministry; whipped; sent on the pillory; have one of his ears cut off; one side of his slit; and to be branded on the forehead with double S.S. for a sower of sedition; then to be carried back to prison, and after a few days be pilloried again; whipped; have the other side of the nose slit; the other or cut off; and shut up in his dungeon to be released only by death. All this was inflected on the learned and excellent man formerly Professor of moral philosophy in the university of Edinburgh. Popular History of Priest Craft in all ages and nations P. 222 William Howitt. 1.The journal of the university of Bombay, 1936. 1. மக்கள் உயர்ந்த நாகரிகம் அடைந்திருந்த காலத்திலும், மக்களில் பெரும்பாலோர் சமயத்தொடர்பாகச் சவலைகளாகவே இருந்தனர். அவர்கள் பூசாரிகளையே சமயத் தொடர்பாக எல்லாவற்றுக்கும் நம்பி இருந்தமையின், அவர்கள் அது தொடர்பாகத் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தவறினர். பிற்காலத்தில் பூசாரிகள் இல்லாத தத்துவ சாத்திரிகள் தோன்றியே உண்மை ஞானங்களை மக்களுக்கு வெளியிட்டனர். கபிலர், புத்தர், மகாவீரர், பதஞ்சலி, திருமூலர், சமய குரவர், சந்தான குரவர் முதலியோர் பூசாரிகளல்லர். 1. The Tantra in some of its aspects is a secret doctrine (Guptavidya) to be gathered not from the written record but verbally from those who hold the key to it - Principles of Tantra - A Avalon part - IP. XXXVI. 1. The Saiva siddhanta system is the most elaborate influential and most intrin sically valuable of all the religions of India. It is peculiarly the South Indian and Tamil religion and must be studied by every one who hopes to understand the influence of the great South Indian people. Saivaism is the old prehistorical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of the Tamil people. But this attempt to solve the problems of god, and soul, humanity nature, evil suffering and the unseen world, has never been expounded in English. Its text books exist in Tamil only - Translation of Thiruvasagam - Dr. Pope. 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 1. Sir John marshall has indentified this figure as the Indian God Shiva, in his aspect of Pasupathi, or Lord of beasts. The fact that the god is shown on the seal amulet with three faces and perhaps even a fourth on the side turned away gives strong proof for supporting Sir John’s theory, for Shiva was, and is, pitched in India with as many as five faces. It was always been suspected that he was one Indian God, and that his worship dated from the pre-historic period, a supposition which is now justified by this interpretation of the figure on the seal amulet - The Indus Civilization, p.71 Earnest Mackay. 1. At his (Jupiter of Syria) side hangs his sword in its scabbord; his right hand brandishes a double axe; his left grasps a thunderbolt consisting of six spirally twisted lines each of which is tipped with arrow head. The bull that supports the god has a rosette on the forehead between the eyes-Zeus, p.619 - Arthur Bernard Cook. 1. Vishnu, Shiva and Kali, the great gods of Hinduism, are not Rigvedic deities at all. Sakti is probably a cult derived from the great mother goddess of Asia Minor, and the cult of Shiva is evidently associated with it, the two being bound up with phallic religion of Southern Asia and of Eastern Mediterranean. It is probably significant that the word Lingam is definitely of non-Aryan origin, as Przyluski has demonstrated. while the word puja is also believed to be a non-Samskritic loan word. With the worshippers of Shiva too, it is to be associated the snake cult of which there are so many survivals in Southern India and which appears to have been at an early date in definite opposition of Brahmanic Hinduism - Castes in India, its nature, functions and origins - J.H.H. Hatton, p.227. 1. The Upanishads were not originally recognised as part of the Vedic cannon at all and had their origin outside Vedic Hinduism ... Pancharatra and Pasupatha systems were condemned by Kumarila as non-Vedic, and that the Vaisnavite and Saivite sects are derived respectively from these two systems; that contact with Pasupathas, Saivas, Jains involved purification; that by the time of the Mahabharata, however, Pancharatra and Pasupatha are placed on a footing of recognised and orthodox religious authority. His general conclusion is of Vishnu, Shiva and Sakti originated among people of different ethnic origins from the midlandic Aryans - Castes in India its nature, functions and origins - p.228, J.H.H. Hatton. 1. Rudra is the lord of animals, and forms the point of linkage between the Vedic religion and the later Siva worship. Siva in the Rig-Veda means auspicious, but it is not the name of a god; the Rudra in Rig-Veda is a malignant cattle destroying deity. Here he is the Lord of all cattle, Pasupathe - Indian Philosophy, p.122, S. Radhakrishnan. 1. Apart from these archaeological evidences there has gradually accumulated a mass of evidence tending to show that the early Indian and Mesopotamian culture represent cognate developments. This applies especially to considerations derived from a study of the history of design (particularly in connection with the animal style and architecture) and to the analogies between Babylonean mythology and cult and those of the Dravidian (Agamic) tradition of India such as the use of the same formulee representing mountains, clouds and water; the motif of animals with long necks, interlaced and hiraldilc ... symbol of flowing vase in Babylonia and brimming vase of plenty (Purana Kalasa) of India - Indian and Singhalese art and archaeology - Encyclopaedia Britannica. 1. We may infer that unpanishadic speculations originated wholly outside pale of Vedic Brahmanism and had their source in religio-philosophical thought currents already prevalent in India since pre-Aryan days. Both Samkya and Yoga had developed probably already in pre-Aryan India - Back ground of Buddhist Philosophy - Dr.B.B.Bhattacharya - Indo asian Culture Vol.1. The living Hindu regions of today from capecomorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vedas e.g.Samdya have been modified by the addition of the Tantric practices - Outlines of Indian philosophy - p. 130, P.T.S. lyengar. 2. காஞ்சீபுரத்தில் கைலாசநாதர் கோவிலிலுள்ளதும் இராசேந்திர வர்மனால் பொறிக்கப் பட்டதுமாகிய சாசனமொன்றில் 28 ஆகமங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இச் சாசனம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது. 1. That contact between Vedism and the indigenous religion of Indus valley modified both by making the cult of Yoga acceptable to Vedism, which formerly believed only in sacrifice and (b) by the retention of non-Vedic elements in popular religion as to the cult of Yoga its indigenous origin is seen in certain stone statuettes discovered at Mohenjo-Daro showing ascetics with eyes half shut in contemplation and fixed on the tip of the nose. These according to Chanda supply the missing links between the prehistoric Indus valley civilization and the later civilization of India, Buddhist, Jain or Brahmanical - Memoir, No.41 of Arch. Survey. (India). Among the many revalations that Mohenjo-Daro and Harappa had in store for us, none perhaps is more remarkable than that this discovery that Saivaism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world - Mohenjo - Daro and the Indus civilization, Vol. I, p. VII - Sir John Marshall. 1. History of the Tamils - T.S. Iyengar 1. No. 471 of 1912 records the gift of such a monastery for a Saiva saint by a village, which also provided for the feeding of all strangers who might visit it. The property of this monastary was confiscated in the twenty-second year of Kulotunga Chola III when there was a general crusade against the non-Brahmanical Saiva mathas instigated by the Brahmans - Local Government in ancient India, p. 273, R.K. Mookerji. The scheme of four Varnas - could not well spread among the Tamils - It only led to the confusion of caste and prevalence of social jealousies and have characterized the life of South India for a thousand five hundred years; for we learn from Thevaram of Thirunavukkarasu Nayanar that there was in his day, as there is to-day, a consciousness of rivalry, if not jealousy between the Brahman and non-Brahmans as they were then called Aryan and Tamilian. “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை” “ஆரியந் தமிழோடிசையானவன்”. - Pre Aryan Tamil Culture, p.20, P.T.S. Aiyengar. When the Brahmans settled in Southern India and the ancient Tamil Rajahs desiring to secure the benefit of the Yagas, accepted to the fire priests, a supreme position to the society, the Brahmans naturally tried to introduce socio religious organization in Tamil religion - Ibid, p.20. 1. The progress of research into various phases of Indian antiquities is helping to pile up evidences to demonstrate the fact that the texure of Indian culture is made of the work of non-Aryan and pre-Aryan threads crossed with the woof of Aryan Hinduistic character. In the light of these evidences the conviction has been gaining ground that the great process popularly known as Hinduism is nothing but a synthesis and harmonization of complex elements of Aryan, pre-Aryan, non-Aryan and aboriginal culture, a good deal of which must have been autocthonus and indigenous, that is to say, was born on, or sprung from the soil of Indian continent. It has become impossible to contradict the fact that aboriginal and Indian Aryan cultures have greatly contributed to the development of what has become to be known during historical times as characteristically Indian civilization. Sometimes the elements and types of aboriginal culture has been transformed and modified so as to fit into the ideals and systems of Aryan thought and culture. Sometimes the aboriginal elements have been bodily annexed and appropriated into Indian system by removing the property mark of earlier aboriginal ownership and origins - Non.Aryan contribution to Indian Music - O.C.Ganguly - Annals of Bhandarkar - Oriental Research Institute - Vol. XIX (1938-1939). 1. Mr.Thomas, a good numismatist agrees with Sir Walter Elliot a distinguished Dravidian scholar, that the Vedas were not co-ordinated by any Aryan Rishi, but first arranged and compiled by Veda Vyasa Krishna. Dwaipayana, who was born on an islet of the Jamuna According to Aryans he was inspired by a Rishi Parasar and was called Kanina “the bastard” implying that he was a half Aryan; but no Aryan has reached the Jamuna, and all learning was in the hands of the Turano-Dravidians then undoubtedly, as now, a highly religious and philosophic people with their own Gods, heroes and rites and a great sacrificial system - Short studies in comparative religions p.252 - J.G.R. Forlong. 2. The simple ritual of the Rig-Veda had now, under the influence of Dravidian methods of worship, became an eloborate system of mechanical rites and ceremonies in Brahmanas - The Hindu View in art - p.14. 3. Brahmanas contain discussions on both work and knowledge. Those sections of the Brahmanas which contain symbolic or spiritual discussions on both ‘work’ and knowledge are called Aranyakas, for these were read in the Aranya (woods, forest) because owing to the obstruse character, they were not imparted everywhere to everybody indescriminately and because great seclusion was needed for their comprehension. Many of the Upanishads are included among the Aranyakas; only one Upanishad is included in mantras or samhita viz., in Isopanishad which forms the last (fortieth) chapter of the white Yajur Veda. What are the Upanishads - Indo Asian Culture - Vol. I (1952) p.53. 1. Dravidian pandits composed some Upanishads and Brahmanas, and why not Vedas ... Short studies of comparative religions, p.251. Forlong. Rig-Veda contains no traces of the beyond; a couple of passages in the last book which speak of the soul of the dead man as going to the waters on plants. It seems hardly likely that for reaching a theory should have been developed from the stray fancies of one or two later vedic poets. It seems more probable that Aryan settlers received the first impulse in the direction from the original inhabitants of India - Sanskrit Literature - p.387 - Prof. Macdonell. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of Kshatriyas. Again and again in the Upanishads we meet the situation which the later after several representations of the unseemliness of such a proceeding impart to him. ... The systems of Vedanta - Dr. Paul Duessen. 1. They accepted the Dravidian doctrine of Karma (deeds) as governing the nature of birth and rebirth in samsara (the universe) and declared moksha (release from the cycle of birth and rebirth) realised through direct spiritual experience brought about by contemplation to the goal of life - Hindu view in art, p.14. Another meaning of the word upanishad is mystery because its teachings or contents are not revealed or imparted to anybody or everybody at any place or every place without discrimination. That is how the two words Upanishad and mystery came to be synonimous. How great a mystery the Upanishads were supposed to be can be gathered from this that they were not taught to any one except the eldest son or the most favourite pupil even for the gift of world kingdom - What are the upanishads - Indo-asian culture, Vol. No.1 (1952) p.53. 1. We have seen in India the Aryan and Dravidian racial elements had intermingled and produced a type of mentality peculiarly Indian. In the super strata of Indo-Aryan society the Dravidian contributed his fine intutive faculties to the logical thinking of the Aryan, so that the Hocus-pocus of primitive magic had developed into a scientific investigation of metaphysical problems into which the intellectuals of Aryavartha were keenly interested - A short history of India, p.37 - E.B. Havell. 1. யோகத்தைப் பற்றிய சாதனையும் கருத்தும் முற்கால பிற்கால வேதமதத்துக்குப் புறம்பானவை. சண்டா அவர்கள் (Chanda) சிந்துவெளி மக்கள் யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்களென்பதை அங்குக் கிடைத்த முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் வடிவத்தைக் கொண்டு தெள்ளிதில் அறிந்து கொள்ளலாம் எனக் கூறி யுள்ளார். அக்கால மக்கள் தம் கடவுளுக்கு யோகி ஒருவரின் வடிவைக் கொடுத்த தோடு அவருக்குத் தவத்தையும் உரிமையாக்கினார்கள். கடவுள் படைத்தலாகிய தொழிலைப் பெறுவதற்குத் தவம் செய்ய வேண்டுமென அவர்கள் நம்பி இருக்கலாம். மனிதன் தன்னைப்போல் கடவுளையும் நினைக்கலானான். தவஞ் செய்தலால் கடவுளர் உயர்நிலை அடைந்தனர் என அவன் நினைத்தான். இக்கருத்தினாலேயே இந்திய மக்கள் கடவுளை யோகியின் வடிவில் வழிபடலானார்கள். சாங்கியத்துக்கும் யோகத் துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. யோகத்தைப் பற்றிய தத்துவக் கொள்கை கடவுட் கொள்கையோடு சாங்கியக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. யோகத்தைப் போலச் சாங்கியமும் வேத சம்பந்தமில்லாததெனக் கருதப்படுகிறது. யோகத்தில் ஆரியரல்லாத மக்களின் கருத்துக்கள் உள்ளன என்று நெடுங்காலஞ் சந்தேகிக்கப்பட்டது. ஆரியரின் கருத்துக்களெல்லாம் மேலானவை, அல்லாதன இழிந் தவை என்னும் தவறான கருத்தினால் இம்மேலான கருத்துக்கள் ஆரியரிடமிருந் தன்றி வரமுடியாதென மக்கள் நம்புவாராயினர். யோகக் கருத்துக்களில் ஆரியர் சார்பு இருப்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. மொகஞ்சதரோவில் இலிங்க வணக்க மிருந்ததென்பதற்குத் தெளிவான சான்று உண்டு. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட பல இலிங்கங்களைக் கொண்டு இருக்கு வேத சங்கிதையில் சிசின தேவர் எனக் குறிப் பிடப்பட்டுள்ளோர் ஆரியரின் பகைவர்கள் எனத் தெரிகிறது. Siva-His pre-Aryan Origin-Amalananda-Ghosh-Indian Culture, Vol.VII. On the grounds indicated above, we may infer the, Upanishadic speculations originated wholly outside the pale of Vedic Brahmanism and had their source in the religio-philosophical thought currents already prevalent in India since pre-Aryan days. That a rich culture which had been flourishing in India for at least two millena before the advent of the Vedic Aryans, should produce philosophical thinking and religious ideas of refined types is no difficult to make, for, it is but normal to expect this evolution ... the pre-Vedic elements constituted the texure while the Vedic did probably no more than imprint the stamp. It would be historically more correct, therefore, to regard Upanishadic as much as Jaina and Buddhist thoughts as having their roots more in non-Vedic than in Vedic ideas. We also find the basic ideas of the Samkhya and Yoga permeate Jaina, Buddhist as well as the Upanishadic outlook and it is probable that the primitive Samkhya consisted the philosophical background par excellence of pre-Vedic Indian thought and Yoga consisted an essential element in the cultivation of matters concerning the spirit. Both Samkhya and Yoga had developed probably already in pre-Aryan India ... the origin of Upanishads was not at all Vedic. We must not forget the priestly classes and philosophical thinkers with their religious practices and ideas who existed in India from before the coming of the Indian Aryans. By Buddhas time they have probably been absorbed in the part of the Vedic society and came to called Brahmans - Back ground of Buddhist philosophy - Prof. Dr.B.B.Bhattacharia, M.A.D., Ph.D. Indo Asian Culture, No.1. 1. According to Haribadra’s Shaddarsanasa-much-chaya Gautama and Kanada, founders, respectively of Nyaya and Vaiseshika systems, were of Saiva persuasion. Ganaratna, in his commentary of Haribadra’s work says that the Naiyayikas were called Saivas and the Vaiseshikas, Pasupathas. Among the successors of Asoka we come across one Jalanka who was a Saiva - The History and culture of the Indian People, Vol.2-p.456. 1. Upanishads and Darsans; six schools each with its text book and sutra-sundry, Brahmanas and philosophies, theistical and atheistical, all of which preceded Buddah, and were founded by Kapila, a quasi divine incarnation of Vishnu, but in reality a stolid Dravidian Pandit. Dravidians as we may conveniently designate the great rulers of India then, and from 2,000 to 3,000 B.C. Long expected evidence is now appearing that they - Dravid Pandits - composed some Upanishads and Brahmanas and why not Vedas, engrafting there in the hymns, prayers and faith of illiterate Aryans? All these scriptures are inferior and easy compositions to philosophical works which issued from the schools of - Kapila before Buddah’s day there was or any Aryan settlement in the middle Ganges. Nor would Vedic compositions prove difficult to learned Dravidian Brahmans e.g., from Apastamba to Sankaracharya of 800 A.D. who wrote on complecated philosophies of the Vedanta, the Bashya or Commentaries on the sutras and Upanishads - aphorisms and hymns which are all still the admirations of even European metaphysicians, theosophists and most pious thinkers - Short studies in comparative religions, p.241, Major General J.G.R. Forlong. 2. Outlines of Indian Philosophy - P.T. Srinivasa Iyengar. (இப்பகுதி மேற்படி நூலிலிருந்து எடுக்கப்பட்டது). 1. Pargiter adduces considerable evidence to show that the true Brahman families were of pre-Rigvedic origin; and the Aryan kings of Madhya Desa were their own priests in the earliest time had no Brahmans Castes in India - its nature function and Origins - J.H.Hatton, C.I.E., M.A.D.Sc. The composers of the Vedic Hymns or Brahmans, as they were called belonged to no one class or order. He, whom the gift of the song has fallen became the poet priest. One poet tells how that although he is maker of the hymn he says, yet his father was a physician, while his mother ground grain between the mills - A literary History of India, p.23, R.W.Fraser. The recent study of ancient Indus civilization suggests that the Brahman priests were originally of non-Aryan stock, but this conclusion still awaits conformation - Buddhists way of life - its philosophy and history, p.18 Harold smith, M.A., D.D., London, 1951. The most important of these dark skinned tribes were Yadus and Turvasas. Even the Rishis or the chief priests of the Indo-Aryan tribes had to admit into their order the priests of these dark-skinned Aryans. The Vedic literature contains descriptions of white skinned and golden haired Rishis and dark skinned Rishis. After this admixure the Indo-Aryans became powerful enough to push on towards the east and south. They conquered the Dravidian kingdoms of the united provinces and northern Rajaputana, but did not succeed in penetrating further South or East. The Dravidian remained independent in Bihar, Bengal, Orissa, and Central Provinces, Gujarat, and Sindh; while the country to the south of Vindhya remained entirely uneffected by the invasion of the Indo-Aryans-Junior History of India - R.D.Banerji, M.A. The non-Aryan magicians and Dravidians became Brahmans. South Indian tradition records numerous instances of Brahmans as taking wives from the lower castes. In many cases non-Brahmans were admitted into the Brahman castes as sufficient Brahmans were not available when the reformed Indo-Aryan religion obtained preferance - Prehistoric ancient and Hindu India, p.88, R.D. Banerji. With Buddhism dawned a new era in the history of India. Buddhism arose as a revolt against the tyranny of the priests who were Brahmanas. Brahmanism in its later stages had assumed very arrogant air. Learning became the monopoly of these human gods, for in the ignorance of the other three castes lay their power-Literary achievements of Indian women, Mrs. Hansa Metha, B.A., J.P. 1. The Vedanta was a great reformation which began at least four centuries B.C. when Buddhism had obtained a firm hold in upper India ... It is clearly a Dravidian reformation of the crude Aryan elemental teaching, a building up of a new-Hinduism purified by the ancient Turano philosophic schools of Kapila and embracing the piety and ethics of the followers of the great Jaina saint Mahavira and his probable disciple Sakya Muni-Short studies in the science of comparative religions, p.265. 1. Maya is the power which enables him to produce mutable nature. It is sakti, or the energy of Iswara, or atmaviriti, the power of self-becoming. Iswara and maya in this sense are mutually dependent and are both beginingless. The power of the supreme is called maya in the Gita. Since the Lord is able to produce the universe by means of the two elements of his being, prakriti and purusa, matter and consciousness, they are said to be higher and lower of god. Gradually, Maya becomes to mean the lower prakriti, since Purusa is said to be the seed which the Lord casts into the womb of prakriti for the germination of the universe - Indian philosophy, vol.I, p.547 Radhakrishnan. 1. That the worship of Siva is more ancient than the time of the founder of Buddhism is rendered probable by the tradition that the Sakyas were worshippers of Siva. The Chinese pilgrim Hieuen Tsang was shown near the eastern gate of Kapilavastu the old temple of Iswara where the infant Siddhartha was taken by the father because “the Sakyya children who he seek divine protection always obtain what they ask”. According to the legend the stone image raised itself and saluted the prince. That this legend is very ancient is proved by the fact that the scene is represented on the Amaravathi stupa (Ep.Ind.V.3) which has probably assigned to the Maurya Period - Outlines of Indian Philosopky, p.193 - P.T.S. Iyengar, 1909. 1. Indian Philosophy, Vol.1 p.478. 1. The Ramayana also narrates an important event known as the war between Rama and the Rakshasas on account of the abduction of the wife of Rama by Ravana the demon Rajah of Lanka or Ceylon. This event, it appears to be connected with the life of another Rama, who is distinguished as the Rama of the Deccan - Wheelers History of India, Vol.II, Part IV. The hermitages are said to have been occupied by the Rishies who composed the Vedic hymns and who are represented as Brahmans although they might have flourished ages before the appearance of the Brahmans. The whole story may therefore be dismissed as apocryphal, Ibid. 1. Immediately following the epics about the first century A.D. the Puranas, mythological and speculative histories of universe began to be written. They were intended to promote several particular Brahmanical beliefs, which had been developing since Vedic times - Hindu View in Art., p.35. It is now generally admitted that a great deal of the ancient and medieval myth and legend enshrined in the Sanskrit epics and Puranas is of non-Aryan origin and even in Vedic mythology certain pre-Aryan elements are present. Puranic myths of the gods and legends of kings, heroes and sages in the form in which we find them in the Sanskrit works represent undoubted by a considerable amount of modification from other original forms whether Aryan or non-Aryan. The non-Aryan speaking massநள டிக nடிசவாநசn ஐனேயை நெஉயஅந ஹசலயnணைநன in டயபேரயபந யனே their tales and legends were retold as a matter of course in an Aryan language of their adoption- S.K.Chatterji, Bulletin of the school of Oriental Studies, Vol.VII, (1935-1937). In the earlier epoch prior to A.D.1000 pre-Aryan legends were rendered from current Prakrit versions into Sanskrit and found a place in one or the other of the numerous Puranas, Upapuranas, Stalapuranas and Mahatmyas and Tantras or even in Mahabharata and so were raised upto a level of pan Indian acceptance - The History and Culture of Indian people - Vol.V, p.379. 1. Will Durant. 1. Madavachares favour Krishna and his consont as their special object of adoration, while image of Sivan Parvati and their son Ganesa are admitted and worshipped in some of their temples, the most important of which is at Udupi in South Kanara with eight monastaries connected with it - Encyclopaedia Britannica. 1. Siva is a god unknown to the Vedas; his name is a word of not frequent occurrence in hymns, indeed, but means simply ‘prosperous’; not even in the Atharvan it is the epithet of a particular divinity, or distinguished by the useage from any other adjectives. The precise relation between Siva and Rudra is not yet satisfactorily traced out - Orient and linguistic studies, p.30 - William Dwlight Whitney. It is an established fact that the god Siva was the form which the Vedic god Rudra later assumed. In other words the god Siva, at least as he has been described in classical times, was unknown to the Vedas, and Rudra the Tempest God of the Vedas is not given any of the distinctive epithets which later came to be associated with the god Siva. If we accept the alleged identification we have to date the god Siva or his proto type in the middle of the third millenium B.C. For, that is the date of the Mohenjo-Daro finds, as has been proved by Professor Selon Lloyd on the strength of the happy discovery of the cylindrical seal at Tel-as-mar which contains a representation of a typically mohenjo-Daro scene-an Indian elephant, rhinoceros and a crocodile. Identification of Mohenjo-Daro figure-B.A. Saletore-New review X, July - Dec. 1939. Now it seems possible that Rudra in the Rig-Veda was an Aryanised form from the pre-Aryan proto-Siva. This supposition to a certain extent finds support in the fact that the word Rudra in Sanskrit meaning ‘Red’ is identical with Dravidian word ‘red’ Siva, Rudra, it must be noted, was not a very important deity in the Rig-Veda. Only three hymns have been given to him, and he is identified with Agni. It seems probable that these pre-Aryan phallic worshippers are identical with the people who in later times dwelt in rich and prosperous cities in the Indus valley, and prejudice and indignation against whom find most eloquent expression in the following two passages of the Rig-Veda ... The cult of linga in three faced Siva is common among represen- tations of Siva. It is ordinarily Agamic principle that Siva in his aspect of Maheswara or Sadasiva can be represented with one, three, four or five faces but not with two. But the fact is there, the image represented with three faces and other associations are clearly Saivaic in character. The conclusion there fore seems to be thoroughly justified that it is the figure of Siva that is represented on this. This would only be confirmed by the yogic posture of Siva in one aspect is represented as Mahayoge and sometimes called Yoge - Daks hanamurthi. In such, his associations are naturally with the forest and the surrounding elements indicated in the picture are sylvan life ... We may therefore state with confidence, that the god represented on the seal and others similar to Siva the proto type of the historical Siva according to Sir John Marshall - Journal of Indian History, Vol. XII, (1933) p.271. 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 1. From the identification of Chandragupta Maurya to the excavations of Mohenjo Daro and Harappa, from the deciphering of the inscriptions of Asoka to the comparative survey of epigraphic records over India, the material for the writing of Indian history was provided by the work of European scholars. Even more striking is the case of Indonesia, where few European scholars, mostly Dutch reconstructed from inscriptions the history of the great empires of Java and Sumatra which provided Indonesian nationalism with a solid historical basis. In this sense it cannot be denied that European scholars and thinkers, by their labour in the interest of knowlge, enabled India, Ceylon and Indonesia to think on terms of historical continuity. - Asia and Western Dominance K.M. Panikkar (London - 1954) * Of European tongues, the nearest congeners to Sanskrit are the Samaritain languages of the Russian Empire, then the classical tongues of Rome and Greece, then those of Germany and the Keltic, this class of languages being called Indo-Germanic, of the sclavonic and Lithuanian, the two branches of samaritain, the affinities of the sanskrit are closer in the Lithuanian than with any other known tongue. Sanskrit next to Lithuanian is most like Sclavonic. It will thus be observed that the Aryan or Sanskrit speakig races of India seem to have been closely connected with the Zend speaking, Greek speaking, Latin speaking races and not at all with Arabic, Phoenician and Hebrew families. - The cyclopaedia of India - Balfour # The Vedic Aryans possessed no temples and used no images. The Dravidian culture promoted image worship, and insisted puja in the place of yajna... the inspiring genius of the seers fused the Vedic and the non-Vedic elements and gave to the Agamas equal authority with the Vedas. - Religion and scociety p.111. - Dr.S.Radhakrishnan. * “விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லாலினிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை யோராப் பழிமொழியாளர்” (திருமந்திரம்) * Frederic Rosen Jane என்பவர் இருக்கு வேதத்தை இலத்தின் மொழி பெயர்ப்போடு 1838-இல் இலண்டனில் அச்சிட்டார். # First of all, there are the very ancient hymns in praise of Indra and Vishnu, Mitra and Varuna as occassion arose for them and propitated them with meat and soma to avert a calamity that immediately threatened them in their individual lives or to gain some urgent desires of their hearts - Outlines of Indian Philosophy p. 214. # வேதங்கள் முதலில் பிரமாவின் மனதில் தோன்றினவென்றும், பிரமா அவற்றில் கூறியபடி உலகைப் படைத்தாரென்றும், பிரமா அவற்றை மரீசி, அத்திரி, அங்கீரசர் போன்ற முனிவர்களின் உள்ளங்களில் தோன்றும்படி செய்தாரென்றும், அவர்கள் மூலம் வேதங்கள் மக்களுக்குக் கிடைத்தனவென்றும், வியாசர் அவற்றை நான்காகச் செய்து அவற்றைப் பயிலகர், வைசம்பாயனர், சைமினி, சுமுந்தர் என்னும் நான்கு முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் அவர்கள் அவற்றைத் தமது குமாரருக்கும் மாணாக்கருக்கும் போதித்தார்கள் என்றும் கூறும் பழங்கதை உளது. * இருக்கு வேதம் 21 சாகைகள் அல்லது கிளைகள் உடையதென்றும், எசுர் வேதம் 109 சாகைகளுடையதென்றும், சாம வேதம் ஆயிரம் சாகைகளுடையதென்றும் விட்டுணு புராணங் கூறுகின்றது. அவற்றில் நூற்றில் 90 பகுதியும் இன்று மறைந்து போயின - Upanishads - Dewakar. # Atharva Veda for a long time was without the prestige of Veda-Indian Philos ophy Vol.1. p.65. * Rudra has a very subordinate position in Rig-Veda being celebrated only in three entire hymns. He holds a thunderbolt in his arms and discharges lightning shafts from the skys. Siva the benignant with a whole tradition developed round him. - Indian Philosophy Vol. I. p.81 Dr.S.Radhakrishnan. Rudra is the lord of animals, and forms the point of linkage between the Vedic religion and the later Siva worship. Siva in the Rig-veda means auspicious , but is not the name of a God; the Rudra in Rig-veda is a malignant cattle destroying deity. Here he is the lord of all cattle Pasupathi. - Indian Philosophy p. 12. Dr. S. Radhakrishnan. * The early Vedic religion was a cult of magic, a system of propitation or constraint of Nature-powers (Devas) by means of sacrifices (Yajnas), offerings of animal fat, (ghee vapa, etc) and fermented liquor (Soma) poured into fire regarded as the mouth of the Gods, and accompanied with the chanting of mantras. Some of these mantras were incantations of praise, and others combinations of sounds having no meaning, being sometimes inarticulate cries (“like the bellowing of a bull etc.”) They were believed to please or constrain the Devas and thus to secure the fulfilment of the sacrificers desires, whether these were the acquisition of material objects in this life or the enjoyment of pleasures in post-mortem states. - Outlines of Indian Philosophy p.118. # *இப்பகுதி “Life in Ancient India” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. * யாகத்தில் நைவேதிக்கப்பட்டவற்றைப் புரோகிதரல்லாத மற்றவர்களுக்குப் பரிமாறுதல் ஆகாதென்றும் அவற்றைப் புரோகிதர் மாத்திரமே உட்கொள்ளலாமென்றும் விதிக ளிருந்தன. # Drinking in Ancient India - The Illustrated weekly Sep. 27-1959. * *சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் (திருமந்திரம்). * It was the usual thing for ancient law-codes to be of divine origin. We have seen how the laws of Egypt were given by The God Thoth, and how the Sun god Samash begot Hammurabi’s code. In like manner the diety gave to king Minos of Mt. Dicta the laws that were to given Crete; the Creeks represented Dionysus. Persians tell how one day as Zoraster prayed on a high mountain, Ahura-mazida appeared to him amid thunder and lightning and delivered to him the book of the law. History of Civilization P.331 - Will Durant. # வேதங்கள் எனப்பட்டன பிற்கால உபநிடதங்கள் எனத் தெரிகின்றன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத்திறன்” (சிவப்பிரகாசம்) “வேதநூல் சைவ நூல் என இரண்டே நூல்கள்” என்பவற்றுக்கும் இவ்வாறே பொருள் கொள்ளுதல் வேண்டும். * After this period there must have occured a break of culture long enough to allow of the language of the Samhita to become obscure to a later generation . The language changed during this period to that of the Brahmanas which is midway between Vedic and Classical Sanskrit - Outlines of Indian Philosopy P .211. # ஆரியமொழி உள்நாட்டு மொழியோடு கலந்து சிதைந்து பிராகிருதங்களாக மாறின வென்றும் பிராகிருதங்கள், ஆரிய மொழியைச் சேர்ந்தனவென்றும் கொள்ளப்படுகின் றன. பிராகிருதமொழிகளும் இன்று ஆரியத்தைச் சேர்ந்தனவென்று கொள்ளப்படும் வடஇந்திய மொழிகளும் இலக்கண அமைப்பில் திராவிடமாக இருக்கின்றன என்று, பி.தி.சீனிவாச ஐயங்காரவர்கள் கற்கால இந்தியா என்னும் நூலில் கூறியிருக்கின்றார். அவ்வாறாயின், பிராகிருதங்கள் என்பன வடமொழியோடு கலந்து திரிபடைந்து மாறுபட்ட திராவிடமொழிகள் எனக் கருதப்பட வேண்டியுள்ளது. *. A History of Indian literature p.52 Herbert H. Goven. # The system of the Vedanta p.8 - Paul Deussen. # Wisdom of the East p.13 - L.D. Barnett M.A. Litt.D. * They were translated from Sanskrit into Persian by or for Dara Shukoh, the eldest son of the Mugal emperor Shah Jehan who held the liberal religious views of Akbar. He had heard of the Upanishads in Kashmir in 1640 invited several Pandits to Delhi to assist in their translation and finished the work in 1657. Translated into Persian then the most widely read language of the East, they became generally accessible. In 1775 a manuscript of this Persian translation was sent by the French resident at the court of Shujaud Daula to Anquetil Duperron the discoverer of the Avesta; and later another manuscript. Anquetil Duperron collected the two and translated the work into French and into Latin publishing the latter version in 1801 and 1802 under the title of Oupnekhat a corruption of upanishad. This Latin translation was studied by Schopenhaner. Twelve of them are translated by Maxmuller with introduction and notes in the “Sacred books of the East”. - The century cyclopaedia of names. * The History and Culture of Indian People Vol.I. # The ethical end of the Sankhya system is to effect the liberation of the purusha or soul from the fetters in which it is evolved by union with Prakriti. This is done by prama or correct knowledge of the 24 constituent principles of creation and discriminating the soul from them its pramanas or means of obtaining the correct means of existing things ... some adherents of Sankhya maintain the existence of a supreme soul Heranyagarbha. The Sankhya proper not so much denies the existence of supreme being as ignores it as incapable of dialectical demonstration. “He must be free from desires and not bound by troubles. If he were bound by desires of any kind he would be under bondage and deficient in power”. - The Century Cyclopaedia of Names. * The work of explaining the various discrepancies of the Veda and solving the various difficulties of the ritual became a profession and the scheme of Nyayas was developed into Mimamsa Sastra-Outlines of Indian Philosophy p.222. * Kanadha does not mention a God or a supreme creator among his ultimate substances. When Vaiseshika philosophy in much later days chiefly under the Siva cult developed the idea of personal creator, the commentators attempted to derive the notion of a supreme god from a misinterpretation of one sutra - outlines of Indian Philosophy - P.T.S. Iyengar. * The meanings of the hymns having become obscure they began to be applied indiscriminately for sacrificial purposes and interpreted in fanciful ways. Discussions frequently arose in the assemblies of the priests, about details of the rituals applications of mantras, etc. To settle such questions, what were called Nyayas were frequently utilized. The Nyayas are analogies or inferences or proverbs which make statements probable to or acceptable and are even now largely used for argumentation - Outlines of Indian Philosophy p. 221. # As the Yoga added to the Sankhya the conception of an Isvara, so the Nyaya to the Vaiseshika. But the Isvara of the Nyaya Sutras concerned only with the adjustment of fruits of action. Some actions are followed by consequences immediate and visible; but others are not. Later Nyaya developed the notion of god the Creator - Ibid p. 208. * Vedanta - The most Common designation of the Uttaramimamsa school of Hindu philosophy given to it either as teaching the ultimate aim of Veda or as founded on the Upanishads, came at the end of the Veda as the last stage in its historic evolution. It is ascribed to Vyasa or Badarayana. The first of the names (‘arranger’) is also given to the legendary person who is supposed to have arranged the Vedas and written the Mahabharata, Puranas and Dharmasastra and was doubtless applied to various great writers or compliers as a kind of title. In this sense it seems to have been given to the founder of the Vedanta. Its principles are propounded in Sutras, but Badarayana’s Sutras are generally called Brahmasutras or sometimes Sharirakasutra. The text of the celebrated commentary of Sankaracharya have been edited in the “Bibliotheca Indica” and a portion translated, and also the commentary known as Vedanta Sara. The most authoritative recent works on the Vedanta are however paul Deussen’s “Die Sutras des Vedanta” - The Century Cyclopaedia of Names. * Out lines of Indian Philosophy. # Smartas: Smarta Brahmins - one of the three principal classes into which the Hindus proper of the present day may be divided as to religion, the other two being the Saivas and the Vaisnavas. The Smarta believe that the man’s spirit is identical with the one spirit which is the essence of the universe and only cognizable through the three personal gods Brahma, Shiva and Vishnu with their subordinate dieties but only as co-equal manifestations of one impersonal spirit and as destined to be reabsorbed into the spirit. They are followers of Sankara - The Century Cyclopaedia of Names. * It contains more than 100,000 distichs divided into Parvas. It is eight times as the Illard and Oddessey. Krisna Dvaipayana is said to have taught the poem to his pupil Vaishampayana who recited it at a festival before King Janamejaya - The Century Cyclopaedia of Names. # Panipath * Puranas - The name of each of a class of Sanskrit works important in their connection with the later phases of Brahmanism, as exhibited in the doctrines of emanation, incarnation and triple manifestation. They are the Vedas of popular Hinduism and contain the history of the Gods, interwoven with every variety of legendary tradition on other subjects. Though nominally tritheistic, they are practically polytheistic and essentially pantheistic. Their form is in general that of dialogues in which a well known sage answers the questions of his disciples, while others are monologues. They are written in sloka matter of the Mahabharata, with occassional passages in prose. They are 18 in number. There are also 18 Upapuranas or Subordinate Puranas - The Century Cyclopaedia of Names. # Encyclopaedia of Religion and Ethics * The Dharma Sutras were manuals written by the teachers of the Vedic Schools for the guidance of their pupils. Their use was therefore, at first restricted to these schools alone and it was not till a later period that they were acknowledged as authority all over India. The Smirthis on the other hand were declared to be of divine origin and hence claimed from the very beginning to be authentic sources of law for all Aryans - “The History and Culture of the Indian People - Vol.II p.225.” # Perhaps one half of the present work consists, however, of additions to the original, drawn from the popular material maxims, and made as Buhler thinks, at the date of the recast which he considers to be between 100 B. C. and the 2nd century A.D. - The Century Cyclopaedia of Names. * விஷ்ணு மிருதியின் காலம் கி.பி. 3 ஆம் நூ. யாக்ஞவல்கிய மிருதியின் காலம் கி.பி. 4 ஆம் நூ. பிரகஸ்பதி மிருதியின் காலம் கி.பி. 6-7 ஆம் நூ. காத்தியாயன மிருதியின் காலம் கி.பி. 7 ஆம் நூ. # The old leaders of Brahmanism were much cleverer and form of old it had been their practice to absorb and assimilate. When the Aryans first came to India they assimilated much of Dravidian culture and customs and all though their history consciously or unconsciously acted in this way. They did like wise with Buddhims and made Buddha an Avatar and a God-Glimpses of World History - Jawaharlal Nehru. * No.99 in vol.ii. part V. of South Indian inscriptions gives an interesting account of a gift of a village for the purpose of supporting 308 learned Brahmans in persuit of their sacred vocations of studying and teaching as prescribed in the Sastras. Regarding the qualifications of the select body of Brahman scholars it is stated in the inscription that they had all studied the three Vedas and Smiritis. The inscription applies to them various learned designations such as Cathurvedin, Triveden, Somajajin, Sadangavid, Bhatta, Kramavid (proficient in the Krama - patha of the Rig Veda & C.) A similar gift for establishing a similar colony of 308 Brahmans is also Registered in No.7 of 1912 No.277 of 1913 refers to the establishment of another cultured colony of 108 Brahman families equipped with all necessaries of life and even with library called Saraswathi Bhandara. No.278 of 1913 registers a similar grant for the same number of Brahman colonists. No.198 of 1919 records the interesting case of an assembly holding a special meeting in response to a royal order which requested them to adjudge the merits of a literary work composed by a poet. The work was recited before the assembly and the author obtained as a reward for his labours a grant of land to be held in perpetual ownership. Students of Tamil literature may find here a lingering literary tradition of the more ancient Dravidian Sangam established in Madura to scrutinze the works of Tamil poets and advance the cause of Tamil literature (mid. Ep. Rep. for 1919. p.98) - Local Government in Ancient India p.283. Radhakumud Mookerji M.A. Ph.D. # Gradually the Dravidians adopted Aryan manners customs and religion. The Dravidian priests became Brahmanas and the kings of all tribes claimed to be Kshatriyas - Junior History of India p.17 R.D. Banerji. * The Agamas represent the oldest products of Dravidian literature, that in prehistoric times they were written in the Dravidian (Tamil) language, and a great part of them was lost in a flood which swept over the land south of the present Cape Comorin, the chief dwelling place of the old Dravidians. Only remnants of the older Agamas were translated into Sanskrit and preserved in this form. But as has been urged, all that one can say is that the home of the Agamas was in the land of the Dravidians i.e. the south of India. From the south they seem to have pushed up north, and later to have turned back to the south where they helped to drive out Jainsm and Buddhism. It has been further said that should one incline towards the theory that Agama literature was of Dravidian origin, one must at the same time admit that it came under the influence of Sanskrit literature very early. What is preserved to us of the Agamas bears unmistakably the stamp of Sanskrit literature, for the Agamas that are preserved are in the Sanskrit language, and the systems based in the Agama and written in the non-Sanskrit language employ Sanskrit terms so that as matters now stand, we have to consider the Agama literature as a part of the Sanskrit literature - The Saiva Siddhanta in the Meykanda Sastra - Violet Paranjothi M.A.L.T.Ph.D. (Isabella Thouburn College, Lucknow - 1938) quoted as an English translation from Der Saiva Siddhanta, a German book by H.W. Schormerus. # As soon as Buddhagosa completed the Pali version of the Singhalese commentaries the manuscripts of the later are said to have been collected together and burnt. As a matter of fact the Singhalese commentaries are irretrievably lost. This complete suppression of the native language by Pali as vehicle of religious thought explain the vast growth of Pali literature and the high position that the Pali language occupied in Ceylon - Indo Asian Culture Vol. 1. No.1. India and Ceylon Dr. R.C.Majumdar. The ruthless manner in which Buddhist and Jain literature in Sanskrit as well as the vernaculars was suppressed and destroyed through the Brahmanical reaction is the greatest tragedy in the Indian culture - The History of the Telugu Language - P. Chenchiah. * Sk. 186 records the interesting story that a king, not finding a Viprakula or Brahman family in Daksinapatha imported from the north thirty two Brahman families whom he settled in the agrahara of Jalguna near Belgami. Sk. 177, 178, 185 show how the educated impulse given by the grant of Sk. 186 resulted in the growth considerable literary activity centering in an Agrahara of considerable dimensions during its maintenance from no less than 144 villages, all acquired as fees for as many as eighteen horse sacrifices performed by the K adamba King Mayuravarman - Local Government in Ancient India - p. 283. * “நவிற்றுநாள் நன்மலர் தூபங் கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம் (திருமந்திரம் 1242) # “*இலிங்க நற்பீட மிசையு மோங்கார மிலிங்கநற் கண்ட நிறையு மகார மிலிங்கத்துள் வட்ட நிறையு முகார மிலிங்க மகார நிறைவிந்து நாதமே. (திருமந்திரம்) * The Vedic culture which resembles that of the Homeric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutans and Slaves becomes transformed in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on the Father sky or some other shining one to look from on high on the sacrificer and receive from him the offerings of fat or flesh, cakes and drink. But soon puja or worship takes the place of Homa or sacrifice. Image worship which was a striking feature of the Dravidian faith was accepted by the Aryans. The ideals of vegetarianism and non-violence (ahimsa) also developed. The Vedic tradition has dominated by the Agamic and today Hindu culture shows the influences of the Agama as much as that of the Vedas. The Aryan and the Dravidian do not exist side by side in Hinduism. “contact with the highly civilized Dravidians led to the transformation of Vedism into theistic religion.” - Hindu view in life - Dr.S.Radhakrishnan. # *இது பி.தி. சீனிவாச ஐயங்காரின் History of the Tamils (பக். 105-115) என்னும் நூலிலுள்ளவற்றிலிருந்து எடுக்கப்பட்டது. * Brahmins learned in many of these sciences served as Rajagurus (teachers of kings) and spread themselves all over the land edifying the lives of the in habitants of every town and village. Gifts of land and houses were frequently offered as inducements to Brahmins to come and settle where they were wanted. In several places they were organized into co-operate colleges called brahmapuris and ghatikas, like the brahmapuri at Belgaum or the ghatika at Kanchi ... at Salatge was another eminent college to which pupils came from different janapadas (countries) and whose vidyarth sangai was richly endowed in 945 by Narayana, a minister of Krishna III, with the revenues of houses, land, and levies on marriage and other ceremonies. We also hear (1058) of a ghatika at Nagai with ample provision for 200 Veda students, 50 students of the sastras, three teachers of the santras ... besides a librarian who brings up the strength to 257 in all. At Ennayram in South Arcot the Chola Rajendra I endowed a large college of (1) 270 junior students of whom 40 studied the sutras of Bodhayana, and the rest learnt the Vedas by wrote (2) 70 seniors students, 10 studying vedanta, 25 Vyakarna and the rest Prabhakara - mimamsa and (3) teaching staff of 14. In another college in the same neighbourhood at Tribhuvanit, there were 260 students and 12 teachers - A History of South India pp. 312, 318 K.A.N. # The temple - priests, both of the Saiva and Vaishnava variety, are regarded as inferior Brahmanas by strict Vedantis; infact, even fifty years ago there existed to my knowledge followers of the Advaita Vedanta, who would not enter any temples. The Vedanta, which was the culmination of the Veda, also severely condemned the Agamina path; Badarayana denounced both the Pasupatha and the Pancaratra in the Sutras - History of the Tamils - p. 110 P.T.S. Iyengar. * “வேதம் பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர் ஓது தமிழ் அதனுள் ளுறைநெய் - நெய்யி னுறுசுவையாம் போத மிகுமெய் கண்டான் செய்தமிழ் நூலின் திறம்.” * ஐரோப்பிய அறிஞரும் தமிழ்மொழியும் டாக்டர் R.P. சேதுப்பிள்ளை B.A. B.L. # Hinduism is not based on any racial factor. Though the civilization has its roots in spiritual life of the Vedic Aryans and has not lost the traces of its origin, it has taken so much from the social life of the Dravidian and ot her native inhabitants that it is difficult to disentangle in modern Hinduism the Vedic and the non Vedic elements - Religion and society p.111 Dr.S.Radha krishnan. 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 113 114 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 129 130 143 142 131 132 141 140 133 134 139 138 135 136 137 160 145 146 159 158 147 148 157 156 149 150 155 154 151 152 153 176 1. In the words of Diadorus Siculos ‘Man in earliest times struck with the beauty of the universe, with the splendour and regularity which everywhere were in evidence made, no doubt, that there was some divinity who therein presided and then presented the Sun as expressing the like nees of the deity - Sun Lore of All Ages - p. 42 - willia Tyler Olcott. 1. Many other nations mention, in the mythological part of their history, in undations which in their essential particulars, agree with the scriptural account of Noah’s preservation. Hence many persons have inferred the universality of this inundation. To this it has been replied that each nation localizes the chief events and actors as connected with itself, necessitating an Ararat, an ark and a Noah in each instance. Fohi in the Chinese mythology, Satyavrata in the Indian, Xisuthrus in the Chaldaean, Ogyges and Deucation in t he Greek, have each been recognised by many as the Noah of the sacred scripture under different names. Even the American Indians have a tradition of a similar deluge, and a renewal of the race from the family of one individual. All these individuals are said be their respective nation to have been saved , and to have become the father of mankind.’ - A New Popular Encyclopaedia Vol.IV p.325. நோவா ஞாயிற்றின் உயிராக அதனிடத்து உறைகின்றார் என யூத மக்கள் நம்பினார்கள். “But they adorned in conjunction with him and perpetually distinguished by his name the Patriach Noah, whose soul after death they feigned to have migrated into that orb, and to have become the intellectual regent of it. The person worshipped in the sun was not simply Noah but Noah reviewed as a transmigratory reappearance of Adam.” - Sun Lore of All Ages - p.149. 1. The world is old enough and time has existed long enough for the widest divergencies to have been made from one common centre of mankind and the proofs of a unity of origin are plentiful enough. What has been wanted is the common centre of the premeval unity. - A Book of the Beginnings - p.26 ... Gerald Masey. 2. There can be no doubt concerning the identity of the Indus and the Easter Island scripts. Whether we are thus confronted by the astonishing historical accident or whether this ancient Indian script has mysteriously travelled to the remote islands of the pacific none can say. The age of the easter Islands tablets made of wood is totally unknown and all knowledge of their writing has been lost. This same script has been found in seals precisely similar to Indian scals in various parts of ancient Sumar, in Susa and the border Island east of Tigris ... here is a civilization of whose history nothing has survived - Script of Harappa and Mohanjo Daro and its connection with other scripts - Introduction by Professor S. Langdon. Their underlying principles are the same, and there is very likelihood that they all derived from one common origin and went back to neolithic times. Mohenjo Daro and Indus Civilization - Sir John Marshall. 3. Prof. Prizy Luski has compared a series of Austro-Asiatic words with Sumerian and has discovered important analogies. Rivet also in the articles already referred to suggests that the Sumerian had probably played an important role as agents of transmission of culture elements between Oceania and Europe and Africa - Pre-Aryan and Pre-Dravidian in India. p. X. 4. This list of words by itself is sufficient to prove the primal indentity of the Maori and Egyptian languages - A Book of the Beginnings - p. 17. 5. The languages of the native races of America has already been described as agglutinative or polysynthetic abounding in combinations and refinements of grammer which throw into Shade even the language of classic Greece. Thus while differing in many minor particulars the grammatical structure of the Indian languages is so much alike as to indicate a common origin at some time in the distant past - Origin and antiquity of Man - p. 80 - Fredric Wright. 2. Of Ra, 11, El, Ils, Helos, Bel, Baal, Al, Allah, Ellohim, I cannot get any further information than that they were names given to the sun as the representative of the creator who was spoken of reverently as My Lord, the Lord, the King etc. - Ancient Faiths, p. 78 - Thomas inman. It may be noted at the outset that the sun was identified with Siva (perhaps also with Vishnu and the Suriasevana really means the worship of Siva in the form of sun. It is interesting as showing the identity of Siva and Surya and thereby explaining the inner significance of the Surya worship. - Ancient Indian Colonies in the Far East - Vol.2, pp. 106-7 - Dr.R.C. Mazumdar. அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனாவான் அரனுரு வல்லனோ (திருஞா-தே) சிவனெனு நாமம் தனக்கேயுரிய செம்மேனி எம்மான் (திருவா) 1. Ann (ஆண்) is supposed to be the highest God, the God of Heaven. In fact he is, as we shall see later on, identified with the sun. Now the sun in the course of the year travels through the constellations of the Zodiac, which were called houses. Accordingly each month of the sun being in a different house was supposed to take a different form and since the constellations of the Poto - Indians as said above were only eight, the forms of the sun i.e., the Supreme Being were eight. The eight forms of the Supreme Being were the eight constellations which were the following: The Ram, the Harp, the Crab, the Mother, the Scale, the Arrow, the Jar and the Fish or the two Fishes. Images of the supreme being under these forms were worshipped in different parts of the country. The most popular of these forms of God, seem to have been the Fish. Several inscriptions refer to this - Father Heras. 2. The chief God of Tanalog was Bathala derived from Sanskrit Battara - Javanese Batara - Guru (-Siva). The Sambol folk name their God Akasi the Visagans have as God Sivapa corresponding to Hindu Pasupathi - India and the Pacific World. p 78. - Kalidas Nag. M.A., D.Litt. 3. Siva is a hunter God and numerous legends concerning him suggest palaeolithic and early neolithic modes of life; hence his worship probably comes down from the lithic stage of development of human culture in India. Sanskrit grammarians have not been able to discover a satisfactory etmology for the name of the God. It has been suggested that the name is derived from the Tamil word for ‘Red’ (சிவ) because he is red God and that name Rudra the red one” is a Sanskrit translation of the Tamil name. - Stone Age in India - pp. 48 and 49 - P.T.S. Iyengar. The relationship between the red colour and Siva, so prominent a diction specially in Southern Hinduism has also been mentioned by Marshall, who considers Siva as a religious feature originally derived form the Indian civilization - Mother Right in India - p. 184. Baron Rolf Ehsenfels. 1. The names of towns have continually been derived from those of God there worshipped as has been pointed out by several archaelogists - The Syrian Stone Lore - p. 18. 2. Encyclopaedia Britannica - Index. The attributes of Osiris under his several forms, correspond with those of Jupiter, Sol Baechus, Pluto, Oceanas & c. He will be accordingly Associated with Siva in his majestic and vindicative character - Mythology of the Hindu - p. 174. 3. Jupiter is traced to Fervo. The direct Assyrian denomination however of the planet is the gulf of lost in time and it is traced from the Chaldie Sevah-History of Hindustan - p. 239 - Author of Indian Antiquities. 4. Zeas Ammon Still haunts the Oasis (Sivah) at least in the modified and unrecognised Shapes ... where smaller temples of Ammon are still to be seen Zeus - Arthur Bernard Cook. 1. The idol of Lingam, a deity familiar to the Phallus of the Egyptians, is always to the found in the interior and most sacred part of the temples of Shiva - Sketches Chiefly relating to the Hindu Religion - History and Manners of the Hindus - A. Craufund - p. 203. 2. The Civilization of Babylon and Assyria - pp. 434 and 512 - Morris Jastow. 3. Marduk is sometimes so pronounced that if one substitutes Jehovah - Zeus - p.217. According to Hebrew scholars the name Jehovah is to be derived from the Stem Havah and thus we take for the modified form Chava - A Book of the Biginnings - p. 150. No essential distinction was felt to exist between Jehovah and El, any more than between Assur and El. Jehovah was only a special name of El. which had become current within a powerful circle and which on the account was all the more fitted to become the designation of national God - See, Israel - E. Britanica. 4. “In September the world was thrilled by the story of the American scientists who scaled the ‘lost world’ of Siva’s temples in the Canyon of Arizona. Siva’s temple explorers found flint at row head and white headed mice” Cavaleade - London. - Dec., 18, 1937. “In the wild mountainous state of Colorado, seventh largest in America, scintists of the U.S. Museum of Natural History three months ago announced discovery of a ‘lost world’. The focal point was Siva’s Grand Temple a half square mile of solid rock plateau, isolated from the mainland by 9000 feet Canyons eroded by rivers some 200,000 years ago” - News Review - London : Sept., 23, 1937. “Siva’s temple is one of the surface points which have been felt high and dry by water on four sides, conservative estimates put the date when animal was cut off from the rest of the world as atleast 100,000 years ago - Times of Ceylon, Sunday Illustrated - June, 17, 1937. * Hindu America - Saman Lal. 1. .A similar object (Candle Stick) of early Minoan ago has, Sir Arthur Evans points out, been found at Siva near Phaestos - Further Excavations at Mohenjo - Daro - Mackay. 1. The place Sivapura connected with Panini might have been named after them. Mr.A.C.Das suggests that they might have been worshippers of Siva or Phallus - History of Pre-Musalman India - p. 185. 2. The peak (Adam’s peak) was their (Buddhists) Buda, ages before Sakya Muni was born, and a Karn God or Bud continued to be the Siva ‘les Indes’ down to our 9th century - Rivers of Life - Part II - p. 485. 3. The Arab sailors who saw the Phallic Cone of Ceylon calling it al maka and ‘the Adam’, a common Indo Mosalman name or euphemism for the Lingam Short Studies in the Science of Comparative Religions. 4. Assyrians had twelve great Gods clearly corresponding to the twelve houses or months - Rivers in Life - p.2. 5. See Calendar - E. Britannica. The name (Sivan is variously pronounced and written Siva, Shiva, Sivin, Seo, Sheo, Sed, Sihin and Chivin, and the earliest mention of this God is in the books of Amos (Ch. V. 25, 26) “Have Ye offered unto me sacrifices and offerings in the wilderness forty years; O house of the Israel? But Ye have borne the tibernacle of your Moloch, and chien, your images, and star of your God which Ye made yourselves; therefore will I cause Ye to go into captivity bef ore Damascus” and it is evident from this that even then (B.C.955) the emble ms under which Siva is still worshipped and the marks which its followers put on their foreheads were well known - E.Balfours, Encyclopaedia of India. 1. The events occured on the 6th day of the third month Sivan - Analysis of Scripture History - p.77. Sivan may - Historians’ History of the world Vol.I. p.283. The Civilization of Babylon and Assyria - p.434. 2. In Ugro - Finnic and other Turanian dialects ZIVO - or Sivo - and Siva is protecting deity armong the Lapps. The Turkish sev - kind; Akkadian Se-favour; sub-heart. - Faiths of man p.308. The worship of the God siva or his counter part of deity finding its birthplace among the fiercer Scythian Tribes and then accepted into Brahmanism as a form of the Vedic Rudra - The Literary History of India p. 182 R.W. Frazer. 3. Another singularly able orientalist Mr. Paterson wrote that in the Asiatic researches, “The doctrines of Siva’s seem to have extended themselves over the greatest portion of mankind. They spread amongst remote nations who were ignorant of the origin and meaning of the rites they adopted, and the ignorance may be considered as the cause of the mixture and confusion of images and ideas which characterised the mythology of ancient Greeks and Romans. Siva in his creative power become Zeus Triopthalmos the three eyed (a special characteristic of Siva) Jupiter and Osiris - Prof. Maspero shows a curious point of conduct between the worshippers of Baal in Syria and the worshipper of Siva - when Saivaism went abroad on its strange missionary career, this Bull worship was promient. We must all differ to an Indian authority as shrewed as Colonel Tod. He holds that this Bull worship was the strongest evidence in Palastine, Egypt etc. of Sivan derivation - India in Primitive Christianity - Arthur Lillie. 1. The Indian God Shiva or Shiba father of Sebo appears in the Ural Altaik astronomy of the Ackkadian the third star of their seven parent stars - History of Chronology of Myth Making Age - p.85 - J.F. Hewitt. 2. Suwa - A Japanese deity, who is the God and protector of the huntsmen - A Dictionary of the Religions and Ceremonies of the Eastern Nations. 3. Wacher is influenced by this circumstance, among others to conclude that our ancestors brought the word (Sun) with them from the East ... Chaucer uses sunnish i.e. golden like the sun - English Dictionary - Richardson. 1. Wife of Chosroros II - Twin Rivers - p. 129 - Seton Lloyds. 2. It is worthy to note that the Sanskrit word Linga means literally a sign , a pole or a staff as also does the Great word Phallos; so that is unlikely that many supposed illustrated of Indian and Greek Phallic worship may be based upon on ancient Ankos, which really refer to sun-pillars or emblamic poles carried in religious processions - Sanchi and its Remain - p.50 General F .C. Maisey. 3. The word Obelisk according to Bryant is derived from Obel, the name of the God to whom they are dedicated ... Obel was the Appolo of Syria and proba bly Heluogabalus was the same deity, for this God was represented by a black symbol of conical form, which was said to have dropped from heaven, and was revered as an image of the sun, at Emeca Worship of the Serpent - J.B.Deane. 4. Mount Kailasa is the highest peak of the portion of the Tibetian Himalayas lying to the north of lake Manasarovar. It is supposed to resemble Linga in shape and an appropriate dwelling place for Siva and Parvathi - C. Tawney - Liberator - Aug. 26-1945. 1. Adam’s speak - A mountain in the island of Ceylon, the inhabitants call it Hamalel and the Europeans ‘peak’ because the highest part of it is in a pyramidal form - A Dictionary of Religious Ceremonies of the Eastern Nations. * எல்+ஐ+அம் = எல் ஆகிய கடவுளின் இடம். 1. The Phallic emblems were generally worshipped in ancient time. The Phallic cult of ancient Shinto really forms an integral part of its essential naturalism and as it considers patiently the religious mission of the Gods - Since 1868 most Phallic emblems have been removed from public places by order of the Government but Dr.Kats says that even now in the secluded parts of the land public Phallic worship is continued - Shentoism - The Indigenous Religion of Japan - p. 41. A.C. Underwood. 1. The worship of the Phallus passed from India or from Ethiopia into Egypt , from Egypt into Asia-Minor and into Greece is not so much a matter of astonishment - these nations communicated with each other; but that this worship existed in countries a long time unknown to the rest of the world in many parts of America, with which the people of the eastern continent had formerly no communication is an astonishing but well attested fact, when in Mexico, was discovered there was found in the City of Panuco the peculiar worship of the Phallus well established, its image was adorned in the temples, there were in the public places the reliefs which like those of India represented the various manners and the union of the two sexes. - If we turn to the temple s of Central America which in many respects exhibit a strict correspondence with those of India, we find precisely the same symbols, separately and in combination - Opiolatreia - pp. 19, 20. 1. The sacred stone was Bathel or house of God; no habitation of a mere spirit, but the dwelling place of deity itself. The worship of these sacred stones was common to all the races of the Semetic family. The famous Black stone of the Kaaba at Mecca is a standing witnees of the fact. So firmly rooted was the belief in its divine character among the Arabs of the Mohammed’s day that he was unable to eradicate it, but was forced to make a compromise with the old faith by attaching to the stone the traditions of the Old Testament. The sun pillars and Asherim meet with frequent mention in the Bibilical records; and we may gain some idea as to what the latter were, like from the pictures we have on coins and gems of the conical stone that stood within the porch of the Holies in the temple of the Pahian Aphrodite, as well as from the description given of it by Tucitus ... we cannot forget that even in Solomon’s temple built as it was by Phoenician workmen, there were two columns, of stones Boaz and Yakin set on either sides of the porch (1 king VII 21) like the two columns of gold and emarald glass which heradotus saw in the temple of Melkarth at Tyre (Heradt - ii. 44.) - The Herbert lectures 1887. - Origin and Growth of Religion - Ancient Bobylon p. 408 - A. H. Sayce. 1. Filfot cross a type formerly identical with the Swasthika of the Hindus. The later was long ago suspected by Edward Thomas to be a sun symbol, but this was not positively proved until Percy Gardiner found a coin of the ancient City of Mesamira struck with a Gammadion bearing on its open centre an image of the sun - The Migration of Symbols - p. IX. Chief among these ecclesiastical solar symbol that antidated the birth of Chirst and one that found its origin in solar worship. It occurs upon the monuments and utensils of every Primitive people from, China to Yucatan - The Non-christian Cross p. 300 - John Denham Parsons. 1. Inside it was I conclude still is a Fakir’s cell, with an adjoining Shiwala, or temple of Mahadeva containing the Linga and Yoni emblem of Siva and Parvathi and several fragments from the adjacent Buddhist ruins - Sanchi and its Remains - p.8. - General Maisey. I shall endeavour to prove elsewhere that large and small Stupas alike; the pyramid and the pagoda; the pillars near caves, temples and shrines; the Linga of Siva, the ring encircled figures and emblems of Assyria, Persia and Greece; and the pillars of Baal are one and all analogous and of the same origin and significance - Ibid p. 14. 2. Theophrasius in the 4th century B.C., depicts the superstitious Greek passing the anointed stones in the streets, taking out his phial and pouring oil on them falling on his knees to adore and going his way - Primitive Culture - Part 2 p. 14 - E.B. Tylor. 1. When Abraham as mentioned in the Genesis, in asking his servant to take a solemn oath makes him to lay his hand on his parts of generations in the common verson “under his thigh”. It was that he required as a token of his sincerity by placing his hand on the most revered part of his body, as at the present day a man would place his hand on his heart in order to evidence his sincerity. A similar custom is still retained among the Arabs at the present day. An Arab on taking a solemn oath, will place his hand on his membrum verile in attestation of his sincerity - Ancient Symbol Worship in the Religions of Antiquity p. 30 W.M. Westropp. 1. At Tlasalla, another City of Mexico they revered the act of generation under the symbols of the characteristic organs of the two sexes. If we turn to the temples of Central America which in many respects exhibit a strict correspondence whith those (Phallus) of India, we find precisely the same symbols, separate and in combination - Ibid p. 19. 2. In Cyprus it appears that before marriage all women were formerly obliged by custom to prostitue themselves to strangers at the Sanctury of Goddess where she went by the name of Aphrodite ... similar customs prevailed in many parts of Western Asia. Whatever its motive, the practice was clearly regarded not as an orgy of lust, but as solemn religious duty performed in the service of that great Mother Goddess of Western Asia whose name varied while her type remained constant from place to place ... The goddess Ma was served by a multitude of sacred harlots in Camera and crowd of men and women flocked to her sanctuary from the neighbouring Cities and Countries to attend the biennial festivals or to pay their vows to the Goddes - Golden Bough - Part IV - p. 39. - J.G. Frazer. In the temple of Aesculapus near Titporaea, there was always in readiness a bed prepared for the purpose of incubation, which was practised there, as in the other sanctuaries of that God - Phallic worship, p.65 - George Ryley Scott. In Erech and Accad prostitution became a religious duty, whose wages were consecrated to the Goddess of love. She was served by Eunuchs and by trains of men and boys who dressed like women and gave themselves to women pursuit. The Herbert Lectures - Orgin and Growth of Religion in Ancient Babylonia, p. 206. A.H. Sayce. 3. The early monarchs of Babylon were worshipped as Gods in their life time . Mesha, King of Moab called himself the son of the God Kemosh - Josephus tells us that down his own time, in the first century of our era, Berd Haded I , whom he calls simply Adad and his successor Hazel, continued to be wor- shipped as Gods by the people of Damascus who held processions daily in their honour. Some of the Kings of Edom seem to have gone a step further and identified themselves with the God in their life time. The kings of Tyre traced their descent from Baal, and apparently professed to be Gods in their own person several of them bore names which are purely composed of names of Baal Astarte; one of them bore the name of Baal pure and simple certainly we hear of kings of Tyre and Siddon who were priests of Astarte - Lolden Bough, Vol.IV, p. 13. 1. There is the same uncertainty about numerous small Phalli that have been found ... many of these small figures and objects were very possibly talismans, amulets or charms - The Archaeology of the Holy Land - P.S.P. Handcock. The vast antiquity of the Phallic necklace can be easily demonstrated. The Phallus as an amulet is shown by the number found among Egyptian sculptures. No visitor to Egyptian antiquities needs to be told this ... Indeed it was held to have been consecrated by Isis herself. The Phallus was the most sacred amulet worn by the vested virgins of ancient Rome. Moreover we find that sesortres of the early twelveth dynasty, who conquered Asia set up memorials of Phallic nature among the people who had acted bravely; but among the degenerate, female emblems engraved. On stelae were set up. Who shall say these objects may not have been the origin of those still to be found so universally throughout India. In the ruins of Zimbawe in Central Africa, are to be seen Phalli carved upon stone; similar to those found in Sardina which are said to be Phoenecean. The like have been seen by the writer on the so called Phoenecian ruins of Hujar Kham in Malta again numbers of Phallic amulets in Bronze are found in the museums of the Collegio Romano of Cortona and Bologna - The Evil Eye P. 151. Frederick Thomas Elworthy. We see in the sculptures and paintings a series of the most varied formations of the Phallus extending from their monsterous works to the amulets for suspension in wedding the newly married woman was obliged to sit on the Phailus in order to present as if it were her chastity to it - Ilios, the city of the Trojans P. 276 - Henery Selihmann. ... It was a protecting power against evil influences of various kinds, and as a charm amulet, against enemy and the evil eye, as at the postern gate of at Alatri and Pompaii and as frequently occurs in amulets of Porcelain found in Egypt, and of Bronze in Italy ... at Pompaii, was found a gold ring with the representation of the Phallus in its Bezel, supposed to have been worn by a barren women. To propitate the deity and to obtain offspring, offerings of this symbol were made in Rome temples by women and this custom has been retained even in modern times at Isernea near Naples. Stone offerings of Phallus are also made at the present day in a Buddhist temple in Peking and for the same object Mohammadan women kiss with reverence. In the 16th century, St. Foutin in the south of France, St. Ters at Antwerp and in the last century saints Cusmo and Damiano at Isernea near Naples, were worshipped for the same purpose by young girls and barren women. Sir Gardiner, Wilkinson records similar superstitious practices at the present day at Ekhmin in Egypt - Religions of Antiquity - H.M. Westropp. P. 28. 1. Elah, is the name of God in Arabia, from whence with adding the article is for- med Al Elah, and by abbriviation Allah which signifies the true and only God, creator of the universe - A Dictionary of the Religious Ceremonies of the East. Melcbezedek worshipped God under a different names evoking him as Elian - Chips from the German workshop - p 374 Maxmuller. 2. இலிங்கம் - Tamil Ilanku ‘what shines’ - இலங்குவது. Etymological and comparative Lexicon of the Tamil Language (சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி) Rev. S. Gnanaprakasar - O.M.L. 3. Among the Semites sacred pillar is universal ... for the God and Goddess were often worshipped together, and than each would have a pillar - Lectures in the Religions of the Semites P. 21 - Herbert Lectures - W. Robertson Smith. 1. The Mohenjo Daro Harappa finds defintiely prove that Shaivaism existed before the arrival of the Aryans in India, and the inscriptions found at the sites and read and interpreted by Father Heras, remove all doubts about the existence of Shaivaism in prehistoric times. The linga worship and the charcteristic attributes of Siva like the three eyes, the trident, the snake, the axe etc. found in the inscriptions prove definitely that Shiva was worshipped by the Indian people before the influence of the Aryans - The Philosophy of the Lingayats. 2. The humped Indian Bull (Box Indicus) all of which are freely figured in Sumerian, Hitto, ‘Phoneacian and Kassi seals as sacred animal of the East - Indo-Sumerian seals deciphered P.20 L.A. Waddell. In connecting with a vase design, including a bull ... showing a humped bull of Indian type unknown in Mesopotamia........ he said that although no scene of animal worship had yet been found of in Mesopotamian sites, it was a common motive of ancient Indian seal stones. ‘Our vase fragments’ he added put the problem on Indo-Sumerian connection on entirely new basis - Frankbont, Field Director of the Iran expedition of the Oriental Institute of the university of Chicago - The Illustrated London News 6th Nov. 1937. In two small bronze coins of the town (in Syria) which exhibit respectively humped bull with a crescent above it - ZEUS. P. 587. 1. The bull was also an impersonation of India and of siva among the Semites the bull form of God is peculiarly prominent, there is not a God in semitic religions who is assimilated to and represented as a bull. The God moon Sin is specially termed, the bearer of the mighty horns. The word mighty “abbir signifies bull and the passage in which it occurs in the scriptures should be rendered ‘bull’ rather than mighty one. Yahweh who throughout earlier times worshipped in the form of a bull, was the bull of Israel. In Egypt the bull worship, that is, the representation of Gods as bulls, was one of the features of religious cult ... The typical representative of the archaic God of Greece Dionysus remained however a bull God. Many of the Greeks say Plutarch “represented Dionysus in the form of bull” - The mothers - Vol. III . 191. 1. In ali lands he (bull) was the personification of the primitive and basic sun God. The Greeks worshipped him under the name of Epaphus. His image is to be found upon a large number of their ancient coins and monuments. Bacchus was depicted with the head of a bull, as was too Moloch, the God of the Ammonites. It is through the bull worship was of Egyptian orgin - Phallust Worship - P. 79. 2. The bull figures in the heavens and bulls, bisons minolitours and parts of these are too numerous for specification. The animal was worshipped under symbols on as represented by images. We see this illustrated in the case of the Jews who fell into the idolatory with the sanction of Aaron himself. The idolatory was probaly never fully suppressed. It was openly removed under Teroboam, who made two calves and set one in Bethel and the other in Dai ... In this case as in the preceding, the calf was recognised as the God that had brought the people out of the land of Egypt. - Studies in ancient History . 3. A vivid reminiscence of sacred Zoogany survived in England down to Tuder time. In the meadows of Manor of Habyrdon now known as Bury St. Edmonds, a white bull was kept, which was never yoked to a plough and enjoyed ease and plenty. Whenever a married maid was desirous of offspring the bull was led i n procession through the principal streets of the town to the principal gates of monastery attended by all the monks singing and a shouting crowed of women walking by him and striking his milk white sides and pendulous dew laps. The bull being dismissed the women entered the church and paid her vows at the altar of St. Edmond kissing the stone and entreating with tears for the blessing of a child - The Mothers Vol. III p. 190. 1. Osiris Apis (Bull) under the name of Sarapis was worshipped for and wide throughout the countries bordering Mediterranean during the Hellanic age; till Tetullian exclaimed indignantly it is not Egypt now - a - days so no Greece but the whole world swears by this African as in Crete the fertilizing bull was the long run identified with the sun - ZEUS, p.49. 1. Its (Serpent worship) place in Egypt, and in Palastine, even among the Hebrews, in Tyre and Babylon; in Greece and Rome; among the Celts and Scandi navians in Europe; in Persia and Arabia in Cashmere and India; in China and Tibet; in Mexico and Peru; in Abysinia and generally throughout Africa. Where it still flourishes in Java and Ceylon, among the Figians as we saw it still prev-ails and in various parts of Oceania. In one place the God was a living serpent; in another a collection of serpents as if the whole species was religiously regarded. The Thebans esteemed serpante genae; Acatus one of the Athenian king was reputed of serpent breed and the honour of having been first king of Athens was assigned to a dragon or to Cecrops, who was half a snake - probably as being on the mother side not of serpent stock. The kings of Abysinia put the serpent first on their list of kings as the progeneter of the Royal line. In Peru where the worship of the serpent was conjoined with sun worship - The Studies in Ancient History - p. 522. Another emblem of God only one referred to is the snake. The snake is one of the most common symbols of Shiva in modern Hinduism. Thus one of the inscriptions of Mohenjo - Daro informs us that “Meena meditates on the snake of the three eyed one” - Fr. Heras. Ophiolatria, the worship of the serpent next to the adoration of the Phallus , is one of the most remarkable and at first sight unaccountable forms of religions the world has ever known. Until the true source from whence it sprung can be reached and understood, its nature will remain at mysterious as its universality, for what man could see in an object so repulsive and forbidding in its habits, as this reptile, to render worship to its one of the most difficult of problems to find a solution to. There is hardly a country of the ancient world, however where it cannot be traced pervading every known system of mythology, and having proofs of its existence and extant in the shape of monuments, temples and earthworks of the most elaborate and curious character. Babylon, Persia, Hindustan, Ceylon, China, Japan, Burmah, Java, Arabia, Syria, Asiya minor, Egypt, Ethiopia, Greece, Italy, North and Western Europe, Mexico, Peru, America all yeild abundant testimony to the same effect and point to the common origin of Pagan system wherever found Ophiolatria - p.1. 1. Almost all nations have represented the lightning by a weapon. Among the Chaldian it was depicted by a trident as well as a pitch fork and an axe. The trident with transces zigzag with lightning is frequently exhibited in the hands of Assyro Chaldic Gods. On a cylinder dating back to all oldest times of Chaldian and the handle of the trident held by the God of storm lets fall a yet of water into the mouth of a deer - The Migration of Symbols. - p. IX. 1. In the sculptural representation of the Hindu Gods a remarkable innovation took place by the end of the first century. Before that time they appeared in ordinary human form with two arms and one head in Buddhist sculptures - on the coin of the Greece - Indian king Kadphises II dating about from 50 A.D. Siva still appeared as a two armed deity - India’s Past - p. 85. 1. Horned Gods were common in Mesopotamia, both in Babylon and Assyria. The great Gods and Goddesses had seven horns, which is the reason that the divine lamb in the book of revelation was said to have seven horns ... The horns were a sign of divinity. When king or high priest appeared as the God Asshur with the queen or high priestess as his consort Ishtar, the appropriate number of horns was worn on the royal pair being then regarded as the incarnat e deities. When Alexander the Great raised himself above the king of the earth and made himself a God, he wore horns in sign of his divinity hence his name in the Koran Dhu’l Karnan, the two horned ... The Indian figures of the horned Gods found at Mohenjo - Daro, are of the earliest bronze - age. The most remarkable is that of a man with bull’s horns on his head sitting crosslegged, surrounded with animals the representative was regarded in historic times as a form of Siva and is called Pasupathi ... When in relief sculpture Pasupathi is three faced, as here; but in figures in the round he has four faces. Such a representation in a native attempt to show the all seeing God, as is found in Europe in the four faced of Janus. It is still uncertain whether the four faced form arose independently in India and Europe, or whether one is the prototype of the other if the later, the India appears to be the earlier - The God of the witches p. 15 - Margret Allice Murray. 1. The Babylonions are said to have devoted purple to the dress of their idols and Tertullian speaks of its use among the ancient kings of Egypt and Babylon ... The Tyrian purple and purple stuff were esesntially articles of luxury varying in price according to times and quality. They were always costly and vied in value even with gold itself; consequently we find them reserved for the hanging of temples or employed for the robes of priests and kings. Moses, it is said, used purple stuffs for the tebernacle as well as for the habits of high priests and kings ... By the Greeks and Romans purple was regarded as the peculiar insignia of royalty, or of official distintction such as Magistrates, Millitary officials, Priests etc. It use was forbidden to the common people, and laws were made inflicting severe penalties and even death itself upon all under the dignity of an Emperor who should presume to wear it - Shells as Evidence of the Migrations of Early Culture - p. 7 - J. Welfrid Jackson. The Romish Church the prevalent colours for sacred dresses etc. are purple or scarlet - Faiths of Man p. 470. 1. Sacred shell is the chank shell of which fetch great prices. Psalm (XXVI , 3) says blow up the trumpet in the new moon in time appointed, on our solemn feast day. The Hindus similarly announce some of their festivals by the sound of the sacred shell - Cyclopaedia of India - E. Balfour. 1. It spread for and wide, until it came to play a part in religious services of Christian and Jewish, Brahman and Buddhist and Shamaniste, in widely different parts of the world. In Mediterranian, In India, in Central ஹளயை, in ஐனேடிநேளயை யனே துயயீயn. டீஉஉநயnயை யனே ஹஅநசica. In Many of these places it was supposed to have the definite ritual object summoning the deity. Chank shells especially celestial specimens are held in special veneration by the Chinese and are kept in the Pagodas by the priests for use in special occasion ... Mosso relates that the Triton is still sounded in church at Pied Mount during the services in holy week at Chieri. Mrs. Zelia Muttall has published a remarkable scene from an unpublished manu script of Sahagun’s now at Florence, representing the ancient Maxican’s act of homgae to the sun. Two priests offer blood by piercing their ears, two others burn incence in a characteristically Egyptian fashion, and another pair below conch shell trumpets. The use of the shell trumpet in a similar ceremonial for sun worship in Indonesia indicates one stage in the route before from Crete to America. One might multiple such illustrations almost without limit to demonstrate the reality of the culture bonds between these shell elements and the rest of the sun cult both in the new world and in the old - shells as evidents of the migrations of early culture. 1. He (the Jupiter of Syria) is represented as a bearded God with phrygian cap ... At his side hangs his sword in its scabbard. His right hand brandishes a double axe; his left gashes a thunderbolt consisting of six spirally twisted lines each of which tipped with arrow head. The bull that supports the God has a resette on the head between his eyes - Zeus - p. 619 - Arthur Bernard Cook. 2. The first of the series a deity wearing a conical head dress decorated with rings stands upon the back of a bull, the horns of which are wreathed with garlands. His left leg is forward (as the faces to the right). In his right hand which is drawn back there is a triangular bow, and in his outstretched hand he holds up a forked emblem, like the lightning trident, and graps at the same time a code which is attached to the nose of the bull. His dress is a short bordered tunic - The Hittitie Empire, p. 202 - John Garstang. The Syrian Hadad is sometimes represented standing on the back of a bull whi ch he glides with a code. Compare also the statement of Lucian, Zeus the chief God of Hicropolis which replaces Carchemish was supported on a bull. The same God was called Hadad by Maorobias. On the bull is Hittitie symbolism... garlanded bulls are informed are a familiar sight in the streets of Benares at the festivals of Siva, and it is from the Indian mythology that we get our nearest insight into the character of these deities and the meanings of those sculptures. For the bull represents Siva whose emblem was a trident and also an axe - Ibid. 3. This God is seated on the bull throne and the Goddess wearing the mural crown sits on a lion throne with staff and mace forming a pair. There on the left hand of the image of the bull God and on the right that of the mother Goddess both deities are enshrined representing the mated pair of the established Hittite divinities. But that which arrests the attention and may throw light upon the broader question of the Hittite orgins is the obvious parallelism with the symbolism of Siva - The Hittite Empire - p. 205 - J. Garstang . The Syrians gave the name Adad to the god whom they revere as first and greater of all. His name signifies. ‘The One’ They hடிnடிரச வாளை ழுடின யள யடட யீடிறநசகரட, ரெவ வாநல யளளடிciate with him Adargates and assign to these two divinities supreme power over every body ... all were below this deity among the Babylonians and northern Semitcs. She was called Ister the Astoreth of Bible and Astarate of Phoenica - Ibid. At the neighbouring village of San-However there was preserved until quite recently a walled pool containing a sacred fish regarded locally with reverence as great its situation at the foot of the Doluk Baba hill suggests the posession of the famous shrine, the one local monument recorded. It (Jupiter Dolichenus) seems more the less to represent the chief deity of the place. He stands on a bull holding the emblem of lightning and a double axe. His consort was a lion Goddess described on inscriptions as Herasanta - Ibid p. 305. “The beared God who grasping a trident in his extended left hands heads, the procession of male figures is probably the father deity. The great Hittite God of thundering sky, whose emblems were the thunderbolt and the bull; for the trident which he carries may resonably be interpreted as thunderbolt. The deity is represented in two stone monuments of Hittite art which were found at Zenjirli in Northern Syria and Bobylonia repectively. On both we see a male God wearing the usual Hittite costume of tall cap, short tunic, and shoes turned up to the toes, a crescent hilted sword in girt at his side; his hands are raised in the right, he holds a single headed axe or hammar, in his left a trident of wavy lines, which is thought to stand for forked lightning or a bundle of thunderbolts. On the Babylonian slab which bears a long Hittite inscription the God’s cap is ornamented with a pair of horns. The horns on the cap are probably those of a bull; for in another Hittite monument found at Malatia on the Euphrates there is carried a deity on the usual Hittite costume standing on a bull grasping a trident or thunderbolt in his left hand, while facing him stands a priest clothed in long robe holding a crook or curved staff in one hand and pouring a libation with the other.” In the sculpture the God on the bull holds in his right hand what is discribed as a triangular bow instead of a mace or an axe or a hammer. The Hittite Thunder God also is known to us from a treaty of alliance which about the year 1290 B.C. was contracted between Huttusil, King of Hittites and Remeses II, King of Egypt. By a singular piece of good fortune we possess copies of this treaty both in Hittite and in Egyptian languages. The Hittite copy was found some years ago inscribed in cuniform characters in a clay tablet at Borgazkeni; the copies of the treaty of Egyptian language are engraved on the walls of the temples of Thebes. From the Egyptian copies which have been read and translated, we gather that the sun God was principal deity, of the Hittites and the Hittite scales which appended to the treaty exhibited the king embraced by the Thunder - God and the queen embraced the sun goddess Arenna. The Hittite divinity of thundering sky appears to have long survived at Doliche in Commagene, forin late Roman art he reappears under the title of Jupiter. Dolichenus wearing a phrygian cap, standing on a bull and weilding double axe in one hand and a thunder bolt in the other. In this form his worship was transported from the native Syrian home by soldiers and slaves, till it had spread over a large part of the Roman Empire especially in the frontiers, while it flourished in the camps of the legions. The combination of the bull with the thunderbolt as emblems of the deity suggests that the animal may have been chosen to represent the sky God not merely of its virility but of its voice; for in the peal of thunder primitive man may well have heard the bellowing of a celestial bull. The Goddess who at the head of the procession of women confronts the great sky God in the sanctuary at Boghazkai is generally recognised as the Divine Mother, the great Asiatic Goddess of life of fertility. The tall flat totted hat with perpendicular grooves which she wears, and lioness or panther in which she stands, remind as the turetted crown and lion drawn car of Cybele, who was worshipped in the neighbouring land of Phrygia across the Halys so stagnates the great Syrian Goddess Hierapolis Bambyce, was portrayed sitting on lions and wearing a tower on her head. At Babilon, image of a Goddes whom the Greeks called Rea had the figures of two lions standing on her knces - Golden Bough - IV - pp. 134 - 137. 1. He is seated on a low Indian throne in a typical attitude of yoga with legs bent double beneath him, heel to heel and toes turned downwards. His arms are outstretched (presumably) with thumbs to front resting on knees. From waist to shoulder the arms are covered with bangles. The structure is probably of a sacred character and in view of the trident post and bull which are peculiarly associated with Siva whose prototype has been found in Mohenjo Daro - Excavations at Harappa, - Vol. 1 - p. 120, Madho Sarup Vats. 1. Seal No.22 depicts of a figure probably that of a deity seated in, which may be a yogic attitute with the heels pressed together on a low dais, whose legs represent those of a bull. The arms are outstretched on either side; but it is possible that the hands are intended to rest on the knees and the seal cutter merely raised them slightly to obviate any confusion of the arms with the legs. On each arm there is a large number of bracelets. The head dress is a twig with leaves like these of the pipal. The horns if indeed they are horns are difinitely separated from the head they are moreover represented as fastened to the base of the twig. The figure has threee faces, one in front and two in profile. On seal 235, there is somewhat similar figure, the stool is omitted however, and the figure is apparently seated upon the ground. The head dress consists of two horn like objects between which there appears to be a spike of flowers. A pigtail hangs down on one side of the head which has one face only in profile facing to the right. Seal No. 420, an enlargement of whcih is shown in Pl.C. (F) is particularly well preserved; it has been described by Sir John Marshall who has identified the figure with the God Siva; comparison of these three seals shows many points in common apart from the ornaments they wear. The figures are made save for langet worn round the waist and apparently also passed between the legs. A garment very similar to the langet worn at the present day in India. On seal 222, the figure has only one face but on Nos. 235 and 420 it has three. On No. 420, there are six beasts and the figure of a man around the God, on the left of the impression an elephant and a tiger with a man between on the right, a rhinocerous and a buffalo, and below the dais on which the God is seated there are either two antelopes or mountain goats as before mentioned. Sir John Marshall has identified this deity with Siva in his aspect as Pasupathi - Further Excavations at Mohanjo - Daro - p. 33 - Mackay. Side by side with earth and Mother Goddess there appears at Mohanjo - Daro a nude God who is recognisable at once as a proto-type of the Historic Siva. He is strikingly portrayed on the roughly carved seal illustrated in Pl. XII ; 17, which has been recently brought to light by Mr. Mackay. The god who is three faced is seated on a low Indian throne in a typical attitude of Yoga-like Saivaism itself Yoga had its origin among the pre-Aryan population and this explains why it was not until epic period, that it came to play an important part in the Indo-Aryan religion. Even before the discovery of this seal Ramaprasad Chanda had pointed out that the head of the male statue from Mohenjo Daro illustrated in Pl. XCVIII has the eyes concentrated in an attitude of Yoga ... He is not only the prince of yogies; he is also lord of beasts (ஞயளரயீயவாi) யனே ளை ளநநஅiபேடல in சநகநசநnஉந வடி வாளை யளயீநஉவ டிக this nature that the four animals tiger, rhinocerous, elephant and buffalo are group about him - Sir John Marshall. 1. His (Siva’s) name does not occur in the Vedas, but in later Hinduism he is an important divinity. Sivan does not occur in the Vedic Hymns as the name of a God, but only adjectives in the sense of kind auspicious - Encyclopaedia Britannica. 2. Indian religion is commonly regarded as the offspring of an Aryan religion brought into India by invaders from the north, and modified by the contact with Dravidan civilization - but - we might tell that it would be more cor rect to describe the Indian religion as Dravidian religion stimulated and modified by the ideas of foreign invaders. For the greatest deities of Hinduis m such as Shiva, Krishna, Rama, Durga and some of its most essential doctrines are either totally unknown in the Vedas or obscurely adumbrated in it. The chief characteristics of the nature of Indian are not the characteristics of religions in Persia, Greece, or other Aryan lands. - Hinduism and Buddhism - Vol. 1 - p. XX. - Sir Charles Elliot. 3. Indian Culture - Vol. II - Siva - His Pre Aryan origins - Amallananda Ghosh. 1. The theory and practice of yoga are entirely foreign to the trend of early and later Vedic religious thoughts and inclinations. It has now been definitely shown by Mr. Chanda with the help of some Mohenjo - Daro sculptures that the idea can be traced to Indus people. It is but natural that the people should have attributed to their God all the characteristics of a yogie including austerities and self - mortification. It is common to believe that the creator himself must perform austerities in order to aualify himself for the capacity of creating manthought Gods, in his own light; process which could bring destruction on man must have been gone thoroughly by Gods to attain their exalted position. It must have been such a belief which led the Indus people to conceive of and depict their God as a meditator. The intimate connection between Samkhya and yoga are too well known to require repetition. The philosophy of the yoga system may be regarded as practically the same as that of the Samkhya with conception of a personal God super imposed upon it. It therefore appears certain that Samkhya too, which orthodox Hindu opinion has regarded as non-Vedic in character, was, like yoga, a system of thought which had a pre-Vedic origin. It has been suspected for a long time by scholars that some non-Aryan tracts are contained in the later-day. Siva worship the tract assumption that everything. Aryan must have been nobler than and superior to the non-Aryan led them to think that the uncanny features which the worship involves, could not have come out of the Aryan religion without the impact of some alien ideas. But so long there was no evidence to lend force to the conjecture or to asce rtain what was the nature of the Aryan influences - Indian Culture - Vol.II - Siva, His Pre-Aryan Origins - Amalananda Ghosh. 1. The word Sambu - as a Vedic epithet, is well known to be derived from Sam; blessing, welfare, prosperity plus the radical bhu; ‘be, become and to mean’ being a blessing beneficient as a name in later times, of Siva. I feel that it is likely to have been chosen because it suggested in the minds of the speakers some Dravidian word akin to the Tamil Cem, ‘redness’ (of Tamil cempoo ‘copper’) the colour red being always associated with this deity. That is to say, the application of the epithet to Siva - seems to me to become more intelligible under the above assumption of the existence in northern India at an early period of a race or races related to the Dravidians of the South, Sambu as a name of Siva becomes in Tamil Campu which, if an early importation, would as I argue, have been originally pronounced with an initial sound like that of the English Church. I venture the suggestion that this word has reverted to Sanskrit from some Dravidic dialect in the form of Jambu, as a name of Siva bearing the connection of ‘reddishness’. Both Jambuka and Siva are used to denote a jackal, possibly because of the tawny colour of the animal and when it is considered that the area characterized pre-eminently by the worship of Siva must have been originally south of the zone into which Aryan civilization had advanced, it will not, I think, be felt to be impossible that it was to this unkown region that the expression Jambu-dvipa, ‘the Siva-country first had a reference - Sanskrit Element in the Vocabularies of the Dravidian Languages pp.61,62 - Remarks by M.Collins. 1. Saiva Siddhanta the most important group, to which the majority of the priests belong, characteristic of the group is the use of formulas ... Pasupathi now totally disappeared with but a trace of it in the cult of the Linga, the Phallus, as a symbol of Siva - Batara Guru identified with Siva of Bali. - Miguel Covarrubias. 1. It is an established fact that the God Siva was the form which the Vedic God Rudra later assumed. In other words, the God Siva at least as he has been described in classical times was unknown to the Vedas; and Rudra, the tempest God of the Vedas, is not given any of the distinctive epithets which later came to be associated with the God Siva. If we accept the alleged identification, we have to date the God Siva to his Proto-Type in the middle of the third millennium B.C. For that is the date of the Mohenjo - Daro finds as has been proved by Selon Lloyd on the strength of the happy discovery of representation of a typically Mohenjo - Daro scene - an Indian elephant, a rhinocerous and a crocodile - Identification of Mohenjo - Daro figure - B.A. Saletore - The New Review Vol. X 1939. 2. Indeed it is possible to trace the beginning of the tree and serpent worship, the pipal tree cult, the Phallus cult as well as Siva of our time to the fourth millennium B.C. - Creative India - p.2 - B.K. Sarkar. 3. Some of the cosmic notions seem to be Dravidian. Gods, were being added to the Aryan pantheon, Dravidian or rather their attributes and motives, and some-times even their names, were transferred to the Aryan Gods, and a new and composite creation resulted gradually from this sort of union - Origin and Development of Bengali Language - p. 41. 4. A Dravidian God of the mountains and wastes, a red God, probably had his name translated to Aryan as Rudra and then identified with the Aryan God. ‘Rudra’ the roarer, and later on, his Dravidian names (cf, Tamil ‘Siva’ red) have been adopted to Siva and Sambu and this synthesis, sub-limited by Hindu thought in their times gave rise to the puranic Rudra-Siva or Mahadeva, one of the greatest conceptions of mythology. The Aryan Vishnu seems to have been identified with a Dravidian sky God Vin. - Dravidian Religion in Hasting’s Cyclopaedia of Religions and Ethcis. 1. Among such dense Dravidian masses the small Aryan influxes, would make slow progress and we must not be misled by their adopting as their own; the chiefs, heroes, Gods, histories of the Turanians, for all peoples have so acted whether they arrived as conquerers or colonists among settled communities are specially the histories of Babylonia, or Akkada, Assyria, etc. It took long centuries before even a few Aryans got south of the basin of the Ganges, and still longer over the Vindhyas, the deserts of Rajaputana, and Malwa and of Guzarat - Short studies in the Science of Comparative Religions, p. 2 47 - G.R. Forlong. 2. Scientists in England are interested in the announcement that an American expedition is to explore the lost world of Shiva’s Temple, a high plateau in the Grand Canyon, Colarado. The expedition is organised by the American Museum of Natural History ... Shiva’s temple is one of the several plateau isolated by Sheer cliffs a mile high in the Canyon - Times of Ceylon Illustrated, June 27, 1937. ‘Shiva Temple’ is more mysterous than ever with the discovery of ants half an inch long and mosquitoes, which have forgotten how to sting - Ibid. 161 162 175 174 163 164 173 172 * Brahmans of India are divided in comparatively recent Sanskrit usage into five Dravidas and the five Gaudas. The Dravida Brahmans are distinguished from the Gaudas by the fact the former do not eat meat but the latter do eat the meat of the five nailed animal - The Journal of the Oriental Research, Madras 1924 - P.T.S. Iyengar. 165 166 171 170 167 168 169 192 177 178 191 190 பாபிலோன் மக்கள் வழிபட்ட தந்தைக் கடவுள் 179 180 10, 000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில்; அமெரிக்காவில் உள்ளது. Colarado was practically unknown until 1858 when gold was discovered in the plain near Denver. Before the coming of whitemen tow types of Indians inhabited the Country, Shiva’s Temple belongs to a much more ancient Indian culture. Before the end of this year Shiva’s Temple will again be lost to the world. New Review, London; Sep. 23, 1937 189 188 181 182 187 186 183 184 185 208 193 194 சீரிய மக்களின் அதாத்து என்னும் தந்தைக் கடவுள் 207 206 மீனவர் (கிரேத்தர்) பழைய அரண்மனையிற் காணப்பட்ட ஓவியம்; கடவுள் வழிபாட்டில் சங்கு ஊதுவதைக் காட்டுவது 195 196 அசந்தா குகை ஓவியம் கி.பி. 500 205 204 197 198 கிரேக்கத்தில் காணப்பட்ட இமில் உள்ள இடபம் பொறித்த பழைய நாணயம் இரண்டாம் கட்பிசிஸ் அரசன் கி.பி. 50 வரையில் அடித்து வழங்கிய பொற்காசு 203 202 கிரேத்தாவில் வழிபடப்பட்ட தாய்க்கடவுள் (காளி) எகிப்தியரின் தாய்க் கடவுள் சாஞ்சிப் பௌத்த கோயிலிற் காணப்பட்ட சிவ இலிங்கம் 199 200 அயர்லாந்தில் காணப்பட்ட சிவ இலிங்கம் சின்ன ஆசியாவிலே எயுக் என்னும் இடத்தில் காணப்படும் இடபக் கடவுளும் பூசாரியும் 201 224 அராபியர் யூதரின் சிவலிங்கங்கள் அல்லா - Alla எலோஹிம் - Elohim சின்ன ஆசிய மக்களின் தாய்க் கடவுள் 209 210 கிதைதியிற் காணப்பட்ட அம்மை அப்பர்க் கடவுளர் பொறித்த நாணயம் “பெத்தேல்” பழைய பலஸ்தினியரின் சிவலிங்கம் சீரிய மக்களின் அதாத்து என்னும் தந்தைக் கடவுள் 223 222 கம்போதியாவிலுள்ள முருகன் சிலை சீரியரின் சிவன் சிலை 211 212 போர்னியோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் சிலை 221 220 மொகஞ்சதரோ முத்திரை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள பசுபதி சிவன் வடிவம் 213 214 219 218 மொகஞ்சொதரோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் 215 216 217 240 பழைய கிரேத்தா (crete) நாட்டில் மழு வழிபாடு 225 226 எகிப்திய குழு புலித்தோல் ஆடை போர்த்துக் கிரியை புரிதல் 1. கருணாமிருதசாகரச் சிறப்புப் பாயிரம் - விருதை சிவஞானயோகிகள். 1. தமிழர் தொன்மை அகவல் - விருதை சிவஞான யோகிகள். 1. Wegenar 1. Arctic Home in the Vedas. 1. பாலைவனம் 1. Sir Herbert Risley. 2. Peoples of India. 1. சொற்கள் மட்டுமல்ல பெரும்பான்மை இலக்கணக் கூறுகளும் தமிழில் இருந்து கடன்பெறாதவையே ஆகும். - ப.ஆ. 1. வையாவூர் - (வைகாவூர்) பழநி. 1. Origin and spread of the Tamil - R.V. Ramachandra Dikshithar. 1. Ibid. 1. Pillars of Hercules. 1. பாரசீக அரசனாகிய சைரஸ் கி.மு. 600 வரையில் பெகிஸ்தன் மலையில் பொறித்த கல்வெட்டுச் சாசனத்தில் காணப்படும் மொழி தமிழோடு ஒற்றுமையுடையதாகக் காணப்படுகின்றது. 1. The Hamitic Indo-Mediterranean race. Rev. H. Heras - New Review vol. XIV. 1. கலைக்களஞ்சியம். 1. தென்னிந்திய வரலாறு ப. 78 - K.A. நீலகண்ட சாத்திரி. 2. கலைக்களஞ்சியம். 1. கலைக்களஞ்சியம். 1. ‘லி’ ஆங்கில மைலில் மூன்றிலொன்று. 1. கலைக்களஞ்சியம். 1. “மனிதன் தன் சமூகத்தின் உறுப்பினனாகத் தான் கற்றவைகளைத் தன் சந்ததி யினருக்கும் தன் இனத்தவர்களுக்கும் கற்பிப்பதையே பண்பாடு எனலாம். இவ்விதம் சமூக வாயிலாய்க் கற்றுக் கொண்டு பிறருக்குக் கற்பித்துக் கொடுக்கும் கற்றுப் பயிலும் நடத்தையே (learned behaviour) பண்பாடாகும். இவ்வித நடவடிக்கை சமூகத் தின் சில முக்கிய அமைப்புகளில் (institutions) நிலைத்திருக்கின்றது. இவ்வமைப்பு களில் குடும்பப் (familial), பொருளாதார, அரசியல் சமய அமைப்புகள் முக்கிய மானவை”. (க.க) 1. பார்ப்பார், அமைச்சர், சேனாபதியார், தூதுவர், சாரணர் (ஒற்றர்) என்போர் ஐம்பெருங் குழுவினராகக் கூறப்படுவதும் உண்டு. 1. தமிழ் இந்தியா - மு.சி. பூரணலிங்கம் பிள்ளை. 1. India Vedic and post Vedic - Talboys Wheeler, Sushil Grpta Ltd., Calcutta, 1952. 1. குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்பவற்றின் பண்கள் முறையே சங்கராபரணம், சாதாரி, கல்யாணி, இந்தோளம், சாரங்கம் எனவும் சொல்லப்படும். 1. அம்பாரி 1. India Vedic and post-Vedic. Talboys Wheeler. 1. acid; 2. body component; 3. extracts. 1. India-Vedic and post Vedic. 1. One must turn to these refined and cultured Pre-Aryans who had a three-horned dancing god akin to Natarajah, a shapely goddess in romantic postures and also a statuette of a dancing girl in provocative poses, with her bunch of hair done in a striking manner - Culture Forum (1964) - Indu Shekar. 2. Evidences are not lacking in support of the fact that Bharata was a learned scion of non-Aryan family and that he had to run from pillar to post to appease the custodian of law and order before he could float his book of drameturgy as a fifth Veda. Inspite of all pleadings and manoeuvres the unrelenting Brahmanical sages relegated him to the status of a Sudra along with his hundred sons. Depressed and fallen he sought asylum in the court of Sudra King Nakusa - Ibid. 239 238 தென்னிந்திய சிவன் கோவிலில் இலிங்கம், நந்தி, கொடிமரம், பலிபீடம் வைக்கப்பட்டிருக் கும் முறை; பலஸ்தீனத்தில் பால், மொலோச் கோவில்களிலும் சிவலிங்கம், பலிபீடம், ஆன்கன்று என்பன இவ்வாறே இருந்தன. சீரிய மக்களின் அதாத்து என்னும் தந்தைக் கடவுள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க உலக மக்கள் வழங்கிய குறிகள் 227 228 237 236 229 230 235 234 231 232 233 256 241 242 255 254 243 244 253 252 245 246 251 250 247 248 249 272 257 258 271 270 259 260 269 268 261 262 267 266 263 264 265 288 273 274 287 286 275 276 285 284 277 278 283 282 279 280 281 304 289 290 303 302 291 292 301 300 293 294 299 298 295 296 297 xvi உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் 1. தமிழர் சமயம் எது? . . . 1 2. சைவ சமய வரலாறு . . . 31 3. இந்து சமய வரலாறு . . . 99 4. சிவன் . . . 173 5. தமிழர் பண்பாடு . . . 229 தமிழர் சமயம் எது? ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாசிரியர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : தமிழர் சமயம் எது? ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 304 = 320 படிகள் : 2000 விலை : உரு. 140 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix