தமிழக வரலாற்று வரிசை -10 தாய்நில வரலாறு (இரண்டாம் பாகம்) ஆசிரியர் பேரா. முனைவர் கோ. தங்கவேலு மேனாள் வரலாற்றுத் திணைக்களத் தலைவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் அமிழ்தம் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை - 10 தாய்நில வரலாறு - (இரண்டாம் பாகம்) ஆசிரியர் : பேரா.முனைவர். கோ. தங்கவேலு பதிப்பாளர் : இ. வளர்மதி முதற்பதிப்பு : 2008 தாள் : 18.6 கி. வெள்ளைமேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 14+ 298 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 290 /- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்” பி-11, குல்மோகர் குடியிருப்பு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொ.பேசி: 24339030 அறிமுகவுரை உலக முதன்மொழி தமிழ்! உலக முதல் மாந்தன் தமிழன். உலகம் தோன்றிய போதே உடன் தோன்றி இன்றளவும் கன்னியாகவே இருப்பது தமிழ்நிலம். அத்தமிழ் நிலத்தைத் தாயகமாகக் கொண்டவனே தமிழன். அந்த தமிழனே தொல்மாந்தன். அவனுடைய தொல்பழங்காலந் தொட்டு இற்றளவுமுள்ள வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டுவதே இத் ``தாய்நிலவரலாறு''ஆகும். தமிழக வரலாற்றில் தலைசிறந்து நிற்பது கழக காலமாகும். வரலாற்று இலக்கணப்படி தன்னக, அயலக, தொல்பொருள், நாணயச் சான்றுகளைக் குறைவின்றிக் கொண்டமையால் கழகக் காலத்தைப் ``பொற்காலம்'' என்கிறோம். கடைக்கழகக் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலானது அடுத்து வரும் களப்பிரர் காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையிலானது. இதனை ``இருண்ட காலம்'' என்று கூறுவது குருட்டுத் தனமான வரலாற்று மரபாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் ஆரியப் பண்புகளும், சமற்கிருத மொழியும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்குகிறதோ அக் காலத்தைப் ``பொற்காலம்'' என்றும் ஆரிய மொழிக்கும் பண்பாட்டிற்கும் தாழ்வு ஏற்படுகிற அக்காலத்தை ``இருண்டகாலம்'' என்றும் கூறுவதைத்தான் குருட்டுத்தனமான வரலாற்று மரபு என்கிறோம். இவ்வாறு தான் ஆரியப் பண்பாட்டையும், மொழியையும் மங்கச் செய்து, கழகக் காலப் பண்பாட்டையும், மொழியையும் மலரச் செய்த காலமே களப்பிரர் காலத்தில்தான். இக்காலம் தான் சமணத்துக்கும், சாக்கியத்துக்கும் ஆரியத்திற்கும் சாவுமணி அடித்த காலமாகும். தமிழ் இலக்கியங்களுக்கு இலக்கண நூல்களையார்த்த காலமே களப்பிரர் காலம் தான். எனவே, இதனை இருண்ட காலம் என்கின்றனர். களப்பிரரை யடுத்து தாய்நிலமாகிய தமிழகத்தைத் தோராயமாக கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர் காலத்தில் ஆரியம் தலை தூக்கியது. பல்லவர்கள், அயலகத்திலிருந்து ஆரிய பூசாரிகளைத் தமிழகத்திற்கு இறக்குமதி செய்து, தாய்நிலத்தை ``தேவதானம்'', ``பிரம்மதேயம்'', மகாதேவமங்கலம்'', முதலியனவாக கூறு போட்டு, தமிழ் வழிபாடுகளை ஒழித்தனர். பூவைப் படைத்து பூசை செய்த தமிழன் அர்ச்சனைக்கு ஆட்பட்டான்! கி.பி.9ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையாண்ட முற்காலப் பாண்டியரும், சோழரும் தமிழர் உடலோடும் ஆரியப் பண்போடும்தான் ஆண்டனர். கலையும், பண்பாடும், வழிபாடும் மாறுபட்டன. ஆனால், கோயிற் கலைகளும், இறைநெறி (பக்தி) இலக்கியங்களும் தமிழின் கருவூலக் கணக்கில் சேர்ந்துவிட்டன. பிற்காலப் பாண்டியருக்குப்பின், தெலுங்கரின் விசய நகர ஆட்சியும், நாயக்கர், பாளையக்காரர் ஆட்சிகளும் தமிழகத்தை அலைக்கழித்து ஆங்கில ஆட்சிக்கு அடிகோலின. ஆங்கில ஆட்சி கி.பி. 1750லிருந்து கி.பி. 1947வரை தமிழகத்தில் நிலவியது. அது, புதுக்கால ஆட்சியாக விரிந்தது. ஆங்கில ஆட்சியை விடுதலை வேட்கைக் கொண்டு அகற்றிய பின், தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்த பாராளுமன்ற முறையிலான மக்களாட்சி ஏற்பட்டது. மீண்டும் தமிழ்ப்பண்பாடுகளை மலரச் செய்ய கழக ஆட்சிகள் முயலுகின்றன. பொதுவாக, இந்திய வரலாற்றில் ஒவ்வொரு ஆறு நூற்றாண்டின் முடிவிலும் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதை உணருகிறோம். அத்தகைய மறுமலர்ச்சியைத் தமிழக வரலாற்றிலும் காண்கிறோம். ஆனால், கழகக்காலத்தை அடுத்து வரும் அத்தியாயங்கள் ஒவ்வொரு மூன்று நூற்றாண்டுக்கொரு முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எத்தகைய மாறுபட்டச் சூழலிலும், தமிழ்ப்பண்பாடு, அடியோடு மாறியதும், மறைக்கப் பட்டதுமில்லை! இதற்கு ஒரே கரணியம் செம்மொழியான தமிழேயாகும். அம்மொழியைச் செம்மைப்படுத்த முதல், இடை, கடைக்கழகங்கள் தோராயமாக பத்து ஆயிரம் ஆண்டுகள் உழைத்தன. இன்றளவும் தோண்டத்தோண்டச் சுரக்கும் மணற்கேணிபோல் சிறந்து விளங்கும் நாற்பது கழகக் காலநூல்களும், எண்ணிலடங்கா இறைநெறி இலக்கியங்களுக்கு தமிழ்மொழியின் கருவூலமாக உள்ளன. பேரூழிக்காலங்களிலும் தமிழ்மண் சாய்ந்ததில்லை! ஆரியம் தன்மய மாக்கியும் தமிழ்ப்பண்பு மாறியத்தில்லை! நான்கு வருணபாகுபாடு இங்கு இல்லை. வேற்றுமொழிகளாலும், மேலைநாட்டுப் பண்பாடுகளாலும் தமிழ் மொழியையும், பண்பாடுகளையுமாற்றி அமைக்க முடியவில்லை. காற்றசைவால் அசையும் நாணல்போல் வளையும், ஆனால் நிமிர்ந்து விடும்! சில பொழுது மாறுபட்டதைப் போல் தோற்றமெடுக்கும். ஆனால் ஒடிந்து உருமாறியதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. ``ஓடும், உட்காரும், தாவும், தாண்டிக்குதிக்கும் ஆனால் ஒரேஅடியாக அடிச்சுவடு அற்றுப் போகாது. இதுவே வரலாற்று இலக்கணம்'' என்பார் உலக நாகரிக வரலாற்று நூலை யார்த்த ஏ.சே. தாயின்பி. இதற்கு முற்றிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதே தமிழக வரலாறு ஆகும். விடுதலைக்குப்பின்னும் இதே தனித் தன்மையோடு தான் தமிழக வரலாறு தொடருகிறது. தலைசாய்ந்து போனதைப் போல உணருவோம். ஆனால், கொடை சாய்ந்து விடவில்லை என்பதுதான் உண்மை! ``மூலத்தின் கூறுபாடு பலவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் மீண்டும் மூலமாகவே தோன்றும் என்பது மாந்தவியல் அறிவியலார் கண்டமுடிவு ஆகும். ஆனால், தமிழ்க்குருதியோடு காலந்தோறும் அறுபடாது திகழ்ந்த தமிழ் அறிஞர்களால் தமிழ்ப்பண்பும் தாய்நில வரலாறும் கட்டிக் காக்கப் பெற்றன. அவற்றின் வீரிய மறுமலர்ச்சிக்கு உந்து சக்திகளாகத் தோன்றியவர்களே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவுமாவர். எனவே, தொல் பழங்காலந் தொட்டு, இன்றளவும் அறுபடாமல் தொடர்வது தாய்நில வரலாறே. இந்திய வரலாற்றில் இடையிடையே ஏற்பட்ட அந்நியர் ஆட்சிகளுக்கு மறுதலை இல்லாமல் தமிழகத்திலும் வேற்று நிலத்தார், வேற்றுமொழியார் ஆட்சிகளேற்பட்டாலும் அவை அசைவுகளாகவே நின்றனவே ஒழிய முற்றுப் புள்ளியாகவில்லை. இதுவே, தாய்நில வரலாற்றின் சீரிய தனித் தன்மையாகும். இத்தகைய மாண்புறு வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டிச் செல்வதே இச்சிறுநூல். இந்நூல் உருவாக உதவிய அனைவருக்கும், குறிப்பாக இதனை அச்சேற்றி அழகுற அமைத்து, `தமிழ்மண்' பதிப்பக உரிமையாளர், தமிழ்க்காவலர் கோ. இளவழகனார் அவர்களின் துணைவியார் அமிழ்தம் பதிப்பகம் வழி வெளியிடுகிறார். அவர்களுக்கு நன்றிக் கடப்பாடுடையேன். - கோ. தங்கவேலு பதிப்புரை ‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப்பாகக் காட்டுவது. ‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந் திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (ழுயசல க்ஷயஉhஅயn: துஹடீளு - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவுநிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது. ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர். இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையி லிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது. தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார். பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தாய்நில வரலாறு, தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு, எனும் நூல்களைத் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர் களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (உடயளளiஉ) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத்துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன் கொள்வாராக. தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஒளவைதுரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர்செல்வம், மயிலை னி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன், பேரா.முனைவர். கோ. தங்கவேலு போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப் பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதியுள்ள இந் நூல்கள்ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன்படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்டமிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ்வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன்கொள்ளுங்கள். தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெருமக்களுள் தலை சிறந்தோர் தந்தை பெரியாரும்,மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றியுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம். தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழ நினையுங்கள். இனத்தின் மீளாத்துயரை மீட்டெடுக்க முனையுங்கள். - பதிப்பாளர். உள்ளடக்கம் அறிமுகவுரை ... iii பதிப்புரை ... எii நூல் 9. தமிழகத்தில் விசயநகர ஆட்சி முறை ... 1 10. நாயக்கர்கள் 11. கி.பி. 17,18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் (தமிழகத்தில் ஆங்கில ஆட்சி கால்கொள்ளுதலும், ஆதிக்க வளர்ச்சியும்) ... 59 12. கி.பி. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் ... 99 13. விடுதலைக்குப்பின் தமிழகம் (1947 முதல் இன்று வரை) ... 215 பின் இணைப்புகள் ... 262 தாய்நில வரலாறு (இரண்டாம் பாகம்) 9. தமிழகத்தில் விசயநகர ஆட்சிமுறை (கி.பி. 1336-164.6) முன்னுரை விசயநகர ஆட்சிமுறையை அறிந்துகொள்வதற்குமுன் அப்பேரர சின் வரலாற்றைச் சுருங்கக் கூறுவோம், தில்லிப் பேரரையம் சுல்தானியம் வலிமை குன்றிய போது கி.பி. 1347-ல் அலாவுதீன் பாமான்சா (ஆசன் கங்கு பாமினிதௌலதாபாதில் பாமினி அரசை ஏற்படுத்தினான். கி.பி. 1336-ல் அரிகரர், புக்கர் என்ற உடன்பிறந்தார் துங்கபத்திரையாற்றங்கரையில் விசயநகரைத் தலைமை யிருக்கையாகக்கொண்டு விசயநகரப் பேரரசை ஏற்படுத்தினார்கள். விசயநகரப் பேரரசை உருவாக்கிய அரிகரரும், புக்கரும் முறையே இதனைக் கிபி. 1336-லிருந்து 1357 வரையிலும், கி.பி. 1357-லிருந்து 1377 வரையிலும் ஆண்டார்கள். இவர்கள் காலத்தில் விசயநகர அரசு, குமரிமுனை வரை பரவியது. புக்கருக்குப் பிறகு இரண்டாம் அரிகரர் (கிபி. 1377-1404) அரசாண்டான். இவன் தென்னகம் முழுவதையும் வென்று விசயநகர ஆட்சியைப் பரப்பினான். இவன் காலத்தில் விசயநகரப் பேரரசு 1.துளுநாடு2. மலைநாடு3. உதயகிரிநாடு+ பெனுகொண்டாநாடு 5. இராச கம்பீரநாடு, மழவராயநாடு ஆகிய பிரிவுகளாகப் பிரித்து ஆளப்பட்டது. இரண்டாம் அரிகரருக்குப் பிறகு அவனுடைய மூத்த மகன் இரண்டாம் புக்கர் (கிபி.1405-14d8) அரசன் ஆனான். இவனுக்குப் பிறகு இவனுடைய தம்பியர் முதலாம் விருபாட்சர், முதலாம் தேவராயர் ஆகியோர் ஆண்டனர். இவர்களுக்குப் பின் விசயன் (கிபி.1422-26), இரண்டாம் தேவராயன் (கி.பி. 424-47) ஆகியோர் ஆண்டனர். பின்னர் இரண்டாம் தேவராயனின் மகன் மல்லிகார்ச்சுனனும் கி.பி. 1447-55 இவனுக்குப்பின் இவனுடைய தம்பி இரண்டாம் விருப்பாட்சனும் (கி.பி. 1465-85) ஆண்டனர். இவர்களுடன் விசயநகரை ஆண்ட சங்கம் மரபு முடிவுற்றது. சங்கம மரபினர் ஆண்டபோது சந்திரகிரியில் சிற்றரசனாய் இருந்த சாளுவ நரசிம்மன் விசயநகர ஆட்சியைக் கைப்பற்றி கி.பி. 1485 முதல் 1493 வரையில் அரசாண்டான். இவனுக்கு உறுதுணையாயிருந்த நரசநாயக்கன் இவனுடைய மக்கள் காலத்திலும் அமைச்சனா யிருந்தான். சாளுவ நரசிம்மனுக்குப் பின் அவனது மக்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக ஆண்டார்கள். ஆயினும், நரசநாயக்கனே எல்லா அதிகாரங்களையும் கைப்பற்றி, மன்னன் போல் விளங்கினான். அவனுடைய மகன் வீரநர சிம்மன், சாளுவ நரசிம்மன் மரபை ஒழித்துவிட்டுத் தானே அரசுக் கட்டி லேறி, கி.பி. 1505- விருந்து 1500 வரை ஆண்டான். இவனுக்குப் பின் ஆண்டவர்கள் துளுவ மரபினர் என்று அழைக்கப்பட்டனர், வீரநரசிம்மனுக்குப் பின் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பியான கிருட்டிணதேவராயன் (கி.பி. 150g-1530) ஆண்டான். இவனே விசயநகரப் பேரரசை ஆண்ட மன்னர்களில் தலைசிறந்த மன்னன் ஆவான். இவனுக்குப் பின் இவனுடைய ஒன்றுவிட்ட தம்பியான அச்சுதராயன் (கி.பி. 1530-42) மன்னன் ஆனான். இவனுக்குப் பின் சதாசிவராயன் (கிபி.1542-75 அரசுக் கட்டில் ஏறினான். இவன் காலத்தில்தான் தலைக்கோட்டைப் போர் (கிபி. 1565 நடந்தது. இதன் கரணியமாக விசயநகரப் பேரரசு வீழ்ந்தது. தலைக்கோட்டைப் போருக்குப் பின்னும் விசயநகர ஆட்சி குற்றுயிராய் நிலை பற்றி நின்றது. திருமலையராயன் பெனுகொண்டா விற்கு வந்து ஆட்சியை நிறுவி விசயநகரை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்று தோற்றான். அரசன் சதாசிவராயனை நீக்கித் தானே (கி.பி.1570-72) ஆண்டான். தன் மூத்த மகன் சீரங்கனைத் தெலுங்கு நாட்டிற்கும், இரண்டாம் மகன் இராமனைக் கன்னட நாட்டிற்கும், இளைய மகன் வேங்கடாத்திரியைத் தமிழகத்திற்கும் நிகராளியாக அமர்த்தி ஆளும்படி செய்தான். இவன் கி.பி. 1572-ல் இறந்ததும் இவனுடைய மூத்த மகன் முதலாம் சீரங்கன் விசய நகரப் பேரரசனாக முடிசூட்டிக்கொண்டான். இவன் கி.பி. 1572 முதல் 1585 வரை ஆண்டான். சிறையில் அடைக்கப்பட்டடிருந்த துளுவ மரபின் கடைசி அரசன் சதாசிவராயன் கி.பி. 1576-ல் மாண்டான். சிரங்கண் 1585ல் மக்கட்பேறின்றி மாண்டான். அவனுக்குப்பின் அவனுடைய தம்பி இரண்டாம் வேங்கடன் (கி.பி. 1885-1614) விசயநகரப் பேரரசனானான். திருமலைராயனும், அவனுக்குப் பின் ஆண்டவனும் ஆரவீடு மரபைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் வேங்கடனின் இறப்புக்குப் பின் அரசுரிமைப் போர் நடந்தது. கடைசியில் சீரங்கனின் இரண்டாம் மகன் இராமதேவன் (கி.பி. 1814-30) அரசு கட்டில் ஏறினான். அவனுக்குப் பின் முதலாம் சீரங்கனின் பெயரன் பெரிய வெங்கடன் கிபி. 1630-1642) அரசன் ஆனான். இவன் பெனுகொண்டாவைக் கைவிட்டு வேலுாருக்குத் தலைநகரை மாற்றிக்கொண்டு அங்கிருந்து ஆட்சி புரிந்தான். பெரிய வேங்கடனுக்குப் பிறகு அவனுடைய தம்பி மகன் மூன்றாம் சீரங்கன் (கிபி. 1542-72) அரசுகட்டில் ஏறினான். இவன் காலத்தில் ஒருபுறம் நாயக்க மன்னர்களும் மறுபுறம் சுல்தான்களும் விசயநகர அரசை நெருக்கி னார்கள். கோல்கொண்டாச் சுல்தான் வடபகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். பீசப்பூர் சுல்தான் வேலூரைத் தாக்க முயன்றான். கிபி1845ல் விரிஞ்சிபுரத்தில் பீசப்பூர்ப் படைகளுக்கும், சீரங்சுள் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. சீரங்கன் தோற்றோடி விட்டான். வேலூர், பீசப்பூர்ச் சுல்தான்வசம் ஆயிற்று.நாடிழந்து ஏதிலியாக அலைந்த மூன்றாம் சீரங்கன் 1672-ல் மாண்டான். ஆரவீடு மரபும் இவனோடு மறைந்தது. ஏறத்தாழ முந்நாற்றுப்பத்து ஆண்டுகள் நிலைத்திருந்த விசயநகர அரசு கடைசியாக வேலூரைப்பீசப்பூர்ச் சுல்தான்கள் 64-ல் கைப்பற்றியதோடு முடிவடைந் தது. பின்னர் இச் சுல்தான்கள் 164-ல் செஞ்சியையும், தஞ்சையையும் கைப்பற்றினார்கள், இந்துக்களையும், இந்துக் கலாச்சாரத்தையும் சுவாமி யார்களிடமிருந்து காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப் பட்ட விசயநகரப் பேரரசு கடைசியாக இசுலாமியரிடமே தோற்று மறைந்தது. கடைசியாகத் திப்புசுல்தான் கி.பி. 1788-ல் இதன் அடிச்சுவட்டையே அழித்துவிட்டான். ஆயினும், கிறித்தவருக்கும், இசுலாமியருக்கு மிடையில் போராடி இந்து சமயத்தை இன்றுள்ள அளவிலாவது காப்பாற்றிய பெருமை விசயநகர மன்னர்களையேச் சாரும். நடுவண் ஆட்சி விசயநகர ஆட்சிமுறையை நடுவண் ஆட்சி, மாநில ஆட்சி, ஊராட்சி எனும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அறியலாம்.நடுவண் ஆட்சி (அல்மைய ஆட்சியில் அரசர், அமைச்சரவை, செயலகம் ஆகிய உறுப்பு களும், வருவாய்த் துறை, சட்டத்துறை, நயன்மைத்துறை, காவல்துறை), படைத்துறை முதலிய துறைகளும் அடங்கியிருந்தன. அரசன் இடைக்கால உலக வரலாற்றில் கோனாட்சியே நிலவியிருந்தது. அரசன் சுட்டுக்கடங்காத அதிகாரங்களைப் பெற்றிருந்தான். விசயநகர மன்னனும் திருமாலின் திருவுருவமாகவே மக்களால் வணங்கப்பெற்றான். அவனும் தெய்விக'க்கோட்பாட்டைப் பின்பற்றி நாட்டை ஆண்டான். ஆயினும், அரசன் தானிட்டதெல்லாம் சட்டமென்று தன் விருப்பம்போல் கொடுங்கோலனாக நாட்டை ஆளவில்லை; அவனுக்கென்று நடைமுறை யில் சட்டதிட்டங்கள் இருந்தன. இவை எழுதப்பட்ட அரசியல் சட்டங்கள் அல்ல. ஆயினும், வேதங்கள்', 'தரும் சாத்திரங்கள்', நீதி நூல்கள்', அரச தந்திரங்கள் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்த நடைமுறைச் சட்டங்களாக' இருந்தன. அரசன் இவற்றின்படியே நடப்பான். இவற்றை வலியுறுத்தும் வேத விற்பன்னர்களும்', 'நீதிமான்' "சுளும் இருந்தனர். இதைப்போலவே அரசன் சமய, குமுகாயச்செய்திகளில் தலையிட மாட்டான். எடுத்துக்காட்டாக, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டில் படவேடு அம்மன் கோயில் படவேடு நாட்டிலிருந்த சுருநாடக, தமிழ், தெலுங்கு, லதாப் பார்ப்பனர்கள் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது காணப்படுகிறது. அதன்படி "வரதட்சணை' வாங்காமல் பெண்களைக் கன்னிதானமாகவே பெறவேண்டுமென்றும், - மீறி "வரதட்சணை வாங்கும் மணமகனும், அவன் தந்தையும் அரசினால் தண்டிக்கப்படுவதோடு சாதியை விட்டு வெளியேற்றப்படுவர் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு மக்கள் தங்களுக்குள்ளே செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையும், குமுகாயப் பழக்கவழக்கங்களையும் அரசன் கட்டிக் காப்பானேயொழியக் குமுகாயப் பழக்கவழக்கங்களிலும், சாதி நெறி முறைகளிலும் தலையிடமாட்டான். 'மூத்தவனே பட்டத்திற்கு வரவேண்டும்' என்ற நெறிப்படியே பிறங்கடையுரிமை நிலைபெற்றிருந்தது. ஓர் அரசன் தனக்குப்பின் இன்னார் அல்லது தன் பிள்ளைகளில் இன்னவர் அரசுக்கட்டி வேற வேண்டும் என்று அமர்த்துவதும் உண்டு. அரசகுமாரன் இளவரசனாக முடிசூட்டப் பெற்றுத் தந்தையுடன் இணைந்து அரசியற் பயிற்சி பெறுவதுண்டு. அரசன் இளைஞனாயிருந்தால் நெருங்கிய உறவினர் இணைந்து ஆள்வதுமுண்டு. அரசன் திடீரென இறந்துவிட்டால் 'பிரதானி, 'புரோகிதர்" முகாமை அதிகாரிகள் முதலிய அரசியல், வேத அறிஞர்கள் கூடி அடுத்த பிறங்கடையை உடனே அமர்த்தி முடிசூட்டு விழா நடத்துவர், இன் விழாதான் நாட்டில் மிகப் பெரிய சிறந்த விழா. இதில் நாட்டிலுள்ள சிற்றரசர்கள், குமுகாயத் தலைவர்கள், பேரதிகாரிகள், அமைச்சர்கள், துறைத்தலைவர்கள், அயலகத் தூதுவர்கள், கலைஞர்கள் முதலிய யாவரும் பங்கேற்பர். வேத, சாத்திர விதிகளின்படி 'முடிசூட்டு விழா நடக்கும். இதில் அரசர்குடிமக்களைக் காக்கும் கடமையையும், போற்றும் பொறையையும் பற்றி உறுதி மொழி கூறுவர். அவர் சுடமை தவறாது நடக்கவேண்டும், நயன்மை வழுவாது நடக்கவேண்டு மென்பதனைச் சுட்டும் சடங்குகளும், முடி, செங்கோல் முதலிய அரசச் சின்னங்களும் இவர்களால் வழங்கப் பெறும். மன்னன் திருமாலின் திருவுருவம்': ஆயினும், அவன் மேற்கண்ட வாறு குமுகாயப் பழக்கவழக்கங்களுக்கும், அறநெறிகளுக்கும், மரபுவழி முறைகளுக்கும் கட்டுப்பட்டே ஆளுவான். இவற்றையும் மீறி மன்னன் தன்னிச்சை போல் நடந்தால் அவனைக் கண்காணித்து நல்வழிப்படுத்த அமைச்சரவை இருந்தது. அமைச்சரவையைக் கலக்காமல் அரசன், போர், அமைதி, இளவரசர் அமர்த்தம் முதலியவற்றைச் செய்யமாட்டான். இவ்வாறு மன்னனுக்கும், மக்களுக்கும் தகப்பன் பிள்ளைகள் என்ற நிலையில் உறவுமுறை இருந்ததால் இக்கால மன்னன் கொடுங்கோலனாக மாறவில்லை. மக்களும் மன்னனைஒறுக்கவில்லை. மாந்தன் தவறுதலுக்கு ஆட்பட்டவன், ஆதலால் சில நிகழ்ச்சிகளில் மன்னர், மக்களை ஒறுத்ததையும், மக்கள் மன்னரை எதிர்த்ததையும் பார்க்கிறோம். இக் கால மன்னர்கள் பல பெண்களை மணக்கும் வழக்கமுடைய வர்கள். இந்த வழக்கம் பெருங்குடி மக்கள், பேரதிகாரிகள், அமைச்சர்கள், செல்வர்களிடம் காணப்பட்டது. இதனால் அரசரின் திடீர் இறப்புக்குப் பின் பிறங்கடையுரிமைப் போராட்டங்களும் கட்சிக் குழப்பங்களும், ஏற்பட்டதைக் காண்கிறோம். அரசரின் உவளகத்தில் எண்ணிறந்த அழகிய மகளிர் இருந்தனர். அரசன்எழிலார்ந்த அரண்மனையிலும், உவளகத்திலும் இன்ப வாழ்வு நடத்தினான். பண்டைய இந்து தரும்' முறைப்படியே கொலு வீற்றிருத்தலும், களியாட்டங்களில் ஈடுபடுதலும், கோயில் திருப்பணிகளைச் செய்தலும், அறிஞர்களைப் போற்றுதலும், பரிசு வழங்குதலும் இக் கால அரசனின் மரபாயிற்று. பேரரசரவை விசயநகர மன்னர் காலத்தில் அமைச்சரவையோடு அரசரவையும் இருந்தது. பிரதானி'யையும், நெருங்கிய உறவினர்களையும் கொண்ட இந்த அரசரவை இன்றைய மேலவைபோல் செயல்பட்டதாகவும் அறிகிறோம். இதனை இங்கிலாந்து நாட்டு அரையர் குழுவுக்கு (பிரிவிகவுன்சிலுக்கு ஒப்பிட்டுப் பேசுவாருமுண்டு. சில ஆசிரியர்கள் இந்து அமைச்சரவையை விட மிகப் பெரியதென்றும், இதில் அமைச்சர்களும், துறைத்தலைவர்களும், அமர நாயகர்களும், இளவரசர்களும், தளவாய்களும், வணிகர்களும், அயல்நாட்டுத் தூதுவர்களும் கலந்துகொண்டனரென்றும் கூறுவர். இப் பேரவை அடிக்கடி கூடியதால் நாயகர்களும், சிற்றரசர்களும் தொடர்ந்து பேரரசருக்குக் கீழ்ப்படிந்து நன்றியுள்ளவர்களாயிருந்தனர். இது தேவைப் பாடும்போது கூட்டப்படும் பேரவையாகும். அமைச்சரவை (மந்திரி பரிசத்) அமைச்சரவை தொடர்ந்து நிரந்தரமாயிருந்த சவையாகும். இது அரசின் கோட்பாடுகளைச் செயல்படுத்தும் அவையாகும். இதில் எத்தனை அமைச்சர்கள் இருந்தனரென்பதில் கருத்துவேறுபாடு உண்டு. நுனிசு, இரண்டாம் தேவராயன் அமைச்சரவையில் இருபது அமைச்சர்கள் இருந்தனரெனக் குறிப்பிடுகிறார். எண்மர் அல்லது பதின்மரே திருந்திருச்சு வேண்டுமென்றும், இதனைப் பின்பற்றியே மராத்திய மன்னன் சிவாசியும் * அட்டப்பிரதான்' என்ற எண்மர் அடங்கிய அமைச்சரவையைப் பெற் பிருந்தா னெனவும் கூறுவர். சாணக்கியன், குறைந்த எண்ணிக்கையுள்ள அமைச்சரவையே சிறந்த முடிவைச் சட்டென காடுக்குமெனக் கூறியதி லிருந்து இக் காலத்தில் குறைந்த எண்ணிக்கையுள்ள அமைச்சரவையே இருந்திருக்க வேண்டும் என்பாருமுளர். அமைச்சரவையே பேரதிகாரத்துடன் திகழ்ந்தது. பெயர்பெற்ற கிருட்டிணதேவராயன் நான் இங்கே அரியணையில் அமர்ந்திருக்கிறேன். ஆனால், இவ்வுலகம் அமைச்சர்களால் ஆளப்படுகிறதே! என் பேச்சைக் கேட்பாரில்லையா!" என்று முணுமுணுத்ததாகக் கூறப்படுவதிலிருந்து அமைச்சரவை பெற்றிருந்த பேரதிகாரத்தை ஊகித்தறியலாம். அமைச்சர் களை அரசனே முதலில் பழகிப்பார்த்து, ஆய்ந்து தேர்ந்தெடுப்பான். ஒரே அமைச்சர், அரசர் பலருக்கு அமைச்சராயிருந்ததைப் பார்க்கிறோம். அமைச்சர்கள் சிலர் அரசருக்கு உறவினர்களாகவும் இருப்பர். அமைச் சர்கள் அறிவு, திறமை, ஈகம் தியாகம், தன்னலமின்மை ஆகிய பண்புகளை உடையவர்களாயும், அரசு நயன்மை , அறநூல்கள் (தரும சாத்திரம்) முதலியன அறிந்தவர்களாயும் ஐம்பதுக்கும் எழுபதுக்குமிடைப்பட்ட அகவையும், நல்ல உடல்நலமுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்பது பண்டைய நெறி. சில சமையங்களில் அரசர் அமைச்சரவைக்கு எதிராகச் செயல் பட்டதும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கிருட்டிணதேவராயன் சபதியின் மீது போர் தொடுக்கும் தன் விருப்பத்தை அமைச்சரவை மறுத்த பின்னும் போர்தொடுத்தான். சில சமையங்களில் அமைச்சர்களே தண்டணை பெற் றதும் உண்டு. அரசன்தன் அமைச்சர்களை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்; ஒற்றர்கள் அவர்களை நிழல் போல் தொடர வேண்டும்; அவர்களின் உள்ளம்புறத்திற்கு மாறுபடுகிறதா என்பதை தான்றிக் கவனிக்க வேண்டுமென்று கிருட்டிணதேவராயன் கூறினான். அமைச்சரவைக்கு அரசன் சில சமையங்களில் தலைமை தாங்குவ துண்டு. நயன்மை, படை, பிற துறைகள் தொடர்புள்ள செய்திகளிலும் அரசன் தலையிடுவதும், தலையிடுமாறு வேண்டப்படுவதும் உண்டு. அமைச்சரவைக்குத் தலைமை தாங்குபவர் 'சவைநாயகர்' எனப் பட்டார். இவர் சவையில் நடக்கும் உறழி, எதிருமழிகளை (வாதப் பிரதிவாதங்களையும் வேறு சிக்கல்களையும் நடுநிலைமை ஏற்றுக் கண்காணிப்பார். கல்வெட்டுச் சான்றுகளின்படி நோக்கும்போது, 'மகாபிரதானி', 'பிரதானி", "யபபிரதானி" 'சிரபிரதானி', 'சர்வசிர பிரதானி" முதலியனவாக அமைச்சர்கள் அறியப்படுகின்றனர். 'தண்டநாயகம் என்று பதவி பெற்றவர் ஓர் அமைச்சராகவே பிரதாணி இருக்கவேண்டுமென்றும், இப்பதவிக்கும் சேனாதிபதிக்கும் வேறுபாடு உண்டு என்றும் கருதுகின்ற னர். சிலர் தண்டநாயகரே தானைத்தலைவர் ஆவாரென்பர்.பிரதானிக்கு வழங்கிய வேறு பெயரே தண்டதாயகர் என்பதென்றும் அவர் ஆட்சி அலுவலரேயொழியத் தானைத்தலைவர் அல்லரென்றும் கூறுவர். தலைமை அமைச்சரான சாளுவதிம்மர் தந்தர நாயகர்' என்று கல்வெட்டு களில் குறிப்பிடப்படுகிறார். பிரதானியரைக் கோரியகர்த்தர்', 'இராச்சியபார புரந்தரர்' ( ஆட்சிக் காப்பாளர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. . தானைத் தலைவர், சேனாதிபதி, சர்வ சேனாதிபதி அல்லது சர்வசேனாதி காரி என்றெல்லாம் குறிப்பிடப் படுவதால் தண்டநாயகர் தானைத் தலைவரினின்றும் வேறானவர் என்றும் அறியலாம். சில சமயங்களில் தண்டநாயகர் மாநில ஆளுநர்களையும் அமர்த்துபவராக இருப்பார், ஆகவே, நாடு முழுவதற்குமான ஆட்சிக்குப் பொறுப்பாளராக இவர் இருந்திருக்கிறார் என்று கூறலாம். இவர் நயன்னமயராகவும் செயல்பட் டுள்ளார். 'பிரதானி' பொதுவாக எல்லாத் துறைகளுக்கும் தலைவராய் இருப்பார். படை நயன்மை மற்றும் பல துறைகளையும் கண்காணிப்பார். இலக்கண்ண தண்டநாயகர் என்பவர் 'தட்சண சமுத்தராதிபதி' என்ற பதவியில் மதுரையில் அமர்த்தப்பட்டார். இவர் ஈழநாட்டின்மீது படை யெடுத்தார் என்பதாலும், கிருட்டிணதேவராயனின் பிரதானியாகயிருந்த சாங் வதிம்மர் அரசனுடன் சேர்ந்து ப களைப் போருக்கு நடத்திச் சென்றார் என்று துனிசு குறிப்பிடுவதாலும் தலைமையமைச்சருக்கே இத்துணைப் பேரதிகாரங்களும் இருந்ததையறிகிறோம். பிரதானிக்கும், பிற அமைச்சர்களுக்கும் சம்பளம் பணமாக வழங்கப்படுவதில்லை. சில களர்கள் அல் மாவட்டங்கள் சாகீர்களாக மானியம் வழங்கப்படும். இவர்கள் வேண்டியபோது படைகளைத் திரட்டி மன்னருக்கு உதவுவர். வரித்தண்டல் போன்ற பொருளியல் ரிகளையும் இவர்களே செய்தனர் என்பதையுமறிகிறோம். ஆகவே, மொகலாயர் காலத்து 'மான்சப்தாரி முறையைப் போன்று இப் பிரதானி, படை பொதுத் துறைகளைக் கவனித்து வந்தார் எனலாம். "பிரதானி" அரண்மனை, அரசனது குடும்பச் செலவுகள் ஆகியவற்றையும் கண்காணித்தார் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆகவே, இவர் ஆட்சியின் உச்சத்திலுள்ளதைக் காணலாம். இவருக்குத் துணையாக "உப பிரதானிகளும்" "உபாய பிரதானிகளும் இருந்தனர், செயலகம் ஏறக்குறைய தென்னகம் முழுவதிலும் பரவியிருந்த விசயநகரப் பேரரசின் அலுவல்களை அரசரும், அமைச்சர்களும் மட்டும் ஆற்றவும், கண்காணிக்கவும் முடியாது. தனித்தனியாகத் துறைகளும் துறைத் தலைவர்களும் அதிகாரிகளும், இவர்களை ஒட்டுமொத்தமாகக் கவனிக்கும் ஒரு செயலகமும் தேவை இத்தகைய பெரிய செயலகம் தலைநகரில் இருந்ததாக அப்துல்ரசாக்கின் கூற்றிலிருந்தும், கிருட்டிண தேவராயனின் நாலி விருந்தும் அறிகிறோம். அப்பொரிய அலுவலகத்தை அப்துல்ரசாக் திவான் கான்" என்று அழைப்பதோடு அது மன்னரின் அரண்மனைக்கு வடபுறத் தில் உயர்ந்த பீடத்தில் நாற்பது தூண்களைக்கொண்ட பெரு மண்டபத்தில் செயல்பட்டதைத் தான் கண்டதாகவும் கூறுகிறான், எழுத்தர், எழுத்தர் பணியம் என்னும் பொருள்படும் ஒரு பிரிவு செயலகத்திலிருந்தது. இதனைக் கண்காணித்தவர் இராயசம்" எனப்பட் டார். அரசன் வாய்மொழியாகக் கூறும் ஆணைகளைப் பதிவு செய்வதும், பின்னர் அவற்றில் அரசனது முத்திரையை இடுவதும் இவனுடைய பணி யாகும். சோழர் காலத்தில் இத்தகைய பணியாளரைத் "திருமந்திர வோலை' அல்லது "ஓலைநாயகம்' என்றனர். பொதுவாகவே, அரச னுடைய ஆணைகளைச் செயலாளர்கள் பதிவு செய்வர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூர் திருவிதக் கலைநாயனார் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இம்மடி நரசநாயக்கர் வாய்மொழியாகச் சொன்ன ஆணையை வீரநரசய்ய பல்லவராயன், இம்மடி நரசய்ய தேவன் ஆகிய அவருடைய செயலாளர் கள் கல்வெட்டில் பதிவு செய்திருப்பதிலிருந்து இதனை அறியலாம். 'கர்ணிக்கம்" என்பது செயலகத்திலிருந்த மற்றொரு பிரிவாகும். கணக்குப் பார்ப்பவர்கள் [Accountanits) ஒவ்வொரு துறையிலும் இருப்பர். அவர்களுக்குத் தலைமையகமாகக் 'கர்ணிக்கம்' இருந்தது. அரசரின் அரண்மனைப் பணிகளையும், கணக்கு வழக்குகளையும் கவனிக்கவும் பல பணியாளர்கள் இருந்தனர். 'சுவர்ண நாய்கர்' என்பவர் அரண்மனைத் தட்டார பொன் வேலைகளைக் கவனிப்பவராக இருந்தார். பிற அரண்மனைப் பணிகளைச் செய்பவர்களைக் கவனிப்பவர் * மனேய பிரதானி' எனப்பட்டார். இவருக்குக்கீழ் அரண்மனையில் பணியாற்றும் பல்வேறு பணியாள்கள் இருந்தனர். அவர்களில் வெற்றிலை பாக்குத் தட்டைச் சுமக்கும் அடைப்பக்காரர், காலத்தைக் குறிப்பிடும் நிமித்திகர் (பஞ்சாங்கத்தவர், பட்டையம் எழுதுவோர், பாடல் புனையும் பாணர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். உவளகம், அரண்மனை கொலு மண்டபம் முதலிய கட்டடங்களில் சோடனைக் காட்சிகளை திரைச்சீலைகளைக் கவனிப்பதற்கென்றே 'முகபாவாடை' என்ற அதிகாரியிருந்தார். அரசனின் முத்திரையைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர் 'முத்திரைக் கருத்தா' எனப்பட்டார். அரசனது ஆணையை நேரடியாக ஏற்று உடனடியாகச் செயல்படுத்தும் அதிகாரிகள் 'அஜனதாரகா', 'அஜனபரிபாலகா' எனப்பட்டனர், அரண்மனை வாயிற்காப்போரைக் கண்காணித்தவர் வாசல்' அல்லது 'வாசல் காரியம்' எனப்பட்டார். அரசனைக் காணச் செல்வோர் அவ ருடைய இசைவு பெற்றே உட்செல்லவேண்டும். இவர் போர்முனைக்குச் செல்லும் படைகளின் ஒரு பகுதிக்கும் தலைமை தாங்கிச் செல்வார். பண்டை நாளில் இவர் 'துவாரபாலர்' (துவாரிகா எனப்பட்டார். துறைகள் வேளாண்மைத் துறை விசயநகரப் பேரரசின் கீழிருந்த துறைகளில் வேளாண்மைத் துறையே மிகப்பெரியதும் சிறந்ததுமாகும். கிடைத்துள்ள சான்றுகளின் படி நோக்கும்போது அக் காலத்தில் சாகுபடிக்கேற்ற நிலம் இன்றைய பரப்பளவு இல்லையாயினும் செழிப்பானதாக இருந்திருக்கிறது என்பதை யறிகிறோம். நாடு, ஆண்டில் இரண்டு மூன்று விளைச்சல்களைக் கண்டது. பெரிய ஏரிகளை வெட்டி நீர்ப் பாசன ஏந்துகள் செய்யப்பட்டன. கிருட்டிணதேவராயன் காலத்தில் நாகலாபுரம்ஏரி வெட்டப்படும்போது, தான் நேரில் கண்டதைக் கண்டவாறே பாயசு (Paes) தன் நாட்குறிப்பில் எழுதிவைத்துள்ளான். இதில் கல் கட்டட வேலையைக் கவனித்தவன் ஜாவோ-தெல்லா -பெளதி (Jad-LElla-Pavic) என்ற போர்த்து வீசியன் என்பதனை நானிசின் குறிப்பிலிருந்து அறிகிறோம். கிபி.1369-ல் பாசுகர பவாதுரை என்ற விசயநகர இளவரசன் சுடப்பை மாவட்டத்தில் ஒரு பெரிய ஏரியை நவீனமுறையில் வெட்டி, பல மதகுகளையும் அமைத் ததையும் அறிகிறோம். இவ்வாறு பேரரசரே பல ஏரிகளை வெட்டியும், கால்வாய்களை யமைத்தும் நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்ததோடு பலர் புனிதப் பணியாகக்கொண்டு ஏரி, குளங்களை வெட்டியுள்ளனர். விசயநகர அரசர்கள் அணைகளைக்கட்டி நீர்த்தேக்கம் செய்தனர் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன, இத்தகைய ஏந்துகளைச் செய்ததால் நாட்டில் விளைச்சல் மிகுதியாயிற்று. அத்தகைய விளைச்சலில் ஒரு பகுதியை வாரியாக அரசு பெற்றது. இந்த வரியே அரசின் மிகுந்த அளவு வருமானத்தைக் கொடுத்தது. இதனை நன்செய்யிலிருந்து கிடைத்தவாரி புன்செய்யி லிருந்து கிடைத்த வரி மற்றும் பலவகை நிலவரிகள் எனப் பிரித்தறியலாம். பார்ப்பனருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட 'பிரமதேயச் சிற்றூர்கள்" கோயிலுக்கு மானியமாக விடப்பட்ட 'தேவதானச் சிற்றூர்கள்' ஆகியவற்றிற்கு வரிகள் இல்லை. படைமானியமாக விடப்பட்ட 'தளவாய் அக்ரகாரம்' என்ற ஊரிலிருந்து நேரடியாக வரி தண்டப்படுவதில்லை, எல்லா நிலத்திற்கும் ஒரே மாதிரியாக நிலவரித் தண்டல் செய்யப்படுவதில்லை. -நன்செய், புன்செய் தரம், நீர்பாய்ச்சல், பயிர் விளைச்சல், விளைபொருள் முதலியவற்றிற் கேற்ப வரித்தண்டல் செய்வார்கள். புன்செய் நிலத்தில் விளையும் தவசங்கள், பருப்புவகைகள் ஆகியவையும் கிழங்கு வகைகளும் தனித்தனியே மதிப்பிடப்படும், புன்செய் மானவாரிப் பயிராயிருந்தால் அதற்குத் தக்கபடியும், கால்வாய்ப் பாசனம் அல்லது மழை பெய்து ஓடையில் நீரோடும் போது மட்டும் நீர்பாய்ச்சினால் அதற்கேற்றபடியும் வரிமுறை இருக்கும். மடுவிலிருந்து நீர்பாய்ச்சப்படும் நிலம் 'பதுக்கை' என்றும், அதற்கான வரி, "பதுக்கை வரி* என்றும் அறியப்பட்டன. ஏரிவாய், தாங்கல்வாய், புழுதி எனப் புன்செய் பலவகையாக அறியப் பட்டது. வரி தண்டப்படும் ஊர் சுரக்கிராமம்' எனப்பட்டது. நன்செய்யில் நெல்லுக்கும், வெற்றிலை, கரும்பு, வாழை, செங்கழுநீர், குவளை முதலியவற்றிற்கும் வரிவிதிப்பு வேறுபட்டது. வீட்டுக்குச் செலுத்தப்பட்ட வரி மனைவரி (அல்லது) வாசல் பணம் என்று அறியப் பட்டது. 'கர்ணிக சோடி', 'தலையாரிக் காணம்', 'நாட்டுக் கணக்குவரி*, 'இராயசவர்த்தனை', 'அவசர வர்த்தனை', 'அதிகாரவர்த்தனை' ஆகியவை நிருவாகச் செலவுக்கு வாங்கியவையாகும். அரசக் கட்டளை யைக்கொண்டு வருபவனுக்குச் செலுத்தும் கட்டணம் நிருபச் சம்பளம்' எனவும், வயல் களுக்கு நீர்பாய்ச்சும் போது கண்காணிக்கும் அதிகாரிக்குச் செலுத்தும் கட்டணம் ஆள் நீர்ப்பாட்டம் எனவும், ஆளர்க் காவலுக்கான செலவுக்குக் கட்டிய கட்டணம்பாடி காவல் என்றும் அழைக்கப்பெற்றன. இவை அப்படியே நாயக்கர் காலத்திலும் பின்பற்றப்பெற்றன. காணிக்கை, மகிமை, கட்டளை,பிரசாதக் காணிக்கை, பிடாரி வரி, விபூதிக் காணிக்கை, ஆடிப்பச்சை, கார்த்திகைக் காணிக்கை முதலியன கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் செலுத்தப்பட்டக் கட்டணங்களா கும். வரிவிதிக்கும் முறை 'இந்து தரும் சாத்திர' விதிப்படி ஆறிலொரு பகுதியே வரியாகத் தண்டப்பெற்றது. பார்ப்பனருக்கும், கோயிலுக்கும் ஒரு சிறு தொகையை அரசே வரியாகத் தண்டிப் பின்னர்ப் பார்ப்பனருக்கும், கோயிலுக்கும் கொடுத்து விடும். ஆகவே, இக்காலத்தில் மிகுந்த அளவில் மக்களிட மிருந்து நிலவரிதண்டப்பட்டது. செப்டெம்பர்-அக்டோபர் மாதங்களில் தாம் வரி தண்டுவர். 'விசயதசமி' நானே விசயநகரத்தின் புத்தாண்டு நாளாகும். பணமாகவும், பண்டமாகவும் வரி கொடுக்கலாம், நாற்றங்கால் அழுகிப் போனால், வெள்ளத்தால் பயிர் அழிந்தால், பருவமழை பொய்த்துப் பயிர் சாவியாகிவிட்டால், பஞ்சம் ஏற்பட்டால் வரித் தள்ளுபடி செய்வதுண்டு. நிலவரி வருவாய்த்துறை அத்வனம்' எனப்பட்டது. இதற்கெனத் தனியமைச்சரும், அவருக்கு உதவியாக அலுவலர்களும் இருந்தனர். ஊரில் வரித்தண்டல் செய்யும் மேலதிகாரி “தானிகர்' ஆவார், மாவட்டக்கழகம் (District Assembly) நாட்டவனார்' எனப்பட்டது. இது தன் மாவட்டத் திற்குட்பட்ட வரிகளைத் தண்டி அரசுக்குச் செலுத்தும். வரிகளைக் குறைக்க அல்லது அதிகப்படுத்த அல்லது புதிய வாரிகளைப் போட அரசே ஆணைகளைப் பிறப்பிக்கும், அவற்றை நான்கு பெரிய பதிவேடுகளில் பதிவுசெய்து வைப்பர். குடிமக்கள் நேரடிப் பார்வையிட அவற்றைக் கேட்டால் மூல ஆணைகளைக் காட்டுவர். காசு(நாணய) முறை விசயநகர ஆட்சியில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய மாழைகளா லான காசுகள் (நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இரும்பு ஊசி களையும், பூனைக்கண்கள் எனப்படும் மரிக்கற்களையும் பண நாணயம் மாற்றாகப் பயன்படுத்தியுள்ளனர். வராகன், பரிதாபு, கால்வராகன், பணம் எனப்படும் பொற்காசுகளும், தார் எனப்படும் வெள்ளிக்காசும், பணம், ஜிதால், காசு எனப்படும் செப்புக் காசுகளும் நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. காதி, ஹோக, கத்யாணம், பொன் அல்லது பகோடா முதலிய பொற்காசுளும் வழக்கத்தில் இருந்தன. இரண்டாம் அரிகரர் காலத்தில் வரிகளைப் பணமாகவே கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடப் பட்டது. இதனால் பல்வேறு காசுகளை அச்சிடவேண்டியதாயிற்று. இப் பேரரசை நிறுவிய முதலாம் அரிகரர், புக்கர் காலத்துக் காசுகளில் அனுமான் இலங்கையைத் தாண்டும் சின்னம் பொறிக்கப் பட்டது. பின்வந்தோர் காசுகளில் நந்தி, சரசுவதி -பிரமன், உமாமகேசுவரன், இலக்குமிநாராயணன், யானை, வேங்கடேசர், விருபாட்சர், கருடன் முதலிய சின்னங்கள் பொறிக்கப்பட்டன.தவைக் கோட்டைப் போருக்குப் பின் திருமலைராயன் பெனுகொண்டாவிற்குக் கோநகரை மாற்றினான். அவன் வெளியிட்ட காசுகளில் இராமர், சங்கு, சக்கரம், கரடி ரிவராசன்), யானை, எருது ஆகிய உருவங்கள் பதிக்கப்பெற்றன. காசுகளை அச் சிடுவதற்கென்று அரசின் தங்கச் சாலை இருந்தது. தொழில் துறைகள் சருக்கரை காய்ச்சுதல், கள் இறக்குதல், பனை வெல்லம் காய்ச்சுதல், எண்ணெய் எடுத்தல் முதலியவையும், அவுரியிலிருந்து வண்ணம் (சாயம்) உருவாக்கல், பருத்திப் பஞ்சு எடுத்தல், நூல் நாற்றல், நெசவு முதலியனவும், தென்னையிலிருந்து கயிறு திரித்தல், எண்ணெய் எடுத்தல் முதலியனவும் பயிர்த்தொழில் தொடர்பான தொழில்களாகும். இவற்றைக் கண்காணிக்க வும் வரி விதிக்கவும் அதிகாரிகள் இருந்தனர். சுரங்கத் தொழில் விசயநகர ஆட்சியில் உலகப் புகழ்பெற்றதாக விளங்கியது. கருநாவ், அனந்தப்புரம் மாவட்டங்களில் குறிப்பாக வச்சிரக் கருவூரில் வயிரச் சுரங்கங்கள் இருந்தன. பல திறப்பட்ட மணிக்கற்களும் கிடைத்தன. இத்தகைய மணிகளையும், தங்கக்கட்டிகளையும் காப்பாசுப் பாதுகாக்கும் காப்பறைகளும், காப்பாளர் துறையும் இருந்தன. மகிசாசுர மண்டலத்தில் மைசூர் இரும்புக் கனியமூலம் ஏராளமாய்க் கிடைத்தது, இவற்றுடன் செம்பு, கந்தக மூலங்களும் கிடைத்தன. போர்ப் படைகள், தொழிற்கருவிகள், வீட்டுப் பொருள்கள், அணிகலன்கள் முதலியன செய்யும் தொழிற்கூடங்களுடன் தொழிலாளர்களும், நாடெங்கிலும் இருந்தனர், மருப்புப் பிடிகள் பொறுத்தப்பட்ட வாள்களும் செய்யப் பட்டன. மரத்தொழிலும் சிறந்து காணப்பட்டது. வண்டிகள், பல்லக்குகள் முதலியன மரத்தால் செய்யப்பட்டன. பெரும்பாலான மக்கள் கர்ப்புறங்களில் கூரைவீடுகளில் வாழ்ந்தனர். நகர மக்களும், செல்வர்களும் மாடிவீடுகளில் வாழ்ந்தனர். அரண்மனைகள், மாளிகைகள், அணைகள் முதலிய கட்டடங்களைக் கட்டும் தொழிலாளர்களும் இருந்தனர். கோவை, புலிக்காடு, கோவா முதலிய ஊர்கள் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடங்களாயிருந்தன, கைக்கோலர், சாலியர் எனப்படும் இனத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டனர். தையற்காரர்கள் வஸ்திரக்காரர்' எனப்பட்டனர். தைக்கப்பட்ட துணி "வஸ்திரம்' எனப்பட்டது போலும்! பட்டு நெசவிலும், பின்னல் வேலை யிலும் சிறந்த சௌராட்டிரர்களும் பட்டு நூல்காரர்களும் மதுரை போன்ற நகரங்களில் குடியேறினார்கள். பொதுவாகவே விசயநகர ஆட்சிக்காலத் தில் தெலுங்கு, கன்னட நாடுகளில் தமிழர்களும் சுன்னடர் தெலுங்கர் தமிழகத்திலும் தொழில் தேடிக் குடியேறினர். கடலோரப் பட்டினங்களில் உப்புக் காய்ச்சுதல், முத்தெடுத்தல், சங்கறுத்தல் ஆகிய தொழில்கள் நடந்தன. இத்தொழில்களைக் கண்காணிக்கவும், வரித்தண்டல் செய்யவும் தனித்தனி அதிகாரிகள் இருந்தனர். நயன்மைத் துறை சட்டத்தையும், ஒழுங்கையும் காப்பது நயன்மைத் துறையாகும். விசயநகர மன்னர்கள் வேத, தருமசாத்திரங்களையே சட்டங்களாகக் கொண்டிருந்தனர். மக்களிடையே அமைதியை நிலைநாட்டுவதையும், பலதரப்பட்ட சாதிகளுக்கிடையே மோதல்கள் ஏற்படாதவாறு தடுப்பதை யுமே மன்னர்கள் தலையாய கடமைகளாகக் கொண்டனர். நாட்டுக்கும், குமுகாயத்திற்கும் இரண்டகம் துரோகம் செய்யும் குற்றமே மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. இக் குற்றத்தைச் செய்வோர் நாடு கடத்தப் பட்டனர். சைவர், வைணவர், இடைங்கை, வலங்கைச் சாதிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளுக்குத் தரும் சாத்திரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படும். ஒரு நிலம் அடைவாக வைக்கப் பட்டு அதனை அடைவு பெற்றவன் பன்னிரண்டு ஆண்டுகள் துய்த்து விட்டால் பன்னிரண்டாம் ஆண்டின் முடிவில் திலச் சொந்தக்காரனுக்கு அதனைக் கடன் தொகையைப் பெறாமலே திருப்பித்தரவேண்டும் என்பது இக் காலப் பொருளியல் சட்டமாகும். நிலச் சொந்தக்காரன் 'காணி யாளன்" என்றும், அடைவு போக்கியம்' என்றும், அது எழுதப்பட்ட அடைவு ஆவணம் போக்கிய பத்திரம்' என்றும், அடைவு போட்டுக் கொண்டவன் காப்பாளான்" என்றும், போக்கியம் போடப்பட்டிருந்த காலம் காப்புக் காலம்' என்றும் அறியப்பட்டன. இஃது இன்றும் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள விதியாகும். வழக்கு விவகாரக் கண்டம்' எனப்பட்டது. வழக்குகளை உசாவி அறிவதற்குச் சாத்திரங்களில் வல்ல பார்ப்பன அதிகாரிகள் அமர்த்தப் பட்டனர். நயன்மையர் நீதிபதி "தனநாயகர்' எனவும், "தண்டநாயகர்' எனவும் அறியப்பட்டார். 'பிரதானியே" தலைமை நீதிபதி யாகவும் இருப்பார். இவருக்குக் கீழ்ப்பல் நடுவர்கள் நீதிபதி இருந்தனர். பொதுவாக நடுவர் யாவரும் பார்ப்பனர்களே. சாதியடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்பெற்றன. எனவேதான் சாத்திரங்களின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்புகளையும், சட்டங்களையும் நுனிசு என்பார் இவை மாந்த வுணர்வுக்குப் பகையானவை என்கிறார். ஊர்களில் "மகாஜனங்கள்" நிறைந்த வழக்கு மன்றங்களும், சாதி வழக்கு மன்றங்களும் இருந்தன. 'தர்மாசனம்' என்றும் ஊர் வழக்கு மன்றும் அழைக்கப்பெற்றது. இதில் ஊரிலுள்ள முகாமை உறுப்பினரும், 'கர்ணம்', 'மணியக்கார்', தலையாரி ஆகிய அரசப் பணியாளரும், தச்சன், கம்மாளன், குயவன் முதலிய ஒன்பது மரபுவழித் தொழிலாளர்களுமாகிய பன்னிருவர் இருப்பர் இத்தகைய வழக்கு மன்றத்தை 'ஆயக்கார் வழக்கு மன்றம்' என்றும் அழைப்பர். பொருளியல், குற்றவியல் வழக்குகள் அறுதியாக உசாவப்பட்ட பின்னர் தண்டங்களும், தண்டனைகளும் விதிக்கப்பட்டன. சோதனைகள் மூலம் குற்றவாளியைக் காணும் முறையும் இருந்தது. திருட்டு வழக்குகளில் ஈடுபட்டோருக்குக் கை, கால்களைக் குறைக்கும் தண்டனை வழங்கப் பெற்றது. பொதுவாகத் தண்டனைகள் கடுமையாக இருந்தன. இன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டைக்குள் விசயநகர காலத்தில் கட்டிய சிறைக்கூடத்தைப் பார்க்கும்போது அக்காலச் சிறைத் தண்டனை யின் கொடுமையை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. காவல் துறை குற்றங்கள் நடவாதவாறு கண்காணிக்கக் காவல் முறை (Kaval sys term) இருந்தது.அரசே ஏற்படுத்திய காவற்பிரிவும், களர் மக்கள் ஏற்படுத்திய காவற் பிரிவும் இருந்தன. இவற்றைத் தவிரத் தலைநகர்களில் தனிக் காவற் படையும் இருந்தது. நாயக்கரின் கீழிருந்த பகுதிகளில் நாயக்கர்களுடைய தனிக் காவற்படைகளும் இருந்தன, தளர்க்காவல் படையினருக்கு ஒவ்வோர் பனரிலுமுள்ள தலையாரிகள் அவ்வூரின் உள் மருமங்களையும், குற்றங் களையும் துலங்கும்படி செய்வர். காவற் படையினரோ, தலையாரியோ கடமையைச் செய்யத்தவறினால் தண்டனைக்குள்ளாவார்கள். ஊரார் காவற் படைக்குப் 'பாடிகாவல்' எனப்படும் கட்டணத்தை வழங்குவர். ஊர்க்காவற் படையினருக்கு இலவயமாக இனாமாக) நிலமும், வீடும் விடப்படுவதோடு விளைச்சல் காலங்களில் கிழார்களும், வேளாளர், வணிகர் ஆகியோரும் தரும் பாடிகாவல் தொகையும் கிடைத்தன. இவற்றைத் தவிரச் சந்தைகள், கடைவீதிகள், தட்டாரக் கடைகள் முதலிய வற்றிலிருந்து தண்டலாகும் தொகையில் ஒரு பகுதியும் இவர்களுக்கு வழங்கப்பெற்றன. துறையூர், அரியலூர், உடையார்பாளையம் முதலிய இடங்களிலிருந்த அரசுக் காவற்காரர்கள் விசயநகரம் வீழ்ந்த பின்னர் "பாளையக்காரர்களாக மாறிவிட்டனர். இவ்வாறு ஊரார், அரசு காவற்காரர் ஆகியோர் நாடு முழுவதும் வேலை போல் பின்னிக்கிடந்தனர். படைத்துறை தலைக்கோட்டைப் போரில் மட்டும் எழுபதாயிரம் குதிரைப் படையும், தொண்ணூறாயிரம் காலாள் படையும், பல நூறு யானைப் படை களும் இசுலாமியரைத் தாக்கப் பங்கேற்றதாகக் கூறப்படுவதி லிருந்து விசயநகர மன்னர்களிடமிருந்த படைவலிமையை அறியலாம். இவற்றைத் தவிர நாயக்கரிடமிருந்தும் சிற்றரசர்களிடமிருந்தும் போர்க் காலங்களில் படைகள் கிடைத்தன. இருபதினாயிரம் ஈட்டி வீரர்கள் அரசரைத் சூழ்ந்து நின்றனர் என நுனிசு கூறுகிறார். இவர்களைத் தவிர மூவாயிரம் யானை வீரர்களும், பதினாறாயிரம் குதிரை வீரர்களும், இரண்டாயிரம் குதிரைக் காரர் (குதிரைகளைப் பழக்குவோர், உணவிடுவோர் முதலியோர்களும் போர்க் கருவிகளைச் செய்யும் இரண்டாயிரம் கொல்லர்சுளும், தச்சர் சுளும், வண்ணார்களும், கட்டடத் தொழிலாளர்களும் விசயநகரப் படைத் துறையிலிருந்தனர். அரசரிடம், அரசே ஏற்படுத்திய நிரந்தரப்படையும், நாயக்கர், தளவாய்கள், பிரதானிகள் முதலிய படைமானியக் கிழார்கள் உதவும் படைமானியப் படைகளும் இருந்தன. அரசப் படையில் நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இருப்பார்கள். இவர்கள் படைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செஞ்சோற்றுக் கடன்தீர்ப்பர். படையில் பல்வேறு தரப்பட்ட பதவிகள் இருக்கும். சிறப்புச் செயல்களுக்காகப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும். அமைதிக் காலத்திலும் போர்க் காலத்திலும் படை வீரர்கள் தரும்' விதிகளின்படியே நடப்பார்கள். இவர்களின் போரிடும் முறையிலும் நயன்மை கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோட்டைகள் (துர்கம் இருந்தன. அவை நீரால் சூழப்பட்ட அல்லது அகழியால் சூழப்பட்ட கோட்டை ஜல் துர்கம்), நிலத்தால் சூழப்பட்ட கோட்டை தலதுர்கம்), மலைமீதுள்ள கோட்டை கிரிதுர்கம், காடுகளால் சூழப்பட்ட கோட்டை வனதுர்கம்) என நான்கு வகைப்படும். அனந்தப்புரம் மாவட்டத்திலுள்ள குத்தி என்ற இடத்திலிருந்த கோட்டை நாட்டிலிருந்த கோட்டைகளுக்கெல்லாம் நடுநாயகமாய் விளங்கிய தெனவும், ஒரு சக்கரத்தின் ஆரக் கால்களைப் போல் பிற கோட்டைகள் இருந்தனவென்றும், குத்தியிலிருந்த கோட்டை அவ்வாரக் கால்கள் இணையும் குடம் போலிருந்தது எனவும் அங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. நாட்டின் பாதுகாப்புக்குக் காட்டாண் தேவை யென்றும், ஆனால், அச் காடோ நாட்டின் நடுவிலிருந்தால் கள்வருக்கே அரணாக அமைந்துவிடுமென்றும் கிருட்டிணதேவராயன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளான். படைகள் தங்கிய இடம் படைப்பற்று' (Cantonmerit) எனப்பட்டது. இதுவே 'படைவீடு' எனவும் வழங்க வாயிற்று. இத்தகைய கோட்டைகளை நிருவகிக்க மக்களிடம் தண்டப் பட்ட வாரிப் பணம் கோட்டைப் பணம்' எனப்பட்டது. கோட்டை களுக்குள் கோயில்களும், பார்ப்பனர் இல்லங்களும் இருந்ததையும் அறிகிறோம். படைத்துறை "சுந்தச்சாரம்' எனப்பட்டது. (கந்தர்போர்க் கடவுள்! படைத்தலைவர் சேனாதிபதி சர்வசைன்யதிகாரி, தளவாய் எனும் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டார் அரண்மனை வாயிலைக்காக்கத் தனிப்படை இருந்தது. இதன் தலைவருக்குத் தனிமதிப்பும், மரியாதையும் இருந்தது, இவர்களில் பலதரப்பட்ட பதவிகள் இருந்தன. சம்பளம் படைவீரருக்கு மாதச் சம்பளம் 25 உருபாயிலிருந்து 50 உருபாய் வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்படுகிறது. தளபதிகளுக்கு மானியம் விடப்பட்டது. விசயநகரப் படையிலிருந்த இசுலாமியப் படைத்தலைவர் களும் ஒரே மாதிரியாகவே நடத்தப்பட்டனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டிக்கொள்ளவும் இசைவளிக்கப்பட்டனர். படைகள் செல்வதற்கெனப் பெரிய பாட்டைகள் (பாதைகள் இருந்தன. அவை 'தண்டினதாரி', "தண்டமார்கா', 'தண்டு தோவா' என்னும் பெயர்களால் அறியப் பட்டன. அரசன் விசயதசமியன்று படை அணிவகுப்பு மதிப்பையேற்றுப் பார்வையிடுவான். அயலக உறவு விசயநகர அரசு, பர்மா, சீனா முதலிய கீழ்த்திசை நாடுகளோடும், ஈழத்தோடும், பாரசீகம், அரேபியா, துருக்கி போர்த்துகல் முதலிய மேலை நாடுகளோடும் நட்புறவு கொண்டிருந்தது. போர்த்துகீசியர்தார் விசயநகர அரசால் பெரிதும் நன்மையடைந்தனர். கோவா விசயநகர அரசு உயரும் போதெல்லாம் உயர்ந்து, தாழும் போதெல்லாம் தாழ்ந்து, கடைசியாகத் தலைக்கோட்டைப்போருக்குப்பின் சாய்ந்தே போயிற்று என்பர். மாநில ஆட்சி நாட்டுப் பரப்பு விசயநகரப் பேரரசு, முதலாம் இராசராசன் காலத்திலும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் இருந்த சோழப் பேரரசை விடப் பரப்பில் விரிந்து நின்றது. சாரத் தீவிலிருந்து குல்பர்க்கா வரையிலும், வங்காளத்திலிருந்து மலபார் வரையிலும் இப் பேரரசு பரவியிருந்ததோடு இலங்கையி லிருந்தும் திறை பெற்றது. நாட்டுப் பிரிவுகள் இப் பேரரசு பல பெரிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை இராச்சியங்கள்' அல்லது மண்டிலங்களெனப்பட்டன. அவை: (7) பெனுகொண்டா (2) உதயகிரி, 3 சந்திரகிரி, 4) படைவீடு, 5 திருவாடி, (6) முலுவாயி, சாந்தலிசு ஆயிரம், 8) ஆரகம், 9 துளுநாடு என்பனவாம். பிற்காலத்தில் இவை கூடியும், குறைந்துமிருந்தன. இவற்றில் கீழ்த்திசையிலிருந்த உதயகிரிமண்டலத்தில் இன்றைய நெல்லூர், கடப்பை மாவட்டங்களி லிருந்தன, இதற்குத் தெற்கில்தான் பெனுகொண்டா மண்டிலம் இருந்தது. அதற்கும் தெற்கில் சந்திரகிரி மண்டிலமிருந்தது. அதனையடுத்துப் படைவீடு மண்டிலமிருந்தது. இதில் இன்றைய வேலூர் மாவட்டப் பகுதிகளில் சிலவும் செங்கழுநீர்ப்பட்டு மாவட்டப் பகுதிகளில் சிலவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பகுதிகளும் அடங்கி யிருந்தன. படைவீடுமண்டிலத்திற்குத் தெற்கிலிருந்த திருவாடி மண்டிலத்தில் வேலுார் மாவட்டத்தின் வேறு சில பகுதிகளும், தென்னார்க்காடு, சேலம் மாவட்டங்களின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. மூல்பகாலத் தலைநகராகக் கொண்டிருந்த முலுவாயி மண்டலத்தில் இன்றைய கோலார், சேலம், வடார்க்காடு, சித்தூர் மாவட்டங்களின் சில பகுதிகள் சேர்ந்திருந் தன. சாந்தலிசு ஆயிரம் என்ற மண்டலத்தில் சிமோகா, தென்சுன்னடம் மாவட்டங்களின் சில பகுதிகள் அடங்கியிருந்தன. இதற்குச் சற்றுத் தெற்கிலிருந்த ஆரக மண்டலத்தில் எஞ்சி நின்ற சிமோகா, வடகன்னடம் ஆகியவற்றின் சில பகுதிகளடங்கியிருந்தன. இதன் தலைநகரம் சந்திரகுத்தி அல்லது குத்தியாகும். மங்களூரைத் தலைநகராகக் கொண்டிருந்த துளுநாடும் விசயநகருடனிருந்தது. இவற்றுள் படைவீடு மண்டிலம் சம்புவராயரிடமிருந்து கைப்பற்றப்பட்டு விசயநசுருடன் சேர்க்கப்பட்ட பெரிய மண்டிலமாகும். இது *மகா இராச்சியம்" எனப்பட்டது. இதைப் போன்ற பிற மாமண்டிலங்கள் சந்திரகிரி, ஆரகம் ஆகியவையாம்." விசயநகர ஆட்சியில் தமிழகத்திலிருந்த மண்டிலங்கள் செயங் கொண்ட சோழ மண்டிலம், நிகராழி சோழமண்டிலம், தொண்டை மண்டிலம், மகதை மண்டியம், சோழ மண்டிலம் என அறியப்பட்டன. சோழர்காலப் பெயர்களான இவற்றை அப்படியே விசயநகரத்திலும் காண்கிறோம். இராச்சியத்தைவிட மண்டிலங்கள் பரப்பில் பெரியவை என்பர். ஆனால், இராச்சியத்தை ஆள் ஆளுநர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். மண்டிலத்தை ஆள விசயநகரக் காலத்தில் ஆளுநர்கள் அமர்த்தப்ப டவில்லை. இது பற்றிய முழு ஆய்வுத் தகவல்கள் நமக்குக் கிடைக்க வில்லை, மண்டலத்தில் கீழ்க் கோட்டங்கள் கூற்றங்கள் பல இருந்தன. ஒவ்வொரு கோட்டமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கோட்டத்தை ஒரு மாவட்டத்திற்கும் நாட்டை ஒரு வட்டத்திற்கும் ஒப்பிடலாம். நாடு பற்று" எனவும் அழைக்கப்பெற்றது. ஒவ்வொரு நாடும் ஐம்பது ஊர்களைக் கொண்ட பல ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டது. இது 'ஐம்பதின் மேலகிராமம்' எனப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஓர் ஊர் தலைமைப்பீடமாக இருக்கும். ஒவ்வோர் ஒன்றியத்தின் கீழும் ஒருசில ஊர்களைக் கொண்ட 'அகரம்' அல்லது மங்கலம் அல்லது 'மளர்கள்' இருக்கும், இந்தப் பிரிவைப் பிதாகை' என்பர். இதுவே ஆட்சியின் கீழ்நிலைப் பிரிவாகும். ஆனால், சில ஊர்கள் தனித்தும் ஆளப்பட்டன. அவை தனியூர்' எனப்பட்டன. அத்தகைய தனியூர் ஆட்சியில் சிறந்தது உத்திரமேரூர் ஆகும். இதே போன்ற பிரிவுகளே கன்னட, தெலுங்கு நாடுகளிலும் இருந்தன. ஆனால், அவை அந் நாடுகளுக்கேற்ப வேறு பெயர்களால் அறியப்பட்டன. மாநில ஆட்சிமுறை மாநில ஆளுநர்களை அரசன் தலைமையமைச்சரைக் கலந்தே அமர்த்துவான். பெரும்பாலான மாநில ஆளுநர்கள் அரச குடும்பத்துப் பிள்ளைகளாகவே இருப்பர். இவர்கள் "ஒடியா" என்ற விருதுப்பெயர் பெற்றனர். தமிழகத்தில் இவர்களை 'உடையார்' என்றே அழைத்தனர், இவர்கள் கொடி வழியாகவும் இப் பதவிக்கு வருவதுண்டு. ஆளுநர்களை அடிக்கடி மாற்றுவதும் உண்டு. ஆளுநர்களுக்குத் தனிப்பட்ட அலுவலகம் இருக்கும். இவர்கள் தாங்களே காசுகளை அச்சிட்டு வெளியிடுவார்கள். தங்களுக்கு உட்பட்ட ஆட்சிப் பொறுப்புகளையும், வழக்குகளையும் தாங்களே கவனிப்பார்கள். ஆளுநர்கள் கொடுங்கோலராக மாறும்போது நடுவண் ஆட்சி அரசன் தலையிட்டு மக்களைக் காக்கும். ஆளுநர் மாற்றப் படுவதும் அல்லது நீக்கப்படுவதும் உண்டு. மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட வருவாயை நடுவண் ஆட்சிக்குச் செலுத்த வேண்டும். மாநில ஆளுநர்கள் சிற்றரசர்களைப் போல் பல்லக்கில் ஊர்ந்து செல்லுதல், மற்றும் அரசன் சின்னங்களுடன் கொலு வீற்றிருத்தல், நயன்மை வழங்குதல் முதலிய சலுகைகளுடன் திகழ்ந்தார்கள். அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆளுநர்களையும் கலந்தே தேர்ந்தெடுப்பது வழக்கம். சில ஆளுநர்களே : அமைச்சர்களாகவும் இருந்தனர். நாயக்கர் ஆட்சிமுறை விசயநகர மாநில ஆட்சிப் பொறுப்பு ஆளுநர்களிடம் இருந்ததைக் கண்டோம். ஒரு சில மாநிலப் பகுதிகளை ஆண்டவர்கள் நாயக்கர் எனப்பட்டனர். இந்த நாயக்கர்கள் யாவர்? அரசரிடமிருந்து ஒரு சிறிய அல்லது பெரிய நிலப் பகுதிக்கு நாயகனாகும் தலைவனே நாயகனாவான், குறிப்பிட்ட நிலப்பகுதியைப் பெற்ற இந்த நாயக்கன் அரசருக்குக் குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் செலுத்தவேண்டும். அரசருக்கு வேண்டிய சமையத்தில் போர்க் காலத்தில்) படையுதவி புரிய வேண்டும், தனக்குட்பட்ட நிலப்பகுதியில் வரும் வருவாயை அவனே துய்த்துக் கொண்டு, அதன் ஆட்சிப் பொறுப்பையும் அவனே கவனித்துக் கொள் வான். இது இடைக்கால ஐரோப்பாவிலிருந்த 'படைமானிய முறையை ஓரளவு ஒத்தது; பலவகையில் வேறுபடுவது. நாயக்கர்களுக்கும், மாநில ஆளுநர்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆளுநர் அரசனின் படிநிகராளி; ஆனால், நாயக்கன் தனிப்பட்ட படைத்தலைவன். தக்க சமையத்தில் குறித்த எண்ணிக்கையுள்ள படையும், நிரந்தரமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணமும் அரசுக்குச் செலுத்து வது நாயக்கன் கடமை. அவனுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்குத் தக்கபடியே இப்படை யளவும், பணத்தொகையும் இருக்கும். இந் நிலப் பரப்பு ஏறத்தாழ ஒரு மாவட்டத்தையொத்திருக்கும். அரசன் ஆளுநர்களை அடிக்கடி மாற்றலாம் அவர்களுடைய மாநில ஆட்சிமுறையில் அடிக்கடி தலையிடலாம். ஆனால், நாயக்கர்கள் மாற்றப்படுவதுமில்லை; அவர்களின் ஆட்சிமுறையில் தலையிடுவதும் இல்லை. அவர்கள் குறிப்பிட்ட தொகையைக் கட்டத் தவறினால் அல்லது படை உதவமுடியாவிட்டால் நீக்கப்பட்டு வேறு நாயக்கர் நியமிக்கப்படுவர். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற ஆளுநர்கள் பார்ப்பனர்கள், ஆட்சிமுறையைக் கவனிப்பதோடு அவர்களின் கடமை முடிந்தது. ஆனால், நாயக்கர்கள் காடுகொன்று நாடாக்கிப் பயிர்வளத்தைப் பெருக்குவதிலும், களர் மக்களின் அன்றாட வாழ்வையும், நயன்மையையும் சுவனிப்பதிலும் அக்கறை காட்டினர். நடுவண் ஆட்சி வலுக்குன்றிய போதெல்லாம் நாயக்கர்கள் வலுப்பெற்றுக் காலப் போக்கில் கொடி வழியாக ஆளமுற்பட்டனர். இத்தகைய நாயக்கர்கள் பற்றி இனி விரிவாக அறியலாம். நாயக்கர்கள் தங்களின் படிநிகராளிகளாகத் தானாதிபதிகளை அரசனின் அவைக்கு அனுப்புவர். இதைப்போலவே அரசனுக்குப் படை தேவைப்படும்போது தங்களின் படைத் தலைவர்களைப் படையுடன் அரசனிடம் அனுப்புவர். ஆகவே, காலப்போக்கில் இவர்கள் அரசர்களைப் போல் ஆகிவிட்டனர். நாயக்கர் ஆட்சியில் காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக்கப்பட்டன. இதனால், வேளாண்மை வளர்ந்தது. மாவட்ட அளவில் மக்களின் வாழ்க்கைத்தரமும், பண்பாடு, பாதுகாப்பு, முதலியனவும் தனி அக்கறையுடன் வளர்க்கப்பட்டன. மதுரை, திருநெல் வேலி மாவட்டங்களில் இம்முறையால் காலப்போக்கில் பாளையக்காரர் முறையாக மாறியபோது, பல தொல்லைகளும் ஏற்பட்டன, தங்களுக் குள்ளே இவர்கள் போரிட்டுக்கொண்டனர். நடுவண் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் தனியாட்சியாளராக ஆண்டனர். ஆகவே, நாட்டின் ஒற்றுமைக்கு இம்முறை கேடு விளைவித்தது என்பர். ஊராட்சி பார்ப்பனர்களுக்கென்று தானமாக வழங்கப்பெற்ற சிற்றூர்கள் 'பிரம்மதேயம்' எனப்பட்டன. இவற்றில் பார்ப்பனர்களே தனி ஊர் மன்றங்களை அமைத்துக்கொண்டனர். அவை சதுர்வேதிமங்கல சபை' எனப்பட்டன. இவற்றைத்தவிரத் தனியூர் மன்றங்களும், நாட்டவைகளும் இருந்தன, இம் மன்றங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட நிலங்களை விற்கும் அல்லது வாங்கும் உரிமைகளையும், வழக்குகளைத் தீர்க்கும் உரிமைகளை யும், மற்ற ஊராட்சி அதிகாரங்களையும் பெற்றிருந்தன. . ஊராட்சி முறையில் ஆயக்கார் முறை' என்பது குறிப்பிடத்தக்க தாகும். இதனைத் தனியூர் ஆட்சி"எனலாம். இதில் கர்ணம் பதிவாளராக வும், தலையாரியும் தோட்டியும் காவலாளர்களாகவும் இருப்பர். இவர்களுடன் பருவங்களைக் கணித்துக் கூறும் நிமித்தகன் சோதிடன்), வேளாண்மைக் கருவிகளைச் செய்து தரும் கம்மாளன்', தச்சன், குயவன், வண்ணான், அம்பட்டன், தட்டான், தோல் வேலை செய்பவன், வயல் - களுக்கு நீர்ப் பாய்ச்சும் முறையைக் கண்காணிக்கும் நீர்கந்தி ஆகியோர் தளர்மன்றத்தில் இருப்பர். பிற்கால் மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் இந்த ஆயக்காரர் முறையிருந்தது. அதில் மணியக்காரர் அல்லது அம்பலக் காரர் சிறப்பிடம் பெற்றார். தொழிற் சங்கங்கள் தட்டார், தச்சர், கம்மாளர், குயவர் போன்ற தொழிலாளர்கள் தங்கள் தொழில்வழி ஒன்றிணைந்து தொழிற்கழகங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஒவ்வொரு தொழிற்கழகமும் தனிப்பட்ட சட்ட திட்டங் களை ஏற்படுத்திக்கொண்டு தொழில் முறையை வளர்த்தது. காலப்போக் தில் இதில் இருந்தவர்கள் குமுகாயத்தில் தங்களுக்கெனத் தனித்தனி யாகச் சலுகைகள் கோரிப் போராட்டங்கள் நடத்தினர். இவர்களுள்கைக் கோலர் கழகம் சற்று வலிவுடையதாய் விளங்கியது எனலாம். தொழிற் கழகத்தார் தங்களுக்கெனத் தனிக் கோயில்களையும், குமுகாயக் கூடங்களையும். அறக்கட்டளைகளையும் அழைத்துக்கொண்டனர். பிற்காலத்தில் இக் கழகங்கள் சாதியும் தொழிலும் சேர்ந்து செயல்பட்ட வலிவுள்ள நிறுவனங் சுளாக மாறிக் குமுகாய ஒற்றுமையைச் சீர்குலைத்தன. இவற்றையொத்த மற்றொரு பெரும் பிரிவுதான் வலங்கை, இடங்கைப் பிரிவுகளாகும். பொதுவாக விசயநகர ஆட்சிக்காலத்தில் ஊராட்சிமுறை சோழர் காலத்தைப் போல் சிறந்து காணப்படவில்லை. சாதியுணர்வு வளர்வதற்கும், தாழ்த்தப்பட்டோர் நசுக்கப்படுவதற்கும் சாதிப் பிரிவுகளும், தொழிற் கழகங்களும் பேருதவி புரிந்தன. தீண்டாமைக் கொடுமை வளர்ந்தது. இதற்கு உறுதுணையாக இந்தச் சமயத்தின் மறுமலர்ச்சி விளங்கியது. விசயநகர மன்னர்கள் 1. சங்கம் மரபினர் 1. முதலாம் அரிகரன் (கி.பி. 1336 - 1357) 2. முதலாம் புக்கன் (கி.பி. 1357 - 1377) 3. இரண்டாம் அரிகரன் (கி.பி.1377 - 1404) 4, இரண்டாம் புக்கன் (கி.பி.1405 - 1406) 5. முதலாம் தேவராயன் (கி.பி.1406 – 1422) 6. முதலாம் விசயராயன் கிபி.1427 - 1426) 7. இரண்டாம் தேவராயன் (கி.பி. 1424 - 1447) 8. மல்லிகார்ச்சுனன் (கிபி.1441 - 1455) 9. இரண்டாம் விருபாட்சன் (கி.பி. 1465 - 1485) II சாளுவ மரபினர் 1. சாளுவ நரசிம்ம ன் கி.பி. 1485 - 93) 2. தருமராயன் (கிபி.1491 - 1505) III. துளுவ மரபினர் வீரநரசிம்ம ன் (கி.பி. 1506 – 1509) கிருட்டிணதேவராயர் (கி.பி. 1509 - 1530) 3. அச்சுதராயன் (கி.பி. 1530 - 1542) 4. சதாசிவராயன் (கி.பி. 1542 - 1576) IV, ஆரவீடு மரபினர் (தலைநகர் – பெனுகொண்டா) 1. திருமலைராயன் (கிபி. 1570 - 1572) 2 முதலாம் சிறீரங்கன் (கி.பி. 1572 = 1585) 3. இரண்டாம் வேங்கடன் (கி.பி.1585 - 1614) 4. இராமதேவராயன் (கி.பி. 1614 = 1630) 5. பெரியவேங்கடன் (கிபி.1530 - 1642 ) தலைநகர் - பெனுகொண்டா} 6 மூன்றாம் சிறீரங்கன் இறப்பு: கி.பி. 1672 கிபி.1642 - 16-49) 10. நாயக்கர்கள் (அ) மதுரை நாயக்கர்கள் ஆட்சிமுறை (கி.பி. 1529-1786) தலைக்கோட்டைப் போரில் கிபி1565 விசயநகரப் பேரரசு அழிந்த பின்னரே மதுரையில் நாயக்கர் அரசு தோன்றியது என்று எண்ணுவதற் கில்லை . அதற்கு முன்னரே நாயக்கர்கள் விசயநகரப் பேரரசின் படிநிகராளி களாக அல்லது ஆளுநர்களாக ஆண்டுவந்தனர். ஆகவே, மதுரை நாயக்கர் வரலாறு என்பது முதன் முதலில் மதுரையை ஆள் அமர்த்தப்பட்ட விசுவநாத நாயக்கனிலிருந்து கி.பி. 159 இதனைக் கடைசியாக ஆண்ட அவர் கொடிவழியைச் சேர்ந்த மீனாட்சியின் ஆட்சி முடிவுக் காலம் கிபி. 1736) வரை தொடர்ந்தது, விசுவநாத நாயக்கனுக்கு முன்பே மதுரை விசயநகர ஆட்சியின் கீழ் வந்தது. ஆகவே, அவனுக்கு முன்பே விசயநகரப் பேரரசின் சார்பில் மதுரையை ஆண்டவர்களும் உள்ளனர். விசயநகர அரசர் விசயநகர அரசர் புக்கர் சிபி.1357-137ா காலத்தில் தென்னாட்டின் பெரும் பகுதி விசயநகர ஆட்சிக்கு உட்பட்டது. அதில் நெல்லூர், கடப்பை, பெனுகொண்டா, பெல்லாரி, அனந்தப்பூர், மைசூரின் வடபகுதி, கோவா, தமிழ்நாடு ஆகியவையும் அடங்கிற்று. புக்கரின் மகன் கம்பண்ணன் குமார் கம்பண்ணன், தொண்டை மண்டலத்தையாண்ட சம்புவராயர் மீது படையெடுத்து அவர்களை வென்று அவர்களின் ஒத்துழைப்புடன் சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பாண்டிய நாட்டு மாபார் சுல்தான்களையும் வென்றான். இவனால்தான் மதுரையிலிருந்த சுல்தான்களாட்சி ஒழிக்கப் பட்டதென்பது ஏற்கனவே கூறப்பட்டது. இவன் மதுரையில் முஸ்லீம் களால் தரைமட்டமாக்கப்பட்ட மீனாட்சியம்மன் கோயில் மதிற்சுவர் களையும், கோபுரங்களையும் கட்டுவித்தான். இசுலாமியருக்கு அஞ்சித் திருவரங்கத்திலிருந்து நாஞ்சில் நாட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைக்கப் பெற்றிருந்த அரங்கநாதனார் சிலையை மீண்டும் கொண்டுவரச் செய்து திருவரங்கத்தில் வைத்து நாள்தோறும் பூசைகள் நடத்த ஏற்பாடு செய்தான். இதற்காகச் சில ஊர்களும் மானியமாக விடப்பட்டன. இக் கம்பண்ணன் கிபி. 1374-ல் இறந்தான். இவனுக்குப் பின்னும் தமிழ்நாட்டின் பகுதிகளை ஆன விசயநகரப் படிநிகராளிகள் தொடர்ந்து அமர்த்தப்பட்டனர். இரண்டாம் தேவராயன் (கிபி.1425-1445 காலத்தில் இலக்கண்ணன் என்பவன் மதுரை நாட்டிற்கும், மாதண்ணன் என்பவன் தஞ்சை நாட்டிற்கும் மாமண்டலத்தலைவர்களாக மகா மண்டலேசுவரர் அமர்த்தப்பட்டனர். கிருட்டிணதேவராயன் காலத்தில் (கிபி.1809-159 நரச நாயக்கன் என்பான் சோழ நாட்டிற்கும், நாகம நாயக்கன் என்பான் பாண்டிய நாட்டிற்கும் மண்டலேசுவரர்களாக அமர்த்தப்பட்டனர். நாகம் நாயக்கன் தனக்கு முரண்படநடந்துகொண்டதால் கிருட்டிணதேவராயன் அவனை நீக்கிவிட்டு அவனுடைய மகன் விசுவநாத நாயக்கனை மதுரை மண்டலேசுவராாக அமர்த்தினான். இதனைக் கிருட்டின தேவராயனுக்குப் பின் வந்த அச்சுதராயன் (கி.பி. 1530-1542 அப்படியே ஒப்புக்கொண்டு விசுவநாத நாயக்கனையே மதுரை மகாமண்டலே சுவரராக ஆளும்படி செய்தான். அச்சுதராயனின் மனைவியின் தங்கை கணவன் செவ்வப்ப நாயக்கன் தஞ்சைக்கு மகாமண்டலேசுவரர் ஆனான். விசுவநாத நாயக்கன் (கி.பி. 1529-1564) விசுவநாத நாயக்கனின் தந்தையான நாகம நாயக்கன் கிருட்டிண தேவராயனுக்கு முன் விசயநகரையாண்ட சாளுவ நரசிம்மன் காலத்தி லிருந்தே பெரும் பொறுப்புகளையேற்று வந்தான். கிருட்டிண தேவராயன் இவனை மதுரை மகாமண்டலேசுவரராக அமர்த்தினான். கிருட்டிணதேவராயன் காலத்தில் சோழநாட்டில் வீரசேகரன் என்று சிற்றரசன் இருந்தான். இவன் பாண்டிய நாட்டிலிருந்த சந்திரசேகரன்மீது படையெடுத்து அவன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சந்திர சேகரன் கிருட்டிணதேவராயன் உதவியை நாடினான். கிருட்டிண தேவராயன் மதுரை மகாமண்டலேசுவரராயிருந்த நாகம் நாயக்கனை அவனுக்கு உதவிசெய்யும்படி ஆணையிட்டான், நாகம நாயக்கன் சோழர் சிற்றரசனை வென்று பாண்டிய நாட்டைச் சந்திரசேகரனிடம் ஒப்படைக் காமல் தானே வைத்துக்கொண்டான். இதனையறிந்த கிருட்டிண தேவராயன் அவனை நீக்கிவிட்டு அவனுடைய மகனான விசுவநாத நாயக்கனை மதுரை மகாமண்டலேசுவரனாக அமர்த்தினான் என்பது வரலாறு. இவ்வாறு கிபி.1570-ல் மதுரை மகாமண்டலேசுவரரான விசுவநாத நாயக்கன் மதுரையையும் சோழ நாட்டையும் தானே கண்காணித்தான். சோழர் சிற்றரசன் சந்திரசேகரன் பிறங்கடையின்றி இறந்ததும் சோழ நாட்டையும் இணைத்துத் தானே ஆளத்தொடங்கினான். இந் நிலையில் இவனுக்கு உறுதுணையாய் நின்றவன் தளவாய் அரியநாத முதலி ஆவான். மேலும், விசுவநாத நாயக்கன் இனம் அகவையிலிருந்தே தேவராயனிடம் பல துறைகளில் பணியாற்றிதல்ல ஆற்றலும், பட்டறிவும் பெற்றிருந்தான், சீர்திருத்தங்கள் விசயநகர நாயக்கன் மதுரை மண்டலேசுவரரானதும் மதுரை, தஞ்சை மண்டலங்களின் எல்லைகளை அமைத்துக்கொண்டான். திருச்சி ராப்பள்ளி மதுரை மண்டலத்துடன் இணைந்தது. திருச்சித்தெப்பக்குளம், தாயுமானவர் கோயில் ஆகியவற்றை விசுவநாதன் செப்பனிட்டான். திருவரங்கக் கோயிலைச் சீர்திருத்தி அதனைச் சுற்றிலும் தெருக்களை யமைத்தான். இக் கோயிலுக்கு மூன்று இலக்கம் பொன் செலவிட்டான். காவிரிக்கரையின் இருமருங்கிலும் கள்ளர் பதுங்கி வாழ்வதற்கு ஏந்தா யிருந்த காடுகளையழித்து ஊர்க்காவற்படைகளை அமர்த்திக் காவல்புரியச் செய்தான், தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகத்தைத் தன் தளபதி தளவாய் அரியநாதனை அனுப்பி அடக்கினான். அங்கிருந்த பஞ்ச பாண்டியர்' என்னும் பாண்டிய மன்னர் ஐவரை அடக்கித் தனக்கு அடங்கி ஆளும்படி செய்தான். தாம்பரபரணி யாற்றங் கரைகளில் இருந்துகொண்டு தொல்லை தந்த கள்ளர்களை யொழித்து அவர்கள் வாழ்ந்த காடுகளை யழித்தான் . நெல்லையப்பர் கோயிலைப் பழுதுபார்த்து, திருநெல்வேலி நகரத்தையும் விரிவாக்கினான். நீர்ப்பாசன ஏந்துகள் பல செய்தான். குடிமக்கள் அமைதியும், செழுமை யான வாழ்க்கையையும் பெற்றனர். கம்பம் கூடலூர்ப் பகுதியில் நடை பெற்ற கல்கத்தை அடக்கினான், பாளையப்பட்டு முறையை வளர்த்தல் ஆங்கில நாட்டுப் படைமானிய முறையைப் (Feudal System) போன்று தமிழகத்திலும் விசுவநாத நாயக்கனால் ஏற்படுத்தப்பட்ட ஒருவகை ஆட்சிமுறையையே 'பாளையப்பட்டு முறை' என்கிறோம். இந்து அரசியல், பொருளியல், படை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. தன் அடிப்படையில் தனக்குக் கீழிருந்த (பழைய) மதுரை, திருச்சி, முகவை, நெல்லை, சேலம், கோவை மாவட்டப் பகுதிகளையும், திருவிதாங்கூரில் ஒரு பகுதியையும் விசுவநாத நாயக்கன் எழுபத்திரண்டு, பாளையங் களாகப் பிரித்தான். ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு தலைவனை அமர்த்தினான். அத் தலைவன் அப்பாளையப்பட்டிலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றிலொரு பகுதியை மதுரை நாயக்கனுக்குக் கொடுத்துவிட்டு, மீதியில் பாதியைப் படை வீரர்களுக்குச் செலவிட வேண்டும். மிகுந்ததைத் தனது சொந்த செலவிற்கு வைத்துக்கொள்ளல் வேண்டும். போர்க் காலங்களில் மதுரை நாயக்கனுக்குப் படைத்துணை புரிய வேண்டும். தங்கள் எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை உசாவி நயன்மை வழங்க வேண்டும். இத்தகைய பாளையப்பட்டுமுறை கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் காந்திய நாட்டையாண்டப்பிரதாபருத்திரனால் அந்நாட்டில் கொண்டு வரப்பட்டதால் அந்நாட்டின் ஆட்சிமுறை நிலைப்படுத்தப்பட்டு அமைதி ஏற்பட்டது. இதனைப் பின்பற்றியே விசுவநாத நாயக்கனும் இம் முறை யைத் தன் நாட்டிலும் நடைமுறைக்குக் கொண்டுவந்தான். பண்டையப் பாண்டியரின் கீழ் ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்கள், விசயநகரப் பேரரசின் கீழிருந்த சிற்றரசர்கள், கன்னடதெலுங்கு நாட்டுத்தலைவர்கள் கள்ளர் தலைவர்கள் ஆகியோர் அடிக்கடி விளைத்த குழப்பங்களும், கலகங்களும் இப் பாளையப்பட்டு முறையால் அடக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டது. இத்தகையோரில் சிலர் பாளையக்காரர்களாகவும் அமர்த்தப்பட்டு விட்டதால் ஆட்சியில் பொறுப்புள்ளவராகவும், சிற்றரசர்களைப் போலவும் சிறந்து விளங்கினார்கள். இப்பாளையப்பட்டு முறை கி.பி. 1535-ல் செயற்படுத்தப்பட்டது. நாளடைவில் இதன் ஆட்சி முறையிலும் சில சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தெலுங்கரும் கன்னடரும் தமிழகத்தில் ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள். உயிர், உடைமை, தொழில் ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆகவே, அக் கால நிலைமைக்கேற்ப இப் பாளையப்பட்டு முறை எவ்வகையிலும் சிறந்ததாகவே காணப்பட்டது. விசுவநாத நாயக்கன் விசயநகரப் பேரரசுக்குக் கீழ்படிந்தும், நேர்மையாகச் செங்கோலோச்சியும், சீரிய ஒழுக்கமும், ஒப்புயர்வற்ற ஆட்சித் திறனும், பெரு வீரமும் கொண்டு வாழ்ந்தான். கோயில் திருப்பணிகளை மேற்கொண்டான். இவனுக்கு உறுதுணையாயமைந்த இராமபுத்திர நாயக்கன், அரியநாத முதலி ஆகியோரில் அரியநாதன் கட்டிய மதுரை சோமசுந்தரப் பெருமான் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் தூண் ஒன்றில் குதிரைமீது அமர்ந்திருப்பது போல் விசுவநாத நாயக்கனின் உருவச்சிலை செதுக்கப்பட்டிருக்கிறது, முப்பத்தைந்து ஆட்சியாண்டுகளுக்குப்பின் இவன் தமது அறுபத் தொன்பதாம் அகவையில் கிபி.1554 ஆம் ஆண்டில் இறந்தான், முதலாம் கிருட்டிணப்ப நாயக்கன் (கி.பி. 1564-1572) விசுவநாத நாயக்கனுக்குப் பின் அவன் மகன் முதலாம் கிருட்டி ணப்ப நாயக்கன் கிபி.1564-ல் மதுரை மகாமண்டலேசுவரர் ஆனான். நல்ல ஆட்சிப் பயிற்சியை இளமையிலேயே பெற்ற இவன் பாளையக்காரர்கள் தம்மையெதிர்த்துச் செய்த கலகத்தை எளிதில் அடக்கினான். தும்பிச்சி நாயக்கனூரர்ப் பாளையக்காரன் தனக்கெதிராகப் பறம்புக்குடிக்கோட்டை யைக் கைப்பற்றிப் படையெடுத்ததைத் தாம்போருக்குச் செல்லாமலேயே படைத்தலைவர்களைக் கொண்டு அடக்கினான். தும்பிச்சி நாயக்கன் பாளையத்து மன்னனைக் கொல்லித்தான்.தும்பிச்சிநாயக்கன் நண்பணான இலங்கையரசன்மீது ஐம்பத்திரண்டு பாளையக்காரர்களின் படைகளை யும் செலுத்தி அந் நாட்டிலுள்ள புட்டணம் என்ற இடத்தில் அவனுக்குத் துணையாய் வந்த 40 வீரர்களையும் வென்றான். இலங்கை மன்னன் - மீண்டும் நிரப்பி சிங்களரையும், பத்தாயிரம் போர்த்து கீசியரையும் சேர்த்துக்கொண்டு கடும் போர் புரிந்தான். அத்துணை பேரும் மதுரை வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை வேந்தனோ தற்கொலை செய்து கொண்டான். கிருட்டிணப்ப நாயக்கன் தமது அளியனான(மைத்துனனான விசயகோபால் நாயக்கனை இலங்கைக்குப் படிநிகராளியாக அமர்த்திவிட்டு மதுரைக்குத் திரும்பினான். தலைக்கோட்டைப் போர் கி.பி. 1565-ல் பாமினி அரையர்கள் ஒன்றிணைந்து விசய நகரப் பேரரசைத் தலைக்கோட்டை என்னுமிடத்தில் தாக்கி அதனை அழித்து விட்டார்கள் என்பதையும், அச் சமையத்தில் அப் பேரரசின் மன்னனா யிருந்த சதாசிவராயன் பெயரளவில் மட்டும் மன்னனாய் இருந்ததால் அவனுக்கு அமைச்சராயிருந்த திருமலைராயன் விசயநகரம் பற்றி எரியும்போது அம் மன்னனையும் தன் மனைவி மக்களையும் அழைத்துக் கொண்டு, கையில் கிடைத்த மட்டும் செல்வங்களை வாரிக்கொண்டு, பெனுகொண்டாவிற்கு ஓடி விட்டான் என்பதையும் அறிவோம். பெனு கொண்டாவந்தடைந்த திருமலைராயன் அதனைக் கோநகராகக் கொண்டு தானே பேரரசனாக முடிசூட்டிக்கொண்டு ஆண்டான். இக் குழப்ப நிலையில் செஞ்சி, தஞ்சை முதலிய பகுதியிலிருந்த நாயக்க மன்னர்கள் பேரரசின் தலைமையைப் புறக்கணித்து முழு உரிமையுடன் அரசாண் டார்கள். ஆனால், மதுரை நாட்டையாண்ட கிருட்டிணப்ப நாயக்கன் மட்டும் பேரரசுக்கு அடங்கித் திருமலை நாயக்கனுக்குத் திறை செலுத்தி வந்தான். விசயநகரப் போரில் பேரரசுக்குத் துணையாகத் தமது படைகளையும் தளவாய் அரியநாத முதலியின் தலைமையில் அனுப்பி வைத்தான். இம் முதலியார் காஞ்சிபுரத்திற்கருகிலுள்ள மட்பேட்டுக் கருகில் வாழ்ந்துகொண்டிருந்த தமது உறவினரைப் பாண்டிய நாட்டுக்கு அழைத்துச்சென்று சோழவந்தானில் குடியேற்றினான். இவர்கள் நாளடைவில் திருநெல்வேலி முதலிய இடங்களில் பரவினார்கள். இவர்களின் வழித்தோன்றல்களே 'தொண்டை மண்டல முதலியார்கள்' என அழைக்கப்படுகிறார்கள். கிருட்டிணப்ப நாயக்கன் பாளையங்கோட்டைக்கு அருகில் கிருட்டிணாபுரம் என்ற நகரத்தையும் அமைத்தான். கிருட்டிணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோயிலைக் கட்டிப் பல இறையிலிகளை அளித்தான். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலுள்ள பல பகுதிகளைக் கட்டுவித்துப் பல திருப்பணிகளையும் செய்தான். கி.பி.1572 ஆம் ஆண்டு இவன் இறந்தான். வீரப்ப நாயக்கன் (கி.பி. 1572-1595) முதலாம் கிருட்டிணப்ப நாயக்கனுக்குப்பின் அவனுடைய மூத்த மகன் வீரப்ப நாயக்கன் கி.பி. 1572-1595 மதுரை நாயக்கன் ஆனான். இவனுடைய தம்பி விசுவநாத நாயக்கன் இவனுக்குத் துணையாயிருந்து இளவரசன் போல் செயல்பட்டான். வீரப்ப நாயக்கன் காலத்தில் பாணர்களின் கலகம் ஏற்பட்டது. விசுவநாத நாயக்கன் காலத்தில ? பாளையக்காரர்களுள் சில பாணர்களும் பாளையக்காரர்களாய் இருந்தனர். இவர்கள் கிருட்டிணப்ப நாயக்கன் காலத்தில் உரிமை பெறக் கருதி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். பாணர் அல்லது வாணர் அல்லது மாவலி வாணாதிராயர் எனப்படும் இவர்களில் ஒருவன் மானாமதுரை யிலும் காளையார் கோயிலிலும் இருந்த கோட்டைகளை வலுப்படுத்தி, பக்கத்துச் சிற்றூர்களைக் கைப்பற்றிக்கொண்டு கலகத்தில் இறங்கினான். கிருட்டிணப்ப நாயக்கன் இவனை அடக்கியதோடு இவனுடைய பாளை யத்தையும் கைப்பற்றினான். இது மற்ற பாளையக்காரருக்கும், சிற்றரசருக் கும் பாடமாயிற்று. நாட்டில் அமைதியும் ஏற்பட்டது, வீரப்பன் மதுரையிலும், திருச்சியிலும், இராமநாதபுரத்திலும் சிறந்த பாதுகாவல் ஏந்துகளை ஏற்படுத்தி மக்களை அமைதியாக வாழச் செய்தான். சிதம்பரம் கோயிலுக்குப் புறமதிலெழுப்பி அந்தணர் குடியிருப்புகளையும் அமைத்துத் தந்தான். ஆயினும், பிற சமயங்களை இவன் வெறுக்கவில்லை . கி.பி.1592-ல் ஏசு கழகத்துப் பாதிரிகள் மதுரை சமயப்பணிக் கழகத்தை ஏற்படுத்திக் கொண்டு கிறித்தவத்தைப் பரப்ப முயன்றார்கள். வீரப்ப நாயக்கன் அவர்களுக்கு மதுரையில் மாதா கோயில் சுட்டிக்கொள்ளவும், சமயச் சொற்பொழிவுகள் நடத்தவும் இசைவு வழங்கினான். ஆயினும், இக் குழுவின் தலைவரான பெர்னாண்டஸ் பாதிரியாரின் முயற்சியால் உயர்குடி இந்துக்களைக் கிறித்தவராக்க முடிய வில்லை. வீரப்பன் கடைசிவரை விசயநகரப் பேரரசுக்கு அடங்கியாண்டு கிபி.1595-ல் இறந்தான், இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் (கி.பி. 1595-1601) வீரப்பன் கி.பி. 1595 -ல் இறந்ததும் அவனுடைய மூத்த மகன் இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் மதுரை நாயக்கர் ஆனான். இவனுக்குக் குமார கிருட்டிணப்பன், வீர கிருட்டிணப்பன் என்ற வேறு பெயர்களும் உண்டு இவனுக்கு விசுவப்பன், கத்தூரி அரங்கப்பன் என்ற தம்பியரும் இருந்தனர். பெரும் பரப்பில் அமைந்த மதுரையாட்சியை யேற்ற இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் தம் முன்னோர்களைப் போலவே விசயநகரப் பேரரசுக்கு அடங்கி ஆண்டான். மூன்று தலைமுறைக்கும் மூதறிஞராயிருந்து, அமைச்சர், படைத்தலைவர் என்ற முறையிலிருந்து தளவாய் அரியநாத முதலியின் சொற்படியே ஆட்சியை நடத்தினான். ஆனால், அப் பெருந்தகை அரியநாதர் கி.பி. 1600-ல் இறந்தார். இந்து இவனுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இரண்டாம் கிருட்டிணப்ப னின் தம்பியான விசுவப்பனும் இறந்து விட்டான். மனமுடைந்த இரண்டாம் கிருட்டிணப்பன் கிபி.1801-ல் பிறங்கடையின்றி இறந்தான். இவனுக்குப்பின் இவன் தம்பி இறந்துபட்ட விசுவப்பனின் மகன் முத்துக்கிருட்டிணப்பன் மதுரை நாயக்கன் ஆனான். அரியநாதர் (கி.பி. 1515-1600) முதல் நான்கு தலைமுறைகள் மதுரை நாயக்கருக்கு உறுதுணையாயி ருந்த அரியநாதர் தொண்டை மண்டலத்தில் காஞ்சி புரத்திற்கு அருகி லுள்ள மப்பேடு மெய்ப்பேடு) என்னும் தளரில் பிறந்து, விசயநகரம் சென்று, விசயநகரப் பெருமன்னர் கிருட்டிணதேவராயனிடம் பணியில் அமர்ந்து, படிப்படியாக உயர்ந்து தானைத் தலைவர் ஆனார். பின்னர், மதுரை நாயக்கர்களுக்கு அமைச்சராகவும், தானைத் தலைவருமாகத் 'தளவாய்' அல்லது முதலியார்' ஆக இருந்தார். தோராயமாக 85 ஆண்டுகள் (கி.பி. 1515-1600) வாழ்ந்த இவர் 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கு இலக்கியமானவர். சுருங்கக்கூறின் 72 பாளையங்களை அமைத்ததிலிருந்து பல்வேறு அரசியல், சமய, குமுகாயச் சீர்திருத்தங்களையும் செய்து மதுரை நாயக்கரைக் காப்பாற்றியவர் இவரே எனலாம். முத்துக்கிருட்டிணப்ப நாயக்கன் (கி.பி. 1806-1609) மதுரை நாயக்கர் வரிசையில் ஐந்தாவதாக வரும் இவன் பட்டத்துக்கு வரவொட்டாமல் இவனுடைய சிற்றப்பன் கத்தாரி அரங்கப்பன் கலகம் செய்து பட்டத்துக்கு வந்தான். ஆனால், அவனை மக்களே ஒரு கிழமைக் குள் கொன்று விட்டனர். முறைப்படி இவன் பின்னர் பட்டம் ஏற்றான். இவன் ஆட்சிப்பொறுப்பையேற்றதும் இராமநாதபுர மாவர்களை அடக்கினான். அம் மறவர்கள் தனித்துச் சிற்றரசர்களைப் போலாண்டனர். இராமேசுவரம் செல்லும் புனிதப் பயணிகளை வழிமறித்துக் கொலை, களவு செய்தனர். முத்துக் கிருட்டிணப்பன் இவர்களை அடக்கி மக்களுக்குப் பாதுகாப்பளித்தான். இப் பகுதிக்கு மேலும் பாதுகாப்பைத் தேடுவதற்கு போகலூர் என்னும் சிற்றூரையாண்ட சடையத்தேவன் உடையான் என்பவனை மறவர் நாட்டு மன்னனாக்கிக் கள்வர்களையும், மக்களைத் துன்புறுத்தி மதமாற்றம் செய்தும், வரிகொடாமல் முத்து வாணிபம் செய்தும் வந்த போர்த்துகீசியரையும் ஒழித்தான். இச் சடையத்தேவன் வழிவந்தவர்களே 'சேதுபதி' களாகத் தமிழுக்கு அரும்பணி செய்தவர் ஆவர், போர்த்துகீசியரின் அடாத செயல்களைத் தடுத்தானாயினும் இவன் புறச் சமயத்தார் மீது வெறுப்புக்கொண்டவன் அல்லன். இத்தாலி நாட்டுப் பாதிரி இராபர்ட்-தி- நொபிலி என்பாருக்குத் தன் சமயத்தைப் பரப்ப இசைவளித்தான். இப் பாதிரியார் இந்துப் பார்ப்பனர்களைப்போலவே பொட்டிட்டுப் பூணூல் அணிந்து, குடுமி வைத்துக்கொண்டு, சைவ உணவையுண்டு, சந்தியாவந்தனம் செய்தல் முதலிய ஆரியப் பண்பாடு களைப் பின்பற்றிக் கிறித்துவத்தை இந்துமயமாக்கிப் பரப்பினார். இவர் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம் ஆகியவற்றில் வல்லவர். இவரால் தமிழ் மொழி ஏற்றம் பெற்றது. தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடம் நிறுவப்பட்டு அரிய தமிழ் நூல்கள் அச்சிடப்பெற்றன. கன்னியாகுமரி வரையிலும் தன் ஆளுமையைப் பெருக்கிக் கொண்ட முத்துக்கிருட்டிணப்பன் தன் முன்னோர்களைப் போலவே விசயநகரப் பேரரசுக்கு அடங்கிச் சமயப்பணிகள் பல செய்து கிபி 1509-ல் இறந்தான். முதலாம் முத்துவீரப்ப நாயக்கன் (1609-1623) முத்துக்கிருட்டிணப்ப நாயக்கனுக்குப்பின் முதலாம் முத்துவீரப்ப நாயக்கன் மதுரை நாயக்கன் ஆனான். இவனுக்குத் திருமலை, குமாரமுத்து எனும் இரு தம்பியர் இருந்தனர். இவன் தன் முன்னோர்களைப்போல் விசயநகரப் பேரரசுக்கு அடங்கி நடக்காமல் தனித்தாள விரும்பினான். இச் சமயத்தில் பேரரசில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. பேரரசன் இரண்டாம் வேங்கடராயன் இறந்தான். இவனுக்குப்பின் அரசுக்கட்டிலேறிய இரண்டாம் சீரங்கன் நான்கே நாள்களுக்குள் கொல்லப்பட்டான், இவனைக்கொன்ற வேலூர்ச் சிற்றரசன் சக்கராயன் எவனோ ஒருவனை வேங்கடராயனின் மகன் என்று கூறி அவனையே அரசனாக்க வேண்டு மென ஒரு கட்சியைச் சேர்த்தான். இவனுக்கு எதிராக அச்சமன் என்பானும் ஒரு கட்சியைத் தொடங்கிக் கொல்லப்பட்ட இரண்டாம் சீரங்கன் மகன் இராமதேவனுக்கு முடிசூட்டினான். சக்கராயன் கட்சி அச்சமனால் தோற்கடிக்கப்பட்டது. சக்கராயன் மதுரை நாயக்கன் முத்துவீரப்பனையும், செஞ்சி நாயக்கனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அச்சமனோடு கிபி.16-ல் திருச்சிக்கு அருகிலுள்ள தோப்பூரில் போரிட்டான். போரில் சக்கராயன் கொல்லப்பட்டான். முத்துவீரப்பன், தோற்றதோடு தனக்கேற்பட்ட தனித்தாளும்நப்பாசையையும் கைவிட்டான், இப்போருக்குப்பின் அதே ஆண்டில் கிபி.1616-ல் முத்து வீரப்பன் தன் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினான். இதனால், மதுரை நாயக்கராட்சிக்கு உட்பட்டதென்பாண்டி நாட்டுச் சிற்றரசர்கள் இவனுக்கு அடங்கி ஒழுங்காகத் திறை செலுத்தி வந்தனர். பகைமை கொண்டதஞ்சை மன்னனைப்போரிட்டு அடக்கினான், மைசூர் மன்னரின் படையெடுப்பைத் தடுத்துதவிய விருப்பாட்சி, கன்னிவாடிப் பாளையக் காரர்களுக்கு விருதுப் பெயர்கள் வழங்கிப் போற்றினான். இவன் காலத்திலும் இராபர்ட்-திநொபிலி, பெர்னாண்டஸ் பாதிரிகள் கிறித்தவ சமயப் பணிகளைச் செய்து வந்தனர். இவன் கி.பி. 1623-ல் இறந்தான், இவனுக்குப் பின் இவன் தம்பி திருமலை, நாயக்கன் ஆனான். திருமலை நாயக்கன் (கி.பி. 1623-1659) இவன் மதுரையையாண்ட ஐந்தாம் நாயக்கனான முத்துக் கிருட்டிணப்பனின் இரண்டாவது புதல்வனென்பதையும், தன் அண்ணன் முதலாம் முத்துவீரப்ப நாயக்கனுக்குப்பின் மதுரையில் முடிசூடிக் கொண்டவன் என்பதையும் பார்த்தோம். ஆக, இவன் மதுரையை ஆண்ட நாயக்கர் வரிசையில் ஏழாவதாக வருபவன். இவன் மதுரை நாயக்கனாகும் போது அகவை 43 ஆக இருக்கலாம். இவனுடைய முழுப் பெயர் திருமலை சவுரி நாயினு அய்யலுகாரு' என்பதாகும். முதலாம் முத்துவீரப்பனுக்குப் பிறங்கடையில்லை. ஆதலால் திருமலை பட்டமேற்றான், இவன் காலத்தில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவிதாங் கூரின் ஒருபகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை , திருச்சி, சேலம், கோவை ஆகியவை மதுரை ஆட்சிக்குள் அடங்கியிருந்தன. சேதுபதி முதலிய பல சிற்றரசர்களும் மதுரைக்கு அடங்கி ஆண்டனர். முத்து வீரப்பன் காலத்தில் தலைநகரம் மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டதை யறிவோம். கிபி.1634-ல் திருமலை நாயக்கன் மீண்டும் மதுரைக்கே தலைநகரை மாற்றினான். மீனாட்சியம்மனுக்கும், சொக்க நாதக் கடவுளுக்கும் திருப்பணிகள் செய்தான். இருபெரும் கோட்டை களைக்கட்டி, 30,000 வீரர்களைத் திரட்டிப் பாதுகாப்பு ஏந்துகளைச் செய்தான். போர்கள் திருமலை நாயக்கன் தம் வாழ்நாளில் ஐம்பெரும் போர்களில் ஈடுபட்டான். அவை மைசூர், திருவிதாங்கூர், விசயநகரம் ஆகியவற்றுட னும், இராமநாதபுரத்தையாண்ட சேதுபதியுடனும் செய்த போர்களாகும். முதல் மைசூர்ப் போர் (கி.பி. 1630) மைசூர் கி.பி. 1610-ல் விசயநகரப் பேரரசிலிருந்து விடுபட்டு முழு உரிமையுடன் விளங்கியது. மதுரைமீது பகைமைகொண்டு மைசூரை யாண்ட சாமராச உடையார் கிபி. 1530-ல் படையெடுத்தான். மைசூர்ப் படைகள் மதுரைக்குரிய இரு கோட்டைகளைக் கைப்பற்றித் திண்டுக் கல்லை முற்றுகையிட்டனர். திருமலை நாயக்கனின் படைத் தலைவன் இராமப்பய்யரின் வீரத்தால் மைசூர்ப் படைகள் தோல்விகண்டு ஓடின, இராமப்பய்யர் மைசூர் எல்லைக்குள்ளும் அப் படைகளைத் துரத்திச் சென்று வெற்றி கண்டு திரும்பினான். இப் போரில் பல பாளையக் காரர்களும் பங்கேற்று உதவினர், திருவிதாங்கூர்ப் போர் அடுத்துத் (கிபி. 1635) தனக்குக் கீழ்படிந்து கப்பம் கட்டி வந்த திருவிதாங்கூர் மன்னன் உண்ணிகேரளவர்மன் என்பான் திறை செலுத்த மறுத்ததால் கிபி. 1534-35-ல் திருமலை நாயக்கன் திருவிதாங்கூரின் மீது படையெடுத்தான். இதிலும் படைத்தலைவர் இராமப்பய்யரே பங்கேற்று வெற்றி கண்டான். சேதுபதியுடன் போர் (கி.பி. 1637) முகவைச் இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்குக் கீழ்ப்படிந்து திறை செலுத்தி வந்தார்கள் என்பதை யறிவோம். இதனையாண்ட கூத்தன் சேதுபதி கிபி. 1635-ல் காலமானன். இவனுக்குப்பின் இவன் மகன் சடையத்தேவன் பட்டத்துக்கு வந்து இரண்டாண்டுகள் அமைதியாக ஆண்டான். இவன் தனக்கு மகப்பேறு இல்லாததால் தன் தங்கை மகன் இரகுநாதன் என்பவனை மகன்மை யெடுத்துக் கொண்டான். இதனையறிந்த காலஞ்சென்ற கூத்தன் சேதுபதியின் வைப்பாட்டியின் மகன் தம்பி என்பான் தனக்கே பட்டம் உரியதென்று கலகம் செய்தான். பின்னர் இவன் மதுரை நாயக்கன் திருமலையைக் கண்டு தனக்கே 'சேதுபதி' பட்டம் உரியதென்றும், அதனைத் தானடைய உதவ வேண்டுமென்றும் வேண்டினான். உண்மை யறியாத திருமலை நாயக்கன் தனது தளபதி இராமப்பய்யரையும், அவனுக்குத் துணையாக அரங்கண்ண நாயக்கனையும் படைகளுடன் சென்று தம்பிக்கு உதவி செய்து சடையப்பனைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படி ஆணையிட்டான். இராமப்பய்யரும், அரங்கண்ண நாயக்கனும் பல சிற்றரசர்கள், வீரர்கள், செட்டிமார்கள், பரத்தையர், பறங்கியர் முதலியோர் உதவியுடன் இராமேசுவரத்திற்குப் பாலம் அமைத்து முதற்போரில் தப்பியோடிய சடையத்தேவனை இராமேசுவரத்தில் சிறைப் பிடித்து மதுரைக்குக் கொண்டு வந்தனர். சடையத்தேவன் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டான். தம்பி சேதுபதியானான். ஆனால், தென் பாண்டி நாட்டில் கலகம் அடங்கவில்லை. மீண்டும் குழப்பத்தில் சிக்கிய தம்பி, மதுரைக்கு ஓடிவந்து திருமலையிடம் உதவி கோரினான். உண்மை யறிந்த திருமலை நாயக்கன் சடையத்தேவனை விடுவித்துச் சேனாதிபதி யாக்கினான். பின்னர் சுலகம்ஒய்ந்து அமைதி ஏற்பட்டது. இப்போரைக் குறித்து இராமப்பய்யர் அம்மானை, தெய்லர் பாதிரியாரின் கீழைநாட்டு வரலாற்றுக் கையேடு, மற்றும் பல பாதிரியாரின் கடிதங்கள் முதலியன பேசுகின்றன, விசயநகரப் பேரரசனுடன் போர் (கி.பி. 1645-1647) திருமலை நாயக்கன் தனக்கு எவ்வகையிலும் உதவி புரியாத விசயநகரப் பேரரசுக்குத் திறை செலுத்தாமல் நிறுத்திவிட்டான். மைசூர் கிபி1510-லிருந்தே தன்னுரிமை நாடாகத் திகழ்வதைப் போல் தானும் தனித்தாள விரும்பினான். தன் அண்ணனும் தனித்தாள முற்பட்டதையும் உணர்ந்து அதனைச் செயல்படுத்தத் தீர்மானித்தான். இதனால் ஆண்டு தோறும் விசயநகருக்கு மதுரை நாயக்கன் தன் வருவாயில் மூன்றிலொரு பகுதியான நாற்பதிலக்கம் உருபாயைத் திறையாகச் செலுத்தி வந்ததை நிறுத்தினான். இதனால் இவன் காலத்தில் விசயநகர மன்னனான மூன்றாம் சீரங்கன் கிபி. 1845ல் மதுரை நாயக்கன் மீது படையெடுத்தான். திருமலை நாயக்கன் செஞ்சி, தஞ்சை நாயக்கர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு மூன்றாம் சீரங்கனை எதிர்த்தான். ஆனால், தஞ்சை நாயக்கன் மறைமுக ஒப்பந்தத்தைச் சீரங்கனிடம் கூறிவிட்டான். வஞ்சகத்தை வஞ்சகத்தால் வெல்ல நினைத்த திருமலை நாயக்கன்கோல் கொண்டாச் சுல்தானைவேலூர்மீது படையெடுக்கும்படி வேண்டினான். சுல்தானின் படையெடுப்பால் சீரங்கன் கிபி.1647ல் நாடிழந்து அலைந்தான். பல முயற்சிகளுக்குப் பின்னும் வேலூரை மீட்கமுடியாமல் சீரங்கன் 12-ல் பெத்தனூரில் மாண்டான். இவனோடு விசயநகர ஆட்சி முடிவுற்றது. சுருங்கக்கூறின் விசயநகரத்தில் தொடங்கிய விசய நகரப் பேரரசு வேலூரில் முடிவுற்றது. வேலூரைக் கைப்பற்றிய கோல்கொண்டாச் சுல்தான் பீஜப்பூர்ச் சுல்தானிடம் அதனைவிட்டுச் சென்றான். பின்னர் இவ்விரு சுல்தான்களுடைய ஆட்சிகளும் தமிழகத்தில் விரிவடைந்தன. இரண்டாம் மைசூர்ப் போர் (கி.பி. 1656-1659) விசயநகரப் பேரரசன் சீரங்கன் நாடிழந்து அலைந்தபோது மைசூர் மன்னன் காந்தருவ நரசராசன் (கி.பி. 1638-1659) அவனுக்குப் புகலிட மளித்தான். வேலூரை மீண்டும் கைப்பற்றச் சீரங்கன் முயன்றபோது திருமலை நாயக்கன் தவிர பிறர் சுல்தான்களை ஒருமுகமாய் எதிர்த்தனர். இதனால் திருமலைக்கும் மைசூர் மன்னருக்கும் உட்பகை ஏற்பட்டது. திருமலை மூப்படைந்து நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் மைசூர் மன்னன் மதுரைமீது படையெடுத்தான். மைசூர்ப் படைவீரர்கள் எதிர்ப்பட்ட வர்களை ஆண், பெண் குழந்தை, மூப்படைந்தோர் என்றும் பாராமல் மூக்கை யறுத்தனர். இத்தகு மூக்கறுப்புப் போர் தமிழரைத் தட்டி யெழுப்பியது. நோய்வாய்ப்பட்டு சாவுப்படுக்கையிலிருந்த திருமலை தன் மூத்த மனைவியைவிட்டு இரகுநாத சேதுபதிக்கு ஓலையனுப்பச் செய்தான். மைசூர்ப்படைகள் கிபி. 1656-ல் சத்தியமங்கலத்தைக் கைப்பற்றின. அப் படைகள் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்கும் போது சேதுபதி யனுப்பிய 25,000 வீரர்கள் மதுரைக்கோட்டை மதிலைச்சுற்றி நின்றனர். திருமலை நாயக்கனும் 35,000 வீரர்களைத் திரட்டித் தந்தான். மைசூர்ப் படைகள் கதிகலங்கியோடின. திண்டுக்கல்லையடைந்து அங்குத் தங்கிக் கொண்டு மைசூரிலிருந்து துணைக்குப் பெரும் படையை எதிர்நோக்கி நின்றன. மைசூரிலிருந்து மேலும் 2000 படைகள் வந்தன. இரு தரப்பாருக் கும் சுடும் போர் நடந்தது. இருதரப்பிலும் சுமார் 24,000 பேர் மாண்டனர். திருமலை நாயக்கனே வெற்றி பெற்றான். இரகுநாத சேதுபதிக்குத் திருமலை சேதுபதி' என்ற விருதும் அரசிசொல்காத்தான்' என்ற பேரும் கொடுத்துப் போற்றியதோடு அளவிறந்த பரிசுகளையும், தனக்குரிய சிவிகை, திருப் பூவனம், திருச்சுழியல், பள்ளிமடம் ஆகிய ஊர்களையும் அளித்தான். திறை செலுத்த வேண்டியதில்லையென்றும் ஆணையிட்டான். ' ஆயினும் இந்தப் போர் தொடர்ந்தது, தம் குடிமக்களை மூக்கறுத் ததை யெண்ணிப் புழுங்கிய திருமலை நாயக்கன் தன் தம்பி குமாரமுத்து நாயக்கனை யனுப்பிப் பழிவாங்கச் செய்தான், குமாரமுத்து நாயக்கன் திண்டுக்கல் முதலிய பதினெட்டுப் பாளையக்காரர்களையும் சேர்த்துக் கொண்டுபோய் மைசூருக்குள் புகுந்து பழிக்குப்பழி வாங்கினான். கடைசி யாக இப் போர் கி.பி. 1559-ல் ஓய்ந்தது. இதற்குள் திருமலை நாயக்கனும் மாண்டான். - திருமலை நாயக்கரின் திருப்பணிகள் எண்ணிலடங்கா. மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பல பகுதிகளையும் திருப்படிமங்களை யும் சமைத்தான். பல கட்டளைகளை ஏற்படுத்தி மீனாட்சியம்மைக்கும் சொக்கநாதப் பெருமானுக்கும் காலப்படி வழிபாடுகளும் விழாக்களும் நிகழ்வுற ஏற்பாடுகள் செய்தான். கோயில் வழிபாடு செய்துவந்த பட்டர் களும், பண்டாரங்களும் கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்து வந்ததையறிந்த திருமலை நாயக்கன் கோயில் ஆட்சிமுறையில் சிறந்த சீர்திருத்தங்களைச் செய்து, தலைமைப் பண்டாரத்தை நீக்கினான். 'மாசி விழா' 'சித்திரை விழாக்களை' மாற்றியமைத்து சிறப்பாக நடத்தச் செய்தான். திருவிளையாடல்களில் சிலவற்றை நாடகமாக நடிக்க ஏற்பாடு செய்தான், விழாக்களிலும், நாடகங்களிலும் அணிவதற்கான பல்வேறு அணிகலன்களையும் பொன்னாலும், மணியாலும், முத்தாலும் செய்தளித் தான். திருமலை நாயக்கனின் திருப்பெயரைச் சாற்றி நிற்பன அவன் கட்டிய கட்டடங்களே, வண்டியூர்த்தெப்பக்குளம், ஐராவதேசுரர் கோயில், வசந்த மண்டபம், இராயர் கோபுரம், மதுரை மகால் முதலியவற்றையும் இவன் கட்டினான். இவற்றுள் தலையாய சிறப்புடையது "மகாலே' யாகும். சொக்கநாத நாயக்கன் (கி.பி. 1659-1682) திருமலை நாயக்கனுக்குப்பின் அவனுடைய மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கன் பட்டம் சூடினான். ஆனால், நான்கு திங்களுக்குள் இறந்துவிட்டான். இவனுக்குப்பின் இவனுடைய சிற்றப்பா முத்துவீரப்பன் மன்னன் ஆனான். அவனும் ஐந்து திங்களில் மாண்டான் ஆக இவை யாவும் கிபி, 1659 ஆம் ஆண்டில் நடந்தன. இவ்வாண்டில் பீசப்பூர் சுல்தான் தன் படைகளை அனுப்பித் தஞ்சை, திருச்சி ஆகியவற்றைத் தாக்கி முற்றுகையிடச் செய்தான். இதனால் பஞ்சமும் கொள்ளையும் அதிகரித்தன. இந் நிலையில்தான் இரண்டாம் முத்து வீரப்பனின் மகன் சொக்கநாத நாயக்கன் அரசுக்கட்டில் ஏறினான். இவனுடைய ஆட்சியின் தொடக்கம் முதல் கடைசிவரை இத்தகைய இன்னல்கள் சூழ்ந்து நின்றன. சொக்கநாதன் இளைஞனாயிருந்ததால் அவனுக்கு எதிராகத் தானைத் தலைவரும், தளவாயும், பிறரும் சூழ்ச்சிகளும், சதிகளும், செய்தனர். இதனால் ஏற்பட்ட போர்களால் நாட்டில் பஞ்சமும், துன்பங்களும் தோன்றின. இவற்றிற்குப் பின்னர் இவன் கி.பி. 161-ல் தன் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினான். தஞ்சை வெற்றி தஞ்சையின் மகாமண்டலேசுவரராக அச்சுதராயனால் அமர்த்தப் பட்ட அவனுடைய தங்கையின் கணவனான செவ்வப்ப நாயக்கனுக்கு ப்பின் தொடர்ந்து அவனுடைய மரபினர் தஞ்சை நாயக்கர்களாக ஆட்சி புரிந்தனர். அவனுடைய பெயரன் இரகுநாத நாயக்கனுக்குப்பின் அண்ட விசயராகவ நாயக்கனுடைய மகளைச் சொக்கநாத நாயக்கன் மணக்க விரும்பினான். விசயராகவ நாயக்கன் பெண் கொடுக்க மறுத்ததால், சொக்கநாதன் தஞ்சை மீது போர் தொடுத்தான் வெற்றியும் சாண்டான். விசயராகவ நாயக்கன் போர்க்களத்தில் மடிந்தான், அதற்கு முன் உவளகப் பெண்களும், அரச குடும்பத்துப் பெண்களும் உவளகத்திற்கு வெடி வைத்துத் தற்கொலை செய்து கொண்டார்கள். வெற்றிகொண்ட சொக்கநாத நாயக்கன் தன் சிற்றன்னையின் மகனும் தன் தம்பியுமான அழகிரி நாயக்கனைத் தன் படிநிகராளியாகத் தஞ்சையை ஆளும்படி செய்தான். தன் தளபதி தளவாய் அரியநாத முதலியாருக்குப் பட்டமும், பொருளும் கொடுத்துப் பாராட்டினான். விசயநாதனின் மகன் டச்சுக்காரர் களிடம் நாகப்பட்டினத்தில் புகலிட மடைந்தான். தஞ்சை , மராத்தியர் வசமாதல் தஞ்சையில் ஆட்சிப்பொறுப்பையேற்றதும் அழகிரி நாயக்கன் தன் தமையன் சொக்கநாதனுக்கு எதிராகச் செயல்பட்டான். சொக்கநாதனுக்கு அடங்காமல் தனித்தாண்டான். இதனால், சொக்கநாதன் இவன்மீது பகைமை யுணர்ச்சி கொண்டான். இந் நிலையில் அழகிரி நாயக்கனுக்குச் செயலாளனாக இராய்சன்) அமர்த்தப்பட்ட வெங்கண்ணா என்பவன் அழகிரியை ஒழித்து விட்டுத் தானே தஞ்சையை ஆன விரும்பினான். முன்பு தஞ்சையை ஆண்ட விசயராகவ நாயக்கனின் மகன் செங்கமலதாசன் இப்பொழுது நாகப்பட்டினத்தில் டச்சுக்காரரிட மிருப்பவன் என்ற சிறுவனைத் தஞ்சைக்கு அரசனாக்கவேண்டுமென்று பீசப்பூர்ச் சுல்தான் இதல்கான் (அதில்சார் என்பவரிடம் அழைத்துச் சென்று வேண்டினான். இதல்கான் தன் படைத் தலைவன் வெங்காசி என்பவனைத் தஞ்சைமீது படையெடுக்கும்படி கட்டளையிட்டான். இந்த வெங்காசி, சிவாசிக்குத் தம்பியாவான். சுல்தானிடம் படைத்தலைவனாக இருந்த வெங்காசி கிபி. 175-ல் தஞ்சைமீது படையெடுத்தான். தனக்கு இரண்டகம் செய்துவிட்ட தன் தம்பி அழகிரிக்குப் படையுதவச் சொக்கநாதன் மறுத்துவிட்டான், தஞ்சை வெங்காசியால் கைப்பற்றப் பட்டது, செங்கமலதாசன் தஞ்சை மன்னன் ஆக்கப்பட்டான். வெங்காசிகுடந்தை, மன்னார்குடி, பாபநாசம் ஆகிய ஊர்களில் வரித் தண்டல் செய்யும் உரிமையைப் பெற்றான். பின்னரும் வெங்கண்ணா சூழ்ச்சி செய்து செங்கமலதாசனைப் பதவியை விட்டோடும்படி செய்துவிட்டுத் தானே தஞ்சைக்கு மன்னன் ஆனான், ஆனால், அவனால் தஞ்சையை ஆளமுடியவில்லை. பகைமை மேலிட்ட தால் தஞ்சையை விட்டோடினான். தஞ்சையை வெங்காசி கைப்பற்றித் தானே ஆள முற்பட்டான். இவ்வாறு மராத்தியர் ஆட்சி வெங்காசியால் தஞ்சையில் கால் கொண்டது. சிவாசியின் கருநாடகப் படையெடுப்பு (கி.பி. 1866-77) செஞ்சி, மராத்தியர் வசமாதல் சிவாசியின் தந்தையார் பெயர் சாசி. இவர் பீசப்பூர்ச் சுல்தானிடம் படைத் தலைவராயிருந்தார். இவருடைய முதல் மனைவியின் பெயர் சீசாபாய். இரண்டாம் மனைவியின் பெயர் துக்காபாய், முதல் மனைவிக்கு சிவாசியும், இரண்டாம் மனைவிக்கு வெங்காசியும் பிறந்தனர். வெங்காசியும் தன் தந்தையைப் போலவே பீசப்பூர்ச் சுல்தானிடம் படைத்தலைவனாய் இருந்தான். வெங்காசி தஞ்சையைத் தனித்து ஆண்டுகொண்டிருந்தான், சிவாசி ஏற்கெனவே மராட்டிய மன்னனாக 1674-ல் முடிசூட்டிக் கொண்டான். ஆயினும், அவனுடைய ஆட்சி 200 கல்பரப்பில்தான் பரவி யிருந்தது. ஆகவே, பீசப்பூர்ச் சுல்தானின் ஆட்சியிலிருந்த செஞ்சி, வேலுார், தஞ்சையைக் கைப்பற்றித் தமிழகத்தில் தன் ஆட்சியை நிலைநாட்ட விரும்பினான். வடக்கு நோக்கிச் சென்று தக்க ஒப்பந்தங்களையும், ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, சிவாசி 17-ல் 5000 குதிரைப்படை வீரர்களைச் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றுமாறு அனுப்பினான், பீசப்பூர்ச் சுல்தான் படிநிகராளியாகச் செஞ்சியை ஆண்டுகொண்டிருந்த நாசர் முகமதுகான் என்பவன் 5000ரூபா வருவாயுள்ள ஒரு சாகீரையும், பெரும் தொகையையும் பெற்றுக் கொண்டு மராத்தியரிடம் செஞ்சியை ஒப்படைத்துவிட்டு விலகினான்.167 ஆம் ஆண்டு மேத் திங்கள் ஒன்பதாம் நாள் செஞ்சி மராத்தியர் வசமாயிற்று. சிவாசி அங்கிருந்த கட்டடங்களை இடித்துத் தன் விருப்பப்படி புதிய கட்டடங்களைக் கட்டினான். இன்று அங்குள்ள கட்டடங்கள் யாவும் சிவாசியால் கட்டப்பட்டனவாகும். வேலூர் முற்றுகை பீசப்பூர்ச் சுல்தானின் படைத்தலைவர்கள் வாலி கொண்டபுரம், வேலூர் முதலிய இடங்களை ஆண்டு வந்தார்கள். திருச்சிக்கு அருகி அள்ளவாலி கொண்டபுரத்தை ஆண்டவன் செர்க்கான் லோடி என்பவன் ஆவான். வேலூரை ஆண்டவன் அப்துல்லாகான் என்பவன் ஆவான். சிவாசி கி.பி., 17, மே 23 ஆம் நாள் வேலூர்க்கோட்டையை முற்றுகை யிட்டான். அன்றைய தமிழகத்தில் வலிவுமிக்க கோட்டையாக விளங்கியது வேலூர்க் கோட்டையே! எனவே, முற்றுகை பல்நாள் நீடித்தது. சிவாசிதன் படைகளைக், கோட்டையைச் சுற்றிலுமிருந்த பகுதிகளைக் கைப்பற்றி, குன்றுகள் மீது தகரிகளை பீரங்கிகளை) வைத்துக் கோட்டையைத் தாக்குமாறு செய்தான். ஆயினும், பதினான்கு திங்கள் கழித்து 178, சூலை 27 ஆம் நாள் வேலூர்க் கோட்டை மராத்தியர் வசமாயிற்று. செர்க்கான் வெற்றி 1578 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் சிவாசி, செர்க்கானைக் கடலூருக்கு அருகிலுள்ள திருவாடியில் தோற்கடித்தான். இவ்வெற்றியால் அவருக்கு பிறகுதிரைகளும் 20 ஓட்டங்களும் இரண்டு யானைகளும் பிற பொருள்களும் பெரும் பணமும் கிடைத்தன. - பீசப்பூர்ச் சுல்தானுக்குச் சொந்தமாயிருந்த தமிழ்நாட்டுப் பகுதிகள் யாவும் சிவாசியின் கீழ் வந்தன. துங்கபத்திரையாற்றிலிருந்து காவிரியாறு வரை முதல் முறையாகத் தமிழ் நாட்டில் மராத்தியரின் ஆட்சி பரவியது. ஆங்காங்கு வலிமைமிக்க கோட்டைகள் சுட்டப்பட்டன. இருபதாயிரம் மராத்திய வீரர்கள் காவல்புரியவும், வரித்தண்டல் செய்யவும் அமர்த்தப் பட்டனர். சம்பாசியைச் செஞ்சிக்குப் படிநிகராளியாகவும், இரகுநாதபந்தி என்பவனை அவனுக்கு உதவியாளராகவும் அமர்த்திவிட்டுச் சிவாசிதன் மராத்தியத் தலைநகருக்குத் திரும்பினான். சொக்கநாதன் பதவி இழத்தல் தாயகம் திரும்பிய சிவாசிக்கும், வெங்காசிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பின்னர் இருவரும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண் டார்கள். சொக்கநாதன் வெங்காசியை ஒழிக்கத் தஞ்சைமீது படை யெடுத்துத் தோற்றான். வெறுப்படைந்த மக்கள் அவனைச் சிறையில் அடைத்துவிட்டு 18-ல் அவனது தம்பியான முத்துலிங்க நாயக்கனை (முத்து அழகாத்திரி மன்னராக்கினர். இந்நிலையில் குதிரைப்படைத் தலைவனாயிருந்த ருசுதம்கான் என்பவன் முத்துலிங்க நாயக்கனை நீக்கி விட்டு மீண்டும் சொக்கநாத நாயக்கனை அரசனாக்கித் தானே எல்லா அதிகாரங்களையும் கைப்பற்றிக்கொண்டு கொடுங்கோலாட்சி செய்தான். ' மைசூர் அரசரும், கிழவன் சேதுபதியும், பிறரும் ருசதம்கானைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சொக்கநாதனைத் தனித்து ஆளச் செய்தார்கள். சொக்கநாதன் பின்னரும் பல தொல்லைகளைச் சந்தித்து 1682- ல் மாண்டான். அரசி மங்கம்மாள் (கி.பி. 1689-1706) சொக்கநாத நாயக்கன் இறந்தபின் அவனுடைய மகன் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கன் (கிபி. 1682-89) பட்டத்துக்கு வந்தான். சொக்க நாதனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவர்களில் சிறந்தவள் மங்கம்மாள், இவளுடைய மைத்துனன்தான் இந்த மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கன் என்பான். இவன் பட்டத்திற்கு வந்தபோது மதுரை நாட்டின் ஒரு பகுதியே இவனுக்கு எஞ்சி நின்றது. பிற பகுதிகளை மைசூர் மன்னரும், தஞ்சை மன்னரும், செஞ்சி சாம்பாசியும், மறவர் நாட்டுச் கிழவன் சேதுபதியும் கைப்பற்றிக்கொண்டனர். இவர்கள் மதுரை நகரத்தையும் அடையப் போட்டியிட்டனர். இவர்களைத் தன் சூழ்ச்சியால் முத்துவீரப்பன் வென்றான். கிபி. 1589-ல் முத்துவீரப்பன் அம்மை நோய் கண்டு திடீரென இறந்துவிட்டான். அவனுடைய தாயார் மங்கம்மாள் ஆட்சிப்பொறுப்பை யேற்று மதுரையை ஆளமுற்பட்டாள். முத்து வீரப்பன் இறக்கும்போது அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். உடன்கட்டை ஏறவில்லை. குழந்தை பிறந்த பின் பன்னீர் குடித்து குலப்பம் (ஜன்னி) சுண்டு அவன் மனைவியும் இறந்து விட்டாள். பிறந்த குழந்தைக்கு விசயரங்க சொக்க நாதன் என்று பெயர் சூட்டப்பெற்று மூன்று மாதக் குழந்தையாயிருக்கும் போதே பட்டமும் சூட்டப்பட்டது, குழந்தை விசயரங்க சொக்கநாதன் சார்பாகத்தான் பாட்டியான மங்கம்மாள் 1889 லிருந்து 170வரை மதுரையை ஆண்டான். சிவாஜியின் இறப்புக்குப் பின் தென்னகம் முழுவதையும் கைப்பற்றிய மொகலாயப் பேரரசர் அவுரங்கசீபுக்கு அடி பணிந்து தென்னக மன்னர் அனைவரும் திறை செலுத்தினர். மங்கம்மாளும் அவுரங்கசீபுக்குத் திறை செலுத்தி அவனுடைய உதவியால் பிறர் கைப்பற்றியிருந்த தன் நாட்டுப் பகுதி களையும் மீட்டுக் கொண்டாள். பின்னர் படையெடுத்து வந்த மைசூர்ப் படைகளையும் வெற்றி கண்டாள்: - திருவிதாங்கூர் நாட்டையாண்ட மன்னன் இரவிவர்மன் மதுரைக்குத் திறை செலுத்துவதை நிறுத்திவிட் டிருந்தான். இதனால் அந் நாட்டின் மீது படையெடுத்து மங்கம்மாள் வெற்றி கண்டாள். தஞ்சையை ஆண்ட வெங்காசி(கிபி. 1683) கிபி.1683ல் மாண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் சாசி கி.பி. 1684-1712) பட்டத்திற்கு வந்தான், மங்கம்மாளுக்கும், சாசிக்கும் சமைதி நட்புறவு ஏற்பட்டது. மைசூரை ஆண்ட சிக்கதேவராயன் தமிழ்நாட்டு மக்களுக்குத் துன்பம் கொடுக்கக்சுருதி காவிரியின் குறுக்கே அணைகட்டி விட்டான். சாசியும், மங்கம்மாளும் ஒருங்கிணைந்து அவனைத் தாக்க முற்பட்டார்கள். ஆனால், திடீரெனப் பெய்த பெருமழையால் காவிரிக்குக் குறுக்கே கட்டிய அணை தானாகவே தகர்ந்து போயிற்று! மங்கம்மாள் கிபி 1702-ல் தனக்கெதிராகச் செயல்பட்டு வந்த மறவர் நாட்டுக் கிழவன் சேதுபதியின் மீது போர் தொடுக்குமாறு தன் படைத் தலைவன் நரசப்பய்யா என்பவனை அனுப்பினாள். இப்போரில் தஞ்சை சாசியும் துணைக்குச் சென்றான். ஆனால், இவ்விரு படைகளும் சேதுபதி யிடம் தோல்வியுற்றன, நரசப்பய்யா கொல்லப்பட்டான். இதற்குப் பின்னர் சேதுபதி தன்னுரிமையோடு ஆன முற்பட்டான். இவ்வாறு தனது அரசியல் அறிவால் மதுரையை வலுப்படுத்திய மங்கம்மாள் தன் பெயர் என்றும் நிலைத்திருக்குமாறு பல அறங்களைச் செய்தாள். இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்ற சமய வேறுபாடு இன்றி எல்லாச் சமயத்திற்கும் பாதுகாப்பளிப்பதோடு பொருள் உதவியும் செய்தாள்.பல அரிய கட்டடங்களை மதுரையில் கட்டினாள். சவுரர்ட்டிர குலத்தவருக்குச் சட்டப்படி ஆதரவு அளித்து, பூணூல் அணியும் உரிமையை வழங்கினாள். சிதைந்து போகும் நிலையிலிருந்த மதுரை அரசைக் கட்டிக் காத்த பெருமை இம் மூதாட்டியைச் சாரும். இவள் கிபி. 1706 ஆம் ஆண்டு தமது ஐம்பத்தைந்தாம் அகவையில் உயிர் நீத்தாள். விசயரங்க சொக்கநாத நாயக்கன் (கி.பி. 1706-1782) தன் சார்பில் ஆண்டு கொண்டிருந்த தன் பாட்டி மங்கம்மாள் இறந்ததும் விசயரங்க சொக்கநாத நாயக்கன் தன் பதினேழாம் அகவையில் மதுரைப் பெருநாட்டைத் தானே ஆள முற்பட்டான். இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் நாட்டில் பல கிளர்ச்சிகள் முளைத்தன. இதற்குக் கரணியம்தளவாய் சுத்தூரி_அரங்கய்யாவும் பிரதானி வேங்கடகிருட்டிணய் யாவும் மக்களைத் துன்புறுத்திப் பணம் பறித்ததாகும். மேலும், இம் மன்னன் மக்களின் நலன்களைக் கவனியாது மடங்களுக்கும், கோயில் களுக்கும் பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொடுத்தான். பஞ்சமும் பட்டினியும் எஞ்சின. பரமன் பாதத்தை நம்பி மக்களைப் பஞ்சத்தில் தவிக்கவிட்டு இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இம் மன்னன் கி.பி. 1732-ல் பிறங்கடையின்றி இறந்தான். மீனாட்சி (கி.பி. 1782-1786] விசயரங்க சொக்கநாதன் இறந்ததும் அவனுடைய மனைவி மீனாட்சி அரசுக் கட்டில் ஏறினாள், தனக்கு மகப்பேறு இல்லாததால் திருலை நாயக்கனின் தம்பி குமாரமுத்துவின் வழிவந்த பங்காரு திருமலை யின் மகன் விசயக்குமாரன் என்பவனை மகன்மை (தத்து எடுத்துக் - கொண்டாள். இவ்வரசியார் மங்கம்மாளைப் போன்று மிக்க ஆற்றலும், அரசியல் அறிவும் பெற்றிருக்கவில்லை. உள்நாட்டுக் கலகங்கள் தோன்றின. இந் நிலையில் ஆர்க்காட்டை ஆண்டுவந்த நவாப்பு தோசுது அலிகான் மதுரை நாட்டின் மீது படையெடுக்கத் தன் மகன் சப்தர் அலிகான் என்பவனையும், மருமகன் சந்தாசாகிப் என்பவனையும் அனுப்பினான். நவாபின் படைகள் திருச்சியை அடைந்தன, இந் நிலையில் மீனாட்சி மகனான விசயக்குமாரனுடைய தந்தை பங்காரு திருமலை என்பவனுக்குத் தானே மதுரையை ஆள வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. இதனால் அவன் யாருக்கும் தெரியாமல் சப்தர் அலிகானுடன் திருச்சியைப் பிடித்துத் தனக்குக் கொடுத்தால் முப்பதிலக்கம் உருபா தருவதாக ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டான். இதனை அறிந்த மீனாட்சி தான் ஒரு கோடிஉருபா கொடுப்பதாக உறுதிளித்துச் சந்தாசாகிப்போடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டாள். சூழ்ச்சிக் காரனான சந்தாசாகிப்பு அரசியாரைச் சிறையிலிட்டான். சிறையில் மீனாட்சி நஞ்சுண்டு இறந்தாள். சந்தாசாகிப் மதுரை நாடு முழுவதையும் கைப்பற்றி மதுரை நாயக்கர் ஆட்சிக்கு முடிவு கட்டினான். மீனாட்சி அரசியோடு மதுரை நாயக்கர் மரபு மறைந்தது. மதுரை நாட்டைக் கைப்பற்றிய சந்தாசாகிபு தாம் திருச்சியிலிருந்து ஆண்டு கொண்டு தன்னுடைய தம்பியரை மதுரையிலும், திண்டுக்கல்லிலும் இருந்து ஆளும்படி செய்தான். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரையும் வென்று தனக்கு அடங்கி ஆளும்படி செய்தான்.கிபி.1740-ல் மராத்தியர்கள் ஆர்க்காட்டின் மீது படையெடுத்து, தோத்து அலியைக் கொன்று, பெரும் பொருளைத் திரட்டிச் சென்றனர். அதே ஆண்டின் இறுதியில் திருச்சியைத் தாக்கிச் சந்தாசாகிபையும், அவனுடைய உடன் பிறந்தவர்களையும் சிறைப்படுத்திக் கொண்டு சதாராவுக்குக் கொண்டு போயினர்.கிபி.ர47ல் சப்தர் அலிகான் கொல்லப்பட்டான். அன்வாருதின் கருநாடக நவாபாக அமர்த்தப்பட்டான். அவன் மராத்தியரை மதுரையிலிருந்து அடியோடு விரட்டிவிட்டுக் கருநாடகம் முழுமையும், தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். எஞ்சி நின்ற மதுரை நாயக்கர் ஆள்குடி மரபும் அழிக்கப்பட்டது. இவ்வாறு மதுரை நாடு நாயக்கருக்குப் பின் மராத்தியரிடமும் பின்னர் இசுலாமியரிடமும் மாறியது. நாயக்கர் ஆட்சிமுறை மதுரைப் பெருநாட்டை 206 ஆண்டுகள் ஆண்ட நாயக்கர் ஆட்சி மீனாட்சி அரசியோடு கிபி. 1736-ல் முடிவடைந்தது. பல தலைசிறந்த மன்னர்கள் இதனைத் தொடர்ந்து ஆண்டதை அறிந்தோம். எனவே, நிலையான ஆட்சியை இருநூறு ஆண்டுகள் பெற்றிருந்த மதுரைத் திருநாட்டில் சிறந்ததொரு ஆட்சிமுறை நிலைத்திருக்க வேண்டும். பொதுவாக இம் மதுரைப் பெருநாடு இன்றைய சேலம், கோவை, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களையும், திருவிதாங் கூரின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. மங்கம்மாள் காலத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகள் ஆகியவற்றை ஆண்ட சேதுபதி கி.பி.1702-ல் முழு உரிமை பெற்று விட்டான். மதுரை நாட்டின் கோநகரம் கிபி.15 முதல் 15 வரையில் மதுரை யாகவும், பின்னர் 1எ முதல் 1634 வரை திருச்சியாகவும், 1634 முதல் 1664 வரை மதுரையாகவும், 1555 முதல் 1736 வரை திருச்சியாகவும் மாறி மாறியிருந்தது. ஆகவே, மதுரையும், திருச்சியும் இதன் தலைநகரங்கள் எனலாம். இந் நகரங்களிலும் நாடு முழுவதிலும் பல கட்டடங்களும், கோட்டைகளும் கட்டப்பட்டன. திண்டுக்கல், தாராபுரம், கோவை, தணநாயக்கன் கோட்டை சத்தியமங்கலம், ஈரோடு, காங்கேயம், விசய மங்கலம், கருவூர், நாமக்கல், சேந்தமங்கலம், பெரியசேலம், சோமனூர், சங்கரகிரி, சாமப்பள்ளி, ஆத்தூர், அனந்தகிரி, பரமத்தி, அரவக்குறிச்சி, மோகனூர் ஆகிய இடங்களில் இம் மன்னர்கள் கட்டிய கோட்டைகள் இருந்தன, நடுவண் ஆட்சி நாயக்க மன்னர்கள் விசயநகரைச் சேர்ந்த வடுகராயினும் தமிழ் - நாட்டை ஆண்டதால் பண்டைத் தமிழரசர் ஆட்சிமுறையை ஓரளவு * பின்பற்றித் தங்கள் ஆட்சியை அமைத்துக் கொண்டனர். காலநிலைக் கேற்றவாறு இவர்கள் புகுத்திய பாளையப்பட்டு ஆட்சிமுறையும் ஓரளவு தமிழகத்துச் சூழலுக்கேற்றவாறு அமைந்திருந்தது எனலாம். இதனால், நாட்டின் அதிகாரங்கள் முழுவதும் நடுவண் ஆட்சியில் குவிந்து கிடக்காமல் பாளையக்காரர்களால் பகிர்ந்து செயல்படுத்தப்பட்டன. அப் பாளையக்காரர்கள் தங்களுக்கு உட்பட்டிருந்த பாளையங்களில் வரித்தண்டல் செய்தல், நயன்மை வழங்குதல் முதலிய எல்லாப் பொறுப்பு களையும் தாங்களே செய்துவந்தனர். திருமலை நாயக்கனுக்குப் பின்வந்த மதுரை நாயக்கர்கள் முழு உரிமையோடு ஆண்டார்கள். மூத்த மகனே பட்டத்திற்கு வரவேண்டும் என்ற கோட்பாட்டைப் பின்பற்றினார்கள். பிறங்கடையற்றோர் மகன்மை செய்து கொள்ளும் உரிமையையும் பெற் றிருந்தனர். மங்கம்மாள் முதல் பெண்ணரசியாகவும், சார்பு அரசியாகவும் ஆண்டாள். நாயக்க மன்னர்களுக்குக் கருத்துரை கூற அமைச்சர் குழு இருந்தது. ஆனால், அமைச்சர் குழுவுக்கு அரசர்கள் கட்டுப்பட்டிருக்க வில்லை. ஆட்சிப்பொறுப்பையும், படைப்பொறுப்பையும் ஏற்றிருந்த அமைச்சர் தளவாய் எனப்பட்டான். இவன் உள்நாட்டில் அமைதியையும், வெளி நாட்டில் நல்லுறவையும் உருவாக்கினான். ஆகவே, நாட்டின் உயர்வும், தாழ்வும் இவனுடைய மதிநுட்பத்தையும், செயல்திறத்தையும் பொறுத்தே நின்றன. அதுவரையில் இருந்த தமிழ்நாட்டு மன்னர்களுக்குத் தலைமை அமைச்சர் ஒருவராகவும் படைத்தலைவர் மற்றொருவ ராகவும் இருந்தார்கள். ஆனால், இவ்வி பதவிகளையும் ஒருங்கே பெற்றவன் (மதுரைநாயக்கர் காலத்தில் தளவாய் என்று அறியப்பட்டான். நடுவண் ஆட்சியில் குறிப்பிடத்தக்க மற்றொரு பெரும் பதவி பிரதானி' என்பது, இது இக் காலத்துப் பொக்கசவமைச்சர் நிதியமைச்சர் பதவிக்கு ஒப்பானது. அரசாங்க வரவு செலவுக் கணக்குகளைக் கவனிப்பது இப் பிரதானியின் பணியாகும். இவருக்கு அடுத்து இராயசம்' என்ற பதவி யிருந்தது. இப் பதவியை இன்றைய தலைமைச் செயலாளர் பதவிக்கு ஒப்பிடலாம். இவர் நாட்டில் நிருவாகப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிப்பார். ஆகத் தளவாய், பிரதானி, இராயசம் ஆகிய மூன்று அமைச் சர்களே அமைச்சரவையில் முகாமை வாய்ந்தவர்கள் ஆவார்கள். இவர் களைத் தவிர அரசுக் கணக்கர், தானாதிபதி ஆகிய இருபதவிகளை வகித்தோர் முறையே அரசுக் கணக்குத் துறையையும், அயல்நாட்டு உறவு களையும் கவனித்தனர். அரசர்களுடைய கட்டளைகளை ஓலையில் எழுதி யனுப்பும் "திருமந்திரஓலைதாயகம்" என்ற ஒரு பதவியும் இருந்ததாக பர், டிவி. மகாலிங்கம் கருதுகிறார். அமைச்சர் குழுவின் கருத்துரையை அரசர்கள் ஏற்றாக வேண்டும் என்ற கட்டளையில்லை. அரசர் ஓர் அமைச்சரை நீக்கி வேறு ஒருவரை அமைச்சராக அமர்த்தலும் உண்டு. மாநில ஆட்சி பாளையப்பட்டுகளுக்கும், நடுவண் ஆட்சிகளுக்கும் இடையில் பேரதிகாரிகள் இருந்தார்கள். இவர்கள் ஆளுநர்கள் எனவும் அறியப் படுகிறார்கள். மதுரை நாடு சில மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாநிலம் சீமையென்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி, திருச்சி, சத்தியமங்கலம் முதலிய இடங்களில் இருந்த அதிகாரிகள் செலுத்திய அதிகாரங்களைக் கொண்டு இடத்திற்கிடம் அதிகாரிகளின் அதிகாரங்கள் மாறுபட்டிருந்ததை அறிகிறோம். பெரும்பாலும் தலைநகருக்குத் தொலை தூரத்திலிருந்த ஆளுநர்கள் பேரதிகாரத்துடன் செயல்பட்டனர். இவர்களில் திருநெல்வேலிச் சீமை ஆளுநர் பெரும் பேரதிகாரம் பெற் றிருந்தார். இவர்கள் அனைவரும் தளவாய்க்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள். எனவேதான் தளவாய் 'தலைமை ஆளுநர்" என்றும் குறிப்பிடப்படுகிறார். மதுரை நாட்டில் திருமலை நாயக்கரால் எழுபத்திரண்டு பாளை யங்கள் ஏற்படுத்தப்பட்டதை அறிந்தோம். பெரிய பாளையங்கள் ஆளுநர் சுளின்கீழ் இருந்தன. சிறிய பாளையங்கள் பெரிய பாளையங்களுக்குள் அடங்கியிருந்தன. இதனால், இப்பெரிய பாளையக்காரர்கள் சிற்றரசர்கள் போல் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, சுன்னிவாடிப் பாளையக்காரர். திண்டுக்கல் பகுதியிலிருந்த பதினெட்டுப்பாளையங்களுக்கும் தலைவரா யிருந்தார். பாளையக்காரர்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து வரித்தண்டல் செய்து மூன்றிலொரு பகுதியை நடுவண் ஆட்சிக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பகுதியைத் தங்கள் செலவுக்கு வைத்துக்கொண்டு, மற்றொரு பகுதியைப் படைக்குச் செலவிடுவார்கள். அரசனுக்குத் தேவைப்படும்போது அவரவர்கள் தகுதிக்கேற்பப் படைகளை அனுப்பு வார்கள். தங்கள் பகுதிக்கு உட்பட்ட மக்களைப் பாதுகாப்பதும், வழக்கு களை உசாவித் தீர்ப்புக் கூறுவதும், அமைதியை நிலைநாட்டுவதும், அரசனுக்கு வேண்டியபிற உதவிகளைச் செய்வதும் இவர்களின் பொறுப்பு களும், கடமைகளுமாகும். ஒவ்வொரு பாளையக்காரருக்குக் கீழும் பண்ணையாளர்களும், வேளாளர்களும், பல தரப்பட்ட தொழிலாளர் களும் இருப்பார்கள். இவ்வாறு பாளையக்காரர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதற்கும் முடிசூடா மன்னராய் விளங்கியதால்தான் பாதிரிமார்கள் இவர்களைச் சிற்றரசர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். ஊராட்சி மதுரை நாயக்கர் காலத்திலும் தமிழகத்தில் வழிவழிவந்த ஊராட்சி முறை தொடர்ந்து இருந்தது. பொதுவாக, மதுரை நாயக்கர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே சிற்றூர்களில் கர்ணம், மணியக்காரர், தலையாரி முதலிய பன்னிருவர் அடங்கிய ஆயக்கார் முறை இருந்தது. கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் அரசரால் அமர்த்தப்பட்டவர்கள். கள்ளர், மறவர் ஆகியோர் குடியிருந்த ஊர்களில் வரித்தண்டல் செய்தவர் ' அம்பலகாரர்" எனப்பட்டார். இவர் பிற ஊர்களில் மணியகாரர் எனப்பட்டார். ஆயக்கார் முறையில் புரோகிதர், நயன்மை வழங்குநர், தட்டார், கருமார், தச்சர், குயவர், வண்ணார், நாவிதர், செருப்புத் தைப்போர் ஆகிய ஒன்பதின்மரும் மேற்கூறிய கர்ணம், மணியகாரர், தலையாரி ஆகிய மூவரும் ஆகப் பன்னிரண்டு உறுப்பினர்கள் இருப் பார்கள். இந்த ஒன்பதின்மரும் கொடிவழியாக மானிய உரிமை பெற்றுத் தொழில் செய்தவர்கள். இவர்களுடைய மானியங்களுக்கும் சிறுதொகை வரியாக அளிக்கப்பட்டது. அவ்வரிக்கு சோடி'(Quite - Tent) என்று பெயர். கர்ணம், மணியகாரர், தலையாரி ஆகியோரால் தண்டல் செய்யப்பட்ட வரிப்பணத்தை மாநில அதிகாரியிடம் சேர்ப்பார்கள். அவர் அதனை மீண்டும் கணக்குப் பார்த்துப் பிரதானியிடம் அனுப்புவார். இவ்வாறு, வரிப்பணம் இருமுறை கணக்குப் பார்க்கப்படுவதால் 'இருசால்' எனப்பட்டது. நயன்மை நீதி) வழங்குதல் அரசரே நாட்டின் தலைமை நயன்மையராக இருந்தார். ஆயினும், நயன்மை மன்றங்களில் வழக்குகளை உசாவுதற்கு நடுவர்கள் பலர். இருந்தனர். இத்துறையைப் பிரதானி கண்காணித்தார். அவரே நடுவராகவும் செயல்பட்டார். தலைநகரிலும், சிற்றுரர்களிலும் நயன்மை மன்றங்கள் பல இருந்தன. சிற்றூர்களில் பொது மக்களால் அமர்த்தப்பட்ட இருவர் நடுவராயிருப்பர். இவ்வாறு பல நயன்மை மன்றங்கள் இருப்பினும் மக்கள் அதிகாரிகளிடமும், அரசரிடமும் தங்கள் வழக்குகளை நேரில் கூறித் தீர்ப்புப் பெறுவதுண்டு. சில வழக்குகளில் சாத்திரங்களில் வல்லுநர்களா யிருந்த பார்ப்பனர்களை நடுவர் களாக அமர்த்தி உசாவச்செய்வதுமுண்டு. சாத்திரம் அறிந்த பார்ப்பனர்கள் கோயில்கள் பற்றிய வழக்குகளையும், குமுகாயத்தில் மதிப்பிற்குரியவர்களின் தரம் பற்றிய வழக்குகளையும் உசாவித் தீர்ப்புக் கூறினார்கள். பூணூல் அணிவதற்கு சௌராட்டிரர் தகுதியுடையவர்களா என்பது பெருவழக்காயிருந்தது. அவர்கள் அணியத் தகுதியுடையவர்கள் என்று மங்கம்மாள் தீர்ப்புக்கூறியதை அறிகிறோம். இதைப் போலவே இசுலாமியர், கிறித்தவர் முதலியோர் தொடர்புள்ள வழக்குகளை மன்னரே உசாவித் தீர்ப்புக் கூறியதையும் அறிகிறோம். பொதுவாக, அக் காலத்தில் பழக்கவழக்கங்கள், ஆவணங்கள் சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப் பட்டன. சிலவேளைகளில் இம்மூன்றையும் வைத்துச் சரியாகத் தீர்வுகாண முடியாவிட்டால் கடவுள் நம்பிக்கையின் பேரில் சோதனைகளை ordeals) மேற்கொண்டு தீர்ப்புக் கூறுவதுண்டு. பாளையங்களில் பாளையக்காரர் களே வழக்குகளை உசாவி முடிவு கூறுவார்கள். இதனால், காலத் தாழ்த்தமின்றியும் செலவின்றியும் வழக்குகள் எளிதில் முடிந்தன. . இக் காலத்துத் தண்டனைகளில் களவுக்கு அளித்த தண்டனை குறிப்பிடத்தக்கது. களவு செய்தவனுடைய கைகளை வெட்டுவது வழக்கம், சில சமையங்களில் குற்றவாளிகளை யானைகளின் கால்களில் இடறச் செய்து சாகடிப்பதும், சித்திரவதை செய்வதுமுண்டு. குற்றவாளியைக்கண்டு பிடிப்பதில் துணைபுரிவோருக்குப் பரிசுகள் வழங்கப்படுவதும் அக் காலத்து வழக்கமாகும். குற்றவாளி யாராக இருந்தாலும் உயர்வு தாழ்வு கருதாமல் தண்டனை வழங்கப்பட்டதாகப் பாதிரிமார்களின் கடிதங்களி லிருந்து அறிகிறோம், கடற்கரைப் பகுதியாட்சி நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டுக் கடற்கரைப்பகுதிகளில் போர்த்து கீசியர்கள் குடியேறித் தங்கள் கிடங்குகளையும் தளவாடக் கொட்டில் களையும் அமைத்துக்கொண்டிருந்தார்கள். நாயக்கர்களிடம் கடற்படை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடற்படையில் வல்ல போர்த்துகீசியரிடம் இவர்கள் உடன்பாடு செய்துகொண்டு கடற்கரைப் பகுதிகளை அவர்களே ஆட்சி செய்து கொள்ளுமாறு விட்டுவிட்டார்கள், பின்னர் வந்த டச்சுக்காரர்களும் இந்த உரிமையைப் பெற்றார்கள். இவ் விருவருக்குள்ளும் ஏற்பட்ட சச்சரவுகளாலும், மன்னரின் புரப்பின்மை யாலும் இப் பகுதிகளிலிருந்த தமிழர்கள் குறிப்பாகப் பரதவர்கள் மதமாற் றத்திற்கும் பல கொடுமைகளுக்கும் ஆளானார்கள். வசி முறைகள் சுமார் 15 ஆண்டுகள் மதுரை நாடு விசயநகரப் பேரரசுக்கு உட்பட்டிருந்த பின்னரே மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டது. ஆதலால் நாயக்கர் ஆட்சிமுறை பெரும்பாலானவற்றில் விசய நகர ஆட்சிமுறையைப் பின்பற்றியும், தமிழக ஆட்சிமுறையைத் தழுவியும் அமைக்கப்பட் டிருப்பதையறிகிறோம். இதனைக் குறிப்பாக மதுரை நாயக்க மன்னர்களின் வரித்தண்டல் முறையில் காணலாம். மதுரை நாட்டில் ஏற்கெனவே நிலங்கள் அளக்கப்பட்டுத் தரம் பிரிக்கப்பட்டிருந்தன. தரத்திற்கும், பயிருக்கும், விளைச்சலுக்கும் ஏற்றவாறு ஏரை' அடிப்படையாகக் கொண்டு நிலவரி விதிக்கப்பட்டது. பஞ்ச காலத்திலும், விளைச்சலுற்ற காலத்திலும் நிலவரித்தண்டல் செய்யப் படுவதில்லை . வீடு, மனை, தோப்பு முதலியவற்றின் மீதும், ஆடு, மாடு முதலியவற்றின் மீதும் சொத்துவரிதண்டப்பட்டது. வாணிகம் செய்வோர் வணிகவரி செலுத்தினர். விலைக்காணம், கைவிலைப்பணம் என்பன முறையே கடைகளுக்கும், சந்னதசுளுக்கும் விதிக்கப்பட்ட வரிகளாகும். சுருமான், தச்சன், கம்மாளன், குயவன், வண்ணான், வாணிகன் முதலிய தொழிலாளர்களிடமிருந்து தொழில் வரியும், நியாயத்தார். மன்றாடி, வரிவாங்குபவர் முதலிய அரச அலுவலர்களிடமிருந்து அலுவல் வரியும் தண்டப்பட்டன. பரத்தையர், உப்புக்காய்ச்சுவோர், கள் இறக்குவோர் முதலியோரும் வரி செலுத்தினர், தறிக்கடமை, செக்குக் கடமை, அரிசிக் காணம், பொன்வரி, பசும்பொன் வரி, புல்வரி மேய்ச்சல் வரி). பட்டாடை நரல் ஆயம், மரக்கலவரி, கொதிகலவரி (உலைவரி முதலிய வரிகள் இத்தகைய கைத்தொழில்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து தண்டப்பட் டன. படைச் செலவுக்கு மக்களிடமிருந்து தண்டப்பட்ட வரிக்குப் 'படைக்கொடை' என்று பெயர், கோட்டைப் பணம், பட்டையக் காணிக்கை , வில்வரி, சூல்வரி ஆகிய வரிகளும் இக் காலத்தில் பெறப் பட்டன. பின் கூறப்பட்டவைவில், சூலம், வாள் முதலியவற்றை வைத்திருந் தோரிடம்தண்டப்பட்டது இசைவுக் கட்டணமாக இருக்கலாம். குமுகாயம் வலங்கை,இடங்கை என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் பல சாதிகள் இருந்தன. இப் பிரிவினரிடமிருந்து கோயில்களுக்கும், குமுகாய நலத்திற்கும், அற நிலையங்களுக்குமாகத் தண்டப்பட்ட வரிகளுக்குக் குமுகாயக் குழுவரி" என்று பெயர், பாசைவரி, வத்தைவரி, கருணீக சோடி, தலையாரிக்கம், நாட்டுக் கணக்குவரி, இராயச வர்த்தனை, அவசர வர்த்தனை, அதிகார வர்த்தனை, நிருபச் சம்பளம், ஆளுக்கு நீர்ப்பாட்டம், பாடிகாவல் முதலிய வரிகளும் இருந்தன. இவற்றில் ஏரி, குளங்களில் மீன்பிடிப்போர் செலுத்திய வரி 'பாசைவரி* எனப்பட்டது. படகுகளை வைத்திருந்தோர் செலுத்தியவரி 'வத்தைவரி' எனப்பட்டது. வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சிய தற்குச் செலுத்திய வரி நீர்ப்பாட்டம்' எனவும், ஊர்காவலுக்குச் செலுத்தியவரி 'பாடிகாவல்" எனவும் அழைக்கப்பட்டன. பிற வரிகள் அரசக் கட்டளைப்படி செயல் பட்ட அலுவலர்களுக்குப் பொதுமக்கள் செலுத்திய வரிகளாகும். உழவர்சுள் கலப்பை ஒன்றுக்கு இவ்வளவு வரி என்று அவரவர்வைத்திருக் கும் கலப்பை மேனிப்படி செலுத்தப்பட்ட வரி 'ஏர் வரி' எனப்பட்டது. தேரோட்ட விழாவின்போது செய்யும் ஊழியம் தேர்வழியம்' எனப் பட்டது. இதைத்தவிர கோயில்களுக்குக் கடமை, மகமை, காணிக்கை, கட்டணம், வரி, இறை, கட்டாயம் முதலிய வருவாய்களும் வந்தன. காடு, நயன்மைமன்றம், கடற்கரைப் பகுதிகள் ஆகியவற்றி லிருந்தும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. பாளையக்காரர்கள் தங்கள் வருவாயில் மூன்றிலொரு பங்கை அரசுக்குக் கொடுத்து விடுவார்கள். பிற்காலத்தில் இவர்கள் இதனைச் சரியாகக் கொடுக்கவில்லை. கடற்கரைப் பகுதிகளில் முத்தெடுப் போரும், சங்கறுப்போதும் வரி செலுத்தி வந்தனர். இந்த வருவாயும் பின்னர் டச்சுக்காரர்களுக்கே சேர்ந்துவிட்டது. வரி தண்டு வதற்கு மலர்களில் மணியகாரன் அல்லது அம்பலகாரன் அமர்த்தப்பட்டடான். அவனுக்குத் துணையாகக் காணமும், தலையாரியும் இருந்தனர். ஏவ முறையில் மொத்தமாக வருவாய் கிடைப்பதும் உண்டு. பெரும்பாலும் வரிகளை ஆண்டுதோறும் தொள்ளிரவுக் (நவராத்திரி காலத்தில் f அக்டோபர் மாதம்) தண்டுவர். இது விசயநகர மன்னர் கையாண்ட் முறையாகும். இதை அப்படியே மதுரை நாயக்க மன்னர்களும் பின்பற்றினர். வரிகள். பண்டமாகவும் பணமாகவும் செலுத்தப்பட்டன. இவற்றை முறையே நெல்முதல், பொன்முதல் என்று அழைத்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் இவை நெல் ஆயம், காசு, ஆயம் என்று அழைக்கப்பட்டன, திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்து 1529 ஆம் ஆண்டுக் கல்வெட்டிலிருந்து மக்கள் நன்செய் வரியைப் பொன்னாய மாகவும், நெல்லாயமாகவும் செலுத்தினார்கள் என்பதை அறிகிறோம், நிசுர வருவாயில் ஏறத்தாழப் பாதிவருவாய் வரியாகச் செலுத்தியதாகப் பாதிரி மார்களின் குறிப்புகளிலிருந்து அறிகிறோம். இது ஆராயத்தக்கது. இவ்வாறு கிடைத்த வருவாய் படைக்கும், கோயில்களுக்கும், நீர்ப்பாசன ஏந்துகளுக்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும், அரண்மனைச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. மதுரை நாயக்கருக்கு ஓராண்டில் எவ்வளவு வருவாய் வந்தது, எவ்வளவு செலவானது என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாயக்கர் காலக் குமுகாயம் ஏறத்தாழ இருநாற்றியாறு ஆண்டுகள் (கிபி.1529-1736) நடைபெற்ற நாயக்கர் கால ஆட்சியில் வாழ்ந்த மக்கள் அமைதி போர், பசுமை, பட்டினி எனப் பலவற்றையும் கண்டனர். தொடக்க முதல் இறுதிவரை பல படையெடுப்புகளும், அவற்றால் பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் ஏற்பட்டதைக் காண்கிறோம். இவற்றைத் தவிரப் போர்த்துகீசியரும், டச்சுக்காரரும், இசுலாமியரும் மக்களைத் துன்புறுத்திப் பணம் பறித்தும், தொல்லைகள் கொடுத்தும், மதமாற்றம் செய்தும், வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இத்தகையச் சூழல்களால் இக் காலத்தில் மக்கள் இறைவனை நினைந்து பத்தி மயக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். மன்னர் சுகளும், எண்ணிறந்த பல கோயில்களைக் கட்டிவிழாக்ளெடுத்து மக்களை இறைவன் திருப்பணிகளில் ஈடுபடும்படி செய்தார்கள். சாதிப் பிரிவுகள் | பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் கணக்கற்ற சாதிகள் இருந்தன. இவற்றை ஒன்றுபடுத்தவோ, ஒழிக்கவோ அல்லது பின்னிலையில் உள்ளவர்களை முன்னிலைக்குக் கொண்டு வரவோநாயக்க மன்னர்கள் முயலவில்லை. நாயக்கர்கள் வடுகர்கள் தெலுங்கர்கள்); பழமை விரும்பிகள்; விசய நகர மன்னர்களின் வழித்தோன்றல்கள். ஆகவே, சாதிக னையும், மூடப்பழக்க வழக்கங் களையும் போற்றிப் பாதுகாத்தார்கள். பார்ப்பனர், செட்டியார், வேளாளர், கைக்கோலர், கம்மாளர், பறையர், பள்ளர், செம்மார் முதலிய எண்ணற்ற சாதிகள் இருந்தன. புதிதாகக் குடியேறிய சௌராட்டிரர்கள் தனிச் சாதியாக இயங்கினர். பின்னர் இவர்களுக்குள்ளும் சாதிப்பிரிவுகள் தோன்றின. நாயக்கராட்சியில் பெரும் பதவிகளான தளவாய், பிரதானி, இராயசம் முதலிய பதவிகள் பெற்றவர் பார்ப்பனர்களே. பின்னரும் இப் பதவிகள் தெலுங்கு நாட்டிலிருந்து வந்த பார்ப்பனர்களுக்கே அளிக்கப்பட்டன. நாயக்க மன்னர்கள் மக்களுக் குள்ளேயே பல சாதிப் பிரிவுகளை உண்டாக்கி விதிமுறைகளையும் ஏற்படுத்தினார்கள். சௌராட்டிரத்திலிருந்து வந்த பார்ப்பனர்கள் பூணூல் அணியக்ககூடாது என்பதை எதிர்த்துப் போராட்டமும், வழக்கும் ஏற்பட்டன. இவ்வழக்கைத் தீர்த்து அவர்கள் பால் அணியும் உரிமையை வழங்கியவள் அரசி மங்கம்மாள் என்பதனையும் அறிகிறோம். கி.பி. 11 12 ஆம் நூற்றாண்டுகளில் தென்னகத்தில் தோன்றிய வலங்கை, இடங்கை சாதிப் பிரிவுகள் இக்காலத்தில் நிலைபெற்றிருந்ததோடு அப்பிரிவுகளின் பெயரால் 'குமுகாயக் குழுவரி செலுத்தப்பட்டதையும் அறிகிறோம். வலங்கைப் பிரிவில் தொன்னூற்றெட்டுச் சாதிகளும் இடங்கைப் பிரிவில் தொன்னூற்றெட்டுச் சாதிகளும் இருந்தன. இந்தப் பிரிவுகளிலிருந்த சாதிகளின் பெயர்கள் பற்றித் திட்டவட்டமான கணக்கு நமக்குக் கிடைக்க வில்லை , பார்ப்பனர், சத்திரியர், வைசியர், வேளாளர் ஆகியோர் இப் பிரிவுகளில் காணப்படவில்லை , ஆண்கள் பல் மனைவியரை மணக்கும் வழக்கம் உடையவராய் இருந்தனர். இவ் வழக்கம் பெரும்பாலும் பெருங்குடி மக்களிடத்தும், அரசர்களிடத்தும், உயர் அலுவலர்களிடத்தும் இருந்தது. திருமலை நாயக்கன் இறந்தபோது அவனுடைய மனைவியர் இருநூற்றுவரும் உடன்கட்டை யேறினர். இராமநாதபுரச் சீமையை ஆண்ட கிழவன் சேதுபதி இறந்தபோது அவனுடைய நாற்பத்தோழு மனைவியரும் உடன்கட்டையேறினர். நாம் கண்டவரையில் மூன்றாம் முத்துவீரப்பன் மட்டும் ஒரே மனைவியை மணந்து வாழ்ந்திருக்கிறான். அவன் மனைவி அவன் இறக்கும்போது கருவுற்றிருந்ததால் உடன்கட்டையேறாமல் மகப்பேற்றுக்குப்பின் பன்னீர் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாள், இக் காலப் பெண்கள் ஆண்களைப்போல் கல்வி கேள்விகளில் சிறந்து காணப்படவில்லை. ஆயினும், கற்பு நெறியைக் காத்தனர். இசையிலும், நடனத்திலும் சிறந்த பெண்மணிகள் பலர் இருந்தனர். பரத்தையர்கள் வரி செலுத்தித் தொழில் நடத்தினர். கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்ட பெண்கள் கோயில் விழாக்களில் நடனமாடுவார்கள். உறவினர் இறந்து விட்டால் பெண்கள் தலைமயிரை விரித்துப் போட்டு, மார்பில் அடித்துக் கொண்டு, ஒப்பாரி பாடி அழும் வழக்கம் இருந்தது. அக்காலத்து மன்னர்கள் தெலுங்கர்களாகவே இருந்ததால் தமிழை வளர்க்கும் ஆர்வம் அவர்களிடம் காணப்படவில்லை. கோயில்களைக் கட்டிக் காத்து மூடப்பழக்க வழக்கங்களை வளர்த்தார்களேயொழியக் கல்விக் கூடங்களைக் கட்டிக் கல்வியை வளர்க்கவில்லை, கற்று அறிஞர் சுளையும் போற்றவில்லை, சிற்றுரர்களில் தனிப்பட்டவர் முயற்சியால் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடந்தன. மாணவர்கள், எழுதும் கற்பலகை, தாள் இவற்றைப் பயன்படுத்தவில்லை, மணலில் எழுதியே எழுத்தையும், கணிதத்தையும் கற்றார்கள். ஆசிரியர்கள் குமுகாயத்தில் பெரிதும் மதிக்கப் பட்டார்கள். ஏசு கழகச் சமயத் தொண்டர்கள் பள்ளிகளையமைத்து மேனாட்டு முறையில் கல்வியையும், சமயக் கல்வியையும் கற்பித்தார்கள். பார்ப்பனர்களுக்கு வேத சாத்திரங்களைக் கற்பிக்கும் கல்விக்கூடங்கள் நடத்துவதும், அவற்றிற்குப் பொருளுதவி செய்வதும் புனிதப்பணியாகவும், இறைவனை அடைவதற்குச் செய்யப்படும் செலவாகவும், மன்னர்களும், செல்வர்களும் கருதினர். இதனால், மதுரையில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்ப்பனச் சிறுவர்கள் உணவு, உடை, உறைவிடம் முதலிய வற்றை இலவசமாகப் பெற்றுப் பயின்றார்கள். இத்தகைய பள்ளிகள் பலவற்றைத் தாங்கள் கண்டதாகப் பாதிரிமார்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக மதுரை நாயக்கர்கள் தமிழை அடியோடு புறக்கணித்துச் சமம் கிருதத்தையும் தெலுங்கையுமே ஆதரித்தார்கள். ஆயினும், என்றும் வளமுடைய சுன்னித்தமிழ் அக்காலத்திலும் பல கனிகளை உதிர்த்தது. அதி வீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர், அந்தாரிப் புலவர், திருக் குறுகைப் பெருமாள் கவிராயர் குமரகுருபரர், மணவாளதாசர் (பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்), சுப்ரதீபக் கவிராயர், தாயுமானவர், திரிகூடராசப்பக் கவிராயர் முதலிய மாபெரும் தமிழறிஞர்கள் இக் காலத்தில் தோன்றித் தமிழிலே பல அரிய நூல்களை யாத்தார்கள். இராபார்ட்-தி- நொபிலி பாதிரியார் தம்மை இத்தாலியப் பார்ப்பனன்' என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டுப் பார்ப்பனரைப் போல் வாழ்ந்து தமிழுக்கு அரிய தொண்டுகள் செய்தார். திருமலை நாயக்கன் காலத்தில் வாழ்ந்த இவர் ஞானோபதேசம், மந்திரமாலை, தமிழ் போர்த்துகீசிய அகரமுதலி முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். விசயநகர ஆட்சியின் கடைசி மன்னர்கள் ளானவிசயரங்கச் சொக்கநாதன், மீனாட்சி அரசியார் ஆகியோர் காலத்தில் வாழ்ந்த சோசப்பெசுகி என்ற இத்தாலிய நாட்டுப் பாதிரி தன் பெயரை 'வீரமா முனிவர்" என்று மாற்றிக்கொண்டு தமிழ் மொழிக்கு அரிய பல பணிகளைச் செய்தார். இவர் தமிழ் எழுத்திலும் அரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். எ, ஒ என்னும் குறிலெழுத்துகளுக்கு இணையான நெடில் எழுத்துகள் எழுதுவதற்கு அவற்றின்மேல் புள்ளிவைத்து எழுதும் வழக்கம் அக் காலத்தில் இருந்தது. வீரமாமுனிவர் எ ஒ ஆகியவற்றை ஏ, ஓ வாக மாற்றினார். இதைப் போலவே இவ்வுயிர்கள் ஏறிய மெய்யெழுத்து சுளையும் கொம்பிட்டுச் சீர்திருத்தினார். எ-டுஎ-ஏ.கெ கே, கொ-கோ. இவர் பல அரிய இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அகர முதலிகளையும் எழுதினார். சதுரகராதி, தமிழ்-இலத்தின் அகராதி, தமிழ் - போர்த்துகீசிய அகராதி, தமிழ் - ஃபிரெஞ்சு அகராதி முதலியன இவரால் எழுதப்பட்டன. தன்னையொரு தமிழ் மாணவன்" என்றே இவர் கூறி இறந்தார். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த உமறுப்புலவரும் இக் காலத்தில் வாழ்ந்தவர். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக அழகிய தமிழில் "சீறாப் புராணம்" என்னும் நூலாக இவர் எழுதியுள்ளார். சமயம் அக் காலத்தில் சைவம், வைணவம் ஆகியவையும் இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்களும் தமிழகத்தில் இருந்தன. திருமலை நாயக்க னுக்குப் பின்பு சாத்தி வழிபாட்டு இயக்கம் மதுரையில் தோன்றியது. மதுரை மீனாட்சியம்மையை வழிபடும் இயக்கம் வலுப்பட்டது. வைணவர்களின் வடகலை, தென்கலைப் பிரிவுகள் இருந்தன. மதுரைவீரன் வழிபாடும் தோன்றி வளர்ந்தது. பொது மக்களில் பெரும்பாலோர் மதுரைவீரன் வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆண்டு முழுவதும், குறிப்பாகக் கன்னி (புரட்டாசி மாதத்தில் நாடெங்கிலும் விழாக்களும், வேடிக்கைகளும் நடந்தன, மதுரையிலும், திருச்சியிலும் இசுலாமியர்கள் இருந்தார்கள், கிறித்தவ சமயம் முதன்முதலாக வீரப்ப நாயக்கன் காலத்தில் 1572-1595) மன்னாரின் இசைவுபெற்று மதுரையில் குடிகொண்டது. பெர்ணாண்டசு பாதிரியார் மதுரையில் 'சர்ச்சு' கிறித்தவக் கோயில் ஒன்றைக் கட்டி, குருமார் குழு ஒன்றையும் ஏற்படுத்தினார். உயர்குல இந்துக்களைக் கிறித்தவர்களாக்க இவர் முயன்று தோற்றார். இவருக்குப்பின் வந்த இராபர்ட்-தி-நொபிலிபாதிரியார் இம்முயற்சியில் சிறிது வெற்றிகண்டார். இவருக்குப் பின்னர் திருச்சியிலும், பிற ஊர்களிலும் இந்துக்கள் கொதித்தெழுந்து கிறித்தவ சமயத் தொண்டர்களைத் துன்புறுத்தினார்கள். திருமலை நாயக்கன் இதில் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினான். சொக்கநாத நாயக்கன் காலத்தில் பாதிரியார்களுக்கு ஏற்பட்ட அஞ்சத்தக்க நிலைமை தவிர்க்கப்பட்டது. சொக்கநாதன் அவர்களுக்குப் பாதுகாப் பளித்தான். மறவர் நாட்டில் ஒரு சிற்றரசர் கிறித்தவர் ஆக்கப்பட்டதால் பாதிரிமார்கள் துன்புறுத்தப்பட்டார்கள். மதமாற்றம் செய்த பாதிரி சான் தி பிரிட்டோகொல்லப்பட்டார். ஆயினும், பாதிரிகள் அங்குத் தொடர்ந்து பணியாற்றினார்கள். இவ்வாறு நாயக்கர் காலத்தில் கிறித்தவ சமயத்திற்குப் பெரும் எதிர்ப்பு இருந்ததை அறிகிறோம். இந்துக்கள் மேழிசித்திரைத் திருவிழா தொள்ளிரவு (நவராத்திரி விழா, விளக்கணி (தீபாவளி விழா முதலிய விழாக்களைக் கொண்டாடி ஆண்டு முழுவதும் இறைநெறியில் ஈடுபட்டிருந்தார்கள். நாயக்கர் கலைகள் நாயக்கர் காலக் கலைகளைப்பற்றி அறிவதற்கு முன் விசயநகரப் பாணியை அறிதலே தென்னகக் கலை வரலாற்றுத் தொடர்பை அறுபடாமல் காணும் முறையாகும். விசயநகரப்பாணி கோயில் அமைப்பு: கருவறையைச் சுற்றிலும் பல்வேறு கட்ட பங்கள் காணப்படும். அவை பல்வேறு தெய்வங்களின் கோயில்களாக இருக்கும். பாண்டியர் காலத்திலேயே ஒரு பெரிய கோயிலுக்குள் அம்மன் கோயிலும் இடம் பெற்றதை அறிவோம். விசயநகரக் காலத்தில் பல்வேறு தேவக் கோயில்களும் ஒரே கோயிலுக்குள் இடம்பெற்றன. அவை பெரும்பாலும் மூலவரோடு தொடர் புடைய தேவக் கோயில்களாக இருக்கும். மூலவருக்கு வடமேற்கில் பின்புறத்தில் அம்மன் கருவறையும் (சன்னதியும், முகவாயிலில் கிழக்குப் பக்கத்தில் திருமண மண்டபமும், பிற பகுதிகளில் மற்ற தேவக் கோயில்களும் இருக்கும். தூண்கள் பல்வேறு உருவங்களையும், அணிகலன்களையும், ஒப்பனை களையும் பெற்றிருக்கும். சிறப்பாக, மண்டபத் தாண்கள் கலைத்திறன் செறிந்து காணப்படும், குதிரைகள், இருவகை விலங்கு களின் உறுப்புகளுடன் காணப்படும் வியத்தகு பெரிய உருவிலான விலங்குகள் இருக்கும். தரண்களைச் சுற்றிலும் ஒட்டு ஒப்பனைகள் இருக்கும். வளை வடைப்புகள், தலைப்புகள், பொதிகைகள் முதலியவை நிறைந்த அணிகலன்களுடன் காணப்படும். பொதிகையில் தாமரை மலர் வடிவம் சிறப்புற அமைந்திருக்கும். மேற்கூறிய பொதுத் தன்மைகளையுடைய பல கோயில்கள் விசயநகர மன்னர்களால் தமிழகத்தில் கட்டப்பட்டன. இவை பாண்டியர் பாணியின் வளர்ச்சியேயாகும். விசயநகர மன்னர்களையடுத்துத் தமிழகத்தில் சிறப்புற்று நின்ற நாயக்கர்கள் இதே பாணியைப் பின் பற்றியே கட்டட ஓவிய, சிற்பக் கலைகளை வளர்த்த னர். கி.பி. 1565-ல் விசயநகரப் பேரரசு வீழ்ந்ததும் நாயக்கர்கள் தனித்தாண்டனர். அவர் களின் அரசியலுக்குத் தலைமை இடமாகவும், தலைக்களஞ்சியமாகவும் திகழ்ந்தது மதுரையே யாகும். ஆகவே, மதுரையில் அவர்களால் கட்டப்பட்ட கோயில்கள், மண்டபங்கள், அரண்மனை முதலியவை இக் காலக் கலைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் அமைகின்றன. நாயக்கர்காலக் கலை வளர்ச்சி கட்டடக்கலை பாண்டியருக்குப் பின் விசயநகர மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. பின்னரே, அவர்கட்குக் கீழ்ப்பட்டவராய் ஆட்சியைத் தொடங்கிய நாயக்கர்கள் அவர்களைத் தொடர்ந்தே தமிழகத்தை காண்டனர். எனவே, அக்காலக் கட்டடக்கலையில் பாண்டியர், விசயநகர மன்னர்கள் ஆகியோரின் பாணிகளைக் காண்கிறோம். பாண்டியர் காலத்தில் கோபுரம் முகாமை பெற்றதைக் கண்டோம், விசயநகர ஆட்சிக் காலத்தில் இக்கோபுர அமைப்பில் ஒரு சிறு மாற்றத்தைக் காண்கிறோம். விமானம் சிறுத்துக் கோபுரங்கள் உயர்த்திக் சுட்டப் பட்டன. சோழ நாட்டுக் கோபுரங்களும், திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் கோயில் முதலியவற்றிலுள்ள கோபுரங்களும் விசயநகரப் பாணியிலானவை, கோபுரங்கள் பதினான்கு நிலைவரையில் உயர்ந்ததும் இக் காலத்தில் தான். இதனால்தான் விசயநகரக் கோபுரங்கள் 'இராயர் கோபுரங்கள்' என்று புகழப்பட்டன. சோழர் காலத்தில் தொடங்கப்பெற்ற "ஆயிரங்கால் மண்டபம்' விசயநகர ஆட்சியில் பெருகி நாயக்கர் காலத்தில் நாயக்கர் மாளிகை" (மகால்) எனும் புகழுடன் வளர்ந்தது. சிறந்த அரண்மனையும் நாயக்கர் காலத்தில் படைக்கப்பட்டது. மண்டபங்களிலுள்ள கற்றூண்களில் உயர்ந்த குதிரை வீரர்களைச் செதுக்கும் வழக்கம் நாயக்கர் காலத்தில் மேலும் சிறப்புடன் விளங்கியது. அத்தகைய அழகிய தூண்களை நிறுத்தி மிகவும் உயர்த்திக் கட்டப்பெற்றுள்ள கோயில் திருச்சுற்றுகளும் நாயக்கர் காலத்தைவையே. மதுரை மீனாட்சி கோயில், புது மண்டபம் ஆகியவை நாயக்கர்காலத் தலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மதுரைத் திருமலை நாயக்கர் மாளிகை (மகால் தமிழரசர்களின் அரண்மனை மாதிரியை அறிய உதவும் எடுத்துக்காட்டாயுள்ள ஒரேவொரு கட்டட மாகும். இக் கட்டடத்திலுள்ள தூண்கள், சுவர்கள், தள் அமைப்பு முதலியன நாயக்கர் காலக் கட்டடத்திறனை விளக்குகின்றன. இதிலுள்ள வளைவுகள் இசுலாமியப் பாணியிலானவையென்பர். சிற்பக்கலை நாயக்கர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் முதலிய இடங் களில் சிறப்புமிக்க கோயில்களைக் கட்டினர். இவர்களின் சுட்டடக் கலையைப் போலவே சிற்பக்கலையும் விசயநகரப் பாணியைப் பின்பற்றி வளர்ந்தது. இச் சிற்பங்கள் கட்டடங்களில் மட்டும் அமையாது தூண்களி லும் இறவாரங்களிலும் மூலைகளிலும் கூரைகளிலும் அமைந்தன, தேவர்களின் உருவங்களோடு புராண இதிகாசக் கதைகளை விளக்கும் சிற்பங்களும், பொதுமக்கள் சிற்பங்களும் சிறப்புற அமைக்கப்பெற்றன. மதுரைப் புதுமண்டபத் தூண்களிலுள்ள சிற்பங்களின் சிவநடனச் சிற்பங்கள் சிறப்பானவை. ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், அரிச்சந்திரன், இறந்த தன் மகனைக் கைகளில் ஏந்தி நிற்கும் சந்திரமதி. குறவன், குறத்தி, இரதிதேவி ஆகிய சிற்பங்கள் சிறப்புறச் செதுக்கப்பட் டுள்ளன, மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பிட்சாடனர், மோகினி, நடம்புரியும் காளி, ஊர்த்தவத்தாண்டவ சிவன் - முதலிய சிற்பங்கள் சிறப்பானவையாகும். பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள கிருட்டிணாபுரம் வெங்கடாசலபதிக் கோயில் சிற்பங்களும் சிறப்பானவையே. இக் கோயில் கிருட்டிணப்ப நாயக்கனால் கட்டப்பெற்றது. இக் கோயிலின் ஒவ்வொரு தூணிலுமுள்ள சிற்பங்கள் தொடர் சிற்பங்களாகக் கருத்தை விளக்குகின்றன. ஒரு குறத்தியின் கதையை விளக்கும் தொடர் சிற்பங்கள் இவற்றுள் சிறப்பானவை. உட்புற மண்டபத் தூணிலுள்ள அன்னப்பறவை மீதமர்ந்த இரதியின் உருவமும், அவளுக்குக் கீழே நடமிடும் தோழியின் உருவமும் தலையாய சிறப்புடையவை. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சிற்பங்கள் சுதையாலும், மரத்தாலும் ஆனவை. திருக்குறுங்குடி கோபுரத்திலுள்ள சிற்பங்கள் திருமாலின் பத்துத் தோற்றரவுகளைக் காட்டுகின்றன. கட்டட சிற்பக் கலைகளைக் போலவே ஓவியம், இசை, நடனம் முதலிய கலைகளும் நாயக்கர் காலத்தில் சிறப்புற்றிருந்தன. (ஆ) தஞ்சை நாயக்கர்கள் விசயநகரப் பேரரசன் அச்சுதராயன் (கி.பி. 1530-42) காலத்தில் அவனுடைய உறவினனான செவ்வப்ப நாயக்கன் என்பவன் தஞ்சை மண்டலேசுவரராக அமர்த்தப்பட்டான் என்பதைப் பார்த்தோம். அவனுக்கு முன்பே தஞ்சை விசயநகரப் பேரரசின் ஒரு பகுதியாகி, அங்கு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டிருந்தது. கி.பி. 1535-ல் தஞ்சை விசயநகரப் பேரரசின் ஒரு பகுதியாயிற்று. செவ்வப்பநாயக்கன் கிபி.1535-லிருந்து 1580) வரை தஞ்சை நாட்டின் மகாமண்டலேசுவரராயிருந்து விசயநகரப் பேரரசுக்கு அடங்கி ஆண்டான்.கிபி. 1565-ல் தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் பேரரசு வீழ்ச்சி யுற்றதும், செவ்வப்ப நாயக்கன் ஓரளவு முழுயுரிமை யோடு தஞ்சையை ஆள முற்பட்டான். விசயநகரப் பேரரசின் மன்னனான மேற்படி அச்சுதராயனின் தங்கையை மணந்தவன் என்றும், அதன் வழி தான் பிற நாயக்கர்களைப் போல் அல்லாமல் அரச மரபின் குருதியுறவுடையவனென்றும் இவன் எண்ணி இறுமாந்திருந்தான். அச்சுதராயனுக்குப் பின் வந்தோர் காலத்திலும் செவ்வப்ப நாயக்கன் பேரரசோடு நல்லுறவு கொண்டிருந்தான். மதுரைவீரப்ப நாயக்கன் (கிபி. 1572-1597 விசயநகரப் பேரரசோடு போர் தொடுத்த காலத்திலும் சேராமல் விசயநகரப் பேரரசுக்குத் துணையாயிருந்தான். கி.பி. 1549 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் செவ்வப்ப நாயக்கன் இசுலாமியத் துறவிகளுக்கு அருளிய தானங்கள் பற்றி அறிகிறோம். இவன் காலத்தில் தஞ்சையில் பல்வேறு பொதுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவன் பெயரால் ஒரு பெரிய ஏரியும் வெட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்த போர்த்து கீசியர்கள் செய்துவந்த அடாத செயல்களை இவன் தடுத்தான். கிபி.15-ல் இவரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஒன்று சிதம்பரத்தில் காணப்படும் கிறது. அதில் இவன் விசயநகரப் பேரரசுக்குத்தான் எவ்வாறு நன்றியறித லுடன் நடந்துகொண்டான் என்பது அறியப்படுகிறது. இவனுடைய அவையில் பெயர்பெற்ற விசயேந்திர தீட்சதர் என்பார் இருந்தார். இவருடைய சமகாலத்தில் வாழ்ந்தவர்தான் அப்பைய தீட்சதராவார், செவ்வப்ப நாயக்கனுக்குப் பின் அவன் மகன் அச்சுதப்பன் (கி.பி. 1564-1600 தஞ்சை மன்னர் ஆனான். மதுரை வீரப்ப நாயக்கன் (கி.பி. 157). 92) விசயநகரப் பேரரசோடு போர் தொடுத்த காலத்திலும் இவன் அவரோடு சேராமல் விசய நகரப் பேரரசுக்குத் துணையாயிருந்தான். இவன் டச்சுக் காரர்களை வெறுத்துப் போர்த்துகீசியர்களுக்கு நண்பனா யிருந்தான். யாது கரணியம் பற்றியோ இவன் மீது பகைமை பூண்டு பேரரசன் இரண்டாம் வேங்கடன் (கி.பி. 1585-1614) தஞ்சையின் மீது போர் தொடுத்தான். அச்சுதப்பன் கிபி. 1597-ல் முடிதுறந்து மூன்றாண்டு களுக்குப்பிறகு கி.பி. 1600-ல் உயிர் நீத்தான். அச்சுதப்பனுக்குப் பிறகு அவனுடைய மகன் இரகுநாத நாயக்கன் *(கிபி. 1600-1545) தஞ்சை மன்னன் ஆனான். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் இவன் படைவன்மையிலும், அரசியல் திறமையிலும், ஆட்சித் திறத்திலும் சிறந்தவன் ஆவான். இவன் காலத்தில் விசயநகரப் பேரரசின் முடிவேந்தராய் இருந்த இரண்டாம் வேங்கடன் இறந்து விட்டான். இவனால் அமர்த்தப்பட்ட இரண்டாம் சீரங்கன் அரசுக்கட்டில் ஏறினான். ஆனால், வேலூரரை ஆண்ட சிற்றரசன் சக்கராயன் என்பவனால் பட்டத்துக்கு வந்த நான்கு நாள்களுக்குள் அவன் குடும்பத்துடன் சொல்லப் பட்டான். அவனுடைய மகன் இராமதேவன் மட்டும் சலவைத்தொழிலாளி யால் காப்பாற்றப்பட்டுவிட்டான். இராமதேவனை அரசுக்கட்டிலேற்ற வேண்டும் என்று ஒரு கட்சி தொடங்கப்பட்டது. அதற்கு அச்சமன் தலைமை தாங்கினான். எவனோ ஒருவனை வேங்கடன் மகன் என்று கூறி அவனையே அரசுக்கட்டி,லேற்ற வேண்டுமென்று மற்றொரு கட்சி தோன்றியது. இரு கட்சிகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அச்சமின் சக்கராயனைத் தோற்கடித்தான். இச் சமையத்தில் மதுரையை யாண்ட முத்துவீரப்ப நாயக்கன்சிபி.1609-163 விசயநகரப் பேரரசிலிருந்து விடுதலை பெற்று முழுவுரிமை பெற்ற மன்னராக முயன்று கொண் டிருந்தான். பேரரசில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினான். சக்கராயனுக்குப் படையுதவி புரிந்தான். செஞ்சி நாயக்கன் கிருட்டிணப்பனும் சக்கராய னுடன் சேர்ந்துகொண்டான். கி.பி. 15-ல் திருச்சிக்கு அருகிலுள்ள தோப்பூரில் நடந்த போரில் அச்சமன் கட்சி வெற்றி பெற்றது. சக்கராயன் போரில் கொல்லப்பட்டான், முத்து வீரப்பனும், செஞ்சி நாயக்கனும் தோற்றோடினர். இவ்வாறு, இராமதேவன் தஞ்சை இரகுநாத நாயக்கனின் உதவியுடன் விசயநகரப் பேரரசன் ஆனான். இரகுநாத நாயக்கன் தஞ்சை நாடு முழுவதிலும் பல் கோட்டை களையும், வைணவக் கோயில்களையும் கட்டினான். இவனுக்கு ஆட்சியில் லும் மற்ற துறைகளிலும் உறுதுணையாய் நின்றவர் கோவிந்த தீட்சிதர் என்னும் பேரறிஞர் ஆவார். 1811-ல் போர்த்துகீசியர்களை விசயநகரப் பேரரசர் எதிர்த்துச் சாந்தோமில் இருந்த அவர்களுடைய தளவாடக் கொட்டில்களை முற்றுகை யிட்டார். இம் முற்றுகையில் பேரரசருக்கு எதிராக இரகுநாத நாயக்கன் போர்த்துக்கீசியரை ஆதரித்தான். ஆயினும், வேங்கடனின் இறப்புக்குப் பிறகு வேலூர் சக்கராயருக்கு எதிராகப் போரிட்டு இராமதேவனை அரசுக்கட்டிலில் ஏற்றியது இவன் அரசியல் அறிவையுணர்த்தும். இரகுநாத நாயக்கனுக்குப் பின் அவனுடைய மகனான விசயராகவ நாயக்கன் (கி.பி.1637-1475) தஞ்சை மன்னன் ஆனான். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் இவனே கடைசி அரசன் ஆவான். கி.பி. 1616-ல் இவனுடைய தந்தையான இரகுநாத நாயக்கன் தோப்பூரில் நடந்த போரில் மதுரை நாயக்கன் முத்துவீரப்பனைத் தோற்கடித்தான் என்பதைப் பார்த்தோம். இதனால், மதுரைக்கும் தஞ்சைக்கும் பகைமை ஏற்பட்டது. அதே சமையத்தில் மைசூரையாண்ட சாமராசவுடையாரும் தஞ்சைமீது பகைமை கொண்டான். இவ்வாறு இருமுனைப் பகைமைகளுக்கிடையில் தஞ்சை சிக்கித் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் விசயராகவ நாயக்கன் தஞ்சை மன்னன் ஆனான். மூன்றாவது பகைவனான பீசப்பூர்ச் சுல்தான் கி.பி. 1659-ல் பெரும்படையுடன் வந்து தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். சில காலம் தஞ்சை சுல்தான் வசமிருந்தது. தஞ்சை நாடெங்கிலும் பஞ்சமும், பட்டினியும், கொள்ளைகளும் அதிகரித்தன, இச் சமையத்தில் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கன் (கிபி. 1559. 1682) மிகவும் இளைஞனாயிருந்தான். இதனால் மதுரையிலும் அவனுக் கெதிராகச் சூழ்ச்சிகளும், சுலகங்களும் தொடர்ந்து நடந்து கொண் டிருந்தன. நாடெங்கும் மக்கள் வெறுப்புற்றுக் காணப்பட்டனர், விசயராகவ நாயக்கன் சுல்தானிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் ஆளத் தொடங்கினான். கி.பி. 13-ல் பீசப்பூர்ச் சுல்தான் அதில்சா அனுப்பிய படைத் தலைவன் வனமியா என்பவன் மதுரைச் சொக்கநாத் நாயக்கன்மீது போர் தொடுத்துத் திருச்சிக் கோட்டையை முற்றுகை யிட்டான். இம் முற்றுகையில் வனமியானுக்கு விசயராகவ நாயக்கன் துணையாக இருந்தான். சுல்தான் படைகள் திருச்சிக் கோட்டையில் முற்றுகையிட்டு மக்களில் பலரைக் கொன்று, வயல்களை எரித்து, வீடுகளுக்குத் தீயிட்டுக் கொடுஞ்செயல்கள் புரிந்தன. சொக்கநாதன் பெரும் பொருள் கொடுத்துச் சுல்தான் படைத்தலைவன் வனமியானுடன் சமைதி செய்து கொண்டான். ஆயினும், பகைவனுக்கு உதவிய தஞ்சை மன்னன் விசயராகவ நாயக்கனைப் பழிதீர்க்க வஞ்சினம்கொண்டான், சொக்கநாத நாயக்கன் தஞ்சைமீது படையெடுத்து வல்லத்துக் கோட்டையைக் கி.பி. 1865-ல் கைப்பற்றிக்கொண்டான். விசயராகவ நாயக்கன் அவருடன் சமைதி (சமாதானம் செய்துகொண்டு வல்வத்துக் கோட்டையில் மதுரைப் படைகள் தங்கியிருக்க அனுமதித்தான். பின்னர் சொக்கநாத நாயக்கன் விசயராகவ நாயக்கனுடைய மகளை மணக்க விரும்பினான் என்றும் இவன் பெண் கொடுக்க மறுத்ததால் தஞ்சைமீது போர்தொடுத்தான் என்றும் கூறப்படுகிறது. சொக்கநாதன் பெண் கொடுக்க மறுத்த விசயராகவனை எதிர்த்துக்கிபி.13-ல் தஞ்சைமீது படையெடுக்கத் தனது தளவாய் வேங்கடப்பகிருட்டிண நாயக்கனையும், வருவாய்த் துறைத் தலைவர் பேசுதார் சின்னத்தம்பி முதலியாரையும், கன்னிவாடிப் பாளையக்காரர் சின்னக்காட்டீர நாயக்கர் என்பவரையும் அனுப்பினார். இவர்கள் முதலில் வல்லம் கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு பின்னர் தஞ்சையைத் தாக்க முற்பட்டனர். விசயராகவ நாயக்கன் தாம் தோற்பது உறுதியென அறிந்துகொண்டு தமது அரண்மனைக்குத் தாமே வெடி வைத்து உவளகத்திலிருந்த பெண்களை மாளும்படி செய்தான். பின்னர் மதுரை நாயக்கர் படைகளுடன் தனித்துப் போரிட்டு மாண்டான், வெற்றிபெற்ற தம் படைகளை வாழ்த்தித் தளபதிகளுக்குச் சொக்கநாதன் பரிசுகளும் பட்டங்களும் வழங்கினான். பின்னர் சொக்கநாத நாயக்கன் தஞ்சையைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டு தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கனைத் தஞ்சைக்குத் தன் படிநிகராளியாக்கி அவனை ஆளும்படி செய்தான். இப் போரின்போது விசயராகவ நாயக்கனின் மனைவி தாம் இறப்பதற்கு முன் தம் மகன் செங்கமலதாசனை யாருக்கும் தெரியாமல் நாகப்பட்டினத்திலிருந்தடச்சு வணிகரிடம் ஒப்படைத்து விட்டு இறந்தாள். தஞ்சைக்குச் சொக்கநாத நாயக்கனின் படிநிகராளியாக அமர்த்தப்பட்ட அழகிரி நாயக்கன் தணித்தாள முற்பட்டான். இச் சமையத்தில் அவனுக்கு இராய்சனாக அமர்த்தப் பட்ட வெங்கண்ணா என்பவன் அழகிரியை ஒழித்து விட்டுத்தானே தஞ்சையை ஆள முற்பட்டான். இதற்காக அவன் ஒரு சூழ்ச்சி செய்தான், நாகப்பட்டினத்தில் டச்சுக்காரரிடம் அடைக்கல மாகவிடப்பட்டகாலஞ்சென்றவிசயராகவநாயக்கனுடைய மகன் சிறுவன் செங்கமல தாசனை அழைத்துக் கொண்டு வீசப்பூர்ச் சுல்தான் அதில்சா விடம் சென்று அச் சிறுவனைத் தஞ்சைக்கு மன்னனாக்கும்படி வேண்டி னான். அதில்சாதன் தானைத்தலைவன் வெங்காசி என்னும் எக்கோசியைத் தஞ்சைமீது போர் தொடுத்து, செங்கமலதாசனை மன்னனாக்கும்படி ஆணையிட்டான். இந்த வெங்காசி பெயர் பெற்ற மராத்திய வீரன் சிவாசியசின் தம்பியாவான். சுகஸ்தானிடம் படைத்தலைவனாயிருந்த இவன் கி.பி. 167-ல் தஞ்சைமீது போர் தொடுத்து அய்யம்பேட்டை என்ற இடத்தில் நடந்த போரில் அழகிரி நாயக்கனைத் தோற்கடித்துச் செங்கமல தாசனைத் தஞ்சைக்கு மன்னனாக்கினான். இப்பணிக்காக வெங்காசிக்குக் குடந்தை, மன்னார்குடி, பாபாநாசம் ஆகிய ஊர்களில் வரித் தண்டல் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அதே ஆண்டில் (7675) பீசப்பூர்ச் சுல்தான் அதில்சா மரணமடைந்தான். இதற்குள் சூழ்ச்சிக்காரன் வெங்கண்ணா , செங்கமலதாசன் தானே பதவியை விட்டு ஓடும்படி செய்துவிட்டுத் தஞ்சை மன்னனானான். தஞ்சையை அவனாலும் ஆளமுடியவில்லை. இந் நிலையில் வெங்காசி தஞ்சையைக் கைப்பற்றித் தானே ஆள் முற்பட்டான். இவ்வாறு தஞ்சை மராத்தியர் வசமாகியது. வெங்காசிக்குப் பின் மராத்தியர் ஆட்சி தஞ்சையில் தொடங்கியது. தஞ்சையில் மராத்தியர் ஆட்சி பற்றிப் பின்னர் காண்போம். (இ செஞ்சி நாயக்கர்கள் செஞ்சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இரண்டாம் அரிகரர் கி.பி. 1377-1404) காலத்தில் விசயநகரப் பேரரசு இக்கேரி, சீரங்கப் பட்டணம், வேலூர், செஞ்சி, தஞ்சை மதுரை முதலிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப் பகுதிகளை ஆளுவதற்கு ஆளுநர்கள் அமர்த்தப் பட்டனர். கிருட்டிண தேவராயனின் கிபி.150g-530) கடைசிக் காலத்தில் விசயநகரப் பேரரசு வலுக்குன்றத் தொடங்கியது. அச் சமையத்தில்தான் தொலைதூர நாடுகளை ஆள அமர்த்தப்பட்ட நாயக்க மன்னர்கள் தனித்தாளும் நைப்பாசைக்குத் தள்ளப்பட்டனர். கிருட்டிண தேவராயன் காலத்தில் செஞ்சி ஆளுநராயிருந்தவையப்பநாயக்கன்தான் முதன் முதலில் நாயக்கராட்சியை ஏற்படுத்தி, அதன் கோட்டையை வலுப்படுத்தி, அதைச் சுற்றிலும் பல கட்டடங்களைக் கட்டினான். இவனுக்குப் பின்வந்த முதலாம் கிருட்டிணப்ப நாயக்கன் தலைக்கோட்டைப்போருக்குப் பின் தனித்தான முற்பட்டான். இவனுக்குப்பின் வந்த சூரப்ப நாயக்கன் காலத்தில் இரத்தினகேத சீனிவாச தீட்சிதர் என்பார் வாழ்ந்தார். இத் தீட்சிதர் பதினெட்டு நாடக நூல்களையும், அறுபது கவிதைகளையும் சமற்கிருதத் தில் எழுதினார் என்பர். சூரப்பநாயக்கனுக்குப்பின் இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் (கிபி.1580-1620 செஞ்சிக்கு நாயக்கர் ஆனான். இவன் பேரரசன் இரண்டாம் வேங்கடனையே எதிர்த்தவன். பேரரசில் ஏற்பட்ட பிறங்கடையுரிமைப் போரின்போது வேலூர் சக்கராயனுக்குத் துணையாக நின்று அச்சமன் கட்சியை இவன் எதிர்த்தான். இவன் சிறந்த மாலியவைணவ நெறியாளன். சிதம்பரத்தில் கூத்தப் பெருமான் கோயிலிலுள்ள கோவிந்தராசப்பெருமாள் கோயிலை இவன் பழுது பார்த்தான். தில்லை தீட்சிதர்கள் இவன் கோயிலுக்குள் நுழையக் கூடாதென்று போராட்டம் நடத்திக் கோபுரத்தில் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதையும் பொருட்படுத்தாமல் இவன் தன் பணியைத் தொடர்ந்தான். பெருமாள் கோயில் சிவன் கோயிலுக்குள் இருக்கக் கூடாதென்று எதிர்த்துப் போராடியவர்களை வேட்டெக்கத்தால் சுட்டுத்தள்ளிப் பெருமாள் கோயிலைப் புதுப்பித்து முடித்தான், பறங்கிப்பேட்டை போர்ட் நோவோ அருகில் வெள்ளாறு கடலோடு கலக்குமிடத்தில் இவன் தன் பெயரால் கிருட்டிணப்பட்டினம் என்ற நகரத்தை ஏற்படுத்தினான். இதன் அருகில் கிறித்தவ சமயத்தவர்கள் மாதாக் கோயிலொன்றைக்கட்டிக் கொள்ளவும் இசைவு வழங்கினான். வேலூரை ஆண்ட சக்கராயன் இவனுக்குக் கீழ்ப்படிந்து ஆண்டுவந்தான். கி.பி. 1609-ல் இவன் கடலூரில் டச்சுக்காரர்களுக்குப் பண்டகசாலை ஒண்றைக் கட்டிக்கொள்ளும் உரிமையை வழங்கினான். ஆனால், கிபி.எல் நடந்த பிறங்கடை யுரிமைப் போரில் பேரரசுக்கு எதிராகச் செயல்பட்ட தால் தன் அதிகாரத்தை இழந்து பேரரசின் ஆணைப்படி டச்சுக்காரருக்கு வழங்கிய இசைவைமறுத்தான். இரண்டாம் திருட்டிணப்ப நாயக்கனுக்குப் பிறகு செஞ்சியின் வரலாற்றைத் தெளிவாக அறியமுடியவில்லை . கிபி. 1649 -ல் பீசப்பூச்சி சுல்தான் செஞ்சியைக் கைப்பற்றிக்கொண்டு தன் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். இவனால் அமர்த்தப்பட்ட படிநிகராளிகள் தொடர்ந்து செஞ்சியை ஆண்டு வந்தார்கள். கிபி. 1577-ல் சிவாசி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது செஞ்சியைப் பீசப்பூர்ச்ல்தானின் படிநிகராளியாக ஆண்டு கொண்டிருந்தவன் நாசர் முகமதுகான் என்பவன் ஆவான். சிவாசியின் படைகளைக் கண்டதும் இவன் அவனிடமிருந்து ஐம்பதி னாயிரம் உருபா வருவாயுள்ள ஒரு சாகிரையும், பெரும் தொகையையும் அமுக்கமாய்ப் பெற்றுக்கொண்டு கி.பி. 17ஆம் ஆண்டு செஞ்சியை மராத்தியரிடம் ஒப்படைத்துவிட்டு விலகினான். இந்நாளிலிருந்து செஞ்சி மராத்தியர் வசமாயிற்று. (ஈ) வேலூர் நாயக்கர்கள் முதலில் வேலூர் விசயநகரப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசா யிருந்தது. ஆயினும் செஞ்சி, அதன்மேல் ஆளுமை செலுத்தி வந்தது. இதனையாண்ட வீரப்ப நாயக்கனும், அவன் மகன் சின்னபொம்மு நாயக்கனும் விசயநகரப் பேரரசர் அவையில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். சின்ன பொம்மு நாயக்கன் கிபி. 1549 - விருந்து 1582 வரை வேலூரை ஆண்டிருக்கலாம். இவன் சிறந்த நாற்புலவனாகவும், கற்றோரைக் காக்கும் புரவலனாகவும் இருந்தான், இவன் அவையிலிருந்த அப்பைய தீட்சிதர் என்னும் அறிஞருக்கு இவன் பொன் நீராட்டினான் (கனகாபி சேகம். அவர் அப்பொன்னைக்கொண்டு தம் ஊரில் ஒரு கோயில் கட்டிய தாகக் கூறப்படுகிறது. வேலூர்க்கோட்டை யையும், அதனுள்ளிருக்கும் சுரகண்டேசுவர் கோயிலையும் கட்டியவன் சின்னபொம்மு நாயக்கனேயாவான். சின்னபொம்மு நாயக்கனுக்குப்பிறகு அவனுடைய மகன் இலிங்கம் நாயக்கன் வேலூர் அரசன் ஆனான். இவன் காலத்துக் கல்வெட்டொன்று (கிபி. 16) விலாப்பாக்கத்தில் உள்ளது. அதிலிருந்து இவன் பேரரசுக்கு அடங்கியவன் என்பதையும் சிவனடியான் என்பதையும் அறிகிறோம். இவன்செஞ்சிநாயக்கரின் மேலாண்மையிலிருந்து வேலூரரை விடுவிக்கப் புரட்சி செய்தான். செஞ்சி நாயக்கன் பேரரசன் உதவியுடன் கி.பி. 1803ல் வேலூரை முற்றுகையிட்டான். இப்பேரரசன் படைகளாலும் செஞ்சிப் படைகளாலும் அக் கால வரலாற்றிலேயே முதலிடம் பெற்று நின்ற வலிவுமிக்கவேலூர்க்கோட்டையை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. ஓராண்டுக்குப் பின்னர்தான் இக் கோட்டை வீழ்ந்தது. கிபி, 1604-ல் இரண்டாம் வேங்கடன் வேலூரைக் கைப்பற்றிப் பேரரசுடன் சேர்த்துக் கொண்டான். இப்போரில் பெரும் பங்கேற்று வெற்றிகண்டவன், தளபதி சென்னப்ப நாயக்கன் என்பவன் ஆவான். இவனுக்கு அளிக்கப்பட்ட இடம்தான் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களால் விலைக்கு வாங்கப்பட்டு இவன் பெயரால் சென்னப்பட்டனம் என அழைக்கப்பட்டது. கடைசி யாசுக்கிபி.1605-ல் வேலூரையாண்ட நாயக்கராட்சி மறைந்தது. இது முதல் வேலூர் விசயநகர மன்னர்களால் நேரடியாக ஆளப்பட்டது. இராயர்க ளால் ஆளப்பட்டதால் இது இராயவேலூர்' எனப்பட்டது. பேரரசர் இரண்டாம் வேங்கடன் கிபி. 1814-ல் இறந்தான். அவ னுக்குப் பின் இரண்டாம் சீரங்கன் ஆட்சிக்கு வந்தான். அச் சமையத்தில் வேலூர், சக்கராயன் என்ற சிற்றரசரால் ஆளப்பட்டு வந்தது, இவர் இரண்டாம் சீரங்கனையும், அவனுடைய குடும்பத்தாரையும் கொன்று விட்டு யாரோ ஒருவனை இறந்துவிட்ட இரண்டாம் வேங்கடனின் மகனெனக்கூறி அவனை மன்னன் ஆக்க ஒரு கட்சியை ஏற்படுத்திக் கலகம் விளைவித்தான் என்பதைப் பார்த்தோம். இதன் முடிவில் அச்சமன், சக்கராயன் கட்சிகளுக்கிடையே கிபி165-ல் திருச்சிக்கு அருகில் நடந்த தோப்பூர்ப் போரில் சக்கராயன் கொல்லப்பட்டான். சக்கராயனுக்குத் துணை புரிந்த மதுரை முத்துவீரப்ப நாயக்கனும், செஞ்சி கிருட்டிணப்ப நாயக்கனும் திருச்சிக் கோட்டைக்குள் ஓடி ஒளிந்தனர். இரண்டாம் சீரங்கனுடைய மகன் சீராமத்தேவன் பேரரசன் ஆனான். இவன் கிபி.163) - ல் இறந்ததும் பெத்தவேங்சுடன் பேரரசன் ஆனான். இவன் மூன்றாம் வேங்கடன் என்று அறியப்பட்டான். இவன் காலத்தில் விசயநகரப் பேரரசின் தலைநகரம் பெனுகொண்டாவிலிருந்து வேலூருக்கு மாற்றப் பட்டது. மூன்றாம் வேங்கடனின் காலத்திலும் பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இக் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு வீசப்பூர்ச் சுல்தான் கி.பி. 1841-ல் வேலுார் மீது படை எடுத்தான். ஆனால், நாயக்கர்களுடைய உதவியால் மூன்றாம் வேங்கடன் வோர்க்கோட்டை சுல்தானிடம் வீழாதவாறு பாதுகாத்துக் கொண்டான். மூன்றாம் வேங்கடனுக்குப் பிறகு மூன்றாம் சீரங்கன் கி.பி. 1642-ல் விசயநகர மன்னன் ஆனான். மதுரைத் திருமலை நாயக்கன் இவனை எதிர்த்தான்.பீசப்பூர்ச் சுல்தானும் இவனை எதிர்த்து வேலூரின் மீது படை யெடுத்தான். மூன்றாம் சீரங்கனுக்கு உதவி செய்ய யாரும் முன்வர வில்லை. வேலூர் மக்கள் அணிமணிகளையும் பொன்னையும் பொருளையும் கொடுத்தனர். திருப்பதி கோவில் பணத்தையும் எடுத்துப் போருக்குச் செலவிட்டான். கிபி. 1545 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் நான்காம் நாள் விரிஞ்சிபுரத்தில் நடந்த போரில் மூன்றாம் சீரங்கன் வேலூரைச் சுல்தான்க ளிடம் தோற்று. தஞ்சையில் தஞ்சம் புகுந்தான். அன்றையிலிருந்து வேலூர் சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது.கிபி.1549-ல் செஞ்சியும், தஞ்சையும் அவர்கள் வசமாயின. கி.பி. 1853-க்குள் கருநாடகம் முழுவதும் பீசப்பூர்ச் சுல்தானுக்குட்பட்ட தாயிற்று. பீசப்பூர்ப்பேரரையன் படைத்தலைவர்களை அமர்த்தி வேலூரை ஆளச்செய்தான். கிபி. 157ல் சிவாசி சுருநாடகத்தின்மீது படையெடுத்து வேலூரை முற்றுகையிட்டான். அப்பொழுது பீசப்பூர்ச் சுல்தானின் படிநிகராளியாகலேலூரை ஆண்டுகொண்டிருந்தவன் தளபதி அப்துல்லா கான் என்னும் அபிசீனிய நாட்டினன் ஆவான். சிவாசியாலும் வேலூர் கோட்டையை உடனே கைப்பற்ற முடியவில்லை. பதின்மூன்று திங்கள்கள் வரை முற்றுகை நீடித்தது. பின்னர், கிபி.1678, சூலை 22 ஆம் நாள் வேலூர்க் கோட்டை மராத்தியர் வசமாயிற்று. இவ்வாறு முதலில் விசயநகரப் பேரரசில் ஒரு பகுதியாகத் திகழ்ந்த வேலூர் பேரரசால் அமர்த்தப்பட்ட ஆளுநர்களால் ஆளப்பட்டுப் பின்னர் நாயக்கராட்சி ஏற்பட்டு, மீண்டும் விசயநகர அரசின் நேரடி ஆட்சி ஏற்பட்டு, இருமுறை சுல்தானிடம் கைமாறிக் கடைசியாக 17 ஆம் நூற்றாண்டில் மராத்தியரின் கைக்கு வந்தது. (உ) இக்கேரி நாயக்கர்கள் மைசூர் மாநிலத்தில் சிமோகா மாவட்டத்திலுள்ள இக்கேரி என்னும் இடத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுதி விசயநகரப் பேரரசின் கீழ் இருந்து வந்தது. இதற்குப்பேரரசால் முதல் நாயக்கராக அமர்த்தப் பட்டவன் சதாசிவ நாயக்கன் (கிபி.158-60). ஆனால், இவன் காலத்தில் சிமோகாதென்கன்னடம் ஆகிய பகுதிகள் கெலாதியைத் தலைமையிருக்கையாகக் கொண்டு விளங்கியது. இவன் மங்களூர் வரையிலுள்ள பகுதியைத் தன் ஆட்சியுடன் இணைத்துக்கொண்டான். இவனுக்குப் பிறகு சிக்கசங்கண்ணார் என்பவன் (கி.பி. 1560-157) நாயக்கன் ஆனான். இவன் காலத்தில்தான் தலைநகரம் மைசூருக் கருகிலுள்ள இக்கோரிக்கு மாற்றப்பட்டது. இவனுக்குப் பின் முதலாம் வேங்கடப்பன் (கி.பி. 1582-1629) இக்கேரி நாயக்கன் ஆனான். பேரரசன் வேங்கடன் இறப்பிற்குப்பின் பேரரசில் நடந்த சக்கராயன்- அச்சம்மன் கட்சிப் போர்களில் இவன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இச் சூழலை வாய்ப்பாக வைத்துக்கொண்டு தன் ஆட்சிப்பரப்பை அகலப்படுத்தினான். பீசப்பூருக்கு உட்பட்டிருந்த சில பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டான், போர்த்துகீசியர்இவனுடன் நட்புறவு கொண்டார்கள். இவனுக்குப் பிறகு இவன் பெயரன் வீரபத்திரன் கிபி. 1630-1645) இக்கோரி மன்னன் ஆனான். இவன் தலைநகரை இக்கேரியிலிருந்து பெத்த ஊருக்கு மாற்றினான். இவன் மகன் சிவப்பா (கி.பி. 1545-1660) இவனை யடுத்து மன்னன் ஆனான். இவன் காலத்தில் விசயநகர மன்னனாயிருந்த மூன்றாம் வேங்கடனுக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் இவன் அவனுக்குத் துணையாக நின்றான். இவனுக்குப் பின்னர் அரசுக்கு வந்தோர் அவ்வளவு சிறந்தவர்களாகக் காணப்பட வில்லை. கடைசியாக, இக்கேரி அரசு கி.பி. 1563-ல் ஐதர் அலி பெத்தனூரைக் கைப்பற்றியதோடு முடிவடைந்தது. (ஊ) மைசூர் மன்னர்கள் விசயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக முதலில் மைசூர் திகழ்ந்தது. யாதவ குலத்தைச் சேர்ந்த இராச உடையார் (கி.பி.1578-1617) காலத்தில் கிபி. 10ல் இது விசயநகரப் பேரரசினின்று விடுபட்டுத் தனிநாடாயிற்று. அதே ஆண்டில் விசயநகர அரசின் கீழிருந்த சீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி இராச உடையார் தன் ஆட்சியுடன் இணைத்துக்கொண்டான். இவனை யடுத்துச் சாமராச உடையார் (கிபி.177-1637), முதலாம் சுந்திருவநரசராசா (கிபி.1638-1659) ஆகியோர் ஆண்டனர். நரசராசா காலத்தில்தான் மைசூருக் கும் மதுரை நாயக்கன் திருமலை நாயக்கனுக்குமிடையே மூக்கறுப்புப் போர் நடந்தது. இவனையடுத்து ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவன் சிக்கதேவராயன் ஆவான். கடைசியாக, மைசூர் சிபி.1751-ல் ஐதர் அலியால் கைப்பற்றப்பெற்றது, மதுரை நாயக்கர்கள் (கி.பி. 1529 - 1736) 1, விசுவநாத நாயக்கன்(கிபி.1529 - 1564) 2, முதலாம் கிருட்டிணப்ப நாயக்கன் (கிபி 1554 - 1572) 3, வீரப்ப நாயக்கன் கிபி.1572 - 1595) 4, இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் (கி.பி.1595 - 1601) 5, முதலாம் முத்து வீரப்ப நாயக்கன் (கிபி.1609 - 1523) 6, திருமலை நாயக்கன் (கி.பி. 1623 - 1659) 7, சொக்கநாத நாயக்கன் (கிபி.1859 - 1582) 8, அரசி மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706) 9, விசயரங்க சொக்கநாதர் (கிபி.1706 - 1732) 10. மீனாட்சிசிபி.173Z - 1736 11, கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் (தமிழகத்தில் ஆங்கில ஆட்சி கால்கொள்ளுதலும், ஆதிக்க வளர்ச்சியும்) இவ்விரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வலுவான ஆட்சி அமைப்பு இல்லை. நாயக்க மன்னர்களும் ஓய்ந்தனர். மராத்தியர் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தனர். ஆர்க்காட்டிலும், பிறவிடங் களிலும் இசுலாமியர் ஆட்சி ஏற்பட்டது. வணிகராய் வந்த ஐரோப்பியருக்குத் தமிழகம் கரடிக் காடாய் மாறியது. பாளையக்காரர்கள் மறவர் பண்பாட்டைப் பின்பற்றி னரேயொழிய 'வீட்டுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வோம், வீடு பற்றிக் கொண்டால் ஒன்றுகூடிக் கொள்வோம்' என்பதை மறந்தனர். இதனால், அயலாருக்குத் தமிழகம் சிறிது சிறிதாக இரையாயிற்று. ஐதரும், திப்புவும் தங்களின் வீரத்தைக் காட்ட முனைந்தனரே தவிர ஒன்றுபட்ட நாட்டைக் காணமுடியவில்லை. இதற்குள் சமயத்தால், பண்பால் பிளவுபட்டிருந்த தமிழகம், பண்டைய சாதிச்செருக்குகளையும் விடாது கொண்டு, சிதறி நின்று, கடைசியாக ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டது, மராத்தியரும் ஒரு கோணத்தில் நின்றனரேயொழிய ஒன்றுபடுத்த முனையவில்லை. இந்த இழிநிலை இந்தியா முழுவதும் தொடர்ந்தது. இந்திய வரலாறு' தமிழகத்திலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டுமென்பர். இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமைப் படுத்தியாண்ட ஆங்கிலேயர் ஆட்சியும் தமிழகத்தில்தான் கருதாடகப் போர்களால் வேர் கொண்டது. ஆங்கிலராட்சியை வேரறுக்க முதலில் எதிர்த்துப் போரிட்டதும் தமிழகமே, ஆங்கிலவாட்சி கால்கொண்ட வரலாற்றில் பங்கு பெறும் கருநாடக, மைசூர்ப் போர்களையும், மராத்தி யரையும் பற்றி இவ்வியலில் அறியலாம். (அ) ஐரோப்பியரும்- நவாபுகளும் ஆங்கில நாட்டையாண்ட எலிசபெத்துப் பேரரசியிடம் இசைவு பெற்று ஆங்கில வணிகக்குழு கிபி.1500 ஆம் ஆண்டின் கடைசி நாளில் நிறுவப்பட்டது. சூரத்து, மசூலிப்பட்டணம் முதலிய இடங்களில் பண்டக சாலைகளை நிறுவிய இவ்வணிகக் கழகத்தார் சென்னையிலும் தங்கள் பண்டகசாலையொன்றை அமைத்தனர். ஃபிரான்சுடே என்ற வணிகக் குழுத்தலைவர் இன்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலகமுள்ள இடத்தைக் கி.பி.1639-ல் சென்னப்ப நாயக்கனிடமிருந்து விலைக்கு வாங்கினார். சிபி147-ல் கோல்கொண்டாச் சுல்தானின் தானைத்தலைவர் னும், முதலமைச்சனுமான மீர்சும்லா என்பவன் சென்னைப் பகுதியைக் கைப்பற்றினான். ஆனால், சென்னையில் ஆங்கிலேயர் வாங்கியிருந்த இடத்தையும், அவர்களின் வாணிக உரிமைகளையும் மீர்சும்லா அவர்க ளுக்கே உறுதிப்படுத்திக்கொடுத்தான். சென்னை புனித சியார்சு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கில வணிகக் குழுவின் முகவரே தலைவரா யிருந்து வணிக வளர்ச்சியைப் பார்த்துவந்தார். பின்னர் இவரே வணிகக் குழுவின் சார்பில் ஆளுநராக அமர்த்தப்பட்டார். இவ்வாறு முதல் ஆளுநர் ஆனவர் சியார்சு பாக்சுகிராபிது(George BoxCraft) என்பவர் ஆவார். சென்னைக் கோட்டை ஆங்கில வணிகத்தின் தலைமையிருக்கை யாக மாறியதும் அதனைச் சுற்றிலும் குடியிருப்புகள் மிகுதியாகத் தோன்றின. மக்கள்தொகையும் அதிகரித்தது. கிபி. 10-ல் சென்னை நகரின் மக்கள் தொகை 40,000 ஆயிற்று. தொடர்ந்து ஆங்கில ஆளுநர்கள் கோட்டையிலமர்ந்து வணிகத்தைக் கவனித்து வந்தனர். வில்லியம் வேங்கார்ன்(கிபி 72-73) ஆளுநராயிருந்த காலத்தில் மராத்திய மன்னன் சிவாசி (Sivaji சென்னை மீது படையெடுத்தான், ஆளுநர் அவனுடன் நட்புறவு கொண்டு பண்டகசாலைகளைத் தக்கவைத்துக் கொண்டார், இவரையடுத்து வயவர் சிதிரேசு நம்மாசுடர்(Sir. StreshNarrarriaster - கிபி. 1678-87 என்பார் ஆளுநர் ஆனார். இவர் காலத்தில் சென்னைக்கோட்டை அரண் செய்யப்பட்டு ஆங்கில வணிகக் குழு மேலும் வளர்ச்சியடைந்தது. கடலூர், பறங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் கி.பி. 1581-ல் ஆங்கில வணிகர்கள் குடியேறினார்கள். சென்னை மிகப்பெரிய வணிக நகரமாயிற்று. இதனால் சென்னைக் கோட்டை ஆளுநருக்குக் கி.பி. 1684-ல் வணிகக் குழுக்களின் தலைவர் (பிரசிடெண்ட்' என்ற பட்டமும் மிகுதியான பொறுப்புகளும் வழங்கப்பட்டன. சென்னை நகரை நிருவகிக்கப் பன்னிரண்டு உறுப்பினரைக் கொண்ட ஆல்டர்மென் ஓர் அவை 1688-ல். ஏற்பட்டது. அதன் தலைவர் "தந்தை" மேயர் எனப்பட்டார். தில்லியை ஆண்ட மொகலாயர்கள் கோல்கொண்டாவைத் தங்கள் ஆட்சிக்குள் சேர்த்துக்கொண்டனர். ஆயினும், ஆங்கிலேயரின் பற்றிடங்களுக்குத் தீங்கு ஏற்படாதவாறு முகலாயரிடம் வணிகக் குழுவினர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.கிபி.1590ல் கடலுாருக்கு அருகில் புனித டேவிட் செயிண்ட் டேவிட் கோட்டையும் கட்டப்பட்டது. கிபி.1594-ல் இங்கிலாந்து நாட்டின் நாடாளும் மன்றம் இங்கிலாந்து குடிமக்கள் அனைவருமே இந்தியாவுடன் வணிகம் செய்ய உரிமை யுடையவர் என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இதனால், தனியாரின் வணிகக் குழுக்கள் கீழைநாடுகளுடன் வணிகம் செய்ய முற்பட்டன. இவர்களுக்கிடையே எழுந்த போட்டிகளும், இவர்களுக்கு முன்பே வணிகக் குழுக்களையமைத்து வாணிபம் செய்துவரும் போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஃபிரெஞ்சியர், உள்நாட்டு வணிகர்கள் (இசுலாமியர்) ஆகியோரின் போட்டிகளும், சச்சரவுகளும் ஆங்கிலேயரின் வணிக முன்னேற்றத்திற்குத் தடையாய் நின்றன. இதனால் கி.பி. 1708-09-ல் இங்கிலாந்து நாட்டு வணிகக் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து 'ஒன் றிணைக்கப்பட்டகிழக்கிந்திய வணிகக்குழு' என்னும் ஒரே குழுவாகியது. இக் குழுமொகலாயப் பேரரசரிடம் உரிமைகளைப் பெற்றுச் சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய இடங்களிலுள்ள பண்டகசாலைகளுக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டது. பம்பாயில் காசு (நாணயங்கள்) அச்சிடும் சாலையையும் இக்குழு நிறுவியது. இந் நாணயங்கள் முகலாயப் பேரரசி லும் செலாவணியாகும் உரிமை பெற்றது. ஆங்கில வணிகக் குழுவின் பண்டக சாலைகளைப் பாதுகாக்கத் தாயகத்திலிருந்து படைகளும், படைவீரர்சுளும் தருவிக்கப்பட்டனர், ஆங்கிலரும் ஃபிரெஞ்சியரும் இந்தியாவிற்கு வணிகம் செய்யவந்த போர்த்துகீசியரும், டச்சுக் காரரும் பெரும் போட்டியிலிருந்து விலகினர். கடைசியாக ஆங்கிலரும், ஃபிரெஞ்சியரும் நேருக்கு நேர் போட்டியிட முற்பட்டனர். இவர்களின் வணிகப் போட்டி நாளடைவில் நாடு கவரும் போட்டியாக மாறியது. உள்நாட்டு அரசியல் நிலைமைகளும் இவர்களின் நாடு கவரும் ஆசைக்கு வாய்ப்பளித்தன. கிபி.1664ல் தோற்றுவிக்கப்பட்டஃபிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக் குழு கி.பி. 1558-ல் சூரத்திலும், கி.பி. 1869-ல் மசூலிப்பட்ட ணத்திலும் பற்றிடங்களை ஏற்படுத்திப் பண்டகசாலைகளை நிறுவியது. பீசப்பூர்ச் சுல்தானின்கீழ் சிற்றரசனாயிருந்த செர்க்கான்லோடி திருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரத்தை ஆண்டுவந்தான். அவனிடமிருந்து பிரான்சுவா மார்ட்டின் என்ற ஃபிரெஞ்சு வணிகக்குழுவின் முகவர் புதுச்சேரியைத் தானமாகப் பெற்று, அங்கு ஒரு வணிக நிறுவனத்தை அமைத்துக்கொண்டார். இதனைக் கிபி. 1577-ல் சிவாசி தாக்கினான். மார்ட்டின் அதனைக் காப்பாற்றி நல்வரண் அழைத்து வணிகத்தை வளர்த்தார். இத்தகைய ஏதங்களைக் கண்டதும் அவர் ஃபிரெஞ்சு வணிக நிறுவனங்களைக் காக்கப்பெரும் படையொன்றையும் அமைத்துக் கொண்டார். எனினும், கி.பி. 1893-ல் புதுச்சேரியை டச்சுக்காரர்கள் கைப்பற்றிக்கொண்டனர். மீண்டும் அதனை மீட்க மார்ட்டின் வலுவான கோட்டை கொத்தளங்களையெழுப்பிப் புதுச்சேரியை வலிமையும் வளமும் பொருந்திய நகராக்கினார், இவர் காலத்தில் புதுச்சேரியும் சென்னையைப் போலவே சிறந்த நகரமாகவும், 40,000 மக்கள்தொகை கொண்டதாகவும் வளர்ந்தது, ஆங்கிலருக்குச் சென்னையும், ஃபிரெஞ்சுக்காரருக்குப் புதுச்சேரி யும் முகாமைத்தளங்களாயின. ஆங்கிலருக்குப் புதுச்சேரிக்குத் தெற்கேயும் புனித டேவிட் கோட்டையிருந்தது. டச்சுக்காரரிடமிருந்த தரங்கம்பாடி யையும், அதற்கு வடக்கிலிருந்த சேராம்பூரையும் இதற்கு முன்பாகவே ஆங்கில வணிகக் குழு 12,50,000 உருபாவுக்கு விலைக்கு வாங்கியிருந்தது. இந் நிலையில் ஆங்கிவரும் ஃபிரெஞ்சியரும் போட்டி போட்டுக்கொண்டு பணவலுவையும், படைவலுவையும் பெருக்கி வந்தனர். அன்றையத் தென்னகத்தில் இவ்விருவரிடமே கப்பற்படையும் வலிமைவாய்ந்த தரைப்படையும் இருந்தன. இதனால், உள்நாட்டு மன்னர்கள் தங்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போதெல்லாம் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் என்று இவர்களின் படையுதவியை நாடினார். இவர்களும் தங்களுக்குள் ஒருவரை யொருவர் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று எதிரும் புதிருமாகத் துணை நின்று மோதலை அதிகரித்தனர். சுருங்கக்கூறின் இந்த ஐரோப்பியர் கலங்கிய நீரில் மீன்பிடிக்க முனைந்தனர். முதல் கருநாடகப் போர் (1746-1748) மொகலாயப் பேரரசின் கீழ்த் தக்காணம் முழுவதையும் ஒரு பேராளன் (சுபேதார் ஐதராபாதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவுரங்கசீப்புக்குப்பின் மொகலாயப் பேரரசு ஆட்டங்கண்டது. அதனை வாய்ப்பாகக் கொண்டு ஐதராபாத்திலிருந்த பேராளன் (சுபேதார்) தனி மன்னனாக (நைஜாம்) ஆளத்தொடங்கினான். ஆர்க்காட்டை யாண்டவன், இவனுக்குக் கீழிருந்து மராத்தியருடன் போரிட்டு வலிமை யிழந்தபோது தானும் தனியரசனே யென்று கூறி, ஆர்க்காட்டு நவாபாகத் தனித்தாளத் தொடங்கினான். மராத்தியர் கிபி. 1741-ல் ஆர்க்காட்டைத் தாக்கி அதனையாண்ட நவாபு தோசுது அலியைக் கொன்று அவனுடைய மருமகனான சந்தாசாயபுவைச் சிறைப்படுத்திக்கொண்டு சதாராவுக்குச் சென்றனர். தோகது அலியின் மகனான சப்தர் அலி ஒரு கோடி உருபாபை மராத்தியருக்குக் கொடுத்து ஆர்க்காட்டைமீட்டான். ஆனால், அவனும் தன் உறவினரால் கொல்லப்பட்டான். அவனுடைய இளய மகனைக் கிபி. 1742-ல் ஆர்க்காட்டு நவாபாக்கினார்கள். இந்நிலையில் ஐதராபாத்தி லிருந்து நிசாம் ஆர்க்காட்டுக்கு வந்து அவ்விளஞனை நீக்கிவிட்டுத் தனக்குக் கீழ்ப்படியும் அன்வாரூதின் என்பவனைக் கிபி. 1743-ல் ஆர்க்காட்டிற்கு நவாபாக்கிச் சென்றான். அப்பொழுது தோசுது அலியின் உறவினர் செல்வாக்கு மிக்கவராயிருந்தனர். அன்வாருதினை எதிர்த்துக் கலகம் செய்தனர். இந் நிலையில் ஐரோப்பாவில் நடந்த ஆசுதிரியப் பிறங்கடை யுரிமைப் போரில் கிபி.1742-48) ஆங்கிலரும், ஃபிரெஞ்சியரும் எதிர் எதிர்க் கட்சிகளில் நின்று போரிட்டனர். இதனடிப்படையில் இவ்வீரினத்தவரும் கருநாடகத்திலும் தங்களுக்குள் பகைமை பூண்டு போரிட்டுக்கொண்டனர். கி.பி. 1746-ல் ஃபிரெஞ்சுக் குழுவின் ஆளுநராயிருந்த தூபிளே சென்னை யைக் கைப்பற்றிச் சூறையாடினான். சென்னை முற்றுகையின் போது ஆங்கிலரின் வேண்டுகோளுக்கிணங்க, அன்வாரூதின் ஃபிரெஞ்சியரைத் தாக்க அனுப்பிய படையும் தூபிளேவால் தோற்கடிக்கப்பட்டது. ஆங்கி வருக்குரிய செயின்ட் டேவிட் கோட்டையும் ஃபிரெஞ்சியர்களால் பதினெட்டுத் திங்கள் முற்றுகையிடப்பெற்றது. ஆங்கிலப் படைகள் புதுச்சேரியைத் தாக்கி முற்றுகையிட்டன. இதற்குள் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருந்த ஆசுதிரியப் பிறங்கடையுரிமைப் போரும் முடிந்து, உடன்படிக்கையேற்பட்டது. தமிழகத்திலும் ஆங்கிலரும், ஃபிரெஞ்சி யரும் உடன்படிக்கை செய்துகொண்டு அவரவர் பிடித்தவிடங்களை அவரவருக்கே திருப்பிக்கொடுத்துவிட்டனர். இப் போர் தூபிளேவுக்கு ஒரு புத்தூக்கத்தையும், வேகத்தையும் மளித்தது. ஆர்க்காட்டு நவாபு வலுவற்றவனென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. பொதுவாக, ஐரோப்பியர் தங்கள் படைவலியால் மண்ணைப் பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்டனர். உள்நாட்டு மன்னர்கள் இவர்களிடம் படை கேட்டுக் கையேந்துமளவுக்குத் தள்ளப்பட்டனர், இரண்டாம் கருநாடகப் போர் (1743-54) மராத்தியர் கிபி. 1741-ல் ஆர்க்காட்டைத் தாக்கி அதனையாண்ட தோசுது அலியைக் கொன்று அவன் மருமகன் சந்தாசாகிபைச் சதாரா வுக்குச் சிறை பிடித்துச் சென்றதைக் கண்டோம். கிபி. 1748ல் சந்தாசாகிபு சதாராவிலிருந்து விடுவிக்கப்பட்டான். அதே ஆண்டில் ஐதராபாது நிசாம் நைசாம் உல்முல்கு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் நாசர்சங் தக்கா39 நிசாமானான். ஆனால், அவனையெதிர்த்து இவள் அண்ணன் மகன் முசாபர்சங் என்பவன் தனக்கே தக்காண நிசாம் பதவி உரியதென்று கூறிமொகலாயப் பேரரசிடமும் ஒப்பளிப்புப் பெற்றான். சந்தாசாகிபும், ஆர்க்காட்டு நவாபுப் பதவி தோசுது அலியின் மருமகன் என்ற முறையில் தனக்கே உரியதென்று கிளம்பினான். இதனால் அன்வாருதீன் -சந்தாசாகிப் கட்சிகள் ஆர்க்காட்டில் தோன்றின. கலங்கிய நீரில் மீன் பிடிக்கும் ஐரோப்பிய வணிகர்கள் ஐதராபாது, ஆர்க்காட்டு அரசியல் போராட்டங்களில் தலையிட்டனர். தூபினே சந்தாசாகிபுக்கும், முசாபர் சங்கிற்கும் அரியணையளிப்பதாக உறுதியளித்தான். இதனால், ஃபிரெஞ்சுப் படை, சந்தாசாகிபின் படை, முசாபர்சங்கின் படை ஆகிய முக்கூட்டுப் படைகளும் ஒன்றிணைந்து ஆர்க்காட்டு நவாபு அன்வாரு தீனை சிபி1749 -ல் ஆம்பூரில் நிகழ்ந்த போரில் கொன்றன. அன்வாரு தீனுடைய மகன் முகமதலி தப்பியோடி திருச்சிக் கோட்டையில் புகுந்து கொண்டான். இந் நிலையில் ஆங்கிலேயரும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்தனர். நாசர்சங் ஆங்கிலேயருடனிணைந்து போரிட்டான். ஆனால், 17501-ல் அவன் போரில் கொல்லப்பட்டான். இதனால் தூபினே ஒரே கல்லில் இரு மாங்காய்களை யடித்து வெற்றி கண்டான். சந்தாசாகிபு ஆர்க்காட்டுக்கும், முசாபர்சங் ஐதராபாத்துக்கும் இவனால் மன்னராக்கப் பட்டனர். இதனால் இவனுக்குக் கிடைத்த பட்டமும் பதவியும் நாடுகளும் பற்பலபோகும். தலைகனத்து நின்ற தூபிளேவுக்கு எதிர்பாராத விளைவு ஏற்பட்டது. திருச்சி முற்றுகை நீண்டது. முகமதலி கோட்டைக்குள்ளும், ஃபிரெஞ்சுப் படைகளும், சந்தாசாகிபின் படைகளும் கோட்டையைச் சுற்றிலும் நின்றன. தலைநகரான ஆர்க்காட்டில் தேவையான படைகளே யில்லை. தாபிளேவால் கவுண்-டு-டிலா என்பவன் தலைமையில் அனுப்பப் பட்ட படைநேரே திருச்சிக்குப் போகாமல் தஞ்சையில் தங்கிப் பொழுது போக்கிற்று. இதற்குள் ஆங்கிலருக்குத் துணையாக மைசூர், தஞ்சாவூர், மராத்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சுல்சுத்தாவிலிருந்து ஆங்கிலக் கப்பற்படையொன்று இராபர்ட் கிளைவின் தலைமையில் சென்னை வந்து சேர்ந்தது. கிளைவ் ஆர்க்காடு பாதுகாப்பின்றி இருப்பதையும், படைகள் யாவும் திருச்சியை முற்றுகையிட்டுக் கிடப்பதையும் உணர்ந்து எதிர்ப்பின்றி ஆர்க்காட்டைப் பிடித்தான். தலைநகர் பறிபோனதைக் கேட்டதும் திருச்சியிலிருந்து சந்தாசாகிபின் படைகளும், ஃபிரெஞ்சுப் படைகளும் ஆர்க்காட்டை நோக்கி ஓடி வந்தன. முற்றுகையிடப்பட் டிடருந்த முகமதலி வெளிப்பட்டு அவற்றைப் பின்புறமிருந்து துரத்தினான். மைசூர், தஞ்சாவூர், மராத்தியர், ஆங்கிலப் படைகள் முன் சென்று தாக்கின. பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன. கடைசியில் சந்தாசாகிபு கொல்லப் பட்டான். ஆங்கிலேயர் கட்சி வெற்றிபெற்றது. தாபிளே 1754-ல் தாய்நாட் டிற்குத் திரும்பியழைக்கப்பட்டான். அவனுக்குப் பின் ஆளுநரான கோதேயு ஆங்கிலேயருடன் உடன்படிக்கைகள் செய்து கொண்டு அமைதியோடு வணிகச் செயல்களை மட்டும் கவனித்தான், தமிழகத்தில் அமைதி ஏற்பட்டது. ஆங்கில ஆட்சியுடன் ஆர்க்காட்டிணைப்பு இரண்டாம் சுருநாடகப் போருக்குப்பின் ஆர்க்காட்டு நவாபின் ஆட்சியின் மீது ஆங்கிலேயர்கள் ஆளுமை செலுத்த முற்பட்டனர். முகமதலி (நவாபு வாலாசா முகமதலி) (கி.பி. 1749-1795) ஆங்கிலரின் கைப்பாவை யானான். ஆர்க்காட்டு மக்கள் ஆங்கிலரால் ஆட்டிப் படைக்கப்பட்டனர். ஒரே காலத்தில் ஆர்க்காடு ஈராட்சிக்குட்படுத்தப் பட்டது. ஆங்கிலரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நவாபு இன்பவுலகில் மிதந்து திரிந்தான், சேப்பாக்கத்தில் 1758-ல் ஓர் அழகிய அரண்மனையைக் கட்டி அதில் கோலாகல வாழ்க்கையை நடத்தினான், அந்த அரண்மனை 117 குறுக்கத்தில் ஏக்கரில் சுட்டப்பட்டது. அதன் வாயில் வளைவுகளும், 'மினார்'களும், அறைகளும், தரையும் வண்ணக் கற்களாலும், கண்ணாடிகளாலும் சோடித்துக் கட்டப்பட்டன. அதனை யடுத்துக் கிழக்குப் பக்கத்தில் ஒரு நயன்மை மன்றமும் அமைக்கப்பட்டது. அரண்மனையின் தென்பகுதி 'கலசமகால்' என்றும் அதனையடுத்த உட்பகுதி 'உமாயூன்மகால்" என்றும் அழைக்கப்பட்டன. உமாயூன் மகாலினுள் கொலு மண்டபம் திவானிகானா இருந்தது. அரண்மனையின் வடக்குப் பக்கத்தில் நீராடுதுறை அமைக்கப்பட்டது. இந்த அரண்மனைக் குள்ளேயே உலகவின்பங்கள் அத்தனையும் துய்த்துக்கொண்டிருந்த நவாபு ஆங்கிலரிடமும் பிறரிடமும், 35 விழுக்காட்டிற்கு வட்டிக்குக் கடன் வாங்கிப் பல்வகை இன்பங்களை விலைக்கு வாங்கினான். ஆங்கிலரும் கண்னை மூடிக்கொண்டு கடன் கொடுத்து வந்தனர். சென்னை ஆளுநர் வயவர் தாமசு ரம்பேல்டு (கி.பி. 1778-80) நிருவாகத் திறமை யற்றவன் நவாபுக்கு ஏராளமான தொகையை அவன் கேட்டபோதெல்லாம் கடனாகக் கொடுத்தான். நிருவாகச் சீர்கேடுகளும் அதிகரித்தன. இதனால் தலைமையாளுநர் வாரன்கேசுதிங்சு (Waahiran Heshtingish) (கி.பி. 1774 17851 இவனைப் பதவியிலிருந்து நீக்கி ஒயிட் கில் (White Hill) என்பவனைச் சென்னை ஆளுநராக் கினான். இந்த ஆளுநரும் இவை போன்ற பல குற்றங்களுக்காகப் பதவியினின்று நீக்கப்பட்டான். பின்னர் சார்லசுசிமிது (Charles Smith) ஆளுநராகிச் சில திங்கள்களே ஆளுநராயிருந்து நீக்கப்பட்டான். மகார்தனே (கிபி. 1781-85 சென்னை ஆளுநரானபோது சென்னையரசு(ஆங்கிலவரசு) ஆர்க்காட்டு நவாபுடன் 1737-ல் ஓர் உடன் படிக்கை செய்துகொண்டது. அதன்படி ஆட்சிப் பொறுப்பை முழுவது மாக நவாபு ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான். ஆங்கிலர் அவன்பட்ட கடன்களை அடைத்தனர். ஆயினும் அவன் மேலும் பல கடன் 1 இன்று நவாபின் நயன்மை மன்றம், மாநிலக் கல்லூரி முதல்வர் தங்கியுள்ள (கல்லூரி வீடு வீடாகவும், மகால்கள் அலுவலகங்களாகவும், நீராடும் துறையின் கரையில் பல்கலைக் கழகப் பழைய கட்டடங்களும் உள்ளன. (பத்திரங்களை எழுதிக் கொடுத்துப் பலரிடமும் கடன்களை வாங்கி, , வங்கக் கடலோரம் இன்ப வுலகில் மூழ்கிக் கிடந்தான். தன் நாட்டின் ஓவ்வொரு பகுதியாக ஆங்கிலருக்கும் கடன்காரர்களுக்கும் அடைவு வைத்துக் கடன் வாங்கினான். கருநாடகத்திலிருந்து சில மாவட்டங்கள் , ஆங்கிலரிடம் அடைவு வைக்கப்பட்டன. கடனுக்காகவும், ஆங்கிலருக்குச் செலுத்த வேண்டிய பாதுகாப்புப் படைத் தொகைக்காவும் சென்னை யாளுநர் ஒப்பார்ட்அம் மாவட்டங்களை ஆங்கிலவாட்சியுடன் இணைத் துக் கொண்டான். கிபி1792-ல் ஆங்கிலருக்கும் நவாபுக்குமிடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி ஆர்க்காட்டில் இரட்டையாட்சி' ஏற்பட்டது. ஆங்கிலரும் நாவாபும் ஆர்க்காட்டுக்கு இரு ஆண்டைகள் - “எசமானர்களாயினர். இதனால் சீர்கேடுகள் பெருகின. மக்கள் துன்புற்றனர்; இந்நிலையில் கிபி. 1795-ல் முகமதலி காலமானான், நாவாபு முகமதலிவாலாசாவுக்குப்பின் அவன் மகன் உம்தாத்-உல் உமாரா "நவாபு இரண்டாம் வாலாசா' என்ற பட்டத்துடன் ஆர்க்காட்டு நவாபு ஆனான். இவன் கிபி. 1795 முதல் 18 வரையாண்டான். இவன் ஆங்கிலருக்கு நிகராகத் திப்பு சுல்தானிடம் ஒரு கமுக்க ஒப்பந்தம் செய்துகொண்டான். இக்கமுக்க உடன்படிக்கைகள் அடங்கிய மடல்கள் சீரங்கப்பட்டணத்தில் ஆங்கிலேயரிடம் சிக்கிக்கொண்டன. தலைமை ஆளுநர் வெல்லெசுலி {Wellhoustily) (கி.பி. 1798-1805) இவன்மீ து நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது இவன் கிபி.1801-ல் திடீரெனக் காலமானான். இவனுக்குப்பின் இவனுடைய இரு பிள்ளைகளும் நவாபுப் பதவிக்குப் போட்டியிட்டனர். வெல்லெசுலி தனக்கு அடங்கிய அவனுடைய மூத்தமகன் அசிம் - உத் தௌலா(கிபி.180 1819) என்பவனை நவாபாக்கினான். இளைய மகன் அலிஉசேன் விலகி நின்றான், அசீம்-உத்-தௌலா 'நாவபு மூன்றாம் வாலாசா' என்ற பட்டத்துடன் ஆர்க்காட்டை ஆளத் தொடங்கினான். ஆனால், அவன் பதவியேற்ற அதே ஆண்டில் (கிபி. 18) வெல்லெஸ்லி அவனுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ஆர்க்காட்டை ஆங்கிலவாட்சியுடன் இணைத்துக் கொண்டான். நவாபு மூன்றாம் வாலாசா ஆங்கிலரிடம் ஓய்வுக்கான உதவித்தொகை பெற்று வாழலானான். அந்த உதவித் தொகை ஆர்க்காட்டு நவாபுக்கு உட்பட்ட ஆட்சியில் வந்த வருமானத்தில் ஐந்திலொரு பங்காகக் கணக்கிடப்பட்டு ஆண்டொன்றுக்குப் பன்னிரண்டு இலக்கம் உருபா மேனி கொடுக்கப்பட்டது. நவாபின் கடன்களை ஆங்கிலவாட்சியாளரே கொடுத்துத் தீர்த்தனர். நவாபு பட்ட கடன் 30 கோடியென்று கணக்கிடப்பட்டுக் கிபி. 1804-ல் கொடுத்துத் தீர்க்கப்பட் டது. ஆனால், 1813-ல் ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக்குழுவின் புலன் உசாவலில் 2 கோடியே உண்மையான கடனென்று கண்டுபிடிக்கப் பட்டது. இத்தகைய ஊழல் நிருவாகம் பற்றி இங்கிலாந்து நாடாளுமன் றத்தில் காட்டமாகத் தாக்கப்பட்டது. ஆர்க்காடு ஆங்கிலவாட்சியின்கீழ்க் கொண்டு வரப்பட்டபின் ஆங்கிலவாட்சிநெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை தமிழகமெங்கும் பரவியது. முன்றாம்வாலாசாவுக்குப் பின் அசம்சா (1819-1825), அசிம்சா பகதூர் (கி.பி. 1857-1874 ஆகியோரும் நவாபுகளாக விருந்து வாணாள் உதவித்தொகை பெற்றனர். பத்தொன்பதாம் நூற்றாண் டிவ் இவர்கள் வாழ்ந்த சேப்பாக்கம் அரண்மனைக் கட்டடங்களை அரசே எடுத்துக்கொண்டது. இவர்கள் வழி வந்தவர்களுக்கு மானியத்தொகை கொடுக்கப்பட்டது. இன்னும் இவர்களின் கொடிவழியினர் சென்னைச் "சாம்பசார் காவல் நிலையத்திற் கெதிரிலுள்ள " அமீர்மகால்" என்னும் சிறு மாளிகையில் அரசமானியம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். (ஆ) ஃபிரெஞ்சியரின் வீழ்ச்சி மூன்றாம் கருநாடகப் போர் (கி.பி. 1758-1763) இப்போர் ஏற்படக் கரணியமாயமைந்த நிகழ்ச்சிகள் தமிழகத்திற் சப்பால் நடந்தன. ஆனால், போர் நிகழ்ச்சிகள் தமிழகத்திலே நடந்தன. கிபி. 1757-ல் பிளாசிப் போரில் வெற்றிகண்ட இராபர்ட்கிளைவு ஃபிரெஞ்சி யருக்குச் சொந்தமான சந்திரநாகூரையும் கைப்பற்றினான். ஐரோப்பாவில் ஆசுதிரியாவுக்கும், பிரசியாவுக்கும் ஏழாண்டுப்போர் (கி.பி. 1756-53) ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இங்கும் மூன்றாம் கருநாடகப் போர் தொடங்கியது. அப்பொழுது ஃபிரெஞ்சு ஆளுநராயிருந்தவன் தாமசு ஆர்தர் கவுண்டுதிஇலாலி என்பவனாவான், இலாலி 1758 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு உரிமையான புனித தாவீது கோட்டையை முற்றுகையிட்டுப் பிடித்துக் கொண்டான். அடுத்துச் சென்னையைத் தாக்கிப் பிடிக்கத் திட்டமிட்டான். கடற்படைத் தளபதி தியாசு (De-Ash) அவனுடன் ஒத்துழைக்கவில்லை . தாய்நாட்டி லிருந்தும் உதவி கிடைக்கவில்லை.ஃபிரெஞ்சியருக்கும் தஞ்சை மன்னருக்கு மிடையே ஏற்பட்டிருந்த உடன்படிக்கையின்படி அம் மன்னரிடமிருந்து சேரவேண்டிய ஐம்பதிலக்கம் உருபாயைப் பெற்றுப் படைதிரட்ட வெண்ணித் தஞ்சைமீது படையெடுத்துக் காலத்தை வீணாக்கினான். வழியில் ஃபிரெஞ்சுப்படை நாகூரைக் கைப்பற்றிச் சூறையாடியது. திருவாரூரில் பொருள் ஏதும் கிடைக்காததால் கோயிற் குருக்களைக் கொன்று போட்டது. பின்னர் தஞ்சை முற்றுகையிடப்பட்டுப் பொரு ளின்றிக் கைவிடப்பட்டது. இதற்குள் கடற்படைத் தலைவன் தியாக தனித்துப் போரிட்டு ஆங்கிலக் கடற்படைத் தலைவன் போகாக்கிடம் தோற்று ஃபிரெஞ்சுத் தீவுக்குப் போய்விட்டான், இலாலி வடசர்க்காரின் காவலனாயிருந்த புஸ்பியைச் சென்னைக் கழைத்தார். இலாலி ஆங்கிலேயருக்குச் சொந்தமான திருச்சி, செங்கழு நீர்ப்பட்டு முதலான புறக்காவல் நிலையங்களைக் கைப்பற்றிச் சென்னையை முற்றுகையிட்டான். முற்றுகை பயன் அளிக்கவில்லை. ஆங்கிலப் படைகள் ஃபிரெஞ்சுப் படைகளை மசூலிப்பட்டினம், இராமேசுவரம் முதலிய இடங்களில் தோற்கடித்தன. ஐதராபாது நவாபும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஃபிரெஞ்சுக்காரரை வெளியேற்றி, ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுத்திருந்த வடசர்க்கார்ப் பகுதியை ஆங்கிலேயருக்குக் கொடுத்தான். புஸ்ஸிசென்னைக்கு வாராம் லிருந்தால் வட சர்க்காராவது மிஞ்சியிருக்கும். இதனால், பிரெஞ்சுக் காரரின் ஆளுமை தக்காணத்தில் மங்கியது. இலாலி வந்தவாசியில் தோற்கடிக்கப்பட்டான். புஸ்பாபி சிறைப் பட்டான். 1780-ல் தமிழகத்தின் ஃபிரெஞ்சுக்காரர் செஞ்சி, காரைக்கால், புதுச்சேரி ஆகியவிடங்களைத் தவிர பிறயாவற்றையும் இழந்தனர். அவர்களின் புகழும் வளர்ச்சியும் குன்றியது. புதுச்சேரி ஆங்கிலேயரால் முற்றுகையிடப்பட்டு 1761-ல் கைப்பற்றப்பட்டுத் தரைமட்டமாக்கப் பட்டது. கலைக்கூடமாகத் திகழ்ந்த கவின்மிகு புதுச்சேரி கட்டாந்தரை யாக்கப்பட்டது. ஆங்கிலர் செஞ்சியைக் கைப்பற்றி அங்கிருந்த கோட்டை யையும் இடித்துத் தள்ளினர், மாகியும் மண்ணாயிற்று. இப்போர் இந்தியாவில்ஃபிரெஞ்சு ஆளுமைக்குச் சாவுமணியடித்தது. இலாலியைச் சிறைப்படுத்தி இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றனர். இரண்டாண்டு களுக்குப்பின் பெரும் பொருள் கொடுத்து அவரை மீட்டஃபிரெஞ்சு அரசு அவர் மீது குற்றஞ்சாட்டி அவர் தலையை வெட்டியது. இப் போருக்குப் பின் தென்னகத்தில் ஆங்கில ஆளுமையே மேலோங்கி நின்றது. மூன்றாம் கருநாடகப் போரின் முடிவில் ஃபிரெஞ்சு ஆளுமை மறைந்தது. அவர்களின் முதுகெலும்பாயிருந்த வடசர்க்கார், புதுச்சேரி, செஞ்சி, மாசி ஆகியவை இழக்கப்பட்டன புதுச்சேரியின் வீழ்ச்சி ஃபிரெஞ்சுக்காரருக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாயிற்று. மைசூர் சுல்தானாட்சியும், மராத்தியராட்சியும் மறைந்து ஆங்கிலத் தனியாளுமை ஏற்பட்டது. ஃபிரெஞ்சுக்காரருக்குத் தாய்நாட்டு உதவி தக்க சமையத்தில் கிடைக்காமையும், தலைவருக்குள் ஒற்றுமையின்மையும், பற்றிடங்களில் போதிய வருவாயின்மையுமே அவர்களின் தோல்விக்குக் கரரியங்க ளாயின. மாறாகப் பகைவர்களான ஆங்கிலர்களுக்குத் தாய்நாட்டு உதவியும், தலைவர்களுக்குள் ஒற்றுமையும், பற்றிடங்களிலிருந்து பெருத்த வருவாயும் கிடைத்தன. ஆங்கிலரின் பற்றிடங்களான பம்பாய், சென்னை, கல்கத்தா முதலியவை சரியான அரசியல், பொருளியல் நடுவங்களாகி விட்டன. ஆனால்ஃபிரெஞ்சுக்காரரின் புதுச்சேரி ஆளுமை, வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் நடுவமாகவில்லை. ஓரளவு வருவாயும், பாதுகாப்பும் அளித்த வடசர்க்காரை இழந்த பின் தலைமையிடமான புதுச்சேரியும் இழக்கப்பட்டதால் ஃபிரெஞ்சுக்காரரின் ஆட்சி தமிழகத்தில் அடியோடு மறைந்தது. (இ) ஆங்கிலேயரும், ஐதர் அலியும் திப்புசுல்தானும் முதல் மைசூர்ப் போர் (கி.பி. 1767-79) மூன்றாம் கருநாடகப் போர் இந்தியாவில் ஃபிரெஞ்சுக்காரருக்குத் தேய்பிறையாகவும், ஆங்கிலருக்கு வளர்பிறையாகவும் மாறியது. ஆங்கிலர் அச்சம் நீங்கினர். ஆனால், அவர்களுக்குப் பேரச்சமாகத் தோன்றினார் மாப்புலி கதர் அலி. 1712 -ல் பிறந்த ஐதர் அலிமைசூர் மன்னரிடம் ஓர் எளிய படைஞனாக சிப்பாயாக) அமர்ந்து 1781ல் அந்த மைசூருக்கே தலைவரா னார். ஆங்கிவரை இந்திய மண்ணிலிருந்து விரட்ட வேண்டுமென்பதே ஐதரின் வாழ்க்கைக் கோட்பாடு. மூன்றாம் சுருநாடகப் போருக்குப்பின் ஆங்கிலர்கள் ஐதராபாது நிசாமின் சவையில் ஆளுமை பெற்று வடசர்க்கார் மாவட்டங்களைத்துய்த்து வந்தனர். ஐதர் நிசாமுடனும், மராத்தியருடனும் இணைந்து ஆங்கிலரை ஒழிக்கத் திட்டமிட்டார். ஆங்சிலர்கள் மைசூர்மீது போர் தொடுத்தனர். ஐதரும், நிசாமும், ஆங்கிலப் படைகளிடம் திருவண்ணாமலை, செங்கம், கணவாய் ஆகிய இடங்களில் தோற்றனர். பின்னர் ஆம்பூரிலும் ஆங்கிலரிடம் கதர் தோற்றார். தோல்விகண்ட நிசாம் கட்சி மாறித் திடீரென ஆங்கிலருடன் சேர்ந்தார். ஆயினும், மங்களூர், சேலத்திலுள்ள பாரமகால், ஈரோடை முதலியவிடங்களில் ஆங்கிலரை எதிர்த்து ஐதர் வெற்றிபெற்றார். திடீரென மராத்தியரும் கட்சிமாறி ஆங்கிலருடன் சேர்ந்தனர். அவர்களே மைசூர் மீது போர் தொடுத்தனர். ஐதர் படையொன்று மராத்தியரைத் தாக்கச் சென்றது. ஐதர் சென்னையைத் தாக்க முற்பட்டார். அஞ்சிய ஆங்கிலர் 1799-ல் அவருடன் சென்னை உடன்படிக்கை' செய்துகொண்டு பிடித்த இடங்களையும் போர்க் குற்றவாளிகளையும் பரிமாற்றம் செய்து கொண்டனர். பிறர் தாக்கினால் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் ஒப்புக்கொண்டனர். இரண்டாம் மைசூர்ப் போர் (கி.பி. 1780-1784) மராத்தியர் மைசூரைத் தாக்கினர். சென்னை உடன் படிக்கை' யின்படி ஆங்கிலார் ஐதருக்கு உதவவில்ப். மாறாக, அவருடைய முன்னேற் றத்திற்குத் தடையாகப் பல செயல்களில் ஈடுபட்டனர். ஐதர் நிசாமோடும், மராத்தியரோடும் ஒப்பந்தம் செய்துகொண்டு ஃபிரெஞ்சுக்காரரைப் பக்கத்துணையாக வைத்துக் கொண்டு 1780-ல் பெரும்படையுடன் செங்கம் கணவாய் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்தார். அவர்களைச் சூறையாடித் தீக்கிரையாக்கினார். கண்ணில்பட்ட மக்களைப் படுகொலை செய்தார். தன்னை எதிர்த்த ஆங்கிலப் படைத் தலைவன் தளபதி பெய்லியைப் போளூரில் தோற்கடித்துத் துண்டாடினார். வந்தவாசியைக் கைப்பற்ற முயன்றார். இதற்குள் கல்கத்தாவிலிருந்து வாரன்கேசுதிங்கால் அனுப்பப் பட்டபடைவயவர் அயர்கூட் என்பவன் தலைமையில் அதரை செங்கழு நீர்ப்பட்டு, வந்தவாசி ஆகியவிடங்களில் தோற்கடித்து 1781-ல் பறங்கிப் பேட்டையில் படுதோல்வி அடையச் செய்தது. ஐதர் வேலூரை முற்றுகை யிட்டார். அயர்கூட் வேலூர் முற்றுகையைத் தளர்த்தி ஐதரச் சோழலிங்க புரத்தில் தோற்கடித்தார். பின்னர் ஆரணியில் நடந்த போர், வெற்றி தோல்வியின்றி முடிந்தது. அயர்கூட் நோய்வாய்ப்பட்டு 1783 ஆம் ஆண்டு, ஏப்ரலில் சென்னையில் காலமானான். அதே திங்களில் ஐதரலியும் புற்றுநோயால் சித்தூருக்கருகில் மாண்டார். ஆயினும், ஐதர் அலியின் மகன் திப்புசுல்தான் தொடர்ந்து போரை நடத்தினான். சென்னை ஆளுநர் மக்கார்த்தனே அவருடன் 1784-ல் மங்களூரில் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். இதன்படி அவரவர் பிடித்த நாடுகளை அவரவருக்கே திருப்பித்தர முடிவாயிற்று. இப் போர் ஆங்கிலரை அடியோடு ஒழிப்பதற்காக ஏற்பட்டது. ஆர்க்காட்டு நவாபு முகமதலி வாலாசா தவிர மற்ற தென்னக மன்னர் அனைவரும் இதில் பங்கேற்றனர். ஃபிரெஞ்சுக்காரரின் கடற்படையும் பங்கேற்றது. பெயின், ஆலந்து, அமெரிக்கா ஃபிரான்சு ஆகிய நாடுகளும் இங்கிலாந்தை எதிர்த்தன. எப்படியோ ஆங்கிலர் தப்பிப் பிழைத்து விட்டனர். மூன்றாம் மைசூர்ப் போர் (கி.பி. 1790-1792) ஐதருக்குப்பின் அவர் மகன் திப்பு மைசூர் சுல்தான் ஆனார். அவரும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமெனத் தீர்மானித்தார். ஃபிரெஞ்சுக்கார ருடன் நட்புறவு கொண்டு அயல் நாடுகளிலிருந்து ஆங்கிலருக்கு எதிராக உதவிகள் கோரினார்; இதற்கிடையில் 1789-ல் ஆங்கிலவரசின் பாதுகாப்பி விருந்த திருவிதாங்கூரைத் தாக்கினார்.790-ல் ஐதராபாது நிசாம் மராத்தியர் முதலியோருடன் உடன்படிக்கை செய்துகொண்டார்; ஆனால், இவ்விரு வரும் பின்னர் காரன்வாலிசுடன் சேர்ந்து கொண்டனர். 1790-ல்கிராங்க னூரைக் கைப்பற்றினார்; 1791-ல் திருவண்ணாமலையை வென்றார்; சென்னை ஆளுநர் திறனற்றுக் கிடந்தார். காரன்வாலிசுகல்கத்தாவிலிருந்து வந்து தாமே படைக்குத் தலைமை தாங்கிச் சென்னை, வேலூர், ஆம்பூர் வழியாகச் சென்று பெங்களூரைக் கைப்பற்றினான். திப்புவை அரிகோரா வில் தோற்கடித்துத் திப்புவின் தலைநகரான சீரங்கப்பட்டணம் நோக்கி முன்னேறினான். சிறிது இடைவெளிக்குப் பின் திப்பு கோயம்புத்தூரைத் தாக்கிப் பிடித்தார். காரன்வாலிசு சீரங்கப்பட்டணத்தை அழித்தான். திப்பு வேறு வழியின்றிக் காரன்வாலிகடன் 1792-ல் சீரங்கப்பட்டணத்தில் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். சீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு தம் ஆள்நிலத்தில் பாதியை ஆங்கிலேயருக்கும், நிசாமுக்கும், மராத்தியருக்கும் இழந்தார். போரின் இழப்பீட்டாக முப்பதுலக்கம் பொற்காசுகளையும் திப்பு கொடுத்தார். அப் பணம் முழுவதும் கொடுத்துத் தீரும்வரை தன்னிரு புதல்வர்களையும் ஆங்கிலேயரிடம் பிணையாக வைத்தார். இவர்கள் கிபி. 1794-ல் மீட்கப்பட்டனர். நான்காம் மைசூர்ப்போர் (கி.பி. 1799) திப்பு மூன்றாம் மைசூர்ப்போரின் முடிவில் தனக்கு நேர்ந்த, அவமானத்தையும், இழப்பையும் எண்ணிப் பொறுமினார். அயல்நாடுக ளுடன் தொடர்பு கொண்டார். ஃபிரெஞ்சுப் புரட்சியைப் போற்றினார். நெப்போலியனுடன் நட்புறவு கொண்டார்.ஃபிரெஞ்சுப் படைகள் 1798-ல் மங்களூர் வந்து இறங்கின. இவற்றைக் கண்டு அஞ்சிய ஆங்கிலத் தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி நிசாமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு, 17.ல் மைசூரை மேற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் தாக்கினார். ஆங்கிலப் படைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து மைசூரைத் தாக்கின. திப்பு மாலவல்லி, குடகு ஆகிய இடங்களில் தோற்றார். தலைநகரான சீரங்கப் பட்டணம் முற்றுகையிடப்பட்டது, கடைசி மூச்சுவரை போரிட்டுத் திப்புசுல்தான் 1799ல் ஆங்கிலேயரின் குண்டுக்கு இரையானார். சீரங்கப் பட்டணம் ஆங்கிலேயரால் சூறையாடப்பட்டது. கட்டடங்கள் இடித்து நிரவப்பட்டன. ஆங்கிலரின் கடைசிப் பகைவர் தென்னகத்தில் அழிந்தார். மைசூர் ஆங்கில ஆளுமைக்கு உட்பட்டது. தென்கன்னடம், வயநாடு, கோவை ஆகியவை ஆங்கிலருக்குக் கிடைத்தன, ஐதராபாத்தைச் சுற்றி யுள்ள பகுதி நிசாமுக்குக் கிடைத்தது. அப் பகுதியிலிருந்த கடப்பை, கருநூல், பெல்லாரி, அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்கள் பின்னர் ஆங்கிலருக்குத் துணைப்படைக்காக நிசாமால் கொடுக்கப்பட்டன, கொடை மாவட்டங்கள்' எஞ்சிய மைசூரின் நடுப்பகுதி மைசூர் அரசர் மூன்றாம் கிருட்டிணராசருக்குக் கொடுக்கப்பட்டது. அவரும் ஆங்கிலர் பாதுகாப்புக்கு உள்ளானார். திப்புவின் குடும்பத்தினரும் ஆங்கிலரின் பாதுகாப்புக்கு உள்ளாயினர். திப்புவின் இரு பிள்ளைகளும் வேலூர்க் கோட்டைச்சிறையில் வைக்கப்பட்டனர். (ஈ) தமிழகத்தில் மராத்தியர் மொகலாயப் பேரரசின் வரலாறு மராத்தியர் எழுச்சியால் முற்றுப் பெற்றது. அவ் வெழுச்சியின் நாயகன் சிவாசி ஆவான். கி.பி. 15ஆம் தாற்றாண்டில் நாசிக், பூனா, சதாரா சோலாப்பூர், கொங்கணப் பகுதிகளில் எளிய ஏழை மக்களாய் வாழ்ந்த மராத்தியார் தாழ்த்தப்பட்ட மக்களேயாவர். தக்காணத்திலிருந்த சுல்தான்களின் படைகளில் சேர்ந்து மராத்தியர் பலர் சிறு படைத்தளபதிகளாய் உயர்ந்து அக்கால வாழ்க்கைப் படி பணியூதிய மாக நிலமானியங்களைப் ஜாகீர் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்தியாவில் ஏற்பட்ட இறைநெறி இயக்கத்தால் பல அரிய மெய்யறிஞர்கள் தோன்றினர். அத்தகைய மெய்யறிஞர்களுள் சிறந்த துக்காராம், இராமதாசு, வாமன் பண்டிதர், ஏகநாதர் முதலியோர் தாழ்த்தப் பட்ட இன மராத்தியரே. ஆகவே தான் இத்தாலி, ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சியின் தொட்டிலாகத் திகழ்ந்தது போலவே இந்தியாவில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மறுமலர்ச்சிக்கு மராத்தியம் தொட்டில் ஆயிற்றென்பர், கிபி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக் குடியில் தோன்றிய சிவாசி இறைநெறிப் பண்போடு மறப்பண்பையும் இணைத்து மராத்தியரை விழிப்படையச் செய்தார். அடிக்க அடிக்கக் கிளம்பும் பந்துபோல, வெட்ட வெட்டத் துளிர்க்கும் கிளைபோல அவுரங்கசீப்பின் சமயவெறி மராத்தி யரை வீரிட்டெழச் செய்தது கரைபுரண்டோடிய அவர்களின் வீர உணர்ச் சியைக் கட்டுப்படுத்தி ஒரு பேரரசைப் படைத்த பெருமை சத்திரபதி சிவாசியையே சாரும். சிவாசியின் தந்தை சாசி ஆமதுநகர நிசாம் சாவிட மும், பீசப்பூர்ச்சுதில்பாவிடமும் பணியாற்றிய பின் மொகலாயப் பேரரசர் சாசகானிடம்மாள்சப்தாரராக அமர்ந்தார். அப்பணியிலிருக்கும்போது தான் கிபி. 1630 -ல் சிவாசி சாசியின் முதல் மனைவி சோபாயின் வயிற்றில் பிறந்தார். பின்னர் மொகலாயப் பேரரசுப் பணியினின்று நீங்கி ஆமதுநகர் பீசப்பூர்ச் சுல்தானிடம் மாறிமாறிப் பணியாற்றிய சாசி கருநாடகப் போர்களில் தம் வீரத்தைக் காட்டினார். இவருடைய இரண்டாம் மனைவிக்குப் பிறந்த வெங்காசியும் சுல்தான் பணியிலேயே அமர்ந்தார். சாசி பல மானியங்களைப் பெற்று மராத்தியரின் தலைவராயினார். இவர் மகன் வெங்காசிதான் கிபி.174-ல் தஞ்சைக்கு மன்னர் ஆனார். கீழைக் கருநாடகப் படையெடுப்பு (கி.பி. 1677-78) சிவாசியும் தம் தந்தையைப் போலவே படிப்படியாக வளர்ந்து பூனா, சதாராப் பகுதிகளுக்குத் தலைவர் ஆனார். கி.பி. 1664-ல் தன் தந்தை இறந்ததும் தானே அரசனானான். பல இடங்களையும் வென்று 1674-ல் 'சத்திரபதி மகாராசா சிவாசி' என்று பட்டம் சூடிக்கொண்டார். கிபி.1677. 78 ஆம் ஆண்டுகளில் சிவாசி சீழைக் சுருநாடகப் பகுதிகளின்மீது படை யெடுத்தான். அப்பொழுது செஞ்சியை ஆண்ட நாசிர்முகமதுவும், வாலிகண்டபுரத்தையாண்ட செர்கான் லோடியும் பீசப்பூர் சுல்தானுக் குட்பட்டு ஆண்டுவந்தனர். 1674-ல் தஞ்சையை இவனுடைய தம்பியான வெங்காசிகைப்பற்றி ஆண்டுவந்தான், திருச்சியில் சொக்கநாத நாயக்கன் ஆண்டுவந்தான். சொக்கநாதன் வெங்காசியைத் தமிழகத்திலிருந்து விரட்ட முயன்று புதுச்சேரி ஆளுநரிடம் உதவி கோரினான். வெங்காசியும் சொக்கநாதனை வீழ்த்தப் புதுச்சேரி ஆளுநரிடம் உதவி கேட்டான். பீசப்பூர், மொகலாயர் தாக்குதல் லால் நலிவுற்றது. இச் சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு சிவாசி கிழக்குக் கருநாடகப்பகுதி சோழமண்டலக் கரையின் மீது படை யெடுக்கத் தீர்மானித்தான். - புதுச்சேரியிலிருந்த ஃபிரெஞ்சு ஆளுநரை நடுநிலைமை தாங்கச் செய்து, கோல்கொண்டாவுடன் நட்புறவு கொண்டு மொகலாய ஆளுநருக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டு, 177-ல் ரெய்க்காட்டிலிருந்து சென்று செஞ்சியைத் தாக்கிப்பிடித்தான். திருவதியில் வாலிகண்டபுரத்தை யாண்டசெர்சானை வென்றான். பின்னர் புவனகிரியையும் வடகொள்ளி டம் பாயும் பகுதிகளையும் கைப்பற்றினான். தன் சிற்றன்னையின் மகன் சாந்தாசியை இப் பகுதிகளை ஆளும்படி தன் படிநிகராளியாக அமர்த்தி விட்டுத் தன் தலைநகர் திரும்பினார். சாந்தாசி செஞ்சிக்கோட்டையில் விருந்து கொண்டு ஆண்டான். எதிர்ப்பின்றி இவன் கீழைக் கருநாடகப் பகுதிகளை வென்ற நிகழ்ச்சி சென்றான், கண்டான் வென்றான்' என்பதைப் போன்றது என்றும், இதனால் இவன் அலெக்சாந்தருக்கும், சூலியசு * சீசருக்கும், அன்னிபாலுக்கும் ஒப்பானவன் என்றும் புகழ்ந்துரைப்பர். சிவாசியின் ஆட்சியில் செஞ்சி, வேலூர் ஆகிய நகரங்களும், சித்தார். திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. தமிழ்நாட்டுப்பகுதிகளைச் செஞ்சி, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து அவனுடைய படி.நகராளியர் ஆண்டனர். தஞ்சையில் மராத்தியராட்சி விசயநகரப் பேரரசன் அச்சுதராயன் (கி.பி. 1530-42) தஞ்சையை மதுரையிலிருந்து பிரித்து அதற்குத் தன் அளியளின் மைத்துனியின்) கணவன் செல்லப்பனை நாயக்கனாக அமர்த்தியாளும்படி செய்தான் என்பதைக் கண்டோம். செல்லப்பனிலிருந்து தொடங்கப்பட்ட தஞ்சை நாயக்கராட்சி கொடி வழியாகத் தொடர்ந்ததையும் அறிந்தோம். கடைசி யாக இதனையாண்ட இரகுநாத நாயக்கன் தனது எண்பதாம் அகவையில் (கிபி. 1540-ல்) உயிர்நீத்தபின் அவன் மகன் விசயராகவ நாயக்கன் தஞ்சை மன்னனானதையும், அவன் மதுரைச் சொக்கநாத நாயக்கனுடன் தீராத பகைமை கொண்டதால் கிபி. 173-ல் சொக்கநாதன் இவனைப் போரில் கொன்றதையும் கண்டோம். விசயராகவ நாயக்கனுக்குப்பின் செங்கமல தாசனை அரசனாக்கப் பீசப்பூர்ச் சுல்தான் தன் படைத்தலைவன் வெங்காசியை யனுப்பி, செங்கமலதாசனுக்கு கி.பி. 1675-ல் முடிசூட்டச் செய்தான். பின்னர் தஞ்சையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும், பீசப்பூர்ச் சுல்தான் அடில்சாவின் இறப்பும் அடுத்த ஆண்டிலேயே வெங்காசி தஞ்சை மன்னனாகும் வாய்ப்பையளித்தன. வெங்காசி (கி.பி. 1675-85) தஞ்சையைக் கைப்பற்றி ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆண்டான். இவன் தன் அண்ணன் சிவாசிக்கு முரண்பட்ட வன். ஃபிரெஞ்சுக்காரருடன் உறவு கொண்டான். மைசூர் மன்னன் மதுரை மீது படையெடுத்தபோது மதுரைக்குப் பக்கத்துணையாய் நின்றான், இவனுடைய ஆட்சிக் காலத்தில் தஞ்சை நாட்டினர் கொடுமைகளையே துய்த்தனர். 1677, 780) ஆகிய ஆண்டுகளில் காவிரியின் கரைபுரண்ட வெள்ளத்தால் தஞ்சை தத்தளித்தது: விளைச்சல் அழிந்தது. ஆயினும் வெங்காசி மக்களைத் துன்புறுத்தி அகவரி தண்டினான். கோயிற் பொருள்களைக் கொள்ளையிட்டும் பொருள் திரட்டினான். இவனுக்குப் பின் இவன் மகன் இரண்டாம் சாசி (கி.பி. 1685-1712) தஞ்சை மன்னன் ஆனான். இவன் காலத்தில்தான் மதுரை நாட்டின் பெண்ணரசி மங்கம்மாள் திருச்சியைக் கோநகராகக் கொண்டு ஆண்டு வந்தாள். இவள் தஞ்சை மீது வெஞ்சமர் செய்து வெற்றியடைந்தாள். அடுத்து, மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பு தென்னகத்தின்மீது படையெடுத்து மதுரை, தஞ்சை முதலிய நாடுகளை வென்று தனக்கு அடங்கித் திறை செலுத்தும்படி செய்தான். இதனால் தஞ்சாவூர் மன்னனும் 1694இலிருந்து மொகலாயப் பேரரசுக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்ட தோடு, மதுரையாட்சியின் கீழிருந்து தஞ்சை மன்னர்களால் முன்பு கைப்பற்றப்பெற்ற பகுதிகளையும் மதுரைக்கே திருப்பித் தரவும் ஒப்புக் கொண்டான். மங்கம்மாளும் மொகலாயப் பேரரசுக்குத் திறை செலுத்தும் அரசி ஆனாள்.சாசி மராத்திய, சமற்கிருத மொழி, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டான். அம்மொழிப் புலவர்களைப் போற்றிக் காத்தான். இவன் காலத்தில் தஞ்சைக்கோட்டை சிறந்த அரணாக்கப்பட்டது. இரண்டாம் சாசி கி.பி. 1712 - ல் பிறங்கடையின்றி இறந்தான், அவனுக்குப் பின் முதலாம் சரபோசி (கி.பி. 1712-1728) தஞ்சை மன்னன் ஆனான், இவன் மதுரை நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றினான், மைசூர் மீதும் படையெடுத்தான். கி.பி. 1728-ல் சரபோசி திடீரென இறந்தான். அவனுக்குப்பின் அவன் தம்பி துக்கோசி (கிபி. 1728-1736) மன்னன் ஆனான். இவர்கள் காலத்தில் தொடர்ந்து பல மொகலாயப் படையெடுப்புகள் நிகழ்ந்தன, துக்கோசி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைப்பகுதிகளை வெற்றிகொள்ள முயன்று தோல்வியுற்றான். இவன் கி.பி.1736-ல் இறந்தான், துக்கோசிக்குப்பவாசாகிபு, செளசி, அண்ணாசாகிபு, நான் பிரதாப் சிங் ஆகிய மக்கள் ஐவர் இருந்தனர். அண்ணாசாகிபும், நானாசாகிபும், துக்கோசிக்கு முன்பே இறந்துவிட்டனர், துக்கோசியின் இறப்புக்குப் பின் பவாசாகிபு இரண்டாம் துக்கோசி என்ற பட்டத்துடன் 1736-ல் தஞ்சை 91-100 கிபி.17,18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் மன்னன் ஆனான்.பட்டத்திற்கு வந்த சின்னாளில் இறந்தான். இவனுடைய மனைவி சுகனாபாய் இவனுக்குப்பின் இரண்டாண்டுகள் ஆண்டாள். அவளைத் தள்ளிவிட்டு செளசி கி.பி. 1638-ல் தஞ்சை அரியணையைக் கைப்பற்றியாண்டான். சித்தோசி என்றொருவன் திடீரெனக் கிளம்பி தனக்கே தஞ்சையரியணை உரியதெனக் கூறி கைப்பற்றிக் கொண்டான், சௌசி பாண்டிச்சேரிக்கு ஓடி ஃபிரெஞ்சு ஆளுநர் உரூமாசியிடம் 1735 1741) உதவி கோரினான். அவ்வுதவிக்கு ஈடாசுக் காரைக்காலையும், திர்காங்கரைக்கோட்டையையும், அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களையும் ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான்.ஃபிரெஞ்சுப் படைகள் காரைக்காலை அடையுமுன் தஞ்சையரியணையைக் கைப்பற்றிய சித்தோசியைத் துரத்திவிட்டுச் செளதி அரியணையேறினான். இதனால் பிரெஞ்சுக்காரர் உதவியை உதறித் தள்ளியதோடு அவர்களுக்குக் கொடுப்பதாய்ச் சொன்ன காரைக்கால், கிர்காங்கரைக்கோட்டை முதலிய இடங்களையும் கொடுக்க மறுத்தான். தஞ்சைமீது பகைமை கொண்டிருந்த திருச்சியையாண்ட ஆர்க் காட்டுதோசுது அலியின் மருமகன் சந்தாசாகிபு ஃபிரெஞ்சுக்காரருக்குத் தானே துணை நின்று செளசியைத் தோற்கடிக்க உதவினான். தோற்ற சௌசி காரைக்காலையும், கிர்காங்கரைக் கோட்டையையும் பல களர்களையும்ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுத்துவிட்டு 50000 பகோடாக் களைப் பெற்றுக்கொண்டார். (பகோடா என்பது அக் காலத்தில் புழக்கத் திலிருந்த பொற்காசாகும். இதன் மதிப்பு மூன்று உருபா. பூப்போட்ட பகோடா காசு மதிப்பு மூன்றரை உருபா). காரைக்கால்ஃபிரெஞ்சுக்காரரின் குடியேற்றமாயிற்று. சந்தாசாகிபுக்கு ஃபிரெஞ்சுக்காரர் நெருங்கிய நண்பர்களாயினர். ஆற்காட்டையாண்ட தோசுது அலியின் மகன் சப்தரலி கி.பி. 1739-ல் தஞ்சைமீது படையெடுத்துச் செளசியைச் சிறை செய்து துக்கோசியின் கடைசி மகன் பிரதாப்சிங்கிடம் அரியணையை ஓப் படைத்து அவனைத் தனக்கு அடங்கி ஆளும்படிச் செய்தான். பிரதாப்சிங் கிபி.1739-லிருந்து 1763 வரை ஆண்டான். தன் இனத்தவர் மீது இசுலாமியர் ஆளுமை செலுத்துவதை விரும்பாத மராத்தியர் தென்னகத்தின் மீது படையெடுத்துத் தஞ்சையை விடுவிக்க முனைந்தனர். 1740-ல் 50,000 வீரர்களைக்கொண்ட மராத்தியர்படை இரகூசிபான்சுலே தலைமையில் ஆர்க்காட்டை நோக்கி வந்தது. தாமிலச் செருவுக்கணவாயில் நவாபு தோசுது அலியைக் கொன்றது. 1741-ல் பல நாள் முற்றுகைக்குப் பின் திருச்சிக் கோட்டையைப் பிடித்துச் சந்தாசாகிபைச் சிறைப்பிடித்துக் கொண்டு சதாராவுக்குச் சென்றது. ' செளசி, பிரதாப்சிங்கைத் தள்ளிவிட்டுத் தானே மன்னனாக விரும்பி ஆங்கிலர் உதவியை நாடினான். அவர்களுக்குத் தேவக்கோட்டையைக் கொடுப்பதாகவும் உறுதியளித்தான்.1749-ல் ஆங்கிலப் படைகள் தஞ்சை மீது படை யெடுத்தன. நிலையையுணர்ந்த பிரதாப்சிங் தானே தேவ தாய்நில வரலாறு கோட்டையை ஆங்கிலருக்குக் கொடுத்துவிட்டுச் உடன்படிக்கை செய்து கொண்டான். தேவகோட்டை ஆங்கிலரின் வணிகவளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. உள்நாட்டுப் போர் ஓய்ந்தபின் பிரதாப்சிங் அயலகப்போரை எதிர் கொண்டான். சந்தாசாகிபு மீண்டும் தஞ்சைமீது படையெடுத்தான். பிரதாப்சிங் ஆங்கில, டச்சு உதவிகளைப் பெற்றுச் சந்தாசாகிபையும், அவனுக்குத் துணைநின்றஃபிரெஞ்சுக்காரரையும் எதிர்த்தான். ஆயினும், பிரதாப்சிங் தோற்றான். சந்தாசாகிபுக்கும் ஃபிரெஞ்சுக்காரருக்கும் பெரும் பொருளையும், 250 ஊர்களையும், எழுபதிலக்கம் உருபாவையும் இழப்பீடாக அளிக்க ஒப்புக்கொண்டான். இப் பணத்தை வாங்குவதற் காகத்தான் முதல், இரண்டாம்சுருநாடகப் போர்களின் போது ஃபிரெஞ்சுப் படைகள் தஞ்சையில் தங்கிக் காலத்தை வீணாக்கின. மூன்றாவது முறையாகவும் சந்தாசாகிபுத் தஞ்சாவூர் மீது படை யெடுத்துத் திருவாரூர், மன்னார்குடி, குடந்தை ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால், 1752-ல் பிரதாப்சிங் கூட்டாளிகளால் சந்தாசாகிபு வீழ்த்தப்பட்டான். முதல், இரண்டாம் கருநாடகப் போர் களின் போது தஞ்சாவூர் ஃபிரெஞ்சியருக்கும், ஆங்கிலருக்கு மிடையே சிக்கித் தவித்தது. எப்படியோ இஃது இப் போர்களில் ஏதாவதொரு கட்சியுடன் இணைந்து போரிடாமல் தனித்து நின்று தப்பியது. அன்வாரூதினுக்குப் பின் முகமதலி ஆர்க்காட்டுக்கு நவாபானான், தஞ்சை தனக்குப் பல்வேறு வழிகளில் ஒரு கோடியே முப்பத்தா நிலக்கத்தைம் பதினாயிரம் உருபா திறை கொடுக்க வேண்டுமென்று கூறினான். இது தன் தந்தை காலத்திலிருந்து வந்த (1748) நிலுவையாகும் என்றான். சென்னை வணிக மன்றத் தலையீட்டால் இது தீர்த்து வைக்கப் பட்டது, 1763-ல் காவிரியின் குறுக்கே பிரதாப்சிங் ஓர் அணைகட்டத் தொடங்கினான். ஆனால், அக்கரையிலிருந்த இடம் முகமதலிக்கு உரியது. ஆகவே, முகமதலி அணைகட்ட இசைவு மறுத்தான். இதற்குள் அரசனும் இறந்தான். பிராப்சிங்கிற்குப் பின் அவன் மகன் துல்சாசி (1763-1787) தஞ்சை மன்னன் ஆனான். இவன் காலத்தில்தான் முதல் மைசூர்ப்போர்ரன்-1779) தொடங்கியது. சுதரலி செங்கம் கணவாய் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்து களர்களையும், வயல்களையும் தீக்கிரையாக்கி மக்களைக் கொன்று குவித்தான். தஞ்சையும், திருச்சியும் அவன் அடாத செயல்களுக்கு இரையாயின. துல்சாசி தன்னிடம் திறைவாங்கும் ஆர்க்காட்டு நவாபை ஐதணரத் தடுத்து நிறுத்தித் தஞ்சையைக் காக்கும்படி கோரினான். நாவாபு துணை செய்யவில்லை. ஆங்கிலரும் முன்வரவில்லை. துல்சாசி ஐதருக்கு நாலிலக்கம் உருபா கொடுத்துத் தஞ்சையைக் காப்பாற்றிக்கொண்டான். ஆனால், நவாபும், ஆங்கில வணிகக் குழுவினரும் இவனிடம் பணம் கேட்டனர். ஐதருடனும், மராத்தியரிடமும் உறவு கொண்டதாய்க் குற்றம் கிபி. 17, 18 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் சாட்டினர். இதற்கிடையில் துல்சாசி புதுக்கோட்டை இராமநாதபுரம், சிவகங்கை நாடுகளையாண்ட மறவர்கள் மீது போர் தொடுத்தான். தஞ்சையும் இந் நாடுகளும் தனக்கு உட்பட்ட நாடுகளென்றும், தனக்குத் தெரியாமல் இவை தங்களுக்குள் சண்டையோ, சமைதியோ செய்து கொள்ளக் கூடாதென்றும் முகமதலி கூறியதோடு, அவ்வாறு செய்ததற்கு ஆங்கிலwர் உதவியுடன் தஞ்சைமீது படையெடுத்தான்.1771ல் முகமதலியின் படைகளும், ஆங்கிலப் படைகளும் தஞ்சைமீது போர் தொடுத்தன, போருக்குப் பின் துல்சாசி செலுத்தப்படவேண்டிய எட்டிலக்கம் உருபாயைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதோடு இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மறவர் நாடுகள் மீது உரிமை கொண் டாடுவதில்லையெனவும் ஒப்புக்கொண்டான். தேர்வானூர், ஆரணிப் பகுதிகளையும் நவாபுக்கு அளித்தான். ஆயினும், நவாபு முகமதலி 1773-ல் தஞ்சையை ஆங்கிலர் உதவியுடன் கைப்பற்றினான். துல்சாசி மூன்றாண் டுகள் சிறையில் அடைக்கப்பட்டான். தஞ்சையைக் கசக்கிப் பிழிந்து நவாபும், வணிகக் குழுவும் பணம் கரண்டின: ஆளுநர் விஞ்சு பதவி நீக்கப்பட்டு பிகாட் சென்னை ஆளுநரானதும்177-ல் மீண்டும் துல்சாசி தஞ்சை அரசனாக்கப்பட்டான். தஞ்சை ஆங்கிலேயரின் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1787-ல் துல்சாசிஇறந்தான். அவனுக்குப் பிறங்கடையாக அவனால் மகன்மை எடுக்கப்பட்ட சரபோசி தஞ்சைக்கு மன்னன் ஆனான். சரபோசிக்குப் பாதுகாவலனாகவும் இணையாட்சியாளனாகவும் துல்சாசியின் தம்பி அமர்சிங் அமர்த்தப்பட்டான். ஆனால், இம் மகன்மையைச் சென்னையாளுநர் ஆர்ச் பால்டு கேம்பெல்ஏற்கமறுத்துத் தனக்கு அடங்கி நடக்கும் அமர்சிங்கையே ஆளும்படி செய்தார். இதனால், அமர்சிங் கி.பி. 1787 முதல் 17 வரை தஞ்சையை ஆண்டான், அஃதாவது தஞ்சையின் மன்னரை ஆக்கும் ஆளுமையை ஆங்கிலர் இதனால் முழுமை யாகப் பெற்றுவிட்டனர். 179-ல் கிழான் வெல்லெஸ்லி தஞ்சைமன்னன் சரபோசி1799-1833யுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். அதன்படி தஞ்சைக்கோட்டையும், சில ஊர்களும் தவிர பிறவற்றை ஆங்கிலுர் எடுத்துக்கொண்டனர். அமர்சிங்கிற்கு ஓய்வுக்கால் வளதியமாக ஆண்டொன்றுக்கு ஓரிலக்கம் உருபா கொடுக்கப்பட்டது. இவனுக்குப்பின் வந்த சரபோசிக்கு 1799-1833) ஆண்டொன்றுக்கு நாவிலக்கம் உருபா வழங்கப்பட்டது. இவனுக்குப்பின் வந்த சிவாசி (1833-1855யும் ஆங்கில ரிடம் ஓய்வுக்கால ஊதியம் பெற்று வாழ்ந்து 1855-ல் பிறங்கடையின்றி இறந்தான். பிறங்கடை யில்லாத நாடுகளைச் சேர்த்துக்கொள்ளத் தன் "காலாவதிக் கொள்கையின்படி 1858- ல் கடைசியாகத் தொல்கவுசி (Lollhousy இதனை ஆங்கில வாட்சியுடன் சேர்த்துக்கொண்டான். மராத்தியராட்சியால் தமிழகத்தில் தமிழ்மொழிக்கும், தமிழருக்கும் குறிப்பிடத்தக்க எவ்வகை நன்மையும் ஏற்படவில்லை. மராத்தியர் தாய்நிலவரலாறு சமற்கிருதம் வளர உதவினரேயொழியத் தமிழ் வளர உதவவில்லை . சாமுண்டீசுவரி போலும் சத்தி வணக்கமும், பண்டரிபுர இயக்கமும், கபீர்ப் பண்பும் தமிழகத்தில் அறியப்பட்டன. ஒரு வகை புதிய இசை தமிழகத்தில் வளர்ந்தது. கோட்டை கோபுரமுறைகளில் புதிய பாணிகள் வளர்ந்தன. போர் முறைகளில் பல உத்திகள் வளர்ந்தன. தாங்கமுடியாத வரிக் கொடுமைகளை மக்கள் துய்த்தனர். புதிய வரிமுறைகள் புகுத்தப் பட்டுப் பின்னர் 'இரயத்துவாரியாக மாறிப் பயனளித்தது. மொகலாயர் கொடுமையோடு, மராத்தியர் கொடுமையும் சேர்ந்து தமிழ்ப் பண்பில் எரியும் தீயில் நெய் இட்டது போலாயிற்று. மராத்தியராட்சியில் தென்னகத்தில் மட்டும் 40 வலுமிக்க கொட் டைகள் இருந்தன. தமிழகத்தில் தலைசிறந்து நின்ற கோட்டைவேலூர்க் கோட்டையாகும். அதனைக் கைப்பற்ற சிவாசி பெருமுயற்சியெடுத்து, ஓராண்டுக்குப் பின்னரேகைப்பற்றியதையறிவோம். ஒவ்வொரு கோட்டை யிலும் 500-க்கும் குறையாத மராத்திய வீரர்களும், அதிகாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். பலதரப்பட்ட படைகளும், போர்க்கருவிகளும், உருண்டு விழுந்து பகைவரைத் தாக்கும் குண்டுப் பாறைகளும் கோட்டை களில் இருந்தன. செஞ்சிக்கோட்டை மராத்தியரால் புதுப்பிக்கப்பட்டு, இன்றும் வியத்தகுநிலையிலுள்ளது. தஞ்சைக் கோட்டையும் அப்படியே, மொகலாயரையெதிர்த்து எழுந்த மராத்தியர் தமிழகத்தில் மொகலாயருக் கும், ஆங்கில ருக்குமிடையே சிக்கிக் கடைசியில் ஆங்கில ருக்கு அடிமை யாகி மறைந்தனர். - ( கால அட்டவணை (1) ஆர்க்காட்டு நவாபுகள் 1. சுல்பிகர் அலிகான் - கிபி. 1680-1703 (அவுரங்கசீபால் கருநாடக நவாபாக அமர்த்தப்பட்டவன்) 2. தாவூத்கான் - கி.பி. 1703-1710 3. முகமது சையத் சதாத் உல்லா கான் -[ 17I]-1737 4.தோசுது அலிகான் 1707-1740 5. சப்தரலிகான் 1780-174) 6.சதாத்உல்லாகான்-II முகமதுசையது 1743-1744 7.அன்வாருதீன் முகமது 1744-17 8. வாலாசா முகமது அலி 1749 - 1705 9.உம்தத்உல்உமாரா 1795-18) 10. அசீம் உத் தௌலா 18-IBN கி.பி. 17,18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 11. அசம்சா 1819-1375 12. அசிம் சாபகதூர் (ஆர்க்காட்டு இளவரசர்) - 1867 - 1874 (2) தஞ்சை மராத்திய மன்னர் 1. வெங்காசி (எகோசி) .. கி.பி. 1675-1585 2. இரண்டாம் சாசி 1685-1712 3. முதலாம் சரபோசி 1712-1778 4. துக்கோசி 1728-1736 5. பிரதாப்சிங் 1739-1763 5.துல்சாசி 1763-1787 7. அமர்சிங் 1787-17ப்பு 8. சரபோசி 1799-1833 9. சிவாசி 1833-1855 (ஊ) தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறை மதுரையையாண்டதிருமலை நாயக்கன் காலத்தில் தமிழ்நாட்டில் எழுபத்திரண்டு பாளையப்பட்டுகள் ஏற்படுத்தப்பட்டு அவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு பாளையக்காரரின்கீழ் விடப்பட்டதையறிந்தோம். தமிழக வரலாற்றை தனன்றி நோக்கும் போது தமிழகம், விசயநகரப் பேராட்சியின் சிழும், நாயக்க மன்னர்களின் கீழுந்தான் இடைக்கால வரலாற்றில் ஒன்றுபட்ட, ஒழுங்கான, அமைதியான ஆட்சிமுறையைக் கண்டதை யறிகிறோம். பின்வந்த மராத்தியர் ஆட்சியிலும், பாளையக்காரர் ஆட்சியின் லும் தமிழகத்தில் அமைதிக்கு மாறாக உள்நாட்டுக் குழுப்பங்களும், சுலகங்களும், போர்களுமே நிலவியதைக் காண்கிறோம். மொகலாயப் பேரரசன் ஒளரங்கசீபாவ் அமர்த்தப்பட்ட தக்காணப் பேராளரின்கீழ்த் தென்னகத்திலிருந்த ஏறத்தாழ முப்பது நவாபுகளின் ஆட்சியாலும் தென்னகத்தில் அமைதியோ, ஒற்றுமையோ ஏற்படவில்லை. குறிப்பாக, ஐதராபாது நிசாமின் கீழிருந்த ஆர்க்காட்டு நவாபும், அவனுக்குக் கீழிருந்த படைத்தலைவர்களும், மராத்தியரோடும், பின்னர் ஐரோப்பியரோடும், உறவு கொண்டும், பகைமைகொண்டும் கருநாடகப் போர்கள் போன்ற பெரும் போர்களிலும், பாளையக்காரர்களுக்கும், தமிழக மன்னர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் ஈடுபட்டுத் தமிழகத்தை ஒரு கரடிக்காடாக மாற்றினார்கள். ஆகவே, கிபி.17, 18 ஆம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை நாம் பார்க்கின்றபோது மராத்தியர், சுல்தான்கள், நிசாம்கள், நவாபுகள், ஃபிரெஞ்சியர், ஆங்கிலர்கள் முதலிய அயலவரும், உள்நாட்டு மறவர்களும், கேரளர்களும் 'தடியெடுத்தவன் தண்டல்காரன்' என்ற முறையில் மக்களை வதக்கி, கசக்கி, வரித்தண்டல் செய்ததோடு, கொலையும், கொள்ளையும், களவும் செய்தனர் என்பதையெண்ணி பட் தாய்நில வரலாறு வாடுகிறோம். சுருங்கக்கூறின் கிபி13-ல் பாண்டிய நாட்டின் கோநகரான மதுரையைக் கைப்பற்றித் தமிழ் மண்ணில் முதன் முதலாக இசுலாமியர் ஆட்சியை ஏற்படுத்தியமை தமிழகப் பண்பிலும், தமிழ்நாட்டு வரலாற்றி லும் ஒரு புல்லுருவி முளைத்தது போலாயிற்று. கிபி. 1323-ல் தில்லியை யாண்டதுக்ளக் மரபில் முதலரசன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உஷாகான் (முகமது பின் துக்ளக் என்பவனைத் தென்னகத்துக்கு ஏவிச் சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றினான். மீண்டும் 1335-ல் தென்னகத்தில் ஏற்பட்ட சுல்தானியர் ஆட்சிக்கு மதுரை தலைநகராயிற்று. இங்கிருந்து கொண்டு சுல்தானியத்தின் படிநிகராளிகளாக ஆளமுற்பட்ட இகலாமியர் சுல்தானியம் வீழ்ச்சியடைந்தபின் 'மதுரைச் சுல்தான்கள்' (மாபார் சுல்தான்கள் என்னும் பட்டத்துடன் ஆண்டார்கள். விசயநகரப் பேரரசன் கிருட்டிணதேவராயனின் தம்பியான கம்பண்ணன் மதுரைமீது படை யெடுத்து மதுரைச் சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளியிட்டான். பின்னர் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சியின் கீழ் பாளையக்காரர்கள் வளரத் தொடங்கினர். கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இவ்வாறு வளர்ச்சி பெற்ற பாளையக்காரர்கள் அடிக்கடி ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், கலவரங்கள், போர்கள் முதலியவற்றையும், நாயக்கர் ஆட்சியின் வலுவின் மையையும் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஆங்காங்கே தனிக்காட்டு அரசர்களாக நிலைபெற்று விட்டனர், திருமலை நாயக்கன் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் எழுபத்திரண்டு பாளையப்பட்டுகள் ஏற்பட்ட தாசு அறிந்தோம். ஆனால், காலப்போக்கில் இவை எண்ணிக்கையில் குறைந்துகொண்டே சென்றன. ஒரு பெரியபாளையக்காரரின் கீழ் பல சிறிய பாளையக்காரர்களும் இருந்தனர். இந் நூற்றாண்டுகளில் இத்தகைய பாளையக்காரர்கள் முகாமையாகத் திருநெல்வேலி, மதுரை, இராமநாத புரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்பட்டார்கள். இவர்களில் மிகப்பெரிய பாளையக்காரர் இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை பாளையக் காரராவர். மணியாச்சி,ஏழாயிரம்பண்ணை ஆகியவற்றை பாண்டவர்கள் மிகச் சிறியவர்களாவர்.பாளையக்காரர்களுக்குட்பட்ட ஆட்சிப்பரப்பை யும், வருவாயையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வளமும் இருந்தது. பாளையக்காரர்கள் யாவரும் ஒரே குடியினர் அல்லது ஒரே மொழியினரென்று கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாகத் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்த பாளையக்காரர்கள் மறவர் குடியினர் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்தவர்கள் கள்ளர் குடியினர்; கீழைத் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தவர்கள் நாயக்க தொட்டியர்)இனத்தவர். இவர்கள் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது இருமொழிகளிலும் பேசுபவர்களாக கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் விருந்தனர், கி.பி. 1752-ல் தமிழகத்தில் ஏறத்தாழ அறுபது பாளையக் காரர்கள் இருந்தார்களென்றும், 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் நாற்பத்தாறு பாளையக்காரர்கள் இருந்தார்களென்றும் அறிகிறோம், அரசர்களால் நேரடியாக ஆளப்பட்ட ஆட்சியை இக் காலத்தில் சர்க்கார் ஆட்சி' என்றழைத்தனர். அத்தகைய 'சர்க்கார் ஆட்சியின் கீழும் சில பாளையப்பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சர்க்கார்' பாளையப்பட்டுகள் பல இருந்தன. தமிழகத்தில் மட்டுமேயல்லாது இராயலசீமா, ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் பாளையக்காரர்கள் இருந் தார்கள். இவர்கள் முறையே மேலைப்பாளையக்காரர்கள், வட்பாளையக் காரர்கள் என்று அறியப்பட்டனர். பாளையப்பட்டு ஆட்சிமுறை கி.பி. 17. 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகமெங்கிலும் பாளையக் காரர்களின் ஆட்சியே இருந்ததெனலாம். படை காவற்படை வருவாய்த் துறை, நயன்மை முதலியவற்றை இவர்களே கண்காணித்தார்கள். இவர் களின் உள்நாட்டு ஆட்சியில் பேரரசு தலையிடுவதில்லை. எனவே, இவர்கள் தனியரசர்களைப் போலவே செயல்பட்டனர். ஒவ்வொரு பாளையக்காரரும் தனக்குள்ள நிலத்தின் ஒரு பகுதியைத் தானே வைத்துக்கொண்டு எஞ்சிய நிலத்தைத் தனக்குக் கீழ்ப்பட்ட வர்களைப் பயிரிடும்படி விடுவர். அவ்வாறு பயிரிடும் வேலைக்காரன் பண்ணையாள் அல்லது 'சிரோகன்' எனப்படுவான். இவன் பயிரிடுவோ னாகவும், போர்க் காலத்தில் போரிடும் படை வீரனாகவும், இரட்டைப் பணியாற்றுவான். ஆகவே, பாளையக்காரர்கள் தனியே பட்டாளம் படை வீரர் குழு என்று ஒன்றை வைத்திருக்கவில்லை, இராமநாதபுரம் சேதுபதி யிடம் மட்டும் 30,000-லிருந்து 40,000 வரையிலான 'சிரோகர்' இருந்தன ரென அறிகிறோம், 'சிரோகர்' பெரும்பாலும் பாளையக்காரருக்கு உறவினராகவோ இனத்தவராகவோ இருப்பர். இதனால், இவர்களுக்கு நகரில் மதிப்பும், புகழும் இருக்கும், பொதுமக்களை ஆட்டிப்படைக்கும் தனியதிகாரங் களையும் இவர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்குக் கீழ்ப் பணியாற்றிய வர்கள் 'புள்ளர்கள்' - (பள்ளர்கள் எனப்பட்டனர்.புள்ளர்களே உண்மை யான வேளாளர் குடியினர். அஃதாவது நிலத்திலிருந்து உழுது பயிரிடும் உழவர் இவர்களேயாவர். இவர்கள் மேல் வாரம் எடுத்துக்கொள்வர். அஃதாவது விளைச்சலில் பாதி பயிரிடுவதற்குக் கூலியாக இவர்களுக்கு அளிக்கப்படும், பாளையக்காரர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட நிலங்களை யும் இத்தகைய பள்ளர்களைக்கொண்டே பயிரிடுவர். அவற்றில் வரும் வருவாயில் வாரம் போக மீதி நேரடியாகப் பாளையக்காரர்களுக்குப் தாய்நில வரலாறு போகும். ஆனால், சிரோகர்சுள் நிலங்களில் வரும் வருவாய் சிரோகர் சுளுக்கே சேரும். அவர்கள் குறிப்பிட்ட தொகையையும், படைகளையும் குறிப்பிடும் காலத்தில் பாளையக்காரருக்குக் கொடுத்து வரவேண்டும். பள்ளர்கள் அடிமைகளைப்போல் தங்கள் பண்ணையாரிடம் கட்டுண்டு கிடந்தனர். இவர்களை ஆடு, மாடுகளைப்போல் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளவும், அல்லது தாம் பட்ட கடனுக்கீடாகக் கொடுக்கவும் சிரோகர்களும், பாளையக்காரர்களும் உரிமை பெற்றிருந்தனர். தம் நிலத்தில் வேலை முடிந்தவுடன் அண்டை நிலத்தில் பள்ளர்கள் வேலை செய்து கூறியீட்டினாலும் அதனைத் தம் மேலாளரிடமே எசமான ரிடமே கொடுத்து விட்டு அவர் கொடுக்கும் வழக்கமான கூலியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலாளரே பார்த்து வேலைக்குத் தகுதியற்றவ னெனப் பள்ளனைத் தள்ளிவிட்டால் அல்லது அவனுக்கு ஒரு தொகையைக் கொடுத்தால் மட்டிலுமே பள்ளனுக்கு விடுதலையேற்படும் ஆகவே, இம் முறை இடைக்கால உருசியாவில் உழவர்கள் தங்களையே பண்ணையாரிடம் விற்றுக்கொண்டு அடிமைகளைப் போல் பயிரிட் டதைப் போன்றது எனலாம். ஆனால், நீக்ரோவர் அடிமை முறையினும் இது மாறுபட்டது. பெரும்பாலான பாளையப்பட்டுகள் மலைகளிலும், காடுகளிலும் அமைந்திருந்ததால் இப்பள்ளர்கள் அக் காடு மலைகளைத் திருத்தி விளை நிலங்கள் ஆக்கினர். பல ஏரிகளும், நீர்த் தேக்கங்களும், கால்வாய்சுளும் இவர்களால் வெட்டப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தனியாக அக்கிரகாரங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. பாளையக்காரர்கள் பொதுவாகத் தங்களுக்கு உட்பட்ட நிலங்களில் வரும் வருவாயில் மூன்றிலொரு பகுதியை அரசருக்குக் கொடுத்துவிடுவர், மூன்றிலொரு பகுதியைப் படைச் செலவுக்கும், மீதியுள்ள மூன்றிலொரு பகுதியைச் சொந்தச் செலவுக்கும் பயன்படுத்துவர். பாளையப்பட்டிலிருந்த முகாமை அமைச்சர் பிரதான்' அல்லது 'தளவாய்' எனப்பட்டார். இவர் அரசர் சார்பில்பாளையப்பட்டு ஆட்சிமுறையைக் கவனிப்பார். பாளையக் காரன் பாளையப்பட்டின் தலைவனாகவும், தானைத் தலைவாரகவுமிருப் பான். அவனுக்குக் கீழிருக்கும் சிரோகர் பயிரிடுவோராகவும் படை வீரர்களாகவும் இருப்பர். ஒவ்வொரு பாளையக்காரர் சார்பிலும், பாளையக்காரரின் படிநிகராளியாக அரசரின் (நடுவண் ஆட்சியில், அவையில் *ஸ்தானாதிபதி' என்னும் அமைச்சர் இருப்பார். இவர் மூலமாகவே பாளையக்காரர் அரசருடன் தொடர்புகொள்வர். ஆங்கிலே யர்கள் பாளையப்பட்டுகளைக் கைப்பற்றியபின் இந்தப்பதானாதிபதி பதவி ஒழிக்கப்பட்டு நவாபுகள் அமர்த்தப்பட்டனர். ஊர்ச்சவை ஒவ்வோர் ஊரிலும் இரு வகையான சவைகள் இருந்தன. அவை பயிரிடுவோர் சவை, சாதியடிப்படையிலான சவை ஆகியவையாம். பார்த் தலைவன் 'மக்கதம்' அல்லது 'படேல்' எனப்பட்டான். இவன் பாளையக் கிபி.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 85 - - - - - காரர் சார்பில் ஊராட்சி முறையையும், வாரித்தண்டலையும் கவனிப்பான். ஊரிலுள்ள நிலங்களின் அளவு, தரம் ஆகியவற்றையும் மற்ற விவரங்களை யும் எழுதி வைப்பவன் 'கர்ணம்' (கணக்கன் எனப்பட்டான். இவர்களுக்கு கீழ் காவல்காரர் (தலையாரி), தோட்டி ஆகியோர் இருப்பர். இவர்கள் யாவருக்கும் ஊதியம் வழங்கப்பட்ட முறை கருக்குத் தக்கபடி இருந்தது. மானியமும், தபசமும் இவர்களுக்கு வழங்கப்பட்டன. உணர்ச்சவையில் படேலும், கர்ணமும், உறுப்பினரும், வழக்குகளை உசாவித் தீர்ப்பளிக்கும் போது தண்டம் போடுவதும் கசையடி கொடுப்பதும் உண்டு. நெய்யைக் காய்ச்சிக்கையில் கற்றிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தெய்விக' முறை இச் சவையாரால் பின்பற்றப்பட்டது. இச் சவையிலும் கையூட்டும், சாதியும், அதிகாரமும் நயன்மையைச் சரித்தன. இச் சபையில் தங்களுக்கு உரிய நயன்மை கிடைக்கவில்லை எனத் தெரிந்தால் நேரடியாகப் பாளையக்காரரிடமே முறையிடலாம். கை, கால் முதலிய உறுப்புகளைக் குறைத்தல், கொலைத் தண்டனையளித்தல் ஆகியவற்றைத் தவிர பிற சிறு தண்டனைகளையே பாளையக்காரர் வழங்கினர். அரசரின் நன்மை மன்றமே இத்தகைய பெரிய தண்டனைகளை வழங்கும் தகுதிபடைத் திருந்தது. கொலை செய்தவனிடம் பெருந்தொகை பெற்றுக்கொண்டு மன்னித்துவிட்ட வழக்குகளும் இக்காலத்தில் காணப்பட்டன. ' வருவாய் நிலவரியும் பிற வரிகளும், காவற் பணமும் பாளையக்காரருக்கு வந்தன. அதாவது நிலத்தின் வருவாயில் பாதி பொதுச்செலவுப் பாளையக் காரருக்குக் கொடுக்கப்பட்டது. இதிலும் பல தில்லுமுல்லுகள் நடந்தன. அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டு வருவாயைக் குறைத்துக் காட்டுவது வழக்கமாயிருந்தது. கரிசல்மண், செம்மண் (செவ்வல்), பொட்டல், வெளி என மண் வளத்திற்கேற்ப நன்செய் நிலத்தின் தரம் பிரிக்கப்பட்டிருந்தது. பயிரிடுவோர் பாளையக்காரருக்கு வாரமும், ஊராருக்குச் சிலவரிகளும் கட்டவேண்டும். அரச நிலத்தைப் பயிரிடுவோர் இவர்களைவிட அதிகமான வரிச்சுமைகளையும் கொடுமைகளையும், துய்த்தனர். இவர்கள் சர்க்கார், நவாபு, அதிகாரிகள், ஊரார் ஆகிய பலருக் கிடையிலும் சிக்கித் தவித்தனர். பொதுவாக, இக்காலத்தில் பாளையக்காரர் கீழும், நவாபுகளின் கீழும் வேளாளர் எண்ணிலாக் கொடுமைகளைத் துய்த்தனர். குறிப்பாக ஆங்கிலர் தமிழகத்தைக் கைப்பற்றிய பின் அவர்கள் நினைத்தபடி கேட்ட பெருந்தொகைகளையும், பரிசில்களையும், பாளையக்காரர்களும், நவாபுகளும் பயிரிடுவோரைக் கசக்கிப் பிழிந்தே கொடுத்தனர். வரித்தண்டல் கால் வாரியாகத் தண்டல் செய்யப்படும் பணம் பல தவணைகளாக கிஸ்திர அரசுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட வட்டத் தலைநகர்களுக்கு குறிப்பிட்ட நாளில் அதிகாரிகள் செல்லுவர். அவர்களிடம் “கர்ணமும்', தாய்நில வரலாறு 'படேலும்' நளரில் தண்டல் செய்த பணத்தைக் கட்டிவிடுவர். வரிநிலுவை அல்லது தண்டல் நிலுவையைத் தண்டுவதற்குத் தனிப்பட்ட ஏவலாள் களையும் அமர்த்துவர். அத்தகையோருக்குத் தண்டில் ஒரு பகுதிதரகாகக் கொடுக்கப்படும். குடிபுடி வாரம் காடு மேடுகளைப் பயிரிடும் நிலங்களாக மாற்றுவதற்கு உளக்க மளிக்கப்பட்டது. இவற்றைக் குறிப்பிட்டவருக்கு ஒதுக்கீடு செய்து கடனாக அல்லது இலவயமாகப் பணம் கொடுத்துப் பயிரிட ஊக்குவிக்கப்படும், பொதுவான விளைநிலமாக அவை மாறிய பின் தொடர்ந்து பயிரிடப்படும் போது குறிப்பிட்ட ஒரு தொகை கட்டணமாகத் தண்டப்படும் தொடர்ந்து இக்கட்டணம் வழக்கம் போல் தண்டப்பட்டு அந்நிலம் பயிரிடுவோருக்கு வழி வழிச் சொத்தாக ஒதுக்கப்படும். பிறங்கடையில்லாமற் போனால் பாளையக்காரரே அதனைத் திருப்பியெடுத்துக் கொள்வார். இத்தகைய முறை குடிபுடி வாரம்' எனப்பட்டது. அமரும் குடிவாரம் பாளையக்காரர் தமக்குக் கீழுள்ள சிலருக்கு ஓர் காரைக்கொடுத்து வரித்தண்டல் செய்தளிக்கும்படி கூறுவதுண்டு. பெரும்பாலும் பாழ்பட்ட களர்களே இவ்வாறு வழங்கப்படும், அவற்றைப் பண்படுத்தி மூன்றாண் டுகள் வரை துய்த்துவிட்டுப் பின்னர் கட்டணத்தை வழக்கம்போல் செலுத்த இவர்கள் இசைவு அளிக்கப்பட்டனர். இம் முறை அமரும் குடிவாரமுறை' எனப்பட்டது. காவல் முறை ஒவ்வொரு பாளையக்காரரும் தமக்கு உட்பட்ட பாளையப்பட்டி லுள்ள உயிர்களையும் உடைமைகளையும் காப்பதைத் தம் கடமையாகக் கொண்டனர். இதற்கெனக் காவற்காரர்களை அமர்த்தினர். இவர்கள் தவசங்களையும், பிற வுடைமைகளையும் காத்தனர். வயல்கள், தவசக் சுளங்கள், நெடுவழிப் பாதைகள், சந்தைகள், வணிகத்தெருக்கள் முதலிய விடங்களிலும் கோயில், குளங்களிலும் நின்று காவல் காத்தனர். குறிப் பிட்ட எல்லையில் திருட்டுப் போனால் அவ்வெல்லையைக் காக்கும் காவற்காரன் அப்பொருளை மீட்டுத்தர வேண்டும். இன்றேல் பொருளை பிழந்தவருக்கு அவன் இழப்பீடு அளிக்க வேண்டும். இக் காவற்காரருக்குத் தவசம், அல்லது பணம்உடைமையாளரால் ஊதியமாக வழங்கப்படும். காவல் அரசக் காவல், நாடு காவல், தேசக் காவல், தளக் காவல் என நால்வகைப்படும், தளக் காவற்காரர்தாமரைக் காவல் புரிவர். மாவட்டக் காவற்காரர் நாட்டுக் காவற்காரர் எனவும் மாநில அளவிலான பகுதிக் காவற்காரர் தேசக் காவற்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். தளக்காவல் காரர்கள் அரசால் அமர்த்தப்படுவர். ஆயினும், ஊராரே சம்பளம் அளிப்பர். இவர்கள் பலரைக் காக்கவும், பாளையக்காரர்கள் பாளை 101-110 கிபி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் யத்தைக் காக்கவும், இரட்டைக் காவல்கள் இக் காலத்தில் இருந்தன. மொகலாயர் படையெடுப்பின்போது திறமான படை வீரர்கள் தேவைப் பட்டனர். இவ்வூர்க் காவல்முறை இப் படையெடுப்பாளருக்குத் துரும் பெனப்பட்டது. எனவே, பாளையக்காரர்களையே படையேந்திய காவற் காரர்களை அமர்த்தும்படி கேட்டு அதற்கென தேசக்காவற்கட்டணம்' ஒன்றையும் ஊரார் கொடுத்தனர். இதனால், பாளையக்காரரின் மதிப்பும் உயர்ந்தது. பாளையக்காரரால் அமர்த்தப்படும் காவற்காரர்கள் திருடர் களின் பாதச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்று கண்டுபிடிப்பர். திருடன் ஊரைத் தாண்டிப் போயிருந்தால் அடுத்த ஊர்க்காவற்காரர்தொடர்ந்து துப்பறிந்து திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்றேல் அவ்வூராரும் காவற்காரரும் திருட்டுப்போன பொருளின் மதிப்பீட்டை இழந்தவருக்குக் கொடுக்க வேண்டும். இதன் வழிக் காவற் பொறுப்பு கரார் மேலும் சுமத்தப்பட்டது. போர்முறை பாளையக்காரர்கள், நவாபுகள், ஆங்கிலர்கள் ஆகியோர் குதிரை, பெருவேட்டெஃகம் (பீரங்கி) முதலிய பெரும்படைகளுடன் வந்து தாக் "கும் போது எதிர் நின்று தாக்கமாட்டார்கள். காடுகளிலும், மலைகளிலும், மரக்கிளைகளிலும் மறைந்திருந்து தாக்கும் முறைகளையே பின்பற்றினர். வேல், வாள், வில், அம்பு, சுக்குமாந்தடி, ஈட்டி, கம்பு, கட்டாரி, கைக்குண்டு முதலிய கருவிகளால், பலதிறப்பட்ட சிக்கலான வலக்கார முறைகளைப் பயன்படுத்திப் போரிடுவர்.குறிப்பாகக் கள்ளர்கள் "வளைதடி' (BoomIrang) என்னும் ஒருவகைக் கருவியைப் பயன்படுத்தினர். இது மூன்றாம் பிறை நிலவைப் போல் வளைந்து காணப்படும். இக் கருவி வயிரமான மரக் கட்டையால் அல்லது கனமான இரும்பால் செய்யப்பட்டிருக்கும். இதனைச் சுழற்றியெறிந்தால் எறிந்தவர் கைக்கே மீண்டும் வந்து சேரும். எதிரியின் தலையைக் கொய்ய இது மிகவும் பயன்பட்டது. தரையடியில் பதுங்கிப் பாயும் முறையால் வேட்டெஃகபீரங்கிப் படையையும், குதிரைப் படையையும் எளிதில் திக்குமுக்காடச் செய்வர். நாம் மேலே கூறியவாறு கரையும் குறிப்பிட்ட நிலங்களையும் மானியமாகப் பெற்ற Dாழியர்கள் போர்க்காலத்தில் இருபது அல்லது முப்பது பேர்கள் அடங் கிய குழுக்களாய் அணிவகுத்துப் படைகளையேந்திப் பாளையக்காரரின் கீழ் நிற்பர். ஒவ்வோர் அணிக்கும் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அதிகாரி 'சர்தார்' எனப்பட்டான். தேவைப்பட்டால் கூலிப்படையும் திரட்டப்பட்டது. இத்தகைய போர்முறைகளை ஆய்ந்து நோக்கும்போது ஒவ்வோர் பலரிலும் தனிப்பட்டவரும் விருப்பம்போல் பெருங் கருவிகளைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. இதனால்தான் சாதி அல்லது குழுச் சண்டைகள் ஏற்படும்போது இக் கருவிகளைப் பயன் படுத்தி உயிர்களைக் குடித்ததையறிகிறோம். இன்று இவை 'குழுச்., கோஷ்டி சண்டைகள்' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. 1 தாய்நில வராது பாளையக்காரர் கோட்டை கட்டக்கூடாது. ஆனால், நடுவண் ஆட்சி நலிந்தபோது இவர்கள் மண்ணால் பல கோட்டைகளைக் கட்டினர், இவற்றைப் பெருவேட்டெஃகத்தாலும் தகர்க்க முடியவில்லை. நன்மைகள் பாளையக்காரர் முறையால் பல நன்மைகள் ஏற்பட்டனவெனலாம், ஊர்காவல், நாடுகாவல் சீர்படுத்தப்பட்டன. காடு மேடுகள் திருத்தப்பட்டு விளைநிலமாக்கப்பட்டன. இதனால் விளைச்சல் மிகுதிப்பட்டது. ஊரும் ஊர்களும் தனித்தும் இணைந்தும் ஒன்றுபட்டன. தலைவன் ஆணைக் குட்படும் பாங்கு வழக்கத்தில் வந்தது. பாளையக்காரர்கள் பொது நலத்திற்கென நீர்பாசன ஏந்துகளைச் செய்தனர். இதனால் பல ஏரிகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. காடுகள் அழிக்கப் பட்டுப் பாதைகள் போடப்பட்டுக் காவற்காரர்கள் நிறுத்தப்பட்டதால் கொலை, களவுகள் குறைந்தன. காவல் முறையின் சிறப்புத்தன்மையால் காவற்காரரும், ஊராரும் பொறுப்பேற்றுத் திருட்டுக் குற்றத்தைக் குறைத்தனர். அரசருக்கு நினைத்தமட்டில் பொருளும், படையும் உழைப்பின்றிக்கிடைத்தன, தீமைகள் குமுகாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. பாளையக்காரர்களே சேதுபதி கள்ளர், மறவர், நாயக்கர் முதலிய சாதிகளாய்ப் பிரிந்து நின்றனர். ஒவ்வோர் ஊரிலும் பயிரிடுவோர் சவையும், சாதிச் சவையும் இருந்தன, குறிப்பாகப் பள்ளர், பறையர் ஆகியோர் சொல்லொணாச் சாதிக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் இன்ன உணவுகளைத் தான் உண்ண வேண்டும். இன்ன உடைகளைத்தான் உடுக்கவேண்டும் மென்றும், முழங்காலுக்குக் கீழ் உடை இழிந்துவரக்கூடாதென்றும், பொன்னணிகள் அணியக்கூடாதென்றும், வெண்கலம் செம்பாலான ஏனங்களைப் பயன்படுத்தக்கூடாதென்றும், மட்பாண்டங்களையே பயன்படுத்தவேண்டு மென்றும் இக் குலப்பெண்கள் சட்டை போடக் கூடாதென்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, பயிரிடும் பள்ளர்கள் அடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் தங்கள் 'எசமானனை'க்கேட்டுத் தான் தங்களுக்கே உரிய உயிரையும் விட்டனர்! பாளையக்காரரில் தொடங்கிப் பயிரிடும் பள்ளர் வரை குமுகாயம் படிக்கட்டுகளைப் போல் காணப்பட்டது. பாளையக்காரர் குதிரை . யானை, ஒட்டகம், பல்லக்கு ஆகியவற்றில் உணர்ந்து செல்வார்கள். அவர் போகுமிடங்கள், வழிகள், தங்கும் இடங்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முதலியவற்றில் பரிவாரங்கள் சூழ்ந்து நிற்கும்; பல்லியங்கள் முழங்கும்; கேளிக்கைகளும் கூத்துகளும் வேடிக்கைகளும் வரவேற்புகளும் நடக்கும், அவருடைய உடை அணிமணிகள் முதலியன ஒரு 'மகாராசாவை' நினைவு கி.பி.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 3g . படுத்தும். அவருக்குக் கிழுள்ள மானியக்காரரும், பிறரும் இவருக்குச் சற்றேறக்குறைய இவரைப் போலவே காணப்படுவர்.' '-- - : கோயில்களுக்கும், பார்ப்பனருக்கும் குமுகாயத்தில் முதலிடம் - ..! அளிக்கப்பட்டது. தனிப்பட்ட தெருக்களும், ஊர்களும் பார்ப்பனருக்கு , ஒதுக்கப்பட்டன.தரது செல்லுதல், ஒற்றுப்பார்த்தல், அமைச்சராயிருத்தல் முதலிய பணிகளிலும் இவர்கள் இருந்தனர். பொதுவாகக் கோயில்களில் பூசைகனை நடத்துவதற்கே இவர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. மறப்பண்புக்கு பாளையக்காரர் முறைவழிவகுத்தாலும் இதன்வழி குமுகாயக்கேடுகளே எஞ்சின. மக்கள் வரிச்சுமையால் அல்லற்பட்டனர், பாளையக்காரர், நவாபுகள், ஆங்கிலர், தரகர்கள் ஆகியோருக்கிடையில் சிக்கிய உழவரின் நிலைமை எண்ணுதற்கும் கொடியதாயிருந்தது. நவாபு " களும், ஆங்கிலரும், படையெடுக்கும்போதெல்லாம் முல்லைமாறிகளாக மாறி, பாளையக்காரர்கள் பலரும், தமிழர்களையே கொல்லும் இரண்டகி களாக மாறினர். வீரமும் திறனுமிருந்தும், பூழித்தேவனும், கட்டபொம்ம னும் வெற்றி பெறாததற்கு தமிழினத்தின் இரண்டகமேதுரோகமே) கரணியமாயிற்று. (எ) விடுதலைப் போர்கள் 1. பூலித்தேவன் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளயனை எதிர்த்து எழுந்த விடுதலைப் போர்களில் பங்கேற்ற முதல் வீரன் நெற்கட்டுச் செவ்வலி விருந்து ஆண்ட பூலித்தேவன் ஆவான். இசுலாமியரையும் ஆங்கிலேயரை யும் தமிழக மண்ணிலிருந்து அடியோடு விரட்ட எண்ணிய வீர மறவன், இவன் காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் பாளையப்பட்டுகள். பல இருந்தன. ஆயினும் அவை ஒற்றுமையின்றிச் சிதறிக் கிடந்தன. பூலித் தேவன் முயன்றதால் மேற்குத் திசையிலிருந்தவர்கள் ஒருவாறு அவன் கீழ் ஒன்றுபட்டனர். ஆனால், கிழக்குத் திசையிலிருந்தவர்கள் பாஞ்சாலங் குறிச்சிப்பாளையக்காரர் பொல்லாப்பாண்டியன் கட்டபொம்மநாயக்கன் தலைமையில் ஒன்றுகூடினர். இவன் கி.பி. 1735 முதல் 17 வரை இதனை யாண்டான். இவன் கீழ்தான் எட்டையபுரமும் இருந்தது. திருவிதாங்கூர் தனியே பிரிந்திருந்தது. கட்டபொம்மன் விடுதலை வேட்கை யற்றவன். அடிமை வாழ்வையே விரும்புபவன். இடைக்காலத்தில் மதுரையை இசுலாமியர் (ஆலம்கான் கைப்பற்றினர். அதனை மியானா, முடேமியா, 1 நபிகான் ஆகியோர் ஆட்சிப்பொறுப்பேற்று ஆண்டனர்.755-ல் சென்னை படைஞன் ஈரான் (கர்னல் ஸ்ரீரான்) மதுரைமீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இக் காலத்தில் ஆர்க்காட்டையாண்ட முகமதலி ஆங்கிலேயரின் வைப்பாள். அவன் அண்ணன் மாபூசுக்கான் ஆங்கிலேய ரின் அடிவருடி திருவிதாங்கூரை யாண்ட மார்த்தாண்டசேகரன் பலன் தாய்நில வரலாறு '' ஒன்றை மட்டுமே கருதிய மதியினன். இந் நிலையில் தென்மண்டலத்துப் பாளையங்காரின் நிலைமைகளையும் மக்களின் நிலைமைகளையும் நாமே ஊகித்தறியலாம். படைஞன் ஈரான் படையெடுப்பு (கி.பி. 1755) மதுரையைக் கைப்பற்றிய ஈரான் அதனைக் கான்சாகிபு என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுத் திருநெல்வேலிச்சீமைமீது படை யெடுத்தான். கட்டபொம்முவும் அவன் கூட்டாளிகளும் அடிபணிந்தனர். திறை செலுத்தி முடியும் வரை தம் ஆள்களைப் பிணையாக வைத்துச் சிறிது திறை செலுத்தித் தப்பினான் கட்டபொம்மு.பல பாளையங்களும் கோட்டைகளும் ஈரான் வசமாயின. வெற்றிப் பெருமிதத்தோடு, பூலித் தேவன் வாழும் நெற்கட்டுச் செவ்வலை ஈரான் முற்றுகையிட்டான், முற்றுகை நீண்டது; வெற்றியில்லை; வெட்கித் திரும்பினான். பூலித்தேவன் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முற்படல் பூலித்தேவன் வெள்ளயனை வெளியேற்றப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்தான். அடிவருடி கட்டபொம்மன் தவிரப் பிறர் இவன் கீழ் ஒன்றுபட்டனர். மாபூசுக்கான் கீழிருந்த திருவல்லிப்புத்தூரைக் கைப் பற்றினான். மேலும் பாளையக்காரர்கள் பலர் இவன் பக்கம் சேர்ந்தனர். இதனால் இவனிடம் 20 ஆயிரம் குதிரைப் படையும், 25 ஆயிரம் காலாள் படையும் சேர்ந்தன. ஆனால், கட்டபொம்மனும் பிறரும் மாபூஸ்கான் பக்கம் சேர்ந்து 1756-ல் பூலித்தேவனைத் தோற்கடித்தனர். இதனால் பாளையக்காரர் வலிமையற்று நின்றனர். இந் நிலையில் கான்சாகிபு தென்மண்டலப் பாளையங்களை வருத்தித் திறைதண்டினான். ஆங்கிலர் பேரம் சென்னை ஆங்கிலக் குழுவார் திருநெல்வேலியை அழகப்ப முதலி என்பவனுக்குக் குத்தகைக்கு விட்டு அவனிடமிருந்து பல இலக்கம் உருபாவைப் பெற்றுக்கொண்டனர். கொள்ளையடிக்க நினைத்த மாபூசுகான் திருநெல்வேலி கைவிட்டு நழுவியதைக் கண்டு பூலித்தேவன் பக்கம் சேர்ந்து வெள்ளையரை எதிர்க்கலானான். பூலித்தேவன் திருநெல் வேலியைக் கைப்பற்றினான். மாபூசுகானுடன் போர் மாபூஸ்கான் தன் வலையில் விழுந்ததும் பூலித்தேவன் ஆங்கிலரின் பேரச்சமாகத் திகழ்ந்த ஐதருடன் நட்புக் கொண்டான். ஆங்கிலரின் தலைநகரை இச் சமையம் ஃபிரெஞ்சியர் முற்றுகையிட்டனர். கான் சாகிபின் துணையுடன் அவர்கள் விரட்டப்பட்டனர். பின்னர் கான்சாகிபு பாளையக்காரர்களை விலைக்கு வாங்கினான். திருவிதாங்கூரைப் பூலித் தேவனிடமிருந்து பிரித்தான். கட்டபொம்மனைச் சேர்ந்த பாளையக் காரர்களும் அவன் பக்கம் சேர்ந்தனர். ஆங்கிலர் பட்டாளமும் ஆங்கிலரின் கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 91 கீழிருந்த மதுரை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி முதலிய இடங்களி விருந்த படைகளும் திருவிதாங்கூர்ப்படையும் மாபூஸ்கான் பக்கம் நின்றன. ஆயினும் பூலித்தேவனே வெற்றி பெற்றான். 1780-ல் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மு நாயக்கன் இறந்தான். அவன் மகன் செகவீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி ஆட்சிக்கு வந்தான். இவன் மானமுள்ளவன்; ஆனால், வீரமில்லாதவன். இவனுக்குப் பின் வந்தவனே விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்ட பொம்மன் ஆவான். 1760-ல் கான்சாகிபு கடைசியாகப் பூலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல் கோட்டையை முற்றுகையிட்டான். வெற்றி பூலித்தேவனுக்கே கிட்டியது. இதற்குப் பின்னும் இவன் எழுதிய மடல்களைக் கொண்டு பூலித்தேவனின் கோட்டைகளைக் கைப்பற்றி யதாய் அறிகிறோம். ஆனால், மாவீரன் பூலித்தேவனின் முடிவு நமக்குத் தெரியவில்லை . பூலித்தேவனுக்குப் பின் பாளையப்பட்டுகளின் மீது வெள்ளையர் ஆளுமை அதிகரித்தது. தமிழகம் மெல்ல மெல்ல ஆங்கிலர் வல்லாட்சியின் கீழ் அடிமையாகியது. கடைசியாகத் தமிழகத்தில் வெள்ளையரை யெதிர்த்துப் போரிட்ட வீர மறவர்கள் பலரில் வீரபாண்டியக் கட்ட பொம்மனே தலைசிறந்தவன். அடுத்து அவனைப்பற்றியறிவோம். 2. வீரபாண்டியக் கட்டபொம்மன் (கி.பி. 1790 - 1799) செகவீரன் சுட்டபொம்மன் (கி.பி. 1760 - 1790) வீர பாண்டியக் கட்டபொம்மனின் தந்தை. இவன் காலத்தில் தமிழகம் ஆர்க்காட்டு நவாபின் கீழிருந்தது. பாளையக்காரர்கள் மாறுபட்டு நின்றபோது ஆர்க்காட்டு நவாபு. சாதிகான் என்ற தன் படைத்தலைவனைத் திருநெல் வேலிச் சீமைக்கு அனுப்பினான். சாதிகாரன் செகவீரன் கட்டபொம்மனிடம் சென்று பாளையக்காரர்கள் திறை செலுத்தாதிருந்தமையைக் கூறினான், கட்டபொம்மன் திசைச் செலவு திக்குவிசயம் செய்து பாளையக் காரர்களையும், குறுநில மன்னர்களையும் சந்தித்துத் திறைத்தண்டல் செய்து சாதிகானுக்கு அளித்தான். இவன் திருச்செந்தூர் முருகன் பால் சிறந்த அன்பு கொண்டவன், இவன் மனைவியின் பெயர் சண்முகக்கனி என்பது. ஆறுமுகத்தம்மாள் என்றும் இவ்வம்மையார் அழைக்கப்பெற்றார். இவ்வம்மையார் 3-1-170-ல் பெற்ற வீரச்சேய்தான் வீர பாண்டியக் கட்டபொம்மன் என்பான். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்குத் தனவாய் குமாரசாமி மைத் துரை), துரைசிங்கம் (சுப்பையா) என்ற தம்பியர் இருவர் இருந்தனர். வீரபாண்டியக் கட்டபொம்மனின் மனைவி வீர சக்கம்மாள் என்பவள் ஆவாள். கட்டபொம்மன் தனது முப்பதாம் அகவையில் 1790-ல் பாஞ்சாலங்குறிச்சியின் அரசன் ஆனான். தம்பியர் இருவரும் இளவரசர்க னாகவும், சிவசுப்பிரமணியப் பிள்ளை என்பார் அமைச்சராகவும் அமர்ந்தனர். கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் நிதி தாய்நில வரலாறு ஊர்கள் இருந்தன. அவை ஆறு வாதங்களாகப் பிரிவு) பிரிக்கப்பட் டிருந்தன. அவை கவுணகிரி, பசுவந்தனை, புதியம்புத்தூர், ஆதனூர், வேடநத்தம், பட்டணமருதூர் என்பனவாகும். இவ்வணிதங்களைக் காக்கத் தளக் காவல், திசைக் காவல் படைகளைக் கட்டபொம்மன் திறம்பட அமைத்துச் செயல்பட்டான். இதனால், வழிப்பறி, கொள்ளை, கொலை, களவு முதலிய குற்றங்கள் குறைந்தன், மதுரை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளில் திருநெல்வேலிச் சீமையில் மட்டும் முப்பது பாளையங்கள் இருந்தன. அவையும், மற்ற பாளையங்களும் இவனிடம் தொடர்புகொண்டு இவனுக்கு இணங்கி நடந்தன. பாளையங்களில் ஏற்படும் உள்ளகக் குழப்பங்களையும், பிறங்கடையுரிமைப் போர்களையும் கட்டபொம்மன் தீர்த்துவைப்பான். மதுரையையாண்ட திருமலைநாயக்கன் தன் கட்டிவந்த அரண்மனைக்கு மாடன், முத்து என்னும் சக்கிலியர் இருவரைப் பிடித்து நாக்காவு கொடுக்க முற்பட்டபோது கட்டபொம்மனின் முன்னோன் ஒருவன் தலையிட்டு அவர்களை மீட்டான். அந்த அளவுக்கு நாயக்க மன்னரும் கூட்டபொம்மன் மரபினருக்கு மதிப்பளித்தனர். படை இக்கால முறைப்படி இவனிடமிருந்த வீரர்கள் வரிசைப்படுத்தப் பட்டிருந்தனர். இவரிடம்6N00 நாயக்க வீரர்களும், 500 மறவர்களும், 3000 பிறவினத்தவரும், பட்டாணியர், கவுண்டர், கவரையர், வலையர் முதலிய இனத்தைச் சேர்ந்த வீரர்களும் இருந்தனர். வாள், வேல், வல்லயங்கள், கம்புகள் ஆகிய படைகள் வகைக்கு ஆறாயிரமும், வில், கவண், பெரு வேட்டெஃகம், தடி, பரசுப்பிண்டிப்பாலும் முதலிய படைகளுமாக மொத்தம் இருபதாயிரத்திற்கும் மேலிருந்தன. குதிரைகளும், யானைகளும், ஒட்டகங்களும், காளைகளும், செம்மறிக் கிடாய்களும், வேட்டை நாய்களும் கூட இவன் படையில் இருந்தன. எண்பது கோட்டைகள் இவனுடைய ஆளுமையிலிருந்தன. வீரபாண்டியக் கட்டபொம்மனும் ஆங்கிலரும் ஆங்கிலர் கி.பி. 1792-ல் ஆர்க்காட்டு நவாபுக்கு உட்பட்டிருந்த திருச்சி, திருநெல்வேலிப் பகுதிகளிருந்த கலர்களில் வரித் தண்டல் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றனர். வரித் தண்டலுக்கு ஏந்தாக இப் பகுதிகளிலிருந்த நிலங்கள் முழுவதும் அளக்கப்பட்டதோடு, தரம் பிரிக்கப் பட்டு ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஆங்கிலருக்கு அடங்கி நடப்பவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர். இப்பணியை மேற் கொண்ட படைத்தளபதி லெட்டினென்ட் கர்னல் மேச்சுவல் என்பான் பாஞ்சாலங்குறிச்சிக்கு உட்பட்டிருந்த ஆதனூர் வணிகத்து அருங்குளம், சப்பலாபுரம் ஆகிய இரண்டு நிமளர்களை எட்டையப்புரத்துஎட்டையப்ப னுக்குக் கொடுத்துவிட்டான். இந் நிகழ்ச்சியிலிருந்தே கட்டபொம்மனுக் கும் ஆங்கிவருக்கும் பகைமை மூண்டது. மேலும் கட்டபொம்மன் பிற கிபி. 17. 18 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் பாளையக்காரர்களைப்போல் ஆங்கிலர்களைக் கண்டு வணங்காமலும், வரிகொடாமலும் வந்தான். இது பகைமையை மேலும் வளர்த்தது. ஆங்கிலர்கள் மைசூர்ப் போர்களிலும், வங்காளப் போர்களிலும், .. கருநாடகத்திலும், மராத்தியத்திலும் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதி லும் பெருங்கவனம் செலுத்தியதால், பாளையக்காரர்கள் எத்தகைய எதிர்ப்புமின்றி வளர்ச்சியடைந்தனர். மூன்றாம்மைசூர்ப் போருக்குப்பின் 1792-ல் சீரங்கப்பட்டணத்தில் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பின்னரே ஆங்கிலர்கள் தமிழகத்தின்மீது ஆளுமை பெற்றனர். 1795-ல் இராமநாத புரமும் வேறு சிலவிடங்களும் இவர்களின்கீழ் வந்தன. மணற்பாறையை யாண்ட இலக்குமண நாயக்கருடைய பாளையமும் ஆங்கிலரால் கைப்பற்றப்பட்டது. பழநிப்பாளையக்காரர், திண்டுக்கல் கோட்டையில் சிறைவைக்கப் பெற்றார். 176-ல் சங்கம்பட்டி. மடூர் ஏற்றிவடூர் முதலிய ஊர்களையும் ஆங்கிலர் கைப்பற்றினர். இவ்வாறு ஏதாவதொரு குற்றம் சாட்டப் பெற்றுப் பாளையங்கள் பலவற்றையும் ஆங்கில வணிகக் குழுவார் கைப்பற்றினர். வணிகக்குழுவும் பாளையக்காரர்களை ஒடுக்கும் ஆணைகளை இட்டதோடு ஒடுக்கும் செயல்களைத் தொடர்ந்து மேற் கொண்டது, பாளையக்காரருக்கு முதுகெலும்பாகவிருந்த மைசூரும் ஐதரும், திப்புவும் கடைசியாக நான்காம் மைசூர்ப் போரில் [I70) ஒடுக்கப்பட்டுவிட்டது. மைசூர்ப் போரின்போது கீழைத்திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் ஆங்கிலருக்குத் துணை நின்றனர். ஆனால் மேலைத் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் கட்டபொம்மன் தலைமையில் ஒன்றிணைந்து மைசூருக்கு நண்பர்களாயிருந்தனர். இதனால், கட்ட பொம்மன் மட்டும் தமிழகத்தில் ஆங்கிலாரின் ஒரே பகைவனாயிருந்தான். கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வதே தன் பிறப்புரிமை என்றான். 'வானம் பொழிகிறது; வையகம் விளைகிறது: உனக்கேன் நான் திறை செலுத்துவது?' என்பதே அவனுடைய பிறப்புரிமைவினார். ஆனால் ஆங்கிலர்கள் கிபி. 792 இலிருந்து. 1798 வரை தங்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் 3,310 'பகோடா' திறை செலுத்த வேண்டுமென்று பல நினைவூட்டல் அறிக்கை களையும் எச்சரிக்கை மடல்களையும், தூதுவர்களையும் அனுப்பிக் கேட்டனர். ஆலன் என்பான் பெயருக்காவது சிறு தொகையைக்கொடுக்கு மாறு கேட்டும் கட்டபொம்மன் அதே விடையையே கூறி அனுப்பினான். 1799-ல் நான்காம் மைசூர்ப் போர் நடந்து கொண்டிருந்தது, ஆங்கிலப் படைகள் அப் போருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அச் சமையத்தில் திருநெல்வேலியில் தண்டலராக Collector) இருந்தவன் சாக்சன் என்பவன் "ஆவான். 1798 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வீரபாண்டியனைத் திறைப் "பணத்துடன் வந்து தன்னைக் காணுமாறு சாக்சன் ஆணை பிறப்பித்தான். அதற்கிணங்கக் கட்டபொம்மன் திறைப்பணத்துடன் தன் பரிவாரம் சூழ சாக்சனைக் காணச் சென்றான். ஆனால், சாக்சன் அவனுக்கு நேர்காணல் 44 தாய்நில வரலாறு பேட்டி கொடுக்க மறுத்து காலத் தாழ்த்தம் செய்தவண்ணம் குற்றாலம், சொக்கம்பட்டி ஆகியவிடங்களைப் பார்வையிட்டு இராமநாதபுரம் சேர்ந்தான். கட்டபொம்மனும் தம்பியர் கானமத்துரையும், துரைச்சிங்க மும், அமைச்சர் சிவசுப்பிரமணியப்பிள்ளையும், படையில் ஒரு பகுதியும் சாக்சனைப் பின்தொடர்ந்து 23 நாள்கள் நடந்து, 400 கல் தொலைவைக் கடந்து இராமநாதபுரத்தையடைந்தனர். கட்டபொம்மன் கடைசியாகச் சாக்சனைச் சந்திக்க நேரும்போதும் திடீரென அவனைச் சிறைப்பிடிக்கச் சாக்சன் முயன்றான். வீரபாண்டியன் வீரிட்டெழுந்து தப்பினான். ஆனால், அமைச்சர் சிவசுப்பிரமணியப்பிள்ளை மட்டும் சிறைப்பட்டார். இச் செய்தியறிந்த சென்னை வணிகக் குழுவினர் கட்டபொம்மனையழைத்து உசாவி அவனுடைய அமைச்சரை விடுதலை செய்து சாக்சனை வேலை நீக்கம் செய்தனர், பின்னர் உஷாசிங்டன் திருநெல்வேலித் தண்டலராசு அமர்த்தப்பட்டான். அவன் கட்டபொம்மனுடன் நட்புப் பூண்டான். பாளையக்காரர் கூட்டணி 1799-ல் நான்காம் மைசூர்ப் போர் மும்முரமாய் நடந்து கொண் டிருந்தது. கட்டபொம்மனின் நிலையைப்பிற பாளையக்காரர்கள் கவலை யோடு நோக்கினர். ஆங்கிலப் படைகள் தென்பாண்டி நாட்டிலிருந்து மைசூர்ப் போரில் ஈடுபட்டிருக்கும் இந்நேரத்தில் பாளையக்காரர்களின் கூட்டணிப் படைகளைத் திரட்டித் தமிழகத்திலிருந்து ஆங்கிலரை அடியோடு விரட்டத் திட்டமிட்டனர். இதில் மும்முரமாய்ப் பங்கேற்ற வர்கள் சிவகங்கை மருது பாண்டியரும், திண்டுக்கல் கோபால நாயக்கரும், ஆனைமலை யாதும் நாயக்கரும் ஆவர். 1797லிலேயே மருது பாண்டிய ரால் பல பாளையங்களின் கூட்டணிப்படைகள் அமைக்கப்பட்டு விட்டன. நாலாபுரம், மன்னார்கோட்டைகோலார்பட்டி, செந்நெல்குடி ஆகியவை ஒன்றுகூடி ஒரு கூட்டணி அமைத்திருந்தன. கட்டபொம்மன் இவ்வணிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டான். கள்ளர்களும் இவன் கீழ் ஒன்று கூடினர். சென்னையில் ஆங்கில வாணிகக் குழுவாரின் நடவடிக்கைகளைக் கவனித்துச் செய்தியனுப்ப அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணியரின் தம்பி பாண்டியப்பிள்ளை அனுப்பப் பட்டான். கட்டபொம்மன் இத்தகைய மறைமுசுக் கூட்டணி செயல்படும் வதற்குப் பாஞ்சாலங்குறிச்சியைவிட மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடியிலுள்ள சிவகிரியே சிறந்ததெனக் கொண்டு அதனையும் தன் கூட்டணியில் சேர்த்தான். இதற்குச் சிவகிரிப் பாளையக்காரனின் மகனுடன் கமுக்க ஒப்பந்தம் செய்துகொண்டான். சிவகிரி புரட்சிக்கார ருக்குத் தலைமை இருக்கையாகப் போவதை எப்படியோ ஆங்கிலர் உணர்ந்துகொண்டனர். 1792 -லிருந்து சிவகிரி ஆங்சிலருக்கு உட்பட் டிருந்தது. அதனை முதலில் கைப்பற்றி அங்குத் தங்களின் தலைமை பிடத்தை அமைக்கப் புரட்சிக்காரரின் கூட்டணிப் படைகள் புறப் பட்டன, கி.பி. 17,18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் பாஞ்சாலக்குறிச்சி வீழ்ச்சி இதனையறிந்த தலைமையாளுநர் வெல்லெஸ்லி தஞ்சை திருச்சி, மதுரை ஆகியவிடங்களிலிருந்த ஆங்கிலப் படைகளைத் திருநெல்வேலி நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி ஆணையிட்டான். தளபதி பானர்மேன் தலைமையில் ஆங்கிலப் படைகள் 1799-ல் பாஞ்சாலங் குறிச்சிக்கோட்டையை முற்றுகையிட்டன. 300 அடி அகலமும் 500 அடி நீளமுமுள்ள அக் கோட்டையை ஆங்கிலப் படைகள் முற்றுகையிட்ட பின் இராமலிங்க முதலியார் என்பவன் தாதுசெல்வது போல் கட்டபொம் மனைக் கண்டபின் பானர்மேனுக்குக் கோட்டையின் உள்ளமைப்பையும் மற்ற கமுக்கங்ளையும் கூறிவிட்டான். எட்டையப்பனும் திருவிதாங் கூரானும் ஆங்கிலக் குழுவாருடன் சேர்ந்து கொண்டனர். பாளையக்காரர் படைகளுக்கு ஆளமைத்துரை தலைமை தாங்கினான், கடைசியில் கடுந் தாக்குதலுக்கு ஈடு கொடுத்த கோட்டை சரிந்தது. பாளையங்கோட்டையி லிருந்து மேலும் ஆங்கிலப்படைகள் வந்தன. கோலார்பட்டி, நாகலாபுரம் முதலிய இடங்களில் போர்கள் நடந்தன. சிவசுப்பிரமணியபிள்ளை சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் கலாப்பூர்க் காட்டுக்குள் ஓடி மறைந்தான். ஆனால், அவனைப் புதுக்கோட்டையரசன் விசய இரகுநாத தொண்டைமான் தன் ஆள்களைவிட்டுத் தேடிப்பிடித்துப் பானர் மேனிடம் ஒப்படைத்தான். இதனையறிந்த பிற புரட்சிக்காரர்கள் சிவகங்கை, திண்டுக்கல் முதலிய விடங்களுக்கு ஓடி மறைந்தனர். கயத்தாற்றில் கட்டபொம்மனைத் தாக்கிவிடல் கட்டபொம்மனையும், பிற புரட்சி வீரர்களையும் சிறைசெய்து உசாவல் நடத்தினர். சிவசுப்பிரமணியம் பிள்ளையை நாகலாபுரத்தில் தாக்கிவிட்டனர். சிவகிரிமீது படையெடுத்தது. ஆங்கில ஆட்சிக்குட் பட்ட மக்களைக் கொள்ளையடித்தது, தீயிட்டது, கொலை செய்தது, ஆங்கிலருக்கு எதிராகக் கூட்டணியமைத்தது போன்ற கொடிய குற்றங் கள்ளுக்காக 171017 அன்று சுயத்தாறு என்னுமிடத்தில் கட்டபொம்மன் தூரக்கிலிடப்பட்டான், கட்டபொம்மன் தன்னைக் காட்டிக்கொடுத்த வரைக் கண்டு ஏளனமாய்ச் சிரித்துக்கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டான். வீரபாண்டிய கட்டபொம்மனைப்பற்றி இருவகைக் கருத்துகள் நிலவுகின்றன. இவன் தலைசிறந்த வீரன், சாகும்போதும் புன்னகை பூத்த முகத்தோடு இறந்தானென்பது யாவரும் ஒப்பும் கருத்து. ஆனால், அவன் ஓர் உண்மையான விடுதலை வீரன் அல்லனென்பர். இருபத்து மூன்று நாள்கள் நானூறு கல் தொலைவு நடந்து திறைப்பணத்துடன் சாக்சனைப் பின் தொடர்ந்து சென்றான். குடிமக்களைக் கொள்ளையடித்துத் தீயிட்டுக் கொலை செய்தானென்பன போன்றவற்றை ஆயும் போதும், ஆங்கிலேயர் அழைத்து உசாவிய போதும் அவர்களுக்கு அடங்கி நடப்பதாகவே கூறினானென்பதை நோக்கும்போதும் இவன் ஒரு தன்மான வீரன்தானா புதி தாய்நிலவரலாறு என்பது ஐயத்திற்குரிய தென்பர். மேலும் இராமநாதபுரம் நிகழ்ச்சிக்குப் பின்னர் பாளையக்காரர்களை இணைத்து ஒரு கூட்டணியை அமைத்த வர்கள் மருது பாண்டியரும், கோபால நாயக்கருமே ஆவார். இவர்கள் நாடு விடுதலை அடையவேண்டுமென்ற விடுதலை வேட்கையும், நாட்டுப் பற்றும் உடையவர்கள் என்பதையறிகிறோம். இதற்குப் பின்னர்தான் கட்டபொம்மன் களம் புகுந்தான். ஆனால், அவனிடம் தன் வீரத்தைக் காட்டவேண்டுமென்ற உணர்வு காணப்படுகிறதேயொழிய விடுதலை வேட்கையோ, நாட்டுப் பற்றோ காணப்படவில்லை, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைத் தாக்கப்பட்டபோதுதான் இவன், தன் வீரத்தைக் காட்டி னான். பின்னர் ஓடி ஒளிந்து கொண்டான். அதற்கு முன் தொடர்ந்து திறை செலுத்தி வந்தான். ஆகவே, இவன் ஒரு புரட்சிக்காரன் என்று கூடக் கூறமுடியாது என்பர். இருப்பினும் பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலை யெழுச்சியும், வீரவுணர்வும், நாட்டுப்பற்றும் ஏற்பட வித்திட்டவன் வீரபாண்டியக் காட்டபொம்மனே எனலாம். இவன் இட்ட வித்து இவனுக்குப்பின் இவனுடைய தம்பிகளால் பயிராக்கப்பட்டு வெள்ளை யனை வெறியேற்றும் ஒரு நீண்ட போர்க்களமாக மாறியதைக் காண்கி றோம். ஆகவே, இவன் ஒரு சிறந்த விடுதலை வீரனே. ஆங்கிலக்குழுவாரின் நடவடிக்கைகள் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், மற்ற உறவினர்களும், பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை , கோலார்பட்டி, குளத்துார், கடல்குடிப் பாளையக் காரர்களும் சிறையில் வதிந்தனர். கட்டபொம்மனை அழிப்பதில் ஆங்கிவருக்குத் துணைபுரிந்த எட்டயபுரம் எட்டப்பனுக்கு அருங்குளம் என்ற ஊரும் பல்வேறு பொருள்களும் பரிசளிக்கப்பட்டன. மரியாச்சி, மயில்மந்தை முதலிய பாளையக்காரர்களும் பரிசு பெற்றனர். சென்னை யாளுநர் எட்வர்டு கிளைவு என்பான் கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த புதுக்கோட்டையரசன் தொண்டைமானுக்கு ஒரு குதிரை யையும், விலையுயர்ந்த பொன்னாடையையும் பரிசாக அளித்தான். பிற பாளையக்காரர்கள் எச்சரிக்கப்பட்டனர். கட்டபொம்மன் பாஞ்சாலங் குறிச்சிப்பாளையத்திற்கு உட்பட்டிருந்த மர்கள் ஆங்கிலவாட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. இவ்வூர்களிலிருந்து வரிகளைப் பெற்றதோடு தேசக் காவற்படைகளையும் ஆங்கிலக்குழுவே அமைத்தது. பாளையக்காரர்கள் தங்கள் கோட்டைகளை இடித்துவிடவும், படைகளைக் கலைத்துவிடவும் ஆணையிடப்பட்டனர். தனிப்பட்ட முறையிலும் இவர்கள் படையேந்திச் செல்லக்கூடாதெனவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். 'படேல்கள்' (மணியக்காரர்} தாருக்குள் படைக் கருவிகள் உருவாக்குபவர்களையும், படைக்கருவிகள் வைத்திருப்போரையும் பற்றிய செய்திகளை அரசுக்குத் தெரிவிக்கக் கட்டளையிடப்பட்டனர். எல்லைகளிலும், புரட்சி தோன்ற லாமென ஐயுற்ற இடங்களிலும் ஆங்கிலப்படைகள் நிறுத்தப்பட்டன. 111-120 கிபி.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதால் நாட்டில் அமைதி யேற்பட்டது. பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப் பட்டன. பாளையக்காரர்கள் பல்பிடுங்கிய பாம்பு போலாயினர், விடுதலைப் புரட்சி (கி.பி. 1800-1801) கிபி.1801-ல் தமிழகத்தில் வெள்ளையரை வெளியேற்றும் மாபெரும் விடுதலைப் புரட்சியொன்று தோன்றியது. கட்டபொம்மனின் வீழ்ச்சிக்குப் பின் ஆங்கிலர்கள் மேற்கண்ட அடக்குமுறைகளைக் கையாண்டு தமிழரை ஒடுக்க முற்பட்டனர். பாளையங்கோட்டைச் சிறையில் கட்டபொம்மனின் தம்பி அமைத்துரையும், அவனுடைய உறவினர் பதினெழுவரும் மற்றும் பலரும் வதைக்கப்பட்டு வந்தனர். இவர்களை மீட்கவும், வெள்ளையரை வெளியேற்றவும் ஒரு புரட்சிப்படைதிரட்டப்பட்டது. சிவகங்கை மருது பாண்டியரும், திண்டுக்கல் அரசர் கோபால நாயக்கரும், மலபார் மன்னர் கேரளவர்மரும், கிருட்டிணப்ப நாயக்கரும், மைசூர் தூரந்தாசியும் கமுக்கமாய் இணைந்து ஒரு சதித்திட்டம் தீட்டினர். அதன்படி கிபி. 1800-ல் கோயம்புத்தூரில் திடீரென ஒரு புரட்சி கிளம்பியது. ஆனால், வெற்றி பெறவில்லை, இதே போன்ற கிளர்ச்சிகள் மதுரையிலும் இராமநாதபுரத்தி ஓம் தோன்றித் தோற்றன. 1801 ஆம் ஆண்டு பிப்பிரவரியில் ஊரமைத்துரை யும் பிறரும் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பினர், ஊமைத் துரையின் சூழ்ச்சியால் புரட்சி வீரர்கள் காவடி தாக்குபவர்களாக நடித்து மற்றவர்களையும் சிறையிலிருந்து விடுவித்தனர், ஒன்றிணைந்த புரட்சி வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சியை மீட்டனர். சிவத்தையாவை அதனை யாளும்படி அமர்த்தினர். இதனையறிந்த மற்ற பாளையக்காரர்களும் ஆங்கிலவாட்சியைப் புறக்கணித்துத் தனித்தாள முற்பட்டனர். இச் சமையத்தில் மருதுபாண்டியரால் அனுப்பப்பட்ட 30,000 வீரர்கள் திருநெல்வேலியை அடைந்தனர். பாஞ்சாலங்குறிச்சி திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய இடங்கள் புரட்சிக்காரரிடம் வீழ்ந்தன, தூத்துக்குடி - கைப்பற்றப்பட்டது. 1799ல் வெள்ளையரின் வேட்டெஃகக் (பீரங்கி குண்டுகளுக்கு இரையாகித் தரைமட்டமான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஐந்தே நாள்களில் புரட்சி வீரர்களால் பொலிவுடன் எழுந்து நின்றது. தளபதி மெக்காலே என்பவன் தலைமையில் வந்த ஆங்கிலப் படைகள் இக் கோட்டையைச் சூழ்ந்து பெருவேட்டெஃக மழை பொழிந்தன. ஆனால், ஒரு திங்களுக்குப் பின்னர்தான் அதனை ஆங்கிலர் கைப்பற்றினர். பின்னர் இராமநாதபுரம் மதுரை முதலிய பகுதிகளிலும் புரட்சி பரவியது. மருதுபாண்டியரும், முத்துக் கருப்பத்தேவரும் தலைமை யேற்றனர். தொண்டி ஈழத்திலிருந்து கலங்களின் வழியாக வந்த படைக் கருவிகளும், உணவுப்பொருள்களும் துறைமுகத்தின் மூலம் புரட்சிக் காரருக்குச் சென்றன. மதுரையின் மேற்குப்பகுதி கள்ளர்களால் கைப்பற் றப்பட்டது. வெள்ளை மருது மகன் செவத்தம்பி படைகளைத் திரட்டித் தஞ்சைமீது பாய்ந்தான். பட்டுக்கோட்டை அறந்தாங்கி, அடியார்குடி முதலியன அவன் வசமாயின. ' தாய்நில வரலாறு இவ்வாறு பரவிய புரட்சியை ஆங்கிலர்கள் அடக்கி ஒடுக்கினர். புரட்சிக்காரரின் தளபதி வெள்ளை மருதுவும், அவனுடைய தம்பி சின்ன மருதுவும் தாக்கிவிடப்பட்டனர். இவர்களைப் போலவே மற்ற யாவரும் தூரக்கிலிடப்பட்டனர். பலர் அகதிகளாய் ' அட்மைரவ் நெல்சன்' என்ற சுப்பலிலேற்றப்பட்டுத் தூத்துக்குடியிலிருந்து பினாங்குக்கு அனுப்பப் பட்டனர். கைகளில் கட்டிய இரும்பு விலங்குகளுடன் நாள்கள் கப்பலில் படாத கொடுமைகளுக்குள்ளாகிக் கொண்டு செல்லப்பட்ட விடுதலை வீரர்கள் - தமிழ் மறவர்கள் எழுபது பேர் அக் கரையை அடைந்தனர், இருவர் வழியிலேயே இறந்தனர். பினாங்கில் சிபி. 1802-ல் நடுக்காட்டில் விடப்பட்ட இந்த எழுபது பேரும் என்னவாயினரோ! பாளையக்காரர் முறை ஒழிப்பு கி.பி., 18 டிசம்பரில் சென்னையாளுநர் எட்வர்டு கிளைவு பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித்தான், பின்னர், பாளையக்காரர்கள் "ஜமீன்தார்கள்', 'ஜாகீர்தார்கள் என்ற முறையில் அறியப்பட்டனர். இவர்களின் உயிரும், உடைமைகளும் காப்பாற்றப்பட்டன. இவர்கள் வரிகளைத் தண்டல் செய்து அரசுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆங்கிலவரசின்மீது பழியின்றிப் பழைய பாளையக்காரர்கள் ஜமீன்தார்' என்ற புதிய பெயரில் காப்பாற்றப் பட்டதோடு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிமுறையும், திட்டங் களும் ஏற்படுத்தப்பட்டன. சிவகிரி, இராமநாதபுரம் முதலிய இடங்களைப் பழைய சிற்றரசர் வழியினரையே ஆளும்படி ஆங்கிலக் குழுவார் அமர்த்தினர். பாஞ்சாலங் குறிச்சியும் வேறு சில பாளையங்களும் ஆங்கிலரின் நேர்முக ஆட்சியில் வந்தன. பாஞ்சாலங்குறிஞ்சி' என்ற பெயரையே எல்லா ஆவணங்களி லிருந்தும் நீக்கியதோடு கோட்டையிருந்த இடத்தையும் உழுது பயிரிடச் செய்தனர். வணிகக்குழுக் காவல் நிலையங்கள் பல நாடுமுழுவதும் ஏற்படுத் தப்பட்டன. ஆங்கில நயன்மையர் நீதிபதிகள் அமர்த்தப்பட்டனர். பாளையக்காராரின் கோட்டைகள் யாவும் இடித்து நிரவப்பட்டன.நெடும் பாதைகள் படைப்பாதைகள் போடப்பட்டன. அஞ்சற் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டது. இரண்டரை நாற்றாண்டுகள் நிலவிவந்த பாளையப் பட்டு முறை ஒழிந்து 'ஜமீன்தாரி முறை' தமிழகத்தில் தோன்றியது. (12) கி.பி. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் இந்திய வரலாற்றில் இவ்விரு நாற்றாண்டுகள் வரலாற்று முகாமை வாய்ந்த நூற்றாண்டுகளாகும். ஆட்சிமுறை, நாகரிகம், கல்வி, சமயம், போக்குவரத்து, போர்முறை முதலிய எல்லாத் துறைகளும் மேலைநாட்டு : முறையில் வளர்ச்சியடைந்தன. மக்கள் மேலை நாட்டு நாகரிகத்தில் மூழ்கித் தாயகப் பண்புகளைப் புறக்கணித்து நின்றனர். சிலர், பின்பற்ற வேண்டியது தாயகத்தின் பண்டைய பண்பாடுகளா, அன்றி மேலைநாட்டுப் பண்பாடுகளா எனும் மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தனர். வெகு சிலரே தாயகப் பண்புகளைக் கடைப்பிடித்து முழுமையாகப் பின்பற்றி, அடிமைத் தளையை அறுத்தாக வேண்டுமென முடிவுசெய்தனர். இவ்வாறு இந்தியா - இருளில் மூழ்கிக் கிடக்கும்போதுதான் 'இருளுக்கும் ஒளியாக, இருளை யகற்றும் பகலவனாக, அடிமைத்தளையறுக்கும் அண்ணல் காந்தியடிகள் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார்' என்னும் பண்டித சவர்லால் நேருவின் கூற்று இந்த நூற்றாண்டுகளின் இந்திய வரலாற்றை உய்த்துணரச் செய்கிறது. சமயத்தால் சஞ்சலத்தையே வாழையடி வாழையாகத் துய்த்துவந்த தாழ்த்தப்பட்டவர் கிறித்தவராக மாறினர். ஆங்கிலப் படிப்பில் வேட்கை கொண்டு பலர் தாய்மொழியை மறந்தனர். சாதிகள் சதிராடின. இந் நிலையில் ஆளவந்தவர்கள் தங்களின் நலனை முதன்மையாகவும், இந்தியர் நலனை இரண்டாவதாகவும் கருதிப் பல அரசியல், பொருளியல், கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இந்தியர் நலனுக்கே எல்லாம் செய்வதாக முதலைக் கண்ணீர் வடித்தனர். பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் மலிந்தன. ஆட்டுமந்தைகளான இந்தியர் காலப்போக்கில் ஓநாய்களின் ஓலத்தின் உண்மையை உணர்ந்தனர். அடிமைத்தளையறுக்க முனைந்தனர். ஐயகோ! அந் நிலையிலும் அவர்களின் பிறப்பிலே ஊறிவிட்ட சாதி, சமயக்காழ்ப்புகளை முதுகிலே சுமந்துகொண்டு நைந்து சாய்ந்தனர். காந்தி யடிகளார் அவர்களுக்கு முட்டுக்கொடுத்து, மூடப் பழக்கவழக்கங்களை மேலோட்டமாக மூடிமறைத்து, விடுதலையுணர்ச்சியில் அவற்றைத் தற்காலிகமாக மறையச் செய்து, 'அமைதி' (சாத்வீக) முறையில் போராடி * விடுதலையடையச் செய்தார். 10) தாய்நில வரலாறு தமிழகம் 18 - 19 F~> நூற்றாண்டுகள் சந்திரகிரி ஜார்ஜ் கோட்டை வேலூர் ஆர்க்காடு எசேக்கியா -சன்னப்பட்டணம். ரவரி * 1செங்கற்பட்டு வந்தவாசி / E. * * * மைசூர் போர்ட்டோ நோன்பா * திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் 1* நாகப்பட்டினம் மதுரை * கச் சி கர் . குமரிமுனை படம் தி விடுதலை கண்ட இந்தியா புது வரலாற்றைப் படைக்கப் பீடுநடை போட்டுச் செல்ல முனைந்தது. மீண்டும் இந்தியரின் குருதியோடு கலந்துவிட்ட சாதி, சமய வெறிகள் தலைதூக்கின. இவற்றோடு போராடிக் கொண்டே மெல்ல, மெல்லப் பல இயல்கள் இன்று படைக்கப்படுகின்றன, இத்தகைய வரலாற்றில் தமிழகமும் ஓர் உறுப்பாக இணைந்த கூறாக வுள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் இவ்விரு நூற்றாண்டுகளிலும் வளர்ந்த பொருளியல், குறுக்கிட்ட பஞ்சங்கள், நயன்மையும் காவலும், மொழி விடுதலைப்போரில் தமிழரின் பங்கு, குமுகாய வளர்ச்சி, அரசியல் மேம்பாடு ஆகியவற்றை இவ்வியலில் மிகச் சுருக்கமாகக் காணலாம். கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 10]! (அ) குமுகாய அரசியல் இயக்கங்கள் இந் நுாற்றாண்டுகளில் சென்னை மண்டிலம் நாட்டின் விடுதலையில் முழு மூச்சாகப் பங்கேற்றது. ஆயினும், வேகமாக வளர்ந்து வந்த சாதிய உணர்வுகளைத் தடுக்க முடியவில்லை . வடக்கில் வருணாசிரமதருமமும்" பல்வேறு சாதிப் பிரிவுகளும் தலைவிரித்தாடின. இங்கும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் எனும் இரு பெரும் பிரிவுகள் உருவாயின. அதற்குப் பெரிதும் கரணியமா யிருந்தவர்கள் நயன்மைக் கட்சியாரும் தந்தை பெரியாரும் ஆவர். இவர்கள் கையாண்ட ஒரு மாபெரும் பண்பியல் பட்டாங்கு, பார்ப்பனரல்லாதார் அனைவரையும் சேர்த்துத் திரவிடர்' என்றும், ஆரியம் கலவாததூய பண்புகளைத் திரவிடப் பண்புகள்' என்றும் கூறி இத்தாலியில் எழுந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியைப் போல் திரவிடத்தில் மறுமலர்ச்சியைப் படைத்தது. 1871-ல் சென்னை மண்டில மக்களின் தொகையைக் கணக்கெடுத்த எச். ஏ. கிடுவர்ட்டு என்பார், சென்னை மண்டலத்தில் பார்ப்பனர், மராத்தியர், இசுலாமியர் தவிர்த்த மற்ற யாவரும் திரவிடரே யென்றும், மனுவால் நிலைநாட்டப் பெற்ற வருணாசிரம தருமப் பாகுபாடுகளையும், சாதிமுறைகளையும், இத் திரவிடர்கள் அறியாதவர்களென்றும், இவை பார்ப்பனர்களால் பிற்காலத் தில் புகுத்தப்பெற்றவையென்றும் கூறினர். 'இந் நாட்டில் மக்கள்தொகை யில் நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பேராகவுள்ள திரவிடர் மூவராயுள்ள பார்ப்பனருக்கு அடிமைகளாய் சூத்திரர்களாய் இருப்பதின் கமுக்கம் என்னவெனப் பலரும் ஓர்ந்தனர். கடவுள், தலைவிதி, மறுபிறப்பு, தருமம். கருமம் முதலிய படைகளைக்கொண்டு திரவிடரை இவர்கள் அடிமை யாக்கியதை உணர்ந்தனர். பார்ப்பனர் குமுகாயத்தின் உச்சியில் இருப்பதைப் போலவே தாங்களும் இருக்க வேண்டுமென எண்ணிய சிலர் தங்களின் சாதிகளைத் தோற்றரவுத் (அவதாரம் தொல்கதைகளோடு இணைத்தும் பெயர் மாற்றம் செய்து கொண்டும், பார்ப்பனரைப்போவவே பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டனர். சைவ வேளாளர், செட்டியார் முதலியோர் பார்ப்பனரை விடவும் மிக உயர்ந்த வைதீகர்கள் ஆயினர். பார்ப்பனரல்லாதாரைத்தொடவும் மறுத்தனர். இடையர் யாதவரென்றும், அம்பட்டர் மருத்துவரென்றும், செம்படவர் பருவதராச குலத்தவ ரென்றும், வண்ணார் இராசக்களென்றும், கம்மாளர் விசுவப் பிராமண ரென்றும், வன்னியர் வன்னியகுலச் சத்திரியர் அல்லது அக்கினிகுலச் சத்திரியரென்றும், சாணார் சான்றோர் நாடார் என்றும் இவ்வாறு பலரும் பலவாறு பார்ப்பனியப் பாதையைப் பின்பற்றித் தங்கள் சாதிகளை உபாத்திக்கொண்டனர். தங்கள் பெயருக்குப்பின்னால் சாதிப் பட்டப்பெயர் களைச் சூட்டிக்கொண்டனர். கம்மாளர் ஆச்சாரி, பட்டர் என்ற பட்டங்களைச் சூடி ஆச்சாரி, பட்டாச்சாரி எனும் பார்ப்பனப் பட்டங்க ளாக இவற்றையெண்ணி மகிழ்ந்தனர். வெள்ளைக்காரனைப் பின்பற்றிக் கருப்புத்துரை'யாகவும், "துரைசானி'யாகவும், மாறிய பலரும், பார்ப்ப, 102 தாய்நில வரலாறு னரைப் பின்பற்றி ஆச்சாரி, பட்டாச்சாரி,தீட்சதர், ஐயர், இராவ் முதலியன. வாக மாறிய சிலரும் திராவிடப் பண்புகளை மறந்து ஆரிய, ஆங்கிலேய மாயைகளில் மயங்கி நின்றனர். இத்தகைய தங்களின் பொய் வேடங்களை மெய்ப்பிக்கக் குல வரலாறு 'சுளையும் படைத்தனர். ஒவ்வொருவரும் சந்திரகுலம், சூரியகுலம், அக்கினிகுலம் முதலியனவாகவும் இராமன், இலக்குமணன், கிருட்டிணன், பாண்டவர் முதலிய இதிகாச நாயகர்க ளோடும், தோற்றரவுகளோடும் இணைத்துப் பெருமையடைந்தனர். கருணீகர் புராணம், பாரத மாலை, சாணார் விகர்ப்ப வினாவிடை சாணார் குல மரபு, பாண்டிய குலவிளக்கம், பலிசாவாரு புராணம், தேசியபுராணம், சேனைக்குலத்தார் பட்டயம், சேனைத்தலைவர் விளக்கம், வேளாளர் புராணம், தேவாங்கர் புராணம் முதலிய பல நூல்கள் தோன்றி ஒவ்வொரு சாதியையும் ஒவ்வொரு இதிகாச, தொல்கதைத் தோற்றரவுசுளுடன் அனைத்துச் சாதி உயர்வையும் பெருக்கையும் பெருக்கின. பட்டுக்காரர் எனப்படும் தேவாங்கர் தங்களைச் சௌராட்டிரப் பார்ப்பனர் என்றே அழைத்துக்கொண்டனர்.சாதியைக் காக்கும் பட்டப்பெயரில்லாஎவரும் அன்றைய தமிழகத்தில் இல்லை எனலாம், தாழ்த்தப்பட்டவர்களும் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பிள்ளைகள் சாம்புவன், தங்கபான் முதலிய பட்டப்பெயர்கள் சேர்த்துக்கொண்டனர். பார்ப்பனரல்லாதார் முதலியார், செட்டியார், ரெட்டியார், உடையார், தேவர், மூப்பனார், பிள்ளை முதலிய எண்ணிறந்த சாதி ஒட்டுப்பெயர்களோடும், இராவ்பகதூரர், ராவ்சாகேப், திவான்பகதரர் முதலிய வெள்ளையன் வழங்கிய ஒட்டுப் பெயர்களோடும் காணப்பட்டனர். வெள்ளையனிடம் பட்டம் பெற்றவர் மேனாட்டுப் 'பிரபு'க்களாகவே இறுமாந்து நடந்தனர். பார்ப்பனர் பலரும் இத்தகைய பட்டங்களையும் பெற்று இரட்டை மடங்கு உயர்ந்தனர். ஒவ்வொரு சாதியிலும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன. பார்ப்பனருக்குள்ளேயே பத்தொன்பது முகாமைப் பிரிவுகள் காணப் பட்டனவெனில், பிறசாதி உட்பிரிவுகளை நாமே கிக்கலாம். வேளாளர் சாதிக்குள் ஐம்பத்து நான்கு உட்பிரிவுகளும், இடையருக்குள் பதின்மூன்று உட்பிரிவுகளும், கம்மாளருக்குள் பத்து உட்பிரிவுகளும், கணக்கருக்குள் ஒன்பது உட்பிரிவுகளும், கைக்கோலருக்குள் பதினோரு உட்பிரிவுகளும், வன்னியருக்குள் பதினைந்து உட்பிரிவுகளும், ஆதிதிராவிடருக்குள் ஏழு உட்பிரிவுகளும் காணப்பட்டனவெனில் இக் காலச் சாதிப்பிரிவுகள் எண்ணிலடங்காவென்பது புலனாகிறது. இப்பிரிவுகளுக்குள்ளும் துணை உட்பிரிவுகள் பல உண்டு. இதனால்தான் ஒவ்வொரு திரவிடனும் ஒவ்வொரு தனிச்சாதியாகக் காணப்பட்டான் என்றும், திரவிடத்தில் திரவிடனைக் காணமுடியவில்லை; ஆனால் செட்டியார், ரெட்டியார், உடையார், முதலியார், நாயுடு, நாயக்கர்களையே காணமுடிகிறது என்றும் ஓர் அயல் நாட்டான் உளம் வெதும்பிக் கூறினான். இவர்களைத்தவிர இசுலாமியர், கிறித்துவர், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் முதலியோரும் இருந்தனர். நாட்டையே ஆட்டிப் கிபி.18, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 103 படைக்கும் ஆங்கிலன் தலைக்குமேல் உட்கார்ந்திருக்க அடிமைகளாய் நைந்துகிடந்த திரவிடர், சாதி, சமயப்பிரிவுகளால் இவ்வாறு சிதறுண்டு கிடந்தனர். பார்ப்பன மேலாண்மை (ஆதிக்கம்) அலெக்சாந்தர் நாடுகளை வென்று மக்களின் உடலை அடிமைப் படுத்தினான். ஆனால், அசோகனோ பலநாட்டு மக்களின் உள்ளங்களை அடிமைப் படுத்தினான் என்பர். இதைப்போலவே, வெள்ளையர், இந் நாட்டை அடிமைப்படுத்தினர். ஆனால், பார்ப்பனர் இந் நாட்டின் சிந்தனையை அடிமைப்படுத்தினர் என்றார் தந்தை பெரியார். இக்கூற்றைக் கீழ்க்காணும் உண்மைகள் மெய்ப்பிக்கின்றன. 11-ல் சென்னை மண்டலத்தில் பார்ப்பனர் 13,10,350 பேர் இருந்தனர். பார்பனரல்லாதார் 359 நடி4பேர் இருந்தனர். அதாவது இந்து மொத்த மக்கள் தொகை கெ5 விழுக்காடு; மீதியுள்ள 35 விழுக்காடு பார்ப்பன ருடையது. ஆனால், இவர்கள் கல்வி, அரசுப்பணி, ஆட்சிமன்றம் முதலிய வற்றில் 95 விழுக்காட்டிற்கும் மேலாக நிரம்பி இருந்தனர்.(எ-டு). 1918ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக அறிக்கையின் இனங்கலைப் பட்டம் பெற்ற 15, 209 பேரில் பார்ப்பனப் பட்டதாரிகள் 10 269 பேர் என்றும், முதுகலைப் பட்டம் பெற்ற பிள் போரில் பார்ப்பனர் 38 பேர் என்றும், சட்டம் பயின்ற பட்டதாரிகள் 54 பேர்களில் பார்ப்பனர் 48 பேர் என்றும், பொறி யியல் பட்டதாரிகள் கப்போரில் பார்ப்பனர் 121 பேர் என்றும், ஆசிரியப் பணியிலிருந்த 1498பேரில் பார்ப்பனர் 1094 பேர் என்றும், அறிகிறோம். இதிலும் பிற்பட்டோரின் (சூத்திரனின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இசுலாமியர், கிறித்தவர் ஆகியோரும் மேல் சாதியினரும் பார்ப்பனருக்கு அடுத்தபடியாகக் கல்வியில் முன்னேறியிருந்தனர். எ-டு: அரசுப்பணியில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களாக (Gazetted Officer) இருந்தவர்களில் பார்ப்ப னரே அதிகம். அரசிதழ் பதிவிலாப் பணிகளிலும் அவர்களே அதிகமாயிருந்தனர். ஆண்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அரசிதழ் பதிவியாப் பணியாளர் பா பா. அ பா. அ. 1pK 1gif) 18 102t| 193) ఈ பப்சிப் - 26 - (* பா-பார்ப்பனர் பா அ : பார்ப்பனரல்லாதார்) 1944ஆம் ஆண்டுக்கணக்கு பா. 55 /15 51 104 தாய்நிலவரலாறு 130 இனம் மக்கள் தொகை அரசிதழ் பதிவு பதவி விழுக்காடு அலுவலர் பதவி விழுக்காடு எண்ணிக்கை 1. பார்ப்ப னர் 8230 2. முற்பட்ட வகுப்பினர் 3. கிறித்துவர் 1) 4. இசுலாமியர் 5, பிற்பட்ட வகுப்பினர் 6. தாழ்த்தப்பட்டோர் ஆட்சிப் பீடத்தில் கல்வி, அரசுப் பணிகளில் மட்டுமேயல்லாது ஆட்சிப் பீடத்திலும் பார்ப்பனர் ஆளுமை பெற்றிருந்தனர்.194-ல் தமிழ்நாடு பேராயக்கட்சியில் பதினாறு தலைமைப் பகுதிகளில் பதினான்கு பதவிகளைப் பார்ப்பனர் பெற்றிருந்தனர். இதற்கு மற்றவரின் கல்வியின்மையும், மூடநம்பிக்கையும், தாளிகை பத்திரிகை) வலுவின்மையுமே கரணியமாகும். இக் காலத்தில் சிறப்புற்றிருந்த இந்து, சுதேசமித்திரன் ஆகிய தாளிகைகள் பார்ப்பன ருடையவை. நியூ இந்தியா என்ற தாளிகை பார்ப்பனப்பற்றுடையது. 1916-ல் நடந்த சென்னை மாநகரத்தேர்தலில் பார்ப்பனர் 10 பேரும் பார்ப்பன ரல்லாதார் 5பேரும் வெற்றி பெற்றனர். 1919 ஆம் ஆண்டுத் தேர்தலில் 3640 ஒப்போலையரில் வாக்காளரில்) 757 பேர் பார்ப்பனர். இவர்களில் ஒப்போலையாவாக்களித்தோர் 2000 பேர்கள். ஆனால், இவர்கள் தேர்ந்தெடுத்த ஒன்பது வேட்பாளரில் நான்கு பேர் பார்ப்பனர்கள். ஒருவர் பார்ப்பனப் பற்றாளர் எனில் பார்ப்பனியத்தின் வலிமையை ஊகிக்கலாம். ஆனால், 1925-லிருந்து 1930 வரையிலும் பார்ப்பனரல்லாதாரே ஆட்சிப் பீடத்தில் அதிகம் இடம்பெற்றனர். 1950க்குப் பின் பார்ப்பனரல்லாதார் (பிற்பட்டோர் முன்னேற்றம் பெற்றுத் தொடர்ந்து ஆட்சிப் பீடத்தில் ஆளுமை பெற்றனர்.1987 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக ஆட்சிப் பீடத்தில் பார்ப்பனரே இல்லை. மேற்கண்ட விரவங்களை ஒரு கணம் கூர்ந்து நோக்கும்போது 1916 ஆம் ஆண்டுக்குப்பின் பார்ப்பனரல்லாதார் கல்வி, அரசுப் பணி, ஆட்சி யதிகாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டதை உணருகிறோம். இதற்குக் கரணியம் பார்ப்பனரல்லாதாரிடம் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியே யாகும். இத்தகைய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட பெருமை நயன்மைக் கட்சியை யும், தன்மான இயக்கத் தந்தை பெரியாரையுமே சாரும். இத்தகைய இயக்கங்கள் இக்காலத்தில் தோன்றிப் பார்ப்பனருக்கு எதிராகச் செயல் பட்டமையைத் தவறு என்பாரும் உண்டு. இவ்வாறு இல்லாமற்போ யிருந்தால் பலவாயிரம் சாதிகளாய்ச் சிதறுண்டுக் கிடந்த பார்ப்பனரல்லா தாரை ஒரே இனமாகிப் (திரவிடர்) பார்ப்பனரை எதிர்த்துப் பல கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 1115 துறைகளிலும் போட்டியிட்டு முன்னேறிக் குமுகாயச் சமநிலையைத் தமிழகம் கண்டிருக்க முடியாது. இத்தகைய குமுகாயச் சமநிலையைக் காணும்படி செய்த பெருமை நயன்மைக் கட்சியையும், தந்தை பெரியாரை யுமே சாரும். இவ்வியக்கங்கள் தோன்றியிரா விட்டால் தமிழகத்தில் முற்பட்டோர், பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற முப்பெரும் பிரிவுகளுக்கு மாறாகத் தனித்தனிச் சாதிக் கட்சிகளும், இயக்கங்களும் தோன்றித் தமிழகத்தை விலங்காண்டிகள் வாழும் கரடிக் காடாக்கியிருக்கக் கூடும். பார்ப்பனருக்குத் தமிழர்கள் அடிமையாகவே கிடந்திருப்பர். 3. நயன்மைக் கட்சி (Justice Party) சென்னை மண்டிலத்தில் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி கொண்டுவரப்பட்ட இரட்டையாட்சி முறையை ஏற்று, மாற்றப்பட்டதுறைகளில் செவ்வனே ஆட்சிப்பணிபுரிந்த ஒரு கட்சியே நயன்மைக் கட்சியாகும். பார்ப்பன ஆளுமையைத் தடுத்துக் குமுகாயத்தில் சமநிலை நயன்மை ஏற்படுத்த வேண்டுமென்னும் அறத்தினடிப்படையில் பார்ப்பனரல்லாதாரால் தொடங்கப்பெற்ற அரசியல், குமுகாய இயக்கமே நயன்மைக் கட்சியாகும். 1908 ஆம் ஆண்டு, இந்திய அரசுச் சட்டத்தின்படி ஒருசில துறைகளில் இந்தியரும் பங்குகொண்டு ஆட்சிபுரிய முற்பட்டனர். அவ்வகையில் சென்னை மண்டிலச் சட்டமன்றத்தில் மக்களின் படிநிக ராளிகளாகப் பத்தொன்பதின்மர் இடம்பெற்றனர். இதில் பெரும்பான்மை யோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர். பார்ப்பனரல்லாதார் பெருவாரி யாக இருந்தும் இவ்வாண்டுக்குப்பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாதாரின் தலைசிறந்த தலைவர்களும் தங்கள் மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டனர், துணையரையரவையிலும் (Viceroy'sCouncil) ஆளுநரவையிலும் இந்தியர் இடம் பெற்றனர். இந் நிலையில் 1970 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதாரின் தலைவரும், பெருநிலக்கிழார் சங்கத்தின் தலைவரும் ஆகிய பொப்பிலி.இராசா ஆளுநரவையில் இடம்பெற்றார். பார்ப்பனரல்லாதார் ஒருவர் ஆளுநரவையில் இடம்பெறுவதைப்பொறாத பார்ப்பன அறிஞர்கள் இதனை எதிர்த்தனர். இதனால் பொப்பிலியரசர் TஓII ஆம் ஆண்டு தன் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. பின்னர், அவ் விடத்தில் நயன்மையர் கிருட்டிணசாமி அய்யர் அமர்த்தப் பெற்றார். அவருக்குப் பின் அவ்விடத்தில் 19 ஆம் ஆண்டு பி. இராசகோபாலாச்சாரி யும், அவருக்குப்பின் சிபி.இராமசாமி அய்யரும் தொடர்ந்து அமர்த்தப் பெற்றனர். இதைப் போலவே நடுவணவையிலும் வைஸ்ராய் சபை) எசு. பி.சின்னா என்பவரும், அவரைத் தொடர்ந்து பார்ப்பனருமே அமர்த்தப் பெற்றனர். 1919 ஆம் ஆண்டு அரசுச் சட்டத்தின்படி ஆளுநரவை யில் இந்தியர் இருவருக்கு இடமளிக்கப் பெற்றது. ஆனால், இதிலும் பார்ப்பனரல்லாதார் இடம் பெற முடியவில்லை. இதில் 192 ஆம் ஆண்டு கான்பகதூர் முகமது அபிபுல்லா சாகிபும் சீனிவாச அய்யங்காரும் அமர்த்தப் பெற்றனர். வ்வாண்டு சிறந்த தலைமையிலும் தலையில் 19 ""கவே இடம் பெற்றதில் மக்கள் 106 தாய்நிலவரலாறு இவ்வாறு நூற்றுக்கு மூவராயுள்ள பார்ப்பனர்கள் தமிழகத்தில் அரசியல், பொருளியல், குமுகாயம், கல்வி முதலிய எல்லாவற்றிலும் தொண்ணூற்றியெழுபவராயுள்ள பார்ப்பனரல்லாதாரை அழுத்தி ஆளுமை செய்து கொண்டிருந்தனர். அரசுப் பணிகளில் தொண்ணூற்றைந்து விழுக் காட்டுக்கும் மேலாகக் கைப்பற்றியிருந்த அவர்கள் பார்ப்பனரல்லாதார் படித்து முன்னேற தொடக்கப் பள்ளிகளைக் கூடத் தொடங்கவில்லை. ஆசிரியர்களாகவும், கோயிற் பூசாரிகளாகவும், பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலியவற்றிலும் ஆளுமை பெற்றிருந்த பார்ப்பனர்கள் ஊர்ப் புறங்களில் வேதப் பள்ளிகளை மட்டுமே தொடங்கினர். ஆங்கிலக் கல்வியையும் மேலை நாட்டிற்குச் சென்று பயிலும் வாய்ப்பையும் தாங்களே பெற்றிருந்தனர். 19ஆம் ஆண்டிலிருந்து பல கல்வி நிலையங்கள் தொடங்கப் பெற்றன. ஆயினும் அன்றைய பார்ப்பனரல்லாதாரின் குழந்தை களின் எண்ணிக்கைக்குப் போதுமானதாய் பள்ளிகளின் எண்ணிக்கை யில்லை . இந்தியாவில் மக்களாட்சி வளரவேண்டும்; ஆங்கிலத் தனி மேலாண்மை (ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும்; நாடு விடுதலை பெற வேண்டும் என்றெல்லாம் மக்கள் போராடிய காலத்தில் பார்ப்பனர்கள் மற்றவரை இருளில் மூழ்கடித்து வெள்ளையன் இடத்திலிருந்து குமுகாயத் தைக்காக்கவேநயன்பைக்கட்சி தோன்றியது. நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னும் பார்ப்பனருக்கே அடிமையாகிவிடும் என்பது அன்றைய அரசியலறிஞர்களின் முற்காணிய தீர்க்கதரிசனமாகும். இத்தகைய பார்ப்பனரின் ஆளுமையை முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டுமெனவும் நயன்மையர் சி. சங்கரன் நாயர் அறைகூவல் விடுத்தார்.1915 ஆம் ஆண்டு அரசப்படி நிகராளியரவையில் கல்வியுறுப்பின அமைச்சராக இடம்பெற்ற முதல் பார்ப்பனரல்லாதாரும் இவரேயாவர். 1916 ஆம் ஆண்டு நடுவணவைக்கு மையச் சட்டமன்றம் நடந்த தேர்தலில் பண்டுவர்டிஎம். நாயர் தோற்கடிக்கப்பட்டார். இத் தோல்வி பார்ப்பன ரிடம் பார்ப்பனரல்லாதார் பெற்ற தோல்வியாகக் கருதப்பட்டது. தங்களுக்கென ஒரு தனியியக்கம் இருந்தாலொழியத் தாங்கள் முன்னேற முடியாதெனப் பார்ப்பனரல்லாதார் முடிவு செய்தனர். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனவே,796 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் 26 ஆம் நாள் பார்ப்பன ரல்லாதாரின் தலைவராகிய வயவர் பிட்டி தியாகராயச் செட்டியாரின் தலைமையில் தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்"South Indian Liberal Federation) என்னும் ஓர் அரசியல் இயக்கம் தொடங்கப்பெற்றது. இதில் தரவாத் மாதவன் நாயர் (டிஎம்நாயர்), வழக்குரைஞர் கி.எத்திராசு முதலியார் ஆகியோர் உறுப்பாண்மை பெற்றனர். இவ்வியக்கத்தின் கருத்துகளை விளக்கிப் பார்ப்பன ரல்லாதாரை விழிப்படையச் செய்வ தற்குத் திராவிடன்' என்னும் தமிழ்த்தாளிகையும், ஆந்திரப்பிரகாசிகா" 121-130 கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 107 என்னும் தெலுங்குத் தாளிகையும், நன்மை ' (Justice) என்னும் ஆங்கிலத் தாளிகையும் இவ் வியக்கத்தாரால் தொடங்கப் பெற்றன. பின்னர் இவ் வியக்கத்தினர் நாடு முழுவதிலும் கட்சிக் கோட்பாட்டு விளக்கக் கூட்டங்களை நிகழ்த்தி மக்களுக்குப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமைகளை விளக்கிக் கூறினர். தென்னகத்திலுள்ள பார்ப்பனரல்லாதாரைக் குமுகாயம், பொரு ளியல், கல்வி, அரசியல் துறைகளில் முன்னேற்றுவது, இவர்களுடைய அவல நிலைமைகளை அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது, நூல்கள், தாளிகைகள், வெளியீடுகள், மேடைப் பேச்சுகள் முதலியவற்றால் மக்களை விழிப்படையச் செய்வது ஆகியவை இக் கட்சியின் தொடக்கக்கால முகாமைப் பணிகளாயின. 'இந்தியருக்குத் தன்னாட்சியில் முன்னர்ப் பழக்கமில்லை யென்றும், ஆகவே இந்தியாவுக்கு உடனடியாக விடுதலை வழங்குவதைத் தாங்கள் மறுப்பதாகவும், சட்டமன்றங்களை விரிவாக்கி அவற்றில் எல்லாச் சாதியினருக்கும் இடம் கொடுத்து, அவர்களைத்தக்க அரசியல் பயிற்சி பெறும்படி செய்ய வேண்டுமென்றும், கல்வி, உள் னாட்சித் துறைகள் முதலியவற்றில் மக்கள் பெரும் பங்கு கொள்ளும்படி செய்ய வேண்டுமென்றும், இக் கட்சியின் செயலாளர் டி.எம். நாயர் கூறினார். இக்கட்சி உள்ளாட்சி யியக்கத்தை வெறுத்தது. அஃதாவது தன்னாட்சிமுறை நாளடைவில் ஏற்பட வேண்டுமென்பது இக்கட்சியின் கோட்பாடாகும் தன்னாட்சி ஏற்படுவதற்கு முன் எல்லாச் சாதியினருக்கும் ஆட்சிப் பொறுப்பில் படிநிகராளியம் வழங்கப்படவேண்டுமென்பதும், அவ்வாறு எல்லாச் சாதியினரும் படி நிகரானியம் பெற்றபின்பே தன்னாட்சிமுறை செவ்வனே செயல்படும் என்பதும் இக் கட்சியின் கோட்பாடாகும். இன்றேல் இன்றைய அரசியலில் ஆளுமை பெற்றிருந்த பார்ப்பனரும் ஒரு சில சாதியினரும் மட்டுமே தன்னாட்சியைக் கைப்பற்றிப் பெருவாரியான மக்களை ஆட்டிப் படைப்பார்களென்பது இக்கட்சித் தலைவர்களின் கணிப்பாகும், தென்னிந்திய முற்போக்குக் கூட்டணி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மேற்கூறிய முற்போக்குக் கருத்து களைக் கொண்டிருந்ததோடு அத்தகைய முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதார் பலரையும் தம்முடன் சேர்த்துக் கொண்டு தென்னிந்திய முற்போக்குக் கூட்டணி ' என்னும் பெயரில் செயல்படத் தொடங்கிற்று. 1917 ஆம் ஆண்டு இக் கட்சியின் மாநில மாநாடுகள் மாவட்டந்தோறும் நடைபெற்றன.குமுகாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை மாற்ற வேண்டுமென்றும், கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், சமய நிறுவனங்களைச் சீர்திருத்தி அவற்றின் வருவாயை மக்களுக்குப் பயன்படும் பொதுப்பணிகளில் செலவிட வேண்டுமென்றும் இம் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தகைய தீர்மானங்களை நடைமுறையில் கடைப்பிடித்துக் குமுகாயத் 1917ஆம் ஆறன.குமுதாயை நடை. 108 தாய்நிலவரலாறு தில் சமநிலையை ஏற்படுத்த முயன்றதால் இக்கட்சி பின்னர் " 'நயன்மைக் கட்சி" (Justice Party) என்று அறியப்பட்டது. 1917 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் சென்னையில் நிகழ்ந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த படிநிகராளியர் ஏறத்தாழ ஆயிரத்தைந்தாற்றுவர் கூடினர். இதில் பார்ப்பனரல்லாத ஒவ்வொரு சாதியினருக்கும் படிநிகராளி யம் வழங்கப்பெற வேண்டும் என்றும், வரிகொடுப்போர் சொத்துரிமை யுடையோர் ஆகியோருக்கே ஓப்போலை (Vote) வழங்கும் உரிமையும், படிநிகராளியமும் உண்டு என்ற நிலைமையை மாற்றிச் சாதிவாரியாக ஒப்போலையுரிமையும், படிநிகராளியமும் வழங்கப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சாதிவாரி படிதிராளிய மற்ற எத்தகைய அரசியல் சீர்திருத்தத்தையும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எதிர்க்கும் என்றும் கூறப்பட்டது. இவ்வாய்ப்பைப் பெறுவதற்குச் சில துறைகளை மாநிலச் சட்டமன்றங்களின் அதிகாரத்திற்கு உட்படுத்த வேண்டுமென்று இம் மாநாடு கேட்டுக் கொண்டது. இகலாமியருக்கும் படி நிகராளியம் வேண்டுமென்றும் இம் மாநாடு வலியுறுத்தியது. சாதியடிப்படையில் தனி ஓப்போலையர்(Voters) பட்டியல் உருவாக்க வேண்டுமென்றும் 1978 ஆம் ஆண்டு நடந்த இச் சங்கத்தின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சவுத் பரோ ஒப்போலையர் குழு (சவுத் பரோ வாக்குரிமைக் குழு) தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தனி ஒப்போலையர் பட்டியல் கருத்தையறிதற்கு 1978 ஆம் ஆண்டு சவுத் பரோ என்பார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. வி. எசு.எசு. சீனிவாச சாத்திரி, எசு.என்.பானர்சி ஆகிய பார்ப்பனர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். சாதியடிப்படையில் தனி ஒப்போலையர் பட்டியலை உருவாக்க உதவும் மனப்போக்கு பார்ப்பனரல்லாதாருக்கே உண்டு என்றும், ஆனால் சவுத் ஒப்போலையர் குழுவில் உள்ளவர்கள் பார்ப்பனராதலால் குழுவைத் தாங்கள் வெறுப்பதாகக்கூறித் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினர் நாடெங்கிலும் கண்டனம் தெரிவித்தனர். அதேயாண்டில் இதனை வலியுறுத்தச் சென்னையில் ஒரு மாபெரும் மாநாடும் கூட்டப்பட்டது. 1919 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் சவுத் பரோ ஒப்போலையர் குழுவின் முன் சென்று வாய் வாக்கு மூலம் அளிக்கக் கூடாதென்று தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் சவுத் பரோ ஒப்போலையர் குழு சாதியடிப்படையில் தனி ஒப்போலையர் பட்டியலை உருவாக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1919 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஒரு குழு இலண்டன் சென்றது. இதற்குத் தலைமையேற்றுச் சென்ற டிஎம் நாயர் அங்குத் திடீரென இறந்து விட்டார். உடன் சென்ற கே.வி.ரெட்டி கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 10g அதற்குத் தலைமை தாங்கிச் சாதியடிப்படையில் தனி ஒப்போலையர் பட்டியலை உருவாக்க வேண்டுமென்று வேட்பம் விண்ணப்பம் கொடுத்தார். அதில் இந்தியாவில் குமுகாய நலம் பெருகிச் சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் சாதியடிப்படையில்தான் படிநிகராளியம் வழங்கப்பட வேண்டுமென்பதும், இந்தியா சாதிகளால் மட்டுமே ஆனதென்பதும் விரிந்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார்ப்பன ரும், பார்ப்பனரல்லாதாரும் ஒன்றிணைந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்படி ஆங்கிலவரசு அறிவித்தது. ஆனால், இவ்விரு வகுப்பாருக்குமிடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தை முறிந்தது. சென்னை ஆளுநராகவிருந்த வெலிங்டன் பார்ப்பனரல்லாதாருக்கு ஐம்பது விழுக்காட்டு இடங்களை ஒதுக்குவதாகக் கூறினான். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதை யேற்றுக் கொள்ள மறுத்து, பார்ப்பனரல்லாதாருக்கு எழுபத்தைந்து விழுக்காடு வேண்டுமெனக் கேட்டது, இவ்வாறு பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்குமிடையேயான போராட்டம் வலுத்தது. கடைசியாக ஆங்கிலவரக கிதான் மெசுடன் என்பானை அனுப்பி இதற்கொரு தீர்வுகாணும்படி கேட்டுக் கொண்டது. மெசுடனை நடுவ ராசுக்கொண்டு அறுவரைக்கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டது. இவ்வறுவரில் பார்ப்பனரும், பார்ப்பனரல்லாதாரும் இடம்பெற்றனர். இக் குழு வழங்கிய தீர்ப்பு மெசுடன் தீர்ப்பு' (Mcston Award) என்று அழைக்கப்பட்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் வெற்றிகள் 1979 ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி அமைக்கப்பட்ட சென்னைச் சட்டமன்றத்தில் மெசுடன் தீர்ப்பு கையாளப்பட்டது. இந்து அமர்த்தமுறை, தேர்தல் முறை ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப் பட்டது. மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 132. இதில் அமர்த்தம் செய்யப் பெற்றவர் 34 பேர். இவ்வமர்த்தமும் சாதியடிப்படையில்தான் செய்யப் பட்டது. ஆகவே, இதில் சாதிவாரியாக அமர்த்தம் பெற்ற 23 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். தனி ஒப்போலையர் பட்டியலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 98. இதில் நகரங்களில் வாழும் இகலாமியருக்கு ஈரிடங்களும், மாவட்டங்களில் வாழும் இசுலாமியருக்குப் பதினோரிடங் களும் ஆங்கிலோ இந்தியருக்கு ஓரிடமும், இந்தியக் கிறித்தவருக்கு ஐந்திடங்களும், ஐரோப்பியருக்கு ஓரிடமும் ஒதுக்கப்பெற்றன. பொதுத் தொகுதிகளில் இசுலாமியருக்கு இடங்களும், மற்றவருக்கு 56 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மற்றவை பல்கலைக்கழக, வணிக, தொழில் நிறுவனங்க ளுக்கும், நிலக்கிழார்களுக்கும் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு இச் சங்கம், சாதிவாரித்தனிஓப்போலையர் பட்டியலை உருவாக்கக்கோரித் தொடுத்த போரில் வெற்றி பெற்றதோடு நடைமுறையிலும் செயல்பட்டதைக் கண்டுகளித்தது. 110 தாய்நில வரலாறு நயன்மைக் கட்சியின் ஆட்சியும் சாதனைகளும் 1920 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெற்றிபெற்றது. இவ்வாண்டுக்குப்பின் இது நயன்மைக் கட்சி (நீதிக்கட்சி) என்று அழைக்கப்பட்டது. முதன்முறையாக இந்து அமைச்சரவை யமைத்து ஆட்சியில் அமர்ந்தது. கொள்கையளவில் பார்ப்பனரை எதிர்த்த போதிலும் சட்டமன்றத்தில் பார்ப்பனர்களும் நயன்மைக் கட்சியினரும் நண்பர்களாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். 1921 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் நன்மைக் கட்சியே பெரு வலிமை பெற்று அமைச்சரவையை அமைத்தது. ஆனால், 1926-ல் நடந்த தேர்தலில் வலிமையிழந்ததால் பர்சுப்பராயன் சுயராச்சியக் கட்சிக்கு மாறி அமைச்சரவை அமைத்துக் கொண்டார். 1927 ஆம் ஆண்டு கோவையில் நடந்த நயன்மைக் கட்சியின் மாநாடு தனிப்பட்ட நயன்மைக் கட்சி உறுப்பினர்கள் பேராயக் கட்சியில் சேர்ந்து நயன்மைக் கட்சியின் கோட்பாடுகளை அக் கட்சியினுள் புகுத்த வேண்டுமென்றும், மாநிலங் களுக்கு உடனடியாகத் தன்னாட்சி கொடுக்க வேண்டுமென்றும், சுப்பராயன் அமைச்சரவையின்மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்றும் முடிவெடுத்தது. இச் சமயத்தில் சைமன் குழுவை வெறுத்தொதுக்க வேண்டுமெனும் சுயராச்சியக் கட்சி தீர்மானத் துக்கு எதிராகச் சுப்பராயன் அக் குழுவை முதலமைச்சர் என்ற முறையில் வரவேற்றார். இதனால் அவருடைய அமைச்சரவையிலிருந்த ஆரோக்கிய சாமி முதலியாரும், அரங்கநாத முதலியாரும் பதவி துறந்தனர். இச் சமயத்தில் நயன்மைக் கட்சி தனக்கு இரண்டகம் செய்து விட்டுச் சுயராச்சியக் கட்சிக்குத் தாவிய சுப்பராயனுக்கும் பார்ப்பனரல்லாதாரை வாழவைக்க வேண்டும் என்னும் கொள்கைக்கேற்ப ஆதரவு நல்கியது. 1999 ஆம் ஆண்டு நெல்லூரில் நடந்த நயன்மைக் கட்சி மாநாட்டில் தலைமைப் பதவிக்கு ஏற்பட்ட போட்டியின் கரணியமாகக் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. 1930 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும், அதற்குப் பின்னரும் நயன்மைக் கட்சியே வெற்றிபெற்றது. இக் காலங்களில் சுப்ப ராயன், பனகல் அரசர், வயவர். எபி. பாத்ரோ , வயவர். ஆர்.கே.சண்முகம் செட்டியார், வயவர் ஏ.இராமசாமி முதலியார், பொப்பிலியரசர் முனுசாமி நாயுடு, வயவர் சி. தணிகாசலம் செட்டியார், வயவர். எசு. குருசாமி ரெட்டியார், வயவர். பொன்னம்பல் தியாகராசன் (பி.டி.இராசன், டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டிய நாடார், பறையர் தலைவர்களான இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் இராவ்பகதூர் எம்சி, இராசா, இராவ்பகத்தார். என்.சிவராசு, வி.ஐ.முனுசாமிப் பிள்னை முதலிய பலரும் இக் கட்சியில் பங்கேற்று உழைத்தனர். 1924 ஆம் ஆண்டு இராவ்பகதூரர் எம்.சி. இராசா இக் கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சிக்கு நெருக்கடி நேரும்போதெல்லாம் கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 111 பின் கூறப்பட்ட தாழ்த்தப்பட்டோர். தலைவர்கள்தாம் மக்களைத் திரட்டிப் புத்துயிரளித்தனர். 1932 ஆம் ஆண்டு நடந்த நயன்மைக் கட்சி மாநாட்டில் பார்ப்பனரும் இக் கட்சியில் சேரலாமென்று அறிவிக்கப் பட்டது. 1934ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நயன்மைக்கட்சி தோற்றது. இதனால், நயன்மைக் கட்சி வலுவிழந்து காணப்பட்டது. 1937-ல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற ஆறு மாநிலங்க ளிலும் பேராயக் கட்சியே வென்றது. சென்னையில் சி.இராசகோபாலாச் சாரியார் தலைமையில் பேராயக் கட்சி அமைச்சரவை ஏற்பட்டது. பெரியாரின் தலைமை அரசியலில் சாய்காலை இழந்துவிட்ட செல்வாக்கிழந்த நயன்மைக் கட்சியின் வரலாறு மங்கி மறையத் தொடங்கியது. ஆனால், இதற்குப் புத்துயிரூட்டி மலரச் செய்த பெருமை தந்தை பெரியாரையே சாரும். 1938-ல் சென்னையில் நடந்த நயன்மைக் கட்சி மாநாடு தந்தை பெரியாரை நயன்மைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்பொழுது பெரியார் சிறையில் இருந்தார். பெரியார் சிறை மீண்டபின் இக் கட்சி தனி வலிவுடனும் பொலிவுடனும் வளரத் தொடங்கியது. இதன் வளர்ச்சிக்கு உரமூட்டியது அன்றைய பேராயக் கட்சியின் ஆட்சியும், சி. இராசகோபாலாச்சாரியாரின் தலைமையும், அவர் கொண்டு வந்த இந்தித் திணிப்புமேயாகும். 1940-ல் திருவாரூரில் நடந்த நயன்மைக் கட்சி மாநாட்டில் திராவிட நாடு திராவிடருக்கே" என்ற கோரிக்கை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. அதனை விளக்கிப் பேசிய அண்ணாத் துரையின் நாவன்மையை உலகமறிந்தது. திரவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த நயன்மைக் கட்சி மாநாட்டில், இக்கட்சி திராவிடர் கழகம்' என்று பெயரை மாற்றிக்கொண்டது. 1945 ல் சென்னையில் நடந்த மாநாட்டில் பிடி இராசன் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார், 1946 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நயன்மைக் கட்சியின் சார்பில் போட்டியிட்டோரில் பிடி இராசன் மட்டுமே வெற்றி பெற்றார். 1949-ல் " திராவிட முன்னேற்றக் கழகம்"' உருவானது. பின்னர் தி.மு.க. 1957-ல் தேர்தலில் போட்டியிட்டுப் பதினேழு இடங்களில் வென்றதையும், 1962-ல் ஐம்பது இடங்களைப் பெற்றதையும், 1957-ல் 138 இடங்களைப் பெற்று அண்ணா தலைமையரில் அமைச்சரவை அமைத்த தையும், 171-ல் 185 இடங்களைப் பெற்றுக் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் அமைச்சரவை அமைத்ததையும் காண்கிறோம். ஆகவே, 1920 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பனரல்லாதாரும் சாய்காலைசெல்வாக்குப் பெற்றுக் குமுகாயம், பொருளியல் துறைகளில் முன்னேற வழிவகுத்தளித்தது நயன்மைக் கட்சியேயாகும். பார்ப்பனருக்கு இது பிறவிப்பதைக் கட்சியன்று. ஆனால் சமத்துவம் காணப் பாடுபட்ட கட்சியாகும். 112 தாய்நிலவரலாறு நயன்மைக் கட்சியின் ஈட்டங்கள் (சாதனைகள்) தென்னகத்தில் பார்ப்பனரல்லாதாரை அரசியல், கல்வி, பொருளியல், குமுகாயம் முதலியவற்றில் விழிப்படையச் செய்தது இக் கட்சியேயாகும். 1919 ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இரட்டையாட்சி முறையை இந்தியாவிலேயே வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை இக் கட்சிக்கேயுண்டு. பார்ப்பன ரவ்லாதாருக்கு ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகள் அரசியற் பயிற்சியளித்த தும் இக் கட்சியேயாகும், சட்டமன்றத்தில் பாராளுமன்ற முறைப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களாட்சி முறையை மலரவைத்ததும் இக் கட்சியேயாகும். * அரசியல் நாகரிகம்' என்பது தமிழகத்துச் சட்ட மன்றத்திலேதான் இக் கட்சியால் பண்புடன் பின்பற்றப்பட்டது, இக்கட்சி நடத்திய ஆட்சிமுறையால் மக்களிடையே ஒரு சிறந்த 'குடியாட்சிப் புரட்சி ஏற்பட்டது. சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும், உரிமைகளைக் கோரிப் போரிடுவதிலும் மக்கள் மன்றங்களும் பண்பட்ட முறையில் வளர்ச்சிபெற இக்கட்சி உதவியது. தோல்வியுற்று எதிர்க்கட்சி யாக இருந்த போதும் வெற்றிபெற்று ஆளுங்கட்சியாக இருந்தபோதும், மாற்றாரை மதிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றிருந்த இக்கட்சிகுடியாட்சி மறுமலர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. பின்தங்கியோருக்குப் பாதுகாப்பளித்தது இக் கட்சியேயாகும், எனவே, இக்கட்சியைப் பிற்பட்டோர் பாசறை' என்றே அழைத்தனர். திரவிட மக்களின் பண்டைய பண்பாடுகள், கலைகள் முதலியவை மறுமலர்ச்சி பெறவும், திரவிட இனம் ஒன்றிணையவும் அதன்வழித் தமிழகத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சிக் குமுகாயத்தை படைக்கவும் இக் கட்சிசுரணியமாய் அமைந்தது. தமிழ்மொழி மறுமலர்ச்சியடைந்ததற்கு இக் கட்சியின் தாளிகைகளும், வெளியீடுகளும், பேச்சுகளும் பெரிதும் உதவின. தந்தை பெரியார் இக் கட்சியின் தலைமையேற்ற பின் மக்களின் மூடநம்பிக்கைகள் வெகுவாக அகற்றப்பட்டன. சமற்கிருதத்திலிருந்த மறைகளும் வேதங்களும், மறவனப்புகளும் இதிகாசங்களும் தமிழ் ஆக்கப்பட்டு மக்களால் அறியப்பட்டபோது திரவிட இலக்கியங்களின் பெருமையும், திரவிடப் பண்பாட்டின் தொன்மையும் ஆரியத்திற்கும் மேலாக நிற்பதை மக்கள் உணர்ந்தனர். தமிழும், சமற்கிருதமும் பயின்ற பார்ப்பனப் பண்டிதர் சுளும், தமிழ் வல்லுநர்களும் மட்டுமே அறிந்திருந்த தமிழிலக்கியங்கள் பாரத மக்களால் அறியப்பட்டன. அதிலும் பார்ப்ப னியம் சலவாத் தனித் தமிழ்ப் பண்பாட்டை உருவாக்கிய அறிஞர்களின் கருத்துகளை ஓரியக்க மாசுக் கொண்டு அவற்றைப் பரப்பிய பெருமை நயன்மைக் கட்சிக்கும், தன்மான இயக்கத்திற்குமே உண்டு. இவ்வாறு தமிழ் தன் பண்புடன் மிளிர்ந்தபோதுதான் பிளவுபட்டுக் கிடந்தோர் 'நாம் தமிழர்' என்ற ஓருணர்வால் ஒன்றிணைந்தனர். கிபி.19, 20 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 113 நயன்மைக் கட்சிதாம் ஆட்சியிலிருந்த ஏறத்தாழப் பதினேழாண்டு சளில் தமது கொள்கை கோட்பாடுகளைச் சட்டங்களாக நிறைவேற்றி யுள்ளது. 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு ஒப்போலையுரிமை வழங்கும் சட்டமும், வகுப்புவாரிப் படிநிகராளியச் சட்டமும் (CommunalG0.) இக் சுட்சியால் கொண்டு வரப்பட்டன. வகுப்புவாரிப் படிநிகராளியத்தின்படி அரசுப் பணிகளில் ஒவ்வொரு சாதிப் பிரிவுக்கும் உரியவிடங்கள் முறைப்படி ஒதுக்கப்பட்டன. இதன்படி பார்ப்பனரல்லாத சாதியிந்துக்கள், பார்ப்பனர்கள், இசுலாமியர், ஆங்கிலோ-இந்தியர் கிறித்தவர், ஐரோப்பியர் உட்பட, தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் முறையே 5:2:7:1 என்னும் விகிதத்தில் அரசுப் பணிகளில் அமர்த்தப் பெற்றனர். இதனால், எல்லாச் சாதியினரும் அரசுப் பணிகளில் அமரும் வாய்ப்புகளைப் பெற்றனர். சமயச் சார்புடைய நிலையங்களில் பார்ப்பனரல்லாதாரும் பங்கு பெறவும், அவற்றின் வருவாய்களைப் பொது நலத்திற்குப் பயன்படுத்தவும், கோயில்களையும், அறநிலையங்களையும் சீர்திருத்தியமைக்கவும் இக் கட்சி 1923 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்" கொண்டு வந்தது. அதன்படி கோயில்களையும், அறநிலையங்களையும் ஆட்சி புரியும் ஒரு கழகம் ஏற்படுத்தப்பட்டது. இதேயாண்டில் தொழிற் சட்டம் ஒன்றும் கொண்டுவரப்பட்டது. அதன்படி புதிதாகத் தொழில் தொடங்குவோருக்குக் கடனுதவி யளித்து பக்குவிக்கும் வாய்ப்பையும் தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருளும் பிறவும் பெறும் வாய்ப்பையும் அரசு ஏற்படுத்தி உதவியது. இச்சட்டத்தின்படி தொழிலாளர் நலக்கழகம்' ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. தொழில்துறை இயக்குநர் ஒருவர் அமர்த்தப் பெற்றார். இவர் ஐநூறு உருபாவரைகுடிசைத் தொழில்களுக்குச்சுடனுதவி வழங்கும் அதிகாரம் பெற்றார். 923 ஆம் ஆண்டு இக் கட்சியால் நிறைவேற்றப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகச் சீர்திருத்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழக ஆட்சிக்குழு, பாடத் திட்டக்குழு, கல்வி மன்றம், கலையியற் குழு, இணைக்கப்பட்ட கல்லூரிகளின் மன்றங்கள் முதலியன ஏற்படுத்தப்பட்டுக் கல்வித்துறை செவ்வனே சீர்திருத்தியமைக்கப்பட்டது. 1926 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டப்படி தெலுங்கு மாவட்டங்களி லுள்ள கல்லூரிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. அதிலும் இத்தகைய குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. 1928 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டப்படி சிதம்பரத்தில் அரச வயவர், அண்ணாமலைச் செட்டியார் அளித்த இருபதிலக்கம் உருபா நன்கொடையில் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அரசு அதற்கு மேலும் இருபத்தெட்டிவக்கம் நல்கைத் தொகையளித்தது. 114 தாய்நில வரலாறு 1933 ஆம் ஆண்டு ஊரக ஒலிபரப்புத் திட்டம் கொண்டு வரப்பட் டது. இதற்குப் பின்னர்தான் சென்னை, திருச்சி முதலிய இடங்களில் வானொலி நிலையங்கள் ஏற்பட்டன. மற்றும் இக் கட்சி ஆட்சியின் லிருக்கும் போது மின்சாரம், நகர மன்றங்கள் தொழிலாளர் நலம் முதலிய வற்றிற்கான பல சட்டங்களைக் கொண்டுவந்தது. ஊராட்சித் துறையில் பிற்பட்ட குமுகாயத்தினர் பதவி பெறும் நிலையைப் பெறவும், எல்லா மாவட்டங்களிலும் பொதுக் கல்வி, தொழில் முதலியன வளரவும், பார்ப்பனரல்லாதார் ஆசிரியர்களாகவும், கல்வியதி காரிகளாகவும் பணியாற்றவும் இக்கட்சி பல சீர்திருத்தங்களைச் செய்தது. 1923 ஆம் ஆண்டு தூத்துக்குடித் துறைமுகத்தைச் செம்மைபடுத்தி வளரவழி செய்தது. 1925, 29 ஆம் ஆண்டுகளில் கொச்சித் துறைமுகத்தை விரிவுபடுத்தி வளரச் செய்யும் சட்டங்களைக் கொண்டுவந்தது. 1976 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி சென்னை மண்டிலப் பொது நல்லியல் துறை திருத்தியமைக்கப்பட்டது. செவிலியர் (Nurses) பயிற்சி முறை, தாய்சேய் நலம் முதலியன செம்மைப்படும் வகையில் இத்துறை திருத்தியமைக்கப்பட்டது. 4. தந்தை பெரியாரும் தன்மான இயக்கமும் இருபதாம் நூற்றாண்டில் தமிழரின் தன்மான உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பி, விழிப்படையச் செய்தவர் தந்தை பெரியார் இராமசாமி ஆவார். இவர் கோவை மாவட்டம் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்க ருக்கும், சின்னத்தாயம்மையாருக்கும் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 17 ஆம் நாள் எட்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு மூத்தவர் கிருட்டிணசாமி 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாள் பிறந்தவர். இராமசாமிக்குப் பொன்னுத்தாயம்மாள், இரத்தினம்மாள் என்ற தங்கையர் இருவர் உண்டு. இளமைப் பருவத்தில் தன் தந்தையாரின் சிற்றன்னையிடம் வளர்ந்த இராமசாமி கட்டுப்பாடற்ற சிறுவனாகவே வளர்ந்துவிட்டார். இதனால் இவருக்கு இளமை முதலே மனவுறுதியும், துணிவும், தனித்துச் செயல்படும் தன்மையும் இயற்கையாகவே வளர்ந்தன. தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவருக்குப் படிப்பில் நாட்டமில்லை. ஆனால் துடுக்கான செயல்கள் எதிலும் தயக்கமின்றி ஈடுபட்டார். அக் காலத்தில் உயர் சாதிசுள்ளுக்குள்ளேயே உயர்வு தாழ்வுகள் நிலவியிருந்தன. இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமலும், இவற்றில் பெரியோர்களின் கட்டு திட்டங்களுக்கு அடங்காமலும் எல்லோருடைய வீட்டிலும் உண்ணும் பழக்கமும், எவரையும் தன் அரிய நண்பராக்கிக்கொள்ளும் நல்ல உள்ளமும் இராமசாமியிடம் வளர்ந்தன. ஐந்தாம் வகுப்போடு அவர் படிப்பு முடிந்தது. தந்தையாருடன் சேர்ந்து வணிகம் செய்யத் தலைப்பட்ட இராமசாமி எளிய தன் தந்தை, உழைப்பால் உயர்ந்ததைப்போலவே தானும் தொழில் துறையில் விரைந்து முன்னேறினார். பெரும் செல்வர் ஆனார். கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 115 செல்வம் கொழிக்கும் தன் வீட்டில் பத்தர்களும், பண்டிதர்களும் கூடி கடவுள் தலைவிதி, தொன்மங்கள் முதலியவற்றைப் பற்றி விரிவான சொற்பொழிவுகளைச் செய்யக்கேட்ட இவர் அவர்களிடம் பகுத்தறிவின் அடிப்படையில் பல வினாக்களை எழுப்புவார். "தலைவிதி என்பது வெறும் புரட்டு: நமது நன்மை தீமைகளுக்கு நாமே கரணியம்; தலைவிதியின் படிதான் எல்லாம் நடக்கும் என்பது அறிவில்லாத்தனம்', என்று தனது பன்னிரண்டாம் அகவையிலேயே இவர் வாதித்தார். சாதிப்பிரிவினையை அடியோடு, வெறுத்த பெரியார், கடவுள், தொல்கதைகள், மறைகள், சாத்திரங்கள், சாதிப் பாகுபாடுகள் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டும், நூல்களைப் படித்தும், அவற்றைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்தும், இவை தன்னலம் கொண்ட மக்களால் புனையப்பட்டவை என்ற முடிவுக்கு வந்தார். "மாந்தருக்குள் சாதி இல்லை ; ஆடு, மாடு, நாய், பன்றி போன்ற விலங்குகளைப் போல் மாந்தரினம் தனித்துக் காணப்படாமல் ஒரே கூறாகக் காணப்படுகிறது; எந்தச் சாதி ஆணும், எந்தச் சாதிப் பெண்ணை மணந்தாலும் பிள்ளை பெறலாம். ஆனால், விலங்குகளுக்குள் வேறுபட்ட இனங்களைச் சேர்ந்தால் இன உற்பத்தியைப் பெருக்க முடியாது. இந்த இயற்கை விதியின்படி பார்த்தால் மாந்தருக்குள் சாதி இல்லை ' என்பது பெரியாரின் முடிவு. இராமசாமி தனது பத்தொன்பதாம் அகவையில் பதின்மூன்று அகவையே நிரம்பிய நாகம்மையைக் கடிமணம் புரிந்து கொண்டார். தன்னைப் போலவே பகுத்தறிவோடு விளங்கும்படியும், பொதுநலப் பணியில் ஈடுபடும்படியும் அவ்வம்மையாரை உருவாக்கினார். பழுத்த வைதீகரான இவருடைய அண்ணன் கிருட்டிணசாமியும் தம்பியின் பாதையைப் பின்பற்றினார். பல கோயில்களுக்கும், அறநிலையங்களுக்கும், காவலர்களாக இருந்த இவருடைய குடும்பத்தினர் இவருடைய பகுத்தறிவுப் பாதையில் சென்று மக்கள் பணியே மகேசன் பணியெனக்கொண்டனர். தன் மனைவி கோயிலுக்குப் போவதையும், தாலி அணிவதையும் தானே விடும்படி செய்தார். 'தாலி' பெண்களின் அடிமைச் சின்னம், இல்லை யாயின் ஆண்களும் தாலி அணிவதுதான் சரிசமம் என்பது அவருடைய கோட்பாடு. தன் இருபத்திரண்டாவது அகவையில் இவர் துறவு பூண்டு காசிக்குச் சென்றார். அங்குத் துறவிகள் (சாமியார்கள்), மடத்தலைவர்கள் முதலி யோரின் வெளித்தோற்றங்களையும், அருவருப்பான மறைமுக வாழ்க்கை முறைகளையும் நேரடியாகக் கண்டு தன் பாதைக்கு ஐயம், திரிபு, மயக்கம் ஆகியவை இல்லாமல் செய்துகொண்டு, மீண்டும் ஈரோடு திரும்பி முடுக்கமாய்ப் பொதுப்பணியில் ஈடுபட்டார். 1919 ஆம் ஆண்டு ஈரோடு நகரத்தந்தை - நகராட்சித் தலைவர் ஆனார். வேறு பல பொதுமன்றங்களி லும் ஈடுபட்டு மக்களுக்காக உழைத்தார். 116 தாய்நில வரலாறு பெரியாரும் பேராயக் கட்சியும் - இவர் ஈரோட்டு நகர மன்றத் தலைவராக இருந்தபோது சேலம் நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியவர் சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியார் ஆவார். இருவரும் பொது நலப் பணியில் பறித் திளைத்து நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சி. இராசகோபாலாச்சாரியார் தனது நண்டார் பர்.வரதராசுலு நாயுடுவுடன் ஈரோட்டில் இராமசாமியார் வீட்டில் அடிக்கடி வந்து தங்கி விருந்துண்டு மகிழ்வார், இக் காலத்தில் நாடெங்கிலும் விடுதலைக் கிளர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. தமிழ்ப் பெரியார் திரு வி. கலியாணசுந்தரனார் தனது 'நவசக்தி' என்னும் தாளிகையால் தனித்தமிழ் உணர்வையும், விடுதலை வேட்கையையும் வளர்த்தார். 1908 ஆம் ஆண்டு முதலே பேராயக் கட்சியில் ஈடுபட்டுத் தொடர்ந்து விடுதலை இயக்கப் பணிகளைக் கவனித்து வந்த பெரியார் 19 ஆம் ஆண்டு அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 'இராவ்பகதூர்' பட்டம் தருவதாக ஆளும் வெள்ளையர் கூறியும் அதனை மறுத்து முடுக்கமாய் நாட்டு விடுதலைப் பணியில் ஈடுபட்டார், 1902-ல் காந்தியார் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தூணாகப் பெரியார் மாறினார். தீண்டாமையொழிப்பு, மதுவொழிப்பு ஆகியவை அவரைப் பெரிதும் கவர்ந்தன. தனது வாணிகம், பஞ்சாலை ஆகியவற்றை மூடினார். பேராயக் கட்சியின் முழுநேரப் பணியாளர் ஆனார். மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தும் பொருட்டுத் தனது நிலத்திலிருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கைநூல் கதர்) உற்பத்தியைப் பெருக்கத் தன் தோள் மீது கைநூல் (கதர் துணிகளைச் சுமந்து ஊர் ஊராகச் சென்று விற்றார். தன் மனைவி, தங்கையரையும் இவற்றில் ஈடுபடுத்தினார். இவருடைய எண்பது அகவை நிரம்பிய அன்னையாரும் சுதர்" படுத்தினாரெனில் இவருடைய சுதர் இயக்கத்தின் வெற்றியை நாமேதகிக்கலாம். மதுக்கடைகளின் முன் மறியல் செய்தார், பாபமுறை சிறைக்கும் சென்றார்.கதரைப்பேராயக் கட்சியோடு இனத்து அதை ஒரு சிறந்த நாடு சார்ந்த தொழிலாகவும், அதன் வழி ஒற்றுமையை யும், சமத்துவத்தையும் இந்தியர் பெறும்படியும் செய்த பெருமை தந்தை பெரியாரையே சாரும். 1924-ல் பெரியார் பேராயக் கட்சியின் தலைவர் ஆனார். பத்தர்களும், பண்டிதர்களும் குடிகொண்டிருந்த தன் வீட்டைத் தொண்டர்களும், தேசியவாதிகளும் குடிகொள்ளும்படி செய்தார். தேசிய இயக்கத்தாரின் அறச்சாலையாக அவர் வீடு மாறியது. அன்னை நாகம்மை அமுதூட்டும் அறத்தாயார் ஆனார், அக் காலத்தில் அவர் வீட்டையறியாத பேராயக் கட்சித் தொண்ட ரில்லை. அதைப்போலவே அவர் பாதம் படாத ஊர்தமிழ்நாட்டிலில்லை. அவருடைய முடுக்கமான சொற்பொழிவுகளும் நடைமுறைச் செயல் சுளும் பல ஆயிரம் தொண்டர்களைப் பேராயக் கட்சிக்கு இழுத்தன. அவர்களில் காமராசரும் ஒருவர். "நயன்மை மன்றங்களுடன் ஒத்துழைக்கக் கூடாது' என்பது காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு 131-140 கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 117 கூறுபாடு. பெரியார் தன் குடும்பத்திற்குச் சேரவேண்டிய ஐம்பதினாயிரம் உருபாயை நயன்மை மன்றம் செல்ல மறுத்ததால் இழந்தார். இவரைப் போலவே இவருடைய துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம் மாளும் கள்ளுக்கடை மறியல் முதல் பல போராட்டங்களிலும் ஈடுபட்ட னர். பெண்கள் இத்தகையப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு வழிவகுத்த வர்கள் இவர்களே ஆவர். பேராயக் கட்சிக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்பட்டு மறியல் போராட்டங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டபோது காந்தியார் * மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது; அவர்களைக் கேட்டாக வேண்டும்' என்றாராம். ஆயின் பெரியாரின் பாசறையில் படைக்கப்பட்ட படையின் வலிமையை நாம் சற்று ஊன்றிப்பார்த்தல் வேண்டும். கள்ளுக்கடை மறியல் கருத்துரு தந்தவர் பெரியாரே. இதனை அவரே தன் வீட்டில் காந்தியார், இராசகோபாலாச்சாரியார் முதலானோருடன் பேசித் தீர்மானமாக்கித் தானே தொடங்கினார். சுயராச்சியக் கட்சி வீண் போராட்டங்களில் ஈடுபடுவதைவிட ஆட்சிமுறையில் பங்கேற்று நாட்டுக்கு நன்மை செய்யலாமென்ற கோட்பாடுடன் தொடங்கப் பெற்றதுதான் "சுயராச்சியக் கட்சியாகும். இதனைத் தொடங்கியவர் சி.ஆர்.தாசு ஆவார். இதனைப் பெரியாரும் காந்தியாரும் இராசகோபாலாச்சாரியாரும் ஆதரிக்கவில்லை. சென்னை மாநிலத்தில் முழு வலிமை பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்த கட்சி நயன்மைக் கட்சி யாகும். இது பார்ப்பனரல்லாதார் கட்சி. இது 1920 முதல் 1935 வரை மாற்றப்பட்ட துறைகளின் பொறுப்புகளை யேற்று நடத்திவந்தது. இக் கட்சி குமுகாயச் சீர்திருத்தங்களையும் மாநில தன்னாட்சிக் கோட் பாட்டையும் கொண்டது. 'சுயராச்சியக் கட்சி பார்ப்பனர்களின் குகையாயிற்று. நயன்மைக் கட்சியை ஒழிக்க முடுக்கமாய்ப் பாடுபட்டது. இதன் உள்நோக்கத்தை அறிந்தே பெரியார் சுயராச்சியக் கட்சியை வெறுத்தார். வைக்கம் வீரர் இச் சமையத்தில் பெரியாரை உலகறியச் செய்யும் நிகழ்ச்சியொன்று கேரளத்திலுள்ள வைக்கம் என்ற ஊரில் நடந்தது. அவ்வூரில் உள்ள தெருவில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வழிமுறையாக இருந்தது. அதனை உடைத்தெறிந்து தங்கள் உரிமையை நிலைநாட்டத் தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதிபூண்டு ஒரு மாபெரும் அமைதிப் போரில் இறங்கினர். பேராயக் கட்சி இவர்களுக்கு ஆதர வளித்தது. சியார்சுசோசபுஎன்பார் தலைமை தாங்கினார். தொடர்ந்து பலர் சிறை செய்யப்பட்டனர். ஈரோட்டிலிருந்து பெரியார் வைக்கம் சேர்ந்து தலைமையேற்று இப் போராட்டத்தை நடத்தினார். இதனால் சிறைத் 118 தாய்நில வரலாறு தண்டனையும் பெற்றார். இவரைத்தொடர்ந்து இவருடைய மனைவியார் நாகம்மையும் இப்போருக்குத் தலைமை தாங்கினார். இவ்வாறு தொடர்ந்த வைக்கம் போராட்டம் இறுதியில் வெற்றியில் முடிந்தது. 'சத்தியாக் கிரகம்" அல்லது சாத்வீகப் போர்' என்ற முதல் இயலைத் தொடங்கிய வரும், அதில் வெற்றி பெற்றவரும் தந்தை பெரியாரே யாவார். இதனால் தான் இவர் வைக்கம் வீரர்" எனப் போற்றப்பட்டார். தீண்டாமைக்காகப் போராடி இருமுறை சிறை சென்ற பெருமையும் இவரையே சேரும். பேராயக் கட்சியைத் துறத்தல் தந்தை பெரியார் கதர் இயக்கத்தை முடுக்கமாக்கி, அதைப் பேராயக் கட்சியுடன் இணைத்துச் செயல்பட்டதால் கதணரத்தங்களின் கொள்ளைக் கிடங்காக்கிப் பணம் திரட்டியவர்கள் ஏமாந்தனர். வைக்கம் போரால் தந்தையின் உள்ளத்தை நாடறிந்து கொண்டது. இந்நிலையில் பேராயக் கட்சிக்குள்ளேயே தீண்டாம்ை தலைவிரித்தாடியது. இதனைத் தந்தை பெரியார் முழுமூச்சுடன் எதிர்த்து மாந்தனை மாந்தனாக மதிக்காதவரை விடுதலையும் வேண்டாம், வெங்காயமும் வேண்டாமெனக் கூறினார். (அ) குருகுலப் போராட்டம் பேராயக் கட்சியின் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் ஒன்றுபட வேண்டுமெனும் நோக்குடன் சாதி, சமய வேறுபாடின்றி 'நாம் இந்தியர்' என்னும் உணர்வு பெற இளைஞரின் பயிற்சிக்கூடமாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் 'தமிழ்நாட்டுக் குருகுலம்' என்ற நிலையத்தை ஏற்படுத்தியது. அதற்குத் தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியும், பார்ப்பனரல்லாத பலரும் பண உதவி செய்தனர். தந்தை பெரியார், பர். வரதராசுலு நாயுடு, திரு வி. கலியாணசுந்தனார், கானாடு காத்தான் வை சு. சண்முகம் செட்டியார் முதலியோர் பெரும் தொகையளித்தனர். அப்பொழுது தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியின் செயலாளராக இருந்தவர் தந்தை பெரியார். இவர் பேராயக் கட்சியிலிருந்து குருகுலத்திற்குப் பத்தாயிரம் உருபா கொடுக்க முடிவு செய்து முதலில் ஐயாயிரம் கொடுத்தார், ஆனால், குருகுலத்தில் சாதி வேற்றுமை தலைதூக்கியது. அதன் தலைவராக இருந்த வ.வே. சுப்பிரமணிய அய்யர் - வ. வே. சு. ஐயர் பேராயக் கட்சியின் ஒரு பழுத்த தேசியவாதி) பார்ப்பனச் சிறுவர்களையும், பார்ப்பனரல்லாதவர்களையும் உணவு, உடை உறைவிடம், குடிநீர் முதலிய யாவற்றிலும் தனித்தனியே பிரித்துவைத்து சாதிப் பிரிவினையை வெளிப் படையாகக் குருகுலத்தில் வளர்த்தார். இதனையறிந்த பேராயக் கட்சியின் செயலாளரான பெரியார், சாதிப்பிரிவினையை வளர்க்கும் குருகுலத்திற்குப் பேராயக் கட்சி கொடுப்பதாய்க் கூறிய மீதி ஐயாயிரத்தைக் கொடுக்க மறுத்தார். ஆனால், துணைச்செயலாளராக இருந்த பார்ப்பனிடமிருந்து வ.வெ. சுப்பிரமணிய அய்யர் மீதி ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டார். இதனால் தமிழ்நாட்டுக்குருகுலம் ஒழிப்புப் போராட்டம் தொடங்கியது. பெரியாருடன் பர். வரதராசுலு நாயுடு, திரு வி. கலியாண சுந்தரனார், கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 119 எசு. இராமநாதன், என். தண்டபாணி பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர். பர். வரதராசுலு நாயுடுவே இதற்குத் தலைமை தாங்கினார். நாடெங்கிலும் பார்ப்பனரின் சாதி வெறியைக் கண்டித்துப் போர் மூண்டது. காந்தியார் தலையிட்டுக் கூறியும் வவெ. சுப்பிரமணிய ஐயர் குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளோடு மற்ற பிள்ளைகள் சேர்ந்திருக்க முடியாதென்றும், பார்ப்பனன் பரமனினும் மேலானவனென்றும் கூறிவிட்டார், போராட்டம் வலுத்தது. அக் குருகுலத்தை வளர்த்த தமிழர்கள் மேலும் உதவி செய்ய மறுத்தனர். குருகுலம் மறுநாளே மூடப்பட்டுவிட்டது. (ஆ) பேராயக் கட்சியில் சாதி வேற்றுமை மேற்கூறிய நிகழ்ச்சிக்குப்பின் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற இனவேற்றுமையும், சாதி உணர்ச்சியும் பேராயக் கட்சியில் வெளிப்படை யாகக் காணப்பட்டது. பேராயக் கட்சியின் தலைவராக பர். வரதராசுலு (நாயுடுவும், செயலாளராகத் தந்தை பெரியாரும் இருந்தனர். திருச்சியில் கூடிய மாநாட்டில் சூத்திரர்கள் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியுடன் நடக்கின்றனர் எனக்கூறி இம் மாநாட்டில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு பர்டிஎசு.எசு. இராசன், சி. இராசகோபாலாச்சாரி, என்.எசு. வரதாச்சாரி, கே. சந்தானம், பர். சாமிநாத (சாகாதிரியார் ஆகிய ஐந்து பார்ப்பனரும் கட்சியிலிருந்து விலகினர். இதனால் கட்சிக்கும் நாட்டு விடுதலைக்கும் சாதி வேறுபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதும், நாடு விடுதலையானாலும் பார்ப்பனர் உயர்ந்தவராகவே. "எசமானர்களாகவே இருப்பார்களென்பதும் மக்களுக்குத் தெளிவாகியது. பார்ப்பனர் பேசும் சாதியற்ற குமுகாயமெனும் பேச்சின் திரை கிழிந்தது. அடுத்து, நயன்மைக் கட்சி அமைச்சரவையின் தலைவர் பனகல் அரசர் 'அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனையெதிர்த்து நாடெங்கிலுமிருந்த பார்ப்பனர்கள் போர்க்கொடி உயர்த்தினர். பார்ப்பனரையே பெருவாரியாகக் கொண்ட வழக்குரைஞர் சங்கமும், போகத்தில் திளைத்த மடாதிபதிகளும், கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்த பூசாரிகளும் கிளர்ச்சியில் ஈடுபட்ட னர். பேராயக் கட்சியரிலிருந்த பார்ப்பனரும்முடுக்கமாய் இதில் பங்கேற்று னர். ஆனால், பெரியார் மட்டும் இச் சட்டத்தை ஆதரித்தார். இவருக்கு உறுதுணையாக பர். வரதராசுலு நாயுடுவும், எசு. இராமநாதனும், திரு வி. கலியாண சுந்தரனாரும் நின்றனர். இதனாலும், பார்ப்பனரின் தன்னலப் பாதுகாப் புணர்ச்சியும், சாதி வெறியும் தமிழர்களால் நன்றாக உணரப்பட்டுவிட்டது. வகுப்புவாரிப் படிநிகராளியம் பார்ப்பனர்பேராயக் கட்சியின் பெயரால் தங்களின் நலனையும் சாதி வேற்றுமைகளையும் வளர்ப்பதையறிந்த பெரியார் நூற்றுக்கு மூவராயுள்ள பார்ப்பனர் அரசுப்பணிகள் அனைத்திலும் வீற்றிருப்பதையும், மீதியுள்ள 1Z0 தாய்நில வரலாறு 97 பேர் படியாதவராய், பாமரராய், குற்றேவலராய், உடல் உழைப்பையே நம்பி வாழ்பவர்களாய் இருப்பதையும் மாற்றியமைக்க விரும்பினார். பார்ப்பனரல்லாதாருக்கு மக்கள் தொகைக்கேற்ப அரசுப்பணி, கல்வி முதலியவற்றில் பங்கு அளிக்க வேண்டுமென்றார். இதற்காக அவர் பேராயக் கட்சியின் மாநில மாநாடுகளில் வகுப்புவாரிப் படிநிகராளியம்' பற்றிய தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஆனால், பேராயக்கட்சிப் பார்ப்பனர் சுளால் இது மாநாடு தோறும் தோற்கடிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டி விருந்து 1925 ஆம் ஆண்டு வரை பெரியாரும் தொடர்ந்து இதனைக் கொண்டு வந்து தோற்றார். சோர்வு அடையும் வழக்கமற்ற அவர் 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு பேராயக் கட்சியின் மாநில மாநாட்டில் இதே தீர்மானங்களைக் கொண்டு வந்தார். மாநாட்டுத் தலைவர் திருவி. கலியாணசுந்தரனாரும் இதனை மறுத்தார். இனிபேராயக் கட்சியிலிருந்துகொண்டு பார்ப்பனரல்லாதகோடான கோடி மக்களுக்குப் பாடுபடமுடியாதென்றும், பேராயக்கட்சி பார்ப்பனரின் குகையென்றும் கூறி மாநாட்டினின்றும் வெளியேறினார். இதனை முன்கூட்டியே அறிந்த பேராயக் கட்சிப் பார்ப்பனர்கள் சென்னை மாகாண சங்கம்', "தேசிய சங்கம்" என்னும் இரண்டு சங்கங்களைத் தோற்றுவித்துப் பார்ப்பன ரல்லாதாரைக் கொண்டே பார்ப்பனரல்லாதாரை எதிர்த்தனர். 'சுயராச் சியக் கட்சியும் இப்பணியில் முழுப் பங்கேற்றது. இம் மூன்று கட்சிகளும் பார்ப்பனர் பாசறைகளாயின. பார்ப்பனரல்லாதார் பகடைக் காய்சுளாய் இவற்றில் உருண்டனர். இதனால் இதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த நயன்மைக் கட்சி 1926 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. சுயராச்சியக் கட்சி வெற்றி பெற்றது. பர். சுப்பராயன் தலைமையேற்ற அமைச்சரவையைச் சுயராச்சியக் கட்சி பின் நின்று நடத்தியது. தன்மான இயக்கம் (சுயமரியாதைக் கட்சி) - 1925-ல் காஞ்சிபுரம் மாநாட்டில் பேராயக் கட்சியைத் துறந்து வெளியேறிய பெரியார் தன்மான இயக்கத்தை (சுயமரியாதைக்கட்சித் தோற்றுவித்தார். தம் கருத்துகளை வெளியிடக் குடியரசு' எனும் கிழமை யேட்டையும் தொடங்கினார். நாடெங்கிலும் தன்மான இயக்கச் சொற் பொழிவுகனைத்தொடர்ந்து நடத்தினார். தமிழர்கள் வீறுகொண்டனர். 1976-ல் மதுரையில் பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் பல மாநாடுகள் நடந்தன. பார்ப்பன ரல்லாதார் பலரும் பெரியாரைப் பின்பற்றினர். காலப்போக்கில் பேராயக் கட்சி, இந்து சமயம், பார்ப்பனர் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் நாடு நலம்பெறும் என்னும் நிலைக்குப் பெரியார் வந்தார். காந்தியார் இந்து சமயத்தையும் சாதிப்பிரிவினையையும், மூட நம்பிக்கைகளையும் ஆதரித்ததால் அவரிடமும் நம்பிக்கை இழந்தார். 1929 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 17, 18 நாள்களில் செங்கழு நீர்ப்பட்டில் முதல் மாநிலத் தன்மான இயக்க மாநாடு நடந்தது.டபிள்யூ. கிபி. 19 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 121 பி.ஏ. செளந்தரபாண்டியன் தலைமையேற்க, வயவர். பிடி இராசன், பர். சுப்பராயன் முதலியோர் இதில் பங்கேற்றனர். தீண்டாமை, சாதி வேற்றுமை, சாதியைக் குறிக்கும் பட்டப்பெயர்கள், புரோகிதம் முதலிய வற்றைத் துறக்கும்படி தீர்மானங்கள் நிறைவேறின. சாமி கும்பிடத்தரசன் தேவையில்லையென்றும், பெண்களுக்குச் சமஉரிமை வேண்டுமென்றும் கூறப்பட்டன. தன்மான இயக்கம் தமிழகத்தில் சூறாவளியெனச் சுழன்று வளர்ந்தது. பர். சுப்பராயன், வயவர். சண்முகம், வயவர், பன்னீர்ச்செல்வம், எம். கே. ரெட்டி, வயவர், எ. இராமசாமி முதலியார், நாகர்கோயில் பி. சிதம்பரம், சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை), சிடி நாயகம், எசு. இராமநாதன், எசு. குருசாமி, சாமி சிதம்பரனார், அ.பொன்னம்பலனார், கே.வி. அழகர்சாமி, ஏ.எசு, அருணாசலம், சொ. முருகப்பர், எசு.வி. இலிங்கம், சி.ஏ. அய்யாமுத்து, மாயவரம் சி. நடராசன், நாகைமணி, என்பி, காளியப்பன், பி.சு, தண்டபாணி, ச.ம.சி. பரமசிவம், கோவை. ஏ.ஆர். சிவானந்தம், அருப்புக்கோட்டை கருப்பையா, சித்தர்க்காடு இராமையா திருவாட்டி இராமாமிர்தம், சேஎசு. கண்ணப்பர்,பூவாளூர் செல்வகணபதி முதலிய பல ஆயிரம் பேர் நாடெங்கிலும் சுற்றித் தன்மான இயக்கத்தைப் பரப்பினர். இதன் பயனாகப் பல கலப்புத் திருமணங்களும், கைம்பெண் (விதவை) மணங்களும் புரோகிதர் இல்லாமலேயே நடந்தன. சாதி வேறுபாடின்றி யாவரும் சேர்ந்துண்ணும் வழக்கமும், சாதிகளைக் குறிக்கும் பட்டங்களைத் துறத்தலும் நடைமுறைக்கு வந்தன. 1930-ல் நயன்மைக் கட்சி வெற்றி பெற்றது. மூடப் பழக்கங்கள் மறையத்தொடங் கின. தொல்கதைகள், இதிகாசங்கள், ஆரிய மறைகள், சாத்திரங்கள் முதலியவற்றைப் பாமரரும் அறிந்தனர். அவற்றில் கூறப்பட்ட பகுத்தறி வுக்கு ஒவ்வாதவற்றை வெறுத்தனர். தமிழர் தன்மானம் பெற்றனர், அரசியல், கல்வி, பொருளியல் முதலியவற்றில் தலைவிதியை மறுத்து முன்னேறினர். ஆகவே, தமிழகத்தில் ஒரு குமுகாய மறுமலர்ச்சியைக் கண்டது இத் தன்மான இயக்கமேயாகும். சமநெறி (சமதர்ம) இயக்கம் பெரியாரின் தன்மானக்கோட்பாடுகள் நாள்தோறும் வளர்ந்தன. குடியரசுத் தாளிசையும், 'ரிவோல்ட்' என்ற ஆங்கில ஏடும் இக்கோட்பாடு களை மக்களிடையே பரப்பின. இந்நிலையில் பெரியார் 1929 ஆம் ஆண்டு மலேசியா சென்று அங்கிருந்த தமிழர்களை ஒன்றுபடுத்தினார். தன்மான இயக்கத்தையும், பகுத்தறிவையும் அங்கெல்லாம் அறியச் செய்தார். சனவரி 1930-ல் இந்தியாவுக்குத் திரும்பியபோது காந்தியாரின் உப்புச் சத்தியாக் கிரகம் தொடங்கவிருப்பதை யறிந்தார். காந்தியாரின் எத்தகைய போராட் டத்திலும் தமக்கு நம்பிக்கையில்லையென்றார். ஏனெனில், முதலில் நம்மிடையேயுள்ள தீண்டாமை, சாதி, சமய, முதலாளிய, பார்ப்பனிய, 127 தாய்நில வரலாறு வல்லாண்மை ( ஆதிக்கங்கள்) ஒழிந்தால் வெள்ளையன் ஆட்சி தானே ஒழிந்து விடுமென்பது பெரியாரின் கருத்து. இதனை அறியாதார் அவரை நாட்டுக்கு இரண்டகம் செய்பவர் என்றும், நாட்டுப்பற்றேயற்றவரென்றும் தூற்றினர். , 1930 மே திங்கள் 10, 11 நாள்களில் ஈரோட்டில் தன்மான இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இதனை இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, இசை மாநாடு முதலியனவாகப் பிரித்து நடத்தினார். தனித்தனித் தலைவர்கள் ஒவ்வொன்றுக்கும் தலைமை தாங்கினர். இதுபோன்ற மாநாட்டுப் பிரிவை முதலில் கண்டவரும் பெரியாரே! இதில் இந்துக்களோடு இசுலாமியரும், கிறித்தவரும் கலந்து கொண்டனர். தீண்டப்படாதார்தாம் சமைத்துப் படைத்தனர். இத்தகைய சமவிருந்து முறையை முதலில் சுண்டவரும் பெரியாரே. இம்மாநாட்டின் தலைவர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.செயக்கர் ஆவார். 1930-ல் நடந்த தேர்தலில் நயன்மைக் கட்சி வெற்றி பெற்றது. 'சுயராச்சியக் கட்சியின் சுவடு மறைந்தது. இதற்குப் பெரியாரின் தன்மான இயக்கத்தின் வளர்ச்சியே கரணியமாகும். ஆயினும் நயன்மைக் கட்சி பெரியாரின் கொள்கைகளை ஏற்க அஞ்சியது. 1931 ஆகஸ்டில் விருதுநகரில் தன்மான இயக்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு நடந்தது. இதற்குத் தலைமையேற்றவர் வயவர். ஆர்கே. சண்முகம் ஆவார். மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்னும் கருத்தும், கதர்த்தொழில் இந்தியப் பொருளியலை வளர்க்காதென்னும் கருத்தும் இம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. சமயம், மூட நம்பிக்கை சுளுக்கு இருப்பிடமானதென்னும் கருத்தை இந்துக்களேயன்றிஇசுலாமிய ரும் கிறித்தவரும்கூட எதிர்த்தனர். இயக்கத்திற்கு எதிரிகள் ஏராளமாயினர், ஆயினும், பகுத்தறிவைக் கூறும் பல அயல்நாட்டு நூல்களும், இந்து சமய இதிகாச, தொல்கதை, சாத்திரங்களிலுள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையும், சொற்பொழிவுகளாலும் வெளியீடுகளாலும் மக்களுக்கு விளக்கப்பட்டன. எதிர்ப்புக்கிடையே இயக்கம் வேகமாக வளர்ந்தது. * வெளிநாட்டுப் பயணம் 1931 டிசம்பரில் தந்தை பெரியார் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். எகிப்து, உருசியா, கிரீசு, துருக்கி, செர்மனி, ஃபிரான்சு, சுபெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஈழம் முதலிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். இந் நாடுகள் பகுத்தறிவால் எப்படி முன்னேறியுள்ளன வென்பதைக் கண்டு வியந்தார். 1932 நவம்பரில் நாடு திரும்பியதும் தமது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார், குமுகாயச் சீர்திருத்த இயக்க மாகவே செயல்பட்டதன்மான இயக்கம்: இனி அரசியல் இயக்கமாகவும் செயல்பட வேண்டுமென்று தன்மான இயக்கத்திற்குள்ளேயே சமநெறி ரீசமதர்மர் இயக்கம் ஒன்றை உருவாக்கினார். பெரியார் உருசியாவைப் கிபி.1920 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 123 பின்பற்றுகிறாரென்றும், அரசியலிலீடுபடக்கூடாதென்றும், சிலர் தன்மான இயக்கத்திலிருந்தே வெளியேறினார்கள். இதனை 'ஈரோட்டுத் திட்டம்' என்றும் அழைத்தனர். ஆயினும் வழக்கப்படி பெரியாரின் பிடிவாதமேவென்றது: கட்சி வலுப்பட்டது.) நெருக்கடி 193) ஏப்பிரலில் நாகம்மையார் இயற்கையெய்தினார். ஆனால் அன்றே பெரியார் திருச்சியில் தடை உத்தரவை மீறிப் பேசியதால் சிறை செய்யப்பட்டார். நவம்பர், 1933-ல் கோவை மாவட்டமாநாடு' நடந்தது. இதில் அரசைத் தாக்கிப் பேசியதற்காக இவரும், இவர் தங்கை கண்ணம் மாளும் சிறைப்பட்டனர். கோவைச் சிறையில் இவர் மீண்டும் சி. இராச கோபாலாச்சாரியைச் சந்தித்தார். காந்தியாரின் தூண்டுதலின் பேரில் ஆச்சாரியார் எவ்வளவோ முயன்றும் பெரியார் மீண்டும் பேராயக் கட்சியில் சேர மறுத்துவிட்டார். அரசு அடக்குமுறைகளைத் தீவிரமாக்கியது. குடியரசு புரட்சி, பகுத்தறிவு முதலிய தன்மான இயக்க ஏடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புரட்சி வீரர் பகவத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நாலைத் தமிழில் ப. சீவானந்தம் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவர் சிறை செய்யப்பட்டதோடு நூலும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு தன்மான இயக்கத்தை வேரோடு சாய்க்க முனைந்தது, நயன்மைக் கட்சியின் ஆதரவு 1934-ல் பெரியார் தமது பதினாறு கூறுபாடுகளைக் கொண்ட அரிய திட்டமொன்றை வெளியிட்டார். உழவர்நலம், சொத்துரிமை, வாணாள். காப்பு நிதி, அனைவருக்கும் கட்டாயக்கல்வி, மதுவிலக்கு, தீண்டாமை யொழிப்பு, மூடநம்பிக்கை யொழிப்பு, எல்லோருக்கும் சமமான அரசுப் பணி வாய்ப்பு நிலவரியில் நேர்மை, உள்ளாட்சித் துறைகளுக்கு அதிக அதிகாரங்கள் முதலியன அத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இத்தகைய திட்டங்களைப் பேராயக் கட்சியால் நிறைவேற்ற முடியாதென்றும் நயன்மைக் கட்சியால்தான் முடியுமென்றும் ஆகவே, நயன்மைக் கட்சியைத் தூம் நேரடியாக ஆதரிப்பதாகவும் கூறினார். அக் கட்சியும் இவருடைய திட்டங்களை ஏற்றது. இந்தி எதிர்ப்பு தந்தை பெரியார் பேராயக் கட்சியிலிருக்கும் போதே இந்தியை எதிர்த்தார். 1937-ல் நடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் பேராயக் கட்சியே வெற்றி பெற்றது. சென்னை மாநிலத்தில் அக்கட்சி சி. இராச் கோபாலாச்சாரியின் தலைமையில் அமைச்சரவையை அமைத்தது. பெரியார் ஆதரித்ததால்தான் நயன்மைக்கட்சி தோற்றதென்று பலர் கட்சி மாறினர். பார்ப்பனரையும், பேராயக் கட்சியையும் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். 134 தாய்நில வரலாறு கழக வளர்ச்சி திராவிடர் கழகத்தின் குரலாக 'விடுதலை' யும், குடியரசு'ம், அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்ட திராவிடநாடு 'ம், என்.வி. நடராசனை ஆசிரியராகக் கொண்ட திராவிடனும்', டி. எம். பார்த்த சாரதியை ஆசிரியராகக் கொண்ட தமிழ் உலகமும்' வெளிவந்தன. அண்ணாவின் பேச்சுகள், திராவிடர் நிலை, நல்ல தீர்ப்பு, நாடும் ஏடும் முதலிய நூல்களாக வெளிவந்தன. 'திராவிட எழுத்தாளர் கழகம்' என்ற அமைப்பும் ஏற்பட்டது. இதில் எசு. குருசாமி தலைவராகவும், புலவர் பு. செல்வராசு செயலாளராகவும் பணியாற்றினர். இத்தகைய ஏடுகளும், அண்ணாவின் பேச்சுகளும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனால் 'திராவிடர் மாணவர் கழகம்' என்ற அமைப்பும் ஏற்பட்டது. க. அன் பழகன், இரா. நெடுஞ்செழியன், தவமணி இராசன், இளம்வழுதி, சு அ.மதி யழகன், ஏபி.சனார்த்தனம் முதலியோர் இம்மாணவர் கழகத்தில் பங்கேற்ற னர். பின்னர் மு. கருணாநிதி, தில்லை வில்லாளன், அரங்கண்ணல், அப்பாவு, கோகுலகிருட்டிணன், பொன்னுவேலு முதலியோரும் இதில் ஈடுபட்ட னர். திராவிடர் கழகத்தை வளர்ப்பதற்கென்றே கருஞ்சட்டைத் தொண்டர் படை என்னும் அமைப்புத் தோன்றியது, இத்தொண்டர்கள் முழுநேரப் பணியாளர்களாகவும், முடுக்கமாய் உழைப்பவர்களாகவும் இருந்ததால் கழகம் கடிது வளர்ந்தது. 146-ல் மதுரையில் 'சுருஞ்சட்டைத் தொண்டர் மாநாடு நடந்தது. இதற்குப்பின் இப்படைக்கு அரசு தடை விதித்தது. ஆயினும், தடையை மீறித் தடியடிபட்டுத் தொண்டர்கள் கழகத்தை வளர்த்தனர். மீண்டும் இந்தி எதிர்ப்பு 1945-ல் டி எசு. அவினாசிலிங்கம் கல்வியமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை மீண்டும் அரசு கட்டாயப் பாடமாகப் புகுத்தியது. தளபதி அண்ணா , டிஎம் பார்த்தசாரதி, திருமதி அலமேலு அப்பாத்துரை முதலியோர் தலைமையில் பள்ளிகளின் முன் இந்தி எதிர்ப்பு மறியல் செய்யப்பட்டது. பொதுமக்களும் ஆதரவளித்தனர். 1947 சூலை முதற் கிழமை நாடு முழுவதும் திராவிடநாட்டுப் பிரிவினைக்கிழமை கொண் பாடப்பட்டது. இந்திய விடுதலை நாள் இந்தியா 1947 ஆகச்டு15ல் ஆங்கிலர் வல்லாட்சியினின்று விடுதலை பெற்றபோது கழகத் தலைவர் பெரியார் இதனைத்துக்க நாளாகக் கொள்ள வேண்டுமென்றார். 'நாட்டுக்கு விடுதலையேயொழியத் தமிழருக்கு விடுதலை இல்லை; தமிழன் இனி பார்ப்பனிய ஆளுமைக்கு அடிமை' எனக் கொண்டே பெரியார் இதனைத் துக்கநாளாகக் கொள்ளவேண்டும் மென்றார். ஆனால், தளபதி அன்ணா ஒரு நாட்டின் விடுதலை நாளென் பது உலக வரலாற்றில் இடம்பெறும் பொன் நாளென்றும், இந்தியாவும் சாசிலிங்கம் கடாயப் பாடமா அப்பாத்து, கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 175 பாகிகதானும் பிறக்கும் நாளென்றும், கூறி இதனைத் துக்க நாளாகக் கொள்ளாமல் நன்னாளாக, பொன்னாளாகப் போற்றி மகிழ வேண்டு மென்றார். பார்ப்பனியத்தை அகற்றுவது தமிழர் கையிலுள்ள தென்றும், அதற்காக விடுதலையே வேண்டாமென்பது கூடாதென்றும் அவர் கூரினார். திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம் 1949 மே 14-ல் இந்தியாவின் தலைமை ஆளுநராயிருந்த சி. இராசி கோபாலாச்சாரி திருவண்ணாமலைக் கோயிலில் பாதாளவிங்கத் திருவறையைத் திறந்துவைக்க வந்தபோது பெரியாரும், அவருடைய தொண்டர்களுள் ஒருவரான மணியம்மையும் அவரைச் சுமுசுகமாய்ச் சந்தித்தனர். பின்னர், எழுபத்தோர் அகவை நிரம்பிய பெரியாருக்கும், இருபத்தாறு அகவை நிரம்பிய மரியம்மையாருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதனை எதிர்த்து அண்ணா உட்படப் பலரும் கண்ணீர் சிந்தி வெளியேறி 1791949-ல் "திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் புதிய அமைப்பைத் தொடங்கினர். இரண்டடி அகலமும் மூன்றடி நீளமும் கொண்ட கொடியின் மேற்பகுதி கறுப்பாகவும், கீழ்ப்பகுதி சிவப்பாகவும் நடுவில் உதயசூரியன் சின்னத்துடனும் இருக்கும் கொடியைச் சின்னமாகக் கொண்டனர். குமுகாயச் சீர்திருத்தம், பகுத்தறிவுப் பண்பாடுகள் முதலிய வற்றையே இக் கட்சி அடிப்படையாகக் கொண்டது. பொதுக் குழு, கொள்கை விளக்கக் குழு அமைப்புக்குழு, நிதிக்குழு என்பனவாகப்பிரித்து அண்ணாவைபப்பொதுச்செயலாளராகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் வளரத் தொடங்கியது. இக் கழகம் நடத்திய போராட்டத்தினால் அரசு 187 .1950-ல் இந்தி சுட்டாயப் பாடம் அன்று என்று கூறியது. இதனாலும் மக்களின் செல்வாக்கைக் கழகம் பெற்றது, நெருக்கடி 1950-ல் சென்னை உயர் நயன்மை மன்றத்தில் வகுப்புவாரிப் படிநிகரானியம் செல்லாதென்று தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்துக் கழக ஏடுகளில் எழுதியும், நாடெங்கிலும் கழகத்தார் கண்டனக் கூட்டங்களை நடத்தியும் வந்தனர். இதனால் கழக ஏடான திராவிடநாடு' மூவாயிரம்உருபாஈட்டுத்தொகை சுட்டவேண்டியதாயிற்று. இத் தொகை யை மக்களே கட்டினர். இதற்குப்பின் கழகத்தை அடியோடு ஒடுக்க அரசு முனைந்தது. அண்ணாவின் 'ஆரியமாயை' என்ற நூலுக்குத் தடை விதித்தது. அண்ணாவுக்கும் அரசு ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை - வழங்கியது. அண்ணாவை விடுதலை செய்யக்கோரி நாடெங்கும் கிளர்ச்சிக ளேற்பட்டன. அண்ணா விடுதலை ஆனார். இதனையடுத்து அரசு, கழகத்தவர் பலர் மீது வழக்குகள் தொடுத்துத் தண்டித்தது. கழகத்தவரும் தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். 195டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாள்களில் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன் மாநில மாநாட்டினை நடத்தியது. 'நம்நாடு' என்னும் ஏடும் தொடங்கப் பட்டது. பின்னர் மாலைமணி' என்னும் ஏடும் கழகக் குரலை ஒலித்தது, 126 தாய்நில வரலாறு திருத்தணிப் போராட்டம் தமிழரசுக் கழகத் தலைவர் மா.பொ.சிவஞானமும், தளபதி வினாயகமும் திருத்தணி தமிழகத்துக்கே சேரவேண்டுமெனப்போராடினர். இப்போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்குகொண்டது. இதனால் பல இன்னல்களையும் அடைந்தது. கல்லக்குடிப் போராட்டம் திருச்சிக்கு அருகிலுள்ள "டால்மியாபுரம்' என்னும் ஊரின் பெயரைக் “கல்லக்குடி' என மாற்றும்படி திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது. இது தொடர்ந்து பல நாள்கள் நடந்தது. மு. கருணாநிதி, பாவலர் கண்ணதாசன் முதலியோர் தலைமை தாங்கினர். தொடர்வண்டிப்பாதையில் படுத்து நடத்திய இப்போராட்டத்தில் பலரும் சிறைப்பட்டனர். காவலர் சுட்டதில் இருவர் மாண்டனர். நாடெங்கிலும் கண்டனங்கள் எழுந்தன. போராட்டம் வெற்றிபெற்றது, ஆட்சிபீடத்தை நோக்கி 1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தங்கள் கருத்தை ஏற்போரை ஆதரித்த கழகம் 1957-ல் தானே நேரடியாகத் தேர்தலில் நிற்க முடிவு செய்தது. இதற்கிடையில் நடந்த கேவிகேசாமியின் படுகொலையும், சங்கர லிங்கனார் "தமிழ்நாடு' எனப் பெயரிடும்படி 78 நாள் உண்ணா நோன் பிருந்து உயிர்விட்ட நிகழ்ச்சியும் கழகத்திற்கு ஆக்கமாயின. 197 தேர்தலில் திமுக 15 இடங்களைப் பெற்று அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஈ.வே.கி.சம்பத்தும், இராதருமலிங்கமும் நாடாளு மன்றம் சென்றனர். பிரிவினைக் கொள்கையைக் கைவிடல் 1962-ல் தி.மு.கழகத்தினர் நாடு முழுவதிலும் விலைவாசியை எதிர்த்துப் போராடிச்சிறை சென்றனர். போராட்டம் வெற்றிபெற்றதோடு மக்களின் பேராதரவையும் பெற்றது. சிறைமீண்ட அண்ணா திராவிட நாட்டுப் பிரிவினை'யைக் கைவிட்டார், சீனப்போரை எதிர்த்து ஒன்று பட்ட நாட்டுப்பற்றுடன் போரிட மக்களுக்கு அழைப்பு விடுத்தார், 1962-ல் நடந்த தேர்தலில் கழகத்தினர் 52 இடங்களைப் பெற்றனர். அண்ணா தோற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக அமர்த்தப் பெற்றார். மீண்டும் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கழகம் போராட்டம் தொடங்கியது. சட்ட எரிப்புப் போராட்டம் இதில் சிறப்பானது. பலரும் சிறைத்தண்டனை பெற்றனர், தீக்குளிப்பு இந்தியை எதிர்த்து கீழ்ப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், அரங்கநாதன், ஐயம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் 141-150 கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 117 முத்து, மாயவரம் சாரங்கபாணி ஆகியோர் தீக்குளித்தனர். பலர் போராடிச் சிறைப்பட்டனர். நாடே போர்க்களமாகியது. 1967 தேர்தல் இத்தகைய போராட்டங்களினால் மக்களின் மனத்தைக் கவர்ந்த கழகம் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் 150 இடங்களைப் பெற்று அமைச் சரவை அமைத்தது. தங்கள் வெற்றியைத் தந்தை பெரியாரின் காலடியில் வைத்து வாழ்த்துப் பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் 1969-ல் அண்ணா இறந்தார். மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனார். பெரியார் பாதை 1949ல் தம்மிடமிருந்து பிரிந்து திமுக ஏற்பட்ட பின்னும் பெரியார் தனித்து நின்று பல போராட்டங்களை நடத்தினார். 1950]-ல் வடநாட்டார் கடைகளின் முன்பு மறியல் செய்தார். 1952-ல் தொடர்வண்டி நிலையங்களி லுள்ள பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்ட இந்தி எழுத்துகளை அழித்துத் தமது இந்தி எதிர்ப்பைத் தெரிவித்தார். 1954-ல் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போரிட்டார். அவ்வாண்டில் பர்மாவில் நடந்த உலகப் பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் கலந்துகொண்ட தாழ்த்தப்பட்டோரின் தனிப்பெரும் தலைவரும் உலக மாமேதையுமான பர். பி. ஆர். அம்பேத்கார் அவர்களைக் கண்டு அளவளாவினார். 1955-ல் இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியினைக் கொளுத்தும் போராட்டத் தில் ஈடுபட்டார். 1956-ல் இராமாயணக் கதைதாயகன் இராமனுடைய படத்தை எரித்துத் திரவிடப் பண்பினைப் போற்றினார்.1957-ல் பார்ப்பன் உண்டிச் சாலைகளின் முன் மறியல் நடத்திச் சாதிச் இழிவினைப் போக்கி னார். இந்திய அரசியல் சட்டத்தினை எரித்துத் தமது இந்தி எதிர்ப்பைக் காட்டினார். 1959-ல் வடநாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்து சமயத்திலுள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மக்களுக்கு விளக்கினார். பல மொழிகளிலும் உள்ள இராமாயணத்தை மக்களுக்கு விளக்கிக் கூறினார். தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர் உரிமைகளைப் பற்றி நாடெங்கிலும் பறை சாற்றினார். 1960-ல் தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் படத்தினைஎரிப்பதாக அறிக்கைவிட்டு அரசின் கவனத்தை ஈர்த்தார்.1962ல் ஆண்டு பச்சைத் தமிழர்' காமராசர் அவர்களைத் தேர்தலில் ஆதரித்து வெற்றிபெறச்செய்தார். 1967-ல் திமுக வெற்றிபெற்றதும் அண்ணாவும் பெரியாரும் ஒன்றிணைந்தனர்.1970ல் பெரியார் 'பகுத்தறிவாளர் கழகம்", 'சிந்தனையாளர் கழகம்' ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். 1971ல் சேலம் மாநாட்டில் இந்துச் சமயக் கடவுளர்களின் இழிதகைமைகளை மக்களுக்கு விளக்கிக்கூறி, இக் கடவுளர்களின் தோற்றரவுகளும், தொல் கதைகளும், மறைகளுமே சாதி வேறுபாடுகளை வளர்த்தன வென்பதை நாடறியச் செய்தார். 1971-ல் நடந்த இடைத் தேர்தலில் திமுக. 185 இடங் களைப் பெற்று மீண்டும் வெற்றிபெற்றது. பெரியார் பெருமகிழ்வடைந்து, தூயதிரவிடரின் அமைச்சரவையை வாழ்த்தினார். 178 தாய்நில வரலாறு மறைவு இவ்வாறு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை குமுகாய நலம் நாடி, பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்ட தந்தை பெரியார் 1973 டிசம்பர் திங்கள் 24 ஆம் நாள் வேலூர் மருத்துவமனையில் உயிர் நீத்தார். இவர் பார்ப்பனியத்திற்குப் பகைவர்; ஆனால், பார்ப்பனருக்கு நெருங்கிய நண்பர். இந்து மதத்திற்கோர் எதிரி; ஆனால், சாதியற்ற சமயத்தினை வளர்த்த தலைவர். விடாப்பிடியானவர்; ஆனால், எவரையும் கவரும் இனிய நண்பர், தந்தை பெரியார் தமிழினத்தின் சிற்பி: இந்திய வரலாற்றில் ஒரு நாயகர்.உலக ஓர்மை சிந்தனையாளர்களில் தனியிடம் பெற்றவர். மேற்கூறிய முகாமைச் செய்திகளையும், அவற்றால் சிபி. இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் அடைந்த மாற்றங்களையும் மனத்திற்கொண்டு அவற்றிற்கு முன்னும், பின்னும் தமிழகத்தில் நடந்த செயல்களைப் பற்றி இனிச் சுருங்கக் காண்போம். அஃதாவது கிபி. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை மேலேழுந்தவாரியாகப் பார்ப்போம். (ஆ) பொருளியல் காசுகள் கி.பி. 19, 20 ஆம் நாற்றாண்டுகளில் சென்னை மாநிலத்தின் பொரு ளியல் வளர்ச்சிப் போக்கினை ஆயும்போது வாணிகம், வேளாண்மை, போக்குவரத்து முதலியவற்றைப் பற்றித் தனித்தனியே கூறுதல் சாலவும் பொருந்தும். முதலில் பொருளியல் துறையின் இழுநாணாக இருக்கும் காசுகளைப் (நாணயங்களை பற்றிச் சிறிது அறிதல் வேண்டும். இக் காலத்தில் பலதரப்பட்ட காசுகள் (நாணயங்கள் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன. அவற்றுள் ஆர்க்காட்டு நவாபு வெளியிட்ட உருபாக்களும், பொன் மொகராக்கள்' எனப்படும் காசுகளும் வெனீசியக் காசுகளும், பறங்கிப்பேட்டை மொகராக்களும், ஐதரால் வெளியிடப்பட்ட ஐதாரி, பொன் மொகராக்கள், சுதாரியவராகன்கள் ஆகியவையும், மராத்தியரின் உருபாக்காசுகளும், சென்னையில் அச்சிடப்பெற்ற நட்சத்திர வராகன்கள், சென்னை வராகன்கள், பணங்கள், துட்டுகள் முதலியனவும் குறிப்பிடத் தக்கனவாகும். மேஜர் ஜெனரல்) வயவர் தாமசு மன்றோ (1820 - 187) சென்னை ஆளுநராயிருந்தபோது இக் காசுகள் யாவும் ஒழிக்கப்பட்டுப் புதிய உருபாச்சாசுகள் அச்சிடப்பட்டன. சாதாரண வராகன் மூன்று உருபாயாகவும், நட்சத்திர வராகன் மூன்றரை உருபாயாகவும் மதிப்பிடப் பெற்றன. சென்னையிலிருந்த காசு அச்சிடும்சாலை புதிய நெறிமுறைகளின் படி காசுகளை வெளியிட்டது. நெசவு இக் காலத்தில் சென்னை மாநிலத்துடன் நடந்த வாணிகத்தால் வெளிநாட்டு வணிகரே பெரும்பொருள் ஈட்டினர். குறிப்பாக, ஆங்கில வணிகக்குழு கொழுத்த ஊதியத்தை இலாபத்தை அடைந்து வந்தது. கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 114 ஆங்கிலேயர்களைத் தவிர, பிற நாட்டார் இந்தியாவுடன் வாணிகம் செய்யத் தடை விதிக்கப்பட்டனர். இதனால் இந்தியப் பொருளியல் முடமாக்கப்பட்டது. தமிழக நெசவாளர்களுடன் ஆங்கிலக்குழுவார் வணிக ஒப்பந்தம் செய்துகொண்டு நெசவுத் தொழிலைத் தங்களின் தனியுரிமையாக்கிப் பல்லாயிரம் குடும்பங்களை அழித்தனர். ஆங்கிலக் குழுவார் வேண்டாத துணிகளை நெய்து வேறிடத்தில் விற்றுப் பொரு வீட்டிய நெசவாளரின் விரல்கள் வெட்டப்பட்டன. உயர்தரப் பருத்திகளைக்குபவார் இலங்காசயருக்கு ஏற்றுமதி செய்து, நாலாக நூற்று. ஆடையாக நெய்து இந்தியா போன்ற குடியேற்ற நாடுகளைத் தங்களின் சந்தைகளாகிக்கொண்டு அவ் வாடைகளைப் பன்மடங்கு ஊதியத்திற்கு இலாபத்திற்கு விற்றனர். இதைப் போலவே பகி மூலப்பொருள்களையும் இங்கிலாந்துக்கு ஏற்றிச்சென்று செய்பொருள்களாக மாற்றித் தங்களின் பரந்த குடியேற்றச் சந்தைகளில் விற்றுப் பணம் குவித்தனர். - பிற பொருள்கள் தமிழகத்தில் கிடைத்த கடல் முத்துகள், நறுமணப் பொருள்கள், சாயவகைகள், சர்க்கரைப் பொருள்கள், அபினி, கஞ்சா, தேக்கு, கருங்காலி, செம்மரம் முதலிய காட்டுப் பொருள்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், காரீயம் ஆகிய மாழை (உலோகப் பொருள்களும், மதுவகைகளும், குதிரைகளும், கண்ணாடிப்பொருள்களும், மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் துறைமுகங்கள் சென்னை மண்டில வணிக வளர்ச்சிக்குத் துறைமுகங்கள் பெரிதும் உதவின. சென்னைத் துறைமுகம்1921ஆம் ஆண்டிலும், விசாகப்பட்டினம் துறைமுகம் 1925 ஆம் ஆண்டிலும் பெரிய துறைமுகங்களுக்கான ஏந்துக ளுடன் அமைக்கப்பட்டன. இவை இரண்டைத்தவிர 104 சிறிய துறை முகங்கள் சென்னை மண்டிலத்தின் இரு கண்களிலும் இருந்தன. அவற்றுள் மிகவும் பெரியவை தாரத்துக்குடி, கொச்சித் துறைமுகங்களாகும், சென்னைத் துறைமுகப்பட்டினம் செயற்கையானது. இன்றுள்ள இதன் கட்டடங்கள் கட்ட 1875-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1881-ல் கட்டி முடிக்கப்பட்டன.படிப்படியாக வளர்ச்சியடைந்த இத் துறைமுகம் இன்று தமிழகத்தின் தலைசிறந்த துறைமுகமாகக் காட்சியளிக்கிறது. கொச்சித் துறைமுகம்1920, ஆம் ஆண்டு தொடங்கி 1928 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. 227 ஏக்கர் பரப்பில் தொடங்கப்பெற்ற இத் துறைமுகத்தில் 20 லிருந்து 30 வரை சிறு கப்பல்கள் நின்றன. சென்னை, கொச்சித் துறை முகங்கள் ஒரே கழகத்தால் ஆளப்பட்டன. இத் துறைமுகங்களுடன் தொடர்வண்டிப் பாதைகளும் இணைக்கப்பட்டன. விசாகப்பட்டினம் துறைமுகத்துடன் வங்காள - நாகபுரித் தொடர்வண்டிப் பாதைகள் இணைந்தன. மன்னார் வளைகுடாவில் அமைந்த தூத்துக்குடிடத் 13) தாய்நில வரலாறு துறைமுகப்பட்டினம் பண்டைக்காலம் முதலே சிறப்புற்ற துறைமுகப் பட்டினமாக விளங்கி வந்தது. 1911-2017 இலக்கம் உருபா செலவிடப்பட்டு இத் துறைமுகம் மேலும் விரிவாக்கப்பட்டது. 1926-ல் துறைமுகக் காப்புக்கழகம் அமைக்கப்பெற்றது. இன்றுள்ள துறைமுகங்கள் இக் கழகப் பொறுப்பாட்சியின் கீழுள்ளன. தொழிற்சாலைகள் தமிழகத்தில் பலதிறப்பட்ட கைத்தொழில்களும், கைநுட்பத் தொழில்களும் தொன்றுதொட்டு நடந்துவந்தன. 1905-ல் இவற்றைப் பரப்புவதற்குத் தொழில் நுட்பம் தொழிற்கூடங்களின் இயக்குநர் ஒருவர் அமர்த்தப்பட்டார்.1908-ல் உதகையில் கூடிய மாநாட்டில் முதலாளியரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டு தொழில் வளர்ச்சியைப் பற்றி ஆய்ந்தனர். அவர்களின் முடிவுப்படி தொழிற்கூடங்களைப் புரக்கும் இயக்குநரகம் 1914-ல் நிரந்தரமாக அமைக்கப்பெற்றது. இதனை அடுத்துத் தொழில்கள் தொடர்பான அறிவுரைகளையும், ஆக்கப் பணிகளையும் பயிற்சிகளையும் விரிவுபடுத்தும் பல்வேறு அதிகாரிகள் அமர்த்தப்பட்ட னர். 1923-ல் தொழிற்சாலைகளுக்கு அரசு உதவும் சட்டமும் நடைமுறை யாக்கப்பட்டது. தொழிற்சாலைகளின் கழகமும் அமைக்கப் பெற்றது. இதனால், தொழிற்சாலைகள் புதியமுறையில் விரிவடைந்தன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பெற்றன. கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள், வேளாண்மைத்துணைத் தொழில்கள் ஆகியவை ஏற்படுத்தப் பட்டன. நீரூற்றுக் குழாய்க் கிணறுகளைத் தோண்டுதல், குழாய்கள் மூலம் நீரிறைத்தல் ஆகிய தொழில் நுட்பங்கள் விரிவடைந்ததால் வேளாண்மை வளர்ச்சியடைந்தது. தொழிற் கல்விக்கூடங்கள் நிறுவப்பட்டன. தொழில் வாணிகம் தொடர்பான செய்திகளைச் சேர்த்தளிக்கும் நிலையமும் ஏற்படுத்தப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளையும், அறிவியற்படி தொழில்களை விரிவாக்கும் முறைகளையும் இந்த நிலையம் மக்களுக்கு அறிவிக்கத்தொடங்கியது. சென்னையில் நிறுவப்பட் கலைப்பள்ளியிலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு 1898-ல் 'அலுமினிய ' ஏனங்கள் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏனங்களும், பல்வேறு தட்டுமுட்டுப் பொருள்களும் அலுமினியத்தால் செய்யப் பட்டன. பொதுமக்களும், படையினரும் அலுமினியத்தாலான பொருள் களைப் பெரிதும் பயன்படுத்தினர். இதனால், இத்தொழில் மிகக் குறுகிய காலத்திற்குள் மாபெரும் வளர்ச்சியடைந்தது. இத் தொழிற்கூடத்தை 1903 விருந்து அரசே மேற்கொண்டு நடத்தியது. அடுத்து, மிகப்பெரிய தொழிலாகத் தமிழகத்தில் கருதப்பட்டது தோல் பதனிடும் தொழிலாகும், உழவர்களின் கபிலையேற்றத்திற்கு வேண்டிய தொண்டம், சால் தைக்கத் தோல் அதிகம் பயன்பட்டது. ஆனால், இதனைச் சரியாகப் பதனிடும் முறை அக்காலத்தில் அறியப்படாத தால் இவை ஒருசில திங்களே உழைத்தன. 1903 ஆம் ஆண்டு அரசு ஈராயிரம் கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 131 உருபா ஒதுக்கிக் கலைப் பள்ளியில் தோல் பதனிடும் முறையை ஆய்வு செய்து வெற்றிகண்டது. இந்தப் புதிய பதனிடும் முறைக்கு ரோம்" பதனிடுதல் என்று பெயர். இதனடிப்படையில்தான் சென்னையை அடுத்த குரோம்போட்டை, பதனிடும் தொழிற்பேட்டையாக மாறியது. இப் புதிய முறை விரிவடைந்ததும் தோற்பொருள்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இத்தொழிலால் தமிழகம் மிகப்பெரிய வெளிநாட்டுச் செலாவணிபைப் பெற்றது. குறிப்பாகச் செருப்புகள், பாதக்கூடுகள் (பூட்சுகள் முதலிய வற்றால் பெரும் வருவாய் கிடைத்தது. 1971-ல் அரசே மிகப்பெரிய தோல் பதனிடும் தொழிற்சாலையை அமைத்தது. தொழிற்கூடங்களின் வளர்ச்சியால் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிகளும் எல்லாத் துறைகளிலும் காணப்பட்டன. மேலே கூறிய நெசவுத் தொழிலில் விசைத்தறிகளால் நெய்யும் முறை புகுத்தப்பட்டது, இதில் முதலில் கைத்துண்டுகள் நெய்து வெற்றி கண்டபின் சேலைகள் முதலியன நெய்யப்பட்டன. 1906-ல் சேலத்தில் நெசவாலை ஒன்று தொடங்கப்பெற்றது. இதிலும் பின்னர்த் தோற்றுவிக்கப்பெற்ற நெசவாலைகளிலும் விசைத்தறிகள் புகுத்தப் பட்டு இத் தொழில் புதிய முறையில் விரிவாக்கப்பட்டது. இவற்றில் பருத்தி, பட்டு, தாவரி (கம்பள! ஆண்களும் நெய்யப்பட்டன. தனியார் பலராலும் ஆங்கிலக் குழுவார் கூட்டுறவாலும் நெசவாலைகள் பல தொடங்கப் பெற்றன. கோவையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நெசவாலைகளும் பஞ்சாலைகளும் ஏற்பட்டன. 1914 ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப்போருக்குக் கரிக்கோல் பென்சில் அதிகம் தேவைப்பட்டது. 1915-ல் கரிக்கோல் உருவாக்கத்திற் கென்றே பெரிய பென்சில் தொழிற்சாலை தொடங்கப்பெற்றது. பின்னர் இத் தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. 1979-ல் உதகையில் பழச்சாறு பிழிந்து புட்டிகளில் அடைக்கும் தொழிற்சாலை தொடங்கப் பெற்றது. இதைப் போலவே சுரும்பானலகளும், சர்க்கரையாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. 1920-ல் கரும்பு பயிரிடும் தொழிலைக் கண்காணிக்கும் பொறுப்பு, வேளாண்மை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1926-ல் கூட்டுறவுச் சர்க்கரையாலை ஒன்றும் தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்தில் வேளாண்மையின் துணைத் தொழிலாகவும் தனிச் சிறப்புடைய தொழிலாகவுமுள்ளது கரும்பாலைத் தொழிலே. இவ்வாறு வளர்ச்சியடைந்த தொழில்களால் தமிழகத்தில் தொழிற் கழகங்களும், தொழிலாளர் சட்டங்களும் ஏற்பட்டன. தொழிற் கல்வியும், கல்விக் கூடங்களும் தனித்துறையின் கீழ் விரிவடைந்தன. வேளாண்மை நம்நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்வது வேளாண்மை , கி.பி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பல மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டன. 132 தாய்நில வரலாறு ஆயினும், புதிய முறைகளைப் பின்பற்றிப் பயிரிடாததாலும் பருவமழை பொய்த்ததாலும் பல பஞ்சங்களும் ஏற்பட்டன. ஆங்கிலரின் ஏற்றுமதி களில் முகாமை பெற்ற பருத்தி, சர்க்கரை, புகையிலை போன்ற பொருள்களையே மக்கள் பெரிதும் பயிரிட்டனர். இவையும் இக் காலப் பற்றாக்குறைக்கும், பஞ்சத்திற்கும் கரணியமாயின, வேளாண்மைக் கல்வியை வளர்ப்பதற்காகச் சென்னை சையது சைதாப்பேட்டையில் 1854-ல் 350 குறுக்கம் (ஏக்கர் நிலத்தில் ஒரு பண்ணையமைக்கப்பட்டது. இதில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உழவுக் கருவிகளைக் கொண்டு பயிரிடும் முறை கற்பிக்கப் பட்டது. செயற்கை முறையில் உரம் உருவாக்கும் முறையும் கற்பிக்கப் பட்டது. 1875-ல் இங்கே ஒரு வேளாண்மைக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. இக் கல்லூரியை நிலவரித்துறையே கண்காணித்தது. 1884-ல் கல்வித்துறை - இயக்குநரின் கண்காணிப்புக்கு இது மாற்றப்பட்டது. 1905-ல் ஏற்பட்ட வேளாண்மைத் துறையின் தனியாட்சியின்கீழ் இக் கல்லூரி கொண்டுவரப் பட்டபின் உயர்மட்ட வேளாண்மைக் கல்வியைக் கற்பிக்கும் கல்லூரியாக வும், தமிழ்நாடு முழுமைக்கும் தலைமை வேளாண்மைக் கல்விக்கூடமாக வும் மாறியது. வேளாண்மைத் துறையின் கிளைகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பெற்றன. இக் கல்லூரியில் பயிற்சி பெற்றோர் மாவட்டங் களில் புதிய முறைகளில் பயிரிடும் முறையைக் கற்பித்தும், செயல்முறை விளக்கம் அளித்து வந்தனர். 1906-ல் வேளாண்மைத் துறைக்கெனத் தனி இயக்குநர் அமர்த்தப்பட்டார். அவருக்குத் துணையாகத் துணை இயக்குநர் இரு வரும், பொறியாளரும் அமர்த்தப்பட்டனர். இதனால் சையது (சைதாப்பேட்டையிலிருந்து வேளாண்மைக்கல்லுாரி, கல்வி இயக்குநரிட மிருந்து வேளாண்மை இயக்குநரின் ஆட்சிக்கு மாற்றப்பட்டது. 1908-ல் சையதுப்பேட்டையிலிருந்த வேளாண்மைக் கல்லூரி கோயம்பத்தூருக்கு மாற்றப் பட்டது. கோயம்பத்தூருக்கு மாற்றம் பெற்றபின் பருத்தி, கரும்பு, முதலியன பயிரிடும் புதிய முறைகளைக் கண்டுபிடிப்பதிலும், வேதியல் உரம், ஒட்டு விதைகள் முதலியன கண்டுபிடிப்பதிலும் சிறந்து விளங்கியது. இதற்கான பல்வேறு அதிகாரிகளும் அறிவியலாளரும் விஞ்ஞானிகளும் அமர்த்தப்பட்டனர். இன்று கோவைக் கல்லூரி, வேளாண்மைக்கல்வியில் பல திறப்பட்ட உயர் பட்டப் படிப்புகளையும், ஆய்வுக்கூடங்களையும் கொண்டு தனிப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இன்றுவரை இஃது ஆற்றியுள்ள பணிகள் எண்ணிலடங்கா. இன்று ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் புதிய முறையில் பயிரிடும் முறைகளை விளக்கி அரசின் உதவியால் வேளாளருக்குப் பல சலுகை களை நல்கிப் பயனடையச் செய்கின்றனர். பயிர்களுக்கு வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் மிகுதியாக விளையும் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, பருத்தி பயிரிடும் தொழிலும், கரும்பு பயிரிடும் தொழிலும் மேலை நாடுகளைப்போல் முன்னேறியுள்ளன. 11) கிபி 18, 2017 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் கால்நடை வளர்ச்சி | கால்நடை வளர்ச்சியும் வேளாண்மைத்துறையும், இரு கண்கள் போன்றவை. 1897 வரை கால்நடை வளர்ச்சியைக் கண்காணிக்கும் துறை, வேளாண்மைத்துறையின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் தனித் துறையாகிக் கால்நடைகளுக்கு வரும் நோய்கள், தீனி, வளர்ப்பு முறை முதலியன ஆயப்பட்டன. தனியதிகாரிகள் ஏற்படுத்தப்பட்டனர். 1903-ல் தனியே கால்நடை மருத்துவக்கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்பெற்றன. 1930-31-ல் 18 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இன்று உயர்பட்டப்படிப்புகள். கூடிய கால்நடை மருத்துவக் கல்லூரி சென்னையில் அமைக்கப்பட் டுள்ளது. இதில் பயின்ற மருத்துவர்கள் மாவட்டக் கால்நடை மருத்துவர்கள் ளாகவும், கால்நடை விரிவாக்க ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளனர். கால்நடைப் பரப்பு, விரிவாக்கம் முதலியவற்றில் தேறியவர்களும் பணி யாற்றுகின்றனர். செயற்கை முறையில் கருத்தரிக்கச்செய்து சிறந்த கால்நடைகளை உருவாக்கம் செய்யும் முறைகளும், நோய்த்தடுப்பு முறைகளும் இன்று புகழ் பெற்று நிற்கின்றன. சிறப்பாகக் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு முதலியன பல அரிய திட்டங்களின்கீழ்ச் செயல்பட்டுவருகின்றன. இன்று இது பல்கலைக்கழகமாக உயர்ந்துள்ளது. நீர்ப்பாசனத்துறை வேளாண்மைக்கு உறுதுணையானது நீர்ப்பாசனம். 1930-31 ஆம் ஆண்டில் 45 கல் நீளமுள்ள கால்வாய்கள் இருந்தன. இதில் பாப் கல் நீளம் வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கும், மற்றது போக்குவரத்திற்கும் பயன்பட்டது. காலப்போக்கில் நீர்ப்பாசன ஏந்துகள் அதிகரிக்கப்பட்டு வேளாண்மை வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் ஓடும் காவேரியாற்றி விருந்து கால்வாய்களின் மூலமும், அணைக்கட்டுகளின் மூலமும் நீர்ப் பாசன ஏந்துகள் செய்யப்பட்டன. இதனால், பலவாயிரம் குறுக்கம் (ஏக்கர்கள்) மூன்று போகம் விளைச்சல் காணும் நிலங்களாயின. காவேரி யிலும், கொள்ளிடத்திலும் ஓடிவரும் நீரை வீணாக்காமல் பகிர்ந்தளிக்க மேலணை கட்டப்பட்டது. பேரணையும் சீர்திருத்தி அமைக்கப்பட்ட தோடு கால்வாய்களும் சீராக அமைக்கப்பட்டன. காவேரியைப் போலவே கோதாவரி, கிருட்டிணை யாறுகளும் வேளாண்மைக்குப் பயன்படும் வகையில் அவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன. அவற்றிலிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டன. கஞ்சம் மாவட்டத்தில் அமைக்கப். பட்ட 'ருசிகுல்யாத் திட்டம்' நீரைத் தேக்கிவைக்கவும், நேரடியாக நீர்பாய்ச்சவும் பயன்பட்டது. தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்குப் பெரியாற்றுத் திட்டம் வேளாண்மைக்குப் பயன்படுவதாயிற்று. பின்னர் ஏற்பட்ட மேட்டூர் அணைத் திட்டம், துங்க" பத்திரை நீர்த்தேக்கம், கிருட்டிணை நீர்த்தேக்கம் முதலியனவும், பல சிறிய பாசனத்திட்டங்களும் மாநிலத்தில் வேளாண்மையை வளமுறச் செய்தன. 134 தாய்நில வரலாறு இன்று இத்துறை மிகச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை வளர்ச்சிக் கேந்தாசுக் கூட்டுறவுக் கழகங்களும், வைப்பகங்சுளும் வளர்ச்சி யடைந்தன. (இ) பஞ்சம் நாட்டிலேற்படும் பஞ்சத்தைப் பற்றரிய விவரங்களைச் சேர்க்கவும், பஞ்சமேற்பட்ட பகுதிகளில் பஞ்ச ஒழிப்பு வேலைகள் மேற்கொள்ளவும், இனிப் பஞ்சம் வராமல் தடுக்கும் வழிவகைகளை மேற்கொள்ளவும் நில அளவையாளரும், புள்ளி விவரம் சேகரிப்போரும், நிலவரித் துறையின் ருமே சிறந்த பணியாளராவர். இவர்கள் தரும் விவரங்களைக் கொண்டு தான் பஞ்சநீக்க வேலைகளை மேற்கொள்ளமுடியும். கிழான் தெல்கவுசி டெல்ஹெளசி 1848-1856) காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட பொதுப் பணித்துறைச் சீர்திருத்தங்களின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுப் பணிகளை ஆயும் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அக் குழுவின் பரிந்துரைகளின்படி ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் ஒரு பொதுப் பணித்துறை அலுவலகம் ஏற்பட்டது. அதில் பல பொறியாளரும், பல்வேறு அலுவலரும் பணியாற்றினர். இவர்கள் யாவரும் இங்கிலாந்தி விருந்து வந்தவர்கள். கால்வாய்கள் வெட்டுதல், பாலங்கள் கட்டுதல், நெடும்பாதைகள் அமைத்தல் முதலிய பணிகளை இத்துறை மேற்கொண் டது. 1854 ஆம் ஆண்டிற்குள் போதுமான பொதுப்பணித்துறை அலுவல் கங்கள் நிறுவப்பட்டு இத் துறை விரிவாக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பல ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டன; அகணகள் கட்டப் பட்டன. அதன்படி 1850]-ல் கிருட்டிண யாற்றுக்குக் குறுக்கே அணை கட்டப்பெற்றது. காவிரியின் குறுக்கேயும், அகண கட்டப்பட்டது. 18:5f-ல் சென்னனயிலிருந்து அரக்கோணம் வரை தொடர்வண்டிப்பாதை போடப்பட்டது. 1854ல் சென்னையிலிருந்து பெங்களூர் வரையிலும் இப் பாதை நீண்டது. 1873-ல் அரக்கோணத்திலிருந்து சிரைச்சூர் வரை தொடர் வண்டிப்பாதை போடப்பட்டது. 1877 ஆம் ஆண்டுக்குள் சென்னை - அரக்கோணம் பாதை இரட்டைப்பாதை யாயிற்று. இதைப் போலவே 1853-லிருந்து 1856க்குள் சென்னை நகரம் கல்கத்தா, பெசாவர், பம்பாய் ஆகிய நகரங்களுடன் தந்திக் கம்பியால் இணைக்கப்பட்டது. நெடும் பாதைகள் போடப்பட்டன. வணிகச் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப் பட்டன. ஆயினும் நாட்டில் அடிக்கடி பஞ்சமேற்பட்டது. 'தாது - ஈசுவர" பஞ்சம் (1876-78) கிபி1870இலிருந்து 1878 வரை சென்னை மாநிலத்தில் பன்னிரண்டு மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால் பஞ்சமேற்பட்டது. இதனைத் தாது ஈசுவரபஞ்சம் என்பர். இப் பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். குறிப்பாக, வேலுார் மாவட்டத்தில்தான் இப் பாஞ்சத்தால் மக்களிழப்பு அதிகமேற்பட்டது. உணவின் மக்கள் கற்றாழை, மூங்கிலரிசி, மூங்கில் குறுத்து, கொட்டிக்கிழங்கு, புல்லரிசி, தழைகள் முதலியவற்றைத் தின்றனர். சளிமண் தின்று பலர் மாண்டனர். கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 135 பஞ்ச ஒழிப்புப் பணிகள் கரெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. பெல்லாரிக்கும் ஊப்ளிக்குமிடையேயுள்ள தொடர்வண்டிப் பாதை இப் பஞ்ச நீக்கப் பணியின் ஒரு பகுதியாகத் தொடங்கி முடிக்கப்பெற்றது. இதற்கு 6,55,710 உருபா செலவிடப்பட்டது. இதைப்போலவே பல தொடர்வண்டிப்பாதைகள் புதிதாக அமைக்கும் பணியும், சீர்திருத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. நெடும்பாதைகள் அமைத்தல் அல்லது சீர்படுத்துதல், கால்வாய், குளங்கள் தோண்டுதல், தூரெடுத்தல் முதலிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன, நாடெங்கிலும் கஞ்சித்தொட்டிகள் வைக்கப்பட்டன. சென்னை மாநிலத்தில் மட்டும் இப் பஞ்ச ஒழிப்புக்கு 6,30,9244 உருபாய் செலவிடப்பட்டது. வரிகள் தள்ளுபடி செய்யப்பட் டன, 1,21,26,000 உருபா. இவ் வரித்தள்ளுபடியால் அரசுக்கு வருவாய் குறைந்தது. தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் னப்பட்டன. இப் பஞ்ச ஒழிப்புப் பணியின் ஒரு கூறாகப் பக்கிங்காம் கால்வாயின் ஒருபகுதி வெட்டப்பட்டது. சென்னைத் துறைமுகம் 200 குறுக்கம் ஏக்கர் பரப்பில் 37 அடி ஆழத்திற்குத் தோண்டும் பணி 1875-ல் தொடங்கப் பெற்று 1887-ல் முடிக்கப்பெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடிபெயர்ந்து தென்னாப்பிரிக்கா, இலங்கை, பிசித்தீவு, பர்மா முதலிய நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாய்ச் சென்று விட்டனர், தரகர்கள் (கங்காதரிகள் இவர்களை அடிமைகள் போல் விலை பேசி இந்நாடுகளில் விற்றனர். ஆப்பிரிக்க நாட்டு ஆவணங்களில் "விலங்காண்டிகள்', 'அநாக ரிசுக் குடிகள்' என்றெல்லாம் இத் தமிழர்கள் பதிவு செய்யப்பட்டனர். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் பாடுடைப்பு (சத்தியாக்கிரகம்) தொடங்கியதே இந்த ஆவணக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தான் என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இக் காலத்தில் அரசப்படிநிகராளியாகவிருந்த இலிட்டன் கிழான் (கி.பி.1876-1880) 1878-ல் பஞ்சநீக்க ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தான். அக் குழுவின் தலைவனான வயவர் இரிச்சர்டு தெம்பிள் நாடெங்கிலும் கற்றி அசரிய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தான். இந்தியா முழுவதும் பரவிய இப் பஞ்சத்தால்.ஈரிலக்கம் மக்கள் மாண்டனர். பதினோரு கோடி உருபா செலவிடப்பட்டது. அதில் பாதிக்குமேல் (630,244 உருபா) சென்னை மாநிலத்திற்குச் செலவிடப்பட்டது. இரண்டு கோடி வரித்தள்ளு படி செய்யப்பட்டது, தெம்பின் குழுவின் பரிந்துரைப்படி பல பஞ்ச நீக்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பஞ்ச நீக்கத்திற்கென ஒதுக்கப்பட் டது. பஞ்சம் வராமல் தடுக்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. வேளாண்மை, தொழில், கைத்தொழில், வணிக முன்னேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றிற்குத் தொடர்வண்டிப் பாதைகளும், போக்குவரத்துஏந்துகளும் உதவின. 1857-ல் பஞ்சநீக்கச் சட்டம் கொண்டு இவரப்பட்டது. 13) தாய்நில வரலாறு க்காற்று நாடுகளிலும் தம் திருவள்ம புத்தூர், 1891-82 ஆம் ஆண்டுகளில் மீண்டும் சென்னை மாநிலத்தில் ஒரு கொடிய பஞ்சமேற்பட்டது. 1890-91 ஆம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவக்காற்று பொய்த்தது. பருவமழை பெய்யவில்லை. இதனால் அடுத்த 1891-92 ஆம் ஆண்டுகளிலும் பஞ்சம் ஏற்பட்டது. சென்னை மாநிலத்தில் கடப்பை, நெல்லூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, மலபார் முதலிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசு பஞ்ச நீக்கப் பணிகளுக்காக 18,44139 உருபா செலவிட்டது. 1990 ஆம் ஆண்டு முதல் 1897 ஆம் ஆண்டு வரையில் வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டன.விலக்குச் செய்யப்பட்டவரித்தொகை 40b8,137உருபா ஆகும். கிணறு வெட்ட மாடுகள் வாங்க, நிலச்சீர்திருத்தம் செய்யக் கடன்கள் வழங்கப்பட்டன. 1896-97 ஆம் ஆண்டுகளில் மீண்டும் சென்னை மாநிலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இப் பஞ்சம் இந்தியா முழுவதும் காணப்பட்டது. வடபர்மா விலும் ஏற்பட்டது. சென்னை மண்டிலத்தில் கஞ்சம், விசாகப்பட்டினம், கரு நூல், பெல்லாரி, அனந்தப்பூர், கடப்பை முதலிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனைப்போக்கப் பயிரிடுவோருக்கு நிலச்சீர்திருத்தம் செய்யவும், மாடுகள், மாட்டுத் தீவனங்கள் வாங்கவும், விதைகள், உங்கள் முதலியன வாங்கவும் சுமார் 24 கோடி உருபா சுடன் வழங்கப்பட்டது. இதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. அரசுக்குச் சொந்தமான காடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. 1897-ல் சென்னையாளுநர் பஞ்ச நீக்கப்பணிகளை ஆய்ந்துரைக்க ஓர் ஆணைக் குழுவை அழைத்தான். இந்தியாவின் அரசப் படிநிகராளியாக விருந்த இரண்டாம் எல்சின் (1894-99), வயவர். சேம்சுல் என்பவனின் தலைமை யில் ஒரு பஞ்ச ஆய்வுக் குழுவை அமைத்தான். 1896-ல் 'பிளேக்கு" நோய் ஏற்பட்டது. சீனக் கப்பல் பம்பாய் வந்ததும் இந்தியாவில் பரவிய இந்நோய் நாடு முழுவதும் பரவியது. இதனை ஆழிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ஆங்கில அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கு மிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1897-ல் பூனாவில் இந்து ஒருவரின் வீட்டில் புகுந்த பிளேக்குத் தடுப்பு ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்ட னர். சென்னையில் 19பால் மீண்டுமொரு பஞ்சநீக்க ஆய்வுக்குழு ஏற்படுத்தப் பட்டது. இக்குழு தொடர்வழி, சாலைப் போக்குவரத்துகளை விரிவுபடுத்த வும், நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்யவும், தரிசு நிலங்களைப் பண்படுத்த வும் கூட்டுறவுக் கழகங்களை அமைக்கவும் பரிந்துரைத்தது. 1880 ஆம் ஆண்டு பஞ்ச ஆய்வுக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, கிருட்டிணை, கோதாவரி ஆற்றுப்பாய்ச்சல்கள் விரிவுபடுத்தப்பட்டன. காவிரி நீர்ப்பசான ஏந்துகள் விரிவாயின. பெல்லாரியில் துங்கபத்திரையில் லிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டன. கஞ்சத்தில் ருசிகுலியா திட்டம் தொடங்கப்பட்டது. சேலத்தில் மேட்டூர் அணைத்திட்டம் தொடங்கப் பட்டது. பல ஏரிகளும் நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. 151-160 கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 137 வேளாண்மையைப் பெருக்கக் கடனுதவி செய்ததால் வேளாண் மைத்துறை செம்மையாக வளர்ந்தது. சுருங்கக்கூறின் 1880,1898, 19 ஆகிய ஆண்டுகளில் அமர்த்தப்பட்ட பஞ்ச ஆய்வுக்குழுக்களின் பரிந்துரை ! களால் சென்னை மாநில வேளாண்மையில் ஒரு புதிய மாற்றமே ஏற்பட்டது. 1901 ஆம் ஆண்டு பஞ்ச ஆய்வுக்குழுவின் பரிந்துரையின்படி ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவுக் கடனுதவிக் கழகங்களால் பெரும் நன்மை யேற்பட்டது. இதனையொட்டி 1904ல் ஏற்பட்ட 'கூட்டுறவுக் கடனுதவிக் கழகங்களின் சட்டம்' சென்னை மாநிலத்தில் நடைமுறைக்கு வந்தது. 1876 - 78-ல் ஏற்பட்ட 'தாது - ஈசுவரப் பஞ்சத்தின்போது கொண்டுவரப்பட்ட பஞ்சநீக்கச் சட்டங்கள் பின்னர் மேலும் பயன்படும் வகையில் திருத்தி யமைக்கப்பட்டன. இந்திய அரசப் படிநிகராளியாயிருந்த கிழான் கர்சன் (780-905 190வ்வய்வர். அந்தோணிமத்தனெல் என்பவரின் தலைமையில் ஒரு பஞ்ச நீக்க ஆய்வுக்குழுவை அமைத்தான். அக் குழு நாடெங்கிலும் சுற்றிப்பார்த்து "பஞ்சநீக்கப் பணிகளை உடனே தொடங்கித் திறம்படச் செயல்பட்டிருந்தால் பஞ்சம் இப்படித் தலைவிரித்தாடாது' என்றது. மொத்தத்தில் 1900-ல் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் 'காலரா'. *பிளேக்கு' நோய்களாலும், நாற்பதிலக்கம் மக்கள் மாண்டனர். எங்கும் - கலவரங்கள், கொலை, களவுகள் முதலான அட்டூழியங்கள் ஏற்பட்டன. இந்திய அரசு அறுபதிலக்கம்பொற்காசுகளைச் செலவிட்டும் பயனில்லை. 191ல் அமர்த்தப்பட்ட பஞ்சநீக்க ஆய்வுக்குழு இத்தகைய நேரங்களில் அரசு ஆயிரம் செய்தாலும் மக்கள் மனவுறுதியுடனிருக்கவும், பொது மக்கள் அறத்தின் பொருட்டாவது பஞ்சத்தைப் போக்கப் பொருளுதவி செய்யவும் கேட்டுக்கொண்டது. எதிர்காலத்தில் பஞ்சம் ஏற்படலாம் எனக் கருதப்படுமிடங்களில் ஆக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1908 ஆம் ஆண்டில் மற்றுமோர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் கஞ்சம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உருபா 12,911 பஞ்சநீக்கப் பணிகளுக்குச் செலவிடப்பட்டது. 1918-ல் மீண்டும் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அரசு 394 இலக்கம் உருபா செலவிட்டது. 1920-21-ல் கருநூல், பெல்லாரி, அனந்தப்பூர் மாவட்டங்களில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சநீக்கப் பணிகளுக் காக அரசு 1706295 உருபா செலவிட்டது. 1923-ல் கஞ்சம், பெல்லாரி, அனந்தப்பூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பஞ்ச நீக்கப் பணிகளுக்காக 244930 உருபா செலவிடப்பட்டது. 1828 முதல் 1928 வரை தொடர்ந்து பெல்லாரி, சுடப்பை, அனந்தப்பூர், கரு நூல் மாவட்டங்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. அரசு 473,638 உருபா செலவிட்டது. இப் பணிகளை மாவட்டக் கழகங்களே மேற்கொண்டு செய்தன. 1931-ல் மீண்டும் இப்பகுதி பஞ்சத்தில் மூழ்கியது. 1929-ல் "பேரரசு வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்' ஏற்பட்டது. வேளாளருக்கெனப் பல கடனுதவிச் சட்டங்களும், கடன் நீக்கச் சட்டங் சுளும் கொண்டு வரப்பட்டன. கூட்டுறவுக் கழகங்களும் தொடர்ந்து 138 தாய்நிலவரலாறு செயல்படுத்தப்பட்டன. 1901-ல் பூனாவிலேற்பட்ட வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், பிறவும் குறைந்த செலவில் நிறைந்த பயனளிக்கும் பயிர் வகைகளைக் கண்டுபிடித்தன. வேதியியல் உரங்களும், வேளாண்மை வளர்ச்சிக்கு உதவின.சப்பானியக் கூட்டுறவுடன் வேளாண்மை முறையை வளர்க்க வழிவகைகள் செய்யப்பட்டன. குடிவாரச் சட்டங்கள் வேளாள ருக்குப் பாதுகாப்பளித்தன. தமிழகத்தில் பல வேளாண்மைப் பள்ளிகள் ஏற்பட்டன. இவ்வாறு வேளாண்மையும், போக்குவரத்து ஏந்துகளும், தொழில்களும் வளர்ந்ததால் பஞ்சமும், தொத்து நோய்களும் கட்டுப் படுத்தப்பட்டன. 1920-ல் கோவை வேளாண்மைக்கல்லூரி தொடங்கப் பட்டது. பொறியியல் கல்லுாரி அனந்தப்பூரில் தொடங்கப் பெற்றது. பல தொழில்நுட்பப் பள்ளிகளும், பயிற்சிக்கூடங்களும் ஏற்பட்டன. இவை யாவும் பஞ்சகாலத்தில் வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் நிலையங்களாக வும் பொருளியலை வளர்க்கும் காற்றுகளாகவும் பயன்பட்டன, (ஈ) நயன்மையும் காவலும் நயன்மை (நீதி) கி.பி1801-ல் சென்னையில் தலைமை நன்மை மன்றம் (HighCourt) அமைக்கப்பட்டது. இதன் தலைமை நயன்மையராக வயவர் என்றி வில்லியம் என்பான் அமர்த்தப்பட்டான். சென்னையாளுநர் ஒரு காவற் படையை ஏற்படுத்தினான். காவற்படையே நாட்டின் கொடுங்கோன் மக்குக் கரணியமாகியது; எனவே, அதைக் கலைக்க வேண்டுமென்றான் தலைமை நயன்மையர். இதனால், ஆளுநருக்கும், இவனுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. தலைமை நயன்மையர் பதவியிலிருந்து விலக்கப் பட்டான். 1831-ல் முறைமன்ற நயன்மையரும் செஷன்ஸ் நீதிபதிகளும்), குற்ற வழக்குகளை உசாவித் தீர்ப்புக்கூறும் அதிகாரம் பெற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (கலெக்டர்கள் நிலம், நிலவரி தொடர்பான வழக்குகளை உசாவும் அதிகாரம் பெற்றனர். ஆயினும், ஒவ்வொரு மன்றமும், ஊருக்கும், சாதிக்குமேற்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றித் தீர்ப்புக் கூற வேண்டியதிருந்தது. இதனால், இந்தியா முழுவதற்குமாக ஒரே சீரான சட்டதிட்டங்களையும் நீதி வழங்கும் முறையையும் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கிழான் மெக்காலேயின் தலைமையில் அமர்த்தப்பட்ட குழு நாடெங்கிலுமுள்ள உள்நாட்டுப் பழக்க வழக் கங்களையும், சட்டதிட்டங்களையும் சேர்த்தது. பின்னர் ஆங்கில நாட்டுச் சட்டங்களின் போலிகையில் இந்தியாவிற்கென இந்தியப் பொது சிவில்) நடைமுறைச் சட்டம்'. (1859). இந்தியக் குற்றவியல் சட்டம்' (1850) ஆகியவை இயற்றப்பட்டன. இதன்படி எல்லா நன்மை மன்றங்களிலும் ஒரே வகையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நயன்மை வழங்கப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் 'குற்றஉசாவல் ஒழுங்குமுறைச் சட்டம்' ஏற்படுத்தப்பட்டது. கரிகளை சாட்சிகளை கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 139 உசாவ ஓர் ஒழுங்குமுறைச் சட்டமும் இந்தியக் கரி சாட்சியச் சட்டம்" என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது. 1858-ல் வெளியிடப்பட்ட விக்டோரியாப் பேரரசியின் பேரறிக்கையின்படியும், 1861 ஆம் ஆண்டு இந்தியக்குழுமச் (கவுன்சில்) சட்டப்படியும், சட்டத்தின்முன் யாவரும் சமம்' என்ற கோட்பாடு நிறுவப்பட்டது. சாதி, சமய வேறுபாடுகளின்றி ஒரேவகையாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1861 ஆம் ஆண்டு குழுமம் சட்டப்படி சென்னை மாநிலத்தில் சட்டமியற்றும் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் நான்கு முதல் எட்டுப் பேர் வரை சட்டவல்லுநர் அமர்த்தப்பட்டனர். இவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் ஆளுநர், தலைமை யாளுநர் ஆகியோரின் ஒப்புதல் பெற்றபின்தான் நடைமுறைக்கு வரும். தலைமை வழக்கறிஞர் (Advocate General) ஒருவரும் அமர்த்தப் பட்டார். இவர் சட்டமியற்றும் நெறிமுறைகளையும் சட்டக் கூறுபாடு களையும் உருவாக்குவதில் இக் குழுவுக்கு உதவிபுரிந்தார். இதனால், மராத்தியரின் ஆட்சியில் ஏற்பட்ட சௌத்', 'சர்தேஷ்முகி' போன்ற வரிமுறைகளும், பலதிறப்பட்ட நயன்மை முறைகளும் மறைந்தன. பாளையக்காரரின் 'தடியடி தர்பார்' முறையாலேற்பட்ட சாதிக்கொரு நயன்மை முறையும் ஒழிந்தது. யாவருக்கும் ஒரே வகையான நயன்மை யேற்பட்டதால் தேசிய ஒற்றுமையேற்பட்டது. ஆங்கிலக்கல்வி இதற்குப் பெரிதும் உதவியது. சிபிஇருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டங்களால் சட்டமன்றங்களுக்கே சட்டமியற்றும் பொறுப்பளிக்கப் பட்டன. இதனால் சட்டமும் நயன்மையும் மேலும் பொதுவுடைமை யாக்கப்பட்டன. 1861 ஆம் ஆண்டு இந்தியக் குழுமச் சட்டப்படி சென்னை யில் உயரறமன்றம் (High Court) ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வந்த சட்டங்களின்படி இதன் கீழ் படிப்படியாக மாவட்ட, வட்ட, ஊர், நயன்மை மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உயரறமன்றம் மாநிலத்தின் உயர்தர மேல் முறையீட்டு மன்றமாகக் கொள்ளப்பட்டது. இதில் பொது (சிவில்), குற்ற கிரிமினல் வழக்குகள் மேல் உசாவலுக்கு வந்தன. இதன் கீழிருந்த மாவட்டமன்றங்களில் பொது வழக்குகளை உசாவுவதற்கும், குற்ற வழக்குகளை உசாவுவதற்கும் தனித்தனி நயன்மையர் அமர்த்தப்பட்டனர். மாவட்ட முனிசீப்புகள் பொது வழக்குகளையும், துணை நயன்மையரும், மாவட்ட நடுவர்களும் (மாஜிஸ்ட்ரேட்களும் குற்ற வழக்குகளையும் உசாவினர். ஊளர் நடுவர்கள் சிறுசிறு பொது வழக்குகளை உசாவினர். இந்திய நயன்மையர் இவ்விருவகை மன்றங்களிலும் அமர்த்தப்பட்டனர். வெள்ளையரையும் இந்திய நயன்மையர் உசாவும் உரிமை பெற்றனர். எனவே, நயன்மை, கறுப்பு சிவப்பு வெள்ளை முதலிய எல்லா வண்ணத்தா ருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைத்தது. நாளாவட்டத்தில் இந்திய நபன்மை. மன்றங்களில் இந்திய நயன்மையரே அதிகமாகக் காணப்பட்டனர், 14] தாய்நிலவரலாறு 14 TA) சென்னை மாநிலப் பொது நயன்மையர் (சிவில் நீதிபதிகள்) ஆண்டு இந்திய ஐரோப்பிய மொத்தம் நயன்மையர் நயன்மையர் 188) 125 1st) 180) IZ5 15 1900 137 167 1971) 1930 247 1931 250 73 இந்திய நயன்மையர் குற்றவழக்குகளை உசாவவும் அமர்த்தப் பட்டனர். குற்ற வாழக்குகளை உசாவத் தனி நீதிமன்றங்கள் ஏற்பட்டன. முறைமன்ற நயன்மையர் செஷன்ஸ் நீதிபதிகள், துணைமுறைமன்ற நயன்மையர் செஷன்ஸ் நீதிபதிகள், மாவட்ட நடுவர் (மாஜிஸ்ட் ரேட்கள், துணை நடுவர் (மாஜிஸ்ட்ரேட்கள், மாநில நடுவர் (மாஜிஸ்டி ரேட்கள்), வட்ட நடுவர் (மாஜிஸ்ட்ரேட்கள்), நடுவராய நயன்மையர் பென்ச் மாஜிஸ்ட்ரேட்கள்), மதிப்பமைநடுவர் (கவுரவ மாஜிஸ்ட் ரேட்கள்), படைநகர நடுவர் (மாஜிஸ்ட்ரேட்கள்) முதலிய பலதரப்பட்ட குற்ற உசாவல் நயன்மையர் அமர்த்தப்பட்டனர். 1890-ல் சென்னை மாநிலத்தில் 52 நடுவராய மன்றங்களே பென்ச் கோர்ட்டு இருந்தன, ஆனால், 1930-ல் இது 2017 ஆக உயர்ந்தது. இதைப் போலவே மதிப்பமை நடுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போயிற்று, பெண் சுளும் மதிப்புமை நடுவராக அமர்த்தப்பட்டனர். 1930-ல் சென்னை யில் இளங்குற்றவாளிகளுக்கென ஒரு நயன்மை மன்றம் (Juveniel Court) ஏற்பட்டது. இதற்குச் சம்பளம் பெறும் நயன்மையரும், மதிப்பமை நயன்மையருமாக இருவர் அமர்த்தப்பட்டனர். இதில் மதிப்புமை நயன்மையராகப் பெண்களே வழக்கமாக அமர்த்தப்பட்டனர். இவ்வாறு நயன்மை பொதுமக்களுக்கு மிக எளிதில் சட்டப்படி சமமாகக் கிடைத்தது. குறிப்பாக வழக்குகளை உசாவ இந்தியர் மேலும் மேலும் அமர்த்தப்பட்டனர். குமுகாயத்தில் சிறந்த பெரிய மாந்தர் மதிப்பமை நயன்மையராக அமர்த்தப்பட்டனர். படையினருக்கும், சிறுவர்களுக்கும் தனி நயன்மை மன்றங்கள் கண்டோன்மெண்ட், ஜூவெனனல் ஏற்பட்டன. பெண்களும் நன்மையராயினர். 1935 ஆம் ஆண்டு அரசுச் சட்டத்திற்குப்பின் நாடாளும் முறை வளர்ச்சி பெற்றபின் நயன்மை மன்றங்கள் பெருகியதோடு மேலும் சீர்பட்டன. பின்னர் ஆட்சித் துறையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனிக் கவனத்துடன் நயன்மை வழங்கப் பட்டது. 1935ஆம் ஆண்டுச் சட்டப்படி தில்லியில் ஒரு வட்டமைப்பு: நயன்மை மன்றம் பெடரல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 1. புள்ளி விவரங்கள் : J.T.3, பிப்பது, 1.23, "The Madras Presidency - 1881-1931', p38-40 கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 141 இங்கிலாந்து அரசால் அமர்த்தப்பட்ட ஒரு தலைமை நயன்மையரும் ஆறு நயன்மையரும் இருந்தனர். இவர்கள் மாநிலங்களுக்கு கிடையிலேயும், மாநிலங்களுக்கும், சிற்றரசுகளுக்குமிடையிலேயும் ஏற்படும் வழக்கு களைத் தீர்த்துவைப்பர், காவல் - 1801-ல் தனிக்காவற்படையொன்று ஏற்படுத்தப்பட்டது பற்றிக் கூறினோம். காவல்துறை அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். அஃதாவது தேர்ந்தெடுக்கப்படவில்லை: 1880-லிருந்து இத் துறையில் தொடர்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. 1893ல் போட்டித் தேர்வின் மூலம் இத் துறைக்கு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கெனவே அரசுப் பணியிலிருப்ப வர்களை மட்டும் இத் தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இதற்கான தேர்வுகள் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடந்தன. காவற்படையினர் அவர்களுக்கு மேலதிகாரிகள் என்ற இருவகைப் பதவிகளே இருந்தன, 1907 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட காவல்துறை ஆணைக் குழுவின் கருத்துரையின்படி இத் துறையில் துணைக்காவல் மேலகர் (துணை போலீஸ் சூப்பிரண்டெண்டு), துணை உண்ணோட்டகர் (சப்- இன்ஸ் பெக்டர்) போன்ற பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. தலைமைக் காவலர் போலீஸ்காரர் ஒரு நிலையத்தின் தலைவராக இருந்தார். 1910-லிருந்து துணைஉண்ணோட்டகர் (சப்-இன்ஸ்பெக்டர்கள் நிலையத் தலைவர்க ளாக்கப்பட்டனர். 1902 ஆம் ஆண்டு காவல்துறை ஆய்வு ஆணைக்குழுவின் பரிந்துரை யின் பேரில் குற்ற ஆய்வுத்துறை (C.I.L.) ஏற்படுத்தப்பட்டது. மாவட்டத் தனபெருகரில் காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன. இதனால், தமிழ்நாட்டில் காவல் நிலையங்களும், காவலர் எண்ணிக்கையும் அதிகரித்தன; பதவிகளும் பெருகின. கொள்ளைக்கூட்டம் ஆண்டாண்டுக் காலமாக, குறிப்பாகப் பாளையக்காரர் காட்டுத் தர்பாராக' வாழ்ந்த காலத்தில் கள்ளர், மறவர் போன்ற இனத்தவர் கூட்டங்கூட்டமாகச் சென்று வழிப்பறி செய்தும், கொள்ளையடித்தும் வாழ்ந்தனர். இத்தகைய குற்றவாளிகள் காவல்படை அதிகரித்ததால் குறைந்தனர். அரசு கள்ளர்களுக்கெனவே தனிச்சட்டங்களை இயற்றி இக் குற்றவாளிகளின் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களை வகைப் படுத்தியது. கல்வியறிவு, கூட்டுறவு, வேலைவாய்ப்பு, குடிசைத் தொழில்கள், கைத்தொழில்கள், ஊரவைகள் (பஞ்சாயத்துக்கள்) முதலியன அவர்க ளுக்குத் தனியே, தாராளமாக வகை செய்யப்பட்டன. அரசுப்பணியில் கல்வி முதலிய கூறுபாடுகளில்லாமலேயே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதனால் ஓரளவு இவ்வினத்தில் குற்றவாளிகள் குறைந்தனர். இவர்களுக் கெனவே தனிக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுக் காவல்துறையின் கண்காணிப்பில் இவர்களின் முன்னேற்றம் கவனிக்கப்பட்டது. இன்று இவ் " " 14) தாய்நில வரலாறு வினத்தவர் உயர்ந்த பதவிகளிலும், சிறந்த கல்வியறிவாளர்களாகவும் திகழ்கின்றனர், இவர்களின் தனிக்குடியேற்றங்களின் பெயர்களும், 'குற்றவாளிகள்' என்ற பெயரும் நீக்கப்பட்டு மிகவும் பிற்பட்டோர் வரிசையில் சலுகை பெறுகின்றனர், சிறைகள் 1894 ஆம் ஆண்டுச் சிறைச்சாலைகள் சட்டத்திற்கு முன் சிறைக் கோட்டங்கள் யாவும் உள்ளூர்ச் சட்டங்களின்படியே புரக்கப்பட்டன. இந்த ஆண்டுக்குப் பின்தான் சிறைச்சாலைகள் அரசின் சட்டத்துறையின் கீழ் கவனிக்கப்பட்டது. 1869-ல் நிறைவேற்றப்பட்ட சிறைக்காவல் சட்டமும், 1887-ல் கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டமும், கடைசியாக 1894-ல் திருத்தப்பட்டது. சிறைகளில் ஒரே மாதிரியான நடைமுறை நெறிகள் கடைபிடிக்கப்பட்டன. சிறைச்சாலைகள் காற்றோட்ட ஏந்துகளுடன் அமைக்கப்பட்டு உணவு, உடை முதலிய ஏந்துகளுடன் --ஆ காப்பட்டன. கொலைக்குற்றம் செய்தவர்கள் அதாவது தாக்குத் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்குத் தனி அறைகள் அமைக்கப் பட்டன. ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பது போல் குற்றவாளிகளை அடைக்காமல் தண்டனைக் கேற்பத் தகரித்தனியறைகளில் அடைக்கப் பட்டனர். 1919-ல் குற்றவாளிகளை நோயாளிகளைப் போல் நடத்தி, அவர்களும் திருந்திக் குமுகாயத்தில் நல்ல மாந்தராக வாழ வழி செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. வாழ்நாள் முழுவதும் குற்றங்களையே தொடர்ந்து செய்து சிறைத்தண்டனைப் பெறும் குற்றவாளிகள் பிற குற்றவாளிகளுடன் சேராமல் தனியே வைத்துக் கண்காணிக்கப்பட்டனர். திருந்தி வாழும் வாணாட்குற்றவாளிகட்குத் தனியே சின்னங்கள் வழங்கப் பட்டுப் பிறகுற்றவாளிகளை மேய்க்கும்படி அமர்த்தப்பட்டனர். சிறைச் சாலைக்குள்ளும் "வகுப்புகள்' பிரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் பல சலுகைகள் துய்த்த னர். 1930 ஆம் ஆண்டுச் சட்டப்படி, 'எ', 'பி', 'சி' என்னும் பிரிவுகள் ஏற்பட்டன. குமுகாயத்தில் உயர்ந்த வாழ்க்கை ஏந்துக ளுடன் வாழ்ந்து, முதன்முறையாகக் குற்றம் சாதாரண குற்றங்கள்) செய்தவர்கள் 'எ' வகுப்பிலும், உயர்வு, படிப்பு, பதவி ஆகியவற்றில் உயர்ந்தவர்களுக்கு 'பி' வகுப்பிலும் இடம் கொடுக்கப்பட்டது. நல்ல நடத்தையுடைய குற்றவாளிகளின் தண்டனைக்காலம் குறைக்கப்பட்டது, 1973-74-ல் குற்றவாளிகளின் நன்னடத்தையைக் கண்காணிக்கக் கண்காணிப்புக்கு ஏற்படுத்தப்பட்டது. ஒரு குற்றவாளி நல்ல நடத்தை யுடன் 23 பாகத் தண்டனையைக் கழித்துவிட்டால் இக் குழு மீதித் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யக் கிருத்துரை கூறியது. குற்றவாளிகளுக்குக் கல்வியறிவும், சமயப் பரப்புரைகளும் அளிக்கப் பட்டன. பல குற்றவாளிகள் அச்சுக் கோப்பவர்களாகவும், பாதக்கூடு தைப்பவர்களாகவும் இப்படிப் பல துறைகளில் பயிற்சி பெற்று விடுதலை யானவுடன் பிழைப்புக்கும் வழிதேடும் வாய்ப்புக் கிடைத்தது. சிறந்த நூலகமும் சிறையில் அமைக்கப்பட்டது. அத்தோடு குற்றவாளிகளுக் கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 143 கென்றே கைதிகளைப் பற்றி ஒரு தாளிகை (Howard JouTTial) நடத்தப் பட்டது. 1920 ஆம் ஆண்டு இளங்குற்றவாளிகள் சட்டப்படி, பதினைந்து அகவைக்கு உட்பட்ட இளங்குற்றவாளிகளுக்கென்று பள்ளிகள் ஏற்படுத் தப்பட்டன. 1976-ல் தஞ்சையில் இளங்குற்றவாளியர் பள்ளி (Borestal School) ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1929-ல் பாளையங்கோட்டைச் சிறையே இத்தகைய பள்ளியாக மாற்றப்பட்டது. 1921-ல் சிறையினின்று விடுதலை பெற்றோரின் நலனைப் பேணும் பாதுகாப்புக் கழகங்கள்' மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டன. சிறைச்சாலைக்குள்ளேயே மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டன. ஆண் குற்றவாளிகளுக்கும் பெண் குற்றவாளிகளுக்கும் மாநிலச் சிறைச் சாலைகள்' என்ற பெயரில் வேலூரில்தொரைப்பாடி சிறைச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு வளர்ந்த சினறக்கோட்டங்கள் இன்று அறக்கோட்டங்களாகவும், தொழிற் சாலைகளாகவும், கல்விக் கூடங்களாகவும், மனநோய் மருத்துவமனைக ளாகவும் திகழ்கின்றன. அரசியலாளர்களும் செல்வரும் இங்கு நல்ல ஏந்துகளுடன் வைக்கப்பட்டனர். கல்வி 1813 ஆம் ஆண்டு பட்டையுச் சட்டத்தின்படி கல்விக்கெனத் தனித் தொகை ஒதுக்கப்பெற்றுக், கிறித்தவப் பாதிரியார் நடத்தும் மேலைநாட்டுக் கல்வி முறைக்கெனச் செலவிடப்பட்டது. பின்னர் வந்த சட்டங்களால் கல்விக்குச் செலவிடும் தொகை ரறிக்கொண்டே வந்தது. ஆயினும் கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் தலைசிறந்த பள்ளிகளோ, கல்லூரிகளோ இந்துக்களால் நடத்தப்பெறவில்லை. இதற்குக் கரணியம் சாதி சமய வேறுபாடுகளின் கூறுபாடுகளே.டவளாகங்களும் ஆதினங்க ளும்) மடங்களும் நடத்திய பள்ளிகளில் சமயக் கல்வியும், இலக்கண, இலக்கியக் கல்வியுமே இடம்பெற்றன. உலகியற் கல்வியையும், அறிவியல் கல்வியையும் இவற்றில் காணமுடியவில்லை. மேலும், கல்வி ஏழையெளிய மக்களுக்கு எட்டாத கொம்புத்தேவனாயிருந்தது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மடவளாகக் கல்விக் கூடங்களில் நுழைவதற்கு இசைவளிக்கப் பெறவில்லை. ஆங்கிலார்கள் இத்தகைய கல்வியைக் கீழைநாட்டுக் கல்வி (Oriental) என் றனர். கிறித்தவப் பாதிரிகள் சமயவொழுக்கத்தோடு மேல்நாட்டுக் கல்வியையும் கற்பித்தனர். இவர்களின் கல்விக்கூடங்களில் சாதி, சமய வேறுபாடுகள் காட்டப் பெறவில்லை . எனவே, குமுகாயத்தில் ஒடுக்கப்பட்ட பலரும் கிறித்தவத்தைத் தழுவிக் கல்வியில் முன்னேறினர். 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டப்படி, கல்வி அமைச்சர்களின் கைக்கு மாற்றப்பட்டதுறையாயிற்று. ஐரோப்பியர் கல்வி தவிர இந்தியரின் கல்வியை அமைச்சர் அவையே கவனித்தது. மாநிலம் முழுமைக்கும் பொதுக்கல்வி இயக்குநர் (Director of Public Instruction) அமர்த்த ப் பட்டார். அவருக்குக்கீழ், மாவட்டக் கல்வியதிகாரிகள் அமர்த்தப்பட்ட ஓனர், இவர்கள். ஆண்கள் கல்விச் சாலைகளைப் புரந்தனர், பெண்கள் 144 தாய்நிலவரலாறு பள்ளிகளைக் கவனிப்பதற்குப் பெண் ஆய்வு அதிகாரி (Inspectress) அமர்த்தப்பெற்றனர். இதனால் ஆண், பெண் ஆகிய இருபாலரும் கல்வியில் முன்னேற்றம் கண்டனர். பல துணையாய்வாளர்களும் உதவி ஆய்வாளர் களும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குக் கீழ் அமர்த்தப் பெற்றனர், 'பதிவு, கல்விப் புரப்புக்குழுவொன்று 192ல் அமைக்கப்பெற்றது. இதில் மேலவை உறுப்பினர் எழுவரும், பொது உறுப்பினர் ஒருவருமாக எண்மர் இடம் பெற்றனர். பதிவு கல்வியமைச்சர் இதன் தலைவரானார். 1923ல் இதன் உறுப்பினர் எண்ணிக்கை பத்தாகியது. 1927ல் கல்விக்கென்றே ஒரு தனிக்குழு அமைக்கப்பெற்றது. இதில் கல்வித்துறைத் துணைச்செய் லாளரும் இடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகம் ' 1857 ஆம் ஆண்டுச் சட்டப்படியே சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. 1904 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சட்டம் பல்கலைக்கழகச் செயல்களை ஒப்புக்கொண்டு கல்வியின் விரிவாக்கத்திற்கு வழிகோலியது. இதே ஆண்டில் இந்தியக் கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களையும், பாடநூல்களையும் வகுத் தளித்து மேலாணை செலுத்திக் கட்டுப்படுத்த வழி செய்தது. உயர் பட்டப் படிப்பு வகுப்புகளைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களே நடத்தவும், ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிக்கூடம் அமைக்கவும் ஏற்பாடாயிற்று. ஆயினும், 1913 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகம் ஒரு தேர்வுக் கழக மாகவே தேர்வுகளை நடத்தி முடிவு கூறும் கழகம்) செயல்பட்டது. இதற்குப்பின்தான் பல்கலைக்கழகத்தில் பெருமைவாய்ந்த திணைக்கள விருக்கைகள் (IDepartimernalChairs) ஏற்படுத்தப்பட்டன. முதன்முறையாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு, தொல்லியல் ஆகிய இரண்டிற்கும் ஒரு திணைக்களம் அமைக்கப்பட்டுத் திணைக்களத் தலைவரும் அமர்த்தப்பட்டார். இதைப்போலவே மொழித் திணைக்கள மும், இந்தியப் பொருளியல் துணைக்களமும் ஏற்பட்டன. 1923ஆம் ஆண்டு சென்னை மேலவையில் நிறைவேற்றப்பெற்ற பல்கலைக்கழகச் சட்டப்படி சென்னைப் பல்கலைக்கழகம் பாடம் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனமாகவும், தனித்தியங்கும் ஆட்சி நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. கண்காணகர் (Chancellor), துணைக் கண்காணகர் (Vice-Chanceller), இணைக் கண்காணகர் (ProChariceller), ஆட்சிக்குழு பாடத்திட்டக்குழு முதலிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை மாநில ஆளுநர் கண்காநகர் ஆனார். கல்வியமைச்சர், இணைக் கண்காணகர் ஆனார். இவர்கள் விழாத் தலைவர்களே. முழுநேரமும் பல்கலைக்கழகத்தை நடத்திச் செல்வச் சம்பளம் பெறும் துணைக் கண்காணகர் அமர்த்தப் பட்டார். இவர் ஆட்சிக் குழுவிலிருக்கும் உறுப்பினர் ஐவரால் தேர்ந் தெடுக்கப்பெற்று மூன்று ஆண்டுகள் பதவியிலிருப்பார். னார். கல்வபடுத்தப்பட்ட 'T), ஆட்சிக் * கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 145 மேற்கண்டவாறு சென்னைப் பல்கலைக்கழகம் விரிவடைந்த பின் பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்பு முதலியவை விரிவடைந்தன. பொருளியல், கணிதம், மெய்ப்பொருள் தத்துவம்), மொழிக்கல்வி முதலியவற்றுக்கான தனித்தனி ஆராய்ச்சித்துறைகளும் ஏற்பட்டன. அரசும் இவற்றுக்கு ஆண்டு தோறும் நிதி - பொக்கச) உதவியளித்தது. துறைதோறும் நாடகம் நிறுவ 88,000 உருபா வழங்கப்பட்டது. உயிரியல், நிலைத்திணையியல் தாவரவியல், வேதியியல் இரசாயனவியல் ஆகியவற் நில் ஆராய்ச்சியைப் பெருக்கவும், ஆய்வுக்கூடங்களை அமைக்கவும் 1,80,000 உருபா ஒதுக்கப்பெற்றது. - 1923, 1929 ஆம் ஆண்டுகளின் சட்டப்படி ஆட்சிக் குழுவிலிருந்து பலர் நீக்கப்பட்டனர். கல்லூரிகளின் கழகப் படிநிகராளியம் ஒழிக்கப் பட்டது. ஆட்சிக் குழுவின் மேலாண்மை வளர்ந்தது. பாடத்திட்டக்குழு அமர்த்தப்பட்டது. துணைக் கண்காணசுரைத் தேர்ந்தெடுக்க ஐவரை யமர்த்தும் முறை தளர்த்தப்பட்டு மூவரே அமர்த்தப்பட்டனர். இதனால் ஆட்சிமுறையும் கல்விக்கூடங்களின் சீரமைப்பும் மேம்பட்டன. ஆந்திரப் பல்கலைக்கழகம் - 1975 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆந்திரப் பல்கலைக்கழகம் அமைக்கப்பெற்றது. முதலில் இதன் தலைமையிடமாக விசயவாடா இருந்தது. பின்னர் 1929 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்திற்கு மாற்றப் பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வயவர். இராசா அண்ணாமலை செட்டியாரின் புரப்பாண்மையில் சிதம்பரத்தில் 1924 ஆம் ஆண்டில் இப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப் பட்டது. ஆந்திரா, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் சென்னை மாநிலச்சட்ட திட்டங்களின்படியே செயல்பட்டன. மேற்கண்ட மூன்று பல்கலைக்கழகங்களே இருபதாம் நூற்றாண் டின் முற்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டன. மொழிவாரியாகத் தமிழகம் தனி மாநிலமாகப் பிரிந்தபின் மதுரைப் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்பட்டன. இவற்றோடு திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, கொடைக்கானல் மகளிர் பல்கலைக்கழகங்களும், பொறியியல் - தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், கால்நடை அறிவியற் பல்கலைக்கழகமும் ஏற்படுத்தப்பட்டன. அடுத்து, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, தொழில் நுட்பக் கல்வி வளர்ச்சிகள் பற்றிச் சிறிது கூறப்படும். உயர்நிலைப்பள்ளிப் படிப்பு 1917 வரை மெட்ரிகுலேஷன்' படிப்புத்தான் உயர்நிலைப் பள்ளி சுகளின் இறுதிப்படிப்பாக இருந்தது. இவ்வாண்டிலிருந்து இன்றைய பள்ளி உயர்நிலைப் படிப்பு (SSLC.) தொடங்கப்பட்டதால் உயர்நிலைப் பள்ளித் 146 தாய்நில வரலாறு ---- - கல்வி பரவலாக வளரலாயிற்று. இதில் தேறியவர்கள் அரசுப் பணிகளுக்கும், கல்லூரிப் படிப்புக்கும் செல்லத் தகுதியுடையவர்கள் ஆயினர். உயர்நிலைப் பள்ளிகளின் மேலாட்சி, கல்வி இயக்குநரின்கீழ் வந்தது. மாவட்டக் கல்வியதிகாரிகளும், மகளிர் பள்ளி ஆய்வாளர்களும் இவற்றைக் கண்காணித்தனர். தனியார் பள்ளிகளுக்கு அரசு போக்க உதவியளித்தது. பல பள்ளிகள் மாவட்ட, வட்ட நகராண்மைக் கழகங்களாலும் நடத்தப் பட்டன. 1923-ல் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக உயர்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டுமெனும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, மாவட்டக் கழகங்களின் உறுப்பினர் குழுக்களே இவற்றைப் புரக்கவும் வகை செய்யப்பட்டது. நீலமலை மாவட்டம், எல்லைப்புறப் பகுதிகளில் இத்தகைய பள்ளிகளைத் தனிக்குழுக்கள் நடத்தின. இக் கழகங்களுக்குக் கருத்துரையும், அறிவுரையும் கூறும் உரிமை மட்டுமே அசரிக்கப்பட்டது. 1928-ல் கழகங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. இதன்படி கழகத்தலைவர்கள் (Presidents) உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டுப் பள்ளிகளைப் புரக்கும் பல உரிமைகளைப் பெற்றனர். பள்ளி ஆட்சிக் குழுவில் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்கள் சிலரும் இடம் பெற்றனர். இதனால், பள்ளிகளின் எண்னரிக்கை பெருகியது. பலரும் படிக்க வாய்ப்பும் ஏற்பட்டது. முஸ்லீம் பெண்களும், தாழ்த்தப்பட்டோ ரும் கல்வியேந்துபெறத் தனிச் சலுகைகள் அளிக்கப்பட்டன. சிறித்தவக் கழகங்கள் தனித்துப் பல் பள்ளிகளை நடத்தின. 1975 ஆம் ஆண்டு வரை பள்ளிப் பாடங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட்டன. இந்த ஆண்டிற்குப் பிறகுதான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபி முதலிய மொழிகளிலும் கற்பிக்கும் கட்டாயத் திட்டம் கொண்டுவரப்பட்ட டது. இதற்கு முன்னும் இத்தகைய தாய்மொழிகளிலும் கற்பிக்கலா மென்னும் விருப்புத் தெரிவு (0ption) இருந்தது. ஆனால், கிறித்தவக் கழகப் பள்ளிகள் ஆங்கிலத்தில் மட்டுமே கற்பித்ததாலும், ஆங்கில வழிப்பயின் றோருக்கு அரசுப்பணி எளிதில் கிடைத்ததாலும், தாய்மொழியில் பயில மாணவர்களே முன்வரவில்லை. உயர்நிலைப் பள்ளிக் கல்வி காமராசர் காலம் வரை ஏழையெளியோருக்குக் கொம்புத் தேனாகவே இருந்தது. இவர்தான் பட்டிதொட்டிகளிலெல்லாம் பள்ளிகளைத் திறந்து, நண்பகல் உணவளித்து, தாய் மொழியிலேயே படிக்கும் வாய்ப்பையும் முதலில் நல்கினார். 1881-ல் 'மெட்ரிகுலேசன் ' தேர்வுக்குச் சென்றவர்களின் எண் ணிக்கை நம் மாநிலம் முழுவதும் 3,51பிதான். அரை நூற்றாண்டுக்குப் பின்னும் ஓரளவே வளர்ச்சியேற்பட்டது. 1911-ல் தான் முதன்முதல் பள்ளி இறுதிப்படிப்பு (S.S.L.C.) கொண்டு வரப்பட்டது. அதற்குமுன் மேலை நாட்டு முறையில் அமைந்த 'மெட்ரிகுலேசன்' படிப்பே இருந்தது. 1925-ல் தான் தாய்மொழிகளிலும் கற்பிக்கும் பாடத்திட்டமும் நெறிமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டன, 161-170 கிபி. 19, 20 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 147 -- - - - - - தொடக்கப்பள்ளிப் படிப்பு 1930, ஆம் ஆண்டுவரை தொடக்கப்பள்ளிப் படிப்பைக் கற்பிக்கும் பணியை வட்ட, ஒன்றியக் கழகங்களும், நகராண்மைக் கழகங்களும், தனியாரும் செய்தனர். இவற்றில் பல கிறித்தவக் கழகங்களால் நடத்தப் பட்டன. 1920 ஆம் ஆண்டில் சென்னை மாநிலத் தொடக்கக்கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்குப்பின் தொடக்கக்கல்விக்கூடங்களையும் அரசே நேரடியாகக் கண்காணித்தது. தொடக்கப் பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளும் அமர்த்தப்பட்டனர். ஊராட்சிக் கழகங்களும், மாவட்டக் கழகங்களும் கல்விக்கெனத் தனியே வரித்தண்டல் செய்யும் உரிமையும் பெற்றன. சமயச் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் சமயக்கல்வி விருப்பப் பாடமாக்கப்பட்டது. 1923ஆம் ஆண்டிலிருந்து 500 பேருக்கு மேல் வாழும் ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் தொடக்கமாகக்கோவையாக்கப்பட்டது. அரசு உதவி பெற்றுத் தனியாரும் பள்ளிகளைத் தொடங்கினர். தாழ்த்தப்பட்டோ ருக்குத் தொழிலாளர் நலத்துறை தொடக்கப்பள்ளிகளைத் தொடங்கியது. 1924-ல் பள்ளி செல்லும் அகவையுடைய குழந்தைகளைப் பற்றிய புள்ளி விளக்கம் உருவாக்கப்பட்டது. புள்ளிவிளக்கங்களின்படி தொடக்கக்கல்வி மாநிலம் முழுவதும் பரவும்படி பள்ளிகள் அமைக்கப்பட்டன. 1927 ஆம் ஆண்டில் எல்லா ஊரவைகளிலும் பரவையே பள்ளிகளை நடத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இத்தகைய முயற்சிகளால் தொடக்கக்கல்வி ஓரளவு எல்லோருக்கும் எளிதில் கிடைக்குமாறு அமைந்தது. அரசும் ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையைத் தொடக்கப்பள்ளிக் கல்விக்கென ஒதுக்கியது. பொறியியல் கல்வி 1794-ல் சென்னைச் சேப்பாக்கத்தில் தொடங்கப்பெற்ற பொறியியற் பள்ளியில் படித்தவர்கள் பொறியாளராக அரசுப் பணிகளில் அமர்ந்தனர். இப் பள்ளி 1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஒப்புதல் வழங்கப் பட்டது, இது 1920-லிருந்து கிண்டியில் மாணவர் தங்கிப் பயிலும் கல்லூரி யாக மாறியது. 1917-ல்விசாகப்பட்டினத்தில் ஏற்படுத்தப்பட்ட பொறியியற் பள்ளியிலும், 1920-ல் திருச்சியில் ஏற்பட்ட பொறியியற் பள்ளியிலும் படித்த மாணவர்களும் பொறியாளர்கள் ஆயினர். 1930-ல் மின்பொறிப் பட்டப் படிப்பு கிண்டியில் தொடங்கப்பெற்றது. பின்னர் படிப்படியாக வளர்ந்து பல துறைகளிலும் பட்டப்படிப்புகளும் மேல் பட்டப் படிப்புகளும் ஏற்பட்டன. இன்று பொறியியற் கல்லூரியோடு தொழில்நுட்பக் கல்விக் கூடங்கள் பலவும் உள்ளன. கல்வி இயக்குநரின் கீழிருந்த இவை இன்று தனித்தியங்குவதோடு இவற்றிற்குத் தனியே இயக்குநர்களும் அமர்த்தப்பட் டுள்ளனர். 144 தாய்நிலவரலாறு வணிகவியற் கல்வி பொறியியற் கல்வியைப் போலவே வணிகவியற்கல்வியும் தனி அலுவலரின்கீழ் வளர்ச்சியடைந்தது. சென்னை, விசாகப்பட்டினம், கோழிக்கோடு முதலியவிடங்களில் இவை தொடங்கப்பெற்றன. தனியாரும் இவை போன்ற கல்வி நிலையங்களைத் தொடங்கினர். வேளாண்மைப் பள்ளிகள், செவிடர், பாமையர் பள்ளிகள் முதலியன இயலாதாருக்கும் வாழ்வளித்தன. இன்று இவை தனி வளர்ச்சி பெற்றுக் குமுகாயத்தின் மேடுபள்ளங்களைச் சமன் செய்கின்றன, மருத்துவக்கல்வி தஞ்சாவூர், இராயபுரம் ஆகியவிடங்களில் இரண்டு மருத்துவப் பள்ளிகள் தொடங்கப்பெற்றன. பெண்களுக்கெனக் கிறித்தவக் கழகத்தார் வேலூரில் ஒரு மருத்துவப் பள்ளினயத் தொடங்கினர். 1975-ல் நாட்டு மூலிகை மருத்துவக் கல்விக்கூடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரியும், விசாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி யும் தொடங்கப்பெற்றன. இவை படிப்படியாக வளர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தாலும், பின்னர் இந்தியப் பல்கலைக்கழகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் பட்ட, மேற்பட்டப் படிப்புகளைக் கற்பித்தன, இன்று ஊராட்சிதோறும் மருத்துவமனைகள் பெருகியுள்ளன. மருத்துவக் கல்வி மிகவும் முன்னேறியுள்ளது. வேலூரில் ஒரு சிறு பள்ளியாகத் தொடங்கப்பட்ட கிறித்தவக் கழக மருத்துவப்பள்ளி இன்று உலகப் புகழ்பெற்ற கல்லூரி மருத்துவபானையாக வளர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் நான்கு மருத்துவக் கல்லூரி களும், தஞ்சை, கோவை, செங்கழுநீர்ப்பட்டு, மதுரை, சேலம், பாளை மருத்துவக் கல்லூரிகளும் ஏற்பட்டுள்ளன. சென்னையில் நாட்டு மூலிகை களைப் பயன்படுத்தும் 'அண்ணா மருத்துவமனை' அமைந்தகரையை யடுத்த அண்ணாநகரில் சிறப்புற்று விளங்குகிறது. பாளையங்கோட்டை பழனி ஆகியவிடங்களில் தமிழ் - அறிவ (சித்த மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மொழி வளர்ச்சி கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியின் வளர்ச்சியினை ஆயும்போது அதன் பல்வேறு வண்ணங்களைக் காண்கிறோம். சிறப்பாக விடுதலை இயக்கத்திற்கு அது சிறந்த வேலாகியது. ஆங்கிலக் கல்வி முறையும், அச்சுப் பொறியும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தன. ஓலைச்சுவடிகளில் எழுதிவந்த முறை மாறி, தாளில் (காகிதத்தில்) எழுதும் மேற்கோள் குறிகள், அடைப்புக் குறிகள், பத்தி பிரித்து எழுதுதல், தலைப்புகள், துணைத் தலைப்புகள் கொடுத்து எழுதுதல் முதலிய புதிய முறைகளைப் பின்பற்றி அச்சிடப்பட்ட தமிழ் நூல்கள் பெருகின. மேலைநாட்டு முறைகளைத் தழுவி வரைபடங்கள், வண்ணப்படங்கள், ஒளிப்படங்கள் முதலியனவும் வாழ்க்கை வரலாறுகள், ஓலைசாமியும் தாமதித்த வேளை கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 140 உயிரோட்டமான உரைநடைகள் முதலியனவும் தமிழில் தோன்றின. புனைகதைகள், புதினங்கள், நாடகங்கள் புதுமுறையில் எழுதப்பட்டன. கழக இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மேலைநாட்டுக் கதைகள் முதலியவை மக்கள் பேசும் நடையில் நாட்டு மொழிகளிலுள்ள நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன. தலபுராணங்களும், சதகங்களும், வாழ்வியல் தத்துவ நூல்களும் தமிழில் தோன்றின. மொழியாராய்ச்சி, ஒப்பிலக்கணம், அகரமுதலி முதலியன வளர்ந்தன. கணிதம், நிமித்தம் சோதிடம், வரலாற்றாராய்ச்சி, தமி ழிலக்கிய ஆராய்ச்சி, அறிவியல் நூல்கள் முதலியனவும் தமிழில் வளர்ந்தன. இவற்றிற்கெல்லாம் மேலாகச் செய்தித் தாள்கள் மொழி வளர்ச்சிக்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவின. - சமற்கிருதத்தையும், தமிழையும் சேர்த்து மணிப்பிரவாள நடையில் பேசியும், எழுதியும் வந்த புலவர்கள் தனித்தமிழ் நடையை வளர்த்தனர். இது ஒரு புனித இயக்கமாகவே செயல்பட்டது. அரசே முன்வந்து தமிழ் அகரமுதலி, தமிழ் ஆராய்ச்சி முதலியவற்றை கணக்குவித்தது. விடுதலைப் போரில் தமிழ்மொழி விடுதலையும் இடம்பெற்றது. இதனால், மொழிவழி மாநிலங்கள் தோன்றின. இத்தனையும் இந்த 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் நடந்தன. விடுதலைக்குப் பின் தமிழ் அரியணை ஏறி ஆட்சிபுரியத் தொடங்கியது. - கிபி18ஆம் நூற்றாண்டில் தோன்றிய புலவர்களில் பெரும்பாலோர் மதத்தவர்களாயிருந்தனர். அவர்களின் நூல்கள் மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின, பேரூர்ச் சாந்தலிங்க அடிகளார், மறைஞானதேசிகர், - சுண்ணன்வள்ளல், சிவஞான வள்ளல், மதுரகவிராயர், சுப்பிரதீபக் கவிராயர், அட்டாவதானம் சீரங்கம் புலவர் நல்லாப்பிள்ளை , நமச்சிவாய முதலியார், ஒப்பிலாமணிப் புலவர் முதலியோர் பல அரிய இலக்கியங் சுளையும், பாவியங்களையும், இலக்கண நூல்களையும் சமைத்தனர். அருணாசலக் கவிராயர் இராமநாடகம் எழுதினார். உபேந்திர ஆசிரியர், குமாரசாமி தேசகிர் முதலியோர்நிமித்த நால்களை எழுதினர்.சாந்தலிங்கக் கவிராயர், அம்பலவாணக் கவிராயர், நாராயண பாரதி, நாராயணதாசர், கோபாலகிருட்டிணதாசர் முதலியோர் சதகங்கள் செய்தனர். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கோவை முதலியனவும் எழுந்தன.சொக்கப்ப நாவலரின் தஞ்சைவாணன் கோவையும், மாரிமுத்துப்பிள்ளையின் சித்திரக் கவிதை களும், முத்துதாசரின் கயிலைமலை வரலாறும் குறிப்பிடத்தக்கன. உரை நடையும், நாடகங்களும், சிறுகாப்பியங்களும் இந்நூற்றாண்டில் சிறந்து வளர்ந்த ன, 19 ஆம் நூற்றாண்டில் தலபுராணங்கள், வழுத்துப் பாடல்கள், நிமித்த நூல்கள், கிறித்தவ சமயநால்கள், அகரமுதலிகள், ஒப்பிலக்கணங் சுள் சிறப்பாக வளர்ந்தன. இராமானுசக் கவிராயர் சிறந்த உரைநடைக்கும், சரவணப் பெருமாள் கவிராயர் செருக்கு பாப் பாடுவதிலும் வல்லவர்கள். 15] தாய்நில வரலாறு வீரராகவ முதலியார் அந்தகக்கவி', 'முத்தமிழ் வித்தகர்' எனப் புகழப் பட்டார், யாழ்ப்பாணம் சேனாதிராயர் தமிழகரமுதலி தொகுத்தார். ஆறுமுக நாவலரின் தந்தை கந்தப்பின்னள ஒரு சிறந்த நாடக ஆசிரியர். இவரை யடுத்து இராமச்சந்திரக் கவிராயர், பரசுராமக் கவிராயர் முதலியோர் நாடகங்கள் இயற்றினர். ஆறுமுகநாவலர் இலக்கண நூல் எழுதுவதிலும், சிவ நூல்களைப் படைப்பதிலும் சிறந்து விளங்கினார். தாண்டவராய முதலியார் மராத்திய மொழியிலிருந்து 'பஞ்சதந்திரக் கதைகளை மொழிபெயர்த்தார், இந் நூற்றாண்டில் தோன்றியவர்களில் இராமலிங்க அடிகளார் தலையாய சிறப்புடையவர். அருள்நெறி பெருக்கி, தேன் தமிழை வளர்த்தவர் இவரே. சுல்நெஞ்சங்களையும் உருக்கும் பாப்பாட்ட வல்லவர், பொதுநிலை நன்வழி (சமரச சன்மார்க்கம்) கண்டவர். இவருடைய திருவருட்பாக்களைக் கேட்டு உருகாதார் இல்லை. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை நாற்கவி வல்லவர். இவருடைய மாணவர்தான் பர்.உவேசாமிநாதையர். இப்பெருமக்களின் பணியால் தமிழ் வானளாவ வளர்ந்தது. உவே.சாமிநாதையரின் பெருமுயற்சியால் செல்லெரித்துப் போகவிருந்த சுழசு இலக்கியங்கள் அச்சேறின. அவற்றை அச்சேற்றி நம்முடைய செல்வமாக்கியப் பெருமை அவரையே சாரும். மீனாட்சி சுந்தரம்பிள்ளை பதினாறு தல புராணங்களையும், பதினாறு அந்தாதி களையும், பிற நூல்களையும் பழமைவழியில் யாத்தார். 19 ஆம் நூற்றாண்டில் எளியோரும் இறைவழிபாட்டில் ஈடுபடும் வண்ணம் 'கீர்த்தனைகள்' வளர்ந்தன. கோபாலகிருட்டிண பாரதியின் நந்தனார் கீர்த்தனை, முத்துராவமுதலியாரின் பாரத் கீர்த்தனைமுதலியன குறிப்பிடத்தக்கன. மாயூரம்(முன்சீப் வேதநாயகம் பிள்ளை புனைகதைகள் புனைந்து புதுமையை உண்டாக்கினார். இவர்களேயன்றி பர் கால்டுவெல், சி.யூபோப்பையர் முதலிய மேலைநாட்டவர்களும் தமிழ் கற்று, பல நூல்களை எழுதி, திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கிலம், ஃபிரெஞ்சு முதலிய மேலை மொழிகளில் ஆக்கியுள்ளனர். கி.பி.20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மேலை நாட்டு முறையில் வரலாற்று அடிப்படையில் வளர்ந்தது. அச்சுக்கூடங்கள் தமிழ் வளர்ச்சிக் குப் பெரிதும் உதவின.தென்னிந்தியச் சிவக்கொண்டு முடிவு சைவ சித்தாந்தம் நாற்பதிப்புக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கழக நூல்களை ஆய்ந்து இக் கழகம் வெளியிட்டது. தமிழ்க் கழகங்கள் பல தோன்றிப் பலர் தமிழ்க் கல்வி கற்றுத்தேற உதவின. ஈழத்திலும், கடல் கடந்த பிற நாடுகளிலும் இக் கழகங்களால் தமிழ் வளர்ச்சியடைந்தது. தமிழை மட்டுமே சுற்றோரும் அரசுப் பணிகளிலும், அரசியல் தலைவர்களின் வரிசையிலும் இடம் பெற்றனர். வை.மு.கோபாலகிருட்டினர் (ஆச்சாரியார், பாண்டித்துரை தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முதலியோர் சைவ அதிக தாக்கத்தார் முகாம் கிபி19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 151 சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே பல தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் உரையுடன் வெளியிட்டும் புகழடைந்தனர். மு. இராக வையங்கார், இரா.இராகவையங்கார் முதலிய தமிழ்ப் புலவர்கள் இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டனர். தமிழ் இலக்கிய வரலாறுகள் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இத்துறையில் பணியாற்றிய எம். எசு.பூர்ணலிங்கம் பிள்ளை ), வி.கனகசபை (பிள்ளை ) முதலியோரை மறுத்தலாகாது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், கா.சுப்பிரமணியம் (பிள்ளை ), ந.மு.வேங்கடசாமி நாட்டார்) முதலி யோரின் தமிழ்ப்பணியும் சாலச் சிறந்தவையே, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாவலர் மிகச் சிலரேயாவர். கருப்பையாப்பாவலர் பல சிறு காப்பியங்களை இயற்றினார். "விக்டோரியா பேரரசியார் வரலாறு' என்ற நூலையும் எழுதி இன்றைய தனிப்பட்டார் வரலாற்றைப் படைக்கும் முயற்சியில் இவர் வெற்றிகண்டார். இவரைத் தொடர்ந்து பலரின் வரலாறுகள் வெளிவந்தன. இதனால், வள்ளல்கள், தமிழறிஞர்கள், பேரறிஞர்கள் முதலியோரின் வாழ்க்கை வரலாறுகளும் தமிழில் வளர்ந்தன. காந்திபுராணம், திலகர் மான்மியம், வள்ளலார் சரித்திரம் ஆகிய நூல்களை எழுதியவர் பண்டிதை அசலாம்பிகை யம்மையார் ஆவார். தனித் தமிழியக்கம் தணித்தமிழியக்கம் உருவாவதற்கும் தமிழின உணர்வு இயக்கமாக வடிவெடுப்பதற்கும் காரணமானவர் 'தமிழன்' என்னும் தாளிகையின் ஆசிரியர்சு அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். ஏற்கெனவே தனித்து தமிழ் இயங்கவல்லது என்பதைக் கண்டுணர்ந்தவர் கால்டுவெலார்.தன் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழில் மாற்றிக்கொண்ட சூரிய நாராயண் சாத்திரியார் 'தனித்தமிழ் இயக்கம்' தொடங்கி வைத்தார். மறைமலை யடிகள் தனித்தமிழ் இயக்கத்தை மக்கள் சார்ந்த பேரியக்கமாக வளர்த்தார். இன்று உலக மொழியாராய்ச்சியாளர்களில் தலைமை சான்றவரும், தனித்தமிழையே தன் உயிர்ப்பாகவும், உடலாகவும் கொண்ட வருமான மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் இவ்வியக்கத்தின் இன்றைய முகடாகத் திகழ்கிறார். அவரின் தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, முதற்றாய்மொழி, திரவிடத்தாய், தமிழர் வரலாறு, தமிழர் மதம், பண்டைத் தமிழநாகரிகமும் பண்பாடும் முதலான தரய தமிழ் நூல்களும் Primary clas sical Language of the World முதலான ஆங்கில நூல்களும் பாவாணரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் மக்கள் இயக்கமான தமிழர்தம் பண்பாட்டுத் தொன்மையை மேலையரும் வியக்கும்வண்ணம் உலகுக்கு உணர்த்தி நிற்கின்றன. 'உலகத் தமிழ்க் கழகம்' உருவாவதற்குக் கரணியமான வரும், மொழி ஞாயிற்றின் பேரொளியை உலகிற்குக் காட்டியவரும் ஆகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்பார் 'தென்மொழி' என்னும் உயர்தனித் தமிழ்த் தாளிகையின் மூலம் உலகெங்கணுமுள்ள தமிழர் தம் 151 தாய்நில வரலாறு ஒற்றுமைக்கும் உரிமை வாழ்வுக்கும் உயர்வுக்கும் என உழைத்தவர், அவரின் சீரிய பாதையில் செம்மாந்து நடையிடும் 'தமிழம்', 'தமிழ்ச்சிட்டு', *வல்லமை, செம்பரிதி', 'வலம்புரி' முதலியன குறிப்பிடத்தக்க தூய தமிழ்த் தாளிகைகளாகும். 1 நாடகம் : ' பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாடகம் நன்கு வளர்ச்சி பெற்று விட்டது எனலாம், ஆனால், அவை மரபு வழிப் பண்புகளைத் தழுவியே வளர்ந்தன, நாடகங்கள் நடத்துவதற்கெனத் தனிக் கழகங்கள் ஏற்பட்டபின் அரசியல், குமுகாயச் சீர்திருத்த நாடகங்களும், வரலாற்று நாடகங்களும் வளர்ந்தன. பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகப்பணி போற்றற்குரியது. நாடகத்தைப் போலவே நாட்டியமும், இசையும் தமிழில் வளர்ச்சி யடைந்தன. காலப்போக்கில் அரசு ஆதரவுடன் இவை வளர்ந்து, இன்று முறைப்படி இவற்றைக் கற்றுக்கொள்வதற்குக் கல்லூரிகளும் ஏற்படுத்தப் பெற்றுள்ளன. தொடக்கத்தில் இவற்றின் வளர்ச்சிக்கு உதவிய புரவலர் அண்ணாமலை செட்டியாரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் உச்சிமேல் வைத்துப் போற்ற வேண்டும். நாடகத்தின் முதிர்ந்த வளர்ச்சியில் இன்று புகழ்பெற்று விளங்கும் திரைப்படங்களும், வானொலி * யும் தமிழ் வளர்ச்சிக்கு ஒருவகையில் உதவுகின்றன, தமிழ் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் மொழி, அரசியல், அறிவியல் முதலியவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நிற்பன தமிழ்த்தாளிகைக ளாகும். விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தபோதினி, ஆனந்தவிகடன், கல்கி முதலிய ஏடுகள் அரசியல், மொழி, பண்பாட்டு நெறிகளை வளர்த்தன. பல அரிய வரலாற்றுக் கதைகளைக் கல்கியும், ஆனந்தவிகடனும் வெளியிட்டன. ஆனால், இவை யாவும் அக் காலத்தில் வழங்கப்பெற்ற மணிப்பிரவாள நடையைக் கடைப்பிடித்தன. தனித்தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பாடுபடப் பல ஏடுகள் தொடங்கப்பட்டன. சுரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட 'தமிழ்ப்பொழில்', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட 'செந்தமிழ்ச் செல்வி', மறைமலையடிகளாரின் அறிவுக்கடல்' (ஞான சாகரம் முதலிய ஏடுகள் இத்தகையப் பணிகளை மேற்கொண்டன. நாட்டு விடுதலைப்போரின்போது எழுந்த எண்ணிறந்த ஏடுகளும், நூல்களும் முறையே விடுதலைக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் வழிகண்டன. இதன்வழி இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதோடு தாய்மொழிக்கும் ஆக்கமும்தணியிடமும் ஏற்பட்டன. பர்வரதராசுலுவின் "தமிழ்நாடு', டிகாசு.நடராசப் பிள்ளையாரின் தென்னாடு'. இராசாசியின் *விமோசனம்', டிபிரகாசத்தின் 'சுயராச்சியா', சுப்பிரமணிய சிவத்தின் 'விவேகபாநு', திரு.வி.க.வின் "தேசபக்தன்', வ.உ.சி.யின் 'சுயராச்சியம்" சி.சுப்பிரமணிய பாரதியின் 'இந்தியா', கணேசனின் "சுதந்திர சங்கு", 'ச.து.சுப்பிரமணிய யோகியாரின் "பாலபாரதம்',பரலி சு.நெல்லையப்பரின் கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் " 153 'லோகோபகாரி', இரா.சொக்கலிங்கத்தின் ' சழியன்', பசீவானந்தத்தின் 'சனசக்தி', நாரணதுரைக்கண்ணனின் 'பிரசண்ட விகடன்', ஏ.கே.செட்டி யாரின் 'குமரிழலர்', ந.சோமயாசுலுவின் இளந்தமிழன்', சீனிவாசனின் 'மணிக்கொடி", பெர்ணாண்டோவின் 'தமிழ்மணி' முதலிய எண்ணிறந்த ஏடுகள் இவ்வகையில் பணிபுரிந்தன. அறிவியல் ஏடுகள் தோன்றித் தமிழ் வளர்ச்சிக்கு உதவின. மேடைப் பேச்சிலும், பகுத்தறிவு வளர்ச்சியிலும் தமிழில் ஒரு புத்தியலைப் படைத்தவர்கள் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் ஆவர். பெரியார் எளிய தமிழில் பேசிக் கோபுரத்தின் உச்சியிலிருந்த அரசியல் கருத்துகளைக் குப்பை மேட்டுக்குக் கொண்டுவந்தார். அண்ணா அடுக்கு மொழியால் ஆயிரமாயிரம் மக்களைக் கவர்ந்தார். பேச்சுக் கலையே ஒருபுது மெருகுடன் திகழ்வதற்கு அண்ணாவும் அவரைப் பின்பற்றியோரும் வழிவகுத்தனர். ஆங்கிலத்தில் பேசுவதுதான் சிறப்பான தென்ற நிலைமாறி தமிழில் பேசுவதுதான் பண்புடையது என்ற கட்டாயம் இன்று ஏற்பட்டுவிட்டது. தமிழ் அரியணை ஏறிவிட்டது. கடைசியாக ஆசிரியர் கழகங்களும், மன்றங்களும், தொழிலாளர் இயக்கங்களும், அச்சுக்கூடங்களும் தமிழ் வளர்ச்சிக்குச் செய்த பணிகளை மறுக்கமுடியாது. சி.ஏ.நடேசன் அச்சுக்கழகம், தமிழ் வளர்ப்புப் பண்ணை , சாது அச்சுக்கூடம் முதலிய பல அச்சுக்கூடங்களும், பதிப்பகங்களும் தமிழ் வளர்ச்சிக்கு உதவின. பாரதியாரும், பாரதிதாசனும் ஆற்றிய தமிழ்ப்பணி வியக்கத்தக்கவை. இவர்கள் பாடல் (கவிதை), இலக்கியம், தாளிகை முதலிய பல துறைகளிலும் பணியாற்றித் தமிழ் மொழிக்குத் தாளாண்மை தந்தனர். ஈழம், மலைநாடு (மலேயா முதலிய அயல்நாடுகளிலும் தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழ்ப் பணியாற்றுகின்றன. கொல்கத்தா (கல்கத்தா) மும்பாய் (பம்பாய்), தில்லி, பெங்களுர் முதலிய இடங்களிலுள்ள தமிழ்ச் சங்கங்களின் தமிழ்ப் பணியாலும், உலகத் தமிழ்க் கழகத்தாலும், உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தாலும் இவையாவற்றிற்கும் மேலாக இன்றைய ஆட்சியாளராலும் தமிழ் பொற்காலத்தைப் படைத்துவிட்டது. இந்தியெதிர்ப்பு தமிழுக்கு உரமிட்டது . 1916-ல் தோன்றிய "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' பார்ப்பன ரல்லாதார் ஒன்றுபடவும், தமிழ் மொழியில் பற்றுக்கொள்ளவும், தமிழர் மறுமலர்ச்சியைக் காணவும் விழைந்தது. இதனை உருவாக்கிய வயவர் பி.தியாகராயர் பார்ப்பனியத்திற்கும், மூடநம்பிக்கைகளுக்கும், நிலக் கிழமை, முதலாளியத்திற்கும் சாவுமணி அடிக்கும்படி தமிழரைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையால்தான் பேராயக் (Congs) கட்சியும் மொழிவழி ) மாநிலங்கள் காளை வழி வகுத்தது. தந்தை பெரியாரும் பின்னர் பேராயக் கட்சியைவிட்டு நீங்கினார்.1926-ல் தன்மான (சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கி, தமிழரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இதன்வழி 154 தாய்நில வரலாறு தான் மேற்கூறிய 'தனித்தமிழ் இயக்கம் வளர்ந்தது. சமற்கிருதத்தைத் தேவமொழியாக மதித்து வழிபட்ட மனப்பாண்மை மாறியது. தமிழரின் பெருமையைப் பலரும் போற்றிப் பரப்பினர். நாட்டினப்பாவலர் சுப்பிர மணியபாரதி, பாரதிதாசன் முதலிய தலையாய பாவலர்களும் தமிழ்நாட்டு அரசியலாளர்களும், தமிழ் வளரப் பாடுபட்டனர். பல தாளிகைகளும், நரல்களும் தமிழில் வந்தன. தமிழிசைச் சங்கம் தெருவெல்லாம் தமிழ் முழங்க வழிவகுத்தது. இந் நிலையில் தமிழரின் அரசியல் விழிப்புணர்ச்சிக் காகத் தோன்றிய நயன்மைக் கட்சி இருபதாண்டுகளைப் பதவி வேட்டை யிலேயேவீணடித்தது. இதன் கரணியமாகத் தமக்குள்ளேயே பிளவுபட்டுச் சிதறியது. 1937-ல் நடந்த தேர்தலில் பேராயக் கட்சி வென்றது. 'ஏக இந்தியா', 'இந்தி' ஆகியவை தமிழர்மேல் நின்றன. மீண்டும் சமற்கிருதம் ஆளுமைபெற்றது. இந்தி எதிர்ப்பு தமிழகமெங்கும் தோன்றியது. பள்ளி களில் திணிக்கப்பட்ட இந்தியையெதிர்த்து மாநாடுகள் கூடின.தாளமுத்து, நடராசன் போன்ற இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் தந்தனர். போராட்டங்கள் நடந்தன. கட்டாய இந்தித் திணிப்பு நீக்கப்பட்டது. பேராயக் கட்சி தேசிய உணர்ச்சி', 'விடுதலைப் போர் போன்ற வற்றால் உந்தப்பட்டு பெரும் வளர்ச்சி பெற்றபோது, காந்தியார் அதன் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார் ஒரே இந்தியர்' என்னும் கோட்பாடும் தேசிய மொழிக் கோட்பாடும் பரவலாகப் போற்றப்பட்டன. ஆயினும், தமிழர் விழிப்போடிருந்து தமிழ்நாடு தமிழருக்கே' என்று முழங்கினர். மபொசிவ ஞானம் பேராயக் கட்சியினின்று வேறுபட்டுத் தமிழரசுக் கழகத்தை ஏற்படுத்தினார். தமிழே தமிழகத்தில் ஆட்சி மொழியாக வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ இடம் பெறக் கூடாது என்றார். மொழி ஆராய்ச்சி களும், மாநாடுகளும் நடந்தன. தமிழர் ஒன்றுபடலாயினர். மொழிவழி மாநிலங்கள் பிரிந்தன. விடுதலைக்குப் பின்னும், தமிழரின் விழிப்புக்குப் பின்னும் நடுவண் ஆட்சி ஒரு மொழிக்கோட்பாட்டைக் கைவிடவில்லை, இதற்காக ஆட்சிமொழிச் சட்டம் வந்தது. 1965 ஆம் ஆண்டு சனவரி - பிப்பிரவரித் திங்கள்களில் ஆட்சி மொழிச் சட்டத்தையெதிர்த்துத் தமிழக மெங்கிலும் மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தமிழக அரசால் இம் மொழிப் போராட்டத்தை அடக்க முடியவில்லை. நடுவண் ஆட்சியின் படைகொண்டுதான் இம் மொழிப் போராட்டம் அடக்கப்பட்டது. பலர் மாண்டனர். பலர் தடியடிபட்டனர். பலர் தீக்குளித்தனர். இத்தகைய மொழிப் போராட்டம் இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவு முடுக்கமாக நடக்க வில்லை. இப் போராட்டம் தமிழகத்தை மொழியால் ஒன்றிணையச் செய்தது. தமிழ்மொழி காப்போருக்கே ஒப்போலையளிக்கப்பட்டது. இதனால், தமிழக அரசின் வரலாறே மாறியது. பேராயக் கட்சிபடுதோல்வி கண்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாகித் தமிழை அரியணையேற்றியது. இந்தி அடியோடு நீக்கப்பட்டது. எங்கும் எதிலும் தமிழ் மலர்ந்து மணம் பரப்பத்தொடங்கியது. கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 155 (எ) விடுதலைப் போரில் தமிழகம் தமிழர்கள் இயற்கையாகவே வீரப் பண்பும், விடுதலையுணர்வும் கொண்டவர்கள். அவர்களின் பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும் வீரப் பெட்டகங்களே. அவர்களின் வரலாற்றுப் போக்கில் அடிமை வாழ்வைத் தொடர்ந்து காண முடியாது. அவர்கள் பொறாமைக்கு அடிமையான போதெல்லாம் தங்களுக்குள் காழ்ப்புணர்ச்சி பொங்கிய போதெல்லாம் மாற்றானுக்கு இடம் கொடுத்துத் தங்களின் வரலாற்றில் புல்லுருவி புகும்படி செய்து விட்டனர். அத்தகைய புல்லுருவிகள்தாம் ஆரியரும், இசுலாமிய ரும், மராத்தியரும், பின்னர் வந்த ஐரோப்பியரும் ஆவர். தமிழர்கள் ஒன்றுதிரண்டு முனைப்பாக எதிர்த்திருந்தால் முசுலீம்களின் ஆட்சி மதுரையிலேயே தோன்றியிராது. மராத்தியர் தமிழ் மண்ணில் காலடி வைத்திருக்க மாட்டார்கள்; ஐரோப்பிய வணிகரும் தமிழகத்தில் வணிகராகவே இருந்து அகன்றிருப்பர். ஆனால், ஒளன்றி நோக்கும்போது ஆரியப் புயலும், முசுலீம் சூறாவளியும், ஐரோப்பியப் பேய்க்காற்றும் இந்தியத் துணைக் கண்டத்தையே அசைத்துவிட்டபோது தமிழகம் மட்டும் தனியே தப்பியிருக்க முடியாது என்பதும் வரலாற்று உண்மை யாகிறது. எப்படியோ மாற்றானுக்கு அடிமையாகிவிட்ட நாட்டில் தமிழர் தன்னுணர்வு பெறும் போதெல்லாம் மாற்றானை மண்ணைவிட்டு அகற்றச் செய்த விடுதலைப் போர்களைத் தொடர்ந்து காண்கிறோம். குறிப்பாக 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இத்தகைய போர்கள் தமிழ் மண்ணில் முடுக்கமாய், முனைப்புடன் நடந்த வரலாற்றைப் பூலித்தேவன், வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர்கள் ஆகியோரை வரலாற்றில் கண்டோம். இதே காலத்தில் மைசூர் வீரன் திப்புசுல்தானும், ஆங்கிலரை அடியோடு விரட்டப் போர்க்கொடி உயர்த்திப் பொங்கி எழுந்ததையும் பார்த்தோம். இவர்கள் யாவரும் மன்னர்களாய் நாட்டையாண்டவர்கள். எனவே, மாற்றானைச் சாய்தி தொழிக்க இவர்கள் மேற்கொண்ட போர்களை "விடுதலைப் போர்கள்' என்று ஒப்புக்கொள்ளச் சிலர் மறுக்கின்றனர். 'போர்' மன்னரின் வாழ்வோடு கலந்த பண்பு. ஆகவே, அது நாட்டு விடுதலைப் போராகாது என்பது இவர்தம் கருத்தாகும். அடுத்துப் படைவீரர்கள் ஆங்கிலரை எதிர்த்து எழுந்த நிகழ்ச்சியும் தமிழக வரலாற்றில் உண்டு. அதுதான் கி.பி1806-ல் வேலூரில் நடந்த படைவீரர்களின் சுல்கமாகும். இதைப் பற்றியும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆங்கிலப் படைவீரர்கள் பெற்றிருந்த தனிச் சலுகைகளை யும், உயர்வையும் கண்டு மனம் பொறாத் தாழ்நிலையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் காழ்ப்புணர்ச்சியால் செய்த கலகமே வேலூர்க் கலகம் என்பது ஒரு சாரார் கருத்து. ஆனால், ஆங்கிலரிடம் பணியாற்றும் வீரரும் விடுதலை வேட்கையுடன் எழுந்தனர் என்பது மறுசாரார் கருத்து. இந் நிகழ்ச்சியைக் காண்போம். 15 தாய்நில வரலாறு வேலூர்க் கலகம் (கி.பி.1806) வயவர். சியார்சு (சர். ஜார்ஜ் பார்லோ கி.பி1805-1807 ஆங்கில வாட்சியின் தலைமையாளுநராக இருந்தபோது சென்னை யாளுநராக இருந்தவர் கிழான் வில்லியம் பெண்டிங்கு ஆவான். இவன் சென்னை யாளுநராகக் கி.பி.1801 முதல் 1807 வரையிலும் இருந்தான். இவனே பிற்காலத்தில் தலைமை யாளுநராக கிபி1828 முதல் 1835வரை இருந்தான்.) ஆங்கிலத் தளபதி வயவர் சாண்கிரேதாக் என்பவன் சென்னை யாளுநரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு ஒரு சில படைச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தான். அதன்படி இந்தியப் படைஞர்களும் சிப்பாய்களும் படை இராணுவச் சீருடையிலிருக்கும் போது 'திலகம்', 'நாமம், திருநீறு' முதலிய சமயச் சின்னங்களை நெற்றியில் இடக் கூடாதென்றும், ஒரே வகையாகத் தலைமயிரை வெட்டிக் கொள்ளவேண்டும் என்றும், மீசையை மிடுக்காக முறுக்கிவிட வேண்டும் என்றும் காதில் கடுக்கண் போடக்கூடா தென்றும் ஆணையிடப்பட்டது. ஒரே வகையான படைச் சீருடை களையும், தொப்பியையும் அணியவும் ஆணையிடப்பட்டனர். இத்தகைய ஆணைகளை இந்தியப் படைவீரர்கள் ஐயத்துடன் நோக்கினர். ஆங்கிலர் தங்களைக் கிறித்தவராக்கவே இச்சூழ்ச்சி செய்கின்றனர் என்று நம்பினர். தங்கள் சமயத்திற்கும் பண்புகளுக்கும் ஏதம் வந்துவிட்டதாகக் கதறினர். 1806 ஆம் ஆண்டில் வேலூர்க்கோட்டையிலிருந்த படையில் 370 ஆங்கில வீரர்களும், 1500 இந்திய வீரர்களும் இருந்தனர். இந்தியப் படைவீரர்கள் இத்தகையப் படைஆணைகளைத் தகர்க்கவும், ஆங்கிலரை ஒழிக்கவும் தங்களுக்குள் கமுக்கமாக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டினர். சூலைத் திங்கள் பத்தாம் நாள் காலையில் ஏழுமணிக்கு திடீரெனப் புரட்சி செய்தனர். ஆங்கில வீரர்களும் அதிகாரிகளும் தங்கியிருந்த பாசறை (முகாம்களை நோக்கிச் சரமாரியாகக் குண்டுமழை பெய்தனர். வெள்ளை யர் பலர் மாண்டனர். பலர் தப்பியோடினர். இந்தியப் படைவீரர்கள் வெள்ளையரை விரட்டிவிட்டோம் என்று வெற்றிமுரசு கொட்டினர். கோட்டையில் பறந்த ஆங்கிலக் கொடியை இறக்கிவிட்டுத் தங்கள் கொடியைப் பறக்கவிட்டனர். வேலூர்க்கோட்டையில் சிறை வைக்கப்பட் டிருந்த திப்புசுல்தானின் இரண்டு பிள்ளைகளில் ஒருவனை மன்னன் எனப் 'பிரகடனம்' செய்தனர். மகிழ்ச்சியாரவாரத்தில் ஆடிக்களித்துக் கூத்தாடினர். இந் நிலையில் தப்பியோடிய வெள்ளையரில் ஒருவனான தளபதி கூட்சு (மேஜர் கூட்ஸ்) என்பவன் ஒரே மூச்சாக இராணிப்பேட்டை வரையில் ஓடி அங்கிருந்த படையை அழைத்துக்கொண்டு வேலூர் திரும்பினான். (கர்னல்) வெல்லசுலி என்பவன் தலைமையில் வந்த இப் படை முன்னூறு இந்தியப் படைகளைச் சுட்டுக்கொன்று கலகத்தை அடக்கியது. இக் கல்கத்தில் மாண்ட ஆங்கில வீரர்களின் எண்ணிக்கை நூறு ஆகும். எஞ்சிய இந்தியப் படைவீரர்கள் கடுந்தண்டனைகளைப் பெற்றனர். இக்கல்கத்தால் விளைந்த இழப்புகளையும், இதன் கரரியத்தை 171-180 கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 157 யும் உசாவிய ஆங்கில மேலிடம் கிரேதாக்கையும், ஆளுநரையும் பதவியி லிருந்து நீக்கியது. திப்புவின் மக்கள் கல்கத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட னர். புதிதாகக் கொண்டுவரப்பட்ட படைச் சீர்திருத்தங்கள் நீக்கப்பட்டன. வேலூரில் நடந்த இந்தப் படைஞர் சிப்பாய்க் கலகம் சிபி.1857-ல் நடந்த மாபெரும் முதல் இந்தியப் போருக்கு வழிகாட்டியாகும். சிலர் இதனைச் 'சாதாரணக் கலகமென்றும், இதற்கும் 1857 ஆம் ஆண்டுப் புரட்சிக்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறுவர். 1808 ஆம் ஆண்டில் மீண்டும் வெள்ளையரை வெளியேற்ற ஒரு திடீர்ப்புரட்சி வேலூரில் தோன்றியது. அதுவும் வெற்றி பெறவில்லை. அதில் பங்கேற்ற இந்தியப் படைஞர்களை ஆங்கிலர், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டனர். துவர்கள் தொங்கிய தாக்குமரம்கோட்டைக்குள் இன்றும் காவல்துறைப் பயிற்சி நிலையத்திற்குள் உள்ளது. வேலுார் மக்கள் அன்றும், அதற்குப்பின் நடந்த போராட்டங்களிலும், போர்களிலும் பங்கேற்ற வீரர்கள். ஆகவே, வேலூர்க் கலகமே இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து நடந்த முதல் விடுதலைப் புரட்சியாகும், வேலூர்க் கலகத்தில் அக் காலத்தில் இரும்புத் திரைகளாயிருந்த சாதி, சமயத் திரைகளைக் கிழித்துக்கொண்டு இந்து, முசுலீம்கள் மேல் சாதி, கீழ்ச்சாதியினர் யாவரும் படையினர் ஈடுபட்டனர். எனவேதான் கி.பி.1857-ல் வடநாடெங்கிலும் பரவிய இந்திய விடுதலைப் போருக்கு சிப்பாய்க் கலகம்இஃதோர் ஒத்திகை' என்றனர், இது ஒரு சிப்பாய்க் கலகமா? இல்லவே இல்லை. வஞ்சம் தீர்க்கவே மூண்ட போர்; ஆங்கிலரின் அடிமைத்தளையை உடைத்தெறியும் தேசியப் போர்; நாட்டு மக்களின் நல்லாட்சிக்கு வித்திட்ட போர்; கருப்பரான அடிமைகள் தங்களை அடிமைப்படுத்தியாண்டஆங்கிலரைக்கொன்று குவித்த விந்தைப்போரேயன்றி வேறில்லை ' என்று இரசல் (Russel) என்னும் ஆங்கிலர் வேலூர்க் கலகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், வேலூர்க் கலகம் தோற்றதற்கு முசுதாபா பேக் என்பவரின் இரண்டகச் செயலே இதற்குக் கரணியமாகும். இவன் திப்புசுல்தானின் மக்களிடமிருந்து பணத்தையும் பெற்று, சுலகத்தையும் தூண்டிவிட்டு, ஆங்கிலாரிடமும் கலகத்தின் கமுக்கத்தைக் கூறிவிட்டான். ஆங்கிலர் இவனுடைய காட்டிக் கொடுத்த பரிக்களித்த கைக்கூலி இரண்டாயிரம் வராகன் பணமாகும். ஆகவே, வேலூர், விடுதலைப்போர் முகதாபாபேக் கின் சண்டாளத்தனத்திற்கும் பலியாகி விட்டது. "கலகம்" எனும் களங்க மாகிவிட்டது. மேற்கூறியவை மன்னர்களாலும், படைவீரர்களாலும் மேற் : கொள்ளப்பட்ட விடுதலைப்போர்களென்றதனால் சிலர் பொது மக்கள் பங்கேற்காத போர்கள் விடுதலைப் போர்கள் ஆகாவென்பர். படைவீரர் களும், மன்னர்களும், மக்கள்தாம், தமிழ் மறவர்தாம் என்பதையும், மன்னர்கள் ஆண்டுமானத்தில் பொது மக்கள், அதுவும் தமிழ்ப் பண்பில் 158 தாய்நில வரலாறு உருபா அவர் ஆனான். அவன் அளிக்கும் பாதுகாப் நிலைக்கும் சாதனான பல்வேறு ஆணை தோய்ந்த பொது மக்கள் கிளர்த்தெழ வாய்ப்பில்லை, அவர்களின் உணர்வு களைத்தான் பூலித்தேவனும், கட்டபொம்மனும், மருது பாண்டியரும், வேலூர் வீரர்களும் வெளிப்படுத்தினர். வெள்ளையர் கலகம் (1809) வேலூர்க் கலகத்தின் கரணியமாகச் சென்னையாளுநர் வில்லியம் பெண்டிங் பதவியிழந்து இங்கிலாந்து சென்றுவிட்டான். அவனுக்குப்பின் வயவர் சியார்சு பார்லோ (1807-13) சென்னையாளுநர் ஆனான். சென்னைப் படையிலிருந்த வெள்ளையர்கள் 'கூடாரப்படி ' கேட்டுக் கலகம் செய்தனர். வெள்ளையரை வெறுத்த இந்தியப் படையினர் இவர்களுடன் சேர்ந்து கலகம் செய்யாமல் வாளாவிருந்துவிட்டனர். இதிலும் தமிழர்களின் உணர்வை அறிய முடிகிறது. வேலுத்தம்பிகலகம் (1809-1810) 1795-ல் ஆங்கிலர் திருவிதாங்கூரில் தங்கள் படையொன்றை நிறுத்தி அதற்காகும் படைச்செலவை அளிக்கும்படி உடன்பாடு செய்துகொண்ட னர். அதன்படி திருவிதாங்கூர் அரசர் ஆண்டொன்றுக்கு எட்டிலக்கம் உருபா அளித்து வந்தார். 1809 -ல் வேலுத்தம்பி என்பான் திருவிதாங்கூர் திவான் அமைச்சர் ஆனான். அவன் ஆங்கிலரையும், அயலார் ஆளுமையை யும் வெறுக்கும் தன்மான வீரன். படைக்களிக்கும் பாதுகாப்புப் பணத்தை நிறுத்தினான். ஆங்கிலரை யெதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினான். 1810-ல் ஆலப்புழையில் முப்பது ஆங்கிலப் படையினரையும், ஒரு படை அதிகாரியையும் கொலை செய்தான். இதனையறிந்த சென்னையாளுநர் வயவர்சியார்சு பார்லோபெரும்படையணுப்பித்திருவிதாங்கூரைத் தாக்கிப் பிடித்துக்கொண்டான். தன் மானவீரன் வேலுத்தம்பி பகைவரின் கையில் சிக்காமல் தற்கொலை செய்துகொண்டான். இந்தியாவில் விடுதலை இயக்கம் தோன்றுவதற்கான கரணியாங்கள் பலவாயினும் அயலவரான ஆங்கிலரின் அடிமைத்தளையை அறுக்க வேண்டுமென்ற விடுதலை வேட்கையேமுதுகந்தண்டாகும். இவ்விடுதலை வேட்கை ஆங்கிலவாட்சி ஏற்பட்டு இருநூறு ஆண்டுகள் வரை இலை மறை காய் போலிருந்து 19 ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டு, இருபதாம் நாற்றாண்டில் பலன் தந்தது. இனத்தால், மொழியால், சமயத்தால், சாதியால் வேறுபட்டுப் பிரிந்துக் கிடந்த இந்தியர் ஒன்றுபட்டு ஆங்கிலரை அகற்ற முடியவில்லை. காலப்போக்கில் இவர்களிடையே எழுந்த இந்த விடுதலை வேட்கை இத்தகைய வேறுபாடுகளை உள்ளழுத்தி மேலெழுந்து வெற்றி பெற்றது. அவ்வாறு எழுந்து பல சோதனைகளைத் தாண்டி வெற்றிபெற்ற வீரவரலாற்றில் தமிழகம் படைத்த இயலை ஈண்டுச் சுருங்கக் காணலாம். வேலூர் வீரர்களின் விடுதலைக் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னும் தமிழகத்தில் புரட்சிக் கனல் நீறுபூத்து நின்றது. 1851 ஆம் ஆண்டில் சென்னை நகரெங்கிலும் ஆங்கிலருக்கு எதிரான சுவரொட்டிகள் காணப் பட்டன. மக்கள் ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தங்களை அணியப்படுத்திக் சிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 150 கொள்ளும்படியான ஆணைகளாக அவை காட்சியளித்தன. விடுதலைப் போருக்குத் தமிழர்களை அணரியப்படுத்திய சுவரொட்டிகளுக்குப் பின்னர் நடைமுறையில் தமிழகப் பாளையங்களில் புரட்சிக் கனல் வெடித்தது. பாளையங்களில் எழுந்த புரட்சிகளை நவாபு வயவர் சாலர்சங் அடக்கி னான், 1857-ல் வடநாடெங்கிலும் இந்தியப்படைவீரர்கள் ஆங்கிலரை யெதிர்த்துப் போரிட்டபோது தமிழகம் அமைதியாகவே இருந்தது. இதற்கு அக் காலத்தில் போக்குவரத்து, செய்தித் தொடர்பு முதலிய ஏந்துகள் ஏராளமாக இல்லாததே கரணியமாகும். மேலும், நாடு முழுவதிலும் திரண்டு மக்கள் ஒரு முகமாகப் போரிடும் பாங்கும் அக் காலத்தில் இல்லை. ஆயினும், இப் போரில் விடுதலை வீரர்களை மாய்த்துப் புகழ்பெற்று, பின்னர் 1897 செப்டம்பர் 20 ஆம் நாள் லக்னோவில் மாண்ட படைஞன் (கர்னல் நீல் என்பவனுக்குச் சென்னையில் வைத்த சிலை 'அவமானச் சின்னம்' எனக் கருதிய தமிழர்கள் கொதித்து எழுந்தனர். ஆனால், நெடுநாள்களுக்குப் பின்னரே சி இராசகோபாலாச்சாரியார் முதலமைச்ச ராயிருந்தபோது அச் சிலை அகற்றப்பட்டுச் சென்னை அருங்காட்சிச் சாலையில் படைக்களப் பிரிவில் வைக்கப் பெற்றது. 1857-க்குப்பின் ஆங்கிலவணிகக்குழுவார் ஆட்சி ஒழிந்தது. ஆங்கில வரசி இந்தியாவுக்கும் அரசி ஆனாள். இதற்குப் பின்னும் பேரரசியாரின் பேரறிக்கைக்கு மாறாக இந்தியரின் அடிப்படையுரிமைகளை ஆங்கில ஆட்சியாளர்கள் நகக்கி வந்தனர். இந்தியா பிரிட்டானியரின் விற்பனைச் சந்தையாகவே திகழ்ந்தது. இந்தியச் செல்வம் பறங்கியரால் கொள்ளைய டிக்கப்பட்டதால் நாட்டில் பஞ்சங்களும் பட்டினிச்சாவுகளும் அதிகரித் தன. ஆனால், இவற்றைப்பற்றியே கவலைப்படாத அரசப் படிநிகராளிகள் 'ஆடம்பர வாழ்க்கையிலும், வேடிக்கை விழாக்களிலும் களிப்புற்று நின்றனர். 1870 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு மேல் நாட்டில் பல பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் தோன்றின. பல இலக்கம் மக்கள் பட்டினியால் மாண்டனர். பல இலக்கம் தமிழர்கள் தோட்டக்கூலிகளாய் அயல்நாடுகளுக்குச் சென்றனர். இந் நிலையில் அரசப்படிநிகராளி யாகவிருந்த கிழான் இலிட்டன் (7876-18801-1-1877-ல் தில்லியில் ஒரு கும்பலை தர்பரைக் கூட்டி விக்டோரியா இந்தியாவின் *பேரரசி' என்று அறிவித்தான். இதற்கு ஏராளமான பணத்தைச் செலவிட் டான். அடுத்து, வடமேற்கு எல்லச் செய்கையில் தலையிட்டு ஆப்கானியப் போரில் ஈடுபட்டுப் பெருந்தொகையைச் செலவிட்டான். இத்தகைய செயல்களால் பஞ்சமும், பட்டினியும் அதிகரித்தன. 1876 முதல் 1878 வரை நாடே பஞ்சத்தில் மூழ்கிப் பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. இவ்வாண்டு களில் பஞ்சத்தால் இரண்டு இலக்கம் மக்கள் மாண்டனர். இந் நிலையில் தாய்மொழித் தாளிகைகளைத் தடைப்படுத்தும் சட்டம் ஒன்றை (The Ner nacular Pr&s Act) இலிட்டன் கொண்டுவந்து இந்தியரின் செய்தித்தாள் உரிமையையும் பறித்தான். அவன் கொண்டுவந்த "படைக்கலச் சட்டம்" 160 தாய்நில வரலாறு இசாகஏற்றாறையும் அவன் சுக்கி இந்தியா [ArIIIs Act) இந்தியர் எத்தகைய படைகளையும் (ஆயுதம் ஏந்திச் செல்வத் தடைவிதித்தது. இந்திய வணிகத்தை முடமாக்கி இந்தியரை வறியராக்கும் - இறக்குமதிச் சட்டம் ஒன்றையும் அவன் கொண்டுவந்தான். இந்தியாவின் விருந்து பஞ்சாசு ஏற்றுமதியாகி, இங்கிலாந்தில் ஆடையாக நெய்யப்பட்டு இறக்குமதியாகும் பருத்தியாடைகள் மீதிருந்த வரிகளை நீக்கி ஆங்கில வணிகருக்குப் பெரும் ஊதியம் தேடிக் கொடுத்தான். இவனுடைய இத்தகைய செயல்களாலும் இயற்கைக் கேடுகளாலும் இந்தியரின் உணர்வுகள் ஒன்றுபட்டு ஆங்கிலவாட்சியை அடியோடு ஒழிக்க வேண்டு மென்ற விடுதலை வேட்கை மேலிட்டது. நயன்மை வழங்குவதிலும் ஆங்கிவருக்கும் இந்தியருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. பறங்கிக் குற்றவாளிகளை இந்திய நயன்மையர் உசாவுதற்குத் தகுதியற்றவர் ரென்று கருதினர். இதனைப் போக்க, கிழான் ரிப்பன் (78800-1884) காலத்தில் கொண்டுவரப்பட்ட "இல்பர்ட்' சட்டவரைவு மசோதாவும் பயனற்றுப் போயிற்று. கிழான் ரிப்பனின் கல்விச் சீர்திருத்தம், உள்ளாட்சியில் இந்தியர் பெற்ற பங்கு முதலியவற்றால் இந்தியர் மேலும் ஒருமைப் பாட்டுணர்வை யும், விடுதலையுணர்வையும் பெற்றனர். தாளிகைகள் (பத்திரிகை மீதிருந்த தடைகள் நீக்கப்பட்டன. இதனால், இந்தியர் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை பெற்றனர். அத்தோடு தங்களின் பாதுகாப்புக்கெனப் பல சங்கங்களையும் ஏற்படுத்திக்கொண்டனர். 1876-ல் இந்தியக்கழகம் (Ini diain League), இந்தியச் சங்கம் (Iridian Association) முதலியன ஏற்பட்ட ன. 1852-ல் சென்னையில் , சென்னைவாணர் சங்கம்' ஏற்பட்டது. தேசிய உணர்வைத் தூண்டும் கூட்டங்கள், மாநாடுகள் இச் சங்கங்களால் நடத்தப்பட்டன. பலதிறப்பட்ட மொழிவழி நாளேடுகளும், கிழமை, திங்களேடுகளும் தோன்றின. பல பெரிய நிலையங்களால் வெளியிடப் பட்ட ஆங்கில ஏடுகளின் வாயிலாக நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான தேசிய உணர்ச்சி' பரவியது. 1883ல் கல்கத்தாவில் "பன்னாட்டுக்கண்காட்சி' ஒன்று தொடங்கியது. அதில் 'தேசிய மாநாடு' ஒன்றைக் கூட்டி, நாடு முழுவதும் பல கழகங்களைத் தொடங்கி தேசிய உணர்வை வளர்க்கும் வழிவகைகளை ஆய்ந்தனர். இதில் இந்து, இசுலாமியத் தலைவர்கள் பலரும் வேறுபாடின்றிப் பங்கேற்றனர். பேராயத்தின் (காங்கிரசு) தோற்றம் (1885) இந்திய தேசியப்பேராயம் முதன் முதலில் தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரில்தான் தோன்றியது. 1884-ல் திவான்பகதூர் இரகுநாதராவ் என்பவர் வீட்டில் பதினேழு பேர்கூடி 'பேராயம்" ஏற்படுத்துவது பற்றிக் பேசினர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் அனந்தாச்சார்லு, அரங்கய்யா fநாயுடு, சி.சுப்பிரமணிய அய்யர், இரகுநாதரான் ஆகிய தமிழ்நாட்டவர்கள் ளாவர். இவர்களின் முடிவுப்படி 1885-ல் பூனாவில் முதல் பேராய மாநாடு கூடுவதா யிருந்தது. ஆனால், பூனாவில் 'பிளேக் நோய் ஏற்பட்டதால் பம்பாயில் முதல் பேராயக் கட்சி மாநாடு கூடியது. இந்தப் பேராயக் கட்சி தோன்றுவதற்கு முன்பே சென்னையில் *மகாசன சவை' என்ற தேசிய கிபி. 18, 2017 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 151 நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களும் இதில் பங்கேற்ற மேற்கண்ட தமிழர்களேயாவர். இதில் இந்து முசுலீம் உறுப்பினர் பலருமிருந்தனர். * 07ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் சென்னை வந்த போது இச் சவை பேராயக் கட்சியின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுச் செயல் பட்டது. பின்னர் இச் சவை பேராயக் கட்சியின் ஒரு கிளையாகவும், பல திறப்பட்ட இந்தியரைப் பண்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபடுத்தும் நிலையமாகவும் மாறியது. இலண்டன் மாநகரிலும் இந்தியர் சங்கம்' ஒன்று தோன்றியது. தமிழகத்தில் நாட்டுப்பற்றும், விடுதலை வேட்கையும் ஏற்பட மேற்கண்ட சங்கங்களேயன்றித் தமிழ்மொழி ஒரு சிறந்த கருவியாக அமைந்தது. நாம் கண்ட தமிழ் மறவர்களான பூலித்தேவன் கட்ட பொம்மன் முதலியோரின் வாழ்க்கை வரலாறுகள் வீரப்பாவியங்களாகவும், நாடகங்களாகவும் பரப்பப்பெற்று மக்களைத் தட்டியெழுப்பின. 'கட்ட பொம்மன் சண்டைக்கும் நாட்டுப்புற மக்களையும் தட்டியெழுப்பியது. இத்தகையவீரப்பாவியங்களேயன்றி * ஆன்மிகத்துறையிலும் தமிழர்களை ஒன்றுபடச் செய்யும் பல நூல்களும் தமிழில் தோன்றின. 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்பதே தமிழர் சமயம். இதனை விடுதலை ஊழியிலும் காண்கிறோம். வடக்கே இராசாராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, இராமகிருட்டிணர் தோன்றி ஆன்மநேய ஒருமைப் பாட்டை ஏற்படுத்தியதைப் போலவே இராமலிங்க அடிகளார் தமிழகத் தில் ஆன்ம நேய உடன்பாட்டை உறுதிப்படுத்தினார். இவரையடுத்து மாயூரம் வேதநாயகனார் கோபாலகிருட்டிண பாரதியார், உ.வே.சாமிநா தையர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரி, பி. சுந்தரம் (பின்னள்) முதலியோரின் அரும்பணிகள் தமிழையும், தேசிய உணர்வை யும் ஆன்மநேய முறையில் வளர்த்தன. பர்.சி.யூ. போப், கால்டுவெல் முதலியோரின் அரும்பணியால் திரவிடர்கள் "ஒருதாய் மக்கள்' என அறியப்பட்டுத் தென்னவர்', 'திரவிடர்' என்ற உணர்வு கொண்டு இணைந் தனர். ஆகவே, தென்னாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் தோன்றிய விடுதலை வேட்கைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் தமிழ் மொழியே அடிப்படையாக அமைந்தது. முற்போக்காளர் பாலகங்காதர திலகர் பேராயக் கட்சியில் முடுக்கமாகப் பங்கேற்குமுன் அது ஒரு மனுப்போடும் கட்சியாகவும், படித்தவருக்கு வேலை தேடித் தரும் நிலையமாகவுமே இருந்தது. 1905-ல் கிழான் கர்சன் பிரபு (789-1905) வங்காளத்தை இரண்டாகப் பிரித்துத் தேசியவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானான். இதனையெதிர்த்து எழுந்த கிளர்ச்சியில் இந்துக் சுளும், முஸ்லீம்களும் ஒருமனதாய்க் கலந்துகொண்டனர். பின்னர், இது தேசியக் கிளர்ச்சியாக வளர்ந்தது. அரவிந்தர் வங்க ஏடுகளிலும் திலகர் மராத்தியஏடுகளிலும், தேசிய உணர்ச்சிகளைத் தாண்டும் பல செய்திகளை 152 தாய்நிலவரலாறு வெளியிட்டனர். தமிழகத்திலும் பல தேசிய ஏடுகள் தோன்றின. "தன் னுரிமை (சுதந்திரம்) எமது பிறப்புரிமை' என்ற திலகரின் குரல் இந்திய நாட்டுஏடுகளிலெல்லாம் ஒலித்தது. 1906ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை திலகர் பேராயக் கட்சியினின்று விலகி, 'தீவிரவாதியாகித்" தேசியப்போரை முடுக்கித் திறம்பட செயல்படும்படிச் செய்தார். பட்டதாரிகளும் மேட்டுக்குடியின ரும் தன்னலத்திற்காகப் பயன்படுத்தும் கூடாரமாக இருந்த பேராயக்கட்சி இவருடைய தலைமையில் ஏழையெளியவரின் (பாமரரின்) பாசறையா யிற்று. தாய்மொழி மட்டுமே கற்றவர்களும் தேசிய உணர்ச்சியைத் தூண்டும் வலிமைபெற்றனர். தமிழகத்தில் எட்டயபுரம் சி. சுப்பிரமணிய பாரதியார் அத்தகையவரில் ஒருவர், தமிழால் தரணியைத் தட்டியெழுப்பி, விடுதலைப் பாடல்கள் புனைந்த நிகரற்ற தேசியவாதியான பாரதியார் தமிழரின் பண்பையும், வீரத்தையும், இறை நெறியையும், இயற்கையையும் 'தேசியம்' என்ற தேனில் குழைத்து இசைத்தவர். முப்பது கோடி முக முடைய இந்தியத்தாய் பதினெட்டு முகாமை மொழிகளையும், பல்வேறு மொழிகளையும் பேசினாலும் அவள் பெற்ற குழந்தைகள் "ஒருதாய் மக்களே' எனக்கூறி இந்திய ஒருமைப்பாட்டினைக் கண்ட பாரதி. இங்கு ஆயிரம் சாதிகளிருப்பினும் இந்தியர் ஒரே குடும்பத்தினரே; இதில் அயலவனான ஆங்கிலன் தலையிட உரிமை இல்லை, என்றும், 'வீட்டுக் குள்ளே சண்டை போட்டுக் கொள்வோம். வீடு தீப்பற்றி எரியும் போது ஒன்றுகூடித் தீயை அணைக்கப் போராடுவோம்' என ஆங்கிலத் தீயை அணைக்க இந்தியரை அழைத்தவர் பாரதி, பாரதியாரின் நண்பரான சுப்பிரமணிய சிவம் ஒரு முற்போக்கான தேசியவாதியும், தமிழ்த் தொண்டரும் ஆவார். இவருக்கு ஆங்கில அடக்குமுறையாட்சி பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது. சிறைமீண்ட பின்னரும் இவர் பல நூல்களை எழுதினார். 'ஞானபாநு' என்ற திங்களேட்டை நடத்தித் தேசிய உணர்வை வளர்த்தார். இவர் சிறைக் கூடத்திலிருந்த போது 'சச்சிதானந்த சிவம்' என்ற நூலை எழுதி வறுமையில் வாடிய தன் மனைவிக்கு அளித்தாராம். இதைத் தவிர இவர் பல நூல்களையும் எழுதினார். விவேகானந்தரின் ஆங்கில நூல்களில் சிலவற்றையும் தமிழில் ஆக்கினார். கழக இலக்கியங்களுக்கு வழி நூல்களை எழுதித் தமிழர்வீரம் மறுமலர்ச்சி யடையச் செய்தார். தாம் நடத்திய திங்கள்ஏட்டின் மூலம் 'இந்துநேசன்", 'சுதேசமித்திரன்' ஆகிய ஏடுகள் தன்மான உணர்வும், தனித்தமிழ் உணர்வு மின்றிக் கிடப்பதை வெறுத்தார். சி. சுப்பிரமணியசிவம் நடத்திய "ஞானபாநு' ஏடும் கப்பலோட்டிய தமிழர் வந. சிதம்பரனார் நடத்திய 'பாரதி' என்ற திங்களேடும் தேசிய வாதிகளை உலகறியச் செய்தன. வ.உ.சிதம்பரனார் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர் கட்டபொம்மனை விடுதலை வீரர் எனப் பாவியம் பாடியவர்; தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை அடைந்த இவர் பாரதியாரின் உயிர்த்தோழர் ஆங்கிலருக்கு எதிராகக் கிபி.19, 20 ஆம் தரற்றாண்டுகளில் தமிழகம் 163 கப்பலோட்டிய தமிழர்; சிறைத் தண்டனைப் பெற்றுச் சிறையிலேயே செக்கிழுத்த போதும் ஆன்ம நலச் சிந்தனையிலும், தமிழ் மொழியிலும் அறுபடா சிந்தனை கொண்டவர். வ.வே. சுப்பிரமணிய ஐயர் வழக்கறிஞர் {பாரிஸ்டர் படிப்புக்காக இலண்டன் சென்றவர். நாட்டுப்பற்றால் வெள்ளையருக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களின் தண்டனையிலிருந்து தப்பி மாறுவேடம் பூண்டு தமிழகம்போந்து திலகரின் முடுக்கமான இயக்கத்தில் ஈடுபட்டவர். இவர், 'தேசபக்தன்' என்ற கிழமையிதழில் ஆங்கில ஆட்சியைச் சாடியதால் ஒன்பது திங்கள் சிறையில் வதிந்தார். சிறையிலிருந்தபோது கம்பரைப் பற்றிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதினார்; இவர் ஒரு தமிழ் இலக்கிய மேதை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு, அரபு, இந்துசுதானி ஆகிய மொழிகளிலும் வல்லவர். இவருடைய பன்மொழி அறிவும், 'பாரின்படர்' படிப்பும், முடுக்கமான தேசப்பற்றும் தமிழகத்தில் பல விடுதலை வீரர்களை வளர்த்தனர். இவர் உருவாக்கிய தமிழ்க்குருகுல வித்தியாலயம்' இளைஞர்கள், நாட்டு விடுதலைப் போருக்குப் பயிற்சி அளிக்கும் நிலைய மாகியது. திருநெல்வேலி மாவட்டம் கட்டபொம்மன் காலத்திலிருந்தே வீரத்தின் விளைகளமாய் விளங்கியதாகும். வஉ.சியும் பிறரும் தோன்றிய இம் மாவட்டத்தில் பரலி நெல்லையப்பர் தோன்றினார். இவருடைய அண்ணன் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளையை மக்கள் "வந்தே மாதரம்' பிள்ளையென்றே அழைத்தனர். தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் உடன்பிறவாத் தம்பியாகத் திகழ்ந்த பரலி சு. நெல்லையப்பர் தமிழைத் தன் படையாகக் கொண்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார். பாரதியார் நடத்திய 'இந்தியா' என்னும் கிழமை ஏட்டிலும், சுப்பிரமணிய சிவம் நடத்திய திங்களேடான "ஞானபாநு'விலும், வசெசுஐயர் நடத்திய பால பாரதி'யிலும், திரு.வி.க. நடத்திய தேசபக்தன்', 'நவசக்தி' ஆகிய நாளேடு களிலும் நெல்லையப்பர் விடுதலைப் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதினார்.தாமே லோகோபகாரி* என்ற கிழமை இதழையும் நடத்தினார். இவ்வாறு தமிழர்கள் தமிழ்வழி விடுதலையை வழிபட்டனர். நாடெங்கிலும் விழிப்புணர்ச்சியும், விடுதலை வேட்கையும் ஏற்பட்டன. திலகரின் முடுக்கமான போராட்டங்கள் தமிழகத்திலும் வெடித்தன. தேசியவாதிகள் புதுச்சேரியைப் பாசறையாகக் கொண்டு செயல்பட்டனர். 1911 ஆம் ஆண்டுதில்லியில் ஐந்தாம் சியார்சு மன்னனின் முடிசூட்டு விழா தர்பார் நடந்தது. இதற்குப் பதினான்கு கோடி உருபா செலவிடப்பட்டது. இந் நிகழ்ச்சி முற்போக்காளர்களை வெறிபிடிக்கச் செய்தது. மக்கள் பட்டினியால் வாடும்போது படாடோபச் செல்வா எனக்கொதித்தனர். நாடெங்கிலும் ஆங்கிலரைப் பலவகைகளில் கொல்லும் சதித் திட்டங்கள் உருவாயின. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராயிருந்த ஆசு துரை என்ற வெள்ளையனை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார். இதற்குக் கரணியம் குற்றால அருவியில் வெள்ளையர் குளிக்கும் 164 தாய்நிலவரலாறு போது இந்தியர் யாரும் குளிக்கக்கூடாது என வெள்ளையர் போட்ட நிறத்திமிர்ச் சட்டமே. இந்தச் சட்டத்தையெதிர்த்துத் தமிழர்கள் இலண்டன் உயர் அறமன்றம் வரை வழக்குத் தொடுத்து வென்றனர். ஆயினும், தாழ்த்தப்பட்டவர் இதில் குளிக்கக்கூடாதென்ற உயர்சாதித் தமிழர் விதியை இலண்டன் அறமன்றம் நீக்கவில்லை . பின்னர் சி. இராச கோபாலாச்சாரியார் முதலமைச்சரானபோது 1938-ல் தாழ்த்தப்பட்டவ ரும் குற்றால அருவியில் குளிக்கலாமென உத்திரவிடப்பட்டது) ஆசு துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் பின்னர் தன்னைத் தானே சுட்டு கொண்டான். இவருடன் சேர்ந்து இச் சதியில் ஈடுபட்ட பதினால்வர்மீது சதிவழக்குத் தொடரப்பட்டது. சங்கரகிருட்டிண ( அய்யர், மடத்துக் கடை சிதம்பரம் பிள்ளை ), முத்துக்குமாரசாமி (ப்பிள்ளை), சுப்பையா பிள்ளை), சகந்நாத அய்யங்கார், பிச்சுமணி (அய்யர், வேம்பு, அரிகரன், தேசிகாச்சாரி, அழகப் பிள்ளை , சாவடி அருணாசலம், பாடிப்பிள்ளை , வந்தே மாதரம் சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டனர். நீலகண்ட பிரம்மச் சாரி என்ற இளைஞர் முதல் குற்றவாளியானார். இவர்கள் யாவரும் இளை ஞர்களே. தீர்ப்பில் இவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இத்தோடு தமிழகத்தில் விடுதலைப்போர் வேரூன்றிய ஆழமும் ஆங்கில ருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் விடுதலைப் போர் மேலும் முடுக்கமடைந்தது. தலைமைக் காவலராகப் பணியாற்றிய குருநாத அய்யர் என்பவர் வெள்ளையர் விடுதலை மறவர்களை ஒடுக்க மேற்கொள்ளும் திட்டங் களைத் தோல்வியடையச் செய்து, விடுதலை மறவருக்குப் படைகனைக் கொடுத்துதவினார். இதனால் இவர் அறாண்டுக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார். திலகர் தொடங்கிய தீவிர இயக்கத்தில் பங்கேற்றுச் சுதேசி இயக்கத்தைப் பரப்பிய "சுதேசி அய்யங்கார்' எனப்படும் பத்மநாப் (அய்யங்கார் அடக்குமுறைக்கு ஆளானார், சுதேசியக் கப்பல்கழகம் 'விடுதலையே நமது குறிக்கோள் அதனை எப்பாடுபட்டேனும் அடைந்தே தீரவேண்டும் விடுதலையின்றி வாழ்வதைவிடச் சாவதே மேல், ஆன்மா அழிவற்றது பொதுநலத்திற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் உயிர் துறப்பவனே நற்பேறு அடைவான்' என்று கூறி மக்களைத் தட்டி யெழுப்பியவஉ சிதம்பரனார் வெள்ளையனைக் கப்பலேற்றவே சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கினார். இவருடைய தேசியப் போராட்டத் திற்கு இருமுறை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர் குறைக்கப்பட்டது. 1906-ல் சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கிய வடிசி. மக்களிடம் நன்கொடை கேட்டார். பாரதியார், சி, இராசகோபாலாச்சாரி இராசாசி) முதலியோர் பொருள் திரட்டினர். சேலத்தில் வழக்குரைஞ ராட் தம் பணியைத் தொடங்கிய இராசாசி தான் சேர்த்து வைத்திருந்த கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 165 ஆயிரம் உருபாபைத் தேசியக் கப்பல் கழகத்திற்கு அளித்தார். மக்கள் தலைக்கு நான்கு அணாமேரிபொருந்தவியளித்தனர். இவ்வாறு சேர்த்த பணத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வாங்கப்பெற்றன. வ.உ.சி. தமிழில் நரல்களை எழுதி விற்று வரும் பணத்தை இக் கப்பல்கழக நிதியாக்க முயன்றார். அக் காலத்தில் தமிழ் நால்களை யாரும் வாங்குவதில்லை, இராசாசி இவற்றைத் தாமே வாங்கிக்கொண்டார். அப் பணம் சுதேசிக் கப்பல் நிதியுடன் சேர்ந்தது. சுதேசிக் கப்பல் கழகம் உலகப் புகழ்பெற்ற, கடலாளுமை படைத்த வெள்ளையரை யெதிர்த்து வெற்றி பெறுவ தென்பது வீண்கனவு. ஆயினும், விடுதலையுணர்வின் அடிப்படையில் லேயே வஉசி கப்பலை அலைகடல் நடுவுள் செலுத்தினார். வஉசியின் முயற்சிக்கு உறுதுணையாய் நின்றவர் பரலி சு. சண்முக சுந்தரம் பிள்ளை ஆவார். வஉசி. வந்தே மாதரம் பிள்ளை (பரலி சு. சண்முக சுந்தரம்பிள்ளை), சுப்பிரமணியசிவம் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் விடுதலை வேட்கையைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தனர். சிதம்பரனார் ஓட்டிய கப்பல் முடவரையும் உணர்வு பெற்று விழித்தெழச் செய்தது. தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் இரவில் நகருக்குள் தூங்குவதற்கு அஞ்சி இரவு முழுவதும் படகுகளிலேறி கடலில் மிதந்து தூங்கினரென்றால் இவர்களின் விடுதலைப்போரின் வேகத்தை ஊகிக்க பாம், 1908-ல் தூத்துக்குடியில் 'கோரல்' ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தேசிய விடுதலை வரலாற்றில் அரசியல் கலப்புடைய முதல் வேலைநிறுத்தம் இதுவேயாகும். இதற்குத் தலைமை தாங்கி நடத்தியவர் வஉசியாவார். இதனையும் ஒரு குற்றமாகக்கொண்டே அவருக்கு வாழ்நாள்தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதல் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தித் தொழிற்கழகத்தைத் தோற்று வித்தவர்களும் விடுதலை மறவரே. 1918-ல் சென்னைத் தொழிலாளர் கழகம்" நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர்கள் திரு. வி. கலியாணசுந்தர னார் குத்திகேசவப் பிள்ளை , சி. செல்வபதி செட்டியார், இராமனுசலு (நாயுடு, வாடியா ஆகியோராவர், இவ்வாறு சிபி.1920 ஆம் ஆண்டுக்குள் விடுதலையியக்கம் படித்தவர், ஏழையெளியோர், பள்ளி மாணவர், தொழிலாளர் முதலிய எல்லாப் பிரிவினரிடையேயும் செல்வாக்குப் பெற்றுவிட்டது. புரட்சி இயக்கங்கள் தமிழகமெங்கிலும் அமைக்கப்பெற்றன. இத்தகைய இயக்கங்களுக்குப் பெரும்பொருள் உதவியவர் மடத்துக் கடைசிதம்பரம் பிள்ளை என்பா ராவார். இவருடைய தம்பியே டி. எசு. சொக்கலிங்கம் பிள்ளை என்பார். தூத்துக்குடியைப் பின்பற்றிக் கருவூரிலும் விடுதலை இயக்கம் வலுப்பெற் நது, இதில் முகாமைப் பங்கேற்றவர்கள் காஞ்சிபுரம் கிருட்டிணசாமி சர்மா), வேங்கட ஆரியர் ஆகியோராவார். விடுதலைக்குயில் பாவலர் சுப்பிரமணிய பாரதியார் 1903-ல் புதுச்சேரியில் புகலிடம் பெற்று இந்தியா' என்னும் தாளிகையை நடத்தி 166 தாய்நில வரலாறு வந்தார். இவரைப் போலவே நாட்டுப்பற்றாளர் பலரும் புதுச்சேரியைப் புகலிடமாகக்கொண்டு தமிழ்நாட்டில் விடுதலைக் கப்பலோட விசைக் கருவிகளாய் விளங்கினர். புதுச்சேரிஃபிரெஞ்சியருக்குச் சொந்தமானதால் ஆங்கிலர்கள் அவர்களைத் தண்டிக்க முடியவில்லை. வெளிநாடுகளில் இந்திய விடுதலை வீரர்கள் இந்தியாவில் மட்டுமேயன்றி அயல்நாடுகளிலும் இந்திய விடுதலை வீரர்கள் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினர். இந்தியச் சங்க மொன்று இலண்டனிலும் அமைக்கப்பட்டதைக் கண்டோம். இந்தியா விடுதலையடைய வேண்டுமென்பதில் மாந்தவுணர்வு கொண்ட வெள்ளையர், சிலரும் சிறப்பாக அமெரிக்கரும் அக்கறை காட்டினர். முதல் உலகப்போரின்போது பிரிட்டானியருக்குப் பகைவராயிருந்தவர்கள் அனைவரும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு காட்டினர். குறிப்பாகச் செருமானியர் இந்தியருக்கு நேரடியாகவே உதவ முன்வந்தனர், தாதாபாய் நவரோசி இலண்டனில் பொதுமக்கள் மன்றத்தில் உறுப் பாண்மையேற்று இந்தியருக்கு நயன்மை கேட்டு நிக்கிறார். இந் நிலையில் இலண்டனில் படிக்கச் சென்ற சாவர்க்கர் என்ற இளைஞர் அங்கிருந்த வ.வே.சு. அய்யருடன் இணைந்து இந்திய விடுதலைக் கழகம்' {பரி இந்தியா சொசைடி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். கமுக்கமாய்ப் பலபயங்கர வேலைகளில் ஈடுபடப் பலருக்கும் பயிற்சியளித்தார். அத்தகைய பயிற்சி நிறுவனம் ' அவிநவ பாரத்' எனப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் 'சிகாத் லாண்டுயார்டு காவல் நிறுவனத்திற்குப் பெரும்பணியைக் கொடுத்தனர்! சாவர்க்கர் போர்வாள்' என்ற தாளிகையை நடத்தி இங்கிலாந்தைத் திக்குமுக்காடச் செய்தார். சாவர்க்கர் சிறை செய்யப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டார். கப்பல் மார்செல்சு துறைமுகத்தை நெருங்கும் போது கடலில் குதித்துத்தப்ப முயன்றார்; ஆனால், பிடிபட்டுவிட்டார். இதற்காகவும் சாக்சன் என்ற வெள்ளையனைக் கொலை செய்யத் தரண்டி யதற்காகவும் ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நாளில் அந்தமான் விடுதலை மறவர்களின் நரக உலகமாகவிருந்தது. இலண்டனில் இந்திய நண்பர்கள் நடத்திய இந்தியா விடுதியிலிருந்த வ.வே.சு. அய்யர் இங்கிலாந்திலிருந்த இந்தியரை ஒன்று திரட்டி விடுதலைக் குப் பாடுபடச் செய்தார். வழக்குரைஞராகப் படிக்கச் செல்வோரும், உயர்படிப்புக்காகச் செல்வோரும் இந்தியா விடுதியையும், வ.வே.சு அய்யரையும் அறிந்தனர். பின்னர், இலண்டன் ஒற்றாய்வாரிடமிருந்து இரகசிய போலிசாரிடமிருந்து தப்பி, மாறுவேடம் பூண்டு வ.வே.சு. அய்யர் பாண்டிச்சேரி புகுந்து பாரதியார், அரவிந்தர் முதலியோருடன் சேர்ந்து விடுதலை இயக்கத்தை முடுக்கினார், முற்போக்காளர், வெள்ளையர் பயணம் செய்யும் தொடர் வண்டிகளைக் (இரயில் கவிழ்த்தல், தொலைவரிக் கம்பிகளை (தந்தி) 181-190 கிபி.18, 2012 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 167 உத்தியது. வெள்ளி மேலாடன் ' இர். 1911 அறுத்தல், காவல் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் முதலியவற்றைத் தாக்கியழித்தல், கைக்குண்டு வீசியும், வேட்டெஃகத்தால் சுட்டும், நாஞ்சிட்டும் வெள்ளையரைக் கொல்லுதல் முதலிய செயல்களில் ஈடுபட்ட னர். இவற்றிற்கெல்லாம் மேலாக முதல் உலகப் போரின்போது ஆங்கிலரின் பகைவராகிய செருமானியருடன் தொடர்புகொண்டு ஆங்கிலரை விரட்டத் திட்டமிட்டுச் செயல்பட்டனர். 1977-ல் வங்காளத்தில் நடந்த விடுதலை இயக்கத்தோடு செருமானியர் கமுக்கமாய்த்தொடர்புகொண்டு உள்நாட்டில் பெருங்கலகத்தை விடுதலை மறவர்கள் தொடங்கவேண்டு மென்றும் அதே நேரத்தில் செருமானியர் நாட்டைச் சூழ்ந்து தாக்க வேண்டுமென்றும் திட்டம் தீட்டினர், செருமனியின் தலைநகரான பெர்லின் நகரத்தில் இந்தியப் புரட்சியாளர் கழகம்' அமைக்கப்பட்டது. திருவாட்டி காமா, சியாம்சி கிருட்டிணவர்மா, வீர சாவர்க்கர், சீனிவாச ஆச்சாரி முதலியோர் செருமன் பேரரசர் கெய்சர் வில்லியத்துடன் தொடர்புகொண்டு இந்திய விடுதலைக்கு வழிவகுத்தனர். செருமனிக்கும் காபூலுக்குமிடையே செய்தித் தகவல் தொடர்பு ஏற்பட்டது. காபூல் அரசர் மகேந்திர பிரதாப் இந்தியத் தன்னுரிமைசுதந்திர அரசைக்காபூலில் அமைத்து அதன் தலைவராகவும் செயல்பட்டார். செருமன் தரைவழியாக ஆப்கானிசத்தானத்தைத் தாங்குதளமாகக் கொண்டு, இந்தியாவைத் தாக்கி, வெள்ளையனை வெளியேற்றி இந்தியருக்கு விடுதலையளிப்பது என்று திட்டம் வகுக்கப்பட்டது. இந் நிலையில் நீர் வழியாகவும் ஒரு பெருந்திட்டம் உருவாகியது, காபூலில் அமைந்த இந்தியத்தன்னுரிமையரசின் தலைமையமைச்சராகச் செயல்பட்டவர் பர்க்கதுல்லா என்பவராவார். அயலக அமைச்சராகச் செயல்பட்டவர் செண்பகராமன் பிள்ளை ) என்னும் தமிழராவார். முதல் உலகப்போர்முடுக்கமாய் நடந்துகொண்டிருந்தது. பிரிட்டானியப் பேரரசு ஆட்டங்கண்டு சரிந்து கொண்டிருந்தது. செண்பகராமன் (பிள்ளை) செருமானியப் போர்க் கப்பல் 'எம்டன்' என்பதில் புறப்பட்டார். கப்பல் இரவு நேரத்தில் சென்னைக்கடற்கரையை நெருங்கியது. திடீரென வெள்ளையருக்குச் சொந்தமான எண்ணெய்க்கிடங்கின் மீது குண்டு வீசப்பட்டது. ஆள் சேதம் எதுவுமில்லை. இவ்வாறு துணிவுடன் வெள்ளையர் ஆட்சியைக் கலக்கியவீரத்தமிழர் செண்பகராமன் அழுத்த மான நாட்டுப் பற்றுடையவர். கல்லூரிப் படிப்பைத் துறந்து திருவனந்த புரத்திலிருந்த செருமானியர் கிதிரிக்லாண்டு என்பவன் உதவியுடன் கமுக்கமாய்ச் செருமனி போய்ச் சேர்ந்து, அங்கு இந்தியக் கழகத்தில் மும்முரமாய்ப் பங்கேற்று, காபூலில் தன்னுரிமை இந்திய அரசை அமைத்து, அதன் அயலக அமைச்சராகித் தனது பெருந்திட்டத்தால் விடுதலையடைய விரும்பியவர் செண்பகராமன், செருமனியின் உதவி யுடன் தன்நாட்டு விடுதலைக்கு வழிகாணத் துடித்த இவர் இட்லரையே மன்னிப்புக்கேட்கச் செய்தார். இட்லர் இந்தியரை 'மிலேச்சர்கள், அடிமை களாகவே இருக்கத் தகுதி படைத்தவர்கள்' எனக் கூறியதை மறுத்து 168 தாய்நில வரலாறு இந்தியரின் வீரப்பண்பையும், நாகரிகத்தையும் விளக்கிக்கூறி இட்லரை மன்னிப்புக் கேட்க வைத்தார், இவரை எப்படியும் சிறைப் பிடிக்கத் திட்டமிட்டப் பிரிட்டானியர் உலகப் புகழ்பெற்ற அழகியும், வேவுக் காரியுமான மாதா. அரி என்பவளையனுப்பி இவரை மயக்கமுயன்று தோற்றனர். அந்த அளவு இவருக்கு நாட்டுப்பற்று குருதி நாளத்துடன் பாய்ந்தோடியதால் பிற எதுவுமே இவரைத் தடுமாறச் செய்ய முடிய வில்லை , தமிழர்களைப் போலவே பஞ்சாபிகளும் அயலகத்திலிருந்து கொண்டு விடுதலைக்குப் பாடுபட்டனர். இலாலா அரிதயாள், சேகாசிங் பாக்னா ஆகிய பஞ்சாபித்தலைவர்கள் அமெரிக்காவில் “கத்தார்" என்ற கழகத்தை அமைத்தனர். முதல் உலகப் போரின் போது சூயஸ் கால்வாயை அடைத்துப் பிரிட்டனுக்குத் தோல்விநேரச் செய்வதென்பது இவர்களின் திட்டம். ஆனால், இவர்களை அறியாமலேயே பிரிட்டானிய உளவாளிகள் இக் கழகத்தில் உறுப்பினர்களாய்ச் சேர்ந்து கமுக்கத்தைப் பிரிட்டனுக்கு அறிவித்துவிட்டனர். இதனால், இவர்கள் யாவரும் சிறைபட்டனர். இவர்களால் சொந்தமாக வாங்கப்பட்ட 'கோம் கட்டமாரு' என்ற கப்பலில் போர்ப்படைகள் ஏற்றப்பட்டு அக் கப்பல் கல்கத்தாத் துறையை அடையும்போது கமுக்கம் வெளியாகி, கப்பலும் பிரிட்டானியரால் தாக்கப்பட்டு அதிலிருந்த விடுதலைவீரரில் பதினாறு பேர் கொல்லப்பட்ட னர். எஞ்சியவீரர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement) இந்தியருக்குத் தன்னாட்சியில் பயிற்சியேற்பட்டால்தான் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுமென்பதை முதலில் கூறியவர் சியாம்சி கிருட்டிண வர்மா என்பவராவார். 'இந்திய சோசலிச்டு' என்ற தாளிகையை இங்கிலாந்தில் நடத்தி அதன்வழித் தன்னாட்சி முறையை விளக்கினார். அன்னிபெசன்ட் அம்மையார் 1915ஆம் ஆண்டு தன்னாட்சிக் கழகம்' (Home Rule League) என்ற ஒன்றைத் தொடங்கி இந்தியர் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படி நிகராளிகளால்தாம் தாங்கள் ஆளப்படவேண்டும் மென்பதனை விளக்கினார். ஓராண்டுக்கு இவ்வியக்கம் நாடு முழுவதும் பாவிப் பல கிளைக்கழகங்களைப் பெற்றது. சென்னையில் இது பெரும் வலிமை பெற்றது. அம்மையாரின் பிரம்மஞானசவை' ஆன்மிக வழியில் மக்களை ஏற்றிணைத்ததைப் போலவே தன்னாட்சி இயக்கமும் விரைந்து மக்களை ஒன்றுபடுத்தியது. அருண்டேலும், வாடியாவும் அம்மை யாருக்கு உறுதுணையாயினர். 1917-ல் அம்மையார் பேராயத்தின் தலைவ ரானதும் இந்த இயக்கம் Corrunon Weal) புத்திந்தியா' (New India) ஆகிய ஏடுகளில் தன்னாட்சிக் கோட்பாடுகளை விளக்கினார். அன்னிபெசண்ட் அம்மையாரைப் போலவே திலகரும் தன்னாட் சிக் கொள்கைகளைத் தனிப்பட்ட முறையில் பரப்பினார். ஆனால், அவருடைய மும்முர இயக்கமும், பிற்போக்கு இயக்கமும் ஒன்றுபட்டுப் கிபி 19 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 159 பேராயக் கட்சியின் கொள்கைகளாயின. ஆகவே, தன்னாட்சி இயக்கம் பிளவுபட்ட பேராயத்தை இணைக்கும் பாலமாக அமைந்ததோடு ஆங்கிலருக்கு அதிர்ச்சி மருந்தாகவும் பயன்பட்டது. திலகரும் பெசண்ட் அம்மையாரும் அருண்டேலும் வாடியாவும் சிறைபட்டபோது மக்கள் கொதித்தெழுந்ததைக் கண்ட பிரிட்டானியர் வேறுவழியின்றித் தன்னாட்சி யில் இந்தியருக்கு உரிமைகளை வழங்கும் 'மிண்டோ மார்லி சீர்திருத் தங்கள்' எனும் பெயரால் 1909 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தைக் கொண்டுவந்தனர். இந் நிலையில், அன்னிபெசண்டிற்கு உதவியாயிருந்தவர் சென்னை வயவர் எசு. சுப்பிரமணிய அய்யர் ஆவார். இவர் ஆங்கிலரின் அடக்கு முறைகளைக் கண்டித்து அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வில்சனுக்கு மடல் எழுதினார். இதனைக் கண்டு சீறிய ஆங்கிலரையெதிர்த்து அவர்கள் தனக்களித்த திவான் பகதூர்', 'சர்' ஆசிய விருதுகளை வீசியெறிந்தார். தன்னாட்சி இயக்கத்தில் சேர்ந்து முடுக்கமாய் உழைத்த மற்றொரு தமிழர் பர். வரதராசுலு நாயுடு என்பவர் ஆவார். இவர் நடத்திய 'பிரபஞ்ச மித்திரன்' என்ற கிழமையேட்டில் அரசுக்கு எதிராக இராஜதுரோகச் செய்தி வெளியிட்டதாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இவருக்காக வழக்காடியவர் இராசாசி ஆவார். வழக்கு மன்றத்தைவிட்டு வெளியேறும் போது இவரைக் காவலர் சுட்டனர். தற்செயலாகத் தப்பினார். அக் காலத்தில் நயன்மை மன்றத்திற்கு வருவோரைக்கூடச் சுடுமளவுக்கு ஆட்சியின் கொடுமை தலைவிரித்தாடியது. வரதராசுலு முடுக்கமான முற்போக்காளர். இவரை மக்கள் 'துப்பாக்கி நாயுடு', 'தென்னாட்டுத் திலகர்' என்றழைத்தனர். காந்தியடிகளை அரசு சிறைபடுத்திய அன்று * அடிகளார் விடுதலை அடையும்வரை வரி கொடுப்பதில்லை'யென்று முடிவு செய்து கொண்டார். இதனால், இவருடைய சொத்துகளும், வீடும், செல்வமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயினும் இவர் தம் முடிவிலிருந்து மாறிவரி கொடுக்கவில்லை, 1918-ல் பேராயக் கட்சியின் மாநாடு காஞ்சிபுரத்தில் கூடியது. அப்பொழுது நடந்துகொண்டிருந்த முதல் உலகப் பெரும் போரில் இந்தியர் அரசுடன் ஒத்துழைப்பதா வேண்டாமா என்று அதில் விவாதிக் சப்பட்டது. ஒத்துழைக்க வேண்டுமென அன்னிபெசண்ட் அம்மையாரும் சி.பி. இராமசாமியும், அய்யரும் பிறரும் கூறினர், ஒத்துழைக்கக் கூடாதென இராசாசி, சத்திய மூர்த்தி முத்துரங்க முதலியார் முதலியோர் கூறினர். பின்னவர் கட்சியே வென்றது இதனால் அம்மையார்செல்வாக்கு " இழந்தார். அடுத்த ஆண்டு 1979 ஏப்ரல் 13 ஆம் நாள் விடுதலை வரலாற்றின் குருதி இயல் சாலியன் வாலாப் பூங்காப் படுகொலை நடந்தது. ஜெனரல் டையர் ஆயிரம் குண்டுகளை அப்பாவிகளை நோக்கிச் சுட்டும், இனியும் சுடத் தோட்டாக்கள் இல்லையே என்று வருந்தினான். இதனைக் கண்டு நாடெங்கிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசுப் படிநிகராளியர் 17) தாய்நிலவரலாறு உதறினார், சியெறிந்தார். நாட்டார்னி (நாயுடு தனது (வைஸ்ராய்டசவையில் உறுப்பினராயிருந்த வயவர், சி.சங்கரன் (நாயர் தம் பதவியைத் துறந்தார். பாக்குயில் ரோசினி நாயுடு தனது கெய்ச்சர்-இ இந்த விருதை வீசியெறிந்தார். நாட்டினப் பாவலர் தாகூர் 'சர்' பட்டத்தை உதறினார். இந்நிகழ்ச்சியைப் பற்றி எழுதியதாளிகைகளின் ஆசிரியர்கள் தண்டனைப் பெற்றனர். சென்னையில் நடத்தப்பட்ட 'இந்து' நாளேட் டிற்கு ஈராயிரம் உருபா பிணையத்தொகை விதிக்கப்பட்டது. விடுதலைக் கோருவதே குற்றம் என்று அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் கீழ் பலர் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். இதற்கு எம். ஆர். செயகர்,திலகர், காந்தியடிகள் முதலியோரும் இரையானார்கள். சென்னை யில் 'பாரததேவி' ஆசிரியருக்காக அல்லாடி கிருட்டிணசாமி அய்யர் வழக்காடி வெற்றி கண்டார். காந்தி ஆண்டுமானம் (1920 - 1947) 1918 ஆம் ஆண்டில் பேராயக் கட்சி தில்லியில் கூடி மாநிலத் தன்னாட்சி (Provincial Autonomy) வேண்டுமென்று கோரியது. மேலும் செய்தித் தாள்கள் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், அரச இரண்டகச் சட்டம், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் முதலியவற்றை நீக்கும்படியும் கோரியது. மாநிலங்களுக்கு முழுமையாகத் தன்னாட்சி (மாநில சுயாட்சி! வேண்டுமென்று சிலர் வாதிட்டனர். இதனால் பேராயக் கட்சியினர், மென்போக்கினர் (மிதவாதிகள்), வன்போக்கினர் (தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிரிந்தனர். இந்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு வந்தார். பீகாரில் சம்பரான் மாவட்டத்தில் அவுரி பயிரிடுவோருக் கும், ஐரோப்பிய முதலாளிகளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டதும், பம்பாய் மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் வாடிய மக்களை வருத்தி ஆங்கில அரசு வரித் தண்டல் செய்ததும், காந்தியார் பாடுகிடப்பு சத்தியார் கிரகப் போரிலீடுபடக் கரணியங்களாயின. வல்லபபாய் பட்டேல் இவருடைய போருக்குத் துணைநின்றார். முதல் உலகப்போரும் முடிந்தது. காந்தியாரும் தமது அமைதி (சாத்வீகப் போரில் வெற்றி கண்டார், இதுதான் பேராயக் கட்சியின் வெற்றிப் பாதையின் தொடக்கவியல். 1919 ஆம் ஆண்டு அரசுச் சட்டம் மாநிலங்களில் இரட்டையாட்சி முறையைக் கொண்டுவந்தது. விடுதலை மறவருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாகியது. விடுதலை மறவர்இனித் தன்னாட்சியும், பொறுப்பாட்சி யும் கோருவதை விடுத்து முழு விடுதலை (பூரண சுதந்திரம் பெற முடிவு செய்தனர். இந் நிலையில் காந்தியடிகள் பேராயக் கட்சியின் தலைவர் ஆனார். பாடுகிடப்பு சத்தியாக்கிரகம், அமைதி (சாத்வீகப் போராட்டம், வன்முறையற்ற ஒத்துழையாமை , சட்டமறுப்பு, உண்ணா நோன்பு முதலிய புதிய படைகளைக்' ஆயுதங்கள் கொண்டுத் தனது விடுதலைப் போரைத் தொடங்கினார். ஏற்கனவே, சாலியன்வாலாப் படுகொலை, எவரையும் உசாவலின்றிச் சிறையிலடைக்கும் ரெனலட்' சட்டம் முதலியவற்றால் மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். பிரிட்டானிய ஆளுமையை தலாளி பகோரி கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 171 எதிர்த்து எழுந்த அனைத்துலக இசுலாமியரின் கிலாபத் இயக்கம் ஒரு பயங்கரப் படையாயிற்று. இச் சூழலில் காந்தியடிகளின் தலைமையில் பேராயக்கட்சி அடக்குமுறைகளுக்கு இடையில் மெய்யாய்வு (சத்திய சோதனைகளைத் தாண்டி வலுப்பெற்றது. 1908 முதல் 1920 வரை திலகர் காலம் படைத்த 'தீவிர இயலைச் சாத்வீத' இயலாக மாற்றியவர் காந்தி யடிகள் ஆவர். ஆகவே, 1920 ஆம் ஆண்டு முதல் விடுதலையடையும் வரை இந்தச் சாத்வீக முறையிலான "காந்திய சகாப்தம்' தோன்றியது. இதில் தமிழர்களின் பங்கைச் சுருங்கக் காணலாம். காந்தியடிகளை 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடந்த மாநாடு பேராயக்கட்சியின் தலைவராக ஏற்றது. ஒத்துழையாமை இயக்கம் பற்றி இம் மாநாடு முடிவுசெய்து அதனைச் செயல்படுத்தத் தீர்மானித்தது. மொழிவழி மாநிலங்களைப் பிரிக்கும் கோட்பாடும் உறுதிசெய்யப் பட்டது. இதனால், ஆங்கில மொழியின் ஆதிக்கத்தையகற்றித் தாய்மொழி கள் இந்திய மொழிகள் வளரும் வாய்ப்பும், இதன் வழி ஆங்கில மேலாண்மைக்கு அடிப்படை உறுதியற்றுப் போகும் திட்டமும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆங்கிலக் கல்விச்சாலைகளை மறுப்பது, நாட்டினக் கல்விச்சாலைகளையமைப்பது, நாட்டின் மொழியாகத் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தியை ஏற்பது முதலிய தீர்மானங்களும் காந்தியடிகள் தலைமையில் நிறைவேறின. இந் நிலையில்தான் 'தாய் மொழிப்பற்றேதாய்நாட்டுப் பற்று' என்ற உண்மை யுணர்வும் தோன்றியது. நாட்டினப் பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் செந்தமிழ் நாட்டையும், தந்தையர் நாட்டையும் இணைத்துப் பாடினார். "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு' எனத் தாய்மொழியையும், தமிழரையும், இந்திய நாட்டையும் வாழ்த்தினார். தேசியம் இம்முறையில் புத்துணர்ச்சியுடன் வளர்ச்சியடைந்தது. விடுதலைப் போருக்குத் தாய் மொழிகளும், தாய்மொழி இலக்கியங்களும் மக்களைத் தட்டியெழுப்ப உதவின. ஆங்கில மோகம் குறைந்தது. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கியவர் இராசாசியே. இதில் கிலாபத் இயக்கத்தினரும் முசுலீம் களும் பங்கேற்றனர். இதனால் பலர் முழுநேரமும் நாட்டுப்பணியில் ஈடுபட்டனர், பட்டிதொட்டிகளிலெல்லாம் விடுதலை இயக்கம் பரவியது. தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் மும்முரமடைந்தது. சட்டமறுப்பு, ஒத்துழையாமை முதலியவற்றில் ஈடுபட்டுச் சிறைபுகுவதைப் புனிதப் பணியாக மக்கள் கருதினர். நயன்மை மன்றங்களையும், பிற ஆங்கில நிறுவனங்களையும், வழக்குரைஞர் முதல் குடியானவர் வரை யாவரும் புறக்கணித்தனர். பேராயக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான இராசாசி 192ஆம் ஆண்டில் தமிழகமெங்கும் ஒத்துழையாமை இயக்கத் தைப் பரப்பினார். இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் நாள் இராசாசி, ஈ. வே. இராமசாமி (தந்தை பெரியார்), ஆரணி சுப்பிரமணிய சாத்திரி முதலியோர் தடை உத்தரவை மீறி வேலூரில் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிய 172 தாய்நில வரலாறு மிேழகமுேதல் ரகம்), கூட்டத்தில் பேசினர். இராசாசி கைது செய்யப்பட்டு மூன்று திங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார். பாடுகிடப்புச் சத்தியாகிரகம் செய்து, ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி முதன்முதல் சிறை சென்றவர் இராசாசியே. இதற்கு வழிகாட்டியதும் தமிழகமே. கள்ளுக்கடை மறியல் காந்தியடிகளின் ஆணையை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்ட தமிழகமே அவருடையகுமுகாயச் சீர்திருத்தமான கள்ளுக் கடைகளை மூடுதல், தீண்டாமை ஒழிப்பு, கைந்நூரல் கதர்), கைத்தொழில் களைப் பரப்புதல் முதலியவற்றிலும் வழிகாட்டியது. 1921-ல் ஈரோட்டில் ஈ. வே. இராமசாமி (தந்தை பெரியார் தனக்குச் சொந்தமான தென்னை, பனை மரங்களை வெட்டி வீழ்த்தி மதுவிலக்குத் திட்டத்தைத் தொடங்கினார். கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்து சிறைப்பட்டார். இவருடன் இவருடைய மனைவியார் நாகம்மையும், தங்கை கண்ணம்மாளும் சிறைப்பட்டனர். சிறப்பாகப் பெண்கள், அதுவும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் காந்தியின் கட்டளைப்படி மறியலை நடத்திச் சிறைபுகுந்த வரலாறு தமிழகத்தில் இதுவே முதலாகும். காந்தியார், தமிழகத்தில் கள்ளுக்கடை மறியலுக்கு வித்திட்டு வளர்த்தவர்கள் இப் பெண்களே' என்றார். தமிழகத்தில் 'கள்ளுக்கடை மறியல்' இயலைத் தொடங்கியவரே பெரியார்தான். இவரைப் பின்பற்றித் தமிழகமெங்கும் கள்ளுக்கடைகளின் முன் தொண்டர்கள் அமைதி நெறியில் மறியல் செய்தனர். மதுரையில் வைத்தியநாத அய்யர் என்பார் மறியலில் ஈடுபட்டபோது சினங்கொண்ட கடைக்காரன் கள் குடத்தை அவர் தலைமீது கவிழ்த்தானாம், அரக்கோ சணத்தில் ஆக்கூர் ஆனந்தாச்சாரி, சமதக்கனி ஆகியோர் மறியல் செய்த போது கடைக்காரன் சமதக்கனியைக் கத்தியால் குத்தினான். திருவண்ணா மலை மாவட்டத்தில் கள்ளுக்கடை மறியலிலீடுபட்டுத் தொண்டர்கள் சிறைசெய்யப்பட்டுப் பள்ளிக்கூடங்களிலும், சாவடிகளிலும் அடைக்கப் படுவதும், பின்னர், சிறைக்கு அனுப்பப்படுவதும் அக் கால வழக்கம். அவ்வாறு இராசாசி ஒரு பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த போதுதான் சகசானந்த அடிகள் என்ற துறவிக்கும், அவருக்கும் நட்புறவு ஏற்பட்டது. அன்று முதல் சக்சானந்தரும் முற்போக்கான விடுதலை மறவரானார். திருவண்ணாமலை மாவட்டம் மேல்புதுப்பாக்கத்தில் பிறந்த இவ்வடிகளே பின்னர் சிதம்பரம் நந்தனார் கல்விச்சாலையை ஏற்படுத்திய வர். இவருடன் இராசாசி சமபந்தியில் உண்டதற்காகப் பிராமணர் பலரும் அவரைச் சாதியைவிட்டு நீக்கினர். ஏனெனில், சகசானந்த அடிகளார் ஒரு தீண்டத்தகாத்தாழ்குலத்தவர்.கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காகச் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவ ஞானத்தை அவர் இனத்தாரே சாதியை விட்டு நீக்கினர். அவர் இனத்தார் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள், ஆனால், மபொசியோ காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். 'குடிகெடுக்கும் கள்" என்ற நூலையும் 'விமோசனம்" என்ற தாளிகையையும் இராசாசி வெளியிட்டார், கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 173 தீண்டாமை ஒழிப்பு பேராயக் கட்சியின் மற்றொரு கொள்கை தீண்டாமையை ஒழிப்பது. இதற்கும் தமிழகமே வழிகாட்டியாக அமைந்தது. இராசாசி திருச்செங்கோட்டில் புதுப்பாளையம் என்ற ஊரில் “காந்தி ஆசிரமம்' ஒன்றை 1924ல் தொடங்கினார். இதில் சர்க்காவைக் கொண்டு நூல் நூற்றல், புற ஒழுக்கம், நாட்டுப் பற்று, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. சேலம் நகரசவைத் தலைவராயிருக்கும்போது இராசாசி குழாய் பழுது பார்க்கும் பணியில் தாழ்த்தப்பட்டவரை அமர்த்தித் தன் இனத்தவருக்குப் பகைவரானார். இதைப்போலவே இப் பாழியிலும் ஆசிரமத்திலும் தாழ்த்தப்பட்டவர்களையே பணியில் அமர்த்தினார். அவர் தானே சகசானந்த அடிகளுடன் சம்பந்தியில் உண்டு, தம் இனத்தவரின் பழிக்கு ஆளானதைப் பார்த்தோம். இவ்வாறு, இராசாசி தம் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்டவரின் நலத்திற்குப் பாடுபட்டதை யாரும் மறுக்கமுடியாது. 1923-ல் தந்தை பெரியார் பேராயக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் ஆனார். ஈரோட்டிலிருந்த அவர் வீடேகட்சியலுவலகமாகவும், தொண்டர் களுக்கு அறச்சாலையாகவும் மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழக மெங்கிலும் கேவலமாய் நடத்தப்பட்டனர். கோயில்களில் நுழைய அனுமதிக்கப்படவில்லை . 1919-ல் திருவிதாங்கூரில் கோயிலுக்குச் செல்லும் உரிமைகோரி கிளர்ச்சி நடத்தினர். அதற்கு டி. கே. மாதவன் என்பார் தலைமைதாங்கினார். 23-ல் காக்கினாடாவில் மௌலானா முகமதலி தலைமையில் பேராயக் கட்சி தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும்படி தீர்மானம் போட்டது. 1974-ல் கேரளத்திலுள்ள வைக்கம் என்ற ஊரில் கோயிலுள்ள தெருவில்கூடத் தாழ்த்தப்பட்ட வர்கள் போகக்கூடாதென்ற தடையை எதிர்த்துப் போராட்டம் தொடங்கப் பெற்றது. இதனைத் தலைமைதாங்கி நடத்தியவர் தந்தை பெரியார் ஆவார்.தடியடிக்குப் பின்னும் உறுதியுடனிருந்து இதில் வெற்றி கண்ட பெரியார் வைக்கம் வீரர்' ஆனார். 1932-ல் குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவேண்டுமெனக் கேளப்பன் என்பார் உண்ணாநோன்பு நோற்றார். ஆனால், 1936-ல் தான் வயவர் சிபி. இராமசாமி அய்யர்) திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது கேரளக் கோயில்கள் தாழ்த்தப்பட்டோருக்கு திறந்து விடப்பட்டன. 4-8 1939-ல் இராசாசி சென்னை மண்டில் முதலமைச்சராயிருந்த போது தாழ்த்தப்பட்டோரின் குறை களையும் முயற்சியில் கோயில் நுழைவு' முதல் கட்டமாகத் தொடங்கப் பெற்றது. இவ்வாறு தீண்டாமையை ஒழிக்கக் காந்தியாரும் பேராயக் கட்சியும் மும்முரமாக முனைந்தும் இப் பேராயக் கட்சியிலும் தீண்டாமை இருந்தது. பாழிகளிலும் இது கடைப் பிடிக்கப்பட்டது. பிராமணர் உயந்தவர்களாகக் கருதப்பட்டனர். இந் நிலையில் சென்னை மாண்டிலத்தை ஆண்ட நயன்மைக் கட்சி (நீதிக்கட்சி) தாழ்த்தப்பட்டவர்களை வஞ்சித்தது. பேராயக் கட்சியில் சாதி வேறுபாடு 174 தாய்நில வரலாறு இருப்பதை எதிர்த்துத்தான், பெரியார் பேராயக் கட்சியைவிட்டு 1925-ல் நீங்கினார். கைராட்டை காந்தியின் உயிர்நாடியான கைராட்டையால் நூற்றுக் கதரைப் பரப்பும் பணியில் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர் தந்தை பெரியார் ஆவார். செல்வரான அவர் கைந்நூற்றுணி மூட்டையைத் தோள்மீது சுமந்து தெருத்தெருவாய் அலைந்துகைந்நூற்றுணி (சுதர்) விற்றார். திலகர் கைந்நூல் தொழிலைப் பரப்புதற்குத் தமிழகத்தில் ஒரு கோடி உருபா பொருள்திரட்டவேண்டும் என்றார். ஆனால், அன்று தமிழகத்திலிருந்த பெரும்பணக்காரர்கள் நயன்மைக் கட்சியைச் சேர்ந்தவர்களாயும், காந்தியையும், பேராயக் கட்சியையும் எதிர்ப்பவர்களாயுமிருந்ததால் ஏழை மக்களே ஈரிலக்கம் வரை பொருள் , அளித்தனர். கைந்நால்துணி உற்பத்தி யால் காந்தி மகிழ்ந்தார். 'சேவாகிராமம்" பிறந்தது; 'சர்வோதயம்" தோன்றியது. இவ்வாறு காந்தியடிகளின் திருப்பணிகளில் ஈடுபட்டத் தமிழகத் தொண்டர்களை இலேசாக எண்ணிவிடமுடியாது. 1921-ல் விருதுநகரில் தந்தை பெரியார் பேராயக் கட்சியின் கோட்பாடுகளையும் காந்தியாரின் குமுகாயப் பணிகளையும் விளக்கிப் பேசிய பேச்சுகள் பத்தொன்பது அகவையே நிரம்பிய இளைஞர் கு. காம் ராசைக்சுவர்ந்தன. எரிமலைப. சீவானந்தம்(மூக்காண்டி முதலிய இலக்கக் கணக்கான தமிழ் மறவர்கள் இப் பணிகளில் ஈடுபட்டனர். சதாவதானம் தெ.பொ.கிருட்டிணசாமிப்பாவலரின் நாடகக் குழுவினர் கதரின் வெற்றி" என்ற நாடகத்தை நடத்தினர். இதில் டிகே. எசு. உடன்பிறப்பார் (சகோ தரர்கள் பங்கேற்றனர். இது போன்ற பல நாடகங்களும், நூல்களும், தாளிகைகளும் மதுவிலக்கு, தீண்டாமை, கைந்நூல் முதலிய இயக்கங்களை வளர்க்க உதவின. சைமன் ஆணைக்குழு 1927-ல் இந்தியருக்கு விடுதலையளிப்பதைப்பற்றி நேரடியாக உசாவல் நடத்தக் கிழான் சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது. "இஃது ஒரு கண் துடைப்பு" என அறிந்த விடுதலை மறவர் இதனை யெதிர்ப்பதென முடிவு செய்தனர். நாடெங்கிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. "வெள்ளை ஆணைக்குழுவே திரும்பிப்போ' என்று மக்கன் ஆரவாரம் செய்தனர். இதனால், நாடெங்கிலும் தடியடியும், துமுக்கிச்சூடும் நடந்தன. பஞ்சாபு அரிமா இலாலா லசபதிராய் தடியடி பட்டு மாண்டார். வெள்ளையரைக்கொல்லும் முயற்சிகள் நாடெங்கிலும் தடந்தன. தொண்டர்கள்மீது பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர், பலர் தாக்கிலிடப்பட்டனர். சென்னையில் ஆந்திரகேசரி டி. பிரகாசம் தலைமை தாங்கி சைமன் ஆணைக் குழுவை எதிர்த்தார். துமுக்கியைக் காட்டி ஓடிப்போகும்படி கான தமிழ் மறிவது. சனவரின் நாடகக் குழு சாப்பார் (சகோ கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 175 எச்சரித்த வெள்ளைக் காவல் அதிகாரிக்கு "சுட்டா துணிவிருந்தால்' என்று சட்டையைக் கிழித்து மார்பைத் திறந்து காட்டினார் பிரகாசம். இதனைக் கண்டு அசந்துபோன அந்த அதிகாரி துமுக்கியைக் கீழே போட்டுவிட்டு கைநடுங்க வணங்கினான். அந்த இடத்தில்தான் (=அண்ணாமலை மன்றத் திற்கெதிரில் பிரகாசத்திற்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது). பிரகாசம் அச்சமென்பதையே அறியாத நாட்டுப்பற்றாளர். இலாகூர்ச் சதிவழக்கில் ஈடுபடுத்திச் சிறைத் தண்டனை பெற்றவர்களில் தமிழகத்தில் காமராசரும் ஒருவர், உப்புப் பாடுகிடப்பு(சத்தியாகிரகம்) 1930 ஜனவரி முதல் பக்கலுக்குள் இந்தியாவுக்கு 'டொமினியன்' குடியேற்ற நிலை உயர்வு கொடுத்துவிட்டு, இந்தியரே ஆளும்படி விட்டுவிட்டு ஆங்கிலர் வெளியேற வேண்டுமென மோதிலால் தலைமை யில் கூடிய அனைத்துக் கட்சிகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், காந்தியடிகளுடன் பேச்சுகள் நடத்திய அரசப்படிநிகராளி விடுதலை மற்றவருக்குக் கண்துடைப்பாகச் சில சலுகைகளை மட்டுமே அளித்தார். ரொட்டி கேட்கப்பட்டது, கல்தான் கொடுக்கப்பட்டது' என்றார் அடிகளார். எனவே, காந்தியார் சட்டத்தை மீறி ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமையான உப்பெடுக்கும் போராட் டத்தைத் தொடங்கினார். "செய் அல்லது செத்துமடி' என்று ஆணையிட் டார். நாடெங்கிலும் தலைவர்களின் தலைமையில் தொண்டர்கள் கடலிலிருந்து உப்பெடுக்கும் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினர். காந்தியடிகள் தலைமையில் 1930 மார்ச்சு 12 ஆம் நாள் தொண்டர்கள் தாண்டிக்குப் புறப்பட்டனர். மேத்திங்கள் நான்காம் நாள் காந்தி சட்டத்தை மீறி உப்பு எடுத்ததற்காகப் பூனாவிலுள்ள எரவாடா சிறையில் அடைக்கப் பட்டார். காந்தியாரைத் தொடர்ந்து ஏப்பிரல் பதினான்காம் நாளில் தமிழகத்தில் இராசாசியின் தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியில் லிருந்து திருமறைக்காட்டிற்கு வேதாரண்யம் உப்பெடுக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டனர். திருச்சி, டி எசு.எசு. இராசன் அவர்கள் வழியனுப்பி வைத்தார். சிவகுருநாதன் என்ற யாழ்ப்பாணத்துத் தொண்டர் சங்குகதி முன் செல்லத் தொண்டர்கள் இறைநெறிப் பாடல்களைப் பாடிக்கொண்டே பின் நடந்தனர். தொண்டர்களுக்கு வழியில் நீர் கொடுப்பவரும் தண்டிக்கப்படுவரென்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது. தொண்டர்கள் பாரதியாரின் வீரமிக்க விடுதலைப் பாடல்களையும், சிறப்பாக நாமக்கல் பாவலர் இராமலிங்கம் பிள்ளை ) அவர்களின் 'கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் வழிநெடுகப் பாடிச் சென்றனர். தொண்டர்கள் திருத்துறைப்பூண்டியில் நிலக்கிழார் இராமச்சந்திர நாயுடுவால் வரவேற்கப்பட்டனர். இதனால், நாயுடு கைது செய்யப்பட்டார். படை திருமறைக்காட்டை நெருங்கும் போது சர்தார் வேதரத்தினம் (பிள்ளை) தன் புகையிலைத் தோட்டத்தையே அழித்துத் தொண்டர்க 176 தாய்நிலவரலாறு ளுக்குக் கூடாரமிட்டுத் தங்கவும், உணவு முதலிய ஏந்துகளையும் செய்து கொடுத்தார். இராசாசி, கே, சந்தானம், மட்டப்பாறை வேங்கடராமையர், கே. எசு. சுப்பிரமணியம், சி. இராமச்சந்திரன், உருக்குமணி லட்சுமிபதி ஆகியோரின் தலைமையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தொண்டர்கள் மறியல் செய்தனர். காவல்துறையினரும் தொடர்ந்து இவர்களைச் சிறைப் படுத்தினர். சென்னைக் கடற்கரையில் சர், நடராசன் என்பார் தலைமையில் தொண்டர்கள் உப்புப் பாடுடைப்புச் செய்தனர். இவர் சத்தியமூர்த்தியைப் போல் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் படைத்தவர். இதில் துர்க்காபாய் அம்மையார், சமதக்கனி முதலியோரும் பங்கேற்றனர். காவல்துறையினர் தடியடி செய்ததில் பலரின் கை கால்கள் முறிந்தன. உப்புப் பாடுகிடப்பின்போது அறப்போராட்ட வீரர்களைத் தாக்கிய அரசைக் கண்டித்துச் சென்னைத் திலகர் கட்டடத்தில் நடந்த கூட்டத்தின்மீது காவலர் துமுக்கிச் சூடு நடத்தினர். ஈ.கே.கோவிந்தசாமி என்றதொண்டர் குண்டுக்கு இரையானார். 1932 ஆம் ஆண்டு சனவரி 24-ல் தமிழகமெங்கிலும் தடையை மீறி 'விடுதலைநாள்' கொண்டாப்பட்டது. சென்னை ஊர்வலத்தில் எம். பக்தவச்சலமும், முத்துரங்க முதலியாரும், ஆதிகேசவலுநாயுடுவும் பிறரும் கலந்து கொண்டனர். இம் மூவரையும் காவலர் தடியால் அடித்துச் சிறையில் அடைத்தனர். 1932-ல் தடையுத்தரவை மீறி ஊர்வலம் சென்றதால் ம.பொ. சிவஞானமும் சிறைத் தண்டனை பெற்றார். இதனால், இவர் செய்துவந்த அச்சுக் கோக்கும் வேலையும் போயிற்று. இவரைப்போல் நாட்டுப் பற்றாளர் பலரும் வாழ்விழந்தனர். இதில் கணவன் மனைவியும், குடும்ப மும், குடும்பங்களும், ஓர் ஊரும்கூட ஒட்டுமொத்தமாகப் பங்கேற்றனர். தொண்டர்கள் ஒருபுறம் பெருகும் போது, தடை உத்தரவுகளும், அடக்கு முறைகளும் மறுபுறம் அதிகரித்தன. 'சுதந்திரச் சங்கு' தாளிகையின் ஆசிரியர் சங்கு கணேசன், நாட்டுப்பற்றைத் தூண்டும் நூல்களை மலிவுப் பதிப்பில் வெளியிட்ட சி.ஏ.நடேசன், சுப்பிரமணியசிவம், டி. எசு. சொக்க லிங்கம், சீனிவாச வரதன், கல்கி சதாசிவம் முதலியோரின் பணிகள் போற்றத் தக்கன. இக்காலத்தில் எழுச்சிமிகு பேச்சுக்குச் சத்திய மூர்த்தியே முகடான வர். இவருடைய அரசியல் மாணவர்தான் பெருந்தலைவர் காமராசர், உப்புப்பாடுகிடப்பில் ஈடுபட்ட காமராசருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. இவரைத் தலைவர் சத்தியமூர்த்தி தமிழ் நாட்டின் தலைசிறந்த ஊழியர், எனது அருமைத் தோழர், ஆலோசகர்' என்று கூறுவார். பேட்டை முத்துரங்க முதலியாருக்கு எம். பக்தவச்சலம் அரசியல் மாணாக்கர், காந்தியாருக்குப் பல கோடி மாணாக்கர்கள் இருந்தனர். அவர்களில் தலைசிறந்தவர் நாத்திகர் சூத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனரான 'கோரா' (இராமசந்திரராவ்) என்பாரும் ஒருவர்.ஆகக் காந்தி 191-200 கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 177 காலத்தில் ஆசிரியர் - மாணாக்கர் உறவு முறையிலும், ஒரு குடும்பம் போலவும் பேராயக்கட்சி வளர்ந்து வலிமை பெற்றது, நாடே நாட்டுப் பற்றால் உந்தப்பட்டது. உப்புப்பாடுகிடப்பின் எதிரொலியாக நாடெங்கிலும் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்தன. அரசப்படிநிகராளி இர்வின் (1926-31) காந்தியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தம்) தலைவர் களை விடுவித்தான். உப்புவரி நீக்கப்பட்டது. பேராயக் கட்சி தன்னாட்சி முறைக்கு அணியப்படுத்திக்கொண்டது. சட்டமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. வட்டமேசை மாநாடும் பூனா ஒப்பந்தமும் இந்திய விடுதலைக்கு முட்டுக் கட்டைகளாயிருந்தவை சாதிகளும், தீண்டாமையும் சமயங்களுமேயாகும். இசுலாமியர் தனியே பிரிந்துவிட முடிவு செய்தனர். அவர்களின் இயக்கம் வலுப்பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து தங்களை மக்களாக மதிக்கும் மாந்தத் தன்மைக் காசுப் போராடினர். போராடியே உள்ளாட்சித் துறைகளில் இவர்கள் நிகராண்மைப் பெற்றனர், கல்வியிலும் முன்னேறினர். 1930]- ல் ஆதித் திராவிடர் மகாசன சவையின் மாநாடு சென்னையில் நடந்தது. அதில், பதினாறு தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் பங்கேற்றன. ஆளுநரின் நிருவாக சவைமுதல் எல்லா இடங்களிலும் தங்களுக்குப் படிநிகராளியம் கோரினர். 'தனி வாக்காளர் பட்டியல் தங்களுக்கென உருவாக்க வேண்டுமென்றும் கோரினர். சைமன் ஆணைக் குழுவும் இவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தனிப்படிநிகராளியம்' ஒதுக்கியது.தாழ்த்தப்பட்டோர் நலன்களைக் கவனிக்கத் தொழிலாளர் துறை ஏற்பட்டது. இந்நேரத்தில் தான் இவர்களுக்குக் கோயில் நுழைவு கோரி கிளர்ச்சிகள் நடந்தன. பர், பி.ஆர். அம்பேத்கார் தனித் தொகுதிக்கொள்கையில் உடும்புப் பிடியானார். இந் நிலையில் இந்திய அரசியலில் இந்தியருக்குத் தரும் உரிமைகள் பற்றி ஆராய 12-11-1930-ல் இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. அதில் தாழ்த்தப்பட்டோரின் தலைவராக பர்.பி. ஆர். அம்பேத்கார் இந்தியக் குமுகாயத்தில் தாழ்த்தப்பட்டோரின் நிலைமைகளைப்பற்றி விளக்கினார். 1931, செப்டம்பர் 7 ஆம் நாள் இரண்டாவது வட்ட மேசை மாநாடு இலண்டனில் கூடியது. அதில் பேராயக் கட்சியின் சார்பில் காந்தியடிகள் கலந்து கொண்டார். இதில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதி வேண்டுமெனக் கோரி பர். பி. ஆர். அம்பேத்காரும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற இரட்டைமலை சீனிவாசனும் தாழ்த்தப்பட்டோரின் சார்பில் உரிமை கோரினர். 1917 பிப்ரவரித் திங்களில் "லோதியன் குழு'சென்னை வந்தது. ஆதித்திராவி டர்கள் தங்களுக்குத் தனி வாக்காளர் பட்டியலும், தனித் தொகுதியும் வேண்டுமென அக்குழுவிடம் கோரினர், வயவர். பன்னீர்ச் செல்வம், எம். சி.இராசா முதலியோர் 'தனித் தொகுதி' கோரினர். சென்னைச் சட்டமன் 17E தாய்நில வரலாறு றத்திலிருந்த 215 இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆயினும், தாழ்த்தப்பட்டோர் நிலைமை பற்றி அரசியல் வட்டாரத்தில் வலிமையான பரிந்துரைகள் நடந்தவண்ணம் இருந்தன, நாடெங்கிலும் ஆங்கிலரை வெளியேற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. சட்டமறுப்பு இயக்கம் மறுபடியும் தொடங்கப் பெற்றது. இதில் ஈடுபட்ட பலரும் சிறையில் அடைக்கப்பெற்றனர். இராசாசி நான்காம் முறையாகச் சிறைப்பட்டார். காந்தியாரும் சிறைப் பட்டார். இந் நிலையில் 1932 ஆம் ஆண்டு ஆகச்ட்டு 5 ஆம் நாள் பிரிட்டானியத் தலைமையமைச்சர் இராம்சே மெத்தனால்டு 'வகுப் புரிமைத் தீர்வு' போITIurial Award) என்னும் வகுப்புவாரிப் படிநிகராளி யத்தை வெளியிட்டார். இதன்படி மாநிலச் சட்டமன்றங்களிலும், நடுவண் சட்டமன்றத்திலும் இசுலாமியர், சீக்கியர், இந்தியக் கிறித்தவர். ஆங்கில இந்தியர் ஆகியோருக்குத் தனியிடங்கள் ஒதுக்க வழி செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கெனத் 'தனி வாக்காளர் பட்டியல்' உருவாக்கம் செய்து தனியே அவர்களுக்குத் தேர்தல் நடத்தும் வழியும் காணப்பட்டது. தங்களின் படிநிகராளிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், பொதுத்தொகுதிகளில் வாக்களிக்கவும் அவர்களுக்கு வழி செய்யப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகத் தாழ்த்தப்பட்டவருக்கு அரசியல் அதிகாரம் (உரிமை வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில்தான் எனப் பலரும் போற்றினர். பொதுவாக இந்தியக் குமுகாயத்திற்கு இந்தமுறை நன்மை தருவதேயாகும்' எனப் பண்டித சவகர்லால் நேருவும் கூறினார். இதனால் இவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கிட்டியது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைக் கடவுளின் குழந்தைகள் (அரிசனங்கள் என்றழைத்த காந்தியடிகள் இதனை எதிர்த்துச் சிறையில் விருந்தபடியே உண்ணாநோன்பை மேற்கொண்டார். பூனாவிலுள்ள எரவாடா சிறையில் உண்ணா நோன்பை மேற்கொண்ட காந்தியார் இந்த வகுப்புவாத அறிக்கைக்காகச் சாகும்வரை உண்ணாநோன்பிருக்க முடிவு செய்தார். இராசாசி, சாப்ரு, செயக்கர், மாளவியா, பிரசாத், பிர்லா, சோபங்கி முதலியோர் ஒருபுறமும், பர். அம்பேத்கார் என். சிவராசு, இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராசா ஆகியோர் மறுபுறமுமிருந்து வழக்காடிப் பூனா ஒப்பந்தம்" (Poorna Fact செய்து கொண்டனர். இராசாசி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்தியடிகளின் உயிர் பர். அம்பேத்காரால் காப்பாற்றப்பட்டதென்றும் அவர் 'புனர் ஜென்மம் எடுத்தாரென்றும் இராசாசி மகிழ்ச்சி அடைந்தார். இதன்படி தனித்தொகுதி கைவிடப்பட்டது. ஆனால், தாழ்த்தப் பட்டோருக்குச் சட்டமன்றங்களிலும், அரசுப்பணிகளிலும் சலுகைகள் வழங்க உறுதியளிக்கப்பட்டன. இந்தப் பூனா ஒப்பந்தத்தை ஏற்று, அரசும் *வகுப்புத் தீர்வுரிமையை நீக்கியது. சென்னைச் சட்டமன்றம் இதனைக் கடைப்பிடித்துத் தாழ்த்தப்பட்டோருக்கு நன்மை வழங்க முன்வந்தது. ஆனால் பர். சுப்பராயன் 1933-ல் கொண்டுவந்த தாழ்த்தப்பட்டோரின் கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 179 கோயில் நுழைவுச் சட்டவரைவு பயனற்றுப் போயிற்று. இராசாசி காலத்தில் கோயில் நுழைவு வெற்றிப் பெற்றது. . 1937-ல் நடந்த பொதுத்தேர்தலில் பேராயக்கட்சி 25 இடங்களில் 150 இடங்களைப் பெற்றது. இராசாசியும், சத்திய மூர்த்தியும் செய்த சொற் பொழிவுகளே இந்த வெற்றியைத் தேடித்தந்தன. ஆளுநர் தனது தனியதி காரங்களைக் கையாளாவிட்டால் தாமே அமைச்சரவையை அமைப் பதாய் இராசாசி கூறினார். அவ்வாறு ஆளுநர் வாக்களித்தபின் பேராயக் கட்சியின் அமைச்சரவை (1937-39) இராசாசி தலைமையில் அமைந்தது. ஆனால், இரண்டாம் உலகப்போரில் பேராயக்கட்சியைக் கலக்காமலேயே பிரிட்டன் இந்தியரைப்போரில் ஈடுபடச் செய்ததையெதிர்த்து, இராசாசி அமைச்சரவையைக் கலைத்தார். 1940-ல் 'தனிப்பட்டவர் பாடுகிடப்பு' (தனிநபர் சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் பங்கெடுத்த இராசாசி கைது செய்யப்பட்டார். அவரை உசாவிச் சிறைத் தண்டனை வழங்கிய நயன்மையர் சனாப் அப்பாசு அலி தன் கடமையைச் செய்வதாய்ப்பசுவத்கீதையிலிருந்து மேற்கோள் காட்டித் தீர்ப்புக் கூறினார். தொடர்ந்து பல தொண்டர்கள் சிறைப்பட்டனர். 1947-ல் கிரிப்சு என்பவர் தலைமையில் ஒரு குழு பிரிட்டானியப் பேரரசால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. போர் முடித்தவுடன் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவதைப் பற்றிய அறிக்கையை அக் குழு வெளியிட்டது. அதில் பாகிசுத்தான் பிரிவினை பற்றியும் காணப்பட்டது. காந்தியடிகள் பாகிசுதான் பிரிவதை விரும்பவில்லை . இராசாசியும், காமராசரும் மற்றும் தமிழசுத் தலைவர்களும் பாகிஸ்தான் பிரிவதை விரும்பினர். முகமதலி சின்னா 'எங்களின் பிணங்களின் மேல் பாகிசு தானைக் கட்டுவோம்' என்றார். இந் நிலையில் காந்தியடிகள் பம்பாய் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு' தீர்மானத்தைக் கொண்டு வந்தார். நேருவே இதனை முன்மொழிந்தார். சின்னா இந்தியாவைப் பிரித்துவிட்டு வெளியேறு' என்று முழங்கினார். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி அழுத்தியதைப் போல் முஸ்லீம்களை அழுத்த முடிய வில்லை. பாகிஸ்தான் பிரிவது உறுதியாயிற்று. ஆகச்ட்டு புரட்சி (1942) கிரிப்சு அறிக்கையையெதிர்த்து நாடெங்கிலும் புரட்சி ஏற்பட்டது, பல ஆயிரம் பேர் மாண்டனர். நாசவேலைகள் பெருகின. தலைவர்கள் யாவரும் சிறையில் அடைக்கப்பட்டனர், நாடு, குருதி வெள்ளத்தில் மூழ்கியது. வேலூர் பனப்பாக்கம் பொதுப்பணித்துறைக் கட்டடமும், வேலூர்க் காவலர் இல்லங்களும் இடிக்கப்பட்டன. தண்டவாளங்கள் பெயர்த்தெறியப்பட்டன. தந்தித் கம்பிகள் அறுபட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை முதலிய மாவட்டங்களில் அரசுடைமைகள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் புரட்சி உச்சகட்டம் அடைந்தது. திருநெல் 180 தாய்நில வரலாறு வேலியிலும் தூத்துக்குடியிலும் இது கனல் தெறிக்கப் பரவியது. ஆகச்ட்டு புரட்சியைத் தமிழகமெங்கும் பரப்பியவர் காமராசரே. இப் புரட்சி வெள்ளையரை ஆட்டங்காணச்செய்தது. சுபாசு சந்திரபோக கல்கத்தாவி விருந்து மறைந்தார். 1943-ல் சிங்கப்பூர் சேர்ந்து இந்தியத் தன்னுரிமைக் கழகம் இந்திய சுதந்தர லீக்) என்னும் நிறுவனத்தின் தலைவராகி 'இந்திய தேசியப் படை' (INA)யை ஏற்படுத்தினார். பிரிட்டனையெதிர்த்து - அப் படை போரிட்டது. ஆனால் 1945, ஆகச்ட்டு 18-ல் வீழ்ந்தது. போசு மறைந்து போனார். கடற்படையினரும் வெள்ளையரை எதிர்த்தனர். இது வும் அடக்கப்பட்டது. தேசியப் படையினரை ஆங்கில அரசு உசாவித் தண்டனை வழங்கியது. இடைக்கால அரசும் விடுதலையும். இரண்டாம் உலகப்போர் முடிந்தது. பேராயக் கட்சியின் தலைவர்கள் விடுதலை பெற்றனர். இடைக்கால அரசு ஏற்பட்டது. நேரு தலைமையில் நடுவண் அமைச்சரவை 2-9-1946-ல் பதவியேற்றது. இடைக் கால அரசையெதிர்த்து இசுலாமியர் நாட்டையே குருதி வெள்ளத்தில் மூழ்கடித்தனர். 23-3-1947-ல் இந்தியாவுக்கு 1948-க்குள் சுதந்திரம் அளிப்பதாய்த் தலைமையமைச்சர் அட்லி உறுதியளித்தார். அரசப்படி நிகராளி கிழான் மவுண்டு பேட்டன் இசுலாமியர் கழகத்தையும் முஸ்லீம் லீக் பேராயக் கட்சியையும் கலந்துகொண்டு இங்கிலாந்து சென்று இந்தியாவுக்குத் தன்னுரிமை உடனே வழங்க வலியுறுத்தினார். சூலை, 1947-ல் பிரிட்டானிய நாடாளும் மன்றத்தில் இந்தியத், தன்னுரிமைச் சட்டம்' நிறைவேறியது. இதன்படி இந்தியநாடு, பாரதம், பாகிசுதான் என்று பிரிக்கப்பட்டு 15-8-1947-ல் விடுதலையடைந்தது. ஆனால் பாகிசுதான் ஆகச்ட்டு 14 ஆம் நாளையே விடுதலை நாளாகக் கொண்டாடுகிறது, (ஏ) குமுகாயம் கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்க் குமுகாயம் வட இந்தியா கண்ட குலப்பூசல்களைப் போலல்லாமல் அமைதியாகவே வாழ்ந்தது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது தமிழரின் சால்பு. ஆகவே, இந்து இசுலாமியர் போராட்டங்கள் இங்குத் தலைகாட்டவில்லை. ஆயினும், உயர்சாதி இந்துக்கள் பன்னெடுங்காலமாக அழுத்தப்பட்டுக் கிடக்கும் தாழ்குலத்தவர்களின் மீது அடிக்கடி சாதிப் போர்களைத் தொடுத்துத் தாழ்குலத்தோர் தலைதூக்க முடியாமல் செய்தனர். அவ் வேழைகள், எதிர்க்கத் தெரியாத கோழைகள், நெல்லிக்காய் முட்டையெனச் சிதறிச் சீரழிந்து கிடந்தனர். ஆக, தமிழகத்தில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற இரு பிரிவினரே இருந்தனர் என்று கூறுதற்குமில்லை. ஒரே சாதியில் பேசும் மொழி, வாழும் இடம், உண்ணும் உணவு, வணங்கும் கடவுள் முதலியவற் றாலும் வேறுபட்டுக் குலப்பூசல்களில் ஈடுபட்டுக் குத்தி, வெட்டி மாய்ந்தனர். எடுத்துக்காட்டாக, கொள்ளேகாலில் வாழ்ந்த செட்டிக்குலத்த வர் கன்னடமும், வேலூரில் வாழ்ந்தவர் கன்னடமும் தமிழும் பேசினர். கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 181 மொழியாலும் இடத்தாலும் இவர்களுக்குள்ளே பல உட்பிரிவுகள் ஏற்பட்டன. இவ்வாறே பின்பற்றும் சமயத்தால் கோமுட்டிச்செட்டிகள், வைணவ செட்டிகள் முதலிய பிரிவுகளும் ஏற்பட்டன. பிராமணருக் குள்ளும் இத்தகைய பிரிவுகள் உண்டு. இப் பிரிவுகளால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழும் வாய்ப்பற்றுப் போய்விட்டது. தாழ்த்தப்பட்ட வர்கள் அல்லது தீண்டப்படாதவர்களிடத்திலும் பள்ளர், பறையர், தங்கலான், சாம்புவான், அருந்ததியன் முதலிய பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டன. பள்ளர், பறையருக்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன. இதன் விளைவால் இன்றைய தமிழக ஆட்சியில் பள்ளருக் கெனவும், பறையருக்கெனவும் தனித்தனி அமைச்சர் பதவி அளிக்கப்பட் டுள்ளது. இதனால், தாழ்த்தப்பட்ட இவ்வினத்தார் மேலும் பகைமை உணர்வு கொண்டு பிரிந்து வளர்கின்றனர். இதற்கு இவ்வினத்திலுள்ள படித்தவர்களும் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் உரமிடுகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டுக் குமுகாயம் படிக்கட்டுகளைப் போலும் குறுக்கு நெடுக்குச் சட்டங்களைப்போலும் பல சாதிகளாய்ப் பிரிந்து கிடந்தது கிடக்கின்றது. எனவே, இவர்களின் திருமணம் மறுமணம், மற்றும் வாழ்வின் கூறுபாடுகளில் ஒரே வகையான பண்புக்கூறுகளைக் காணமுடியவில்லை. சில சாதியினர் குழந்தை மணத்தையும், சிலர் மறுமணத்தையும் கடைப்பிடித்தனர். சமயத்தின் அடிப்படையிலும் பண்பாடுகள் மாறுபட்டன.தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்துவராக மாறித் தாங்கள் துய்த்து வந்த கொடுமைகளினின்று விடுதலை பெற்றுக் கல்வியில் முன்னேறினர். கிறித்துவம் மாறியோரின் பொருளியல் உயர்ந்ததோடு குமுகாயத்திலும் உயர் சாதியினர் அவர்களை மதித்தனர். அன்றைய ஆட்சியாளரான ஆங்கிலரின் சமயமும் கிறித்தவமாதலால் தாழ்த்தப்பட் டோரின் சமயமாற்றம் இன்றைய கட்சிமாற்றம் போலாயிற்று! ஆங்கிவருக் கும், தமிழர்களுக்குமிடையே ஏற்பட்ட மண உறவால் பிறந்த புதிய இனத்தவர் ஆங்கிலோ இந்தியர் அல்லது சட்டைக்காரர்' எனப்பட்டனர், நெசவுத்தொழில் செய்தோர்கைக்கோலர் அல்லது செங்குந்தர் எனப்பட்ட னர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டிலேற்பட்ட வலங்கை, இடங்கைச் சாதிப் பிரிவுகள் 19 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. இவ்விரு பிரிவினருக்கு மிடையே அடிக்கடி பூசல்கள் ஏற்படுவதும் அவை கொலையிலும் கொள்ளையிலும் முடிவதும் இக் காலக் காட்சிகளாயின. காஞ்சி வைணவர் வடகலை, தென்கலை என்னும் சிக்கலில் மாட்டிக்கொண்டு சண்டையிட்டனர். தில்லையிலேவழிபாடு செய்த பிராமணர் (பார்ப்பனர்) தீட்சதர்கள் எனப்பட்டனர். இவர்கள் வேறு எந்தப் பார்ப்பனரோடும் மண உறவுகொள்ளமாட்டார்கள். திருமணமான பார்ப்பன இளைஞனே பூசை செய்வதற்கு உரியவனாவான். ஆதலால் இவர்களிடையே இளமைத் திருமணப் பழக்கம் காணப்பட்டது. பார்ப்பனரல்லாத ஆதிசைவர், வீரசைவர் முதலியோரும் பார்ப்பனரைப்போலவே குமுகாயத் தொடர் பின்றி, ஒதுங்கி, ஒழுக்க ( ஆசாரங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். 18) தாய்நில வரலாறு ஓர் ஆங்கி-டியார், தமிழகத்து கருணீகர் (சுணக்கர் இனத்திலும் பல பிரிவுகள் இருந்தன. வேளாளர்களி லும், முதலியாரிலும் பல பிரிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன. ஆகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று தீவிரமாகப் பிரிக்கப்பட்ட இருவகைப் பிரிவுகளுள்ளும், வலங்கை - இடங்கை என்று பிரிக்கப்பட்ட பிரிவுகளுள்ளும் எண்ணத் தொலையாக் கிளைச்சாதிகள் முளைத்து விட்டன. ஆகவேதான் 'தமிழகத்தில் தமிழரைக் காண முடியவில்லை ; ஆனால் செட்டியார் முதலியார்,நாயுடுகளைக் காணமுடிந்தது' என்றான் ஓர் ஆங்கில ஓர்மையாளன் (சிந்தனையாளன்). இத்தகைய சாதிப் பிரிவுகளின் அடிப்படையில்தான் கல்வி, பொருளியல், அரசியல் செல்வாக்கு முதலியனவும் அமைந்தன. ஒருபுறம் பலவாயிரம் வேலி நிலங்களை உடையவரும், மடவளாகத்தார் (ஆதினக் கர்த்தாக்களும், மடத்தலைவர்களும் செல்வ வாழ்க்கையில் திளைத்து மகிழ்ந்தனர். மறுபுறம் பல்லாயிரக் கணக்கான ஏழைமக்கள் அன்றாடம் கஞ்சிக்கழும் நிலையில் இருந்தனர். இந்தியப் பணித்துறைத் {I. C. S. தேர்வில் தேறியவரும், ஆங்கிலரும் வெட்கித் தலைகுனியும்படி வளமாக ஆங்கிலக் கல்வி கற்றவரும் இருந்தனர். திண்ணைப் பள்ளிக்கூடத்தையே அறியாத ஆயிரக்கணக்கான குடும்பங்களும், சிலகுலங்களும் இருந்தன. அரசியலிலே செல்வாக்குப் பெற்றுத் திவான்பகதூர்', 'இராவ்பகதூர்', 'சர்', 'நைட்வுட்' முதலிய விருதுகளுடன் திகழ்ந்தவரும் இருந்தனர்; உலகையே அறியாதவரும் இருந்தனர். ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்ந்தவரே ஏராளம். சேவகனைக் கண்டஞ்சும் தமிழனே மிகுதி. மூடப்பழக்கங்களிலே மூழ்கி, விதியை நொந்து வாழ்ந்தவரே மிகுதி, சேரிகளிலே சகதிகளிலே உழன்றவரின் எண்ணிக்கை மிக அதிகம். இந் நிலையில்தான் வேதாந்த - சித்தாந்தப் பூசல்களும், சைவ-வைணவவாத எதிர்வாதங்களும் தோன்றித் தமிழர்களை மேலும் பிளவுபடுத்தின. ஆங்லக் கல்வி பயின்று உயர்தர அரசுப்பணிகளில் அமர்ந்தோர் இந்த நாட்டையே வெறுத்தனர். இவர்களின் பேச்சும் மூச்சும் மேலை நாட்டிலேயே உழன்றன. இச் சூழலில் தோன்றிய அனைத்துச் சமயங்களுக்கும் 'சமரச சன்மார்க்கம்' காணவும், ஆண்டவனை அருட்சுடர்' வடிவில் காட்டவும் தமிழர்களைத் தமிழால், அருளால் கட்டிப்பிணைத்து ஒற்றுமைக்காண முயன்ற இராமலிங்க அடிகளார் இந் நூற்றாண்டின் இணையிலாத் தேசிய- ஆன்மீகவாதியாவார். தத்துவத்தில் ஆர்வமும் ஆராய்ச்சியும் ஏற்படவும், ஆன்மீகவழி மக்கள் ஒன்றுபடவும் சென்னை அடையாற்றில் பிரம்மஞான சவை' தோற்று விக்கப்பட்டது. இதில் இந்து, முசுலீம், கிறித்தவர், பார்சிகள் யாவரும் இணைந்து இறைவனை வழிபட்டு ஒருமைப்பாட்டை வளர்த்தனர். மதியம் ஒன்றையே பெரிதாகக் கருதிய வெள்ளைத் தனியாளுமை இந்தியரைக் கசக்கிப் பிழிந்து வரிவாங்கும் பல முறைகளைக் கையாண்டது, இதனை ஒருமுகமாய்க் கண்டிக்கும் பக்குவமற்று இந்தியர் வேறுபட்டு நின்றகோர், தமிழகத்தில் தோன்றிய நயன்மைக் கட்சி பார்ப்பனரைப் பழித்து கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் - 183 - 1 கோ 1 எதிர்த்ததே தவிர வெள்ளையனைப் புகழ்ந்தே நின்றது. பல உயர்சாதி இந்துக்களும் கிறித்துவர்களாகி' ஆங்கிலருக்கு அடிவருடித் துணை நின்றனர். இதனால்தான் வகுப்புவாரிப் படி நிகராளியம்" ஆணையாகவே கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு சாதியும் தம் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையுமே பெரிதாகக் கொண்டது. ஆகவே, வகுப்புவாரிப் படிநிகராளியத்திற்குத் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே பயனாளிகள் அல்லர். தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்தையும் கைப்பற்றிய பார்ப்பனர்க ளால் இரட்டையாட்சி முறை வெற்றியுடன் நடத்தப்பட்டதைப் பார்க்கும் போது எந்தச் சூழலிலும் பார்ப்பனர் முன்னேறுவர்; மற்றவரே காய்ச்சலால் பிய்ந்து போவரென்பது உறுதியாக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் கோயிலுக்குச் சென்றால் கருவறைக்குள் சென்று வணங்க அனுமதி இல்லை. ஆனால், பார்ப்பனர் கருவறைக்குச் சென்றே வணங்கலாம். தொல் தமிழர் ஆதிதிராவிடர் கோயிலுள்ள தெருவிலும் செல்லப் பார்ப்பன ரல்லாதார் அனுமதிப்பதில்லை! குருகுலங்கள் என்பன் தமிழகத்தில் பொது மக்களின் நன்கொடை சளைக்கொண்டும், கோயிற் சொத்துகளைக் கொண்டும், அறக்கட்டளை களைக் கொண்டும் நடத்தப்பட்ட 'ஆசிரிய மாணவர் இல்லங்கள்' இவற்றில் கல்வி, உணவு, உடை, உறைவிடம் யாவும் இலவசமாய் வழங்கப் பட்டன. பேராயக் கட்சியின் சார்பிலும் இத்தகைய "ஆசிரமங்கள்' பல நடத்தப்பட்டன. இவற்றில் பார்ப்பன மாணவர்களே இடம்பெற்றனர். பார்ப்பனரல்லாத மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனரென்றால் அவர்களுக்கும் கீழிருந்த தொல்தமிழ (ஆதித் திராவிட மாணவர்களுக்கு இது ஒரு கனவு உலகமே! புகழ்பெற்ற நாட்டுப் பற்றாளர் வ.வெ.சுப்பிர மணிய ஐயரே பார்ப்பனரல்லாத மாணவரைத் தாம் சேரன்மாதேவியில் நடத்தி வந்த காந்தி சேவா ஆசிரமத்தில் சேர்க்க மறுத்து ஆசிரமத்தையே மூடி விட்டாராம் இத்தகைய கேடுகளை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் 1929-ல்பேராயக் கட்சியைவிட்டே வெளியேறித் தன்மான (சுயமரியாதை இயக்கத்தையும், குடியரசு' இதழையும் தொடங்கினார். இதனால் பார்ப்பனரல்லாதாரிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. பார்பனியத்தை யும், குமுகாயக்கேடுகளையும் எதிர்க்கும் மனப்பக்குவம் தமிழரிடையே தோன்றியது. மார்ட்டின் லூதரால் கிறித்துவம் புதுமையடைந்தது போலவே பெரியாரால் இந்துச் சமயமும் கழுவாய்களைத் தேடிக்கொண்டு பார்ப்பனரல்லாதாரையும் மதிக்கும்படி செய்தது, அறநிலையப் பாது காப்புச் சட்டமும் நிறைவேறியது, தமிழக வரலாற்றில் சிறப்பாகக் குமுகாய மாற்றத்தில் தந்தை பெரியார் ஒரு விடிவெள்ளி: அதிர்வெடியுங்கூட - இவ்வாறு பார்ப்பனரை எதிர்த்துப்பார்ப்பனரல்லாதார் குமுகாயப் "போட்டியில் பலவகையிலும் முன்னேறும்போது தாழ்த்தப்பட்டவர்க ளும் முன்னேறத் துடித்தனர். ஆதித்திராவிட மகாசன சவை', 'தாழ்த்தப்பட் டோர் சங்கம்' முதலிய அவர்களின் நிறுவனங்களும், 'சூரியோதயம்', 'பஞ்சமன்', 'திராவிடமித்திரன்', மகாவிகடத்தூதன்', 'பறையன்', 'இல்லற 184 தாய்நில வரலாறு ஒழுக்கம்', 'பூலோகவியாசன்', 'தமிழன்', 'ஆதி திராவிட மித்திரன்'. *புத்துயிர்', 'ஜெய்பீம்', 'சமத்துவம்', தொண்டு', முதலிய ஏடுகளும் இம் மக்களைத் தட்டியெழுப்பின. ஆங்கில அதிகாரிகளிடம் சமையற்காரர் (பட்லர் களாகப் பணியாற்றிய ஆதித் திராவிடர் சிலரின் பிள்ளைகள் ஆங்கிலரின் உதவியால் கல்வியில் முன்னேறினர். கிறித்துவக் குருகுலங்கள் தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகளை ஆளாக்கின. இவற்றில் கற்றுத் தெரியவர்களே பிற்காலத்தில் இந்த இனத்தவரின் தலைவர்களாகி ஆங்கில அரசுடன் போரிட்டுச் சட்டத்தால் உரிமைகளைப் பெறச் செய்தனர். இவர்களில் பெருஞ்செல்வர்களாய்த் திகழ்ந்த கப்பல் மதுரைப் பிள்ளை, நறுகாய் சக்கரவர்த்தி பி. வி. சுப்பிரமணியம் பிள்ளை , இராவ்பகதூரர் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.இராசா முதலியவர்களும், கற்றறிந்த வர்களாய்த் திகழ்ந்த சே. சிவசண்முகம் பிள்ளை , என், சிவராசு முதலிய வர்களும், ''தமிழன்' அயோத்திதாசப் பண்டிதரும் அரசியல், சமய, குமுகாய எழுச்சிகளில் இம் மக்களை வழிப்படுத்தினர். லோத்தியன் குழு', சைமன் ஆணைக்குழு' முதலிய குழுக்களிலும், வட்டமேசை மாநாடுகளி லும் இவர்கள் பங்கேற்றுத்தங்களின் குறைகளை முன்வைத்து வழக்காடித் தங்களுக்கு விடிவு கண்டதை யறிகிறோம். எனவேதான் விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பின்னும், பூனா ஒப்பந்தப்படியும் இவர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படுகின்றன. சட்டப்படி இன்று தீண் டாமை அகற்றப்பட்டது. ஆனால், உண்மையில் பேயாக உலவுகிறது; அரசியல் இருட்டில் ஆளைக் கொல்லுகிறது. இன்றைய தமிழகத்தில் குமுகாய நலம் பெரிதும் வளமாகக் காணப்படுகிறது. மக்களின் நலன்கருதி பல்வேறு சட்டங்களும், திட்டங் சுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. கல்வி, பொதுநலம், பொருளியல் முதலியவற்றிலும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் வகையிலும் தமிழகம் அண்டை மாநிலங்களைவிட முன்னணியில் நிற்கிறது. தெலுங்கர், மலையாளியர், கன்னடர் ஆகிய அண்டை மாநிலத்தாரும், வட இந்தியர் களும் தமிழகத்தில் குடியேறித் தமிழர்களோடு உறவாடி, ஒரு குடும்பத்தி னரைப் போல் வாழ்கின்றனர். பிற மாநிலங்களில் காணப்படும் சேனை களும்' பூசல்களும் இங்கு இல்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற முந்தையர் மொழியை இன்றும் காப்பவர் தமிழரே! இனித் தமிழருக்குள் சாதிப் பிரிவுகள் இல்லை ; தமிழன் உலகக் குடிமகன்: இது நனவாக வேண்டுமே! (ஐ) அரசியல் கிபி. 19 ஆம் நூற்றாண்டில் சென்னை மண்டிலத்தில் திருவிதாங்கூர் புதுக்கோட்டை முதலிய ஒரு சில இடங்களைத் தவிர மற்றவை ஆங்கில அரசுடன் இணைக்கப்பட்டன.கிபி.1799-ல்கிழான் வெல்லெலி தஞ்சை மன்னருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு அம் மன்னர் வாழ்ந்து வந்த கோட்டை ஒன்றைத் தவிர தஞ்சை நாடு முழுவதையும் ஆளும் கிபி. 19 20 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 185 கி.பி.18 ஆம் ஆட்சிமுறை அம் கிபி.1773ல் : பொறுப்பை ஏற்றதைப் பார்த்தோம். ஒரு சில 'ஜாகீர்தார்களும்', ஜமீன்தார்களும்', ஆண்ட இடங்களைத் தவிர்த்த பிறபகுதிகள் ஆங்கில ஆட்சியின் நேரடிப் பார்வையின்கீழ் வந்தன. இந்த 'ஜாகீர்தார்களும்', 'ஜமீன்தார்களும்' ஆங்கில ஆட்சியின் மேலாண்மையை யேற்றவர்களே. கிபி.18ஆம் நூற்றாண்டில் பிரிட்டானிய நாடாளும் மன்றம் ஆங்கில வணிசுக்குழு ஆட்சிமுறையை ஒழுங்குபடுத்தவும். அதன்மீது நேரடிப் பார்வையினைச் செலுத்தவும் கிபி.1773ல் ஒழுங்குமுறைச் சட்டத்தையும், கி.பி.1784-ல் 'பிட்' இந்தியச் சட்டத்தையும், பட்டையச் சட்டங்களையும் கொண்டுவந்தது. மன்றத்தின் நேரடி ஆளுகையின்கீழ் வந்தது. சென்னை, பம்பாய் முதலிய மாநில ஆளுநர்களுக்கு மேலாகத் தலைமை ஆளுநரி' (Governer General) அமர்த்தப்பட்டார், 'பிட்' இந்தியச் சட்டப்படி 'கட்டுப்படுத்தும் கழகம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டது. குழுவாட்சியின் பொறுப்புகளையேற்ற தலைமையாளுநரும், அவருடைய சவையாரும் இக் குழுவால் கட்டுப்படுத்தப்பட்டதோடு ஆண்டுதோறும் குழுவாட்சி யின் முகாமைச் செய்திகளையும், வரவு-செலவுத் திட்டங்களையும் இச் சவைக்கு அனுப்ப வேண்டும். 'பிட்' இந்தியச் சட்டப்படி சென்னையாளுநர் சவையில் ஆளுநருடன் சேர்ந்து நான்கு உறுப்பினர்கள் அமர்த்தப்பட்ட னர். ஆளுநர், சுதேச மன்னர்களின் செய்திகளில் தலையிடுதல், வரித் தண்டல், படையமைப்பு, போர், சமைதி (சமாதானம்) முதலியவற்றில் தலைமை யாளுநரின் இசைவு அனுமதி பெற வேண்டுமென இச் சட்டம் வலியுறுத்தியது. இதற்குப்பின் படிப்படியாக வளர்ந்த ஆங்கில ஆட்சியால் சென்னை மாநில அரசியலிலும் வளர்ச்சி காணப்பட்டது. மாநிலம் நிலவரித் தண்டுவதற்கும் நயன்மை நீதி, படை, காவல் முறைகளை வலுப்படுத்துவதற்கும் ஏற்பப் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது, நிலவரித் துறையும், நிலவரி முறையும் கிழான் காரன்வாலிசு (1786-93) காலத்தில் சீருடன் அமைத்துச் செயல்படுத்தப்பட்டது. காரன்வாலிசு, சட்டம், நயன்மை , நிலவரி ஆகிய துறைகளை விரிவாக்கிச் சிறந்த சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தான். இதனால், இவனை 'இந்திய ஆட்சிமுறையின் தந்தை' என்றனர். இவன் கொண்டுவந்த காரன்வாலிசு சட்டத் தொகுப்பு, நிலையான நிலவரித் திட்டம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. மாநிலங்களில் தண்டலர்களை (Collector) அமர்த்தியும், மாவட்டநடுவர் நயன்மையரை அமர்த்தியும் ஆளும் நெறியைக்கொண்டு வந்தவன் இவனே, 'சுதேச' மன்னர்களின் செய்திகளில் தலையிடாக் கொள்கையை இவன் கையாண்டான், ஆயினும், அவர்களின் ஆட்சிமுறை சீர் கெட்ட போது நல்லெண்ணத்துடன் தலையிட்டுச் சீர்படுத்தும்படி ஆளுநர்களைக் கேட்டுக்கொண்டான். இதன்படி சென்னையாளுநர் 1787 ல் தஞ்சசையரசர் இறந்தவுடன் ஏற்பட்டதஞ்சை அரியணை அரசுரிமைப் போராட்டத்தில் தலையிட்டு அரண்மனைப் பண்டிதர்களின் வேத வல்லுநர்கள் கருத்துரைப்படி இறந்துபட்ட அரசரின் இளவல் 18 தாய்நிலவரலாறு அமர்சிங்கை நீக்கி மகன்மைப் புதல்வன் (சுவிகாரப் புத்திரன்) சரபோசியைத் தஞ்சைக்கு அரசனாக்கினான். இதைப்போலவே ஆர்க்காட்டு நவாபு முகமதவியின் பாதுகாப்புக்காக 1787, 1792 ஆகிய ஆண்டுகளில் சென்னையாளுநர் பாதுகாப்பு ஒப்பந்த உடன்படிக்கை' செய்துகொண்டு ஓர் ஆங்கிலப் படையை ஆர்க்காட்டில் நிறுத்தினான். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் ஆளுநர் பெற்றான். பிரிட்டானிய நாடாளுமன்றம் வணிகக் குழுவுக்கு வணிகம் செய்யும் உரிமையைப் புதுப்பிக்கும் பட்டையச் சட்டங்களைக் கி.பி.1793-லிருந்து தொடர்ந்து இருபதாண்டுக்கு ஒருமுறை வழங்கியது. ஒவ்வொரு முறையும் அத்தகைய சட்டத்தை வழங்கும் போது ஆட்சிமுறையிலும் நிருவாகத்தி லும் சீரும் சிறப்பும் வளர்ச்சியும் விரைவும் ஏற்பட வழி செய்யப்பட்டது. இதனால், மாநில ஆட்சிமுறையும் வளர்ந்தது. 1793 ஆம் ஆண்டுப் பட்டையச் சட்டப்படி சென்னை ஆளுநர் தன் சபையில் தனி உரிமையும், மேலதிகாரமும் பெற்றான். சென்னையாளுநர் வங்காளத்திலிருந்த தலைமையாளுநருக்குக் கட்டுப்பட்டு ஆள வேண்டு மென இச் சட்டம் வலியுறுத்தியது. மேலும், பொதுத் (Civil) துறை அதிகாரிகளை அமர்த்த வும், அமைதிகாவல் ஆய நடுவர்களை (ஜரிகள்) அமர்த்தவும், தெருக் கூட்டுவோரை அமர்த்தித் துப்புரவு செய்யவும் இச் சட்டம் ஆளுநருக்கு அதிகாரமளித்தது. துப்புரவுக்காக நகரில் தனியாக வரித்தண்டல் செய்யப்பட்டது. 1873 ஆம் ஆண்டுப் பட்டையச் சட்டம் கல்வி, சட்டம், நயன்மை , வரித்தண்டல் ஆகியவற்றில் ஆளுநரின் பொறுப்புகளை வரையறுத்தது. அறிவியற் கல்விக்குத் தனித்தொகை ஒதுக்கியும், கல்விக்கூடங்களை மேற்பார்வையிட்டும், கல்வித்துறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இம்முறையில் கிறித்தவப் பாதிரிகள் கல்விக் கூடங்களை அமைக்கவும், சமயப் பரப்புரை செய்யவும் வாய்ப்பளிக்கப் பெற்றனர். 1833 ஆம் ஆண்டு பட்டையச்சட்டம் சென்னை மண்டிலத்தில் நிலவிவந்த சட்டங்களை ஒழித்து, நாடு முழுவதிற்கும் பொதுவாகத் தலைமையாளுநர் (நடுவண் ஆட்சி) சவையில் இயற்றப்படும் சட்டங்களை யேற்கும்படி செய்தது. ஆளுநர் அவையின் உறுப்பினர் தொகை இரண்டாகியது. தனி மாநிலப் படையையும், படைத் தலைவரையும் ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. சாதி, சமய அடிப்படை வேறுபாடுகளின்றி அரசுப்பணியில் யாவரையும் அமர்த்தவும், அடிமைத்தனத்தை ஒழித்து அடிமைகளை முன்னேற்றவும் இச் சட்டம் வழிசெய்தது. சுருங்கக்கூறின் சமத்துவமும், அடிப்படை உரிமையும் ஓரளவு இச் சட்டத்தால் வலியுறுத்தப்பட்டன. 1853 ஆம் ஆண்டு பட்டையச் சட்டம் நடுவண் அரசில் மேலவை (கவுன்சில்) ஏற்பட வழி செய்தது. இதுவரை ஒற்றை மன்றமே இருந்து வந்தது). இச் சட்டமன்றத் திற்கு மாநில அரசுகளின் படிநிகராளிகள் அனுப்பப்பட்டனர். இந் நிகராளிகள் ஆண்டுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் சம்பளமாகப் பெற்றனர். 201-210 கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 187 இச் சட்டமன்றம் செய்யும் சட்டங்களை மாநிலங்களும் ஏற்று நடை முறைப்படுத்தின. படைஞர் சிப்பாய் கலகத்திற்குப் பின் குழுவாட்சி ஒழிக்கப்பட்டு இந்தியா, பிரிட்டானிய அரசின் நேரடியாட்சிக்குள் கொண்டு வரப்பட்டது, 1858 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டப்படி இவ்வாண்டு ஆக்சடுத் திங்களிலிருந்து இந்தியா முழுவதும் இங்கிலாந்து நாட்டை ஆண்ட விக்டோரியாப் பேரரசியின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது. தலைமையாளுநர் அரசப்படிநிகராளி' அரசப் பிரதிநிதி என்று அறியப்பட்டான். மாநில ஆளுநர்கள் இங்கிலாந்து அரசியாரால் அமர்த்தப்பட்டனர். மாவட்ட அதிகாரிகளைப் பணித்துறை அதிகாரிகள் (I.C.S. OfficGS) அமர்த்தப்பட்டனர். இவர்கள் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றனர். ஆளுநர்கள் இந்தியா முழுவதற்குமாக இங்கிலாந்தில் செய்யப் படும் சட்டங்களின்படி இப் பொதுத்துறை அதிகாரிகளைக் கொண்டு மாநிலத்தை ஆண்டனர். இந்தியச் சட்டசவைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தவை 'இந்திய மேலவைச் சட்டங்கள்' ஆகும். இவைகிபி18, 1897 ஆகிய ஆண்டு களில் நிறைவேற்றப்பட்டன, 1861 ஆம் ஆண்டு இந்திய மேலவைச் சட்டப்படி சென்னை ஆளுநர் மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றும் ஒரு சட்டமன்றத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றார். அதன்படி நான்கிற்குக் குறையாமலும் எட்டுக்கு மேற்படாமலும் உறுப்பினரை யமர்த்தி அவர்களுக்குச் சட்டமியற்றும் பணியினை வழங்கும் அதிகாரம் பெற்றார். அவ்வாறு செய்யப்படும் சட்டங்களைத் தானும் ஒப்புதல் அளித்து அரசப்படி நிகராளியின் ஒப்புதலையும் பெற்ற பின்பே அவற்றை அவர் தம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும். இச் சட்டமன்றத் திற்குச் சட்டமியற்றுவதில் உதவி புரியத் தலைமை வழக்கு அறிஞரும் ஏற்படுத்தப்பட்டார். இவர் மாநிலத் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தார். பொதுக்கடன் பொக்கசம், காசு, அஞ்சல், தொலைவரி(தந்தி), சமயம், பதிப்புரிமை, உரிமைப் பதிவுகள் முதலியவை தவிரப்பிற துறைகள் மாநில அரசின் கீழ் வந்தன. புதிய மாநிலங்களைப் படைக்கவும், மாநிலங் களைக் கட்டுப்படுத்தவும், மாநிலங்களுக்கிடையே எல்லைக் கோடுகளை உறுதிப்படுத்தவும், துணையாளுநர்களை அமர்த்தவும் தலைமையாளுநர் அதிகாரம் பெற்றார். 1880 ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆளுநர் சவையில் ஆளுநருடன் இரண்டு பொதுத்துறை அதிகாரிகளும் சென்னை மாநிலப் படைத்துறைத் தலைவரும் (Commander-in-Chict) சேர்த்துக்கொள்ளப் பட்டனர். ஆட்சிமுறை நலனுக்காக மேலும் உறுப்பினர் எண்மர் அமர்த் தப்பட்டனர். இதனால், ஆளுநர் சவையின் எண்ணிக்கை ஆளுநரையும் சேர்த்துப் பன்னிரண்டு ஆயிற்று. புதிதாக அமர்த்தப்பட்ட உறுப்பினர் எண்மரில் இருவர் அரசு அலுவலர்களாகவும், அறுவர் அலுவலரல்லாத வராகவும் இருந்தனர். IBE தாய்நில வரலாறு 1892 ஆம் ஆண்டு இந்திய மேலவைச்சட்டம் மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது எனலாம். ஏனெனில், மக்கள் தங்களின் படிநிகராளிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆளுநரால் மீண்டும் அமர்த்தப்பட்ட பின்பே உறுப்பினராயினர். இவர்களுக்குக் கேள்விகள் கேட்கும் உரிமை வழங்கப் பட்டது. அத்தகைய கேள்விகளை ஆறு நாள்களுக்கு முன்பே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், அவற்றிற்கு விடையளிப்பது ஆளுநரின் விருப்பம். வரவு, செலவு, நயன்றைக்கொள்கை ஆகியவற்றைப் பற்றி இவர்கள் வழக்கிடலாம். ஆனால், அவற்றிற்கு ஒப்போலையையளிக்கும் உரிமை இவர்களுக்கில்லை. இச் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை இருப்பதாக உயர்த்தப்பட்டது. தலைமை வழக்குரைஞருடன் சேர்த்து இருபத்தோர் உறுப்பினர் சட்டமன்றத்தில் இடம் பெற்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் அரசு அலுவலரல்லாதார் பொது மக்கள் ஆவர். இவர்கள் வரி செலுத்துவோர், ஊராண்மை , நகராண்மைக் கழகங்கள், பல்கலைக்கழகம், வணிக மன்றங்கள் முதலிய வற்றின் படிநிகராளிகளாவர்.1895ல் சென்னைப் படைத்துறையை நடுவண் ஆட்சி ஏற்று அத் துறையை நடுவண் துறையாக்கிக் கொண்டதால் சென்னைப் படைத்துறைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினராக முடிய வில்லை. ஆகவே, உறுப்பினர் எண்ணிக்கை 2-லிருந்து 20 ஆகக்குறைந்தது. இச் சமையத்தில் சென்னை மாநிலத்தில் 26 மாவட்டங்கள் இருந்தன, சென்னை மண்டில் மாவட்டங்கள் 1. கஞ்சம் 2, விசாகப்பட்டினம் 3. கிழக்குக் கோதாவரி 4, மேற்குக் கோதாவரி 5. கிருட்டிணை 6.குண்டூர் 7. நெல்லூர் 8. கடப்பை. கருநூல் 10. பெல்லாரி 11. அனந்தப்புர் 12. சென்னை 13.செங்கழுநீர்ப்பட்டு 14. சித்தூர் 15. வட ஆர்க்காடு 18. சேலம் 17, கோயம்புத்தூரார் -18, தென் ஆர்க்காடு 19, தஞ்சாவூர் 20. திருச்சி 21. மதுரை 22, முகவை இராமநாதபுரம் 23. திருநெல்வேலி 24, நீலமலை 25. மலபார் 26. தென் கன்னடம், 1909 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிண்டோ -மார்லி சீர்திருத்தத்தை யொட்டி யெழுந்த இந்திய அரசுச் சட்டமும், இதற்குப் பின்வந்த 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமும் இந்திய அரசியல்துறையில் மிகச்சிறந்த வளர்ச்சியினை யேற்படுத்தின.படிப்படியாக மக்களாட்சிமுறை வளர்ந்தது. இக்காலத்தில் சென்னை மாநில அரசியல் பெற்ற வளர்ச்சியை அறியலாம். 1909 ஆம் ஆண்டு அரசுச் சட்டபடி சென்னைச் சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதிலிருந்து நாற்பத்தேழாக உயர்ந்தது. இந்த 47 பேரில் 21பேர் அரசு அலுவலர்களாகவும், 26 பேர் அரசுப் பணியில் இல்லாதவர்க ளாகவும் இருந்தனர். அரசுப் பணியில் இல்லாத 26 பேரில் 2 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். ஐவர் ஆளுநரால் அமர்த்தப்பெற்றனர். அமர்த்தப் பெற்ற உறுப்பினர்கள் இயல்பாகவே அரசுடன் சேர்ந்து கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 180 கொள்வர். ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைவிட இன்னமும் சட்டமன்றத்தில் பெருவாரிவலிமையுடன் செயல்பட்டவர்கள் அரகச்சார் புடையவரே! (அலுவலர் 21 + அமர்த்தப் பெற்றவர் 5 = 26. எனவே, இச் சட்டம் உரிமை தந்ததேயொழிய அதனைப் பயன்படுத்த வழி செய்ய வில்லை. இச் சட்டம் சாதிவழிப் படிநிகராண்மைக்கு வகுப்புவாரிப் படிநிகராளியம்) வழி செய்தது. சட்டமன்றத்திலும் நகராட்சி, நகராட்சி மன்றங்களிலும் வகுப்புவாரிப் படிநிகராளியம் பிரதிநிதித்துவம்) கடைப் பிடிக்கப்பட்டது. இசுலாமியர் தங்கள் படிநிகராளிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். சென்னைச் சட்டசவைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட மொத்த சட்டமன்ற உறுப்பினர் இருபத்தொரு பேரில் முசுலீம்கள் இருவர்: 'ஜமீன்தார்' இருவர்; பெருநிலக்கிழார் மூவர்; சென்னை மாநகராட்சியின் படிநிகராளி ஒருவர்; வணிகர்மன்றப் படிநிகராளி ஒருவர்; உழவர் கழகப் படிநிகராளி ஒருவர்'. மீதியிருந்த பதினொரு பேரும் நகராண்மைக்கழகங்கள், மாவட்டக்கழகங்கள், வட்டக் கழகங்கள், ஒன்றியங்கள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் படிநிகராளி சளாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். உறுப்பினர்கள் பல உட்குழுக்களாகப் (Sub-Corrmittees) பிரித்து, பலதரப்பட்ட செய்திகளையும் உறழ்ந்து விவாதித்து, ஆய்ந்து முடி வெடுத்தனர். எத்தகைய கேள்விகளையும் கேட்கும் உரிமையினையும், சட்ட வரைவுகளைக் மசோதா கொண்டுவரும் உரிமையினையும் பெற்றனர். ஆக, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினருக்கு இத்தகைய உரிமைகள் இச் சட்டத்தால் வழங்கப்பட்டனவாயினும் இவற்றை ஆளுநர் தள்ளிவிட்டால் அவரைக் கட்டுப்படுத்தும் உரிமை உறுப்பினருக்கில்லை." ஆளுநரின் செயற்குழுவில் முதன்முறையாக ஓர் இந்தியர் அமர்த்தப் பெற்றார். அவர் இராசாராமராயளிங்கர் என்பவர் ஆவார். இவரை மக்கள் சுருக்கமாகப் பனகல் அரசர் என்றே அறிவர். இவரைத் தொடர்ந்து இப் பதவி பெற்றோர் வயவர் பி.எசுசீனுவாசையர், வயவர் பி.இராசகோபாலாச் சாரிமுதலியோர் ஆவர். 1909 ஆம் ஆண்டு அரசுச் சட்டம் உண்மையான படிநிகராளியத்தை வழங்கவில்லை. படிநிகராளியம் பெற்றவர்களும் மக்களுக்காக முயன்று செயல்பட இயலவில்லை. எனவே, இதனை யாவரும் வெறுத்தனர். இசுலாமியர் தனிப் படிநிகராளியம் பெற்றதால் 'இந்தியா' என்னும் உணர்வுகுன்றி இந்து, முசுலீம் என்னும் இரண்டுபட்ட உணர்வுகள் வளர்ந்தன. இந்தியர் தன்னாட்சிக்குத் தகுதியற்றவர் என மிண்டோவும் மார்லியும் வெளிப்படையாகவே கூறினர். ஆளுநரும் அவருடைய சவையி லிருந்த உறுப்பினரும் மொத்தம் நால்வர்) செயற்குழு என்ற பெயரில் எல்லாப் பணிகளையும் செய்தனர். ஆகவே, உறுப்பினர்கள் பெயருக்கே சட்டமன்றத்தில் இருந்தனர், இரண்டாம் உலகப் போர் (1930-45 விடுதலை இயக்கத்தையும், இந்திய அரசியல் வளர்ச்சியையும் சிறிதுகாலம் தடை செய்தது. 1917 ஆம் இந்தியர் தன்னாவே கூறினர். ஆசையற்குழு என் பெயருக்கே 100 தாய்நில வரலாறு ஆண்டு காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் பேராய (காங்கிரசுக் கட்சிக்கு புதிய பொலிவும் வலியும் ஏற்பட்டது. கட்சியின் வளர்ச்சியைக் கண்ட ஆங்கிலர் அதன் கோரிக்கைகளையேற்று II-ல் 'மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தங்கள்' என்ற பெயரில் 1919 ஆம் ஆண்டு அரசுச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதன்படி, சட்டமன்றம் விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் 32 உறுப்பினர் இதில் இடம் பெற்றனர். இவர்களில் 98 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றனர், 23 பேர் ஆளுநரால் அமர்த்தப் பெற்றனர். மீதி 11பேர் அலுவலர் தேர்ந்தெடுக்கப் பெற்ற சட்டமன்ற உறுப்பினரில் மூவரை ஆளுநர் தம் கருத்துரைக்குழுவில் சேர்த்துக்கொண்டான். இந்த மூவரும் ஆங்கிலரென்பது குறிப்பிடத்தக்கது. தனது செயற்குழுவில் மற்றுமோர் இந்தியரைச் சேர்த்துக்கொண்டான், அந்த இந்தியர் வயவர். முகமது அபிபுல்லா சாயபு ஆவார். இவருக்குப் பின் இப் பதவியிலிருந்தவர்கள் வயவர் கே.சீனுவான சாயங்கார், வயவர் சி.பி.இராமசாமி அய்யர், வயவர். முகமது உசுமான் சாயபு, வயவர். எம்.கிருட்டிணன் நாயர் முதலியோராவர். இரட்டையாட்சி 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தால் சென்னை மண்டலத்தில் இரட்டை யாட்சி முறை ஏற்பட்டது. ஆளுநரின் கருத்துரைக்குழுவில் அவரால் அமர்த்தப்பட்ட உறுப்பினர் ஒருபுறமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஆளுநரால் அமர்த்தப்பட்ட அமைச்சர்கள் ஒரு புறமும் நிருவாகப் பொறுப்பை இரண்டாகப் பிரித்தாண்டனர். ஆனால், ஆளுநரே அரசின் தலைவனாக இருந்தான். கருத்துரைக் குழுவினரிடம் நயன்மை , (நீதி), சிறை, காவல், பொக்கசம்(நிதி), நீர்ப்பாசனம், வரித்தண்டல், காடு, பஞ்ச நீக்கம், தொழிற்சாலைகள் முதலிய பொறுப்பான துறைகள் ஒப்படைக்கப்பட்டன. சுருங்கக் கூறின் இத் துறைகளை அவர்களே தங்களுக்கென நிறுத்திக்கொண்டனர். இவை மக்கள் படிநிகராளியர்க்கு அமைச்சர்களுக்கு மாற்றமுடியாத துறைகளாயின. எனவே, இவற்றை *நிறுத்திக்கொண்ட துறைகள்' அல்லது ஒதுக்கிக் கொள்ளப்பட்ட துறைகள் (Reserved Subjects)என்றும், அமைச்சர்களுக்கு மாற்றப்படாத துறைகள் அல்லது ஒதுக்கப்படாத துறைகள் (Non-Transferred Subjects) என்றும் அழைத்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற இந்திய உறுப்பினர்களில் ஒரு சிலரை ஆளுநர் அமைச்சர்களாக அமர்த்தி அவர்களிடம் சில துறைகளை ஒப்படைத்தான். அவர்களுக்கு ஊராட்சி, கல்வி (ஐரோப்பியர் கல்வி நீங்கலாக) பொதுநலம், துப்புரவு, மருத்துவம், பொதுப்பணி, வேளாண்மை, சுங்கம், கூட்டுறவுச் சங்கங்கள், தொழில் வளர்ச்சி முதலிய துறைகள் கொடுக்கப்பட்டன. இவை மாற்றப்பட்ட துறைகள் (Transferred Subjects) எனப்பட்டன. ஆளுநரால் இவர்களுக்கு இவை ஒதுக்கப்பட்டன. ளிடம் சில துறைகளாக) பொதுநலம், துப்பிள், தொழில் கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 191 இச் சட்டத்தால் இந்தியாவில் ஓரளவு மக்களாட்சி முறை நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டதெனலாம். உறுப்பினர் சட்ட வரைவு களைக் கொண்டுவந்து சட்டமாக்கவும், வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கவும், வாதிடவும் உரிமைகள் பெற்றனர். இம் முறையில் மக்களாட்சிப் பள்ளியில் இவர்களுக்குச் சிறந்த பயிற்சி ஏற்பட்டது. ஆயினும் ஆளுநரின் இசைவுபெற்ற சட்டவரைவுகளையும், வரவுசெலவுத் திட்டங்களையும்தான் இவர்களால் கொண்டுவர முடிந்தது. ஆலோசனைச் சவையிடமுள்ள துறைகள் (ஆளுநர் துறைகள் மீது அதிகாரம் செலுத்த இந்த அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை, ஆனால் ஆளந்தர் இவர்களின் துறைகளின்மீது எத்தகைய அதிகாரமும் செலுத்தலாம். இவர்கள் நிறை வேற்றிய சட்டவரைவைச் சட்டமாக்காமல் திருப்பியனுப்பவும், மறுக்க வும் ஆளுநருக்கு உரிமையுண்டு. அத்தகைய உரிமைக்கு 'மறுப்பாணை உரிமை' (Vetupower) என்று பெயர், ஆயினும், ஆளுநராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுச் சட்டமாகுமுன் இவை தலைமையாளுநரின் ஒப்புதலை யும் பெற்றேயாகல் வேண்டும். இச் சட்டத்தின் குறைபாடுகள் மாற்றப்பட்ட மாற்றப்படாத துறைகள் என நிருவாகம் இரண் டாகப் பிரிக்கப்பட்டதால் நிருவாகம் சீர்கெட்டது. எ-டு நீர்ப்பாசனமும், வேளாண்மையும் இரு வேறு பிரிவுகளாக்கப்பட்டதால் நீர்ப்பாசனத்திற்கு ஓர் அமைச்சரும் வேளாண்மைக்கு ஓர் அமைச்சரும் இருந்தனர். ஒருவர் மேல் மற்றொருவர் அதிகாரம் செலுத்த முடியாது. ஆனால், ஆளுநர் எல்லாத் துறைகளின் மீதும் அதிகாரம் செலுத்தலாம். இந் நிலையில் வேளாண்மைத்துறை நிருவாகம் எப்படிச் சீர்படும்? அமைச்சர்கள் மக்களின் படிநிகராளியா; ஆயினும் ஆளுநரால் அமைச்சர்களாக அமர்த்தப்பட்டவர்கள். ஆகவே, ஆளுநருக்கு நன்றி யுடையவர்கள், மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள். ஆளுநர் பேரதிகாரம் படைத்தவர். இந் நிலையில் இவர்களால் மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கவோ, மக்களுக்காகச் செயல்படவோ முடியவில்லை. உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அமைச்சர்களை உறுப்பினர் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஆகவே, ஆளுநர் ஆட்டுகிறபடி யெல்லாம் ஆட்சி ஆடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட 70 உறுப்பினர்கள் போக மீதி 30% உறுப்பினர் ஆளுநரால் அமர்த்தப்பட்டவர். இவர்களில் 10% அலுவலர், அமர்த்திய உறுப்பினரில் தாழ்த்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் இடம்பெற்றனர். 1920 ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் நயன்மைக் கட்சி (Jus tice Party) வெற்றி பெற்றது. இதன் அமைச்சரவையில் திவான்பகதூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராகவும், பனகல் அரசர், வயவர். கே. வெங்கட்டா ரெட்டியார் முதலியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.1921-ல் சுப்பராயலு ரெட்டியார் பதவி துறந்ததும் பனகல் 192 தாய்நில வரலாறு அரசர் முதலமைச்சர் ஆனார். அவருடன் வயவர் கே. வெங்கட்டா ரெட்டியாரும், எபி. பாத்ரோ என்பாரும் அமைச்சர்களாயிருந்தனர். 1916 ஆம் ஆண்டில் பார்ப்பனரை எதிர்த்துத் தொடங்கப் பெற்ற "தென் னிந்திய நல உரிமை சங்கம்' எனப்படும் பார்ப்பனரல்லாதார் சங்கத்தின் தீவிர உழைப்பால்தான் நயன்மைக் கட்சி வெற்றி பெற்றது. கி.பி. 1894-ல் 'தறுகாய்ப் பேரரசர்' என்று புகழ்பெற்ற பி.வி. சுப்பிரமணியம் என்பார் 'ஆதித்திராவிட மகாசன சவை' என்ற சங்கத்தின் மூலம் சென்னையிலிருந்த தாழ்த்தப்பட்டவருக்கு விழிப்புணர்ச்சியூட்டினார், பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் நயன்மைக் கட்சியிலும், 1976-ல் தோற்றுவிக்கப் பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திலும் சேர்ந்து பார்ப்பனரை எதிர்த்துப் போராடநயன்மைக் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களாக வும், முதுகந்தண்டாக வும் பாடுபட்டனர். நூற்றுக்கு மூன்று பேராயிருந்த பார்ப்பனர் தொண்ணூற்றெழுவராயுள்ள தமிழரை (பார்ப்பனரல்லா தாரைக் கல்விக் கூடங்களிலும், அரசுத் துறைகளிலும் நுழைய வாய்ப் பளிக்காமல் அத்தனை இடங்களையும் அவர்களே நிரப்பிக் கொண் டார்கள். இதற்கு இயன்மை வேண்டி உரிமைக்காக நயன்மைக் கட்சியும், தென்னிந்திய நல உரிமைச் சங்கமும் போராட்டங்கள் பல நடத்தின. அக் காலத்தில் நாடு முழுவதும் ஆரியமாயையில் மூழ்கிக் கிடந்தது. பார்ப்பானைப்பற்றிப் பேசினாலே பாவம் சேரும் என்னும் அறியாமையில் மூழ்கிக்கிடந்த காலத்தில் எதிர்ப்புகளும் இடர்ப்பாடுகளும் துன்பங்களும், தடியடிகளும் எழுந்தன. தொண்டர்கள் அவையெல்லாவற்றையும் சமாளித்தனர். இவர்களால்தான் அக் கட்சி 1920 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவையையும் அமைத்தது. 1920-ல் வெற்றிபெற்று வந்தவுடன் சட்டமன்றத்தில் நேரடியாகவும் மறைமுகமாக வும் தாழ்த்தப்பட்டோருக்குக் காட்டப்படும் சலுகைகளைக் குறைத்தது. தொழிலாளர் துறையின்கீழ் (Labour Department) அவர்கள் பெற்றுவந்த சலுகைகளையும் பெறவிருந்த சலுகைகளையும் பெறாதவாறு மூட்டுக் கட்டையிட்டுத் தடுத்தது. அத் துறை தனியே பிரிக்கப்படாமலும் நிலை யாக்கப்படாமலும் விடப்பட்டது. சென்னையிலிருந்த தாழ்த்தப்பட் போரைச் சென்னையை விட்டே வெளியேற்றவும் முயன்றது. ஆளுநரின் ஆலோ சனைச் சவையில் அன்றைய மேலவை) தாழ்த்தப்பட்டோருக் கென ஒதுக்கப்பட்ட ஓரிடத்தில் சோமசுந்தர முதலியார் என்னும் ஒருவரை அமரச் செய்தது. ஆதித்திராவிட மகாசன சவை தும் மக்களை விழிப் படையச் செய்தது. 'தாழ்த்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்' தொடங்கப் பட்டது. அப்பொழுது ஆதித்திராவிட மகாசன சவையின் பொதுச் செயலராக இருந்த திவான்பதர் எம். சி. இராசா இலண்டனி லுள்ள இந்தியச் செயலருக்குத் தொலைவரி (தந்தி) கொடுத்தார். இந் நாட்டிலிருந்து பதினாறு தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் போர்க்கொடி. உயர்த்தின. தவற்றை உணர்ந்த ஆங்கில அரசு உண்மையான தாழ்த்தப் பட்டோரின் தலைவர் எம். சி. இராசா என்பதையுணர்ந்து சோமசுந்தர கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 18) முதலியாரை நீக்கி இவரையே கருத்துரைச்சவை மேலவையில் சேர்த்தது, நயன்மைக் கட்சிக்கு நன்மை புகட்டி எம்.சி.இராசா உறுப்பினரானார். பின்னர் அமைச்சராகவும் செயல்பட்டார். சட்டமன்றத்திலும் தாழ்த்தப்பட்டோர் ஐவர் இடம் பெற்றனர். 1923-ல் நடந்த பொதுத் தேர்தலில் நயன்மைக் கட்சியே அமைச் சரவைய மைத்தது. இதிலும் பனகல் அரசரே முதலமைச்சர் ஆனார். ஏவி. பாத்ரே டிஎன். சிவஞானம் (பிள்ளை ) முதலியோர் அமைச்சர்களாயினர். ஆளுநர் தாழ்த்தப்பட்டோருக்கு அதிக இடங்களை ஒதுக்கினார். இதனால் ஒன்பது தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம்பெற்றனர். இந்த அமைச்சரவை 1926வரை செயல்பட்டது. இச்சமையத்தில் தாழ்த்தப் பட்டோர் நலன் தொழிலாளர் நலத்துறை' (Labour Welfare Department) யால் கவனிக்கப்பட்டது. அத் துறையை யொழித்து, அதற்கான மானியங் களைவெட்டித் தாழ்த்தப்பட்டோருக்கு இடுக்கண் செய்யும் பணியில் இக் கட்சியும் இறங்கியது. இதனையெதிர்த்து எம்.சி. இராசா போர்க் குரல் எழுப்பினார், 1923, சூலை 21, 22 ஆம் பக்கல்களில் கோவில்பட்டியில் 'தென்னிந்திய ஆதித்திராவிடர் இரண்டாம் மாநாடு' ஒன்றைக் கூட்டி தம் இனத்துக்கு வந்த கேடுகளை விளக்கினார். அரசு ஆவணங்களில் "பறையர்' என்றிருந்த சொல்லைமாற்றி "அதித்திராவிடர்' என்று திருத்தி எழுதச் செய்தார். அது ஆணையாக வெளியிடப் பெறவும் ஏற்பாடு செய்தார். பார்ப்பனர்களிடம் சம உரிமை கோரும் பார்ப்பனரல்லாதார் தம்மை யொத்த இந்து துதித்திராவிடர்களுக்குச் சமர்டரினம்கொடுக்க மறுப்பதைக் கண்டித்தார். நயன்மைக்கட்சி 1920இலிருந்து 1926வரை ஆறாண்டுகள் சென்னை மாநிலத்தையாண்டது. இதில் ஐந்து ஆண்டுகள் பனகல் அரசர் முதலமைச்ச ராக இருந்தார். இந்த ஆண்டுகளில் இவ்வமைச்சரவையால் பன்னிரண்டு சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஓனராட்சிக் கழகங்கள், தொடக்கக்கல்வி பற்றரியவையாகும். 1923-ல் சென்னைப் பல்கலைக்கழகச் சட்டமும், 1925ல் ஆந்திரப் பல்கலைக்கழகம் சட்டமும் நிறைவேறின. 1923-ல் கொண்டுவரப்பட்ட மற்றொரு சட்டம் இந்து சமய அறநிலையச் சட்டமாகும். இதன்படி இந்து அற நிலையங் சுளைப் பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக வயவர், டிசதாசிவ அய்யர் என்பார் அமர்த்தப்பட்டார். 1926-ல் நடந்த பொதுத்தேர்தலில் நயன்மைக் கட்சி தோல்வியுற்றது. பேராயக்கட்சி (காங்கிரசு) வெற்றி பெற்றது. ஆயினும், கட்சி சார்பற்ற பர், சுப்பராயன் முதலமைச்சர் ஆனார். இவருடைய அமைச்சரவையில் ஆரோக்கியசாமி முதலியார், அரங்கநாதரீமுதலியார் ஆகியோர் இடம் பெற்றனர். தாழ்த்தப்பட்டோருக்கு இந்த அமைச்சரவை பல சலுகைகள் செய்தது. பத்துத் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் சட்டமன்றத்தில் இடம் பெற்றனர். வேல்சு இளவரசர் சென்னை வந்தபோது பர், சுப்பராயன் அமைச்சரவை அவருக்கு வரவேற்பளித்தது. 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 194 தாய்நிலவரலாறு படி அமைந்த இரட்டையாட்சி முறையை எதிர்த்து, மேலும் விடுதலை உரிமைகளைக் கோரி காந்தியடிகளின் தலைமையில் கிளர்ச்சி செய்துவந்த பேராயக் கட்சி இளவரசர் வந்தபோது எதிர்ப்பைக் காட்டிப்பலகலவரங் களைச் செய்தது. ஆகவே, தங்கள் கட்சியில் இடம் பெற்ற சுப்பாராயன் தங்களின் கோட்பாட்டுக்கு எதிராக இளவரசரை வரவேற்றதற்குப் பேராயக் கட்சி அமைச்சரவைக்குத் தொல்லைகள் கொடுத்தது. 1928-ல் பேராயக் கட்சி அமைச்சர்களான ஆரோக்கியசாமி முதலியாரும், அரங்கநாத fமுதலியாரும் கட்சிக் கட்டுபாட்டிற்கிணங்க அமைச்சர் பதவியிலிருந்து நீங்கினர். மனந்தளராத பர். சுப்பராயன் பனகல் அரசரின் அறிவுரைப்படி முத்தையா முதலியார், செதுராம் (அய்யர் ஆகியோரை அமைச்சர்க ளாக்கித் திறம்பட ஆண்டார். பர். சுப்பராயன் அமைச்சரவை சாதி அடிப்படைக்கேற்பப் பணியா ளர்களை அரசுப் பணியில் அமர்த்தப்படும் அரசாணை (CornumunalG.பி.) ஒன்றை நிறைவேற்றியது. நயன்மைக் கட்சி செய்யத் தவறியதைச் செய்ய முடியாததையெல்லாம் இவர் செய்து காட்டினார். பார்ப்பனரல்லாதார் இவ் வாணையால் பெரும் பயன் பெற்றனர். தாழ்த்தப்பட்டோருக்கும் 'சமநீதி கிடைத்தது. 1928-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1978ல் அரசுப் பணிகளுக்குப் பொதுத்தேர்வு மூலம் அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் சென்னைத் தேர்வாணைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத் திருத்தச் சட்டம், காவல் துறைச் சட்டம் முதலியன கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் இந்திய அரசியலை மறுவொழுங்கு பரிசீலனை செய்து அரசியல் சட்டத்தைப் படைக்க சைமன் ஆணைக்குழு 1929-ல் வந்தது. இதனை எதிர்த்துத் தமிழகத்தில் சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியார் தலைமையில் மறைக்காட்டில் வேதாரண்யத்தில் தடையை மீறி உப்புக் காய்ச்சுதல் போன்ற எதிர்ப்புகளில் ஈடுபட்டனர். இராசகோபாலாச் சாரியாரும், காந்தியடிகளும் உட்பட பல இலக்கம் பேர் சிறைப்பட்டனர், வட்ட மேசை மாநாடுகள் தோல்வியுற்றன. கடைசியாக 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வந்தது. இவ்வாறு நாட்டில் முடுக்கமாக விடுதலைப் போர் நடந்து கொண் டிருக்கும்போது 1930 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலும் வந்தது. இதில் நயன்மைக் கட்சி சிறுபான்மை வலிமை பெற்று வெற்றி பெற்றது. பேராயக்கட்சி வெள்ளையனை வெளியேற்றும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்ததால் தேர்தலைப்பற்றி அது சிந்திக்கவில்லை, எனவே, சிறுபான்மையினரான நயன்மைக் கட்சியினர் அமைச்சரவையை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்த அமைச்சரவையில் பி.முனுசாமி (நாயுடு முதலமைச்சராகவும், பிடி இராசன், எசு, குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சர்களாகவும் அமர்ந்தனர். கிரி, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் , 195 இந் நிலையில் இந்தியாவின் பொதுக் கட்சியான பேராயக் கட்சியிலும், பார்ப்பனரை எதிர்த்து வெள்ளயனைப் போற்றிய நயன்மைக் கட்சியிலும் சாதிப் பூசல்கள் மேலோங்கி நின்றன. நயன்மைக் கட்சி, நயன்மையைக் குப்பையில் போட்டுவிட்டுச் சாதி வெறிக்கும், பதவி வெறிக்கும் ஆளானது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாடெங்கிலும் கொடுமைகள் விளைக்கப்பட்டன. இசுலாமியர் ஒருபுறம் போராட முனைந்தனர். எம்.சி. இராசா சைமன் ஆணைக்குழு முன் தாழ்த்தப்பட் போர் நிலைகுறித்துச் சான்றியமளித்தார். மத்தியப் பிரதேசச்சட்டமன்றத் தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பேராயக் கட்சி தாழ்த்தப்பட்டோரை அமைச்சரவையில் சேர்க்க மறுத்தது தமிழகத்தில் மாராட்சிக் கழகங்களில் தாழ்த்தப்பட்டோர் நயன்மைக் கட்சியால் புறக்கணிக்கப்பட்டனர். ஒரு வட்டக் கழகத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு இடம் கொடுத்ததாலேயே அலுவலகக் கட்டடத்தை வாடகைக்கு விட்டிருந்தவர் அதனைவிட மறுத்துவிட்டார். பேராயக் கட்சி தீண்டாமையொழிப்பு, மதுவிலக்கிற் காகக் குரல் எழுப்பியதே ஒழிய சாதியொழிப்புக்கு எவ்வகை முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அங்கும் சாதிவெறியும், தீண்டாமையும் தாண்டவ. மாடின. இவர்கள் அமைத்த பாழ் ஆசிரமம்யில் பார்ப்பனரல்லா தாருக்கெனத் தனியே குடிநீர்ப் பானை வைக்கப்பட்டது. இதனை யெதிர்த்து அன்றைய தமிழ்நாடு பேராயக்கட்சியின் தலைவராயிருந்த தந்தை பெரியார் கட்சியை விட்டே (1975ல் வெளியேறினாரெனில் இக் காலச் சாதிவெறியைப் பற்றி இனி விளக்கத்தேவையில்லை. இதனால்தான் 1930-32-ல் நடந்த இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பேரறிஞர் பர்.பி. ஆர். அம்பேத்கார் தீண்டாமையின் கொடுமைகளைக் கேட்டு உலகமே வியக்கும் வண்ணம், அறியும் வண்ணம் விளக்கினார். இதில் தமிழகத்தி லிருந்து அராவ அண்ணல் இராவ்பகதரர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார். இதன்பிறகு 1933-ல் இராம்சே மகதனால்டு தாழ்த்தப் பட்டோருக்குத் தனித்தொகுதியளிக்கும் வகுப்புரிமைத் தீர்வை (Corrithu nal Award) அறிவித்தார். இதனையெதிர்த்த காந்தியடிகள் இந்துக்களைத் 'தீண்டுவார்-தீண்டாதார்' என்று இரண்டாகப் பிரிக்கத் தான் ஒத்துக் கொள்ள முடியாதென்று கூறிச் சாகும் வரை உண்ணாநோன்பிருக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் பூனாவிலுள்ள எரவாடா சிறையில் இருந்தார். கடைசியாக அவருக்கும் தாழ்த்தப்பட்டோரின் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட 'பூனா ஒப்பந்தம்' நிறைவேறியது. தனித் தொகுதி கைவிடப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, அரசுப்பணி, சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்கள் முதலியவற்றில் விகிதாசாரப்படி இடங்கள் ஒதுக்கவும் அவர்களின் முன்னேற்றத்திற்கெனத் தனித்துறை ஏற்படுத்திப் பாடுபட வேண்டுமென்றும் முடிவாயிற்று. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் விடுதலை மறவர் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தையும் அதன் இரட்டையாட்சி முறையையும் எதிர்த்தும், விடுதலை கோரியும் 106 தாய்நில வரலாறு காந்தியடிகளின் தலைமையில் தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கும், சைமன் ஆணைக்குழுவுக்கும், வட்டமேசை மாநாடுகளுக்கும், மக்தனால்டு அறிக்கைக்கும், பூனா ஒப்பந்தத்திற்கும் பின்னர், 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் கூறுபாடுகளின்படி சென்னை மாநிலத்தில் இரு சட்டசவைகள் அமைக்கப்பட்டன. இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. நடுவண் ஆட்சி கூட்டாட்சி முறையில் இயங்க வழிசெய்தது. இந்தியாவில் பதினொரு மாநிலங்களும், ஆணை யாளர் ஆட்சிக்குட்பட்ட ஆறு பகுதிகளும் கூட்டாட்சியில் அடங்கின. இவற்றைத்தவிர 567 சிற்றரசுகள் இருந்தன. சுதேச சமஸ்தானங்கள், பெரிய மாநிலங்கள் இரட்டைச் சட்டமன்றங்களுடன் தனிச் செயல்களில் தனித்தும் பொதுச் செயல்களில் நடுவண் ஆட்சியுடன் இணைந்தும் செயல்படும் கூட்டாட்சி முறை ஏற்பட்டது. சட்டமன்றமும் அதனால் அமைக்கப்படும் அமைச்சரவையுமே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றன, ஆளுநர் 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி ஆளுநரே மாநிலத் தலைவ ராகவும், அமைச்சர்களை அமர்த்துபவராகவும், தனியதிகாரம் பெற்றவ ராகவும், தனித் துறைகளைப் பெற்றவராகவும் செயல்பட்டார். ஆனால், 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தால் இரட்டையாட்சிமுறை ஒழிக்கப்பட்டு அமைச்சரவையே ஆட்சிப் பொறுப்புள்ளதாக மாறியது. ஆயினும், ஆளுநருக்குத் தனியதிகாரங்கள் இருந்தன, நடுவண் ஆட்சியில் அரசப் படிநிகராளிபெற்றிருந்த தனியதிகாரங்கள் அனைத்தையும் இவர் மாநிலச் சட்டசவைகளில் பெற்றிருந்தார். பெருவாரியாக வெற்றிபெற்ற கட்சியே அமைச்சரவையை அமைக்குமாயினும் ஆளுநரே அமைச்சர்களை அமர்த்துவார். குறிப்பாக, இவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்குக் காப்பாளராக இருந்தார். தாமே தளியாள் ஒருவரை அமைச்சராக அமர்த்தும் அதிகாரமும் அவருக்குண்டு, ஆயினும், அவ்வாறு அமர்த்தப் பட்டவர் ஆறு திங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகிவிட வேண்டும். ஆளுநர் சட்டமன்றம், மேலவை இரண்டிற்கும் விகிதாச் சாரப்படி உறுப்பினர்களை அமர்த்துவார். நாட்டின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, அமைதி இவற்றைக் கருதி மன்றத்தைக் கலைத்துத் தாமே ஆளும் அதிகாரமும் இவருக்குண்டு. அதற்குமுன் இவர் அரசப் படிநிகராளியின் ஒப்புதலைப் பெறவேண்டும். கலைத்த ஆறு திங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்; அல்லது மீண்டும் அரசப் படிநிகராளியின் ஒப்புதல் பெற்று மேலும் ஆறு திங்கள் வரை இவரே ஆளலாம். பிரட்டானிய நாடாளும் மன்றத்திடம், ஒப்புதல் பெற்று ஆளுநரே மூன்றாண்டுகள்வரை சட்டமன்ற மின்றியே ஆளவும் இச் சட்டம் வழி செய்தது. ஆனால், பொறுப்புள்ள அமைச்சரவையால் ஆட்சி நடத்தப் பெற்றதால் ஆளுநர் இத்தகைய உரிமைகளை முழுவதுமாகப் பயன்படுத்தவில்லை. 211-220 கிபி.19, 20 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 197 மேலவை (Legislative Council) 1935 ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படிபம்பாய், ஒன்றிய மாநிலங்கள், (United Provinces), பீகார், அசாம், வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டதைப் போலவே சென்னை மண்டிலத்திலும் மேலவை, கீழவை என்ற இரு சட்டமன்றங்கள் ஏற்பட்டன. இந்த மேலவையில் தேர்ந் தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களும், அமர்த்த உறுப்பினர்சுளும் இடம் பெற்றனர். இச் சவையில் மக்கள் தொகைக்கேற்ப மொத்தம் 5 இடங்கள் ஏற்பட்டன. இதில் முப்பத்தைந்து இடம் பொதுவாகவும், பத்து இடம் தாழ்த்தப்பட்டவருக்கும், ஏழு இடம் இசுலாமியருக்கும், மூன்று இடம் இந்தியக் கிறித்துவருக்கும், ஓரிடம் ஐரோப்பியருக்கும் ஒதுக்கப்பட்டன, மீதியுள்ள பத்து இடங்களில் ஆளுநரின் அமர்த்த உறுப்பினர் இடம் பெறுவர். இந்த மேலவை நிலையானது. இதில் மூன்றாண்டுக்கொருமுறை மூன்றிலொரு பகுதி உறுப்பினர் விலகுவர். அவர்களின் இடங்களைத் தகுந்த உறுப்பினர் நிரப்புவர். கீழவையில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு சட்ட வரைவும் இச் சவையில் உறழ்ந்து விவாதித்து ஒப்புதல் பெற்ற பின்பே சட்டமாக்கப்படும். கடைசியாக ஆளுநரின் ஒப்புதலும், அரசப் படி நிகராளியின் ஒப்புதலும் பெற்றாக வேண்டும் என்பதையும் நினைவுகூர்தல் வேண்டும். சட்டமன்றம் (அல்ல து) கீழவை (Legislative Assembly) இதில் மொத்தம் 315 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். பூனா ஒப்பந்தத்தின்படி இதிலும் தாழ்த்தப்பட்டோருக்கு 30 இடங்கள் ஒதுக்கப் பட்டன. மீதியில் மலை வாணருக்கு ஓரிடமும், இசுலாமியருக்கு இருபத் தெட்டு இடங்களும், ஆங்கிலேயருக்கு ஈரிடங்களும், ஐரோப்பியருக்கு மூன்று இடங்களும் இந்தியக் கிறித்தவருக்கு எட்டு இடங்களும், தொழில் வணிக நிறுவனங்களுக்கு ஆறு இடங்களும், பெருநிலக்கிழார்களுக்கு ஆறு இடங்களும், தொழிலாளிகளுக்கு ஆறு இடங்களும், பெண்களுக்கு எட்டு இடங்களும், பல்கலைக்கழகத்திற்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டன. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட எட்டு இடங்களில் ஒன்று கிறித்தவப் பெண்ணுக்கும், ஒன்று இசுலாமியப் பெண்ணுக்கும் சேரும். மீதியுள்ள 116 இடங்கள் பொது இடங்களாகவும் கொள்ளப்பட்டன. இதிலும் அமர்த்த உறுப்பினர் உண்டு. இச் சட்டமன்றம் ஐந்தாண்டுகள் பதவியில் இருக்கும். முன்பே கூறியபடி இடையில் சட்டம், ஒழுங்கு, அமைதி, நாட்டின் பாதுகாப்பு முதலியவற்றைக் கருதி ஆளுநரால் இது கலைக்கப்படலாம். உறுப்பி னர்கள் கேள்விகள் கேட்கவும் சட்ட வரைவுகளைக் கொண்டுவரவும் உரிமை பெற்றனர். மாநிலச் சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களை நிரப்பும் முறைப் படியே நடுவண் சட்டமன்றங்களிலும் உறுப்பினர்கள் நிரப்பப்படுவர். மக்கள் தொகைக்கேற்ப மாநிலங்கள் உறுப்பினர்களை நடுவண் மன்றங் 198 தாய்நில வரலாறு சுளுக்கு அனுப்பும். இவ்வகையில் சென்னை மண்டிலத்திலிருந்து நடுவண் ஆட்சிமேலவைக்கு இதுபது பேர் அனுப்பப்பட்டனர். சீழவைக்கு37 பேர் அனுப்பப்பட்டனர். அங்கும் இதே முறையில் வகுப்புவாரியாகப் படிநிக ராளியம் கையாளப்பட்டது. இதன் மேலவையரில் மொத்த இடங்கள் 15). இதில் 75 இடங்கள் பொது இடங்கள். தாழ்த்தப்பட்டோருக்கு ஆறு இடங்களும், சீக்கியருக்கு நான்கு இடங்களும், முசுலீம்களுக்கு நாற்பத் தொன்பது இடங்களும், பெண்களுக்கு ஆறு இடங்களும் ஆக நூற்று நாற்பது இடங்கள் போக மீதியுள்ள பத்து இடங்களை அரசப்படி நிகராளி யால் அமர்த்தம் செய்வோர் நிரப்புவர். இந்த அமர்த்தத்தில் ஏழு ஐரோப்பிய ரும் இரண்டு இந்தியக் கிறித்துவரும், ஓர் ஆங்கிலோ-இந்தியரும் இடம் பெறுவர். இச் சவையும் மாநில மேலவையைப்போலவே நிலையானது. கீழவையில் மொத்தம் 250 உறுப்பினர் இடம் பெற்றனர். இதில் 105 பேர் பொதுத் தொகுதியிலிருந்தும், 19 பேர் தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். மீதியில் 82 பேர் முசுலீம்கள், 11 பேர் தொழில் நிலையத்தாரின் படிநிகராளிகள், 8 பேர் இந்தியக் கிறித்துவர், 8 பேர் ஐரோப்பியர், 6 பேர் சீக்கியர், 4 பேர் ஐரோப்பியர்பேர் பெருநிலக்கிழார் என்ற முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டனர். மாநிலக் கீழவையைப் போலவே இச் சமைக்கும் பதவிக்காலம் ஐந்தாண்டுகளே. மொத்தத் துறைகள் மூன்று கூறுகளாய்ப் பிரிக்கப்பட்டன. இவற்றில் 59 துறைகளை நடுவண் ஆட்சியும், 54 துறைகளை மாநில ஆட்சி யும் பகிர்ந்து ஆண்டன. மூன்றாவதாக பொதுவாக) உள்ள 35 துறைகள் நடுவண் மாநில ஆட்சிகளுக்குப் பொதுவாக விடப்பட்டன. வாய்ப்புக்கு ஏற்றாற்போல் இவை பகிர்ந்தாளப்படும். இம்முறையிலும் ஆட்சிமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆயினும் அதிகாரங்கள் அனைத்தையும் தடுவண் ஆட்சியே குவித்து வைத்துக்கொள்ளாமல் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக் கும் முறை இச் சட்டத்தால் ஏற்பட்டது. 1936-ல் அமைக்கப்பெற்ற அமைச்சரவையில் பொப்பிலியரசர் முதல்வராகவும், பி.டி இராசன், எசு. குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் நான்கு திங்கள் பிடி இராசன் முதலமைச்சராகவும் செயல்பட்டார். பின்னர் இந்த அமைச்சரவையில் எம்,ஏ, முத்தையா செட்டியார், ஏ.டி பன்னீர்செல்வம், பி, கலிபுல்லா சாகிப்பகதூர், மயிலைச் சின்னத்தம்பி இராசா (எம். சி. இராசு), ஆர்.எம். பாலட் ஆகியோர் அமைச்சர்கள் ஆயினர். அமைச்சரின் எண்ணிக்கை இதில் அதிகமிருப்பதை யறியலாம். தேர்தலில் தோற்றுப் பதவி இழந்தது. இதுவே நயன்மைக் கட்சியின் கடைசி அமைச்சரவை. திருத்தியமைக்கப்பட்ட மாநில ஆட்சிமுறையில் இடைக்காலத் தேர்தலில் ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்ற பேராயக் கட்சி அமைச்ச ரவையை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. சென்னை மண்டிலத்திலும் 1937 ஆம் ஆண்டு சூலையில் சி. இராசகோபாலாச்சாரியாரை முதல்வர் சிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 199 ராகக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பெற்றது. இதில் பெயர் பெற்ற பதின்மர் அமைச்சர்கள் ஆயினர். அவர்கள் டி. பிரகாசம், யாகும் ஆசன், பர்.பி. சுப்பராயன், பர், டி. எசு, எசு. இராசன், வி. ஐ. முனுசாமி பிள்ளை ! வி.வி. கிரி, எசு. இராமன் மேனன், பி. கோபால் ரெட்டி, சி.சே. வர்கிசு ஆகியோர் ஆவர். வி. ஐ. முனுசாமிப்பிள்ளை தாழ்த்தப்பட்டோர் படிநிகராளியாக உறுப்பாண்மையேற்றார். இந்த அமைச்சரவை அமைந்த காலமும், சூழலும் சிறப்பானது, மக்கள் நாட்டுப்பற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட காலத்தில், உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒத்துழைத்த காலத்தில், மக்கள் பணியே மகேசன்' பணியென அமைச்சர் களும், அதிகாரிகளும் எண்ணிச் செயல்பட்ட காலத்தில் இராசகோபா லாச்சாரியார் அமைச்சரவை அமைத்தார். இதனால் இந்த அமைச்சரவை யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் யாவும் கடவுள்' கட்டளைகளாகப் போற்றிக் கடைப்பிடிக்கப் பெற்றன. மதுவிலக்குச் சட்டம் நடைமுறை யாக்கப்பட்டது: குடிவாரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றால் எண்ணிறந்த குடும்பங்கள் குடியிலும் கடனிலுமிருந்து மீட்கப்பெற்றன. ஆயினும், இராசகோபாலாச்சாரியார் அமைச்சரவை கடைசியில் தமிழர்களின் மனக்கசப்பைப் பெற்றது. அதற்குக் கரணியம் அவர் கொண்டுவந்த கட்டாய இந்தித்திணிப்பேயாகும். பள்ளிகளிலும் இது கட்டாயப் பாடமாக்கப் பெற்றது. இதனையெதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் செல்வரங்கள் தோன்றின.ஈ. வே. இராமசாமிப் பெரியார் தலைமை யில் 1938-ல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தியையெதிர்த்துச் சிறைபுகுந்தனர். தந்தை பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே' என. முழங்கினார். இந்தியெதிர்ப்பில் அன்னை அலுமேலு அப்பாதுரை, அன்னை மீனாம்பாள் சிவராசு, தளபதிசிஎன் அண்ணாதுரை பேரறிஞர் அண்ணா முதலிய எண்ணாயிரம் பேர் பங்கேற்றனர். பள்ளிகளின் வாயில் களில் நின்று மறியல் செய்தும், இந்தி நூல்களையெரித்தும் போராடிச் சிறை புகுந்தனர். இச் சமயத்தில் நயன்மைக் கட்சி தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றதால் தந்தை பெரியார் சிறையிலிருந்தபோதும் எண்ணத் தொலையாத்தமிழர்கள் இந்தியை ஓயாது எதிர்த்துப் போராடினர்.தமிழ்ப் பேரறிஞர் மறைமலையடிகள், சதானந்தர், (ஈழத்தடிகள்) நாவலர் சோம சுந்தர பாரதியார், திரு.வி.கலியாணசுந்தரனார் ஞா.தேவநேயப் பாவாணர் முதலிய அறிஞர் பெருமக்களும் இதில் பங்கேற்றனர். இவ்வாறு தமிழ் அறிஞர்களிடையேயும் இந்தி எதிர்ப்பு உணர்வு பொங்கியது. இராச கோபாலாச்சாரியார் வேறு வழியின்றிக் கட்டாய இந்திக் கல்வியை ஒழித்தார். இதைப் போலவே கம்மாளர்கள் தங்களை 'ஆச்சாரிகள்', எனக் கூறாமல் 'ஆஸாரிகள்' எனக் கூற வேண்டுமென்று இராசகோபாலச் சாரியார் கொண்டுவந்த சட்டமும் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒழிந்தது. ' ' 1939 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் பெரும் போரால். இந்த அமைச்சரவை கலைக்கப்பட்டுப் போர்க்கால அமைச்சரவை சுப்பில் அன்பைன் அண்ணாவிகளின் வா 200 தாய்நில வரலாறு ஏற்படுத்தப்பட்டது. சப்பானியர் சிங்கப்பூரையும், இரங்கடனையும் கைப்பற்றி ஈழத்தை மிரட்டினர். 1942-ல் சென்னையிலுள்ள கோட்டைப் பகுதியில் குண்டுவீசினர். சென்னை மக்கள் நகரைவிட்டு ஓடினர். பின்னர் சென்னையில் அமைதியேற்பட்டு மக்கள் வதிந்தனர். தலைமைச் செயலகம், அச்சகம் முதலியனவும்கூடச் சிறிது காலம் உதகைக்கு மாற்றப்பட்டிருந்தன. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் பெரும் போரில் இந்தியரும், இந்தியப் பொருள்களும் ஆங்கிலரின் 'கதிரவன் மறையாப் பேரரசைக்' காப்பதற்காகக் காவிடப்பட்டனர். கடல்கடந்தும், பல நாடுகளில் குறிப்பாகத் தமிழ்ப் போர்வீரர்கள் பணிபுரிந்து குருதி சிந்தினர், பேராயக்கட்சி முடுக்கமாகத் தன் பணிகளை மேற்கொண்டது. முசுலீம்கள் தனிநாடு கோரினர். காமராசரும், இராசகோபாலாச்சாரியும் முசுலீம் களுக்குத் தனிநாடு அளிக்கலாம் என்றனர். பிரிட்டானியப் பேரரசு இந்தியாவுக்கு முழு விடுதலை வழங்க மறுத்தது. 1942-ல் காந்தியடிகள் * ஆக்ச்ட்டு புரட்சியைத் தொடங்கினார். ஆகச்ட்டு ஆம் பக்கல் அவர் தலைமையில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் போராட்டம் நாட்டைக் கிடுகிடுக்கவைத்தது. பலவாயிரம் தொண்டர்கள் ஆங்கிலரின் அடக்குமுறைக்கு ஆளாயினர்; பலர் உயிரிழந்தனர். இந்திய விடுதலை இரண்டாம் உலகப் போருக்குப்பின் இந்தியாவுக்கு விடுதலை யளிப்பதாய் ஆங்கிலர் உறுதியளித்தனர். இப்போரும்1945-ல் முடிவுற்றது. பிரிட்டானிய நாடாளும் மன்றத்தில் தொழிற்கட்சி பெரும்பான்மை பெற்று, கிழான் பெதிக் லாரன்சு தலைமையில் அமைச்சரவை அமைத்தது. இந்திய விடுதலைக்கான தீர்மானத்தை இந்த அமைச்சரவை கொண்டு வந்தது. இந்தியாவின் அரசப் படிநிகராளியாக்கிழான் மவுண்ட்பேட்டன் அமர்த்தப்பட்டார். அவரும் இந்தியருடன் நெருங்கிப் பழகிவிடுதலைக்கும் இந்தியர் தம்மைத்தாமே ஆளுதற்கும் பாடுபட்டார். முசுலீம்கள் தனிநாடு கேட்டு வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகச்ட்டு திங்கள் 15 ஆம் நாள் பாரதம், பாகிஸ்தான் என இரு கூறுகளாக்கப்பெற்று விடுதலையளிக்கப் பெற்றது. மாநில அமைச்சரவை பேராயக் கட்சி வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தது. டி. பிரகாசம் முதலமைச்சர் ஆனார். இவருடைய அமைச்சரவையில் வி.வி. சிரி, எம். பக்தவச்சலம், டி. எசு. அவினாசிலிங்கம் முதலிய திறன்மிக்க அமைச்சர்கள் பதின்மூவர் இடம்பெற்றனர், இந்த அமைச்சரவை 1-5-146 முதல் 23-3-1947 வரை பதவியில் இருந்தது. பின்னரும் பேராயக் கட்சியே வெற்றி பெற்றது. அதில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சர் ஆனார். இதிலும் பதின்மூன்று அமைச்சர்கள் இடம் பெற்றனர். டி. எசு. அவினாசிலிங்கம் கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தங்களை மக்கள் கிபி. 19 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 201 போற்றினர். ஆனால், மீண்டும் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பெற்றது. ' நாடெங்கிலும் இந்தியெதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றின. தந்தை பெரியார் இதனை முடுக்காயெதிர்த்து 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று முழக்கமிட்டார். 'ஓமந்தூரார் ஓதாத இந்தி. அவினாசியார் அறியாத இந்தி ஒழிக' என்று திராவிடர் கழகத்தினர் தந்தை பெரியார் தலைமையில் திரண்டு எழுந்து இந்தியை எதிர்த்தனர். 1944-ல் சேலம் மாநாட்டில் நயன்மைக்கட்சி, தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுத் திராவிடர் கழகமானபின் நாட்டில் இந்திக்கும், மூடப் பழக்கவழக்கங்களுக்கும், பேராயக் கட்சிக்கும் எதிப்புகள் சாய்க்க முடியாதபடி வலுப்பெற்றன, ஓமந்தூரார் அமைச்சரவைக்குப் பின் பி. எசு. குமாரசாமிராசா அமைச் சரவை அமைந்தது. இது ஓ4-1952 வரை பதவியில் இருந்தது. ஆந்திரம் பிரிதல் சென்னை மாகாணம் என்பது தமிழகம், ஆந்திரம், கேரளத்தில் இரு மாவட்டங்கள், தென்கன்னடம் ஆகியவற்றைக் கொண்டு திகழ்ந்தது. ஆனால், நாடு விடுதலையடைந்தபின் மக்களுக்கு மொழிவழி, இனவழி உணர்வுகள் பெருகின. இதில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட ஆந்திர மக்கள் 'விசால ஆந்திரம் கேட்டுக் கிளர்ச்சிகள் செய்தனர். பொட்டி சீராமுலு fநாயுடு) என்பார் தனி மாநிலம் கோரி உண்ணாநோன்பு நோற்று உயிர் நீத்தார். இச்சமயத்தில் சி.இராசகோபாலாச்சாரியார் தலைமையி லான அமைச்சரவை சென்னை மாநிலத்தை யாண்டது. இது 1-4-1952 முதல் 13.4.1954 வரை பதவியில் இருந்தது. எம். பக்தவச்சலம், சி. சுப்பிர மணியம், அன்னை சோதிவெங்கடாசலம் முதலிய பதினேழு அமைச் சர்கள் இதில் இருந்தனர். ஆந்திரத்தைத் தனி மாநிலமாக்க இந்த அவையும், இந்திய அரசும் ஒப்புக்கொண்டன. இதன்படி ஆந்திரம் 53 ஆம் ஆண்டு தணி மாநிலமானது. ஆந்திரம் தனி மாநிலமானதை எடுத்துக்காட்டாகக் கொண்டு மொழிவழி மாநிலங்கள் கோரி நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சிகள் தோன்றின. பர். பி. ஆர். அம்பேத்கார் மொழிவழி மாநிலங்களைத் தோற்றுவிப்பதோடு இந்தியாவுக்குத் தெற்கிலும் ஒரு தலைநகரை அமைக்கவேண்டுமென அசைக்க முடியாத அறிவியல் உறழியங்களை (வாதங்களை முன்வைத்துப் பேசினார். தமிழகத்தில் தனி நாடு கோரும் கிளர்ச்சிகள் எழுந்தன.1953-ல் பசலலி தலைமையில் அமைக்கப்பெற்ற குழு மொழி எல்லைகளைக் குறித்தது. இதற்குள் சங்கரலிங்க நாடார் என்னும் தமிழர் தனித் தமிழ்நாடு கோரி உண்ணாநோன்பு நோற்று உயிர் துறந்தார். 1956 ஆம் ஆண்டுச் சட்டப்படி கேரளம் தனி மாநிலமாக்கப்பெற்றது. ஆக, ஆந்திரமும், கேரளமும் தனி மாநிலங்களான பின் தமிழகம் பரப்பிலும் எல்லையிலும் சுருங்கிவிட்டது. இது மொழிவழியாகத் தமிழகம்' என அழைக்கப் பெற்றது. 1949-ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அறிஞர் 1. Ambedkar, Dr. B. R., 'Thoughts on Linguistic States' 202 தாய்நில வரலாறு அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம்' உருவானது. இக் சுட்சி, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஆந்திரமும், கேரளமும் மொழி வழியே அமைந்து அழைக்கப்படும்போது 'தமிழகம்" என அழைக்கப் பெறாமல் சென்னை மாகாணம்' என அழைக்கப்படுவதை எதிர்த்துப் போராடியது. கிளர்ச்சிக்குப் பின் அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டையின் பெரும் பகுதியும் சென்னையுடன் இணைக்கப்பெற்றுத் தமிழ் மாநிலமானது. 1957-ல் நடந்த விடுதலை இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தலிலும் பேராயக் கட்சியே வெற்றி பெற்றது. கேரளமும், ஆந்திரமும் தனி மாநிலங்களானபின் தமிழகம் சிறுத்துவிட்டது. இதனால், அமைச் சரவையும் சுருங்கிவிட்டது. இதில்.கு. காமராசர் முதலமைச்சராகவும், எம். பக்தவச்சலம், சி. சுப்பிரமணியம் முதலிய எழுவர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இந்தியையெதிர்த் தும், சென்னை மாநிலத்தைத் 'தமிழ்நாடு' என்று மாற்றும்படியும் போராட்டங்கள் நடத்தியது. 1957ல் சென்னை மாநிலம் தமிழ்நாடு' என்று அறியப்படும் என்றும், ஆங்கிலத்தில் "சென்னை' எனக் குறிப்பிடவேண்டும் மென்றும் காமராசர் அமைச்சரவை தீர்மானித்தது. பள்ளி இறுதிப் படிப்புவரை இலவசக் கல்வியும், ஏழை மாணவருக்கு மதிய உணவுத்திட்ட, மும் கொண்டு வந்து காமராசர் தமிழரின் உள்ளக் கோயிலில் இடம் பெற்றார். 1967-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் பேராயக் கட்சியே வெற்றி பெற்றது. காமராசரே சென்னை மாநில முதல்வர் ஆனார். எம். பக்த வச்சலம், சி. சுப்பிரமணியம் முதலிய எழுவர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். 1955-ல் சேலம், தருமபுரி என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்றது. சுன்னியாகுமரி மாவட்டமும் தோன்றியது. கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் பிரிக்கப்பெற்றது. 1963-ல் காமராசர் மூத்த உறுப்பினர், சுட்சிக்குப் பணியாற்றப் பதவி துறக்கும் தன் கோட்பாட்டின்படி தாமே பதவி துறந்தார். ஆகவே, 1963 முதல் 16 வரை எம். பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனார், தனது திருச்சி மாநாட்டு முடிவின்படி இத் தேர்தலில் ஈடுபட்டதிராவிட முன்னேற்றக்கழகம் ஒரு சில இடங்களைப் பிடித்தது. 1967-ல் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று அறிஞர் அண்ணா தலைமை யில் அமைச்சரவை அமைத்தது. இரா. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி முதலிய ஒன்பது அமைச்சர்கள் இதில் இடம் பெற்றனர், அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்றேற்றக் கழகத்தின் இந்த அமைச்சரவை மக்கள், கட்சிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்பைக் கோரிப் பெற்றுப் பல புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. சென்னை மாகாணம் தமிழ்நாடு' என்று மாற்றப்படும் சட்டத்தையும், இந்தியை அடியோடு நீக்கித் தமிழே மாநிலம் முழுவதும் கற்கும் கற்பிக்கும் ஆளும் கிபி 19, 20 ஆம் நாற்றாண்டுகளில் தமிழகம் 203 மொழியாகவும், ஆங்கிலம் துணை மொழியாகவும் இருக்கும் சட்டத்தை யும் கொண்டு வந்தது. 1957-ல் சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என அறியப்படும் தீர்மானத்தைக் காமராசர் அமைச்சரவைக் கொண்டுவந்தது. ஆனாலும் 1967-ல் அண்ணா அமைச்சரவைதான் சட்டப்படி தமிழ்நாடு என்று மாற்றியது. 1958 முதலே தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டதாயி னும் அண்ணாவின் அமைச்சரவையே சட்டப்படி அதற்கு முகாமை இடத்தையும் விரிவாக்கத்தையும் அளித்தது. இந்தி அடியோடு அகற்றப் பட்டு, இந்தி ஆசிரியர்கள் வேறு பணிகளில் அமர்த்தப் பெற்றனர். 1963 54 ஆம் ஆண்டு முதலே பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் சில பாடங்கள் தமிழில் கற்றுக்கொடுக்கப் பெற்றன. ஆயினும், இது சட்டப்படியும், படிப்படியாகவும் கொண்டுவரப்பட்டு இன்று கல்லூரிகளில் தமிழ் பாடமொழியாகிவிட்டது. இந்துச் சமய விதிகளின்படி செய்யப்பட்ட திருமணங்கள் தவிர பிற திருமணங்கள் செல்லுபடியாகாவென்ற நிலைமை மாறிபெரியாரின் தன்மான (சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடி யாகும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தாழ்த்தப்பட்ட ஆண் அல்லது பெண் வேறு குலத்தவருடன் மண உறவு கொண்டால் அதனை உனக்குவிச் கும் பொருட்டுத் தங்கப் பதக்கம் வழங்கும் திட்டமும் கொண்டு வரப் பட்டது. குமுகாயச் சீர்திருத்தங்களையே தன் முதுகந்தண்டாய்க்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தன் அமைச்சரவையிலேயே இத்தகைய சீர்திருத்தச் சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து வெற்றி பெற்றது. 3-2-1969-ல் அறிஞர் அண்ணா காலமானார்: மு. கருணாநிதி முதலமைச்சர் ஆனார். 1971-ல் நடந்த இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றிப்பெற்றது. அண்ணாவுக்குப் பிறகு எட்டு நாள்கள் இரா. நெடுஞ் செழியன் தற்காலிக முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னும், இடைத் தேர்தலுக்குப் பின்னும் கலைஞர் மு. கருணாநிதியே தொடர்ந்து முத லமைச்சராக இருந்தார். 10-2-1959 முதல் 31-1-197வரை இருந்த கருணாநிதி யின் அமைச்சரவை பிற மாநிலங்களும் பின்பற்றுமாறு பல அரிய திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வந்தது. கல்வி, பொருளியல், குமுகாயச் சீர்திருத்தங்களில் தமிழகம் இன்று முதலிடம் பெற்று விளங்கிய பேருந்து வண்டிகளை நாட்டுடைமையாக்கியது; கப்பல் வாணிகத்தை மேற்கொண்டது; வான்வழிப் போக்குவரத்தை மேற்கொள்ளவிருந்தது; மாநிலத் திட்டக்குழுவை ஏற்படுத்தி அதன் கருத்துகளை ஏற்று நடப்பது: பசுமைப் புரட்சி, வெள்ளைப் புரட்சி, உணவுப் புரட்சி முதலியனவும், தனி வாரியங்களை அமைத்துப் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதுமான பல அரிய திட்டங்கள் தமிழ்நாட்டில் பொருளியல் வளர்ச்சிக்கு ஏற்றம் தருகின்றன. காவிரி நீர்ப் பங்கீடு முறையும் தீர்ந்து, நீர்ப்பாசனத் திட்டங் களும், வேளாண்மைத் திட்டங்களும், தொழில் திட்டங்களும் நிறைவேறி னால் தமிழகம் பொருளியல் நிலையில் தன்னிறைவு பெறுவதோடு பிற மாநிலங்களுக்கும் உதவும் நிலையில் அமையும். 2014 தாய்நில வரலாறு கல்வியிலும், குமுகாய முன்னேற்றத்திலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றது. கண்ணொளி வழங்கும் திட்டம், முடவர், குருடர், இரவர் (பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்,ஏதிலி அனாதைகளுக்கு வாழ்வளித் கும் திட்டம் முதலியன கருணாநிதியின் சிறந்த திட்டங்களாகும். நாடு முழுவதும் தொழுநோயாளர்களுக்கு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரப்பதும் (பிச்சை எடுப்பதும், மாந்தனை மாந்தன் கை வண்டியில் வைத்து இழுத்துச்செல்வதும் சட்டங்களால் குற்றங்களாக்கப்பட்டன. நரவண்டி (கை ரிக்சாவுக்குப்பதில் சுமை மிதிவண்டி சைக்கிள் ரிக்சா) கொடுக்கப்பட்டது. நரிக்குறவர் போன்ற நாடற்ற ஏதிலிகளுக்கும் தனியே குடியிருப்புகளும், கல்வி, தொழிற்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குடிசைமாற்று வாரியம், தாழ்த்தப்பட்டோர் வீட்டு ஏந்து வாரியம் முதலியனவும் பூசாரியர் அருச்சகர்) சட்டவரைவும் குமுகாய நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டங்களாகும், பிற்பட்டோர் நலத்துறை நயன்மைக் கட்சி 1920 ஆம் ஆண்டு அமைச்சரவையை அமைத்ததி லிருந்தே பிற்பட்டோர் நலத்திற்கே பாடுபட முனைந்தது. அதன் மறுபிறவி யான திராவிட முன்னேற்றக் கழகம் பிற்பட்டோர் நலத்துறை ஒன்றைத் தனியே ஏற்படுத்திப் பிற்பட்டோருக்கு அரசுப் பணிகளிலும், கல்விக் கூடங்களிலும் அதிக இடங்களை ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பிற்பட்டோர் குழந்தைகளுக்கான விடுதிகள் அமைக்கப்பெற்றுள்ளன, தாழ்த்தப்பட்டோர் நலத்துறையுடன் இணைந்து செயல்பட்ட இத் துறையைத் தனியே பிரித்து அதற்கு தனியே அமைச்சரையும் அமர்த்திச் செயல்பட்ட பெருமை மு. கருணாநிதியையே சாரும். இதனால், தாழ்த்தப்பட்டோர்-பிற்பட்டோர் சலுகைப் போராட் டங்களும், சாதி உணர்வுகளும் வளர்ந்து வருவதைத் தடுக்க முடியவில்லை, இதனைப் போக்கக் குமுகாயச் சீர்திருத்தத்தையே மூச்சாகக்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் சாதியடிப்படையை ஒழித்துப்பொருளியல் அடிப்படையில் சலுகைகள் வழங்கினால் குமுகாயத்தில் சாதி உணர்வு வளராமல் தடுக்கலாம் என அறிஞர் பலரும் கருதுகின்றனர். தாழ்த்தப்பட் டோர் மாணவர் விடுதிகளும், பிற்பட்டோர் மாணவர் விடுதிகளும் சாதி உணர்வுகளை உருவாக்கும் விதைப் பண்ணைகளாகிவிட்டன. அரசு இதனைத் தக்கபடி ஆய்ந்து செயல்பட வேண்டும். மாணவமணிகள் மனம் திருந்திச் சாதிஉணர்வைவிட்டொழித்து முன்னேற வேண்டும். இன்று தமிழகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. அவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலமலை, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகியவையாம். 1974 ஆம் வள்ளூர், காநாமக்கல், தாவூர், திருவாதர், திருதொர4ஆம் 7, கரூர், அரியாக்கல், தர்மபுரி, கோமலை, வேலூர் கிபி. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 2015 ஆண்டு பொங்கற் புது நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் அமைக்கப் பெற்றது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, குளத்தூர், திருமையம், ஆலங்குடி ஆகிய வட்டங்கள் அடங்கியுள்ளன. பத்து ஊராட்சி ஒன்றியங் களும், 490 ஊராட்சிகளும், ஒன்பது பேரூராட்சிகளும், ஒரு நகராட்சியும் இம் மாவட்டத்தில் உள்ளன. இதன் பின்னரே பல மாவட்டங்கள் இரண்டாகவும் மூன்றாகவும் பிரிக்கப்பட்டன. ஊராட்சித்துறை வளர்ச்சி உள்ளாட்சிமுறை ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்றவுடன் நாம் ரிப்பன் பிரபு (1880-1884) என்பானை நினைவு கூர்கிறோம். ஆனால், கிபி. 1871-ல் ஏற்பட்ட உள்ளாட்சிச் சட்டப்படி (Local Fund Act) சென்னை மாவட்டத்தில் மாவட்டக் கழகங்களும் (District Bards), வட்டக் கழகங் களும் (Taluk Boards), கராட்சி ஒன்றியங்களும் (Union Boards) ஏற்பட்டன. மாவட்டக் கழகங்கள் 1871 ஆம் ஆண்டுச் சட்டப்படி சென்னை மண்டிலத்தில் மாவட்டச் கழகங்கள் ஏற்பட்டன. இக் கழகங்கள் நிலவரி வருவாய்த்துறையின் கீழ்ச் செயல்பட்டன. எனவே, ஒவ்வொரு வருவாய்த் துறைப் பிரிவின் கீழும் ஒன்று அல்லது இரண்டு கழகங்கள் நிறுவப்பட்டன. கோட்ட வருவாய்த் துறை அதிகாரி கலெக்டர் அல்லது கோட்டாட்சித் தலைவர்) இதன் தலைவரானார். இதில் அரசால் அமர்த்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று உறுப்பினர் இடம் பெற்றனர். இந்த உறுப்பினர் சொந்த நிலம் அல்லது சொத்துடையவர்களாயிருப்பர். 1884-ல் கொண்டுவரப்பட்ட சென்னை உள்ளாட்சிச் சட்டம்' ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக்கழகம் ஏற்படவும், அதில் 24 உறுப்பினர்கள் இடம் பெறவும் வகை செய்தது. இந்த உறுப்பினர்களில் ஒரு சிலர் ஆளுநரால் அமர்த்தப்பட்டனர். ஒரு சிலர் வட்ட ஊராட்சி ஒன்றியக் கழகங்களாலும் வரி கொடுப்போராலும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். ஒரு சில வரிகளை அரசின் ஒப்புதல் பெற்று விதிக்கும் அதிகாரத்தை இக் கழகங்கள் பெற்றன. வட்டக் கழகங்கள் (Taluk Boards) மாவட்டக் கழகங்களுக்குக்கீழ் வட்டக் கழகங்கள் இருந்தன, ஒவ்வொரு வட்டக் கழகத்திலும் அரசால் அமர்த்தப்பட்டும், வரிகொடுப் போராலும், ஒன்றியக்கழகத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டும் பன்னிரண்டு உறுப்பினர் இடம் பெற்றனர். மாவட்ட நிலவரித்துறை அதிகாரி இதன் தலைவர் ஆனார். மாவட்டக் கழகம் தன் முடிவுக்கேற்ப வட்டக் கழகங் களுக்குப் பணம் ஒதுக்கீடு செய்தது. வருமானத்திற்கேற்ப மாவட்ட, வட்டக்கழகங்களுக்குக் குறிப்பிட்ட விழுக்காட்டுத் தொகையையும் உதவித் தொகையையும் அரசு ஒதுக்கியது. 20 தாய்நிலவரலாறு ஒன்றியக் கழகங்கள் (Union Board) பல ஊர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்றியமாக்கப்பட்டு ஒன்றியக் கழகத்தால் ஆளப்பட்டது. ஒவ்வோர் ஊரின் தலைவரும் இதில் உறுப்பின் ராயிருப்பார். குறைந்தது ஐந்து பேர் இதில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதில் உறுப்பாண்மை பெற்ற ஓர் ஊர்த்தலைவரே ஒன்றியத்தின் தலைவர் ராக (Union Chairman) இருப்பார். ஊர்த்தலைவர்களைத் தவிர்த்த மற்ற உறுப்பினர்கள் ஆளுநராலும், வரிகொடுப்போராலும் அமர்த்தப்படுவர். வீட்டு வரியே ஒன்றியத்தின் முகாமைவருவாயாகும். இதைத்தவிர வட்டக் கழகமும் ஒரு தொகையை அளிக்கும். தனக்குக் கீழுள்ள ஊர்களின் பொதுச் சாலைகள், குடிநீர், துப்புரவு, நிலவியல் முதலியவற்றை ஒன்றியம் கவனித்தது. ஊரவைக் கழகங்கள் 1920 ஆம் ஆண்டு ரவை (பஞ்சாயத்துச் சட்டப்படி ஊர்தோறும் பரவை பஞ்சாயத்து ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வோர் ஊரவையிலும் ஏழு முதல் பதினைந்துக்கு உட்பட்ட உறுப்பினர், அவ்வூரில் 25 அகவைக்கு மேற்பட்ட ஆடவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இடம்பெற்றனர். சொத்து அல்லது நிலம் உள்ளவர் மட்டுமே வரிகொடுப்போர் ஒப்போலையுரிமை உடையவர் என்று இருந்த நிலைமாறி 25 அகவை நிரம்பிய ஆடவர் ஒப்போலையுரிமை பெற்று வளரவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தனர். இச்சட்டத்தினால் நிலமில்லாத ஏழை மக்களுக்கு, குறிப்பாகத் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் இப்போவை உரிமை அளிக்கப்பட்டது. நனருக்கு வேண்டிய எல்லாச் செயல்களையும் இவ்வூரலையே செய்து கொண்டது. வீட்டுவரி, தொழில்வரி, முதலியனவும், பொதுச்சொத்துகளிலிருந்து வரும் வருமானங்களுக்கும் இதற்கும் வருவாயாயின. மாநிலம் முழுவதிலுமுள்ள ஊரவைகளைக் கண்காணிக்க மாநில உணரவைப் பதிவாளர் ஒருவர் அமர்த்தப்பட்டார். இவரே மற்ற ஊராட்சிக் கழகங்களையும், நகராட்சி மன்றங்களையும் கண்காணித்தார். மேற்கூறிய ஊராட்சிக் கழகங்கள் நாளாவட்டத்தில் எண்ணிக்கை யில் அதிகரித்ததோடு, அவ்வப்பொழுது கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் பல மாற்றங்களைப் பெற்றன. 127-ல் மாநில அரவைப் பதிவாளரே நேரடியாக ஊரவைகளுக்கு உதவித்தொகை வழங்கும் அதிகாரம் பெற்றார். தொகையும் அதிகரித்தது. பள்ளிக்கூடங்களை ஊராட்சிக் கழகங்களே ஏற்று நடத்தும் உரிமையும் வழங்கப்பட்டது. மாவட்டக் கழகங்களின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்ந்தது. கோட்டாட்சித் தலைவராயிருந்த நிலைமாறி ஆளுநரால் அமர்த்தப் பட்டவர் தலைவர் ஆனார். வரவு செலவுத்திட்டத்தைத் தாமே வகுத்துக் கொள்ளும் உரிமையையும் இக் கழகம் பெற்றது. 1930 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றியங்கள் சுவைக்கப்பட்டு பரவைகளில் சேர்க்கப்பட்டன. ஆகவே, ஊராட்சித்துறையின் கடைசி அல்லது தொடக்க நிலையாக கரவைகள் 221-230 கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 207 அமைந்தன, அவற்றிற்கு மேல் வட்டக் கழகங்களும் அவற்றிற்கு மேல் மாவட்டக் கழகங்களும் அமைந்தன. ராட்சிக்கு வரி செலுத்தும் யாவருக்கும் ஒப்போலையுரிமை அளிக்கப்பட்டது. அரசால் உறுப்பினர் " அமர்த்தும் முறைமாறி யாவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். ஊரவை வட்ட, மாவட்டக்கழகங்களில் குறிப்பிட்ட இடங்கள் தாழ்த்தப் பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டன, வட்ட, மாவட்டக் கழகத் தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பெற்ற) உறுப்பினர்களே தங்களுக்குள் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். இத் தலைவர்கள் உறுப்பின ரின் நம்பிக்கை இழந்தால் தள்ளப்படலாம், மாவட்ட ஊரவையதிகாரி சுளும், தணிக்கையாளரும் அமர்த்தப்பட்டனர். வருவாய் செலவினம் யாவும் அதிகரித்தன. அரசும் ஒரு குறிப்பிட்ட தொகையை இவற்றின் வளர்ச்சிக்கென ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்தது. நலவியல் அதிகாரிகள், பொறியாளர் முதலியோர் அமர்த்தப்பட்டனர். ஊராட்சி மன்றங்கள் தொடர்வழிப் பாதைகளைக்கூட கண்காணித்தன. இவற்றிற்குள்ள அதிகாரங்களில் அரசுக்குத் தலையிடும் உரிமையுண்டு. நகராண்மைக் கழகம் 1871 ஆம் ஆண்டின் நகரவிரிவாக்கச் சட்டப்படி தேர்தல் ஆணை யாளர்' அமர்த்தப்பட்டார். 1878-79-ல் மாநிலத்திலுள்ள எல்லா நகரங்களி லும் நகராண்மைக் கழகங்களை ஏற்படுத்த வழி செய்யும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 1884ல் சென்னை நகராண்மைக் கழகச் சட்டம்" கொண்டு வரப்பட்டது. இதன்படி நகராண்மைக் கழக உறுப்பினரில் மூன்றில் இரு பகுதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1920ல் உறுப்பினரின் எண்ணிக்கை 12 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டது. 1930 ஆம் ஆண்டில் பெண்களும் உறுப்பினராகும் உரிமை வழங்கப்பட்டது. தலைவரை உறுப்பினரே தேர்ந்தெடுத்தனர். இத் தலைவர்களை நீக்கும் அதிகாரமும் உறுப்பினருக்கே வழங்கப்பட்டது. உள்ளாட்சி முறை வளர்ச்சி சென்னை நகரமன்றத் தோற்றமும் வளர்ச்சியும் கி.பி. 1640]-ல் சென்னையில் புனித சார்சு கோட்டையைக்கட்டி அதனைச் சுற்றிலும் ஆங்கிலேயர்கள் குடியமர்ந்தனர். கி.பி. 1687-ல் வெளியான பட்டையச் சட்டப்படி சென்னை நகரைப் பராமரிக்க நகரத் தந்தை (Mayor) அமர்த்தப்பட்டார். அவருக்கு உதவியாக 12 நகரமுதுவர்கள் (Aldernet) தி குடிமகன்கள் ஆகியோர் அமர்த்தப்பட்டனர். நகரத் தந்தையின் பதவிக்காலம் ஓராண்டு என்றும் நகரமுதுவர்கள் (Aldernmen) பதவிக்காலம் ஆயுட்காலமென்றும் குறிப்பிடப்பட்டது. பின்னர் நகரத் தந்தையை நியமனம் செய்யாமல் நகரமுதுவர்களே (Aldernmen) தேர்ந் தெடுத்தனர். நகரமுதுவர்களும் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடிமக்கள் என்பவர் சென்னைவாசிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 208 தாய்நிலவரலாறு ஆனால், சட்டப்படி 299.1688-ல் தான் சென்னை மாநகராட்சித் தொடங்கியது. அதன் தந்தையாக நந்தேனியல் ஆரிசன் என்பார் நியமிக்கப் பட்டார். இவரே சென்னை மாநகராட்சியின் முதல் தந்தை (Mayor) எனலாம். - கி.பி. 1728-ல் ஏற்பட்ட பட்டையச் சட்டப்படி நகர தந்தைக்கும் பிறருக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. கி.பி. 1793ஆம் ஆண்டு ஏற்பட்ட பட்டையச் சட்டப்படி சென்னையைப் போலவே மும்பாய், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் மாநகராட்சிகளேற்பட்டன. இந்நகரங் களில் அமைதி நயன்மையர் (Justice of PeacE) அமர்த்தப்பட்டனர். இவர்கள் நகரவாசிகளிடமிருந்து நிலவரி, வீட்டுவரி, ஆகியவரிகளைத் தண்டல் செய்து கொள்ளவும், அதனை நகரத்தின் சாலைகள், சுகாதாரம், காவல் ஆகியவற்றிற்காகச் செலவிடவும் வங்காள தலைமை ஆளுநரால் அதிகாரம் வழங்கப்பட்டனர், இப் பட்டையச் சட்டப்படி, "நகரமன்றக் குழுக்கள்' (Team CoT) TittEES) அமைக்கப்பட்டு, அவர்களே நகரக் காரியங்களை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கி.பி. 1840-ல் "வீட்டுவரி" என்பதை 'நகரவரி'' என்று மாற்றி அழைத்தனர். கி.பி. 1842-ல் ஏற்றப்பட்ட வங்காளச்சட்டம் சென்னை நகரத்தைப் போலவே, இதரநகரங்களிலும் மாநகர மன்றங்கள் ஏற்பட்டன. இவற்றை நகரவாசிகளே வேண்டி விரும்பி ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு, நகரங்களிவேற்பட்ட நகர மன்றக்கழகங்கள் தனித்துச் செயல் படவும், வணிகக் குழுவும் அரசும் அவற்றில் தலையிடாமலும் கட்டுப்படுத் தும் திட்டவட்டமான விதிகளை கிபி.1880-ல் கொண்டுவரப்பட்ட வணிகக் குழுச் சட்டமே வழி செய்தது. இவ்வாறு, தமிழகத்தில் உள்ளாட்சி முறையை ஆங்கிலேயர்கள் சென்னை நகரத்திலிருந்தே தொடங்கினர். கிழக்கிந்திய வணிகக்குழுவார் வளர்த்த உள்ளாட்சிமுறை சென்னை மண்டிலத்தில் கி.பி. 1794 முதல் 1870 வரை ஏற்பட்ட உள்ளாட்சிமுறை வளர்ச்சியின்போது கிழக்கிந்திய ஆங்கிலவணிகக்குழு அதிகாரத்திலிருந்தது. கிபி. 174ல் ஒப்பார்டுபிரபு (Lord Hofen)சென்னை ஆளுநராக இருந்தபோது திறமைவாய்ந்த மாவட்ட ஆட்சியாளர்களாக இங்கிலாந்து நாட்டு இளைஞர்களிருந்தனர். அவர்களின் திறமையான நிருவாகத்தின் கீழ் நகரமன்றங்கள் செவ்வனே அமைக்கப்பெற்றன. கிபி.1854-ல் மாவட்ட நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க உள்ளாட்சி நிதி (Local Funds) ஏற்படுத்தப்பட்டது. கால்நடை மேய்ச்சக்கால் தண்டம், நீர் நிலைகளில் மீன்பிடிப்போரிடமிருந்து வரும் வருவாய், அரசு தங்கு மிடங்களிலிருந்து வரும் வாடகை முதலியன இந்த உள்ளாட்சி நிதியில் சேர்க்கப்பட்டன. பத்து ஆண்டுகளில் இத் தகுதி நான்கு இலட்சம் ருபா யாக சேர்ந்து விட்டது. எனவே, அரசு சிபி.1868-ல் சாலைகள் பராமரிப்புத் தொகையென வரித்தண்டலில் சிறு தொகையை ஒதுக்கி அத் கிபி. 9, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 209 தொகையுடன் சேர்க்கத் தொடங்கியது. நகர மன்றங்கள் தண்டல் செய்யும் வரிகளிலிருந்து உருபாவுக்கு ஆறு காசு வீதம் இதில் சேர்க்கப்பட்டது. மேயோ தீர்மானம் - கி.பி. 1870 கி.பி. 1870-ல் தலைமை ஆளுநராக இருந்த கி.பி. 1869-72) மேயோபிரபு அதிகாரத்தைப் பன்முகப்படுத்தும் தீர்மானத்தைக்கொண்டு வந்து உள்ளாட்சி விவகாரங்களில் அரசு தலையிடாமல் செய்தார். உள்ளாட்சி மன்றங்களிலும், அரசுத்துறைகளிலும் இந்தியரை அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்தார். இதனால் அரசுத் துறைகளில் * இந்தியர் மயமாக்குதல் தொடங்கியது. மேயோபிரபுவின் இத்தகைய முடிவையடுத்து கிபி. 187-ல் சென்னை சட்டமன்ற மேலவை உள்ளாட்சி நிதிச் சட்டம்" (Madras Local Funds AcL1871) ஒன்றைக் கொண்டுவந்தது. இதனால் தொடக்கக்கல்வி வளர்ச்சிக் கும் இது பேருதவியாயிற்று. சென்னை மண்டிலம் 36 உள்ளாட்சி நிதி வட்டமாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட உள்ளாட்சி நிதிய திட்டத்திற்குப்பிறகே சென்னை மண்டிலத்தில் உள்ளாட்சி நல்ல கட்டமைப்புடன் வளரத்தொடங்கியது எனலாம். அடுத்த கட்ட வளர்ச்சி ரிப்பன் பிரபு' (கிபி. 1880-1888) இந்தியாவின் தலைமை ஆளுநராயிருந்தபோது அவர் கொண்டுவந்த உள்ளாட்சி முறைத் தீர்மானத்திலிருந்து தொடங்கியது. * 'உள்ளாட்சி முறையென்பது பொது மக்களுக்கு அரசியலில் பங்கேற்கக் கொடுக்கும் அடிப்படைப் பயிற்சி யாகும்" என்பது அவருடைய கோட்பாடாகும். இரண்டாவது கட்ட வளர்ச்சியாக அரசு ஆணைக்குழுவின் பன்முகப்படுத்தும் பரிந்துரையாகும் (Report of the Royal போபாission for Decent rialization), இதனால் மாநகர மன்றம், நகர மன்றம் ஆகியவை ஏற்பட்டன, சிறு நகரங்களிலும் நகராண்மைக் கழகங்கள் ஏற்பட்டன. இவற்றிற்கு அரசாங்கமே நிதி உதவியளித்தது. அதைக் கொண்டு குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் முதலியன அமைக்கப்பட்டன. மூன்றாவது கட்டமாக கிபி, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டக் கூறுபாடுகள் ஆகும். இவ்வாண்டிலிருந்துதான் உள்ளாட்சிக்கான பலதிறப்பட்ட உள்ளாட்சிச் சட்டங்கள் (Local Government Acts) வெளிவரத்தொடங்கின. நான்காவது கட்ட வளர்ச்சி, இந்தியர் விடுதலையடைந்த கிபி.1947 லிருந்து தொடங்கியது. 1950-ல் செயல்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தில் உள்ளாட்சிமுறை இடம் பெற்றது. இந்திய அரசியல் சட்டவிதி 40-ல் "ஊராட்சி மன்றங்கள்தான் இந்திய அரசாங்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகக் கொள்ளப்பட்டன"'. செப்டம்பர், 1954-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் நடுவண் உள்ளாட்சிக் கழகத்தைத் தொடங்கிவைத்தார். 1952லிருந்தே குமுகாய வளர்ச்சித்திட்டங்கள் (Community Devel pment ProgratinTE) தொடங்கப்பட்டன. 1957-ல் பலவந்தராய்மேதா - 11 210) தாய்நில வரலாறு தலைமையிலேற்பட்டக்குழு (Balavantray Metha orumittee) குமுகாய் வளர்ச்சித் திட்டங்களையும் மக்களாட்சி முறையில் ஒன்றிணைத்து, பன்முகப்படுத்திச் செயல்பட வேண்டுமென்றது. இதனடிப்படையில்தான், (1) ஊர்களில் பஞ்சாயத்துக்களும், - (2) ஓனர்களை உட்கொண்ட பகுதிகளில் பஞ்சாயத்து ஒன்றியங் களும், (3) மாவட்ட அளவில் மாவட்டக் கழகங்களும் ஆக, ""மூன்றடுக்கு உள்ளாட்சிமுறை" ஏற்பட வழிவகுத்தது. இவ்வாறு, படிப்படியாக வளர்ச்சிப் பெற்ற உள்ளாட்சிமுறை இன்று தமிழகத்தில் மக்களின் அன்றாட உயிர்த் துடிப்பாகக் காட்சி யளிக்கிறது. குறிப்பாகச் சென்னை மண்டிலத்தில் இரட்டை ஆட்சி நடந்த காலக்கட்டத்தில் (கி.பி. 1920-1937) தான் இது ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக:- சென்னை உள்ளாட்சி சட்டம், சென்னை ஊராட்சிகளின் சட்டம் முதலியன 1920-ல் நிறைவேற்றப் பட்டன. 1930 ஆம் ஆண்டு மாவட்ட நகரமன்றங்களின் சட்டமும், உள்ளாட்சிச் சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டன. 1935லேற்பட்ட இந்திய அரசியல் சட்டம் மாநிலத் தன்னாட்சி முறையை அறிமுகப் படுத்தியது. எனவேதான் இவ்வாண்டிலிருந்து தொடங்கும் உள்ளாட்சி முறையைத் ''தமிழகத்திலேற்பட்ட உள்ளாட்சி முறையின் பொற்காலத் தொடர்ச்சி என்பர். கிபி.1909-திலேற்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி இசுலாமியர், இந்தியக் கிறித்துவர், ஆங்கிலோ இந்தியர் முதலியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் சரியான விகிதத்தில் இடம் பெறாதவருக்கு ''நியமனமுறை"ப்படி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், 1920ல்கொண்டு வரப்பட்ட சென்னை மண்டில் மாவட்ட நகரமன்றச் சட்டப்படி இந்த நியமனமுறை நீக்கப்பட்டது. 1933-ல் ஏற்பட்ட சட்டப்படி, நகரமன்ற ஆணையர் முழுநேர அதிகாரியாக அமர்த்தப்பட்டு உள்ளாட்சிசி-- செயல்களை அவரே நடைமுறைப்படுத்தினார். விடுதலைக்குப்பின் நகர்மன்றத் தலைவர்களும், ஆணையர்களும் இணைந்து செயல்பட்டனர், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உறுப்பினர்கள் செயல்பட்டனர். ஐந்தாண்டுத் திட்டங்களும் உள்ளாட்சி வளர்ச்சியும் அடித்தள மக்களிலிருந்து, உயர்நிலையிலுள்ள மக்கள் வரையிலான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே, நீண்டகால ஐந்தாண்டுத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கியது. ஐந்தாண்டுத் திட்டங்களால் ஊராட்சி மன்றங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டது. அதற்காகவே, புதிய பஞ்சாயத்துச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதோடு நடைமுறையிலிருந்த சட்டங் களும் திருத்தி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் வேண்டிய கிபி.19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் - 211 நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு பஞ்சாயத்தும் மாநில, நடுவண் ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி, இந்தியாவில் 85 விழுக்காடு மக்கள் கர்ப்புறங்களில் தானிருந்தனர். எனவேதான், 1952ல் குமுகாய வளர்ச்சித் திட்டமும், வட்டார வளர்ச்சித்திட்டமும் கொண்டு வரப்பட்டன. வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளும், கிராம சேவகர்களும் பிறரும் அமர்த்தப்பட்டனர். கிராம சுகாதார நிலையங்கள், கால்நடை சுகாதார நிலையங்கள் முதலியன ஏற்பட்டன. கல்வி வளர்ச்சி மிக உயர்ந்தது. வேளாண்மை வளர்ச்சி, சிறுதொழில் வளர்ச்சி முதலிய பொரு ளாதார முன்னேற்றமும் வளர்ந்தன. இவ்வாறு முதல், இரண்டு, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களிலேயே முறையே 1951 - 55, 1956-5, 1956 ஆகிய காலகட்டங்களுக்குள் கிராமப் பஞ்சாயத்துக்கள் முழுவளர்ச்சி அடைந்து விட்டன. நான்காவது: இந்தாவது ஐந்து ஆண்டுத் திட்டகாலத்தில் (1889-197) ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப்பதிலாக ஓராண்டு திட்டங்களை (Annual Plan) வகுத்துச் செயல்படுத்த அரசு முற்பட்டது. இதில் பஞ்சாயத்து ராச்சியம் (Panchayat Raj) என்ற பெயரில் உள்ளாட்சி முறைசெயல்பட்டது. இதில் ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாவட்ட, வட்டார வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் ஒவ்வொரு வளருக்கும் தேவைப்படும் குறைந்த பக்க ''தன்னிறைவு' பூர்த்தி செய்யப்பட்டது. 1980-85-ல் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கியது. இச் காலக்கட்டத்தில் குமுகாயப் பொருளாதார மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காகப் பஞ்சாயத்துச் சட்டங்கள், உள்ளாட்சி முறை அமைப்புகள் முதலியன மாற்றி அமைக்கப் பெற்றன. மேலும் மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியாக உள்ளாட்சி முறை முற்றிலும் மாற்றப்பட்டது. ' இவ்வாறு, ஐந்து ஆண்டுத் திட்டக்காலங்களில் உள்ளாட்சியைக் கட்டமைக்கத்தொடங்கி, ஓர் ஆண்டுகால திட்டக்காலக் கட்டமைப்பாக வும் செயல்பட்ட உள்ளாட்சி முறை வளர்ச்சி காலந்தோறும் ஆண்ட அரசியல் கட்சிகளால் வலுப்பெற்றுத் தேசியத்தோடு இணைந்து ஒரு முகமாய்ச் செயல்பட்டது. கி.பி. 1850-லிருந்து சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி சென்னை நகரமன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிப் பார்த் தோம். தமிழகத்தில் உள்ளாட்சி முறை முதலில் சென்னை நகரத்தில்தான் தோன்றியதென்பதனைப்பார்த்தோம். கிபி.1540லிருந்து 1850 வரையிலான சென்னை மாநகர வளர்ச்சியையும் பார்த்தோம். தமிழகத்தில் இரட்டை ஆட்சி தொடங்கிய பொழுதுதான் உள்ளாட்சி மன்றங்களின் வளர்ச்சி முடுக்கமாக வளர்ந்தது. உள்ளாட்சி மன்றச் சட்டங்கள் பலவும் சட்ட 21) தாய்நிலவரலாறு மன்றத்தால் கொண்டு வரப்பட்டன, கிழக்கிந்திய வணிக ஆட்சிக்குழு உள்ளாட்சி வளர்ச்சியில் அக்கரைக் காட்டாமலிருந்ததால் மக்களாட்சித் தொடக்கப்பட்ட இரட்டை ஆட்சிக் காலத்தில் முடுக்கமாய் வளரத் தொடங்கியது. 1920-லேயே 70-லிருந்து 80 வரையிலான நகர மன்றங்கள் தோன்றின. ஆயினும், 1979 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்திற்குப்பின் தான் சென்னை மாநகராட்சி முழுமையாக வளரத் தொடங்கியது. நகரமன்றக்குழு, நிலைக்குழு ஆணையர், நகரத்தந்தை ஆகியோர் ஏற்பட்ட னர். அவர்களின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டன. நயன்மைக் கட்சியின் ஆட்சிகாலத்தில் பெண்களுக்கு 1921-ல் வாக் குரிமை வழங்கப்பட்டது, சிறுபான்மையருக்கு நிகராளியம் வழங்கப் பட்டது. 1933ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தலைவர் (President) என்ற பதவியைச் சென்னை மாநகரத்தந்தை (Mayor of Madras Corporation) என்றும் மாற்றினார்கள். எனவே, தலைவராக இருந்த வயவர். இராசா முத்தையா செட்டியார் செட்டிநாடு அரசர் சென்னை மாநகர முதல் தந்தையானார். அவர் சி-3-1913 முதல் 7-11-1933 வரை மாநகரத் தந்தையாகச் செயல்பட்டார். சென்னை மாநகர மன்றம் தொடங்கியதி லிருந்து அன்று வரை பிராமணர்களே ''மாநகர மன்றத் தலைவர்களாக இருந்தனர். இவர் தான் முதல் ''தந்தை'' என்பதும் * முதல் பிராமண ரல்லாதவர்" என்பதும் குறிப்பிடத்தக்கது. வருப்புவாரிபடிநிகராளியம்படி முதலில் நகரத்தந்தையானவரும் இவரேயாவார்.வகுப்புவாரி படிநிகராளிய விதிப்படி முதன் முதலாகச் சென்னை மாநகரத் தந்தையான முதல் ஆதி திராவிடர்சே. சிவசண்முகம்பிள்ளை யாவார். 1958ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 50-லிருந்து 100 பிரிவுகள் (wards) ஏற்பட்டன. அதே ஆண்டில் நகரமுதுவர்கள் (Alderrhern) முறையும் ஒழிக்கப்பட்டது. 1951-ல் சென்னை நகர நகரியம்" (Madras City Municipality) என்பதை "சென்னை நகரிய மாநகராட்சி " (Madras CityCorporation) என மாற்றப்பட்டது. 1973-ல் 100-லிருந்து 173 பிரிவுகளாக (Wards) நகராட்சிப் பிரித்தாளப்பட்டது. 1945 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப்பின் 1957 வரை பேராயக்கட்சியின் (காங்கிரசு ஆட்சியே தொடர்ந்து இருந்தது. இக் காலக்கட்டத்தில்தான் உள்ளாட்சித்துறைக்கென தனி அமைச்ச சும்" ஏற்பட்டது. "நியமன முறை" அடியோடு ஒழிக்கப்பட்டது.) 1953-ல் சென்னை மகளடிவத்தில் மொத்தமிருந்த 25 மாவட்டக் கழகங்களுக்கும், ஓ8 நகரியங்களுக்கும், ''நகரமைப்புச் சட்டம்" (Town Plarl ning Act) கொண்டுவரப்பட்டு, அதன்படி ஒரே மாதிரியான உள்ளாட்சி அமைப்பு ஏற்பட்டது. இதனடிப்படையில்தான் பஞ்சாயத்து இராச்சியம், குமுகாய வளர்ச்சித் திட்டங்கள், புதிய பாஞ்சாயத்துக்களை ஏற்படுத்துதல் முதலியன தோன்றி ""குமுகாயநலமே நாட்டின் நோக்கம்' எனப் பாடுபடத் தொடங்கின. கிபி 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் 213 சென்னை மாநகராட்சியில் மாநகராட்சித் தலைவர்கள் (Presidents) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1919 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டுவரை "'தலைவர்கள்" என்ற பதவியில் பத்து பேர் இருந்த னர். 1933 ஆம் ஆண்டில் தலைவர் என்ற பதவி நகரத் தந்தை (Mayor) என மாற்றப்பட்டது. முதல் நகரத் தந்தையாக வயவர். இராசா முத்தையா செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1933 முதல் 2000 வரை தேர்ந்தெடுக் கப்பட்ட நகரத் தந்தையர்கள் வகுப்புவாரிப் படிநிகராளியப்படி தேர்ந் தெடுக்கப்பட்டனர். 200 முதல் மக்களே நேரடியாக மாநகரத் தந்தையைத் தேர்ந்தெடுத்தனர். அவருடைய பதவிக் காலமும் சட்டமன்ற உறுப்பினர் களைப் போல் ஐந்தாண்டுகளானது. அவ்வாறு முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் தி.மு.க.வைச் சேர்ந்த மு.க. ஸ்டாலின் (Mr.K. Stalin) ஆவார். ஆனால், *'ஒரு ஆளுக்கு ஒரு பதவி'' என்ற சட்ட விதியின் படி அவர் ''மாநகரத்தந்தை "'பதவியை 2002-ல் இழந்தார். இதனால் அவர் சென்னைச் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். வகுப்புவாரி படிநிகராளிய விதிப்படி மேயர் பதவி வகிக்கப்பட்ட தால் இந்தியக் கிறித்துவர், இசுலாமியர், ஆதிதிராவிடர் முதலியோரும் மாநகரத் தந்தையாகப் பதவி வகித்தனர். ஆதிதிராவிடநகரத்தந்தையர்களில் சே, சிவசண்முகம் பிள்ளை (1937-38) என். சிவராசு (1945-46), பி. பரமேசுவரன் (1953-54), சி. குசேலர் (1951-53), வி. பாலசுந்தரம் (1969.70) முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர், சிறப்பான உலக மாநகர மன்றங்களைப் போல் சிறப்புற்று விளங்குவது சென்னை மாநகரமாகும். மாநகரப் பணிகளில் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுவன தொடக்கக்கல்வி வளர்ச்சியும், மாணவருக்கு மதிய உணவளிக்கும் திட்டமும், குடிசை மாற்று வாரியமும், தடையிலாக் குடிநீர் வழங்கும் முறையும், அதற்காகச் சத்தியமூர்த்தி பூண்டி) நீர்த்தேக்கத்தையும், செங்குன்றம் ஏரிநீர்த் தேக்கத்தையும் ஏற்படுத்தியதும், உலகத் தரத்திற்கு ஒப்பான நகரச்சாலைகள், சாக்கடை ஏந்துகள், மேம்பாலங்கள், பூங்காக்கள் முதலியனவுமாகும், கசப்பான செய்தி, மாநகரப் பணிகள் அரசியல் கட்சிகளின் காழ்ப்பு உணர்வுகளால் சில சமயம் செம்மைக் கெட்டு நிற்பதாகும். உள்ளாட்சி வளர்ச்சி காலந்தோறும் காலத்திற்கேற்ப வளர்ந்து கொண்டே வந்து மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற தத்துவத்தில் செயல்படுகிறது. இதனால்தான் கிபி. 1934-ல் வட்டாட்சிக் கழகங்கள் (Taluk Boards) மூடப்பட்டு மாவட்டக் கழகங்களுக்கு (District Ecards) முகாமையளிக்கப்பட்டது. பின்னர் மாவட்டக் கழகங்கள் 1953-ல் மூடப் பட்டு, காலத்திற்கேற்ப வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஏற்பட்டன. இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களே என்ற காந்தியாரின் விருப்பப்படி பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ராச்சியமும் ஏற்பட்டன. ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் விரைந்து வளர்ச்சிப் பெற்றன. 1959.79 காலக்கட்டத் தில் இவற்றிற்கு ஆண்டுத்திட்டங்களும், வலுவான நிதியும் ஏற்பட்டன. 214 தாய்நில வரலாறு ''ரிப்பன் எங்கள் அப்பன்"" என்று இந்தியர் அனைவராலும் போற்றிப் புகழப்படும் ரிப்பன் பிரபுதான் நவீன உள்ளாட்சி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அவர் பாமரப் பொதுமக்களும் ஆட்சிமுறையில் பங்கு பெற்றுப் பயிற்சி பெறுவதே இந்த உள்ளாட்சியின் நோக்கமென்றார். அவருடைய கனவு இன்று முழுமையாக நிறைவேறி விட்டது. வாக்காளர்களுக்குச் சொத்துரிமை இருக்க வேண்டுமென்ற விதி மறைந்து, வயது வந்தோர் எல்லோருக்கும் வாக்குரிமை ஏற்பட்டது. 1909 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சட்டப்படி கிறித்துவர். இசுலாமியர், சீக்கியர் முதலிய சிறுபான்மையினருக்கும், 1919 ஆம் ஆண்டிலேற்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி தாழ்த்தப்பட்டவருக்கும் உள்ளாட்சி மன்றங் களிலும், சட்ட நாடாளும் மன்றங்களிலும் படிநிகராளியம் கொடுக்கப் பட்டது. 1950 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்திலேயே உள்ளாட்சிமுறையும் குறிப்பாகப் பஞ்சாயத்து இராச்சியம் மும் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டன. எனவே இன்று சாதி சமய வேறுபா டின்றி இந்தியர் எவரும் உள்ளாட்சி மன்றங்களில் பங்கேற்கலாம். இத்தகையப் பயிற்சியால் சட்டமன்ற, நாடாளும் மன்றங்களிலும் அமைச்சர், குடியரசுத்தலைவர் போன்ற உயர்பதவிகளிலும் எவரும் வரலாம். எனவேதான், ரிப்பன் சுண்ட கனவு இன்று நனவாகிவிட்டது என்கிறோம். ' இன்னமும் குறிப்பிட்ட இனத்திற்குப்படிநிகராளிகளை நியமனம்" செய்யும் முறையும் உள்ளது.தாழ்த்தப்பட்டவரைப்போலவே மகளிருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல பஞ்சாயத்துக்களில் மகளிரும் தலைவர்களாக உள்ளனர். அதிலும் ஆதி திராவிட மகளிருக்கென்று தனி இடஒதுக்கீடு உண்டு. ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாகச் சாதிப்பிரிவுகள் ளாலும், தீண்டாமையாலும் வாடிய இந்தியர் புதிதாக அரசியல் கட்சிகள்' என்ற பேயால் ஆட்டிப்படைக்கப்படுகின்றனர். சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டும் அரசியல் கட்சிகளின் பெயரால் வேட்பாளர் போட்டியிடுவது நல்லது. உள்ளாட்சி மன்றங்களில் அரசியலை அடியோடு ஒழித்தால் உள்ளாட்சி ஒளிமயமானதாகத் திகழும், விடுதலைக்குப்பின் தமிழகம் (1947 முதல் இன்று வரை) முன்னுரை 1947 ஆம் ஆண்டு ஆகச்டு 15 ஆம் நாள் ஆங்கிலேயரின் அடிமைப் பிடியிலிருந்து பாரதநாடு விடுதலையடைந்தது. ஆனால், விடுதலைக்குப் பின் பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அமைதி யான சூழ்நிலை இல்லை. அன்று தமிழகம் தனித்தியங்கவில்லை. சென்னை மண்டிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆந்திரமும், கேரளத்தின் ஒரு பகுதியும், கன்னடத்தின் ஒரு பகுதியும் இம் மண்டிலத்தில் இணைந்து இருந்தன. எனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா, கன்னடம் ஆகிய மொழி பேசும் மக்களும், சிறுபான்மை மொழியினரும் இங்கிருந்தனர். நாடு விடுதலை பெற்றவுடன் இம் மக்கள் மொழிவழி மாநிலங்கள் பிரிய ' வேண்டுமென விரும்பினர்.பேராந்திரம் விசால ஆந்திரம் வேண்டுமெனக் கோரி ஆந்திரர் முடுக்கமானப் போராட்டம் தொடுத்தனர். இதனை முன் வைத்துப் பொட்டி சிறீராமுலு' என்ற ஆந்திர தேசியவாதி, தன் உயிரையும் விட்டார். கலகம் கட்டுக்கடங்காமல் போகவே ஆந்திரத்தைத் தமிழகத்தி விருந்து தனியே பிரித்து, 1.10.1953-ல் ஆந்திர மாநிலம் உருவாக்கினர். ' , ஆந்திரத்தையடுத்துத் தமிழகத்திலும் ஆந்திரத்தோடும், கேரளத் தோடும் இணைந்து இருந்த சென்னை மண்டிலத் தமிழ்ப்பகுதிகளைப் பிரித்துத் தமிழகத்தோடு இணைத்துத் தனித்தமிழ்நாடு வேண்டுமென வட தமிழ் நாட்டில் தமிழரசுக்கழகம்' தென் தமிழ்நாட்டில் "தாய்த் தமிழக இயக்கம்' முதலியனவும் போராடின. பேரர்ந்திரம் பிரிக்கப்படும்போது சித்தூர் மாவட்டம் முழுவதும் அதனுடன் இணைக்கப்பட்டுவிட்டது, அதிலுள்ள திருத்தணி, திருக்காளத்தி, பல்லவனேறி, கங்குந்திக்குப்பம், சித்தூர் ஆகிய மாவட்டங்களிலும், தமிழர்கள் வசிப்பதால், அவற்றையும் தமிழகத்தோடு சேர்க்கவேண்டுமெனத் தமிழரசுக்கழகம் போராடியது. கடைசியில் சித்தூர் தவிர்த்த மற்றவற்றில் சில பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. இதனால் வடக்கெல்லையில் ஒருவாறு அமைதி ஏற்பட்டது. தெற்கெல்லையில் அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங் கோடு முதலிய இடங்களிலும் திருவிதாங்கூர் மன்னராட்சியின் கீழும் 216 தாய்நில வரலாறு இன்றைய தமிழ்நாடு = மாவட்டங்கள் . 1 - கர் 1. - -- - - - படம் தமிழர்களிருந்தனர். இப்பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்கக்கோரிப் போராட்டம் நடத்திய தாய்த்தமிழ் இயக்கம் அரசின் அடக்குமுறையால் மக்கள் இயக்கமாக மாறி முடுக்கமாகப் போரிட்டது. 1953-ல் பசல் அலி தலைமையிலான மாநில மறு சீரமைப்புக்குழு உருவானது. ஆயினும், போராட்டம் வலுத்தது. கடைசியில் பசல் அலிக் குழுவின் பரிந்துரைப்படி அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு வட்டங்களைத் திருவிதாங்கூரிலிருந்துப் பிரித்து குமரி மாவட்டம் உருவாக்கப்பட்டு அத்துடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டையைத் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைத்தனர். தமிழகத்துடனிருந்த காளை அலிருந்து பட்டன. 231-240 விடுதலைக்குப்பின் தமிழகம் 217 ''மலபார்"' புதிதாகப் பெயரிடப்பட்டுக் கேரளத்தோடு இணைந்தது. திருவிதாங்கூர் கொச்சியுடன் இணைந்தது. இவ்வாறு வடக்கே தமிழரசுக் கழகமும், தெற்கே தாய்த் தமிழ்க் கழகமும் போராடிப் பரந்த தமிழகத்தை 1.11.1956-ல் உருவாக்கின. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொழி வழி மாநில எல்லைகள்" சிக்கலின்றி உருவாக்கப்பட்டன. ', 1பேராயக் கட்சி ஆட்சியின் சாதனைகள் (1947-1967) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி 1937-ல் நடந்த தேர்தலில் பேராயக் கட்சி (காங்கிரஸ் வெற்றிப்பெற்று, 1937 முதல் 1939 வரை 18 திங்கள் சி. இராசகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச் சரவை அமைத்து ஆண்டது. இரண்டாம் உலகப்போரில் இந்தியத் தலைவர்களைக் கலந்தோசிக்காமல் பிரிட்டானியர் இந்தியாவையும் போரிலீடுபடுத்தியதால் எதிர்ப்புத் தெரிவித்து, பேராயக் கட்சித் தானே அமைச்சரவையைக் கலைத்துக் கொண்டது. இதற்குப்பின் 1939 முதல் 1945வரைப் போர்க்கால ஆட்சி அல்லது இடைக்கால ஆட்சி நடந்தது. தேசிய விடுதலைப் போரின் தாக்கத்தால் 1946-ல் தேர்தல் நடந்தது. அதில் பேராயக் கட்சியே வெற்றிப்பெற்று சென்னை மண்டிலத்தில் ஆட்சி அமைத்தது. தெலுங்கரான் பிரகாசம் தலைமையில் 30 4.14-ல் அமைச்சரவை அமைந்தது. மொழிச் சிக்கலால் பேராயக் கட்சியிலும் உட்கட்சிப்பூச்சிலேற்பட்டது. இதனடிப்படையில் பிரகாசம்14.3.1947-ல் பதவி துறந்தார். அவரையடுத்துத் தமிழரான ஓ.பி. இராமசாமி ரெட்டியார் முதலமைச்சரானார். அவர் 2331947லிருந்து 1949 வரை முதலமைச்சர் பதவி வகித்தார். இவர் முதலமைச்சராக இருந்த பொழுதுதான் இந்தியாவுக்கு விடுதலை {75-8-1947) கிடைத்தது. சாதனைகள் இவருடைய ஆட்சிக்காலத்தில் பொதுவுடைமைக்காரர்கள் பல புரட்சிகளைச் செய்தனர். அவற்றை அடக்குவதற்காகவே பொது அமைதிப் பேணும் சட்டம் கொண்டு வரப்பட்டது; உணவுப்பற்றாக் குறையைச் சமாளிக்க நியாய விலைக் கடைகள் ஏற்படுத்தப்பட்டன; காய்கறி உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டது; பாசன ஏந்துகள் அதிகரிக்கப் பட்டன; ஆதிதிராவிடர் நலத்தை மேம்படுத்தத் தொழிலாளர் நலத்" துறையை இரண்டாகப் பிரித்து அரிசன நலத்துறை'யை ஏற்படுத்தினார்; 1947ல் கோயில் நுழைவுச்சட்டம் கொண்டுவந்தார்; புதிய கல்விக் கோட் பாட்டால் மனர்ப்புரக்குழந்தைகளுக்கும் கல்விப் பயன் கிடைக்கப்பெற்றது. , பி. எசு. குமாரசாமிராசா (1949-1952) சாதனைகள் நயன்மைக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ''வகுப்புவாரிப் படிநிகராளிய ஆணை" 1951-ல் உச்ச நயன்மை மன்றத்தால் 218 தாய்நில வரலாறு தள்ளுபடியானது. குமாரசாமிராசாவின் பெரும் முயற்சியால் மீண்டும் அது உயிர்பெற்றது முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956 நிறைவேறியது. இதில் அதிகத் தொகை கல்விக்குச் செலவழிக்கப்பட்டது: "வயதுவந்தோருக்கு வாக்குரிமை" (Adult Suffarage) ஏற்பட்டது. சி. இராசகோபாலாச்சாரியார் (இராசாசி - 1952-1954) 1952-ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. பேராயக் கட்சியே வெற்றிப் பெற்றது. சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சரானார். சாதனைகள் * "குலக்கல்வித் திட்டம்' * கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த கிளர்ச்சிகளால் அது கைவிடப்பட்டது, இந்த எதிர்ப்பின் எதிரொலியாக இராசாசி பதவித் துறந்தார். குலக்கல்வித் திட்டத்தால் பலநூறு பள்ளிகள் மூடப்பட்டன. பல ஆசிரியர்கள் வேலை இழந்தனர். கு. காமராசர் (1954-1963) - இராசாசி பதவி துறந்ததும், தமிழ்நாடுபேராயக் கட்சித் தலைவரான கு. காமராசர் முதல்வரானார். முதன்முறையாக 1958 முதல் 1957 வரை முதலமைச்சர் பதவி வகித்தார். 1957-ல் நடந்த நாட்டின் இரண்டாவது பொதுத் தேர்தலில் பேராயக்கட்சியே மீண்டும் வெற்றிப்பெற்றதால் 1957 முதல் 16 வரை இரண்டாம் முறையாகக் காமராசர் முதலமைச்சரானார், 1952-ல் நடந்த மூன்றாவது பொதுத் தேர்தலிலும் பேராயக் கட்சியே வெற்றிப் பெற்றதால் மூன்றாவது முறையாகக் காமராசரே முதலமைச்ச ரானார். 1952 முதல் 1963 வரை முதலமைச்சராயிருந்து, மூத்த கட்சித் தொண்டர்கள் பதவி விலகிக் கட்சிப்பணிகளைச் செய்ய வேண்டுமெனத் தாளே ஒரு திட்டத்தை வகுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்துவெளி யேறிய அவரை அனைத்திந்தியப் பேராயக் கட்சியின் தலைவராக்கினர். அவருடைய திட்டத்தை அவருடைய பெயராலேயே "காமராசர் திட்டம்" என்றழைத்தனர், சாதனைகள் கல்விப்புரட்சி : சி. இராசகோபாலாச்சாரியார் (இராசாசி) அவர்களால் மூடப்பட்டப் பள்ளிக்கூடங்களைக் காமராசர் திறந்தார்; * "எல்லோருக்கும் கல்வி'' என்ற தன் நெஞ்சார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்த ஆர்தோறும் பள்ளிகளைத் தோற்றுவித்தார். 1955-56-ல் எட்டாம் வகுப்புவரை எல்லோருக்கும் இலவசக் கல்வியளித்தார். 1950-500ல் ஐந்து கல்லுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளித் திட்டத்தின் கீழ் உயர்நிலைப் பள்ளிகளையும் மூன்று கல் சுற்றுவாரத்திற்குள் ஒரு தொடக்கப் பள்ளியும் தொடங்கினார். . விடுதலைக்குப்பின் தமிழகம் - 21 இராசாசியின் ஆட்சிக்காலத்தில் உயர் நிலைப்பள்ளியில் படித்தவர் எண்ணிக்கை 31900 மாணவர்களாகும். காமராசர் ஆட்சிக்காலத்தில் இது 7,15,000 ஆக உயர்ந்தது. காமராசர் கல்விக்குச் செலவிடும் தொகையே நாட்டின் செலவுத் தொகையில் முதன்மையானது. இதைக்கண்ட பொது மக்கள் தாங்களே முன்வந்து ஏழுகோடி உருபா நன்கொடையாக அளித்தனர். சுல்ளிவீடுதோறும் சென்றடைந்தது. 19-5-ல் 40 நர்களில் கட்டாயக் கல்வியைச் செயல்படுத்தினார். முதல் வகுப்பு முதலே ஆங்கிலம் படிக்கச் செய்தார். இதனால் பட்டப் படிப்புப்படித்த ஆசிரியர்கள் அதிகமாக ஆசிரியர் பணியில் அமர்த்தப் பட்டனர். ஆசிரியர் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டது. தொழில்கல்வி, மருத்துவக்கல்வி முதலியன மேம்படுத்தப்பட்டன.கோவையிலும், மதுரை யிலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. ஆசிரியப் பயிற்சிக் கல்லுாரிகள் ஏழிலிருந்து பதினேழாக உயர்ந்தன. ஆசிரியப்பயிற்சிப் பள்ளிகள் 107விருந்து 138 ஆக உயர்ந்தன. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டம் முகாமைப் பெற்றது. அதற்காக அதிகப் பணம் செலவிடப்பட்டது, தமிழ் ஆட்சி மொழியாதல் - கு. காமராசர் இரண்டாம் முறையாகத் தமிழகத்தின் முதல்வரான வுடன் தமிழ் மொழியே தமிழகத்தின் ஆட்சிமொழியானது. அதற்கான ஆட்சிமொழிச் சட்டமுன்வரைவை கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் சட்டமன்றத்தின் முன் வைத்துப் பேசும்போது கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக அறிஞர் பெருமக்கள் அயராது உழைத்ததின் பலனாகவே, இன்று தமிழ் தமிழக நிருவாகத் துறையை ஆளப்போகிறது. அவர்களின் உழைப்பால் இன்றுப் பூத்துக் குலுங்கும் தமிழ் நாளைக் காயாகிக் கனியாகித் தமிழர்களுக்கு இன்சுவை அமுதாய்ப் பயன்படப்போகிறது. இதற்காக, ஆட்சிமுறையில் எப்படி தமிழைச் செயல்படுத்துவது என்பதை ஆய்ந்துரைக்க " ஆட்சி மொழி ஆய்வுக்குழு" ஒன்றை ஏற்படுத்தினோம். அக்குழு, அரசுத்துறைகளில் அலுவலகங்களில் தமிழ்மொழியைச் செயல் படுத்தும் வழிவகைகளை ஆய்ந்து அரசுக்கு அளித்தது" என்றார். முதலில் இக் குழுவினர் தயாரித்த ஆட்சியாளர்கள் (துறையில் . பணியாற்றுவோர்) கையாளும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை உருவாக்கி * ஆட்சிச்சொல் அகராதி" (Glossary of Administrative Terrms) (English-Tamil) என்ற ஒரு நூலாகத் தமிழக அரசு 1966-ல் வெளியிட்டது. இதனை மேலும் செம்மைப்படுத்தி, அடுத்து வந்த திமுக அரசும் வெளியிட்டது. ஆட்சிமொழித் திட்டச் செயல்பாடு தமிழை ஆட்சி மொழியாக ஆக்கும் சட்டத்தைப் பேராயக் கட்சி ஆட்சி 1957 ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 21 ஆம் நாள் கொண்டுவந்தது. 22] தாய்நிலவரலாறு இச் சட்டத்தைச் செயல்படுத்த அரசு ஒரு குழுவை அமர்த்திச் செயல்முறை நடவடிக்கைகளை அளிக்கச் செய்தது. இக் குழுவின் முயற்சியால் வெளி யிடப்பட்டதே மேலே கூறப்பட்ட ''ஆட்சிச் சொல் அகராதி"யாகும். அடுத்து, ஆட்சி அலுவலகங்களிலுள்ள எழுத்தர்கள், பிரிவுத் தலைவர்களுக்கு இதுவரையில் ஆங்கிலத்தில் எழுதி வந்த முறையை மாற்றி எப்படித் தமிழில் எழுதுவது யென்பதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுவரை ஆங்கிலத் தட்டச்சுக்களே பயன்படுத்தப்பட்டன. அவற்றிற்கு ஈடாகத் தமிழ்த் தட்டச்சுக்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ் தெரியாத பணியாளர்களுக்குத் தமிழில் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தகைய மாற்றத்தின்போது பணியாளர் சுளுக்கு ஐயம் ஏற்படாமலிருக்கச் சரியான தமிழ்க்கோப்புகளைத் தயாரிக்க அலுவலகங்களிலேயே மொழிபெயர்ப்புப் பிரிவு" (Tarislation Sction) ஏற்பட்டது. 1955ஆம் ஆண்டிலேயே ஆங்கிலச் சுருக்கெழுத்து முறையைப் போலவே தமிழ்ச் சுருக்கெழுத்து முறை வெளியிடப்பட்டது. இதை நடை முறைப்படுத்த அரசே இதற்காக ஒரு சிறந்த பயிற்சி நிலையத்தை உருவாக்கியது. இதனால் தமிழ்ச் சுருக்கெழுத்தாளரும், தட்டச்சாளரும் பெருமளவில் அலுவலகப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மாநிலத் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பெறும் பணியாளர் களுக்குத் தமிழில் கோப்புகளைத் தயாரித்தல், தமிழில் தட்டச்சு செய்தல் முதலியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டன. நடுவண் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் இந்திய ஆட்சிப்பணியாளர்கள் (IAS) இந்தியக் காவல் துறைப் பணியாளர்கள் (I.P.S), முதலியோருக்கும், வேற்றுமொழிப் பணியாளர்களுக்கும் ஆட்சித் துறையில் தமிழில் படிக்கவும், எழுதவும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசுப்பணியில் சேருவதற்குப் போதிய தமிழறிவு இருக்க வேண்டுமென்றும் அரசு ஆணை பிறப்பித்தது. 1957-ல் தமிழக அரசுப் பணியில் புதிதாகச் சேருவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், மாற்றுப் பணியில் சேருவதற்கும் மாநில அளவு தமிழ் அறிவுத் தேவையெனும் ஆணை பிறந்தது. அதற்கானத் துறைத்தேர்வும் நடத்தப்பட்டது. 1961 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் இந்துச்சமய அற நிலைய ஆட்சித் துறையின் துணை ஆணையர் அலுவலகங்கள், மீன் வனத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பதிவுத்துறையில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட உயர்நிலை அலுவலகங்களிலும், நிதித்தணிக்கைத் துறையிலும், தமிழில் அலுவல்கள் நடைபெறத் தொடங்கின. 1961 ஆம் ஆண்டு முதலே மாவட்ட நிலையில் அமைந்துள்ள பல்வேறு துறைகளிலும், சார்நிலை அலுவலகங்களிலும் தமிழில் அலுவலகப் பணிகள் தொடங்கிவிட்டன. 1953-ல் 38 துறைகளில் தமிழ் ஆட்சிமொழியானது. விடுதலைக்குப்பின் தமிழகம் 221 இவ்வாறு, முதலில் மாவட்ட அளவிலான அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டுப் பின்னர் படிப்படியாக துறைத் தலைமை அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் செயல்படத் தொடங்கியது. செயல்முறை (நான்கு நிலைகள்) முதல்நிலை துறைத்தலைவர்களிடமிருந்து பொதுமக்களுக்கு அனுப்பப்பெறும் கடிதத் தொடர்புகள் தமிழில் எழுதப்பெற்றன. இதற்காகத் துறைத் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தட்டச்சுப்பொறி இருந்தது. இரண்டாம் நிலை துறைத் தலைமை அலுவலகத்திற்கும் சார்நிலை அலுவலகங்களுக்குமிடையில் தமிழில் கடித்து தொடர்புகள் ஏற்பட்டன. மூன்றாம் நிலை துறைத் தலைமை அலுவலகங்களுக்கிடையே கடிதத் தொடர்புகள் தமிழில் ஏற்பட்டன. நான்காம் நிலை துறைத் தலைமை அலுவலகங்களுக்கும் தலைமைச் செயலகத்திற்குமிடையில் கடித்த் தொடர்புகள் தமிழில் ஏற்பட்டன. இத்தகைய நான்கு நிலைகளிலும் தமிழ்வழி ஆட்சி அலுவல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்தொரு படிமுறை வளர்ச்சியினடிப் படையில் ஆட்சிமொழி வலுபெற்றதெனலாம். எனவே, முரட்டுத் தனமாகவும், விடாப்பிடியாகவும் அரசு ஆட்சிமொழித் திட்டத்தை நடை முறைப்படுத்தவில்லை . இதிலும் சில விதிவிலக்குகளும் இதில் கையாளப் விதிவிலக்குகள் 1. பணப்பட்டியல்கள், சம்பளப் பட்டியல்கள், கருவூலங்கள், மாநிலக் கணக்காயர் அலுவலகம், சம்பளக் கணக்கு அலுவலகம் ஆகியவற் றுடன் மேற்கொள்ளும் கடிதத்தொடர்புகள் ஆங்கிலத்தில் இருக்கலாம். சார்நிலை அலுவலகங்கள் துறைத்தலைமை அலுவலகங்களுட னும், மாநில அரசுடனும் ஊர் நயன்மை மன்றம் நீங்கலாகப் பிற நயன்மை மன்றங்களுடனும் மேற்கொள்ளும் கடிதத் தொடர்புகள் ஆங்கிலத்தில் இருக்கலாம். 3. மேல்முறையீடுகள் தொடர்பான சட்ட ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்கலாம். 4. நடுவண் அரசு, அயல்நாடுகள், அயல் நாட்டுத் தூதரகங்கள், அயல் நாட்டவர் அயல்நாட்டு நிறுவனங்கள், பிற மாநிலங்கள் முதலிய வற்றுடன் கொள்ளும் தொடர்புகள் ஆங்கிலத்திலிருக்கலாம். 5. தொழில்நுட்பச் செய்திகள் ஆங்கிலத்தில் இருக்கலாம். 117 தாய்நில வரலாறு ஆட்சிமொழிக் குழுவின் பணிகள் 1. தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை அரசு அலுவலகங்களில் செயல்படுத்த ஆவன செய்யவும், அரசாணைகள் அறிக்கைகள், அறிவுறுத்தல்கள் வெளியிடவும் இக்குழு ஆவன செய்தது. 2 பல்வேறு சுற்றறிக்கைகளைப் பிறப்பித்துத் தமிழ் ஆட்சிமொழித் " திட்டத்தை வளர்த்தது. 3. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சட்டங்கள், விதிகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தது. 4. தமிழ்த் திட்டம் செயல்படுத்தப்படும் அலுவலகங்களின் செயல் பாட்டு நிலைகளை ஆய்வு செய்து அறிவுரை நல்கியது. 5. ஆட்சிமொழிக்குழுவின் தலைவராயிருந்தவரையே மாநில முழுமைக்கும் தனி அலுவலராக அமர்த்தினர். பின்னர் இப் பதவி இயக்குநர் பதவியாக (Director of Tamil Levelopment) மாறியது. இவர் அனைத்திந்தியப் பணியாளராவார். இவருக்குக் கீழ்ப்பல அலுவலர் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகள், ஆய்வுப் பணிகள் முதலியவற்றை மேற்கொண்டனர். சங்க காலத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழ் காலப்போக்கில் நிலைமை இழந்து பாலி, சமற்கிருதம், பாரசீகம், அராபி, உருது, போர்த்து கீசிய, ஆங்கில மொழிகளால் தாக்குண்டது. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு பரந்த நிலப் பரப்பில் ஆட்சி அமைப்புச் சீர்படுத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மொழி ஆங்கிலமாகவே இருந்தது. மேலை நாட்டுக் கல்விமுறை யால் அனைவரும் கல்விக் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் தாழ்ந்தது. 1835-ல் மெக்காலேபிரபு இந்தியருக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்கச் செய்தார். ஆங்கிலக் கல்வியால் மேநாட்டு ஆட்சிமுறை, அறிவியல், பண்பாடுகள் இந்தியரால் அறியப்பட்டன. இதனால் தாய் மொழிப்பற்று மேலிட்டது, தமிழறிஞர்கள் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமெனவீரிட்டெழுந்தனர், சமற்கிருதம் தமிழைத் தன் மயமாக்கிக் கொண்டதை மாற்றித் தனித்தமிழைஉயிர்ப்பிக்கச் செய்தனர்.பரிதிமாற் கலைஞர், திருவிக வேத நாயகம் பிள்ளை , மறைமலை அடிகளார், பாரதி, பாரதிதாசன் சோம் சுந்தர பாரதியார், காசுபிள்ளை , விபுலானந்தர் முதலிய எண்ணிறந்த தமிழறிஞர்கள் தமிழை அரியணையேற்றப் பாடுபட்டனர். பல கழகங்களும், பல இயக்கங்களும் தமிழை ஆட்சிமொழியாக்க முடுக்கமாய்க் கிளம்பின.காலமும் கனிந்தது. 1920 ஆம் ஆண்டிலேற்பட்ட இரட்டை ஆட்சிமுறையில் மக்களின் படிநிகராளிகள் நாட்டை ஆளத் தொடங்கினர். சட்டமன்றங்களில் தமிழ்க் குரல் ஒலித்தது. தமிழில் சட்டமன்றங்களில் பேசத்தொடங்கினர். இன்றியமையாத சில சட்டங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டன. "மொழி விடுதலைக்குப்பின் தமிழகம் 223 வழி மாநில ஆட்சி" என்ற கருத்துச் சட்டமன்றத்தில்1927லேயே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 1937-லிருந்து 1939 வரை சி. இராசகோபாலாச்சாரியார் பேராயக் கட்சியின் முதலமைச்சராக தமிழகத்தில் பதவியில் இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓரியா ஆகியவை சென்னை மண்டிலத் திலிருந்தாலும் ஆட்சி மொழிதாய்மொழிதான்" என்பது அப்பொழுது உறுதியாயிற்று. இந்திய விடுதலைக்குப்பின் 1956-ல் ஆந்திரம் மொழியினடிப் படையில் பிரிந்தது. 1956-ல் "மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. சி. இராசகோபாலாச்சாரியார் முதல்வராயிருந்த போது திருச்சி மாவட்டத் தில் 1952ல் முன்னோடித்திட்டமாகத் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தள்ளிப் போடப்பட்டது. 1956-ல் கு. காமராசர் முதல்வராயிருந்தபோது, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல் படுத்தினார். 1957 வரைப் பேராயக் கட்சி ஆண்ட காலத்திலேயே மேற்கண்டவாறு ஆட்சி மொழியாகி, வலுப்பெற்று விட்டது தமிழ். பொது சுகாதார மேம்பாடு காமராசர் காலத்தில் இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பெற்றன. 1951-ல் குமுகாய நலக்கழகம், மகளிர் நலக்கழகம், ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டன. பின்னர் இஃது ''குமுகாய நலத்துறை"(Social Welfare Department) எனும் ஒரே துறையாகச் செயல்பட்டது. இவர் காலத்தில் 1959-ல் * இந்து அறநிலையச் சட்டம்" திருத்தி அமைக்கப்பட்டது. இச் சட்டத்தால் அர்ச்சகர் பதவி பரம்பரை உரிமையாக்கப்பட்டது." (அ) வேளாண்மை பொருளாதார மேம்பாடு: தமிழக மக்கள் தொகையில் 50 விழுக்காடு வேளாண்மையிலும், மீதமுள்ள 40 விழுக்காடு பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப விலைநிலங்கள் இல்லை. வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 43 விழுக்காட்டினர் வேளாண் கூலிகளா யுள்ளனர். காரணம் போதிய நிலவுடைமைக்காரர்கள் இல்லை . 1948-ல் "பெருநில உடமைக்காரர் ஒழிப்புச் சட்டம் '' (ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதாலும், 191ல் நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதாலும் தமிழகத்தில் ஓரளவுஉழவர்கள் எண்ணிக்கை அதிகரித் தது. 1948, 1959 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட "பண்ணையாள் கூலி நிர்ணயச் சட்டங்கள்'', 1952, 195ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப் பட்ட "உழவர் நலச் சட்டங்கள் ஆகியவை உழவர்களின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் மேம்பாடு அளித்தன. 174 தாய்நில வரலாறு முதல், இரண்டு, மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் உணவு உற்பத்திக்கு முதலிடம் அளித்ததால் அத்திட்டங்களின் முடிவில் முறையே 3094, 5,000 கல்லெடைடன் தவச உற்பத்தி ஏற்பட்டது. இக்கால வேளாண்மை முறையில் நவீன முறைகள் கையாளப்பட்டன. வேதியியல் முறையில் தயாரான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பொறுக்கு விதைகள் முதலியன பயன்படுத்தப்பட்டன. தீவிர வேளாண்மைத் திட்டம் இத்திட்டம் போர்டு அமைப்பின் ஒரு வழிகாட்டிடத்திட்டமாகும். சோதனை முறையில் தஞ்சை மாவட்டத்தில் 1950-ல் இத் திட்டம் தொடங்கப்பட்டது. ஏனென்றால் இம் மாவட்டத்தில்தான் 14 இலக்கம் குறுக்கத்தில் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகின்றது. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு நெல் இம்மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. தனிப்பட்ட குடியானவன் முதற்கொண்டு ஊர், மாவட்டம், மாநிலம், நடுவண் ஆட்சிகள் வரை கூட்டுறவு முறையில் உணவு உற்பத்திப் பெருக்கும் முறைகளைக் கையாண்டு உணவு உற்பத்தியைப் பெருக்குவதே இந்தத் தீவிர வேளாண்மைத் திட்டத்தின் முகாமை நோக்கமாகும். குடியானவனின் ஆண்டு வருமானத்தை அதிகரிக்கச் செய்து அதன்வழி அவன் வாழும் பலரின் வருமானத்தையும் அதிகப்படுத்தினால் வேளாண் சமைத் துறையின் பொருளாதாரம் மேம்படுவதோடு ஒவ்வொரு ஊரும் தன்னிறைவுப் பெறுமென்பதும், இதனால் வேளாண்மையில் மக்களுக்கு நணக்கம் ஏற்படும் என்பதும் இத்திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டத் தினால் உற்பத்தி 20 விழுக்காடு வரை அதிகரிக்குமென்று கணக்கிடப் பட்டது. விவசாயக் கடனுதவி வேளாண்மையை காக்குவிப்பதற்காக வேளாளருக்குக் கடனுதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1956-ஆம் ஆண்டுகளில், அதாவது இரண்டாவது ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 20 கோடி ரூபாய் தமிழக விவசாயிகளுக்குக் கடனளிக்கப்பட்டது. 1962 முதல் இதுவே எண்பது கோடியாக உயர்த்தப்பட்டது. இதனை அரசிடமிருந்து பெறும் வழிவகைகள் எளிதாக்கப்பட்டன. நீர்ப்பாசன ஏந்துகள் வேளாண்மைக்கு உயிர்நாடியான நீர்ப்பாசனம் தமிழகத்தில் காமராசர்காலத்தில் அதிகப்படுத்தப்பட்டது. நீர்ப்பாசனங்கள் 1. கீழ்பவானித் திட்டம் இத் திட்டத்திற்காக உருபா பத்து கோடி செலவிடப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் இரண்டு இலக்கத்து ஏழு ஆயிரம் குறுக்கம் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்றது. விடுதலைக்குப்பின் தமிழகம் 225 -- - 2. மேட்டூர் கால்வாய்த் திட்டம் இத் திட்டத்திற்காக அரசு 195 இலக்கம் உருபா செலவிட்டது, இதனால் சேலம், கோவை மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் குறுக்கம் நிலப்பரப்பு பயனடைந்தது. இஃது 1959-ல் சுட்டி முடிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தால் மதுரை மாவட்டத்தில் 2000 குறுக்கம் நிலப்பரப்புப் பாசனம் பெற்றுப் பயனடைகிறது. இதற்காக அரசு 330 கோடி உருபா செலவிட்டது. 4. அமராவதி நீர்த்தேக்கம் 1957-ல் திறக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்திற்கு அரசு 29 உருபா செலவிட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் 17,000 குறுக்கம் நிலப்பரப்புப் பாசனம் பெறுகிறது. 5. சாத்தனூர் அணை திருவண்ணாமலை வேலுார் முதலிய மாவட்டங்களுக்கு II,000 குறுக்கம் நிலப்பரப்புக்கு இவ்வணையின் நீர் பயன்படுகிறது. இதனை 1957 ஆம் ஆண்டு நவம்பரில் சுட்டி முடித்தனர். இதற்கான செலவு 1243 கோடி உருபா ஆகும். 6. கிருட்டிணகிரி நீர்த்தேக்கம் சேலம் மாவட்டத்திற்குப் பயன்படும் இத்திட்டத்திற்கு அரசு உருபா 2253 கோடி செலவிட்டு 1957ல் கட்டி முடித்தது. இதனால் ஓரகுறுக்கம் நிலப்பரப்புப் பயனடைகிறது. மேற் கூறியவற்றைத் தவிர மணிமுத்தாறு திட்டம், 1958-ல் முடிக்கப் பட்டது. இதற்குக5 கோடி உருபா செலவானது. இதனால் 30000 குறுக்கம் நிலப்பரப்புப் பயனடைகிறது. ஆரணியாறு திட்டம் யென்பது செங்கை மாவட்டத்திற்குப் பயன்படும் திட்டமாகும், காவிரி வடிகால் மேம்பாட்டுத் திட்டம் 1956-57ல் முடிந்து பெரும் பயனளிக்கிறது. 1957க்குப் பிறகு, கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடிக் கால்வாய் ஆசிய கால்வாய்த் திட்டங்கள் முடிக்கப்பட்டன. 1959-ல் முடிக்கப்பட்ட இத் திட்டங்களால் 9000 குறுக்கம் நிலப்பரப்பு பயனடைந்தது. 1959-ல் முடிவுற்ற வீடூர் அணைத்திட்டம், தமிழகத்தில் 2,200 குறுக்கம் நிலப்பரப் புக்கும், புதுவையில் 1,000 குறுக்கம் நிலப்பரப்புக்கும் பயன்படுகிறது. பரம்பிக்குளம் - ஆளியாறு திட்டம் உருருடா 50 கோடி செலவில் முடிந் துள்ளது. இதனால் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் முதலியவற்றிற்கு வேளாண்மைக்குப் பயன்படுவதோடு மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது, இவற்றைத்தவிர குமரி மாவட்டத்தில் 13 கல் நீளத்திற்கு நெய்யாறு கால்வாய்த் திட்டம் 200 குறுக்கம் நிலப்பரப்பில் பயிராகும் வேளாண் மைக்கு உதவுகிறது. 216 தாய்நில வரலாறு சிறிய நீர்ப்பாசனங்கள் மேலே குறிப்பிட்ட பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களைத் தவிர பல் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும் காமராசர் ஆட்சிக் காலத்தில் நிறை வேறின. தமிழகத்தில் தோராயமாக 27,000 ஏரி, குளங்கள் உள்ளன. அவற்றைச் சீர்படுத்தக் காமராசர் காலத்தில் உருபா எட்டு கோடி செலவானது. குறிப்பாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்குமுன் (1951-1956) பழைய ஏரிகளும், குளங்களும் சீர்படுத்தப்பட்டன. புதிய கிணறுகள் வெட்டப்பட்டன, மேலும், வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கு வேண்டிய நீர் இரைக்கும் இயந்திரங்கள் தாராளமாகக் கொடுக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் உள்ள பயிரிடப்படும்150 குறுக்கம் இலக்கம் நிலத்தில் மூன்றிலொருபங்கு நிலையாகப் பயிரிடும் வகையில் நீர்ப்பாசன ஏந்துகள் உள்ளன. ஆற்று நீர்ப்பாசனம் தோராயமாக 150 இலக்கம் குறுக்கம் நிலப்பரப்பில் நடக்கிறது. (ஆ) தொழில் மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைக்கு அடுத்து மிகவும் முகாமை வாய்ந்தது தொழில் வளர்ச்சியாகும். தொழில்கள் யாவும் நவீன தொழிற்சாலைகளில்தான் வளர்ச்சி அடைகின்றன. எனவே அதனைக் கனரகத் தொழிற்சாலைகள் வளர்ச்சி யென்றும், சிறுரகத் தொழிற் சாலைகள் வளர்ச்சியென்றும், பிரித்தறியலாம். இவை இரண்டுமே அரசே ஏற்று நடத்தும் தொழிற்சாலைகளென்றும், தனியார் ஏற்று நடத்தும் தொழிற்சாலைகளென்றும் பிரித்தறியலாம். எனவே, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இந்தியாவிலே மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 1955-ல் இராமநாதபுரம் ஆலங்குளத்தில் தமிழகத் தொழில் வளர்ச்சி நிறுவனம் தொடங்கத் திட்டமிடப்பட்டது. 1970-ல் இங்குச் சிமெண்டு தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 47 தொழில் திட்டங்களைக் கொண்டுள்ளது. முதல் ஐந்தாண்டுத் திட்டக் - காலத்தில் உருபா 12 இலக்கமும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் உருபா 396 இலக்கமும் சிறுதொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கப் பட்டன. இரண்டாம் இந்தாண்டுத் திட்டக் காலத்தில் உருபா 154 இலக்கத்தில் தொழில் பேட்டைகளை உருவாக்க ஒதுக்கப்பட்டன. அத்தகைய தொழிற்பேட்டைகள் கிண்டி, விருதுநகர், நெல்லை, மார்த்தாண்டம், மதுரை, திருச்சி, காட்டுப்பாடி, சேலம், அம்பத்தூர் முதலிய இடங்களில் உருவாக்கப்பட்டன. கைத்தறிகள் தமிழகத்தில் மொத்தம் 427 இலக்கம் கைத்தறிகள் உள்ளன. 1956-ல் * 'கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்"" ஏற்பட்டது. இதில் 357 இயக்கம் 241-250 விடுதலைக்குப்பின் தமிழகம் கைத்தறிகள் 1400 முகாமைக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்பட்டன. அரசு நெசவாளர் மேம்பாட்டிற்காக ஆண்டொன் றுக்கு உருபா 154 இலக்கம் ஒதுக்கியது. குடிசைத் தொழில்கள் குடிசைத் தொழில் மேம்பாட்டிற்காக அரசு குடிசைத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம்" ஒன்றை 1960-ல் தொடங்கியது. இதன் . வழி பல ஆயிரம் வளர்ப்புர மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. சலைப் போக்குவரத்து பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுவது சாலப்போக்கு வரத்து ஆகும், கர்ப்புரங்களையும், நகர்ப்புரங்களையும் இணைக்கவும், சந்தைகளை வளர்க்கவும் சாலைப் போக்குவரத்து இன்றியமையாத தாகிறது. இதன் மேம்பாட்டிற்காக அரசு "தமிழ்நாடு சாலைப் போக்கு வரத்துக்கழகம்" என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியது. காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மொத்தம் 170இலக்கம் கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு பேருந்துகள் ஓடின. தொழிற் சங்கங்கள் தொழிற் வளர்ச்சி யென்பது தொழிற்சாலைகளின் வளர்ச்சி என்பதைக் கண்டோம். இயந்திரத்தால் அவை இயக்கப்பட்டாலும், தொழிலாளர்களே இதனை இயக்கினர். எனவே, தொழிற்பேட்டை களைப்போலவே தொழிலாளர் குடியிருப்புகளும் பெருகின. அவர்களின் முன்னேற்றத்திற்கென முதலாளிகளை அல்லது அரசைக் கேட்டுப்பெறத் தொழிற்சங்கங்கள் ஏற்பட்டன. அவை தொழிலாளர் ஒற்றுமை, முன்னேற் றம் முதலியவற்றோடு நாட்டுடைமைவளம், முன்னேற்றம், ஒருமைப்பாட் டிற்கும் பாடுபட்டன. தொழிற்சாலைச் சட்டங்கள் பலவும் தோன்றின. தமிழ் நாட்டில் தொழிற்சங்கங்களின் தந்தையெனப் போற்றப்படு பவர்கள் என்எம், சோசி, பிபி, வாடியா, ஏசி.சி. அந்தோனிப்பிள்ளை , திரு.வி.க, எம்.சி. இராசா முதலியோராவர். தமிழ்நாடு அளவிலும், தேசிய அளவிலும், உலக நாடுகள் அளவிலும் தொழிலாளர் சிக்கல்களைப் பேசத் தாளிகைகளும், அரசியல் கட்சிகளுமிருக்கின்றன. தொழிலாளரே தொழிற் சங்கத் தலைவராக இருப்பதே நலம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருத்தல் மிக, மிகநலம். பிற்பட்டோர் மேம்பாடு பிற்பட்டோர் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, அவர்களுக்குள் ளேயே மிகவும் பிற்பட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்குச் சலுகை களைக் கொடுத்தவர் காமராசர்.பேராயக் கட்சி ஆட்சிக்குப்பின் ஏற்பட்ட தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.கருணாநிதி இதற்கென ஒரு ஆணையத்தை அமர்த்தி அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி, பிற்பட்டோர் நலத்துறை யைச் சட்டப்படி அமைத்தார். 115 தாய்நிலவரலாறு காமராசர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்பட்டோருக் கும், மிகவும் பிற்பட்டோருக்கும் வேறுபாடின்றிக் கல்விச் சலுகைகளும், அரசுப்பணிகளில் படிப்பு வயதுவரம்பு முதலியவற்றிலும் சமமாகவே நன்மை ஏற்பட்டது. பிற்பட்டோரில் 54 சாதியினர் மிகவும் பிற்பட்டோர் (Most Backward) எனக் கண்டறிந்து தனிச் சலுகைகள் வழங்கப்பட்டன. இவர்களில் ஆங்கில அரசால் குற்றப்பரம்பரையினர் (Criminal Tribes) எனக் குறிக்கப்பட்டவர்களையும் அரசுப்பணிகளில் முழுமையாக இடம்பெறச் செய்தார், மீனவர் நல மேம்பாடு மீனவர்கள் மிகவும் பின்தங்கியவர்கள். அவர்களின் மேம்பாட்டிற் காக்குறைந்த விலையில் 'பாப்லோ முறை இயந்திரப் படகுகள்' வாங்கித் தரப்பட்டன; இதைப் போலவே நைலான் மீன்பிடி வலைகளும் மலிவு விலையில் கொடுக்கப்பட்டன. இத்தோடு உருபா 36 இலக்கம் நிதி அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. நாகப் பட்டினம், கடலூர், இராயபுரம், லீபுரம் ஆகிய துறைமுகங்களில் மீன் துறைகள் கட்டப்பட்டன. பிடித்த மீன்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைக்க ஆங்காங்கே குளிர்சாதன அறைகள் கட்டப்பட்டன. அரசிதழ்பெறாத அரசு ஊழியர் மேம்பாடு (N.G.0) இவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளி இறுதிப்படிப்புவரைக் கட்டண மில்லாமல் படிக்கவழி செய்யப்பட்டது. இவ்வூழியர்களுக்குத் திங்களூதியம் 172 ரூபாய் அதிகரித்துத் தரப்பட்டது: இலவச மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. காவல்காரர்களுக்கு (Police) கோடி ருபாயில் 3500 வீடுகள் கட்டித்தரப்பட்டன. பொதுவாக அரசு ஊழியருக்கு வழிய ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வும், ஓய்வு ஊதியமும் அளிக்கப்பட்டன. சேரி சீரமைப்புத் திட்டம் விரிவுபடுத்துதல் 1958 வரை சேரி சீரமைப்புத் திட்டம் சென்னை நகரில் மட்டுமே இருந்தது. 1959-50-ல் இத் திட்டத்தை மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்களுக்கும் அரசு விரிவுபடுத்தியது. இதற்காக 195ஆம் ஆண்டு வரை உருபா 150 கோடி செலவிட்டது. மொத்தம் 57] மனைகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. குடிசைகளுக்கு மாறாக 200 வீடுகள் புதிதாகக் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதைப்போலவே, நெசவாளர்களுக் கும், குறைந்த வருமானமுள்ளவருக்கும், தொழிலாளர்களுக்கும் வீடுகள் சுட்டிக் கொடுக்கப்பட்டன. முடிவுரை காமராசர் ஆட்சியில்தான் 14.1.1958-ல் தமிழ் ஆட்சிமொழியானது. தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் * "தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக்குழு" ஏற்பட்டது: விவசாயிகள் நலனுக்காக 50க்கும் மேற்பட்ட சட்டங்கள் விடுதலைக்குப்பின் தமிழகம் 110 கொண்டுவரப்பட்டன; இவற்றில் நில உச்ச வரம்புச் சட்டம் முகாமை யானது; "கல்விக்குக் காமராசர்'' என்ற வாக்கு உண்மையானது. எம். பக்தவத்சலம் (1963-1967) 'காமராசர் திட்டப்படி 'காமராசரே 20.1963ல் பதவி விலகியவுடன் எம் பக்தவச்சலம் தமிழக முதல்வரானார். இவரே பேராயக் கட்சியின் கடைசி தமிழக முதல்வராவார். இவருடன் பேராயக்கட்சி, தமிழக அரசியலின் ஆளுமையிலிருந்து மறைந்துவிட்டது.. சாதனைகள் இவருடைய காலத்தில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (1961-66) செயல்பாட்டிற்கு வந்தது. கல்வியில் தமிழ்நாடு சிறந்த முன்னேற்றமடைந்தது. கல்வித்துறை இவரிடமே இருந்தது. வருமான உச்சவரம்பு இல்லாமல் எல்லா மாணவருக்கும் பள்ளி இறுதி வகுப்புவரை இலவசக் கல்வியளித்தார், காமராசர் காலத்தில் தர மக்கள் தொகையுள்ள ஊர்களில் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பக்தவத்சலம் 300 மக்கள் தொகையுள்ள ஊர்களிலெல்லாம் உயர்நிலைப் பள்ளிகளைத் தொடங்கினார். தொழில் நுட்பப்பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் தொடங்கினார். சேலத்தில் புதிய பொறியியல் கல்லூரியைத் தொடங்கினார். திருச்சிராப்பள்ளியில் வட்டாரப் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. மூன்றுகள் சுற்று வட்டாரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளியைத் தொடங்கிய காமராசர் அடிச்சுவட்டைப் பின்பற்றி இவர் ஒருகல் சுற்று வட்டாரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார். அவற்றில் 41 ஆசிரியர்களைப் புதிதாக அமர்த்தினார். ஆசிரியைகளுக்கு ஊர்ப்புறங்களில் 750 குடியிருப்புகளைக் கட்டினார். ஆசிரியர்களின் ஓய்வு பெறும் அகவையை 55லிருந்து 58 ஆக அரசு ஊழியர்களுக்கு இருப்பதைப் போலவே உயர்த்தினார். புதிதாக ஐந்து அரசுக் கலைக் கல்லூரிகளைத் தொடங்கினார், ஆறு தனியார் கல்லுாரிகளைத் தொடங்க அனுமதி அளித்தார். மாலை நேரக் கல்லுாரிகளும் தொடங்கப்பட்டன. செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லுாரிகள் தொடங்கப்பட்டன, தி.2. 16-ல் மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஏன் சிறப்பிழந்து வீழ்ந்தார்? காமராசர் அடியொற்றிக் கல்வி வளர்ச்சியில் சாதனைப் படைத்த பக்தவத்சலம் ஏன் மக்களால் பழிக்கப் பட்டார்? பேராயக் கட்சியின் ஆட்சியே அடிச்சுவடு அற்றுப்போகக் கரணியமாக ரன் அமைந்தார்? அவர் செய்த ஒரே தவறு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1964-ல் மாணவரிடையேயும், மக்களிடையேயும் வெறுப்பைத் தேடிக்கொண்டதேயாகும். 23) தாய்நில வரலாறு இந்தி, நாடாளும் மன்றத்தில் ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்று ஆட்சி மொழிச் சட்டத்தால் ஆட்சி மொழியானது. ஆனால், பக்தவத்சலம் அதனைச் சுட்டாயப்பாடமாக்கினார். இதனை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த மொழிப்போரால் சட்டம், ஒழுங்கு கெட்டது. நடுவண் ஆட்சியில் அமைச்சர்களாயிருந்த சி. சுப்பிரமணியம், ஓவி, அழகேசன் ஆகியோரும் பதவி துறந்தனர். தந்தை பெரியாரின் திராவிடக் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஒட்டுமொத்த மாணவர்களும், பொது மக்களும், மொழிப்போரில் இறங்கினர். அண்டை மாநிலங்களிலும் மொழிப்போர் பரவியது. அரிசிப்பற்றாக்குறை மறுபுறம் மக்களை வாட்டியது. இந்தச் சூழலில் 19 ஆம் ஆண்டு பிப்பிரவரியில் பொதுத் தேர்தல் வந்தது. இதில் திமுக, கூட்டணி வெற்றிப் பெற்று அமைச்சரவை அமைத்தது, முடிவுரை பேராயக்கட்சி நாட்டின் விடுதலைக்குப் பல் ஆயிரம் இன்னுயிரை ஈந்தது. எனவே, விடுதலைப் பெற்ற நாட்டில் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றில் மிக அக்கரையோடு கறைப்படாதகைகளோடு அமைச்சர் களும், பிறரும் பாடுபட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக ஐந்தாண்டுத் திட்டங்கள் அமைந்தன. தமிழகத்தின் தவப்பயனாகக் கருமவீரர் காமராசர் தொடர்ந்து மூன்றுமுறை முதல்வராகி முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினார். [1951-56, 1956-1951, 1951 197) மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பின்பாதியில் பக்தவத்சலம் முதல்வரானார். அவரும் காமராசரைப் பின்பற்றியே தமிழகத்திற்குத் தொண்டாற்றினார்.காலச்சூழலையும், மக்கள் மனநிலையும் பொருட்படுத் தாமல் இந்தியை நுழைத்துவிட்டு, வெளியேறினார். பேராயக் கட்சியின் ஆட்சியில் 1946முதல் 17 வரையிலானக்காலக் கட்டத்தில் தமிழகம் கல்வியில் மிக உயர்ந்த நிலையை எட்டியது: பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றமடைந்தது. குமுகாயத்திலும் முன்னேறியது. I திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் சாதனைகள் (1967 - 1976) கா. ந. அண்ணாதுரை (சி.என். அண்ணாதுரை) (6.3.1969) 1957-ல் நடந்த ஐந்தாவது பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. கா.ந. அண்ணாதுரை முதல்வ ரானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் மறைந்தார். அவர் ஆண்ட இரண்டே ஆண்டுகளில் பல சாதனைகளைப் புரிந்தார். சாதனைகள் ஆந்திரமும், கன்னடமும், கேரளமும் தனித்தனியே ட ரிந்துவிட்டப் பின்னும் தமிழகம் மட்டும் சென்னை மண்டிலம் (மாகாணIE என்றே விடுதலைக்குப்பின் தமிழகம் - 231 அழைக்கப் பெற்றது. அண்ணா இதனை மாற்றித் தமிழ் நாடு' என்று பெயரிட்டார், தமிழ் கூறும் நல்லுலகம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டில்தான் ''தமிழ் நாடு' எனப் பெயர் பெற்றது! 1955 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்துத்திருமணச் சட்டம்" என்பதைத் திருத்தி சுயமரியாதைத் திருமணச் சட்டம் யென வெளியிட்டார். தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1925-லிருந்து நடத்தி வைத்தத் "தன்மானத் திருமணங்களும்" இதன்படி செல்லுபடியாயின. இத்திருமணத்தில் ஐயர்திடையாது. அம்மி மிதித்தல், அருந்ததிப்பார்த்தல், தீவலம் வருதல் முதலிய சடங்குகள் கிடையாது. தாலி கட்டலாம், அல்லது மோதிரம் மாற்றிக்கொள்ளலாம். அல்லது மாலை மாற்றிக்கொள்ளலாம். இதுவும் இந்துத் திருமணத்தைப் போலவே சட்டப்படி செல்லும். தேவைப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம். குலம், கோத்திரம், சாதி கட்டுத் திட்டங்கள் இதில் இல்லை, வருணாசருமப்படி பிராமணன் உயர்ந்தவன். அவன் தாலியெடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் புனிதமானதாகும் என்ற சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பதே இத் திருமணத்தின் நோக்கமென்றார். அண்ணா இதனை ''வாழ்க்கை ஒப்பந்தம்'' எனக்கூறி ஆணும், பெண்ணும் சமமெனப் பறைசாற்றினார். தங்கப் பதக்கம் வழங்குதல் ஒரு ஆதி திராவிட மணமகன் அல்லது மணமகள் வேற்றுச்சாதி மணமகன் அல்லது மணமகளைத் திருமணம் செய்து கொண்டால் இந்த மணமக்களுக்கு அரசு தங்கப்பதக்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இத்திட்டத்தில் 1968 முதல் 1976-க்குட்பட்ட காலக் கட்டத்தில் 417 தம்பதிகள் தங்கப்பதக்கம் பெற்றார்கள். உருவவழிபாடு இந்துச் சமயத்தின் அடிப்படைக் கோட்பாடா கும். சமயம் தனிப்பட்டோரின் அடிப்படை உரிமையாகும். ஆனால், அரசு அலுவலகங்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் பணியாற்றுவதால் உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லாதவர்களையும் நம்பிக்கைக் கொள்ளு மாறு செய்வதைப் போல் அரசு அலுவலகங்களில் இந்துக் கடவுள்களின் உருவப்படங்களை வைத்து வழிபடுவதாகும். எனவே, இத்தகைய உருவப் படங்களை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்றி விடவேண்டுமென அண்ணா ஆணையொன்றைப் போட்டார். இந்தியை அடியோடு ஒழித்து, இந்தி ஆசிரியர்களை மாற்றுப் பணியில் அமர்த்தினார். இரா. நெடுஞ்செழியன் (3.2.1969 - 10.2.1969) அண்ணா 331969-ல் மறைந்ததும் இடை ஏற்பாடாக நாவலர் இரா. நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சரானார். இவர் 3.2.1969 முதல் 10.21969 வரை எட்டு நாட்கள் தமிழக முதலமைச்சராகயிருந்தார். 10. 2 1969 அன்றே மு. கருணாநிதியை முதலமைச்சராக்கினர். 23) தாய்நில வரலாறு மு. கருணாநிதி (10.2.1969 - 31.1.1976) சாதனைகள் அ) குமுகாய முன்னேற்றத்தில்: 1. தீண்டாமை ஒழிப்புக்குற்றச் சட்டம், சிவில் உரிகமப் பாதுகாப்புச்சட்டம் (Protection of Civil Rights Act) ஆகிய தீண்டாமைக்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்தித் தீண்டாமைக்குற்றங்களைச் செய்வோர், தூண்டுவோர், உடந்தையாக இருப்போர் முதலியோரைக் கருணாநிதி தண்டித்தார். இதற்கென 'பறக்கும் படைகள்' எனும் காவல் படைகளை அமர்த்தித் தீண்டாமைக் குற்றம் நடக்கும் இடங்களுக்கும், நடக்க முகாந்திரமுள்ள இடங்களுக்கும் அனுப்பிக் குற்றவாளிகளைத் தண்டித் தும், குற்றம் நிகழாமல் தடுக்கவும் செய்தார், பாதிக்கப்பட்டவருக்கு வழக்கறிஞர்களை அமர்த்தி வழக்காட உதவினார். 2 இந்து அறநிலையச் சட்டத்தைத் திருத்தி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட முன்வரைவு (1970) அர்ச்சகர் பதவி சாதி அடிப்படையில் அமைந்தது. பிராமணன் தவிர மற்ற சாதியினர் இப் பதவிக்கு வரமுடியாது. கடவுள் வீட்டில் கோயிலில் சாதிகூடாது என்பது திமுக வின் கோட்பாடு. எனவே, பூசை விதிமுறைகளைக் கற்றுத் தேறும் எவரும் அர்ச்சகராக வரலாமென்னும் நோக்கத்தில் " அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்ற சட்ட முன்வரைவைக்கருணாநிதிக்கொண்டுவரமுனைந்தார். இதற்காக 1959 ஆம் ஆண்டு இந்துச் சமய அறநிலையச் சட்டத்தில் உள்ள விதிகள்55, 56 ஆகிய இரண்டையும் திருத்தி அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். விதி 55-ல் இந்து சமய அறநிலைய அறக்கட்டளையின்படி, இந்துக் கோயில்கள், மடங்கள் முதலியவற்றில் பணியாற்றுவோர் வாழையடி வாழையாக "'தகப்பனுக்குப்பின் மகன்" என்ற முறையில் பணி செய்யவேண்டும். இப் பணிகளில் ஆட்களை அமர்த்தும் பொறுப்பு அறங்காவலர்களுக்கே உண்டு. இதில் அரசு தலையிடக் கூடாது." என்று கூறப்பட்டுள்ளது; விதிக-ல் அர்ச்சகர் பதவியும் இத்தகையதே. அப்பதவி வெற்றிடமாகி விட்டாலும், வாரிசு இல்லாமல் போய்விட்டாலும் அதனை நிரப்ப வேண்டிய பொறுப்பு அறங்காவலருடையது. குற்றங்குறைகளேற் பட்டாலும் குற்றவாளியைத் அர்ச்சகனை தண்டிப்பது துணை ஆணையர் பொறுப்பு. இதில் அரசு தலையிட உரிமை இல்லை எனத் திட்ட வட்டமாகக் கூறப்பட்டு உள்ளதால், இச் சட்ட விதிகளை மாற்றினால் வேண்டிய தகுதிகளையுடையவரை அர்ச்சகராக அமர்த்த முடியும் என்பதை யுணர்ந்த கருணாநிதி, முதலில் இச் சட்டத்தைத் திருத்தும் சட்ட முன்வரைவைச் சட்டமன்றத்தில் 1970 ஆம் ஆண்டு கொண்டுவந்தார். ஆணையர்பெர்பவாளியைத் (அர்ச்சடையது. குற்றங்கு விடுதவைக்குப்பின் தமிழகம் 11] - - - ''பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதி - திராவிடர்களின் கோயில் நுழைவு ஏற்பட்டு விட்டது. 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டத்தில் எவருக்கும் எந்த ஒரு பணியும் அவருடைய சாதியின் பெயரால் மறுக்கமுடியாது என்றும், அரசியல் சட்டவிதி 7ல் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளதால் ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற விதியை நிலைநாட்டவே இந்தச் சட்டத்தைக் கொண்டுவருகிறோம்'' என்று கருணாநிதி கூறினார். சட்டம் நிறைவேறி யது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அர்ச்சகர்கள், மரபுகளுக்கும், ஆகமதருமங்களுக்கும் எதிராக உள்ளதால் இச்சட்டத்தை நிராகரிக்கக் கோரி தில்லி உச்ச நயன்மை மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனை ஏற்று, உச்ச நயன்மை மன்றம் இச் சட்டத்தை நிராகரித்தது. திமுக அரசு தம் முயற்சியில் தோற்றது. 3. ஆதி-திராவிடர்களைக் கோயில் அறங்காவலர்களாக்குதல்: ஆதி - திராவிடர் கோயில் நுழைவு ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. அரசியல் சட்டப்படி தீண்டாமை இல்லை. எனவே, அறங்காவலர்களாக அவர்களை நியமிப்பது தி.மு.க. அரசுக்கு எளிதாகிவிட்டது. முதலில் 49 ஆதி திராவிடர்கள் பெரிய கோயில்களின் அறங்காவலர்களாக அமர்த்தப்பட்டனர். 4. பிற்பட்டோர் மேம்பாடு: பிற்பட்டோர் (backward Class) யென்ற சொல்லும் அதற்கான விளக்க உரையும் முதலில் இந்திய அரசியல் சட்டத்தில் இல்லை , 1951-ல் இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாக திருத்தம் செய்தபின்தான் இந்திய அரசியல் சட்டம்15 (4) 16 (4) விதிகளில் சேர்க்கப்பட்டது. அதற்குச் சரியான பொருளும், விளக்க உரையும் தந்தவர் இந்திய அரசியல் சட்டச் சிற்பி டாக்டர்.பி. ஆர். அம்பேத்கார் அவர்களே! ''குமுகாய நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்கள் பிற்பட்டவ ராவர்" என்பது. அவர் தந்த விளக்கமாகும். அரசியல் சட்டத்தில் இடம் பெற்ற இவர்களுக்கு மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் முன்னேற்றத் திற்கான ஏந்துகளைச் செய்யலாமென்றதால் பிற்பட்டச் சாதிகளின் பட்டியலை தமிழ்நாடு அரசு தயாரித்தது. இதற்காகச் சட்டநாதன் ஆணைக்குழுவை1971-ல் ஏற்படுத்தி பிற்பட்ட சாதிகள் எவை எவையெனக் கண்டறிந்து, அவற்றின் மேம்பாட்டிற்காக தி.மு.க. அரசுபாடுபட்டது. தமிழ் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 54 விழுக்காடு பிற்பட்டோர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. உச்ச நயன்மை மன்றத்தின் தீர்ப்புப்படி மொத்த ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை மனதிற்கொண்டு ' மு. கருணாநிதி பிற்பட்டோருக்கு 25-லிருந்து 32 சதவிகிதமும், தாழ்த்தப் பட்டோருக்கு 18 சதவிகிதமுமாக மொத்த ஒதுக்கீடு 50 சதவிகிதம் இருக்கும்படிச் செய்தார், 34 தாய்நில வரலாறு சட்டநாதன் ஆணைக் குழுவின் பரிந்துரையில் பிற்பட்டோரில் ''மிசுவும் பிற்பட்டோர்" (Most Backward) தோராயமாக 25 விழுக்காடு, உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் 1968-ல் மிகவும் பிற்பட்டோர் [Most Backward Class) பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும் பல சாதிகள் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அவற்றுள் பிற்பட்ட சாதிகளிலிருந்து இசுலாம். கிறித்துவம் மாறிய சாதிகளும் பிற்பட்டவர்களாகவே கணக்கிடப் பட்டனர். எடுத்துக்காட்டாக நாடார் சாதியிலிருந்து கிறித்துவம் மாறியவர் களும், இந்து நாடார்களும் பிற்பட்டவராகவே கொள்ளப்பட்டனர். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து கிறித்துவம் மாறியோர் பிற்பட்ட வராகவே அதாவது முன்னேறியவர்களாகக் கொள்ளப்பட்டனர். இது ஏன் என்று புரியவில்லை . மு. கருணாநிதி தி.மு.க. ஆட்சியை அமைத்தவுடனேயே 1959-ல் ''பிற்பட்டோர் நலத்துறையைத் தோற்றுவித்தார். நயன்மைக் கட்சி 1920-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பிரட்டானியர் தொழிலாளர் நலத் துறையைத் (Labour #WelfarE [EpartiTIEnt) தோற்றுவித்தனர். ஒமந்தரர் இராமசாமி ரெட்டியார் முதல்வரானவுடன் 1947-லேயே அத் துறையை அரிசன நலத்துறை தொழிலாளர் நலத்துறையென இரண்டாகப் பிரித்தார். 1947-லிருந்து கருணாநிதி முதல்வராகும் 1969 ஆம் ஆண்டுவரை அரிசன நலத்துறையால் பிற்பட்டோர் நலமும் கவனிக்கப்பட்டு வந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அரிசன நலத்துறையிலிருந்து பிரித்து ''பிற்பட்டோர் நலத்துறை' எனும் புதிய துறையை ஏற்படுத்தி, அதற்குக் காலஞ்சென்ற என்.வி.நடராசனை அமைச்சராக்கினார். இத்துறைக்குப் பெருந்தொகையை ஒதுக்கி அரசின் செல்லக்குழந்தையாக அதனைப் பேணிக்காத்தார். குறிப்பாகப் பிற்பட்டோர் கல்வி மேம்பாட்டிற்காக மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டது. அது மாணவரின் உதவித்தொகைக்கும், விடுதிகளுக்கும் செலவிடப்பட்டது. 5. சிறீதன திருத்தச் சட்டம்(1958) ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது வரதட்சனை வாங்கு வதும் கேட்பதும் குற்றமெனப்பட்டன. மணமகன், மணமகள் பெற்றோர் அல்லது உறவினரிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறீதனம் அல்லது வரதட்சனை வாங்கினால் அவர்கள் ஆறு திங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனைப் பெறுவர் என்பது இச் சட்டத்தின் கருப்பொருளாகும். மேலும், குற்றவியல் சட்டம் 174-ல் 3இன்படி ஒரு பெண் திருமண மாகி ஏழு ஆண்டுக்குள் வரதட்சணைக் கொடுமையால் இறந்துபட்டால் அவள் சாவுக்குக் கரணியமானவர்கள் தண்டனைக்குரியவராவர். 6. கருக்கலைப்புச் சட்டம் (1971) 'கருக்கலைப்பு 'கொலைக் குற்றமாகும். ஆனால், உடல் நலம், குடும்ப நலம் இவற்றிற்காகக் கருக்கலைப்பதைச் சட்டப்படிக் குற்றமல்லவெனக் விடுதலைக்குப்பின் தமிழகம் 235 கருணாநிதி ஆட்சியில் கருக்கலைப்பை நியதிபடுத்தவே இச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 7. ஆதி - திராவிடர் வீட்டுவசதி வாரியம் (1974) ஆதி - திராவிடப் பழங்குடி மக்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறாமல் வாழ்ந்து வந்தனர், நகர்ப்புறங்களில் வாழ்ந்த அம் மக்கள் பள்ளமான, சேரும், சகதியுமுள்ள இடங்களில் குடிசைகளில் வாழ்ந்தனர். இந்த வாழ்விடங்களையும், பொதுவாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள ஆதி திராவிடர்களின் வாழ் விடங்களையும் மேம்படுத்தவே "தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி வாரியம்"' 1974-ல் தொடங்கப்பட்டது. இதற்கு நடுவண் ஆட்சியும் பெருந்தொகையை மானியமாக வழங்கி வந்தது. நல்ல தெருக்களும், காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள தீப்பிடிக்காத சிமெண்டுத் தகடுகளால் இவை சுட்டப்பட்டன. குடிநீர்க் குழாய்களும் தெரு விளக்குகளும், கழிப்பிடங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. 1971-ல் குடிசை மேம்பாட்டுத்திட்டம் (Slurns improvement Scheme) கொண்டு வரப்பட்டது. அதற்காகத் தமிழ்நாடு குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் குடிசைப்பகுதி ஒழிப்புச்சட்டம் 1977-ல்(The Tamil Nadu Slurn Ar As IrmழOVErmerit and cleararICE Act of 1971]கொண்டுவரப்பட்ட து. இப் பகுதியில் வாழ்ந்தவரில் ஏறத்தாழ 8 விழுக்காட்டினர் இசுலாமியர் 6 விழுக்காட்டினர் கிறித்துவர்கள் மற்றும் இதர சமயத்தினராவர்; மீதமுள்ள வர்களில் 80 விழுக்காட்டினர் ஆதி திராவிடப் பழங்குடியினர்; 12 விழுக்காட்டினர் சாதி இந்துக்களெனக் கணக்கிடப்பட்டனர். எனவேதான் 1974-ல் கொண்டுவரப்பட்ட வீட்டுவசதி வாரியத் தையே ஆதி திராவிடர் வீட்டுவசதி வாரியம்' என அழைத்தனர். முதலில் தனித்தனி வீடுகள் சிமெண்டுத்தகடுகளால் கட்டப்பட்டன. 1973க்குப்பிறகு அடுக்குமாடி வீடுகளாகக் கட்டப்பட்டன. ஆக மொத்தத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இத்தகைய குமுகாய நல மேம்பாட்டுத் திட்டம் செயல் படுத்தும் முறைத் தொடங்கப்பட்டது. 8. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்: **பிச்சை எடுப்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றம்" என்று 1945. லேயே சென்னை மண்டில் அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அதனை எந்த ஒரு அரசியல் கட்சியும் செயல்படுத்தவில்லை. பிச்சைக் காரருக்கு மறுவாழ்வுத் திட்டம் தயாரித்துவிட்டுத்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியும். பேராயக் கட்சிப் பிச்சையெடுப்பவர்களைப் பிடித்துத் தங்குமிடங்களில் வைத்துக் காத்தது. அதற்காக அவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பவில்லை. மேல்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமிடங்களைப் பேராயக்கட்சி ஆட்சி அமைத்தது. அரசு நிதி உதவியுடன் "தயாசதன்"" எனும் தொண்டு நிறுவன தாய்நில வரலாறு மும், சென்னை மாநகரமும் இத்தகைய பிச்சைக்காரர் விடுதிகளை அமைத்து நடத்தின. தொழுநோய்ப் பிச்சைக்காரருக்கென பரனூர் (செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை, நாகர்கோயில், சிதம்பரம் ஆகிய நகரங்களில் விடுதிகள் அமைக்கப்பட்டன. இத்தகைய பிச்சைக்காரர் விடுதிகளைக் கண்காணிக்கக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு (Inspector General of Police) அதிகாரம் வழங்கப்பட்ட து, ஏ.வி.பி. ஆசைத்தம்பிக்குழு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, பிச்சைக்காரர் சிக்கல்களைக் களைந்து, மறுவாழ்வு அளித்து, இரப்போரே இல்லை எனுமாறு எப்படிச் செயல்பட லாமென ஆய்ந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தக்குழு, பிச்சைக்காரரைத் " திடமான உடல் நிலையுள்ளவர்கள்" என்றும், உடல் நலிந்தவரும், வயதானவருமானவர்கள்" என்றும், நோயால் பாதிக்கப் பட்டோர், இளங்குற்றவாளிகள்" என்றும் மூவகையாகப் பிரித்து, தனித் தனியே சிக்கல்களை ஆய்ந்தது. ஆயினும், பொதுவாக தமிழகத்தில் பிச்சை யெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதின் கரணியங்களையும் ஆய்ந் துரைத்தது. இயற்கைக் கேடுகளாலேற்படும் பஞ்சம், பட்டினி முதலிய வற்றாலும், வேலையில்லாத்தாலும் குடும்பம் கெட்டுச் சீரழிந்து விடுவதா லும், அல்லது குடும்பத்திலேற்படும் சண்டை சச்சரவுகளாலும், கணவன் கைவிடுவதால் மனைவியும், குழந்தைகளும், பிள்ளைகளும் கைவிடுவதால் மூப்படைந்த பெற்றோர்களும், தீராத நோயால் கைவிடப்பட்டவரும், உலகைத் துறந்தவர்களும், காதலில் தோல்வியுற்றவர்களும் பிச்சையெடுக் கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, பிச்சைக்காரர்கள் குமுகாயப் , பிரச்சனையாகவும், தேசியப் பிரச்சனையாகவும் உள்ளனர். இவர்களை ஒழிப்பதே அரசின் கடமையென ஆசைத்தம்பிக்குழு கூறியது. திடகாத்திர மானபிச்சைக்காரருக்கென மாற்று மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, வேலைகொடுத்தும், மற்றவருக்கு வேண்டிய ஏந்துகளைச் செய்தும் அரசு காக்க வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரைத்தது. தி.மு.க. அரசு முதலில் தொழுநோய்ப் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுக் காப்பகங்களைத் தொடங்கியது. 1.பரனரர் செங்கல்பட்டு உளுந்தூர்பேட்டை தென்னார்க்காடு 3. பர்கூர் (தருமபுரி 4, புதுக்கோட்டை 5. மணலேரிப்பட்டி (தஞ்சை) 6. மாலவாடி வட ஆர்க்காடு7, விண்ணம்பள்ளிகோவை 8.தேவிடுாரிச்சி சேலம்), செல்லியம்பட்டி (தருமபுரி) 10. ஓட்டேரி (சென்னை ) ஆகிய இடங்களில் தோற்றுவித்தனர். ஒவ்வொரு காப்பகத்திலும் 400 முதியவரும், 25 சிறுவர், சிறுமிகளும் தங்கும் ஏந்துகளிருந்தன. சிலவற்றில் கணவன் மனைவியும் அனுமதிக்கப் பட்டனர். இவர்களுக்கு வேண்டிய ஏந்துகளோடு, சில தொழிற் பயிற்சி களும், கொடுக்கப்பட்டன. தொழுநோயைக் குணப்படுத்த மருத்துவ 251-260 விடுதலைக்குப்பின் தமிழகம் 237 சிகிச்சையளிக்க மருத்துவர்களும் அமர்த்தப்பட்டனர். நோய் தீர்ந்து உடல்நலம் பெற்றோர் கைத்தொழிலைக் கொண்டு தானே பிழைக்க வழி செய்யப்பட்டனர். 10.9.1974-ல் இந்திய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அம்மையார் மேற்கண்ட பத்து தொழுநோயாளர் காப்பகங்களைத் தொடங்கி வைத்தார். ஆனால் 311.1976-ல் தி.மு.க. ஆட்சிக் கலைக்கப் பட்டதற்குப் பின் வந்த ஆட்சியால் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் கைவிடப்பட்டது. 3. நரவண்டி (கையால் இழுக்கும் சிக்சா) ஒழித்தல் மாந்தனை மாந்தன் வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் கைவண்டி அல்லது நரவண்டி (Hand Pulling Rickhaw) மக்களாட்சியில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இதனைத் திமுக அரசு ஒழித்தது. இவ்வாறு 2000 நரவண்டிகளை ஒழித்து, அத்தொழிலாளர்களுக்கு துவிச் சக்கர வண்டிகளை (Cycle Rickhaws) அரசு இலவயமாகக் கொடுத்தது. இதற்காகக் கொடைமனம் படைத்தோர்களும் உருபா 25 இலக்கம் கொடுத்தனர். பெரும்பாலானவர்கள் நரவன்சடிகளைச் சொந்தக்காரரிடம் மிருந்து வாடகைக்குப் பெற்றே இழுத்து, சம்பாதித்து வாழ்ந்தனர். அத்தகைய சொந்தக்காரருக்குத் தலா உருபா 200 அரசு இழப்பாடாக வழங்கியது. இவ்வாறு இந்தியாவிலேயே பிச்சைக்காரரை ஒழித்ததும், நரவண்டிகளை ஒழித்ததும் தமிழ்நாடுதான். 10. ஏழை, ஏதிலிகருக்கு இலவச மருத்துவ உதவிகள் அ) கண் சிகிச்சை முகாம்கள் ஊர்ப்புரங்களில் முகாம்களை அமைத்து ஏழை மக்களுக்கு இலவய கண் சிகிச்சைகளை அளிப்பதோடு, கண் கண்ணாடிகளையும் அவர்க ளுக்கு வழங்கும் திட்டத்தை 1972-ல் தொடங்கினர். இத்தகைய திட்டத்தைக் கண்ணொளி வழங்கும் திட்டம்' என்றனர். இத்தகைய திட்டம் பேராயக் கட்சியின் ஆட்சிக் காலத்திலுமிருந்தது. ஆனால் திமுக, ஆட்சியில் முடுக்கமாக்கப்பட்டு, மக்களிடையே வரவேற்கப்பட்டது. இதற்காகப் பொதுமக்களே முன் வந்து ஒன்பது இலக்கம் உருபா நன்கொடையும் அளித்தனர். இதில் ஐந்து இலக்கம் உருபாயை எம்ஏஎம். இராமசாமி செட்டியார் கொடுத்தார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இத்தகைய சுண்ணொளி வழங்கும் திட்டம் நடந்தது. தோராயமாகப் பதினேழு இலக்கம் மக்கள் பயன்பட்ட னர். 11 குமுகாய நலத்துறையின் பணிகள் அ) 1977-ல் மாதர் நலத்துறை குமுகாய நலத்துறையாகப் பெயர் மாற்றம் பெற்றது : 08 தாய்நிலவரலாறு குழந்தைகளுக்குச் சத்துணவு அளித்தல், தாய்மார்கள் நலம் காத்தல், பிச்சைக்காரர் கர்ப்பகங்கள், ஊனமுற்றோர் மறுவாழ்வு முதலியப் பணிகளைச் செய்தது. செயற்கை உறுப்புக்களைப் பொறுத்த தனி மருத்துவப் பிரிவுகளையும் ஏற்படுத்தியது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு உருபா நாற்பத்தைந்து ஆயிரம் செலவிடப்பட்டது. ஊனமுற்றோருக் கெனத் தொழிற்பயிற்சி நிலையங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பள்ளி இறுதி வகுப்புத் தேறியுள்ளவருக்குத் தட்டச்சு முதலிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன, தையல் பயிற்சி நிலையங்கள் ஊனமுற்றோருக்காக ஏற்படுத்தப்பட்டன. இவர்களுக்காகத் தனியே வேலைவாய்ப்பு நிலையங் களும் ஏற்பட்டன. ஆஏழைகள் தன் முயற்சிப் பணிகளைத் தொடங்கக் கடன் வழங்குதல்:-- தானே வேலை செய்து பிழைக்கவேலைகளைத் தொடங்கமுடியாத ஏழைகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டது. இதில் பெரும் பாலான ஆதி திராவிடர் பயனடைந்தனர். 12. பொருளாதார முன்னேற்றத்தில் இதில் தொழில் வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி முதலியன அடங்கும். சேலம் உருக்கு ஆலை, ஆலங்குளம் சிமெண்டு தொழிற்சாலை, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் முதலியன தொழில் வளர்ச்சியில் முகாமைப் பங்கேற்றன. இவற்றால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பும் பெற்றனர். வேளாண்மை வளர்ச்சிக்காகப் புதிய வேளாண்மைச் சாகுபடி முறைகள் கையாளப்பட்டன. சாதாரணக் கலப்பைகளைத் தவிர்த்து இயந்திரக்கலப்பைகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைக் கழகம்" ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம் 300 டிராக் டர்கள் மானியவிலையில் அளிக்கப்பட்டன. வேளாண்மை ஆராய்ச்சிக் காசுப் புதுக்கோட்டையில் அண்ணா பண்ணை ஏற்படுத்தப்பட்டது. பல இடங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டன. நீர் இறைக்கும் மின்சார இயந்திரங்களுக்குக் கடனளிக்கப்பட்டது. இவற்றால் தமிழ் நாட்டில் "பசுமைப்புரட்சி ஏற்பட்டது. மேலும் நிலையான வேளாண்மை வளர்ச்சிக்குப் பல நீர்ப்பாசன திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. மின் தட்டுப்பாட்டைத் தவிர்க்க 170 கோடி உருபாயில் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. " நில உச்சவரம்புச் சட்டம், பண்ணைத் தொழிலாளர் ஊதிய நிர்ணயச் சட்டம், புஞ்சைக்குவரிவிலக்கு, ஐந்து குறுக்கம் ஏக்கர் நஞ்சை. நிலமுள்ள ஏழைகளுக்கும் நஞ்சை நிலத்திற்கும் வரிவிலக்கு முதலிய - சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. - பேருந்துத்தடங்களை நாட்டுடமையாக்கித் தனியார் மேலாண் மையைக் குறைத்தது ஒரு சிறந்த பொது ட்மைச் செயல்பாடாகும். விடுதலைக்குப்பின் தமிழகம் 14 13. ஆட்சிமொழி மேம்பாடு பேராயக்கட்சி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956-ல் நிறைவேற்றப்பட்டது. அது 19. 1. 1957 முதல் செயல்படத் தொடங்கியது. ஆட்சிமொழிச் சட்டத்தின் கூறுபாடுகள் 1. அரசின் மறுஉத்திரவு வரும்வரை ஆங்கிலம் தொடர்ந்து அலுவலகக் காரியங்களில் பயன்படுத்தப்படுதல் வேண்டும். 2. அரசியல் சட்டத்தின் 46வது 347வது பிரிவுகளுக்கு உளறின்றி அலுவல் முறை காரியங்களை ஆங்கில முறையில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் 3. தமிழில் வெளியிட வேண்டியவற்றுக்கு தமிழையே பயன்படுத்தலாம். 4. சட்டமூலங்கள் முதலியவற்றைத் தமிழிலேயே பயன்படுத்தலாம், இதற்கான அறிவிக்கையை மாநில அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும். சட்ட மூலங்களாவன: தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பெறும் சட்டமுன் வரைவுகள், அல்லது சட்டத் திருத்தங்கள் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ்ப் பேரறிக்கையாக பிரகடனம் வெளியிடப்பெறும் அவசர காலச் சட்டங்கள், நடுவண் ஆட்சியால் வெளியிடப்படும் சட்டம், மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டம் முதலியவற்றின் கீழ் மாநில அரசால் பிறப்பிக்கப்படும் ஆணைகள் விதிகள், ஒழுங்குமுறை விதிகள், துணை விதிகள் ஆகியவற்றைத் தமிழிலேயே வெளியிடல் வேண்டும்; எந்த ஒரு அறிவிக்கையும், இரு அவைகளிலும் வைத்து விவாதித்து முடிவு காண வேண்டும், இவ்வாறு அச் சட்டத்தில் கண்மூடித்தனமாகத் தமிழை மட்டுமே அலுவலகக் காரியங்களில் செயல்படுத்தாமல் ஆங்கிலத்தை வேண்டிய இடத்தில் பயன்படுத்த வழி செய்யும் வகையும் கூறப்பெற்றது. இதனை விரைவுபடுத்தி, ஆங்கிலத்தை நீக்கித் தமிழை மட்டுமே பயன்படுத்தும். அடுத்தக் கட்டப்பணியில் அடுத்து வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி முடுக்கமாய்ச் செயல்பட்டது. 1947-ல் அண்ணா முதல்வரானவுடன் பள்ளிகளிலிருந்த இந்தி ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணிகள் அளித்து இந்தியைப் பள்ளிகளி லிருந்து நீக்கினார். ஆட்சிமொழி தமிழ் மட்டுமேயென அறிவித்தார். ஆட்சி மொழி வளர்ச்சிக்காக 1968- ல் க தமிழ் வளர்ச்சித்துறை" என்ற ஒரு தணித்துறையை ஏற்படுத்தி, அதை முழுவளர்ச்சியடைந்த துறைபோல் செயல்படுவதற்கு வேண்டிய எல்லா ஏந்துகளையும் செய்தார்; 1857 முதல் 1957வரையில் ஒரு நூற்றாண்டு காலத்தில் வெளியான தமிழ் நூல்களைத் தொகுத்து ''அச்சான தமிழ் நூல்களின் பட்டியல்" வெளியிடப்பட்டது. 24] தாய்நிலவரலாறு 1971-ல் "ஆட்சிச் சொல் அகரமுதலி'' மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது. 1970 ஆம் ஆண்டு கூடிய தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்' தமிழ் நாட்டின் வரலாற்றை எழுதி வெளியிட முடிவு செய்தது. அதற்குத் தலைமை தாங்கிய முதல்வர் மு.கருணாநிதி தமிழக வரலாற்றை எழுத ஒரு குழுவை அமைத்தார். அக் குழுவுக்குத் தமிழறிஞர் மு. வரதராசனார் தலைவராக்கப்பட்டார். அக் குழு, வரலாற்று அறிஞர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்றுத் தமிழக வரலாற்றைத் தொல்பழங்காலம் முதல் இன்று வரை பல மடலங்களாக வெளியிட்டது. கட்டுரையாளர்கள் கொடுக்கும் கட்டுரைகளை இக் குழு ஆய்ந்தபின் அவற்றை நூலாகப் பதித்து வெளியிடப் பதிப்பாசிரியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். இப்பணி, தமிழ் வளர்ச்சித் துறையில் செயல்பட்டது. தொல்பழங்காலம், சங்ககாலம், பல்லவர் - பாண்டியர் காலம், சோழப் பெருவேந்தர் காலம், பாண்டியர் பெரும் வேந்தர்காலம், முதலிய மடலங்களாகத் தமிழ்நாட்டு வரலாறு' வெளியிடப்பட்டது. அடுத்தபடியாகப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தமிழில் பாடநூல்கள் வெளியிடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அதற்காகத் "தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம்" என்ற நிறுவனமும் ஏற்பட்டது. சிறந்த ஆங்கில நூல்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டன. இதைப் போலவே, தமிழில் உள்ள நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்க்கப் பட்டன. தமிழ்மொழியை அறியாதார் தமிழைக் கற்றுணரும்படி ஏந்துகள் செய்யப்பட்டன. பிற மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமி ழுக்காக துறை ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு கொடுத்து எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இதைத் தவிர சிறந்த ஆய்வு நூல்களைப் படைப்பவர்களுக்குப் பண உதவியும் செய்யப் பட்டது. நலிவுற்றத் தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தலைசிறந்த அறிஞர்களுக்குப் பாரதிதாசன் விருது, பெரியார் விருது. அண்ணா விருது முதலியன அளித்து அவர்களை ஊக்கு வித்தனர். சிறந்த தமிழ்ப்புலவர் ஒருவரை "அரசவைக் கவிஞர்" எனும் பதவியிலமர்த்தித் பழந்தமிழர் ஆட்சியை மலரச் செய்தது தி.மு.க அரசு. பயிற்சி வகுப்புகள் 30.11.1957 முதல் ஆட்சி மொழித் திட்டம் தமிழகத்தில் நடை முறைக்கு வந்தது. அதுவரை ஆங்கிலம் தெரிந்தவர்களே அரசுப் பணிகளில் இருந்தனர். அவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாய மில்லை. எனவே, ஆட்சிமொழி தமிழ்' என்றவுடன் தமிழ் தெரியாத பணியாளர்களுக்குத் தமிழில் பயிற்சி அளிக்கவேண்டியதாயிற்று. சென்னை மாநகரிலும், மாவட்டங்களிலும், தமிழ்ப் பயிற்சி வகுப்புகள்" நடத்தப்பட்டன. இத்தகைய பயிற்சி வகுப்புகள் 1984 ஆம் ஆண்டு சூன் திங்களில் தொடங்கப்பட்டன. இவை பதினோரு திங்கள்கள் விடுதலைக்குப்பின் தமிழகம் 341 நடந்தன. பயிற்சியின் முடிவில் தேர்வும் நடத்தப்பட்டது. இத்தகைய பயிற்சி வகுப்புகள் 1964 முதல் 177வரை தொடர்ந்து நடந்தன. இந்திய ஆட்சிப்பணி (I.A.S) இந்தியக் காவல்பணி (I.P.S) முதலிய பணியாளர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும்போது அவர்களில் தமிழ் தெரியாதவர்களுமிருந்தனர். இத்தகையப் பயிற்சியால் அவர்கள் தமிழில் படிக்கவும், எழுதவும், கோப்புகளைப் படித்து ஆணை இடவும் தேறினர். அவர்களின் நிருவாகப் பயிற்சியோடு தமிழ்ப் பயிற்சித் திட்டமும் சேர்க்கப்பட்டது. தமிழ்வளர்ச்சி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை யும், துறைத் தலைமை அலுவலகங்களையும், காலவாரியாகத் தமிழில் ஆட்சி அலுவலகங்கள் நடப்பதைப் பரிசோதித்து ஆய்வு செய்தார். இதன் சுரணியமாகத் தமிழ் வளர்ச்சித்துறையில் தனி அலுவலர்கள் எண்ணிக்கை : அதிகரித்தது. எழுத்துச் சீர்திருத்தம் அலுவலகங்களில் தமிழ்வழி காரியங்களை விரைந்து செயல்படுத்த வேண்டி, தமிழில் தட்டச்சு இயந்திரங்கள், தமிழில் சுருக்கெழுத்து முறை முதலியன நடைமுறைக்கு வந்தன. தமிழ்மொழியில் உயிர், உயிர்மெய், மெய் முதலிய எழுத்துகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாலும், அவற்றின் ஓசைகளுக்கேற்பக் குறில் நெடில்களிருப்பதாலும் தட்டச்சு, சுருக்கெழுத் திற்கு ஒத்துவருமாறு எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசிய மாயிற்று. இது தமிழ் ஆட்சிமொழிக்குத்தான் என்றாலும், புலவர் பெருமக்கள் இதற்குத் தடையாக நின்றனர். எனவே, அவர்களின் கருத்து ஒருமைப்பாட்டினைப் பெறுவதற்காக அரசு தமிழ் எழுத்துச் சீர்திருத்தக் குழு'' ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ""மகாவித்துவான் மே.வீ. வேணு கோபாலப் பிள்ளை அவர்களைத் தலைவராக்கியது. இக் குழு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மேற்பார்வையின் கீழ் இயங்கியது. புலவர் பெருமக்கள் இதன் உறுப்பினர்களாக இருந்தனர். குறுகியகாலமே இக்குழு ஆய்வினை மேற்கொண்டது. குழுத்தலைவர் நோய்வாய்பட்டமையாலும், தி.மு.க. ஆட்சி மாற்றத்தாலும் இக்குழு செயலிழந்து நின்றது. தமிழ் ஆட்சிமொழி வளர்ச்சி வரலாறு 1996-ல் நடந்த பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. கலைஞர் மு. கருணாநிதி நான்காம் முறையாக முதலமைச்சரானார். இவர் தலைமையிலமைந்த அமைச்சரவை யில் 25 அமைச்சர்கள் இடம் பெற்றனர். இந்த அமைச்சரவை 13-5-1ப்பதி | முதல் 235.1996 வரை பதவியிலிருந்தது. இக் கால இடைவெளியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்வாட்சி ஆற்றிய பணிகள் அளவிடற்கரியதாகும், தமிழ் ஆட்சிமொழி - தமிழ்ப் பண்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஆன்றவிழ்ந்த சான்றோரான தமிழ்க்குடிமகன் தமிழ்மொழி வளர்ச்சியைத் தனது உயிர் மூச்சாகக்கொண்டு செயலாற்றினார். திராவிட மச்சராம் பொது. இக் கள் 2 14) தாய்நிலவரலாறு முன்னேற்றக் கழக ஆட்சிப் பதவியேற்ற 13-5-196 - நாளன்றே தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாட்டுத்துறை தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கியது. அமைச்சரின் ஆளுகைக்குட்பட்டவற்றுள் சிறப்பானவை தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். இவையாவுமே தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேர்களாகும். தமிழ் வளர்ச்சி கருதிப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பெற்றன. அவற்றுள், அகரமுதலிகள் தயாரித்தல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கலைக்களஞ்சியம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி, தமிழ் தட்டச்சுப்பொறிகளை அலுவலகங் களில் பயன்படுத்துதல், தமிழ் சுருக்கெழுத்து நூல், தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியது, தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேன்மைப்படுத்துதல், தமிழில் அகவி (Pager] தமிழில் மருத்துவம், தமிழில் கோயில் வழிபாடு, திராவிடப் பல்கலைக்கழகம் அமைத்தல், துறைச் சிறப்பு அகராதி மழலையர் பள்ளிகளில் தமிழ், வானொலியில் தமிழ், விளம்பரப்பலசையில் தமிழ், முதலியன குறிப்பிடத்தக்கனவாகும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவியளித்தல், அஞ்சல் வழிக் கல்வியில் தமிழ் வழிப்பாடங்களை நடத்துதல், சென்னையில் அறிவியல் நிறுவனம் அமைத்தல், ஆட்சி மொழிக் கருத்தரங்குகளை நடத்துதல், தமிழிசைப் பள்ளி, தமிழ் இசை நாடகமன்றம், உலகத் தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, வளர்திகளில் தமிழ், கருநாடகத்தில் தமிழ், தமிழைச் செம்மொழியாக்கும் முடுக்கம், தமிழில் அறிவியல் நூல்களைப் படைத்தல், தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்துதல், சிறந்த தமிழ் அறிஞர்களின் நால்களை நாட்டுடைமையாக்குதல், சிறந்த நூல்களை யாச்சு நிதி உதவி அளித்தல், தமிழ்நாட்டு வரலாற்று வரைவுத் திட்டத்தை விரைவுபடுத்துதல் முதலிய அரிய பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. அகரமுதலிகள் அகரமுதலிகள் அக்காலத்தில் நிகண்டுகள் எனப்பெற்றன. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் உருவாகிய நிகண்டுகள் இருவகைப்படும். அவை ஒரு சொல்லுக்கான பல பொருள்களைக் கூறும் அகரமுதலி, ஒரு சொல்லுக்கான எதிர்மறையைக் கூறும் அகரமுதலி யென்பனவாகும். ஒரு சொல் பல்பொருள் அகராதி கவிதை வடிவிலானது; இதுவரை 22 அகராதிகள் இதைப் போல் உருவாகியுள்ளன. ஒரு சொல்லுக்கு எதிரான சொற்களைக் கூறும் அகராதி உரைநடையிலானதாகும். கி.பி. 1732-ல் வீரமாமுனிவர் தொகுத்த இத்தகைய "சதுர் அகராதி" இதற்கு வழிகாட்டி யாகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1969-ல் "செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதவித்திட்டம்" தொடங்கப்பெற்றது. இதற்கென தனி " அகரமுதலித் திட்ட இயக்ககம்"தொடங்கப்பட்டது, விடுதலைக்குப்பின் தமிழகம் - 243 இதற்குத் தலைவராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமர்த்தம் செய்யப் பெற்றார். 1997 வரை அகரமுதலி இயக்ககம் 'அ' முதல் 'ஒள' வரையிலான சொற்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. ஆட்சிச் சொல் அகராதி ஆட்சியைச் செம்மைப்படுத்தும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை 1957, 1962, 1971, 1983 ஆகிய ஆண்டுகளில் முறையே முதலாம், இரண்டாம், முன்றாம், நான்காம் பதிப்புகளாக ஆட்சிச் சொல் அகராதியை வெளி யிட்டது. 1990-ல் ஐந்தாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. ஏறத்தாழ 78 துறைகளுக்கான சிறப்புச் சொல் துணை அகராதிகளும் தனியே வெளியிடப்பெற்றுள்ளன. மொத்தத்தில் ஒன்பதாயிரம் ஆட்சிச்சொற்கள் இவ்வகராதியில் இடம்பெற்றுள்ளன. அகராதிகள் ஒவ்வொரு துறைக்கும் வழங்கப் பெற்றுள்ளன. மேலே கூறப்பெற்ற சுமார் 61 பணிகளின் பட்டியலில் தமிழ் மொழியைச் செம்மைப்படுத்தி விரிவாக்கும் செயல் திட்டங்கள் ஒவ்வொன்றும் தி.மு.க. ஆட்சியில் செவ்வனே செயல்பட்டது. - 58 - அகவை முடிந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள் தோறும் உருபா 400-லிருந்து 500 ஆக நிதி உதவியளிக்கப்பெற்றது: சென்னைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக அஞ்சல்வழிக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு மொரீசியசு, ரீயூனியன், டர்பன், மடகாசுகர் ஆகிய பகுதிகளில் அஞ்சல் வழிக் கல்வியைத் தொடர் அரசு ஆவன செய்தது. கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் கிபி. 1869-ல் தொடங்கப்பெற்ற இந் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம், உருது போன்ற இசுலாமிய மொழிகளிலுள்ள 12,314 ஓலைச் சுவடிகள் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழ் ஓலைச் சுவடிகள் மட்டும் 16000-க்கும் மேம்பட்டுள்ளன. " இந் நூலகம் இதுவரை ஏறத்தாழ 420 ஓலைச் சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் சுமார் 4,000 சதுர அடி பரப்புள்ள இந் நாவகம் குளிர்சாதனம் செய்யப் பெற்றும், சுவடிகளை நுண்படச் சுருளில் கொண்டுவரவும் ஏற்பாடு செய்தது. இவற்றிற்காக தோராயமாக 38 இலக்கம் உருபாய் செலவிட்டது. அரசு அருங்காட்சியகங்கள் சென்னை அருங்காட்சியகத்தைப் போன்றே 12 மாவட்டங்களில் ஏற்படுத்தப் பெற்றிருந்த அருங்காட்சியகங்களோடு 1996-ல் மேலும் ஐந்து மாவட்டங்களில் அருங்காட்சியகங்களேற்படுத்தப்பெற்றன. கபிலர் எழுதிய "குறிஞ்சிப் பாட்டு" எனும் நூலில் குறிப்பிடப் பெற்றுள்ள ஒத மலர்களின் பெயர்களை அடையாளங்கண்டு அவற்றைப் பாடம் செய்து அருங்காட்சியகத்தில் அவைப் பார்வைக்கு வைக்கப்பெற்றுள்ளன். 144 தாய்நில வரலாறு ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) தமிழியல் ஆய்வுக்காக தமிழக அரசு 1997-1998-ல் இந்நிறுவனத்திற் காக உரூபாய் 90 - இலக்கம் நிதி உதவி அளித்தது. தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம், தமிழ் - சப்பான் - தெலுங்கு - கன்னடம் அகரமுதலி ஆகிய பணிகளை இந்த நிறுவனம் செய்துவருகிறது. இதற்காக 1998-99-ல் உரூபாய் 20 இலக்கம் மானியமாக அரசு அளித்தது. தமிழ்மொழி கருத்தரங்கு மாவட்டந் தோறுமுள்ள அரசு அலுவலர்களுக்கும் தமிழ் ஆட்சிமொழி ஆவதிலுள்ள நிரைகுறைகளைச் சுட்டிக்காட்டும்படியான கருத்தரங்குகள் நடைபெற்றன. குறிப்பாக அரசாணைகள், சட்டங்கள் ஆகியவற்றின் பொருள் விளங்கும்படியும், அவற்றை நடைமுறைப் படுத்தும் வகை பற்றியும் கருத்தரங்கில் ஆயப்பட்டன. இக் கருத்தரங்கு களால் 100விழுக்காடு தொய்வின்றித் தமிழ் ஆட்சிமொழியானது. இசைப் பள்ளிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மட்டுமிருந்த இசைப் பள்ளிகளைப் போலவே மேலும் பத்து மாவட்டத் தலைநகரங் களில் 1996-க்குப் பின் இசைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் மொத்தம் இசை வல்லுநர்கள் பணியிலமர்த்தம் செய்யப் பெற்றனர். இணையம் (Internet) இன்றைய அறிவியலில் பூத்த மலராகத் திகழ்வது இணையம். உலகத்தை ஒரு நொடியில் இணைக்கும் இக்கருவியின் பயனை 1997-98ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற நிகழ்ச்சியில் நடந்த வரவு - செலவுத் திட்ட நிகழ்ச்சியால் உலகம் அறிந்தது. விரிவுபடுத்தப்பெற்ற இணையத்தால் தமிழக வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்க் கலைகளின் சிறப்பு, சுற்றுலா பயண வழிகாட்டுதல் ஆகியவை செய்திப் பக்கம்"(Home Page), எனும் முறையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்படுகிறது. மேலும், இணையத்தில் உலகத்திலேயே அதிக செய்திப் பக்கங் களைக் கொண்ட தமிழில்தான் முதலில் வெளியிடப் பெற்றது. 1900 - ல் உலகத்தமிழ் இணையம் மாநாடு' தமிழக அரசால் நடத்தப்பெற்று உலகத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணித்தேர்வு[I.A.S. Examination) இந்திய ஆட்சிப் பணித்தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டபின், தமிழக அரசு 1996-க்குப் பின் தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, புவியியல், இந்திய வரலாறு, உலக வரலாறு போன்ற பாடங்களைத் தமிழில் வெளியிட்டது. இதனால் இந்திய அரசுப்பணித் தேர்வை எழுதுவோர் பெரும் பயனடைந்து வருகின்றனர். தமிழக சட்டியில் இவை பூத்த மகன் விடுதலைக்குப்பின் தமிழகம் 245 இயல் இசை நாடகமன்றம் - தி.மு.க. ஆட்சி காலத்தில் இயல், இசை, நாடக வளர்ச்சிக்காக உரூபாய்45 இலக்கம் ஒதுக்கியது. புகழ்பெற்ற கலைஞர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் அல்லலுறும் குடும்பங்களுக்கு நிதியுதவியளிக்க உரூபாய் 10 இலக்கமாக உயர்த்தப்பட்டது; அத்தோடு, நவீன "கலையரங்கம்" அமைக்க உருபா 34 இலக்கம் ஒதுக்கப்பட்டது; நலிந்த கலைஞர்களுக்கு திங்கள் தோறும் உரூபாய் 5000 ஆக உயர்த்தி அளிக்கப்பட்டது. இலக்கணக்குழு தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் இக் கால மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இலக்கண நூல்களை எழுதி வெளியிட எட்டு பேர் அடங்கிய வல்லுநர் குழு ஒன்றைத் திமுக. அரசு ஏற்படுத்தியது.) தமிழ்த் தட்டச்சு இயந்திரம் உயர்நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த 862 தமிழ்த் தட்டச்சுகள் அளிக்கப்பட்டன. இதற்காக உரூபாய் 65 இலக்கம் அரசு செலவிட்டது, கலைக்களஞ்சியம் தி.மு.க. ஆட்சியில் 1999-க்குப்பின் தமிழ்ப் பல்கலைக்கழகம் வாயிலாக நாடகக் கலைக்களஞ்சியம் ஒரு தொகுப்பும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழிசைக் கலைக்களஞ்சியம் மூன்று தொகுப்புகளும், தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மருத்துவக்கவைக் களஞ்சியம் ஐந்து தொகுப்புகளும், குழந்தைகள் கலைக்களஞ்சியம் மறு பதிப்பும் வெளியிடப் பெற்றன. இக் கலைக் களஞ்சியங்களில் இன்றைய நிலைக்கேற்ற திருத்தங்களைச் செய்து பின்னிணைப்பாக வெளியிட மட்டும் உரூபாய் 10 இலக்கம் ஒதுக்கப்பட்டது. 1998-ல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியாக வாழ்வியல் களஞ்சியம் 14, 15 தொகுதிகளும், அறிவியற்களஞ்சியம் 10-வது தொகுதியும் வெளியிட அரசு உருபா 10) இலக்கம் ஒதுக்கியது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 1974-ல் தொடங்கப் பெற்ற இப் பணியால் 1995 வரை இரண்டு தொகுப்புகளும் 1996 முதல் 100-வரை மற்றொரு தொகுப்பும் வெளிவந் துள்ளது. இப் பணியை விரைந்து செய்ய கணினி வசதி செய்யப் பெற்றுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை விரிவாக்கம் இத் துறையில் பணிகளை விரைந்து செய்ய உதவி இயக்குநர்கள், ஆய்வு அலுவலர்கள், தட்டச்சர்கள் முதலிய நிலைகளில் அலுவலர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டன. உதவி இயக்குநர் பதவியில் 13 பேர் 146 தாய்நில வரலாறு அமர்த்தப்பட்டனர். 1998-99-ல் மாவட்டம் தோறும் உதவி இயக்குநர் தலைமையில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. சென்னை அருங் காட்சியகத்திற்கு அருகில் உரூபாய் 2 கோடி செலவில் தமிழ்வளர்ச்சி வனாகம் ஒன்று தனியே உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறை, ஓலைச் சுவடி நூலகம், செந்தமிழ்ச்சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் ஆகிய அனைத்தும் அமையும். தமிழில் அறிவியல் நூல்கள் அறிவியல் நூல்களை ஆக்குவதற்காக அரசு பதினைந்து பல்கலைக் கழகங்களுக்கு மொத்தம் உரூபாய் 64 இலக்கம் அளித்தது. இன்றுவரை அனைத்து அறிவியல் நூல்களும் வெளியிடப் பெற்றுள்ளன எனலாம். தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் 1947ல் தொடங்கப்பெற்ற இத்திட்டத்தின்படி முதல் பரிசு உருபாய் 5000 ஆகவும், இரண்டாம் பரிசு உரூபாய் 3,000 ஆகவும், மூன்றாம் பரிசு உருபாய் 1000 ஆகவும் வழங்கப்பட்டதை உயர்த்தி தி.மு.க. அரசு முதல் பரிசுத் தொகை உருபாய் 10,000 ஆகவும், இரண்டாம் பரிசு உருபாய் 5,000 ஆகவும், மூன்றாம் பரிசு உரூபாய் 2000 ஆகவும் அளித்தது. திராவிடப் பல்கலைக்கழகம் தென்னக மொழிகளையும், அவற்றிற்கிடையேயுன்ன உறவு தொடர்புகளையும், பண்பாட்டுக் கூறுபாடுகளையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் முயற்சியால் குப்பம் என்னும் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு தனது பங்காக உருபா 50 இலக்கம் அளித்தது. கேரள அரசு உருபா 25 இலக்கம் வழங்கியது. தொடர்வண்டி நிலையங்களில் தமிழில் பெயர்ப்பலகை திமுக ஆட்சியிலெடுக்கப்பட்ட முயற்சியால் நடுவண் ஆட்சிக்குட் பட்டத்தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன. கம்பன் விரைவு வண்டி, மலைக் கோட்டை விரைவு வண்டி வேகத் தொடர் வண்டி முதலிய சொற் றொடர்கள் இதனால் ஏற்பட்டன. தொல்பொருள் ஆய்வுத்துறை - - மரபுச் சின்னங்களைப் பாதுகாத்தல், அகழ்வாராய்ச்சி - வைப்புகள், பழம்பொருட்களைப் பதிவு செய்தல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், அவற்றை நூல்வடிவில் வெளியிடுதல், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திற்குச் சுவடிகளைச் சேகரித்து அனுப்புதல், ஓலைச் சுவடிகளைச் சேகரித்தல், பாதுகாத்தல் முதலிய பல்வேறு பணிகனைத் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டது. இது அனுப்பும் முத்திசைச் சுலபபடியெடும். 261-270 விடுதலைக்குப்பின் தமிழகம் " 147 குறிப்பாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அகழ்வு ஆய்வுகளை மேற்கொள்ளுதல் இத்துறையின் முகாமைப் பணியாயிற்று, அதன்படி அழகன்குளம், பூம்புகார், கொடுமணல் ஆகிய இடங்களில் பெரிய அளவில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் வாய்வு களில் பண்டைக்காலத் தமிழகத்தின் பண்பாடுகளும், நாகரிகமும் வெளிக்கொணரப் பெற்றுள்ளன. கடலுள் மூழ்கிய பண்டைய பூம்புகாரில் கிடைத்தப் பொருள்களை ஆழ்கடல் தொல்லியல் அகழ்வாய்வு வைப்ப கத்தில் காணலாம். இதுவரை படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 1000 ல்வெட்டுகளை அச்சிட்டுள்ளனர். இதற்காக அரசு உருபாய் 8இலக்கம் செலவிட்டது. நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் 1999-க்குப்பின் தேவநேயப்பாவாணரின் நால்களுக்காக உருபாய் 20 இலக்கமும், மறைமலையடிகளார் நூல்களுக்காக உரூபாய் 30இலக்கமும், திரு.வி.க. நூல்களுக்காக உருபாய் 20 இலக்கமும் இச் சான்றோர்களின் மரபினருக்கு வழங்கப்பட்டு, அவர்கள் எழுதிய நூல்கள் நாட்டுடமை யாக்கப்பட்டன. விடுதலைப் பொன்விழாவை யொட்டி விடுதலை உணர்வை யூட்டிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் பதின்மூன்று பேரின் நூல்களையும் அரசு நாட்டுடமை ஆக்கியது. இவர்களின் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் அரசு உரூபாய் 65 இலக்கம் அளித்தது. - மற்றும் தமிழுக்குத் தொண்டு செய்த பல்வேறு துறைகளைச் சார்ந்தவருக்கும் அரசு நிதி உதவியளித்தது. அவற்றுள் பல நூலகங்களும் அடங்கும். கனவுச் சின்னங்கள் ஒக்கூர் மாசாத்தியார், மாங்குடி மருதனார், கருவூர்க்கிழார், நல்லூர் நத்தத்தனார் முதலியோருக்கு ஏற்கனவே தமிழக அரசு நினைவுச் சின்னங்களை எழுப்பியிருந்தன. 1999-க்குப்பின் கணியன் பூங்குன்றனா ருக்குச் சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் நினைவுச் சின்னம் எழுப்பியது. இவற்றைத் தவிர மண்டலக்கலை பண்பாட்டு மையங்கள் பலவும் ஏற்பட்டன. மொழிப்போர்க் காவலர்களுக்கும் எல்லைப் போராட்ட வீரர்களுக்கும் ஓய்வு ஊதியமாக திங்களொன்றுக்கு உருபா 400 வழங்கப் பட்டது. இஃது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் உருபா 3000 ஆக உயர்த்தியளிக்கப்பட்டது. , பாலாற்று நூல்கள் தமிழக வரலாற்றை 1970 முதல் எழுதத் தொடங்கி 1999-வரை தொல்பழங்காலம், சங்க காலம் பல்லவர் பாண்டியர் காலம், சோழப்பெரு வேந்தர் காலம், பாண்டியப் பெருவேந்தர் காலம் என பல தொகுதிகளாக! வெளியிடப்பட்டுள்ளது. "248 தாய்நிலவரலாறு வானூர்தியிலும், வானொலியிலும், தமிழில் அறிவிப்புகள் வெளியிட அரசு முயற்சி மேற்கொண்டு வெற்றிப்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு, திருவள்ளுவர் விருது, திரு.வி.க, விருது, பாரதிதாசன் விருது ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும் உரூபாய் 20000கொண்டது. வணிக விளம்பரப் பலகைகள் வணிகக் கடைகளின் பெயர்களும், வணிகமும் குறிப்பிடப்படும் பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழ் இடம் பெற்றது. இதற்காக வணிகச் சொற்பட்டியலை அரசோதயாரித்தளித்தது. விளம்பரப் பலகையில் முதலில் பெரிய எழுத்துக்களில் தமிழிலும், அடுத்து சிறிய வடிவிலான எழுத்துக் களில் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டது. (அகு இதில் வரும் புள்ளி விவரங்கள் முனைவர். மு. தமிழ்க்குடி மகன் அவர்களின் புதிய அமைச்சகம் புரிந்த பணிகள்" 13-5-1996க்குப்பின்) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1999 என்ற நூலிலிருந்து தொகுக்கப் பெற்றவையாகும். முடிவுரை தமிழை அவசரப்பட்டு ஆட்சி மொழியாக்கி, அதனைச் செயல் படுத்த வகையறியாது தவிக்கப் போகிறார்களென்ற ஆங்கிலம் கற்ற மேதைகள் வியக்குமாறு, ஆட்சிமொழிச் செழிக்க அரசு செய்த ஆயத்த. செயல்முறை வழிவகைகளைக் கண்டாலே புரியும். பேராயக்கட்சி, தமிழ் ஆர்வலர் வாயை அடைக்கவே சென்னை மண்டிலத்திற்குத் தமிழ்நாடு' என்று பெயரிட்டது, ஆனால் சட்டப்படி அப் பெயர் ஆவணங்களில் பதியப் பெறவில்லை, தமிழை ஆட்சி மொழியெனக் கூறித் திருச்சி மாவட்டத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்து செயல்படுத்தவோ, விரிவுபடுத்தவோ யில்லை. திமுக ஆட்சி தான் உள்ளபடியே தமிழ் நாட்டில், தமிழை ஆட்சி மொழியாக்கி, கோலோச்சச்செய்தது. எனவே, இனி எவரும் இதனைத் தவிர்த்து வேறு பாதையில் செல்ல முடியாது. III அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் 'நயன்மைக்கட்சி"', 1944-ல் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் என காந. அண்ணாத்துரையால் சி.என். அண்ணாதுரை) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1949-ல் திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணாத் துரையும் சிலரும் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, 1973-ல் மருதூர். கோ. இராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித் தார். அக்கழகம் 1977-ல் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றுத் தமிழகத்தில் அமைச்சரவையை அமைத்தது. 1977 முதல் 1987 வரை தாம் இறக்கும் வரை விடுதலைக்குப்பின் தமிழகம் 240 மகோரா. எம் ஜி ஆர் அக்கட்சியின் தமிழக முதல்வராயிருந்தார். 1979-ல் ** அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம்'' ''அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எனப் பெயர் மாற்றம் பெற்றது. மகோரர். (எம் ஜி ஆர் மறைவுக்குப்பின் அவருடைய மனைவி சானகி இராமச் சந்திரன் 14 நாட்களும், செல்வி செயலலிதா ஐந்து ஆண்டுகளும் முதலமைச்சர்களாயிருந்தனர்.மீண்டும் செல்விசெ. செயலலிதா 2.3:2002 விருந்து முதல்வராகி அஇஅதிமுக ஆட்சியை நடத்தி வருகிறார். எனவே, ம.கோரா, எம்ஜிஆர்) சானகி இராமச்சந்திரன், செயலலிதா ஆகியோர் முதல்வராயிருந்து ஆட்சிப்புரிந்த தோராயமாக 16 ஆண்டு கால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சுருங்கக் காண்போம். 1. பிற்பட்டோர் நலம் மேம்படுதல் *' பற்றுக பிற்பட்டோர் மேம்பாட்டை " இது திராவிட இயக்கங் ளின் சித்தாந்தம் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சிக்கனப்பிடித்துக்கொள்" என்ற பட்டாங் கைத் தி.மு.க.வுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வும் பின்பற்றி அதனையே தேர்தலில் தாரக மந்திரமாக உச்சரித்துப் பதவிக்கு வந்ததால் அ.இஅதிமுக பிற்பட்டோர் நலத்தில் அக்கறை கொண்டது. அ) வகுப்பு வாரிப்படி நிகராளியம் 1921-ல் கொண்டுவரப்பட்ட வகுப்பு வாரிப் படிநிகராளியம் 1951-ல் அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளைக் காட்டி உச்ச நயன்மை மன்றத்தால் செல்லாதெனத் தள்ளப்பட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் திருத்தத்தில் "பிற்பட்டோர் பாதுகாப்புப் பெற்றனர். இதனடிப்படையில் தான் திமுக ஆட்சியில் 1969-ல் பிற்பட்டோர் நலத்துறைப் படைக்கப் பட்டது. அவர்களுக்காக இருந்த இட ஒதுக்கீடு25லிருந்து 32 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. மகோரா.(எம்.ஜி.ஆர் ஆட்சியில் பொறுப்பையேற்றவுடன் 1982 ல் சே.ஏ. அம்பாசங்கர் ஆணைக்குழுவை அமர்த்தினார். அதில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும், பிற்பட்ட நலத்துறை இயக்குநர், சட்டதி துறைத் தலைவர் மற்றும் மக்கள் மன்றத் தலைவர்களுமாக 21 உறுப்பி னர்கள் இடம் பெற்றனர். பின்னிணைப்பு IV-ல் காண்க) இக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1986-ல் பிற்பட்டோர் சாதிகள் 201 என அறியப்பட்டது. இவர்கள் தமிழக மக்கள் தொகையில் 54 சதவிகிதமாக உள்ளனரென்றும் கணக்கிடப்பட்டது. இவர்கள் குமுகாய நிலை, பொருளாதார நிலை முதலியவற்றில் பின்தங்கியவர்களென்றும் கூறப்பட்டது. எனவே, பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தி.மு.க. அரசு செய்த 32 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்தது. இந்த ஒதுக்கீடு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் செயல்படுத்தப்பட்டது, அதற்கேற்றாற்போல் வரவு-செலவில் நிதி ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டது. 250 தாய்நிலவரலாறு 1980-ல் பிற்பட்டோருக்காகப் "பொருளாதார மேம்பாட்டுக் கழகம்" ஏற்படுத்தப்பட்டது. 1985-87-ல் இவர்களின் மேம்பாட்டிற்காக உருபா 103.82 கோடி செலவிடப்பட்டது. 2. ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு 1980-87ல் ஆதிதிராவிடருக்கெனத் தனித்திட்டம் (Special Compo nent - Plan) ஒன்றை மகோரா.எம் ஜி ஆர் வெளியிட்டார். 1974-ல் திமுக ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியம்"' இக் காலத்திலும் செவ்வனே செயல்பட்டது. 1985-86-ல் இதற்காக 14.02 கோடி உருபா செலவிடப் பட்டது. கலப்புத் திருமணம் செய்வோருக்குத் தங்கப்பதக்கம் அளிக்கும் அண்ணாவின் திட்டமும் கடைப்பிடிக்கப்பட்டது, பழங்குடியினரின் மேம்பாட்டில் அக்கறை காட்டப்பட்டது. 3. குழந்தைகள் மகளிர் நல மேம்பாட்டுத் திட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக 'வழி காட்டும் மையங்கள்" சென்னை, தஞ்சை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் அமைக்கப் பட்டன. இவற்றில் ஏழை, ஏதிலி, ஊனமுற்ற , விதவைப் பெண்களுக்கான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வழிமுறைகள் காட்டப்பட்டன. 1983-ல் 'தமிழ்நாடுப் பெண்கள் வளர்ச்சிக் கழகம்" ஏற்படுத்தப் பட்டது. வழிகாட்டும் மையங்கள் மூலம் மூன்று சேவை இல்லங்கள்" (Service Hormes) எட்டுத் தொழில் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன. இவற்றில் பெண்களுக்கு பின்னல், தையல், தட்டச்சு முதலிய வற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. "மகளிர் மன்றங்கள்" எனவும் தொடங் கப்பட்டன. இத்தகைய மகளிர் மன்றங்கள் மொத்தம் II 220 இருந்தன. இவற்றிற்காக உருடா12.5 இலக்கம் செலவிடப்பட்டது. இவற்றில் குழந்தை வளர்ப்பு, சத்துணவு, சிறுதொழில்கள் பற்றிப் பெண்களுக்குக் கற்பிக்கப் பட்ட ன. இவற்றைத் தவிர குழந்தைகள் காப்பகங்கள்" தோராயமாக 1988 நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் அகவை முதல் இக்குட்பட்ட குழந்தைகள் பேணிக்காக்கப்பட்டனர். இதனால் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது. இத்தகைய மகளிர் குழந்தை நல நிறுவனங்கள் ளால் குறிப்பாக விதவைகள், ஊனமுற்றப் பெண்கள், கைவிடப்பட்டப் பெண்கள் ஆகியோரும் அனாதைகளான குழந்தைகளும் காப்பாற்றப் பட்டனர். 1986-87ல் மட்டும் குழந்தைகளைப் பேணிக் காக்க உருபா 117 82 இலக்கம் செலவிடப்பட்டது, குழந்தைகளுக்கெனவே 17.1982-ல் * முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1984-85-ல் மட்டும் இத் திட்டத்திற்கு 2874 கோடி உருபா செலவிடப்பட்டது. ஆண்டு முழுவதும் இத் திட்டம் விடுதலைக்குப்பின் தமிழகம் 151 செயல்பட்டது. பற்பொடியும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத் திட்டம் 113 இடங்களில் செயல்பட்டது. இத்தோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் தொடங்கப்பட்டன. இவற்றில் குழந்தை களுக்குச் சத்துணவோடு, சத்துணவு உருண்டைகளும், வைட்டமின் மாத்திரைகளும், மருந்துகளும் கொடுக்கப்பட்டன. தனியாக மருத்துவர்கள் அமர்த்தப்பட்டு அவர்களின் உடல் நலனைப் பேணிக் காத்தனர். அம்மை, மஞ்சள்காமாலை, முடக்குவாதம், யானைக்கால் நோய் முதலியன வராமல் வருமுன் காக்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் கொடுக்கப்பட்டன. இதற்காக, ஆண்டொன்றுக்கு உருபாய் 1228 கோடி செலவானது. 4. கரக வளர்ச்சி மேம்படுதல் - ஒவ்வொரு ஊரும் ''தன்னிறைவு '' பெறவேண்டுமென்பதே மகோரா. எம்.ஜி.ஆர்) வின் நோக்கம். அதனடிப்படையில் ஒவ்வொரு ஊரிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், நகரங்களோடு இணைக்கும் பாதைகள், போக்குவரத்து ஏந்துகள், பாவங்கள் முதலியன நிறைவு செய்யப்பட்டன. எல்லா ஊர்களுக்கும் மின்விளக்கும், தொலைபேசித் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டன. ஆதி - திராவிடர் குடியிருப்புகளுக்கு இவற்றில் முன்னுரிமை தரப்பட்டது. அவர்களுக்குக் குடிநீர், இடுகாடு, சுடுகாடு, மின்விளக்கு முதலிய ஏந்துகள் செய்யப்பட்டன. மருத்துவ மனைகள், தாய்-சேய் நலவிடுதிகள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன. பள்ளிக்கூடங்கள் இல்லாத ஊர்களே இல்லை. ஆதி திராவிடர்களுக்கு வீடுகள் கட்ட நடுவண் அரசும் மானியம் கொடுத்தது. இத்தகைய ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்த் தன்னிறைவு அளிப்பதற்காக அஇஅதிமுக அரசு தமிழ்நாட்டிலுள்ள 378 வட்டாரங்களும் (Blocks) மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு காலக் கட்டத்தின் கீழ் தன்னிறைவுப் பணிகளை மேற்கொண்டது. இத்தகையத் தன்னிறைவுத் திட்டம் 1980-87-ல் முதல் கட்டமாக உருபா 46.42 இலக்கம் செலவில் 69 வட்டாரங்களில் மேற்கொள்ளப் பட்டது; 1981-82-ல் 150 வட்டாரங்களிலும் தன்னிறைவுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதற்கு உருபா 97கோடிசெய்யப்பட்டது: 1982-83-ல் 159 வட்டாரங்களில் தன்னிறைவுத் திட்டங்கள் உருபா 113 கோடியில் செயல்படுத்தப்பட்டன. இத்தகைய திட்டங்களால், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவை ஊர்ப்புரங்களில் மேம்பட்டன. 5. தமிழ்மொழி வளர்ச்சி ஆட்சிமொழித்திட்ட மேம்பாடு எழுத்துச் சீர்திருத்தம் 1878 ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ம.கோரா, எம்.ஜி.ஆர்) ஓர் அறிக்கையை 11) தாய்நில வரலாறு வெளியிட்டார். அதில், “பெரியார் கையாண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத் தத்தைத் தமிழக அரசு இனி செயல்படுத்தும்'' என்று குறிப்பிட்டார். அதனடிப்படையில் தமிழ்வளர்ச்சி இயக்குநரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய விவரங்களுடன் கூடிய தமது பரிந்துரையை அரசுக்கு அனுப்பினார், பின்னர், அரசு எழுத்துச் சீர்திருத்த ஆணையொன்றை வெளியிட்டது. அதன்படி நடைமுறையில் உள்ளவை. திருத்திய எழுத்துகள் ஒள அவ் ஆனா ப ] றொ ரோ பியா னொ னோ என்று சீர்திருத்த எழுத்துகளின் விவரமும் ஆணையுடன் இணைக்கப் பட்டிருந்தது. பிறகு வந்த திருத்த ஆணைப்படி ஐ, ஒள எனும் உயிர் எழுத்துகளை அப்படியே எழுதலாமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது . ஆட்சிமொழிச் செயல்பாட்டில் மூன்றாண்டு முனைப்புத் திட்டம் ஆட்சிமொழித் திட்டத்தை முனைந்து முடுக்கமாய்ச் செயல்படுத்த ம.கோரா. எம்ஜிஆர் மூவாண்டு முனைப்புத் திட்டமொன்றைத் தீட்டி, அதன்படி விரைந்து செயல்படுத்தினார். இத் திட்டத்தின் சிறப்புக் கூறுபாடுகள் 1. இத்திட்டத்தின்படி துறைகளின் சார்நிலை அலுவலகங்களில் ஆங்கிலத் தட்டச்சுக்களைப் பயன்படுத்தக் கூடாது. 2. துறைத் தலைவர்கள் வேண்டிய தமிழ்த் தட்டச்சுக்களை அலுவலகங் களுக்கு வழங்கிடல் வேண்டும், 3. விலக்களிக்கப்பட்ட இனங்களில் மட்டுமே கடிதங்கள் ஆங்கிலத் தில் எழுதப்பட அனுமதிக்க வேண்டும். விடுதலைக்குப்பின் தமிழகம் 25] 4. நினைவூட்டுகள், ஒப்புகைக் கடிதங்கள், இடைக்கால மறு மொழிகள், அசல் திருப்பு முடிவுகள் கண்டிப்பாகத் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். 5. அனைத்துப் பதிவேடுகளும் தமிழில்தானிருக்க வேண்டும். 6. இந்த முனைப்புத் திட்டத்தைத் துறைத் தலைவருக்கு அடுத்துள்ள அலுவலர் ஓராண்டுக்குள் நிறைவேற்றும் பொறுப்பு உடையவர் ராவார், 7. தமிழ் வளர்ச்சி இயக்குநர், துறைத் தலைவர்களின் அலுவலகங் களில் இந்த முனைப்புத் திட்டம் செவ்வனே செயல்படுகின்றதா யென்பதைக் கண்காணித்துக் குறை கண்டால் களைந்து செயல் படுத்த வேண்டும். இந்த முளைப்புத் திட்டம் முதலில் ஐந்து துறைகளுக்கும், பின்னர் பன்னிரெண்டு துறைகளுக்கும், கடைசியாக 1986-ல் எல்லாத் துறைகளுக் கும் விரிவுபடுத்தப்பட்டது. இதில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்கு நரின் பங்கு முகாமையானதாகக் கொள்ளப்பட்டது. சட்டத்துறையிலும், நயன்மை மன்றங்களிலும் சட்டத்தையும், தீர்ப்பையும் தமிழிலேயே வழங்கவேண்டுமென்ற ஆணைகள் வழங்கப் பட்டன. இவ்வாறு, ஆட்சிமொழித் திட்டத்திற்கு மொழி பெயர்ப்பு, தட்டச்சு தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், தமிழ் ஆட்சிமொழித் திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், ஆய்வுப் பணிகள் மூவாண்டு முளைப்புத் திட்டம் முதலானவை உறுப்புகளாய்ச் செயல்பட்டன. 4. 10. 1981-ல் மதுரை மாநகரில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் மகோரா எம் ஜி ஆர் "உலகச் செம்மொழி தமிழே" யென ஓங்கி ஒலித்து, அரை கூவல் விடுத்தார், 6. பொருளாதார வளர்ச்சி அ) வேளாண்மை தமிழகத்தின் உயிர்நாடியே வேளாண்மைதான். அதனால்தான் நாட்டை வாழ்த்துகிற பொழுது "வரப்புயர்க'' என வாழ்த்தினர். வேளாண் மைத்தொழில் செய்பவர்கள் வேளாளர் அல்லது விவசாயிகள் எனப்பட்ட னர். இவர்களில் பத்துக்குறுக்கம் ஏக்கர் நிலம் வைத்திருப்போரை "சிறு விவசாயிகள்" என்று அழைக்கப்பட்டனர். பெரும்பாலான தமிழக விவசாயிகள் சிறுவிவசாயிகளே. எனவே அவர்களை முன்னேற்றினால் வேளாண்மை மேம்படுமென அ.இஅதிமுக, அரசு கருதியது. 1. அவர்களுக்காக விவசாயிகள் நலக்குழு" ஒன்று வேளாண் துறை அமைச்சரின் கீழ் அமைக்கப்பெற்றது. 2 சிறுவிவசாயிகள் கடனில் மூழ்கிக் கிடந்ததால் ஏறத்தாழ உருடா72 கோடி கடனை அரசு தள்ளுபடி செய்தது. யே லேச" விலசிருப்பே 154 தாய்நிலவரலாறு 3. 1பிலிருந்து 20குறுக்கம் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு விவசாய வருமான வரியினின்று" விலக்களிக்கப்பட்டது. குத்தகைதாரர்களுக்கு வருமானத்தில் 75 சதவிகிதம் கிடைக்கவழி செய்யப்பட்டது. 5. சிறுவிவசாயிகளுக்கு மின்சாரச் செலவில் சலுகை அளிக்கப் பட்டது. 5. விவசாய இடுபொருள்கள், உரம் முதலியன மானிய விலையில் வழங்கப்பட்டன. 7. கூட்டுறவுச் சங்க வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டது. 8. மண்பரிசோதனை, கரும்பு பயிரிடத் தனிச் சலுகை, விலைபொருள் களை விற்கச் சந்தைகள் முதலியன செய்து தரப்பட்டன. 9. பண்ணைப்பயிர்கள், காய்கறி உற்பத்தி முதலியவற்றிற்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டன. 10. பஞ்ச காலத்தில் தக்க நிவாரணம் அளிக்கப்பட்டது. 11. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், தமிழ்நாடு விவசாயப் பொறியியல் தொழில் வளர்ச்சிக்கழகம் முதலியன வேளாண்மைக்கு உறுதுணையாக நின்றன. 12. 1981-ல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி இணையம் ஏற்பட்டது. மீன்வளம் மேம்படுத்தப்பட்டது. இவை இரண்டையும் முறையே வெள்ளைப்புரட்சி, நீலப்புரட்சி என்றழைத்தனர். - 13. குமுகாயநலக் காடுகள் அதிகரித்தன. இதனால் காடுகள் அழிக்கப் படுவது குறைந்தது. 1986-87ல் காடு வளர்ப்புக்காக உருபா 20. 28 கோடி செலவிடப்பட்டது. 14. கால்நடை வளர்ப்புத் திட்டத்திற்காக 1985-86-ல் உருபா 27.23 கோடி செலவிடப்பட்டது, இஃது பெரும்பாலும் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புக்காகவே செலவிடப்பட்டது. ஆ) தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாட்டிற்கு வேளாண்மைக்கு அடுத்து, தொழில் வளர்ச்சியே முகாமையானதாகும். அ.இ.அ.தி.மு.க. அரசு, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலையளிப்பதும், நகர்ப்புரமும், வளர்ப்புரமும் பொருளாதாரத்தில் இணையாக முன்னேற்றுவதும் தமது கடமையெனத் தேர்தல் அறிக்கையிலேயே உறுதியளித்திருந்தது. இதனடிப்படையில்தான் "தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்" ஏற்பட்டது. மேலும் கரும்பு உற்பத்தி வாரியம், சிமெண்டு உற்பத்தி வாரியம், காகித உற்பத்தி வாரியம் முதலியனவாகத் தனித்தனி வாரியங்களை யும் ஏற்படுத்தியது. விடுதலைக்குப்பின் தமிழகம் 155 அரசின் முனைப்பான செயல்களில் பார்ப்புர வளர்ச்சிக்கான சிறு தொழில்களைத் தொடங்குவது தலையாய இடத்தைப் பெற்றது. இதனால் பல ஆயிரம் கர்ப்புர மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது. அத்தகைய சிறுதொழில்களில் பீங்கான் தொழிற்சாலைகள், பட்டுப்பூச்சி வளர்த்தல், மரச்சாமான்கள் செய்தல், உலோகப்பொருள்கள் செய்தல், கை நூல் (தர்) தொழில்கள் முதலியன குறிப்பிடத்தக்கனவாம். கைநூல் உற்பத்திக்கும் அதன் மேம்பாட்டுக்கும் மட்டும் அரசு பெரும் முயற்சியெடுத்து 1,28,50g பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. பனைப்பொருள்கள் தயாரித்தல், எண்ணெய் உற்பத்தி, சவக்காரம் சோப்பு தயாரித்தல், தோல் பொருள்கள் தயாரித்தல், சந்தன மரச் சாமான்களைத் தயாரித்தல் முதலிய சிறு தொழில்கள் மர்ப்புரமக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தன. மொத்தத் தொழில் உற்பத்திக்குச் செலவிட்டதில் கர்ப்புரத்தொழில்களுக்கு மட்டும் 38சதவிகிதம் செலவிடப்பட்டது. 7. - கல்வி வளர்ச்சி 1977-78-ல் கல்வி வளர்ச்சிக்காக உருபா 150 கோடி செலவிடப் பட்டது. 1985-86-ல் இது 534 கோடியாக உயர்ந்தது. மேல்நிலைப்படிப்பு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது உயர்நிலைப் பள்ளிப்படிப்பு பத்து ஆண்டுகளோடு கார்ப்புரத்திலேயே மேல் நிலைக்கல்வி" இரண்டு துண்டுகள் படிக்க வழி செய்யப்பட்டது. இதனால் பத்தாண்டுகள் படித்து விட்டுக் கல்லூரியில் படிக்க நகர்ப்புரம் செல்லும் வழக்கம் மாறி, கர்ப் புரத்திலேயே கல்லூரிப் படிப்பு வந்துவிட்டது. அடுத்து, கல்லூரி இளங்கலைப் படிப்பு மூன்றாண்டாக மாறியது. ஆனால் மேல்நிலைப் படிப்பு முடிந்த உடனேயே மருத்துவம், பொறியியல் முதலிய தொழிற் படிப்புகளை ஊரிலிருந்தே நேரே சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எனவே, ஊரிலேயே மருத்துவர், பொறியாளர், அறிவியலார், தொழில் துறை வல்லுநர், முதலியோரை மேல்நிலைப் பள்ளிப்படிப்பு நிர்ணயித்து விட்டது. பல்கலைக்கழகங்கள் . கோவையில் பாரதியார் பல்கலைக்கழகமும், திருச்சியில் பாரதி தாசன் பல்கலைக்கழகமும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சென்னையில் தொழில் நுட்பப் பல்கலைக்கழகமும், கோடைக்கானலில் அன்னை தெரேசா பல்கலைக்கழகமும், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகமும், தொடங்கப்பட்டன. எல்லோருக்கும் கல்வியென்ற அடிப்படையில் பல்கலைக்கழகங், களில் அஞ்சல்வழிக் கல்விமுறையும், தமிழ்வழிக் கல்வி முறையும், முறை சாரா கல்விமுறையும் தொடங்கப்பட்டன. பொதுவாக, அரசு கல்விக்காகப் பெருந்தொகையைச் செல் விட்டது. அதில் எண்பது விழுக்காடு பள்ளிக் கல்விக்கும், மதிய உணவுக் 146 தாய்நில வரலாறு கும், சீர்உடை வழங்குவதற்கும், பொத்தகங்கள், எழுதுபொருள்கள் முதலியவற்றிற்கும் செலவிடப்பட்டது. இதனால், பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தி விடும் மாணவர் விகிதம் குறைந்தது. அதே சமயம் மாணவர் வருகையும் அதிகரித்தது. பள்ளிகளின் வேறுபாடுகளை நீக்குதல் பள்ளிகள் அரசுப் பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள் என இருவகையாக இருந்ததை இவ்வரசு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் * 'அரசுப்பள்ளிகள்" என்றாக்கியது. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாயினர். அவர்களின் எண்ணிக்கையும், பாதுகாப்பும் அதிகரித்தன. பணிமுறைகள், ஓய்வு ஊதியம் முதலியன ஒரே சீராக அமைந்தன. இருவகைக் கல்லூரிகள் கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளென இரு வகையாகச் செயல்பட்டன. அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிலைகளிலும், பணி, ஊதியம் முதலியவற்றிலும் வேறுபாடுகளிருந்தன. இவை பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைப்படி ஒரே சீரானவை யாக ஆக்கப்பட்டன. அரசுக்கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரேவிதமான ஊதியம் வழங்கப்பட்டது. இதையும் அரசே நேரடியாக வழங்கியது. அனதிய விகிதம், பணி நிலைகள் முதலியனவும் ஓய்வு ஊதியமும் இவர்களுக்கு ஒரே மாதிரியாக நிர்ண யிக்கப்பட்டன, தொழில் நுட்பக் கல்லூரிகள், வேளாண்மைக் கல் லூரிகள், பொறி இயல் கல்லூரிகள் முதலியவற்றில் பணியாற்றும் ஆசிரி யர்களும் இதே நிலையில் மதிக்கப்பட்டனர். இதனால், மாந்தவனமும் ஆற்றலும் வளர்ந்தன, 8, நல்வாழ்வு மேம்பாடு (அ) சுகாதார வளர்ச்சி ஊர்ப்புரங்களில் நலவாழ்வை மேம்படுத்தச் சுற்றுச் சூழல்களைத் தூய்மைப்படுத்துதல், தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்தல், தரமான மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல், நோய் தடுப்பு முறைகளைக் கையாளுதல் முதலியவற்றை அரசு செய்தது.குறிப்பாகத்தாய், சேய் நலத்தை முகாமையாசுக்கொண்டது. வாதநோய் தடுப்பு தடுப்புச் சொட்டு மருந்து விடுதல், அம்மை, மஞ்சள்காமாலைத் தடுப்பூசி, சத்துணவு வழங்குதல் முதலியவற்றை மேற்கொண்டது. புதிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகள் முதலியன ஏற்படுத்தப்பட்டன. எட்டு மருத்துவக் கல்லுாரிகளை அமைத்து, ஆண்டு தோறும் 1,015 மருத்துவர்களை உருவாக்கி, மக்களுக்குப்பணிபுரிய அனுப்பப்பட்டனர். மொத்தத்தில் 14 மாவட்ட மருத்துவமனைகள், 104 வட்ட மருத்துவமனைகள், அவர்களில் தொடக்கச் சுகாதார மருத்துவ நிலையங்கள் ஏற்பட்டன. புற்றுநோய் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை முடுக்கமாய் மேற்கொள்ளப்பட்டன. 271-280 விடுதலைக்குப்பின் தமிழகம் 187 9. மின்உற்பத்தியில் மேம்பாடு - 1970-71ல் 57 மெகாவாட் யூனிட்டுகளாயிருந்த மின்உற்பத்தி 1985 - 86-ல் பற்கள் மெகாவாட் யூனிட்டுகளாய் உயர்த்தப்பட்டது. மின் உற்பத்தி நிலக்கரியை எரித்தும், அணுவைப் பயன்படுத்தியும் பெறப்பட்டது. வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்து மின்உற்பத்தி செய்யப்பட்டது. கல்பாக்கத்தில் அணுமின் உற்பத்தி செய்யப்பட்டது. போதிய நிலக்கரி தமிழ்நாட்டில் கிடைக்காததால் 1985-86-ல் உருபா 57.87 கோடி மின் உற்பத்திக்காகச் செலவிடப்பட்டது. புதிதாக ஊர்ப்புரங்களுக்கும், குடிசைப்பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதால் 1986-ல் மட்டும் 45இலக்கம் குடிசைகளில் மின்விளக் கெரிந்தது. ஆதி - திராவிடர் குடியிருப்புகள் மொத்தம் 64,012க்கு மின் விளக்குகள் இலவசமாக அளிக்கப்பட்டன. 1984-85-ல் 074 இலக்கம் வேளாண்மைநீர்இரைப்பு இயந்திரங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், வேளாண்மை உற்பத்தி அதிகரித்தது. 10, போக்குவரத்து ஏந்துகள் மேம்படுதல் 1985-ல் தமிழக ஊர்களின் மக்கள் தொகை 324 கோடியாகும். ஊர்ப்பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 12,339 ஆகும், நகரங்களின் எண்ணிக்கை 434 ஆகும். 1985-ல் தமிழகத்தில் ஓடிய பேருந்துகளின் எண் கணிக்கை 15,021 ஆகும். இவற்றில் 12 போக்குவரத்துக்கழகங்கள் 7,829 பேருந்துகளை இயக்கின. ஓவ்வொரு நாளும் 56 இலக்கம் பயணிகள் பேருந்துகளில் பயணித்தனர். நாள்தோறும் 35 இலக்கம் கிலோ மீட்டர் தாரம்பேருந்துகள் ஓடின. பேருந்துகளை நாட்டுடமையாக்கிய அண்ணாவின் காலந்தொட்டு, தமிழ்நாட்டுப் போக்குவரத்துக்கழகம் பல்கிப் பெருகியது. குறிப்பாக மூலை முடுக்குகளிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பேருந்துகள் சென்றன. இதனால் 440 ஊர்கள் பேருந்துப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டன, இதனால் அ.இ.அ.தி.மு.க. அரசு 400 புதிய பேருந்துகளை 163 கோடி உருபா செலவில் வாங்கியது. இன்று இந்திய மாநிலங்களிலேயே 24 மணி நேரமும் எண்திசைகளிலும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துப் போக்குவரத்து உள்ள மாநிலம் தமிழகம் மட்டுமேயாம். 11. நீர்ப்பாசன மேம்பாடுகள் நீர்ப்பாசனங்களை முதல்தரம், இரண்டாம் தரம், சிறுநீர்ப்பாசனம் என மூன்றாகப் பிரித்துப் படிப்படியாகவும், தனித் தனியாகவும், அவற்றின் தரத்தை அரசு மேம்படுத்தியது. 1985-இல் மட்டும் முதல்தர இரண்டாம்தர நீர்ப்பாசனங்களுக்காக அரசு 48.12 கோடி உருபாசெலவிட்டது. சிறுநீர்ப் பாசன மேம்பாட்டிற்காக உருபா 4.62 கோடி செலவிட்டது. பஞ்ச நிவாரணம் ' . 1988-ல் பஞ்ச நிவாரணத்திற்காக அரசு 153.80 கோடி உருபா செலவிட்டது. குடிநீர் ஏந்துகளுக்காகக் கிணறுகள், குழாய்கள் முதலியன 253 - தாய்நிலவரலாறு அமைக்கப்பட்டன. "'வயிற்றுக்குச் சோறு" என்ற திட்டத்தின்கீழ் எல்லா விவசாயிகளுக்கும் வேலையளிக்கப்பட்டது. அவர்கள் பஞ்சநிவாரணப் பணிகளில் வேலை செய்தனர். மேலும், விவசாயிகளுக்குத் தாராளமாகக் சுடன் வழங்க வங்கிகள் பணிக்கப்பட்டன. இவர்களின் மேம்பாட்டிற் காகத் தவசச்சேமிப்பு (தானியச் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன. சிமெண்டு உற்பத்தி அதிகரித்தது. வீடுகட்டடக் கடன் கொடுக்கப்பட்டது, 12. சிறந்த குமுகாயச் சீர்திருத்தங்கள் ட வருவாய்த்துறைக் கழகம் ஒழிப்பு (ஜமாபந்தி) ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட இக் கழகம் குமுகாயப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இதனால் 1.12.1980-ல் மகோரா எம் ஜி ஆரி ஒழித்தார். 2. பாரம்பரிய மர்மணியக்காரர், கர்ணம் ஒழிப்பு கோயிலிலே அர்ச்சகர் பதவியைப்போல் இப் பதவிகளும் தகப்ப னுக்குப்பின் மகன் யென்ற முறையில் பரம்பரைச் சொத்தாக இருந்தன, இதனால் குறிப்பிட்ட சாதியினர் பரம்பரையாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப் பட்டனர். இந்த பரம்பரை முறையை ஒழித்து, அவற்றையும் அரசுப்பணிக ளாக்க வேண்டுமென ஆதி திராவிடர்களின் தலைவர்கள் பன்னெடுங் காலமாகக் கேட்டு வந்தனர். ஆனால், இது மகோரா, எம்ஜிஆர்) காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. பரம்பரைப் பதவி முறையை ஒழித்து இதனை ஊர் அலுவலர் (Village Administrative Officials) என மாற்றினார், தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேறிய எவரும் இப் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், அரசுப்பணிகள் வகுப்புவாரி படிநிகராளியத் தின் அடிப்படையில் அமர்த்தப்படுவதால் ஊர் மணியக்காரராகவும், கர்ணமாக வும் ஓர் ஆதி திராவிடர்கூட வரலாமென்ற நியதி ஏற்பட்டு விட்டது. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி (I.A.S & I.P.S) ஆகியவற்றில் தேறிய ஆதி திராவிடர் மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்டக் காவல்துறை அதிகாரியாகவும் வந்தபோதும் ஊர் மணியக்கார ராக வரமுடியாத நிலை இருந்ததை மகோரா. எம்.ஜி.ஆர் மாற்றியமைத் தார். இது குமுகாயத்திலேற்பட்ட மாபெரும் புரட்சி ''அரசு ஆதி - திராவி டர்களுக்குப்போடும் நலத்திட்டங்கள் அவர்களைப் போய் அடையாமல் தடுத்தவர்கள் பரம்பரை மணியக்காரரும், கர்ணமுமேயாவர்; இனி அத்தகைய தடை ஏற்படாது" என்று. இவ்வாணையை வெளியிடும்போது மகோரா. எம் ஜி ஆர் கூறினார். 3. உள்ளாட்சித் துறைகளில் இட ஒதுக்கீடு பஞ்சாயத்துத் தலைவர்கள் இடஒதுக்கீடுபடி வரவேண்டுமென அவர் ஆணையிட்டார். இதனால் ஆதி திராவிடர்களும், பெண்களும், குறிப்பாக ஆதி திராவிடப்பெண்களும் பஞ்சாயத்துத் தலைவர்களாகவும், தலைவிகளாகவும் வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் தீண்டாமையின் - விடுதலைக்குப்பின் தமிழகம் 15 ஆகவே பட்மெ ஆபிரி ஆணிவேர் வளர்ப்புரங்களில் அசைக்கப்பட்டது. ஆனால், இன்னமும் தென் தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தலைவர்களாக நாற்காலியில் ஆதி திராவிடர் அமர முடியவில்லை . சட்டத்தால் மட்டும் முடியாது, இதற்கு மனமாற்றம் தேவை என்கிறார்கள்.உரிமையை உயிரை விட்டாவது துய்க்க வேண்டுமென்ற மன உறுதி ஆதி திராவிடருக்கு வந்து விட்டால் சட்டம் தானே செயல்படும். 4. அரிசன நலத்துறை பெயர்மாற்றம் ''அரிசன்"' என்ற சொல்லே அரசியல் சட்டத்தில் இல்லை . ஆனாலும் காந்தியார் இச்சொல்லை உச்சரித்து அரிசனத்தெய்வமானார்! எனவே, பேராயக் கட்சியின் வளர்ச்சிக்குத் தாரக மந்திரமாக இஃது உச்சரிக்கப்பட்டது. ஓபி. இராமசாமி ரெட்டியார் (1947-49) சென்னை மண்டிலத் தலைமை அமைச்சராக இருந்தபோது தொழிலாளர் நலத் துறை"யை இரண்டாகப் பிரித்து அதிலிருந்து "அரிசன நலத்துறை"யை . ஏற்படுத்தினார். அன்று முதல்மகோரா (எம் ஜி ஆர் காலம் வரை அரிசன நலத்துறை பெயர் மாற்றமில்லாமலேயே இருந்தது. மகோரா.""அரிசன்" என்ற பெயர் தமிழ்ப் பெயராக இல்லை யென்பதற்காக அதனை * 'ஆதி - திராவிடர்"" என்று மாற்றினார். இதற்குப்பிறகு அரிசன நலத்துறை ஆதி திராவிடர் நலத்துறையென்றும், அரிசன மந்திரி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். 5. தெருக்களுக்கிருந்த சாதிப்பெயர்களை நீக்குதல் தெருக்கள் அல்லது வீதிகள் சாதிப் பெயர்களால் அழைக்கப் பட்டன. பெரியார் பாசறையில் வளர்ந்த தலைவர்களால் தமிழகம் 1967. விருந்து ஆளப்பட்டது. சாதிப் பட்டங்களைத் தங்களின் பெயரோடு சேர்ப்பதில்லை யென்று உறுதியெடுத்துக் கொண்ட இவர்கள்திருக்க ளுக்கு மட்டும் சாதிப் பெயர்கள் வைத்து வழங்குவதை எப்படி விட்டு விட்டனரென்று தெரியவில்லை, ஆனால், அதே பாசறையில் வளர்ந்த மகாரா.பெரியாரைப் போலவே உறுதியாக இருந்து அப்பெயர்களை நீக்கிவிட்டார்! இதனை மு. கருணாநிதியும் எதிர்த்தார். ஆனால், மகோரா. இதில் பின்னடையவில்லை "சுங்குராம செட்டித் தெரு" என்பதை சுங்குராமன் தெரு என்றும், தணிகாசலம் முதலி தெரு என்பதைத் தணிகா சலம் தெரு என்றும் இவ்வாறாக 'சாதி'களை வெட்டினார். ''ம.கோ.ரா."' மாந்த நேயம் உடையவர். அவருக்குக்கட்சி, சாதி, சமயம் முதலியன குறுக்கே நிற்காது. 5. தமிழக மேலவை (Legislative Council)யை ஒழித்தல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மேல் அவை (LegislativE Council) சீழ்அ வை (அல்லது) சட்டமன்றம் (Legislative Assembly) என இரு அவைகள் இருந்தன. இந்த ஆட்சி 30.1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் மகோரா, தலைமையில் இயங்கியது. அவரும் மூன்று முறை 16) தாய்நில வரலாறு முதல் அமைச்சராயிருந்தார். மூன்றாம் முறை முதல் அமைச்சராய் (14.2.1985 - 24.12.1997 இருந்தபோதுதான் 1986ல் அவர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மேல்வையை ஒழித்துவிட்டார். அவ்வாண்டு முதல் தமிழகத்தில் ஒற்றைச் சட்டமன்ற மேயுள்ளது. இதை ஏன் ஒழித்தார் என்பதற்கான விளக்கமும், அதன் நன்மை தீமைகளும் அறிஞர்களிடையே விவாதப் பொருளாகவேயுள்ளது. 1. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டவரைவு தி.மு.க. ஆட்சியில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு, உச்ச நயன்மை மன்றத்தால் நிராகரிக்கப்பட்டதைக் கண்டோம். அஇஅதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் மகோரா. (எம். ஜி. ஆர். இதுபற்றி ஆய்ந்துரைக்க நயன்மையர் (ஓய்வு) மகாராசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்த குழு 1987 ஆம் ஆண்டு அரசுக்குத் தனது பரிந்துரைகளைக் கொடுத்தது. அக்குழுவின் பரிந்துரைகளாவன: 1. அடிப்படை உரிமைக்கு எதிரானது:- அர்ச்சகர் பதவி பரம்பரை உரிமையுடையதென 1959 ஆம் ஆண்டு இந்து அறநிலையச் சட்டம் விதி 55 ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனைத் திருத்தி திமுக அரசு 1971 ஆம் ஆண்டுகொண்டு வரப்பட்ட அர்ச்சகர் சட்டத்தில் அந்தப் பரம்பரை உரிமை நீக்கப்பட்டது. அர்ச்சகர்கள் இதனை எதிர்த்து, உச்ச நயன்மை மன்றத்தில் வழக்குப் போட்டனர். உச்ச நயன்மை மன்றம் ''பரம்பரை உரிமையை ஒழிப்பது அரசியல் சட்டம் அளித்த அடிப்படை உரிமைக்கு எதிரானது" என்று தீர்ப்பு அளித்தது. 2. ஆகமவிதிகளுக்கு புறம்பானதல்ல:- பிராமணரைத் தவிர்த்த பிற சாதியாரை அர்ச்சகராக்குவது 'ஆகம விதிகளுக்குப் புறம்பானது அல்ல" என்று இக்குழு கூறியது. ஏனென்றால் ஆகமவிதிப்படி கட்டிய பல கோயில்களில் பிராமணரல்லாதாரும் அர்ச்சகராக வுள்ளனர்; ஆகம விதிகளுக்கு மாறாகத் தேவதாசி முறை ஒழிக்கப் பட்டுவிட்டது: ஆகம விதிகளுக்குப் புறம்பாக ஆதி திராவிடர்கள் (தீண்டாதார்கோயில் நுழைவு ஏற்பட்டுவிட்டது ஆகம விதிகளுக் குப் புறம்பாக உயிர்ப்பலித் தடை கொண்டு வரப்பட்டு விட்டது: சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் சட்ட விதியாகிவிட்டது; எனவே,' 'ஆண்டவன் முன் அனைவரும் சமம்" என்பதை உறுதி செய்ய அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கு வதைத் தடுக்க முடியாதெனக் குழு பரிந்துரை செய்தது. இதற்கு அரசியல் சட்டமே தடையாக நின்றாலும், அதையே திருத்தலர் மென்று குழுத் தலைவர் கூறினார். 3. ஆகமவிதிகளை அறிந்தவரே அர்ச்சகராக வேண்டுமென்றால் அர்ச்சகராவோருக்கு அதில் பயிற்சி அளிக்கலாம் அதற்காக அரசே ஆகமக்கல்லுாரிகளைத் திறந்து அத்தகைய பயிற்சி அளிக்கலாம் மென்றும் பரிந்துரைச் செய்யப்பட்டது. விடுதலைக்குப்பின் தமிழகம் 261 4. ''ஆகமவிதிகள் பிராமணர் தவிர்த்த பிறசாதியினரையும், பெண்க ளையும் அர்ச்சகராகக் கூடாது யென்று தடுக்கவில்லை. எனவே, பெண்களும் அர்ச்சகராகலாம்" என்றும் பரிந்துரைக்கப் பட்டது. பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து மூலவர் இருக்கைக்கு வரக் கூடாதென்றால் தேவதாசிகளும் பெண்கள் தானே? அவர்களை ஏன் அனுமதித்தனர்? என்றும் வினா எழுப்பியது. இதற்குப் பின்னும், அரசு அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்த முடியாமல் மயக்கமுற்றது. ஆயினும் குமுகாயச் சீர்திருத்தம் செய்து குமுகாய நயன்மையைக் கண்டுவிடத் துடித்த மகோரா. எம்ஜிஆர்) மேலும் இதுபற்றி ஆய்ந்துரைக்க 1984-ல் நயன்மையர் கிருட்டிணசாமி ரெட்டியார் தலைமையில் மீண்டும் ஒரு குழுவை ஏற்படுத்தினார். இக் குழுவும் பல் பரிந்துரைகளைத் தந்தது. அதற்குப் பின்னும் அரசால் அர்ச்சகர் சட்டத்தை நிறைவேற்றிச் செயல்படுத்த முடியவில்லை. நெஞ்சோடு கிளத்தல் 1. இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து "சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது: இது அரசியல் சட்டமளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்குப் புறம்பானது" என்று கூறி அதனை எதிர்த்த பிரா மணர்கள் அர்ச்சகர் பதவியை மட்டும் பிராமண சாதிக்கே உரியது யென்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்? பிராமணர் தவிர மற்ற சாதியார் அர்ச்சராகி ஆண்டவன் உருவச் சிலையைத் தொட்டு நீராட்டினால் தீட்டுப்பட்டுவிடும் என்கிறார்கள். இது அரசியல் சட்ட விதி 17க்கு எதிரானது. அவ்விதியில் 26.950-லிருந்து தீண்டாமை இப் புனித பாரதத்திலிருந்து அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டதென்றும், தீண்டாமைக் குற்றம் செய்வோர் தண்டனைக்குள்ளாவ ரென்றும் கூறுகிறது. ஆனால், பிராமணர்கள் அக்குற்றத்தையே செய்கின்ற னர்! இவ்வாறு, சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் போது அரசியல் சட்டவிதிகள் 25(1) மற்றும் 26யும் சுட்டிக்காட்டி அவற்றில் வெற்றி பெற்ற பிராமணர், அதே அரசியல் சட்ட விதிகளுக்கு எதிராக **பிராமண சாதிக்கே அர்ச்சகர் பதவி'' என்று கூறி அச் சட்டம் நிறை வேறாமல் தடுத்துவிட்டனர். இதனை மேலும் வலுப்படுத்தக்காஞ்சி சங்கர மடத்தில் மடத் தலைவர்களாக பிராமணரையே வைத்துக் கொண்டு, வருணாசிரமத்தைக் கடைபிடிக்கின்றனர். உண்மையான மக்களாட்சி முறையை நிலைநாட்டவும், நாகரிகக் குமுகாயத்தை உருவாக்கவுமே தேவதாசி முறையை ஒழித்தார்கள், தீண்டாதாரைக் கோயில்புகச் செய்தனர். அதே பண்பாடுகளைக் கட்டிக் காக்க அர்ச்சகர் பதவியிலும் எந்தச் சாதியினரும் அமரலாமென்று விட்டுக் கொடுத்தாலென்ன? தாய்நிலவரலாறு தேவதாசிகள் பிராமணச் சாதியைச் சேர்ந்தவர்களல்லர். அவர்கள் தக்கபடி பயிற்சிப் பெற்றபின் தேவதாசிகள் ஆயினர். அவ்வாறே, பயிற்சிப் பெற்ற எவரையும் அர்ச்சகர்களாக்கினாலென்ன? முதற்படியாகச் செல்வி ஜெயலலிதா அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கியுள்ளார். 6. காவிரி நீர்ப்பங்கட்டிச்சிக்கல்கள் இந்திய வரலாறே காவிரிப்படுகையிலிருந்துதான் தொடங்கப்படுதல் வேண்டுமென்றும், அது சிந்து வெளியிலிருந்து தொடங்கப்படுதல் கூடாது என்றும் கூறும் நாகரிகமும், பண்பாடும் அறிஞர்களுக்கே ஒரு மாபெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. இன்றையக் கருநாடக - தமிழகங்களுக் கிடையே அவ்வாற்று நீரைப் பகிர்ந்து கொள்ளுவதிலேற்பட்டுள்ள சிக்கல்கள், 1956-ல் மொழிவழி மாநிலங்கள் தோன்றியதற்குப்பின்னரே வெளிப்படையாகத் தெரியவந்தன. இச் சிக்கல் காவிரி பாயும் கருநாடகம், கேரளம், தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையி லெற்பட்டாலும் இதில் அதிகம் தாக்குண்டுத் துன்பப்படுவது தமிழகமே ஆகும். ஆதலால் நேரடி மோதல்கள், தமிழகத்திற்கும் சுருநாடகத்துக்கு மிடையில் தான் நடக்கின்றன. ஒரு பின்னோட்டம் - ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறைப் பொறி யாளராக இருந்த வயவர். ஆர்தர்காட்டன் என்பவர் காவிரியில் வெள்ளாறு காவிரியிலிருந்து பிரியுமிடத்தில் காவிரிக்கும், வெள்ளாற்றுக்கும் மதகுகள் அமைத்தார். பின்னர் கொள்ளிடத்தில் மேல் அணையும், 936-ல் கீழ் அணையும் அமைக்கப்பெற்றன. ஓப்பந்தம் - 1892ல் மைசூர் அரசும், சென்னை மண்டில அரசும், தங்களுக்குள் இயைந்து ஓர் ஒப்பந்த உடன்படிக்கைச் செய்து கொண்டன. அதன்படி மைசூரும், சென்னையும் ஒன்றுக்கொன்று ஒப்புக்கொண்டு, முன் அனுமதியுடன்தான் காவிரியின் குறுக்கே நீர்த்தேக்கமோ, கால்வாயோ அமைக்க வேண்டும் என்பதாகும். - ஒப்பந்தம் மீறல் எடுத்த எடுப்பிலேயே மைசூர் அரசு சென்னை அரசின் அனுமதி இல்லாமலேயே 1892ல் கண்ணம்பாடி அணையைக் கட்டத் தொடங்கி யது. இதற்குச் சென்னை அரசு மறுப்புத் தெரிவித்தும் பயனில்லாமல் போனது.1971-ல் மின் உற்பத்திக்காகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியை மைசூர் அரசு கூட்டத்தொடங்கியது. இதற்கும் சென்னை அரசு அனுமதி மறுத்தது, வழக்கு இவ்விரு ஒப்பந்தமீறலுக்காகச் சென்னை அரசு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கு அலகாபாது நயன்மை மன்றத்தில் பாசாவப் விடுதலைக்குப்பின் தமிழகம் 263 பெற்று, மைசூர் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதெனத் தீர்ப்புக் கூறப் பட்டது. ஆனால், நயன்மை மன்றத் தீர்ப்பை மைசூர் அரசு ஏற்க மறுத்து, மேல் முறையீடு செய்தது. அன்றைய இந்தியாவின் உச்ச நயன்மை மன்றம் இலண்டனிலுள்ள பிரிவிகவுன்சில் ஆகும். அந்த உச்ச நயன்மை மன்றம் * இரண்டு மாநிலங்களும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று தீர்ப்புக் கூறியது. மீண்டும் ஒப்பந்தம் 1821924-ல் இரண்டு அரசுகளும் மீண்டும் பழையபடி ஒப்பந்தம் செய்து கொண்டன. இதனடிப்படையில் ஒன்றுக்கொன்று முன் அனுமதி யுடன் கிருட்டிணராசசாகர் அணை ஆகியவற்றைக் கட்டிக்கொண்டன. அணைக்கட்டுகளுக்குப்பின், இவ்விரு மாநிலங்களும் கால்வாய்கள் வெட்டும் திட்டங்களைத் தொடங்கின. கன்வா, பைரமங்களா, பார்மே கோகள்ளி, இம்சா முதலிய கால்வாய்களை மைசூர் அரசும், பவானி, கீழ்பவானி, பவானி சாகர், அமராவதி ஆகிய கால்வாய்த் திட்டங்களைச் சென்னை அரசும் தொடங்கின. சிக்கல்களின் தோற்றம் 1956-ல் நிர்ணயிக்கப்பட்ட மொழிவழி மாநில எல்லைக் கோடு களால் சிக்கல்கள் தோன்றலாயின. எல்லைக்கோடுகள் தோன்றலாயின. எல்லைக் கோடுகள் நிர்ணயிக்கப்பட்டபின் 1892லும், 1924லும் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் காற்றில் பறந்தன. கருநாடக அரசு தன்னிச்சையாகப் பல புதிய கால்வாய்களை வெட்டிக் காவிரி நீர் பாயும் நிலப்பரப்பைக் கருநாடகத்தில் விரிவுப்படுத்திக்கொண்டது. இதனைத் தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய காவிரிப்பாயும் மாநிலங்கள் எதிர்த்தன. இத்தகைய எதிர்ப்புகளும் சிக்கல்களும் 1968லிருந்து வலுவடைந்தன. தமிழ்நாடு வழக்குமன்றம் சென்றது 1971ல் தமிழ் நாடு காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க ஒரு "நடுவர் மன்றம்" வேண்டுமென்றுக் கோரி உச்சநயன்மை மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அன்றைய பாரதத்தின் தலைமை அமைச்சர் இதில் தலையிட்டு, காவிரி பாயும் மாநிலங்கள் ஒன்று கூடிக் கவந்து பேசித் தீர்த்துக் கொள்ளும்படியும் இதனால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டதால், தமிழ்நாடு வழக்கைத் திருப்பிப் பெற்றுக்கொண்டது. 1971-1972-ல் கேரளம், கருநாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒன்று சேர்ந்து பேசி இரண்டு வரைவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. இவற்றில் இம் மாநிலங்கள் அணைக்கட்டுவதற்கும், கால்வாய் வெட்டுவதற்கும் முன் ஒன்று மற்றொன்றிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இல்லை. மேலும், கருநாடகம் 1924ல் ஏற்பட்ட ஒப்பந்தத்திலுள்ள முன் அனுமதிப் பெற வேண்டும்" என்ற நிபந்தனை செல்லாது என்று கூறி விட்டது, ஏனென்றால் அந்த ஒப்பந்தம் மாநில எல்லைக்கோடுகளை நிர்ணயித்த 64 தாய்நிலவரலாறு 1956க்கு முன்புநாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தை விடுதலைக் குப்பின் அதனைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் கூறிவிட்டது. இதற்குப்பின், கருநாடகம் தன்விருப்பம் போல் கால்வாய்களை வெட்டியது. அணைக்கட்டுகளைக் கட்டியது. இதற்கு மறுப்புத் தெரிவித்தும் கருநாடகம் காதில் விழவில்லைஎளg75ல் தமிழகம் காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கலை நடுவர் மன்றத்திற்கு விடும்படிக் கேட்டது பயனில்லை . 1983ல்காவிரிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கை விவசாயிகள் நல உரிமைச் சங்கம் உச்ச நயன்மை மன்றத்தில் தொடுத்தது. இவ்வழக்கு 1990 வரைத் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால், 2441990ல் நடுவண் அரசு தலையிட்டு, இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கருநாடகமும், தமிழகமும் தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டது. ஆனால், பேச்சுவார்த்தையிலும் பலன் ஏற்படவில்லை. நடுவர் நயன்மை மன்றம் எந்த முடிவும் எட்டாத நிலையில் தமிழகத்தின் வேண்டுகோளுக் கிணங்க நடுவண் அரசு 'தடுவர் நயன்மை மண்றம்' அமைத்து, அதில் நயன்மையர் குழு ஒன்றையும் அமர்த்தியது. அதன் தலைவராக நயன்மையர் சிட்டகோசு முகர்சி நியமிக்கப்பெற்றார். அவருடன் பணியாற்ற என்.எசு. இராவ், எஸ்.டி அகர்வால் ஆகிய இரு நயன்மையரும் அமர்த்தப்பட்டனர் இந்த நயன்மையர் குழு காவிரி பாயும் மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து, செய்திகளைத் திரட்டி ஆய்ந்து, கீழ்கண்ட தீர்ப்பை வழங்கியது. நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்பு ''கருநாடகமும், தமிழகமும் வாராவாரம் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்,'' என்பதே தீர்ப்பு ஆகும். இத் தீர்ப்பை கருநாடகம் ஏற்க மறுத்தது. மேலும், "நடுவர் நயன்மையர் மன்றத்திற்குத் தீர்ப்புக் கூறும் தகுதி இல்லையென்றும், அது நயன்மை மன்றமே அல்லவென்றும் கருநாடகம் கூறியதோடு, அத் தீர்ப்புச் செல்லாதென 'அவசர சட்டம் ஒன்றையும் கருநாடகம் பிறப்பித்தது. கருநாடகத்தின் இந்த அதிரடிச் செயலுக்கு மாற்றாக உச்ச நன்மை மன்றம், ''கருநாடக அரசுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கும் உரிமை இல்லை" யென்றும், அது இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது" என்றும் கூறி, ''நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்பே முடிவானது" என்றும் கூறியது. நடுவண் அரசு, நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்பைத் தனது அரசிதழில் 20299ல் வெளியிட்டு உறுதி செய்த்து, விடுதலைக்குப்பின் தமிழகம் 265 உண்ணாநோன்பு செல்வி. செ. செயலலிதா முதன் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். [2551991 - 2321996) காவிரிநீர் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க வேண்டியும், உடனடியாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் விடும்படியும் காந்திய பாணியில் உண்ணா நோன்பு நோற்றார். இஃது 187 1993லிருந்து 21793 வரை நான்கு நாட்கள் சென்னைக் கடற்கரையிலுள்ள மகோரா. (எம் ஜி ஆர் சமாதி முன்பு நடைபெற்றது. மக்கள் கொந்தளித்தனர். இதனையறிந்த நடுவண் அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சுக்லா அவர்கள், செல்வி செயலலிதாவை உண்ணா நோன்பைக் கைவிடும்படிக் கேட்டுக்கொண்டார்; நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்பை நிறைவேற்று வதாக வாக்குறுதி அளித்தார். நடுவர் நயன்மை மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதைக் கண்காணிக்கக் கண்காணிப்புக் குழு அமைத்தல் இதற்குப் பின்னும் கருநாடகம் நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்பை ஏற்றுச் செயல்பட மறுத்து விட்டது. இதனால், நடுவர் நயன்னையர் மன்றத் தீர்ப்புப்படி இரு மாநிலங்களும் செயல்படுகின்றனவாயென்பதைக் கண்காணிக்க ஒரு ''கண்காணிப்புக் குழு" ஏற்படுத்தப்பட்டது. இந்த இரண்டு குழுக்களின் தீர்ப்புகளையும் கருநாடகம் சட்டைச் செய்ய வில்லை , மீண்டும் உச்சநயன்மை மன்றத்தில் வழக்கு - தமிழகத்தில் கடும்வர்ட்சி ஏற்பட்டது. காவிரிப்படுகையில் பயிரிடப்பட்ட 133 இலக்கம் குறுக்கையில் உள்ள நெற்கதிர்கள் வாடின; இதனால் தமிழக விவசாயிகளுக்கு உருபா 800 கோடி இழப்பீடு ஏற்படும் அபாயம் நெருங்கியது. இதனை விளக்கி 11.12.1995-ல் தமிழக அரசு உச்ச நயன்மையர் மன்றத்தில் தண்ணீர் விடும்படி ஆணையிடக்கோரி மனு கொடுத்தது. உச்சநயன்மை மன்றமும் தமிழகத்திற்கு 13பிடிஎம்சி தண்ணீர் விடும்படித் தீர்ப்புக் கூறியது. ஆனால், உச்சநயன்மை மன்றத் தீர்ப்பைக் கருநாடகம் துச்சமென நினைத்து தண்ணீர் விட மறுத்துவிட்டது. அனைத்துக்கட்சிக் கூட்டம் இந் நிலையில் தமிழக அரசு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இதற்கு ஒரு தீர்வு காணும்படிக் கேட்டுக்கொண்டது. இதில் 78 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திற்கு அறத்தின் அடிப்படையில் கருநாடகம் *நடுவர் நயன்மையர் மன்றத் தீர்ப்புப்படி தண்ணீர்விட வேண்டும்" என்று ஒருமனதாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானமும் செவிடன் காதில் ஔதிய சங்கொலிபோல் ஆனது. இந்தியத் தலைமை அமைச்சரின் வேண்டுகோள் இதனையடுத்து, தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தில்லிச் சென்று நேரடியாக இந்தியத் தலைமை அமைச்சரை 22.1995 -ல் நேரில் 266 தாய்நிலவரலாறு எம்சி. தாயினும், சுருக்கப்பெற்றது சந்தித்து, தமிழகத்தில் வாடும் நெற்கதிர்களைப் பற்றிக் கூறினார். தலைமை அமைச்சர் குறைந்தது ஆறு டிஎம்சி தண்ணீராவது விடவேண்டுமென சுருநாடகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆயினும், சுருநாடகம் தண்ணீர் விட மறுத்துவிட்டது. பின்னர், "முவர்குழு" ஒன்றும் அமைக்கப்பெற்றது. அதனாலும் பலன் ஏற்படவில்லை. இதற்கிடையில்செல்வி, செயலலிதா வின் அஇஅதிமுக ஆட்சியும் 1995-ல் முடிந்தது. முடிவுரை காவிரி நீர்ப் பங்கிட்டுச் சிக்கல் கருநாடகம், தமிழகத்திற்குமிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்கிறது. ஒப்பந்தம், நடுவர் நயன்மர் மன்றத்தீர்ப்பு, உச்ச நயன்மையர் மன்றத் தீர்ப்பு, கண்காணிப்புக்குழுத் தீர்ப்பு முவர்க்குழுத் தீர்ப்பு மக்கள் மன்றத்தின் வேண்டுகோள் விவசாயி ளின் வேண்டுகோள் முதலிய இன்னபிறவும் கருநாடகத்தின் பிடிவாதத் திற்கு முன் எடுபடவில்லை. ''தீர்ப்பு'' என்றால் செயல்படுத்தப்பட வேண்டும் தவறினால் தண்டனை வேண்டும். இதுவே நயன்மை மாற்றத்தின் இறையாண்மை , ஆக, இந்திய உச்ச நயன்மை மன்றத்தையும், இந்திய அரசியல் சட்டத்தையும், மக்கள் குரலையும் மதிக்காத ஒரு அரசு உள்ள தென்றால் அது கருநாடகமே. இதற்குத் தீர்வுதான்.என்ன? * "ஈயிருக்கும் இடம் எனினும் இப் புவியில் யான் அவர்க்கு அரசு இனி கொடேன்." என்ற துரியோதனன் பிடிவாதம் போல் இன்றைய கருநாடக முதல்வர் " ஒரு சொட்டுத் தண்ணீரும் தமிழகத்திற்குக் கொடேன்" என்கிறார். ""தமிழகம் உச்ச நயன்மையர் மன்றமென்ன, உலக நாடுகள் மன்றமே சென்றாலும் என்னை ஒன்றும் அசைக்க முடியாது" என்கிறார். அவரை அசைக்கப்பாரதமும், பாரத தலைமை அமைச்சரும், உச்ச நயன்மையர் மன்றமும், அரசியல் சட்டமும் ஒன்றும் செய்யாம் விருக்கும் போது காவிரிச் சிக்கல் அப்படியேதானிருக்கும். கருநாடகம் அளவுக்கு மீறி அணைகளையும், கால்வாய்களையும் அமைத்துப் பாசனப்பரப்பை அகலப்படுத்திவிட்டது. அது தன்னிறைவுப் பெற்று, "தனக்கு மிஞ்சினால்தான் தருமம்" என்பதை எப்படி நிறைவு செய்ய முடியும்? 281-290 57g" TE பின்னிணைப்பு : சென்னை மாநில ஆளுநர்கள் (1652-2002) I557 ஆரூன் பேக்கர் 1659 வயவர் தாமசு சேம்பர் Iஓரி வயவர் எட்டுவர்டுவின் சுதர் 1F58" சியார்சு பாக்க கிராப்டு 5. 10 ---வவர் வில்லியம்லங்கார்ன் சிதிரேயன் மாசுடர் வில்லியம்கைபோர்டு IAST எலிவரல் IAH நத்தானியல் இக்கின்சன் தாமசுபிட் IFE குல்சன் அடிசன் IFI எட்மண்டு மாண்டேகு 13. 1700 வில்லியம் ஃபிரேசர் 14. 171 எட்வர்டு ஆரிசன் 15. 1717 சோசப் கல்லட் 16. 720 ஃபிரான்சிசுகேசுதிங்சு 17, 72 நத்தானியல் எவ்விக் 1775 சேம்சு மெக்ரே 173) சியாச்சு மார்டன் பிட் 1735 இரிச்சர்டு பென்யான் 2. 1744 நிக்லோசு மோர்சு 27. 174 சாணித்தே - 13. 747 சார்லசு ஃபிலோயர் 24 1750 தாமா சாந்தரசு , 25. 1755 சியார்சுபிக்காட் 26. 1763 இராபர்ட் பால்கு 77. 17 சார்லசு பவுச்சர் 78 170 சோசியா துயிரே 4, 1773 அலெக்சாந்தர்விஞ்சு 30, 1775 கிழான் பிகாட்டு 31, 1776 சியார்சு சிதிராத்தன் 37. 1777 சான் ஒயிட்கில் 168 தாய்நிலவரலாறு 33. 1778 34. 1780 35. 178 16, 177 17. 1785 38. கே 7. 78g 4). THO சா. 70 42 1782 41. 174 4. 178 45, 1798 சது. 1903 47. IBCT. K ISIT சது. 13 50, 18714 எ. IE0 5) 1827 51. ISB 4. 1832 வயவர் தாமசுரம் போல்டு சான்ஒயிட்கில் சார்லசுசிமிது கிழான் மெக்கார்த்னே அலெக்சாந்தர்தேவிட்சன் (மேஜர் ஜெனரல் ஆர்சிபால்டுகேம்பல் சான் ஆலந்து எட்வர்டு ஆலந்து மேஜர் ஜெனரல் வில்லியம் மெக்கன்சி வயவர் சார்லசு ஒக்காலே கிழான் ஒப்பார்டு லேப்டினென்ட் ஜெனரல்ஓம்சு கிழான் கிளைவு கிழான் வில்லியம் பெண்டிங் வில்லியம் பேட்ரிக் வயவர் சியார்சுஇலாபோ பார்லோ சான் ஆபர்கிரோம்பி ஆக்கெலியட் மேஜர் ஜெனரல்வயவர் தாமசுமன்றோ என்றி சுல்லியன் கிரேமி சிதீபன் ரம்போல்டு வாசிங்டன் லெப்டினென்ட் ஜெனரல்வயவர் ஃபிரடெரிக் ஆதம் சியார்சு எதுவார்ரசல் கிழான் எல்பின்ஸ்ட ன் .. லெப்டினென்ட் ஜெனரல்-ட்விடேல் மேஜர் ஜெனரல் என்றிடிக்கன்சன் வயவர் என்றி பொட்டிங்கர் தேனியல் எரியட் கிழான் ஆரிசு சார்லசு எட்வர்டு திரெவெலியன் என்றி சியார்சுவார்டு வில்லியம் தாமசு தெர்சியன் கிழான் நேப்பியர் கிழான் ஓபார்ட் பக்கிங்காம்-சான்டோசு வில்லியம் பேட்ரிக் ஆதம் வயவார் மவுண்டு சிதவர்டு எல்பின்சுடன் இராபர்ட்பர்க் (கன்னிமரா) 55. 1837 56. T837 57. 184 1848 848 854 51. 1854 2. THE 53. Tரே 4 18கள் பி. 1பிக்க தி. 1872 4. 1875 68. 1980 9. IS 70. ITHA பின்னிணைப்பு) 26g 71. IBC 72 396 3. 19 74. IPLE 75, 1911 76, 1913 77. 191g 78. 1934 74. 1924 80. 1929 81. 19 82 1935 81. 7441) 84. 1945 85. 1945 பிக். 48 87. 1957 88. 1956 89. 1957 பிப். 1958 #1. 194 07 ஒத்து 1. 187 கிழான்வென்யாகு வயவர் ஆர்தர் எலிவாங் ஓளலாக் கிழான் அம்பதில் ஆர்தர் லெளவி கிழான் சார்மிகால் கிழான் பென்ட்லாண்டு கிழான் வெலிங்டன் வயவர் சார்லசு தாடண்டர் வயவர் சியார்சு சோசிம் - விக்கவுண்டு கோங்கன் ஆர்க்கர்சுடு வயவர் நார்மேன் எட்வர்டு மார்சோரி பேங்சு (சர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டேன்லி, கிழான் சான் பிரான்சிசு ஆசுலே எர்ஸ்கின் வயவர் ஆர்தர் கோபு வயவர் என்றிபோலே நைட் வயவர் ஆர்சிபால்டுஎட்வர்டு நைட் பவநகர் மகாராசா வயவர் கிருட்டிண இராசேந்திர சின்னாசி-பவநகர் மகாராசா திரு. சீபிரகாசம் திரு. அனப்பரம்பில் சோசப்சான் பாக்காலாவேங்கட இராசமண்னார் திரு. விட்டுணுராம் மேதி மகாராசா செயசாமராச உடையார் திரு. சர்தார் உச்சல் சிங் திரு.கோதர்தாசு காளிதாசு சா. கே.கே.சா) மோகன்லால் காதியா பிரபுதாசு பட்வாரி சாதிக் அலி சுதன்லால் குரானா பிசி. அலெக்சாந்தர் சுர்சித்சிங் பர்னாலா பிசாம் நாராயண்சிங் டாக்டர். எம். சென்னாரெட்டி செல்வி. பாத்திமா பீவீ டாக்டர் சி. அரங்கரான் பொறுப்பு) இராம மோகன்ராவ் 4. 1975 5. 1977 ஓ6. 1987 #7. 057 ப. 1987 புடி புப் O0, 19g1 , 11. 1000 I 2 Igழ்ர 103, 2017 104. SIII) பின்னிணைப்பு II சென்னை மாநில அமைச்சரவை (1920 ஆம் ஆண்டு முதல் இன்று வரை) 1. ஆளுநர்: வயவர் பிர்மேன் பிரமேன் தாமசுப் பொன்வெலிங்டன் ரேட்டன் 7041919 - 124924) 2. முதலமைச்சர்: ஏ. சுப்பராயலு ரெட்டியார் 17-12-1920 - 11-7-192) 1. பிற அமைச்சர்கள் : 1. பனகண்டராமராயனிங்கார் பனகல் அரசர், 2. குருமா வேங்கட ரெட்டி நாயுடு 3. ஏபி. பாத்ரோ - (2) 1, ஆளுநர்: 1. வயவர்பிர்மேன் பிரிமேன் தாமசு, பேரன்வெலிங்டன், (10-4979 -04-1924. 2 வயவர். சார்லசுதாடண்டர், (134224) 3. - வயவர். சியார்சு சோசிம் விக்கவுண்டு, கோசன், அக்கர்சடு 2. முதலமைச்சர்: பனகல் அரசர் (19-11-1923-3-12-1925 3. பிற அமைச்சர்கள்: 1. ஏபி. பாத்ரோ , (19-1-1923-3-12-1926) 2. டிஎன். சிவஞானம் பிள்ளை ) (19-11-923 - 342-1926 1. ஆளுநர்: I, வயவர் சியார்சுசோசிம் விசு கவுண்டுகோசன் ஆக்கர்சுடு (14-4-1934 = 5- 5-199) 2. வயவர் நார்மேன் எட்வர்டு மார் சோரிபேங்சு (30-5-1979 - 7-11-1939) 3. வயவர் சியார்சுபிரடெரிக் சிதேன்லி , (I2-11-1979 = 15-5-1934). , பின்னிணைப்பு II 171 2. முதலமைச்சர்: பர், பி. சுப்பராயன், (4-12-1935 - 27-10-1931) 3. பிற அமைச்சர்கள்: 1. ஏ.அரங்கநாத முதலியார் "4-17-1976 - 8-3-1978) 2. ஆர்என். ஆரோக்கியசாமி முதலியார், 3. முத்தையா முதலியார்) 4. எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர்) 1. ஆளுநர்: வயவர். சியார்சுபிரடெரிக் சிதேன்லி, (12-11-1929 - 15-5-1934) முதலமைச்சர்: பி.முனுசாமி நாயுடு) 27-11-1931) - 4-11-1932) 3. பிற அமைச்சர்கள்: 1. பொன்னம்பல தியாகராசன் (பிடி இராசன்) 2. எசு.குமாரசாமி ரெட்டியார் 1. ஆளுநர்: 1. வயவர். சியார்சு பிரடெரிக் சிதேன்லி (17-11-19 - 13-5-1934) (77-8-1934 = 15-11-1934) 2 வயவர் முகம்மது உசுமான், 3. கிழார் சான் பிரான்சிசு ஆசுலே டி. எர்ஸ்கின் (15-11-1934 - 18-5-1936) 2. முதலமைச்சர்: இராவு சுவெட்டாச்சலபதி ராமகிருட்டிண ரங்காராவ் பொப்பிலியரசர் (5-11-1933 - 4-4-1936) 3. பிற அமைச்சர்கள்; 1. பிடி இராசன் 2. எசு. குமாரசாமி ரெட்டியார் (5) 1. ஆளுநர்: 1. கிழான் சான் பிரான்சிசு ஆசுவே எர்ஸ்கின் (16-11-1934 - 18-5-1936) 2 வயவர் குருமா வேங்கட ரெட்டி (நாயுடு (19-5-1935 - 1-10-1936) 2. முதலமைச்சர்: திரு. பிடி இராசன் 4-4-1934 - 24-8-1935) 3. பிற அமைச்சர்கள்: 1. எசு, குமாரசாமி ரெட்டியார்) 172 தாய்நில வரலாறு 1. ஆளுநர்: 2. முதலமைச்சர்: 3. பிற அமைச்சர்கள்: 1. வயவர் குருமா வேங்கட ரெட்டி நாயுடு (19-5-1936 = 1-10-1936) 2. கிழான் சான் பிரான்சிசு ஆசுலே எர்சுக்கின் (2-10-1936 - 11-3-1940) இராவுசுவெட்டாச்சலபதி ராம் கிருட்டிணரங்காராஷ்டொப்பிலியபரசர் 24-8-1936 - 1-4-1937) 1. பிடி இராசன் 2. எசு.குமாரசுவாமி ரெட்டியார் 3. அரச வயவர் முத்தையா செட்டியார்) (8) 1. கிழான் சான் பிரான்சிசு ஆசுலே (2-10-1936 - 11-3-1940) குருமாவேங்கட ரெட்டி (நாயுடு 1-4-1937 - 14-7-1937) அரச வயவர் எம்.ஏ.முத்தையா செட்டியார் 2. ஏடி பன்னீர்செல்வம் 3. பி.லிபுல்லா சாகிப்பகதுார் 4. மயிலைச் சின்னத்தம்பிராசா 5. ஆர்.எம். பாலட் 1, ஆளுநர்: 2. முதலமைச்சர்: 3. பிற அமைச்சர்கள்: 1, ஆளுநர்: 2. முதலமைச்சர்: - 3. பிற அமைச்சர்கள்: 1. கிழான் பிரான்சிசு ஆசுதே எர்ஸ்கின் (2-104936 = 11-3-1940) 2 வயவர், ஆர்தர் ஆசுவால்டு சேம்சு ஓபு (11-3-1940 - 25-2-1945) சி.இராகோபாலாச்சாரி (14-7-1917 - 28-0-1939) 1. டி பிரசாரம் 2. யாகூப் ஆசான் 3. பர்.பி. சுப்பராயன்' 4. பர்.டி எசு. எசு. இராசன் 5. வி. க. முனுசாமிப்பிள்ளை - க. வி.வி.கிரி 7. எசு. இராமநாதன்பிள்ளை 8. கே. இராமன்மேனன் 9. பி. கோபால ரெட்டி 10. சி. சே. வர்கே . பின்னிணைப்பு II 27] (ID) ஆளுநர்: 1. வயவர். என்றி போலே நைட் [27-2-1946 - 5-5-1946) 7 வயவர் ஆர்ச்சிபார்டுஎட்வர்டு நைட் fb-5-1945 - தி-9- 148) 2. முதலமைச்சர்: டி. பிரகாசம் (1-5-1948 - 23-3-1947) 3. பிற அமைச்சர்கள்: 1. வி.வி.கிரி 2. எம். பக்தவச்சலம் 3. டி எசு. அவினாசிலிங்கம் செட்டியார் 4. கே. பாசியம் 5. பி. எசு. குமாரசுவாமி ராசா 6. தேனியல் தாமசு 7. திருவாட்டி உருக்மிணி லட்சுமிபதி 8. கே. ஆர். கரந்த் 9. கோட்டி ரெட்டி 10. வேமுல கூர்மய்யா 11. பி.வீராசாமி "+12. பி. இராகவமேனன் - --13. பி. வேங்கடரத்தினம் 1, ஆளுநர்; 2. முதலமைச்சர்: . 3. பிற அமைச்சர்கள்: 1. வயவர். ஆர்ச்சிபால்டுஎட்வர்டு நைட் [6-5-1948 - [-9-1948) 2. சர். கிருட்டிண குமாரசிஞ்சி பவசிஞ்சிபவநகர் மகாராசா (7.9:1948 = 11-3-1957) ஓபி. இராமசாமி ரெட்டியார் - {24-+947 - £4-1949) 1. பர்.பி. சுப்பராயன் 2. பர், டி எசு.எசு. இராசன் 3. பி. கோபாலரெட்டி 4. எம். பக்தவச்சலம் 5. டி அவினாசிலிங்கம் செட்டியார்) 8. தேனியல் தாமசு 7. வேமுல கூர்மய்யா 8. எச். சீத்தாராமரெட்டி ஓ கே. சந்திரமெளலி 10. கே. மாதவ மேனன் 11, கலாவேங்கடராவ் 12. ஏ. பி. செட்டி 13. பர், எசு. குருபாதம் H4 தாய்நில வரலாறு - - (12) 1. ஆளுநர்கள்: 1. வயலர். கிருட்டின குமாரசிஞ்சி பவசிஞ்சி, பவநகர் மகாராஜா 7-g-14 - 1-3-1957) 7 சிபிரகாசம் (17-3-1955- 24-12-1956) 2. முதலமைச்சர்: பி.எசு. குமாரசாமிராசா 7-1949 - ஓ41952) 3. பிற அமைச்சர்கள்: 1. பர்டி எசு.எசு. இராசன் 2 பி.கோபாலரெட்டி 3. எம். பக்தவச்சலம் 4. எச். சீதாராம் ரெட்டி' 5. கே. சந்திரமௌலி 5. கே. மாதவமேளன் 7. கலாவேங்கடராவ் 8. ஏ.பி.செட்டி சி. பி.பரமேசுவரன் 10. சிபெருமாள்சாமி ரெட்டியார் Ti: ஜே.எவ்.பி.உரோச் விக்டோரியா 12. என். சஞ்சீவ் ரெட்டி' 1. ஆளுநர்: 2. முதலமைச்சர்: 3, பிற அமைச்சர்கள்: சிபிரகாசம் (17-3-1857 --17-Tஓரிங் சி.இராசகோபாலாச்சாரி flip-4-1957 - 124.1954) 1. எம். பக்தவச்சலம் 2. ஏ. பி. செட்டி 3. சி. சுப்பிரமணியம் : 4. கே.வேங்கடசாமி நாயுடு 5. என். அரங்காரெட்டி 6, எம்.வி. கிருஷ்ண ராவ் 7. வி. சி பழனிச்சாமி கெளண்டர் 8. யு. கிருட்டிணாராவ் 9. ஆர். நாகண கௌடர் 10. சண்முகராசேசுவர சேதுபதி ராசா 11. எம்.ஏ.மாணிக்கவேலு (நாயக்கர்) 12. கே. பி. குட்டி கிருட்டிணன் (நாயர்) 13. என். சங்கராரெட்டி 14. எஸ்பிபி. பட்டாபிராமராவ் 15. டிசஞ்சிவய்யா --16. கே. இராசாராம் '17. திருவாட்டி சோதி வேங்கடாசலம் பின்னிணைப்பு 1 174 1. ஆளுநர்கள்: 2. முதலமைச்சர்: 3. பிற அமைச்சர்கள்: 1. ஆளுநர்கள்: 1. சீபிரகாசா (17-3-1857 - 9-12-1956) 2 அனம்பாம்பில் சோசப் சான் [7]-12-1956 - 1-1[]-1957) கு. காமராசர் முதன் முறை) [T3-4-1854 - 12-4-1947) 1. எம். பக்தவச்சலம் 2. ஏ, பி.ஷெட்டி 3. பி. பரமேசுவரன் 4, சி.சுப்பிரமணியம் 5. சண்முகராசேசுவர சேதுபதிராசா 6. எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர்! 7. எக, எசு. இராமசாமி படையாட்சி) (15) 1. அனம்பரம்டரில் சோசப்சான் 1-7-1956 - 1-10-1957) 2. பாக்காலா வேங்கடஇராசமன்னார் 3-10-1957 - 24-1-1958) 3. விசுணுராம் மேதி [25-7-1958 - 1-5-1954) கு. காமராசர் இரண்டாம் முறை) [13-4-1957 - 14-3-1967) 1. எம். பக்தவச்சலம் 2. சி. சுப்பிரமணியம் 3, எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர் 4. ஆர்.வேங்கடராமன் 5. பி. கக்க ன் 5. இராமையா 7. திருவாட்டி லூர்தம்மாள் சைமன் 2. முதலமைச்சர்: 3. பிற அமைச்சர்கள்; --T: ஆளுநர்: 2. முதலமைச்சர்: 3. பிற அமைச்சர்கள்: விசுணுராம்மேதி [25-1-1958 = 3-5-1964) கு. காமராசர் (மூன்றாம் முறை) (15-3-1967-7-11-1983) 1. எம். பக்தவச்சலம் 2. திருவாட்டி சோதி வேங்கடாசலம் 3. ஆர். வேங்கடராமன் 4, பி. சுக்கன் 5, வி. இராமையா 5. நல்ல சேனாதிபதி சருக்கரை மன்றாடியார் 275 - தாய்நிலவரலாறு 7. சி. பூவராகவன் * 8. எசு.எம். அப்துல் மஜீத் 1. ஆளுநர்கள்: 1. விசுணுராம் மேதி (75-1-1958 - 3-5-1964) 2 மகாராசா சசெயசாமராச உடையார், (4-5-1954 -1-1-1956) 3. பி. சந்திராரெட்டி, (4-1-96 - 27-5-966) 4. சர்தார் உச்சவ் சிங், (28-5-19தி - 26-5-1971) 2. முதலமைச்சர்: எம். பக்தவச்சலம் (2-10-1963-5-3-1957) பிற அமைச்சர்கள்: - 1. திருவாட்டி சோதி வேங்கடாசலம் 2. ஆர்.வேங்கடராமன் 3, பி. கக்க ன் 4. வி. இராமையா 5. நல்லசேனாதிபதி சருக்கரை மன்றாடியார் பி. சி.பூவராகவன் 7. எஸ். எம். அப்துல் மஜீது. (78) ஆளுநர்: சர்தார் உச்சல் சிங் (28-5-1956 - 25-5-1971 -- முதலமைச்சர்: கா. ந. அண்ணாதுரை சிஎன் அண்ணாதுரை), 3, பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. மு. கருணாநிதி 3, க. அ. மதியழகன் 4. அ.கோவிந்தசாமி 5, திருவாட்டி சத்தியவாணிமுத்து 6. செ. மாதவன் 7. எசு. சே. சாதிக்பாட்சா 8. மா. முத்துசாமி (7) 1. ஆளுநர்: சர்தார் உச்சல் சிங் (28-4-1948 - 25-5-1971) இரா. நெடுஞ்செழியன் (3-2-1950 - 10-2-1959) 2. முதலமைச்சர்: 291-300 பின்னிணைப்பு II 377 3. பிற அமைச்சர்கள்: 1. மு. கருணாநிதி 2. க, அ. மதியழகன் 3. அ. கோவிந்தசாமி 4. திருவாட்டி சத்தியவாணிமுத்து அம்மையார் 5. செ. மாதவன் 5, எக்சே, சாதிக்பாட்சா 7. மா. முத்துசாமி 1. ஆளுநர்: சர்தார் நச்சன் சிங் (28--1966 = 26-5-1971) முதலமைச்சர்: மு. கருணாநிதி, முதன் முறை) 10-7-16 - 15-3-71 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. க. அ. மதியழகன் 3. அ.கோவிந்தசாமி 4. திருவாட்டி சத்தியவாணிமுத்து அம்மையார் 5. செ. மாதவன் 6. எசு. சே.சாதிக் பாட்சா 7. மா. முத்துசாமி 8. ப. உ. சண்முகம் 9. சி.பா.ஆதித்தனார் 10. கே. வி. சுப்பையா 11. ஓ.பி. இராமன் 12. கோ.வேழவேந்தன் 13. என். வி. நடராசன் (2) 1. ஆளுநர்: 1. சர்தார் உச்சல் சிங் 28-5-1955 - 36-5-1971) 2. கோதர்தாசு காளிதாசு சா (26-5-1971 - 1975 2. முதலமைச்சர்: மு. கருணாநிதி இரண்டாம் முறை) 15-3-1971 - 31-1-1976) 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 1. இ அன்பராசன் வாணிமுத்து 3. என். வி. நடராசன் 4, திருவாட்டி சத்தியவாணிமுத்து அம்மையார் மே, 1974 வரை) 5. என். இராசாங்கம் மே, 1974இலிருந்து) 278 தாய்நில வரலாறு 6. ப.உ. சண்முகம் 7. செ. மாதவன் சி. எசு. சே. சாதிக் பாட்சா ." பி. சி.பா. ஆதித்தனார் 10. ஏ. பி. தர்மலிங்கம் 11. க. இராசாராம் 12. ஓ. பி. இராமன் 13. ச. இராமச்சந்திரன் 14. மு. கண்ண ப்பன் 15 சி. வி. எம். அரண்ம லை மே, 1974-லிருந்து) அ. இ. அ. தி. மு. க அமைச்சரவை முதல்முறை (30-5-1977 - 19-2-1980) 1. ஆளுநர்: 1. பிரபுதாசுபட்டுவாரி(1977-1980) 2 முதலமைச்சர்: மகோ. இராமச்சந்திரன் (எம் ஜி ஆர்) [3]-6-1977 - 18-2-1980) 3. பிற அமைச்சர்கள்: 1. நாஞ்சில் சி. மனோகரன் 2. பன்ருட்டி சு. இராமச்சந்திரன். 3. ந. அ. கிருட்டிணசாமி 4. எசுடி சோமசுந்தரம் 5. கோ. இரா எட்மண்ட் 5. இராமவீரப்பன் 7. க.நாராயணசாமி 8. செ. அரங்கநாயகம் சி, கா, காளிமுத்து 17. ச. இராசுவானந்தம் 11. பெ.செளந்தரபாண்டியன் 12. சி.பொன்னையன் 13. பெ.குழந்தைவேலு 14. கா. இராசாமுகம்மது 15. செளந்தரராசன் 16. பிடி சரசுவதி 17. சுப்புலட்சுமி செகதீசன் (18-3-198f]- ல் அரசு கலைப்பு குடியாட்சித் தலைவர் ஆட்சி) (23) அ. இ. அ. தி. மு. க அமைச்சரவை (இரண்டாம் முறை) (B-6-1980 - 14-2-1985) 1. ஆளுநர்: 1. பிரபுதாசு பட்வாரி [1977 - 80 2. சாதிக் அலி(1987) பின்னிணைப்பு II 27g 2. முதலமைச்சர்: மகோ. இராமச்சந்திரன் எம்ஜிஆர் 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. பன்ருட்டி ச. இராமச்சந்திரன் 3. க. அ. கிருட்டிணசாமி 4. எசு. டி சோமசுந்தரம் 5. இராமவீரப்பன் 6, செ. அரங்கநாயகம் 7. கா.காளிமுத்து 8. சி.பொன்னையன் 9. பெ.குழந்தைவேலு T(), ச. இராசவானந்தம் 11. எச். வி. அண்டே 12, கா.இராசாமுகமது 13. செ. முத்துச்சாமி 14. எசு. திருநாவுக்கரசு 15. எசு. எசு. இராசேந்திரன் 16, எம், விசயசாந்தி 17. கோமதி சீனிவாசன் 18. எசு. ஆர். இராதா 19. விசயலட்சுமி பழனிச்சாமி 20. ஆர்.செளந்தரராசன் 21. எம். ஆர்.கோவேந்தன் 22. ஒய்எ சு. எம். யூசுப் 23. இரா. அருணாச்சலம் 24. கே. கலைமணி 25, சே. வீராச்சாமி 26, கே, கே, எசு.எசு. ஆர். இராமச்சந்திரன் (24) அ. இ. அ. தி. மு. க (மூன்றாம் முறை அமைச்சரவை (14-2-1985 - 26-12-1987) 1. ஆளுநர்: 1. சுந்தர்லால் குரானா (1982 - 1986) 2. பி. சி. அலெக்சாந்தர் (1987 - 1989) 2. முதலமைச்சர்: ம. கோ. இராமச்சந்திரன் எம்ஜிஆர், 3, பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் 3. க. அ. கிருட்டிணசாமி 4. இராமவீரப்பன் 5, க. இராசாராம் 6. ப. உ. சண்முகம் 7. செ. அரங்கநாயகம் 280 தாய்நில வரலஈறு " 8, கா.காளிமுத்து 9. சி.பொன்னையன் 10. எச். வி. அண்டே 11. செ. முத்துசாமி 12. எசு. திருநாவுக்கரசு 13. வி. வி. சாமிநாதன் 14. ஆசௌந்தரராசன் 15, டிவீராச்சாமி 18, ஆனூர் செகதீசன் 17. என். நல்லுசாமி 18. இராமசாமி 1. அருணாச்சலம் 20. எம். ஆர்.கோவேந்தன் 21. கோமதி சீனிவாசன் 27. விசயலட்சுமிபழநிச்சாமி 23. ஒய். எஸ். எம். யூசப் 24. கே. கே. எசு.எசு, ஆர்.இராமச்சந்திரன் (25) அ. இ. அ. தி. மு. க (நான்காம்முறை அமைச்சரவை) [7-1-1988 - 20-1-19881 1, ஆளுநர்: பி.சி. அலெக்சாந்திர் {1987 - 1989 2. முதலமைச்சர்: சானகி இராமச்சந்திரன் 3. பிற அமைச்சர்கள்; 1. இராமவீரப்பன் 2. ப. உ சண்முகம் 3. சி. பொன்னையன் 4, செ. முத்துசாமி 5. வி. வி. சாமிநாதன் 6. டி இராமசாமி 7. அருணாச்சலம் முதலமைச்சர் ம. கோ. ரா (எம்.ஜி.ஆர் மறைவால் அமைதி கெட்டது. பெரும்பான்மை இன்மையால் கலைக்கப்பட்டு 24-1989 முதல் 26-1-1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வந்தது, திராவிட முன்னேற்றக்கழக அமைச்சரவை (மு, கருணாநிதியின் மூன்றாவது அமைச்சரவை (27-11989 - 20--1991) 1. ஆளுநர்: 1. சுர்சித்சிங் பர்னாலா - 1990 2. பி. நாராயண் சிங் - 1991 - ? பின்னிணைப்புப் 151 2. முதலமைச்சர்: மு. கருணாநிதி 3. பிற அமைச்சர்கள்: 1. க. அன்ப ழகன் 2. எசு. சே. சாதிக்பாசா 3. நாஞ்சில் சி.மனோகரன் 4. மு, கண்ண ப்பன் 5. கே. பி. கந்தசாமி கி. கோ.சி. மணி 7. நா.வீராச்சாமி 8. பொன் முத்துராமலிங்கம் 9. வீரபாண்டி எசு. ஆறுமுகம் 10. துரைமுருகன் - 11. சுப்புலட்சுமி செகதீசன் 12.டாக்டர். ராம கிருட்டிணன் 13. டாக்டர், சு, பொன்முடி 14. கே.என். நேரு 15.டாக்டர். கே. சந்திரசேகரன் IA, ச, தங்கவேலு 17. க. சுந்தரம் fஆட்சிக் கலைக்கப்பட்டு 30-1-1997 லிருந்து 24--199வரை குடியரசுத் தலைவராட்சி இருந்தது) அ. இ. அ. தி.மு.க அமைச்சரவை [முதலமைச்சர் செல்வி. செ. செயலலிதா அமைச்சரவை) முதன் முறை (25-6-1991 - 2-3-1995) 1. ஆளுநர்: 1. பீசும் நாராயண் சிங் (199 - 02). டாக்டர். எம். சென்னாரெட்டி 1993-97 2. முதலமைச்சர்: செல்வி.செ.செயலலிதா 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. க. அ. கிருட்டிணசாமி 3. எசு. டி. சோமசுந்தரம் 4. இராம. வீரப்பன் 5. க, இராசாராம் கி.செ.அரங்கநாயகம் 7.செ.முத்துசாமி 8. கே.ஏ.செங்கோட்டையன் 9. இ. மதுசூதனன் 17. எசு. கண்ண ப்பன் 17. அழகு. திருநாவுக்கரசு 18) தாய்நிலவரலாறு 12, கு.ப.கிருட்டிணன் 13. டி. எம். செல்வகணபதி 14. முகம்மது ஆசிப் 15. இந்திரகுமாரி TH, எம். ஆனந்தன் 17.டிசெயகுமார் (8) திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை {மு. கருணாநிதியின் நான்காவது அமைச்சரவை) 113-5-1996 = 6-5-2001) 1. ஆளுநர்: 1. டாக்டர்.சென்னாரெட்டி 1996 - 97) 2. செல்வி. பாத்திமாபீவீ (1997 - 200) 2 முதலமைச்சர்: மு. கருணாநிதி 3. பிற அமைச்சர்கள்: 1. க. அன்பழகன் 2 நா.வீராச்சாமி 3. நாஞ்சில்.சி. மனோகரன் 4. கோ.சி. மணி 5. வீரபாண்டி எசு, ஆறுமுகம் 6. துரைமுருகன் 7. டாக்டர் க. பொன்முடி 8. டாக்டர் மு.தமிழ்க்குடிமகன் 9. கே. என். நேரு 11. க. சுந்தரம் 11. ஏ,இரகுமான்கான் 12. ஆலடி அருணா 13. வே. தங்கப்பாண்டியன் 14. என். கே. பெரியசாமி 15. எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் 16. பொங்கலுார். பழனிச்சாமி 17. கு.பிச்சாண்டி 18. இ பெரியசாமி 19. வி. முல்லைவேந்தன் 20. பி. எம். செங்குட்டுவன் 21. திருமதி. எசு. பி. சற்குணபாண்டியன் 22. சமயநல்லுார் செல்வராக 23. எசு. சுரேசுராசன் 24. அந்தியூர் பி. செல்வராசு 25. எசு. பன்னீர்செல்வம் (20) அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவைப்பட்டியல் (21.9.2001 - 23.2002) ஆளுநர்: டாக்டர். சி. அரங்கராசன்(பொறுப்பு) 2. முதலமைச்சர்: ஓ. பன்னீர் செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் (30) -' . * அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவைப் பட்டியல் 23.2002 - 12.5.2008) ஆளுநர்: டாக்டர் சி. அரங்கராசன் (பொறுப்பு) முதலமைச்சர்: செல்வி, செ. செயலலிதா பிற அமைச்சர்கள்: 1. ஓ. பன்னீர் செல்வம் 2 சி. பொன்னையன் 3. டாக்டர், எம், தம்பித்துரை 4. டி. செயகுமார் 5. பி.சி. இராமசாமி 6. எசு, செம்மலை 7. சி. துரைராசு 8. பி.தனபால் 9. என் தளவாய் சுந்தரம் 10. ஆர், சிவானந்தம் 11, திருவாட்டி - பி, வளர்மதி 12, எசு, கருப்புசாமி 13. ஆர். விசுவநாதன் 14. நைனார் நாகேந்திரன் 15, சி.ம, வேலுச்சாமி 16. பி. மோகன் 17. ஆர். விசுவநாதன் 18. எம்.சி. சம்பத்து 19. அனிதா. ஆர். இராதாகிருட்டிணன் 20. கே. சுதர்சனம் 21. வ.து. நடராசன் 22. கே.கே. பாலசுப்பிரமணியன் 23. எசு. இராமச்சந்திரன் 24. வி. சோமசுந்தரம் 25. எம். இராதாகிருட்டிணன் 26, ஏ. மில்ல ர் (31) திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவைப் பட்டியல் (13.05.2006 முதல் : 1. ஆளுநர்: கர்ஜித் சிங் பர்னாலா 2. முதலமைச்சர்: மு.கருணாநிதி (ஐந்தாம் முறை) 3. பிற அமைச்சர்கள்: 1.க. அன்பழகன் 2. ஆற்காடு நா.வீராசாமி 3. மு.க.ஸ்டாலின் 4. கோ.சி.மணி 5. வீரபாண்டி ஆறுமுகம் 6. துரைமுருகன் 7. க.பொன்முடி 8. கே.என்.நேரு 3, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 10. ஐ.பெரியசாமி 11. என்.சுரேஷ்ராஜன் 12.பரிதி இளம்வழுதி 13.தண்டராம்பட்டு எ.வ.வேலு ' 14.சுப.தங்கவேலன் 15. கே.கே.எஸ்.எபஸ்.ஆர்.ராமச்சந்திரன் 15. தா.மோ.அன்பரசன் 17. கே.ஆர்.பெரியகருப்பன் 18. தங்கம் தென்னரசு 19. எஸ்.என்.எம்.உபயதுல்லா 20. டி.பி.எம்.மைதீன்கான் 21 என்.செல்வராஜ் 22 வெள்ளகோவில் சாமிநாதன் 23, பி.கீதா ஜீவன். 24. ஆதமிழரசி 25. கே.பி.பி.சாமி 26. உமதிவாணன் 27. கா.இராமச்சந்திரன் 28. பொங்கலூர் நா.பழனிச்சாமி பின்னிணைப்பு III தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி எண். காலம் முதலமைச்சர் 1 31.1.1976 - 30-5-1877 தி. மு. க. கருணாநிதி ஆளுநர் காரணங்கள் கே. கே. சா " 1. அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது, 2 பழங்கள் மலிந்துவிட்டன; 3. குமுகாய நயன்மை கெட்டுவிட்டது; 4. ஆட்சிதடம் புரண்டுவிட்டது. 7 17-2-1982 - 2-6-1980 அ. இ. அ. தி. மு. க. ம. கோ . ரா (எம்ஜிஆர்) ஆளுநர் காரணங்கள் பிரபுதாசுபட்டுவாரி 1.1980-ல் நடந்த நாடாளும் மன்றத் தேர்தலில் தோல்வி, 2. குடிமக்களுக்குப் படிநிகராளியமில்லை , 3. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. 3 30-1-1988 - 17-1-1991 அ.இ.அ.தி.மு.க சானகி இராமச்சந்திரன் ஆளுநர் காரணங்கள் எசு. எல்.குரானா 1. முதல்வர் ம. கோ, ரா, மறைவால் அரசு இயந்திரம் செயலற்றுவிட்டது. 2. சட்டம், ஒழுங்கு கெட்டது. 3. சட்டமன்றத்தில் அமளி. 4. அரசியல் விதி முறைகளைச் செயல்படுத்த முடியவில்லை . 4 31-1-1991 - 24-6-19 தி. மு. க. ) மு. கருணாநிதி ஆளுநர் காரணங்கள் எசு.எசு. பர்னாலா 1. ஈழத்தமிழர் விடுதலைப்படையால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டது. அரசாங்கத்தால் இதனைச் சரிசெய்யமுடியவில்லை . எனவே, தமிழகரசு இயந்திரம் ஆட்டங்கண்டு விட்டது. 286 - தாய்நில வரலாறு பின்னிணைப்பு IV குமுகாய நலம்நாடி அமைக்கப் பெற்றக் குழுக்கள் பிற்பட்டோருக்கான ஆணைக்குழு (19 53) 1, தனலவர்: காகாசாகிபு கலில்கர் 2. உறுப்பினர்கள்: 1. நாரயணசதிபரோல்கர் 2. பீக்சா பாய் 3. இலதயால் சிங் சந்தரசியா 4. இராசேசுவர் பட்டேல் 5. அப்துல் கயூம் அன்சாரி 5. டி மாரியப்பா 7. லாலாசெகநாத் பதவி துறந்தார்) 8. பி. ஜி. சா 8. ஆத்மசிங் நடிதாரி (மரணமடைந்தார்) 10, டாக்டர். அனுப்சிங் 11. என் ஆர்.சாமி பிற்பட்டோருக்கான தமிழக முதலாவது ஆணைக்குழு (1971) தலைவர்: - ஏஎன் சட்டநாதன் 2. உறுப்பினர்கள்: 1. சின்னப்பா - 2 எம். ஏ. ஜமால் உசேன் 3. இயக்குநர் - பிற்பட்டோர் நலத்துறை, பிற்பட்டோருக்கான தமிழக இரண்டாவது ஆணைக்குழு (1982) 1. தலைவர்: சே. ஏ. அம்பாசங்கர்(இஆப. ஓய்வு) 2 - உறுப்பினர்கள்: 1. எசு. ஆர். இராதா (சட்டமேலவை உறுப்பினர்) 2, ஜி.விசுவநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) 3. விவி. சுவாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர்) 4. பி.நெடுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்) 301-312 பின்னிணைப்பு IV - 287 5. அன்பில் தருமலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர்) 6, குமாரி ஆனந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) 7. எம். மோகன் வின்சன்ட் (சட்டமன்ற உறுப்பினர்) 8. எசு. ஆண்டித்தேவர் (சட்டமன்ற உறுப்பினர்) 9. லியாவத் அலிகான் (சட்டமன்ற உறுப்பினர்) 10. லியாவத் அலிகான் (சட்டமன்ற உறுப்பினர்) 11. திருவாட்டி சௌந்தரம் கைலாசம் 12, எம். கே. பாலசுப்பிரமணியம் (இ ஆய. ஒய்வு) 13. இயக்குநர் (பிற்பட்டோர் நலத்துறை) 14, கே.எசு.ஜி. ஆஜாசெரீப் 15; எம், மூர்த்தி 16, கோபாலகிருட்டிணயாதவ் 17. குழசெல்லையா 18. டி இராமசாமி (சட்டமன்ற உறுப்பினர் 19. ஐடி. ஜவகர்ராசு 20. எக்கே. பால கிருட்டிணன் 2. எம்.கிருட்டிணமூர்த்தி (சட்ட இயக்குநர் தாழ்த்தப்பட்டோருக்கான நாடாளும் மன்ற இளையபெருமாள் ஆணைக்குழு 41965) 1, தலைவர்: எல். இளையபெருமாள் (நாடாளும் மன்ற உறுப்பினர்) 2. உறுப்பினர்கள்: 1, சி, தாசு 2. ஆர்.ஏ. அச்சுதன் 3. பி.கே. கெயிக்லாட் 4. பி. எல். மசூம்தார் 5. நாராயின்தின் 8. விவி. வாசு பின்னிணைப்பு V கருவி நூல்கள் தமிழ் நூல்கள் அப்பாத்துரை, கா, 1. இந்திய நாகரிகத்தில் திராவிடப்பண்பு கழகம், சென்னை , 1963. குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு கழகம், சென்னை . 1972. இராகவன், அ தமிழகக் கலைத்தொடர்புகள், கழகம், சென்னை , 1967. இராகவையங்கார், மு. - ஆராய்ச்சித் தொகுதி இரண்டாம் பதிப்பு பாரிநிலையம், சென்னை , 1972. இராசமாணிக்கனார், பர். மா. . தமிழக வரலாறு, - பாரிநிலையம், சென்னை . ' 2. பல்லவர் வரலாறு, கழகம், சென்னை . கந்தையாபிள்ளை , நசி, 1. தமிழ் இந்தியா, - கழகம், சென்னை , 1972. 2. தமிழர் சரித்திரம், சதாசிவபண்டாரத்தார்,தவி. பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 19 . 2. பாண்டியர் வரலாறு, 'கழகம், சென்னை . சாமி சிதம்பரனார், தமிழர் தலைவர் குடியரசுப் பதிப்பகம், ஈரோடு, 958. செகவீரபாண்டியனார், பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம், 'நான்' சுதந்திரச் சிந்தனைகள், வானதி பதிப்பகம், சென்னை , 1972 தங்கவேலு, கோ, பேரா. இந்திய வரலாறு, இரு தொகுதிகள்) பழனியப்பா , சென்னை -4.197,1975. துரைசாமிப்பிள்ளை ஒளவை, சு. பண்டைநாளைச்சேர்மன்ணிவரலாறு, திருவளர் பதிப்பகம், தாத்துக்குடி பின்னிணைப்பு 28g தேவநேயப் பாவாணர், ஞா. பழந்தமிழாட்சி, கழகம், சென்னை -1, 1972 தமிழர் வரலாறு, நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி விரிவு. . பரந்தாமனார் அ.கி., மதுரை நாயக்கர் வரலாறு, பாரி நிலையம், சென்னை , 16). பார்த்தசாரதி, டி எம். தி.மு.க., வரலாறு, பாரி நிலையம், சென்னை , 1950) நெடுஞ்செழியன் இரா. திராவிடர் இயக்க வரலாறு முதல் - தொகுதி சென்னை , 1996 பாசுகரத் தொண்டை இந்தியக் கலைச்செல்வம், கலைஞன் மான், தொமு, பதிப்பகம், 1970. பாலசுப்பிரமணியம், எசு. ஆர். முற்காலச் சோழர் கலைப்பணி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். " பிள்ளை , பர், க.சு. தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை , 1972 மயிலை - சீனி வேங்கடசாமி 1.மகேந்திரவர்மன், கழகம், சென்னை , 1959, 2. வாதாபி கொண்ட நரசிம்மன், கழகம், சென்னை . 3. தமிழர்வளர்த்த அழகுக் கலைகள், பாரி நிலையம், 1972. வையாபுரிப்பிள்ளை , எசு, தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை , 1968, மூலச் சான்றுகள் தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் பல்லவர் செப்பேடுகள் முப்பது, தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை , 1966. பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை , 195. தமிழ் இலக்கியங்கள் கம்பராமாயணம் கலிங்கத்துப்பரணி காஞ்சிப் புராணம் 1 சங்க இலக்கியங்கள் (1) தொல்காப்பியம் (2) எட்டுத்தொகை (3) பத்துப்பாட்டு (4) பதினெண்கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி சைவத் திருமுறைகள் 290 தாய்நிலவரலாறு நந்திக் கலம்பகம் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் பன்னிருதிருமுறை வரலாறு பெரியபுராணம் மணிமேகலை மூவருலா' வில்லிபுத்தூரார் பாரதம் ஆங்கில நூல்கள் Ambedkar, Dr. B.R. *Who were the Shudras?' Thackers, Bom bay 1970) Arokiasamy, Dr. "The Classical Age of the Tamils, Univer sity of Madras, Madras, 1972. Boag, G.T., 1.C.S. 'The Madras Presidency, 1881-1931', Ma dras Govt, Madras 1933. Caldwell, 'History of the Tinnevelly' (1881). Gopalan, R. 'Pallavas of Kanchi', 1928. Gururaja Rao, B.K., 'The Megalithic Culture in South India.* Havell, E.B., "History of Indian Arts", Jouveau-Dubrouil, 'The Pallavas (1917), Dravidian Architec ture' Kanakasabhai Pillai, V.. *The Tamils of Eighteen Hundred Years Ago Krishnaswamy, A., *The Tamil Country under Vijayanagar," Kuber, Dr.W.N. 'Dr. Ambedkar-A Critical Study (P.P.H. Delhi, 1973) Longhrust, A. H., "Pallava Architecture," Vol. I, II & III. Minakshi, Dr. C. 1. 'Administration and Social Life Under Pallavas, 1938'. 2. "Historical Sculptures of Kanchi Vaikuntha Perumal Koil." : Mahalingam, T.V.. 1. 'Administration and Social Life Under Vijayanagar, Univ. of Madras, 1940. 2. South Inidan Polity, Univ. of Madras, 1955 Nilakanda Sastri, K.A., 1. C-olas, Vol. I & II. 2. 'Foreign Notices of South Inida', Univ. of Madras, 1972. 3. "The Pandiyan Kingdom', 1972. 4. *A History of South Inida." பின்னிணைப்பு 291 Percy Brown, 'Indian Architecture (Buddist & Hindu), 1973.'D.B. Taraporevala Sons, Bombay Pillay, KK, 'A Social History of the Tamils' Raja, M.C., 'Oppressed Hindus', 1927. Rajayyan, Dr. K., 1. A History of British Diplomacy in Tanjore, 1969 (Rao & Raghavan, Mysore-4) 2. 'South Indian Rebellion, - The First War of Independance 1800-1801" (Rao & Raghavan, Mysorc-4), 3. 'Rise and Fall of the Poligars of Tamil Nadu, Univ. of Madras, 1974. Ramachandra Dikshitar, V.R. 'Orgin and Spread of the Tamils',1971. Sathianathaier, R., *The Nayaks of Madura Schoff, W.H. (ed.) *The Periplus of the Erythrean Sea, New York, 1912. Sivashanmugam Pillai, J.. 'The Life Select Writings and Speechest of Rao Bahadur M.C. Rajah, M.L.A(1930) Madras-1. Swell, R. *A Forgotten Empire,' London, 1924. Srinivasa Aiyangar, M., *Tamil Studies Srinivasan, K.R., *The Megalithic Burials and Urn Fields of South India in the Light of Tamil Litera ture and Tradition, 1946." Srinivasa Ayyangar, P,T., *History of the Tamils, 1929." Subramaniyan, Dr, N., "History of Tamil Nadu, 'Madurai, 1972. Vaiyapuri Pillai, S., *History of Tamil Language and Litera ture, '1956. Venkataramanaya, N. "The Early Muslim Expansion in South In dia, 1942. Vriddhaginisan, V., "Nayaks of Tanjore,' Annamalai Univ., 1942. Bharatiya Vidya Bhavan Bombay, 'The History and Culture of the Inidan People. ORIGINAL SOURCES Annual Reports of South Indian Epigraphy Archaeological Series Epigraphia Carnatica, (12 Volumes) Epigraphia Indica, (13 Volumes) South Indian Temple Inscriptions, (3 Volumes) பின்னிணைப்பு VI கலைச் சொற்கள் அரசப் படிநிகராளி அமர்த்தம் அங்கன் (கடகம்) அட்டிகம் அரையர் குழு அறிவன் அறிவியல் அவையம் அணியம் அளிகடன் அளியன் வைசுராய் (Viceroy) நியமனம் ஆனிமாதம் சாதிக்காய் பிரிவி கவுன்சில் (privy Council) புதன் விஞ்ஞானம் பொது மன்றம் தயார் மைத்துனன் | Mistant thank ulkar 4 ஆங்கில வணிகக்குழு ஆடவை (இரட்டை ஆள்குடி ஆன் நிலம் துளும் கும்பினி ஆடி மாதம் சத்திரியர் மரபு இராச்சியம் ஆதிக்கம் கவர்னர் பத்திரம் சகாப்தம் ஆவணம் ஆண்டுமானம் இலவயம் இலைச்சுருட்டு இதளியவுரம் இயக்கர் இனாம் இட்சம் பீடி இரசாயன உரம் பாக்சர் (Yaksha) மோட்டார் (Motor) தியாகம் - ஈரோடு ஈராடை உண்ணோட்டகர் உவாசம் உருவாக்கம் உறழியம் ஆய்வாளர் (Inspector) அந்தப்புரம் தருக்கம், வாதம் வழி, சாதனம், வசதி ஏனம் பாத்திரம் ஐம்பெருங்கரிசு பஞ்சமா பாதகம் அப்பால் ஒப்போலையர் வாக்கு (Wate) வாக்காளர்(Voter) ஓர்மை ஓர்மைப்பாளர் சிந்தனையாளர் கூடசனரி கதிர்க்குண்டம் கடகரேகை சங்கம் சூரியகுண்டம் இரகசியம் புரட்டாசி மாதம் டென்சிங் கரிக்கோல் பரிமா அமாவாசை பிரபு (Lord) காஃபி (Coffee) மாசி மாதம் காவு காமுகம் காருவர் கிழான் குளம்பி கும்பம் குமுகம் குமுகாயம் குழம்பு குழுமம் குறுக்கம் கைந்நூரல் கொணமுடிபு சமுதாயம் Council, Guild சித்தாந்தம் - சபை - உடன்பாடு, சமாதானம் சார்பு 4. தாய்நிலவரலாறு - சாம்பரம் சாலித்தீவு சிலை சிவனியம் சரானலை கறதுக்குழை சுறவனரி சுரவம் சுன்னம் செங்காவி செயன்மையர் செங்கழுநீர்ப்பட்டு னசயதுப்பேட்டை சொலவம் - பொட்டாசியம் ஜாவா மார்கழி மாதம் வனசகம் சாம்பிராணி மகரக்குழை மகரரேகை தைமாதம் சைபர் (Cipher) சிவப்பு வண்ண ம்(Red chirE) நிருவாக அதிகாரி (Excutives) செங்கற்பட்டு சைதாப்பேட்டை சுலோகம் ஞெகிழி பிளாஸ்டிக் (plastic) பீரங்கி, குண்டு cantant Og (Govemer-General) கம்பனம் தலாமாளுநர் தாவரி தண்டார் . தனி மேலாண்மை , தனிப்பேராளுமை, தன்னாட்சி இயக்கம் தாளிகை தன்னாட்சி இயக்கக் கழகம் திசைச்செலவு திணைக்களம் நிறை திருத்தவத்துறை துவை (துலாம்) துணையினரையர் ஏகாதிபத்தியம் - Home Rule Movement பத்திரிகை - Home RuleLague" திக்கு விஜயம் - துறை (Department) பப திமுக்கி தூவற்கத்தி தென்முகன் தொங்கதை, தொன்மம் தொள்ளிரவு தொண்கொள் தொண்மணி தொடர்வழி தொடர் வண்டி தொய்வம் தோற்றரவு லால்குடி சப்பசி மாதம் வைசுராய் (Viceroy) துணைவேந்தர் (Vice Chancellor) துப்பாக்கி பேனாக்கத்தி தட்சிணாமூர்த்தி புராணம் நவராத்திரி நவக்கிரகம் நவமணி இரயில்பாதை (Railways) - இரயில் வண்டி (Train) ரப்பர் அவதாரம் பின்னிணைப்பு VI 295 மேயர் [Mlavar) நகரத் தந்தை நயன்மை நன்னய்யர் நயன்பச் சுட்டு நடுப்பனவை நக்கவாரம் நீதிபதி நீதிக் கட்சி (ஐபடின் பார்ட்டி! மத்திய சவை நிக்கோபார் தீவு கார்த்திகை மாதம் மத்திய தரைக்கடல் பரது மூர்த்தி தாவரம் நண்ணிலக் கடல் நாய்புகள் நிலத்திணை நீவாரி நீர்மம் நெடுங்கோடு நைல்நதி அght தீர்க்க ரேகை - டாக்டர் பன்னாற் பண்டிதர் மருத்துவர் பிரதிநிதித்துவம் இமயமலை படைத்தலைவர் " கண்டோன்மென்ட் (Contenment) பண்டாரகர் (பர்) பாண்டுவர் .. படிநிகராளி படிநிகராளியம் பனிமலை பாடகர் படைப்பற்று, பாசறை பட்டாங்கு பாதுக்கூடு பாழி பாடுகிடப்பு புலத்தி பிறங்கடை பூசாரி பேரனரயன், அரையன், சிற்றரசன் பூட்சு (Boots) ஆசிரமம் சத்தியாக்கிரகம் - பெண்பாற் புலவர் அருச்சகர் சுல்தான் தில்லிச் சுல்தானியம் - பேரனரயம் பாமினிச் சுல்தானியம் - அரைம்பம் மரபுச் சங்தானியம் - சிற்றனரயம் சுல்தானியம் சுபேதார் பேரரையம், அகரயம், சிற்றரையம் பேராளன் வடாஞ்சுது பொருநையோ பொக்கசம் பொற்காசு போர்னியேர்த்தீவு பவுன் மடங்கல் மட்டயம் ஆவணி மாதம் UTAL (Volume) 296 தாய்நிலவரலாறு மடவளாகம் மலைநாடு மணப்புகழ் மலைவாரம் மறமுழுக்கு மதிக்குண்டம் மதிப்பணம் மாசடிவம் மாகாணம் மாநிலம் மாது மாவியம் மாழை மாந்த நேயம் மலேசியா சிகரம் மண்பார் வீராபிசேகம் சோமகுண்டம் கெளரவம் Presidency Proyince -- - State ஒருமால் - வைணவம் - உலோகம் மனிதாபிமானம் - பங்குனி மாதம் - இராமநாதபுரம் - , தீவிரவாதிகள்" தீர்க்கதரிசனம் சந்தர்ப்பவாதி முகவை முற்போக்காளர் முற்காணியம் முல்லைமாறி மூலக்கனி மெய்ப்பொருள் மெய்யறிஞன் மென் போனா மேழம் - உண்மைநெறி, தத்துவம் நானி Liberals - சித்திரை மாதம் அயலகத்திலிருந்து வந்து குடியேறியவர் சர் (ST) வரி வசூல் வயவர் வரித்தண்டல் வழக்குரைஞர் வழுத்துப் பாடல் வாரன் விரிவாக்கம் விளக்கணி விடை விரைமா விளத்தம் - விளக்கம் வெள்ளுவர் பட்டெஃஸLE, தகரி. வெட்பம் வேதியியல் கவப்பகம் துதிப்பாடல் வருணன் அபிவிருத்தி தீபாவளி னவகாசி மாதம் முகப் பவுடர்(Talcum Powdள்) - பெளர்ணமி விண்ணப்பம் இரசாயனம் Balk. 297 உலகின் முதல் நகர நாகரிகப் பிறப்பிடம் பூம்புகார் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம்தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந் துள்ளார். இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருந்தான" மெசபடோமியா' பகுதியில் சுமேரியர்களால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது. - கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் கடந்த 1991 ஆம் ஆண்டில் வரலாற்றுப்புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் #3 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கிமீ தொலை விற்குள் பல வட்டவடிவமான கிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட். டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன 'ட' வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் நீரில் சுமார் 23 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீ உயரமும் கொண்ட பல பொருள்கள் கண்டறியப் பட்டன, இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது. - இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம் ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்ட டதை அறிந்த அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த 'சானல் 4' என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த 'லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம், ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய 208 தாய்நிலவரலாறு : ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அந்த ஆராய்ச்சிக்கு அதிநவீன 'சைடு ஸ்கேன் சோனார் என்ற சுருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூம்படம் எடுத்தார். இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த " ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண் டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த நகரம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக் கூடும் என ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ் பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார். ' இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக் கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினரர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கட்டும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார். இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், நமது பூம்புகார் நகரில் 17500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது. - பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக் காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை கடந்தவாரம் பெங்களு ரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார். ''நன்றி: தினமணி, பொறையார்,டிச.19 2002. (பூம்புகார் ஆய்வு தமிழக வரலாற்றுக் கால எல்லையைப் பலபடி உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது, " கால எல்லையின் காலைப் பிடித்து இழுப்பவர்களுக்குச் சாட்டை யடி கொடுப்பதுபோல இந்த ஆய்வு நிகழ்ந்துள்ளது. பூம்புகார் ஆய்வே இப்படியென்றால் குமரிக்கண்ட ஆய்வு நடந்து முடிவு தெரியவரும்போது தமிழன் வரலாற்றை மறுக்கவோ மறைக்கவோ முடியமா? காப்பியக் காலப் பூம்புகார் 1500 ஆண்டென்றால் கழகக் காலக் குமரிக்கண்டம் 5000 ஆண்டென்பது மிகையா?) கும்னே அவ நாகதாளி