கோநகர் கொற்கை சாத்தன்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் (1902 - 1981) எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது கோநகர் கொற்கை என்னும் நூலாகும். பழங் காலத்தில் இருந்து இன்றைக்கு மறைந்து போன தமிழக நகரங்களில் ஒன்றாக கொற்கை அமைந்துள்ளது. இக்கொற்கை அமைந்த நிலப்பகுதி குறித்த ஆய்வை இந்நூல் வெளிப்படுத்துகிறது. கொற்கை நகரோடு யவனர் போன்ற பிற நாட்டவர் மேற்கொண்ட வணிகம் பற்றியும் அறிய முடிகிறது. தமிழ் இலக்கியங்களில் கொற்கை நகர் இடம் பெற்றிருப்பது குறித்த விரிவான தகவல்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. கொற்கை நகரில் முத்துத் தொழில் இடம் பெற்றிருந்ததை இந்நூல் தகவல்கள் உறுதிப் படுத்துகின்றன. கொற்கையில் காசுகள் அச்சடிக்கும் சாலைகள் இருந்ததையும் அங்குக் கிடைத்த காசுகள் தமிழக வரலாற்றை அறிய உதவுவதையும் இந்நூல் மூலம் அறியலாம். கொற்கை நகருக்கும் காயல் பட்டினத்துக்குமான உறவுகளை இந்நூல் விரிவாக பதிவு செய்துள்ளது. ஆதித்த நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு களுக்கும் கொற்கைக்கும் உள்ள தொடர்பு களையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது. தமிழர்களின் தொல்பழங்கால வரலாற்றை அறிவதற்கு இந்நூல் அரிய தரவாக இந் நூலைக் கூறமுடியும். தொல்பொருள் ஆய்வு நூற்களஞ்சியம் - தொகுதி பன்னிரண்டு கோநகர் கொற்கை சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் - தொகுதி பன்னிரண்டு கோநகர் கொற்கை, | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 1971 | மறு பதிப்பு : 2005 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+144 = 160 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 150 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும், வளமும் வலிமையும் சேர்க்கின்ற நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு எம் பதிப்பகம் தொடங்கப் பட்டது. தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர், மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா, செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், முனைவர் இரா. இளவரசு போன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல் களையும், ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தையும் ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனிமுத்திரைப் பதித்ததைத் தமிழுலகம் அறியும். அந்த அடிச்சுவட்டில் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கின்ற நூல்களை மீள்பதிப்பு செய்வதற்கு எம் பணியைத் தொடர்ந்த நேரத்தில் நுண்கலைச்செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் எம் பதிப்பகம் வெளியிட்டால் மொழிக்கும் இனத்திற்கும் யாம் இதுவரையிலும் செய்த பணிக்கு அது மேலும் வலிமை சேர்க்கும் என்றும் அவருடைய நூல்கள் வெளிவருவது மிகமிக இன்றி யமையாதது என்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தெரிவித்தார். அவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்நூல்கள் வெளிவருகின்றன. நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் நூல்களாக வெளிவந்தவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து நூற்களஞ்சியமாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். இவை மட்டுமன்றி குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ் களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து விரைவில் வெளியிடவிருக்கிறோம். இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு உரிய வழிகாட்டுதல் தந்து பல்லாற் றானும் துணை இருந்து உதவியவர் பேரா. வீ. அரசு ஆவார். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள் ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணை யிருந்த பெருமைக்குரியவர். அவர் இந் நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாண னிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளி வருவதற்குப் பெரிதும் துணை இருந்தார். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதி களைக் கணினி ஆக்கம் செய்து உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத்தொகையன், செல்வி பிருந்தாவதி, செல்வி கலையரசி, செல்வி கோகிலா ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த குமரேசன், இராமன், சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் சரவணன், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வெங்கடேசன், தனசேகரன், சுப்ரமணியன் ஆகி யோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் உறுதியாகப் பணியாற்றுவோம். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற ஐயத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இ. இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) 30.12.2005 கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் மதிப்புரை - வீ. அரசு x 1. நுழைவாயில் 3 2. பெயரும் பெருமையும் 11 3. சீரும் சிறப்பும் 23 4. தமிழும் தண்பொருநையும் 34 5. யவனரும் வணிகரும் 40 6. வணிக வளர்ச்சி 49 7. இலக்கியமும் ஏற்றமும் 54 8. முத்தூரும் மூதூரும் 62 9. சங்கமும் துங்கமும் 70 10. உலகு புகழ் அஃகசாலை 75 11. கோநகரும் கோரக் காட்சியும் 81 12. கொடியும் முத்திரையும் 85 13. மன்னரும் பின்னரும் 94 14. பழைய காயலும் பாங்கும் 100 15. காயல் பட்டினம் 113 16. ஆதித்தநல்லூரும் அழிபாடுகளும் 115 17. முடிவுரை 121 படங்கள் 124 படங்களின் விளக்கம் 136 இந்நூல் ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் 139 மதிப்புரை இன்று தமிழகத்தில் பல்வேறு இனத்தவர்கள், நாங்கள் பாண்டியர் இனத்தவர், பாண்டியர் குடும்பத்தவர்; பாண்டியரின் நேர்வழியில் வந்தவர் என்று உரிமை கொண்டாட முன்வந்துள்ளனர். பாண்டியர் ஆவி மறைந்து 500 ஆண்டுகளுக்கு அப்பால் - நாடு உரிமை பெற்றபின் இப்பொழுதாவது பலர் தைரியமாக பாண்டியர்களின் குடியில் வந்தவர்கள் என்று உரிமையுடன் தலை நிமிர்ந்து பேச முன்வருவது கண்டு களிபேருவகை அடைகின்றேன். Mdhš, e«kt®, ‘ah® gh©oa® ïd«?’, ‘ah® gh©oaÇ‹ ne®tÊÆš tªjt®fŸ? என்று தீர்மானிக்க முடியவில்லை. உரிமை கொண்டாடுகிறவர்கள் எவரிடமும் எழுத்து மூலமான ஆதாரமோ அல்லது கொடிவழிப் பட்டியலோ அல்லது பாண்டியர்களின் அரசு கட்டில், செங்கோல், முடி, கொடி, முத்திரை போன்ற அடையாளங்களோ இல்லை. எனவே, நம்மால், யார் பாண்டியர்களின் வழி வந்தவர்கள்? என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்நூலின் நுழைவாயில் பகுதியில் மேற்கண்ட வாறு இராகவன் அவர்கள் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்க காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, தமிழ், தமிழர், தமிழ்நாடு குறித்த சொல்லாடல்கள் புதிய பொருளுடன் நடைமுறைக்கு வந்தன. மூவேந்தர், முத்தமிழ் ஆகிய பிற சொல்லாட்சிகளும் பெரிதும் பேசப்பட்டன. சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தனர். பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் குறித்த நேரடித் தரவுகள் உள்ளன. பிற்காலச் சேரர் குறித்த தரவுகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. பதிற்றுப் பத்து வழி அறியும் சேர அரசர்களின் தொடர்ச்சி குறித்தும் அறிய இயலவில்லை. இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் காணப் படும் இவ்வரசர்கள் குறித்த மேலும் பல தரவுகளைத் தேடும் முயற்சி இயல்பானதே. இவ்வகையில் இம் மன்னர்கள் ஆட்சிபுரிந்த தலைநகரங்கள் குறித்த அகழ்வாய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை போன்ற நகரங்கள் இன்றும் உள்ளன. ஆனால் உறையூர், கொற்கை, முசிறி, பூம்புகார் ஆகிய பிற நகரங்கள் குறித்த செய்திகளை அறிவது என்பது இயலாத ஒன்றாக அமைந்துவிட்டது. இவ்வகையில் தொல் - பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்கள் நகரங்கள் குறித்த அகழ்வாய்வுகளை மேற்கொண் டனர். பூம்புகார், உறையூர் ஆகிய நகரங்கள் குறித்த அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டினப் பாலை மற்றும் சிலப்பதிகாரத்தில் பேசப்படும் பூம்புகார் அகழ்வாய்வு பல புதிய தரவுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. துறைமுக வாயில்கள்; செங்கற்கள், இரும்புப் பொருட்கள் ஆகிய பிற கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது பூம்புகார் என்று அமைந்துள்ள ஊரைச் சார்ந்துள்ள கடற்பகுதிக்குள், தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டால், கடலில் மறைந்து கிடக்கும் பூம்புகாரைக் கண்டுபிடிக்கலாம் என்ற கருத்து இன்றும் நடைமுறையில் உள்ளது. புகார் கண்டுபிடிக்கப்படுவதின் மூலம், முற்காலச் சோழர்களின் தலைநகர் குறித்தத் தரவுகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இதனை உறுதிப் படுத்தும் வகையில் சோழர்களின் இன்னொரு தலை நகரமான உறையூர் குறித்த அகழ்வாய்வு சென்னைப் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 1965-69ஆண்டுகளில், சென்னைப் பல்கலைக் கழகத் தொல் பொருள் ஆய்வுத்துறை, குளித்தலைக்கு அருகில் அகழ்வாய்வு செய்து, அப்பகுதியை உறையூர் எனக் கண்டறிந்துள்ளனர். அரிக்க மேடு, காவிரிபூம் பட்டினம் ஆகிய அகழ்வாய்வுகளுள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட இவ்வாய்வு, மறைந்துபோன சோழர் களின் தலைநகரம் குறித்த செய்திகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. அகநானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை ஆகிய இடங்களில் இடம்பெறும் உறையூர் கி.மு. 150 ஆண்டுகளில் இருந்திருக்கலாம். அங்கு சோழர்கள் ஆட்சி புரிந்திருக்கலாம். அதற்கான தரவுகள் உறையூர் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவ்வகையில் கரூருக்கு அருகில் உள்ள வஞ்சி என்ற சேரர் தலைநகர் குறித்தும் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பலர் கருத்து. இந்தப் பின்புலத்தில்தான், பாண்டியர்களின் தலைநகரமான கொற்கை குறித்த ஆய்வை இராகவன் அவர்கள் மேற்கொண்டுள்ளார். பாண்டியர் தொடர் பான பல்வேறு செய்திகளை அறிய கொற்கை அகழ் வாய்வு உதவும் என்றும் அவர் கருதினார். ஆனால் பலமுறை பலர் வேண்டுகோள் விடுத்தும் அவ் வகழ்வாய்வு மேற்கொள்ளப்படாத சூழலை, இராகவன் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேற்குறித்தப் பின்புலத்தில், கொற்கை குறித்து அறியப்படும் அனைத்துத் தகவல்களையும் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். கொற்கை குறித்த தகவல்களை அறிவதற்கு, இதுவரை செய்யப்பட்ட பல்வேறு அகழ்வாய்வுகளில் உள்ள செய்திகளைத் தொகுத்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் பேசப்படும், கொற்கை குறித்த செய்திகளையும் விரிவாகத்தொகுத்து, அவற்றை ஆய்வு செய்கிறார். அதன்மூலம், பாண்டி யர்கள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். கொற்கை நகரம் குறித்து பல்வேறு வெளி நாட்டுப் பயணிகள் மற்றும் ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோர் விரிவாகப் பதிவு செய்துள்ளனர். கொற்கைக்கு மிக அருகில் அமைந்த நகரம் காயல். காயல், கொற்கையை ஆண்ட மன்னர்களின் துறைமுக மாகப் பயன்படுத்தப்பட்டது. இக்காயல் குறித்த மிக விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காயல் பட்டினத்திலிருந்துதான் மார்க்கோ போலோ 13ஆம் நூற்றாண்டில் கப்பல் ஏறியதாக தகவல்கள் உள்ளன. எனவே பிற்காலப் பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த காயல் பட்டினத்திற்கும் அருகில் இருந்து கொற்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இந்நூலில் இராகவன் உறுதிப்படுத்துகிறார். கொற்கை நகருக்கு யவனர் வருகை வந்தமை; அதன்மூலம் ஏற்பட்ட வணிகம், இங்கு நடைபெற்ற முத்துக்குளிப்பு, அம் முத்துக்கள் பல்வேறு பகுதி களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டமை, வணிக வளர்ச்சி யின் அடையாளமாக காசுகள் அச்சடிக்கப்படும் அஃக சாலை உருவாக்கம், ஆகிய பிற செய்திகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வரலாற்றைப் பதிவு செய்வதற்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றைப் பின்கண்டவாறு நம் வசதிகருதி தொகுத்துக் கொள்ளலாம். - தொல்பழம் வரலாற்றை அறிய உதவும் கற் படுக்கைகள், முதுமக்கள் தாழிகள், ஆகிய பிற. இவைகளின் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், இரும்புக் காலம் ஆகிய தொல்பழம் - வரலாற்றை அறிய முடியும். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு, சிந்துசமவெளி அகழ்வாய்வு, கொடுமணல் அகழ்வாய்வு ஆகியவை இவ்வகையில் முக்கியத்துவம் மிக்கவை. - அரசு உருவாக்கம் ஏற்பட்டு, அரசர்கள் ஆட்சி செய்த காலங்கள் குறித்த அகழ்வாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மூவேந்தர்கள் என்ற கருத்து நிலை சார்ந்து அவை அமைந்தன. அவ்வகையில், பூம்புகார், உறையூர், அரிக்கமேடு ஆகிய பிற அகழ்வாய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேற்குறித்த அகழ்வாய்வுகள் - மூலம் பெறப் பட்ட பொருட்கள் அடிப்படையிலும், இலக்கியங் களில் சொல்லப்படும் செய்திகள் சார்ந்தும், இதுவரை அகழ்வாய்வு மேற்கொள்ளப்படாத, ஆனால் கண்டிப் பாக அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டிய பகுதிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இவ்வகையில் அமைந்த ஆய்வுகளில் இந்நூல் குறிப் பிடத்தக்கது. இந் நூலில் கூறப்படும் தகவல்கள் கொற்கை குறித்த அகழ்வாய்வை மேற் கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமை கின்றன. இதற்காக அறிஞர் இராகவனுக்குத் தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூக வரலாற்றை அறிய உதவும் இந் நூலை வெளியிடும் அமிழ்தம் பதிப்பகத்தார் பணி பெரிதும் போற்ற வேண்டிய ஒன்றாகும். பேராசிரியர், தலைவர் வீ. அரசு தமிழ் இலக்கியத் துறை சென்னைப் பல்கலைக் கழகம் கோநகர் கொற்கை 1. நுழைவாயில் 1920 ஆம் ஆண்டின் தொடக்க நிலையிலே இந்திய நாட்டின் உரிமை உணர்ச்சி உச்சக் கட்டத்திற்கு உந்தி விட்டது. விடுதலை வேட்கை விரைந்து மலர்ந்தெழுந்தது. அப்பொழுது, நாட்டிற்குப் புதிய தலைமை தேவையாய் இருந்தது. பாரத நாட்டின் வேட்டத்தை நிறைவேற்றும் கூட்டத்தின் தலைவராகக் காந்தி அடிகள் தோன்றி னார். அவர் நாட்டின் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். பாரதநாடு ஆங்கில ஆட்சியின் தொடர்புகள் அனைத்தையும் அறுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் விழைந்தனர். உலகிலே வலிமை வாய்ந்த வன்புலியென வரலாறு கூறும் ஆங்கில ஆட்சியோடு காந்தி அடிகள் தலைமையில் இந்தியா அறப்போர் தொடுத்தது. ஆங்கில ஆட்சி நமது குமுகாயத்தை ஆட்டு மந்தைகளைப் போல் எண்ணியது. ஆம்! ஆடுகளின் ஆயன்போல் காந்தி அடிகள், தலைமை ஏற்று அறப்போர் தொடுத்தார். இந்தக் காலம் இந்திய வரலாற்றின் ஒரு திருப்பு மையமாகத் திகழ்ந்தது. புதிய போர் முரசின் ஒலி புவனம் நடுங்க எழுந்தது. அவ்வொலி நாடெங்கும் புத்துணர்ச்சி பொங்கி யெழச்செய்து விட்டது. எங்கும் நமது நாடு, நமது மொழி, நமது நெறி, நமது பண்பாடு, நமது நாகரிகம் என்ற எண்ணம் எழுச்சியுற்றுத் துளிர்த்தது. இந்திய விடுதலைப் போர் வீறுகொண்டு எழுந்தது. இதன் பயனாகத் தமிழகத்தில், நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாயின. ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையாய் இருந்தது தமிழ் இனமும் அதன் நெறியும், பண்பாடும், ஏனைய பிறவும் ஆகும் என்பது உள்ளார்ந்த உண்மையாகும். 1947 ஆம் ஆண்டில் ஆயன் தலைமை யில் அறப்போர் வெற்றி பெற்றது, ஆங்கிலப் புலி விரட்டி யடிக்கப் பெற்றது. இந்தியா உரிமைபெற்றது. திரு. முகமத்அலி சின்னாவின் தலைமையில் முசுலிம்களின் தனியரசாக பாக்கிதான் பிரிந்தது ஆனால் திரு. அண்ணாவின் தலைமையில் திராவிடதான் மலர வில்லை. ஒருமைப்பாட்டின் பேரால் தமிழர்களின் தனியரசுக் கொள்கை நிறுத்தி வைக்கப்பெற்றது. 1967 ஆம் ஆண்டில் தமிழன்னை யின் தவப்புதல்வர் அமரர் அண்ணா அவர்களின் தலைமையில் சென்னை மாநில ஆட்சியைத் தி.மு.கழகம் கைப்பற்றியது, கழகம் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்மொழியைத் தமிழகத்தில் அரசுக் கட்டிலில் ஏற்ற முன்வந்தது. சென்னை மாநிலத்தைத் தமிழகம் என்றும் சென்னை அரசாங்கத்தைத் தமிழக அரசு என்றும் மாற்றி யமைத்தது, இப்பெருஞ்செயல், தமிழ் இனம் வாழ்வதற்குப் பணியாற்ற, தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டு முன்வந்துள்ளது என்பதை உறுதி செய்ததாக எண்ணப் பெற்றது. தமிழ்நாட்டின் வளமும் தமிழன் வாழ்வும் தமிழ் மொழியின் சிறப்பும் தமிழ்ப் பண்பின் பாங்கும், தமிழன் நாகரிகச் சிறப்பும், நல்ல தூய தமிழன் ஆட்சியில்தான் மலர முடியும் என்ற எண்ணம் உறுதிப்படுத்தப் பெற்றது. பிற இனத்தவரால் பிற இனத்தவர்களின் ஆணைவழி நிற்கும் ஆட்களால், பெயரளவில் ஒருமை பேசும் கட்சிகளால் தமிழ்நாடு உயர முடியாது; தமிழன் வாழ்வு சிறந்தெழ முடியாது என்பது முடிந்த முடிபாயிற்று. தமிழகத்தில் தமிழன் ஆட்சி முளைத்துக் கிளைத்துத் தழைத்து எழுந்ததால் தமிழன் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை உணரமுற்பட்டான். திராவிட இந்தியாவையே, திராவிடம் என எண்ணத் தலைப்பட்டான். தமது மொழியையும் தமது பண்பாட்டையும் பேணி வளர்க்கத் தமிழர் முன்வரத் தொடங்கினர். நமது பழம்பெரும் வரலாறு எழுதப்பெற வேண்டும்; அழிந்து போன நம் நகரங்களான கொற்கையும் பழையகாயலும் உவரியும் ஆதித்த நல்லூரும், அரிக்கன்மேடும், புகாரும், முசிறியும் இன்னோரன்ன பிறவும் அகழ் ஆய்வு செய்யப் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தமிழில் பூம்புகாரைப் பற்றி ஒன்றிரண்டு நூல்கள் வெளி வந்துள்ளன. அவை நல்ல நிறைவுடைய நூலாக வரும் வாய்ப் பிருந்தும் அவ்வாறு வெளிவரவில்லை. ஆனால் பிற பட்டினங் களைப் பற்றி ஒரு நூலும் தோன்றவில்லை. இப்பொழுது கொற்கையைப் பற்றி ஒரு நூல் எழுதப்பெறல் வேண்டும் என்ற எண்ணம் சில நெல்லை மாவட்ட இளைஞர் களுக்கு எழுந்தது. அவர்கள் என்னை நோக்கினர்; அப்பணியை முடிக்க, நான் முன் வந்துள்ளேன். அதற்கு, அதிகமான சான்றுகள், கிட்டவில்லை; ஆய்வதற்குப் போதிய காலமும் இல்லை. விரைவில் வெளிவரச் செய்ய வேண்டும் என்று எங்கள் கலைக்கழகமும் ஆணையிட்டது. எனவே ஒரு திங்களில் இந்நூலை எழுதி முடிக்க திட்டமிட்டு எழுதி முடித்து விட்டேன். இதன் முன்னர், நமது தமிழக அரசு, கொற்கையில் அகழ் ஆய்வு செய்யுமாறு தனது தொல்பொருள் ஆய்வுத் துறையினர்க்கு ஆணை பிறப்பித்தது, ஆய்வுத் துறையினர் கொற்கை வந்தனர்; திரும்பிப் போயினர். அஃதோடன்றி ஆண்டு மீண்டும் போந்து சில நாள் தங்கினர்; கல்லைக் கண்டோம்; வில்லைக் கண்டோம்; சிலையைக் கண்டோம்; அலையைக் கண்டோம் என்று நாள் இதழ்கள் சிலவற்றில் விளம்பரம் செய்துவிட்டு வாளா இருந்து வருகின்றனர். அது தமிழ் மக்களை, - சிறப்பாக எம்போன்ற தமிழ் எழுத்தாளர்களைப் பெரிதும் வருத்தி வருகிறது! நமது புதை பொருள் ஆய்வுத்துறையினர் துணை செய்தால் கொற்கை என்ற இந்நூலை இதைவிடச் சிறப்பாக எழுதி வெளியிட்டிருக்க முடியும். இனியாவது நமது தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மீண்டும் ஆழ்ந்து அகழ் ஆய்வு செய்யவேண்டும்; கொற்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்குத் துணை செய்ய வேண்டும் என்பது நமது ஆசை! நமது ஆட்சியாளர் கொற்கையில் பெரிய அளவில் ஆய்வு நடத்தவும் கொற்கையைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்குத் துணை செய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும். இது போன்ற அகழ் ஆய்வுகள் செய்யாவிடில் தமிழர்களின் நிறைவான வரலாற்றை நாம் காணமுடியாது. கொற்கையை இந்திய அரசு எண்ணிப் பார்த்ததே இல்லை. தமிழகத் தலைவர்களாக வந்த ஓமந்தூராரோ, விருது நகராரோ, செங்கற்பட்டாரோ இப்பக்கம் என்றும் திரும்பிப் பார்த்ததே இல்லை. ஆனால் 1967இல் தமிழன்னையின் தவப் புதல்வர் அமரர் அண்ணா தமிழகத்திற்கு, நான் செய்ய வேண்டிய கடமைகள் சிலவற்றை என்னிடம் குறிப்பிட்டார். அதில் கொற்கையைப் பற்றி ஒரு நல்ல நூல் எழுதித் தரல் வேண்டும் என்பதும் ஒன்று, இஃதன்றி, நான் சேகரித்துள்ள கலைப்பொருள்களின் உருவப்படங்கள் அனைத்தையும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத் திற்கும் கொண்டு போய்க் காட்சி நடத்த வேண்டும். தமிழ்க் கலைஞர்கள் அடங்கிய கலைக்கழகம் ஒன்றை நன்கு உருவாக்கிக் கலைகளைக் காக்கவும் வளர்க்கவும் வேண்டும். தமிழ்க் கலைஞர்கள் உலகமெங்கும் தமிழ்க் கலைத் தூதுவர்களாகச் சென்றுவர வேண்டும். தேவை எழும்பொழுது தமிழ் இலக்கியப் புலவர்கள், ஓவியர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள், இசைப்புலவர்கள், நாட்டிய விற்பன்னர்கள் ஆகிய கலைஞர்கள் அனைவரும் கைகோத்து நின்று தமிழ் அரசைக் காப்பதற்கு முன்வர வேண்டும். தமிழ்க்கலையின் சிறப்பை, உலகறியப் பறை சாற்றவேண்டும், என்று ஆணையிட்டார். அவரது ஆணையை அவரது காலத்தில் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இப்பொழுதுதான் அவரது ஆணையில் ஒரு சிலவற்றை நிறைவேற்றும் நிலை எழுந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள இடையன் குடியில் பிரிவினைக் கிறித்தவ சமயத்தின் நல்லாயராய் இருந்த பேரறிஞர், தமிழ் மொழிக்கு ஏற்றமும் தேற்றமும் அளித்த சீரியர், மறைத்திரு முனைவர் நல்லாயர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவர். அவர் கொற்கை போந்து அங்கு அகழ் ஆய்வு செய்தார். கொற்கையைப் பற்றிக் கூறும் தமிழ், ஆங்கில பிரஞ்சு நூல்களையெல்லாம் ஆய்ந்தார். அவரது ஆய்வுகள் அவர் எழுதிய, திருநெல்வேலி பொது, அரசியல், வரலாறு என்ற அரிய நூலில் விரிவாக வெளிவந்துள்ளன. இந்நூல் 1881-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்தது.1 அப்பால் அழிவுபெற்ற கொற்கைப்பட்டினம் அறிஞர்கள் கருத்தை ஈர்த்தது. 1888-ஆம் ஆண்டு வேலூரில் கிறித்தவ சமய குருவாக இருந்த அறிஞர் மறைத்திரு. இ. உலோவந்தால் அவர்கள் கொற்கை போந்தார். அம்மாநகர் இருந்த இடத்தைக் கண்டு களித்தார். அங்குக் கிடைத்த பழம் பொருள்கள் பலவற்றைச் சேகரித்தார். அவைகளுள் பழங்காசுகளும் உண்டு. அவர் சேகரித்த காசுகளில் கொற்கையில் வாழ்ந்த பாண்டியப் பேரரசர்கள், கொற்கை அஃகசாலையில் அச்சிட்டு வெளியிட்ட பாண்டியர் காசுகள் மிக முக்கியமானவைகளாகும். அவரது ஆய்வில் மதுரை யில், பாண்டியர்கள் அச்சிட்டு வெளியிட்ட காசுகளும் பிற காசு களும் உள்ளன. அவர், கொற்கையில் கிடைத்த பழங்காசுகள் அனைத்தையும் சேகரித்து ஆய்ந்து, தமிழ் ஒப்பிலக்கணங்கண்ட நல்லாயர் கால்டுவெல் எழுதிய நூல்களோடு ஒப்பு நோக்கித் திருநெல்வேலிக் காசுகள் என்று ஓர் அரிய சிறிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். இவ்விரு அறிஞர்களின் சீரிய முயற்சிகள் பொன்னே போல் போற்றத் தக்கனவாகும். அவை தமிழ் அறிஞர்கள் எவரும் இன்று வரை செய்யாத - ஏன்? - செய்ய முடியாத தமிழ்த் தொண்டு; நாட்டுப்பணி; வரலாற்று ஆய்வு என்று இன்று வரை எண்ணப்பட்டு வருகிறது, திருநெல்வேலிக் காசுகள் என்ற நூல் இந்தியாவில் பழங்காசியலைப் பற்றி முதன் முதலாக வெளி வந்த ஏற்றம் பெற்ற ஏடாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.2 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்காசியா, மேற்காசியா, சிறப்பாக, யவனர், உரோமர், கிரேக்கர் நாடுகளுடன் தமிழர் கடல் வணிகம் தொடங்கிய பட்டினம் கொற்கை என்று அவர் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேனாட்டைச் சார்ந்த இவ்வறிஞர்கள் கொற்கை மீது கொண்ட அக்கரை இதுவரை இந்திய நாட்டுத் தேசியத் தலைவர் எவர்க்கும் எழவில்லை. இதனை வைத்து நமது நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் அளவிட முடிகிறது என்றால் நமக்குக் கோபம் எழுவானேன்? நான் இலங்கைக்குப் போயிருந்த பொழுது, 1950-ஆம் ஆண்டில் இ. உலோவந்தால் எழுதிய திருநெல்வேலிக் காசுகள் என்ற கொற்கை மூதூரைப் பற்றிய ஆங்கில நூலைக் கொழும்பிலுள்ள பழம் பொருட்காட்சி சாலையைச் சார்ந்த தேசிய நூல் நிலையத்தில் கண்டு படித்தேன். உடனே, கொற்கை மூதுரைப் பற்றி அறியாத தமிழ் மக்களுக்கு நாட்டுப் பற்றும் ஒரு கேடா? என்று எண்ணி நான் நாணத்தால் தலைகுனிந்தேன். இந்த நூலே என்னைத் தமிழ் நாட்டுக் காசுகளைப் பற்றி ஆயவும் பல்வேறு கலைநூற் களைப் படிக்கவும் கலைகளை ஆயவும் - ஏன்? - இந்த நூலையும் பிற கலைநூற்களையும் எழுதவும், தூண்டி, உரிய ஆற்றலையும் அறிவையும் உணர்வையும் பெற மூலகாரணமாக இருந்தது. 1969 - ஆம் ஆண்டில், இலங்கையில் உள்ள சிங்கள நண்பர் ஒருவரிடம் 23-பக்கங்களும் 4 படங்களும் கொண்ட அந்நூலை நூறு உரூபா கொடுத்து விலைக்கு வாங்கினேன். இதை ஓர் உயர்ந்த கலைக் கருவூலமாகக் கருதிப் போற்றிக் காத்து வைத்துள்ளேன். உலகின் எட்டுத் திக்குகளிலும் இருந்து திரள் திரளாக வணிகர்கள் கப்பல்களில் வந்து பொற்காசுகளையும் பொற்கட்டி களையும் வாரி வாரி வழங்கி, கொற்கை முத்துக்களையும் தமிழ் நாட்டின் விளைபொருட்களையும் செய்பொருட்களையும் வாங்கிப் போயினர் என்று வரலாறுகள் கூறுகின்றன. பாண்டியமன்னர்களும், அகத்தியர், தொல்காப்பியர் போன்ற பெரும் புலவர்களும் அமர்ந்து, தமிழ் ஆய்ந்த இடைச்சங்கம் நிலவிய இடம் கோ நகர் கொற்கையாகும். அது, தமிழ் பிறந்த பொதிகையில் உதித்து நாட்டை நலப்படுத்திய நல்லாறு - பொருநை, கடலுடன் கலக்கும் இடத்தில், கலமும் நலமும், வங்கமும் துங்கமும் துலங்க வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்த பட்டினமாகும், வானவரும் சோனகரும் சாவகரும் யவனரும் தாயகரும் ஈழவரும், காழகரும் ஏனையரும் வந்து குடியேறிய பாண்டியரின் பழம் பெரும் மூதூர் ஆகும். அம்மாநகர் இன்று பெருமை இழந்து சிறுமை உற்று வறுமையில் வாடிச் சிற்றூராய்த் தேடுவாரற்றுக் கிடக் கின்றது. இதன் பெருமையை வரலாறுகள் கூறுகின்றன; சங்க நூற்கள் பாடுகின்றன, பழங்காசுகள் பகர்கின்றன; பழம் முத்துக்கள் ஒலிக்கின்றன; இம்மூதூரில் அகழ் ஆய்வு நடத்த வெளி நாட்டார்கள் ஆவலுடன் இருக்கின்றனர். நாம் முயன்றால் இங்குப் போந்து அகழ் ஆய்வு செய்ய பிரான்சு, பின்லாந்து, உருசியா, அமெரிக்கா முதலிய நாடுகள் கூட நமக்குத் துணை செய்யலாம் என்று நம்புகிறேன். அகழ் ஆய்வு செய்தால் நமது பழைய வரலாறுகள் நன்கு தெரியவரும்; பல புதிய உண்மைகள் புலப்படும். கால வெள்ளத்தால் கட்டழிந்து போன மூதூர் தமிழகத்தின் நனிசிறந்த நாகரிகத்திற்கோர் நல்ல கலங்கரை விளக்காய் இலங்கி, ஒளியுடன் மிளிர்ந்த ஒப்பற்ற பட்டினம் - கொற்கைக் கோநகர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய நாட்டின் செல்வப் பெருக்கிற்கும், தமிழகத்தின் வாழ்விற்கும் வளத்திற்கும் வழியாகவும் வாய்க்காலாகவும், ஊற்றுக் கண்ணாகவும், உயிராகவும் விளங்கியது இந்த மாநகர். அது நமது இடைச்சங்கம் நிலவிய நல்லூராகப் பொலிந்தது; நமது பழம்பெரும் தெய்வங்கள் காட்சி அளித்த பழம் பட்டினமாகத் திகழ்ந்தது. அதை நாம் போய்ப் பார்க்கவும் ஆராயவும் வேண்டும் என்ற எண்ணம் நமது நாட்டு இளங்காளையர் கருத்தில் - விழுமிய தமிழ்ப் புலவர்கள் எண்ணத் தில் எழுந்துவிட்டது என்று நான் உணரும் நிலை எழுந்தது, அதுவே நான் இந்நூலை எழுதியதற்குக் கிடைக்கும் கைம்மாறு என்று எண்ணுகிறேன். நான் 1955-ஆம் ஆண்டு கொற்கையைக் காண நினைந்தேன். எனது மாணவர், பேராசிரியர் திரு. m¥Jš uFkh‹ MÕR v«.V., எம்.எட், ஆசிரியர் திரு.பி.சௌந்திர பாண்டியன் ஆகியவர்களுடன் அங்குப் போந்தேன். அப்புனித பூமியில் - அரச போகங்கள் அனைத்தும் அரும்பி ஆர்த்த அரண்மலிந்த ஆரூரில், - கழகங்கண்ட கழனி சூழ்ந்த காலகாலன் உறைந்த பட்டினத்தில் - பாதம் எடுத்து வைத்ததும் உள்ளத்தில் உணர்ச்சி பொங்கியது. உடம்பில் மயிர்க் குச்செறிந்தது. என்னை அறியாமலே எனது வாயில் பாரதியார் பாட்டு முழங்கியது. 1. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி யிருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் - வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தியென் வாயுறை வாழ்த்தேனோ. 2. இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல் போந்ததும் இந்நாடே 3. மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே - மக்கள் துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! என்று வணங்கேனோ? இப்பாட்டு, என் உள்ளத்திற்கு உவகை ஊட்டியது. உரிமை உணர்ச்சி உந்தி எழச் செய்தது. தாய் நாட்டின் மீது - தாய் மொழிமீது, - தாய் நெறிமீது, - தாய் நாகரிகத்தின் மீது அளவில்லாத அன்பு எழும்படி செய்தது. என்னைக் களிப்பென்னும் கடலில் ஆழ்த்தியது. உங்களுக்கு ஒன்றுகூற விழைகின்றேன். நீங்கள் ஒரு முறை கொற்கைக்குப் போங்கள். போனதும் இப்பாரதியின் பாடலைப் பாடுங்கள். உங்களுக்கு இன்பம் எழுகிறதா? எழுச்சி பொங்குகிறதா? உரிமை உணர்ச்சி உந்துகிறதா? என்று பாருங்கள். நீங்கள் நாட்டின்மீது, நற்றமிழ்மீது, உண்மையான பற்றுக் கொண்டிருந்தால், தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை, மாதாவின் பாதத்தின்கீழ் சுவர்க்கம் இருக்கிறது பெற்றோரைக் கனம் பண்ணுவாயாக என்று மொழிந்த ஔவையார் அன்பு மொழி யில், இக்பாலின் பொன் மொழியில், கிறித்துவின் அருள்மொழியில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் உங்களுக்கு இப்பாட்டு உறுதியாக, உண்மையாக உள்ளத்திற்கு உயிரூட்டும்; வானுலக இன்பத்தை வாரி வழங்கும்; உரிமை உணர்ச்சியை உந்தி எழச் செய்யும். கொற்கைப்பட்டினம் அகழ் ஆய்வு செய்யப் பெறல் வேண்டும். அம்மூதூர் மறுமலர்ச்சி பெற்றுத் திருநகராய் - பெருநகராய் - அருள் நகராய்ப் புதுவாழ்வு பெற்றுப் பொலிய வேண்டும். கொற்கையில், கலைக்கல்லூரியும், கப்பற் கல்லூரியும், தொழிற்கல்லூரியும், ஆலை களும், சாலைகளும் இடம்பெற வேண்டும். போக்குவரத்து வசதிகள் பெருக வேண்டும். அரசாங்கம் அங்கு வசதியான பயணிகள் விடுதி அமைக்க வேண்டும். இக்குறிக் கோள்கள் நிறைவுபெறப், பொது வாகத் தமிழ் மக்களும் - சிறப்பாகக் கொற்கை, மாறமங்கலம், முக்காணி, ஆத்தூர், பழைய காயல், புன்னைக்காயல், காயல் பட்டினம், வீரபாண்டியன் பட்டினம் போன்ற ஊர்களில் வாழும் தமிழ்மக்களும் முக்கியமாக மாணவர்களும் இளைஞர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொற்கைப் பகுதியின் பெயராளராய் இருக்கும் நமது அமைச்சர் மாண்புமிகு ஆதித்தனார் அவர்களும் ஆவன செய்ய முன் வரவேண்டும். இதற்கென ஒரு குழு தேர்ந் தெடுக்கப் பெறவேண்டும். இன்று தமிழகத்தில் பல்வேறு இனத்தவர்கள், நாங்கள் பாண்டியர் இனத்தவர், பாண்டியர் குடும்பத்தவர்; பாண்டியரின் நேர்வழியில் வந்தவர் என்று உரிமை கொண்டாட முன்வந்துள்ள னர். பாண்டியர் ஆட்சி மறைந்து 500 ஆண்டுகளுக்கு அப்பால் - நாடு உரிமை பெற்றபின் இப்பொழுதாவது பலர் தைரியமாக பாண்டியர் களின் குடியில் வந்தவர்கள் என்று உரிமையுடன் தலை நிமிர்ந்து பேச முன் வருவது கண்டு களிபேருவகை அடைகின்றேன். ஆனால், நம்மால், யார் பாண்டியர் இனம்? யார் பாண்டியரின் நேர்வழியில் வந்தவர்கள்? என்று தீர்மானிக்க முடியவில்லை. உரிமை கொண் டாடுகிறவர்கள் எவரிடமும் எழுத்து மூலமான ஆதாரமோ அல்லது கொடி வழிப்பட்டியலோ அல்லது பாண்டியர்களின் அரசுகட்டில், செங்கோல், முடி, கொடி, முத்திரை போன்ற அடையாளங்களோ இல்லை. எனவே நம்மால், யார் பாண்டியர்களின் வழிவந்தவர்கள்? என்று அறுதியிட்டு உறுதிகூற முடியவில்லை. எனவே, இன்று, பாண்டியர் ஆட்சி, மறைந்து போனதற்கு யார் உண்மையாக வருந்துகிறார்களோ? பாண்டியர் கோ நகர்-கொற்கை அழிந்து கிடக்கும் அவல நிலைகண்டு அழுது கண்ணீர் வடித்து, அப்பட்டினம் புத்துருப்பெற, புதுவாழ்வு பெற யார் முன் வந்து இப்பெரும் பணியை நிறைவேற்றுகிறார்களோ? அவர்களே பாண்டியர் இனம், அவர்களேபாண்டியப் பேரரசர்களின் வழிவந்த வர்கள் என மதிக்கப்பெறுவர். கொற்கைக் கோநகரின் மறுமலர்ச்சிக்கு ஆற்றும் அரிய பணி, பழம் பாண்டியப் பேரரசர்களின் ஆன்மாவிற்குக் களிப்பூட்டும் தெய்வப்பணி. தமிழ் அன்னையின் உள்ளத்திற்கு உவகை ஊட்டும் நாட்டுத் திருப்பணி - நற்றொண்டு. இப்பெரும் பணியாளர்களுக்குத் தமிழன்னையின் வாழ்த்துக் கிடைக்கும். அதனால் தமிழ் மக்களின் வாழ்வு வளரும்; வளம் பெருகும். 2. பெயரும் பெருமையும் பாண்டிய நாடு பழம் பெரும் நாடு. பாண்டிய குலத்தவர்களின் பிறப்பிடம் தமிழர்களின், தாயகம்; திராவிடர்களின் திருவிடம் என்றும் கூறலாம்.1 இந்நாடு இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே பூமியின் நடுக் கோட்டிற்கு அப்பாலும் பரவி இருந்தது. அதனை மேலைநாட்டு நிலநூல் வல்லுநர் இலெமூரியாக்கண்டம் என்பர். தமிழகத்தின் நடுவே பாண்டிய நாடு இருந்தது. அப்பாண்டிய நாட்டின் தலைநகரம் (மூதூர்) மதுரை என்னும் மாநகர் ஆகும். இதனைத் தென் மதுரை என்றும் கூறுவர். இங்கேதான் தமிழ் வளர்க்க எழுந்த முதற்சங்கம் இருந்தது. இம்மதுரையையும் பாண்டிய நாட்டையும் தமிழகத்தையும் 4000 ஆண்டுகளுக்குமுன் கடல் விழுங்கி விட்டது. இதற்குத் தமிழ் இலக்கியச் சான்றுகளும் மேனாட்டறிஞர்களின் நிலநூற் சான்றுகளும் பிறநூற் சான்றுகளும் உள்ளன.2 பண்டைத் தமிழகமும் - பாண்டிய நாட்டின் தெற்கு கிழக்குப் பகுதிகளும், கடல் கோளால் அழிவுற்றன. இந்தக் காலமும் கிறித்தவ மறையில் குறிப்பிடும் நோவாவின் காலத்தில் எழுந்த பெரும் வெள்ளத்தின் காலமும் ஒன்றாக இருக்கலாம் என்று எண்ணப்படு கிறது. இவ்வெள்ளப் பெருக்கால் எழுந்த அழிவினின்று பாண்டிய நாட்டின் வடபகுதியும் ஈழ நாடும் எஞ்சின. அழிந்து போன தமிழகத்தில் உள்ள நாடுகள், மலைகள் கலைகள் ஆறுகள், ஏறுகள் ஏடுகள் கோடுகள் மன்னர்கள், பின்னர்கள் புலவர்கள் வலவர்கள் முதலியவைகளைப் பற்றிய குறிப்புகள் தமிழ் நுற்களில் ஓரளவு காணப்படுகின்றன. தண்பொருநை யாறு பொதிகை மலையில் தோன்றி, கிழக்கு நோக்கிச் செல்கிறது. இதனைப் பொருந்தம் என்று புகல்வர். தண் பொருநையை வடமொழியாளர் தாம்பிரபர்ணி என்பர். இந்த யாறு கிழக்கு நோக்கி நெடுந்தூரம் சென்று இலங்கையையும் வளப்படுத்தி வந்தது. இதனால் இலங்கைக்கு தப்பிரபோன் என்ற பெயர் எழுந்தது. சந்திரகுப்தர் அரசவையில் கிரேக்க நாட்டு அரச தூதராக இருந்த மெகசுதனீசு இலங்கையைத் தாம்பிரபனே என்று தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை இந்தியாவில் உள்ள ஓர் ஆற்றினால் பிரிக்கப் பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். முதற் கடல்கோளில் கிழக்குக் கடற்கரையில் உள்ள பல பட்டினங்கள் அழிந்து போயின என்று தெரிகிறது. மீண்டும் கடல்கோள் எழுந்து பாண்டியரின் கோ நகரையும், இடைச்சங்கத்தையும் அழித்தது1 அது சோழர்களின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தையும் அழித்துவிட்டது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த கடல்கோளில் மகேந்திரமலையும் காவிரிப் பூம்பட்டினமும் கிழக்குக் கடற்கரையில் உள்ள பல தீவுகளும் அழிந்தன. சிலப்பதிகார ஆசிரியர் காலத்திலே - கி.பி. 170இல் புகார் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது எழுந்த கடல் கோளில் பாண்டியர்களின் கோநகரும் இடைச்சங்கமும் இறுதி நிலையை எய்தின. ஆனால் இதைப்பற்றிப் பேரறிஞர்கள் எவரும் ஆராய முன்வரவில்லை. விளக்கமான ஆய்வு நூல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை மக்களும் இன்றளவும் கவனியாது வாளா விருந்து விட்டனர். என்றாலும் இந்த மாநிலத்தில் தமிழர் ஆட்சி அரும்பியதும் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் நாட்டு வரலாற்றையும் - சிறப்பாக - அழிந்துபோன தமிழகத்தையும் பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எங்கும் துளிர்த் தெழுந்து வருகிறது. அதன் பலனாகத் தமிழக அரசின் புதைபொருள் ஆய்வுத்துறையினர் நெல்லை மாவட்டம் போந்து சில நாள் தங்கி இரண்டு இடங்களில் அகழ் ஆய்வுகள் சிறிதளவு செய்தனர். அதன் மூலம் கொற்கை கி.மு. 285ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு முதுபெரும் முத்துக் குளித்த மூதூர் என்று முடிபு கட்டப் பெற்றதாக நாளிதழ் களில் கண்டு களிப்புற்றேம்.2 பழம் பெரும் பாண்டிய நாட்டில் கடல்கோளுக்குத் தப்பி எஞ்சி நிற்பது இன்றைய பாண்டிய நாடு; இதன் தென்பகுதி தென்பாண்டி நாடு எனப்படும். தென்பாண்டி நாட்டு இரண்டாவது சங்கமும், தலைநகராகிய கொற்கையும் இருந்த நிலப்பரப்பாகும். எனவே பாண்டியரின் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்ட பின்னரும் பாண்டிய மன்னர்கள் தென்பாண்டி நாட்டைப் போற்றி வந்தனர். பாண்டியப் பேரரசு பிறந்த, பொன்னாடு என்று பெருமைப் படுத்தி வந்தனர். பாண்டியர்களின் அரும் புகழுக்கும் பெரும் பெயருக்கும் உறுதுணையாய் நிலவிய நிலப்பரப்பு என்று எண்ணி னர். தென்பாண்டி நாடு தமிழர் பிறப்பிடம் மட்டுமல்லாமல் மக்கள் குலமும் தோன்றிய திருநாடுமாகும். ஆதியில் அரனார் தென்முகக் கடவுளாய் நான்கு முனிவர்களுக்கு நான்மறையை ஓதுவித்த மகேந்திர மலையும்,1 சிவனார், முதன் முதலாகச் செப்பறையில் ஆட வல்லனாய் முனிதாண்டவத்தை ஆடிய புனித பூமியும் முதற் சங்கமும் முதல் பாண்டியனும் கூட இந்த நாட்டிலேயே இருந்த தாகத் தெரிகிறது. இந்தத் தூய நிலத்திலே மக்களினம் அரும்பியது என்பதை செர்மன் மண்ணூல் வல்லார் எக்கேல் இலெமூரியாக் கண்டம் மனித வர்க்கத்தின் தொட்டில் என்றார்.2 கிறித்தவர்களும் முசுலிம்களும், தென்னிந்தியா, மக்களினத்தின் பெற்றோர்களான ஆதாமும் ஏவாளும் தோன்றிய புனித பூமி என்பர்.3 பௌத்தர்கள் ஆதிப்புத்தரின் காலடி அழியாது நிலவும் சிரிபாத மலை இங்கே உள்ளது என்பர். தமிழர்கள், சிவனடி மலை இங்கே பண்டையத் தமிழகத்தில் இன்றைய இலங்கையில் உள்ளது என்று கூறுவர். தென்திசை, பாண்டியர்களுக்குச் சிறப்பானது; அது மக்கள் இனம் பிறந்த மாண்புமிகு மாநிலம்; தெய்வ பூமி என்று அத் திசையை நோக்கித் தமிழர்கள் வழிபட்டனர். அவர்கள் அத்திசைக்கு நேராக கால்நீட்டித் துயில மாட்டார்கள். அத்துடன் பாண்டியர்கள், தென்னவன் என்ற பட்டத்தைச் சூடி வந்தனர். இராவணன் கூடத் தென்னவன் என்று அழைக்கும் பேறு பெற்றான். தென் என்பது தேன், அழகு, இசை, மணம், கருப்பு என்று பொருள் தரும் என்று நிகண்டுகள் நவில்கின்றன. எனவே நமது நாடு தென் பாண்டிய நாடு என்ற பெயர் மிகப் பொருத்தமான பெயராகும். பாண்டியர்கள் வேண்டியவர்களிடம், நாங்கள் ஆதியில் இந்தச் சிறப்புமிக்க மாநிலத்தில் வாழ்ந்த வானவர்களின் வழி வந்தவர்கள் என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்வர். தென் பாண்டி நாட்டில் மாறோக்க மண்டலத்தில் தண் பொருநையாறு கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை இருந்து வந்தது. இது பாண்டியப் பேரரசின் தலைநகராய் நிலைபெற் றிருந்தது. ஏன்? துறைமுகமாகவும் துலங்கியது.1 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குவலயம் போற்றும் மீனக்கொடி இங்கே பட்டொளி வீசிப் பறந்தது. குறுநில மன்னர் களும் முடியுடைய பேரரசர்களும் தூதுவர்களும் அறிஞர்களும், கலைஞர்களும், வந்து போகும் பட்டினமாய்த் திகழ்ந்தது. பண்பு வாய்ந்த இப்பழம் பெரும் பட்டினத்தில்தான், தமிழ்ப் பாவலரும் நாவலரும் கூடித் தமிழ் ஆய்ந்த இடைச்சங்கம் இருந்தது.2 இம்மூதூர் இன்று நெல்லை மாவட்டத்தில் சீர்வை குண்டம் வட்டத்தில் இருக்கிறது. இவ்வூர், முருகன் கோயில் கொண்டிருக்கும் திருச்செந்தூருக்கு வடக்கே திருச்செந்தூர் - தூத்துக்குடிச் சாலையில் இருக்கிறது. இவ்வூர் முற்காலத்தில் கடற்றுறையான கொற்கைப் பட்டினம் என்னும் பெயரால் சீரும் சிறப்பும் பெற்றிருந்தது. இது பாண்டியப் பேரரசின் கோநகராகவும் துறைமுகப் பட்டினமாயும் விளங்கியது. பின்னர் கடல் இவ்வூரினின்று நான்கு கல் தொலைவிற்குப் பின் வாங்கி விட்டது. கடல் பொங்கி, இந்நகரை அழித்துப் பின்வாங்கி விட்டது என்று கூறுவாரும் உளர். பாண்டியர்கள், அடிக்கடி கடல் தொந்தரவு கொடுத்து வருவதை எண்ணி, பாண்டிய நாட்டின் கோ நகரைக் கொற்கையினின்று மதுரைக்கு மாற்றி விட்டனர். பல்லாற் றானும் கொற்கை நாளடைவில் மதிப்பிழந்தது; நாளடைவில், படிப்படியாய்க் கொற்கைப் பட்டினம் படிவம் மாறிப் பண்பு குன்றிப் பட்டிக் காடாகக் குட்டிச் சுவராக மாறியது என்றாலும், அண்மையில் ஆறும் கடலும் இருப்பதால் நிலவளமும் நீர்வளமும் வாய்ந்த சிற்றூராய்க் காட்சி நல்குகிறது. மாடமாளிகை களும் கூடகோபுரங்களும் நீண்ட தெருக்களும் பெரிய வணிக நிலையங்களும் பண்டகசாலைகளும் உயரிய கலங்கரை விளக்கும் தக்கோர் இடம் பெற்ற தமிழ்ச் சங்கமும் நிலவிய மூதூர் இன்று யாதும் அற்ற சிற்றூராய்க் காட்சி அளிக்கிறது. என்றாலும் பசுமை நிறைந்ததாய் வளம் வாய்ந்ததாய் எழில் பொழிவதாய் இயற்கைக் காட்சி அளிப்பதாய்த் திகழ்கிறது. இதன் வாழ்வையும் தாழ்வையும் அறிந்த வரலாற்றுப் புலவர்கள் இவ்வூரைக் கண்டு கவலாதிருக்க முடியாது. கோநகர் முற்காலத்தில் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று முடியுடைய மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் மூவரும் வலிமை வாய்ந்த வல்லரசர்கள் என விளங்கினர். இவர்கள் மூவரும் தனித்தனியே குமரி முதல் இமயம் வரைத் தண்டெடுத்து தரைப்படை பரிப்படை, கரிப்படை, வலிமையால் வெற்றியீட்டினர். வடஇந்திய மன்னர்களையெல்லாம் வீழ்த்தி இமயத்தின் மீது இரு மீன்கள், புலி வில் ஆகிய மூன்று சின்னங்கள் உள்ள கொடிகளை ஏற்றிக் குடைகளை நாட்டி ஒருங்கே வெற்றி வீரர்களாய்த் திரும்பினர்1 தம் கடற்படைகளை ஏவி, ஈழத்தை வென்று வீழ்த்தித் திருக்கோண மலையில் தம் கொடிகளைப் பொறித்து வந்தனர். அந்தமான், நக்க வாரம், கடாரம், மலையம், சிங்கபுரம், சாகவம், தாயகம், கம்போசகம் போன்ற நாடுகளை யெல்லாம் வென்று தமிழ்க் கொடி பறக்கச் செய்து வந்தனர். இம் மூவரசர்களுக்கும் முறையே முசிறி, புகார், கொற்கை என்ற மூன்று பெருந்துறைகளிருந்தன. கொற்கை ஏனைய துறைமுகங்களை விடப் பேரும் பெருமையும் வாய்ந்தது. தனிச் சிறப்புடையது. இரு பெரும் யவன ஆசிரியர்கள் கண்ட கொல்கை நமது கொற்கையாகவே இருக்க வேண்டும்2 கொற்கையைக் கோநகராகக் கொண்டு கோலோச்சிய பாண்டியர்கள் கொற்கைத் துறைவன் கொற்கையாளி கொற்கைக் கோமான் என்ற பட்டங்கள் தாங்கி இருந்தனர்.3 நெல்லை மாவட் டத்தில் கிறித்துவச் சமயப்பணியாற்ற வந்த ஆங்கிலப் பெருமக்களில் குறிப்பிடத்தக்கவர், முனைவர் சா.யு.போப், முனைவர் கால்டுவெல் என்பவர்கள் ஆவர். இவ்விருவரையும் தமிழ் மொழியும் தமிழ் இலக்கணமும் தமிழர் வரலாறும் முற்றாகக் கவர்ந்து கொண்டன இவர்கள் கசடறத் தமிழ்க் கற்றனர். போப், திருக்குறள், திருவாசகம், நாலடியார் போன்ற நூற்களைத் திறம்பட மொழியாக்கம் செய்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள இடையன் குடியில் இருந்த, அறிஞர், கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், (1851) திருநெல்வேலி அரசியல் பொதுவரலாறு போன்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்றார். இவர்களில் நற்றமிழ் கற்ற நல்லாயர் முனைவர் கால்டுவெல் கொற்கை போந்தார். அங்குப் பல்வேறு அவதிகளுக்கிடையே அகழ் ஆய்வு நடத்தினார். கொற்கையில், நிலத்தை ஆறடி ஆழம் அகழ்ந்து ஆய்வுகள் செய்தார். அங்கு மணற் பாறையும் அதன் அடியில் ஓர் அடி ஆழத்தில் குறு மணலும் இருந்தன. மேற்பரப்பில் சங்குகளும் சிப்பிகளும் இருந்தன. ஆறடியின், கீழே அமைந்த மணற்பாறையின் பரப்பே முற்காலத்தில் கடற்கரையாக இருந்திருக்க வேண்டும் என்று கண்டார். ஆற்று நீரில் அடித்து வந்து மண்ணும் மணலும் மக்கிய இலைகளும் துறைமுகத்தில் படிந்து அதைத் தூர்த்து மேடாக்கிவிட்டன. அவ்வாறு படிந்த மண், அழுத்தப் பெற்றுக் கடினமுற்று ஓரடிப் பாறையாக உறைந்திருக்கலாம் என்று உணரப் பெறுகிறது, என்று கால்டுவெல் அவர்கள் ஆய்ந்து தமிழர் களுக்கும் உலகிற்கும் விளக்கமாக ஏடு எழுதி வெளியிட்டார்.1 கொற்கைத் துறைமுகம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி யில் தூர்ந்து போய் இருக்கலாம் என்று எண்ணப் படுகிறது. பன்னி ரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாடு போந்து பல்வேறிடங்களைக் கண்டுகளித்து இங்கிருந்து கடற்பயணம் செய்த இத்தாலிய நாட்டு வணிகர் மார்க்கோபோலோ பழைய காயல் என்னும் பாண்டிய நாட்டுத் துறைமுகத்திலே கப்பல் ஏறினார் என்று அவரது நாட் குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. கொற்கைத் துறை முகத்தினின்று கடல், பின்வாங்கியதும் கொற்கையைப் பாண்டியர்கள் அதை கைநழுவவிட்டுப் பழைய காயலைத் துறைமுகமாக ஆக்கினர். அப்பால் கொற்கைக்கு நேர்ந்த கதியே பழைய காயலுக்கும் எழவே, பதினாறாம் நூற்றாண்டில் வாணிகம் நாடிவந்த போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடியைத் துறைமுகமாக அமைத்தனர். திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை நன்கு ஆய்ந்த பேரறிஞர் கால்டுவெல் தமிழ் மொழியையும் அதன் இலக்கணத்தையும் கசடறக் கற்று தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி, இப்பைந்தமிழ்மொழி பிற மொழித் துணையின்றி தனித்தியங்க வல்ல அரியமொழி; இம் மொழியைக் கண்ட தமிழ் மக்கள் தாளாண்மையிற் சிறந்த வேளாண் மக்கள்; இவர்கள் நானிலமெங்கும் போந்து நல்லிடங்களில் அமர்ந்து உழைத்துப் பொருள் தேடு பவர்கள். இவர்களைக் கீழ் நாட்டுக் கிரேக்கர்கள் அல்லது காத்துலாந்து (Scottland) மக்கள் என்று கூறினால் அது மிகைபடக் கூறிய தாகாது என்ற புகழ்மாலை சூட்டினார்.2 முத்தமிழ் நாட்டை மூன்று மன்னர்கள் - அதாவது சேர, சோழ, பாண்டியர் என்னும் மூன்று முடிமன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ஆண்ட சேர நாடு மலை வளம் வாய்ந்தது; சோழ நாடு நிலவளம் மிக்கது. பாண்டிய நாடு கடல் வளம் பெற்றது. எனவே சேர நாட்டில் மிளகு. ஏலம், கிராம்பு, தேக்கு முதலிய பொருள்களும் சோழநாட்டில் செந்நெல்லும் கமுகும் வாழையும் மிகுந்திருந்தன. பாண்டிய நாட்டில் பவளம், முத்து, ஏலம், கிராம்பு, அகில்கட்டை, செந்நெல், போன்ற மலைபடு பொருள்களும் கடல்படு கருவூலங் களும் நிலந்தருபண்டங்களும் கிடைத்தன. மேலும் கொற்கை நல்ல துறைமுகமாக விளங்கியது. கடற் கொள்ளைக்காரர்கள் அருகே செல்ல அஞ்சும் பாதுகாப்பான துறையாகவும் மிளிர்ந்தது. எனவே இத்துறையிலிருந்து முத்தமிழ் நாட்டுப் பண்டங்கள் பலவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. வளைகுடா கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் கடற்கரை வழியாக வந்துசென்ற பெரிப்புளுசு நூலாசிரியரும் வான நூல் வல்லுநருமான தாலமி என்ற யவனரும் கொற்கைத் துறையைக் குறித்துத் தம் நூல்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கொற்கை, பொற்கையான் ஆண்ட கோநகர், பழம்பெரும்பட்டினம் என்று புகழ்ந்தேற்றியுள்ளனர்.1 கிரேக்க வணிகர்கள் முதன் முதலாகக் குமரி முனையைச் சுற்றி வந்து கொற்கைத் துறைமுகத்திலேயே இறங்கியதாகத் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மன்னார் வளைகுடா அன்று அவர்களால் கொல்கை வளைகுடா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.2 துறைமுகம் கொற்கை கொழுமை கொண்ட கோநகர், பழம் பாண்டியர் களின் பண்டையப் பட்டினம். யவனர்களும் சோனகர்களும் கிரேக்கர்களும் உரோமர்களும் பிற நாட்டவர்களும் தத்தம் நாட்டுக் கொடிகள் பறக்கும். சீரிய மரக்கலங்களில் களிப்புடன் வந்திறங்கிய துறை கொற்கைப் பட்டினம். கிறித்தவ ஊழிக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த துறைமுகப் பட்டினமாய்த் துளிர்த்தெழுந்தது. ஆதி காலத்திலிருந்தே பொனிசியர், எகிப்தியர், சுமேரியர், கிரேக்கர், யவனர், உரோமர், அராபியர், பாரசீகர் போன்ற மேற்கு நாட்டவர் களும் பர்மியர், சீனர், ஈழகர், காழகர், சாவகர், கம்போசகர் போன்ற கிழக்காசிய நாட்டவர்களும் சிந்துவெளி மக்களும் கொற்கை போந்து வாணிகம் வளர்த்து வந்தனர்.1 பாண்டிய நாட்டவர்களும் பாண்டிய அரசரும் அயல் நாட்டவர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்தி விருந்தோம்பி வந்தனர். வணிகம் புரிந்து வந்தனர். யவன வீரர்களையும் யவனப் பெண்களையும் வாயில் காப்போர்களாகவும் மெய்க்காப்பாளர்களாகவும் வேலைக்கமர்த்திக் கொண்டனர். பாண்டிய நாட்டு மக்களின் பண்பும் அன்பும் அவர்களின் அயல் நாட்டு வாணிகம் வளர்வதற்கு ஆதரவாக அமைந்தன.2 இடைச்சங்கம் கொற்கைக் கோநகர் இடைச்சங்கத்தை எடுப்பித்து வளர்த் தது. இடைச்சங்கம் நிறுவிய வெண்டேர்ச் செழியன் முதலாக முடத் திருமாறன் ஈறாக எழுபத்தொன்பது பாண்டியர்கள் கொற்கையில் கோல் ஓச்சினர். இப் பாண்டியர்களில் கவியரங்கேறிய காவலர்கள் ஐவர். இடைச் சங்கத்தில் அகத்தியர், இறையனார், தொல் காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழிமோசி, உலோபாமுத்திரை, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை கவுதமனார், நாரதர், பனம் பாரனார், சியாமளேந்திரர் முதலிய ஐம்பத்தொன்பது பெரும்புலவர்கள் இருந்து தமிழ் ஆய்ந்து வந்தனர். இச் சங்கத்தில் உறுப்பினராய் இருந்து கவிகள் இயற்றிய கவிஞர்கள் மூவாயிரத்து எழு நூற்றுவர். இப்புலவர்கள் கலி, குரு, வெண்டாளி, வியாழமாலை என வகை வகையான பாடல்களைப் பாடினர். இவர்களுக்கு இலக்கண நூல்களாய் அமைந்தவை அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் முதலியவைகளாகும். இவர்கள் இயற்றிய நூல்கள் அகத்தியம், அவிநயம், பஞ்சமரபு, பரத சேனா பதியம், பஞ்ச பாரதீயம், கூத்த நூல், வாமன நூல், இந்திரகாளியம், தொல்காப்பியம், பேரிசைச் சூத்திரம், இசை நுணுக்கம், இசைநூல் இன்னோரன்ன பலவுமாம். மனிதகுலத்தின் மணித் தொட்டிலாக மதிக்கப்பெறும் தமிழகத்தின் - இலெமூரியாவின் நடுவில் பழம் பாண்டியர்களின் அரசு அமைக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வந்தது. கோநகர், மதுரை என்னும் மூதூராகும். இதனைப் பிற்காலத்தவர் தென்மதுரை என்பர். இங்கேதான் பாண்டியர்கள் முதற்சங்கத்தை நிறுவினர். தென்மதுரை யும் பழம் பாண்டிய நாடும் கடல் கொள்ளப்பட்டன. அப்பால் எஞ்சிய மக்கள் கொற்கையில் பாண்டியப் பேரரசை நிறுவினர். கொற்கை, கபாடபுரம் என்று கூறப்பட்டது. மீண்டும் கடற்கோள் எழுந்தது. கொற்கையும் இடைச் சங்கமும் பிறவும் அழிந்தன. கடற்கரையில் மீண்டும் கொற்கைப் பட்டினம் கட்டப்பட்டது. என்றாலும் கடற்கோளுக்கு அஞ்சிப் பாண்டியர்களின் கோநகர், கொற்கையினின்று உள்நாட்டிற்கு மாற்றப்பட்டது. அங்குக் கடைச் சங்கமும் கால்கொண்டது. தலைநகர் மதுரை என்னும் பெயருடன் திராவிடச் சிற்ப விதிப்படி, தாமரை வடிவில் உலகிலே ஒப்பற்ற திரு நகராய் எழுப்பப் பெற்றது. நான்கு மாடங்களையுடைய மாளிகைகள் பல எழுந்ததால் இது, நடுவே, தாமரையின் பொகுட்டுப் போன்று அங்கயற் கண்ணி ஆலயமும் அரண்மனையும் அமைச்சர் அரச குருக்கள், அறவோர்கள் இல்லங்கள் அமைக்கப்பட்டு நான்மாடக் கூடலாயிற்று. ஆலவாயில் அழகிய மாளிகை களும் மண்டபங்களும் எழுநிலை மாடங்களும் விண்முட்டும் விமானங்களும் தோன்றின. மாமதுரை, மொகஞ்சதாரோ, அரப்பா நகரைப் போல், பல மாடங் களையும் அழகிய அரண்களையும் உடைய பெருநகராய், திரு நகராய், தெய்வத் திருவிளையாடல்கள் நிகழ்ந்த புனிதப் பதியாய்த் தலை தூக்கியது. பாண்டியப் பேரரசின் கோநகர் மதுரையாகவும் (அகநக ராகவும்) கொற்கைத் துறைமுகப் பட்டினமாகவும் (புற நகராகவும்) விளங்கின. கோநகர் கொற்கையினின்று மதுரைக்கு மாற்றப் பட்டதைப் பல பழைய வரலாற்றாசிரியர்களும் தம் வரலாற்று ஏடு களில் பதிந்துள்ளார்கள். பிளினி போன்ற பேராசிரியர்களும் புகழ் பெற்ற தம் பெரும் நூலில் இந்நகரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.1 புகழ்பெற்றுத் திகழுற்ற திருநகர் கொற்கை இன்று அழிந்து அருளற்றுச் சிற்றூராய்க் குற்றுயிராய்க் கிடக் கின்றது. இன்று இந்தப் புனிதப் பட்டினம் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. முடிமன்னர்கள் பலர் வாழ்ந்த முது பெரும்பட்டினம் பன்னாட்டரசரும், பாவலரும், நாவலரும், புகழ்ந்தேத்திய புனித நகர் இன்று யாதுமற்ற பட்டிக்காடு என்று கூறும் நிலையில் உள்ளது. இப்பட்டினம் அரும்பிய காலத்தையும் அது தழைத்த காலத் தையும் கோநகராய் இருந்த காலத்தையும் அங்கு ஆட்சி நடத்திய பாண்டியப் பேரரசர்களைப் பற்றியும், இடைச்சங்கம் எழுந்த மூதூர் கொற்கையா அல்லது வேறூரா? கொற்கைதான் கபாடபுரம் எனப் பட்டதா? அல்லது வேறு ஊர் கபாடபுரம் எனக் கூறப்பட்டதா? என்பவற்றில் அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் வரலாற்று உணர்வு மிக்க தமிழறிஞர்கள் இப் பட்டினத்தைப் பற்றி ஆய்வு செய்ய முன்வரவில்லை. முன்னாள் ஆட்சியாளர் எந்நாளாவது இந் நகரைப் பற்றி எண்ணியதில்லை. வரலாற்று அறிவு வாய்க்கப் பெறாத அரசு கொற்கையைப் பற்றி எவ்வாறு எண்ணமுடியும்? அடிமை வாழ்வில் இன்பந்துய்த்த தமிழ் மக்களும் பன்னூறு ஆண்டுகளாய் இப்பட்டினத்தை எட்டிக் கூடப் பாராது வாளா இருந்து விட்டனர். என்றாலும் இந்த மாநிலத்தில் தமிழர் ஆட்சி தலை தூக்கியதும் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழ்மொழி ஆட்சி பீடத்தில் அமரவேண்டும் என்ற எண்ணம் எங்கும் பரவலாக எழுந்தது. அதன் பலனாக தமிழக அரசின் அகழ் ஆய்வுத் துறையினர் கொற்கைக்குப் போந்து சில நாள் தங்கிச் சிறிய ஆய்வு ஒன்றை நடத்தினர். அதன் மூலம் கொற்கை, கி.மு. 285-ஆம் ஆண்டைச் சேர்ந்த பட்டினம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.1 அகழ் ஆய்வு திருவுற்ற தென்னவரின் நன்னகர் கொற்கை, இற்றைக்கு 100 ஆண்டுகட்கு முன்னர் 1880ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடியில் கிறித்தவ சமய குருமார்களின் தலைவ ராய் இருந்தவரும் தமிழ்மொழியை நன்கு பயின்றவருமாயிருந்த பண்டா ரகர் இராபர்ட் கால்டுவெல் டி.டி. எல்எல்டி. அவர்கள் அகழ் ஆய்வு செய்து பல நூற்கள் யாத்துள்ளார். வேலூர் கிறித்தவ சமய குருவா யிருந்த அறிஞர் கி. உலோவந்தால் 1888ஆம் ஆண்டில் கொற்கை போந்து அங்குக் கிடைத்த பழங்காசுகளைச் சேகரித்து திருநெல் வேலிக் காசுகள் என்ற நூலைப் படைத்தார். டாக்டர் ஈல்சு மார்ட்டின் அங்கு அகழ் ஆய்வுநடத்திப் பல கட்டுரைகள் வரைந்துள்ளார். 1969, 1970ஆம் ஆண்டுகளில் தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அரசின் ஆணைப்படி ஆய்வுகள் நடத்தினர். இந்த ஆய்வுகளின் பயனாக அங்குப் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், யவன நாட்டுப் பீங்கான் கோப்பைகள் முதலியன கிடைத்தன. மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளும், மணிகளும், வளைகள், மோதிரங்கள் செய்வதற்கு அறுக்கப்பட்ட சங்குகளில் எஞ்சிய துண்டுகள் முத்துச் சிப்பிகள் பலப்பல பழங்காசுகள், முத்துக்கள், தாழிகள், தடையங்கள், முத்துக் களைத் தரம் பிரிக்கும் அளவுக்கற்கள் இன்னோரன்ன பல பொருள்கள் கிடைத்தன. கல்வெட்டுகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வட்டத்தில் உள்ள திருக்குறுங்குடியில் உள்ள கல்வெட்டில் கொற்கைக்குச் செல்லும் நல்ல வழிகள் இருந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொற்கைக் குடநாட்டுப் பிரிவிற்குள் அடங்கி இருந்தது என்று அக்கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது. திருச்செந்தூர் கல்வெட்டு ஒன்று குடநாட்டுக் கொற்கை என்று தெளிவாகக் கூறுகிறது. இஃதன்றிப் பல கல்வெட்டுகளில் கொற்கை இடம் பெற்றுள்ளது. அவைகளில் கொற்கை மதுராந்தக நல்லூர், மதுரோதய நல்லூர், மதிவரோதயநல்லூர் என்று பெயர் பெற்றுள்ளதாகத்தெரிகிறது. மேலும் கொற்கைத் தென்பாண்டி நாட்டில் மாறோக்க மண்டலத்தில் உள்ள பட்டினம் என்றும் தெரிகிறது. மாறோக்கம் என்பது மாற மங்கலமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. மாறோக்கம் என்னும் ஊரில் நப்பசலையார் என்னும் பெண்பாற் புலவர் ஒருவர் இருந்தார். அவரது பாடல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 3. சீரும் சிறப்பும் சீருஞ் சிறப்பும் பெற்ற பாண்டியர்களின் கோநகர் - கபாட புரமாய் இருந்தது. பிற்காலத்தில் தான் ஆண்டவனின் ஆடல் பிறந்த கூடல் மாநகர் என்னும் மதுரை பாண்டியப் பேரரசின் கோநகராயும் கொற்கைப் பாண்டியப் பேரரசின் துறைமுகப் பட்டினமாயும் எழுந்தது. கொற்கைமாநகர் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குப் புனித பூமியாகவும் தெய்வீகத் திருநகராகவும் கருதப்பெற்ற, தென் பாண்டியிலுள்ள கிழக்குக் கடற்கரையில் ஞாலம் புகழும் நல்ல பட்டினமாக விளங்கியது.1 தென்பாண்டி நாடு தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்றும் தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை என்றும் தென்னானைக் காவானைத், தென்பாண்டி நாட்டானை என்றும் மணிவாசகப் பெருமானால் திருவாசகத்தில் சிறப்பித்துக் கூறப்படும் ஏற்றம் உடையது. இத் தென்பாண்டிநாடு, சீர்வைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம், நாங்குநேரி, திருக்குறுங்குடி, முதலிய வைணவ திருத்தலங்களையும், திருநெல்வேலி, திருக்குற்றாலம், செப்பறை, சங்கர நயினார் கோவில், கழுகுமலை, திருச்செந்தூர், திருப்புடை மருதூர், பாபனாசம் முதலிய சிவத்தலங்களையும் உடையது. கொற்கை, தமிழர்களின் பழம்பெருந் தெய்வமாகிய முருகன் உறையும் திருச்செந்தூருக்கு அண்மையில் தமிழ் வளர்த்த தண் பொருநை ஆற்றின் வடகரையில் உள்ளது. ஒரு காலத்தில் உலகப் புகழ் பெற்று, பாண்டியர்களின் பொன்னும் முத்தும் கொழிக்கும் பேரூராய் ஒளிர்ந்தது. இன்று கொற்கை சீரும் சிறப்பும் அழிந்து யாதுமற்ற சிற்றூராய் எவரும் எட்டிப் பார்க்கவும் விரும்பாத பட்டிக்காடாய்ப் பாழடைந்து கிடக்கிறது. கொற்கையிலிருந்து கடல்நீர் நான்கு கல் தொலைவுக்குப் பின்வாங்கி விட்டது. இதன் இடைவெளி மண் மேடிட்டு பனைமரங் களும், முட்புதர்களும் மண்டிக் காடாய்க் கிடக்கிறது. இது பாண்டியராட்சிக் காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. அதாவது கி.மு. 13-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கொற்கைத் துறைமுகமாக விளங்கிய நிலை மாறியது. ஆனால் கொற்கைக்கு அண்மையில் உள்ள காயல் என்னுமூர் பாண்டியர்களின் துறைமுகமாகும் பேற்றைப் பெற்றது. முற்காலத்தில் உரோமர்கள், கிரேக்கர்கள், யவனர்கள், எகிப்தி யர்கள், அரேபியர்கள் போன்றவர்களும் அந்த நாட்டு மாலுமிகளும் (மீகாமன்களும்) நிலநூற் புலவர்களும் கொற்கைப் பட்டினத்தை நன்கறிவார்கள். அவர்கள், கொல்கை, கோல்சிசு, காயல், காயெல், புன்னைக் காயல், பழைய காயல், மஞ்சள்நீர்க் காயல், உவரி (Ophir), உபாசிபிர், அனிலா, காபில், காபல் (கபாடம்) காயல்பட்டினம் போன்ற பல ஊர்களின் பெயர்களை நன்கறிவார்கள். இவை அனைத்தும் கொற்கையின் பெயர்களும், அதற்கு அண்மையில் உள்ள ஊர்களின் பெயர்களுமாகும். கொற்கை அருகே உள்ள கடல், கோல்சிசு சினசு அல்லது கொற்கை வளைகுடா என்று அழைக்கப் பட்டது. உலகப் புகழ்பெற்ற - ஒப்பற்ற துறைமுகப்பட்டினமாய் இருந்த கொற்கைப்பட்டினமும், அதற்குப் பின் எழுந்த காயல் என்னும் துறைமுகமும் தண்பொருநை கடலோடு கலக்கும் இடத்திலிருந்து நேர் வடக்கில் - ஒரு கல் தொலைவில், தூத்துக்குடியிலிருந்து நேர் தெற்கில் பத்துக்கல் தொலைவில் உள்ளது. கொற்கைப் பட்டினம் பண்டைக் காலத்திலிருந்து பாண்டிய மன்னர்களின் கடல் துறையாயும் இந்தியாவிலே தலைசிறந்த வணிகமையமாயும், இருந்து வந்தது. கிறித்தவ ஊழிக்குச் சற்றுமுன் தலைநகராக இருந்த பெருமையை இழந்தது. கி.பி. 12ஆம் நூற் றாண்டுக்குப்பின் துறைமுகமாக இருந்த சிறப்பையும் இழந்தது. பாரசீகர்கள், அராபியர்கள், பொனிசியர்கள், எபிரேயர்கள், எகிப்தி யர்கள், எத்தியோப் பியர்கள், யவனர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் மட்டு மல்லாமல், சீனர், பர்மியர், மலாயர் போன்ற ஏனைய கீழை நாட்டு மக்களும் தமிழ் நாட்டோடு வணிகத் தொடர்பு கொண் டிருந்தனர். தமிழ்நாட்டினின்றும் ஏராளமான பொன், முத்து மற்றும் பல மணிகள், தந்தம், மயிலிறகு, குரங்கு, போன்றவைகளும் சந்தனக்கட்டை, கருங்காலி, தேக்கு போன்ற மரங்களும் மருந்து நெய் (Ointment) நறுமணப் பொருள்கள் (Spices), நீலச்சாயம் (Indigo), பருத்தி, பட்டாடைகள், மசுலின் துணிகள், மிளகு போன்றவைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.1 முசுலிம் வரலாற்றாசிரியர்களும், இத்தாலிய வரலாற்றாசிரியர் களும் கூறுவதை ஆய்ந்தால், கொற்கையும், பாண்டிய நாடும் கி.பி. 1310 முதல் 1371 வரை அலாவு தீனாலும், அவனுக்குப்பின் வந்த அயல் நாட்டுக் கொள்ளைக்காரர்களாலும் கொற்கை சூறையாடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் கொற்கைபட்டினம் பேரூராய்ச் சிறப்பு வாய்ந்த மாநகராய் எண்ணற்ற, அகன்று நீண்ட தெருக்களை யுடைய திருநகராய், பல, கல்சுற்றளவுள்ள பெருநகராய் எஃகுப் போன்ற அரண்கள் சூழ்ந்த கோநகராய்ப் பேரழகு வாய்ந்த பழைய பபிலோன் போன்று பொற்கதவுகள் பொருத்தப் பெற்ற செல் மணி நகராய் விளங்கியது. கொற்கையின் செல்வம் அளவிடமுடியாததாய் இருந்தது. கொற்கையில் வாழ்ந்த பெருங்குடிமக்கள் தம் உணவைப் பொற் கலத்திலே சமைத்து, பொன் வட்டிலிலே உண்டு. பொற்கிண்ணங் களிலே நீர் பருகி வந்தனர். கொற்கையின் செல்வம் அனைத்தையும், கி.பி. 1293ஆம் ஆண்டில் முசுலிம் கொள்ளைக்காரனான சேய்கு சமால்தீன் என்பான், படையின் துணை கொண்டு கொள்ளை அடித்துச் சென்றான். 1கொற்கை வேந்தன் சுந்தர பாண்டியன் அரண் மனையிலிருந்து பொன் அணிகலன்கள் யானைகளிலும் குதிரைகளி லும் ஏற்றிச் செல்லப்பட்டன. கி.பி. 1310ஆம் ஆண்டில் மாலிக் கபூரி னால் காயல் மாநகர் முதலில் கொள்ளை அடிக்கப்பட்டது. சுமார் 80 ஆண்டுகள் தொடர்ந்து இந்தக் கொடிய முசுலிம் கொள்ளைக் காரர்களால் பாண்டியர்கள் ஆட்சிக்குட்பட்ட நாடனைத்தும் சூறையாடப்பட்டுப் பத்துக் கோடிப் பவுன்கள் (One hundred million pounds Sterlings). மதிப்புள்ள செல்வம், தில்லிக்குக் கவர்ந்து செல்லப்பட்டது. இந்தக் கொள்ளை, விசயநகர் ஆட்சி வரும் வரை நடந்து வந்தது. இக் கொள்ளையர்களுக்குப் பயந்து கொற்கைப் பட்டினத்து மக்கள் தங்களது ஏராளமான செல்வங்களை, இன்று அழிந்து கிடக்கும் நகரத்திற்கு அப்பால் உள்ள பழைய நிலப்பரப்பில் பகைவர்களுக்கு அஞ்சி ஒரு கல் சுற்றளவிற்குள் புதைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. கி.மு. 2500ஆம் ஆண்டில் உக்கிரப் பெருவழுதியால் நிறுவப் பெற்று, அகத்தியராலும், பிற தமிழ்ப்புலவர் களாலும், தமிழ் ஆய்வு செய்யப்பெற்ற இடைச் சங்கம், எழுந்தது, கொற்கை என்னும் அழகாபுரியிலேயாகும். கிறித்தவ ஊழி எழுமுன் பாண்டியர் அரசவையில் உரோமர், கிரேக்கர், அராபியர், சாவகர், பர்மியர், சீனர் போன்ற எட்டு நாடுகளிலுள்ள எட்டு மொழி பேசும் அரச தூது வர்கள் அமர்ந்திருந்தனர். இந்த எட்டு நாடுகளும் பெரும் அளவில் வணிகத் தொடர்பும் கொண்டிருந்தன. கொற்கை மன்னர்கள் போர்த் தெய்வமாகிய முருகனை வழிபட்டு வந்தனர். அவர்களுடைய குலதெய்வம் சிவபெருமானே என்றாலும், முருகனை அவர்கள் வணிகத்திற்குத் துணை செய்யும் தெய்வமாக நம்பி இருந்தனர். திருச்செந்தூர் முருகனை அவர்கள் செட்டி (வணிகன்) என்று அழைத்தனர். வணிகர்களின் கலன்களை முருகன் காப்பான் என்பது அவர்களது அசையாத நம்பிக்கை செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை என்பது அக்காலத்தில் அரும்பிய பழமொழியாகும். பாண்டிய நாட்டு நாவாய்களின் சுற்று மண்டலப் பயணம் (Circumnavigation) மலைகளைத் தோண்டிப் பொன் எடுத்துவந்த அமெரிக்கா, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அப்பாலும் பரவியது என்று கூறப்படுகிறது. கொற்கையில் ஆட்சி நடத்திய பாண்டிய அரசர்கள், கடல் கடந்து பல்லாயிரம் கல் தொலைவில் உள்ள நாடுகளுக்கெல்லாம் தம் தூதுவர்களை அனுப்பி அரசர்களுக்குப் பரிசுகள் அளித்து, வணிக உறவு கொண்டனர். உரோமப் பேரரசர்களான அகடசு, (கி.மு. 63 - கி.பி. 74) கிளாடியசு, நீரோ (கி.பி. 54-68) போன்றவர் களோடும், பிற மன்னர்களோடும் அரச தூதுவர்களைப் பரிமாறிக் கொண்டு வணிகம் வளர்த்து வந்தனர்.1 கி.மு. 1400-ஆம் ஆண்டில் ஆட்சி நடத்திய அத்தீனிய அரசர்கள், புகழ் வாய்ந்த கொற்கைத் துறைமுகப் பட்டினத்தை ஆண்ட தென் இந்தியப் பாண்டியர்களைக் கௌரவிக்க பாண்டியர் என்ற பெயரைச்சூட்டிக் கொண்டனர். கருங்கடல் அருகே உள்ள கடற்கரையில் மேலையுலகுக்குத் தனிச் சிறப்பான பண்டகப்பெரு நிலையத்தை (Emporium) அமைத்து, அதற்குப் பாண்டியநாட்டுத் துறைமுகமான கொற்கைக்கு அவர்கள் வழங்கியகோல்கிசு (Colchis) என்ற பெயரைச் சூட்டி, பாண்டிய மன்னர்களையும் பாண்டிய நாட்டையும் பெருமைப்படுத்தினர். முற்காலத்தில் தமிழகம் முழுவதும் பாண்டியர் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. சேரர், சோழர் ஆட்சி எழவில்லை. தமிழ்ப் புராணக் கதைகளின்படி கொற்கையில் ஆதிப் பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்துவந்தான். அவனது மக்களான பாண்டியன், சேரன், சோழன் என்போர் தண்பொருநை ஆற்றங்கரையின் ஆற்றுமுகத் துக்கு அண்மையில் உள்ள கொற்கையில் வாழ்ந்து பொதுவாக ஆட்சி புரிந்து வந்தனர். இம்மூவரும் பொதுவாக இருந்து வந்த இடம் முக்காணி (மூன்று சொத்துகள்) எனப்படும் ஊராகும். இவ்வூர் இன்றும் கொற்கையின் அருகில் இருந்து வருகிறது. முக்காணியில் ஒருபகுதி கொற்கையாகத் திகழ்ந்து பழைய மரபுப் படி. பல்லாண்டுகளாக தென்இந்திய நாகரிகத்தின் தொட்டிலாகக் குறிப்பிடப்படுகிறது. முக்காணி என்ற இந்த இடத்திலே இடைக் காலப் பாண்டியர்களின் ஆட்சி பிறந்து அதன் ஒரு பகுதி ஆகிய கொற்கையில் வளர்ந்து மதுரையில் குடியேறியது. இவர்கள் ஆதியில் கொற்கையில் ஆட்சி புரிந்ததால் கொற்கையான், கொற்கைவேந்தன், கொற்கைக் கோமான் கொற்கையாளி, கொற்கைமாறன் போன்ற பட்டங்களைச் சூடிக்கொண்டனர். பாண்டிய அரச குலத்தை நிறுவியவர் என்று கருதப்படும் ஆதிப் பாண்டியனாகிய குலசேகர னுக்குக் கொற்கையான் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.1 மரபு முறைகளும், கல்வெட்டுகளும், இலக்கியமும் வரலாறும் ஏற்றுக்கொள்ளும் இம்மூன்று அரச குலத்தினரின் மூலக்கதையைத் தழுவியே தென் இந்திய வரலாறு தொடங்குகிறது. சேரன், சோழர், பாண்டியர் என்ற மூன்று முடிமன்னர்களின் முதல்வர்கள் மூவரும் உடன் பிறந்தவர்கள். திருநெல்வேலிச் சீமையில் உள்ள தண் பொருநை ஆற்றங்கரையின் அண்மையில் உள்ள கொற்கையில் ஒரு தாய் வயிற்றிற் பிறந்து ஓரிடத்தில் ஒருமித்து வாழ்ந்து வந்தவராவர். அவர்கள் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தனியாகப் பிரிந்தனர். இதை மறுப்பாரும் உண்டு. பாண்டியர்கள் மதுரை என்று கூறப் படும் தாயகத்தில் தனி ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் வட பகுதியில் தம் தலைநகரை மாற்றிய பொழுது இரண்டுக்கும் வேற்றுமை தெரியுமாறு வடமதுரை என்ற பெயரை வைத்தனர். ஆதியில் பாண்டியர் ஆட்சி புரிந்த தென் மதுரை கடல் கோளால் அழிந்து விட்டது. அம்மதுரை குமரிமுனைக்குத் தெற்கே பூமியின் நடுக்கோடு செல்லும் இடத்தில் இருந்தது என்றும் அங்கே பாண்டியப் பேரரசு தங்கள் தாய்மொழியாம் தமிழை வளர்க்க முதல் சங்கத்தை நிறுவி யது என்று கூறப்படுகிறது.2 இந்த முதற் சங்கம் பஃறுளி ஆற்றின் கரையில் இருந்த மூதூர் (தென் மதுரை) என்றும், இந்த முதற் சங்கம் நிறுவிய பாண்டியன் நெடியோன் என்றும் அழைக்கப் படுவான். இவனே முதலாம் நிலந்தரு திருவிற் பாண்டியன் ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன், பாண்டியன் மாகீர்த்தி எனவும் அழைக்கப்பட்டான். பாண்டியன் என்ற பெயர் பழம்பெரும் தமிழ் இலக்கியங் களில் அடிக்கடி குறிக்கப்படும் அரிய பெயராகும். பாண்டியரின் பெயர் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கொற்கையான், கொற்கைக் கோமான் (The Lord of Korkai), கொற்கை வேந்தன், கொற்கைக் காவலன் என்று குறிப்பிடப்படுகின்றனர். பாண்டிய அரச குலத்தின் முதல்வன் அயோத்தியில் அல்லது அவுத்தில் (Ayodya or Oudh) இருந்து வந்தவன் என்றும் அவனது முதலாவது தலைநகர் குர்க்கி (Kurky) என்றும் பெரிப்ளூ என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் என்றும், இரண்டாவது தலைநகர் கலியன்பூர் (Kaliyanpoor) என்றும் மூன்றாவது தலைநகர் மதுரை என்றும் பல மேனாட்டு ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். யவனர்களால் கோல்கிசு (Colchis), கோல்சாசு (Colchas), கோல்சிசு (Colcis) என்று பலவாறாக அழைக்கப்பட்ட கொற்கை நீண்ட காலமாக இந்தியாவின் எல்லாச் செல்வங்கட்கும் களஞ்சியமாகவும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் பயன்படும் வணிகப் பண்டகசாலையாகவும் விளங்கியது என்று ஐரோப்பிய அறிஞர் கூறியுள்ளனர்.1 தமிழக அல்லது இந்திய அறிஞர்களின் நூல்களிலிருந்து கொற்கைப் பட்டினத்தின் சிறப்பை அறிவதை விட அதிகமாக முற்கால உரோம, கிரேக்க நாட்டு அறிஞர்களின் நூல்களினின்றும் அதிகம் அறிய முடிகிறது. கி.பி. 80இல் இந்தியா போந்த கூர்மதி வாய்ந்த பெரிப்ளூசு மேரி எரிதிரே என்ற நூலின் ஆசிரியராலும்2 கி.பி. 130ஆம் ஆண்டில் வாழ்ந்த தாலமி என்ற நிலநூல் ஆசிரியராலும் கொற்கையின் சிறப்புப் பெரிதும் கூறப்படுகிறது. தாலமியும், பெரிப்ளூசு ஆசிரியரும், பாண்டியர்களின் ஏனைய ஆட்சிப் பகுதிகளை உள்ளடக்கி கொல்கை அக்காலத்தில் முத்துக் குளிப்புக்கு ஒரு பெரும் தலை நகராக விளங்கியது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தாலமி, அது சோலன் (Solen) ஆற்றிற்கு வடக்கே அண்மையில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பௌட்டிங்கர் பட்டியலில் (Peutinger Tables) இது கோல் சோய் இந்தோரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியர்களின் கோல்சி கருங்கடல் கரையில் இருக்கும் கோல்சி பட்டினத்தினின்று வேறுபட்டதென்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது தனிப் பட்ட சிறப்புடனும் திகழ்கிறது.3 ஆதிகாலத்தில் ஐரோப்பாவிற்கு இந்தியாவினின்று அரிசி முதல் யானைத்தந்தம் வரை ஏற்றுமதி செய்து நடத்திய பெரும் வாணிகம் அனைத்தும் பொனிசியர்கள், பாரசீகர்கள் கைகளில் இருந்தது. அதன் பின்னரே தண்பொருநை ஆற்றங்கரையின் அண்மை யில் இருந்த கொற்கைப் பட்டினத்தினின்று அரிசியைக் கிரேக்கர்கள் கொள் முதல் செய்து ஐரோப்பாவில் பல இடங்களுக்கும் தம் கப்பல் களில் கொண்டு சென்று வாணிகம் வளர்த்தனர். கிரேக்க மொழியில் அரிசி, ஒரிய்சா (Oriza) என்றும் இஞ்சி சிஞ்சி (Ginjee) என்றும், கருவாப்பட்டை - கார்ப்பியன் (Karpion) என்றும் அழைக்கப்படுவ தொன்றே பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டோடு கிரேக்கர்கள் வாணிகம் நடத்தினர் என்பதை உறுதி செய்கிறது. 4000 ஆண்டு களுக்கு முன், சாலமோன் ஞானி எருசலேமில் கட்டிய கோயிலின் தொடக்க விழாவிற்காகப் பொனிசியர்கள் கப்பலில் உவரித் துறை முகத்திற்கு வந்து (உவரி - கொற்கைக்கு அருகில் உள்ளது) அகில் கட்டை, ஆட்டு மயிர், மயில் இறகு, குரங்கு, தந்தம் முதலியவைகளை வாங்கித் தம் கப்பலில் ஏற்றிக் கொண்டு சென்றனர் என்பதை கிறித்தவ மறை சான்று தருகிறது.1 அம்மறை நூல் உவரியை உவர்பீன் என்றும் மயில் இறகைத் தொய்யில் என்றும் குரங்கை, கிபி (கவி) என்றும் குறிப்பிடுகிறது. உவர்பீன் என்ற துறைமுகம் நெல்லை மாவட்டத்தில் நான்குநேரி வட்டத்திலுள்ள உவரிப் பட்டினம் என்று அறிஞர் கால்டுவெல் அவர்கள் 1880-ஆம் ஆண்டிற்கு முன்னரே தம் திருநெல்வேலி வரலாறு என்ற நூலில் குறிப்பிட் டுள்ளார்.2 மேலும் இந்தியர்களில், முதல் கிறித்தவக் குருவாகப் பட்டம் பெற்ற கணியர் அசரியா அவர்களின் தம்பியும் நாட்டுப் பற்றுமிக்க பெரியாருமாகிய திரு. தாமசு, M.A., அவர்கள் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் திங்கள் இதழில் உவரியே உவர்பீன் எனப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதைப் பல கிறித்தவ சமய குருக்களும், அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.3 பாண்டியர்களைப் பற்றிப் பண்டைக்கால உரோமர்கள் நன்கறிவார்கள். அகத்தசு சீசர் அரசவைக்குப் பாண்டிய மன்னர்கள் இரண்டு தடவை தம் அரச தூதுவர்களை அனுப்பி இரு பெரும் நாடுகளும் நட்பை வளர்த்து வணிகத் தொடர்பைப் பெருக்கிக் கொண்டன.4 பாண்டிய அரசவைக்கு அகத்தசு அரசர் (கி.மு. 20ல்) உரோமி லிருந்து தம் அரசத் தூதுவரை அனுப்பி அவர் மூலம் பாண்டிய அரசருக்குப் பல பரிசுகளும் அளித்ததைக் கிறித்தவசமயக் குருவும் வரலாற்றுப் பேராசிரியருமான திரு.டப்ளியூ. டெய்லர் என்பவர் தம் கீழை நாட்டு வரலாற்றுப் பாங்கான கையெழுத்து ஏடுகள் என்ற நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.5 பாண்டியன் என்ற பெயர் கிரேக்கர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த பெயராகும். ஏதென்சில் இரண்டு அரசர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவனுக்குப் பாண்டியன் என்று பட்டம் சூட்டப்பட் டது. அதற்காக ஒரு விழாவும் கொண்டாடப்பட்டது. அது திங்களுக்கு மிகவும் தொடர்புடையதாகச் சூரியனுக்குத் ânahÅáah(Dioneysia) இருந்தது போலாகும். இரண்டாவது பாண்டியன் தனது ஆட்சியை இழந்துவிட்டான். அவனுக்கு நான்கு புதல்வர்கள் உண்டு. (அவனது தந்தை இழந்து திரும்பப் பெற்றவர்களின் மூத்தவன்.) இந்தப் புதல்வர் பாண்டிய தாசர்கள் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டனர் என்று கணியர் கால்டுவெல் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.1 பிளினி உயிர் வாழ்ந்த காலத்தில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் தலைநகரம் கொற்கையிலிருந்து கூடலுக்கு (மதுரைக்கு) மாற்றப்பட்டது. கொற்கைத் துறைமுகம் எப்பொழுது தூர்ந்தது என்று கூற முடியவில்லை. என்றாலும் கொற்கை அஃக சாலையில் கி. பி.700ஆம் ஆண்டிற்கு முன்வரை நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. கி. பி. 1292ஆம் ஆண்டில் காயல் துறைமுகத்தில் கப்பல் ஏறியதால் அதன் முன்பே கொற்கைத் துறை முகம் பயன்படும் நிலையை இழந்தது என அறியப்படுகிறது. கொற்கை 14ஆம் நூற்றாண்டு வரை - சுமார் 3000 ஆண்டு களுக்கு மேலாக இந்தியாவின் மாபெரும் வணிக மையமாகத் திகழ்ந்தது. பாரசீகர்கள், அரேபியர்கள், பொனிசியர்கள், எபிரேயர்கள், எகித்தியர்கள், சுமேரியர்கள், எத்தியோப்பியர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், சீனர்கள், பர்மியர்கள் முதலியவர்களோடன்றி ஈழகம், மலையகம், சாவகம், கம்போசகம் முதலிய கிழக்காசிய நாட்டு மக்களும் வந்து போகும் பெரிய துறைமுகப் பட்டினமாய்த் துலங்கி யது. தமிழ் வணிகர் முத்து, மரகதம் மாணிக்கம், பவளம், வைடூரியம் முதலிய மணிகளையும் தந்தம், மயில், குரங்கு, சந்தனம், கருங்காலி, தேக்கு போன்ற உயர்ந்த பொருள்களையும், மசுலின் துணி, பட்டுத் துணி, சாயம், சங்கு, சிப்பி, சோவி, வாசனைப் பொருள்கள் முதலியவை களையும் பெரும் அளவில் ஏற்றுமதி செய்து பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் பெற்று வந்தனர். இந்தியா, இத்தாலி, அரேபியா முதலிய வரலாற்றுப் புலவர்கள் கி.பி. 1310இல் இருந்து 1371 வரை செல்வம் கொழித்த தமிழகம் தில்லி சுல்தான் அல்லாவுதீன் என்பவனாலும் அவனுக்குப் பின் வந்தவர் களாலும் கொள்ளை அடிக்கப்படும் வரை கொற்கைப் பட்டினம் 50 கல் சுற்றளவிற்குச் சீரும் சிறப்பும் பெற்று செல்வம் கொழிக்கும் திருவிடமாய்த் திகழ்ந்தது. பழைய பபிலோன் நகரம் போல் கொற்கைப் பட்டினத்தில் கோட்டை வாயிற் கதவு பொன்னால் செய்யப் பெற்று முத்துக்களும் மணிகளும் பதிக்கப் பெற்று எழிலுற விளங்கியது. கொற்கை மாநகரின் செல்வம் அளவிடற்கரியதாய் இருந்தது. கொற்கை மாநகர மக்கள் உச்சி முதல் பாதம் வரை பொன்னாலும் மணியாலும் அணிகலன்கள் செய்து பூண்டிருந்தனர். அவர்கள் வீடுகளைப் பொற்குடங்களும், பொற்செம்புகளும், பொன்வட்டில் களும் அணி செய்தன. தில்லி சுல்தானின் தளபதி சேய்க் சமாலுதீன் என்ற முலிம் கொள்ளைக்காரன் கி.பி. 1293ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டிற்குள் புகுந்து செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்து டில்லிக்கு அனுப்பியுள்ளான். கி.பி. 1310ஆம் ஆண்டில் மாலிக்கபூர் என்பான் மதுரையில் சுந்தரபாண்டியன் அரண்மனையில் இருந்தும், காயலிலிருந்தும், கொற்கையிலிருந்தும் சூறையாடப் பட்ட பொருட்களின் மதிப்பு 10 கோடி பவுண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இவை பொற்காசு களாகவும், பொற்கட்டிகளாகவும் மணிகள் பதித்த அணிகளாகவும் இருந்தன. இவைகள் யானைகள் மீது குதிரைகள் மீதும் ஏற்றப்பட்டு தில்லிச்சுல்தான் அரண்மனைக்கு அனுப்பப்பட்டன.1 இவ்வாறு முகமதிய கொள்ளைக்காரர்கள் 80 ஆண்டுகள் - அதாவது மதுரையில் விசய நகர நாயக்கர்கள் வந்து விரட்டும் வரை புனிதமான பாண்டிநாடு முழுவதிலும் காட்டுமிராண்டித்தனமாகக் கொள்ளையடித்தும் சுரண்டியும் பொருள் சேர்த்தனர். இந்தக் கொள்ளைக்கார வேடர்கட்கு அஞ்சியே அக்கால மக்கள் பாழடைந்து, அழிக்கப்பட்ட தம்நகரில் 1 கல் சுற்றளவிற்குள் தங்கள் திரண்ட செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கி.மு. 1000 ஆண்டுக்கு முன் தோன்றிய தமிழ்ச் சங்கத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் கொற்கையில் இருந்து (பொதுவாகத் தமிழகத்துக் கடற்கரைத் தலை நகரங்கள் அடிக்கடி கடல்கோளுக்கு உள்ளாவதை எண்ணி) பாண்டிநாட்டுத் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டது. மார்க்கோபோலோ இத்தாலிய நாட்டிலிருந்து வந்த வழிப்போக்கனான மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா விற்கு வந்து பல இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு கப்பலேறி வெளிநாடு சென்றான். அவன் எழுதியுள்ள குறிப்பில் பழைய காயலே சிறந்த துறைமுகமாக இருந்ததென்றும். அவன் அக்காயல் வழி யாகவே மரக்கலம் ஏறிச்சென்றான் என்றும் தெரிகிறது. கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்குப் பின் கொற்கையின் சிறப்பு குன்றியது. 13-ஆம் நூற்றாண்டிற்குப் பின் கொற்கையைப் பற்றிய பேச்சே எங்கும் கிடையாது. மார்க்கோ போலோ இத் தமிழகத்தைப் பார்த்துவிட்டு மகா இந்தியா, என்று புகழ்ந்து கூறியதாவது:- இலங்கைத் தீவை விட்டு மேற்கே 60 கல் தொலைவிற்குக் கடற்பயணம் செய்தால் மகா இந்தியா என்ற மாபார் நாட்டைக் (தென் இந்தியாவைக்) காண லாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளையும் விட இது மிகச் சிறந்தது. மிக முக்கியமான இடத்தில் இது இருக்கிறது. உலகத்திலேயே இம்மாநிலம் மிக நேர்த்தியானதும், சிறப்புடையதும் ஆகும். மாபார் மக்கள் ஆணும், பெண்ணும் நாடோறும் நீரில் குளிக் கிறார்கள், ஆகாரம் அருந்தும்போது வலது கையையே பயன்படுத்து கின்றனர். இடது கையைக் கொண்டு உணவைத் தொடுவதும் இல்லை. நல்ல காரியங்கள் செய்வதிலும் கூட இடது கையைப் பயன் படுத்துவதை அறவே தவிர்த்து வலது கையைப் பயன்படுத்து கிறார்கள். குற்றவாளிளைத் தண்டிப்பதில் இவர்கள் கண்டிப்பான வர்கள். மதுபானம் அருந்துவது இந்நாட்டில் கொடிய குற்றமாகும். குடிகாரர்களும், கடற்பயணம் செய்பவர்களும் பிறருக்குப் பிணை கொடுக்க வந்தால் இந்நாட்டவர் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இது நாட்டு விதி. பல்கலைகளும் பயின்ற விற்பன்னர்கள் இங்குளர். மக்களின் தோற்றத்தை வைத்து அவர்களுடைய குணங்களை அறியும் ஆற்றல் இவர்களுக்குண்டு. இவர்கள் குழந்தை பிறந்ததும் பிறந்த நாள், நாழிகை, வினாடி முதலியவைகளைக் குறித்து வைத்துக் கொண்டு அதற்குச் சாதகம் கணிக்கிறார்கள். மன்னன் ஆடம்பர மற்றவனாய் இருக்கிறான். அவன் உடம்பில் சட்டை அணிவதில்லை. மணிகள் பதித்த அணிகலன்களும் மேலாடையும் அணிந்துள்ளான். அரசர்கள் வீரர்களாயும், அறம் உணர்ந்தவர்களாயும் இருக்கி றார்கள். அயல் நாட்டினரை அரசன் அன்புடன் வரவேற்று விருந்தின ராக ஏற்றுப் போற்றுகின்றான் - (மார்க்கோபோலோ 42, ப. 266-26) என்றும் கூறியுள்ளான். வீழ்ச்சி கிறித்தவ ஊழிக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிறப்புற்றிருந்த கொற்கை கி.பி. 6ஆம் நூற்றாண்டில் அதன் பெருமை குன்றியது. கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை அதன் சிறப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அப்பால் முந்நூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக்குட்பட்டு தன் மாண்பை முற்றிலும் இழந்தது. பாண்டிய நாட்டைச் சோழர்கள் வென்று இராசராச பாண்டிய நாடு என்று அழைத்து வந்தனர். கொற்கைப் பட்டினத்தைச் சோழேந்திர சிம்மசதுர்வேதி மங்கலம் என்றும் அழைத்தனர். பட்ட காலிலேபடும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிப் படி கொற்கையில் இருந்த பாண்டியர் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டது. அப்பால் இயற்கைக் கோளாற்றினால் கொற்கையில் இருந்த கடல்நீர் பின் வாங்கி 4 கல் தொலைவிற்கு மண் மேடிட்டுப் போய் விட்டது. கொற்கை கப்பல்கள் வந்து தங்கி நிற்கும் துறைமுக நிலையை இழந்துவிட்டது. எனவே பக்கத்தில் உள்ள பழைய காயல் துறை முகமாக்கப்பட்டது. இதனால் எஞ்சியிருந்த சிறு பெருமையையும் கொற்கை இழந்து விட்டது. கொற்கையில் இருந்த இளவரசர் பழைய காயலில் அரண்மனை அமைத்து அங்க இருக்கவேண்டிய இன்றியமையா நிலை ஏற்பட்டு விட்டது. கொற்கையில் இருந்த கடற்சுங்கச் சாவடி பழைய காயலுக்கு மாற்றப்பட்டது. கலங்கரை விளக்கமும் மாற்றப்பட்டுக் கடற்றுறை அதிகாரிகளும் பழைய காயலில் குடியேறினர். கொற்கையிலிருந்து மீன் பிடிக்கும் தொழிலையும், முத்து, சங்கு குளிக்கும் தொழிலையும் செய்துவந்த பரத குல மக்களிற் பலர் பழைய காயலில் குடியேறி விட்டனர். அயல்நாட்டிலிருந்து வணிகத்தின் பொருட்டு வந்து குடியேறிய யவனர்களும், சோனர்களும் பிறரும் கொற்கையை விட்டுக் குடிபெயர்ந்தனர். இதனால் கொற்கை பேரூர் என்னும் பெருமையை இழந்து விரைவில் ஓர் சிற்றூராய் நிலைமாறியது. 4. தமிழும் தண்பொருநையும் மக்களின் மாபெரும் நாகரிகம் எல்லாம் மலையிலே முகிழ்த்தன, ஆற்றங்கரைகளிலே வளர்ந்தன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எகிப்திய நாகரிகம் நீல ஆற்றங்கரையிலே எழுந்தது. பபிலோனின் பழம்பெரும் நாகரிகம் தைக்கிரீசு, உயூப்பிரட்டீசு ஆற்றங்கரைகளில் அரும்பியது. திராவிடப் பெருங்குடி மக்களின் நாகரிகம் சிந்து, இரவி, சட்லெச், ஆற்றங்கரைகளில் வளர்ந்தது, பல்லவர் நாகரிகம் வேகவதி ஆற்றங்கரையிலுள்ள காஞ்சியில் உந்தியது. சோழர் நாகரிகம் காவிரியாறு கடலில் கடக்கும் இடத்திலுள்ள பூம்புகாரில் தழைத்தது. சேரர் நாகரிகம் ஆன் பொருநை அரபிக்கடலில் கலக்கும் இடத்திலுள்ள முசிறியிலும், பழம் பாண்டிய நாகரிகம் தண் பொருநை கடலில் கலக்கும் இடத்திலுள்ள கொற்கையிலும் பிற்காலப் பாண்டியர் நாகரிகம் வைகை ஆற்றங்கரையிலுள்ள மதுரையிலும் வளர்ந்தன. திரிகூட ராசப்ப கவிராயர், சாலிவாடீசுர ஓதுவார் வடிவேற் கவிராயர் போன்ற பெரும்புலவர்கள் பொருநை நீரைப் பருகி வாழ்ந்தவர்களே யாவார். இந்த ஆற்றங்கரையிலே உலகப் புகழ் பெற்ற பழம்பெரும் நாகரிகம் வளர்ந்த ஆதித்தநல்லூர், மாறோகம் (மாறமங்கலம்) சீர்வைகுந்தம் ஆத்தூர், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் போன்ற நகரங்களுள. தண் பொருநை பொதிகையில் பிறந்து மன்னார் குடாக் கடலில் கலக்கும் பொருநை, தண்பொருநை, பொருந்தம், தாம்பிரபர்ணி, தாம்பிர வருணி என்றெல்லாம் அழைக்கப்படும். தென்பாண்டி நாட்டை வளப்படுத்தி, கொற்கைக் கோநகரைச் வளமாக்கி வாழ்வூட்டுவது பொருநை. இப் பொருநையாற்றின் பெருமை பண்டைப் பாவலர் களின் பாக்களானும், புலவர்கள் புனைந்துரையானும் புவனம் போற்றும் யவனர்களின் பொன்னுரையானும் உலகம் உணர்ந் திருந்தது. தண் பொருநையின் பெருமையும் கொற்கையின் சிறப்பும் பின்னிப் பிணைந்திருந்தன. மிகத் தொன்மையான காலந்தொட்டே மேனாட்டறிஞர் பலர் கொற்கையும் பொருநையும் பற்றி அறிந் திருந்தனர். ஆரமும் அகிலும் தேக்கும், பாக்கும், தேங்கும் கோங்கும் ஆலும், வேலும் அடர்ந்தோங்குவது பொதியமலை அதை வட மொழிவாணர் மலையமலை என்பர். இம்மாமலை தமிழ் மக்க ளுக்குப் புனிதமானது, இனித மானது, தெய்வத்தன்மை வாய்ந்தது. இம்மலையிற் பிறந்து மஞ்சுலாவும் மலைச்சாரலில் தவழ்ந்து பாலையெலாம் சோலையாக வளம் ஊட்டி, புல் வளர்ந்த புன்செய்க் காடெல்லாம் நெல்விளையும் நன்செய் நிலமாக்கச் செய்தது பொருநை. அது சான்றோர் உள்ளம் போன்று என்றும் பளிங்கு போன்ற நீரையுடைய பொன்றாத தண்பொருநையாறாகத் தென்பாண்டி நாட்டின் உயிர் நிலையாய்த் திகழ்ந்து விளங்கும். பொன்னார்ந்த புனல் பெருகும் பொருநை எனும் பேராற்றை, ஆண்டவனின் அருள் வடிவாகக் கண்ட பண்டைப் பாவலர் பலரும் பைந்தமிழ்ப் பாமாலை பல பாடி உள்ளம் பூரித்தனர். இத்தகைய பேரும் பெருமையும் பெற்ற பொருநையாறு கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கைப் பட்டினம், ஒரு பொற்பெட்டகமாய் - செல்வச் செழுந்துறையாய் - கலன்களுக்கெல்லாம் காவல் அரணாய் விளங்கியது. கடற்கள்வர் எவரும் இதன் அண்மையில் தலைகாட்ட முடியாதவாறு காவல் செய்யப் பெற்றிருந்தது. எனவே பாண்டிய மன்னரும் ஏனைய மன்னரும் யவனவணிகரும் கிரேக்கச் செல்வரும் சோனக முதலாளிகளும் இத் துறையை ஏற்றிப் போற்றி வந்தனர்.1 ஆனை மலையிலும் அண்மையில் உள்ள ஏனைய மலைகளி லும் அரும்பிய ஆற்றை ஆன் பொருநை என்பர். பொதிய மலையில் தோன்றிக் கிழக்காக ஓடி, மன்னார் குடாக் கடலில் கலக்கும் ஆற்றைத் தண்பொருநை என்பர். தண்பொருநை பிறந்த பொதிகை யில் பிறந்து வைகையில் தவழ்ந்து பாண்டியர்களால் வளர்க்கப் பெற்றது என்று தமிழ்மொழியைப் புலவர்கள் புகழ்ந்து பாடுவர். பொன்றாப் பொருந்தம் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகையினின்று இழிந்து கிழக்காக ஓடி, அணைக் கட்டுகள் அனைத்தையும் தாண்டி, அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, செவ்வல், திருநெல்வேலி, மருதூர், முரப்பநாடு, மணற்கரை, ஆதித்தநல்லூர், சீர்வைகுண்டம், ஆழ்வார்திருநகரி முதலிய ஊர்கள் அனைத்தையும் கடந்து ஆத்தூர்க்கருகில் கடலில் கலக்கிறது. ஆற்றுமுகத்தில் வடபுறம் கொற்கையும் தெற்கே ஆத்தூரும் இருக்கின்றன. இவ்வாறு மரங்களடர்ந்த காடுகள் வழியே பாய்ந்து ஏறத்தாழ 100 அடி உயரமுள்ள பெரிய மலையின் மேலிருந்து பல அருவிகளாகக் கீழே விழுகிறது. உள்ளாறு, பேயாறு என்னும் சிற்றாறுகளோடு கலந்து பெருக்கெடுத்தோடுகிறது. மேலும் பாண தீர்த்தம் என்னும் அருவியாகிப் பின் பாம்பாறும், கீரியாறும் கலந்து பேராறாகிறது. இதிலிருந்து சேர்வையாறு என்னும் கிளை பிரிந்து செல்கிறது. கல்லிடைக்குறிச்சிக் கருகே மணிமுத்தாறும் பின்னர் வராக நதியும், கடனா நதியும் கூடித் திருப்புடை மருதூரில் வந்து சேர்கின்றன. அப்பால் தருவையில் பச்சையாறு வந்து கலக்கிறது. இறுதியாக சித்திரா நதி குற்றால மலையில் தோன்றி தேன் அருவி, செண்பகதேவி அருவி, வட அருவி, ஐந்தருவி என்றெல்லாம் பெயர் பெற்று 40 கல் தொலைவிற்கு ஓடி, சீவலப் பேரிக் கருகில் தண் பொருநையோடு கலக்கிறது. இந்நதியில் பாவநாசம் அணைக்கட்டும், இதன் துணைநதியான மணிமுத்தாற்றில் உள்ள மணிமுத்தாறு அணைக்கட்டும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இவையன்றிச் சீர்வை குண்டம் அணைக்கட்டும், மருதூர் அணைக் கட்டும் முன்பே இருந்து வருகின்றன. இவ்வணைக்கட்டுகளால் ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்காமல் தடுக்கப்பெற்று ஏராளமான நன்செய் நிலங்கள் பயனடையச் செய்யப் பெற்றுள்ளன. தண்பொருநை வரலாறு பழம்பெரும் இதிகாச நூலான வடமொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தில் தாம்பிரபரணி என்று இந்த ஆறு குறிப்பிடப்பட் டுள்ளது. சீதையைத் தேடுவதற்குச் சுக்கிரீவன் படைகளை அனுப்பும் போது வானர வீரர்களே, நீங்கள் அகத்திய முனிவரின் ஆதரவு பெற்று முதலைகள் நிறைந்த தாம்பிரபரணி என்ற பேராற்றைக் கடந்து செல்லுங்கள்; அவ்வாறு அகில் அடர்ந்த அழகிய சோலை களால் மூடப்பெற்றுக் கணவனிடத்துக் காதல் கொண்ட காரிகை புக்ககம் புகுந்தாற் போன்றுக் கடலில் கவின் பெறக் கலக்கும் என்று கூறப்பட்டுள்ளது.1 வான்மீகியைப் போன்று கம்பரும், தம் இராம காதையில் இந்த ஆற்றைக் குறிப்பிடுகின்றான். கிட்கிந்தை யிலிருந்து சீதையைத் தேடச் சுக்கிரீவன் நான்கு திசை கட்கும் வானரப் படைகளை அனுப்புகின்றான். தென் திசை நோக்கிச் செல்லும் படையில் அநுமன் இருக்கின்றான். அநுமனது ஆற்றலை அறிந்த சுக்கிரீவன் அனுமன் சீதையைக் கட்டாயம் தேடிக் கண்டு பிடித்து விடுவான் என்று நம்புகிறான். ஆனால் இராமன் அநுமனை நோக்கி நீ எந்தக் காரியத்துக்காக அனுப்பப்படுகிறாய் என்பதை நன்கறிவாய், நீ செல்லும்போது பொருநையாறு உற்பத்தியாகும் பொதிகைமலைப் பக்கம் போகாதே அங்கு அகத்தியர் நடத்தும் அமுதத் தமிழ்ச் சங்கத்தின் அருகிலும் சென்றுவிடாதே, அங்குப் போய்த் தமிழ்ப் பாடலைக் கேட்டு உன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டால் நீ நாட்டையும் வீட்டையும் மறந்து விடுவாய். எனவே பொதிகைக்கு இடப் பக்கமாகப் பொருநை நதியைக் கடந்து மகேந்திரமலைப் பக்கமாகச் செல் என்று கூறுகிறார். இதனை தென் தமிழ்நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல் என்றும் அவன் உறைவிடமாம் ஆதலால் அம்மனையை இடத்திலிட்டு ஏகில் பொன்றிணிந்த புனல் பெருகும் பொருநையெனும் திருநதியின் பின்பொழிய நாகக் கன்று வளர் தடஞ்சாரல் மகேந்திரமா நெடுவரையும் கடலும் காண்பீர் (கிட்கிந்தா காண்டம் - நாடவிட்ட படலம் - 31) என்று கம்பர் இராம காதையில் பொருநை என்று கூறுவதோடு அகத்திய முனிவரையும் பொதியமலையையும் குறிப்பிடுவது ஆராயத் தக்கது. முற்காலத்தில், அதாவது முதற்கடல்கோளுக்கு முன்னர் தமிழகத்தோடு இலங்கை இணைந்திருந்தது. இன்றுள்ள மன்னார் வளைகுடா அன்று இல்லை. தண்பொருநை இலங்கை வரை பாய்ந்து அந்நாட்டை வளப்படுத்தியது. எனவே அந்நாடு தாம்ப பன்னி தாம்ரபோன் என்றெல்லாம் வரலாற்றாசிரியர்களால் சிறப்பித்துக் கூறப்பெற்றது என்று சில பௌத்த சமயாசிரியர்கள் கூறுகின்றார்கள்.1 முதல் இராச ராசசோழனின் 28-ஆம் ஆண்டுச் சாசனம் ஒன்றில் தண்பொருந்தம் குறிக்கப்பட்டுள்ளது. கலிங்கத்துப் பரணியில், பொன்னித் துறைவனை வாழ்த்தினவே பொருநைக் கணவனை வாழ்த்தினவே கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்தினவே என்று கூறும் அரிய பாட்டிலும் பொருநை சிறப்பித்துக் கூறப்படு கிறது. கி.மு. 1000 ஆண்டிற்கு முன்பிருந்து தண்பொருநையாறு இலக்கியச் சிறப்புப் பெற்றதாய்த் திகழ்கிறது. மெகத்தனிசும் (கி.மு. 302). பெரிப்ளுசு நூலாசிரியரும் (கி.பி. 80), தாலமியும் (கி.பி. 150) தாம்பரபனே என்ற பெயராலும் கீர்நார் கல்வெட்டில் அசோகனும் (கி.மு. 273-232). பௌத்த ஆசிரியர்களும் தாம்பபன்னி என்ற பெயராலும் தண்பொருநை ஆற்றை அழைத்து வந்துள்ளனர். மார்க்கண்டேய புராணத்தில் தாம்பரபர்ணி என்ற ஆறு இலங்கை யில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (அத் 58, 28) இராச ராச சோழன் உலாவிலும் பொருநை குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க நூல்களில் பொருநை சங்க நூற்களில் ஒன்றான பரிபாடலில் அகத்தியர் பெயர் குறிப்பிடும் பொழுது பின்வருமாறு கூறப் பட்டுள்ளது. பொதியில் முனிவன் புரைவரை கீறி என்று பொதிகையின் பெருமை கூறப் பட்டுள்ளது. பொதிகையின் உற்பத்தி இந்தியாவில் உள்ள கையிலாய மலையில் பரம சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. அதைக் காணத் தேவர், முனிவர் முதலிய அனைவரும் அங்குப் போந்தனர். அதனால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது, அதைச் சமப்படுத்த அகத்தியர் தம் இல்லாள் உலோபா முத்திரையுடன் தெற்கே வந்தார். அவர் வரும் பொழுது ஒரு தாமரை மாலையை எடுத்து வந்தார். முனிவர் பொதிகை மலையில் வந்தவுடன் இறைவன் அவருக்குத் தம் திருமணக் காட்சியை நல்கினார். அது கண்ட தாமரை மாலை பெண்ணாக வடிவெடுக்கவே, அகத்தியர் அதனை ஆறாக வடிவெடுக்கக் கூறினார் தாமரை மாலையும் ஆறாக மாறி ஓடியது. அகத்தியரும் தாம்பிரபர்ணி ஆகிய அந்த ஆறு செல்லும் இடங்களுக்கெல்லாம் விமானத்தில் சென்று ஆங்காங்கே தீர்த்தங்களையும் புண்ணிய தலங்களையும் அமைத்தா ராம். பாவநாசத்துக்கு மேற்கே 32 தீர்த்தங்களைத் தேவர்கட்காகவும், அதற்குக் கிழக்கே 86 தீர்த்தங்களை மக்களுக்காகவும் ஏற்படுத்தினா ராம். இஃதன்றி வேறு விதமாகவும் இவ்வரலாறு கூறப்படும். இவ்வாறு அகத்தியர் பொருநை மூலம், நாடு வளம் பெற்றுச் சிறப்படையுமாறு செய்துள்ளார். புண்ணிய பலத்தால் பக்தியையும் சமய உணர்ச்சியையும் விளைவித்த இவர், தமிழ் இலக்கணம் செய்து தமிழ் மொழியை வளர்த்துள்ளார். அப்பால் அவர் தமிழ் மொழிப் பற்றால் பொதியை மலையை நிரந்தர உறைவிடமாகச் செய்து கொண்டார். அகத்தியருக்கு இவை பற்றியே தமிழ் முனிவன், பொதியில் முனிவன் என்றெல்லாம் பெயர் கூறப்பட்டது. வடமொழியில் தாம்பரபர்ணி மகாத்தியம் என்றொரு நூல் உள்ளது. தமிழில் சுமார் 80 ஆண்டுகட்கு முன் எழுந்த தாம்பிரபரணி புராணம் என்ற நூலும் உண்டு. இஃதன்றித் திருநெல்வேலித் தலபுராணமும், திருவிளையாடற் புராணமும் இந்த ஆற்றின் சிறப்பைக் கூறுகின்றன. ஆதியில் விளையும் ரத்நம், ஆனதோர் பொருநை நாப்பண் மேதகு திவ்வியமான தாமிரம் விளைவதாகும் சோதிவெண் தரளம் அந்தம் துலங்குற விளையும் நீதிசேர்இனிய நீரால் நிறைசெல்வம் எவர்க்கும் நாளும் உண்டாம் (தாம்பிர பன்னி - 32.) பொருநைப் பண்ணை பொருநை யாற்று நீர் பெருமையுள்ளது. இதனை அருந்து பவர்கட்குக் கல்வி உணர்ச்சி அதிகம் எழுகிறது. இந்த ஆற்றங்கரை ஊர்கள் அரிய புலவர் பலரை அளித்துள்ளன. எனவே பொருநையைப் புலவர்களின் வளர்ப்புப் பண்ணையாக அறிஞர் கூறுவர். சங்கக் காலத்தில் மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற் புலவர் கொற்கை அருகில் உள்ள மாறமங்கலத்தில் பிறந்தவர்; வாழ்ந்தவர். வெள்ளூர்க் காப்பியனார் என்பவர் சீர்வை குண்டத்திற்கு அண்மையில் உள்ள வெள்ளூரில் இருந்தவர். பனம் பாரனார் சாத்தன் குளத்திற்கு அருகிலுள்ள பன்னம் பாரையில் இருந்தவர். கொற்கையில் அதிவீரராம பாண்டியனும் அவனது அரசியும் புலமைச்சான்றோராய் வீற்றிருந்து ஆட்சி புரிந்தனர் என்று கூறப்படுகிறது. பிற்காலத்தில் திரிகூடராசப்பக் கவிராயரும், சிவஞான முனிவரும், சங்கர நமச்சிவாயரும் முறையே மேலகரம், திருநெல்வேலி ஆழ்வார்திருநகரி என்னும் ஊர்களில் இருந்து வந்தனர். பிற்காலத்தில் சாலீவாடிசுர ஓதுவார், நெல்லை யப்பன் கவி ராயர், குட்டிக் கவிராயர், அருணாசலம் பிள்ளை, வடிவேற்கவிராயர் தண்டபாணி சுவாமிகள், இராமானுசன் கவிராயர் புதூர் வள்ளி நாயகம் பிள்ளை, சொக்கநாதப் பிள்ளை முதலியவர்கள் நெல்லை யிலும், ஆழ்வார் திருநகரியிலும் வாழ்ந்தவர்களே. திரைபடு பொருநை நீத்தம் செவிலிபோல் வளர்க்கும் என்று பரஞ்சோதி முனிவர் கூறியதுபோல இவ்வாறு நெற்பயிரைச் செழிக்கச் செய்ததோடு இன்று வரை திரு. கா. சு. பிள்ளை, சுந்தரம் பிள்ளை, வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், சுப்பிரமணிய பாரதி, வையாபுரிப்பிள்ளை, இரா. பி. சேதுப்பிள்ளை முதலிய தமிழ் அறிஞர்களை அளித்துக் கல்விப் பயிரை வளர்த்து வற்றாத சீவநதியாக மக்களின் உயிரையும், உள்ளத்தையும் துளிர்க்கச் செய்து வருகிறது. பொருநை கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கைப் பட்டினம் இருந்தது. 5. யவனரும் வணிகமும் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யவனரும், கிரேக்கரும், உரோமரும், பிறரும் தமிழகத்தோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த மூன்று இனத்தவர்களுடைய நாகரிகத்தின் பயனைத் துய்த்தே மேனாட்டினர் நாகரிகம் பெற்றனர். ஐரோப்பியர் களின் அரசியற் கருத்துக்கள் அனைத்தும் உரோமர்களின் ஏடுகளி னின்றே தெரிந்தெடுக்கப்பட்டனவாகும். ஐரோப்பியர்கள் தழுவிய நெறிகள் எல் நெறியின் வழிவந்தனவாகும். எல்நெறியினர்களுடைய இலக்கியங்களும் கலைகளும் நாகரிகங்களும் யவனர்களின் வழி வந்தனவுமாகும். உரோமர்கள், யவனர்களிடமிருந்தே பல கலைகளைப் பயின்று மேனாட்டிற்கு அளித்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் வரைந்துள்ளனர். யவனர்களின் பாடல்கள் ஒப்புவமையற்றன. அவர் களின் சிலைகளும் வெண்கலப் படிமங்களும் ஓவியங்களும் இணை யிலாதன. எனவே இன்றையக் கவிஞரும் கலைஞரும் யவனர்தம் ஈடில்லாக் கலைத்திறனைக் கண்டு வியப்படைகின்றனர். இன்று மேனாட்டில் கலைகள் வளர்ந்திருக்கிறது; என்றாலும் யவனர்களே முதன்முதலாக கலைகளிலும், நாகரிகத்திலும் ஈடுபட்டு வளர்த்து வந்தனர் என்று தெரிகிறது. யவனர்கள் வணிகம் வளர்ப்பதில் மட்டும் வல்லவர்களல்ல, பொருளீட்டுவதிலும் திறமை பெற்றவர்கள். அறம் செய்வதில் அக்கரை கொண்டவர்கள்; இல்லற வாழ்வை இன்ப வாழ்வாக எண்ணி வாழ்ந்தவர்கள்; வீட்டிலக்கணம் ஆய்ந்து அனுபவித்தவர்கள்; பிற இனத்தவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். உரோமர்கள் யவன நாட்டை வென்று அடிமைப் படுத்தி ஆண்டு வந்தனர். என்றாலும் யவன நாகரிகம் உரோமருடைய உள்ளத்தைக் கவர்ந்து விட்டது. யவன நாகரிகம் உரோமர்களால் புரக்கப்பட்டு பூவுலகெங்கும் பரப்பப்பட்டது. யவனர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது, அவர்களது ஒற்றுமைக் குறைவினாலேயாகும். யவனர், எலனியர் எனவும் அவரது நாடு எல்லாசு எனவும் அவரது நாகரிகம் எலனிசம் (Helenism) எனவும் அழைக்கப்பட்டன. யவன நாடுகளின் ஒன்றாகிய எப்பிரசு நாட்டில் ஒரு பகுதியில் வசித்தவர்களை உரோமர், கிரேக்கர் என்று அழைத்தனர். பின்னர் அந்தப் பெயரே யவனர் யாவருக்கும் சூட்டப்பெற்றது. யவனர் பிறர் அறியா மொழியைப் பயில்பவர் என்னும் பதத்தால் குறிப்பிடப் பட்டனர். எல்லாசு என்னும் யவனநாடு ஐரோப்பாக் கண்டத்தின் தென்திசையில் உள்ள ஒரு குடா நாடு. யவனநாடு ஒரு குறிஞ்சி நிலமாகும். இது நல்ல வளமார்ந்த நாடாகும். அந்தநாடு அழகிய கடற்கரையையும் நல்ல துறைமுகத்தையும் உடைய நாடு. ஆதியில் இந்நாட்டில் யவனர், டோரியர் எயோனியர் என்ற முப்பிரிவினர் வாழ்ந்து வந்தனர். யவனமொழி அழகியது. டோரியரின் போர் வித்தை போற்றற்குரியது. யவனரின் தலைநகர் ஏதென்சு; டோரியர் தலைநகர் சுபார்ட்டா. யவனர்கள் பல தெய்வங்களை வழிபட்டனர். விண்ணின் அதிதேவதையாகிய சேயசு முழுமுதற் கடவுள். அவரது மனைவி கீரா எனும், தெய்வம் பூமிதேவி எனப்படும். கடல் தெய்வம் தமீற்றர்! இசைத் தெய்வம் அப்பலோ, அபிரோடிற்றி என்பவர்களாகும். காமத் தெய்வம் பாலாசு, அதினி எனப்படும்; ஞானத் தெய்வம் ஆறிசு; போர்த்தய்வம் ஆட்டமிசு; வேட்டைத் தெய்வம் ஏர்மிசு; பாதாளத் தெய்வம் புளுட்டே எனவும் அழைக்கப் படும். வேறு சில சிறு தெய்வங்களும் நீராமகளிர், வரையர மகளிர், ஆயர் தெய்வமாகிய ஆட்டுக்கால் தெய்வம் களித் தெய்வமாகிய பார்க்கசு, மருத்துவத் தெய்வமாகிய எச்சிலா பியசு, வனத்தெய்வ மாகிய கவி, வீரர் தெய்வமாகிய கராக்கில்சு போன்றவைகளும் உண்டு. அந்நாட்டில் நாடகங்களும், ஆடல் பாடல்களும் திருவிழாக் களும் உண்டு. தெய்வங்கள் மனிதர்கள் மீது வந்தேறுவதும் ஆடுதலும் குறி சொல்லுதலும் உண்டு. தெய்வங்களுக்குப் பூசைகள் செய்ப வர்கள் சாமி ஆடி ஓலமிட்டலறி மக்களுக்கு வரம் அளிப்பதும் உண்டு. வரலாற்றாசிரியர்கள், யவனர் வரலாறு கி.மு. 1100 ஆண்டு முதல் தொடங்குகிறது என்பர். தமிழ் இலக்கியங்களில், யவனர் என்று குறிக்கப் படுவது உரோமர் கிரேக்கர் போன்ற நாட்டினர்களையே யாகும். சில இலக்கியங்களில் சோனகர் என்று குறிப்பிடப்படுவது அராபியர் போன்ற நாட்டினரைக் குறிப்பிடுவதாகும். தமிழகத்தோடு உரோமர் களும் அராபியர்களும் அதிகத் தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர்கள் வட இந்தியாவோடு அதிகத் தொடர்பு கொண்டிருந் தனர். வடஇந்தியாவில் கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர் கண்ட வெற்றி கிரேக்கர்கள் வடஇந்தியாவோடு நெருக்கமான தொடர்பைப் பெற்றிருந்தனர் என்பதை மெய்ப்பிக்கும். உரோமப் பேரரசன் அகத்தசு கிறித்துவ ஊழி எழு முன்னரே பாண்டிய மன்னனோடு அரசியல், வணிகத் தொடர்பு கொண் டிருந்தான். பாண்டியன் தனது அழகிய நாவாய் மூலம் உரோம் நாட்டிற்குத் தனது அரச தூதரை அனுப்பினான். தன் தூதுவர் மூலம் உரோமப் பேரரசருக்குப் பல அரிய பொருள்களைப் பரிவுடன் அனுப்பினான். பாண்டிய நாட்டு அரச தூதர்கள் உரோம நாட்டுப் பேரரசரைக் கண்டு தம் நாட்டு மன்னரின் நல்வாழ்த்தைக் கூறிப் பரிசுகளை அளித்து அகத்தசு அரசனின் அன்பையும் ஆதரவையும் நல்லெண்ணத்தையும் பெற்றனர். உரோம அரசன் தன் அரச தூதுவர் களைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பியதோடு வணிக ஒப்பந்தமும் செய்து கொண்டு தனது நாட்டில் உள்ள கிடைத்தற்கரிய பல பண்டங் களையும் சில உரோமர் நாட்டு அழகிய ஆரணங்குகளையும் அன்பளிப்பாகப் அளித்துப் பாண்டிய மன்னனின் நட்பையும் நல்லெண்ணெத்தையும் பெற்றுக் கொண்டான். இதன் பலனாக உரோமர்கள் தமிழ் நாட்டோடு வணிகத்தை வளர்த்துக் கொண்டனர். இந்த வணிகம் பெரும் அளவில் கொற்கை மூலமே நடந்தது.1 கொற்கை, தமிழகத்திலுள்ள புகார், மாமல்லபுரம், தொண்டி, உவரி, முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறை முகமாகவும்; கடற் கொள்ளைக்காரர்கள் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும் உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த ஆணி முத்துக்களை அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது. மேலும் அயலவர் களை கொற்கை மக்களும் பாண்டியப் பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்பு பவர்களாக விளங்கினர். ஆதியில், பினீசியரின் துறைமுகமாகிய அரையர் சிடன் என்னும் பட்டினத்தினின்று பயணமுற்றுச் செங்கடலைக் கடந்து இந்துமாக் கடலின் கரையை அடைந்து முத்து, மசுலின் ஆடை, பட்டு, மிளகு, தேக்குமரம், மயில் தோகை முதலியவைகளை வாங்கிக் கொண்டு பொற்காசுகளையும் பொற்றகடுகளையும் கொடுத்துத் தம் கலங்களில் ஏற்றிச் சென்றனர். அப்பால் எகிப்தியரும் யவனரும், உரோமரும் முத்து, மிளகு, ஆரம், எண்ணெய், பருத்தி நூலாடை முதலிய பண்டங்களை வாங்குவதற்குத் தத்தம் நாவாய்கள் மூலம் வந்து கொற்கையிலும் பிற துறைமுகங்களிலும் தம் கலங்களை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சிக் கரையில் இறக்கி, கொண்டு வந்த பண்டங்களை இறக்கி வேண்டிய பொருள்களை வாங்கிக் கலங் களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அரிசி, கறுவா இஞ்சி, சுக்கு போன்ற தமிழ்ச் சொற்கள் யவனமொழியாயின ஒரிசா, கறுப்புவா, ஜிஞ்சி, டிரைட் சிஞ்சர் என்று அழைக்கப்பட்டன. யவனர்கள் கி.மு. 400ஆம் ஆண்டில் சிந்து தேயத்திலும் தமிழகத்திலும் பண்ட மாற்றுச் செய்தனர் என்று அர்த்த நூலில் கௌடில்யர் குறிப்பிட் டுள்ளனர். உரோம வரலாற்றுப் புலவர் மூத்த பிளினி உரோமர்கள் தமிழர்களிடம் முத்தும், மணியும், மிளகும், பட்டும் பெறுவதற்கு எண்ணற்ற பொற்காசுகளைக் கொட்டுகின்றனர் என்று வருந்தினார். உரோமர்கள் ஆடம்பர வாழ்க்கையை நாடி விலையுயர்ந்த முத்துக் களையும் மணிகளையும் பட்டாடைகளையும் வாங்கித் தம் பொற் காசுகளை வீண்செலவு செய்தனர் என்று பிளினி எழுதியுள்ளார். யவனர்கள் கொற்கை, புகார், முசிறித் துறைமுகங்களில் வந்திறங்கித் தம் கப்பல்களில் ஏராளமான தோற்குப்பிகளில் மதுவினைக் கொண்டு வந்து தமிழர்க்கு விற்றனர்.1 யவன நாட்டினின்று அன்னம் (ஒதிமம்) வைத்த அழகிய பித்தளை விளக்குகளையும், ஒரு பெண் விளக்கைப் பிடித்து, அக்கையை உயர்த்தி நிற்பதுபோல் காணப்படும் பாவை விளக்கு களையும், பொன்னாற் செய்த ஒரு விளக்கை ஒரு பெண் கொடி ஏந்தி நிற்பது போலவும் அவ்விளக்கு அதிக ஒளி விட்டோங்கி நிற்பது போலவும் காணப்படும் பாவை விளக்குகளையும், கைஅமை விளக்குகளையும் யவன நாட்டினின்று கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கினர்.2 இஃதன்றி யவனர்கள் தம் நாட்டில் கிடைக்கும் வெள்ளைக் களிமண்ணால் செய்த கோப்பைகள் கண்ணாடிப் புட்டிகள் பொம்மைகள், போன்றவைகளையும் மதுப்புட்டிகளை யும் ஏராளமாகக் கொண்டு வந்து கொற்கையில் இறக்கினர். யவனர்கள் தங்கள் நாட்டில் உள்ள மதுவைவிட தமிழகத்தில் குறைந்த விலையில் கலயம் நிரம்பக் கிடைக்கும் பனங்கள்ளையும் கூந்தற் பனங்கள்ளையும் விரும்பி வாங்கி அருந்தி அகமகிழ்ந்தனர். தமிழகத்தில் வடித்த வடிசாராயத்தை நல்ல போதை யூட்டும் மது என்று அதிகமாக வாங்கிப் புட்டிகளில் அடைத்துக் கொண்டு தம் நாட்டிற்கேகினர். மதுவும், வாசனைப் பொருள்களும் யவனர்களின், உயர்ந்த போகப்பொருளாக இருந்தன. கொற்கைத் துறைமுகத்தில் யவனர்கள் தங்கள் கலன்களை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு கரையில் இறங்கிக் கடற்கரையில் உள்ள அகன்ற பாதைகளிலும் அண்மையில் உள்ள சோலைகளிலும் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டும், ஆடிப்பாடிக்கொண் டும் இருந்தனர் கொற்கைத் துறைமுகத்திற் கருகில் பெரிய பண்டக சாலைகள் இருந்தன. அதில் ஏற்றுமதிக்காகவும் இறக்கு மதிக்காக வும் வந்த ஏராளமான பண்டங்கள் மூடை மூடையாக அணி அணி யாக வைக்கப்பட்டிருந்தன. ஏற்றுமதிக்கான பொருள்கள் சுங்கச் சாவடியில் சோதிக்கப்பட்டு, பாண்டிய அரசின் இணைக் கயல் முத்திரைகள் பொறிக்கப்பட்டு, ஏற்றுமதித் தீர்வை வசூலிக்கப் பட்டது. அவ்வாறே இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் சோதிக்கப்பட்டு, சுங்க வரி வசூல் செய்யப்பட்டது. சுங்கச் சாவடிக் கருகில் உயர்ந்த கலங்கரை விளக்கு ஒளிவிட்டோங்கி நின்றது. கொற்கைக் கருகில் யவனர்கள் பலர், வணிக நலத்தின் பொருட்டுக் குடியேறியுள்ளனர். அப்பகுதி யவனர் இருக்கை அல்லது யவனச் சேரி, வெள்ளையர் இருக்கை என்றெல்லாம் அழைக்கப்பட்டது. அக்காலத்தில் யவனர்கள், தாங்கள் பணியாற்றும் தலைவர்களிட மும் மன்னர்களிடமும் நல்ல அன்பும் பணிவும் நன்றியும் உடையவர் களாயும், தம் தலைவன் இட்ட ஆணையைத் தவறாது, இறுதி மூச்சுள்ளவரை - உடலில் உள்ள இறுதிக் குருதியுள்ளவரை நின்று நிறைவேற்றுபவர்களாய் இருந்ததால் பாண்டிய மன்னர்கள் கொற்கையிலும் மதுரையிலும் உள்ள அரண்மனைகளிலும் அரண் களிலும், கருவூலங்களிலும் நல்ல உரம் பெற்ற உறுதிவாய்ந்த வீரம் வாய்ந்த வன்கண் யவனர்களை வாயிற் காப்பாளர்களாக நிற்கும்படி செய்திருந்தனர். யவன நாட்டுப் பொறிகள் யவன நாடுகளின்று பல அரிய எந்திரப் பொறிகளைப் பாண்டிய மன்னர்கள் வாங்கிப் பாண்டிய நாட்டு அரண்கள் மீது வைத்து நாட்டைப் பகைவர்கள் எளிதில் அணுக முடியா வண்ணம் காத்து வந்தனர். இந்தப் பொறிகள் தமிழகத்தில் செய்யப்பட்டவை என்று கூறுவாரும் உளர். பகைவர்கள் அரணை முற்றுகையிட்டால் அவர்களை வெல்லுவதற்குரிய வீரர்கள் தேவை இல்லை. இப்பொறிகளே அவர்கள் உயிரை வாங்கப் போதியனவாய் இருந்தன.1 வளைந்து தானாகவே இயங்கும் இயந்திரவில்; கரிய விரல் வாய்ந்த கருங்குரங்குப் பொறி, கற்களை உமிழும் கவண் பொறி, பகைவர்கள் மீது கொதிக்கும் எண்ணெய்யை உமிழும் பொறி, செம்பை உருக்கிப் பகைவர்கள் மீது தெளிக்கும் குழிசி, இரும்பை உருக்கி எதிரிகள் மீது உமிழும் பொறி, தூண்டில் பொறி, கல் நிரம்பப் பெற்ற கூடைப்பொறி, தூண்டில் பொறி, பகைவர் கழுத்தை முறிக்கும் சங்கிலி, ஆண்டலை என்ற பறவை வடிவிலான அடுப்புகள், அரண் மீது ஏறுவோரைத் தாக்கித் தள்ளும் இரும்புக் கப்புகள், கழுக்கோல் பொறி, அம்புத் தொகுதியுள்ள பொறிகள், ஏவறைகள் அண்மியோர் தலையை நெருக்கித் திருகும் மரங்கள், சிறு சவளம், ஈட்டி, குருவித் தலைப் பொறி, களிற்றுப் பொறி, புலிப்பொறி போன்றவை அரண் மீதிருந்தன. இவற்றை அரண் மீதிருந்து யவனர்கள் இயக்கினர்.1 கி.மு. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அகத்தசு என்ற உரோமைப்பேரரசன் காலத்தில் பாண்டிய நாட்டோடு வணிக ஒப்பந்தம் எழுந்தது. கொற்கைப் பட்டினத்தின் மூலம் தமிழகத்தின் பல அரிய பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.2 அப்பால் கி.பி. முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தனிக் கோலர் காலத்தில் உரோமையர்கள் தமிழகத்தோடு மட்டு மல்லாமல் இந்தியாவோடும், கீழை நாட்டுடனும் வணிகந் தொடங்கி வளர்த்து வந்தனர். இதற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் பல சான்றுகள் தருகின்றன. யவன நாட்டினின்று பல பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்றும் யவன நாட்டிலுள்ள தச்சர்களும், வணிகர் களும் தமிழகத்திற்கு வந்து தமிழ் மன்னர்களின் தலைநகரங்களிலும் துறைமுகப் பட்டினங்களிலும் குடியேறி வாழ்ந்து வந்தனர் என்றும் தமிழகத்தில் பார்ப்பனச் சேரியும், சோனகச் சேரியும் யவனச் சேரியும் இருந்து வந்தன என்றும் பழைய தமிழ் இலக்கியங்களில் சான்று தருகின்றன. வரலாற்றுப் புலவர்களும் இதனை வரைந்துள்ளார்கள். தமிழ் நாட்டு வரலாற்றுப் புலவர்கள் இதனை வரையத் தவறி விட்டாலும் பிற நாட்டிலுள்ள தாலமி, பெரிப்புளுசு ஆசிரியர்கள் போன்றவர்கள் நன்கு குறிப்பிட்டுள்ளனர். தமிழர்கள் முதன் முதலாக யவனர்களோடு தொடர்பு கொண்டனர்; எனவே அவர்கள் உரோமையர்களையும் கிரேக்கர் களையும் யவனர் என்று கருதியுள்ளனர். உரோமர்கள் யவன நாடுகளிலும் எகித்திலும் பரவி இருந்ததால் தமிழகத்தோடு வணிகம் வளர்க்க எளிதில் முடிந்தது.1 உரோமருடைய வணிகத்தைப் பற்றி ஆசிரியர் மூத்த பிளினி (கி.பி. 70) உரோமர்கள் பாளம் பாளமாக பொற்றகடுகளை அளித்துப் பட்டாடைகளையும் மிளகு, இலவங்கம், தந்தம், சந்தனக் கட்டை போன்ற பொருள்களையும் முத்து, மணிகள் போன்ற விளையுயர்ந்த பண்டங்களையும் வாசனைப் பொருள் களையும் பெற்றனர். இதனால் உரோம் நாடு பொன்னை இழந்து வறுமையுற்று வருகிறது என்று கவலையுற்றுத் தம் நூலில் குறிப்பிட் டுள்ளார். இலண்டன் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் வார்மிங்டன் இலத்தீன், கிரேக்க நூல்களை ஆய்ந்து உரோமர் யவனர் சீனர், இந்தியர் என்னும் கீழை நாட்டாரோடு பன்னூறாண்டுகள் வணிகம் நடத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்2 உரோம ஆசிரியரான பிளினியும் பெரிப்புளுசு என்னும் நூலை எழுதிய கிரேக்க ஆசிரிய ரும் தாலமியும் கீழை நாட்டாரோடு உரோமையர் நடத்திய பண்ட மாற்று வணிகத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். இப்பாலூசு என்ற யவனன் செங்கடல் வழியாகச் சென்று அராபிக் கடலை அடைந்ததால் சோழகம், தென்மேற்கிலிருந்து பெயரும் பருவக் காற்று என்று ஆசிரியர்கள் இருவரும் கூறினான். செங்கடலை எரி திரையன் கடல் என்றும் அவர்கள் எண்ணினர். சோழகக் காற்றை யவனர் இப்பாலுசு என்றனர். இப்பாலுசு என்பது அரபிக் கடலைக் குறிப்பிடுவதாகும். உரோமாபுரியிலிருந்து புறப்பட்டுப் புற்றையோரித் துறை வழியாய் நீல ஆற்றின் முகத்துவாரத்தில் அலக் சாந்திரியாவில் இறங்க 20 நாட்களாகும். அலெக்சாந்திரியாவில் இருந்து நீல ஆற்றின் வழியாலோ, நிலவழியாகவே சென்று செங்கடலில் உள்ள துறை யாகிய பெருநிசியில் கப்பல் ஏறி ஆடித்திங்களில் புறப்பட்டால் புரட்டாசித் திங்களில் தமிழகத்தை அடையலாம். சோழகம் நின்று வாடை தொடங்கியபின் மரக்கல மாலுமிகள் முசிறி யினின்று மார்கழித் திங்களில் புறப்பட்டுப் பங்குனியில் எகிப்தை அடை வார்கள். மரக்கலத்தில் செல்லும் யவன வணிகர்கள் எத்தியோப்பிய ரோடும் இந்தியரோடும் பண்டமாற்று செய்தார்கள். 600 குறுநில மன்னர்களுக்கும் தலைவனான பாண்டியப் பேரரசன் ஒருவன் உரோமைப் பேரரசர் அகத்தசை அல்லது அவனுடைய தூதரை யேனும் தன்னை வந்து காணுமாறு தூதனுப்பினான். அப்பாண்டியன் அகத்தசு அரசனுக்குப் பரிசாக அனுப்பிய கைகள் இல்லாத சிறுவன் ஒருவனைப் பூகோள நூலாசிரியர் திராபோ (Strabo) என்பவன் கண் டான் என்று கூறுகிறான். டையோக்கசியா என்பானும் புளுரற் றாக்கசு என்பானும் இந்தியாவிலிருந்து வேங்கைகள் பரிசாக அளிக்கப்பட்டன எனக் கூறினர். தனிக்கோலன் தொமிசியானசு என்பவன் காலத்தி லிருந்த மாசாலிசு, குவிந்திலியன், திராசியசு என்னும் ஆசிரியர்கள் உரோம ரும், யவனரும் இந்தியரோடு பண்டமாற்றினர் என்று கூறியுள்ளனர். யவனர்கள் கப்பற் கொள்ளைக்காரர்களுக்குத் தப்பிக் கலங்கரை விளக்கங்களைக் கவனித்து முசிறியிலும் தண் பொருநை யாற்றங் கரையில் உள்ள கொற்கையிலும் பூம்புகாரிலும் வஞ்சியிலும் (கருவூரி லும்) யவனர்கள் இருக்கை புறம்பானதென்று இளங்கோ வடிகள் கூறினர். யவனர்கள் வணிகம் புரிந்து வந்ததோடு மெய்க் காப்பாளர் களாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலிய மன்னர்பால் ஊழியஞ் செய்து வந்தனர். மார்க்கசு ஔரேலியாசு காலம் முதல் உரோமர் தமிழரோடு செய்த வணிகம் குன்றியது எனக் கருதப் படுகிறது.1 கொற்கையில் சிறந்த துறைமுகம் இருந்தது. பாண்டிய நாட்டுப் பண்டங்களும், சேர, சோழ நாட்டுப் பண்டங்களும், இத்துறை முகத் தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாட்டுப் பொருள்கள் பல இறக்குமதி செய்யப்பட்டன. இத்துறைமுகத்திற்கு யவனர் கிரேக்கர் உரோமர் முதலிய பலரும் வந்து பொற்காசுகளையும் பொற்கட்டிகளையும் கொடுத்து இங்குள்ள மிகுதியான விளை பொருட்களையும் செய் பொருள்களையும் வாங்கித் தங்கள் கலங் களில் ஏற்றிச் சென்றனர். இங்குள்ள கடற்கரைகளிலும் சோலை களிலும் வெளிநாட்டு வணிகர்களும், மீகாமன்களும், கப்பற்காரர் களும் ஆடியும் பாடியும் கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்துறைமுகத்துச் சுங்கச் சாவடியில் சுங்க அதிகாரி களும் பிற ஊழியர்களும் இருந்து வந்தனர். இங்கு உயர்ந்த கலங்கரை விளக்கு இருந்தது. துறை முகத்தில் பாண்டிய நாட்டுக் கப்பல்களும், பிறநாட்டுக் கலங்களும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன. அக் கப்பல்களில் அவரவர் நாட்டுக் கொடிகள் பறந்தன. சுங்கச் சாவடிகளில் மூட்டைகள் பிரிக்கப்பட்டு அதில் உள்ள பண்டங் களுக்குக் கடற் சுங்க வரிகள் தீர்த்து அம் மூட்டைகளில் பாண்டிய நாட்டு இணைக்கயல் முத்திரைகள் பொறிக்கப்பட்டன. 6. வணிக வளர்ச்சி கொற்கை பாண்டிய நாட்டின் பொற்சுரங்கமாய்த் திகழ்ந்தது. ஏன்? - தமிழகத்தின் பொன் ஊற்றாகப் பொலிந்தது எனவும் கூறலாம். சேரநாட்டு மிளகும், பாண்டிய நாட்டுச் சந்தனமும், கொற்கை முத்தும் மதுரை ஆடையும் காவிரிப் பண்டங்களும், ஆந்திர நாட்டு மெல்லிய ஆடைகளும், மைசூர்த் தந்தங்களும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏலம், கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி, மயில், குரங்கு, அரிசி போன்ற பண்டங்கள் கொற்கை துறைமுகத்தில் மலை மலையாய்க் குவிக்கப் பட்டிருந்தன. கருங்காலி, தேக்கு, சந்தனக்கட்டை, இலவங்கப் பட்டை போன்ற பொருள்களும் ஏராளமாகக் குவிக்கப் பட்டுக் கிடந்தன. தமிழ்நாட்டு நாவாய்களும், வங்கங்களும் பிறநாட்டு மரக்கலங்களும் கொற்கைக் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருந்தன. எண்ணற்ற கப்பல்கள் தங்கள் நாட்டினின்று கொண்டு வந்த பண்டங்களை இறக்கிவிட்டு இங்குள்ள பண்டங்களை ஏற்றிச் சென்றன. பட்டாடைகளும், பஞ்சாடைகளும் அயல் நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இரண்டாம் சங்கக் கால முதல் ஏராளமாக இத்துறை முகத்தினின்று சங்குகளும், சங்கால் செய்யப்பட்ட பொருள்களும், விலையுயர்ந்த முத்துக்களும் அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. மேனாட்டிலிருந்து நல்ல மது வகை களும், இயந்திரப் பொறிகளும், பீங்கான் கோப்பைகளும் அன்னம் அமைத்த அழகிய பித்தளை விளக்குகளும்1 பாவை விளக்குகளும் வெள்ளைக் களிமண்ணால் செய்த அழகுப் பொம்மைகளும் வந்திறங்கின. அரபி நாடுகளிலிருந்து ஏராளமான குதிரைகளும் இந்தக் கொற்கைத் துறை முகத்திலும், அப்பால் காயல் துறைமுகத்தி லும் வந்திறங்கின.2 ஈழநாட்டிலிருந்துகூட நல்ல உணவுப் பொருள் களும் பிற கைவினைப் பொருள்களும் வந்திறங்கின.3 அகத்தசு கி.மு. 30ஆம் ஆண்டில் எகித்தை வென்றார். அப்பால் அவர் இந்தியாவிற்கும் உரோமை நாட்டிற்கும் இடையே நேரடி யாகக் கடல் வாணிகம் வளர்க்க வழிகாண விழைந்தான். பாண்டிய மன்னன். அகத்தசு அரசருக்குத் தூதொடு பல பரிசுப் பொருள்கள் அனுப்பி வணிக உறவை வளர்த்தான். அகத்தசு அரசனும் தன் தூதர் மூலம் பாண்டியனுக்குப் பல பரிசுகள் அளித்து அரச உறவும் வாணிக உறவும் மேற்கொண்டான். இதன் பலனாக உரோமாபுரியி லிருந்து எண்ணற்ற கப்பல்கள் கொற்கைத் துறை முகத்திற்கு வந்து பல பண்டங்களை இறக்குமதி செய்தும் ஏற்றுமதி செய்தும் சென்றன.4 கொற்கையில் இறக்குமதியான பொருள்களைவிட ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களே அதிகம். கி.மு. 25ஆம் ஆண்டில் ஓர்மசிலிருந்து (Hormas) இந்தியாவிற்கு 120 பெரிய கப்பல்கள் சென்றதைத் தாம் கண்டதாகத் திராபோ கூறுகிறார்5 வார்மிங்டன் சேரர்களும் பாண்டியர்களும் அகத்தசு அரசரோடு நட்புக் கொண்டு அரச தூதுவர்களைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணு கிறார்.6 இதனால் அகத்தசு அரசர் காலத்தில் இந்தியாவிற்கும் உரோ மிற்கும் பெருமளவில் வாணிகம் பெருகிற்று.7 ஏராளமான இந்தியப் பண்டங்கள் உரோம் நாட்டில் வந்து குவிந்தன. ஆனால் அந்த அளவிற்கு உரோம் நாட்டுப் பண்டங்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதியாக வில்லை. எனவே உரோம் நாட்டுப் பொற்கட்டிகள் கப்பல்களில் இந்தியாவிற்குக் கொண்டு போகப்பட்டு அங்குக் குவிந்தன என்று திராபோ கூறுகிறார். இந்த வணிகத்தால் இந்தியா பெரும் ஊதியத்தை அடைந்து. இந்தியாவிலிருந்து ஏற்று மதி செய்யப்பட்ட முத்துகளும், மெல்லிய துணிகளும், நறுமணப் பொருள்களும், உரோம்நாட்டு மக்களையும் குறிப்பாக அரச குடும்பத் திலுள்ள செல்வம் நிறைந்த சீமாட்டிகளையும் பெரிதும் கவர்ந்தன. கி.மு. 1400ஆம் ஆண்டில் வாழ்ந்து வந்த எத்தினிய நாட்டு அரசர்கள் கடல் வணிக உறவினால் பாண்டிய நாட்டு அரசர் களோடு நம்புரிமை கொண்டு தங்கள் பெயரோடு பாண்டியோன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டனர். கருங்கடல் கரையிற் கட்டப் பட்ட வாணிக நகரத்திற்கு கொல்கை (கொற்கையின் பெயரால் கொல்கிசு எனப் பெயர் வைத்தனர். உரோமை அகத்தசு, கிளாடியசு போன்றவர்கள் பாண்டிய மன்னர்களோடு அரசு தூதர்களைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாட்டு மன்னர்களும் ஒருவருக் கொருவர் பரிசுப் பொருள்களை வழங்கிக் கொண்டனர்.1 தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாகக் கொற்கை விளங்கியது. கடல் வணிகத்திற்கோர் கருவூலமாகப் பிறங்கியது. கொற்கைக் கடலில் ஆணி முத்துக்கள் பேணி எடுத்துத் தோணியில் கொண்டு வரப்பட்டன. சங்குகள் பாங்குறக் குளித்து எடுக்கப்பெற்றன. சங்கு வளைகளும் மோதிரங்களும் காதணிகளும் பிறவும் எழில் பெற அமைக்கப்பெற்று ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறையில் சேர நாட்டிலும், சோழ நாட்டிலும் இருந்து வந்த மிளகு, சந்தனம், ஏலம், கிராம்பு, இலவங்கப்பட்டை, மெல்லிய துணிகள், பட்டாடைகள் மயில் இறகுகள், ஆட்டுமயிர், தந்தம், குரங்கு முதலியவை பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. கி.மு. 1400ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்த எத்தீனிய அரசர்கள் பாண்டியப் பார்வேந்தர்களோடு அதிக நட்புக் கொண்டிருந்தனர். கிறித்தவ ஊழிக்கு முன்னரே உரோமா புரியில் ஆட்சி நடத்திய பேரரசர்களுடன் பாண்டிய மன்னர்கள் நட்புக்கொண்டு அரச தூதுவர்களைப் பரிமாறிக் கொண்டனர். பாண்டியர்கள் பிறநாட்டினருடன் பண்புடன் பழகி வந்தனர். அயல் நாட்டினரை அன்புடன் வரவேற்று விருந்தோம்பி வணிகம் வளர்த்து வந்தனர். அவர்களில் பாங்கும் பட்டறிவும் பிறநாட்டினரைப் பெரிதும் கவர்ந்தன. வெளிநாட்டு வணிகர்களும் வெளிநாட்டுப் பயணிகளும் தமிழகத்தின் அன்பையும், பண்பையும், தகைமையை யும் விட்டுக்கொடுக்கும் உளப்பாங்கையும் கண்டு வியந்தனர். இதனால் வாணிகம் வளர்ந்தது. பிறநாடுகளில் முத்தும் மணிகளும் நறுமணப் பொருள்களும் குவிந்து இன்பம் அளித்தன; தமிழகம் பொன்னும் புகழும் பெற்றது.2 சங்கக் காலத்திற்குப்பின் கொற்கையின் சிறப்பை எடுத்துக் காட்டும் சான்றுகள் நமக்கு அதிகம் கிடைக்க வில்லை. பாண்டிய நாடு கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டுவரை பாண்டிய மன்னரின் அரசாட்சியில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது என்று வரலாறு கூறுகின்றது. அப்பால் 13ஆம் நூற்றாண்டுவரை சோழர் ஆட்சியில் பாண்டியநாடு பெருமை குன்றிக் கிடந்தது. அக்காலத்தில் பாண்டியநாடு இராசராச பாண்டிய நாடு என்று கூறப்பட்டது. கொற்கையம்பதி, சோழேந்திர சிம்ம சதுர்வேதி மங்கலம் என அழைக்கப் பட்டமையும் இறுதியில் கொற்கைத் துறைமுகம் மண்மேடிட்டுத் தன் தகுதி இழந்து சீர்குலைந்தமையும், கொற்கை இழந்த துறைமுகச் சிறப்பைப் பழைய காயல், அடைந்தமையும் முன்பே கூறப்பட்டன. பழைய காயலும் பாழ்பட்டது. பாண்டியர் ஆட்சியும், தமிழர் ஆட்சியும் மறைந்து தமிழகம் வறுமையால் வாடும் நிலையை அடைந்தது. விந்திய மலை என்றென்றும் ஆரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற் கும் இடையே இயற்கையாய் எழுந்த எல்லையாக அமைந்துள்ளது. பெருங்காப்பியப் புலவர்கள் தமிழகத்துப் பேரரசுகளைக் குறிப் பிட்டிருக்கின்றனரேனும் அவைகளைப் பற்றி அவர்கள் சிறிதுதான் உணர்ந்திருந்தனர் என்று தெரிகிறது. அவைகளைச் சேர, சோழ, பாண்டிய அரசுகள் என்பர். திருநெல்வேலி, மதுரை மாவட்டங்கள் அக்காலத்துப் பாண்டிய நாடாக இருந்து வந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தண்பொருநை (தாமிரவருணி) ஆற்றங்கரை யில் அமைந்த கொற்கையே மிகத்தொன்மையான காலத்தில் அதாவது மதுரை தலை நகராகுமுன் கோநகராக இருந்துவந்தது. இத்தலைமைப் பேற்றைப் பிற்காலத்தில் மதுரை நகரம் பறித்துக் கொண்டது என்று அறிஞர் பர்னட் என்பவர் கூறியுள்ளார். இதனை ஆதரித்து வரலாற்றுப் பெரும் புலவராய் விளங்கிய வின்சென்று சிமித் அவர்களும், பாண்டிய நாட்டின் தலைநகரரோ வெனில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கொற்கையே என்பதில் ஐயுறவில்லை என்று கூறி, கொற்கை ஒரு காலத்தில் பாண்டிய நாட்டின் கோநகராய் விளங்கியது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தண்பொருநை ஆற்றுக்கு அருகில் உள்ள கொற்கைப்பட்டினம் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுகப் பட்டினமாக வும் இருந்து வந்தது. இத்தாலிய நாட்டினரும் இயற்கை நூற் புலவரும் கி.பி. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உயிர் வாழ்ந்த வருமாகிய பிளினி மதுரை பாண்டிய நாட்டின் கோநகராய் விளங்கியது என்றாலும் இன்னும் முன்னைய நாட்களில் கொற்கை முதன்மையான அரசிருக்கையாக விளங்கியது என்று நம்புவதற்கு இடமுண்டு. வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் மதுரை மாவட்டத் தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்த தென் மணலூர் பாண்டிய மன்னர்களின் தலைநகராகச் சில காலம் இருந்து பின்பே மதுரைக்கு மாற்றப்பட்டது. கொற்கை அதாவது கொல்கையைத் தமிழர் நாகரிகம் வளர்ந்த தொட்டிலாகவும், சேர, சோழ, பாண்டிய அரசு களை நிறுவியவராகக் கருதப்படுபவரும் புராணத் தொடர்பு உடைய வருமான உடன் பிறப்பாளர்களின் பிறப்பிடமாகவும் விளங்கியது என்று தொன்று தொட்டு வழங்கும் வரலாறுகள் யாவும் குறிப்பிடுகின்றன. நெல்லை மாவட்டத்தில் தண்பொருநை ஆற்றங் கரையில் ஏதுமற்ற சிற்றூராய் இன்று விளங்கும் அந்தக் கொற்கை என்னும் மூதூர் தனது புகழ் ஓங்கி நின்ற பழங்காலத்தில் சிறந்த தொரு துறைமுகப் பட்டினமாய்ப் பாண்டிய மன்னர்தம் கருவூலத் திற்குத் தனிப்பட்ட அளவில் மிகுந்த வருவாய் வரும் வழியாக இருந்தது. மேலும் அது முத்து வாணிகத்திற்குத் தலைமைப் பதியாக வும் நிலவியது. மிகுந்த அளவில் வந்து குவிந்த அரசிறைப் பொருட் களையும், பண்டமாற்று வருவாயையும் கண்காணித்தற் பொருட்டு பட்டத்திளவரசர் மதுரையில் அரசவை நிறுவப்பெற்ற காலத்தும் கொற்கைத் துறைமுகம் நாளடைவில் மண் மண்டியதால் கப்பல் களை வரவேற்கும் வசதிகளை இழந்து இங்கிலாந்தின் செய்சுத் துறைமுகங்களைப்போல் படிப்படியாக அழிவுற்றது. கொற்கைத் துறைமுகமாகப் பயன்படுவது ஒழிந்து கைநெகிழ விடப்பட்டது எப்பொழுது என்று தெரிய வில்லை. என்றாலும் கொற்கை அஃகசாலையில் அச்சிடப்பட்ட காசுகள் கி.பி. 700ஆம் ஆண்டிற்கு முற்பட்டவை என்று தெரிகிறது. கொற்கையில் நடைபெற்ற வாணிகம் எல்லாம் ஆற்றின் கீழ்ப்பக்கம் மூன்று கல் தொலைவில் அமைந்த காயலில் புதிதாக நிறுவப்பெற்ற காயலுக்கு மாற்றப் பட்டது. காயல் துறைமுகமாகிப் பல நூற்றாண்டுகள் வரை கீழ்நாட்டு மாபெரும் வாணிகத் தலைமைப் பதிகளுள் ஒன்றாக விளங்கியது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்கோ போலோ இங்கேதான் வந்திறங்கினார். முடிமன்னனே அன்றிக் குடிமக்களும் பெற்றிருந்த செல்வச் சிறப்பையும், வெளித் தோற்றச் சிறப்பையும் மார்க்கோபோலோ கண்டு வியந்து பாராட்டி யுள்ளார். கொற்கை பாழாவதற்குக் காரணமான அதே நிகழ்ச்சி காயல் கைவிடப்படுவதற்கும் காரணமாய் இருந்தது. இன்று மீன் பிடித்துப் பிழைக்கும் பரதகுலக் கிறித்தவர்களும் முசுலிம்களும் வாழும் சிறுகுடிசைகளே காயல் துறைமுகம் விளங்கிய இடத்தில் எஞ்சி நிற்கின்றன. 7. இலக்கியமும் ஏற்றமும் கொற்கை, பண்டைக்கால இலக்கியங்களில் எல்லாம் சிறப் புடன் போற்றப் பெற்றுள்ளது.1 வடமொழியின் பழைய இதிகாச மாகிய வான்மீகி இராமாயணத்தில் கொற்கையின் சிறப்பு எடுத்து ஓதப்பெறுகிறது.2 யவன நாட்டு வரலாறுகளும் கொற்கையைப் போற்றுகின்றன. கொற்கை, கோநகராகவும் துறைமுகமாகவும் இருந்ததால் சிறப்புற்றிருந்தது; பெரும் பட்டினமாகத் திகழ்ந்தது. இங்கு வாணிகத் திற்காக வந்த யவனர்களும், சோனகர்களும் குடியேறி இருந்தனர். சோனகர் (அரபி நாட்டிலிருந்து வந்தவர்கள்) குடியேறிய ஊர் இன்று காயல் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. புகார் நகரில் இருந்தது போல் கொற்கை தனியாக யவனச்சேரி, வெள்ளையன் இருக்கை முதலியன உடையதாய்க் கோட்டை கொத்தளங்களும், கோயில்களும் அரண்மனையும், வணிகர்களின் மாளிகைகளும் இலங்கச் சிறப்புற அமைந் திருந்தது. கடற்கரை அழகுற அமைந்திருந்தது. துறைமுகமும், கலங்கரை விளக்கமும் கவின் பெற்றிலங்கின. இன்றைய மதுரை எவ்வாறு, பண்டைய தமிழனின் நகர் அமைப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாக இலங்குகிறதோ அதுபோல் - ஏன்? அதைவிடச் சிறப்பாகக் கொற்கை அமைக்கப்பட்டிருந்தது. கொற்கையின் கோட்டை வாயில் பொற்றகடுகளால் பொதியப் பெற்று அதன்மீது முத்துக்களும் ஏனைய மணிகளும் பதிக்கப் பெற்றிருந்தன. இதனை வான்மீகி இராமாயணம் நன்கு எடுத்துக் காட்டுகிறது. கொற்கைக் கடற்கரை கண்கொள்ளாக் காட்சி நல்கியது. அங்கு எப்பொழுதும் யவன நாட்டு மீகாமன்களும், வணிகர்களும் அரபிய நாட்டுக் குதிரை வணிகர்களும், பிறரும் குழுமி நின்றனர். அங்குப் பெரும் பண்டங்களை வைக்கும் பண்டகசாலைகளும், கிடங்குகளும் இருந்தன. பெரிய கடற்சுங்கச் சாவடியும் இருந்தது. அதில் ஒவ்வொரு மூடையும் அதிலுள்ள பொருளும் எடுத்துப் பார்க்கப் பட்டு, வரி விதிக்கப்பெற்று இணையக்கயல் முத்திரை இடப்பெற்றது. துறைமுகத்தில் தமிழ் நாட்டுக் கலங்களும், தோணி களும், ஓடங்களும், அயல் நாட்டுக் கலங்களும் குழுமி நின்றன. சுங்கச் சாவடிக்கு அண்மையில் அழகிய சோலைகள் பல இருந்தன. எழிலுடன் எண்ணற்ற தாழைமரங்கள் நின்றன. கடற்கரையின் புலால் நாற்றத்தை அத்தாழம்பூவின் நறுமணம் மாற்றியது. இதை, முண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப் பேஎய்த் தலைய பிணர்அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇப் புலவுப் பொருது அழித்த பூநாறு பரப்பின் நற்றேர் வழுதிக் கொற்கை முன்துறை (அகம் 130.) என்று சங்க நூலான அகநானூறு கூறுகிறது. கொற்கை இந்தியாவின் ஒளி விளக்காக ஒரு காலத்தில் ஒளிவிட்டு விளங்கியது. தமிழ்நாட்டின் கருவூலம் என்று போற்றப் பட்டது. தமிழ்நாட்டை வளப்படுத்தும் பொற்ற கடுகளும், பொற் காசுகளும் ஆற்றுப் பெருக்கென அங்கு வந்து நிரம்பின. குவலயம் முழுவதும் அறிந்த கொற்கைப் பட்டினம் - முத்துக் கொழிக்கும் மூதூர், தமிழ் வளர்த்த இடைச்சங்கம் மேவிய நல்லூர் - இராமாயணம் எழுதிய வான்மீகி, கபாடபுரம் என்று போற்றிய பேரூர் - பழம் பெரும் பாண்டியர்களின் தாயகம் அழிந்து ஒரு சிற்றூராய் இன்று தேடுவாரற்றுக் கிடக்கின்றது. இன்று கொற்கையின் மாண்பு குன்றிவிட்டது. கொற்கை சிறப்பு வாய்ந்த ஒரு பட்டினம் என்று கூறவே இந்த நாட்டில் ஆள் இல்லாது போய்விட்டது. இன்று நாம் அதிகமான அகழ் ஆய்வுச் சான்றுகளையோ, கல்வெட்டுச் சான்று களையோ வரலாற்றுச் சான்றுகளையோ தேடவில்லை; கிடைக்கவு மில்லை. ஆனால் ஓரளவு இலக்கியச் சான்றுகள் மட்டும் கிடைக் கின்றன என்று சில புலவர்கள் கூறிப் போந்தனர் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்த பாண்டிய முடி மன்னர்கள், கொற்கைக் கோமான், கொற்கையாழி, கொற்கைப் பொருநன், கொற்கை மாறன் என்று பட்டம் சூடி வந்துள்ளனர் என்று சங்கக்காலப் புலவர் மதுரைப் பேராலவாயர் பாடியுள்ளார். பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேல் கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன் கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை (அகம். 296: 10-12) உகுவாய் நிலத்துயர் மணல்மேல் ஏறி நகுவாய் முத்தீன் றசைந்த சங்கம் - புகுவான் திரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான் வரைவு பார்த்திருக்கும் நெஞ்சு என்று முத்தொள்ளாயிரமும் பிறநூற்களும் முழங்குகின்றன. சிறந்த துறைமுகம் தமிழகத்தில் முற்காலத்தில் இருந்த துறைமுகங்கள் பூம்புகார், முசிறி, தொண்டி, உவரி, மாமல்லபுரம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கியது கொற்கையே ஆகும். இது முற்காலத்தில் கடற் கொள்ளைக்காரர்கள் அணுக முடியாத நல்ல பாதுகாப்புள்ள துறைமுகமாக இருந்தது. எனவே சேரநாட்டுப் பொருள்களான மிளகு, ஏலம், கிராம்பு, போன்ற பல பொருள்களைக்கூட யவனர்கள் கொற்கைத் துறைமுகத்தினின்றே தம் கலத்தில் ஏற்றிச் சென்றனர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கொற்கை தென்னாட்டுத் துறை முகங்களில் மிகவும் பெரியதாகக் காட்சி அளித்தது. அத் துறையில், அங்கு விளைந்த முத்து, கடல் கடந்து உலகம் எங்கும் பரவி, பெரும் மதிப்புப் பெற்றது. உரோமர், கிரேக்கர், எகிப்தியர் ஆகியோர் தங்கள் நாடுகளிலுள்ள பொற்காசுகளையும், பொற் பாளங்களையும் ஏராளமாகக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் கொற்கைத் துறைமுகத்திலிருந்து முத்து, மெல்லிய துணிகள், மிளகு போன்றவைகளை வாங்கிச் சென்றனர். எனவே நமது இலக்கியங் களில் கொற்கைத் துறைமுகம் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளது. கொற்கை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தலை நகராய்ச் சிறப்புற்றிருந்தது. பின்னர் பல வசதிகளை எண்ணித் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டது. மதுரை மாநகரின் சிறப்பை எடுத்துக் கூறும் சங்க ஏடுகளில் சிறப்பானது பத்துப் பாட்டுகளில் ஒன்றான மதுரைக் காஞ்சி என்னும் கடைச்சங்க நூலாகும். அதில் மதுரை மட்டும் அன்றி கொற்கையின் சிறப்பும் வியந்து ஓதப்பட்டுள்ளது. உலகில் புகழ்பெற்று விளங்கும் மூதூர் என்றும் முதிர்ந்த முத்துக்கள் மலிந்த மூதுடைப் பட்டினம் என்றும் முத்துக் குளிக்கும் முதுமக்கள் வாழும் முதுபெரும் நகர் என்றும் ஏற்றிப் போற்றிப் பாராட்டப் பெற்றுள்ளது : பேருலகத்து மேஎந் தோன்றிச் சீருடை விழுச்சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் இலங்குவளை இருஞ்சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை (மதுரைக் காஞ்சி : 133-138) முத்துக்கள் கடலில் பல இடங்களில் கிடைக்கலாம். ஆனால் கொற்கைக் கடலில் கிடைக்கும் முத்துக்களுக்கு இணையான நன்முத்துக்கள் உலகில் எங்கும் காண முடியாது. அன்றியும் அங்கு அளவிலா முத்துக்கள் கிடைத்தன. முத்துக்கள் ஆழ்கடலில் உள்ள பாறைகளின் அண்மையில் இருக்கும். அவைகளை எடுப்பதற்கு அத் தொழிலில் அநுபவமும் திறமையுமுள்ள மீன் பிடிக்கும் பரதவர்கள் நீரில் மூழ்கி நெடுநேரம் கடலினுள் இருந்து கூடைகளில் வாரி வாரி எடுத்துத் தோணியில் ஏற்றி வருவர். இவர்கள் முத்துக் களையுடைய சிப்பிகளை யன்றிச் சங்குகளையும் எடுத்து வந்து விற்பர். இதனை, பன்மீன் கொள்பவர் முகந்த விப்பி நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை (அகம். 296 : 11-13) என்று கூறப்பட்டுள்ளது. முத்துக்குளிக்கும் முது பெரும் திராவிடக் குடிமக்களான பரதவர்கள் முத்துக்களைப் பொற்காசுகட்கு விற்றுப் பொருள் வளம் மிக்குடையோராய் வாழ்ந்து வந்தனர். கடலில் முத்துக் குளிப்பவர்களுக்குச் சுறாமீன்களால் உயிரிடர் ஏற்படுவது முண்டு. சுறாமீன்களைப் பரதவர்கள் மந்திரத்தாலும் தந்திரத் தாலும் விரட்டிவிட்டு முத்துக்களை எடுத்து வருவார்கள். அவர்கள் கடலி னின்று முத்துச் சிப்பிகளை மட்டுமன்றி வலம்புரிச் சங்குகளையும், பவளங்களையும் பிற அரிய கடல்படு செல்வங்களையும் எடுத்து வந்தனர். கொற்கைக் கடலில் இருந்து பரதவர்கள் கடல்படு பொருள் களை எடுத்து வரும்பொழுது கடற்கரையில் அவர்களுடைய மக்களும், மனைவியரும், உறவினரும் ஆவலோடு எதிர்பார்த்து நிற்பர். அவர்கள் கரையை அடைந்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் புரிவர்; சங்கொலி முழக்கி வாழ்த்தி வரவேற்பர். இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை (அகம். 350 : 11-13) என்று அகநானூறு கூறுகிறது. கொற்கை பழம் பெரும் பாண்டிய மன்னர்களின் துறைமுகப்பட்டினம். கொற்கைத் துறைமுகத்திற்கு அண்மையில் விரிந்து அகன்று அலை யெழுப்பி நிற்கும் ஆழ் கடலின் உயர்ந்த நீரில் உயரிய நன்முத்துக்கள் விளைந்தன. இதனை நற்றிணை, முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை (நற் 131:11-7-8) என்று கூறுகிறது. வலிமை மிக்க பாண்டிய மன்னர்கள் அறவழி நின்று காத்துவரும் சிறந்த நாட்டின் தலைசிறந்த கொற்கை என்னும் பெரிய துறையில் கிடைக்கும் நல்ல முத்து என்று அகநானூறு கூறுகிறது; மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து (அகம் 2-11-9-10) கொற்கை, நல்ல அழகிய குதிரைகள் பூட்டப்பெற்ற தேரை யுடைய பாண்டியர்களுக்கு உரித்தான துறைமுகப் பட்டினம். அலை களால் கடற்கரையில் ஒதுக்கித் தள்ளப் பட்டிருக்கும் முத்துக்கள், விரும்பும் நடையினையுடைய குதிரையின் காலினை வடுச்செய்து அஃது ஓடிச் செல்வதைத் தடுக்கும். குதிரையின் காலில் பட்ட முத்துத் தெறித்து விழுந்து ஒளி செய்வது எழில்தரும் காட்சியாக இருக்கும் என்று கொற்கைத் துறைமுகத்தின் காட்சியை அகநானூறு அழகுற எடுத்தக் காட்டுகிறது. இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதிக் கொற்கை முன்றுறை (அகம் 130: 9-11) கொற்கைப் பட்டினத்தின் துறைமுகத்தில் தனிச் சிறப்பும், பெரும் பேரும் தரும் ஒரு விழா ஆண்டாண்டு தோறும் நடை பெற்று வந்தது. நிறைமதி நாளில் அன்று ஞாயிறு மறைந்தபின் கடலில் முழுநிலா கவின்பெற மிளிர்வது கண்கொள்ளாக் காட்சி யாய் இருந்தது. இவ்வமயம் கொற்கை மகளிர் கூடிநின்று ஆடிப் பாடிக் கடல் தெய்வத்தை வழிபட்டனர். தங்கள் வாழ்க்கை வளம் பெற நன்முத்துக்களையும் உயரிய வலம்புரிச் சங்குகளையும் படைத்து வழிபட்டனர். இதனை, மகிழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து பழையவர் மகளிர் பனித்துறை பரவப் பகலோன் மறைந்த அந்த ஆரிடை உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு என்று அகநானூறு அறிவுறுத்துகிறது. இதே போன்று சுவை பொதிந்த மற்றொரு செய்யுளில் கொற்கைத் துறை முகத்தில் கிடக்கும் முத்துக் கள் ஆங்குள்ள குரங்குகளின் கைகளில் அகப்பட்டு விளையாட்டுப் பொருளாகும் என்று மற்றொரு பழம் புலவர் கூறுகின்றார். ..... விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்துறை யவிர்கதிர் முத்தம் (அகம் 201. 11. 3-5) உப்பு வாணிகர் கொற்கையில் மண்டிக்கிடந்த உப்பைப் பொதிமாட்டிலும் வண்டியிலுமேற்றிச் சுற்றுப் புறங்களில் கொண்டு போய் விற்று வந்தனராம். ஒரு நாள் வரும் வழியில் அவர்கள் கையில் அகப்பட்ட ஒரு குரங்குக் குட்டியையும் பிடித்து வந்தனர். அக்குரங்கு உப்புத் தொழிலாளர் வசிக்கும் பகுதியில் வளர்ந்து அவர்களுடைய குழந்தைகளோடு விளையாடி வந்தது. கடற்கரையில் வாழும் உப்பு வாணிகரின் மக்கள் கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சில்களை எடுத்து விளையாடுவது வழக்கம். அவர்களோடு சேர்ந்து கிளிஞ்சில் களை எடுத்து குரங்குக் குட்டியும் விளையாடத் தொடங்கியது. இஃதன்றிச் சிறுவர்கள் கிலுகிலுப்பை ஆடுவதைக்கண்ட குரங்குக் குட்டி, தானும் அவ்வாறே கிலுகிலுப்பையை ஆட்டுவதற்கு எண்ணிக் கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சில்களை எடுத்து, அங்குத் தாமாகவே அலைகளால் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் முத்துக்களை பொறுக்கி கிளிஞ்சிலினுள் போட்டுக் கிலுகிலுவென்று ஆட்டியது. இக்காட்சியைச் சங்கக் காலப் புலவர் ஒருவர் கண்டு களித்து, சிறுபாணாற்றுப் படையில் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார் : நோன் பகட்டுமணர் ஒழுகையொடு வந்த மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலியாடும் தத்துநீர் வரைப்பின் கொற்கை (சிறுபாண் 55-62) இஃதன்றிப் பழம் பெரும் சங்க ஏடுகள் பலவற்றில் கொற்கை யின் சிறப்புப் பேசப்படுகிறது. ஆங்கு நடை பெற்ற முத்து வாணிகம் உலகத்தின் கவனம் முழுவதையுமே ஈர்த்து நின்றது. உரோமர் நாட்டிலும், கிரேக்கர் நாட்டிலும், எகிப்து நாட்டிலுமுள்ள அரசர் களும், அரசிகளும் பெரும் பணம் படைத்த சீமாட்டிகளும் இரண் டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கொற்கையின் பெயரை அறிந்திருந்னர். கொற்கை முத்தால் அவர்கள் கவரப்பட்டிருந்தனர். அராபியர்கள் கொற்கைக்கு வந்து குதிரை விற்றுப் பணந் தேடியதால் அவர் களுக்குக் கொற்கையின் வளம் நன்கு தெரிந்திருந்தது. கொற்கைப் பொருநன் நெடுஞ்செழியனுக்குப்பின் பாண்டிய நாட்டு அரச கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பவன் ஆவான். இவன் புலமை வாய்ந்த புரவலன். இவன் பாடிய பாக்களில் ஒன்று புறநானூற்றிலும், (71 ஆம் செய்யுள்) மற்றொன்று அகநானூற்றிலும் இடம் பெற்றுள்ளன. இவன் காலத்தில் இருந்த புலவர் கூடலைக் கைப்பற்றிய நெடுஞ் செழியனுக்குக் கிடைத்த புகழை ஒரு பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு : பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேற் கடும்பகட் டியானை நெடுந்தேர்ச் செழியன் மலைபுரை நெடுநகர்க் கூடல் ஆடிய மலிதரு கம்பலை போல் (அகம் 296 : 10-13) சேறு நிரம்பிக் கரியதாய்த் திகழும் கழிகளில் விளையும் உப்பையும் புளியையும் பரதவர்களால் பதஞ் செய்யப்பட்ட கருவாட்டையும் அயல் நாடுகளிலிருந்து வந்த கயல்கள் போன்று கடலில் செல்லும் கலங்கள் ஏற்றிச் செல்லும். பண்டமாற்றாக அவை தம் நாட்டிலிருந்து கொண்டு வந்த குதிரைகளை இறக்கிச் செல்லும்* என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள்ளுப்பு பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல் விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர் நனந்தலை தேஎத்து நன்கல னுய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும் (மதுரைக் 8 : 18-26.) கொற்கை மன்னர்களுக்குக் கொற்கைக் கோமான் கொற்கை யாளி, கொற்கைத்துறைவன் என்ற பட்டங்கள் உண்டு. இதனை, கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்று ஐங்குறு நூறு எடுத்தக்காட்டுகிறது. இன்னும் பல தமிழ் இலக்கியங் களில் கொற்கையும் அங்கு நடை பெற்றவணிகமும் எடுத்துக் காட்டப்படுகின்றன. கொற்கை அழிவுற்றுக் கிடந்தாலும் அதன் பெயர் என்றும் அழியாது தமிழ் இலக்கியங்களிலும் யவனர், கிரேக்கர், உரோமர் போன்ற அயல் நாட்டின் வரலாறுகளிலும் மறையாது ஒளிர்கிறது. ஒட்டக் கூத்தர் என்னும் சோழநாட்டு அரசரின் அவைப் புலவர், சோழ மன்னனுக்குப், பாண்டிய அரசனிடம் பெண் கேட்கச் சென்றார். பாண்டியன் சோழன் பெருமையை வினவினான். அதற்கு ஒட்டக்கூத்தர் ஒரு பாட்டைக் கூறினார். கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானை கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ அம்மானை ஆதித்த னுக்குநிகர் அம்புலியோ அம்மானை வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானை வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை ஊருக் குறந்தைநிகர் கொற்கையோ அம்மானை ஒக்குமோ சோணாட்டுக்குப் பாண்டி நாடம்மானை (தனிப்பாடற்றிரட்டு, பக். 170.) என்பதாகும். இதன் கருத்து, சோழன் ஏறும் குதிரையாகிய கோரமும், அவன் நாட்டுக் காவிரியாறும் அவனது ஆத்தி மாலையும், சூரிய குலமும், வீரமும், புலிக்கொடியும் உறந்தை நகரும் உள்ள சோணாட்டுக்குப் பாண்டியன் குதிரையாகிய கனவட்டமும், பாண்டிய நாட்டு ஆறாகிய வைகையும், பாண்டியனின் வேப்பமாலையும், சந்திரகுலமும், வீரமும் மீன் கொடியும் கொற்கைப் பட்டினமும் ஒப்பாகுமா? என்பதாகும். அவரை மடக்கி, புகழேந்திப்புலவர் திருமால் அவதாரம் எடுத்தது புலியா மீனா? சிவன் முடியில் இருப்பது சூரியனா சந்திரனா? தமிழ்மொழி பிறந்தது ஒப்பற்ற பொதிகையிலா சோழநாட்டின் வயல்களிலா? இறைவன் திருவிளையாடல் நடந்தது உறந்தையிலா மதுரையிலா, நீரில்விட்ட ஏடு எதிர் சென்றது காவிரி யிலா வைகை யிலா? விருப்புடையது வேப்பமலரா ஆத்திமலரா? கடல் பணிந்தது சோழன் பாதத்திலா பாண்டியன் பாதத்திலா? சோழன் வீரத்தைப் பாண்டியன் பராக்கிரமத்திற்கு ஒப்பிட்டு உரைக்க முடியுமா? என்று கூறியதாக ஒரு கதையுண்டு. திரு நெடுமால் அவதாரம் சிறுபுலியோ வம்மானை சிவன் முடியில் ஏறுவதும் செங்கதிரோ வம்மானை ஒரு முனிவ னேரியிலோ வுரை தெளிந்த தம்மானை ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ வம்மானை கரையெதிரே டேறியது காவிரியோ தம்மானை கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மானை என்று ஒட்டக்கூத்தன் கொற்கைக்கு உறந்தை ஒப்பாகுமா? என்று கேட்பதை நாம் எடுத்து ஆராய்வதற்குரியதாகும். 8. முத்தும் மூதூரும் தமிழர்கள் பண்டு தொட்டு உலகில் ஒன்பது உயரிய மணிகள் உண்டென்று கண்டுள்ளனர். இவை, நவமணிகள் (நவரத்தினம்) என்று அழைக்கப் பெறும். ஒன்பது மணிகளில் ஏழு மணிகள் நிலத்திலும் இரு மணிகள் - அதாவது பவளமும் முத்தும் நீரிலும் விளைவனவாகும். உலகில் பல இடங்களில் கடலினின்று முத்துக்கள் குளித்து எடுக்கப் பட்டு வந்தன. எந்த முத்தும் இந்தக்கொற்கை முத் திற்கு ஈடாக மாட்டா. கொற்கையை அடுத்துள்ள பாக்சு நீரிணையில் உள்ள மன்னார் குடாக்கடலில் ஆணி முத்துக்கள் பருமனிலும் ஒளியிலும் சிறப்புற்றனவாய் ஒளிர்விட்டோங்கின. கொற்கை முத்திற்கு ஈடான உயர்ந்த முத்துக்கள் குவலயத்திலே காணமுடியாது என்ற பெயர் பண்டு எழுந்தது.1 முத்து வகைகள் முத்துக்களின் பருமன், ஒளி, அமைப்பு, நிலை முதலியவை களை வைத்து அறிஞர்கள் முத்தைப் பதின்மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவை முறையே வட்டம், அனுவட்டம், ஒப்பு முத்து, குறுமுத்து, நிம்போளம், பயிட்டம், அம்புமுது, கரடு, இரட்டை, சப்பத்தி, சக்கத்து, குளிர்ந்த நீர், சிவந்தநீர் என்று கூறப்படும்.2 வட்டம், என்பது உருண்டையாக உள்ளது. அனு வட்டம் ஏறத்தாழ வட்டவடிவம் வாய்ந்தது. ஒப்பு முத்து ஒளிவீசுமாறு மெருகேற்றப்பட்ட முத்து, குறுமுத்து, சிறு முத்து; கரடு, சொர சொரப்பாகக் கரடு முரடாக இருப்பது. இரட்டை இருமுத்து இயற்கையாகவே இணைந்தது. சப்பத்தி, சக்கத்து நிம்போளம் என்பவைகளின் இயல்புகள் தெரியவில்லை. குளிர்ந்த நீர், குளிர்ச்சி யான முத்து, சிவந்த நீர், செந்நிறம் வாய்ந்த முத்து. தோற்றம் முத்துக்களில் அடங்கி இருக்கும் மூலப் பொருள் சுண்ணாம்புச் சத்து என்று அறிஞர்கள் ஆய்ந்து கண்டுள்ளார்கள். முத்துச் சிப்பியினுள் ஒருவகை மெல்லிய உயிரினம் இருக்கிறது. அதன் உடல் மெல்லிய தசையால் ஆனது அது நீரில் மிதந்து செல்லும் பொழுதோ, பாறைகளில் ஒட்டிக் கிடக்கும் பொழுதோ சிறு மண், கல் போன்றவை உடலில் புகுந்து உடலை வருத்தும். உடனே அது தன்னைச் சுற்றி உடலில் உள்ள ஒரு பசுமையான நீரைப் பாய்ச்சுகிறது. நாளடைவில் அது ஒரு கடினமான பொருளாகி இறுதியில் முத்தாகிறது. பளபளப்பாக ஒளி வீசும் முத்துச் சிப்பிகளின் உட்புறம் போன்று முத்தும் வெண்மையும் பளபளப்பும் மிருதுத் தன்மையும் உடையதாய்ப் பரிணமிக்கிறது. முத்து, சிப்பியில் ஒட்டினால் அதன் அடிப்பாகம் தட்டையாய் விடுகிறது. முத்துக்கள் அழகான அமைப்பைப் பெறுவது அரிது. சில சிப்பிகளில் இரு முத்துக்கள் இணைந்து இருக்கின்றன. சிற்சில சமயங்களில் சிப்பியில் படியும் தாதுப் பொருள்களில் முத்துப் புதைந்து கிடக்கிறது. அதை வெட்டிப் பார்க்கும் பொழுது உள்ளே உயர்ந்த முத்து கிடைக்கிறது. சிறந்த முத்து நல்லதோல், மெல்லிய தசைச் சுற்று களங்கமற்ற தன்மை, வெண்மை நிறம், நல்ல ஒளி ஆகிய தன்மைகளைப் பெற்றிருக்கும். உயர்ந்த முத்து உருண்டை உருவமும் அழகான அமைப்பும் உடையதாய் குற்றமற்றதாய் இலங்கும். கிடைக்கும் இடம் தமிழகத்தில் தலைசிறந்த முத்துக்கள் கிடைக்கும் இடம் கொற்கையும் அதைச் சுற்றியுள்ள மன்னார்குடாக் கடற்பகுதியும் என்று கூறப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து கொற்கையில் முத்துக்கள் கிடைத்து வருகின்றன. மன்னார் குடாக் கடலில் விளையும் முத்துக்கள் மாநிலத்தில் மதிப்பு வாய்ந்தவை. தமிழ் நாட்டில் கொற்கைக் கோநகர் அருகில் உள்ள கடலில் குளித்து எடுக்கும் குளிர்முத்துக்கள் உலகில் உள்ள எல்லாச் சந்தைகளிலும் இடம் பெற்றுள்ளன. தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தக் கொற்கை முத்து குவலயத்திலே உயர்ந்தது என்று புகழ்மாலை சூட்டி யுள்ளனர். கொற்கை முத்து சிந்துவெளி அகழ் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முத்துமாலைகள் முத்துக்கள் கோத்துச் செய்யப்பட்ட மாலை, முத்து மாலை எனப்படும். முத்துவடம் என்றும் மொழிவர். முற்காலத்தில் முத்து வடங்கள் ஐந்து வகையாகச் செய்யப் பட்டன : (1) தலைமணிவடம் (2) உதவித் தலைமணிவடம் (3) கணுநிலைவடம் (4) தரளக்கட்டு வடம் (5) செறிநிலை வடம் எனப்படும். தமிழகத்தில் முத்துமாலை என்று தெய்வம் பெயர் பெற்றிருக் கின்றது. தமிழ் மக்கள் தங்கள் மக்களுக்கு முத்துமாலை என்று பெயர் சூட்டி அன்பொழுக அழைத்து வருகின்றார்கள். நிற்க, மேற்கூறிய ஐந்து வகையான முத்துவடங்களும் அதில் கோக்கப்பட்ட மணி எண்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் களைப் பெற்றிருந்தன. எடுத்துக்காட்டாக தலைமணி இந்திரச் சந்தம். உதவித் தலைமணி இந்திரச் சந்தம் என்பன போன்ற பெயர் களைப் பெறும். இவ்வாறு முற்காலத்தில் 50 வகையான முத்து வடங்கள் உள்ளன என்று கூறப்படும். அன்றியும் முத்து வடங்கள் உடலின் உறுப்புகளில் அணிவ தற்கு உகந்தவாறு பெயர்கள் வேறுபடுவதும் உண்டு. அப்பெயர் களும், அதில் இடம் பெறும் முத்துக்களின் எண்களும் அடியில் வருமாறு : 1. இந்திரச் சந்தம் 1008 முத்துக்கள் கொண்டது 2. விசயச் சந்தம் 500 3. தேவச் சந்தம் 100 4. அருத்த மாலை 64 5. கதிர்க்கலாபம் 54 6. குச்சம் 32 7. நட்சத்திர மாலை 27 8. அர்த்த குச்சம் 24 9. மாணவகம் 20 10. அர்த்தமாணவகம் 10 இன்று காணக் கிடக்கும் முத்துக்களில் எல்லாம் பெரியது இலண்டன் தெற்குக் கென்சிங்டன் காட்சிச் சாலையில் உள்ள முத்தே யாகும். இதன் சுற்றளவு 4 1/2 அங்குலம், எடை 3 அவுன்சு. ஸோவியத் யூனியனில். சோசிமா (Zosima) என்ற காட்சிச் சாலையில் உள்ள லா பெல்லிக்ரைனா (La Pellegrina) என்ற முத்து எழில் மிக வாய்ந்தது; ஒளிமிக உள்ளது; எடை, இருபத்தெட்டு காரட் என்று எண்ணப்படுகிறது. இது உலகில் உயர்ந்த ஒப்பற்ற முத்து. இது இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்டது. இந்திய முத்து என்றால் கொற்கை முத்து என நாம் பெருமைப்படுவதில் இழுக் கொன்றுமில்லை.1 தவறாகவும் மாட்டாது. பிணியகற்றும் மணி நவமணிகளில் ஒன்றான முத்துமணியைப் பொடி யாக்கிச் செய்யப்பெற்ற மருந்து உடலுக்கு வலிமையும், ஆயுள் பலமும் தரும்; கண்நோய், ஈழை, காசம், சுவாச நோய், அக்கினி மந்தம் போன்ற நோயை நீக்கும்; முத்துச் சுண்ணமும், சிப்பிப்பப்பசுமும் பிணி யகற்றும் நன்மருந்தாகும்.1 அணிகலன்கள் முத்துக்கள் பதிக்கப் பெற்ற அணிகலன்கள் அரசர்களாலும் மக்களாலும் நன்கு மதிக்கப்பெற்றன. மக்கள் தெய்வங்களுக்கு முத்து மணிவடங்களும்,முத்துமகுடங்களும், முத்துக் கொலுசும், முத்துக் காதணிகளும் செய்து படைத்தனர். இன்னும் பாண்டியர்களின் பழம் பெரும் தெய்வமாகிய மதுரை மீனாட்சி அம்மனுக்கு அரசர்கள் வழங்கிய முத்து மகுடங்களும் முத்துவடங்களும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. சில கோவில்களில் பட்டாடையின் விளிம்பில் முத்துக்கள் வைத்துத் தைக்கப் பெற்றுள்ளது. இதைப் பரிவட்ட மாக கோயில்களுக்கு வரும் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அறவோர்களுக்கும் அணிவிக்கப்படும். முற்காலத்தில் நவமணிகளில் ஒன்றான முத்தைப் போற்றி அணிய விரும்பாத மக்கள் இல்லை; புகழ்ந்து பாடாத புலவர்கள் இலர். பழந்தமிழ் இலக்கியங்களில் முத்துக்களைப் பற்றிய குறிப்புகள் பல உண்டு. முற்காலத்தில் தமிழர்கள் யவன நாட்டோடு நடத்திய வாணிகத்தில் முத்து ஏற்றுமதி முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. மேலும் முத்து வாணிகம் எகிப்து, கிரேக்கம், பாரசீகம், சீனம் முதலிய நாடுகளில் எல்லாம் பரவி இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கொற்கை முத்துக்கள் யவன நாடுகளில் எல்லாம் சென்று ஆங்குள்ள தங்கக் கட்டிகளைக் கவர்ந்து வந்த வரலாற்றைப் பிளினி, தாலமி போன்ற யவன ஆசிரியர் களும், பெரிபுளுசு என்ற நூலை எழுதிய பேராசிரியரும் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். கொற்கைத் துறைமுகம் முத்துக்குளிப்புக்குரிய பெரிய துறைமுகங்களில் ஒன்று என்று பழந்தமிழ் ஏடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழகம் முத்துக் கொழிக்கும் நாடு என்று எகித்தியர் களும், கிரேக்கர்களும், உரோமர்களும் அறிந்திருந்தனர். அயல் நாட்டு மகளிர் முத்தைப் பிற மணிகளை விடச் சிறந்ததாகப் போற்றிப் புகழ்ந்து மதித்து வந்தனர். கைய்சு என்னும் அரசனுடைய மனைவி பௌலீனா, ஏறத்தாழ 40,000,000 பொன் பெறுமதியான மணிகளா லும் முத்துக்களாலும் தன்னை நன்றாக அழகுபடுத்திக் கொண்ட தாகப் பிளினி என்ற ஆசிரியர் கூறுகிறார். கொற்கை முத்தைப் புகழ்ந்து மதுரைக் காஞ்சியும், சிறு பாணாற்றுப் படையும், அகநானூறும், பிற பழம் பெறும் இலக்கி யங்களும் கூறுகின்றன. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சந்திரகுத்தன் அவைக் களத்தில் அமைச்சனாக இருந்த சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் கொற்கை முத்துக்கள் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளன. அதில் பாண்டிய கவாடம், தாம்பிரவருணிகம் என்ற இருவகை முத்துக்கள் கூறப்பட்டுள்ளன. முத்துக்குளிப்பு தமிழகத்துக்கு கி.பி. 1292இல் வந்த வழிப்போக்கரான மார்க்கோபோலோ, இலங்கையினின்று மேற்கே 60 கல் தொலை விற்குப் போனால் மாபாரை (தமிழகத்தை) அடையலாம். இது, செல்வத்திலும், மாட்சியிலும் தலை சிறந்த நாடாகும். இதனைப் பல அரசர்கள் ஆண்டு வருகிறார்கள். இவர்களில் தலையானவன் பெயர் செந்தூர்ப் பாண்டி (சுந்தரபாண்டியன்) என்பதாகும். இவனது நாட்டில்தான் மாபாருக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள வளைகுடாவில் முத்துக் குளிக்கும் துறையுண்டு. அங்குத் தண்ணீர் 12 அல்லது 15 அடி ஆழத்திற்கு மேல் இராது. வணிகர் பலர் கூடிக் கப்பல்களையும், படகுகளையும் வாடகைக்கு அமர்த்திக் கொள் வார்கள். இந்தக் கப்பல்களில் முத்துக் குளிப்பதில் கைதேர்ந்த நிபுணர் களை அழைத்துச் செல்வார்கள். முத்துக்கள் அதிகமாக விளைந்து கிடக்கும் இடங்களில் கப்பல்களை நிறுத்தி முத்துக்குளிப்பவர் தங்கள் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டும், கயிறு கட்டப்பட்ட கூடைகளைக் கையில் பிடித்துக் கொண்டும் நீரில் மூழ்கி முத்துச் சிப்பிகளை வாரி வாரிக் கூடைகளில் நிரப்புவார்கள். கப்பலில் இருப்பவர்கள் அவைகளை மேலே இழுப்பார்கள். இறுதி யாக முத்துக் குளிப்பவர்களையும் மேலே கொண்டு வந்து கப்பலில் ஏற்றிக்கொள்வார்கள். இத் தொழிலில் ஈடுபடுபவர்க்குப் பொதுவாக நீண்ட நேரம் மூச்சை அடக்கும் பயிற்சியும் திறமையும் பழக்கமும் தேவை என்று கூறுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 5000 ஆண்டுகட்கு முன் அரும்பிய அரப்பா நாகரிகத்தில் முகிழ்ந்து அணிகலன்களில் கொற்கை முத்துக்கள் காணப்படுவதி னின்று கொற்கை மிகத் தொன்மையான காலந்தொட்டு - ஏன்? - 5000 ஆண்டுகட்கு முன்பிருந்து முத்து வணிகம் நடத்தி வருவது நன்கு புலனாகிறது. கிளியோபத்திரா என்னும் எகித்திய நாட்டு அரசி தன் காது களிலும், கழுத்திலும் முத்துக் காதணியையும், முத்து மாலையையும் அணிந்திருந்தாள், தன் ஆடையின் விளிம்பிலெல்லாம் முத்துக்களை இணைத்துக் கோத்துத் தைத்திருந்தாள். அவள் ஒரு கோடிப் பொன் செலவு செய்து ஒரு விருந்து நடத்தினாள். அவ்விருந்தில் உயர்ந்த முத்தை மதுவில் கரைத்து விருந்தினர்க்கு அளித்தாளாம். அவள் காதில் அணிந்திருந்த முத்துக்களின் விலை மட்டும் 1,61,458 சவரன்கள் ஆகும். கி.பி. 75ஆம் ஆண்டிற்கு முன் வாழ்ந்த கிரேக்க நாட்டு ஆசிரியர் பிளினி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வந்து சென்றவர். இவர் தம் நூலில் முத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் முத்துக்கள் தாமிரபரணித் தீவில் கிடைப்பதாகவும் பௌலீனா அரசி முத்து, மரகதம் ஆகியவைகளை அணிந்திருந்ததாகவும், அவள், காது, தலை, கழுத்து ஆகிய உறுப்புகளில் அணிசெயப் பூண்டிருந்த மணிகளின் விலை 4 கோடி செசுடர் என்றும் குறிப்பிடுகின்றார். தண்பொருநையாற்றுக்கு அருகில் அமைந்த கொற்கை வாணிகத்திற்கு முதன்மையான இடமாக விளங்கியது. பிளினி உயிர் வாழ்ந்த காலத்தில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் மதுரை அல்லது கூடல் தலைநகராக விளங்கியது. முன்னை நாட்களிலே கொற்கை அரசிருக்கையாக விளங்கியது என்று கருதுவதற்கு ஏற்ற பல சான்றுகளுண்டு. வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் மதுரை மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்த தென்மணலூர் பாண்டியரின் தலைநகராய் எழுந்தது. கொற்கை அல்லது கொல்கை மாநகரம் தமிழர் நாகரிகம் வளர்ந்த தொட்டி லாகவும், சேர, சோழ, பாண்டிய அரசுகளை நிறுவிய முன்னோர் களின் பிறப்பிடமாகவும் விளங்கியது என்று வரலாறு குறிப்பிடு கின்றது. இன்று தாமிரபரணி யாற்றின் கரையில் ஏதுமற்ற சிற்றூராய்க் காட்சியளிக்கும் அம்மாநகர் ஓங்குபுகழ் உயர்வாழ்வில் திளைத்து ஒளிர்ந்த நாளிலே சிறந்ததொரு துறைமுகமாகத் துலங்கிய தோடு பாண்டிய அரசர்கள் நலமுற ஈட்டிய பொருட் செல்வத் திற்குத் தனிப்பட்ட வருவாயாக இருந்த முத்து வாணிகத் திற்குத் தலைமைப் பதியாகவும் விளங்கியது. கொற்கைத் துறைமுகம் பயன்படுவது எப்பொழுது கைவிடப் பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அந்நாட்டுக் காசு அடிக்கும் நாணயக் கூடத்தினின்று வெளி வந்த காசுகள் கிட்டத்தட்ட கி.பி. 700-ஆம் ஆண்டிற்கு முன் உள்ளது என உணர முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார் வரலாற்று அறிஞர் திரு. வின்சென்று1 சிமிது : திரு.வில்லியம் வின்சென்று என்னும் அறிஞர் பரளியா நாடு குமரியி னின்று முத்துக் கொழிக்கும் முதுபெரும் பட்டினம் கொற்கை வரை பரவி இருந்தது என்று கூறுகிறார்.2 முத்துக் குளிக்கும் தொழிலில் பண்டு தொட்டு ஈடுபட்டு இருந்தவர்கள் சங்க நூற்கள் புகழ்ந்து பாடும் நெய்தல் நிலமக்க ளாகிய பரதவர்களே யாவர். பாண்டிய நாட்டின் பணச்செழிப்பிற்கு மூலகாரணமாக இருந்த முத்துக் குளிக்கும் தொழிலில் ஈடுபட் டிருந்த மீனவர்களாகிய பரதவர்களுக்கு மீனக்கொடியுடைய பாண்டிய வர்கள் பல நன்மைகளையும் சலுகைகளையும் அளித்து வந்தனர். பாண்டிய நாடு, தில்லி மொகல் அரசர்களின் சார்பாளரிடம் சென்றதும் பரதவர்கள் பாண்டியர்களிடமிருந்து பெற்ற பல நலன் களையும் இழந்தனர். முக்கிய காரணம் முசுலிம்களும் முத்துக் குளிக்க முற்பட்டனர். பழம்பெரும் இனத்தவர்களான பரதவர் களுக்கும் இடையே வந்த முசுலிம்களுக்கும் அடிக்கடி சண்டை மூண்டது. இதனால் முத்து வணிகம் குன்றியது. இவ்வமயம் கொச்சியில் குடியேறிய போர்ச்சுக்கீசியர் பரதவர் களுக்கு ஆதரவுகாட்டினர். அதனால் பரதவர்கள் தங்களுடைய சமயத்தைத் துறந்து கிறித்தவர்களாயினர். பரதவர்கள் போர்ச்சுக் கீசியர் துணையுடன் இந்த நாட்டைக் கவர வந்த நாயக்கர்களோடும் முசுலிம்களோடும் போராடி வந்தனர். பழைய காயல் துறைமுகம் தூர்ந்து போனது பரதவர்களுக்குப் பெரிய இழப்பாக இருந்தது. பரதவர்களின் நலனை நாடிப் போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடியைத் துறைமுகமாக்கினர். போர்ச்சுக் கீசியர் தமிழகத்தில் உலாந்தாக் காரர்களுக்கு இடமளிக்கவே பரதவர்கள் நல்ல ஆதரவைப் பெற்றனர். 1658ஆம் ஆண்டு முதல் உலாந்தாக் காரர்கள் துணையுடன் தூத்துக்குடியில் மீன் பிடிக்குந் தொழிலும் முத்துக் குளிக்கும் தொழிலும் நன்கு நடைபெற்று வந்தன. உலாந்தாக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களுக்குக் கப்பம் செலுத்தி வந்தனர். 1800ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சி எழுந்தது. கம்பெனியாரின் ஆட்சியும் அப்பால் அரும்பிய இங்கிலாந்து அரசர் ஆட்சியும் இன்று எழுந் துள்ள சுதந்திர இந்திய ஆட்சியும் முத்துக்குளிப்புக்கு ஆதரவு காட்டி வருகின்றன. முத்துக்குளிக்கும் இடங்கள் தமிழகத்தில் குமரி முனையினின்று இராமேசுவரம் வரை கிட்டத்தட்ட 100 கல் தொலைவிற்குள் முத்துக்கள் விளைகின்றன. இங்கேதான் முத்துக்குளிப்பும் நடைபெறுகின்றது. இப்பகுதி மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கே இராமேசுவரம் முதல் வைப்பாறு வரை ஒரு பிரிவு, அடுத்தது தூத்துக்குடிப் பகுதி - இது வைப்பாறு முதல் மணப்பாடுவரை நிலவுகிறது. மற்றெரு பகுதி மணப்பாடு முதல் குமரிமுனை வரை பரவி நிற்கிறது. தூத்துக்குடி யாகிய நடுப்பகுதியே முத்து மிகுதியாக உற்பத்தியாகிறது; நன்முத்தும் இங்கேதான் கிடைக்கிறது. நடுப்பகுதியில் தான் குவலயம் எங்கும் புகழ்பெற்ற கொற்கை உள்ளது. இந்தப் பகுதி - அதாவது கடலின் அடிப்பகுதி பாறைகள் உள்ள கரடு முரடான பகுதி. இவைகளைப் பார்கள் என்பார்கள்; இந்தப் பார்கள் 8 அடிக்குள்ளே இருக்கின்றன. இங்கேதான் முத்துச்சிப்பிகள் இருக்கும். சிப்பிகள் கடல் படுக்கையில் ஆழத்தில் மண் அல்லது சகதியுள்ள பகுதிகளில் காணப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. 9. சங்கமும் துங்கமும் கொற்கை கி.பி. இரண்டாவது நூற்றாண்டிற்கு முன்பே சங்கு குளிக்கும் இடமாய் விளங்கியது. இங்கே சங்கறுக்கும் தொழில் சிறப்புற்றுத் திகழ்ந்தது. இப்பட்டினம் சங்கறுக்கும் தொழில் செய்ப வர்களுக்கு நல்ல குடியேறும் இடமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.1 இப்பொழுது, கொற்கையில் நிலத்தை அகழ்ந்து பார்க்கும் பொழுது அங்குச் சங்கு அறுக்கும் தொழில் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது என்று உணர முடிகிறது. சங்கு வளைகள், மோதிரங்கள், காதணிகள், மாலைகள் முதலியன செய்யச் சங்கை யறுத்து அதில் எஞ்சிய பகுதிகளைக் குழிகளில் போட்டுப் புதைத்துள் ளார்கள். இன்று அவை அகழ்ந்து சங்கறுக்கும் தொழில் இங்கு முற்காலத்தில் நடைபெற்றதற்கு அரிய சான்றாகக் கண்டு பிடிக்கப் பெற்றுள்ளன. சங்கு நகைகள் அணிவது ஆதியில் நெய்தல் நிலப் பரதவர் களிடம் தோன்றி அப்பால் மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை முதலிய எல்லா நில மக்களிடமும் பரவியது. சங்கு அணிகலம் பூனுவது அழகுக்காக மட்டுமன்றி அருளுக்காகவும், காப்புக்காகவும் அணியப் பெற்றது. சங்கணிகளை மன்னர்களும் அரசிகளும் அணிய முன் வந்தனர். சங்கு அணிகள் அணிவது திராவிட நாகரிகத்தின் பால் எழுந்தது என்று எண்ணப்படுகிறது.2 முற்காலத்தில் தமிழகத்தில் நானில மகளிரும் சங்கு வளைகளை அணிந்து வந்ததால் மகளிர்க்கு ஒண்டொடி என்ற பெயர் எழுந்தது.3 பொன்வளை பூண்ட பூவையர் பொற்றொடி மகளிர் என்று அழைக்கப்பட்டனர். சிறு சங்குகளில் துளையிட்டு நூலில் கோத்து மாலையாகக் கழுத்தில் அணிவது இன்றும் வழக்கில் உண்டு. பணம் படைத்தோர் சங்கைப் பொன்னாற் பொதிந்து பொற் கம்பியில் கோத்து அணிவர். வெள்ளியில் பொதிந்து வெள்ளிக் கம்பியில் கோத்து அணிவதும் உண்டு. இன்று தமிழகத் தில் சங்கு அணிகலன்களைப் பூணும் வழக்கம் குன்றி வருகிறது. ஆனால் வட இந்தியாவில் சில பகுதிகளில் வாழும் மக்கள் கை நிறைய ஏராளமான அழகிய சங்கு வளைகளையும் மோதிரங்களையும் அணிந்து வருகின்றார்கள். சங்கு அணிவது சமயச் சின்னமாகவும் எண்ணப்படுகிறது. சங்குத் தொழிலால் துங்கம் பெற்றது கொற்கை. மதுரையில் மலர்ந்த மாபெரும் கடைச்சங்கத்தில் தலைவராக வீற்றிருந்த கீரனார் சங்கறுக்கும் குலத்தைச் சேர்ந்தவர் என்பர். அவர் சிவபெருமான் பாடிய பாடலில் குறையுண்டென்று கூறிய பொழுது, சிவனார். அங்கங் குலைய அரிவாளில் நெய்பூசி பங்கப் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனை கீர்கீர்என அறுக்கும் கீரனோ என்கவியை ஆராயும் உள்ளத் தவன். என்று பாடியதும், அதற்கு நக்கீரர் சங்கறுப்ப தெங்குலம் சங்கரனார்க் கேதுகுலம் பங்கமறச் சொன்னால் பழுதாமோ - சங்கை யரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல் இரந்துண்டு வாழோம் இனி. என்று கூறியதும் பண்டைக் காலத்தில் சங்கறுக்கும் தொழில் கொற்கையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது என்பதில் ஐயமில்லை. நக்கீரர் மதுரைக் கடைச்சங்கப் புலவர்களின் தலைவராய்ப் பாண்டியன் இரண்டாம் நெடுஞ்செழியன் காலத்தில் அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தார் என்று சிலர் கூறுகிறார்கள். சங்கறுக்கும் தொழில் கொற்கை, பழையகாயல் ஆகிய இடங் களில் 1200 முதல் 2000ஆம் ஆண்டுகட்கு முன் வரை நிலவியிருந்தது. அவ்விடங்களில் அகழ் ஆய்வு செய்து சங்குகளையும், காசுகளையும் கண்டெடுத்து அங்குள்ள மக்களோடெல்லாம் கலந்து பழகிச் செய்திகளைச் சேகரித்துத் தூய இந்தியச் சங்குகள் என்ற அரிய நூலை எழுதிய சென்னை மீன்வளத்துறை இயக்குநர் அறிஞர் சேம்சு ஓர்னல் இதுபற்றிக் கூறியுள்ளார்.1 இந்தச் சங்குகள் 5000 ஆண்டுகட்கு முன் உலகிலே ஒப்பற்ற நாகரீகங்களை உருவாக்கிய திராவிடர்களின் முன்னோர்கள் உருவாக்கிய சிந்துவெளி நாகரிகத்திலும், கிறித்தவ ஊழி அரும்பும் முன் எழுந்த ஆதித்த நல்லூர்த் தமிழர் பண்பாட்டிலும் இடம் பெற்றிருந்தன. சங்குகளில் வலம்புரி, இடம்புரி என்ற இரு வகைகள் உண்டு. சாதாரண இடம்புரிச் சங்கு இன்று 25 காசுக்கு வாங்கலாம். ஆனால் வலம்புரிச் சங்கு 100, 1000 ரூபாய்கட்கு மேல் விற்கப்படுகிறது. இந்தச் சங்கு, சைவ, வைணவக் கோயில்களில் பூசைகட்குப் பயன்படுத்தப் படுகிறது. செல்வர்கள் இந்தச் சங்கை இல்லத்தில் வைத்திருந்தால் வீட்டில் நலம்பல பெருகும், செல்வம் வளரும். திருமகள் அருள் சுரக்கும் என்று எண்ணுகிறார்கள். பண்டைக் காலத்தில் தமிழர்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் பிள்ளைப்பேறு போன்ற நல்ல சமயங்களில் சங்கு ஒலிக்கச் செய்வர். செட்டி நாட்டுப் பகுதியில் இது வழக்கில் இன்றும் உள்ளது. மரணச் சடங்குகளிலும் ஒலிக்கப் படுவது உண்டு. சங்கைத் தமிழக மக்கள் மிகத் தொன்மையான காலத்தி லிருந்து பல்வேறு நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர். சங்கு கடலில் கிடைக்கும் பொருள் என்றாலும் அது மருத நிலத்தவர் களாலும், முல்லை நிலத்தவர்களாலும், பிற நிலத்தவர்களாலும் பல்வேறு காரியங்கட்குப் பயன்படுத்தப்பட்டது. முல்லை நிலத் தெய்வமான மாயோன் கையில் சங்கு இருந்தது. அவன் தனது வெற்றியின் அறிகுறியாக அதை ஊதுவான். அது வலம்புரிச் சங்கு என்று கூறப்படுகிறது. சங்கு இன்றும் காலை, மாலை இரு வேளைகளிலும் தமிழர் தம் கோயில்களில் ஊதப்படுகிறது. சங்குகளில் நீர் வார்த்துத் தெய்வங்களை நீராட்டுவது புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. திராவிடர்கள் குடியேறிய வெளி நாடு களில் அவர்கள் தெய்வங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண் டிருந்தாலும் சங்கைப் புனிதப் பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர். தமிழர்கள் போரில் வெற்றிக்கறிகுறியாக சங்கை ஊதி வந்தனர். முற்காலத்தில் தங்கள் இல்லத்தில் நடைபெறும் நல்ல காரியங்கட்கும் கெட்ட காரியங்கட்கும் சங்கு ஊதுவது வழக்கம். இப்போது அது மங்கி வருகிறது; என்றாலும் இராமநாதபுரம் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் இல்லங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்து வாணிபச் செட்டிகளின் இல்லங்களிலும் இன்றும் விழாக்களில் சங்கூதுவது வழக்கில் இருந்து வருகிறது. முற்காலத்தில் சங்கை விளக்காகவும் பயன்படுத்தினர். மாடுகட்கு நோய் வராது தடுக்கக் கழுத்தில் சங்கைக் கட்டுவதுண்டு. இல்லங்களின் முன் சங்கைப் புதைத்து வைத்தால் அந்த இல்லங் களுக்குப் பேய், பில்லி, சூனியம் முதலியன அணுகா என்று எண்ணி வீடுகளின் வாயிலில் சங்கைப் புதைத்து வைப்பர். சங்கில் சிறு குழந்தைகட்குப் பால் வார்த்துப் புகட்டுவதுமுண்டு. உரிமைக் கவிஞர் பாரதி சங்கின் பெருமையை நன்கு உணர்ந்திருந்தார். அவர்தம் பாட்டில், சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக் கெல்லாம் எடுத்து ஓதுவோமே என்றார். புரட்சிக்கவி என்று போற்றப்படும் பாரதிதாசன், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்றார். சங்குக் குளிப்பும் முத்துக்குளிப்பும் தமிழகத்தில் பண்டு தொட்டும் அடிக்கடி நிகழ்வதுண்டு. கடலினுள் சங்குகள் வளர்ந்து முதிர்ந்ததும் முத்துக் குளிப்பதுபோல் கடலில் மூழ்கி சங்கு எடுப்பர். சிப்பிகளில் முத்து விளைவதுபோல் சங்கிலும் முத்து விளைவதுண்டு என்று பழங்காலப் புலவர்கள் கூறுவார்கள். ஆனால் சங்கு முத்துக் களைக் காணமுடியவில்லை. சங்கு பிணிதீர்க்கும் மருந்தாக மருத்துவர்களால் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. சங்கு பசுமமும், சங்குத் திராவகமும் மருந்தாகப் பயன்படுகின்றன. சங்குச் சுண்ணாம்பைச் சுவரில் பூசிக் கல்லால் தேய்த்து மெருகிட்டால் சுவர் கண்ணாடிபோல் பளபளப் பாக இருக்கும். சங்குகள் பல வகைப்படும். சிலவகைகள் எண்ணற்ற வண்ணங் களையுடையனவாய் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் அழகு வாய்ந்தவைகளாய் இருக்கின்றன. சில சங்குகள் வெள்ளியைப்போல் மின்னும். இவற்றின் மேல் தோட்டை இரசாயனப் பொருள்களால் துப்புரவாக்கி மெருகேற்றி விட்டால் மிக அழகாகக் கண்ணைக் கவர்வனவாய் இருக்கும். சங்குகளும், சிப்பிகளும், கிளிஞ்சில்களும் திருச்செந்தூர், கன்னியாகுமரி, இராமேசுவரம், அந்தமான் போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளிலே அதிகம் கிடைக்கின்றன. நம் நாட்டில் உள்ள ஏறத்தாழ 20,000 சிப்பி, சங்கு கிளிஞ்சில் முதலியவை களைச் சேகரித்து அவைகளை வகைப்படுத்தித் தொகைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும். பெயர் கொடுத்து இன்ன இனத்தைச் சேர்ந்தது இன்ன குடும்பத்தைச் சேர்ந்தது என்று எடுத்துக் காட்டி அவைகளுக் கெல்லாம் ஆங்கிலப் பெயரும் இலத்தீன் பெயரும் சூட்டி மிக அழகாக வண்ணப் படங்களுடன் கூடிய விரிவான ஒரு நூலை ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் உள்ள பேரறிஞர் ஒருவர் எழுதி யுள்ளார். 10. உலகு புகழ் அஃகசாலை அஃகசாலை என்பது தங்கச்சாலை என்ற பொருளில் பண்டைக் காலத் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்தனர். அஃகசாலை என்பது காசு நாணயம் அடிக்கும் இடம். நமது நாட்டிலுள்ள சென்னை மாநகரில் கிழக்கிந்தியக் கம்பெனியார் 18 ஆம் நூற் றாண்டில் காசடித்து வந்தனர். காசடிக்கப்பட்டு வந்த தெருவைத் தங்கசாலைத் தெரு என்று அழைத்து வந்தனர்; இன்றும் அத்தெருப் பெயர் மாற்றம் பெறாது சென்னையில் தங்கசாலைத் தெரு (Mint Street) ஆக இருந்து வருகிறது. அதைப்போல கொற்கையில் காசடிக் கப்பட்டு வந்த இடத்திற்கு அஃகசாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. கொற்கைப்பட்டினம் அழிந்து விட்டது. அஃகசாலையும் அஃகசாலைத் தெருவும் அவை இருந்த இடம் தெரியாது அடியோடு அழிந்துவிட்டன; எனினும் அத்தெருவில் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் அழியாது இருந்து வருகிறது. அப்பிள்ளையார் கோயிலை மக்கள் அஃகசாலை விநாயகர் கோயில் என்று அழைத்து வருகின் றனர். அந்தக் கோயில் சுவர்களில் சில கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த அஃகசாலையில் பொன், வெள்ளி, செம்புக் காசுகள் பல அச்சிடப்பட்டுவந்தன. இந்த அஃகசாலையில் உருவாக்கப்பட்ட காசுகள் பல என்னிடம் உள்ளன. இவ்வஃகசாலை தெருவில் காசடிக்கும் தொழிலில் ஈடுபட்ட பலர் குடியிருந்து வந்தனர். மதுரையில் ஒரு பொற்கொல்லனின் வஞ்சகச் செயலால் கோவலன் கொல்லப்பட்டதும், கண்ணகியின் சாபத்தால் மதுரை எரிந்ததும் பாண்டியன் நெடுஞ்செழியன் தான் செய்த தவறு கண்டுணர்ந்து உயிர் துறந்ததும், உடனே கொற்கையில் இளவரசனாய் இருந்த வெற்றிவேற் செழியன் அரசுக் கட்டிலை அடைந்ததும் நாடறிந்த உண்மை. ஆனால் வெற்றிவேற் செழியன் முடிசூடியதும் ஒரு பொற் கொல்லனின் வஞ்சகத்தால் பத்தினிக் கண்ணகியின் கணவன் உயிர் துறந்ததும் அதனால் தன் நகர் தீப்பற்றி அழிந்து, தன் அண்ணன் நெடுஞ்செழியன் உயிர் துறந்ததும் கண்டு மனம் வெதும்பினான். பொற்கொல்லர் இனத்தின் மீது சீற்றம் கொண்டான். கொற்கையில் இருந்த ஆயிரம் பொற் கொல்லரைத் தூக்கிலிடுமாறு ஆணையிட்டான். அரசன் ஆணைப்படி 1000 பொற் கொல்லர்கள் தூக்கிலிடப்பட்டனர்.1 ஒரு சில பொற்கொல்லர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிற் சிலர் திருநெல்வேலியில் குடி யேறினர். குடியேறிய பொற்கொல்லர்கள் தங்கள் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர் சூட்டினர். இன்றும் அத்தெரு அஃகசாலைத்தெரு என்னும் பெயரில் இருந்து வருகிறது. இத்தெரு இன்று தொண்டை நயினார் கோயிலுக்கு வடபுறம் உள்ளது. இத்தெரு அஃகசாலைத் தெரு என்று அழைக்கப்பட்டாலும் இங்கு காசுகள் அடிக்கப்படவில்லை. முற்காலத்திலும் இங்குக் காசுகள் எதுவும் அடிக்கப்படவில்லை. பாண்டிய மன்னர்கள், கிறித்தவ ஊழி அரும்புமுன் - கொற்கை தலைநகராக இருக்கும்போது - கொற்கை அஃகசாலையில் சில காசுகளை வெளியிட்டுள்ளார்கள். அவை கொற்கைப் பாண்டியர் களின் நீண்ட சதுரப் பழங்காசுகள் என்று கூறப்படும். அப்பால், தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டபின் மதுரையில் பலவிதமான உருவம் தீட்டப்பெற்ற காசுகளை வெளியிட்டார்கள். இவை நீண்ட சதுர வடிவிலும் வட்டவடிவிலும் உள்ளன. நீண்ட சதுரக்காசுகள் பழம் பாண்டியரின் நீண்ட சதுரக்காசுகள் எனப்படும். அப்பால், பாண்டியர் ஆட்சி சீர்குலைந்து பாண்டிய மன்னர் குலத்தினர் ஆங்காங்கே சிற்றரசர்கள் போல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறி ஆட்சி நடத்தி வந்தனர். அவர்களில் கொற்கை யில் குடியேறி ஆட்சி புரிந்தோர் பல காசுகளை வெளியிட்டுள்ளனர். அவை பெரும்பாலும் செம்புக் காசுகளாகவே உள்ளன. மேலும் அவைகளைக் கண்டதும் காசு ஆராய்ச்சி நிபுணர்கள் இதுபிற்காலப் பாண்டியர்களின் காசுகள் என்று கூறும் நிலையிலேயே உள்ளன. இவை தோற்றத்திலும், தன்மையில் மட்டுமல்லாமல் அதில் தீட்டப் பட்ட உருவங்களிலும் பழைய பாண்டியர் மரபிற்கு மாறான பண்பு இருப்பதை அறிய முடியும். இந்த அஃகசாலையில் அச்சிடப்பட்ட காசுகள் பெரும்பாலும் 50 ஆண்டுகட்கு முன் தண்பொருநை ஆற்றங்கரையின் இரு மருங் கிலும் உள்ள சீர்வைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பதி, மாற மங்கலம், ஆத்தூர், பழைய காயல் முதலிய இடங்களில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. நாயக்கர்கள் காலத்து நாணயங்கள் கிடைக்கின்றன. ஆயினும் அவை அனைத்தும் செம்பாகவே உள்ளன. கொற்கையில் வாழ்ந்த பிற்காலப் பாண்டியர்கள் நீண்ட சதுரக்காசுகள் எதையும் வெளியிடவில்லை. இவர்கள் வெளியிட்ட நீண்ட சதுரக் காசுகள் ஒருபுறம் யானை நிற்பதுபோலவும் மேலே சக்கரம், இணைக் கயல்கள் சுவத்திகம், சங்கு, கொடி, கண்ணாடி, தொரட்டி, நிறைகுடம் போன்ற சுமார் எட்டு அல்லது அதற்குக் குறைவான வடிவங்கள் தீட்டப்பட்டும் பின்புறம் மீன் உருவத்தைக் காட்டும் கோடுகளாலான வடிவமும், சில காசுகளில் எருதும் அதன் முன்புறம் தொட்டியிலுள்ள சிறு செடியும், முன் கூறியவாறு சக்கரம், சுவத்திகம், கண்ணாடி போன்றவற்றின் உருவங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. இக்காசுகள் சிறிதும் பெரிதுமாக வட்ட வடிவில் உள்ளன. சில காசுகள் மிளகுவற்றல் விதை அளவு சிறிதாக உள்ளன. இதில் அதிகமான சின்னங்கள் இல்லை. இக்காசுகளில் சுவத்திகம், தாமரை, யானை, கண்ட கோடரி, திரிசூலம், பிறை, நண்டு, மயில், வைணவத் திருச்சின்னம் முதலியன காணப்படுகின்றன. சில காசுகளில் குலசேகரன், சு, சுந், ச, சுந்தர, வி முதலிய எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை எதுவும் மதுரையில் அச்சிடப்படவில்லை கொற்கையி லேயே அச்சிடப்பட்டுள்ளன. ஒருசில காயலில் அச்சிடப்பட்டிருக்க லாம் என்றும் கருதப்படுகிறது. இவை கிறித்தவ ஊழிக்குமுன் இருந்து கி.பி. 300 ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் உலோவந்தால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காசுகளில் சில காசுகள் பழங்காசுகள் (புராணக்காசு) என்று கூறப்படும். இவை வெள்ளிக் காசுகள். இவைகளைப் போன்ற காசுகள் இமயந்தொட்டுக் குமரி வரை, கராச்சி தொட்டு அசாம் வரை கண்டெடுக்கப் பெற்றுள்ளன. இலங்கையிலும் இத்தகைய காசுகள் கிடைக்கின்றன. இவை எந்த மன்னரால் வெளியிடப்பட்ட காசுகள் என்று அறிஞர்களால் முடிபுகூற முடியவில்லை. ஆனால், அறிஞர் உலோவந்தால் இவை பாண்டியர் காசுகள் என்றே கூறி யுள்ளார். அதை அண்மைக்காலம் வரை பலரும் ஏற்றுக் கொள்ளா திருந்து வந்தனர். ஆனால் தற்போது போடி நாயக்கனூரில் கண் டெடுக்கப்பட்டுள்ள இதைப் போன்ற பழைய வெள்ளிக் காசுகளில் பின்பக்கம் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது, அறிஞர்களிடையே பெருந்திகைப்பை உண்டாக்கி விட்டது. அதோ, கொற்கையில் வெளியிடப்பட்ட காசுகளில் பொற் காசுகள் எதுவும் இதுவரை கிடைத்ததாக நமக்குத் தெரியவில்லை. கொற்கைப் பாண்டியர்களின் காசுகளில் சில மதுரைப் பாண்டியர் களின் காசுகளைவிடச் சிறியதாய் இருக்கின்றன. பாண்டிய மன்னர்கள் ஆதிகாலத்தில் சைவர்களாய் இருந்தனர். அப்பால் பௌத்தர்களாயும் சமணர்களாயும் மாறி இருக்கின்றனர். அவர்களது பிற்காலத்தில் வைணவர்களாயும், ஏன்? பார்ப்பனீய மதத்தைத் தழுவியும் வேத வேள்விகளில் நம்பிக்கை கொண்டும் சோமாசிப் பட்டம், தேவதீட்சிதர் பட்டம் முதலியன பெற்றும் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வைணவ சமயத்தில் நம்பிக்கை கொண்டு, அதிவீரராமன், வரதுங்கராமன், வரகுணராமன் முதலிய பெயர்கள் தாங்கியதோடு தங்கள் காசுகளில் வைணவச் சின்னமும் பொறித்துள்ளார்கள். பலகாசுகளில் கருடாழ்வார் உருவமும் உள்ளன.1 பாண்டியர்கள் ஆட்சி கொற்கையில் நிலவிய பொழுது நாட்டின் செலாவணிக்கு இன்றியமையாத காசுகள் அங்குள்ள அஃகசாலையில் அச்சடிக்கப்பெற்றன. அந்த அஃகசாலை இன்றைய கொற்கை ஊருக்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ளது. அஃக சாலைத் தெரு அழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிலிருந்த அஃகசாலையும் (Mint) அழிந்துவிட்டது. ஆனால் அத்தெருவில் இருந்த அஃகசாலைப் பிள்ளையார் கோவில் மட்டும் அழியாது இன்றும் காணப்படுவதுபற்றி முன்பே கூறப்பட்டது. குளக்கரை யொன்றில் தரை மட்டத்திற்கு 8 அடி கீழே இருக்கும் இக்கோவில் கொற்கையின் பழம்பெரும் நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அங்குப் பாண்டிய மன்னர் களால் ஏராளமான செல்வங்கள் புதைக்கப் பட்டிருப்பதாகவும் அவைகளைப் பூதங்கள் காத்து வருவதாகவும், அவற்றை வெளியே எடுப்பது எளிதான செயலன்று என்றும் எண்ணி வருகிறார்கள். இதனாலேயே அறிஞர் கால்டுவெல் போன்றவர்களைக் கூட அவ்வூர் மக்கள் கொற்கையில் அகழ்ந்து பார்க்க இடமளிக்கவில்லை. அகழ்ந்து பார்த்தால் பூதங்கள் கொன்றுவிடும் என்று தடுத்துவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்னே காயலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பழைய சாலையில் ஏராளமான முசுலிம் பொற்காசுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அவைகளில் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபி நாட்டுக் காசுகள் என்று தெரிகிறது. அவை மார்க்கோபோலோ கி.பி. 1292ஆம் ஆண்டில் இங்கு வருவதற்கு முன்னர் அரபிய வணிகர் கொண்டு வந்த காசுகளாக இருக்கலாம் என்று தெரிகிறது திருடர்க்கு அஞ்சியோ வேறு காரணங்களாலோ இவை புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பழையகாயல் நகர் இருந்த இடத்தில் புதையுண்ட பொன் நாணயங்கள் நூறாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிடக் கூடியன. முதலாம் இராசராசன் (கி.பி. 985-1013) ஆட்சியின் உச்சக் கட்டத்தில் அவன் பாண்டியர்களை வென்றிருக்கலாமென்று தெரிகிறது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் உள்ள அவனது கல்வெட்டுக்களும், இங்கே கிடைக்கும் ஏராளமான அவனது செப்புக் காசுகளும் அதை உறுதி செய்கின்றன. அப்போது பழம் பாண்டியர்களின் தலைநகராய் விளங்கிய கொற்கையின் பெயர் மாற்றப்பட்டு சோழர்களின் சொல்வழக்கான சோழேந்திர சிம்ம சதுர்வேதி மங்கலம் என்று கூறப்பட்டன என்று மதுரை மாவட்டக் கருப்பொருள் களஞ்சிய விவரத் தொகுப்பேடு கூறுகிறது.1 பாண்டியர் காசுகள் இரண்டு வித அடையாளம் உள்ளன வாகக் காணப்படுகின்றன. பாண்டியர் தம் சின்னமான மீன் இக்காசுகளில் தெளிவாகத் தெரிவதோடு பழைய நாகரி எழுத்துக் களும் காணப்படுகின்றன. பாண்டியர்களின் பொற்காசுகள் ஒன் றிரண்டு வகைகளே கிடைக்கின்றன. அவைகளும் இப்போது கிடைப்பது அரிதாகும். ஐரோப்பியர் ஒருவரிடம் உள்ள ஒருவகைப் பொற்காசு 58-8. கிரெய்ன் எடையாகும். மற்றது பேராசிரியர் வில்சன் அவர்களால் மெக்கன்சி சேகரிப்பிலிருந்து கண்டு தீட்டப் பெற்ற உருவமாகும். மூன்றாவது, மூர் அவர்களின் இந்து தெய்வ உருவங்கள் என்னும் நூலில் வெளி வந்துள்ளது. நான்காவது, இந்நூல் ஆசிரியர் சாத்தன்குளம் - அ.இராகவன் அவர்களிடம் உள்ளது. இஃதன்றி சர். டபிள்யூ. எலியட் அவர்களிடமும் பெர்சி பிரவுண் அவர்களிடமும் ஒவ்வொரு பொற்காசுகள் உள்ளன. சென்னை அட்வகேட் சீனிவாச கோபாலச்சாரி அவர்களிடம் இருந்த பாண்டியன் தனஞ்செயன் பொற்காசு தில்லி அரசாங்கத் தேசீயப் பொருட்காட்சிக்கு விற்று விடப் பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டியர் தலைநகரம் கொற்கை யில் இருந்த காலத்தில் இவை அச்சிடப்பட்டன என்று தெரிகிறது.2 இது பாண்டியன் காசு அல்ல என்று கூறுவாரும் நம் நாட்டில் உண்டு. பாண்டிய நாட்டிலும் சிறப்பாகத் தென் இந்தியாவிலும் நீண்டகாலம் வரை பொற்காசுகளே வழக்கில் இருந்து வந்தன. சிறு பொற்காசுகள் கூடப் பொன் பூட்டம் (Gold Futam) அல்லது பணம் (Fanam) அதாவது 6 பென்சு மதிப்புள்ளதாய் பெருமளவில் செலா வணியில் இருந்து வந்தது. கொற்கைப் பாண்டியர்களின் காசுகளையும், மதுரைப் பாண்டியர்களின் காசுகளையும் நன்கு ஆராய்ந்து முதன் முதலாகத் தென் இந்தியாவில் பழங்காசுகளைப் பற்றிய ஒரு நூலை வெளி யிட்டவர் வேலூர் டேனிசு லுத்தரன் மிசன்கிறித்தவ பாதிரியான சி. உலோவந்தால் என்பவரே. அவர்தம் ஆராய்ச்சிக் கருவூலமான திருநெல்வேலிக் காசுகள் என்ற சிறுநூலில் மதுரையிலும், கொற்கை யிலும் வெவ்வேறு மன்னர்கள் இருந்து கொண்டு தனித்தனியே தமக்கென்று காசுகள் வெளியிட்டிருக்கலாம் என்று குறிப்பிட் டுள்ளார். அவர் அவ்வாறு கருதுவதற்குச் சில காரணங்களும் உண்டு. பழம் பாண்டியர்கள் காசுகள் - அதாவது கொற்கையிலும், மதுரை யிலும் வெளியிடப் பட்ட காசுகள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் இரு இடங்களிலிருந்தும் வெளி யிடப் பட்ட காசுகள் வெவ்வேறு தன்மைகளையும் வெவ்வேறு விதமான சின்னங்களையும் உடையனவாய்த் திகழ்கின்றன. எனவே ஆதிகாலத்தில் கொற்கையில் மட்டும் காசு அடிக்கப்பட்டு வந்தது. அப்பால் மதுரையில் மட்டும் காசு அடிக்கப்பட்டு வந்தது. பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் மீண்டும் கொற்கையில் காசு அடிக்கப்பட்டு வந்தது என்று தெரிகிறது. சிலர் ஒரே காலத்தில் மதுரையிலும் கொற்கையிலும் காசு அடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டுக் காசுகள் உரோம் நாடுகளில் கிடைக்கப் பெறாமையால் தமிழர் உரோமரிடம் பெரும்பாலும் பண்டம் வாங்கவில்லை என ஊகிக்கப்படுகின்றது. உரோமர் காசுகள் தமிழகத்தில் ஏராளமாகக் கிடைப்பதால் உரோமர்கள் தமிழ் நாட்டில் ஏராளமாக பண்டங்கள் வாங்கினார்கள் என்று தெரிகிறது. குடி அரசுக் காலத்தவரான உரோமருடைய காசுகள் வடமேற்கு இந்தியாவில் அகப்படுகின்றன. அகத்தசு அரசர் காலம் முதல் நீரோ ஈறான தனிக்கோலருடைய பொற்காசுகள் தமிழகத்தில் பலவிடங் களில் ஆராய்ச்சி வல்லுநர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தனிக்கோலர் இரைபீநியசு காயசு, நீரோ என்போரின் சின்னம் பொறிக்கப்பட்ட காசுகள் பல, கோயம்புத்தூரில் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. அதில் இரைபீநியசின் காசுகள் ஆயிரத்தேழும் அகத்தசு காசுகள் மூன்றும் உள்ளன. தமிழகத்திலும் ஈழகத்திலும் உரோமர்களின் செம்பு, பொன் காசுகள் ஏராளமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வெளியிடப்பட்டவையாய்க் காணப்படுகின்றன. அதே பொழுது உரோம நாட்டிலோ யவன நாட்டிலோ சேர, சோழ, பாண்டிய நாட்டுக் காசுகள் எதுவும் கிடைக்கவில்லை. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் காசுகள் கொடுத்து உரோமர்கள் பண்டங்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள் என்றும், தமிழர்கள் உரோமர் அல்லது யவன நாடுகளில் உள்ள பண்டங்களைக் காசு கொடுத்து வாங்கவில்லை என்றும் அறிகிறோம். ஒரு வேளை பண்டமாற்று முறையில் வணிகம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. 11. கோநகரும் கோரக் காட்சியும் பண்டைய கொற்கை வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களின் சீரிய துறைமுகப்பட்டினம். பொன்னும் மணியும் அணியும் பொலியும் திருப்பெற்ற அன்று அது பேரூராய்த் திகழ்ந்தது. எண்ணற்ற மன்னர்கள் வந்திறங்கும் மாநகராய் விளங்கியது. கிரேக்கர்களும், உரோமர்களும், சீனர்களும், அராபியர்களும், பொனிசியர்களும், பபிலோனியர்களும், எகிப்தியர்களும் தத்தம் மரக்கலங்களில் வந்திறங்கும் சீரிய துறைமுகப்பட்டினமாய் உயர்ந்து நின்றது. தமிழ்ப் புலவர்கள் பலரும் கூடி முத்தமிழை ஆய்ந்த இடைச்சங்கம் நிலவிய மூதூராய்ப் பொலிந்தது. அங்கிருந்த கடல் 4 கல் தொலைவிற்குப் பின் வாங்கிப் போய் விட்டது. துறைமுகப்பட்டினம் என்ற பெயரை இழந்தது. அரசிருக்கை மதுரைக்கு மாற்றப்பட்டதால் கோநகர் என்ற பெருமையையும் இழந்தது. வணிகம் மறைந்தது. செல்வம் குன்றியது. மக்கள் குடி பெயர்ந்து சென்றனர். ஆனால் இயற்கை வளம் ஒரு சிறிது குன்ற வில்லை. எங்கும் பசுமை நிறைந்து இனிய காட்சி தருகிறது. அங்கு குளத்தின் நடுவே வெற்றிவேல் அம்மன்கோவில் இருக்கிறது. அங்கு ஆதியில் கண்ணகியின் சிலை இருந்ததாகவும் அது காணாமற் போனபின் அதற்குப் பதிலாக ஒரு துர்க்கையின் சிலை வைக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவலன் மதுரையில் கொலையுண்டதும், கண்ணகி சாபத் தால் மதுரை அழிந்தது : தான் செய்த தவற்றை எண்ணிப் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்தான். கொற்கையில் இளவரசனாய் இருந்த வெற்றிவேற் செழியன் மதுரை போந்து அரசுக் கட்டிலில் ஏறினான். அவன் பத்தினித் தெய்வத்தின் உள்ளத்தைச் சாந்தப்படுத்த எண்ணி ஆயிரம்பொற்கொல்லர்களைப் பலியிட்டான் என்று கூறப்படுகிறது. அத்தகைய வேந்தன் தன் துறைமுகப் பட்டினத்தில் கண்ணகிக்குச் சிலை எடுப்பித்திருத்தல் இயல்பேயாகும். அந்தக் கண்ணகியை வெற்றிவேற் செழியன் வழிபட்டிருக்கவும் கூடும். அதனால் அவளுக்கு வெற்றிவேல் அம்மன் என்று பெயர் சூட்டப் பட்டிருக்கலாம். இவ்வம்மன் செழுகை நங்கை எனவும் வழங்கப்படு கிறது. செழிய நங்கை என்பதே செழுகை நங்கை என்று திரிபுற்றிருக் கலாம். செழியன் வணங்கியமை பற்றிச் செழிய நங்கை எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அஃகசாலை விநாயகர் பாண்டிய மன்னர் காலத்துக் கொற்கையில் காசுகள் அச்சடித்து வந்தனர். இந்தக் காசு அடிக்கும் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர்.1 அஃகம் என்றால் காசு என்பது பொருள். எனவே தங்கக் காசடிக்கும் தெருவைத் தங்கசாலைத் தெரு (Mint Street) என்று அழைப்பது போலவே அக்காலத்தில் அஃகசாலை என்று அழைத் தனர் போலும்! அஃகசாலையில் உள்ள விநாயகர் அஃகசாலை விநாயகர் என்றும், அவரது கோவில் அஃகசாலை விநாயகர் கோவில் என்றும் அத்தெரு அஃகசாலை விநாயகர் கோவில் தெரு என்றும் பெயர் பெற்றிருக்கலாம். அஃகசாலையும் அஃகசாலை தெருவும் அழிந்து விட்டாலும் அங்கிருந்த விநாயகர் இன்றும் அஃகசாலை விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார். கொற்கை நகர், அழிவுற்றதும் அங்குள்ள பொற் கொல்லர்கள் திருநெல்வேலியில் குடியேறினர். அவர்கள் குடியேறிய தெரு நெல்லையில் இன்றும் அஃகசாலைத் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறது. கொற்கை, அஃகசாலை விநாயகர் கோவில் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என்று கூறப்பட்ட போதிலும் அங்கு இன்று சிவலிங்கமோ வேறு சிலைகளோ காணப்படவில்லை. விநாயகர் உருவம் மட்டுமே கொண்ட அக்கோவிலின் கருவறையைச் சுற்றிச் சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இக்கோவில் அஃக சாலை ஈசுவரமுடையார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் கொற்கை மதுரோதயநல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொற்கை அஃகசாலைப் பிள்ளையார் கோவில் கிறித்தவ ஊழிக்கு முன்பே பாண்டியப் பேரரசர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் திரு.கே.ஏ. நீலகண்டசாத்திரி தாம் எழுதிய சோழர்கள் என்ற நூலில் இந்த அஃகசாலைப்பிள்ளையார் கோவில் சோழர் பாணியில் கட்டப்பட்டது என்று கூறுகிறார்.2 இவர் இந்தக் கோயிலின் எந்த அமைப்பை ஆய்ந்து அது சோழர் பாணியில் அமைந்துள்ளது என்று கூறுகிறார் என்பது பற்றி அவரது நூலினின்றும் எதுவும் புலப்படவில்லை. ஆயிரம் ஆண்டுகட்குமுன் தமிழகத்தில் சோழர் பாணி, பல்லவர் பாணி, பாண்டியர் பாணி, என்ற பகுப்புகள் எதுவும் தோன்றியதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புகளை முதலில் எடுத்துக் காட்டியவர் பிரஞ்சுப் பேராசிரியர் சோவியோ துப்ரயீல் அவர்கள் ஆவர். அவரே திராவிடக் கட்டிடக் கலை என்ற தமது ஆங்கில நூலில் முதலில் இந்தப் பகுப்பை எடுத்துக்காட்டினார். பழம் பொருட்கள் கொற்கையிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஒன்றேகால் அடிச் சதுரச் செங்கற்கள் கிடைக்கின்றன. இங்கு நிலத்தை அகழ்ந்து பார்த்தால் சங்குத் துண்டுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. சங்குகள் வளைகளும் மோதிரங்களும் செய்வதற்காக அறுக்கப்பட்டு அதில் எஞ்சிய பாகங்கள் பூமிக்கடியில் இன்றும் கிடைக்கின்றன. 15 அடி ஆழத்தில் உப்பங்கழிகள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படு கின்றன. கொற்கையில் பல நூற்றாண்டுகளாக நிற்கும் வன்னி மரம் ஒன்றுண்டு. அது தரையை ஒட்டிச் சாய்ந்து மேலே நிமிர்ந்து நிற்கிறது. அம்மரத்தின் அடியிலுள்ள பொந்திற்கு நேர் எதிரே சாலை நடுவே சமண முனிவராகிய தீர்த்தங்கரர் சிலை ஒன்று காணப்படுகிறது. அது இடுப்பளவு மண்ணிற்குள் புதைந்து காணப்படுகிறது. இன்னும் ஒரு தீர்த்தங்கரர் சிலை ஊரை அடுத்த தோட்டம் ஒன்றில் இருக்கிறது. இவ்வூரில் கிடைத்துள்ள கல்வெட்டு ஒன்றில் ஸ்ரீவரகுண மகாராயர்க்கு யாண்டு 13-என்பது காணப்படுகிறது. அப்பட்டயத்தில் பழங்காசு ஆயிரத்து நானூறு பொன் ஏட்டு அரண்மனைக்கு மரக்கலராயர், ஆயிரம் பொன்னும் உப்புலாபத்தில் நூறு பொன்னுக்கு இருபத்தைந்து பொன்னும் செலுத்தக் கடவர். ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ஆணி முத்தும், வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கலராயர் அரண்மனைக்குச் செலுத்திவிடவும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இஃதன்றி இங்கே பழங்காசுகளும் அகப்பட்டுள்ளன. பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் மட்டுமன்றி உரோமர்கள், அரேபியர்கள், நாயக்கர்கள் காசுகளும் கிடைத்துள்ளன. முத்துக்களைவிட மதிப்பிடத் தக்க கற்களும், யவன நாட்டு மதுபானக் குப்பிகளும், உரோமர், சீனர் நாட்டிற் செய்த உடைந்த பீங்கான்கள் துண்டுகளும் பிறசிறு பொருட்களும் கிடைத்துள. சில இடங்களில் கிணறுகள் தோண்டும் பொழுது பல்வேறு விதமான வாள்களும், ஈட்டிகளும் அரிவாள் களும் கிடைத்துள்ளன. பெரிப்ளூசு ஆசிரியர் குறிப்பிடும் கோமார், கொல்கை சாலோர் என்பவை சங்க நூற்களில் குறிப்பிடப்படும் குமரி, கொற்கை என்ற பாண்டியர்களின் முத்துக் கொழிக்கும் துறைமுகப் பட்டினங்களும் சாலியூர் என்பவைகளே ஆகும். இங்கிலாந்தில் அரசர்கள் இருந்து ஆட்சி நடத்தும் பொழுது இளவரசர்கள் வேல்சு நாட்டிலிருந்து கொண்டு வேல்சு இளவரசர் என்ற பட்டத்தோடு முடி மன்னர்க்குத் துணையிருப்பது போல் மதுரைப் பாண்டிய மன்னர்க்கு இளவரசர்கள் கொற்கைக் கோமான், கொற்கையாளி, கொற்கைத் துறைவன் என்னும் பட்டங்களோடு கொற்கையில் இருந்து பாண்டிய மன்னர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தனர்.1 12. கொடியும் முத்திரையும் பாண்டிய நாடு பழம் பெரும் நாடு, பாண்டிய அரசு வலிமை வாய்ந்த பேரரசு, பாண்டியப் பார்வேந்தர்கள் பண்பும் பட்டறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள். பண்டு தொட்டுத் தங்கள் தாய் மொழியை, தமிழ் மொழியை அதோடு பிரிக்கமுடியாது இணைந் துள்ள இசை, நாடகம் முதலியவைகளோடு பேணிச் சங்கம் அமைத்து வளர்த்து வந்தவர்கள். பாண்டியர்களுக்குக் கொடி குடை, முத்திரை, முரசு கவரி, தோட்டி, சக்கரம், யானை, மதில், நீர்க்குடம், தோரணம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக் கயல், சிங்கம், தீபம், இடபம், இருக்கை முதலிய இருபத்தொரு அரசச்சின்னங்கள் உண்டு. அவற்றோடு பாண்டி மன்னர்க் கென்று தனித்த கனவட்டம் என்ற குதிரையும் உண்டு. பாண்டியப் பேரரசர்களின் கொடியும் குடையும் முடியும், கோலும் இருக்கையும் முத்திரையும் சிறப்பு வாய்ந்தவை களாகும். அவை தமிழகத்தில் நுண் மாண் நுழைபுலம் வாய்ந்த அறிஞர்களால் ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கப் பெற்றவை. இவை களின் சீரும் சிறப்பும் அறிஞர்களால் நன்கு ஆய்ந்து பாராட்டற் குரியவை. கொடி பாண்டிய நாட்டுக் கொடியைத் தமிழர்களிற் பலர் கண்டதே இல்லை. பலருக்குக் காணவேண்டும் என்ற ஆர்வமே இதுவரை எழுந்ததில்லை. பலர், இதற்கும் ஓர் ஆய்வா? என்று எளிதாகக் கூறி விடுகின்றனர். பலர் பாண்டியர் கொடி தெரியாதா? மீன்பொறிக்கப் பட்டது தானே என்று கூறி வருகின்றனர். சிலர் தமிழ் நாட்டு நாளி தழ்களிலும் திங்கள் கிழமை இதழ்களிலும் வந்துள்ளவை தாமே என்று எளிதாகக் கூறி வருகின்றனர். மீன் கொடி பாண்டியர் கொடி, மீன் கொடியேயாகும். அதை வடமொழி யாளர்கள் மீனத்துவசம் என்றும் மச்யபதாகம் என்றும் கூறுவர். பாண்டியர்கள் மீன் கொடியைத் தேர்ந்தெடுத்த பண்பே அவர்கள் திராவிட மக்கள் என்பதை நன்கு எடுத்துக் காட்டும். மீனைச் சின்னமாகக் கொண்டவர்கள் உலகில் பல நாடுகளிலும் காணப்படு கின்றனர். தமிழகத்தில் அவர்கள் மீனவர்கள் எனப்பட்டனர் இவர்கள் வேறு பல நாடுகளில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் மீனவன், மீனோன், மேனோன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த மீனவர்கள். மேனோன் என்று கேரளத்தில் அழைக்கப் படுகின்றனர். இந்த மேனோன்கள் சிந்துவெளியிலும் வாழ்ந்தனர். இஃதன்றி பபிலோன் எகிப்து கிரீற்றுத் தீவு முதலிய நாடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்த மீனவர்களுக்கும் கிறித்தவர்களின் முன்னோர் களுக்கும் தொடர்புகள் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. கிறித்தவ அறிவர்கள் கிறித்துவையே மீன் என எழுதி அதற்குப் பல தத்துவப் பொருள்களும் கூறியுள்ளனர். மீன் உருவைப் பண்டையப் பாபி லோன், எல்லம், கல்தேயா, அசீரியா, அக்கேடியா, எகிப்து, கிரீற்று, சிந்து வெளி முதலிய இடங்களில் வாழ்ந்த மக்கள் போற்றி அதற்குப் பல தெய்வீகமான தத்துவ விளக்கம் அளித் துள்ளனர். மீனில் உள்ள சிறப்பு தமிழக மன்னர்களில் சேரர் வில்லையும், சோழர் புலியையும் பாண்டியர்கள் மீனையும் சின்னமாகக் கொண்டவர்கள். பல்ல வர்கள் ஆதியில் சிங்கத்தையும், பின்னர் மாட்டையும் சின்னமாகக் கொண்டவர்கள். இராவணன் யாழைச் சின்னமாகக் கொண்டவன். இவையன்றி முற்காலத்தில் பாம்பு. கருடன், மான், கொம்புள்ள குதிரை, பன்றி, சிங்கம் யானை, குரங்கு முரசு முதலியவைகளைச் சின்னமாகக் கொண்ட மன்னர்களும் உண்டு. ஒருவன் தன் ஆட்சி யானையைப் போல் பெரிது என்பதற்காக யானையைச் சின்னமாகக் கொண்டான். ஒருவன் தன் நாட்டைக் கவர வருபவர்கள் மீது பாய்ந்து வீழ்த்திக் கொல்லும் வீரர்களை யுடைய நாடு என்பதற்குப் புலியைச் சின்னமாகக் கொண்டான். ஒருவன் தன் நாட்டைக் கவர எண்ணி வருபவர்களை எதிர்த்து அழிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறோம் என்பதைக் காட்டவில்லைச் சின்னமாகக் கொண்டான். ஒருவன் தன் நாடு செல்வச் சிறப்புற்ற நாடு என்பதைக் காட்ட மாட்டைச் சின்னமாகப் பெற்றான். இவைகளைப் போல் பாண்டியன் சிறந்த கடற்படையை யுடையவன், ஆழ் கடல்கள் அனைத்தையும் தாண்ட வல்லவன் என்ற கருத்தில் மீன் சின்னத்தைக் கொண்டான் என்று சொல் வதற்கில்லை. எவராவது அவ்வாறு கூறினால் அது மிக மிகத் தவறு என்று நாம் உறுதியாகக் கூறமுடியும். பாண்டியர்கள் மீனைச் சின்ன மாகக் கொண்டது மீனிற்கு இயற்கையாக அமைந்த ஆரிய உறுப்பின் மாட்சியை வைத்தே மீனைச் சின்னமாகக் கொண்டனர் என்று தெரிகிறது. கண்களின் மாட்சி மீன் கண்கள் மாட்சிக்குரியன! அவை வட்டமானவை. கண் களுக்கு இமையே இல்லை. மீன் குஞ்சுகள் தாய் மீனின் அண்மையில் நின்று இரைதேடிக் கொண்டிருக்கும். தாய் மீனோ எப்பொழுதும் தன் குஞ்சுகள் மீதே கண் வைத்துக் கொண்டு நிற்கும். பகைவர்கள் எவரும் குஞ்சுகளின் அருகில் வந்தால், நொடிப்பொழுதிலே அவர்கள் மீது பாய்ந்து அடித்து விரட்டிவிடும். மீன்களுக்கு இமைகள் இல்லாததால் இமைக்கும் நேரம்கூட தன் குஞ்சுகளை மறந்தோ, அல்லது கவனியாமலோ இருப்பதில்லை. இந்த அரிய இயற்கை நியதியைக் கண்ட தமிழ் மக்கள் சிறப் பாகப் பாண்டிய நாட்டு மக்கள் தங்கள் தெய்வத்தை மீனாட்சியாக - மீன் கண்ணியாகக் கண்டனர். மதுரையில் உள்ள பாண்டியர்களின் குலதெய்வத்தை மீனாட்சியாகக் கொண்டனர். இவள் கயல்வழி, கயற்கண்ணி, அங்கயற் கண்ணி, மீனலோசனி, மீனாட்சி, மீன் கண்ணி என்றெல்லாம் அழைக்கப்படுவாள். பொதுவாகத் தமிழர்கள், தெய்வங்கள் இமையாதவை என்று கூறுவர். இமையிருந்தால் ஒரு வேளையில் இமைக்கவும் நேரிடலாம். எனவே தம் தெய்வத்தை இமைக்காத மீன் கண்ணியாகக் கண்டனர். பாண்டியர்களின் பழம் பெரும் தெய்வமாகிய மீன் கண்ணி (மீனாட்சி), என்றும், எப்பொழுதும் தன் மக்களையே பார்த்துக் கொண்டிருப்பவள். அவள் தம் மக்களுக்கு இன்னல் வரப்போகிறது என்பதை உணர்ந்தால் ஒரு விநாடியில் அவர்களின் அருகே வந்து அவர்களைப் பாதுகாப்பாள் என்ற உண்மையை உருப்படுத்தவே, பாண்டியர்கள் மீன் கண்களை உடைய தெய்வத்தைப் பெற்றனர். மீன் கண்ணியின், அருந்தவ மக்களாகிய பாண்டியப் பேரரசர் களும் மீனைப்போல், மீனாட்சியைப்போல் இமையாது தம் குடி மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு இன்னல் வரும் என்பதை உணர்ந்தால் ஒரு நொடிக்குள் வந்து அதை அகற்றும் தன்மையும் வன்மையும் பண்பும் அன்பும் வாய்ந்தவர்கள் என்பதைக் காட்டவே தங்களின் அரசசின்னமாக மீனைக் கொண்டனர். மீனவர்கள் என்ற பெயரைத் தாங்கினர். தங்கள் நாட்டை மீனாடு என்று கூறவும் விரும்பினர். மீனை அட்டமங்கலப் பொருளாகக் கொண்டனர். மீன் மங்கலச் சொல்லில் ஒன்றாக அமைக்கப்பட்டது இறைவன் மீனாக வந்து உலகத்தைக் காத்த கதையையும் கொண் டனர். பண்டைக் காலத்தில் தேவன் நோவாவிடம் போந்து நோவாவும் அவள் மக்களும் உறவினர்களும் பிற உயிரினங்களும் ஒரு பேழையின் மூலம் பெரிய வெள்ளத்தினின்று தப்புமாறு செய்யப்பெற்றது என்று கிறித்தவர்களின் மறைநூல் கூறுகிறது.1 அதே போல தமிழகத்தைச் சத்தியவிரதன் என்னும் பாண்டிய மன்னன் மக்களைப் பெரும் வெள்ளத்தினின்று காத்துள்ளான் பண்டைய தமிழகம் (இலெமூரியா) கடல் கோளால் அழிவதற்கு முன் பாண்டியன் சத்திய விரதனுக்கு ஒரு பெரிய கடற்கோள் எழப் போவதை முன்னெச்சரிக்கையாக ஒரு மீன் கூறி அவனையும் அவன் உறவினர்களையும் ஒரு தோணியிலேற்றிக் கொற்கையும் மன்னார் குடாக்கடலும் ஒருங்கு சேர்ந்த இடத்தில் கலக்கும் தண்பொருநை ஆற்றின் மூலம் தனது கொம்பால் இழுத்து வந்து மலைய மலைமீது (பொதிகை மலைமீது) கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகிறது.1 திருமால் மீன் அவதாரம் பூண்டான் என்று வைணவ மறை கூறு கின்றது. இத்தகைய பெரும் வெள்ளப் பெருக்கைப் பற்றிய கதை களை சீனர்களும் கல்தேயரும், கிரேக்கர்களும் கூறிவந்துள்ளனர். மீன் சின்னம் பண்டையத் திராவிட மக்களோடு இணைத்திருந்தது என்று இந்தப் பழங்கதைகளினின்று நாம் நன்கு தெரிகின்றோம். தொல்பொருள் ஆராய்ச்சி மிக்க அறிஞர்கள் எல்லம் நாட்டின் தலைநகராகிய ஊரில் வாழ்ந்த ஆபிரகாம் என்னும் முதியோன் மரபிலே கிறித்து பெருமானும், முகம்மது என்னும் தெய்வத்தூதரும் தோன்றினர் என்று கூறப்படுகிறது.2 எல்லம், ஊரும், திராவிட நாட்டோடும் திராவிட மக்களோடும் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தாக இன்றைய அறிஞர்களால் கருதப் பெறுகிறது. மேலும் கிறித்து, மீன் சின்னம் என்று கிறித்தவ மறையை நன்கறிந்த ஆராய்ச்சி விற்பன்னர்கள் கூறி வருகின்றனர். கிறித்துவிற்கு முன்னுள்ள ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் இரு மீன்களின் உருவம் தீட்டப் பெற்றிருப்பதும் நமது கருத்தை அரண் செய்வதாகத் திகழ்கிறது. முற்காலக் கிறித்தவத் திருச்சபைகளின் எழுத்தாளர்கள், மீன், மீட்பரின் (கிறிதுவின்) பிரதிநிதித்துவம் பெற்றதாக விளங்கியது என்று உரிமை பாராட்டுகிறார்கள். மீனைக் குறிப்பிடும் இச்தைசு (Ichthys) என்ற பதம் கிரேக்க மொழியினின்று வந்ததாக எண்ணப் படுகிறது. அதன் பொருள் இயேசுகிறித்து கடவுள் மகன், மீட்பர் என்றும் கூறப்படுகிறது. ஒருவர் இயேசுவை மக்களின் மீனவன் (The fisher of Men) என்று கூறுகிறார். மற்றொரு அறிஞர் இயேசு மீட்பரை மீன் என்றே உருவகப்படுத்தலாம் என்கிறார். ஓர் அறிஞர் அவர் மீனாக இருந்து மீனுக்கு நடுவே வாழ்கிறார் என்கிறார். பிறிதொருவர் நாம் இச்தைசு போன்று சிறு மீனாக இருக்கின்றோம். மீட்பர் நீரில் பிறந்தார்; எஞ்சிய நீரினால் நம்மை மீட்கிறார். இதை கிறித்தவ மேதை கே.எம்.பால் தம் நூலில் மிக விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.3 முற்காலத்தில் எல்லம் நாட்டில் வாழ்ந்த யூதர்கள் சமயப் பற்று மிக்கவர்கள். திராவிட மக்களின் முன்னோர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். அவர்கள் சமயம், பண்பாடு, பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் - இரத்த சம்பந்தமான உறவும் கொண்டவர்களாய் இருந்தனர் என்று அறிஞர்கள் கூறிவருகி றார்கள். யூதர்கள் மீன் கொடியைக் கொண்டிருந்தனர். அவர்களின் சவக்குழியில் கட்டப்பெற்ற கல்லறைகள் மீது இரு மீன்கள் பொறிக்கப் பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பாண்டியர்களின் கொடியைப் போன்று இரு மீன்கள் செங்குத்தாய் நிற்பதைப் போன்ற சின்னங்களை கிறித்துவுக்கு முன் வாழ்ந்தமக்கள் பெற்றிருந்தனர். (படம் பார்க்க) இதே போன்ற இருமீன் வடிவங்கள் பாண்டியர்கள் காலத்தில் எடுப்பிக்கப் பெற்ற கோயில்களின் மேற்கூரைகளிலும் தெப்பக்குளங்களில் உள்ள படிகளில் கூடக் காணப்படுகின்றன. திருக்குற்றாலத்தில் உள்ள சில மண்டங்களில் உள்ள கூரைகளில் பாவப்பெற்ற கற்பாளங்களிலும் இன்றும் காணப்படுகின்றன. கி.பி. 200ஆம் ஆண்டிலுள்ள இலினிசியா அமியா என்பவரின் கல்லறைமீது இரு மீன்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதில் கடவுளின் மகனாகிய இயேசு கிறித்து மக்களின் மீட்பர் ஆவர். அவர் மீன்களால் அழகூட்டப்பெற்றிருக்கிறார் - அது வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்தவர்களை நிழலுருப்படுத்திக் காட்டும் என்ற பொருளைத் தரும் வாக்கியம் தீட்டப்பெற்றுள்ளது.1 கொடியும் கயலும் மீனுக்கு ஒரு தத்துவமும், பெருந் தெய்வீகத் தன்மையும் உண்டு. அதன் கண்களின் அமைப்பு கருத்தாழம் வாய்ந்தது. கயல் கண்கள், ஆட்சியின் போக்கை அறிவுறுத்துவதாக அமைந்துள்ள. எனவே பாண்டியர் தம் கொடியில் மீனைச் சின்னமாகப் பொறித்துக் கொண்டனர், ஆனால் மீனை எந்த நிலையில் பொறித்தனர்? கொடியில் காணப்பட வேண்டிய மீன் ஒன்றா - இரண்டா? என்று நம்மில் பலர் உணரவே இல்லை. தமிழ் நாட்டு வெளியீடுகளிலும், புத்தகங்களிலும் இதுவரை பாண்டியன் கொடியில் நீந்துவதுபோல ஒரு மீனையோ இரண்டு மீனையோ, தீட்டி வருகின்றார்கள். இது மிகத் தவறு. பாண்டியர் கொடியில் இரு மீன்கள் செங்குத்தாக நிற்பது போல் தீட்டப் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள வரலாற்று அறிஞர்களும் புலவர்களும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. பாண்டியர்கள் கொடி, மீன் கொடி, கொடியில் ஒரு மீன் பொறித்தால் என்ன இரண்டு மீன் பொறித்தால் என்ன? இதைப் பற்றியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் வீண் வேலை என்று வேடிக்கை பேசி வருகின்றார்கள். இஃது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறதே ஒழிய ஆராய்ச்சியைக் காட்டாது. கொடியை உருவாக்கியவர்கள் நீண்டநாள் சிந்தித்து அதில் பல தத்துவங்கள் விளங்க அதை உருவாக்கியுள்ளார்கள். அதை எண்ணாது இட்லர்போல், இட்டதே காட்சி; எழுதியதே கோலம் என்று நம் நாட்டிலும் சிலர் பேசி வருவதும் எழுதி வருவதும் வருந்தற்குரியது. கொடிகளில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும் புள்ளிக்கும் பொருள் உண்டு; தத்துவங்கள் உண்டு. இன்றைய உருசியக் கொடியில் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) பொறித்திருக் கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் தம் விருப்பம் போல் அந்த விண்மீனைத் தீட்டிக். கொள்ளமுடியாது உருசியக் கொடியில் இடது பக்கம் மேலே ஒரு மூலையில் சுத்தியலும் அரிவாளும் அதன் மேலே ஐந்து முனையுள்ள விண்மீனும் அதைச் சுற்றிப் பொன் வடிவில் விளிம்பும் பொறிக்கப்படவேண்டும். விண்மீனின் ஐந்து முனைக்கும் ஐந்து பொருள் உண்டு என்று கூறுகிறார்கள். நட்சத் திரந்தான் தீட்டப்படவேண்டுமா? - ஒரு நட்சத்திரமா இரண்டு நட்சத்திரமா ஐந்து மூலையுள்ளதா மூன்று மூலை யுள்ளதா? என்று கேட்பது தவறு, என்று எவரும் அறிவர். விண்மீன் கம்யூனிட் கட்சியைக் குறிக்கும். அதன் ஐந்து முனையும் ஐந்து கம்யூனிட் தத்துவங்களைக் குறிக்கும். சுத்தியல் தொழிலாளர்களையும், பன்னரி வாள் உழவர்களையும் குறிக்கும் என்றும் உருசியர்கள் கூறுகின்றனர். இட்லர் தன் கொடியில் சுவத்திகம் தீட்டவேண்டும் என்றான். எவனோ ஒருவன் இதுதான் சுவத்திகம் என்று கொடியில் வேறொன்றைத் தீட்டும்படி செய்து விட்டான். இட்லரும் செர்மன் மக்களும் சுவத்திகா (?) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வணங் கினர். உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள சின்னங்களின் நிபுணர் ஒருவர் செர்மன் கொடியில் இருப்பது சுவத்திகா அல்ல அது கெபத்திகா என்றார். சுவத்திகா என்றால் நன்மை. மங்களம் என்று பொருள்படும்; கெபத்திகா என்றால் அழிவு, தீமை, நாசம் என்று பொருள்படும் என அமெரிக்காவிலுள்ள லுக் (Look) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வரைந்தார். அதை அறிந்தான் இட்லர். எதற்கும் அஞ்சாத இட்லர், இதை அறிந்து அஞ்சினான்; அழுதான். உடனே பல நிபுணர்களை அழைத்து ஆலோசித்தான். தனது கொடி யில் இருப்பது சுவத்திகா அல்ல கெபத்திகா என்பதை அறிந்தான். உடனே அதை மாற்றி அமைத்தான். ஆனாலும் அவன் அழிந் தொழிந்தான். அவன் நாடு வீழ்ந்தது; அங்கு விதைத்த தீமை விளைந் தது; நாட்டின் வாழ்வு குன்றியது நாடு இரண்டாகப் பிளந்தது; தோல்வி மேல் தோல்வி எழுந்தது. இவ்வுண்மை உலக வரலாற்று ஏடுகளில் பதிவு பெற்றது. இட்லரும் அவனது கட்சியும் அவனது அரசாங்கமும் அடியோடு வீழ்ந்து, இருந்த இடம் தெரியாது மறைந்து ஒழிந்தன. சுவத்திகாவை உருவாக்க ஒரு சிலுவை போட்டு (+) அதன் நடுக்கோட்டின் உச்சியிலிருந்து வலது புறம் ஒரு சிறு கோடு இழுக்கவேண்டும் அப்படியே ஒவ்வொரு கோட்டின் நுனியிலும் ஒரு சிறு கோடு வலப்புறமாக இழுத்து 4 கோடுகள் போட்டால் சுவத்திகாவாகும். ஆனால் கெபத்திகா என்பதற்கு சிலுவையின் ஒவ்வொரு கோட்டின் இறுதியினின்றும் இடது புறம் ஒரு கோடு இழுக்கப்பட வேண்டும். ஒரு சில கோடுகளும் புள்ளி களும் நமது வாழ்வையும் நாட்டின் வெற்றியையும் தீர்மானிக்கும் ஆற்றல் உடையனவா என்று பகுத்தறிவுவாதிகள் சிலர் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் எவரும் தம்பெயரையோ தனது இல்லப் பெயரையோ தீமை என்றோ, சாவு என்றோ அழிவு என்றோ வைத்துக் கொள்வதில்லையே. அப்படியே நமது கொடியும் சின்னமும் நல்லனவாக, உயரிய பொருள் உள்ளனவாக அழகிய பெயராக இருக்க வேண்டாமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். பாண்டியர் மீன் கொடி நான் இலங்கையில் இருக்கும் பொழுது, பாண்டியன் கொடி எப்படி இருக்கும் என்று சிந்தித்தேன். ஒரு சிங்கள நண்பர் எனக்கு ஒரு பழைய பாண்டியர் கொடியைக் காட்டினார். அதை நான் பாண்டியன் கொடி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிங்களவனுக்குப் பாண்டியன் கொடியைப் பற்றி என்ன தெரியும்? - நான் தமிழன், பாண்டிய நாட்டான். கொற்கைக்கு அண்மையில் உள்ள ஊரில் பிறந்தவன் என்ற ஆணவமே யாகும். அப்பால் சில காலம் கழித்து நான் பழைய காசுகளைப் பற்றி ஆய்ந்த பொழுது கோட்ரிங்டன் என்னும் ஒரு காசு ஆய்வு நிபுணர், தம் நூலில் இளவரசன் சடவர்மன் சுந்தர பாண்டியன் இலங்கையை வென்ற தாக உரிமை பாராட்டுகிறான். சடவர்மன் வீரபாண்டியன் II ஈழ நாட்டை வென்று (கி.பி. 1253/4-1275) ஒரு இலங்கை மன்னனைக் கொன்று அவன் படையையும், தேரையும், கருவூலங்களையும் அரசக் கட்டிலையும் மணி முடியையும், செங்கோலையும் கழுத்து மாலைகளையும் பிறவற்றையும் கவர்ந்து கொண்டு தனது இரட்டை மீன்கள் பொறித்த மீன் கொடியைத் திருக்கோண மலையில் பொறித் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.1 நான் இதைப் படித்துமுடித்தும் மறுநாளே ஈழ நாட்டின் சிறந்த துறைமுகப் பட்டினமாய் விளங்கும் திருக்கோண மலைக்குப் போய், மலையெங்கும் பாண்டியன் கொடியை தேடி அலைந்தேன். பின் ஒரு நண்பரின் உதவியால் திருக்கோண மலைமீது பொறிக்கப்பட்ட பாண்டியனின் மீன் கொடியைக் கண்டேன். இது பாண்டிய அரசனால் பொறித்த உண்மையானகொடி என்று உளம் பூரித்தேன். பிற்காலத்தில் இடச்சுக்காரர்கள் அக்கொடியைப் பொறித்துள்ள பாறையை அப்படியே உடைத்து, தங்களின் தூய பெரடரிக் கோட்டை என்ற அரண்மீது வைத்துக்கட்டியுள்ளார்கள். அதை ஒளிப் படம் எடுத்து வந்தேன். அப்படம் இங்கு வெளியிடப் பட்டுள்ளது. பாண்டியன் வடஇந்தியாவை வென்று இமயத்தின் மீது குடையை நாட்டினான் என்றும் ஈழத்தைவென்று கோண மலை மீது இணைக்கயல்கள் தீட்டிய கொடியைப் பொறித்தான் என்றும் தமிழ்ப் புலவர்கள் மன்னர்களுக்குப் புகழ்மாலை சூட்டுவது உண்டு. அந்தப் பாக்களில் எல்லாம் இணைக்கயல்கள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளன. மேலும் வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் ஈராசு அடிக ளாரும் தம் ஆய்வுக் கண்கொண்டு நன்கு ஆய்ந்து பாண்டியர்களின் சின்னம் இரு மீன்களே என்று கூறியுள்ளனர்.2 அதோடு உலகில் உள்ள பல நாடுகளிலும் வாழும் திராவிட இனத்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் மீனை வழிபட்டு வருகின்றார்கள். அதேபோல் பண்டையத் தமிழகத்தில் உள்ள பரதவர்களும் சுறா மீன் கொம்பை நட்டு வழிபட்டு வந்தனர் என்று அறிகிறோம். பாண்டியர்கள் தம் கொடியில் இரு மீன்கள் பொறித்திருப்பது இரு கண்கள் காணப்படவேண்டும் என்பதற்கேயாம். அத்துடன் மீன்கள் செங்குத்தாய் நிற்பதுபோல் தீட்டப்பட்டிருப்பது பாண்டிய நாட்டின் வலிமையைக் காட்டுவதற்கேயாகும். முத்திரைகள் பாண்டிய மன்னர்களின் சொந்த முத்திரையில் செங்குத்தாய் நிற்கும் இரு மீன்கள் பொறிக்கப்பட்டு நடுவில் விளக்குப் போன்ற ஒரு உருவம் தீட்டப்பட்டிருக்கிறது. அரசு சம்பந்தப்பட்ட பொது முத்திரைகளில் தமிழ் அரசு என்பதைக் காட்டும் முறையில் இரு மீன்கள் செங்குத்தாய் நிற்கும், அருகே புலி, வில் உருவம் முதலிய தீட்டப் பெற்றிருக்கும். சில முத்திரைகளில் கீழே வில்லைப் பொறித்து அதன் மீது இணைக் கயலும் புலியும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர்கள் ஒரு கோயிலுக்கு அளித்த மானியத்தைக் குறிப்பிடும் செப்பேட்டில் உள்ள முத்திரையில் மீனுக்கு மேலே குடையும் அருகே சாமரங்களும் காணப்படுகின்றன. சோழர்கள் அளித்த சாசனங்களில் புலியின் மேலே குடையும் இருமருங்கினும் இரு கவரி களும் காணப்படுகின்றன. காசுகள் சிலவற்றில் வில், மீன்கள், புலி ஆகிய உருவங்களைப் பொறித்து இரு புறங்களிலும் திருவிளக்குகள் திகழுமாறு செய்யப் பட்டுள்ளன. என்னிடம் 10 முத்திரைகள் உள்ளன. இவை அனைத்திலும் - சோழர் கல்வெட்டுகளாய் இருந்தாலும் பாண்டியர் செப்பேடு களாய் இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர் எனும் மூவர் தம் அரச சின்னங்களும் தீட்டப்பட்டுள்ளன. இங்கு வேறோர் இடத்தில் இரு மன்னர்களின் இரு சாசனங்களின் உருவப் படங்கள் தரப்பட்டுள்ளன. 13. மன்னரும் பின்னரும் கொற்கை, பாண்டியப் பேரரசின் பழம்பெரும் கோநகரம், பாண்டிய நாட்டின் பண்பு வாய்ந்த துறைமுகப்பட்டினம்; இடைச் சங்கம் நிலவிய மூதூர்; பெரும் புலமை வாய்ந்த புலவர்களும் பாண்டிய மன்னர்களும் ஒருங்கிருந்து முத்தமிழ் வளர்த்த இடைச் சங்கம் நிலவிய பேரூர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் ஆயிரம் கல் தொலைவிற்கு அப்பாலிருந்து கிரேக்கர்களும், யவனர்களும் உரோமர்களும் சாவகர்களும் சிங்களவர்களும் பீனிசியர்களும் எகிப்தியர்களும் பபிலோனியர்களும் வணிகத்தின் பொருட்டுப் பெரிய மரக்கலங்களில் வந்திறங்கிய பாண்டிய மன்னர் களின் அகநகராயும் புறநகராயும் கொள்ளப்பட்ட மாநகராகும். பொதுவாகத் தமிழ்நாட்டிற்கும் சிறப்பாகப் பாண்டிய நாட்டிற்கும் வாழ்வளித்த கொற்கை முத்துக் கொழித்த பொற்புறும் புனித நகரமாகும். இங்கேதான் அயல்நாட்டிலிருந்து கோடி கோடியாகப் பொற்காசுகளும் பொற்பாளங்களும் வந்து குவிந்தன. கொற்கை பொன்கொழிக்கும் பொற்புறும் புனிதமான பட்டினம் ஆகும். இங்குப் பாண்டிய மன்னர்கள், வாழையடி வாழையென, தலைமுறையாகச் செல்வப் பெருக்குடன் வாழ்ந்து வந்தனர். கொற்கை மன்னர்களின் மாளிகை அற்புதமான அழகொளிரும் விண்முட்டும் மாடங்களையுடையதாய் விளங்கியது. இங்குப் பல அரண்மனை களும், உப்பரிகைகளும் உய்யானவனங்களும் கோட்டை கொத்தளங் களும் கடற்படையும், தரைப்படையும், தேர்ப்படையும், பரிப்படை யும், கரிப்படையும், விற்படையும், வேல்படையும், இருந்து வந்தன. கொற்கையில் பழம்பாண்டியர்களின் ஆட்சி கி.மு.500 முதல் கி.பி. 300 வரை இருந்திருக்கலாம் என்று வரலாற்றுப் புலவர் சிலர் வரைந்துள்ளார்கள். அப்பால் தலைநகர் மதுரைக்கு மாற்றப் பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நுண்ணறிவு வாய்ந்த வரலாற்று ஆய்வு மிக்க அறிஞர்கள் கி.மு.3 அல்லது 4 ஆவது நூற்றாண்டிலே பாண்டியர் கோநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.1 மதுரையில் தலைநகரம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாண்டிய மன்னர் மதுரை அருகில் உள்ள மணலூர் அல்லது கலியாணபுரம் என்னும் ஊரில் இருந்தனர் என்று தெரிகிறது. வடபாண்டிய நாட்டிலுள்ள மதுரை கோநகராகச் சிறப்புப் பெற்றெழுந்தாலும் தென் பாண்டி நாடும் கொற்கையும் பாண்டியர்களுக்குப் புனித பூமியாக இருந்துவந்தன. கொற்கை இரண்டாவது தலைநகராக நீண்ட காலம் பெருமைப் படுத்தப்பட்டு வந்தது. மன்னர் மதுரையிலும் மன்னனின் தம்பியோ, மகனோ இளவரசனாய் கொற்கைக் கோமான் என்னும் பட்டத் துடன் கொற்கையிலும் இருந்து வருவான். இளவரசன் கொற்கையில் இருந்து கடல் வணிகத்தைக் கவனித்து வருவான். கொற்கைப் பட்டினத்தில் இடைச் சங்கம் நிலவிய காலத்தில் - அதாவது தலைநகர் நான்மாடக் கூடலுக்கு மாற்றப்படுமுன் வாழ்ந்த கொற்கை மன்னர்கள் ஐம்பத்தொன்பது பேர் என்று கூறப்படும்; எழுபத்தொன்பது பேர் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் இறுதி யில் வாழ்ந்த பாண்டியன் முடத்திருமாறன் என்பவன் ஆவான். கொற்கைக் கோநகரம் என்ற பெயர் மாற்றப்பட்டு, கூடலுக்கு - (மதுரை) கோநகரம் என்ற பெயர் எழுந்ததும் கொற்கைப்பட்டினம் சிறப்பிழந்தது. ஆனால், அரசன் கூடலுக்குப் போய்விட்டாலும் இளவரசன் கொற்கையிலே இருந்து பாண்டிய அரசுக்குத் துணை யாக இருந்து வந்தான். இளவரசர்கள், கொற்கைக் கோமான், கொற்கை இளவரசர் என்று பெயர் சூட்டி வந்தனர். இவர்கள் அரசன் இறந்தால் இங்கிருந்து மதுரை போய் அரசு கட்டிலில் ஏறி மணிமுடியும் செங்கோலும் தாங்குவர். கொற்கையாளி, கொற்கை வேந்தன் என்ற பட்டமும் சூடிக் கொள்வர். ஆனால், கொற்கை கடற்கரைப் பட்டினமாய் இருந்தது. கடல் கொற்கையினின்று நான்கு கல் தொலைவிற்குப் பின்தள்ளிப் போகவே, கொற்கையில், கப்பல்கள் வந்து நிற்கும் வசதியை குன்றியது அதனால் துறைமுகம் என்னும் பெயரை இழக்க நேரிட்டது துறை முகம் பழைய காயலுக்கு மாற்றப்பெற்றது. கொற்கை, எஞ்சியிருந்த ஒரு சிறு பெருமையையும் இழந்தது. மதுரையில் பாண்டியப் பேரரசு வீழ்ந்ததும் பாண்டிய இளவரசர்கள் தென் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினர். கொற்கையிலும், திருநெல்வேலியிலும் தென்காசியிலும் பிறவிடங்களிலும் இருந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்தனர். கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசு மதுரையில் நிலைகுலைந்தது. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுதது போல முசுலிம்களும், நாயக்கர்களும் ஆங்கிலேயர்களும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி மக்களை அடிமைகளாக்கி சுரண்டி வாழ்ந்து வந்தனர். மாறவர்மன் குலசேகரபாண்டியனுடைய மக்கள் அரசுக் கட்டிலுக்காகச் சண்டையிட்டனர். தில்லி சுல்தான் உதவியைப் பாண்டியன் மகன் ஒருவன் நாடினான். சுல்தானின் படைவீரன் மாலிக்கபூர் பெரும்படையுடன் வந்து நாட்டைச் சூறையாடிப் பாண்டிய அரச குமாரர்களை அடித்து விரட்டி நாட்டிலுள்ள பொன்னையும் மணியையும் கொள்ளையடித்து டில்லி சுல்தானுக்கு அனுப்பிவிட்டு அரசு கட்டிலில் ஏறிக்கொண்டான். கி.பி. 1330 முதல் 1378 வரை மதுரையில் முசுலிம் ஆட்சி எழுந்தது. அப்பால் முசுலிம் ஆட்சியாளர்களை நாயக்கர்கள் விரட்டி விட்டு அரசுகட்டிலைக் கைப்பற்றிக் கொண்டனர். இறுதியாக ஆங்கில அரசு ஆட்சிபீடத் தில் அமர்ந்தது 1947இல் இந்தியா விடுதலை பெற்றது; பாண்டிய நாடு - இன்று இந்திய ஆட்சிக்குள் இருந்துவருகிறது. கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண் டின் பிற்பகுதி வரை தென்பாண்டி நாட்டில் பாண்டிய அரச குலத்தில் உள்ள சிலர் சிற்றரசர்கள் போல் ஆங்காங்கு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் நெல்லை தென்காசி. கரிவலம்வந்தநல்லூர், கொற்கை முதலிய ஊர்களில் இருந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். இவர்கள் கொற்கைப் பாண்டியன். திருநெல்வேலிப் பாண்டியன், தென்காசிப் பாண்டியன் என்று அழைக்கப் பட்டு வந்தனர். திருச்செந்தூர் மாவட்டத்தில் உள்ள சாத்தன்குளத்தில்கூட ஒரு பாண்டியன் இருந்து வந்ததாகக் கூறப்படுவது உண்டு. பாண்டியப் பேரரசு நிலைகுலைந்து உடைந்து சிதறுண்டு போயிற்று. பாண்டிய இளவரசர்கள் கொற்கையைத் தலைமைப் பதியாக வைத்துக்கொண்டு சில சிற்றூர்களில் சில இளவரசர்கள் இருந்து ஆட்சி நடத்தி வந்தனர்.1 இவர்கள் நாயக்க மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்தனர். சிறு பாளையக்காரர்கள் போல் வாழ்ந்து வாழ்க்கை நடத்தினர். என்றாலும் மீண்டும் சிதறுண்ட பாண்டியப் பேரரசைக் கட்டி உயர்த்தி விடலாம் என்று கனவு கண்டனர். சிலர், அதற்காக வைணவ சமயத்தைத் தழுவித் திருமாலை வேண்டி நின்றனர். சிலர் பார்ப்பனக் குருமார்களின் சொற்படி யாகம் இயற்றி சோமாசியார் என்னும் பட்டம் தாங்கி கையில் இருந்த காசுகளையும் பார்ப்பனர்களுக்குப் பாதகாணிக்கை வைத்து வணங்கியும் பயனின்றி வறுமையால் வாடி மறைந்தனர். சிலர் மனைவி மக்கள் அணிந்துள்ள நகைகளை விற்றுக் கோயில்கள் கட்டி ஆட்சியைப் பெற அழுது தொழுது நடைப் பிணங்களாய்த் திரிந்தலைந்து மறைந்தனர் இறுதியாக பாண்டியர் குடும்பம் பெயர் சொல்ல நாதியற்றுப் போய் விட்டது. இன்று அதிவீரராமபாண்டியன் வழிவந்தவர்களுள் நான் என்று கொடி வழிப்பட்டியல் காட்டி உரிமை கொண்டாட எவரும் வரக்வடிய நிலையில்லை. எனவே இந்த நாட்டில் வாழும் எல்லா இனத்தவர்களும் தாங்களே பாண்டிய குடும்பத்தினர் என்று கூறிக்கொள்ளும் நிலைமையில் இருந்து வருகிறது. இது மிக வெட்கக் கேடாகும். சங்கக் கால ஆதிப் பாண்டிய மன்னர்கள் பலர் அற நெறிபற்றி யொழுகும் ஆன்ற நெறியுடையவர்களாய் விளங்கினர். பின்னர் தோன்றிய பலர் அறநெறி வழுவி மறநெறி தழுவி வந்துள்ளனர். உற்றாரிடமும் மாற்றாரிடமும் போரில் ஈவு இரக்கமின்றி நடந்து வந்தனர். சங்கக் காலப் பாண்டியருள் மிகப் புகழ்பெற்ற பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்போன் போரில் புலியென நிற்பவன். புலிபோல் பகைவர்கள் மீது பாயும் மறக்குலப் பாண்டியன் பகைவர்களைக் கண்டதும் மார்தட்டி, சவால் விட்டு சிம்மக்குரல் எழுப்பிப் படைக்களம் புகுவான். அவனது புலிக்குரல் கேட்டுப் பகைவர்கள் கிலிகொண்டு வீழ்வர். அவன் நொடிப் பொழுதில் பகைவர்கள் மீது பாய்ந்து வெட்டி வீழ்த்திப் புறங்காட்டியோடும் படி செய்துவரும் வலிமை வாய்ந்தவன். அவன் முன்வைத்த காலை, பின்வையாத வீரமறவன்; தோல்வியே அறியாத தொல்குடித் தோன்றல்; வெற்றி முரசொலியைத் தவிர வேறு ஒலியை அவன் செவி மடுத்ததே இல்லை. இவன் பகைவர்களிடம் ஒரு சிறிதும் இரக்கங்காட்டாதவன். போரில் பகைவர்கள் தோல்வியுற்றால் அவன் பகை அரசனின் மனைவி மக்களைச் சிறைப்பிடித்து வருவான். பகைவன் தலையில் முடிசூடச் செய்து தன்முன் மண்டியிட்டு அமரச் செய்து தன் காலால் அவன் மணி முடியை இடறு வான். தோல்வியுற்ற மன்னன் தலையை மொட்டை யடித்து அவன் தலைமீது, சுற்றிலும் சாணியை வைத்து நடுவில் எண்ணெய் ஊற்றி, திரியிட்டு விளக்கேற்றி அரசனை நடைவிளக்காக்கித் தன் அரண்மனை வாயிலில் நிற்கச் செய்வான். அவன் அரண்மனையை இடித்து வீழ்த்தி, கழுதை பூட்டிய ஏரினால் உழுது கருக்கும் குருக்கும் எருக்கும் விதைப்பான். இக்கொடுஞ் செயல் பிறகாலத் தமிழ் அரசர் சிலரிடமும் இருந்தது. இது தமிழகத் திற்கே ஒரு சாபக்கேடாக முடிந்தது! கொற்கையில் இருந்த இளவரசர்களே, மதுரையில் மன்னர்கள் காலமானதும் அரச கட்டிலை அடைபவர்களாக இருப்பர். சிலப்பதிகாரம் கூறும் நெடுஞ்செழியன் இறந்ததும் அவன் தம்பி கொற்கையாளி என்னும் பட்டந் தாங்கிய இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை சென்று மணி முடி சூடி செங்கோல் ஏந்தி, அரசு கட்டிலில் அமர்ந்தான். பாண்டியப் பேரரசு உடைந்தபின் தென்பாண்டி நாட்டில் வாழ்ந்து வந்த பாண்டிய மன்னர்களிற் சிலரது பெயர்களும் அவர்கள் வாழ்ந்த காலங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அவை அடியில் வருமாறு : 1. பராக்கிரம பாண்டியன் I கி.பி. 1387 2. பராக்கிரம பாண்டியன் II கி.பி. 1384-1415 3. பராக்கிரம பாண்டியன் III கி.பி. 1401-1435 4. சடையவர்மன் குலசேகரபாண்டியன் 1393 5. சடையவர்மன் விக்கிரமபாண்டியன் 1401-1422 6. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1422-1463 7. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் 1422-1461 8. சடையவர்மன் குலசேகரபாண்டியன் 1429-1473 9. அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியன் 1473-1506 10. சடையவர்மன் சீவல்லபன் 1534-1543 11. சடையவர்மன் பராக்கிரமகுலசேகரன் 1543-1552 12. நெல்வேலி மாறன் 1552-1564 13. சடையவர்மன் அதிவீரராமபாண்டியன் 1564-1604 14. வரதுங்கராம பாண்டியன் 1588 15. வரகுணராம குலசேகரபாண்டியன் (குலசேகர சோமாசியார்) 1613 16. வரகுணராம பாண்டிய குலசேகரதேவ தீட்சிதர் 1748 பாண்டிய மரபினர்களின் ஆட்சி கி.பி. 1748 ஆம் ஆண்டு வரை தலைதூக்கி வந்துள்ளது என்று தெரிகிறது. இயேசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருமார்களின் குறிப்புப்படி பாண்டியர் ஆட்சி கி.பி. 1523 முதல் 1666 வரை நிலவிப் படிப்படியாய் அழிந்து மறைந்தது என்று அறிகிறோம். கி.பி. 1756-ல் கிழக்கிந்தியக் கம்பெனி மதுரை, திருநெல்வேலிச் சீமைகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆங்காங்கே சில குலத்துரோகிகளை அழைத்து மன்னர் சாகிர்தார், சமீன்தார் என்றும் பட்டம் அளித்து மக்களை ஆட்சியாளர்களுக்கு அடிமைப்படுத்தி, வரி வசூல் செய்து, வேண்டியவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு தங்களுக்கும் சிறிது கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டனர். பாண்டிய நாட்டின் சமீன்தார்கள் எவராயிருப் பினும் அவர்கள் அனைவரும் இந்த நாட்டை அடிமைப்படுத்தி இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துவந்த பகைவர்களின் கையாட்களே என்பதை நாடு என்றும் மறப்பதற்கில்லை. கொற்கை, பழம் பாண்டியர்கள் வாழ்ந்த மூதூர், இடைச்சங்க மும் எண்ணற்ற புலவர்களும் கூடி தமிழாய்ந்த நல்லூர். பாண்டியப் பேரரசின் பண்புமிக்க இணைக் கயல்கள் பொறித்த செங்கொடி பறந்த பேரூர். கிரேக்கர்களும் யவனர்களும் உரோமர்களும் அராபியர்களும் பிறரும் மனம் உவந்து வந்து குடியேறிய கடிநகர். உலகில் உள்ள பல்வேறு நாட்டு மரக்கலன்களும் நம்நாட்டு நாவாய் களும் அம்பிகளும் வங்கங்களும் வணிகத்தின் பொருட்டும் போக்கு வரத்தின் பொருட்டும் நங்கூரம் பாய்ச்சித் தத்தம் கொடி பறக்க நின்ற மாபெரும் பட்டினம், தமிழகத்தின் செய்பொருள்களையும் விளை பொருள்களையும் சிறப்பாக முத்துக்களையும் பிற நாட்டிற்கு விற்றுக் கோடி கோடியாகப் பொற்காசுகளையும், தங்கப் பாளங்களையும் பெற்றுத் தமிழகத்தைப் பொற்களஞ்சியமாக்கிய மாநகர். இன்று அந்த மாநகர் - கொற்கை, சீர் அழிந்து சிறப்பழிந்து ஒரு சிறு ஊராக, பட்டிக்காடாக தேடுவாரற்றுக் கிடக்கிறது. அதன் பெருமையை மீண்டும் உயர்த்துவது தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் சிறப்புத் தருவதாகும். எனவே தமிழ்மக்கள் கிளர்ந்தெழுந்து கொற்கையை மறுமலர்ச்சி பெறச் செய்யவேண்டும். அங்கு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும். தொழிற்சாலை நிறுவவேண்டும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவேண்டும். புதைபொருள் ஆய்வுத் துறையினர், அதிக அக்கரையெடுத்து அகழ் ஆய்வு நடத்த வேண்டும். தூத்துக்குடித் துறைமுகம் கொற்கைத் துறைமுகம் எனப்பெயர் சூட்டப்பெற வேண்டும். முடியாவிடில் ஒரு மீன் பிடித்துறைமுகமாகவாவது விளங்கவேண்டும். கொற்கைப்பட்டினம். மீண்டும் நல்ல நாகரிகமான நகரமாக மறுமலர்ச்சி பெற அரசாங்கம் ஆவனசெய்ய வேண்டும். இதற்கு நமது மாவட்டத்திலுள்ள எல்லாச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் துணை புரிய வேண்டும். அங்கு ஒரு சுற்றுலா மாளிகையை எழுப்பலாம். தொல்பொருள் காட்சி சாலையை நிறுவலாம். 14. பழைய காயலும் பாங்கும் சீர்வைகுண்டம் வட்டத்தில் உள்ள சாயர்புரத்திற்குக் கீழ்புறம் மூன்று கல் தொலைவிலும் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ் சாலையில் - கடற்கரையில் பழைய காயல் என்றொரு சிற்றூர் இன்றும் உள்ளது. இவ்வூரில் இன்றும் வாழும் மக்களிற் பெரும் பாலோர் பரத குலத்தவரே யாவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் புகழ் பெற்ற கொற்கைத் துறைமுகம் சீர்கெட்டுப் போயிற்று. எனவே பழையகாயல் கடற் பகுதியைப் பாண்டிய மன்னர்கள் துறைமுக மாகப் பயன்படுத்த முற்பட்டனர். பழையகாயல் பாண்டியர்களின் துறைமுகப் பட்டினமாய் சிறப்புற்றிருந்தது என்று கூற எண்ணற்ற நல்ல சான்றுகள் உள்ளன. இங்கு அகழ்ந்து பார்க்கும் பொழுது அரேபியர், சீனர், உரோமர் நாட்டுக் காசுகளும் கோப்பைகளும் பீங்கான்கள், மதுப்புட்டிகளும் பிற பொருள்களும் கிடைத் துள்ளன. சிறந்த இந்திய வரலாற்றுப் பேராசிரியர் வின்சென்று சிமீது, காயலைப் பற்றி, தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். கொற்கையில் உள்ள வணிகத் தொடர்புடைய செயல்கள் அனைத்தும் ஆற்றிற்குக் கீழ்புறம் - மூன்று கல்தொலைவில் உள்ள காயலில் புதிதாக நிறுவப் பெற்ற துறைமுகத்திற்கு மாற்றப்பெற்றன. காயல் பல நூற்றாண்டுகள் வரை பாண்டிய நாட்டுக் கடற்றுறை யாகவும் பாண்டிய மன்னர்களின் இரண்டாவது தலைநகரமாகவும் கீழ்நாட்டு மாபெரும் வணிகத் தலைமைப் பதிகளுள் ஒன்றாகவும் நன்றாகவும் விளங்கி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்கோபோலோ எனும் இத்தாலிய வணிகர் இங்கே தான் கப்பல் ஏறினார். அவர் இங்கு ஒரு முறை அன்றிப் பல முறை வந்து போயிருக்கிறார். முடி மன்னர்கள் மட்டுமன்றி, குடிமக்களும் எய்தப் பெற்ற செல்வப் சிறப்பையும் புறக்கோல மேன்மையையும் வந்த வழிப்போக்கரான அவர் கண்டுகளித்தார்; வியந்து பாராட்டி னார். அதைத் தம் நாள் குறிப்பில் எழுதியும் வைத்தார். கொற்கைப் பட்டினம் பாழ்படக் காரணமாக இருந்த அதே நிகழ்ச்சியே காயல் துறைமுகமும் கைவிடப் படுவதற்குக் காரணமாக சீர்கெட்டு அமைந்தது.1 அங்குமீன் பிடித்து வாழும் சில பரதகுல மீனவர்களும் ஒரு சில முசுலிம்களும் கிறித்தவ சமயந் தழுவிய சிலரும் ஒன்றிரண்டு இந்துக்களும் சில குடிசைகளும் எஞ்சியுள்ளன. பழைய காயல் பழைய காயல், காயல் என்றும் அழைக்கப்படும். கொற்கையைப் போல் காயலும் மாடமாளிகைகள் நிறைந்த மாபெரும் துறைமுகப் பட்டினமாய் நிலவியது. ஆனால் காயலுக்கு இப்பெருமை நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. சில ஆண்டுகளில் துறைமுகம் தூர்ந்து போய்விட்டது. இங்கிருந்து கொற்கையைப் போல் முத்தும் மிளகும் பட்டும் நறுமணப் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பட்டு யாண்டிருந்து வருகிறது என்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்றும் உரோமர்கள் அறியார்கள். அது ஒரு வகைப் பஞ்சு என்றும் ஏதோ ஒரு சில மரங்களில் படைப்புமுறை தோற்றுவித்த ஓர் இளஞ்சிறகு என்றும் நீண்டகாலம் எண்ணி வந்தனர். கொற்கையில் முத்தும் பவளமும் எளிதாகக் கிடைத்தன. முத்து வணிகம் இன்றைக்கும் முதன்மை பெற்றே விளங்குகிறது. கீழ்நாட்டினரும் மேனாட்டினரும் முத்துக்குளித்த மதிப்பே இதற்குக் காரணம். ஒரு முத்து மட்டும் ரூபாய் மூவாயிரம் விலைபோதல் அரிதாக நிகழ்வதன்று - என்று அறிஞர் தோர்மலே கூறியுள்ளார்.1 கொற்கையைப் போன்று காயலும் முத்துக்களை ஏற்றுமதி செய்து புகழ் ஈட்டிவந்தது. மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய நாட்டு வழிப் போக்கர் இந்தியா போந்த பொழுது அதாவது கி.பி. 1295-ஆம் ஆண் டிலே கொற்கைத் துறைமுகம் தூர்ந்து காயல் துறைமுகம் எழுந்து விட்டது. பாண்டிய நாட்டின் புதிய துறைமுகமாகிய காயலிலே மார்க்கோபோலோ மரக்கலம் ஏறினார் என்று அறிகிறோம். அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தண்பொருநை ஆற்று முகத்திலிருந்து ஒன்றரைக் கல் தொலைவில் உள்ள பழைய காயல்பட்டினம் மாபெரும் வணிகச் சிறப்பு வாய்ந்த தாகவும் நிர்வாகத் துறைக்கு ஏற்ற இடமாகவும் மிளிர்கிறது என்று கூறியுள்ளார். மேலும், இது பாண்டியர் களின் பெரும் கடல் வாணிகத்திற்கு ஒரு மையமாகவும் காணப்படுகிறது. எனவே பாண்டியர்கள் இந்நகரைப் பேணி வளர்த்துப் புகழ்பெறச் செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இன்னும் அவர் மேற்கு நாடுகளிலிருந்து பெரிய கலங்கள் எல்லாம் காயல் துறைமுகத்தை அணுகாமல் போவதில்லை என்றும் கூறினார். அதோடு அவரது காலத்தில் உள்ள பாரசீக வரலாற்றாசிரியர் வாசபு அலி (Wassaf Ali) இந்தியா, சீனா நாடுகளிலுள்ள பண்டங்கள் அனைத்தும் காயலுக்கு வந்து அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆகவே பாண்டிய நாட்டுப் பழைய காயல் என்னும் பாங்கான துறைமுகம் இந்திய நாட்டிற்குத் திறவு கோல் போன்ற இடத்தில் அமைந்திருந்தது. இத்துறைமுகத்தி லிருந்தே சேர நாட்டு மிளகும், பாண்டிய நாட்டு முத்தும், கருநாடக நாட்டுச் சந்தனக் கட்டைகளும், பிறநாட்டுத் தந்தம், கோதுமை, அவுரி, கருவாப்பட்டை போன்ற பொருள்களும் ஏற்றுமதி செய்யப் பட்டன என்று எடுத்துக் காட்டுகின்றார். பாண்டியப் பேரரசர் பழைய காயலில் உள்ள அரண்மனையில் அமர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது. பழைய காயல் பக்கத்தி லுள்ள கடலில் விலையுயர்ந்த நன் முத்துக்கள் அதிகம் கிடைத்தன. மேலும் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காயல் துறை முகத்தில் யவனர்தம் எண்ணற்ற மரக்கலங்களும், சோனகர்களின் நாவாய்களும் வந்து குழுமி நின்றன. பெருமளவில் அங்கு வாணிகம் நடைபெற்றது. பழைய காயலில், தண் பொருநை, கடலோடு கலக்கு மிடத்தில் ஒரு கோயில் உள்ளது. பாண்டிய மன்னர்கள் பொருநை கடலோடு சங்கமம் ஆகும் இடத்தில் குளித்து விட்டு அருகில் உள்ள சங்குமுக ஈசுவரர் கோயிலில் சென்று வழிபட்டு வந்தனர். இக் கோயிலில் பழைய கல்வெட்டுக்கள் உள்ளன. அரண்மனை பழைய காயல் பட்டினத்துக்குக் கிழக்கே பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும் இருந்து அழிந்து போயின. இன்று அதன் அடித்தளங்களும் இடிபாடுகளுமே காணக்கிடைக்கின்றன. வெளிநாட்டுப் பண்டங்கள் சீன நாட்டு உடைந்த பீங்கான் தட்டுகளும், சாடிகளும், பழைய காசுகளும் இங்கு, இன்றும் கிடைக்கின்றன. இங்கு ஆயிரக் கணக்கான குதிரைகள் வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வூரில் 5000 - க்கு மேற்பட்ட உறை கிணறுகள் இருந்தனவென்றும் அவைகளைக் குதிரைகள் குளிப் பாட்டவும், குடிநீரெடுக்கவும் பயன்படுத்தினர் என்றும் கூறப்படு கிறது. இன்று இந்த உறைக்கிணறுகள் சிலவற்றைத் தோண்டித் தூரெடுத்துப் பயன்படுத்துகின்றனர். இங்கு, அகழ்ந்து பார்க்கும் பொழுது எண்ணற்ற மனிதர்களின் எலும்புகளும் கிடைக்கின்றன. இவை இங்கு நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களின் எலும்பு களாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. பழைய காயலின் வடபக்கமுள்ள இராமச்சந்திர புரத்தில் பெரும் மரம் என்று ஒரு மரத்தை அழைக்கிறார்கள். இம்மரத்தை நமது நாட்டில் வேறு எங்கும் காணமுடியாது என்று கூறலாம். இது ஆதிரேலியாவில் உள்ள மரம் என்று அறிஞர் கால்டுவெல் கூறுகிறார். பாண்டிய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் வரும் வழக்கு களைத் தீர்க்க இம் மரத்தடியில் சென்று சத்தியம் செய்வார்களாம். ஆனால் இன்று அப்படி எதுவும் நடப்பதில்லை. கட்டபொம்மன் சின்னம் கட்டபொம்மன் காலத்துச் சின்னங்கள் சிலவும் இங்குக் காணப்படுகின்றன. இங்குக் கட்டபொம்மன் கட்டிய பிள்ளையார் கோவிலும், அதன்முன் ஒரு நகரா மண்டபமும் இருக்கின்றன. இதுபோல் திருசெந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை பல நகராமண்டபங்கள் இருந்தனவாம். (நகரா - முரசு) திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடுப்பகல் பூசையின்போது அடிக்கப்படும் நகரா அடுத்தடுத்துள்ள நகரா மண்டபங்களின் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து அடிக்கப்பட்டு, பாஞ்சாலங் குறிச்சி வரை நகரா ஒலி எட்டும், இந் நகரா ஒலியைக் கேட்டதும் கட்டபொம்மன் பாஞ் சாலங்குறிச்சியில் உள்ள முருகன் திருஉருவை வழிபட்டுப் பின் உணவு உண்பானாம்! காயலில் கட்டப்பட்டுள்ள கோட்டையை நிர்மாணித்தவர் மன்னர் சூரபத்ம ராஜா என்றும், இவரே இறுதியாக வாழ்ந்த பாண்டிய அரசர் என்றும் கூறப்படுகிறது. இப்பெயர் நாயக்க மன்னர் பெயர் போலத் தெரிகிறது. சிலர் இது முகமதிய மன்னர் பெயர் என் கின்றனர். இது தவறு. காயலில் உள்ள மீனாட்சி கோவிலில் சூர்ராசா வினால் அளிக்கப்பட்ட ஒரு செப்பேடு உள்ளது. அது இன்னும் படிக்கப்படவில்லை. அது அக்கோவில் பூசாரியிடம் உள்ளது. அது படிக்கப்பட்டால் சில உண்மைகள் வெளிப்படலாம். இங்குள்ள சூரங்காடு என்னும் சிற்றூர் சூர் அரசன் பெயரால் தோன்றிய ஊர் என்று கூறப்படுகிறது. இங்கு அரபி நாட்டினின்றும் குதிரை வணிகம் செய்யவந்த அராபியர் இவ்வூருக்கருகே குடியேறினர். அவ்வூரே இன்று காயல்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் இன்றுள்ள மக்களிற் பெரும்பாலோர் அரபிகளின் சந்ததியினர் என்றே கூறப்படுகிறது. இவர்கள் அரபி நாட்டினின்றும் மரக்கலங் களில் வந்ததால் மரக்கலராயர் எனப்பட்டனர். இச் சொல்லே மரைக்காயர் எனத் திரிந்து வழங்குகிறது. கீழக்கரை, நாகப்பட்டினம் போன்ற கடற்கரைகளில் வாழும் முசுலீம்களும் மரைக்காயர் என்றே அழைக்கப்படுகின்றனர். மார்க்கோபோலோ அறிஞர் இயூல் (Colonel yule), தம், மார்க்கோபோலோ என்னும் நூலில் குறிப்பிடுவதாவது காயல் என்னும் பாண்டியர் களின் கடற்றுறையும் பட்டினமுமாகிய இடம் அழிவுற்றுப் பல் லாண்டுகட்குப் பின்னரே அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. காயல் சென்னை மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடற்கரையில் நீண்டகாலமாகப் பாண்டிய மன்னர்களின் துறைமுக மாக விளங்கியது என்பது மக்கள் உள்ளத்தினின்றும் மறந்து போய்விட்டது. இந்தப் பட்டினம் பற்றி கி.பி. 1292-ல் மார்க்கோ போலோவால் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. நடு ஊழியில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு கடற்றுறையாகவும் மிக முக்கியமான நகரமாயும் விளங்கிய இவ்வூர் பொதுவாக அண்டை யில் வாழும் மக்களால் பழைய காயல் என்று அழைக்கப்பட்டு வந்தது. இது தாமிரவருணி ஆற்றிற்கு அண்மையில், அதன் ஆற்று முகத்திற்கு ஒன்றரைக் கல்தொலைவில் இருந்தது என்று நூறு ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி வரலாற்றை வரைந்த அறிஞர் முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் அவர்கள் கூறியுள்ளார்கள்.1 மார்க்கோபோலோ இங்கு வந்திருந்தபோது காயலில் கண்டவை அவரது கவனத்தை ஈர்த்தன. காயல் பெரும் பட்டினமாக வும் சிறந்த நகரமாகவும் மன்னரின் ஐந்து குமாரர்களில் மூத்த மகனான அசர் (Ashar) என்பவருக்கு உரித்தானதாகவும் இருந்தது. ஓர்னசு, கிசு (பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு தீவு) ஆகிய இடங்களினின்று வந்த கப்பல்களெல்லாம் இந்தத் துறைமுகத்தில் தம் நங்கூரத்தைப் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தன. அன்றியும் அடீய் (Adeei), அரேபியா, இலேடன் முதலிய இடங்களின்று வந்த மரக்கலங்கள் விற்பனைக்காகத் தம் நாட்டுக் குதிரைகளையும் பிற பண்டங்களையும் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தன. இது, அந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலுமுள்ள மக்களை ஒன்று திரளும்படி செய்கிறது. எனவே காயல் என்னும் பட்டினத்தில் பெரும் வணிகம் நடைபெற்று வந்தது. அரசரிடம் ஏராளமான செல்வம் குவிந்து கிடந்தது. அரசன் விலையுயர்ந்த மணிகள் இழைக்கப்பெற்ற பொன் அணிகலன்களைத் தன் காதிலும், கழுத் திலும், கைகளிலும், இடுப்பிலும் அணிந்திருந்தான். அவன் மாபெரும் அரசைக் கவனமாகக் காத்து நடத்தி வருகிறான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாடு நன்கு இயங்கி வருகிறது அங்கு நீதியும், நேர்மையும், ஒப்புரவுப் பண்பும் உண்டு. வணிகர்களுக்கும், அயல் நாட்டினர்க்கும் நல்ல ஆதரவும், அன்பும், சலுகையும் அளிக்கப்படுகின்றன. எனவே இவனுடைய நகரைப் பார்ப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார். மார்க்கோபோலோ காலத்தில் இந்தியா போந்த பாரசீக வரலாற்றாசிரியர் வாசபு மாபாரின் துறைமுகம் காயல் என்று நம்புகிறேன். என்று கூறி மாபாரைப் பற்றிக் கூறியிருக்கிறார். சின், மெச்சின் என்னும் அரிய நகரங்களிலிருந்து (சீனாவில் வடக்குத், தெற்குப் பகுதிகளிலுள்ள ஊர்கள்) வந்த மலை போன்ற சங் என்ற கப்பல்கள் இந்து, சிந்து, லேடன் முதலிய இடங்களிலிருந்து அழகிய பொருட்களை ஏற்றிக்கொண்டு காற்றின் இறக்கைகளைக் கொண்டு நீரின்மீது பறந்து வந்து ஆங்கு எப்பொழுதும் வருவதும், போவது மாக இருக்கின்றன. பாரசீக வளை குடாவின் செல்வங்கள், குறிப்பாக ஈராக்கு, குரோசான் முதலிய நாடுகளிலிருந்து, ஏனைய நாடுகளை அணி செய்யும் பொருட்கள், மாபாரிலிருந்து ஐரோப்பாவிற்கும் உரோமிற்கும் செல்வதற்கு வழியாக பழைய காயல் இந்தியாவின் திறவுகோலாக இருக்கிறது1 என்று கூறியுள்ளார். அயலார் ஆதிக்கம் 14ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலத்திலே தமிழ் நாட்டிற்கு ஏழரை நாட்டுச் சனியன் பிடித்துவிட்டது. மூன்று தமிழ் மன்னர் களும் நிலை குலைய முற்பட்டு விட்டனர். கி.பி. 1327இல் டில்லி அரசன் முகம்மது பின் துக்ளக் மாபார் நாட்டைத் தன் காலடியில் கொண்டு வந்தான். கி.பி. 1335இல் சலால் உத்தீன் அசன் என்பவனை அரச பரிபாலனாக நியமித்தான். ஆனால் அவன் மதுரையில் தனியாட்சி நிறுவிக்கொண்டான். 1340 கியாசு உத்தீன் மதுரை மன்னனாகித் தமிழகம் முழுவதையும் அச்சுறுத்தினான். 1378 - வரை முசுலிம் ஆட்சி நடை பெற்றது. அப்பால் விசயநகர நாயக்கர்கள், முசுலிம் ஆட்சியை அகற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினர். 16ஆம், நூற்றாண்டில் விசுவநாத நாயக்கன் (1529-64) ஆட்சி திருச்சியிலிருந்து குமரிமுனை வரைப் பரவியது. 1565-ஆம் ஆண்டில் மதுரையில் திருமலை நாயக்கன் ஆட்சி செய்த காலத்தில் இயேசு சபைப் பாதிரி மார்கள் மதுரையில் வந்து குடியேறினர். கி.பி.1675இல் மகாராட்டிரர் ஆட்சி தளிர்த்தது. சிவாசியின் தம்பி வெங்காசி போன்சலே 1676இல் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து அரசு கட்டிலேறினான். 1498இல் போர்ச்சுக்கீசிய மாலுமிவாசு கோடகாமா மரக்கலத்தின் மூலம் ஆப்பிரிக்காவைச் சுற்றிவந்து கோழிக்கோட்டை (கள்ளிக் கோட்டை)யில் கால் வைத்தான். அக்காலத்தே பழைய காயலில் முத்துக் குளிக்கும் தொழில் பரதவர்களிடமிருந்து முசுலிம்களிடம் போய்விட்டது. கி.பி. 1514இல் இத்துறைமுகத்திற்கு போர்ச்சுக்கீசியக் கப்பலின் கப்பித்தான் (Captain) பார் போசா வரும்பொழுது காயலின் முத்துக் குளிக்கும் தொழில் கொல்லத்தில் உள்ள ஒரு அரசனுக்கு உரியதாய் இருந்தது. 1542ஆம் ஆண்டு தூய சவேரியார் முத்துக் குளிக்கும் துறையை முதன்முதலாகப் பார்வையிட வந்தார் என்று கூறப்படு கிறது. அப்பொழுது பட்டினம் முற்றிலும் போர்ச்சுக்கீசியர் கைக்குப் போய்விட்டது. பழைய காயலின் பக்கத்தே காயல்பட்டினம், மஞ்சள் நீர்க் காயல், புன்னைக்காயல் வீரபாண்டியன் பட்டினம் மாறன்மங்கலம் என்று பல ஊர்கள் உள்ளன. புன்னைக் காயல் அக்காலத்தில் பரதவர்களுக்கு ஒரு நல்ல குடியேற்றப் பகுதியாய் இருந்தது. 1552-ஆம் ஆண்டில் புன்னைக்காயல் ஒரு சிறு கடற்றுறையாகக் கூட இருந்தது. இங்கு ஒரு மண்ணாலான கோட்டையும் எழுப்பப் பெற் றிருந்தது. அக்கோட்டை போர்ச்சுக்கீசியக் கப்பித்தான் கோவார்ட் டினோ ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. இவன் படகர்களால் தோற்கடிக் கப்பட்டான், என்றாலும் போர்ச்சுக்கீசியர் படை திரட்டி வந்து மீண்டும் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். முதல் அச்சகம் புன்னைக் காயலில் போர்ச்சுக்கீசியர் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட சமயத்தை நிலைநாட்டி அதன் மூலம் அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தத் திட்டமிட்டனர் புன்னைக் காயலில் ஒரு அச்சகத்தை நிறுவி அதில் துண்டுத் தாள்கள் அச்சிட்டு வந்தனர். தமிழ் மக்களுக்கு கிறித்தவ சமயத்தைப் போதிக்க ஒரு தமிழ் நூலை வெளியிட்டனர். அந்நூல் புன்னைக் காயல் அச்சகத்தில் 1578ஆம் ஆண்டு, அடியார் வரலாறு (Flos Sanctrum) என்ற பெயரால் வெளியிடப்பட்டது. தமிழில் அச்சிடப்பட்ட நூற்களில் இது மூன்றாவது நூல் என்றெண்ணப்படுகிறது. இதன் மறுபதிப்பு இப் பொழுது பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் தவத்திரு. முனைவர் இராசமாணிக்கம் அடிக ளாரின் பெரும் முயற்சியால் தூத்துக்குடி தமிழ் இலக்கியக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.1 இஃதன்றி இருமருந்தகமும், உரோமன் கத்தோலிக்கச் சமய போதனைக் கூடமும் (Seminary) கோட்டைக் காவற் படையும் இருந்தன. 1596-ஆம் ஆண்டு காயலில் மீன் பிடிக்கும் துறையின் தளபதியாய் ஒருவர் பழைய காயலில் இருந்து வந்தார். இடொன் செபத்தியர் என்பவர், கிறித்தவப் பரதவர்கள் முத்துக்குளித்து முத்து எடுத்து வந்தால் அதில் பத்தில் ஒரு பங்கு கிறித்தவக்கோயில் மகமைக்குக் கொடுக்க வேண்டும் என்று ஒரு விதியை ஏற்படுத்தினார். தமிழகத்தில் முசுலிம் ஆட்சி அரும்பிய பொழுது முசுலிம்களும் முத்துக் குளிக்கவும் மீன் பிடிக்கவும் முற் பட்டனர். அதனால் தமிழர்களின் தொன்மையான இனத்தவர் களான பரதவர்களுக்கும் முசுலிம்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் அன்றையப் பாண்டியநாட்டு ஆட்சியாளர் முசுலிம் ஆக இருந்ததால் தமிழ்நாட்டுப் பரதர்கள் ஆதரவு இன்றித் தவித்தனர்; அவர்கள் முசுலிம்களிடம் தோல்வியுற்று வந்தனர். பாண்டிய நாடு போந்த போர்ச்சுக்கீசியர் பரதவர்களுக்கு ஆதரவு காட்டியதோடு கத்தோலிக்க சமயத்திலும் அவர்கள் இடம் பெறுமாறு செய்து விட்டனர். அப்பால் போர்ச்சுக்கீசியர் கத்தோலிக் பரதவர்களுக்கு நல்ல அரண் போன்றிருந்தனர். நாயக்க அரசர்களால் முசுலிம் ஆட்சி தமிழகத்தில் மறையவே, கத்தோலிக்கப் பரதவர்கள் கடல் தொழிலைத் தங்கள் காலடியில் வைத்துக் கொண்டனர். முசுலிம்கள் அத் தொழிலி னின்று பெரிதும் விலகிக் கொண்டனர். இதன் பலனாகப் பாண்டிய நாட்டில் உள்ள கடற்றுறைகளில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளான பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறித்தவர்கள் ஆகிவிட்டனர். ஆனால் தஞ்சை, செங்கற்பட்டு மாவட்டங்களிலும் சென்னையிலும் உள்ள பரதவர்களிற் சிலர் இந்துக்களாகவே இருந்து வருகின்றனர். கி.பி. 1605இல் உலாந்தக்காரர்கள், வணிகம் என்னும் பேரால் இந்தியா போந்தனர். 1658இல் உலாந்தக்காரர்கள் போர்ச்சுக்கீசி யரைப் புன்னைக் காயலினின்று விரட்டி அடித்ததுடன் கிழக்குக் கடற்கரையினின்றும் ஓடும்படி செய்தனர். உலாந்தக்காரர்கள் மதுரை மன்னனிடமிருந்து முத்துக் குளிப்பு, சங்குக் குளிப்பு, மீன் பிடிப்புத் தொழில்களின் முழு உரிமையையும் பெற்றனர். 1664இல் இந்தியாவிற்குப் பிரெஞ்சுக்காரர்கள் வந்தனர்.1 அவர்கள் கத்தோலிக்கப் பரதவர்களுக்கு பெரிதும் ஆதரவளித்து வந்தனர். 1795இல் ஆங்கிலேயர் கைக்கு ஆட்சி மாறும் வரை தமிழகக் கடல் ஆதிக்கம் உலாந்தக்காரர்களிடமே இருந்து வந்தது. இதனால் 1825இல் கிறித்தவ சமயப்பணி பீடுற்றது. கொற்கையின் பொற்புறும் துறைமுகம் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் மண்மேடிட்டுத் துறைமுகத்திற்குரிய வசதியை இழந்தது. அதன் பின், பழைய காயல் பாண்டிய நாட்டின் துறைமுகமாக எழுந்தது. ïj‹ fhy« ek¡F¤ â£lt£ltkhf¡ TwKoaÉšiy v‹whY« ï¤jhÈa eh£L tÊ¥ ngh¡f® kh®¡nfhnghnyh 13M« ü‰wh©o‹ ïWâÆš - m~jhtJ 1292ïš fhaš JiwKf¤â‰F tªJ f¥gš V¿dh® v‹W bjÇ»wJ.* கொற்கைத் துறைமுகம் கை நழுவப்படவிருந்த அதே கடல்கோள், பழைய காயல் துறைமுகமும் கைநழுவ விடப்படுவதற் கும் காரணமாய்த் தோன்றியது. அதனால் போர்ச்சுக்கீசியர் 1580-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் குடியேறி அதைத் துறைமுகம் ஆக்கினர். புன்னைக் காயலையும் அவர்கள் தங்கும் இடமாக ஆக்கிக் கொண்ட னர். 1658ஆம் ஆண்டில் உலாந்தக்காரர்கள் (Dutch) தூத்துக்குடித் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். 1782-ஆம் ஆண்டில் உலாந்தக் காரர்களிடமிருந்து தூத்துக்குடித் துறைமுகத்தைக் கிழக் கிந்தியக் கம்பெனியார் 1782ஆம் ஆண்டில் பறித்துக் கொண்டனர். மீண்டும் 1785ஆம் ஆண்டில் உலாந்தக்காரர்கள் கைக்குப் போய் 1796ஆம் ஆண்டில் கம்பெனியார் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் 1818ஆம் ஆண்டு பெப்ருவரித் திங்கள் 9ஆம் நாள் உலாந்தாக்காரர்கள் கைக்குப் போயிற்று. பின்னர்த் தூத்துக்குடித் துறைமுகம் 1825ஆம் ஆண்டு சூன் திங்கள் 1ஆம் நாள் அமைதியாய் - சமாதானத்துடன் - ஆங்கில ஆட்சியின் கைக்குப் போயிற்று. இறுதியாய் 1947ஆம் ஆண்டு ஆகத்துத் திங்கள் 15ஆம் நாள் ஆங்கிலேயர், இந்தியர்க ளிடம் மிக அமைதியாய் தூத்துக்குடித் துறைமுகத்தையும் - ஏன்? இந்தியாவையும் இந்தியர்களிடம் ஒப்புவித்துவிட்டு இங்கிலாந் திற்குக் கப்பல் ஏறிக் கடுகி அகன்றுவிட்டனர்.1 மார்க்கோபோலோ தமது நூலில் தென்னிந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுவதாவது,2 மாபார் நாட்டின் மாபெரும் மாநிலத்தில் பாண்டியநாடு பெருமை வாய்ந்தது. இங்குள்ள நாடுகள் அனைத்தி னும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஐந்து உடன்பிறந்தார்களான அரசர்கள் ஆட்சி புரிகிறார்கள். இந்த மாநிலம் உலகிலேயே உயர்ந்த பண்பு வாய்ந்ததும், நேர்த்தியானதுமாகும். இதனை ஆட்சிபுரியும் அரசர்களில் சுந்தரபாண்டியத் தேவர் என்பவர் முடிசூடிய மன்னர் ஆவர். அவருடைய ஆட்சியில் அரும்பெரும் அழகிய முத்துக்கள் கிடைக்கின்றன. காயல் பெரியதும் அழகியதுமான பட்டினம். அதனுடைய பழம் பெருமையும் நினைவுச் சின்னங்களும் இன்னும் ஆய்ந்த கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றையக் காயலுக்கு வடக்கே மூன்று, நான்கு கல் தொலைவில் மாறமங்கலம் (மாறோக்கம்) என்னும் ஊருக்கு ஒன்றரைக் கல் அளவில் உள்ள சமவெளியில் உடைந்த பானை சட்டிகளும், பழங்காசுகளும், பிறபொருட்களும் கிடைத் திருப்பது மார்க்கோபோலோவின் அறிக்கையை உறுதிப்படுத்து கிறது. காயல் ஓர் ஒப்பற்ற கடற்றுறை என்று முசுலிம் வரலாற் றாசிரியர்கள் வரைவதை இங்குக் கிடைக்கும் சீன, அராபிய நாட்டுப் பீங்கான்களும், சட்டிகளும், பொன், வெள்ளி, செப்புக் காசுகளும் உறுதிப்படுத்துகின்றன. காயலில் வாழும் தொன்மை வாய்ந்த திராவிடப் பெருங் குடியைச் சேர்ந்த தமிழ்ப் பரதவர்கள் ஏறத்தாழ 30-ஆண்டுகட்கு முன்பே, ஆங்கில ஆட்சி நிலவும் காலத்தில் காயலின் பழம் பெருமையும், அரிய சிறப்புக்களுமாகியவற்றை எடுத்துக்காட்டிக் காயல் துறைமுகத்தை மறுமலர்ச்சி அடையச்செய்ய முயன்றனர். தூத்துக்குடியை விடக் காயல் பெரிய துறைமுகமாவதற்குரிய எல்லா வாய்ப்பையும் பெற்றிருக்கிறது என்று அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டினர். ஆனால் அன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த ஆங்கில ஆட்சியாளர் செவியில் அவர்கள் வார்த்தை அணுவளவும் புகவில்லை. காயல் மக்கள் அத்துடன் தொடர்ந்து கிளர்ச்சி செய்ய வில்லை. சோர்ந்து இருந்து விட்டனர். அவர்களிடம் மக்கள் பலமும் இல்லை; போதிய செல்வமும் இல்லை. நேரு ஆட்சியில் தூத்துக்குடியைப் பெரிய துறைமுகமாக்க முன்வந்தனர். அது பாராட்டற்குரியதேயாகும். ஆனால் தூத்துக் குடித் துறைமுகம் கொற்கைத் துறைமுகம் அல்லது காயல் துறை முகம் என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் கொற்கைத் துறைமுகம் என்று பெயரிடப் பெற வேண்டும் என்று நடுவண் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டி இருக்க வேண்டும். ஆனால் தமிழர் வரலாற்றைச் செம்மையாக அறியாத சிலர் தமிழக அரசின் தலைமைப் பீடத்தில் இருந்ததால் அது நடைபெறவில்லை! என்றாலும், இன்று, தமிழகத்தில் தமிழரசு தளிர்த் துள்ளது. தமிழ் மொழியையும் தமிழ் வரலாற்றையும் தமிழப் பண்பாட்டை யும் பேண முன்வந்துள்ள இன்றைய தமிழரசு இதை நடுவண் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காகக் கொற்கை மக்களும், சிறப்பாக திருநெல்வேலி மாவட்ட மக்களும், பொது வாகத் தமிழகமும் ஆவன செய்ய வேண்டும். ஆற்றினால் எழுந்த பிரிவுகள் அராபி நாட்டிலிருந்து வந்து குடியேற விரும்பிய மக்களுக்குப் புவிச் சக்கரவர்த்தி செயவீரராசு காருவால் கொடுக்கப்பட்ட பட்டயத்தில் பல ஊர்கள் சேர்ந்துதான் காயல் என்று அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது. மேலும் தண்பொருநையாறு ஊடறுத்துச் சென்று பல கிளைகளாகப் பிரிந்ததனால் பெரிய நகர் பிரிந்து, முள்ளக்காடு, குலையங் கரிசல், புல்லாவெளி, கோவங்காடு, அடைக்கலபுரம், மஞ்சள் நீர்க்காயல், அகரம், மாற மங்கலம், கொடுங் கணி, குருவித்துறை, சேர்ந்த பூமங்கலம், புன்னைக்காயல், கீறனூர், ஆவரங்காடு, சந்த எசுத்தேவு, குருசடி, காயல் பட்டினம் என்ற பெயர்களால் பல சிற்றூர்களாயின. நாட்டுப்பாடல் பழைய காயலில் பெண் மக்களும் குழந்தைகளும் பாடிவரும் நாட்டுப் பாடல்கள் சில உள : பாடிப் பாடித் தண்ணீர் எடுக்கும் பாண்டிய நகர்காயல் ஊரைச்சுற்றிப் புளியமரம் உலுப்பி விட்டால் கலகலக்கும் பேரைச் சுற்றிக் கூப்பிடுங்கள் பேரான காயலூரை சண்டை பிடிக்கும் முக்காணி; சாட்சி சொல்லும் மாறமங்கலம் மண்டிபோட்டு வழக்குத் தீர்க்கும் மகராசன் காயலூர். எனப் பலப்பாடல் இன்றும் பாடப்பெறுகின்றன. சிறப்பு அர்ச், சவேரியாரின் இந்தியமிசன் என்ற நூலில் பழமை மிக்க (St Francis Xaviers Indian Mission) பழைய காயலின் சிறப்பு சீரும் பல உள. பழமை பாண்டிய அரசு கி.மு. 600 - 700 ஆண்டுகளுக்குமுன் செழிப் புற்றிருந்தது என்று மெகசுதனிசு என்று சந்திர குப்தனின் அவையில் இருந்த கிரேக்கத் தூதுவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.1 பறிபோன செல்வங்கள் தில்லிச் சுல்தானின் தளபதி சேய்கக் சமாலுத்தின், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து அதை வென்று 700 எருமைகள் சுமக்கத்தக்க கொள்ளைப் பொருள்களை 1373ஆம் ஆண்டில் தில்லிக்கு அனுப்பி வைத்துள்ளான். 80ஆண்டு தொடர்ந்து கொள்ளை யடிக்கப்பட்டு வந்ததால் நாடு அவனால் வறுமைக் கடலில் மூழ்கியது என்றாலும் விசயநகர அரசன் காலத்தில் பழைய காயல் பெரிதும் பவிசிழந்தது என்று தெரிகிறது.2 பழைய காயல் பகுதிகளுக்கு மாறோகம், பாவல், காவல், காபில், மாபர் என்று பல பெயர்கள் வழங்கி வந்ததாக மார்க்கோ போலோ கூறியுள்ளார். திறவுகோல் உவாசிங் என்ற பாரசீக வரலாற்றாசிரியன் சீனா, சிந்து முதலிய நாடுகளிலிருந்து முக்கியமான பண்டங்களையும், விளைபொருட் களையும் ஏற்றிக்கொண்டு வரும் அயல் நாட்டுக் கப்பல்கள் காயலுக்கு வந்துவிட்டுப் பின் பிற இடங்களுக்குச் சென்றன என்று கூறியுள்ளார். பாரசீகம், சராக, குராசம், ரம் முதலிய நாடுகள், முன்னால் அதிக செல்வம் பெற்றிருந்ததற்குக் காரணம் இந்தியா விற்குத் திறவுகோல் போலிருந்த காயலே என்று மார்க்கோபோ லோ கூறினார் என்று முனைவர் கால்டுவெல் திருநெல்வேலி வரலாற்றில் (பக்கம் 28) கூறியுள்ளார். முத்து பெய்ன் நாட்டுத் தொல் பொருள் காட்சி சாலையில் மிகப் பருமனான முத்து ஒன்று இருக்கிறது. அது கொற்கைக்கும், காயலுக்கும் அருகில் உள்ள கடலில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. வாசுகோடி காமா, 1498இல் முதன் முதலாக இந்தியாவைக் கண்ட ஐரோப்பியர் என்று சில வரலாற்றாசிரியர் கூறியுள்ளனர். அது மிகத்தவறு, அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள் உரோமைப் பேரரசுடன் தொடர்பு கொண்டு வணிகம் வளர்த்துள்ளனர். வாசுகோடிகாமா இந்தியா போந்த பொழுது காயலில் உள்ளவர்கள் பல முத்துமாலைகளைக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்ததாகக் கூறுகின்றார். அப்பொழுது முத்துக் குளிப்பது ஒரு முசுலிம் அரசன் கையில் இருந்தது. 1658இல் முசுலிம் களை உலாந்தக் காரர்கள் கார்மணல் என்ற (Coromandal Coast) முத்துக் குளித்துறையினின்று விரட்டிவிட்டு, காயலிலும் பிற இடங் களிலும் பண்டகசாலைகளை நிறுவினர். அவர்கள் அப்பொழுது மதுரையில் ஆட்சி புரிந்த மன்னரிடமிருந்து முத்துக் குளிக்கவும் சங்குகள் எடுக்கவும் உரிமை பெற்றனர். மீன் பிடிக்க அனுமதி பெற்றதினால் அவர்களுக்கு அதிகமான வருவாய் வந்தது. 1795ஆம் ஆண்டு தொடங்கி இறுதியாய் 1825ஆம் ஆண்டு வரை ஆங்கி லேயர்கள் பெரும் முயற்சி செய்து நாட்டின் ஆதிக்கம் அனைத்தை யும் கைப்பற்றிக் கொண்டனர்.1 காயலில், பாண்டியர், சோழர், சேரர், பல்லவர், தெலுங்கர், கன்னடர், சீனர், பர்மியர், அராபியர், கிரேக்கர், உரோமர் போன்ற பல நாட்டவர்களின் காசுகளும், கோப்பைகளும், சாடிகளும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தூய. தோமையார் இங்கே கரையேறியதற்கு அறிகுறியாக இங்கு ஒரு சிறு கோயில் கட்டப்பட்டுள்ளது. அது புன்னைக் காயலுக்கு வடபுறம் இருக்கிறது. கி.மு. 302ஆம் ஆண்டு சைன சமயத்தினர் இங்கு போந்தனர். அவர்கள் தங்களின் உயிரோம்பும் நெறியை மக்களுக்குப் போதித்து வந்துள்ளனர். அவர்களின் கோயில்கள் இங்கு இருந்தன. இன்றும் பல சமணச் சிலைகள் இங்கு உள்ளன. இன்றும் இங்கு சங்கு மகேசுவரர் கோயிலும் திருமால் கோயி லும் இருந்து வருகின்றன. இவைகளுக்கு மேற்கே அழிவுற்றுக் கிடக்கும் கோயில்கள் முசுலிம்களின் படையெடுப்பால் அழிக்கப் பட்டவை. 1543ஆம் ஆண்டில் தூய சவேரியாரால் இங்கு ஒரு கத்தோ லிக்கக் கோயில் கட்டப்பட்டது. உலாந்தாக்காரர்களால் ஒரு பிரிவினைக் கிறித்தவக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அலா வுதீனின் படைத்தலைவன், அடக்கப்பட்ட ஒரு கோரியும், அலாவுதீன் பணியாட்களில் ஒருவன் அடக்கப்பட்டதாகக் கூறப்படும் 40-கியூபிக் அடிநீள முள்ள கல்லறையும் மற்றுமொரு முசுலிம் கோரியும் காப்பிரிக் சாமி கோயிலில் வணங்கப்படும் ஆப்பிரிக்க நாட்டுச் சிலை ஒன்றும் இங்கு உள்ளன.1 15. காயல்பட்டினம் தண்பொருநை ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் ஆற்றிற்கு வடபால் கொற்கைப் பட்டினம் இருந்தது. ஆற்றிற்குத் தெற்கே ஆத்தூருக்கு அண்மையில் - தென்புறம் காயல்பட்டினம் அமைந் துள்ளது. இன்று இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் இருப்புப் பாதையில் இருக்கிறது. 9ஆம் நூற்றாண்டிற்கு முன்பே பாண்டிய அரசர்களுக்கு அராபிய நாட்டிலிருந்து சில அராபிய வணிகர்கள் குதிரைகளை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொற்கை துறைமுகத்தில் இறக்கி விற்பனை செய்து வந்தனர். பாண்டிய மன்னர்களுக்கு ஆண்டுதோறும் அராபி நாட்டினின்று 10,000 குதிரைகள் இறக்குமதி யாயின. மேலும் தமிழகத்தினின்று இஞ்சி, மிளகு, நீலம் முதலிய வற்றை வாங்கித் தம் கப்பலில் அராபி வணிகர்கள் ஏற்றிச் சென்றனர். இவ்வணிகப் பெருக்கால் பல அராபிய வணிகர்களும் வணிகப் பிரதிநிதிகளும், அவர்களின் பணியாட்களும் கொற்கைக்கு அருகே தண்பொருநை ஆற்றின் தென்பால் கடற்கரையில் குடியேறத் தொடங் கினர். அவர்கள் இந்நாட்டிற்கு மரக்கலத்தில் ஏறிவந்ததால் மரக்கல ராயர், மரக்காயர், மரைக்கார் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழும் இடம் சோனகர் பட்டினம், சோனகர் சேரி என்றும், ஆற்றிற்கு வடக்கே வெள்ளையர் குடியேறிய இடம் வெள்ளையன் இருக்கை, யவனச்சேரி என்றும் அழைக்கப்பட்டன. சோனகர்கள் தம் பெண்களை அழைத்து வரவில்லை. தன்னந்தனிய ராக வந்து தமிழ்நாட்டுப் பெண்களையே மணந்து கொண்டனர். ஆகையால் அவர்களின் தாய்மொழி தமிழாயிற்று. வணிகம் வளர வளர அராபியர்கள் அடுத்தடுத்து வந்து தமிழகத்தில் குடியேறினர். இன்று அவர்கள் வாழும் இடம் காயல் பட்டினம், பாண்டிய மன்னர்களிடம் 12000 - அராபிதினாருக்கு வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. அராபியர்கள் குதிரை வளர்ப்பதை நன்கு தெரிந்தவர்கள்; குதிரை இலக்கணமும் நன்கு உணர்ந்தவர்கள். அவர்கள் ஒரு குதிரை யின் விலை 100-மார்க்கு வெள்ளியின் பெறுமதிக்குக் கூடுதலான 500-சக்கிப் பொன் விலை ஆகும். குதிரைகள் வாங்குவதில் பாண்டியர்கள், நாட்டின் செல்வத்தின் பெரும் பகுதியை வீணாக்கி வந்தனர். அவர்கள் வாங்கும் குதிரைகளில் பல உயிரிழந்து வந்தன. அவை களை எப்படி வளர்ப்பது, என்ன தீனி அளிப்பது என்பது அவர் களுக்குத் தெரியாது என்றெல்லாம் மார்க்கபோலோ கூறுகிறார். ஆனால், பாண்டியர்களுக்குக் குதிரை இலக்கணம் நன்கு தெரியும்; குதிரைகளை வளர்க்கவும் நன்கு தெரியும் என்பது திருவிளையாடல் புராணம், அசுவ பரீட்சை முதலிய நூல்களின் மூலம் நன்கறிய முடிகிறது. குதிரை விற்க வந்தவர்கள் அன்றி வேறு பல அராபியர்களும் இங்கு வந்து குடியேற முற்பட்டனர். கி.பி. 13ஆவது நூற்றாண்டின் நடுவில், செய்யத் சமாலுத்தீன் என்னும் பெரியார் தலைமையில் அராபி முசுலிம்கள் பலர் காயல்பட்டினத்தில் குடியேறினர். திரு.செய்யது சமாலுத்தீன், பெரியார் முகம்மத் நபி அவர்களின் 21-ஆவது தலைமுறையில் வந்தவர்கள். எகித்தில் கலிபா கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். மேலும் அங்குப் பூமி அதிர்ச்சியும் வெள்ளப் பெருக்கும் எழுந்தன. எனவே அங்குள்ள மக்களிற் சிலர் கி.பி. 1284 பழைய காயல் துறைமுகத்தில் வந்து இறங்கிக் காயல்பட்டினத்தில் குடியேறினர். அப்பொழுது சுந்தரபாண்டியன் ஆட்சி நடைபெற்றது. வரலாற்று ஆசிரியர் சடவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் நாட்டை ஆண்டு வந்தான் என்று கூறுகின்றனர். சுந்தரபாண்டியன் ஆட்சியில் காயல்பட்டினத்தில் வாழ்ந்த முகம்மது தீபியின் மகன் தகிய்யுத்தீன் அப்துல் ரகுமான் பாண்டிய மன்னரின் பிரதிநிதியாயும் ஆலோசகராயும் இருந்தார் என்று கூறப் படுகிறது. காயல்பட்டினத்தில் கிடைத்துள்ள அராபிக் கல்வெட்டின் படி பல முசுலிம்களுக்கு நயினார் என்ற பட்டம் வழங்கப்பட்ட தாகத் தெரிகிறது. சேக்காலி நயினாரான செண்பக முதலியார் அகமது நயினாரான வீரபாண்டிய முதலியார் முதலிய பட்டங் களைப் பாண்டிய மன்னர்கள் முசுலிம்களுக்கு வழங்கியுள்ளனர். நயினார், ஊரின் நாட்டாண்மைக்காரர் ஆவர். அவர் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புச் செய்வார். அவர் பள்ளி வாயிலுக்கு வரும் பொழுது பணியாளர் அவருக்கு அரச குடை பிடித்துக் கொண்டு வருவார்கள். பட்டத்து நயினார்களுக்குச் சிறப்பான ஆடைகள் உண்டு. கி.பி. 1553இல் பாண்டிய மன்னர் முசுலிம்கள் சிலருக்கு அளித்த பட்டயம் இங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. பாண்டியர் களின் இறுதிக் காலத்திலும் அப்பால் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியிலும் இங்குள்ள முசுலிம்கள் சிறப்பான சலுகைகள் வந்து பெற்றுள்ளனர். இங்கு 13ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பெற்ற அராபி நாணயங்கள் கிடைத்துள்ளன. இங்கு அகழ்ந்து கண்ட சில பொற் காசுகள் சென்னைத் தொல்பொருள் காட்சிச் சாலையில் உள்ளன. 16. ஆதித்தநல்லூரும் அழிபாடுகளும் ஆதித்தநல்லூர் பறம்பு என்பது திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மேட்டு நிலம். இது பாளையங் கோட்டையிலிருந்து 11-கல் தொல் தொலைவில் தண் பொருநை ஆற்றின் வடகரையில் உள்ளது. இவ்விடத்தில் இன்று ஊர் எதுவும் இல்லை. ஆனால் மக்கள் இப்பகுதியினை ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என்று அழைக்கிறார்கள். இப்பறம்பில் மக்கள் வாழ்ந்ததற்குரிய அறிகுறிகள் எதுவும் கிடைக்கவில்லை. பக்கத்தில் பெரிய நகரம் எதுவும் இருந்திருக்கலாம். அந்நகரமக்கள் இதைப் புதைகுழியாக பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. முதன்முதலாக 1876ஆம் ஆண்டு செர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகரைச்சேர்ந்த முனைவர் சாகர்1 என்பவர் இங்குப் போந்து அகழ் ஆய்வு நடத்தினார். அதில், பல ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. இவை முதுமக்கள் தாழிகள் (முதுமத்தன் தாழி) என்று கூறப்படும். இத்தாழிகளில் பல எலும்புக்கூடுகளும் பொன், இரும்பு போன்ற வற்றால் செய்யப்பெற்ற பல பொருள்களும் பல அழகிய மட் பாண்டங்களும் கண்டுபிடிக்கப் பெற்றன. அவை அனைத்தும் பெர்வின் தொல்பொருள் காட்சிச் சாலையில் இடம் பெற்றுள்ளன. மீண்டும் இங்கே பிரஞ்சு நாட்டிலுள்ள பாரீசு நகரத்தைச் சார்ந்த எம். லூயி லேப்பிக்கியூ என்னும் அறிஞரால் 1903 இல் அகழ் ஆய்வு நடத்தப் பெற்றது. மேலும் பல சுடுமண்ணால் செய்யப்பெற்ற தாழிகளும் மட் பாண்டங்களும், இரும்பினால் செய்யப்பட்ட படைக்கலங்களும், தங்கத்தினால் செய்யப்பட்ட நெற்றிப் பட்டங்களும், பித்தளை அணிகலன்களும் கல்திரிகைகளும் கிடைத்துள்ளன. இத்து நைந்த துணிகளின் பகுதிகளும் அரிசி, வரகு முதலிய கூலப்பொருள்களின் உமிகளும் தாழியினுள் காணப்பட்டன. இங்கு அதிகமான சிவப்பு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. பித்தளைப் பாத்திரங்களும் இரும்பால் செய்யப் பெற்ற விளக்குகளுமாகப் பல பொருள்கள் கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் மட்பாண்டங்கள் வனை வதில் வல்லவர்களாய் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. உலோக வேலைப் பாட்டிலும் நெசவுத் தொழிலிலும், தச்சுத் தொழிலிலும் கூட சிறந்திருந்தனர் என்று தெரிகிறது. இங்குக் காணப்படும் மண் வெட்டி, கொழு முதலியவைகளின் மூலம், இங்கு நிலவியது, ஆற்றங்கரைப் பண்பாடு என்றும் இவர்களது முக்கிய தொழில் பயிர்த் தொழில் என்றும் தெரிகின்றன. பித்தளையில் விலங்குகள், பூச்செடிகள் போன்றவைகளை உருக்கி வார்த்திருப்பது அவர்களின் கைத்தொழிற் சிறப்பைக் காட்டுகிறது. அரப்பா மக்களைப் போல் ஆதித்தநல்லூர் மக்களும் திமில் பெருத்த காளைச் சின்னமும் நகர நாகரிகமும் பெற்ற மக்கள் என்று நன்கு தெரிகிறது. அறிஞர் எம். லாப்பிக்கியூ அவர்களின், 1903-1904 ஆம் ஆண்டைய ஆய்வில், ஆதித்தநல்லூர்ப் பண்பாடு திராவிடர்களின் ஆதி முன்னோர்களைச் சார்ந்த (Proto Dravididan race) தொடக்க காலப் பண்பாடு என்று முடிபு கட்டப்பட்டுள்ளது.1 சிந்து வெளியை ஆய்ந்த சர் சாண் மார்சல் தம் சீரிய நூலில் இவ்வூரைக் குறிப்பிட் டுள்ளார்.2 இதனைத் தொடர்ந்து 1899 முதல் 1905 வரை சென்னை அரசாங்கத் தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையாளரும் அகழ் ஆய்வுத்துறை அதிகாரியுமான அலெச்சாந்தர் இரீ (Alexander Rea F.S.A. Scot), அவர்களின் அரிய முயற்சியால் இப்பகுதியை அகழ்ந்து, அங்குக் கிடைத்த பொருள்கள், சென்னைத் தொல் பொருள் காட்சிசாலையில், பழம் பொருள்களின் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள பழம் பொருள்கள் கிறித்தவ ஊழிக்குப்பின் எழுந்த பாண்டியர்களின் மூலத்தை உடையது என்று அவர் கருதினார். ஆனால் பேராசிரியர் ஜி. எலியட்சிமித், கிறித்தவ ஊழியின் தொடக்கத்திற்கு முன் - பன்னூறு ஆண்டு களுக்கு - முன் பழம் பாண்டியர் காலத்தில் இப்பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருக்க லாம் என்று கருதுகிறார். ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் பல, திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மண்டையோடு என்றும் எண்ணப்படுகிறது.3 எனவே கிறித்தவ ஊழி அரும்பு முன்னரே திரா விடர்களின் முன்னோர்கள் ஆத்திரேலியப் பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் - பகைவர்கள் மீது எறிந்தால், அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு - வரும் ஒரு வகை ஆயுதம் தமிழகத்தில் பண்டு தொட்டுக் கிடைப்பதும் ஒரு சான்றாகக் கூறுகிறார்கள். ஆதித்த நல்லூர் நாகரிகம் அரப்பா நாகரிகத்தோடு சங்கிலித் தொடர்போல் ஒற்றுமையுடையதாய்த் திகழ்கிறது என்று சிந்துவெளி அகழ் ஆய்வினைத் திறம்பட நடத்திய ஆர்.டி.பானர்சி1 கூறுகிறார். கிறித்தவ ஊழிக்குமுன் கொற்கைக்கு வரும் கப்பல்கள் தண்பொருநை ஆற்றின் மூலம் ஆதித்தநல்லூர் வரை வந்துள்ளன என்று இந்திய வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு பாலகிருட்டிண நாயர்2 கருதுகிறார். இவைகளின் மூலம் சிந்துவெளி நாகரிகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஆற்றங்கரைப் பண்பாடும், பயிர்த்தொழில் வளர்ச்சி யால் பெற்ற நகர நாகரிகமும், காளைச் சின்னமும் கொற்கை, ஆதித்த நல்லூர், நல்லூர் நாகரிகங்களில் காணப்படுகின்றன. இவைகளை அடுத்தே மதுரை, பூம்புகார், காஞ்சி, வஞ்சி முதலிய ஆற்றங்கரைப் பண்பாடு சிந்து ஆற்றங்கரையில் மலர்ந்த மொகஞ்சதாரோ வரை மிளிர்கின்றது. ஆரியர்கள் இந்திய நாட்டினுள் அடி எடுத்து வைக்கும் பொழுது, இந்தியாவில் உயரிய திராவிட நாகரிகம் நிலவி நின்றது. அத்திராவிட நாகரிகம் எகிப்து, மெசபொத்தாமியா ஆகிய வெளி நாடுகளினின்று வந்த நாகரிகம் என்று எண்ணப்பட்டது. இன்று அறிஞர் பலர் திராவிட நாகரிகம் இந்தியாவிலே அரும்பி எகிப்து பபிலோன், எல்லம், சுமேரியா, அசீரியா, அக்கேடியா கிரீட் நாடு களில் பரவியது என்று கூறுகின்றனர்.3 மக்களின் தோற்றம், உடல் அமைப்பு, எலும்புகளின் தன்மை ஆகியவைகளை வைத்து மக்களினம் இன்று பிரிக்கப்படுகிறது. மொகஞ்சதாரோ, அரப்பா, பலுச்சிசுத் தானத்தில் உள்ள நால் (Nal), ஆதித்தநல்லூர் ஆகிய இடங்களில் அகழ்ந்துகண்ட எலும்புக்கூடுகள், பண்டங்கள் முதலியவைகளினின்றும் வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த மக்களின் மண்டை ஓட்டுப் புடைப்புகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறியமுடியுமென்ற கோட்பாட்டு அடிப் படையில் மண்டைஓட்டு அமைப்பியல் ஆய்வுத்துறையின் மூலம் அங்கு வாழ்ந்த மக்கள் யார் என்று முடிபுகட்டப் பெற்றுள்ளது. ஆதித்தநல்லூரில் வாழ்ந்த மக்களும், அரப்பாவில் வாழ்ந்த மக்களும் கிசு (Kish) நகரில் வாழ்ந்த மக்களும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களோடு நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்று அவர்களின் மண்டை ஓடுகளினின்று ஆய்ந்து கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. எலியட் சுமித் என்ற அறிஞரின் ஆய்வின் படி ஆதித்தநல்லூரில் உள்ள மண்டையோடு பழங்கால எகித்திய மக்களின் மண்டை யோட்டினின்று வேறுபட்டதாகப் பிரித்துணர முடியாததாக இருக்கிறது. வில்லும், அத்தி மரத்தின் வழிபாட்டு மரபும் - ஒரு நிறைவான சமயக் கோட்பாட்டுமுறை, ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் காடர்கள் தென்இந்தியக் காடுகளில் உள்ள ஊராளிகளிட மிருந்து பெற்ற நன்கொடைகளாக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மைகளாகும். பானை சட்டிகளும் அவர்கள் அளித்த நன் கொடைகளேயாகும். பூமராங், தென்இந்திய ஊது கணைக்குழல் (Blow gun) குமுகாயப் பொறுப்புக் கட்டுப்பாடு ஆகியவைகளைக் குலமரபுச் சின்ன அடிப்படையில் கொள்ளும் வாழ்க்கை முறை (Totemism)í« அவர்களிடமிருந்து பெற்றவைகளே என்று மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.1 அடுத்ததாக, நடுநிலைக்கடல் சார்ந்த மக்களை எடுத்துக் கொள்ளலாம் பொதுவாக இந்திய மக்களுடைய - சிறப்பாகத் தென் இந்திய மக்களுடைய உடல் ஆக்க அமைப்பும் (Physical composition) கடலில் கல மோட்டும் திறனும், பயிர்த் தொழிற் கலையும் மதிப்புயர்ந்த தென் இந்தியப் பண்பாடும் கிழக்கு நடுநிலக் கடற் பகுதியினின்று வந்ததாகக் கொள்ளலாம். தென் இந்திய இந்துக் களின் மண்டையோடு அர்மீனிய நாட்டு மக்களின் மண்டை யோட்டை ஒத்ததென்று தர்சுடன் தென் இந்தியாவின் குலப்பிரிவு களும், இனமரபுக் குழுக்களும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.2 தமிழர்களிடையே அர்மீனிய நடுநிலக் கடற்பகுதி மக்களின் இணைப்பின் பொலிவு பெரிதும் காணப்படுகிறது என்று அறிஞர் பலரும் கூறுகின்றார்கள். புருசுபுட் என்னும் அறிஞர் ஆய்வில், ஆதித்த நல்லூரில் 1140-ஏக்கர் அளவிற்கு மேல் உள்ள நிலத்தில் காணப்படும் புதைகுழிகளில் புதிய கற்காலத்தை அடுத்து அரும்பிய பழைய இரும்புக் கால நாகரிகம் நிலவியது என்று முடிபு கட்டியுள்ளார். ஆதித்தநல்லூரில் அரும்பிய தமிழர் நாகரிகம் அரப்பா நாகரிகத்தோடும் சுமேரிய, எல்லம், எகித்து, பபிலோனிய அசிரிய, நாகரிகங்களோடு சங்கிலித் தொடர் போல் இணைந்தது என்று அறிஞர்களால் முடிபு கட்டப் பெற்றுள்ளது. ஆதித்தநல்லூரில் அகழ்ந்துகண்ட, வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பொருள்களையும் தமிழகத்தில் உள்ள நெல்லை, மதுரை, இராமநாதபுரம், செங்கற்பட்டு மாவட்டங்களில் அகழ்ந்து கண்ட புதிய கற்கால, பழங்கற்கால, தொல் பழங்கற்காலக் கருவிகளையும் தமிழ் இலக்கியங்கள் கூறும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களின் நாகரிகங்களோடு ஒப்புநோக்கி ஆய்ந்து எகித்திய சுமேரிய அசிரிய அரப்பன் நாகரிகங்களோடு ஒப்பிட்டும் பார்த்த அறிஞர்கள் திராவிட நாகரிகமே தொன்மையானது; சிறப்பானது; இதினின்று உலகில், பல நாகரிகங்கள் தோன்றின. இம்மக்களே உலக நாகரிகத்தின் முன்னோடிகள் என்றும் திராவிடர்களின் முன்னோர் களே எகித்திலும் எல்லத்திலும் பபிலோனிலும் குடியேறி இருக்க லாம் என்றும் கருதுகின்றனர். ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டு கொற்கைப் பண்பாட் டோடு இணைந்தது; அரப்பா பண்பாட்டோடு நெருங்கிய தொடர் புடையது. அறிஞர்கள் ஆதித்தநல்லூர்ப் பண்பாட்டை ஆழ்ந்து அழுத்தமாக ஆராய்ச்சி செய்ய முற்பட்டால் பொதுவாகத் தமிழர் நாகரிகத்தைப் பற்றியும் சிறப்பாகக் கொற்கை நாகரிகத்தைப் பற்றியும் பல அரிய - புதிய உண்மைகள் வெளிவரும். ஆதித்தநல்லூரில் அரும்பிய அரிய பண்பாட்டின் சின்னங் களும் கோநகர் கொற்கையில் கொழுந்துவிட்டத் துளிர்த்தெழுந்த நகர - ஆற்றங்கரைப் பண்பாடும் அரப்பாவில் அறிஞர்கள் அகழ்ந்து கண்ட நாகரிகத்தோடு ஒத்திருப்பது ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதற் குரியது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உவரியைப் பற்றி நடு நிலக் கடற் பகுதியில் வாழ்ந்த மக்கள் நன்கறிந்திருத்னர். சாலமோன் ஞானி விரும்பி வேண்டியமையால், எல் என்னும் தேவனுக்குக் கட்டிய எழில் மிகுந்த கோயிலுக்கு அகில் கட்டையும் மயில் இறகும் ஆட்டு மயிரும், குரங்கும் பிறவும் பீனிசியர் தம் கப்பலில் வந்து ஏற்றிச் சென்றுள்ளனர் என்று விவிலியத் திரு நூலில் கூறப்படுகிறது. உவரி, கொற்கைக்குத் தெற்கில் உள்ள பழைய துறைமுகப் பட்டினமாகும். 17. முடிவுரை அறம் ஆர்ந்து அணிபெற்றெழுந்த அரப்பாவும் மொகஞ்ச தாரோவும் ஆடவலானும் கொற்றவையும் தென்முகக் கடவுளும் திருவிளையாடல் புரிந்த திராவிடர்களின் திருவிடமாகிய திராவிட இந்தியாவிற்கு இரு கண்கள் போல் விளங்கின. திராவிட நாகரிகத் திற்கு உயர்ந்த எடுத்துக்காட்டாய் இலங்கிய இரு பெரும் நகரங்களும் ஆரிய அரக்கர்களால் அழிக்கப்பட்டன. சிந்து வெளி மக்களின் நகர நாகரிகமும், அவர்களது அரிய காளைச் சின்னமும், கிராம நாகரிக மும், பசுச் சின்னமும் கொண்ட ஆரியர்களால் அழிக்கப்பட்டன. ஏன்? உலகிற்கே ஒரு நந்தா விளக்கென ஒளிவிட்டோங்கிய சிந்து வெளித் திராவிட நாகரிகமும் திராவிடப் பண்பும் திராவிட ஆட்சியும் 4500 ஆண்டுகளுக்கு முன் அடியுடன் வீழ்ந்தன. அப்பால் அதன் அடிவேரில் கிளைத்தெழுந்த தமிழர் ஆட்சி யும் அவர்கள் நகரங்களும் மொகலாயர்களால் வீழ்த்தப்பட்டன. திராவிடர்களும், அவர்கள் வழிவந்த தமிழர்களும் வீரம் அற்ற வர்கள் என்றோ படைபலம் இல்லாதவர்கள் என்றோ அரசியல் அறிவு பெறாதவர்கள் என்றோ எவரும் கூறமுடியாது. ஆனால் அவர்கள் ஆட்சி ஏன் அடியோடு சாய்ந்தது? பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் ஆட்சி ஏன் தலைதூக்கவில்லை? அழிந்து போன அவர்களது நகரங்கள் ஏன் மீண்டும் தலைதூக்கி எழவில்லை? இவை நமக்குப் புதிராக இருக்கின்றன. இதுவரை நமது நாட்டு ஆன்றோர் களும் சான்றோர்களும் அறவோர்களும் இதைப்பற்றி ஆய முன் வரவில்லை; உண்மை கண்டு நமக்கு வழிகாட்ட வில்லை. அதனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் குமுகாயம் விழிப்புற்று எழவில்லை. தங்கள் வீழ்ச்சிக்கு உரிய காரணங்களை அறிந்து துயில் களைந்து மீண்டு உயர்வதற்குப் போர்க்கோலம் பூண்டெழவில்லை. சிந்து வெளித் திராவிட மக்கள் பயிர்த்தொழில் செய்து அற வழியில் வாழ்ந்தார்கள்; பண்பு நிறைந்து நின்றார்கள்; நாகரிக வாழ்வு நடத்திவந்தனர்; தெய்வத்தைப் பேணி வாழ்ந்தனர். ஆனால் அன்னிய நாட்டினர் அயல் இனத்தவர்கள் திராவிடர்கள் வாழ்வைக் கண்டு பொறாமை கொண்டு அவர்கள் அரிதின் முயன்று கட்டிய நகரங் களையும் விளை நிலங்களையும், பண்டங்களையும் சூறையாடி அழித்து அடிமையாக்க வருவார்கள் என்று அவர்கள் தற்பாதுகாப் பிற்கான பலமான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. ஆக்கிரமிக்க வரும் அயலவர்களின் படைகளை அழித்து அவர்களின் பிறப்பிடம் வரை விரட்டி அவர்கள் நாட்டைத் தாக்கி அவர் களுடைய படை களையும், படைக்கருவிகளையும் அழித்து அறிவூட்டு வதற்கு ஏற்ற, தாக்கும் படைகளை அமைக்கவில்லை, அதனால் திராவிட இந்தியா வீழ்ந்தது. சிந்துவெளி நாகரிகத்திற்கு அடிப் படையாக இருக்கலாம் என்று கருதும் தமிழர் நாகரிகமும் கோநகர் கொற்கையும் கூடக் காலவௌத்தால் தாழ்ந்தது; அயலவர் படை யெடுப்பால், ஆக்கிர மிப்பால் நைந்தது; இயற்கையின் கோபத்தால் வீழ்ந்தது. அரப்பாவின் வீழ்ச்சிக்குப்பின் துளிர்த்த தமிழ்நாடும் தமிழ் மக்களும் பண்டைய சிந்துவெளித் திராவிடர்கள் போல் செல்வமும், நாகரிகமும் அறமும், நெறியும், பண்பும் ஒழுக்கமும் வாய்ந்தவர்கள். பகைவர்களைத் தாக்கி விரட்டி அவர்கள் நாடுவரைப் போந்து அடித்து வீழ்த்தி அவர்களுக்கும் புத்தி புகட்டும் திறமை மிக்கவர்கள் என்றாலும் சேரர் என்றும், சோழர் என்றும் பாண்டியர் என்றும் மூன்று நாடாகப் பிரிந்ததும் மூவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி போரிட்டு சகோதர நாடுகளையும் அரண்மனைகளையும் வீடுகளை யும், விளை நிலங்களையும் கலைகளையும், கலைக் கருவிகளையும் அழித்து மூவரசர்களும் பலங்குன்றி நின்றமையால் மூவரும் அடியோடு வீழ நேர்ந்தது. பழம் பெரும் பாண்டியர் ஆட்சி கொள்ளையன் சமாலுதீன் கையால் எளிதில் வீழ்ந்த நிலைகண்டு பாண்டியகுலம் மட்டுமன்றி பாண்டியநாட்டு மக்களும், தமிழ் மக்களும் - ஏன் திராவிட இனமும் கண்ணீர் விடாதிருக்க முடியாது. பாண்டியநாடு எல்லாத் தமிழர்களுக்கும் தாயகம். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி மக்களோடும், சீனர்களோடும் சுமேரியர் களோடும் எகித்தியர்களோடும் வணிகத் தொடர்பு கொண்டவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழ்கடல்களைக் கடந்து செல்லும் கலங்களையும் கப்பற்படைகளையும் கண்டவர்கள். இமயம் முதல் ஈழம் வரை சென்று வெற்றியீட்டி இமயத்தின் உச்சி யில் குடையை நாட்டியவர்கள் ஈழம் வரை போந்து திருக்கோண மலை மீது கொடியைப் பொறித்தவர்கள்; தங்களது வலிமை மிக்க கடற்படையின் திறத்தால் சிங்களம், பர்மா, அந்தமான், நிக்கோபார், கடாரம், மலையம், சிங்கபுரம், சாவகம், பாலித்தீவு, தாய்லாந்து, கம்போசகம் போன்ற எண்ணற்ற நாடுகளை வென்று வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர்கள். யவனர்களோடும் கிரேக்கர்களோடும் உரோமர்களோடும் அரபியர்களோடும் சுமேரியர்களோடும், எகித்தியர்களோடும் சீனர்களோடும் வணிகம் நடத்தியவர்கள்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பற்படையின் திறத்தால் கடல் கடந்து யாண்டும் வெற்றி யீட்டி, சமயத்தையும் கலையையும் பண்பாட்டையும் ஞாலமெல் லாம் நாகரிகத்தையும் பரப்பியவர்கள். பழம்பெரும் பண்பு வாய்ந்த, அறநெறி கண்ட தமிழ் மக்கள் மீண்டுந் தலைதூக்கித் தழைத்தோங்க வேண்டும். எனவே, அவர்கள் முதலில் தாங்கள் பண்பு வாய்ந்த நாகரிக மக்கள் என்று உணர வேண்டும். அப்பால் அவர்கள் தங்களுக்குள் எழுந்த இனவேற்றுமை, குலவேற்றுமை, சமய வேற்றுமை அனைத்தையும் மறந்து ஒன்றுபட வேண்டும். அப்பால் அவர்கள் தங்கள் உயர்வுக்கும் உரிமைக்கும் போரிட வேண்டும். நாடு நலம்பெற - திராவிட மக்கள் வாழ்வு மலர - அறிவூட்டுக கிளர்ந்தெழுக சட்டம் செய்க என்னும் பொன் மொழியை நமது மூல மந்திரமாகக் கொண்டு எழுவார்களாக. படங்களின் விளக்கம் 1. பாண்டிய மன்னனும் பட்டத்தரசியும் இப்படம் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு அண்மையில் உள்ள அண்ணல் வாயில் அறிவன் கோயில் முகமண்ட பத்தின் முன்னுள்ள தூணில் தீட்டப் பெற்ற ஒரு ஒப்பற்ற எழில் ஓவியமாகும் இந்த ஓவியம் பாண்டியன் அவனீப சேகர சீவல்லபனும் அவனது அரசியும் கி.பி. (835-862) அரச உடையுடன் அழகு பொலிய நிற்பது போல் எழுதப் பெற்றுள்ளது - இது கி.பி. 9ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற நெய்வண்ண ஓவியப்படியாகும். சிலையைவிட ஓவியம் அழகுடன் ஒளிர்கிறது. 2. பாண்டிய நாட்டுக் கொடி இரண்டாம் சடவர்மன் சுந்தரபாண்டியன் I இலங்கையை வென்ற நினைவுக்குறியாக, அவனால் தீட்டப் பெற்ற சாசனத்தில் சடவர்மன் வீரபாண்டியன் III”, ஈழத்தை வென்று அங்குள்ள அரசர்களில் ஒருவனைக் கொன்று அவர்களுடைய படைகளைச் சிறையிட்டு அரசன் ஏறிச்செல்லும் வண்டி, கருவூலம், அரசு கட்டில், மகுடம், மாலை போன்ற அரசச் சின்னங்களைக் கைப்பற்றிப் பாண்டியனது இரு மீன்கள் தீட்டிய கொடியைத் திருக்கோண மலையில் பொறித்தான் என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கொடியின் உருவமே இங்குக் காணப்படும் படமாகும். திருக்கோண மலையி னின்று இக்கொடி தீட்டப்பட்ட மலைப்பகுதி உடைக்கப்பட்டு உலாந்தாக் காரர்கள் கட்டிய செய்கண்ட பிரடரிக் கோட்டையின் மீது வைத்துக் கட்டப் பெற்றுள்ளது. (A.R.E.No. 356 of 1906 : 1-b. 19128 & 66) இன்று அக்கோட்டை மீதே கொடி உருவம் காணப் படுகிறது. 3. பாண்டிய அரசு முத்திரை உக்கிரன் கோட்டைச் சாசனத்தில் பொறிக்கப்பட்ட பாண்டியன் சிரிபராந்தகன் வீரநாராயணனால் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) தீட்டப் பெற்ற அரசு முத்திரை. முத்திரையின் நடுவில் கீழே வில்லும் மேலே செங்குத்தாய் நிற்கும் நிலையில் இரு மீன்களும், அருகே உட்கார்ந்திருக்கும் புலியும் தீட்டப்பட்டிருப்பது சிந்திக்கத் தக்கது. சோழர் அரசு சின்னத்திலும் இவ்வாறே மூன்று அரசுகளின் சின்னமும் இடம் பெற்றிருக்கிறது. 4. பாண்டிய இளவரசனது முத்திரை இந்த முத்திரை பாண்டிய நாட்டு அரசு முத்திரையன்று. இது பாண்டிய இளவரசன் அபிராம அதிவீர ராமபாண்டியனின் சொந்த முத்திரை (இலாஞ்சனம்) ஆகும். இந்த இளவரசன் சடிலவர்மன் சீவல்லபன் என்ற அதி வீரராமபாண்டியன் மகன் ஆவன். இவர் கி.பி. 1593-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரு சிற்றூர்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக அளித்தான். அதற்காக அவனால் எழுதி வைக்கப்பட்ட செப்பேட்டில் பொறிக்கப்பட்ட முத்திரையே இங்குக் காணப்படும் முத்திரையாகும். இந்தச் செப்பேடு சென்னைத் தொல் பொருள் காட்சிச் சாலையில் உள்ளது. (V.R. ii Ramnad 66 C.P.I of 1912). 5. அஃகசாலை விநாயகர் கோயில் கொற்கையில் (மதுரோதய நல்லூரில்) உள்ள ஒரு குளக்கரை யில் காணப்படும் கோயில் அஃகசாலை விநாயகர் கோயில் என்று கூறப்படும். இதனைச் சிவன் கோயில் என்றும் இது சோழர் பாணியில் பழங்காலச் சோழர்களால் கட்டப்பெற்றது என்றும் கூறுவர். இக் கோயிலின் விமானம் மிகத் தொன்மையான காலத்தில் உள்ள சோழர்களின் விமான அமைப்பைப் போல் காணப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர் பாண்டி யர்கள் கட்டிய இந்தச் சிவன் கோயிலை இடைக்காலத்தில் சோழர்கள் மாற்றியமைத் திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. அதில் அஃகசாலை ஈசுவரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 6. சமண தீர்த்தங்கரர் சிலை கொற்கை ஊரை அடைந்ததும் வழியில் முதன் முதலாகக் காணப்படுவது இந்தச் சமணமுனிவரின் சிலையே. இது கொற்கை யில் உள்ள பழங்காலச் சின்னங்களில் ஒன்று. மற்றொரு தீர்த்தங்கரர் சிலை ஊருக்கு அண்மையில் உள்ளது தோட்டம் ஒன்றில் உள்ளது. இங்கு கிறித்தவ ஊழியை ஒட்டி சமணநெறி செல்வாக்குப் பெற் றிருந்தது என்று எண்ணப் படுகிறது. இங்குப் பல சமண சமயத்த வர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவதில் வியப்பில்லை. 7.(m) பழம் பாண்டியர் காசுகள் இங்குப் பழம் பாண்டியர்களின் புராணக் காசுகளும் எருது உருவம் பொறிக்கப்பட்ட காசுகளும், யானை உருவம் பொறிக்கப் பட்ட காசுகளும் பிற்காலப் பாண்டியர் காசுகளும் காணப்படு கின்றன. அனைத்தும் செம்பினால் ஆனவை. இவை கொற்கை அஃகசாலையில் அச்சிடப்பட்டவை. 8. (ஆ) இடைகாலப் பாண்டியர் காசுகள் இவை இடைக்காலப் பாண்டியர் காசுகளாக எண்ணப்படு கின்றன. சிலவற்றில் சு என்ற தமிழ் வரிவடிவம் தீட்டப் பெற் றுள்ளன. சிலவற்றில் கருடன், கண்ட, கோடரி, சிவன்-பார்வதி உருவங்கள் காணப்படுகின்றன. இவை கொற்கையில் அச்சிடப் பட்டவை. 9.(ï) இறுதிக் காலப் பாண்டியர் காசுகள் இதில் காணப்படும் காசுகள் பாண்டிய அரசின் இறுதிக்காலத் தில் கொற்கை அஃகசாலையில் அச்சிடப் பட்டவை. இவைகளில் கருடன், திருமால், இளம்பிறை கண்ட கோடரி, வைணவர்களின் சின்னமாகிய நாமம், சங்கு, சக்கரம் முதலியவை காணப்படுகின்றன. 10. ஆதித்த நல்லூர் பானை சட்டிகள் இங்குள்ள பானை சட்டிகள் கறுப்பு - சிவப்பு வண்ணம் வாய்ந்தவைகளாய் உள்ளன. இவை பல்வேறு வகைகளாய்க் காணப் படுகின்றன. இவை பண்டைக்காலத் தமிழர்களின் கை வண்ணத்தை எடுத்துக்காட்டும் சான்றுகளாய்த் திகழ்கின்றன. 11. ஆதித்தநல்லூர் எஃகு ஆயுதங்கள் இங்குக் காணப்படும் எஃகுக் கருவிகள் கி.மு. 100 முதல் கி.மு. 2000 ஆண்டுக்கு உட்பட்ட காலத்தவை என்று கருதப்படு கின்றன. இதில் திரிசூலம், வாள், ஈட்டி, எஃகு, அம்புமுனைகள், உளி, இருபுறமும் விளிம்புள்ள வாள், மீனெறிவேல், எறிவேல் போன்றவை காணப்படுகின்றன. 12. ஆதித்தநல்லூர் வெண்கலப் பொருட்கள் வெண்கலத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப் பாடுகள் நிறைந்த பூந்தொட்டிகளும், சாடிகளும், கிண்ணங்களும் காணப்படு கின்றன. இதில் பல செடிகளும், கொடிகளும், பூக்களும், அரும்பு களும், இலைகளும், விலங்குகளும், பறவைகளும் அழகுறச் செய்யப் பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் தளிர்த்துவிட்டன என்ப தற்கு இவை ஏற்ற எடுத்துக்காட்டாய் மிளிர்கின்றன. இந்நூல் ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் 1. A Political and General History of Tinnevelly. The Rt. Rev. Dr. R. Caldwell D.D.L.L.D. 1881. 2. A Hand book of to the Ports on the Coast of, India and Ceylon. H.S. Brown. 1897. 3. Adichanallur Skulls - S. Zuckerman (London) 1915. 4. Ancient India as described by Ptolemy - M.C. crindle J.W. (London) 1835. 5. Ancient History of New East The - Dr. H.R. Hall. 6. Archaeological Survey of Southern India - Robert Swell. Vol. II. 7. Boys Universal Chronologist. 8. Coins of Tinnevelly - Rev. E. Loventhol (Vellore) 1888. 9. Classical Dictionary of Hindu Mythology Art Pandya - J. Dawson. 10. Colas, The K.A.N. Sastry (Madras). 11. Commerce between the Roman Empire and India - Warmington (Cambridge) 1928. 12. Cultural Revolution - A. Taylor, 1930. 13. Castes and Tribes of South India - Thurston Vol. I. 14. Dravidian India - Sesha Iyengar. 15. Dravidian Elements in Indian Culture. G. Slater. 16. District Gazetteer of Madura - Francis Vol. 7. 17. Early History of India - Vincent Smith. (1914). 18. Further excavations at Mohenjo - Daro E. Mackay. 19. Gazetteer of Tinnevelly - H.R. Pate. 20. History of Tinnevelly Mission - Rt. Rev. Rt. Rev - Dr. Recald well D.D.LL.D. 1891. 21. History of Tamils - P.T.Srinivasa Iyengar (Madras) 1929. 22. History of India - Gleig. Vol.I. 23. I.M.P. Vol. III. 24. Indian Chanks and Conches - N. Rawilson. 1938. 25. History of the Rise of the Mohammadan power in India - Feritotas. (Trans. by Briggs) Vol.II. 26. Later Hindu Civilization - R.C.Dutt. 27. Manual of Tinnevelly - Stuart. 28. Mc Grindle ancient India - Strabo. 29. Modern Geography - John Purkertons (London) Vol.II. 1897. 30. Natural History - Pliny (Plinius Secondus) Trans. by Boolock & H.T.Bilay. London 1835. 31. India and the Pacific world - Kalidas Nag. 32. Historians History of the world, Vol. I. 33. Holy Bible, The. 34. Oriental Historical Manuscripts - Rev. W. Taylor Vol.I. 35. Origin and Spread of the Tamils - Prof. V.R.Rama Chandira Dikshithar. M.A. 1971. 36. Oxford History of India - V.A. Smith. 37. Periplus of the Erythrean Sea, - The, W.H. Schoff. 1912. 38. Pandian Kingdom - K.A.N. Sastry. 39. South Indian Inscriptions Vol. II. 40. Sacred chanks of India - James Homel. 1914. 41. Tamil India - M.S. Purnalingm Pillai. 1927. 42. Mohenjo-daro and The indus civilization - Sir John marshall (London) Vol.I (1931). 43. அகநானூறு - ந.மு. வேங்கடசாமி நாட்டார் 1944. 44. இராமாயணம் - கம்பன், பெரியன் சீனிவாச ஐயங்கார் 1942. 45. கலித்தொகை - பாகனேரி த.வை.இ. தமிழ்ச்சங்கம் 1938. 46. கலிங்கத்துப்பரணி - பெ. பழனிவேல் பிள்ளை 1950. 47. சிலப்பதிகாரம் - உ.வே. சாமிநாதையர் 1947. 48. சிறுபாணாற்றுப்படை - கழக வெளியீடு 1953. 49. தமிழர் சால்பு - சு. வித்தியானந்தன் M.A. Ph.D. (கண்டி) 50. திருவிளையாடற் புராணம் - உ.வே. சாமிநாதையர் 1927. 51. சேந்தன் திவாகரம் - தாண்டவராயமுதலியார் 1898. 52. தொல்காப்பியம் - கழகப்பதிப்பு 1927 (சென்னை) 1955. 53. நெடுநல்வாடை - பொ. வே. சோமசுந்தனார் 1956. 54. பட்டினப்பாலை - கழக வெளியீடு 1956. 55. பரிபாடல் - உ.வே. சாமிநாதையர், 1918. 56. பாரதிதாசன் பாடல்கள் - பாரதிதாசன் 1948. 57. பாரதியார் பாடல்கள் - சி.சுப்பிரமணிய பாரதி 1947. 58. பெரும்பாணாற்றுப்படை - இரா. இராகவையங்கார் 1949. 59. மதுரைக்காஞ்சி - பொ.வே.சோமசுந்தரனார் 1956. 60. முத்தொள்ளாயிரம் - டி.கே. சிதம்பரநாத முதலியார் 1943. 61. முல்லைப்பாட்டு - பொ.வே. சோமசுந்தரனார் 1955. 62. மீனாட்சியம்மைபிள்ளைத் தமிழ். 63. புறநானூறு - ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை உரை 1952. 64. பழையகாயல் தல புராணம் ஜ.சோ. ஆபிரகாம் தூத்துக்குடி (1926). JOURNALS 65. Asiatic Journal. Vol. I. 66. Indian Magazine, and Raview, The. June 1893. 67. Madras Christian College Magazine. 68. Modern Reveiw (Calcutta) 69. Prabuddha Bharatha. 70. Tamilian Antiquary. தாளிகைகள் 71. செந்தமிழ்ச் செல்வி - சென்னை. 72. தமிழ் முரசு (நாளிதழ்) - சிங்கப்பூர் 73. செந்தமிழ் - மதுரை. 1. A. Political and general History of Tirunelveli by the Rt. Rev. Dr. Robert Caldwell, D.D., LL. D. Bishop of Tirunelveli Published by the Madras Government 1881. 2. The Coins of Tinneveli By Rev. E. Loventhal, Danish Lutheran Mission, Vellore, Published By Higginbotham and Co., 1888. 1. What is Tamil Culture - V.R.R: Dikshitar (New Review Culcutta) June 1937. 2. (அ) பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள - சிலப். மதுரை 19-20. (ஆ) India and the Pacific world-Kalidas Nag. P.19. (இ) Out Post of Science-Bernard Jaffee, P.76. (ஈ) Stone age in India-J.C.Brown. 1. (அ) பேராசிரியர் வி.அரங்காச்சாரி, இக்காலம் கி.மு.800 வரை என்று குறிப்பிடுகிறார். திரு.வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் கி.மு.500 முதல் கி.பி.600 வரை என்று குறிப்பிடுகிறார். நாமிருக்கும் நாடு - டாக்டர் மு.ஆரோக்கியசாமி பக்.34 (1955). (ஆ) V. Rangachari Edu. Review, Oct. 1928. 2. தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கொற்கையில் நடத்திய ஆய்வின் பயனாகச் சில தடையங்கள் கிடைத்தன. அவற்றைப் பம்பாய் டாட்டா அடிப்படை ஆய்வு நிலையத்தில் சோதனை செய்து பார்த்ததன் மூலம் கொற்கைத் துறைமுகம் கிறித்து பிறப்பதற்கு 785-ஆவது ஆண்டிற்கு முன் எழுந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு புவனேசுவரம், கோனார்க் ஆகிய இடங்களைச் சேர்ந்த 9-ஆவது நூற்றாண்டில் எழுந்த பைரவர் படிமமும் பிறபடிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன - தமிழ் முரசு (நாளிதழ்) சிங்கப்பூர். சூலை. 12-1970. 1. “Kautalia speaks of pearls being found in the river Tambraparni, on Pandian kavataka and near the Mahendra mountain” - Dr. Bhandarker’s lectures on the ancient History of India. 2. (a) This large continent of times sclater an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance being the probable cradle of the human race which in all likelihood here first developed out of the anthropoid apes” - Prof. Errest Hacekal’s The Evolution of Man. (b) Ancient Jaffna-C.Rasanayagan C.C.S (ceylon) 3. Ibn Battuta (1325-54) - Trans - H.A.R, Gibb (London) 1953, P. 259. 1. (a) Tamil name of the place was Korkai. When this was abandoned the present (Northern) Madurai became the capital. The transfer of the capital from Korkai to Madurai is noted by Plini” - The History of the Tamils - P.T. Srinivasa Iyengar, M.A. (1927) Madras. P. 242. (b) Warmington Op. Cih, P. 167. (c) தென்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்கிவைத்த அப்பார் சடைப்பன் - திருவாசகம். (d) Korkai was from the earliest times the maritime Capital of the Pandian kings and the greatest Emporium of all India for more than four thousand years until the Mohamadan invasion of the 14th century” - Manual of Tinnevelly - Stuart. 2. Korkai was the primitive seat of the Tamil College (Sangam) as Organised by Agastya Rishi, King Ukra Pandyan alias Subramania who reigned there about 2500 B.C. As the College (Sangam) was afterwards removed to the inland capital Madura. Korkai bore also according to some inscriptions the name Mathurothaya Nallur meaning the good town which originated madurai” - manual of Tinnevelly - Stuart. “Kayal (Korkai) flourished for about 4000 years as the maritime capital of the highly. Civilized Tamil kings who had (from the erronomously called pre-historic period) for intercourse with the length and breadth of the whole world in commerce, religion, litrature Science etc., and that in ‘Consequeence’ it was praised by the ancient nations of the west as the most important city and sea port on the Eastern coast of India”, “the great and noble city and key of Hind” (the cradle of the postdeluvian mankind and of all wisdom and as situated in the great province of Mabar (kfh மாற - the great pandians) the best of all Indies and the finest and noblest in the world” - Ancient Historical Manuscripts - Rev. W. Taylor, Vol. I - P XIV. “This was the Korkai to which all native traditions pointed as the cradle of South Indian civilization” - A Political and general History of Tinnevelly - The Rt. Rev. Dr. R. Caldwell, D.D., LLD. PP. 12-13, 283. “... Ancient city of Korkai once the Sub-Capital of the Pandian Kingdom and the great emporiun familiar to Greek and Egyption Sailors & traders & described by the geographers of the 1st and 2nd centurces A.D. under the namo of Kolkai. The Sacred chank of India - J. Hornell. F.L.S. (1914) F.P. 42. 1. வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்திசையாண்ட தென்னவன் வாழி - சிலப். மது. 11: 21-22. 2. The gaeat foreign trade of the Tamil country during the period brought about the existence of numerous sea ports such as described in the next age by the author of the Periplus and Ptolemy. From a story of the Bauddha jataka quotted in a previous chapter we learn Kaviri-poom-pattinam was the greatest sea port of the Cholas in the first millennium B.C. as well as the secondary capital Korkai called by Sanskrit writers Pandya Kavatam, the gate way of the Pandyas for a long time wrested from madura, the honour of being the Pandya capital and retained it till about the time of Ptolemy the geographer, who says that the capital was recently shifted to Madura. Korkai’s importance lay in the fact that it was the seat of the trade in pearls so much prized by ancient peoples. The History of the Tamils - P.T. Srinivasa Iyengar (1929) P. 189. 3. *கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகைபெரி துடைய காதலி கண்ணே - ஐங். நெய்தல். 1. A Political and general History of Tinnevely (1881) - by The Rf. Rev. Dr. R. Caldwell D.D.L.L.D. Bishop of Tinnevelly. 2. In short wherever money is to be made, wherever a more apathetic or a more aristocratic people is waiting to be pushed aside thither swarm the Tamilians the Greeks or Scots of the East the least superstitious and the most enterprising and peresevering race of Hindus - A comparative Grammer of the Dravidian, Dr.R.Caldwell (1856). 1. “More is known about Korkai from the Greeks than from Native writings or traditions. It is mentioned by the author of Feriplus Maris Erithrace - an intelligent greek merchant who visited India probably about A.D. 80 and Ptolemy the Geographer A.D. 130. Both author of the Periplus and Ptolemy aggree in representing Kolkhai as the head quarters of the pearl fisher at that time* - A Political and General History of Tinnevely. Dr. Caldwell (1881). 2. Megasthenes mentions it 302 B.C. The Greeks named the Gulf of Mannar from this place “Col. Chic Gulf”. It was the fitst port visited by Greeks after roundings Cape of Camorin and the first place on Tinnevelly coast whose name was recorded by them” Madras Manual: P. 42. 1. (m) Persians Arabians Phonicians Hebrus Egyptians Ethopians Greeks and the Romans as well as the Chinese Burmese and other Eastern nations all had intercourse with the Tamlians and traded in various commodities as fine gold, pearls, different germs, ivory, peacocks, monkeys, sandal, ebony and their rich woods, ointments, spices, indigo, cotton and silk clothses etc., manual of Tinnevelly - Stuart, PP. 43, 44. (ஆ) A Political and general History of Tinnevelly - Dr. Caldwell (1881) 57-83. 2. (a) L. Indo Dravidianne-Societe d’ Ethnographie Julien Vinson (Paris). 1907. (b) The Ancient History of the East-H.R.Hall. PP. 173-4. (c) Sayce, Hibbert Lectures PP. 136-8. (d) Schoff’s Periplus P. 61, 153. (e) Warmington, commerce between the Rome an India P. 213. 1. (a) It is perfectly possible that after this district was drowned in the sea the capital was shifted to Kabadapuram. The word is but an adaptation of the Sanskrit phrase Pandyakavadam meaning the door of the Pandya Country. The Tamil name of the place was Korkai. When the place was abandoned the present (Northern) Madurai became capital. The transfer of the capital from Korkai to Madurai is noted by Pliny, when the king changed his residence we may persume, his poets also shifted their quarters to the new capital” - The History of Tamils - P.T.S. Iyenkar. P. 242. (b) Warmington op cit P. 167. 2. கொற்கையில், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சில தடையங்களைக் கண்டெடுத்தனர். அதைப் பம்பாய் டாட்டா அடிப்படை ஆய்வு நிலையத்தார் சோதித்துப் பார்த்ததன் மூலம் கொற்கைப் பட்டினம் கி.மு. 285-ஆவது ஆண்டைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - தமிழ் முரசு (நாளிதழ்) சிங்கப்பூர் சூலை 12, 1970. பக். 3. 1. The History of the Tamils - P.T.Srinivasa Iyengar M. A. (Madras) 1929 - P. 189. 1. The History of the Tamils - P.T.Srinivasaiengar M.A. 1929 (Madras) P.189. 1. The History of the Tamils - P.T.Srinivasaiengar M.A. 1929 (Madras) P.189. 1. இன்று கொற்கையில் கிடைக்கும் அகட மன்னன் காலத்துப் (கி.மு.63-கி.பி.14) பொன் நாணயங்களிலிருந்து நீரோ (கி.பி.54-68) காலத்துப் பொன் நாணயங்கள் வரை கிடைக்கின்றன. அதற்குப் பின் உள்ள உரோமர்களின் செம்பு நாணயங்களும் சில கொற்கையில் கிடைக்கின்றன. - தமிழ்நாட்டுக் காசுகள், அ. இராகவன். 1. History of Tinnavelly - The Rt. Rew. R. Caldwell. P.P. 12, 13, 283. 2. Medous Taylors Students Manual of the History of India P. 67. Boys Universal Chronologist P.P. 32-181. Tamil India by M.S. PurnalingamPillai (Madras) 1927 P. 3. 1. Scotts Priplus. 2. Pliny, Natural History. 3. History of Tinnevelly - The Rt. Rev. R. Caldwell D.D.L.I.D. (1881) PP. 17-18. 1. The Holy Bible - King I: Chap, 22: 48, Chap. 10 : 22. 2. Caldwell’s History of Tinnavelly.P.23 - Comparative Grammar p.88. 3. Madras Christian College Magazine - Thomasï M.A. Warmington O. Cit . p.147. 4. J. Dawson’s classical Dictionary of Hindu Mythology (Art-Pandya). 5. Rev. W. Taylor’s Oriental Historical Manuscripts Vol.I. P. - XIV. 1. The name Pandian was familiar to the Greeks. There were two king of Athens, so named by one of whom the Pandia was established, it being a festival, stated to have some reference to the moon as the Dionysia had to the son. The second Pandian lost his kingdom and had four sons (the eldest of whom recovered what his father has lost.) and the sons were termed Pandianidas. - Caldwell’s History of Tinnavelly. P-119. 1. Malik Kapur retuturned to Delhi on October 18, 1311 bringing with him so the chroniclers say 312 elephants laden with spoils 12,000 horses 96,000 mounds of gold and many boxes of pearls and precious stones. When he returned a military garrison was left at Madura. The Pandian Chronicle further states that three years after the conquest of Malik Kapure “all things were conducted in Mahammadan manners. Men were in dread of showing themselves to each other. All things were in strife and disorders” - South India and her Mohammandan invaders - Krishnaswamy Iyenger (1921) - PP. 91-131. 1. “The greeks came to kolkai to purchase pesrls certainly soon after the christian era, probably many years before and represented it as the Head quarters of the pearl trade ... It must have been regarded as a considerable place at that time, seeing that from its name they called the Gulf of Mannar the Kolchie gulf. This was the Korkai to which all native traditions pointed as the cradle of South Indian Civilization” - The Indian Antiquary Vol. VII. P. 80-82. 1. Vanmeeki Ramayana. 1. It we take the earlier statement of the Mahavamsa that Vijaya landed in the division of Tambapanni of the land of Lanka as a proof that part of cylon where he landed was then known as Tamprapanni and that the earlier Greek traders used to call at a port there and applied that name to the the whole island Ceylon, then the correctness of the statement made in the Periplus that ceylon was then called Palaisimoundon but by the ancients Taprobane will become apparent. As Pliny was the first to make mention of the name Palaisimunda, Taprobane was certainly the more ancient name. Anciant Jaffna - C. Rasanayagm C.C.S. (1926) P. 104. தண்பொருந்தத்தின் வடகரை தென் திருமாலிருஞ்சோலை எம்பெருமானுக்கு என்று இச்சாசனம் கூறுகிறது - 411 of 1966. - V.A. Smith’s Early History of India (1924) P. 469 F.N. 1. Strabo says that he saw in 25 B.C. about 120 ships sailing from Hormus to India (Merindle, Ane Ind P. 6) Embasies want him (Augustus empror of Rome) from several Indian states, for Augustus himself says that Indian embasies came frequently (Warmington op. eit. P. 35) Warmington thinks Sera the Pandya and the Sola monorchs of the time each sent separate embasies (Warmington op. cih. P. 37). This led to the volume of India’s trade with Rome in the time of Augustus expanding to huge proportions. 1.* நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப - புறம் 56. (அ) யவனர் ஓதிம விளக்கு - பெரும்பாண் 11 : 316-317. (ஆ) யவனர் இயற்றிய வினைமாண்பாவை கையேந்தைய களிறையநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி - நெடுதல் 11 : 101-103 (இ) பாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழல - முல்லை : 85 (ஈ) கையமை விளக்கம் - முல்லை 1:49. (உ) யவனப் பாவை யணிவிளக்கு - பெருங்கதை 171-175. 1. (அ) கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர் - சிலப். 14 : 66-67. (ஆ) மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் - முல்லை. 11-59-61. 1. (அ) மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் துடக்கம் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலுங் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து - சிலப். 15 : 207-217 (ஆ) சீவக சிந்தாமணி 1: 101-104. 2. (அ) இனி உரோமைப் புலவன் ஒறாசியசு என்பான் இந்தியத் தூதர், அகத்தசை கி.மு. 25-இலும் கி.மு. 15 - இலும் கண்டார்கள் என்று கூறுகிறான் - உலக வரலாறு (முதற் பாகம்) - த. இராமநாத பிள்ளை பக். 329. (ஆ) “In the time of the Emperor Augustus there was a great development of Indias trade with Rome” (இ) யவனர் தந்த வினைமா ணன்கலம் பொன்னொடு வந்து கறியொட பெயரும் - அகம் 149. (ஈ) யவன மஞ்சிகை - பெருங்கதை 1, 32, 1-76. (உ) யவனப் பேழை - பெருங்கதை : 111, 22-1-213. (ஊ) ............................................ யவனக் கைவினை மரணப் புணர்ந்ததோர் மகர வீணை - பெருங் 111 16; 11. 22-23. (எ) யவனக் கைவினை யாரியர் புனைந்து தமனியத் தியன்ற தாமரை போல் .......................... வையம் -பெருங். 1, 38, 11, 233, 4, 239. (ஏ) அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி - மணி 132-1-76. (ஒ) ஐம்பதி னிரட்டி யவனச் சேரி - பெருங். 111. 4, 1-8. 1. The History of the Tamils - P.T. Srinivasa Iyengar, P.14. 2. Warmington op. cit, P. 4., Mcrindle, Anc. Ind. P.6. 1. உலக வரலாறு - இராமநாதபிள்ளை (1851) பக்கம். 330. 1. யவனரோதிம விளக்கு - பெரும்பாண் 11 : 316-317 பாவை விளக்கிற் பரூஉச்சுடர் அழல - முல்லை 1:85 யவன ரியற்றிய வினைமாண் பாவை கையேந் தையகம் நிறைய நெய்சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி - நெடுநல் 11:101-3. 2. ஆண்டுதோறும் சமாலுதீன் இப்ராகீம் கிசுத் தீவிலிருந்து 1400 குதிரைகளும், கதீப் லாக்சாப்ரைன், குர்முசு, கில்காட் முதலிய தீவுகளிலிருந்து 10000 குதிரைகளும் பாண்டியர்கட்கு அனுப்ப வேண்டுமென்பது ஒப்பந்தம், ஒவ்வொரு குதிரையும் 220 தினார் என்னும் பொன்நாணயம் பெறுமதி எனக் கணிக்கப்பட்டுளது - எலியட் ஐஏ - 69. 3. Warmington op. cit P. 147-158 Periplus - 41 Scoffs Periplus - 177 Plinys Natural History Vi - 26. 4. Schoff’s Periplus P. 16. 5. Warmington op. cit P. 4. 6. Merindle Anc. Ind. P. 6. 7. Warmington op - cit P. 35-37. இங்கே குதிரை வளர்ப்பதில்லை. குதிரைகள் வாங்குவதில் இந்நாட்டின் செல்வத்தின் பெரும் பாகம் செலவாகிறது. ஒரு குதிரையின் விலை 100 மார்க் வெள்ளியின் பெறுமதிக்குக் கூடுதலான 500 சக்கி பொன் கிரையமாகும். இங்கு ஏராளமான குதிரைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. இங்குள்ள 4 மன்னர்களில் ஒவ்வொருவரும் 2000 குதிரைகள் வாங்கும் தேவை உடையவர்கள் மார்க்கோபோலோ, 42. பக். 266-67. பட்டினப்பாலை 11-185-191. 1. In the time of the Emperor Augustus, there was a great development of India’s trade with Rome. The intercourse of Roman influence at palmyra and the consolidation of Roman power in Alenandra the principal emporium of Trade between the east and the west were the cases of the sudden expansion of this trade” - History of the Tamils - P.T. Srinivase Iyengar M.A. - (Madras 1929. P. 301). 2. From the very beginning of the Roman Empire Pandian people had probably taken the leading part in encouraging the Romans to come and trade for they had sent as we have seen an embassy to Augustus’ Pandyan Kingdom - K.A.N. Sastry London) 1929 - P. 253. 1. பொன் மலிந்த விழுப்பண்ட நாடார நன்கிழிதரு மாடியற் பெருநாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கிருக்கை தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற உயர் நெல்லினூர் - மதுரை. 77-88. 2. Korkai, called by Sanskrit writers, Pandya Kavatam, the gateway of the Pandya for long time, wrested from Madura the honour of being the Pandya capital and retain it, till about the time of Ptolemy the Geographer, who says that the capital was recently shifted to Madura. Korkai’s importance lay in the fact that it was the chief seat of the trade in pearls so much prized by ancient peoples” - The History of the Tamils. P.T.Srinivasa Iyenkar M.A. (Madras). 1929. P. 189. Ramayana - Krish - Kanda - Vanmeeki can 41 vers - 19. 1. (அ) மறப்போர்ப் பாண்டியர் அறத்திற்காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து - அகம் 27: 8-9. (ஆ) விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் ... நற்கொற்கை - மதுரை 135-138. (இ) முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை - நற் 25 : 5-6. (ஈ) நற்றேர்வழுதி கொற்கை முன்றுறை - அகம். 130 : 1-11. 2. தென் இந்தியச் சாசனங்கள் தொகுதி 2 பகுதி 1. 1. நவமணிகள் டி.எ. வைத்தியநாதன் (1959) 1. பதார்த்தகுண சிந்தாமணி Indian chanks and conches - N. Rawtson 1930. 1. The Early History of India, (Oxford) 1914 2. பெரிபுளூசு - சோமசுந்தர தேசிகர் மொழி பெயர்ப்பு. பக். 50 (அடிக்குறிப்பு) 1. Supra. Chap. III. P. 100 note *(b). 2. “Among Bengal Castes of inferior social status particularly those whose physical charactertistics bespeak Dravidian descent and whose customs are not yet thoroughly Hinduised the use of chank bangles made up into massive gauntlets composed of numerous separate bangles is very prevalent. The Sacred Chank of India - G. Hornell. (1914) P. 103. 3. (அ) ஒண்டோடி மகளிர் கொண்டகம் புகுதா - பெருங் 1 : 34.230. (ஆ) ஒண்நொடி அரிவை கொண்டனன் நெஞ்சே - ஐங்குறு. 18. 172. மற்றவ ணின்ற பொற்றொடி மகளிரை - பெருங் 1 : 34.157. 1. “The evidence furnished by the Tamil classics of existence of an extensive chank-bangle industry in the extreme south of India during the height of ancient Tamil civilisation 1200 to 2000 years ago has received unexpected by conclusive corroboration within the present year (1912) through discoveries which I have made on the sites of the once famous Tamil cities of Korkai and Kayal (now Palaya Kayal). These cities are now represented by mounds of rubbish adjacent tovillages stillbearing the appelation of their celebrated predecessors. The greatest find was at Korkai which as already noted flourished from a date well antecedent to the christian era down to some indeterminate date prior to 1000 A.D. when the accretion of silt at the mouth of the Tambraparani drove the inhabitants to build another city (kayal) at the new mouth of the river. Here on the landward outskirt of the village I unearthed a five series of chank work shop waste, seventeen fragments in all. The whole numbers were found lying on the surface of the ground in a place where the old Pandyan coins have from time to time been discovered according to the information gathered in the village. “The Sacred chanks of India by James Hornell, F.L.S.” (1914) P. 45. Ibid P.46. 1. கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் பொற்றொழில் கொல்லறர் ஈரைஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை உயிரப்பலி யூட்டி - சிலப். நீர் 127-130. Figure 1-15. These are no doubt old Pandyan Coins from Korkai a Place which Bishop Caldwell calls “The oldest Place of Dravidian civilisation in Southern India” They are from the remotest times down to I think about 300 years after christ” Coins of Tinnevelly by Rev. E. Loventhal - Vellore 1888-1. 1. The earlier part of them are probably Buddhist coins, but the later ones not at least some of them (Fig.25-26) have Brahmanical marks - Coins of Tinnevelly - E. Loventhanl. The figure Siva & Parvathi (Fig. 58-59) have been abolished & old Vishnu mark the Garudan put into its place on the obverse of the coins. The Coins of Tinnivelly. E. Lovethal (1888) P. 14. 1. Gazatter of the Madura Dist. Vol. I - P. 31. 2. Numismata Orientalia Vol. III - P. 119. 1. அஃகசாலை பழைய கொற்கைப்பட்டினத்தின் ஒரு பகுதி என்பாரும் உளர். 2. The Colas by K.A. Nilakanda Sastry P. 635. 1. (அ) தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்* (ஆ) பேருலகத்து மேஎந் தோன்றிச் - சிறுபாண் 1 : 62 விளைந்து முதிர்ந்த விழுமுத்தி னிலங்குவளை இருஞ் சேரிக் கட்கொண்டிக் குடிப் பாக்கத்து நற்கொற்கை* - மதுரைக்காஞ் 11 : 133 - 138 (இ) கொடும்புணரி லிலங்கு போழக கடுங்காலொடு கரைசேரக் நெடுய்கொடி மிசை இதை எடுத் தின்னிசை முரச முழங்க; 1. The Holy Bible - Genesis Chap. 7. 1. கருணாமிர்த சாகரம், முதல் புத்தகம், முதல் பாகம். பக். 18-19. 2. Min Kan - The Rev. H. Heras. S.J. (1947) Bombay P. 74. 3. The early writers of the church, however claim that the use of the fish to represent the Saviour was derived from a rebas taken from the Greek word for fish “ICHTHYS”, the letter of which are interpreted to mean Jesus Christ. God, Son, Saviour, One Calls Jesus “The Fisher of Men”; another says “Christ is figuratively called a fish”; another, “He is the fish that lives in the midst of water”, and still another “we small fish are like ICHTHYS, Our Jesus Christ born in water and saved only by remaining in water” - Decorative Motives of Oriental Art by Katherine M. Ball. P. 201 (1927) London. 1. The fish had already appeared in Pagan art, but the christians soon discovered, that in Greek language the five letters constituting the word ‘fish’ were the initial letter of the phrase “Jesus Christ the son of God the Saviour” writing about A.D.200. On Baptism Tertuleian said “But we little fishes after the example of our fish Jesus Christ are born in water while Augustine (A.D.C. 425) said that in the word fish” Christ is mystically understood because he was able to live that is, to exist without sin the abyss of this mortality as in the depth of waters”. Thus the fish might stand symbolically for the name of Christ. In the catacomb of Priscilla there is an inscription reading “Alexandar in” after which a fish is shown Completing the phrase Alexandar in Christ. Or fishes might stand for the Christians themselves. A grave inscription of Licinia Amias from around A.D. 200 (See illustration) has word “Fish” followed by “of the living” which must mean “Jesus christ, the son God the saviour of living” and is adorned with to fishes which may represent the christian who are “the living”. The inilials D.M. which appear on this inscription stand for Dis Manibas meaning “To the sprihits of the world of the dead”. These initials appeard regularly on Pagan graves and were friquetly employed by christians simplyas a conventional form and without further thought of their Original meaning” - Light from the ancient past - Jack Finegan (1951) PP. 382-383. 1. Of these princes Jatavarman Sundara Pandian 1, claims in his inscription to have conquered ceylon while Jatavarman Vira Pandia II, who took Elam A.D. 1253/4-1275) killed one of the two Kings, captured his army, charriots, treasures, throne, crown, necklace, bracelets, parasols, chaures, and other royal possessions planted the Pandian flag with the double fish on Konamalai and the high peaks of Trikutakiri mountain, received elephants as tribute from the other Kings of Ceylon subdued the Kerala* - (A.R.E.No 356 of 1906; ib 1912 & 65) - Ceylon coins and curreney - H.W.Codrington, B.A. (Oxon) C.C.S.; 1925. 2. As said above in the south also we have a Minavan the Pandyan King of Madura. His lanchanam was also the two fish may be seen in the Ramnad Plates of Abhirama Ativerarama Pandya in the Madras Museum in the Pandyan coins in all the temples built by the Pandyas in Southern India and even on the jambs of the gate of the Frederick Fort at Trincomalee in Ceylon. Again he says that the horn fish of the flag of Greece is the same horn fish that was worshipped by the Pandya Minas Madura Kings” - The Minavan in Mohenjo - Daro - Rev. H. Heras, S.J. 1. “We may have it that the end of the 3rd century B.C. or of the begining of the 4th be the time at which Madura was built” - Madura Sri Meenakshi Sundeswarar Mahakumbabisheka Sovenier (1963) Madurai. 1. Korkai was still claimed to be the nominal capital of the late Pandyas, but the real capital from the days of Arekesari Parakraman (A.D. 1422-1461) Later Pandias - A.R.O. Marthandanar 1925 P. 15. 1. (a) The early History of India - V.Smith. 1914. (b) Prehistoric history of the rise of the Mohammedan power in India, (Trans. by John Briggs. Vol. 1. 8, 875). (c) “..... There must have been two districts in Pandya Dynasties. One in Korkey and one in Madura and also that there were several branch lines especially of the Madura Pandyas.” - Coins of Tinnevelly by Rev, E. Loventhal (Vellore). 1888. P. 7. 1. M.De Marles - Histoire Generale de I’Iinde ancienne et moderne. Tome 1 of 111 Lile Emolor Feros - Paris 1828. 1. Caldwell’s History of Tinnevelly - P. 37. 1. Caldwells’s History of Tinnevelly P. 38-39. 1. India Orientalis Christian loc cit: In 1578 Fr. John de Faria S.J. at Pudikael (Punnai kayal) engraved and cast types of Tamil letters common to the fishery and coromandal Coast in which he published the Flos Sanctrum” (Foot Note) All article on “The first Printing Press in India by Leo Proserpia” - The New Review Calcutta Oct. 1935. P. 328. 1. (a) A short History of Indian people - Tarachand. P. 19-38. (b) A Political and General History of Tinneveli - Bishop. Dr.R.Caldwell. P. 57. (c) Manual of Tinnevelly - Stuart - PP. 43-44. 1. APolitical and General History of Tinnevelly. The Rt. Rev. Dr. Robert Caldwell D.D.L.L.D. (1881) Madras. PP. 75-83. 2. Marco Polo - Colonel Yule. 1. Oriental Historical Manuscriptus Vol.I Preface P.V.VJ Vol. II appendix W.P.25. 2. பழைய காயல் தல புராணம் - ஐ.ஜோ. ஆபிரகாம் (சுப்பிரமணிய புரம்) 1926 பக்கம்.1. பழைய காயல் தல புராணம் - ஜ. ஜோ. ஆபிரகாம் (சுப்பிரமணியபுரம்) (1926) பக்கம்.7. 1. History of Tinnevelly District - Bishop Dr.R.Caldwell P. 57-83 Mawal Tinnevelly of Stuau P.40 & 47. 1. History of Tinnevelly district: Bishop Dr.R.Caldwell P.P.12, 13-283. 1. Dr. Jagor of Berlin. 1. Further exploration were conducted in the winter of 1903 1904 by M. Louis Lapicque of Paris, which resulted in additional collections and as a result of their examination M. Lapicque arrived at the conclusion that the remains belonged to a Proto Dravidian race - Catalogue of Prehistoric Antiquities at Adichanallur & Perumbair - 1915. 2. Mohenjo - Daro and The Indus Civilization - Sir John Marshall. Vol.I London (193) P. 107. 3. The Adiehanallur Skulls by S. Zuckerman M.A.M.R.C.S., L.R.C.P. London. 1930. 1. Dravidian Civilization - R.D.Banerji - (Modern Review. 1934. 2. Settlement Pattern in Tambaraparani Vally - I. Balakrishna Nayar M.A.L.T. (A paper submitted in the Seminar on Pandian History, Madurai 22-3-71). 3. Historians History of the world vol.I.P. 77. Dravidian element in Indian culture - G. Slater P. 22 ff. 1. Physical features have been taken into account in determining racial elements. Prehistoric cronology can be studied from the finds at Adichanallur. Nal in Baluchistan and Mohenjo - Daro. It has been that the Mohenjo - Daro skulls of Proto - Australoid type are related to the skulls from Kish from Adichanallur and from those of the modern Veddhas. According to Elliot Smith an Adichanallur skull is indistinguishable from the early Egyptian type. The generally accepted theory is that the earliest inhabitants of the Peninsula were negroid in type akin to the Kadars and Uralis of South Indian forests and their contribution was probably the bow and the cult of the ficus tree - a fertility cult .... Next came the Mediteranian race. It is these that have been largely responsible for the physical composition of the peoples of Indian and especially South India and that have enriched South Indian culture Arts of agriculture & navigation came with them. These were from the eastern Mediteranean with them the Armenoids. - Origin and spread of the Tamils - Prof. V.R. Ramachandra Dikshitar M.A. (Madras) 1971. P. 6. 2. (a) Castes and tribes of South India - Thurston Vol. II.P. 115. (b) Travancore Tribes and castes - L.A.Krishna Iyer Vol.II. P. 292-293. (c) The Ancient History of the Near East - H.R.Hall. P. 173, 174-212. (d) “The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into central India where in the Narbada valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valley to North Western India right up to Himalayan Hills” - India and the Pacific World - Kalidas Nag. P. 15. The hypothesis that would represent what we know of their history most correctly would place their Original seat in the extreme South, some were probably not for from Madura or Tanjore and thence spreading fan-like towards the north. They have no traditions which point to any seat of race out of India or of their having emigrated from any Country whose inhabitants they can claim any kindred so far as they know they indigenous and oboriginal” - Tamilian Antiquary (No.1) - Dr. Fergusson. “Among the modern Indians, as amongst the modern Greeks or Italians the ancient Pre-Aryan type of the has (as the primitive of the alway does) survived, while that of the Aryan conqueror died out long ago and it is to this Dravidian ethnic type of India that the Sumerians bear most resemblance so far as we can judge from his monuments. He was very like a Southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is by no means impossible that the Sumerians were an Indian race which passed certainly by land, perhaps also by sea, through Persia to the Valley of the two rivers. It was in the Indian home (perhaps Indus Valley) that their writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and abreviated form which afterwards in Babylonia took on its peculiat unifrom appearance owing to its being written within a aquare ended stilus on soft clay. On the way they left the seeds of culture in Elam ... ... there is little doubt that India must have been one of the earliest centres of civilization and it seems natural to suppose that the strange unsemitic uraryan people who came from the east to civilise the west were of Indian the Sumerians were in type” - An Ancient History of the Near East - Dr. R.Hall. The Madras presidency is the habitate of a Tamil Race whose civilization was the most ancient. A branch of Tamil Race spread a vast civilization on the Euphrates in very ancient times whose astrology, religion, love, morals and rites etc., furnished the foundation of the Asryian and Babylonian civilization and whose mythology was the source of the christian Bible. Another branch of them spread from the Malabar coast and gave rise to a wonderful Egyptian civilization and the Aryans are ir debted to the race in many respects. The colassal temples in South India proclaim the Engineering Art of the Tamil race” - Qutoed in “Prabuddha Bharatha” (Monthly Magazine) by Swami Vivekananda Sep. 1921. 1. “Educate, agitate and legitate” - Cultural Revolution A. Taylor. (1930).