உரைவேந்தர் தமிழ்த்தொகை 12 பரணர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் AN INTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 12 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 336 = 360 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப் படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் பரணர் முன்னுரை 1 பாராட்டுரை 8 பரணர் 13 பண்டை நிகழ்ச்சி கூறல் 22 தெய்வப் புலவர் திருவள்ளுவர் முன்னுரை 189 தெய்வப் புலவர் 194 திருவள்ளுவர் வாழ்வு 200 திருவள்ளுவரைப் பற்றிய கதைகள் 234 திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி 247 AN INTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR Foreword 263 An introduction to the study of thiruvalluvar 265 Part - I 270 Part-II 291 Part III 311  Contents முன்னுரை 1 பாராட்டுரை 8 பரணர் 13 1. பண்டை நிகழ்ச்சி கூறல் 22 முன்னுரை 189 I. தெய்வப் புலவர் 194 II. திருவள்ளுவர் வாழ்வு 200 III. திருவள்ளுவரைப் பற்றிய கதைகள் 234 திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி 247 ANINTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR 261 AN INTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR 265 PART - I 270 PART-II 291 PART III 311 முன்னுரை கரந்தைத் தமிழ்ச் சங்கமும் உரைவேந்தரும் திருவளரும் இப்பெரு நாட்டில் தொன்று தொட்டு வழங்கி, நமது வாழ்க்கையை வழிப்படுத்தி நிற்கும் மொழிகள் பல. அவற்றினுள் முதன்மையானது தமிழ். இதன் தோன்றற் காலம் இன்னது என்று அறிய முடியாதது. மற்றை மொழிகளைத் தனது துணைவேண்டா வென்றியால் அடிமை கொண்டு, தன்னையொத்த சிறந்த மொழிகள் பலவற்றிற்கும் தான் தாயாகி வேற்று மொழிகள் சிதைந்தொழிந்த காலத்தும் தான் தன் பண்டைய இளமை மாறாது, என்றும் ஒருபடித்தாய்த் திகழ்வதும், தன்னை வழங்கும் மக்கட்கு அவர் தன்னிழலிற் பிறந்தமையினாலே உரிமைபல அளித்து உயர்வடையச் செய்வதும் தமிழ். இதன் பண்டைப் பெருமை எல்லையற்றது. உலகத்து முந்தை மனிதர் பேச நாவியக்கமின்றிக் குறிகாட்டித் திரிந்து, வனங்களிலும் குகைகளிலும் விலங்கினத் தோடொப்ப வாழ்ந்த போது, பைய நாவையசைத்துப் பொருள்கட்குப்பெயர் பொறித்து, வாழ்க்கையின் இனிய சாறுகளைச் சுவைக்க இடம் கொடுத்தது நந்தமிழ்! தழையும் தோலுமே உடுக்கையிற் சிறந்தவையென மற்றையோர் அணிந்தபோது பாம்புரிவை போன்ற பட்டுடையுடுத்தது தமிழ்! முற்காலத்துக் கல்வி அறிவொழுக்கங்களிற் சிறந்த யவனர், புலவர்க்கும் பரணர்க்கும் இலை முடியளித்தபோது, புனைதேரும், முகபடா அம் போர்த்த களிறும், பொற்றாமரையும் வரையாது வழங்கியது தமிழ்! பெருமாண்புடையார் அவ்வவர் வாழ்நாட்குப் பின்னும் நிலை பெற்றிருக்கச் செய்யும் விரகு மற்றையோர் அறியா திருந்த போது, அவருக்கு உருவச்சிலை நாட்டி வழிகாட்டியது தமிழ்! பொருள் வேண்டின் கொள்ளை கொள்வதையே மற்றையோர் தொழிலாகக் கொண்ட காலத்தில், திரைகடல் ஓடித் திரவியம் தேடியது தமிழ்! இரண்டொரு பயிரேயன்றி வேறுவளர்க்க அறியாது மற்றையோர் இருந்த நாளில், பதினெண்வகைக்கூலங்களைப் பயிர் செய்து பாருக்கு அளித்தது தமிழ்! ஒரு குலத்துக் கொருநீதி வழங்கிய காலத்தே துலாக் கோலன்ன நடுநிலைமை குன்றாதிருந்தது தமிழ்! நமது முன்னோர் தாய்மொழியைத் தமது உயிரும், அதனோடு மூத்து அதனினும் சிறந்த தம் புகழேயும் பொற் போற் போற்றி வளர்த்தனர். தமது கடமையும் அதுவேயென அறிவுறுத்தினால் நந்தமிழ்மக்கள் ஊக்கம் பெறுவர். மனவலி மிகுந்து தாய்மொழித் தொண்டியற்றும் திண்ணியவராவர். 'தமிழ் மக்கள் யாம்' என்று சொல்லிக் கொள்வோரே, அவர் மொழியைப் புறக்கணித்துத் தம்மைத் தாமே மதியாது வேற்று மொழிகளில் நாட்டங்கொண்டு கற்கத் தொடங்கினர். தனித்தமிழ் மொழியாகிய தமிழும் படிப்படியாக இந்த நாட்டை வென்றோர் மொழிகளையெல்லாம் ஒருவாறு தழுவிக், கடையாக ஆங்கிலமும் கலப்புண்டு நிற்கும் நிலையை எய்திற்று. தன்மதிப்புடைய நாட்டவரெவரும் விரும்பா நிலையில் நந்தமிழ் நிற்றலைக்கண்டு அவ்வப்போது அதன் சீரும்செம்மையும் பேரும் திறனும் வெளிவர நம்மவரிற் சிற்சில பெரியோர் ஆன்றோர் தலைமையில் பலகழகங்கள் நிறுவித்தமிழ் வளர்க்கலாயினர். பனிமா மலைவரை பரந்து விளங்கும் தனிமாநிலமதைத் தன்னடிப்படுத்தியும் - காடு கெடுத்து நாடு பல தோற்றியும் - கலங்கரை விளக்கமொடு கடற்றுறை கண்டும் - காவிரி சிறக்கக் கல்லணை அமைத்தும் - முதியவர் போற்ற முறைமை நல்கியும்- பொன்றாப் பெரும்புகழ் போர்வலி பெற்ற கரிகாற் பெருவளத்தான் அரசு கட்டிலில் அமர்வதற்குப் பல்லாண்டுகளின் முதலினின்று, சொல்லாற்றலும் பொருளாற்றலும் இலக்கண இலக்கிய அமைவும் ஒருங்கேயமையப் பெற்றுத் தமிழக மூவேந்தர் போற்றிப் புரந்ததாலும்- சங்கம் வைத்து அங்கம் தழைக்க வளர்த்ததாலும் தனியரசு செலுத்தி வீறுற்றுயர்ந்த நம் தமிழ்த்தாய் சில்லாண்டுகளின் முன்னர் சிறுமையுறு மாறிருந்ததை யுணர்ந்த நம் சான்றோர்களிற் சிலர், அன்னையின் அடிமலர் பொலிவு ஆங்காங்கு தமிழ்ச் சங்கங்கள் நிறுவி அச்சிறுமையினைப் போக்க முற்பட்டனர். அந்நிலையிற்றான் நமது தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம், நாவுக்கரசப் பெருநாவலனின் நற்றமிழ்ப் பேறுபெற்ற கருந்திட்டைக் குடியில் விரோதிகிருதியாண்டு வைகாசித் திங்கள் முதல்நாள் 14-5-1911 அன்று, திருவருளின் துணையும் தமிழ்த் தாயின் தண்ணளியும் கொண்டு, செல்வத் திருமகன் -திருவளர் மேலோன் திரு. த. வே. இராதாகிருட்டினப்பிள்ளை. பி. ஏ. அவர்களால் தொடங்கப் பெற்றது. தொடங்கிய காலந்தொட்டு இவரின் தமையனார் த. வே. உமா மகேசுவரனார் பி.ஏ., பி. எல்., அவர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பினையேற்று முப்பதாண்டுகள் தன்னலங் கருதாத தமிழ்த் தொண்டாற்றியதைத் தமிழ்கூறு நல்லுலகத்துத் தமிழ்ச் சான்றோர் நன்கறிவர். சங்க இலக்கியங்களின் சிறப்புக்களையும் - தெய்வப் பனுவல்களின் பெருமைகளையும் தமிழராயினார் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகச் சிலப்பதிகாரம் பெரியபுராணம் கம்பராமாயணம் முதலான நூல்களைக் கிழமைகள் தோறும் பாடம் நடாத்தி மக்கள் தாமே தமிழ் நூல்களைப் பயிலுமாறு செய்தது கரந்தைத் தமிழ்ச்சங்கம். தமிழ்ப்பெரும் புலவர்களை அழைத்து வந்து திங்கள் தோறும் கூட்டங்கள் நடாத்தி எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகிய சங்கஇலக்கியங்களைப் பற்றித் தமிழராயினார் அறிந்து கொள்ளுமாறு செய்தது கரந்தைத் தமிழ்ச்சங்கம். பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசியும் எழுதியும் வந்த காலத்து, "திரு - திருவாளர் - திருமண அழைப்பிதழ் - சொற்பொழிவு" முதலான தனித்தமிழ்ச் சொற்களைத் தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச்சங்கம். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற " நீராருங் கடலுடுத்த ..." என்று தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலைச்சங்கக்கூட்டங்களிற் பாடியும் தமிழராயினார் அதனைப் பயிலவும் பாடவும் வேண்டு மென்பதற்காகத் துண்டுத் தாள்களில் அச்சிட்டு வழங்கியது கரந்தைத் தமிழ்ச் சங்கம். தமிழ்ச் சிறார்கள் எல்லாப்பாடங்களையும் தாய்மொழி வழியே பயில வேண்டு மென்பதற்காகச் " செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரி" என்னும் பள்ளியைத் தோற்றுவித்து ஏட்டுக் கல்வியும் தொழிற்கல்வியும் பயிற்றுவித்துத் தமிழகத்திற்கு வழிகாட்டியது கரந்தைத் தமிழ்ச் சங்கம். புத்தகசாலை - இலவசப் படிப்பகம் - இலவச சித்த மருத்துவமனை - ஏழை மாணவர் இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தி மாணாக்கர்க்கும் - மக்களுக்கும் ஏற்பன இயற்றித் தொண்டு செய்தது கரந்தைத் தமிழ்ச் சங்கம். தமிழ் மொழியின் மேன்மையைப் பேணுதற் பொருட்டு "தமிழ்ப் பொழில்" என்னும் தமிழாராய்ச்சித்திங்கள் இதழை 1925-ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து நடாத்தி வருவது கரந்தைத் தமிழ்சசங்கம் தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கழைக்கழகம் இருக்க வேண்டுவது இன்றியமையாததொன்று சங்கக் கூட்டங்களில் முடிபுகள் இயற்றியும் - மாநாடுகள் நடாத்தியும்-முதற்குரல் எழுப்பியது கரந்தைத் தமிழ்ச் சங்கம். தமிழகத்துத் தமிழ்ப் பெரும் புலவர்களின் - சங்கப் புலவர்களின் எழுத்தோவியங்களை - ஆய்வுக் கட்டுரைகளை- மறுப்புரைகளைத் "தமிழ்ப் பொழில்" இதழில் வெளியிட்டுத் தமிழை வளர்த்தது கரந்தைத் தமிழ்ச் சங்கம். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "நக்கீரர்" "கபிலர்" என்னும் புத்தகங்களையும் பா. வே. மாணிக்கர்நாயக்கர், பி.இ., அவர்களால் எழுதப்பெற்ற "அஞ்ஞாநம்" என்னும் நூலையும்- அருட்டிரு. விபுலானந்த அடிகளாரால் எழுதப்பெற்ற"யாழ்நூல்" என்னும் இசைத்தமிழ் நூலையும், "தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பேராசிரியர் உரையைக்" கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களைக் கொண்டு பதிப்பித்தும் - "தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் உரையை" வெளியிட்டும் தமிழ்த்தாய்க்கு அணிசேர்த்தது கரந்தைத் தமிழ்ச் சங்கம். கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரி என்னும் பள்ளியில் புலமை மிக்கவர்களாய சிவ. குப்புசாமி பிள்ளை ஒளவை. சு. துரைசாமிபிள்ளை முதலானோரை ஆசிரியராய் அமர்த்தித் தமிழை வளர்த்தது கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழகத்து உயர் நிலைப்பள்ளி களில் தனித்தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இல்லாக்குறையைப் போக்க 1938- ஆம் ஆண்டில் கரந்தைப் புலவர் கல்லூரியைத் தோற்றுவித்து ஆயிரக்கணக்கான புலவர் பெருமக்களைத் தமிழகத்திற்கு வழங்கியது கரந்தைத் தமிழ்ச் சங்கம். பேராசிரியர். ஒளவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் சங்கத்தில் ஆசிரியப் பணியாற்றிய தோடமையாது தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் உரை - பதிப்பிக்கும் காலத்துச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பதிப்பிக்கும் பணியிலும் - தமிழ்ப் பொழில் வெளியீட்டுப் பணியிலும் கரந்தைக் கவியரசு அவர்களுக்குத் துணையாயிருந்து தொண்டாற்றியவர். சங்கத்திலும் ஐயம்பேட்டை கிளைச் சங்கத்திலும் திருமுருகாற்றுப்படை - திருநீலகண்டர் என்னும் பொருள்களில் சொற் பெருக்காற்றியவர். சங்கவிழாக்களிலும் -வெள்ளி விழாவிலும் முக்கியப் பங்கேற்றுப் பணியாற்றியவர். தொல்காப்பியத்தில் எழும் ஐயங்களைத் தமிழவேள் அவர்களிடம் பாடம் கேட்டுத் தெளிவு பெற்றவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளிடம் சைவ சித்தாந்தம் அறிந்தவர். பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தும் சங்கத்தார் விழாக்களுக்கு அழைத்த போதெல்லாம் தாய்வீடு நோக்கி வரும் சேயைப் போல் பாசத்தோடு வந்து பங்கு பற்றியவர். தமிழ்ப் பொழில் திங்கள் இதழில் தொடர்ந்து "வள்ளல்கள் வரலாறு", "முடத்தாமக் கண்ணியார்", "மதுரைக் காஞ்சி யாராய்ச்சி", "ஆர்க்காடு" "பரணர்" முதலான தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரை களையும் - ஆங்கிலக்கதைகளைத் தமிழ்வழிப்படுத்தியும் எழுதியவர். காவிரிப்பாக்கம் - திருவத்திபுரம் போளூர்- செய்யாறு முதலான ஊர்களில் பணியாற்றிய காலத்தும் தமிழ்ப்பொழில் இதழுக்குத் தன் பங்களிப்பை அளிக்கத் தவறினாரில்லை. சங்கத்திற்குச் செய்யும் தொண்டினைத் தமிழ்த் தாய்க்குச் செய்யும் தலைத் தொண்டாகக் கருதி வாழ்ந்தவர். எதிர்வரும் 1995 சனவரி 1 முதல் 5- ஆம் நாள் வரை தமிழ் வளர் தஞ்சையில் நடைபெறும் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை முன்னிட்டுத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை இயக்கத்தார். தமிழில் இதுநாள் வரை வெளிவராத, வெளிவந்தும் கிடைக்காத தமிழ்ப் பெரும் புலவர்களால் எழுதப்பெற்ற அரியதொரு நூலினை வெளியிடுமாறும் - அதற்கு அரசு நிதியுதவி அளிக்கும் என்றும் அறிக்கை அளித்தார்கள் அதன்படி, நம் சங்க வெளியீடாகிய "தமிழ்ப் பொழிலில்" 1925- ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த துணர்களையெல்லாம் படித்தறிந்து ஆராய்ந்து - தமிழ்வளர்க்கும் சங்கத்தின் பாலும் தமிழ்வளர்த்த தமிழவேள் அவர்கள் மாட்டும்அன்பும் மதிப்பு முடையாரும்- சங்கத்தில் கல்விப் பணியாற்றியவரும் ஆகிய உரைவேந்தர் -சித்தாந்த கலாநிதி -பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் தமிழ்ப் பொழில் இதழில் 1931 -ம் ஆண்டிலிருந்து துணர் 6, 7, 8. 11, 12, ஆகியவற்றின் இதழ்களில் பரணர் என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைத் தெரிவுசெய்து தொகுத்து நூலாக வெளியிடலாமென்று உமாம கேசுவர மேனிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் புலவர் மீ. இராமதாசு, எம். ஏ., எம். எட்., அவர்கள் கொடுத்தார். சங்கத்தின் புகழுக்கும் தமிழின் பெருமைக்கும் பரணர் என்னும் நூல் சிறந்த தெரிவென்றோர்ந்து இதன் நகலை உரை வேந்தர் திருமகனாரும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணை வேந்தரு மாகிய முனைவர் ஒளவை. நடராசன் அவர்களிடம் கையளித்த போது அவர்கள் பேரன்பும் பெருமகிழ்ச்சியும் கொண்டு ஏற்று, படித்துப்பார்த்துத் திருத்தம் செய்ததோடு ஒப்பம் அளித்துப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்கட்கு என் நன்றியை உள்ளன்போடு தெரிவிக்கின்றேன். கரந்தைத் தமிழ்ச் சங்கச் சார்பில் பதிப்பிக்கப்பெற்ற தரமும் திறமும் வாய்ந்த வண்ணமிகு இந்நூலினை எட்டாவது உலகத் தமிழ் மாநாடு கொண்டாடப்பெறும் வேளையில் தமிழக அரசின் அரிய நூல்களை வெளியிடும் திட்டத்தின்கீழ் நிதியுதவி செய்தும் - தம் திருக்கரங்களால் வெளியிட்டும் அருளிய மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். இக்கட்டுரைகளைத் தொகுத்ததோடு அமையாது பிழை திருத்தம் செய்தும் பதிப்புக்குதவியும் வரும் புலவர் மீ. இராமதாசு அவர்களுக்கும் - பகலென்றும் இரவென்றும் பாராமல் நூல் வெளியீட்டுக்குரியன அனைத்தும் செய்தும் - பதிப்புக்குதவியும் வரும் உமாமகேசுவர மேல்நிலைப்பள்ளி K.ஜெயக்குமார் எம். எஸ்ஸி., பி.எட்., இவருக்கு உறுதுணையாய் உதவிய S. வாசுதேவன், க. சண்முகசுந்தரம் ஆகியோருக்கு என் நன்றி என்றும் உரியன. பரணர் என்னும் பைந்தமிழ்நூலைப் பாங்குற அச்சிட்டுக் கொடுத்த தஞ்சை, லக்மி அச்சகத்தார்க்கும் வண்ணமிகு அட்டையினை வடிவமைத்துப் பதிப்பித்துக் கொடுத்த தஞ்சை என். எஸ். பி லித்தோஸ் நிறுவனத்தார்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். “ தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்ப ராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே” கரந்தை. 1- 1- 95 ச.இராமநாதன், தலைவர், கரந்தைத் தமிழ்ச் சங்கம். பாராட்டுரை பேராசிரியர் முனைவர் ஒளவை. நடராசன் முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். எந்தையார் உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தம் வாழ்நாள் முழுவதும் பரிவு கொண்டிருந்தார். தமிழவேள் உமாமகேசு வரானாரிடம் பேரா அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்ததோடு தமிழவேளின் மறைந்த நாளை ஆண்டு தொறும் நினைந்து உண்ணாநோன்பிருந்து வந்தார். சில ஆண்டுகள் அச்சங்கத்தின் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதைப் பிற்காலத்தில் மிக மகிழ்ந்துரைப்பார்கள். அந்நாளில் சங்கத்தொடு இணைந்திருந்த அறிஞர் எல். உலகநாத பிள்ளை, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை, பள்ளியகரம் நீ.கந்தசாமி பிள்ளை, சிவ.குப்புசாமிபிள்ளை முதலானாரொடு நெருங்கிப் பழகியதைப் பல நூல்களில் குறித்தார்கள், இயல்பாகவே தமிழில் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்த என் தந்தையாருக்கு ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெறுதற்கு இந்நல்லாரிணக்கம் துணை நின்றது. எந்தையாரவர்களின் அறிவாற்றலையும் புலமையையும் நன்கு தெரிந்திருந்த தமிழவேளவர்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டிய நீங்கள் இந்த இடைநிலைப் பள்ளியில் கட்டுண்டிருத்தல் கூடாது. உயர்நிலைப் பள்ளியிலாவது பணியாற்றல் வேண்டும் என வற்புறுத் தியமையால் அதனை ஏற்று மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளியில் பணியாற்ற சென்றார்கள். தமிழவேள் விரும்பியாங்குக் காவிரிப்பாக்கம் பின்னர் சேயாறு உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழவேளவர்களின் தூண்டலால் ‘பரணர்’ என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய இதழாகிய “தமிழ்ப் பொழிலில்” வெளியிட்டு வந்தார். இக்கட்டுரையை இன்றைக்கு நோக்கும் பொழுது தொடக்க காலத்திலே எந்தையார் எய்தியிருந்த செறிந்த புலமை நலமும் சிந்தனை வளமும் கட்டுரை எழுதும் கலைத்திறனும் வியப்பை அளிக்கின்றன. இத்தகு பெரும் புலமையே பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினை நல்கியது எனல் வேண்டும். ‘பரணர்’ என்னும் இக்கட்டுரையின் ஆராய்ச்சியமைப்பினை நோக்குமிடத்துப் பின்னர், புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க இலக்கியங்களுக்கும் யசோதரகாவியம் முதலிய சிற்றிலக் கியங்களுக்கும், நாட்டாரையா அவர்கள் விட்டுச் சென்ற மணிமேகலைக் காவியத்தின் காதைகளுக்கும் நல்லுரை வரையும் ஆற்றல் கால் கொண்டிருந்தமை புலனாகிறது. மேலும் சேர மன்னர் வரலாறு முதலிய வரலாறுகளை எழுதியமைக்கு இக்கட்டுரையின் ஆய்வுச் சிந்தனையே அடிப்படை எனலாம். தமிழ்ப்புலமை என்னும் அளவில் நில்லாமல் ஆங்கில மொழியிலும் ஆழ்ந்த பயிற்சி பெற்றிருந்தமையால் அக்காலத்தில் தமிழ், தமிழர் பற்றி ஆங்கிலம் வல்லார் ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று நூல்களையெல்லாம் ஆராய்ந்து பயின்று அவற்றில் தேர்ச்சியும் பெற்றிருந்தமையை இக்கட்டுரையின் முதற்படலம் நன்கு தெளிவிக்கின்றது. அந்நாளிலேயே தமிழக வரலாற்றிலும் கல்வெட்டுத் துறையிலும் எந்தையார் ஆழ்ந்த புலமை பெற்றிருந் தமையும் அறியலாம். ‘பரணர்’ என்னும் இக்கட்டுரையை நூலாசிரியர் எழுதிய காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் பலர் இலக்கியங்களை மட்டுமே சான்றாகக் கொண்டு சங்க இலக்கியப் புலவர்களைப் பற்றியும் மூவேந்தர் குறுநில மன்னர் ஆகியோரைப் பற்றியும் வரலாறுகளை எழுதிச் சென்றனர். அதனால் காலம் பற்றிய ஆய்வுகளும் பிறவும் தடுமாற்றத்திற்குள்ளாயின. வரலாற்றுச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் நுண்ணிதின் அறிந்து நுவலும் மனப்பாங்கும் கடப்பாடும் எந்தையார் கொண்டிருந்ததும் இக்கட்டுரை நூலால் புலனாகின்றது. இக்கட்டுரைக்குரிய தலைவரான பரணர் சங்ககாலப் புலவர் சிலரொடு இணையாகப் பேசப்படும் பெருமிதம் உடையவர். தொகைநூல்களில் கபிலரை ஒப்ப மிகுதியான பாடல்களைப் புனைந்தவர். பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தினைப் பாடியவர். பதினோராந்திருமுறையில் இவர் பாடியனவாகச் சில பாடல்கள் உள்ளன. இவர் நக்கீரனார், பெருங்குன்றூர்க்கிழார், ஒளவையார் முதலாய சங்கப்புலவோர் பலரால் மதிப்புடன் பாராட்டப் பெறுபவர். இவர் இயற்றிய பாடல்களில் சேரன் செங்குட்டுவன், கரிகாற் பெருவளத்தான் ஆகியோர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகுதியாகவும், நன்னன், பிண்டன், அதிகன், கோசர், தித்தன், வெளியன், மிஞீலி, அஞ்சி ஆய்ஆண்டிரன் வேள்எவ்வி, நள்ளி, பேகன், மத்தி, தழும்பன், ஆதிமந்தி, ஆட்டனத்தி முதலாய குறுநில மன்னர் பலரின் வரலாற்றுக் குறிப்புகள் ஓரளவும் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் இவர் பாடிய பாடல்கள் வாயிலாக நயம்பட கட்டுரையாசிரியர் விளக்கியிருப்பது இலக்கிய வாயிலாக வரலாற்றுச் செய்திகளை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆராய்ச்சி பரணர் பற்றியதாயினும் அவரால் மதிக்கப் பெற்ற பாராட்டப்பெற்ற வேந்தர்கள் குறுநில மன்னர்கள் என்னும் முறைமையில் சேரன் செங்குட்டுவன் வரலாறும் சோழன் கரிகாற்பெருவளத்தான் வரலாறும் தனி ஆராய்ச்சிக் கட்டுரையாக அமைந்திருப்பது இவ்வராய்ச்சி நூலின் சிறப்பாகும். கரிகால் வளவன் மற்றும் சில குறுநில மன்னர்களைப் பற்றிய பரணர் பாடல்களைப் பண்டைய நிகழ்ச்சிக் கூறலாகக் கொண்டு விளக்கந்தருகின்றார். அவற்றுள் பல பாடல்கள் முன்னிலையில் வைத்து நேருக்கு நேர் கூறுவது போல அமைந்தன, அதனாற் பரணர் என்னும் பெயருடையார் பலராக இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகின்றது. இக்கால ஆய்வாளர் பலரும் அவ்வாறே எண்ணுகின்றனர். இதன்கண் கல்வி, அறிவு, புலமை என்பவை தம்முள் தொடர்புடைய வேறு தன்மைகளையும் ஆற்றலையும் கொண்டவை என்பதை இக்கட்டுரையாசிரியர் விளக்கிய பாங்கு எக்காலத்திற்கும் பொருந்தும் விழுமியவுரையாக அமைந்திருப்பது பெரிதும் போற்றிப் பேணத்தக்க ஒன்றாகும். புலமையின் தன்மையையும் ஆற்றலையும் விளக்கப் பரணர் பாடியுள்ளவற்றுள் ஊருண்கேணி உண்துறை தொக்க பாசியற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழிவிடுவுழிப் பரத்தலானே” என்னும் பாடலை எடுத்துக் காட்டி அதன்கண் அமைந்த உவமை நலத்தையும் பொருள் ஆழத்தையும் விளக்குவது இவர் உரைவேந்தர் எனப் புலவோருலகம் பாராட்டும் உண்மைக்குச் சான்றாக உள்ளது. சங்க இலக்கியங்களை ஆராயப் புகுவோர்க்கு இக்கட்டுரை நூல் தக்க வழி காட்டியாக அமைந்திருப்பதை இதனைப் பயில்வோர் நன்குணரலாம். இத்தொடரின் இரண்டாம் படலத்தோடு இந்நூல் நிற்கிறது. தொடர்ந்து பரணரின் பாடல்களின் சிறப்பு களையும் நயங்களையும் எழுதவுள்ளதாகக் குறிப்புக் காணப்படுகிறது. அவற்றை உணர்வதற்கு இக்கட்டுரைப் பகுதிகளும் துணையாக உள்ளன. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குமுன் “தமிழ்ப் பொழிலில்” வெளிவந்த இக்கட்டுரையைத் தொகுத்து ஒரு நூலாக இலக்கிய உலகமும் ஆராய்ச்சி உலகமும் பயன்கொள்ள வெளியிடும் புலவர் மீ. இராமதாசு அவர்களின் நல்லுழைப்பையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் இன்றைய தலைவராக அமர்ந்து அருஞ் செயல்கள் பலபுரிந்து சங்கத்தைப் பலரும் போற்றத்தக்க முறையில் வளர்த்து வரும் திருமிகு “கரந்தை தமிழ்ச்செம்மல்” ச. இராமநாதன் அவர்களுக்கும் எனது பாராட்டுதலையும் உளம் நிறைந்த நன்றியினையும் மனநெகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணியாய் எட்டாம் உலகத்தமிழ் மாநாடு தஞ்சைப் பேரூரில் எழிலுற நடக்கும் இந்நாளில் இந்நூல் வெளிவருதல் காலத்தாற் கனிந்த கனியாக நம்கைக்குக் கிட்டுகிறது. இங்ஙனம் அரிய நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் பணியைச் சங்கம் மேற்கொண்டு தொடர்ந்து நற்பணிபுரிய வேண்டுமென்னும் என் விருப்பத்தையும் தெரிவித்துச் சங்கத் தொண்டு பல்லாற்றானும் பெரிதும் வளரத் தமிழ் செழிக்க வாழ்த்துகின்றேன். எந்தையார் பேரிமயம் யானோ அதிற்பிறந்து வந்த சிறுகல்லாய் வாழ்பவன்காண் சந்தமுறக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் காணுமவர் நூலாம் பரணர்க்கென் வாழ்த்துப் பணிந்து எந்தையார் புகழெங்கே நான் எங்கே. பரணர் பகுதி - 1 சீரிய பேரிலக்கியங்களாகவமைந்துள்ள சங்க நூல்களை ஒருவன் கற்கத் தொடங்குவதன் முன்னமே அவற்றையாக்கிய புலவர் பெருமக்களுள் கபிலர். நக்கீரர், இக்கட்டுரைத் தலைவராகிய பரணர் ஆகிய இம்மூவர்களை அறிந்து கொள்ளுகின்றான். இவருள் நக்கீரரைப் பற்றிய செய்திகளைப் பலர் பலபடக் கூறுவது மிகுதியாக இருத்தலின், அவரை யறிதல் அருமையன்றா தலின் கபிலர் பரணராகிய இருவரையும் சிற்றிலக்கியங் கண்டு நன்னூல் சின்னூல்களாகிய இலக்கணங்களைக் கற்கும்பொழுது தான் அறிகின்றான். நன்னூலில் “பொதுப் பெயருயர்திணைப் பெயர்கள்” என்று தொடங்கும் புணரியற் சூத்திர வுரையிலும், சின்னூலில் “உலைவில் உயர்திணை மேலும்மைத் தொகைதான் பலர் சொன்னடைத்தாய்ப் பயிலும்” என்னும் சூத்திரவுரையிலும், முறையே, “கபிலபரணர்” எனவும் “கபிலபரணர் வந்தார் என உம்மைத்தொகை பலர் சொன்னடைத்தானவாறு” எனவும் வருதல் காண்க. இங்ஙனமே, இவை யிரண்டற்கும் முதனூலாய்த் திகழும் தொல்காப்பியத்துள் “உயிரீறாகிய வுயர் திணைப் பெயரும்” என்று தொடங்கும் எழுத்ததிகாரச் சூத்திரத்தும், “உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே, பலர்சொன்னடைத் தென மொழிமனார் புலவர்” என்னும் சொல்லதிகாரச் சூத்திரத்தும் உரையாசிரியர் முதல் நச்சினார்க்கினியர் ஈறாக எல்லா ஆசிரியர்களும் உரை கூறுகின்றனர். இச்சிற்றிலக் கியங்களுள்ளும் திருவிளையாடற் புராணங்கள் இரண்டனுள் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல், “ முன்னமோர் காலம் சங்கமண் டபத்து முறைமையி னிருப்பதற் கியைந்தே பன்னிய பனுவற் காரண மாகி விளங்குபே ராசனம் விரும்பிப் பன்னியல் வாணர் கபிலர்நக் கீரர் பரணர் முன் னாகவா லயத்துத் தொன்னெறி யடியார்க் கினியன கொடுக்கும் சொக்கனுக் குரைப்பமென் றடைந்தார்.” எனவும், “வாங்கருந் தெய்வப் பலகையைச் சங்க மண்டபத் திடைநடு விட்டாங் கோங்கமுன் கீர ரிருந்தனர் பின்னர் உயர்புளோர் ஒருவருக் கிருப்ப ஆங்கது வளர்தல் கண்டுநன் கபிலர் இருந்தனர் அன்பொடு முன்போல் தாங்குதல் கொடாது வளர்ந்திட விருந்தார் பரணருத் தலமெலாம் மதிப்ப” எனவும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் இச் சங்கப் பலகை கொடுத்த செய்தியைக் கூறுமிடத்து “வேறுபல் வகை யாற் பூசை வினைமுடித் திறைஞ்சிக்கீரன்- ஏறினான் கபிலனோடு பரணனும் ஏறினானே” என்றும், சங்கத்தார் கலாம் தீர்த்த படலத்தின்கண், “ இத்தன்மைய னாகிக்கலை வல்லோர் தமிழெல்லாம் சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன்தெருள் கீரன் முத்தண்டமிழ் கபிலன்தமிழ் பரணன் தமிழ் மூன்றும் அத்தன்மையனறியுந்தொறும் அறியுந்தொறுமெல்லாம்” என்றும் கூறுகின்றன. இவற்றால், நாம் இக் கட்டுரைக்குத் தலைப் பொருளாகக் கொண்ட பரணர் தமிழ்கற்போரனைவரும் முன்னரே யறிந்துகொள்ளும் சங்கச் சான்றோர் என்பது பெறப்படுகின்றது. மேலும், பரணர் கூறப்பெறுதலைக் காணுமிடத்து இவருக்கும் கபிலருக்கும் நெருங்கிய நட்பு உளதாகல் வேண்டுமென்பது தெரிகின்றது. ஆனால், இதற்குச் சிறந்த சான்றாவது கபிலபரணர் என்னும் தொடரே யன்றி வேறொன்றும் கிடைத்திலது. இவரது தோழரான கபிலர் “உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்”என நக்கீரனாராலும், “வயங்கு செந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” என்று பெருங்குன்றூர்க்கிழாராலும், “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்றும், “பொய்யா நாவிற் கபிலன்” என்றும் முறையே பொருந்திலிளங்கீரனார், மாறோகத்து நப்பசலையார் முதலி யோராலும் புகழப்பெற்றது போல, இவரும் “இன்றும் பரணன் பாடினன் மற்கொல்” என ஒளவையாரால் புகழப் பெறுதலானும், குறுந்தொகை முதலிய தொகை நூல்களிற் கபிலரையொப்பச் சொன்னலம் பொருணலம் சிறக்கக் கவிபாடும் சிறப்பினாலும் அவர் பெயரோடு இணைத்துக் கூறப்பெறும் தகுதி யுடையராயினார் என்பது யாவரும் கொள்ளற்பாலதொன்றாம். இங்ஙன், புலவர் பாடும் புகழ்படைத்த பரணரது பிறந்தவூர், பெற்றோர் பெயர் முதலியன இதுகாறும் கிடைத்தில. எனினும் பதினோராம் திருமுறையிலுள்ள சிவபெருமான் திருவந்தாதியைப் பாடிய பரணதேவநாயனார் என்பவரும் இவரேயாயின், இவரது சமயம் சைவசமயமாகும். மற்றுத் திருவள்ளுவ மாலையின் கண் இவர் பாடியதாகக் காணப்பெறும் “ மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின் வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து” என்னும் வெண்பாவைக் கொண்டு இவர் திருமாலை வழிபடும் சமயத்தராதல் வேண்டும் என்கின்றனர்! இங்ஙனம் உவமை முகத்தாற் புகழ்ந்துரைத்ததனையே கருவியாகக் கொண்டு முடிபு செய்வதாயின், இவர், “ஞால நாறு நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ஆல முற்றங் கவின்பெறத் தைஇப் பொய்கை சூழ்ந்த பொழின்மண மகளிர் கைசெய் பாவை துறைக்க ணிறுக்கும் * * * புகார் நன்னாட்டதுவே.” (அகம். 181) என்னும் செய்யுளின்கண் புகார்நாட்டு மகளிரை விதந்துகூறு முகத்தால் பொய்கையோடு “முக்கட் செல்வ”னையும் உடன் கூட்டிப் புகழ்ந்த துணையானே இவரது சமயம் சைவசமயமே யென்பது துணியப்படுவதாம். இது எத்துணை வலியுடைத்தாயிற்று! பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்து முற்றும் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவனை இவர் பாடியிருப்பதோடு அமையாது “ படைநிலா விலங்குங் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க வோட்டிய நிர்மா ணெஃகம்” என அகத்திலும், “இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பின்” என்று தொடங்கும் ஏர்க்களவுருவகப் பாட்டினைப் புறத்திலும் பாடிப் பரிசில் பெற்றமையான், இவர் இக் குட்டுவன் காலத்திலிருந்தவர் என்பது வெளிப் படையாதலா லும், இச்செங்குட்டுவன் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தவனாதல் கூடும் என்று சேரன் செங்குட்டுவன் என்னும் சிறந்த ஆராய்ச்சி நூலொன்று கூறுவதனாலும் இவர் காலமும் ஐந்தாம் நூற்றாண்டேயாகும். ஆயினும் இவர், “நன்னன், நறுமா கொன்று நாட்டிற் போக்கிய, ஒன்றுமொழிக் கோசர்” என்றும், “ஒன்று மொழிக் கோசர்க் கொன்று முரண்போகிய, கடுந்தேர்த் திதியன்” என்றும் கோசரது வரலாற்றினைக் கூறுகின்றார். இக்கோசர் துளுநாட்டு வாழ்நர் ஆவர்.* இவர்கள் பாடலிபுரத்து அரசர் மரபின் ஒரு கிளையாகித் துளு நாட்டின் புறத்து வாழ்ந்த மோரியரோடு கூடித் தமிழ்நாட்டிற் புகுந்தனராதலாலும், அவர்கள் அக்காலத்து அரசுபுரிந்த முதலாங் கீர்த்திவர்மன் என்னும் சாளுக்கிய வேந்தனுக்குப் பகைவராய் வெளிவந்தமையாலும், அவ் வேந்தன் காலம் கி. பி. 566-597 எனத் தெரிதலாலும், இவர் காலமும் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாம் என்று கொள்ளும் வகையில் கிடக்கின்றது. இனி இவரது புலமையியல் பல புலவர் பெரு மக்களாலும் “அளக்கலாகா ஆழ முடைத்து” எனக் கருதப்பெறுகின்றது. புலமையாவது அறிவுடைமையாம் தன்மையென்பது. அறிவு என்பது கல்வி கேள்விகளினாலாய அறிவோடு உண்மையறிவு கூடியது. இவ்வறிவு உலகிற் பிறந்த மக்கள் அனைவருக்கும் கருவிலே வாய்த்த திரு. அது இயற்கையில் ஆகாயம் போல் வண்ணம், அளவு, வடிவு, சுவை முதலியனவின்றித் தானே தனக்கு நிகராய் மிகத்தூயதாய் இருப்பது; மேலும், மக்களது மனத்தின்கண் நிலைபெற்று, அதன் தொழிலாய் விளங்குவதுமாகும். இங்ஙனம், மனத்தின் தொழிலாய்த் தன் தொழிலை நடாத்து மிடத்துத் தனக்குக் கருவியாக, இது பொறிபுலன் களைக் கொண்டு, உலகினை யாராய்கின்றது. அதனாற்றான், இவ்வுலகும் கட்புலனாம் பொருள், செவிப்புலனாம் பொருள் என முறையே ஐவகைப் பகுப்பின்கண் எஞ்சுதலின்றி அடங்குகின்றது. இவ்வறிவு கட்புலனைத் துணையாகக் கொண்டு பொருள்களை உற்றுக் கண்டதனைக் கண்டாங்கே மனத்திடத்து நிலை பெறச் செய்து பிறிதோர மையத்து முற்கண்ட பொருளோடு முற்றுமோ ஒருபுடையோ ஒப்புமையுடைய வேறோர் பொருளைக் கண்டவிடத்து அவ்விரு பொருளையும் ஒப்புநோக்கி, அவற்றின் பெற்றி இது என்னும் முடிபினைச் செய்கின்றது. இங்ஙனம் பொருள்களைக் காண்டலும் ஏற்றுக் கோடலும், ஒப்புநோக்கலும் முடிபு செய்தலுமாகிய தொழில்களால் முடிந்தவற்றை மனத்தின் கண் நிறுத்தி, மேன்மேலும் பொருள்களை யாராய்தற்குக் கருவியாகவும் செய்து கொள்ளு கின்றது. இச்செயலால் அறிவு உரம்பெற்ற காலத்தே புலமை எய்துகின்றது. இப்புலமை வலுப்பட்டுநின்ற காலத்துத்தான், பொருள்களை நெடுநேரம் உற்று அவற்றின் திட்பநுட்பங்களை ஒருவன் அறிந்து கொள்ளுதல் இயலுகின்றது. இற்றாக, இவ்வண்ணம் அறிந்தபொருள்களை மீட்டும் பிறர் மனத்து நிலை பெறச் செய்யுங் காலத்து அவரது புலன்களைத் தன்வயம் கவர்ந்து அவை வாயிலாகத் தான் உணர்த்தப்புகும் பொருள்களை உணர்த்துவது தான் அதற்குச் சிறப்பாகின்றது. இச்சிறப்புத் தொழிலால் தான் அறிவு புலமையெனச் சிறப்பிக்கப் பெறுகின்றது. இவ்வுண்மை கருதித்தான், ஒருவன் பொருளுணர்ச்சியிடத்து எத்துணைத் திண்மை பெற்றிருப்பினும், அப்புலமை அவன் தன் உட்பொருளைப் பிறர்க்கு உரைக்குமிடத்தே பிறரால் அறியப்படுகின்றதென்றும், உரைத்திறத்தில் வழுவிய வழி அப்புலமை பெருமை குன்றி மறைகின்ற தென்றும், எனவே, ஒருவன் பொருளுணர்ச்சி பயிலு மிடத்தே அப்பொருளை உரைக்குந் திறத்தும் பயிலுதல் வேண்டும் என்றும் அறிவாளிகள் எல்லா மொழியின் கண்ணும் உரைத்துள்ளார்கள். ஆகவே, புலமையுடைமை யென்பது பொருள்களை அவற்றின் உண்மை நிலை வழாது அறிதலும், அறிந்ததனைப் பிறர்மனத்தும் நீங்கா வகையில் எஞ்சாமல் நிலை பெறுத்தலுமே யாகும் என்பது தெளிவாயிற்று. இப்புலமை யாவர்க்கும் ஒராங்கு உண்டாதல் அரிது. அதனாற்றான் உலகிற் புலவர் சிலரே காணப்பெறுகின்றனர். அதுபற்றியே தான் உள நூல்களிலும் “எல்லாம் அறிவுடையவர், மற்றுப் புலமையுடையவராகார்” என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள். சிலர்புலவராவார் கல்விகேள்விகளிற் சிறந்தவ ரென்று கருதுகின்றனர். யார் யார் எவ்வெத் துறையில் பயின்று அத்துறையிற் காணப்பெறும் திட்பநுட்பப் பொருள்களை யுணர்தலிலும் பிறர்க்கு உணர்த்துதலிலும் சிறக்கின்றார்களோ அவர்களே அத்துறையிற் புலமையுடைய புலவராவர். இசைவல்லார் இசைப்புலவராதலும், ஓவியம் வல்லார் ஓவியப்புலவராதலும் இன்னோரன்னோராதலும் ஆகும். இங்கு, நாம் தலைவராகக் கொண்டவர் கல்விகேள்வியிற் புலமைமிக்காராவர். கல்விப்புலமை யுடையார் ஏனைப் புலவர்களைப் போல் ஒரே துறையிற் பயின்றவராதல் கூடாது. அவர் காட்சிக் குட்படுவன பெரியோர் தாம் தம் வாழ்விற் கண்ட நுண்பொருளைக் குறித்துள்ள நூல்களும், அவர் வாழ்விற்கு நிலைக்களனான உலகுமாம். இவ் வியைபுநோக்கி உலகினையும் “நுவலாநூல்” என வழங்குப. ஏனை நூல்களிலும் இந் “நுவலாநூல்” பரந்து பட்டதாய், அறிவார் அறிவையும் கடந்து நிற்பதாய்த் தோன்றி அவர்தம் அறிவின்கண் அறிவாயும் நுணுகி நிற்பதாய் விளங்குவது. ஓவியப் புலவ னொருவன் இந்நூலின் ஒரு காட்சியைப் பிறர்க்குணர்த்துவான். எழுதியவிடத்து அவ்வோவியம் அவன் காட்சிக்குட்பட்ட வளவே நிற்பினும், ஆண்டுக் கண்ட ஒலி இயக்கம் முதலியவற்றைக் காட்டாது; ஆயினும், அங்குத் தோன்றிய வண்ணம் வடிவு முதலியன பெற்றுக் காண்பார்க்கு இன்பம் பயக்கும். எடுத்துக் காட்டாக, நீர்வீழ்ச்சி யொன்றன் படத்தினைக் காண்போமாயின், அதன் நீரின் வண்ணம், வரும் ஆறு அருகுள்ள மரஞ்செடி கொடி முதலியன, பாறைக்கூட்டம், நீர்வீழ்தலால் எழும் பிசிர், துவலை ஆகிய இவையும் பிறவும் அதன்கண் காணப்பெறுவோமே யன்றி அந்நீரின் கடுவரவும் பெருங்கலிப்பும் அறிதல் கூடாது. ஆயினும், அதன் வண்ணமும் தோற்றமும், இன்பம் பயவாதொழிதல் இல்லை. இவ்வண்ணமே இசையுமாகும். இதனால், கல்வியொழிந்த ஏனைப் புலவரது செயல் பிறர் மனத்தை எளிதிற் பற்றி இன்பம் செயும் என்பது பெறப்படும். கல்விப்புலவரது செயல் ஏனைப் புலவரது செயலெல்லாம் தன்னகத்தேகொண்டு பிறர் மனத்தில் அச்செயல் களையும் செய்து தன் செயலால் இன்பத்தையும் விளைவிக்கும். இதனால் இதன்கண் இருவகை யின்பம் எழுகின்றமை விளங்கும். ஒன்று காட்டுதும், “ ஊருண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.” இது பரணர் பாடிய புலமை சிறக்கும் பாடல்கள் பலவற்றுள் ஒன்று. இதன்கண் ஒருத்தி தன் தோழிக்குத் தன் பசலையின் இயல்பு இத்தன்மைத் தென்று கூறுகின்றாள். பசலை யென்பது “மகளிர் கணவனைப் பிரிந்தகாலத்து அவர்க்கு முன்புள்ள நெற்றியின் ஓளி கெட்டுக் கண்ணாடியில் வாயினாலூதிய பொழுது ஆவி படர்ந்து ஒளி மழுங்குவது போல வேறுபட்டுக் காட்டுந் தன்மை” இதனைப் பாடிய புலவர் பெருமகனாரது புலமை வயங்கு செய்யுள் நம் மனத்து இசைப்புலவர், ஓவியப் புலவர் ஆகிய இருபுலவரது செயலைச் செய்து தன் சீரிய செயலையும் செய்து இன்பம் செய்தல் எளிதிற் காணப்பெறுகின்றது. இப் பாட்டின் முதலடியில் உள்ள ஊருண்கேணியென்பது ஊரார் உண்ணுநீர்க் கொள்ளும் குளம் என்பது. உண்துறையாவது இறங்கி நீர் எடுக்கும் துறை. இந்த ஊருண்கேணியுண் துறை யென்ற தொடர், ஓர் அழகிய தெருக்களமைந்த ஊரின் காட்சியும் அதனடுவில் சிறந்த படிக்கட்டுகள் நாற்புறத்தும் சூழ விளங்கும் குளக்காட்சியும் அக்குளத்தின் நீர்மேற் பாசி படர்ந்து பசுங்கம்பளம் விரித்தாற்போல் தோன்றும் காட்சியும் நீர்த்துறையில் மகளிர் இறங்கி ஒளிவீசும் கலங்களோடு நீர் கொண்டு ஒசிந்தது நுடங்கும் இடை துவள ஏறுதலும் இறங்குதலும் செய்யும் காட்சியும், கலங்களில் நீர் முகக்குங்கால் அப்பாசி வட்டமாக விலகியும் கூடியும் வரும் காட்சியும் வன்மை மிக்க ஓவியம் வல்ல புலவனொருவன் எழுதிய படம் போல் மனத்தில் காட்டி அவ்வுருவுகிளர் ஓவிய வின்பத்தினைச் செய்கின்றது. ஊருண்கேணி என்று தொடங்கிக் காதலர் என்பது வரையில் சமநிலத்திலோடும் நீரோட்டம் போல் மெத்தெனச் சொல்லும் ஓசை நலம் பின்னிரண்டடிகளிலும் சலசலவெனச் செல்லும் நீரோட்டம் போல ஓடிச் சுதியொடு கூடிப்பரத்தலானே என மெத்தென முடிதல் தமிழ் கமழும் விழுமிய இழுமெனோசை இசையின்பத்தைப் பயந்து நிற்கின்றது. இங்ஙனம் இருவகைப் புலமைச்செயல் செய்து கல்விப்புலமையான தனக்கெனச் சிறந்த செயலைச் செய்தல் தலைவி தன்னொத்த மகளிர்க்கு இயல்பாகவுள்ள நீர் கொள்ளும் செயலுக்குப் பயிற்சி மிக்க கேணியை உவமித் திருத்திருத்தலாலும், முட்டைப் பாசிகளால் எளிதில் அடையப் பெறுவன ஊருண் கேணிகளே யாதலால் அதனை யெடுத்தாளல் புலமையினியல் பாதலாலும், நன்கு கட்புலனாகாத பசலையினை விளக்கிக் கூறுதற்குப் பலரும் எளிது காண்பதோர் பொருளையே உவமித்தல் வேண்டு மாதலாலும், தொடுவுழி நீங்கி விடுவுழிப் படர்வதற்குச் சமயவாதிகள் கூறும் செம்பிற்களிம்பு நுணுகி நோக்குவார்க் கன்றி ஏனையோர்க்கும் பாசி போல விளங்கக் காணப் பெறாமை யாலும் அதனை விலக்கிப் பாசியினையே கூறி யிருத்தலாலும், விளங்குகின்றது. அன்றியும் பாசி தொக்கவிடத்து நீர் பொலிவு குன்றுதல் போலப் பசலை நீங்காது மிக்கவிடத்து என் பொலிவு “கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத் துக்காங்கு” “எனக்கும் ஆகாது என்னைக்கும் ஆகாது” “குன்றி யழியுமே எனத் தலைவனது பிரிவாற்றாது தலைவி அழுங்குதலும், “தொடுவுழித் தொடுவுழி” என்றதனால், தலைவன் இரவினும் பகலினும் களவொழுக்கம் பூண்டு வருகின்றா னென்பதும், இப்பிரிவு அவன் வரைவிடை வைத்த பிரிவு என்பதும் இவைபோல்வன பிறவும் ஆயும்தொறும் சிறந்திருத்தல் பற்றியே பெரியோர் “புலவர்” என்னும் சொல் கல்விப் புலமை யுடையாரையே குறிக்கும் வகையில் வழங்கி வருகிறார்கள். இதன் இயல்பினை இன்னும் விரிப்பிற் பெருகும். நிற்க, புலமை மிக்காரது நல்லிசைப் புலமையை யாராயுமிடத்து அதன்கண் பல சிறப்பியல்புகள் வெளிப் படுகின்றன. அவை பண்டைக்கால நிகழச்சி கூறல், உவமைநலம், உலகவழக்கு, பழமொழியாளல், உய்த்துணர வைப்பு முதலியனவாம். இவற்றை முறையே இவரது பாடல்களிற் காண்போம். 1. பண்டை நிகழ்ச்சி கூறல் பண்டைநிகழ்ச்சிகளுட் சிறப்பாக இவர் பாடலில் அரசர், குறுநிலமன்னர் முதலியோர் பலர் போர் செய்ததும், கற்புடை மகளிர் செய்த செய்கைகள் சிலவும் காணப் பெறுகின்றன. அரசர்களுள் இவராற் பாடப்பெறும் தகுதியுடையார யினார் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், கரிகால், கரிகால் வளவன் முதலியோராவர். இவருள் வேல்கெழுகுட்டுவனை இவர் பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்திற் புகழ்ந்து கூறியிருக்கிறார். இக்குட்டுவன் “குடவர் கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்” என்று மேற்கூறிய ஐந்தாம் பத்தின் பதிகம் கூறுகின்றது. முத்தமிழிலக்கியமும், இச்செங்குட்டுவனது இளவல் இளங்கோவடிகளாலியற்றப்பெற்றதுமாகிய சிலப்பதி காரத்து மூன்றாங் காண்டத்து இவன் கூறப் பெறுகின்றான். ஆயினும் அங்கு இவன், “குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற் றேழ்பரி நெடுந் தேர்ச் சோழன் தன்மகள் நற்சோணையீன்ற மக்கள்” என அடியார்க்கு நல்லாரது உரையின்கட் கூறப்பெறுகின்றான். அன்றியும் மேல் பதிற்றுப்பத்தின் நான்காம்பத்தின் தலைவனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலாதனுக்குத் தந்தை “ஆராத்திருவிற் சேரலாதன்” என்றே கூறுதலால், அந் நார்முடிச் சேரலுக்கும் இச்செங்குட்டு வனுக்கும் தந்தை சேரலாதனே யென்பதும், அவனது தாய் “வேளாவிக் கோமான் பதுமன் தேவி” என்று அப்பதிகம் கூறுதலாலும் இவன் “சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்” என்று இப்பதிகம் கூறுதலாலும் இவ்விருவர்க்குந் தாய்மார் வேறு என்பதும் தெரிகின்றன. தெரியினும், இச் செங்குட்டுவனது பிறப்பினைக் “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணற்கிள்ளி யீன்ற மகன்” என்று கூறுவது போலன்றிச் சிலப்பதிகாரம் “சோழன் மகள் நற்சோணை யீன்ற மக்கள் இருவர் என்று கூறுவதால் இவனது தாய் நற்சோணை யென்பாள் என்று விளங்குகின்றது. இது “சேரன் செங்குட்டுவன்” என்னும் நூலுடை யார்க்கும் உடன்பாடு. நிற்க. திரு. பி. டி. சீநிவாச அய்யங்காரவர்களால் சிலப்பதி காரத்தில் கூறப்பெறும் செய்தியை அறவே யொதுக்கிவிட்டு நம் கட்டுரைத் தலைவராய பரணரது பதிற்றுப்பத்துப் பாடலின் பதிகம் ஒன்றனையே சான்றாகக் கொண்டு உண்மை காண வியலாமைபற்றி ஒரு சங்கை விடுக்கின்றனர்.œ இவர் சிலப்பதிகாரத்திற் செங்குட்டுவனைப் புகழ்ந்து கூறும் பகுதியாகிய வஞ்சிக்காண்டம் ஏனைய இரண்டு காண்டங்களையும் பாடிய ஆசிரியரால் இயற்றப்படாது. அவருக்குப் பிற்போந்த ஓர் அறிஞரால் இயற்றிச் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டுமெனச் சில சிறந்த காரணங்களால் எண்ணுகின்றார். இதனாலே, இதன்கட் கூறப்பெறும் நற்சோணையை விடுத்து (1) “குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன்” என்றிருப்பது தவறுடைத்து. ஓர் ஆண்மகன் பிறனொருவனுக்கு மனைவியாதல் கூடாது. இப் பதிற்றுப்பத்தின் பதிப்புக்குக் காரணமாயிருந்த மூலவோலைச் சுவடிகளை ஆராய்தலும் இனி முடியாத செயலாகும். இராமபாணம் முதலிய பூச்சிகளால் அரிக்கப்பெற்றுச் சிதர்ந்து கிடக்கும் ஓலைச் சுவடிகளைக் கண்டவர்கள் இத்தவறு எவ்வண்ணம் உண்டாயிருத்தல் கூடும் என்று ஆராயவும் துணியார். திரு. எம். சீநிவாச ஐயங்கார் அவர்கள் ஒருவாறு முன்வந்து இவ் வைந்தாம் பதிகத்துக் கூறப் பெறும் சோழன் மணக்கிள்ளி என்பான் குடவர் கோமானான நெடுஞ்சேரலாதன் உடன்பிறந்தாள் ஒருத்தியின் கணவனாதல் வேண்டும் என்று கூறி இக்காலத்து மலையாளத்து. வழங்கும் “மருமக்கள் தாயம்” என்னும் உரிமை அக்காலத்தும் நிலவிற்றெனக் கொண்டு, செங்குட்டுவன் தன் அம்மான் அரசுரிமையைத் தான் அடைந்த வனாகல் வேண்டும் என்று கூறுகின்றார். சேரர்களோ தமிழர்கள். மருமக்கள் தாயத்தைக் கையாளும் மலையாளிகளோ பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்களாவர். அன்றியும், குட்டுவனது தந்தையான நெடுஞ் சேரலாதனும் தன் தந்தையின் அரசுரிமையை எய்தினவனே யன்றித்தாய் அம்மான் அரசுரிமையைப் பெற்றவனல்லன்.” என்று கூறுகின்றார். இனி இச் செங்குட்டுவன் பல அரசர்களை வென்று அடிப்படுத்தியும் பல புலவர் பெருமக்களை ஆதரித்தும் பொன்றாப் புகழ்படைத்தும் புலவர் பாடும் பெருமையுடைய னாயினான். இங்ஙனமாதற்கு இன்றியமையாத கல்வியறிவுடை மையும் குன்றா வீரமுடைமையும் இவனை விதந்துகூறும் சொற்றொடர்களால் இவனிடத்தில் அமைந்து கிடந்தன வென்பது தோன்றுகின்றது. “தொலையாக் கற்பநின் நிலைகண்டிகுமே” என்ற பதிற்றுப் பத்தின் தொடரும், “புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த அரச ரேறே”, “புலவரையிறந்தோய்” என்ற சிலப்பதிகாரத் தொடர்களும் இவனது கல்விமாண்புக்குச் சான்று பகருகின்றன. குன்றா வீரமுடைய னென்றற்குப் பரணர் பாடிய பதிற்றுப்பத்தினும் வேறு சான்று வேண்டா. சுருங்கக் கூறின் அப்பத்தின் இறுதிக்கண் வரும் பதிகமே சாலும். அது, “ வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக்கிள்ளி யீன்ற மகன், கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்ப லருவிக் கங்கை மண்ணி இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு மாறா வல்வில் இடும்பிற் புறத்திறுத்(து) உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுதல் துமியப் பண்ணி வரலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச்செருவின் ஆற்றலை யறுத்துக் கெடலறுந் தாணையொடு கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம்:- சுடர்வீ வேங்கை........ வெருவருபுனற்றார். இவை பாட்டின் பதிகம் என்பது. இனி இச்செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என்று இப்பதிகத்தின் இறுதி உரைக்குறிப்பால் தெரிகின்றது. சிலப்பதிகாரம் “ வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை” என்பதனால் இப்பதிகத்தின் முதற்கட் கூறப்பெறும் “கடவுட் பத்தினிக்கற் கோள் வேண்டிக் கானவில் கானம் கணையிற்” போகிய காலம் இவனது ஐம்பதாம் யாண்டே என்பது அறிதலாம். மேலும், மாடலன் இவனுக்குப் பல்வேறு நிலையாமைகளையுணர்த்துபவன் “திருஞெமி சகலத்துச் செங்கோல் வேந்தே, நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை” என்று கூறுதலால், இப்பதிகத்துக் கூறப்பெறும் போர்ச்செயல்கள் யாவும் கற்கோள் வேண்டிப் போன செய்திக்கு முன்னமே நடந்தன வென்பது விளங்குகின்றது. இச்செயல் சிலப்பதிகாரத்துப் பரக்கக் கூறப்பெறுதலால் அதனைநாம் இங்குக் கூறுகின்றிலம். நிற்க, “ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி“ய செய்தி சிலப்பதிகாரத்தும். “ உடன்று மேல்வந்த ஆரிய மன்னரைக் கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்! ” எனக் கூறப்பெறுகின்றது1. பின்னர், இவன் “மாறா வல்வில் இடும்பிற் புறத்திறுத்த” செய்தி நெடுந்தேர்த்தானையொடு இடும்பிற்புறத் திறுத்திக் கொடும்போர் கடந்து” என்று இளங் கோவடிகளால் கூறப்படுகிறது. இப்பதிகத்தின் உரைக் குறிப்பில் “இடும்பில் என்றது இடும்பாதவனத்தை. புறம் அவ்விடம்” என்பது காணப் படுவதால், இவ்விடும்பாதவனம் சம்பந்த சுவாமிகளால் “இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே” என்றும் “மடுக்கண் மலர் வயல்சேர் செந்நெல் மலி நீர் மலர்க்கரைமேல், இடுக்கண் பலகளை வானிடம் இரும்பாவனமிதுவே” என்று முதற்றிருமுறையிற் பாடிப் பரவியுள்ள இடும்பாவனமாகும் என்று கருதலாம். சிலர், இப்பதிகமும் சிலப்பதிகாரமும் இடும்பிற்புறம் என்றே கூறுவதால், இஃது இடும்பாதன்ன மென்றோ இடும்பான்ன மென்றோ கூறல் அமையாது என்று அவ்வுரைக்குறிப்பையும் ஒதுக்கிக் கூறுகின்றனர். சிலப்பதிகாரத்தும் இவ் ‘இடும்பிற்புறத்” தைப்பற்றி ஒரு குறிப்பும் குறிக்கப் பெறவில்லை. எனினும், இதனையடுத்தே, “உறுபுலி யனை வயவர் வீழச், சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி” என்று இப்பதிகத்தும், “கறிவளர்சிலம் பிற்றுஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்” என்று சிலப்பதி காரத்தும் வருதலை நோக்கின், இவ்வியலூர் கடற் சார்ந்தவூர் என்பது, விளங்குகின்றது. இவ்வூரும் சம்பந்த சுவாமிகளால் “விரிநீர் வியலூர்” எனப் புகழப்பெறுகின்றது. இவ்வியலூரேபோல் இடும்பிலும் இடும்பாவனமென்றே துணியப் பெறின் இவை யிரண்டும் கீழ்க்கடற்கரைப் போரெனவும், “அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து” என்று பதிகங் கூறுவது மேலைக்கடற்கரைப் போரெனவும் கோடல் கூடும்1 கொடுகூர் என்னும் பெயரிய நாடொன்று சேரநாட்டின் பகுதியாக விருந்ததென இரவிதத் தனென்னும் சிற்றரசன் ஒருவனது பழைய சாசனம் ஒன்று தெரிவிக்கின்றது. இக்கொடுகூர் “வெண்ணிநாட்டுவெண்ணி,” “மிழலை நாட்டு மிழலை” யென்றது போலக்கொடுகூர் நாட்டுக் கொடுகூர் என்று கொள்ளலாம். ஆகவே, சேரநாடு மேலைக் கடற் சார்ந்த நாடாதலாலும், அதன்பகுதியே இதுவுமாதலாலும் கொடுகூர்ப்போர் மேலைக்கடற்கரைப் போரென்றல் வலிபெறு வதாகும். வேறுசில அறிஞர்கள் இக் கொடுகூர் நாடு இப்போதைய மைசூர் அரசாங்கத்தின் தென்பகுதியாதலால் இதனை மேலைக் கடற்கரைப் போரெனலாகாது; கொடுகூர் என்னும் ஊரொன்று திருச்சிராப்பள்ளி சில்லாவிலுள தென்றும் அதுவே கொடுகூர் என அக்காலத்து வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்றும் கருதுகின்றனர். இனி, இப்பதிகத்துப் போர்ச்செய்திகளாக இதுகாறும் கூறிப் போந்தவை, இதனகத்தும் சிலப்பதிகாரத்துமே காணப் படுகின்றனவே யன்றி, இச்செங்குட்டுவனை விரிவாகப் புகழ்ந்துள்ள பரணரால் அவர் செய்யுட்களுள் யாண்டும் கூறப்பட்டில. இப்பதிகமோ அவராற் பாடப்பெற்ற தன்று; அவருக்குப் பிற்போந்த சான்றோ ரொருவரால் ஆக்கப்பெற்ற தாகும். இப்பதிகத்தில் “வெந்திறல் ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்த” செய்தியும் சிலப்பதிகாரத்து, “ மாடல மறையோன் மன்னவற் குரைக்குநின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கு மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்” எனவும் “ வியலூ ரெறிந்தபின் ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று” எனவும் கூறப்படுகிறதே யன்றிப் பரணர் பாடலுள் இல்லை, இவை யொழிந்த பழையன் போர், கடல் பிறக்கோட்டிய செய்தி ஆகிய இவ்விரண்டுமே இக்கட்டுரைத் தலைவர் பாடல்களிற் பயின்று வருகின்றன. இவற்றுட் கடல்பிறக்கோட்டிய செய்தி, “படுந் திரைப் பணிகடல் உழந்த தாள்” என்றும், “ இனியா ருளரோ நின்முன்னு மில்லை மழைகொளக் குறையாது புனல்மிக நிறையாது விலங்குவளி கடவுற் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோரே” என்றும், “கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே.” என்றும், “ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ!” என்றும் வரும் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாட்டுகளிலும். “மின்னுவசிப் பரவுக்கால் கடுப்ப மறவி மைந்துற்று விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கெரளீ இப் படைநிலா விளங்கு கடன்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறா அது விளங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவும் நீங்க வோட்டிய நீர்மா ணெஃகம் நிறத்துச்சென் றழுந்தக் கூர்மத னழியரோ நெஞ்சே” எனவரும் இவாது அகப்பாட்டிலும் கிடந்து மிளிர்கின்றது. *இச்செய்தியினிடத்து ஆராய்ச்சியாளர்கள் பெருங் கலக்கங் கொண்டு, “இவ்வண்ணமும் ஒன்று நிகழ்ந்திருத்தல் கூடுமோ” என்றையுற்றுப் “பெருங்கடற் பரப்பும் தன் அரசிற்குட்பட்டதே யென்றார் கறிகுறியாகச் செங்குட்டுவன் தன் வேலினைக் கடலின் கண் எறிந்திருத்தல் வேண்டும். அச்செய்தி இங்ஙனம் திரிந்து வந்ததாகும்” என்று கருதுகின்றனர். மேலும், “முந்நீர் விழவின் நெடியோன், நன்னீர் பஃறுளி மணலினும் பலவே” என்ற புறநானூற்று ஒன்பதாம் பாட்டு அடிகளைக் கொண்டு, “முந்நீர்க் கண் வடிம்பலம்ப நின்றா னென்ற வியப்பால் நெடியோ னென்றா ரென்ப” எனவரும் உரைக்குறிப்பையும் துணையாக்கி முந்நீர் விழவு ஒன்று இத்துணைப் பெருஞ்செயலாகக் கூறப் பெற்றுள்ளது என்று அவர்கள் முடிபு செய்கின்றனர். அன்றியும் “சேர மன்னர்களுள் நெடுஞ்சேரலாதன் காலத்தே ஆரியர் நாகரீகம் அந்நாட்டிற் பரவியிருந்தமையின், அவர்களது வீரருட் பரசுராமனென்பான் தன் வேலெறிந்து கடல்பிறக்கிடச் செய்ததாக இவ்வாரிய ஆசிரியர்களாற் கற்பிக்கப் பெற்றது கொண்டே இது செய்தானாதலுங் கூடும். இச்செய்தி பின்னர்த் திருவிளையாடற் புராணத்து உக்கிர பாண்டியன்மே லேற்றப் பெற்றதாதல் வேண்டும்” என்றும் கருதுகின்றனர். இனி பழையன் மோகூர்ப்போர்தான் பரணரால் பெரிதும் சதுரப்பாடமைய விளக்கப்பெறுகின்றது. செங் குட்டுவன் செய்துள்ள போர்களில் இப்பழையனொடு செய்த போர்தான் மிக வீரஞ்சிறந்த போர் என்றல் பொருத்தமாகும். இச்செயல்பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகத்துள் “பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர வொழுகை பூட்டி “யென்று கூறப்படுகின்றது. இதனைப் படிக்கும் நம் நெஞ்சமே இத்துணைத் துடிப்புக் கொள்ளுமாயின், அப்போர்ச்செயல் எத்துணைக் கடுமையாக விருந்திருத்தல் கூடும் என்பதைப் படிக்குந் திருவாளர்களே அறிந்து கொள்ளல் வேண்டும்! பழையன் என்பவன் பாண்டிய மன்னர்களின் கீழிருந்த ஒரு குறுநில மன்னன் என்று சிலர் கூறுகின்றனர். இவர் கட்குச் சான்றாவது இவன் தனக்குக் காவன்மரமாக வளர்த் தோம்பியது ஒரு வேப்பமரம் என்பது. பதிற்றுப்பத்தின் உரை காரர் இவனைப் பற்றி இதுபற்றியொன்றும் குறித்திலர் பழையன் என்பான் ஒருவனது வரலாறு அகத்திலும் நற்றிணையிலும் கூறப்பெறுகின்றது. அவனது நகரங்களுள் போ ஓர் என்பது மிகப்பலவாய்ப் புகழப் படுகின்றது. பழையன் மாறன் என்னும் வேறொருவன் அகநானூற்று 346- ஆம் பாட்டினுள் கூடற் பறந்தலையுள் கிள்ளிவளவனால் தோல்வியுற்றானென்பது தெரிகிறது. பதிற்றுப் பத்து 9- ஆம் பத்தின் பதிகத்தின்கண் “வித்தையாண்ட இளம்பழையன் மாறன்” என்று ஒரு பழையன் கூறப்பெறுகின்றான். மற்று, இவ் விளம்பழையன் மாறன் இளஞ்சேரலிரும் பொறையின் காலத்தவனாதலாலும், இப்பொறை, “கடலிகுப்ப வேலிட்டும்,, உடலுநர் மிடல்சாய்த்தும், மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிப், பெற்ற பெரும் பெயர் பலர்கை யிரீஇய, கொற்றத் திருவின் உரவோரும்பல்” எனப் பெருங்குன்றூர்கிழாரால் புகழப்படுதலினாலும் கடலோட்டிய செங்குட்டுவன் காலத்துப்பழையன் இவனாகான் என்பது தெளியலாகும், மேலும், செங்குட்டுவன் தன் மைத்துனனான கிள்ளிவளவன் சோழனாட்டிற்கு இளவரசனாதலைப் பொறாது அவன் ஏவலையும் கேளாது பகைத்தெழுந்த ஒன்பது மன்னர்களை நேரிவாயில் என்னுமிடத்து வெற்றிகொண்டு வளவ னரசுரிமையும் நிலைபெறச் செய்தானென்று சிலப்பதிகாரம் கூறுகின்றமையின், இக்கிள்ளி வளவனொடு பொருத பழையன்மாறன் என்பான் செங்குட்டுவன் காலத்தவனே யாதல் பெறப்படும். அன்றியும், தனக்குப் பகையான வளவனுக்குத் துணை செய்தமைப்பற்றிச் செங்குட்டுவன் மீதும் இவன் பகைகொண்டிருத்தல் கூடுமாதலின், இவனே பதிற்றுப்பத்தில் பரணரால் கூறப்படும் பழையன் எனத் தெளிதல் வேண்டும். இவனைப் “பழையன் மோகூர்” என்று கூறுவதுமுண்டு. மோகூர் என்பது இவனது தலைநகரம். இங்ஙனம் “பழையன் மோகூர்” எனக்கூறிய பரணர் அகத்தில் “பழையன் என்றே கூறி அவனது போஒர் என்னும் ஊரினையும் சிறப்பிக் கின்றார். இக்கூறியவாற்றால், செங்குட்டு வனோடு பொருது தோல்வியுற்றபோழ்து பழையன் தன் மோகூரினையிழந்து “போஒர்” என்னும் ஊரினைச் சீர்செய்து புலவர் பாடும் புகழ் பெறுவானாயினன் என்று கொள்ளல் வேண்டும். இனி, இப் பழையன் காவிரிபாயும் சிறந்த நாடுடையன். இவனது நாடு மழைவளம் பொய்த்தலின்றி விளைவுநலம் பிழையாப் பெருமையினை உடையது; இவன் சிறந்த பிழைத்தலறியாத வேல் ஏந்திய வீரமுடையவன்; பகை தலைவந்தோர்க்குப் பணியா வாய்மையன், இவை, “ மழையொழுக் கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர்” என்று மதுரைக் காஞ்சியும், “ வெண்கோட் டியானைப் போர் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி” என்று நற்றிணைப் பத்தாம்பாட்டும் “வென்வேல், மாரியம்பின் மழைத்தோற் பழையன்” என்று பரணரது பாட்டும் கூறியதனால் அறியப்படுகின்றன. இப்பழையனது அவைக்களத்தில் கோசர் என்னும் ஒருவகை மரபினர் இருந்து தம் வஞ்சின மொழியாலே மேம்பாடுற்று விளங்கினர். அது “பழையன் மோகூர் அவை யகம் விளங்க - நான்மொழிக் கோசர் தோன்றியன்ன” என மாங்குடி மருதனாராலும், துனைகா லன்ன புனைதேர்க் கோசர்........... மோகூர்” என மாமூலனாராலும் கூறப்படுதல் காண்க. பழையன் இவர்களது வரிசை யறிந்து ஆதரித்து வந்தான். நிற்க, இக் கோசர் துளுநாட்டுமக்கள். இவர்கள், “ மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் துளு நாடு” (அகம். 15) எனவும், “அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது பெருங்கடன் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர் நியமம்” (அகம். 90) எனவும், “ மாவீசு வண்மகிழ் அஃதைப் போற்றிப் காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தலஞ் செறுவின் வளங்கெழு நன்னாடு” (அகம். 113) எனவும், “தந்தை கண்கவி னழித்ததன் றப்பற் றெறுவா ஒன்றுமொழிக் கோசர்க் கொன் றுமுரண் போகிய கடுந்தேர்த் திதியன்” (அகம். 196) எனவும், “வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர்.” (அகம். 205) எனவும், “கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி யுழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி யயரும் மல்லல் யாணர்ச் செல்லி (அகம். 216) எனவும், “வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளாது ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்து முண்ணான் வாலிதுமுடா அன் (அன்னமிஞிலி)” (அகம். 262) எனவும். “வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமாக் கம்பம்”. (புறம். 169) எனவும், “வலம்புரி கோசர் அவைக்களத் தானும்” (புறம். 283) எனவும், “நனைக்கள்ளின் மனைக் கோசர் தீந்தேறல் நறவுமகிழ்ந்து தீங்குரவைக் கொளைத்தாங்குந்து” (புறம். 396) எனவும், “பறைபடப் பணில மார்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நல்லூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்று”. (குறுந். 15) எனவும், “நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே” (குறுந் 73) எனவும் வரும் நல்லிசைச் சான்றோர்களின் அணிதிகழும் சொற்பொருளை நோக்குமிடத்து, இக்கோசராவார் துளுநாட்டு மக்கள் என்பதும், இவர்கள் வாய்மை தவறாத மாண்புடையவர் என்பதும் இவர்கள் செல்லூர், நல்லூர் முதலிய வூர்களிலிருந்து சிறப் பெய்தினவரென்பதும், இவர்கள் படைப்பயிற்சி மிக்குப் பல வேந்தரோடு பொருது அப்போர் செய்தற் கேற்ற சூழ்ச்சித் திறத்தால் வென்றி கொண்டு விளங்கின ரென்பதும், இவர்கள் தொன் மூதாலத்துப் பொதியிலில் இருந்து தம் மொழியின் வாய்மையும் படைப்பயிற்சியும் மேம்படச் செய்வ ரென்பதும் பெறப்படுவதோடு செல்வக்காலை அல்லற் காலை ஆகிய இருகாலும் ஒரு பெற்றியராய் நட்பாடும் இயல்பினர் என்பதும் தெரிகின்றன. மேலும் யானை முதலியவற்றை வரையாது வழங்கும் வள்ளன்மை மிக்க அகுதை யென்பானொடு நட்புப்பூண்டு அவனுக்கு உற்றவிடத்து உதவி செய்தனர்; அன்னிமிஞிலி யென்பானது தந்தையின் கண்ணை இவர்கள் களைந்தாராகத் திதியன் குறும்பியன் முதலியோரால் கொல்லப்பட்டனர். இவர்கள் செல்லூரின்கண் மகளிர் கொய்த ஞாழல், உழவர் கொய்த குவளை, புறவிற்பூத்த முல்லை முதலிய மலர்களாற் கண்ணி வேய்ந்து சூடிக் களித்தலும் இளங்கள்ளுண்டு குரவையாடுதலும் பிறவும் செய்து மகிழும் இயல்பினர். படைப்பயிற்சி மிகுதியால் இரும் பிடம்படுத்த வடுவுடை முகத்தராய் இக்கோசர் விளங்குதலைக் கண்ட பழையன் இவர்களைத் தன் அவைக்களத்தே கொண்டு போர்த்தொழில் மேற் கொண்டு வேற்று மன்னரை மதியாது செம்மாந்து வருவானாயினான். அக்காலத்து மோரியர் என்னும் ஒருவகை வீரர்கள் வட நாட்டிலிருந்து படையெடுத்து வரலாயினர். இவர்களை “விண் பொரு நெடுவரை இயல்தேர் மோரியர்,” “மாகெழுதானை வம்ப மோரியர்,” “மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு” “வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்”என்று அகத்தும் புறத்தும் சான்றோர் சிறப்பித்துக் கூறுகின்றார்கள். தென்திசை மாதிரம் முன்னிவந்த இவர்கள் தம் தேர்கள் எளிது வரும்பொருட்டு மலையொன்றைக் குறைத்து வழி செய்தனர். இவ்வரிய செயல் பல விடத்தும் உவமிக்கப் பெற்றுள்ளது. இவர்கள் தம் வெற்றியை நிலைநாட்டக் கருதித் தென்றிசை வேந்தர்களை அடிப்படுத்த ஞான்று, பழையன் இம்மோரியரது வரவுக்குச் சிறிதும் அஞ்சுதலின்றிப் பணியா னாயினான். அக்காலத்து இவனுக்குச் சிறந்த படைவலி தந்தவர்கள் மேற்கூறிய கோசர்களே யாவர். எனினும் மோரியரே வெற்றிபெற்றனர். இது ஆசிரியர் மாமூலனாரால் “ வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த விலங்குவெள் ளருவிய வரை” என்று கூறப்பெறுகின்றது. இங்ஙனம் வெற்றியும் தோல்வியும் பெற்றும் புகழும் வீரமும் குன்றாது மேம்பட்டுவரும் பழையன், நாம் மேற்குறித்த படி செங்குட்டுவன் மைத்துன வளவனோடு பகைவனானது காரணமாக அக்குட்டுவனோடும் பகைகொள்வானாயினான். இஃது ஒரு காரணமாக, அறுகை யென்னும் அரசன் ஒருவன் சேரனாட்டுக்குச் சேய்மையிலுள்ளதொரு நாட்டினையாண்டு வந்தான். அவனால் ஓருதவியும் செங்குட்டுவன் பெறவில்லை யெனினும் அவனைத் தன் “கேள் என மொழிந்து” ஒழுகி வருகையில்யாது காரணத்தாலோ அவ்அறுகை யென்பானுக்கும் பழையனுக்கும் பகைமை யுண்டாய்விட்டது. செங்குட்டுவன் பழையனோடு பொருதற்கு இதுவுமோர் காரணமாயிற்று இவ்விரு காரணத்தாலும் பெருஞ் சினங்கொண்டு செங்குட்டுவன் போர் செய்தலை மேற்கொண்ட செயலை பதிற்றுப்பத்தில் பரணரால் பெரும்பான்மையும் புகழப் பெறுகின்றது. போர்மேற்கொண்டு செங்குட்டுவன் பழையனது மோகூர் அரண்களைத் தகர்த்து, நகருண் ணுழைந்து அவனது வெற்றி முரசினைக் கைப்பற்றி அங்கிருந்த காவல்மரமான வேம்பினை அடியோடு தடிந்து முரசு செய்துகொள்ளும் பொருட்டு அதனைத் துண்டங்களாகச் செய்து வண்டிகளிலேற்றிக் களிறுபல பூட்டித் தன்னாடு திரும்பினன். இது, “நுண்கொடி யுழிஞை வெல்போர் அறுகை சேண னாயினுங் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை யுய்த்த ஆருநடை (+யண்ணல்)” என வருவதனாலும், இங்ஙனம் எதிர்த்த செங்குட்டுவனோடு பழையன், தன்னிடத்தே யமைந்திருந்த கோசர் ஒழிந்த, வேளிர்பலரும் வேந்தர்பலரும் துணைசெய்யப் பெரும்படை கொண்டு எதிர்த்தும் பயன்பெறாதொழிகின்றான்: துணைசெய்ய வந்த வேளிரும் வேந்தரும் போரிற் பட்டொழிகின்றனர்; ஒழிந்தார் உடலின் குருதி மழைநாட் புனல்போல் பள்ளம் நோக்கிப் பாய்கின்றது; குட்டுவனது வெற்றிமுரசம் நடுவட் சிலைப்ப வாளேந்திய வயவரது பிணங்கள் அக்குருதிப்புனலின் மிதப்ப “மழை யொழுக் கறாப் பிழையா விளையுட் பழையன் மோகூர்” என மாங்குடி மருதனார் புகழ்ந்த விளையுள் வளன் அற நிகழ வாழுநர் பலர் பட்டொழிகின்றனர்; செங்குட்டுவன் கருஞ்சினை விறல் வேம்பறுத்து வென்றி மேம்படுகின்றான். “களிறு பரந்தியலக் கடுமா தாங்க ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப எஃகு துரந் தெழுதருங் கைகவர் கடுந்தார் * வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்து வரும் மோகூர்” என வரும் இது பழையன் வெல்போர் வேந்தரும் வேளிரும் தற்சூழ மொய்வளம் செருக்கி வருதலை விளக்குதல் காண்க. இங்ஙனம், 1 “மொய்வளம் செருக்கி மொசிந்துவரும் மோகூர் வலம்படு குழூஉநிலை யதிரமண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் 2 நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலின் அவற்பரந் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவட் சிலைப்ப 3வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்கினை விறல் வேம்பறுத்த பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே” யாமும் செல்லுதும், நீயிரும் வம்மின்” என ஆசிரியர் பரணர் கூறும் பாடற்பகுதி இப் போர்ச் செயலை விளக்குகின்றது. இனி, செங்குட்டுவன் பழையனது கருஞ்சினை வேம்பினைத் தடிந்து முரசுசெய முரச்சிக் களிறு பல பூட்டி ஒழுகை யுய்த்த செய்தியை உரைகாரர். ‘முரசுசெய முரச்சி யென்றது அவ் வேம்பினை முரசாகச் செய்தற்கு முற்றுவித் தென்றவாறு முற்று வித்தலாவது ஒழுகை யேற்றலாம்படி துண்டங்களாகத் தறிப்பித்தல். களிறென்றது மோகூர்மன்னன் களிற்றினை. களிறுபல பூட்டி யென்றது அவனேறும் யானைகளை யவமதித்துச் 1சாட்டிற்குக் கடாவோபாதியாகப் பூட்டி யென்றவாறு. பூட்டி யென்றதற்கு “வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர், பல்லிருங் கூந்தல் முரற்சியால், குஞ்சர வொழுகை பூட்டி என இதன் பதிகத்து வந்தமையால் அம் மகளிர் கூந்தல் மயிர்க்கயிற்றாற் பூட்டி யெனக் கொள்க” என்று கூறுதலையும் பதிகத்தையும் நோக்குமிடத்து ஆசிரியர் பரணரால் கூறப்படாத செய்தி யொன்று வெளியாகின்றது. பழையன் செங்குட்டுவனோடு போர்புரிந்த காலத்து வேந்தர் வேளிர்களோடு தானும் வீழ்ந்துபட்டான்; விழவே, அவனது உரிமை மகளிர் பலர் தம் வாலிய இழைகளைக் களைந்து அலமந்து புலம்ப, அவர்களைக் குட்டுவன் பற்றிக் கூந்தல் களைந்து, கயிறு திரித்து, குஞ்சரம் பூட்டிய வண்டியில் அவ் வேம்பின் துண்டங்களைக் கட்டிக் கொணர்ந்தான் என்பது. இது பரணருக்குத் தெரிந்திருந்தால் அவர் குறியாது விடார். ஏனெனில், நல்லிசைச் சான்றோர்களாற் பாடப்பெறும் புகழ்படைத்த நன்னன் என்பவன் கற்றோரை யாதரிக்கும் கல்விவள்ளலா யிருந்துப் பெண்கொலை யொன்று புரிந்தமையை “பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரயத்துச் செலீ இயரோ அன்னை” யெனக் குறுந்தொகைக் கண் விதந்து பாடியவர் இப்பரணர் ஆதலால், இவருக்குப் பிற்போந்தவர் பதிகம் பாடுவார் இச்செய்தியை மிகைப்படுத்திக் கூறியிருத்தல் வேண்டுமேயன்றி உண்மைச் செய்தி யாகாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.) இக்கருத்தே பற்றிச் சரித்திர ஆராய்ச்சி வல்லுநரான திரு.சீநிவாச அய்யங்கார் அவர்கள் இச் செய்தியை மறுக்கின்றனர். இனி, இப் பழையன் மோகூரைப் பற்றிய வரலாற்றிற் போந்த மோரியர் என்பார் பாடலிபுரத்து மோரிய வரசரது குடிக்குரியோர் என்றும், அவர்கள் முதலாங் கீர்த்திவர்மன் என்னும் சாளுக்கிய வேந்தனது பகைவர்கள் என்றும் “பம்பாய் கெசட்டீர்” என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது. ஆசிரியர் மாமூலனார், மோரியர் வடநாட்டு வாழ்நராவர்; இவர்கட்கு முன் தென்றிசை நோக்கி வடுகர் வந்து தம் வன்மையால் வளம் பெறக் கண்டு, இம்மோரியர் தென்திசையிலும் தம் வென்றிச் சீர் விளங்குதல் வேண்டும் என்று கருதி வந்தனர் என்றும் அதுபோது அவர் மலையைக் குறைத்துத் தம் தேர்களுக்கு வழிசெய்து கொண்டனர் என்றும் கூறுகின்றார். அது “ முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறையிறந் தவரோ சென்றனர்” (அகம். 281) என்பது, இனி, ஆசிரியர் பரணரால் பாடப்பெறுந் தகுதிபெற்ற அரசர் பெருமக்களுள் ஒருவனான கரிகாலன் வரலாற்றினைச் சிறிது காண்பாம், பகுதி - 2 கரிகாலன் பரணர் என்னும் புலவர் பெருமகனாரால் தம் பாடலின் கண் உலகம் பொன்றுங்காறும் பொன்றாப் புகழ் தரப்பெற்ற தமிழ் நாட்டு முடியுடை வேந்தர்களுட் கரிகாற் சோழன் வரலாறு ஈண்டு ஆராயப்பெறுகின்றது. இவனது வரலாறு பல அறிஞர்களால் சீரிய முறையில் ஆராய்ந்தெழுதப் பட்டிருத்தலின் அதனை முற்றிலும் ஈண்டுக் கூறின் இக் கட்டுரை மிகப் பெருகு மென்றஞ்சிச் சிறிதே கூறுகின்றோம். சோழ நாட்டை யாண்ட அரசர்களுட் டலைமையாகக் கூறப்படுபவன் இக் கரிகாலனே. இவன் காலத்துத்தான் சோழனாடுமிகச் சிறந்த புகழ் பெறுவதாயிற்று. “சோழ வளநாடு சோறுடைத்து” என ஒளவையார் கூறுதற்கு ஏதுவான நெல்வளம் இவன் ஆட்சியிற்றான் மேம்பட்டது. இது பற்றித்தான், “ ஏரியும் ஏற்றத்தி னாலும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின் அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு” என்று சான்றோர் புகழ் வாராயினார். சுருங்கக் கூறின், ஒரு நாடு சீரிய புகழ் பெறுதற்கு வேண்டுவன யாவையோ அவை முற்றவும் ஆக்கி அமைத்த அறிவு, ஆண்மை, பொருள், படையாகிய ஆற்றல் படைத்த அரசரேறு இக் கரிகாலன் என்பது பொருத்தமாகும். கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி யென்பானது அருமைத் திருமகன். இவன் தன் இளமைப் பருவத்தே தந்தையை யிழந்து தன் அம்மான் இரும்பிடர்த் தலையார் என்பாரைத் துணையாகக் கொண்டு கருவூரில் இருந்து வந்தான். அக்காலத்துச் சோழநாடு அரசிழந்து அலமந்து வருந்தக் கழுமலத்தி லிருந்த சான்றோர் அரசுவா ஒன்றை அணிசெய்து மாலை யளித்தனுப்ப, அவ்யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொணர்தர, அச்சான்றோர் ஒன்று கூடி யவனை யரசனாக்கினார் அக்காலை அவன் மிக்க இளையனா யிருந்தது கண்ட புற மன்னர் பலர் கூடி யெதிர்த்து அந்நாட்டைக் கைக்கொண்டு கரிகாலனையும் சிறைப் படுத்தினர். இவன் அச் சிறையினின்றுந் தப்பி வெளிப்போந்து, தனக்கு வேண்டும் படைத்துணை கொண்டு அப்பகை மன்னரை வென்று தன் நாட்டினைத் திரும்பப் பெற்று அரசுபுரிந்தனன்; மேலும் இவன்இளமைக் காலத்தே தன் மதிநுட்பத்தால், சான்றோர் வியப்பெய்த, வேற்றுருவங் கொண்டு வழக்கொன்று கொண்டு போந்த முதியோர்கள் உள்ளம் உவப்ப அதனைத் தீர்த்து முடிபு செய்தான்; நாங்கூர் வேளிடை மகட் கொண்டு இவன், பத்தினிக் கடவுளெனப் பரவிப் புகழ்பெறும் கண்ணகியால், “உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள்” எனப் புகழ்பெற்ற ஆதி மந்தியார் என்னும் கடவுட் கற்பும் கல்விப்புலமையும் மிக்க பெண் மகளைப் பெற்றான்; உறையூரினின்றும் காவிரிப்பூம் பட்டினம் போந்து, அதனைத்தன் தலை நகராகக் கொண்டு, செல்வங் கொழுத்த திருநகராக்கினன்; வெண்ணி, வாகை முதலிய விடங்களிற் றன்னை யெதிர்த்த வேந்தர் வேளிர்களை வென்று சிறப்பெய்தினான்; வடநாடு சென்று மேற்செல்லாவாறு, இமயம் தடுப்பச் சினந்து அதன் சென்னியிற் புலிக்கொடி பொறித்துத் திரும்பினன்; தன் நாட்டின் கண் காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கிக் குடிபெருகக் கோலோச்சி வந்தனன். வாணிபம் கைத்தொழில் முதலியன ஒருபுடை விளங்க, கல்விநலம் மேன்மேலும் வளர்ந்தது சான்றோர் பலர் தழைத் தோங்கினர். முடதாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங் கண்ணணார் முதலிய நல்லிசைப் புலவர் பலர் கரிகாலன் மீது நறுந்தமிழ்ப் பாட்டுக்கள் பாடுவாராக, அவர்கள் வரிசையறிந்து இவனும் தருவன செய்து அவர் புலமைநலம் வளம் பெறச் செய்தனன். இனி, இவன் பிறக்குங் காலத்துத் “தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்திப்” பிறந்தானென ஆசிரியர் முடத்தாமக்கண்ணி யார் கூறுகின்றார். அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் “தாயுடைய வயிற்றிலே யிருந்து அரசுரிமையைப் பெற்றுப் பிறந்து எ. று. தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலே யிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்து என்றார்” என்று உரைவகுத்துள்ளார், இதனை யாராயுமிடத்துப் புனைந்துரையெனக் காணப்படு கிறதேயன்றி உண்மையாகக் கோடற்கு இடமின்று. ஏனெனின், பிரசூத வாயுவானது, கருவுயிர்க்கு மாதர், நிற்கினும், இருக்கினும் கிடக்கினும் வேறு எந்நிலை மேவினும் மகவை வெளிப்படுத்தும் தன்மையது என்பதும்; அதனைத் தடுத்திடின் தாய்க்கும் குழந்தைக்கும் இறுதி பயக்கும் என்பதும் மருத்துவ நூல் வல்லார் கண்டறிந்தன வாகலால் பிறக்கின்ற காலத்திற் குழந்தையைப் பெறாமல் வேண்டு மளவும் தாங்கி வைத்துப் பெறுவது எவர்க்கும் முடியாத காரியமேயாம். ஆனால் தாய்க்குப் பேற்றுவலி தொடங்கிய போது, அயலிற் சூழ்ந்து உள்ளார், “இன்ன நல்லோரையில் இக்குழந்தை பிறக்கு மெனின் நன்று” எனப் பகர்வது பெருவழக்கு. சிற்சிலவமை யத்து இவர்கள் கருதியநேரமும் குழந்தை பிறக்குங்காலமும் “காகதாலிய நியாயம்போல்” தம்மில் வந்து இயைவதும் உண்டு அங்ஙனம் நேர்ந்த இதனை இங்ஙனம் புனைந்துரைத்தனர் போலும். “இக்கரிகாலன் நெடுநாளைக்குப் பின்னரேயே தன் அரசு ரிமையை எய்தப்பெற்றனன் என்பது விளங்கிக் கிடத்தலால் “தாய் வயிற்றிருந்து தாயம் எய்திப் பிறந்து” என்பதற்குத் “தொழு தெழுவார்” என்றதை “எழுந்து தொழுவார்” எனப் பொருள் கொண்டாங்குத் “தாய் வயிற்றிருந்து பிறந்து பின்னர்த் தாயம் எய்தி” எனப் பொருள் கோடல் நேரிதாகக் காண்கின்றது”1. நிற்க, “கோச் செங்கட் சோழர் இங்ஙனம் பிறந்தன ரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியலாவது. செவ்வந்திப் புராணம் பராந்தகன் மகனாகிய (ஒரு) கரிகாலனுக்கு இச்செய்தியை உரிமை யாக்குகின்றது. இவ்வாறாய கதைகளில் ஒன்றை யுட்கொண்டே நச்சினார்க்கினியரும் இங்ஙனம் பொருள் கூறினாராவர். ஆனால் தாய்வயிற்றிலிருந்து பிறக்கு முன்னரே தந்தை விண்ணுல கெய்தினனாகலின் அப்பொழுதே அரசுரிமை யெய்திப் பிறந்தனன் என்று கூறுவது ஏற்புடைத்தாகத் தோன்றுகிறது”1 இவன் கருவூரிலிருந்து அரசுவாவாற் கொணரப்பெற்று அரசுரிமை யெய்திய செய்தி, 2 “கழுமலத் தியாத்த களிறுங் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறப்பால தீண்டா விடுத லரிது.” என்னும் பழமொழி வெண்பாவும்,“கழுமலம் என்னும் ஊரின் கண்ணே பிணித்து நின்ற களிறும், கருவூரின் கண்ணே யிருந்த கரிகால் வளவன் கடிது இளையனாயினும் அவன் சிறப் புடையனா தலால் அவன்மேற் சென்று தன்மிசை யெடுத்துக் கொண்டு அரசிற் குரிமை செய்தது” எனவரும் அதன் உரைப் பகுதியும். கூறுகின்றன. இவன் வேற்றுருக்கொண்டு வழக்கு முடிபு காட்டியது பொருநராற்றுப்படையில் “முதியோர், அவைபுகு பொழுதிற்றம் பகை முரண் செலவும்” எனவரும் அடியின் உரையாலும், 3“உரைமுடிவு காணான் இளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்” என்னும் பழமொழி வெண்பாவோடு, “தம்முள் மறுதலை யாயினாரிருவர் தமக்கு முறைமை செய வேண்டி வந்து சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தா னென்றிகழ்ந்த நரைமுதுமக்களுவக்கும் வகை நரைமுடித்து வந்து முறை வேண்டி வந்த இரு திறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தா னென்னும் சோழன்” என வரும் அதன் உரைப் பகுதியாலும், “இளமை நாணி முதுமை யெய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருக” எனவரும் மணிமேகலை யடிகளாலும் தெரிகிறது. “வெண்ணிற்றாக்கிய, கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” எனவரும் பொருநராற்றுப் படையினடிகளுரையில் இவன் கால் நெருப்பாற் சுடப் பட்டமையால் கரிகாலன் என்னும் பெயரின னாயினான் என்பது தெரிகிறது. இது 1“சுடப்பட் டுயிருயந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பற்றுக்- கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையா ரெய்தா வினை.” என்னும் பழமொழி வெண்பாவாலும் அறியப்படுகின்றது. மேலும், இதன்கண் கரிகாலன் அம்மான் இரும்பிடர்த் தலையாரைத் துணைக் கொண்டமையும் தோன்றுதல் காண்க. இனி, இவன் இளமைக் காலத்து அரசுரிமை பெற்ற ஞான்று பகைமன்னராற் சிறைப்படுத்தப் பெற்ற செய்தியும், பின்னர் இவன் அச் சிறையினின்றும் வெளிப்போந்த செய்தியும் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் உவமை நலம் பொலிய, பட்டினப்பாலை யென்னும் செழுந்தமிழ்ப் பாட்டினுள் “கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் (து) உருகெழு தாயம் ஊழின் எய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான்.” என்று கூறுவதனால் அறியப்படு கின்றன. இதன்கண், இவன் சிறைக்கண்ணே ஆற்றல் சிறந்தான் என்பது“குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு” என்னும் உவமையால் விளங்குதல் காண்க. மேலும், இப்பாட்டின் பகுதியின்கண் இவன் சிறைக்களத் தினின்றும் வெளிப்போந்த செய்திக்குத் தரப்பெற்றுள்ள, பிணியகத் திருந்து, குழிகொன்று, வெளிப் போந்த பெருங்கை யானை பிடிபுக்காங்கு என்னும் உவமை இவன் தன் மனைவியையும் உரிமை மகளிரையும் அடைந்து கூடினன் என்று தெரிவிக்கின்றது. இவன் நாங்கூர்வேளிடை மகள் கொண்டனன் என்னும் செய்தி “மன்னர் பாங்கிற் பின்னோராகுப” என்னும் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில் ஆசிரியர் நச்சினார்க் கினியரால் கூறப்படுகின்றது. இச்சூத்திரத்திற் பின்னோராவார் வேளாளவராவர். “அவர், உழுதுண்போர், உழுவித்துண்போர் என இரு வகையினராவர். “அவருள், உழுவித்துண்போர் மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கழாரும் முதலிய பயிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை யெய்தினோரும், பாண்டியனாட்டுக் காவிதிப் பட்ட மெய்தினோரும் குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாள ராகுப...... உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தோர்வேளிடை மகட் கோடனெறும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத் தான் நாங்கூர் வேணிடை மகட்கோடலுங் கூறுவார்” என்பது இச்சூத்திரத்துக்காணப்படும்பகுதி. இக்கூறிய செய்திகளுள் கரிகாலன் கால்நெருப்புற்றதும், கபிலத்து யாத்த களிறு கொணர்ந்து அரசுரிமை யெய்துவித்த தும் ஆராய்ச்சிக்குட் படலாகாத செய்திகளாமென அத்துறையின் வல்லுநர் கூறுகின்றனர்.1 நிற்க. கரிகாலனது போர்ச்செயல்களுள் முதற்கண் நிகழ்ந்தது வெண்ணிப் பறந்தலைப்போர். அதுபோது இவனோடு எதிர்த்துப் பொருதவர் பதினோரு வேளிரும் வேந்தர் பலரு மாவர். இது, காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயிற் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருளகத் தொழியப் பதினோரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைக் கொய்யா வழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே” என இக்கட்டுரைத் தலைவர் ஆசிரியர் பரணர் கூறு வதனாலறிதலாம். இவ்வெண்ணிப் போர் ஆசிரியர் முடத் தாமக்கண்ணி யாரால் பொருநராற்றுப்படையுள், “ இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்” எனவும், “ நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக ! களியியல் யானைக் கரிகால் வளவ ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் ! நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே” என வெண்ணிக் குயத்தியார் என்னும் புலவர் பெரு மாட்டியின் அரிய பாட்டினாலும் கூறப்பெறுவது காண்க இக்காட்டிய பாட்டுக்களால் கரிகாலனுடைய போர்களில் இப்போரே சிறந்ததெனச் சான்றோரால் கருதப்பட்டிருத்தலை அறிதல் வேண்டும். இவற்றால், இப் பறந்தலையின்கண் பொருதவர், முடிவில், பதினொரு வேளிரும் சேரபாண்டியர் களாகிய இரு பெருவேந்தரும் அவர்க்குத் துணைப்போந்த குறுநில மன்னருமாவர் என்பது பெறப்படுகின்றது. இம் மன்னர்கள் தோல்வியுற் றோடிய போழ்து ஒரு வேந்தன் தான் பெற்ற புறப் புண்ணிற்கு வருந்தி வடக்கிருந்து உயிர் நீத்தானென்பது வெண்ணிக் குயத்தியார் பாடலாற் றெரிகின்றது. ஆனால், “மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப” என்னும் கழாத்தலையார் பாடிய புறப்பாட்டு, “சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பருவளத்தானோடு பொருது புறப்புண்ணாணி வடக் கிருந்தானைப்” பாடியதாகக் கூறப்பட்டிருத்தலின், கரிகாலனோடு போர் செய்த சேரன் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பது வெளிப்படுகின்றது. இது மாமூலனாரால் அக நானூற்றில் “ஒண்படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென இன்னா வின்னுரை கேட்ட சான்றோர் அரும்பெற லுலகத் தவனொடு செலீஇயர் பெரும்பிறி தாகி யாங்கு” எனப் புகலப் பெற்றிருக்கி கின்றது. அச் சேரலாதன் வடக்கிருந்து உயிர்துறப்ப, அவன் பிரிவாற்றாத சான்றோர் சிலர் தாமும் உயிர் நீத்தனர் என்பதும் அறியவேண்டுவ தொன்று. இங்ஙனம் வெண்ணிப்பறந்தலையின் கண் கரிகாலன் வென்றி கொள்ளப் பிறக்கிட்டோடிய சேரலாதன் சேரமான் பெருஞ்சேரலாதன் ஆவான் என்பதும் அவன் சான்றோர் பலரால் அன்பு செயப்பெற்றதும் அறிஞர் பலராலும் மேற்கூறிய சான்றுகளால் கொள்ளப்பட்டிருக்கின்றன. மற்று, தமிழர் வரலாறுடையார், “புறத்தின் பதிப்பாசிரியர் வெண்ணிக்குயத்தியார் கரிகாலனோடு போர் செய்து பிறக்கிட்டோடிய மானத்தால் வடக்கிருந்தான் ஒரு வேந்தன் என்றதனாலும். அகத்தில் மாமூலனார் கரிகாலனோடு போர்புரிந்து வடக்கிருந்து உயிர் துறந்தவன் நெடுமை பெருமை முதலிய அடையின்றி வறிதே, “சேரலாதன்” என்றதனாலும், புறத்திற் கழாத்தலையார் பாடிய சேரன் “பெருஞ்சேரலாதன்” என அடைபெற்றோன் ஆதலினாலும், சேரலாதனும் பெருஞ்சேரலாதனும் ஒருவராகார். மேலும், பெருஞ் சேரலாதன் என்பான் ஒருவனே புறத்திற் கூறப்படுகின்றான். ஆகலின், அவனைப்பற்றி விளங்கத் தெரிதற்கு வேறு சான்றே யில்லை” என்று கழறுகின்றார். இனி, இவன் வாகைப் பறந்தலையின் கண்ணும் ஒரு போர் செய்து அங்குத் தன்னை யெதிர்த்த ஒன்பது மன்னர்களை வெற்றி கொண்டான் என்பது ( தெரிகிறது. இது, ஆசிரியர் பரணரால் “ பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகை பறந்தலை யாடுபெற ஒன்பது குடையு நன்பக லொழித்த பீடின் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே” என அகநானூற்று 125 ஆம் பாட்டின்கட் கூறப்பெறுகின்றது. இனி இவன் வேறு சில மன்னர்களோடும் வேற்று நாட்டு மக்களோடும் போர்செய்து நிறைந்த திருவும் சிறந்த புகழும் பெற்று விளங்கினான் என்பதற்கு இவன் காலத்தே பாடப்பெற்ற பட்டினப்பாலை யென்னும் நூலே சான்றா கின்றது. அது “ பல் ஒளியர் பணியொடுங்கத் தொல் அருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவும் மதனுடைய நோன்றாள் மாத்தானை மறமொய்ம்பின் செங்கண்ணாற் செயிர்த்து நோக்கிப் புன்பொதுவர் வழிபோன்ற இருங்கோவேள் மருங்குசாய” என்பது. மேலும் அந்நூல், இவன் நாடுவளம் படுத்திச் செல்வநிலை மிகுதிப்படுத்திய செய்தியை மிக வழகுபெறச் சுருங்கச் சொல்லி விளக்குகின்றது. அது: “ காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிறீ இ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீ இ” என்பது இதன்கண் இவன் உறையூரினின்றும் தன் தலைநகரை மாற்றிக் கொண்ட செய்தி “உறந்தை போக்கி” யென வருதலாற் காண்க. இனி இவன் காலத்து வாணிபநலம் மேம்பாடுற்றும் வணிகர் தம் அறந்திறம்பாது பண்டம் பகூர்ந்து வயங்கியும் நிலவ இவன் நாடு சிறந்ததற்கு, “ நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெளிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை, மறுகு” எனவும் “ புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறை படாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை” எனவும் வருவன வற்றால் அறியப்படும். வேறு, சிலப்பதிகாரத்தில் இவன் வச்சிரநன்னாடு, மகத நாடு, அவந்தி நாடு முதலிய நாடுகளைத் தான் வடதிசை நோக்கிச் செல்லுவோன். “அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப், பகை விலக்கியது இப்பயங்கெழு மலையென, இமைய வருறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யேற்றிக், கொள்கையிற் பெயர்ந்து” வருங்கால் அடிப்படுத்து அவ்வந் நாட்டு வேந்தர்களாற்றரப் பட்ட கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் முதலிய பெற்றுச் சிறப்பெய்தினான் என்பது கூறப்படுகிறது. அன்றியும் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் “ செண்டு கொண்டு கரி காலனொரு காலிமயச் சிமய மால்வரை திரித்தருளிமீளவதனைப் பண்டு நின்றபடி நிற்கவிது வென்றுமுதுகிற் பாய்பு லிப்பொறி குறித்தது மறித்த பொழுதே” எனப் “பயங்கெழு மாமலை பகைவிலக்கிய” செய்தியும் அவன் புலிப்பொறி வைத்த செய்தியும் கூறப்படுதல் காண்க. இங்ஙனமே கரிகாலன் இமயம் சென்ற செய்தி மட்டில், தக்கயாகப் பரணி ஆசிரியர் ஒட்டக்கூத்தரால்” பொறைசூழ் வரையிற் புலியே றெழுதும், பொன்மேருவரைப் பெருமான் மகளார்” எனக் கூறப்படுவதோடு அதன் உரையாசிரியராலும், “பொன்மலை யிவனதாதற்குக் காரணம் மகா மேருவின் அடி முதல் முடி கடை சோழர்களால் எழுதப்பட்ட புலிப்பொறியே யாதலாலும்” கரிகாலன் கைச்செண்டால் திரித்தான் என்னும் கதையுண்டாதலாலும்” என்று கூறப் பெற்றுள்ளது. ஆனால் இவையனைத்தையும் இற்றைக் காலச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஒல்லாத செயல்களா மென மறுத்துவிடுகின்றனர். இனி, இவன் காவிரியாறு ஆண்டு தோறும் பெருவெள்ளத்தாற் சோழநாட்டின் வளனைக் குறைத்துக் கொண்டு வந்தமை காரணமாக, அதன் இருமருங்கும் தடங் கரைகட்டி அப்பெருக் கினையும் தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டனன் என்னும் செய்தியொன்று சிலோன்தேச சரித்திரமும் தெலுங்கு நாட்டுக் கல் வெட்டுக்கள் சிலவும் வெளியிடுகின்றன. இவற்றுட் சிலோன் தேச சரித்திரம் “காவிரி கரை செய்தற்குச் சிங்களர் பன்னீராயிரவரைச் சிறைகொண்டு சென்றான்” என்று கூறுதலை அறிஞர்கள் பலர் மறுத்துக் கல்வெட்டுச் செய்தியை உறுதி செய்து கொள்ளுகின்றனர். இது காறும் கூறப்பெற்ற செயல்களுட் கரிகாலன் செயல் களென நல்லிசைச் சான்றோர்களான தொகை நூலாசிரியர்கள் கூறுவன வெண்ணிப்போர், வாகைப்போர், உறையூரினின்றும் பெயர்ந்தது, நாடு வளம்படுத்தது முதலியனவே யன்றிக் காவிரிக்குக் கரைகட்டிய செய்தியும் மேருவரையைச் செண்டாலடித்துப் புலிப்பொறி வைத்த செய்தியுமல்ல. இவன் மகள் ஆதிமந்தியென்பாளது வரலாறு தனியே பின்னர் ஆராயப்படுகின்றமையின், ஈண்டுக் கூறிற்றிலம். இனி, இவன் பல புலவர்களை யாதரித்து அவர்தம் அரிய தமிழ்க்கவிகளை யேற்று அவற்றின் சொற்பொருட்சுவை யோர்ந்தும் நுகர்ந்தும் புலமை சிறந்திருந்தான். இவன் காலத்து இவனால் சிறப்புச் செய்யப்பெற்ற புலவர் பெருமக்களுட் சிறந்தார் கடியலூர் உருத்திரங் கண்ணனார்’ முடத்தாமக்கண்ணியார் வெண்ணிக் குயத்தியார், கழாத்தலையார் முதலியோர் ஆவர். இவருள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவன் மீது பட்டினப்பாலை யென்னும்’ அழகிய பாட்டினைப் பாடிப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு தரப்பெற்றார். இது, “தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடாறுநூறாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலைகொண்டதும்” எனவரும் கலிங்கத்துப் பரணி பாடலால் அறியக் கிடக்கின்றது. இனி, இவனது காலம் பல அறிஞரால் பலவேறு வகையாக முடிபுசெய்து கூறப்பட்டுள்ளது. சிலர் கி.மு. முதல் நூற்றாண்டென்பர்; சிலர் கி. பி. முதல் நூற்றாண்டென்பர் வேறு சிலர் கி.பி. மூன்று நான்காம் நூற்றாண்டுகளென்று கூறுவர். திருவாளர் பி.டி. சீநிவாச அய்யங்கார் அவர்கள் “இவனது காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியுமாகும்” என்று சில சிறந்த சான்றுகளுடன் முறையே ஆராய்ந்து கூறுகின்றார். இனி இவன் காலத்துச் சிறந்திருந்த நகரங்களுள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இரண்டுமே மேற்கண்ட செய்யுட்களில் நாம் அறிந்தனவாகின்றன. அவற்றோடு இடையாறு என்றும் ஒருநகரம் அவன் நாட்டின்கண் இருந்ததென்றும் அது மிக்க செல்வம் சிறந்த நகரமென்றும் கொள்ளல் வேண்டும். அது, தண்டமிழ்ச் சான்றோருட் டலைவரெனக் கருதப்படும் ஆசிரியர் நக்கீரனாரால் அகத்தில் “துவரப் புலர்ந்து தூமலர்க் கஞலித் தகர நாறுந் தண்ணறுங் கதுப்பிற் புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப் பல்கோட் டடுப்பிற் பாலுலை யிரீஇக் கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர் பெருஞ்செந் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவ லிடித்த பரூஉக்கா ழுலக்கைக் கடிதிடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு தீங்குலை. வாழை ஓங்குமடல் இராது நெடுங்கான் மாஅத்துக் ‘குரும்பறை பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாற் றென்ன நல்லிசை வெறுக்கை தருமார் சுரனிறந்தோர்” என்று பாராட்டப்பெறுகின்றது. விளைத்த ஒன்று ஆயிரமாக விளையும் காவிரி புரக்கும் நாடுகிழவோன் இவனாதலால், இவனுடைய இந்நகர் செல்வஞ் சிறத்தல் அருமை யன்றன்றே; இவன் காலத்தே ஆரியரது நாகரிகம் தமிழ் நாட்டிற் பரவிவிட, அதன் பயனாக வந்த வேட்டல் வேட்பித்தல் என்பன போன்ற நெறிகளுள் வேட்டல் என்பதனைக் கரிகாலனும் ஏற்றுச் செய்துள்ளான், என்பது இவன் இறந்த போழ்து இவன் பிரிவாற்றாது உலகினை நோக்கி வருந்திக் கூறும் கருங்குழலாதனார் என்பாரால், படிப்போருள்ளம் நெக்கு உருகும் வகையிற் பாடப்பெற்றுள்ளது அது: “ அருப்பம் பேணாது அமர்கடந் தூஉம் துணைபுண ராயமொடு தசும்புடன் தொலைச்சி இரும்பா ணொக்கல் கடும்பு புரந்ததூஉம் அறமறக் கண்ட நெறிமா ணவையத்து முறைநற் கறியுநர் முன்னுறப்புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை யெருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம் அறிந்தோன் மன்ற அறிவுடையாளன் இறந்தோன் தானே, அளித்து இவ்வுலகம். அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப் பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப் பசித்த வாயத்துப் பயனிரை தருமார் பூவாட் கோவலர் பூவுட னுதிரக் கொய்துகட் டழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரும் இழைகளைந் தனரே.” என்பது. இதுகாறும், கரிகாலனது வரலாற்றினை நாம் தொகை நூல்களையே பெரும்பான்மைத் துணையாகக் கொண்டு கூறி வந்தோமே யன்றி, சிலப்பதிகாரத்து இவன் செய்திகளெனக் கூறப்பெறுவனவும், தொகைநூல்களுள்ளும் இவன் இருங்கோ வேளை வென்றதும், வேங்கடவரைப்பைத் தனதாக்கியதும் பிறவும் விரிவஞ்சிக் குறித்திலோம். இனி, ஆசிரியர் பரணரால் சிறப்பிக்கப் பெற்ற குறுநில மன்னர், தலைவர் முதலாயினோருள் பெரும்பாலும் புகழ்ந்து பாராட்டப்பெறும் நன்னன் என்பானது வரலாற்றினைக் காண்போம். பகுதி - 3 நன்னன் நன்னன் என்பவன் சேரநாட்டைச் சேர்ந்த பகுதியினை ஆண்டுவந்த குறுநிலமன்னர்களுள் ஒருவன். இவனது நாடு கொண்கான நன்னாடு என்பது. அதனருகில் புள்ளுநாடு என்றோர் நாடு அதிகன் என்னும் குறுநில மன்னனால் ஆளப் பெற்று வந்தது. இவன் அவ்வதிகனைக் கொன்று அந் நாட்டையும் அடிப்படுத்திக் கொண்டபின் அதுவும் இவனதாகக் கூறப் படலாயிற்று. அது “நன்னன் புள்ளுநாடு” எனவருவது. இப் புள்ளுநாடு என்பது பூழிநாடாதல் வேண்டும் என்று கருதினோர். இதனைப் பூழிநாடு என்றும், இவனும் அப்பூழி நாட்டை யாண்ட குறுநில மன்னன் என்றும் கூறுவாராயினர். மற்று, இவனது நாடு கொண்கானநாடு என்பது ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங் கோவால் “பொன்படுகொண்கான நன்னன் நன்னாடு” என்று பாராட்டப் படுவதால் அறியப்பெறுகின்றது. 1இக்கொண்கான நாடு பின்னர்க் கொங்குநா டென்றும் கொங்கணநா டென்றும் மருவி வழங்கி வரலாயிற்று என்றும் இந் நன்னனும் “நன்னன் உதியன்” (அகம். 258) என வழங்குதல் கொண்டு, சேரனாதலால், இந்நாடும் சேரனாட்டின் ஒரு பகுதி யாதல் வேண்டுமென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர், வேறுசிலர் இவை யிரண்டும் வெவ்வேறு நாடுகளாம் எனக் கூறிப் பண்டை யிலக்கியங்களிற் கூறப்படும் கொண்கான நாடு இக்கால மைசூர் நாட்டின் தென்பகுதியும் சேலம் கோயம்புத்தூர் ஆகிய நாடுகளும் கிழக்கு மலைத் தொடர் நீலகிரி, மேலகிரி முதலிய மலைப்பகுதிகளும் தன்னகத்தே கொண்டிருந்ததென்றும், கொங்குநாடு இக்கால மைசூர்ப் பீட பூமியின் தென்பகுதியும், திருநெல்வேலி, இராமநாதபுரம், கீழ் மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப் பள்ளி, தஞ்சாவூர், தென்னார்க்காடு முதலிய நாடும் கொண்டிருந்ததென்றும் கூறுப.1 இனி, இவற்றுட் கொங்குநாடு வேறு பிரிக்கப் பட்டமையை யேற்று, அது “கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை” எனவும் “கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே” எனவும் வரும் புறப் பாட்டடிகளையும் பிறவற்றையும் அடிப் படையாகக் கொண்டு, பண்டு தொட்டே தனி நாடாகக் கொள்ளப்பட்டுளதென்றும், இது சேரனாட்டினைச் சேர்ந்தது என்றதற்குக் கூறும் சான்றா வனவாய திருப்புகழ், தலபுராணங்கள் ஆகியவற்றைப் பிற்காலத் தாரது கேள்விமாத்திரையாற் பெறக்கொண்டெழுதியவாமென்று கூறியும், கொங்குநாட்டு மக்களது நாகரிகம், ஒழுக்கம், முதலியன ஏனைச் சேர கேரள நாட்டு மக்களின் நாகரிகம், ஒழுக்கம் முதலியவற்றின் வேறுபட்டிருத்தலே மிக்க சான்றாம் என்றும் கொங்குநாட்டின் வரலாறு கூறும் கரணபரம்பரைச் செய்திக்கு வேறு ஆதாரமில்லை யென்றும் சிறந்த முறையில் ஆராய்ந்து, திரு.C.M. இராமசந்திர செட்டியார் B.A.B.L., அவர்கள் அழகு பெற முடிபு செய்கின்றார். ஆனால் இவ்வாராய்ச்சியின் கண், கொங்கு நாட்டின் பண்டைக்கால எல்லை முடிபு கூறப் பெறவில்லை. நிற்க. இனி, இவனது கொண்கான நாட்டின்கண் பாரம்பிரம்பு வியலூர் என்னும் ஊர்களும் பாழி, எழில் முதலிய மலைகளும் இருந்தன. இவற்றுள் பாழி யென்பதனை “முன்பு வடுகர் கைப்பற்றி ஆண்டுவருநாளில் சோழன் நெய்தலங்கானலிலுள்ள இளஞ்சேட் சென்னி யென்பவன் படையொடு சென்று பொருது வடுகர்களைக் கொன்று பாழியை யழித்து மீண்டான். அதனால் அவன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி யெனவும் கூறப்படுவன், “இதுபற்றியே இவனை, 1“தென்பரதவர் மிடல்சாய வடுவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித்திருந்து வேற் றடக்கைக் கடுமா கடைஇய விரிபரி வடிம்பின் நற்றார்க்கள்ளின் சோழன்” என ஆசிரியர் ஊன் பொதி பசுங் குடையார் தம் நகைச்சுவை ததும்பும் புறப்பாட்டினிற் புகழ்ந் துரைப்பா ராயினர். இங்ஙனம், இப்பாழிச்சிலம்பு இளம்பெருஞ் சென்னிக்கும் வடுகர்க்கும் நடந்த பெரும் போர்க்கு இடனாயிருந்தமை “எழா அத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கட னாகலின் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி 2வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானைக் கோட்டிற் றோன்றும் அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் ” (அகம். 375) என ஆசிரியர் இடையன் சேந்தன் கொற்றனார் விரித் துரைத்த வதனால் விளங்குகின்றது. இக்கொண்கானம் புலவர் பாடும் புகழுடையது. இந்நாடு கொண்கானம் என்னும் மலையைத் தன்னகத்தே யுடைமையான், இப்பெயர் பெற்றது. இம்மலை. “அறுவைத் தூவிரி கடுப்பத்துவன்றி மீமிசைத் தண்பல் இழிதரும் அருவி”களை யுடையது. மலைபடு பொருளான பொன்னை மிகவுடையது1. இது “பொன்படு கொண்கான நன்னன் நன்னா” டெனப் பாலை பாடிய பெருங்கடுங் கோவாலும். “இன்களி நறவின் இயல்தேர் நன்னன் விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலை” என முள்ளியூர்ப் பூதியாராலும் முறையே நற்றிணையிலும் அகநானூற்றிலும் புகழப்படுகின்றது. மேலும். ஆசிரியர் மோசிகீரனார் தாம் இயற்கையாகவே பாடும் பொருளாழமும் அணிகலமும் அமையும் முறையில் இம்மலையை, “ஒன்றுநன் குடைய பிறர்குன்றம் என்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம் நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று நிறையருந் தானை வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்கும் செம்மலு முடைத்தே” எனக் கொண்கானங்கிழான் என்னும் வள்ளலைப் புகழுமுகத்தாற் சிறப்பிப்பது மிக்கசுவை தருகின்றது. இந் நாட்டின்கண் விளங்கிய நகரங்களுள் பாரம்,பிரம்பு வியலூர் என்பனவற்றுள் பாரம் என்பது, “பாரத்துத் தலைவன் ஆர நன்னன்” என்பதனால் இவனுக்கே உரித் தெனினும், பரப் புடைமையும் சேய்மையும் உடைமையின் இவனது படையின் தலைவன் மிஞிலி யென்பவனால் காக்கப்பட்டு வந்தமையின், “வில்லோர் பெருமகன், பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரம்” என்று நற்றிணையிற் கூறப்படலாயிற்று. இதன் அண்மையிலேயே பாழிச்சிலம்பும் பாழி யென்னும் நகரும், இருந்தன வாதலால், அவையும் மிஞிலியின் காவற்குள்ளிருப்ப வாயின. பிரம்பென்பது நீர்வளம் மிக்க ஊர்போல் தோன்று கின்றது. மலைநாடாதல் பற்றிச் சிறு குன்றங்களில் வீழ்தரும் அருவிகளும், அருவிநீர் நிறைந்து ஆம்பல் முதலியன தழைத்த துறைகளையு முடையது. இதனை, “அருவி யாம்பல் கலித்த முன்றுறை, நன்னன் “ஆஅய் பிரம்பு ” என்றனர் ஆசிரியர் பரணர். இந்நகரத்துக்கு “ஆஅய் பிரம்பு” என்பதும் பெயர் போலும். வியலூர் என்பது பசலைக்கொடி படர்ந்த வேலி யுடையதென்றும். இது நன்னனுக்கு உரித்தென்றும் ஆசிரியர் மாமூலனார் கூறுகின்றார். அது “ நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர்” (அகம். 97) என வருவதாகும். பாழி யென்பது பாழி மலையை யடுத்திருந்த சீரிய காவலமைந்த பேரூராகும். ‘இவ்வூரில் யாழ்வல்லவர் பலர் வாழ்ந்தனர். இது தன் “முறையியல் வழா அது ஆற்றிற் பெற்ற” நகரம். இங்கே, நன்னன் தான் ஈட்டிய பொருளை வேளிர் பலர் காப்ப வைத்திருந்தான். இப்பாழிச் சிலம்பில் கடவுளர் இருந்து காவல் புரிந்தனர்; எங்கும் பெரிய அடை பொருந்திய தேன் தூங்கி நலம் பயக்கும். இது, “சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி யன்ன கடியுடை வியனகர்” (அ. 15) எனவும், “முறையியல் வழா அது ஆற்றிற் பெற்ற கறையடி யானை நன்னன் பாழி” (அ. 142) எனவும், “நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன்னினும் அருமை” ( அ, 258) எனவும், ஆசிரியர் பரணர் பல விடத்தும் கூறுவது கொண்டு உணரப்படும். இனி, நன்னன் என்னும் பெயர் அக்காலத்திற் பல விடத்தும் பயின்று வந்த தென்பது, சிலப்பதிகாரத்தில் “இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி” என்ற காட்சிக் காதை யடியின் அரும்பதவுரை, “இளங்கோ வேண்மாள் - பெயர், நன்னன் வேண்மாள், உதியன் வேண்மாள்” என்று கூறுதலாலும், மலைபடு கடாம் என்னும் கூத்தராற்றுப்படையின் தலைவன் ஒருவன் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் என்ற பெயருடன் வருதலாலும் தெரிகின்றது. இந்நன்னனும் நன்னன் வேண்மான் என்று வழங்கப் பெறுதலும் உண்டு. நாம் மேற்கண்ட கொண்கான நாட்டின் பகுதியான சேல நாட்டின் அருகும் திருவண்ணாமலைக்கு மேற்கிலும் உள்ள செங்கண்மா என்னும் நகரம் கொண்கான நாட்டினைச் சேர்ந்திருத்தல் கூடும் என்று உணரவும் கிடக்கின்றது. அதனால், இந்நன்னன் சேய் நன்னன் என்பாரும் இந்தக் கொண்கான நன்னனது குடிப்பிறந்தாரே யென்று துணிய வேண்டும். இனி, நன்னன், வேண்மான் என்று வழங்கப் பெறு தலால் இவன் வேளிருள் ஒருவன் என்று கொள்ளல் வேண்டும். வேளிர் என்பார் மலைய மாதவனால் வடநாட்டினின்றும் கொணரப் பெற்றவர் என்பது தொல்காப்பிய நச்சினார்க் கினியர் உரையால் தெரிகின்றது. இவர்கள் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை நேர்தற்கு உரிய வேளாளருமாவர். இவர்களுட் சிறந்த நன்னன் குணங்களா லுயர்ந்த வள்ளலாவான். இவன், “மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் முனைபாழ் படுக்கும் துன்னருத் துப்பின் இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் புதுநிறை வந்த புனலஞ் சாயல் மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி வில்நவில் தடக்கை மேவரும் பெரும்பூண்” நன்னன் ஆவான். இவன், “தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப் பலர்புறங் கண்டவர் அருங்கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் ஈகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு வீயாது சுரக்கும் நாண்மகி ழிருக்கையும் நல்லோர் குழீஇ நாநவில் அவையத்து வல்லாராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லிதின் நயக்கும் சுற்றத் தொழுக்கமும், ஞாயி றன்ன வசையில் சிறப்பும்” பொதுவாக வுடையன். சிறப்பாக, பகைவர் தேயம் சேணிகந் திருப்பினும், ஆண்டுச் சென்று அவர்தம் தூசிப்படையைக் கொன்று குவித்து, “புரைத்தோல் வரைப்பின் வேல்நிழற் புலவோர்க்குக் - கொடைக் கடன்” இறுக்கும் பேராண்மை படைத்தவன். இவன் பலர் புறங்கண்டு அவர் அருங்கலம் கொணர்ந்ததும், “இடனின்றி இரந்தோர்க்கு இல்லென்றல் இழி” வெனக் கருதி வரையாது வீசும் வள்ளன்மையும் புலவர் பாடும் பொன்றாப் புகழை இவனுக்குத் தந்தன எனல் வேண்டும். இவனிடத்தில் எண்ணில் அடங்கா யானைகளும் தேர்களும் இருந்தன என்பது “சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்” என்றும், “கறையடியானை நன்னன்” என்றும் “இசைநல் ஈகைக்களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்” என்றும், “இயல்தேர் நன்னன்” என்றும் வருவன வற்றால் உணரப்படுகின்றது. செம்மையில் திறம்பல் இல்லாத செம்மொழி யுடையராய்ப் பாடிப் பரிசில் வேண்டி வருபவர்க்குத் தான் பகைப்புலத்துக் கவர்ந்த அருங்கலங் களைத் தனக்கென ஓம்பாது, ஓம்புதலையும் ஆராயாது, கொடுக்கும் இவனது கொடை, ஆசிரியர் மாமூலனார், “ஞெமன்ன் தெரிகோலன்ன செயிர்தீர் செம்மொழி உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே, உரன்மலி யுள்ளமொடு முனைபா ழாக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன்” (அகம். 349) என்று கூறுதலால் விளங்குகின்றது. இவன் நாட்டுப் பாழிச் சிலம்பு கொண்கானமலை, எழிற்குன்றம் முதலியன பெருந்தேன் தூங்கும் நெடுவரைகளாதலின், இவன் இருக்கையிற் கள்ளுண்டு மகிழ்தல் மிக்கிருந்தது. அது “இன்களி நறவின் இயல்தேர் நன்னன்” எனவும், “நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்” எனவும் வருவனவற்றால் அறிக. இவன் பல அரசர்களை வென்று புறங்கண்ட மேம்பாடுடையன் என்பது, “பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்தரோட்டிய ஏந்துவேல் நன்னன்” என வருத லாலும் உணர்தலாம். இவன் காலத்தில், “நாண்மங்கலம்” என ஆசிரியர் ஐயனாரி தனாராற் கூறப்பெறும் பிறந்த நாட் கொண்டாட்டம் நிகழ்ந்தது. இந்நாண்மங்கலம் ஆசிரியர் தொல்காப்பியனாரால், “சிறந்த நாளணி செற்ற நீக்கிப் பிறத்த நாள்வயிற் பெருமங்கலம்” எனக் கூறப்பெறு கின்றது, இக்காலத்தில், .அரசர்கள் வெள்ளிய உடையணிந்து செற்றம் நீக்கி அருளே நிறைந்த மனமுடையவராய்ச் சிறை விடுதல், செருவொழிதல், கொலையொழிதல், இறை தவிர்தல், தானம் செய்தல், வேண்டின் கொடுத்தலாகிய, சிறந்த தொழில்களையே செய்வர். இவ்வாறு கிள்ளி ஒருவன் ( இச்சோழன் பெயர் தெரிந்திலது.) தான் பிறந்த நாளாய இரேவதி நாள் விழவயர்ந்த செய்தி, “ அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம் போன் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு” எனவரும் முத் தொள்ளாயிரச் செய்யுளாற் றெரிகின்றது. 1இவ்வழக்கம் இந்நன்னன் காலத்தும் நடைபெற்றதென மதுரைக்காஞ்சி யென்னும் ஒரு சிறந்த பாட்டு கூறுகின்றது. அது “பேரிசை நன்னன் பெறும் பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பெழுந்தாங்கு” என வருவதாம். இனி, நன்னன் மேற்கூறிய வண்ணம் சிறப்பும் செல்வமும் ஓங்க ஆளும் திருவுடையனா யிருந்ததோடு புலமைமிக்கானா யிருந்தமை, ஏனைப் புலவர்களை யாதரித்தும் அவர் வேண்டும் பரிசில் அளித்தும் வந்தமையால் விளங்குகின்றது. ஏனெனில் “புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்” என்பர் முன்றுறையரையர். இங்ஙனம், புலமையும், புலமைக்கேற்ற வள்ளன்மையும், அதற்கேற்ற அருளுடைமையும், சுற்றத்திடத்து அன்பும் பிறவுமாய, மக்களின் நல்வாழ்விற்கு இன்றியமையாச் சிறப்புக் குணங்கள் பலவற்றையும் உடையனாயிருந்ததோடு சேர்ந்தாரைக் கொல்லும் சினமும் மிகக் கொண்டிருந்தான். அதனால் இவன் வழிவந்தோர்க்கும் பழியொன்று நிலைபெறுவதாயிற்று. இவனது நாட்டில், யாற்றில் நீராடுதற்குச் சென்றாள் ஒரு பெண், அவ்வியாற்று நீரில் மிதந்து போந்த முற்றும் பழுக்காத பசுங்காய் ஒன்று கண்டு எடுத்து உண்டொழிந்தாள். அதனை யுண்ணல் வேண்டும் என்பது நன்னனது வேட்கை போலும், அன்றி அது அவனது பொழில் பயந்தது போலும். அக்காய் இங்ஙனம் யாது காரணத்தாலோ யாற்றில் வீழ்ந்துவர இப் பெண் உண்டற்குரியதாயிற்று. இதனை இவன் ஆராயாது அக்காயை அவளுண்டதை யறிந்து, அக்குற்றம் நோக்கி, அவளைக் கொலைசெய்யத் துணிந்தான். இதனை யுணர்ந்த அப்பெண்ணின் தந்தை, அக்குற்றத்தீடாக எண்பத் தொரு களிறுகளையும், அப்பெண்ணின் நிறையளவு தூய பொன்னாற் செய்த பாவையையும் கொடுத்தான். கொடுப்பவும் கொள்ளானாய், ஆறாச் சினங்கொண்ட நன்னன் அப்பெண்ணைத் தான் கருதிய வண்ணம் கொலையே புரிந்தனன். இவனது புகழை நிலை பெறச் செய்து பலபடப் பாராட்டிய புலவர் பெருமகனான பரணர், இவனது இத்தீச் செயலையும் விளக்கிக் கூறியுள்ளார். அது, “மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் றப்பிற்(கு) ஒன்பதிற்றொன்பது களிற்றொடு அவள்நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலீ இயரோ அன்னை ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே” எனவரும் குறுந்தொகைப் பாடற்கண் கூறப்பெறுகின்றது. இது நிகழ்ந்த சின்னாட்களுள் ஒருநாள் ஒளவையார் இவனிடம் சென்று அழகிய பாட்டுக்கள் பாடியும், அவற்றின் ஆழ்ந்த சொற்பொருளின்பங்களை எடுத்துக் கூறியும் இவனை மகிழ்விக்க முயன்றனர். இவன் அவற்றைத் தன் செவியிற் கொள்ளாமலும், அவர்க்குப் பரிசிலொன்றும் நல்காமலும் விடுப்ப, மனத்தில் வெறுப்புக் கொண்டு, அவர், இவனை நோக்கி, “இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயும் அன்றுநின் குற்றம் -மருள்தீர்ந்த பாட்டும் உரையும் பயிலா தனவிரண்டு ஓட்டைச் செவியும் உளை.” எனப்பாடிச் சென்றனர்.1 இ வையே, பின்னர், ஒருகால் இளங்கண்டீரக்கோ என்பவனும் இளவிச்சிக்கோ என்பவனும் ஒருங்கிருந்தவழிப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் பெருமான் சென்று அவருள் இளங்கண்டீரக் கோவைப் புல்லி, இளவிச்சிக் கோவைப் புல்லாராயினார். அது கண்ட விச்சிக்கோ, “என்னை என் செயப் புல்லீராயினீர்” என்று வினவ, அதற்கு அவர், “நீ பொலந்தேர் நன்னன் மருகன் அன்றியும் வயங்கு மொழிப் பாடுநர்க் கடைத்த கதவு காரணமாக எமர் வரைந்தனர்” என்று கூறி விடுதற்குக் காரணமாயிருந்தன என்று தோன்றுகின்றது. இதன்கண் நன்னனது தீச்செயல் நினைவுறுத்தப் படுதல் காண்க. மேலும், இச்செயல் புலவர் பலர்க்கு வெறுப்பை இவன் மாட்டு உண்டாக்கினமையும் இதனாற் பெறப்படுகின்றது. படினும், ஆசிரியர் பரணர் முதலிய சான்றோர் சிலர், “அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்-இன்மை அரிதே வெளிறு” என்னும் பொய்யா மொழியையும், “குணங்குற்றங்களும் ஒன்றே யுடையார் உலகத்”திலர் என்னுங் கொள்கையையு முடையராய் இவன் மாட்டுக் காணப்பெறும் குணம் நாடி, குற்ற மும் நாடி அவற்றுள் இச்செயல் இவனது குணம் நோக்க மாணச் சிறிதெனத் தேர்ந்து இவனைப் பாராட்டுவாராயினர். அற்றேல் இக்கொடுஞ் செயலைப் பரணர் கூறியதற்குக் காரணம் யாதாம் எனின், இதுபற்றி வெறுப்புற்ற சான்றோர் இவனது வரலாற்றினைப் பிற்காலத்தார் உணர்ந்து கோடற் கேற்ற குறிப்புக்களைச் செய்யாராகப் பழுமரம் உள்ளிப் பழந்தேர் வாழ்க்கைப் பறவை படர்தல்போல் பரிசிலர் பலர் இவனை யுள்ளி வருதலும். வருவார்க்கு இவன் வரையாது கொடுக்கும் வள்ளன்மையும், பகைவர் பலர் புறங்கண்டு வென்ற வெற்றிச் சிறப்பும் வழிவருவார்க்குப் பெரிதும் பயன் தருவனவாம் எனும் நோக்கத்துடன், இவன் வரலாற்றுக் குறிப்பினுள் இதனையும் ஒன்றாகக் கூறினார் போலும் என்று கோடல் ஒருவாறு பொருந்துவதாம். இனி, இவனது போர்ச்செயல்களை யாராய்வாம். மேற் கூறிய செய்தியில் இவன் ஒருகால் கொண்ட வஞ்சினம். தொழிலால் முற்றுப்பெருங்காறும், அது தணியான் எனப் பெறப்படுவது கொண்டே, இவன் தன்னை யெதிர்த்தாரை எங்ஙனம் வென்றிருப் பான் என்பது நன்கு விளங்கும். உய்த் துணர்வது சொல்லில்வழி யாதலின் அதனை விரியக் கூறுகின்றோம். இவன் அரசுரிமை யெய்திய காலத்து இவனது கொண்கான நாட்டின் புறத்தே சில குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுள் பெரும்பாலார் முடியுடை வேந்தருட் சேர மன்னர் தம் ஆணை வழி நிற்போராவர். அவருள் பிண்டன், அதிகன் என்போர் சிறந்தோராவர். இவருட் பிண்டன் என்பான் மிக்க மெய்வலி யுடையவன். இதுபற்றியே இவன் பரணரால் “மொய்ம் மூசு பிண்டன்” என சிறப்பிக்கக் படுகின்றான். அதிகன் என்பான் பாண்டியன் ஆணைவழி நிற்கும் குறுநில மன்னன். அதனால் இவன் அதிகன் பசும்பூட் பாண்டியன் என்றும் வழங்கப் பெற்றான். இங்ஙன் ஒரு பேரரசன் பெயரே அவன் கீழாண்ட சிற்றரசரும், தண்டத் தலைவரும் பெற்றிருத்தல் கல்வெட்டாராய்வார்க்குப் புதுமை யாகாது. இவன் போர்த் தொழிலில் மிக்க வன்மை யுடையவன்; நல்லிசை தரும் இரவலர்க்குப் பெரும் பொருள் அளித்து அழியாப் புகழ் பெற்றவன்; வில்லேந்திய படைவீரர் பலர் கொண்டவன். இது “பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்” என்றும், “வாய்மொழி நல்லிசை தருஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப் பறியாக் கழல்தொடி அதிகன்1 வில்கெழு தானைப் பசும்பூட் பாண்டியன்” என்றும் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் ஆசிரியர் பரணரால் புகழப் பெறுகின்றான். இவனது நாடு புள்ளுநாடு என்று முன்னர்க் கூறினாம். நன்னன் இந்த அதிகன், பிண்டன் முதலானோரை வென்று பெரும்பொருள் கொண்டதோடமையாது அப் பொருள்களை அவர் நாட்டு யானை மீதேற்றி அவர்தம் மகளிர் கூந்தலால் கயிறு திரித்துப் பிணித்துக் கொணர்ந்து தனது மிக்க காவல் செறிந்த பாழி யென்னும் நகரின்கண், தன் சுற்றமாய வேளிர் பலர் காப்ப வைத்தனன். இப்போர் வாகைப் பறந்தலை யென்னு மிடத்தில் நிகழ்ந்தது. இவ்வெற்றி கேட்ட கொங்கர் மிக்க மகிழ்ச்சி கொண்டார்த்தனர். இச்செய்தி, “மொய்ம்மூசு பிண்ட னுண்முர ணுடையக் கடந்த வென்வேல் இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவ னார நன்னன்” (அ. 152) என்றும், “ புள்ளிற் கேம மாகிய பெரும்பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று வந் (து) ஒள்வா ளமலை யாடிய ஞாட்பு” (அ. 142) என்றும், “ கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே” (குறு.393) என்றும், “பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்த ரோட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சி.” (நற். 270) என்றும், “ பொலம்பூண் நன்னன் புள்ளுநாடு கடிந்தென” (அக 396) என்றும், “ அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப் பெருந்தேன் றூங்கு நாடுகாண் நனந்தலை அணங்குடை வரைப்பிற் பாழி யாங்கண் வேண்முது மாக்கள் வியனகரீக் கரந்த அருங்கல வெறுக்கை” ( அகம். 396) என்றும், “ நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்.” (அகம். 258) என்றும், பரணர் ஒருவராலே பாடப்பெற்று வருவனவற்றால் அறியப் படுகின்றது. இனியும், நன்னன் வேறுபல குறுநில மன்னர்களை வென்று கவர்ந்து கொணர்ந்த பொருளைப் பரிசிலர்க்கு வழங்கினமை, முன்னரே கூறினாம். இவன் காலத்தும், அதற்குச் சிறிது முன்னும் வடநாட்டி னின்றும் நம்நாடு போந்து துளுநாட்டினையும், செல்லூர். நல்லூர் முதலிய ஊர்களையும் தமவாக்கி வாழ்ந்த கோசர்களை வென்று, அவர்தம் காவல் மரமான மாமரம் ஒன்றைத் தடிந்து தன் வெற்றி மேம்படச் செய்ததுமன்றி, அக்கோசரையும் வேறு நாட்டிற் போக்கினன். இதனை ஆசிரியர் பரணர்,1 “நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர்’. எனக் குறுந்தொகை யின்கட் கூறுகின்றார். இங்ஙனம் செல்லுமிடமெல்லாம் தன் வென்றியே விளங்கச் செய்த நன்னனுக்குத் தோழராகச் சில குறுநில மன்னர் இருந்தனர். அவர் ஏற்றை, அத்தி, கங்கண், கட்டி, புன்றுறை முதலியோராவர். இவர்கள் ஒருங்கு கூடிக் கழுமலத்தில் அக்காலத்துவிளங்கிய சோழன் பெரும்பூட் சென்னியை அவனது நகரருகே எதிர்த்தனர். இவருள் ஏற்றை, அத்தி, கங்கன் புன்றுரை ஆகிய இவர்கள் புலவர் கூறும் பேறு பெற்றிலர். கட்டி யென்பான் ஒருகால் உறையூரின் கட் சிறப்புற் றோங்கிய 1தித்தன் வெளியன் என்பானோடு பொரற்கெனப் பெரும்படை கொண்டு சென்று, அத்தித்தனது நாளவையின்கண் எழுகின்ற கிணைப்பாடு கேட்டு அஞ்சிப் பொராது ஓடினன் என்று ஆசிரியர் பரணர் கூறுகின்றார். அது, “தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொரா அ தோடிய ஆர்ப்பினும் பெரிதே (அகம் 226) (நீ வெய்யோளொடு முன்னா ளாடிய கௌவை)” என்பது. ஏற்றை முதலானோருடன் நன்னன் சென்னியை யெதிர்த்தகாலை, அவனது படைத்தலைவனான பழையன் என்பான் முதற்கட் போரிற் பட்டனன், கண்ட சென்னி பொறானாய் இவர்களையடர்த்து வென்றிகொண்டதேயன்றி இவர் படைவீரருள் ஒருவனான கணையன் அகப்பட அவனைச் சிறைகொண்டு கழுமலத்தையும் உரிமை செய்துகொண்டு சென்றான். இங்குக் கூறிய கணையன் என்பானும் கட்டிபோலச் சிறந்த வீரமுடைய வனல்லன். அவன் ஒருகால் தன்னொத்த பாணன் என்னும் வீரனொருவனுடன் கூடி, ஆரியப்பொருநன் என்ற மல்லன் ஒருவனுடன் மற்போர் செய்து தோல்வியுறத் தான் மிகநாணி மறைந்திருந்தான் என ஆசிரியர் பரணரே கூறுகின்றார். அது, “ பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி யெதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருந னிறைத்திரள் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணையன் நாணியங்கு மறையினள்.” (அகம். 386) என்பது. இவற்றால், போர்வலிமிக்க நன்னன் அஃதில்லாத ஏனை ஏற்றை முதலானோரோடு கூடிப் பொறாது தோற்ற செய்தியைக் குடவாயிற் கீரத்தனார். “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங்கு அன்றவர் குழீஇய வளப்பருங் கட்டூர்ப்1 பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனா னாகித் திண்டேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி” (அகம் 44) என்று பாடுகின்றார். இனி, இவனது வெற்றிக்கெல்லாம் சிறந்த காரணமாக விளங்கிய தானைத் தலைவன் மிஞிலி யென்பவன். அவன் நன்னனது பாழி, பாரம் முதலிய நகரங்களை நலம்பெற ஆட்சி செய்து வந்தான். நன்னனது வரலாற்றின் பிற்பகுதிக்கு இம் மிஞிலியின் வரலாறு இன்றிமையாமையி னீண்டுக் கூறுகின்றோம். பகுதி- 4 1. மிஞிலி முன்னைய கட்டுரைக் கண் நன்னனது வரலாற்றில் மிஞிலி யென்பானது வரலாறு சிறப்புமுறையில் வழங்குதலின், அதனைக் கூறுகின்றோம் என்று நண்பர்கட்கு நினைவிருக்கும், அம் மிஞிலி யென்பவன் நன்னன் படைத்தலைவன். இவன், வினைசெயல் வகையில் வல்லனும் வினைத்தூய்மையுடைய வனுமாய் விளங்கினமை காரணமாக, நன்னன் தனது நகரங்களுள் பாரம், பிரம்பு முதலியவற்றையும் அவற்றைச் சூழ்ந்த நாட்டின் பகுதியையும் இவன் வசம் ஒப்பித்து ஆட்சிபுரியு மாறு விடுத்திருந்தான். இதனை நாம் முன்னரே கூறியுள்ளோம் மேலும், இவன் விற்பயிற்சி மிக்க வில்லேருழவர்களுட்டலைவ னாகவும் விளங்கினன் என்று, “ இறுகுபுல் மேய்ந்த வறுகோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை வீளை யம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத் தன்ன ஆர மார்பு” (நற். 265) எனவரும் பரணர் பாட்டுக் கூறுகின்றது. இங்ஙனம் புரவலர் விரும்பும் வின்மையும், வீரமும் படைத்த காளையாகிய இம் மிஞிலி தன் தலைவனை யொப்ப வள்ளன்மையும், “நெடுந்தேர் மிஞிலி” “ஒன்னார் ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை, அடுபோர் மிஞிலி” “இழையணி யானை இயல்தேர் மிஞிலி” எனப்புலவர் பாடும் புகழும் பெற்றிருந்தான். “இகலடு கற்பின் மிஞிலி” எனக் கூறப்படுதலை நோக்க இவன் வீரமேயன்றி, வீரமுடைமைக் கேற்ற கல்வியும் வல்லனா யிருந்தமை புலனாகின்றது. 1இவ்வீரனை மகனாகப் பெற்ற பெரியோன் அன்னி யெனப்படு வானாவன். இது நோக்கியே, மிஞிலியும் அன்னிமிஞிலி யெனவும் கூறப்படு வானாயினன். அது “கொடுங்குழை அன்னிமிஞிலியின் இயலும் எனவும், அன்னி மிஞிலி போல” எனவும் ஆசிரியர் பரணரே கூறுமாற்றால் உணரப்படும். அன்னியென்பான் சோழ நாட்டில் வாழ்ந்த ஒரு சிறந்த வீரனாவான். அன்னிகுடி யென்னும் ஊர் ஒன்று தஞ்சை சில்லாவில் இருக்கின்றது. அதுவே இவன் வாழ்ந்த வூராதல் கூடும் என்றும் சிலர் முடிபு செய்கின்றனர். இவன் காலத்தில் அழுந்தை யென்னும் ஊரில் திதியன் என்னும் வேளிர் மரபினனொருவனும் வைப்பு என்னும் ஊரில் எவ்வி யென்னும் வேளிர் மரபின னொருவனும் சிறப்புற்றிருந்தனர். திதியன் என்பான் மிக்க செல்வ முடையவன். மேலும் இவனுக்குப் பொதியில் மலை உரியதாயிருந்தது. அது பிறை யெயிற்றுக் கேழல் குழுமும் சாரலும், குறவர்க்குப் பெரும்பயன் தரும் தேனும், முயலுநர் முயற்சி முற்றற் காற்றாச் சிமையமும் கொண்டது. இது, “உருமிசைக் களிறுகண் கூடிய வாண்மயங்கு ஞாட்பின் ஒளிறுவேற்றானைக் கடுந்தேர்த் திதியன் வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற் பிறையுறழ் மருப்பிற் கடுங்கட் பன்றிக் குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல் அறையறு தீந்தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா வேற்றரு நெடுஞ்சிமைப் புகலரும் பொதியில் (அகம். 322) எனவரும் பரணர் பாடலால் பெறப்படுகின்றது. மேலும் இவன் மிக்க போர் வன்மையும் வரையா வீகையும் உடையன் என்பதும், ஒரு காலத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற யாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருத சிறப்புடையவன் என்பதும் முறையே, “என்றும் அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சிறியாழ்ப் பாண ரார்ப்பப் பல்கலம் உதவி நாளவை யிருந்த நனைமமிழ்த் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள்” (அகம் 331) என மாமூலனாராலும், “பொருநர் செல்சமங் கடந்த வில் கழு தடக்கைப் பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன் (அகம். 25) எனப் பூதப்பாண்டியனாலும் “ கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங்கானத் தகன்றலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழினி நாரரி நறவின் எருமை யூரன் தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயறேர்ப் பொருநனென் றெழுவர் நல்வல மடங்க வொருபகல் முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை” (அகம். 36) என மதுரை நக்கீரராலும் கூறப்படுதலால் அறியப் படுவனவாம். எவ்வி என்பான் வேளிருள் ஒருவன் “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினும் கொடுப்பாரில்லை” எனச் சுந்தரரால் திருமுறையிற் பாராட்டப்பெறும் பேறுபெற்ற பாரியென்னும் வள்ளல் பிறந்தகுடிக்கு முதல்வனாவான். இவனது நாடு மிழலைக் கூற்றம், முத்தூற்று முதலியவாம். இவனது சிறப்புப் பின்னர்ப் பரணர் இவன்மீது பாடிய பாடலை ஆராயுங் காலத்துக் கூறப்படும். நிற்க, திதியனுடைய சிறந்த ஊர்களுள் ஒன்றான குறுக்கை யென்னும் ஊரின்கண் பெரிய அழகிய புன்னைமர மொன்றனைத் தனக்குக் காவல் மரமாகக் கொண்டு திதியன் பெரிதும் ஆர்வத்தோடு அதனை ஓம்பி வந்தனன். இதனைக் கண்ட அழுந்தூர் வாழும் அன்னி, இத்திதியன் தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனால் தோல்வியுற்றதே இவனது வலியொடுக் கத்துக்குக் காட்டாகுமெனக் கருதி, அப்புன்னை மரத்தைத் தடிதற்கு எண்ணி, வைப்பூர் கிழவனான வேள் எவ்வியிடம் உசாவினன். அவன், சமயம் வரின் இடித்துரைத்துத் தக்கவழிச் செலச்செய்வது சால்புடையோர் செயலாதலின், திதியன் போர் வன்மை, படைவன்மை முதலியவற்றை விளங்க வுரைத்து அவனை அம் முயற்சியை விட்டொழியுமாறு கூறினன். கூறினும் என்! அன்னி அடங்கானாய் அப்புன்னையைத் தடிந்து வீழ்த்தினன். இச் செய்தி யறிந்த திதியன் ஆறாச் சினங்கொண்டு பெரும் படையுடன் சென்று அன்னியைக் குறுக்கையிலே எதிர்த்து யாண்டும் குருதியாறு பெருகப் பெரும்போர் உடற்றி அன்னியைப் புறங்கண்டு தன் சிறப்பினை நிலை நிறுத்தினன். இவனது புன்னையின் வீழ்வு பல புலவர் பெருமக்களாலும் எடுத்துக் கூறப்பெற்றுள்ளது. இச்செய்தி, “மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்டுறை தயங்கக் கடல்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்(று) அறல்வார் நெடுங்கயத் தருநிலை கலங்க மாலிருள் நடுநாள் போகித் தன்னையர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக் கவ்வாங் குந்தி யஞ்சொற் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ” (அகம் 126) எனவும், “அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை” (அகம்.45) எனவும் “பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிய நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக் கடுநவைப் படீஇயர் மாதோ” (அகம். 145) எனவும், “அன்னியும் பெரியன் அவனும் விழுமிய இருபெரு வேந்தர் பொருகளத் தொழித்த புன்னை விழுமம்” (நற். 180) எனவும் வருவனவற்றால் உணரப்படுகின்றது. இங்ஙன், பொருதற்கரிய திதியனது புன்னையை வீழ்த்தி அவனுக்குப் புறமுங் கொடுத்தோடிய அன்னி பின்னர் வட வரும் வலியுள்ளவரும் ஆகிய கோசர் பலருடன் போர் தொடுத்தான். அவர்கள் அவனை வென்று இவனுடைய கண்களையும் களைந்தனர். இக்கோசர் திதியனது நாளவையிலும் படையிலும் இருந்து அவற்குப் பெரும்புகழ் தந்தோராவர். இவ்வாறு, தந்தையின் கண்களைக் கோசர் களைந்து திதியனுக்குப் புகழ்விளைத்துக் கொடுத்தனர் என்ற செய்தி மிஞிலியின் செவிக் கெட்டியது. அவன் மறலிய சினங் கொண்டு திதியனை வெல்லுமாறு யாதெனச் சூழ் வானாயினன், தன்வலியும் மாற்றான் வலியுமாகிய இருவலியும் தூக்கித் தன்வலி குறைவாதல் கண்டு, ஒத்த வலியுடைய குறும்பியன் என்பானைத் தனக்குத் துணைசெய்யுமாறு வேண்ட, அக்கொற்றக் குறும்பியன் மிஞிலியை நட்பினாற்றழுவி அக்கோசரை மரபோடழியக் கொன்றொழித்தான். அதுகாறும், மிஞிலி பரிகலத்துண்ணாமலும் படிவ மாறாமலும் வெள்ளாடை யுடாமலும் இருந்த, பின்னர்த் திதியன் இறந்த செய்தி கேட்டு, அவனது அழுந்தைக்கண், மிக்க ஆரவாரத்தோடு சென்று, பெருமிதங் கொள்வானாயினன். இதனால், இவன் தன் தந்தைக்குக் குற்றம் செய்தாரை ஒறுக்கும் ஆறறிந்து ஒறுத்த செய்கையால் மிக்க மதிநுட்பமும் ஊராண்மை யோடு கூடிய பேராண்மையும் உடையவன் என்பது தேற்றமாம். இச்செய்தி, “வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளாது ஊர்முது கோசர் நவைத்த சிறுமையிற் கலத்து முண்ணான் வாலிது முடாஅன் சினத்திற் கொண்ட படிவ மாறான் மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டுசினம் மாறிய அன்னி மிஞிலி போல மெய்ம் மலிந் (து) ஆனா வுலகையே மாயினேம்” (அகம் 262) எனவும், “தந்தை கண்கவின் அழித்ததன் தப்பற் றெருவர ஒன்றுமொழிக் கோசர்க் கொன்றுமுரண் போகிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை அன்னி மிஞிலியின் இயலும்” (அகம். 196) எனவும் வருவனவற்றால் காண்க. நிற்க, வெளியம் என்னும் ஊரில் வேளிர் மரபில் ஆய் எயினன் என்பா னொரு வீரன், சேரனது படைத்தலைவனாக விளங்கினன். இவன் மிக்க போர்வன்மையும் வள்ளன்மையும் உடையன் என்பது, “யாம விரவின் நெடுங்கடை நின்று தேமுதிர் சிமையக் குன்றம் பாடும் நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட் (டு) அண்ணல் யானை யீயும் வண்மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்” எனவும், “கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்” எனவும் வரும் பரணர் பாடல்களாற்றெரிகின்றது. சுருங்கக்கூறின், இவனது பகைக்கஞ்சி அகுதை யென்னும் வீரனொருவன் அடங்கிக் கிடந்தான் என்பதே சாலுவதாம். இந்த ஆஅய்எயினன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேரவேந்தன் ஒருவனது படைத்தலைவனாயினன். இச்சேரல் ஆராத் திருவினையுடைய சேரலாதனுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி யென்பாளிடம் பகைவர் பனிப்பப் பிறந்து பலர்புகழ் பல்புகழ் வளர்த்தவன்; பிறர்க்கென வாழும் பெற்றியுடையவன். “ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மல்” எனவும், “துளங்குகுடி திருந்திய வளம்படு வென்றி” யுடையோன் எனவும், “வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்” எனவும் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனாரால் பதிற்றுப்பத்தினுள் பாடப்பெற்றி ருப்பதையும் அங்ஙனம் பாடிய புலவர்க்கு, “நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங் கொடுத்தான் அக் கோ” என அப் பாட்டின் பதிகம் கூறுதலையும் நோக்கின்இவன் நிறைந்த கல்வி கேள்வி யுடையவனாய்ப் பொருளிடங்களால் தளர்ச்சியுற்ற குடிகட்கு வேண்டுவன வுதவி யாதரித்தும், தன் காலத்துத் தளர்ச்சியுற்று வலிகுன்றிக் கிடந்த அரண்களைத் திருத்திச் செம்மை செய்தும் விளங்கினான் என்பது தோன்றுகிறது. இவன் மனைவி சிறந்த கற்புமேம்பாடுடையள். அவள் “வண்டுபட ஒளிர்ந்த கூந்தல் அறஞ்சால் கற்பின் குழைக்கு விளக்காகிய ஒண்ணுதல் பொன்னின் இழைக்கு விளக்காகிய அவ்வாங்கு உந்தி. விசும்பு வழங்கு மகளி ருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி” எனப் புகழப் பெறுகின்றாள். இவனுக்கும் நன்னனுக்கும் யாது காரணத்தாலோ பகைமை யுண்டாகி யிருந்தது. அதனால் இவனது படைத்தலைவனான ஆஅய்எயினன், நன்னன் படைத் தலைவனான மிஞிலியோடு பொரலாயினன். இங்ஙனம், எயினன் மிஞிலியோடு போர்க்கெழுவதன் முன், சிலர் அவனுக்கு மிஞிலியின் மேம்பாட்டையும், அவன் துணையால் நன்னன் அதிகன் என்பானுடைய புள்ளுநாட்டினைக் கடிந்த செய்தியையும் விளங்கக் கூறிப் போர்தொடுக்காவாறு தடுத்தனர். தடுத்தும், எயினன் நில்லாது மிஞிலியைப் பாழியென்னும், பறந்தலையின்கண் எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினன். அக்காலை, நன்னன் தன் பேய்க்கூட்டங்களின் இடையில் நின்று “அஞ்சாது நின்று போர் செய்க” என்று மிஞிலிக்குக் கட்டளையிட அதனைப் பணிவொடு ஏற்ற மிஞிலி எயினனைத்தாக்கிக் கொன்றொழித்தான். அதுபோது, நன்னன் போர்க்களத்தை நோக்கிச் சினஞ்சிறந்து அருள்பிறவாது நின்றான். உயிரிழந்து வீழ்ந்த ஆஅய் எயினன் மீது வெயில்படா வண்ணம் பறவைகள் தம் சிறகரால் மறைத்துச் சூழ்ந்தன. பின்னர் அவனது உரிமை மகளிர் இறுதிக்கடன் கழிப்பார் அவ்வெயினன் போலும் பாவை செய்து, அதனை முற்றவும் அணி செய்து, முக்கட்செல்வன் வீற்றிருக்கும் ஆலமுற்றம் போந்து, அம்முற்றத்தினையும் அழகு செய்து அங்கு அப் பாவையை வைத்துத் தம் கடன் ஆற்றிப் பின்னர் நீரிற் போகட்டுத் தாமும் நீராடிப் போயினர். எயினன் இறந்த செய்தி கேட்ட அகுதையும் அச்சம் நீங்கிவெளிவரலாயினன், இது, “கொடித்தேர் பொலம்பூண் நன்னன் புள்ளுநாடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி யாங்கண் அஞ்ச லென்ற ஆஅய் எயினன் இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்தன் உயிர்கொடுத் தனனே சொல்லிய தமையாது” (அகம் 396) எனவும், “முறையியல் வழா அது ஆற்றிற் பெற்ற கறையடி யானை நன்னன் பாழி யூட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி” (அகம் 142) எனவும், “வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு நண்பக லுற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள்வாண் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்(கு) அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்(று) ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி நிழல்செய் துழறல் காணேன் யானெனப் படுகளங் காண்டல் செல்லான் சினஞ்சிறந்து உருவினை நன்னன் அருளான் கரப்பப் பெருவிதுப் புற்ற பல்வேண் மகளிர் குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல் வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை அகுதை களைதந் தாங்கு” (அகம். 208) எனவும், “ஒன்னார் ஒம்பரண் கடந்த வீங்குபெருந் தானை அடுபோர் மிஞிலி செருவிற் குடைஇ முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப வண்மை யெயினன் வீழ்ந்தென ஞாயிற்(று) ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு விசும்பிடை தூர வாடி மொசிந்துடன் பூவிரி யகன்றுறைக் கனைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேரியாற் றயிர்கொண் டீண்டி யெக்க ரிட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் ஞால நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ஆல முற்றம் கவின்பெறத் தைஇப் பொய்கை சூழ்ந்த பொழின்மண மகளிர் கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்” புகா அர் (அகம். 181) எனவும் வருவனவற்றால் உணர்க. இவ்வாறு தன் படைத்தலைவன் மிஞிலியொடு பொருது உயிரிழந்தான் என்ற செய்தி களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் அறிந்ததும் பெருஞ்சினங் கொண்டு அம்மிஞிலியொடு அவனது தலைவனான நன்னனையும் கொன்று மீள்வேன் எனத்தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்து வஞ்சினங் கூறிப் போர்க் கெழுந்தனன். மேலும், இச்சேரலுக்கும் நன்னனுக்கும் இயற்கையிலே நாடாட்சி காரணமாகப் பகைமையும் இருந்ததென முன்னர்க் கூறினோமன்றோ. அதுவும் இதுபோது இவன் போர்க்கெழுதற்கு ஏதுவாயிற்று. நார்முடிச்சேரல் போர்க்கெழும் செய்தி நன்னன் அறிந்து தானும் திரண்டு தானை சூழப் பெருங்கடல் நடுவட்செலும் வங்கம் போலச் செல்வானாயினன். இருபடையும் கடம்பின் பெருவாயில் என்னுமிடத்துக் கைகலந்து பொரலாயின. அதுபோது இருங்களிற்று யானைகள் கையும் மருப்பும் இழந்து பட்டன; தேர்கள் முறிந்து கொடுஞ்சியும் கொடியும் ஒருபுடை சிதறிவிழ உருளைகள் கழன்று துகளாயின; பெடையொடு கூடின பருந்தின் சேவல்கள் தம் மினத்தொடு போர்க்களம் புக்குக் குருதி படிந்து உண்டும், கொழுவிய தசை யருந்தியும், விசும்பகம் புதைய வட்டமிட்டன; ஒரு பெயருடைய வீரர்பலர் பட்டமையான், அவர் தலை துமிந்து எஞ்சிய மெய்கள் எழுந்தாடின; அந்திமாலை விசும்பு கண்டன்ன அப் பறந்தலையின், உட்களத்தின் நடுவாகிய செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்திற் பேய் எழுந்து குரவையும், துணங்கையும் ஆடின. சேரலும், மல்லல் உள்ளமொடு, பகைவர், முன்பு செய்துவருகின்ற போரன்றிப் புதிதாகப் பகைத்துச் செய்யும், போர்வகை பலவும் கடந்து, செருவில் மிகுகின்ற மொய்ம்பினையுடைய மறவரொடு தலைச் சென்று, பனைதடியும் புனம்போல, அவர்தம் கை கால்களைத் தடிந்து, இரண்டு படையின் வாளும் தம்மிற் றெரியாமல் மயங்கு தலால், பட்ட மாவும் மாக்களும் செய்த பிணங்களை யுண்டதற்குப் போந்த எருவையும், அதன் சேவலும். குடுமி ஏழாலொடு, அம்பு, வாள் முதலிய படையுடன் குருதிச் செம்புனல் பிறவற்றையும் சுமந்து கிழக்கிழிய, உருவெழு கூளியர் உண்டு மகிழ்ந்தாடச் செருச்செய்து, நன்னனது காவல் மரமான பொன்படும் வாகை மரத்தின் முழுமுதல் தடிந்து, “குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்ப, அயரா வென்றி யெய்தினன், வெந்நிட் டோடிய நன்னன் மானத்தால் வலிகுன்றியிருந்தனன். பின்னர் அச்சேரல், அவன் வலிகுன்றியிருத்தலறிந்து, தன் முன்னோரால் இழக்கப்பெற்று நன்னனது ஆட்சியின் கீழிருந்த நாட்டினை மீளப் பெறற் பொருட்டுப் பெரும் படை கொண்டு வாகைப்பெருந்துறை யென்னுமிடத்து அந் நன்னனை மீட்டும் எதிர்த்து இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான். நன்னனும் பொருது களத்தேயே ஒழிந்தான். இவ்விரு போர்களுள் முன்னதைப் பதிற்றுப்பத்து நான்காம் பத்தினுள் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் ஒரோவிடத்தில் (40- ஆம் பாட்டினுள்), “பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” என்று சிறப்பாகவும் ஏனைய விடங்களிற் பொதுவாகவும் கூறியுள்ளார்; பின்னது, ஆசிரியர் கல்லாடனாரால், “குடாஅது இரும்பொன் வாகைப்பெருந்துறைச் செருவிற் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம்பெரிது பெரினும் வாரலென்” (அகம். 190) என்றும் கூறப்பட்டுள்ளது. இக் கல்லாடனார் பாட்டு நன்னன் நார்முடிச் சேரலால் பட்டொழிந்தான் என்ற செய்தியை வற்புறுத்துவதே யன்றிப் பதிற்றுப்பத்துக் கூறுவதனை நாட்டுவதாகத் தோன்றவில்லை. பதிற்றுப்பத்து பதிகத்தாலும் அதன் உரையாலும் இப்போர் கடம்பின் பெருவாயில் என்னுமிடத்து நிகழ்ந்ததென்பது அறியப்பட, இவ்வகப்பாட்டு இப்போர் வாகைப் பெருந்துறை யென்னுமிடத்து நடந்ததெனக் கூறுகின்றது. மேலும், இதன்கட் காவல்மரந் தடிதலும் கூறப்பட்டிலது. இவற்றால் நன்னனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் நடந்தது ஒரே போர் அன்று என்பது பெறப்படும். படவே காப்பியனார் கூறிய போரின்கண் நன்னன் தன் காவன்மர மிழந்து புறங்கொடுத்து ஓடினன் என்பதும், கல்லாடனார் கூறிய போரின்கண் நன்னன் இறந்தான் என்பதும் முன்னது கடம்பின் பெருவாயில் என்னு மிடத்தும், பின்னது வாகைப் பெருந்துறை யென்னுமிடத்தும் நிகழ்ந்தன என்பதும் பெற்றாம். சிலர் நார்முடிச்சேரல் நன்னனை வென்று பெற்ற நாடு தான் இளமைக்காலத்தே இவனோடு பொருது இழந்த நாடு என்று கூறுகின்றனர். அது நன்னனது வெற்றிச் செயல்களுள் ஒன்றாதலால் அவனைப் பாராட்டிய புலவர்பெருமக்கள் அதனைக் குறியாதிரார். அத்தகைய குறிப்பொன்றும் இன்மையானும், அவன் கவர்ந்ததாகப் புள்ளுநாடு ஒன்றினைத் தவிரப் பிறிதொன்றும் கூறப்படாமை யானும், தன் நாட்டையும் “முறையில் வழாஅது ஆற்றிற் பெற்” றா னெனவே கூறப் படலாலும், வேறு தக்க சான்று கூறினாலன்றி அது கோடற் பாலதன்றாம். இதனை இன்னும் விரித்து ஆராய்வதற்கு இஃதிடமன்று. இவ் வகப்பாட்டில் வாகைக்குக் கொடுக்கப்பெற்றுள்ள அடைமொழியே பதிற்றுப்பத்தின் நான்காம்பத்தின் பதிகத்து நன்னனது காவன்மரமான வாகைக்கும் “பொன்படு வாகை முழுமுதல் தடிந்து” என்புழி “பொன்படு” என்று கொடுக்கப் பட்டிருக்கும் ஒப்புமை நோக்கி, பெருந்துறை யென்னுமிடத்து நன்னன் தன் பொன்படுவாகையை யிழந்து பொருது களத்து ஒழிந்தான் என்று கொள்ளுவாரும் உண்டு.“இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற் - பொலம்பூண் நன்னன் பொருது களத்தொழிய” என்றதற்கு வாகையாகிய காவல் மரத்தையிழந்து, உயிரிழந்தான் என்று பொருள் கோடல் பொருத்தமாகத் தோன்றவில்லை. வருந்திப் பொருள் கோடலும் அழகன்று. பகுதி - 4 2. அஞ்சி இவன் அதியமான் நெடுமான் அஞ்சி எனப்பெயர் பெறுவான். “ஆர்கலி நறவின் அதியர் கோமான், போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி” அதியர் கோமான், என ஒளவையார் கூறுதலை நோக்க, அதியர் என்பார் ஒருவகை மரபினர் என்பதும், அவர்கட்குத் தலைவன் இவன் என்பதும் விளங்குகின்றன. இவ்வதியர் என்பார் சிறந்த வீரர்கள் என்பது இவன் செயல்களால் தெரிகின்றது. மேலும் இவனது முன்னோர்கள் விண்ணுலகத்திலிருந்து இவ் வுலகத்திற்கு. அமரரை வேண்டி ஆவுதி அருத்திப் பெறுதற்கரிய கரும்பினைக் கொண்டுவந்து விளைவித்த சிறப்பினை யுடையார். அது “அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் அரும்பெறல் மரபின் கரும்பிவண் தந்தும் நீரக விருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர்” (புறம். 99) எனவும், “அந்தரத்து, அரும்பெற லமிழ்தம் அன்ன கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே” (புறம்.395) எனவும் வரும் ஒளவையார் பாடல்களால் விளங்குகின்றது. மேலும் இவர் இவனை நோக்கி, “நீ, நின் முன்னோர் போல, ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல் பூவார் காவிற் புனிற்றுப்புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத் தெழாஅத் தாயம் வழுவின் றெய்தியும் அமையாய்” என்று கூறுதலாலும் இதன் உரையாலும் இவன் சேரமானுக்கு உறவின னென்றும். அதனால் இவனுக்குப் பனந்தார் உண்டென்றும், இவன் முன்னோர்களின் வேண்டுகோட் பொருட்டு வானோர் அவர்கட்கு வரங்கொடுத்தற்கு வந்திருந்ததொரு சோலையுடைய னென்றும் கூறுகின்றார். ஒரு காலத்து இவன் பெறுதற்கரியதும் உண்டா ருயிர் நெடிதிருக்கச் செய்யும் சிறப்புடையதுமானதோர் நெல்லிக்கனி பெற்று, அதனைத் தானுண்ணாது ஒளவைக்கு ஈந்தான். அது பெற்ற ஒளவையார். “வலம்படு வாய்வா ளேந்தி ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை ஆர்கலி நறவின் அதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி! பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே.” (புறம்.91) எனப் புகழ்ந்து பாடுவாராயினர். இவன் மிக்க போர்வன்மையும் புலவர்மாட்டுப் பேரன் புடைமையும் கொண்டு நன்மகப்பேறு பெற்றுச் சிறந்து புகழ் பெற்றவன். இவ்விடத்தில் மழவர் என்னும் ஒருவகை வீரர் பலர் இருந்து இவனுக்குப் பெரும் வெற்றியைப் பயந்தனர். இவை “இருநிலம் மண்கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ நீகளம் புகினே” எனவும், “ஒன்னார் “கடிமதி லரண்பல கடந்த நெடுமா னஞ்சிநீ அருளன் மாறே” எனவும் வருவனவற்றாலும், ஒளவை முதலிய அருந் தமிழ்ப் புலவர் பெருமக்களால் “ஆசா கெந்தை”, “என்னை” எனும் உரிமைச் சொற்களாற் கூறப்பெறுதலினாலும், “ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்” “வழுவில் வன்கை மழவர் பெருமகன்” என்பனவற்றாலும் உணரப்படுகின்றன. “அதியமான் தவ மகன்” பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது” என்றும் “அவன் மகன் பொகுட்டெழினியைப் பாடியது” என்றும் வருவன அவனது மக்கட்செல்வத்தை யுணர்த்துவனவாம் இவனுடைய ஊர் தகடூர் என்பது; மலை குதிரைமலை யென்பது. இவற்றைப் போல் அத்துணைச் சிறப்பில்லாத மலைகளும் ஊர்களும் பல இத்தகடூரைப்பற்றிக் கூறுமிடத்து, இராவ்பகதூர் வி.வெங்கையர் அவர்கள் “வடமொழியில் தகடா என்று சொல்லப்பட்ட இந்தவூர் தமிழில் தகடூர் என்று வழங்கி வந்ததாகத் தோன்றுகின்றது; மைசூர் இராச்சியத்தில் தகடூர் என்று சொல்லப் பட்ட ஊர் ஒன்றிருக்கிறது” என்று எழுதுவதாக ஆசிரியர், மகாம கோபாத்தியாய உ. வே. சாமி நாத ஐயரவர்கள் கூறுகின்றார்கள். குதிரைமலையை ஆசிரியர்கள் “ஊரா தேந்திய குதிரைக் கூர்வேல், கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினி” என்றும் “நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி” என்றும், அதன் வளத்தை “அருவி யார்க்கும் கழைபயில் நனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தள் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட்கேழல் உழுத பூமி நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர் உழா அது வித்திய பரூஉக்குரற் சிறுசினை முந்துவிளை யாணர் நாட் புதிது உண்மார் மரையான் கறந்த நுரைகொள் தீம்பால் மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி வான்கே ழிரும்புடை கழா அது ஏற்றிச் சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங்கோள் வாழை அகலிலைப் பகுக்கும் ஊராக் குதிரை” (புறம், 168) எனவும், “மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவா அன்” (அகம். 143) எனவும் கூறுகின்றனர். தென்கண்டம் சில்லாவில் குதிரைமூக்கு மலை யென ஒன்றிருப்பது இக்குதிரைமலை கொல்லோ என்றெண்ணச் செய்கின்றது. இனி, இவனது போர்ச்செயல்களுட் கோவலூரெ றிந்ததும் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் போர் செய்ததும் புலவர் பெருமக்களால் மிகமிகப் பாராட்டப் பெறுகின்றன. இவற்றுட் கோவலூர் என்பது மலையமான் திருமுடிக்காரிக் குரியது. இது “துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையும் பேர்யாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங் கதுப்பின் என்பேதை” ( அகம். 35) என வருவதால் விளங்குகின்றது. இக்காரி என்பான் வள்ளல் எழுவருள் ஒருவன். கபிலர் முதலிய நல்லிசைச் சான்றோரால் புகழப்பெற்றவன். மேலும், “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி” என்று கூறப்பெறுதல் நோக்க, இவனுக்கு முள்ளூர் என்பதும் உரித்தெனத் தோன்றுகிறது. இக்காரி, மலையன் என்றும் வழங்கப் பெறுவன்; விற் போரிலும் ஈகையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா தவனாவன். இது, “ பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன்” (நற். 100) என்றும், “ தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த விழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே” (புறம் 123.) என்றும் வருவனவற்றாலும் பிறவற்றாலும் உணரப்படும். ஒரு காலத்துச் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகி வென்றி தந்து மிக்க புகழ் எய்தினான். சுருங்கக்கூறின் இவன் எத்துணை வலிமையுடையவனா யிருப்பின் முடியுடை மூவேந்தரும் துணை வேண்டிப் பொருள் கொடுத்து வேண்டி நிற்பர். இன்றேல், ஆசிரியர் கபிலர் “ வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் துப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே” (புறம்.122) என்று கூறுவாரோ? இங்ஙனம் முடியுடை மன்னராலும் புகழப்பெற்றுப் பெருங் கீர்த்தி கொண்டு விளங்கும் காரியைக்கண்ட அஞ்சி அக் கோவலூரை முற்றுகையிட்டுப் பொருதுவென்றான். இவ்வெற்றியைப் புகழ்ந்து கூறவந்த ஒளவையார், “செருவேட்டு இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்றமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை இன்றும் பரணன் பாடினான் மற்கொல் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறிநின் அரண்டு திகிரி ஏந்திய தோளே” (புறம்.99) என்று பாடுவாராயினர். இப்போரில் எதிர்க்கும் ஆற்றலின்றியும் முடியுடை வேந்தரின் துணையின்றியும் போகவே, காரி தோல்வியுற்றோடிப் பெருஞ் சேர லிரும்பொறையைத் துணை வேண்டினன். இவ்விரும்பொறை, “பொய்யில் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன்தேவி யீன்றமகன்.” இவனது “வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவிறந்தன”. “கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது” வேள்வி பல வேட்டவன்’, “எண்ணியல் முற்றி ஈரறிவுபுரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசுதுறை போகிய வீறுசால் புதல்வனைப் பெற்றவன்; மண்ணாள் வேந்தற்குக் கண்ணென வகுத்த நீதிநன்னூல் ஓதிய நாவினன்; மக்கட்கு நல்லறிவு கூறும் நல்லறிவினன். இது, “ வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலை பெயரக் கூறினை பெருநின் படிமை யானே” (பதிற். 74) என அரிசில் கிழார் பாட்டினால் விளங்குகின்றது. மேலும், அப்புலவர் பெருமகனார் இவனை, இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்- அரும்பொறி வயமான் அனையை” என்றும், அவன் எண்ணற்கரிய தேரும் மாவும் மாக்களும் யானையும் உடையன் என்றும், “உயிர் போற்றலையே செருவத்தானே” என்றும் கூறியதனால் இவனது போர்வன்மை தெள்ளிதாகின்றது. இவனது கொடை முதலிய நல்லொழுக்கத்தை ஒருவன் அறிந்து கோடற்கு, “உரவோர் எண்ணினும் மடவோ ரெண்ணினும் பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப், பிறருவமம் ஆகா ஒரு பெரு வேந்தே” எனவும். “ உயிர் போற்றலையே செருவத் தானே கொடைபோற் றலையே இரவலர் நடுவண் பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும் பிறர்நசை யறியா வயங்கு செந் நாவிற் படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப! அனைய அளப்பருங் குரையை” (பதிற். 79) எனவும் வருவனவே போதியனவாம். இப்பெருஞ் சேரலிரும் பொறைக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியிலிருந்த தேன்வளம் சிறந்த கொல்லிமலை நாட்டினையும் தான் அடைதல் வேண்டுமென்னும் வேட்கை மிகுதியுமுண்டு. அதனால் அவன் தன்துணை வேண்டிப்போந்த காரியிடம் இவ்வேட்கையை யுணர்த்தவே, அவன் பெருஞ்சேனையுடன் அக் கொல்லியை யாண்ட வல்விலோரி என்பானை வென்று அதனைக் கைக்கொள்வான் சென்றான். வல்விலோரி கடை யெழுவள்ளல்களுள் ஒருவன், இவன் “வல்வில் ஓரி கொல்லிக் குடவரை” ,“ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி”, “விடர்ச்சிமை ஓங்கருங் கொல்லிப் பொருந” “கொல்லியாண்ட வல்வில் ஓரி” எனப் புகழப்படுதல் நோக்கி, கொல்லிமலையும் அதனைச் சார்ந்த நாடும் ஓரிக்கே யுரிய வென்பது பெறப்படும். “நாளும், இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோரானா ஆதனோரி” என ஆசிரியர் வன்பரணர் கூறுதலாலும், “நளிசினை, நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக், குறும் பொறை நன்னாடு கோடியர்க் கீந்த, காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரியும்” என வள்ளல்க ளெழுவருள் ஒருவனாகப் பெரியோர்கள் கூறுதலாலும் அவனது வள்ளன்மையும் விளங்கு வதாகும். மேலும், இவன் ஆசிரியர் வன்பரணரைக் காட்டில் கண்டு, தான் இன்னானெனக் கூறாது நிற்ப, அவர் அவனை யுணர்ந்து பாடிய அளவில், அவன் தான்வேட்டையாடிக் கொன்ற மானின் தசையைத் தந்து உண்ணச்செய்து பின்னர்ப் பொன்னும் மணியும் மிகக் கொடுத்தனுப்பினான். இவனை “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி” என்னும் புறப்பாட்டினுள் விரியக் காண்க. இக்கூறிய வல்விலோரியும் திருமுடிக்காரியும் போர் உடற்றியகாலை, ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன் றாகலின் ஓரி அப்போர்க்களத்தே கொலையுண்டு இறந்தான். வென்றி கொண்ட அவனது கொல்லி நாட்டினைச் சேரனுக் கீந்த காரி அச்சேரனது துணையைப் பெற்றான். இது “ முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று சேரலற் கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம். 209) என வருவதால் உணரப்படுகின்றது. பேரிசையுடன் முள்ளூர்க் குரியனாய் அதன்கண் வந்து துவன்றிய ஆரியர் அலறத் தாக்கிப் பலரையும் கொன்று துரத்திய காரிக்கு, இஃதோர் அரிய செயலன்றன்றே! இவ்வுதவிக் கீடாகப் பெருஞ்சேரலிரும் பொறை தன் எண்ணிலடங்காச் சேனையுடன் அஞ்சியின் தகடூரை முற்றுகையிட்டுப் போர் தொடங்கினன். அப்போரின்கண் அதிகமான் தான் துணை வேண்டிய இருபெருவேந்தர்கள் தாழ்த்து வந்தமையாலும், தன்னூராண் மிக்க திண்ணிதாகலின் பகைவர் எளிதிற் கைப்பற்றலாகாத தென் றெண்ணி அவர் அதனருகு வரும்வரை அகத்தேயிருந்து விட்டமையாலும், சேரனால் வென்றி கொள்ளப்பட்டு உயிரிழந்தான்; துணை வந்த வேந்தரும் பின்னர்த் தோல்வியுற்றுத் தம் முரசும் குடையுமிழந்து ஓடினர். இச்செய்தி “ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூ ரிடை அதிகமான் இருந்ததாம்” என நச்சினார்க்கினியரும், (தொல், பொருள், புறத், நச்சி, பக்கம் 189) “ பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறிப் பேஎ மன்ற பிறழநோக் கியவர் ஓடுறு கடுமுரண் துமியச் சென்று வெம்முனை தபுத்த காலை” (பதிற் 78) என அரிசில் கிழாரும், “ கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை பல்வேற் றானை அதிகமா னோடு இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று முரசும் குடையும் கலனும் கொண்டு உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத் துகடீர் மகளிர் இரங்கத்துப்பறுத்துத் தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேர லிரும்பொறை” என அவர் பாடிய பத்தின் பதிகமும் கூறுவதனாற் பெறப் படுகின்றது பின்னர்க் காரி தன் கோவலூரைப் பெற்று இனிது வாழ்ந்து வந்தான். இவ்வதிகமானைப் பற்றிய ஆராய்ச்சி யொன்று புற நானூற்றின் பதிப்பில் திரு. இராவ்பகதூர் வி.வெங்கையரவர்களால் குறிக்கப் பெறுகின்றது. அதில் அதிகமான் அதிகன், அதிகைமான், அதியமான், அதியன் ஆகிய இவ்வைந்தும் சேர வமிசத்தைச் சேர்ந்த ஓரரசனைக் குறிக்கும் ஒரு பொருட் பல பெயரென்றும், போளூருக் கடுத்த திருமலையென்ற சமணக் கிராமத்தி லுள்ள ஒரு கல்வெட்டால் அதிகைமான் அதிகன் என்று கூறப்பட்டுள்ள கேரள தேசத்தரச னொருவன் இருந்தா னென்பதும் அவனுக்கு இராச இராசனென்று மற்றொரு பெயருண்டென்பதும், அவன், வமிசத்தில் எழினி அல்லது யவனிகா என்ற ஓரரசனிருந்தா னென்பதும் இராச இராசனென்பானுடைய மகனான விடுகா தழகிய பெருமாள், தகடா என்று சொல்லப்பட்ட வூரை ஆண்டானென்பதும் தெரிகின்றன என்றும் ஐயரவர்கள் கூறுகின்றார்கள். இனி, அத்திருமலைச் சாசனம், “சேர வமிசத்து அதிகைமானி எழினி செய்த தர்ம யக்ஷிரையும் யக்ஷியாரையும் எழுந்தருளுவித்து எறிமனியும் இட்டுக் கடப் பேரிக் ( காலு)ங் கண்டு குடுத்தான் ஸ்ரீமத் கேரள பூப்ருதா யவநிகா நாம் நாஸுதர்மாத்மகா, துண்டீராஹ்வய மண்டலார் ஹஸு கிரௌய சேஸ்வரௌ கல்யிதௌ, பஸ் சாத்து குபூஷணாதிக ந்ருப ஸ்ரீராஜராஜாத்மஜௌ வ்யாமுக்த சர்வணோஜ்வலேநே தகடாநே தேந ஜீர்ணோத்ரதௌ; வஞ்சியர் குலபதி எழினி வகுத்த இயக்கர் இயக்கியரோ(டு)- எஞ்சிய அழிவு திருத்தியிவ் வெண்குண இறைதிரு மலை வைத்தான். அஞ்சிதன் வழிவரும் அவன்வழி முதலிகல் அதிகன் 1யவனிகன் நூல் விஞ்சையர் தலம்புனை தகமையர் காவலன் விடுகா தழகிய பெருமாளே” என்று கூறுகின்றது. இங்குக் கூறப்படும் தகடா என்பது தமிழில் தகடூர் என மருவி யிருக்கும் என்றெண்ணி, அதுவே அதியமானுக்கு உரிய நகராயிருந்த தென்றும், அது இதுபோது தர்மபுரி1 என்று வழங்கப் பெறுகின்றது என்றும் சிலர் கூறுகின்றனர். இவற்றை நோக்க, அதிகமானது மரபு பெருஞ் சேரலொடு பொருது தகடூரை யிழந்த போதிலும் எஞ்சாது நீடித்து வந்த தென்பதும், அன்றி அதிகமானது சிறப்பு நோக்கியும் அவன்மகன் எழினியின் பெருமை நோக்கியும் தகடூரையாண்ட பிற்கால மன்னர்களும் அவர்தம் பெயரே தாமும் புனைந்து வந்தன ரென்பதும் அறியக் கிடக்கின்றன. பகுதி- 5 2ஆஅய் அண்டிரன் இவனும் ஆசிரியர் பரணரால் உலவாப் புகழ் தரப் பெற்ற உரவோருள் ஒருவனாவான். மோசி கீரனார் என்னும் புலவர் பெருமானை மிக ஆதரித்து ‘மோசி பாடிய ஆயும்’ எனப்பெருஞ் சித்திரனார் தந்த புகழைப் படைத்தவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். ஆஅய் எயினன் என்பான் வேறு; இவன் வேறு. ஒருகாலத்து இவன் ஒரு பாம்பினிடம் நீலஉடை ஒன்று பெற்று ஆலின்கீழமர்ந்த சிவபெருமானுக்கு அதனை அளித்தான் என்பது “ நீல நாக நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆஅயும்” எனவரும் சிறுபாணாற்றுப் படையால் அறியப்படுகின்றது. “கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் எனக் குறுந் தொகையிலும், புறத்திலும் வருதலையும், “வடதிசையதுவே வான்றோய் இமயம், தென்றிசை ஆய்குடி யின்றாயிற், பிறழ்வது மன்னோஇம் மலர்தலை யுலகே” என வருதலையும் நோக்கின், தென்னாட்டில் உயர்ந்து விளங்கும் பொதியில்மலை இவனுக்கு உரித்தென்பதும் அதன் கீழுள்ள ஊர் ஆய்குடி என்பதும் தெரி கின்றன. இவன் ஒரு காலத்துத் தன்னோ டெதிர்த்த கொங்கர்களைக் குடகடல்வரைத் துரத்தி வென்று பெருமை யெய்தினான் என்பது “கொங்கர்க் குடகட லோட்டிய ஞாற்றை, தலைப் பெயர்த் திட்ட வேலினும் பலவே” என்பதனால் தெரிகின்றது. அன்றியும் இவனது வீரமும், வீரர் பலருடைமையும், “ஆடியல்-மடமயில் ஒழித்த பீலி வார்ந்துதம்- சிலைமாண் வல்வில் சுற்றிப் பலமாண். அம்புடைக் கையர் அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன், சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய்” என வருத லால் விளங்குவனவாம். இவன் பிறர்க்கு ஈதலால் வரும் இன்பமே இன்பமாகக் கொண்டு செய்த கொடை, புலவர் பெருமக்களால் பலபடப் பாராட்டப்பெறுகின்றது. ‘வல்லினும் வல்லா ராயினும் சென்றோர்க்குச் - சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், மாஅல் யானைஆஅய்” என்பதனால் இவன் சோறு போடும் திறமும், “ ஆஅய் அண்டிரன் அடுபோ ரண்ணல் இரவலர்க் கீத்த யானையிற் கரவின்று வான் மீன்பல பூப்பின் ஆனாது ஒருவழிக் கொருவழி யின்றிப் பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே” எனவும், “ மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையஇக் கவின்பெறு காடே” எனவும் வருவனவற்றால் இவனது யானைக்கொடையும் விளங்கு கின்றன. மேலும் யானைக்கொடைக்கண், இவன் தன்னையுள்ளி இரவலர் வரும்பொழுது அவர்க்குக் கொடுத்தல் கருதியானைகளைத் தொகுத்து வைத்திருந்து கொடுப்பன் என நற்றிணையில் “வியப்புடை, இரவலர் வரூஉம் அளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை” என்பதனால் ஆசிரியர் காரிக் கண்ணனார் கூறுகின்றார். இவனது நாட்டில் கவிரம் என்னும் மலையுண் டென்றும் இவனது கானத்திற் செல்லும் வழியில் முதற் கண்ணே மிக வுயர்ந்த மலையொன் றுண்டென்றும் அப் பகுதிக்குத் தலையாறு என்பது பெயரென்றும், அம்மலையில் மூங்கில்கள் செறிந்திருந்தன என்றும் ஆசிரியர் பரணர் கூறுகின்றார். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் என்றெண்ணும் அற விலை பகரும் வாணிகனாதலின்றி, ஈதலின்பமே வெஃகிப் பெருங் கொடை செய்த இவ்வள்ளல் காலனென்னும் கண்ணிலி யுய்ப்ப மேலோர் உலகம் எய்தினன். இவன் வருகின்றானென்று விசும்பின் கண், வச்சிரத் தடக்கை நெடியோன் கோயினுள் போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பெழுந்தது. மகளிர் பலர் உடன்கட்டை யேறினர். பகுதி- 6 வேள் எவ்வி இவன் வள்ளல்களுள் மிக்க பாரி யென்பான் பிறந்த சீரிய குடிக்கு முதல்வன் என முன்னரே கூறினோம். “தாங்காவுறையுள் நல்லுர் கெழீஇய, ஓம்பா வீகை மாவேள் எவ்வி, புனலம் புதவின் மிழலையொடு” என்றும் “பயங்கெழு வைப்பு” என்றும், “யாழிசை மறுகின் நீடூர், கிழவோன்” என்றும், ‘புலம்பூண் எவ்வி நீழல் என்றும்’ வருவனவற்றால், இவன் மிழலை நாடும், வைப்பு நல்லூர், நீடூர், நீழல் முதலியவூர்களும் உடையன் என்பது விளங்குகின்றது. இவற்றுள், மிழலைநாடும், அந்நாட்டு நல்லூரும் “நெல்லரியும் இருந்தொழுவர்” என்று தொடங்கும் புறப்பாட்டிலும், நீழல் என்னும் ஊர் “தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய” என்று தொடங்கும் அகப்பாட்டிலும் விரியப் புகழப்பெற்றுள. “பெரும்பூண், போரடு தானை எவ்வி மார்பின், எஃகுறு விழுப்புண் பல” என்று கூறப்படுதலையும், “பல்வேல் எவ்வி” “வாய்வாள் எவ்வி” என வருதலையும் நோக்கின், இவன் வில்வாட் பயிற்சி மிக்கோன் என்பதும், விழுப்புண் பல பெற்ற மையான் இவனது பேராண்மையும் தெரியநிற்கின்றன. இவனது ஏவலை விரும்பி அடங்கிநில்லாத பகைவர் பலர் வன்மையிழந்து இவன் ஆணைவழி நிற்ப, அவர்தம் அரிமணவாயில் என்னும் உறத்தூரின் கண் பசும்பூண் பொருந்திலர் என்னும் ஒருவகை வீரர் கள்ளுண்டு களிப்பெய்தினர் என்பது, பரணரால் அகத்தில், “யாழிசை மறுகின் நீடூர் கிழவோன் வாய்வாள், எவ்வி ஏவல் மேவார் 1 நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பெருந்திலர் 2 அரிமண வாயில் உறத்தூர் ஆங்கட் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமி ழன்ன கவ்வை யாகின்று” (அகம்.266.) என்று கூறப்பட்டுள்ளது. இம் மேம்பாடு கருதித்தான் அன்னி யென்பான் திதியனொடு பொருதல் வேண்டி இவனோடு உசாவுவானாயினன். இச்செய்தி முன்னர்க் கூறினாம். இது நிற்க, இவனது கொடை, எங்கும் பரவ நாற்றிசை யினின்றும் இரவலர் பலர் இவனைப் பாடிப் புகழுவாராயினர். “எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்” என்றும், இரும்பா ணொக்கல்” என்றும், “உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீ இயோன்” “ஒம்பா ஈகை மாவேள் எவ்வி” என்றும் எழுந்த புகழ், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் முதலானோர்க்கு எட்டுதலும் அவர் இவன் மீது படைகொண்டு சென்று போர்உடற்றி பெற்றனர். இது, ஒம்பா ஈகை மாவேள் எவ்வி புலனம் புதவின் மிழலையொடு கழனிக் கயலார் நாரை போர்விற் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய” என ஆசிரியர் மாங்குடி கிழார் அந்நெடுஞ்செழியனைப் பாடிய பாட்டால் அறியப்படு கின்றது. இவன் நாட்டில் மீன்விற்கும் நுளைச்சியர் அம்மீனுக்கு மாறாக முத்தினைப் பெறுவர் என ஆசிரியர் நக்கீரர் கூறுகின்றார். போர்க்கண் இறந்துபட்ட எவ்வியின் மகளிர் கைம்மை நோற்றுச் செயலற்று வருந்தினர். அக் கையறு நிலை, நோகா யானே தேய்கமா காலை பிடியடி அன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாருண் டனன் கொல் உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇ யோனே” என்று வெள்ளெருக்கிலையார் என்னும் புலவரால் விளக்கப் பட்டிருக்கின்றது. இவன் பின்னர் கையற்றிரங்கிய புலவர் பாடல்கள் தொகை நூல்களுட் பல கிடைக்கின்றன. பகுதி-7 நள்ளி இவன் கண்டீரக் கோப் பெருநள்ளி யெனவும் வழங்கப் பெறுவன், இவன், “கரவாது, நட்டோ ருவப்ப நடைப்பரி காரம்’ முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு, நளிமலை நாடன் நள்ளி” எனச் சிறுபாணாற்றிலும், “ஆர்வமுற்று, உள்ளி வருநர் உலைவு நனி தீரத், தள்ளா தீயும் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளி” எனப் புறத்திலும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக வைத்துப் போற்றப் படுகின்றான். “இரும்பு புனைந் தியற்றாப் பெரும்பெயர்த்தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றிற் பளிங்கு வகுத்தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி” (புறம். 150)எனவும், “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை யடுக்கத்துச் சுரும்புண விருந்த கடவுட் காந்தன்” (அகம்.152) எனவும், “இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிறொ டென்றும் மழைசுரந் தன்ன ஈகை வண்மகிழ்க் கழல்தொடித் தடக்கைக் கலிமாண் நள்ளி நளிமுகை யுடைந்த நறுங்கார் அடுக்கத்துப் போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்” (அகம்.238) எனவும் வரும் சான்றோர் பாடற் பகுதிகளால் இவன் தோட்டி என்னும் மலையும் அதனைச் சார்ந்த பிறமலைகளும் கொண்ட மலைநாட்டுத் தலைவன் என்பதும், அம்மலைகள் பளிங்கு போலுந்தெள்ளிய வெள்ளிய தூய நீர்நிறைந்த அருவிகளும் சாரல்களில் செறிந்த காந்தளும் உடையனவாம் என்பதும், இவன் வில்லேந்திய வீரர் பலர்க்குத் தலைவனென்பதும், ஆர்வ முற்றுத் தன்னை யடையும் பாணர் முதலிய இரவலர்க்கு யானை, தேர், பொன் முதலியவற்றை நிரம்ப வளிப்பவ னென்பதும் தோன்று கின்றன. இவனை அகத்திற் பாடியவர் பரணரும் கபிலருமாவார். புறத்தில் வன்பரணர் தாம் சிறக்கப் பாடியுள்ளார். மேலும், வன்பரணரும், பரணரும் வேறு வேறாவர் என்று அறிஞர் கூறுகின்றார்கள், நள்ளி வன்பரணரை வரவேற்றுக் கொடைக் கடன் இறுக்கும் திறம் படிப்போர்க்குப் பேரின்பம் பயக்கின்றது. ஒருகாலத்து வன்பரணர், வறுமை மிகுதியால், நள்ளியை யுள்ளித் தன் சுற்றம் சூழ்ந்துவர, கால்வருந்த நடந்து, அவனது கானத்தை யடைந்து, மேலும் நடக்கும் ஆற்றல் குன்றி ஓர் பலா மரத்தின் அடியிற் றங்கினர், இவர் உடுத்த உடையும் நல்ல தின்றிக் கிழிந்திருந்தது. அது கண்டார்க்குக் கழியவும் வெறுப்பே விளைத்தது. அக்காலை குருதி தோய்த்து சிவந்த வீரக்கழல் அணிந்த காலும் வெள்ளியஒளிவீசும் நீலமணி கிடந்து விளங்கும் உச்சியும் உடைய வல்வில் வீரனொருவன் அவரிடம் வந்தான். அவனுடைய நடையும் தோற்றமும் அவன் ஒரு சீரிய செல்வன் என்பதை நன்கு உணர்த்தின. உணர்ந்த புலவர் சட்டென்று அஞ்சலி பண்ணிக் கொண்டே எழுந்தனர். எழக்கண்ட அவன் அவரை எழாவண்ணம் கைகவித்து இருத்தி, தன்னோடு உடன் போந்த துணைவர் வருமுன்னரே, தன்கையிலிருந்த ஊன் தசையை யெடுத்து, ஒரு புறம் வைத்து, கடைகோலால் தீயுண்டாக்கி, அதன்கண் இத்தசையைச் சுட்டு அவர்க்கும் அவரது சுற்றத்திற்கும் வழங்கினன். ஆரப் பசித்தார்க்கு நீரும் பாலே யாம் என்றபடி அத் தசையை அமிழ்தென உண்டு. அருகோடும் அருவிநீர் பருகி, அடுபசி நீக்கியபின், அவனை நோக்கிப் புலவர் தம் சுற்றத்தோடு அவனிடம் விடை வேண்டினர். வேண்டவும், நள்ளி, “யான் காட்டுநாட்டில் வாழ்பவன். ஆதலால் பெருமையமைந்த நல்ல அணிகலன்கள் எம்மிடத்து இவை தவிர இல்லையென்று கூறித் தன்மார்பிற் கிடந்த முத்து வடம் பூண்ட ஆரத்தையும் முன்கைக் கணிந்த கடகத்தையும் தந்தனன். பின்னர்ப் புலவர், இங்ஙனம் ஆற்றா மக்கட்கு ஆற்றுந் துணையாகி விளங்கும் ஆண்டகை நள்ளியென் றறியாராய், அறிய வினாவிய பொழுது, அவன்நாடும் பேரும் கூறாது நீங்கினன். பின்னர், இவர் வழிவருவோரை வினவி உண்மை யறிந்து பெருமகிழ்ச்சி கொண்டு அவனைப் புகழுவாராயினர். இது அவராலேயே, புறநானூற்றில், “கூதிர்ப் பருந்தின் இருஞ்சிறகு அன்ன பாறிய சிதாரேன் பலவுமுதல் பொருந்தித் தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென் உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி மான்கணம் தொலைச்சிய குருதியம் கழற்கால் வால்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச் செல்வத் தோன்றல் ஓர் வல்வில் வேட்டுவன் தொழுதனன் எழுவேற் கைகவித்து இரீஇ இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை கானதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந் தெய்தா அளவை ஒய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின் இரும்பேர் ஒக்கலொடு தின்மெனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி நன்மரன் நளிய நறுந்தண் சாரல் கன்மிசை யருவி தண்ணெனப் பருகி விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே பெறுதற் கரிய வீறுசால் நன்கலம் பிறிதொன் றில்லை, காட்டுநாட்டேம்” என மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம் மடைசெறி முன்கைக் கடகமொடு ஈந்தனன் “எந்நா டோ?” என நாடும் சொல்லான் “யாரீ ரோ?” எனப் பேரும் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட்டிசினே இரும்புபுனைந்து இயற்றாப்பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றிற் பளிங்குவகுத் தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி எனவே,” என்று விரித்துக் கூறப்பெற்றுள்ளது. பகுதி - 8 வையாவிக் கோப் பெரும் பேகன். இவன், “பெருங்கல் நாடன் பேகன்” என்று சிறப்பிக்கப் படுதலால், மலைநாட்டிலிருந்த வள்ளல் என்பது பெறுதும். இவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் பாராட்டப் படுகின்றான். மேலும், “அது மன் எம்பரிசில் ஆவியர் கோவே” எனவும், “அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன். பெருங்கல் நாடன் பேகன்” எனவும் வழங்கப்படுதலால். ஆவியர் குடியிற் பிறந்தவன் என்பதும் பெறுதும். ஆவியர் என்பார் அதியர் போன்ற ஒரு குடியினராவர். அதியர் என்பார் அதிகை என்னும் ஊரிற் றோன்றினவர். அவர்கள் அதிகையர் என வழங்கப்பெற்றுப் பின்னர் அதியர் என மரூஉ மொழியால் வழங்கப் படலாயினர் என்பர் சில அறிஞர். அவர்களைப்போல, இவர்தம் தொடக்க வரலாறு அறியக் கூடவில்லை; சிலர், “முனா அது, முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” என்றும் “உருவக் குதிரை மழவ ரோட்டிய, முருகன் நற்போர் நெடுவேளாவி, அறுகோடியானைப் பொதினி” என்றும் வரும் வழக்காறு கொண்டு, இந்த ஆவியென்பான் குடியில் வந்தோர் ஆவியர் என வழங்கப்பட்டார் என்று கோடல் நேரிது என்பர். வேறுசிலர் நெடுவேளாவி என்ற சொற்றொடர்க்கு அக நானூற்று அரும்பத வுரைகாரர் “ஆவிநெடுவேள் குறு நில மன்னன்” என்று கூறுதலை ஆவியர் குலத்து நெடுவேள் எனக் கொண்டு அக்குலமுதல் விளங்கிற்றன்று என்றும் கூறுவர். வேளாவியே ஆவியர்குலத்து முதல்வனாவான் என்று கொண்டு, அவனது நகரமான பொதினி யென்பது இப்போ தைய பழனி என்றும், அதுவே பேகனுக்கு அந்நகர்க்குள்ள உரிமையை வற்புறுத்தும் என்றும் பலரும் கொள்ளுகின்றனர். இனி, இப் பேகனது மலைநாடு தீவிய நீரோடும் அருவிகளும் மலைவளம் சிறத்தலால் குறவர் குடிவாழும் மேன்மையும் உடையது. இம்மலை நலத்தை, ஆசிரியர் பரணர், “பூமலிந்து, அருவியார்க்கும் அயந்திகழ் சிலம்பின், நுண்பல் துவலை புதன் மிசை நனைக்கும், வண்டுபடு நறவின் வண் மகிழ்ப் பேகன் கொண்டகன் மாமலை” என்று கூறுகின்றார். அம் மலைவாழ் குறவர் மழைவேண்டுங் காலத்துப் பெய்வித் தற்கும், வேண்டாக் காலத்து ஒழித்ததற்கும் பலி தூவிக் குறவர் கடவுளைப் பரவுவர். இது இக்காலத்துப் பர்மியர்களால் கையாளப்பெற்று வருகின்றது1. இது ஆசிரியர் கபிலரால், “ மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரி ஆன்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள்” (புறம். 43) எனப் பாராட்டப் படுகின்றது. ஒருகால் இவன் உலாப்போந்தவன் குளிர்ந்த வாடை வீசவும், விசும்பின் முகிற்குலம் திரண்டு மூடிக்கொள்ளவும், அது கண்டு மயிலொன்று தன் தோகையை விரித்தாடுதலைக் கண்ணுற்று மகிழ்வுற்றான். பின்னர் அவன் அதன்மாட்டு இரக்கங்கொண்டு, அது குளிராற் பனிக்குமென்று எண்ணிப் போர்வை ஒன்றைத் தந்து போந்தான். இச்செய்கையறிந்த புலவர் பெருமக்கள் யாவரும், “ மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” எனவும், “ உடாஅ போரா ஆகுத லறிந்தும் படாஅ மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்” எனவும் கூறிப் புகழ்வாராயினர், இங்ஙனம், மயிலையும் தன்னை யொப்பக் கருதி அதற்குப் போர்வை தந்து பேரருள் செய்தவள்ளல் ஏனை இரவலர்க்கு வேண்டுவன ஈதல்ஓர் அரிய செயலாகுமோ? இது பற்றியே, ஆசிரியர், இவனை, “ அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும் உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரிபோலக் கடாஅயானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான் பிறர் படைமயக் குறினே” எனப் பழிப்பது போன்று புகழ்ந்து பாராட்டினர். இங்ஙனம் கொடை மடம் படுதலும் மறுமை குறித்தாதல், புகழ்குறித்தாதல் அன்று; ‘பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மை’ என்ப இவ்வண்ணம் கொடையினாலுயர்ந்த வள்ளலாகிய பேகன் ஒருகால், தன்மனைவி, கண்ணகி என்பாளை மறந்து வேறு ஒருத்தியின் நலன் நயந்து அவளுறையும் நல்லூருக்கு அடிக்கடி சென்று வரலாயினன், இதனையுணர்ந்த கண்ணகி, தன் கணவனது பிரிவாற்றாது மிகமிக வருந்துவாளானாள். இவன் செய்கை யுணர்ந்த புலவர் பெருமக்கள் இவ்விருவரையும் கூட்டிவைக்க முயன்று, தம் சதுரப்பாட்டினால், வென்று, இருவரும் நல்ல இன்பவாழ்வு பண்டேபோல் நடாத்தக்கண்டு களிப் பெய்தினர். இம்முயற்சியில் முயன்ற பெருமக்கள் கபிலர். பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் முதலியோராவர். இவருட்கபிலர், “பேக! என் ஒக்கல் பசியால் வருந்துவது கண்டு நின்னையுள்ளி வந்து நின்னையும் நின்மலையையும் யாம் பாடினோம். அதுகண்டு, ஒருத்தி கண்ணீர் முலையகம் நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் பெரிதும் அழுதனள். அவள் யார்கொல்! அவள்பால் நீ அருள் பண்ணத்தகும்” என்றும். நின் மலையிற் குறமக்கள் கடவுட்பேணி மழை வேண்டிய பொழுது பெற்றுத்தாம் வேண்டும் உணவும் நுகருமாறு போல இவளும் நின் அருள்பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டும் என்பதொரு நயமும் தோன்றப்பாடினர். அப்பாட்டுப் புறத்தில்“மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்” எனத் தொடங்குவது. பரணரது பாட்டுப் பின்னர் அவர் பாடல்களின் ஆராய்ச்சி யிற் கூறப்படும். அரிசில்கிழார்.“ஏ! அடுபோர்ப் பேக! நின் அருங்கல வெறுக்கைகளாகிய அவை பெறல் வேண்டேம்; மற்று, நின் வன்புல நன்னாடு பாடியதற்காக என்னை நீ நயந்து பரிசில் நல் குவையாயின், நீ நல்காமையினால் கண்டார் இரங்க மெலிந்து அருந்துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை தன் கூந்தற் கண் புகை கொளுவி நின் தண்கமழ் கோதை புனையும் வகை நெடுந்தேர் பூண்டு சென்று, அவளை அருள்வாயாக” என்று கூறினர். ஆசிரியர் பெருங்குன்றூர் கிழாரும் இவரைப் போலவே, பரிசில் வேண்டாது, கண்ணகிமாட்டு அவன் செய்யும் அருளே தனக்குப் பரிசிலாவது என்று கூறினார். இவ்விருவர் பாடல்களும் புறத்தில், முறையே, “அன்னவாக நின் அருங் கலவெறுக்கை” எனவும், “கன்முழை யருவிப் பன்மலை நீந்தி” எனவும் தொடங்குகின்றன. பகுதி - 9 தித்தன் இவன் உறையூரையாண்ட சிறந்த சோழவேந்தருள் ஒருவன்; தலைநகராகிய உறையூர் இவன் காலத்தே அரணும் கிடங்கும் திண்மையும் பிறநலமும் பெற்றுச் சிறந்தோங்கியது. இதன் உறுதியுடைமை நோக்கிப் புலவர் பெருமக்கள், “நொச்சி வேலித் தித்தன் உறந்தை”, எனவும், “மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை”, “தித்தன் வெளியன் உறந்தை” எனவும் பலபடப் புகழுவாராயினர். இவனுக்கு ஐயை என்னும் கற்பிற் சிறந்த மகளும் வீரங்குன்றாப் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் மகனும் இருந்தனர். “சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்” என்றும், “வீரை வெளியன் தித்தனார்” என்றும் வழங்கப்படுதலாலும், “பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ” என்று தொடங்கும் அகப் பாட்டொன்று இவன் பெயரால் காணப் படுவதாலும், இச்சோழ வேந்தன், தித்தன் வெளியன், வெளியன் தித்தன், வீரை வெளியன் தித்தன், வீரைவேண்மான் வெளியன் தித்தன் என்றெல்லாம் வழங்கப் பட்டனன் என்பது பெறுதும், “வீரை வெளியன் தித்தனார்” என்று அழைக்கப்பட்டதனாலும், இவனது செய்யுளும் சான்றோர் செய்யுளுள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டிருப்பதனாலும், இத்தித்தன் ஒரு சிறந்த நல்லிசைப் புலவன் என்பது விளங்குகின்றது. இனி, இச்சோழனது புலமை நலத்தை யாராய்வதன் முன் இவனது ஆட்சிநலன், மக்கள்நலன் ஆகிய நலன்களை ஒரு சிறிது நோக்குதல் நேரிது. இவன் ஆட்சியில், உறந்தை பகைவரால் எளிதிற் கைப்பற்ற இயலாத கல்முதிர்ந்த காட்டரண் கொண்டிருந்தது. இந்நகரருகே காவிரியாறு ஓடக்கோல் விடினும் நிலைத்த லாற்றாத பெரும் பெருக்கிட்டோடிற்று. இக் காவிரிபாயும் நீர் நாட்டிற் கானலம் பெருந்துறைக்கண் தனம் தரும் நன்கலம் பல காலினும் கோலினும் வந்தெய்தும், இந்நற்கலங்களின் இடையே கிடத்தப் பெறும் இறாக்களின் குப்பை செறிந்து விளங்கும். இவனது தலைநகரின்கண் காலை, மலையாகிய இரு போதும், அவற்றை யெதிர் கொள்ளுவது போல, முரசம் முதலிய வாச்சியங்கள் ஒலித்தன. இஃது எல்லா அரசர் தலை நகரங்களினும் நிகழ்வதாயினும், இவனது முரசவொலியும், ஏனைத் தெள்ளிய கிணை முதலியவற்றின் ஓசையும் பிறநகரங்களின் ஓசையினும் சிறந்தனவாதல் பற்றியே ஆசிரியர் முதுகூற்றனார், பரணர் முதலியோர் விதந்து கூறுவாராயினர். மேலும் இவனது கிணைப்பாடு அகட்டு அஞ்சிப் பொராது ஓடின வீரனொருவனும் உளன். அவன் பெயர் கட்டி என்பது. அவன் பாணன் என்பானொரு வனைத் துணைப்பெற்று, இத்தித்தன் உறந்தையைக் கைப்பற்ற எண்ணி, முற்றுகை யிட்டவன், இவனது நாளவைக் கண் எழுந்த, கிணையொலி கேட்டு அஞ்சிப் போர் செய்யாமல் ஓடிவிட்டான். இச் செய்தியும் பிறவும், “ வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதற் கொளீஇய மாலை,” (நற்.58) எனவும் “ வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தென்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராது ஓடிய ஆர்ப்பு (அகம்.226) எனவும் வருவனவற்றாற் பெறப்படும். இவனது மகள் ஐயை என்பாள் புலவர் பாடும்புகழ் பெற்றவள். அவள் அரிபெய்த சிலம்பும், ஆம்பல் மலரால் தொடுக்கப்பெற்ற மாலையும், அரத்தாற் போழப்பட்ட அழகிய வளையும் அணிந்தவள். இழைகள் பல அணிந்து மூங்கில் போல் சிறந்த தோளை உடையவள். இவள் பெய்யெனின் மழைபெய்யும்; அத்துணைச் சிறந்த கற்புமேம்பாடு உடையவள். இதனால், இவள் தந்தை “ஐயை தந்தை தித்தன்” என வரும் புகழ்க்குரியனானான். இவன் மகன் போர்வைக்கோப்பெரு நற்கிள்ளி யென்றோ மன்றோ. இவன், ஆசிரியர் தொல்காப்பினார்* “தந்தையார் ஒப்பர் மக்கள் என்பதனால்” என்று கூறுதலால் 1“சீர் சான்ற விழுச்சிறப்பின், சிறுகண் யானைப் பெறலரும் தித்தன்” என நக்கீரனார் பாராட்டும் தித்தனுடைய “அந்தமில் சிறப்பி” னையுடைய மகனாய், யானைபோலும் மெய்வலியும் ஈகைச் சிறப்பும் உடையனாவான் என்பது பெறப்படும்; படினும், யாது காரணத்தாலோ, இவன் தன் தந்தையுடன் வெறுத்து, வெளிப் போந்து, தன் நாட்டையும் இழந்து, வறுமையால் மிகவருந்திப் புல்லரிசிக் கூழுண்டிருந்தான். இருப்பினும், தன் கட்டழகிலும், போர் வன்மையிலும், சிறிதும், இவன் குன்றாமை கண்டு, ஆடு ஆடு என்ப ஒருசா ரோரே ஆடன் றென்ப ஒருசா ரோரே நல்ல பல்லோர் இருநன் மொழியே! அஞ்சிலம் பொலிப்ப ஓடி எம்மின் முழாவரைப் போந்தைப் பொருந்தி நின்று யான்கண் டனள் அவன் ஆடாகுதலே” என்று இயற்கை நலம் சிறக்கப் பாடியுள்ளார். இனி, இச்சோழன் தித்தனது நல்லிசைப் புலமையை விளக்குதற்கு, இவன் பாடிய அகநானூற்றுப் பாட்டு ஒன்றின் ஆராய்ச்சியே அமையுமாதலின், அதனை யீண்டுச் செய்வாம்; “ பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்து அறநெறி பிழையாத் திறனறி மன்னர் அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்சே யாடவர் கழித்தெறி வாளி னனிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை யாகி நாளும் கொன்னே செய்தியோ அரவம் பொன்னென மலர்ந்த வேங்கை மலிதொட ரடைச்சிப் பொலிந்த ஆயமொடு காண்டக இயலித் தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் அழலேர் செயலை அந்தழை அசை இயும் குறமகள் காக்கும் எனற் புறமுந் தருதியோ வாழிய மழையே.” என்பது அப்பாட்டு. இது இரவிற் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. என்றது, தலைவன் இரவிலும் பகலிலும் களவொழுக்கம் பூண்டு வருதலால் பலர் அறிந்து கொள்வர் என்றஞ்சியும், தலைமகளது பிரிவாற்றாமை கருதியும், தலைவனை வரைந்து கோடலைவேண்டிய தோழி மழைமேல் வைத்துக் கூறுதல். இதன்பொருள்- பெரிய கடல்நீரை முகந்த கரிய கிளை மேகங்களுடன் கூடிய மேகமே! கருத்து, உயர்ந்த வானத்தின் கண் வலமாக எழுந்து வளைத்து, நல்ல எருதினது தோலால் மூடப்பட்ட முரசத்தைப்போல் அதிர்ந்து, யாவர்க்கும் ஒப்ப நீதியைச் செய்தலால் வரும் அறப்பயனைப் பெறுதற் கண் தப்பாத கூறுபாட்டினை அறியும் மன்னரது கிட்டுதற்கரிய போரின்கண் எதிர்ந்த, மிக்க பெரிய செயலையுடைய வீரர்களின் உறைகழித்து வீசப்படும் வாளைப்போலப் பெயலாகிய பயனைத் தருவனவாய் விளங்கும் மின்னுக் கொண்ட தொகுதியுடையை யாய், மழையே! நீ நாளும் பெருமுழக்கத்தினை ஒருவகைப் பயனுமின்றிச் செய்கின்றனையோ? அன்றி, பொன்போல் மலர்ந்த வேங்கையினது, மிக்க பூக்களால் தொடர்ப் படத் தொடுத்த மாலையினைச் சேர்த்திப், பொலிவுற்ற ஆயத்தாரோடு அழகு தக்கிருக்கும்படி நடந்து சென்று, தழலை, தட்டை முதலிய கருவிகளை வாங்கிக், கிளி முதலிய பறவை ஓட்டியும், நெருப்பொக்கும் அசோகினது அழகிய தழையினை இடையிற் கட்டியும், குறவர் மகளிர் காவல் செய்யும் தினைப் புனத்தைப் பாதுகாக்கின்றனையோ? யாது செய்கின்றனை? கூறுவாயாக என்பது. “போர்ப்புறு முரசம்” எனக் கூறினமையால். சிறப்புடைய எருதினது தோல் கொள்ளப்பட்டது; “ஓடா நல்லேற் றுரிவை தைஇய, பாடுகொள் முரசம்” (1)எனவும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம்” (2) எனவும் கூறப்படுதல் காண்க. “முறைபுரிந்து மன்னர்” என்பதற்கு, ஒறுங்குங்கால் கண்ணோடாது செய்தலே முறையாவது என்னும் நெய்தற் கலியால், கண்ணோடாது முறைசெய்து, அற வழியினின்றும் பிறழாத நெறிமையினையறிந்த மன்னர் எனினுமாம். பெருஞ் செய்யாடவர், ஒளிறுவாள்” (3) எனவும், “புரவெதிர் கொள்ளும் பெருஞ் செய்யாடவர்” (4) எனவும் வருவனவற்றால் உணர்க. “வாளின் நளிப்பன” எனக்கொண்டு செறிந்தனவாய் என்று கொள்ளினுமாம், நளியென்னும் சொல் வினைச்சொற்கு அங்கமாகி வருமாதலாலும், (5) நளிந்து பலர் வழங்காச் செப்பம்” (6) என்றவிடத்து நளியென்னும் சொல் வினையாகி வந்தமையாலும். “தழலாவது கையாற் சுற்றின காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி; கவணென் பாருமுளர். தட்டையாவது மூங்கிலைக் கண்ணுக்கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி” என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். (குறிஞ்சிப்பாட்டு. 43-4 உரை.) “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்பவாகலின், “அற நெறி பிழையா மன்னர்” என்றார். தலைமகன் குறிப்புணர்ந்து செயற்கரிய செய்து வெற்றியே பெறுதன் மாலையராகலின் அவரைப் பெருஞ் செய்யாடவர் என்றார். செய் செய் என்பது முதனிலைத் தொழிற்பெயர். மிக்க செயலைச் செய்யுங் காலத்து அவர் விரைந்து செய்வாரா தலினாலும், அச்செயற்கு அவரது வாள் பலமுறையும் தீட்டுதல் பெறுதலினாலும் மின்னுக்கு உவமை கூறினார் இருங்கிளைக் கொண்மூ என்றது விளி. இப்பாட்டின் பொருள் இரண்டு வினாக்களுள் அடங்கு கின்றது. ஒன்று முகிலே, நீ, கிளை முகிலோடு சூழ்ந்து கருத்து யர்ந்து வானத்தை வளைத்து, முரசின் அதிர்ந்து, வாளின் மின்னுடைக் கருவியுடையையாய்வறிதே அரவம் செய்கின்றனையோ? என்பது, மற்றொன்று, குறமகள் வேங்கை மலிதொடர் அடைச்சி, ஆயமொடு இயலிச்சென்று தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் செயலையந் தழையினை இடையிற் கட்டியும் காவல் செய்யும் ஏனற் புனத்தைப் புறந்தருதியோ? என்பது. இவற்றுள், மழை மின்னல் இடி முதலியவற்றுடன் விசும் பெங்கும் இருண்டு பரவுதலால், பேரிருள் எங்கும் சூழ்ந்து கொள்ள, அக்காலை தலைமகன் வருதல் கூடாது ஆதலின், அவன் பிரிவாற்றாத தலைமகள் வருந்துவாளென்பதையுட் கொண்டு அஞ்சி வருந்துகின்ற தலைமகட்கு, ஆற்றுதல் கூறு வாள், தோழி,” “கொன்னே அரவம் செய்தியோ” எனவும் “ஏனற் புறமுந் தருதியோ” எனவும் கூறினாள். எங்ஙனம் ஆற்றாமை தீர்ப்பதாயிற்று எனின், மின்னுடைக் கருவியதாகி, மழைபெய்தலின்றி, அரவம் மட்டில் செய்தலால், தலைமகன் ஆற்றின்கண் ஏதமின்றி, இடையறாது மின்னும் மின்னுத் தொகுதி தன்கை வேல் ஆகிய இவற்றின் ஒளியால் நெறி, பற்றி, மழையின் மையால், விரைந்து வருவன் எனத் தலைமகள் உணர்ந்து ஆற்றி யிருப்பள். ஏனற் புறந்தருதலால், தினைமுற்றி விளைவு கொண்ட காலம் வரைதற் கேற்ற கால மாதலறிந்தமைவள் என்பதாம். இது பற்றியே, வேங்கை மலர்ந்தமையும், கிளி முதலாய பறவைகள் படிதலையும் உடன் கூறினாள், உடனுறை யுவமம் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே” என்ற ஐந்தனுள் “சுட்டு” என்பதன்பாற் படுவதனால் இப்பாட்டுத் தலைவனுக்கும் கூறியதாயிற்று. சுட்டு என்பது, “உடனுலை உவமம் இன்றி, நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று சொல்லுவது.” அங்ஙனமாகுங்கால், தலைவனைநோக்கி, “கொன்னே அரவம் செய்தியோ” என்றதனால் “நீ இன்னமும் பயனின்றி அலர் விளைத்தியோ” எனவும், புறமும் தருதியோ” என்றதனால், “காலம் நோக்கித் தாழ்க்காது வரைந்து கொள்வையோ” எனவும் கூறினாளாம். முதலாவது கடல்போலும் கல்வியும் ஆண்மையும் பெருமையும் பெற்று வில்லேந்திய இளையர் பலர் சூழ வளர்ந்து உலகுபுகழ்ச் சீலத்தால் உயர்ந்து, இவ்விரவின்கண் களவொழுக்கம் பூண்டு வேலும் வாளும் துணையாக இவளை யருள்பவர்போல் வருகின்றீர் பெரும! நும் வரவு இவளை யருளுவதுபோலத் தோன்றினும், வரைதலாகிய பயனின்றிக் கொன்னே பலரறி சொல்லான் அலராகி விளைகின்றது இது செய்வது நின்கருத்தோ? என்பது. இரண்டாவது வேங்கை மலருங்காலம் வரைதற்கேற்ற காலம் என்று எண்ணி, பொன்னோடு சான்றோர் பலரை விடுத்து வரைந்து கொள்ளுவையோ?” என்பது. இங்ஙனம் வினாவுகின்றவிடத்து “பயனின்றி அலர் விளைத்தியோ” என்பது போல வினாதல் தோழிக்கு இலக்கண மன்று; ஆயினும், வரைதல் வேட்கை மிகுதியால் அவன் வினவு கின்றமையின், அமைந்தது. இக்கருத்துக்களனைத்தும் அகத்தேகொண்டு மழை மேல் வைத்து உலகியல் கூறுவார் போன்று புலமைத்திறம் நன்கு அமையப்பாடிய இவரது செய்யுள் ஆயுந்தோறும் மிக்க சுவை தருகின்றது. அதனால், அதனை அன்பர்கள் பெறவிடுத்து மேற்செல்லுகின்றேன். பகுதி - 10 தழும்பன் இவன் கடல்சார்ந்த நிலப்பகுதியொன்றில் விளங்கிய தலைவன். இவனது ஊர் ஊணூா ர் என்பது. அது கடல்சார்ந்த தெனினும் நீர்வளம் சிறந்து நெல் விளையும் நல்வளம் பொருந்தியது. இது “முழங்குகடலோதம் காலைக்கொட்கும், பழம்பன் நெல்லின் ஊணூா ர் ” என்று ஆசிரியர் மருதனிள நாகனார் பாட்டினாற் தெரிகின்றது. இந்நெல் வயற்கண் வந்து படியும் பறவைகள், உழவர் எழுப்பும் தண்ணுமை ஓசைகேட்டு அஞ்சி அருகிருக்கும் பெண்ணை முதலிய மரங்களின் மடற்கட் சென்று அமரும். அங்குத் தேனீக்கள் ஈட்டிய தேன்கூடு அழிவுற்றுத் தேனைச்சொரியும், அதனைக் கொண்டும் அருகு ஓலமிடும் கடற் கண்வாழும் சிறுமீன்களைக் கொண்டும் வாழும் பாணரது சேரி, இவ்வூணூாரின் கட்கிறந்து நிற்கின்றது. இந்நகரைச் சுற்றிச் சிறந்து காவலமைந்த அரண் விளங்கிற்று. இதன் மேற்பால் மிக்கு விளங்கும் சீரிய செல்வத்தால் பெருமை யுற்ற மருங்கூர்ப் பட்டினம் என்னும் பெரிய நகரமொன்றுளது என மருதனிள நாகனார், “கடிமதில் வரைப்பின் ஊணூா ர் உம்பர், விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் மருங்கூர்ப் பட்டினம்” என்பதனால் அறியப்படுகின்றது. இத்தழும்பன் “பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்” என்றும், இவனைத் தூங்கல் என்னும் புலவர் ஒருவர் பாடியுள்ளா ரென்றும், அந்நாகனார் பாட்டே கூறுகின்றது. ஆசிரியர் பரணர், பெரும்புண் ஏஎர் தழும்பன்” என்று கூறுதலால் இவன் போரிற் “பெரும்புண் பட்டதனால் வந்த தழும்பு செய்த அழகுடையவன் என்று தோன்றுகின்றது. தோன்றவே, இவன் இயற்பெயர் இன்னதெனத் தெரிதற்கியலாது ஒழிகின்றது. “பெரும்புண் ஏஎர் தழும்பன்” என்றும், “வாய்வாள் தமிழகப்படுத்த தழும்பன்” என்றும் வழங்கப்படுதலை நோக்கின் இவன் சிறந்த போர்வீரன் என்பதும், ஒரு காலத்து, இவன் தமிழரையோ, தமிழ் நாட்டின் ஒரு பகுதியையோ தன்னாட்டின் அகப்படுத்தினன் என்பதும் அறியப்படுகின்றன. மேலும், இவன் சிறந்த கொடையாளி என்பதும், வாய்மை குன்றாதவன் என்பதும், “வாய்வான் தமிழகப் படுத்த இமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளி ருக்கைத் தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்” என்றும், (அகம்.227) “பெரும்புண், ஏஎர் தழும்பன் ஊணூ ராங்கண் பிச்சை சூழ்பெருங் களிறு போல” (நற்.300) என்றும், “வெண்ணெல் அறிஞர் தண்ணுமை வெரீஇக் கண்மடற் கொண்ட தீந்தே னிரியக் கள்ளரிக்கும் குயம்சிறுசின் மீன்சீவும் பாண்சேரி வாய்மொழித் தழும்பன்.” (புறம். 348) என்றும், வருவனவற்றாற் பெறப்படுகின்றன. பகுதி - 11 கழுவுள்: இவன் காமூர் என்னும் ஊரின்கண் இருந்த மிக்க வள்ளன்மை பொருந்திய தலைவனாவான் . இவனது காமூரின் கண் பூதத்தால் தரப்பட்டதோர் வேங்கைமரம் இருந்தது. அது மிக்க மணங் கமழுவதாகும். இக்கழுவுள் என்பான் வேலேந்திய வீரர் தலைவன். இது பற்றியே இவனைப் பரணர் “வென்வேல், மாவண் கழுவுள்” என்றார். இவன் தன் வள்ளன்மையாலும் வேல் வெற்றியாலும் மிக்க சிறப்புடையனாதல் கண்டோ, வேறு எக்காரணத் தாலோ போர்த் தொழிலால் அழியாப் புகழ் படைத்து வானளாவும் பெரிய கொற்றக் குடையுடையராய பதினான்கு வேளிர் ஒருங்குகூடி இவனை எதிர்த்துப் பொருதனர். அப்போரின் கண் கழுவுள் இறந்தொழிந்தான். அவன் நகரும் பாழ்பட்டது. இதனைக் கண்டு இரங்கிய ஆசிரியர் பரணர், “அடுபோர், வீயா விழுப்புகழ் விண்டோய் வியன்குடை ஈரெழு வேளிர் இயைந்து ஒருங் கெறிந்த கழுவுள் காமூர் போல, விளிந்தன்று மாதவர்த் தெளிந்தஎன் நெஞ்சே” (அகம். 135) என்று பாடுவராயினர். இனி, இப்பெயருடைய இடையர் தலைவன் ஒருவன் சேரமான் பெருஞ் சேரலிரும் பொறையின் காலத்துக் குறும்பு செய்திருந்தான். அவன் தனக்கென அரண்செய்துகொண்டு வாழ்ந்து வருநாள், அவ்விரும் பொறையுடன் பகைத்துக் கொள்ளலும், அவன் சினங்கொண்டு, “ஏனொடு கன்றுடை யாயம் தரீஇப் புகல்சினந்து புலவுவில் இளையர் அங்கை விடுப்ப மத்துக்கயிறு ஆடாவைகற் பொழுது நினையூஉ வான்சயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பழிபாழாக வேறுபுலம்படர்ந்து” வெற்றியால் பகைத்தவரிடத்துத் திறைகொண்டு பெயர்ந்தனன் என்று பதிற்றுப்பத்தில் அரிசில் கிழார் கூறுகின்றார். இச்செய்தியே மீட்டும் பெருங்குன்றூர் கிழாராலும் “பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று, நாம மன்னர் துணிய நூறிக் கால்வல்புரவி அண்டரோட்டி” என்று ஒன்பதாம் பத்தினும் கூறப்பட்டது. இவ்விடையர் தலைவனும் காமூர்த் தலைவனும் ஒருவனே யாயின் இவன் சேரமானிடம் பொருது தலைவணங்கி திறை செலுத்தியுய்ந்து, பின்னர் வேளிர் பதினால்வராலும் எறியப் பெற்றானென்று கொள்ளுதல் வேண்டும் பகுதி - 12 மத்தி இவன் காவிரிக்கரையிலுள்ள கழார் என்னும் ஊருக்குத் தலைவன். அவ்வூர் கீரனெயிற்றியார் முதலாய புலவர் பெருமாட்டிகள் பிறந்தவூராகும். இவ்வூர்க்கண் குறிய வளையலை யுடைய மகளிர் நிறம்பொருந்திய நீராடுதலை வெறுப்பாராயின் பஞ்சாய்க் கோரையைக் கோதி வயற்கண் வந்து படியும் வெண் குருகுகளை ஓப்புவர். சுடர்போலும் அழகிய பூக்களையுடைய நிறைந்த நீர்மிக்க வயல்களில் தங்கும் நீர் நாய்கள். அழகிய தூம்பினையுடைய வள்ளைக் கொடியின் நிலையை நெகிழ்த்து, அங்குவந்து தங்கும் வாளைமீனை யுண்டு முள் பொருந்திய தண்டினைக் கொண்ட பிரம்பினது பழமையான தூறுகளிலே தங்கி வாழும். இது, “ குறுந் தொடிமகளிர் குரூஉப்புனல் முனையின் பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் கரந்தையம் செறுவின் வெண்குரு கோப்பும்” (அகம். 126) எனவும், “ சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து அந்தூம்பு வள்ளை ஆய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியுந் பல்வேன்மத்தி கழா அர்” (அகம்.6) எனவும் வருதலால் உணரப்படுகின்றது. இம்மத்தியென்பான் பரதவர் என்னும் ஒருவகை குறுநில மன்னர்க்குத் தலைவன். “தென்பரதவர் மிடல்சாய” எனவும் “தென் பரதவர் போரேறே” எனவும் வருவனவற்றால் இவர்கள் தென்திசைக் கண்ணே வாழ்ந்தவர் என்று தெரிகின்றது. மேலும், இவன் பலவேற் படையுடன் வலிமையான தோள்களையுடையவன். இதனாற்றான், இவனை யாவரும் “பல்வேன்மத்தி” என்று அழைப்பாராயினர் ஒருகாலத்து இவன் வெண்மணி யென்னு மிடத்துப் பனித்துறை ஒன்று கட்டி ஆசிரியர் மாமூலனாரால் புகழப் பெற்றான். இவ்வெண்மணி வாயிலின் கண் “குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை பிடிபடு பூசலின் எய்தா தொழியக் கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ்சே ணாட்டிற் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில் மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை” (அகம் 211) என வருதல் கொண்டு எழினி என்பானது பல்லைப் பிடுங்கிக் கதவில் வைத்து அழுத்தினான் என்று சிலர் கூறுவர். அச்செய்தி நன்கு விளங்கவில்லை. பகுதி - 13 1. ஆதிமந்தி இவர் ஒரு நல்லிசைப்புலவர் பெருமாட்டியார்; சோழன் கரிகாற் பெருவளத்தானது மகள்; புகார் நகரத்துக் கற்புடை மகளிர் எழுவருள் ஒருவர். இவரது கணவன் வஞ்சிவேந்தனான ஆட்டனத்தி என்பானாவன். அவன் அழகிலும் நீரிலாடும் கூத்து வகைகளிலும் மிகச் சிறந்தவன், ஒரு காலத்து, ஆதிமந்தியார் தம் கணவனோடு கழார் நகரத்துக் காவிரியின் முன்றுறைக்கண் நிகழ்ந்த புதுநீர் விழாவின் கண், நீராடுவராயினர். அக்காலை அவள் தந்தை கரிகாலன் தன் சுற்றம் சூழ எழுந்தருளியிருந்தனன். ஆட்டனத்தி, தன் காலிற் சிலம்பு கிடந்து ஒலிப்ப, இன்னிசை வல்லார் யாழ் கொண்டிசைக்க, கஞ்சதாளம் ஒருபுடை மணியொடு கறங்க, கச்சணிந்து, கழல்யாத்து, மணமிக்க மாலையணிந்து ஆடத் தொடங்கினன். அங்ஙனம் ஆடினவனைக் கண்ட காவிரி அவனது அழகை விரும்பிக் கொண்டுபோய் ஒளித்துவிட்டது; என்றது நீரில் மறைந்து விட்டான். ஆதிமந்தி அலமரலானாள். இது, “ ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக் கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனல்நயந் தாடும் அத்திஅணி நயந்து காவிரி கொண்டொளித் தாங்கு”. (அகம். 376) எனவும், “மந்தி பனிவார் கண்ணள் பலபுரந் துறையக் கடுந்திற லத்தி ஆடணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்கு” (அகம் 396) எனவும், சான்றோர் இரங்கிக் கூறியவற்றாற் றெளியப்படும். இங்ஙனம் கணவனை உயிரோடே யிழந்த ஆதிமந்தியார் ஆறாக இருதடங்கண் அஞ்சன வெம்புனல் சோர, அளகம் சோரத் தன்னைவிட்டு வேறான தன் கணவனைத் தேடி எதிர் வருவாரை யெல்லாம் தன் நாயகனது உருவம், உடை முதலிய சிறப்பெல்லாம் பலபட எடுத்துக் கூறியும் “கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன், வகையமைப்பொலிந்த வனப்பமை தெரியல், சுரியலம் பொருநனை காண்டிரோ? எனவும், “அணிகிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பக் கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை, அறியாமையின் அழிந்த நெஞ்சின். ஏற்றியல் எழில்நடைப் பொலிந்த முன்பின், தோட்டிரும் சுரியல் மணந்த பித்தை, ஆட்டனத்தியைக் காணீரோ?” எனவும் கேட்டும், நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் சென்று, “என் நாயகனைக் கடல்கொண்டது என் கொழுநனைப் புனல் கொண்டது” என்ற வாய்வெருவிப் புலம்பி வரலாயினள். இவ்வாறு காதலனையிழந்து வரும் மந்தியார் “யானும் அவைக்களத்து ஆடும் மகள் போன்றேன். அவனும் ஒரு களத்தில் ஆடும் மகன் போன்றான். ஆதலால், பலருங் கூடும் இடங்களாகிய மள்ளர்களம், மகளிர் துணங்கையாடும் களம் முதலிய இடங்களிலும் தேடினேன்” என்று சொல்லுவாள். “ மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை? யானும் ஓர் ஆடுகள மகளே என்கைக் கோடீர் இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகளமகனே” என்று பாடிப் புலம்பி “யான் இனி என் செயப் போகின்றேன்” என்று வருந்தி தன் கொழுநனைக் கவர்ந்த கடற்கரையை அணுகினள். கடற்கரையைக் கண்ணுற்றுக் காதலனை நினைந்து கதறிப் புலம்பிய ஆதிமந்தியின் நிலையைக் கண்ட கல்லும் புல்லும் உருகின; வெள்ளி வீதியார் என்னும் புலவர் பெரு மாட்டியார் “யானே, காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து, ஆதி மந்தி போலப் பேதுற்று, அலந்தனென் உழல்வேன் கொல்லோ” எனத் தம் துயருக்கு உவமை கூறி வருந்தினர்; இக்காட்சியையும் ஆதிமந்தியின் அறக் கற்பினையும் கண்ட கடல் அவ்வாட்டனத் தியை ஒரு புறத்திற் கொணர்ந்து காட்டிற்று. கண்டதும், ஆதிமந்தி யார் துயரத்தின் கரைகாணாளாய்க் கதறிப் புலம்பலும், அயல் புறத்தே கடலாடிப் போந்த மருதி என்னும் கற்புடைய மகளொருத்தி அவனைக் கொண்டுவந்து, ஆதிமந்தியாரிடம் விடுத்துச் சென்றனள். காதலனைப் பெற்ற மந்தியார், மருதிக்கு ஆற்றுவதோர் கைம்மாறு காணாராய்த் தம்மனத்தெழுந்த நன்றியறிவினால், அம்மருதிக்கு வாழ்த்துக்கூறி வரம்பல தந்தனர். இங்ஙனம், கற்புடைய மகளொருத்திக்கு உதவி புரிந்த மருதியின் செயல் சிறிதெனினும் பெரிதெனக்கொள்வார் பயன் தெரிவார். ஆதலால் புலவர் பெருமகனாரான பரணர் “ முழவு முகம் புலராக் கலிகொ ளாங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டெழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த ஆதி மந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதியன்ன மாண்புகழ் பெறீஇயர்” (அகம்.222) என விளங்கப் பாடியருளினார். இச்செய்தி பின்னர்க் கண்ணகியார் தன்கணவன் கோவலன் கள்வனல்ல னென வழக்குரைத்து மீள்வார் அங்குக் கோல் கோடி வீழ்ந்த பாண்டியமன்னன் தேவியிடம் வஞ்சினங் கூறுங்கால், “பத்தினிமார் எழுவரான” மட்டார் குழலால் பிறந்த பதி (புகார்)ப் பிறந்தேன் “என்று சொல்லுமுகத்தான், இந்த ஆதி மந்தியாரை முதற்கண் நிறுத்தி, “உரைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ளத் தான்புனலின் பின்சென்று “கன்னவில் தோளாயோ” என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” (சிலம். 21-11- 5) என்று கூறுவதாக ஆசிரியர் இளங்கோவடிகள் பாராட்டுகின்றார். அன்றியும், பட்டினத்துப் பிள்ளையார் புராணத்துப் பூம்புகார்ச் சருக்கத்தும், இந்நிகழ்ச்சி, “கரிகாலன் பெருவளவன் மகள் கேள்வன் கடல்புக்கான் “திருவேயோ” எனவழைத்துத் திரைக்கையாற் றரக் கொண்டான் வரைகேள்வன் கலம் நோக்கி வருமளவும் கல்லானாள் புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே” என்று பாராட்டப் பெறுகின்றது. மற்று, ஆராய்ச்சியாளர்களால் இந்நிகழ்ச்சியிற் கூறப் பட்ட காவிரி வவ்வுதலும், மீட்டும் தருதலும் ஆகிய செயல்கள், “கூத்தயர்ந்த ஆட்டனத்தி அயர்ந்து வெள்ளத்திலே வீழ்ந்து விட அவனை அவ்வெள்ளம் கடலிடம் சேர்க்க, அங்கு மீன் பிடிப்போரால் கரைசேர்க்கப்பட்டு மூர்ச்சை தெளிந்து கடற் கரையே ஆட்டனத்தி நடந்து வந்தானை” மருதிகாண்டலும், கொணர்தலும், அவன் மனைவியிடம் சேர்ப்பதுமாய் நிகழ்ந் திருத்தல் வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனினும், வெள்ளத்தில் வீழ்ந்தான், உயிர்துறவாது கடலடைந்து கரை வருதல் அருமையாகலின் அது ஆதிமந்தியின் கற்பின் உறுதியுடைமைப் பயனே என்று யாவரும் உணர்ந்து கொள்வர். ஆசிரியர் பரணர் பாடிய பாட்டுக்களின் ஆராய்ச்சியைக் கூறுதற்கு எடுத்துக்கொண்ட யான், இதுகாறும், பண்டை நிகழ்ச்சி கூறல் என்ற பகுதியின்கீழ் சேரன் செங்குட்டுவன் முதல் ஆதிமந்தி கணவன் ஆட்டனத்தி யீறாக வமைந்த அரசர், குறுநில மன்னர், வள்ளல்கள் முதலிய பலரது வரலாற்றினைப் பொதுப்படக் கூறி வந்தேன். இனி, அவர்களைத் தனித்தனியே இவர் சிறப்பித் திருக்கும் இயல்பினையும் அதனாற் பெறப்படும் இவரது புலமைத் திறனும் ஆராயப் புகுகின்றேன். பகுதி - 13 2. சேரன் செங்குட்டுவன் இவன் சேரநாட்டிற் சிறந்து விளங்கிய மன்னர்களுள் ஒருவன் என்பதும், இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் என்பதும் கடவுட் பத்தினியாகிய கண்ணகிக்குக் கல்நட வேண்டிக் கங்கைப் பேரியாறு கடந்து இமயமலையிலிருந்து கற்கொண்டு வந்தா னென்பதும், அதுபோது ஆரியவரசர் பலரை வென்றா னென்பதும், பழையன் என்பானொருவனை வென்று அவன் உரிமைமகளிர் கூந்தல் களைந்து கயிறு திரித்து, அவனது காவல் மரமாகிய வேம்பினைத் தடிந்து, யானை பூட்டிய ஒழுகையி (வண்டி) லேற்றிக் கட்டிக் கொணர்ந்தா னென்பதும், ஒரு காலத்தில் கடலும் பிறக் கிடுமாறு தன் வேலெறிந்து வெற்றி பெற்றானென்பதும், பிறவும் மேலே கூறப்பட்டன வாகலின் அவற்றை யினியும் விரித்துக்கூறாது மேற்செல்லுகின்றேன். இவனை, ஆசிரியர் பரணர், புறத்தில், “மீன்கொடுத்து நெற்குவைஇ, என்றும், “இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பின்,” என்றும் தொடங்கும் இரண்டு பாட்டுக்களிலும், அகத்தில், “தாவில் நன்பொன் தைஇய பாவை” யென்று தொடங்கும் பாட்டிலும், பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்திலும் சிறப்பித்திருக் கின்றார். இவற்றுள், “மீன்கொடுத்து நெற்குவைஇ” என்று தொடங்கும் பாட்டு, இவனது வள்ளன்மை, முசுறி யென்னும் நகர்வளம் ஆகிய இரண்டும் முன்னர் உணர்த்திப் பின்னர் மகட்பாற்காஞ்சி யென்னும் புறத்திணைப் பொருளை யுணர்த்து கின்றது. இவன் தன்னை நாடிவரும் இரவலர்க்கும் பாவலர்க்கும் மலைபடு பொருள், கடல்படு பொருள் என்ற இருவகைப் பொருளும் கலந்து வழங்குவன் என்றும், அதுபோது அவர்கட்கு இனிமை மிக்க கள்ளினை நீர்போன் முகந்துண்ணத் தருவன் என்றும் கூறுவார். “மலைத்தாரமும் கடற்றாரமும் தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்” என்று கூறுகின்றார். பின்னர், அவனது முசுறி நகரத்தைச் சிறப்பிப்பார். “மீன்நொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையால் கலிச்சு ம்மைய கரைகலக்குறுந்து கலம்தந்த பொற்பரிசும் கழித்தோணியால் கரைசேர்க்குந்து ........... ......... ....... முழங்குகடல் முழவின் முசுறி” என்றார். எனவே, இந்நகர்வாழும் பரதவர் மனைதோறும் மீன் விற்றலால் மாறப்பட்டுக் கொணர்ந்த நெல் குவிக்கப்பெற்றிருத்தலும், அவ்வீடுகளினருகே குவிக்கப்பெற்ற மிளகுப் பொதிகள் மிகுந்து கடற்கரைவரையிற் கலந்திருத்தலும், பிற நாடுகளிலிருந்து கலங்களாற் கொணரப்பட்ட பொன்னும் பொருளும் சிறு தோணிகளில், கழிகளின் வழியே கரை சேர்க்கப்படுதலும் எப்பொழுதும் மங்கல முழவு கடல்போன் றொலித்துக் கொண்டிருத்தலும் அம் முசுறிக்குச் சிறப்பென்றாராம். இதன் கண் மறுக்குந்து, கலக்குறுந்து, சேர்க்குந்து என்பவை மறுக்கும், கலக்குறும், சேர்க்கும் என்ற சொற்களே யாம். இவை “உம்உந் தாகும் இடனூமா ருண்டே” (தொல். சொல்.) என்றதனால் இவ்வாறு நின்றன. மீன் விற்று அவற்றிற்கு மாறாகக் கொண்டு நெல்லை மூட்டைகளாகக் கட்டி வீட்டின் முன்றிலில் அடுக்கிய தோற்றம் தோணியின் மேற்புறத்தை யொத்துக் காண்பாரைத் தோணியின் மேற்பக்க மென்றும், மனையக மென்றும் அறியக்கூடாவகை மயக்குதலால் “மனைமறுக்குந்து” என்றும்; பிறநாடுகட்குக் கலத்திற் கொண்டுபோதற் பொருட்டுக் குவிக்கப்பட்டுக் கடற் கரைவரைச் சாரையாய் அடுக்கப் பெற்றிருத்தலின், “கரைகலக் குறுந்து” என்றும், கடற்கரைக்கண் அலை மிக்குக் கரையொடு பொருதலால் தோணியைச் செலுத்துதல் கூடாமையால், கடலிலிருந்து கரைப்பகுதிக்குள் கழிவெட்டி அவற்றின் வழியே தோணி செலுத்தின் தோணி இனிது கரை சேர்தலால், “கழித் தோணியால் கரைசேர்க்குந்து” என்றும் கூறினார். இப் பாட்டின் பிற்பகுதி, “முழங்குகடல் முழவின் முசுறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரையர் அல்லோர் வரையல்ள் வளெனத் தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே பருந்துயிர்த்(து) இடைமதிற் சேக்கும் புரிசைப் படைமயங்(கு) ஆரிடை நெடுநல் ஊரே” என்பது. இதன் பொருள், கடல்போன் றொலிக்கும் முழா வினையுடைய முசுறி நகர் போலும் நன்மை யமைந்த சீரிய பொருளைக் கொணர்ந்து பணிவோடு விரும்பிக் கொடுப்பினும், இவள் தந்தை வந்தோர்க்கு “இவள் ஒத்த வரல்லாத பிறரால் வரையப் படாள்” என்று கூறி மகட் கொடை மறுப்பானாயின், வந்தோர் சினந்து வென்றி தப்பாதபடி படையொடு தங்கிய எல்லைக்கிடையே பருந்துகள் இடைமதிலிற்றங்கி யிளைப்பாறும் பெருமதிலும் பலவகைப் படைகள் விரவியிருத்தலால் கடத்தற்கரிய வழியு முடைய நெடிய நல்ல ஊர் வருந்துவதாகுங் கொல்லோ என்பதாம். எனவே வருந்துவது புறத்துத் தங்கும் வந்தோர் படையே யென்பதாம். இக் கருத்தே. * “அந்தழை யல்குலும் ஆடமை மென்றோளும். பைந்தளிர் மேனியும் பாராட்டி - தந்தை; புறமதில் வைகும் புலம்பே தருமே. மறமதில் மன்னன் மகள்” என்ற செய்யுளினும் அமைந்திருத்தல் காண்க. பலவகைப் படைகளாவன, 1“வளைவிற் பொறியு மயிர்செறி நிலையும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்ப்பொன்னுலையும், கல்விடு கூடையும், தூண்டிலுந் துடக்கு மாண்டலை படுப்புங் கவையும் கழுவும் புதையும் புழையு, மையவித் துலாமும் கைபெய ரூசியும், சென்றெறி சிரலும் பன்றியும் பணையு, மெழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமும், கோலும் குந்தமும் வேலும் சூலமும்” என்றிவை முதலிய பொறிகளும் படைகளுமாம். இது மகட்பாற் காஞ்சியென்னும் புறத்திணைப் பொருளை யுணர்த்துவதென முன்னர்க் கூறினோமன்றோ. அஃதாவது, “நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி, மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்” எனத் தொல்காப்பித்துட் கூறப்படு வது. இதன் பொருள், “பெண்கோள் ஒழுக்கத்தின் ஒத்து” மறுத்தல்பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு, எடுத்துவந்த அரசனோடு, முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளரும் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்” என்பது. (தொல். பொ. சூ.79. உரை) மேலும், இவ்வுரையால் முதுகுடிமக்கள் தத்தம் மகளிரைப் படுத்தற்கு மறுப்பதன் காரணம் அரசரியல்பு தம் முயிரைப் பொருளெனப் போற்றாது வாழ்தலா கையால் அவர் நிலையின்மை நோக்கி அவர்கட்குத் தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சும் அச்சமேயாம் என்றும் முது குடிமக்களாகையால் அவரும் தம் மகளிர் மானங்கருதிப்பொருது படத் துணிந்தவ ரென்றும் அறியலாம். உருவும் திருவும் ஏனை நலனும் ஒத்தாலன்றி ஒருத்திக்கும் ஒருவற்கும் அன்புண்டாகாதாகலின், அது நலம்பெறும் விழுப் பொருள் பணிந்து உவந்து கொடுப்பினும் ஒவ்வா விடத்து ஆகாதென மறுப்பான், “நல்ஞ்சால் விழுப்பொருள், கொடுப்பினும் புரைய ரல்லோர் வரையலள் இவள்” என மகள்மேல் வைத்துக் கூறினான். முதுகுடிப் பிறந்தோர் தனம் சிறியராயினும் மனம் சிறியராகாமையின், தனக்கு வரும் ஏத மஞ்சாது மறுக்கின்றானாகலின், “தந்தையும் கொடான்” என்றார். ‘தந்தையும்” என்றவிடத்து உம்மை மகளே அம்மணத்தை மறுத்தமையை யுணர்த்திற்று. “புரையமன்ற புரையோர் கேண்மை” என்பது போலப் (நற்...றிணை...) புரையேர் என்பது மேலோர் என்னும் பொருளை உணர்த்துவதாகக் கொள்ளின், மகள்கோடற் குரியராயினும் மகளுக்குரியவர் இயல்பு தம் மியல்போடு மாறுபடுதலறிந்தும் மகள் வேண்டல் பெரியோர் செயலன்றாகலின். “புரைய ரல்லோர் வரையலள் இவள்”, என்றானெனினுமாம். வந்தோர் வலிந்து கோடற் கருத்தினராயின், அவரோடு பொருது உயிர் தந்தேனும் தன் மகளின் மானம் காக்க விரைகின்றானாகலின், அவனை வந்தோரால் வெல்லலாகாது என்பார் “வருந்தின்று கொல்லோ தானே” யென்று கூறுகின்றார். இனி, இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பின்” என்ற பாட்டு, செங்குட்டுவனது போர்ச்சிறப்பினை வேளாண் மாக்களது தொழிலோடு உவமித்துக் கூறும் பகுதியும் ’ பரிசிற் பகுதியும் என இருபகுதியினை யுடையதாய் உருவகவணி சிறக்க நிற்கின்றது. உழவுத்தொழிலுக்கு இன்றிமையாத மேகமும், அது கருத்து மழை பெய்யுங் காலத்துச் செய்யும் மின்னலும், உடன் தோன்றும் இடிமுழக்கமும், மின்னிடித்து மழை பெய்யுங்கால் நாற்றிசையும் பரவிப் பொழியுமாறு வீசும் வளியும் இவற்றால் ஈரங்கொண்ட நிலமும் அதனை யுழுதற்கு வேண்டும் ஏரும், உழுதவழியுண்டாகும் படைச்சாலும், அதன்கண் விதைக்கப் படும்வித்தும், அது விளைந்து முற்றிக் கதிர்தலைசாய நிற்றலும், அவற்றை யறுத்துப் போரிடுதலும் போல, போர்க்களத்திலும் கருங்கை யானை மேகமாக, மறவர் எறிதற்கு உயர்த்துவாள் மின்னலாக, போர் முரசு முழக்கமாக, மிக்க விரைந்த செலவினையுடைய குதிரை வீசுவளியாக, வல்வில் வீங்குநாண் செலுத்திய கணைகள் மழைத் தாரையாக இவற்றாற் கொலையுண்ட மாக்களின் உதிரந் தோய்ந்து ஈரமுற்ற போர்க்களம் வயலாக, தேர் ஏராக, ஆயுதமாகிய படைவாளால் கீழ்மேலாக மறிக்கப் பட்ட படை முதலிய வற்றின் நிரை படைச்சாலாக, வெள்வேலும் கணையமும் எறியப்பட்டுச் சிதறி வீழ்தலின் விதையாக, வீரர் தம் தலைகளை வெட்டிச் சாய்த்த அச்சந்தரும் நிலை பைங்கூழாக, பேய்மகளிர் பிணமுண்பான் சூழ்ந்து வர, அவற்றைக் குவித்த குவை, போராக, அவற்றைப் பூதம், பேய், நரி முதலியவை முகந்துண்ணும் வகையிற்றான் தன்னைப் பாடி வருவோர்க்கு அவர் வேண்டுவன ஈதற்பொருட்டு வீற்றிருக்கின்றான் என்னும் பொருளமைந்து வருவது அவ்வேர்க்கள உருவகப் பகுதி. அது, “இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பின் கருங்கை யானை கொண்மூ வாக நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள் மின்னாக வயங்குகடிப்பமைந்த குருதிப் பலிய முரசு முழக்காக, அரசராப் பணிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்து கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவயின் தேர்ஏ ராக விடியல் புக்கு நெடிய நீட்டநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெல்வேள் கணையமொடு வித்தி விழுத் தலை சாய்த்த வெருவரு பைங்கூழ் பேய் மகள் பற்றிய பிணம் பிறங்கு பல்போர்பு கணநரி யோடு கழுதுகளம் படுப்பப் பூதம் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர் கிருந்த பீடுடை யாள” என்பது. இதன்கண், யானைகள் போர்செய்யுங்குகால் அவற்றின் கோடு எதிர்த்தவரையும் எதிர்த்தவற்றையும் மண்டித் தாக்குங்கால் அது கூர்மடிந்து மழுங்காவகை நுனியிற் கூரிய இருப்புப்பூண் செறித்தல் மரபாகலின், “இருப்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பு” என்றும், *“காலமாரியின் அம்புதைப்பினும் வயற் கெண்டையின் வேல்பிறழினும், பொலம்புனையோடை யண்ணல் யானை, இலங்குவான் மருப்பின் நுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாள” ராகலின், வீரரை, “நீள்மொழி மறவர்” என்றும், போரிடைப் பெற்ற வெற்றிக் குறியாக முழக்கும் முரசத்திற்குக் குருதியை வீரர் பலியிடுத லுண்மையின் “குருதிப் பலியமுரசு” என்றும், “விரிநிற நாகம் விடருள தேனும், உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்” (நாலடியார்) என்ப வாகலின் முரசொலி கேட்டஞ்சும் அரசரை அரவொடு உவமித்து “அரசராப் பனிக்கும் அணுங் குறு பொழுது” என்றும் உழுதற்குச் செல்வோர் கடும்பகலிற் செல்லின் நிலம் வெதுப்புதற்கும், ஈரங் குன்றுதற்கும் அஞ்சி விடியலிற் செல்வா ராகலின் “விடியல் புக்கு” என்றும் விதை வித்துவோர் அதனைப் பிடியளவாகக் கொண்டு நீட்டி வீசுதலால், “பிடித்தெறி வெள்வேல் கணைய மொடு வித்தி” என்றும் கூறினார். பாடுநர்க்கு என்பதில் நான்காவது “அதற்பொருட்டு” இங்ஙனம், முற்பகுதியில் செங்குட்டுவனது போர்க்களத் தினைச் சிறப்பித்துக் கூறினவர், பின்னர்த் தான் விரும்பிக் கேட்கும் பரிசில்களைத் தருதல் வேண்டுமென்றதற்குத் தோற்று வாயாகப் பாடுநர்க்கு ஈதற் பொருட்டிருக்கும் பீடுடையோய் என்று தொடங்கி, பரிசில் வேண்டுகின்றார். வேண்டுபவர், “பெரும! அரிக்குரல்தடாரி யென்னும் பறை பலமுறை யடிபடுதலால் சூடு பிறக்க இசைத்து நின்புகழ் பாடி வந்தேன். ஆதலாலும் நீட்டியாது பரிசில் நல்கும் தகுதி விரும்புவோ யாதலாலும் “பாடான்று எழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன ஓடை நுதல வொல்குத லறியாத் துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி” என்று கூறுகின்றார். இப்பாட்டின்கண் முற்பகுதி சொல்லொழுக்கமும் பொருளொ ழுக்கமும் செவ்வனம் அமையப்பெற்றுப் படிப்போருளம் சுவை பெறச்செய்வது போலப் பிற்பகுதியில்லை யாயினும், முற்பகுதியால் கவரப்பட்ட மனம் பின்னும் இழுக்கப் பெறின் கயப் புறு மென்று அஞ்சித் தாம் தம் வேண்டுகோள் கூறுதற் கமைவுடைத் தாக்கினமை இவரது புலமைத் திறனை வெளிப்படுத்துகின்றது. இனி, செங்குட்டுவனைப் பாராட்டிக் கூறும் அகப்பாட்டு அகநானூற்றில் “தாவில் நன்பொன் தைஇய பாவை” என்று தொடங்குவது. இது அகத்திணைக்கண் வரும் அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறுதல் என்னும் துறைப் பொருளுணர்த்துகின்றது. அல்லகுறிப்படுதலாவது, தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகுகின்ற காலத்து ஒருநாள் தலைமகன் செல்லாமே, அவனால் செய்யப்படும் குறிப்புக்கள் தாமே வெளிப்படுதல்; “அக்குறிப்புக்கள் புன்னைக்காய் நீரிலிடுதலும் புள்ளெழுப்பு தலுமென இவை.” இவை வெளிப்படுதற் குரிய காரணங்கள் இவனே யன்றி வேறும் உள. “புன்னைக்காய் மூக்கு ஊழ்த்தும் விழும், வளி எறியவும் விழும், புள் துளக்கவும் விழும்; புட்கள் எழுமிடத்து வெருவியும் எழும், வேற்றுப்புள் வரவும் எழும். இவை கண்டு, தலைமகனால் ஆயின வெனக்கொண்டு குறியிடம் போந்து அவனினாகாமை யுணர்ந்து, (தலைமகள்) போந்து மனையகம் புக்க பின்னை, அவன் (தலைமகன்) வந்து, அக்குறி செய்யும். செய்தக்கால், இரண்டாவது கொண்டு போதல் ஆகா தன்றே. என்னை, சிறிது முன்னாகப் போனாரன்றே. “அகத்தினின்று நின்னின் ஆகாதன கண்டு வந்து நின்று பெயர்ந்தேம்” என்பதனை அவனுக்கு உணர்த்தும்; திங்கள்மே லிட்டானும் அன்னத்தின்மே லிட்டானும் ஓதத்தின்மே லிட்டானும் கூறுவள். இஃதுணர்ந்து தலைமகன், “இவ்விரவு இவர் என் பாலராய நின்று துயிலாராயினார் போலும்; என்னை, தாம் துயிலாது நின்றாரன்றே துயிலாதன அறிவார். இவற்றின் துயிலெழ (இவர்) வினையேன் குறியென்று வந்து பெயர்ந்தார் போலும்” என ஆற்றானாய்ப் பெயர்வான். அக்காலை அவன் தன் நெஞ்சினை நெருங்கிக் கூறும் பகுதிகளுள் ஒன்றாகும் இத்துறை. இங்ஙனம் அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தலை மகளின் பெறுதற் கருமையும் நெருங்காவகையுற்ற காப்பு மிகுதியும் நினைத்து வருந்துவான், நெஞ்சினை நெருங்கிக் கூறு கின்றான். “ தாவில் நன்பொன் தைஇய பாவை விண்தவ ழிளவெயில் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால் கிளையறி நாணல் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ் இசையோர்த் தன்ன வின்றீங் கிளவி அணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற்(று) இனம்படி நீரிற் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய், வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே என்னை இன்னற்படுத்தினை, மின்னுவசிப் புரவுக்கால் கடுப்ப 1மறலிமைந் துற்று விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப் படைநிலா விலங்கும் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினம் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க வோட்டிய நீர்மாண் எஃகம் நிறத்துச்சென் றழுந்தக் கூர்மத னழியரோ நெஞ்சே! ஆனாது எளியள் அல்லோட் கருதி விளியா வெவ்வம் தலைத்தந் தோயே” என்பது அப்பாட்டு. இதன்கண் “தாவில் நன்பொன் தைஇய பாவை” என்பது முதல் “அணங்குசால் அரிவையை நசைஇ” என்பது ஈறாகக் கிடந்த பகுதி தலைமகளது தோற்றப் பொலிவையும், “மின்னுவசிப், புரவுக்கால் கடுப்ப மறலி மைந்தற்று” என்று தொடங்கி “ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம்” என்பது வரையிற் கிடந்த பகுதி குட்டுவன் கடல் பிறக் கோட்டிய செய்தியையும், எஞ்சியது நெஞ்சினை நெருங்கிக் கூறுவதையும் உணர்த்துகின்றன. தலைமகளின் தோற்றப்பொலிவு, ஓட்டற்ற நல்ல பொன் னாற் செய்யப்பட்ட பாவை விண்ணிற் றவழ்ந்து செல்லும் இள ஞாயிற்றின் ஒளிகொண்டு நின்றது போல் மிகுதிபடும் அழகுப் பெற்ற, தொக்ககதிர்போல் நீண்ட கூந்தலையும், கிளைத் தெழுந்த ஐம்மை பொருந்திய நாணற்கிழங்கினது மணலின் கண் ஈன்ற வெள்ளிய முளைபோற் கூரிய பற்கள் பொருந்திய, பவளம் போன்ற வாயினையும், ஈரமுடையா னொருவன் இசைக்கும் செவ்வழிப் பண்ணுக்குரிய நல்ல யாழினது இசையைக் கேட்டாற் போலும் இனிய தீவிய மொழியினையு முடைய கண்டார்க்கு வருத்தம் விளைக்கும் அரிவையெனக் கூறப்பட்டது. செங்குட்டுவன் கடல் பிறக்கோட்டியது, மின்னலோடு கூடிப் புரத்தற் கெழுந்த மேகங்களைச் சவட்டும் காற்றைப் போல், மாறுபட்டு வலியும் மிகப்பொருந்திப் பலவகை மொழிகள் விரவிய பாசறைகளை விரும்பிய விடங்களில் நிறுவி, படைகளின் ஒளி விளங்கும் கடல் போலும் தானையினையும், தேன் நெகிழ்ந்து சொரியும் மாலை யினையும், மறம் பொருந்திய போரினையு முடைய செங்குட்டுவன் பொருதற்குரிய மாற்றாரைப் பெறாமையால், நெறியினின்றும் பிறழ்கின்ற சினம் மிகுந்து, போர் செய்யும் வன்மையோடு கடலை முற்றுகையிட்டு, எழுகின்ற அலை பொருந்திய கடல் விலகும்படிச் செலுத்திய மாட்சி பெற்ற நீர்மையினை யுடைய வேல் என்று விளக்கப்படுகின்றது. இக்கூறிய தோற்றப்பொலிவினையுடைய அரிவையைக் காதலித்து, அல்ல குறிப்பட்டமையால் அழுங்கும் நெஞ்சே! பெரிய யானைகளின் திரள்கள் வந்து படிதலால் கலக்கமுறும் நீர்போலக் கலங்கி நிற்கும் இப்பொழுதின்கண், “பெறுதற்கரி யளாவாள்” என்று கருதாது, துன்பத்தைத் தரும் கடப்பதற் கரிய சுரங்கள் பல கடந்து வந்து என்னைத் துயர்க்குட் படுத்தினை. இங்ஙனம், கூடுதற் கெளியளல்லாதாளைக் கூடுதல் அரிதென்று கருதியமையாது நீங்காத துன்பத்தையே மிகத் தந்தாய் ஆதலால், நீ, குட்டுவனது நீர்மாண் எஃகம் மார்பின் கட்புக்கு மூழ்க, நின் மிக்கவலி கெடுவாயாக எனவரும் இஃது இப்பாட்டின் கருப்பொருள். தலைமகட்குந் தனக்கும் அன்புமிகுதல் வேண்டி, விரைந்து வரையாது குறிவழி யொழுகுதலே மேற் கொண்டவன் வரும் வழியும் திரும்பச் சேறும் வழியும் அவளையே நினைந்து செல்கின்றானாகலின், அழுங்கும் பொழுதினும் நெஞ்சில் மிக்கு நின்ற அவளது உருவ வியல்பினை முதற்கட் கூறி, அத்தோற்றம் நினைத்த பொழுதும் வருத்த மிகுவித்தலால் அவளை “அணங்குசா லரிவை” யென்றும் கூறினான். பின்னர், நெஞ்சிற்கு நெருங்கி யுரைப்பானாய், அதுபொழுது தான் கொண்டிருந்த நிலை விரைவில் தெளியும் தன்மைத் தல்லாத பெரிய கலக்கம் பொருந்திய நிலையாகும் என்பான் “பெருங்களிற்(று) இனம் படி நீரிற் கலங்கிய பொழுதில்” என்று கூறினான். முன்னர் இயற்கைப் புணர்ச்சிக்கண் அவளைக் கண்டபோது அவளது அழகு, என் அறிவு, நிறை, ஆண்மை முதலிய ஆண்மைக் குணங்களைக் கலக்கிக் கவர்ந்து கொண்ட மையின், மிகுதிக் கண் மேற்சென்றிடித்தற்பாலையாய நீ. நின்னாற் காணப்படும் இவள், பெறுதற்கரியன் என்று கூறாது, இங்ஙனம் செலுத்தித் துன்புறுத்தினாய் எனச் சினந்தான்போற் கூறினான் எனினுமாம். அப்பெற்றியோன். சினத்தொழிலாகிய குட்டுவனது கடல்பிறக் கோட்டிய வேலை சிறப்பித்துப் பின்னர், இவ்வாறு எளிய ளல்லாதாளை எளியவள்போற் காட்டி நீங்காத் துன்பந் தந்த நீ, எதனாலும் அடக்குதற் கியலாத கடலைத் தன்வேலாற் பிறக்கிடச் செய்த செங்குட்டுவனுடைய தப்பாத வேல்மார் பிலழுந்த நின் மிக்க வலி கெடுக என்று கூறினான். முதற்பகுதியும் நெஞ்சினை நெருங்கிக் கூறுவனவும், அல்ல குறிப்பட்டுத் தலைமகள் கூட்டம் பெறாமையால் ஆற்றாது அழுங்கிக் கூறுவன வாகலின், இது நெய்தற்றிணை யாயிற்று. பிற்பகுதியாகிய செங்குட்டுவன் செயல் கூறுவது, அவன் பொரு முரண் பெறாது, சினம் சிறந்து, “செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி”, ஓங்குதிரை பிறக்கிடும்படி பொருதலைக் கூறுதலின் அது தும்பைத்திணை யாயிற்று. இத் தும்பைத்திணை அந் நெய்தறிறிணையின் புறமாகும். என்னை “தும்பை தானே நெய்தலது புறனே” (தொல். பொ. 69.) என்ப. தும்பைத் திணை யென்பது “மைந்து பொருளாக வந்த வேந்தனை, சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (தொல். பொ.70). இனி, ஆசிரியர் பரணர் இச்செங்குட்டுவனைப் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்தினுள் சிறப்பித்திருக்கின்றா ரென்று முன்னர்க் கூறினோமன்றோ. அப்பத்தினையும் சிறிது ஆராய்கின்றேம். பதிற்றுப் பத்து என்னும் இந்நூலுள் ஒவ்வொரு பத்தினும் இறுதியில், பதிகங்கள் அமைந்து பாடினோர் பாடப் பட்டோர் செயல், பாடினோர்பெற்ற பரிசில் ஆகிய இவற்றைக் கூறுகின்றன இவற்றுள் ஐந்தாம்பத்தின் இறுதி யிலுள்ள பதிகம், செங்குட்டுவன் செயலையும், பாடினோர் பரணர் என்பதையும் கூறிப் பின்னர்ப் பரணர் பாடிப் பெற்றபரிசில் உம்பற் காட்டு வாரியையும் தன் மகன்குட்டுவன் சேரலையும் கொடுத்தான் அக்கோ” என்று கூறுகின்றது. மற்று அந்நூலைப் பதிப்பித்த ஆசிரியர் உ.வே சாமிநாதை யரவர்கள் முகவுரையில் “ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு பெயரென்பவைகள் உரையில்லாத மூலப்பிரதிகளி லெல்லா மிருத்தலின், அவை உரையாசிரியரால் எழுதப் பட்டனவல்ல வென்றும் நூலாசிரியர் களாலோ தொகுத்தாராலோ எழுதப்பட்டன வென்றும். பதிகங்கள் உரைப்பிரதிகளில் மட்டும் காணப்படு கின்றமையால் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரும் தொகுத்தோரும் அல்ல ரென்றும் தெரிகின்றன” என்று உரைத்தலின், நூலாசிரியரோ தொகுத்தாரோ குறியாத செயலை உரையாசிரியரோ பிறரோ குறித்தல் எங்ஙன மமையுமென ஐயம் நிகழுமாயினும் குறித்தோர் கேள்வி மாத்திரையாற் பெற்ற செய்தியாதல் கூடுமென் றெண்ணு கிறேன். இதற்கு விளக்கம் வேண்டும். இப்பத்தின் முதற்பாட்டில், இவர் செங்குட்டுவனை நோக்கித் ‘திண்டேர் வசையில் நெடுந்தகை! ஒன்று இரண்டல்ல பல வழிகளைக்கடந்து யான் நின்னைக் காண்பதற்கு வந்தேன்” என்று கூறி அவன் கடல்பிறக் கோட்டிய வென்றியைச் சிறப்பித்துக் கூறுகின்றார். இக்கருப்பொருட்குத் துணையாகத் தம்முடன் வருவாரையும், வழியினது ஏதமும் உடன் கூறுகின்றார். இத்துணைப் பொருள்களைப் பாட்டின் முதற்கண் நிறுத்தி, “ புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுணிய வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப் பண்ணாமை முழவும் பதலையும் பிறவும் கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் கைவல் இளையர் கடவுட் பழிச்ச” எனத் தன்னுடன் வரும் யாழோரையும் ஆடலில் வல்ல இளை யரையும் கூறினார். இதன்கருத்து, யாழ்வல்ல இளையர் 1வணர் பொருந்திய பேரியாழ் தாங்கிவர. முழவு பதலை முதலிய பல வாச்சியங்களைத் தூம்பு என்னும் வாச்சியத்தோடு ஒருங்கு சேர்த்துக் காவடியின் ஒருபக்கத்தும் மற்றொரு பக்கத்து ஆடற்றுறைக்கு வேண்டுவன வெல்லாம் கூடிய முட்டினையும் வைத்து, ஆடற்றுறையில் வல்ல இளைஞர் தாம் செல்லும் வழிகளில் உளவாகும் ஏதம் வாராமைப் பொருட்டுக் கடவுளைப் பரவி வர தாம் வந்தார் என்பது பின்னர் “ மறுப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன் மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் சேஎ ருற்ற செல்படை மறவர் தண்டுடை வரத்தர் போரெதிர்ந் தாங்கு வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும் மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்” என வழியி லுளவாகும் ஏதம் கூறுகின்றார். இதன் கருத்து வயக்களிறு என்று மலையைச் சேர வெழுத்த வேங்கை மரத்தினைப் புலியின் குழுவெனக் கருதி, அதன் பூக்கள் நிறைந்த கிளையை வளைத்து முறித்துந் தன் பெரிய தலையில் அழகுபட அணிந்து (சுமந்து) முனையில் பொருந்திச் செல்லும் படை வீரர் வலத்தே தண்டேந்திப் போர்செய்ய எதிர்ந்தது போலச் சுரபுன்னைகள் நிறைந்த அகன்ற காட்டகம் ஒலிக்கும் படிப் பிளிறுவதும் மழைபெய்து மாறிய மூங்கில் திரங்கி விளங்குவதுமாகிய வழி என்பது. இது கூறினவர், மேலே, அத்தங்கள் “ஒன்றிரண்டல பல கழிந்து, திண்டேர் - வசையில் நெடுந்தகை காண்கு வந்தி சினே” எனவரும் கருப்பொருளை யமைத்துப் பின் கடல் பிறக்கோட்டிய செய்தியைச் சிறப்பிக்கின்றார். 1. தாவல் உய்யுமோ மற்றே, தாவாது 2. வஞ்சின முடித்த ஒன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து 3. வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர் மிளகெறி உலக்கையின் இருந்தலை யிடித்து 4. வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின் எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண் வலம்படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து 5 காலுளைக் கடும்பிசிர் உடைய வாலுளைக் கடும்பரிப் புரவி யூர்ந்தநின் படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.” என்பது அப்பகுதி. இதன் கருத்து, மாற்றார் மண்டலங்களைக் கொள்வேம் என வஞ்சினங் கூறிப் பின் அது தப்பாது முடித்த வாய்மையினையுடைய வீரர் வெற்றி முரசு ஒலிக்கும் பெரும் போரின்கண் நண்பராய்த் துணைவந்த அரசர் மேன்மேலும் உயர்வு பெருகவும், பகைவராய் எதிர்த்துவந்த தெவ்வரசர்களின் பெரிய (கரிய வெனினுமாம்) தலைகளை மிளகுகளைக் கொடி களிலிருந்து உதிர்த்தற்கு வீசும் உலக்கையினால் இடித்து அவர்கள் கெடுதலால் வென்றி யெய்தவும், ஒருகாலும் இடையறாத ஆரவாரத்தினையுடைய கருங்கடற் பரப்பில் வேலெடுத்தெறிதல் பொருந்தவும், குறுந்தடி கொண்ட அகன்ற கண்ணினை யுடைய முரசு எழுந்தொலிக்கும் வென்றிதரும் கீர்த்தி ஒருங்கே தோன்றி நிலவவும், காற்றால் விடுபட்டுப் பறக்கும் (புகைப்படலம் போல் பறக்கும் ) நீர்த்துளிகளாகிய பிசிர் எங்கும் பரவும்படி ஒலிக்கின்ற அலைபொருந்திய குளிர்ந்த கடலைப் பிறக்கிட ஓட்டிய நின்னுடைய தாள்கள் வருந்துதலில் நின்று நீங்குமோ என்பதாம். இஃது உரைகாரர் குறித்த முறையே கொண்ட பொருள். பாட்டுக் கிடந்த முறையே காணின், மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்த வாய்மையினையுடைய வீரர் முரசு பொருந்திய பெரிய போரின்கண் அரசர் பலரை வென்று, அவருள் நட்பு விரும்பிய வேந்தர்க்கு உயர்வு பெருகவும், விரும்பாத தெவ்வரசரின் பெரிய தலைகளை மிளகெறி உலக்கையால் இடித்து அவர் கெடவும் செய்து, அதனோடமையாது, இடையறாத ஆரவாரத் தினையுடைய கருங்கடற் பரப்பால், எடுத்தெறிதல் பொருந்திய குறுந்தடி கொண்ட அகன்ற கண்ணினையுடைய முரசெழுந் தொலிக்கும் வென்றிதரும் கீர்த்தி ஒருங்கு நிலவ காற்றால் விடுபட்டுப் பறக்கும் நீர்த்துளிகளாகிய பிசிர் எங்கும் பரவும்படி ஒலிக்கின்ற அலை பொருந்திய குளிர்ந்த கடலைப் பிறக்கிட ஓட்டிய, வெள்ளிய தலையாட்ட மணிந்த விரைந்த செலவினையுடைய குதிரை யூர்ந்த, தாள்கள் வருந்துதலில் நின்று நீங்குமோ என்பது பொருளாகும். இனி, இதன் இரண்டாம்பாட்டு, “பெரும! நன்னுதல் கணவ! அண்ணல் யானை யடுபோர்க் குட்டுவ!” நீ கோடியர் பெருங்கிளை வாழத், தந்த கலிமாக்களை எண்ணின், அவை புணரியிற் றோன்றும் நீர்த்திவலைகளினும் பலவாம்” என்பது பொருளாக வந்தது. இதற்குப் புடைப்பொருள்களாக அமைந்தன வீரர்மறமும் கோடியர் பெருங்கிளையை யருளுதலும், வென்றி பரவுதலுமாம். இவற்றுள், வீரர்மறம், “இரும்பனம் புடையல் ஈகை வான்கழல் மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் *அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி யன்னோர்” என வருகின்றது. இதன்பொருள், பெரிய பனந்தோட்டாற் றொடுத்த மாலையினையும் பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழலையும் மீன் கவரும் சுழற்சியினைச் சிரல் குளிர்ந்த குளத்திலே மூழ்கி எழுகின்ற காலத்து, அதன் வாயலகை ஒக்கப் புண்களை இழை கொள்கின்ற காலத்து அப்புண்ணின் உதிரத்திலே மறைந் தெழுகின்ற ஊசியின் தழும்பும், புண்ணாலாகிய வடுவும் பரந்த மார்பினையும் அம்பாலுற்ற தழும்பு சேர்ந்த உடம்பினையு முடையாராய்த் தம்மைச் சேர்ந்தா ரோடன்றி அவ்வகையினரல்லாப் பிறரோடு “ஒத்த வீரமுடைய ரல்லர்” எனத் தும்பை சூடிப் பொருதலைச் செய்யாத மாட்சியினை யுடையோர் என்பதாம். இனி, அதன்பின்னதாய கோடியர் பெருங்கிளையை அருளுமாறு, “மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீ இ 1இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல் உளையவிர் கலிமாப் பொழிந்தவை யெண்ணின் ........... ..... .... மாயிருந் தெண்கடல் மலிதிரைப் பௌவத்து வெண்டலைக் குரூஉப்பிசிர் உடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே”. எனச் சிறப்பிக்கப்படுகின்றது. இதன்பொருள், வலி பொருந்திய நல்ல போரைச் செய்து வெற்றிபெற்று, அதனைப் பாடும் கூத்தர்க்கு அவரது பெரிய சுற்றம் வாழ்வுறும்வண்ணம், இஞ்சிப் பூவும் பிற நறிய பூவுமாக விரவித் தொடுத்த பசிய மாலை சூட்டி புறத்தே சந்தனமும் பூசின மதுக்குடம் அசைந்தாடும் சமனில்லா இருக்கைக்கண் வைத்த மிக்க சுவை நிறைந்த நீலமணி போலும் கள்ளினைத் தனக்கென ஓம்பாது செய்யும் ஈகைக்குணத்தால். மிகத்தந்து அதன்மேலும் கொடுக்கப்பட்ட வெற்றியுறும் தலையாட்டத்தால் பொலியும் குதிரைகளை எண்ணியறியலுறின், அவை அளவுபடாமையான், பெரிய கரிய தெளிந்த கடலின் நுரையின் நிறம் பெற்ற பிசிர் எங்கும் பரவத் தண்ணியவும் பல வுமாய் வரும் அலைகளினும் பலவாகும் என்பது. இனி, இதன்கட்கோடியர் பாடுதற்குப் பொருளா யமைந்த வென்றிச் சிறப்பினை, “ மன்பதை மருள அரசுபடக் கடந்து முந்துவினை யெதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறுநிலை யுயர்மருப் பேந்திய களிறுஊர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய” என்பதனாற் கூறுகின்றார். இதன்பொருள், காணும் மக்கள் மருட்சி கொள்ளும்படி எதிர்த்த அரசர் கெடவென்று அவர் முன்னுற்ற போர்ச்செயலை எதிர்பெய்து கொண்டுவர, அதனை ஏற்றுப் பெறுதலைக் காண்பதற்கு மன்னர் பலர் மானமுடைய வீரருடன் விளக்கமுறும் நிலையினையுடைய உயர்ந்த கொம்பேந்திய யானையேறிப் போந்து ஏத்துதலைச் செய்ய, (பரவி வாழ்த்த எனினுமாம்) நினக்குச் சுற்றமாயினார் தேருடன் உலகுமுற்றும் நெருங்க, கோடியர்க்கு மாப் பொழிந்தனை என்பதாம், இனி, இதன்மூன்றாம் பாட்டுள், ஆசிரியர் பரணர், “போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! தொலையாக் கற்ப! வண்கை வேந்தே! ஏறாவேணியெனச் சிறப்பிக்கப்பெறும் கோக்காலியின் மேல் வைத்த குடத்திலுள்ள கள்ளினைக் கூத் தருண்டு மகிழும் நின் ஆரவாரமான மகிழ்ச்சிக்கண் நின்செல்வ நிலை கண்டேம்” என்று கூறுகின்றார். இதற்குத் துணையாக, அவனது தானையின் செயலும், அவனது வள்ளன்மையும் உடன்சிறப்பிக்கப்பெறுகின்றன. இவற்றுள் தானையின் செயல், “ கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசல் மேவற் சேயிழை மகளிர் உரல்போற் பெருங்கால் இலகுவாண் மருப்பின் பெருங்கை மதமாப் புகுதரின், அவற்றுள், விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக் கடவுள் நிலைஇய கல்லோங்கு கெடுவரை வடதிசை யெல்லை இமய மாகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானை” எனவருகின்றது. இதன்பொருள், கல்மிக்க உயரியமலை யாகிய இமயம் வடதிசை யெல்லையாக, தென்திசைக் கண்ணதாய குமரி தென்திசை யெல்லையாக, இவற்றில் இடைப்பட்ட அரசர்களின் உயர்த்துச் சொல்லப்படும் நாடுகள் எல்லாவற்றையும் முரசுடைய பெரும்போரில் சிதைவுறும்படி ஆரவாரமெழவெதிர்த்து அவற்றின் பண்டையழகு கெடுத்த போர்செய்யும் தானை என்பது. இங்கு, நெடுவரையாகிய இமயத்தைச் சிறப்பிப்பார். அது, கொண்டையிட்ட, கருத்துவிரிந்த, கவரிபோலும் கூந்தலும் ஊசலாட்டு விருப்பு முடைய செம்மையான இழையணிந்து மகளிர், உரல் போன்ற பெருங்காலும், விளங்கும், ஒளிபொருந்தியகொம்பும், பொருகின்ற கையும், மதமுமுடைய யானைகள் புகுந்தால், அவற்றின் தொகை யெண்ணிலடங் காமையால் தமக்கு விருந்தாகித் தாம் விரும்பும் பிடிகளையேயெண்ணி, அவற்றின் தொகையையும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி, சங்கம், பற்பம் எனும் எண்ணுமுறைக்குள் அடக்கவியலாத அத்துணை யானைகளையும், கடவுளர் தங்கும் நிலைகளுமுடையதாகும் என்றார். இனி, அவனது வள்ளன்மையை விளக்கும் பகுதி “இரும்பணை திரங்கப் பெரும்பெயல் ஒளிப்பக் குன்றுவறங் கூரச் சுடர்சினம் திகழ அருவி யற்ற பெருவறற் காலையும் அருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக் கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய விரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து) ஆர்கலிவானம் தளிசொரிந் தாஅங்(கு) உறுவர் ஆர ஓம்பா துண்டு நகைவர் ஆரநன்கலம் சிதறி ஆடுசிறை யறுத்த நரம்புசேர் இன்குரல் பாடு விறலியர்பல்பிடி பெறுக துய்வீ வாகை நுண்கொடி யுழிஞை வென்றி மேவல் உருகெழு சிறப்பின் கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே”. என்பது, இதன்பொருள், பெரியவயல்கள் உலரும் வண்ணம் மழை பொய்த்தலானும், குன்றுகள் வறியவாமாறு ஞாயிற்றின் வெயில் தெறுதலானும், அருவிகள் நீரற்றொழிந்த பெரியவற் கடகாலத்தும், அரிய செலவினையுடைய நீர் நிறைந்த பெரியயாற்றின் கரையை யுடைத்துக் கூரிய ஏரினால் உழுவோர் கொன்றை மலரைச் சூட வரையின்கண் வில்லிட்டு அதிர்கின்ற சிலைத்தற் றொழிலோடு முழங்கி நீர்மிகுந்து நிறைந்த கலிப்புடைய மேகம் மழைபெய்தாற்போலத் தன்னையுறுவோர் உணவினையொழி யாது ஆர உண்பித்தும் உண்டு மகிழ்வோர் மனங்கொள்ள நல்ல கலன்களை நிறைய வழங்கியும், கின்னரமென்னும் புள்ளின் இசையெழுகின்ற சிறகினைத் தோற்பித்த யாழ் நரம்பினது இனிய குரலாற்பாடும் விறலியர். பல பிடி யானைகளைப் பெறுக என்றும், துய்ப் பொருந்திய வாகைப்பூவினை முடிவிலேயுடைய நுண்ணிய கொடியாகிய உழிஞையைச் சூடிய வென்றி விரும்பும் உட்குப் பொருந்திய சிறப்பினையுடைய கொள்ளையாடும் வீரர் கொல்களிறுகளைப் பெறுக என்றும்; பொதுவிடங்களையுள்ளித் தெருக்களினிடமாகப் புகுந்துசென்ற கணுக்களையுடைய நுண்ணிய பிறப்புணர்த்துங்கோலாகிய மூங்கிலேந்திப் போர்க்களம் வாழ்த்தி அதன்கட் பெற்ற வென்றியைப்பாடும் பாணன் குதிரைகள் பெறுக என்றும் வழங்குதல் என்பது. இனி இதன் நான்காம்பாட்டு நெடுங்காலம் வாழ்க என வாழ்த்து முகந்தான், “அண்ணால், நின்னை யெல்லா வீரரும் சொல்லிப் புகழ்தற்குக் காரணமாகிய யாக்கையாகிய, மிக்கவலி பொருந்தி, நோயின்றியன்ற உடலினைப் பாடுமகள் காண்பா ளாக. ஏனைப் பறந்தலையும் மன்னர் பலரை மறைத்த தாழிகள் நிறைந்த வன்னிமரத்துப் பொதுவிடத்து விளங்கும் இடுகாடும் காணாதொழியுமாக” என்று கூறி, இவன் பாடுமகட்கு நன்கலம் வழங்குமாறும். அறுகை யென்பானைத் தழுவி மோகூர் மன்னனை வென்ற வரலாறும், பிறவுங் கூறுகின்றது. இவற்றுள், இவன் பாடுமகட்கு நன்கலம் வழங்குமாறு, ‘நிலம்புடைப் பன்னவர்ப் பொடுவிசும்பு துடையூ வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப் பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய வென்னாது ஓம்பாது வீசிக் கலம்செலச் சுரத்தல் அல்லது கவினும் களைகென அறியாக் கசடில் நெஞ்சத்(து) ஆடுநடையண்ணல்நிற் பாடுமகள் காணியர்” என வருதலாலுணரப்படும். இதன்பொருள், நிலத்தை மோதினாற் போலும் ஆர்ப்பினோடு விசும்பளாவ வுயர்ந்த தேர்மீது விசும்பின் கட்டோயும் வெற்றிக் கொடியசைய, கடத்தற்கரிய பெருமை யுடையவாயினும் அவ்வமர்க்கண் வென்றுபெற்ற பொருள்கள் பெறுதற்கரியவாம் என்று கருதித் தனக்காமென ஓம்பாது வழங்கித் தன் மார்பிலணிந்த கலன்களையும் கொடுத்ததே யன்றிக் கவினையும் களைந்து ஈக என விரும்பின், அதன் நீங்ககில்லாமையை யுணராது அது செய்தற்குத் தொடங்கிய குற்றமில்லாத நெஞ்சமும், அசைந்த நடையுமுடைய அண்ணால் நின் உடலழகை நின்னைப் பாடுமகள் காண்பாளாக என்பது. எனவே, பாடுமகள் இவனைக் கண்டு பாடலும், அவட்கு இவன் போரின்கண் வென்றுபெற்ற அணி கலன்களையும் தான் அணிந்திருந்த அணிகலன்களையும் ஈதலும். அவற்றோடமையாது அவள் அவன்றன் மேனியழகை விரும்புதலும் பிறவும் இதன்கண் விளங்க உரைக்கப்பட்டனவாம். அறுகை யென்பானைத் தழுவிக் கோடலும் மோகூர் மன்னனை வென்ற வரலாறும். “நுண் கொடியுழிஞை வெல்போர் அறுகை சேண னாயினும் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளிந்த களையாப் பூசற்(கு) அரண்கள் தாவுறீஇ அணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை யுய்த்த (ஆடு நடை அண்ணல்)” என்பதனால் கூறப்படுகின்றன. இதன் பொருள், நுண்ணிய உழிஞைக் கொடியணிந்த வெல்கின்ற போரினை யுடைய அறுகை யென்பான் நெருங்கப்போந்து துணைசெய்ய வியலாத சேணிடத் திருந்தானாயினும் அவனைத் தனக்கு நண்பனாவான் எனத் தழுவிக்கொண்டு. இடம் பெயர்த்து சென்று ஒளித்திருந்து செய்தமாற்ற வொண்ணாத வருத்தத்தின் பொருட்டு மோகூர் மன்னனுடைய அரண்களை யழித்தற்றொழிலைத் தானே மேற் கொண்டு, தெய்வமருள் உற்றான்போல் வீரமருள் உற்று அவன் (மோகூர் மன்னன்) வெற்றி முரசைக் கைப்பற்றி, அவன் கூறிய வஞ்சினத்தைப் பொய்ப்பித்து, அவனையும் பணிவித்து, காவல் மரமாகிய வேம்பினையும் அடியோடே தடிந்து, முரசு செய்தற் பொருட்டுத் துண்டஞ் செய்து யானைகள் பல பூட்டி வண்டியிற் செலுத்திய ஆடு நடையண்ணல் என்பது. இனி, இப்பத்தின் ஐந்தாம்பாட்டு இவன்கடல்பிறக் கோட்டிய செய்தியை வியந்து, இத்தகைய அரியசெயலைச் செய்தமன்னர், நினக்கு முன்னிருந்த மன்னருள் ஒருவருமிலர், பின்னும் ஒருவருமிலர் என்பதை, “எழுமுடி மார்பின் எய்திய சேரல்! முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசினோர் மன்னர் இனியாருளரோ! நின்முன்னுமில்லை” என்று கூறுகின்றது. இது, “பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணி” என்று தொடங்கி, “எழுமுடி மார்பின் எய்திய சேரல்” என்பது வரையில் ஒருபகுதி யாகவும், “குண்டுகண் அகழிய மதில்பல கடந்து” என்பது முதல், “அனைய பண்பிற்றானைமன்னர்” என்பது வரையில் ஒருபகுதி யாகவும், எஞ்சியது கடல்பிறக் கோட்டிய வனப்பினைக் கூறும் பகுதியாகவும் அறைந்துள்ளது. இவற்றுள், முதற்பகுதி, “பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங் கரவின் ஒடுங்கிய அம்பின் நொசிவுடை வில்லின் நொசியா நெஞ்சிற் களி(று) எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் விழுமியோர் துவன்றிய அகன்கண் ஞாட்பின் எழுமூடி மார்பின் எய்திய சேரல்” என வருகின்றது. இதன் பொருள், பொன்னாற்செய்த பூவாற் றொடுத்த தும்பை மாலையும், புள்ளிகள் பொருந்திய தூணியும் புற்றின்கண் அடங்கியிருக்கும் பாம்புபோல் ஒடுங்கியுள்ள அம்புகளும், அவற்றைத் தொடுக்குந் தோறும் துவளுநலையுடைய வில்லும் அவ்வாறு துவளுதலில்லாத நெஞ்சமும், களிறுகளைத் தாக்குதலால் முரிந்து வடுப்பட்ட வேலுமுடைய சீரிய வீரர் நெருங்கிய அகன்ற போர்க்களத்வதப்பெற்ற. “ஏழாசைவென்று அவர்களுடைய ஏழுமுடியாலும் செய்ததோர் ஆரத்தையணிந்த மார்பினையுடைய” சேரமானே என்பது. இரண்டாவது பகுதி. இச் செங்குட்டுவற்கு முன்னிருந்த மன்னரது சிறப்பினை விளக்குகின்றது. அது, “ குண்டுகண் அகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டும்தாம் உள்ளழித் துண்ட நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக் கதவம் காக்கும் கணையழு வன்ன நிலம்பெறு திணிதோள் உயர வோச்சிப் பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை யாடிச் சோறு வே(று) என்னா ஊன்றுவை யடிசில் ஓடாப்பீடர் உள்வழி இறுத்து முள்ளிடு(பு) அறியா ஏணித் தெவ்வர் சிலைவிசை யடங்கிய மூரிவெண்டோல் அனைய பண்பிற் றானை மன்னர் இனியார் உளரோநின் முன்னும் இல்லை.” என்பது இதற்குப்பொருள், ஆழ்ந்த இடம் பெற்ற அகழி சூழ்ந்த மதில் பல கடந்து முன்னும் முன்னும் தாம் உள்புகுந்து அழித்துக் கொள்ளையாடிய நாடு பொருந்திய உரிமையுற்ற அரண்களின் நடுவில் திண்ணிய கதவுகளைத் திறக்கா வகையில் தடுக்கும் கணைய மரமாகிய எழுப் போன்ற, மாற்றார் நிலங்களைக் கவரும் வலிய தோளை உயரச் செலுத்திப் பிணம் நிறைந்த களத்திலே துணங்கைக் கூத்தாடி, ஊனைத் துவைத்துச் சமைத்த சோறு வேறு என்றும் கருதாது ஏற்கும், புறங் கொடுத்து ஓடாத பெருமைபெற்ற வீரர் உள்ளடங்கிய இடங்களை முற்றியிருந்து முள்ளிட்டிருத்தலால் ஏறப்படாத ஏணியினையுடைய பகைவர்களின் சிலையின் வேகத்தை யடக்கிய வலிய வெண்மையான தோற் கேடகம் போலும் பண்பு கொண்ட தானையையுடைய மன்னர் நினக்கு முன்னுமில்லை யாகலின், இனியாவர் உளராவரோ என்பதாம். “தோல் அனைய பண் பென்றது, தான் அம்புபடில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு என்றவாறு.” இனி, கடல் பிறக் கோட்டிய வனப்பு. “ மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின்வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்தி சினோரே” என வருகின்றது. இதன் பொருள், முகில் முகத்தலாலும், யாறுகளின் வழியே நீர் மிகுதலாலும் முறையே குறைதலும் நிறைதலும் செய்யாது விலங்குகின்ற காற்றால் அலைக்கப்படும் முழங்கும் அலைகளையுடைய குளிர்ந்த கடலின்கட்புகுந்து அசைகின்ற பெரியசூல் நிறைந்த மேகத்தின் மணிபோல் ஒளிவிடும். மின்னலை ஒத்த வேலைச் செலுத்தி, கடற்கண் ஒரு வினைசெய்தல் அரிதென்னும் சொல்லை மறுத்து அதனைச் செய்து முடித்தோர், என்பதாம். இதன்கண், “மணியிமைப்புப் போலும் மின்னுக்கு மணியிமைப்பு என்பது பெயராயிற்று.” இனி ஆறாம்பாட்டு மகளிர் பாட, அவர்க்குச் செங்குட்டுவன் இனியகள் வழங்குவதும், கடலோட்டியதும் கூறுகின்றது. இவற்றுள், “ இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபின் உழிஞை பாட இனிதுபுறந் தந்தவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின் வெல் புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே” எனவரும். இஃதவன் கள் வழங்குதலைக் காட்டுவது, இதன் பொருள், இழையும், குழையும், நறிய தண்ணிய மாலையும், சுடர் விட்டு விளங்கும் தொடியணிந்த முன்கையும், வலிய ஒளி பொருந்திய அழகிய மணிகிடந்து விளங்கு மார்பும். வண்டு மொய்த்த கூந்தலிலிட்ட முடியுமுடைய மகளிர் இசைமிக்க பேரியாழில் செவ்வழிப் பாலையென்னும் பண்ணையியக்கிப் பிறரைப் பணியுமுறைமைத்தல்லாத உழிஞைத் திணைக்குரிய உழிஞைப்பண்ணினோடு கூட்டிப் பாட, அவர்களையினிது ஏற்றுப் பேணி, இனிய கள்ளினை அவர்கட்கு வழங்குதலால், அவனைக் காண்போர் பாடிப் பெயர்ந்து செல்குவமென்று சொல்லார். எனவே. அவனிடத்தேயிருக்க விரும்புவார் என்பதாம். அவன் கடல்பிறக் கோட்டிய செய்தி, இப்பாட்டினுள், “சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்(டு) உடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவன்” என்ற அடிகளால் கூறப்பெறுகின்றது. இவற்றின் பொருள், போரிடங்கள் பலவற்றினும் கடந்துசெல்லும் குருதிக்கரை படிந்த உருளைகளையுடைய தேர்ஊர்கின்ற பாட்டையில், யானைப் போர்க்கு அஞ்சி ஒளித்த மறவர்களின் பசியதலைகள் ஆழியின் கீழ்ப்பட்டு நசுங்க, பலவாகிய போர்களில் வென்ற பகை கொல்லும் யானைகளையும், சங்குமுழங்கும் கடல் கலங்குமாறு வேலைச் செலுத்திக் கரையையுடைக்கும் அலைமிக்க அதனைப் பிறக்கிடச் செய்த வெல்கின்ற போராற்பெறும் புகழையுமுடைய குட்டுவன் என்பது. இனி, ஏழாம்பாட்டின்கண் நகரின் சிறப்பும் குட்டுவன் இயல்பும் கூறப்படுகின்றன. இவற்றுள், “அட்டானானே குட்டுவன், அடுதொறும் - பெற்றானாரே பரிசிலர்களிறே........ ..... தொன்னகர் வரைப்பின் அவன் உரை யானாவே” என்பன குட்டுவன் இயல்பும் புகழும் விளக்குவனவாம். இவ்வடிகளின் பொருள், செங்குட்டுவன் போரில் அடுந்தோறும், போரைச் செய்து அமைந்திரான்; அவன் புகழ் பாடும் பரிசிலர் களிறுகளைப் பெற்றும் அவற்றோடு அமையார்; அவனுடைய பழைய நகரிடங்களில் அவன்புகழ்கள் அமையாவாய் யாண்டும் பரவும்” என்பதாம், நகர்ச் சிறப்பு, “வரைமிசை யிழிதரும் அருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு மறுகிற் சொரிசுரை கவரு நெய் வழிபு உராலிற் பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல் நன்னுதல் விறலியராடும் தொன்னகர்.” என வருகின்றது. இதன்பொருள், மலையினின்றிழியும் அருவிகளைப் போல மாடங்களில், காற்றின் முன் விளங்கும் கொடிகள் அசை கின்ற தெருக்களில் நெய் சொரியும் உட்சந்து பொருந்திய திரிக்குழாய், தான் ஏற்றுக்கொண்ட நெய் வழிந்து திரியில் உலவுத லால், கால் விளக்குகளில் பருத்த சுடர்விட்டு எரிய, அவற்றின் ஒளியில்தம் ஆடல் பாடல்களுக் கேற்ப நூலுட் சொல்லப்பட்ட அழகையுமுடைய நன்னுதல் பெற்ற விறலியர் ஆடும் பழைமை யான நகர் என்பதாம். இனி, இதன் எட்டாம்பாட்டுச் செங்குட்டுவனை வாழ்த் துதலே பொருளாக அமைந்துள்ளது. இவ்வாழ்த்தினைக் கூறுவார் முதற்கண், இவன் கடலொடுபொருது, ஆண்டுப் பெற்ற பொருளைப் பாணர் விறலியர்க்கு ஈதலும், பின்னர், பெருந்துறையின் சிறப்பும் கூறுகின்றார். இதன் கருக்கொண்ட பொருள், கடலொடு உழந்த பனித்துறைப்பரதவ! பல்பொறி மார்ப! நின் பெயர் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவாகிய காலம் நின்றுநிலவுமாக என்பது. இதன் முதற்பகுதி, “ பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ!1 ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்டிவர் கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும் கல்லாவாய்மையன் இவனெனத் தத்தம் கைவல் இளையர் நேர்கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை முனைசுடு கனையெரி எரித்தலிற் பெரிதும் இதழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்ப! 2நின் பெயர்வா ழியரோ,” என்பது, பசிய பொன்னாற் செய்யப்பட்ட தாமரையைப் பாணர்க்குச்சூட்டி, ஒள்ளிய நுதலினையுடைய விறலியர்க்கு மாலைகள் அணிந்து, அழியாத பலவாகிய புகழ் நிறுவி, நீரின் கட்புகுந்து கடலொடு பொருதுநின்ற குளிர்ந்த துறையினையுடைய பரதவனே! “கடலுட் போர்செய்து அரிதிற்பெற்ற பொருளை எளிதாக மனங்கொள்ளாப் பாடலையுடையதாய் போதாதார்க்குக் கொடுக்கும் கல்லாததன்மையை உண்மையாக வுடையவன் இவன் என இழித்துக் கூறற்கேற்ப கைவல் இனையர் அடைவேதத்தம் கையைச் சுட்டி நிரைக்கும்படி இரவலரிடத்து வணக்கத்தைப் புலப்படுத்தும் மென்மையும், மானத்தால் வணங்காத ஆண்மையு முடையனாய்ப் பகைவர் முனையிடங்களை மிக்க எரிகொளுத்து தலால் இதழ்கள் பெரிதும்வாடி அழகிழந்த மாலையோடு பூசியசாந்தும் புலர்ந்துள்ள உத்தம இலக்கண மென்ற பலவாகிய வரிகள் மூன்றும் பொருந்திய மார்பினை யுடையவனே! நின்பெயர் நின்று நிலவுமாக என்பது. இதன் பொருளாகும். இதன் பிற்பகுதி, “ நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின் பொழில்வதி வேனிற் பேர்எழில் வாழ்க்கை மேவரு சுற்றமோ(டு) உண்டினிது நுகரும் தீம்புன லாய மாடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே” என்பது. இதன்பொருள் நினக்குரிய மலைக்கண்ணே பிறந்து, நின்னுடைய கடலைச்சென்று சேரும் யாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய புதுநீர் விழாக்காலத்து, வேனில் வெப்பத்தால் மனையில்வைகாது பொழில்களிலேவதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கையை விரும்பும் சுற்றத்தாரோடு அச்செல்வப்பயன்களெல்லாம் நுகர்ந்து மகிழ்கூரும் புனலாடு மாயத்தால் ஆடலயரும் காஞ்சிமரங்கள் நின்றபெரிய துறைக் கண்ணுள்ள மணலினும் பலவாகிய காலம் நின்பெயர் வாழியரோ என்பது. பகுதி - 14 கரிகாலன் இவன் சோழநாட்டிற் சிறந்த அரசுபுரிந்து வந்த பேரரசன் என்பதும், இவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி யென்பதும், இவன் இளமையிற் கருவூரில் தன் அம்மான் இரும் பிடர்த் தலையாருடன் இருந்த காலை, சோழநாடு அரசிழந்து அலமர கழுமலத்திலிருந்த சான்றோர் சிலர் அரசுவா வொன்றனுப்பி இவனைக் கொணர்வித்துத் தமக்கு அரசனாக்கிக் கொண்டமையும், அரசாட்சியில், தன்னையிளையனெனக் கருதிய சான்றோர் உவப்ப முறை செய்தமையும், நாங்கூர் வேளிடை மகட்கொண்டு ஆதிமந்தியென்னும் பெண் மகளைப் பெற்றதும், உறையூரினின்றும் போந்து காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராக்கிக் கொண்ட மையும், வெண்ணி, வாகை முதலிய விடங்களில் தன்னையெதிர்த்த வேந்தர் வேளிர் முதலிய பலரைவென்றதும், நாட்டின் கட்காடு கொன்று நாடாக்குதல், குளம்தொட்டு வளம்பெருக்குதல் முதலிய அருஞ்செயல்களால் நாடு வளம் பெறச் செய்தமையும், காவிரிக்குக் கரைகட்டி அதன் பெருக்கினைப் பயன் படுத்தினதையும் பிறவற்றையும் முன்னர் விரித் துரைத்திருத்தலின், இங்கு இவனை ஆசிரியர் பரணர் தம் பாட்டுக்களாற் சிறப்பித்த திறம்மட்டில் கூறப்படுகின்றது, ஆசிரியர் பரணர் இவன் தந்தையாகிய சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் புறத்தில் “வாள், வலந்தர மறுப்பட்டன்” என்று தொடங்கும் பாட்டிலும், இவனை அகத்தில், “அரம்போழவ்வளை தோள்நிலைநெகிழ” என்றும் “பிணர் மோட்டுநந்தின் பேழ்வாயேற்றை” என்றும் தொடங்கும் பாட்டு களிலுஞ் சிறப்பித்திருக்கின்றார், இப்பாட்டுக்களுள் “வாள், வலந்தர மறுப்பட்டன” என்ற பாட்டில் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் வாள், தாள் தோல், குதிரை, யானை முதலியவற்றின் இயல்பு கூறி, “நீ, இவ் வியல்பினையுடையை யாகையால் நின்னை சினப்பித்தவருடைய நாடு தாயில்லாத குழந்தையைப்போல ஒழிவின்றி வருந்தியழும்” என்பார், “அனையை யாகன் மாறே....... ஓவாது கூஉம் நின்ற உடற்றியோர் நாடே” என்று பாடுகின்றார். இனி, இவனேந்தியவாள், “வாள் வலந்தர மறுப்பட்டன. செவ்வானத்து வனப்புப் போன்றன” என்று சிறப்பிக்கப்படு கின்றது. இதன்பொருள்:- பகைவரைக் கோறலால் குருதிக்கறை படிந்து சிவந்து தோன்றும் வாள் செவ்வானத்தின் அழகு பெற்றது என்பது. போர்க்களம் புகுந்து பகைவர் சேனையைச் சாடுங்கால் நின்றும், பெயர்ந்தும் , ஓடியும் பொருதலின், காலில் அணிந்த கழல்கள் தம் அருப்புத் தொழில் தேய்வுற்று, கொல்லேற்றின் கோடுகளை யொத்தன என்பார். “தாள் களங்கொளக் கழல் பறைந்தன, கொல்ல ஏற்றின் மருப்புப் போன்றன” என்றும் இவன் கைக்கண் எடுத்த கேடகம், பகைவர் விடும் பலவாய அம்புகளால் துளைப்பட்டு, விற்பயிற்சி புரிவோர் பழகுதற்குத் தொடுத்து நிறுவிய இலக்கத்தை யொத்தது என்பார். “தோல் துவைத் தம்பின்துளை தோன்றுவ நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன” என்றும் குதிரைகள் எதிரியை எறிதற்குரிய காலம் நோக்கி இடமாகவும் வலமாகவும் செலுத்தப்பட்டுச் செல்வன, முகக்கருவியாற்றேய்ந்து குருதிதோன்றிய வாயை யுடைமையால் மான் முதலியவற்றின் கழுத்தைக் கவ்வி உதிரம் உவற்றி யுண்ட புலிகளை யொத்தன என்பார்,, மாவே, எறி பதத்தான் இடங்காட்டக் கறுழ் பொருத செவ்வாயான், எருத்து வவ்விய புலிபோன்றன” என்றும், யானைகள், பகைவரின் மதிற் கதவுகளை முறித்து வெகுண்டு உலாவுவன நுனைதேய்ந்த வெளிய கொம்புகளை யுடையவாகையால் உயிருண்ணும் கூற்றை யொத்தன என்பார், “களிறு, கதவெறியாச் சிவந்துராஅய், நுதிமழுங்கிய வெண் கோட்டான் உயிருண்ணும் கூற்றுப் போன்றன” என்றும், நீ தான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற்றேரின் மேலே பொலிவொடு தோன்றுதலால் கரிய கடலின் கண்ணே ஓங்கியெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை” என்னும் பொருளில். “நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப், பொலந்தேர் மிசைப் பொலிவுதோன்றி, மாக்கடன் நிவந்தெழுதரும், செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ’ என்றும் கூறினார். இதன்கண், “வாள், வலந்தரமறுப்பட்டன, செவ்வானத்து வனப்புப் போன்றன” என்பது முதல், “நீ செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ” என்பது வரை. மன்னவன் புகழையும், “நின்னை உடற்றியோர் நாடு, தாயில் தூவாக் குழவிபோல, ஓவாது கூவு” மென்றது, இவனைப் பகைத்தோர் நாடு கெடுவது குறித்து இரங்குதலையும் குறித்தலின், இது “குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை” யென்ற துறைக்கண் அடங்கும். இனி,“அரம் போழவ்வளை தோணிலை நெகிழ” என்னும் பாட்டு அகத்தில் தலைமகன் வினைமுற்றி மீண்டமை தோழி யுணரத் தலைமகள் சொல்லிய துறைப் பொருண்மை யறியக் கிடக்கின்றது. இதன்கண், தலைவி யொருத்தி இராப் பொழுதின்கண் வாடைக் காற்று வீசுதல் கண்டு, அதனை முன்னிலை யாக்கி, அது தனக்குச் செய்யும் வருத்தத்தையும், அதனை நீக்கவல்ல தலைவன் விரைந்து வந்தவிடத்து இவ்வாடையின் குளிர் தனக்கு வருத்தம் செய்யலாகாமை குறித்து அவ்வாடை வாளாதே ஓடுமென்றும் கூறி, அதற்குக் கரிகாலன்முன் போர் குறித்து நின்ற வேந்தர் முதுகிட்டோடியதனையும் கூறுகின்றாள். இக்கூற்றில் முற்பகுதி வாடையை முனிந்து கூறுவனவும் பிற்பகுதி கரிகாலன் முன்னர் வேந்தர் வெந்நிட்டோடினமையும் உணர்த்து வனவாம். அம்முதற் பகுதி, “ அரம்போ ழவ்வளை தோணிலை நெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி ஈர்ங்கா ழன்ன வரும்புமுதி ரீங்கை ஆலி யன்ன வால்வீதா அய் வைவா லோதிமையண லேய்ப்பக் கோளுறு குவளைப் போதுபிணி யவிழப் படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய் கடாஅ மாறிய யானை போலப் பெய்து வறிதாகிய வோங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப் பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி; முரணல் காலைக் கைதொழு மரபிற் கடவுட் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் * * * * ஓடுவை மன்னால் வாடை! நீ யெமக்கே” (அக.125) என்பது. இதன்பொருள், ஏ, வாடையே! குளிர்ந்த விதை போலும் அரும்பு நிறைந்து ஈங்கைப்புதர் ஆலங்கட்டிபோலும் வெள்ளிய மலர்கள் பரந்து, கூரியவெண்மையான மயிர் நிறைந்த கறுத்த கபோலத்தை யொத்து விளங்க, கொள்ளு தலமைந்த குவளையின் அரும்புகள் முறுக்கவிழ்ந்து மலர, உறங்குதலில்லாத பசிய கண்களையும் பரந்த அடியையு முடையவாய் மதம் பொழிந்து மாறியதனால் விளர்த்துத் தளர்ந்து நிற்கும் யானையைப்போல மழை பெய்தமைந்த தனால் விளர்த்து மேலே செல்லுதலையுடைய மேகங்கள், கரிய விசும்பின் கண், திசை தோறும் சென்று திரிய, பனி தோன்றி வருத்தும் கங்குல் யாமத்தின்கண், நின்னையெதிர்க்கும் மாறு பாடில்லாத இக்காலத்தில் தமித்தோர் வலியுடைமையை யாராயாது தண்ணென்று வீசி யாம் நின்னை வெறுக்கும்படி எம்மை வருத்துகின்றாய். அரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளை தோளிடத் திலிருந்து நெகிழ்ந்து நீங்க, தனக்குரிய இலக்கணத்தால் முற்றுப் பெறாத வாழ்க்கை முற்றுதல் கருதிப் பலரும் கைதொழும் முறைமையினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்தொழிலொன்றை மேற்கொண்டு சென்ற காதலர் விரைந்து வருவாராயின், நீ எம்மை நின் பணியால் வருத்துதல் இயலாது ஓடுவாய் காண்: இனி நின் பனிப்பும் அறவேயொழிந்தது. என்பது, “கைதொழு மரபிற் கடவுட் சான்ற செய்வினை” என்பது தேவர் காரணமாகப் பிரிந்து செய்யும் வினையென்பர் ஆசிரியர் இளம்பூரணர். “பலரும் கைதொழும் மரபினை யுடைய கடவுட்டன் மையமைந்த செய்வினை எனவே, ஓதற் பிரிதலென்பது பெற்றாம்; “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (தொல்.பொ.192) என்பதனாற் கிழவனும் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பா தென்றற்கு,“நிரம்பா வாழ்க்கை” என்றார்” என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டிப் பிரிந்தாராயினும் அவர் பிரிவினாலுளதாகிய மெலிவு தன் மெய்க்கண் நின்று தோன்றக் காட்டுதலின், “அரம்போ ழவ்வளை தோள்நிலை நெகிழ” என்று கூறினாள். ‘ஈர்ங்கா ழன்ன வரும்பு முதிரீங்கை” யென்ற பாடத்துக்கு இரவமரத்தின் விதையை யொப்ப அரும்பு மிக்க ஈங்கை” யென்று பொருள் கொள்க. “ஈர்ங்காழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முதுபெண்டு” (புறம். 276) என்றார் பிறரும். ஈங்கையென்பது ஒருவகைப் புதலாதல், “வெண்கொடி யீங்கைப் பைம்புதல்” (ஐங்.456) என்பதனாலு மறிக ஈங்கை, வால்வீதா அய், மையணலேய்ப்ப எனமுடிக்க. இது மாரிக்கண் மலரும் புதலாதல் பற்றி, “ஈங்கை வால்வீதாய்” என்றார் மன், ஒழியிசை. இனி, இதன் பிற்பகுதி, “ விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னி லச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற வொன்பது குடையு நன்பக லொழித்த பீடின் மன்னர் (போல், ஓடுவை)” என்பது இதன் பொருள், விரிந்த சாமரையால் விளங்கிய செலவினையுடைய நல்ல குதிரைகளோடு கூடிய அஞ்சத்தக்க சேனையுடன் தான் கொள்ளக் கருதிய நாடுகளிற் றங்கி வெற்றி கொண்டமையால் பெற்ற மிக்கசெல்வத்தினையுடைய கரிகாலன் முன்சென்று போர் செய்ய மாட்டாராய், வாகைப் பறந்தலை யென்னு மிடத்து அவன் வென்றிகொள்ள, போர் செய்தற்கு ஏற்ற காலமாயினும் தம் ஒன்பது குடையும், படையும் களத்தே விட்டுச்சென்ற சிறப்பில்லாத வேந்தர் (ஓடியது போல நீயும் ஓடுவாய்) என்பது சூடாவாகையென்பது வாகையென்னு மிடத்துக்கு வெளிப் படை; “பூவாவஞ்சி” என்பது போல குலமன்னர்க்குத் தம்மினின்று நீக்கலாகாதன குடையுமுடியுமாதலால், குடையை யொழித்த இவ்வேந்தரைப் “பீடின் மன்னர்” என்றார். நன் பகல், என்பது அவர் வென்றியெய்துதற்குரியகாலம் வாய்த்தமையுணர நின்றது. கரிகாலன் முன்னின்று போர் செய்தற்கு வந்தோர் ஒன் பதின்மராயினும், அவன் முன்னிற்கலாற்றாது தம் குடையும் படையும் இழந்து சென்றதுபோல, ஏ, வாடையே, நீயும் நின் இயக்கமும் பனிப்புமிழந்து நீங்குவை யென்றாளாம். இனி, “பிணர் மோட்டுநந்தின் பேழ்வாயேற்றை” (அகம் 246) என்று தொடங்கும் அகப்பாட்டுத் தலைமகனொருவன் புறத்தொழுக்கத்தினை மேற்கொண்டொழுகுவான், தன் மனைக் கட்போந்து வாயில் வேண்டிய வழி, தோழி, ஐயனே நீர் புறத் தொழுக்கத்தே நின்னால் விரும்பப் பட்ட பரத்தை யொருத்தி யொடுநெருநல் புனலாடினையென்றும் அதனா லெழுந்த அலருரை கரிகாலன் வெண்ணி யென்னுமிடத்தே முடிவேந்தரும் வேளிரும் பொருதோட வென்றியெய்த, அச்சிறப்பறிந்த அழுந்தூர் மக்கள் செய்த ஆரவாரத்தினும் பெரிதாயிருந்த தாகலான், யாம்வாயில் நேரேம் என மறுக்கும் பொருண்மை யுணரக் கிடக்கின்றது. இதன்கண், தலைவன் புனலாடவெழுந்த அலர் கூறித் தோழி வாயில் மறுக்கும் பகுதி. “ பிணர்மோ ட்டுநந்தின் பேழ்வா யேற்றை கதிர்மூக் காரல் கள்வ னாக நெடுநீர்ப் பொய்கைத் துணையோடு புணரும் மலிநீ ரகல்வயல் யாண ரூர ! போதார் கூந்தல் நீவெய்யொளொடு தாதா காஞ்சித் தண்பொழில் அகல்யா றாடினை யென்ப நெருநை யலரே * * * * தொய்யா வழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.” என்பது. இதன் பொருள், சருச்சரைபோலும் பெரிய வயிற்றினையுடைய. நத்தையின் அகன்ற வாயையுடைய ஆணும், கதிர்த்த மூக்கினையுடைய ஆரலும், சுரிவளையுமாகிய இவை நெடிய நீர் நிறைந்த பொய்கை யின்கண் தத்தம் துணையொடு புணர்ந்துவைகும் நீர் மிக்க அகன்ற வயல் சூழ்ந்த புதுவருவாயினையுடைய நின்னால் விரும்பப் பட்டாளொருத்தியோடு நீ தாது நிறைந்த காஞ்சி மரம் செறிந்த குளிர்ந்த பொழிலின் அருகோடும் அகன்ற யாற்றின் கண் புலனாட்டயர்ந் தனையென்ப. அதனாலெழுந்த அலர் வளக் குறைவில்லாத அழுந்தூர் என்னும் ஊர்க்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாயிரா நின்றது என்பது. கள்வனென்றது சுரிவளையை. “ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப” என்ற சூத்திரக் கருத்தினானே, பிணர்மோட் டுநந்தின் பேழ் வாயேற்றை” என்று கூறினார். (பேராசிரியர். தொல் பொ. 604). “யாறுங் குளனுங் காவு மாடிப், பதியிகந்து நுகர்தன் முரிய வென்ப” (தொல். பொ.149) என்றதனால், தலைவன் பரத்தை யொடு புனலாடுதலமைந்தது. நந்தின் ஏற்றையும், ஆரலும், சுரிவளையும் தத்தம் துணையொடு புணரும் ஊரனாயினும், நீ அவ்வாறின்றி, பரத்தையொடு கூடிப்புனலாடி அலர் விளைக்கின்றனை என இதன்கண் இறைச்சி தோன்றியவாறு காண்க இனி, கரிகாலனது வெற்றி கூறும் பகுதி, “ காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயிற் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருகளத் தொழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய் வலி யறுத்த ஞான்றைத் தொய்யா வழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே” யென்பது. இதன்பொருள்: பகைவரைக் காய்தற்குரிய சினமும் வலிமையும் பெரிய பெயரையுமுடைய கரிகால் வளவன் ஒலி மிக்க கள்ளினை யுடைய வெண்ணியென்னு மிடத்துக் கீர்த்தி பொருந்திய மன்னர்கள் வெகுண்டு செய்த போரில், ஒலிக்கின்ற இசையினையுடைய முரசங்கள் போர்க்களத்தே வறிது கிடப்ப, பதினொருவகை வேளிர்களோடு வேந்தர் பலர் வீழ. அவர் தம் மிக்க வலிமையைச் சிதைத்த காலத்து, செல்வக் குறைபாடில்லாத அழுந்தூர் என்னும் ஊர்க்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதா யிருந்தது என்பது. பெரும் பெயர்க் கரிகால் என்பதற்கு, “பெரும்பெயர் முருக” (முருகு. 269) என்புழிப் போலப்பெரும் பொருளை யுடைய கரிகாலன் என்றும், பொருளாவது வெற்றித்திரு என்றும் கூறினுமாம். ஆர்கலி நறவின் என்பதற்கு நீர்வெள்ளம் போல் மிக்குற்ற கள்ளினையுடைய வென்றுரைப்பினுமாம். “புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் ” (புறம்.343.) என்றார் புறத்தினும், தொய்யா. செல்வக்குறைவுபடாத. “தொய்யாவுலகத்து நுகர்ச்சியுங் கூடும்”. (புறம்.214) என்புழிப் போல உயர்ந்த விருப்பம் என்று கூறுதலுமாம் ஊடற்பொருண்மைத்தாகிய மருதத்தின் புறமாதலால் தன்னை வெண்ணியென்னு மிடத்து முற்றிய வேந்தரையும் பதினொரு வேளிரையும் கரிகாலன் தன் படையைச் செலுத்தி அவர்தம் படையைத்தள்ளி வென்று, அவர் தரமும் தம் முரசமும் படையும் போர்க்களத் தொழியப் பொருத அகத்தோன் முற்றிய முதிர்வு எனப்படுந்துறைத்தாகிய உழிஞையைக் கூறினார். “உழிஞை தானே மருதத்துப்புறனே” என்பது விதி. (தொல். பொ. 64.) பலநிலங்களினும் சென்று ஆண்டுத் தன்னை யெதிர்த்த பகை மன்னர்களைப் பொருது வென்று வாகை சூடிப்போந்த கரிகாலன் வாகைப் பறந்தலைக்கண்ணும் பல வேந்தரை வென்ற செய்தியும் வாகைத் திணையின் பாற்பட்டு, தலைவன் பிரிந்த விடத்து வருந்தும் தலைவியின் நிலைமை கூறும் பகுதியோடிணைத்து இதன் முன்னைப் பாட்டிற் கூறப்பட்டது. “வாகை தானே பாலையது புறனே” என்றார் ஆசிரியர். இங்ஙனம், தாம் பாடத் தொடங்கிய அகப்பொருளுக் கேற்பப் புறப்பொருளும் இணைத்துக் கூறும் கருத்தினராய ஆசிரியர் பரணர், கரிகாலன், வாகைப் பறந்தலையில், வென்றி யெய்தினமையும், வெண்ணியென்னுமிடத்துத் தன்னை முற்றி யோரைப் பொருதழித்தமையும் உவமமுகத்தாற் கூறினார். இவர், கரிகாலன் காலத்துக்குப்பிற்பட்டவர் என்று கருதுவோர் இச்செய்திகள் யாண்டும் யாவராலும் பாராட்டிக் கூறப்படும் சிறப்பு நோக்கிக்கூறினாராவர் என்பர். சேரமன்னர்கள், சோழ வேந்தர் ஆகிய இருபெரு வேந்தரையே சிறப்பித்துக் கூறிய இவர் பாண்டி மன்னருள் ஒருவரையும் சிறப்பிக்காமையாலும், அம்மன்னருட் சிறந்தோர் செயலும் யவராலும் பாராட்டிக் கூறப்படுவதுண்மையின், “யாது மூரே யாவருங் கேளிர்” எனுங் கருத்தினராய புலவர் பெருமக்கட்கு ஒருவரை வியத்தலும், ஒருவரை இகழ்தலுமின்மையின், கேள்விமாத்திரையாற் பெற்ற பொருள் குறித்துப் பாடுவோர், அவருள் (பாண்டிய வேந்தர்) ஒருவரையும் பாடுவராகலினாலும், அது செய்யாத இவர் தம் காலத்து நிகழ்ந்த செய்தியே கூறினாரெனக் கோடல் வேண்டும். பரணர் என்னும் ஆராய்ச்சிநூல் ஒன்று சென்னைப் பல் கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அக்கழகத்து வித்துவான். வே. வேங்கடராஜூலு ரெட்டியார் ஆவர், இந்நூலில் எடுத்தாண்ட மேற்கோள் நூல்களால், தமிழ் தெலுங்கு, கன்னடம் , மலையாளம், வடமொழி, “ப்ராக்ருதம்,” ஆங்கிலம் எனப் பல மொழிகளினும் பயிற்சியும் புலமையும் உடையவர் என்பது தெரிகிறது, இவ்வாறு தமிழ் மொழிப் புலமையோடு பிற மொழிப் புலமையும் ஒருங்குடையார் தமிழாராய்ச்சி செய்து, தமிழுலகத்திற்கு உதவிபுரிவது அரும் பணியாகும் என்பது அறிஞர் பலரும் பாராட்டும் பான்மைய தாகும். சில நாட்களுக்கு முன், யான் இந்நூல் ஒன்று கிடைக்கப் பெற்றுப் பெருமகிழ்வு கொண்டேன். பரணர் என்னும் இப் பொருளே பற்றிச் சில யாண்டுகட்டு முன்னர் யானும் ஓர் சிற்றாராய்ச்சி செய்து, நம் பொழில் வாயிலாக வெளியிட்டு வந்தேன். அதற்குத் துணையாய நூல்கள், மீட்டும் ஆராய்ந்து உண்மை துணியும் நிலையில் உள்ளன என்று பின்னர் உணர்ந்து, பிறிதொரு காலத்துத் தொடங்க வெண்ணி அவ் வாராய்ச்சியை நிறுத்தி விட்டேன். அந்நிலையிலுள்ள எனக்கு இந்நூல் நல்விருந்தாயிற்று. அதனால், இதனை ஊன்றிப் படித்து வருகையில், பரணர் பாட்டுக்கள், இலக்கண முடிபுகள், சொல்லாராய்ச்சிகள் முதலிய பல பகுதிகளில் பொருந்தாக் குறிப்புக்கள் பல தோன்றின. அவற்றை வெளியிடின், அறிவுடைப் பெருமக்கள் ஆராய்ந்து உண்மை யுணர்த்துவர் என்னும் துணிபுண்டாயிற்று. ஆயினும் அவை யனைத்தும் வெளியிடலுறின் காலம் நீட்டிக்கும் என்பதுணர்ந்து வகைக்கொன்று காட்டின், அறிஞர் உலகம் உண்மை கண்டு துணியும் என்னும் உறுதிகொண்டுமேற் செல்லு கின்றேன். பகுதி - 15 பரணர் என்னும் ஆராய்ச்சி நூல் பாட்டுக்களுக்குத் திணை கூறுதல்பற்றி, இந் நூலாசிரியர், ஒரு முடிபு கூறுகின்றார். அஃதாவது, “பாட்டுக்களுக்குத் திணை கூறுமிடத்து, முதற்பொருளினும் கருப்பொருளும், கருப்பொருளினும் உரிப்பொருளும் சிறந்த ஏதுக்களாகும் என்றல் ஆசிரியர் தொல்காப்பியனார் கொள்கையாகும்...” என்பது, “ஆனால், கருப்பொருளை மட்டும் நோக்கித் திணைவகுக்கப்பட்ட பாட்டுக்களும் உள்ளன.” என்று கூறி, “இவர் பாடியவற்றுள், குறிஞ்சித் திணைச் செய்யுட்களோ பெரும்பாலன,,,,, ” என்றும், “இவர் பரணர் மருதத்திணைப் பொருளையும் அழகு பெற அமைத்துப் பாடுதலில் வல்லவர்.” என்றும், இவற்றால், இவர் மலை நாடுகளிலும் பேரூர்களிலும் வதிந்து, அந்நிலத்துப் பொருள் களையும், அங்கு நிகழும் வழக்கவொழுக்கங்களையும் நன்கறிந்து தேர்ந்தவர் எனக் கருதலாம்” என்றும் கூறினார். இனி, பண்டையாசிரியர் ஒருவரால், தொகை நூல்கள் திணை வகுக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்தது. இவர் கூறுமாறே, ஒருபாட்டின் திணைவகுப்பிற்கு மூன்று பொருள்கள் ஏதுவாகின்றன. இம்மூன்றனுள் இப்பாட்டு இன்னபொருள் ஏதுவாக இத்திணை வகுக்கப்பட்டதென்பது நூல்களிற் கூறப் படவில்லை பெரும்பான்மையும் குறிஞ்சி, மருதம் என்பன முதலாகவே கூறப்பட்டுள. இவரும் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள திணைகளையே கொண்டுள்ளாரேயன்றி, முதற் பொருளாற் குறிஞ்சியாயின இத்துணை, கருப்பொருளாற் குறிஞ்சியாயின இத்துணை, உரிப்பொருளாற் குறிஞ்சியாயின இத்துணையென்று விளக்கிக் கூறிற்றிலர். ஒரு பாட்டின் கருப்பொருள் மருதத்துக்கும், உரிப்பொருள் குறிஞ்கிக்கும் உரியவாய் வருதலுண்டு; அவற்றுள், உரிப் பொருள் சிறந்தவழி, கருப்பொருள் மருதமாயினும் குறிஞ்சியென்றே திணை கூறப்படும், அவ்வாறு கூறப்பட்ட திணைகளுள், குறிஞ்சியும், மருதமும் பெரும்பான்மைய வாகிய வழி, கருப்பொருளும் குறிஞ்சி மருதங்கட்கே யுரிய வென ஒரு தலையாய்க் கூறலாகாது. ஆகவே, அப்பொருள் பற்றிக் கூறற்பால தாகிய முடிபினை முடித்துக் கூறல் பொருந்தாது. பரணர் பாட்டுக்களுள் குறிஞ்சியும் மருதமும் பெரும் பான்மையவாயினும், இவர் கருத்தின்படி அவை நின்ற பாட்டினுள் சிறந்து நின்றது கருப்பொருளே என்றல் நிரம்பாது. கருப்பொருளின் சிறப்புக் கருதிப் பாடினார் வாழ்க்கையியல் கூறல்வேண்டுதலினால், பரணர், மலைநாடுகளிலும் பேரூர்களிலும் வதிந்து அங்கு நிகழ்வனவற்றைத் தேர்ந்து கூறினாரென்றால் நிரம்பாது. மேலும், “கருப்பொருளை மட்டுமே நோக்கத்திணை வகுக்கப்பட்ட பாட்டுக்களும் உள்ளன” என்று கூறியவர். அவை இத்துணைய வென்று துணிந்து, அவற்றால் கோடற்குரிய இம்முடிபினைக் கூறா தொழிந்ததே, இந்நிரம்பாமைக் கேதுவாதல் அறிக. இனி, “பரணர் பாட்டுக்களிற் காணும் தவறான பாடங் களும் அவற்றிற்கேற்ற அமைதிகளும்” என்ற பிரிவின்கண், இந்நூலாசிரியர், பரணர் பாட்டுக்கள் உள்ள தொகை நூல்களைப் பதிப்பித்த ஆசிரியன்மாரைப்பற்றிக் கூறுவார், நற்றிணைப்பதிப் பாசிரியர், பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இவற்றைப் பதிப்பித்த ஆசிரியர் ஆகிய இருவரையும் பாராட்டிக் கூறிவிட்டு, குறுந்தொகை, அகநானூறு *என்ற இரண்டனையும் பதிப்பித்த ஆசிரியன் மார்களின் முயற்சி யருமையினையும் கூறாதொழிந்தார். இந்நூல் உயர்வகுப்பு மாணவர்க்குப் பாடமமைக்கும் கழகத்தார் கையிலிருத் தலின், மாணவர்கள் படிக்க நேரும் நிலையும் எய்துமாகலால், ஆராய்ச்சியாளர் நடுவிகந்து செல்லுவது மாணவர் மனத்துக் கூடாக் கொள்கையைக் கொளுத்தும். அது பற்றியே, மேனாட்டாரும், “இந்நூலைக் கற்கும் ஒவ்வொரு மாணவனும் பிற்காலத்தில் தன்மொழிக்கு ஆக்கந்தேடும் தனிப்பெருமகன்,” என்பதனை, அறிவாராய்ச்சி செய்து அறிவுலகத்திற்குதவும் ஒவ்வோரறிஞனும் தன் மனத்திற் கொள்ளற்பாலன் 1என்பர். இனி, நற்றிணைப் பதிப்பின்கண் “திருத்தமில்லாத பாடங்களும், பொருத்தமில்லாதவுரைகளும் சில விடங்களிற் காணப்படு கின்றன எனவும் கூறுதல் தவறாகாது” என்று தொடங்கி, பரணர் பாட்டுக்களை மட்டில் வரைந்து கொண்டு அவற்றுட் சிலவற்றில், தாம் கண்ட “திருத்த மில்லாத பாடங்களும் பொருத்தமில்லாத வுரைகளும்” காட்டுவார். சிலவற்றில் திருத்த முடையதனையும், திருத்த மில்லாத பாடமெனத் திரியக் கொண்டு. “பொருத்த மில்லாதவுரை” எழுதுகின்றார். யான், மேலே கூறியவாறே, ஒன்று காட்டுகின்றேன். வெண்ணெல் அரிநர் தண்ணுமை வரீஇப் பழனப் பல்புள் இரியக் கழனி வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும் தேர்வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல்கவின் தொலையினும் தொலைக; சார விடேஎன்; விடுக்கு வெனாயின், கடைஇக் கவவுக்கை தாங்கும்; மதுகையங் குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையை ஆகில் கலங் கழீஇ யற்றும் வாரல்; வாழீய சுவைஇ நின்றோனே, (நற். 350) இது நற்றிணையில் காணப்படும். பரணர் பாட்டுக்களுள் ஒன்று. இதன்கண், “கவவுக்கை தாங்கும் மதுகையங் குவவு முலை” யென்பதும், “ஆகில் கலங்கழீ இயற்றும்” என்பதும் “திருத்தமில்லாத பாடங்க” ளென்றும், இவற்றிற்கு ஆசிரியர் நாராயணசாமியையர் எழுதியவுரைகள், பொருத்தமில்லாத வுரைகள்” என்றும் கூறி, இவ்வாராய்ச்சியாளர், “கவவுக்கை தாங்கு மதுகைய குவவுமுலை” யென்றும் “ஆசிலகழந்தழீ இயற்று” என்றும் திருத்திக்கொண்டு “பொருத்தமில்லாத” உரை கூறினர். அப்பொருத்தமின்மையை யாராய்ந்து காட்டுவ தன்முன், இப்பாட்டிற்கு ஐயரவர்கள் கூறியவுரையினைக் காண்டல் வேண்டுதலின் அதனை முன்னர்க் காட்டுகின்றேன். அது. “இது தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது எ-து பரத்தையிற் பிரிந்து ஆற்றாமை வாயிலாகப் புகுந்து பள்ளியிடத் தானாகிய தலைமகனைத் தலைமகள் நெருங்கி ஊடல் தீர்கின்றாள். ஊரனே, எனது நலன் முழுவதும் தொலையினும் என்னை நீ நெருங்கவிடேன்; நெருங்க விடுவேனாயின், என் வரைத்தன்றி என் கை நின்னையணைத்து முயங்கா நிற்கும்; சாந்தமுதலாயின வுடையை யாதலின், நின்னை நீக்குவது கலங்கழிப்பது போலாம்; அதனால், இங்கு வாராதேகொள்; நின்னொடு அப்பரத்தை நீடுவாழ்வாளாக என, வெகுண்டு கூறாநிற்பது. “உரை:- வெள்ளிய நெற்கதிரையறுக்கும் மள்ளர் முழக்கு கின்ற தண்ணுமைக்கு அஞ்சி வயலிலுள்ள பலவாகிய புள்ளின மெல்லாம் இரிந்தோடிச் செறிதலால், வயலின் மீது தாழ்ந்து வளைந்த கிளையையுடைய மருதமரத்தே தூங்குகின்ற பூங்கொத் துக்கள் உதிராநிற்கும் 1இரவலர்க்குத் தேர் கொடுக்கும் வன்மையை யுடைய விரான் என்னும் கொடை வள்ளலின் இருப்பையூர் போன்ற எனது பழைய அழகெல்லாம் கெடுவதாயினும் கெடுக: என்னருகில் நீ நெருங்குமாறு விடுவேனல்லேன்; அங்ஙனம் விடுகிற் பேனாயின், என்வாயினால் நின்னை விலக்கப்பட்டும், என் அகத்திடுகைகள் நின்னைவல்லே யணைத்து முயங்கா நிற்கும்; நீ தானும் வலிமையுடைய குவிந்த பரத்தையின் கொங்கை யினாலே சாடப்பட்ட சந்தனத்தையுடையை: அவள் குழைய முயங்கலாலே, துவண்டு வாடிய மாலையையுடையை; ஆதலால், நின்னைத் தீண்டுதல். கழித்தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்: அதனால், என் மனையின் கண்ணே வாராதே கொள்; நின்னை அணைத்து முயங்கும் அப்பரத்தை நின்னொடு நெடுங்காலம் வாழ்வாளாக; எ-று.” இனி, இந்நூலாராய்ச்சியாளர். இப்பாட்டில். “சாரவிடே என்” என்பது முதல், ஈற்றடியின் “வாரல்” என்பது வரையி லுள்ள பகுதிகளையும், அதன் உரைப்பகுதியாகிய, “என் னருகில் நீ என்பது முதல். “வாராதே கொள்” என்பது வரையில் எழுதி, இவை “சில தவறுடையனவாகக் காணப்படுகின்றன” என்றும் “இது, தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது என்னும் துறைக்கு பொருள் பொருத்த மற்றுப்பொலிவிழந் திருக்கின்றது” என்றும் கூறி, தாம் திருத்தியமைத்து உரை வகுத்ததனைப் பின்னர்க் குறிக்கின்றார், இப்பகுதியின் கண், “சில தவறுடையனவாகக் காணப்படுகின்றன” என்றும்’ “பொருள் பொருத்தமற்றுப் பொலிவிழந்திருக்கிறது” என்றும் தாம் கொண்ட மேற்கோளைச் சாதிப்பதற்குரிய ஏது வொன்றும் கூறிற்றிலர். ஒருவர் ஒருபொருளின் உண்மை நிலை காண்பதற்குச் செய்யும் ஆராய்ச்சிக்கண் பிழையுள்ளன தோன்றின், அவை உளவாதற்குரிய ஏதுக்களை இயன்ற அளவு கண்டு, அவற்றின் வன்மை மென்மைகளைத் தூக்கி நோக்கி அவற்றிற்குத் தகக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்யற் பாலர் தன் மனத்தின் கண் பிழையுளதெனத் தோன்றிய துணையானே; ஏதுகாணாது, பிறிதொரு முடிபு வகுத்தல் பெரும்பாலும் தவறாதல் ஒரு தலையென அறிஞர் கூறுப 1அம்முறையில், இவர் தம்மேற் கோளைச் சாதிக்கும் ஏது காணாமைக்கு ஏது என்னை? எனின், கூறுவல். இப்பாட்டுக்களை ஆராயத் தொடங்கும் தொடக்கத்தே, ஏடுகள் சிதைந்தும் குறைந்தும் கிடந்த இப்பண்டைத் தமிழ் நூல்களை (தொகை நூல்களை) எத்துணை ஆராய்ந்து பதிப்பிப்பினும் அவற்றில் சிற்சில இடங்களில் பிழைபாடுகள் நேராமற் போகா என்பது ஒருதலை. அன்றியும், பதிப்பிப்போரின் ஆராய்ச்சிக் குறைவினால் நேர்ந்த சில பிழைகளும் அவற்றிற் காணப்படும்” என்னும் உணர்வு கொண்டு தொடங்கியதே தக்க ஏதுவாகும். அன்றியும், “கவவுக்கை தாங்கும் மதுகையங் குவவுமுலை” என்பதனைக் கிடந்தபடியே கொள்ளின்வரும் குற்றமும், ‘ஆகில் கலங்கழீ இயற்றும்” என்பதன் பொருளையாராய்ந்து காணாமையும் வேறு ஏதுக்களாகும். இனி, இவர் திருந்திய பகுதியும், அதற்குக் கூறியபொருளும் ஆராயுமுன், இவர் ஆராயாது விடுத்தவற்றை ஆராய்கின்றேன். “கடைஇக் கவவுக்கை தாங்கும், மதுகையங்குவவு முலை” என்பதனை,‘ கடைஇக் கவவுக்கை தாங்கும்” என்று பிரிந்து, “மதுகை” யென்பதனைக் “குவவுமுலை” யென்பதனோடு இயைத்து, ஊர, என் தொல்கவின் தொலையினும் தொலைக; நின்னை என்னருகு சாரவிடேன், விடுவனேல், “என் வாயினால் நின்னை விலக்கப்பட்டும் என் அகத்திடுகைகள் நின்னைவல்லே அணைத்துமுயங்கா நிற்கும்” என்று ஐயரவர்கள் உரை கூறினார்கள். “கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையங் குவவுமுலை” என்பதனுள், கடைஇ என்பதற்கு விலக்கி என்று பொருள் கொண்டு, பின் அதனை விலக்க எனத்திரித்து,“என் வாயினால் நின்னை விலக்கப்பட்டும்” என்று தொடர்புரை கூறினர். இதன் சொன்னிலை கடவியென்பது கடவுதலைச் செலுத்துதல், வினவுதல் என்ற பொருண்மைக்கண் சான்றோர் வழங்கியுளரேயன்றி விலக்கற்பொருளில் வழங்கியது காணப் படவில்லை. மேலும் என்வாயினால் நின்னை விலக்கப் பட்டும்” என்பது சொற்றொடர் அமைதி பெற்றிலது. இனி, இவ்வாராய்ச்சியாளர். ‘விடுக்கு வெனாயிற் கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகைய” என்று கொண்டு ஒருவேளையான் விடுக்கினும் என் கைகள் நின்னைப் புறத்தே செலுத்தித் தடுக்கும் வலிமையுடையனவாகும் “என்று உரை கூறினர். ஈண்டு இவர் கடைஇ என்பதற்குச் செலுத்தியென்று கூறிய பொருள் பொருந்தும்; ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇ (பதிற்.31.32) எனப் பிற சான்றோரும் கூறுதல் காண்க. வன்மைப் பொருளதாகிய மதுகையென்னும் சொல், ஆண்மையும் உரனும் தோன்றக் கூறுமிடத்து வழங்கல் சிறப் பேயன்றிப் பிறபொருட்கண் சிறவாது. கொங்கைக்கு வன்மை கூறுப வாயினும் அஃது அவ்வன்மைச் சொல்லாற் உணர்த்துதற் குரித்தேயன்றி, “மதுகை” யென்னுஞ் சொல்லானன்று. ஒருகால் இந்நெறி மாறிக் கூறப்படின் அஃது ஆசிரியர் சேனாவரையர் கூறியதுபோல, “உலகத்தார்” இடைத் தெரிவின்றி வழங்குகின்றார் எனவேபடும் ஆகவே நற்றிணை உரையாசிரியர், மதுகையங் குவவுமுலை” யென்று கொண்டு கூறியபொருள் சிறவாதென்பது தோன்றிற்று. இந்நிலையில் இந்நூலாராய்ச்சியாளர், அவ்வாறு இயைக்காமை பொருந்துவதாயிற்று. கவவுக்கையென்பதற்கு நற்றிணையுரைகாரர், அகத்திடு கைகள் என்றும், தாங்கும் என்பதற்கு அனைத்து முயங்கா நிற்கும் என்றும் பொருள் கூறினர் இந்நூலாராய்ச்சியாளர் கவவு என்னும் உரிச்சொல்லிற்கு அதுவே பொருளாக ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினமையின், அதனை விடுத்து, ‘என் கைகள்’ என்றே பொருளெழுதியொழிந்தார் போலும். ஆகவே ‘கடை இக்கவவுக்கை தாங்கும் மதுகையங்குவவுமுலை” என்பதனை நற்றிணை யுரைகாரர் கொண்டு கூறிய பொருளினும் இந்நூலாராய்ச்சியாளர், “கடைஇக் கவவுக்கை தாங்கும் மது கைய” என்று பிரித்துக் கொண்டது சொன்னெறியிற் பொருந்துவதாம். பொருணெறியிற் பொருந் தாமையினைப் பின்னர்க் கூறுவல். இனி, “ஆகில்கலங்கழீ இயற்றும்” என்பதற்கு நற்றிணை யுரைகாரர், துறைவிளக்கங் கூறியவிடத்து, “நின்னை நீக்குவது கலங்கழிப்பது போலாம்” என்றும், உரையின்கண், “நின்னைத் தீண்டுதல்,*” கழித்தெறிந்த தாழி முதலியவற்றைத் தீண்டிய அத்தன்மையதாகும்” என்றும் கூறினார். இருவழியும் பொருள் ஒன்றே. இனி, இந்நூலாராய்ச்சியாளர், இதன் பொருளை யாராய்ந்து உணரமாட்டாது, இது பிழையாமெனக் கருதிய தோடு நில்லாது; இஃது “ஆசிலகலந்தழீ இயற்று” என்று “இருக்கத் தக்க” தென்று கூறி, இதற்குப் “பரத்தை யினது குற்றமில்லாத மார்பைத் தழுவிய அத்தன்மையுளது” என்றொரு பொருத்தமில்லாத உரையும் கூறி, “குற்றமில்லாத மார்பு என்றது குறிப்பு” என அதன்மேலுமொரு விசேடமும் கூறி “ஆசினகல” மெனப் பாடமிருப்பினுமமையும், (பாடங்களை நாமே படைத்துக் கொள்ளலாம் போலும்!) என்றும் கூறினர். இந் நிலையில், பழைய நூல்களைப் பதிப்பிக்கும் செயல்பற்றிச் சில கூறல்வேண்டுதலின், அதனைக்கூறி, மேற்செல்லுகின்றேன். பண்டைத் தமிழ் நூல்களை ஏட்டுப் பிரதிகளிலிருந்து பெயர்த்தெழுதி வெளியிடும் பெருந்தொண்டினை மேற்கொள் வோர் அஃகியகன்ற அறிவும், அதன் பயனாகப் பெற்ற மனத் தூய்மையு முடையராவர். அவ்வேட்டுப் பிரதிகளிற் காணும் எழுத்துக்களுள் மெய்யெழுத்துக்கள் புள்ளி யின்றியும், உயிர் மெய்யெழுத்துக்களுள் கொம்பு சுழிக்கப் படுவன சுழிக்கப் படாமலும், கை, சை, என்பனவும், பை, யை, மை, என்பனவும் வேறு பாடுதோன்றாமலும் பிறவாறும் இருக்கும், இந்நிலையினை, நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச் சிலையாருரை பதிப்பாகுங் காலத்தில் டாக்டர் உ.வே சாமிநாதையரவர்கள் உதவிய ஏட்டுப் பிரதியை வைத்துக் கொண்டு ஒப்புநோக்குதல், பெயர்த் தெழுதுதல் முதலிய முன்னணி வேலைகளை, இதுபோது நாமக்கல் போர்டு உயர்கலா சாலையில் தமிழாசிரியராகவிருக்கும் திரு. மாவீ. உலகவூழியரவர்களோடு யானும் எங்கள் ஆசிரியர் திரு.வேங்கடாசலம் பிள்ளையவர்கள் ஆணைவழி நின்று செய்து வந்த காலத்தில் ஒருவாறு அறிந்தேன். பின்னர், எங்கள் வீட்டிலிருந்த ஞானாமிர்த நூலின் *ஏட்டுப் பிரதியிலிருந்து பெயர்த்தெழுதிய காலத்து, இவ்விடரினை நன்கு கண்டேன். அதுபோது பதிப்பாசிரியன்மார் மேற்கொள்ளும் மனத்தூய்மையும், அதற்கேதுவாகிய அவரது அறிவொட்பமும் எங்களுக்குப் புலனாயின. இம்மாண்பே, நற்றிணைப்பதிப்பாசிரியர் மாட்டும் அமைந்திருந்த தென்று கூறுதல் மிகையே. அவர் இப்பாட்டினை யுணர்ந்து உரையெழுதிப் பதிப்பித்த காலத்துப் பிற்கூறுமாறு துணிந்து கூறியிருப்பரென்று நினைக்கின்றேன். ஏட்டுப் பிரதியில், “ஆகில் கலங்கழீ இயற்றும்” என்பது “ஆகில கலங்கழீ இயற்றும்” என்று தோன்றிற்று. இந் நிலையில் பொருள் விளங்காமையின், பிற பிரதிகளைநோக்கி, ஆண்டும் அதுவே தோன்றக்கண்டு, அதன் பொருளாராய்ச்சியில் அவர் கருத்தைச் செலுத்தியிருப்பர். இத்துணை வருத்தமேன்? ஆசி லகந்தழீ இயற்று’ என்று திருத்திக் கொண்டால் என்னை? எனின், அது திருத்துவோர் கருத்தாமேயன்றி, நூலாசிரியர் கருத்தாகாது; அன்றியும், அஃது அந்நூலைப் படிப்பாரை வஞ்சித்தலுமாம் என்பது அப்பெருமக்கள் கருத்து. இதற்கு டாக்டர். உ.வே சாமிநாதையரவர்களே நிலைத்த சான்றாவர். பிரதிகளில் விளங்காமை தோன்றியவிடத்து, ஒப்புநோக்கல், பிற நூல்களைத் துணைகொண்டு உண்மை நிலைகாண்டல் முதலியனவும், இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை முதலிய பிழையுறு பகுதிகளைத் திருத்துதல் செய்தலும் ஆகிய இவையே பதிப்பாளர் செயற்குரியர். நிற்க, நற்றிணை யுரைகாரர், “ஆகில் கலங்கழீ இயற்றும் ” என்றிருப்பது கண்டு, பிற நூல்களையாராய்ந்தவழி, அகநானூற்று 196- ஆம் செய்யுளைக்கண்டு, ‘தொடு கலங் குறுகவாரல்” என்ற பகுதிக்கண் தம்கருத்தைச் செலுத்தியிருப்பர் அப்பாட்டை யெழுதியவரும் பரணரே யாதலும், அதன் பொருளும் இப்பாட்டினது போலத் தலைமகன் புறத்தொழுகிப் போந்தானைத் தலைமகள் புலந்து கூறியதாகவேயிருத்தலும் கண்டு “கெடுத்துப் படுநன்கலம் எடுத்துக் கொண்டாங்கு” மகிழ்ச்சியுற்றிருப்பர். அவ்வக நானூற்றுப்பாட்டில், தலைமகள், தலைமகனை நோக்கி, ‘நின்னலத் தகுவியை முயங்கியமார்பு, தொடுகலம் குறுகவாரல்” என்றனள் இதன்கண், தலைமகள் குறுகவந்தவழி, அவன் தீண்டுதலால் “தொடுகலம்” தொடாக்கலமாய் இப்பாட்டுக்கூறும் “ஆகில்கல”மாம். ஆகவே, அது நீக்கற் பாலதேயன்றி, நீக்காது கோடற்பால தன்றாம். அக்கருத்தால், ஈண்டும், தலைமகள், தலைமகனை நோக்கி, “நின்னைச் சார விடுக்குவெனாயின், தூய்மையில்லாத நின்மார்பைக் கோடல் நேர்தலின், அஃது ஆகில் கலத்தை அமைதிப்பெறக் கழுவிக் கொண்டாற் போலும்” என்றாளாம், எனவே, “ஆகில் கலங்கழீ இயற்றும்” என்ற பாடமே பரணர் கருத்தொடு பட்டபாட மாதல் விளங்குதலின், “ஆசில கலந்தழீ இயற்று” என்று இலேசாகத் திருத்திக் கொள்ளுதல் நம்மனோர்க்கு ஆகாத செயலாயிற்று. ஆகவே, இத்துணையும் கூறியவாற்றால். இந்நற்றிணைப் பாட்டின்கண், “கடைஇக், கவவுக்கை தாங்கு மதுகையங் குவவுமுலை” என்பதனை, “கடைஇக், கவவுக்கை தாங்கு மதுகைய குவவுமுலை” என இந்நூலாராய்ச்சியாளர் கொண்டது பொருணெறியாற் பொருந்தா தாயினும், சொன்னோக் கால் ஒருவாறு பொருந்துமென்பதும், “ஆகில் கலங்கழீ இயற்றும்” என்பதனை “ஆசிலகந்தழீ இயற்று” எனத் திருத்திக் கொண்டது பொருந்தாதென்பதும் கூறியவாறாம். இனி, இந்நூலாராய்ச்சியாளர், “கடைஇக் கவவுக்கை தாங்கு மதுகைய” என்றது பொருணெறியாற் பொருந்தாமையினைக் காட்டுகின்றேன். பரணர் மிகச் சதுரப்பாடமையப் பேசும் வன்மைப் படைத்தவர் என்பதனைக் கண்ணகி காரணமாக, அவள் கணவன் வையாவிக் கோப்பெரும் பேகன் பால் சென்று பாண்டிய ‘அருளாயாகலோ கொடிதே’ (புறம்.144) என்று தொடங்கும் பாட்டினை உணர்ந்த அறிஞர் பலரும் அறிவர். அவ்வறிவு நெறியே பற்றி இதனையாராய்தல் வேண்டும். இதுவும் அவர் பாட்டன்றோ! புறத்தொழுகிப்போந்த தலைமகன் ஆற்றாமை வாயிலாகத் தன்மனைக்கட் புகுந்திருந்தானைப் புலந்த உள்ளத் தளாய தலை மகள் அவனை மறுத்தற்குக்கொண்ட மேற்கொள் “சாரவிடே என்வாரல்” என்பது. இதனைச் சாதித்ததற்குப் பயனையேது வாகக் கொண்டு, விடாத வழியெய்தும் ஆக்கமும், விட்டவழி யெய்தும் கேடும் கூறும் கருத்தினளாயினள். ஆக்கம், “என் தொல்கவின் தொலையினும் தொலைக” என்பது. கவினது கேடு எவ்வாறு ஆக்கமாம் எனின், தலைமகற்கெய்தும் இன்பம் தனக்கு மெய்திற்றாகப் பேணும் கற்புக் கடம் பூண்டவளாதலின், கவின் தொலைவு தனக்குக் கேடாயினும், பரத்தையிற் பிரிந்த தலை மகற்கு இன்ப நுகர்ச்சி யெய்துதலால் ஆக்கமாதல்கொண்டு “என் தொல்கவின் தொலையினும் தொலைக” என்கின்றாள். கேடு, “விடுக்குவெனாயின்” என்பது முதலாகக் கூறியன, “நல்லது செய்தலாற் றீராயினும், அல்லது செய்த லோம்புமின்” (புறம்.195) என்பவாகலின், ஆக்கமின்றாயினும், கேடின்மையே பெரிதும் நாடப்படுமாகலின் அதனை “ஆகில் கலங்கழீஇயற்றும் வாரல்” என்றாள். விடாவழி நினக்கெய்தும் வருத்தத்தினும், விடுக்கு வெனாயின் எய்தும் வருத்தம் பெரிதாம் என்றற்கு உவம முகத்தாற் கூறினாள். *“ ஆகில் கலங்கழீ இயற்று” என்பதனை விரித்தவழி, தீண்டற்காகாத கலத்தைத் தீண்டல் குறித்து அதன் தூய்தன்மை நீக்கிக் கொள்ளுதல்போல, பரத்தையைக் கூடி, அவள் செய்த குறியால் தூய்தன்றாகிய நின்மார்பினை அக்குறி’ கெடுத்துக் கூடுதல் நிகழும் என்று விரியும். ஆகில்கலம், பரத்தையைக் கூடிய மார்பாகவும், அதன்பாலுள்ள தூய்தன்மை பரத்தை செய்குறி யாகவும், கழீஇக்கோடல், சாரவிடின் அவனாற் கவவப்படுதல் ஒரு தலையாகலின், அக்காலத்து அவன் மார்பிற்குறிகெட்டுத் தோன்றலால் கூட்டம் நேர்தலாகவும் கொள்க. உள்ளதன் உண்மைகூறி யூடுகின்றாளாகலின், மார்பிற் குறியை, “குவவுமுலை சாடிய சாந்தினை வாடிய கோதையைய் ” யென வகுத்துக் கூறினாள். உவமைக்கண். கழீஇயற்று என்றதற் கேற்ப, அவன் மார்பிற் கூடுதல் நேர்தற்கு அவனாற் கவவப் படுதல் வேண்டுதலின், “கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகைய” என்றதனைத் தலைவி கைம் மேலேற்றிக் கூறுதல் குற்றமாதல் பெற்றாம். அன்றியும், தலைமகனைச் சாரவிடினும், தலைமகள் சாரப்படாது நீங்கலா மாகலின், அவனை விடுவதால் இவட்குண்டாகும் இழவென்னை யெனின், விட்டவழி அவன் கையகப்பட்டு அவள் நீங்குதல் கூடாதாம். ஆகவே அக்கூடாமைப் பொருள் விளங்காமையினாலும், “கவவுக்கை தாங்கும்மதுகைய” என்ற பாடம் பொருந்தாதொழிதல் காண்க. பின், என்னையோ உண்மைப் பாடமெனின், ஏட்டுப் பிரதிகளில் யை என்னும் எழுத்துச் சிலவிடங்களில் யகர ஙகரம் போலத் தோன்றுத லுண்டாதலின், “மதுகையை” என்பதே “மதுகையங்” எனக் கருத நின்ற தென்றுணர்க, “விடுக்குவெனாயின், கடைஇக் கவவுக்கை தாங்கும துகையை” என்பது உண்மைப் பாடமாம். ஏனைச் சாந்தினை, கோதையை என நின்றாற்போல இதுவும் மதுகையை, சாந்தினை, கோதையை யாகலின். ஆகில் கலங் கழீ இயற்று” என இயைந்து முடியுமாறு காணப்படும். படவே, இப்பகுதி, “ ................................................. என் தொல்கவின் தொலையினும் தொலைக; சார விடேஎன்; விடுக்குவெனாயின், கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையை; குவவுமுலை சாடிய சாந்தினை; வாடிய கோதையை; ஆகில் கலங் கழீஇ யற்றும்; வாரல்; வாழிய கவைஇ நின்றோளே” எனவரும். இதன்பொருள்: நின்னைச் சாரவிடாவழி என் பழமைக்கவின் கெடுவதாயினும் கெடுக. நின்னை என்னருகில் வரவிடேன். விடுவனேல், முற்படச் செலுத்திப் புல்லி நின் அகத்திடும்கைகள் அகப்பட்டயான் மீளாவாறு தடுக்கும் வலியினையும், பரத்தையின் திரண்ட கொங்கை மூழ்குதலால் சாடப்பட்ட சாந்தினையும் குழைய முயங்குதலால் வாடிய அவளது கோதையினையு முடையயாகலின், அது, தீண்டற்காகாத கலத்தைக் கழுவிக் கொள்ளுதல் போல்வதாம்; ஆகலின். என் அருகுவாரல். நின்வரவு அவள் அறியின் பிறிது படுவாளாகலின், நின்னைக் கூடி நின்ற அப்பரத்தை வாழ்வாளாக என்பது. பிரிவருமை தோன்றத் தன்கவினைத் தலைவி, “தொல்கவின்” என்றாள். சார்பு, கருமச்சார்பு. கடைஇ என்பது மேலே கூறப்பட்டது; இவ்வினையெச்சத்தைக் கவவு என்னும் வினைப்பெயரொடு முடித்து, முற்படச் செலுத்திக் கவவு தலையுடைய கை என்றும் கூறலாம். இருகையாலும் பற்றியவழி, பற்றப்படுபொருள் அகத்திடப் படுதலால், அவ்வாறு அகப் படுமாறு முற்படச் செலுத்தப்படும் கை ஈண்டுத் தலைமகன் கையேயாதலின், அவன் கையை, “கவவுக்கை” யென்றாள். தாங்கும் என்பது “உறுநர்த்தாங்கும்” என்றாற்போல நின்றது. இந்நூலாராய்ச்சியாளர் கூறியவாறு மதுகைய என்றே கொண்டு முன்னே செலுத்திக் கவவுவரும் நின்கைகள் என்னைப்பற்றி மீளாவாறு தடுக்கும் வலியுடையன வாகும் என்ற கூறுவதமையு மாயினும், முன்னர், சாந்தினை, கோதையையென வருதற்கேற்ப மதுகையை எனவரும் இயைபு சிறப்பாகலினாலும், விடுக்குவெனாயின், கழீஇயற்று எனவரும் தொடர்நிலை, மதுகைய என்ற தனால் இடையறுதலாலும், அது சிறவாது. கைகள் பன்மையாயும், மதுகையை என்பது ஒருமையாயும் இருத்தலின், பன்மைப்பெயர் ஒருமை வினைகொள்ளுதல் குற்றமன்றோ எனின் குற்றமாகாது. என்னையெனின், பன்மைச் சினைப்பெயர், முதற்குரிய வினைகொண்டு முடியும்வழி “பன்மைகூறுங் கடப் பாடிலவே” (தொல். சொல். 61) என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளார். இச்சூத்திரத்து ஆசிரியர் கையினைக் கூறிற்றிலரெனின், சினைவினை முதன்மே னின்றதென்று கூறிக்கொள்க. கவவு என்பது, பெயராயும், வினையாயும் வருதலை, “அவவுறு நெஞ்சம் கவவு நனிவிரும்பி” யென்னும், பிரிந்துற லறிபாவிருந்து கவவி, நம்போல் நயவரப் புணர்ந்தன” (ஐங். 360 419) என்றும் முறையே வந்தமை காண்க. அற்றும் என்பதில் உம்மை, ஆக்கங் குறித்து வந்தது. இசைநிறை என்றுமாம்; உம்மை இல்லையாயின், சொல்லொழுக்கம் அறுபட்டு, “வாரல் வாழிய” என்பன முதலியவற்றோடு தொடராதொழியும். ஆகையால், “ஆசிலகலந்தழீ இயற்று” என உம்மையின்றிக் காட்டலும் குற்றமாம். தலைமகன் தன்பால் வந்து கவவு விரும்பிச் சார நின்றதனை அவன் பரத்தை, இதுகாறும் அவன் வாரா வகைப் பிணித்திருந்தாள், இதனையறியின் உயிர்வாழாள் என்பாள், “வாழிய கவைஇ நின்றோளே” என்றாள். கற்புக் கடம்பூண்ட பொற்புடை மகளிரே வாழ்த்துதற்குரியராகலின், “வாழிய” வென்றாள். இனி, இந்நூலாராய்ச்சியாளர், ‘கடைஇக், கவவுக்கை தாங்கும் மதுகைய” என்று திருத்திக் கொண்டு, “ஒரு வேளையான் விடுக்கினும் என் கைகள் நின்னைப் புறத்தே செலுத்தித் தடுக்கும் வலியையுடையனவாகும் ” என்று பொருள் கூறினர். “நின்னைச் சாரவிடின், யான் நின் கைகளாற் கவவப் பட்டு மார்பிற் கூடுதலை நேர்தல் நிகழும்” என்பதனைக் கூறுதற்கு நாணி உவமமுகத்தால் உணர்த்திய பெரு நாணினளாகிய தலைமகள் தலைமகனைப் புறத்தே செலுத்தற்கு நினைத்தலும் செய்வாளா? ‘எள்ளின் இளிவாமென்றெண்ணியவர் திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு” (குறள். 1298.) என்று கூறும் இயல்பினளாய தலைமகட்கு இக்கருத்து நிகழ்ந்து வாயாற் கூறப்பட்டதாகக் கூறுவது பொருளிலக்கணம் அறியாதார் கூறும் கூற்றன்றோ. ஆகலின், அதுபொருளின்றெனத் தள்ளுக. இவ்வாறு கூறப்படுவன “அறக்கழி வுடையன” என்று கொண்டால் வரும் குற்ற மென்னையெனின், தலைமகனைப் புறத்தே செலுத்தற்குத் தலைமகள் கை துணியினும், நாணின் மையென்னும் குற்றமாய் “மிக்க பொருளினும் பொருள் வகை புணர்க்க, நாணுத் தலைப் பிரியா நல்வழிப் படுத்தே” என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின், அறிஞரால் கொள்ளப் படாதாம். “ஆகிலகந் தழீ இயற்று” என்று தாம் திருத்திக் கொண்ட பாடத்துக்கு, “பரத்தையினது குற்றமில்லாத மார்பைத் தழுவிய அத்தன்மையுளது” என்று பொருள் கூறுவர் பரணர் என்னும் இந்நூலாராய்ச்சியாளர். விரிந்த பண்புடைமைபற்றி ஆடவர் மார்பு அகலம் எனப்படுமாகலின், “ஈர்க்கிடை போகாவேரிள வனமுலை” (பொருந 36) என அகல மின்மையே ஓர் அணி யாகக் கூறப்படும் மகளிர் மார்பினைப் பரணர் அகல மென்றார் என்றுகோடல் அசம்பவமாகும். தலைமகனைப் புலந்து மறுக்கும் தலைமகள், பரத்தை செய்த குறிகண்டு பொறாது ஊடுபவள். தான், அவள் மார்பினைத் தழுவிய அத்தன்மையுளது என்று நினைத்தலும், ஒருமகள் வேறொரு மகளின் மார்பினைத் தழுவுவதாக நினைத்தலும் பொருளிலக்கணமறிந்தார் கூறுவனவல்ல. மேலும், குற்றமில்லாத மார்பு என்றது குறிப்பு” என்கின்றார், வெளிப்படையாயின் குற்ற முடைய மார்பு என்பதாம். ஆகவே, அவள், “வாரல்” என்றதனோடு நில்லாது “வாழிய கவைஇ நின்றோளே’ என வாழ்த்து கின்றாளாகவின் அக்குறிப்பு வேண்டாமையறிக. “ஆசிலகலம்” என்றும் “வாழிய” என்றும், தலைமகள் பரத்தையை ஏத்திக் கூறினும், அவள் உள்ளத்து ஊடலுண்டென்பது பொருளி லக்கணம் படித்த மாணவரும் கூறுப. “கற்பு வழிப்பட்டவள் பரத்தையேத்தினும், உள்ளத் தூடலுண்டெனமொழிப” என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். இனி விரிப்பிற் பெருகும். இதுகாறும் கூறியவற்றால், பரணர் என்னும் ஆராய்ச்சி நூல், “பரணர் பாட்டுக்கள்” என்னும் பகுதிக்கண், பரணர் மலைநாடுகளிலும், பேரூர்களிலும் வதிந்து, ஆங்காங்கு நிகழ்ந்த வழக்கவொழுக்கங்களையும், ஆங்குள்ள பொருள்களையும் நன்கறிந்து தேர்ந்தவர் என்று கூறியதற்கேற்ப, நிரம்பிய ஏதுகூறிற்றில தென்பதும், இந்நூலாராயத் தொடங்கும் தொடக்கத்தே, தொகை நூல்களுள் பிழைகள் உளவாதல் வேண்டும் என்னும் துணிபு கொண்டெழுந்த தென்பதும் பரணர் பாடிய பாட்டுக்கள் உள்ளதொகை நூல்களைப் பதிப்பித்த ஆசிரியன்மாருட்சிலரைப் பாராட்டி, சிலருடைய முயற்சியருமையினையும் கூறாதொழிந்த தென்பதும், “பரணர் பாட்டுக்கள்” என்ற பகுதிக்கண், இந் நூல் காட்டும் திருத்தமில்லாத பாடங்களும் பொருத்த மில்லாத உரைகளும்” ஆராய்வாருக்கு அக்காட்டியவை உண்மையாகா வென்பதும் வேண்டிய கருவிகொண்டு ஆராயும் வலியின்மையால் எழுந்த மெலிவுரையென்றதற்கு “வெண்ணெலரிநர்” என்று தொடங்கும் நற்றிணைப்பாட்டு (350) மேலே ஆராயப்பட்ட தென்பதும் அதன்கண் இந்நூல் காட்டிய திருத்தமான பாடங்களும் பொருத்தமான உரைகளும் போலியுரையாயின என்பதும் பிறவும், இதனையே விரிய ஆராயின் கட்டுரை பெருகுமென்றஞ்சிச் சில விடுக்கப்பட்டன. என்பதெய்தவும் கூறியவாறாம். பிற பாட்டுக்களிலும் பெரும்பான்மை இப்பெற்றியவே என்றற்கு ஒரு பாட்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. இனி இந்நூல் ஆராயும் இலக்கணப்பகுதி அடுத்த கட்டுரையில் ஆராயப்படும். பரணர் என்னும் ஆராய்ச்சிநூல், பரணர் பாட்டுக்கள்” என்ற பகுதியின்கண், செய்த ஆராய்ச்சிகளுள் சில பொருந்தா என்பது, “வெண்ணெலரிநர்” என்று தொடங்கும் நற்றிணைப் பாட்டினை யாராயுமுகத்தால், முன்னைய கட்டுரைகளில் (மலர் 9,10) காட்டப்பட்டது அறிஞர்கள் அறிந்ததாகும். இனி, அக்கட்டுரையின் முடிப்புரையில் தோற்றுவாய் செய்தவாறு, இந் நூல் ஆராயும் “இலக்கண வேறுபாடு” என்னும் பகுதியினை ஆராய்வாம். அறிஞர்கள் ஈண்டுக் கூறுவன வற்றைச் சீர்தூக்கி உண்மை துணிந்து உரைப்பார்களாக. இந்நூலாசிரியராகிய திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டி யாரவர்கள், “பெரும் புலவராகிய பரணர் தம் செய்யுட்களின் அமைதி, தொல்காப்பியத்திற்கு மாறு படுகின்றது.......... . உயர் திணைப் பெயர்களில், இரண்டாம் வேற்றுமையுருபு விரிந்தே வருதல் வேண்டும் என்பது “உயர்திணைமருங்கின் ஒழியாது வருதலும்” (தொல் தொகை. 15) என்னும் இரண்டாம் வேற்றுமைச் சிறப்பு விதிச் சூத்திரத்தால் பெறப்படும். அங்ஙனமாகவும் பரணர் செய்யுட்களில் ‘வேந்த ரோட்டிய ஏந்துவேல் நன்னன்’ (நற்.270) என இரண்டாம் வேற்றுமை யுருபு தொக்கு வந்துள்ளது ........... ‘உருவக் குதிரை மழவரோட்டிய’ (அகம்.1) என்று மாமூலர் பாடியிருப்பதும் இது போன்றதே. இவ்வாறு வருதலைக் கண்டே நன்னூலார். ‘உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும்’ என்று இலக்கணம் அமைப்பாராயினர்” என்று கூறுகின்றார்கள். கூறவே, ஆசிரியர் தொல்காப்பியனார், இரண்டாம் வேற்றுமை யுருபாகிய ஐயுருபு. உயர்திணைப் பெயரிடத்து விரிந்தே வருதல் வேண்டும் என்று விதித்தார் என்பதும், பரணர், மாமூலர் முதலிய நல்லிசைப் புலவர், அவ்விலக்கண விதிக்கு மாறுபட்டு உயர்திணைப் பெயரிடத்து அவ்வுருபு தொக்கு வரச் செய்யுள் செய்தனர் என்பதும் பெறப்படும். மேலும், அவ்வாறு வருதலே நேரிது; தொக்குநின்றவழிப் பொருள் இனிது விளங்காது என்பது திரு ரெட்டியாரவர்கள் கருத்து. இது, “வேந்தரோட்டிய ஏந்துவேல் நன்னன்” என்னும் அடியைப் படிக்கும் பொழுது, வேந்தரை யோட்டிய நன்னன் என பொருள் தோன்றுதல் அரிது” என்று கூறுவதால் அறியப்படுகிறது. அன்றியும், தொல்காப்பியனார் கூறுதற்கு மாறாகப் பரணர் முதலியோர் செய்யுள் செய்தாராயினும், அச்செய்கை பிற்காலத்தார்க்கு இலக்கணமாம் என்னும் கருத்தினால், நன்னூலார், “உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும்” வரும் என எடுத்துக் கூறினர் என்பதும் இவர் கூறியவாற்றால் தெளியப்படும். இக்கூறியவாற்றால், பரணர் செய்யுட்கள், தொல்காப் பியத்துக்கு மாறாகவும், நன்னூலிலக்கணத்துக்கு ஒப்பவும் நிற்றல் பெறப்படும். இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்’ என எழுத்ததிகாரத்து விதித்தவர். சொல்லதி காரத்து “ஆடுஉவறிசொல், மகடூஉவறிசொல், பல்லோரறியும் சொல்லொடுசிவணி, அம்முப்பாற்சொல் உயர்திணை யவ்வே” (சூ.2) என்றும் பொருளதிகாரத்து, “தன்னும் அவனும் அவளும் சுட்டி” (சூ36.) என்றும் கூறிய சூத்திரங்களுள், உயர் திணைப் பெயரிடத்து ஐயுருபு. தொக்குவரக் கூறியிருக்கின்றனர், எழுத்ததி காரத்து வகுத்த விதிக்குமாறாகப் பிறாண்டுத் தாமே கூறுதல், விதியும் செய்கையும் ஒவ்வாமை கூறலாகிய குற்றம் ஆசிரியர் தொல்காப்பியனார்பால் எய்துவதாயிற்று. திரு.ரெட்டி யாரவர்கள் அடிக்குறிப்பில் “ஆடுஉவறிசொல் என்று ஆசிரியர் கூறியிருத்தலின் இஃது அமையும் என்பர்” என்று குறித்தனர் (பக். 162) இதன்கண் “என்பார்” எனப் பிறர்மேல் வைத்துக் கூறியிருத்தலின் அஃது அவர்க்கும் உடன் பாடன்று என்பது துணியப்படும். மேலும் அவ்வாறு தொக்கு நிற்பக் கூறுதல் சிறவாது என்பது தமக்குக் கருத்து என்பது எய்தவே திரு. ரெட்டியாரவர்கள் ‘வேந்தரோட்டிய ஏந்துவேல்’ நன்னன் என்பதைப் படிக்கும் பொழுது வேந்தரை யோட்டிய என்றும் பொருள் தோன்றுதல் அரிதாகின்றதென்று கூறினார் என்பதும் அறியப்படும். படவே ஐயுருபு உயர்திணை யிடத்து விரிந்து வருதலே நேரிது என்பதும், தொக்குவர ஆசிரியர் தொல்காப்பியனாரே கூறினும், அஃது அவ்விலக்கண விதிக்கு முரணியதே என்பதும் திரு ரெட்டியார வர்கள் கருத்தாம். இனி, நன்னூலார் ஐயுருபு உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும் வரும் என்றும் கூறியது நேரிது என்று திரு. ரெட்டியா ரவர்கள் கருதுவர். நன்னூலார் கூறிய கூற்றின் தகுதி நிலையினை ஆராயாது “உயர்திணையிடத்து விரிந்தும் தொக்கும் என்று இலக்கணம் அமைப்பாராயினர்” என்று கூறியொழிந்தமையே அவர்க்கு அது கருத்தென்பது துணியபடும். ஐ முதலிய வேற்றுமையுருபுகள் தம்மையேற்கும் பெயர்களின் ஈற்றில் விரிந்தும் தொக்கும் தம்பொருளை யுணர்த்தும். என்பது பண்டைய ஆசிரியன்மார் அனைவருக்கும் ஒப்ப முடிந்தது. இது வேற்றுமைகளின் பொது விலக்கணமாகும். ஆகவே ஐயுருபு தானும் இவ்விலக்கண நெறியால் தன்னையேற்கும் பெயரது ஈற்றில் விரிந்தும் தொக்கும்வரும் இலக்கணத்ததாகலின், இஃது “உயர் திணையிடத்து விரிந்தும் தொக்கும்” வரும் என்று நன்னூலார் எடுத்துக் கூறுவதால் பயன் என்னை? அஃறிணை யிடத்தும் இப்பெற்றியாகவே வரும் இலக்கணத்ததாகிய இதனை உயர் திணைக்கே உரியது போலக் கூறுதல் குற்றம் அன்றோ? “சொல் பல நாட்டைத் தொல்கவினழித்த” (பதிற்.43) என அஃறிணை யிடத்து ஐயருபு விரிந்தும், “காரெதிரகானம் பாடினேமாக” (புற.144) எனத் தொக்கும் வருதல் காண்க. ஆகவே, உயர்திணையிடத்து ஐயுருபு விரிந்தே வரும் என்று விதித்த ஆசிரியர் தொல்காப்பியனார் ஏனை நூற்பாக் களில் (சூத்திரங்களில்) அது தொக்குவரக் கூறியதனால், விதியும் செய்கையும் ஒவ்வாமையாகிய குற்றம் அவர்பாலும், இருதிணைப் பெயரிடத்தும் விரிந்தும் தொக்கும் வரற் பாற்றாகிய ஐயுருபு, உயர் திணையிடத்து விரிந்தும் தொக்கும் என வரைந்து கூறிய குற்றம் நன்னூலார் பாலும் கிடைக்கின்றது என்பது இவ்வாராய்ச்சியால் பெறப்பட்ட மையின், இவற்றுள், தொல்காப்பியத்தின் உண்மை நிலையினை ஈண்டு ஆராய்வாம். மக்களுடைய மனவுணர்வு நாளும் வளர்ந்து விரியும் இயல்பிற்று; அதனை வெளிப்படுக்கும் சிறப்புடைக் கருவியாகிய சொற்றொகுதியும் விரிந்து பல்கும் இயல்பினதாகும். ஆகவே அதன் முடிபு வகைகளும் பலவாய் விரிதல் பெறப்படும். அவற்றை வரைந்து, திணிந்த முடிபுவகைக்கண் அடக்கலுறின், அவ்வளர்ச்சி குன்றும். ஆகலின், அவ்வாறு பெருகிப் பல்கும் முடிபுவகைகள் அவ்வளர்ச்சி கெடாது அடங்குதற்கேற்ப, அவற்றை ஓரெல்லைக்குள் நிறுத்தி, அழகுறவைக்கும் இலக்கண விதிகள், “பலவகையானும் பயன் தெரிபுடைய” வாய் அமைந்திருத்தல் வேண்டும். அவை, இலேசு, உத்தி என்பன முதலாகக் கூறப்படும். அவற்றிற்கு உரைகாணப்புகும் புலவர் பெருமக்கள். அவ்வமைதியின் ஒட்பம் தேர்ந்து வேண்டுமாற்றால் அமைப்பது கடனாகும். இவ்வமைதி “அளக்கலாகாவரும் பொருட்டாகிப், பல்வகையானும் பயன் தெரிபுடையது, சூத்திரத் தியல்பு” என்றும், “சூத்திரத்துப் பொருளன்றியும் யாப்புற, வின்றிமையாதியைபவை யெல்லாம், ஒன்றவுரைப்பது உரையெனப்படுமே” என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றால் உணரப்படும். படவே. உயர்திணையிடத்தும் விரிந்தும் தொக்கும் வரும் இயல்யிற்றாகிய ஐயுருபு. தொக்குநின்ற வழித் தன்பொருளைத் தெள்ளிதின் உணர்த்தும் சீர்ப்பாடின்மை கருதி, “உயர்திணையிடத்து ஒழியாது வருதலும்” என்றாராயினும், தொக்குநின்று முன்னும் பின்னும் அடுத்து வரும் சொற்றொகுதியால், தன் பொருளையுணர்த்தும் சீர்ப்பாடு எய்து மாயின், அது விலக்கப்படாதாம். ஆகவே, அதனையும் அடக்குமாறு சூத்திரம் அமைந்திலதாயின். அதன் இயல்பு குன்றுதலின், அதுவும் அடங்குதற்கு. விரிந்தே வருதலும் என்னாது, “ஒழியாது வருதலும்” என்று ஆசிரியர் கூறுவாராயினர். ஆகவே, அவர்பால் முன்கண்ட குற்றமின்மை பெறப்படும். அவ்வுண்மை தோன்றவே, சொல்லதிகாரத்தும், பொருளதி காரத்தும் ஒரு சில சூத்திரங்களுள் உயர்திணையிடத்து ஐயுருபு தொக்குவரக் கூறினார் எனக் கோடல்வேண்டும். இப்பெற்றித்தாய அமைதியொடு திகழும் இலக்கண நெறியின் இயற்கை நலங்களை முற்றவுணர்ந்த ஆசிரியர் பரணர் முதலாயினார், தம் பாட்டுக்களில் ஐயுருபு தொக்குவரவும் பாடினார் என வுணர்தல் வேண்டுமேயன்றி, அவர் கூறியன. இலக்கண முடிபு நாட்டும் தொல்காப்பியத்துக்கு மாறுபட்டனவாம் என்றல் நிரம்பாதாம். இந்நெறிமையின் ஒட்பங்களை யுணர்ந்தே உரையாசிரியன்மாரும், இன்னோரன்னவற்றை இலேசினாலும் உத்தியாலும் பிறவற்றாலும் அமைத்துக் காட்டுவாராயினர். இவ்வியல்பு காணமாட்டாத ஆராய்ச்சியாளர் சிலர், “சூத்திரத்துட் கூறுவனவே பொருளாவன; உரையாசிரியன் மார் உரையிற் கொணர்ந்து காட்டுவன ஆகா” என்று கருதுவர். இக் காலத்து நம் நாட்டில் வழங்கும் வழக்குநூல் (Civil/ Criminal, Constitutional and other laws of our Country)களின் அமைப்பினையும், அவற்றின் பொருள் காணும் திறங்களையும் தெரிந்துணர்ந்த அறிஞர், இலக்கண நூல்கட்கு உரைகாரர்கள் காட்டும் உரைத்திறம் அறிவின் இயற்கை நிலையொடு இயைந்ததென்றே கூறுவர். இலக்கணமும் வழக்கு நூலேயாகும். ஆகவே, தமிழ்ச் சொற்றொகுதிக்கட்படும் முடிவுவகை பலவும் தன்பால் அடங்கியமையுமாறு தொல்காப்பியமாகிய பேரிலக்கணப் பெருமணி நின்று திகழ்கின்றமையின், அம்மணியொளி கொண்டு, சொற்பொருளின் நுட்பங்களை நுனித்துணர்ந்து தேர்ந்து நல்லிசைப் புலமை நிரம்பிய ஆசிரியர் பரணர் முதலாயினாரது உள்ளம், அந்நூல் நெறியே பயின்ற பயிற்சி வன்மையுடையதாகலின், அதன் கட்டோன்றும் சொன்முடிபுகள் அந்நூன் முடிபுக்கு மாறாதல் கூடாமையின், அவர் உள்ளத்துப் பிறந்து சொல் வடிவு பெற்றுப் போதந்த அவர் செய்யுட்களின் சொற்பொருள் முடிபுகளும், தொல்காப்பிய இலக்கணங்கட்கு மாறுபட்டன என்று கோடல் நிரம்பா தென்பது உணரப்படும். இனி, பரணர் என்னும் இவ்வாராய்ச்சிநூல் கூறும் வேறோர் இலக்கண வேறுபாட்டினை யாராய்ந்து காட்டி, இக்கட்டுரையின் இப்பகுதியினை முடிக்கின்றாம். “பனைத்திர ளன்ன பரேரெறுழ்த் தடக்கை” (அகம்.148) என்னும் அடியில் பனைத்திரள் என்பது பனந்திரள் என வருதலே யமைதி. இது, “பனையும் அரையும்” (தொல். உயிர். 81) என்னும் சூத்திரத்தால் அறியலாகும். ஆயின், ‘ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர், வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகுமே, (உயிர்.78) என்னும் பொது விதியான் பனைத்திரள் என வந்ததால் எனின், ஆசிரியர் பனை யென்னும் சொல்லைக் குறித்து மூன்று சூத்திரங்களில் (உயிர் 81-83) சிறப்புவிதி கூறுகின்றாராகலானும், பொதுவிதி சிறப்பு விதியால் கெடுமாகலானும் அஃது அமையாது என்க. அன்றியும், ஆசிரியர் பனைக்கொடியென வருதல் கண்டு, அதனை, ‘கொடிமுன் வரினே ஐயவண் நிற்பக், கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி’ (உயிர்.83) என்று விதி கூறியமைத்தாற்போல, பனைத்திரள் என வருதல் ஆசிரியர் கருத்தன்மையுணர்க, பனந்துணி’ (புறம் 35), ‘பனங்குடை’ (புறம் 177) என வருதல் ஈண்டு அறியத்தகும்” என்று திரு. ரெட்டியாரவர்கள் கூறுகின்றார்கள். இதனால் பனைத்திரள் என்பதனைப் பொதுவிதியால் முடித்தலினும், சிறப்பு விதியால் முடித்தலே அமைதி யென்பதும், பனைத்திரள் என்பது ஆசிரியர் கருத்தன்று என்பதும் அவர் கருத்தாதல் பெறப்பட்டது பனைத்திரள் என்பது பொதுவிதியால் முடிந்ததென்றல் அமையாது என்பது திரு, ரெட்டியாரவர்களின் மேற்கோள். இதற்கு அவர் கூறும் ஏது, “ஆசிரியர், பனையென்னும் சொல்லைக் குறித்து மூன்று சூத்திரங்களில் (உயி. 81-83) சிறப்பு விதி கூறுகின்றார்” என்பதும், “பொதுவிதி சிறப்பு விதியால் கெடும்” என்பதுமாகும். இவர் காட்டும் பொதுவிதி, “ஐகார விறுதிப் பெயர் நிலை முன்னர், வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகுமே” என்பது ஐகார வீற்றுப் பெயர்ச் சொற்களின் முன், வேற்றுமைப் புணர்ச்சிக் கண் வல்லெழுத்துமிக்கு முடியும் என்பது இதன் பொருள். “பனையும் அமையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும், ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே, மெய்யவ ணொழிய என்மனார் புலவர்” என்பது ஒரு சிறப்பு விதி பனை அரை, ஆவிரையென்னும் சொற்கள் அம்முப் பெற்று முடியும் என்பதும், அதுபோது, இவற்றுள், அரையென்பது ஒழிய, ஏனைய இரண்டின் ஈற்று ஐகாரம் தான் நின்ற மெய்யொழித்துக் கெடும் என்பதும் இதன் பொருளாகும். “பனையின் முன்னர் அட்டுவரு காலை, நிலையின்றாகும் ஐயென் உயிரே, ஆகாரம் வருதல் ஆவயினான” என்பது வேறொரு சிறப்பு விதி. பனை யென்னும் சொல் முன் அட்டுஎன்னும் சொல் வந்து புணரின், பனையின் ஈற்று ஐகாரம் நில்லாது என்பதும், அவ்விடத்து, ஆகாரவுயிர் வந்து, பனா அட்டு என முடியும் என்பதும் இதன் பொருளாகும். “கொடி முன் வரினே ஐயவண் நிற்பக், கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி” யென்பது மூன்றாவது சிறப்பு விதி. பனையென்னும் சொல் முன் கொடியென்னும் சொல் வந்து புணரின், பனைக் கொடியென வல்லெழுத்துமிக்கு முடிதல் நீக்கப்படாது என்பது இதன் பொருளாகும். இனி, இவ்விதிகள் செய்யும் செய்கையினை யாராய்வாம். “ஐகாரவிறுதி” யென்னும் பொது விதியாற் போந்த வல் லெழுத்து மிகுதி, “பனையும் அரையும்” என்னும் சிறப்பு விதியால் கெட, பனையென்னும் சொல் அம்முப்பெறுதலும், ஐகாரம் கெடுதலும் பெறுதல் எய்திற்று. இச்bல், “அட்டுவருகாவை” என்னும் சிறப்பு விதியால், முன்பெய்திய ஐகாரக்கேடும் (அம்முப்பேறு விலக்கி) ஆகாரப்பேறும் பெறுதல் எய்திற்று, எய்தவே “பனையும் அரையும்” என்னும் சிறப்பு விதியால் எய்திய அம்முப்பேறு, ஐகாரக்கேடு என்ற இரண்டனுள், பின்னர்ப் போந்த சிறப்புவிதி, அம்முப்பேற்றை விலக்கியவாறு காண்க. “கொடி முன்றரினே” என்னும் சிறப்புவிதி, முன்னைய சிறப்பு விதிகளாற் போந்த ஐகாரக் கேடு, அம்முப்பேறு ‘ஆகாரப்பேறு ஆகிய மூன்றையும் விலக்கி, பொதுவிதியால் எய்தும் வல்லெழுத்து மிகுதியினையே வற்புறுத்து வதாயிற்று. ஆகவே, ஒன்றனை யொன்று விலக்கிப் போதரும் சிறப்பு விதிகள் தாமும் முடிவில், பொதுவிதி கூறும் முடிபினையே வற்புறுத்துதலின், அவை வருமொழி நோக்கியவாயும், நிலை மொழிக்குரியவாயும் வந்தன வாயினும், பனையென்னும் சொல்பொது விதியால் முடிபு பெறு தலை நீக்கும் வன்மையில வென்பது பெறப்படும். படவே, பனை யென்னும் இச்சொல், பொதுவிதியால் முடிதல் அமையாது என்றல் நிரம்பாதாம். இந்நிலையில், விதிகளின் இயல்பினைச் சிறிதாராய்தல் இன்றியமையாதாகின்றது. ‘விதியெல்லாம் எய்தாததனை யெய்து விப்பதூஉம், ஒருகாலெய்தி ஒருகாலெய்தாதாகற் பாலதனை அவ்வழியும் இகந்து படாமற் காத்து நியமமாக எய்து விப்பதூஉம், ஈரிடத்தும் எய்தற்பாலதனை ஒருமருங்கு மறுப்பதூஉ மென மூவகைப்படும்” என்பர் மாதவச் சிவஞானமுனிவர். பொது சிறப்பு எனவரும் இருவகையும் அடங்க “விதியெல்லாம்” எனப் பொதுப்படக் கூறியது காண்க. இம்முறைப்படியே, “ஐகாரவிறுதிப் பெயர்” என்னும் பொதுவிதி “வேற்றுமையல் வழி” (தொகை.16) என்புழி எய்தாத வல்லெழுத்து மிகுதியினை எய்தவித்ததாக, ‘விசைமரக்கிளவியும்’ (உயிர். 79) என்னும் சிறப்புவிதி, அவ்வா றெய்தியவிதி வல்லெழுத்து மிகுதியினை விலக்கிற்று. இவ்வாறு எய்தியதனை விலக்கி, “பனையும் அரையும்” என்னும் சிறப்புவிதி அம்முப்பேறும், ஈற்றுஐகாரக் கேடும் விதிப்ப அதன் பின்தோன்றிய “பனையின் முன்னர்” என்னும் சிறப்புவிதி, ஐகாரக் கேட்டை இகவாமற் காத்து, அம்முப் பேற்றை விலக்கி, எய்தாத ஆகாரப் பேற்றினை விதித்தது. பின்பு, “கொடிமுன்வரினே” என்னும் சிறப்புவிதி, முன்னைச் சிறப்பு விதியால் காக்கப்பட்ட ஐகாரக் கேட்டையும், ஆகாரப்பேற்றையும் விலக்கி, பொதுவிதியால் எய்தியதனை இகந்து படாமற் காத்தது; இவ்வாறு, பொதுவிதியால் முடிந்ததனையே, குறித்து வருகிளவி மேல் வைத்து முடித்ததனாற் பயன், பனையென்னும் சொல், இக்கூறிய சிறப்பு விதிமுடிபே யன்றி, பொதுவிதியால் முடிபுபெறினும் அமையும் என்பதாம். இப்பொருள்கோள், எடுத்தோத்தும்’ இலேசும் இல்வழி உத்திவகை யாலும் பிறவாற்றாலும் அமைக்கப் படும் மரபு கருதி. “பனைத்திரள்” என முடிவதனை “கொடிமுன் வரினே” என்ற சூத்திரத்து, “அவண்” என்ற இலேசினால் உரைகாரர்கள் அமைத்து முடித்தனர், இந்நெறி யெல்லாம் ஆசிரியர் தொல்காப் பியனார் முதலாயினார் காலத்தேயே நம் நாட்டில் நிலவி வந்தனவாகலின், பரணர் முதலிய நல்லிசைப் புலவர்க்கு உடன்பாடேயாம். ஆதலின், அவர்கள், இவ்விலக்கண நெறிக்கு மாறுபட்ட முடிபு வகுத்தல் கூடாமையின், “பனைத்திரன்” எனப் பரணர் கூறியது தொல் காப்பியத்துக்கு மாறுபட்டதன்றாம் என்று கொள்ளல் வேண்டும். இனி, திரு. ரெட்டியாரவர்கள், “பொதுவிதி, சிறப்புவிதியால் கெடும்” என்று கூறுகின்றனர். மேலே ஆராய்ந்து காட்டிய வற்றால், சிறப்புவிதிகளால் பொதுவிதி கெட்டழியாது. ஓராற்றால் வற்புறுத்தப் பெற்றமை புலனாமாகலின், அவர் கூறுவது பொருந்தாமை பெறப்படும். மேலும், சிறப்பு விதிகளால், பொதுவிதிகள் கெடுவது உண்மையாயின் ஆசிரியன்மார்பொது விதி வகுத்துக் கூறல் பயனில கூறலாம். அல்லதூ உம் பொது விதிகள் பொருள் பலவற்றிற்குப் பொதுவாகிய இலக்கணம் கூறுவனவாகலின், ஒவ்வொரு பொருளினும் தனித்தனிநிற்கும் சிறப்பிலக்கணம் கூறிச்சேறல் முடியாதாம். ஆகவே, அவற்றைத் தெரிந் துணர்தற்காகவே சிறப்பு விதிகள் தோன்றுகின்றன. பொது விதி கூறும் பொதுவிலக்கணம் இலக்கிய மெங்கும் பொதுவாய் நிரம்பி நிற்றல்போல, சிறப்பிலக்கணம் நிரம்பி நில்லாது என்பது இலக்கண அறிஞர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வுண்மையாகும். ஆகவே; பொதுவிதி பரந்த பண்புடையதென்றும், சிறப்புவிதி அன்னதன்றென்றும் தோன்றுதலின், சிற்றெல்லைத்தாகிய சிறப்பு விதியால், பேரெல்லைத்தாகிய பொதுவிதி கெடுமென்று கூறல் நிரம்பாமை பெறப்படும். அல்லதூஉம், மேற்காட்டிய விதிகள், எய்தாதனை எய்து வித்தலும், எய்தியதனை ஒருமருங்கு விலக்குதலும், எய்தியது விலக்கிப் பிறிதொன்று வகுத்தலும், முன்னர் விலக்கிய தனையே ஓராற்றல் எய்து வித்தலும் செய்யக் காண்கின்றோமேயன்றி, பொது விதியைக் கெடுத்து, அது தனக்குரிய இலக்கியங்களின் மேற் செல்லாவாறு தடுப்பதனைக் காண்கிலோம். சிற்றெல்லைத் தாகிய சிறப்புவிதி, பொதுவிதியை விலக்கலுறின், தன்னெல்லைக் கண் அஃது எய்தாவாறு விலக்கி, ஒழிந்தவற்றின் மேற்சேறற் கண் அதனை விலக்குதல் கூடாமையின், பொதுவிதி சிறப்பு விதியாற் கெடும் என்றல் அமையாமை காண்க. ஆசிரியர் மாதவச் சிவஞான முனிவரும், “பொதுவிதி ஆயிரம் கூடினும் விதந்தெடுத் தோதும் சிறப்புவிதி ஒன்றானே விலக்கப்பட்டு, அஃது ஒழிந்தவற்றின் மேற்செல்லும்’ என்றே கூறியருளினர். ஈண்டும் முனிவர் பெருமானார், பொதுவிதி சிறப்பு விதியால் விலக்கப்பட்டுக் கெடும் என்னாது, ‘அஃது ஒழிந்தவற்றின் மேற்செல்லும்” என்றே கூறியிருத்தல் காண்க. இனி, திரு. ரெட்டியாரவர்கள் “கொடிமுன்வரினே” என ஆசிரியர் விதந்தோதியதுபோல, திரள் என்பதனையும் ஓதாமையின் பனைத்திரள் என்று வருதல் அமைதியன்று என்கின்றனர். “பனையின் முன்னர்”, ‘கொடிமுன்வரினே” என்ற சிறப்பு விதிகள், வருமொழி நோக்கி எழுந்த செய்கை கூறுவன வாகலின், ‘பனையுமரையும்’ என்னும் சிறப்புவிதி நிலைமொழிக்கேயுரித் தாயிற்று. ஆகவே, அச்சிறப்பு விதிக்கண், “நினையுங் காலை அம்மொடு சிவணும்’ என்பதற்கு, “வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” (சொல். வினை.1) என்றவிடத்து, “ஆசிரியர் சேனாவரையர் “நினையுங்காலை” என்பது பற்றிக் கூறியது போல, ஈண்டு, பனை யென்னும் சொல் அம்முப்பெறாது முடிதலும் உண்டு; அதுவும் ஆராயுங்கால், அம்முப்பெற்று முடிதற்கண் நீக்கப்படாது என்றற்கு “நினையுங்காலை” என்றார் என்று கூறிக்கொள்ளல் வேண்டும். கொள்ளவே, “பனைத்திரள்” “பனைப்போழ்” (புறம்.22) என்பன பனந்திரள், பனம்போழ் எனமுடிவது தோன்றும். தோன்றவே பொதுவிதியால் அம்முப்பெறாது வல்லெழுத்துமிக்கு முடிவனவும், அது பெற்று முடியும் என எய்தியதனை ஒருமருங்கு விலக்குதற்கு வருமொழி குறித்த சிறப்புவிதி யெழுந்தனவாகலின், அவ்வுண்மை காணாது, திரள், போழ் என்பன எடுத்தோதாமையின், தொல்காப்பியத்துக்கு மாறுபட்டன என்றல் நிரம்பாதாம். நச்சினார்க் கினியரும், நன்னூலாரும், உறழ்ச்சி முடிபு கூறுதல் காண்க. “இரும்பனை வெண்டொடு”(புறம்.45) “பனைநுகும்பு” (புறம்.249) எனப் பிறாண்டும். பனையென்னும் சொல், அம்முப்பெறாமை முடிதல் காண்க. இவையனைத்தையும் ஆசிரியர் எடுத்தோதா மையின், தொல்காப்பியத்துக்கு மாறுபட்டன என்றல்வேண்டும். அன்றி, ஆசிரியர் தொல்காப்பியனார், பரந்துபட்ட வழக்கின வாய்வரும் இம்முடிபுகளை அறியாது கூறினர் என்றல் வேண்டும். பெரும் புலவர்கள் இலக்கணவிதிகட்கு அடங்கியிராது, தம்கருத் தின்படி செய்யுள் செய்வர் என்னும் துணிபு கொள்வதாயின், அக்கொள்கை சிறுபான்மையாமேயன்றிப் பெரும் பான்மையன்மை. வரலாற்று நெறிக்கண் இனிது உணரப்படுதலின், பெரும் பான்மைத்தாகிய இம்முடிபு அந்நெறியின் பாற்படும் என்று கோடலும் பொருந்தாதாம். மேலும், குறித்து வருகிளவிகள் அனைத்தையும் எடுத்தோதி அமைக்கலுறின் இலக்கண விதிகள் வரம்பின்றிப் பல்கும். ஆகவே, எடுத்தோதாமைபற்றி, இதனை மாறுபட்டதெனக் கோடல் நிரம்பாமை பெறப்பட்டது, “பனைக் கைமும்மதவேழம் உரித்தவன்” எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் கூறுதல் காண்க. இக்கூறியவாற்றால், பொதுவிதியின் பரந்தபண்பின் கண் அடங்கி, சிறப்புவிதிகளின் சிற்றெல்லையைக் கடந்து நிற்கும் இலக்கிய நெறிபற்றி ஆசிரியர் பரணர் முதலாயினார் காட்டிய சொன் முடிபுகளை, தொல்காப்பிய இலக்கணவிதிக்கு மாறுபட்டன என்று கோடல் நிரம்பாதென்பது கூறியவாறாம். இவ்வுண்மை இக்காலவழக்கு நூல் விதிகளின் அமைதியினை அவ்வப் போது உயர்நீதி மன்றங்களில் (High courts) சான்றோர் வகுத்துக்காட்டும் நெறிபற்றி ஆராய்வார்க்கு இனிது புலனாகும். இனி, “பனையும் அரையும்” என்னும் விதி, அம்முப் பெறாதனவும் பெற்று முடிதலையே சிறப்பித் தமையின், அவை அது பெறாது முடிதற்குரிய இயைபு, “கொடி முன் வரினே” என்ற சூத்திரத்து சிறந்து நிற்றலின், உரையாசிரியர், “ஐயவண் நிற்ப” என்புழி, “அவண்” இலேசினால் முடித்தனர் என்று கொள்ளல் வேண்டும் உயர்நீதி மன்றத்துச் சான்றோரும், ஒரு முடிபு கருதுமிடத்து, விதிகள் இரண்டு உளவாய வழி, ஒன்று பொதுவாயும், ஏனையது சிறப்பும் நேர்மையும் உடையதாயுமிருப்பின், அவற்றுள் பின்னதே கோடற்குரித்து என்கின்றனர். (When there are two articles which may possibly govern a case, the one more general and the other more particular and specific, the later ought to be applied” H.C. Mitras Indian limitation Act. 7th Ed n page. 5.) இனி, இக்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் மேனாட்டறிஞரின் அறிவு நெறியினைப் பின்பற்றிச் செல்லும் விழைவு மிகுதியால் சில பொருந்தாமுடிபிணை மேற் கொள்ளுகின்றனர். ஒன்று கூறுவேம். மேனாடுகளுள், ஆங்கில நாட்டு மொழிக்குத் தொல் காப்பியம் போல, வழக்குஞ்செய்யுளும் குறைவற ஆராய்ந்து முடிபு வகுக்கப் பட்டதோர் இலக்கணநூல் இன்று. “வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெருவழக்குக்கு இழுக்கு முண்டோ” என்னும் பொருளுரை அவர்மொழி மரபுக்கு அமைந்ததாகும். அவர் நாட்டுச் சான்றோர் செய்யுட்கள் பொருளும், ஓசையும், பிற நலங்களும் செவ்வையாய் அமைந்து விளங்கி, அவர் வழங்கும் மொழியிலக்கண நெறிக்கு மாறுபட்டு நிற்பவாயின் அம்மாறுபாடு நோக்காது, அவற்றைத் தழீஇக் கோடல் அந்நாட்டவர் மரபு. மக்கள் உள்ளத்து எழும் எண்ணங் கட்கேற்ப மொழியும், அவற்றிற்கேற்ப, காலநிலை மாறினும், பெரும்பான்மையும் தம் இயற்கைநிலை மாறாத வகையில் இலக்கணமுடிபுகளும் இயல்பாகவே வாய்க்கப் பெற்ற நம் நாட்டுச் சான்றோர், அவ்வாறு மாறுபடுவனபோலத் தோன்றுவனவற்றையும் இலக்கணத்துள் இடமும், நெறியும் அறிந்து அமைத்துக் கொள்வர்; அவ்விலக்கண விதிகளும், எதிர்காலத்துப் பிறக்கும் சொன் முடிபுகள் இயல்பாகவே தம்பால் அடங்குமாறு அமைந்திருக்கும். மேலும், இலக்கணவமைதிகடந்து செல்வன ஒரு நெறிப்படாது, பல நெறியினவாய்ச் சென்று வரம்பின்றி நிற்கும் என்பதும் அந்நிலையில் சான்றார், சாலார் ஆகிய இருதிறத்தார் மாட்டும் வேற்றுமையின்றி வரிசையிழந்தும் நிற்கும் என்பதும் பிறவும் பண்டைக் காலத்துப் பெரியோர் உட்கோளாகும். பண்டைச் சான்றோர் வரிசையறிந்து செய்யப்பெறும் சிறப்பினையே சிறப்பாகக் கொண்டிருந்தன ரென்பது அவர் பாடிய பாட்டுக்களால் இனிது விளங்கும். ஆதலின், மேனாட்டு அறிவுநெறி வேண்டற் பாலதேயாயினும், அந்நெறி வகையினுள், நம்நாட்டு அறிவு நெறிக்கும், மொழியமைதிக்கும், இயற்கை நிலைக்கும் ஏற்பனவே கோடற் பாலனவாம்.  தெய்வப்புலவர் திருவள்ளுவர் முன்னுரை " தெய்வப் புலவர் திருவள் ளுவருலகோர் உய்யத் தருங்குறளை யோதுவோம் -மெய்வைத்து வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம் சிந்திக்க கேட்க செவி" இன்றைய தமிழ்நாட்டிற்குத் திருவள்ளுவர்க்கோ அவருடைய நூலாகிய திருக்குறளுக்கோ முன்னுரை ஒன்று வேண்டுவதில்லை. கல்வி கற்கும் இளஞ்சிறார்கட்கும் கற்றவர் கல்லாதவராகிய முதியோர்க்கும் திருவள்ளுரைப்பற்றிய செய்திகள் தெரிந்தனவாகும். ஆயினும் சுருக்கமாகச் சிலவற்றைக் கூறுவது வேண்டப்படுகிறது. சமயவுலகில் இறைவனைத் தோத்திரப் பாட்டுக்களால், பண்பொருந்தப் பாடிய சைவ வைணவச் சான்றோர்கட்குத் தமிழகத்தில் சிறந்த இடம் தரப்பெற்றுள்ளது. இறைவன் திருவருளைப் பெறுதற்கு உரிய நெறியும் பயனும் உணர்த்திய நேர்மையால் இச் சான்றோர்களை இறைவனாகவே எண்ணித் திருக்கோயிலெடுத்துச் சிறப்பும் பூசனையும் செய்வது வழக்க மாக இருந்துவருகிறது. திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய சைவ நாயன்மார் களுக்கும், திருமங்கைமன்னன், சடகோபர் முதலிய ஆழ்வார் கட்க்கும் முறையே சிவன் கோயில் களிலும் திருமால் கோயில் களிலும் தனியே கோயிலெடுத்திருப்பது யாவரும் அறிந்த தொன்று. ஏனை எந்த நூலாசிரியர்க்கும் கோயிலெடுத்து வழிபாடு செய்யும் சிறப்பு உண்டானதில்லை. ஆனால், பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழ் மக்களால் கோயில் எடுத்துச் சிறப்புச் செய்யப் பெறும் பெருமாண்பெய்தியவர் திருவள்ளுவர் ஒருவரேயாவர். அவர் ஒருவரே தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனப்பெறும் சீர்த்திபெற்றவர். தொல்காப்பிய வுரைகாரர் காலத்தேயே திருவள்ளுவர் தெய்வப் புலவராய் விளங்கினர். இனி, "புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்க வர்க்கே புலனாம்" என்பது பழமொழி. பண்டை நாளில் சிறந்த நூல் எழுதிய சான்றோர்களை ஏனைச்சான்றோர்கள் போற்றிப் பாராட்டியதுண்டு அதற்கு அறிகுறியாக அச்சான்றோர் அளித்த மொழிகளையும் மொழிப் பொருள்களையும் பொன்போல் போற்றுவர். மணிமேகலை யெழுதிய சீத்தலைச்சாத்தனாரும், சூளாமணியுரைத்த தோலாமொழி யாரும், கல்லாடம் உரைத்த கல்லாடரும் பாராட்டி யிருப்பது பலரும் அறிந்தது. சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் சான்றோர்களுள் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய ஆலத்தூர் கிழாரும் மதுரை யிளங்கண்ணிக் கோசிகனாரும் பிறரும் திருவள்ளு வருடைய மொழிப் பொருளையும் மொழியையும் மேற்கொண்டிருப்பது சங்கநூலறிஞர் சால அறிந்ததாகும். இவ்வாறு நூலெழுதும் சான்றோர் பின்வரும் சான்றோர் களாற் பாராட்டப்பெறுவது பொதுவாக வுள்ள சிறப்பு; திருவள்ளுவர் போலத் தனித்தொரு நூல் வடிவில் பாராட்டப்பெற்றவர், பிற்காலத்தே தோன்றியசேக்கிழார் ஒருவர் தவிரப் பிறர் எவருமே இலர். திருவள்ளுவரைத் திருவள்ளுவமாலையும், சேக்கிழாரைச் சேக்கிழார் பிள்ளை தமிழும் பாராட்டிப் பரவுகின்றன. இவ்விரண்டனுள் சேக்கிழார் பிள்ளைத்தமிழில் அதனை ஆக்கிய மகா வித்துவான், திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுடைய கருத்து ஒன்றே இனிய அழகிய ஆராய்ச்சி நிறைந்த சொற்களால் விளக்கமுறு கின்றது. திருவள்ளுவ மாலையில் ஐம்பதி மருக்கு மேற்பட்ட சான்றோர்களின் அரிய கருத்துக்களை தொகுத்துக் காட்டப்படு கின்றன. திருவள்ளுவமாலையும் திருவள்ளுவரைத் தெய்வத் திருவள்ளுவரென வழங்குகிறது. திருக்குறட்கு உரைகண்ட பண்டை யோருள் நால்வர் உரை இப்போது கிடைத்துள்ளது. அவருள் எவரும் திருவள்ளுவமாலைக்கு உரை வழங்காமை கொண்டு, இத் திருவள்ளுவமாலை பரிமேலழகர் காலத்துக்குப் பின்னே தோன்றி யிருக்கும் எனக் கருதுவோரும், இது சான்றோர் பலரால் உரைக்கப் பட்ட தென்போரும், ஒருவரே பலர் கருத்துக் களை அவரவர் பெயராற் கூறுகின்றாரென்போரும் பலதிறத்தர் அறிஞர். இதன் உண்மை எவ்வாறாயினுமாகுக. இத்திருவள்ளுவ மாலை திருவள்ளுவர் மாண்பையும் திருக்குறட் பயனையும் எடுத்துக் காட்டிப் பாராட்டு வதில் ஈடும் எடுப்புமின்றி இலங்கு கின்றது. "சிந்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய" செந்தமிழ்ச் சொற்களால் அமைந்துள்ள இச்சொன்மாலை, "நான் முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்," என்றது கொண்டே பிற்காலத்தோர் திருவள்ளுவர் வரலாற்றுக்குப் பிரமன் முதலாகக் கதை புனைந்து கூறலுற்றனர். திருவள்ளுவர் தம்முடைய திருக்குறட் கருத்துக்களைத் "தாமே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்"உரைத்தார் என்று கூறுவது, திருக்குறள், திருவள்ளுவரது தூய இனிய செந்தமிழ் வாழ்வை நிலைக்களனாகக் கொண்டு காணப்பட்டதென்று வற்புறுத்து வதைக் காணலாம். இத்தகைய திருக்குறளின் நலத்தை யுணர்த்தவந்த திருவள்ளுவ மாலை, திருவள்ளுவர் சொல்லியவாறு செய்வதே நல்லொழுக்கம் என்றும், "இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும், செம்மை நெறியின் தெளிவுபெற"லா மென்றும் செப்புவதாயிற்று. திருக்குறள் முழுதும் கேட்டார், "மன்னு தமிழ் புலவராய்க் கேட்க வீற்றிருக்கலாம்" என்றது பற்றி நெடுங்காலம் வரையில் கல்வித்துறையில் தமிழ்ப் புலமை பெறுவோரே சிறப்புறப் பயிலும் நூலாகத் திருக்குறள் இருந்து வந்தது. பின்பு ஆங்கிலம் கற்போரும் பிறரும் திருக்குறள் பயிலாவழி "நாவிற்கு உய்வில்லை, சொற்சுவை ஓர்வில்லை மற்றும் செயலில்லை" என்பது உணர்ந்தனர். அருள் திரு. G. U. போப்பையர் முதலிய மேனாட்டவர் திருக்குறளைத் தம் மொழியில் மொழிபெயர்த்துக் கொள் வாராயினர். இன்று தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் இளஞ்சிறார் களும் திருக்குறளைப் பயிலுகின்றனர். பொதுமக்கட்குத் தொண்டுபுரிவோரும் அரசியற் பணிபுரி வோரும் வணிகரும் பிறரும் மக்கட் கூட்டத்திற் கலந்து தத்தம் கருத்துக்களை எடுத்தோதி அளவளாவிக் கொள்ளவேண்டிய இன்றியமையாமை இன்றையவாழ்வில் பிறந்துவிட்டமையின், அவர்கள் அச்செயலை முட்டின்றி முடிப்பதற்குத் திருக்குறள் பெருந்துணையாக இருப்பது விளங்கி விட்டமையின. அவர் களும் அதனைப் பயிலத் தொடங்கிவிட்டனர். ஒரு காலத்தில் தமிழ் பயில்வோர்க் கெனவே ஒதுக்கப்பட்டிருந்த திருக்குறள், இன்று பொது மக்கள் அனைவருக்கும் பொதுவாக வேண்டிய பொது நூலாயினமையின், திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொருளாகப் பல நூல்கள் அறிஞர்களால் வெளியிடப் பெற்று வருகின்றன. அவ்வெளியீடுகள் நாளும் பெருகுவ தொன்றே தமிழ் மக்கள் திருக்குறள்பால் பேராதரம் கொள்கின்றன ரென்பதைக் காட்டி நிற்கிறது. இந்நாளில் பள்ளியில் பயிலும் இளஞ்சிறார்களும் தங்கள் இனிய மழலை மொழியால் விழுமிய நலங்கனியும் திருக்குறளைச் சிறப்புறச் சொல்லவும் பயிலவும் காண்கின்றோம். உயிர் வாழ்க்கைக்கு உறுதிபயக்கும் உண்மைகளை ஒளியாமல் எடுத்துரைக்கும் இத்திருக் குறளை வழங்கிய திருவள்ளுவரது வரலாறு தூயவடிவில் வடித்துத் தர வேண்டியது நம்மனோர் கடனாகின்றது. பொய்யும் புனைந் துரையும் நிறைந்த கதைகளைச் சொல்லி இளஞ் சிறார்களின் உள்ளத்தை மாசுபடுத்துவதைவிட அவர் அளித்துள்ள திருக்குறளையே அடிப்படையாகக்கொண்டு அவர் வரலாற்றை வடித்தெடுத்துரைப்பது சிறப்புடைப் பணியாம் என்று கருதியே இந்நூல் எழுவதாயிற்று. திருக்குறளையே துணையாகக்கொண்டு திருவள்ளுவரின் வரலாறு காணும் உண்மைநெறியை முதற்கண் பேராசிரியர் அருள் திரு. விபுலானந்த அடிகள் ‘வேதாந்த கேசரி’ யென்னும் ஆங்கில வெளியீடொன்றில் எழுதிக்காட்டினார்கள். அவர்கள் காட்டி யருளிய அந்நெறியே பற்றி ஈண்டுத் திருவள்ளுவர் வரலாறு வடித்துத் தரப்படுகிறது. இதனோடு திருவள்ளுவரைப் பற்றி வழங்கும் கதைகளும், அவற்றுள் கொள்வன தவிர்வனவும் ஆராய்ச்சி செய்யப் பெற்றுள்ளன. திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளைப் பல்வேறு வடிவில் பல்வேறு வகையில் வெளியிட்டு மக்களிடையே பரப்பும் பெரும் பணியைச் செய்துவரும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதனை மிக்க ஆர்வத்தோடும் சிறப்போடும் வெளியிடு முகத்தால் தமிழகத்து நன்மக்களின் பெருநன்றிக்கு உரியராகின்றனர். தமிழ்கூறும் நல்லுலகம் இதனை விரைந்தேற்றுப் பெரும்பயன் எய்துமாக. அண்ணாமலைநகர், 1-10-1949 ஒளவை. சு. துரைசாமி I. தெய்வப் புலவர் தமிழகத்துத் தமிழ்மக்கள் தங்கள் மொழியாகிய தமிழைத் ‘தமிழன்னை’ என்றும், ‘தமிழ்த்தாய்’ என்றும், ‘தமிழ்த்தெய்வம்’ என்றும் பாராட்டிப்போற்றுவதைத் தமக்குத் தகுதியாகக் கருதுவர். தமிழ், இயல், இசை, நாடகம் என முத்திறப்படும். இம்மூன்றும் பண்டை நாளில் முத்திறத்து மக்களால் வளர்க்கப்பட்டுவந்தன. இயற்றமிழைப் புலவர்களும், இசைத்தமிழைப் பாணர்களும், நாடகத்தமிழைக் கூத்தரும் பேணிவந்தனர். அந்நாளில் வேந்தரும் செல்வர்களும் தாம் ஈட்டிய செல்வத்தைப் புலவர் முதலிய மூவர்களுக்கும் தந்து முத்தமிழையும் வளர்த்தனர். இம்மூவராலும் புகழப் படாத ஒருவன் வாழ்வு வாழ்வாகவே கருதப்படாது. இவர்களாற் பாடப்படும் புகழ்படைத்தவர் உடலிலிருந்து உயிர் நீங்குங் காலத்து இந்திரவிமானம் ஊர்ந்து தேவருலகு செல்வர் என்பது பண்டைநாளைய கருத்து. இந்தப் புகழ்பெற விரும்பி உயிர்கொடுத்தோரும், உடல்கொடுத்தோரும், பொருள் கோடுத் தோரும் எண்ணிறந்தோராவர். இவ்வாறு புகழ்விரும்பு முகத்தால் முத்தமிழையும் ஓம்பி வளர்ப்பது முன்னாளைத் தமிழ் மக்களது செல்வ வாழ்வாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்த வழக்கம் இடைக்காலத்தும் இருந்துவந்திருக்கிறது ஏன்? சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் செல்வர்கூட, பண்டைநாளைச் செல்வர்போலத் தமிழ்ப்பாவலர்களை ஆதரித்துப் புகழ்பெற்றனர். இதனால் தமிழ்மக்களுக்குத் தங்கள் தமிழின்பால் உள்ள பேரன்பால் தமிழ்ப் பாவலரையும் தமிழ்நாவலரையும் பேணும் மனப்பான்மை இடையறவு படாமல் இருந்து வந்திருக்கிறது என்பதைத் தெளியக் காணலாம். அண்மையில் வாழ்ந்த தேசீயகவி சுப்பிரமணிய பாரதியாரும், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்,” என்று பாடியிருப்பதும், இன்று நம்மிடையே வாழும் பாரதி தாசனாரும், “தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்,” என்று பாடியிருப்பதும் இன்றைய இளைஞரும் அறிந்த செய்தியாகும். இவ்வாறே, இன்று தமிழில் இனிய கவிபாடும் இளம்புலவர் அனைவரும் தமிழ்மொழியை நினைத்த அளவிலே பேரின்பம் உள்ளத்தில் உவட்டெடுத்துப் பெருகு மாறு தோன்ற விறுவிறுப்பான சொற்றொடர்களால், தமிழ் மொழியைப் புகழ்ந்து பாடுவதை நாம் காண்கின்றோம். இதனால் தமிழகத்துத் தமிழ்மக்கட்குத் தங்கள் தாய் மொழியாகிய தமிழின்பால் பேரன்பும் அதன் வாயிலாக அவருள்ளத்தே அது பற்றியே பெருமிதமும் நிறைந்து தோன்றுவது கண் கூடாக இருக்கிறது. ஒரு நாட்டு மக்களுக்கு அவர் பிறந்து சிறக்கும் நாடு உடலாகவும், அந்நாட்டில் அவர்கள் வழங்கும் தாய் மொழி உயிர்ப்பாகவும் அமைவனவாகும். உடல் பொலிவும் வளமும் குன்றியிருப்பினும், அதன்கண் உலவும் உயிர் அவ்வுடலின் பால் பெருங்காதல் கொண்டு அதனை விட்டுப்பிரியும் விருப்பின்றி அதனோடு ஒன்றியிருந்து அதனைப் பேணுதற்கே விருப்பம்கொள்ளும். அவ்வுடற்கு வருந் துன்பங்களைத் தனக்கு வந்ததாக அதனை ஏற்று வருந்துவதும் உயிர்க்கு இயல்பு. திரு வள்ளு வரும், “துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்” என்று உயிரின் இந்த இயல்பைக் குறித்துரைத்துள்ளார். இவ்வாறே ஒரு நாடு எத்துணை நலமில்லாத நாடாயினும், தட்பவெப்ப நிலநீர் வளங்களால் மிக்க வளம் பொருந்தாதாயினும், அந்நாட்டு மக்கட்கு அதன்பால் உண்டாகி யிருக்கும் காதல் பெரிதாகும். உலக வரலாற்றில் ஒரு நாட்டு மக்கள் வேற்றுநாட்டு மக்களோடு தம் உடற்குருதி பேராறு போலப் பெருகியோடப் போர்செய்து மடிந்ததற்குக் காரணம் தாம் வாழும் நாட்டின்பால் உண்டாகிய பேரன்பேயாகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் நாகரீகமின்றி விலங்குவாழ்வு வாழ்ந்த மக்கள், தங்கள் நாட்டிற்குள் மேலைநாட்டு வெள்ளையர்கள் புகுந்த போது அவர்களை யெதிர்த்துப் போராடிய செய்திகளை நாம் படிக்கின்றோம். இச்செய்திகளால் விலங்கு வாழ்வு வாழும் மக்களாயினும் அவரது நாட்டுப்பற்று அவரை யறியாமே அவரது இயற்கையில் நுழைந்து வேற்றவரோடு போராடி உயிர் தருமாறு செய்துளது என்பது தானே விளங்குகிறது. இளஞ் சிறார்களுக்குத் தம் பெற்றோர்பால் உள்ள அன்புக்கு அடுத்த நிலையில், ஒரு மனிதனுடைய பிறவியிலும் ஒழுகலாற்றிலும் ஊறிநிற்கும் நாட்டன்பு இடம் பெற்றுள்ள தென எட்மண்டு பர்க் (Edmund Burk) என்பார் கூறியிருப்பது மேலே கூறிய கருத்துக்கு ஆதரவு தருகிறது. இப்பெற்றித்தாகிய நாட்டன்பு தமிழ்மக்களிடையே அவர்களை யறியாமலே அவர்தம் நரப்புக் கால்தோறும் ஊறியிருக்கிறது. இது பண்டைச் சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் அவர்களது உள்ளத்தில் நிலைபெற்று நின்றதன் பயனாக, காடிடையிட்டும், மலையிடையிட்டும், கடலிடை யிட்டும் வேறுநாடுகட்குச் சென்று பொருளீட்டிப் புகழ் மேம்படு முகத்தால், தங்கள் நாட்டின் பெருமையினை வளம்படுத்தினர். நாட்டின்பால் செல்லும் அன்பு நாட்டவர் பாலும் சென்று அவர்க்கு வேண்டும் நலம் செய்தல் வேண்டுமென்ற மனப்பண்பினை வளர்க்கும். அதனால் தமிழர் அனைவரும் தம்மில் இயைந்து ஒருவரையொருவர் சார்ந்து தமிழகத்தைப் பேணிவந்தனர். அதனால் தமிழகம் “பொதுமை சுட்டிய மூவருலகம்,” (புறம்) எனவும், “வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு,”(தொல்) எனவும் சான்றோரால் பாராட்டப் பெற்றுள்ளன. இவ்வகையால், தமிழகத்து ஒரு பகுதியினரை வேற்று நாட்டவர் இகழ்ந்துரைப்பின், எல்லாப் பகுதியினரும் உடங்கியைந்துநின்று இகழ்ந்தாரையிகழ்ந்து, அவர் உள்ளத்தே இகழ்தற்கேதுவாய் முளைத்த காரணத்தை வேரோடு கிள்ளி யெறிந்து வீறுபெற்று விளங்கிய செய்தியைச் சேரன்செங்குட்டு வனது வரலாறு தெரிவிக்கின்றது. இமயம் முதல் கங்கநாடு (மைசூர் நாடு) வரையில் தன் புகழைப் பரப்பிய அசோக மன்னன் அடல் மிக்க ஆட்சிபுரிந்த அந்நாளிலும் அவன் ஆட்சிக்கீழ்ச் செல்லாது தனித்து நின்று நட்புரிமை கொண்டு தனியாண்மை யாட்சி நடாத்திய நற்றிறம் தமிழர்க்கேயுண்டு. கீழ்க்கடலிற் சோழரும், தென்கடலிற் பாண்டியரும் மேலைக்கடலிற் சேரரும் தனியாணை செலுத்தித் தமிழரசு நடாத்திய சிறப்பைச் சங்க நூல்கள் கூறுகின்றன. இவ்வண்ணம் தமிழரசு நடந்த சங்ககாலத்தில் தமிழ் மொழி, மக்களுடைய உள்ளத்தை இயற்பிரிவாலும், வாய்மையை இசைப் பிரிவாலும், மெய்யைக் கூத்துப் பிரிவாலும் வளம் படுத்திய தென்பது வரலாறு கூறும் வாய்மையுரை. இம்முப்பிரிவையும் புலவர்கள் தம் நல்லிசைப்புலமையால் நலம் பெறச்செய்து சொல் லேருழவர் எனும் தொல்புக ழெய்தினர். அவர்களும் நாட்டின் நலத்தை, நாடாதல், காடாதல், மேடாதல், பள்ளமாதல் கண்டு தெளியாது எவ்வழி ஆடவர் நல்லவர் அவ்வழியே நாடு நாடாம் எனக் கண்டு தெளிந்து மக்கள் உள்ளம், உரை, செயல்களால் நல்லராம் நலத்தையே நாடித் தம் நல்லிசைப்புலமையை நடாத்தினர். நல்லராகிய தமிழ்வேந்தர் நல்லிசைப்புலவரது நாநலத்தைத் துணை யாகக் கொண்டு நல்லரசுபுரிந்தனர். அவராற் பாடப்பெறும் அரும்புகழ்ப்பேறே தம் வாழ்வின் முழுப் பேறாகக் கருதினர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பான், “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர்,” பாடும் புகழையே பெரிதும் போற்றினானென அவனது வரலாறு கூறக் காண்கின்றோம். அறந் தவறியவிடத்து அறநிலை வற்புறுத்தியும், பொருள் குன்றியகாலைப் பொருள்செய்யும் நெறி வற்புறுத்தியும், இன்ப நாடாது துன்பம் விளைவிக்கும் செயல்மேற் சென்று அன்புதேய வருமிடத்து இன்பநிலை வற்புறுத்தற்கும் அகமும் புறமுமாகிய பாட்டுக்களால் தமிழ் வாழ்வை இனிமைப்பண்பு குன்றாவாறு நிலை நிறுவிய செயற்பெருமை புலவர்களாகிய நல்லிசைச் சான்றோர்க்கே உரியதாயிற்று. வாழ்வாரை வாழ்விக்கும் வகையில் வண்டமிழ்ப் புலவரது வாய்வளம் பெருந்தொண்டு செய்தமையின், வேந்தரும், செல்வரும், பிறரும் அச்சான்றோர் தம் நாட்டகத்தே உளராவது தமக்குப் பெருமையாகக் கருதியொழுகினர். நாட்டில் விளையும் பொருள்வகைகளில் தலையாயது புலமையாகிய செம்பொருள் என்று தேறினமையின், வேந்தர், தம் திருவோலக்கத்தில் நல்லிசைப் புலவர்களைப் பேணிச் சிறப்பித்தனர். நாட்டின் நலங்கண்டு பாடப்போந்த நல்லோர், நல்லிசைச்சான்றோர் தோன்றிய தோற்றத்தை நாட்டிற்கு நல்ல அணியாகப் புகழ்ந்து பாடுவாராயினர். சிலப்பதிகாரத்தைப் பாடியருளிய இளங்கோவடிகள், புகார் நகரத்தை வாழ்த்தலுற்றார். அந்நகரத்தோடு ஒத்த சிறப்புடைய வென பொதியில்மலையும் இமயமலையும் அடிகள் நினைவுக்கு வந்தன. மூன்றையும் ஒருங்குசேர்த்து, “பொதியி லாயினும் இமயமாயினும், பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பின் புகாரேயாயினும் நடுக்கின்று நிலைஇய என்பதல்லதை, ஒடுக்கங் கூறார்,” என்று வாழ்த்தினார். அக்காலை, ஒடுக்கங் கூறாமைக்குக் காரணம் இது என்றற்கு, அங்கே உயர்ந்தோர் உளர் என்பாராய், “உயர்ந்தோர் உண்மையின்,” என்றும், இவ்வாறு உயர்ந்தோர் உள்ள இடங்களை நிலைபெறுக என்று வாழ்த்துவதும், தீயோர் உறைவிடம் ஒழிக எனக் கடிதலும் முழுதுணர்ந்த சான்றோர்க்கு இயல்பு என்பா ராய், “முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே,” என்றும் கூறினார். இதனால் புகார் நகர்க்குப் புகழ் உயர்ந்தோர் உண்மை யென்று கூறும் நெறியால், உயர்ந்தோர் உண்மை கண்டே ஓரிடம் சான்றோரால் புகழப்படும் என்ற உண்மை பண்டை நாளில் இருந்த தென்பது தெளிய விளங்குகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த சேக்கிழார்பெருமான் திருநாவுக்கரசர் வரலாறு கூறப்புகுந்தார். அவர் பிறந்தது திருமுனைப் பாடி நாடாகும். அந்நாட்டைப் புகழக் கருதிய சேக்கிழார், அந்நாடு சான்றோர் பிறந்த சால்பு மிகவுடையதாதல் கண்டு, “அறந்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும், பிறந்தருளவுளதானால் நம்மளவோ பேருலகில், சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு,” என்று கூறித் திருமுனைப் பாடிநாட்டைச் சிறப்பித்தார். இந்நாளில் நம் தமிழ்நாட்டைப் பாராட்டிப் பரவிய தேசீயகவி சுப்பிரமணிய பாரதியார், “வள்ளுவன்தன்னை உலகினுக்கேதந்து வான்புகழ் கொண்டே தமிழ்நாடு- நெஞ்சை,அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு,” என்று பாடினார். இதனாலும், ஒரு நாட்டிற்குச் சிறந்த புகழ்க்காரணங்களுள் மிகச்சிறந்தது சான்றோர் அந்நாட்டில் உளராவது என்றும், இதுவே, தலையாய தொன்றெனக் கருதும் வழக்கம் தொன்று தொட்டே நம் தமிழகத்தில் இருந்து வருகிறது என்றும் தெரியலாம். இன்று நம் தமிழகத்தில் நமக்கேயுரிய தமிழும் உலகிற்குரிய ஆங்கிலமொழியும் நிலவுகின்றன. இவ்விரு மொழிகளிலும் சிறந்த புலவர்பெருமக்கள் உள்ளனர். அவர் அனைவரும் அவ்வம் மொழிகளின் பெருமை கூறும் போது அம்மொழியில் புலமை சிறந்தோங்கிய சான்றோரை எடுத் தோதி அம்மொழியின் ஏற்றத்தைக் கூறுவர். ஆங்கிலத்திற்கு ஏற்றங் கூறுவோர், அதற்குப் பெருமையெல்லாம் செகப்பிரியர் (Shakespear) உளரானது என்றும், ஆங்கிலநாட்டுக் கார்லயில் (carlyle) என்பார், ‘நாங்கள் இந்தியாவை இழத்தற்கு உடன் பட்டாலும் உடன்படுவோம், செகப்பிரியரை விடோம்’ என்ற கருத்துப்பட மொழிந்தார் என்றும் கூறுவர். இவ்வாறே வடமொழி யாளர், தங்கள் வடமொழி வான்மீகியையும் காளிதாசனையும் பெற்ற பெருமையுடைய தென்பர். செந்தமிழர் தங்கட்குப் பெருமை தரும் சான்றோர் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பர். அவருள்ளும் தேசீயவாழ்வில் ஈடுபட்டோர், திருவள்ளுவரும், கம்பரும், இளங்கோவடிகளும் சிறந்த சான்றோரென்பர். இலக்கிய சமயவாழ்வு களில் ஈடுபட்டோர், எங்கள் தமிழ்க்கு ஏற்றந் தருவன என ஆறு தமிழ்ப்பெருநூல்களை ஓதுவர். அவை, “வள்ளுவர், மெய்யன்பர் மொழி வாசகம். தொல்காப்பியமே, தெள்ளு பரிமேலழகன் செய்தஉரை - ஒள்ளியசீர்த், தொண்டர் புராணம், தொகுசித்தி (சிவஞான சித்தியார், சிவஞான போதம் முதலியன) ஓராறும், தண்டமிழின் மேலாந்தரம்” என்பர். இலக்கணநெறியிற் பயின்றோர், தொல்காப்பியம், திருவள்ளுவர், திருக்கோவையார் என்ற மூன்றுமே சிறந்தன என்பர். இவ்வாறு பலரும் பல கூறுவராயினும், எல்லாருடைய கூற்றினும் ஒரு நூல் தவறாது குறிக்கப் பெறுவது காணலாம். அஃது யாது? அதுதான் திருவள்ளுவர் செய்த திருக்குறள். எத்திறத்தாராலும் பாராட்டப்படும் திருவள்ளுவரை மனத்தால் விரும்பாத ஒருவன் தமிழ்க்குடியில் இருப்பானாயின், “அவன் குலத்தின்கண் ஐயப்படும்.” அவனைத் தமிழர் மகனென்னார்; மக்கட்பதடியென்பர்; அறிவுடை யோர் நடைப்பிணம் என்பர். இதுபற்றியே முன்னோர் திருவள்ளுவரைத் ‘தெய்வப்புலவர் திருவள்ளுவர்’ என்று பாராட்டினர். II. திருவள்ளுவர் வாழ்வு தோற்றுவாய் நம் செந்தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்களின் வரலாறு களை அவ்வக்காலத்திலிருந்த அறிஞர்கள் எழுதி வைத்திலர். அப்பெருமக்கள் தாமும் தம் வரலாற்றைக் குறித்திலர். அவர்தம் புலமைப்பொருள் களாகிய பாட்டும் உரையும் பெயர்க்குறிப்பு மாகிய சில குறிப்புக்களே நமக்குக் கிடைத்திருக்கின்றன. மேனாட்டு மக்களின் மொழியறிவும் நல்லொழுக்கங்களுட் சிலவும் விரவியதன் பயனாய், நம் நாட்டவர்க்குத் தம் பண்டைப் பெரியோர் வரலாறுகளை ஆராய்ந்து காணும் முயற்சி தோன்றுவ தாயிற்று. அதன் பயனாகவே இன்று செந்தமிழ் நாட்டை யாண்ட பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்க மன்னர், முகமதியர், மேனாட்டவர் முதலியோர் வரலாறுகள் ஓரளவில் வெளியாகி யுள்ளன. மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, புலவர் வரலாறுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சமயவரலாறு, சமுதாய வரலாறு, பொருள்நிலை வரலாறு, அரசியல் வரலாறு, வாணிக வரலாறு எனப் பல வரலாறுகள் ஆராய்ந்து காணவேண்டிய நிலையில் உள்ளன. இவற்றை ஆராய்ந்து உண்மைகாணும் நெறி மிக்க சிக்கலாக வுளது எத்துணைக் காலங்கழியினும், மெய்ம்மை நிலைபெறு மென்றும், பொய்ம்மை நிலையின்றிக்கெடும் என்றும் கூறுவர். சில ஆராய்ச்சிகளால் பொய்ம்மை மெய்ம்மைகள் நன்கு விளங்கி யுள்ளன. இந்திய வரலாற்றில், கல்கத்தா இருட்டறை வரலாறு ஒன்று நெடுநாள்வரையும் உண்மையெனக் கருதப்பட்டு வந்தது; ஆராய்ச்சி யால் அது பொய்யெனத் தெளிவாயிற்று. இவ்வாறே சிவாஜி, திப்புசுல்தான் முதலியோர் வரலாறுகளில் பல பொய்கள் நிலை யின்றி ஒழிந்தன; பல ஆயிர ஆண்டுகட்கு முன்பிருந்த வரெனக் கருதப்பட்டுவந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலாயினோர் காலம், இத்தகைய ஆராய்ச்சிகளால் இன்னது தான் எனத் துணிபு செய்யப்பட்டுள்ளது. இங்ஙனம் ஆராய்ந்து வருமிடத்துத் திருவள்ளுவர் போன்ற பெருமக்களின் வரலாற்றுண்மைகள் ஆன்றோரால் குறிக்கப் பட்டில வாயினும், ஒருசில, தமது உண்மை காட்டி ஆராய் வார்க்கு ஊக்கம் தந்து வருகின்றன. பெரும்பாலன பொய்யும் வழுவும் புனைவுரையும் கலந்து ஒளிமழுங்கி யிருக்கின்றன. ஆயினும், அவற்றைத் தூய்மை செய்து கொள்வது அறிஞர் அறிவுபெற்றதன் பயனாகும் அதுவே திருவள்ளுவர்க்கும் கருத்து என்பதை, “குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்,” என அவரே உரைப்பதனால் நன்கறியலாம். நம் நாட்டில் அச்சுப்பொறி நிலவத்தொடங்கிய காலத்தில் திருக்குறளை அச்சிட்டு வெளியிட்ட சான்றோர் பலரும், திருக்குறட் பதிப்புக்களில், தொடக்கத்தே திருவள்ளுவர் வரலாற்றை எழுதியிருக் கின்றனர். அவ்வரலாறுகள் பல வற்றிற்கும் ஆதாரம் அவரவர் கேள்வி வாயிலாக அறிந்த செய்திகளேயாகும். இச்செய்திகளை ஒருங்கு திரட்டிச் சுமார் நாற்பத்தைந்து ஐம்பது ஆண்டுகட்குமுன்பு வாழ்ந்த முருகதாச சுவாமிகள் தாம் எழுதிய புலவர் புராணத்துள் செய்யுள் வடிவாகத் திருவள்ளுவர் வரலாற்றைத் தந்துள்ளார். ஆராய்ச்சி நெறியில் முயன்ற அறிஞர் சிலர் வேறு குறிப்புக்கள் சிலவற்றைக் கண்டு வெளியிட்டுள்ளார்கள். இவற்றின் துணையால் திருவள்ளுவரது உண்மை வரலாறு ஓரளவே தெரிகிறது. வள்ளுவர் காலம் சங்க நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் திருவள்ளுவ ருடைய திருக்குறள் கருத்துக்களும் திருக்குறட்சொற்றொடர்களும் காணப் படுகின்றன. அவைகள் ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் அனைவருக்கும் ஒப்பமுடிந்த கருத்து. ஆகவே, திருவள்ளுவர் காலமும் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டதாம். சங்கநூல்களிற் காணப்படும் பாட்டுக்கள் பலவும் ஒருகாலத்தன அல்ல. நெடுங் காலம் இடையிட்ட பாட்டுக்களும் அவற்றுள் உண்டு. “தென்குமரியின் தெற்கிலுள்ள இந்துமாக்கடல் தோன்றுதற்கு முன் தோன்றிய செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத ராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும், திருவேங்கடத்தில் திருமால் கோயிலும், பழனியில் முருகன் கோயிலும் தோன்று வதற்குமுன் தோன்றிய செய்யுட் களும்............ தொகுக்கப் பட்டுள்ளன. சுருங்கச் சொல்லுமிடத்து, மிகப் பழைய நூல்கள் எல்லாவற்றிற்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்துக்குமுன்னே தோன்றிய செய்யுட்களும், பின் தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே கொண்டு தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறென்பது மிகையாகாது,” என்பர். எனவே, திருவள்ளுவர் இருந்து திருக்குறள் பாடிச் சிறப்புற்ற காலம் சங்கத் தொகைநூற் பாட்டுக்கள் தோன்றிய காலமாம்: சுருக்கமாகக் கூறின், சங்ககாலம் என்று கூறலாம். தமிழகம்- பிரிவுகள் சங்ககாலத்தில் தமிழகம் ஐந்து பெருநாடுகளாகப் பிரிந் திருந்தது. அவை, தென்பாண்டிநாடு, சோழநாடு, தொண்டை நாடு, கொங்குநாடு, சேரநாடு என்பனவாம். பாண்டிநாட்டின் வடவெல்லை புதுக்கோட்டைக் கண்மையிலோடும் வெள்ளாறு; சோழநாட்டின் வடவெல்லை தென்பெண்ணையாறு; தொண்டை நாட்டின் வட வெல்லை வேங்கடமலையும், அதன் வட கோடியில் கிழக்குநோக்கி யோடும் வடபெண்ணை யாறுமாம். கருவூரருகில் காவிரியொடு கலக்கும் ஆன்பொருந்த ஆற்றுக்கும் (அமராவதியாறு) மேற்குமலைத் தொடருக்கும் இடைப்பகுதி கொங்குநாடாகும். இதன் தென்னெல்லை கோடைமலைத் தொடரும் (ஆனை மலைத் தொடர்) வட வெல்லை எருமை (மைசூர்) நாடுமாகும். இந்த எருமை நாடு பிற்காலத்தே கங்கநாடெனப்பட்டது. கொங்கு நாட்டின் வடமேற்குக் கொண்கான நாடாகும். மங்களூர்ப் பகுதியி லுள்ள ஏழில்மலை (சப்த சயிலம் ) இந்தக் கொண்கான நாட்டைச்சேர்ந்தது. வெஞ்சமாக் கூடலருகே யோடும் குடவனாறு சங்ககாலத்தே காவிரியொடு கலந்ததெனப் பதிற்றுப்பத்துப் பழைய வுரையால் தெரிகிறது. வள்ளுவர்கள் இச் சங்ககாலத் தமிழகத்தில் பாண்டிநாட்டு மேற்குப் பகுதியில் நிற்கும் மலைத்தொடர்களிடையே நாஞ்சில்மலை யென்பதொரு குன்று. அதனைச் சூழவுள்ள நாட்டை வள்ளுவர் என்ற வேந்தர் குடியினர் ஆட்சி புரிந்தனர். ஒளவையார் காலத்தே அந்நாட்டை நாஞ்சில் வள்ளுவன் என்ற வேந்தன்ஆட்சிபுரிந்தான் எனச் சங்கத் தொகைநூல் கூறுகிறது. அவன் ஒளவையார்க்குச் செய்த சிறப்பை நோக்குமிடத்து, அவன் அறங்கிடந்த நெஞ்சும், ஆண்மை சான்ற அமைதியும் உடையன் என்பது தெளிவாகிறது. புறநானூற்றில் ஒரு பாட்டுத் திருக்குறளை அறம் என்றே கூறுதலால், அறம் பயந்த நம் திருவள்ளுவர் அவனுக்கு முன்னோராதல் வேண்டுமெனத் துணியலாம். அதற்கேற்ப அவன் வள்ளுவன் என்ற பெயரையே கொண்டிருக் கின்றான். பிற்காலத்தே வள்ளுவர் குடி நிலைதளர்ந்துபோயிற்று. அவ்வள்ளுவர்கள் மேலை மலையாளநாட்டுக் கோயில்களில் “கோயில் காரியம்” பார்க்கும் பெருமக்களுள் ஒருவராக இருந்தனர். இதனை, மலையாளநாட்டுப் பொன்னானி வட்டத்துச் சுகபுரம் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டொன்று* “சொகிரத்துப்பருடை யாரும் ............ இராயசேகராயின வள்ளுவரும் கூடிச் செய்த கச்சமாவது,” என்று கூறுகிறது. இது வள்ளுவர்களை “இராயசேக” ரென்பதனால், வள்ளுவரில் ஒருசிலர் மேலைநாட்டில் அரசுரிமை நீங்கினும் தொன்மைச் சிறப்புத் தோன்றக் கோயில் காரியம் பார்த்து வந்தனரென அறிகின்றோம். இக்கல்வெட்டிற் போலவே, இப் பொன்னானி வட்டத்துப் புக்காட்டூரிலுள்ள கல் வெட்டொன்று புக்காட்டூர்ச்சபையோரும், பிராமணரும், கோயிலதி காரிகளும், வள்ளுவர்களும் கோயிலில் விளக் கெரிக்க உடன்பட்ட செய்தியைக் கூறுகிறது. இக்கல் வெட்டுக்கள் காலத்தால் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டனவாகும். ஆதலால், சங்ககாலத்துக்கும் இக்கல் வெட்டுக்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வள்ளு வர்கள் இருந்த இருப்பைக் காண்டல் வேண்டும். சங்கநூல்களை அடுத்துத் தோன்றிய மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழாவை நகரத்தார்க்கு அறிவிக்கும் பணியை வள்ளுவன் ஒருவன் செய்த செய்தி காணப் படுகிறது. இதனை யடுத்துப் போந்த திவாகர நூல், “வள்ளுவன் சாக்கை யெனும் பெயர் மன்னற், குள்படு கருமத் தலைவர்க்கொன்றும்,” என்று கூறுகிறது. இவ்வாற்றால், வள்ளுவர்கள் பழங்காலத்தே அரசரைச் சேர்ந்தொழுகும் பெருங்குடி மக்களாக விளங்கினரென்பது தேற்றம். சங்ககாலத்தே குறுநிலமன்னராயிருந்த வள்ளுவர்கள், பின்னர் அரசவாழ்விழந்து தமிழ்வேந்தர்பால் அரசரைச் சேர்ந் தொழுகும் அரசியற் சுற்றத்தாருள் ஒருவராக வாழ்ந்தனரெனவும், பின்னர்ப் பெருங்கோயில்களில் “கோயில் காரியம்” பார்க்கும் பெருமக்களாக விளங்கினரெனவும் அறியவேண்டும். திருவள்ளுவர்- பிறந்த நாடு வள்ளுவர்கள் அரசவாழ்வு வாழ்ந்த நாளிலோ, அதற்குச் சிறிதுபின்னோ திருவள்ளுவருடைய முன்னோர் நாஞ்சில் மலையைச் சூழ்ந்த நாட்டினின்றும்நீங்கிப் பாண்டி நாட்டு வையையாற்றின் கரையிலுள்ள நாட்டையடைந்து அங்கே தங்கினர் அந்நாட்டவர், ஊரார் உண்ணுநீர் கொள்ளும் நீர்நிலையை ஊருணியெனவும், அப்பகுதி மணல் பரந்து விளங்குவதாகலின் ஊற்றுக்கண்டு நீர் கொள்ளும் நீர்நிலையை ஊற்றெனவும், மணற்கேணியெனவும் வழங்குவர். திருவள்ளுவர் அந்நாட்டினரென்பது இனிது தோன்ற, அவர் “ஊருணி நீர் நிறைந் தற்று”, எனவும், “தொட்டனைத் தூறு மணற்கேணி,” எனவும், “இறைப்பவர்க்கு ஊற்று நீர்போல,” எனவும் வழங்கியிருப்பது தக்க சான்று பகருகின்றது. மேலும், ஊருணி, கேணி யென்ற சொல்வழக்குகள் கொங்குநாட்டிலும் தொண்டை நாட்டிலும் இல்லை; ஊருணியெண்னும் வழக்குச் சோழ நாட்டில் கிடையாது. ஆதலால், இவற்றை வழங்கிப் பயின்ற திருவள்ளுவர் பாண்டிநாட்டினரே யென்பது தெளிவாம், இதற்கு ஆதரவாக, திருவள்ளுவ மாலையில் பழம் பாட்டொன்று, உத்தரமதுரையில் கண்ணன் சிறந்து விளங்கியதுபோல, தென் மதுரையில் திருவள்ளுவர் சிறந்து விளங்கினாரென்ற கருத்துப்பட, “உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான் உத்தர மாமதுரைக் கச்சென்ப- இப்பக்கம் *மாதாணு பங்கி மருவுபுலச் செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு,” என்று கூறுகிறது. திருவள்ளுவர்- இளமை வாழ்வு பாண்டிநாட்டு வையையாறு பாயும் மணல் பரந்த பகுதியில் வாழ்ந்த அரசியல் வழித்தோன்றல்களான வள்ளுவர் குடியில் தோன்றிய திருவள்ளுவர், “குல விச்சை கல்லாமற் பாகம்படும்” என்றதற்கேற்ப, அரசியல் அறிவும் பொருளியல் அறிவும் இயல்பாகவே ஓரளவு வாய்க்கப் பெற்றவர். பின்பு அவர் இயற்கையறிவோடு, கல்வி கேள்விகளால் சிறக்கும் செயற்கையறிவு மிகப்பெற்று நல்லிசைப் புலமை யெய்தினார். அவருடைய பெற்றோர், தம்மினும் தம்முடைய மகன் சீர்த்த அறிவுடையனாய் இருப்பது கண்டு, இவனறிவு நமக்கேயன்றி மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இன்பந் தரும் எனத் தெளிந்து இன்புற்றனர். அதனால், திருவள்ளுவருடைய தந்தையார், கற்றோர் கூடிய பேரவை கட்கு அவரையழைத்துச் சென்று காட்டி, அவருள்ளத்தே கல்வியிற் பேரூக்கம் உண்டாமாறு செய்தார். கல்வியாற் பிறக்கும் அறிவு நலத்தால் மனநலமும், மன நலத்தால் வினைநலமும் ஒருவர்க்கு உண்டாகும். மன நலத்துக் குரிய அறிவு நல்கும் கல்விபெற்ற திருவள்ளுவர். வினைநலம் வாய்ப்ப உண்டாதல் வேண்டிப் படைப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினார் அறிவு நலத்தாலும் வினைநலத்தாலும் மேன்மையுற்று வருகையில் மன்னரைச் சேர்ந்தொழுகும் அரசியற்பணி திருவள்ளுவர்க் குண்டாயிற்று. அவ்வாற்றால் திருவள்ளுவர் அரசியற் கூறுகளையும், அவற்றுள் செய்வன தவிர்வனவற்றையும், அவற்றால் விளையும் ஆக்கக்கேடு களையும் செவ்வே தெரிந்து கொண்டார். அச் செல்வாக்கால் அக்காலத்தே அரியன எனவும், உயரிய எனவும் கருதப்பட்ட நூல்கள் பலவற்றையும் கசடறக்கற்று ஒள்ளிய புலமை பெற்று விளங்கினார். இவருடைய அறநூலறிவும் பொருணூலறிவும் மேன்மை யுற்றுத் திகழக்கண்ட சான்றோர், “இந்த அருமந்த மகனைப் பெறற்கு இவன் தந்தை என் நோற்றான் கொல்லோ?” என வியந்து பாராட்டினர் மெய்ந்நூற் புலமையும் வினைத் திண்மையும், போர்ப்பீடும் பெற்ற சான்றோர், திருவள்ளு வருடைய அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலிய நற்பண்புகளைப் பாராட்டி, “சான்றோன்” எனப் புகழ்ந்தனர். அது கேட்குந்தோறும், திருவள்ளுவரைப்பெற்ற தாய் கொண்ட பேருவகை மலையினும், கடலினும், நிலத்தினும் மிக்குப் பரந்ததெனக் கூறவும் வேண்டுமோ? மனை வாழ்வு திருவள்ளுவர் நூலறிவு உலகியலறிவுகளில் சிறந்து சான்றோர் பரவும் சால்பு எய்திய காலையில், அவர்க்குத் தன் மனத்துக்கேற்ற வாழ்க்கைத் துணையாக ஒரு நன்மகளைத் தேர்ந்து மணஞ்செய்து கொள்ள வேண்டுமென்னும் நாட்ட முண்டாயிற்று. அந்நாளில் மணப்பருவ மெய்திய மக்கட்கு மணஞ்செய்யவேண்டிய கடமை பெற்றோர்க்கு இக்காலத்தி லிருப்பதுபோல இல்லை. நல்லதன் நலமும் தீயதன் தீமையும் பகுத்தறியும் அறிவு சிறப்போர் உரிய காலத்தில் தமக் கேற்ற வாழ்க்கைத் துணைகளைத் தேடிக் கொள்வது அவரவர் பிறப் புரிமையாக இருந்தது. மக்கட்குப் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகளுள் ஈன்று புறந்தருதலும் சான்றோராக்குதலும் என்ற இரண்டுமே சிறந்திருந்தன. தந்தை மகற்காற்றும் உதவி இதுவெனச் சிறந்தெடுத் தோதிய திருவள்ளுவர் தக்க பெண்ணொ ருத்தியைத் தேடித் தன் மகனுக்கு மணம் செய்துவைப்பது பெற்றோர் கடன் என யாண்டும் அவர் கூறவில்லை. இதுவே இக்கருத்துக்கு வலிய சான்றாகிறது. திருவள்ளுவர், தாம் பிறந்து சிறந்த பாண்டிநாட்டுச் சீரியோர் ஒருவர் மகளொருத்தியை ஒருகால் கண்டு அவள் பால் தன் காதற்கருத்தைச் செலுத்தினார். அம் மடந்தையும் திருவள்ளுவர் பால் ஒத்த காதலுடையவரானார். அக்காதல் முறுகிப் பெருகி ஒருவரை யொருவர் இன்றியமையார் என்ற நிலையினைப் பயந்தது கல்வி கேள்வித் துறையிலும், கட்டாண்மைத் துறையிலும் கருத்துச் செலுத்திப் பயின்றிருந்த திருவள்ளுவர் கருத்துப் புதிதுதோன்றிய காதற் காமத்தால் அலக்கண்உற்றது. “போரில் எனது ஆண்மையைப் பிறர் கூறக் கேட்டாலும் பகைவர் அஞ்சுவர்; அத்தகைய என் பீடு இப்பெண்ணின் நெற்றியொளி கண்ட மாத்திரையே கரைந்து போயிற்றே,” எனத் திருவள்ளுவர் கவன்றார் பின்பு அவர் தன்னை மணம் செய்துகொள்ளற்கு அவள் விரும்புவளோ என்பது துணிய அவளுடைய குறிப்பை ஆராய்ந்தார். அவர் அவளை நோக்கும் போது அவள் தலைகுனிந்து கடைக் கண்ணால் அவரை நோக்கி மெல்ல நகைத்துத்தன் உடன் பாட்டை அறிவித்தாள். இருவரும் பின்னர்க் களவுத்துறையில் இறங்கி ஒருவரை யொருவர் தனித்துக் கண்டு அளவளாவினர். “முறிமேனி, முத்தம் முறுவல், நெறிநாற்றம், வேலுண்கண், வேய்த்தோள், அவட்கு,” என அவளது நலத்தைத் திருவள்ளுவர் தம் நெஞ்சக்கிழியில் எழுதிக்கண்டு இன்புற்றார். முடிவில், “வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை” எனவும், “உடம்போடு உயிரிடை என்னமற்றன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு” எனவும் தெளிந்தார். இவ்விருவரது களவொழுக்கம், ஊரில் அலரையுண்டாக்கிற்று. ஆகவே, திருவள்ளுவர், சான்றோர் துணையாக அப்பெண்ணின் பெற்றோரது உடன்பாடுபெற்று நல்லோரையில் நல்லோர் வாழ்த்தத் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டார். திருவள்ளுவருடைய இல்வாழ்க்கை பண்பும் பயனுமாகிய அன்பும் அறமும்கொண்டு நடந்தது அவர் வாழ்க்கைத் துணைவியார். தற்காப்பு, தன்னைக் கொண்டானைப் பேணுதல், தகைசான்ற சொற்காத்தல் முதலிய நற்செய்கைகளால் மேன்மை யுற்று விளங்கினார். மனைத் தக்க மாண்பும், தம் வளத்துக்குத் தக்க தகுதியும் அவர் பால் இருந்தது கண்டு திருவள்ளுவர் பெருமகிழ்ச்சி கொண்டு, “இல்லதென் இல்லவள் மாண்பானால்” என இறும்பூது கொண்டார். அவருடைய கற்பின் திண்மையும் பொற்பும் காணவே, திருவள்ளுவர் பெருவியப் புற்று, “பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்” எனப் பெருமிதங் கொண்டார். இந்த வாழ்வின் விளைபயனாகத் தொடக்கத்தே இவர்கட்கு நன்மக்கட்பேறு உண்டாயிற்று. மனைவாழ்விலும் ஏனை உயிர்களோடு தொடர்பு கொண்டு வாழும் வாழ்விலும் அன்பு பெருகிற்று; விருந்தினரை ஓம்பினர்; இன்சொற்களே வழங்கினர். திருவள்ளுவர் பிறன்மனை நோக்காத பேராண்மையாகிய ஆன்ற ஒழுக்கத்தால் சான்றோராய்த் திகழ்ந்தார். தன்பால் பிறர் தகாதன செய்தாராயினும், அவர்க்கு அற மல்லாதன செய்யாது தமது தகுதியால் அவரை வென்று விளங்கினார் அதனால், அழுக்காறு, வெஃகல், புறங்கூறல் முதலிய தீய பண்புகள் இலவாயின. இன்சொல் இனிதீன்றல் கண்ட வராதலால், திருவள்ளுவர், பொருளி ல்லாத பயனில் சொற்களை மறந்தும் சொல்வதிலர். தீய செயல் களைத் தீயினும் கொடியவையாகக் கருதி அவற்றை மறந்தும் செய்ய நினையார். வறுமை வந்து வருத்துவதாயினும் தீச்செயலை நெஞ்சிலும் தீண்டார். கல்வியறிவு ஒழுக்கங்களால் சிறப்புற்றுத் திகழ்ந்தபோதும், ஒப்புரவைவிடச் சிறந்தது ஒன்று தேவருலகத்தும் பெறலரிது என்று தேறி ஊரவர்க்குத் தாம் செய்யத்தகுவன செய்து ஒப்புரவு குன்றாமல் வாழ்ந்தார். வறியார்க்கு ஒன்று ஈவேத ஈகை என்ற கருத்தால், இல்லார்க்கு வேண்டுவன ஈந்து பெரும்புகழ் பெற்றார். மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று என்று கொண்டு, இரப்பார்க்கு இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈந்து சிறந்தார். ஈயுமிடத்தும், பசிப்பிணியால் வருந்தி வருவோர்க்கு வேண்டும் உணவு தந்துபசி தீர்ப்பதுதான் சிறந்ததாகக் கருதினார். அவர், தம் பால் இரப்பார்க்கு ஈதலும், இசையுண்டாக வாழ்தலுமே வாழ்வின் ஊதியமாகக்கொண்டு தம் வாழ்க்கையை நடத்தினார்; அதனால் பெரும்புகழ் உண்டாயிற்று அவர் புகழை நாம் இன்றும் பாராட்டிப் பரவுகின்றோம் உலகியல் வாழ்வு திருவள்ளுவர் இல்வாழ்வில் இதுகாறும் மனைக்கண் இருந்து செய்து போந்த நற்பண்பு நற்செய்கைகளைக் கண்டோம். இனி, அவர் அரசியல் பொருளியல் என்ற உலகியல் வாழ்விற் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் கூறுகளைக் காணலாம். திருவள்ளுவர் அரச குடும்பத்திற் பிறந்தவ ராதலால், கல்வி, கேள்விகளாற் பிறக்கும் செயற்கை யறிவும் வழிவழியாக எய்தும் இயற்கையறிவும் கூடிய செவ்விய அறிவு. வாழ்வுக்கு இன்றியமை யாதென கருதித் தொடக்கத்தே சிறந்த கல்வியறிவு பெற்றாரென முன்பே கூறினோம். அவ்வறிவால் திருவள்ளுவர் தம் பால் குற்றம் உண்டாகாதபடி எப்போதும் தம்மைக் காத்தொழுகினார்; பிறர்பால் குற்றங்காண நேரும்போ தெல்லாம்தன் குற்றத்தை முதற்கண் கண்டு தெளிவார் அரசியல் வாழ்வு என்பது ஒரு தனி மனிதனுடைய எல்லையைக் கடந்தது. அறிஞர் பலருடைய துணைபெற்றே நடப்பதெனக்கருதி, அறன் அறிந்து மூத்த அறிவுடையாராகிய பெரியோர் துணையைச் சிறப்பாகத் தெரிந்து மேற்கொண்டார். அவ்வாறு துணையாகும் பெரியோரை நாடிக் கொள்ளுமிடத்துச் சிற்றினத்தாரும் எதிர்ப் பட்டனர். அவரால் அறிவு திரிந்து அல்லலுழக்க நேரும் என்றறிந்து அச்சிற்றினத்தார் கூட்டுறவை ஒதுக்கி நீக்கினார். பெரியோர் துணைபெற்றுச் செய்வன செய்தொழுகும் போதும், மேற்கொண்ட ஒரு செய்கையைச் செய்யுமிடத்து, அதற்கு உண்டாகும் செலவும், அதனால் விளையும் பயனும், இடையேயுண்டாகும் ஊதியமும் என்ற இவற்றை ஆராய்ந்தே செய்வர். வினை வலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி முதலிய வலியறிந்தும், செய்தற்குரிய வற்றைச் செய்தற்குரிய காலமறிந்தும் இடமறிந்தும் செய்யத் தவறார். இச்செயல் கட்குரிய அரசியல் வினையாளரைத் தேர்ந்து கொள்ளு மிடத்து. உலகியலிற் பற்றில்லாதவர் பழிபாவங்களுக்கு நாணார் என்று கண்டு, அவர்களை அரசியலில் அறவே விலக்கினார். தமக்கு அன்புடையாரென்றும் உறவின ரென்றும் கருதிப் போதிய அறி வில்லாதவரை அரசியலில் வினையாளராக வைப்பது கூடா தென்பது திருவள்ளுவர் கொள்கை. ஒவ்வொருவனையும், செய்தற் குரிய வினைக்கேற்ற தகுதியுடைய னென்பதைத் தெரிந்தே வினை யாளனாகக் குறிப்பர். வினையாளராகிய சுற்றத்தார்பால் இன்சொல் வழங்கலும் வெகுளிகொள்ளாமையும் பெருங்கொடை கொடுப்பதும் அரசியல் தலைவரின் தலைமைப் பண்பாதலைக் கண்டார். செல்வத் தாற் சிறக்கும்போது தம்மை மறந்து கெட்டாரை நினைந்து தற்காப்புச் செய்துகொள்வது தலைவர்களின் தகுதியாக இருப்பது கண்டார். அந்நாளில் சிறப்புடைய வேந்தர் நல்லாட்சி புரிந்து நலம் பெற்றதும், அஃதில்லாதார் கொடுங்கோன்மை புரிந்து கெட்டதும் திருவள்ளுவர் கண்டார். செங்கோன்மையை நாடாது படைவன்மை ஒன்றே கருதி அதனைப் பெருக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த வேந்தர் தம் எண்ணமழிந்து கெட்டார்கள். அம் மன்னர்களை நோக்கிய திருவள்ளுவர் “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல்; அதுவும் கோடாதாயின்” என்று வற்புறுத்தினார். குடிகளைக் காத்துப் புரந்தருளும் வேந்தன், அவர்களுட் சிலர் குற்றம் செய்தவழிக் கண்ணோடாது ஒறுப்பாராயின் மக்கட்கு அவன்பால் வெறுப்புண்டாகுமன்றோ! என்று சிலர் கூற, அவர்களை, “குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல், வடுவன்று, வேந்தன் தொழில்,” என்றும், அச்செயல் நெல் விளைக்கும் உழவர் களை யெடுப்பதையொக்கும் என்றும் கூறித் திருவள்ளுவர் தெருட்டினார் கட்சிப் பிணக்குகளிற் கருத்தைச் செலுத்திச் செங்கோன்மை நாடாத வேந்தர் நாட்டில், இன்பம் வேண்டிச் செல்வம் மிக ஈட்டிய செல்வர்கள் இல்லாத வறியவர்களைக் காட்டிலும் பெருந் துன்பம் உழந்தனர். அதுகண்ட திருவள்ளுவர், கொடுங் கோன்மை நிலவும் நாட்டில், “இன்மையின் இன்னாது உடைமை,” என்று எடுத்துரைத் தார். அரசியல் தலைமையில், அரசியலும் பொருளியலும் உலகியலும் பிறவும் கல்லாத மக்கள் கூடி, கல்லாரையே பெரிதும் அன்பாற் பிணிக்கும் வகையில் ஆட்சிமுறை நடத்துவரேல், அதனைக் காட்டிலும் நிலத்துக்குப் பெருஞ்சுமை வேறில்லை என்பதைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினார். அரசியலிற் சிலர் பொறுக்கத் தக்க குற்றம் செய்தாரையும் கண்ணோடாது ஒறுக்கத் தொடங்கினர். அவர் செயல் கண்டு மக்கள் வருந்துவது அறிந்தார் திருவள்ளுவர். “கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம்” என்றும், “கருமஞ் சிதை யாமற் கண்ணோட” வேண்டும் என்றும், “ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை” என்றும் உரைத்து நலம் செய்தார். அரசாளும் தலைவர் பலர், அரசியல் நெறிக்கு ஒற்றாளுதலை விரும்பாமை கண்டார் திருவள்ளுவர். வேந்தர்கட்குத் தெளிவைத் தருவன. “ஒற்றும் உரைசான்ற நூலும்” என எடுத்தோதி, ஒற்றினை வெற்றிபெற ஆளும் வேந்தர்க்கே வெற்றி உரியதென விளக்கினர். ஒற்றினால் ஒற்றப்படற்கு உரியவர் யார் என்றெழுந்த ஐயத்தை, “வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்றாங்கு, அனை வரையும் ஆராய்வது ஒற்று” என நீக்கி நெறி காட்டினார். இவ்வாறே வேந்தர்க்கு ஊக்கத்தின் சிறப்பும், மடிமையின் தீங்கும் முயற்சியின் பெருமையும், இடுக்கண் வருங்கால் அதற்கு அஞ்சி உள்ளமழியாமையும் வேந்தர்கட்கு இன்றியமை யாதனவாதலைத் திருவள்ளுவர் கண்டு தெளிவித்தார். அரசர் வழித்தோன்றலாய் அரசியற் சுற்றமாய் இருந்து நாட்டுக்குப் பெருந்தொண்டுபுரியும் அரும்புலமை நலம் வாய்ந்த திருவள்ளுவர், அமைச்சர்கட்குரிய அமைச்சுக் கடன்களை யாராய்ந்து அவர்க்குச் சிறப்பாக வேண்டிய சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செய்திறம் என்பனவற்றை நன்கு தேர்ந்து நயமுற நவின்றார். மேற்கூறிய தகுதியுடைய அமைச்சர்களே வேந்தர்கட்குத் தூது செல்லும் தகுதி பெற்றோரென்றும், அத்தகுதி அன்பு, உயர் குடிப்பிறப்பு, வேந்தவாம் பண்பு என்றும் குறித்துணர்ந்தார். அமைச்சுக்கடன் பூண்டோர் மன்னரைச் சேர்ந்தொழுகுமிடத்து, “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க” என்றும், மன்னர் விரும்பு வனவற்றை அவர் விரும்புதலாகாதென்றும், வேந்தரால் விரும்பப்பட்டவழி, “கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத” செயல்களைச் செய்தல் கூடாதென்றம் அமைச்சியல் வாழ்வு காட்டக் கண்டார் வேந்தரவையில் பணிசெய்வோர் குறிப்பறிய வல்ல ராதல் வேண்டும். அவர் முன் ஒருவர் முகநோக்கி நிற்பாராயின், அவர் வாய் திறந்து கூறாமலே அவர் அகத்தின்கண் அமைந்திருக்கும் கருத்தைக் குறிப்பால் அறியவல்ல அறிஞர் தெய்வமாகவே கருதப் பட்டனர். மேலும் வேத்தவையில் இருக்கும் அறிஞர் இயல்பைத் திருவள்ளுவர் தெளியக்கண்டு, வேத்தவை மேவும் உரவோர், சொற்களின் தொகைவகைகளையும் நடைவகைகளையும் அறிந்த வராதல் வேண்டும் எனவும், அவர்கள் “அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக” எனவும் ‘இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக” எனவும் எடுத்துரைத்தார். முதுவர்கூடிய அவையில் முந்துற்று மொழிதல் நன்றாகாமையைத் திருவள்ளுவர் “நன்றென்ற வற்றுள்ளும் நன்றே” என்று தெளிவுபடுத்தினார். இதனால் நல்லோர் கூடிய நல்லவை கண்டு அஞ்சாது அடங்கி யொழுகுவது நன்றென்று காட்டி, நல்லோர் அவையில் தாம் கூறுவனவற்றை அஞ்சாது கூறல் வேண்டும் என்றார். அரசியல் அறிஞரும் பொருளியலறிஞரும் அறநூல் அறிஞரும் கூடிய பேரவைகள் பாண்டிநாட்டு மதுரையிலும், சோழநாட்டு உறையூரிலும் சிறப்புற்று விளங்கின. ஆங்காங்கு வாழ்ந்த சிற்றரசர் அவைகளும் பெருஞ்செல்வர் அவைகளும் தமிழகத்தில் இருந்தன. இவற்றின் நிகழ்ச்சி நலங்களைத் திருவள்ளுவர் நேரிற் கண்டு தெளிந்திருந்தார். அவ்வவைகளில் இருந்து அறிவுரை வழங்கும் சான்றோர், அவை வகையறிந்து அவற்றின்முன் தாம் கற்றுவல்ல வற்றை அஞ்சாது எடுத்துப் பேசுவர். பேசுவோருள் கேட்போர் உளங்கொள்ளச் சொல்லும் வன்மையுடையோர் கற்றாருட் கற்றார் எனப்பட்டனர். அப்பெற்றியோர், கற்றார்முன் தாம் கற்றவற்றைச் சொல்லித் தம்மின்மிக்கார் கூறுவனவற்றைத் தாம் மேற்கொள்வர். பல நல்ல நூல்களைக் கற்றுவைத்தும், நல்லறிஞர் கூடிய அவையில் சொல்லும் திறனில்லாதார் பயனில்லாதார் என்றும், சொல்லற்கு அஞ்சுவோர் “கல்லாதவரிற் கடை” என்றும், அவர்கள்“ உளரெனினும் இல்லாரொடொப்பர்” என்றும் அவையினர் கூறிக்கொள்வர். இவற்றைக்கண்ட திருவள்ளுவர் இன்று நாம் அறிந்து ஒழுகத்தக்க வகையில் தெரிவித்துள்ளார். சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெரும் பகுதியும் சிறுசிறு நாடுகளாகப் பிரிந்திருந்ததெனச் சங்கத் தொகை நூல்கள் கூறுகின்றன. வேங்கடநாடு, இடைக்கழிநாடு, முக்காவல்நாடு, கோனாடு, குட்டநாடு, குடநாடு, மாறோக்கநாடு எனப் பல இருந்திருக்கின்றன. அக்காலத்து நல்லிசைச்சான்றோர் தமிழ்நாடு முழுதும் சென்று புலமைத்தொண்டு புரியும் பொற்பினர். அவர் இருந்து சிறந்த காலத்தவராதலால் திருவள்ளுவரும் தமிழ்நாடு முழுதும் சென்று அவ்வந்நாட்டு நலங்களையும் நுனித்தறிந் திருந்தார். அவர் சிறுசிறு நாடுகளாகத் தமிழ் வேந்தர் தங்கள் நாட்டைப் பிரித்திருப்பது கண்டார். நாட்டுப்பிரிவினைக்கண் அறிஞர் கொண்டிருந்த கருத்தை நுணுகி நோக்கினார். ஒவ்வொரு சிறுநாடும் தன்கண் வாழும் மக்களுக்கு வேண்டும் உண்டியும் உடையும் விளைத்துக் கொடுக்கும் வகையில் பிறநாடுகளை எதிர்பாரா வகையில் பிரிக்கப்பட்டிருப்பது கண்டார். சில நாடுகள் இன்றியமையாத உணவுறுப்பெனப்படும் உணவுக்கும், உடைக்கும் ஆண்டுதோறும் பிறநாடுகளை எதிர்பார்க்கும் நிலையி லிருந்தன. உணவும் உடையும் நல்கும் பிறநாடுகள், எதிர்பாராத இடையூறு களாலோ, போர், பகை முதலிய இடையீடுகளாலோ, உணவுடை நல்குந்துறையில் இயலாதன வாயின், அவற்றை யெதிர் நோக்கும் நாடுகள் பேரிடுக் கணுற்றழிவதும் திருவள்ளுவர்க்குப் புலனாயிற்று. ஆகவே, “நாடென்ப நாடா வளத்தன நாடல்ல, நாட வளந்தரும் நாடு” என்று தெளிந்தார் சிறப்புடைய நாடுகள் பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் என்ற இவற்றால் அழகு பெற்று விளங்கின. மக்களிடையே பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் குறும்பும் இல்லாமல் இருந்தன. எல்லாம் அமைந்த வழியும் சில நாடுகளில் ஆட்சிநலம் சிறக்க இல்லாமையால் மக்கள் பரக்கழி பூண்டு பரிபுலம்பினர். நன்னாடுகள் வேந்தர்க்கு வேண்டும் பொருள்நல்கிப் பிறநாட்டு மக்கட்கும் வேண்டுவன நல்கின. வளமுள்ள நாடுகளில் விளைவு பெருகச் செல்வம் மிகுதலால், அந்நாடுகளைக் கைக்கொள்வதற்கு வலியுடைய வேந்தர் நாட்டம் கொண்டனர். அதனால் போர் அடிக்கடி யுண்டாவது இயல்பாயிற்று. ஈட்டப்படும் பொருளைக் காப்பது இல்வழி அழிவது உறுதி. அதனால் காப்புக்குறித்து நாடுகளில் அரண்கள் பல அமைந் திருந்தன. இந்த அரண்கள் நீரரண், மதிலரண், மலையரண், காட்டரண் எனப் பலவகைப்படும். நீரரண், சூழ்ந்தோடும் ஆறும் அகழுமாம். மதிலரணாவது கல்லும் சுண்ணாம்பும் அரக்கும் செம்புங்கொண்டு எடுக்கப்படும் சுவர். இவ்வரண், உயர்வு, அகலம், திண்மை, பகைவர் கொள்ளற்கருமை என்ற நால்வகை யாலும் சிறப்புற்றிருக்கும். இவ்வாறு ஒவ்வோரரணும் சிறந்த காவலுறுப்பாக இருக்கவேண்டும். இவற்றின் அமைதிகளையும், அவ்வமைதிபற்றி நூலோர் கூறுவன வற்றையும் திருவள்ளுவர் கண்டார். இவற்றுள், ஒவ்வொன்றும் மிக்க சிறப்புடைய தாயினும், இவற்றின் கண் இருந்து வினை செய்யும் திறலுடையோர் நல்ல மாண்புடை யராதல் வேண்டுமென உணர்ந்தார். அரண் வகைகளில் காப்பமைதி கண்ட திருவள்ளுவர், இவற்றின் இடமாக நின்று நாடு காக்கும் கருத்துடன் போருடற்றும் படைநலத்தைக் கண்டார். படைக்குரிய உறுப்புக்கள் எல்லாம் அமைந்து எத்தகைய ஊறுண்டாயினும் அஞ்சாது பொரும் படையே எங்கும் வெற்றிபெறுவதைத் திருவள்ளுவர் கண்டறிந் தார். படை மறவர் கூற்றுவன் உடன்று மேல்வந்த போதும் அஞ்சிச் சிதறியோடாது தம்மிற்கூடி அக்கூற்றுவனை வெல்லுமாறு வல்ல மறப்பண்பு கொண்டு தானை வீறு பெறுவதும், பகைவர் பலவகையான சூழ்ச்சி செய்தபோதும், அதனால் அறைபோகாது நேர்மையுடன் பொருது சிறப்பதும், மறம், மானம் மாண்புடைய வழிச்செலவு செய்வினைக் கண் தேற்றம் என்ற இவை படைக்குச் சிறந்த காப்பாய் வெற்றி யளிப்பதும் திருவள்ளுவர்க்கு இன்பம் செய்தன. சில படைகள் அடுந்திறலும் அமைந்த ஆற்றலும் இல்லன போலக் காணப்பட்டன. ஆயினும் அவையே வெற்றி எய்தின. அதற்குக் காரணம் ஆராய்ந்த திருவள்ளுவர், காரணம் அதன் படைத்தகை யெனவும், சிறுமையும் செயலின்கண் வெறுப்பும் வறுமையும் அதன்பால் இல்லாமை யெனவும் கண்டார். வேறு படைகள் நிலைத்த மறப்பண்புடைய வாயிருந்தும் தோற்றோடக் கண்டு, அவற்றைத் தலைமைதாங்கி நடத்தற்குத் தக்க தலைமக்கள் இல்லாமையை அறிந்தார். இவ்வண்ணம் படையின் பொதுவியல்பு கண்டுபடை மாட்சி யறிந்த திருவள்ளுவர், படை மறவர் இடையே சென்று அவர் பொரும் இயல்பைக் காணலுற்றார். படை மறவன் ஒருவன் தன் பகைவரை நோக்கி, தன் தலைவனொடு பொருது வீழ்ந்து பலர் கல் நாட்டப்பெற்றனர்; அதனால் அவன் முன் நிற்றல் வேண்டா எனச் செருக்குடன் மொழிந்தான். ஒருவன்வில் விரும்பாது வேலையே விரும்பி யேந்திச் சென்றான். அவனை யணுகி வினாவியபோது, காட்டுச்சார் ஓடும் குறுமுயலைத் தப்பாது எறிந்து வீழ்த்தும் அம்பை ஏந்துவதிலும், பெருங் காட்டிடத்தே களிற்றியானை யொன்றை வீழ்த்தக்கருதிச் செலுத்திய வேல் அதனை வீழ்த்தாது தைத்து வீழ்ந்து பிழைத்ததாயினும் அதனை யேந்துவது இனிது” என்றான். பகை வேந்தன் ஏறிவந்த களிற்றை வீழ்த்தக் கருதிய மறவன் ஒருவன், தன் கையிலேந்திய வேலை அதன் நெற்றியில் ஊடுருவ எய்தான். வேலேறுண்ட களிறு பின்னிட்டு வேலோடே ஓடி வீழ்ந்தது. வெற்றி கொண்டு வருபவன் தன் மார்பில் யானைமேல் இருந்த பகைவன் எறிந்த வேல் தைப்புண்டி ருந்ததை அறியானாயினன். போர்க்களத்தே படை யொன்றுமின்றி வெறுங்கையுடன் செல்லின் ஒருவரும் தன்னொடு பொரற்கு எண்ணாரென்றெண்ணி வேல் வேண்டுமென விழைந்து நோக்கினான். அப்போது அவன் மார்பில் தைப்புண்டிருந்த வேல் காணப்பட்டது. உடனே அதனைப் பறித்துக் கையில் ஏந்திப் பெருமகிழ்வு கொண்டான். இவ்வாறு மறவர் பலரும் மறம் சிறந்து விளங்கக் கண்ட திருவள்ளுவனார், பலரொடு பொருது சிறந்து வென்றி மிக்குவரும் மறவனைப் பார்த்தார். அவன் முகத்தில் வருத்தக்குறி காணப்பட்டது. நெருங்கி உசாவிய போது, அந்நாளில் அவன் செய்த போரில் முகத்திலோ மார்பிலோ தனக்குப் புண் சிறிதும் உண்டாகவில்லை யென்றும், புண்ணுறப் பொராத நாள் வீழ்நாளென்றும் அவன் கருதி வருந்தினானென்பது தெரிந்தது. ஒருபால் ஒரு சிறந்த மறவன் மார்பு பிளப் புண்டு வீழ்ந்துகிடந்தான். அவனைச்சூழ வேந்தனும் தானைத் தலைவரும் நின்றனர். அவர் கண்களில் நீர் மல்கித் துளித்தது. அவ்வாறு, புரந்தார் தன்பொருட்டுக் கண்ணீர் மல்கச் சாகும் சாக்காடு மிகச் சிறந்ததாதலை எண்ணிய திருவள்ளுவர், இச்சாக்காடு “இரந்து கோட்டக்க துடைத்து” என வியந்தார். மேலே கூறிய அரசியல், பொருளியல் முதலிய வாழ்க்கைக் கூறுகளில் மக்கள் சிலருடன் நட்புற்று வாழ்வது இயல்பாதலைத் திருவள்ளுவர் நன்கறிந்தவர். மக்கள் பலராதல் கொண்டே அவர் ஒவ்வொருவரும் தம்மில் வேறுபாடு உடையர் என்பது விளங்கும். வேறுபாடு இயல்பாகவுடைய மக்கள் ஒருவரோடொருவர் புணர்ந் துறைவதாலும், பழகுதலாலும், உணர்ச்சி யொத்தலாலும் நண்பராய் வாழ்வது திருவள்ளுவர்க்கு இனிது தெரிந்தது. உண்மை நட்பால் விளையும் இன்பமும், உண்மை நண்பர் செய்யும் நலமும், உண்மைநாடி நட்புச் செய்தலில் உள்ள அருமையும் கண்டு, நட்புப் போல உலகில் செய்தற்கரியது ஒன்றில்லை யெனவும், அந்நட்புப் போல ஒருவர் உயிர்க்குக் காப்பாவது வேறொன்றில்லையாதலால், உண்மை நட்பால் விளையும் காப்புப்போலச் செய்து கொள்ளும் காப்பு வேறில்லை யெனவும் தெளிந்துகொண்டார். நண்பர் பலருடைய வாழ்வை ஆராய்ந்தார். ஆராயாது நட்புச் செய்து கொண்டவர் எய்திய கேடும், பேதையார் நட்பை நீக்கிக் கொண்டவர் எய்திய ஊதியமும், பழைமைபற்றி வந்த நட்பின் பண்பும், தீ நட்புக் கூடா நட்புக் களால் விளையும் தீங்குகளும், தெளியக்கண்டார். பேதையர், புல்லறிவாளர் முதலியோர் பலர் திருவள்ளுவருடைய கூர்த்த நோக்கினால் ஆராயப் பட்டனர். நட்புக்குரியாரை ஆராயுமிடத்துப்பேதையர் முதலாயினாரைக் கண்ட நம் திருவள்ளுவர், சிலர் எடுத்ததற் கெல்லாம் எளிதில் வேறுபட்டு முரணும் இயல்பினராக இருப்பதை அறிந்தார். அவ்வியல்புடையார் எப்போதும் துன்பமே எய்தி வருந்தினர். அவர்அவ்வாறு வருத்தமுறினும் ஒருபோதும் அவர்க்குப் பொருள் களின் மெய்ம்மை புலனாவதில்லை. அவர்க்கு நேர் மாறாக எல்லோரோடும் நயமாகவும் இன்பமாகவும் பழகும் பண்புடையார் பலர் இருப்பதும் திருவள்ளுவர்க்குத் தெரியும். அவர் அதனால் இன்பமுறுவது கண்கூடாய்த் தெரிந்தது. இவ்விருதிறத்தாரையுங் கண்டு, “இகலானாம் இன்னாத எல்லாம்; நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு” என்று அறிந்து இன்புற்றார். பகைத்துப் பொரும் மக்களில் பலர், பிறரோடு பகை கொள்ளின் ஆக்கம் இன்றி அழியும் திறத்தினராகவே உள்ளனர். யாவர்பாலும் அன்பில்லாதவர், துணையில்லாதவர், உண்பன வுண்ணாது இவறு வோர், நீங்காத வெகுளியுடையவர், நிறை யில்லாதவர், இன்னது செய்தால் பின்பு இன்னது உண்டாம் என எண்ணாதவர், வாய்ப் புடையவற்றைச் செய்யாதவர், பழிநோக்காதவர், நற்பண் பில்லாதவர், பெருஞ்சினங் கொள்பவர், கழிபெருங்காமத்தார் முதலிய பலரும் பிறரைப் பகைத்தற்குத் தக்கவரல்லர். குணம் இன்றிக் குற்றம் பலவுடையவர் பிறரோடு பகைப்பின் எளிதில் வெல்லப் பட்டழிவர். நல்லறிவின்றி அஞ்சும் இயல்புடை யவன் பகைவனாக வந்தால், அவனை எதிர்த்து வருபவன் மிக்க மகிழ்ச்சி கொள்வன். இவர் அனைவரும் திருவள்ளுவரதா ராய்ச்சிக்கு இலக்காயினர். மேலே கூறிய இயல்பினரல்லாத பிறர், பிறரோடு பகை கொள்வது பொருந்துமாயினும், பகை யென்பது பண்பில் செயலாகும். அதனால் விளையும் கேடு பெரிதாதலால், விளையாட்டிலும் பகை கொள்வது வேண்டத்தக்கதன்று எனத் திருவள்ளுவர் கண்டார். அதனால், எவர்பாலும் பகைகொள்வது நன்றன்று; பகையை நட்பாக்கிக் கொள்ளும் பண்புடைமையே வேண்டுவது என்றும், எங்கேனும் தனக்குப் பகையுண்டாகிறதெனின் அதனை முளையி லேயே கிள்ளியெறிய வேண்டுமென்றும் அவர் தெளிந்து நம்மனோர் அறியவைத்தார். பகைவருள்ளும் புறத்தே நண்பர் போல ஒழுகும் பகைவர் பலர் உளர். உட்பகை எள்ளத்தனைச் சிறிதாயிருப்பினும் அது பெருங் கேட்டினைச் செய்யும். உள்ளத்தே பகைகொண்டு உறவாடியோரை நம்பிய பலர் கெட்டழிந்ததைத் திருவள்ளுவர் கண்டு, உடம்பாடில்லாத வரோடு வாழும் வாழ்வு நஞ்சுடைய பாம்போடு கூடி வாழ்வது போலாம் என அறிந்துரைத் துள்ளார். சிலர், அறிவு ஆண்மை முதலியவற்றில் தம்மினும் பெரியரா யிருப்பாரை அடுத்து அவர் உரைக்கும் அறிவுவழி நின்று வாழ நினையாது. அவர்களை மதியாது கெடலாயினர். பெரியோரை மதியாது பகைப்பது கூற்றத்தைக் கையால் அழைப்பதுபோலத் திருவள்ளுவர் கண்ணிற்குக் காட்சி வழங்கிற்று. அது கண்டதும் அவர், “கெடல் வேண்டின்” பெரியாரைக் கேளாது செய்க என்று கூறி யொழிந்தார். வேறு சிலர், வாழ்க்கைத் துணையாக வந்த மனைவியின் மாண் குணங்களைப் பயன் கொள்ளாது, அவளது பெண்மை நலத்தைப் பெரிதென விழைந்து அவள்பால் தலைமை தந்து தாம் அவட்கு அடிமையாகி யொழுகினர். அதனால் நண்பர்க்குத் துணை செய்வதேயன்றி ஒரு நல்ல செயவும் திறமிலராயினர். அவர்பால் அறமோ, பொருளோ, பிறவோ எவ்வினையும் காணப் படாவாயின. அவரைக் கண்ட திருவள்ளுவர், “மனைவிழைவார் மாண்பயன் எய்தார்” என்றும், வினைசெய்யும் விழைவும் ஆண்மையு முடையாரார் “வேண்டாப் பொருளும் அது” என்றும் சுருங்க வுரைத்து நீங்கினார். ஆடவருலகில், பெண்ணின் பெண்மைநல மொன்றே கருதிப் பிறனில் விழைந்து திரியும் பேதையர் இருப்பது போல, மகளிருள்ளும் தக்கார் தகவிலரென நாடாது வரைவின்றித் தம்மை நச்சிவருவார்க்குத் தம் நலத்தை விற்கும் வரைவில் மகளிர் இருப்பது கண்டார். அவர்கள் தம்மைக் கூடும் ஆடவர் எவரையும் அன்போடு சேர்வதிலர்; அவர் தரும் பொருளையே அவர் நோக்குவர். அதனால் அவர்கட்குப் பொருட் பெண்டிர் என்றும் பெயர் கூறப்பட்டது. ஒருவன் தரும் பொருட்குத் தம் நலத்தை அவன் நுகரக் கொடுத்திருக் கும் போதே அம்மகளிர் மனம் வேறே பொருள் தருபவனை நாடி நிற்கும். அதனால் அவர்களை இருமனப் பெண்டிர் என்று வழங்குவது இயல்பு. இவருடைய தொடர்புடையாருட் பெரும்பாலார், கள்ளுண்டல் சூதாடல் முதலிய தீ நெறிகளில் ஈடுபட்டு வருந்தினர். இறுதியிற் கூறிய சூதாட்டத்தால் ஒருவன், உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி யென்ற ஐந்தும் இழந்து அலமருவன் எனத் தெரித் துணர்த்தினார். இந்நாளை உரிமையரசியல், கள்ளுண்டலை நீக்கியிருப்பது திருவள்ளுவர்க்கு இன்பந்தருவ தொன்றாம்; ஆயினும் சூது மட்டில் நீக்கப் படாமல் இருப்பது நல்லொழுக்க வாழ்வுக்குப் பெருந்துன்பம் செய்து நிற்கிறது. வரைவின் மகளிர் கூட்டமும் குன்றி வருகிறது. இருமனப் பெண்டிரும் கள்ளும் சூதும் நல்லரசுக்கு நாணுத்தருவனவாம் என்பர். உலகியல் வாழ்வில், மக்களுடைய வாழ்க்கைக் கூறுகள் பலவற்றையும் கண்ட திருவள்ளுவர் மக்கள் நோயுற்று வருந்து வதையும் காணலுற்றார். மக்களுடலில், வளி, பித்து, ஐயெனப்படும் மூன்றும் மிகுந்தாலும் நோயுண்டாகும். அவை மிகுதல் குறைதல் செய்வது உண்ணும் உணவு செரிக்காது நிற்கும் காலத்தே யாம் ஆதலின், ஒவ்வொருவரும் உண்டது செரித்தது அறிந்தே உணவு கொள்ளவேண்டும்; அவ்வாறு செய்தல் உடம்பின்கண் நிற்கும் உயிர் அவ்வுடம்பை நெடிது தாங்கிநிற்கும். நன்றாகப் பசித்தபின் உணவுகொள்வது சிறப்பு. உணவு மாறுபாடில்லாத பொருள்கள் பொருந்தி யிருக்க வேண்டும் பசித்துண்ணார்க்கு நோயுண்டாதல் போலக் கழிபேருணவு கொள்பவர்க்கும் நோய் நீங்காது உண்டாகும். நோயுற்றார்க்கு மருந்து தருபவன், “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” வேண்டும். அங்ஙனம் செய்தவழி நோயுற்றார் நோய் தீர்ந்து இன்புறுவர். இனி, நற்குண நற்செய்கைகளால் உயர்ந்தோர் கூட்டத்தைத் திருவள்ளுவர் காண்பாராய், உயர் குடியிற் பிறந்த பெரு மக்களைக் கண்டார். அவர்பால் செப்பமும் நாணமும் இயல்பாக அமைந்திருந்தன. நகை, ஈகை, இன்சொல், இகழாமை என்ற நால்வகை நலங்களும் அவரிடத்தே நன்கு நிலவின. ஒழுக்கம், வாய்மை, நாணம் என்ற மூன்றிலும் சிறிதும் வழுவுதல் இலர். அவர் பேசும் சொல்லே அவர் குடிப் பிறப்பைக் காட்டி நின்றது. அவர்பால் சிறிது குற்ற முண்டாயினும் நிலாத் திங்களில் தோன்றும் களங்கம் போல அது விளங்கித் தோன்றிற்று. பின்பு மானமுடைய மற மக்களைக் கண்டு அவர் தமது கருத்தைச் செலுத்தி ஆராய்ந்தார். இன்றியமையாச் சிறப்புடையன வெனினும், அவற்றால் மானம் குன்றுமாயின், அதனை அவர்கள் விரும்பாராயினர். வறுமையிற் செம்மையும் செல்வத்திற் பணிவும் அவர்பால் சிறந்துவிளங்கின. தம்மை இகழ்வாரைப் பின் சென்று அவர் அடிவருடி வாழும் இழிசெயல் மானமுடையாரிடத்தே காணப்படவில்லை. மானமிழந்தவர் தலையினின்றும் நீங்கி வீழ்ந்த மயிர்போல் இழிவுற்றனர். தன்மயிர் நீங்குமாயின் உயிர் விட்டிறக்கும் கவரிமாப் போல மானம் வந்த விடத்து உயிர் விட்டவர் பலர். இழிவுண்டாகக் கண்டு மானத்தால் உயிர் வாழா தொழிந்த உரவோர்களின் ஒளியை இவ்வுலகு தொழுதேத்திற்று இவ்வாறே பெருமை, சான்றாண்மை பண்புடைமை, நாணுடைமை முதலிய உயரிய பண்புடைய நன்மக்கள் இயல்புகளைத் திருவள்ளுவர் ஆராய்ந்தார். இவர்களிடையே செல்வத்தால் உயர்ந்தோர் சிலர் காணப்பட்டனர் அவர்பால் ஒவ்வொருகாலத்தில் சிறிது துனி தோன்றுவதுண்டு. ஆயினும் அதுபொழிந்து வளஞ்செய்தற்குரிய மழை பெய்யாது பொய்ப்பது போல மக்கட்கு வருத்தம் பயந்தது. எவர்க்கும் அன்புசெய்யாது தாமும் உண்ணாது தம்மையே வருத்தி அற முதலியவற்றைக் கனவினும் கருதாதவர், தம் பொருளைப் பிறர் கைக்கொள்ள மாய்ந்தொழித்தனர். தானும் உண்ணாது, தக்கார்க்கும் ஈயாது ஈட்டியசெல்வர்க்கு அவரது செல்வம் தீமையாகவே முடிந்தது. செல்வத்தாற் சிறந்த செல்வர் சிலர் நன்று செய்தற்குப் பயன்படாதவகையில் செல்வத்தைத் தேனீக்களைப் போல ஈட்டித் தொகுப்பதும், தொகுத்தவற்றைக் கண்டு இன்புறுவது மாகிய இத்தகைய செய்கைகளையே செய்து வாழ்ந்தனர். அவரைக்கண்ட திருவள்ளுவர், அவரது செல்வத் தொகுப்புக்குக் காரணமாய் நாளும் உழைத்து ஓய்ந்து வருந்தும் உழவர் கூட்டத்தை நோக்கினார். அவரது உழைப்பும் உலையா முயற்சியும் திருவள்ளுவர் உள்ளத்தை உருக்கின. அவரிடையே பலர் தாம் பிறந்தகுடி சீரும் சிறப்பு முடையதாகல் வேண்டுமென்ற கருத்துடன் உழைப்பது கண்டார். அவர் உள்ளத்தில் ஆள்வினையும் அவர்பால் ஆன்ற அறிவும் ஒளிவிட்டுத் திகழ்ந்தன. மடியென்னும் இருள், உழைப்பால் ஒளிரும் அவரது உள்ள ஒளியின் முன் நிற்கலாற்றாது கெட்டொழிந்தது. குடி செய்யும் அவர்க்குப் பருவம் என்பதே இல்லை; ஒவ்வொரு நொடிப்போதும் அவர்கட்குப் பருவமாகவே இருந்தது. அவர்கள் எச்செயலைச் செய்யத் தொடங்கினும் அது தானே இனிது முடிவெய்தக் கண்டார். குடிசெய்வல் என்றெழும் ஒருவனுக்குத் துணை செய்யும் பொருட்டுத் தெய்வம் மடி கட்டிக் கொண்டு முன் வந்து நிற்குமெனத் தெரிந்தார். பின்பு உழவரை நோக்கினார். பிறர்பால் சென்று கையேந்திப் பெறுவன பெற்று வாழும் சிறுமை அவர்பால் இல்லை. அவர் உழுது விளைக்கும் பொருள்பெற்றே பிறர் வாழ வேண்டியிருத்தல் விளக்க மாயிற்று. பிறரைச் சென்று இரப்பதும், தம்மை இரப்பவர்க்கு இல்லை யென்று மறைப்பதுவும் அவர் அறியாதவை. உழவின் வளம் குறித்தே வேந்தருடைய நோக்கமெல்லாம் ஊன்றியிருந்தது. உழவர் மனம் திறம்பித் தம் கைகளை மடக்கிக் கொள்வாராயின், முற்றத் துறந்த முனிவரரும் பசியும் தளர்வுமுற்றுத் தம் முனித்தன்மை கெட்டொழியக்கண்டார். உழவரது உழவுத்தொழிலைப் பார்த்தவர், அவர் உழுத வயற்புழுதி ஒரு பலம் அரைப்பலமாப் புலர்ந்ததால், அஃது ஒரு பிடி யெருவும் வேண்டாமலே நல்ல விளைவைச் செய்தது. ஏரால் உழுவதினும் எருவிடுதல் சிறந்தும், எருவினும் களை யெடுத்தல் சிறந்தும், அதனினும் நீர்பாய்ச்சுதல் சிறந்தும், அதனினும் காவல் சிறப்புற்றும் விளங்கின. வயற்குரிய கிழவன் நாடோறும் சென்று வயலைக்கண்டு வாரானாயின், வயல் விளைநலம் குன்றிற்று. நிலக்கிழவர் ‘யாம் ஒன்றும் இலமே’ என வருந்துதற்கு உரியரல்லர்; வருந்துவராயின் அவரை நிலமே கண்டு எள்ளி நகைக்கும் என்பது தெரியவந்தது. அந்நாளில், உழைப்பதற்கேற்ற உடல்நலமும் பிற நலங்களும் இன்றி வறுமையுற்று வருந்தும் இரவலர் பலர் இருந்தனர். அவருட் கற்றோரும் குடிப்பிறந்தோரும் எனப் பலதிறத்தர் உண்டு. அவரிடையே புகுந்த வறுமை பெருங்கேட்டினைச் செய்தது; குடிப் பிறந்தாரிடத்தே இளிவந்த சொற்களைப் பேசத்தக்க குற்றத்தைத் தோற்றுவித்தது; கற்றோர் நல்ல பொருள்களை நன்கெடுத்துச் சொன்னாலும், வறுமையால் அவர் சொற்கள் செல்லாக் காசு களாயின. அவர்க்கு வேண்டுவன நல்கும் செல்வரை நோக்கிய காலை, அவரிடையே ஈயாது கரப்போரும், ஈத்தல் கடனென வுணர்ந்து நல்குவோரும் இருப்பது திருவள்ளுவர்க்குத் தெரிந்தது. அவரை ஒப்பநோக்கியபோது செல்வர் சிலரும் வறியர் பலருமாக இருந்தனர் இந்நிலை வளருமாயின், முடிவில் செல்வ வாழ்வைச் சீரழித்தற்கேற்ற தீய முயற்சிகள் வறியவர் கூட்டத்தே பிறக்கும்; இறுதியில் அக்கூட்டத்தின் முயற்சி வெற்றி எய்தவும் கூடும்; அந்நிலை எய்தாவகையில் செல்வரை நோக்கி, கற்றோரும் குடிப் பிறந்தோரும் வறுமையுறின் தம்மியல்புக்கு மாறானவற்றைச் செய்வரென வற்புறுத்தினார். இரக்கும் இரவலர் பொருட்டு வருந்தி, “கரவாதீயும் செல்வரிடத்தே சென்று இரத்தல் வேண்டும்; அவர்பால் இரப்பதும் ஈதல்போல் இன்பம் தருவதாம்; இரப்பாரைக் கண்டு இகழ்ந்து எள்ளாது ஈபவர்களைக் காண்பதே பேரின்பம்” எனத் தெரிவித்தார். இரப்பார்க் கீயத்தக்க செல்வமுடையாரை நோக்கி, “இரப்பவர் இல்லாராயின் இவ்வுலகியலில் நம் இயக்கம் மரப்பாவை இயக்கம்போல இருக்கும்; இவ்வுலகில் நம் தோற்றத் தால் ஒரு பயனும் இல்லையாம்” என்று அறிவுறுத்தினார். பின்பு இரத்தலும் ஈதலுமாகிய செய்கைகள் பெரும்பாலும் மக்களிடையே மனப்பிளவை வளர்ப்பதேயன்றி அதனைக் குறைக்கப்பயன்படுவ தாக இல்லை. இதனைத் தெளியக் கண்ட திருவள்ளுவர், ஈகைக்கும் இரத்தலே காரணமாதலால், அதனைத் தவிர்ப்பது தக்கதென எண்ணினார். இரவலர் குழுவிடைச்சென்று அவர் படும் துன்பத்தைக் கண்டார். அவர் இவ்வறுமைத் துன்பத்தை இரந்து தீர்க்கும் மனவன்மையுடையராக இருந்தனர். மானமின்றி ஒருவர் முன்னின்று இரத்தலை எண்ணியதும் திருவள்ளுவர் உள்ளம் உருகி மெலிந்தது. ஆயினும், அவர் அதனைச்செய்யும் இரவலர் உள்ளத்தின் வன்மையை யுணர்ந்தார். அவ்வன்மை முறுகி யெழுமாயின் எத்துணை வல்லரசும் தவிடுபொடி யாகுமே என எண்ணி யஞ்சினார். இரவலர் முன்னின்று, இரக்கக் கருதிநிற்கும் அவர் உள்ளத்தை மாற்ற நினைந்து “ஆவிற்குச் சிறிது நீர் வேண்டும் என ஒருவரை இரந்தாலும், நாவுக்கு அச் சொல்லால் பிறக்கும் இழிவு பெரிதாயிற்றே” என்றும், “ஒருவன் தான் முயன்று பெற்றது கொண்டு உண்ணும் உணவினும் உயர்ந்த வுணவு கிடையாதே” என்றும் எடுத்தோதினார். இரவலருட் சிலர், கரவாது ஈயும் கைவண்மையுடையவரை இரந்து வாழலாமே எனக் கருதுவ தறிந்த வள்ளுவர், அவரிடத்தும் இரவாமை கோடி நலங்களைச் செய்யுமே என்றார். அவரிடையே, உழைப்பவர் உழைப்பின் பயனை உறிஞ்சியுண்டு பெருஞ்சுவை நுகர்ந்து திரிந்த கூட்டங்களும் இருந்தன. அக் கூட்டத்தவருட் சிலர், எம்மை இரந்து வாழவேண்டு மென்றே உலகை இயற்றிய முதல்வன் படைத்துள்ளான்; எங்களுக்கென வரையறுக்கப்பட்ட தொழில்களுள் இரத்தலும் ஒன்றாக அற நூல்கள் குறித்துள்ளன என்று நினைந் தொழுகினர். அது முற்றிலும் பொய். உலகியற்றிய முதல்வன் சிலர் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டுமெனக்கருதி அவர்களைப் படைத்திருப்பானாயின், அஃது உயிர் வாழ்க்கையைக் கெடுத்தற்குச் செய்த தீய சூழ்ச்சியாகலின், அத்தீவினையால் அவன் கெட்டழி வானாக எனத் தம் மடித்த வாயைத் திறந்து வெடித்த சொற்களை விளம்பினார். இனி, இவரினும் கடைப்பட்ட கீழ்மக்கள் பலர் பொதுவாக மக்களிடையே இருந்தனர் செல்வர், வறியர், கற்றவர், கல்லாதவர், முதியர், இளையர், அரசர், அடியர் என்ற எல்லாவகையான மக்களிலும் இக் கீழ் மக்கள் இருந்தனர். செல்வக் காலம் அல்லற் காலமென்ற எல்லாக் காலத்திலும் அவர்கள் நெஞ்சில் அவலம் சிறிதும் இன்றியிருந்தனர். எதனையும் தம் விருப்பப்படியே செய்வ ரேயன்றிப் பிறர் கூறுவது கேட்க விழையார். அச்சமே அவர்கட்கு ஒழுக்கமாகும். எஞ்ஞான்றும் பிறரைக் குற்றங் கூறுவதும் பிறர் மறை (இரகசியம்) யறிந்து தூற்றுவதும் அவரது சிறப்பியல்பு. அவர்கள் தம் எச்சிற்கையால் ஈயோட்டமாட்டார்கள். கன்னத்தில் அறைந்து பல்லையுதிர்க்கும் கண்ணறையர்க்கு வேண்டுவன விரைந்து வழங்குவர். சான்றோர் ஒன்று சொல்லப் பயன்படுவர்; இக் கயவர்கள் கொல்லப் பயன்படுவர். பிறர் உடுக்கும் உடையிலும் உண்ணும் உணவிலும் குறுகுறுத்த பார்வை செலுத்திக் குற்றம் காண்பதில் பெரு விருப்பு டையர். இவர்களைக் கண்ட திருவள்ளுவர் “எற்றிற்குரியர் கயவர்!” என எண்ணினார். முடிவில் இவர்கள் “ஒன்று உற்றக்கால் விரைந்து தம்மையே விற்றற்குரியர்” என்று தேறி, இவர்போல் “ஒப்பாரியாம் கண்டதில்லை” என்று கூறிக்கொண்டு சென்றார். துறவு வாழ்வு இவ்வாறு மனைவாழ்வு, அரசியல் வாழ்வு, பொருள் வாழ்வு முதலிய பலவகை வாழ்வுவகைகளைக் கண்டு உண்மையறிவு பெருகிவந்த திருவள்ளுவர்க்கு வயதும் முதிர்ந்து வருவதாயிற்று. மக்களுடைய வாழ்வு தாழ்வு களையும், இன்பத் துன்பங்களையும் அறிவு அறியாமை களையும், வெற்றி தோல்வி களையும் நேரிற்கண்டு அவ்வக் காலங்களிலும் மக்களுடைய உள்ளம், உரை , செயல் என்பன இயன்ற முறையை அவர் நன்கறிந்தார். அவருடைய நன் மக்களும் அறிவு நிரம்பித் தத்தம் வாழ்க்கைகளை நடாத்த லுற்றனர். மனைவிமக்கள் பால் தோன்றிய அன்பு, சுற்றத்தார், துணைவர், நண்பர் முதலாயினார்பால் தொடர்ந்து அருளாகி எவ்வுயிர் பாலும் படருவதாயிற்று. ஆண்டு முதிர முதிர அன்பு முதிர்ந்து அருளாகிய கனியை விளைவிப்பது வாழ்வின் குறிப்பாதல் விளங்கிற்று. அந்த அருள் உயர்ந்தோர் பால் பெருஞ் செல்வமாய்த் திகழ்ந்தது. அதனையுடையார் வினையச்சமின்றி இன்பமுற்றனர். அவர்க்கு அல்லலே உண்டாகவில்லை. அருளுடையார் அருணெறியின் விழுவினால் மீளத் தேறித் தெளியும் வழியின்றி வருந்து வதையும் திருவள்ளுவர் கண்டார். “பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார் அற்றார்” எனத் தெரிந்தார். பின்பு, அருளாளர் புலால் உண்ணாது வாழக்கண்டார். புலால் உணவு ஒருவன் தன் ஊன் பெருக்குதற்குப் பயன்பட்டது. அதனால், ‘தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் அருளாளுவன்?” என ஆராய்ந்து, ஊன் தின்பவர்க்கு அருளாட்சியில்லையெனத் தெளி வுற்றார். ஊனுண்ணாமையால் உயிர்கள் தாம் நிற்றற்குரிய உடம் போடு நிற்கமுடியும்; மக்களுயிர் பிற மக்களுயிரின் உடம்பைத் தின்னலுறின், மக்கட் கூட்டம் இம்மாநிலத்தில் அருகிக் கெடும் என்பது கண்டு, “உண்ணாமை யுள்ளது உயிர்நிலை” யென்றார். அக்காலத்தே உயிர்க்கொலை புரியும் வேள்விகள் நடைபெற்று வந்தன. ஆயிரம் வேள்விபுரிந்தோன் விண்ணுலக வேந்தாய்த் தேவரும் மக்களும் கைகூப்பித் தொழு மேன்மையுறுவன் என்ற கருத்தும் அவ்வேள்வியாளரிடை முற்பட்டு நின்றது. அதனால் திருவள்ளுவர் “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று” எனவும், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிரும் தொழும்” எனவும் வற்புறுத்தி வந்தார். இவ்வாறே உயிர்களைக் கொன்று வாழும் வாழ்க்கையும் சிறந்த வாழ்க்கையன்று எனத் தெளிவிப்பாராய். “அறவினை யாதெனில் கொல்லாமை” எனவும், “நல்லா றெனப் படுவது யாதெனின் யாதொன்றும், கொல்லாமை சூழும் நெறி” யெனவும் எடுத்தோதினர். இந்நிலையில் திருவள்ளுவருடைய உள்ளம் தவத்தை நோக்கத் தொடங்கிற்று. தவமுடையார், பகை கெடுத்தலும் நண்பரை எடுத்தலுமாகிய செயல்களை எளிதில் செய்தனர்; அவர் வேண்டிய வற்றை வேண்டியவாறே பெற்று இன்புற்றனர். தவமாவது யாதென ஆராய்ந்தார். தத்தமக்குரிய கடமை களைத் தவறாது செய்பவர் வேண்டிய வேண்டியாங்கு எய்துவது கண்டு, “தவம் செய்வார் தங்கருமம் செய்வார்” என்றார். தவமுடையாரை அறிதற்கு வழியறிய முயன்ற திருவள்ளுவர், உற்றநோய் பொறுத்தலும், பிற உயிர்கட்கு உறுகண் செய்யாமையும் தவமுடையார்பால் உருவாய் விளங்கக் கண்டார். துன்பம் சுடச்சுடத் தாக்கிய வழி, தவமுடையார் தம் கருமத்தில் உறைப் புற்று நின்று அறிவொளி பெற்று மேன்மை யுற்றனர். தவமுடை யார் உள்ளம் அருள் நிறைந்திருந்ததனால் பிற உயிர்கட்கு நலம் செய்வதே தவவினையாகக் கருதினர். உற்றநோய் பொறுத்தலால் தன்னலம் பேணாமையும், உயிர்க்குறு கண் செய்யா மையால் பிறர்க்கென முயலுவதும் தவமாயின. இவற்றைச் செய்தற் கண் மனைவாழ்வு தடைசெய்து வந்தது. மிகச் சிலரே இத்தவத்தை மேற்கொண்டனர். இதற்குக் காரணம் காணலுற்ற திருவள்ளுவர், இத்தவம் கருதி மனைவாழ்வைத் துறந்த பெரியோர்க்கு வேண்டும் துப்புரவு நல்குதற்காக மற்றையர் தவத்தை மேற்கொள்ள மறந்தனர் போலும் என்று கொண்டார். இங்ஙனம், தவம் குறித்து மனைவாழ்க்கையைத் துறந்து சென்ற சான்றோரிடையே போலித் துறவிகளும் உளராயினர் அவருட்சிலர் மனைமக்களைக் காக்கும் வலியின்றித் துறந்தார் வேடந்தாங்கினர். சிலர் மக்கள் அறியாமையைக் கருவியாகக் கொண்டு பொருளும் இன்பமும் நுகரக் கருதித் துறவுருக் கொண்டனர் வேறு சிலர் தாம் செய்த பெருங் குற்றத்தை மறைப்பது குறித்துத் துறவு நாடகம் நடித்தனர். அவரது வன்கண்மை கண்டு அஞ்சிய நம் திருவள்ளுவர், அவருட் சிலருடைய வஞ்சனை வெளிப்பட அவரெய்திய துன்பம் கண்டு, அவர்களை நோக்கி, “பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று, ஏதம் பலவும் தரும்” என்று கூறினர். ஏனை மக்களைப் பார்த்து, மனத்தில் மாசு தங்க, மாபெருந் துறவிபோலும் வேட முடையார் பலருளர்; அவர்களை ஆராய்ந்து அறிதல் வேண்டு மென அறிவுறுத்தினார். இத் துறவுவேடம் பிறர் பொருளைக் களவு கொள் வதற்குச் சிலர்க்குத் துணையாயிற்று. களவினால் ஆகிய செல்வம் ஆவது போலத் தோன்றி முடிவில் அளவிறந்து கெடுவதும், கள்வர் தம் கள்ளம் வெளிப்பட்டவழிப் பெருந் துன்பம் எய்துவதும் திருவள்ளுவர் கண்டார். உண்மைத் துறவிகளை நோக்கினார். அவர் உள்ளத்தே களவில்லை; பொய்ம்மையும் இல்லை. உள்ளத்தாலும் பொய்யா தொழுகும் அவர்களை உலகத்தார் உள்ளத்தில் வைத்துப் பாராட்டிப் பரவினர். புறத் தூய்மை நீரால் அமைவதுபோல அகத்தூய்மை அவர் வழங்கிய வாய்மையாற் காணப்பட்டது. வாய்மையாவது யாதென நூல்களை ஆராய்ந்த வள்ளுவர், “வாய்மையெனப் படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்” என்றும், “பொய்ம்மையும் வாய்மை யிடத்தபுரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்றும் தெளிந்தார். பிறர்க்கும், “யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையினல்ல பிற” என்று எடுத்துரைத்தார். தன்னலம் பேணாது பிறர்க்கென முயலும் பெற்றி யராகிய துறவிகள் உடல் முதிர்ந்து வலிகுன்றியிருத்த லால், எளிதில் அவர்கள் வெகுளிக்கு இரையாயினர். அதனால் தீமைகள் பல உண்டாயின. செல்லுமிடம் செல்லா விடங்களைத் தேராது, பலர் சினம்கொண்டு இரண்டிடத்தும் துன்பமே உற்றனர். அதுகண்ட திருவள்ளுவர் சினத்தால் நகையும் உவகையும் அழிவது நோக்கினார். அவற்றிற்குச் சினம் பகையாவதும் அறிந்தார். சினங்கொண்டவர்தாமே யன்றி அவர் இனத்தாரும் அதனால் துன்புற்றனர். சினம் கொள்ளாதான் தான் கருதியவெல்லாம் கருதியவாறு பெற்று இன்புறு தலைக்கண்டு, சினங்கொள்வார்க்குக் காட்டினார் இச்சினத்தால், பலர் பிறர்க்குத் தம் சொல்லாலும் செயலாலும் இன்னாமை செய்தனர். அது கண்டு வருந்திய திருவள்ளுவர், இத் துறவிகளது அறிவுப்பெருமையை எண்ணினார். அது பயன்படாமை கண்டு பரிந்தார். “அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய் போற் போற்றாக் கடை” யென்று அறிவுறுத்தினார். சிலர், இன்னா செய்தாரை வாளாதுவிடின் மேலும் அதனையே செய்வரே யென்றனர். அவர்கட்குத் திருவள்ளுவர், “இன்னா செய்தாரை யொறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்று தெருட்டினார். பொதுவாக உலகரையும் சிறப்பாகத் துறவியரையும் கண்டு அவரவர் உள்ளம், உரை, செயல் வகைகளை அறிந்து போந்த திருவள்ளுவர்க்கு உண்மைத் துறவின்கண் கருத்துச் சென்றது. செல்வம், உடல், இளமை முதலியவற்றின் நிலையாமை புலனாயிற்று. வாழும் வாழ்வில் ஒவ்வொரு பொழுதும் உடல் வாழ்வைக் குறைத்துக்கொண்டே வருவதை நன்கு எண்ணினார். உயிர்க்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு, ஒரு பறவைக்கும் அதன் குடம்பைக்கும் உள்ள தொடர்பாக இருத்தலைத் தெளிந்தார். உடலின் நீங்கிய உயிர் எங்கே போகும் என நினைத்தார். உடம்புக்குட் போந்து ஒதுங்கி யிருந்து விட்டுப் பின்னர் நீங்கி யேகும் உயிர்க்குப் புகுமிடம் ஒன்று இருந்தே தீர வேண்டுமெனத் தெளிந்தார். இவ்வுணர்வு முதிரமுதிர உடம்பின்கண் உள்ள பற்றுக் குறையத் தலைப்பட்டது. உடம்பிடமாக இருந்து பற்றினை விளைவிக்கும் ஐம்புலன்களை யடக்கினார். அடக்காது அகப்பற்றினைப்பற்றி நிற்பாரை இடும்பைகன் பற்றிக் கொண்டு விடாதிருப்பதை அறிந்தார் பற்றின்றித் துறந்து நோற்கும் பெரியோர்களை நோக்கினார். அவர்பால் ஒன்றின்பாலும் பற்றி ல்லாமை இயல்பாய் அமைந்துகிடந்தது. பற்று ஏன் உண்டாகிறதென்பது காணலுற்றார், பற்று பிறப்புக்குக் காரணமாதலைக் கண்டார். பிறப் பிறப்புக்கள் உளவாதற்குரிய காரணத்தை அறியலுற்றார். உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்புக்குக் காரணம் புலனாயிற்று. என்னை காரணம் ? உடம்போடு கூடியுறையும் உயிர்க்கு நொடிதோறும் அறிவு விளக்கம் உண்டாகிறது; உடம்பு அறிவு விளக்கத்துக்குத் துணையா வதால்., உயிர் அறிவு விளக்கம் பெறாதிருந்த நிலையிருந்ததெனவும், அதனைப் பெறும் பொருட்டு வந்த உடம்பு உயிரால் தேடிக் கொள்ளப் பெறாமையால் இரண்டையும் தொடர்புபடுத்து வோன் இறைவன் என்றும், உயிரும் உடம்பும் ஒன்றை யொன்று இன்றியமையா திருப்பதற்கே இப் பற்று உண்டாகிறதென்றும், இப் பற்றும் அறிவு விளக்கமே செய்கிறதென்றும், உயிர் அறிவு முழுவிளக்கம் பெற்ற வழி உடம்பின் தொடர்பு வேண்டா தென்றும், இறைவன் விளங்கிய அறிவே வுருவானவன் என்றும், அதனால் அவற்கு உடம்பு வேண்டா மையின் அவன்பற்றற்றவன் என்றும், அவன் உண்மை யுணர்ந்து அவன்பால் பற்றுச் செய்யின் அறிவின் முழுவிளக்கமும் அதனால் உடம்பின் தொடர்பாகிய பிறப்பு உண்டாகா தென்றும் தெளிந்தார். பிறர்க்கும் தெளிய வுணர்த்த நினைந்து, “பற்றுக பற்றற்றான் பற்றினை” என்றும், “அப்பற்றினைப் பற்றுக பற்று விடற்கு” என்றும் அறிவுறுத்தினார். துறவு நெறியும் அவருக்குக் கைகூடுவ தாயிற்று. துறவின்கண் நின்ற திருவள்ளுவர், பற்றற்றா னாகிய மெய்ப் பொருளை யுணரத்தொடங்கினார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருளின் மெய்ம்மைத் தொடர்பு காண்பதே அறிவெனக் கண்டார். கண்டவழி, உடம்பின் வேறாக உயிர் விளங்குவது தேர்ந்து, அவ்வுயிர் உடம்பிற்குள் இயங்கும் மன முதலியவற்றாலாகிய நுண்ணுடம்பின் உள்ளே விளங்குவது அறிந்தார். உள்ளே இருப்பதுபற்றி உயிர்க்கு உள்ளம் எனப் பெயரிட்டார் அவ்வுள்ளம் தன்னின் வேறாக வுள்ளனவெல்லாம் நிலைபேறின்றி அழிவதால் நிலையாக வுள்ளதாகிய செம்பொருள் உண்மையினைக் கண்டு தன் அறிவு நன்கு விளங்கப்பெறும்; அதனால் உடம்பை வேண்டாதொழியும் என்று உணர்ந்து, “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின், ஒரு தலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” என்றார். இதனை நன்கறிந்த பிற்காலத்தே தோன்றிய மெய்கண்டதேவரும் உயிரை “உள்ளம்” என்றே வழங்கினார். செம்பொருள் உண்மையை யறியும் அறிவு, ஏனை உடம்பு முதலிய சார்புகளை நோக்கச் சிறந்த சார்பாக இருப்பதைத் திருவள்ளுவர் சிறப்புறத் தெளிந்து, உடம்பும் உலகுமாகிய சார்புகள் தமக்கு உண்டாகா வண்ணம் அச் செம்பொருள் அறிவே சார்பாக ஒழுகினார். உடம்போடு கூடியிருந்தே இதனைச் செய்து சிறந்தமை யான், பொருட்சார்புகளாகிய உடம்புலகுகளால் உண்டாகும் நோய்கள் தம்மைச் சாரா தொழிவது கண்டார். “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தாரா சார்தரும் நோய்” என்று அறிவுறுத்தினார். உடம்போடு உள்ளவரையும் நுகர்வன நுகர்ந்து வாழ வேண்டி யிருத்தலால், செம்பொருள றிவுபெற்று உலகியற் சார்பு கெட ஒழுகுவது எங்ஙனமாகும் என்றொரு வினா அவர் உள்ளத்தே எழுந்தது. அதற்கு விடையாக, இதுகாறும் உடம்போடு பெற்றிருந்த தொடர்பால் உயிர்க்கு உண்டாகிய அவா அதனைத் தாங்கி நிற்கும் உடம்பு வழிநின்று, அறிவை மறைத்துப் பிறப்பை யுண்டு பண்ணு மென்றும், அஃதுண்டா காதவாறு அதனை அறுத் தொழுகவேண்டும் என்றும் கண்டார். அதனை அறுத்தற்குரிய எளியவழி, இறைவனை வாழ்த்தி வணங்குவதே எனத் தேர்ந்தார். இவ்வாறு மெய்யுணர்ந்து அவா வறுத்தொழுகுங் காலத்தில் இத் திருக்குறளை எழுதலுற்றார். அதனால் முதற்கண் கடவுளை வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறினார். அதன்கண் தாமுணர்ந்த இறைவனை, ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமை யில்லாதவன், இறைவன், பொறி வாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமையில்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று விளக்கினார். அவன்பால் பற்றுக்கொண்டு, ஏனை உடம்பு உலகவாழ்வுகளில் பற்றுவை யாது வழி பட்டொழு கினால், உடம்போடு கூடியுறையும் வாழ்வு இனிது இயலும் எனவும், ஆராத இயல்பினையுடைய அவாவால் உண்டாகும் துன்பங்கள் இல்லையாம் எனவும், இருவினையும் வந்து அணையா எனவும், மனத்தின்கண் கவலை முதலியன இல்லா தொழியும் எனவும், பிறவித் தொடர்பு இல்லாது கெடும் எனவும் கூறினார். இவ்வாறு வாழ்வோர் ஏனையுயிர்கள் இன்புற்று வாழ்வதையே விரும்பி அதற்கேற்ற பணியினைச் செய்வர். அதற்கு அவ்வுயிர்களால் நினைத்தபடியே பெற்றுக்கொள்ள முடியாதது மழையாதலால், பின்பு மழையைக் கூறினார். இவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டுரைக்கும் ஆற்ற லுடையார் துறவுநெறி நின்று நீத்த பெருமை யுடையோர். அவர் பெருமையை மழை யினையடுத்துக் கூறி அறத்தைப் பொதுவகையில் எடுத்தோதி வலியுறுத்தருளினார். ஊழ் அறம்பொருள் இன்பம் என்ற முத்திறத்து வாழ்விலும் சில நிகழ்ச்சிகள் காரணம் தெரியாமலே உளவாதலைத் திருவள்ளுவர் கண்டார். ஒன்றை நினைத்துச் செயின், ஒன்றேயன்றி வேறொன்று விளைவதும், அவ்வொன்றே விளையா தொழியாதொழிவதும், முற்றிலும் நினையாத தொன்று வந்து நேர்ப்படுவதும் பிறவும் திருவள்ளுவர்க்கு முன்பிருந்த சான்றோர்க்குப் பெருங் கலக்கத்தை விளைவித்தன. வினை, செய்வது, செயப்படு பொருள்,இடம், காலம், கருவி, நோக்கம், பயன் என எண்வகையான காரணங்களை ஒரு வினை நிகழ்ச்சிக்கு ஏதுவாகத் தொல்காப்பியர் முதலிய சான்றோர் கண்டிருந்தனர். மேலே கூறிய நிகழ்ச்சிகள் இவ்வாராய்ச் சியால் விளக்கம் பெறாதொழிந்தன. அவை காரணம் புலப்படா வகையில் நிகழ்ந்துவரக்கண்ட பண்டைச் சான்றோர், அவற்றின் பயனை நுகர்ந்து கழித்தனராயினும், புலப்படாத அக்காரணத்தை யறியும் முயற்சியில் இடைவிடாது உழைத்து வந்தனர். வாழ்வில் ஒருவன் நுகரும் இன்பமும் துன்பமும் அவன் செய்யும் வினை வழியாக உளவாவன என்பது இயல்பாகத் தெரிந்த ஒன்று காரணம் புலப்படாது நிகழ்ந்த நிகழ்ச்சி களாலும் இன்பமும் துன்பமுமே பயனாய் விளைந்தன. வினைப்பயனாகத் தோன்றும் இன்பத் துன்பங்களே, காரணம் புலப்படாத நிகழ்ச்சி களின் விளைவாயினமையின், இன்பத் துன்பக் காரணமான வினையே, காரணம் புலப்படாத வகையில் நிகழும் விளைவு கட்கும் காரணமாம் என்று கண்டனர். ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கு மெனினும், ஒருவர் செல்வத்திற் பிறந்து இன்புறுதலும், ஒருவர் வறுமையிற் பிறந்து துன்புறுதலும் காரணம் புலப்படாத வகையில் நிகழும் நிகழ்ச்சிகளாகும்; வெயிலிற் செல்லும் இருவருள் ஒருவர் அழற்றெறிப்பு (sun- stroke) உற்று இறப்பதும் மற்றவர் இருப்பதும் மழை நாளில் ஒரு மனையின் கண் இருக்கும் பலருள் ஒருவர் இடியேறுண்டு இறப்பதும், பிறர் இருப்பதும் காரணம் அறியவாராத நிகழ்ச்சி களாகும். இவ்வாறே, பண்டை நாளில் இந்தியாவுக்கு வழி காண்பான் முயன்ற கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டதும், இந் நாளில் ரேடியம் காண முயன்றவர் போலோனியம் கண்டதும் மேற்கூறிய நிகழ்ச்சியின் பாற்பட்டனவாம். இந்நிகழ்ச்சி கட்கும், இவற்றின் பயனை உற்றோர்க்கும் செலவும் முயற்சியும் முதலிய வினை வகையால் தொடர்புண்டாதலின், புலப்படாத காரணத்தை வினை யென்றே பண்டையோர் கூறினர். ஒருவினையின் பயனாகிய இன்பமும் துன்பமும் அவ்வினை முடிவிலே பெரும்பாலும் உளவாகும்; சில இடையில் இன்பம் பயந்து முடிவில் வேறொன்று விளைவிக்கும்; சில தொடக்கத்தில் துன்பம் பயந்து முடிவில் இன்பம் பயக்கும். இவ்வாற்றால் வினை வகைகட்கேற்ப வினைப் பயன்கள் முதல் இடை முடிவு என்ற விடங்களில் தோன்றுவதைக் கண்டு, காரண காரியங்களை ஆராய்ந்த அறிஞர் அவை ஒரு முறைபற்றி நிகழ்வது கண்டனர். அம் முறையினை ஆராய்ந்த அறிஞர், வினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள், வினையின்கண் அருவாயிருந்து, அவ்வினை, வினை முதல், கருவி, காலம் என்பனவற்றால் தொழிற் படுங்கால், தாமும் முகிழ்த்து அரும்பிப் பூத்துச் சிறப்பிக்கும் மலர்போல்சிறந்து வினை முடிவின் கண் நறுமலர் பயன்படுவது கண்டுணர்ந்தனர். பூத்து மணஞ்செய் செயலை ஊழ்த்தல் என்பது தமிழ் வழக்கு. “இணரூழ்த்தும் நாறா மலரனையர்” எனத் திருவள்ளுவரும், பூத்து மணங்கமழச் சமைந்த அரும்பினை “ஊழ்முகை” (நற். 115) எனவும், மணங்கமழ்ந்து வயங்கும் பூவை “ஊழுறுபூ” (நற். 326) எனவும் சான்றோரும் வழங்குவது காண்க. இவ்வூழ்முகையும் ஊழுறு பூவும்போல, இன்பமும் துன்பமுமாகிய பயன்களைமட்டில் பயக்கும் வினையும் வினை முதலும் கருவியும் பிறவுமாகிய, காரணம் விளங்காத வினைகளை, ஊழ்வினையெனச் சான்றோர் வழங்கினர். ஒரு வினைக்குரிய பயன், அதன் வினைமுதலோடு தொடர்பும் உரிமையும் பெற்று விளங்குவது கண்கூடு காரணம் புலப்படாத வினைப்பயன்கள் ஒருவரை யடையுமாயின், அவருக்கும், அப் பயன்கட்குக் காரணமான வினைக்கும் தொடர்புண்டென்பது தெளிவாம். பயனை நோக்க, வினை காலத்தால் முற்படுவதால், காரணம் புலப்படாது நிகழும் வினைப்பயன்கள் ஒருவருடைய முன்னை வினைப்பயன் எனவும் வழங்கப்பட்டன. இவ்வாறு, வினையுணர்வு தோன்றிக் கற்றார் கல்லாதார் என்ற இருதிறத் தாரிடையிலும் நன்கு பரவியிருந்த காலம் சங்ககாலம். “யாம் செய் தொல்வினைக் கெவன் பேதுற்றனை”யெனப் பேசும் நல்லந்துவனார் முதலிய சான்றோர் இருந்த காலம் அச்சங்க காலம். அதுவே திருவள்ளுவர் காலமுமாதலின், இவ்வினையைப் பற்றியும் திருவள்ளுவர் தமது நூலில் கூறும் கருத்துடையரானார் அறம் வினையின்மேலும், ஏனைப் பொருளும் இன்பமும் வினைப்பயன் மேலும் நிற்கக் கண்டு, அறத்துக்கும் பொருட்கும் இடையே ஊழ்வினை யெனப் பெயரிட்டு, இதனைப்பற்றித் திருவள்ளுவர் பத்துத் திருக்குறள்கள் வழங்கினார். மடிமையே வடிவாகவுள்ள ஒருவன், ஒரு காரணமும் பற்றாது முயற்சியுடையனாய் ஒரு வினை செய்து இன்புறுவதும், முயற்சி யுருவாய ஒருவன் எதிர்பாரா வகையில் மடியுற்றுத் துன்புறுவதும் திருவள்ளுவர் கண்டார்; சிறந்த அறிஞனொருவன் ஒரோவழி அறிவு மழுங்கியிருந்தான்; பிறிதொருகால் ஒருவன் பிற அறிஞர் காண்டற்கரிய நுட்பத்தை யுணர்ந்தான்; சிறந்த செல்வமுடை யார்பால் இருத்தற்குரிய கூர்த்த அறிவு, வறுமைத் தீயில் வதங்கு வோன்பால் ஒளிவிட்டுத் திகழ்ந் தது; ஒருவன் செல்வம் செய்தற்கு இவை நல்லன எனத் தேர்ந்து அவற்றைச் செய்தானாக, அவை தீயவாய்ச் செல்வக்கேட்டிற்குள்ளாயின; பிறனொருவன் உணர் வின்றியே தீச்செயல் செய்ய, அது மிக்க செல்வம் பயந்து அவற்குச் சிறப்பை விளைவித்தது. மிடியால் வருந்து மொருவன் மிடிமைக்கு ஏதுவாகிய குணஞ் செயல்களையும் இடம் பொருள் களையும் விலக்க முயன்றான்; அவன் முயற்சி வெற்றிதரா தொழிந்தது. பெருஞ் செல்வ முடையவரொருவர் நுகரக்கடவ நுகர்பொருள் முற்றவும் நிரம்பப் பெற்றுண்ணும் பீடுடையராயிருந்தும், நுகராது வருந்தக் கண்டார். இவர்கள் செயல்களெல்லாவற்றிற்கும் ஊழ்வினையே காரணமாவது உணர்ந்து நம்மனோரறிய எடுத்துரைத்தார். வினை யுணர்வுடையாரை நோக்கி, நன்றுண் டாகுங்கால் அதன் பயனாகிய இன்பத்தை ஊழ்வினையென வுணர்ந்து நுகருவோர் தீதுண்டாகுங் கால் அதுவேயுணர்ந்து வருந்தாதொழிதல் வேண்டும் என்றும், ஊழினும் பெருவலி யுடையது பிறிது யாதும் இல்லை யென்றும் அறிவுறுத்தினார். இவ்வாறு உரைத்தாராயினும், ஊழ்வினையே என்று சொல்லிக்கொண்டு செய்யக்கடவ அறங்களையும், ஈட்டற்குரிய பொருள்களையும் நுகர்தற்குரிய நுகர்ச்சி களையும் ஒருவன் செய்யா தொழிதல் கூடாது என்று திருவள்ளுவர் வற்புறுத்தி யுள்ளார். மற்றொன்று சூழினும் தான் முந்துறும் பெரு வலி யுடைய தாயினும், இறைவன்பால் உண்மை யன்புகொண்டு அவன் பொருள்சேர் புகழ் புரிந்தாரை இவ் வூழ்வினை வந்து சேரும் வலியுடையதன்று என்றற்கு “இருள்சேர் இருவினையும் சேரா” என்றும், மலை துளங்கினும் கடல் வெதும்பினும் மனந்துளங் காத வுள்ளமும் முயற்சியுமுடையார்க்கு இவ்வூழ் புறங்காட்டியோடும் புன்மையுடையதென்றற்கு, “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்” என்றும் யாப்புற எடுத்துரைத்தார். III. திருவள்ளுவரைப் பற்றிய கதைகள் புலவர் புராணம் கூறும் கதை திருவள்ளுவர், ஒளவையார் முதலிய நல்லோர் சிலருடன் பிறந்தவர். இவருடைய தந்தை பகவன் என்னும் பார்ப்பனர். தாய் ஆதியென்னும் பெயரினர். பகவனார் பிரமன் “அங்கிசத்தினர்”; ஆதியார் கலைமகள் “அங்கிசத்தினர்”. இவ்விருவருக்கும் மக்கள் எழுவர் பிறந்தனர். அவருள் ஆண் மக்கள் மூவர்; அவர், வள்ளுவன், கபிலன், சேரமான் என்போராவர். பெண் மக்கள் நால்வர்; அவர் உப்பை, உறுவை, ஒளவை, வள்ளி எனப்படுவர். இம் மக்கள் எவ்வெவ்விடங்களிற் பிறந்தார்களோ, அவ்வவ்விடத்திலேயே அவர்களை அன்பின்றி விட்டேகுவது பெற்றோராகிய பகவனும் ஆதியும் மேற்கொண்டிருந்த கொள்கை. பெற்றோரால் கைவிடப்பெற்று அழுதுகொண்டிருந்த வள்ளு வனாகிய குழவியை, ஒரு வேளாளன் கண்டு ஆர்வத்தோடு எடுத்துச் சென்று, “இக் கவின் சேயை இந் நாள் எளிதினில் எமக்கு நல்கல் முக்கணான் அருளே” என்று கருதிப் போற்றி வளர்த்து வந்தான். பிள்ளை திருமணத்துக்குரிய செவ்வியெய்தியபின், அவருக்கு ‘வாசுகி’ என்னும் அரிய பெண்ணொருத்தியை மணம் செய்தனர். சின்னாட்களில் வேளாளனும் அவன் மனைவியும் சிவனடியைச் சேர்ந்தனர். திருவள்ளுவர் தம் மனைவியோடு கூடி முனிவரும் வியக்கு மாறு இல்லறம் புரிந்துவந்தார். வாசுகியும் தன் ஒழுக்கத் தால் கற்புக்கெல்லையாய்ச் சான்றோரால் கருதப்பெறும் பெரும் பேறு பெற்றனர். இதனைப் புலவர் புராண முடையார், “ மாசறு தவத்தின் மிக்க வசிட்டமா முனிக்கு வாய்த்த தேசவிர் வடமீன் சீர்த்தி செப்புவார் செப்புந் தோறும் வாசநாண் மலர்ப்புத் தேளாம் வள்ளுவன் மனைதன் மாட்சி பேசலும் உலகி லென்றும் பெருவழக் காயிற் றம்மா!” என்று கூறுகின்றார். இவ்வாறு வள்ளுவர் கற்புச் சிறந்த வாசுகியாரோடு வாழ்ந் திருந்த இடம் மயிலாப்பூர். அவ்வூருள் அவர் ஏனைமக்கள் வாழும் இடத்தில் வாழாமல் ஊருக்குப் புறத்தே ஒரு குச்சுவீட மைத்துக்கொண்டு அதன்கண் நெசவுத் தொழில் செய்துவந்தார். அக்காலத்தேதான் அவர் திருக்குறள் நூலைச் செய்தார். இதனோடு சோதிடம் முதலிய தூய நூல்கள் சிலவற்றைத் திருவள்ளுவர் செய்தாரெனப் புலவர் புராணம் கூறுகிறது. அந் நாளில் மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் தருக்குமிகுதியால், சங்கத்திற்கு நூலெழுதி வரும் ஏனைப் புலவர்களை இகழ்ந்து, அவர்தம் நூலையும் குற்றம் கூறி வஞ்சனை செய்து வந்தனர். “என்ன பாட்டெவர்சொன்னாலும் இதுபழம் பாடல் என்னப் பன்னலும் எழுதிக் காட்டும் படிறும்” பிற தீச்செயலும் அவர்கள் மேற்கொண்டிருந்தனராம். வள்ளுவர் அதனையறியாது தாம் எழுதியருளிய திருக்குறளை எடுத்துக் கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அதனை அரங்கேற்றக் கருதிச் சென்றார். செல்லுங்கால் வழியில் ஒருநாள் பெருமழை பொழிந்தது. திருவள்ளுவர் வழியருகே நின்ற ஆலமர மொன்றின் அடியில் ஒதுங்கிநின்றனர். அங்கே அவர்க்கு முன்னே ஒருவன் வந்திருந்தான். அவன் பெயர் இடைக்காடன் என்பது. அவ் விடைக்காடன், “புத்த கத்துப் பேயா சிற்றிலையின் கீழ்வா”, என்று பேரொலி செய்து அழைத்தான். வள்ளுவரும் அங்கே சென்றார். சிறிதுபோதில் மழையும் நின்றது. பின்னர், அவன் வள்ளுவரைப் பார்த்து அவர் வரலாற்றைக் கேட்டறிந்து, “உன் கையில் உற்ற நூலிற் கூறும் ஒண் பொருள் வகை யாது?” என்று வினவினான். அவற்கு வள்ளுவர், “முற்ற யாவையும் மொழிந்துளேன்,” என்று மொழிந்தார். இடைக் காடன், ஆட்டினங்களுக்கு இலைதழை பறித்துதவும் கோலைக் குறளா சிரியர்க்குக் காட்டி “இதற்கும் பாடல் பாடியுள் ளாயோ?” என்று கேட்டான். உடனே திருவள்ளுவர், “உரன் என்னும் தோட்டி யான் ஓரைந்தும் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர்வித்து,” என்னும் பாட்டினை, தம் திருக்குறள் நூலிலிருந்த படித்துக் காட்டினார். அது கேட்டு, இடைக் காடன் பெருமகிழ்வு கொண்டு, தானும் திருவள்ளு வருடன் மதுரைக்குச் செல்லும் கருத்துடையேன் என்று சொல்லி, அவரோடே மதுரைக்குச் சென்றான். இருவரும் சிறிதளவு சென்றதும்,. வழியில் ஒளவையார் வரக்கண்டு அவர்பால் தங்கள் கருத்தை வெளியிட்டனர். அவரும் தான் மதுரைக்குச் செல்வதாகத் தெரிவித்தார். பின்பு மூவரும் மதுரை மூதூரைச் சென்று சேர்ந்தனர். மதுரையில் சங்கத்தைச் சார்ந்த சான்றோர் சிலர் இம்மூவரையும் நோக்கி, “நீவிர் எந்த ஊர்?” என்று கேட்டனர். அதற்குத் திருவள்ளுவர், “எந்தவூ ரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர், அந்தவூர்ச் செய்தி யறியீரோ - அந்தவூர், முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் அப்பாழும் பாழாய் அறும். என்று விடையிறுத்தார். பின்பு அவர்கள் வள்ளுவரை நோக்கி, “நீவிர் யார்?” என்று வினவ, அவர், “யான் வள்ளுவன்,” என்றார். என்றலும், அவர்கள் சற்றும் மதிப்பின்றி, “குலைக்குந்தன்மை கொள்ளுதிகொல்லோ?” என இகழ்ந்தனர். அவ்விகழ்ச்சியைப் பொருளாகக் கொள்ளாத வள்ளுவனார், “குலைக்கவே வந்தேன்,” என்றார். பின்னர் அவர்கள் இடைக்காடனை நோக்கினர். இடைக் காடனார் அவர்களைப் பார்த்து, “ஆற்றங்கரை யில் இருந்த மாமரத்தில் ஒரு காக்கையிருந்து கத்த, அதனை ஓட்டும் கருத்துடைய இடைச்சிறுவன் ஒருவன் அதனை எய்யக் கோலின்றிக் கையற்று ஒலித்த குறிப்புத் தோன்ற ஒரு பாட்டுப் பாடுமின்,” என்றார். அவர்கள், காக்கை கரையும் ஒலிக் குறிப்பும் இடைச்சிறுவன் கையற்றொலிக்கும் இசைக் குறிப்பும், குறிக்க வகை யறியாது மயங்கினர் அவர், அவர்கள் செருக்கடங்க, “ஆற்றங் கரையி னருகிருந்த மாமரத்தில் காக்கை யிருந்து கஃகஃகெனக் - காக்கைதனை எய்யக்கோ லில்லாமல் இச்இச்இச் சென்றான் வையக்கோ னார்தம் மகன்” என்ற பாட்டைப் பாடிக் காட்டினார். இவ்வாறே ஒளவையாரும் பாட்டுக்கள் பாடிச் சங்கப்புலவரின் தருக்கை யழித்தனர். இனி, சங்கப்புலவர்கள் திருக்குறளின் சீர்மை காண்டல் வேண்டித் தாமிருந்த சங்கப்பலகையின் மேலே அதனை வைத்தனர். அப்பலகை அவ்வொரு நூலுக்குமட்டில் இடம் தந்து அப்புலவர் களைக் குளத்தில் வீழ்த்திற்று. அதுகண்டு வியப்புற்ற சங்கப் புலவர்கள் திருக்குறளை வியந்து தனித் தனியே ஒவ்வொரு பாட்டுப் பாடி வள்ளுவரை வாழ்த்தினர். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் தாம்எழுதிய திருக்குறளை அரங் கேற்றிச் சிறப்பெய்திய திருவள்ளுவர், பாண்டி நாட்டவர் செய்த சிறப்புக்களை ஏற்றுக் கொண்டு திருமயிலை வந்தடைந்து முன் போல் மனையறம் புரிந்துவந்தார். அது போது திருவாலங் காட்டில் கூத்தப் பெருமானான இறைவன் காளியொடு வாதக் கூத்து இயற்றி மேம்பட்டான். அக்காலை அங்கே கூடியிருந்த தேவர்களை நோக்கி அவன் “எம்மில் வெற்றி யெய்தியவர்யாவர்?” என வினவ, தாம் அறிய மாட்டாமை கூறிவருந்தினர். இறைவனார், “நீவிர் திருமயிலை சென்று திருவள்ளுவரைக் கண்டு தெளிந்து வருக,” எனப் பணித்தார். அவர்களும் மக்களுருக்கொண்டு திருவள்ளுவர் மனைக்குச் சென்றனர். அங்கே அற்புதங்கள் பல நடந்தன. ஒருநாள் திருவள்ளுவர் பழையது உண்ணுங்கால், தம் மனைவியை நோக்கி, “பெண்ணே! இது சுடுகிறது, விசிறி கொணர்க,” என்றார். வாசுகியார் மறுத்தொன்றும் கூறாமல் விசிறி கொணர்ந்து விசிறினார். அப்போது பழஞ்சோற்றில் ஆவி கிளம்பிற்று. வேறொரு நாள்வாசுகியார் தண்ணீர் முகத்தற்குக் கயிற்றில் குடமொன்றைக் கட்டிக் கிணற்றில் இட்டிருக்கையில், திருவள்ளுவர் அவரை யழைத்தார். மனைவியார் கயிற்றை அங்ஙனே விட்டுவிட்டு வந்தார். கிணற்றிற் பாதியளவில் வந்திருந்த குடம் அவர் திரும்பி வருமளவும் “அந்தரமாய்” நின்று கொண்டிருந்தது. இச் செயல்களைக் கண்ட தேவர்கள், வாசுகியாரின் கற்புநலம் கண்டு வியந்து பாராட்டித் தாம் வந்த கருத்தைத் திருவள்ளுவர்க்குத் தெரிவித்தனர். அவர்கட்கு விடை கூறலுற்ற திருவள்ளுவர், “பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி யளந்தோனும் தாமிருக்க- நாவில் இழைநக்கி நூனெருடும் ஏழை யறிவேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” என்று மொழிந்தார். தேவர்கள் அதனால் மனந்தேறித் தம் தேவவுலகு சென்று சேர்ந்தனர். சிறிது காலத்துக்குப்பின் ஏலேலசிங்கன் என்னும் செட்டி ஒருவன் திருவள்ளுவரைக் குருவெனக்கொண்டு அருளுரை பெற்று உய்தி பெற எண்ணி வந்தான். அவனை வள்ளுவர் பலவகையால் ஆராய்ந் தார். ஒருநாள் அவர் அவனை ஒரு மரத்தில் ஏற்றி இரு கையையும் விட்டு நிற்குமாறு கூறினார். அவன் “குருபாதம் துணை” என நினைந்து அவ்வாறே செய்தான். அவன் கீழே விழவில்லை. அதன்பின் அவன் திருவள்ளுவர் மனையில் வாசுகியார்க்கு மகன்போல் ஒழுகி வந்தான். அக்காலத்தே நாட்டில் பெருவறம் உண்டாயிற்று. ஆனால், ஏலேலசிங்கனிடம் குன்றுபோல் செல்வம் குவிந் திருந்தது. அவனைப் பார்த்து, “நீ வாங்கிக் குவித்துள்ள நெற்குவையை வாங்கியதற்கு மேல் ஒருபடி மிகுதியாக விற்பாயாக!” என்றார். அவனும் அவ்வாறே செய்தானாக, நெற்குவை சிறிதும் குன்றாமல் குவிந்தே யிருந்தது, அப்போது, அவர் “இதனை வறியார்க்கு வரைவின்றி வழங்குக,” என்றார். அவ்வழியும் அது குறை படாமலே இருப்ப தாயிற்று. பிறிதொருகால் அவர் ஏலேலசிங் கனை நோக்கி, “நீ ஈட்டிய பொன்னை உருக்கிச் சதுரக்கல் போற் செய்து அதன்மேல் உன் பெயரைப் பொறித்துக் கடலில் எறிந்து வருக,” எனக் கட்டளை யிட்டார். அவர் சொல்வழியே அவனும் செய்து மாணவன் என்னும் தனது உண்மைப் பான்மையை நிலைநாட்டினான். இது நிற்க, ஏலேலசிங்கன் புலாலுண்ணும் இயல்பினன். அதனை முற்றவும் கைவிடுவதென்பது அவனுக்கு அருஞ் செயலாக இருந்தது. அதனையறிந்த திருவள்ளுவர் அவனைப் படிப்படியாகத் திருத்தக் கருதி அவனை நாடோறும் செத்துப் போன சேல் மீன் களையே தின்னு மாறு திட்டம் செய்தார். அவ்வாறே அவன் செய்துவந்தான். அவனுக்காக மீன் வலைஞர் செத்த சேல் மீனைக் கொணர்ந்து தந்துவந்தனர். ஒருநாள் அம்மீன் வலைஞர் பெரியதொரு சேல்மீனை வலைவீசிப் பிடித்துக் கொன்று அதன் உடலைப் பிளந்தார்கள். அதன் வயிற்றில் பாசி மூடிய பொற்கட்டி யொன் றிருந்தது அதனை உயர்ந்ததொரு பச்சைக் கல்லெனக் கருதிய மீன்வலைஞர் ஏலேலசிங்கனிடம் தந்தனர். அவன் அதனைப் பொன்னென நினையாது தன் புறக் கடையில் இட்டான். நாளடைவில் அது பாசி நீங்கி முன்னே அவன் கடலில் எறிந்த சதுரப் பொற் கல்லாக இருந்தது. அது கண்டு வியந்த சிங்கன் திருவள்ளுவர்க்குத் தெரிவித்தான். அவர், “அறத்தாற்றிற் செய்த பொருள் அகற்றினும் அகலாது,” எனச் சொல்லி அவனைத் தேற்றினார். இது நிகழ்ந்த சிலபல நாட்களுக்குப்பின், வாசுகி யார்க்கு வாழ்நாள் எல்லை குறுகிற்று. அவர் உயிர் எளிதில் நீங்காது ஊசலாடுவதாயிற்று. அதுகண்ட திருவள்ளுவர், “பெண்ணே! உன் மனத்தில் யாது உளது?” என்றார். அப்போது, வாசுகியார், “அடிகளே! அடியேன் மனத்தில் ஓர் ஐயம் உளது. யான் உணவு படைக்கும் போதெல்லாம் ஒரு வள்ளத்தில் தண்ணீரும் ஓர் ஊசியும் கொணர்ந்து வைக்குமாறு பணித்திருந் தீர்கள். யானும் அது செய்தேனாயினும் தாங்கள் அவற்றை ஒருநாளும் கையாண்ட தில்லை. அதற்குக் காரணம் அறிய வேண்டுமென்றோர் அவா உண்டு,” என்றார். அதுகேட்டு உள்ளங்கலங்கிய திருவள்ளுவர், சோறு படைக்கும்போது சிந்து மாயின், அதனை ஊசியாற் கோத்துக் கிண்ணத்தில் கழுவியுண்பதற் காக அவற்றை வைக்குமாறு பணித்திருந்தேன்; நீ ஒரு நாளும் சோறு சிந்தியதில்லை,” என்றார். இச் சொற் களைக் கேட்டு மனவமைதி பெற்ற வாசுகியார்க்குச் சிறிதுபோதில் உயிர் நீங்கிற்று. அவர் பிரிவாற்றாமல் திருவள்ளுவர், “ அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை- அடிவருடிப் பின்தூங்கி முன்னெழுந்த பேதையை யான்பிரிந்தால் என்தூங்கும் என்கண் இரா” என்று பாடி வருந்தினர். சிலநாட்களுப்பின் வள்ளுவர், ஏலேலசிங்கனை நோக்கி, “இன்னும் சிலபோதில் யான் இவ்வுலகினின்றும் நீங்குவேன்,” என்று கூறி, “யான் இறந்தபின் என் இருகால்களினும் வைக்கோற் புரியைக் கட்டி இழுத்துச் சென்று, இவ்வூர்க்கு வடக்கிலுள்ள காட்டில் எறிந்து விடுக,” என்று சொன்னார். அவர் கூறியவாறே சில நாட்களுக்குப்பின் அவர் உயிர் உடலின் நீங்கிச் சென்றது. அங்கிருந் தோர் கூறியவற்றால் மனம் பேதுற்ற ஏலேலசிங்கன், அவர் உடலைத் திருமுழுக்காட்டி ஒரு தேர்மேல் வைத்து எடுத்தேகத் தலைப் பட்டான். உடனே திருவள்ளுவர் உயிர்த் தெழுந்து, “அவ்வாறு செய்வது கூடாது; யான் முன்பு கூறியவாறு செய்வதே வேண்டுவது,” என ஏலேலசிங்கனைப் பணித்தார். அது கேட்டு நடுக்கமுற்ற சிங்கன் ஒருவாறு தேறி அவர் பணித்த வண்ணமே செய்தான். அவர் உடலைத் தின்ற காகமும் கழுகும் விண்ணவராய் வீடுபெற்றன. அவர் உடல் தீண்டப்பெற்றவரும் உயர்மிக்க தேவராயினர். இச் செய்தியைக் கச்சிப்பதியில் இருந்த சிற்பியொருவன் அறிந்து, அவரைப்போல் திருவுரு ஒன்றைச் செய்து திருமயிலையில் ஆகமமுறைப்படி நிறுவினான். அஃது இன்றும் யாவரும் கண்டு பரவிப் பணியுமாறு விளங்கி வருகிறது. திருவள்ளுவமாலை குறிக்கும் கதை திருவள்ளுவர் மதுரைச் சங்கத்தில் சங்கப் பலகையேறித் தமது திருக்குறளை அரங்கேற்றத் தொடங்கினார். அப்போது, அப் பலகையில் அவரோடு உடனிருக்கத்தக்கவர் யார் என்ற ஐயம், புலவரிடையே யுண்டாயிற்று. அப்போது வானொலி (அசரீரி) தோன்றி, “தெய்வத் திருவள்ளுவரோடு சங்கப் பலகைக் கண் உருத்திரசன்மர் உடனிருப்பாராக,” என்றது. பின்பு, உருத்திர சன்மர் உடனிருப்ப, வள்ளுவர் தம் திருக்குறளை அரங் கேற்றினார். சங்கப் புலவருள் சீத்தலைச் சாத்தனார் என ஒருவர் இருந்தார். அவர் தவறுடைப் பாக்களைக் கேட்க நேரும் போதெல்லாம் தம் தலையிற் குத்திக்கொள்வது வழக்கம். திருவள்ளுவர் தம் திருக்குறளை அரங்கேற்றியபோது தான் அவர் தலையிற் குத்திக்கொள்ளாது மகிழ்ந்து கேட்டார். ஞானாமிர்த உரை கூறும் கதை இந்திரதத்தன், வரருசி, யாளிதத்தன் என்ற மூவர், தம் வினைத்தொடக்கை வெல்வது குறித்து வேறுவேறு வகையிற் சென்றனர். அவருள் யாளிதத்தன் ஒரு சண்டாளப் பெண்ணைக் காமுற்றுக்கூடிப் பின் அவளைக் கிணற்றிலே தள்ளிவிட்டான். அவளை ஒரு பார்ப்பனன் எடுத்துச்சென்று ஆதரித்து வடநாட்டிற்குக் கொண்டு போனான். அந் நாட்டிற்குச் சென்ற யாளிதத்தன் அங்கே அப்புலைப் பெண்ணைத் தனக்கு ஏற்றவள் என மணம் செய்து கொண்டான். அவள் பெயர் ஆதி யென்பது. அவட்கு மக்கள் எழுவர் பிறந்தனர். அவ்வெழு வருள் திருவள்ளுவர் ஒருவர். கபிலரகவல் கூறும் கதை பகவன் என்பவர் ஓர் அருந்தவமுனிவர். ஆதி யென்பவள் கருவூர் என்னும் பெரும்பதியில் வாழ்ந்த ஒரு புலைச்சி. இவ்விரு வர்க்கும் பிறந்தவர் கபிலர்.இவரொடு ஆண்மக்கள் மூவரும் பெண்மக்கள் நால்வரும் பிறந்தனர். இவருள் உப்பையென்பாள் ஊற்றுக் காடென்னும் ஊரில் வண்ணார் வீட்டில் வளர்ந்தாள். உறுவை யென்பவள் மற்றோர் உடன் பிறந்தாள். அவள் காவிரிப் பூம்பட்டினத்தில் கள்விற்பவர் சேரியில் சான்றார் ஒருவர் மனையில் வளர்ந்தாள். பெண்மக்களுள் ஒருவரான ஒளவையார் பாண்சேரி ஒன்றில் பாணர் வீட்டில் வளர்ந்தாள். வள்ளி யென்பாள் குறவர் வாழும் குறிச்சி யொன்றில் வாழ்ந்த குறவர் கோமான் பெருமனையில் வளர்ந்தாள். தொண்டைமண்டலத்துத் திருமயிலையில் பறையர் மனையில் வள்ளுவர் வளர்ந்தார். வஞ்சி நகர்க்கண் இருந்த அதிகமான் இல்லத்தில் அதிகமான் வளர்ந்தான். திருவாரூரில் அந்தணன் ஒருவன் மனையில் கபிலர் வளர்ந்தனர். திருக்குறள் சிறப்புப்பாயிரங்கள் கூறும் கதை பகவனுடைய தந்தை சோழநாட்டு அந்தணர்களில் ஒருவன். பகவன் பிறந்ததும் அவன் நாட்குறிப்பை ஆராய்ந்த கணிகன், “பகவன் பிற்காலத்தே புன்குலமாது ஒருத்தியைக் கூடுவன்,” என்றனர். மகனுக்கு உண்டாக இருக்கும் தீவினைக்குக் கழுவாய்நாடி, அந்தணன் காசிக்குப்போனான். பதினைந்து ஆண்டுகட்குப் பின் பகவன், தன் தாயால் தன் தந்தை வடபுலம் சென்றிருந்த செய்தி கேட்டுத் தானும் பிரமசரியம் பூண்டு வடநாடு நோக்கிச் சென்றான். சென்றவன் கருவூரையடைந்து ஆதியென்னும் புலைமகளின் பெண்மை நலம் கண்டு காதல் மிக்குக்கூடிப் பின் அவள் புலைமகள் என்பது தெரிந்து அவளைக் கைவிட்டேகினன். ஆனால், ஆதியென்பாள் அவனை விடாது பின் தொடர்ந் தாள். அவன் உடனே ஒரு கல்லையெடுத்து அவள் நெற்றியில் புண்ணுண்டாமாறு எறிந்துவிட்டுப் போய்விட்டான். ஆதியோ, அவன் வருகைகுறித்து அறச்சாலை ஒன்றை நிறுவி நடத்திவந்தாள். வடபுலத்தில் தன் தந்தையைப் பலவிடங்களில் தேடியும் காணாத பகவன், மீளத் தன் சோழநாட்டுக்குத் திரும்பி வந்தான். வந்தவன் வழியில் கருவூரில் ஆதியின் அறச்சாலைக்கு வந்து சேர்ந்தான். அவனை ஆதி என்பவள் அறிந்து அடி பணிந்தாள். அவன் அவளது நெற்றிவடுக் கண்டு இன்னாளென அறிந்து முன் போல் அவளைக் கைவிட்டேகக் கருதினான். அவள், “இனி நீ நீப்பின் யான் உயிர் வாழேன்,” என்றாள். அவன், “ஈன்றிடு மகவெலாம் ஈன்றுழி யேவிடுத், தூன்றிய துணிபொடு உடன்வர வல்லையேல், வருக,” என்றான். அவளும் அதற்கிசைந்து அவனுடன் சென்றாள். இருவரும் செல்லுங்கால் வழியில் உப்பை, ஒளவை, உறுவை, வள்ளி யென்ற நான்கு பெண் மக்களையும், அதிகமான், வள்ளுவர், கபிலர் என்ற மூன்று ஆண் மக்களையும் பெற்றுவிட்டு நீங்கினர். அம் மகவுகள் அங்கங்கே கண்டோரால் வளர்க்கப் பட்டன. வள்ளுவர் மயிலாப்பூரில் வள்ளுவர் மனையில் வளர்ந்தார். பின்பு அவர் சிவ தீக்கை பெற்றுச் சிவநெறி நின்று, பூவைசியர் மரபிற் பிறந்த வாசுகி யாரை மணந்து இல்லறம்புரிந்து வருகையில் திருக்குறளை இயற்றினார். சைனரிடையில் வழங்கும் கதை கரமுண்டன் என்னும் வைசியனுக்கும் சீமதியென்னும் அவன் மனைவிக்கும் மகனாகப் பிறந்தவர் ஏலாச்சாரி. அவரே திருக்குறளை இயற்றியவர். இவர் வடமொழியில் பிரகிருத மொழியில் பஞ்சாஸ்திகாய சாரம் முதலாக ஸாலம்மிய பாகுடம் ஈறாக உள்ள ஐம்பத்திரண்டு சைன நூல்களும் வடமொழியில் தத்வார்த்த சூத்திரம், பதுமநந்தி பச்சீஸ் என்ற இரண்டு நூல்களும்தமிழில் திருக்குறளும் இயற்றினார். இவருடைய மாணவருள் திருவுள்ளம் நயினாரென்பவர் ஒருவர். இவர்கள் திருமயிலையில் வாழ்ந்து வந்தனர். ஏலாச்சாரியார் தாம் இயற்றிய திருக்குறளை மதுரைச் சங்கத்தில் அரங்கேற்றி அச்சங்கப்புலவர் செருக்கடங்கி வருமாறு திருவுள்ளம் நயினாரிடம் தந்துவிடுத்தார். அவர் சென்று அவ்வாறே செய்து போந்தார். பின்பு ஏலாச்சாரியார் வந்தவாசிக்கண்மை யிலுள்ள பொன்னூருக் கருகி லிருக்கும் நீலகிரியில் முனிசங்கத்துடன் இருப்பாராயினர். திருவுள்ளம் நயினார் அரங்கேற்றியதனால். தமிழர்கள் திருவள்ளுவ நாயனார் திருக்குறளை இயற்றினார் எனக் கூறுகின்றன ரென்பர். கேள்வி வழியாற் கூறப்படும் செய்திகள் 1. பண்டைநாளில் பாண்டிநாட்டு மதுரைமா நகரில் இருந்த சங்கப்புலவர்கள் சிவபெருமானை இகழ்ந்தாராக, அப் பெருமான் அப்புலவர்களது செருக்கடங்கு மாறு பிரமனைத் திருவள்ளு வராகவும், திருமாலை இடைக்காடராகவும், கலை மகளே ஒளவை யாரகவும் மக்களாகத் தோன்றுமாறு பணித்தருளினார். 2. பகவனார் பெருஞ்சாகரன் என்பவருக்கும் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்திக்கும் பிறந்தவர். ஆதி யென்பவள் தவமுனி யென்பவருக்கும் அருண்மங்கை யென்னும் பார்ப்பனப் பெண்ணுக்கும் மகளாகப் பிறந்தவர். பின்பு, அவள் உறையூர்ப் பெரும் பறையனால் வளர்க்கப்பட்டு மேலூர் அகரத்தில் நீதியையர் மனையில் வளர்ந்தாள். 3. பகவன் ஆதியை முதற்கண் தான் காசிக்குப் போம் போது மேலூர் அகரத்தில் கண்டு அவளது இளமையை எள்ளி அடித்துத் துரத்தினான். பின்பு அப்பகவன் காசியிலிருந்து திரும்பி வருங்கால் அவளது பெண்மை நலம் கண்டு காமுற்று மணஞ்செய்து கொண்டான். 4. திருவள்ளுவர் குழவிப்பருவத்தில் திருமயிலையில் ஓர் இலுப்பை மரத்தடியில் பெற்றோரால் கைவிடப் பெற்றார். பிள்ளைபேறு குறித்துத் தவம் கிடந்த வேளாளன் மனைவி யொருத்தி அவரைக் கண்டு எடுத்துச்சென்று, தான் பெற்ற பிள்ளைபோல் வளர்த்து வந்தாள். 5. “மரபறியாக் குழந்தையை வளர்க்கிறார்கள்,” என்று ஊரார் பழிகூற, திருவள்ளுவரை வளர்த்த தாய் தந்தையர் அவரை ஒரு மாட்டுத் தொழுவில் தொட்டிலிட்டுக்கிடத்தி வளர்த்து வந்தனர். அறிவு வந்தபின் திருவள்ளுவர் ஒரு பனைமரத்தடியில் இருந்து தவம் புரிந்தனர். பின்பு திருமூலர் முதலிய சான்றோ ரோடு கூடித் தவம் செய்வாராயினர். 6. காவிரிப்பாக்கத்தில் மார்க்கசகாயன் என்னும் வேளாள னொருவன் ஆயிரம் ஏர் வைத்துப் பயிர் செய்யும் பெருஞ் செல்வ முற்று விளங்கினான். அவனுக்கு வேதாளமொன்றால் அடிக்கடி இடுக்கண் தோன்றிய வண்ணம் இருந்தது. அதனால் அவன் திருவள்ளுவரை யடைந்து குறையிரந்து நிற்க, அவர் அவனது காவிரிப் பாக்கத்துக்கு வந்து வேதாளத்தின் ஆற்றலைக் கெடுத்துத் துரத்தினார். அதுகண்டு வியந்த மார்க்கசகாயன் தன் மகள் வாசுகி யென்பாளைத் திருவள்ளு வருக்கு மணம் செய்து கொடுத்தான். வாசுகியைத் திருமணம் செய்துகொள்ளுமுன் திருவள்ளுவர் வாசுகியிடம் மணலைத்தந்து சோறாகச் சமைக்குமாறு பணித்தார். அவரும் அவ்வாறே சமைத்துத் தந்தார். அதனால் திருவள்ளுவர் வாசுகியை மணஞ் செய்து கொண்டார். 7. திருவள்ளுவர் திருமயிலையில் ஏலேலசிங்கன் என்னும் வணிகனொருவனிடம் நூல் பெற்று நெய்தற்றொழில் புரிந்து வந்தார். அந்நாளில், தேவர்கள், சிவனது ஆலங்காட்டு ஆடல் நலம் அறியவந்து அறிவுபெற்றுச் சென்றனர். ஏலேலசிங்கன் ஒருநாள் சிவபூசை செய்யுங்கால் தமது கருத்தைக் குப்பத்து வாணிகத்தில் செலுத்தி யிருந்ததைத் திருவள்ளுவர் கூறக்கேட்டு அவன் திருவள்ளுவர்க்கு மாணவராயினன். 8. ஒருகால் ஏலேலசிங்கர் தமக்கு மக்கட்பேறு வேண்டு மெனத் திருவள்ளுவரிடம் தெரிவித்து வருந்தினர். திருவள்ளுவர் “ஆண்டவன் அருளால் அஃது உண்டாம்,” என மொழிந்தனர். சின்னாட்களில் ஆண்டவன் ஒரு குழவியுருவாய் வந்து ஏலேலசிங்கர் முன் கிடந்தனர். ஏலேலசிங்கரும் அதனைத் திருவள்ளுவர்க்குக் காட்டி ‘அழகானந்தன்’ எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். 9. ஒருகால் ஏலேலசிங்கருடைய கப்பல் கரைதட்டி விடவே, திருவள்ளுவர் “ஏலையா” என்று சொல்லி அதனை இழுக்குமாறு சொல்லித் தாமும் உடனிருந்து இழுத்தார். கப்பல் இனிது கரை யடைந்தது. 10. மீன் வலைஞர் கொணர்ந்த பொற் கட்டியைக் கல்லென்று கருதிய ஏலேலசிங்கர் தமது மனையின் புறக்கடையில் இடச் செய்திருந்தார். அது பாசி நீங்கியதும் பொற்கட்டியாகத் தோன்றக் கண்டு வள்ளுவர்க்குத் தெரி வித்து உண்மை யுணர்ந்தார். 11. அந்நாளில் வாழ்ந்த புலவர்கள் செய்கையால் நெடுங் காலமாய் மனத்துயரடைந்திருந்த அழகானந்தர் முதலியோர் வேண்டுகோளுக்கு இசைந்து திருவள்ளுவர் திருக்குறளைப் பாடி யருளினர். 12. மதுரையில் செருக்கடங்கிய புலவர்களும், உக்கிரப் பெருவழுதி யென்னும் பாண்டியனும் திருவள்ளுவரை வணங்கிப் பொதிகை மலைக்குச் சென்று அகத்தியர்க்குத் திருக்குறளைக் காட்டுமாறு கேட்டுக் கொள்ளவே, திருவள்ளுவர் திருக்குறளை அவர்க்குக் காட்டி அவரை மகிழ்வித்தனர். 13. ஒருகால் கொங்கணரென்னும் சித்தரொருவர் வந்து கொண்டிருக்கையில், வானத்திற் பறந்து சென்ற கொக் கொன்று அவர்மேல் எச்சமிட்டது. அதனை அவர் வெகுண்டு நோக்கினாராக, அக்கொக்கு உடனே எரிந்து சாம்பராயிற்று. பின்னர் அச்சித்தர் வாசுகியிருந்த மனைப்புறத்தே நின்று உணவு கேட்டார். அப்போது வாசுகியார் திருவள்ளுவர்க்கு உணவளித்துக்கொண்டிருந்தமையால், புறத்தே வந்து உணவளித்தற்குச் சிறிது காலமாயிற்று. கொங்கணர் சினமுற்று. வாசுகி யாரை உறுத்து நோக்கினர். வாசுகியார், அவர் திடுக்கிடுமாறு, “கொக்கென்று நினைத்தனையா, கொங்கணவா?” என்றார். கொங்கணர் நடுநடுங்கி அவரது கற்புமாண்பு கண்டு வணங்கினர். 14. கொங்கணசித்தர் திருவள்ளுவர்பால் ஞானம் பெற்று, இல்லறம், துறவறம் என்ற இரண்டனுள் சிறந்தது காண விழைந் தனர். திருவள்ளுவர் அவரைத் தமது மனையின்கண் சிலநாள் தங்கியிருக்குமாறு பணித்தார். வாசுகியின் மனை மாட்சிகண்டு வியந்தகொங்கணர், “கற்புடைய மனைவி வாய்க்கின், துறவறத் தினும் இல்லறமே சிறந்த,” தெனத் தேறிச் சென்றனர். 15. ஒருநாள் திருவள்ளுவர் நெய்தற்றொழிலைச் செய்து கொண்டிருக்கையில் அவர் கையிலிருந்த குழல் கைந்நழுவிக் கீழே வீழ்ந்துவிட்டது. அதனை எடுப்பதற்கு விளக்கேற்றிக் கொணருமாறு திருவள்ளுவர் வாசுகியாரைப் பணித்தார். அவரும் அவ்வாறே செய்தார். 16. திருவள்ளுவர் மாசித் திங்களில் உத்தரநாளில் மண்ணு லகை நீத்தனர். திருவள்ளுவரது வரலாற்று ஆராய்ச்சி 1. பெற்றோர் புலவர் புராணமும் கேள்விவழிச் செய்தியும், சிறப்புப் பாயிரங்களும் ஒருமுகமாகத் திருவள்ளுவருடைய தந்தை பெயர் பகவன் என்றும், தாய் பெயர் ஆதி யென்றும் கூறுகின்றன. ஞானா மிர்தமென்னும் நூலுரைமட்டில் திருவள்ளுவருடைய தந்தை பெயர் யாளிதத்தன் என்றும், தாய் ஆதிப்புலைச்சி யென்றும் கூறுகின்றது. புலவர் புராண முதலியவற்றை நோக்க, ஞானாமிர்த உரை பழமையானது: ஆயினும், அது கூறும் செய்தி நாட்டில் பயில வழங்கவில்லை. மேலும், யாளிதத்தன் கதை, ஏனை வரருசி, இந்திர தத்தன் முதலியோர் கதைகளோடு விரவியே ஞானா மிர்தத்துட் காணப்படுகிறது. இக் கதைகள்; குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் எழுதப்பெற்ற பிருகற் கதையெனப்படும் பெருங்கதையில் அடங்கிய புனைந்துரைக்கதைகளாம் என்பது அதன் வடநூல் மொழிபெயர்ப்பால் விளக்கமுறுகின்றது. அன்றியும், ஞானாமிர்தம் கூறும், “யாளி. கூவற்றூண்டும் ஆதிப் புலைச்சி காதற்காசனி யாகி மேதினி, இன்னிசை யெழுவர்ப் பயந்தோள்” என்ற அடிகளும் யாளிதத்தன் ஆதிப் புலைச்சியைக் கூடித் திருவள்ளுவரைப் பயந்தான் என்று கூறுகின்றில. அதன் பழையவுரையொடு கூடிய ஏடுகள் “எழுவரென்றது சுநந்தர் முதலிய எழுவரை” யென்று குறிக்கின்றன. ஞானாமிர்த அச்சுப்பிரதியில் காணப்படும் உரைதான் “எழுவர் கபிலரையுள்ளிட்ட எழுவர்” என்று உரைக்கிறது. இதற்குரிய உரை வேறுபாடு சுநந்தர் முதலிய எழுவரென்பது, இந்த ஞானாமிர்தத் துக்கும் திருவள்ளு வருக்கும் யாதோர் இயைபுமில்லை யென்றற்குப் போதிய சான்றாகிறது. இனி, திருவள்ளுவருடைய பெற்றோர் பகவனும் ஆதியுமாவர் எனக் கூறும் பிறசெய்திகட்கு ஆதரவு ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. திருக்குறளில் முதற்குறள், உலகிற்கு முதல் இது வென்றற்கு “ஆதி பகவன்” என்று கூறுவது கொண்டு, ஆதியென்பது தாயது பெயரென்றும், பகவனென்பது தந்தையது பெயரென்றும் கொள்ளப் படுகின்றன என்பர் சிலர் இவ்வாறு தம்மைப் பெற்ற தாய்தந்தையர் பெயர்களைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ குறித்தோதிய தமிழ் நூலாசிரியர் ஒருவரும் இலர். எனவே, அவ்வாறு ஓதுவது தமிழ்ச் சான்றோர் மரபன்று என்பது தெளிவாகிறது. அதனால், திருவள்ளுவரைப் பெற்ற தாய் ஆதி யெனவும், தந்தை பகவன் எனவும் கொள்வது ஆராய்ச்சி யறிஞர் கொள்ளத் தகுவதன்றாம். இனி, கபிலரகவலும், புலவர் புராணமும், பிறவும் ஒரு முகமாகக் கூறுதல்கொண்டு, திருவள்ளுவருடைய பெற்றோர் பகவ னாரும் ஆதியாருமாவர் என்று கொள்வதாயின், அஃது ஆராய்தற் குரியதேயாம். திருவள்ளுவர் காலத்தே ஆடவர் ஆதன் என்று பெயர்பெற்று வாழ்ந்ததுபோல மகளிர் ஆதியென்னும் பெயருடன், “ஆதிமந்தியார்” என்றாற்போல இருந்ததுண்டேயன்றி, பகவன் என்ற பெயர் தாங்கியிருந்த தில்லை. முக்கோலேந்தித் திரிந்த முனிவரைப் பகவர் என வழங்கிய துண்டு. இதனால், திருவள்ளு வருடைய தாய் பெயர் ஆதியார் எனல் பொருந்துமென்பதும், தந்தை பெயர் பகவனெனல் இயற்பெயராக அமையாதென்பதும் விளங்குகின்றன. இனி, ஆதியாரைப் புலைச்சியெனவும், பகவனைப் பார்ப்பன அந்தணரெனவும் திருவள்ளுவர் வரலாறு பற்றிய குறிப்புக்கள் கூறக் காண்கின்றோம். முக்கோலேந்தித் திரிந்த துறவிகளாகிய அந்தணர் களைப் பகவரென்பது பண்டை நாளை வழக்கு. அதனால், பகவனை அந்தணரென்றல் ஒரு வாறு அமையும். அரசர், வணிகர், வேளாளர், பார்ப்பனர் என்பாருள் யாவரும் துறவிகளாகியபோது அந்தண ரெனப்படுவர். “அந்தணரென்போர் அறவோர்” எனத் திருவள்ளுவரே குறிப்பது காண்க. ஆகவே, பகவனாகிய அந்தனர் பார்ப்பனராகத் தான் இருக்கவேண்டுமென வரைந்து கூறல் குற்றமாம். கபிலர் முதலிய சான்றோராகிய பார்ப்பனர் அந்தணராதலின். அவரைப் பயந்தவர் பகவன் எனப்படுதலின், பகவனை அந்தணன் எனப் பிற்காலத்தவர் கருதியிருக்கலாம். கபிலர் அந்தணரெனப் படற் கேற்ப மணமும் மகப்பேறு மின்றித் துறவு வாழ்வு வாழ்ந்தவர். பகவனாகிய பார்ப்பனரும் அந்தணராயின், அவர் ஆதியை மணந்தா ரென்றும், திருவள்ளுவர் முதலியோரைப் பெற்றா ரென்றும், அருள் என்பது சிறிதுமின்றித் தாம் பெற்ற மக்களை ஆங்காங்குக் கைவிட்டேகினரென்றும் கூறப்படுவன அனைத்தும் பொய்யுரைகளாம். இனி, ஆதியாரைப் புலைச்சியென்பர். திருத்தகு தெய்வத் திருவள்ளுவரைப் பெற்ற பெறலருந் திருமிக்க அவ்வம்மையாரை, “மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்,” என மனமாரப் போற்றி வழிபடவேண்டிய கடமை தமிழ்ச் சான்றோர்க்கு உண்டாகிறது. அவ்வாறு செய்யாது, “புலைச்சி”யென இழித்துப் பேசுவதே வழக்காதலின், அவருக்கும் திருவள்ளுவர்க்கும் தொடர்பில்லை யென்பது தெளிவாகிறது. நலத்தின்கண் நாரின்மை கொள்வது குலத்துக்கு மாசு செய்வதென்பதைத் தெளிய வுணர்ந்தவர் தமிழ்ச் சான்றோர். இனி, புலாலுண்போர் அனைவரும் முற்காலத்தே நூலோரால் புலையரெனப்பட்டனர். புலாலுண்ணும் ஒருவனைப் புலையன் எனவும், புலாலுண்ணும் ஒருத்தியைப் புலைச்சியெனவும், வழங்குவர். “பொல்லாப் புலாலை நுகரும் புலையரை” (திருமந். 199) எனத் திருமூலர் கூறுவது காண்க. பண்டைநாளில் பார்ப்பார் முதலிய பலரும் புலால் உண்டன ரென்பது ஆராய்ச்சியாளர்க்குத் தெரிந்த செய்தியாகும். அங்ஙனமாக, ஆதியாரைமட்டில் புலைச்சியென்று கூறுவது பொய்யாம். இவ்வாற்றால், ஆதியாகிய புலைச்சியைத் திருவள்ளுவர் வரலாற்றில் இணைத்துரைப்பது பெருங் குற்றமாம். இவ்வாறே, திருவள்ளுவரைப் பெற்ற தாய்தந்தையர் தாம் பெற்ற மக்களை ஆங்காங்கே அன்பின்றிக் கைவிட்டுச் சென்றனரென ஒரு குறிப்பும் கூறப்படுகிறது. அவ்வண்ணம் செய்யக்கூடிய வன்கண்மை எத்தகைய தாயர்பாலும் எளிதிற் காணக்கூடியதன்று; பகவனாரும் ஆதியாரும் கொண்ட பொருந்தா மணத்தைப் புனைந்தோர், தீநெறியில் மகப் பெற்றோர் செய்யும் இச்செயலை இவர்கண் மேலேற்றிப் படைத்து மொழிந்துள்ளனர் எனக் கொண்டொழிவது தவிர. இதனை உண்மையெனக் கொள்ளுதற்கு இடம் இல்லை. 2. உடன்பிறந்தார் இனி, திருவள்ளுவரையுள்ளிட்ட எழுவர் இத்தாய் தந்தை யர்க்குப் பிறந்த மக்கள் என்பது திருவள்ளுவர் வரலாற்றிற் காணப்படும் குறிப்பாகும். அவ்வெழுவரையும் நோக்குங்கால், இக்குறிப்பைப் படைத்து மொழிந்தோர் இலக்கிய அறிவோ காலவுணர்வோ சிறிதுமில்லாத வெளிற்றறிவினரென்பது தெளிவாகிறது. ஒளவை, வள்ளி, அதிகமான், கபிலர் என்போர் சங்க இலக்கியங் களிற் காணப்படும் சான்றோராவர். இவர்களது வரலாறும் ஓரளவு கற்றோரனைவர்க்கும் இனிது தெரிந்திருக்கிறது. அது காண்போர், இவர்களை ஒரு தாய் வயிற்றிற் பிறந்தவர்கள் என ஒருகாலும் உடன்படார். மேலும், திருவள்ளுவருடைய மதிநுட்பத்தையும், உலகியலறி வையும் நோக்கின், இவர் ஒரு செல்வக்குடியில் பிறந்து வளர்ந்து செந்தமிழ்வளம் சிறக்கப்பெற்றவர் என்பது தெளிவாக விளங்குகிறது. எல்லாச் சான்றோர்களும் இவரைத் திருவள்ளுவரென்றே வழங்கி யுள்ளனர் இலக்கண வுரைகாரர்கள், ‘வள்ளுவன்’ என்பது இவரது இயற் பெயரென்றே கருதுகின்றனர். ஆகவே, வள்ளுவரென்பத இவர்க்குத் தாய்தந்தையரிட்ட இயற்பெயரென்றும், இவருடைய ஒப்புயர்வற்ற புலமை நலங் கண்டு வியப்புக் கொண்ட சான்றோர், திருவள்ளுவரெனவும் ‘தெய்வப்புலவன் திருவள்ளுவன்’ எனவும் பாராட்டிச் சிறப் பிப்பாராயின ரென்று அறிதல் வேண்டும். 3. ஊர் இனி, திருவள்ளுவனாரது ஊர் திருமயிலை (மயிலாப்பூர்) என்பது பெரும்பான்மையான வழக்கு. சைன சமயத்தவர் இடையில் வழங்கும் கதையும் திருமயிலையைக் குறிக்கிறது; திருவள்ளுவ மாலையொன்றுமே இவரது இடம் மதுரையெனக் குறிக்கின்றது. இதற்கேற்பவே, திருவள்ளுவர் நூற்கு உரைகண்ட பரிமேலழகர் தொண்டைநாட்டினரெனக் கண்ட தொண்டை மண்டல சதகம், “திருக்காஞ்சிவாழ் பரிமேலழகன் வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் தொண்டை மண்டலமே” (41) என்று கூறி, வள்ளுவனார்க்கும் இடம் இத்தொண்டைநாடே என எடுத்தோது கின்றிலது. திருமயிலை தொண்டைநாட்டின் கண்ணதோரூர் என்பதை, “கயிலையுங்* கச்சியும் விற்கோல மும்நற் கழுக்குன்றமும் பயில்வழி தாயமும் பாசூரு மச்சிறு பாக்கமுநல் லயிலையும் வல்லந் திருவொற்றி யூரு மரசிலியும் மயிலையும் ஈசன் மகிழ்ந்ததன்றோ தொண்டை மண்டலமே.” என்று குறித்தோதுகிறது. திருமயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலும் பிற்காலத்தே கட்டப்பெற்ற தென்பதை முன்பே கூறினோம். இவ்வாற்றால், திருவள்ளுவர்க்கு ஊர் திருமயிலை எனக்கூறுவது ஒரு தலையாகத் துணிதற் கில்லாமையும், எனவே, திருவள்ளுவ மாலை கூறுவதே வலியுறுவதும் காணப்படுகின்றன. 4. மனை வாழ்வு இனி, திருவள்ளுவர் வாசுகி யென்பவரை மணந்து இல்லறம் புரிந்துவந்தனரென்ற செய்தி, மேற்கூறிய கேள்விவழி வரலாற்றிலும் ஏனைப் புராண முதலிய வற்றிலும் ஒப்பக் கூறப்படுகிறது ஆதியார் பகவனார் என்னும் பெயர்களை நோக்க. வாசுகி யென்னும் பெயர் ஆராய்ச்சிக்குரிய தொன்றாகிறது. வாசுகி யென்னும் வடமொழிப் பெயர், அந்நாளில் தமிழ்நாட்டில் வழங்கிய தமிழர் பெயராகத் தோன்றவில்லை. வடவரும், அவரது வடமொழியும் விரவியிருந்த காலத்தே திருவள்ளுவர் வாழ்ந்தாராயினும் வடமொழிப் பெயருள் வாசுகி யென்பது போலும் பெயர் மக்கட்கு வழங்கியதில்லை. தம்மை வடவராகக் கருதி யொழுகும் இந்நாளைப் பார்ப்பனரும் தாம் தமக்கு வடமொழிப் பெயரையிட்டு வழங்கிய வழக்கம். நாயக்க மன்னர் ஆட்சியிற்றான் பெருகிற்றென்பதைப் பல்லாயிரக் கணக்காக எடுக்கப்பட்டிருக்கும் தென்னாட்டுக் கல் வெட்டுக்கள் எடுத்தோதுகின்றன பார்ப்பனரும் கி.பி. பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுவரையில் வடமொழிப் பெயரைப் பெரிதும் தமக்கு இட்டு வழங்காதிருந்தனராக. பார்ப்பனரல்லாதாராகிய திருவள்ளு வரும் பிறரும் தம் மகளிர்க்கு வடமொழிப் பெயரிட்டு வழங்கினரெனக் கூறுவது உண்மையுரையாகாது. ஆகவே, திருவள்ளுவர்க்கு மனைவி யார் ஒருவர் இருந்தனரென்பது உண்மையாயினும், அவர் பெயர் வாசுகி யென வழங்கிற்றென்பது பொருத்த மன்றென்று காண் கின்றோம் இவ்வாறே, வாசுகியார் தந்தை பெயர் மார்க்கசகாய முதலியாரென்பதும் முழுத்த பொய்யுரையாகிறது. காவிரிப்பாக்கத் துக்கு மேற்கில் பாலாற்றின் கரையில் இருக்கும் விரிஞ்சி புரத்துக் கோயிலிலுள்ள இறைவனை அங்குள்ள பழங் கல்வெட்டுக்கள் வழித்துணை நாயனா ரென்றும், பிற்காலக் கல்வெட்டுக்கள் மார்க்கசகாயீச்சுர ரென்றும் குறிக்கின்றன. மார்க்கசகாயனென்ற இறைவன் பெயர் நாட்டில் வழங்கிய பிற்காலத்தே மக்கள் தமக்கும் மார்க்கசகாயனெனப் பெயர் கொண்டிருந்தனராதலால், அப் பெயருடையார் ஒருவர், திருவள்ளுவர் காலத்தே இருந்தா ரென்பது பொருந்தாது. காவிரிப்பாக்கத்தின் பழம் பெயர் காவிதிப்பாக்கம் என்பதையும் ஈண்டு நினைவுகூர்தல் வேண்டும். இதனால் மார்க்க சகாயர் வரலாறும் பிறவும் அவர் பெயர்போலப் பிற்காலத் தெழுந்த புனைந்துரையெனக் கொள்வதே பொருத்தம். திருவள்ளுவர் கற்புடைய மனைவியாருடன் கூடி வாழ்ந்து வருகையில் நெசவுத்தொழில் புரிந்துவந்தாரென்று கூறி, “இழை நக்கி நூல் நெருடும் ஏழையறிவேனோ,” என அவர் தம்மைக் கூறுவதாகச் சொல்லும் வெண்பாவை அதற்குச் சான்றாகக் காட்டுவது உண்டு. ஆனால், அத்தொழில் பற்றிய குறிப்பொன்றும் அவரது நூலிற் காணப்படவில்லை. உழவு, வாணிபம், அரசியல், அமைச்சியல், தூதுபோதல், போர் செய்தல், மறையோதுதல் முதலிய தொழில்களை ஆங்காங்குக் கூறுவதுபோலவேனும் தமது நெய்தற்றொழிலை அவர் குறித்திலர். ஆதலால், அவர் நெய்தற்றொழிலைத்தான் தமது தொழிலாகக் கொண்டி ருந்தாரெனக் கூறுதற்கு இடமில்லை. திருவள்ளுவர் கற்புறு பொற்புமிக்க மனைவி யாரொடு கூடி இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகையில், தமிழ் நாடும் தமிழ் மக்களும் உய்தல் வேண்டி, தாம் தம் நல்லறிவுகொண்டு ஆராய்ந்த நன்னூற் பொருள் அனைத்தையும் நன்கு தெளிந்து உலக வாழ்வில் அவ்வப்போது கண்ட அரிய காட்சிகளையும் தேர்ந்து, யாவர்க்கும் ஒப்பப் பயன்படத்தக்க நூலியற்ற வேண்டுமென்ற கருத்தால் உந்தப்பெற்றுத் தெய்வத் திருக்குறள் நூலைச் செய்தாராதல் வேண்டும். 5. நூலியற்றல் இவர் காலத்தே மக்கள் கூட்டத்தில்கடவுள் உண்மையும், வினைத்தொடர்பும், இறைவன் திருவடி யடைவதே வீடுபே றென்னும் வீடுபேற்றுணர்வும் துறக்க நரகங்கள் உண்டென்னும் கொள்கையும் பிறவும் நிலவின. வேதியர் மறையும் துறவியர் துறவு நெறியும் விரவியிருந்தமையின், இவர்காலம், வடவரது வேதநெறியும் தமிழரது சைவநெறியும் கலந்த திருநெறி ஒரு மருங்கும், புத்த சமணர்களின் புதுச் சமய நெறி ஒருமருங்கும் நிலவிய காலமாகும். இரண்டன்பயிற்சியால் மக்கள் கூட்டம் உலகியலில் சீரிய நாட்டம் பெறாது சீர்குலைவதாயிற்று. வைதிக நெறியினர், பிறப்பில் உயர்வு தாழ்வும், உலகியலில் நிலையாமைக் குறிப்பும், உலக வாழ்வில் வெறுப்பும் பிறவும் கற்பித்து, மக்களை உலகியற்பொருளை ஆராய்தற்கும், மக்களிடையே ஒருமையுணர்வு தோற்றுவித்து ஒற்றுமை யொடு வாழ்தற்கும் ஊக்கங்கொள்ளாது வேறுவேறாகப் பிரிந்து கெடுதற்கு உலைவைத் தொழுகினர். புத்த சமணர்கள், பொல்லா நோன்பும் வாழ்க்கையிற் பற்றின்மையும் பெருங் கொள்கை களாக எடுத்தோதி, அரசியல், சமுதாயம், பொருளீட்டல் முதலிய துறைகளில் மக்கள் கருத்து ஈடுபடாத நிலையினையுண்டு பண்ணினர். இதன்விளைவே களப்பிரரும் பல்லவரும் பிறரும் நாட்டில் நுழைந்து அரசியலைக் கைப்பற்றித் தமிழரது தொன்மை வரவு கெடுத்தற்கு இடம் செய்தது எனின் அது தவறாகாது. பற்றுக்கொண்டு செய்யும் இல்வாழ்வு துன்பத்துக்கு ஏது; ‘புத்தேளுலகம் புதல்வரும் தாரார்,” என்பது புத்தர்களின் பொரு ளுரையாகும். இத்தகைய கொள்கைகளைக்கேட்ட தென்னாட்டவர், இவற்றை மேற்கொண்டு ஒருமை நோக்கம் பெறாது தலைதடு மாறலாயினர். புதுமைக்கு அடிமையாகும் புன்மை தமிழ் மக்கள் பால் இருப்பதுகண்டு மனம் வருந்திய திருவள்ளுவர், உலகியற்குப் பொருளாவன அறமும் பொருளும் இன்பமும் எனப் பண்டையோர் உரைத்த உறுதிப் பொருள்களையே மீளவும் எடுத்துத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் உரைக்க வேண்டிய கடமை அறிவுடைய சான்றோர்க்கு உளதாவதை நன்கு உணர்ந்தார். உலகியலில் செய்யும் நல்வாழ்வே வீடுபேற்றுக்கு வாயிலாம் என்பதை வற்புறுத்த விழைந்தார்; வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது வானுறையும் தெய்வ வாழ்வாம் என்பது பழந்தமிழரது வாழ்க்கைக் குறிக்கோள். இதனையே பல்லாற்றானும் எத்திறத்தோரும் விழைந்தேற்கும் வண்ணம் நூல் செய்வாராயினர். இவ்வுண்மை யினை நன்கு ஆராய்ந்து கண்டே கல்லாடனார் என்பார், “சமயக் கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்,” என்று விளக்கினார். ஏனையோரெல்லாம் இவ்வுலகியலைக் கருவி யாகக்கொண்டு தத்தம் சமயக் கருத்தினையே வற்புறுத்த முயன்றனர். உலகியலை, அறம், பொருள், இன்பம் என்ற மூன்று குறிக் கோளின்கண் வைத்து ஆராய்ந்த முதன்மை தொல்காப்பியர்க் குரித்து. அதனைப் பயன்படவுணர்ந்து உண்மையுணர்வால் மக்கட்கு வகுத்தும் விரித்தும் உரைத்த உயர்நிலைப்பெருமை திருவள்ளுவர்க் கேயுரியது. இவர்போல் உலகியற்பொருளை இவ்வண்ணம் வகுத்தும் விரித்தும் உரைத்த அறிஞர், இப்பரந்த மண்ணுலகில் எவருமே இலர் என்பதை யாவரும் ஒப்பவுரைக் கின்றனர். 6. திருக்குறள் தனித்தமிழ் முதனூல் இனி, உலகில் காணப்படும் நூல்களுள் மிகவும் பழமை யானது வேதம் என்பர். “உலகியல் வேதநூல் ஒழுக்கம்” என்றனர் சேக்கிழார். அதுவும் உலகியலைக் கன்மமும் ஞானமும் என இரண்டாக வகுத்தோதுவதாகக் கூறுவர் ஆனால், உலகியலில் உயிர்கள் செய்தற்குரியது அறம்: அதனால் செய்யப்படுவது பொருள்; அதனால் அவ்வுயிர்கட் குளதாகும் பயன் இன்பம் என்று வகுத்தோதும் அறிவுடை யியல்பு வேதத்துக்கும் கிடையாது என்பர். இத்திருக்குறள் நூல் அமைந்துள்ள முறை வேறே எம் மொழியினும் காணப்படவில்லை; ஆகவே, இதன் அமைப்புத் திருவள்ளுவர் தாமே படைத்துக்கொண்ட தொரு தனித்த உண்மை முறையாகும். நிலவுலகில் அறிவுடை மக்கள் காணும் உயிர்க் கொள்கை பலவும் இதன்கட் காணப்படும்;ஆனால், இத்திருக்குறளின் கண்ணுள்ள கொள்கைகள் பல பிற எந்நாட்டு எம்மொழி நூலிலும் காணப்படுவதில்லை. இதுவே இதற்குள்ள தனிமை நலமும் பெருமை நலமுமாகும். இனி, தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுடைய தனி நிகழ்ச்சி வரலாறுகட்கும், உண்மைகட்கும், தமிழர் ஊர்கட்கும் தனிமையும் தொன்மையும் உண்டென்பது அறியாது, வடவர்நாட்டு வடவர் வடமொழிக்கண் தொடக்கும் தோற்றமும் நாடி அலமரும் கீழ்மை இடைக்காலத்தே எங்ஙனமோ உண்டாயிற்று. தமிழ் நாட்டு மூதூர் களான மதுரை, தில்லை. திருவண்ணாமலை, திருவேங்கடம், திருக்காளத்தி முதலியவற்றின் தொன்மை வரலாறும், தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் நிகழ்ச்சி வரலாறுகளான சிலப்பதிகாரம், திருந்தொண்டர் புராணம் முதலியவற்றுக்கும் வடமொழியில் தொடக்கமும் தோற்று வாயும் கண்டுரைப்பவர் உளராயினர் ‘அரசமரத்தைப் பிடித்த சனி, அதன் கீழ் இருந்த ஐங்கரனையும் பிடித்த தென்பது போல, மிகப் பழந்தமிழரது தொன்னூல்களான திருக்குறளுக்கும் தொல்காப்பியத் துக்கும் “வடமொழி மூலம்” கண்டு, இலதாகிய தனால் பொய் யேனும் புனைந்து கூறும் புன்மை நாட்டில் உண்டாகி விட்டது. அதனால் விழுங்கப்பட்டோர் பலர், திருவள்ளுவர் முதலாயி னோர்க்குப் பொய் வரலாறு புனைந்ததோடு நில்லாது, திருக்குறள் பர்த்துருஹரி, நீதிசதகம், பகவற் கீதை, மனுமிருதி, கௌடிலியர் அருத்தசாத்திரம், சுக்கிரநீதி, காமந்தகம் முதலிய வட நூல்களின் மொழி பெயர்ப்பென்றும் கூறுவர். தமிழ் வாழ்வின் தனிப்பயனாய்த் தோன்றித் தமிழ்ப் புலமை சிறந்து தமிழ் நினைவு தமிழ்ச் செயல்களைத் தமிழுள்ளத்திற் கண்டுரைத்த தமிழ்த் தனிமகனாரான திருவள்ளுவர், தங்காலத்து வழக்கும் செய்யுளும் ஆகிய இரு பெருந் தமிழ்க் கடல்களையும் நுண்மாண்புலமை யென்னும் மத்தினைக் கொண்டுகடைந் தெடுத்த தனிப்பெருந்தமிழமுதம் இத் தண்டமிழ்த் திருக்குறள் என்பது யாவரும் உள்ளக்கிழியில் உருவுபெறப் பொறித்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும். திருக்குறள் என்னும் அரிய அறநூல் உலகியலுக்குரிய பெரு நூலாகும். உலகியலில் கூறுதற்குரிய பெரிய பொருள்கள் பல வற்றினும், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினும் பெருமை மிக்க பொருள் வேறே கிடையாது. வீடுபேறும் மூன்றன் ஏதுவாகப் பெறப்படுவதேயன்றி, இம்மூன்றானுமே எய்தப் படுவதுமாகலின், பெருமை யென்பது இம்மூன்றுக்குமே உரியதென்பது தேற்றம். ஆகவே, எவ்வகையினும் அற முதலிய மூன்றுமே பெருமைக்கு உரிமை கொண்டு நிற்றலின் அம் மூன்றனையும் விளக்கும் நூலது பெருமைக்கு வேறே எம்மொழி எந்நூலும் இணையாகாதாகலின், இதுவே எல்லாப்பெருமைக்கும் உரித்தாய்ப் பெருநூல் எனப்படு வதாயிற்று. பெருநூல்களை யாத்தற்குப் பெருமை மிக்க வழிகள் பல உண்டு. பெருமையைப் பெரிதாய்க் காட்டுவதை விட, அப் பெருமை நலம் சிறிதும் குன்றாதவகையில் சிறுமைக்கண் அடக்கிப் பலர்க்கும் தெரியப்பண் ணுவது தான் புலவரது சீர்த்த புலமைச் செயலாகும். மேலும் பெருமைப் பொருளைப் பெருநெறிபற்றி உணர்த்தலுறின்,. அப்பெருநெறி தேறி நுனித்துணரும் அறிவுப் பெருமையுடையார்க்கே அந் நூல் உரியதாய்விடும். நூற்பொருள், பெரியோர் சிறியோர் அனைவோர்க்கும் பொது வாதலால், சிறுமையறிவினரான மக்கள் பலரும் அறிதற்காகவே, பாக்களுட் சிறுகியதும் குறுகியதுமான குறட்பாக்களால் இந்நூலை ஆசிரியர் திருவள்ளுவர் யாத்திருக்கின்றார். 7. நூற்பெயர் இவ்வாறு, குறும்பாவாகிய குறட்பாவால், பெரும் பொருளை யுணர்த்த வந்தவர், குறள் என்றே நூலுக்கும் பெயர் குறித்திருக் கின்றனர். நூற்பெயர் விளங்கப் பெயர் குறித்திலர். உலகில் நிலவும் பெரும்பொருளை யெல்லாம் ஒருவழியால் இனிது எளிது விளங்கக் கூறுவதால், நூற்பொருளை யுள்ளடக்கிய பொதுப்பெயரொன்றால் சுட்டிக்கூறல் அமையாமைபற்றி, கருவியாகிய குறட்பாவின் பெயரால் நூலைக் குறித்திருப்பது நோக்கத்தக்கது. இதன்கட் கூறப்படும் அற முதலிய பொருள்கள் ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாய் இயைந்து பிரிப்பற நிற்றலால், இம்மூன்றையும் தொகுத்துச் சுட்டவல்லதொரு பொதுப்பெயர் இதற்கு எய்தாதாயிற்று. அறநூல் என்று பெயர் குறித்தால், அது பொருளையும் இன்பத்தையும் சொன்ன மாத்திரத்தே கேட்டார் மனத்துட் கிளர்ந்து எழுவிக்கும் வன்மையுடையதா காது; ஏனைப்பொருணூல் இன்பநூல் என்று குறித்த வழியும் அதுவே முடிவாகும். இனி ஒழுக்கநூல் என்ற வழி. அது, வழக்கு, தண்டம் என்பனவற்றையும் சுட்டாதாகின்றது; இந் நூற்கண், வழக்கும் தண்டமும் ஆங்காங்குப் பொதுவகையில் கூறப்படுகின்றன. உலகியல் நூல் என்றக்கால். அதனோடியைத்துக் காணப்படும் அறிவுநூல் என்பதனின் நீங்கித் தனிமையுறும்; இஃது அறிவு நூலுமாதலின், சிறப்புடைய ஒன்றன் பெயரால் வரைந்து கூறுவதும் குன்றக் கூறலாகின்றது. இவ்வாறு எல்லாமாய் அல்லதுமாய் உள்ள பொருள்வகை எல்லாவற்றையும் சுட்டிவரும் இந்நூற்குப் பொருளியல்பு காட்டும் பெயர் ஒன்று கிடைத்தல் அரிதாதல் கண்டே, ஆசிரியர், குறட்பாவாகிய கருவியனாலேயே குறள் என்னும் பெயரால் வழங்கினரெனக் கொள்ளல்வேண்டும் திருவள்ளுவரது தெய்வப் புலமையின் விளைவாகத் தோன்றிய சிறப்புப்பற்றிச் சான்றோர் இக்குறQ லைத் திருக்குறள் என்று பாராட்டு வாராயினர். இனி, இத் திருக்குறளை அறத்துப்பால். பொருட்பால், இன்பத்துப்பால் (காமத்துப்பால்) என்று மூவகைப்படுத்து, ஒவ்வொன்றினையும் சில பல அதிகாரங்களாக வகுத்து அதிகாரம் ஒவ்வொன்றினையும் பப்பத்துக் குறட்பாக்களால் கூறிச்செல்கின்றார். பப்பத்தாக நிற்கும் குறள்களும், எடுத்துக் கொண்ட பொருட்கு இலக்கணம் கூறுவதும், ஏதுவும் பயனும் கூறுவதும், பொருளியல் புரைப்பதும், விதிப்பதும், மறுப்பதும், சில பொருள்களைத் துணை யென்பதும், சிலவற்றை அணியென்பதும், சிலவற்றைப் படை யென்பதும், முறை செய்வதும், முன்பின் நோக்கி வலியுறுத்து வதும், நூலோர் முடிபென்பதும், சான்றோர் மேல்வைத்துக் கோடற் பான்மை காட்டுவதும், உவமை வகையாற் சிலவற்றை விளக்கலுற்று, பொருளையே உவமம் செய்வதும், ஏனையவற்றை உவமம் செய்வதும், உருபு விரித்து உவமிப்பதும், உவமையும் பொருளும் ஒருங்கு வைத்து உருவகம் செய்வதும், ஒட்டு, வஞ்சப் புகழ்ச்சி முதலிய அணியுறக் கூறுவதும், வியப்பு, வெகுளி முதலிய மெய்ப் பாடு தோன்றக் கூறுவதுமாகிய பல வகையால் இயன்றுள்ளன. இனி, அறத்துப்பாலுள் அடங்கிய அதிகாரங்களுட் சில வற்றைத் தொகுத்துப் பாயிரமெனவும், இல்லறவியல், துறவிறவியல் எனவும், பொருட்பால் அதிகாரங்களை வகுத்து, அரசியல், அங்கவியல், ஒழிபியல் எனவும், இன்பத்துப்பாலிற் காணப்படும் அதிகாரங்களை, களவியல் கற்பியல் எனவும் வகுத்தடக்கிக் கூறினர் என்பர். இவ்வியல் வகுப்புக்கள் ஒரு நெறியாக வன்றி வேறு வேறு வகையாக வகுத்துக் கூறப் பட்டுள்ளன எனத் திருவள்ளுவமாலை தெரிவிக்கிறது. மணக்குடவர் உரையில் இவ்வியல் வகுப்பு வேறுபடுகிறது. இதனால், இயல் வகுப்பு மட்டில் ஆசிரியர் திருவள்ளுவனார் கொண்டதன்று என்பது தெளிய விளங்குகிறது. அதிகாரங் களின் வைப்புமுறை மட்டில், பரிமே லழகர், மணக்குடவர் முதலியோரது தொகுப்பில் வேறுபாடின்றி ஒப்ப நிலவுவதால், அம்முறை, ஆசிரியரே கண்டுரைத்ததெனக் கொள்ளலாம். அறிவு, விழைவு, செயல் என்ற மூன்றும் உயிர்கட்குரிய பண்புகளாகும். அவற்றுள் அறிவு பொருட் பேற்றுக்கும், விழைவு இன்ப நுகர்ச்சிக்கும் செயல் அறஞ்செய்தற்கும் பயனாகும். இப்பண்பும் பயனும் கொண்டு இன்பமே நாடிநிற்பதுபற்றி, பொருளதிகாரத்து இன்பத்திணையின் இயல்பு கூறப்புகுந்த தொல்காப்பியர் “இன்பமும் பொருளும் அறனும்” என முறை செய்து கூறினார். அறத்தான் வருவதே இன்பம்; பொருளிலார்க்கு இவ்வுலகில் இன்பமில்லை என அறமும் பொருளும் இன்பப் பேற்றுக்கு ஏதுவாதலைத் திரு வள்ளுவர் செயல்முறையிற் கூறுகின்றார்; அதனால் அறத்துப்பாலை முதற்கண்ணும், பொருட்பாலை இடையிலும், இன்பத்துப்பாலை முடிவிலும் முறை செய்து வைத்து முப்பாலாகிய திருக்குறளை உரைத்துள்ளார். இனி, பரிமேலழகர், இம்மை மறுமை வீடு என்ற மூன்றையும் பயப்பது பற்றி அறம் முதலிலும், இம்மை மறுமை என்ற இரண்டையும் பயப்பதுபற்றிப் பொருள் இடையிலும் இம்மை யொன்றே பயப்பதுபற்றி இன்பம் இறுதியிலும் வைக்கப் பட்டன என்பர். 8. அரங்கேற்றம் இனி, இத் திருக்குறள் நூல் மதுரையில் இருந்த சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதென்றும், அக்காலத்தே இந்நூலை ஏற்க மறுத்த சங்கப்புலவர், இத்திருக்குறட்கு இடந்தருமுகத்தால் சங்கப் பலகையால் தெருட்டப் பட்டன ரென்றும் கூறப்படும் செய்தியும் பிற்காலத்தோர் புனைந்து விட்ட பொய்யுரையே. நல்லதன் நலத்தை உள்ளவாறு காணும் உரவோரே புலவரெனப் படுவராகை யால், அவர் கூடிய பேரவையில் திருவள்ளுவர் முதற்கண் புறக்கணிக்கப் பட்டாரென்றற்கு அச்சங்கச் சான்றோர் செய்துள்ள பாட்டுக்களின் தொகுதிகளாகக் காணப்படும் தொகை நூல்கள் ஆதரவு தருவனவாக இல்லை. 9. இறுதிநிலை முப்பால் வழங்கி முழுதுலகும் தொழுதேத்தும் மூவாப் புகழ்பெற்ற முதற் புலவரான திருவள்ளுவனார், பின்பு, ஏலேலசிங்கர் என்னும் செல்வர் தொடர்பு பெற்று மனையறம் புரிந்துவந்தனர் என்ற செய்திபொதுவாகக் கூறப்படுகிறது. அவன் இவர்பால் மாணவனாய் அறங்கேட்டான் என்பாரும், இவர் அவன்பால் நூல்பெற்று நெசவுத்தொழில் புரிந்தார் என்பாரும் பல திறத்தர் உளர். இவை எத்துணை யுண்மையானவை என்பது அறியக் கூடாத தாயினும், இருவர்க்கும் தொடர்பு இருந்ததெனக் கொள்வதில் குற்றமில்லை திருவள்ளுவர்க்கு மக்கட்பேறு உண்டோ இல்லையோ என்று கூறத்தக்க வகையில் அவர் வரலாறு விளக்க மின்றியுளது. திருக்குறளை நோக்குமிடத்து அவர்க்கு மக்கட்பேறு உண்டெனத் தெளிதற்கு இடமிருக்கிறது. அவர்கள் திருவள்ளுவர்போல் பொன் றாப்புகழ் பெறும் பேறு இலராக இருக்கலாம். திருவள்ளுவர் விண்புகுவதற்கு முன்பே அவர் மனைவியார் தம் பூதவுடம்பு நீத்தனரென அவர் வரலாறு கூறுகிறது. அவர் பிரிவாற்றாது வள்ளுவர் வருந்திப் பாடியதாகப் பாட்டொன்றும் காட்டப்படுகிறது. சின்னாள் கழித்துத் திருவள்ளுவரும் இறைவன் திருவடி சேர்ந்தா ரென்றும், அவருடைய மாணவராகிய ஏலேல சிங்கரே இறுதிக்கடன் ஆற்றினாரென்றும் கூறுகின்றனர். யாதோர் ஆடம்பரமுமின்றி மிக்க எளிய நிலையில் திருவள்ளுவர் தமது வாழ்க்கையை நடத்தி இறைவன் திருவடி நீழலெய்தினாரென்று கொள்வதே இவரது இறுதிபற்றிக் கூறப்படும் நிகழ்ச்சிகளின் உண்மைக் கருத்தாகும். 10. பிற நூல்கள் ‘தூங்கினவன் துடையில் திரித்தது கயிறு’ என்றாற் போல, திருவள்ளுவர்பேரால் ஞானவெட்டியான், திருவள்ளுவர் ஞானம் என்பன முதலிய சிறு நூல்கள் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அவற்றிற்கும் திருக்குறட்கும் எத்துணைப் பொருந்தாமை யுண்டோ, அத்துணைப் பொருந்தாமை அவர்க்கும் அந் நூல் களுக்கும் உண்டென்பது கண்டு அறிவுடையுலகம் அமைந்தொழுகு கின்றது வாழ்க திருவள்ளுவர்! வாழ்க திருக்குறள்!! வாழ்க! “வள்ளுவன் தன்னை யுலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”  AN INTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR Foreword T.Sundaram Chettiar, B.Com., District Governer, Lions International Dist, 304 (South) Madurai. It will not be an exaggeration if we say that, of all the great poets,philosophers and thinkers of the ancient as well as modern times, Thiruvalluvar stands foremost. But it is a matter for regret that his immortal work, Thirukkural, perhaps the greatest and noblest lliterary creation of the human intellect ever produced, is not so much known to the outside world as those of Homer or Virgil, Plato or Aristotle, Dante or Goethe and Shakespeare or Milton. Even in India, beyond the boundaries of Tamil Nad, the knowledge and study of Thirukkural is deplorably meagre and though it far exceeds in its grand and noble conception of the philosophy of life, both material and spiritual, and in its scientific treatment of the four branches, viz., Aram, Porul, Inbham and Veedu, it has not become as much popular as Ghita or Upanishads. The reason for this sorry state of affairs is not far to seek. Despite the fact that Thirukkural, according to one of its titles - Podhumarai - is connon to all nations, all religions and acceptable for all times, it still remains a sealed book and a forbidden fruit to many of the Indians and to the foreigner. We have to blame ourselves for this because, while people of other countries, why even our brethren like Bengalis, are propagating their language and literature throughout the world, we are vainly indulging in our glorious past. Yet it is gratifying to note that attempts are now being made by Tamil scholars, educationsl and other cultural bodies to spread the knowledge of Thirukkural among the peoples of the world and it is being translated in different languages by competent authors. I am particularly glad that one of such attempt by my esteemed and learned friend Professor Avvai S.Duraiswami Pillai has resulted in the form of a paper entitled as “An Introduction To The Study of Thiruvalluvar” which has been now brought out in a book form with a view to help the non-Tamils to have access to the greatest, most valuable and inexhaustible treasure - Thirukkural. While congratulating Professor Avvai S.Duraiswami Pillai of his achievement, I wish that he and other Scholars of Tamil should offer many more such treatises to non-Tamils especially to Europeans and Americans. T.SUNDARAM. AN INTRODUCTION TO THE STUDY OF THIRUVALLUVAR Mr. President, Ladies and Gentlemen, I have great pleasure in expressing at the outset my grateful thanks for the kind opportunity, you, the Lions of Madurai, have given me to address you on Thiruvalluvar. This opportunity is noteworthy for the reason that our Union Government has recognised the greatness of Thiruvalluvar and has issued Postal Stamps with his image. The present trend of thiking among the educated is quite different from that of those in my younger days; the outlook of our young men now is broad and international. It looks upon man as man; his colour, caste and creed are ignored. The uplift of man, as Tolstoy puts it, lies in the endeavour to raise the super element of human aspect and curb and control “the animal man” in him. It is therefore proper and legitimate the the Lions club of Madurai takes up for its study Thiruvalluvar whose object and aim of study centre in and around the human society, Valluvar, you know, lived in Mdurai when the Egyptian and Athenian civilizations were at zenith. Great thinkers and philosophers like Plato, Aristotle and a host of others were shining bright and influencing the human society to a greater extent. Ancient Grecian writers inform us of the import of Tugi from Indies; Thiruvalluvar also points out the export of the same tugi in one of his couplets. 1. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் Our Bharat was not wanting in thinkers like Thirualluvar in those days. There were Bodhayana, Apasthamba. Asvalayana, Koutilya and Parasara, besides Manu, the law giver. But the mind of these thinkers was so saturated with communal feelings called Varnashrama Dharma that they could not extricate themselves from bias. They thought and did every thing in terms of caste and community. Even the author of the famous Bhagavat Gita, who devotes a separate chapter to the castes and the respective communal duties and Birthru Hari, the author of Neethi Sathagam, are not free from this mental distemper. That is why Prof. Sundaram Pillai went to the extent of saying. 2. வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி i.e if anybody studies Thirukkural in detail he will never like the code of Manu and Smirities which mete out justice on the basis of caste and community. From these we can see that Thiruvalluvar is the only great thinker superior to those law givers and moralists mentioned before and his views are in tune with the modern sociological trends which tend to a formation of a casteless and classless community, free from all types of distinctions by virtue of birth or practice. Sublimation of life by following the natural rules of conduct is the sole aim of Tirukkural and it does not place any religious or political faith or thought, as the be-all and the end-all of life. It is in pursuance of this aim that Valluvar takes the whole human society into consideration and wants to establish it on the bed-rock of moral virtue. The unit of society according to him consists of husband and wife. If the man and woman of a family - unit are well qualified to lead a virtuous life, the whole of an ideal society would enjoy permanent peace and pleasure. In the introductory chapters of Tirukkural, human society is viewed both materially and morally. In the first chapter. Thiruvalluvar explains the importance of prayer to God as the only solution for the scares and anxieties and pangs of birth and death, the ambitious longing for wealth and pleasure And the last, if not the least, the innate ingnorance which is responsible for all the deeds, good or bad, The drama of human life is to be enacted at the face of the earth. The material aspect of life rests upon the food-stuff, which is the immediate product of the rain; but just like the grace of God, rain is also beyond the control of man. The existence of worldly life is dependent upon the rain; it is the only thing responsible to ensure living for all beings. Thiruvalluvar has thought very minutely of the importance of the rain and declares that even though the earth is surrounded by expansive seas and oceans; it will be as useless as the poet says, “ Water water everywhere, not a drop to drink.’’ Modern science can provide us with distilled water when our water cans go dry in the midst of the sea, but this artifical distilled water is tasteless and hence incapable of quenching our thirst; that is why thiruvalluvar says that even the watery oceans will shrink in their importance, if there is no rain at all. 3. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின் Man maintains his power of elevating his human spirit to super human and divine level simply because his physical actvities are crowned with pleasure and plenty on account of the rain. Consequently penance and patience help him to raise his spiritual existence up and above ordinary human level. 4. தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். Even when the human society, by the grace of Lord God and the heavenly rain, is provided with peace and plenty, its worldly social life has to be governed by the most experienced and wise men of keen intellect and broad spiritual outlook. They are gifted with keen insight so that with the philosophic process of analysis and synthesis they are able to analyse the universe into five and more elements mentally and appreciate psychologically the inner working of each element. This is put in a nutshell as. 5. சுவை யொளி ஊறுஓசை நாற்றம்என்றைந்தின் வகைதெரிவான் கண்ணதே உலகு. Having lived their life most profitably both for others and for themselves, they take to asectic life and devote their time to give pieces of advice to the experienced and guide the inexperienced. The ascetic life they had adopted gives ample opportunities for introspection and self negation and ripens their mind to render all possible help to their fellow beings. That is why their actions are considered to be the greatest which no other human being can do. This our Valluvar says: 6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். They are embodiments of love and sympathy. They are called அந்தணர்!(Andhanar) because their love is towards the welfare of all living beings. As such, they become the accredited leaders of the human society. Every word they utter is held as law for human conduct. Their words and ideas of virtues, morals, laws and regulations are incorporated in this word kural. In the last chapter of the Introductory part. Thiruvalluvar gives the general scope of the அறம் (Aram) which he wants to present to us in the following chapters. Aram in Tamil is a very comprehensive term and it includes all virtues, morals, laws both individual and social and regulations of conduct both in the private and public life. The first and foremost object of any individual is to attain glory and obtain wealth. He desires that his life graph must always be straight and on the positive side i.e. plus side, and so Thiruvalluvar says to him that this is possible and attainable if Aram is adhered to strictly and followed most faithfully. Man’s actions, good or bad, are first conceived in the mind and then put into action. Aram can be worth doing only when it is conceived in the mind which is pure. Therefore the first requisite he enjoins on us is to be pure in mind. 7. மனத்துக்கண் மாசுஇல னாதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. In putting this Aram into action one must be careful in eschewing uncharitable envy, illegitimate desire, unscrupulous anger and mischievous offensive speech. The purpose of man’s life on earth is to attain pleasure; no power or pelf is capable of bringing lasting peace and pleasure; history tells us in its true verasity, that sceptre and crown have tumbled down and rich diadems have been thrown away rejected on the ground that they were incapable of yielding happiness with peace. Man’s burning desire is to attain unalloyed, untroubled and everlasting pleasure and peace. Even this is not impossible provided yo are an ardent devotee of Aram; Aram is the only source of that everlasting pleasure and nothing else. 8. அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல. PART - I Gentlemen. Having introduced Aram in this way Thiruvalluvar begins to enlarge his subject of Aram and exhorts the human society to follow it. In the beginning he begins with the house hold life because according to Valluvar and his predecessors as we have already seen family is the unit of the human society. But our modern politicians advocate individuals as the unit of the soceity and they base all the Governmental activities taking the individual male or female as the unit. According to our traditions and culture family-unit is indivisable and sacred. Splitting family into individuals has torpeded peace and tranquility at home. This reduces the house to a temporary lodging for the male and the female individuals. There is another school of thought professing the village community as the unit of the human society. Here, the unit is heterogeneous in its structure and the active are absent on account os their exodus to urban areas. Thus we can see how realistic our Valluvar is and true to our culture; he gives a lead to the entire human community. The domestic life of each family or the unit of the human society is replete with duties and services to be rendered to the community at large. Human life on earth is always interdependent; physical, economical, social and intellectual inder-dependance is the summum bonum of life. With this in his view, Valluvar says that every house-holder must be of help, assistance, and guidance to his fellowmen besides being a mainstay of the ascetics, poor and needy, and those who are too old and feeble to fend for themselves. Ancestral worship, devotion to duty, hospitality to the guests and timely help to relatives are the general duties imposed upon each householder. In discharging these duties, the male and female of the family-unit must on no account forget to preserve their person by attending to its needs and comforts. It is the human body which is the most indispensable instrument of carrying out the various Arams; the essence of existence. The wife of the house-holder is called the life-partner and she occupies the supreme position of the family in its internal affairs. In the days of Valluvar their union was not separable by any law or regulation. No government had the right to cut asunder their partnership in life. The government of the family was entirely in the hands of the wife and her family budget never ran into deficit. She was the home and finance minister to the government of the family. Every duty of the family is discharged in consanance with the dignity of the house. And the domestic expenditure is in proportion to its income. The name and fame of the family rests entirely in the virtuous conduct of the wife. Among the most glorious things on earth, nothing is superior to a woman who upholds her chastity with firmness of mind. 9. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின் To her the loving husband is the Lord God, and bowing low at his feet she controls the entire elements of nature, and comands them to execute her wish. Valluvar says that rains will pour down if she desires. She is vigilent in guarding herself and her chastity, always attentive to her husband’s comfort, ever anxious to safeguard the tradition and dignity of the family and unfailing in the discharge of her domestic duties. It is her sincere conviction that her husband, her life partner, attains everlasting glory and bliss. She will, in turn, without any doubt be deified in the world where gods live. 10. பெற்றான் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. She therefore directs her thought, word and deed towards raising the right reputation of her husband in the paths of domestic virtue. Any lacking in this aspect of her life will not only drive the whole family to docks but her poor husband will lose his manly appearance, lion-like walk, before his scorning foes. 11. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. From these we come to the conclusion that a virtuous wife is a real blessing to a house. But this is not sufficient. She must bring forth brilliant children. They are fine ornaments to the household. She is not only responsible for the prevalence of peace and pleasure but should beautify the household life by bringing up good children. It must be clearly understood that procreating children is not the sole purpose ot the family life; according to Valluvar, Tholkappiar and other ancient Tamil saints, the childen were true ornaments as well as wealth to the family and to that effect they were brought up. Of all the valuable acquisitions a husband and wife of a family can have, nothing is greater than begetting intelligent children. Sons and daughters of unimpeachable character will enable their parents to enjoy all pleasure not only in this life but in the seven-fold births they may take in future and that is because great thinkers of the past declared one’s children as one’s fortune. The wishes and the best thing that a father can do to his children is to educate them to such an extent as would elevate them to the forefront of the councils of the wise. The parents feel that, by the education they give, if their sons and daughters possess for higher degree of knowledge than themselves, it would do immense good to all beings at large. When the society recognises the greatness of her son and offers him the foremost of its place, the mother’s heart is filled with pride and happiness exceedingly greater than what she enjoyed when she gave birth to him. Having shown the true extent of the parental care and love towards the intellectual growth of the son, Valluvar exhorts the son that the best requittal that a greatful son could offer to his father is to make the wise men praise the parent for presenting so noble and virtuous a son for the benefit of the human society. With this chapter Valluvar completes the structure of the unit of the human society. These family-units are bound together by the sacred bond of genuine love; this love is spontaneous and nothing can obstruct it from its flow. From love springs affection to all and that in turn results in real friendship with others 12.அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு! This genuine, spontaneous flow of love not only encourages virtue but is of utmost importance to avoid and remove evil from the minds of the wicked and cruel. The very existence of the living beings is due to this love; but for this love, the whole universe will be devoid of entire beings and it will be full of skin-clad bones. We thus understand that love is nothing but a binding force pulling all the members together to form a solid human entity called family. This love bound family comes in contact with the other units and by mutual love, these units of the human society are linked and knit together. Thus the life of the human beings becomes the movement of love, affection and friendship In 17 chapters, Valluvar deals with the positive and negative characteristics of the working of the family units along with the whole human society. Instead of entering into the details, let me confine myself to the presentation of the general scope for your thought at present. Reception and cordial entertainment of guests and other fellowmen, utterance of kind and sincerely sweet words, gratefulness to people who are of help, assistance and guidance and sense of uprightness and equity in transactions are the main positive elements for success in family life Of course, experience of our life on earth tell us that the course is not smooth. There are some negative forces arising out of our movement in the society at large. Failure to control our mind and speech, covetuousness, lack of forbearance and fortitude, evil tendency of enjoying others’ possessions and back-biting, indulgence in frivolous and vain talks are the most important negative characteristics which impede the pursuit of the house-holder to achieve his object. In order to overcome these anti-social negative elements, Valluvar points out the importance of the generosity of mind, liberality of help to others without any thought of recompense, feeding the hungry and helping the poor and needy. The ultimate fruit of a life devoted to the various duties already enunciated is earthly name and fair renown; otherwise life is not worth living. As regards the reception of people, Valluvar says that the love that has hitherto been confined within the family - husband, wife and child - begins to manifest itself when a guest arrives to the family. No matter whether the guest is a stranger or not, he is received with courtesy and affection. The householder thinks that the sole object of running a family is to receive and serve others whether they are already known or otherwise. 13. இருந்து ஓம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு In order to achieve this object every individual must speak sweet and kind words. Only such words are declared sweet which come out from righteous persons with heart full of love and speech completely guileless. 14. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் Speaking always kind and pleasant words born of humility, not only serves as an ornament but protectes one from falling a prey to indigence which produces misery. 15. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மட்டும் இன்புறூஉம் இன்சொல வர்க்கு. It helps every man to maintain friendly relation with all. The next allied Aram that brings an individual into the fold of the society is his gratefulness to the help and assistance he receives from others. As every human being is interdependent, helping and being helped by others are not infrequent. Some of the helps received might have been done without any expectation of return, some may be in times of need and some might have been without any thought of its high value. Even when the help done is as small as millet’s seed, wise men who realise the fruits of the act, will only think of the benefit derived by such help and be grateful. The true value of the help received does not lie in its quantity; but it depends entirely upon the worth and quality of the person who receives it. 16.உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து The quality of being grateful is quite essential for the proper working of the human society; it helps us to wipe out from our memory any wrong done to us however deadly it may be 17.கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் The next factor that makes an individual is indispensable to the society is the sense of uprightness or equity. Man is apt to be biased on account of various interests in the midst of which he lives and moves. Sense of equity and uprightness must be above all kinds of bias and partiality. Opportunities to swerve from uprightness are greater in earning wealth as the comforts of worldly life depend more upon it and neglect of equity and justice also becomes necessary in protecting the ill - gotten wealth. Therefore, Valluvar averes that wealth acquired by proper and fair means never dwindles away but passes safely to the posterity. 18.செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திகு ஏமாப் புடைத்து If a slight deviation from justice were to fetch you the most maximum amount of wealth and power. Valluvar strongly condemns it saying that it must be rejected with cotemptuous disregard instantaneously. 19.நன்றே தரினும் நடுவிகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் i.e. Give up all wealth however good and pleasant it may be, if it is acquired by dubious means. Trade and Commerce will flourish only when people engaged in it are upright in their dealings. Unjust. and unfair transactions in trade will result in the fall of the society in the estimation of other peoples of the world. 20. வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப் பிறவும் தமபோல் செயின். Supposing a businessman or a judge in a court of law entertains a thought which failsto equipoise his mind, then he must take it for granted, that it is a sure sign of disaster and destruction awaiting to befall himself and the nation he belongs to. 21.கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் In the routine of our life, especially when we come in contact with men and matters highly beneficial, there is every likelihood for our mind to go beyond our control, and our words more excessive. Self-restraint or control is the only weapon to guard us from consequential downfall. 22. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊ ங்கில்லை உயிர்க்கு Of couse, self control is excellent in all, but it most befits those whom fortune smiles upon. If the mind sometimes break the control, it will begin to roam about in thougt and its harm will not be so serious as the unrestrained word; when it loses its control over the tongue, words become harsh and hot and cause grievous wounds to others. Thiruvalluvar says: 23. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் மாறாதே நாவினால் சுட்ட வடு. i.e. ‘The wound may heal though from a burning brand, And be forgotton; but the wound never heals a burning tongue inflicts.’ (Ellis). Even though a person may be unrestrained in all else, he must have effective control over his tongue; otherwise he will be degraded by licentious speech and put to trouble by his indiscreet words. Control of mind and restraint over tongue of an individual contribute a good deal to the well being of the human society. Then comes the conduct and discipine of each householder. He must conform to the general discipline and decency the society requires. He cannot isolate himself from the social structure and its laws. It he fails to understand, in spite of all his extensive learning, that he is a part and parcel of the society and that, as is the society so he must move, he will be looked down upon as one devoid of any refined culture. This conformity to social requirements is called “ஒழுக்கம்”(Olukkam) in Tamil by Valluvar. Adherence to Olukkam raises one to the exalted place in life and therefore it must be protected well and prized above one’s life. 24. ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் Proper observance of the social conduct will be considered good, and will be crowned with peace plenty and pleasure; if wrong course is adopted the person will be undone for ever. 25. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் The best mark of a person having Olukkam (ஒழுக்கம்) is that he will never utter evil words even in the moment of forgetfulness. 26. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல். In moving about in the human society, the householder has ample opportunities to come across men and women belonging to other families. Man’s attention is arrested, and desire kindled, when beauty confronts him. The observing mind may be influenced and try to covet the thing of beauty; if it is the person of a female, the degree of its pull may be great. Here, you see that the success of the householder lies in controlling his mind. If the householder is really a wise man, he will at once overrule his mind that the particular woman is the sole property of another individual over whom he has no claim. No Dharma Sastra or Artha Sastra pronounces any such claim. Even if the husband of the particular lady is such a close friend that he will never suspect if anything untoward takes place, the fellow who commits the outrage will be counted as living dead. Close friendship, high and influential position in life, economic and physical strength - these things intoxicate fools to tresspass others’ houses. According to Thiruvalluvar, any other sin commited by any individual may be tolerated but not adultery, as he condemns it as the mother of all sins. Another thing that upsets the mind of the disciplined householder is the insult inflicted by others. One can face any amount of praise; but it will be too unbearable for one to receive insults. Having been exasperated with undueinsults, if a householder begins to retaliate, he loses his self-control and descends to the level of the person who insulted him either out of ignorance or foolishness. If a person wants to keep always his mind subservient to his will, he should guard his patience very zealously. If at all any man resorts to retaliation, it will fetch him a satisfaction which will be momentary; but if he forgives the evildoer, all glory and honour will be then to him throughout the ages the world lives. Encouraged by the pride of immense wealth and exceeding valour, if the miscreant commits insult after insult, forbearance is the only weapon to conquer him decisively. Amo ng the unpleasant words heard, those which cause insult are capable of destroying the peace of mind. Even ascetics of high order lose their control and punish the evildoers. If a householder bears with patience the insolent words thrown at him, he will be far greater than those noble ascetics. 27. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் i.e.ascetics who fast and practise yoga are of course great; but any person who puts up with the insults is greater than those ascetics. Hence it will be found that forbearance is another factor which binds an individual with the society and is a source of mental tranquility. In the life of a householder, the wealth and high status of his neighbour or fellowman may kindle the fiery emotions of envy and bring ruins to his household. A well disciplined and virtuous house holder will therefore instead of envying others feel immensely pleased with the wealth of his fellowmen. He thinks that true virtue called Olukkam (ஒழுக்கம்) is to be free from envy and that ஒழுக்கம் in its turn gives Viluppam (விழுப்பம்) i.e. the highest moral satus in the society. 28. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து தழுக்கா றிலாதி இயல்பு. 29. விழுப்பேற்றின் அஃது ஒப்பதுஇல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் If, by mistake, any householder allows his mind to be usurped by the evil tendency of envying others, he will at once try to break the common law and covet wealth by iniquitious means. The blind covetousness will in turn drive him to complete destruction. 30 இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டமை என்னும் செருக்கு A covetous mind instigates one to conspire against his neighbour and derive cruel pleasure at the fall caused by his Envy. Some fall a prey to this inhuman crime simply because they do not possess the particular object of their covetous desire. at times a highly educated individual, even when he is placed above wants, becomes illegally covetous and does great havoc to his neighbour. Another characteristic of certain anti-social elements is indecent back-biting, which is worse than covetousness. There is a section of people who have made it their profession to speak ill of others; this at times carries them to the extent of black - mailing . But it must be understood that this defect is not incorrigible. If the individual who engages himself in speaking ill of others in their absence, inquires into his own faults as he does unto others, he can free himself from this serious anti-social drawback. Just like back-biting, indulgence in frivolous and vain-talks destroys the relationship of the householder with the other members of the society. Even if he is good-natured and highly honoured on account of his station in life, the futility of his speech will reduce him to nothing and he will be neglected as good for nothing. In the discharge of the multifarious daily duties of a householder, he is apt to err and as such there is room for evil to creep in his thought, word and deed. So, every househoder sholuld always be careful to guard himself from doing evil to others. Poverty is one of the mischievous forces which may at times drive an individual to do evil which, instead of rescuing one from the pangs of penury, will throw him down headlong into its dark depths of misery. 31 இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து When once a person commits evil, there is no escape at all; it will pursue him till he meets the consequent destruction like his shadow which follows him wherever he goes. 32 தீயவை செயதார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடியுறைந் தற்று It must therefore be understood that if a man wants to lead a peaceful and pleasant life, he must never make himself an object of the onslaught of misfortunes caused by doing eveil to others. In the ordinary life of a man heading a family, there may be occasions when he may unconsciously be driven to entertain evil thoughts and words. Realising the consequences, if he wants to control his mind, he must resort to helping the needy without expecting any return just as the heavenly clouds pour down rain without any thought of recompense. 33 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு Thus his mind expurgates the black thoughts of evil and ponders over the plight of others. He must think that the purpose of wealth acquired by hard toil and effort must be diverted to redress the grievances of those who live around him. 34. தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு By thus doing, the grateful recepients are brought closer and they serve as a strong army of virtuous protection from evil and sin. Help and assistance rendered to those who deserve form themselves into a social virtue Oppuravu (ஒப்புரவு!) in Tamil. Really rich people are those who are extra-ordinarily wise, whose heart is full of sympathy and who are generous in their outlook. Their riches are compared to a tank full of sweet water fit for drinking, a full-grown tree of sweet fruits standing in the heart of a free village and a medicinal tree each part of which is more efficacious in curing diseases. This ஒப்புரவு (Oppuravu), helping all deserving cases, may drain his resources but the house-holder who is steadfast in exercising this Aram will rather be ready to succumb to the poverty caused by it. 35. ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து The mental bend towards helping deserving people gradually broadens in its outlook and stretches itself to those who are penniless; that is called Igai (ஈகை) in Tamil. Of course being begged by the poor and needy is painful; but it is less severe then feeding the hungry, because even the so called ascetics who conquer nature by penance bear the pangs of hunger. Feeding the hungry is srongly advocated by Valluvar; for he was not unaware of the fact that hunger kindles the ferocious animal spirit in man and instigates him to rise in revolt against the kings and the governments established by law. History tells us how kingdoms had been shattered to pieces by the hungry mob. If a single pie is lost, we take it seriously to our heart and feel very sorry; on the other hand if we give the same to a beggar, we are pleased with his smile. Smile is a contagion and if a beggar smiles on receipt of anything from you, you yourself begin to smile and that smile spreads miles and miles. On both occasions we part with our money, but yet there is pleasure in parting with it to a beggar. The man who hoards money parts with it when he dies with a heart too heavy. People of this type are numberless; Thiruvalluvar asks us “Do they not experience the pleasure they could enjoy in helping the beggars with the money they now lose?” To a person, who has tasted the pleasure of helping the needy and the hungry, death will not be painful. The pain caused by inability to help the poor is experienced as worse than death. 36. சாதலின் இன்னாதது இல்லை இனிஅதூஉம் ஈதல் இயையாக் கடை The ultimate fruit of a life devoted to all kinds of household duties hither to enunciated is earthly name and fame and nothing else. This renown is obtained by helping the poor and needy. After all man is mortal: neither the members of his family nor the society to which he has been attached accompany him, when he leaves once and for all the earth and its worldly life. The only thing that remains after him is his renown, Pugal (புகழ்). The best qualification for a living individual is to achieve fame; other wise his life becomes worthless. According to Valluvar, this disposable existence will spoil the fertility of the land where he lives. 37. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் The people without glory or fame will simply condemn themselves for this drawback and in the end they will ‘go down to the vile dust from whence they are sprung unwept, unhonoured and usung.’ The unblemishd glorious man lives truly long after his death but the inglorious is dead even when he is alive. 38.வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். By the time a man attains glory and fame by proper conduct in family and society, he gets ripened in his worldly experience and entertains a kind of mental rejection of certain comforts he enjoyed in his youth. He feels that he had played his part in the drama of life, and that he should retire soon. As this thought takes root deeper in him his feelings which were hitherto tethered to the family get loosened and spread towards all living beings. He looks upon the pain and pleasure of all beings as if they are all his own, becomes an embodiment of sympathy and compassion and begins to abstain from eating flesh and doing any harm to others. He realises the meat as the flesh of another being and everytime he takes it an animal is killed and deprived of its life. He realises that he has no right to remove a life from its body which is not made by him; the flesh of an animal is as precious to it as is to him. Thus he enters into the path of penance. Just as the craving for flesh-eating is controlled and irretrievably buried in the mind, so also he brooks all pains physical, mental or phenomenal and never does any harm to any being. The misfortunes that come to him successively are looked upon as fire that melts gold and makes it glitter brightly. 39. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்ப வர்க்கு In the time of Thiruvalluvar the retired householders took up ascetic life to spend the rest of their days in the service of the human society. Interpretation of laws regulating the earthly life, assistance and guidance to kings and leaders of various walks of life and divine wisdom were in their hands. People therefore respected them very highly and treated them as earthly gods. They felt that it was the duty of every householder to render whatever help they needed. Failure to harbour them most kindly and respectfully was considered to be a grave sin. Impropriety in conduct, stealth, robbery and other crimes should be out of their province, they should never utter falsehood because they lived for unsullied truth. Valluvar declared that among all the holy scriptures he studied he found no virtue greater than truth. Truth cleanses the mind just like water cleanses the body. 40. புறம்தூய்மை நீரால் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். At times naked truth causes harm to others and in such a case Valluvar permits untruth provided it does not cause in any way any trouble to any body. As these wise ex-householders are exceedingly kind and compassionate they are not susceptible to anger. They know their anger is so effective that nothing on the face of the earth could defend itself from it. So the wrath of these gentlemen is always under restraint. Real control of anger is recognised only if and when vented it does harm. 41. செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து காக்கில்என் காவாக்கால் என்? This aggressive emotion called anger, before it finds vent, subdues the soft aspect of the human nature and supresses the benevolent nature of one’s intellect and thus reverts one to the brutal region of one’s heart. It kills the feeling of joy and pleaure; it is a deadly enemy to the peace loving compassion of the soul. Physical weakness and nervous debility are the two main factors for the presence of short tempered anger among the retired old people. however learned and gentle they may be. Therefore they readily resort to do evil in their provocation. As this will affect very seriously their pursuit of divine knowledge and freedom from the cycle of brith and death, they should guard them selves from iniflicting suffering on others. It is a firm belief among those who are spotlessly pure in their heart that no evil on any account should be done to others. by doing evil to others they cannot obtain heavenly pleasure and glory: An individual may do any evil out of malice or a person may inflict injury out of sheer ignorance but no evil must be thought of against him. If the evil doer is to be punished, the best thing is to do him good in order that he may blush out of shame and disgrace. Next injunction issued is against killing other beings. All moral laws promulgate two essential duties; they are hospitality and creed of non-violence. 42. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை Killing of beings is a deliberate controvention of the fundamental law of virtue. Killing by any means animal or bird even for the defence of one’s life must not be done. 43. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை Valluvar ridicules and rejects summarily the heavenly or divinely life were it to be the prize of killing a living being. Abidence in these injunctions enables the retired family man or the recluse to observe the impermanency of the lives of the worldly beings. Wealth amassed disapperas as freely and quickly as possible; as longevity of life is graduated into days and nights, passing of each day and night diminishes the span of life and in no moment it reaches the zero point. “Yesterday he was alive. Alas! To-day he is no more; Such is the greatness of the human world” 44. நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை யுடைத்துஇவ்வுலகு Death is just like falling asleep and again birth is waking up from sleep. Here a question is raised; when our body dies where does our soul which was residing in it go? Thiruvalluvar says “My dear man, don’t think that there is no permanent habitation for the soul. There is one. Till it finds its permanent abode, it will be flying like a bird that goes away deserting its nest so beautifully built and protected” 45. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு These observations give rise to subjective thinking and introspection takes him deep into his life. Life appears to be a store-house of misery; the more he renunciates the more free he feels from misery. A dislike towards birth and rebirth sets in and the ex-householder comes to the conclusion that his physical body is also redundant and a handicap against his attempt to gain relief from misery. He discovers the two fundamental factors of bondage that fetters his legs to march towards the land of no-birth and death. They are the so called “I” and “mine”. They are sometimes called the subjective ego and possessive ego. Severance of the connection of these two is the only solution for the problem of reaching the goal. To achieve this successfully “We are advised to cling to the almighty who is by nature immune to these bonds,” so that our endeavour for liberation will be crowned with success. 46. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு The pre-requisite for achieving liberation of our souls from these egocentric bondages is a clear knowledge of the sublime truth. This knowledge removes the innate ignorance covering the soul. Any doubt in our insight will land us in darkness and even the control of the five senses will not help us if we are not well enlightened by the supreme knowledge. By dint of ardent learning and subjective thinking, the acquisition of this know ledge is possible. Desire, anger and delusion caused by the self concentring egoism are the three obstacles on the way of our goal and if they are destroyed completely leaving no trace in the mind success is sure and certain. We know fully well that the sphere of the activities of the human intellect is limited and consequently it is disabled to enjoy the pleasure stored up in the vast inexhaustible extensive of Nature and even though the mind of the ascetic rests contented with this limited amount of pleasure and pain, the fiery desire caused by the previous experiences still flickers in and at times flares up and deflects his mind towards those pleasures. Valluvar realises its insatiable nature and sounds a note of warning that if the desire which is otherwise called the eternal seed of birth is left to survive, endless sorrows will be-fall. He says: 47. இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். i.e. the desire called Ava in Tamil prompts man to do sin and if that dreadful desire which is responsible for all misery is rooted out, continuous flow of happiness is certain in our living present. Thiruvalluvar is a strong believer in the working of the cause and effect of every event of human lives; this is called ஊழ்வினை by the ancient Tamils. ஊழ் is effect and வினை or action is cause. Many of our people have not understood the real purport of this phrase and have identified it with the theory of fatalism. Suppose a man undertakes to do a work, then when he commences the work or வினை, its effect or பயன் begins to grow simultaneously. By the time he finishes it, his வினை becomes ripened and bears its fruit. The word ஊழ்த்தல் means ripening; in this very sense this word is used by the learned scholars of the Sangam literature e.g.ஊழ்மலர் (அகம்,199), ஊழ்முகை (நற்,115), ஊழ் கோடு (புறம், 322), Valluvar also uses it in the same sense. vide his couplet. 48. இணர்ஊழ்த்தும் நாறா மலர் அனையர் தாம்கற்றது உணர விரித்துரையா தார். When the work has been completed and the wage due to the work is paid, we say that the objective nature of the work done is its product செயப்படு பொருள். The pleasure derived at the completion of the work is வினைபயன். i.e. the fruit of the வினை, The pleasure the labourer enjoys on receipt of the wage is the fruit of his work or வினை. Till the வினைபயன் is enjoyed, it stands aloof waiting for the opportunity to afford enjoyment. In that state it is called ஊழ்வினை or ஊழ் If the வினைபயன், the fruit or Karma, is pleasure it is called ஆகூழ், and if it is other wise, it is போகூழ் when ஆகூழ் (Fortune) presents pleasure, our mind becomes clear and brisk in preparation to receive it in good spirits. If it is போகூழ் it preposes laziness and indifference in us. 49. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. When our faculty of intellect thus gets dimmed and our mind deludes itself and produces folly, it should be understood that it foretells some misfortune. If on the other hand our mental state becomes different and its out-look and thought get broadened and bright, we can be sure of fortune waithing uon us, Valluvar therefore says, 50. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும் ஆகலூழ் உற்றக் கடை The mysterious position this law of causation or ஊழ் occupies is such that it reveals itself to us when we sincerely exhaust all our legitimate means to do a particular work, no matter whether it is thought speech or deed. But Valluvar advises us not to be perturbed or discouraged when misfortune confronts us. We should understand that we are the real authors of our actions past or present and our eligibility and right to reap the fruit can never be averted or obstructed just like the falling of the ripened fruit cannot be prevented or postponed. Valluvar proclaims, 51. ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் And we must calmly receive and put up with it. Any attempt to divert or prevent it will be a sad failure. The law of causation called ஊழ்வினை operates through any act of ours or any of our fellowmen connected directly or indirectly with us Suppose a boy throws a stone at a dog, then it is the stone that hits it and causes pain; but the dog does not bark at the stone but frowns only at the boy. Similarly the pleasure or pain, profit or loss, comes to us through some intermediaries, and we also should recognise that it is ஊழ் That works behind and we are the real masters and not the intermediaries who simply act like the stone that hit the person or the dog. According to the Tamil philosophers, the law of causation is inanimate and insensible and it is directed towards us by the All Knowing Almighty Being who knows as to whom the profit or loss and pleasure or pain, are due. That is why Valluvar says that even this invincible law of causation can be averted and rendered powerless by earnest prayer and intensive devotion to God, the Almighty. 52. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு We should also note with care the difference between the Fatalist theory and the Tamilian ஊழ்வினை. The Fatalist theory is based on the past Karma done in the previous births, and ஊழ்வினை refers to all the karmas done in the past as well as in the present birth. PART-II Gentlemen, Next comes the second part entitled as பொருட்பால் (Porutpal) which deals with the political, economic and social working of the human society, which ensures the proper attainment of earthly pleasure, which, in turn, leads humansouls to the everlasting life of infinite pleasure,peace and plenty. No nationalism or racialism ever existed in the period of Thiruvalluvar and he therefore took the human society as a whole and its mundane life into consideration. We already saw in the first part that the family which is the unit of the society was headed by the husband and moved with the other units of the society as per the rules of conduct prescribed for the household life. In like manner the entire society has to be headed and led by an individual who is capable of looking after each and every unit of the Society. He was named as monarch or king and under his governance, the society was brought to function. So monarchy was the rule of the day of Thiruvalluvar. Here, Valluvar has dealt with in 70 chapters this aspect of human life i.e. the kingship and the government. The government is divided into six departments such as 53. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு and let me condense them without leaving the essential and salient points as far as possible The Government of the country was responsible to the King and not to the people and he was all in all in every walk of life. But personal qualifications for kingship were also prescribed and he was required to satisfy them. Acquisition of knowledge by learning from books and from learned scholars was not discriminatory but common to kings and their subjects. The king was trained both theoretically and practically to safeguard himself by preventing occurance of faults in his royal conduct. He should not take decisions independently without consulting the experts. Administration of justice was in the hands of the king. It was the primary duty of the king to maintain law and order in the state. The council of ministers and the ministry of the state formed the head and heart of the Governmnt. Though the king was the supreme head of the society, he must secure the hearty co-operation of the people. 54. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு It must be remembered in this connection that most of the powers of the monarch were so decentralised that villages enjoyed a kind of political autonomy. These villges were grouped as Nadu (நாடு) on the basis of self-sufficiency. 55. நாடுஎன்ப நாடா வளத்தனநாடல்ல நாட வளம் தரும் நாடு and the administration was carried on by assemblies of elders and learned men. Any how, in the days of Thiruvalluvar, Governments could not be stable and so every monarch was very keenly interested in the defence of the country by building and protecting forts and fortresses and strengthening the miltary service. National wealth of the country was freely allowed to grow and nationalisation of the sources of income was never dreamt of. As the monarchs were engaged in governing the civil life, the administration of justice and defence, people enjoyed freedom of speech, freedom of worship and freedom of movement; trade, commerce and industry were thriving independently in the hands of the public. But the kings were keenly watching the acquisition of wealth; instructions regulating the ways and means of earning wealth were issued, so that no deviation from the paths of virtue took place. Unclaimed properties, tolls and customs duties, tributes paid by the sub-ordinate and subdued kings and chieftains were added to the exchequer besides the regular land mountain and forest revenues from the people. 56. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். Every taxation was direct and there is no mention of any kind of indirect taxation. The Government and the governed were conscious of the fact the the wealth acquired by legal and virtuous means served the society to do its duties properly and enjoy life to the fullest extent. 57. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் எனை இரண்டும் ஒருங்கு Amassing wealth by illicit and unlawful means was ruthlessly condemned. The relationship with the neighbouring and other kingdoms was maintained by employing able ambassadors and talented spies. The service of the spies was utilised to know the mind of the public and ascertain the opinion of the people of the working of the various departments and services of the goevernment. Corruption, favoruitism, nepotism and other anti-governmental and anti-social misdeeds were detected and eradicated then and there by these exceedingly clever spies. Meritorious services of the public men and those of the members of the Government were recognised, appreciated and rewarded both publicly and privately. Medical relief was rendered by the Government and the public; the medical science was taught under four heads; the patient, the physician, the medicine and the recipe; as a preventive measure, propaganda on the regulation of diet was beautifully done. The evils of over feeding and underfeeding were taught under medical and health education. The Government was very attentive in maintaining high ethical standard of life among the people. Valluvar bestows more of his thoughts upon the general morale of the public. The evils of the demoralising elements like disrespect for the elders, infatuated sexual life, prostitution, intoxicating drinks and gambling were clearly pointed out and condemned. Importance of preserving the high tradition of the family and society, protecting the honour of the individual as well as the society, paying respect to the greatness of thought, word and deed of every member of the society, and safeguarding the nobility of conduct and courteousness was duly recognised. The economic uplift of a country must start from each family and go on spreading first to the co-existing village society and then to the country. The welfare of the family stands on two important requisites: they are untiring industry and clear worldly knowledge 58. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள் வினையால் நீளும் குடி. The head of the family must take pleasure in the service of others, and does not thing of his bodily effort which though painful will disappear when he feels the joy in making the members happy. If this kind of mentality spreads throughout the country, the economic need is easily met with. Production of food and comercial crops are the two economic fundamentals; agriculture is the only source for these two and if it is properly attended to, production increases and thereby distribution takes place in the form of trade and commerce. With this view in his mind, Valluvar speaks about the agriculture in a pleasant instructive language; he proclaims that agriculture and production stand as noblest of all economic professions and the fame and name of a country rest upon the self sufficiency caused by production. When the country is full of natural resources, instead of taking its full of advantage If the people felt sorry for their inability to meet demand. Thiruvalluvar says that the lady earth will simply laugh at them in contempt. 59. இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும் Poverty sets in and begging increases in it is magnitude when the country does not produce sufficiently and supply properly to the full extent of the demand of the countrymen. In the chapter on poverty, Thiruvalluvar is very graphic in describing its evil; the poverty destroys the noble characteristic elements of the parentage and glory of the family in which the particular person is born. His mind becomes wild without any trace of virtue and evecn his mother looks down upon him as a wretch. Begging is honourable when it is undertaken for a noble cause. For the propagation of spiritual knowledge, for feeding the enfeebled, for running an orphanage of children etc, mendicancy is allowed. Then it becomes the duty of the agriculturist who is engaged in the production of goods and of the traders who serve the country by distributing these products, to relieve these mendicants. Those who have enough and to spare must also feel it their duty to help them. In this connection Valluvar says that if there is no beggary, people on earth will be inhuman, like a dramatic stage wherein wooden - puppets are brought to play. 60. இரப்பாரையில்லாத ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று There are peole who adopt beggary as a profession; the existence of such professional beggars is a stigma on the country and it should not be allowed to spoil the healthy development of the society. Valluvar condemns begging as beneath the human dignity. Even though begging is for a noble cause, say, of rescuing an innocent cow from death, it brings disgrace to the tongue which spells it. Some go to the extent of saying that beggary was already destined to them by the Creator himself. But Valluvar refuses to accept it and if it has been ordained already, the Creator who did it must be a fool and He must suffer and perish like the beggar ‘unto whom the wrong He has done’. But he emphasises that nothing is sweeter and more enjoyable than what is earned, let it be some watery gruel, by the sweat of one’s brow. In spite of wealth and other comforts, there are persons who are mean in their outlook and ignoble in their word and deed. Thery can do nothing and are never mindful of their own lives. Unless they are physically attacked with blows, nothing can be had from them. If any thing untoward happens, these mean men கயவர் with readiness sell themselves to anything. They possess no individuality and are good for nothing. In those ancient days we learn that the kings were aspiring for might and power. Survival of the mightiest was the rule of the day. So, it psychologically led them to wage war with their neighbouring kings and establish their supremacy. The geographical position of the Chera and Pandya kingdoms induced them always to take up arms to expand their territories. That the main cause of wars in those days among the Tamil Kings was territorial expansion is noticed very often in the anthologies of the Sangam age. It is therefore proper that Thiruvalluvar assigned primary importance to the military department of the Government (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறு) i,e. army, law and order, wealth, ministry, friendly relations with other kings and defence of the strategic points in the state are the six main departments under the Government of the monarchs. A well-trained and well-equipped army with spirts dauntless and inexorable desire for military glory and fame, was considered to be the foremost of the constituents of the royal wealth. 61. உறுப்புஅமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. As no artillery or any other scientific weapons was known to the people in those days, man-power alone was felt important and the kings were interested only in the number and strength of the warriors they employed. Unassailable faith in the kings and insusceptibility to any kind of sabotaging by enemies were the prominent qualities of the army. Heroism, sense of honour, sincere attachment to high traditions of military life and clear knowledge of the science and technique of warfare were the necessary qualifications of the army. 62. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு Valluvar exphasises upon the role and the efficiency of the generals of each battalian, however well equipped and magnificiently constituted it may be. Success in action and victory in defeating the army are dependent upon the lead or command of the military generals. Valluvar of course recognises that the essential quality of a true warrior is fearlessness but at the same time he affirms that the chivalry of the warrior attains glory when his action is attended with mercy and devotion to the weak and enfeebled. Ruthless killing of the enemy is indeed the main objective of the warfare and the mind of every warrior who is engaged in the battle becomes ferocious with feelings of animal spirit. When the enemy is perforce enfeebled or disabled, the fighting warrior must at once subdue his murderous attitude and with human feelings, render to him such help as would be necessary then. In the couplet. 63. பேராண்மை என்ப தறுகண் ஒன்றுஉற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு Valluvar prescribes this act of chivalry as the most important characteristic of each warrior. Supposing the advancing warrior winks at the approach of the spear thrown at him by his antagonist, then Valluvar pronounces that it tantamounts to defear and retreat. The next department of the State called Kudi (குடி) is responsible for the maintenance of law and order. The real authors of making and breaking of law and order are the people of the state. If their civic-consciousness is properly trimmed and fostered, permanent peace and order will ultimately prevail and the running of the Government will be smooth and pleasant. To this effect each member of the society must realise his responsibility and duty towards his family which is the basic unit of the society and to the state which is the real defender of his rights for life on earth. It is therefore prescribed that a good citizen must possess proper conduct of social virtue, truthfulness and modesty. His civic environment must always be full of cheerfulness, charity, sweet and soft exchange of thoughts and words and equal treatment of the fellow members of the society. No individual who wants to safeguard the noble position his family enjoys in the society and the respectability of its members will never stoop to do mean things even though they fetch him riches beyond avarice. Tamilian Society attaches foremost importance to wealth and it considers that wealth is the vital aspect of life, but for which earthly life will be miserable. The might and power of kingdoms are judged by the amount of wealth in possession of both the Government and the public. Valluvar insists that every individual must work hard and acquire wealth. According to Valluvar, wealth is a mighty weapon of defence and its possession in large amounts proselytises the enemy. The wealth provides the country with strong defence and enables the people to establish their name and fame in far off countries. The importance and the amount of wealth of a people depend entirely upon the productivity of the country and the integrity of the country men. It is therefore said that the true factors that constitute a properly wealthy country are the undiminishing fertility of the soil and the unblemished character of the people and the untiring industry of the rich. 64. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருள் சேர்வது நாடு The production must be enough and to spare so that people of other countries may regard and love it as a sincere source of help. An ideally rich country is that which is full of unfailing resources even when the surrounding countries face insufficiencey and famine. In pre-historic days earth was considered to be created as the common place of all human beings and no king had any exclusive right over it, and hence no Tamil State ever raised any objection against migrations of people from one state to another. The immigration itself was not felt as a burden but on the other hand the natives received the immigrants warmly and provided them with houses to live in and lands to till and toil to eke their livelihood honourably. The kings most willingly extended their protection to these new-comers till they settle themselves to pay the revenue and other taxes. In the mean - while the people of the country shared the additional burden of the Government. 65. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு The government of each state or country was striving its utmost to achieve complete absence of extreme hunger which, if allowed to exist, will be detrimental to the peace and tranquillity of life, eradication of uncontrollable disease among the people and freedom from implacable enmity with other kingdoms. A healthy as well as wealthy country was defined as one having no room for cliquism or communalism among the people, or for any kind of internal dissensions which will destroy the solidarity of the society, or for any formation of rebellious groups of anti-governmental murderous elements. As regards the physical conditions of a country, unfailing seasonal rains and subsoil water were the two important requisites for irrigation; a high mountain range densely clad with rich forests is not only a strategic protection but serves as a perennial source of income and water flow. For defence purposes the country must have strong invincible forts and fortresses in all vulnerable points of attack from the army. To put it short, Thiruvalluvar says that health, wealth, production, peace and security are the five kinds of ornaments which adorn the national life of a country. In fine, Valluvar reiterates the indispensability of the self-sufficiency of production and the unimpeachable governance of the country; for the former raises the economic prestige and honour of the country and the latter renders life secure and pleasant. MINISTRY: In all monarchical governments, we all know that the king was all in all, but yet the real executive head was the minister. It was thererfore expressed in clear terms that the minister must be well educated and extraordinarily intelligent. Technical correctness and legality of disposal of governmental transactions do not count for the success of a ministry but its each and every action must be in accordance with the public opinion. 66. செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் In maintaining the status quo of the Government, the minister must be dauntless in his advocacy. If the king in council refuses to listen and wants to carrry on the business by execrising his royal prerogative, Valluvar says that it must be the duty of the minister to cling to the priniciple for which the Government and country stood and on no account he should allow his personal interest or the royal favour to corrupt his mind. 67. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் Further, the successful discharge of duties of a minister lies in the eloquence of his speech. Logical arrangement and psychological presentation of facts clothed in persuasive and impressive language ensures complete success in all debates. Eloquence of speech, and fearlessness in facing the opponents make an individual indefatigable and it is no wonder the whole country moves at his beck and call. The sword, the gun power and the modern atomic energy, every thing has subjected itself to the control of man and man in turn is controlled by thought. Word is a vehicle of his thought. When the word is eloquent and sugar-coated, the thought is easily conveyed to the mind of the hearer and produces the required effect. It is because of that the present leadership thrives upon its eloquence. Being the executive head of the Government the minister must choose such actions as will fetch fame and honour to the king and his country. If he is really interested in the reconstruction of the state uneconomic and protracting profitless works should not be undertaken. Even by way of relieving the people from poverty, the ministry must not take up works which are not remunerative and which on the other hand may drive the country to more misery in the future. In the case of taxation which is nothing but a contribution of the people to the proper running of the Government, the ministry is required to consider the incidence and the paying capacity of the people. The levy and collection of taxes must not be felt as a heavy burden and the people must be educated to pay them willingly. A clear explanation of the expediency of the particular tax will convince the tax payer of its necessity. Payment of taxes with heart heavy and eyes full of tears breeds contempt and hatred against the Government. 68. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. The deliberations in the council must necessarily culminate in decisions and they must in turn be implemented without undue delay. The publlic works both civil and military, when undertaken by the Governement, must serve as stepping stone for further chain of activities and they should not be left incomplete. Otherwise they will develop themselves into causes for misunderstanding and revolt in the minds of the public against the Government. In dealing with the neighbouring kings, such as will ensure friendly relations have to be done as quickly as possible; but quicker must be those which help to placate the enemies. It is but natural that kings of weak stuff get terror-struck at the sight of the big powers and in order that the king may be relieved of the fear, the ministers must not hesitate to bend their knees before those powers and win their friendly alliance. 69. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. The Royal Council is the place where topics relating to the domestic and foreign policies of the Government are discussed and the ambassadors and other members of the embassies take part in the deliberations. As the peaceful co-existence with the nighbouring kingdoms is the only means for the proper security of any state. Valluvar is very careful in prescribing the necessary qualifications of an efficient ambassador. Lovableness, noble parentage, possession of such highly polished qualites as will endear the kings must be innate characteristics of an ambassador. Sympathy, intelligence and critical insight with captivating eloquence are indispenable for an ambassador. Above all, an ambassador must be a man of extensive learning and in the midst of the scholars of the Royal courts he should ascend to the top most rank leaving none to excel him. 70. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு He who is gifted with sound knowledge of men and matters, imposing personality and well matured in the analytic and synthetic process of political education is best fitted for going abroad as an ambassador. The envoy who carries meassage to other kings must be of spotless character, capable of making friends with others and be firm and courageous in achieving his end even at the risk of his life. His utterance in the Council of foreign kings must be completely free from irrelevancy and impertinence. Cogency of ideas and regimentation of arguments are especial characteristics of his speech. Valluvar feels that certain rules of conduct for those who move more closely with kings are necessary. The king’s presence must be treated as fire side and the ministers and other officers who are privileged to be in closer contact should go neither too near nor remove themselves too far; the former will breed contempt and the latter will create suspicion on their loyalty. Neither age nor close relationship should impair the respects due to the kings by the ministers ambassadors and other officers. Officers occupying exalted positions in the Government and enjoying the royal favour and respect must avoid doing any thing against the wishof the king. If any thing repugnant to the royal desire is done under the cover of old acquiantance, the consequence will be irredeemable loss of liberty and privilege enjoyed till now. The conduct of these officers must be above any suspicion; suspicion once entertained will become indilibly so impressed that nothing on earth could remove it. 71. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது Of all the in intellectual equipments of these officers the capacity of reading one’s hidden intentions from one’s face, according to Valluvar, is an ornament to himself and to the king’s court and the particular talented officer is considered to be a divine being in human frame. As direct recruitment to services was in vogue, the men of divine talents were appointed on attractively higher salary. Valluvar is of opinion that the reading of human faces and divining the intentions concealed in the mind can be acquired by proper training. Human faces are like reflecting crystals capable of exposing the nature of the contents of the mind within. Valluvar declares that face being the index of the mind, a sharp look at the face will be enough for the diviner to read the under-current running in the mind. As a sure weapon of safeguard as well as defence, the kings have to be well trained in the study of facial expressions of people whom he comes across very often. Another important requisite of ministers is a sound knowledge of the procedure and conduct of business in the council of the state. When the house is ready for business, the consensus of the opinion of the members must be judged beforehand, and the subject must be introduced. In addressing the council, the language of each member has to be polite and decent; every word must be weighed and nothing superfluous. Uncouth and faulty language will not only fall flat but pull down the personal honour and respect of the member. In this connection, Valluvar says, self restraint and voluntary silence must be carefully maintained. One’s power of judgement and brilliance of expression will be recognised and appreciated in an assembly of enlightened members, but it will be casting pearls before the swine if the audience is uncultured and illiterate. Thoughts delivered in an audience of wise men become well possessed. There are some who become afraid and feel shy when they are required to address an assembly of learned men. But these defects can be rectified if thy are trained properly in the art of eloquence. Taking part in the deliberations of an enlightened assembly affords beautiful opportunity to acquire more and more of the ever extending knowledge. It is the duty of the ministers to learn the art of dialectics through the study of logic so as to refute fearlessly the arguments advanced by the members of opposition. No purpose will be served by keeping all authentic records on hand if the member shudders at the sight of the council. This may be due to his nervousness and want of dialectical skill. Such persons, however highly learned, will be considered worse and their presence in the assembly will be useless. FRIENDLY RELATIONSHIP That life on earth will be pleasant only when we are surrounded and supported by good friends is a general rule applicable to one and all of the human beings. Even mighty kingdoms will fall down if they fail to be in friendly relations with other countries. The friendship being the necessary requisite for a peaceful and pleasant life, it requires fore-thought and careful consideration beforehand. Character, noble parentage, nature of faults committed, and association are the main factors to be considered befor making friends with others. Hasty formation of friendship results in endless troubles and disaster. 72. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் The friendship of persons born of noble family and who are too sensitive to do anything disrespectful must be acquire voluntarily even if it costs something. By frank exposure of the defects and thereby causing repentance of the part of the friends true friendship serves as an immediate loving corrective and it will never tolerate guilty conduct among friends. Long standing friendship bound by mutual love is really an asset, and its longevity is based upon the generous forbearance towards one another. Longer and closer the friendship the more identical are the feelings and thinking among friends. The liberty accrued by longstanding friendship induces a person to do without previous permission a work on his friends’s behalf and even if it by chance results in a great loss, it will be readily condoned. If, in spite of many defects and drawbacks, a king or his minister is undiminished in his affections towards his old and longstanding friends, it will raise him high in the estimation of even his enemies and converty their enmity into friendship. Realising that the constancy in old friendship is dynamic in its force, Valluvar attaches great importance to this attitude of the victorious monarchs. 73. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பில் தலைப்பிரியா தார் This omnibus section called Natpu (நட்பு) by Valluvar includes evil friendship, false friend ship, friendship of fools, silly persons, and persons of hostile temperament, merits and demerits of enemies, enemity in the garb of friendship and misbehaviour towards great men Those whose words and deeds are at variance are evil friends and they will undo things assigned to them however light they may be. They will always be calculative of the benifits they gain by their friendship and prove treacherous when occasionwarrants their assistance or guidance. Falsity of friendship can be easily defeated by the way in which they move with us; friendly in our presence and hostile in our absence are the main characteristic behaviour of these false friends. And therefore it is said that when an opportunity occurs they must be gor rid of immediately by putting on the same sweet and smiling face. Fools are those who are devoid of any sense of humour and incapable of discriminating between right and wrong. Lack of interest in anything good and complete indifference to personal safeguards form unique defect in them. When a fool happens to obtain wealth, all its benefits well go to his foes and make them thrive while his close friends as well as his kith and kin starve for food. Even among the educators of high ethical principles, there are fools who do not conform to what they teach and their friendship will cause ruin and disgrace. High degree of education fails to train the mind properly of certain individuals who are by nature not amenable. Separation from friends is indeed painful but Valluvar declares that it is exceedingly pleasant when we part with the friendship of fools once for all. 74. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பிழை தருவதொன்று இல் Among our friends there are some who fail to realise the lack of their knowledge and attainments whose imperfection is deliberate but think very highly of themselves. This silly assumption is called Venmai (வெண்மை) in Tamil and it ‘discredits their true wisdom. 75. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை யுடையம்யாம் என்னும் செருக்கு This foolish arrogance renders them incorrigible and incapacitates them to accept either the advice of wise men or to understand things themselves. There is also a tendency among some of our friends to contradict consciously or unconsciously whatever is said or suggested. This is called Ihal (இகழ்) in Tamil. In some it appears to be an intrinsic disease causing antagonism among all. If it is allowed to develop, the consequence will be painful misery and helplessness. The person who is prone to this evil of promoting feelings of antagonism loses clearness of intellectual vision and fails to discover truth. 76. மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் If the friendship of a person of this temperament is felt necessary, one must suppress one’s opposing feelings and win his co-operation by proper accommodation and mild adjustment. Any attempt to excel him by counter argument or retaliation will result in open enmity. To put it short the antagonistic temperament is the primary cause for all ruins of warfare both internal and external, civil, criminal and political, whereas cordial friendliness is of vital importance for peace and prosperity in life. 77. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு In dealing with the enemies, we need not be anxious about the success if the foe is not loved by his kinsmen or supported by mighty allies or is not strong himself; if he is cowardly, ignorant of the techniques of warfare, not trained in the tactics employed in the battle-front and is niggardly, he will fall an easy prey to the enemy. He who does not abstain from anger and who babbles all the secretes of diplomatic and military character is completely incompetent to launch war against anybody. The king who does not take advantage of the knowledge of the past history and refuses to adopt such means as will ensure victory and who is callous to public odium is ungracious and he cannot dream of any success over his enemies. If he is blind in his wrath and inordinately lecherous, his fall is undoubtedly certain. Great kings will always try to avoid enmity with other kings and it is therefore averred by Valluvar that the feelings of enmity ought not to be entertained even in a playful mood. It should be the policy of every king to convert his enemies into allies and it will bring subsequently the whole world, according to Valluvar, under his sovereignty. Negligence in this respect may be tolerable in the days of prosperity, but when the country is facing the evils of adversity, kings must diligently avert wars at any cost. If the enemy is not aware of the difficulties, the king must not on any account complain to him; for it will betray his weakness and pave way for his downfall. If proper and timely measures are taken to strengthen the forces with all the sinews of war, the pride of the enemy will certainly fade away. 78. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு Enmity may take shelter in the mind of the disgruntled friends and remain there till an opportunity to do its havoc occurs. Hidden enmity is far more dangerous than an open one. Enemies in the guise of friendship can be found in the circle of close relations and friends and unless they are detected and eradicated immediately, no king or an individual can be safe from destruction. Similarly, if the subjects of a country harbour any hatred or hostility in their minds against the king, the solidarity of the people will wear out and in no time the kingdom will be shattered to pieces. Living with the members of a family or a state having no harmony at all is just like residing together with venomous snakes in a dungeon. 79. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று Of all the safeguards of a king nothing is stronger than the company and friendship of greatmen of learning and noble character. At times the insolence of certain kings has provoked them to reject the royal favour and put the kings out of gear. Valluvar insists upon the imperative necessity of the friendship of the great men, but at the same time he does not fail to point out the delicacy of obtaining and maintaining their companionship. Of course a king can provide himself with all artificial safeguards but that of great men he must gain by sincere love and respect. Neither his kingship nor his material forces can compel this company. Those who want to taste misery and disaster may offend these great men and thereby incur their displeasure. Valluvar says that such a foolish conduct on the part of a king or a rich man will be nothing but falling in the icy hands of Death. 80. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் According to Valluvar, escape from a wild fire is possible, whereas, against the fiery wrath of these great men of supreme spiritual power, neither the mightiest of the kings not the wealthiest of the people of inexhaustible resources can withstand. 81. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் PART III Gentlemen. The third and the last part of Thirukural is Kamatthuppal (காமத்துப்பால்) and I am sorry to say that this has been the topic of mischievous propaganda against Valluvar carried on by a section of people in our State. Their speeches and writings betray that they have neither studied this part nor understood the central idea enshrined in this part of Thirukural. For a clear understanding and appreciation of this part of Valluvar, one must have studied Tholkappiyam and particularly its chapters dealing with the household life of the ancient Tamils. As most of the translators and even commentators failed to have a clear knowledge of the life of the Tamils depicted in the Sangam literature, their translations have gone to the extent of exposing the translator to infamy.’ We remember that Valluvar commences his Kural with household life in the beginning. The family unit consists of husband and wife and the duties of the household are discharged by both with a common object and deal. The minds of the husband and wife think alike and function alike. It is a known fact that both the husband and wife were born and brought up in different atmospheres and in different families. When the period of mating sets in, they meet each other by chance and their minds are attracted. In two or three such meetings their minds become united by love and they feel that either of them are indispensable to each other and in the end they decide themselves to be partners of life. This aspect of selecting life partners was left free to the option of individuals in those good old days. The section that deals with the selection of life mates is called Kalaviyal. In Karppial the selection is conveyed to the parents and they celebrate the marriage and thus confirm their partnership. The newly wedded couple set up a separate family of theirs and commence to do the duties pertaining to the household life. Immediately after the marriage, the union of their mind and the love that binds them together develop themselves to form an indissoluble admixture of psychical elements. This psychological bondage is tried and solidified by the on slaughts of familiarity and partings caused by duties. The husband realises that 82. உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு i.e.the friendship that exists between him and his wife is exactly indentical with that of the soul and the physical body; that means there is no severance during life time. On another occasion the husband declares; 83. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கு மிடத்து i.e.living with my wife is as pleasant as my life is to me that parting with her even for a short time is as unbearable as the pangs of death. The enjoyment of the cordial friendship of these life partners is being explained in a couplet as the enjoyment of a householder who, living in his own house, derives pleasure in co-sharing his earned income with his fellowmen. 84. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு Thus we see that this part of Kural is completely devoted to the psychological development of the conjugal love which is of fundamental importance to lead a virtuously ideal life on earth and after. As the result of the false propaganda of a section of people unfortunately ill disposed towards the Tamil literature and its antiquity, the study of Kamathupal has been deliberately neglected and wantonly ignored. It is really a wonder when learned ascetics like Rev, G.U.Pope and other scholars of his order express their deep regret for their inability to grasp fully the subject matter so beartifully dealt with, how these people have come forward to envy against Valluvar in public and on platforms. I therefore feel that I must be a little elaborate in this part of my speech. The section Kalaviyal is dealt with in seven chapters. As valluvar wants to explain the gradual psychological development of love in the minds of two youths, male and female, destined to become partners of life as husband and wife, its every stage in the developing process is to be inferred by the reader; so he adopts a dramatic method by introducing the lad and the maiden as hero and heroine. In the first meeting, they look at each other and by ner captivating looks, the lad is conquered and his soul and mind are subdued. He feels that he is physically powerless on account of the piercing look cast at him by the maiden and exclaims that his physical prowess which created terror in the mind of his foes when met in the battle, had broken down completely at the very sight of the bright forehead of the young lady, and at the end he concludes that love has the peculiar quality of evoking pleasure by mere sight unlike drinks which intoxicate people only when they are taken in. 84. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று In subsequent meetings, he gains her looks, glances and hears her words and expresses his experience that when he had a look at her, she modestly bent her head down and raised it and cast her looks upon him when he did not see her. Instead of looking straight at him she simply glanced at him once but it spoke volumes about her love. In the midst of a company of friends and others, she uttered some words as if she was unfriendly to him but after thought confessed to him that it was a prudent warning lest anybody should learn the secrecy of their love. In another context, he had to hear some hot words from her lips thougth, at the same time, her looks were full of love and encouragement. In course of time he understands that the looks of lovers pretend to be strange and their words appear to be unfriendly only in the presence of others. The secret meetings and exchange of looks are of course physical and physiological, but the psychological development of love caused by those two factors takes them to the intimate region of the sexual pleasure and the ultimate result is pressure of hands or a chaste kiss or warm embrace. The lover is pleased to express his experience of the embrace, in a couplet: 85. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து i.e. disease and medicines are two diffeent things incompatible with each other, but in the case of sickness caused by the love of a lady she is the only efficacious remedy. Of course, the embrace of a lover is warm but when withdrawn it burns like a fire and when embraced again it is soothing. As the lad has had no previous experience he was surprised and then he exclaimed that his lady love had a wonderful fire which burnt him ‘when left and cooled him when met’ and he further inquired of himself as to where she could have obtained it. The embraces never affect the ever increasing strangeness of pleasure derived at any and every time just like the study of great books sheds forth new light every time we read. 86. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு The smilling looks, loving words and soothing embraces enshrine the lady love in the heart of the lover, and he at once begins to adore her in his mind. The flowers and the full moon provoke the feelings of love in him, and his utterances under this atmosphere are full of similes, metaphors and personifications. Here a clarification is necessary in respect of the lady love. Even though her mind is over whelmed with love she is by virtue of her sex incapaciated to give expression openly to her feelings and that is why Valluvar has not said anything on her behalf in these chapters dealing with secret meetings. When they are separated and left alone in their respective places, solitude kindles the fire of love and hence she is granted relief to give vent to her feelings. The lad in his solitude brings to his mind the pleasure he enjoyed in the previous meeting and avers that the sweetness of her saliva was exactly like that produced by the admixture of milk and honey. Again he says that he never forgets her for a moment and if at all any duty removes her from his memory for a short time, her qualities of excellence remain permanently in his mind. When the lady love is alone, her intimate companion speaks about her lover’s absence and unto her she replies that he is residing both in her eyes and heart and that is why she neither paints her eyes with collyrium nor takes in hot things lest they should hurt him. 87. நெஞ்சத்தார் காதல வராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. This sort of constant thinking of love raises it to the climax and the lover being unbearable of the painful delay in getting the consent of parents of his ladylove thinks of proclaiming his love in public. This is called madal (மடல்) in Tamil. Marriage celebrations among Tamils were preceded by the open consent of the maiden and her parents and therefore the lover insisted upon the preparation of the mind of the parents to accept his proposal. In most cases the companion her self would prevail upon him to initiate the marriage proposal. Anyhow, a considerable period of time is required for their endeavours to bear fruit. In the meantime the feeling of love in the hearts of the lovers swell to the point of bursting. He says that he was once an embodiment of the high sense of honour and manly vigour and hence he restrained himself from transgressing the social conventions but then he had nothing but stoop to accept the madal-the last resort to effect forcible marriage. Whe the love of the lady is communicated to her parents and they are ready to accord consent, the lover may take sometime by way of preparation to go to her house with the elite of the village. This period of suspense may aggravate the intensity of her love and even drive her to consider herself the feasibility of the madal but in those days ladies were exclusively forbidden to adopt madal or express their love publicly. Considering her limitation the lady love bewails that she is unable to control her feeling and too frail to withstand the pain of love, but her love on the other hand takes off the veil and proclaims itself in public. The limited sphere of the movements of the lovers at times affords ample opportunity for the women folk of the village to know and talk openly about their love affair and this may reach both the lovers through their companions. This kind of open talk of love affair is called alar in Tamil. Though this is capable of affecting the conduct of the lady love, the lover will be in his heart of hearts glad because it indirectly confirms his relastionship with the lady and thereby compels the parents to consent to the marriage. It is in this light that the lover says that his dear life is sustained by this open talk of scandal which fortunately many people do not understand: 88. அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால் And further he adds that the mischievous rumour set afloat by the village people nourishes the love that binds him with his lady love; otherwise, he thinks, the intensity of the love may languish. 89. கவ்வையாற் கவ்விது காமம்; அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை யிழந்து On hearing this rumour, the lady love enquires her companion as to the object of these scandalous talks and learns that it was done purposely to stifle her love. Then she announces that the attempt to extinguish the love she bears to her lover by mischievous scandal is as foolish as pouring of ghee over a burning fire to put it out. 90. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கவ்வையால் காமம் நுதுப்பேம் எனல். From these points dealt with by Valluvar in the chapters on Kalaviyal, we undestand how would-be householders come in contact with each other, how love sets in and binds them inseparably together, how it effects the state of indispensability of each and how it prepares them to form themselves as partners of life. Instead of you and I they become We. Newly married life is entitled as Karppiyal (கற்பியல்) and being the solid foundation for the edifice of the household life, it is dealt with in 18 chapters. Marriage removes those restrictions which in pre-marital days stood in the way of the lovers to come openly in close touch with each other and move freely as husband and wife as they do at present. They live in a separate house with all comforts at their command. They are free from any interference and nothing interrupts the proper working of the family. They study each other and by mutual sacrifice and adjustment equip themselves for the new life of responsibility. Reciprocal love and mutual admirations transform their minds to think and act alike. In the course of their life, duty intervenes and effects separation of the newly wedded husband for some months. He wants to inform his wife and take leave but she replies that if his talk is not of his parting, she is ready to hear him but if it be about his return, he can inform those who survive his absence. 91. செல்லாமை யுண்டேல் எனக்கு உரை, மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை In support of her statement she further continues that love and fire are alike in burning others but the difference lies in that that fire can scorch only those who touch it whereas love burns like anything when the loved are at a distance. At last the tug-of-war between love and duty ends in yielding decisive success to the latter. During his absence loneliness kindles her feelings but she tries to suppress them with all her might; to her sad disappointment, love increases in its intensity. She says that the pleasure of love is indeed immeasurable as ocean but when it begins to torment, on account of partings, greater and vaster still are the sorrows that fill up the melancholy mind. The pain of love becomes acute and tears roll down from her eyes. She looks at her eyes in the mirror and blames them for the lack of fore-thought on their part in showing the person of her husband at the outset and causing her to fall in love with him. Sleeplessness sets in during nights and its stamp is apparent in her eyes. On noticing this she complains to her companion that her eyes do not sleep when her husband is absent and even when he returns back, they refuse to sleep a wink out of fear that he would leave her once again. 92. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞ்ர் உற்றன கண். Constant thinking of love, continuous weeping and sleeplessness reduce her body and she appears pale and sickly. Her pallid colour becomes the topic of the talk of her companions and when questioned them, she answers that the pallor of her body is due to her consent for the departure of her husband and the blame therefore falls on herself. Further she says that in spite of her mind always remembering his words and herself speaking very eloquently of his loving qualities, the pallor stealthily spreads through out her body. One of her friends accuses her husband of negligence for causing the pallid colour over her person whereas she being unable to brook it, prefers herself to be called pallor provided her friends refrain from accusing her husband for unkind desertions. The period of absence of the householder depends dentirely upon the nature of work or business undertaken and the pain of the love of the lady due to his separation prolongs accordingly. As days pass away the love-sick wife gets dejected with her loneliness and goes even to the extent of suspecting the sincerity of her husband’s love and friendship. She proclaims that the love shown by the lovers to their beloved men are quite similar to the blessing showered by the timely rain from heavens on people who expect it eagerly and further adds that nothing is more bitter than unrequited love. When she does not receive any information from her husband, she is restless withe grief and bewails that, of all the woman living on earth, none are so miserably afflicted as those who do not get any word of consolation from their loved ones. A message from the husband apprises her of the laurels he had won but fails to specify the date of his return and when questioned by the companion, she replies that though her husband does not satisfy her desire by intimating beforehand the time of his return, every word from his lips rings melodiously sweet in her ears. 93. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு The prospects of meeting of lovers after separation engage their mind in thinking of the pleasures of love and their company. The more they think of their love the more intoxicated with joy becomes their intellect. Strong liquors intoxicate the mind in proportion to the volume taken in whereas the pleasure of love exhilerates the mind the moment it is thought of it is therefore declared as sweeter than any intoxicants. When the thoughts of love reign supreme in the mental zone, all sufferings from physical, social and economial disabilities disappear and as such love is bound to be good for all people even though it is transient. With these observations Valluvar cites some utterances of lovers and eloquently expatiates on the irresistible influence of love over the human intellect. Mind according to Tamils is like a lotus flower wherein things perceived through the senses are stored up. The wife thinks that her beloved husband resides in her mind and so she confesses that every time his thought occurs he appears before her mental eye. When she is steeped in thoughts about his loving words and manners, an innocent doubt rises whether she resides in her husband’s heart as he is always present in hers. 94. யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஓ உளரே அவர் It is also common among the Tamils to interpret sneezing as a psycho-physical indication of the thought rising in the mind of the lovers, friends, and relatives living in distant places. Once the wife was about to sneeze but suddenly it passed away. As per the Tamilian conception of sneezing, her husband would have wished to think at first about her but it must have been given up immediately. As the heroine of Valluvar is a well accomplished lady, she could not rely upon its truth and asks her companion whether her husband instead of continuing to think of her, diverts his mind at once toward something else. 95. நினைப்பவர் போன்று நினையா கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் Her friend’s reply fails to convince her, and there upon she gets heated and utters that her husband who excluded her from his mind should feel ashamed of appearing frequently in her mental vision. 96. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல் Again she remembers the words he spoke both at the time of the proposal of his love and on supsequent occasions and thinks that his present desertion of his beloved wife falsifies his promises and loving words. She gets frightened at the thought of the disaster that invariably ensues from all falsehood and insincerities. 97. விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து Unlike hard physical work which produces sound sleep, the intense thinking of love troubles the sleep of the young people with dreams. When the young wife was advised to save herself from disturbing dreams which will in the due course affect her health, she refutes her companions saying that the dreams of love which present before her mind her loving husband who does not favour her with his physical presence on account of his stay in far off places serve as elixir of her life. 98. நனவினால் நல்காத வரைக் கனவினான் காண்டலின் உண்டுஎன் உயிர் When she is haunted very much by love dreams, she angrily expresses to herself that her husband who does not show any compassion on her has no right to disquiet her sleep by his appearance in dreams. Her companion pitying at her plight condemns her husband for prolonging his absence, but, on the other hand, she feels mortified and out of love to her lord, retorts that only those who do not know how compassionately her husband moves with her in her sweet dreams will speak strongly of his separations. And then she expresses her regret for the ignorance of her friends. Experience has taught us that all pains both physical and mental appear acute and virulent during night time; the sickness of love is no exception to it. The setting sun, the facing light of day, the ringing of the bells of the cattle on their homeward march in the evening, the flute of the cowherd, the sweet fragrance of the blooming flowers and the bright cool light of the fullmoon intensify the poignancy of feelings of love. So the love-sick lady frowns at the approach of the evening and even scolds it as the fatal time of killing the parted lovers, particularly women. In the absence of her husband, the incoming of the evening appears to her as that of a nerciless excutioner to the platform whereon stands the scaffold. In the day time as her mind engages itself in attending to the regular discharge of the daily duties of the household life, her feelings of love are dormant; but when the sun sets and darkness comes in throwing every thing out of sight, her mind retires from its sensorial region and reverts to think of her lover and his love. Loneliness and the separtion of her beloved husband arouse the feelings of love, and their irrepressibility forces her to utter that the pain of love is just like a flower which buds in the morning hours, blooms during day time and blossoms in the evening: 99. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் Thus the sorrows of love consequent upon the absence of the husband consume her physical essence and result in the loss of colour and reduction of beauty of the face, eyes and other parts of her body. When the friendly talk of her companion turns towards the change that has taken place in her, she simply says that her husband has caused this separtion purposely to effect these changes in her. She says “Even if I am silent, my eyes streaming with tears, shoulders shrunken and armlets slipping proclaim the callousness and cruetly of the heart of my parted husband.” At the same time, her husband is also non unaware of the change of her complexion and form caused immediatley by his separation. In one of his soliloquies he says that when once he loosened his hands from the ectatic embrace he avails of her, being unbearable of this slight separation, her lustrous forehead changed itself into pallid and immediately her looks also became pale. 100. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் On seeing this his keen intellect begins to rationalize the change, the after-effect of the slight release of his arms and he speaks out in his usual philosophic language that the pallor of her eyes is due to their sympathy with the fading brightness of her forehead. 101. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு The pain of love gets intensified by loneliness and even breaks off the control of her self. She requests her mind to suggest any remedy for her sickness caused by love. The loving words her husband spoke and the sweet caresses he lavished flash upon her mind and produce a strong craving to see him in person. She implores her mind to take with it her eyes also to her lord because, she says they eat her vitals in the fiery desire to see him personally. 102. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே; இவைஎன்னைத் தின்னும் அவர்க்காண லுற்று. If her mind succeeds in its attempt to see him, she advises it in her innocent girlish tone not to succumb to his loving caresses but to make a mock quarrel with him which according to her line of thinking sweetens the pleasure of the meeting. In another mood, she asks her mind which is burning with desire to see her husband as to where it wants to go while he is residing in her heart. Modesty and maidenly reserve are two prominent traits of the youth of the fair-sex. When the feelings of love are intense, self-restraint and womanly reserve are rendered too impotent, to withstand. Even if the love is suppressed, anyhow it breaks out like a sudden sneeze. 103. மறைப்பேன்மன் காமத்தை யானே குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் Her companion intervenes with the remark that love becomes painful and dishonourable when it is not requited with equal compassion but she replies that the noble attitude for rejecting oneself to hang on those who are not inwardly well disposed of is unknown in the case of lovers. 104. செற்றார் எனக்கைவிடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் Further she adds that the maidenly reserve which is the protecting guard of honour of her sex is shattered to pieces by the sweet appeasing word of the lover 105. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றே நம் பெண்மை உடைக்கும் படை? The incessant thinking of love and the lover infuses the mind with a distressingly burning desire to meet each other. She loses her patience and becomes erotic. She says that her existence is solely dependent upon the return of her husband and therefore she cannot avoid thinking of him even though it is the only course of easing her mind from grief. If she forgets him, she fears that her colour and beauty will be irrecoverably lost and asserts herself that the pallor which eclipses the beautiful colour of her shoulders will disappear at the very sight of her lord. If her erotic mood, she regrets that she is not clear whether she would maintain her womanly reserve and be glum or rush forth and embrace him and vacillates between the two when her beloved husband returns. Thought it is incumbent on the householder to be hospitable to all guests and strangers, the housewife is prohibited to receive them when her husband is absent from head-quarters This primary duty is suspended on account of his long absence and hence the wife is very eager to resume it because she knows that the family life is imperfect by its suspension. She receives a message from her husband informing her of his victory in the warfare and return. She rejoices on its receipt and says, 106. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து i.e. let my kingly husband return victorious and let us honour him with a feast in the evening. Unfortunately the return journey of the equally impatient husband is delayed by a short period and hence he gets disheartened. In a pessimistic tone, he utters then that his beloved wife will be broken-hearted and perhaps lose her life and his return to the house, the sight of her face and the cold embrace of her person will be of no avail. 107. பெறின்என்னா பெற்றக்கால் என்னாம்உறின் என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்? The husband returns home and the domestic life resumes its full vigour and regularity. In her sexual life which is but the natural consummation of love, her blooming young mind entertains interrupted by further partings. Her modesty and womanly reserve do not permit her to express it in words. But, any how, it is detected by her judicious husband and he says to her that in spite of her a attempt to hide, her eyes are capable of disclosing that there is something in her mind. To a shrewd observer, it appears like a thread running through transparent crystal beads and the bud of a flower holding within its characteristic sweet fragrance. 108. மணியிள் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியுள் திகழ்வதொன்று உண்டு 109. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு. In like manner, she is also very discreet in studying the mental contents implied in the art of his love making. Exceeding caresses, extraordinarily sweetened words and excessively rapturous embraces and fervent kisses of her husband indicate that she should prepare herself to endure another parting in the immediate future. With care and delicacy, his departure is conveyed to her through her companion. The compainon returns with the words: 110. தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃது ஆண்டு அவள் செய் தது i.e. “On hearing your departure, she did not utter any word but simply looked at first her armlets, then at her tender arms and lastly she arrested her looks at her feet; this is what she did.” The sexual union between two people who love each other is the true sacrament of marriage, the outward and visible sign of inward and spiritual unity. At the moment of the union, their spirits as well as the physical bodies rise together to a flame of indescribable ecstasy. Sexualogists say that it is an experience which seems to have nothing to do with worldly attributes; it is shared alike by rich and poor, by those who are clever and those who are not; it cannot be acheived by will power. Money cannot buy it. It is one of the most precious gifts that love can bring marriage. Ellen Key describes it as “harmony between body and soul in relation to love.” According to Havlock Ellis, “it is the natural instinct of dignity and temperance.” When the companion of the lady suggested to her to dismiss from her mind the love which was the cause of all her when her husband was away, the gentle lady replies that her love towards her husband is such that even when he is in dfferent and does whatever he likes without any regard for him, she cannot have peace without any regard for her, she cannot have peace without seeing him in person. Just as her eyes do not see the point of the brush, when she paints them with colliriyum, so also, she says, she forgets all his indifference and disregard. 111. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து Once she decided herself to be glum to her husband, but when he approached her with bended knees and looks beaming with love, her determination melted away and she at once fell into his arms. During a conversation with her companion who instructed her to be strong and firm in her attitude towards her husband, at least when he craved for her love, she, with a view to show the futility of the piece of her advice, replied. 112. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தேன் புலந்து? i.e.like one who knowing fully well that the rapidly flowing flood will carry one away, jumps deep into it and drowns, my attempt to deny him becomes ridiculously baffled. When shy tries to feign anger, he enligtens her by saying that true love is like a blossoming tender flower full of sweet fresh fragrance and only very few take advantage of it. 113. மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் The advice, suggestion and instructions of the companions and the influence of her intense love create a contraious tendency in her. She thinks that her husband if indifferent and does not require his love. When love kindles her desire, a regular conflict between her mind and action breaks out and she accuses her mind of its inconsistency and questions as to why it does not remain with her even on seeing that the mind of her husband never leaves him. 114. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது? She ponders over her plight and bewails that those who are economically ruined in life are deserted even by their close friends, and in like manner, her mind forsakes her and runs after him affectionately. In another mood, she sympathises with her mind and says that her mind is haunted with constant fear, because it is afraid that he may withdraw his affections and even when he displays his compassion, it fears that he would leave it alone. 115. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு Further she relises that none will be worthy of sincere friendship, if one’s mind is otherwise disposed, and the reason why the mind which is desperately in love with her soul, always thinks of the noble virtue of her husband that it will ultimately bring disgrace if he is spoken ill of. 116. எள்ளின் இனிவாம்என் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு Most of the romantic novels written by our contemporary writers begin with the love of the hero and heroine and after dealing with the obstacles on their way, conclude in the winning of the heroine by the hero or in the reconciliation of the hero and heroine. But, in our practical life, this is the beginning and not the end. As a matter of fact, “people in love usually marry an idealised image of each other and afterwards they have to learn the real person they have married”. The newly married couple must gradually adapt their personalities to each other and their mental love helps them with patience and understanding. Of these two, to be coquettish is the natural instinct of the wife and, like all women in general, she desires always to be pursued and conquered, but at the same time, she is too contrarious or too shy to be able to show it. This tendency very often makes the loving couple treat each other with a kind of cold reserve of sulkiness or petulence. In the beginning the sulkiness formed by the innate desire of being pursued intensifies the love in the mind of the loving wife and the husband and increases the pleasure of their physical union. In this sulking mood, a wife may be cold and almost antagonistic but she can be thawed by the skilful art of love making. Valluvar, we know, is dead against entertaining any kind of hostility even in a playful mood. He therefore examines the properiety of this petulance and pronounces his opinion. He compares this to the seasoning of food with salt. Just as adequate seasoning renders the food very palatable and any excess completely spoils it, so also the sulkiness on the part of the wife, if prolonged defeats its purpose and perhaps leads to danger. 117. உப்பு அமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் On the other hand the intelligent husband is fully aware of this feminine trait of coquettishness and its healthy reaction in his heart. When she is adamant in her caustic sulkiness, he appraises her that it is worthy of the excellence of the nobee qualities of the fair-sex in general. 118. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து On hearing these words she gets frightened that the would neglect her to droop without installing the sweet thrill of joy by is warm embrace. She gives vent to her feelings that the leaving carelessly of the love of sulking ladies to languish is nothing but cutting away the tender root of an already withering creeper. 119. ஊடிய வரை உணராமை, வாடிய வள்ளிமுதல்அரிந் தற்று. As love and hatred are closely allied, people who have been in love tend to flare up over trifles. Jealousy also plays an equal part in disturbing the pleasure of the young couple. Every friendship not only with the other sex is regarded with suspicion; every word and action is misinterpreted. On account of these groundless suspicion, jealousy and hatred, if any word or deed gives room, drive her to think that her husband is not faithful and responsive. She becomes nervy and emotional and feels herself that her pride and self-esteem are hurt and insulted. In the cause of young couple bound by pure and sincere love this false suspicion, groundless jealousy and affected hatred help to prolong the congenial atmosphere to their sex life. When the husband approaches her earnestly, she is influenced by these love noruishing jealousy, suspicion and misunderstanding and refuses his warm embrace. She says that his broad chest is looked at covetously by the womenfolk and therefore she cannot suffer herself to his arms. One day she picked up a groundless quarrel and was resolute in her silence. With a view to break her silence and reserve, he voluntarily aroused in himself a sneeze. Immediately she pronounced “long life to you”. This incident is narrated briefly with all the literary embellishments in the couplet. 120. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து On the other hand, the young loving husband is more eloquent in describing her petulant words and behaviour. Once he plucked some blossoming beautiful flowers from the branches of a tree and adorned the tresses of her hair; but, instead of being pleased, she burst out in anger and said that he purposely did this to show this skill in adornment of flowers to some other lady in love with him. 121. கோட்டுப்பூச் சூடினும் காயும், ஒருத்தியைக் காட்டிய சூடினீர், என்று In another couplet, he says that when he sneezed, she, as usual, wished him long life and in the next moment, she changed her mind and cried bitterly requesting him to say as to who his lady friend was whose thought gave rise to this sneeze. 122. வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள் யார் உள்ளித் தும்மினீர், என்று Here a genuine doubt may arise as to the disconcerting tendency of picking up groundless quarrels in the minds of love-bound householders and may create an unhealthy atmosphere and impair the proper discharge of the domestic duties; but practical experience has proved it otherwise. It has enriched the pleasures of love, the ultimate fruit of setting up a peaceful family. It must be clearly understood that the temporary pleasant misunderstandings and mock-quarrels occuring in the sexual life tend to tame the latent animal spirit which shows its ugly head, when the male individual gets heated with violent feelings of passion. This is beautifully substantiated in a couplet in the form of a reply of a young wife to her companion who objects to her teasing attitude of unwarranted petulance. She states that even though her husband is entirely free from any fault, the petulance on her part is capable of exposing the true nature of his love on her. 123. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு Her companion is persistent in pointing out that by her petulant attitude towards her loving husband, hatred which is allied to love, may of course enter in his mind, and however smaller in measure, it will mar the free flow of his compassion. The wife accepts the truth of the statement of her friend but excuses herself saying that though her frequent sulking disturbs his love, it rises high in the esteem of lovers. But at the same time she reiterates her conviction of the petulance in her behaviour before her husband that there is a kind of pleasure in the short severance from his sweet embrace. even though he does not deserve to be treated so. 124. தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து She further says that, in taking food, to see what was eaten has been digested well is pleasant; similarly, in love, wantonly picking up groundless quarrels is more pleasurable than the erotic embrace which is ultimate. 125. உணலினும் உண்டது அறல் இனிதுகாமம் புணர்தலின் ஊடல் இனிது These love quarrels make love enjoyable and the love subsequently makes their physical union sublime. 126. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின். Thus we come to the conclusion that sublimation is the sole object and purpose of both the psychical harmony and physical union of the huband and wife of an ideal family, the fundamental unit of the human society. Gentlemen, By way of concluding my speech, I feel it is my legitimate duty now to dispel the erroneous doubt caused by some scholars by pronouncing very delliberately that Thiruvalluvar has only translated the Kama Sutra of Vatsayana. We know of course that one of the old commentators of Kural, Parimelalagar, is a great scholar in Sanskrit and if it is a fact, he would have certainly mentioned this in his introduction to Kamathupal as he has referred to the Sanskrit works of the famous king Bhoja. But I do admit that the absence of any reference to Vatsayana cannot be a sound reason to reject their view. I therefore beg to be permitted to give a brief summary of the content of the Kama Sutra of Vatsyana for favour of your kind and fair judgement. Vatsayana’s Kama Sutra consists of seven chapters called Adhikaranas, namely, Sadharana, Samprayogika, Kanya Samprayuktaka, Bharyadhikarika, Paradarika, Vaisika and Oupanishadha. In the Sadharana Adhikarana, there are seven prakaranas or topics, the first of which is but a brief sketch of the book just as we find chapters like Prachna Mala in some of the Bashyams in Sanskrit. The acquisition of Trivarga (Dharma, Artha, Kama) and an account of lores are given in the succeeding two Prakaranas. A clear description of the various qualities of a gallant gentleman and those of his friends and messengers who go between him and his mistress is given in the last two prakaranas, Nagaraka Vruttam and Nayaga Sahya Dutikarma Vimarsa. The second adhikarana called Samprayogika deals with sexual union under seventeen topics such as embracing, kissing, gentle scratching, mild biting. Samvesana (Cohabitation) and the various forms of coition. Here. Vatsayana goes to the extent of enunciating certain rules for the commencement and termination of coitus, and treats about love-quarrel (Pranaya Kalahah) which breaks out at the height of ecstasy. In the Kanya Samprayuktaka adhikarana, choosing of the brides, confirmation of the marital alliance, winning of the confidence of the bride, indication of the physical manifestation of the psychic emotions. Solo-efforts, acceptance of the bride by necessary means and the different kinds of marriages are discussed in detail. The fourth adhikarana describes the various duties and conduct of the loyal wife during her conjugal state and the separation from her husband, the duties of the first and the second wives, those of the re-married virgin widow (Punarbhu Vrutham) and those of an unlucky wife and the inmates of the harem (Antah purikam). It is on this account, this adhikarana is entitled as Bharyadhi Karika. The fifth section, Paradharaika, deals with the different good qualities of men and women, causes for dislike of each other, people who succeed in seducing others’ wives, women, who are easily seduced, means by which the acquaintance of other women are made, testing of their mental attitude, duties of the messengers, love towards women in higher status (isvara Kamitam) and the protection of one’s wife from being seduced. The sixth adikarana on Vaisika (Harlots) consists of nine prakaranas: they are (1) consideration of friends both fit and unfit and causes for their approach (sahaya gamya gamya gamana karana chintha) (2) winning over the fit (gamyopa Varttanam), (3) gratification of the lover (Kanthanu Varttanam) (4) ways and means for earning money (artha gamyopayah) (5) attitude towards the displeased (vrakta prathipathih), (6) methods of expulsion (Nishkasana prakarah), (7) re-union with the expelled person (visirna prathisanthanam) (8) special advantages (Laba Viseshah) and (9) Judging of the advantages and disadvantages, consequencs and doubts (Arthanarthana bandha conisaya Vicharach) and the special harlots (Vesya Viseshah). The seventh and the last adhikarana, Oupanishadha, deals with some secret formulas under six headings, namely (1) recipes for making one charming (Subha gangankaranam) (2) means of making onself attractive (Vasikaranam), (3) recipes on stimulants (Vrushya yogan), (4) revival of lost love (Nashta raga pratya nayanam), (5) means for development (vrudhi vidhayah) and (6) strange recipes (Chitra yogah). A cursory reading of the topics and the contents of Kama Sutra cited above and a superficial comparision with the contents of the Kamatthu Pal of Kural will expose to you the fallacy of the argument and the falsity of the statement that Tiruvalluvar’s Kamathu Pal is a translation of Vatsayana’s Kama Sutra. On the other hand it must be clearly understood that Tiruvalluvar’s treatment of Kamatthu Pal in Tirukural is completely original and the thoughts and ideas found in it are expressed purely in accourdance with the indigenous spirit and concept of the Tamilians. Tiruvalluvar is precisely psychological and entirely free from the vulgar and indecent sexulite such as found in other books dealing with sex. It is a great misfortune for the Tamils to have in their midst some scholars who in the name of research dare not hesitate to misrepresent things and utter falsehood to impress both the unlettered people of the Tamil land and the influential non-tamils that nothing is original in Tamil. That day is fast approaching when the political, social, economic, cultural and lierary history will be brought to light and the false attempt to belittle the cultural eminence of the Tamils will be frustrated. Thanks to the ardent love being evinced towards the study of Kural, people are becoming enlightened. Thanks. Long live Tiruvalluvar. குறிப்புகள் 1Vide Pages 510 to 522. History of the Tamils œ History of the Tamils P 602-606 a Pa 512 1 கங்கை மண்ணியென்று பதிகங் கூறுவது செங்குட்டுவன் தன்தாயை கங்கையில் நீராட்டினான் என்று சிலப்பதிகாரத்துக் கூறப்படும் செய்தி என்று சொல்லுவாருமுளர் P. 805, H. A. Dravidians. 1 An. Rep. p. 45, L. T. S. 1905. * “It is difficult to gues what this oft repeated enlogy means. Kuttuvan’s spear did apparently succeed in doing what Canute’s loudly-utterred order could not. Probably the throwing of the spear was solemnly performed by him as a symbol of Kuttuvan’s lordship of the sea.” History of the Tamils p. 514-5. *மாற்றார் படையில் வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவரும் கடிய தூசிப் படை எ.று. 1 மொய்வளம் செருக்கி யென்பது வலியாகிய செல்வத்தானே மயங்கி எ.று. 2 பகைவருடலில் தாங்கன் எறிந்த வேல் முதலிய கருவிகளைப் பறிக்கின்ற காலத்து அவருடைய வுடலுகு குருதியை அணைந்து சிவந்த கையையுடைய மறவர். 3 நிகழ்ந்து- நிகழவெனத்திரிக்க: வளனற நிகழ்ந்து என்றது: செல்வமானது அறும் படியாகக் கொள்ளை நிகழ எ.று. 1 சாடு -வண்டி,கடவோபாதி - கடாக்களையொப்ப 1சோழன் கரிகாற் பெருவளத்தான். பக் 21.குறிப்பு 1The Cholas Part I. P. 37. 2 பழமொழி நானூறு, செய், 62, பழையவுரை. 3 பழமொழி. 21 1 பழமொழி. 510 1. His. of the Tamils p. 369-70. *An interpretation of the lines printed antic is given by the author of the History of the Tamils and I quote it for examination. “Having conquered these (அருவர், ஒளியர், இருங்கோ வேள் etc) Karikal subjugated the Northern kings (வடவர்) ie the Pallava Rajas of Kanci. He pushed beyond and brought under his away the Poduva chieftains, who ruled over the Cudappa and Karnool districts. The word Ponduvar means herdsman cheif and must refer to the rulers of the pastoral tribes that inhabited the Mullai region, north of the Marudam lands belonging to the Pallavas. The herdsmen brought under Karikal’s sway were Kurumbas (குறும்பர்கள்) like those who imhabit these districts even to-day and weave the famous kambalis of that region.” Then the author begins to intertrpret as: “The famous victor, the Sola Karikal, protected the families of the Kurumbar who tend(flocks) on the hill tops”. Then he justifies his interpretation stating that “There is also plenty of epigraphical evidence to support the fact deduced from this poem that Karikal’s sway extended north up to the Ceded districts, which will be discussed presently.” But குறும்பறை means the partner bird. (Vide புறம் 67 கோழி, உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசை இ and its comment,குறும்பறையென்றது பேடையை) and it may also mean a bird having small wings. Despite the epigraphical evidence, this deduction is hence incorrect. 1. இதனைத் துளுநாடு என்பர் திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் 1Lower down, between Coimbatore and Anaimalais’ there is the broad Paighat gap cut across the Ghats by a river of a former geological epoch which links up the Konkan Coast with the upper reaches of the Kaveri. This region merges imperceptibly into the South Maisur region through the lowlands on either side of the Shervaroys gap so that South Maisur, Coimbator and Salem form one natural plateau region studded with uneroded remnants of the Easten Ghats, like the Nilgiris and the Melagiris. The whole of this natural region was also called Kongu Nadu, as is proved by the fact that the book which narrates the legendary history of the early kings of this country is called Kongu Desa Rajakkal. This was the Konganam of early Tamil Literature, whereas the word Kongu Nadu was more often used in a more restricted sense, viz being applied to the region between the south of the Maisur plateau and the region less than 500 feet above sea-level which form Tinnevelly, Ramnad Lower Madura, Pudukottah, Trichiropoly, Tanjore and South Arcot” -A paper on “Geographical Control of Early Kongu History” read by Mr.P. T. Srinivasa Iyengar M. A., University Reader of Indian History, at the first conference of the Madras Geographical Association. May 1930, at Coimbatore. 1புறம், 378. 2வம்பவடுகர்: புதிராய் வந்த வட நாட்டினர் 1 Journal of the Madras Geographical Association nos. 2 & 3 Vol. 5, 1 இவ்வழக்கம் 12, 13 ஆம் நூற்றாண்டிலும் நடை பெற்றதென அக்காலத்துப் பராந்தகதேவபாண்டியன் என்பானது கல்வெட்டினால் தெரிகிறது. Vide Travancore Archeoigical Series, Vol. 1 p 22 1 தமிழ் நாவலர் சரிதை. இச்செய்யுள் இவனைக் குறிக்கின்றமை ஆராய்ச்சிக் குரியதொன்று. 1 கொங்கர்: கொங்குநாட்டு மக்கள். இந்நாடும் நன்னனுக் குரியதே மற்று கொண்கான நாடு வேறு, இக் கொங்கரது நாடுவேறு Vide Footnote கொண்கான நாடு. 1 நன்னன் ........ கோசர் என்பதற்கு “நன்னனது சிறந்த யானையைக் கொன்று அவனது நாட்டிற் போகவிட்ட வாய்மை பொருந்திய சொல்லினையுடைய கோசர்” என்று அதன் உரையாளர் கூறுகின்றார். நறுமா என்றதற்கு யானையெனப் பொருள் கோடலாகாமையாலும், கொன்ற யானையை மீட்டும் நாட்டின்கட் போக்குதல் ஆகாமையாலும், கோசர்கள் படைப் பயிற்சிக்கும் வாய்மைக்கும் சிறப்புடையரெனலேயன்றி இன்னோரன்னசெயல் செய்துளரெனற்குச் சான்றின்மையாலும், யாம் கூறிய பொருளையேற்றலாற் கவியின் பொருள் சிறத்தலேயன்றி இழுக்காமையாலும் அது பொருளன்மையுணர்க. மற்று உரையாளர் உரையினை அடிப்படையாகக்கொண்டு திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் துளுநாடு அல்லது கொண்கானநாடு நன்னனது நாடாமெனவும், அவன் வம்பவடு கரான கோசரொடு பொருது, தன் பட்டத்து யானையை யிழந்ததோடு, பெருந் தோல்வியடைந்தான் எனவும் கூறுகின்றார். (Beginning of south Indian History pp.84-85) இதனை மறுத்து திரு.பி. டி. சீ நிவாசய்யங்கார் அவர்கள் நன்னனது நறிய மாமரத்தினைக் கொன்று தம் நாட்டிற்குக் கொண்டு சென்ற கோசர்போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டும்” என்று கூறினர். (History of the Tamils PP.521, 2, Footnote 57) வன்கட் சூழ்ச்சி செய்து கவர்ந்தது “நறுமா” வேயாயின் அது அவனது காவன்மரமாதல் வேண்டுமாகலானும் “பொலந் தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த” எனவும் “அவன் பொன்படுவாகை முழுமுதல் தடிந்து” எனவும் பதிற்றுப் பத்துக்கூறுதலின் அவனது காவல்மரம் வாகையாதலினாலும் அதுவும் பொருளன்மையுணர்க. வெளியன்: வெளியம் என்னும் ஊரினன் 1கட்டூர் -பாடிவீடு. 1கற்பு இப் பொருட்டாதல் “தொலையாக் கற்பநின் நிலைகண்டிகுமே” எனவரும் பதிற்றுப்பத்தினுங் காண்க. இதனை யறியாது மிஞீலியைப் பெண்ணெனக் கருதி மயங்கினாருமுளர். 1 அச்சுப்பிரதியில் “அ (தி) கனவகன்.....நூல்” என்றுனது. அது அணுகி நோக்குமிடத்து “யவனிகன் நூல்” என்றூகிக்கு முறையில் கிடக்கின்றது. S. l. l.vol.l p. 106 1. Journal of Madras Geographical Association No.2 &3 1 “அண்டிரன் என்பது ஆந்திரனென்னும் தெலுங்கச் சொல்லின் திரி பாதலின் இவன் தெலுங்க நாட்டினன் எனவும், அகத்திய முனிவர் பதினெண் குடி வேளிரைக் கொணர்ந்தா ரென்றிருத் தலானெ இவன் அவராற் கொண்டு வரப்பட்ட வேளிர் மரபின னெனவுங் கூறுவர். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் நற்றிணை. பாடப்பட்டோர் வரலாறு, பக். 86. 1. நெடுமிடல் என்னும் பெயருள்ள வீரனொருவன் பதிற்றுப் பத்து எட்டாம் பத்தினுட் கூறப்படுகின்றான். 2. பொருந்தில் என்பது ஒரு ஊர். பொருந்தில் இளங்கீரனார் என வருதல் காண்க. 1 A Trip to Burma”- Cap Gilbert.pp 69-70 * தொல், பொருள் சூ. 147 1 புறம். 395 (1) அகம்-334. (2) மது-காஞ்சி 732,3. (3)நெடு -வாடை 171. (4) புறம் 199. (5) தொல்-சொல் சூ. 292. தெய்வச் சிலையார். (6) மலைபடு. 197. தொல்- பொருள் - பொருளியல் சூ. 48 *பு.வெ. மாலை 123. 1 சிலப்- அடைக் -207-216 34 *புறம்.287. 1 வினையெச்சம் “மெலிவுகண் டுவந்து மாதோ விருப்பொடு மறலினாரே” (சிந் 968) என்பதனால் வினையாதல் காண்க. 1 வணர், யாழுறுப்பினுள் ஒன்று தீந்தொடை, யாழினிசை, தொடை, யாழ்எனல், “தீந்தொடைச் செவ்வழிப் பாலை” (சிலப்- கானல் எனவும், “தேவர் பண்ணிய தீந்தொடையின் சுவை”(சிந்தா 1328) எனவும் வருதலா லுணர்க. 1 தாவ லுய்யுமோ என்றது வருத்தத்தில் நின்று நீங்குமோ எ.று. தாவென்னும் உரிச்சொல் தொழிற்பெயர்ப் பட்டுத் தாவ லென நின்றது. 2 வஞ்சின முடித்தல் - மாற்றார் மண்டலங்களைக் கொண்டு முடித்தல். 3 வெம்மை யென்னும் (வேண்டற் பொருளில் வரும்) பண்பிற்கு வெவ்வ ரென்பதும் ஒரு வாய்பாடு. 4 வைகார்ப்பு- ஒருகாலும் இடையறாது தங்கின ஆரவாரம். மைபடுபரப்பு- கடற்பரப்பு, 5 காலுளை யென்றது காற்றானே உளைதலையுடைய என்றவாறு உளைதல்- விடுபடுதல்.” -ப உரை. *இதற்கு, “அரசன் வீரரில் அம்புசேர் உடம்பினராய்த் தம்மோடு வீரம் ஒத்தாரோ டல்லாது போர்குறித்தார் தம்மோடு தும்பை சூடாமல் மாறுபட்ட மாட்சிமையுடைய என்றவாறு,” பழைய உரைகாரர், 1 இதற்கு, “மது நுகர்வுழி இடையிடைக் கறித்து இன்புறு தற்பொருட்டு இஞ்சியும், மோந்து இன்புறுதற் பொருட்டுப் பூவுமாக விரவித் தொடுத்த மாலைபூட்டி, அவ்வாறு பயன் கோடற்குச் சாந்தும் புறத்தெறிந்த எ.று. பழையவுரைகாரர். 1 “பரதவ என்றதனாற் சொல்லியது, அக்கடலின் உழத்தற்றொழில் ஒப்புமை பற்றி அக்கடற்றுறைவாழும் நுளை யர்க்குப் பெயராகிய பரதவன் என்னும் பெயரான் இழித்துக் கூறினான்போலக் குறிப்பான் உயர்த்து வென்றி கூறினானாகக் கொள்க” - ப. உரை. 2 “அம்ப கட்டு மார்பின், செம்பொறி” என்ற முருகாற்றுப் படையடியின் உரையைக் காண்க. *அகநானூற்றுப் பதிப்பாசிரியர் பல பாட்டுகளுக்கு உரையும் வகுத்துள்ளார். 1 “Talks to Teachers”. sully 1. இவர் கூறிய உள்ளுறையின் தூய்மையின்மை உள்ளுறையுவமப்பகுதிக்கண் ஆராயப்படும். 1 “Text book of criticism p.273 and Trial of B. G. Tilak page 385. * இங்குக் “கலம்” என்னும் சொல் வேண்டாமையின் ஒழிக்கப்பட்டது, * இஃது இப்பொழுது “சித்தாந்தம்” என்னும் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. *இவ்வுவமையால் தலைமகனது தூய்மையில் மார்பினைக் கூடுதல் நேரும் எனத் தலைவி தன் வாயாற் கூறுதற்குக் கூசி நிற்பது காண்க. S.I.I. Vol. V. No. 775. A.R. N. 349of 1924. *‘மாதானுபங்கி மறுவில்பலச் செந்நா’ என்றும் பாடம். *இச்சதகத்துள் “கயிலை” யென்றது திருக்காளத்தியையாகும்; திருக்காளத்தி மலை கயிலைமலை யெனவும் வழங்குவ துண்மையின் (A.R. No. 160 of 1922), ஈண்டுக் காளத்தி கயிலையெனக் குறிக்கப்பட்டதென அறிக.