இளங்குமரனார் தமிழ்வளம் 2 இணைச்சொல் அகராதி இலக்கிய வகை அகராதி இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் -2 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 384 = 400 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 250/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் ல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக ளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் இணைச்சொல் அகராதி ஆராய்ச்சி முன்னுரை 1 இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு 7 இணைச்சொல் அகரமுறை 10 இலக்கிய வகை அகராதி ஆராய்ச்சி முன்னுரை 157 இலக்கிய வகை அகராதி 168 இணைச்சொல் அகராதி ஆராய்ச்சி முன்னுரை அடுக்கடுக்காய் பூக்கும் மல்லிகை, அடுக்கு மல்லிகை. அடுக்கடுக்காய் அமைந்த பாறை, அடுக்குப் பாறை. அடுக்கடுக்காய் அடுக்கிய பானை, அடுக்குப் பானை. அடுக்கடுக்காய் அடுக்கியச்சட்டி, அடுக்குச்சட்டி. அடுக்கடுக்காய் அடுக்கும் மொழி, அடுக்கு மொழி. இவற்றைப் போலவே வந்த சொல்லே மீண்டும் வருவது, அடுக்குத் தொடர். (எ.டு) புலி புலி. வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது, இரட்டைக் கிளவி. (கிளவி-சொல்) (எ-டு) மளமள. முன்னதைத் தனித்துப் பார்த்தாலும் பொருள் தரும் (எ-டு) புலி பின்னதைத் தனித்துச் சொல்ல முடியாது; சொன்னால் பொருள் தராது (எ-டு) மள. அடுக்கு மொழி, அடுக்குத் தொடர். இரட்டைக் கிளவி ஆகிய இம் மூவகையினும் வேறுபட்டது இணைச் சொல். (எ-டு) நிலம் புலம். (நிலம்-நன் செய்.புலம் புன்செய்). இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. (எ-டு) நிலம். இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்த தன்மையதாம். இணைச் சொற்கள் எப்படி இனணந்து நிற்கின்றன? 1. எதுகையால் இணைதல் ஒரு வகை. (எ-டு) அடி பிடி (ஈரெழுத்து) ஊடும் பாடும் (மூவெழுத்து) அக்கம் பக்கம்( நாலெழுத்து) கக்கலும் விக்கலும் (ஐந்தெழுத்து) அலுங்காமல் நலுங்காமல் (ஆறெழுத்து) இவை தலையாகெதுகை. மோனை (முதல்) எழுத்து அளவால் ஒத்திருக்க எதுகை (இரண்டாம்) எழுத்தும் பிறவும் அதே எழுத்தாக வருதலால்) இலை தழை மோழை காளை இஃது உயிரொப்பு எதுகை. (லை, ழை, ளை, என்பவற்றில் ஐகாரம் இருத்தல் காண்க). அடக்கம் ஒடுக்கம் அலுப்பும் சலிப்பும் இவை உயிரின எதுகை (அகரமும், உகரமும்; உகரமும் இகரமும் ஆகிய உயிரினமும் பிற எழுத்துக்களும் ஒத்து வருதல் அறிக). அரிப்புப் பறிப்பு அதரப் பதற எதுகையுடன் ஒலியொப்பு வருதல் (ரகர றகர ஒலியியைபு கருதுக.) அரியாடும் கரியாடும் எதுகையும் முரணும் இயைதல். (அரி-செம்மை; பரி-பருமை) உளறுதல் குழறுதல் இடையின எதுகை. (ள,ழ) கஞ்சி தண்ணீர் மெல்லின எதுகை. (ஞ்,ண்) கண்ணீரும் கம்பலையும் மோனையுடன் மெல்லின எதுகை. 2. மோனையால் இயைதல் இன்னொரு வகை. அண்டை அயல் குறிலுக்குக் குறில் (அ, அ) கட்டு காவல் குறிலுக்கு நெடில் (க,கா) போவாய் பொழுவாய் நெடிலுக்குக் குறில் அடியோலை அச்சோலை மோனையுடன் இறுதியடுக்கு அற்றது அலைந்தது மோனையுடன் ஈறு ஒப்பு நேரம் காலம் நெடில் மோனை. கேளும் கிளையும் ஏகார இகர மோனை. ஓட்டை உடைவு மொய்யோ முறையோ ஒகர உகர மோனை. பூச்சி பொட்டு -ஊகார ஒகர மோனை. பிற வகை. எச்சிற்கை ஈரக்கை ஈறொப்பு. கடுவாய் புலி சீலை துணி நத்தம் புறம்போக்கு பொருள் இனவொப்பு. இழு பறி கேள்வி முறை தொழில் வழி ஒப்பு. சிண்டான் பொண்டான் எதிரும் புதிரும் எதுகையுடன் முரண் இன்னன விரிவன. ஒருநாள் மதுரையில் இருந்து பூவானி (பவானி)க்குச் செல்கிறேன்; பேருந்து செலவு; ஆறுமணி நேரம் ஆகும்! அப்பொழுதையப் பயன்பொழுது ஆக்குவது எப்படி? இணைச் சொற்களை நினைந்து எழுதுவது! ஓடும் ஓட்டத்தில், நினைவோட்டத் தடை உண்டோ? எழுத்தோட்டத் தடைதானே உண்டு? கிறுக்கல் எழுத்தாக இருந்தால் என்ன-படியெடுத்துக் கொள்ளலாமே! இனைச் சொல்லைத் தொகுத்து விட்டால் பொருள் விளக்கம் அமைந்து எழுதலாமே! ஒழுங்குப்படுத்தியபின், இடை இடையே சேர்ப்பனவும் சேர்க்கலாமே! பூவானிச் செலவு தந்த இணைச் சொற்கொடை ஏறத்தாழ இருநூற்று ஐம்பது! பின்னே அதனை எண்ணிச் சேர்க்க அமைந்த தூண்டல், புதுவைத் தனித்தமிழ்க் கழகச் சிறப்பு* ஆய்வரங்கப் பொழிவு வாய்ப்பு (1984). அவ்வாய்வு, இணைச் சொல் தொகையை, ஏறத்தாழ இரட்டிப்பு ஆக்க உதவியது. அவ் விரட்டிப்பு மேலும் இரட்டிப்பும், இரட்டிப்பின் இரட்டிப்பும் தமிழ் வளம் உண்டு! செந்தமிழ்ச் சொல்வளம் அத்தகு சீர்த்தமை சான்றது! நெஞசில் நிறைந்து கிடக்கும் இணைச் சொல் வளம், தமிழ் நிலத்து வைப்பாகக் கிடக்கும் வண்ணமும் நடக்கும் வண்ணமும் உதவிய கெழுதகைக் கேண்மையர் முழுநூறு மன்பர் கழக ஆட்சியர் திருமிகு இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் ஆவர். அவர்களுக்குப் பெருநன்றியன்! தீரா இன்பத்திலேயே என்றும் திளைக்க வைக்கும் தீந்தமிழ்த் தொண்டுக்கென்றே என் வாழ்வை அருளிய திருவருளையும், திருவருள் வாழ்வை என் பெற்றோரையும் நினைந்து உருகு கின்றேன்! பெற்றமை-பேணி வளர்த்தமை-என்பவை கருதியோ? இவை பெற்றோர்க்கெல்லாம் பொதுமைப் பான்மைய! தனித்துச் சுட்டும் தகைமைய வல்ல! என்னுயிர் அன்னையார் வாழவந்தாள்! என் தவத் தந்தையார் படிக்கராமர்! என் அன்னையார்-என் இளமைப் பருவத்திலேயே-சொல்லச் சொல்லக் கேட்டுக் கேட்டுச் சுவைத்து, நெஞ்சக் களஞ்சியத்தில் நிரம்பிக்கிடந்தனவே ஆறு மணிப் பேருந்துச் செலவுப் பொழுதில் இரு நூற்றைம்பதுத் ததும்பி வழிய வைத்ததாம்! அவரை, அசைய அசையாய் அசை போட வைத்துள்ள இவ் விசை நூலில் அவர் பெயரை இசைவித்தல் என்னுயிர்க் கடனே யன்றோ? காலடியால் கணக்காக அளந்து இத்தனை ஏக்கர், இத்தனை செண்டு; இத்தனை இலிங்கிசு என்று அறுதியிட்டு உரைக்கவும், நான்கு எண் தொகையை நான்கு எண் தொகையால் பெருக்கி, அப் பெருக்கத்தைப் பெருக்க எண்ணால் பெருக்கவும் துண்டுத் தாளும் கொள்ளாமல் நெஞ்சத் தாளில் வரைந்து சொல்லவும், சில ஆயிரம் பாடல்களைத் தொடர்ந்து நினைவிலிருந்து சொல்லிப் பொருள் விரிக்கவும், வாய்மைக்கு இவரே என வியக்கவும் வாழ்ந்த உழவராவும் படிக்கராமர் எந்தையார்! அவர் தந்த தந்தைமை இன்றேல், இத்தாய் தமிழ்த் தொண்டு எளியனுக்கு வாய்க்குமோ! அம்மை அப்பராம் இவ்விருவரையும் தனித் தனியே சுட்ட வேண்டாமல், எந்தாய்என்றுவிளித்தாலே..ïUtiuí« விளிக்கும் வண்ணம் அமைந்த அருமைச்சொல்வள¢செல்வியா«அமிழ்த¤தமிழ்¤தாயி‹சீர்த்திaநினைந்து,எந்தாŒநுங்கŸ இளங்குமரனி‹எளிaஇப்படையyஏற்றருள்க”எdஇறைஞ்சி¥படைக்கின்றேன். தமிழ்ச் செல்வம், தமிழ்¤தொண்டன், பாவணர் ஆராய்ச்சி நூலகம், இரா.இளங்குமர‹ திருநகர், மதுரை-6 19-4-86  இணைச்சொல் அகராதி இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு செந்தமிழ்ச் சொல்வளம் பெருக்கமிக்கது; பல்வேறுதிறத்தது;பல்வேறுதுறையது;வேரும்அடியும்சுவடும்கிளையும்வளாரும்மிலாரும்போலப்பல்வேறுcட்பிரிவுகளைக்bகாண்டது;xU bபாருள்gன்மொழியாகÉsங்குவன,rந்தமிழ்ச்rல்வளம்கhட்டுவன:யhனையின்gயர்களைஎ©ணும்நிfண்டு,Vழைந்துக்குkல்இuண்டுஉaர்ந்தயhனை எ‹றுஅjன்மு¥பத்தேழுgயர்களைஇaம்புதல்அjற்குச்சhன்று.xU சொற் பலபொருளாய் வருவனவும் செந்தமிழ்ச் சொல் வளம் காட்டுவன; அரி என்னும் சொல்லுக்கு மட்டும், நூற்றுப் பதின்மூன்று பொருள்களைக் குறிப்பிடும் தமிழ்ச் சொல்லகராதி இதனை விளக்கும். இனி இவையன்றி,வழக்குச் சொற்களாய் வயங்குவன; இணைச்சொற்களாய்த் துலங்குவன; கலைச் சொற்களாய்க் கமழ்வன; பழமொழி உவமை மரபுத் தொடர்களாய்ப் பயில்வன-என்பவனவும் செந்தமிழ்ச் சொல்வளம் காட்டுவனவே. இப்பல்வகை வளங்களுள் இணைச்சொல் வளம்பற்றிய சுருங்கிய ஆய்வே இது. இணைச்சொற்கள் பொருளாலும் எதுகை மோனைத் தொடையாலும் இணைவுற்றவையாம். இவை இலையிரட்டை பூவிரட்டை போலாவாய் விலங்கிரட்டை போல்வன என்க. இரட்டை அல்லது இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கும். தனித்து நின்று தனிப் பொருள் தந்து நிற்பினும் நிற்கும். ஆதலால், இணைந்த தன்மையால் இணைச் சொற்கள் எனப்படினும் தனிச்சொல் தன்மை உடையவையே இவையாம். இணைச்சொற்கள் இரண்டும் ஒரு பொருள் தருவனபோல் தோன்றும். அகர முதலிகளும் இணைச் சொற்களுக்கு ஒரு பொருளே காட்டும். ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்கின் இரண்டு சொற்களின் பொருள்களுக்கும் நுண்ணிய வேறு பாடுண்மை விளங்கும். அடிபிடி என்னும் இணைச்சொல்லுக்குச் சண்டை என்னும் பொருளையே அகரமுதலிதரும். அடி என்பது தாக்குதலையும் பிடி என்பது தடுத்தலையும் குறிப்பன என்னும் விளக்கம் ஆங்குப் பெறுதற்கு இயலாது. அதனை விளக்குதலும் அகர முதலியைச் செய்தாரின் நோக்கு அன்று. அறிகுறி என்னும் இணைச் சொல்லுக்கு அடையாளம் என்னும் பொருளையே அகர முதலியால் பெறமுடியும். ஆனால் அறி என்பது ஒலி, மணம் அருவ அடையாளம் என்றும், குறி என்பது தோற்றம், ஒளி, உருவம் முதலிய உருவ அடையாளம் என்றும் விளக்கம் பெற நம் அகர முதலிகளில் இடமில்லை. அகர முதலிக்கு அப்பால் அறிந்து கொள்ள வேண்டிய நுண்ணிய விளக்கப் பொருளை அதில் எப்படி அறிந்து கொள்ள இயலும்? இன்னும் சொல்லப் போனால், இணைச் சொற்களில் பெரும்பாலானவை அகர முதலிகளில் இடமே பெறவில்லை என்றால், அதன் விளக்கத்தைப் பெறவும் கூடுமோ? இலக்கிய வழக்குச் சொற்களே சொற்கள் என்றும், அவற்றைத் தொகுப்பதே தொகுப்பு என்றும் கொண்டுள்ள அடிப்படையைத் தகர்த்து அவற்றின் மேலாக, வழக்குச் சொற்களே வாழ்வுச் சொற்கள். வழக்குச் சொற்களே இலக்கியச் சொற்களுக்கு விளக்கச் சொற்கள், வழக்குச் சொற்களே கலைச் சொல், புத்தாக்கச் சொற்களுக்கு மூலச்சொற்கள் எனக் கொள்ள வேண்டும். அவ்வழக்குச் சொற்களோ கற்றறியா மாந்தரிடத்துக் கரவிலா நிலையில் களிதுளும்பி வழியும் இயல்பின என்பதை உணர்ந்து அவற்றை முற்றாகத் தொகுத்துக் கொண்டு மாசு தட்டி மணியாக்கி அணியாக்கிக் கொள்ள வேண்டும். இது பொதுக் குறிப்பு. இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு என்னும் இப் பொருள், பெரியதோர் ஆய்விற்கும் உரியது. இதன்கண் ஏறத்தாழ நானூறு இணைச்சொற்கள் உள்ளன. இவற்றுக்குப் பொருள் விளக்கமும் நுண்பொருள் வேறுபாடும் வழக்கும் எடுத்துக் காட்டும் காட்டப் பெற்றுள்ளன. சொல்லை விளங்குங்கால், அதன் வேர், வேர்ப்பொருள், ஒப்பு, திரிநிலை ஆயனவும் காட்டப் பெற்றுள. பெரும்பாலும் எடுத்துக் காட்டை மிகுக்காமலும், இலக்கியச் சான்றுகளைப் பெருக்காமலும் வேண்டுமளவு விளக்கமே செய்யப்பட்டுள. இத்தகு சொல்லாய்வு பருகுவன் அன்ன ஆர்வத் தர்க்கும், கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி அன்னர்க்கும் விருந்தாம். இவ் விணைச்சொற்களுள் பெரும்பாலனவும் பொது மக்கள் வழக்கில் இருந்து பொறுக்கப்பட்டவையே! எனினும், ஆய்வுக்களப் பொருளாக இஃது உருக்கொண்டுள்ளமையால், புலமக்களுக்கே உரியதாய் அமைந்ததாம். பொதுமக்களும் ஓராற்றாற் சுவைக்கக் கூடுமெனினும் புலமக்கள் போல் நுனித் துணரும் பயிற்சியும், வாய்ப்பும், வாழ்வு நிலையும் அவர்க்கு இன்மையால், அவர்கள் தம் உடைமையாய் உரையாய் விளங்கு பவற்றையும் உணரும் வாய்ப்புத் தலைக்கூடினார் அல்லராம். ஆனால், அவர்கள் அறியத் தலைப்பட்டால் அவ்வளவில் உவகை கொள்ளவும் வியப்பில் தளிர்க்கவும் கூடுமெனலாம். இங்குக் காட்டப் பெற்ற இணைச்சொற்கள் மேலோட்டத் தொகுப்பே. இன்னும் ஆழ்ந்தும் வழக்கில் தோய்ந்தும் இடந்தோறும் பயின்றும் இணைக்கத் தக்க இணைச் சொற்கள் மிகப் பலவாகலாம். அவற்றை இணைக்கும் முயற்சியில் ஆர்வலர் ஈடுபடுதல் வேண்டும். இவ்வினைச் சொற்களுக்குக் காட்டிய நுண்பொருள் வேறுபாட்டினும் நுணுகிச் சென்று பொருள் காண வேண்டியவை உண்டு; பொருள் விளக்கம் செய்ய வேண்டியவை உண்டு. ஏன்? பொருளும் விளக்கமும் பொருந்தாதனவாய் முரண் பட்டனவாய் இருத்தலும் கூடும்! ஆயின், இது முதன் முயற்சி. இம் முயற்சியைப் பின்னுக்குத் தள்ளும் ஆய்வாளர் கிளர்தல் வேண்டும். அக்கிளர்வே இத்தகு ஆய்வால் பெறும் பயனீடாம்; வெற்றியுமாம். இதன் மறுபதிப்பு வருவதற்குள் எத்துணையோ இணைச் சொற்கள் கிட்டலாம். அரிய விளக்கங்களும் எய்தலாம். ஆர்வலர் ஆய்வர் துணையாலும் சிறக்கலாம். ஆதலால் இத்தகு நூல்களின் ஒவ்வொரு பதிப்பும், பெருக்கமும் திருத்தமும் பெற்று வருதல் மொழிவளப் பெருக்கமும் பேறுமாம். இனி இணைச் சொற்களின் நுண் பொருள் வேறுபாட்டை அகர முறையில் காணலாம்: இணைச் சொல் அகரமுறை அக்கம் பக்கம் அக்கம் - தன் வீடும் தானிருக்கும் இடமும். பக்கம் - தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தான் இருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும். ஒரு குடிவழியர் அல்லது தாயாதியர் இருக்கும் வீடு வளைவு, வளசல் எனப் பெறும். அவ்வீடுகள் ஒரு காலத்தில் ஓருடைமையாய் இருந்து பின்னர்ப் பலபாகமாய் அமைதல் வழக்கு. அவற்றுள் தன் வீடும் இடமும் அக்கமும், அதற்கு அருகிலுள்ளது பக்கமும் ஆயது. அக்கம்-அகம்; பக்கம்-பகம்;(பிரிவு) பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே என்பது பழமொழி. அக்குத்தொக்கு அக்கு - தவசம் தொக்கு - பணம் அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத்தேடு என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாதல் அறிக. தொக்கு-தொகுக்கப் பெற்றது; தொகை பயிர்களில் தவசப் பயிர், பணப் பயிர் என இரு வகை இருத்தல் அறிக. அக்குத் தொக்கு இல்லை என்பது மரபு மொழி. தவசமும், பணமும் இல்லை யென்றும், தவசமும், பணமும் தந்துதவுவார் இலர் என்றும் இரண்டையும் குறிக்கும். இனி உற்றார் உறவு இல்லை என்பதையும் குறித்தல் உண்டு. அக்கு-உற்றார்; தொக்கு-உறவு. அக்குவேர் ஆணிவேர் அக்குவேர் - மெல்லியவேர், சல்லி வேர், பக்க வேர் ஆணிவேர் - ஆழ்ந்து செல்லும் வலிய வேர். அக்குதல்-சுருங்குதல்; மெலிதாதல். ஒரு மரத்தின் வேர் களுள் பக்கத்துச் செல்லும் வேர் பலவாய் மெலியவாய் இருக்கும். ஆணிவேர் நேர் கீழ் இறங்குவதாய் ஒன்றாய் வலியதாய் இருக்கும். அக்கு வேராக ஆணிவேராக ஆய்தல் என்பது வழக்கு. அக்குவேறு ஆணிவேறு காண்க. அக்குவேறு ஆணிவேறு அக்கு - முள் ஆணி - காலடியில் தோன்றிய கட்டி. முள் தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டிபட்டுக் கல்போல் ஆகிக் காலையூன்ற முடியா வலிக்கு ஆளாக்கும், பின்னர் அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதல் உண்டு. அதனை ஆணி பிடுங்குதல் என்பர். காலாணி எடுக்கப்படும் என விளம்பரம் செய்து கொண்டு வீதியோரங்களில் இருப்பாரை நகரப்பகுதிகளில் காணலாம். அக்கமணி-முள் மணி. அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்குதல் என்பது வழக்கு. அடக்கம் ஒடுக்கம் அடக்கம் - மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறி களையும் மனத்தையும் அடக்குதல். ஒடுக்கம் - பணிவுடன் ஒடுங்கி நிற்றல். ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் அடக்கம் அமரருள் உய்க்கும் புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்-என்பவை அடக்கம். சென்னி மண்ணுற வணங்கி வாசச், சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையிற் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் இது கைகேயி முன்னர் இராமன் நின்ற பணிவுநிலை. இஃது ஒடுக்கம். சான்றோர் ஒடுங்கிய இடம் ஒடுக்கம் எனப் பெறுதலையும் கருதுக. அடிசால் பிடிசால் அடிசால் - விதை தெளிப்பதற்காக அடிக்கும் சால் பிடிசால் - தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால். வேளாண்மைத் தொழில் வழியாக வழங்கப் பெறும் இணைச்சொல் இது. சால் என்பது உழுபடைச்சால் என்பதன் சுருக்கம். உழுபடையாவது கலப்பை. மண்ணைக் கலக்க வைக்கும் கலப்பை. பொதுநிலை உழவு விடுத்து, ஆழ உழுதல் சாலடித்தல் எனப்படும். சாலடித்தல் விதை தெளிப்பதற்கும் பாத்தி கட்டு தற்கும் இடனாக அமையும். உழுதடத்தில் விதை போடுதல் சால்விதை எனப்படும். அடித்துப் பிடித்து அடித்தல் - ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல். பிடித்தல் - தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல். மண்தட்டி ஓடிப் பிடித்தல் என்னும் சிறுவர் விளையாட்டில் அடித்துப் பிடித்து ஓடல் என்னும் இணைச்சொல் வழங்கும். அடிபிடி அடி - அடித்தல் என்பது முதனிலையளவில் அடியென நின்றது. பிடி - பிடித்தல் என்பதும் முதனிலையளவில் பிடி என நின்றது. அடியும் பிடியும் என உம்மைத் தொகையாய் அமைந்து இணைச் சொல்லாகியது. அடியும் பிடியும் என்பதும் அது. சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில் தாக்குவாரும் தடுப்பாரும் என இரு திறத்தர் உளரன்றோ! தாக்குவார் வினைப்பாடு அடி; தடுப்பார் வினைப்பாடு பிடி. வெட்சி, கரந்தை; வஞ்சி, காஞ்சி; உழிஞை, நொச்சி; தும்பை, வாகை எனப் புறத் தினைகள் இரு கூறுபட்டு அமைதலை அறிக. நீயடித்தால் என்கை புளியங்காய் பிடுங்கவா போகும்; என்பதும், குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள்; குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் என்பதும் வழங்கு மொழிகள். அடியோலை அச்சோலை அடியோலை - முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை. அச்சோலை - மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை. அடிமனை, அடிப்பத்திரம் என்பவற்றில் உள்ள அடி மூலமாதல் தெளிவிக்கும். மூலத்தில் உள்ளது உள்ளபடி, படியெடுப்பது அச்சோலையாம். மூட்சியில் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை, மாட்சியிற் காட்ட வைத்தேன் (பெரிய, தடுத்.56) என வருவதில் சுட்டும் படியோலை அச்சோலையாம். அச்சடிச் சீலை, அச்சுவெல்லம், வார்ப்பட அச்சு என்பவன வற்றைக் கொண்டு அச்சுபடியாதல் அறிக. அடுத்தும் தொடுத்தும் அடுத்தல் - இடைவெளிப்படுதல் தொடுத்தல் - இடைவெளிப்படாமை. அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர் கதை, தொடர்பொழிவு இவற்றால் தொடுத்தல் பொருளை அறிக. அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா -மூதுரை அடுப்பும் துடுப்பும் அடுப்பு - அடுப்பு வேலை துடுப்பு - அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை. அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலையறிந்து, அதில் மாவைப் போடுதலும், போடப்பட்ட மாவு கட்டிப் பட்டுப் போகாவண்ணம் கிண்டுதலும், தீயின் அளவினைத் தேவைக்குத் தகக் கூட்டிக் குறைத்துக் கொள்ளுதலுமாகிய பல திறத்தொரு பணிக்கிடையே அப்பணி செய்வாரை எவரேனும் கூப்பிட்டால் அடுப்பும் துடுப்புமாக இருக்கிறேன் என்பார். உடனே வர முடியாது என்பது மறுமொழியாம். இதனை விடைவகை எட்டனுள் உற்றதுரைத்தலோடு சார்த்தலாம். அல்லது பிறிது மொழிதல் விடை யென ஒன்பதாய் ஆக்கலாம். அண்டாகுண்டா அண்டா - மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன் படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது. குண்டா - அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப் போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம். கலவகையைச் சேர்ந்தவை இவை. வடிவ அமைப்பால் இரண்டும் ஒத்தவை. பருமை சிறுமையால் வேறுபட்டவை. அண்டாவிற்குக் கைப்பிடி வளையங்கள் உண்டு. குண்டாவிற்கு அவை இல்லை. உடல் நலமுறைப்படி அண்டாச்சோறு அண்டக்கூடாது என்பர். அண்டைஅயல் அல்லது அண்டியவர் அடுத்தவர் அண்டை - தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் - அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார். அண் - நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்-நண்பர்; அணிமை - அண்மை, இவற்றால் அண்டை நெருக்கப் பொருளதாதல் கொள்க. அயலார் - பிறர்; அயவு - அகலம்; திருவருட்கு அயலுமாய் என்பார் தாயுமானவர். அயல், அப்பால் என்னும் பொருட்டதாம். கொண்டவர்கள் கொடுத்தவர்கள், அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும் நல்லா இருக்கணும் என்பது வாழ்த்து வகையுள் ஒன்று. அதரப்பதற அதரல் - நடுக்கமுறல் பதறல் - நாடி, துடி மிகல். அதிர்வு-நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உள நடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும். கட்புலனாகும் உடல்நடுக்கம் அதரல் எனவும், கட்புலனாகாத நாடித் துடிப்பு மிகுதலும், உரைப்பதற்றமும் பதறல் எனவும் சுட்டப் பெற்றனவாம். ஒடுங்கிய உடம்பு, நடுங்கிய நிலை, மலங்கிய கண், கலங்கிய மனம், மறைந்துவருதல், கையெதிர் மறுத்தல் என்பவை அச்சமுற்றோர்க்கு உளவாதலைச் சிலம்பு சொல்லும். அந்திசந்தி அந்தி - மாலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது. சந்தி - காலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது. மாலைக்கடை அந்திக்கடை எனப்படும். சில ஊர்களில் அந்திக்கடைத் தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள் தம் பழமையைச் சொல்லிக் கொண்டு இன்றும் உள்ளன. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை என்பது சிலம்பில் ஒரு காதை. இரவுக்கடை அல்லங்காடி என்பதும் பகற்கடை எல்லங்காடி என்பதும் சிலப்பதிகார ஆட்சி. இந்நாளில் புதிய புதிய மாலைக் கடைகளும் இரவுக்கடைகளும் பெருகுகின்றன. ஆனால் தமிழில் பெயர் இருந்தால் தலையே போய்விடும் என்பது போல ஆங்கில மயக்கத்தில் குலவுகின்றன. தமிழால் வாழும் தமிழனுக்கும் தமிழ்பற்று இல்லை என்றால், நன்றியில்லாப் பிறப்பாளர் என்பதற்கு நாக்கூச வேண்டுவதில்லையாம். சந்தி, முச்சந்தி, நாற்சந்தி சந்திப்பதால் வந்தது போல, இரவும் பகலும் சந்திப்பதால் வந்த பெயர். சிலர் காலையையும் அந்தி என்பர். அதற்கு வெள்ளந்தி என்பது பெயர் காலை நியமம் சந்தியாவந்தனம் எனப்படுதல் அறிக. அப்புறக்குப்புற அப்புற(ம்) - முகம் மேல் நோக்கி இருத்தல் குப்புற(ம்) - முகம் கீழ்நோக்கி இருத்தல். குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே புரண்டு குப்புறப் படுத்துக்கொள்வதுண்டு. அதனை அப்பறக்குப்பற விழுகிறது என்பர். அப்பக்கம் என்னும் பொருள் தரும் அப்புறம் என்னும் சொல் குப்புறம் என்னும் இணைவால் மேல் பக்கம் (மல்லாக்க) என்னும் பொருள் தந்தது. குப்புறப் படுத்துக் கிடத்தலை முகங்கீழாகக் கிடத்தல் என்றும், அதோ முகமாய்க் கிடத்தல் என்றும் கூறுவர். அரக்கப்பரக்கவிழித்தல் அரக்கல் - முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல். பரக்கல் - சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும் முகம் முதலியவற்றைத் தேய்த்தலையும் திருதிரு வென அங்கும் இங்கும் மருண்டும் வெருண்டும் பார்த்தலையும் கண்டு அரக்கப்பரக்க விழிப்பதாகச் சொல்லுவர். அறியாப் புதிய இடத்தில் திகைப்போடு இருப்பவனையும் அரக்கப் பரக்க விழிப்பதாகச் சொல்லுவர். அரிப்பும் பறிப்பும் அரிப்பு - சிறிது சிறிதாகச் சுரண்டுதல். பறிப்பு - முழுமையாகப் பறித்துக் கொள்ளுதல். அரித்துச் சேர்த்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போய் விட்டான் என அரிப்புப் பறிப்புக் கொடுமைகளைப் பழிப்பர். சிறுகச் சிறுகச் சுரண்டியதை மொத்தமாகப் பறித்துக் கொண்டு விட்டான். இதற்கு இது தக்கதே என்பது போன்ற கருத்தில் இருந்து வந்தது அரிப்புப் பறிப்பு ஆகும். கறையான் அரித்தலையும், வழிப்பறியையும் கருதுக. அரியாடும் கரியாடும் அரியாடு - செந்நிற ஆடு கரியாடு - கருநிற ஆடு. அரியாடு செம்மறியாடு எனப்படும். காராடு ஆகிய கரியாட்டை வெள்ளையாடு - வெள்ளாடு என்பர். அதனை மங்கல வழக்கு என இலக்கண நூலார் கூறுவர். அரி சிவப்பாதல், செவ்வரி என்பதாலும் அறிக. செம்மறியாடும் வெள்ளையாடும் தனித்தனியியல் புடையவை. கூடி நடக்கவோ, மேயவோ செய்யாதவை. தாமே தனித்தனியாகப் பிரிந்து தம் கூட்டத்துடன் கூடிக்கொள்ளக் கூடியவை. ஆகவே இவற்றின் இயல்பை யறிந்தோர் இணையத் தகாத இருவர் இணையக் காணின் அரியாடும் கரியாடும் போல என்பர். அருமை பெருமை அருமை - பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை. பெருமை - செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு. அருமை பெருமை தெரியாதவன் எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது அருமை பெருமைகளை அறிந்து நடத்தல் வேண்டும் என்பது உலகோர் எதிர்பார்ப்பாம். ஆனால் அருமை பெருமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையாக அல்லவோ தோன்றுகின்றது. அரிது என்பதன் வழிவந்தது அருமை. பெரிது என்பதன் வழிவந்தது பெருமை. அரைகுலையத் தலைகுலைய அரைகுலைதல் - இடுப்பில் உடுத்திய உடை நிலை கெடுதல் தலைகுலைதல் - முடித்த குடுமியும் கூந்தலும் நிலை கெடுதல். விரைந்து ஓடி வருவார் நிலை அரைகுலையத் தலை குலையக் காட்சி யளிப்பதுண்டு. போரில் பின்னிட்டு வருவார், அஞ்சி அலறியடித்து வருவார் நிலையும் இத்தகையவே. அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து என்று ஈடு சொல்லும் 3. 5 . 1. அரைகுறை அரை - ஒரு பொருளில் சரிபாதியளவினது அரை. குறை - அவ்வரையளவில் குறைவானது குறை. அரை குறை வேலை; அரை குறைச் சாப்பாடு என்பவை வழக்கில் உள்ளவை. இனி அறை குறை என்பதோ வேறு. அறை அறுக்கப்பட்டது. அதில் சரிபாதி என்னும் அளவு இல்லை. குறை அறுக்கப்பட்டதை அறுத்துக் குறைபட்டது. அல்லாடுதல் மல்லாடுதல் அல்லாடுதல் - அடிபட்டுக் கீழே விழுதல் மல்லாடுதல் - அடிபோடுவதற்கு மேலேவிழுதல் சண்டையில் கீழே விழுந்தும் மேலே எழுந்தும், தாக்குண்டும் தாக்கியும் போரிடுவாரை அல்லாட்டமும், மல்லாட்டமும் போடுவதாகக் கூறுவர். இனி, வறுமையில் தத்தளித்தும், ஒருவாறு வறுமையை முனைந்து வென்றும்,மீண்டும் வறுமையும் சமாளிப்புமாக வாழ்பவரை அவர்பாடு எப்போதும் அல்லாட்ட மல்லாட்டந் தான் என்பர். போர்த் தத்தளிப்பு வறுமைத் தத்தளிப்புக்கு ஆகி வந்ததாம். வெல்லவும் முடியாமல் தோற்கவும் இல்லாமல் திண்டாடும் இரு நிலையையும் விளக்கும் இணைச் சொல் இது. அல்லுச்சில்லு அல்லு - அல்லலைத் தரும் பெருங்கடன். சில்லு - சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன். அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன் என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக் கேட்கும்போது அவர்கள் அல்லுச்சில்லால் பட்ட துயரம் தெரியவரும். சில்லு என்பது சிறியது; சில்லி, சில்லுக் கருப்புக்கட்டி, தேங்காய்ச் சில்லு என்பவனற்றால் சில்லுக்குச் சிறுமைப் பொருள் உண்மை அறியலாம். இனி, அல்லு அல்லலையும் சில்லு சிறுமையையும் தருவதாகவும் அமைகிறது. அவனுக்கு அல்லுச் சில்லு எதுவும் இல்லை; அமைதியான வாழ்வு என்னும் பாராட்டால் இது விளங்கும். அலுங்காமல் நலுங்காமல் அலுங்காமல் - அசையாமல் நலுங்காமல் - ஆடாமல் அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும் போது விரல் இன்னொரு கல்லில்பட்டு அலுங்கி விட்டால் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டுமென விதியுண்டு. நலுங்குதல். இடம் பெயரும் அளவு ஆடுதலாம். இனி, அலுங்காமல் குலுங்காமல் நடப்பாள் என்பதில் குலுங்குதல் நலுங்குதல் பொருள் தருவதேயாம். குலுங்கிக் குலுங்கி அழுதல் என்பதிலும், குலுக்குதல் என்பதிலும் குலுங்குதலுக்கு ஆடுதல் பொருள் உண்மை அறிய வரும். அலுப்பும் சலிப்பும் அலுப்பு - உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும். சலிப்பு - உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும். அலங்குதல், அலுங்குதல் - அசைதல்; இடையீடு இல்லாமல் உழைப்பவர் அலுப்படையவர். அலுப்பு மருந்தென ஒரு மருந்தும் பல சரக்குக் கடைகளில் உண்டு. முன்னே அலுப்புக்குக் கழாயம் (கசாயம்) கொடுப்பர்; இப்பொழுது குடியே அலுப்பு மருந்தாய்க் குடிகெடுத்து வருகின்றது. சலித்தல்-துளைத்தல்; சல்லடை அறிக. உள்ளத்தைத் துளைக்கும் துளைப்பே சலிப்பாம். மனத்திண்மையை இறையும் சலியா வலிமை என்பார் கம்பர் (உயுத்த1733) அலை கொலை அலை - அலைத்தலாம் துன்புறுத்துதல் கொலை - கொல்லுதல் இனிப் புலை கொலை என்பது புலால் உண்ணுதலையும், கொலை என்பது கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல் அடுத்தடுத்தும் துயர்பல செய்வதாம். அலை மேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து என்பது திருக்குறள் 551. அலைப்பு, அலைச்சல் முதலிய சொற்களால் அலையின் பொருள் விளங்கும். கொல்லான் கொலைபுரியான் என்னும் ஏலாதித் தொடர், கொல்லாதவனையும், கொன்று தந்த ஊனை விரும்பாதனையும் குறிக்கும். அழுதுஅரற்றுதல் அழுதல் - கண்ணீர் விட்டு கலங்குதல் அரற்றுதல் - வாய் விட்டுப் புலம்புதல். அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர் (சிலப்.5.237-9) அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை என்பது திருக்குறள். அரற்றுதல், என்பதற்கு அலறுதல், புலம்பல், ஒலித்தல், ஓலமிடல், பலவும் சொல்லித் தன்குறை கூறல் என்னும் பொருள்கள் உண்டு. காதல் கைம்மிகக் கனவின் அரற்றலைச் சுட்டுவார் தொல்காப்பியர். அரற்று என்பதற்கு வாய்ச் சோர்வு என்பார் இளம்பூரணர் (பொருள்.256). இக்காலத்தில் வாய்வெருவல், வாய்விடல் என அரற்று வழங்குகின்றது. அழுது வாய் குழறி என அழுது அரற்று தலைச் சுட்டுவார் கம்பர். (ஆர.41). அள்ளக்கொள்ள அள்ள - பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு. கொள்ள - கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு. அள்ளக் கொள்ள ஆள் வேண்டும் என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர் .மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடிவந்து அள்ளக்கொள்ள முந்துவர். அள்ளிக்குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை. அள்ளி முள்ளி அள்ளுதல் - கை கொள்ளுமளவு எடுத்தல் முள்ளுதல் - விரல் நுனிபட அதனளவு எடுத்தல். தருதல் வகையுள் அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும், கொள்வார்க்கும் கொடுப் பார்க்கும் உள்ள நேர்வும் அள்ளித் தருதலாலும் முள்ளித் தருதலாலும் விளங்கும். ஏதோ கொடுக்க வேண்டுமே என்னும் கடனுக்காக, அள்ளித் தருதலாலும் முள்ளித் தந்து ஒப்பேற்றி விடுவதும் கண்கூடு. அள்ளிமுள்ளித் தின்னுதல் என்பதும் வழக்கு. அள்ளித் தின்னல் சோறு; முள்ளித் தின்னல் கறி வகைகளும் தீனிவகை களுமாம். அற்றதுஅலைந்தது அற்றது - எவர் துணையும் அற்றவர். அலைந்தது - ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர். அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது எனச் சலித்துக் கொள்ளுவார் உளர். அவர் அற்றவர் அலைந்தவர் என்று கூறுவதையும் விரும்பாராய் அஃறிணையால் குறிப்பர். தம் வறுமையாலும் செய்து செய்து சலித்தலாலும், மனமின்மையாலும் வரும் பழிப்புரை ஈதாம். அற்றார்க்கு ஒன்று ஆற்றுதலும், புகலற்று அலைவார்க்கு உதவுதலும் அறம் என்பது அறநூற் கொள்கை. அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி அற்றைப்பட்டினி - ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் . அரைப்பட்டினி - ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல். அற்றைப் பட்டினி பொழுது மறுத் துண்ணல் என நற்றிணையில் சொல்லப்படும். ஒரு வேளையுண்டு ஒரு வேளை யுண்ணாத வயிற்றை, ஆற்றில் மேடு பள்ளமாய்ப் படிந்துள்ள மணல் வரிக்கு உவமையாகச் சொல்கிறது அது. வயிற்று மேடு பள்ளம், மணல் மேடு பள்ளம் போலக் காட்டப்படுகிறது. உண்ட வயிறு மேடு; உண்ணாத வயிறு பள்ளம். பட்டுணி-பட்டினி. அறிகுறி அறி - ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம். குறி - தோற்றத்தால் அல்லது உருவால் அறியும் அடையாளம். வண்டி வரும் அறிகுறியே இல்லையே என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவர். வண்டி வரும் ஒலியும் இல்லை; புகை முதலிய தோற்றமும் இல்லை என்பதாம். மழை பெய்யும் அறிகுறியே இல்லை என்றால் பெய்தற்கு ஏற்ற காற்றும் வெயிலும் இல்லை; மழை முகிலும் மின்னல் இடியும் இல்லை என்பதாம். அறி என்னும் பொதுப்பொருள் உருவக் காட்சியை விலக்கி ஒலி, மணம் முதலியவற்றைக் குறித்து நின்றதாம். குறி என்பது உருவக் காட்சியைக் குறித்து நின்றதாம். ஆட்டம்பாட்டம் ஆட்டம் - தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம் பாட்டம் - ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம் பாட்டு, பாட்டம் என வழங்குதல் இதனால் அறியலாம். சொல்லால் ஆடுதல் பாடுதல்களைக் குறிப்பதாயினும், இலக்கணையாய் வேறு குறிப்பினதாம். பிறரைப் படாப்பாடு படுத்திய கொடியவர்களுக்கும் முதுமை, வறுமை, நோய்மை முதலியன வந்து வாட்டுமல்லவோ! அந்நிலையில் அவர் தம் பழநாள் கொடுமைகளைச் செய்ய இயலாதவராய் அயர்ந்து ஒடுங்கி ‘என்ன? என்று கேட்பதற்கும் ஆளின்றிக் கிடப்பரன்றோ! அந்நிலையில் அவரை ஆட்ட பாட்டமெல்லாம் ஒடுங்கிவிட்டது. அவர் ஆடிய ஆட்ட மென்ன? பாட்டமென்ன? எல்லாம் எங்கே போனது? என்று இகழும் வழக்கைத் தழுவியது இது. ஆடைகோடை ஆடை - மழை பெய்தற்குரிய கார் காலம் ஆடை கோடை - வெயில் அடித்தற்குரிய கோடை காலம் கோடை காலம் என்றாலே கார்காலம் அல்லது மழைக் காலத்தையே குறிக்கும். காலச் சோளம், காலப்பருத்தி, காலம் விளைந்தது என்பவை வழக்குகள் கோடை என்பது மேல்காற்று வீசும் வறண்ட காலம். அந்நாளில் விளைவன கோடைச் சோளம், கோடைச் சம்பாநெல் எனப்படும். கோடை ஆகு பெயராக இலக்கண நூல்களில் காணப்படும். குளிரால் ஆட வைக்கும் காலம் ஆடை எனவும், கொடு வெப்பக் காலம் கோடை எனவும் வந்திருக்கலாம், ஆனி, ஆடி மாதக் கொந்தலிலே குளிர் ஆடுகள் போல் கொடுகி நிற்போம் என்பது கவிமணி பாடல். ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஓஞ்சு): ஆய்ந்து - ஆராய்ந்து பார்த்து ஓய்ந்து - ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து. இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப்பல பல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச் செய்த ஒருவன்,ஒன்றிலும் வெற்றி கொள்ள இயலாமல் ஒடுங்கிவிட்ட நிலையில் அவனை ஆஞ்சு ஓஞ்சு அடங்கி விட்டான் என்பர். ஓய்தல் ஒன்றும் செய்யமுடியாமல் அமைந்து விடுதல். ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு) ஆயிற்று - செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய் தாயிற்று. போயிற்று - என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று. உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா? பால் இறங்கு கிறதா? ஆள் குறிப்புத் தெரிகிறதா? எனப் பலவாறாக ஆய்ந்து பார்ப்பது வழக்கம். உயிர் உள்ளேயா வெளியேயா என்பது தெரியாமல் உற்றார் உறவுகள் திகைப்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் என்ன நிலையில் இருக்கிறது? என்பார்க்கு ஆச்சு போச்சு என்று கிடக்கிறது என்பர். எல்லாரும் சமமென்பது உறுதியாச்சு என்பது போல ஆச்சு போச்சு என்பவை இலக்கிய வழக்கும் பெறலாயின. ஆல்பூல் ஆல - ஆலமரம் பூல் - பூலாஞ் செடி ஆல் என்றால் பூல் என்கிறான் என்பது பழமொழி. ஆல் பூல் என்பவை பெயரளவால் ஒத்துத் தோன்றுபவை. ஆனால் எத்தகைய ஒப்புமையும் சுட்டிச் சொல்ல இல்லாதவை. ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததை ஒப்பிதமாகக் கூறுவாரை ஆல் என்றால் பூல் என்பான் என்பர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி பூலுக்குப் போகம் பொழியுமே இவை பல் துலக்குதற்கு ஆகும் குச்சிகளைத் தருவன. ஆளும் பேரும் ஆள் - நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள் பேர் - ஆள் என்று பெயர் சொல்லத் தக்க சிறார் அல்லது இளைஞர். பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய போது பெரிய ஆள்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமானால் சிறுவர்களையும் சேர்ந்து பிடிக்குமாறு கூறுவர். அந்நிலையில் ஆளும் பேருமாகப் பிடியுங்கள் என்பர். ஒத்த ஆட்டக்காரர்களைப் பிரித்து ஆடும் ஆட்டத்திற்கு ஒருவர் இருவர் குறைவரானால், ஒப்புக்குச் சப்பாணி என இணையாக அமர்த்திக்கொண்டு ஆடும் வழக்கத்தை-இதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். உப்புக்குச் சப்பாணி என வழங்கு கின்றது. ஆள், பேர், புள்ளி, தலை என்பவை பொதுவில் ஆள்களைக் குறிக்குமாயினும் இவண் பொது நீங்கி,பேர் என்பது பேருக்கு ஆளாக இருக்கும் சிறாரைக் குறித்ததாம். ஆறுதல் தேறுதல் ஆறுதல் - மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல். தேறுதல் - ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல். நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர். அந்நிலையில் ஆறுதல் - தேறுதலாய் அமைவார் அரியரும் அருமையருமாம் கெட்ட காலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை நன்று என்பது பெருங்கதை. இளைப்பாறுதல், களைப்பாறுதல், ஆகியவற்றினும் மன ஆறுதல் அருமையே! தேர்வுகளில் தேறுவாரும் முதன்மையில் முதன்மையாய் தேறுவாரும் மனத்தில் தேறுதல் கொண்டாராய் காணல் அருமையே! இசகுபிசகாக ஏமாறுதல் இசகு (இசைவு) - ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு (தவறு) - தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல். எந்த ஒரு குற்றத்திலாவது வன்பு துன்புகளிலாவது மாட்டிக் கொண்டவர், இசகுபிசகாக மாட்டிக்கொண்டேன் என்பது வழக்கு. வெள்ளறிவுடையான் பிறர் ஏமாற்றுக்கு ஆட்பட்ட போது அவனைப் பிறர் இசகு பிசகாக ஏமாறிப் போனான் என்பதும் வழக்கு. ஒருவரைத் தம்பால் வயப்படுத்தி அவரிடம் உள்ளவற்றைத் தட்டிப் பறித்தற்குத் தணியா ஆர்வமுடையவர் என்றும் உண்டன்றோ? அவர்க்கு வயப்பட்டு உள்ளதை உளீயதை ஹிழந்து ஓலலீடுவாரும் என்றும் உண்டன்றோ!இவர்கள் வழியாக வழங்கப் பெறும் இணைச் சொல் இது. இட்டடி முட்டடி இட்டடி - இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம். முட்டடி - முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம் இட்டடி முட்டடியான இடம் என்பதில் இப்பொருள் உண்டாயினும் இட்டடி முட்டடிக்கு உதவுவான் என்பதில் இதன் நேர் பொருள் இல்லாமல் வழிப் பொருளே உண்டாம். இட்டடி என்பது, தம் கையில் எதுவும் இல்லாத நெருக்கடியையும், முட்டடி என்பது எவரிடத்துக் கேட்டும் எதுவும் பெற முடியாத முட்டுப் பாட்டையும் குறித்தனவாம். அந்நிலையிலுள்ள போதும் உதவுபவனை உதவுவான் எனப் பாராட்டுவர். முட்டுப்பாடு இட்டடி முட்டடிக்கு-வறுமை. அது எதுவும் கிட்டுதற்கு இல்லாமல் முட்டுதல் வழியாகத் தந்தது. தட்டுப்பாடும் அது. இடக்கு முடக்கு இடக்கு - எளிமையாக இகழ்ந்து பேசுதல் முடக்கு - கடுமையாக எதிரிட்டுப் பேசுதல் நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் குணங்கினால் இடக்குச் செய்கிறது என்பதும் வழக்கு. அவையில் சொல்லக் கூடாத சொல்லை மறைத்துச் சொல்வது இடக்கர் அடக்கு. முடக்கு, மடக்கு என்னும் பொருளதாம். மடக்கி எதிர்த்துப் பேசுதல் மடக்கு என்றும் முடக்கு என்றும் ஆயிற்று. முடக்குதல் மேற்செல்ல விடாமலும் சொல்லவிடாமலும் தடுத்தலாம். எதிரிட்டுத் தடுத்தல் மடக்குதல் என வழங்குவதும் அறிக. இடுக்குமுடுக்கு இடுக்கு - மிகக் குறுகலான வழியும் , தெருவும். முடுக்கு - மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டி முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும். இடுங்கிய கண்ணாக்கிவிட வல்லிதாம் வறுமை இடுக்கண் எனப்பட்டதனை எண்ணுக. இடுக்கிப் பொறியை எண்ணினால் இதன் பொருளமைதி நன்கு தெளிவாம். முக்குத் தெரு, முடுக்குத் தெரு என்பவனைற்றையும், முட்டி, முடங்குதல் என்பவற்றையும் எண்ணுக. இணக்கம் வணக்கம் இணக்கம் - ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல். வணக்கம் - பணிந்த மொழியும் வணங்கிய கையுமாக அமைந்து போதல். இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத் தாலும் வயப்படுத்தலாம்; இணக்க வணக்கம் இரண்டும் உடைய ஒருவர் எவரையும் வயப்படுத்துதல் எளிமையாம். இணக்க வணக்கம் உண்மையாக இல்லாத நிலையில் அவற்றால் விளைந்துள்ள தீமைகளுக்கு எல்லையே இல்லையாம்! தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்துஎன வள்ளுவர் எச்சரித்தார். (குறள் 838) இதம்பதம் இதம் - இனிமையாகப் பேசுதல் பதம் - பக்குவமாகப் பேசுதல் இதம் என்பது இனிமையையும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம். பதம் என்பது பக்குவம். வேக்காட்டு நிலையைப் பார்த்தல் பதம் பார்த்தல் என்பதும், விளைவை அறுக்கும் பதமாக இருக்கிறது என்பதும் கருதுக. இனி, கடைந்து பக்குவமாகத் திரட்டப்பட்ட வெண்ணெய் பதம் எனப் படுவதையும், பதனீர் உண்மையையும் கருதுக. புகும்வேளை சரியாக இருக்க வேண்டும் என்னும் குறிப்பில் பதனன்று புக்கு எனவரும் புறப்பாட்டு. இராப்பாடி பகற்பாடி இராப்பாடி - இரவில் பாடிக் கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன். பகல்பாடி - பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டுவந்து தவசம் பெறும் புலவன், களம் பாடி என்பவனும் அவன். இராப்பாடி யாமக் கோடங்கி எனவும் பெறுவான். அவன் நடை உடை தோற்றம் சொல் ஆகியவை கண்டு அஞ்சினராய், அவன் கூறும் குறிச்சொல்லைக் கேட்கும் ஆர்வலராய்க் கதவு சாளரப் புறத்திலிருந்து மறைந்துக் கொண்டு கேட்கும் வழக்கம் உண்டு. நேரில் காசு தவசம் தராமல் மறைவில் இருந்துக் கொண்டே கதவுக்கு வெளிப்புறத்தில் சுளகில் வைத்து எடுத்துக் கொள்ளச் செய்வதும் உண்டு. பகலில் வந்துக் கொண்டு போவோரும் இந்நாளில் உளர். வேடமென ஒன்றில்லாமல் தாம் தெரிந்த பாடல்களை, இடத்திற்கு ஏற்பச் சொல்லி இரக்கும் எளிய பாடகர் பகல் பாடியாவர். பண்டை ஏரோர் களவழி, தேரோர் களவழி என்பவற்றின் எச்சம் பகற்பாடி யாகலாம். இரை தண்ணீர் இரை - தீனி வகை தண்ணீர் - குடிநீர் உயிரிகளை வளர்ப்பார் இரை தண்ணீர் வைத்தலில் கருத்தாக இருக்க வேண்டும். வாயில்லா உயிர்; அது என்ன, கேட்குமா? நாம் தான் இரை தண்ணீர் பார்க்க வேண்டும் என்று கூறும் வழக்கம் உண்டு. இவ்வழக்கால் ஆறறிவு உயிரியாம் மாந்தரும், உண்டு நீர் பருகுவதை இரை தண்ணீர்-பார்க்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமாயிற்று. கோழிக்கு இரை வைத்தல்; மாட்டுக்குத் தீனி போடல் என்பவை மரபுகள். இலைதழை இலை - ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம். தழை - குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது. ஒரு காம்பில் உள்ளது வெற்றிலை; ஓர் ஈர்க்கில் பல இலக்காக உள்ளவை வேப்பிலை புளியிலை போன்றவை. தழை, குழை என்பவை ஆடு தின்னுவதற்குக் கட்டுனவும், உரத்திற்குப் பயன்படுத்துவனவுமாம். தழையுரம் என்பதும் குழை மிதித்தல் என்பதும் வேளாண் தொழிலில் பெருக வழங்குவன. இழுபறி இழுப்பு - உயிரைப் போக விடாமல் போராட்டத்துடன் மூச்சை உள்ளே இழுத்தல். பறிப்பு - உள்ளே போன மூச்சு தங்க மாட்டாமல் வெளியேறல். உயிர் ஊசலாடுகிறது என்னும் உவமைத் தொடர் இழுபறியை விளக்குவதாம். ஒரு தொல்லை போய் மறு தொல்லை, அது போய் வேறொரு தொல்லையென வாட்டமுறுவாரை இழுபறி என்பதும், ஒத்து வாழ்க்கை நடத்தமாட்டாத கணவன் மனைவியர் வாழ்வை இழுபறிப் பிழைப்பு என்பதும் உண்டு. கயிறு இழுவைப் போட்டியில் இழுபறி உண்டல்லவோ! அதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். காடு வாவா என்கிறது; வீடு போ போ என்கிறது என்னும் பழைய மொழி இழுபறியை நன்கு தெளிவிக்கும். இளக்காரம் எக்காரம் இளக்காரம் - பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல். எக்காரம் - தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல். இளம்-மென்மை, மெலிதாக நினைத்தல். வலம் - வன்மை; வலிய கை - வலக்கை; மென்மையான கை - இடக்கை, இளம் - இடம் ஆயது. பயிற்சி - வன்மை, இன்மையைக் கொள்க. எக்காரம், ஏக்காரம்; ஏக்கழுத்தம் என்பது எக்கழுத்தம் ஆயினாற்போல ஏக்காரம் எக்காரம் ஆயிற்றாம். ஏக்காரம்-இறுமாப்பு. உன் இளக்காரமும் எக்காரமும் எப்பொழுது ஒழியுமோ? என ஏக்கத்துடன் வசைமொழிவதுண்டு. ஈடு இணை ஈடு - உயர்வு இணை - ஒப்பு உயர்வாகவாவது ஒப்பாகவாவது சொல்ல முடியாத ஒன்றை ஈடினை இல்லாதது என்பர். சதைப் பிடிப்பு உடையவனை ஈடுபிடித்திருக்கிறான் என்பதையும்; தேடி வைத்திருப்பவனை ஈட்டி வைத்திருக்கிறான் என்பதையும் நினைக. ஈட்டின் பேரில் கடன் கொடுப்பவர், தாம் கொடுக்கும் பொருளுக்கும் மிகப் பெறுமான முடைய பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்வதையும் எண்ணுக. இணை - ஒப்பாதல்; இணையடி, இணைப்புறா, இணை மாலை. இணைச்செயலர் என்பவற்றால் கொள்க. ஈடுஎடுப்பு ஈடு என்பதன் பொருளை ஈடு இணை என்பதில் காண்க. எடுப்பு என்பது உயர்வு என்னும் பொருளதாம். எதில் உயர்வு என்பார்க்கு, ஈடு ஆகிய உயர்வினும் உயர்வு என்னும் பொருள் தருவது எடுப்பு என்க. எடுத்த கழுத்து, எடுப்புத் தண்ணீர், எடுப்பாகப் பேசுதல் என்பவற்றில் உயர்வுப் பொருள் உண்மை அறிக. முதல் தண்ணீர் பாய்ச்சப் பெற்ற நடுகைப் பயிர்க்கு மீண்டும் தண்ணீர் விடுதல் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அத்தண்ணீர் அப்பயிரின் வாட்டம் போக்கி நிமிர்ந்து நிற்க வைத்தற்குரியதாம் என்பதால். ஈடுசோடு ஈடு - உயர்வு என்னும் பொருளதாதலும் அதன் விளக்கமும் ஈடு இணை என்பதில் காண்க. சோடு - சுவடு; சுவடாவது ஒப்பு சுவடிப் பிள்ளைகள், சுவடிக் காளைகள், சுவடிப்பு என்பவற்றில் ஒப்புப் பொருள் உண்மை அறிக. சோடு - சோடி என்றாயிற்று. ஒரு முறியை எடுத்து,அதற்கு ஒப்பாக இன்னொரு முறியை எடுத்து இணை சேர்ப்பதையே சுவடி சேர்ப்பது என்பதையும், அதுவே சுவடியாயிற்று என்பதையும் கருதுக. இணைக்கால் களும் தடமும் சுவடு எனப்படுவதையும் கொள்க. ஈரம் சாரம் ஈரம் - ஈரமுள்ள இடம் சாரம் - ஈரமான இடத்தைச் சார்ந்த இடம் ஈரம் சாரம் இருப்பதால் இந்த மரம் வளமாக இருக்கிறது என்பர். என்ன ஊட்டமும் நில நேர்த்தியும் இருந்தாலும் நீர் வளம் இல்லையானால் என்ன ஆகும்? ஊட்டத்தை எடுத்துத் தருவதற்கும் வாட்டத்தைத் தவிர்ப்பதற்கும் அந்த நீர் தானே வேண்டும்? ஈவு இரக்கம் ஈவு - கொடை கொடுத்தல். இரக்கம் - அருள் புரிதல். சாதல், சாவு என ஆவது போல் ஈதல் ஈவு ஆகியது. பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்துவாரைக் கடிகின்றது புறப்பாடல். (127) இரக்கம் என்பது அருள் என்னும் பொருளாதல் வெளிப் படையாம். ஈவிரக்கமில்லாத பாவி எனப் பிறர்க்கு உதவானைப் பழித்தல் எவரும் அறிந்த செய்தியே. இறைவன் அருளும் ஈவும், கணக்கில் பங்கிட்டுத்தரும் ஈவும் இவண் எண்ணுக. ஈவுதாவு ஈவு - கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே. தாவு - என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. மலையடிப் பள்ளத் தாக்குகளையோ பிற பள்ளங்களையோ தாவு என்பது வழக்கு. மேடு தாவுஎன முரண் தொடையாகவும் வழங்கும். தாவு - தணிவு இங்கு தணிவு; என்பது ஒருவர் நிலைக்குத் தணிந்து சென்று அவர்க்குப் பணிவுடன் உதவுதலைக் குறித்து வந்தது. ஈவார்க்குத் தாவும் வேண்டும் என்பதை எவ்வம் உரையாமை ஈதல் என்பார் வள்ளுவர். உத்தியார்உரியார் சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது. ஒற்றைக்கு ஒற்றையை உத்திக்கு உத்தி என்பர்; ஒத்தவன் ஒத்தியாகி உத்தியானான். ஓத்தைக்கு ஒத்தை என்பதும் உண்டு. உத்தியார் - ஒத்த திறமுடைய இருவர் உத்தியார். உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா? வானத்தை வில்லாக வளைத்தவன் வேண்டுமா? என்று தலைமை ஆட்டக்காரனிடம் உத்தியாக வந்தவர் கேட்பார். அவன் எவனென்று சொல்கிறானோ அவன் தங்களுக்கு முன்னே பேசி வைத்துக் கொண்ட பெயர்ப்படி உத்தியாகப் போவான். உப்புச் சப்பு உப்பு - உப்புச் சுவை சப்பு - விரும்பத்தக்க மற்றைச் சுவைகள். உப்புச் சப்பு இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி அதனை முன்னர்க் குறித்து, மற்றைச் சுவைகளைப் பின்னர்க் குறிப்பர். சப்பு சாப்பிடுதலின் மூலம். சுவையானவற்றை விரும்பி யுண்ணுதல் உயிரிகளின் பொதுவியல்பு. முற்றுந்துறந்த துறவியரும் சுவைக்கு அடிமையாதல் உண்டெனின் பிறரைச் சொல்வானேன். செவிச்சுவை விரும்பாராய் அவிச்சுவை விருப்பாளரை மாக்கள் என்பார் வள்ளுவர். (குறள் 420) ஆனால் அவரும் உப்பமைந்தற்றால் புலவி என்பார். உருட்டு புரட்டு உருட்டு - ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல். புரட்டு - ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல். உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச் சீர் உருளை உருளற்கும், கற்றூணைப் புரட்டற்கும் உள்ள வேறுபாடு கண்டு தெளிக. கற்றூணைப் புரட்டுவார் அத்தூணுக்குக் கீழே உருளைகள் வைத்து எளிதாகப் புரட்டிச் செல்லுதல் அறிக. உருளல் புரளல் என்பவை ஏமாற்றுக் கருவியாய் உருட்டுப் புரட்டெனச் சொல்லப்படுகின்றனவாம். உருட்டினும் புரட்டு, சிக்கல் மிக்கதாம். உள்ளது உரியது உள்ளது - கையில் உள்ள பொருள்; தங்கம் , வெள்ளி, பணம் முதலியன. உரியது - மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். வழிவழியுரிமையாகவோ விலைமானம் தந்து வாங்குதல் உரிமையாகவோ வந்த பொருள். உள்ளது உரியதை விற்றாவது செய்ய வேண்டியதைச் செய்து தானே தீர வேண்டும். என்பது இதெனினும் உச்சமானது வில்லாததை விற்றாவது கொடு என்பது. வில்லாதது என்பது தாலி! விற்காததை வில்லாததை என ஆயிற்று. மனை, நிலம் முதலியன விற்பார் வாங்குவார்க்கு, இதனை வழி வழியாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும் என உரிமைப் படுத்தும் உறுதிமொழி எழுத்து வழியாகத் தருதல் அதன் உரிமையைத் தெளிவாக்கும். உளறுதல் குழறுதல்: உளறுதல் - பொருளறிவுரா முதியர் பேச்சு குழறுதல் - பொருளறிவுராக் குழவியர் பேச்சு வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத் திருந்து வருங்கால் குழலினும் யாழினும் இனி தெனத் துறவோராலும் கொள்ளப்படும். உற்றார் உறவினர்: உற்றார் - குருதிக் கலப்புடையவர் உற்றார். உறவினர் - குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர். உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல். உற்றாரையான் வேண்டேன்; ஊர் வேண்டேன் என்பதில் வரும் ஊர். ஊரைச் சார்ந்த உறவினரைக் குறித்ததாம். உற்றது உரைத்தல், உறுவது கூறல் என்பவனற்றில் உள்ள கால வேறுபாடு கருதுக. ஒட்டு உறவு காண்க. ஊடும் பாடும்: ஊடு - ஊடு ஊடாகக் கலக்கமான இடம். பாடு - பயிர் பட்டுப் போன இடம் ஊடும் பாடும் பயிர் நட வேண்டும்; மிகக் கலக்கமாக இருக்கிறது பயிர் என்பது உழவர் குடியின் உரை. ஊடு ஊடாகப் பயிரில்லாத இடம் ஊடுபாடு ஆகவும் குறிக்கப்பட்டன. கண்ணை மூடுதல் கண்பாடு எனப்படும். படுத்தல் என்பதும் அது. பயிர் படுத்துவிடுதல் பாடு எனப்படுகிறதாம். ஊடும் பாவும் ஊடு - ஊடை எனப்படும் குறுக்குநூல். பா - பாவு எனப்படும் நெடுக்குநூல். ஊடும் பாவும் சீராக வாராக்கால், இழையறுந்தும் திண்டும் திரடுமாகித் தோன்றும். ஊடு என்பது ஊடை எனவும்படும். ஊடைநூல் ஓடத்தின் வழியே, பாவின் ஊடே ஊடே சென்று வருவதாம். துணி நெய்வோர் ஊடையும் பாவையும் ஒருங்கே கண்காணித்துக் கொண்டே இயக்குவர். ஊரணியும் ஊருணியும் ஊரணி - ஊருக்கு அணித்தாக அமைந்த நீர்நிலை. ஊருணி - ஊரவர்க்குக் குடிநீராக அமைந்த நீர் நிலை. ஊர்+அணி- ஊரணி; ஊர்-உணி-ஊருணி. ஊர்க்கு அணித்தே அமைந்த நீர்நிலை. குளிக்கவும் துணி தோய்க்கவும் கலம் முதலியன கழுவவும் பயன்படுத்தப்படும். ஊர்க்கு அப்பால் குடிநீர்க்கென்றே அமைந்தது ஊருணியாம். ஊருணியும் ஊரணியும் சங்கநூல்களிலேயே இடம் பெற்றுள. எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்): எய்த்தவன் - நலிந்துபோனவன் இளைத்தவன் - களைத்துப் போனவன் இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “vŒ¤jt‹ ïis¤jt‹!என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது? என்பது நல்லவன் வினா! சடுகுடு ஆட்டத்தில் மூச்சு விட்டுவிட்டால் எச்சுப் போனான் என்பர். முற்றுப் பெறாச் சொல் எச்சம் என்பது இலக்கணம். எச்சிற்கை ஈரக்கை எச்சிற்கை - உண்டபின், கழுவாத கை. ஈரக்கை - உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை. எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமி களைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை உதறினால், அதில் ஒட்டியுள்ள ஒன்றிரண்டு பொறுக்குகள் உதிர்ந்துபோம் என்றும், ஈரக்கையை உதறினால் அதில் படிந்துள்ள நீர்த்துளி வீழ்ந்துவிடும் என்றும் எண்ணிக் கையை உதறமாட்டானாம்! இத்தகையவனை எருமைத் தோலைக் கொண்டு வடிகட்டினால் ஏதாவது வழியுமா? நெய்யரி, சல்லடை, பன்னாடையைக் கொண்டு வடிக்கட்டினால் வழியும், எருமைத் தோலைக் கொண்டு வடி கட்டினால்? எட்டுக்கும் எழவுக்கும்: (இழவுக்கும்) எட்டு - இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன். இழவு - இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன். எட்டுக்கும் சேர்வான்; இழவுக்கும் சேர்வான் என்பது பழமொழி. எட்டா நாள் கடன் செய்வார் தாய் வழியார்; பதினாறாம் நாள் கடன் செய்வார் மாமன் வழியார்; இரண்டற்கும் கூடுவார் என்பது முறைபிசகைச் சுட்டுவதாம். கூடத்தகாத இடத்துக்கு கூடும் இயல்பினரை இவ்வாறு சுட்டுவது வழக்கு. தனக்கென்று எவ்வொரு திட்டமும் கொள்கையும் இல்லாமல் எங்கேயும் சேர்ந்து எப்படியும் வாழ்வாரை இழித்துரைப்பதற்கு இப்பழமொழியை ஆள்வர். எடுப்பும் தொடுப்பும் எடுப்பு - ஒரு வினாவை எழுப்பவது அல்லது ஒரு பாடலின் முற்பாதியை இயற்றுது. தொடுப்பு - எழுப்பிய வினாவுக்குத் தொடுத்து விடை தருவது அல்லது பாடலுக்குரிய பிற்பாதியைத் தொடுத்து இயற்றுவது. எடுப்பு-முற்பட எடுப்பது; தொடுப்பு-எடுப்புக்கு ஏற்ப உடனே முடிப்புத் தருவது. வினா விடைப்பாடல்கள், விடுகதைப் பாடல்கள், மனக் கணக்குகள் என்பவனெல்லாம் எடுப்பு தொடுப்பு எனவும் கூறப்படும். இன்னவாறு தொடங்கி இன்னவாறு முடிக்க வேண்டும் என்றவாறு ஒருவரே எடுத்து முடிப்பதும் உண்டு. இரட்டையர்கள் எடுப்பு முடிப்பு, இருவரும் இணைந்தே செய்தவை. பொன்னுசாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும் வினாவிடை வெண்பா எடுப்பு முடிப்பாகப் பாடினார். காளமேகமோ கேட்டவாறெல்லாம் பாடினார். எத்தும்-ஏமாற்றும்: எத்து(எற்று )- எதைச் சொன்னாலும், ஏற்காமல் எற்றிவிட்டு (தள்ளி விட்டு)ப் போதல். ஏமாற்று - நம்புமாறு செய்து நம்பிக்கைக் கேடு ஆக்குதல். எத்தும் ஏமாற்றும் அவன் சொத்து எத்துவான் இல்லா விட்டால், ஏமாற்றுவான்; அது தான் அவன் தொழில் உன் எத்தும் ஏமாற்றும் இங்கே செல்லாது என்பன வழங்கு மொழிகள். எற்றுதலால் மனத்துயர் மட்டுமே உண்டு; ஏமாற்றுதலால் பொருள் இழப்பும் அதன் வழியே மனத்துயரும் உண்டு. அதனால் எத்தனோடு சேர்ந்தாலும் ஏமாத்துக் காரனோடு சேராதே என்பர். எதிரும் புதிரும் எதிர் - எதிர்த் திசை புதிர் - எதிர்த்திசைக்கு எதிர்த் திசை. இருவர் எதிரிட்டுப் போதலையும், பேசுதலையும், இருத் தலையும் முறையே எதிரும் புதிருமாகப் போகின்றனர், எதிரும் புதிருமாகப் பேசுகின்றனர், எதிரும் புதிருமாகவே இருக்கின்றனர் என்பர். புதிர் என்பது எதிர்க்கு எதிராயது. விடுகதையைப் புதிர் என்பது வழக்கு. புதிர் போடுதல் என்பதும் உண்டு. தொல்காப்பியர் நாளில் பிசி எனப்பட்டதே பின்னர் புதிர் என்பதாகவும் விடுகதையாகவும் வழங்கப் படுகின்றதாம். விடுகதை மாறி மாறிக் கேட்டு விடுவிக்கப் பெறுவது என்பது அறிந்தால் புதிரின் பொருள் புலனாம். எதுகை மோனை: எதுகை - இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை. மோனை - முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. எதுகை மோனை இல்லாத பா பாவன்று, பாவின் அழகு எதுகை மோனைகளில் தொக்கிக் கிடத்தல் கண்கூடு. எதுகை மோனை, அறியார் வாக்கில் எகனை மொகனை என வழங்கப் படுகின்றது. செய்யுள்களுக்கு உரிய எதுகை மோனை பழமொழி களிலும் பயில வழங்கும். ஆடிப்பட்டம் தேடி விதை, சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத்தங்கம்- இவை எதுகை. தைப்பனி தரையைப் பிளக்கும்-இவை மோனை. எரிச்சல் நமைச்சல்: எரிச்சல் - காந்தல் நமைச்சல் - தினவு எடுத்தல் கண்ணெரிச்சல் என்பது கண் காந்துதலாம். அது வெப்பத்தால் ஏற்பட்டதாம். வயிற்றெரிச்சல் என்பதோ மனஎரிச்சலைச் சுட்டி நிற்பதாம். ஊறுதலும் அதனால் உண்டாகும் வலியும் தினவு அல்லது நமைச்சலாம். செந்தட்டிச் செடி தட்டுப்பலாச் செடி ஆகியவை பட்ட இடம் கடுமையான நமைச்சல் உண்டாக்கும். நமைச்சலுக்குச் சொறிந்தால் புண்ணாகித் துன்பம் மிகும். ஏங்கல் தாங்கல் (ஏங்குதல் தாங்குதல்) ஏங்கல் - ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடியநிலை. தாங்கல் - ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவும் நிலை. உனக்கு என்ன! ஏங்கல் தாங்கலுக்கு ஆள் இருக்கிறார்கள் என்பது வழக்கு. ஏங்கல் தன்னிலையில் தாழ்வு; தாங்கல் பிறர் முட்டுப்பாட்டுக்குத் தாங்கியாக வேண்டிய இக்கட்டு. இவ்விரு நிலைக்கும் உதவியாக இருப்பவன் ஏங்கல் தாங்கலுக்கு உதவுபவனாம். ஏங்கலுக்கு உதவுவாரும் தாங்கலுக்கு உதவுதல் அரிது. ஆகலின் அவ்வருமை கருதியே ஏங்கல் தாங்கலுக்கு உதவுவான் என்று சிறப்பிப்பர். தாங்குதல் என்பது வீழ்வாரை எடுத்து நிமிர்த்துதலாம். சுமைதாங்கி, குடிதாங்கி, அறந்தாங்கி என்பவற்றை எண்ணுக. மண்தாங்கி எனக் கூரைவீட்டு அட்டளைக் கம்பு உள்ளதையும் அறிக. ஏச்சுப் பேச்சு: ஏச்சு - பழித்தல். பேச்சு - திட்டுதல் ஏசுதல் - ஏச்சு; பேசுதல்-பேச்சு ; ஏசி இடலின் இடாமை நன்று என்றார் ஔவையார் . ஈவான் இகழாமை வேண்டும் என்பது வள்ளுவம். இகழ்தல் வேறு; திட்டுதல் வேறு. முன்னது குறை கூறல்; பின்னது வசை கூறல். வசைச் சொல்லைத் தொல்காப்பியர் வை இயமொழி என்பார். இசை வசை என்னும் முரண் எவரும் அறிந்ததே. பேச்சு, பொதுமைக் குறிப்பில் இருந்து நீங்கி வசைப் பேச்சை இவண் சுட்டியது. பேச்சு என்பது திட்டுதல் பொருளில் இதுகால் மிகுதியாக வழங்குகின்றது. ஏட்டிக்குப் போட்டி: ஏட்டி - விரும்புகின்ற ஒன்று. போட்டி - விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று. ஏடம், ஏடணை என்பவை விருப்பம்; விரும்பும் ஒன்று ஏட்டியாம்; விரும்பி முயலும் ஒன்றற்கு எதிரிடையாக மற்றொன்று முட்டும்போது தானே போட்டி தொடங்குகின்றது. போட்டியில் நல்ல போட்டியும் அல்ல போட்டியும் உண்டு. ஏட்டிக்குப் போட்டி உள்ளச் சிறுமையால் ஏற்பாடுவதாம். போட்டிக்கு முடிவு உண்டோ? போட்டா போட்டி யாகி ஒன்றன் அழிவும், ஒன்றன் ஆக்கம் போன்ற அழிவும் கூடி இரண்டும் அழிந்து படவேயாகும். ஏணும் கோணும்: ஏண் - உயரம் கோண் - வளைவு அல்லது கோணல். ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் சேண் என்பதிலும் அறிக. உயர்ந்த தோளை ஏணுலாவிய தோள் என்றார் கம்பர். கோணல் வளைவாதல், கோணுதல், கூன், கூனி, கூனை, குனிவு முதலியவற்றில் கண்டு கொள்க. கோணற்கால், கோணல் நடை, கோணன் என்னும் ஆட்சிகளில் கோணல் தெளிவாம். ஏமம் சாமம்: ஏமம் - போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை. சாமம் - நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை. ஏமாம்-பாதுகாப்பு; ஏமப்புணை என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில் செல்வார் கலம் கவிழநேரின் ஏமப்புணை கொண்டு உய்வர். ஏமாஞ்சாராச் சிறியவர் என்று சொல்வார் வள்ளுவர். ஏமம் அரண்பொருள் தருதல் உண்டு (திருக்.815). யாமம் என்பது சாமம் ஆயிற்று. அஞ்சாமல் தனி வழியே போக வேண்டா என்பது ஔவையார் மொழி. ஆனால் பாதுகாப்பில்லாத நண்பரொடு செல்லுதலினும் தனிமையில் போதல் சீரியது என்பது வள்ளுவம். (814) ஏமம் சாமம் பாராமல் உதவிக்கு நிற்பான் என்பதொரு பாராட்டுரை. ஏமம் சாமம் பார்க்காமல் வராதே. ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப) ஏய்ப்பு - ஏமாற்றுக்கு உட்படுதல் சாய்ப்பு - சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல். அவன் ஏப்ப சாப்ப ஆள் இல்லை என்பதும் என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து வருகிறாயா? என்பதும் கேட்கக் கூடிய வழக்குகள். ஏய்ப்புக்கு சாய்ப்புக்கு ஆட்படுபவன் ஏமாளி எனினும், அதன் மூலம் ஏமாறுதல் வீழ்தல் இரண்டையும் தழுவியதாம். ஏமாற்றுதல் போல, ஏமாறுதலும் இழிவு தானே! ஏமாறாப் பெருமித மொழி இது. ஏரும் கலப்பையும்: ஏர் - ஏர்த் தொழில் கலப்பை - ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும் பெயர் வழங்கும் வழக்கம், உழவை விளக்கும். திருவள்ளுவர் கூறியது உழவு என்பதே. மேல்மண் கீழ்மண் கலக்க வைக்கும் கருவி கலப்பையாம். கலப்பைக்கும் ஏர் எனப் பெயர் உண்டு. ஏர்க்கால் என்பது குத்தியில் நுழைக்கப் பெற்று நீண்டு நுகக் கோலுக்குச் செல்லும் தடியாம். ஏர் என்பது உழுதல் தொழிலில் வருவதை ஏரினும் நன்றா எருவிடுதல் என்னும் குறள் தெளிவிக்கும். (குறள் 1038) ஏழை எம்போகி (எண்போகி): ஏழை - ஏழ்மைக்கு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவன். எண்போகி - எண்ணத் தக்க பேறு எதுவும் இல்லாதான். ஏழை எம்போகிக்கு இரங்க வேண்டும் என்று கூறுவர். ஏழைக்கு உதவுதலை வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்பதால் அருள்வார் வள்ளுவர். (குநன். 221) வறுமையோடு உறுப்புக் குறையும் உற்றார் எண்போகி யாவர். போகி-போயவர், காணார் கேளார் கால்முடமாயோர், பேணா மாந்தர் பிணி நோய் உற்றோர் யாவரும் வருக என்னும் மணி மேகலையார் அழைப்பில் இடம் பெறுவர் எண் போகியர். ஏழை எளியவர்: ஏழையர் - ஏழ்மைக்கு ஆட்பட்டவர். எளியவர் - பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர். ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும், எளிமைக்கும் ஆட்படுத்துபவராக ஆகி விடக்கூடாது. உயர்த்தக் கடமைப்பட்டவர் அதனைச் செய்யாததுடன் தாழ்த்தவும் முனைதல் பெருந்தவறாம். ஏழைமையும், எளிமையுள் ஒன்று. ஆனால் எளிமைப்படுபவர் உளர். எளிதென இல்லிறப்பான் என்னும் வள்ளுவம் எளிமையை விளக்கும். (குறள் 145) ஏழை பாழை: ஏழை - வறுமையாளி பாழை - வெறுமையாளி ஏழையின் விளக்கம் ஏழை எம்போகி என்பதில் காண்க. பாழ் என்பது பழமையான சொல்; வெற்றிடமாம் வான் வெளியைப் பாழெனக் கூறும் பரிபாடல். பாழாய்ப் போன பாவி பாழும் பழியும் என்பன வசையுரையும், இணைச் சொற்களுமாம். ஏழை பாழைக்கு உதவுதல் வேண்டும் என்பது அறவுரை. வறுமை என்பது இன்மைப் பொருள்தரினும் முழுவதும் இன்மை யன்றாம். ஆனால் வெறுமை - அறவே இன்மையாம். ஏறக்குறைய: ஏற - அளவுக்குச் சற்றே உயர. குறைய - அளவுக்குச் சற்றே குறைய. மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே ஏறக்குறைய என்பர். இது, ஏறத்தாழ எனவும் வழங்கப் பெறும். இதனுடன் சற்றே ஏறக்குறைய சற்றே ஏறத்தாழ என்பதும் உண்டு. குறிப்பாக எண் தொடர்பான செய்திகளிலேயே ஏறக்குறைய முதலியன பெரிதும் வழங்கப்படும். ஏறக்குறைய ஈராயிர உரூபா செலவாகும் என்பது போலவரும். ஏறக்குறைய முடிந்த நிலை தான்என்பது போல அருகி வழங்கும். கூடக் குறையக் காண்க. ஏறு மாறு : ஏறு - ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல். மாறு - மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல். ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் - இறங்குதல்; இறங்கும் போது மாறுதல் - ஏறுதல்; இவை ஏறுக்குமாறு எனப்படும். ஏறுமாறாக நடப்பாளே யாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள். என்பது ஔவையார் தனிப்பாடல். ஏறுக்கு மாறு எவருக்கும் பயனாகாதது. மெய்யாக, இணை வாழ்வுக்கு ஆகுமா? ஏறுமாறு - ஏற்ற மாற்றமுமாம். ஏனோ தானோ: ஏனோ - என்னுடையதோ தானோ - தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான், அக்கறையும் காட்டான். இவனோ என்னுடையது என்று அக்கறைக்காட்டிச் செய்வானும் அல்லன்; அவனுடையது என்று அறவே புறக்கணிப்பானும் அல்லன். இரண்டும் கெட்டனாய்ப் பட்டும் படாமல் செய்கிறான் என்பதாம். என் என்பது ஏன் என நீண்டது. ஏன் பொருள் ஏன் எண்ணம் என நீள்வதுபேச்சு வழக்கில் உள்ளனவே. தான் என்பது படர்க்கைப் பெயர். ஒட்டு உறவு: ஒட்டு - குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார். உறவு - கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு. தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள் என்பார் ஒட்டு ஆவர். கொண்டு கொடுத்த வகையால் நெருக்கமாவார் உறவு ஆவர். இனி உற்றார் உறவு என்பதில் உற்றார் எனப்படுவார் ஒட்டு என்க. கேளும் கிளையும் என்பதிலும் கேள் என்பது ஒட்டையும், கிளை என்பது உறவையும் குறிக்கும். ஒரு வேரில் இருந்து நீர் பெறும் மரம் செடிகள் ஒட்டு எனப்பெறல் அறிக. ஒட்டார்-பகைவர் எனப்படுவார். உற்றார் உறவு காண்க. ஓடை உடைப்பு: ஓடை - நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம். உடைப்பு - ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ள மாவது. நீர் ஓட்டத்தால் அமைந்தது ஓடை; நீர்ப்பெருக்கெடுத்து உடைதலால் அமைந்தது உடைப்பு. ஓடை - பள்ளம் என்னும் பொருளில், யானையின் நெற்றிப் பள்ளத்தை ஓடை என்பதாயிற்று. உடைதல் மனம் உடைதல், படை உடைதல் முதலிய உடைதலுக்கும் விரிந்தது. ஒண்டுக்குடி ஒட்டுக்குடி ஒண்டு (ஒன்று)க்குடி - வீட்டோடு வீடாக வைத்துக் கொண்டுள்ள குடும்பம் ஒண்டுக்குடி. ஒட்டுக்குடி - வீட்டுக்கு அப்பால், ஆனால் வீட்டு எல்லைக்குள் தனியே வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒட்டுக்குடி ஒன்றாகிய குடும்பத்தின் சமையல் வரவு செலவு முதலியவை எல்லாம் ஒன்றானவை. ஒனர்டுக்குடி ஒட்டுக் குடியில் அவையெல்லாம் தனித்தனியானவை. ஆனால் வீட்டு எல்லைக்குள் இருத்தல் என்னும் இடநெருக்கம் மட்டுமே ஒரு வீட்டுத்தன்மை குறிப்பதாம். ஒண்ணடி மண்ணடி:(ஒண்ணடி-ஒன்றடி) ஒண்ணடி - ஒன்று மண்ணடி - மண் அடி என்பது அடியைக் குறிக்காமல் சார்ந்த இடத்தைக் குறித்து வந்தது. இரயிலடி தேரடி செக்கடி என்பவனற்றை அறிக. எந்த ஒன்றுக்கும் மண்ணுக்கும் உள்ள சார்பு மிக அழுத்த மானது. விட்டுப் பிரியாத, விட்டுவிட இயலாத சார்பு; ஒருகால் விட்டு விலகினும் எதிர்ப்பாற்றலால் நேர்வது அது. பின்னே ஒரு கால் அவ்வெதிர்ப்பாற்றல் விலகியதும் பற்றி நிற்கும் ஈர்ப்பு அதற்கு உண்டு. இணைந்திருக்கும் உறவுகளை ஒண்ணடி மண்ணடி என்பர். எப்படி ஒண்ணடி மண்ணடியாக இருந்தார்கள்;இப்படிச் சண்டை போடுகிறார்களே என்பர். வேறுபாடன்மை சுட்டுவது ஒண்ணடி மண்ணடியாம். ஒண்ணும் மண்ணும் என்பதும் இது ஒற்றை சற்றை : (ஒத்த சத்த) ஒற்றை - தனிமை சற்றை - கயமை அல்லது கீழ்மை ஒற்றை சற்றையாய்ப் போகாதே, ஒற்றை சற்றையில் போகாதே என்பன போல ஒற்றை சற்றை வழக்கில் உள்ளது. தனித்துப் போதல் ஒற்றையாம்; தகுதி இல்லாதவர் துணையுடன் போதல் சற்றையாம். கூடார் கூட்டைப் பார்க்கிலும் தனிமையே நல்லது என்பது கண்கூடு. ஒற்றையில் செல்வதையும், தீயவர் துணையுடன் செல்வதையும் விலக்க வந்தது இவ்விணைமொழி. ஒன்றுக்குள்ளே ஒன்று: (ஒண்ணுக்குள்ளே ஒண்ணு) ஒன்று - ஒரு பெரும் பிரிவு உள்ளே ஒன்று - பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை, பிளவு, உரசல் முரசல், ஏற்பட்டால், ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; பொறுத்துப் போக வேண்டாமா? என்பர். அவன் யார்? Úah®? என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? என்றும் கூறுவர். இனத்துள் அல்லது குடும்பத்துள் பிளவு கூடாது என்னும் பெருநோக்கில் எழுந்தது இது. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்கக் கண்ட பண்டைப் புலவர் நீயும் சோழன் அவனும் சோழன்; இப்படியா பகைத்து நிற்பது? என்று கேட்கவில்லையா? அக் கேள்விக் குள்ளே இருப்பது ஒன்றுக்குள்ளே ஒன்று என்பதே. ஓங்கு தாங்கு: ஓங்கு - உயரத்தில் மிக்கிருத்தல். தாங்கு - கனத்தில் மிக்கிருத்தல் ஓங்கு தாங்கான மரம் என்றும் ஓங்கு தாங்கான ஆள் என்றும் வழங்குவது உண்டு. ஓங்குதல் மட்டுமானால், நெட்டப் பனை கோக்காலி, கொக்கு என்று பழிக்கப்படும். தாங்குதல் மட்டுமானால் செக்குரல், குந்தானி, புளிமூட்டை கடகப் பெட்டி இன்னவாறு பழிக்கப்படும். நல்ல உயரமும், அதற்கேற்ற கட்டான உடற்கனமும் வாய்த்திருப்பின் பாராட்டப்படும். அதுவே ஓங்கு தாங்கு என்பதாம். சங்கநாள் பாரி ஓங்கு தாங்காக இருந்ததால் பாரி என்னும் பெயர் பெற்றான். அவன் இயற்பெயர் மறையப் புகழ்ப் பெயரே நின்றதாம். ஓசை ஒலி: ஓசை - பொருளற்றது ஒலி - பொருளுற்றது. ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே என்பது தேவாரம். நீரின் சலசலப்பு; காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழக்கு இவையெல்லாம் ஓசையாம்; உயிரிகள் அல்லா இவற்றின் ஓசையில் உணர்வு சிறிதும் இன்றாம்; உணர்வோடு கூடா ஒன்றில் பொருளாய்வது பொருந்துமோ. உயிரிகளின் இன்பு, துன்பு, அச்சம், வெகுளி, அரவணைப்பு அரற்று ஆய உணர்வு வெளிப்பாடாகவும், மொழிவல்லார் குறிப்பு, வெளிப்படை எனக் கொண்டு உணர்த்தியும், உணர்ந்தும் வரும் பொருள் வெளிப்பாடாகவும் கிளர்வென வெல்லாம் ஒலியாம். ஓட்டை உடைவு: ஓட்டை - துளை; துளை என்பது வெடிப்பு கீறல் முதலிய வற்றையும் தழுவும். உடைவு - உடைந்து போனது. துண்டானது, இரு கூறானது ஓட்டை விழுந்த கலங்களையும் ஒரு வகையாகப் பயன் படுத்திக் கொள்வர். ஆனால் உடைந்து போனதைப் பயன் படுத்துவார் இலர். அவ்வுடைவும் கைபிடி. கழுத்துப் பகுதியில் இருப்பின் பிறிதொன்று வாங்கிக் கொள்ள இயலாதார் பயன்கொள்வது உண்டு. ஓட்டை உடைவு பழுதுபார்க்கவும் ஈயம் பூசவும் வருவார் உண்டு. அவர்கள் ஓட்டை உடைசலை நீட்டி முழக்கிக் கேட்பது நாடறிந்தது. ஓய்வு ஒழிவு: ஓய்வு - வேலையின்றி ஓய்ந்திருத்தல். ஒழிவு - ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல். ஓய்வு ஒழிவு இல்லை எனப்பலர் குறைப் பட்டுக் கொள்வர். சிலர்க்கோ ஓய்வு ஒழிவு அன்றி வேலையே இல்லை என்னும் நிலைமையும் உள்ளது. ஓய்வு என்பது படுத்துக் கொள்வதே என்று கருதுவாரும் உளர். அவர் ஓய்வு சாய்வு என்னும் இணைச் சொல்லுக்கு இலக்கியமானவர். ஓரம் சாரம்: ஓரம் - ஒன்றன் கடைசிப் பகுதி அல்லது விளிம்பு. சாரம் - கடைசிப் பகுதியை அல்லது விளிம்பைச் சார்ந்த இடம். ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரஞ் சாரம் ஆயிற்றாம். ஓர் அம் என்பது ஓரகம் என்பதன் தொகுத்தலாம். ஓரிடம் என்னும் பொருள் தரும் இச்சொல், ஒன்றன் எல்லை முடிவைக் குறித்து வந்தது. அதனைச் சார்ந்து அப்பால் உள்ள இடம் சாரமாம். ஓரம் சாரமாகப் போ என்பது வழக்கு. சார்பு, சாரல், சாரியை, சாரம் (கட்டட வேலைக்குப் பயன்படுத்தப் படும் பரண்) என்பவற்றைக் கருதுக. ஆக ஓரிடத்தின் உட்கடை ஓரம் புறக்கடை சாரம் ஆம் எனக் கொள்க. ஓரம் சாரம் ஆகாது என்பது நடுவுநிலை பற்றிய கருத்தில் வந்தது. ஓவாய் ஒழுவாய்: ஓவாய் - பல் போனவாய். ஒழுவாய் - நீர் வழியும் ஓட்டைவாய். ஓ-ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது. பல் ஒழிந்து இடைவெளிபட்டுப் போனவாய் ஒவாய் எனப்படும். ஒழுவாய்-ஒழுகும் வாய், ஒழுவாய் என நின்றது. பல் போய் பின்னர்த் தடையின்றி நீர் ஒழுகுதல் உளதாகலின் ஒழுவாய் எனப்பட்டது. ஓவாயன் ஒழுவாயன் என்பவை நகையாண்டிப் பெயர்கள். இப்பெயர்களாக நிலைத்தாரும் உளர். போவாய் பொழுவாய் காண்க. கக்கல் கழிச்சல்: கக்கல் - வாந்தியெடுத்தல். கழிச்சல் - வயிற்றோட்டம் போதல் ஒருவரைக் கக்கல் கழிச்சல் ஒரே வேளையில் இருந்து வாட்டினால் அதனை வாந்தி பேதி என்பர். பேதி வயிற்றோட்டமாம். கழிதல் - மிகுதல், விட்டுப் போதல், அகலுதல் என்னும் பொருளுடையது. கழிவதைக் கூட விட்டு விடலாம். ஆனால் நாளையும் பொழுதையும் வீணே கழிப்பாரை ‘என்ன பிறவி? என்று ஏசாமல் தீராது! இத்தகையரைத் தானோ கழிசடை என்பது! கக்கலும் விக்கலும் கக்கல் - வாந்தியெடுத்தல் விக்கல் - குடலுக்குச் செல்லாமல் தொக்கிக் கொள்ளுதல். கக்கலில் ஒலியுண்டாகும்; விக்கலில் திணறலுண்டாகும். இனி விக்கல் நீர் வேட்கையால் உண்டாவதாயின் அதற்கு ஒலியுண்டாம். கக்கல் கக்குவான் நோய் என ஒரு நோயாகக் குழந்தைகளை ஆட்டிப் படைப்பதுண்டு.விக்கலும் நோயாக முதியவர்களை வாட்டுவதுண்டு. முடியாத நிலையில் படுத்தவரைக் கக்கலும் விக்கலுமாகக் கிடக்கிறார்; எப்பொழுதோ தெரியாது எனக் கைவிரிப்பதுண்டு. கங்குகரை: கங்கு - எல்லை முடிவு. கரை - எல்லை முடிவுக்கு அடையாளமாம் வரம்பு. கங்கு கரை இல்லை கங்குகரை காணாத கடல் என்பவை கங்குகரை இணையைச் சுட்டும். கங்கும் இல்லை; கரையும் இல்லை என்று கொள்க. கங்காவது ஓர் எல்லையின் கடைசி; கரையாவது அக்கடைசி எல்லையில் வைக்கப்பட்ட வரப்பு அல்லது கரை. கஞ்சிதண்ணீர்: கஞ்சி - நீராளமாகக் காய்ச்சப் பெற்ற பொறுக்கும் நீரும். தண்ணீர் - சோற்றில் விட்டு வைத்துக் காடியான நீர். கஞ்சி, அன்னப்பால் எனப்படும். அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்குமம்மா? என்பது வறுமையர் வினா? கஞ்சிப்பசை, கஞ்சிக் கலயம், கஞ்சித்தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. கஞ்சியை அன்னசாரக் கஞ்சி என்றும் மருத்துவர் சுட்டுவர். தண்ணீர் என்பது சோற்றுத் தண்ணீர் ; நீற்றுத் தண்ணீர் என்பதும் அது. புளிப்புமிக்கதாகலின் அது காடி எனவும் படும். காடிக் கஞ்சியானாலும் மூடிக் குடி என்பது பழமொழி. கஞ்சி தண்ணிக்கு வழியில்லை என்பது வறுமை ஒலி. கட்டி முட்டி: கட்டி - கட்டபட்ட ஒன்று கட்டி. முட்டி - கட்டி உடைந்து உண்டாய துண்டு முட்டி. கருப்புக்கட்டி, வெல்லக்கட்டி, செங்கற்கட்டி, தங்கக்கட்டி இவற்றில் கட்டியின் பொருளை அறிந்து கொள்க. இனி மண்ணாங்கட்டி என்பது ஒரு பொருளும், வசையுமாய் அமைந்ததாம். செங்கற்கட்டி உடைந்ததைச் செங்கல்முட்டி என்பது வழக்கு. உழவடையில் கட்டி முட்டி, தட்டுதல் ஒரு பகுதியாம். கூழ், களி கிண்டும் போது கட்டிபடாமல் இருக்கக் கவலைப் படுவர். அதில் பெரிய கட்டி சிறிய கட்டி இருந்தால், என்ன கட்டியும் முட்டியுமாக இருக்கிறது என்பது வழக்கு. இது கட்டாணி முட்டாணி எனவும் வழங்கப்படும். கட்டுக் காவல்: கட்டு - கோட்டை, அகழ்,சுவர் முதலிய அரண் கட்டாகும். காவல் - காவலர், நாய் ஆகிய கண்காணிப்பு காவல் ஆகும். கட்டுமானம் அமைந்தது கட்டு எனப்பட்டது. பழங்காலக் கோட்டைகளைக் கவனித்தால் கட்டு காவல் அமைதி புலப்படும். அகழ், அரண், கோட்டை என்பவை இருப்பினும், அவற்றையும் தகர்த்தோ, கடந்தோ வந்து அழிவு செய்யும் பகைவர் இருப்பர். அவரைத் தடுத்து நிறுத்தவும் அழிக்கவும் காவலும் வேண்டிய தாயிற்று. கோட்டை வாயிலில் காவலர் மேடையும் இருத்தலைக் கண்டு தெளிக. அதன் எச்சம் இக்கால வளமனை அலுவலகங்கள் கருவூலங்கள் ஆகியவற்றில் இருத்தலை அறிக. கட்டுமட்டு கட்டு - வருவாய்க்குத் தக்கவாறு கட்டுப் படுத்திச் செவ விடல். மட்டு - எவ்வளவு தான் வருவாய் வந்தாலும், திட்டப் படுத்தி இதற்கு இவ்வளவே என்று மட்டுப்படுத்தி (எல்லை அல்லது அளவு படுத்தி)ச் செலவிடல். கட்டுமட்டு உடையன்; கட்டுமட்டாகச் செலவு செய்வான் என்பன வழக்குகள். கட்டுமட்டானவன் எனப் பொதுவாகக் கூறுவதும் உண்டு. இனி இதனைக் கட்டுமெட்டு என்பதும் உண்டு. கடன் உடன்: கடன் - காலம் குறித்து வட்டி மேனி குறித்து ஒப்படை தந்த பெறும் தொகை. எழுத்துறுதியோ வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு. உடன் - கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம் வந்தவுடன் தருவதாகிய தொகை. வட்டியற்றது இது. கடன் உடன் வாங்கியாவது செய்வதைச் செய்துதானே தீர வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுவதும். அவரவரே மேற்கொள்வதும் வழக்காறாகும். இத்தகு முனைப்பால் இடர்ப் படுவார்மிகப்பலர். வேண்டாச் செலவுக்கும் வெட்டிச் செலவுக்கும் இம் முனைப்புக் காட்டுவார் நிலைமை என்னாம்? கடன் இல்லாக் கஞ்சி கால்வயிற்றுக் கஞ்சி என்றும் கடன் கொடுத்தான் நட்பை உடன் கெடுத்தான் என்றும் வழங்குவன வற்றை அறிய வேண்டுமே. கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது கம்பன் தலையில் கட்டப்பட்ட எவனோ ஒரு கொம்பன் பாட்டு. இராமாயணத்தில் இல்லாதது. கடுவாய் புலி: கடுவாய் - கொடுமையான வாயையுடைய பெரும்புலி. புலி - உடலில் வரியும் புள்ளியும் உடைய சிறுபுலி. வாயைப் பிளக்குதடி- கையுறை, வாளும் உருவுதடி என்பார் கவிமணி. இது கடுவாய்ப் புலியாம். சிறுபுலி சிறுத்தை எனப்படும். கடுவாய்ப் புலி என்றால் கடுவாய் ஆகிய புலி என்றாம். கடுவாய் புலி என்றால் கடுவாயும் புலியும் என்றாம். கடுவாய் புலி காட்டில் திரியும்; கவனித்துப்போ என்பது பட்டறிவாளர் உரை. கடை கண்ணி: கடை - தனித்தனியாய் அமைந்த வணிக நிலையம். கண்ணி - தொடராக அமைந்த கடை வீதியும் சந்தையும். கடை - இடம் என்னும் பொருள் தரும் இச்சொல் வாயில் எனப் பொருள் பெற்றது. தலைக் கடை, புறக்கடை அல்லது புழைக்கடை என்பவற்றைக் கருதுக. கடையிலே வாயிலிலே -வணிகம் செய்தமையால் அதற்குக் கடையெனப் பெயர் வந்தது. கண்ணி-இணை இணையாகத் தொடுக்கப்பட்ட அல்லது வரிசையாய் அமைந்த கடைத் தெருவும் சந்தையும் கண்ணி எனப்பட்டன. கண்ணிணை போல் அமைக்கப்படும் கண்ணி என்னும் பாவகையையும், பூக் கண்ணியையும் வலைக் கண்ணியையும் கருதுக. கண் காது: கண் - கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல். காது - காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். கண்ணும் காதும் வைத்துப் பேசுவான் என்பதில் இக்குறிப்புண்மை அறியலாம். காணாததையும், கேளாததையும் கண்டது போலவும் கேட்டது போலவும் இட்டுக் கட்டிக் கூறுதல் சிலர்க்கு இயல்பு. அத்தகையரைக் கண் காது வைக்காமல் உன்னால் பேச முடியாதே என்பர். கண்ணும் காதும் அருகிலிருந்தும் காதினைக் கண் பாராது. கண்ட துண்டம் கண்டம் - கண்டிக்கப் பெற்றது கண்டம். துண்டம் - கண்டத்தைத் துண்டிக்கப் பெற்றது துண்டாம். கண்டம் பெரியது; துண்டம் கண்டத்தில் சிறியது என்க. கண்ட கோடரி என்பது கோடரியுள் ஒன்று. மரம் வெட்டுவார் கண்டி வைத்து வெட்டுதல் கண்கூடு. உப்புக் கண்டமும், நிலப்பிரிவாம் கண்டமும் அறிந்தவையாம். துண்டம்-துண்டிக்கப்பட்டது எனினும் இவண் கண்டித்ததைத் துண்டித்தது என்க. துண்டு, அறுவை, வேட்டி முதலியவற்றைக் கருதினால் பாவில் இருந்து அறுத் தெடுக்கப்படுதலால் பெற்ற பெயர்கள் என்பது புலனாம். கண்ட துண்டத்தைத் துண்ட துண்டம் என்பார் அருணகிரியார். கண்டது கழியது கண்டது - கண்ணில் கண்ட பொருள்களும் கையிற்குக் கிடைத்த பொருள்களுமாம். கழியது - உடலுக்கு ஒவ்வாத பொருள்களும் பதனழிந்து போன பொருள்களுமாம். கண்டதைக் கழியதைக் குழந்தைகள் மட்டும் தின்பதில்லை. வளர்ந்த பின்னரும் வாழ்நாளெல்லாம் உணவு வகையில் மட்டும் இருப்பார் உளரல்லரோ! அவர் பிறப்பின் பயனே உண்டியிலே தான் இருக்கிறது என்று கொண்டவர்கள். அவர்கள் எது கிடைத்தாலும் அடைத்துக் கொண்டே இருப்பர். அவர்கள் உடலுக்கு ஒவ்வாததும் உண்பர்; உணவுக்கு ஆகாததையும் உண்பர். பிறகு மருந்து மாத்திரைக்குத் திரிவர். ஆயினும் கண்டது கழியதை விடவே மாட்டார். கண்டதைத் தின்பது கேடு; அதனினும் கேடு கழியதைத் தின்பது. கண்டதை; கழியதைத் தின்னாதே என்பதோர் அறிவுரை. கண்ணீரும் கம்பலையும் கண்ணீர் - அழுகை. கம்பலை - அரற்றுதல். அழுது அரற்றுதல் என்பது கண்ணீரும் கம்பலையுமாக எனச் சொல்லப்படும். கண்ணீர் என்பது வெளிப்படை. கம்பலை அரவம், ஒலி, அரற்று என்னும் பொருள் தருவது. ஆரவாரமிக்க சிறுவரும் சிறுமியரும் கம்பலை மாக்கள் எனப்படுவர். (சிலம்பு. ஊர் சூழ்.29) கண்ணும் மண்ணும்: சிறுவர் விளையாட்டில் மகிழ்வுப் பெருக்கோ, தோல்விக் கிறுக்கோ வந்துவிட்டால் மண்ணையள்ளி மாறி மாறி வீசுதல் உண்டு. அப்பொழுதில் மண் தலையில் படும்; உடலில் படும்; கண்ணிலும் படும். புழுதியாடிய யானை போலச் சிறார் விளங்குவர். சிறுமியர்க்கும் இவ்வாடலில் விலக்கு இல்லை. கலித்தொகைத் தலைவி ஒருத்தி நகையாண்டி செய்த முதிய எருமை போல்வான் ஒருவன் கண்ணில் மண்ணை எறிந்து கதறச் செய்த காட்சி யுண்டு. அவ்வளவு பழமையுடையது கண்ணும் மண்ணும் ஆட்டம். கண்ணுக்கு ஒரு துகளும் பேரிடையூறாம். மண்ணுக்கு என்ன வந்தது? இரண்டையும் ஒன்றாக எண்ணிச் சிறுதனம் செய்வாரைக் கண்ணும் மண்ணும் தெரியாமல் இப்படியா ஆடுவது? என்று சினத்தால் தட்டிக் கேட்பதும் தட்டுவதும் உண்டு. இன்னொரு வகையாலும் கண் மண் வழக்குண்டு; மேலே காண்க. கண்ணும் மண்ணும் கண்ணும் மண்ணும் என்பது முத்தெடுப்பார் அல்லது முத்துக் குளிப்பார் வழக்கில் ஊன்றியுள்ள தொடராகும். அவர்கள் ஆழத்துள் சென்று முத்துச் சிப்பிகளை அள்ளுங்காள், கண் தெளிவாகத் தெரியாமல் போதலுண்டு. அவர்கள் மேலே வருவதெற்கென விடப்படும் கயிற்றைப் பற்றிக் கொள்ளவும் இடருண்டு. அந்நிலையில் நீர் மூழ்குவார் கண்ணுமண்ணும் தெரியவில்லை என்பர் மண் என்பது மணடக்குஎனப்படும் கயிறு; அக் கயிற்றை மேலிருந்து கீழே விடுபவன் மண்டக்காள் எனப்படுவான். மண்ணுதல் குளித்தல், குளிப்பாட்டுதல் பொருளவாதல் மண்ணுமங்கலம் என்பதால் அறிக. கத்தல் கதக்கல் கழுதை கனாக் கண்டதாம் கத்தலும் கதக்கலும் என்பது பழமொழி. கத்தல் - மகிழ்வுக் குறியாகக் கழுதை கனைத்தல். கதக்கல் - துயர்க் குறியாகக் கழுதை வாடுதல். தாமே ஒன்றை, நிகழப் போவதாக நினைத்துக் கொண்டு மகிழ்வாரையும் வருந்துவாரையும் பார்த்து இப்பழமொழியைச் சொல்வது வழக்கு. கத்தி கப்படா கத்தி - குத்துதல் கிழித்தல் அறுத்தற்குப் பயன்படுத்தும் கருவி. கப்படா - கத்திப்பட்டா எனப்படும் பட்டையானதும் நீண்டதுமாய்க் கத்தி போல் பயன்படுத்துதற்காம் பெரிய கருவி. கத்தி கப்படாவுடன் வந்தான்; கத்தி கப்படாக்களால் தாக்கினான் என்பவை குற்றத்துறை நடவடிக்கைகள். கத்தியினும் நீண்டதும் பட்டையாய் அமைந்ததும் வாளினும் கனம் குறைந்ததும் நீளம் குறைந்ததுமாகிய கருவி. கத்திப்பட்டா என்பது ஊடு எழுத்துக்கள் சிலவற்றை விட்டுக் கப்படா என வழக்கில் உள்ளதாம். கத்தை கசடு கத்தை (கற்றை) - தொகுதியாக அமைந்த அழுக்குப் பொருள். கசடு - கலத்தில் அல்லது தளத்தில் அமைந்த வழுக்குப் பொருள். கற்றை என்பது தொகுதி என்னும் பொருளது. குப்பைக் கூளம், தும்பு தூசி என்பன திரண்டால் கற்றையாம். கசடு என்பது தளத்துடன் பற்றிக் கொண்டுள்ள பாசியும் வழுக்கலும் போல்வன. கலத்தில் பற்றிக் கொண்டுள்ள களிம்பு போல்வன. இவை, மனத்தைப் பற்றிக் கொள்ளும் குற்றங்களுக்கு ஆகிக் கசடு எனவும் படும். கற்க கசடற என்றார் வள்ளுவர். (குறள் 391) கத்தை கதக்கல் கற்றையாகச் சேர்ந்த அழுக்கு கற்றை (கத்தை) எனப்படும். தனித்தனியே படிந்த அழுக்கு கதக்கல் எனப்படும். இது கொத்தை கொதுக்கல் எனவும் வழங்கப்படும். அதற்கும் இப்பொருளேயாம். புளியைக் கரைத்தப்பின் அதன் எச்சமாய்க் கரைப்படாமல் இருக்கும் திப்பிகளும் நார்களும் கதக்கல் அல்லது கொதுக்கல் எனப்படும். திரட்டிவைத்த அழுக்கோ கத்தை, அல்லது கொத்தை எனப்படும். கதைநொடி கதை - சிறுகதை தொடர்கதை போல்வனவாம் புனைவுகள். நொடி - விடுகதைபோல்வனவாம் குறிப்பு மொழிகள். பண்டு பாவால் கூறிய புனைவு காதை எனப்பெற்றது; பின்னர் பாவால் கூறியது கதை எனவும் வழங்கியது. முன்னதற்குச் சிலம்பும் மேகலையும் பின்னதற்குப் பெருங்கதையும் சான்று. நொடி, குறிப்புமொழி என்பது நொடிவது போலும் என வரும் சிலம்பாலும், தொல்காப்பியத்தில் வரும் உரைநடை வகையாலும் விளக்கமாம். நொடிப் பொழுதில் வெளிப்படுத்தும் குறிப்பு நொடியெனப் பெற்றிருக்கலாம். நொடித்தல் கூறுதல். வழக்குச் சான்று? கப்பு கவடு கவடு - அடிமரத்தில் இருந்து இரண்டாகப் பிரிவது கவடு; இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடையூடு பகுதியும் கவடு. கப்பு - கவட்டில் இருந்து இரட்டையாகப் பிரியும் கிளை கப்பு. கப்பு என்பது பொருளால் இரண்டாகப் பிரிதல் என்னும் பொதுமைக்குரியது ஆயினும் கவட்டினும் கப்புச் சிறிதெனக் கொள்க. கவை, கவட்டை, கவலை, கவைக்கோல் என்பனவெல்லாம் இரண்டாகப் பிரிவன என்னும் பொருளனவாம். தொடைச் சந்தினைக் கப்பு என்பது கவை, கப்பு வேறுபாடுணரா வழக்காம். கரடு முரடு கரடு - மேடு பள்ளமுடையதாயும் வழுவழுப்பும் ஒழுங்கு மற்றதாயும் அமைந்தது. முரடு - ஒப்புத்தரத்தின் விஞ்சிய பருமையும் தோற்றப் பொலிவும் அற்றது. துணி, தாள், நிலம் முதலியவற்றைக் கரடு முரடாக இருக்கிறது என்பது வழக்கு. சிலர் பண்பியல் ஒவ்வாமையையும் சொல்லினிமையின்மையையும் கருதிக் கரடுமுரடு எனல் உண்டு. கரடு, கருநிறமானதும் ஒழுங்கற்றதும் கல்லும் சரளையும் செறிந்ததுமாகிய திரட்டைக் குறித்துப் பின்னே மற்றவற்றுக்கு ஆயிற்று. கரட்டு நிலத்தில் பெரிதும் வாழ்வதும், கரடு உடையதும் ஆகிய உயிரி கரட்டான் என்பதை அறிக. முரடு மாறுபட்ட அமைவுடையது என்பதை முரண் என்பதால் அறிக. முரண்டு, முரடன், முரட்டாட்டம் என்பவனற்றையும் கருதுக. கல்லும் கரடும் கல் - வளமற்ற பாறை அல்லது குன்று கரடு - கல்லும் மண்ணும் கலந்த திரடு. வளமானது மலை; வளமற்றது கரடு என்க. கரடு முரடு என்பதில் கரடு பற்றிய குறிப்பைக் காண்க. கல் என்பது கரடு என்பதன் இணைச்சொல்லாக வந்தமையால் தனிக்கல்லைக் குறிக்காமல் நீர்ப்பசையற்று வறண்ட கல்லாஞ் சரளை எனப்படும் நிலப்பகுதியைக்குறிக்கும் என்க. கல்லும் கரடுமாய இடம் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பழிந்து நடுங்கு துயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்பது சிலம்பு. கல்லும் கரடுமாய வழி கல்லதர் அத்தம் என இலக்கியங்களில் ஆளப்படும். கல்லும் கரம்பையும் கல்-சின்னஞ்சிறிய கல்துகள் அல்லது மணல் . கரம்பை - சின்னஞ்சிறிய கருமண் கட்டி, அரிசியிலோ, பருப்பிலோ கல்லும் கரம்பையுமாகக் கிடக்கிறது; பொறுக்க வேண்டும் என்பது வழக்கு. கரம்பை - கரிசல்மண். அதன் சிறிய கட்டியும் கரம்பை எனப்படும். கருநிற மண்ணாதலால் கரம்பை எனப்பட்டது. கரடு, கரடி என்னும் பெயர்களை நினைக. நெல், பயறு அடிக்கும் களங்களில் கிடந்த கல்லும் கரம்பையும் அவற்றுடன் சேர்ந்து வந்து விடுவது உண்டு. ஆனால் இப்பொழுது கலந்து விற்பதே கலையாகிவிட்டது. கலகம் கச்சரா கலகம் - கைகலப்பால் உண்டாகும் சண்டை, கருவிகள் கலத்தலும் கலகத்தில் இடம் பெறும். கச்சரா - கலகத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கச்சேரிக்கு காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் செல்லுதல். கலகம் கச்சரா என்று திரிபவன் உடலை வளைத்து வேலை பார்ப்பானா? கலகம் கச்சரா இல்லாமல் இருக்கமாட்டானா அவன்? என்பன போன்றவை நாட்டுப் புறங்களில் கேட்கும் வழக்குகள். கச்சரா என்பது கச்சேரியின் திரிபு. அஃது உருதுச் சொல். கழுக்கா மழுக்கா கழுக்கு - பூண் தேய்ந்துபோன உலக்கை. மழுக்கு - கூர் மழுங்கிப் போன அரிவாள் முதலிய கருவிகள். கழுக்காகவும், மழுக்காகவும் இருப்பவை செவ்வையற்றைன வாய்ப் பயன்படுத்துவதற்கு உதவாதனவாய் அமைந்தனவை. அவற்றைப்போல், உழைப்புக்கு உதவாமல் இருப்பவனைக் கழுக்கா மழுக்காவாய்த் திரிகிறான் என்பது வழக்கு. கழுந்தராய் உன்கழல் பணியாதவர் என்பதில் கம்பர் கழுந்து என்பதைப் பயன்படுத்துகிறார். கழுந்து பூண்போன உலக்கையாம். மழுங்குதல் - மொட்டையாதல் பொருளில் இன்றும் வழங்குகின்றது. இதனைக் கழுக்கட்டி மழுக்கட்டி என்பதும் வழக்கு. கள்ளம் கவடு கள்ளம் - களவு கவடு - வஞ்சம் கள்ளம் கவடு இல்லாதவர் என்னும் இணைமொழி களவும், களவுக்கு மூலமாம் வஞ்சமும் இல்லாதவர் என்பதை விளக்கும். கள்ளுதல் களவாடல். கவடு இரட்டையாகப் பிரிதல். ஓரெண்ணத்தை உள்வைத்து அதற்கு எதிரிடையானதை வெளிக் காட்டிச் செய்தல் கவடு அல்லது வஞ்சமாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது திருவருட்பா. கள்ளாளும் உள்ளாளும் கள்ளான் - திருடன் அல்லது களவாளன். உள்ளாள் - களவாளனுக்கு உளவாளனாக இருக்கும் கையாள். களவான் பெரியனா? காப்பான் பெரியனா? என வினாவுவார். கள்வானுக்குக் காப்பானே கையாளாக அல்லது உள்ளாளாக இருந்தால் திருடுவது மிக எளிமையல்லவோ? தடுக்க வேண்டியவனே எடுத்துக் கொடுப்பவனாக இருக்கும் போது என்ன குறை? கள்ளாளும் உள்ளாளுமாக இருந்ததைச் சுட்டிக் காவற்காரர்மேல் நடவடிக்கை எடுப்பது நாடறிந்த செய்தி. ஏன், அவன் உள்ளாளாக இருந்தான் என்பதை எண்ணிப், பொறுப்போடு நடந்திருந்தால் உள்ளாளாக இல்லாமல் காவற் காரனாகவே இருந்திருப்பானே! கள்ளும் கவறும் கள் - கட்குடி. சுள் - சூதாட்டம். கள்ளும் கவறும் கடிமின் என அறநூல்கள் கூறும். கள் என்பது மதுவகையெல்லாம் சுட்டும். கவறு என்பது குதிரைப் பந்தயம், பரிசுச்சீட்டு இன்னவை எல்லாம் சுட்டும். இரண்டும் அறிவை மயக்கி அழிவைச் செய்வன. முன்னது உயிர் அழிவுக்கும், பின்னது பொருளழிவுக்கும் இடமானவை எனத் தோன்றினும் இரண்டும் முழுதழிவுக்கே கொண்டு செல்பவையாம். கள்ளும் சுள்ளும்: கள் - கள்ளு, சாராயம் முதலிய மதுவகை சுள் - மதுக்குடிக்குத் துணையாம் தொடு கறிவகை. சுள் என்பது சுள்ளாப்பு என்றும் சொல்லப்படும். சுள்ளாப்பு என்பதற்கு அடி, உறைப்பு, வெப்பம் முதலிய பொருள்கள் உண்டு; வெயில் சுள்ளப்பாக அடிப்பது போலச் சுள்ளாப்பாக இருக்கும் சுவையும் சுள்ளாப்பு எனப்பட்டது. சுள்ளக்காய், சுள்ளாக்காய் என்பவை மிளகாயைக் குறித்து வழங்குகின்றன; மிளகாய் பிற்காலத்து வெளிநாட்டு வரத்துப் பொருளாயினும் மிளகு பழம் பொருளாம்; கறிக்குச் சுவையூட்டும் அது கறி என்றே சொல்லப்பட்டது. யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியொடு பெயரும் என்பது சங்கப்பாட்டு. கன்று கயந்தலை கன்று - குட்டி என்னும் பொருளில் வழங்குவது கன்று. கயந்தலை - பெரிய மெல்லிய தலையையுடைய யானைக்குட்டி கயந்தலை எனப்படும். கன்று ஆண்கன்று, மான் கன்று, யானைக் கன்று என வழங்கப்பெறும். ஆனால் கயந்தலையோ யானைக்கன்று ஒன்றை மட்டுமே குறிப்பதாயிற்று. கயம் என்பதற்குப் பெரிய என்னும் பொருள் உண்டு. கயந்தலை பெரிய தலையாம். கயவாய்ப் புனிற்று எருமை என்பார் குமரகுருபரர். கயவாய்-பெரியவாய். யானைக்கன்றின் உடலோடு அதன் தலைப்பருமையை ஒப்பிடப் பெரியதாய் இருத்தல் கருதிவந்த பெயராம். கன்றுகாலி கன்று - கன்றுக்குட்டி காலி- எருமை, பசு முதலிய மாடுகள். கன்று காலி மேய்ப்பதைச் ஒரு தொழிலாகவே செய்கின்றனர். ஊர்மாடுகள் ஊர்க்காலிமாடுஎனப்படும். ஊர்க்காலிமாடு மேய்த்தலை உரிமைத் தொழிலாகக் கொண்டு, விளைவுக் காலத்தில் களத்தில் உரிமைப்பங்கு(சுந்திரம்) பெறுதல் இன்றும் சிற்றூர்களில் உண்டு. கன்றும் காலியுமாக மேயச் செல்லும் மாடு எனின் பால் வற்றிப்போன மாடாகும். இளங்கன்று உடையதாயின், கன்றை மட்டும் வீட்டில் நிறுத்தி மாட்டைக் காட்டுக்கு ஓட்டிச் செல்லுதல் வழக்கமாம். கன்று காலி தங்கிடமும், மேய்ப்பிடமும் நத்தம் புறம்போக்கு என ஒதுக்கிவைக்கப்படுவதுண்டு. காச்சு மூச்சு காச்சு(காய்ச்சு) - கஞ்சியைக் காய்ச்சு. மூச்சு - பசியால் உயிர் போகிறது. பசித்துக் கிடக்கும் குழந்தைகள் கஞ்சிக்காகக் கத்தும் போது, காச்சு மூச்சு என்று குழந்தைகள் கத்துகின்றன என்பர். அக் கத்துதலால் வந்த வழக்கு ஒருவர் சாகக்கிடக்கும் போதோ, சண்டையின் போதோ பேரொலி கேட்குமானால் காச்சுமூச்சு என்று கிடக்கின்றது என்று வழங்கலாயிற்று. காடுகரை காடு - முல்லைநிலம் அல்லது மேட்டு நிலம். கரை - மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய் ஓரூரிலேயே ஒருவருக்கே காடுகரையுண்டு. காடுகரை பார்த்து வருதல் வழக்காறு. காட்டில் ஓர வரப்புகள் மட்டுமே உண்டு. கரையில் உள் வரப்புகள் பல உண்டு. வரப்பு உயர நீர் உயரும் என்பது தெளிவே. காமா சோமா காமா - அழகில் மன்மதனே! சோமா - கொடையில் சோமனே! காமா சோமா என்று நடத்திவிட்டான் என்பது வழக்கு. பிறரைப் புகழ்ந்து அவர்கள் துணையால் எளிமையாக நிறைவேற்றிவிட்டதைக் காமா சோமா என்று நடத்தி விட்டான் என்பர். புகழ்ச்சியைக் கருவியாக்கி நிறைவேற்று தலைக் குறித்தது இது. அழகுக்கு மன்மதன் முதல்வன் எனப்படுவான். இடைக் காலத்தில் வாழ்ந்த ஒரு வள்ளல் பெயர் சோமன் என்பது புல்லரிடத்தே சோமன் கொடை அருமை அறிக என்பது ஒரு தனிப்பாடல் செய்தி. காய்கறி காய் - காய்வகை. கறி - கறிக்குப் பயன்படும் கிழங்கு, கீரை வகை. காய்கறிக் கடைகளில் இவ்விருபால் பொருள்களும் இருக்கக் காணலாம். காய் என்னப்பட்டவை நீங்கிய பிறவற்றையெல்லாம் கறிக்குப் பயன்படுவன என்னும் பொருளால் கறி என்றனர். இனிப் புலவைக் குறிக்குமோ என்பார் உளராயின்அப் பொருள் காய்கறிக் கடையில் விற்கப்படுவது இல்லை என்பதையும், அதனை விற்கும். கடை கறிக்கடை எனப்படுவதையும் அறிக. காரசாரம் காரம் - உறைப்புச் சுவை சாரம் - மற்றைச் சுவை குழம்பு காரசாரமாக இருக்கிறது; காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். காரச்சேவு காரவடை என்பவை தின்பண்டங்கள். மிளகு காரமிளகு எனவும் படும். சாரம்-சார்ந்தது. காரத்தைச் சார்ந்த பிற சுவைகள். சாரம் என்பதற்கு இனிமைப் பொருள் உண்டாயினும், பிற சுவைகளைச் சுட்டலே சிறக்கும். கால்வாயும் வாய்க்காலும் கால்வாய் - குளத்திற்கு நீர்வரும் கால். வாய்க்கால் - குளத்தில் இருந்து நீர் செல்லும் கால். வாய் என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; கம்மாய் கண்மாய் என இந்நாள் வழங்குகின்றது. புலிக்கண், மான்கண், நாழிக்கண், துடுப்புக் கண் எனப்பல கண்களை அமைத்து அதன் வழியே நீரைப் போகவிடும் முறையால் கண்வாய் எனப்பட்டதாம். நீர், வாய்க்கு அல்லது குளத்திற்கு வருவழி கால்வாய். வாயில் இருந்து நீர் வெளியேறுவழி வாய்க்கால். வாயும், காலும் கண்ணும், இடப் பொருளன. காவும் கழனியும் கா - சோலை கழனி- வயல் காவும் கழனியும் மருதம் சார்ந்தனவே. கோயில் முதலிய வற்றுக்கு அறப்பொருளாக வழங்குவார் காவும் கழனியும் வழங்கிய செய்தி செப்பேடு கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றது. முல்லைக் காட்டினை வேறுபடுத்திக் காட்டுவது. இக்காவும் கழனியும் என்க. கா என்பது கான். கானம், கானகம், காவு எனவரின் அது முல்லையும் குறிஞ்சியும் சார்ந்ததாம். காளியும் கூனியும் காளி - கருநிறத்தவளாம் காளி கூளி (கூனி) - காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய் தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ் சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக் கண்டால், என்ன, காளியும் கூளியுமாக இந்த ஓட்டம்? என்பர். கூளி குள்ளம்: குட்டையானவனைக் குள்ளன் என்னும் வழக்கால் அறிக. உயரங்குறைந்த மகிழ்வுந்தைச் சிற்றூரார் கூளிக்கார் என்பது உண்டு. காளிக்குக் கூளி கூறுவதும், கூளிக்குக் காளி கூறுவதும் பரணி நூல் செய்திகள். கர், கார், கால், காள், காழ் என்பவை கருவண்ணஞ் சார்ந்த வேர்கள். காளியும் மூளியும் காளி - கன்னங்கறேல் என்று இருப்பவள். மூளி - காதறுபட்டவள் அல்லது காதறை. தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் காளியும் மூளியும் என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும் என்ன காளியும் மூளியுமாகக் கூடிக் கசிகிறதைப் பார் என்பர். மூளி என்பது வாய் போன குடம், சட்டிகளைக் குறிப்பதும் உண்டு. மூளி-அறுவாள் எனக் கூர் மழுங்கிய அறுவாளைக் குறிப்பதும் உண்டு. கிச்சு முச்சு கிச்சு - கிச்சங்காட்டுதல் முச்சு - மூச்சுத் தடுமாறச் செய்தல். குழந்தைக்குக் கிச்சுமுச்சுக் காட்டாதே என்று எத்தனை முறை சொன்னாலும், சிறுவர்கள் விடுவது இல்லை. கிச்சு முச்சுக் காட்டுதலில் அவர்களுக்குக் கொள்ளை ஆர்வம்! குழந்தைக்குத் தன் துயரைச் சொல்லத் தெரியாதே. கிச்சுக் காட்டுதல் என்பது உணர்வு மிக்க இடங்களில் தொட்டுச் சிரிப்பு உண்டாக்குதல். அச்சிரிப்பு மிகுதிப்படுதலால் மூச்சு முட்டிப் போதல் உண்டு. அது முச்சு எனப்பட்டதாம். கிட்டத்தட்ட கிட்ட - குறித்த அளவுக்கு நெருங்க. தட்ட - குறித்த அளவுக்கு மேலேற. கிட்ட-நெருங்க; தட்ட-தட்டுமாறு உயர. ஏறக்குறைய, ஏறத்தாழ, கூடக் குறைய என்பன போல வரும் இணைச் சொல்லே கிட்டத் தட்ட என்பதாம். கிட்டத்தில் என்பது பக்கத்தில் என்னும் பொருள்தருவதும் உண்டு. அதற்கு முரண் எட்டத்தில் என்பது. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்பவை முரண்பார்வைகளே. குழிவு குவிவு காண்க. கிட்ட முட்ட கிட்ட - கிட்டத்தில் அல்லது நெருக்கத்தில் முட்ட - கண்ணுக்குப் படுமாறோ காதுக்குப் படுமாறோ உள்ள தொலைவில். போனவன் கிட்ட முட்டத் தெரியவில்லை வண்டி கிட்ட முட்டத் தெரியவில்லை-இன்னவாறு கிட்ட முட்ட வழங்கப் படுகின்றது. கிட்டுதல்-நெருங்குதல், கிட்டத்து வீட்டுக்காரர் எட்டத்து வீட்டுக்காரர் என்பவை சொல்லப்படுபவை. கிட்டிபோட்டு இறுக்குதல் என்பதும் வழக்கு. முட்ட என்பது ஒலி, ஒளி முதலியவை முட்ட என்பதாம். கிட்டத்துறவு முட்டப் பகை என்பது இணைச் சொல்லையும் விளக்கும் பழமொழி. கிண்டலும் கேலியும் கிண்டல் - ஒருவன் மறைவுச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்; கிண்டி அறிதல் கிண்டல் ஆயிற்று. கேலி - நகையாடுதல் கேலியாம். கிண்டியறிந்து கொண்ட செய்தியைக் கொண்டு நகை யாடுதல் கிண்டலும் கேலியுமாம். என்னைப் பார்த்தால் உனக்குக் கிண்டலும் கேலியுமாக இருக்கிறது என்று இயலாதார் தம்மை நொந்து கொள்ளுதல் கண்கூடு. கிண்டுதல் கிளறுதல் கிண்டுதல் - கோழி காலால் நிலத்தைக் கிழித்தல். கிளறுதல் - கிண்டிய இடத்தில் கோழி அலகால் சீத்தல். கோழி கிண்டிக் கிளறித் தொலைக்கிறது என்பது வழக்கு. கிண்டிக் கிளைத்தல் என்பதும் இதுவே. குப்பையில் கிண்டி கிளைக்கும் என்பது பழமொழி. ஒருவர் செய்தியைத் துருவித் துருவிக் கேட்கும் போது, என்ன கிண்டிக் கிளறுகிறாயா? என்று முறைப்பது வழக்கு. நெல்லைக் காலால் கிண்டுவதும், பின்னர்க் கையால் கிளறுவதும், கற்பித்த கல்வியாகலாம். கிணறும் கேணியும் கிணறு - இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை. கேணி - அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை. தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது இணைமொழி. துரவு ஆவது கிணறு. மிகப் பழங்காலத்தே உறைக் கிணறு இருந்தமை உறைக் கிணற்றுப் புறச்சேரி எனவரும் பட்டினப் பாலையால் அறியலாம். கேணி ஊற்று நீரால் தொட்டனைத் தூறும் மணற் கேணி என்பதால் தெளிவாம். ஆற்றங்கரை ஊரார் ஊற்று நீர் எடுத்துப் பருகுதல் கருதி அதனை ஊருண்கேணி என்பர். ஊருணி, ஊரணி, ஊருண்கேணி ஆய மூன்றும் வெவ்வேறானவை என்பதை அறிக. கிய்யாமிய்யா கிய்யா - குருவிக் குஞ்சின் ஒலி மிய்யா - பூனைக் குட்டியின் ஒலி அவன் பேச்சா பேசுகிறான்? கிய்யா மிய்யா என்கிறான் எனப் பழிப்புக் காட்டுவதுண்டு. ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமான-தெளிவான-விடை கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யா மிய்யா என்கிறான் என்பர். குருவிக் குஞ்சும், பூனைக் குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல, இவனும் அஞ்சி உளறுகிறான் என்றும்; அவன் மருளுதல் தெரிவதை அன்றிப் பொருள் புலப்பாடு இல்லை என்றும் தெரிவிப்பதாம் இது. கிறுத்தான்மறுத்தான் கிறுத்தான் - குறும்புக்காரன். மறுத்தான் - குறும்புக்காரன் குறும்பையும் மடக்கும் குறும்புக் காரன். எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் கிறுத்தானுக்கு மறுத்தானாக இருப்பதே உனக்கு வழக்கம் என்பது ஓர் இடிப்புரை. கிறி என்பதற்குப் பொய், வஞ்சம் முதலிய பொருள் உண்டு. கிறுத்துவம் என்பது குறும்பு என்னும் பொருளிலும் வழங்கு கின்றது. பொய்யைப் பொய்யால் வெற்றி கொள்வான் போல் குறும்பைக் குறும்பால் வெற்றி கொள்வான். கிறுத்தானுக்கு மறுத்தானாம். வலியவனுக்கு வலியவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழியே யன்றோ! குச்சும் மச்சும் குச்சு - குடிசை வீடு. மச்சு - மாடி வீடு. குச்சு - குச்சில் என்றும் கூறப்படும். ஓலைக் கொட்டகையோ, கூரைக் குடிசையோ குச்சு ஆகும். பூப்படைந்த பெண்களைப் புதுக் கொட்டகையில் இருக்க வைப்பர். அதற்குக் குச்சில் என்பது பெயர். குச்சிலுக்குள் இருக்கிறாள் எனப் பூப்பானவளைக் குறிப்பது சிற்றூர் வழக்கு. மச்சு மெச்சு என்றும், மெத்து என்றும் மெத்தை என்றும் வழங்கப்படும். கழுதை கிடப்பது தெருப்புழுதி, கனாக் காண்பது மச்சுமாளி என்பது பழமொழி. குட்டி குறுமான்: குட்டி - பெண் பிள்ளை. குறுமான் - ஆண் பிள்ளை. உங்களுக்குக் குட்டி குறுமான் எத்தனை குட்டி குறுமான் எல்லாம் நலமா? என வினவுதல் வழக்கு. குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறித்தல் இன்றும் மலையாள நாட்டில் பெரு வழக்கமாம். அதன் ஆண்பால் குட்டன் என்பது. அது, நாலாயிரப் பனுவலில் பெருக வழங்குகின்றது. பெருமகன் பெருமான் ஆவது போலக் குறுமகன் குறுமான் ஆனான் என்க. குட்டியின் சிறுமைப் பொருளைக் குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டியப்பா இவற்றில் காண்க. குட்டுநட்டு: குட்டு - உள்ளத்துள்ள மறைவுச் செய்தி. நட்டு - வெளிப்பட்ட விளக்கச் செய்தி. உன்குட்டு நட்டு எனக்குத் தெரியாதா? என்னிடமே அவிழுக்கிறாயே என்பது வழக்கு. உன் குட்டை உடைக்கட்டுமா? என்னும் வினாவில் குட்டு என்பது மறைவுச் செய்தியாதல் புலப்படும். நட்டு என்பது நட்டப்பட்டது, வெளிப்பட்டது என்னும் பொருளதாம். நுண்ணறிவு படைத்தவனைக்குட்டு நட்டுத் தெரிந்தவன் என்பது நாட்டுப்புற வழக்கு. நட்டு என்பது நெட்டு என்றும் வழங்கப்படும். குட்டை கட்டை: குட்டை - நெட்டைக்கு மாறானது குட்டை கட்டை - குட்டையானதும் பருத்ததும் கட்டை. குட்டைப்பிள்ளை கட்டைப் பிள்ளை என்பதில் முன்னது குள்ளமானது என்றும், பின்னது குள்ளமானதும் கனமானதும் என்றும் பொருளாம். குளம் குட்டை என்பதில் வரும் குட்டையையும், கைக்குட்டையையும் கருதுக. கட்டைவிரல், பெருவிரல் என்பதை எண்ணுக. நெடுமரத்தைக் குறுகக் குறுக வெட்டியது கட்டை எனப்படுவதையும் - கொள்க குடலும் குந்தாணியும்: குடல் - சிறு குடல்-பெருங்குடல் முதலியவை. குந்தாணி - குடலின் மேல் மூடி (உதரவிதானம்) குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன என்பது வழக்கு. குடல் என்பதற்குக் குழல் போல்வது என்பது பொருள். உட்டுளையுடையவை குடல், குழல், புடல், புழல் முதலியவை என்க. குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு என்பதை அறிவது. மேல்மூடி என்னும் பொருளுக்கு உதவும். குண்டக்கா மண்டக்கா குண்டக்காக - இடுப்புப் பகுதியாக. மண்டக்காக - தலைப் பகுதியாக. சிறுவர்கள், கால்மாடு தலைமாடு தெரியாமல் (கால் பக்கம் தலைப்பக்கம் பாராமல்) படுத்திருப்பதைக் காணும் பெரியவர்கள் இப்படியா குண்டக்காமண்டக்காவாகப்படுப்பது? என இடித்துக் கூறுவது வழக்கம். பொருத்தமில்லாமல் கிடக்கும் பொருள்களைக் குண்டக்கா மண்டக்காக் கிடப்பதெனக் கூறுவதும் வழக்கமேயாகும். காலும் தலையும் மாறிக் கிடத்தல் போல் பொருள்கள் சிதறிக் கிடத்தலைக் குறிப்பதாம். குண்டானும் பொண்டானும் குண்டான் - உருண்டு திரண்ட எலி. பொண்டான் - பேரெலி அல்லது பெருச்சாளி. குண்டு என்பது திரண்டது என்னும் பொருள் தருவது. கோலிக்குண்டு முதலியவற்றைப் பார்க்கும்போது உருண்டு திரண்டுள்ள அமைப்பு விளங்கும். பொண்டான், பொந்தான் என்பவை வயிறு பருத்த தோற்றத்தைக் குறிப்பதாம். சுண்டானும் பொண்டானும் என்பதைக் காண்க. குண்டு குழி குண்டு - ஆழ்ந்த நீர்நிலை குழி - பள்ளம் குண்டு மிக ஆழத்தைக் குறித்துப் பழநாளில் வழங்கியது. குண்டுகண் அகழி என்பது புறநானூறு. பின்னே குண்டு, குளத்தையும், வயலையும் குறிப்பதாயிற்று. சாலையில் பெரும் பள்ளமாக இருப்பதைக் குண்டு என்பதும், சிறு பள்ளமாக இருப்பதைக் குழி என்பதும் உண்டு. மேட்டு நிலங்களைக் குண்டும் குழியுமாக்கி வயல்நிலப் படுத்துதல் வழக்கமாதலின் குண்டு குழி என்பவை வயலுக்கு ஆயிற்றாம். குண்டு குழி பார்த்து வண்டியை ஓட்டு என்பது வழக்கு. குத்தல் குடைச்சல் குத்தல் - விட்டு விட்டு ஓரிடத்து வலித்தல். குடைச்சல் - இடைவிடாது குடைந்து அல்லது சுழன்று வலித்தல். நோவு வகையுள் குத்தல் குடைச்சல் என்பவற்றைக் குறிப்பிடுவர். உலக்கை, கம்பி முதலியவை குத்துதலையும், வண்டு குடைதல் அல்லது துளைத்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குத்தல் குடைச்சல் பொருள் தெளிவாம். தலைக்குத்து, மூச்சுக் குத்து, என்பவை குத்துக்கள். காது குடைதல், கால் குடைதல் என்பவை குடைவுகள். வட்டமிட்டு நீந்துதலைக் குடைதல் என்பது இலக்கிய வழக்கு. குப்பை கூளம் குப்பை - குவியலாகப் போடப்பட்ட உரமும் கழிவுப் பொருள்களும். கூளம் - மாடு தின்று எஞ்சிய வைக்கோல் தட்டை முதலிய வற்றின் துண்டு துணுக்குகள். குப்பை கூளம் சேரவிடாதே; பூச்சி பொட்டை சேர்ந்து விடும் என உழவர் வீடுகளில் கூறுவது வழக்கம். குப்பைக்குப் போவதைக் குப்பை என்கின்றனர் என்க. கூளம் என்பது செத்தை, செதும்பை என்பவையாம். கீரையில் கிடக்கும் புல் முதலியவற்றை எடுத்தலைக் கூளம் பார்த்தல் என்பது நடைமுறை. கூளம் என்பது மாட்டுத் தீனியாம் தட்டை தாளைக் குறித்தலும் உண்டு. கூலம், தவசத்தையும் கூழ், உணவையும் குறித்தல் இவண் அறிக. கும்மி கோலாட்டம்: கும்மி - பலர் குழுமி, கைகொட்டி ஆடும் ஆட்டம். கோலாட்டம் - பலர் குழுமி, கோல் கொட்டி ஆடும் ஆட்டம். பெரும்பாலும் கும்மியும் கோலும் மகளிர் ஆட்டங்களாம். கும்முதல்-கூடுதல். கொம்முதல் கொம்மி எனவும் படும். கொம்முதலும் கூடுதலேயாம். கோலாட்டத்திற்கெனத் தனிக் கோல்களும் கோல்களில் சலங்கை இணைப்பும் உண்டு. ஒன்பான் இரவு விழாக்களிலும் ஊர் விழாக்களிலும் கும்மி கோலாட்டம் நிகழ்த்தப்படுவ துண்டு. குழிவு குவிவு குழிவு - பக்கங்கள் உயர்ந்து நடுவே குழி வானது குழிவு ஆகும். குவிவு - நடுவுயர்ந்து பக்கங்கள் குழிவானது குவிவு ஆகும். முன்னதற்குக் குழியையும் பின்னதற்குக் குவியலையும் கண்டு அறிக. கிட்டப்பார்வை எட்டப்பார்வைகளுக்குக் குழிவு ஆடி, குவிவு ஆடிகளைப் பயன்படுத்துதல் நடைமுறைச் செய்தியாம். குழியைக் குண்டு குழி என்பதிலும், குவிவை மலர் குவிதலிலும் கண்டுகொள்ளலாம். தாமரை குவிதல் போல் கைகுவிதலையும் (கூப்புதலையும்) ஒப்பிட்டுக் கைம்மலர் என்பதன் அருமையை உணரலாம்! குற்றுயிரும் குலையுயிரும் குற்றுயிர் - மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை. குலையுயிர்- நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த்துடிப்பு இருக்கும் நிலை. குறுமை - சிறுமை; வெளிப்பட அறியமுடியாமல் மெல்லெனச் செல்லும் மூச்சு நிலையை இவண் குறித்தது. குலை என்பது நெஞ்சாங்குலையாம் நுரையீரலைக் குறித்தது. அங்கே ஒடுங்கிய பின்னரே உயிர் பிரிந்தது என்று கொள்ளப்படுகின்றதாம். குலையை ஈரற்குலை என்பதும் வழக்கு. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார் என்பது நடைமுறைச் செய்தி. குறுக்கும் மறுக்கும் குறுக்கு - குறுக்காகச் செல்வது குறுக்கு மறுக்கு - குறுக்காகச் செல்வதற்கு எதிரிடையாக மறுத்துச் செல்வது மறுக்கு. இது குறுக்கா மறுக்கா எனவும் வழங்கும். குறுக்காக மறுக்காக என்பவற்றின் தொகுத்தல் ஆகும். நெடிய உடலின் குறுக்காக அமைந்தது குறுக்கு எனப்படுவதையும், குறுக்கு வழி என்பதையும் நினைக. மறுத்தல், மறுக்கம், மறுமொழி இவற்றால் மறுக்கு எதிரிடையாதல் கொள்க. குறுக்கும் மறுக்கும் ஓடுதல் குறுக்கு மறுக்குமாக உழுதல் என்பவை வழக்கங்கள். குறுக்குவழி சுருக்குவழி குறுக்கு வழி - நெடிதாகச் செல்லும் சாலை வழி, வண்டிப்பாதை என்பவை தவிர்த்துக் குறுகலாக அமைந்த நடை வழி. அது நெடுவழியினும் அளவில் குறுகுதலுடன், தொலைவும் குறுகியதாக இருக்கும். சுருக்குவழி - குறுக்கு வழியிலும் தடம் உண்டு; தடத்தைப் பற்றியும் கருதாமல் மிகச்சுருக்கமாகச் செல்லுதற்கு ஏற்படுத்திக் கொண்ட வழி. அது போகுமிடத்தை நேர் வைத்துத் தடமும் வழியும் கருதாமல் செல்வதாம். முன்னதில் குறுகுதல் மூலம்; பின்னதில் சுருங்குதல் மூலம். கூச்சலும் கும்மாளமும் கூச்சல் - துன்புறுவார் ஓலம் கும்மாளம் - துன்புறுத்துவார் கொண்டாட்டம். இதனைக் கூச்சல் கும்மரிச்சல்என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம். இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது கும்மரிச்சல் என்பது எக்காளத்தில் இருந்து எழும்புவது. கும்முதல் - அடித்தல் பொருள் தரும். அடித்து ஆரவாரித்தலால் கும்மாளம் ஆயிற்றாம். இஃது எருதுக்கு இரணவலி காக்கைக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தான்! கூச்சல் குழப்பமும் கூச்சல் - துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம். குழப்பம் - துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல். கூ(கூவுதல்) கூகூ (அச்சக்குறிப்பு) கூப்பாடு இவற்றையும் கூக்குரல் என்பதையும் கருதுக. குழப்புதல் குழப்பமாம். இது அது என்று கண்டுபிடிக்க முடியாமல் எதுவும் புரியாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலைமையே குழப்பமாம். நேரிடைப் பகையினும் குழப்புவாரால் ஏற்படும் கேடே பெருங்கேடாம். அங்கே என்ன ஒரே கூச்சலும் குழப்பமும் என வினாவுதல் நாடறிந்த நிகழ்ச்சி. கூடக்குறைய கூட - சற்றே மிகுதலாக. குறைய - சற்றே குறைதலாக. ஏறக்குறைய, ஏறத்தாழ, ஏறஇறங்க, என்பவை போன்ற இணைச்சொல் கூடக்குறைய என்பதாம். கிட்டத்தட்ட என்பதும் இவ்வகையினதே. கூட்டிக்குறைக்க நெடும்பகை என்னும் பழமொழி தாராளமாக இருந்து பின்னர் அத்தாராளம் குறையுமாயின், ஏற்படும் விளைவைச் சுட்டுவதாம். கூடமாடப் (போதல்) கூட - ஆள் துணையாகப் போதல். மாட - பேச்சுத் துணையாகப் போதல். துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணையும் உண்டு; வாய்த் துணையும் உண்டு. முன்னது வழித்துணை; பின்னது வாய்த்துணை. கூடமாட வேலை செய்தல் என்பதில் கூட என்பது கூடியிருந்து வேலை செய்தலையும், மாட என்பது பேச்சுத் துணையாக இருந்து வேலை செய்தலையும் குறிக்கும். மாற்றம்-சொல்; மாட்டாடுதல் பேசுதல் என்னும் பொருள் தரும் தெலுங்குச் சொல். கூடும் குச்சும் கூடு - குடில் குச்சு - குடிசை. ஆட்டுக் குட்டிகளை அடைத்து வைக்கும் கூடு குடில் ஆகும்.அதனைக் குட்டாப்பு கிடாப்பு என்பதும் உண்டு. காடு நாடு என்று தேடி ஆடு மேய்த்துத் திரிவார் மழைக்கு ஒதுங்குமிடம் குடிலாகவே இருக்கும். குடிலினும் நிலையானது குச்சு எனப்படும் குடிசை. இவற்றுக்கும் வகையில்லாதவர் தம்மை நொந்து வீடுவாசல் வேண்டாம்; கூடும் குச்சுமாவது வேண்டாமா? என்று ஏங்குவர். கூடும் குடும்பமும் கூடு - வீடு குடும்பம் - மக்கள் கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள் என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல் அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும் ஒரு சமையலில் உண்பதையும் கூடும் குடும்பமும் என்றும், கூடும் குடித்தனமும் என்றும் கூறுவர். கூடும் குடித்தனமும் பற்றிக் கருதுவதற்கு நத்தை சான்றாம். கூண்டு வண்டி போலச் செல்லும் அதன் செலவும், இணைவந்து சேருங்கால் ஒன்றாய் உருண்டு திரளும் கூடும் குடித்தனத்திற்குச் சீரிய ஒப்புமை. கூனல் குறுகல் கூனல் - வளைவானது குறுகல் - வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது. வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி. முதற்கண் முதுகு வளையும். பின்னர் அவ்வளவு மிகுந்து மிகுந்து உடல் குறுகிப் போகும் நிலையுண்டாம். இடுப்பு மட்டத்திற்கு மார்பு குனிந்து தலை நிமிர்த்தப் பாடுபட்டு நடப்பார் உண்மை கண்கூடு. கூனி என்பதோர் உயிரி. இறைவைச் சாலைக் கூனை என்பதும் உண்டு. கூனைகுடம் குண்டுசட்டி முதலியவை ஒட்டக் கூத்தர் கதையில் வரும். கேள்வி முறை கேள்வி - இடித்துக் கேள்வி கேட்டல் முறை - அறமுறை இதுவெனக் கூறல். கேள்வி முறை இல்லையா? என்று முறை கேடான துயருக்கு ஆட்பட்டவர் கூறுதல் உண்டு. எப்படி இதை நீ செய்யலாம்? என்று இடித்துக் கேட்பது கேள்வி. இந்தக் குற்றத்திற்கு இதுவே தண்டனை என்று நீதி வழங்குவது முறை. கேள்வியும் இல்லை; முறையும் இல்லை என்றால் அந்நாடு விலங்குறையும் காடேயாம். கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்பது ஒரு காவலன் உரை. கேளும் கிளையும் கேள் - உடன் பிறந்தாரும், கொண்டவர் கொடுத்தவரும் கேள் ஆவர். கிளை - உடன் பிறந்தவர்க்கும் கொண்டவர் கொடுத் தவர்க்கும் கேள் ஆகியவர் கிளையாவர். அடிமரத்தில் இருந்து பிரியும் கவடுகளும், கவட்டில் இருந்து பிரியும் கிளையும் கொப்பும் வளாரும் மிலாரும் போல்வன கிளையுமாம். ஒட்டுறவு காண்க. கொட்டும் குரவையும் கொட்டு - கொட்டுக் கொட்டுதல். குரவை (குலவை)- நாவையசைத்து லல்லல்ல என ஒலித்தல். இறந்தவரைக் கொட்டும் குலவையுமாகக் கொண்டு போய்ச் சேர்த்தலைப் பெருமையாகச் சுட்டுவது நாட்டுப்புற வழக்கு. அவ்வாறு செய்யாமல் கொண்டுபோய்ச் சேர்த்தவரை தேடி என்ன செய்ய? ஒரு கொட்டு உண்டா? ஒரு குலவையுண்டா? என்று பழிப்புரைப்பதும் உண்டு. குரவை என்னும் சொல் பழைய குரவைக் கூத்தை நினைவுப்படுத்தும், அதன் எச்சம் குரவை யாகலாம். கொத்தல் கொதுக்கல் கொத்தல் - சதைப்பற்று இல்லாமல் காய்ந்து சுண்டிப் போன புளி; எளிதில் கரையாதது. கொதுக்கல் - கரைத்த பின்னர்க் கரையப்படாமல் எஞ்சும் சக்கை. புளியைக் கரைத்துக் குழம்பு வைப்பார், புளி நன்றாகக் கரையாததாக இருப்பின்கொத்தலும் கொதுக்கலுமாக இருக்கிறது எனக்குறைப்பட்டுக் கொள்ளும் வழக்கில் இருந்து வந்தது இக்கொத்தல் கொதுக்கல். கொத்து குலை கொத்து - அவரை, துவரை முதலியவற்றின் காய்த்திரள் குலை - முந்திரி, வாழை முதலியவற்றின் காய்த்திரள். கொத்துமுரி என்பது கொத்தினைக் குறிக்கும். கொத்துமுரி என்பது கொத்துமல்லியாம். கொத்து நிமிர்ந்தோ பக்கவாட்டிலோ இருப்பதையும், குலை கீழே தொங்குவதையும் எண்ணுக. கொள்ளுதல் கொடுத்தல் கொள்ளுதல் - பெண் கொள்ளுதல் கொடுத்தல் - பெண் கொடுத்தல் இதனைக் கொள்வினை கொடுப்புவினை என்றும், கொண்டவர் கொடுத்தவர் என்றும் கூறுவதுண்டு. கொள்ளுதல் கொடுத்தல் என்பவை பெறுதலும் தருதலும் பற்றிய பொதுமையில் இருந்து பெண்ணை மணத்தலும் மணக்கக் கொடுத்தலுமாகிய நல்வினையைக் குறித்து நின்றது. கொள்வோர் கொடுப்போர் என்னும் குறியீடு தொல்காப்பியப் பழமையுடையதாம். கொத்துகூலி கொத்து - அன்றன்று தவசந்தந்து பெறும் வேலை. கூலி - ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ்செய்து தவசந்தந்து பெறும் வேலை. கொத்தும் கூலியும் தவசந்தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக் கொத்து எனப்படும். பின்னது ஆண்டுக்கூலி எனப்படும். வேலை செய்துவிட்டு வீட்டுக்குக் போகும்போதே அதற்குரிய தவசத்தைப் பெற்றுக் கொள்வதால் அற்றைக் கொத்து என்பதே வழக்கமாயிற்று கூலிக்கு ஆண்டுப் பிறப்பு என்றும், ஆடிக்கணக்கு என்றும் இருவகையுண்டு. இப்பொழுது காசு, பணம் தருவதும் கூலியாயிற்று. கூலி ஆங்கிலத்திற்கும் சென்று ஒட்டிக் கொண்டது. கொத்தை கொசுறு கொத்தை - பழுதுப்பட்ட அல்லது கெட்டுப் போன பொருளாய் விலை குறைத்துத் தருவது. கொசுறு - காசு இல்லாமல் பிசுக்காக அல்லது இலவயமாகத் தருவது. கொத்தை, சொத்தை எனவும், சூத்தை எனவும், சூன் எனவும் வழங்கும். கொசுறு - கொசறு எனவும் வழங்கும். கொத்தை வாங்குபவர் கொசுறும் கேட்கும் போது, கொத்தை கொசுறு வாங்காமல் போகமாட்டாயே என்பர். கொந்துதல் குதறுதல்: கொந்துதல் - பறவை தன் அலகால் ஒன்றைக் குத்திக் கிழித்தல் கொந்துதலாம். குதறுதல் - கிழித்ததைக் குடைந்து அலகால் எடுத்து உதறுதல் குதறுதலாம். கொத்தி அல்லது குத்திக் குதறுதல் என்பதும் இது. பறவை. இறந்து போன ஒன்றைக் கொந்திக் குதறுதலும் அதனைத்தின்னுதலும் காணக் கூடியது. பறவை எனினும், காகம், கழுகு, பருந்து என்பவை குறிப்பிடத் தக்கவையாம். கொப்பும் குழையும் கொப்பு - மரக்கிளை. குழை - கொப்பில் உள்ள இலை தழை கொப்பும் குழையுமாகவா மரத்தை வெட்டுவது? நிழலைக் கெடுத்துவிட்டாயே என்பது வழக்கு. இலை என்பது தனித்ததாம். தழையென்பது குச்சி வளார் முதலியவற்றில் உள்ள இலைத் தொகுதியாம். ஆடு மேய்ப் பாரும், தொளியில் (சேற்றில்) தழையிட்டு மிதிப்பாரும் கொப்பும் குழையுமாக வெட்டுவர். நெல் நடவில் தொளி நடவு என்பது கருதத் தக்கது. கொள்வினை கொடுப்புவினை கொள்வினை - மணமகளை மணமகன் மணம் கொள்ளுதல் கொடுப்புவினை - மணமகனுக்கு மணமகளை மணமகள் வீட்டார் கொடுத்தல். மணப் பெண் எடுத்தல் கொடுத்தல் ஆகிய சடங்குகளைக் கொள்வினை கொடுப்புவினை என்பர். கொள்ளுதல் கொடுத்தல் என்பவை மிகப் பழங்காலச் செய்தியாம். பெண் கொடுத்தல் பெண் எடுத்தல் என்னும் வழக்கமே இக்காலம் வரை உள்ளது .மாப்பிள்ளை எடுத்தல் கொடுத்தல் என்னும் வழக்கு இல்லாமையைக் கொண்டும் தெளிக. கோக்குமாக்கு கோக்கு - ஒன்றைக் கோக்க வேண்டிய முறையில் கோத்தல். மாக்கு - கோக்க வேண்டிய முறையை மாற்றிக் கோத்தல். ஏர்,ஏற்றம், கட்டில், அணிகலம் முதலியவற்றைக் கோக்கு முறையில் கோவாமல் மாற்றிக் கோத்தல் பொருந்தாமை போலப் பொருந்தாமல் முறை கேடாகச் செய்யும் செயல் கோக்கு மாக்காம். எடுக்கவோ, அன்றிக் கோக்கவோ என்பது பாரதச் செய்தி. ஒன்றிருக்க ஒன்றை ஏமாற்றிச் செய்வதைக் கோக்கு மாக்கு எனல் வழக்கு. கோணல் மாணல் கோணல் - நேர் விலகி வளைந்து செல்லும் கோடு. மாணல் - வளைந்து செல்லும் கோட்டைக் குறுக்கும் மறுக்கு மாக எதிரிட்டுச் செல்லும் கோடு. கோண் - வளைவு. கூன் - கூனல் என்பனவும் வளைவே. நெறிமுறையிற் செல்லாதவனைக் கோணன் என்பதும் வழக்கு. மாணல் என்பது மாறல் என்னும் பொருளது. மாறல், கோணலைத் தொடர்ந்து மாணல் ஆயது. சங்கடமும் சள்ளையும் சங்கடம் - உழைப்பு மிகுதியால் உண்டாகும் உடல் தொல்லை. சள்ளை - மாறி மாறி உண்டாகும் மனத் தொல்லை. உடல் நோவும் உளநோவும் முறையே சங்கடமும் சள்ளையும் எனப்படுகின்றன. ஒன்றையொன்று தழுவி இயல்பவை. ஆதலால், இவ்விரண்டும் வேறுபாடற வழங்கும் வழக்கமும் உண்டு. சங்கடமான வேலை மனச்சள்ளை என்னும் வழக்குகள் இவற்றின் பொருளை வெளியாக்கும். சட்டதிட்டம் சட்டம் - அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டம் - சமுதாயத்தால் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறை. சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் நாகரிக நாடுகளுக் கெல்லாம் பொதுவிதி. சட்டங்கள் அரசால் அல்லது அரசின் அமைப்பால் உருவாக்கப்பெற்றாலும் சமுதாய அமைதியையும் நன்மையையும் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று விலக்கமில்லாத் தொடர்பினவாம். ஆனால் தனித்தன்மை உடையனவாம். சண்டு சாவி சண்டு- நீர் வளமற்றோ நோயுற்றோ விளைவுக்கு வராமல் உலர்ந்து போன தட்டை தாள் முதலியவை. சாவி - மணி பிடிக்காமல் காய்ந்துபோன கதிரும் பூட்டையும். சண்டு பயிரில் நிகழ்வதும், சாவி கதிரில் நிகழ்வதும் ஆகும். விளைவுக்கு வாராமல் அறுக்கப் பெறும் நெல்தாள் சண்டு வைக்கோல் எனப்படுவதும், சாவி பதர் எனப்படுவதும் கருதுக. சண்டுவற்றல் சருகுவற்றல் சண்டுவற்றல் - நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போன வற்றல் சண்டு வற்றலாம். சருகுவற்றல் - காம்பும் விதையும் கழன்ற வற்றல் சருகு வற்றலாம். மிளகு வற்றல் அல்லது மிளகாய் வற்றலில் தரம்பிரிப்பார் சண்டு வற்றலையும் சருகு வற்றலையும் இவ்வாறு ஒதுக்குவர். சண்டைசச்சரவு சண்டை - மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு; சச்சரவு - மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது போர் என்றும் வேறுபாடு கொள்க. சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படா, ஆகலின் கைகலப்பு எனல் தகும். சிலர் கைகலப்பு இன்றி வாய் கலப்பு அளவில் அமைவதும் உண்டு. இரண்டையும் இணைத்துச் சண்டை சச்சரவு போடாதீர்கள் என்று கூறுவர் அதனைத் தடுப்பவர். சத்திரம் சாவடி சத்திரம் - காசிலாச் சோற்று விடுதி சாவடி - காசிலாத் தங்கல் விடுதி சத்திரம் சாவடி கட்டுதலும் அவற்றை அறப் பொருளாய் நடத்துதலும் நெடுநாள் வழக்கம். சத்திரம் சாவடிகளுக்கு நிலக்கொடை புரிந்த செய்திகள் மிகப்பல. இவற்றோடு கிணறு, சோலை, தண்ணீர்ப்பந்தல் முதலியன அமைத்த செய்திகளும் பழமையானவை. ஊரூர்க்குச் சத்திரம் உண்டு; சாவடியும் உண்டு; சத்திரப் பெயரால் ஊர்களும், சாவடிப் பெயரால் ஊர்களும் தெருக்களும் மிகப்பலவாம். சந்தி சதுக்கம் சந்தி - இரண்டு தெருக்களோ மூன்று தெருக்களோ சந்திக்கும் இடம் சந்தியாம். சதுக்கம் - நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் சதுக்கமாம். மூன்று தெருக்கள் சந்திப்பதை முச்சந்தி என்றும், நான்கு தெருக்கள் சந்திப்பதை நாற்சந்தி என்றும் கூறுவதுமுண்டு. சந்தியும் சதுக்கமும் மிகப் பழமையானவை சங்கநூல்களில் இடம் பெற்றிருப்பது கொண்டு அறியலாம். சந்துபொந்து சந்து - இரண்டு சுவர்க்கு அல்லது இரண்டு தடுப்புக்கு இடையேயுள்ள குறுகலான கடப்புவழி சந்து ஆகும். கடவு என்பதும் அது. பொந்து - எலி தவளை நண்டு முதலியவை குடியிருக்கும் புடை அல்லது வளை பொந்து ஆகும். சந்து பொந்தை அடைக்காமல் எதையாவது காப்பாக வைத்திருக்க முடியுமா? என்பர். இவ்வளவு சந்து பொந்து இருந்தால் பூச்சி பொட்டை வராமல் இருக்குமா? என்பதும் வழக்கே. சுவரில் இரு செங்கலுக்கு இடைவெளி சந்து என்பதையும் பொத்தல், பொள்ளல் என்பதையும் கருதுக. சழிந்து சப்பளிந்து சழிதல் - நெளிந்து போன ஒன்று மேலும் நெளிதல் சழிதல் ஆகும். சப்பளித்தல் - சழிந்த அது சீராக்க இயலா வண்ணம் சிதைவுறுதல் சப்பளித்தலாம். நெளிதல் என்பது வளைதல், திருகுதல் ஒரு பொருள் நெளிந்து போனால் அதனை நெளிவு எடுத்துப் பயன்படுத்துவர். அது சழிந்து போனால் அதை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாவிட்டாலும் பயன்படுத்தும் அளவுக்குச் சீர் செய்யலாம். சப்பளிந்து போனால் மீண்டும் உருப்படுத்த முடியாது. உருக்கி வேண்டுமானால் மாற்றுருக் கொடுக்கலாம். ஈயம் அலுமினியம் கலங்களே பெரும்பாலும் சழிதல் சப்பளிதல்களுக்கு ஆட்படும். சன்னல் பின்னல் சன்னல்- சன்னமாக அல்லது மெல்லிதாக நீண்டிருத்தல். பின்னல்- சுருண்டு பின்னிப் பிணைந்து கிடத்தல். பாம்பைப் பற்றிய விடுகதை ஒன்று சன்னல் பின்னல் கொடி சாதிலிங்கக் கொடி, மின்னி மறையும் கொடி, என்ன கொடி? எனவரும். தோட்டத்தில் கொடிகள் நெருக்கிக் கிடந்தால் கொடி இப்படிச் சன்னல் பின்னலாகக் கிடந்தால் எப்படிக் காய்க்கும் என வினாவுவர். சாக்குப் போக்கு சாக்கு - குற்றத்தைத் தனக்கு வாராமல் வேறொருவர் மேல் போட்டுத் தப்புதல். போக்கு - உரிய வழியை விட்டு வேறொரு வழிகாட்டி அல்லது போக்குக் காட்டித் தப்புதல். சாட்சி என்பதைச் சாக்கி என்பதும் சாட்சி சொல்பவனைச் சாக்கிஎன்பதும் இன்றும் நடைமுறையில் உள்ளவை; சாட்டு என்பது சாக்கு என வருகின்றதாம். பிறரைப் பொறுப்பாளி யாக்கிச் சாட்டுதல் (கூறுதல்) சாக்கு ஆயிற்றாம். சாக்கிடுதல் என்பதும் அது. போக்கு என்பது போக்குக் காட்டித் தப்புதலாம். சாப்பாடும் கூப்பாடும் சாப்பாடு - பலர் கூடிச் சாப்பிடுதல் சாப்பாடு. கூப்பாடு - பலர் கூடிச் சாப்பிடும் போது உண்டாகும் பேரொலி கூப்பாடு. சப்பு, சப்பிடுதல் என்பவை சாப்பாட்டுக்கு மூலம். கூ, கூவுதல், கூப்பிடு, கூப்பாடு என்பவை கூப்பாட்டின் மூலம். பலர் சேர்ந்து சாப்பிடும் போது, இதைக் கொண்டு வா, அதைக் கொண்டு வா என்று கூப்பிடுவதும், பலரும் ஒரு வேளையில் கூப்பிடுதல் உரையாடுதல் இரைதல் முதலியவை நிகழ்த்துவதும் கூப்பாடு ஆக்குகின்றதாம். சிலர் சாப்பாடு போடும் போதே திட்டவும் செய்வர். அதனால் சாப்பாடும் வேண்டாம் கூப்பாடும் வேண்டாம் என்று வெறுத்துக் கூறும் நிலையும் உண்டு. சாரல் தூறல் சாரல் - நுண்ணிய மழைத்துளி நெருங்க விழுதல். தூறல் - பருத்த மழைத்துளி அகலவிழுதல். சாரல் விழுதல்; தூற்றல் போடுதல் எனவும் வழங்கும். மலைச்சரிவு, சாரல் பெய்தற்கு மிக வாய்ப்பாம். குற்றாலச்சாரல் என்பது இதனை விளக்கும். சட்டச்சடவென விழுவது தூறலாம். உமியைப்போல் மெல்லியதாய்ப் பனிநீர் தெளித்தல் போல் இன்பந்தருவதாய் அமைந்தது சாரலாம். சிண்டான்பெண்டான் சிண்டான் - சிற்றெலி அல்லது சுண்டெலி. பொண்டான் - பேரெலி அல்லது பெருச்சாளி சிண்டு, சுண்டு என்பவை சிறுமைப்பொருளன. சிண்டான் என்பது சுண்டான் என்றும் வழங்கப்படும். பொந்து என்பது வயிற்றைக் குறிக்கும். வயிறு பருத்த வரைப் பொந்தன் என்பது வழக்கம். பொந்தன் பொண்டான் ஆயிற்றாம். சிறிதேயுள்ள குடுமி சிண்டு என்பதைக் கருதுக. சிம்பும் சிலும்பும் சிம்பு - மரம் செடி கொடிகள் பக்கமடித்துக் கிளைத்தல். சிலும்பு - பக்கமடித்துக் கிளைத்ததில் துளிரும் தளிரும் நிரம்புதல். சிம்பு என்பது சிம்படித்தல் என்றும், சிலும்பு என்பது சிலும்படித்தல் என்றும் வழங்கப்படும். கொழுமை, வளமை, நீர்மை முதலியவை சிறந்த மரம் செடி கொடிகள், சிம்பும் சிலும்புமடித்தல் தனி அழகுத் தோற்றமாம். ஆனால் சிம்பும் சிலும்பும் அப்படியே வளரவிடின் பயனீடு குறைந்துபோம். ஆதலால் சிம்பு சிலும்புகளைக் குறைத்து விடுவது நடைமுறை. சிறுவர் சிறியர் சிறுவர் - சிறிய வயதுடையவர். சிறியர் - சிறுமைத்தன்மையுடையவர். முன்னது அகவை கருதியது; பின்னது, தன்மை கருதியது. இரண்டும் பால்பொதுமை கருதியவை. சிறியர் என்பதைச் செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர், செயற்கரிய செய்கலா தார் என்னும் குறளால் (குறள் 26) அறியலாம். நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் என்னும் கம்பர் வாக்கில் சிறுவர் நிலை தெளிவாம். சின்னது நணியது சின்னது - இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை. நணியது - பிறந்து அணியதாம் குழந்தை. சின்னது நணியது எல்லாரும் நலமா? என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல்-நெருக்கம் அண்மை. நண்ணு தலையுடையது நணியது ஆயிற்றாம். நணியது புனிறு என வருதல் இலக்கிய வழக்கு. நணியது என்பதன் நெருக்கத்தைக் குறுநணி காண்பதாக நம்முள் என்னும் புறநானூற்று அடி கூறும். சின்னா பின்னா(சின்னம் பின்னம்) சின்னம் - தனிமைப்படுத்துதல் பின்னம் - சிதைவுபடுத்துதல் போர்க்களத்தின் நிகழ்வாக சின்னா பின்னம் என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்தவேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து தனிமைப் படுத்துதலும், பின்னர்த் தனிமைப் படுத்தப்பட்ட அவனை உறுப்பறுத்தல் முதலியவற்றால் சிதைத்தலும் வழக்கம். அவற்றுள் சின்னம் தனிமைப்படுத்துதல் பொருளதாம். தனிச்சொல்லைச் சின்னம் என்பார் தொல்காப்பியர். பின்னமாவது முழுமையைக் குறைத்த குறையாம். பின்னக் கணக்கால் பின்னப் பொருள் அறிக. சின்னா பின்னம் சின்னம் - ஊதுகொதும்பு பிடித்துச் செல்லும் முன்னிலை. பின்னம் - பின்னிற்கும் நிலை. போரில் சின்னம் முற்படுதல் வழக்காறு. வீரர் பின்னே செல்வர். வலிமையிலாப் படை வீரர் தோல்வி காணுமிடத்துப் புறமுதுகிட்டுத் தப்பியோடுவதும் உண்டு. அப்போது சின்னம் பிடித்தவர் பிற்பட, வீரர் முற்பட ஓடித் தப்புவதைச் சின்னா பின்னம் என்பதும் வழக்கே. அவ்வாறு செய்தலைச் சின்னா பின்னம் படுத்துதல் என்பதும் தக்கதே. சீர் சிறப்பு சீர் - சிறந்த பொருள்களை உவந்து தருதல். சிறப்பு - முகமும் அகமும் மலரச் சிறந்த மொழிகளால் பாராட்டுதல். சீர் வரிசை: சீர் செய்தல் எனத் திருமண விழா, பூப்பு நீராட்டுவிழா ஆகியவற்றில் நிகழ்த்தப் பெறும் நிகழ்ச்சிகளால் சீர் என்பதன் பொருள் புலப்படும். சிறப்பு என்பது உணர்வால் சிறப்பித்தலாம், ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்துண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்னும் மொழியில் கொடைப் பொருளைக் கொடுக்கும் தன்மையே மதிப்பீடாக்கல் புலப்படும். சீர் செனத்து சீர் - சிறந்த பொருள் வாய்ப்பு செனத்து - மக்கட் கூட்டம். சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச் சிறப்பும் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்துதல் கண்கூடு. ஆள் கூட்டங்கண்டே ஒருவன் சிறப்பை மதிப்பிடுதல் உலகநடைமுறை. அவனுக்கென்ன நாலு பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு பாராட்டு. செனம்-சனம்; செனம், செனனம், செனகன், செனனீ, சென்மம் என்பவை முறையே மக்கள் பிறப்பு, தந்தை, தாய், முற்பிறப்பு என்னும் பொருள்தரும் வடசொற்களாம். அவன் சீர் செனத்தியான ஆள் என்பதும் சீர் செனத்திக்குக் குறைவில்லை என்பதும் வழக்கம். சீராட்டும் பாராட்டும் சீராட்டு - ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல். பாராட்டு - ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம். சீர்-சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று. சிறப்பிலாத் தன்மைகள் உளவாயின் அவற்றைக் கூறாது விடுப்பினும் இல்லது கூறுதல் இல்லையாய் சிறப்பை மட்டும் தேர்ந்து கூறுவது இதுவாம். பார்- பரவிய தன்மையது, குறையுடையவை. இருக்கு மாயினும் அவற்றைக் கூறாததுடன் இல்லாத தன்மைகளையும் இயைத்து இனிது மகிழப் புனைந்து கூறுதல் பாராட்டாகாது. ஆனால் இதுகால் சீராட்டும் பாராட்டும் ஒப்ப இயல்கின்றன. சீலை துணி சீலை - புடைவைகள். துணி - மற்றைத் துணிகள் சீரை என்னும் பழஞ் சொல்லில் இருந்து வந்தது சீலையாம். இதனைச் சேலை என வழங்குதல் இதன் மூலமறியார் பிழையாம். சீரை சுற்றித் திருமகள் பின்செல் என்பது கம்பர் வாக்கு. துண்டு வேட்டி அறுவை முதலியவை வெட்டுதல் பொருளில் வந்தவை, துணி என்பதும் துணிக்கப்பட்டது என்னும் பொருளில் வந்ததாம். சுண்டு சுழி: சுண்டு - நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய். சுழி - தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு. முன்னதைச் சுண்டு வாதம் என்பர் வாதம் என்பதற்கு வளி என்பது தமிழ். சுழியாகக் கிடப்பது சுழி. சுழல், சுழிவு என்பவனற்றைக் கருதுக. பிள்ளையார் சுழி என்பதும் வழக்கே. மாடுகள் பிடிப்பவர் சுண்டு சுழி பார்த்தே பிடிப்பர். தங்களுக்கு ஆகும் ஆகாது என்பதைச் சுண்டு சுழிகளைக் கொண்டே தீர்மாணிப்பர். சுழியன் சேட்டைக்காரன் என்பதும் சித்திரைச் சுழி இரட்டைச் சுழி என்பதும் வழக்கே. சுழிவு நெளிவு: சுழிவு - திறமையாக நடந்து கொள்ளல். நெளிவு - பணிவாக நடந்துக் கொள்ளல். ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக் கருதி வந்தது இவ்விணை மொழியாம். அவன் சுழிவு நெளிவு அறிந்தவன் எனச் சிலரைப் பாராட்டுவர். சூழ்ச்சி, சூழ்வு என்பவை அறிவு ஆராய்ச்சி வழிப்பட்டவை. அவையே சுழிவாம். சுழிவு வல்லார் சூழ்வார் எனப்படுவார். முன்பு நற்பொருளில் வந்த சூழ்ச்சி இப்பொழுது தந்திரம் (ஏமாற்று) என்னும் பொருளில் வழங்குகின்றது. நெளிதல்-வளைதல். அதாவது வணங்கிய கையும் இணங்கிய நாவும் உடையவராக விளங்குதல். சுற்றம் சூழல்: சுற்றம் - உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர். சூழல் - சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர். சுற்றமும் சூழலும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்று மங்கல விழாக்களுக்கு அழைப்பது வழக்கமாம். சுற்றம் அணுக்கமான அல்லது நெருக்கமான வட்டமும், சூழல் அடுத்த வட்டமுமாம். உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேன்டா என்பதால் சுற்றம் உடன்பிறந்தாரைச் சுட்டுதல் அறியவரும். சூடு சொரணை: சூடு - தீயது அல்லது தகாதது; ஒருவர் செய்யும்போதோ சொல்லும்போதோ உண்டாகும் மனவெதுப்பு. சொரணை - மான உணர்வு. சூடு சொரணை இல்லாதவன் என்றோ சூடு சொரணைக் கெட்டவன் என்றோ பழிக்கும் வழக்கு நடைமுறைப் பட்டது இது. எரிகிறது; எரிச்சலைக் கிளப்பாதே என்பவை சூடு என்பதை வெளிப்படுத்துவன. ஒன்று, தன் உடலில் படுவது தெரியாமல் இருப்பவரைச் சொரணை இல்லாதவர் என்பவர். இங்குச் செய்யும் அல்லது சொல்லும் ஒன்று மனத்துத் தைக்காமல் இருத்தலைச் சொரணையில்லாமை எனப்பட்டதாம். செங்கல் மங்கல்: செங்கல் - செவ்வானமாகத் தோன்றும் மாலைப் பொழுது. மங்கல் - செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது. நான் அங்கே போகும் போது செங்கல் மங்கல் பொழுதாக இருந்தது என்பது வழக்கு. சுடுமண் செந்நிறம் பெறுதலால் செங்கல் எனப்படுவது அறிக. மங்கல் என்பது செந்நிறம் மங்கி இருள் வருதலைக் குறித்ததாம். செத்தை செதும்பல்: செத்தை - உலர்ந்து போன இலை, சருகு முதலியவை. செதும்பல் - உலர்ந்து போன இலை சருகு முதலியவை செதுமி அல்லது செம்மிக் கிடத்தல். செத்தை உலர்ந்து போன ஒன்றைக் குறிக்கும். செதும்பல் எனின் செத்தைகள் பல செறிந்து கிடத்தலைக் குறிக்கும். மடை, நீர்ப்பிடியடைத்துக் கிடந்தால் செத்தை செதும்பல் அடைத்துக் கொண்டு இருக்கும்; எடுத்தால் சரட்டென நீர் போகும் என்பது வழக்கம். செறிந்து கிடத்தல் செம்மல் எனப்படுவதை அறியின் செதும்பல் விளக்கமாம். சேறும் தொளியும்: சேறு - நீரொடு கூடிக் குழைந்த மண் சேறு ஆகும். தொளி - நெல் நடவுக்காக உழுது கூழாக்கப்பட்ட நெகிழ்வான அல்லது குழைந்த நிலம் தொளியாகும். நடவில் தொளி நடவு என்பதொன்று. கை வைத்த அளவில் நாற்றுப் பயிர் சேற்றுள் தொள தொளப்பாகப் போய் ஊன்றிக் கொள்ள வாய்ப்பானது அது. ஆகலின் தொளி எனப்பட்டதாம். சேறு நீரொடு கூடிக் குழைந்த மண் எனினும், கட்டிப்பட்ட இறுக்கமும் உடையதாம். சொங்கு சோகை: சொங்கு - தவசமணியின் மேல் ஒட்டியுள்ள பக்கு. தோல், உமி. சோகை - கரும்பு சோளம் முதலியவற்றின் தோகை. சொங்கு நிரம்ப உடைய சோளம் சொங்குச் சோளம் என வழங்குகின்றது. அது சிவப்புச் சோளம் எனவும் பெறும். அதன் சொங்கு பெரிதாகவும் சிவந்தும் இருக்கும். சோகை என்பது தோகை என வழங்குவதாம். தோகை என்பதே சோகை யாயிற்று எனக் கொள்க. சொண்டு சொறி சொண்டு - தோலில் பக்குக் கிளம்புதல் சொறி - தினவுண்டாக்கும் பொரி கிளம்புதல். தோலில் உண்டாகும் பக்கு சொறியும்போது உதிரும். மீனின் உடலில் உள்ள செதில் போல்வது அது. தோல் வண்ணத் திற்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. சொறி என்பது சொறி சிரங்கின் மூலமானது. வேர்க் குருவிற்கும் சொறிக்கும் வேறுபாடுண்டு. ஆயின் இரண்டும் உடல் வெதுப்பால் ஏற்படுவனவேயாகும். சொண்டு சொள்ளை சொண்டு - காய்கறி பழங்களின் வெளியேயுள்ள சுணை, பக்கு, வெடிப்பு முதலியவை சொண்டு எனப்படும். சொள்ளை - அவற்றின் உள்ளேயமைந்துள்ள கேடு சொள்ளை எனப்படும். சுணை மிக்க ஒன்று பூசுணை என்பதை அறிக. அதன் காம்பு இலைகளில் முன்போல் அமைந்த அமைப்பையும் வெண்ணிறச் சுணையையும் கருதுக. சுணை படுதலால் அரிப்பு உண்டாகும். அரிப்பு உண்டாகாமை சுணை கெட்டதாம். மான மற்றவனைச் சூடு சொரணை இல்லாதவன் என்பதால் அறிக. சொரணையும் சுணையும் ஒப்பாம். சொத்தை சொள்ளை : சொத்தை - புறத்தே ஓட்டை பொத்தல் முதலியவையுடைய காய்கறிகள். சொள்ளை - வெளியே தெரியாமல் உள்ளே கெட்டுப்போன காய்கறிகள். சொத்தை என்பது சூன், என்றும், சூனம் என்றும் வழங்கும். சொள்ளை உள்ளே கேடுடையதென்பது வெளியே பார்த்தால் வெள்ளை: உள்ளே பார்த்தால் சொள்ளை என்னும் பழமொழி விளக்கும். சொல்லாமல் கொள்ளாமல் சொல்லாமல் - எண்ணியது இன்னது என்று சொல்லாமல் கொள்ளாமல் - எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல். ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான் என்பதில் சொல்லாமல் என்பது விடை பெறாமல் என்பதையும், கொள்ளாமல் என்பது வழிச் செலவுக்கு வேண்டும் தொகை பெறாமல் என்பதையும் குறிக்கும். சொல்லிக் கொள்ளாமல் என்றாலும் இப்பொருள் தருவதேயாம். செலவு உரைத்தலும், வழிச்செலவு தந்து விடை தருதலும் வழக்காக இருந்த நாளில் அவ்வழக்கில் இருந்து வந்தது இது. சொறி சிரங்கு அரிசிரங்கு சொறி சிரங்கு - பெருஞ்சிரங்கு. அரிசிரங்கு - சிறு சிரங்கு. முன்னது இடைவெளிப்படப் பெரிது பெரிதாக கிளம்பும்; நீரும் புண்ணும் உண்டாம். பின்னது இடைவெளியின்றி வியர்க்குரு போல இருக்கும். ஓயாமல் அரித்தலால் தேய்த்துக் கொண்டிருக்க நேரும். சொறி சிரங்கன் சொறியாமல் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அரி சிரங்கன் சொறியாமல் இருக்க முடியாது. ஆதலால் சொறி சிரங்கனை நம்பினாலும் அரிசிரங்கனை நம்பக் கூடாது என்பர். தக்கி முக்கி தக்குதல் - அடி இடறுதல் முக்குதல் - மூச்சுத் திணறுதல். உடல் பருத்தும் அகவை முதிர்ந்தும் உள்ளவர் உயரமான இடத்திற்கு ஏறுவது கடுமையானது. அப்படி ஏறுங்கால் அடி தள்ளாடுதலும், மூச்சு இரைத்தலும் உண்டாம். அந்நிலையில் அவர் தக்கி முக்கி ஏறுவார். இதனைத் தத்தி முத்தி என்பதும் உண்டு. தக்கு-தடை, தடுப்பு, தாழ்வு என்னும் பொருளது. முக்கு- மூச்சு முட்டுதல், பெரு மூச்சு வாங்குதல், மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குதல் என்னும் பொருளது. வடக்கு உயரத் தாழ்ந்த தெற்கு தக்கணம் எனப்படுவதறிக. தங்குதடை தங்கு - தங்குகிற அல்லது நிற்கின்ற நிலை. தடை - தடுக்கப்பட்ட நிலை. தங்கு தடை இல்லாமல் வரலாம் என்றும் தங்கு தடையில்லாமல் பேசு என்றும் கூறக் கேட்கலாம். தானே ஒரு காரணத்தால் தடைப்பட்ட நிலையோ, பிறரால் தடுக்கப்பட்டு நிறுத்தும் நிலையோ இல்லாமல் வரலாம் பேசலாம் என்பதாம். தங்குதல் தன்வினையும் தடை பிறர் வினையுமாகக் கருதுக. தட்டிக் கொட்டி: தட்டுதல் - மண் கலங்களைக் கையால் தட்டிப் பார்த்தல். கொட்டுதல் - தட்டிப் பார்த்தப் பின்னர், விரலை மடித்துக் கொட்டிப் பார்த்தல். தட்டிக் கொட்டிப் பாராமல் மண்கலங்களை வாங்குவ தில்லை. அவ்வழக்கம் வெண்கலக் கலங்களுக்கும் வளர்ந்தது. ã‹d® xUtiu VjhtJ nf£lhš ‘ v‹id¤ j£o¡ bfh£o¥ gh®¡»whah? என்னும் அளவுக்கும் சென்றுள்ளது. தட்டுதல், ஓட்டை, உடைவு, கீறலைக் காண உதவும். கொட்டுதல், வேக்காட்டை அறிய உதவும். தட்டிக் கொட்டுதல் ஆய்வு நோக்கினது ஆதலால் ஆய்வுப் பொருள் தட்டிக் கொட்டுதலுக்கு வந்தது. தட்டிமுட்டி: தட்டுதல் - இடறுதல். முட்டுதல் - தலைப்படுதல் தக்கிமுக்கி என்னும் இணைச் சொல் போல்வது இது. தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும்; முட்டுதல் பெரும்பாலும் தலையில் முட்டுதலையும் அல்லது தலை முட்டுதலையும் (குறிக்கும். தட்டிவிழுதல் என்னும் வழக்கையும், முட்டு முட்டு என்று குழந்தைகளுக்கு முட்டுக் காட்டுதலையும் கருதுக. தட்டுதல்- தடுக்குதலாம். தட்டுத்தடங்கல்: தட்டு - ஒன்றைச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகுமானால் அது தட்டு எனப்படும். தடங்கல் - அச்செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும். சிலர் எடுத்துக் கொண்ட செயல்கள் தொடக்க முதல் இடையூறு ஏதுமின்றி இனிது முடிவதாய் அமையும். அவர்தட்டுத் தடங்கல் இன்றிச் செய்து முடித்ததாக மகிழ்வர். தடையுண்டானால் தடந்தோள் உண்டு என்பது புரட்சியுரை. தட்டுத் தடுமாறி: தட்டுதல் - ஏதாவது ஒன்று இடறுதல் தடுமாறுதல் - இடறுதலால் வீழ்தல். இது தட்டித்தடுமாறி எனவும் வழங்கும்; தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல். மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ நடத்தற்குத் தட்டித் தடுமாறுதல் கண்கூடு. தள்ளாடுதல் தள்ளமாடுதல் எனவும் வழங்கும். தள்ளமாட்டாமல் இருக்கிறேன் என்பது இறப்பு வரவில்லையே என்னும் ஏக்கத்தில் வருவது. தக்கிமுக்கி, தட்டிமுட்டி என்பவை காண்க. தட்டுதாம்பாளம்: தட்டு - திருநீறு, சூடன் வைக்கும் சிறுத் தட்டு. தாம்பாளம் - தேங்காய் பழம் வெற்றிலை வைக்கும் பெருந்தட்டு. தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும். கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம், தட்டு, இரண்டும் கொண்டு செல்வது வழக்கம். அகலம் பெரிது சிறிது என்பது மட்டுமில்லாமல் அமைப்பு முறையிலும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு. இனித் தாம்பாளத்தைப் பெருந்தட்டு என்பதும் உண்டு. தராசுத் தட்டு, இட்லித் தட்டு, உண்கலத்தட்டு எனப்பிற தட்டுகளும் உள. தட்டுமுட்டு(ப் பொருட்கள்): தட்டு - உண்ணற்கும் மூடுவதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன. முட்டு - அடுக்களை அல்லது சமையற்கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை சட்டி அண்டா குண்டா முதலிய பொருள்கள். தட்டு முட்டுப் பொருள்கள் என்பது கைக்கும் காலுக்கும் தட்டவும் முட்டவும் இருப்பவை. எனினும் எடுக்க வாய்ப்பாக வைத்திருக்கும் பொருள்களாம். தட்டு-தட்டுதல்;முட்டு-முட்டுதல்; வினை; தட்டு-தட்டம் போல்வன; முட்டு-முட்டி; பெயர் தென்னை பணை மரங்களின் பாளைசீவி முட்டி கட்டுதல் வழக்கம். பிச்சை முட்டி என்றொரு வழக்கும் உண்டு. தட்டை தாள்: தட்டை - கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு. தாள் - நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு. தட்டையும் தாளும் புல்லினத்தனவே. எனினும் அவற்றின் அடித்தண்டு தட்டை, தாள் எனப்பகுத்து வழங்கப்படுகின்றன. ஓலை, கீற்று, தோகை என்பன புல்லினத்திற்குரிய பல்வேறு இலைகளே அல்லவோ, அது போல் என்க. மாட்டுக்குத் தட்டை தாள் சேர்த்துப் படப்பை போட்டுக்கொள்ளுதல் வேளாண் தொழிற்குரியதாம். தடவுதல் நீவுதல்: தடவுதல் - ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல். நீவுதல் - தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல். தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக் காலிலோ கையிலோ தொட்டு வைத்துப் பரவச் செய்தல் தடவுதலாம். அதனை ஏற்ற வண்ணம் மேலும் கீழும் பக்கங்களிலும் தசை நிலைக்கு ஏற்றவாறு அழுத்தித் தேய்த்து உருவுதல் நீவுதலாம். தடவித் தடவி நீவுதலும், நீவி நீவித் தடவுதலும் வழக்காறு. ஒற்றடம் வைத்து நீவுதலும் உண்டு. அங்குத் தடவுதல் இல்லையாம். கால் வலிக்கிறது இக்களிம்பைக் கொஞ்சம் தடவி நீவுங்கள் என்பது நடைமுறை. பாறுமயிர் குடுமிக்கு எண்ணெய் நீவுதலைச் சுட்டும் புறம். தடைவிடை தடை - தடுத்துக் கேட்கும் வினா விடை - தடுத்துக் கேட்கும் வினாவிற்குத் தரும் மறுமொழி. மேனிலைத் தேர்வுகளிலும், வாதாட்டு அரங்குகளிலும் தடைவிடை ஆட்சியுண்டு. தடை விடைகளால் நிறுவுக என்பது வினாவின் அமைதியாம். இக்கடாவுக்கு விடை என்னை? என்பதில் வரும் கடா என்பதன் பொருள் வினா என்பதாம். இவ்வினா பொதுவாக வினவப்படுவதாம். தடை அத்தகைய தன்று. எழுப்பப்பட்ட கருத்தைத் தடுத்து அல்லது மறுத்து வினாவுவதாம். தடை என்பது தடுக்கும் இயல்பினவற்றை யெல்லாம் தழுவிப் பின்னே பொருளால் விரிந்தது. தண்டா தசுக்கா: தண்டா - வரி வாங்க அல்லது வரிதண்ட வந்தவனா? தசுக்கா - கொழுத்துப் போய் வந்தவனா? நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே அவன் தண்டா தசுக்கா என்று குதித்து விட்டான் என்பது வழக்கு. அரசு வரி தண்டவந்தவன் அடாவடி ஆணை செலுத்து வதையும் தடி தூக்கியவனெல்லாம் தண்டக்காரனா என்பதையும் கருதினால் தண்டா என்பதன் பொருள் விளங்கும். தண்டு என்பது படை; தசுக்கு என்பது கொழுத்த ஊன். தத்தித் தாவி: தத்துதல் - தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல். தாவுதல் - முயல்போல் பெரிதளவு இடைவெளிபட உயர்ந் தோங்கித் தாவுதல். தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத் துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது நிலத்தினின்று மிக உயராமையும் மிக இடைவெளி படாமையும் உடையது. தத்துதல் தாவுதல், குழந்தையர் விளையாடல்களில் இடம் பெறும், போலிகை ஆட்டங்களில் இவை இடம் பெறும். தப்புத் தண்டா: தப்பு - கொண்டொழுகத் தக்க கடைப் பிடியைக் கொண்டொழுகாது தப்புதல். தண்டா - தண்டனைக் குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல். தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே; தப்புத் தண்டாச் செய்து மாட்டிக் கொள்ளாதே என்பவை அறிவுரைகள். தப்பும் தவறும் என்பதில் தப்பு என்பதன் விளக்கம் அறிக. தண்டா-தண்டத்திற்கு உரியது தண்டம். அது தண்டா என நின்றது. தண்டா என்பது தவிர்க்கத் தக்கவையுமாம். முதுமொழிக் காஞ்சியில் வரும் தண்டாப் பத்து இப்பொருளது. தப்பும் தவறும்: தப்பு - கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண் டொழுகாது தப்ப விடுதல். தவறு - செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல். தப்பு, தவறு என்பவை குற்றம் என்னும் ஒரு பொருளே தருவன எனினும், முன்னது தன் கடைப்பிடியொழிந்த குற்றத்தையும் குறிப்பதாம். தப்புதல் - தப்பித்தல் என்பவனற்றைக் கருதுக. பாண்டியன் தவறு இழைப்ப என்பதையும், இறந்தாரைத் தவறினார் என்பததையும் எண்ணுக. தப்பைக் காட்டிலும் தவறு கொடிது என்பதையும் எண்ணுக. இக்கால், இரண்டும் வேறுபாடற வழங்குகின்றதாம். தள்ளி முள்ளி: தள்ளி - மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல். முள்ளி - தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும் நகர்த்துதல். சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி ஓட்டுதல் வழக்கம். அவ்வழக்கத்தால் தோன்றிய இணைச் சொல், சுறுசுறுப் பில்லாதவர்களை வேலை வாங்க வேண்டியிருப்பதாகக் கூறுவதாயிற்று. தள்ளுதல் ஏவி ஏவிச் செய்வித்தலும், முள்ளுதல் இடித்துரைத்தும் திட்டியும் செய்வித்தலும் குறித்தது. தாங்குவார் தரிப்பார்: தாங்குவார் - வறுமைக்கும் துயருக்கும் களை கணாக (ஊடாக இடையில்) அல்லது துணையாக இருந்து தவிர்ப்பார். தரிப்பார் - உற்ற போதெல்லாம் உடனிருந்து உரையாலும் உளத்தாலும் உதவுவார். தாங்குவார், சுமை தாங்கி போல்வார். தரிப்பார் உடை போல்வார். இவ் வுவமைகளாலேயே தாங்குவார் தரிப்பார் இயல்பு புலனாம். தாங்குநர் என்பதை வள்ளலார் என்னும் பொருளில் வழங்கும் பெரும்பாண். ஆடை அணிகலம் தரித்தலையும் ஏற்று இருத்தல் என்னும் பொருள் அதற்குண்மையையும் எண்ணுக. தாட்டு ஓட்டு(தாட்டோட்டு) தாட்டு - தவணை சொல்லல். ஓட்டு - இல்லைபோ எனச் சொல்லல். கடன் வாங்கியவன் தராமல் இப்போது பிறகு என்று சொல்லிக் கொண்டு வந்தால் நான் இன்ன நாள் வருவேன் அன்று தாட்டோட்டுச் சொல்லாமல் தந்துவிட வேண்டும்: இல்லையானால் நடக்கப் போவது வேறு என்று சொல்லி எச்சரிப்பது நடைமுறை. கெடுக்கடந்து நிற்கும் பணத்தை வாங்க வருபவன் வாயில் இருந்து வரும் சொல் தாட்டோட்டாகும் தாட்டு பூட்டு தாட்டு - தாட்பாளைப் போடு பூட்டு - பூட்டைப் போடு சொருகு கம்பியோ கோலோ உடையது தாட்பாள்; அவற்றைப் போடுவது தாட்டு கொண்டி போடுவதும் தாட்டேயாம். பூட்டுப் போட்டுப் பூட்டுவது பூட்டு எனப்பட்டது. என்ன நீ தாட்டுப் பூட்டு என்று குதித்தால் விட்டுவிடுவேனா? என்பது வழக்கு. தாட்டுப் பூட்டு என்பவை தடுத்து அடைத்து வைத்துவிடுவதாக அச்சுறுத்தலாம். சிறை வைத்தல் அது என்க. தாள் தப்பட்டை: தாள் - நெல்புள் இவற்றின் தாள்; எழுதுபொருளாம் தடித்ததாளுமாம். தப்பட்டை - மேற்குறித்ததாள்களின் சிதைவு; இனித் தப்பைப் பட்டை தப்பட்டையுமாம். தாள்- புல்லினத்தின் தண்டுகள் சில தாள் எனப்படும். கடிதம் செய்தற்குரிய மூலப் பொருள்களில் பெரும்பாலனவும் புல்லினப் பொருள்களேயாம் என்பதும் எண்ணத் தக்கது. முன்னாளில் பயன்படுத்திய ஓலை, மடல் முதலியவையும் புல்லினம் சார்ந்தவையே. மூங்கில் பிளாச்சு - தப்பை எனப்படும். அது பட்டையாக இருக்கும். ஆதலின் தப்பைப்பட்டை, தப்பட்டை என வந்தது. ஆகலாம். தாள் தப்பட்டை இல்லாமல் பொறுக்கச் சொல்வது வழக்கம். தாறு மாறு : தாறு - தாற்றுக் கோலால் குத்துதல். மாறு - முள் மாற்றால் அறைதல். தாறுமாறாக பேசுதல்; தாறு மாறு செய்தல் என்பவை நாட்டு வழக்கில் உள்ளவை. தாறுமாறு செய்வது புண்படுத்துவதாம். தாற்றுக்கோல், இரும்புமுள், கம்பு, சாட்டை இவற்றை ஒருங்கு உடையதாம். அதனால், குத்தியும் அடித்தும் அறைந்தும் மாட்டை ஓட்டுதல் உண்டு. தாற்றுக் கோலை முன்னும் பின்னும் மாற்றிப் பயன்படுத்தலை அறிக. தாறுமாறு அத்தகையதே. மாறு கம்பு, வளார், குச்சி எனவும்படும். தாறுகோல் எனவும் வழக்கில் உண்டு. தாறு மாறு: தாறு - தாற்று உடையில் கட்டுதல் மாறு - தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல். தட்டுச் சுற்று, வட்டுடை என்பவை மேல் நாள் உடைமுறை. அதன் வழி வந்ததே தாறு கட்டுதல். தாற்றுப் பாய்ச்சுதல் என்பதே. சிற்றூர்களில் தாற்பாச்சை என இன்றும் வழக்கில் உள்ளது. கீழ்பாச்சி மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக மாற்றிக் கட்டுதல் போல் எதிரிடையாகச் செய்வதைத் தாறுமாறு என்பதும் பொருந்துவதாம். தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும் என்பதில் தற்றுடை வந்தது அறிக. திக்குதல் திணறுதல்: திக்குதல் - பேச்சுத் தடக்கமாதல் திணறுதல் - மூச்சுத் தடக்கமாதல் திக்குத் திக்கென அச்சத்தால் திணறுதல் அறிந்ததே. திக்குதல், திக்குவாய் என்பதில் புலப்படும். திக்குதல் கொன்னல் எனவும்படும். திடுக்கீடான நிகழ்வுக்கு ஆட்படும் ஒருவர் திக்குதல் திணறுதலுக்கு ஆட்படுவது காணக்கூடியதேயாம். திக்குத் திசை: திக்கு - புரவலர் அல்லது வள்ளன்மையாளர் (திக்குக்கு உதவியாக அமைந்தவர்) திசை - புரவலர் அல்லது வள்ளன்மையாளர் இருக்கும் திசை. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பது தனிச் சிறப்புடைய பழமொழி. இவண், திக்கு என்பது ஆதரவாளரைக் குறிக்கும். புலவர்களும், கலைஞர்களும், இரவலர்களும் திக்குத் திசை தெரியவில்லை என ஏங்கும் நிலை இருப்பதுண்டு. அந்நிலையில் எழுந்த இணைச்சொல் திக்குத்திசை தெரிய வில்லை என்பதாம். திக்கு என்பதும் திசை என்பதும் ஒரு பொருட் சொல் போல் தோன்றினும் திக்கு என்பதன் பொருள் ஆதரவு என்பதாம். திக்கு வேறில்லை என்பது அருணகிரி அந்தாதி. திக்கு முக்கு திக்கு - சொல் வெளிப்பட முடியாத நிலை. முக்கு - மூச்சு வெளிப்பட முடியாத நிலை. அவன் திக்குமுக்காடிப் போனான் என்பது வழக்கு. திக்கு முக்காடுதல் அச்சத்தால் நிகழ்வதாம். திக்குதல் திணறுதல் என்பது காண்க. திக்கிப் பேசுதல், திகைப்பு வருதல் என்பவைக்கெல்லாம் அச்சமே அடிப்படையாம். உடற்குறையால் வருவதாயின் அச்சத்தின் பாற் படுவ தில்லையாம். அவர்க்கு அச்சமும் கூடின் உள்ளதும் போயது நொள்ளைக் கண்ணா என்னும் பழமொழிக்கு மெய்ப்பாகும். திண்டு திரடு: திண்டு - ஓரிடத்தில் உயர்ந்து தோன்றும் கல் அல்லது கற்பாறை. திரடு - தொடராக மேடுபட்டுக் கிடக்கும் மண்ணும் கரடும். ஓரிடத்து மேட்டையும் தொடர் மேட்டையும் குறிக்கும். திண்டு திரடு என்பது இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் ஆகியவற்றில் ஓர் ஒழுங்கற்று மேடு பள்ளம் மொத்தை கற்றை என அமைந்த அமைப்பைக் குறித்து வருவதாயிற்று. துணி திண்டும் திரடுமாக இருக்கிறது என்பதும் வழக்கே. திண்டு என்பது மெத்தை திண்ணை முதலிய சொற்களுடன் ஒப்பீட்டுக் காணத்தக்கதாம். திண்டுக்கல் என்னும் பெயரையும் கருதுக. ஊரூர்க்கு திரடுகள் இல்லாமல் இல்லையே! திரள் திரளை, திரட்டு என்பவற்றில் திரடு என்பதன் பொருள் வெளிப் படுமே. திண்டு முண்டு திண்டு - மனத்தில் இரக்கமில்லாத, பாறைக் கல் போன்ற தன்மை முண்டு - முட்டி மோதும் தன்மை. திண்டு முண்டுக் காரன் என்பதில் வரும் திண்டும் முண்டும் இப்பொருளவாம். இனித் திண்டுக்கு முண்டு என்பதும் உண்டு. பாறைக்கல் போல ஒருவன் இருந்தால் அவனையும் முட்டித் தாக்குபவனைத் திண்டுக்கு முண்டன் என்பதும் உண்டு. திண்டு முரட்டுத்தனத்தையும் முண்டு மோதுதல் அல்லது முட்டுதலையும் குறிப்பனவாம். திருகல் முறுகல் திருகல் - வளைதல் முறுகல் - முதிர்தல் அல்லது முற்றுதல். மரம் திருகல் முறுகலாக இருக்கிறது என்பது வழக்கு. திருகுதல் வளைதல், கோணுதல் என்னும் பொருளது. தென்னுதல் என்பதும் அது. மிக முற்றிய மரம். பக்குக் கிளம்பியும் வெடிப்பு பொந்து ஆகியவை ஏற்பட்டும் இருக்கும். வாள், வாய்ச்சி, உளி கொண்டு வேலை செய்தற்குத்திருகல் முறுகலாக இருக்கும் மரங்கள் இடரானவை. மாந்தருள் சிலர் இயல்பும் திருகல் முறுகலாக அமைந்துவிடுவதுண்டு. அவர்களைத் திருகல் முறுகலானவர்கள் என ஒன்றாமல் ஒதுங்கி போவது கண்கூடு. தின்றல் தெறித்தால் தின்றால் - உண்டு முடித்தால் தெறித்தால் - கைகழுவி முடித்தால். தின்றால் தெறித்தால் வீதிக்குப் போக வேண்டியது தானே! வீட்டுக்குள் ஏன் அடைந்து கும்மாளம் போடுகிறீர்கள் என்பது குழந்தைகளைப் பார்த்துப் பெரியவர்கள் வெருட்டுதல். உண்டு. கை கழுவி முடித்தால் வெளியே போய், அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பாம். தின்றல் என்பது வெளிப்படை. தெறித்தல் என்பது நீர் தெறித்தல் என்பதாம். தண்ணீர் தெறிக்கும் ஒதுங்கி நில்லுங்கள் என்பது வழக்கு. தெறித்தல் என்பது கையலம்புதலைக் குறித்ததாம். துட்டுத் துக்காணி (துய்க்காணி) துட்டு - கைப்பொருள் துய்க்காணி - துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு வேண்டும் நிலபுலம். துட்டுத்துக்காணி எதுவும் இல்லை என்று இரங்குவதும், துட்டுத் துக்காணி உண்டா? என்று வினவுவதும் வழக்காறு. துட்டு என்பது குறைந்த பொருளையும், துக்காணி என்பது குறைந்த நிலபுலத்தையுங் குறிப்பதாம். அதற்கும் வழியில்லை என்பது இரங்கத்தக்க நிலையை மிகுவிப்பதாம். துய்த்தல்-வாழ்வு நுகர்வுக்கு வேண்டும் வாய்ப்பு. அதற்காக முதியர்க்கு சோறுடைக்கென (அன்னவத்திர)ப் பங்கு தரும் வழக்கத்தை அறிவது தெளிவாம். துட்டுத் துக்காணி: துட்டு - நான்கு சல்லி, அளவுடைய ஒரு காசு. துக்காணி - இரண்டு சல்லி அளவுடைய ஒரு காசு. துட்டு என்பது முந்தை வழங்கிய ஒரு காசு வகையாம். ஒரு ரூபாவுக்கு 48 துட்டு என்பதும் அணாவுக்கு 3 துட்டு என்பதும், ஒரு துட்டுக்கு 4 சல்லி என்பதும் முன்னே வழங்கிய காசு வகை. தெலுங்கில் துக்காணி என்பது, இரண்டு சல்லியைக் குறிக்கும் ஒரு வகை காசாக இருந்தது. ஒரு துட்டு. அரைத்துட்டு என்னும் அளவின துட்டு துக்காணி என்பவை என்க. துக்காணி போல் ஒரு பொட்டிட்டு என்பது தனிப்பாடல். துக்குணி கிள்ளி என்னும் குற்றாலக்குறவஞ்சியால் துக்குணி சிறிதாதல் புலப்படும். துண்டம் துள்ளம்: துண்டம் - துண்டு துண்டாக அமைந்தது துண்டம் ஆகும். துள்ளம் - துண்டத்தின் இடை இடையே அமைந்த சிறு வட்டங்கள் துள்ளம் எனப்படும். ஒருவர் நிலப்பரப்பில் ஒரு பகுதி துண்டம் அல்லது துண்டு என்று அழைக்கப்படும். அத்துண்டின் ஊடே சில பகுதி களிலுள்ள பயிர்கள் கருகியோ வாடியோ போயிருந்தால் துள்ளம் துள்ளமாக கருகியோ வாடியோ போயிருப்பதாக வழக்காறு. துளி, துள்ளி, துள்ளம் என்பவை ஒரு பொருளன. துளியின் சிறுமை மழைத் துளியால் தெரியவரும். துண்டு துணுக்கு: துண்டு - ஒன்றைத் துண்டித்தது துண்டு. துணுக்கு - ஒன்றைத் துண்டித்ததைப் பலவாகத் துண்டித்தது. துண்டு என்பது துண்டிக்கப்பட்டதாம். துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் துண்டிக்கப்பட்டவையே. கூட்டத்தில் இருந்து ஒன்றை ஒதுக்குதல் துண்டித்தலாகச் சொல்லப்படுவதை அறிக. சின்னஞ்சிறு செய்திகள் துணுக்கு என இந்நாள் பெருக வழங்குதல் நினைவு கூரத்தக்கது. துணிமணி துணி - ஆடை அல்லது உடைவகை. மணி - அணிகல வகை. துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் ஒரு பொருளன. பாவில் இருந்து துணிக்கப்படுவதால் துணி ஆயிற்றாம். துணி என்பது உடுப்பனவற்றையெல்லாம் தழுவி நின்றது. அது போல மணி என்பது அணிவனவற்றையெல்லாம் தழுவி நின்றது. மணிவகை ஒன்பது; இக்கால் அவ்வொவ்வொன்றின் போலிமையும், புத்தாக்கமானவையும் எண்ணற்றுள. அவற்றால் அமைக்கப் பெற்ற அணி கலங்கள் எல்லாம் மணி என்னும் சொல்லுள் அடக்கமே. மணவிழாவுக்குத் துணி மணி எடுக்காதவர் எவர்? துள்ளத் துடிக்க துள்ளல் - காலும் கையும் நடுங்கி மேலும் கீழும் ஏறி இறங்கல். துடித்தல் - மூச்சுப் படபடத்து ஏறி இறங்கல். துள்ளத் துடிக்க அடித்து விட்டான் என்பது ஒரு குறைபாடு. சின்னது நணியதுகளைத் துள்ள துடிக்கவா செய்வார்கள்? என்பது இரங்கல் வழிவந்த வசைமொழி. துள்ளுதல் - நிற்கும் அல்லது இருக்கும் நிலையில் இருந்து மேலே, எழுந்து வீழ்தல். மீன்துள்ளல் அறிக. துள்ளுவதைக் காணவே கொலை செய்த கொடுமையாளரும் உளரல்லரோ! துள்ளு நடைப்புறவைக் கண்டு வியந்திருக்கிறான் ஒரு புலவன் .பிறர் துயருக்காகத் துடிப்பவர் மனித வடிவினர் எனினும் தெய்வ நிலையரே! தூசி துப்பட்டை தூசி - கிழிந்து நைந்து போன துண்டும் துணியும். துப்பட்டை(துய்ப்பட்டை)-அழுக்கேறிக் கழிந்து போன பஞ்சு. தூசு என்பது துணி என்னும் பொருளது. தூசு நல்குதல் பண்டு தொட்டே வரும் வழக்கம். தூசி, தும்பு காண்க. துய் என்பது பஞ்சு. துய்ப்பட்டை என்பது பஞ்சுக்கற்றை அல்லது பஞ்சுத் தொகுதி என்பதாம். இப்பொழுது தூசி துப்பட்டை என்பது முதற்பொருளில் இருந்து பெரிதும் விலகிக் குப்பை கூளப் பொருளில் வழங்கு கின்றதாம். தூசி தும்பு: தூசி - கிழிந்து நைந்து போன துண்டும் துணியும். தும்பு - அறுந்து போன நூலும், கழிந்துபோன பஞ்சும். தூசு-துணி: தூசு என்பது தூசியாக நின்றது; கொடி பிடித்துப் போகும் படை தூசிப் படை எனப்படும். தூசியைக் கிளப்புவதால் அப்பெயர் வந்தது என்பது பொருந்தப் புனைதல். பொருளுடையதன்று. தும்பு-நூல், கயிறு, சணல்; கயிறு தும்பு தும்பாகப் போய்விட்டது; துணி தும்பு தும்பாக கிழிந்து விட்டது என்பவை வழக்காறுகள். தூசி துப்பட்டை காண்க. தூர்த்தல் பெருக்கல் தூர்த்தல் - பள்ளத்தை மூடி ஒப்புரவு செய்தல். பெருக்கல் - குப்பைகளைக் கூட்டித் துப்புரவு செய்தல். கிணறு மேடுபட்டுப் போதலையும், காதில் உள்ள துளை மூடிப் போதலையும் தூர்ந்து போதல் என்பது வழக்கு. கிணற்றில் மேடிட்டுப் போதலை அள்ளுதலைத் தூர்வை வாரல் தூர்வை எடுத்தல் என்பதும் வழக்கே. பெருக்குதல் கூட்டுதல், திரட்டுதல் ஒன்று சேர்த்தல் என்பன வெல்லாம் ஒரே பொருளன. தூரம் தொலை தூரம் - எட்டம் தொலை - மிக எட்டம் அவனுக்கும் எனக்கும் தூரம் தொலை என விலக்குவார் உளர். வீட்டுக்கு அயல் வைத்தலைத் தூர மாதல் என்று வழங்கும் வழக்கால் தூரப் பொருள் புலனாம். தொல் என்பதில் இருந்து வரும் தொலை என்பது எட்டத்தினும் எட்டம் என்பதை விளக்கும். தூரம் விலகிப் போதலைக் குறித்தலும் வழக்கே; விலகிப் போதலும் அகன்று போதலும் கருதுக. தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்லநெறி என்பது அறிவுரையாம். தொங்குதல் தொடுக்குதல் தொங்குதல் - ஒரு கிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம். தொடுக்குதல் - தொங்கும் கிளை கீழே வீழ்ந்து படாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம். தொங்கல், தொங்கட்டம் என்பவற்றால் தொங்குதல் பொருள் அறிக. தொடுவானம், தொடுகோடு, என்பவற்றால் தொடுக்குதல் பொருள் அறிக. ஆடு குழை தின்னவும் வேண்டும்; கிளை ஒடிந்து விழாமலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஆடு மேய்ப்பார் அறாவெட்டு வெட்டுவர். அந்நிலையில் கிளை, தொங்கித் தொடுக்கிக் கொண்டு இருக்கும். ஆயன் வெட்டு அறா வெட்டு என்பது பழமொழி. தொட்டுக்கோ துடைத்துக்கோ தொட்டுக்கோ - எண்ணெய், கலத்தில் அறுவாகித் தொட்டுத் தேய்க்கும் அளவாக (இருத்தல்) துடைத்துக்கோ- தொட்டுத் தேய்க்கும் அளவிலும் தீர்ந்து துடைத்துக் கொள்ளும் அளவாக (இருத்தல்) எண்ணெய் தொட்டுக்கோ துடைத்துக்கோ என்று இருக்கிறது என்பதில் இவ்விணைமொழியாட்சி யுள்ளது. வறுமையின் அடையாளமாக வழங்கும் வழக்கு இது. தொடுதலுக்கும் துடைத்தலுக்கும் வேறுபாடு வெளிப்படையே. தொடு தோல், தொடுவை என்பவற்றையும், துடைப்பம், கண் துடைப்பம் என்பவற்றையும் கருதுக. தொண்டு தொசுக்கு தொண்டு - ஓட்டை அல்லது துளை தொசுக்கு - மெல்லெனக் கீழே ஆழ்த்திவிடும் அளறு. தொண்டு தொசுக்கு என்று சொல்லாமல் இருக்க மாட்டாயே என்பது வழக்கு. குறை கூறாமல் இருக்க மாட்டாயே என்பது குறிப்பு. தொண்டு என்பதன் குறை, ஓட்டை; தொசுக்கின் குறை. தொசுக்கெனக் கீழே இறங்குதல். தொசுக்கு, தொறுக்கென இறங்குதல் எனவும் சொல்லப்படும். குற்றவகை தொண்டு தொசுக்கென்க. வத்தலும் தொத்தலும் தொத்தல் - நோயால் நலிந்தவன் வத்தல்(வற்றல்)- வறுமையால் மெலிந்தவன். கால் தள்ளாடி நடப்பாரைத் தொத்தல் என்பது வழக்கம். சிலருக்குத் தொத்தன் எனப்பட்டப் பெயரும் உண்டு. ஊன்வாடி மெலிந்து தோன்றுதல் வற்றலாம். மற்றை வற்றல்களையும் கருதுக. வாடலினும் வற்றிச் சுருங்கியது வற்றல் என்க. வற்றல் என்பதை வத்தல் எனவே பெரும்பாலும் வழங்குதலும் அறிக. தொதுக்கனும் பொதுக்கனும் தொதுக்கன் - வலிமையற்றவன் பொதுக்கன் - வலிமையற்றுப் பொதி போலத் தோற்றமளிப்பவன். கால் தள்ளாடி நடையிடும் வலிமையில்லாதவன் தொதுக் கனாவான்; அவன் மெலிந்தும் காட்சியளிப்பான். ஆனால், பொதுக்கனோ தோற்றத்தில் கனமாக இருப்பான். தொதுக்கன் அளவும் நடக்கவோ செயலாற்றவோ மாட்டான். சிறு செயல் செய்யவும் இளைத்துக் களைத்துப் போய்விடுவான். தொதுக்கன் தொதுக்கட்டி என்றும், பொதுக்கன் பொதுக் கட்டி என்றும் வழங்கப்படுவதுண்டு. தொந்தி தொப்பை தொந்தி - பருத்த வயிறு அல்லது வயிறு பருத்துப் போதல். தொப்பை - பருத்த வயிற்றில் விழும் மடிப்பு. தொந்தி தொப்பை இரண்டும் பருவயிற்றைக் குறிப்பவையாய் வழக்கில் இருப்பினும் இவ் வேறுபாடு கருதத்தக்கதாம். தொந்திப் பிள்ளையார் எனப் பிள்ளையார் பெயருண்டு. தொந்தியப்பன் என்பதும் பெயரே; அது பிள்ளையாரைக் கருதியது; மத்தள வயிற்றன் என்பார் அருணகிரியார். தொம்பை என்பது தவசம் போட்டு வைக்கும் குதிர் ஆகும். தொய்வு, தொப்பு, தொப்புள் என்பவை தொப்பையை விளக்கும். தோட்டம் துரவு தோட்டம் - காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் போல்வன. துரவு - கிணறு நிலபுலத்தில் கிணறு இல்லையாயினும் மழையையும் ஏரிகுளம் கால்களையும் நம்பிப் பயிரிடப் படும். ஆனால் நாள் தவறாமல் தண்ணீர் விட வேண்டிய தோட்டப் பயிருக்குக் கட்டாயம் கிணறு வேண்டும். அதனால் தோட்டம் துரவு என்னும் இணைச்சொல் வழக்கு எழுந்ததாம். தோட்டம் தோப்பு தோட்டம் - கீரை, செடி, கொடி பயிரிடப்படும் இடம். தோப்பு - மரம் வைத்து வளர்க்கும் இடம் தோட்டம், பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் என்ப வற்றால் விளங்கும். தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு என்பவற்றால் விளங்கும். தோட்டம் தோப்புப் பெயர்களால் பல ஊர்ப் பெயர்களும் தெருப் பெயர்களும் விளங்குதல் எவரும் அறிந்ததே. தோடு-தொகுதி, கூட்டம். தோப்பு-தொகுப்பு. தோட்டமும் தோப்பும் எங்களுக்கு உண்டு என்பது வளமைப் பேச்சு. தோப்பு கூப்பு தோப்பு - திட்டமிட்டு வளர்க்கப் பட்ட ஒரு வகை மரங்களோ பல வகை மரங்களோ உடைய தொகுப்பு. கூப்பு - திட்டமிடுதல் இல்லாமல் இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக்காடு. தொகுப்பு என்பது தோப்பு ஆயிற்றாம், பகுப்பது பாத்தி யாவது போல. கூப்பு என்பது குவிப்பு என்பதிலிருந்து வந்ததாம். குவி, குவிதல், குவிப்பு, குமி, குமிதல், குமிப்பு என்பவற்றையும் கருதுக. தோப்புக் காடும் கூப்புக் காடும் என்பது வழக்கு. தோலான் துருத்தியான் தோலான் - ஊதுலைத் துருத்தியின் தோற்பைபோல் பின்னே வருபவன். துருத்தியான்- துருத்தியின் மூக்குப் போல முன்னே வருபவன். ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும்போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்றுவந்தால், நீ என்ன அவனுக்குத் தோலான துருத்தியானா? என்று வினாவுவது உண்டு. நீவராதே என்று தடுக்கும் தடையாக வரும் வினா இதுவாம். ஊதுலையில் அமைந்த தோல் துருத்தி அமைப்பைத் தழுவியது இவ்விணை மொழியாம். தோலான் துருத்தியான் எல்லாம் கேட்பான். நக்கல் நரகல் நக்கல் - நகையாடுஞ் சொல் நரகல் - அருவருப்பான சொல் நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல்- நகைத்தல்; நக்கல் என்பதும் அது வேடிக்கை விளையாட்டு, கேலி கிண்டல் என்று சொல்பவை நக்கலாம். இடக்கரடக்கு முதலாம் இழிந்த சொற்களைச் சொல்லுதல் நரகலாம். நரகல் என்பது சொல்லின் தன்மை நோக்கிய உவமைச் சொல். நக்கவா துக்கவா(துய்க்கவா) நக்கல் - நக்கி உண்ணல். துக்கல் - நுகர்தல். விழக்கூடாத இடத்தில் விழுந்த தேனை நக்கவா துக்கவா? என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம். கருமியினிடம்அகப்பட்ட பொருள் எவருக்கும் உதவாது போவதை விளக்க இவ்விணைச் சொல் பயன்படுகின்றதாம். அவன் சொத்து நக்கவா துக்கவா ஆகும்? என்பர். துக்கல்-துய்த்தல்; துத்தல் என்பதும் துற்றி என்பதும் அது. நகை நட்டு நகை - இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் போல்வன நகை. நட்டு - முருகு, கொப்பு, காப்பு, தோடு, முதலியன நட்டு. முன்னது பேரணிகலங்களையும் பின்னது சிற்றணிகலங் களையும் குறிக்கும். முன்னவற்றிலும் திருகு அமைப்பு இருந் தாலும் பின்னவற்றில் திருகமைப்பே சிறப்பும் தனித்தன்மையும் உடையதாதல் கருதுக. முன்னவற்றில் பளிச்சிடலும் அசைவும் பின்னவற்றில் அசைவிலா நிலைப்பும் உண்மை கருதுக. பெண்ணுக்கு நகை நட்டு என்ன போட்டீர்கள்? என்று வினவார் அரியர். நச்சுப்பிச்சு நச்சு - சொத்தை முழுவதும் நைத்துவிடச் செய்கின்ற பெருஞ் செலவுகள். பிச்சு - சொத்தைப் பிரித்துப் பிரித்து விற்கத்தக்க சிறு செலவுகள். நச்சு - நைந்துபோகச் செய்வது; பிச்சு - பிய்ந்து போகச் செய்வது. பிய்த்துக் கொடுத்தலைப் பிச்சுக் கொடுத்தல் என்பதும் வழக்காறு. பிய்த்தலைப் புய்த்தல் என்பது இலக்கிய வழக்காறு. இனி நச்சுப் பிச்சு எனப் பேசாதே என்பதும் வழக்காறு. நச்சரித்தும் பித்துப் பிடித்தும் பேசுதலைச் சுட்டுவது அது. நச்சுப் பிச்சு நச்சு - நஞ்சு போல் அழிப்பது பிச்சு - பங்குபோல் பிரிப்பது, நச்சுப் பிச்சு எதுவும் இல்லை; ஆதலால் கவலை எதுவும் அவருக்கு இல்லை என்பது நயப்புரை, நச்சு, சொத்து முழுவதையும் அழித்துவிடக் கூடிய தீய மக்கள், பிச்சு, பங்கு பாகம் என்று பிரித்துக்கொண்டு போகக் கூடிய உடன் பிறந்தார். தனி மகனாக இருந்து, அவனுக்குச் சொத்தை அழிக்கும் தீயமகனும் இல்லாமல் நன்மகன் இருந்தால் அவனை நச்சுப் பிச்சு இல்லாதவன் என்பர். நட்டுக்கு நடு நட்டு - பெரும்பரப்பில் நடுவாக அமைந்த இடம். நடு - நடுவேயமைந்த இடத்தின் சரியான மையப்புள்ளி. நடுப்பகுதி வேறு; நடுப்பகுதியின் மையம் வேறு. வட்டத்துள் வட்டம் மையம் எனினும் அதன் மையப்புள்ளி நட்ட நடுவாகும். நட்டுக்கு நடு, நடுவுக்கு நடு, நட்டநடு என்பனவெல்லாம் ஒரு பொருளனவாம். நட்டாறு என்பது நடுவாறு என்றாலும் நட்ட நடு ஆறு என்பதே சரியான நடுவாம். நட்ட நடுவில் ஒரு புள்ளி வை என்பதற்கும் நடுவில் புள்ளிவை என்பதற்கும் வேறுபாடு உண்டு. நண்டு நசுக்கு நண்டு - ஓடி ஆடித் திரியும் வளர்ந்த குழந்தைகள். நசுக்கு - ஓடி ஆடாமல் நகர்ந்தும் கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தைகள். நண்டு என்பதை நண்டு சிண்டு என்பதில் காண்க. நசுக்கு சிறிது என்னும் பொருளது. நசுகணி என்பதொரு நோய். அதன் பூச்சி பசை போல் ஒட்டிக் கிடப்பதாம். நசுக்குதல் தேய்த்தலுக்கு உரிய நொய்ம்மையானது என்பது தெளிவு. நண்டும் சிண்டும் நண்டு - ஓடி ஆடித் திரியும் பிள்ளைகள். சிண்டு - ஓடி ஆடித் திரியாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் திரியும் பிள்ளைகள். நண்டும் சிண்டுமாகத் திரிகின்றன. நண்டுஞ்சிண்டுமாகப் பல பிள்ளைகள் என்பன வழக்குகள். சிண்டு, சுண்டு எனவும் வழங்கும். நண்டு, சிண்டு என்பவை பெரிய நண்டு, நண்டுக் குஞ்சு என்பவற்றைச் சுட்டி, அத்தகு குழந்தைகளைக் குறிப்பதாயிற்றாம். சிண்டு, சுண்டு என்பவை சிறியது என்னும் பொருள் தரும் சொற்கள். சிறுகுடுமியைச் சிண்டு என்பதையும், சிறுகாயைச் சுண்டைக் காய் என்பதையும் கருதுக. சுண்டைக்காயைச் சுரைக்காய் ஆக்கிவிட்டானே என்பதும் விளக்கும். நத்தம் நத்தம் புறம்போக்கு - வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிலம். நத்தம் - ஊர்க்குப் பொதுவாம் மந்தை. புறம்போக்கு - ஆடுமாடு மேய்தற்கென அரசு ஒதுக்கிய புல்நிலம். ஊர் மாடு, ஆடு முதலியவை நத்தத்தில் தங்கும். நாய்களும் நத்தத்தில் திரியும். நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?என்பது பழமொழி. புறம்போக்கு - மேய்ச்சல் நிலம் எனவும் வழங்கப்படும். நத்தம் ஊரடி சார்ந்தது; புறம்போக்கு - ஊர் நில புலங்களை யெல்லாம் தாண்டிய ஆறு குளம் ஓடை முதலியவை. நத்தல் நறுங்கல் நத்தல் - தின்னுதற்கு வாயலந்த குழந்தை நறுங்கல் - சவலைப் பிள்ளை அல்லது நோயால் நறுங்கிப் போன பிள்ளை. நத்துதல் ஆர்வப்படுதல், நறுங்குதல் வளர்ச்சியின்றி இருத்தல். இத்தகுகுழந்தைகள் பெற்றோர்க்கு ஓயாத தொல்லை தந்து கொண்டே இருக்கும். அழுகையும் அரற்றுமாக இருக்கும். நத்தல் நறுங்கலை வைத்துக் கொண்டு எப்படி எல்லாவற்றையும் நேரம் காலத்தில் முடிக்க முடியும் என ஏங்குவார் பலர். நயம் பயம் நயம் - நயந்து அல்லது நயத்தால் பயன்படுத்திக் கொள்ளுதல். பயம் - பயப்படுத்தி அல்லது அச்சுறுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல். நயபயம் காட்டி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுதல் சிலர் இயற்கையாம். ஆடிக் கறப்பதை ஆடிக் கறத்தல், பாடிக் கறப்பதைப் பாடிக் கறத்தல் போல் பயன்படுத்துதல் நயமாம். வல்லாண்மையாலும், சூழ்ச்சித் திறத்தாலும் ஒருவனை அச்சுறுத்தித் தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளுதல் பயமாம். இவ்விரண்டும் உலகிடையில் காணக்கூடுவனவேயாம். நரம்பு நாற்று நரம்பு - நரம்பு வைத்துப் போன அல்லது முற்றிய நாற்று. நாற்று - நடுதற்குரிய பருவ நிலையில் அமைந்துள்ள நாற்று. காய்கறி தவச வித்துக்களை நாற்றாங்காலில் முளைக்கச் செய்து வளர்த்து உரிய வள்ர்ச்சி நிலையில் நடவு செய்தல் வேளாண்மை முறையாம். அம்முறையில் நரம்பு வைத்த அல்லது மட்டை வைத்த நாற்று முற்றியதற்குச் சான்றாம். அந்நாற்றை நட்டால் பக்கம் விரியாது. நட்டது மட்டுமே சின்னஞ்சிறு கதிர் வாங்கி அல்லது பயன் தந்து நின்று விடும். நரம்பும் நாற்றுமாக இருக்கிறது; ஒரு பாதியே பயன்படும் என்பது வழக்காறு. நல்லது நளியது நல்லது - கோயிலில் நிகழும் பொங்கல் விழா தேர்த் திருவிழா முதலிய விழாக்கள். நளியது - கோயிலில் நிகழும் குளுமை சொரிதல் விழா. நன்மையாவது மங்கலம்; மங்கல விழாக்கள் நல்லது எனப்படும். வெப்பம் மிக்கும், மழையில்லாதும், அம்மை முதலிய நோய் வந்தும் துன்புறுத்தும் காலத்தில் தெய்வத்திற்குச் சாந்தி செய்ய வேண்டும் எனக் குளுமை சொரிதல் என ஒரு விழாக் கொண்டாடப்படும். குளுமை சொரிதல் விழாவே நளியது ஆகும். நளி என்பது குளிர்ச்சியாம். குளிர் நளுக்குதல் என்பது நடுக்குதல் பொருளில் வந்தது, குளிர் நடுக்குவதாகலின். நலம் பொலம் (நல்லது - கெட்டது) நலம் - பூப்பு நீராட்டு மணம் போன்ற நன்னிகழ்ச்சிகள். பொலம் - நோய் இறப்பு போன்ற தீய நிகழ்ச்சிகள். நல்லது பொல்லது என்பதும் இதுவே. உற்றார் உறவாக இருந்தும் பகையாகி இருப்பாரும், கொண்டு கொடுத்தல் இல்லாத அயலாராக இருப்பாரும் கூட ஓரூரில் நிகழும் நலம் பொலங்களைத் தள்ளி வைக்க மாட்டார். ஊரொழுங்கு அது வாகும். அவ்வாறு செய்து ஊர்ப் பகையைத் தேடிக் கொள்ள எவரும் விரும்பார். யாராக இருந்தாலும் நலம் பொலம் தள்ளலாமா? என்பது சிற்றூர் வழக்கு. நாடி நரம்பு நாடி - நாடித் துடிப்பு நரம்பு - உணர்வுக்கு இடமாகிய நரம்பு. நரம்புக்கும், நாடிக்கும் மிகு தொடர்புண்மை வெளிப்படை. நாடிப் பார்ப்பதற்கு இடமாக இருப்பது குருதிக் குழாய். அதனுள் ஓடும் குருதியோட்டம் கொண்டே துடிப்பளவு காணப்படு கின்றது. வளி முதலா (வாதம் முதலா) எண்ணிய மூன்று என்னும் குறளால் (குறள் 941) நாடித் துடிப்பு வகைப் புலப்படும். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி என வரும் குறளால் (குறள் 947) நாடிச் சீர் புலப்படும். நாடி அறிவது நாடி நூல்கள் வர்ம நூல் என வழங்கின. நாணுதல் கோணுதல் நாணுதல் - நாணத்தால் தலைதாழ்தல் கோணுதல் - நாணத்தால் தலைதாழ்தலுடன் உடலும் வளைதல். என்ன நாணிக் கோணி நிற்கிறாய்? என்று வினாவுவார் உளர்; திருட்டுக் குற்றத்தில் அகப்பட்ட ஒருவன் தலைக் கவிழ்ந்து நிலங் கிளைத்தலை இலக்கியம் சுட்டும். தம்புகழ் கேட்டார் போல் தலைநாணுதலையும் இலக்கியம் இயம்பும். கோண் - கோணல், கூனல் - கூன் என்பவை ஒரு பொருளனவாம். நாளும் பொழுதும் நாள் - இரவும் பகலும் கூடிய ஒரு நாள் பொழுது - ஒரு நாளில் திட்டப்படுத்தப்பட்ட ஒரு பொழுது. கதிரோனைக் கொண்டு பொழுது கணக்கிடப்படும். பொழுது புறப்பட்டது பொழுது விழுந்தது என்பன போல வழங்கும் வழக்குகளால் பொழுது கதிராதல் விளங்கும். கதிர் உள்ள போது மூன்று பொழுதும் விழுந்த போது மூன்று பொழுதுமாக ஆறு பொழுது கூறுவர். அவற்றையும் பகுத்து நல் பொழுது அல்பொழுது எனக் கணித்துக் கூறுவர். நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை என்பது தெளிவுரை. நாளும் பொழுதும் பார்க்கவே நாளும் பொழுதும் செலவிடுவோர் மிகப்பலர். நிரப்புக் கலப்பு நிரப்பு - குறித்த அளவு தந்து நிரவலாக நடுதல். கலப்பு - நிரவலாக இல்லாமல் இடைவெளி மிகப்பட நடுதல். நிரவல், சமனிலைப்பாடு என்னும் பொருளது. கலக்க மாவது அகலம் அகலமாக நெட்டிடைவெளிபட்டு இருத்தல். பயிர் நெருக்கமாக இல்லை; நிரப்புக் கலப்பாக இருக்கிறது என்பது ஒரு மதிப்பீடு. நெருக்கமானவற்றை அகற்றுதலைக் கலப்பித்தல் என்பர். நிலபுலம் நிலம் - நன்செய் புலம் - புன்செய் செய்தற்கு ஏற்பப் பயன் தருவது செய்யாம். பண்ணுதல்-செய்தல்-தொழிற் குறித்தே பண்ணை என்பதும் வந்தது. செய்க்குப் பண்படுத்துதல் முதண்மை. அது பண்பாடு எனப்படும். வாழ்வுக்கும் பண்பாடு இன்றியமையாததே. நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் என்பது நிலம் - நன்செய் என்பதைக் காட்டும். வரகு விளை புன்புலம் என்பது புன் செய்யைக் காட்டும். புன் புலம் - புன்செய் என்க. நிலம் நீச்சு நிலம் - நன்செய் நீச்சு - நீர்வாய்ப்பு. ‘நிலம் நீச்சு உண்டா? என்பது உழவரைப் பற்றிய ஒரு வினா. நிலம் நன்செய் ஆதல் நிலபுலம் என்பதில் காண்க. நீச்சு என்பது கிணறு, குளம், கால் முதலிய வாய்ப்புகளைக் குறிக்கும். நீரருகே சேர்ந்த நிலம் என்பதே நிலத்தின் மதிப்பாம். நீர் வளமில்லா நிலம், நிலம் எனப்படாமல் புலமாகப் போய்விடும். நீக்குப் போக்கு நீக்கு - மறக்க வேண்டுவனவற்றை மறத்தல். போக்கு - ஒதுக்க வேண்டுவனவற்றை ஒதுக்குதல் ஒரே கெடுபிடியாக இருந்தால் முடியுமா வாழ்க்கையில் நீக்குப் போக்கு கட்டாயம் வேண்டும் என்று பட்டறிவாளர் அறிவுரை கூறுவர். மறத்தல் இறப்பினை (சிறப்பு) என்றும் என்பார் வள்ளுவர். தூற்றாதே தூர விடல் என்பது நாலடி. இவை நீக்குப் போக்குகளைச் சுட்டுவன. நீட்டக் குறைக்க நீட்ட - கொடுக்க குறைக்க - மறுக்க கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டு அதற்குப் பின்பு கொடுக்க மறுத்தால் வெறுப்பைக் கட்டிக் கொள்ள நேர்தல் உண்டு. நீட்டக் குறைக்க நெடும்பகை என்பது பழமொழி. நீட்டுதல் கொடுத் தற்குக் கையை நீட்டுதல். கொடுக்காதவனை நீட்ட மாட்டானே எனப் பழிப்பர். தருகை நீண்ட தயரதன் என்றார் கம்பர். குறைத்தல் சுருக்குதலும் இல்லையெனலும் தழுவியது. நெல்லும் புல்லும் நெல் - நெல் தவசம் புல் - புல் தவசம்(கம்பு) நெல்-நன்செய்ப்பயிர், புல்- புன்செய்ப் பயிர். முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது. பின்னது கரிசல் மண்ணில் இயல்பாகப் பெய்யும் மழையில் எளிதாய் முளைத்து நல்வளம் தருவது. புல்லரிசி என்பதொன்றுண்டு. அது நெல்லொடு கூடியதன்று. அஃது எறும்பு சேர்த்து வைக்கும் புல். மலைநெல், வெதிர்நெல் என்னும் மூங்கில் நெல். ஐவனம் என்பது இலக்கியச் சொல். நெளிவு சுழிவு நெளிவு - ஒரு பொருள் நெளிந்துவிடுதல் அல்லது வளைந்து விடுதல். சுழிவு - நெளிந்த பொருள் மேலும் நெளிதல். நெளிவினும் சழிவு சீர்கேடு மிக்கதாம். நெளி வெடுக்க ஈயம் பூசுவார் கருவியுடன் வருவர். அது சழிவு ஆகுமானால் எவ்வளவு தட்டிக் கொட்டிப் பார்த்தாலும் சழிவு அடையாளம் இருக்கவே செய்யும். நெளிவு, எவராவது திமிராகப் பேசினால், உன் நெளிசலை எடுக்க வேண்டுமா? என்னும் அளவுக்கு விரிந்தது. நெளிவு சுழிவுக்கும் நெளிவு உதவியுள்ளது. நெளிவு என்பது விரலணிகளுள் ஒன்றுமாம். நெற்று நெருகு நெற்று - காய்ந்துபோன தேங்காய் நெற்று, பயற்று நெற்று போல்வன. நெருகு - பருப்பு வைக்காமல் காய்ந்து சுருங்கிப்போன குலையும் போல்வன. நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில் உள்ளீடு இராது. இருப்பினும் பயன் செய்யாது. பருத்திச் செடியில் காய்கள் முற்றிப் பயன் தராமல் நெருகாகிப் போதல் ஒரு நோயாம். தோல் நெருக்கி உள்ளீடு இல்லாமல் செய்தமையால் நெருகுப் பெயர் பெற்றிருக்கலாம். நேரம் காலம் நேரம் - ஒன்றைச் செய்தற்கு நேர்வாக அமைந்த பொழுது. காலம் - ஒன்றைச் செய்தற்கு எடுத்துக் கொள்ளும் கால நிலை. எந்தச் செயலையும் காலநிலை அறிந்து மேற்கொள்ளலும் வேண்டும், கால நிலையுடன் அதனை நிறைவேற்றுதற்குரிய நேரத்தையும் போற்றிச் செய்தலும் வேண்டும். காலமறிந்து செயல் எனனும் திருக்குறள் சொகினம் (சகுனம்) ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்த்துச் செய்வதைக் குறிப்பதன்றாம். அவ்வகையில் நேரமும் காலமும் கொள்க. ஒரு செயல் நிறைவேறத்தக்க பொழுது நிறைவேற இயலாத பொழுதென உண்டேயன்றிப் பொழுதில் நல்பொழுது அல்பொழுது இல்லையாம். நேரும் கூறும் நேர் - நெடுக்கம் அல்லது நீளம் கூறு - குறுக்கம் அல்லது அகலம் ஒன்றை நேரும் கூறுமாக அறுப்பதும், நேரும் கூறுமாகக் கிழிப்பதும், பின்னர் இணைப்பதும் தொழில் முறையாம். இந்நேரும் கூறும், நெடுக்காகவும் குறுக்காகவும் நடப்பதற்கும் சுட்டப்படும். கூறு என்பது பகுப்பதாம். கூறுவைத்தல், கூற்றம் என்பவை பகுப்பின் பொருளன. நொண்டி சண்டி நொண்டி - காலில் குறையுடைய மாடு. சண்டி - உழைக்காமல் இடக்கும் செய்யும் மாடு. நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டி யடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. நொண்டி நொடம் காண்க. சண்டியை மாதம்போம் காதவழி என்பதும், தின்னுமாம் ஒருபடப்பு திரும்பாதாம் ஒரு மடக்கு என்பதும் விளக்கும். நொண்டி நொடம் நொண்டி - கால் குறையால் நொண்டி நடப்பவர் நொடம் - கை முடங்கிப் போனவர் நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு, முள்ளோ கல்லோ இடித்தால் நொண்டி நடப்பது உண்டு. ஆனால் இந்நொண்டுதல் இயற்கையாகி விட்ட நிலை. நொடம், நுடம், முடம் என்பன ஒரு பொருளன. நொண்டுதல் காலைப் பற்றியதும் முடங்குதல் கையைப் பற்றியதுமாம். முடத்தாழை, முடத்தெங்கு என்பவற்றில் வரும் முடத்திற்கு வளைவுப் பொருள் உண்மை அறிக. நொட மருத்துவர் என்னும் விளம்பரத்துடன் இருப்பவர் நொண்டி நொடம் இரண்டும் பார்ப்பவரே. நொய் நொறுங்கு நொய் - அரிசி பருப்பு முதலியவற்றின் குறுநொய் நொறுங்கு - அரிசி பருப்பு முதலியவற்றின் நொறுங்கல் நொறுங்கல் முழுமணியில் அல்லது முழுப் பருப்பில் இரண்டாய் மூன்றாய் உடைந்ததாம். அது, மிகப்பலவாக நொறுங்கிப் போவது நொய்யாம். அரிசியில் நொய்யை நொய்யரிசி என்பர்; குறுநொய் என்பதும் அது. நொய்ய நொறுங்க மிதித்துவிட்டான் என்பது மிதிப்பின் கடுமையையும் கொடுமையையும் உவமையால் விளக்குவதாம். நோக்காடு போக்காடு நோக்காடு - நோய் போக்காடு - சாவு ஊரே நோக்காடும் போக்காடுமாகக் கிடக்கிறது என்று தொற்று நோய் வாட்டும் போதில் சிற்றூர்களில் சொல்வது வழக்காறு. சாக்காடு போல நோக்காடும் போக்காடும் வந்தனவாம். நோ- நோய்; போக்காடு-போதல்; இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டுபோய்ச் சேர்த்தலைக் குறித்தது. நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான் என்பது நாலடி. செல்லுதல் இறப்பைக் குறித்தது போல் போக்காடும் குறித்தது. இன்னும் சாவாமல் இருக்கிறானே என்னும் ஏக்கத்தில் போக் கொழிந்தான் என்பதும் எண்ணத்தக்கது. நோய் நொடி நோய் - உடலையும் உள்ளத்தையும் வருத்தும் பிணியும் நோயும். நொடி - உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே வாட்டும் வறுமை. நோ, நோய், நோவு, நோதல், நோக்காடு முதலியவெல்லாம் நோய்வழிச் சொற்களே. நொ என்பதும் நோய் என்னும் பொருள் தருவதே. நொடித்துப் போய்விட்டார் என்பது வறுமைப் பட்டுவிட்டார் என்பதைக் குறிப்பதால் நொடி வறுமைப் பொருள் தருதல் புலப்படும். ஆழ்ந்த பள்ளம் நொடிப் பள்ளம் எனப்படுவதால் வறுமையின் அளவீடு வெளிப்படும். நோய் நொடியில்லாமல் வாழ்க என்பதொரு வாழ்த்து வகை. பங்குபாகம் பங்கு - கையிருப்பு தவசம் முதலியவற்றைப் பிரித்தல். பாகம் - வீடு மனைநிலபுலம் முதலியவற்றைப் பிரித்தல். சொத்து நிலை பொருள் என்றும் அலை பொருள் என்றும் இருவகையாம். பங்கு, அலை பொருள்பற்றியது; பாகம், நிலை பொருள் பற்றியது. இவை தாவரசங்கமம் என்று வடமொழியிலும், அசையாப் பொருள், அசையும் பொருள் என்று தமிழிலும் வழங்கப்படும். பிள்ளைகளுக்குத் தந்தை பங்குபாகம் வைத்துத் தருவது வழக்கம். பச்சை பசப்பு பச்சை - வளமை அல்லது பசுமை பசப்பு - ஏய்ப்பு, அல்லது ஒப்பிதம். பச்சைபசப்புக் காரன் என்று ஏய்ப்பவரைக் குறிப்பர். தம் பசுமையைக் காட்டி ஏய்ப்பாரும், இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏய்ப்பாரும் என அவர் இருவகையர். அவர் தன்மையை இவ்விணைச் சொல்லால் சுட்டினாராம். பசப்புதல் - ஏய்த்தல் என்னும் பொருளில் இன்றும் வழங்கு கின்றது. பச்சை இப்பொழுது பசையாக வழங்குகின்றது. பசையானவன் என்றால் வளமானவன் என்பதாம். பச்சை பதவல் பச்சை - சிறிதும் காயாத ஈரம் உடையது. பதவல் - சற்றே காய்ந்து ஈரப்பதமுடையது. பச்சை பதவலை அடைத்து வைத்தால் வெந்து போகும்; பூஞ்சணம் பிடித்தும் போகும்; உலரப்போடு என்பர். உலரப் போடுதல் என்பது ஆலாற்றுதல் எனப்படும். ஆல் என்பது நீர்; ஆல் அகற்றுதல் என்பது ஆலாற்றுதல் ஆயிற்று. நீர்ப்பதம் போக்கல் என்பதாம். பட்டி தொட்டி பட்டி - ஆடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர். தொட்டி - மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் ஊர். ஊரெல்லாம் பட்டிதொட்டி என்பதொரு தனிப்பாட்டு. பட்டி தொட்டி என்னும் இணைச் சொல் எங்கும் வழங்குகின்றது. பட்டி என்பது ஆடு அடைக்கும் இடம். தொட்டி என்பது தொட்டிக்கட்டு-தொழுவம், மாடு கட்டுமிடம். ஆடும் மாடும் சிற்றூர் தோறும் உண்டாயினும் தொடக்க நாளில் இக்காரணம் கருதி வந்த பெயர் பின்னே பொதுமை குறிப்பதாயிற்றாம். பட்டும் படாமல் படுதல் - நெருங்குதல் படாமை - நெருங்காமை நெருங்குவது போல் நெருங்கி, நெருங்காமல் வாழ்பவரைப் பட்டும் படாமல் வாழ்பவர் என்பர். தொட்டும் தொடாமல் வாழ்பவர் என்பதும் வழக்கு. தாமரை இலைமேல் பட்ட தண்ணிர் இயல்பு போல் வாழும் வாழ்க்கையை இவ்வாறு சுட்டுவர். பற்றற்ற வாழ்வு என்பது அதன் சுருக்கம். பட்டும் படாமல் பேசுவதைத் தப்பித்துக் கொள்ளும் சூழ்ச்சியம் என்று கூறுவர். பண்டாரம் பரதேசி பண்டாரம் - துறவியரும் துறவிக் கோலத்தாரும். பரதேசி - இரந்துண்டு வாழ்பவர். பண்டாரம் பரதேசிக்கு உணவிடுவது அறம் என்பது நெடுநாள் வழக்கம். பண்டாரம் என்பவர் துறவுத்தோற்றத் தாராம். பரதேசி என்பது அயல்நாட்டார் என்னும் பொருளது. அயல்நாட்டு இரவலர் பெயர் பரதேசியாக இருந்து பின்னை இந்நாட்டு இரவலர் பெயராக வழங்குகின்றதாம். பரதேசி வாழ்வு நாட்டுக்குத் தீராப்பழியாகவும் கேடாகவும் உருவாகி வருகின்றமை கண்கூடு. பரதேசம் என்பது கடல்கடந்த நாடன்று; ஐம்பத்தாறு தேசங்கள் என்று எண்ணிய காலம் உண்டே! அதைக்கருதுக. பம்பை பரட்டை பம்பை - செறிந்து நீண்டு தொங்கும்முடி. பரட்டை - உலர்ந்து அகன்று நிமிர்ந்த முடி பம்பை பரட்டை என்பது குழந்தைகள் விளையாட்டுப் பாடலின் முதலடி. பம்பைத் தலை பரட்டைத்தலை என்பது வழக்காறு. கொட்டு அடிப்பவர் தலைமயிர் அவர்கள் அசைவுக்கு ஏற்ப அழகாக இயங்கிக் காட்சி இன்பம் தரும். பம்பைக் கொட்டு என்பது ஒன்று. பல கொட்டுகள் சேர்ந்து முழங்குவது பம்பை. இங்கும் முடிச்செறிவு கருதிய பெயர் அது. வறண்டு காய்ந்த மரங்கள் பரட்டை எனப்படும். அம்மரங்கள் போல்வது பரட்டையாம். பயிர் பச்சை பயிர் - தவசம் விளையும் பயிர்வகை. பச்சை - பயறு விளையும் செடி கொடி வகை நெற்பயிர், சோளப்பயிர் என்பவற்றால் பயிர் தவச வகைக்காதல் விளங்கும். பயற்றுக்கொடிகளில் பச்சை என்பதொன்று உண்டு. பச்சைப் பயறு, பாசிப் பயறு என்பவை அது. மை என்பது மயில் மூலம் போலப் பை என்பது பயிர் மூலமாம்; அதனின் வேறுபடுத்து அதே பொருள் தருதற்கு வந்ததே பச்சை என்பதாம். பசுமை வண்ணம் சார்ந்ததால் வந்த பெயர். பின்னே வேக வைக்காத பொருளைச் சுட்டுவதாக அமைந்தது. பச்சைக்காய்கறி, பச்சை ஊன் என்பவை அவை. பின்னே பக்குவமற்ற பேச்சைப் பச்சையாகப் பேசுதல் என வழக்கூன்றியது. பழக்க வழக்கம் பழக்கம் - ஒருவர் பல்கால் செய்து வருவது பழக்கம். வழக்கம் - பலரும் பலகாலம் கடைப்பிடியாகக் கொண்டது வழக்கம். வழக்கம் என்பது மரபு ஆகும். அது வழிவழி வழங்கி வருவதாம். தனிப்படப்பழகி, கடைப் பிடியாக அமைந்துவிட்டது பழக்கமாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்என்பதொரு பாடல். பழக்க வழக்க வேறுபாட்டுணர்வு இன்மையால் பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும். என்னும் பழமொழி வந்தது. பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்பது பழக்கமே. கோழி கிண்டல் வழக்கமே. பழிபாவம் பழி - பொருந்தாச் செயல் செய்தலால் இம்மையில் உண்டாகும் பழிப்பு. பாவம் - தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் தீயநிகழ்வு. பழி-வசைச்சொல்; பழியஞ்சித்தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர். பழியோரிடம் பாவமோரிடம் என்பதில் பழி என்பது பழிக்கு ஆளாம் குற்றத்தைக் குறித்தது. பாவம் என்பது தண்டனையைக் குறித்தது. பாவம்-அகன்றது; அகன்று செல்வது என்னும் பொருளது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக விரிந்து கொண்டேவரும் தீவினைகளை இயற்றுவது பாவமாகும். முன்னதிற் பின்னது கொடுமை மிக்கது என்பது கருதுக. பள்ளம் நொடி பள்ளம் - ஆழமும் அகலமுமாக அமைந்த குழி நொடி - மேடும் தணிவுமாக அமைந்த வழி பள்ளம் நொடி பார்த்து வண்டியை நடத்துமாறு சொல்வது வழக்கு. பள்ளத்தில் வண்டி இறங்கினால் ஏறுதற்கு இடர்; நொடியில் ஓட்டினால் தூக்கித் தூக்கி அடித்துத் தொல்லையுண்டாம். நொடிக்கு வறுமைப் பொருள் உண்மை நோய் நொடி என்பதில் காண்க. பள்ளம்-வயல் நிலம்; வயல் நிலத்து அல்லது மருத நிலத்து வாழ்வு பற்றி எழுந்த நூல் பள்ளுநூல்; பின்னே பள்ளு பாடல் என்னும் பொருளில் வந்தது. ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்பது அது. பற்று பாசம் பற்று - நெருங்கி உறவாடி இருத்தல். பாசம் - பிரிவின்றி இணைந்திருத்தல். பற்று பாசம் இல்லாத மக்களென்னமக்கள் என்று முதியோர் தம் மக்களைச் சலித்துக் கொள்வது தெரிந்த செய்தி. பற்று - பற்றுதல் அல்லது இறுக்கிப் பிடித்தல் போல் அமைந்த நிலை. பாசம், பசைபோல் ஒட்டிக் கொண்டு இரண்டற நிற்கும் நிலை. பற்றும் பாசமும் அறுதல் துறவுச் சிறப்பை துலக்குவது எனினும்; இல்லற அன்புக்கும் உலகியல் நலத்துக்கும் பற்றும் பாசமும் விரும்பக் கூடியனவாகவே உள்ளன. ஆதலால் பற்றறுத்தலை வள்ளுவர் துறவிலே வைத்தார். (குறள் அதி 35) பாரதூரம்: பார தூரம் தெரியாதவன் என்பதொரு பழித் தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றபடி நன்றியோடு இருக்கத் தோன்றும். அது போல் நம் குடும்பத்திற்கும் இக் குடும்பத்திற்கும் உள்ள முன்பின் தொடர்புகளை அறிந்து கொண்டாலும் அதற்கு ஏற்றபடி உதவியாக வாழ்ந்து கொள்ளத் தோன்றும்? அவ்விரண்டும் அறியாதவனுக்கு என்ன தோன்றும் என்னும் வினாவில் பிறந்தது இப் பழித் தொடாரம். பாரம் - தாங்குவார்; தூரம் - பழந் தொடர்பார். பாழும் பழியும் பாழ் - வெறுமை பழி - வசை என்னபட்டு என்ன செய்வது? எஞ்சியது பாழும் பழியுமே என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர். முயன்று முயன்று தேடியும் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கடன்மேல் கடன் பட்டு கலங்குவாரும், எவ்வளவு தான் தம்மால் முடியுமோ அவ்வளவு உதவியும் அதனை நினையாமல் உண்மை நிலைமை உணராமல் பழிக்கு ஆட்பட்டாரும், தம்மை நொந்து நமக்கு மிஞ்சியது பாழும் பழியுமே என்பது மிகுதியாகின்றதே அன்றி குறையும் நடைமுறை நாட்டில் இல்லை. பிக்கல் பிடுங்கல் பிக்கல் - பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல். பிடுங்கல் - இடைஇடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல். பிக்கல்-பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமையுடையார் செயல். பிடுங்கல், பொருள் மேல் பற்றால் உரிமை இல்லாரும் இளக்கம் கண்டு வலிந்து பிடுங்கிக் கொண்டு போதல். பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை என்று பாராட்டுவது உண்டு. பிடுங்குதல் வழிப்பறி போல்வதாம். பிச்சை முட்டி பிச்சை - இரந்து வருபவர் முட்டி - முட்டுப்பாடு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவர். பிச்சை முட்டிகளுக்கு உதவ வேண்டும் என்பதில் சிற்றூர்ச் செல்வர்கள் கருத்துச் செலுத்துதல் கண்கண்ட செய்தியாம். முட்டி - முட்டுப்பாடு அல்லது வறுமை. உதவுவார் இன்மையால் முட்டுப்பாடு உறுபவரை முட்டி என்றனர். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்பது வள்ளுவம். முட்டிலாப் பெருமை முட்டாப் பெருமையாம் (பட்டினப்பாலை) பிள்ளை குட்டி பிள்ளை - ஆண் பிள்ளை குட்டி - பெண் பிள்ளை உங்களுக்குப் பிள்ளை குட்டி எத்தனை? என உற்றார் உறவினர் கேட்பது வழக்காறு. இவற்றுள் குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறிக்கும். குட்டி குறுமான், குழந்தை குட்டி என்பவற்றைக் காண்க. பிள்ளை என்பது பொதுப் பெயர் ஆயினும் இவண், ஆண்பிள்ளையைக் குறித்து நின்றதாம். அது குழந்தை என்பது போன்றதாம். பிள்ளை கொள்ளி பிள்ளை - ஆண் பிள்ளை கொள்ளி - கொள்ளிக் கட்டை தீ பிள்ளை கொள்ளி இல்லை என்பதொரு வசை. எவருக்கோ ஆண் பிள்ளைப் பேறு இல்லை என்றால், பின்னே வருவதையும் கூட்டி பிள்ளை கொள்ளி இல்லை என்பர். எவனோ கொள்ளி வைக்கத்தானே செய்வான்? இருந்தாலும் அவன் மகன் இல்லையாம்! அதனால் இவ்வாறு பழிப்பர். கொள்ளிக்குப் பிள்ளை என்று தவிப்பார் சிலர். அப்பிள்ளை கொள்ளிக் கட்டையாகவோ, கொள்ளிவாய் பேயாகவோ இருந்தாலும் கவலை இல்லை! கொள்ளி முடிவான் எனத் திட்டிக் கொண்டிருக்கத் திரிந்தாலும் கொள்ளி வைக்க அவனொருவன் வேண்டுமாம்! பீடும் பெயரும் பீடு - பெருமிதமான செய்கை பெயர் - பெருமிதச் செய்கை செய்தான் பெயர் பீடும் பெயரும் எழுதி வழி தோறும் நாட்டப்பட்டிருந்த கற்களைச் சுட்டுகிறது சங்கப் பாட்டு. போர்க்களத்தில் பெருமிதம் காட்டுதலையே பீடாகக் கருதி அவர்க்குக் கல்லெடுத்து அவர் பெருமைச் செயலையும் பெயரையும் எழுதி வைத்து வழிபாடு செய்தல் வழக்கம். அமரில் இறந்தார் அமரர் எனப்பட்டார். அவரே தெய்வம் எனவும்பட்டார். பீடு பெற நில் என்பது அறவுரை. பிறர்க்குத் தாழாப் பெருநிலை பீடு என்பதாம். பெயர் என்பதே பேராகிப் புகழும் ஆயிற்றாம். பெயர் பெறுவதினும் பீடு பெறுவது தனிச் சிறப்பினதாம். புல் பூண்டு புல் - நிலத்தைப் புல்லிக் கிடப்பவை(தழுவிக் கிடப்பவை) புல்லாம். பூண்டு - புல்லினும் உயர்ந்து நிற்பது. முன்னது தாளால் பயனாவது, பின்னது கிழங்கால் பயனாவது. புல்லாகிப் பூடாகி என்பது திருவாசகம். பூடு-பூண்டு. கூண்டு - கூடு ஆவது போல ஆயது. தென்னை பனை உயர்ந்து ஓங்கியவை எனினும் புல்லினம் எனப்பட்டது. புல்லின் தன்மையாய உட்டுளை யுடைமையால் என்க. புல்-புள்-பொள்-பொள்ளல்-பொய்- பொத்தல் என்பன வெல்லாம் உள்ளீடு இன்மைப் பொருளனவே. பூடும் பூண்டும் வெள்ளைப் பூடு வெள்ளைப் பூண்டு என்பவற்றால் அறிக. புளித்துச் சளித்து புளிப்பு - காடியாகிப் போதல் சளிப்பு - காடியும் முதிர்ந்து சுவையழிந்து போதல். சோற்று நீர் புளிப்புடையதாக இருக்கும். அது நீர் உணவாகப் பயன்படும். நீற்றுத் தண்ணீர் எனவும் பெயர் பெறும். புளித்த தண்ணீர் என்பதும் அதன் பெயர். கடுவெயிலுக்கு இயல்பான உடல் நலமான குடிநீர் அது. ஆனால் அது பலநாள் கிடந்து புளிப்பேறிப் போனால் குடிக்க ஆகாதவாறு கெட்டுப்போகும். அதனைச் சளிப்பாதல் என்பர். காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடி என்பது பழமொழி. சிலர் பேச்சைப் புளித்து சளித்து விட்டதாக வெறுத்துக் கூறுதல் உண்டு. பூச்சி பொட்டை பூச்சி - பாம்பு பொட்டை - தேள் இப்படிக் குப்பை கூளமாகக் கிடந்தால் பூச்சி பொட்டை அடையாமல் இருக்குமா?என்று கண்டித்துத் துப்புரவு செய்வார் உண்டு. பாம்பின் மேல் இருக்கும் அச்சத்தால் பாம்பு என்று கூறவும் விரும்பாமல் பூச்சி என்பது வழக்கு. பூச்சிக்கடி எனப் பாம்புக் கடியைக் கூறுவர். பொட்டு என்று கொட்டும் கொடுக்கு உடையதைப் பொட்டை என்று கூறுவர். பூரான், நட்டுவாய்க்காலி முதலியவை கடிப்பன. குளவி, தேள் முதலியன கொட்டுவன. பாம்பு தீண்டுவது; தீண்டுவதும் கொட்டுவது போன்றதே. ஆனால் பாம்பின் அச்சத்தால் தொடுதல் பொருளில் தீண்டுதலைச் சுட்டினர். பூசி மெழுகுதல் பூசுதல் - தடவுதல் மெழுகுதல் - தேய்த்தல் ஈயம் பூசுதல்; சுவர்ப் பூச்சு; இவற்றால் பூசுதல் புலனாம். முற்படப் பூசி, பின்னே அதனை மெழுகுதல் நிகழும் பூனைக்குப் பூசை என்பதொரு பெயர். அது தன் வாயை அடிக்கடி பூசுதலால் பெற்ற பெயர். பூசுகர், பூசனை என்பனவும் பூசுதலால் வந்தவையே. மெழுகுதல் சாணகத்தைக் கரைத்துத் தேய்த்தல் மெழுகுதலாம். பூசிய சுவரையோ தளத்தையோ மெழுக்கிடல் கண்கூடு. ஒன்றை, உண்மை மறைத்து மழுப்பிச் சொல்லுதலைப் பூசி மெழுகுவதாகக் கூறுவது வழக்கம். பூசி மெழுகும் வினையடியாக வந்த மரபு இதுவாம். பெட்டி பேழை பெட்டி - மூடு (மூடி) இல்லாதது. பேழை - மூடு (மூடி) உடையது. கடகம், பெட்டி முதலியவை நாரால் செய்யப்பட்ட காலம் உண்டு. அந்நாளில் பேழைப் பெட்டி என்று ஒன்றும் இருந்தது. திருமணப்பரிசுகளில் பேழைப் பெட்டிக்குத் தனி இடம் உண்டு. அது மூடும் தூக்கும் உடையதாய் வண்ண நார்களால் பின்னப் பட்டதாய், உள் தட்டும் உடையதாய் இருக்கும். நிலைப்பேழை (bureau) என்னும் பெயர்க்கு மூலம் பேழையாம். பேழ்-பிளத்தல்; பிளந்து மூடுவது பேழை; பேழ்வாய் - பெருவாயாம். அமைப்பு ஒப்புமை கருதுக. பேச்சு மூச்சு பேச்சு - பேசுதல் மூச்சு - மூச்சுவிடுதல் பேச்சு மூச்சு இல்லை; பேச்சு மூச்சுக் கூடா என்பவை கேட்கக் கூடியவை. அச்சுறுத்தல் ஆணையில் பேச்சு மூச்சு பெரிதும் வழங்கும். பேச்சு பேசாமை என்பதை விடுத்து வலுவாகப் பேசாமையைக் குறிக்கும் மூச்சு மூச்சு விடாமை என்பதைக் குறியாமல் அதனையும் ஒலிகேளாவாறு மெதுவாக விடுதல் என்பதைக் குறிக்கும். பேச்சு வார்த்தை பேச்சு - சந்தித்து உரையாடல் வார்த்தை - எழுத்து வழியே போக்குவரத்து ஏதாவது சிக்கலானதைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறுவது வழக்கம். நேரிடையாகக் கூடிக் கலந்துரை யாடலும் பின்னே கடிதத் தொடர்பு கொள்ளலும் நடைமுறை யாகலான் அவற்றைக் குறிக்கு முகத்தான் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறினர். வார்த்தை என்பதற்குச் சொல் என்பது பொருளாயினும் இவண் எழுதும் செய்தியைக் குறித்ததாம். பேத்து மாத்து பேத்து(பெயர்த்தல்) - ஓரிடத்தில் இருந்து ஒன்றைப் பெயர்த்தல். மாத்து(மாற்றுதல்) - பெயர்த்ததை வேறோரிடத்தில் கொண்டு போய் நட்டுதல். பெயர்த்து மாற்றுதல் உழவுத் தொழில் சார்ந்தது. அதன் வழியாக வந்தது. பேத்துமாத்தாம் ஒருவகையாக நிகழும் நிகழ்வை வேறொன்றாக மாற்றி, மற்றோரிடத்துச் சொல்வது பேத்து மாத்து எனப்படுகிறது. மாற்றிப் பேசுவதைப் பேத்துதல் என்பர். அது பிதற்றுதலாம். பெயர்த்தல் பிதற்றுதல் என்பன ஒப்பானவையே. மாற்று என்பது மாத்து என வழங்குதல் வெளிப்படை. பேரும் புகழும் பேர் - வாழ்ந்து கொண்டிருக்கும் போது உண்டாகும் பெருமை. புகழ் - வாழ்வின் பின்னரும் நிலைபெற்றிருக்கும் பெருமை. பெயர் என்பதில் இருந்து வந்தது பேர். பீடும் பெயரும் காண்க. புகழ் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரேஎன்பது புறப்பாடல். பேர் என்பது செல்வாக்கு; புகழ் என்பது வரலாறும் காவியமும். காலத்தோடு முடிவது பேர். என்றும் நிலைப்பது புகழ். பொட்டு பொடி பொட்டு - பயறு தானியம் முதலியவற்றின் தோல். பொடி - பயறு தானியம் முதலியவற்றின் தோல் நொறுங்கல். சில பயற்றுக் செடிகளின் காய்ந்த இலையும் பொட்டெனக் கூறப்படும். அவ்விலையின் நொறுங்கல் பொடியாம். துவரம் பொட்டு என்பது துவரை இலையும் நெற்றின் தோலுமாம். அவற்றின் நொறுங்கல் பொடியாம். இனிப் பொட்டுப் பொடி எனத் தட்டு முட்டுக் கலங்களும், அணிகலங்களும் வழங்கப் பெறுதல் மிகச் சிறிய, பெரிய பொருள்களைக் குறிப்பதாம். பொத்தல் பொதுக்கல் பொத்தல் - ஓட்டையுடையது. பொதுக்கல் - பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது. பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால் பெரியதாம். பொத்தல் பொந்து எனவும் வழங்கும். பொதுக்கன், பொதுக்கட்டி எனச் சிலர்க்குப்பட்டப் பெயரும் உண்டு. பொந்து புடை பொந்து - மரத்தில் உண்டாகிய ஓட்டை. புடை - நிலத்தில் உண்டாகிய ஓட்டை. பொந்து ஆயிரம் புளி ஆயிரம் என்னும பழமொழி புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட ஆயிரம் ஆண்டாம்; பொந்துபட்ட பின்னும் வாழ்வது ஆயிரம் ஆண்டாம். புடைத்தல்-பருத்தல். வெளியில் பருத்துத் தோன்றி உள்ளே ஓட்டை இருப்பது புடையாம். புடைத்தல் பருத்தல் என்பதைக் குறித்துப் பின்னர் அதன் உள்ளே அமைந்த ஓட்டையைக் குறித்ததாம். இனிப் பொந்து பெரியதும் புடை சிறியதுமாம் ஓட்டையாம். கிணற்றில் பொந்து புடை உள்ளன என்னும் வழக்கு இதனைக் காட்டும். பொய் புரட்டு பொய் - உண்மை இல்லாததை(உள்ளீடு இல்லாததை)க் கூறுதல். புரட்டு - ஒன்றை ஒன்றாக மாற்றிக் கூறுதல். இல்லாத ஒன்றைக் கூறுவது பொய்; இருக்கும் ஒன்றை நேருக்கு மாறாக மாற்றிக் கூறுவது புரட்டு. உருட்டுப் புரட்டு என்பது காண்க. பொய் உள்ளீடு இல்லாதது. பொக்கு, பொக்கை, பொத்தை, பொந்து முதலியவற்றைக் கருதுக. பொய் புரட்டுப் பேசாவிட்டால் உனக்கு வயிறு வீங்கி விடுமே என்பதொரு பழிப்புரை. பொய் புளுகு பொய் - உண்மை அல்லது உள்ளீடு இல்லாததை உள்ளது போல் கூறுதல். புளுகு - பொய்யை ஒட்டிப் புனைந்து கூறுதல். பொய் கூறுவதும் அதனைப் பொருத்திக் காட்டுவதற்குப் புளுகுவதும் வழக்கம். ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடங்கி, அணைத்துப் புளுகுடா அயலூர் கோடங்கி என்பது பொய் புளுகை வெளிப்படுத்தும். கோடாங்கி-குறிகூறுபவன். சில குறிப்புகளை மனத்தில் தாங்கி இவற்றை இப்படிக் கூறுவேன் எனக்கொண்டு கூறுபவன் ஆகலின் அவன் கோள் தாங்கி (கோடாங்கி) எனப்பட்டான். ஓரிடத்துச் செய்தியை ஓரிடத்துக்கொண்டு கூறுதல் கோள் எனப்படுவதை எண்ணுக. பொய்யும் வழுவும் பொய் - விளையாட்டுப் போல ஒன்றைச் செய்து விலகி விடுதல். வழு - உறுதிமொழி தந்து அவ்வுறுதியை வழுவி-விலகிப் போய் விடுதல். திருமணச் சடங்குமுறை தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தவை மணமக்கள் வாழ்வில் பொய்யும் வழுவும் தோன்றியமையே எனச் சுட்டுகிறார் தொல்காப்பியர். சிறுமியர் கட்டும் சிறு வீடு பொய்தல் எனப்படும். சிறு வீடு கட்டி விளையாடி அழிப்பது போல் அழிப்பது பொய். வழுவி அல்லது குற்றம் செய்து நழுவிச் செல்லுதல் வழு. ஊரறிந்த உறுதியும் சடங்கும் மணப்பாதுகாப்பாம் என்பதாம். பொள்ளல் பொத்தல் பொள்ளல் - சின்னஞ்சிறு நுண் துளை பொத்தல் - பெரிய துளை அல்லது ஓட்டை பொள்ளலில் நீர் கசியும்; பொத்தலில் நீர் ஒழுகும். ஆதலால் மண்கலம் வாங்குவார் பொத்தல் பொள்ளல் கீறல் முதலியவை உண்டோ எனத் தட்டிக் கொட்டிப் பார்த்தே வாங்குவது வழக்கம். பொள்ளெனப் புறம் வேர்த்தலைப் புகல்வார் வள்ளுவர். போவாய் பொழுவாய் போவாய் - பல்போன வாய் பொழுவாய் - நீர் ஒழுக்குடைய வாய் போய வாய் போவாய் ஆயிற்று; போயது பல் என்க. பொழுவாய் என்பது ஒழுகுகின்ற பொழிகின்ற வாயெனும் பொருளில் பொழுவாய் எனப்பட்டதாம். இதனை ஓவாய் ஒழுவாய் என்னும் இணைச் சொல்லுடன் ஒப்பிட்டுக் காண்க. பொருள் வேறுபாடு ஒப்பிட்டு இல்லாத ஈரிணைச் சொற்கள் போவாய் பொழுவாய் ஓவாய் ஒழுவாய் என்பனவாம். மட்டு மரியாதை மட்டு - தனக்குரிய அளவு மரியாதை - பெருமை சிலர் செருக்காகப் பேசும் போதோ, நடந்து கொள்ளும் போதோ மட்டுமரியாதைதெரியாதவன் என்பர். தனக்குரிய அளவும், பிறர்க்குத் தரத் வேண்டிய பெருமையளவும் தெரியாதவன் என்பதாம். இனிப் பிறர் தகுதியளவும், பெருமையளவும் தெரியாதவன் என்பதுமாம். அந்த மட்டில் நில் என்பதில் மட்டு அளவுப் பொருளாதல் விளங்கும். k£o¥ò(limited)fHf§fŸ இந்நாளில் உள்ளன. வரையறுக்கப்பட்ட அளவினது என்பது பொருள். மப்பு மந்தாரம் மப்பு(மைப்பு) - மை அல்லது முகில் திரண்டிருத்தல். மந்தாரம் - மழை பெய்தற்குரிய குளிர்காற்று அடித்தல். மை-முகில்; கருமுகில்; மழை முகில் மை எனப்படும். மைப்பு - மப்பு என நின்றது. மந்தாரம் மெல்லிய தண்ணிய காற்று. எட்டத்தில் மழை பெய்திருந்தால் அம்மழையின் ஈர நைப்பு காற்றொடு வரும். அன்றியும் தாழப் படிந்த கருமுகிலைத் தழுவி வரும் காற்றும் ஈரநைப்புடன் வரும். இவற்றால் மப்பும் மந்தாரமும்இணைதற்காயின. மரம் மட்டை மரம் - ஒரறிவுயிராம் மரம் மட்டை - மரத்தின் உறுப்பாகிய மட்டை. மட்டை என்பதும் மடல் என்பதும் ஒன்றே. தென்னை, பனை, வாழை, தாழை என்பவற்றிற்கு மட்டையுண்டு. இவை மர இனத்தைச் சேர்ந்தவையல்ல, புல்லினத்தைச் சேர்ந்தவை. எனினும் பிற்கால மக்கள் வழக்கில் இவை தென்னை மரம் பனை மரம் என்பன போலக் கொள்ளப்பட்டமையால் தேர்ந்த இணை மொழியாக மரம்மட்டை வழங்குகின்றது. மரபு நிலை மாறிய வழக்கைத் தழுவியது இது. மருந்து மாயம் மருந்து - மருத்துவம் பார்த்தல் மாயம் - மந்திரம் குறி முதலியன பார்த்தல். எவருக்காவது நோய் வந்துவிட்டால் நோய்க்கும் பார் பேய்க்கும் பார்என்பது வழக்கம். நோயாகவும் இருக்கும்; பேயாகவும் இருக்கும் என்பது கருத்து. ஆதலால் மருந்தை மட்டும் பார்க்காமல் மாயமும் பார்க்க விரும்புவர். மாயம் பேயோட்டுவது, குறி பார்ப்பது இன்னவாறாகச் செய்யப்படும். கண்மூடி வழக்கம் மண் மூடிப் போக வேண்டும் என்ற குரலுக்கு மருந்தும் மாயமும் ஓர் அடிப்படை. மாடகூடம் மாடம் - தளத்தின் மேல் தளம் அமைத்த கட்டடம். கூடம் - மாடத்தின் மேல் அமைத்த கூண்டுக் கட்டடம். மேல்தளம், மாடம், மாடி, மெத்து, மச்சு, தட்டு இன்ன வெல்லாம் மாடங்களே. ஒன்றன்மேல் ஒன்றாய் எத்தனை தட்டுகள் அடுக்கினாலும் மாடங்களே. மாடத்தின் மேல் வளைகூடாய் செய்யப்பட்டவை கூடமாம். எழுநிலை மாடத்து இடைநிலத் திருந்துழி என்பது சிலம்பு. ஏராரும்மாட கூட மதுரையில் என்பது திருப்புகழ். மிச்சம் சொச்சம் மிச்சம் - மீதம் அல்லது எச்சம் சொச்சம் - மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம். வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை எவருக்கோ படைத்துவிட, அவர்க்குப் பின்னே ஒருவர் வந்து கேட்டால் பின்னரும் உணவுக் கலங்களைத் தட்டித் தடவித் தருவது சொச்சமாம். தவசம், பணம் இவற்றிலும் மிச்சம் சொச்சம் என்னும் பேச்சு வரும். முக்கு முடங்கி முக்கு - முட்டித் திரும்பும் இடம். முடங்கி - வளைந்து திரும்பும் இடம். முக்கு முடங்கி தெருக்களில் உண்டு. நில புலங்களிலும் உண்டு. வளைந்து வளைந்து ஓடும் ஆறு ஒன்று முடங்கியாறு என்னும் பெயருடன் விளங்குகின்றது. முடக்கம், முடம் என்பவை வளைவின் அடியில் வந்தவையே. முக்கு என்பதை மூலை முடுக்கில் காண்க. முடங்கி - முடுக்கு எனவும்படும். வளைந்த நெற்பயிரை முடந்தை நெல் என்பர். முட்டுதல் மோதுதல் முட்டுதல் - ஒன்றையொன்று படுமாறு தலைப்படுதல் முட்டு தலாம். மோதுதல் - கீழே வீழ்ந்துபடுமாறு தள்ளுதல் மோதுதலாம். முட்டுதல் முற்படுவினையும், மோதுதல் பிற்படுவினையுமாம். முட்டித் தள்ளுதல் என்பது இவ்வினைச் சொற்பொருளை விளக்கும். முட்டுப்பாடாம் வறுமை முட்டுப்பாடு எனப்படுவதும் அறிக. முட்டுக்கால் முழங்கால் முட்டுக்கை முழங்கை என்பவற்றைக் காண்க. முட்டுக்கால் முழங்கால் முட்டுக்கால் - கால் எலும்பும் தொடை எலும்பும் முட்டுகிற இடம், முட்டுக்கால். முழங்கால் - கணைக்கால் முதல் முட்டுக்கால் வரை உள்ள கால் முழங்கால். முழங்கால் - முழந்தாள் எனவும் படும். கைம்முழம் அளவு இருத்தல் கருதி முழங்கால் எனப்பட்டது. முழம் போடுதல் நீட்டலளவாக நெடுங்காலம் இருந்தது. முட்டு, முட்டி எனவும் வழங்கும். முட்டுக்கை முழங்கை முட்டுக்கை - கை எலும்பும் தோள் எலும்பும் முட்டுகிற இடம் முட்டுக்கை. முழங்கை - மணிக்கட்டு முதல் முட்டுக்கை வரையுள்ள கை முழங்கை. ஈரெலும்புகள் முட்டுகின்ற இடம் முட்டு; இரண்டையும் மூடி இணைப்பது மூட்டு. முட்டுக்கை - முட்டிக்கை எனவும் படும். சிறுவர் விளையாட்டுகளில் தோல்வியுற்றவர்க்கு முட்டித் தள்ளும் தண்டனை உண்டு. கல்லையோ, குச்சியையோ ஆட்டக் குழிவரை முட்டியால் தள்ளிக்கொண்டு போக வேண்டும் என்பது அது. முட்டுமொளி முட்டு - ஓர் எலும்பும் மற்றோர் எலும்பும் அல்லது இருபகுதிகள் முட்டுகிற இடம் முட்டு. மொளி - ஒரு முட்டுக்கும் மற்றொரு முட்டுக்கும் இடைப் பட்ட இடம் மொளி. கரும்பில் உள்ள கணுக்கள் முட்டு; கணுவுக்கும் கணுவுக்கும் உள்ள இடைவெளி மொளி. காலில் முட்டுக்கால், முழங்கால் உண்டு. முட்டுக்கால் முட்டி அல்லது மண்டி போடும் பகுதி. அதற்குக் கீழே உள்ளது முழங்கால். அதே போல் முட்டுக்கையும் முழங்கையும். முட்டுக்கை நீண்டால் முழங்கை நீளும் என்பது பழமொழி. முத்தனும் பெத்தனும் முத்தன் - முத்தி நிலை பெற்றோன். பெத்தன் - பெருநிலை அல்லது ஒடுக்கநிலை பெற்றோன். முத்தனும் பெத்தனும் என்பது சமயநூல் இணைச் சொற்கள். முத்தனைச் சீவன் முத்தன் எனவும் கூறுவர். பெத்த நிலை பெத்த முத்தி எனப்படும். முத்த நிலை என்பது முழுமை பெற்றோன்நிலை. முத்தன் முழுதுணர்ந்தோன்; அவன் நிலையை அறிந்தோர் மண்ணுலகில் வாழும் போதே முத்தன் பெத்தன் என வழங்குகின்றனர். முடிவினை அறிந்தபின் கூறப்படுவ தன்றாம். புத்தன் அருகன் முதலியோரை முத்தன் என்பதைக் கொண்டு அறிக. முள் முடல் முள் - வேலமரம் ஒட்டடை மரம் இவற்றின் கிளை அல்லது படல். முடல் - காய்ந்த விறகு. சிற்றூர்களில் முள்ளும் முடலும் எரிபொருளாகக் கொள்வர். முள் என்பது முட்படலைக் குறித்தது. கவைக் கோலால் முட்படல்களை குத்தித் தூக்கிக் கொண்டு வருவது வழக்கம். வெளுப்புத் தொழிலுக்கு ஆவி வைப்பதற்கு முள்முடல் கொணர்வது வழக்கம். முடல் - முடலை எனவும் படும். முடலைவிறகு என்பது மணிமேகலை. ஒழுங்கற்ற வடிவும் காய்வும் உடையது முடலை. மூக்கறை காக்கறை மூக்கறை - மூக்குக் குறைந்தது. காக்கறை - கால்கை குறைந்தது. உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி மூக்கறை காக்கறை என்பதாம். கால்கை பிடித்தல் காக்கை பிடித்தல் என வழங்குவது போலக், கால் கை குறை காக்கறை ஆயிற்றாம். மூக்கு அறை -மூக்கறை; மூக்கறுப்பட்டது. மூக்கறுப்பு முன்னாளிலும் பின்னாளிலும் முனைப்பான வரலாற்றுச் செய்திகள். அறிவற்றுப் போதல் அறிவறை எனப்படுவதை அறிக. மூக்கும் முழியும் மூக்கு - மூக்கின் எடுப்பான தோற்றம். முழி(விழி) - விழியின் கவர்ச்சியான தோற்றம். ஒரு குழந்தையைப் பார்த்து அழகாக இருந்தால்மூக்கும் முழியும் எப்படி இருக்கிறது என வியந்து கூறுவது தாய்மைச் சீர். மூக்கு என்பதற்கு ஏற்ப விழி மோனைப்பட முழி ஆயிற்று. வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே என்பது பெரியாழ்வார் திருமொழி. மூலை முடுக்கு மூலை - இரண்டு பக்கங்கள் சந்திக்கும் இடத்தின் முக்கோணப் பகுதி மூலையாகும் முடுக்கு - கோணலாய் அமைந்தது முடுக்கு எனப்படும். மிக நெருக்கமானதும் முடுக்கு எனப்படுவதுண்டு. தெருக்களில் மூலை முடுக்கு உண்டு. மூலை என்பது மாரி மூலை ஈசானமூலை எனக் கோணத்திசைகளைக் குறிப்பதும் உண்டு. முக்கு என்பது முட்டித் திரும்பும் இடம். முடுக்கு வளைந்து திரும்பும் இடம். இவை இவற்றின் வேறுபாடு. மெல்லாமல் கொள்ளாமல் மெல்லாமல் - நன்றாகப் பல்லால் அரைக்காமல். கொள்ளாமல் - வாய் கொள்ளும் அளவு இல்லாமல். சில பிள்ளைகள் பண்டத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வாயில் அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டு இருப்பர். அவர் களை இப்படி மெல்லாமல் கொள்ளாமல் தின்றால் வயிற்றுக்கு ஆகாது எனக் கடிந்து மென்று தின்னச் சொல்வர். மெல்லுதல் அரைப்பதுடன் உமிழ்நீர் சேர்வதற்கும் வாய்ப்பாம். கொள்ளுதல் மெல்லுவதற்கு வாய்ப்பாம். மேடு தாவு மேடு - மேட்டு நிலம் தாவு - தாழ்வு நிலம் நிலம் மேடு தாவாகக் கிடந்தால் சமனிலைப்படுத்துதல் முதல் வேலையாம். அதனைப் பண்படுத்துதல் அடுத்த வேலையாம். நன்செய் நிலமெனின் மேடு தாவுகளைத் தனித்தனிக் குண்டு களாகப் பிரித்துக் கொள்வது வழக்கம். மலைநிலத்து வேளாண்மை மேடு தாவுகளில் அதனதன் நிலைக்குத் தகச் சமப்படுத்தி வரப்பமைத்துச் செய்யப்படும். வாழ்வில் மேடுதாவு உண்டு. அதனைச் சமப்படுத்திக் கொள்ள திட்டமும் திறமும் கட்டாயம் வேண்டும். மொட்டை சொட்டை மொட்டை - முழுவதும் மயிரற்ற தலை. சொட்டை - இடை இடையே துள்ளி துள்ளியாய் மயிரற்ற தலை. மொட்டை என்பது அடிக்கப்படுவது. மழுக்கை அல்லது வழுக்கை என்பது மயிர் அறவே இல்லாமல் உதிர்ந்துவிடுவது. சொட்டுச் சொட்டாக நீர் விழுந்த இடம் போல வட்ட வட்டமாக மயிர் உதிர்ந்தது சொட்டை. மொட்டையும் சொட்டையும் அவரவர்க்கே கூட மனத்துயர் ஊட்டுவது உண்டு. மொட்டை சொட்டை மரத்தில் இலையுதிர்தலைச் சுட்டவும் பின்னே வளர்ந்தது. மொட்டைமாடி மொட்டான் (Stool) என்பனவும் ஆட்சி பெற்றன. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது, என்பது பழமொழி. மொத்தல் மொதவல் மொத்தல் - நிலப்பரப்பெல்லாம் களைசெம்மிக் கிடத்தல். மொதவல் - நிலத்துச் செம்மியத்துடன் கிளைத்துத் தழைத்துப் பயிரையும் மூடிக் கிடத்தல் மொதவலாம். மொத்தப் பரப்பையும் கவர்வதால் மொத்தல் எனவும், முதைத்துக் கிடத்தலால் மொதவல் எனவும் சொல்லப் பட்டதாம். களை மொத்தல் மொதவல்லாகக் கிடக்கிறது; பயிரை எழுந்திருக்க விடவில்லை என்று வருந்துதலும், களையெடுத்தலும் வேளாண்மைத் தொழில் சார்ந்தவை. மொய்யோ முறையோ மொய் - கூட்டாக வந்து தொல்லை தருதல். முறை - முறை கேடாகத் தொல்லைத் தருதல். ஒருவரைப் பலர் திரண்டு வந்து தாக்கும் போது தாக்கப்படுவர். மொய்யோ முறையோ எனக் கத்துவதாகச் சொல்வர். மொய்த்தல் எறும்பு மொய்த்தல், ஈமொய்த்தல் போலக் கூட்டம். முறை-நேர்மை, அறமுறை. ஒருவனைப் பலர் தாக்குதல் முறையன்று என்பதாம். மோழை காளை மோழை - கொம்பு இல்லாதது காளை - கொம்பு உடையது. மோழையும் காளையும் கடாக்களே. இருப்பினும் மோழைக்குக் கொம்பு இல்லை. காளைக்குத் கொம்பு உண்டு. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் என்பதொரு பழமொழி. கொம்பு இல்லாததும் குத்த வருமாம்; ஏழையைப் பார்த்து அவ்வளவு எளிமைப்பட்ட செயலாம். மூத்தது மோழை இளையது காளை என்னும் பழமொழி.. மூத்தவனிலும் இளையவன் எடுப்பை வெளிப்படுத்தும். வக்கு வகை வக்கு - வழி; வாய்ப்பு, வகை - பிறர் உதவியாம் வகை. வக்கு வகை என்பது வழி வகை எனவும் படும். தம் பொருளால் வாழ்வு நடத்துதலும் பிறர் உதவியால் வாழ்வு நடத்துதலும் என இருவகை வாழ்வும் உண்டு. ஒருவர்க்கே ஒவ்வொரு காலத்தில் இவ்விருவகை வாழ்வும் இணைதலும் உண்டு. இவ்விரண்டு வகையாலும் நிரம்பாத வறிய வாழ்வு உடையவரை வக்குவகை இல்லாதவர் என இகழ்வது வழக்கம். வக்கற்றவன், வகையற்றவன் என்பவை வக்கு வகைகளின் விரியாம். வகை தொகை வகை - வரவு வந்த அல்லது செலவிட்ட வழி. தொகை - வரவு வந்த அல்லது செலவிட்ட தொகை. வகை, தொகை விளக்கமாக இருக்கவேண்டும் என்பதை எவரும் விரும்புவது இயற்கை. கணக்கு எழுதும் அன்று இன்னது எனத் தெளிவாக இருக்கும். ஆனால் ஆண்டுகள் சில கடந்தபின் நினைவில் இருக்குமோ? கணக்கு வகை, தொகை செம்மையாக இருந்தால் என்றும் கண்டு கொள்ளலாமே. செய்வன திருந்த செய்ய விழைவார் வகை, தொகை சீராக வைத்திருப்பார். வட்டம் வளசல் வட்டம் - தன் சுற்றத்தார் வீடுகள். வளசல் - தன் உறவினர் வீடுகள். முற்காலத்தில் பங்காளிகள் ஒரு வட்டமாகவும் அவர்கள் காலத்தில் உறவினர்கள் அடுத்தடுத்து வட்டம் வட்டமாக அமைந்திருக்க வாய்த்தது. ஆதலால் தம்மை அடுத்தாரை வட்ட மாகவும், அவரை அடுத்திருப்பாரை வளசல் ஆகவும் கருதினர். நகர வாழ்க்கையில் வட்டம் வளசல்களுக்கு இடமில்லையாம். வட்டம் - வட்டகை எனவும் வளசல் - வளைவு எனவும் வழங்கும். வட்டி வாசி வட்டி - குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி. வாசி - வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி. வாசி என்பது வட்டிக்கு வட்டியாம். கூட்டு வட்டியும் வாசியே. வட்டி பாவத் தொழிலாகக் கருதப்பட்ட காலநிலை யுண்டு. இன்று நாடே வட்டிக்கு வட்டி எனத் தவிக்கிறது. ஒவ்வொரு வரும் நாட்டின் கடனாளிகளே! வட்டி தருவோரே! வத்தல் வதக்கல் வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்) வதக்கல் - சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல். உலரப் போட்ட மிளகாய் வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும் இருந்தால் வத்தலும் வதக்கலுமாக இருக்கின்றதென்பர். நீர்ப்பதன் முழுவதும் போக்காமல் ஓரளவு போக்குதலை வதக்குதல் என்பது வழக்கம். ஈர உள்ளி அல்லது ஈர வெண்காயம் வதக்குதல் அறிக. மொறுமொறுப்பின்றி ஈரப்பதனுடையதைத் தின்பார் வதக்கு வதக்கு என்றிருப்பதாகக் கூறுவதும் எண்ணத் தக்கது. வதியும் சேறும் வதி - வழியிலும் வாழ்விடங்களிலும் பட்ட சேறு, வதி எனப்படும். சேறு - நிலங்களில் நீரோடு கலந்து கட்டியாக இருக்கும் மண்சேறு எனப்படும். வதி-வழி; வதிவிடம், நிலத்துச் சேறு நீரொடு கலந்த அளவில் இருக்கும். வதிச் சேறோ ஊரவரும் ஆடும் மாடும் மிதித்துக் கூழும் குழம்புமாய்க் கிடக்கும். வதியழிதல் என்னும் வழக்கு வதியின் தன்மையைச் சுட்டும். சேறும் தொளியும் காண்க. வம்மை வழமை வம்மை(வண்மை) - கொடை வழமை - வழக்கம் வழி வழியாகக் கொடுத்து வந்த கொடை முறை வம்மை என்பதாம். உழவர் குடியில் இவரிவர்க்கு இன்ன இன்ன செய்ய வேண்டும் என்னும் கொடை முறையும், வழக்கமுறையும் உண்டு. அது வம்மை வழமை எனப்படும். மங்கலம், அல்மங்கலம், பூப்பு, புதுமனை என நிகழ்வுகள் வருங்கால் வம்மை வழமைகள் முந்து நிற்கக் காணலாம். வன்பு துன்பு(வம்பு தும்பு) வன்பு - வல்லாண்மையால் துயரூட்டல். துன்பு - வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல். வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது வம்படியா என வழங்குவது போல வன்பு வம்பு எனவும் துன்பு தும்பு எனவும் வழங்குகின்றனவாம். இனி, வம்பு பொய்யும் வஞ்சமும் கலந்ததாம். அதனையோ, துன்புறுத்தலையோ கொள்ளாதே என்றுமாம். வாட்ட சாட்டம் வாட்டம் - வளமான உயரம். சாட்டம் - வளமான கனம். வாட்டம்-வளம், வாளிப்பு எனவும் வழங்கும். வளமான உடல், வாளிப்பான தோற்றம் என்பர். சட்டம் என்பதும் சட்டகம் என்பதும் உடல். எற்புச் சட்டகம் என்பதும் உண்டு. இவண் சாட்டம் உடற்கட்டினைக் குறித்து நின்றது. ஒழுங்கமைந்த நெடுமை வாட்டமும், ஒழுங்கமைந்த கனம் சாட்டமுமாம். நீர்வாட்டம் பார்த்தல் அறிக. வாடல் வதவல்: வாடல் - வாடிப் போனவை. வதவல் - காய்ந்தும் காயாதும் இருப்பவை. இலை, காய், கனி முதலிய நீர்ப்பதப் பொருள்கள் வெப்பத் தாலும் வெப்பக் காற்றாலும் வாட்டமுறும். வாட்டமுற்றவை வாடலாம். செடி கொடிகள் நீர் வறட்சியாலும் வாடலுண்டு. ஆனால் வதவல் வேறு வகையினது. உலரப் போட்டும் முற்றிலும் உலராமல் அள்ளி வைத்துவிட அதிலுள்ள ஈரம் அகலாமல் தங்கிவிடுதலாம். வதவலாக இருப்பது தான் கெட்டுப் போவதன்றி தன்னை அடுத்ததையும் தன் பதத்தால் வதவலாக்கிக் கெடுக்கும். வாடிப் போனது வாடல்; வாடவெற்றிலை வதங்க வெற்றிலை வாய்க்கு நல்லால்ல என்பது நாட்டுப் புறப்பாட்டு. வாயும் வயிறும் வாய் - பாலுண்ணும் குழந்தை வயிறு - வயிற்றிலுள்ள குழந்தை கைக் குழந்தையுடன் இருக்கும் ஒருத்தி வயிறு வாய்த்து இருந்தால் அவள் வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்பர். அவள்மேல் இரக்கம் காட்டி அவளுக்கு வேண்டும் உதவிகளும் செய்வர். வாய்க் குழந்தைகளுக்கு உணவூட்டுவாளும் அவள்; வயிற்றுக் குழந்தைக்கு உணவாவாளும் அவள்; இரு குழந்தை களுக்கும் உடலில் ஊட்டம் வேண்டுமே ஊட்டுவதற்கு என்னும் பரிவு தந்த பரிசு வாயும் வயிறுமாம். வாலும் தோலும் வால் - கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு. தோல் - வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல் வால் முன்னே வரும்; தோல் பின்னே வரும். வால் பத்தலை அடைந்ததும் தோல் நீரைக் கொட்டும். வால் வரவும் தோல் வரவும் நிகழ்ச்சி ஒன்றையொன்று தழுவி நிகழும். அதுபோல் இணைந்து பேசி செயல்படுவாரை வாலும் தோலும் என்பது உண்டு. ஒருவருக்கு ஒருவர் ஏற்றுப் பேச வந்தால் நீ என்ன அவனுக்கு வாலா? தோலா? என வினாவுவதும் வழக்கம். வேறு; வகையாக வாலைக் கண்டாயா? தோலைக் கண்டாயா? என்பதும் வழக்காம். விட்டக் குறை தொட்டக்குறை விட்டக்குறை - முன்னைப் பிறவியில் செய்யாமல் விட்ட குறைவினை. தொட்டக்குறை- இப்பிறவியில் எடுத்து முடிக்காமல் விட்ட குறைவினை. ஒருவன் பிறவியைத் தீர்மானிப்பது விட்டக் குறை தொட்டக்குறை என்பது இந்திய நாட்டுக் கொள்கை. குறை நீக்கமே வீடுபேறு என்று சொல்லப்படும். சிலர் இளமையிலேயே பெருநிலைப் பேற்றாளராகத் திகழ்வர். அன்னவரை விட்டகுறை தொட்ட குறையால் வந்தவர். குறை முடிந்து நிறைவாகிவிட்ட பெருநிலை இது எனப் பாராட்டுவர். விப்பு வெடிப்பு விப்பு - நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு. வெடிப்பு - மண் கல் முதலியவை பிளந்து காணல். விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் விப்பு சிறியது; மெல்லியது; கோடு போல்வது. வெடிப்போ ஆழம் அகலம் நீளம் எல்லாமும் அகன்ற பிளப்பு. விப்பின் நிலையை அதன் விரிவு, விரிசல் என்னும் பெயர்கள் விளக்கும். வெடிப்பை வெடி வைத்துத் தகர்க்கும் தகர்ப்பு விளக்கும். வெட்டு விலக்கு வெட்டு - எதிர்த்தும் மறுத்தும் வெட்டிப் பேசுதல். விலக்கு - எடுத்ததை மாற்றிப் பிறிதொன்றால் பேசி மறுத்தல். வெட்டு; விலக்கு இரண்டுமே மறுப்புரைகளே, எனினும் இரண்டற்கும் வேற்றுமை உண்டாம். ஒட்டிப்பாடல் வெட்டிப் பாடல் என இரு வகைப் பாடு முறை உள்ளது போல் இவ்வுரை முறையும் இரண்டாயிற்றாம். நேரிடையாக மறுத்துப் பேசுதலும் மறுக்காதது போல் மறுத்து மறுப்பை உறுதிப்படுத்தலுமாம். வெட்டை வெளி வெட்டை - மேட்டுப்பாங்கான இடம் வெளி - அகன்று பரந்து திறவையான இடம் அல்லது திறந்த வெளி. வெட்டை வெளி என வானத்தைச் சுட்டுவர். மேட்டுப் பாங்கான திறந்த வெளியிடமும் வெட்டைவெளி எனவே படும். வெள்ளிடை மலை என்பது வெட்ட வெளிச்சம் பரப்பில் அமைந்த மலையாம். இந்த பொருளை வெட்டையில் வை என்றால் மேட்டில் வை என்பதும் பொருளாம். இன்றும் வழக்கில் உள்ளது. வெளி- வெளிப்படையே. வெள்ளையும் சொள்ளையும் வெள்ளை - வெளுத்த வேட்டி சட்டை சொள்ளை - வெளுத்த துண்டு ஆடைபாதி ஆள் பாதி என்பது பழமொழி. மேலாடையின்றி அவை புகுந்தால் மதியார் என்பதொரு வழக்கம் உண்டு. ஆதலால் வெள்ளை என்பது வெளுத்த வேட்டியையும் வேண்டுமானால் சட்டையையும் குறித்து வந்தது. உடுப்பவை இரண்டே என்னும் வழக்கமிருந்த நாளில் வேட்டி, மேலாடை என இரண்டே ஆடவர் உடையாம். சொள்ளை-துண்டு; மெல்லிது, சிறிது என்னும் பொருளது. சுள் என்பது. வெள்ளை வெட்டை: வெள்ளை - வெள்ளை நீர் வெட்டை - வெக்கை அல்லது வேக்காடு. வெள்ளை வெட்டை என்பவை மகளிர் நோய்கள், வெள்ளை நீர் ஒழுக்கு வெள்ளையாம். இதன் முதிர்ச்சியால் வேக்காடு மிக்கு எரிச்சலும் தினவும் மிகுநிலை வெட்டை யாம். வெட்டைவந்தால் கட்டை என்னும் பழமொழி வெட்டையின் கொடுமையைச் சுட்டும் பழமொழியாம். பின்னிணைப்பு அரசல் புரசல் அரசல் - நேரே தன் செவியில் மெல்லெனப் படுதல். புரசல் - பிறர் செவியில் பட்டு மீளத் தன் செவிக்கு வருதல். அரசல் புரசலாக அந்தச் செய்தியை அறிந்தேன் என்பது வழக்கு. சில செய்திகள் தானே கேட்டறிய நேரும். சில செய்திகள் பிறர் வழியே தன் காதுக்கு வந்து சேரும். இவ்விரு பகுதியையும் சுட்டும் இணைச்சொல் இது. அழன்று குழன்று அழன்று - எரிந்து, வெதும்பி குழன்று - குழைந்து, கூழாகி அழலுதல் முதல் நிலை; குழன்று போதல் அதன் வளர் நிலை; சோறு, காய்கறி அனலால் அழலும்; அனலால் அல்லது அழலால் மிகத் தாக்குண்ணுங்கால் அல்லது நெடும் பொழுது இருத்தலால் குழைந்து கூழாகிப் போகும். இதனை அழன்று குழன்று போயிற்று என்பது வழக்கு. அழிந்து ஒழிந்து அழிந்து - கெட்டுப்போதல் ஒழிந்து - அற்றுப் போதல். அழிந்து ஒழிந்து போனது; அழிந்தொழிந்து போக நேரம் வந்துவிட்டதா? என்பவை வழக்கு மொழிகள். அழிதல், அழிந்துபடுவதும், அழிந்ததற்குச் சான்று இருப்பதும் ஆகும். ஒழிதல், அழிந்ததன் தடமும் இல்லாமல் மறைந்து போவதாம். ஆள் அம்பு ஆள் - ஆள் துணை அம்பு - அம்பு முதலிய கருவித் துணை. ஆள் அம்பு அவனுக்கு நிரம்புவதுண்டு; அவனை நெருங்க முடியாது அவனுக்கென்ன ஆள் அம்புக்குக் குறைவில்லை. என்பன வழக்காறுகள். ஆட்செல்வாக்கும் படைக்கருவிச் செல்வாக்கும் ஒருவனுக்கு இருந்தால் அவனை எவரும் நெருங்கித் தொல்லை தர நினைக்கவும் மாட்டார்கள். இந்நிலைமை சுட்டி யெழுந்தது ஆள் அம்பு இணைமொழி. இனம் கனம் இனம் - உற்றார் உறவினராகிய சுற்றப்பெருக்கம். கனம் - வீடு நிலம் பணம் முதலாகிய பொருட்பெருக்கம். இனம் கனம் இருந்தால் மதிப்பிருக்கும் மடியில் கனமில்லை; வழியில்லை பயமில்லை என்னும் பழமொழிகளில் கனம் பொருள் என்னும் பொருளாதல் விளங்கும். கனவான் என்பதறிக. இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு என்பதில் இன விளக்கம் இருப்பது அறிக. உண்ணாமல் தின்னாமல் உண்ணுதல் - சோறு உட்கொளல் தின்னுதல் - காய்கறி, சிற்றுணவு (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல். உண்ணாமல் தின்னாமல் ஐயோவென்று போவான் என்பதில் இவ்வினை மொழியாட்சி காண்க. உண்ணுதல் - பேருணவும்; தின்னுதல் - சிற்றுணவுமாம். தின்னலால் தீனிப்பெயர் பெற்றதும் அறிக. தினற் பொருட்டால் என்னும் குறளும் பகுத்துண்டு என்னும் குறளும் விளக்கந்தரும். எருவும் தழையும் எரு - ஆடு மாடு முதலியவற்றின் உரம் தழை - செடி, கொடி, மரம் முதலியவற்றின் இலை, தழை, உரம். எருத்தழை எருவுந்தழையும் எனவும் வழங்கும். எருவும் தழையும் போட்டால் தானே கதிர்த்திரட்சி இருக்கும் நிலத்தில் எருவும் தழையும் போடக்கூட முடியவில்லை என்பவை உழவர் வழக்காறுகள். ஏட கூடம் ஏடம் - செருக்கு, தடித்தனம் கூடம் - மறைப்பு; வஞ்சகம் ஏட கூடமாகப் போயிற்று ஏட கூடமாக நடக்கலாமா? என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விருவகையும் கொள்ளத் தக்கவை அல்ல என்பதும் தள்ளத்தக்கவை என்பதும் வெளிப் படை ஏடகூடம் ஏடா கூடம் எனவும் வழங்கும். ஒட்டியும் வெட்டியும் (கூறுதல்) ஒட்டி - ஓராற்றான் இயைந்து கூறுதல் வெட்டி - நேர்மாறாக மறுத்து கூறுதல். ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ? என்பது புகழேந்தியார் வினா. ஒட்டக் கூத்தர் அரசவைப் புலவர்; ஆதலால் அவர்க்கு இறக்கம் வாராதிருக்க இரக்கம் கொண்ட சோழன் ஒட்டிப் பாடுக என்றது புலவர் புனைவுச் செய்தி. ஒட்டுதலும், வெட்டுதலும் எதிரிடை என்பது வெளிப்படை தானே. ஒளிவு மறைவு ஒளிவு - சொல்லப்பட வேண்டியவற்றுள் சிலவற்றை ஒளித்துச் சொல்வது. மறைவு - சொல்லப்படவேண்டியவை எல்லாவற்றையும் வெளிப்படாமல் மறைத்து விடுவது. ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல வேண்டும்; ஒளித்து மறைத்துச் சொன்னால் உயிரையும் பார்க்கமாட்டேன் என்பன போல்வன நடைச் சொற்கள். ஒருபால் மறைப்பு ஒளிவும், முழுதுறு மறைப்பு மறைவு மாம். கணக்கு வழக்கு கணக்கு - கணக்கிட்டுத் தந்தது. வழக்கு - செய்முறைகளால் தந்தது. எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு ஒன்றும் இல்லை என நட்பில் கூறுவதும் கணக்கு வழக்கைப் பார்த்து கொடுத்துவிடு எனப் பகையில் கூறுவதும் கேட்கக் கூடியவை. வழக்கு-வழக்கம், நடைமுறை, மொய், நன்கொடை அன்பளிப்பு எனத் தந்தவையும் வழக்கில் வந்து விடும். தின்றதைக் கக்கு என்பது சிறுபிள்ளைத்தனம் என்றால் பெரியவர்களிலும் அத்தகையர் உண்டு. காய்த்துக் குலுங்குதல் காய்த்தல் - காய் காய்த்தல் குலுங்குதல் - கிளையும் கொப்பும் காய்ப்பெருக்கம் தாங்காமல் வளைந்து ஆடுதல்; காற்றால் காய் உதிர்தலுமாம். தட்டான் காய்கள், பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றன என்பது ஒரு புலவர் மற்றொரு புலவரிடத்துக் கூறிய சாடலுரை. குலுங்குதல், அசைதல், வளைதல், அலுங்குதல், என்பதும் அசைதலாம். குட்டு நெட்டு குட்டு - குறுகிய செய்தி அல்லது குறுஞ்செய்தி. நெட்டு - நெடிய அல்லது விரிந்த செய்தி உன் குட்டு நெட்டை நான்உடைத்து விடுவேன் சும்மா இரு என்பது அடங்காரை அடக்குவாய்களுள் ஒன்று. குட்டு-குட்டை; நெட்டு- நெட்டை செய்திகளின் அளவுக்கு ஆகியது. குட்டு நட்டுக் காண்க. கூட்டிக் குறைக்க கூட்டி - மிகுதியாகத் தந்து. குறைக்க - குறைவாகத் தர மிகுதியாகத் தந்த ஒருவர் பின்னே குறைத்துத் தரும் நிலைக்கு வந்தால் கூட்டிக் குறைக்கக் கொடும்பகையாம். இப்படிப் பழமொழியும் உண்டு. நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பதும் உண்டு. அதனைக் காண்க. என்றும் தராமல் இருந்தால் புதிது இல்லையே. கிடைக்கும் என எதிர்ப்பார்த்த இடத்தில் கிடையாமைதானே ஏமாற்றம். அதுவே பகைக்குக் காரணமாம். நெளிவு சுழிவு நெளிவு - ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக வளைந்து கொடுத்து நிறைவேற்றல். சுழிவு - ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக சூழ்ச்சி வழியில் நிறைவேற்றல். அவன் நெளிவு சுழிவானவன்; அவன் நெளிவு சுழிவாக நிறைவேற்றிக் கொள்வான் என்பவற்றில் இவ்விணை மொழி விளக்கம் தெளிவாம். நெளிவு சுழிவு நூற்பகுதியில் காண்க. பட்டம் பதவி பட்டம் - படிப்புத்திறமைதகுதி பதவி - படிப்புத் திறமையால் அடையும் பணித் தகுதி. பட்டம்-துணி; துணியில் பொறித்துத் தரப்பட்ட சிறப்புத் தகுதி பட்டம் எனப்பட்டது. பின்னே படிப்புச் சான்றிதழாக வழங்குபவற்றுக்கு வளர்ந்தது. பதவி-மேனிலை; உயர்வின் திரட்சிநிலை; அது அதிகாரம் செலுத்தும் பெருநிலையாய் அமைந்தது. பட்டம் பதவியிலிருந்தால் மதிப்பு தானே தேடி வரும் என்பது வழக்குரை. பருக்கை தண்ணீர் பருக்கை - சோறு தண்ணீர் - சோற்று நீர் பருக்கை தண்ணீர் ஆயிற்றா? எனக் கேட்பது உண்டு. உண்டு ஆயிற்றா என்பதே அக் கேள்வி. கஞ்சித்தண்ணீர் என்பதும் ஒரு சார் இத்தகையதே. அரிசியின் அளவு வேகவேகப் பருப்பதால் பருக்கை ஆயிற்று. பரு, பருப்பு, பரியது இன்னவை உருவப் பருமை காட்டுவன. தண்ணீர் என்பது நீற்றுத் தண்ணீர், சோற்றுத் தண்ணீர் என்பன. புல்லரிப்பு பூரிப்பு புல்லரிப்பு - ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க்கூச்செறிவு பூரிப்பு - மகிழ்ச்சி அல்லது மனவிம்மிதம். திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும், திரைப்படம் காணும் காலும், வரலாறு நிகழுங்காலும், புல்லரிப்பும், பூரிப்பும் ஏற்படல், இணைத் தொடர் நிகழ்ச்சிகளாம். பொச்சரிப்பு பூழாப்பு பொச்சரிப்பு - உள்ளரிப்பாம் எரிவு பூழாப்பு - பொறாமை அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாது என்பர். உட்சினமும், பொறாமையும் தாமே இருக்கும். விட்டு வைக்குமா? பொச்சாப்பு-மறதி; பொச்சரிப்பு-எரிச்சல் பூழாப்பு- பொறுக்க முடியாமை அல்லது பொறாமை. முண்டும் முடிச்சும் முண்டு - மரத்தின் தூர் திண்டு திண்டாக பருத்திருத்தல் முடிச்சு - மரத்தின் தூரில் கணுக்கள் இருத்தல். முண்டும் முடிச்சுமாக இருக்கும் இந்த மரத்தை அறுக்க முடியாது. அரம்பத்தையும், உளியையும் சிதைத்துவிடும் என்பர். கதவு, நிலை முதலிய பொருள் செய்தற்கு மரம் எடுப்பவர் முண்டு முடிச்சு இல்லாமல் பார்ப்பர். துண்டு துணி நெடிய பாவில் இருந்து துண்டு போடுவது-துண்டு துண்டாக அறுத்து அமைப்பது துண்டு; அத்துண்டையும் சிறிது சிறிதாக அறுத்து ஆக்குவது துணி. துணியிலும் சிறியது துணுக்கு. துண்டு துணுக்கு என்பதும் உண்டு. துணி, துணிப்பதால் (துண்டாக்கு தலால்) பெற்ற பெயர். அத்துணித்துண்டு போலவே ஒரு கூட்டத்தில் இருந்து பிரிந்து அவர் செய்தற்கு அரிய செயலை செய்வாரே ஆனால், அவர் துணிவானர் எனப்படுவார். கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) செயலாற்றியமையால் துணிவு. துணிவாளர் என்பவை உண்டாயின. எண்ணித்துணிக கருமம்- வள்ளுவம் துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது பழமொழி. தோலும் வாலும் தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்பு பெட்டியொரு இணைந்துள்ள கருவிகள். இரும்பால்-தகட்டால்-செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை தோல் ஆகும். சாலில் நீர் நிரப்பி கிணற்றில் மேலே கொண்டு வந்து தோல்பை வழியாக நீரை வாய்க்காலில் வடிப்பர். அத்தோலில் இருந்து செல்லும் கயிறு வால். அது வால் கயிறு எனப்படும். வடத்தொடு சேர்த்துக் கட்டப்படும். வடம் வால் இரண்டும் சாலை மேலும் கீழும் பற்றி மேலிழுத்தும் கீழிறக்கியும் கிணற்று நீரை முகந்து வரும். முகவைப்பாட்டு பழமையானது. இறவை என்பது நீர் இறைக்கும் தொழில் பற்றியது. இறவைக்குப் போகிறது மாடு இறைக்கப் போகிறார் என்பது வழக்கு. தில்லுமுல்லு தில்லு - வலிமை உடல் வலிமை கொழுப்பெடுத்த தன்மை முல்லு - தேவையில்லாமல் முட்டி மோதல் உனக்கு தில்லு இருந்தால் வந்து மோதிப்பார் என்பதில் தில் என்பதற்கு வலிமைப் பொருள் உள்ளமை புலப்படும். உடல் வலிமையை மூலதனமாகக் கொண்டு ஊரையே-ஒரு கூட்டத்தையே-அச்சப்படுத்துவார் உண்டு. அவரை தில்லு முல்லுக்காரன் என்பர். காரணம் இல்லாமலே, தானே ஒரு காரணத்தைப் படைத்துக் கொண்டு வம்புக்கு இழுத்து, வலியச் சண்டை செய்து, வாரிக் கொள்வதே வழக்கமாகிப் போன முரட்டுப் பிறவியர் அவர். அவர்க்கும் முரடர் இல்லாமலா போவர்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. அத்தகையவர் தில்லுமுல்லுக்காரனைப் பார்த்து உன் வேலையை இங்கு காட்டாதே வேறிடத்தில் வைத்துக் கொள் என்பர். தில்லும், முல்லும் ஆள் பார்த்தே மோதும். திண்ணக்கம் மண்ணக்கம் திண்ணக்கம்- சோம்பல் செயலாற்றும் மனமில்லாமை. எதையும் பொருட்டாக எண்ணாமல் மன இறுக்கத்துடன் இருத்தல். இவ்வாறு இருந்தே பழகி விட்டால் வேளைக்கு உண்ணல்; திண்ணையில் சத்திரம் சாவடிகளில் படுத்து கிடத்தல்; என்ற அளவிலேயே வாழ்வு சுருங்கிப் போகும். அந்நிலைமை உயரிய வாழ்வு ஆகாது. போம் அளவும் ஒரு நோயாய்ச் சீரழியும், சீரழிக்கும். அந்நிலை முற்றின் மண்ணோடு மண்ணாகி மட்கி மடியும் பாடு ஆகிவிடும். மண்ணக்கம் - மண்ணுள் மண்ணாய் ஆகி மட்கிப் போகும் நிலை. திரட்டி உருட்டி திரட்டுதல் - பரவிக்கிடப்பதை ஒன்றாக்குதல் திரட்டுதல். உருட்டுதல் - திரட்டப்பட்டதை வேண்டும் அளவால் உருண்டை யாக்குதல். இரண்டையும் செய்தல் திரட்டி உருட்டல் ஆகும். மட்குடம் வனைவாரும், எருவாட்டி தட்டுவாரும், முதற்கண் மூலப்பொருள்களைத்திரட்டுவர். பின்னர் திரட்டியதை உருட்டிப் பயன்படுத்துவர். நூல்களைத் திரட்டுதல், பாடல்களைத் திரட்டுதல், ஊரைக் கூவித் திரட்டுதல் என்பன ஒன்று சேர்த்தலே. மாவைக் களியாக்குவதற்குத் திரட்டி உருட்டுதல் இல்லாமல் முடியாது. திரட்டுதலோடு புரட்டி உருட்டுதலும் அதற்கு வேண்டும். தானம் தவம் தானம் - கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்- தானம் - என அதன் தோற்றமே, வாள் தந்தனனே தலை எனக்கீய என்னும் தலைக் கொடையாளி குமணனை நினைவூட்டும். தவம் என்பது தவ் என்னும் வேர் வழியது தவ்-சுருக்கம் உண்டி, உடை, உறைவு எல்லாம் எளிமையதாய் தேவையைச் சுருக்குவதாய், சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம். தானம் தவம் இரண்டும் தங்கா, வானம் வழங்காதெனின் என்பது வள்ளுவம். (குறள் 29) திண்டாட்டம் கொண்டாட்டம் திண்டு- திண்ணை. சோற்றுக்கோ, வேறு பிச்சை (இரவல்) பெறுதற்கோ வறியவர், செல்வர் வீட்டு முகப்பில் உள்ள திண்டுகளில் ஏறி நின்று தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும். இது வறுமைப் பாட்டில் நிகழ்வது. கோயிலுக்குக் காவடி கொண்டு செல்வதைக் காண்கிறோம். தோளில், தலையில், கைகளில், தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் - கொண்டாட்டம் ஆகும். இஃது அன்பு மேலீட்டாலும், இறையுணர்வு மேம்பாட்டாலும், போர்க்கள வீறு முதலிய பெருமிதத்தாலும் உண்டாவதாம். ஊரவையில் ஒருவர்க்கு நேர்ந்ததையெல்லாம் கூறுதல் மன்றாட்டு ஆகும். கோயிலில் - இறை- மன்றாட்டும் உண்டு. துச்சு குச்சு துச்சு- சிறியதும் வீட்டை ஒட்டிக் கூரை வேய்ந்ததுமாம் குடியிருப்பு துச்சு ஆகும். துச்சில் என்பது வள்ளுவம். குச்சு- குச்சிகளைக் கால்களாக நாட்டி, குச்சிகளை வரிச்சுகளாகவும் முகடாகவும் பரப்பி வைக்கோல், கீற்று, கோரை தழை, என்பவை பரப்பப்பட்ட சிறிய குடிசை குச்சு. தூண்டித் துலக்கல் தூண்டுதல், துலக்குதல் என்னும் சொற்களின் இணைப்பு இது. தூண்டுதல் அடங்கியிருப்பதை மேலெழச் செய்தல்; ஒரு வினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல்; விளக்கைத் தூண்டுதல், சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்று வழங்கும் பழமொழி தூண்டலை விளக்கும். ஆப்பிள்பழம் விழுதல் ஐசக்கு நியூட்டனார்க்குத் தூண்டலாயதை அறிக. துலக்குதல் ஆவது விளக்குதல். விளக்கம் பெறச் செய்தல். ஒளிப்படுத்தல் பொருளவாம். பல்துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக. தூண்டல் வழியால் உண்டாவது துலங்கல். அக்காட்சி (அ) அக்கருத்து என்க. தெத்தலும் குத்தலும் தெத்தல் = வளைதல், கோணுதல், சிலர் பல்வரிசைப் படாமல் வளைந்தும், சாய்ந்தும், நீண்டும், குறைந்தும், ஒழுங்கின்றி இருக்கும். அதனைத் தெத்தல் என்பர்; தெத்துப்பல் என்பதும் அது. நேராக நிற்கும் கல், கம்பி முதலியவை குத்துக்கல், குத்துப் பாறை என வழங்கும். குற்றி என்பது கற்றூண். அது குத்தி ஆகியது. பற்றி என்பது பத்தியானதுபோல. ஆதலால் குத்தல் நேராக இருத்தல் ஆகும். தெத்தலும், குத்தலும் என்பது ஒழுங்குஇல்லாமை; ஒரு சீராக இல்லாமை, உயரம் தாழ்வு ஆயவை என்பவற்றைக் குறிப்பதாம். தெள்ளிக் கொழித்தல்: புடைத்தல் வகையுள் தெள்ளுதல் ஒன்று. கொழித்தல் மற்றொன்று தவசம், பருப்பு, மாவு, முதலியவற்றை முறத்தில் பரப்பி மேலும் கீழும் பக்கமும் அகற்றிக் கல், மண், தூசி, பூச்சி, புழு முதலியவற்றை அகற்றுதல் தெள்ளுதலாம். தெள்ளுதல் தெளிவாகக் கண்டு விலக்குவ விலக்கல். தெள்ளிய அறிவு, தெள்ளிய ஆல், தெள்ளத் தெளிவாக வழக்கு மொழிகள். கொழித்தல் என்பது முறத்தின் இக்கரையில் இருந்து அக்கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் தள்ளி ஒட்டிய தவிடு, நொய் முதலியவற்றை அகற்றிக் கொழுமைப் படுத்ததலாம். இரண்டும் புடைத்தல் வழிப்பட்டவையே. நாவுதல், நீவுதல் என்பவும் அவ்வகையவே. துடைத்து மெழுகல் துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு, கூட்டுமாறு, வாரியல் முதலியனவும் அது. குப்பை கூளம் தும்பு தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்யவேண்டிய பணி மெழுகுத லாகும். மண்தளமாக இருந்த காலத்தில் சாணக நீர் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. செங்கல் கல், ஆயதளம், ஏற்பட்ட பின் தண்ணீர் தெளித்துத் துடைத்தல் ஆயிற்று. இதுகால் பளிக்குத் தளத்தில் பளிச்சிடும் வகையில் துடைத்து எடுக்கக் கருவிகள் உண்டாகிவிட்டன. வெள்ளி செவ்வாய் ஒவ்வொருவர் வீட்டையும் மெழுகுதல் தமிழக வழக்கு. தூக்கி நிறுத்தல்: ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால் தூக்குதல் முதற்பணி. அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை; இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல் என்பது. தொழுது எழுவாள் என்பது எப்படித் தொழுதலும் எழுதலும் இடையீடு அற்ற ஒன்றெனத் தோற்றம் தருவதோ அவ்வாறு தூக்கி நிறுத்துதலும் ஒருங்கே நிகழ வேண்டும் என்பதே இதன் குறிப்பாம். இடையீடுபடின், இரட்டை வேலையாய், ஏற்பட்டுவிடும். தோட்டி தொண்டைமான் தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் தோட்டி எனப்பட்டான். இடையர்கள் இலை, தழை, கொய்ய வைத்திருப்பதும் தோட்டியே; அது தொரட்டி எனவும், வாங்கு (வளைவு) எனவும் வழங்குகிறது. தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன். அவன் நாடு தொண்டைநாடு. பல்லாபுரம் சென்னை காஞ்சிப் பகுதி. அங்கே தொண்டைமான் என்றும் பெயருடன் ஆட்சி செய்தலால் தொண்டைமான் என்பது அரசன் என்றும் பொருள் பெற்றது. தோட்டி யானைமேல் இருந்து அதனைச் செலுத்துபவன்; தொண்டைமான் அவ் யானைமேல் உலாக் கொள்பவன். இவ்வியல் கருதிஅவர்கள் தோட்டி முதல் தொண்டைமான் வரை என்றனர். தோட்டி என்றும் அப்பொருள் மக்கள் வழக்கில் மாறிப் போய்விட்டது. தோண்டித் துருவல் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப்பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும். சிலர் சில செய்திகளை வெளிப்படுத்தவே மாட்டார்கள். என்னென்ன வகையால் முயன்றாலும் அவர்கள் அச்செய்தியை வெளியிட மாட்டார்கள் அவர்களிடமிருந்து பலப்பல வினாவி, அம்மறு மொழியை ஆராய்ந்து மடக்கி மடக்கி வினாவி உண்மையை உரைக்கவைத்து விடுவர். அது தோண்டித் துருவுதல் எனப்படும். அவனிடம் மறைத்தால் எப்படியும் தோண்டித் துருவாமல் விடமாட்டான் என்பர். தோது வாது தோது = உதவியாக இருத்தல் வாது = உதவியாக வாதாடுதல் அவனையும் கூட்டிக் கொண்டு போனால் தோது வாதுக்கு உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடியும் எனினும்; தமக்காகப் பேச முடியும் எனினும் தோதுவாது; இருந்தால் ஒரு தென்பும், ஒர் உறுதியும் வாய்க்கும். ஆதலால் உதவத் தெரிந்த, பேசத் தெரிந்த ஒருவர் துணை வேண்டும் என்னும் வகையால் எழுந்த இணைச்சொல் இது. இனி எனக்குத் தோதுவாதுக்கு யார்வந்து உதவுவார் என்று வருந்துவார் பலர். எதற்கும் ஒற்றையாளுடன் மற்றோர் ஆளும் இருத்தல் துணிவை உண்டாக்கல் தெளிவு.  இலக்கிய வகை அகராதி ஆராய்ச்சி முன்னுரை 1976- ல் செந்தமிழ்ச் செல்வியில் இலக்கிய வகைமை - ஒரு வேண்டுகோள் என ஒரு வேண்டுகை விடுத்தேன். இந் நூல் வரவினை அப்பகுதி காட்டுவதாகலின் அதனை அப்படியே வடித்தேன் (செ. செ. 50: 283): தொண்ணூற்றாறு வகைச் சிறு நூல்கள் என்னும் கருத்து, தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் வழங்கப் பெறுகின்றது; அகர வரிசை நூல்களும் குறிப்பிடுகின்றன. ஆனால் பாட்டியல் நூல் களைப் பயின்றபோதும், சிற்றிலக்கியங்களைக் கற்றபோதும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள்தாமா உள்ளன? என்னும் ஐயம் எனக்குக் கிளர்ந்து கொண்டே இருந்தது. அதன் விளைவே இலக்கிய வகைமை என்பதொரு நூலாக உருக் கொண்டது. பல்வேறு பாட்டியல் நூல்களையும் ஆராய்ந்ததில் சில செய்திகள் புலனாயின: 1) பாட்டியல்கள் 96 வகைச் சிறுநூல்கள் என்னும் ஒரே வரம்பு கொண்டு சொல்வன அல்ல. 2) அவை கூறும் சிறுநூல்களின் வரிசை முறையும் ஒப் பானவை அல்ல. 3) எல்லாப் பாட்டியல்களுக்கும் பொதுவான சிறு நூல்கள், தனித்தனியே சிறப்பான சிறு நூல்கள் என இருவகைப் பாகுபாடுகள் கொள்ளக் கிடக்கின்றன. பொது நூல்கள் நாடு தழுவியவை என்றும், சிறப்பு நூல்கள் வட்டாரமும் வழக்கும் தழுவியவை என்றும் அறியப்பெறுகின்றன. 4) பாட்டியல்கள் கூறும் சிறுநூல்களையெல்லாம் அடைவு செய்யப் பெறின் 96 வகைக்கும் மிகுகின்றன. 5) பொது வழக்கான சிறு நூல்கள் மட்டுமே கூறியமையும் பாட்டியல் நூல்களும் உண்டு என்பவை அவை. யான் தொகுத்து வைத்துள்ள பாட்டியல் நூல்கள், சிற் றிலக்கிய நூல்கள், இலக்கிய வரலாறுகள், புலவர் வரலாறுகள் ஆகியவற்றைக் கொண்டு 163 வகைச் சிறு நூல்கள் உளவாதல் புலப்பட்டது. அப் புலப்பாட்டின் தூண்டலால் கழக ஆட்சி யாளர் தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையாபிள்ளை அவர் களுக்கு என் சிற்றிலக்கிய ஆய்வை வெளியிட்டேன். அவர்கள் மிக உவப்புற்றனர். மனிதர்காள் இங்கேவம் கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ! என அப்பரடிகள் கனிந்து அழைத்தாற்போல அழைத்து, நிற்கும் தவத்திரு. மறைமலையடிகளார் நூல் நிலையத்திலுள்ள அரிய நூல் களையெல்லாம் ஆராய வாய்ப்பளித்தார். அப்பொழுது, கழகப் பொது மேலாளர் திரு.இரா.கலியாண சுந்தரனார் அவர்களும், நூலகர் திரு.இரா.முத்துக்குமார சாமி அவர்களும் உழுவலன்பால் உதவிய உதவிகள் பெரிதும் ஊக்கின. இவ்வாராய்ச்சியால் அரிய சிற்றிலக்கிய வகைகள் பல கிடைத்தன. மேலும் கழக ஆட்சியாளர் அவர்கள் வழியால் திரு வான்மியூர், டாக்டர் உ,வே. சாமிநாதையர் நூல் நிலையத் தொடர்பும், திருவாமாத்தூர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் திருமடத்தொடர்பும் வாய்த்தன, அவற்றால் பெற்ற பயன் பெரிதாகும். தமிழ் செய்த தவத்தால் பிறந்த பெருமகனார் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவர்கள் வெளியிட் டுள்ள சுவடிப்படியாலும், அச்சில் வாராத பிரபந்தத் திரட்டு, பிரபந்த தீபம் என்னும் நூல்களின் கைப்படிகளாலும் அறியவந்த சிற்றிலக்கிய நூல்கள் பலவாயின. தண்டபாணி அடிகளாரின் திருப்பெயரனார் முருகதாச அடிகளாரும் அவர்கள் திருமகனார் புலவர் சங்கரலிங்கனார் அவர்களும் தண்டபாணி அடிகளார் படைத்த சிற்றிலக்கியப் புதுப்படைப்புகள் பலவற்றைக் கனிவோடும் எழுதி உதவினர். விளக்கங்களும் தந்தனர். இவ்வகையால் பெருக்கமுற்ற இலக்கிய வகைமை மேலும் பெருக்கமுற வாய்ப்பு உண்டு என்று கருதியே இவ்வேண்டுகோள் விடப்பெற்றதாம். செல்வி ஆராய்ச்சி இதழ்; அறிவு வேட்கையர் அவாவும் இதழ். பயில்வாரே அன்றி நூல் படைப்பாரும் போற்றும் இதழ். ஆகலின், செல்விவட்டப் புலமையாளர்கள் இங்குக் காட்டப் பெறும் சிற்றிலக்கிய வகைகளை அன்றி வேறு சில வகைகளை யும் ஆய்ந்து அறிந்திருத்தல் கூடும். அவற்றைக் குறிப்பிட்டு உதவுவார்களாயின் பெருநன்றியுடையேன். இதனைச் செந் தமிழ்ச் சிற்றிலக்கிய ஆராய்ச்சிக்குச் செய்யும் உதவியாகக் கருதி அறிவு நலங்கனிந்த அன்பர்கள் உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன். அடியிற்காணும் பட்டியலில் 287 வகை நூல்களைக் காணலாம். இவ்வாறு வேண்டிக்கொண்டு அகலக்கவி தொடங்கி வேனில்மாலை ஈறாக 287 வகை நூல்கள் அக்கட்டுரையில் பட்டியல் இட்டுக் காட்டப்பட்டன! ஆய்வாளர், ஆர்வலர் மாட்டிருந்து, எதிர்பார்ப்புக்கு இடம் எதுவும் இல்லாது அமைந்தது! எனினும், சென்னை, ஓலைச் சுவடி நூலகச் சுவடிகள், தஞ்சை, சரசுவதிமகால் நூல் நிலையச் சுவடிகள் ஆயவையும் பயன் செய்தன. படிப்படியே இலக்கிய வகையும் பெருகியது. இலக்கிய வகைகளை எழுதி அகரவரிசை முறையில் அடைவு செய்யப்பட்டது. சிற்றிலக்கிய வகைகளை, அகராதி முறையில் காண்பதற்கு வாய்ப்பாகவும், ஆய்வாளர்க்கும், ஆர்வலர்க்கும், எளிமையாகப் பயன் கொள்ளத் தக்கதாகவும் இத் தொகுப்பு அமைந்துள்ளது. எடுத்துக் கூறும் செய்தியை அகர முறையில் கூறுவது போல் ஆய்வாளர்க்கு வாய்ப்பானது பிறிதொன்றில்லை என்பது வெளிப்படை; அப்பட்டறிவே என்னைப் பல்வேறு கருவி நூல்களை அகர முறையில் செய்விக்க ஏவுகின்றதாம். இனிச், சிற்றிலக்கியத் தோற்றம், வளர்ச்சி குறித்தும் இவண் எண்ணல் வேண்டும். தொல்காப்பியம் சிற்றிலக்கியங்கள் பலவற்றுக்குக் கால் கோள் செய்தது. பாட்டு, தொகை, பாவிகம் ஆகியவை பல சிற்றிலக்கி யங்களை உருவாக்கின. அரசியல், கலையியல், தொழிலியல், வாழ்வியல், இறை யியல் என்பவை சிற்றிலக்கியங்கள் பலவற்றை உருவாக்கி உர மிட்டு வளர்த்துள்ளன. புலமக்கள் அன்றிப் பொதுமக்கள் துலங்கச் செய்த இலக்கிய வகைகளும் பல. இலக்கிய வகைகளை எண்ணிக் - கைவிட்டார் எண்ணிக்கை விட்டாரே ஆவர். நாளும் வளரும் ஒன்றன் வளர்ச்சியை, நாளெண்ணி வாழும் மாந்தர் அளவிட்டுரைக்க இயல்வதோ? ஓரிடத்து ஒருகாலத்து ஒருவர் ஒரு நோக்கில் எண்ணியது மாறா இயல்பிற்றாமோ? அடிப்பட்டுப்போன வழக்காறு மாறாமையால் ஆழ்வார் பன்னிருவர், நாயன்மார் அறு பத்து மூவர், அறங்கள் முப்பத்திரண்டு, கலைகள் அறுபத்து நான்கு, இறைவன் குணங்கள் எட்டு, கூலங்கள் ஒன்பது, வள்ளல்கள் எழுவர் என எண்ணலாம்! அவ்வெண்ணிக்கை நிலையிலேயே நிற்க வளரும் அறிவுலகும், தேர்ந்த உணர்வுலகும், நிறைந்த எண்ணுவுலகும் ஒப்புவது இல்லை! அவ்வாறு இல்லாமையாலேயே, பதின்மூன்றாம் ஆழ்வார் என இவரைச் சொல்லலாம்; அறுபத்து நான்காம் நாயனார் என இவரைச் சொல்லலாம் எனச் சொல்லி அமைதல் உண்டாயிற்று. இறைவன், முழுமுதல்வன்; அவன் முழு நிறை குணங் களைச் சிற்றறிவும் சில்வாழ்நாள், பல்விணி மும்மயக்குமுடைய ஒருவன் எண்குணத்தான்; என எண்ணிக் கூற வல்லனோ? என்னும் உந்துதலால் எண்ணுகின்ற குணமெல்லாம் உடை யவன் எனப் புத்துரை காணவும் ஏவிற்று! இந்நிலைப்பட்டதே தொண்ணூற்றாறு வகைச் சிறுநூல்கள் என்னும் திட்டமும் என அமைக! சிற்றிலக்கிய வளர்ச்சியை மிகமிகப் பின்னுக்குத் தள்ளுதல் வரலாற்றுப் பார்வை! ஆனால் அதன் தோற்றம் தொல் காப்பியத்திற்கும் முன்னுக்குத் தள்ளத் தக்கதாம். காவலர்க் குரைத்த கடைநிலை கண்படை கண்ணிய கண்படை நிலை வாயுறை வாழ்த்து, செவியறி வுறூஉ புறநிலை வாழ்த்து என்று கூறும் அவர் மொழிப என முன்னோரை முன் னிறுத்திய செய்தி காலத்தொன்மை காட்டுவதேயன்றோ, இங்குச் சுட்டிய கடைநிலை, கண்படைநிலை, வாயுறை வாழ்த்து, செவியறுவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பவை துறையளவில் தோன்றிச் சிற்றிலக்கியமாக வளர்ந்ததே யன்றோ. ஆசிரியர் தொல்காப்பியர், கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எய்தச் சொன்ன பக்கமும். என்று கூறும் நூற்பாவின் நான்கடி, துறை யளவிலோ ஒழிந் தது? பத்துப் பாட்டில் செம்பாதியைப் பறித்துக் கொண்டு நூலுருப் பெற்றுவிட்டதே!. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப் படை (மலைபடுகடாம்) என்பவை தொல்காப்பியம் தந்த சிற்றிலக்கிய வகைமையே யல்லவோ! பதிற்றுப்பத்து என்பது என்ன தந்தது? பத்தைத் (பதிகத்தை) தந்தது; நூற்றையும் (சதகத்தையும்) தந்தது! அம் மட்டோ? ஈறுமுதலாக (அந்தாதியாக) வரும் சிற்றிலக்கிய வகைத் தோற்றத்தை நான்காம் பத்து நவில்கின்றதே! ஐங்குறுநூறும் (18) அந்தாதிக்கும் பத்துக்கும் சான்றாகின்றதே. தமிழுக்குத் தனிச் சிறப்பாம் அகப்பொருளின் முப் பொருள் வழியேயும், திணை துறைகளின் வழியேயும், புறப் பொருள் திணை துறைகளின் வழியேயும் யாப்பியல் வழியேயும் எண்ணற்ற சிற்றிலக்கியங்கள் எழுந்துள்ளமையைப் பயில அறியலாம். இறையாண்மைகொண்ட அரசன் வழியாகவும், இறைவ னாம் முழுமுதல்வன் ஈடிலா அன்பில் ஈடுபட்டுப் பாடிய அடியார் பாடல்கள் வழியாகவும், எழுந்த இத்தொகுப்பளவில் அடங்கிவிடக்கூடியவையன்றாம். இனிச் சிற்றிலக்கியப் பரப்பு வகையை ஒரு பகுப்பு வகையில் பார்க்கலாம். வகைக்குக் காட்டப் படுவன, எடுத்துக்காட்டாம் அளவே! முழுத் தொகுப்பு அன்றாம். அரசு இயல் அரச அடையாளம் (சின்னம்) - குடைவிருத்தம், செங்கோல் விருத்தம். அரச உறுப்பு (தசாங்கம்) - மலை, ஆறு, நாடு முதலியன அரண்மனை நடைமுறை - எச்சரிக்கை, கட்டியம். அறவுரை - முதுமொழிக் காஞ்சி. உலா - பவனிக் காதல், விலாசம். உறக்கம் விழிப்பு - கண்படை நிலை, துயிலெடை நிலை. ஊரும் பேரும் - ஊர் நேரிசை, பேர் நேரிசை, ஊர் இன்னிசை, பேர் இன்னிசை, நாமக் கோவை. ஒற்று - புறநாட்டுச் செய்கை கொடை - கனகாபிடேகம், சீட்டுக்கவி. செய்தியறிவித்தல் - தூது திருமணம் - சுயம்வரம் திருமணவாழ்த்து - சோபனம். படைநிலை - தளசிங்காரம், யானை விருத்தம். புறத்திணை - உழிஞைமாலை, வெட்சிமாலை புறத்துறை - அமர்க்களவஞ்சி, கொடை நிலை. போர் - தானைமாலை, திக்கு விசயம். போர்க்களம் - பறந்தலைச்சிறப்பு, களவழி. வெற்றி விழா - பரணி, திருப்பெயர்ப்பொறி. முடிசூட்டு - பட்டாபிடேகம். வரலாறு - மெய்க்கீர்த்தி, குலோதய மாலை. வாழ்த்து - யாண்டுநிலை விண்ணக வெற்றி - வச்சிராங்கி. இறை இயல் இறைவன் திருவுலா - வாகனக் கவி. இறை வேண்டுனை - விண்ணப்பம், வேட்டல். காவல் கடன் - காப்புமாலை, கவசம். கோயில் நடைமுறை - கோயிலொழுகு, சந்நிதி முறை. திருப்பெயர் கூறல் - நாமாவளி. திருமால் பிறப்பு - உற்பவமாலை. திருமால் சிறப்பு - பூவைநிலை. படையல் - காவடிச்சிந்து. முருகு வழிபாடு - படைவீட்டுப்பதிகம். வழிபாட்டுச் செலவு - வழிநடைச்சிந்து வழிவழிப்புனைவு - தொன்மம் (புராணம்) வாழ்த்து - திருப்பல்லாண்டு. யாப்பியல் அடியளவு - குறுந்தொகை, நெடுந்தொகை. அமைப்பு - கண்ணி, கோவை, மாலை, எழுகூற்றிருக்கை. உறுப்புக் குறைதல் - ஒரு போகு. உறுப்புச் செய்கை - இதழ் குவிபா, இதழ் அகல்பா, எண்ணும் எழுத்தும் - எண்ணெழுத்து மாலை. எழுத்து வரிசை - சுக்கரமாலை, உயிர் வருக்கமாலை, வருக்கமாலை. ஒரே வகைப்பா - ஒரு வருக்கப்பா. ஒலிவகை - வண்ணம், கொம்பிலாப் பாடல். ஒன்றில்பல - பகுபடுபாட்டு, பிறிதுபடுபாட்டு ஓரெழுத்து - ஓரெழுத்தந்தாதி, களவை - கலம்பகம், மஞ்சரி. சொல் நிலை - மிறைக்கவி; சக்கரமாற்று, கூடற்சதுக்கம், மடக்கு. திரட்டு, தொகை - பிரபந்தத்திரட்டு, எட்டுத்தொகை. பலவகைப்பா - இணைமணி, மும்மணி, பன்மணி. பழங்கதை - பிசி. பழமொழி - பழமொழி, பழமொழி-மேல் வைப்பு. பாடல் எண் - ஐந்தகம், பதிகம், நூறு, ஆயிரம். பாவகை - வெண்பா, அகவல், விருத்தம். மொழி - தமிழ் சொரி சிந்தாமணி. வழக்காட்டு - சாழல், வசன சம்ப்ரதாயம். வசை இசை - அங்கதம். வினாவிடை - வினாவுரை, வினாவிடை. வேற்றுமொழி வரவு - இலகிரி, இலாலி, இலீலை, உலாவணி. பொருளியல் அகத்துறை - உலாமடல். அகப்பொருள் - அகப்பொருட்கோவை. அவலம் - இரங்கல்மாலை, கையறுமாலை. ஆறு - நதிவிசேடம். உரிப்பொருள் - ஊடல் மாலை. காலநிலை - கார் எட்டு, கார் நாற்பது. திணை - ஒரு திணைமாலை, ஐந்திணைச் செய்யுள், பாடாண் பாட்டு. துறை - ஒரு துறைக் கோவை, மடல். நிலவு - விடய சந்திரோதயம். பருவநிலை - வேனில் மாலை. புறத்துறை - நெடுமொழிவஞ்சி. பொழுது - நாழிகைக் கவி. விண்மீன் - தாரகை மாலை. வாழ்வியல் இடமறிதல் - குறியறிசிந்து. உடல் - அங்கமாலை. உடன்போக்கு உதவி - தெய்வக் கையுறை. உறுப்பு - நயனப்பத்து. ஒழுங்குறுத்தல் - கேசாதிபாதம், பாதாதிகேசம். காமம் - மதனிசிங்காரம், மதன விசையம். குடிப்பிரிவு - குளுவநாடகம், குறவஞ்சி குடும்பப்போர் - ஏசல் குழந்தை - குழமகன், பிள்ளைத் தமிழ். கொட்டங்கி (கோடாங்கி) - மாதிரக்கட்டு. பிரிவு - பிரிவுசுரம், துனிவிசித்திரம். பிறப்பியம் - சாதகம். மகளிர் நோன்பு - பாவை, தாமரை நோன்பு. மகளிர் பருவம் - பருவமாலை. தொழிலியல் உலக்கை குற்றல் - வள்ளைப்பாட்டு, சுண்ணம். உழவு - பண்ணை விசித்திரம், பள்ளு. ஏற்றம் - ஏற்றப் பாட்டு. களவு - களவுக் கன்னி. வணிகம் - கப்பற் சிந்து. வழிப்பறி - வேடுபறி. வேட்டை - கானவேட்டம். இசையியல் ஆட்டுதல் - தாலாட்டு. இசை - ஆனந்தக் களிப்பு, பதம், கீர்த்தனை. இசைக்கருவி - பறைநிலை, வில்லடிப்பாட்டு. சந்தம் - சந்த விருத்தம், பல்சந்தமாலை. வகுப்பு - புயவகுப்பு. வண்ணிப்பு - வண்ணம், ஒலியலந்தாதி. ஆட்டவியல் அடித்துப் பாடல் - பந்தடி. ஆடிப் பாடல் - ஊசல். எறிந்து பாடல் - அம்மானை. கொட்டிப் பாடல் - கும்மி கொய்து பாடல் - பூவல்லி. தாவிப் பாடல் - உந்தி பறத்தல். நோக்கிப் பாடல் - தோள் நோக்கம். விளித்துப் பாடல் - கோத்தும்பி. மெய்ப்பாட்டியல் இரங்கல் - புலம்பல், இரங்கல் மாலை சினம் - கோபப் பிரசாதம். சுவை - நவரசம், நவரச மஞ்சரி. வலக்காரம் - தேவாங்க வரையுள். வீறுகோள் - திருமறம். மெய்யியல் அருணிலை - ஆற்றுப்படை. அறநிலை - தருமவிசேடம் அறிவுரை - செவியறிவுறூஉ, நெஞ்சறிவுறூஉ மெய்யுரை - போதம், நானிலைச் சதகம். இவ்வாறே இவற்றையெல்லாம் பெருக்கிக் கொள்ளவும், விரித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இலக்கிய வகை அகரவரிசையில் இடம் பெற்றுள்ளவை, உரிய அளவால் விளக்கப் பெற்றுள. நூற்பாக்களும் வேண்டு மிடத்துத் தரப்பெற்றுள. எடுத்துக்காட்டுகளும் இயம்பப் பெற்றுள. விரித்துக் கூறவேண்டியவை விரித்தும், சுருக்கிச் சொல்ல வேண்டியவை சுருக்கியும் சொல்லப்பட்டுள. பெயரளவானே சுட்டப் பெறுவனவும் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு ஓரளவு விளக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. சிற்றிலக்கியங்கள் காலவகையில் பிற்படத் தனி நூலுருக் கொண்டவை, ஆதலால் வடமொழியாட்சி பெயரில் மிக்குள. அவையெல்லாம் அடைப்புக் குறிக்குள் தமிழாக்கஞ் செய்யப் பெற்றுள. அவற்றுள் விடுபெற்றனவும் இருக்க வாயப்பு உண்டு. தமிழாட்சி போற்றப் பெறுமாயின், வடமொழிப்பெயர் தானே படிப்படியே மறைய வாய்ப்பாம். தமிழாக்கத்தில் மேலும் திருந்த இடமானவை இருக்கலாம். பயிலப் பயிலவே புத்தாக்கச் சொற்கள் பொலிவுறும் வண்ணத்தை அடையும் என்பது வெளிப்படும் உண்மையாம். இலக்கிய வகைமை ஆய்வு 1972-ல் தொடங்கப் பெற்றது. அதன் வேண்டுகை அப்பணி நிறைவித்து 1976-ல் வெளிப்பட்டது. நூல் வெளியீடோ 1985 இறுதியில் ஆகின்றது. இதனை வரு விருந்தாய் ஏற்று வனப்புற வெளிப்படுத்தும் மெய்யன்பர் மணி வாசகர் பதிப்பக உறுதுணையர் பேராசிரியர் ச.மெய்யப்பனார். மெய்யப்பர் சிற்றிலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூலாய்வு நூல்களும் நிரம்ப வெளியிட்ட பேற்றாளர். கழக மேனாள் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சு. அவர்கள் தமிழ்ப்பணியில் தம் மனத்தைப் பறி கொடுத்து நெஞ்சாரப் பாராட்டுபவர். அவர்கள் பணியைத் தம் முன்னோட்டப் பணியாகக் கொண்டு அவ்வகையில் நூல் வெளியிட முகிழ்ப்பவர். என் கெழுதகை அன்புக்கும், நண்புக்கும் உரிமை பூண்டவர். அன்னார் இந் நூலை வெளியிடும் ஆர்வத்தில் தளிர்த்துக் கடனாற்றியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன். சிற்றிலக்கியங்களை யாத்த பெருமக்களை நினைவதோடு, அவற்றை வெளியிட்டும், ஆராய்ந்தும், தொண்டாற்றிய பெரு மக்கள் எல்லோரையும் நினைவுகூர்ந்து நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். தமிழ் வாழ்வே தவவாழ்வாக்கிவரும் திருவருளை நினைந்து வழிபடுகின்றேன். தமிழ்த்தொண்டன் இரா. இளங்குமரன் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் திருநகர், மதுரை-6 இலக்கியவகை அகராதி அக்கரமாலை (எழுத்துமாலை) அகரமுதலாகிய ஒழுங்கில், மொழிக்கு முதலாக வரும் எழுத்துகளுக்கெல்லாம் பாடல் அமைந்தது அக்கரமாலை எனப் பெறும். அக்கரம் - எழுத்து; இவண், மொழிக்கு முதலாக வரும் எழுத்துகளைக் குறித்து. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவை அக்கரமாலை முறையில் அமைந்தவை. அருணாசல அக்கரமாலை இணைக்குறட்டாழிசையால் அமைந்துள்ளது. வருக்கக்கோவை, வருக்கமாலை காண்க. அகப்பொருட்கோவை அகப்பொருள் துறைகளை ஓர் ஒழுங்குறுத்திக்கோத்த அமைப்புடையது இக்கோவையாகும். கோக்கப்பட்டவையெல்லாம் பொதுவாகக் கோவை எனத்தக்கனவே எனினும், அவை ஆசாரக்கோவை, வருக்கக் கோவை, ஞானக்கோவை எனப்படுவதன்றிக் கோவை என்ற அளவில் குறிக்கப்படுவன அல்ல. அவ்வாறு குறிக்கப்படுவது அகப்பொருட்கோவையே. கோவை காண்க. அகலக்கவி (பாவிகம்) பொருட்டொடர் நிலையாய் விரிவுறச் செய்யும் பெரு நூல்கள் அகலக்கவி எனப்படும். பெருங்காப்பியம், காப்பியம், புராணம் (தொன்மம்) என்பவற்றைக் காண்க. நால்வகைக் கவிஞருள் வித்தார கவி எனப் பெறு வானால் இயற்றப்படும் பெருநூலே அகலக் கவியாம். பாவிகம் என்பது காப்பியப் பண்பே. என்பது தண்டியலங்காரம். காப்பியம் என்பது பாவிகமாம். பாவிகம் பாடவல்லான் பாவிகன் என்க. அகவல் அகவல் பாவால் அமைந்த நூல் அகவல் எனப் பெறும். பல பாடல்கள் அமைந்திருப்பின் அதனை அகவல் என வழங்கப் பெறுவது இல்லை. ஒரோஒரு நெடிய அகவலால் அமைந்த ஒரு நூல் வகையே அகவல் எனப் பெறும். அகவ லாவது அழைக்கை; அகவன் மகளே அகவன் மகளே என வரும் பழம் பாடல் இதனைத் தெளிவிக்கும். வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் 1596 அடிகளைக் கொண்டது. மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித் திருவகவல் போற்றித் திருவகவல் என்பனவும், கபிலர் பாடிய கபிலர் அகவலும் அகவல் நூல் வகைக்கு எடுத்துக்காட்டுகள். நம்மாழ்வார் பாடிய திருவாசிரியம் அகவலே. பத்துப்பாட்டுள் பட்டினப்பாலை ஒன்று நீங்கலாக எஞ்சிய ஒன்பதும் அகவல் பாவால் அமைந்த நூல்களே எனி னும், அக்காலத்து அகவல் என ஒரு நூல்வகை, எண்ணப் பெற வில்லையாகலின் அவற்றைப் பாட்டு என்றே வழங்கினர். அங்கதச் செய்யுள் அங்கதச் செய்யுளை ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடு கிறார். வெளிப்படக் கூறும் செம்பொருள் அங்கதம், பழி மறைத்துக் கூறும் என்னும் இரு பகுப்பையும் சுட்டுகிறார். வெண்பா யாப்பை அதற்கு உரிமையும் ஆக்குகிறார். இவ்வங் கதம் பழிப்பதுபோலப் புகழ்வதாகவும், புகழ்வது போலப் பழிப்பதாகவும் அமைந்து வஞ்சப்புகழ்ச்சி என்னும் பெயரும் பின்னாளில் பெற்றது. அங்கதச் செய்யுள் தனிப்பாடல் தொகுதிகளுள் பலவுள வேனும், நூலாக அமைந்தது அருமையே. அவ்வகையில் கவி மணி தேசிகவிநாயகர் இயற்றிய மருமக்கள் வழி மான்மியம் எடுத்துக்காட்டாம். பாவேந்தரின் இருண்ட வீடும் எண்ணத் தக்கதாம். ஆயின் இவை அங்கதம் என்னும் நூல் வகைப் பெயரைப் பெற்றில என்பது குறிப்பிடத்தக்கது (கடைநிலை காண்க). அங்கமாலை (உறுப்பு மாலை) ஆண் பெண் என்னும் இருபாலார்க்கும் உரிய, உடல் உறுப்புகளை வெண்பாவினாலாவது, வெளிவிருத்தத்தினா லாவது அழகுறுத்தி அந்தாதியாகப் பாடுவது அங்கமாலை எனப்பெறும். மிக்க உறுப்பை வெண்பா விருத்தம் தொக்கவொரு முறையால் தொடர்வுறப் பாடுதல் அங்க மாலை யாமெனப் பகர்வர். - (இலக்கண விளக்கம் பாட்டியல் 75) உறுப்புகளை முறைப்படுத்துவதில் அடிமுதல் முடியிறுதி யாகக் கொள்வதைப் பாதாதி கேசம் (அடிமுடி) என்றும், முடிமுதல் அடியிறுதியாகக் கொள்வதைக் கேசாதி பாதம் (முடியடி) என்றும் கூறுவர். கடிதலில் லாக்கலி வெண்பாப் பகரும் அவயவங்கள் முடிவது கேசமக் கேச முதலடி யீறும்வந்தால் படிதிகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமுமாம் மடிதலில் வெண்பா விருத்தம் பலவங்க மாலை யென்னே. - (நவநீதப் பாட்டியல் 43) அடிமுடி உறுப்புகள் அகங்கால் உகிர்விரல் மீகால் பரடு கனைமுழந்தாள் மிகுங்கால் நிதம்பமும் உந்தியுதர மரைமுலையும் நகஞ்சார் விரலங்கை முன்கைதோள் கண்டம் முகம்நகைவாய் நகுங்கா திதழ்மூக்குக் கண்புரு வம்நெற்றி தாழ்குழலே. - (நவநீதப் பாட்டியல் 44) அகவடி உசிரே விரல்புற வடியே பரடே கழலே கணைத்தாள் முழந்தாள் குறங்கே அல்குல் கொப்பூழ் வயிறதன் வரையே இடையே மயிரின் ஒழுக்கே முலையுகிர் விரலே முன்கை அங்கை தோளிணை கழுத்தே முகநகை செவ்வாய் மூக்கே கண்ணே காது புருவம் நுதலெனும் ஆறைந் துறுப்புடன் இரண்டும் பாத மாதியா வேண்டுதல் புணர்ப்பினஃ(து) ஓதிய பாதம் ஆதியாம் என்ப. - (பன்னிரு பாட்டியல் 332) அகவல், வஞ்சிப் பாக்களால் அவயவமாலை வரும் எனவும். கலிப்பா வருதலையும் விலக்கார் எனவும் கூறுவர். அகத்தியன் நுதலிய பல்பொருள் வகையான் அகவல் வஞ்சி ஆயிரு பாவினும் அவைவரத் தொடுப்ப தவயவ மாலை அதுகலி விரவினும் வரையார் ஆண்டே.. - (பொய்கையார் பாட்டியல்) (நவநீதப் பாட்டியல் 44 மேற்கோள்) அப்பரடிகள் ஒரு பதிகத்தைத் திருவரங்க மாலை யாகப் பாடினார். அதில் தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, ஆக்கை, கால் என்பன முறையே சொல்லப் பெறுகின்றன. பெரியாழ்வார் பாடிய கண்ணன் திருப்பாதாதிகேச வண்ணத்தில் பாதம், விரல், கணைக்கால், முழந்தாள், குறங்கு, முத்தக்காசு, மருங்கு, உந்தி, உதரம், மார்பு, தோள், கை, கண்டம், வாய், நாக்கு, நயனம், முறுவல், மூக்கு, கண்கள், புருவம், குழை, நெற்றி, குழல் என்பன முறையே ஓதப்பெறுகின்றன. அப்பரடிகள் தம் தலை முதலியவற்றை விளித்துப் பாடி னார். பெரியாழ்வார் கண்ணன் அடிமுதல் முடியீறாகப் பாடினார். இவை அங்கமாலைக்குரிய இலக்கணத்தைப் பெறாவாயினும், அங்கமாலைக்கு முன்னோடிகள் என்னத் தக்கன. அங்கமாலைக்குப் பின்னாடி என்னத் தக்கதும் உண்டு. அது, கவசம் என்னும் பெயர் கொண்டது. விநாயக கவசம், சட்டி கவசம் முதலியன அவை. இன்ன இன்ன உறுப்புகளை இப்படி இதனால் காக்க எனவரும் அமைவுடையவை அவை. தெய்வங்களுக்குப் பாதாதி கேசமும், ஏனையவர்களுக்குக் கேசாதி பாதமும் கூறுதல் மரபென்பர் என்பது, நவநீதப் பாட்டியல் குறிப்புரை (43). அட்டகம் (எட்டகம்) ஒரே வகை யாப்பில் பாடல்கள் எட்டுப் பாடுவது அட்டகம் ஆகும். வண்ணச் சரபம் தண்டபாணியடிகள் பாடியது மந்திர அட்டகம். எட்டெழுத்தைப் பற்றிக் கூறும் எட்டுப்பாடல்களை யுடையது. இது திருவரங்கத் திருவாயிரத்தில் உள்ளது. அட்ட மங்கலம் (எண்மங்கலம்) கடவுள் காக்க என்று அகவல் விருத்தம் எட்டால் பாடப்பெறுவது அட்டமங்கலம் ஆகும். அட்டம் - எட்டு; மங்கலம் - மங்கல வாழ்த்து. அட்டமங்கலம் அந்தாதியாக வரும். ஒருவனைக் காக்கவென் றிறைவனை ஏத்திய எண்வகை யகவல் விருத்தம் புணர்தல் நண்ணிய அட்ட மங்கல என்ப. இறைவனை ஏந்திய எண்வகை மங்கலம் அறிதரு பாவே அகவல் விருத்தம். - (பன்னிரு பாட்டியல். 299, 300) கடவுளைப் பாடியக் கடவுள் தானே காக்கவென் றகவல் விருத்தம் இருநான் கந்தாதித் தறைகுவ தட்டமங் கலமே. - (முத்துவீரியம் 1047) இப்பாடல் இவ்வகையில் ஒன்பதாக அமையின் நவமணி மாலை யாம். இதனை, அட்ட மங்கலம் எட்டுமன் விருத்தம் கவிதொறும் தெய்வம் காப்பவென் றுரைப்பது நவமணி மாலையந் நடைய வென்ப. என்னும் தொன்னூல் விளக்கம் (274). அட்ட மங்கலமே ஆதிக் கடவுளை ஆசிரிய விருத்தம் எட்டந்தாதித் துரைத்தலே. என்னும் பிரபந்த தீபம் (3). அண்டகோசம் (உலகப்படைப்பு) நிலம், நீர், தீ, வளி, விண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் உலகம் என்பது தொல்காப்பியம், அதனை விரித்துக் கூறுகின்றது பரிபாடல், உலகை, இறைமையாகக் காணும் மெய்ப் பொருளாளர், பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி. என்று பாடினார் (திருவாசகம் போற்றித் திருவகவல்). இவ்வாறு, உலகம் தோன்றிய வகையை விரித்துக் கூறும் நூல் அண்டகோசம் என்பதாம். அண்ட நிலை சாற்றல் அண்டகோசம். வகுப்புக் கலிவெண்பாவாம் என்பது பிரபந்தத் திரட்டு (39). உலகப் படைப்பு வரலாறு விவிலிய நூலில் உள்ளமையும் ஒப்பிட்டுக் காணத்தக்கது. அந்தாதி (முடிமுதல்) ஒரு செய்யுளின் இறுதிச்சீரோ, அதன் உறுப்போ அதனை அடுத்துவரும் செய்யுளுக்கு முதலாக வருமாறு பாடப்பெறும் நூல் அந்தாதி ஆகும். கலித்துறையால் செய்யப்பெறுவது கலித்துறை அந்தாதி என்றும், வெண்பாவால் செய்யப்பெறுவது வெண்பா அந்தாதி என்றும் பெயர் பெறும். பத்துச் செய்யுள்களால் வருவது பதிற்றந்தாதி; நூறு செய்யுள்களால் வருவது நூற்றந்தாதி; பதிற்றுப்பத்தந்தாதி என்பதும் அது. ஐம்பது செய்யுள், எழுபது செய்யுள், தொண்ணூறு செய்யுள் எனக் கொண்டு வருவனவும் அவ்வெண்பெயரால் விளங்கும். ஒருபொருள்மேல் பத்து, நூறு என்னும் தொகைபட அந்தாதியாக வருவதால் இதனை அந்தாதித் தொகை என்றும் கூறுவர். வெண்பாகலித்துறை வேண்டியபொருளிற் பண்பால் உரைப்பதந் தாதித் தொகையே. -(பன்னிரு பாட்டியல். 330) வெண்பாப் பத்து கலித்துறை பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி. நூறு வெண்பா நூறு கலித்துறை கூறுதல் நூற்றந் தாதிக் கோளே. -(இலக்கண விளக்கம். பாட்டியல். 81, 82) வெண்பா ஐம்பதானும் எழுபதானும் தொண்ணூ றானும் வந்தால் பேர்பெற்று முடிவது அந்தத் தொகை வெண்பா அந்தாதியாம். -(நவநீதப் பாட்டியல். 38) காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, முத லாழ்வார் மூவர் பாடிய திருவந்தாதிகள் குறிப்பிடத்தக்கன. திருநூற்றந்தாதியும் அரியது. தண்டபாணி அடிகள் பாடிய ஆங்கிலியர் அந்தாதி புதுவது. சொல்லரு மேன்மைப் பசுமேடம் ஆதியதுய்த் துவக்கும் புல்லறி வாண்மை பொலிஆங் கிலியர் புறம்கொடுக்க வெல்லவல் லானைப் படையா திருக்கின்ற வேதனுக்கு நல்ல மதியொன்றுண்டாகுங்கொ லோவெள்ளை நாமகளே. என்னும் முதற்பாடலே அவ்வந்தாதி உட்கிடையை விளக்கும். சதகம், பதிற்றுப் பத்தந்தாதி பார்க்க. அந்தாதித்தொகை (முடிமுதல் தொகை) வெண்பாவால் ஆயினும் கலித்துறையால் ஆயினும் வேண்டிய பொருளைப் பற்றிப் பத்து, நூறு என்னும் தொகை பெற வரும் சிறுநூல், அவ்வவ் வந்தாதித்தொகை எனப் பெயர் பெறும். அந்தாதி காண்க. அநுராகமாலை (சிற்றின்பமாலை) அநுராகம் - சிற்றின்பவேட்கை. தலைவன், கனவின் கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இன்புற்றதைத் தன் உயிர்த் தோழனிடம் உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுதல் அநுராகமாலை எனப்படும். - (தொன்னூல், 283 உரை) கனவின் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த் தினிதிற் புணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கற்கு நனவில் உரைத்தல் அநுராக மாலை. - (இலக்கண விளக்கம். பாட்டியல். 104) இஃதனுராகமாலை என்றும் எழுதப்பெறும். கனவில் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த் தினிமை யுறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப் பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துதல் அனுராக மாலையாம் ஆயுங் காலே. - (முத்துவீரியம். 1048) அம்மானை மகளிர் மூவர் அமர்ந்து, ஒருவர் ஒருவினாவை எழுப்ப, மற்றொருவர் அதற்கொரு மறுமொழிதர, வேறொருவர் அவ் வினாவையும் விடையையும் தொடர்புறுத்தி உரைக்கப் பாடிக் கொண்டு அம்மானைக் காய்விளையாடுவதாகப் பாடுவது அம்மானையாம். அம்மானைப் பாடல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. அது வரிப்பாடல் வகையைச் சேர்ந்ததாய் அம்மானைவரி எனப்படுகின்றது. அம்மானைப் பாடல் ஐந்தடிகளை யுடையதாகவும், செப்பலோசையுடையதாகவும் அமையும். முன்னிரண்டடிகளும் முதலாமவள் வாக்காகவும், அடுத்த இரண்டடிகளும் இரண்டாமவள் வாக்காகவும், இறுதியடி ஒன்றும் மூன்றாமவள் வாக்காகவும் அமையும். ஒவ்வொருவர் வாக்கின் நிறைவிலும் அம்மானை என்னும் சொன்முடிவிருக்கும். கலம்பகம் முதலிய இலக்கியங்களில் இடம்பெற்ற இவ் வம்மானை, பின்னே தனிநூல் வடிவுற்ற காலையில் யாப்பியல் மாறிப்போயநிலையும் அறிய முடிகின்றது. எடுத்துக்காட்டு இராமப்பையன் அம்மானை. வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை; ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை; சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை. இச்சிலப்பதிகார அம்மானை வரிப்பாடலின் முதல் நான் கடிகளும் ஓரெதுகையாகவும், இரண்டாம் மூன்றாம் அடிகள் மடக்காகவும், ஐந்தாம்அடி எதுகை விகற்பத் தனியடியாகவும் எல்லா அடிகளும் அடியளவில் செப்பலோசை உடையவை யாகவும் இருத்தல் அறிக. அமர்க்கள வஞ்சி போர்க்களத்தில் மாண்டார் உடலையும், மற்றைக் கரி, பரிகளின் உடலங்களையும் காகம், கழுகு, நாய், நரி, பேய் முதலியன தின்று களித்தாடும் சிறப்பைக் கூறுதல் அமர்க்கள வஞ்சி எனப்படும். இதனைச் செருக்கள வஞ்சி என்றும் கூறுவர். விருத்தவகை பத்தான் விளம்பும் அதனைச் செருக்களம் எனவே செப்பினர் புலவர். - (பன்னிரு பாட்டியல் 319) செருக்களங் கூறின் செருக்கள வஞ்சி. - (இலக்கண விளக்கம். பாட்டியல், 109) போர்க்களத் திறந்த புரவி நால்வாய் மக்கள் உடலையும் வாயசம் கழுகு பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக் களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல் செருக்கள வஞ்சியாம் செப்புங் காலே. - (முத்துவீரியம். 1073) அரசன் விருத்தம் (அரசன்பா) பத்துக் கலித்துறையும், முப்பது விருத்தமும், கலித் தாழிசையுமாக மலை, நாடு நகர் வருணனையும், வாள் மங்கல மும் தோள்மங்கலமும் பாடி முடிப்பது அரசன் விருத்தமாகும். அரசன் விருத்தம்கலித்துறைஈரைந் தகன்மலைமேல் விரவிய நாடு நகர்சிறப்பாய விருத்தமுப்பான் உரைசெய் கலித்தாழிசையும்வாள் மங்கலம் ஓதுவது புரவலர் ஆயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே. - (நவநீதப் பாட்டியல். 51) அரசன்விருத்தமே ஐயிரு கலித்துறை விருத்த முப்பான் வெணிகலித் தாழிசை இவற்றால் இறைவன் எழிலூர் மலைகடல் வான்மங் கலந்திண் தோள்மங் கலமுதல் வருணனை யெல்லாம் வகுத்துப் பாடலே. - (பிரபந்ததீபம். 5) அரசன் விருத்தம் முடிபுனைந்த வேந்தற்குப் பாடப் பெறுவ தாகும். கலித்துறை பத்தும் கலித்தா ழிசையும் விருத்த முப்பதும் வெற்புநீர் நாடு வருணனை யொடுநில வருணனை தாமும் வாண்மங் கலமும் தோண்மங் கலமும் அறைகுவ தரசன் விருத்த மாகும். - (முத்துவீரியம். 1103) அரிபிறப்பு உற்பவ மாலை காண்க. அலங்கார சட்கம் (அறுமணியணி) வெண்பா, கட்டளைக்கலித்துறை, எழுசீர் ஆசிரிய விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், சந்தக்கவி, ஆசிரியம் என்னும் அறுவகைப் பாடல்களும் முறையே அமைந்து வரப் பெறும் ஆறன் அடுக்குநூல் அலங்கார சட்கம் எனப்பெறும். சட்கம் - ஆறு; வண்ணச்சரபம் தண்டபாணி அடிக ளாரால் பாடப்பெற்ற, திருநெல்வேலி திருப்பணி ஆறுமுக நயினார் அலங்கார சட்கம் 36 பாடல்களால் அமைந்த நூலாகும். இதனை அறுமணி என்று கூறுவது உண்டு என்பது, விருதை சிவஞானயோகிகள் இயற்றிய நாகேசர் அறுமணி என்னும் நூலால் விளங்கும். அலங்கார பஞ்சகம் (அணி ஐந்தகம்) வெண்பாவும், கலித்துறையும், ஆசிரியப்பாவும், ஆசிரிய விருத்தமும், வண்ணமும் என்னும் ஐந்தும் மாறிமாறி அந்தாதி யாக வரப்பாடுதல் அலங்கார பஞ்சகம் எனப் பெறும் (பஞ்சகம் - ஐந்துடையது) வெண்பா கலித்துறை வேறாசிரியம் விருத்தம் - வண்ணம் பண்பால் வருவ அலங்கார பஞ்சகமாம். - (நவநீதப் பாட்டியல். 42) வெண்பா அகவல் கலித்துறை அகவல் விருத்தம் சந்த விருத்தமிவ் வகையே மாறி மாறியந் தாதித் தொடையாய்ப் பாடுவ தலங்கார பஞ்சக மாகும். - (முத்துவீரியம். 1108) அலங்காரம் (அழகுநூறு) அழகுறுத்திப் பாடப்பெறும் நூறு கட்டளைக்கலித் துறைப் பாடல்களைக் கொண்டது அலங்காரமாம். பழனித்திருவாயிரத்தில் வரும் அலங்காரம் காண்க. இதனை இயற்றிய தண்டபாணியடிகள் இயற்றியனவே வேல் அலங்காரம், மயிலலங்காரம், ஆறெழுத்தலங்காரம், வாளலங் காரம், தமிழலங்காரம் என்பன. அருணகிரியார் அருளிய கந்தரலங்காரமும் கருதத்தக்கது. அலைசல் அலைசல் என்பது அலைபோல் அலையும், நிலையிலாத் தன்மையாம். அதற்கு, இரங்குதலாக அமைந்தது அலைசல் எனப்படுகின்றது. இவ்வகையில் அடிமைத் திறத்து அலைசல், அவத் தொழிற்கு அலைசல், நாளத்து அலைசல், அவலமதிக்கு அலைசல், ஆனாவாழ்வின் அலைசல், அருட்டிறத்து அலைசல் என அலைசல் பதிகங்கள் வள்ளலார் தொகுதியில் உள. இவற் றுள் இறுதிய தொன்றும் கொச்சகக்கலிப்பா 36 பாடல்களை யுடையது. ஏனையவையெல்லாம் கழிநெடிலடியாசிரியத்தால் ஆயவை. எல்லாமும் பதிகங்கள். அவயவமாலை (உறுப்பறிக்கை) அங்கமாலை காண்க. இனி, அவயவ அறிக்கை என்ப தொரு நூல் வகையும் உண்டு. ஒவ்வோர் அவயவத்தையும் விளித்துக்கூறி இவ்வாறு இவ்வாறு செயலாற்றுக என்று அறிவிப்பதாய் அமைவது அந்நூல், தலையே நீவணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் - தலைவனைத் தலையே நீவணங்காய். என்பது முதலாகக் கண்காள், செவிகாள், மூக்கா, வாயே, நெஞ்சே, கைகாள் என விளித்தும், ஆக்கை, கால், உற்றார் என்பனவற்றை உரைத்தும் குற்றாலத்தானை நோக்கி முறை யிட்டுரைக்கும் அப்பரடிகள் திருவங்கமாலைப் பாடல் இப் பனுவல் வகைக்கு எடுத்துக்காட்டாகலாம். இன்னும், காவுந்தி கைதன் கைதலை மேற்கொண் டொருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாம மல்லது நவிலா தென்னா ஐவரை வென்றோன் அடியினை அல்லது கைவரைக் கானினும் காணா வென்கண் அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தா தருகர் அறவன் அறிவோற் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தா தருகர் அறவன் அறிவோற் கல்லதென் இருகையுங் கூடி ஒருவழிக் குவியா மலர்மிசை நடந்தோன் மலரடியல்லதென் தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅ திறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது மறுதர வோதியென் மனம்புடை பெயராது. எனக் கவுந்தியடிகள் வாக்காக இளங்கோவடிகள் கூறும் பகுதி யும் எண்ணத்தக்கதாம். பரிதிமாற் கலைஞர் பாடிய அவயவ அறிக்கை பாவலர் விருந்தில் இடம் பெற்றுள்ளது. ஆடாமணி ஆடாத மணியை ஆட்டி அரிவை ஒருத்தி அறங்கேட்ட காலை, வேந்தன் வருந்தி அவளிடத்துச் சென்று கேட்டலைப் பற்றிக் கூறுவது ஆடாமணி என்பதாம். வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட. என்பதையும், கண்ணகியார் வழக்குரையையும் இணைத்துக் கொண்டெழுந்த இலக்கிய வகை ஈதெனலாம். இதன் இலக்கணம்: வாயின் மணிநா அசையாமற் செய்மின்னாள் வாயின் மணிமுற்றுற அசைக்க - வேயிறைவன் பூசலிட்டுப் பின்மேவப் பூட்டி உரைப்பதுவே வாசமிகும் ஆடா மணி. - (பிரபந்தத் திரட்டு 9) ஆண்கூடல் உலாப்போழ்தில், மகளிர் கூட்டத்திடையே, தன் காதல் மங்கை வருதல் கண்டு, அக்கூட்டத்தினின்று அவளை விலக்கிக், காமன் அன்ன தலைமகன் அவள் உறுப்புகளின் அழகினைப் புகழ்ந்துகூறிக் கூடுதல் ஆண் கூடல் என்பதாம். பவனிமின்னார் கூட்டமயற் பாவை வரல்கண்டு திவளார நீக்கியெதிர் செவ்வேள் - அவளுறுப்புக் கூறல் ஆண் கூடல். - (பிரபந்தத் திரட்டு. 17) ஆற்றுப்படை பரிசு பெற்று வருவார் ஒருவர், பெறக் கருதிப் போவார் ஒருவரை வழியிடைக்கண்டு, தாம் பெற்ற வளத்தையும் அதனை அருளிய தலைவன், நாடு, ஊர், புகழ், கொடை முதலியவற்றையும் கூறிப் பரிசு பெற்று வர வழிப்படுத்துதல் (ஆற்றுப்படுத்துதல்) ஆற்றுப்படையாகும். இதனை, கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம். என்று கூறும் தொல்காப்பியம் (பொருள். 91). புரவலன் பரிசில் கொண்டு மீண்ட இரவலன் வெயில்தெறும் இருங்கானத்திடை வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர் பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப் புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅய் ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை. எனப் புலவரையும் இணைத்துக் கொண்டார் பன்னிரு பாட்டிய லுடையார் (320). ஓங்கிய அதுதான் அகவலின் வருமே. புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே. என யாப்பையும் உரைத்து புலவராற்றுப் படைக்கொரு விளக்கமும் தருகிறது அப்பன்னிரு பாட்டியல் (321-2) புலவர்கள் வாழ்த்துநலம், நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீள்நிதியம் பெறும்படி ஆற்றுப்படுப்பன ஆசிரி யம்பெறுமே. என்று நவநீதப்பாட்டியலும், ஆற்றுப் படையே அகவல் பாவால் விறலி பாணர் கூத்தரில் ஒருவர் பரிசுக்குச் சென்ற பாவலர் புகழும் கொடையும் கொற்றமும் வழியிடைக் கூறலே. என்று பிரபந்த தீபமும் ஆற்றுப்படை இலக்கணத்தை எளி வரக்கூறும். திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பவை பழமையான ஆற்றுப்படை நூல்கள். சங்கப் பாடல்கள் வேறு சிலவற்றிலும் ஆற்று படையுண்டு. இவற்றுள் வரும் செய்தியைக் கொண்டே, ஆற்றுப் படை இலக்கணம் தோன்றியதெனலாம். மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசிரியர் ஆற்றுப்படை, தமிழ்மகள் ஆற்றுப்படை எனக் காலத்துக்கேற்ற புதுப் பொருட்கு இருப்பாகவும் ஆற்றுப்படை பெருகி வருகின்றது. ஆறெழுத்தலங்காரம் (ஆறெழுத்தில்) திருமுருகன் ஆறெழுத்துகளைப் பற்றி நூறு பாட்டுப் பாடுதல் ஆறெழுத்தலங்காரமாம். ஆறு எழுத்து - சரவணபவ. தண்டபாணி அடிகள், ஆறெழுத்தலங்காரம் பாடியுள்ளார். அதிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் நூற்றுமூன்று (103) ஆனந்தக்களிப்பு (பெருமகிழ்ச்சி) இரண்டடிகளாய் ஓரெதுகையுடையதாய், ஒவ்வோர் அடியும் மூன்றுசீர்களும் தனிச்சொல்லும், பின்னும் நான்கு சீர்களும் உடையதாய்ச் சிந்துநடையில் வருவது ஆனந்தக் களிப்பு எனப்பெறும். கடுவெளிச்சித்தர் ஆனந்தக்களிப்பும், வள்ளலார் ஆனந்தக்களிப்பும் காண்க. நந்த வனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க்குயவனை வேண்டிக் கொண்டுவந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. இவ்வாறு முப்பத்து நான்கு பாடல்களையுடையது கடுவெளிச் சித்தர் ஆனந்தக் களிப்பு. இதன் எடுப்பு, பாபம்செய் யாதிருமனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான். என்பதாம். ஞான மருந்திம் மருந்து - சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து. என்னும் எடுப்பும், அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து பொருட்பெரும் போக மருந்து - என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. என்பது முதலாகத் தொடுப்பும் அமைவது வள்ளலார் ஆனந்தக் களிப்பு. இவர் ஆனந்தக் களிப்பின் இயைபும், வெண்டளைச் சீர்மையும், சந்தமும், இனிக்க இயலல் அறிக. தனித்தொகுதியாம் அளவுக்கு ஆனந்தக்களிப்புப் பாடிய வள்ளலார் ஆனந்தமேலீடும் பாடுகிறார். ஆனந்தப்பெருக்கில், இசையொடு இசைக்கருவியும் இயை யும் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஊதூது சங்கே என்றும், சின்னம்பிடி என்றும் வரும் முழக்குச் சொற்களால் இதனை அறியலாம். ஆனந்தக் களிப்பு இவ்விலக்கணம் அமைய நான்கடிப் பாடலாக வருவதும் உண்டு. ஆனைத்தொழில் (யானைத்தொழில்) ஆனைபிறந்த நாடு, அதன் குலநன்மை, அதன் உயர்ச்சி, அளவு, அகவை, சினத்தின் பொருட்டால் நிலை நின்று நீக்குதல், சினத்தால் கொலைபுரிதல் ஆகியவற்றைக் கூறிப் பின்பு அரசன் அதனை அணையிற் பிணித்தவாறும் வஞ்சிப்பாவால் கூறுதல் ஆனைத் தொழிலாகும். ஆனைத்தொழில் அருந்தொழில் என்பது, இவன் பெரிய ஆனைத்தொழிலைச் செய்யாநிற்க என்னும் ஈட்டுரையால் (7. 4. 3) புலப்படும். பிறந்த நிலம்குலம் ஓக்கம் அளவு பிராயம்எழில் சிறந்த மாக்கோபக் கிரமத்தில் விட்டகதிர் சினத்தால் இறந்துயிர்கோடல் செயக்கண் டிறைகந்தினிற்பிணித்தல் உரைத்திடும் வஞ்சி உரமுடை யானைத்தனித் தொழிலே. - (நவநீதப் பாட்டியல். 49) இவ்வானைத் தொழில் இலக்கணத்தை, மூவகை நிலனும் மூவகை நிறைவும் பல்வகைத் தேயமும் எழுவகை உறுப்பும் வருணமும் யாண்டும் ஐவகைக் கொலையும் இருவகை நடையும் ஐவகை உணர்வும் உடையோர்ப் பேணலும் உளப்படப் பிறவும் கண்ணிய வேளாண் பாவின் நலம்பெற எண்ணி உரைப்ப தியானைத் தொழிலே. எனப் பன்னிருபாட்டியல் பகரும். இதன் பொருள் விளக்கத்தை அஃதுரைக்குமாறு: மலையே யாறே காடே என்றிவை நிலைவெறு நிலனென நிறுத்திசி னோர ... ... உயரமும் நீளமம் சுற்றும் அளவினில் குறையா தியல்வது நிறைவெனப் படுமே. ...... ...பல்வகைத் தேயம் கொல்களிறு பிறக்கும் பல்வகைத் தேயமும் என்மனார் புலவர் பாதம் நாலும் கையும்வா லதியும் கோசமும் நிலனுறத் தீண்டுதல் குறியே ... குலமெனப் படுவது பலவகை வருணமும் நலனுற உரைக்கும் நலத்த தென்பது. .. நலமிகு வாழ்நாள் பொலிவுற இயம்புதல் யாண்டென மொழிப வியனெறிப் புலவர். ... கையுமுற் கூறும் கடியபிற் கூறும் கூர்ங்கோ டிரண்டும் கொலைத்தொகை வகையே. .. முன்னர் ஊன்றிய காற்குறி தன்னிற் பின்னர்ப் பதமிடுவது தோரண மென்ப. . பிறழ விடுவது வக்கிரமதுவே சாரிகை விகற்பமும் ஆகும் என்ப. ... நன்மை இயற்றலும் தீமை இயற்றலும் பற்றிய நன்மை தீமை நினைத்தலும் கயக்கறு காலம் நினைத்தலும் புலனே. . வழுவா துடையோர் ஏவல் இயற்றல் உடையோர்ப் பேணல் என்மனார் புலவர். - (பன்னிரு பாட்டியல். 271-281) ஆனைத்தொழிலை அகவற்பாவால் இயற்றுதலும் உண்டு என்பதை, அகவலும் உரித்தென அறைகுநர் உளரே. - (பன்னிரு. 282) என்பதனால் அறியலாம். ஆனைவிருத்தம் (ஆனைப்பா) யானையைப் பற்றிப் பத்து ஆசிரிய விருத்தம் பாடுவது ஆனைவிருத்தம் என்னும் சிறுநூலாம். (நவநீதப் பாட்டியல். 41) ஆனையைப்பற்றி வெண்பாவினால் பாடுதலும் உண்டு என்றும், அதற்கு ஆனைப்பா என்பது பெயர் என்றும் பிரபந்தத் திரட்டுக்கூறும் (1.15). இங்கிதமாலை கடவுளிடத்து மானிடப்பெண் நயந்தபக்கம். என்னும் முறையால், பாடப் பெறுவது இங்கித மாலையாகும். அதன்கண் வெளிப்படைப் பொருள் ஒன்றும், உட்பொருள் ஒன்றும் அமைந்து இருத்தலை வள்ளலார் பாடிய இங்கித மாலையுள் கண்டறிக. 166 பாக்களால் அமைந்த இவ்விங்கித மாலை அறுசீர்க்கழி நெடில் ஆசிரிய விருத்த யாப்பில் வந்த தாகும். இங்கிதமாலை பாடாண்டிணையின் பாற்பட வரும் என்பதும், வினாவும் விடையுமாக இயலும் என்பதும் வள்ளலார் வாக்கால் அறியக்கிடக்கின்றன. இதன் உள்ளீடு எள்ளல் என்னும் அசதியாடற் பொருளாயும் கிடத்தல் சுவைபெருக்குவதாம். பிட்டின் நதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவர் இவர்தமைநான் தட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன் மட்டின் ஒருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி எட்டி முலையைப் பிடிக்கின்றார் இதுதான் சேடி என்னேடி. (3) ஓதனம் - சோறு; ஓதனத்தைப் பிடியும் என்ன அவர் தனத்தைப் பிடித்தார் என அசதியாடல் காண்க. ஒரு மூன்றுடன் ஏழு மத்தர் என்பது பதுமத்தர் (நான்முகன்) எனச் சுவைமிகுத்தல் அறிக. இங்கிதம் தெரியாதவன் என்னும் நாட்டுவழக்கிலுள்ள இங்கிதம் நூற்பெயரீட்டை வழங்கியிருக்கலாம். இணைமணிமாலை வெண்பா இரண்டு வந்து பின் கலித்துறை இரண்டு வந்து அவ்வாறே நூறு பாட்டான் முடிவது இணைமணி மாலை யாகும். ...... வெண்பாக் கலித்துறை தாமிவையாம் வருபா விரண்டிரண்டாத் தம்முள் மாறின்றி நூறுவரின் பொருமான் விழியாய் இணைமணிமாலை புகல்வர்களே. - (நவநீதப் பாட்டியல்.. 37) இணைமணி மாலை தணிவில் அந்தாதியாய் மறையவர் பாவும் வணிகர்தம் பாவின் துறையும் இயைந்தீ ரைம்பது வருமே. - (பன்னிரு பாட்டியல்.. 252) வெண்பாக்கலித்துறை ஈரிரண்டியைந்த ஒண்பா நூறவை இணைமணி மாலை. - (பன்னிரு பாட்டியல்.. 253) வெண்பாவும் அகவலும் இணைந்து அந்தாதியாய் நூறு வருவது வெண்பா அகவல் இணைமணிமாலை என்றும், வெண் பாவும் கலித்துறையும் இணைந்து அந்தாதியாய் நூறு வருவது வெண்பாக்கலித்துறை இணைமணிமாலை என்றும் கூறுவாரும் உளர். வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை பண்பான் ஈரைம் பஃதந் தாதி இயலின் வகுப்ப திணைமணி மாலை. - (இலக்.பொருள். 446) வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை இரண்டிரண் டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணி மாலை வெண்பாக் கலித்துறை இணைமணி மாலையாகும். - (முத்துவீரியம். 1050) பிரபந்த தீபம் இணைமணி மாலை இலக்கணத்தை இணைமணி மாலை இலக்கணம் இயம்பலில் வெண்பா அகவல் வெண்பா கலித்துறை இரண்டிரண் டந்தாதித் திருநூறு இயம்பலே. என்கிறது (9). நூறுபாடலை இருநூறு பாடலாக்கிக் கொள்கிறது இது. மாலை என்னும் பெயருண்மை முடி முதல் (அந்தாதி) நடையது என்பதை வெளிப்படுத்தும். இயன்மொழி வாழ்த்து இக்குடிப் பிறந்தோர்க்கெல்லாம் இக்குணம் இயல் பென்னும், அவற்றை நீயும் இயல்பாகவுடையை என்றும், இன்னோர் போல் நீயும் இயல்பாக ஈவாயாக என்றும், உயர்ந்தோர் அவனை வாழ்த்துவதாகக் கூறுவது இயன்மொழி வாழ்த்தாகும். இக்குடிப் பிறந்தோர்க் கெல்லாம் இக்குணம் இயல்பென் றுநீயும் அவற்றை யுடையை என்றும் இன்னோர் போல்நீயும் இயல்பாக ஈயென்றும் உயர்ந்தோர் எடுத்துமற் றவனை வாழ்த்துவ தாக வழுத்தல் இயன்மொழி வாழ்த்தாமென்ன வழுத்தினர் புலவர். - (முத்துவீரியம். 1128) இயன்மொழி வாழ்த்தே இக்குலத் தோய்நீ பயனளித் திடுவெனப் பாவலர் பகர்தலே. - (பிரபந்ததீபம். 11) இயன்மொழி வாழ்த்து, பாடாண்திணை என்னும் புறத்துறை சார்ந்தது என்பது, தொல்காப்பியத்தால் அறியப்பெறும், புறநானூற்றினும், பதிற்றுப்பத்தினும் இயன்மொழி வாழ்த்து உண்டு. இரங்கல் இரங்கல் என்பது நெய்தல் திணையின் உரிப்பொருளாதல் பழமையான நெறி. அவ்விரங்கலை அகத்திணை நூல்கள் பரக்கக் கூறுகின்றன. திருக்குறளும் இரங்கலுக்கு உறுப்பு நல னழிதல், நெஞ்சொடு கிளத்தல், நிறையழிதல், அவர்வயின் விதும்பல், குறிப்பறிவுறுத்தல் என ஐந்ததிகாரங்களைக் கொண் டுள்ளது. அகப்பொருள் சார்ந்த இவ்விரங்கல் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியும் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து உருகியும் திளைக்கும் இறைமைக் காதல் ஏக்கத்திற்கும் வளர்ந்தது. இவ்வகையில் திருவாசகம், திருவருட்பா, நாலாயிரப் பனுவல் ஆகியவற்றில் பெருக்கமான பாடல்கள் உள. அழுங்கல், அழிதல், முறையீடு, ஆற்றாமை எனப் பல வடிவங்களையும் பெற்று இரங்கல் வெளிப்பட்டது உண்டு. இறந்த காலத் திரங்கல் என்பது பட்டினத்தார் பாடியது. இரங்கல் கையறுநிலைப் பொருளதால் ஆங்கு காண்க. இரட்டைச் சொல் யமக மாலை (இரட்டைச்சொல் மடக்குமாலை) ஒரே சொல் இருமுறை மடக்கி நான்கடிக்கண்ணும் வந்து பொருள் வேறு பயப்பது இரட்டை சொல் யமகமாலை எனப் பெறும். இந்நூல், கட்டளைக் கலித்துறையால் வரும். புரசை அட்டாவதானம் (எண்கவனகம்) சபாபதி முதலி யாரால் பாடப் பெற்ற திருத்தணிகை இரட்டைச் சொல் யமகமாலை முப்பது (30) கட்டளைக் கலித்துறைப் பாக்களால் அமைந்துள்ளது. இரட்டை மணிமாலை வெண்பாவும், அதன்பின் கலித்துறையும் முறையேவந்து இருபது பாட்டான் முடிவது இரட்டை மணிமாலையாகும். இரட்டைமணி, தருபா இருபது வெண்பாக் கலித்துறை தாமிவையாம். - (நவநீதப் பாட்டியல். 37) வெண்பா முதலாக் கலித்துறை விண்வரும் இந்த இருப திரட்டைமணி மாலை ஆதியந்தம் வெண்பாக் கலித்துறை ஏதமின்றி வருவ திரட்டைமணி மாலை; அதுவே நாலைந் தியலும் என்ப. - (பன்னிருபாட்டியல். 254, 255) இருபது வெண்பாக் கலித்துறை இயைபின் வருவது இரட்டை மணிமாலை யாகும் - (இலக்கண விளக்கம்பாட்டியல். 59) இரட்டை மணிமாலை இயம்புங் காலை வெண்பாக் கலித்துறை விரவிப் பப்பத்தும் நேரிசை வெண்பா ஆசிரியவிருத்தம் இவற்றாம் இருபதந் தாதித் தியம்பலே. - (பிரபந்ததீபம். 8) வேறொரு வகையாலும் இரட்டை மணிமாலை கூறுவார்; வெண்பா விருத்தம் வியப்புற இருபஃ தெண்பட உரைப்பது இரட்டைமணிமாலை. - (இலக்கண விளக்கம்பாட்டியல். 69) இராசாங்கமாலை (இறைமாட்சிமாலை): வெண்கலிப்பாவால் அரசன் வெற்றிச்சிறப்புகளை யெல்லாம் உரைப்பது இராசாங்கமாலை என்பதாம். வெண்கலியா லேவிருதுண் டானவெல்லா மேயுரைத்தல் மண்ணுலகில் ராசாங்க மாலையாம். - (பிரபந்தத்திரட்டு. 19) ஒரு சொல்லலங்காரம் (இரு சொல்லழகு) பாரை இடிவதேன்? பாம்புஓடுவதேன்? ஆலிலை உதிர்வதேன்? இராவழி நடப்பதேன்? இவை இரண்டு இரண்டு வினாக்களாக வருவன. ஆயினும் இரண்டற்கும் விடை ஒன்றே. இவை வாய்மொழி இலக்கியமாக ஊன்றி வளர்ந்தமையால் ற, ர; ன, ந; ள,ழ வேறுபாடு இல்லாதும் வரும். முன்னதற்கு, அடிபாராற்று; அடிப்பாரற்று என்பது விடை. அடுத்தற்கு பறிப்பாரற்று: பறிப்பாரற்று என்பது விடை. இத்தகைய நாட்டியல் வழக்காறே ஏட்டியியலிலும் இடம் பெற்றுப் பனுவலுமாயிற்று. இருசொல் அலங்காரம் அன்றி முச்சொல் அலங்காரம் என்னும் நூலும் வெளி வந்ததைச் சுட்டுகின்றது தமிழ் இலக்கிய வகையும் வடிவும் என்னும் அறிஞர் ச. வே. சுப்பிரமணியனார் நூல்(304-5). இருபா இருபது பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித் தொடை யால் இருபது இணைந்து வருவது இருபா இருபதாகும். ஒருபது வெண்பா ஒருபஃதகவல் இருபது வரினிரு பாவிரு பஃதே. - (இலக்கண விளக்கம்பாட்டியல்.. 62) இருபா இருபது வெண்பா அகவல். - (நவநீதப் பாட்டியல். 37) அகவல்வெண் பாவும் அந்தாதித் தொடையாய் இருப திணைந்து வரவெடுத் துரைப்பது இருபா இருபஃ தென்மனார் புலவர். - (முத்துவீரியம். 1089) இல்லற வெள்ளை வண்ணமும், வெண்பாவும் ஒன்பதாக இல்லறச் சீர்மை குறித்து இயம்புவது இல்லற வெள்ளையாம். கலைதரு வண்ணமும் வெள்ளையும் ஒன்பான் நிலைபெறப் புணர்ப்பினஃ தில்லற வெள்ளை. - (பன்னிருபாட்டியல். 301) இனி, இல்லற வெள்ளை, வெண்கலிப்பா ஒன்றானும், சந்தவகை ஒன்பதினானும், வெண்பா ஒன்பதினானும் வரும் என்பாரும் உளர் என்பார் பன்னிருபாட்டியலார் (301). (மங்கல வெள்ளை காண்க). இலகிரி (களிப்புப் பேரலை) தேன் சுவை போன்றதாம் இனிய பொருளைக் குறிக்கும் இலகிரி, இனிய பாக்களால் ஆகிய நூலைக் குறித்து வந்தது. சங்கரரின் சௌந்தரிய லகரி வீரை கவிராயரால் மொழி பெயர்க்கப்பட்டது இவ்வகை நூலின் முன்னோடி. வள்ளலாரின் சல்லாபலகரி, தண்டபாணி அடிகளின் முருகானந்த லகரி ஆகியவை தொடர்ந்தவை. லகரி, யை அலை யெனக் கொண்டு பெயர்க்கப் பட்டமை வாலம் அம்மையாரின் அழகின் அலை (சௌந்தர்ய லகரி) என்பதால் விளங்கும். இலட்சுமி விலாசம் (திருப்பேறு) கன்னி ஒருத்தியின் திருமணத்தைக் கவினோடு நடத்தி வைக்கத் திருமாலும், திருமகளும் ஒருங்கு வந்ததாகப் பாடுதல் இலட்சுமி விலாசமாம். பெண்ணை, மணங்கூட்ட மாலொடுபொன் வந்ததாப் பாடல், அணைலட் சுமிவிலா சம் - (பிரபந்தத்திரட்டு. 3) இலாலி (இன்சொல்) இலாலி என்னும் சொல் இடம்பெறப் பாடப்படும் மங்கலப் பாடல் இலாலி எனப்படுகின்றது. திருமணத்தின் மங்கலப் பாடலாகப் பாடப்படும் இலாலி இறைவனைப் பாடுதற்கும் பொருளாயிற்று. இசைப்பாடல் வடிவிலும் இலாலி இயல்வதுண்டு. இலீலை (திருவிளையாடல்) தெய்வத் திருவிளையாடல் பற்றிக் கூறுவதாக அமைந்தது இலீலையாம். இவ்வகையில் புகழ்வாய்ந்தது பிரபுலிங்க லீலை, தியாகராச லீலை என்பன. இலீலை பல்வேறு கதைக் குறிப்புகளைக் கொண்டு நடப்ப தால் பல்வேறு யாப்பமைதியமைந்த பாடல்களைக் கொண் டுள்ளது. திருவிளையாடல் புராணம் என்பது இலீலை என்ப துடன் ஒப்பிட்டு இணைத்து நோக்கத்தக்கது. கிரீடை எனவரும் பனுவல் இலீலை வகையினதே. நாலாயிரப்பனுவில் கண்ணன் பாலக்கீரிடை உள்ளது. இதழ்குவிபா இதழ் அகல்பா தோன்றியபின், ஏன், இதழ்குவிபா இருத்தல் கூடாது? என்னும் எண்ணத்தால் பிறந்தது இதழ் குவி பா ஆகும். இதழொட்டிப் பிறக்கும் எழுத்துகளாலேயே பாடல் அமைவது இஃதாகும். இப்பாவையில் வரும் எழுத்துகள் இதழ் ஒட்டிப் பிறப்பதால் இப்பாவினை ஒட்டகம் எனப் பெயர் சூட்டலாம். இதழொட்டாப்பாட்டு (நிரொட்டகம்) என்னும் பெயரைக் கருதுக. ஒட்டகம் என்பதன் பெயர்ப் பொருள்தான் என்ன? எத்துணை நாள்களோ ஒட்டிப் போய்ப் பட்டினி கிடக்கும் கரணியத்தாலேதான் ஒட்டகப் பெயர் வந்ததறிக. அகம் - இடம்; இவண் வயிறு. இவ்வகைப் பாடல்களை எழுதியவர் தண்டபாணி அடிகளார் ஆவார். இதழகல் அந்தாதி இதழொட்டா எழுத்துகளையே அமைத்து அந்தாதித் (முடிமுதல்) தொடைபடப் பாடப்படுவது இதழகல் அந்தாதியாம். உ, ஊ, ஒ, ஓ, ஔ என்னும் உயிரெழுத்துகளும் இவற்றின் வரிசையும் ப், வ், ம் என்னும் ஒற்றும் இவற்றின் உயிர் மெய்யெழுத்துகளும் இதழொட்டிப் பிறப்பன. ஆகலின் இவற்றை விலக்கிப் பாடுவதே இதழகல் பாவென்க. திருவரங்க இதழகல் அந்தாதி, திருநெல்வேலி இதழகல் அந்தாதி என்பவை தண்டபாணி அடிகளால் பாடப் பட்டவை. முன்னதில் முப்பத்து இரண்டு (32) பாடல்களும், பின்னதில் முப்பத்து மூன்று (33) பாடல்களும் உள. இதழகல்பா நிரொட்டகம் என வடமொழியில் வழங்கப் படும். இதழகல் அமைவுடையதாய், ஓரடியே மடங்கி நாலடியாய் அடிதோறும் வேறு வேறு பொருட் தருவதாய் முடி முதல் தொடைபட அமைவது ஏகத்தாள் இதழகலந்தாதி, எனப்படும். இதழகல் எழுத்துகளையுடையதாய், ஒருதொடை அமை வுடையதாய்ப் பாடப்பட்ட ஒரு நூல் ஒரு தொடைச் செய்யுள் நிரொட்டகக் குகனந்தாதி என்பதாம். இதனையும் அவ்வடிகளே அருளினார். இந்நூலில் நூற்று இரண்டு (102) பாடல்கள் உள. ஏகபாத நூற்றந்தாதி பார்க்க. இன்பமடல் மடல் காண்க. இன்னிசைத் தொகை இன்னிசை வெண்பா எழுபதேனும், தொண்ணூறேனும் தொடுத்துப் பாடின அஃது இன்னிசைத் தொகை. எனப்பெறும். தொண்ணூ றேனும் எழுப தேனும் இன்னிசை தொடுப்பின் இன்னிசைத் தொகையே. - (பன்னிருபாட்டியல். 288) இனிதின் ஓசை மேம்பா டுடைமையின் இன்னிசை என்பர் தொன்னெறிப் புலவர். - (பன்னிரு பாட்டியல். குறிப்பு. பக். 42) உத்தியாபனம் (நிறைவு) கோடைப்பொழுதில் தலைவன் தலைவியைக் காண்ப தற்குச் சோலைக்கண் சேறலும், அப்பெண்ணாள் தலைவன் வருகையறிந்து அன்பால் உருகிப் புன்முறுவலுடன் புறத்தே நிற்றலும், தூதுவிடுத்து அவளை அடைந்து இன்புறுதலும் கூறுதல் உத்தியாபனம் என்னும் இலக்கியச்செய்தி ஆம். வேனிற் பொழுதிலிறை மின்கன்னி ஆசையால் தான்சோலை மேவுறஅத் தையலறிந் - தூனுருக நின்றுநகை யாத்தூது நெட்டிப்பின் னேமருவல் பன்னுகாதல் உத்யா பனம். - (பிரபந்தத்திரட்டு 42) உந்தி பறத்தல் உந்து, உந்துதல், உந்துவண்டி, உந்துபந்து இன்னவெல் லாம் இக்கால ஆட்சிச் சொற்கள். இவற்றின் மூலவைப்பு உந்தி பறத்தல் உந்தீபற என்பவற்றில் உள. பெரியாழ்வார் பாடிய உந்தி பறத்தல் பாடிப்பற என்னும் முடிவுடையது. ஆயின், உந்திப் பறந்த ஒளியிழையார்கள் சொல் எனவரும் பதிக இறுதிப்பாடல் உந்தி பறத்தலைத் தருவதுடன், ஒளியிழையார் உரிமையையும் தருகின்றது. கலித்தாழிசையால் அமைந்தது ஆழ்வார் பாடல். பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் வகைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்(கு) அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற. -அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. இனி வேறொரு வகைக்கலித் தாழிசையால் வருகின்றது மணி மொழியாரின் திருவுந்தியார். அதில் ஒரு பாடல்: வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. உந்திபற ஏன் உந்தீபற என்றானது காவிரி இசைக்காகக் காவேரி யாகவில்லையா? இவ்வுந்திப் பனுவல் உந்தி வளர்ந்ததால் சோமசுந்தர நாயகரின் சித்தாந்த உந்தியார் நூற்று மூன்று பாடல்களை யுடையதாயிற்று. உயிர் வருக்கமாலை (உயிரினமாலை) அகரமுதல் அஃகேனம் ஈறாக அமைந்துள்ள பதின் மூன்றெழுத்துகளுக்கும் ஒவ்வொரு பாடலாக அமைந்த சிறு நூல் உயிர்வருக்க மாலையாகும். இவ்வகையில் எழுந்த ஒருநூல் மதுரை மீனாட்சியம்மை உயிர்வருக்கமாலை என்பதாம். வருக்கக்கோவை, வருக்கமாலை என்பவற்றில் வரும் எழுத்துகளில் உயிர் வருக்கத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அமைவதால் உயிர் வருக்கமாலை என்னும் பெயர் பெற்றது. மீனாட்சியம்மை உயிர்வருக்கமாலையின் ஒவ்வொரு பாடல் முடிவும், வருமடியர் குறைதீர வரமருளும் அதிகார மதுரை மீனாட்சி யுமையே என முடிகின்றது. பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய வகையான் அமைந்தது இந்நூல். உலா இளம் பருவத் தலைமகன் ஒருவனைக் குலம், குடிப்பிறப்பு, மங்கலவழிமுறை, இவற்றின் இன்னான் என்பது தோன்றக் கூறி, அவர் மாதரார் நெருங்கிய பெருவீதியில் உலாவரப் பேதை முதலிய ஏழு பருவப் பெண்களும் கண்டு தொழுததாக நேரிசைக் கலி வெண்பாவாற் கூறுவது உலா ஆகும். உலாப்புறம் என்பதும் இது. முடிபுனைந்த மன்னவருமாய் இருபத்தொரு பிராயத்துக்கு உட்பட்டவர்களுக்கும், தேவர்களுக்கும் உலாப் பாடலாம்; அல்லார்களுக்கு ஆகாது என்பார் நவநீதப் பாட்டியல் உரைகாரர். குழமகனைக்கலி வெண்பாக் கொண்டு விழைதொல் குடிமுதல் விளங்க உரைத்தாங் கிழைபுனை நல்லார் இவர்மணி மறுகின் மற்றவன் பவனி வரஏழ் பருவம் உற்ற மானார் தொழப் போந்த துலாவாம். - (இலக்கண விளக்கம் பாட்டியல். 98) பாட்டுடைத் தலைவன் உலாப்புற இயற்கையும் ஒத்த காமத் திளையாள் வேட்கையும் கலிஒலி தழுவிய வெள்ளடி இயலால் திரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே. - (பொய்கையார் - பன்னிருபாட்டியல், 216) பேதை முதலா எழுவகை மகளிர்கண் டோங்கிய வகைநிலைக்குரியான் ஒருவனைக் காதல்செய் தலின்வருங் கலிவெண் பாட்டே. - (பன்னிருபாட்டியல். 217) எழுபருவ மாதர்க்கும் உரிய பெயரையும் அவர்களின் ஆண் டளவையும்: ஐந்து முதலே ழாண்டும் பேதை. எட்டு முதனான் காண்டும் பெதும்பை. ஆறிரண் டொன்றே ஆகும் மங்கை. பதினான் காதிபத் தொன்பான் காறும். எதிர்தரு மடந்தை மேலாறும் அரிவை. ஆறு தலையிட்ட இருபதின் மேலோர் ஆறுந் தெரிவை எண்ணைந்து பேரிளம் பெண்ணென் றோரும் பருவத் தோர்க்குரைத் தனரே. - (இலக்கண விளக்கம் பாட்டியல் 88-103) இவ்வியாண்டுகளைப் பிறவாறுங் கூறுப : பேதைக் கியாண்டே ஐந்துமுதல் எட்டே, பெதும்பைக் கியாண்டே ஒன்பதும் பத்தும். மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும். மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும். அரிவைக் கியாண்டே அறுநான் கென்ப. தெரிவைக் கியாண்டே இருபத்தொன்பது. ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது பேரிளம் பேண்டுக்கியல்பென மொழிப. - (பொய்கையார் பன்னிருபாட்டியல் 221-27) பேதை முதலெழு வோர்க்குப் பிராயங்கள் பேசிடுங்கால் ஆதியில் ஐந்தேழ் பதினொன்று பன்மூன்று பத்தொன்பதே மீதிரு பத்தைந்து முப்பத்தொன் றாதிய நாற்பதென ஓதுவர் தொன்னூற் பருனித ரெல்லாம் உணர்ந்து கொண்டே. - (நவிநீத பாட்டியல் 46) இனிப் பெண்பாலார்க்குக் காட்டியவாறே ஆண்பாலர்க்கும் பருவமும் ஆண்டும் காட்டினார் உளர். அவர் காட்டுமாறு: பாலன் யாண்டே ஏழென மொழிப. மீளி யாண்டே பத்தியை காறும். மறவோன் யாண்டே பதினான் காகும் திறலோன் யாண்டே பதினைந் தாகும். பதினா றெல்லை காளைக் கியாண்டே. அத்திறமிறந்த முப்பதின் காறும் விடலைக் காகும்; மிகினே முதுமகன். - (அலிநயனார் பன்னிரு பாட்டியல் 229-234) ஆடவர்க்கு உலாப்புறம் கொள்ளுதற்குரிய உயரெல்லை நாற்பத் தெட்டுயாண்டளவு என்றும் குறித்தாருளர். நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க் குலாப்புறம் உரித்தென மொழிப. - (பன்னிருபாட்டியல் 235) உலாமடல் கனவில் காரிகை ஒருத்தியைக் கண்டு களித்த ஒருவன் அவளை அடைவது கருதி மடலூர்வேன் என்று கலிவெண்பா வால் கூறுதல் உலா மடலாகும். கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன் நனவில் அவள்பொருட்டாக நானே ஊர்வேன் மடலென் றுரைப்ப துலாமடல். - (இலக்கணப் பாட்டியல் 97) கனவில் ஒருத்தியைக் கண்டு கலவி இன்ப நுகர்ந்தோன் விழித்த பின்னவள் பொருட்டு மடலூர்வேன் என்பது கலிவென் பாவான் முடிப்ப துலாமட லாகும். - (முத்துவீரியம். 1086) உலா என்னும் பனுவலும், மடல் என்னும் பனுவலும், ஒருசார் இயைந்த தன்மையதாகப் பெறுதலின் உலாமடல், எனப் பெற்றது. மடல் உலா என மாற்றியியைப்பின் மடலூர்தல் என்னும் பொருளே பட்டமையுமாகலின் உலாமடல் என்றா ராம். மடல் காண்க. உலாவணி இசுலாமிய சமயச் சார்பால் தமிழ் இலக்கிய வகை பெற்ற பெருக்கத்துள் ஒன்று உலாவணியாகும். இதனை இலாவணி என்பது பெருவழக்கு. உலாவணி பாடுதலில் தேர்ச்சி மிக்க புலவராகத் திகழ்ந் தவர் உறையூர் சித்திரகவி சையத் இமாம் பாவலர் ஆவார். உலாவணி என்ற சொல்தான் தற்போது இலாவணியாக மாறி வழக்கில் இருந்து வருகிறது. இல் + ஆ +அணி எனப் பிரித்துக் காட்டிப் பொருள் கூறுவாரும் உண்டு. உள்ளமெனும் வீட்டில் குடிபுகுந்த ஆத்மாவுக்கு அழகு சேர்ப்பது என்பதாகக் கருதுவார்கள் என்பார் மதனீ (இசுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக்கோவை பக். 309). எரிந்த கட்சி எரியாத கட்சி என ஏசலிப்பும், காம னெரிப்புப் பற்றியும் உலாவணி உண்டு என்பதை விளக்குவ தொரு நூல். அஃது, எரியாத கட்சி சிங்காரக் கேள்வி லாவணி என்பது. அதனை இயற்றியவர் பட்டமும் பெயரும் தமிழ் நாடெங்கும் புகழ்பெற்ற காமதகனக் கண்டனக் கட்சிக் கவிக் கேசரி தஞ்சை முத்தமிழ் வித்துவ பாப்புதாசர் என்பது. மன்மதன் பண்டிகைக் கேள்வி: காமன் பண்டிகை என்று வருடந் தோறும் காணும் மாசிப்பிறை கண்டவுடனே நீங்கள் ஆமணக்கு பேய்க்கரும்புத்தட்டை கொண்டு அருமையுடன் நட்டுவைக்கோற் பிரியைச் சுற்றிப் பாமரர்கள் ராட்டி ஒன்றைத் தொங்கவிட்டுப் பங்குனி மாதப் பருவமட்டும் அங்கே நேமமதாய்க் கடலை மொச்சை தேங்காயிட்டு நெறியாகக் கொளுத்தச் சொன்ன புராணம் காட்டே. உலகில் மன்மதன் எத்தனை என்று ஒரு கேள்வியைப் போடுகின்றது அது. மால்மகள் மதனென்குதொரு புராணம் மலர்வேதன் மகனென்கு தொரு புராணம் பால்வண்ணன் மகனென்கு தொருபுராணம் பகர்தர்மன் மகனென்கு தொருபுராணம் சால்வண்ணன் மகனென்கு தொருபுராணம் சங்கல்பன் மகனென்கு தொருபுராணம் வேள்மதனித்தனை பேரைநூல் சொன்னாலே வெந்தமதன் எந்தமதன் விளம்புவீரே! எரிந்த கட்சியைப் பாடிக் கெட்டழிந்தவர்களைக் கூறி, பாப்பு தாசம் அறைவதைக் கேட்டு வாயை மூடு மூடு எனப் புத்தகம் மூடுகின்றது. இலாவணி வெண்பா, விருத்தம், இசைப் பாடல்களாக இயல்வதையும் தருக்க நெறியில் நடப்பதையும் இந்நூலால் அறியலாம். உழத்திப்பாட்டு உழவர் புகழ் உலகறிந்தது; உழவு என்றோர் அதிகாரம் வள்ளுவர் வாய்மொழியாக இலக்குவதும், ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்னும் நூல்களைக் கம்பர் இயற்றியதும் உழவின் பெருமையை விளக்குவனவாம். ஏரோர் களவழி என்னும் தொல்காப்பியச் செய்தியும், ஏர்மங்கலம் பாடும் இளங்கோவடிகள் இசைச்செய்தியும் எண்ணத்தக்கன. உழத்திப்பாட்டு என்னும் நூல்வகையைப் பன்னிரு பாட்டியல் (164) தருகின்றது. அதன் இலக்கணத்தை, புரவலற் கூறி அவன்வா ழியவென் றகல்வயற் றொழிலை ஒருமை உணர்ந்தனள் எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே. என்கின்றது. பத்துப்பாட்டே அளவாகவும், புரவலர் புகழ்கூறி வாழ்த்துவதும், உழுதொழில் திறம் கூறுவதுமே பொருளாகவும் இவ்வுழத்திப்பாட்டு சுட்டப்பெறுகின்றது. உழத்திப் பாட்டின் வளர்ச்சியே பள்ளு என்னும் நூலாம். பள்ளு பார்க்க. உழிஞை மாலை பகைவர் ஊர்ப்புறஞ் சூழ, உழிஞைப் பூமாலை சூடிப் படைவளைப்பதைக் கூறுவது உழிஞை மாலையாகும். மாற்றார் ஊர்ப்புறம் வளைதர உழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையாம் உணருங் காலே. - (முத்துவீரியம். 1076) உழிஞை மாலையே ஒன்னலர் ஊர்ப்புறம் ஒருங்குடன் வளைக்க உழிஞைத்தார் சூடிப் படைசெலும் பண்பைப் பகர்தல் என்ப. - (பிரபந்த தீபம். 13) முப்பது பாடல்களையுடையது உழிஞைமாலை எனப் பிரபந்த மரபியல் கூறும். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகும் என்ப. என வரும் தொல்காப்பியம் (1011) இவண் கருதத்தகும். உற்பவ மாலை (பிறப்பு மாலை) திருமால் பிறப்புப் பத்தினையும் பத்து அகவல் விருத்தத் தால் பாடுவது உற்பவ மாலை எனப்பெறும். அரிபிறப் பொருபதும் அகவல் விருத்தத் துரிதிற் புகறல் உற்பவ மாலை. - (இலக்கணவிளக்கம் பாட்டியல். 108) உற்பவமாலை அரிபிறப்பு எனவும் வழங்கப் பெறும். சேலே ஆமை ஏனம் சிங்கம் கோல வாமனன் மூவகை இராமர் கரியவன் கற்கி எனவரு கடவுளர் புரிதரு தோற்றம் தெரிதரப் பராஅய்ப் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டி இனமொழி நாட்டி அகவல் விருத்தம் ஒருப தியற்றுதல் ஆழியோன் பிறப்பே. - (பன்னிரு பாட்டியல் 298) உற்பவமாலையினைத் தசப்பிராதுற்பவம் என்பார் நவநீதப் பாட்டியலுடையார். குறைவில்லது தசங் கூறிற் றசப்பிரா துற்பவமே. - (நவநீத பாட்டியல் 52) என்பது அது. ஊசல் ஊசலாடுவதாகப் பாடப்பெறும் ஒருவகைச் சிறுநூல் ஊசலாயிற்று. சிலப்பதிகாரத்தில் ஊசல்வரி என வரிப்பா உண்டு. ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல். என்பது சிலம்பிலொரு பாட்டு. பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களில், ஊசல் பத்தில் ஒரு பங்கைப் பற்றிக் கொண்டது. பின்னை, ஊசல் தனிநூல் உருக்கொண்டது. கோயில்களில் திரு ஊசல், திருப்பொன்னூசல் என விழாக்கள் எடுப்பது வழக்கு. இறைமையில் தோய்ந்த அடியார்கள் இவ் வகையில் பாடி மகிழ்ந்துள்ளனர். மணிமொழிப் பெருந்தகை பாடியது திருப்பொன்னூசல். திருவரன்குளத்தீசர் திருவூசல் என்பது ஆவணப்பெரும் புலவர் வேலாயுதனார் இயற்றியது. அதில் முதற்பாட்டு: அருளாட அருளம்மை அப்ப ராட அருள்நிறைந்த பெரியோர்கள் களிப்புற் றாடப் பொருளாடப் புவனமெலாம் செழித்தே ஆடப் புண்ணியமும் புகழறமும் தழைத்தே ஆடத் தெருளாடு ஞானமெலாம் கதிப்புற் றாடச் செந்தமிழும் பாவலருஞ் சிறப்புற் றாட மருளாடு மக்கள்மனம் மகிழ்ந்தே ஆட மாட்சிமிகும் அரன்குளத்தீர் ஆடீர் ஊசல். இவ்வூசல் 36 பாடல்களையுடையது. அகவல் விருத்தம் கலித்தாழிசையால் பொலிதரும் கிளையொடும் புகலுவ தூசல் என்று ஊசல் இலக்கணம் கூறும் இலக்கணவிளக்கப் பாட்டியல் (85). ஊசல் கலித்தாழிசையால் வரும் என்பார் நவநீதப் பாட்டியலார் (50). அகவல் விருத்தத் தானா குதல்கலித் தாழிசை யானா னாகுதல் சுற்றத் தோடும் பொலிக ஆடீர் ஊசல் ஆடாமோ ஊசல் ஊசலாகும். என்பது முத்துவீரியம் (1122). ஊடல்மாலை ஊடுதல், ஊடுதல் நிமித்தம், ஊடல் நீக்கம் ஆகியவை பற்றிய இலக்கியம் ஊடல் மாலை என்பது. ஊடல் மாலையை நவநீதப் பாட்டியல் சுட்டும் (66). அது தொழிலால் தொக்கன ஊசல், ஊடன் மாலை, கூடன் மாலை போல்வன என்பது. திருக்குறளிலுள்ள புணர்ச்சி விதும்பல், நெஞ்சோடு புலத்தல், புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்பவற்றைக் காண்க. ஊர்நேரிசை பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார, நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் ஊர்நேரிசை எனப்பெறும். இன்னிசை போல இறைவன் பெயரூர் தன்னின் இயல்வது தானே ரிசையே. - (இலக்கண விளக்கம் பாட்டியல். 70) ஊரைச் சார உரைப்பதூர் நேரிசை. - (முத்துவீரியம் .1095) ஊர்வெண்பா பத்து நேரிசை வெண்பாக்களால் ஊரின் சீர் உரைப்பது ஊர் வெண்பா எனப்பெறும். (நவநீதப் பாட்டியல். 41) வெண்பா வாற்சிறப் பித்தூர் ஒருபான் பாவிரித் துரைப்பதூர் வெண்பா ஆகும். - (முத்துவீரியம். 1096) ஊரின்னிசை பாட்டுடைத் தலைவன் ஊரினைச் சார இன்னிசை வெண்பாவினால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்ப தேனும் பாடுதல் ஊரின்னிசை எனப்பெறும். இறைவன் பெயரூ ரினையின் னிசையான் முறையிற் றொண்ணூ றெழுபா னைம்பான் அறையின் அப்பெயர் ஆகும் என்ப. -(இலக்கண விளக்கம் பாட்டியல். 65) பாட்டுடைத் தலைமகன் ஊரைச் சார இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ தேனும் எழுபா னேனும் ஐம்பஃ தேனும் இயம்புவ தூரின் னிசையே. -(முத்துவீரியம். 1093) எச்சரிக்கை அரசன் திருவோலக்கத்திற்கு வருங்கால் அல்லது உலா வருங்கால் அவ்வரசனை முன்னிலையாக்கி, அவையில் உள்ளார்க்கு அவ்வரசன் வருகையை எச்சரித்துப் பாடுவது எச்சரிக்கை என்னும் இலக்கிய வகையாகும். எச்சரிக்கை = முன்னறிவித்தல். அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும்போது அவ் வரசன் தன்மை இத்தகைத்து என அவையில் உள்ளார்க்கு எச்சரித்தலும் இவ்வெச்சரிக்கையேயாம். அரசனை அன்றி, இறைவன் திருவருகை, திருவோலக்கம் ஆகியவற்றை எச்சரித்துப் பாடுவதும் உண்டு. திருப்போரூர் முருகன் எச்சரிக்கை என்பது இவ்வகையைச் சார்ந்தது. பிறைசூடிய சடையானருள் பிள்ளைப்பெரு மாளே மறையோர்நிறை போரூர்வரு மன்னவாஎச் ரிக்கை, பராக்கு எனக் கட்டியங்கூறுவதையும், அமைதி என முறை மன்றங்களில் கூறும் வழக்குண்மையையும் கருதுக. எட்டெட்டந்தாதி ஒருவகை யாப்பில் எட்டுப் பாடலாக எட்டுவகை யாப்பில் பாடப்பட்ட 64 பாடல்களைக் கொண்ட நூல் எட்டெட்டந் தாதி. இவ்வகையில் அமைந்தது காஞ்சி காமாட்சி எட்டெட்டந் தாதியாகும். (ஓலைச்சுவடி நூலகம் 240, 241). எண்கூற்றிருக்கை எழுகூற்றிருக்கையின் வளர்ச்சி எண்கூற்றிருக்கையாம். இவ்வகைப் பாடல் அருளியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாவார். ஏழோடு அமைந்த எழுகூற்றிருக்கை, அதன்மேல் எட்டாக உயர்ந்து நிற்பதே எண்கூற்றிருக்கையாம். எண்சீர் எண்பது எண்சீர் அகவல் விருத்தம் எண்பது அமையப் பாடப்படுவ தொரு நூல் எண்சீர் எண்பதாம். தெய்வத் திருவாயிரத்தில் வரும் எண்சீர் எண்பது எடுத்துக்காட்டாம். இந்நூல் தண்டபாணி அடிகள் அருளியது. எண்செய்யுள் பாட்டுடைத் தலைவனது ஊரினையும், பெயரினையும் முதல் ஆயிரம் பா அளவும் பாடி, அவ்வெண்ணாற் பெயர் தருவது எண்செய்யுளாம். ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே சீரிதிற் பாடல் எண்செயு ளாகும். - (இலக்கண விளக்கம் பாட்டியல். 88) பாரியது பாட்டு, கபிலரது பாட்டு எனச் செய்தோன் பெயர் பற்றி வருவனவும் கொள்க என்பார் இலக்கண விளக்கப் பாட்டியலார். பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும் பத்துமுதல் ஆயிரம் அளவும் பாடி எண்ணாற் பெயர்பெறல் எண்செய்யுளாகும். - (முத்துவீரியம். 1080) எண்ணெழுத்து மாலை முதற்பாடல் எண்முறையிலும், அடுத்த பாடல் எழுத்து முறையிலும், அமைந்து தொடர்வதால் எண்ணெழுத்து மாலை என்னும் பெயர் பெற்றது. இளம்பாவலர் வேங்கடராமனாரும், அருட்பாவலர் சேதுராமனாரும் முறையே எண்ணும் எழுத்தும் பாட இரட்டையர் யாத்த நூலாய் இலங்குவது மதுரைப் பரிபூரண விநாயகர் எண்ணெழுத்துமாலை என்பதாம். இந்நூல் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூற்று எட்டனைக் கொண்டுள்ளது. எண்கள் ஒன்று முதல் பத்துவரை ஏறி அதன்பின் இருபது முப்பது என நூறு வரைக்கும், இருநூறு முந்நூறு என ஆயிரம் வரைக்கும், ஈராயிரம், மூவாயிரம் எனப் பத்தாயிரம் வரைக்கும், இலக்கம், பத்திலக்கம், கோடி என ஏறி; இலக்கம், ஆயிரம், நூறு, பத்து வரைக்கும் ஒன்பது முதல் ஒன்றுவரைக்கும் இறங்கியும் அனந்தாய் நிறைகின்றது. எழுத்துகள் அகரமுதல் அஃகேணம் முடிய முறையாகத் தொடர்ந்து, பின்னர் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன என்னும் உயிர் மெய் வரிசையுள் ங, ண, ழ, ள, ற, ன என்பவை ஒன்றும், வ இரண்டும், எஞ்சியவை மூன்றும் ஆகிய எழுத்துகளை ஏற்றாங்குக் கொண்டுள்ளது. இம்மாலையின் அருமைப்பாடு பாராட்டத்தக்கது. எனினும், டடம், டவுள், டக்கை, டமருகம், டவண்டை, டிண்டிமம், டாகினி, ராசினி, ரீங்காரம், லாகினி, லவணம், லாசகன், லுத்தன் என வரும் ஆட்சிகள் ஏற்கத்தக்கன அல்ல. ழகரந் தனக்கே உரித்தா வுடைத்தமிழ். ளகர மெய் சேர்கள வாரண மாப்பிள்ளையாய். றச்சேர் இடைஇலியும்பிலியும் அற்றவ. னவ்விரண் டாமெழுத் தாக்கொள் வசரக. என்னும் ஆட்சிகள் அருமையிலும் அருமையாய்! இலக்கிய வகையுள் இவ்வெண்ணெழுத்துமாலைக்கு முற்பட எழுந்தது வைணவி எண்ணெழுத்துமாலையாம். அதனை இயற்றியவர், இவ்விரட்டையருள் இளவலராம் அருட் கவியாரே. எழுக்கூற்றிருக்கை ஏழு அறையாகக் குறுமக்கள் (சிறுவர்) முன்னின்றும் புக்கும், போந்தும், விளையாடும் பெற்றியால் வழுவாமையால் ஒன்று முதலாக ஏழு இறுதியாக முறையானே பாடுவது எழு கூற்றிருக்கையாகும். ஒன்று இரண்டு ஒன்று என்று வந்து, பின் ஒன்று என்னும் எண் வந்து இரண்டு மூன்று என்று ஏறிப், பின்னர் இரண்டு ஒன்று இரண்டு மூன்று நான்கு என ஏறிக், கீழிறங்கி மீண்டும்ஏறி இவ்வாறு ஏழு என்னும் எண் வரையில் அமையும். இவ்வெழுக் கூற்றிருக்கையின் எண் முடிநிலை ஏழு வரைக்கும் சென்று ஒன்றில் அமைவதும் உண்டு. இருவகை எழுகூற்றிருக்கைக்கும் எடுத்துக்காட்டு யாப்பருங்கல விருத்தியுட் காண்க (96). தமிழ் ஞானசம்பந்தர் இயற்றிய திருவெழு கூற்றிருக்கையும், திரு மங்கை மன்னர் இயற்றிய திருவெழு கூற்றிருக்கையும் காண்க. கோதில் ஏழறை ஆக்கிக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றி யால்வழு வாமை ஒன்று முதலாக ஏழீ றாய்முறை யானே இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும். - (முத்துவீரியம். 1123) எழுகூற்றிருக்கைக்கோர் எடுத்துக்காட்டு: ஓர்ஒருபொருளாய், இரண்டாய் ஒன்றி ஒன்றிரண்டின்றி மூவிரு நெறியோர்க்கு ஒருமைகண்டிருமையின் மூவாநாற்பயன் முத்தமிழ் இருங்கடலோடொருங்குதலும், ஒன்றுடன் இரண்டும் மூன்றும் நாலும் கூடிய தொகைப்படு கோலங்கொளலும், ஐவர் ஒற்றென நாற்றிசைபரவ மூவருந்தானாயிருப்பது மறைந்துஓர் ஓரனிருஞ்சமைமூப்பினர் தம்முகம் நால் ஐந்(து) இல் ஆறி யேற்றலும், ஐந்நாற்றோளின் மூன்றுல கெடுத்தோன் இருகூ றாவிழ ஒருகணை ஏவலும், ஓருருள் இரதனை முக்கணன் நான்முகன் ஐயர்கோன்முதலினர் அறியமறைத்தலும், ஏழெருதினையும் இளைப்பறப்பிணித்திட்(டு) ஐம்பால்ஓதி அணங்கனாட்பெறலும், நாற்கால் மும்மதத்(து) இருமருப்பொருமா உய்யக் கானத்து ஓடிச் சேறலும், மாமறை ஓலிசால் மணிமதிள் அரங்கக் கோயில் நாப்பன் கொடும்பற்பேழ்வாய் ஆயிரம் காட்டும் அரவப் பாயலின் மேற்றுயில் குவியாவிழித்திருமாலே. இவ் வெழுகூற்றிருக்கை திருவரங்கத் திருவாயிரத்துள்ளது. ஆசிரியர் தண்டபாணி அடிகள். இருக்கை அமைப்பு: 1 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 இத் திருவரங்கத்திருவாயிரத்தில் வரும் எழுகூற்றிருக்கை ஒன்று, என்று தலைப்பெண் தந்து பின்னர் ஒன்று எனத் தொடர் கிறது. இது பிறர்பாடிய எழுகூற்றிருக்கையினும் புத்தமைப்பின தாம். எழுகூற்றிருக்கை அந்தாதித் தொடைபட வருவது எழு கூற்றந்தாதியாம். தண்டபாணி அடிகள் பாடிய சமயாதீத எழுகூற்றந்தாதி 87 பாடல்களையுடையது. எண்கூற்றிருக்கை, ஒன்பான்கூற்றிருக்கை என்பவற்றைப் பார்க்க. எழுபா எழுபது ஏழுவகைச் சமயங்களுக்கும், எழுவகை யாப்பினால் பப்பத்துப் பாடலாக எழுபது பாடலால் அமைந்த நூல் எழுபது ஆகும். இந்நூலில் வரும் ஏழ்வகைச் சமயங்கள்: கதிரவம் (சௌரம்), சிவனியம் (சைவம்), உமையியம் (சாத்தேயம்), மாலியம் (வைணவம்), பிள்ளையாரியம் (காணாபத்தியம்), குமரனியம் (கௌமாரம்), பொது என்பனவாம். இவ்வெழுவகை வழிபாட்டுக்கென்றே எழுநாள்கள் அமைந்ததாகக் கொள்வார் தண்டபாணி அடிகள்: எழுபா எழுபஃது என்பது அவ்வடிகளார் யாத்த ஒரு நூலாம். ஏகபாதநூற்றந்தாதி (ஓரடி நூறு முடிமுதல்) ஓரடியே நான்கடியாக வர ஒவ்வோர் அடிக்கும், பொருள் வேறுபட்டு வருவது ஏகபாதமாம். இவ்வாறு ஏகபாத, நூறு கொண்டு அந்தாதித் தொடைபெற வருவது ஏகபாத நூற்றந்தாதி எனப் பெயர் பெறும். பெரும்புலவர் அரசஞ்சண்முகனாரால் ஏகபாத நுற்றந்தாதி ஒன்று இயற்றப்பெற்றது. அதன் முதற் பாடற்கு மட்டும் நூறு பொருள் விரித்துக் கூறி உரை யெழுதியுள்ளார். ஆளுடைய பிள்ளையார் திருப்பிரம புரப் பதிகம் ஒன்றை ஏகபாதத்தியற்றியுள்ளார். ஏகபாதம் - ஓரடி. ஏகபாதத்தை ஏகத்தாள் என்பார் தண்டபாணி அடிகள். அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்தனத்தனையே என்பது அரசஞ்சண்முகனார் பாடிய ஏகபாத நூற்றந்தாதியின் முதற்பாடலாம், கடவுள் வாழ்த்து. ஏகாதசமாலை (பதினொருபா மாலை) அகவல்விருத்தம் பதினொன்றால் முடி முதல் தொடை அமைவுறப் பாடப்படுவது ஏகாதச மாலையாம். நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாம். ஏசல் ஏசல் - பழித்தல். பள்ளுநூல்களில் இடம்பெறும் மூத்தாள், இளையாள் போராட்டுரை ஏசல் நூலாக உருக்கொண்டது எனலாம். ஒரு கணவனுக்கு அமைந்த மனைவியர் இருவர் ஏசலாக எழுந்த நூல், கணவன் மனைவியர் ஏசலாகவும், இருவர் வழிபடு தெய்வ ஏசலாகவும் வளர்ந்தது. வீட்டுச் சண்டை, தெருச்சண்டை, சமயப்போர், கட்சிப் போர், நாட்டுப்போர் எனப் பெருகியும், பெருக்கியும் வரும் உலகியல், ஏசல் நூலின்மூலம் எனல் கருதத்தக்கதாம். வள்ளி தெய்வானை ஏசல். பலவூர்களுக்கு உண்டு. பாவநாசம் இறைவன் வயிராசநாயகருக்கும் உலகமை நாயகிக்கும் நடந்த ஏசலைக் கூறும் ஏசற்பிரபந்தத்தில் ஒரு செய்தி: குற்றமொன்றும் செய்யாக் கொலைவேடர் கோன் விழியைப் பற்றிப் பிடுங்கியது பாவமன்றோ? என்பது அம்மை குற்றச் சாற்று கொற்றமுறும், மாவலியைக் காவலிடை வைத்துகந்து நன்றி கொன்ற பாவமெவர் செய்வார் பணிமொழியே? என்பது ஐயன் மாற்றுச் சாற்று. ஏசியவர் ஏசிக்கொண்டே இருப்பின் என்னாம்? ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். - (திருக்குறள். 1330) என்பதுபோல், இவ்வேசலும் இறுதியில் இருமையிலா ஒருமை எய்துதலோடு நிறைவுறும். நீரும் குளிர்ச்சியும்போல் நீங்காக் குணகுணியாய்ச் சீரொன்றும் சத்தி சிவகாமி. விளங்கும் காட்சியைக் கூறுகிறது பாவநாசம் ஏசற் பிரபந்தம். கலிவெண்பாவினால் ஏசல் நூல் இயலும். அகவல் நடையிடுவதும் உண்டு. ஏற்றப்பாட்டு ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்பது பழ மொழி. மூங்கில் இலைமேலே எனத்தொடங்கும் ஏற்றப் பாட்டை முழுதுமறிவதற்காகக் கல்வியில் பெரியவரையே காக்க வைத்த கதையே ஏற்றப்பாட்டின் ஏற்றம் கூறும். ஏ - உயர்வு; ஏன், ஏணி, ஏர், ஏற்றம், ஏறு எல்லாம் உயர்வுப் பொருள். ஏறி நடையிடுதலாலேயே ஆழ்கிணற்று நீர், மேன் மட்டப்பொருளாகின்றது. ஏறி, ஏறுநடையிட அமைந்த பொறி ஏற்றம் ஆயிற்று. ஏணி ஏற்றம், மலையேற்றம், ஏற்ற இறக்கம் அறியாதவையா? ஏற்றம் பழைமைப் பொறி. ஆயின் ஏற்றப்பாட்டு என்னும் தனிப்பனுவலாட்சி பிற்பட்டதே. மருதவளங் கூறுங்கால் இடம் பெற்ற ஏற்றச் சிறப்பு, பின்னே வளர்ந்த நிலை இது. வெற்றிலைக் கொடிக்கால் என்றால் ஏற்றம்தான்! ஏற்றப் பாடல்தான்! கூட்டுறவால் குடிசைகள் குலாவும் நிலைக்களம், ஏற்றமிறைத்தல் எனலாம். வேலையை விளையாட்டாக்கும் ஏற்றம், இசைக்கும், கணக்குக்கும், பத்திமைக்கும், புனைவுக்கும் எல்லாம் இடமாதல் பாராட்டுக்குரிய நிலை. ஞானக்குறவஞ்சி பாடி ஞானக்கும்மி ஆடும் சித்தர், ஞான ஏற்றமும் ஏறுகிறாரே! பிள்ளையாரும் வாரி பிள்ளையாரும் மங்கே பெருத்தமூலா தாரம் சிறுத்தஇதழ் நாலாம். பாடல் தொடர்கிறது. இரண்டுடனே வாரி, மூன்றுடனே வாரி, நாற்பதியால் எட்டு என எண்ணிக்கையும் போடுகிறது. இராம யோகி தந்த இராசயோகி சேடன் எனப் பாட்டாளி முத்திரை யுடன் முடிகின்றது. மோனை இயைபுடைய குறளடியாக நடை யிடுகின்றது. இவ்வேற்றப் பாட்டு; குசேலர் ஏற்றப்பாட்டு 1500 அடிகளால் இயல்கின்றது! ஏற்றமில்லையா! ஐந்திணைச் செய்யுள் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலாகிய ஐவகை ஒழுக்கங்களையும் விளக்கும் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து திணைகளையும் தெரிந்து கூறுதல் ஐந்திணைச் செய்யுளாகும். உரிப்பொருள் தோன்ற ஓரைந்திணையும் தெரிப்ப தைந்திணைச் செய்யு ளாகும். - (இலக்கண விளக்கம் பாட்டியல். 89) புணர்தல் முதலிய ஐந்துரிப் பொருளும் அணிபெறக் குறிஞ்சி முதலிய ஐந்திணை இணையும் இயம்புவ தைந்திணைப் பாவே. - (முத்துவீரியம். 1043) ஐம்படை விருத்தம் (ஐம்படைப்பா) சக்கரம், வில், வாள், சங்கு, தண்டு ஆகிய ஐம்படைகளை யும் அகவல் விருத்தத்தால் பாடுவது ஐம்படை விருத்தம் எனப் பெறும். திருமால் காக்க எனும் பொருட்டாகக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஐம்படைகள் இவை என்க. சக்கரம் தனுவாள் சங்கொடு தண்டினை ஐம்படை அகவல் விருத்தமாகும். -(பன்னிருப் பாட்டியல். 291) திருவரங்கத் திருவாயிரத்திலுள்ள ஆயுத பஞ்சகம் இவ் வைம் படை விருத்தமாம். ஒருதிணைமாலை ஒரு திணையில், ஒரேதுறை குறித்த பாடல்களால் அமைந்த நூல் ஒருதிணைமாலை எனப்பெறும். திருமருங்கை ஒருதிணைமாலை என்பது இதற்கு எடுத்துக் காட்டாகும். இது, மருத்துவாழ்மலை (மருங்கூர்) முருகனைக் குறித்துக் குறிஞ்சித் திணையில் குறைநயத்தல் என்னும் துறையில் பாடபெற்ற 108 பாடல்களையுடையதொரு நூலாகும். இனி ஒரோஒருதுறையைப் பற்றிக் கட்டளைக் கலித் துறையால் பாடப் பெறுவது ஒருதுறைக்கோவை எனப் பெறும். நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒருதுறையைப் பற்றிப் பல புலவர்கள், பல புரவலர்கள் மேல் யாத்த நூல்கள் உண்டு. அமுத கவிராயர் சேதுபதிமேல் இயற்றிய ஒருதுறைக்கோவை 400 பாடல்களையுடையது. ஒருதுறைக் கோவை காண்க. ஒருதுறைக்கோவை அகத்துறையுள் ஒரேஒருதுறையினை எடுத்துக்கொண்டு பாடுவது ஒரு துறைக்கோவை எனப்பெறும். இக்கோவை கட்டளைக்கலித்துறையால் வரும். நாணிக் கண் புதைத்தல் என்னும் ஒரு துறைக்கு நானூறு பாடல்கள் பாடினார் அமிர்தகவிராயர் என்பவர். அது நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒருதுறைக்கோவை என்னும் பெயரால் வழங்கப்பெறுகிறது. அதே துறையில், அதே அளவில், இராச ராசேசுவர சேதுபதி ஒருதுறைக் கோவையும் உண்டு. அது பெரும்புலவர் இரா. இராகவரால் இயற்றப்பட்டது. நூறு பாடல்களால் அமைந்த ஒருதுறைக் கோவை பல. ஒருபது கூற்றிருக்கை ஒன்பது கூற்றிருக்கையின் மேல் வளர்ச்சியே இந்நூலாம். இவ்வகையும் பாடியவர் எண் கூற்றிருக்கை, ஒன்பது கூற் றிருக்கை என்பவற்றை அருளிய தண்டபாணி அடிகளே ஆவார். அவர் அருளியது விட்டுணு ஒருபது கூற்றிருக்கை என்பது. ஒருபா ஒருபது அகவலும், வெண்பாவும், கலித்துறையும், ஆகிய இவற்றில் ஒன்றனால் அந்தாதித் தொடையில் பத்துப் பாடல்கள் பாடுவது ஒருபா ஒருபது எனப்பெறும். வெண்பா அகவல் என்னும் இரண்டு பாவகையால் வரும் ஒருபா ஒருபது எனக் கூறும் பன்னிரு பாட்டியல் (338). வெள்ளை யாதல் அகவல் ஆதல் தள்ளா ஒருபஃதொருபா ஒருபது. முத்துவீரியம் மூவகைப்பாவைச் சுட்டும். அகவல் வெண்பாக் கலித்துறை ஆகிய இவற்றுள் ஒன்றினால் அந்தாதித் தொடையாய் ஒருபஃதுரைப்பது ஒருபா ஒருபது. - (முத்துவீரியம் .1088) ஒருபோகு முன்னிலையாலும், படர்க்கையாலும் கடவுளைப் பழிச் சுதல் (வாழ்த்துதல்) ஒருபோகு ஆகும். கலிப்பாவிற்குரிய ஆறு உறுப்புகளுள் வண்ணகமோ எண்ணோ இரண்டுமோ குறையினும் ஒருபோகு என்பதேயாம். கலி உறுப்புகள் மயங்கியும் மிக்கும் குறைந்தும் வரினும் கொச்சக ஒருபோகு என்று கூறுவர். ஒருபோகு தேவர்களைப் பாடுதலால் தேவபாணி எனவும் பெறும்; அது திருமாலுக்குரியதாம். மற்றும் சிவபெருமானுக்கும் முருகனுக்கும் உரித்தாகவும் கூறுவர். வேந்தன் அறச்செயல், குடிநிலை, அறிவுத்திறம் ஆகிய வற்றை வாழ்த்துதலும் ஒரு போகியற்கை என்பர். தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை ஒழித்திரு வகையுள் ஒன்றால் கடவுட் பழிச்சும் ஒருபோ கிருமூன் றுறுப்பும் அமைந்தொரு கியலும் நயந்திகழ் கலியுள் வண்ணகம் போதினும் எண்ணே போதினும் ஓதிய உறுப்பாற் பேர்புகன் றனரே. வரன்முறை பிறழ உறுப்பு மயங்கி மிக்கும் குறைந்தும் வருவது கொச்சக ஒருபோ காமென உரைத்தனர் புலவர். - (பன்னிருப் பாட்டியல். 206,207) தேவபாணி தெரியுங் காலை மாசறு துழாய்முடி மலைந்த சென்னி நீர்நிலம் அளந்த நெடியோன் மேற்றே. சுடர்கதிர்த் திங்கள் சூடியோற்கும் படர்திரைப் பனிக்கடல் மாதடிந் தோற்கும் உரிய காலமும் உளவென மொழிப. வேந்தன் வேண்டும் நெறிசெய் தாலும் வாய்ந்த மதியும் மரபும் வாழ்த்தலும் விதியென மொழிப மெய்ந்நெறிப் புலவர். - (பன்னிருப் பாட்டியல். 210-212) ஒரு வருக்கப்பா ஒருவகை அல்லது ஓரின எழுத்துகளாலேயே பாடப் பட்ட பாடல்களையுடைய நூல் ஒருவருக்கப்பா எனப்படும். இஃது முடிமுதல் தொடர்பொடும் வருவதும் உண்டு. தாதிதூ தோதீது, திதத்தத்தி தாதத்தி எனவரும் தனிப்பாடல்கள் இவ்வகைக்குச் சான்று. தண்ட பாணி அடிகள் இத்தகரவருக்கத்தாலே ஒரு வருக்கப்பா இயற்றி யுள்ளார். ஓரெழுத்தந்தாதி பார்க்க. ஒலியந்தாதி (ஒலி முடிமுதல்) பதினாறு காலை ஓரடியாக வைத்து இவ்வாறு நாலடிக்கு அறுபத்து நாலு கலை வகுத்து, வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் அந்தாதியாக முப்பது செய்யுள் பாடுவது ஒலியந்தாதி என்று சொல்லப்படும். ஈட்டிய ஈரெண் கலை வண்ணச் செய்யுள் இயைந்தமுப்பான் கூட்டிய நீடொலி அந்தாதி. -(நவநீதப் பாட்டியல். 39) தத்தம் இனத்தின் ஒப்புமுறை பிறழாது நாலடி ஈரெண் கலையொரு முப்பது கோலிய தொலியந் தாதி யாகும். ஈரொலி யாகிய எண்ணான்கு கலையெனச் சீரியற் புலவர் செப்பினர் கொளலே வண்ணகம் என்ப தொலியெனப் படுமே. - (பன்னிருப் பாட்டியல், 267-269) ஒலியந்தாதியையோ ஒருசாரார் பல்சந்த மாலையென்று அடக்குவர்.. என்பார் நவநீதப்பாட்டியல் உரையுடையார். அவர் வண்ணம் என்பதும் வகுப்பு என்பதும் ஒன்று என்பாரை மறுத்து, அஃது (வகுப்பு) ஆசிரிய விருத்தம் ஆதலும் அறிக என்றார். ஒலியந்தாதியை அளவியல் தாண்டகம் என்பாரும் உளர் என்பதை, மூவெட்டி ரண்டெழுத்தாய் மூன்றடி நான்காய்ச் சந்தம் பாவதன்மீத் தாண்டகமுப் பானாகமேவலொலி யந்தாதி. என்பார் பிரபந்தத் திரட்டுடையார் (74). ஒலியந்தாதியை ஒலியலந்தாதி என்றும் வழங்குவர். அவர் பதினாறு கலை எட்டுக் கலையாக வரவும் பெறும் என்றும், வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம் மூன்றையும் பத்துப் பத்தாக அந்தாதித்துப் பாடுவதும் ஒலியந்தாதியாகும் என்றும் கூறுவர். பதினாறு கலையோ ரடியாக வைத்து நாலடிக் கறுபா னாலுகலை வகுத்துப் பல்சந்த மாக வணங்கலை வைப்பும் வழுவாகந் தாதித்து முப்பது செய்யுட் பாடுவ தெட்டுக் கலையானும் வரப்பெறும் அன்றியும் வெண்பா அகவல் கலித்துறை பப்பத் தாக அந்தா தித்துப் பாடு வதுமாம் ஒலியலந் தாதி. - (முத்துவீரியம். 1082) இனி, 64 கலைச்சந்தப் பாடல்கள் 30 முடிமுதல் தொடை யமையப் பாடப்படுவதை முதல் ஒலியலந்தாதி என்றும், அதிற் பாதியளவாக 32 கலைச் சந்தப் பாடல்கள் அமைப்பதை நடுஒலியல் அந்தாதி என்றும் கூறும் வழக்குண்டு. முதலொலியல் அந்தாதி, பேரொலியல் அந்தாதி என வெவ்வேறாக இரண்டு ஒலியலந்தாதிகளை அருளியுள்ளார் தண்டபாணி அடிகள். இஃது எவரும் பாடாத அருமைப் பாடுடையதாம். முதல் என்பது முதன்மையையும் சுட்டும் அல்லவோ! ஒன்பது கூற்றிருக்கை எண்கூற்றிருக்கைக்கு மேல் வளர்ந்த வளர்ச்சியுடையது இவ்வொன்பது கூற்றிருக்கை. சிவபெருமான் மேல் ஒன்பது கூற்றிருக்கை பாடியவர் தண்டபாணி அடிகள். ஓரெழுத்தந்தாதி (ஓரெழுத்து முடிமுதல்) ஓரெழுத்தே செய்யுண் முழுமையும் வந்து அந்தாதித் தொடையால் அமையும் நூல் ஓரெழுத்தந்தாதியாகும். ஓரெழுத் தந்தாதி குற்றுயிரான் வந்த மடக்கு, நெட்டுயிரான் வந்த மடக்கு, ஒருமெய்யான் வந்த மடக்கு என்று பகுக்கப்படும். கருப்பையா பாவலர் என்பார் ஓரெழுத்தந்தாதி நூல் ஒன்று யாத்துள்ளமையைத் தமிழ்ப்புலவர் அகராதி வெளிப் படுத்துகின்றது (பக். 100).. திருச்சுழியல் ஓரெழுத்தந்தாதி, கழுகு மலை ஓரெழுத்தந்தாதி என்பவை இவ்வகைய. (தனிச் செய்யுட் சிந்தாமணி 346) (எ.டு:) தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது. -(தண்டி.45 மேற்) இது தகர எழுத்தொன்றான் வந்த செய்யுள். ஒரு வருக்கப்பா பார்க்க. கட்டளைக் கலிப்பா சங்கச் சான்றோர்க்கு முற்பட்டோர் கட்டளை அடியால் செய்யுள் செய்தலை வழக்காகக் கொண்டிருந்தனர். தொல் காப்பியர் கூறும் அடிகளுக்குரிய எழுத்து எண்ணிக்கை அதனை வெளிப்படுத்தும். அதனை வெளிப்படையாக விளக்குவது போல அமைந்தது கட்டளை என்னும் சொல்லாட்சி. கட்டளைக் கலித்துறை என்பது நேரசையில் தொடங்கும் அடிக்குப் பதினாறு எழுத்தையும் நிரையசையில் தொடங்கும் அடிக்குப் பதினேழெழுத்தையும் கொண்டிருக்கும். இக் கட்டளைக் கலிப்பா, ஓரடியை இரண்டு அரையாகவும் அரை யடியை நாற்சீரளவினதாகவும் அவ்வரையடி நேரில் தொடங்கின் பதினோரெழுத்தும், நிரையில் தொடங்கின் பன்னீரெழுத்தும் பெற்றுவரும். யாப்பால் பெற்றபெயர் நூலுக்கு ஆயிற்று. கட்டளைக் கலிப்பா நாட்டுங் காலை ஒருமாக் கூவிளம் ஒருமூன்றியைய நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய் நடந்தடிப் பாதியாய் நான்கடி ஒத்தவாய் வருவதின்று வழங்கும் நெறியே. - (தொன்னூல் விளக்கம் 236) கட்டியம் அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும்போது, அவ் வரசன் புகழை அவையிலுள்ளார் கேட்டு மகிழுமாறு, கட்டியங் கூறுவோன் கூறுவதுபோல் அமைக்கப் பெற்ற நூல் கட்டியம் எனப்பெறும். எடுத்துக்கொண்ட பாடல் அடியின் சீர் எண்ணிக்கையை அளவாகக் கொண்டு பெரிய கட்டியம் சிறிய கட்டியம் என இருவகையாகக் கூறப்பெறும். சிதம்பர அடிகளாரால் இயற்றப்பெற்ற திருப்போரூர் முருகர் பெரியகட்டியமும், திருப்போரூர் முருகர் சின்னக் கட்டிய மும் இவற்றுக்குச் சான்றாம். இவற்றுள், முன்னது எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத் தத்தானும், பின்னது வெண்செந்துறையானும் அமைந்துள்ளன. கடாநிலை கொற்றவைக்குக் கடாப்பலியூட்டுவதைப் பற்றிப் பாடுவது கடாநிலை எனப்பெறும். கொற்றவை தனக்குக் கொற்றவர் எறியும் கடாநிலை உரைப்பது கடாநிலை யாகும். வடாஅதுறை கன்னிக்கு மன்னவர் எறிந்த கடாநிலை உரைப்பது கடாநிலையாகும். - (பன்னிருப்பாட்டியல். 326, 327) கடா என்றது; எருமைக்கடாவை. கொற்றவைக்குக் கடாப்பலி யிடல் இந்நூற்றாண்டின் மையப்பகுதிவரையிலும் கூடத் தொடர்ந்தமை, பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில், பன்னீராட்டைக் கொருமுறை எருமைப் பலி யீட்டால் அறியலாம். கடிகை வெண்பா நாழிகை வெண்பா காண்க. கடைநிலை பரிசில் நீட்டித்தபோது அதனை வெறுத்த புலவன், வேந்தனது கடைக் காவலரிடம் முனிந்துரைப்பதாக வரும் நூல் கடைநிலை எனப்படும். இக் கடை நிலையை வசைப்பாட்டு என்றும், அங்கதம் என்றும் கூறுவர். கடைநிலை என்பது காணுங் காலைப் பரிசில் உழப்பும் குரிசிலை முனிந்தோர் கடையகத் தியம்பும் காட்சித் தென்ப. பரிசில் நீட்டித்தல் அஞ்சி வெறுத்தோர் கடைநின் றுரைப்பது கடைநிலை என்ப. - (பன்னிருப் பாட்டியல். 355,356) கடைநிலை எனினும் வசைப்பாட் டெனினும் அங்கதம் எனினும் ஒரு பொருள் மேற்றே. - (பன்னிருப் பாட்டியல் சங்கப்பிரதி. 161) இனிக் கடைநிலையைப் புறத்துறையில் வரும் வாயினிலை என்பாரும் உளர். அது, சான்றோர், எம்வரவினைத் தலைவற்கு உரை எனக் கடைக் காவலர்க்குக் கடைக்கண் நின்று கூறுதல் என்பர் (அகராதிகள்). புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று. - (பு. வெ. 190) என்னும் புறத்துறை, கொண்டு கூறப்பெற்றது இதுவாகும். கடைநிலை - வினாவிநிற்றல் எனப்பொருள் காணலும் உண்டு. பெரியோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தம்தீர வாயில்காக் கின்றோர் என்வர வினையிறைக் கியம்புதி நீயெனக் கடைக்கணின் றுரைப்பது கடைநிலை யாகும். - (முத்துவீரியம். 1099) பரிசில் நீட்டிக்கப் பருவரலுற்ற புலவர்கள் பாடிய பாடல்கள் பல புறநானூற்றில் இடம் பெற்றுள. கடைநிலைக்கு முன்னோடி அவை என்க (127, 382-4, 391-5, 398) கண்ணி ஈரடி ஓரெதுகையாய் அமைந்த பாவகை கண்ணி எனப் பெறும். இருமலர்களை இணைத்துத் தொடுப்பதைக் கண்ணி என்று வழங்குதல் அறிக. இக்கண்ணிவகைப் பாவால் அமைந்த நூல் கண்ணி என்று வழங்கப்பெறும். தாயுமானவர் பாடிய பராபரக்கண்ணி காண்க. ஈரடி ஓரெதுகையாய் வருவதுடன் இரண்டாமடி மடக் காகவும் கண்ணி வருவதுண்டு. அதனை வள்ளலார் பாடிய வருகைக்கண்ணி முதலியவற்றால் அறிக. கண்ணிகள் வெண்டளை பிறழாமல் வரும் என்க. கண்படைநிலை காலை, பகல், மாலை ஆகிய பொழுதுகளில் அரசியல், பொருளியல், கலையியல், மறையியல்களில் ஈடுபட்ட வேந்தனை, மகளிரோடு, இன்பத்துயில் கொள்க என்று வேண்டிப் பாடுவது கண்படைநிலையாகும். காலைபகல் மாலை யாழ்முறை அறத்தியல் அமைச்சியல் அரசியல் ஏனை இயலிசை நாடகத்திய லோடு நான்மறை முறையே எய்தினை ஊழி வாழி இனிய மகளிரோ டின்பத்துயில் கொள்கென் றிங்ஙன முரைப்பது கண்படை யாகும் - (பன்னிருப் பாட்டியல். 323) கண்படை கொள்ளுமாறு மருத்துவரும் அமைச்சரும் கூறுவர் என்க. அரசரும் அரசர் தமைப்போல் வாரும் அவைக்கண் நெடிது நாளாக வைகிய வழிமருத் துவரும் மந்திரி மாரும் முதலியோர் தமக்குக் கண்டுயில் கோடலைக் கருதி உரைப்பது கண்படை நிலையே. - (முத்துவீரியம் 1091) கண்படை நிலையே காவலன் அவைக்கண் சுற்றம் குழூஉத்துணை சூழ இருத்தலின் நெடும்பொழு துரிவரும் நித்திரை கூறலே. - (பிரபந்த தீபம். 60) கண்படை பண்ணிய கண்படை நிலை யைப் பாடாண்திணைப் பகுதியாகக் குறிக்கும். - (தொல்காப்பியம் 1036) கோயில்களில் நிகழ்த்தப் பெறும் பள்ளியறை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கெனக் கிளர்ந்த தாலாட்டு என்பவை கருதத் தக்கன. பள்ளியெழுச்சி பாடுதல் நூலுருப்பெற்றதுபோல் கண் படை நிலையும் உருக்கொண்டதாம். கணக்கு கணக்கு என்பது நூல் என்னும் பொருட்டது. மேற் கணக்கு கீழ்க்கணக்கு என்பவை நூல் என்னும் பொருளைத் தருதல் அறிந்தது. நூலாய்ந்து கற்பிக்க வல்லார் கணக்காயர் எனப்பட்டனர். கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது தமிழறிந்தது. கணக்கு என்பது பற்றிய இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் பகர்கின்றது. மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே. மேற்கணக் கெனவும் கீழ்க்கணக் கெனவும் பாற்படும் வகையால் பகர்ந்தனர் கொளலே. அகவலும் கலிப்பா வும்பரி பாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும் வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின் எள்ளறு கீழ்க்கணக் கெனவும் கொளலே. ஐம்பது முதலா ஐந்நூ றீறா ஐவகைப் பாவும் பொருணெறி மரபிற் றொகுக்கப் படுவது மேற்கணக் காகும். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும். - (பன்னிருப்பாட்டியல். 344-348) கீழ்க்கணக்கு, மேற்கணக்கு காண்க. கதை நல்லதங்காள் கதை, சித்திரபுத்திரநாயினார் கதை, கட்ட பொம்மன் கதை, கோவலன் கதை, தேசிங்குராசன் கதை முதலிய கதைகள் எளிய இலக்கியங்களாக நடமாடுகின்றன. இக் கதைகளுக்குப் பெருங்கதை என்னும் பெயர் வழிகாட்டி எனலாம். சிலப்பதிகாரம், மணிமேகலையில் வரும் கதைப்பகுதிகள் காதை எனப்படுவதும், காதை என்பது கதைபொதி பாட்டு எனப்படுவதும் கருதத்தக்கவை. மேலே கூறப்பட்ட கதைகள் கலித்தளையால் அமைந்த ஈரடிக்கண்ணிகளால், தொடர்ந்து கதை கூறுவதாக இயல் கின்றன. இவ்வமைப்பு எளிமையும், இனிமையும், வருணைனையும் கொண்டு நடப்பதால் கற்றறியா மாந்தரும் கேட்டுச் சுவைத்து மகிழ்வுறுதலை நாட்டுப் புறங்களில் இன்றுங்காண முடிகின்ற தாம். கதைமொழிமாற்று கதைமொழிமாற்று இன்னதென்பதை, ஏற்றமின்னும் தானுமாய் மின்சொல்லத் தானுமுறப் பெண்ணாணுக், கானாற் கதைமொழி மாற்றாம். எனப் பிரபந்தத்திரட்டுக் கூறுகின்றது (64) மின்னும், தானும் என்பது; மனைவியும், கணவனும், அல்லது தலைவியும், தலைவனும், என்பதாம். ஏற்ற என்பதால் எதிரிட்டு வந்தார் என்பது இல்லையாம். அவள் கூறும் கதையைக் கேட்டு அவன் மறுமொழி கூறலும், அவன் கூறும் கதையைக் கேட்டு அவள் மறுமொழி கூறலும் கதைமொழிமாற்று என்பதாம். விடுகதை, அளிப்பான் கதை என்னும் வழக்குகளை நோக்கினால் கதைமொழிமாற்று என்பது தெளிவாகும். விடுகவி காண்க. கப்பல் பாட்டு கப்பற்சிந்து, ஓடப்பாட்டு, படகுப்பாட்டு, ஏலேலோ பாட்டு என்பனவும் இதுவே. இப்பாட்டு இருவராலோ, இருகுழுவினராலோ பாடப் படுவதாய் அமையும். முன்னே பாடுபவர் பாட்டைப் பாடி, ஏலேலோ என இசைப்பார்; பின்னே பாடுபவர், ஐலசா என்பர். இவ்வமைப்பும் ஓரிடத்தில் துடுப்பை ஓரொழுங்கில் தள்ளுதற்குப் பயனுடையதாம். கற்றூண், மரத்தடி ஆகிய வற்றைப் புரட்டுவார் முன்பாட்டும், பின்பாட்டும் பாடிக் கொண்டு செயலாற்றுதல் இதனை விளக்கும். கப்பலில் வரும் பொருள்வகை, கப்பல் சென்று வந்த நாடுகள், கப்பல் அமைப்பு ஆகியவையும் கப்பல் பாட்டில் இடம்பெறும். திருமண ஏசல் பாட்டும், கப்பல் பாட்டாக விளங்கு கின்றது. மாப்பிள்ளையை ஏசல், மகட்கொடையாளரை (சம்பந்தியை) ஏசல், மணமகளை அண்ணி கொழுந்தியர் ஏசல் எனவும் ஏசற்பாட்டுருக்கொள்ளும். தெப்பத் திருவிழாக்களில் இறைமைச் செய்தியைத் தாங்கிக் கப்பல் பாட்டு வெளிப்படுதல் பல இடங்களில் காணக்கூடிய தாம். கருமாணிக்கன் கப்பற்கோவை என்பதொரு நூலுண்மை அறியத்தகும். இராமலிங்கக் குருக்கள் என்பார் இயற்றிய மதுரை மீனாட்சி கப்பற் சிந்து என்னும் நூலின் தொடக்கம்: ஏலேலோ - ஏலேலோ - ததினம் ஏலேலோ - ஏலேலோ, ஆத்தாளே ஈசுவரியே - எங்கள் அம்பிகையே அண்டமெல்லாம் பூத்தாளே நின்மீதில் - நன்றாய்ப் புகழ்ந்துரைக்கும் கப்பலுக்கு - ஏலேலம். முடுகுகளில் ஒன்று குடையாணி குமிழாணி கூராணி தங்கம் குச்சாணி உச்சாணி அச்சாணி வெள்ளி கடையாணி தடையாணி சடையாணி செம்பொன் கணக்கடங் காததோர் தங்கத் தகட்டால் இடைகள் தெரியாமலே கோட்டித் திருத்தி இரத்தினக் கற்களை மேலே யமைத்த முடியாணி முள்ளாணி சுள்ளாணி பூட்டி மூவாறு பாய்மரம் மேலே நிறுத்தி - ஏலேலம். கலம்பகம் பல்வேறு பாவும், பாவினமும், உறுப்பும், கலந்து வர லுடைமையால் கலம்பகம் என்னும் பெயர் பெற்றதாம். பலவகை மலர்மிடைந்த தொடையைக் கலம்பகம் என்று வழங்கினர். அது கதம்பம் என வழக்குற்றது. கலம், பன்னிரு மரக்கால் என்னும் முகத்தலளவைக்கருவி. பகம் அதிற்பாதியாம் ஆறுமரக்கால். இப்பன்னிரண்டும் ஆறுமாகிய 18 உறுப்புகளை உடைமையால் கலம்பகப் பெயர் பெற்றதென்றும் கூறுவர். ஒருபோகும் வெண்பாவும், கலித்துறையும் முதற் கவியுறுப் பாக முற்கூறப்பெற்றுப், புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புகளும் பொருந்த மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை என்னும் இவற்றால் இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் முழுதுறக் கூறல் கலம்பகமாகும். இக்கலம்பகம் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண் ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வணிகர்க்கு ஐம்பதும், உழவர்க்கு முப்பதுமாகப் பாடுதல் வேண்டும் என்பர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பேணிக்கொள்ளாப் பிழையால் பிறந்த கேட்டுச் சான்றாம் இது. ஒருபோகு வெண்பாக் கலித்துறை உறமுன் வருபுய மதங்கம் மானை காலம் சம்பிர தம்கார் தவங்குறம் மறம்பாண் களிசித் திரங்கல் கைக்கிளை தூது வண்டுதழைமேற் கொண்டெழும் ஊசல் மடக்கு மருட்பா வஞ்சி விருத்தம் அகவல் கலியினம் அகவல் விருத்தம் வஞ்சி வஞ்சித்துறை வெண்டுறை மருவி இடையிடை வெண்பாக் கலித்துறை நடைபெற் றந்தாதி மண்டலித் தாங்கலம் பகமே. - (இலக்கண விளக்கம் பாட்டியல். 51) மூலம் ஒருபோகு வெண்பாக் கலித்துறை மூன்றுறுப்பாய் ஏலும் புயத்தோட்டம் மானைபொன்னூசல் இயமகம் விற் கோல மறங்குறம் சிந்துநற் கைக்கிளை கொண்டதூது கால மதங்கி களிசம் பிரதம் கலம்பகமே. - (நவநீதப் பாட்டியல். 33) கலம்பகத்தில் வரும் பாடல்தொகை வருமாறு: அதுவே, இமையவர்க் கொருநூ றிழிபைந் தையர்க் கமைதரும் அரசர்க் காகும் தொண்ணூ றமைச்சருக் கெழுபான் வணிகருக்கைம்பான் அமைத்தனர் பின்னவர் தமக்கா றைந்தே. - (இலக்கண விளக்கம் பாட்டியல். 53) இனிப்பிறர் பிறர்க்கும் கலம்பகம் வகுக்குமாற்றையும், அவர்க்குப் பாடல் தொகையாமாற்றையும் பலர் பலவாறு கூறுவர். வருமாறு: தேவர்க்கும் முனிவர்க்கும் காவல் அரசர்க்கும் நூறு தொண்ணூற் றைந்துதொண் ணூறே ஒப்பில் எழுப தமைச்சிய லோர்க்குச் செப்பிய வணிகர்க் கைம்பது முப்பது வேளா ளர்க்கென விளம்பினர் செய்யுள். - (பன்னிருப் பாட்டியல். 43) தேவர்க்கு நூறு முனிவர்க் கிழிவைந்து சேனியத்தைக் காவற்குரிய அரசர்க்குத் தொண்ணூறு காவலரால் ஏவற்றொழிலவற் கெண்ப தெழுப திருநிதியம் மேவப் படுமவர்க் கைம்பது முப்பது மிக்கவர்க்கே. - (நவநீதப் பாட்டியல். 35) அமரர்க்கு நூறந் தணருக் கிழிவைந் தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம்பட்ட முடிபுனையா மன்னர்க் கெண்பது வணிகர்க் கெழுபது மற்றை யோர்க்குத் துணியில் அறுபத் தஞ்சு சொல்லும். அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத் தொண்ணூ றெண்ப தெழுப தறுபது விண்ணோர் தமக்கு நூறென விளம்பினர். அமரர்க்கு நூறந் தணருக் கிழிவைந் தரசர்க்குத் தொண்ணூ றன்றி முடிபுனையாப் புதல்வருக் கெண்பது புகலுங் காலே. தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே. - (நவநீதப் பாட்டியல். 35) கலம்பகம் மண்டலித்துப் பாடப்பெறும். மண்டலித்துப் பாடுதல் என்பது அந்தாதித்தொடையால் செய்யுட்கள் அனைத்தையும் வகுத்து ஈற்றுச் செய்யுள் ஈறு, முதற் செய்யுள் முதலோடு அந்தாதியாய் அமையப்பாடுதல். கலம்பகமாலை ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதலாகக் கூறப்பெறும் கலம்பக உறுப்புகளுடன் ஒருபோகு, அம்மானை என்னும் இரண்டும் ஒழிந்து எஞ்சியவெல்லாம் இனிதுவரின் அது கலம்பகமாலை என்னும் பெயர்பெறும் (கலம்பகம் காண்க). ஒருபோ குடனே அம்மனை நீக்கி வெள்ளை முதலா எல்லா உறுப்பும் தள்ளா இயலது கலம்பக மாலை. ஒருபோ கம்மனை ஒழித்துவெண் பாடுதற் கருதிற் பேரது கலம்பக மாலை. - (பன்னிருப் பாட்டியல். 260-261) கலம்பகமாலையைப் பன்மணிமாலை என்றும் கூறுவர்: பன்மணி மாலை பகரும் விதிமுறை ஒருபோ கம்மானை ஊசல் ஒழிய ஏனை உறுப்புகள் எல்லா வற்றுளும் அவ்வாறு செய்யுள் அறைவர்கற் றோரே. என்பது பிரபந்ததீபம். (29). கலம்பகமாலை என்னும் பெயரீடு, பலபூக்கள் கலந்து நெருங்கிய கலம்பகமாகிய மாலை. என்னும் பெரும்பாணாற்றுப்படை உரையையும், களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலந் தொடையல் கொண்டு. என்னும் தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பாடலையும் (திருப்பள்ளி. 5) நினைவுறுத்துவதாம். கலித்தொகை. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், என்னும் அடிப்படை அலகுகளையும் வண்ணகம், அம்போதரங்கம் என்பனவற்றையும் உடையது கலி. இக்கலிப்பாவகையால் அமைந்த நூல், கலித் தொகைப் பெயர் பெற்றது. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை இவ்வகைப்பட்டதே. இக்கலித்தொகை, தத்துவராயர் அடங்கன் முறைகளுள் ஒன்றாக மெய்ப்பொருள் கூறுவதாக அமைந்துளது. கலித்தொகை தொகைநிலை எனவும் படும். தொகைநிலை என்பன தோன்றக் கூறில் கலியடி செய்யுள் கலித்தொகை யாமே. என்பது பிரபந்ததீபம் (51). கலியந்தாதி வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவின எழுத் துக்களும் அளவே அமைந்து, குறிலுக்குக் குறிலும் நெடிலுக்கு நெடிலும் பொருந்தி நான்கு கலைகொண்டது ஓரடியார், அவ்வண்ணம் நான்கடியாகியும், ஒருவகை ஒலியே உடைய தாகியும், முப்பத்திரண்டு கலையொடு பொருந்தியும் குறிலும் நெடிலும் இணைந்துவரின் அவ்வாறே இணைந்தும் முப்பது கட்டளைக்கலிகள் அந்தாதி முறையில் வருமாயின் அது கலியந் தாதி எனப்பெயர் பெறும். வல்லினம் மெல்லினம் இடையின எழுத்துப் புல்லி மருங்கு போகா தொன்றிக் குறிலெனில் குறிலே நெடிலெனில் நெடிலே பொருந்தி நாற்கலை கொண்டோ ரடியாய்த் திருந்தும் இவ்வகை நான்கடி யாகியும் ஓரொலி யாகியும் எண்ணான் காகிய கலையொடு பொருந்தியும் குறிலும் நெடிலும் முறைமுதல் வரினும் அவ்வெழுத் தாகியும் இப்பரி சியன்ற முப்பது கட்டளை மிக்கது கலியந் தாதி யாகும். - (பன்னிருப் பாட்டியல். 265) இனி வெண்கலிப்பாவாகவும் சிறுபான்மை வரும் என்பர்: வெண்கலி யுஞ்சில சிறுபான்மை வருமே. - (பன்னிருப்பாட்டியல். 266) இது, கலித்துறை அந்தாதி எனவும் பெறும். திருக்கருவைக் கலித்துறை அந்தாதி எடுத்துக்காட்டாம். இனிக் கட்டளைக் கலித்துறை அந்தாதி என்பதும் இதுவே. திருவரங்கத் திரு வாயிரத்தில் இடம் பெற்றுள்ளது, கட்டளைக் கலித்துறை அந்தாதி. கலியாண சுந்தரம் சொந்தத்தின் மானைக் கல்யாண மணங்குறி வென்றே செய்தலான் கலியாண சுந்தரம் என இதன் இலக்கணத்தைப் பிரபந்தத் திரட்டுக் கூறுகின்றது (44). உரிமையமைந்த பெண்ணொருத்தியை மணக்கத் திட்ட மிட்டு அவளை மணந்து வெற்றிகொண்ட செய்தியைப் பற்றிக் கூறுவது கலியாண சுந்தரம் எனப்படும் என்கின்றது. உரிமையமைந்த பெண்ணே எனினும் அவளை அடைதற்கு இருந்த தடைகள் இடையூறுகள் ஆகியவற்றை வெற்றி கொண் டமையும், அதன்பின்னர் உற்றார் உறவினர் பகைமை நீங்கிப் பாங்குற மணமுடித்து வைத்து மகிழ்ந்த சிறப்பையும் கூறுவதாக இந்நூல் அமைந்ததாகலாம். கலிவெண்பா கலிவெண்பாவால் அமைந்த நூல் கலிவெண்பா எனப் படும். அக்கலிவெண்பா ஒரோ ஒன்றாகவும் நூலாதற்கேற்ற நெடியதாகவும் இருக்கும் என்க. குமரகுருபர அடிகள் இயற்றிய கந்தர் கலிவெண்பா, பரஞ் சோதியார் பாடிய திருவிளையாடல் போற்றிக் கலி வெண்பா முதலியன குறிப்பிடத்தக்கன. சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாம்தில்லைச் சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே. என விளித்து, வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் எனச்சுட்டி. சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க வாழ்ந்திடுக நின்றாண் மலர். என விண்ணப்பித்து நிறைகின்றது வள்ளலாரின் விண்ணப்பக் கலிவெண்பா, அது 417 கண்ணிகளைக் கொண்டுளது. வேறுசில பனுவல்களும் கலிவெண்பாவால் பாடப்படுவ துண்டெனினும் அவை வேறுபிற பெயர்களைக் கொண்டன வாக, இவ்வொன்றும் பாவகையால் பெயர் பெற்றதாம். கலி வெண்பா - பன்னீரடியின் மிக்குவரும் நெடிய வெண்பா. கவசம் (மெய்ம்மறை) போரில் பாதுகாப்பாகக் கொள்ளப்பட்ட ஒரு கருவி மெய்ம்மறை என்னும் கவசமாகும். இதனை மெய்புகு கருவி என்பர். மெய்ம்மறை என்றும் கூறுவர். வீட்டை வளிமறை என்பது கருதத்தக்கது. உடலுக்கு வரும் ஊறுபாட்டை விலக்கிக் காப்பதற்குக் கவசம் இடுமாப்போல, உள்ளத்திற்கு வரும் ஊறுபாட்டை விலக்கிப் பாதுகாக்கும் வண்ணம் இறையருளை நாடிப் பாடும் நூல் கவசம் எனப்பெற்றது. மணிமொழியார் சுட்டும் திருநீற்றுக்கவசம் என்னும் ஆட்சி (46.1) இறையருள் நாடிய கவச ஆட்சிக்கு எடுத்துக் காட்டாம். கவசம் பெருநூல்களின் பகுதியாக இருந்து தனி நூலுருக் கொண்டமை காசிகாண்டச் சக்தி கவசம், பாகவத நாராயண கவசம் முதலியவற்றால் விளங்கும். இந்நாளில் கவசங்கள் பல விளங்குகின்றன. அவற்றுள் கந்தர்சட்டி கவசம் பெருவழக்கினது. அது நிலை மண்டில ஆசிரியப்பாவான் அமைந்தது. அறுசீர் விருத்தத்தால் கவசம் அமைதல் பாம்பன் குருதாச அடிகள் இயற்றிய சண்முக கவசத்தால் அறியலாம். உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆகிய முப்பது எழுத்துகளில் தொடங்கும் முப்பது பாடல்களை யுடையது அது. கழிநெடில் ஐஞ்சீரடி, நெடிலடி; அதன்மேற் சீர்களையுடைய அடி கழிநெடிலடி; கழிநெடிலடியால் அமைந்த நூல் கழிநெடில் எனப் பெயர் பெற்றது. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பத்துப் பாடல்களையுடையதொரு சிற்றிலக்கியம் குறுங்கழி நெடில் எனப்படுகிறது. 14 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பப்பத்துப் பாடல்களையுடைய இரண்டு சிற்றிலக்கியங்கள் பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலடியாசிரிய விருத்தம் எனவும், நெடுங்கழிநெடில் எனவும் வழங்கப்படுகின்றன. இம்மூன்றும் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளாரால் அருளப்பட்டவை. கழிநெடில் வகையிலே உச்சியை எட்டும் ஒருபாடல் வள்ளலார் அருளியது. அது 224 சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தான் அமைந்தது. அத்துணைச் சீர்களையுடைய அடிகளை எதற்காக யாத்தார் அடிகள்? ‘இறைவன் திருவடிப் பெருமைக்கோர் அளவும் உண்டோ? என்பதைக் காட்டுமாப் போலத் திருவடிப்புகழ்ச்சிக்கென யாத்தார். பொருளால் மட்டுமன்றி, அடிகளாலும் அடிச்சிறப்பை விளக்க அடிகள் கொண்ட குறிப்பு இஃதாம்; முதல் திருமுறை முதல் பாட்டு என்பதன் பொருள் என்ன? முதன்மையும், முதன்மையில் முதன்மையும் சுட்டுவது மட்டுமோ? கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களில், ஏழு குறள்களில் தாளும் அடியும் தலைவைத்து வழிபட்ட வள்ளுவர் உள்ளுறை விளக்கக் குறிப்பும் ஆகலாமே! களவழி போர்க்களச் செய்தியைக் கூறும் நூல் களவழியாம். களவழி நாற்பது என்றொரு நூல் கீழ்க்கணக்கில் உள்ளது. போர்க்கள நிகழ்ச்சியையே புனைந்துரைக்கும் அந்நூல் பொய்கையாரால் பாடப்பட்டதாம். அது வெண்பா யாப்பினது. போர்க்களம், செருக்களம், மறக்களம், அமர்க்களம், களம் எனவும் பெயர்பெறும். மறக்களவஞ்சி, செருக் களவஞ்சி காண்க. ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. என்பதொரு களவழிப்பாட்டு. களவழி நாற்பது என்பது பெயராயினும் அதில் நாற்பத் தொரு பாடல்கள் உள. புறத்திரட்டில் வரும் 1427 ஆம் பாடல் களவழி என்றிருப்பினும் நூலில் இடம் பெறவில்லை. 41 பாடல் களுமே, களத்து என்றே முடிநிலையடைகின்றன. அவற்றுள் 36 பாடல்கள் அட்டகளத்து என்றும், 3 பாடல்கள் பொருத களத்து என்றும், ஒவ்வொரு பாடல் வீழ்ந்தகளத்து பெய்த களத்து என்றும் முடிகின்றன. களத்து என்னும் முற்றாட்சி யையே புறத் திரட்டுக் கூறும் பாட்டும் கொண்டுள்ளது. சிவந்த களத்து என்பது அதன் முடிநிலையாம். களவுகண்ணி காதல்வயப்பட்ட தலைவன் ஒருவன், பேராசையால் நள்ளிருள் போதில் தலைவியைக் களவிற்கொள்ளுமாறு செல்லுதலைக் கூறுதல் களவுகண்ணி என்பதாம். இதனை, மானாசை யாலிறைவன் கங்குலிலே யார்களவிற் செல்லுதலே, சாலுங் களவுகண்ணி தான். என்கிறது பிரபந்தத் திரட்டு (69). களவிற் செல்லுங்கால் ஏற்படும் இடையூறுகளை விரித் துரைத்து அத்தடைகளையெல்லாம் வெற்றியடைந்த வர லாற்றை விளக்குவதாக இப்பனுவல் அமையலாம். கண்ணாற் சிறைகொண்டு அகப்படுத்துதலைக் கண்ணி என்றார். இன்றும் கண்ணிபோடுதல், தூண்டில் போடுதல், வலைவீசுதல் என வழக்காறுகள் உண்மை ஒப்பிடக் கூடியதாம். களவிற் புணர்ச்சித்தடை, வருந்தொழிற்கு அருமை என்றும் இடையூறு கிளத்தல் என்றும் கூறப்படும். இரவரன் மாலைய னேவரு தோறும் காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் நீடுதுயில் எழினும் நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றோள் இன்றுயில் என்றும் பெறாஅன் பெயரினும் என்றுவரும் குறிஞ்சிப்பாட்டும் (239-243), தாயும் நாயும் ஊருந்துஞ் சாமை காவலர் கடுகுதல் நிலவுவெளிப்படுதல் கூகை குழறுதல் கோழிகுரற் காட்டுதல் ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன் வருந்தொழிற் கருமை பொருந்துத லுரிய. என்று வரும் அகப்பொருள் விளக்கமும் (161) கருதத்தக்கன. கற்பனை விலாசம் (கற்பனை முகவம்) தலைவியின் அடிமுதல் முடிவரை உறுப்புகளைக் கற்பனை நயம் செறியப் பாடி, அவள் மறையோர் வேள்வியில் தோன்றி வந்தவளாகச் சொல்லி, தொடக்க முதல் முடிவு வரை நூலைச் சுவைபெற யாப்பது கற்பனை விலாசம் எனப்படுவதாம். ஆதிமுதல் அந்தம்வரை பாதாதி கேசத்துக் கோதிய கற்பனை உண்டாக்கி - கோதை மறையோர்செய் வேள்விதனில் வந்ததாய்அப்பா(டு) அறிகற் பனைவிலா சம். என்பது பிரபந்தத்திரட்டு. அப் பாடு - அப் பாடப்படும் நூல். கன்னிமயக்கம் தன் பேரழகால் கன்னியொருத்தியைத் தன்னவளாக்கித் தன்னகத்துச் சேர்ப்பது கன்னிமயக்கம் என்னும் பனுவலாகக் கூறப்படும். பூவையைத், தவத்தால் எழில்பெற்று மாரன்போல் வந்து தன் அகத்தாக்கல் கன்னிமயக்கம். என்பது பிரபந்தத்திரட்டு (63). அகத்தாக்கல் என்பது மனத்தாக்கலும், மனைக்கண் ஆக்கலு மாம். முன்னது களவும், பின்னத கற்பும் என்க. கனகாபிடேகம் (பொற்கிழி வழங்கல்) தன்னால் காதலிக்கப்பட்டாளொரு தலைவியின் அணுக்கத் தோழியர்க்குத் தலைவன், பொற்கிழிவழங்கி அன்பு வெளிப் படுத்தல் கனகாபிடேகம் எனப்படும் இலக்கியமாம். இதன் இலக்கணத்தை, வாள்மின்னார், பாங்கியர்க்கு வேந்தன் கனகமுடி பாய்விடலாம் கனகா பிடேகம். என்று கூறும் பிரபந்தத்திரட்டு (25). காஞ்சிமாலை பகைவர் ஊர்ப்புறத்துக் காஞ்சிப்பூமாலை சூடி ஊன்றலைக் கூறுவது காஞ்சி மாலையாம். காஞ்சி புனைந்து கருதார் ஊர்ப்புறம் ஊன்றலை உரைப்பது காஞ்சி மாலை. - (முத்துவீரியம் 1074) காஞ்சிப்பூ மாலையே காஞ்சித்தார் சூடிக் கருதலர் ஊர்ப்புறம் கைப்பற்றலை செப்பலபிரபந்ததீபம். 46) காஞ்சி என்னும் புறத்திணையின் ஊன்றுதல் என்னும் துறைவழியே பிறந்தது இக்காஞ்சி மாலை என்னும் இலக்கிய வகையாம். காஞ்சி கையறுநிலைப் பொருளதாதல் மறைமலை யடிகளார் இயற்றிய சோமசுந்தரக் காஞ்சியால் தெளிவுறும். நிலையாமை பற்றிக் கூறுவதும் காஞ்சியே என்பது தொன் னெறி. காதல் காதல் என்பது அன்பின் பல்வேறு படிநிலைகளை அடக்கிக்கொண்டிருக்கும் சொல். மாதர், காதல் என்பது தொல்காப்பியம். மாதர் என்பதற்கே காதல் எனப் பொரு ளுண்மையைத் தெளிவிக்கும் அது. காதல் என்னும் பனுவல், பால்வேற்றுமையும் பருவ வொற்றுமையும் உடைய இருவர் அன்பைக் கூறுவதாக இலக்கிய வாழ்வுற்றது. களவுக்காதல், கற்புக்காதல் என இரு வகைப்பட்ட இயலினும் ஒன்றன்மேல் ஒன்று தொடர்ச்சி யாகவும், முதிர்ச்சியாகவும் திகழ்வதேயாம். காதல் நூல்களுள் பெருகப்பயின்று வருவதும், சுவை மிக்கதெனப் பாராட்டப்படுவதும் நாகம கூளப்ப நாயக்கன் காதல் என்பதாம். அதனை இயற்றியவர் சுப்பிரதீபக் கவிராயர் என்பார். பாட்டுடைத்தலைவன் மலை ஆறு முதலிய பதின் உறுப்பு களையும், பிற சிறப்புகளையும் கூறித் தொடங்கும் அந்நூல் அவன் கொலுவிருத்தல், வேட்டைக்குச் செல்லுதல், நற் குறி காட்டல். வேட்டையாடல், சோலையை அடைதல், தலைவியைக் காணல், அவளை வேண்டல், களவில் மணம் புணர்தல், தலைவன் ஊருக்குத் திரும்பல், தலைவி புலம்பல், தோழியர் கூறுதல், தாயின் மகிழ்ச்சி, மகளை வாழ்த்துதல், தலைவனை அடைதல், வாழ்த்து என நூல் நிறைகின்றது. 374 கண்ணிகளையுடையது அந்நூல், கண்ணிகள் வெண்டளை யாப்பின. கொடுமணல் கந்தசாமிக் காதல், பொன்னையன் காதல் என்பவை வெண்டளையன்றிப் பிற தளைகளையும் கொண்டு ஈரடிக் கண்ணியாய் இயல்கின்றன. காப்பியம் (பாவிகம்) காப்பியம், காவியம் என்பன ஒரு பொருளன. ஐம் பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்பன காப்பிய நூல்கள் இவையெனக் கூறும். பெருங்காப்பியம் என்பன அறமுதல் நான்கு பொருளும் உரைப்பன என்றும், காப்பியம் என்பன அந்நாற் பொருள்களுள் ஒன்று குறைய உரைப்பன என்றும் பாட்டியல் நூல்கள் கூறும். காப்பியம் என்பது கருதறம் பொருளொடு இன்பம் இவற்றிலொன் றெஞ்ச இயம்பலே. என்பது பீரபந்ததீபம் (91) அறமுதல் நான்கிற் குறைபா டுடையது காப்பியரு மென்று கறுதப் படுமே. என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் (11). ஆனால் வெண்பாப் பாட்டியலோ அறம் முதலாம் நாற்பொருளில் குறையாது பிற உறுப்புகள் சில குறைந்து வருதலையே காப்பியம் என்று கூறும். கருதுசில குன்றினும் காப்பியமாம் என்பர் பெரிதறமே யாதிபிழைத்து - வருவதுதான் காப்பியமாகும். என்பது அது (43). சிதம்பரப்பாட்டியலும் (16) இவ்வாறே கூறும். இவண் காப்பியம் என்றது சிறுகாப்பியங்களை. அவை சூளாமணி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி என்பன. காப்புமாலை தெய்வங்காக்கவென மூன்று பாட்டானாதல் ஐந்து பாட்டானாதல் ஏழு பாட்டானாதல் பாடுவது காப்பு மாலையாம். காப்பு மாலையே தெய்வம் காக்கவென மூன்றைந்தேழ் செய்யுளின் மொழிபகற் றோரே - (பிரபந்ததீபம். 35) காப்புமூன் றைந்தேழ் காப்பு மாலையாம். - (இலக்கண விளக்கம் பாட்டியல். 72) கடவுள் காத்தலாக ஒருமூன் றைந்தே ழானும் அறைவது காப்பு மாலையெனப்பெயர் வைக்கப் படுமே. - (முத்துவீரியம். 1091) பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெறும் காப்புப்பருவம் இதனைத் தோற்றுவித்திருக்கலாம். ஏனெனில் பாட்டுடைத் தலைவனைக் காக்கவென்றே இயல்வது அது. காமரசமாலை (காமச்சுவை மாலை) காமச்சுவையினை நயப்பக் கூறுதல் காமரசமாலையாம். சீலமாம் கொக்கோகம் செப்புதலே காமரச மாலை. என்று இதன் இலக்கணம் கூறுகிறது. பிரபந்தத்திரட்டு (38). கொக்கோகம் எனப் பெயரியதொரு நூல் அதிவீரராம பாண்டியனால் செய்யப்பட்டதாம். கார்எட்டு காரின் தோற்றஞ் செயல்களை இறைவன் தோற்றஞ் செயல்களுடன் ஒப்பிட்டு எட்டு வெண்பாக்களால் பாடும் சிறு நூல் கார் எட்டு என வழங்கப்படுகிறது. கார் எட்டு நக்கீரதேவ நாயனாரால் அருளப்பெற்ற தென்பதைப் பதினோராம் திருமுறையுள் காண்க. காவடிச்சிந்து முச்சீர் இரட்டையும், முடுகும், தனிச்சீர் எடுப்பும் உடைய அமைப்புடையது காவடிச்சிந்து ஆகும். காவடிச் சிந்து என்றதும் நினைவுக்கு வருபவர் சென்னிகுளம் அண்ணாமலையார் ஆவர். அவர் காவடிச்சிந்துகளைக் காண்க. மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித் துரையார் பாடிய காவடிச்சிந்தும் உண்டு. திருப்புகழ், தேவார, திருவாசக நாலாயிரப்பனுவல்களாகத் தமிழிசை வெளிப் பட்டும், (11) தமிழிசை என ஒன்றில்லை என்பார் இரங்கத்தக்கார். அவர் அடியார்க்கு நல்லார் அடிப்பொடியைத் தொட்டுப் பார்த்ததும் இல்லாரேயாவர். சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்புஞ் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையிற் புனை தீரன் அயில் வீரன். என்பது கோயில்வளம் என்னும் காவடிச்சிந்தின் முதலடி பாடியவர் அண்ணாமலையார். வேலா மலைக்குமரி பாலா தமிழ்க்கருள்செய் மீனுலவுங் குளிர்வானதி தந்திடு மெய்யனே - புகழ் வானளவுஞ் சிவஞான புரந்திகழ் துய்யனே. என்பது பாண்டித்துரையார் காவடிச்சிந்தில் முருகக் கடவுள் வாழ்த்தின் ஈற்றடி. கானவேட்டம் நாற்படையும் புடைசூழ வேட்டைக்குச் சென்ற வேந்தன் ஒருவன், காட்டில் வெதும்ப அலைந்ததனால் மயங்கிக் காட்டு முயலுக்கும், யானை முதலியவற்றுக்கும் அம்பேவித் திகைப்புற; அவ்வேளையில் ஆங்கொரு நங்கையைக் கண்டு களிப்புற்ற செய்தியைக் கூறுதல் கானவேட்டம் என்பர். ஆனைபரி சேனைபுடை யாகவேட் டஞ்சென்று கானலி னான்மயங்கிக் கானமுயல் -ஆனையிவைக் கம்பேவி யேதிகைத்த அப்போது மானொருத்தி இன்பமுறல் கன்னிவேட்ட மே. - (பிரபந்தத் திரட்டு 49) கீர்த்தனம் (சீர்த்தனம்) சீர்த்தி என்பது மிகுபுகழ்; சீர்த்தி - கீர்த்தி யானாற் போல், சீர்த்தனம் கீர்த்தனம் ஆயிற்று. சீர்த்தி, சீரர் என்னும் பெயர்களே கீர்த்தி, கீரர் என ஆயிற்று என அறிக. சிறந்த இசையமைப்புடைய பாடலே சீர்த்தனமாம். இது கீர்த்தனை, சங்கீர்த்தனம் எனவும் வழங்கப்படும். இவ்வகையில் இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை என்பன குறிப்பிடத்தக்கன. இக் கீர்த்தனைகளின் இடை இடையே உரைநடையும் இடம் பெறும். முந்தை நாடகமும் தெருக்கூத்தும் இவ்வகையிலேயே இயன்றன. பசனைக் கோயில்கள் என்னும் பெயரால் கோயில் விளங்கிய இடங்களிலெல்லாம் பசனைக் கீர்த்தனங்கள் மிக வழங்குகின்றன. கிறித்தவர்களும் வழிபாட்டுக்கு இக்கீர்த்தன முறையைக் கையாண்டனர். சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்னும், வேதநாயகர் நூல் இவ்வகையில் சமயப் பொதுமை வாய்ந்து திகழ்கின்றது. கீழ்க்கணக்கு குறைந்த அடிகளை உடையனவாய், அறம்பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறும் நூற்றொகுதி கீழ்க்கணக்கு எனப்பெறும். குறைந்த அடிகள் என்பது ஐந்தடியின் ஏறாத அடி என்க. அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத் திறம்பட வருவது கீழ்க்கணக் காகும். - (பன்னிருப் பாட்டியல். 248) கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாவால் அமைந்தவை என்பது கருதத்தக்கது; கீழ்க்கணக்கு நூல்கள்: நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. குடைவிருத்தம் (குடைப்பா) வேந்தர் வெண்கொற்றக் குடையைக் குறித்து ஆசிரிய விருத்தம் பத்துப் பாடுவது குடைவிருத்தமாகும். - (நவநீதப் பாட்டியல். 41) குடைவிருத்தம் போன்றவற்றைத் தானை பெற்ற தலைமை யோரையன்றி ஏனை முன்னோரைச் சொல்லுதலும் உண்டு என்று இப்பாட்டியல் கூறும். குதிரை விருத்தம் (குதிரைப்பா) குதிரையைப்பற்றி ஆசிரிய விருத்தம் பத்துப்பாடுவது குதிரை விருத்தம் ஆகும். - (நவநீதப் பாட்டியல். 41) குதிரையைப் பற்றி வெண்பாவினால் பாடப்படின் அது குதிரைப்பா, எனப்படும் என்று கூறும் பிரபந்தத் திரட்டு (1: 15). கும்மி வெண்டளையான் அமைந்த ஓரெதுகையுடைய எழு சீர்க்கழிநெடிலடிகள் இரண்டுவரப் பாடப்பெறும் பாடல் களைக் கொண்டது கும்மி என்பதாகும். பலபேர் கூடிநின்று ஆடிப்பாடுதலால் கும்மி என்று பெயர் பெற்றது. கும்பல், கும்மிருட்டு, குப்பல், குப்பை முதலிய, தொகுதி குறிக்கும் சொற்கள் பல உளவாதல் அறிக. ஒவ்வோர் அடியின் நான்காஞ்சீரையும் தனிச் சொல்லாக அமைத்துப் பாடுவதும் கும்மியில் உண்டு. கொங்கண நாயனார் அருளிய வாலைக்கும்மி, மதுரை வாலைசாமி அருளிய ஞானக்கும்மி முதலியவற்றைக் காண்க. கும்மியைக் கொம்மி என்பார் வள்ளலார். நடேசர் கொம்மி காண்க. கும்மிகள் சந்தம் பலப்பல கொண்டு இயலும் என்பது சாக்கோட்டை உமையாண்டவள் சந்தக் கும்மியால் விளங்கும். கல்லைக் கனிவிக்கும் சித்தனடி - முடி கங்கைக் கருளிய கர்த்தனடி தில்லைச் சிதம்பர சித்தனடி - தேவ சிங்க மடியுயர் தங்கமடி. என்பது நடேசர் கொம்மியில் ஒரு பாட்டு. செந்தமிழ் நாடெனும் போதினிலே எனவரும் பாரதியார் பாடல் கும்மிப்பாட்டேயாம். குலோதயமாலை (குடிவரவு) பாட்டுடைத் தலைவன் பிறந்த குடிவரவினை நயமுற விரித்துக் கூறுதல் குலோதயமாலையாம். கலிங்கத்துப்பரணி கூறும் இராசபாரம்பரியம் குலோதயச் செய்தியாம். கல்வெட்டுகளில் வரும் மெய்க் கீர்த்திகளும், குடிவரவுரைப்பதுடன், அவர்கள் செய்த செயல்களையும் தலைவன் செய்தவையாகச் சிறப்பித்துக் கூறுவதுண்டு. வளிதொழிலாண்ட உரவோன் மருக. என்பனபோலப் புறப்பாடல்களில் வருவன குலோதய மாலைக்கு முன்னணியவாம். மானக் குலோதய மாலைகுலந் தான் விரித்தல். என்பது பிரபந்தத்திரட்டு (8). குவிபா ஒருபது இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்துகளே வரப் பாடப் பெறும் பத்துப்பாடல்களைக் கொண்ட ஒரு சிறுநூல் குவிபா ஒருபதாகும். இதழ் ஒட்டப் பிறக்கும் எழுத்துகளும் இதழ் குவிதல் வழியே தோன்றுதலால் அவ்வெழுத்துகளும் இதழ்குவி எழுத்து களாகவே கொள்ளப்பெறும். உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ்குவிவே என்பதனால் இதழ் குவிதலால் பிறக்கும் உயிரெழுத்துகள் இவை என்பது விளங்கும். மெய்யுள் ப், ம், வ், என்பவை இதழ் ஒட்டப் பிறப்பவை. ப், ம், வ் என்னும் மூன்று எழுத்துகளும், அவற்றின் உயிர் மெய் வரிசை 36 எழுத்துகளும், அம்முன்று வரிசையும் நீங்கிய 15 மெய்களின் வரிசையில் வரிசைக்கு ஐந்தெழுத்தாய்க் கூடிய 75 எழுத்துகளும், உயிர் ஐந்து எழுத்துகளும் ஆக 119 எழுத்துகளும் குவிபாவுக்கு உரிய எழுத்துகளாம். இக் குவியெழுத்துகளை விலக்கிப் பாடுவது இதழகல்பா என்னும் நிரொட்டகம் ஆகும். குவிபா ஒருபது தண்டபாணி அடிகளாரால் இயற்றப் பெற்றதாகும். இதழகல்பா, இதழ்குவிபா காண்க. குழமகன் குழமகன் = இளமகன். கலிவெண்பாவினால் மகளிர் தம் கையிற் கண்ட, இளமைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து பாடுவது குழமகனாகும். “ கலிவெண் பாவாற் கையினிற் கண்ட குழமக னைச்சொலிற் குழமக னாகும்.” - (இலக்கண விளக்கம் பாட்டியல். 110) “மழவும் குழவும் இளமைப் பொருள்.” என்பது தொல். மரபியல். இளங்கன்றைக் ‘குழக்கன்று’ என்பது வழக்காறு. பெண்மகவானால், குழமகன் மூன்றாம் ஆண்டில் மொழியப் பெறும் என்பர். “ பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின் மூன்றாம் ஆண்டின் மொழிகுவ குழமகன்.” - (நவநீதப் பாட்டியல். 45. உரை மேற்). குழமகன் உலாவரக் கண்டு புகழ்தல் உண்டு என்பது ‘பவனிவரு குழமகன்’ என்னும் பிரபந்தத்திரட்டால் (14) அறியவரும். குழமகன், மகவைப்புகழ்வதாக அமைந்தது. பாலனைப் பழித்தல் என்னும் துறை, இதற்கு எதிரிடைப்பட்டது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைப் பற்றிய, “ கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்துநுதல் வேம்பின் ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பலரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்.” என வரும் இடைக்குன்றூர்கிழார் பாட்டு (புறம் 77) குழமகன் சிறப்பை அழகுற விளக்கும். குளுவ நாடகம் ‘குளுவ நாடகம்’ என்னும் பெயர், இது கூத்து வகையைச் சேர்ந்ததொரு நூல் என்பதை வெளிப்படுத்தும், கூத்து வகை நூல் எனின் இசையும், இயலும், இசையாமல் இயலாமை விளங்கலாம். காப்பு, தோடையம், மங்கலம், தலைவன் புகழ்பாடல், குளுவன் தோற்றம், சித்துவித்தை கூறல், சிங்கன் வருதல், பறவைகள் வருதல், கண்ணிகுத்தி வேட்டையாடல், பறவை களைப் பங்கிடல், பரிசுபெறல், சிங்கன் சிங்கியைச் சந்தித்தல், வாழ்த்துதல் என்னும் பகுதிகளையுடையதாகக் குளுவ நாடகம் இயல்கின்றது. தமிழ்க் கோயிலாகத் தம் குடியிருப்பைக் கொண்டிருந்த அழகிய சிற்றம்பலக் கவிராயரின் மிதிலைப்பட்டித் தலைவனாக இருந்தவன் சின்னமகிபன் என்பான். அவன் மேல் எழுந்தது சின்னமகிபன் குளுவ நாடகமாகும். “ கல்லிடும் பச்சி பல்லைக் காட்டு தடா தமிழருமை யறியா மல்சல சலென்று கல்வி பண்ணுவோ ருடையபேச் சைக்கேளான் காண்டீபன் சின்னன்.” என வரும் பகுதியால் பாடிய புலவன் தகுதியும் பாட்டுடையான் தகுதியும் விளங்கும். குறவஞ்சியில் இடம் பெறும் சிங்கன் சிங்கியர் குளுவ நாடகத்திலும் இடம் பெறுகின்றனர். ஆயின், அவர்களுக்குத் தலையிடம் இல்லை; துணையிடமேயுண்டு. குளுவ நாடகத்தில் குளுவனுக்கன்றோ முதலிடம். சிங்கனுக்குச் சிங்கியை இணைக்கும் இந்நாடகத்தில் தலைவன் குளுவனின், குளுவச்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. அவன்தான், “ஏகாந்த யோகக் குளுவன் நானே” (11) என்று ஆடிப்பாடுகிறானே! இனிக் குளுவச்சியைத் தலைகாட்ட விடலாமா? குறத்தியர் பாட்டு இது குறம், குறவஞ்சி, குறத்திப்பாட்டு எனவும் படும். ‘குறம் பாடல்’ என்னும் வழக்கு குறத்தியர் பாட்டின் வழியே வந்ததாம். ‘குறி கூறுதல்’ என்பது குறத்தின் வழிவந்த ஆட்சியே; குறிஞ்சிநில வாணர் குறவர் என்பதும் அவர்கள் வெறியாட் டயர்ந்து வேலனை வேண்டலும், கட்டு, கழங்கு, குறி எனப் பார்த்தலும் இலக்கியப் பழமை வாய்ந்தவை. ‘குற்றாலக் குறவஞ்சி’ இவ்வகை நூல்களில் முதற் பட்டதும் முதன்மையுற்றதுமாம். பிறநாட்டுப் பிற சமயவாணரையும் இக்குறவஞ்சி கவர்ந் தமை, வேத நாயக சாத்திரியார் இயற்றிய பெத்தலேம் குற வஞ்சியால் அறியப்படும். வெண்ணிலாவின் தலைமேல் மாந்தன் அடிவைத்த இந் நாளிலும், கோல் எடுத்துக் குறி சொல்லும் குறிஞ்சி நிலவாணர் உண்மை குறவஞ்சியின் எச்சம் எனலாம். தலைவன் உலா வரவு, மகளிர் காமுறுதல், மோகினி வரவு, உலாப் போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம் (வகை), பாங்கி உற்றது என்ன என்று வினாதல், தலைவி பாங்கியோடு உற்றது உரைத்தல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளங் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலியன வினவல், குறத்தி மலைவளம் நாட்டு வளம் முதலிய கூறல், தலைவன் தலவளம் கிளைவளம் முதலிய கூறல், குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத்தேடல், குறவன் பாங்கனோடு குறத்தி அடையாளங் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும், குறத்தி விடைகூறலுமாகக் கூறல் பெரும்பாலும் இவ்வகை உறுப்புக்களால் அகவல், வெண்பா, தரவு கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள் இடைக்கிடை கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது குறத்திப் பாட்டு எனப்படும். இனி, முக்காலமும் உணர்ந்த குறத்தி குறி சொல்வதாக அமைந்ததே குறத்திப் பாட்டு என்பர் பன்னிருபாட்டியலார் (336) “ இறப்பு நிகழ்பெதிர் பென்னுமுக் காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே.” பிரபந்த தீபம் (72) ‘குறத்திப் பாட்டின்’ இலக்கணத்தை விரிவுற இயம்புகின்றது. “ குறத்திப் பாட்டே கூறும் இலக்கணம் தலைவன் உலாவரத் தையலர் காமுறல் மோகினி வரவு மொழிதல் உலாவந்த தலைவனைக் கண்டு தான்மயங் குறுதல் உவாமதி முதலிய உவாலம் பனத்தைப் பாங்கி உற்றதென்னென வினாவல் தலைவி பாங்கியோ டுற்ற துரைத்தல் பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல் தலைவி பாங்கியைத் தூது வேண்டல் தலைவி சகியொடு தலைவன் குறிகூறல் குறத்தி வரவு கூறல் தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினாவல் குறத்தி நிலவளம் மலைவளம் கூறல் தலைவன் குலவளம் நிலவளம் சாற்றல் குலமகள் குறத்தியைக் குறிதேற வினாவல் குறத்தி தெய்வம் பராவலங் குறி தேர்ந்து நல்வரவு நவிலல் தலைவிபொருள் நல்குதல் குறவன் வரவு புள்வரவு கூறுதல் கண்ணி குத்தல் கான்பறவை படுத்தல் குறத்தியைத் தேடல் குறவன் பாங்கனோடு குறத்தி குறிகூறல் குறத்தியைக் கண்ணுறல் குறவன் குறத்தியை ஐயுற்று வினாவால் வினாவிற் குறுவிடை குறத்தி விடுதல் இவ்வகை உறுப்பெலாம் இயையப் பொருந்திக் கலித்துறை அகவல் கழிநெடில் விருத்தம் கலிவிருத்தம் வெண்பா தரவு கொச்சகம் பதமுதல் சிந்து பாடுதல் பண்பே.” குறவஞ்சி வகையுள் ஞானக்குறவஞ்சி என்பதொரு வகை. அது சிங்கன் சிங்கி உரையாகச் செல்லும் என்பது பீருமுகம்மது அருளிச் செய்த ஞானரத்தினக் குறவஞ்சியால் விளங்கும். “ ஆதிக்கு முன்னம் அநாதியும் என்னடி சிங்கி! அஃது, அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா! ஆதியாய் வந்த அரும்பொருள் ஏதடி சிங்கி - அது சோதியில் ஆதி சொரூபாய் எழுந்தது சிங்கா!” இக்குறவஞ்சி 63 கண்ணிகளையுடையது. குறம் குறம் என்பது குறி சொல்லுதல் என்னும் பொருளது. பாட்டுடைத் தலைவனைக் காமுற்ற தலைவி ஒருத்தியைக் கண்டு குறத்தி குறிகூறுவதாக வருவது குறமாகும். குறம் என்னும் நூலில் குறத்தியின் கூற்று மட்டுமே வரும். ஆனால், குறவஞ்சி என்னும் நூலில் குறத்தி கூற்றுடன் பிறர் பிறர் கூற்றும் பிற பிற செய்திகளும் உண்டாம். குறம் என்னும் வகையுள் குறிப்பிடத்தக்க ஒன்று மீனாட்சி யம்மை குறம். அது காப்புத் தொடங்கி வாழ்த்துடன் 52 பாடல் களால் முடிகின்றது. கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சிந்து கொச்சகக்கலி ஆகிய பாவகைகளைக் கொண்டுள்ளது. “முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா; முறத்தில் ஒரு படிநெல்லை முன்னேவை அம்மே; இந்நாழி நெல்லையும்முக் கூறுசெய்தோர் கூற்றை இரட்டைபட எண்ணினபோ தொற்றைப்பட்டதம்மே; உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந் துதித்தார்; உனக்கினியெண்ணினகருமம் இமைப்பினில்கை கூடும் என்னாணை எங்கள்குலக் கன்னிமார் அறிய எக்குறிதப் பினும்தப்பா திக்குறிகாண் அம்மே.” எனவரும் பாடல் நெற்குறி கூறுமுறையைக் கூறுவதாம். கைக்குறி, நிமித்தக்குறி என்பனவும் இக்குறத்தில் விரித்துரைக்கப்பெற்றுள. குறத்தியர் பாடல் பார்க்க. குறள் குறள்வெண்பா யாப்பில் அமைந்தநூல் குறள் எனப்படு கின்றது. திருக்குறள் முப்பாலைக்கூற வீட்டுப்பால் கூறுவதாக ஒளவைக் குறள் விளங்குகின்றது. அட்டாங்க யோகக் குறள், கிறித்துமொழிக் குறள், அருட்குறள், புதுமைக்குறள் என்பனவும் குறள் யாப்பால் அமைந்த நூல்கள். ஆளுடைய பிள்ளையார் பாடும் திருவிருக்குக் குறள் எழுத்தெண்ணிப் பாடும் இருசீரடிச் சிறுமையால் அமைந்த பெயராக உள்ளது. “நீல மாமிடற் றால வாயிலான் பால தாயினார் ஞாலம் ஆள்வரே.” இஃது ஆலவாய்த் திருவிருக்குக் குறள். குறியறி சிந்து உலாப்புறத்துக் கண்ட நங்கை ஒருத்தியின் இருப்பிடத்தைக் கேட்டு அறிதலும், ஆங்குச் சேர்ந்து அவளைக் கண்டு மகிழ் தலும், சிந்துப்பாவால் பாடப்பெறுவது ‘குறியறி சிந்து’ என்னும் பெயர்பெறும். “குறியகவல் நாடுபிற சேறல் குறியறி சிந்து.” என்பது பிரபந்தத்திரட்டு (17). குறுந்தொகை “குறளடிச் செய்யுள் குறுந்தொகை யாமே” என்பது குறுந்தொகை இலக்கணம் (பிரபந்ததீபம் 53). குறளடி என்பது நான்குமுதல் ஆறெழுத்துள்ள நாற்சீரடி என்பது தொல்காப்பிய நெறி. ஆயின் அந்நெறி சங்கத்தார் காலத்திற்குப் பின்னே போற்றப்பெறவில்லை. ‘இருசீரடிகுறளடி’ எனச் சீரெண்ணிக்கை கொண்டு அடி அளவிடப்படுவதாயிற்று. ஆகலின் குறளடி அல்லது இரு சீரடி கொண்டு பாடப்பட்ட நூல்வகை குறுந்தொகை எனப்பட்டதாம். “அறஞ்செய விரும்பு.” “ஆறுவது சினம்.” என்பனபோல இயல்வனவும் குறளடி. வஞ்சிப்பா நடையினவும் இக்குறுந்தொகையாவதாம். இனிச் சங்கத்தார் குறுந்தொகை என்னும் தொகை நூலோ, நெடுந்தொகை என்னும் அகநானூற்றடியளவை நோக்கக் குறுந்தொகை ஆயிற்றாம். ‘ஐங்குறுநூறு’ என்பதும் அத்தகையதே. கூடல்மாலை கூடல் - கூட்டம் - புணர்ச்சி - கலவி இன்னவெலாம் ஒரு பொருள். மகளொருத்தி தானே விரும்பி வந்து தலைவனைக் கூடுதல் கூடல்மாலைப் பெயரமைந்த நூற் பொருளாம். “மான்வலிய மேவவரல்கூடல் மாலையாம்” (பிரபந்தத்திரட்டு 8) மான் - மான்போலும் மங்கை. கூடற்சதுக்கம் நான்கு திருவிடங்கள் ஒரே பாடலில் வருமாறு ஞான சம்பந்தர் பாடிய ஒரு பதிகம், ‘கூடற்சதுக்கம்’ எனப்படுகின்றது. சதுக்கம் - நான்கு. கூடல் - இணைந்திருத்தல். திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திரு வாரூர் என்னும் நான்கு இடங்களிலும் கோயில் கொண்ட இறைவரைப் பத்துப் பாடல்களிலும் பாடியுள்ளார். “ மண்ணது வுண்டரி மலரோன் காணா வெண்ணாவல் விரும்பும் யேந்திரரும் கண்ணது வோங்கிய கயிலை யாரும் அண்ணல் ஆரூ ராதியானைக்காவே.” கூடற்சதுக்க முதற்பாட்டு இது. இனிக் ‘கூட சதுர்த்தம்’ என்னுமிறைப்பா (சித்திரக் கவி) இதனின் வேறுபட்டதாம். அஃது, ஒரு பாடலின் நான்காம் அடியில் உள்ள எழுத்துகள், மற்றை மூன்று அடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படுவதாம். இதில், கூடம் என்பது ‘மறைவு’ என்னும் பொருட்டது. கேசாதிபாதம் (முடிமுதல் அடி) கலிவெண்பாவால் முடிமுதல் அடியளவும் கூறுவது கேசாதிபாதமாகும். “கலிவெண் பாவான் முடிமுதல் கால்வரை கிளத்தல் கேசாதி பாத மாகும்.” - (முத்துவீரியம். 1107) “கேசாதி பாதமே கலிவெண் பாவால் முடிமுதல் அடிவரை மொழிவர்நா வலரே.” - (பிரபந்ததீபம் 73) முடிமுதல் அடியும், அடிமுதல் முடியும் புனைந்துரைக்கும் வனப்பு சங்கச் சான்றோரிடை அரும்பி, காப்பிய நூலாரிடை முகிழ்த்து, மெய்யடியாரிடத்துத் திரளுற்றுச் சிற்றிலக்கியப் பாவலரிடத்தே மலர்ந்து மணம் பரப்பியதெனலாம். பெரியாழ்வார் அருளிய ‘சீதக்கடல்’ என்னும் திருப் பாசுரம், ‘திருப்பாதாதி கேசவண்ணம்’ எனப்படுவதும் “திருப்பாதகேசம்’ எனத் தொகை நிலையில் கூறப்படுவதும் நோக்கத் தக்கவை. “சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவளவா யீர்வந்து காணீரே.” எனத் தொடங்கும் சீதக்கடல், பாதம், விரல், கணைக்கால், முழந்தாள், குறங்கு, முத்தம், மருங்கு, உந்தி, உதரம், திருமார், தோள், கைத்தலம், கண்டம், தொண்டை, வாக்கு, நயனம், வாய், முறுவல், மூக்கு, கண்கள், புருவம், குழை, நெற்றி, குழல்கள் என இருபது திருப்பாடல்களில் அடுக்கியும், அடக்கியும் அடிமுதல் முடிகாறும் இருபத்து நான்கு உறுப்புகளைக் கூறுதல் அருமை யும் அழகும் உடையதாம். ஆழ்வார் தாயாக மாறிப்புக்கு இருந்தாலன்றித், தாயர்தம் ஆர்வ முத்தத்திற்கு உறையுளாம் மழலைக்குறி முத்தத்தை “முத்தம்’ என எழில்மிகு பெயரிட்டு ஆள இயலுமோ? அங்க மாலை, பாதாதிகேசம் பார்க்க. கைக்கிளை ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தப்பாக்களால் கூறு வது கைக்கிளை எனப்பெறும். “ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம் கருத உரைத்தல் கைக்கிளை யாகும்.” - (இலக்கண விளக்கம் பாட்டியல். 67) “கைக்கிளை தானே மூன்று பாட்டாய் வருதலாம்” என்றும், “இவையிற்றை (வெண்பா, கலித்துறை)த் தனித் தனியே முப்பது முப்பதாக ஒருதலைக்காமமாகப் பாடுவது கைக்கிளை என்று வழங்கப்படும்” என்றும் நவநீதப் பாட்டியல் உரையாளர் கூறுவர் (42). செய்யுள் வகைமையுடையார், “கைக்கிளை தானே கருதும் விருத்தம் ஐந்தும் மூன்றும் ஆகவும் பெறுமே.” - (நவநீதப் பாட்டியல். 42 மேற்) என்பார். “ஐந்து விருத்தத் தாலே ஒருதலைக் காமத்தைக் கூறுவது கைக்கிளை.” “அன்றியும் வெண்பா ஆறைந் திரண்டு பாடுவததன்பாற் படுமென மொழிப.” - (முத்துவீரியம். 1109-1110) என்பார், முத்துவீரியமுடையார் (ஆறைந்திரண்டு - முப்பத் திரண்டு). 32 பாடல்களால் பாடப்படுவது கைக்கிளை என்பதை, “கைக்கிளை என்ப தொருதலைக் காமத்தை நாலெட்டுச் செய்யுளில் நவிலுவர் புலவர்” என்று கூறும் பிரபந்ததீபம் (74). கைக்கிளையாவது ஒருதலைக் காமம் எனப்படும். திரை யுலா வந்த ‘ஒருதலை ராகம்’ கைக்கிளைப் பொருளதே. கைக்கிளை வெண்பா யாப்பிலும், மருட்பா யாப்பிலும் வருமெனத் தொல்காப்பியர் குறிப்பார். கலிப்பாவகையும் கைக்கிளைப் பொருளில் வருதல் கலித்தொகையால் அறிய வரும். கைசிறுமைப் பொருட்டெனக் கொண்டு கைக்குடை, கைவாய்க்கால் முதலியவற்றை எடுத்துக்காட்டி விளக்குவார் இளம்பூரணர். கைக்கிளை ஆண்பால் ஒருமைத்தாகத் தொல்காப்பியம் குறித்தும்; அதனை ஆண்பாற்கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை எனப்பங்கிட்டுக் கொண்டு பலபட விரித்துரைத்தன பிற்பட்ட நூல்கள். முத்தொள்ளாயிரப் பாடல்களாகக் கிடைத்தனவற்றுள் பெரும்பாலான பெண்பாற்கைக்கிளைப் பாடல்களேயாம். சங்கச்சான்றோர் பாடிய கலித்தொகையில் இடம் பெற்ற கைக்கிளைப் பாடல்கள் ஆண்பாற்பட்டனவே என்றறிதல் தெளிவிக்கும். கைக்கிளை மாலை ஒருதலைக் காதலால் வருந்துவது பற்றி அந்தாதியாகப் பாடப்பெறுவது கைக்கிளை மாலை எனப்பெறும். வருத்தச் செய்வன இவை என்பதையும், வருத்தும் மன் மதன் அம்புகள் இவை என்பதையும் பன்னிரு பாட்டியல் விரித்துக்கூறும். “இரங்க வருவது மயங்கிய ஒருதலை இயைந்த நெறியது கைக்கிளை மாலை.’ தாயர் சேரியர் ஆயர் தீங்குழல் தென்றல் சேமணி அன்றில் திங்கள் வேலை வீணை மாலை கங்குல் காமன் ஐங்கணை கண்வளர் கனவென எஞ்சிய நன்னிற வேனில் குயிலே கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேக்கை பயில்தரு நன்னலம் பாங்கர் பாங்கியர் இயன்ற பருவரல் என்மனார் புலவர்.” “முல்லை அசோகு மாந்தளிர் தாமரை யல்லி நீலம் ஐங்கணை யாகும்.” - (பன்னிருப் பாட்டியல் 295-97) தாமரையல்லி - தாமரையாகிய அல்லி என்க. கைக்கிளைக்கும், கைக்கிளை மாலைக்கும் பொருளொப் புடையதேனும் முடிமுதல் தொடையாகப் பாடுதல் மாலைக் குரியதென வேறுபாடற்க. இனிப் பாடல் எண்ணிக்கை பகராமை யும் கருதுக. இனிக் கைக்கிளை மாலை மருட்பாவாற் பாடப்படும். அல்லாதவழி ஆசிரியம் வஞ்சி ஒழிந்த பாக்களாலும் இனங்க ளாலும் பாடப்பெறும். சிறுபான்மை ஆசிரியப் பாவானும் பாடப்படும் என்றும் கூறுவர் (பன்னிரு 295-97 உரை). கையறுநிலை கையறுதல் - செயலற்று ஒழிதல், செயலொழிந்து போகத் தக்க கவல்வினை யூட்டுவது கையறுநிலையாம். வெற்றி வேந்தர் விண்ணுலகு புக்க போழ்தில் புலவர்கள் ஆற்றாது இரங்கிப் பாடுதல் கையறுநிலை என்னும் நூலின் பாற்படும். கையறுநிலை கலிப்பா, வஞ்சிப்பா என்னும் இரண்டு வகைப்பாக்களும் ஒழிந்த வெண்பா, அகவற்பாக்களால் பாடப் பெறும். “ வலங்கெழு வேந்தர் வான்புகக் கவிஞர் கலங்கித் தொடுப்பது கையறு நிலையே.” “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே.” “ கலியொடு வஞ்சியிற் கையற வுரையார்.” - (பன்னிருப் பாட்டியல். 357-360) இனிக் கையறுநிலையினைக் “கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப் பொருளெல்லாம் பிறர்க்கறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலி யரும் தனிப்படர் உழந்து செயலறு நிலையைக் கூறுவது” என்பர். “ கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட் பட்ட அழிவுப் பாக்கிய மெல்லாம் பிறருக் கெடுத்தறி வுறுத்தித் தாமும் இறந்துபடா தொழிந்த ஆயத் தாரும் வேண்டு வனபெறும் விறலியர் குழாமும் தனிப்படர் உழந்த செயலறு நிலையை நிகழ்த்துவது கையறு நிலையா கும்மே.” - (முத்துவீரியம். 1100) புறநானூற்றில் இடம் பெற்றுள்ள கையறுநிலைப் பாடல்கள் காலமும், இடமும், சூழலும், எட்டாநிலைக்கு மாறிய இந் நாளிலும், கண்ணீர் பனிக்கச் செய்யும் திறத்தை, ‘உணர்ந்து கற்றோர் அறிவர். “கல்லறைப் பாடலை’ எடுத்தெடுத்தோதி’ என்னே! என்னே!’ என்னும் ஆங்கிலத் தேர்ச்சியர், கண் ணோட்டம், கன்னித் தமிழ்க் கண்ணீர்க் குறையுளாம் கையறு நிலைப்பாடலின் பக்கம் கண்ணோட்டம் கொண்டுகூடக் கண் ணோட விடுவது இல்லை என்பதும் ஒரு கையறு நிலையே. கொம்பில்லா வெண்பா அந்தாதி கொம்பு எழுத்து வாராமல் பாடப்படுவதொரு வெண்பா அந்தாதி இது. கொம்பு ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு என்பவை. இவ்வெழுத்துகள் பாடலில் இடம் பெறாவண்ணம் பாடப்படுவதாயிற்று. இது, ஒலியமைதி நோக்கிய பனுவல் பிரிவாம். இதழகல்பா, இதழ் குவிபா என்பன போல் கொள்க. ‘திருச்சுழியல் கொம்பில்லா வெண்பாவந்தாதி’ இவ் வகைக்கு எடுத்துக்காட்டாம். கோபப் பிரசாதம் (காய்வருள்) சினமும், அருளும் ஆகிய இருவகை முரணியல்களையும் இறைவன், நெறியுறச் செய்தமையை மாறிமாறிவர உரைப்ப தொரு நூல்வகை ‘கோபப் பிரசாதம்’ எனப்படுகின்றது. காய்தலும் அருளலும் ஆகிய இது, காய்வருளாம். பிரசாதம் என்பது அருட்கொடையாம். இந்நூலின் உட் கிடைப்பொருளை, “ இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர் என்றறிய உலகின் முன்னே உரைப்பதில்லை.” எனவரும் நக்கீர தேவநாயனார் இயற்றிய கோபப்பிரசாத அடிகள் விளக்கும். இந்நூல் 100 அடிகளைக் கொண்ட இணைக் குறளாசிரியப்பாவால் அமைந்ததாகும். ‘ அண்ட வாணனுக் காழியன் றருளியும் உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்.” என நூல் தொடக்கத்திலேயே அருளலும், ஒறுத்தலும் இருத்தல் கண்டு கொள்க. கோமூத்திரி (ஆநீர்த்தடம்) ஆன் நடந்து கொண்டு நீர்விடுதலால் உண்டாகும் தடத்தின் வடிவாக அமைக்கப்படுவதொரு கோட்டிலே எழுத்துகள் அமையப்பாடும் பாடல் ‘கோமூத்திரி’ எனப்படும். நான்கடிப் பாடலில் முன்னிரண்டடிகளையும் ஒரு வரிசை யாயும், பின்னிரண்டடிகளையும் ஒரு வரிசையாயும் நேர் கீழே எழுதினால்; இரட்டைப்படையாக வரும் எழுத்துகளெல்லாம் ஒரே எழுத்துகளாக அமைந்து ஓரெழுத்து மேலும் ஓரெழுத்துக் கீழுமாகக் கோத்துப் படிக்க அப்பாடல் அமைப்பு மாறாது இருக்கும். “ப ரு வ மா க வி தோ க ன மா லை யே ம ரு வு மா சை வி டோ க ன மா லை யே பொ ரு லி லா வு ழை மே வ ன கா ன மே வெ ரு வ லா யி ழை பூ வ னி கா ல மே. 1, 3; 2, 4 என அடிகளை இயைத்துக் காட்டியது இது.” இவ்வகையில் திருக்கோமூத்திரிப்பதிகம் தேவாரத்தில் உள்ளது. அஃது ஆளுடைய பிள்ளையார் அருளியது. பெயர் இவ்வாறு இருந்தாலும், அதன் திருக்கடைக்காப்பு ‘வழிமுடக்கு மாவின் பாய்ச்சல்’ என்றுளது. கோமூத்திரி வகைக்கு இப்பதிகப் பாடல்கள் இயையாமையாலும், மாவின் பாய்ச்சல் என்பது ‘குதிரைப் பாய்ச்சல்’ எனப்படும் ‘சதுரங்க துரக்கதி பந்தம்’ போல்வதொரு மிறைக்கவியாதல் வேண்டும். சதுரங்க துரக் கதிபந்தம் ஆகாதோ இஃது எனின், 64 கட்டங்களுள் அடக்கிக் காட்டத்தக்க பாட்டு அதுவாகலின் அவ்வகைப் படுத்தக் கூடவில்லை. “திருக்கோமூத்திரி” என்னும் பதிகக் குறிப்பு ஆயத் தக்கதாம். பூ மகனூர் எனத்தொடங்கும் திருப்பிரமபுரப் பதிகம் காண்க. கோயிலொழுகு கோயில் நடைமுறை ஒழுங்குகளைக் கூறும் நூல் கோயி லொழுகு என்பதாம். ‘திருவரங்கக் கோயிலொழுகு’ என்பதொரு நூல் குறிப் பிடத் தக்கது. கோயிலொழுகு போல்வதொரு நூல் ‘சீதளப் புத்தகம்’ என்பது. ‘சீர்தளம்’ என்பது சீதளமாயிற்று. திருக்கோயில் என்பது அதன் பொருள். திருக்கோயில் திருப்பணி, கோயில் நடைமுறை பற்றிய செய்திகளைக் கூறும் நூலே ‘சீதளப் புத்தக மாம்’; மதுரைத் திருக்கோயில் திருப்பணிகளைக் குறிக்கும் ‘சீதள நூல்’ உண்டு. திருப்பணி மாலை என்பதொரு நூலும் கோயில் திருப்பணி பற்றியதே. ‘மதுரைத் திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை’ என்பது குறிப்பிடத்தக்கது. பழம்பாண்டியர்கள் திருப்பணி தொடங்கி நாயக்க மன்னர் கள் காலம் வரை நிகழ்ந்த திருப்பணிகளை எடுத்துரைக்கும் திருப்பணிமாலை, நல்ல பெண் என்பாள் செய்த திருப்பணியை, “ மண்ணிலுள் ளோர்களும் யாவரும் போற்று மதுரைச் சொக்கர்க் கண்ணிய சந்நிதி வாசலி லேநல் லழகு பெறத் திண்ணிய பேரருள் நந்தீ சரைப்பிர திட்டை செய்தாள் பெண்ணினி னல்லபெண் னென்றே பெயர்மிகப் பெற்றவளே.” என்கின்றது. இதன் பாடல்கள் பெரும்பாலனவும் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. சிதைவின்றிக் கிடைத்துள்ள பாடல்கள் நூற்று ஆறாம். கோவை ‘எடுக்கவோ கோக்கவோ’ என்னும் துரியன் நயத்தகு நாகரிக வினவல் நாடறிந்த செய்தி. கோக்கப்பட்டது யாது? அது, கோவை என்க. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலமைந்த அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத் திணையும் கற்பொழுக்கத் திணையும் கூறுதலை எல்லையாகக்கொண்டு கட்டளைக் கலித்துறை நானூறாகத் திணைமுதலாகத் துறையீறாகிய பன் னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றி வரப்பாடுவது அகப் பொருட்கோவை எனப்படும் கோவையாகும். “யாவையும் பாடிக் கோவைபாடுக” என்னும் முன் மொழி, கோவையின் அருமையை உணர்த்தும். ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்னும் திருமொழியோ, சுவை நலப்பேற்றினைச் சொட்டச் சொட்ட உரைக்கும். “ கோவை என்பது கூறுங் காலை மேவிய களவு கற்பெனுங் கிளவி ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ முந்திய கலித்துறை நானூறென்ப.” “ களவினுங் கற்பினும் கிளவி வகையாற் றிணைநிலை திரியாச் செம்மைத் தாகி நாட்டிய கலித்துறை நானூ றுரைப்பது கோட்ட மில்லாக் கோவை யாகும்.” - (பன்னிருப் பாட்டியல். 341-342.) “ முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து களவு கற்பெனும் வரைவுடைத் தாகி நலனுற கலித்துறை நானூ றாக ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக் கூறுவ தகப்பொருட் கோவை யாகும்.” -(இலக்கண விளக்கம் பாட்டியல். 56) கோவை வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றாலும் வழங்கப்படும் என்பார். “ முதல்கரு உரிப்பொருளொரு மூன்றும் அடைந்து கைக்கிளை அன்புடைக் காமப் பகுதிய வாங்கள ஒழுக்கமும் கற்பும் இயம்புத லேயெலை யாகக் கட்டளைக் கலித்துறை நானூற் றாற்றிணை முதலாகத் துறையீ றாகச் சொல்லப்பட்டும் ஈறா றகப்பாட் டுறுப்பும் இயையக் கூறுவ தகப்பொருட் கோவையா மற்றிஃ தகவல்வெண் பாக்கலி யடுக்கியல் வண்ண வஞ்சி யினானும் வழுத்தப் படுமே.”- (முத்துவீரியம். 1042) தொல்காப்பியனார் கூறும் அகப்பொருட் கூற்றுவகை களே இக்கோவைப் பனுவலுக்குக் கொடைவள வைப்பகமாம். கோவைக்கு எடுத்துக்காட்டுத் ‘திரு வைக் கூட்டுக. அகப்பொருட்கோவை பார்க்க. கோவைச் சதகம் (கோவை நூறு) முடிமுதல் தொடை இயைபுற, நூறு பாடல்களால் அமைந்த நூல் கோவைச்சதகமாகும். கோவை என்னும் சொல் லாட்சியால், அகப்பொருட் கோவைக்குரிய கட்டளைக் கலித் துறைப்பாவான் இயல்வது என்பது விளங்கும். நெல்லை மாவட்டம் சார்ந்த வடகரைக் குறுநில மன்னர்மேல் புலவர் பெரியசாமி என்பவரால் இயற்றப்பட்ட ‘கோவைச்சதகம்’ எடுத்துக்காட்டாம். சக்கரமாற்று ஒன்றன் பெயர்களையெல்லாம் முறையே கூறிச் சக்கரச் சுழற்சிபோல அவை அடுத்தடுத்துத் தலைமை பெறுமாறு பாடுதல் சக்கரமாற்று எனப்படுகிறது. இவ்வகையில் திருச்சக்கர மாற்றாகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று விளங்கு கின்றது. அது சீர்காழிப் பதிகமாகும். “பிரமனூர் வேணுபுரம் புகலிவெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னுஞ் சிரபுரம் புறவஞ்சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிடங் காதி யாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவு மூரே.” இது பதிக முதற்பாடல், பின்னர் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம் எனப்பத்துப் பெயர்கள் பத்துப்பாடல்களிலும் முன்னாக விளங்கச் சக்கரமுறையில் சுழல்வதால் இப்பெயர் பெற்றதாம். இச்சக்கரமாற்றிலேயே அவ்வூர்க்கு அவராலேயே மேலு மொரு பதிகமும் பாடப் பெற்றுள்ளது. அது விளங்கிய சீர்ப் பிரமனூர் என்று தொடங்குகின்றது. சகத்திராங்கி (ஆயிரம்) ஒரு பாடல்போல் ஒருபாடல் இல்லாமல் தொடர்ந்து ஆயிரம் பாடல்களையுடையது சகத்திராங்கி எனப்படும் ஆயிரம் என்னும் நூலாம். ஒரு பாடலை அடுத்தும் அதே பாடலாக இல்லாதிருத்தல் என்பதும், பாடல் ஆயிரம் என்பதும் இந்நூல் அடிப்படை. இருபாடல் தானும் இயையாமை என்பது குறிப்பாம். “ பாவெவையும் கூறியொன்று பார்த்தாலொன் றாயிராது ஒய்விலெண் ணாயிரமா உற்றதுதான் - மேவு சகத்திராங்கி” “ஓய்வில் எண், ஆயிரமா உற்றது” எனப்பிரித்துப் பொருள் காண்க. இன்றேல் எண்ணாயிரமாகி விடும். ‘திருவரங்கத் திருவாயிரம்’ ‘தில்லைத்திருவாயிரம்’ ‘பழனித்திருவாயிரம்’ ‘கதிராயிரம்’ ‘தெய்வத்திருவாயிரம்’ என்பவை தண்டபாணி அடிகள் அருளியவையாம். ஆனால் இவ் ஆயிரங்கள் ஒன்று பார்த்தால் ஒன்றாய் இராதவையல்ல. ‘ஏழாயிரப் பிரபந்தம்’ என ஒரு நூலும் அடிகளார் யாத்துளார். அதிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் 7008. சட்கம் (அறுமணி) ஆறுபாடல்களையுடையதொரு சிறு நூல் சட்கம் எனப் படும். சட்கத்தை விருதை சிவஞானயோகிகள் அறுமணி எனப் பாடியுள்ளார். தண்டபாணியடிகளும் இயற்றியுள்ளார். இவ் வறுமணி ஒரேவகை யாப்பால் ஆறு பாடல்களும் பாடப் படுவதாம். சஷ்டி-சட்டி- ஆறு. ‘அலங்கார சட்கம்’ பார்க்க. சடானனம் (அறுமணிமாலை) நான் மணிமாலைக்குரிய வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் இவற்றுடன் கலிப்பாவும், தாழிசையும் இயன்று அறுமணியாகித் தொடர்வது சடானனம் எனப்படும். “கலிப்பாவும் தாழிசையும் நான்மணிமேற் காட்டல் நலத்துறுச டானன நற்பா.” என்பது பிரபந்தத் திரட்டு (13) நான்மதிமாலை காண்க. சண்டை தலைவன் நாடு, ஊர், ஞிறப்பு, ஆயவற்றைக் கூறி, வஞ்ஞினம் கூறல், போர்புளீதல், களக்காட்ஞி முதஸீயவற்றை ஜீளீத்துக்கூறல் ‘சண்டை’ என்னும் நூற் பொருளாகும். ‘பாஞ்சாலங்குறிச்ஞிச் சண்டை’ பட்டிதொட்டியெல்லாம் நாட்டுபாடலாக ஜீளங்கு கின்றது. கற்றறியார்க்கும் பயன்படுமாறு ‘சண்டை’ நூல்கள் எழுந்தனவாம். சத்தகம் (எழுமதி) ஏழுபாடல்களைஜிடைய தொல் நூல்வகை சத்தகம் - ஒரே வகைப் பாடலால் பாடுதல் என்பது ஜீணி. (சப்த - சத்த- ஏழு) ‘சட்கம்’ காண்க. சதகப்பணிகம் (நூறுகள் பத்து) சதகங்கள் பத்ணினைஜிடையதும் ஆழீரம் பாடல்களைக் கொண்டதுமாகிய சதகப்பணிகம். சதகப்பணிகம், தண்டபாதி அடிகள் பாடிஜிள்ளார். அப் பணிகம், அடிகள் ஒடுக்கமுற்ற ணிருவாமாத்தூர்க்கு வாய்த்தது. அணிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் 1006. சதகம் கற்றோர் ஜீரும்பும் அகப்பொருள் மேலாவது, புறப் பொருள் மேலாவது, நூறு பாடல்கள் பாடுவது ‘சதகம்’ என்னும் பெயர்பெறும். சதகம் என்பது ‘நூறு’ எனஷிம் பெயர் பெறும். “ஜீழைஜிம் ஒருபொருள் மேலொரு நூறு தழைய உரைத்தல் சதகம் என்ப.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 87) “அகப்பொருள் ஒன்றன்மேல் லாதல் புறப்பொருள் ஒன்றன்மே லாதல் கற்நித் தொருநூறு செய்ஜிள் உரைப்பது சதகமா மென்ப.” - (முத்துனிளீயம். 1117) சதுரங்கபந்தம் (அரங்கக்கட்டு) சதுரங்கம் - அரங்கம்; அரங்கின்றி வட்டாடலைக் கூறினார் வள்ளுவனார். அரங்கக்காய்களை நகர்த்துவதுபோலச் சளீவாகஷிம் வலலீருந்து ஹிடமாகஷிம், ஹிடலீருந்து வலமாகஷிம் மேலே, சென்று நின்னர்ச் சளீவாக ஹிறங்கி முடிவது போன்ற அமைப்நில் பாடப்படுவது ஹிது. தண்டபாதி அடிகள் ஹியற்றிய ணிருவரங்கத் ணிருவாழீரத் ணில் ஹிப்பந்தம் ஹிடம் பெற்றுளது. ஹிது கட்டளைக் கஸீத்துறை, வெண்பா ஆகிய பாவகைழீல் அமைக்கப்படும். குணிரைப்பாய்ச்சல் அமைப்நில் வருவது ‘சதுரங்க துரக கணிபந்தம்’ எனப்படும். ‘ஞித்ணிரகஜீ ஜீளக்கம்’ என்னும் நூல் காண்க. சந்பிணிமுறை (ணிருமுன்வீலை முறை) ஹிறைவன் முன்வீலைழீல் பின்று முறைழீட்டு வேண்டுவ தாகப் பாடப் பெறும் நூல் சந்பிணி முறையாம். ‘சந்பிணிமுறை’ என்பது தவீநூல் என்று சொல்லப்படுவ தெவீனும், பல நூல்கஹீன் தொகையாகிய அடக்க நூல் எனல் தகும். ணிருப்போரூர் முருகன் சந்பிணிமுறை என்பது ஹிவ்வகை நூல்களுள் ஞிறப்நிடம் பெற்றது. அணில் தாலாட்டு, பள்ஹீ எழுச்ஞி, கட்டியம், எச்சளீக்கை, தூது, ஊசல் ஆகியவை உண்டு. தாஷீசை, வண்ணம், சந்தம், ஜீருத்தம், அட்டகம் ஆகியவை உண்டு. ஜீருத்தங்கஹீலும் கஸீஜீருத்தம், பெருங்கஷீநெடில் ஜீருத்தம், குறுங்கஷீநெடில் ஜீருத்தம், சந்தக்கஷீநெடில் ஜீருத்தம் என்பனஷிம் ஹிடம் பெற்றுள. வேறு ஞில சந்பிணி முறைகஹீல் ஹிவற்றுடன் ணிருக்கோழீல் சார்ந்த ஹிலக்கிய அமைப்புகளும் ஹிடம் பெற்றுள. கலம்பகத்ணில் பல்வேறு பாடல்களும் துறைகளும் கலந்துள என்றால், சந்பிணி முறைகஹீல் பல்வேறு நூல்களும், நூற்பகுணிகளும் தொகுப் பாகச் செறிந்துள எனலாம். சமசங்கினாமம் (சமபிலையோங்கல்) பெண், ஆண் ஒருவனுடன் சமவீலை கூற, அவன் அச் சமவீலைழீன் உயர்ந்து பின்று அவளை வெற்றி பெற்றதைக் கூறுவது ஹிப்பனுவஸீன் பொருளமைணியாம். ஹிதனை, “அளீவை, சமங்கூற வேந்தன் சமந்தப்நி வேறல் சம சங்கி னாமமென்றே சாற்று.” என்கிறது நிரபந்தத்ணிரட்டு (62). “ஈன்றபொழுணிற் பெளீதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” - (ணிருக்குறள். 69) என்னும் பொருள் வளலீக்க பொய்யாமொஷீக்கே, “பெண்தி யல்பால் தானாக அறியாமைழீன், “கேட்டதாய்’ எனஷிம் கூறினார்” என்று ஜீளக்கம் கூறுவதைக் கருணின், ‘சமசங்கி னாமம்’ என ஹிந்நூற் பெயர் எழுந்தமை ஜீயப்பன்றாம். சமுத்ணி (கேள்பா) ஹின்ன வகையாய்ப் பாடுக என்றதும் அன்னவகையாய்ப் பாடும் பாடல் சமுத்ணி எனப்படும். கேட்டவாறு பாடப்படுவது ஆகஸீன் ‘கேள்பா’ எனத்தக்கதாம். அகப்பொருள் புறப்பொருள் ஆகிய ஹிருபொருள் வஷீ ழீலும் ஹிப்பா படப்படும். “சொன்ன எழுத்ணினும் சொன்ன மொஷீழீனும் அந்பிலை தன்வீல் ஹிருவகைப் பொருட்கும் முன்வீ கருத்து முடிஷிறப் பாடல் சமுத்ணி என்று சாற்றுவர்; அதுவே கொடுத்த பொருளெலாம் குறைபா டின்றித் தொடுத்தாய் நிற்றாய்த் துதிந்து பிற்றலே,” என்பது நிரபந்ததீபம் (97). “யாப்நிற்றாய்த்து... பிற்றலே’ என்ற அளஜீல் சுவடிச் ஞிதைஷி. சேரமான் செல்வக்கடுங்கோ வாஷீயாதன், கநிலர் கையைப்பற்றி ‘மெல்ஸீயவாமால் நுங்கை’ என, அவர் பாடிய புறப்பாட்டும் (14), சோழன் குளமுற்றத்துஞ்ஞிய கிள்ஹீவளவன் ‘எம்முள்ரிர் எந்நாட்டீர்’ என்று ஜீனாஜீயதற்கு ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டும் (38) ஹிணையஷிம் சமுத்ணிக்குத் தோன்றாத் துணையாய்த் ணிகழ்பவை. காளமேகப்புலவரும், மாம்பழக் கஜீச்ஞிங்க நாவலரும் சமுத்ணி பாடுதஸீல் கொடிகட்டிப் பறந்தவர்கள். ஹிரட்டைப் புலவர்களும் ஹித்துறைழீல் வல்லாளர்களே. “எழுத்துச் சொற்பொருள் அதியாப் நிவைழீன் ஜீழுத்தக ஒருவன் ஜீளம்நிய உள்ளுறை அப்பொழு துரைப்ப தாசு கஜீயே.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 4) என வரும் ‘ஆசுகஜீ’ ஹிச்சமுத்ணி பாடுவோன் என்க. ஜீனாஜீடைப் பாடல் காண்க. சாதகம் (நிறப்நியம்) கஸீயூஷீழீன், ஆண்டு, நாள், பொழுது, கிழமை, ஹிராஞி, முதஸீயவற்றை வைத்துப் பாட்டுடைத்தலைவன் காலபிலை கதித்துப் பாடுவது சாதகம் என்பதாகும். “ தோற்றிய சாதகம் சாற்றுங் காலைப் பற்றிய கஸீஜிகத் துற்ற யாண்டிற் றிருந்ணிய சகாத்தமும் ஆண்டும் பொருந்ணிய ஞாழீறும் பக்கமும் ஏய வாரமும் ஹிராஞிஜிம் மன்னுற மொஷீதற் குளீய.” - (பன்வீருப் பாட்டியல். 73) சாதகக்கஜீ என்பது, “ஓரை பிலைஜிம், ணிணி பிலைஜிம், யோக பிலைஜிம், நாண்மீன் பிலைஜிம், வார பிலைஜிம், கரண பிலைஜிம், கிரக பிலைஜிம் ஆகிய ஏழுறுப்புகஹீன் பிலைமைஜிம் சோணிட நூலால் நன்குணர்ந்து அவற்றை அமைத்து அவற்றால் தலை மகனுக்கு அடைவன கூறல்” என்பார் முத்துனிளீய நூலுடையார். “ஓரை ணிணிபிலை யோகநாண் மீவீலை வாரங் கரணம் பிலைவரு கிரக பிலையெழு அவயவ பிலைமைஜிம் உணர்ஷிற் றவற்றை அமைத்தவற் றாற்றலை மகனுக் கடைவன அறைதல்சா தகமென மொஷீப.” -(முத்துனிளீயம்.1038) சாதகத்தைப் ‘நிறப்நிய’ மாக்கியவர் மொஷீ ஞாழீறு பாவாணர். சாரப்நிரபந்தம் (சாரப்பனுவல்) ஹிறைவன் ணிருமுன்பைப் புலவர் சார்ந்து, தமக்கு வேண்டு வன அருள வேண்ட, அவர்தம் பிலை உரைப்பதாகஷிம், புலவர் ஹிறைவன் பெருபிலை கூறுவதாகஷிம், ஹிறைவன் ஹிவர் ஹிவரைச் சார்ந்து ஹிவ்ஜீந் நலங்களைப் பெறுக என அருள்வதாகஷிம், புலவர் வாழ்த்துவதாகஷிம் அமைந்தது சாரப்நிரபந்தம் எனப் படும். கஷீநெடில் ஆஞிளீய ஜீருத்தத்தால் ஹிந்நூல் அமைந் துள்ளது. நமஞிவாய சுவாலீகள் அருஹீய அருணாசலேசுவரர் சாரப்நிரபந்தம் ஹிதற்கு எடுத்துக்காட்டாகும். சாரம் (நிஷீஷி) பரந்துபட்ட செய்ணியை ஜீளீத்துக் கூறாமல், தெஹீந்து தேர்ந்து சுருக்கிக் கூறுவதொரு நூல்வகை சாரம் எனப்படுகிறது. ஹிவ்வகைழீல் சுட்டத்தக்கதொரு நூல் ‘ஞிவபோகசாரம்’, மற்றொன்று, ‘ஞிவயோகசாரம்.” முன்னது அடிகள் வணக்கம் முதல் பொதுபிலை ஈறாகப் பணினொரு பகுணிகளைஜிடையது. 139 வெண்பாக்களைக் கொண்டது. நின்னது உரைநடையால் ஆயது. பூரணானந்தர் அருஹீயது என்றும் குறிப்புளது. தொடக்கத்ணிலும் முடிஜீலு மாக நான்கு பாடல்களே உள. ஹிச்சார நூல்கள் ஞித்தர் தொகுணி சார்ந்தன. ‘அறநெறிச்சாரம்’ போல்வன உலகியல் நெறியை ஜீளக்கு வன. ஹிங்குக் கூறிய சாரநூல்களோ, ஞித்தாந்தம், வேதாந்தம் (ஞிவக்கொண்முடிஷி. மறைக்கொண்முடிஷி) பற்றியன. சாழல் “சாழலோ’ என ஈற்றுச் சொல்வருமாறான ஓர் அமைப் புடைய பாடல் சாழல் எனப்படுகின்றது. ‘சாழல்’ வழக்கிழந்த சொல்போலத் தோன்றினாலும் முற்றாக வழக்கிழக்க ஜீல்லை. ‘சாடுதல்’ என்பதாக வழங்கு கின்றது. “சாடு சாடு என்று சாடிஜீட்டான்” என்று மறுத்து மறுத்து உரைப்பாரைக் கூறும் வழக்குடன் ‘சாழல்’ பாடல் களைப் பார்த்தால் ஜீளக்கமாம். “பூசுவதும் வெண்ணீறு பூண்பதுஷிம் பொங்கரவம் பேசுவதும் ணிருவாயான் மறைபோலும் காணேடீ; பூசுவதும் பேசுவதும் பூண்பதுஷிம் கொண்டென்னை ஈசனவன் எவ்ஷிழீர்க்கும் ஹியல்பானான் சாழலோ.” - (ணிருவா ணிருச்சாழல் 1) ஹிது மதிமொஷீயார் ணிருச்சாழல் முதற்பாட்டு. ‘மானமரும் மென்னோக்கி வைதேகி ழீன்துணையா கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த பொன்னடிக்கள் வானவர்தம் சென்வீ மலர்கண்டாய் சாழலே” - (பெளீயணிருமொஷீ 11-5-1) ஹிது ணிருமங்கையார் பாடிய ணிருச்சாழல் முதற்பாட்டு. கொச்சகக் கஸீப்பா யாப்பும், பாடல் அமைணிஜிம் பொருதிலைஜிம் ஒப்பச் சாழலாக (சாடலாக) உள்ளன அல்லவோ! ஞித்ணிரக்கஜீ (லீறைப்பா) ‘ ஞித்ணிரகஜீ யாறும்நின் தேற்றும் அட்ட நாகபந்தம் ஒத்த கஜீஜிமற்று முள்ளவெலாம் - வைத்துரைத்தல் அத்ரஜீஷீப் பெண்ணே அணங்கே மடமானே ஞித்ரகஜீப் பாட்டென்றே செப்பு.” எனவரும் நிரபந்தத்ணிரட்டு (50) ஞித்ணிரகஜீ வகைகளைக் கூறும். அது கூறும் ஞித்ணிரக்கஜீகள் கோமூத்ணிளீ, ஹிரட்டை நாகபந்தம், முரசபந்தம், சக்கரம், சுஷீகுளம், சருப்ப தோபத்ணிரம்., அட்ட நாகபந்தம் என்பனவாம் (51-60). ஞித்ணிரக்கஜீ ஜீளக்கம் யாப்பருங்கலஜீருத்ணிழீலும், தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதஸீய அதிநூல்கஹீலும், முத்துனிளீயத்ணிலும் (1143 - 1153) உண்டு. ஜீனாஷித்தரம், எழுத்து வருத்தனம், மாலைமாற்று, பிரொட்டகம், எழுத்தஷீஷி, மாத்ணிரைச்சுருக்கம், மாத்ணிரை வருத்தனம், ணிளீபங்கி, ணிளீபாகி, ஒற்றுப்பெயர்த்தல், நிறிதுபடுபாட்டு என்பவற்றை முத்துனிளீயம் கூறுகின்றது. ‘ஞித்ணிரக்கஜீ ஜீளக்கம்’ என ஒருநூல் ஹியற்றிஜிள்ளார் பளீணிமாற் கலைஞர்; பணிப்நித்து உரைவரைந்தவர் பேராஞிளீயர் ந. பலராமர். பாம்பன் குமரகுருதாச அடிகளும், வண்ணச்சரபம் தண்ட பாதி அடிகளும் ஹித்துறைழீல் தேர்ச்ஞி லீக்கிருந்தனர். முன்னவர் ஹியற்றியது பத்துப்நிரபந்தம் என்னும் நூல். அணில் சக்கரபந்தம், மயூரபந்தம், கமலபந்தம், நிறிதுபடுபாட்டு, பகுபடுபஞ்சகம் முதஸீயவை உள. நின்னவர் ஹியற்றிய ஞித்ணிரக்கஜீகள் பல்வேறு தொகுணிகஹீல் உண்டு. அரசஞ் சண்முகனார் பாடிய மாலை மாற்று மாலைழீல் ஞித்ணிரக்கஜீகள் பல உண்டு. ஞித்ணிரக்கஜீ வரஷி, ஆளுடையநிள்ளையார் அருஹீய எழு கூற்றிருக்கை, ஏகபாதம், ணிருக்கோமூத்ணிளீ, ணிருச்சக்கர மாற்று, ணிருமாலைமாற்று, ணிருஜீயமகம் என்னும் ணிருப்பணிகங்கஹீல் காணக்கிடக்கின்றது. ஞித்ணிரக் கஜீகளாலேயே அமைந்த நூல் ‘ஞித்ணிரக் கஜீமாலை’ எனப்படும். அப்துல் கபூர் சாகிப் என்பார் ‘ஞித்ணிரகஜீ சரபம்’ எனப் புகழப்பெறுதல் அவர் ணிறம் வெஹீப்படுப்பதாம். ஞித்ணிர ஷிபாய செயம் (சூழ்ச்ஞிய வென்றி) எல்லாவகைகஹீலும் ஏற்றம்பெற்றுத் ணிகழும் நங்கை ஒருத்ணியைப் பல்வேறு ணிறங்களால் வெற்றி கொள்ளுதல் ‘ஞித்ணிர ஷிபாய செயம்’ எனப்படும். “ஒப்பாமல், எத்தொஷீஸீ னும்ஜீருதாம் ஏந்ணிழையை யேசெழீத்தல், ஞித்ர ஷிபாய செயம்” என்பது ஹிதன் ஹிலக்கணம் (நிரபந்தத்ணிரட்டு 45). ஜீருதாம் ஏந்ணிழை - ஜீருது பெற்று ஜீளங்கும் பெண். ‘தலீழறிஜிம் பெருமாள் கதை’ போல்வன ஹிவ்வகைழீல் அமைந்தவையாம். ஞிந்து ஓரெதுகை பெற்ற ஹிரண்டு அடிகள் அளவொத்து வருவது ஞிந்தாகும். ஹிச்ஞிந்து குறளடி முதலாக எவ்வடியானும் வரப்பெறும். காவடிச் ஞிந்து, தங்கச் ஞிந்து, நொண்டிச் ஞிந்து, வஷீநடைச் ஞிந்து, ஆனந்தக்கஹீப்பு, தெம்பாங்கு எனச்ஞிந்து பலவகைப்படும். பாரணியார் பாடிய பலவகைச் ஞிந்துகளை நயந்த பாவேந்தர், அவரைச் ‘ஞிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டியது பினைக்கத்தக்கது. ஞிந்துமோகிவீ வண்ணக ஒத்தாஷீசைப் பாடல்களால், ஒரு பெண்ணைக் கடலுக்கு ஒப்நிட்டுப் பாடுவது ‘ஞிந்து மோகிவீ’ எனப்படும் என்கிறது நிரபந்தத்ணிரட்டு (41). “வண்ணகஒத் தாஷீசையான் மாதுகடல் நேராக்கிற் பண்ணுஞிந்து மோகிவீயாம் பார்.” என்பது அது. கடிகைமுத்துப் புலவர் ஹியற்றிய சமுத்ணிரஜீலாசம் போன்றவற்றில் ஹிருந்து ஹிச் ‘ஞிந்துமோகிவீ’ கிளர்ந்ணிருக்கலாம். ஞிலேடா சாகரம் (ஹிரட்டுறற்கடல்) பெளீயகடலுக்கும் பெருமைலீக்க ஹிறைக்கும் உவமை கூறி, முடிஜீல் அக்கடலுக்கும் மங்கைக்கும் வேந்தனுக்கும் ஒப்பாகக் கூறுதல் ஞிலேடா சாகரம் எனப்படுவதாம். ஹிச்சாகரம் ஞிஃறாஷீசை’ ப்பாடலாதல் வேண்டும். “ சேர்ந்தமான் வாளீக்கும் சீளீறைக்கு மேஜிவலீத்து ஆர்ந்தஷிடன் வாளீக்கும் மங்கைக்கும் - வேந்தன் புரையப் புகலல் புகழ்ஞிலே டாசா கரம்ஞிஃஃ றாஷீசைழீற் காட்டு.” - (நிரபந்தத்ணிரட்டு 47) ஞிலேடை வெண்பா (ஹிரட்டுறல் வெண்பா) ஞிலேடை (ஹிரட்டுறல்) ஹிருபொருள்பட வருதல். ஞிலேடை யமைய ஹியற்றப்பெற்ற வெண்பாக்களால் அமைந்த நூல் ஞிலேடை வெண்பா எனப்பெறும். ஞிலேடை வெண்பாக்கஹீன் முன் ஹிரண்டடிகளும் ஞிலேடையாகஷிம், நின் ஹிரண்டு அடி களும் மடக்காகஷிம் அமைஜிம்; ஊர்ப் பெயரால் ஞிலேடை வெண்பாப் பாடப்பெறுதலால் அவ்வூர்ப் பெயருடன் ஞிலேடை வெண்பா என்பதும் சேர்ந்து வழங்கும். தொட்டிக்கலை சுப்நிர மதிய முவீவரால் ஹியற்றப் பெற்ற ‘கலைசைச் ஞிலேடை வெண்பா’, நமச்ஞிவாய கஜீராயரால் ஹியற்றப்பெற்ற ‘ஞிங்கைச் ஞிலேடை வெண்பா’ ஆகியவற்றைக் காண்க. ஞிலேடை வெண்பா நூறு பாக்களைக் கொண்டதாகும். ஞிறு காப்நியம் பெருங்காப்நிய உறுப்புகஹீல் ஞில குறைந்து வளீனும், அறம்முதல் நான்கு பொருள்கஹீல் குறைந்து வளீனும் அது ஞிறுகாப்நியம் என்று கூறப்படும். காப்நிய நெறிழீல் ஞில குறைந்து வருமாழீனும் காப்நியமே என்றும், அறமுதல் நான்கு வருமாழீனும் காப்நியமே என்றும், அறமுதல் நான்கு பொருள் கஹீல் குறைஷிபட்டு வருவதே ஞிறுகாப்நியம் என்றும் கூறுவார் தண்டியாஞிளீயர். “அறமுதல் நான்கினும் குறைபாடுடையது காப்நிய மென்று கருதப்படுமே” - (தண்டி. 10) காப்நியம் காண்க. ஞின்னப்பூ அரசனது ஞின்னங்களை ஜீளீத்துக்கூறுவது ஞின்னப்பூ ஆகும். நேளீசை வெண்பாவால் அரசனது ஞின்னங்கள் ஆகிய தசாங்கத்ணினைச் ஞிறப்நித்து நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் தொகைவரப் பாடப் பெறுவது அது. தசாங்கங்கள் மலை, ஆறு, நாடு, ஊர், பளீ, கஹீறு, கொடி, முரசு, தார், பெயர் என்பன. “லீக்க நேளீசை வெண்பா அதனால் தக்க தசாங்கந் தன்னை நூறு தொண்ணூ றெழுப தைம்பது முப்பஃ தெண்ணப் பாடிற் ஞின்னப் பூவே.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 86) நேளீசை வெண்பாஜீன் முற்பாணிழீல் ஞின்னத்ணின் செய்ணிஜிம், நிற்பாணிழீல் பாட்டுடைத் தலைவன் ஹியற்பெயரும் வைத்து ஹிணைத்துப் பாடப்பெறும். “ மலைஜிம் ஆறும் நாடும் ஊரும் பளீஜிம் கஹீறும் கொடிஜிம் முரசும் தாரும் பெயரும் எனத்தெளீ பத்தும் சொல்லும் எல்லைழீன் முதற்குறட் கண்ணே ஞின்னத் தொஷீலை மன்ன வைத்துப் நின்னர்க் குறளுட் பாட்டுடைத் தலைவர் ஹியற்பெயர் வைத்தவர்க் குளீமை தோன்றும் செயல்பெற வைப்பது ஞின்னம் அதுவே ஆணிப் பாஜீன் அதவீனம் வருமே.” - (பன்வீருப் பாட்டியல். 239) அமரர்க்கும் அரசர்க்குமே ஞின்னப்பூப் பாடுதல் உளீத்து என்பர். “உரைத்த தசாங்க மாவன பத்தாக பிரைத்து வருவது நேளீசை வெண்பா...” “அமரரைச் செங்கோல் வேந்தரைச் செப்புதல் ஞின்னப்பூவாம்; ஏனையோர்க்குத் தசாங்கமல் லாதன என்ப ஹியல்புணர்ந்தோரே.” - (நவநீதப் பாட்டியல். 40 மேற்) ஞின்னமாலை “ மயக்க வடிவஞ்ஞி யானதிஞி றக்க ஜீயத்தல் லீஹீர்ஞின்ன மாலை.” - (நிரபந்தத்ணிரட்டு. 27) என்பது ஹிதன் ஹிலக்கணம். தளை மயக்கமமைந்த அடிகளைஜிடைய வஞ்ஞிப்பாவால் அழகுநலம் ஞிறக்குமாறு ஜீயப்புஜீளங்கக் கூறுதல் ஞின்னமாலை எனப்படும் என்பதாம். ஞின்னமாவது அழகு. ‘அதி ஞிறக்க ஜீயத்தல் ‘என்பதால்’ நலம்புனைந் துரைத்தல்’ என்பது கொள்ளப்பெறும். எப்பொருள் பற்றிஜிம் கூறலாம். எவீனும் ‘மயக்கவடிவஞ்ஞி’ என்பதால் மயக்கத்தக்க வடிவழகமைந்த மங்கை ஒருத்ணியை நயஞ் ஞிறக்க ஜீயந்துரைத்தல் என ஹிரட்டுறலானும், குறிப்பாலும் கொள்ளலாம். சீட்டுக்கஜீ “ஹின்னார் ஜீடுக்கும் ஓலையை ஹின்னார் கண்டு ஹின்னது செய்க” என்னும் முறையமைப்நில் வருவது சீட்டுக்கஜீயாம். சீட்டுக்கஜீழீல் பாடுவோன் புகழும் ஹிடம்பெறும் என்பது, ‘மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்’ “தன்னைப்புகழ் தலும் தகும்” என்னும் நன்னூற் பாழீரக் குறிப்பால் புலனாம். அன்றிஜிம், “ஏடாழீரம் கோடி எழுதாது தன்மனத்து எழுணிப் படித்து ஜீரகன் ஹிமசேது பளீயந்தம் எணிளீலாக் கற்ற கஜீனிர ராகவன் ஜீடுக்குமோலை.” என்பது போல வருவனஷிம் சான்றாம். ணிருமந்ணிர ஓலை, ணிருமந்ணிர ஓலைநாயகம், ஓலைக் கணக்கர் என்பவைஜிம் வரலாற்றுச் செய்ணிகள். காஜீயங்கஹீல் ஓலைபோக்கும் செய்ணிகள் உண்டு. பணினொன்றாம் ணிருமுறைழீல் வரும் ணிருமுகப்பாசுரம் சீட்டுக்கஜீயேயாம். அந்தகக் கஜீராயர், மாம்பழக் கஜீச்ஞிங்க நாவலர்; சரவணப் பெருமாள் கஜீராயர் முதஸீயோர் யாத்த சீட்டுக் கஜீகள் லீகப்பல. நின்வீருவர் ஜீடுத்த சீட்டுக்கஜீகளும் தவீநூலாமளஷி பெருக்கமுடையவையாம். வறுமை தந்த ‘வளர்தலீழ்’ ஆகும் ஆற்றுப்படை போல்வது; ஹிச்சீட்டுக் கஜீஜிம் அத்தகைத்தே எவீன் தகும். தூணின் சாயலும் சீட்டுக்கஜீழீல் உண்டு என்பது, ஆய் வார்க்குப் புலப்படும். சீட்டுக்கஜீழீன் ஹிலக்கணம், “சீட்டுக் கஜீயே செப்பும் வரன்முறை தெய்வ வணக்கமும் தேஞிகன் வணக்கமும் தன்பெரும் புகழ்ச்ஞிஜிம் தலைவன் புகழ்ச்ஞிஜிம் எய்தல் ஆஞிளீய ஜீருத்தத் ணியம்பலே.” - (நிரபந்ததீபம். 96) சுயம்வரம் (தன்மணப்பு) ஹிலக்கியங்கஹீல் வரும் சுயம்வரப்படலப் பொருளைத் தவீயே வாங்கிக் கொண்டு அமைந்த அமைப்புடையது ‘சுயம் வரம்’ என்னும் நூலாம். “ பெற்றோன் மகள்வதுவை பேஞியே தேசங்கட் குற்றோலை போக்க ஷிறமன்னர் - வெற்றியவன் மான்வதுவை செய்ய மகிழ்கஸீவெண் பாஷிரைத்தல் தேனே சுயம்வரப்பேர் செப்பு.” - (நிரபந்தத் ணிரட்டு. 61) மணம்பேசுதல், மன்னர்களுக்கு ஓலைப்போக்குதல், வந்த வேந்தருள்தேர்தல், அல்லது ஏதேனும் ஒரு வகையான் போட்டி வைத்துத் தேர்தல், வென்றான் மணத்தல் ஆகிய செய்ணிகளைக் கஸீவெண்பாவால் பாடுதல் ‘சுயம்வரம்’ என்னும் ஹிலக்கிய வகை என்க. நளவெண்பாஜீலும், பாரதத்ணிலும் வரும் சுயம்வரப் படலங்கள் அறியத்தக்கன. மன்னர் மணங்குறித்த ஞிற்றிலக்கியவகைழீனது. ஹிது பொது பிலைப்பாற்பட்ட தன்றாம். களஜீன்வஷீக் கற்புநெறி ஞிதைஷிற்ற பிலைழீல் புறப்பட்ட, ஞிற்றிலக்கிய வகை ஹிது. செந்தலீழ் மாலை “எப்பொரு ளேனும் ஹிருபத் தெழுவகை செப்நின நெறியது செந்தலீழ் மாலை.” என்பது பன்வீரு பாட்டியல் (306). பாவானும் ஹினத்தானும் பாடுவாருமுளர் என்றும், நான்கு முதற்பாவானாதல் ஒருபாஜீன் ஹினத்தானாதல் பாடுக என்பாருமுளர் என்றும் அணிற் குறிப்புரைஜிளது. எப்பொருளேனும் என்றிருப்நினும் செந்தலீழ்மாலை என்பதாகஸீன், தலீழ்மொஷீபற்றிய - தலீழ் அகப்புறப் பொருள் பற்றிய - செந்தலீழ்ப்பா எனக் கொள்க. தலீழ்ஞானசம்பந்தர் என்றும் தலீழ்மாலை என்றும், “அங்கயற்கணாயகி குறஞ்செந்தலீஷீற்பாட” என்றும் ஹிவை போன்றும் வருமாட்ஞிகளால் தெய்வ ஹிசைத் ணிருப்பாடல்கள் ஹிச்செந்தலீழ் மாலையாம் என்பதும் தகும். ஹிருபத்தெழுவகை என்றது யாப்நியல் வேறுபாட்டை என்றறியலாம். செருக்களவஞ்ஞி அமர்க்களவஞ்ஞி காண்க. செங்கோல் ஜீருத்தம் (செங்கோற்பா) அரசர்தம் செங்கோற்சீர்மை குறித்து ஆஞிளீய ஜீருத்தம் பத்துப் பாடுவது செங்கோல்ஜீருத்தம் என்னும் பெயர் பெறும். ஹிதனைக் “கோல் ஜீருத்தம்’ என்றும் கூறுவர். (நவநீத. 41) செருக்களவஷீ வேந்தன் பிகழ்த்ணிய, பிலைபெற்ற, புகழ்வாய்ந்த போர்க் களச் செய்ணியை நேளீசை வெண்பாஜீனாவது, ஹின்வீசை வெண்பாஜீனது, பஃறொடை வெண்பாஜீனாவது பாடுவது செருக்களவஷீ எனப்பெறும். ஹிதனைப் போர்க்களவஷீ என்றும் கூறுவர். ஹிக்களவஷீ, பாடல் அளஷிடனும் பெயர் கூறுதல் உண்டு என்பது, களவஷீ நாற்பது என்னும் நுற்பெயரால் அறியக்கிடக் கின்றது. “ தலைவன் செய்த பிலைபெறு புகழ்புனை நேளீசை வெண்பா ஹின்வீசை வெண்பாப் பஃறொடை வெண்பா மறக்கள வஷீயே” “ நேளீசை ஹின்வீசை பஃறொடை வெண்பா போளீன் களவஷீ புகலப் படுமே.” - (பன்வீருப் பாட்டியல். 315-316) செஜீயறிஷிறூஉ பெளீயோர்கஹீடத்துச் ஞினங்கொள்ளாது, அடங்கிழீருத்தல் கடன் என்னும், அவையடக்கியல் பொருளைப் பற்றி வருவது செஜீயறிஷிறூஉ ஆகும். ஹிது வெண்பா யாப்நிலும், ஆஞிளீய யாப்நிலும் வரும். அன்றிஜிம், செஜீயறிஷிறூஉ மருட்பா என ஒன்று ஹிருத்தலால் ஹிது வெண்பா முன்னாக ஆஞிளீயர் நின் னாக ஹிருபா ஹிணைப்பாய் ஹியலும் மருட்பா யாப்நிலும் பாடப்படுமென அறியலாம் (தொல். பொ. 419) புறநானூற்றில் செஜீயறிஷிறூஉப் பாக்கள் ஞில உள. கடஷிள் வாழ்த்ணினை அடுத்து வைக்கப்பட்டுள்ள தொடக்கப் பாடல்கள் நான்கும் செஜீயறிஷிறூஉத் துறைப் பாற்பட்டதாக ஹிருத்தலும்; நான்காம் பாடலும், “தாழீல் தூவாக் குழஜீபோல ஓவாதுகூஉம் பின் உடற்றியோர் நாடே” என்று வருவதால் செஜீயறிஷிறூஉ ஆதலும் கூடும் எனக் கருத ஹிடலீருப்பதாலும்; ஆள்வோர்க்கு ஹிச்செஜீயறிஷிறூஉ எத்தகு ஹின்றியமையாதது என்பது தெஹீவாம். காய்நெல்லறுத்து எனத் தொடங்கும் செஜீயறிஷிறூஉ (புறம். 184) “அறிஷிடை வேந்தன் நெறியறிந்து கொஹீனே கோடி யாத்து நாடுபெளீது நந்தும், மெல்ஸீயன் கிழவ னாகி வைகலும் வளீசை யறியாக் கல்லென் சுற்றமொடு பளீஷிதப வெடுக்கும் நிண்டம் நச்ஞின் ... ... ... தானும் உண்ணான் உலகமும் கெடுமே.” என்பது ஹிலக்கணமாய் அமைதலோடு, எங்கும் என்றும் ஆள் வோர் கொண்டொழுகத்தக்க அருமைஜிம் தகஷிம் உடையதாம் என்பது தகும். சேத்ணிரத்ணிருவெண்பா (ணிருவூர்த்ணிருவெண்பா) பாட்டுடைத் தலைவன் ஊளீனை நேளீசை வெண்பாவால் பாடுவது ‘ஊர் நேளீசை’ என்றும், ஹின்வீசை வெண்பாவால் பாடுவது ‘ஊர் ஹின்வீசை’ என்றும் பெயர் பெறும். ஆனால் சேத்ணிரத் ணிருவெண்பா என்பது ஹிறைவன் கோழீல் கொண்ட ஊர்களை அடைஷிசெய்து வெண்பாவால் கூறுவதாகும். சேத்ணிரம், ணிருக்கோழீல் என்க. ஹிவ்வகைழீல் எழுந்தது ஐயடிகள் காடவர் கோன் நாயனாரால் அருளப்பெற்ற ‘சேத்ணிரத்ணிருவெண்பா’ ஆகும். சேத்ணிரத்ணிருவெண்பா கஸீவெண்பாவால் வருதலை வள்ளலார் அருஹீய ஜீண்ணப்பக் கஸீவெண்பாவால் அறிக. சோடசமாலை பணினறுபாமாலை சோடசம்-பணினாறு; பணினாறு பாக்களால் ஆகிய நூல் சோடசமாலை எனப்படுகின்றது. பாடல் எண்திக்கை கொண்டு வரும் அறுமதி, எண்மதி, தொண்மதி என்பவை போலப் பணினாறு பாவால் அமைந்ததென்க. “துரோபதையம்மை சந்பிணி ஜீளக்கச் சோடசமாலை’ என்பது பணினான்கு சீர்க்கஷீநெடிலடி ஆஞிளீயப்பாவால் அமைந் துள்ளது. பணினாறு வகைக் கவனகம் செய்ய வல்லார் ‘சோட சாவதாவீ’ என வழங்கப்பட்டமை எண்ணத்தக்கது. சோபனம் (மங்கல வாழ்த்து) முன்வீலையாரை ஜீஹீத்து, ‘சோபனம்’ ‘சோபனம்’ என வாழ்த்து உரைத்து, வாஷீப்பகுணியோடு பிறைஷிறும் அமை ஷிடையது சோபனமாம். ணிருமணபிகழ்ச்ஞியைப் பாராட்டி, வாழ்த்துரைப்பது பண்டு தொட்டே வரும் வழக்கம். புதல்வரைப் பெற்ற புகழ்சால் மகஹீர் நால்வர் கூடி மண பிகழ்ச்ஞியை நடாத்ணிவைப்பதும், ‘கற்நிவீன் வழுவாமல், நற்பல உதஜீயொடு, பெற்றவன் பெட்கும் நிணைமான் அனையையாகி” வாஷீயென வாழத்துவதை அகப்பாடல் தெளீஜீக்கின்றது (86). ஞிலப்பணிகார மங்கலவாழ்த்துக்காதைஜிம் முதற்கண் ஹியற்கை வாழ்த்துக் கூறி, நின் மங்கல நல்லமஹீ யேற்றி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரைத்து நடைழீடுகின்றது. “ஆல்போல் படர்ந்து, அரசுபோல் தஹீர்ந்து அறுகுபோல் வேரூன்றி” வாழ்கவென வாழ்த்துதல் வாழ்த்து மரபாக ஹிந்நாஹீலும் கல்லாளீடமும் அமைந்துள்ளது. ஹிவ்வஷீவஷீ மரபே மங்கல வாழ்த்தாய் அமையவேண்டிஜிம் மொஷீநலம் போற்றாத் தலீழர் மடமையால் சோபன மாழீற்று; நலுங்குமாழீற்று; ணிருமணம், மங்கலஜீழா, மணஜீழா, மன்றல் ஜீழா எனப்பல பெயர்கள் வாய் மணக்க வாய்த்ணிருந்தும் வாழ்க்கைத் துணைநலமென வஷீஞிறக்க வாய்த்ணிருந்தும் ஜீவாகத்ணில்” மாட்டிக்கொண்டவர்களும், ‘வெட்டிங்கில்’ ணிளைப்பவர்களும் சோபனத்தை ஜீட்டு வைப்பரோ? ஞானம் (அறிஷி) ஞானம் என்பது அறிஷிப்பொருட்டதாம் சொல்லெவீ னும், மெய்யறிஷிப் பொருஹீலேயே ‘ஞானப்பெயர்’ நூல்கள் சுட்டுகின்றன. சட்டைமுவீ ஞானம், அகத்ணியர் ஞானம், உரோமர் ஞானம், ணிருமூலர் ஞானம், சுப்நிரமதியர் ஞானம், காக புசுண்டர் ஞானம் எனப் பல நூல்கள் ஞித்தர் தொகுணிஜிள் உள்ளன. சட்டைமுவீ நாயனார் முன்ஞானம் நூறு, நின் ஞானம் நூறு எனஷிம் ஹிரு நூல்கள் உள்ளன. ஹிவ்ஜீரண்டுமே எண்சீர் ஜீருத்தங்களால் ஆனவை. முன், நின் என்பன கால முறைச்சுட்டே ஆகலாம். ஞித்தர் ஞானம் கூறும் நூல்கள் பெரும்பாலும் எண்சீர்ஜீருத்தங்களாலேயே அமைந்துள. நிறபா, ஹினம், பாவகைகள், அளீதாகவே உள. தங்கச்ஞிந்து ‘தங்கமே’ என்னும் ஜீஹீஜிடன் வரும் ஞிந்து தங்கச்ஞிந்து எனப்பெறும். முன்னடி நான்கு சீர்களைஜிடையதாகஷிம், ஹிறுணியடி ஹிருசீர்களைஜிடையதாகஷிம் எதுகைத் தொடைஜிடன் அமைந்து, ‘தங்கமே’ என்னும் தவீச் சொல்லுடனும், எடுப்புடனும் முடிஜிம். தங்கச்ஞிந்து ஹிரண்டடிமுதல் பல அடிகளாகஷிம் வரும். தசப்நிராதுற்பவம் (பணின் நிறப்புமாலை) உற்பவமாலை காண்க. தசமதிமாலை (பணின்மதிமாலை) வெண்பா முதலாக வேறுபட்ட பாஷிம், பாஜீனமும், பத்துவர அந்தாணியாகப் பாடுதல் தசமதிமாலையாம். நவமதிமாலை காண்க. தசாங்கத்ணியல் (பணினுறுப்நியல்) அரசன் தசாங்கத்தை ஆஞிளீய ஜீருத்தம் பத்ணினால் கூறுவது தசாங்கத்ணியலாகும். தசாங்கம் ஹிவை என்பதைத் தசாங்கத்ணில் காண்க. ஹிதனைத் தசாங்கத்தயல், தசாங்க வன்வீப்பு என்பதும் உண்டு. வன்வீப்பு = வண்திப்பு. “அரசன் தசாங்கம் ஆஞிளீய ஜீருத்தம் ஐழீரண் டறைவது தசாங்கத் தயலே.” - (முத்துனிளீயம். 1102) தசாங்கம் (பத்துறுப்பு) அரசனது பத்து அங்கங்களைஜிம், பத்து நேளீசை வெண்பாக் களால் பாடுவது தசாங்கமாகும். தசாங்கப்பத்து என்பதும் ஹிது. “ நேளீசை வெண்பாவான் பிருபன்பெறு தசாங்கத் ணினைச்சொலல் தசாங்கப் பத்தாம்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல்.80). தசாங்கங்கள் ஹிவை என்பதை, “ மலையே யாறே நாடே ஊரே பறையே பளீயே கஹீறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம்.” - (பன்வீரு. 240) என்பதால் அறிக. ஹிவ்ஜீலக்கணம் அமையப் பாரத தேஜீக்குத் ணிருத் தசாங்கம் பாடிஜிள்ளார் பாரணியார். ஹிது புதுவகைழீனதாகும். தடாகஞிங்காரம் (பொய்கைஎஷீல்) தலைவன் உலாவரல், சோலைழீலும், மலர்ப்பொய்கைழீலும் உலாஷிதல்; லீன்போலும் கன்வீயொருத்ணியைக் காணல், ஹிருவரும் மையலுறல், மகிழ்தல் ஆகியவற்றையெல்லாம் பாடல் தடாகஞிங்காரமாம். “ மன்பவவீ சோலை மலர்மஸீ வாஸீவர லீன்னொருத்ணி லீன்போல் ஜீயனெய்தக் - கன்வீக்கு ஹிறைமோகத் தாற்சோலை ஏற்றவெலாம் பாடல் அறிஜிந் தடாகஞிங்கா ரம்.” - (நிரபந்தத்ணிரட்டு 12) தண்டகமாலை (புணர்ச்ஞிமாலை) வெண்பாஜீனால் முந்நூறு செய்ஜிட் கூறுவது தண்டக மாலையாகும். வெண்புணர்ச்ஞிமாலை என்பதும் ஹிது. பாவகை, வெண்பா; பொருள்வகை, புணர்ச்ஞி; ஆகஸீன் வெண் புணர்ச்ஞி மாலை என்றார். “ வெண்பா வான்முந் நூறு ஜீளீப்பது தண்டக மாலையாம் சாற்றுங் காலே.” - (முத்துனிளீயம். 1068) தலீழ் சொளீ ஞிந்தாமதித்தொகை ஒரு கதையை எடுத்துக்கொண்டு தலீழ்நலமெல்லாம் கெழும முடிமுதல் (அந்தாணி) அடைவால் பாடுதல் தலீழ் சொளீ ஞிந்தாமதித் தொகை எனப்படும். “அந்தாணிப் பாக்கதை யாதல் தலீழ்சொளீ ஞிந்தா மதித்தொகை யாம்.” - (நிரபந்தத்ணிரட்டு 44) தரும ஜீசேடம் (அறச்ஞிறப்பு) வஞ்ஞித் தாஷீசை யாப்பால் முப்பத்ணிருவகை அறங்களைஜிம் எடுத்துரைத்தல் ‘தருமஜீசேடம்’ என்னும் ஹிலக்கிய வகையாம். “முப்பத்ணிரண்டறம் முற்றவஞ்ஞித் தாஷீசைழீற் செப்பல் தரும ஜீசேடமாம்.” - (நிரபந்தத்ணிரட்டு 45) “அறம் 32: ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்குணஷி, அறு சமயத்தார்க்கு உண்டி, பசுஷிக்குவாஜிறை, ஞிறைச் சோறு, ஐயம், ணின்பண்டம், நல்கல், அறவைச்சோறு, மகப்பெறுஜீத்தல், மகஷிவளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப்நிணம் சுடுதல், அறவைத் தூளீயம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாஜீதர், கண்ணாடி, காதோலை, சேலை, கண்மருந்து, பெண் போகம், நிறர் துயர் காத்தல், தண்ணீர்ப்பந்தல், மடம், தடம், சோலை, ஆஷிளீஞ்சு தறி, ஜீலங்கிற்குணஷி, ஏறுஜீடுத்தல், ஜீலை கொடுத்து உழீர் காத்தல், கன்வீகாதானம்.” (வெள்ஹீஜீழாப் பேரகராணி பக் 1162) ஹிவை ஒருகாலத்து ஒருவகை எண்திக்கை கொண்டு எண்ணப் பட்டவையாம். எண்ண எண்ண ‘எண்திக்கைஜியரும் அறத்தை எண்திச் செயலன்றி எண்திக்கையால் வரம்நிடல் கூடுமோ? வள்ளுவ அறம்’ வாய்ச்சொல்லளஜீல் பின்றகாலை ழீல் வந்தேறிய சரக்கெனல் வெஹீப்படையாம். முழுதற வடிவே முப்பத்ணிருவகை அறம்பாஸீத்த (காஞ்ஞிப் புராணத்) தொன்மச் செய்ணி எவரும் அறிந்ததே. “அறம் வளர்த்த நாயகி” என்னும் அம்மைபெயரை அறியலாமே! தளஞிங்காரம் (படைவனப்பு) வேந்தனொருவன் ஜீயப்புற உலாச் செல்வதை ஜீளீத்துக் கூறி, ஹிவன்றன் படைத்ணிற ஆண்மையைப் பாராட்டல் தள ஞிங்காரம் எனப்படும். தளம் = படை. ‘கோட்டை கொத்தளம்’ என்னும் ஹிணை மொஷீ, கோட்டைஜிம், கொல்தளமாம் படைஜிமாம். கொல்தளம் - கொற்றளம் - கொத்தளம். “கொந்தள அரசர் தந்தளம் ஹிளீய.” என்பது முதற்குலோத்துங்கன் மெய்க்கீர்த்ணி. (பெருந்தொகை. 799). “ வேட்டைப் பவவீ ஜீளீத்துரைத்துச் சேனைலீடல் காட்டல்தள ஞிங்காரம்.” என்பது நிரபந்தத் ணிரட்டு (46). ஹிரகுநாதசேதுபணிழீன் மேல், ‘தளஞிங்கமாலை’ என்பதொருநூல், அழகிய ஞிற்றம்பலக் கஜீராயரால் ஹியற்றப்பட்டது. அது கட்டளைக் கஸீத் துறையால் ஆகியது. தவீவெண்பா ஒன்றற்கு ஒன்று தொடர்நில்லாமலும், தவீத்தவீயே முடியக்கூடியதும், முடிமுதல்ழீயைபு (அந்தாணி) ஹில்லாமல் ஹியல்வதும் ஆகிய வெண்பாக்களால் அமைந்ததொரு நூல் ‘தவீவெண்பா’ எனப்படுகின்றது. ‘தவீப்பாடல் ணிரட்டு’ ‘தவீப்பாசுரத் தொகை’ என்னும் ஆட்ஞிகளை பினைக. ணிருவண்ணாமலைழீல் ஹிருந்த குகை நமஞிவாயர் அருஹீச்செய்த ‘ணிருவருணைத் தவீவெண்பா’ ஹிவ்வகைழீல் எண்ணத்தக்கது. அணில் 35 வெண்பாக்கள் உள. ஒரே ஓர் ஊடக ஹியைபு ஹிப்பாடற்கு உண்டு எவீன், அஃது அண்ணாமலையார் ணிருப்பெயரே. தாண்டகம் ஆறு சீர்களாலேனும்; எண்சீர்களாலேனும்; ஆடவரை யாவது, கடஷிளரையாவது, புகழ்ந்து பாடுவது தாண்டகம் ஆகும். ஹிவற்றுள் ஆறு சீர்கள் வரப்பாடுவது குறுந்தாண்டகம் என்றும், எண்சீர்கள் வரப்பாடுவது நெடுந்தாண்டகம் என்றும் பெயர் பெறும் (அப்பரடிகளும், ணிருமங்கைமன்னரும் பாடிய தாண்டகங்களைக் காண்க.) நான்கு அடிகளுக்கும் எழுத்து எண்தி ஒத்த அளவால் வருவது தாண்டகச் செய்ஜிளாகும். “ மூஜீரண் டேனும் ஹிருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்ஜிஹீன் ஆடவர் கடஷிளர்ப் புகழ்வன தாண்டகம்; அவற்றுள் அறுசீர் குறியது நெடியதெண் சீராம்.” “ அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங் கிறுவது தாண்டகம் ஹிருமுச் சீரடி குறியது நெடிய ணிருநாற் சீரே.” - (பல்காயனார்) “ மங்கல மரநின் மாவீடர் கடஷிளர் தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே.” “தாண்டகம் மாவீடர் கடஷிளர்க் குளீத்தே.” (மாபூதனார்) ‘ அடிவரை நான்கும் வருமெழுத் தெண்தி நேரடி வருவது தாண்டக மாகும்.” - சீத்தலையார் பன்வீரு பாட்டியல் 307-311) ஹிவீத் தாண்டகம் நான்கடிஜிம் அளவொத்து வருவது ‘அளஜீயல் தாண்டகம்’ என்றும், அளஷி அஷீந்து வருவது ‘அஷீவஷீ தாண்டகம்’ என்றும், சந்தமும் தாண்டகமுமாக வருவது ‘சந்தத் தாண்டகம்’ என்றும், யாப்பருங்கல ஜீருத்ணி ஜிடையார் காட்டுவர். எண்சீளீன் லீக்குத் தாண்டகம் வருதற்கும் அவர் எடுத்துக்காட்டுத் தருவர் (95). ஹிருபத்தேழு எழுத்து முதலாகக் குறில்நெடில் ஒத்து வருதலைக் கணக்கிட்டுக் காட்டுவர். “ ஹிருபத் தேழெழுத் தாகி யாக உயர்ந்த எழுத்தடி ழீனவாய் எழுத்துங் குருஷிம் ஹிலகுஷிம் ஒத்து வந்தன அளஜீயற் றாண்டகம் எனஷிம் அக்கரம் ஒவ்வாதும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அளவஷீத் தாண்டகம் எனஷிம் பெயர்பெறும்” - (முத்துனிளீயம். 1116) என்பார் முத்துனிளீயனார். தாமரை நோன்பு மாலைழீல் தாமரை மலளீல் புகுந்தவண்டு ஆங்கிருக்கும் போணில் கணிர்மறைதலால் மலர் மூடிக்கொள்ள ஆங்கேயே தங்கிழீருந்து காலைழீல் கணிரோன் எழும்நிய அளஜீல் அம் மலர் மலர்தலால் வெஹீப்பட்டுச் செல்வதாய மலரை, ஹிர வெல்லாம் கைழீல் கொண்டிருந்து நோன்பு கொண்ட தலைஜீ, அம்மலரைத் தோஷீழீடம் கொடுத்தலைப்பற்றிப் பாடுதல் தாமரைநோன்பு என்பதாம். அது கஸீவெண்பாவால் ஹியற்றப் படுவதாம். “ கங்குஸீன்வண் டேந்ணிநகை கால்பானு வான்மலர்த்ணிப் பங்கய மாதொருத்ணி பாங்கிழீடம் - செங்கை கொடுக்கவே கூறல்ஏடார் தாமரை நோன்பாம் எடுத்தல் கஸீவெண்பா வே.” - (நிரபந்தத்ணிரட்டு 24) மாலைழீல் தாமரைஜிள் புகுந்தவண்டு காலைழீல் வெஹீப் படுதல் முருகாற்றுப்படை, ஞிலம்பு ஆகியவற்றில் அறிந்த செய்ணி. கஜீமதி ‘பினைஷிம் முடிஷிம்’ என்னும் பாடஸீலும் குறிப்பார். தாமரையை ஏந்ணிழீருந்து நோற்றலால், ‘தாமரை நோன்பு’ எனப்பட்டது. ஹிது ணிருமகளை நோக்கிய நோன்பாகலாம். தாரகைமாலை தாரகை = கண்மதி, ஜீண்மீன். ஹிருபொருள்களை ஹிணைத்து ஹிருபத்தேழு பாடல்கள் பாடுவது ‘தாரகைமாலை’ எனப்படும் என்பார் பன்வீரு பாட்டியலார். அளீய கற்புடைய மகஹீன் மாண்புகளை வகுப்பால் கூறுவது ‘தாரகை மாலை’ என்பார் ஹிலக்கண ஜீளக்கப் பாட்டியலார். “ ஹிரண்டு பொருள்புணர் ஹிருபத் தெழுவகைச் சீளீய பாட்டே தாரகைமாலை.” - (பன்வீருபாட்டியல். 305) “ வகுப்பாற் கற்புடை மகஹீர்க் குள்ள தகைத்ணிறம் கூறுதல் தாரகைமாலை.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 107) “ அருந்தணிக் கற்நின் அளீவையர்க் குள்ள ஹியற்கைக் குணங்களை வகுப்பால் ஹியம்புதல் தாரகை மாலையாம் சாற்றுங் காலே.” என்பார் முத்துனிர உபாத்ணியாயர் (103). ஹிவீத் தூஞிப் படையைப் புகழ்ந்து வகுப்பால் ஒன்பது கஜீ பாடுவது தாரகைமாலை என்பார் வெண்பாப் பாட்டியலார்.(32) தாலாட்டு நாற்சீர் ஈரடி ஓரெதுகைக் கண்திகளாகத் தாலாட்டுப் பாடல் வரும். சீராமர் தாலாட்டு முதஸீயவை ஹிவ்வகைழீல் அமைந்த நூல்களாம். “பேராம் அயோத்ணிப் பெருமானைத் தாலாட்டச் சீரார் குருகையர்கோன் சேவடிகள் காப்பாமே.” அல்ஸீ அரசாதிமாலை, பவழக்கொடிமாலை, ஹிவ்வகைக் கண்திகளால் வருவனவேயாம். ஹிவை மாலை எனப் பெயர் பெறுவதைக் கருணி அந்தாணி எனக் கொள்ள வேண்டுவணில்லை. தொடர்கதை, தொடர்ந்து வரும் பாடல் என்னும் பொருஹீல் வருவது ஹிம்மாலையாகும். பெளீயாழ்வார் பாடிய கண்ணன் ணிருத்தாலாட்டு கஜீன் லீக்கது. கஜீமதி பாவேந்தர் முதஸீய வர்கள் பாடிய தாலாட்டுகள் புதுமணம் கமழ்வன. தாய்மார் வளர்த்த தலீழ் தாலாட்டாம். தாஷீசை மாலை தாஷீசையால் பாடப்படுவதொரு நூல் தாஷீசை மாலை. ணிருச்ஞிராப்பள்ஹீ, ‘சக்ணி தாஷீசைமாலை’ தண்டபாதி அடிக ளால் பாடப்பட்டது. அணில் 34 தாஷீசைகள் உண்டு. தானைமாலை. அகவல் ஓசைழீற் நிறழாது அரசர்க்குளீய ஆஞிளீயப் பாவால் முன்னர் எடுத்துச்செல்லும் கொடிப்படையைச் சொல் வது தானைமாலையாகும். “ ஆசற உணர்ந்த அரசர் பாவால் தூஞிப் படையைச் சொல்வது தானை மாலை யாகும்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல் 109) “ அகவலோ சைழீற்நிற ழாதகவ ஸீன்முனர் எடுத்துச்செல்லுங் கொடிப்படை ஹியம்பல் தானைமா லைப்பெயர் தழுஷிமா மெனவே.” - (முத்துனிளீயம். 1166) ணிக்குஜீசயம் (ணிக்குவெற்றி) எட்டுத்ணிக்கும் படைகொண்டு சென்று, பகைவரை வெற்றி கொண்ட ஞிறப்பைப் பாடுவது ணிக்குஜீசயம் என்பதாம். கடிகை முத்துப்புலவரால் ‘ணிக்குஜீசயம்’ பாடப்பட் டுள்ளது. அது ‘ஞிவகிளீ வரகுணராம பாண்டிய வன்வீயனார் ணிக்குஜீசயம்’ என்பது. “ பின்கடற் நிறந்த ஞாழீறு பெயர்த்துபின் வெண்டலைப் புணளீக் குடகடற் குஹீக்கும்.” என்பது போலும் புகழ் நாட்டத்தால் முழுதாளும் முனைப்பு மீக்கூந்தார்க்கு எழுந்த ணிசைவெற்றிப் பாட்டின் வஷீவந்த ஞிற்றிலக்கிய வகை ஹிது. ணிரட்டு ஒருவர் பாடிய பாடல்களைத் ணிரட்டிய நூலோ, பலர் பாடிய பாடல்களைத் ணிரட்டிய நூலோ ணிரட்டு என்று வழங்கப் பட்டன. முன்னே ‘தொகை’ என்று வழங்கிய ஆட்ஞியைத் ‘ணிரட்டு’ ஏற்றுக்கொண்டது நின்னே எனலாம். குமரகுருபரர் நிரபந்தத்ணிரட்டு, ஞிவஞான முவீவர் நிர பந்தத்ணிரட்டு என்பன போன்றவை முதல்வகைழீன. தவீப்பாடல் ணிரட்டு; பல பாடல் ணிரட்டு என வழங்குவன அடுத்த வகைழீன. ஹிவீத் ‘தெருட்டு’ என்பதொரு நூல்வகைஜிண்டு. அது ‘நீலகேஞித் தெருட்டு’ என்பதால் ஜீளங்கும். ‘தெருட்டு’ என்பது தெஹீஜீப்பது என்னும் பொருளது. ணிரட்டு என்பது ‘தெளீஷி’ என வழங்கப்பெற்றமை சுவடி களால் அறிய வருகின்றது. தெளீந்தெடுக்கப்பட்ட பாடல் களைஜிடையது என்பது பொருள். புறத்ணிரட்டு, பன்னூற்றிரட்டு என்பவை அளீய ணிரட்டு நூல்களாம். தொகை காண்க. ணிளீபந்தாணி (ணிளீபு முடிமுதல்) அடிதோறும் முதற்சீர் முதலெழுத் தொன்று மட்டும் அளவால் ஒத்துத் ணிளீந்து பின்று நிறவெழுத்துக்களது தொகுணி யமகம் (மடக்குப்) போலவே வருவது ணிளீபு என்னும் சொல்லதி வகைழீனதாம். மடக்கு அமைப்நில், முதல் எழுத்து ஒன்று மட்டுமே ணிளீந்து பிற்றல் ணிளீபு என்க. ணிளீபுடன் அந்தாணியாக வரும் பாடல்களைக் கொண்ட நூல் ணிளீபந்தாணி எனப்பெறும். ஞிவப்நிரகாச அடிகள் ஹியற்றிய பழமலைத் ணிளீபந்தாணி காண்க. (எ-டு): “ணிருவருந் தங்க வருங்கல்ஜீ மாது ஞிறப்புவருங் கருவந் தங்க பிலையாதென் றுள்ளங் கரைந்ணிறைஞ்ஞிற் பொருவருந் தங்க மலைபோலும் குன்றைப் புராதனனை ஹிருவருந் தங்க டலையா ஸீறைஞ்சு லீறைவனையே.” - (பழமலையந்தாணி 1) ணிருச்ஞின்னம் ஞின்னம் என்பது ணிருக்கோழீற் பொருள்களைஜிம், சங்கம், ஊதுகொம்பு ஆகியவற்றைஜிம், அடையாளம், துண்டித்தல், துன்புறுத்துதல், ஆகிய பொருள்களைஜிம் தரும் சொல். ணிருச்ஞின்னம் என்பது ணிருக்கோழீற் பொருள்கஹீன் ஹிறைமைழீன் ஞிறப்புகளை எடுத்துச் சங்கமும், கொம்பும், நிடிப்ப தாக வரும். மெய்ப்பொருட் கொள்கைகளைக் கூறிச் ஞின்னம் நிடிப்பதாகஷிம் வரும். ‘ணிருச்ஞின்னமாலை’ என்னும் பெயரால் வேதாந்த தேஞிகர், னிரராகவாசாளீயர் ஆகியோர் ஹியற்றிய நூல்கள் உண்டு. வள்ளலார் அருஹீய ஆனந்த மேமிட்டுப்பாடல் ‘ஞின்னம் நிடி’ப்பதாக வரும். “அம்பலவர் வந்தாரென்று ஞின்னம்நிடி அற்புதம் செய்கின்றாரென்று ஞின்னம்நிடி செம்பலன் அஹீத்தாரென்று ஞின்னம்நிடி ஞித்ணிபிலை பெற்றதென்று ஞின்னம்நிடி ஞிற்சபையைக் கண்டோமென்று ஞின்னம்நிடி ஞித்ணிகள்செய் கின்றோமென்று ஞின்னம்நிடி பொற்சபை புகுந்தோமென்று ஞின்னம்நிடி புந்ணிமகிழ் கின்றோமென்று ஞின்னம்நிடி.” என்பவை அவற்றில் முதஸீரண்டு கண்திகள். ணிருப்பல்லாண்டு ஹிறைவனைஜிம், ஹிறைவன் தொடர்புடைய பொருள் களைஜிம், அடியார்களைஜிம் ஹின்னநிறவற்றைஜிம், “பல்லாண்டு பல்லாண்டு பல்லாழீரத்தாண்டு வாழ்க” வென வாழ்த்துவதாய் அமைந்த நூல் ணிருப்பல்லாண்டு என்பதாகும். பெளீயாழ்வார் பாடிய ணிருப்பல்லாண்டு அறுசீர் ஆஞிளீய ஜீருத்தத்தால் அமைந்துள்ளதறிக. ணிருப்பள்ஹீயெழுச்ஞி உலகத்துழீர்களையெல்லாம் தன் அடிக்கண் ஒடுக்கி மீண்டும் மலர்க்கும் ஹிறைவன் துழீல் கொள்வதாகஷிம், அவன் அத்துழீல் நீங்கி எழுந்தருள வேண்டுவதாகஷிம் அவன் புகழ்பல பேஞி எண்சீர் ஜீருத்தத்தால் பாடப் பெறுவது ணிருப்பள்ஹீ எழுச்ஞியாகும். தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், மாதிக்க வாசகரும் அருஹீய ணிருப்பள்ஹீ எழுச்ஞிகள் எடுத்துக்காட்டாம். பாரணியாரால் பாடப்பெற்ற பாரதமாதா பள்ஹீயெழுச்ஞி ஹிவ்ஜீலக்கணம் அமையப் புது நெறிழீல் அமைந்ததாகும். ஹிறைவனைத் தந்தையாய்த், தாயாய்க், குருவாய்த், தெய்வமாய், அரசாய், வள்ளலாய் பிறுத்ணித் ணிருப்பள்ஹீயெழுச்ஞி பாடுகிறார் வள்ளலார். ணிருப்பெயர்பொறி பீடும், பெயரும், எழுணிக் கல்நாட்டல் னிரவஷீபாட்டு முறையாகும். ‘நடுகல்’ என்பது னிர வஷீபாட்டுச் ஞின்னமே. “ காட்ஞி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு ஞிறப்நிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகைழீற் கல்.” என்னும் தொல்காப்நிய வஷீழீலேயே காட்ஞிக்காதை, கால் கோட்காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை, வரந்தருகாதை என்பவற்றை ஹிளங்கோவடிகளார் வஞ்ஞிக் காண்டமாக அமைத்துக் கொண்டார். செங்குட்டுவன் வடநாடு சென்று பவீமலைழீல் கல் லெடுத்து, மேன்மலைழீல் கோழீல் பிறுஜீ, வஷீபட்ட செய்ணியை ஜீளீத்துரைத்தார். ஹிச்செய்ணிஜிம், தென்னாட்டு வேந்தர்களாகிய களீகாற்சோழன், ஹிமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், முதஸீயோர் வடநாடு சென்று ஹிமயத்ணில் தங்கள் ஹிலச்ஞினைகளைப் பொறித்துக் கொடிநாட்டித் ணிரும்நிய செய்ணிஜிம் நின்னதி யாகக் கிளர்ந்தது, ஹித்ணிருப்பெயர்ப் பொறி ஹிலக்கியமாம். “ வெற்றிக் கொடிமேரு ஜீல்நாட்டி தன்பெயரைப் பற்றி வரைதலந்தப் பான்மைப்பேர்.” - (நிரபந்தத் ணிரட்டு 68) என்பது ணிருப்பெயர்ப் பொறிழீன் ஹிலக்கணம். ணிருமறம் கண்திடந்தப்பல், கையறுத்தல், கால்தடிதல் முதலாகத் தமக்குத் தாமே செய்து ஹிறைவன் ணிருவருஹீல் தோய்த்த அடியார் வரலாற்றை ஆஞிளீயப்பாவாற் கூறுவது ணிருமறம் ஆகும். ஹிவ்வகைழீல் எழுந்தவை ணிருக்கண்ணப்ப தேவர் ணிரு மறம் முதஸீயவையாம். ணிருமுக்கால் பாடஸீன் ஹிரண்டாம் அடிஜிம், நான்காம் அடிஜிம், முச்சீரால் முடிவது ணிருமுக்கால் எனப்படும். முதலாம், மூன்றாம், அடிகள் நாற்சீர் என்க. “ ஜீண்ணவர் தொழுதெழு வெங்குரு மேஜீய சுண்ணவெண் பொடியதி னிரே சுண்ணவெண் பொடியதி னிரும் தொழுகழல் எண்ணவல் லாளீட ளீலரே.” ஹித்ணிருப்நிரமபுரத் ணிருமுக்கால் (1) ஆளுடைய நிள்ளையார் அருஹீயதே. ணிருவாழீரம் தெய்வத்தைப்பற்றி ஆழீரம் பாடல்கள் பாடுவது ணிரு வாழீரமாம். வண்ணச் சரபம் தண்டபாதி அடிகள் நான்கு ணிரு வாழீரங்கள் பாடிஜிள்ளார். அவை பழவீத் ணிருவாழீரம். ணில்லைத் ணிருவாழீரம். ணிருவரங்கத் ணிருவாழீரம், தெய்வத் ணிருவாழீரம் என்பன. ஹிவற்றுள் பழவீத் ணிருவாழீரத்ணில் ஹிடம் பெற்றுள்ளவை. 1. வெண்பாமாலை: தவீத்தவீ வெண்பாக்கள் நூறுடையது. 2. வெண்பா அந்தாணி: அந்தாணித் தொடளீல் வெண்பா நூறுடையது. 3. அலங்காரம்: கட்டளைக்கஸீத்துறை நூறுடையது. 4. குருபரமாலை: எழுசீர் ஜீருத்தம் ஐம்பத்தொன்றா லாகியது. 5. பணிற்றுப்பத் தந்தாணி: பத்துப்பாடல்களுக்கு ஒரு வகை யாப்பாகப் பத்துவகைப் பாடல்கள் அந்தாணித் தொடைழீல் நூறுடையது. 6. ஒருபா ஒருபஃது: அந்தாணித் தொடளீல் 10 அகவற் பாக்களைக் கொண்டது. 7. நவமதிமாலை: வெண்பா, கட்டளைக்கஸீத்துறை, வெண்டளைக்கஸீப்பா, கொச்சகம், கஸீபிலைத்துறை, கட்டளைக்கஸீப்பா, எழுசீர் ஜீருத்தம், ஆஞிளீயப்பா, சந்த எண்சீர்ப்பா என ஒன்பது பாவகைழீல் அந்தாணி நடைழீல் ஹியல்வது. 81 பாடல்களைஜிடையது. 8. ஞித்ணிமாலை: பலவகைச் சந்தஜீருத்தங்களைஜிடைய 64 பாடல்களைக் கொண்டது. 9. நவரசம்: ஒன்பான் சுவைகளை ஒருவகை யாப்பவீல் பாடியது; 9 பாடல்களைஜிடையது. 10. நடுஒஸீயல் அந்தாணி: 32 கலைச்சந்தப் பாடல்கள் 30 உடையது. 11. வகுப்பு: “தனனத் தந்தத் - தனனத் தத்தத்” என்றும் “தனதன தனதத்த - தனதன தனத்த” என்றும் “தனனதன தானதன - தானான தந்தனா” என்றும் வரும் சந்தத்ணில் மூன்று வகுப்புப் பாடல்களை ஜிடையது. 12. வண்ணம்: கலஜீ மகிழ்தல் என்னும் அகத்துறை வண்ணப்பாடல் ஒன்றுடையது. 13. நிள்ளைக்கஸீ: நூறுபாடல்களைஜிடையது. 14. கலம்பகம்: நூறுபாடல்களைஜிடையது. 15. யமக அந்தாணி: நூறு பாடல்களைஜிடையது. 16. ணிளீபு மஞ்சளீ: 51 பாடல்களைஜிடையது. ணிருஜீயமகம் (ணிருமடக்கு) அடிதோறும் வந்த சொல்லோ தொடரோ மீண்டும் வந்து பொருள்வேறு தருவது மடக்கு என்னும் சொல்லதி யாகும். அடிழீன் முதல், ஹிடை, கடை மடங்கி வருதல் முறையே முதன்மடக்கு, ஹிடைமடக்கு, கடைமடக்கு எனப்பெயர் பெறும். முழுவதும் மடங்கிவருவதும் உண்டு. அது முழுமடக்கமாகும். ணிருஞானசம்பந்தர் பாடிய கடைமடக்குப் பணிகத்ணில் முதல் பாடல்: “ உற்றுமை சேர்வது மெய்ழீனையே உணர்வது பின்னருள் மெய்ழீனையே கற்றவர் காய்வது காமனையே கனல்வஷீ காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பதியே அமரர்கள் செய்வதும் உன்பதியே பெற்றும் உகந்தது கந்தனையே நிரம புரத்தைஜி கந்தனையே.” தும்பைமாலை “மாற்றாரோடு தும்பைப் பூமாலை சூடிப் பொருவதைக் கூறுவது தும்பை மாலையாகும்.” “ தும்பைவேய்ந் தொனாரொடு சூழ்ந்து பொருவது சொல்வது தும்பை மாலையாகும்.” - (முத்துனிளீயம். 1077.) துழீலெடைபிலை கண்படை கொண்ட வேந்தரை வைகறைப் போழ்ணில், முன்னே ணிறைதந்த வேந்தரும், ணிறைதாராத வேந்தரும் வாழ்த்ணி பின்மொஷீகேட்டு நடக்க ஜீழைந்து பிற்கின்றனர்; வேந்தே! துழீல் எழுக! எனப்பாடுவது துழீலெடைபிலை என்பதாகும். “ கண்படை மன்னவர் முன்னர்த் தண்பதம் ஜீடிய எல்லை ஹியல்புறச் சொல்ஸீத் தந்த ணிறையரும் தாராத் ணிறையரும் ஏத்ணி பின்மொஷீ கேட்டிவீ ணியங்க வேண்டினர் ஹித்துழீல் எழுகென ஜீளம்நின் அதுவே மன்னவர் துழீலெடை பிலையே.” - (பன்வீருப் பாட்டியல். 324) பாசறைழீல் ‘சூதர்’ துழீலெழுப்புதலுமாம். (நிரபந்த தீபம் 61) துவீஜீஞித்ணிரம் (நிளீதுயர்ப் பேரெஷீல்) துவீ என்பது அச்சம், ஞினம், துன்பம், வெறுப்பு, புலஜீ நீட்டம் முதஸீய பொருள் தரும் சொல். ஜீஞித்ணிரம் என்பது ஜீயப்பு, பேரழகு, வேடிக்கை, பல வண்ணம், எணிருரை எனப் பல பொருள்தரும் சொல். நிளீஷிஷீக்கலங்கும் கலக்கத்தை அழகுறக் கூறுவது துவீஜீ ஞித்ணிரம் என்பதாம். “ முத்துமுலைப், பெண்கலஜீ பாடிப் நிளீவாய் ஜீளீத்துரைத்தல், அண்ணும் துவீஜீஞித்ணிரம்” என்பது ஹிதன் ஹிலக்கணம் ( நிரபந்தத்ணிரட்டு.5) நிளீ வாய் - நிளீகின்ற ஹிடத்து. நிளீஷிஷீக் கலங்கலைக், கற்றார் உருகிக் கலுழுமாறு உணர் வொன்றப் பாடுதலால் பேரெஷீல் ஆழீற்றாம். நெடிய வாடைஜிம், நிளீந்த தலைவனைக் கூட்டுஜீக்க உதுஷிவதால் ‘நல்’ வாடையாகி ‘நெடுநல்வாடை’யாகி ஜீடஜீல்லையா? ‘செங்கடுமொஷீ’ என்னும் தொல்காப்நியச் சொல் லாட்ஞிஜிம் அது.(களஷி. 23) தூது கஸீவெண்பாஜீனால் உயர்ணிணை ஹிருபாஸீனரைஜிம், அஃறிணைப் பொருள்களைஜிம் தூதாக ஜீடுத்துத் தம் வேட்கை பிலைஜிரைப்பதாகக் கூறுவது தூது ஆகும். ஆடவர் மகஹீர் ஹிருவர் வாக்காகஷிம் தூது நூல் கூறப் பெறுதல் உண்டு. ‘ பழீல்தரும் கஸீவெண் பாஜீ னாலே உயர்ணிணைப் பொருளைஜிம் அஃறிணைப் பொருளைஜிம் சந்ணின் ஜீடுத்தல் முந்துறு தூதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெஹீந்தே.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 114) தூதுஜீடுதற்குளீயவை ஹிவை என்பதைப் பத்தென வரைப் படுத்ணிக் கூறியவர்கள் உளர். ஆனால் அவ்வரையறை கடந்து எண்திலாப் பொருட்பெயரால் தூது நூல்கள் உளவாதல் கண்கூடு. “ எகினமழீல் கிள்ளை எஷீஸீயொடு பூவை சகிகுழீல் நெஞ் சந்தென்றல் வண்டு - தொகைபத்தை வேறுவே றாப்நிளீத்து ஜீத்தளீத்து மாலைகொண்டான் பூறிவா வென்ற தூது. - (நிரபந்தத் ணிரட்டு) “ ஹியம்புகின்ற காலத் தெகினமழீல் கிள்ளை பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுழீல் பேதைநெஞ்சந் தென்றல் நிரமரமீ ரைந்துமே தூதுரைத்து வாங்குந் தொடை.” - (ஹிரத்ணினச் சுருக்கம்) “ ஆணும் பெண்ணும் அவரவர் காதல் பாணன் முதஸீய உயர்ணிணை யோடும் கிள்ளை முதஸீய அஃறிணை யோடும் சொல்ஸீத் தூது போய்வா வென்னக் கஸீவெண் பாவால் அறைவது தூது.” - (முத்துனிளீயம். 1112) தெம்பாங்கு ஈரடி ஓரெதுகையாய், நாற்சீரடியாய், ஒவ்வொரடிழீன் மூன்றாம் சீரும், முதற்சீருக்கேற்ற மோனைஜிடையதாய் வரும் ஞிந்துநடை, தெம்பாங்கு என்பதாம். ஹிதனைத் தென்பாங்கு என்பர். தேன்போல் ஹிவீக்கும் பாட்டு என்பது பொருளாம். ஹிவீத் தெம்பாங்கு முதலடிழீன் ஹிறுணிச்சீர், மடக்கா ஹிரண் டாவது அடிவருவதும் உண்டு. நாட்டுப்புறம் தந்த பாட்டுவளம் ஹித் தென்பாங்காம். தெய்வக்கைஜிறை “தெய்வத்தை, ஜீஹீத் துணித்துக் குஜீமுலையைக் கைகொடுத்தல் ஓஜீல்தெய் வக்கை ஜிறை.” - (நிரபந்தத் ணிரட்டு 16) காதலுக்குத் தடைஜிண்டாங்கால் உடன் போக்கு பிகழ்தல் உண்டு. அவ்ஷிடன் போக்குக்கு உடந்தையாகஷிம், உறு துணையாகஷிம் ஹிருப்பவள், தலைஜீழீன் உழீருக்கு உழீரான தோஷீயே ஆவள். அவள் தன் கவலையையெல்லாம் அடக்கிக் கொண்டு தலைஜீழீன் நல்வாழ்வே கருத்தாகி, ‘வாஷீ நவீபயக்க வெனத் தெய்வம் வாழ்த்ணி”த் தலைஜீயைத் தலைவவீடம் கையடையாகக் கொடுப்பாள். ஹிவ்ஷிருக்கலீகு செய்கையே கருப்பொருளாக அமைந்த ஹிலக்கியம் தெய்வக்கைஜிறை. தெய்வத்தை வாழ்த்ணிக் கைஜிறையாகக் கொடுத்தலால் ஹிப் பெயர்த்தாழீற்று. தேவபாதி தெய்வத்தைப் பாடும் பாடல் தேவபாதி. பாடும் ணிறம் வல்லார் பாணர், பாடிவீயர் என்று வழங்கப்பட்டமை அறியத் தக்கது. ணிருப்பாணாழ்வாரும், ணிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், பாணாற்றுப்படைகளும் எண்ணத்தக்கன. தேவபாதி தொல்காப்நியத்ணில் சுட்டப்படுகின்றது. அது பெருந்தேவபாதி, ஞிறுதேவபாதி எனப்பகுக்கஷிம் ஆழீற்று. கஸீஜிம், பளீபாடலும் தேவபாதிக்குளீயவை என்பது முந்தை யோர் முடிபு. ஆழீன் நின்னே மாறியமைந்த சான்றும் உண்டு. பணினோராந்ணிருமுறைழீல் பெருந்தேவபாதி உண்டு. அது நக்கீர தேவநாயனார் பாடியது. 67 அடிகளைக் கொண்டது. பளீபாடஸீல், ணிருமால் செவ்வேள் ஆகியோரைப் பற்றிய தேவபாதிகள் உள. தேவாங்கவரைஜிள் (பட்டுவரைஜிள்) துய்க்கத் தக்க நலமெல்லாம் அமைந்த பட்டுடுத்த லீன்னற் கொடி போல்வாளைச் ஞிறைப்படுத்ணிக் கொண்டு வந்து அவளை அடைதல், ‘தேவாங்க வரைஜிள்’ என்னும் ஹிலக்கியப் பொருளாகும். “துற்ற தேவாங்க லீன்னையே ஞிறைவாய் வைத்துவந்து மேஷிதலே ஓங்கு தேவாங்க வரைஜிள்.” என்பது நிரபந்தத் ணிரட்டு (68). தேவாங்கம் - பட்டு; தேவாங்கரைப் பட்டுநூல்காரர் என்னும் வழக்குண்மை அறிக. தேவாங்க வரைஜிள், தேவாங்க ஞிலோச்சயம்’ எனஷிம் சொல்லப்படும். ஞிலோச்சயம் - வரை, மலை. தொகைபிலைச் செய்ஜிள் பாட்டின் பொருளால், ஹிடத்தால், காலத்தால், தொஷீலால்; வருவனஷிம் பாட்டினது அளவால் ; எண்ணால் வருவனஷிம் செய்தவன் பெயரை நாட்டித் தொகுவனஷிம்; செய்ஜீத்தவன் பெயரை நாட்டித் தொகுவனஷிம்; தொகை பிலைச் செய்ஜிள் என்பதாம். ‘ பாட்டுப் பொருஹீடங் காலம் தொஷீல்பாட் டளஜீனெண்தின் நாட்டித் தொகுத்தஷிம் செய்தவன் செய்ஜீத் தவன்தம்பேர் மூட்டித் தொகுத்தஷி மாகி முதநூல் மொஷீந்தநெறி கேட்டுத் தெளீந்துகொள் கிஞ்சுகச் செவ்வாய்க் கிஹீமொஷீயே.” - (நவநீதப்பாட்டியல். 66) (பாட்டின்) பொருளால் தொக்கது, அகநானூறு. ஹிடத்தால் தொக்கது, களவஷீநாற்பது. காலத்தால் தொக்கது, கார்நாற்பது. தொஷீலால் தொக்கது, ஊசல் பாட்டால் தொக்கது, கஸீத்தொகை. அளவால் தொக்கது, குறுந்தொகை. ஹிவீ லீகுணி, தன்மை, முதனூல் ஹிடுகுறி, உறுப்பு முதஸீய நிறவகையாலும் பெயர் பெறுவதுண்டு. வெற்றிவேற்கைழீன் ஒரு பெயர் நறுந்தொகை; நிற்காலத் தொகைநூல்கஹீல் பெருந்தொகைக்குத் தவீ ஹிடமுண்டு. ‘ணிரட்டு’ காண்க. தொகைவெண்பா ஏதேனும் ஒரு பொருள்மேல் ஐம்பது, எழுபது, தொண் ணூறு வெண்பாக்கள் வரப் பாடுவது தொகை வெண்பா. “ வெண்பா, ஒத்தான ஐம்பது எழுபது தொண்னூறும் பேர்பெற்றதாய்...ஹியம்புவரே.” என்பது நவநீதப் பாட்டியல் (38) தொடர்பிலைச் செய்ஜிள் காப்நியம், பெருங்காப்நியம், அகலக்கஜீ காண்க. ஞிலப்பணிகாரத்ணிற்கு, ஹியஸீசை நாடகப் பொருட்டொடர் பிலைச் செய்ஜிள் என்னும் பெயருண்மை அறிக. தொள்ளாழீரம் தொள்ளாழீரம் பாடல்களைஜிடைய நூல்வகை தொள் ளாழீரம் எனப்பட்டது. தொள்ளாழீரம் ஒரு வகை யாப்பால் ஹியலும் என்பது முத்தொள்ளாழீரத்தால் ஜீளங்கும். ஹிவீ அரும்பைத் தொள்ளாழீரம் ஒட்டக்கூத்தர் ஹியற்றியது. மற் றொரு தொள்ளாழீரம் வசந்தத் தொள்ளாழீரம். ஹிவை ஹிரண்டும் மறைந்து போன நூல்களைச் சார்ந்தவை. முத் தொள்ளாழீரத்ணில் மட்டும் பாடல்கள் கிடைத்துள. தோணோக்கம் மதிவாசகரால் அறிந்து கொள்ள வாய்க்கும் ஓர், ஆட்டுப் பாட்டு ‘தோணோக்கமாம். தோள் நோக்கம் = தோணோக்கம் தோளெடுத்து னிஞி ஆடுவதுடன், அதனை நோக்கிக் கொண்டு பாடுவதும் உண்மையால் ஹிப்பெயர் பெற்றதெனலாம். ஹிப்பாடல் முடிபிலை ‘தோணோக்கம் ஆடாமோ? என்று வருதல் பெயர்க்குறி என்க. ஹிது மகிளராடல் என்பது ‘துன்றார் குழஸீனீர், மங்கைநல்மிர்” என்பனபோல வரும் வளீகளால் ஜீளங்கும். தோணோக்கப் பாடல்கள் ணிருவாசகத்ணில் 14 உள. நான்காம் பாடல்: “ கற்போலும் நெஞ்சம் கஞிந்துருகக் கருணைழீனால் பிற்பானைப் போலவென் னெஞ்ஞினுள்ளே புகுந்தருஹீ நற்பாற் படுத்தென்னை நாடறியத் தாவீங்ஙனம் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ.” நகர் ஜீருத்தம் (நகர்ப்பா) நகர நலங்குறித்துப் பத்து ஆஞிளீய ஜீருத்தம் பாடுவது நகர்ஜீருத்தம் என்னும் ஞிறுநூற் பாற்படும். - (நவநீதப் பாட்டியல். 41) நட்சத்ணிரமாலை (உடுமாலை) உடுஜீன் பெயர் ஒவ்வொன்றும் வருமாறு ஹிவீய பாடல் ஹிருபத்தேழு ஹியற்றித் தொடுத்தல் நட்சத்ணிரமாலை எனப் படும். உடுஜீன் எண்திக்கை 27 ஆகஸீன், ஹிந்நூற் பாடல் தொகைஜிம் 27 ஆழீற்று. “உடுப்பேர்க் கார்த்ணிருத்தல் சந்தமேற்ற நட்சத்ர மாலையே.” - (நிரபந்தத்ணிரட்டு. 26) “தாரகைமாலை” பார்க்க. நடுவொஸீலயந்தாணி ‘ஒஸீயந்தாணி’ பார்க்க. நணிஜீசேடம் (ஆற்றுச் ஞிறப்பு) தலைவன் நாட்டின் ஆற்றினைச் ஞிறப்நித்து, மற்றை ஆறுகஹீன் ஹியலை ஹிகழ்ந்து காமுகர் கூடும் குறிழீடத்ணிற்கு ஆற்றில் அடித்துவரப்படும் மலருக்கு உவமையாக்கிக் கூறுதல் ஆற்றுச்சீர் என்னும் நணிஜீசேடமாம். “ ஹிறைவன் நணியை எடுத்துமற்ற வற்றைக் குறிழீகழ்ந்து காமக்குணத்தார் - குறிழீடத்துக் காற்று மலரைஜிவ மாவீத்தல் எந்நாளும் ஆற்ற நணிஜீசே டம்.” - (நிரபந்தத்ணிரட்டு 66) காற்றுக்கும் மலருக்கும் உவமையாக்கிக் கூறுதலுமாம். நயனப்பத்து (ணிருக்கண்பத்து) ஆஞிளீய ஜீருத்தம் பத்ணினாலாவது, கஸீத்துறை பத்ணினா லாவது, நயனத்தைப் புகழ்வது நயனப்பத்தாகும். (நயனம் - கண்.) . (நவநீத. 50) ஆஞிளீய ஜீருத்தம் பத்தால் பாடுவது என்று பன்வீரு பாட்டியல் (333) கூறும். பத்துப் பாடல் என்ற அளஜீல் ஹிலக்கண ஜீளக்கப் பாட்டியல் அமைஜிம். (பாட். 92) “ பார்வையைப் பத்துப் பாட்டால் உரைப்பது நயனப் பத்தென நஜீலப் படுமே.” என்பது முத்துனிளீயம் (1104). நவகம் (ஒன்பது) ஒன்பது பாடல்களால் ஆகிய நூல். அட்டகம் (எட்டு) சத்தகம் (ஏழு) என்பவைபோல வந்தபெயர். சோமசுந்தர நாயகர் ஹியற்றியது, ‘தேஜீ ணியான நவகம்.” நவகாளீகைமாலை (தொண்கஸீத்துறைமாலை) கட்டளைக்கஸீத்துறை ஒன்பதால் பாடப்பெறுவது நவ காளீகைமாலை எனப்பெறும். ஹிக்காளீகை தெய்வத்ணின்மேல் பாடப்பெறுவதாகும். ணிருவண்ணாமலை அருணாசலேசர் நவகாளீகைமாலை ஹிவ்வகையைச் சார்ந்ததாகும். நவம் - ஒன்பது; காளீகை - கட்டளைக்கஸீத்துறை. நவரசம் (தொண்சுவை) ஒன்பான் சுவைகளைஜிம் சுவைக்கு ஒன்றாக ஒரேவகை யாப்பால் பாடுதல் நவரசம் எனப்படும். பழவீத் ணிருவாழீரத்ணில் ‘நவரசம்’ ஒன்பதாம் பகுணியாம். நவரசமஞ்சளீ (தொண்சுவைமாலை) ‘ நகையே அழுகை ஹிஹீவரல் மருட்கை அச்சம் பெருலீதம் வெகுஹீ உவகையென் றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.” என்பார் தொல்காப்நியர். (மெய்ப். 3) ஹிவ்வெட்டனுடன் சமவீலை என்பதொன்றைஜிம் சேர்த்து ஒன்பான்சுவை என்பர்; நவரசம் என்பததுவே. சுவைக்கு ஒன்பதாக ஒன்பான் சுவைக்கும் எண்பத்தொரு பாடல்பாடுதல் நவரச மஞ்சளீ எனப்பெயர் பெறும். வண்ணச் சரபம் தண்டபாதி அடிகஹீன் ணிருச்செந்ணில் ‘நவரச மஞ்சளீ’ ஹிவ்வகைழீல் எழுந்ததாம். நவமதி (தொண்மதி) ஒன்பான் மதிகஹீன் பொயரும் அமைய, ஒன்பான் பாடல்கள் ஹியற்றல் நவமதியாம். ஜீருதை ஞிவஞானயோகிகள் ஹியற்றிய ஒரு நூல், ‘சேறை நவமதிமாலை’ என்பது. தொண் -ஒன்பது. நவமதிமாலை (தொண்மதிமாலை ) வெண்பா முதலாக வேறுபட்ட பாஷிம், பாஜீனமும் ஒன்பது வர அந்தாணியாகப் பாடுதல் நவமதிமாலை எனப் பெறும். நவரத்ணினமாலை என்பதும் ஹிது. ஒன்பது பாடல் கஹீலும் ஒன்பது மதிப்பெயர்கள் வரும். “ வெண்பா முதலா வேறோர் ஒன்பது நண்பர்க் கூறல் நவமதி மாலை” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 76) “ பாவே ஹினமே என்றிவை ஹிரண்டும் மேஜீய வகையது நவமதி மாலை.” - (பன்வீருப் பாட்டியல். 294) “ஆஞிளீய ஜீருத்தம் ஒன்பது வருவது நவமதிமாலை.” என்று நவநீதப்பாட்டியல் (52) கூறும். “ அந்தா ணித்து வெண்பா ஆணிய பாஷிம் பாஜீனமு மாக ஒன்பது செய்ஜிள் அதிபெறச் செப்புவ ததுதான் நவமதி மாலையாம் நாடுங் காலே.” - (முத்துனிளீயம். 1051) ஹிவ்ஜீலக்கணம் அமையப் பாரணியாரால் செய்யப்பெற்ற பாரதமாதா நவரத்ணினமாலை புது நெறிழீனதாகும். வெண்பா, கட்டளைக் கஸீத்துறை, வெண்டளைக் கஸீப்பா, கொச்சகம், கஸீபிலைத்துறை, கட்டளைக் கஸீப்பா, எழுசீர் ஜீருத்தம், ஆஞிளீயப்பா, சந்த எண்சீர்ப்பா என ஒன்பது வகை யாப்நில் அந்தாணியாகப் பாடப்பட்ட நவமதிமாலை பழவீத் ணிருவாழீரத்ணில் உண்டு. நாட்டு ஜீருத்தம் (நாட்டுப்பா) நாட்டின் ஞிறப்நியல் குறித்துப் பத்து ஆஞிளீய ஜீருத்தம் ஹியற்றுவது நாட்டு ஜீருத்தம் என்னும் நூல்வகையாம். (நவநீதப் பாட்யடில். 41) நாமக்கோவை (பெயர்க்கோவை) நாமம் - பெயர். எடுத்துக்கொண்ட ஒருவர் பெயரையோ, குழுஜீன் பெயரையோ ஒழுங்குறுத்ணிக் கூறுதல் நாமக்கோவை எனப்படும். ணிருத்தொண்டர் ணிருநாமக்கோவை என்பது ஞிவஞான முவீவரால் ஹியற்றப் பெற்றது. கஸீவெண்பா யாப்நினது. ணிருத்தொண்டத்தொகை, ணிருத்தொண்டத் ணிருவந்தாணி, சேத்ணிரக் கோவை, சீகாஷீழீன் பல்பெயர்களைஜிம் கூறிய பல்பெயர்ப் பத்து என்பவை நாமக்கோவைழீன் முன்னவை என எண்ணத்தக்கவை. நாமமாலை பலவகை அடிகளும் மயங்கிவரும் வஞ்ஞிப்பாவால் ஆடவரைப் புகழ்ந்து பாடுவது நாமமாலையாகும். “ மைந்தர்க் காழீன் வஞ்ஞிப் பல்வகை நேர்ந்தஅடி மயக்கம் நாம மாலை.” “ ஆடவர் ணிறத்து வஞ்ஞி ழீன்னெறி நாடிய பாதம் மயங்க வைப்நின் நாம மாலை.” - (பன்வீருப் பாட்டியல். 284, 285) “ அகவல் அடிகஸீ அடிஜிம் மயங்கிய வஞ்ஞியாற் புருடனை வாழ்த்ணிப் புகழ்வது நாம மாலையாம் நாடுங் காலே.” - (முத்துனிளீயம். 1053.) நாமாவஹீ (ணிருப்பெயர் வளீசை) நாமம் - பெயர்; ஆவஹீ - வளீசை; ஜீளக்கதி, ‘தீபாவஹீ’ எனப்படுதல் அறிக. ஹிறைவன் ணிருப்பெயர்களைப் பலபட ஷிரைத்து வாழ்த்துதலும், வேண்டிக் கிடத்தலும், நாமாவஹீயாம். “ அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருள்ஜீருந்தே பொதுநடத் தரசே புண்தியனே புலவ ரெலாம்புகழ் கண்தியனே.” எனத் தொடங்கும் வள்ளலார் ‘நாமாவஹீ’ “ நல்லோரெல் லார்க்கும் சபாபணியே நல்வர மீஜிம் தயாபிணியே.” என அருள்ஜீளக்கம் செய்து, “ புத்தந்தரும் போதா ஜீத்தந்தரும் தாதா பித்தந்தரும் பாதா ஞித்தந்ணிரும் பாதா.” என வேண்டி பிறைகின்றது. அடியார் ணிருக்கூட்டத்து ஆர்வ ஹிசையால் கொட் டாட்டுப் பாட்டாகத் ணிகழும் வண்ணம் பல்வேறு ஹிசை வண்ணம் ணிகழப் பாடப்பட்டுள்ளதாம். ‘கொட்டாட்டுப்பாட்டு’ (வாத்யபிருத்த கீதம்) என்பது கல்வெட்டில் கண்ட அருந்தொடர். நாஷீகைக் கஜீ அரசர்க்கும், அமரர்க்கும் உரைக்கும் கடிகைகளை, முப் பத்ணிரண்டு வெண்பாஜீனால் உரைப்பது நாஷீகைக் கஜீயாகும். ஹிது நாஷீகை வெண்பா, கடிகை வெண்பா எனஷிம் பெறும். “ வானவர்க்கும், அரசர் தமக்கும் அறிய உரைத்த கடிகைகளை உரைசெய்ஜிள் முப்பத்ணிரண்டு வெண்பாவென ஓதுவரே.” - (நவநீதப் பாட்டியல். 54) ஹிதனைக் கடிகையளஜீல் தோன்றி நடப்பதாகக் கூறுவார் ஹிலக்கண ஜீளக்கமுடையார். “தேவர் அரசர் ணிறனே ளீசையான் மேஷிங் கடிகைழீன் மேற்சென் றதனை நாலெட்டுறச்சொலல் நாஷீகை வெண்பா.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 90) “அமர ளீடத்தும் அரச ளீடத்தும் நடக்கும் காளீயம் நாஷீகை அளஜீற் றோன்றி யொழுகுவ தாகமுப் பானோ டிரண்டு நேளீசை வெண்பா ஹியம்பல் கடிகைவெண் பாவெனக் கருணினர் புலவர்.” - (முத்துனிளீயம். 1124) நாஷீகைக்கஜீ ஹிலக்கணத்தைப் பன்வீரு பாட்டியல் நின் வருமாறு உரைக்கின்றது: “ஈளீரண் டியாமத் ணியன்ற நாஷீகைச் சீர்ணிகழ் வெண்பாப் பாடுநர் யாவரும் ஹிருநான் கேழே ஷீருநான் காமெனக் கன்னன் முப்பதும் எண்தினார் ஹிவீதே.” “மன்னர் கடஷிளர் முன்வீலையாக அன்ன கடிகை என்னும் ஹியல்நில் தொகுநெறி அன்னவை நேளீசை வெண்பா.” “முதல்யாமம் ஏழு அளஷிம் பாடி, எட்டாவணில் யாமம் ஒன் றென்றும்; ஹிரண்டாம் யாமம் ஆறளஷிம்பாடி, ஏஷீல் யாமம் ஹிரண்டென்றும்; மூன்றாம் யாமம் ஆறளஷிம் பாடி, ஏஷீல் யாமம் மூன்றென்றும்; நான்காம் யாமம் ஏழளஷிம் பாடி, எட்டில் யாமம் நான்கென்றும் பாடின் முப்பது வெண்பாவாம்.” (பன்வீருப் பாட்டியல். 292-293) நாற்பது காலமும், ஹிடமும், பொருளும், பற்றி நாற்பது வெண்பாப் பாடுதல் நாற்பதாகும். காலம் பற்றியது - காற்நாற்பது. ஹிடம் பற்றியது - களவஷீ நாற்பது. பொருள் பற்றியது - ஹின்னாநாற்பது; ஹிவீயவை நாற்பது. “ காலம் ஹிடம் பொருள் கருணி நாற்பான் சால உரைத்தல் நானாற் பதுவே” - (ஹிலக். பாட். 91) நானாற்பதென்னாமல் நாற்பது வெண்பாவமைந்த நூல்கள் ஹிப்பொருளமைணியால் மேலும் லீகுதற்கு ஹிடந்தந்து பாடினார் முத்துனிளீயனார். “ ஹிடம் பொருள் காலம் ஹிவற்றில் ஒன்றனை வெண்பா நாற்பதால் ஜீளம்பல் நாற்பது.” - (முத்துனிளீயம். 1113) நாற்பாமூஜீனமாலை நால்வகைப் பாஷிம், அப்பாக்கஹீன் மூஜீனங்களாகிய தாஷீசை, துறை, ஜீருத்தங்களும் ஓர் ஒழுங்காய் அமையப் பாடப்படுவதொரு நூல் ‘நாற்பா மூஜீனமாலை.’ ‘சரசுவணியம்மை நாற்பா மூஜீனமாலை’ என்பது பண்டித சங்குப் புலவர் ஹியற்றியதாகும். நான்மதிமாலை வெண்பா, ஆஞிளீயம், ஜீருத்தம், கஸீத்துறை என்பன முறையே வந்து நாற்பது பாட்டான் முடிவது நான்மதி மாலை யாகும். “வெண்பா ஆஞிளீயம் ஜீருத்தம் கஸீத்துறை ஒண்பா நான்கும் நான்மதிமாலை.” (செய்ஜிள்வகைமை) ஹிம்முறை மாறிஜிம் வரும் வழக்குண்மை கீழ்வரும் நூற்பாக்களால் புலப்படும். “வெண்பாக் கஸீத்துறை அகவல் ஜீருத்தம் நண்பாய் வருவது நான்மதி மாலை.” “வெள்ளை கஸீத்துறை அகவல் ஜீருத்தம் கொள்வது நான்மதி கோத்தவந் தாணி.” - (பன்வீருப் பாட்டியல். 257,259) என்றும், “வெண்பாக் கஸீத்துறை ஜீருத்தம் அகவல் நின்பேசும் அந்தா ணிழீனாற் பதுபெறின் நான்மதி மாலை யாமென நஜீல்வர்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 61) அகவலும், அகவல் ஜீருத்தமும் நாற்பதாக, அகவலை முற் கொண்டு கூறுவதும் நான்மதிமாலை என்பர். ஆனால் அவர் அகவல் ஜீகற்பமும், அகவல் ஜீகற்பஜீருத்தமும், நான்கு கூறுபடக் கொண்டு வகுப்பார்போலும். ஆழீனும் தகஷிடையதன்று. “அகவலும் அகவல் ஜீருத்தமும் நாற்ப தகவலை முன்வைத் தறைவது கடனே.” - (பன்வீருப்பாட்டியல். 258) நானாற்பது நான்கு வகைப்பொருள்களைப்பற்றி நாற்பது நாற்பதாகப் பாடப் பட்ட நூல்வகை நானாற்பது எனப்படும். ஹிவ்வகைழீல் பணினென்கீழ்க்கணக்குத் தொகுணிஜிள் ஹிடம் பெற்றுள்ள கார் நாற்பது, களவஷீ நாற்பது, ஹின்னா நாற்பது, ஹிவீயவை நாற்பது என்னும் தொகுணி எடுத்துக்காட்டாம். ஆழீன், ஒருவரால் செய்யப்பட்ட நூல்கள் அவையல்ல. தவீத் தவீ ஒருவரால் செய்யப்பட்டது என்பது வேறுபாடு. கீழ்க்கணக்கு ஹிவையெனச் சுட்டும் பாடஸீல் ‘நானாற் பது’ என வருவது கொண்டு ஹிவ்வகை தோன்றியதெனல் வெஹீப்படை. ‘நாற்பது’ என்னும் வகையே சாலும். நாவீலைச் சதகம் (நாவீலை நூறு) சளீயை, கிளீயை, யோகம், ஞானம், (ஒழுக்கம், வஷீபாடு, ஓகம், அறிஷி) எனப்படும் நான்கு படிகளைஜிம் பற்றி நூறு பாடல்கள் பாடுவது நாவீலைச் சதகம். தண்டபாதி அடிகளால் ‘நாவீலைச் சதகம்’ ஹியற்றப் பட்டுள்ளது. பிராகரணம் (மறுப்பு) நிறர்கொள்கை மறுப்பு நூலாக வெஹீப்பட்டது ‘பிரா கரணம்’ என்னும் ஒருவகை நூல். ஹிவ்வகைழீல் முற்படக்குறிப்நிடத்தக்கது. ‘சங்கற்ப பிரா கரணம் என்னும் நூல். ஹிணில் பல்வேறு சமயவாணிகள் மறுக்கப் படுகின்றனர். நீலகேஞி, குண்டலகேஞி, நிங்கலகேஞி முதஸீய நூல்களும், நாவல் நாட்டுப் நிறசமயவாணிகளை வெல்லும் வழக்காறும் - பிராகரண நூல்களைத் தோற்றுஜீத்தஸீல் பங்குள்ளவை. கிறித்தவ சமய மறுப்பாகக் கிளர்ந்தது ‘யேசுமத சங்கற்ப பிராகரணம்’ என்னும் நூல். பிரொட்டகம் (ஹிதழகல்பா) பிரொட்டி, ஹிதழொட்டாப் பாட்டு என்பனஷிம் ஹிது. உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ ஆகிய ஹிவை ஹிதழ்குஜீந் தொஸீக்கப் நிறப்பன ஆதஸீன் ஹிவை வாராமல் பாடுவது பிரொட்டகம் ஆகும். “ஆறிரண்டாம் ஆஜீஜிம் ஐழீரண்டாம் ஆஜீஜிம் மாறிகந்த உ ஊஷிம் ஒளஷிம் - கூறில் வகர பகரமஃகான் வந்தணையாச் செய்ஜிள் பிகளீல் பிரொட்டி எனல்.” - (யாப்பருங்கலஜீருத்ணி 96 மேற்.) “ஹிதழ்குஜீந் ணியையா ணியல்வது பிரொட்டியாம்.” - (மாறனலங்காரம் 274) “ உ ஊ ஒஓ ஒளபம வஹிவற் றியைபு சேராபி ரொட்டத் ணிறத்து” - (தண்டி. 97) பிரொட்டியாஜிம், யமகமாஜிம், அந்தாணியாஜிம் வந்த நூல் பிரொட்டக யமக அந்தாணி எனப்பெறும். ணிருச்செந்ணில் பிரொட்டக யமக அந்தாணி, ணிருத்ணில்லை பிரொட்டக யமக அந்தாணி என்பவை போல்வன எடுத்துக்காட்டாம் எ-டு: “யானைக்கண் டங்களீ சென்றேத் தொஷீற்செந்ணி ஸீன்றடைந்தே யானைக்கண் டங்களீ யற்கங் கழீலையை யேய்ந்ததகை யானைக்கண் டங்களீ சேரெண்டிக் காக்கினற் கீநஸீசை யானைக்கண் டங்களீ தாகிய சீர்க்கணி யெய்ணினனே.” - (ணிருசெந்ணில் பிரொட்டக யமக அந்தாணி -1) நூல் நூல் என்பது ஹிலக்கண நூலைக் குறிப்பதாக எழுந்தது. மரத்ணின் வளைவை நீக்குதற்கு நூல் அடித்து அறுத்து ஒழுங்கு படுத்துவதுபோல, அறிஜீன் ணிளீவை அகற்றி ஒழுங்குப்படுத்து வது நூல் என்னும் கரதியப் பெயராழீற்று. நூல் ஹியற்றுதற்குளீய பாவகையாக ஹிருந்தமையால் ஒருவகை அகவல் ‘நூற்பா’ என வழக்கூன்றியது. நூல் என்பது ஹிலக்கணப் பொருளதாதல் நன்னூல், ஞின்னூல், தொன்னூல் என்பவற்றால் ஜீளங்கும். ஹிவை முறையே பவணந்ணி முவீவர், குணனிரபண்டிதர், னிரமாமுவீவர் ஆகியோரால் ஹியற்றப் பட்டவை. நூல் என்றொரு நூல் ஹிருந்தமை ஞிலப்பணிகார அடியார்க்கு நல்லார் உரையால் ஜீளங்கும். நூற்றந்தாணி நூறு வெண்பாஜீனாலேனும், நூறு கஸீத்துறைழீ னாலேனும் அந்தாணித்துக் கூறுவது நூற்றந்தாணியாகும். “வெண்பா நூற்றினா லேனும் கஸீத்துறை நூற்றினாலேனும் அந்தாணித் துரைப்பது நூற்றந் தாணியாம் நுவலுங் காலே.” - (முத்துனிளீயம். 1084) (அந்தாணி காண்க). நெஞ்சறிஷிறூஉ அறிஷிறூஉ - அறிஷிறுத்துதல். பாடும் புலவர் தம் நெஞ் சுக்கு அறிஷிறுத்ணிக் கூறுமாறுபோலக் கூறி, உலகோர் பய னெய்த அருளும் நூல்வகை நெஞ்சறிஷிறூஉ ஆகும். வள்ளலார் அருஹீய நெஞ்சறிஷிறுத்தல் 1406 அடிகளால் ஆகிய கஸீவெண்பாவால் ஹியல்கின்றது. “ பொன்னார் மலைபோற் பொஸீஷிற் றசையாமல் எந்நாளும் வாஷீயநீ என்நெஞ்சே.” எனத் தொடங்கி. “ பாழ்வாழ்ஷி நீங்கப் பணிவாழ்ஜீல் எஞ்ஞான்றும் வாழ்வாயென் னோடு மகிழ்ந்து.” என பிறைகின்றது. நெஞ்சுக்கு அறிஷிறுத்தல் உரையாக, “ செல்லா ஜீடத்துச் ஞினந்தீது செல்ஸீடத்தும் ஹில்லதவீற் றீய தென்றே தெண்திலையே -மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கிற் ஞினங்காக்க என்றதனைப் பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்ணிலையே - துன்வீ அகழ்வாரைத் தாங்கு பிலம்போல வென்னும் ணிகழ்வாய் மையநீ தெஹீயாய்.” (433-35) என்று குறள் மதிகளைஜிம், நிறர் நிறர் கூறும் மதிகளைஜிம் படைபடையாக எடுத்துரைத்து நடைழீட்டுச் செல்கிறது நெஞ் சறிஷிறுத்தல். செஜீயறிஷிறூஉ காண்க. நெடுந்தொகை “நெடிலடிச் செய்ஜிள் நெடுந்தொகை யாமே.” என்பது நிரபந்ததீபம் (52) அடிழீன் எண்திக்கை கருணி நெடுமை, குறுமைகாணல் தொல்வழக்கு. ஆஞிளீயர் தொல்காப்நியர் ‘நெடுவெண்பாட்டு’, ‘குறு வெண் பாட்டு, என்று கூறியமை அடி எண்திக்கை கருணியே. 13 முதல் 31 அடிகளைஜிடைய பாடல்களால் ஆகிய நூலை ‘நெடுந்தொகை’ என்றும், 4 முதல் 8 அடிகளைஜிடைய பாடல் களால் ஆகிய நூலைக் ‘குறுந்தொகை’ என்றும் முந்தையோர் முடித்துக்கொண்டது தொன்னெறிழீலேயேயாம். ஆனால், ஹிடைக்காலத்ணில் அடிழீன் எண்திக்கைப் பெருக்கம், சுருக்கம் கருதாமல், ஓர் அடிழீலுள்ள சீர்கஹீன் எண்திக்கைப் பெருக்கம், சுருக்கம் கொண்டு; நெடுமை, குறுமை கணக்கிடப்பட்டன. ஹிதனை, ‘நெடுந்தாண்டகம்’, ‘குறுந் தாண்டகம்’ என்னும் ஆட்ஞியால் அறியலாம். அதற்கு அடிப் படை 2, 3, 4, 5, 6 முதலாய சீர்களைஜிடைய அடிகளை முறையே குறளடி, ஞிந்தடி, அளவடி, நெடிலடி, கஷீநெடிலடி எனப் பெயளீடும் வழக்கு ஊன்றியமையாம். ஹிந்பிலைழீலேயே, ‘நெடி லடிச் செய்ஜிள் நெடுந்தொகை’ எனஷிம், ‘குறளடிச் செய்ஜிள் குறுந்தொகை’ எனஷிம் நிரபந்ததீபத்தார் உரைக்கிறார். ஆகஸீன் கஷீநெடில் அடிப்பாடல்களால் அமைந்த நூல் ‘நெடுந்தொகை’ என்றும், அணிற்குறுகிய சீர்களைஜிடைய அடிகளால் அமைந்த பாடல்களைஜிடைய நூல் ‘குறுந்தொகை’ என்றும் கொண்டார் என அறியலாம். நெடுமொஷீ வஞ்ஞி நெடுமொஷீவஞ்ஞி, போர்த்துறையாம் புறத்துறை சார்ந் தது. வஞ்ஞினம் என்பதும் ஹிது. அத்துறையை ஹிறைமை யோடியைத்துப் பாடிஜிள்ளார் வள்ளலார். “கோவ மென்னுமோர் கொலைப்புலைத் தலைமைக் கொடியனேஎனைக் கூடிநீ பின்ற பாவ வன்மையாற் பகையடுத் துழீர்மேற் நிளீஜீ லாமலே பயவீழந்தனன்காண் சாவ நீழீல தேலெனை ஜீடுக சலஞ்செய் வாயெவீற் சதுர்மறை முழக்கம் ஓஜீ லொற்றியூர்ச் ஞிவனருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மையென் றுணரே!” தமக்குண்டாம் ‘கோவத்தை’ ஜீஹீத்து, ஹிறையருள்வாளால் வெட்டுதல் உண்மை எனச் சுட்டுகிறார். புறத்துறை வஞ்ஞிக்கும் ஹிதற்கும் வேற்றுமை ‘ஹிது செய்யாக்கால் ஹின்னன் ஆவேன்’ என்று அமைவது புறத்துறை. ஹிணில் ‘ஹின்னது செய்வேன்’ என்னும் அளவே ஜிள்ளது. காமம், கோவம், உலோபம், மோகம், மதம், ஆணவம் என்னும் அறுகுணக்கேடுகளையே பகையாய்ச் சுட்டி, அவற்றை வெட்டியஷீப்பதாம் உண்மைஜிடன் முழுப்பணிகமும் அமைந் துள்ளது. நொச்ஞிமாலை புறத்து ஊன்றி பகைவர் கொள்ளாமல், நொச்ஞிப் பூமாலை சூடித் தன் மணில்காக்கும் ணிறம் கூறுவது நொச்ஞி மாலையாகும். “ கோஸீய மாற்றார் கோட ஸீன்றி நொச்ஞிவேய்ந் தகல்எழீல் நோக்குந் ணிறனை வழுத்துதல் நொச்ஞி மாலையாகும்.” - (முத்துனிளீயம். 1075) நொண்டிச்ஞிந்து நொண்டி நாடகங்களுக்கு அமைந்த ஞிந்து வகையே நொண்டிச்ஞிந்து எனப்பட்ட தாகலாம். அச்ஞிந்து, அந்நாடகம் தஜீர்த்துப் நிறவற்றுக்கும் பயன்படுத்தப்பட்ட போது அப் பெயரைக்கொண்டு வழங்கப்பட்டிருத்தல் கூடும். நொண்டிச்ஞிந்து பெருவழக்குடையது. ‘ஞித்தராரூட நொண்டிச் ஞிந்து’ என்பதொரு நூல் பாம்புகஹீன் ஹியல்பு, அவற்றின் வகை, பெயர்கள், பற்கஹீன் பெயர்கள், அவற்றின் தன்மை, நஞ்ஞினை ஹிறக்கும் வஷீ ஆகியவற்றையெல்லாம் லீக ஜீளீத்துரைக்கின்றது. “ நெஞ்சு பொறுக்குணில்லையே - ஹிந்த பிலைகெட்ட மவீதரை பினைத்துஜீட்டால் அஞ்ஞியஞ் ஞிச்சாவார் - ஹிவர் அஞ்சாத பொருஹீல்லை அவவீழீலே.” என்பது நொண்டிச்ஞிந்தே. பாணி ஓரடி (மேலடி) குறைந்தும், மீணிப்பாணி ஓரடி (கீழடி) நீண்டும் ஹிருக்கஜீல்லையா! பாட்டின் அடி அளவே நொண்டிக் கொண்டுஜீட்டதல்லவா! நொண்டி நடப்பவர் அடிநெடுமை குறுமையைப் பார்த்தால், ‘நொண்டிச்ஞிந்து’ என்னும் பெயர் ஜீளக்கமாகுமோ? ஹிரண்டு அடிகளாய் ஒவ்வோர் அடிஜிம் முதற்கண் ஹிருசீர்களும் தவீச்சொல்லும், நின்னர் மூன்று சீர்களும் உடையதாகஷிம், ஹிரண்டிகளும் ஓரெதுகை உடைய தாகஷிம் அமைஜிம் ஞிந்துகளை எண்ணுங்கால் ஹிவ்வெண்ணம் வருவது ஹியல்பே. நாலடிகளாகஷிம், தவீச்சொல் ஹின்றிஜிம், முன்னடி லீக்கும் வருவனவெல்லாம் நின்வளர்ச்ஞி பிலை யாகலாம். நொண்டி நாடகம் களஷிக்குற்றத்ணிற்கு ஆட்பட்டுக் கால் ஹிழந்த நொண்டி தன் குறைஜிணர்ந்து ஹிறையருளை வேண்டிக் கிடக்க, அவ னருளால் நொண்டிநீங்கி நலம் பெற்றதாகக் கூறும் அமைப் புடையது நொண்டிநாடகம். பள்ளு, குறவஞ்ஞி என்பவைபோலப் பாட்டுடைத் தலைவன் ஒருவனைக் கொண்டு ஹியலும். வாழ்த்து, அவையடக்கு, தோடையம், தரு, ஜீருத்தம் முதஸீயவை ஹிவற்றின் உறுப்புகளாம். சீதக்காணி நொண்டிநாடகம், ணிருச்செந்தூர் நொண்டி நாடகம் என்பவை பரவலாக வழங்குபவை. “வஸீக்காஜீற் காலற்ற லேகாங்கிளீ; கஸீவெண்பாச் ஞிந்தாய்க் கோலுற்றார் நொண்டியென்று கொண்டு” என “நொண்டி’ ஹிலக்கணத்தை நிரபந்தத் ணிரட்டு (13) கூறுகின்றது. ணிருட்டுக்குற்றத்ணிற்காக வஸீந்து பற்றிச் சென்று தண்டனை யாகக் கோழீஸீல் காஷி (பஸீ) தருதலால் தவீத்துக் கிடப்ப வனைப் பற்றிக் கஸீவெண்பாச் ஞிந்தாகப் பாடுவது நொண்டி எனப்படும் என்கிறார். ஏகாங்கிளீ - தவீயாள். கோலுற்றார் - அமைத்தார். பஃறொடை பஃறொடை என்பது வெண்பா வகைஜிள் ஒன்றாகிய பஃறொடை வெணபாவைக் குறிக்கும். ஹிவ்வகை வெண்பாவால் அமைந்த நூல் பஃறொடை என்றும், பஃறொடை வெண்பா என்றும் வழங்கும். மெய்கண்ட நூல்கள் பணினான்கனுள் ஓன்றான ‘போற்றிப் பஃறொடை வெண்பா’ ஹிவ்வகை சார்ந்தது. உமாபணி ஞிவா சாளீயரால் ஹியற்றப்பட்ட அது, தொண்ணூற்றைந்து கண்தி களால் நடக்கின்றது. பஃறொடை வெண்பா ஐந்தடிமுதல் பன்னீரடி உயர் எல்லைழீனது என்பதைக் கடந்து கஸீவெண்பாவைபோல நீண்டு வளர்ந்த குறிப்பை ஹிதனால் அறியலாம். பகுபடுபாட்டு ஒருபாட்டு அதே ஹினப்பாட்டாகவோ, வேறினப் பாட்டாகவோ, மூன்றுக்கு மேற்பகுக்கப்படுமாறு அமைஜிமானால் அது ‘பகுபடு பாட்டு’ எனப்படும். அவ்வகைப் பாக்களால் அமைந்த நூலும் ‘பகுபடு பாட்டு’ எனப்படும். ஒரு பாட்டு, ஐந்து பாட்டாக அமைந்த நூல் பகுபடு பஞ்சகம் என்று வழங்கப்பெறும். “ஞிவகந்தன் சீர்மழீன் மேற்றிகழ் செய்ஜிம் ணினம தொன்றி வைகண்டஞ் சூஷீனன் றானலீன் ஜீஞ்சொண் ணகைழீதென்னென் கவலொன்றுங் காலவற் குட்கணி ரெண்முக் கதிறை யெஞ்சே யவனங்கங் காணதென் றானளீ வந்ணித் தன னெழுந்தே.” என்னும் ஹிக்கட்டளைக் கஸீத்துறையை, அறுஞிர்க்கஷீ நெடில் ஆஞிளீய ஜீருத்தத்ணில் ஹிருவகையாகஷிம், தரஷி கொச்சகக் கஸீப்பாவாகஷிம், கஸீபிலைத் துறையாகஷிம் காட்டப்பெற்றுள் ளதைப் பத்துப் நிரபந்தத்துள் காண்க. - (ஐந்தாணி என்னும் பகுபடுபஞ்சகம். 1) பஞ்சகம் (ஐந்தகம்) ஐந்து பாடல்களைக் கொண்டதொரு ஞிற்றிலக்கியம் பஞ்சகம் எனப்படுகின்றது. ஜீருத்தம், வெண்பா, தாஷீசை, ஞிந்து முதலாய பல வகை கஹீல் பஞ்சகம் காண வருதலால் ஐந்து பாடல்கள் என்றே முடிவே செய்யலாம். ஹிவீ ஐந்து பொருள்களைப் பற்றித் தவீத்தவீ ஒரு பாட லால் பாடுதலும் பஞ்சகம் என்பது, தண்டபாதி அடிகள் பாடிய ‘ஐம்படை மாலை’யால் அறியலாம். கண்திகளாகஷிம் ‘பஞ்சகம்’ வருமென்பது கஜீ மதிழீன், ஹிலக்கிய பஞ்சகத்தால் அறியலாம். ஹிவீப், பஞ்சரத்ணினம்’ என்னும் ‘ஐம்மதிஜிம்’ ஐந்து பாடல்களைஜிடையதே. ணிருவள்ளுவ நாயனார் பஞ்சரத்ணினம் பன்வீரு சீர்க்கஷீ நெடிலடியாஞிளீய ஜீருத்தம் ஐந்தனைக் கொண்டுள்ளது. ணிருப்புகழ் ஐந்து கொண்ட நூல் ‘பஞ்ச ரத்ணினத் ணிருப் புகழ்’ என வழங்குகின்றது. ஆகஸீன் ஹிசை வண்ணமும் ஹிதற்கு ஹிசைவே எனக் கொள்க. பஞ்சரத்ணினக்கோவை (ஐம்மதிக்கோவை) ணிருப்புகலூர்க்குப் பஞ்சரத்ணினக்கோவை உள்ளது. வாழ்த்துப் பாடல்கள் ஹிரண்டும், நூல் பாடல்கள் ஐம்பதும் கொண்டது. ஹிவண் பஞ்சரத்ணினம் என்பது பணிக பஞ்சகம் போல ஐம்பதைக் குறிப்பதாக உள்ளது. ஹிது கோவை எனப் படுதஸீன் பொருட்டொடர் ஒழுங்கு வேண்டும் என்பதும் பணிக பஞ்சகத்ணிற்கு வெவ்வேறு ஐந்து பொருள் பற்றிய பணிகமும் ஹிருக்கலாம் என்பது கொள்ளலாம். ஹிக்கோவை தண்டபாதி அடிகள் பாடியது. பட்டாநிசேகம் (ணிருமுடிசூட்டு) வேந்தன் ஒருவன் தான் ஹிவீணின் ஆட்ஞி நடாத்ணி அதன் நின்னர் அவன் பெற்ற மைந்தனுக்கு ஆட்ஞியைத் தருதல் ‘ணிரு முடிசூட்டு’ எனப்படும் ‘பட்டாநிசேக’ மாகும். ‘அளீயணை அனுமன் தாங்க’ என வரும் பாட்டு, ‘ணிரு முடிசூட்டாக’ ஹிராமகாதைழீல் ணிகழ்கின்றது. அரசர் தம் பெருஜீழாக்களுள் தலையாயது முடிசூட்டு ஜீழாவாம். ஹிந்நாள் மக்களாட்ஞி முறைழீல் அமைச்சர்கள் பதஜீயேற்பு ஜீழாவை ஒப்நிட்டுக் காணத்தக்கதாம். “ தானரசு செய்துதஷி தன்சேய்க் கரசுதரல் தேன்மொஷீயாய் பட்டாநி சேகமாம்.” - (நிரபந்தத்ணிரட்டு 69) படைப்போர் நநிகள் நாயகம் பங்கு கொண்ட போர்கள் தொடர்பாக எழுந்த ஹிவ்ஜீலக்கிய வகை, நின்னே சமயப்போர் தொடர்பாக வளர்ச்ஞிஜிற்றது. படைப்போர்கஹீல் ஹிறஷிசுல்கூல் படைப்போர் புகழ் லீக்கது. காப்நிய ஹியலாய் ஹியல்வது. ஐந்து போர்களைப் பற்றித் தொடர்ந்துரைக்கும் படைப்போர் ஐந்து படைப்போர் என்பது. படைப்போர் கண்திகளால் அமைந்தது. ஹிசுலாலீயக் கொடையாக எழுந்தது ‘படைப்போர்’ ஹிலக்கியம். ‘சண்டை - பார்க்க. படைனிட்டுப் பணிகம் ‘படை’ என்பது ‘கருஜீ’ என்னும் பொருளது. கலப்பை ‘உழுபடை’ என்றும், அது செல்லும் சால். ‘படைச்சால்’ என்றும் வழக்கிலுள்ளதை அறிந்தால் ‘பொதுஜீல் கருஜீப் பொருளதே ‘படை’ என அறியலாம். எவீனும் ‘படை’, போர்க் கருஜீகளைக் குறித்தலே பெரு வழக்காழீற்று. படைக்கருஜீகள் வைக்கப்பட்டுள்ள சாலை, ‘படைக்கலக் கொட்டில்’ என்று பண்டு வழங்கப்பட்டது. ‘ஆஜிதசாலை’ என்னும் வழக்கு வரு முன்னே தலீழ் வழக்கில் ஹிருந்தது, படைக்கலக் கொட்டிலே. படை வஷீபாடே, ஆஜிதபூசைக்கு முன்னோடி. ஹிவீப் படைக்கலம் என்பதும் தன் பொதுமை பிலைழீல் ஹிருந்து ‘வேல்’ என்பதைக் குறிக்கும் பிலைஜிண்டாழீற்று. போளீல் ஞிறந்த போர் யானைப்போர்; முயலை எய்ய அம்பும், யானையை னிழ்த்த வேலும் னிரர் கொள்வர். ஆகஸீன் “கான முயலெய்த அம்நிவீல் யானை நிழைத்த வேல் ஏந்தல் ஹிவீது” என வள்ளுவம் பேஞிற்று. (குறள் 772) வேல், னிரன் கையதாம் கருஜீ. னிரருள் தலையாய னிர னாகச் செவ்வேள் மணிக்கப்பட்டான்; அவனே வேந்தனாகஷிம், ஹிறைவனாகஷிம் கொள்ளப்பட்டான். அவன் கை ‘வேற்படை’ மெய்வஷீபாட்டுக்கு உளீயதாழீற்று. வஷீபாட்டுக்காகப் படை பிறுத்தப்பட்ட ஹிடமே ‘படை னிடு’ எனப்பட்டது. ‘படை’ வஷீபாடே, முருக வஷீ பாடகாஷிம் ஹிணைந்த வஷீபாடாகஷிம் ஹியலாழீற்று. ‘படைனிடு’ என்பதற்கு ஜீளக்கச் செய்ணியே ஹிது. முருகன் வேற்படை வஷீபாடு உடைய ஹிடங்கள் எல்லாமும் படைனிடுகள் தாமே! அப்படைனிடுகளுக்குப் பாடப்பட்ட பணிகங்கள் படைனிட்டுப் பணிகங்களாம். எத்தனை ஹிடங் களுக்குப் படைனிட்டுப் பணிகங்கள் பாடிஜிள்ளார் ஒருவர்? அவர் எவர்? அவர் ‘முருகனடி’ என்னும் தண்டபாதியடிகளார். அவர் பாடிய படைனிட்டுப் பணிக ஹிடங்கள் அவலூர். ஹிலஞ்ஞி, உடுப்நி, எட்டுக்குடி, குன்றக்குடி, சத்ணிமலை, ஞிவமலை, சோமாஞிபாடி, ணிருச்செந்தூர், ணிருப்பரங்குன்றம், ணிருவேரகம், ணிருத்ததிகை, ணிருவளீப்பாடு, ணிருவேங்கடம், ணிருப்போரூர், நட்சத்ணிரமலை, பழவீ, பழமுணிர்சோலை, பெரும்பேறு, மழீலம், வள்ஹீமலை, வாசகிர், ஜீராஸீமலை, வேலுடையான்பட்டினம், வேள்ஜீ மலை என்பனவாம். பண்ணைஜீஞித்ணிரம் (பண்ணை ஜீயப்பு) தலைவன், வளலீக்க பிலம், ஆறு, மழை, செங்கோல், நெல், மாடு, களஞ்ஞியம், நாற்றிடல் ஆகியவற்றை மாதர் ஹிருவர் புகழ்தலும், தம்முள் ஏஞிக் கொள்ளுதலும் பண்ணை ஜீஞித்ணிரம் என்னும் நூற் செய்ணியாம். “மாதர் ஹிருவளீறை வன்நாறு மீறுணிணை ஓதுநணி மேகமழை ஒள்ஹீறைவன் - நீணியா நென்மாடு கோட்டை (பிரை) நாறிட்டல் பின்றேசல் அன்னஞிந்து பண்ணைஜீஞித் ரம்.” - (நிரபந்தத்ணிரட்டு 18) நாறுமீறு ணிணை - வளம் ஜீஞ்ஞிய ஐந்ணிணையாம் பிலம். நாறு ஹிட்டல் - நாற்றுநடல். ‘பிரை’ என்பது சுவடிச் ஞிதைவை ஹிட்டு பிரப்நிய சொல். வளீசை என்னும் பொருட்டது உழத்ணியர், பள்ளு ஹிவற்றையன்றி யொருவகையாக உழஷித் தொஷீல் வஷீழீல் வந்த ஞிறுநூல் ஹிது. பத்துப்பாட்டு நூறடிச்ஞிறுமையாய் ஆழீரம் அடிப் பெருமையாய் அமைந்த பத்துப்பாட்டுகள் பத்துப்பாட்டு எனப்பெறும். அப் பாட்டு அகவலால் வரும். “ நூறடிச் ஞிறுமை நூற்றுப்பத் தளவே ஏறிய அடிழீன் ஈரைம் பாட்டுத் தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே.” “ அதுவே அகவஸீன் வருமென அறைகுவர் புலவர்.” - (பன்வீருப் பாட்டியல். 353, 354) பதம் ஹிசைப்பாட்டு வகைக்கு பதம் என்பது பெயர். ‘தாள்’ என்பணில் ஹிருந்து தாளம் நிறந்தது. ‘பதம்’ என்பதும் ‘தாளம்’ என்னும் பொருளதே. பதம் ழூ பாதம் = தாள். எடுப்பு (பல்லஜீ), தொடுப்பு (அநுபல்லஜீ), அடி (சரணம்) என்னும் உறுப்புகளால் பதம் ஹியலும். கீர்த்தனை (சீர்த்தனை) ஜிம் பதம் எனப்படுதல் உண்டு. பத்ணித்துறைழீல் பழீலும் ‘பதம்’ நிற துறைகஹீலும் ஹிடம் பெறல் லீகுணி. அழகிய சொக்கநாதர் பதம், பத்ணித்துறைப்பாற்பட்டது. முத்துத்தாண்டவர் பாடிய சபாநாயகர் பதம் 25 கீர்த்தனை களால் ஆயது. மூக்குத்தூள் புகழ்பதம், மூக்குத்தூள் ஹிகழ்பதம் என்பன எள்ளற்பதங்கள். சீர்முத்துக் குமாரசாலீபேளீல் பதம் என்னும் சுப்பராயர் ஹியற்றிய பதம், ஹிறைமைஜிம், பல்வேறு அகத்துறைஜிம் ஹியைந்து செல்வது. கீர்த்தனை காண்க. பணிகம் ஆஞிளீயத்துறை, ஆஞிளீயஜீருத்தம், கஸீஜீருத்தம் ஆகியனஷிம் நான்கடி முதல் எட்டடிகாறும் உயர்ந்த வெண்பாஷிம், ஒருபது, ஹிருபது என்று எண்திக்கை வர ஹியற்றப் பெறுவது பணிகம் ஆகும். ஹிவண் கூறப்பெற்ற வெண்பா பஃறொடை வெண்பா என்க. “ ஆஞிளீ யத்துறை அதனது ஜீருத்தம் கஸீழீன் ஜீருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா லீசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பொட்டுவரத் தொடுப்பது பணிகம் ஆகும்.” - (பன்வீருப் பாட்டியல். 312) ஹிவீ, ஹிதனை ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்ஜிள் செய்வது பணிகம் என்பர். “ கோணிலார் பொருளைக் குறித்தை ழீரண்டு பாவெடுத் துரைப்ப பணிக மாகும்.” (முத்துனிளீயம். 1116) பணிற்றந்தாணி பத்து வெண்பா, பத்துக் கஸீத்துறை பொருட்டன்மை தோன்றப் பாடுதல் பணிற்றந்தாணியாம். “ வெண்பாப் பத்துக் கஸீத்துறை பத்துப் பண்புற மொஷீதல் பணிற்றந் தாணி.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 81) “ ஈரைந்து வெண்பாக் கஸீத்துறை யீரைந் தரும் பொருள் புலப்பட அந்தா ணித்துப் பாடு வனபணிற் றந்தாணி யாகும்.” (முத்துனிளீயம். 1083) “ பணிற்றந் தாணியே பாடவல் லோர்கள் பப்பத்து வெண்பா பப்பத்துக் கஸீத்துறை பொருள்தன்மை தோன்ற அந்தாணித்துப் பாடுவர்.” - (நிரபந்தத்தீபம். 54) பணிற்றந்தாணிக்கு முன்னோடி பணிற்றுப்பத்ணின் நான்காம் பத்தும், ஐங்குறுநூற்றின் தொண்டிப்பத்துமாம். ஆழீன் அவை அகவற்பாவால் ஹியல்வன. பணிகச் சதகம் (பத்துகள் நூறு) பணிகங்கள் நூறு கொண்டமையால் ஆழீரம் பாடல் களைஜிடைய நூல் என்பது ஜீளங்கும். சதகப்பணிகம் (நூறுகள் பத்து) பெற்ற ணிருவாமாத்தூரே பணிகச் சதகமும் பெற்ற பெருமையது. அதனை ஹியற்றியவரும் அதனைப் பாடிய தண்டபாதி அடிகளே ஆவார். அந்நூஸீல் வாழ்த்து முதஸீயவற்றுடன் 1006 பாடல்கள் உள்ளன. பணிக பஞ்சகம் (பணிக ஐந்தகம்) பணிகங்கள் ஐந்தனைக் கொண்ட ஹிலக்கியம் பணிக பஞ்சகம் எனப்படுகின்றது. ஆகஸீன் 50 பாடல்களைக் கொண்டது என்பது தெஹீவாம். ணில்லைக்குப் ‘பணிக பஞ்சகம்’ உள்ளது. அதனை ஹியற்றியவர் தண்டபாதி அடிகள். வாழ்த்துடன் 53 பாடல்களைக் கொண்டுள்ளது அது. பணிற்றுப் பத்தந்தாணி பணிற்றுப்பத்து = நூறு. நூறு பாடல்களைஜிடையதே ஹிவ் வந்தாணிஜிம். எவீனும், வெண்பாவந்தாணி, கஸீத்துறையந்தாணி போல ஒரேவகைப் பாவால் அமைந்ததன்று. ‘பணிற்றுப்பத்து’ என்னும் பெயர் ஜீளங்கும் வண்ணம் பத்து வகைப் பாக்களால் அமைஜிம், ஒவ்வொரு வகைக்கும் பத்துப் பாடல்கள் ஹிடம் பெறும். ஹிவண் ‘பா’ வகை என்றது ‘பாஹின’ வகையாம். ‘பணிற்றுப்பத்து’ என்னும் பழம் பெயராட்ஞி, சேர அரசர் பணின்மரைப் பற்றி, பப்பத்துப் பாடல்களாகப் பாடப் பெற்றமை கொண்டமைந்தது. ஹிவண், பாவகைஜிம், தொகைஜிம் கருணிப் பணிற்றுப்பத்தாழீற்று. முடிமுதல் ஹியல்புடைமையால் அந்தாணி ஜிம் ஆழீற்று. ணிருக்கருவைப் பணிற்றுப்பத்தந்தாணி ‘குட்டித் ணிருவாசகம்’ எனப் பெறும் ஞிறப்நினது. ஹின்னும் கலைசைப் பணிற்றுப் பத்தந்தாணி, மதுரைப்பணிற்றுப் பத்தந்தாணி முதஸீயவை எடுத்துக் காட்டாம். ‘பணின்பத்தந்தாணி’ எனப் பணிற்றுப் பத்தந்தாணியைச் சுவாலீநாதன் கூறும். பந்தடி பந்தடி என்பது பண்டு ‘கந்துகவளீ’ எனப்பட்டது. ஞிலம்நின் சீளீய கொடையாகிய ‘கந்துகவளீ’ பெருங்கதைழீல் ‘பந்தடி’ யாகச் ஞிறக்கின்றது. மதுரை மால் பகுணி, ஒரு காலத்ணில் பந்தடி யாக ஹிருந்தமையால் பந்தடி ஒன்று, ஹிரண்டு எனத் தெருப் பெயர்கள் ஹின்றும் வழக்கில் உள்ளன. மதுரை மீனாட்ஞியம்மன் பந்தடி ஹிவ்வகைழீல் எழுந்த நூல். “ பொன்வீலங்கு பூங்கொடிபொ லஞ்செய்கோதை ஜீல்ஸீட லீன்வீலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன் வாழ்கவென்றுபந் தடித்துமே.” என்பது ஞிலம்பு. “ மென்ஞிலம்பு நன்கிலங்கப் பண்குலுங்கு வாய்ச்ஞியர் ஹின்பலுங்கு பொன்சதங்கை ஓங்கவோங்கப் பாங்கெலாம் பொன்வீயண்ணல் வாழ்கவாழ்க என்றுபந் தடிக்குமே பூவைவண்ணன் வாழ்கவாழ்க வென்றுபந் தடிக்குமே.” என்பது அடிகள் அடியைப் பற்றி எழுந்த புணிய குண்டலகேஞிப் பாட்டு. பயோதரப்பத்து (மார்புப்பத்து) ஆஞிளீய ஜீருத்தம் பத்ணினாலாவது, கஸீத்துறை பத்ணி னாலாவது ‘பயோதரத்தை (மார்பை)ப் புகழ்வது பயோதரப் பத்து எனப்படும். (நவநீத. 50). ஹிதனை ஆஞிளீய ஜீருத்தத்தால் பாடுவது என்று பன்வீரு பாட்டியல் (333) பகரும். பொதுவகைழீல், ‘பத்துப் பாடல்’ என்று ஹிலக்கணஜீளக்கம் ஹியம்பும். (பாட்டியல். 92). “பருமுலை பத்துப் பாவால் அறைவது பயோதரப் பத்தெனப் பகரப் படுமே.” - (முத்துனிளீயம். 1105) பரதி போளீடை ஆழீரம் ஆண்யானைகள் பட்டஷீய வென்ற னிரமகனுக்குப் பாடப்படுவது பரதி நூலாகும். “ ஆனை ஆழீரம் அமளீடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரதி.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல்.78) ஆனைப்போர் வெற்றியாளர்க்கன்றிப் நிறர்க்குப் பரதி வகுப்பணில்லை என்பதை, “ யானை எய்த அடுகளத் தல்ல ணியாவரும் பெறாஅர் பரதிப் பாட்டே.” - (பன்வீருப் பாட்டியல். 244) என்பதால் அறியலாம். யானைத் தொகையைப் நிறவாறு கூறினாரும் உளர். “ ஏழ்தலைப் பெய்த நூறுடை ஹிபமே அடுகளத் தட்டாற் பாடுதல் கடனே.” - (பன்வீருப் பாட்டியல் 245) என்பது பன்வீருபாட்டியல். கடஷிள் வாழ்த்து, கடைத்ணிறப்பு முதஸீய பல உறுப்புகளை அமைத்துப் பாட்டுடைத் தலைவனுடைய பலவகைச் ஞிறப்பு களைஜிம் பல்வேறு வகைகளால் புறப்பொருள் அமைணி தோன்ற ஜீளக்கிக் கஸீத்தாஷீசையால் பரதி பாடப்பெறும். ஹிதனுள் ஹிருசீரடி, முச்சீரடி ஜிடையவை வாரா. பரதிழீன் பொருட்டொடர் பிலை வருமாறு: “ தேவர் வாழ்த்தே கடைபிலை பாலை மேஜீ அமரும் காஹீ கோழீல் கன்வீயை ஏத்தல் அலகை ஜீநோதம் கனாபிலை பிலீத்தம் பஞியே ஓகை பெருந்தேஜீ பீடம் அழகுற ஹிருக்க அமர்பிலை பிலீத்தம் அவள்பதம் பஷீச்சா மன்னவன் வாகை மலைஜிம் அளஷிம் மரநிவீ துரைத்தல் மறக்களங் காண்டல் செருலீகு களத்ணிடை அடுகூழ் வார்த்தல் பரஷிதல் ஹின்ன வருவன நிறஷிம் தொடர்பிலை யாகச் சொல்லுதல் கடனே.” - (பன்வீருப் பாட்டியல். 243) “ கடஷிள் வாழ்த்துக் கடைணிறப் புரைத்தல் கடும்பாலை கூறல் கொடுங்காஹீ கோட்டம் கடிகணம் உரைத்தல் காஹீக் கிதுசொலல் அடுபேய்க் கவள்சொலல் அதனால் தலைவன் வண்புகழ் உரைத்தல் எண்புறத் ணிணைஜிற னிட்டல் அடுகளம் வேட்டல் ஹிவைமேல் அளவடி முதலா அடிழீரண் டாக உளமகிழ் பரதி உரைக்கப் படுமே.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 79) பரதிப்போர் முறையைப் பன்வீருபாட்டியல், “ மயக்கறு கொச்சகத் தீரடி ஹியன்று நயப்புறு தாஷீசை உறுப்நிற் பொணிந்து வஞ்ஞி மலைந்த உஷீஞை முற்றித் தும்பைழீற் சென்ற தொடுகழல் மன்னனை வெம்புஞின மாற்றான் தானைவெங் களத்ணிற் குருணிப் பேராறு பெருகுஞ் செங்களத் தொருதவீ ஏத்தும் பரதியது பண்பே.” (பன்வீருப் பாட்டியல். 242) எனக்கூறும். நவநீதப் பாட்டியலோ பரதிழீன், ஹிலக்கணத்தை ஐந்து கட்டளைக்கஸீத்துறைகளால் ஜீளீயக் கூறும் (57-61) பரதி என்பது நாண்மீவீன் பெயர். பரதி நாள் முதன் முதல் அடுப்நில் தீமுட்டி அடுதற்கு உற்றநாள் என்பர். அந் நாளைத் தேர்ந்து அடுகளத்துற்ற பேய்கள் கூஷீட்டு உண்டு கூத்தாடி மகிழ்வதாக அமைந்த நூலுக்குப் பெயராழீற்று. பரதி நாட் பெயர்ப்பொருள், “ காடு கிழவோள் பூதம் அடுப்பே தாஷீ பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரதிநாட் பெயரே.” என்று ணிவாகரம் கூறுதலால் புலப்படும். ஹிப்பொருள்களுக்கும் பரதிழீல் வரும் செய்ணிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பரதி நூலால் ஹிவீது ஜீளங்கும். பராக்கு கட்டியம் பார்க்க. பருவமாலை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அளீவை, தெளீவை, பேளீளம்பெண் எனப்படும் பெண்டிர்பருவம் ஏழனைஜிம் உரைத்து, அவ்வேழ் பருவத்தும் கற்றுக் கொண்டுள்ள துறைக்கல்ஜீச் ஞிறப்புகளைஜிம் எடுத்துரைத்தல் பருவமாலை எனப் படும். “ பெண்பருவம், ஏழுக்கும் ஆண்டேழ் துறைக்கல்ஜீ ஏற்றமுறல் வாழ்பருவ மாலையா மால்.” - (நிரபந்தத்ணிரட்டு 10) பெண்டிர் பருவவருணனை நோக்குமட்டுமன்றி, அவர்தம் கல்ஜீத்ணிறம் குறித்தும் கருணிழீருத்தல் குறிப்நிடத் தக்கதாம். ‘பொருந்து கல்ஜீஜிம் செல்வமும் பூக்கும்’ புகழ் வாழ் ஷிக்குத் தக்க புதுப்படைப்பாகப் பருவமாலை வெஹீப்படல் வேண்டும். பல்சந்தமாலை பலசந்தங்களால், பத்துமுதல் நூறு பாடல்கள் வருவது பல்சந்த மாலையாகும். பலசந்தம் என்பராழீனும் பத்துச் சந்தங்கள் வருதல் வழக்கு என்க. சந்தம் என்பது நான்கெழுத்து முதல் ஹிருபத்தாறு எழுத் தளஷிம் ஓரோ அடியான் ஒத்துவருவது என்க. “பத்தாணி நூறந்தம் பல்சந்த மாலை.” - (நவநீத. 38) “சந்தத் தொருபது பல்சந்த மாலை.” - (முள்ஹீயார் கஸீத்தொகை) “பத்துக் கொருசந்தம் படிப்பா நூறாக வைத்தல்தான் பல்சந்த மாலையாம்.” - (நிரபந்தத்ணிரட்டு) “பத்து முதலாகப் பப்பத் தீறா வைத்த வண்ண வகைபத் தாகப் பல்சந்த மாலை பகரப் படுமே.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 74) பல்பெயர் ஒன்றற்குளீய பலபெயர்களைஜிம் முறையே கூறும் பாடல் தொகுணி பல்பெயர் எனப்படும். ஹிதற்கு எடுத்துக் காட்டு ‘ஞானசம்பந்தர் பாடிய ‘பல்பெயர்ப்பத்து’ ஆகும். நிரமபுரம், வேணுபுரம், பூம்புகஸீ, வெங்குரு, தோதிபுரம், பூந்தராய், ஞிவபுரம், புறவம், சண்பை, சீர்காஷீ, கொச்சை, கழுமலம் என்னும் பெயர்கள் முறையே வரப்பாடப்பட்டுள்ள பணிகம் பல்பெயர்ப்பத்தாம். ஒரு பொருட்பன்மொஷீ வளர்ச்ஞி ஹிப்பணிகப்பனுவல் (ஓளீடப்பன்மொஷீ) எனத்தகும். பல்லாண்டு “பல்லாண்டு பல்லாண்டு பல்லாழீரத்தாண்டு பலகோடி நூறாழீரம் மல்லாண்ட ணிண்தோள் மதிவண்ணா உன் செவ்வடி செவ்ஜீணிருக்காப்பு.” எனக் குறள் வெண்செந்துறையால் தொடங்கும் பல்லாண்டு அறுசீர் ஆஞிளீய ஜீருத்தம் பணினொன்றால் பிறைகின்றது. ஹிது பெளீயாழ்வார் பாடியது. மன்னரை வாழ்த்துதல் பழமையானது. புறப்பாடஸீல் புரவலரை வாழ்த்ணிக்கூறிய வாழ்த்துகள் லீகப்பல. அவை அகவல் நடையன. ஹிறைவனை வாழ்த்துதல் உண்டு; அகவல், கஸீ வெண்பா, ஜீருத்தம் ஹின்ன பல யாப்புகஹீல் பாடப் பட்டுள்ளன. எவீனும் ‘பல்லாண்டு’ என்னும் சொல்லாட்ஞிஜிம், பாடல்தோறும் ‘பல்லாண்டு கூறுதும்’ என்னும் முடிபிலைஜிம் ஆழ்வார் அருஹீ யவையே. “ வையக மன்னவன் மன்னுக பல்யாண் டெய்துக வென்ப ணியாண்டுபிலை யாகும்.” என்பது பன்வீருபாட்டியல் (328). மன்னவன் மாலோடொப்பன் என்றமையால், மாலுக்குப் பல்லாண்டு பாடினார்போலும் ஆழ்வார், பழமொஷீ பழமொஷீ, ஹிலக்கிய வகையாதல் பழமையானது. “ நுண்மைஜிம் சுருக்கமும் ஒஹீஜிடைமைஜிம் மென்மைஜிம் என்றிவை ஜீளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதஸீய முதுமொஷீ என்ப.” என்பது பழமொஷீ பற்றிய தொல்காப்நியச் செய்ணி. பழமொஷீ = முதுமொஷீ, பழமலை, முதுகுன்றம் என்னும் ஓரூர் ஹிருபெயர் அறிக. முதுமொஷீ சீளீய அடிப்படைழீல் செவ்ஜீது கிளப்பதாய் வருதஸீன் “ஏது நுதஸீய முதுமொஷீ’ என்றும் கூறுவார் தொல்காப்நியர். பழமொஷீ நானூறு ஹிவ்வகைழீல் எழுந்த தவீப் பெருந் தொகைநூல், பணின்மூவாழீரம் என்னும் அளஜீல் ணிரட்டப் பட்ட பழமொஷீகள் ஹிருப்நினும் முழுதுறு ணிரட்டில் முக்கால் ஜீடுபாடுடைய கால்பகுணியே அது எனலாம். ‘பழமொஷீமேல் வைப்பு’ பார்க்க. பழமொஷீமேல் வைப்பு முதுமொஷீ என்பதும் பழமொஷீயே. ணிருக்குறளை மேல் வைப்பாகக் கொண்டதொருநூல் ‘முதுமொஷீமேல் வைப்பாக’ ஜீளங்குகின்றது. ஞிவஞான முவீவர் ஹியற்றிய அந்நூல் ‘சோமேசர் முதுமொஷீ வெண்பா’ என்னும் பெயர்த்து. அவ் வாறே ணிருக்குறளை மேல் வைப்பாகக் கொண்டு நிறந்த நூல்கள் பல. அவற்றுள் ணிருக்குறள் குமரேசவெண்பா 1330 குறள் களைஜிம் மேல் வைப்பாகக் கொண்ட 1330 நேளீசை வெண் பாக்களால் ஆயது. கஜீராச பண்டித செகனிர பாண்டியனார் ஹியற்றியது அது. ‘முதுமொஷீ’ தொல்காப்நியர் சுட்டும் ஒருவகை நூற் குறிப்பு. முதுமொஷீக் காஞ்ஞி கீழ்க்கணக்கில் ஒன்று. தண்டலை யார் சதகம் முதுமொஷீ ஜீளக்கமே. நாவரசர் பாடிய ணிருவாரூர்த் ணிருப்பணிகம் ஒன்று பழ மொஷீப் பெயராகவே ஜீளங்குகின்றது. “கவீழீருப்பக் காய் கவர்ந்த கள்வனேனே” “முயல் ஜீட்டுக் காக்கைப் நின் போன வாறே” என்று தொடர்ந்து, “கரும்நிருக்க ஹிரும்புகடித் தெய்த்த வாறே” எனப் பழமொஷீஜிடன் பிறைகின்றது. பழமொஷீமேல் வைத்தலைப் நிறரெல்லாம் முடி பிலையாகக் கொள்ள, வள்ளலாரோ முதல்பிலையை மேல் பிலையாகக் கொள்கிறார். “வானை நோக்கி மண்வஷீ நடப்பவன்போல்.” “வாழீலான் பெருவழக் குரைப்பது போல்.” “ஜீத்தைழீன்றியே ஜீளைத்ணிடு பவன்போல்.” “நீர்சொளீந்தொஹீ ஜீளக் கெளீப்பவன்போல்.” எனத் தொடங்கிப் பாடுகின்றார். “பழமொஷீமேல் வைத்துப் பளீஷி கூர்தல்” என்பது ஹிப்பணிகப் பெயர். ஹிவ்வகைழீல், பழமொஷீ நானூறு முதற்கண் எழுந்த பனுவல் எனலாம். மேல் வைப்புப் பார்க்க. பள்ஹீ எழுச்ஞி உறங்குபவரை எழுப்புவதற்குப் பாடும் பாடல் பள்ஹீ யெழுச்ஞி எனப்படும். உறங்குவதற்கு அல்லது உறக்காட்டுவதற்கு ஒருபாட்டு என்றால் எழுப்புவதற்கும் ஒரு பாட்டு வேண்டுமே! உறங்குவதற்குக் கண்படைபிலை, உறக்காட்டு, தாலாட்டு என்றால், எழுப்புவதற்குத் துழீலெடைபிலை, துழீல்நீக்கு, பள்ஹீ எழுச்ஞி என்பவை. மற்றை மற்றைப் பெருநகர்களெல்லாம் கோஷீழீன் எழுமாம்! ஆனால் மதுரை மாநகர் கோஷீழீன் எழாதாம்! “ நான்மறைக் கேள்ஜீ நஜீல்குரல் எடுப்ப ஏம ஹின்றுழீல் எழுதல் அல்லதை வாஷீய வஞ்ஞிஜிம் கோஷீஜிம் போலக் கோஷீழீன் எழாதேம் பேரூர் துழீலே.” என்பது பளீபாடல். சமணத்துறவோர் குகைகஹீல் தங்கிழீருந்தனர். ஹிருந்த ஹிடத்தே தங்கி, உண்டு, உறங்கி, கற்று, கற்நித்து, உறைந்தனர். அவ்ஜீடம் ‘பள்ஹீ’ யாழீற்று. ஒவ்வொருவர் படுப்பதற்கும் பாறைழீல் பள்ளம் தோண்டிஜிம், தலைக்கு மேடுவைத்தும் அமைத்த அவ்ஜீடம் பள்ஹீயாகி, உறைஜீடத்ணிற்கும், வஷீ பாட்டிடத்ணிற்கும், ஊதிடத்ணிற்கும், உறங்கிடத்ணிற்கும் கற்கும் ஹிடத்ணிற்கும், காலந்தோறும் வளர்ந்தது. அமண்பள்ஹீ, புத்தப் பள்ஹீ, பள்ஹீவாசல், மடைப்பள்ஹீ, பள்ஹீயறை, பள்ஹீக் கூடம் என்றுள்ள வழக்குகளைக் காண்க. ‘பள்ஹீயெழுச்ஞி’ வேந்தர்க்கு ஹிருந்தது. அது துழீ லெடைபிலை என்னும் புறத்துறையாழீற்று. பள்ஹீயெழுச்ஞி ஹிறைநலம் பெற்றதால் ணிருப்பள்ஹீ எழுச்ஞிகள் கிளர்ந்தன. தொண்டரடிப் பொடியாழ்வார் ணிருப்பள்ஹீ எழுச்ஞி பாடுகின்றார் ணிருமாலுக்கு: “கணிரவன் குணணிசைச் ஞிகரம்வந் தணைந்தான் கனஜீருள் அகன்றது காலையம் பொழுதாய்! மதுஜீளீந் தொழுகின மாமல ரெல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந் தீண்டி எணிர்ணிசை பிறைந்தனர் ஹிவரொடும் புகுந்த ஹிருங்கஹீற் றீட்டமும் நிடியொடு முரசும் அணிர்தஸீல் அலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ஹீ எழுந்தரு ளாயே.” என்பது பள்ஹீயெழுச்ஞிப்பத்ணில் முதலொன்று. பள்ஹீயெழுச்ஞி பாடியதால் தொண்டரடிப்பொடிழீன் மண்டங்குடியே மாப்புகழ் எய்ணிற்று! எப்படி? தொண்டரப் பொடி நகராழீற்றாம்! “ மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்வீயசீர் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு ணிணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ஹீ உணர்த்தும் நிரானுணித்த ஊர்.” ஹிது ணிருவரங்கப் பெருமாளரையர் பாடிய தவீயன். பள்ஹீ எழுச்ஞி எண்சீர் ஜீருத்தத்தால் ஹியல்வது என ஹிப்பாடலால் அறியலாம். பாரணியார் பாரத தேஜீக்குப் பள்ஹீ எழுச்ஞி பாடினார்; பாரதமாதா ணிருப்பள்ஹீ எழுச்ஞி என்பது அதன் பெயர். நூன்முறை பழையது! பொருண்மரபு புதுவது! பாடல் எண்திக்கை பணிகத்ணிற்பாணி. “பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால் புன்மை ஹிருட்கணம் போழீன யாஷிம் எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரஜீ எழுந்து ஜீளங்கிய தறிவெனும் ஹிரஜீ தொழுதுனை வாழ்த்ணி வணங்குதற் கிங்குன் தொண்டர்பல் லாழீரர் சூழ்ந்துபிற் கின்றோம் ஜீஷீதுழீல் கின்றனை ஹின்னுமெந் தாயே! ஜீயப்நிதுகாண்! பள்ஹீ எழுந்தரு ளாயே.” என்பது முதற்பாட்டு. பள்ளு கடஷிள் வணக்கம், முறையே மூத்தபள்ஹீ, ஹிளைய பள்ஹீ, பள்ளன் வரவோடு அவன் பெருமைபேசல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளம், குழீற்கூக்கேட்டல், மழை வேண்டிக் கடஷிட் பரசல், மழைக்குறி ஓர்தல், ஆற்றின் வரஷி, அதன் ஞிறப்புக் காண்டல், ஹிவற்றிற்கு ஹிடைஹிடை அகப்பொருள் துறைஜிம் கூறிப் பண்ணைத் தலைவன் வரஷி, பள்ஹீயர்கள் ஹிருவர் முறையீடு, ஹிளையாளை அவன் உரப்பல், பள்ளன் வெஹீப் பாடல், பண்ணைச் செயல்ஜீனவல், அவன்அது கூறல், ஆயரை வருஜீத்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ஹீ முறையீடு, குடும்பன் கிடைழீல் ஹிருந்தான்போல் வரல், அவனைத் தொழுஜீல் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ஹீ அடிஞில் கொண்டுவரல், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்வீத்தல் கேட்கவேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், ஜீஷீ முதஸீய வளங்கூறல், உழவர் உழல், காளைவெருளல், அது பள்ளத்துப் பாய்தல், பள்ஹீகள் புலம்பல், அவன் எழுந்து ஜீத்தல், அதைப் பண்ணைத் தலைவர்க்கு அறிஜீத்தல், நாற்றுநடல், ஜீளைந்தநின் செப்பஞ் செய்தல், நெல் அளத்தல், மூத்த பள்ஹீ முறையீடு, பள்ஹீகளுள் ஒருவர்க் கொருவர் ஏசல், என ஹிவ்ஷிறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்றச் ஞிந்தும் ஜீருத்தமும் ஜீரஜீவரப் பாடுவது உழத்ணிப்பாட்டு எனப்பெறும் பள்ளுப் பாட்டாகும். பள்ளு ஹிலக்கியத்ணிற்குளீய ஹிலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் ஜீளீத்ணில. ஆழீன் நவநீதப் பாட்டியஸீல் காணப்படும் லீகைச் செய்ஜிள்கள் பள்ளு நூஸீன் ஹிலக்கணத்தைத் தெளீ ஜீக்கின்றன. அவை: “ கடஷிள் வணக்கம் உழத்ணியருங் குடும்பன் வரலொன் றடைமுறை நாடுவளங் குழீல்கூ மழைக்காங் குறியோர்ப் படுமாறு வரற்ஞிறப்புட்டுறைத் தலைவன் வரற்கூப் படுமவ னன்னாள் உரப்பல் வெஹீயாம் பண்ணைச் செயலே.” “ ஜீனாச்சொலல் ஆயர் வருஜீக்க வரல்தகை முதலாள் தனாதுரைக் கேட்டுக் குடும்பன் கிடைழீருந் தானெனவந் தனாற்றொழு மாட்டப்புலம்பல் முற்பள்ஹீ கூழ் கொண்டுவரல் சொனானவள் மன்வீத்தற் கேட்க வேண்டற்கு மறுத்ணிடலே.” “ சூளவணை மீட்பவனைப் பதிஜீத் துழவருழக் காளை வெருட்பாளை பாயப்புலம்பல் எழுந்து ஜீத்தல் ஆளத் தலைவற் குணர்த்தல் நடல்ஜீளை செப்பம் செய்நெல் நீள அளத்தல் முதற்பள்ஹீ கூவேசல் மூட்டவையே.” “ ஹிவ்வமயங்கஹீற் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங் கொவ்ஜீய ஞிந்து ஜீருத்தம் ஜீரஜீவரத் தொடர்பு செவ்ஜீணிற் பாடுமது உழத்ணிப்பாட்டு பள்ளுமென்பர் நவ்ஜீ எனக்கண் மடனிர் நிறர்தம் நாட்டுவரே.” ஹிப்பாடல்கஹீன் அமைப்பும் ஓட்டமும், பள்ளுநூல்கஹீன் செய்ணிகளை வாங்கிக்கொண்டு ‘முதலுழஷி செய்வான் முறை’ யெனத் தெஹீவாக்குதல் வெஹீப்படையாம். ‘ணிருவாரூர்ப்பள்ளே’ முதற்பள்ளு என்பர். முக்கூடற் பள்ஹீன் சுவை நாடறிந்தது. பள்ளு நூஸீன் ஹிசைவளம் ‘ஆடு வோமே பள்ளுப் பாடுவோமே’ என வரும் நாட்டியற் புலவர் பாரணியார் பாட்டால், ‘பள்ளு’ என்பதற்குப் ‘பாட்டு’ என்னும் பொருள் உண்டாதல் அறிந்த செய்ணி. ஹிது பள்ஹீன் ஞிறப் பெனல் வெஹீப்படை. பவவீக்காதல் உலாக்காட்ஞிழீனால் உண்டாகிய காமம் லீகுந்தால் அதனைப்நிறரொடும் உரைத்து வருந்துவது பவவீக்காதல் என்னும் பெயர்பெறும். “ காமரு முலாவற் காட்ஞி யாலே அடைந்த காம லீக்கா லவற்றைப் நிறரொடும் எடுத்துப் பேஞி வருந்துதல் பவவீக் காதலாம் பகருங் காலே.” - (முத்துனிளீயம். 1121) பறந்தலைச்ஞிறப்பு பேய்கள் போர்க்களத்ணில் ஆக்கின கூழை உண்டு கஹீத்துக் கைகோத்துக் குரவைகூத்து ஆடுவது பறந்தலைச் ஞிறப்பு எனப் பெறும். அதனைப் பாடுவது பறந்தலைச் ஞிறப்புப்பாட்டு ஆகும். பறந்தலை = போர்க்களம். - (நவநீதப் பாட்டியல். 61 (உரை)) பறைபிலை அரசர் ஹிவீயவையெல்லாம் எய்துமாறு தெய்வம் காக்க வேண்டித் ணிருஜீழாஜீன் பொழுணிலும், முடிசூட்டு ஜீழா ஜீன்பொழுணிலும் வேண்டிக்கொண்டு; நாடும், நகரமும், நலம்பல எய்துமாறு வாழ்த்துரைத்து வஞ்ஞிச்சீர் பழீலப் பாடுவது பறைபிலை என்னும் பெயர்பெறும். “காவலர் ஹிவீதுறத் தேவர்காத் தஹீக்கெனக் கடஷிளர் ஜீழஜீனும் கணிர்முடி ஜீழஜீனும் நாடும் நகரமும் நலம்பெற ஹியம்நி வருநெறி வஞ்ஞி வழங்கப் பற்றிய மொஷீவரத் தொடுப்பது பறைபிலையாகும்.” - (பன்வீருப்பாட்டியல். 329) பன்மதிமாலை கலம்பக உறுப்புகளுள் அம்மானை, ஊசல், ஒருபோகு ஆகியவை ஒஷீந்து ஏனைய வெல்லாம் வரப்பாடுவது பன் மதிமாலையாகும். “ கலம்பகத்ணின், ஆட்டிய அம்மனை ஊசல் ஒருபோகும் அற்று வந்தால் பாட்டியல் பன்மதிமாலை” - (நவநீதப் பாட்டியல். 39) “அவற்றுள், “ஒருபோ கம்மானை ஊசல் ஹின்றி வருவது பன்மதி மாலை யாகும்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 54) “ முற்கூ றியகலம் பகத்துள் வருமொரு போகும் அம்மனை ஊசலும் போக்கி ஏனைய உறுப்புகள் எல்லாம் அமையப் பாடுவ ததுதான் பன்மதி மாலை.” - (முத்துனிளீயம். 1055). பன்வீருபாமாலை பன்வீருவகை யாப்பால் அமைந்த பன்வீரு பாடல் களைஜிடையது ஹிம்மாலை. தண்டபாதி அடிகள் அருஹீய ணிருச்செந்தூர்ப் நிரபந்தத்ணில் ‘பன்வீருபாமாலை’ ஹிடம் பெற்றுள்ளது. பாதாணிகேசம் கஸீவெண்பாவால் அடிமுதல் முடியளஷிம் கூறுவது பாதாணி கேசமாகும். “ கால்முதல் முடிவரை கஸீவெண் பாவாற் பாடுவதுபா தாணி கேசம் ஆகும் என்மனார் அறிந்ணிஞி னோரே.” - (முத்துனிளீயம். 1106) பாட்டியல் செய்ஜிஹீயல், யாப்பு, பாஜீனம் என்பன யாப்நிலக்கண நூல்கள். ஹிப்பாட்டியலோ நூல்வகை நுவலும் நூலாழீற்று. பன்வீரு பாட்டியல் முன்னோடி; வெண்பாப்பாட்டியல், நவநீதப்பாட்டியல் போல்வன தவீப்பாட்டியல் நூல்கள். ஹிலக்கண ஜீளக்கத்ணில் ஒருபகுணி பாட்டியல். ஆகஸீன் தவீ நூலாகஷிம், நூஸீன்பகுணியாகஷிம் பாட்டியல் எழுந்தன எனலாம். பன்வீரு பாட்டியல் எழுத்ணியல், சொல்ஸீயல், ஹினஜீயல் என மூஜீயல்களைஜிடையது. எழுத்ணின்நிறப்பு, வருணம், கணி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள், என்பவற்றை எழுத்ணியல் கூறுகின்றது. சீர்க்கணம், மங்கலச் சொல், பெயர்ப்பொருத்தம் என்ப வற்றை ஜீளக்குவது சொல்ஸீயல். பாப்பொருத்தம், பாஜீனம் என்பவற்றைக் கூறுவது ஹினஜீயல். சாதகம் முதல் கையறுபிலை ஈறாக அறுபத்தாறு வகைகளைப் பாஜீனமாகக் கூறுகின்றது. ஹிப்பன்வீரு பாட்டியல், பாட்டியல் நூல்கஹீன் செய்ணிக்கோவையை ஜீளக்கும். பாடாண்பாட்டு பாடாண் என்பது புறத்ணிணைகளுள் ஒன்றாகும். ஹித் ணிணைப் பொருள் அமையப் பாடப்பெறும் நூல் ‘பாடாண் பாட்டு’ எனப்பெறும். ஹிவ்வகைழீல் எழுந்தநூல், ‘ஞிவஞான பாலய தேஞிகர் பாடாண்பாட்டு’ என்பதாகும். ஹிது நேளீசை ஆஞிளீயப்பாவாய் 608 அடிகஹீல் அமைந்துள்ளது. ஹிதனை ஹியற்றியவர் ஆத்ணிரேயன் சீவீவாசன் என்பார். “ ஜீத்தகர் ஹியற்கை வெட்ஞிமுதல் எட்டொடும் அவர்ஞித் தாந்தம் அமைஷிறக் காட்டிப் பாடாண் பாட்டெனப் பகர்ந்தனன்.” எனவரும் பாழீரத்தால் பாடாண்பாட்டின் ஹிலக்கணம் ஹின்ன தென ஆஞிளீயர் சொல்கிறார். தொல்காப்நியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய வற்றில் பாடாண்ணிணைச் செய்ணிஜிண்டு. புறநானூறு பாடாண் பாடல் பலவற்றைஜிடையது. “ ஒஹீஜிம் ஆற்றலும் ஓம்பா ஈகைஜிம் அஹீஜிம் என்றிவை ஆய்ந்துரைத் தன்று.” எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை (189 ‘பாடாண்’ பொருள் ஜீளக்கும். பாவை பாவையன்ன கன்வீப்பெண்கள் நன்மழை பொஷீந்து நாடு செஷீக்கஷிம், னிடும் குடிஜிம் ஜீளங்கஷிம், காதற் கணவனை எய்ணிக் கஜீனஷிம் நோன்பு கொண்டு, தம்மன்ன பாவையரைஜிம் எழுப்நிச் சென்று பாவைஜிருச் செய்து வஷீபட்டு நீராடுவதாக அமைவது ‘பாவை’ என்னும் நூல்வகைச் செய்ணியாம். வெண்டளையான் ஹியற்றரஜீனைக் கொச்சகக் கஸீப்பா வாற் பாவைப்பாட்டு வரும் என்பதை மதிவாசகர் அருஹீய ணிருவெம்பாவை யானும், ஆண்டாளம்மையார் அருஹீய ணிருப் பாவையானும் அறிக. ணிருவெம்பாவை 20 பாடல்களாலும், ணிருப்பாவை 30 பாடல்களாலும் அமைந்தனவாம். ஒவ்வொரு பாட்டும் ‘எம்பாவாய்’ என்னும் பிறைபிலை எய்தும். “ கோஷீ ஞிலம்பச் ஞிலம்பும் குருகெங்கும் ஏஷீல் ஹியம்ப ஹியம்பும்வெண் சங்கெங்கும் கேஷீல் பரஞ்சோணி கேஷீல் பரங்கருணை கேஷீல் ஜீழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாஷீயீ தென்ன ஷிறக்கமோ வாய்ணிறவாய் ஆஷீயான் அன்புடைமை ஆமாறும் ஹிவ்வாறோ ஊஷீ முதல்வனாய் பின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.” என்பது ணிருவெம்பாவைஜிள் எட்டாம் பாட்டு. “ ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் ணிங்கள்மும் மாளீபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள பூங்குவளைப் போணில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக்குடம் பிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் பிறைந்தேலோர் எம்பாவாய்.” என்பது ணிருப்பாவை மூன்றாம் பாட்டு. நிள்ளைத்தலீழ் நிள்ளைத்தலீழ் ஆண்பாற்நிள்ளைத்தலீழ், பெண்பாற் நிள்ளைத்தலீழ் என ஹிருவகைப்படும். காப்புப்பருவம், செங்கீரைப்பருவம், தாலப்பருவம், சப்பாதிப்பருவம், முத்தப்பருவம், வாரானைப்பருவம், அம் புஸீப்பருவம், ஞிறுபறைப்பருவம், ஞிற்றிற்பருவம், ஞிறுதேர்ப் பருவம் எனப் பத்துப் பருவங்கள் வகுத்து ஆண்பாற் நிள்ளைத் தலீழ் பாடப்பெறும். ஹிவற்றுள் ஹிறுணிக்கண் பின்ற ஞிறுபறை, ஞிற்றில், ஞிறுதேர் என்பவற்றை ஜீலக்கி கழங்கு, அம்மானை, ஊசல் என்பவற்றை ஹிணைத்துப் பெண்பாற்நிள்ளைத்தலீழ் பாடப்பெறும். பெண்பாற் நிள்ளைத்தலீஷீல் ‘நீராடல்’ என்பதும் ஹிணைக்கப்பெறுதல் வழக்கு. எவீனும் பத்துப் பருவங்களுக்கு லீக்குப் நிள்ளைத் தலீழ் செய்ஜிம் வழக்கில்லை. “ கடுங்கொலை நீக்கிக் கடஷிட் காப்புச் செங்கீ ரை தால் சப்பாதி முத்தம் வாரா னைமுதல் வகுத்ணிடும் அம்புஸீ ஞிறுபறை ஞிற்றில் ஞிறுதேர் என்னப் பெறுமுறை ஆண்பாற் நிள்ளைப் பாட்டே.” “ அவற்றுடன், நின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடும் கழங்கம் மானை ஊசல் பாடுங் கஜீயாற் பகுத்து வகுப்புடன் அகவல் ஜீருத்தத் தாற்கிளை யளவாம்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 434,435) நிள்ளைத்தலீழ் ஓதுங்கால் அளவை மூன்று முதலாக ஹிருபத் தொரு ணிங்கள் என்பர். ஒன்று முதல் ஐந்தாண்டளஷி என்றும், பணினாறு யாண்டளஷி என்றும் கூறுவர். அரசர் முடிசூடிய நின்னரும், மகஹீர் பூப்பெய்ணிய நின்னரும் நிள்ளைத் தலீழ் பெறார் என்றும் கூறுவர். “ நிள்ளைப் பாட்டே தெள்ஹீணின் கிளப்நின் மூன்று முதலா மூவேழ் அளஷிம் ஆன்ற ணிங்கஹீன் அறைகுவர் பிலையே.” “ஒன்று முதல் ஐயாண் டோணினும் வரையார்.” (பொய்கையார்) “தோற்ற முதல்யாண் டீரெட்டளஷிம் ஆற்றல் சான்ற ஆண்பாற் குளீய.” “காப்பு முதலாகிய யாப்புவகை யெல்லாம் பூப்பு பிகழ்வளஷிம் பெண்பாற் குளீய.” (ஹிந்ணிரகாஹீயார்) “தொன்வீல வேந்தர் சுடர்முடி சூடிய நின்னப் பெறாஅர் நிள்ளைப் பாட்டே.” (பரணர்) - (பன்வீருப் பாட்டியல். 174-178) நிள்ளைத் தலீழ்ப்பாட்டு, ஆஞிளீயச் சந்த ஜீருத்தங்களாற் பாடப்பெறும். அணில் காப்புப்பருவம் ஒன்பது அல்லது பணி னொரு ஜீருத்தங்களால் அமைதல் வேண்டும் என்பது ஜீணி. “ஒன்பது பணினொன் றென்பது காப்பே.” (பரணர்) - (பன்வீரு. 188) ஹிவீ வேறு வகைப்பாவால் நிள்ளைத்தலீழ் பாடுதற்கு நேர்ந் தாரும் ஒரு சார் ஆஞிளீயருளர். அவர் கூறுமாறு: “அகவல் ஜீருத்தமும் கட்டளை ஒஸீஜிம் கஸீழீன் ஜீருத்தமும் கஜீன்பேறு பாவே.” “நிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத் தெள்ஹீணிற் செப்பும் புலவரும் உளரே.” - ( பன்வீருப் பாட்டியல். 189,190) முதற்கண் எடுக்கப்பெறும் அகவல் ஜீருத்தம் நான்கடிக்கும் எழுத்ணின் பகுணி எண்திக்கொள்ளவேண்டும் என்றும், எழுத் தொப்பப்பாட வேண்டும் என்றும் கூறுவர். “முதற்கண் எடுக்கும் அகவல் ஜீருத்தம் எழுத்ணின் பகுணி எண்தினர் கொளலே.” - (பன்வீரு. 191. ஹிலக்.கண ஜீளக்கம் பாட்டியல். 51 மேற்) பருவத்ணிற்குளீய பாடல்கள் ஒற்றைப்படப் பாடுதல் ஞிறப் பென்றும், ஹிரட்டைப்பட வருமாழீன் ஓசை பெயர்த்துப் பாடுதல் வேண்டும் என்றும் கூறுவர். காப்புப்பருவத்ணின் முதற்பாடல் ணிருமாலைப் பற்றிய தாதல் வேண்டும். அவன் காவற் கடமை பூண்டவன் ஆதலாலும், ணிருஜீன் கிழத்ணிழீன் கேள்வன் ஆதலாலும் நிறவற்றாலும் அவனை முற்படக்கூறித் தொடங்குதல் முறையென்பர். நின்னே ஹிவளீவரைக் கூறுக என்றும் வரைந்து கூறுவர். “காப்நின் முதல் எடுக்கும் கடஷிள் தானே பூக்கமழ் துழாய்முடி புனைந்தோ னாகும்.” (பரணர் பாட்டியல்) - (நவநீதப் பாட்டியல். 26) “மங்கலம் பொஸீஜிம் செங்கண் மாலே சங்கு சக்கரம் தளீத்த லானும் காவற் கடஷிள் ஆத லானும் பூஜீனுட் புணர்த லானுமுற் கூறிக் கங்கைஜிம் நிறைஜிம் கடுக்கைஜிம் புனைஜிமை பங்கனென் றிறைவனைப் பகர்ந்து முறையே முழுதுல கீன்ற பழுதறும் ஹிமயப் பருப்பதச் செல்ஜீயை ஜீருப்புற உரைத்து நாமகற் கொருநன் மாமுகில் ஊர்ணி ஒற்றைக் கொம்பன் வெற்றி வேலன் எழுவர் மங்கையர் ஹிந்ணிரை வாதி உருத்ணிரர் அருக்கர் மருத்துவர் வசுக்கள் பூப்புனை ஊர்ணிழீற் பொஸீவோர் அனைவரும் காப்ப தாகக் காப்புக் கூறல்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 68) ஹிவீ ஹிவர்களைக் கூட்டிஜிம் குறைத்தும் மாற்றிஜிம் உரைப்பாருளர். “ ணிருமால் அரனே ணிசைமுகன் களீமுகன் பொருவேல் முருகன் பளீணிவடுகன் எழுவர் மங்கையர் ஹிந்ணிரர் சாத்தன் நணியவன் நீஸீ பணினொரு மூவர் ணிருமகள் நாமகள் ணிகழ்மணி என்ப மருஜீய காப்நினுள் வருங்கட ஷிளரே.” - (பன்வீருப் பாட்டியல். 184) ஹிவீக் காப்புக் கூறுங்காலைக் கொலைஜிம் கொடுமைஜிம் கூறாமல் மங்கலம் மல்கக் கூறுதல் வேண்டும் என்றார். “ஜீளீசடைக் கடஷிளும் வேய்த்தோள் எழுவரும் அருளொடு காக்கவென் றறைஜிங் காலைக் கொலைஜிங் கொடுமைஜிம் கூறா ராகிப் பெயருஞ் ஞின்னமும் நிறஷிந் தோன்றக் கங்கை ணிங்கள் கடுக்கை மாலை மங்கல மழுவொடு மலைமகள் என்றிவை ஜீளங்கக் கூறல் ஜீளம்நிய மரபே.” - (பன்வீருப் பாட்டியல் 187) ஹிவ்ஜீப்பருவங்கஹீல் ஹிவ்ஜீச் செயல்கள் பாடுதற்குளீயவை எனக் குறிப்பதும் வழக்காகும். அவர் கூறுமாறு: “ஹிரண்டாம் மாதத்ணிற் காப்புக் கூறுதலும், ஐந்தாம் மாதத்ணிற் செங்கீரை கூறுதலும், ஆறாம் மாதத்ணிற் சொற்பழீல்ஷி கூறுதலும், ஏழாம் மாதத்ணில் அமுதூட்டலும், எட்டாம் மாதத் ணில் தாலாட்டுக் கூறுதலும், ஒன்பதாம் மாதத்ணில் சப்பாதி கூறுதலும், பணினொன்றாம் மாதத்ணில் முத்தம் மொஷீதலும், பன்வீரண்டாம் மாதத்ணில் வாரானை கிளத்தலும், பணி னெட்டாம் மாதத்ணில் சந்ணிரனை அழைத்தலும், ஹிரண்டாம் ஆண்டிற் ஞிறுபறை கொட்டலும், மூன்றாம் ஆண்டில் ஞிற்றில் ஞிதைத்தலும், நான்காம் ஆண்டில் ஞிறு தேர் உருட்டலும், பத்தாம் ஆண்டில் கச்ஞினோடு உடைவாளை ஜீரும்பத் தளீத்தலும் என்று சொல்லப்பட்டஷிம் நிறஷிம் உடைத்து’ என்றும், “ஹிவீப் பெண்பாற் நிள்ளைத்தலீழுக்கு, அம்புஸீ ஹிறுணி யாய் பின்ற பருவங்களுடன் மூன்றாம் ஆண்டில்தான் ஜீளை யாடும் பாவைக்கு மணம் பேசுதலும், ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுகாறும் மன்மதனை ஒத்த புருடனைப் பெறத் தவம் செய்தலும், குஹீர்ந்த நீராடலும், பதுமை வைத்து ஜீளை யாடலும், கழங்காடலும், பந்தாடலும், ஞிறு சோறாடுதலும், ஞிற்றில் ஹிழைத்தலும், ஊசலாடலும் என்பன கூறப்படும் என்க.” என்று கூறுவர். - (பேரகராணி. 1218) பன்னீராண்டு ஆண் நிள்ளைக்கு ஹிளம்நிறை, புஸீ, யானை, அளீமா ஹிவற்றின் குட்டிகளைஜிம், காளையைஜிம் உவமையாகக் கூறவேண்டும் எனஷிம், பெண் நிள்ளைக்கு மான்கன்று, மழீற்நிள்ளை, தேன், மது, கரும்நின்முளை, கிள்ளை, கொடி ஹிவற்றை உவமையாகக் கூறவேண்டும் என்றும் பாட்டியலார் உரைத்தனர். ‘வளர்நிறை’யை ஒப்நிட்டுக் கூறுதல் ஹிருபாலார்க்கும் ஒக்கும் என்றும் உரைத்தாருளர். “ பொங்குகணிர் ஹிளம்நிறை புஸீழீன் ஞிறுபறழ் குஞ்சரக் குழஜீ கோளளீக் குருளை மடஜீள ஜீடையே யாறிரண் டாண்டின் ஹிடைபிகழ் உவமை என்மனார் புலவர்.” “ பெண் மக ஜீற்குப் பேசு லீடத்து மாவீன் கன்று மழீஸீன் நிள்ளை தேவீன் ஹின்பம் தெள்ளாத் தேறல் கரும்நின் ஹிளமுளை கல்லாக் கிள்ளை ஹிளந்தஹீர் வல்ஸீ என்றிவை எல்லாம் பெய்வளை மகஹீர்க் கெய்ணிய உவமை.” - (பன்வீருப்பாட்டியல். 193, 194) “ ஹிளங்கணிர்த் ணிங்கள் எல்லார்க்கும் உளீத்தே.” (பரணர்) - (பன்வீருப் பாட்டியல். 195) நிளீஷி சுரம் சுரம் - வெப்பம், பாலைபிலம், நிளீஷி என்பது, பாலைத் ணிணை சார்ந்ததொரு துறை. தலைவன் நிளீந்து செல்ல அப்நிளீஷி தாங்காமல் தலைஜீ வருந்துதல் ‘நிளீஷி சுரம்’ என்னும் ஹிலக்கிய வகைழீன் உள்ளுறை யாம். “ தலைவன் நிளீயத் தலைஜீ வருந்தல் ஜீளீவார் நிளீஷிசுரம் என்பார்.” - (நிரபந்தத்ணிரட்டு 62) நிளீதல் - நிளீதல் பிலீத்தம் ஹிரண்டும் நிளீதலாம். ‘ஜீளீவார் நிளீஷி’ என்றதால், நிளீஷிக்குளீய காரணமும், நிளீஷி கருதுதலும், நிளீவைக் குறிப்பால் உணர்த்துதலும், ஒருவாற்றான் நிளீவைத் தலைஜீ அறிதலும், தோஷீ அறிதலும், நிளீயேன் என்றலும், காட்டின் அருமை கூறலும், பருவ வரஷி கூறலும், பினைந்து பருவரலும், நிளீதலும், செலஷிம், செலஜீடை அழுங்கலும், ஜீனை முடித்து மீளலும், தலைஜீ ஆற்றாமைஜிம், தோஷீ ஆற்றுஜீத்தலும், தலைஜீ ஆறிழீருத்தலும், பருவ வரஷிம், பருவமன்று எனத் தோஷீ கூறலும், தலைவன் ஜீனைமுற்றி மீளலும், தேரை ஜீரைந்து செலுத்தலும், தலைஜீயை அடை தலும், மகிழ்தலும் ஹின்னவெல்லாம் அடக்கிக் கொள்ளத்தகும். ணிருவள்ளுவர் நிளீஷிக்கு ஐந்து அணிகாரங்கள் ஒதுக்கியமை கண்டு கொள்க. நிறிதுபடுபாட்டு ஒரு பாட்டினுள் வேறு ஹினப்பாட்டு ஒன்றோ, பலவோ அமைஜிம் வண்ணம் பாடுவது நிறிதுபடுபாட்டாகும். தன்வீனப் பாட்டும், வேறினப்பாட்டும் ஒரு பாட்டுள் அடங்கி வரப் பாடினும் நிறிதுபடு பாட்டேயாம். ஹிவ்வகைப் பாடல்களால் வரும் நூல் ‘நிறிதுபடு பாட்டு’ என்பதாம். கட்டளைக்கஸீத்துறை “ ஓமய வேலவ னோய்வறு சீர்த்ணிய னோமஷின சீமய சுத்தமர் நாதன் மழீன்லீசைச் செல்ஸீளைஞன் கோமய லீன்வீய னிடேறு லீட்டர் குரவனென தாமய னிறிறு மாறன கானந்த மார்கவன்றே.” நேளீசையாஞிளீயப்பா “ ஓமய வேலவ னோய்வது சீர்த்ணிய னோமஷி னஞிமய ஷித்தமர் நாதன் மழீன்லீசைச் செல்ஸீளை ஞன்கோ மயலீன் வீயனி டேறு லீட்டர் குரவ னெனதா மயனி றிறுமா றனகா னந்த மார்க வன்றே.” - (நிறிதுபடுப்பாட்டுப்நிரபந்தம். 1) நிறிதுபடு பாட்டு ஹிரண்டு பாட்டாகப் பகுக்கப்படுமானால் நிறிதுபடு ஹிருபங்கி (துஜீதபங்கி) என்றும், மூன்றாகப் பகுக்கப் படுமானால் நிறிதுபடு முப்பங்கி (ணிளீபங்கி) என்றும் வழங்கப் பெறும். குமரகுருதாசர் ஹியற்றிய பத்துப் நிரபந்தங்கள் என்னும் நூல் காண்க. புகழ்ச்ஞி மாலை பலவகை அடிகளும் மயங்கிய வஞ்ஞிப் பாவால் மகஹீரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்ஞி மாலையாகும். “ மயக்க அடிபெறு வஞ்ஞிப் பாவால் ஜீயத்தகு நல்லார் ஜீழுச்சீர் உரைத்தல் புகழ்ச்ஞி மாலை.” - (ஹிலக்கண. பாட்டியல். 106) ஹிதனை வெண்பாவால் பாடுவதும் உண்டென்பது சேந்தம்பூதனார் பெயரால் வரும் ஒரு நூற் பாவால் அறியப் பெறுகின்றது. “ வெள்ளடி ஹியலால் புணர்ப்போன் குறிப்நிற் றள்ளா ஹியலது புகழ்ச்ஞி மாலை.” - (பன்வீருப் பாட்டியல். 287) ஹிவீ அகவலடிஜிம், கஸீயடிஜிம் வந்து மயங்கிய வஞ்ஞிப் பாவால் பாடுவது என்றும் கூறுவர். “ அகவல் அடிகஸீ அடிஜிம் மயங்கிய வஞ்ஞிழீன் அளீவையர் மாண்பை உரைப்பது புகழ்ச்ஞி மாலைழீன் பொருளா கும்மே.” - (முத்துனி. 1057) புராணம் (தொன்மம்) உலகத் தோற்றம், மக்கட் நிறப்பு முதஸீயவற்றை அழகுறக் கூறுவது புராணம் ஆகும். “ குலவரஷி காளீகை, யாப்நிற் புராணமே யாம்.” - (வெண். பாட். 43) ஹிதன் உரைகாரர் மனுவந்தரம் உலகத் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவது புராணம் என்பர். ஹிவீப், பழமையான செய்ணிகளைக் கூறும் நூல்களைத் ‘தொன்மை’ என்பார் தொல்காப்நியர். அவ்வகையால் பழங் கதைகளைக் கூறும் புராணம் ‘தொன்மம்’ என்னும் ஆட்ஞி பெற்றதாம். ஹிதனை வழங்கியவர் பாவாணர். நாட்டிலும், ஏட்டிலும் வழங்கிய கதைகளைத் தொகுத் தமைத்த நூல் புராணம் ஆழீற்று. அவ்வகைழீல் பெளீயபுராணம் குறிப்நிடத்தக்கது. கந்தபுராணம் ஜீளீந்தது. நின்னே பணினெண் புராணங்கள், அளீச்சந்ணிரபுராணம் என்பவை வளர்ந்தன. ணிருக்கோழீல்களுக்குப் புராணம் பாடும் மரபு பெரும்புலவர் ணிளீஞிரபுரம் மீனாட்ஞி சுந்தரரால் பெருவழக்காழீற்று. “புராணம் பாடப்பெறாக் கோழீல் புகஷீலாக் கோழீல்” என்ற தஜீப்பும் ஹிருந்தது என்பது அவர் வரலாற்றால் ஜீளங்குகின்றது. ணிருக்கருவைத் தலைபுராணம் காப்பு, பாழீரம், வணக்கம் அவையடக்கம் என்பவை 49 பாடல்களைக் கொண்டுளது. நின்னர்த் ணிருநாட்டுச் சருக்கம், ணிருநகர்ச் சருக்கம், தல ஜீசேடச் சருக்கம், தீர்த்தஜீசேடச் சருக்கம், மூர்த்ணிஜீசேடச் சருக்கம், புராணக்கதை வரலாறு எனக்கூறி, முதலாவது கதை காக புசுண்டர் கணியடைந்த சருக்கம் முதலாக முப்பத்தைந்தாவது சேரவரதுங்கர் தெளீசனம் பெறு சருக்கம் ஈறாக வளர்கின்றது. புராணநூல் அமைப்நின் ஒரு பொதுப்போக்கு ஹிதனால் புலப்படும். புலம்பல் ‘புலம்பே தவீமை’ என்றார் தொல்காப்நியர். புரப் பாரையோ, அன்புப்நிறப்பாரையோ ஹிழந்த காலைழீல் தவீமைப் பட்டுப்போன உணர்ஷிம், அவ்ஷிணர்வால் புலம்பு தலும் உண்டாம். உலகியல் புலப்பம் வேறு; தூய துறஷி பிலைப்படியேறித் துலங்கும் சான்றோர் ‘புலப்பம்’ வேறு; அவர்கள் ஹிறையைப் நிளீந்து தவீத்ணிருத்தலுக்கும், உழீர்கஹீன் மேல் கொண்ட பேரருள் உருக்குதலுக்கும் புலம்நினர். முன்னது கலங்கல் என்றும், கையறு பிலையென்றும், ஒப்பாளீ என்றும் பெயர் களைத் தாங்க, நின்னது புலம்பலாகஷிம், ஆற்றாமையாகஷிம், ஏசறவாகஷிம், நிறவாகஷிம் ஜீளங்குகின்றன. ஞித்தர்களுள் ஒருவர் அழுகதிச் ஞித்தர்; அழுகண்ணராகவே ஹிருந்தவர் எவ்வளஷி ஆற்றாது புலம்நிழீருப்பார். பட்டினத்தார் புலம்பலும், பத்ணிர கிளீயார் புலம்பலும், அறிஷிப் புலம்பல் (ஞானப்புலம்பல்), மெய்யறிஷிப் புலம்பல் (மெஞ்ஞானப் புலம்பல்) ஆம். மதிவாசகளீன் ணிருவேசறஷி; ணிருப்புலம்பல், வள்ளலா ளீன் ஆற்றா ஹிரக்கம், ஏழைமைழீன் ஹிரங்கல், ஆற்றாப் புலம்பல், முறையீடு ஹிவையெல்லாம் உருக்கத்தால் நிறந்து உருக்கவே உருக்கொண்டவை அல்லவோ? மைந்தன் கான் புகுந்தான்; தந்தை வருந்ணி வான் புகுந்தான்! ஏன் புகுந்து புலம்புகிறார் குலசேகர ஆழ்வார்! தசரதனே ஆகிஜீட்டாரே? “கொல்லணைவேல் வளீநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குவீஜீல் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா! வல்ஜீனையேன் மனமுருக்கும் வகையே கற்றாய், மெல்லணைமேல் முன்துழீன்றாய் ஹின்றிவீப்போய் ஜீயன்கான மரத்ணின் நீழல், கல்லணைமேல் கண்டுழீலக் கற்றனையோ காகுத்தா! களீய கோவே”! - (பெருமாள்ணிருமொஷீ 9-3) ஆழ்வார் புலம்பஸீல் பத்ணில் ஒன்று ஹிது. புலம்பலுக்கு யாப்பு என்ன? ஒவ்வொரு புலம்பலும் உருக்குகின்றது! உணர்வே புலம்பல் யாப்பு! அறுசீரா? எழுசீரா? அகவலா? தாஷீசையா? வெண்பாவா? தாஷீசையா? ஞிந்தா? கண்தியா? எல்லாவற்றிலும் புலம்பல் சான்று உண்டே! புறநாட்டுச் செய்கை வேந்தன் ணிருவோலக்கத்ணில் ஹிருந்து தன் ஒற்றரை அழைத்து அடுத்த நாட்டு பிலையை அறிந்து வருமாறு போக்கு தலும், போக்கிய அவர் வேண்டுமாற்றான் கரந்து போய் ஒற்றறிந்து மீளலும், வேந்தனைக் கண்டு அடுத்த நாட்டு ஒற்றுச் செய்ணியை உரைத்தலும், ‘புறநாட்டுச் செய்கை’ என்னும் நூற்பொருளாம். ஹிவற்றுடன் அவ்வடுத்த நாட்டரசன், வேந்தன் மகிழுமாறு ணிறைகுஜீத்துப் பதிதலும் புறநாட்டுச் செய்கை என்பதேயாம். “ வேந்தன்அத் தாதிலீசை ஜிற்றொற்றர்ப் போக்கித் தாந்ணிரும்நி வேந்தளீயல் சாற்றுவது - வாய்ந்த புறநாட்டுச் செய்கை; புறநாட்டார் பொன்னைத் ணிறைகுஜீத்தல் அப்பெயர்ப்பாச் செப்பு.” - (நிரபந்தத்ணிரட்டு. 23) ஞிலப்பணிகாரத்ணிலும் கஸீங்கத்துப் பரதிழீலும் ஹிப்புற நாட்டுச் செய்கைக்குளீய கருப்பொருள்கள் உண்டு. அவற்றை வாங்கிக் கொண்டு ஹிச்ஞிற்றிலக்கிய படைப்பு வெஹீப்பட்டதென்க. புறபிலை நீ வணங்கும் தெய்வம் பின் வஷீவஷீ லீகுவதாக எனக் கூறுவது புறபிலையாகும். “நீவணங் கொருவன் பினைப்பாது காப்ப பின்னுடை வஷீவஷீ நீளுவ தாக என் ஹியம் புவது புறபிலை என்ப.” - (முத்துனிளீயம். 1098) புறம்புல்கல் புறம் - முதுகு; புல்கல் - தழுஷிதல். பெளீயாழ்வார் ஏக்கத்தொடு எணிர்பார்க்கிறார், கண்ணன் வந்து தம் ‘புறம் புல்குதலை’. என்ன வேட்கை! என்ன வேட்கை! அகவை முணிர்ந்தவர்க்கு ஹிளையர்கை வருடல் ஹின்பக் கொள்ளையன்றோ? அணிலும் எட்டாமுதுகில் அச் சொட்டும் தண்ணந்தாமரைக் கைவருடல் எப்படி ஹின்பம் செய்ஜிம்? “வட்டு நடுவே வளர்கின்ற மாதிக்க மொட்டு நுனைழீல் முளைக்கின்ற முத்தேபோல் சொட்டுச்சொட் டென்னத் துஹீக்கத் துஹீக்கஎன் குட்டன்வந் தென்னைப் புறம்புல்குவான் கோஜீந்தன் என்னைப் புறம் புல்குவான்!” - (பெளீயாழ்வார் ணிருமொஷீ 1-9) முதுகுவருடலும் முத்தலீழ்க்கொரு பனுவல் வழங்குமெவீன், அதன் முழுமையை எவரே உரைப்பார்? புறம் புல்லலைப். நிறர்ப் புல்லா தொஷீதல் பெளீயவர் பெருமை யாம் தவீப்பெருமைக்கோ? பூச்ஞி காட்டல் பூச்ஞி காட்டுதல் = பொய்யாக அச்சங்காட்டுதல், குழந்தைகள் மறைந்ணிருந்தோ, துதி முதஸீயவற்றால் முகத்தை மறைத்துக் கொண்டோ அச்சங்காட்டுதல் உண்டு. பெளீயவர்கள் செயல்களைப் நின்பற்றும் செயல் அது. கற்நித்த பெளீயவர்க்கே கற்நித்துக் காட்டும் குழந்தையல்லவோ! ஆகஸீன், குழந்தைமைப் பூச்ஞி காட்டல் வளர்ந்தோர்க்கும் வளமான ஹின்பம் சேர்ப்ப தாம்; நிள்ளைத் தலீழ்ப் பருவங்களுள் ஒன்றாகக் காட்டற் குளீயதாம். ஹிதனைப் போற்றிக் கொண்டவர் பெளீயவர் பெளீ யாழ்வார். அவர், கண்ணன் பூச்ஞி காட்டுதலைக் கூறும் பணிக முதற்பாட்டு: “ மெச்சூது சங்க லீடத்தான்நல் வேயூணி பொய்ச்சூணில் தோற்ற பொறைஜிடை மன்னர்க்காய்ப் பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த அத்தூ தன் அப்பூச்ஞி காட்டுகின்றான். அம்மனே ! அப்பூச்ஞி காட்டுகின்றான்.” - (பெளீயாழ்வார் ணிருமொஷீ 2-1) பூச்ஞி என்பது பிழலுக்கு மட்டுமோ பெயர் ? பாம்புக்கும் கூடப் பெயராழீற்றே! பூவைபிலை பூவைபிலை என்னும் புறத்துறைப்பெயரால் ஞிறுநூல் வகை ஒன்று கிளர்ந்தது என்பதை நவநீதப் பாட்டியல் உரை (26) வெஹீப்படுத்துகின்றது. அது வருமாறு: “அந்த நாராயணனே முடிபுனைந்த மன்னற்குச் சமமாக உவமை வைத்துப் பாடற்கும் உளீயவனாகும். தேவர்களை மாவீடருடன் சமமாக வைத்துப்பாடுதற்குப் பூவைபிலை என்று பேராம். ஹிப்படிப்பாடுவது ஹிருபத்தைந்து வயசுக்கு மேற்பட்டு முப்பது வயசுக்கு உட்பட்ட மன்னருக்கு ஆகாது.” பெயர்நேளீசை (பேர்நேளீசை) பாட்டுடைத் தலைவன் பெயளீனைச்சார நேளீசை வெண் பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் பெயர் நேளீசை என்று கூறப்பெறும். “ பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார நேளீசை வெண்பாத் தொண்ணூ றேனும் எழுப தேனும் ஐம்ப தேனும் அறைவது பெயர்நே ளீசையா கும்மே.” - (முத்துனிளீயம். 1094) பெயளீன்வீசை (பேளீன்வீசை) பாட்டுடைத் தலைவன் பெயளீனைச் சார ஹின்வீசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் பெயளீன்வீசை என வழங்கப்பெறும். “ பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார ஹின்வீசை வெண்பா எழுபான் ஹிருபஃ தேனும் எழுபா னேனும் ஐம்பஃ தேனும் உரைப்பது பெயளீன் வீசையே.” - (முத்துனிளீயம். 1092) பெருங்காப்நியம் (பெரும்பாஜீகம்) வாழ்த்துதல், வணக்கம், வருபொருள் உரைத்தல் என்னும் மூன்றனுள் ஒன்று முன்வரநடந்து, அறம்பொருள் ஹின்பம் னிடு என்னும் நான்கு ஒழுகலாறுகளைஜிம் உடையதாய், தன்னோடு ஒப்பாரும் லீக்காரும் ஹில்லாத தலைவனை உடையதாய்; மலை, கடல், நாடு, நகர், பருவம், ஞாழீறு, ணிங்கள், ஹிவற்றின் தோற்றம் ஆகியவை பற்றிய வருணனைஜிடையதாய், ணிருமணம், முடி சூட்டு, பொஷீலாட்டு, புனல்ஜீளையாட்டு, உண்டாட்டு, மகப் பேறு, புலஜீ, கலஜீ ஆகிய ஹித்தகையவற்றைக் கூறும் நடை ஜிடையதாய், சூழ்ந்து ஆய்தல், தூதனுப்பல், படையெடுப்பு, போர்புளீதல், வெற்றியெய்தல், ஆகியவை நெறியே தொடர்ந்து காண்டம், ஹிலம்பகம், சருக்கம் முதஸீய பாகுபாடுகளைஜிடைய தாய், நகை முதஸீய எண்வகைச் சுவைஜிம் மெய்ப்பாட்டுக் குறிப்பும் பொருந்தப் புலவரால் ஹியற்றப் பெறுவது காப்நிய மாகும். அவற்றுள், “ பெருங்காப் நியபிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் ஹிவற்றினொன் றேற்புடைத் தாகி முன்வர ஹியன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்வீகர் ஹில்லாத் தலைவனை ஜிடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் ஹிருசுடர்த் தோற்றமென் பினையன புனைந்து நன்மணம் புணர்த்தல் பொன்முடி கஜீத்தல் பூம்பொஷீல் நுகர்தல் புனல்ஜீளை யாடல் தேம்நிஷீ மதுக்கஹீ ஞிறுவரைப் பெறுதல் புலஜீழீற் புலத்தல் கலஜீழீற் கஹீத்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்ணிரந் தூது செலஜீகல் வென்றி சந்ணிழீல் தொடர்ந்து சருக்கம் ஹிலம்பகம் பளீச்சேதம் என்னும் பான்மைழீல் ஜீளங்கி நெருங்கிய சுவைஜிம் பாவமும் ஜீரும்பக் கற்றோர் புனைஜிம் பெற்றிய தென்ப.” - (தண்டி. 8) பெருமகிழ்ச்ஞி மாலை பெண்கள் அழகும் குணமும் ஆக்கமும் ஞிறப்பும் ஆகிய வற்றைக் கூறுவது பெருமகிழ்ச்ஞி மாலையாகும். “ தெளீவை எஷீல்குணம் ஆக்கம் ஞிறப்பை உரைப்பது பெருமகிழ்ச்ஞி மாலை எனப்பெயர் பெறுமே.” - (முத்துனிளீயம். 1058) பெருமங்கலம் (வெள்ளதிநாள்) “நாள்தோறும் தான்மேற்கொள்கின்ற ஞிறை செய்தல் முதஸீய செற்றங்களைக் கைஜீட்டுச் ஞிறைஜீடுதல் முதஸீய ஞிறந்த தொஷீல்கள் நிறந்ததற்குக் காரணமான நாஹீடத்து பிகழும் வெள்ளதியைக் கூறுவது.” (வெள்ளதிநாள் - நிறந்தநாள்). பொய்ம்மொஷீ அலங்காரம் (மொய்ம்மொஷீ அழகு) அலங்காரம் - அழகு. பொய்யாகப் புனைந்து கூறும் அழகு பொய்ம்மொஷீ அலங்காரம் எனப்படும். பொய்யாகப் புனைந்து கூறவேண்டுவது என்ன? அணில் அழகு ஹிருப்பதும் என்ன? என ஐயம் எழுதல் ஹியற்கை. கட்டுக்கதை என்றும், புனைகதை என்றும், சொல்லப்படும் ஞிறுகதை, தொடர்கதை என்பவைஜிம், நாடகம் ணிரைப்படம் ஆகியவைஜிம் உள்ளது உள்ளவாறு கூறுவன அல்ல. ‘ஹில் லோன் தலைவனாக ஹில்லது கூறலும்’ கூத்து வகைக்குளீய தெனக் கொள்கை வகுத்துளர், ஹிப் பொய்ப்புனைவால் மெய்ந் நலம் உண்டு என்னும் கருத்தாலேயாம். நல்ல பொழுதுபோக்காவதுடன், புனைஜீல்வரும் நன் வீகழ்ஷி நறுஜீதாய் நெஞ்சகம் புகுந்து பிலைபெற்றுத் தன் வயமாக்கித் தீயோனைஜிம் ணிருத்தும் நலப்பாடு உடையதாம். ‘கட்டி பூஞிக் கடுத்தீற்றுவதுபோல’ சுவையாகத் தோன்றிச் சுட்டும்நலம் சேர்ப்பது கண்கூடாகஸீன் ஹித்தகையஷிம் நூற் பொருளாக நுவலப்பட்டதென்க. “ பொய்ம்மொஷீஜிம் மெய்ம்மொஷீஜிம் போற்றுமலங் காரலீரண் டய்யகஸீ வெண்பாவால் ஆற்றுவன.” - (நிரபந்தத் ணிரட்டு 16) என்பதால் ஹிது கஸீவெண்பாட்டால் வருமென அறியலாம். “ பொய்மைஜிம் வாய்மைழீடத்தபுரை தீர்ந்த, நன்மை பயக்கு மெவீன்.” என்னும் குறள் (292) கருதத்தக்கது. “மெய்ம்மொஷீ அலங்காரம்’ பார்க்க. பொருள்வஞ்ஞி புறத்ணிணைக்கண் ஒருதுறைப் பொருளை ஜீளீத்துக் கூறின் அஃது அப்பொருள் வஞ்ஞியாகும். “ஜீளீத்தொரு பொருளை ஜீளம்நினப் பெயராம்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 109) போதம் (மெய்யறிஷி) மெய்ப்பொருள்பற்றி ஜீளக்கிக் கூறும் நூல்வகை ‘போதம்’ எனப்படுகின்றது. அத்தகு நூல்களுள் ‘ஞிவஞான போதம்’ தலைப்பட்டது. அதனைக் கண்டவர் பெயரே ‘மெய் கண்டார்’ எவீன் வேறுஜீளக்கம் வேண்டுவணின்று. பன்வீரு நூற்பாக்களால் அமைந்த ஞிவஞானபோதம், குன்றத்தைக் குன்றி மதிக்குள் அடக்கியபான்மையது. ஞித்தர் தொகுணிஜிள் ஞிவானந்தபோதம், பிசானந்த போதம் என ஹிரண்டு நூல்கள் உள. ஹிவ்ஜீரண்டும் உரைஜிம் பாட்டும் ஜீரஜீய நூலாக ஹியல்கின்றன. பல்வகைப்பாஷிம் ஹினமும் பழீல்கின்றன. தவீத்தவீ நூல்களாமளஷி ஜீளீஷிம் உடையன. போர்க்கெழுவஞ்ஞி பகைவர்மேல் போர் குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்ஞிப்பூமாலை சூடிப் புறப்படும் படையெழுச்ஞிச் ஞிறப்பை ஆஞிளீயப்பாவாற் கூறுவது போர்க்கெழு வஞ்ஞியாகும். “ போர்க்கெழு மன்னவர் வஞ்ஞிப் பூத்தொடை அதிந்து புறப்படும் அடுபடை எழுச்ஞிச் ஞிறப்பக வஸீனாற் செப்புதல் போர்க்கெழு வஞ்ஞி எனப்பெயர் வைக்கப் படுமே.” - (முத்துனிளீயம். 1071) மங்கலவள்ளை உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவாலும், வகுப்பாலும் பாடுவது மங்கலவள்ளை எனப்பெறும். “ ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல மங்கையைப் பாடுதல் மங்கல வள்ளை.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 68) “ மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால் ஹிங்காமொன் பானென் றிசை.” - (வெண்பா பாட்டியல். 32) ஒன்பது வெண்பாவாலும், ஒன்பது வகுப்பாலும் பாடுவது என்று முத்துனிளீயம் கூறும். “ மேற்குலத்ணிற் நிறந்த லீன்னாளை வெண்பா ஒன்பதா லும்வகுப் பொன்பணி னாலும் வழுத்துவது மங்கல வள்ளை யாகும்.” ஹிவீ, மங்கல வள்ளையை மங்கல வெள்ளை என்பார் பன்வீரு பாட்டியலார். வெண்கஸீப்பாஷிம் வருதற்கு உளீயது என்பார் அவர். வகுப்பும், வெள்ளைஜிம், தவீத்தவீ வருவதைஜிம் ஏற்பார். “சந்தமும் வெள்ளைஜிம் தருவன கற்புடை மங்கல வெள்ளை வருவன ஒன்பான்.” “அதுவே, வெண்கஸீ யானும் வருதற்கும் உளீத்தே.” (மாபூதனார்) “சந்தமும் வெள்ளைஜிம் தவீத்தவீ புணர்தலும் அந்தலீல் புலவ ராமென மொஷீப.” (சீத்தலையார்) - (பன்வீருப் பாட்டியல். 302,304) மஞ்சளீ தலைவன் பத்து நாள் உலா வரல்; அவ்ஷிலாஜீன் நாலாம் நாள் பாவை யொருத்ணி அவனைக் காணல்; அவஹீடம் அன்பு அரும்புதல்; ஒன்பானாம் நாஹீல் தன் முன்றிஸீல் வந்து அவனைக் காணல்; பத்தாம் நாள் களீமேல் அவன் உலா வரல்; நின்னர்ப் பாவை நிளீவால் வருந்துதல் - என்னும் பொருஹீல் வருவது ‘மஞ்சளீ’ என்னும் ஹிலக்கியம். ஹிவ்ஜீலக்கியம் வதிகச் செல்வருக்கு உளீயதாகச் சொல்லப் பெறுதல் ஹில்லை. ‘ஒன்பான் நாள் முன்றிற்காகும்’ என்றதால் எட்டாம் நாள்காறும் அவள் ஹில்லுள் அடைஜிற்றிருந்து வாழீல் பலகதி, மாடம் வஷீயாகக் கண்டாள் என்பது புலப்படும். முத் தொள்ளாழீரக் கைக்கிளைப் பாடல்கள் ஹிப்பொருளை ஜீளக்கு வனவாதல் அறிக. வேந்தர்க்குளீயதாகக் கூறிய ஹிம்மஞ்சளீ, ‘ஹிளங்கோக்கள்’ என்னும் பெருமை பூண்ட வதிகர்க்கு ஆகுமோ என்பார்க்கு, ஆகாது என்றார். வதிகநலம் பேணுவார், ‘முதஸீழக்கும் செய்ஜீனை ஊக்குதல் கூடாது’ என்னும் உன்வீப்பாக ஹிதனைக் கொள்ளலாம். “ வரும்பவவீ பத்து வருமவர்காண் நாஸீல் அரும்பும்ஒன் பானாள்முன்றிற் காகும் - ஜீரும்புகளீ பத்தாநா ளைப்பவவீ பாவைநிளீ வே; வதிக வத்தருக்கா காமஞ் சளீ.” - (நிரபந்தத்ணிரட்டு 34) பாடற் சொல்லமைணி நல்ஜீளக்கமாக அமையாமைழீன் நிற வாறு பொருள் காணஷிம் வாய்க்கும். மடல் அறம், பொருள், னிடு, என்னும் மூன்று பொருள்களைஜிம் பஷீத்து, மங்கையரைச் சேர்தலான் உளவாகிய ஹின்பத்தையே பயனெனக்கொண்டு ஹின்வீசைக் கஸீ வெண்பாவால் தலைவன் ஹியற்பெயர் எதுகைழீல், அப்பொருள் முழுவதும் பாடுதல் மடல் எனப்படும்; ஹிஃது ஹின்பமடல், வளமடல் என்றும் கூறப்பெறும். “ அறம்பொருள் னிடெனு மம்முக் கூற்றின் ணிறங்கடிந் தளீவையர் ணிறத்துறும் ஹின்பம் பயனெனக் கஸீவெண் பாவால் தலைவன் பெயரெது கைழீவீற் பேசுதல் வளமடல்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 96) “ அறம்பொருள் னிடு ணிறம்பெளீ தஷீத்துச் ஞிறந்த வேட்கை செவ்ஜீணிற் பராஅய்ப் பாட்டுடைத் தலைவன் ஹியற்பெயர்க் கெதுகை நாட்டிய வெண்கஸீப் பாவ தாகித் தவீச்சொல் ஒரீஹித் தவீழீடத் தொருத்ணியைக் கண்டநின் அந்த ஒண்டொடி எய்தலும் மற்றவள் வடிவை உற்றகிஷீ எழுணிக் காமங் கவற்றல் கரும்பனை மடல்மா ஏறுதல் கவற்றல் கரும்பனை மடல்மா ஏறுதல் ஆடவர் என்றனர் புலவர்.” - (பன்வீருப் பாட்டியல். 246) மடல் என்பது பனைழீன் கருக்கோடு கூடிய மட்டை. அதனால் குணிரை வடிஷிசெய்து அதன்மேல் ஆடவர் ஏறி ழீருந்து ஊர்வதாகக் கூறுதல் மடல் என்னும் நூலாழீற்று. அவர் எருக்குமாலை சூடுவர். “ மாவென மடலும் ஊர்ப ; பூவெனக் குஜீமுகிழ் எருக்கங் கண்திஜிம் சூடுப.” - (குறுந்தொகை. 17) ஹிவீ வளமடல், ஹிரந்து குறைபெறாத் தலைமகன் மட லேறுவன் என்றும், ஹிரண்டடி எதுகையாய் வருமென்றும் கூறுவர். “ அறம்பொருள் ஹின்பம் ஆகிய பயனை எள்ஹீ மகடூஉக் காமஜீன் பத்தைப் பயனெனக் கொண்டு பாட்டுடைத் தலைமகன் ஹியற்பெயர்க் கெதுகைப் படத்தவீக் கிளஜீ ஹின்றி ஹின்வீசைக் கஸீவெண் பாவால் தலைமகன் ஹிரந்து குறைபெ றாது மடலேறுவதாய் ஈரடி எதுகை வரப்பா டுவது வளமட லாகும்.” - (முத்துனிளீயம். 1087) மகஹீர் மடல் ஊர்வதாகவோ, ஊரப்போவதாகக் கூறுவ தாகவோ நூல் செய்யத் தலீழ்நெறி ஏற்பணில்லை. ஹிதனை, “ கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்திற் பெருந்தக்க ணில்.” என்னும் குறளால் (1137) அறிக. எவீனும் பாட்டியல் நூல்கள் மகஹீர் மடலேற்றைஜிம் சுட்டிஜிரைக்கின்றன. அவ்வாறு சுட்டு தல் வடவர்நெறி என்பதைத் ணிருமங்கை மன்னர் பாடிய பெளீய ணிருமடஸீல் (38, 39), “ அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் மன்னும் மடலூ ரார் என்பதோர் வாசகமும் தென்னுரைழீல் கேட்டறிவ துண்டதனை யாம்தெஹீயோம் மன்னும் வடநெறியே வேண்டினோம்.” என்பதால் தெஹீயலாம். மகஹீர் மடலேறுவதாகக் கூறும் பிலையொன்றைக் குறிக்கின்றது பாட்டியல்: “மடன்மாப் பெண்டிர் ஏறார்; ஏறுவர் கடஷிளர் தலைவராய்வருங் காலே.” “ கடஷிளர் மேற்றே காளீகை மடலே” “ எந்தை ஜிடைப்பெயர்க் கெதுகை சாற்றி அந்தலீல் ஹின்பம் பொருளா ஏத்ணிப் பொருளும் அறனும் னிடும் பஷீத்து மடன்மா ஏறுதல் மாதர்க் குளீத்தே.” - (பன்வீருபாட்டியல் 247-249) ஹிவற்றுக்குத் ணிருமங்கைமன்னர் பாடிய ஞிறிய ணிருமடல், பெளீய ணிருமடல் முதஸீயவை எடுத்துக்காட்டாம். மதனஞிங்காரம் (காமனெஷீல்) காமனை முதற்கண் பாடுதல்; நின்னர் மகஹீர் ஜீரும்பும் எஷீல் மையலாளன் காமக்கவலையை ஜீளீத்துரைத்தல்; பிறை ஜீல் ஹிருவர்தம் ஹின்புபிலை ஹியம்பல்; ஹிவ்ஜீணைஷி ஊழ் ஜீனையால் பிகழ்ந்தமை சாற்றல் என்பவை மதன ஞிங்காரப் பொருளாம். ஹிப்பொருளை வெண்கஸீப்பாவால் கூறுதல் முறையாம். வெண் கஸீப்பாவாவது, கஸீத்தளையாலும் வெண்சீர் வெண்டளை யாலும் ஹியன்று ஈற்றடி, வெண்பாவைப் போல் முடிஷிறுதலாம். மாச்சீர் கஸீஜிள் புகாது என்பது வெண்கஸீக்கும் உளீயதே. “ மதனனைமுன் பாடியவன் மாற்றிபினை மாது ஜீதனனைப் பாடியவன் மேஷிம் - ஹிதம்பாடல் வெண்கஸீயா லேஜிரைத்தல் ஊழ்ஜீணிபோல் ஆக்கலே அண்சீர் மதனஞிங்கா ரம்.” - (நிரபந்தத் ணிரட்டு 43) மதிமாலை எந்தப் பொருள்மேலும் வெண்பா ஹிருபதும் கஸீத்துறை நாற்பதும் ஜீரஜீப்பாடுவது மதிமாலையாகும். “ எப்பொருள் மேலும் வெண்பா ஹிருபதும் கஸீத்துறை நாற்பதும் கலந்து வருவது மதிமாலை யாகும் வழுத்துங் காலே.” - (முத்துனிளீயம். 1056) ‘மதி’ செம்மதி, பச்சைமதி, நீலமதி என ஒன்பான் வகைப் படும். அவற்றுள் ஹிருமதித் தொடையாய், அறுபது எண்ணால் ஹியல்வது ஹிம்மாலையாம். அறுபதாம் ஆண்டு ‘மதிஜீழா’ எனல் கருதலாம். மதனஜீசையம் (காமஷிலா) ணிக்குஜீசயம் (ணிக்குலா) என்பது வெற்றிப்பொருட்டால் பிகழ்த்தப்பெறுவது. ஹிது காமப்பொருட்டால் பிகழ்த்தப் பெறுவதாம். கட்டழகமைந்த தலைவன் ஒருவன் தன் எஷீலுக்கும், வேட் கைக்கும், தகஷிக்கும், ஏற்ற நங்கையைத் தேடித் ணிசைஜிலாக் கொள்வதும், அவன் உலாக் கொள்ளும் நோக்கறிந்த நங்கையர் கூட்டம் அவன் உலாக்கொள்ளும் யானைழீன் முன்னுற எணிர்த்துப் பார்ப்பார்போல பிற்றலும் மதன ஜீசையம் என்பதாம். அரச குமரர்கள் பெண்தேடிப், புறப்பட்டதாகஷிம், தக்க வளைத் தேர்ந்து மணந்து ணிரும்நியதாகஷிம், கிளர்ந்த கதை களைஜிட்பொருளாகக் கொண்ட பனுவல் ஹிதுவாம். மகஹீர் சீர்மையைச் ஞிதைப்பதுபோல் எழுந்த ஞிறுநூல் வகைகளுள் ஈதொன்று எனலாம். ‘பெண்திற் பெருந்தக்கது யாது?’ என ஜீனஜீப் ‘பெண்திற் பெருந்தக்கது ஹில்’ என ஜீடைழீறுத்த வள்ளுவம் நிறந்த மண் தின் மாண்பு மறைந்தகாலை அல்லது மறைக்கவென்றே எழுந்த ஞிறுநூல் ஹித்தகைய எனல் தகும். “ மதன நலத்தார், ணிசைவென்றிறைவன் செயலறிந்த மாமுன், ஹிசைந்தெணிர்த்தல் அவ்ஜீசைய மே.” என்பது நிரபந்தத்ணிரட்டு (37). மருட்பாப் நிரபந்தம் (மருட்பாப் பனுவல்) புறபிலைவாழ்த்து, செஜீயறிஷிறூஉ, கைக்கிளை, வாஜிறை வாழ்த்து என்னும் நான்கு பொருஹீன் மேலும் வரும் மருட் பாவால் அமைந்த நூல் மருட்பாப் நிரபந்தம் எனப்பெறும். ஹிப்பொருட்கள் மருட்பாவன்றிப் நிறபாக்களாலும் பாடப் பெறுவதும் உண்டு. “ புறபிலை வாஜிறை வாழ்த்துப் புஜீழீல் ஒருவன்செஜீ யறிவே உறுத்தல் அகப்புறக் கைக்கிளை ஆனஜீந்த நெறிழீற் பொருள்களை அன்றி மருட்பா பிகர்தஸீனால் அறியஜீந் நாற்செய்ஜி ளல்லாத பாஜீனால் ஆமென்பரே.” - (நவநீதப் பாட்டியல். 55) ஹிவற்றைத் தவீத்தவீத் தலைப்நிலும் காண்க’ ஹிப்பொருள்கள் அகவல், கஸீப்பாவகைகஹீலும் வருதல்’ தொகை நூல்களாலும் நிறவற்றாலும் அறியக்கிடக்கின்றன. மறக்களவஞ்ஞி பகைமேற்கொண்டெழுந்த மன்னவர் மறக்களச் ஞிறப்பைக் குறள், ஞிந்து அளஷி வகைகஹீல் வரும் அகவலடிகள் கலந்த (மயங்கிய) வஞ்ஞிப்பாட்டில் குறைஜீன்றிப்பாடுவது மறக்கள வஞ்ஞி எனப்பெறும். “ குறள்ஞிந் தளவடி அகவல் அடிஜீராஅய் வஞ்ஞிச் செய்ஜிஹீன் மன்னவர் மறக்களம் எஞ்சா துரைப்பது மறக்கள வஞ்ஞி.” “ ஹியங்குபடை மன்னர் ஹிகற்களம் புகழ்ந்த மயங்கியல் வஞ்ஞி மறக்கள வஞ்ஞி.” - (பன்வீருப் பாட்டியல். 317,318) மறக்களம் - போர்க்களம். - வஞ்ஞி - போர்க்களத்ணில் கொள்ளப்பட்ட வெற்றி. ‘வஞ்ஞி’ என்பது மாற்றார் மண்ணைக் கொள்வதற்குக் கிளர்ந்த படையெடுப்பு. புறத்ணிணைகளுள் ஒன்று வஞ்ஞி. ஹிதற்கு வஞ்ஞிமாலை சூடிச்செல்லல் வழக்காறு. ஹிவர்க்கு எணிளீடுவார் ‘காஞ்ஞி’ மாலை சூடுவர். “வஞ்ஞிஜிம் காஞ்ஞிஜிம் தம்முள் மாறே.” என்பது பழம்பாடல். மறம் பெருவேந்தன் ஒருவன் குறுபில மன்னனாகிய வேட வீடத்து அவன் மகளை வேண்டித் தூது ஜீடுக்கத் தூதன் மொஷீகேட்ட குறுபில மன்னன் ஞினந்து உரைப்பது மறம் என்பதாகும். “பெருபில வேந்தன் மகட்பால் வேண்டி ஒருபெருந் தூதன் உரைத்தமொஷீ கேட்டுக் குறுபில மறவன் வெஞ்ஞினந் ணிருகி மாற்றலீக உரைப்பது மறமென மொஷீப.” - (பன்வீருப் பாட்டியல். 250) ஹிவீ, ‘மகட்பாற் காஞ்ஞி’ என்பதைஜிம் மறம் எனக் கூறுவாரும் உளர். மகட்பாற் காஞ்ஞி என்பது, குலத்தொடு பொருந்தாத மன்னன் ஒருவன் மகள் வேண்டத் தந்தை, தாய், உடன்நிறந்தார் ஆகிய அனைவரும் மகள் மறுத்துரைப்பது என்பர். “கூடாக் குலமுதல் மன்னன் மகள்வேண்டத் தாதைஜிந் தாஜிம் தன்னையர் அனைவரும் மாறுசொல் மகட்பாற் காஞ்ஞிஜிம் மறனே.” - (பன்வீருப் பாட்டியல். சங்கப்நிரணி.62) மறம் கலம்பகத்து உறுப்புகளுள் ஒன்றாகஷிம் ஜீளங்கி வருகிறது. ‘மறம்பாடல்’ என்பதொருவகைநூல், மறவர் தம் வரலாறும் வழக்காறும் கூறுவதாக அமைந்துளது. மாணிரக்கட்டு (ணிசைக்கட்டு) மாணிரம் - ணிசை. “மாணிரம் எவைஜிம் நோக்கான்” என்றார் கம்பர் “மான்மயல்தான் கூவீயென்று தாய்மந்ணிர வாணிகொண்டு தான்பார்க்க, கொட்டங்கி தாலத்ணின் - வான்ணிசையைக் கட்ட ஹிவள்எழுந்து கைநொடித்துக் கோமயலைக் கொட்டங்கிக் கேஜிரைத்தல் கூறு.” என்றும், “உள்ஹீட்டுக் கல்யாணத் துக்குமுகிழ்த் தம்வைக்க உள்ளுமவன் என்கணவன் உண்மையென - வள்ளலுறக் கொட்டங்கிக் கெல்லாங் கொடுத்தனை நின்சேறல் ஒட்டிலகு மாணிரக் கட்டு.” என்றும் மாணிரக் கட்டின் ஹிலக்கணத்தைப் நிரபந்தத் ணிரட்டு (35, 36) கூறுகின்றது. மாலை மாலைபோல் தொடுக்கப்படுவது மாலை எனப்பட்டது. பூவால் தொடுக்கப்படுதல், பாவால் தொடுக்கப் படுதலுக்கு ஆயது. மாலைக்குத் தெளீந்தெடுக்கப்பட்ட பூக்களைக் கொள்ள லும், அவற்றைஜிம் ஓர் ஒழுங்குறஷிம் கலைநலம் செறியஷிம் தொடுத்தலும், ஜீனைத்ணிறத்தாலும் ஒப்புமையாம். மாலைகள் பல்வகைய. ஹிணைமதிமாலை, ஹிரட்டை மதிமாலை, மும்மதிமாலை, நான்மதிமாலை, மாலை மாற்று மாலை, மடக்குமாலை, ணிளீபுமாலை ஹின்னவை. மாலைழீல் பெரும்பாலனஷிம் முதல்முடி ஹியைபுத் தொடையாதல், வரப்படுத்ணிக்கொண்டார் வளீசைப் படுத்ணிக் கூறுதற்கு வாய்ப்பாம். மாலை என்னும் பகுப்நின் வகுப்புகள் எண்ணற்றன. அதனை வேண்டியாங்குக் கொள்வதற்கு வாய்ப்பாகச் ஞிதம்பரப் பாட்டியல் வகுத்துக் கூறுகின்றது: “முப்பான், நாற்பான், எழுபான், தொண்ணூறு, நூறால் வெண்பா, மன்னுகஸீத் துறையாதல் புகலப் பேரான், மாலைஜிமாம் எண்ணாலும் மருஷிம் பேராம்.” - (ஞிதம். மர. 11) என்பது அது. மாலைமாற்று மாலை ஒரு செய்ஜிளை ஹிறுணி முதலாகக்கொண்டு படிப்நினும் அச்செய்ஜிளே ஆவது மாலைமாற்று என்பதாகும். அஃது அந்தாணியாகத் தொடர்வது மாலைமாற்று மாலையாம். ஹிலக்கண நூல்கஹீல் குறள்வெண்பா, வெண்பா, வஞ்ஞித் துறை ஆகியவை மாலைமாற்றுக்கு எடுத்துக்காட்டாகத் தரப் பெற்றுள்ளன. பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் கஸீத் துறைழீல் ஹியற்றினார். அதனுள் யமகம், ணிளீபு, காதை கரப்பு முதஸீய சொல்லதிகளும் அமைய 33 செய்ஜிட்கள் ஹியற்றி மாலைமாற்றுமாலை எனப்பெயர் சூட்டிஜிள்ளார். நுண் ணுணர்ஜீனர்க்கே அமைந்த படைப்பு ஹிஃதாகும். ணிருஞான சம்பந்தர் ணிருப்நிரமபுரப் பணிகம் ஒன்றை மாலைமாற்று மாலையாகப் பாடிஜிள்ளார். அதற்குத் ‘ணிருமாலைமாற்று’ என்பது பெயர். (எ-டு) “வாலகன மானீயா மாவல வேவீத நீலன நேசாயா நீயல - மாலய னீயாசா னேநல னீதவீ வேலவ மாயானீ மானகல வா.” - (மாலைமாற்று மாலை 1) மானதவம் அகன்ற மலைக்காவீல், அழுத்தமான தவலீயற்றி, அத் தவத்தால் நங்கை ஒருத்ணியை வருஜீத்துத் தருவது பற்றிக் கூறுவது ‘மானதவம்’ என்றும் நூல்வகைச் செய்ணியாம். மானம் - பெருமை. “ ஜீட்டவறைக், கானந் தளீபூசை யாலழைத்து மாலளீவை தானுதவல் மான தவம்.” - (நிரபந்தத்ணிரட்டு) முதுகாஞ்ஞி ஹிளமை கஷீந்த அறிஜீன் லீக்கோர், ஹிளமைகஷீயாத அறிஜீல்லாத மாக்கட்குக் கூறுவது முதுகாஞ்ஞியாகும். “ ஹிளமைகஷீந் தறிஷி லீக்கோர் ஹிளமை கஷீயாத அறிஜீன் மாக்கள் தமக்கு மொஷீயப் படுவது முதுகாஞ்ஞி யாகும்.” - (முத்துனிளீயம். 1127) காஞ்ஞி - பிலையாமை. ஹிவ்ஷிலகியலைக் கூறும் தொல்காப்நியம், “பில்லா உலகம் புல்ஸீய நெறித்தே.” என்னும். “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் பிறீஹித் தாமாய்ந் தனரே.” என்னும் புறநானூறு. “ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது பிற்பதொன் றில்.” என்னும் ணிருக்குறள். (233) நாலடியார் ஹிளமை பிலையாமை, யாக்கை பிலையாமை, செல்வம் பிலையாமை என்பவற்றை ஜீளீக்கும். பிலையாமை பொதுஜீல் அறியப்படுமாழீனும், போர்க் களத்து அறியப்படுதல் லீகத்தெஹீவாம். ஆகஸீன் களப்போர் சுட்டும் வஞ்ஞிக்கு எணிளீடையாம் காஞ்ஞி, பிலையாமைப் பொருளும் தரலாழீற்று. பிலையாமை கருணி, அறமேற்கொண்டு ஒழுக அறிஷிறுத்தும் நூல்களுள் ஒன்று முதுமொஷீக்காஞ்ஞி என்பதும் அறிக. அசோக மன்னன் வெற்றிழீலே ‘புத்தசமயப் பரப்பல்’ எழுந்ததும் உணர்க. மும்மண்டிலப்பா ஒரே ஒரு பாடலாக ஹிருந்து, அதனைப் பகுத்துப் பார்க்க மூன்று பாடல்களாய், மூவகையாப்நியல்புடைய தாய், பொரு ளமைணி பிறைஷிடையதாகத் ணிகழும். ஹிவ்வகைப்பா மும் மண்டிலப்பா எனப்படும். மும்மண்டிலப்பா ணிருவரங்கத்ணிரு வாழீரத்ணில் ஹிடம் பெற்றுள்ளது. ‘பகுபடு பஞ்சகம்’ ‘நிறிதுபடுபாட்டு’ பார்க்க. மும்மதிக்கோவை ஆஞிளீயம், வெண்பா, கஸீத்துறை ஆகிய மூன்றும் முறையே முப்பது பாட்டான் வருவது மும்மதிக்கோவையாகும். கோவை யாவது கோக்கப்பட்ட மாலைபோல்வது. “ஆஞிளீயம் வெண்பாக் கஸீத்துறை முப்ப தாக வருவது மும்மதிக் கோவை,” (செய்ஜிள் வகைமை) - (நவநீதப் பாட்டியல். 36) ஹிப்பாக்களை வெண்பா, அகவல், கஸீத்துறை என்னும் முறைழீல் வரும் என்றும், வெண்பா அகவல் என்பவை நேளீசை வெண்பாஷிம், நேளீசை ஆஞிளீயமுமே என்றும் கூறுவர். “வெள்ளைஜிம் அகவலும் நேளீசையாகக் கஸீத்துறை வரவந் தாணி யாகி முறைமைழீன் ஹியல்வது மும்மதிக்கோவை.” - (பன்வீருப் பாட்டியல். 262) கஸீத்துறையாவது கட்டளைக் கஸீத்துறை. ஹிதனை அசை யெண் கஸீத்துறை என்பார் ஹிலக்கண ஜீளக்க நூலார் (55). மும்மதிமாலை வெண்பா, கஸீத்துறை, ஆஞிளீயஜீருத்தம் என்னும் மூன்றும் முறையே முப்பது பாட்டான் வளீன் மும்மதிமாலை எனப் பெயர்பெறும் “ வெள்ளை கஸீத்துறை ஆஞிளீய ஜீருத்தம் புல்லும் முப்பதும் மும்மதி மாலை.” (செய்ஜிள் வகைமை) - (நவநீதப் பாட்டியல். 36) “ லீகுந்த வெள்ளை கஸீத்துறை அகவல் ஜீருத்த மும்மதி ஜீளம்புமந் தாணி.” - (பன்வீருப் பாட்டியல். 256) ஹிவற்றை, “வெண்பா கஸீத்துறை அகவல்’ “அந்தாணி” என்பார் ஹிலக்கண ஜீளக்கப்பாட்டியலார். மும்மதி யந்தாணி ‘தளவாய் மும்மதி அந்தாணி’ என்பதொரு தொகுப்பு நூல். அதனைச் செய்தார் தளவாய் ணிருமலையப்பர். மூவர் தேவாரங்கஹீல் ஹிருந்து முடி முதல் தொடை அமையத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்களைஜிடையது. மூவகைப் பாடல்கள் என்னும் வழக்கில் ஹிருந்து ஜீளீந்து மூவர் பாடல் தொகுப்புக்கு ஆழீற்று ஹிம் மும்மதி. முரண்வஞ்ஞி முரணாவது பகை, வஞ்ஞியாவது பகைமேற் சென்று போளீடல்; அதற்கு அடையாளமாக வஞ்ஞிமாலை அதிதல். வஞ்ஞிப்பாவால் போர்வாய்த்த செய்கைகளையெல்லாம் குறையாமல் கூறுவதாகஷிம் பகைவர் அடிப்படுதலாகஷிம் உரைப்பது முரண்வஞ்ஞியாம். “ வஞ்ஞிப்பா வால்மறம் வாய்த்தசெய்கை எல்லாமும் எஞ்சா ணிறைவன் ஹிசைத்தலாய்ப் - பஞ்சார் சரணாய் உரைத்தல் தலந்தன்வீல் என்றும் முரண்வஞ்ஞி முன்வீ அறி.” - (நிரபந்தத்ணிரட்டு 28) பஞ்சார் - பஞ்சு போலப் பறந்தோடும் பகைவர். ‘பஞ்சாகப் பறந்தோடும் பகைவர். ‘பஞ்சாகப் பறத்துதல்’ என்பது வழக்காறு. “ஆளையா உனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளையாழீன கண்டனை’ என்று கம்பர் கூறுதல் பஞ்சாகப் படை பறந்ததைத் தெஹீவாக்கும். பூளை - பூளைப்பூ; ‘பஞ்சார்’ என்று பறந்தோடும் பகைவரைச் சுட்டுதல் அளீய ஆட்ஞி. மெய்க்கீர்த்ணி (மெய்ச்சீர்த்ணி) அரசரது மெய்யான புகழைக் கூறுவது மெய்க்கீர்த்ணி எனப்பெறும். மெய்க்கீர்த்ணி ஆஞிளீய அடிஜிம் வஞ்ஞியடிஜிமாகிய சொற்சீரடியான் வரும். சீர்த்ணிழூகீர்த்ணி; “சீர்த்ணி லீகுபுகழ்” என்பது தொல்காப்நியம். “ஞிறந்தமெய்க் கீர்த்ணி அரசர் செயல்சொற் றனவாய்ச் செய்ஜிள் அறைந்ததோர் சொற்சீரடியாம்.” - (நவநீதப் பாட்டியல். 53) “சொற்சீ ரடியால் தொஷீற்படு புகழை வேந்தர்பாற் கூறின் மெய்க்கீர்த்ணி யாகும்.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 71) ஹிதனைச் சீர்மெய்க்கீர்த்ணி என வழங்கி அதன் ஹிலக்கண அமைணியைஜிம் ஹியம்பும் பன்வீரு பாட்டியல். “ சீர்நான் காணி ஹிரண்டடித் தொடையாய் வேந்தன் மெய்ப்புகழ் எல்லாம் சொல்ஸீஜிம் அந்தத் தவன்வர லாறு சொல்ஸீஜிம் அவளுடன் வாழ்கெனச் சொல்ஸீஜிம் மற்றவன் ஹியற்பெயர்ப் நின்னர்ச்ஞிறக்கை யாண்டெனத் ணிறம்பட உரைப்பது சீர்மெய்க் கீர்த்ணி.” “ பிலைபெறு சீர்மெய்க் கீர்த்ணிழீன் அந்தம் உரையாய் முடிஜிம் எனஷிரைத் தனரே.” (கோவூர் கிழார்) - (பன்வீருப் பாட்டியல். 313, 314) ஹிதனை மெய்க்கீர்த்ணி மாலை என்பாரும் உளர். “ சொற்சீர் அடியெனும் கட்டுரைத் தொடர்பாற் குலமுறை ஆற்றிய கீர்த்ணியைக் கூறல் மெய்க்கீர்த்ணி மாலையாம் ஜீளம்புங் காலே.” - (முத்துனிளீயம். 1060) மெய்ம்மொஷீ அலங்காரம் (மெய்ம்மொஷீ அழகு) உள்ளதை உள்ளவாறு கூறுதலாகிய அழகு, மெய்ம் மொஷீ அலங்காரம் எனப்படும். ஹிவ்வழகு, கஸீவெண்பாவால் கூறப்படும். “ பொய்ம்மொஷீஜிம் மெய்ம்மொஷீஜிம் போற்றுமலங் காரலீரண் டய்யகஸீ வெண்பாவால் ஆற்றுவன.” என்பது நிரபந்தத்ணிரட்டு (16). மெய்ம்மையைக் கூறுதற்கும் அழகு வேண்டுமோ எவீன் ‘பாஸீன் தூய்மைஜிடன் பாற்கலத்ணின் தூய்மைஜிம் வேண்டத் தக்கதே அல்லவோ!’ கலந்தூய்மைழீன்மையால் நலம் பயக்கும் பாலும் நஞ்சாந்தன்மை எய்ணிஜீடுதல் உண்டு என்பதால் அன்றோ, “நன்பால் கலந்தீமையால் ணிளீந்தற்று” என்றார் பொய்யாமொஷீயார் (1000). “ ஜீரைந்து தொஷீல்கேட்கும் ஞாலம் பிரந்ணிவீது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.” என்பதும் குறளே (648). ஆகஸீன் மெய்ம்மொஷீயைஜிம் அழகு நலம் கெழுமக் கூறுதல் வேண்டுமென்க. “சுருங்கச் சொல்லல் ஜீளங்கவைத்தல்” என்பன முதலாகப் பத்து வகை அழகுகளை நூல்கள் கூறிய நுட்பம் ஹின்னதேயாம். மேல்வைப்பு ஒரு பாடஸீன் மேல்வைக்கப்படும் லீகையடி மேல் வைப்பு எனப்படும். ஈரடிமேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு என ஹிஃது ஹிருவகையாம். “ தக்கன் வேள்ஜீ தகர்த்தவன் பூந்தராய் லீக்க செம்மை ஜீமலன் ஜீயன்கழல் சென்று ஞிந்தைழீல் வைக்க மெய்க்கணி நன்ற தாகிய நம்பன் தானே.” ஹிஃது ஈரடி மேல்வைப்பு. “ ஹியஸீசை யெனும்பொரு ஹீன்ணிறமாம் புயலன லீடறுடைப் புண்தியனே கயலன அளீநெடுங் கண்தியொடும் அயலுல கடிதொழ அமர்ந்தவனே கலனாவது வெண்டலை கடிபொஷீல் புகஸீ தன்னுள் பிலனாள்தொறு லீன்புற பிறைமணி யருஹீனனே.” ஹிது நாலடி மேல்வைப்பு ஹிவை ணிருஞானசம்பந்தர் அருஹீயவை. பணிகம் தவீநூலாம் பான்மைய வென்பதறிக. மேற்கணக்கு அகவற்பா, கஸீப்பா, பளீபாடல் ஆகியவற்றால் ஐம்பது முதலாக ஐந்நூறு ஈறாகப் பொருள் நெறிமரநில் தொகுப்பது மேற்கணக்கு எனப்படும். கணக்கு - நூல். கணக்காயர் - நூற் கற்நிக்கும் ஆஞிளீயர் “ அகவலும் கஸீப்பா ஷிம்பளீ பாடலும் பணிற்றைந் தாணி பணிற்றைம்ப தீறா லீகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனஷிம்.” - (பன்வீருப் பாட்டியல். 346) ஹிவீ அகவற்பா, வெண்பா, கஸீப்பா, வஞ்ஞிப்பா, பளீபா என்னும் ஐவகைப்பாவாலும் மேற்கணக்குத் தொகுக்கப்படும் என்றும் கூறுவர். “ ஐம்பது முதலா ஐந்நூ றீறா ஐவகைப் பாஷிம் பொருள்நெறி மரநிற் றொகுக்கப் படுவது மேற்கணக்காகும்.” - (பன்வீருப் பாட்டியல். 346) கீழ்க்கணக்கு பணினெட்டாதல் போல மேற்கணக்கும் பணி னெட்டாம். அவை பாட்டு தொகை என்பன. பாட்டாவது பத்துப்பாட்டு; தொகையாவது எட்டுத் தொகை. ணிருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, ஞிறு பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்ஞி, நெடுநல்வாடை, குறிஞ்ஞிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் என்பவை பத்துப்பாட்டு. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பணிற்றுப்பத்து, பளீபாடல், கஸீத்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை எட்டுத்தொகை. ஹிப்பாட்டும் தொகைஜிம் பணினெண்மேற்கணக்கு என்றும், மேற்கணக்கு என்றும் வழங்கப்படுகின்றன. மொஷீமாற்று மொஷீகளை மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்ள வைக்கும் லீறைக்கஜீ மொஷீ மாற்றாகும். “ உளீத்தது பாம்பை உடல்லீசை ஹிட்டதோர் ஒண்கஹீற்றை எளீத்த தொராமையை ஹின்புறப் பூண்டது முப்புரத்தைச் செருத்தது சூலத்தை யேந்ணிற்றுத் தக்கனை வேள்ஜீபன்னூல் ஜீளீத்தவர் வாழ்தரு வெங்குரு ஜீல்னிற் றிருந்தவரே.” - (தேவா. ஞான.) ஹிணில் “ உளீத்தது கஹீற்றை; உடல்லீசை ழீட்டதுபாம்பை; எளீத்தது முப்புரத்தை; பூண்டது ஆமையை; செருத்தது தக்கனை வேள்ஜீ; ஏந்ணிற்று சூலத்தை.” என மொஷீமாற்றி அமைக்க. யமக அந்தாணி (மடக்கு முடிமுதல்) யமகம் என்பது மடக்கு ஆகும். எழுத்துகளது தொகுணி நிற எழுத்தானும் சொல்லானும் ஹிடைழீடாது; ஹிடைழீட்டும், வந்து பெயர்த்தும் வேறுபொருளை ஜீளைப்பதும் மடக்காகும். “ எழுத்ணின் கூட்டம் ஹிடைநிறி ணின்றிஜிம் பெயர்த்தும்வேறு பொருள்தளீன் மடக்கெனும் பெயர்த்தே.” - (தண்டி. 91) ஹிம்மடக்கென்னும் சொல்லதி அமைந்த பாக்களால் ஹியற்றப் பெற்று அந்தாணியாக வரும் நூல் யமக அந்தாணி எனப் பெயர் பெறும். குற்றால யமக அந்தாணி, செந்ணில் யமக அந்தாணி, ணில்லை யமக அந்தாணி முதஸீயவை ஹிவ்வகையைச் சார்ந்தவையாம். யாண்டுபிலை ‘மன்னன் பல்லாண்டு பல்லாண்டு மன்னுக!’ என்று வாழ்த்துவதாக அமைந்தது யாண்டுபிலை என்பதாகும். பெரும் பாலும் நேளீசை வெண்பாவானும் ஞிறுபான்மை நிற எல்லாப் பாக்களானும் பாடப்படும் என்பர். “ வையக மன்னவன் மன்னுக பல்யாண் டெய்துக என்ப ணியாண்டுபிலை யாகும்.” - (பன்வீருப் பாட்டியல். 328) யானைவஞ்ஞி ‘ஆனைத் தொஷீல்’ காண்க. யானைத் தொஷீல் மாலை என்பதுஷிம் ஹிது. வஞ்ஞிப்பாவால் பாடுதலால் யானை வஞ்ஞி எனப்பெற்றது. “ ஹிசைந்த பிலம்குலம் ஒத்த எஷீலோ டசைந்த நிராயத் தளஷிம் - ஹிசைந்தமதம் துன்னஅஞ்ஞி னிடுழீர்கோன் மன்னன் தொடர்ந் தணைத்தல் சொன்னவஞ்ஞி யானைத் தொஷீல்.” - (வெண்பா பாட்டியல். 33) வகுப்பு வகுத்துக் கூறுவதாக அமைந்த பனுவல் வகுப்பு எனப் படுகின்றது. கலம்பகத்ணில் வரும் புயவகுப்பு (தோள் வகுப்பு) தவீ நூலாகக் கூறப்படலாழீற்று எனலாம். வகுப்பு சந்த நடையது; நெடிய அகவலாய் ஹியல்வது. அருணகிளீயாளீன் வேல்வகுப்பு, புயவகுப்பு என்பவை ஹிவ் வகைழீல் ஞிறப்பு வாய்ந்தவை. வகுப்பு பாடுதஸீல் தண்டபாதி அடிகள் தவீப்பெருமை ஜிடன் ஹியங்குகின்றார். அவர் பாடிய வகுப்புகள் தவீப்பெரு நூலாம் அளஜீன. அவர் பாடிய ணிருவாழீரங்களுள் வகுப்புக்குச் சீளீய ஹிடமுண்டு. வச்ஞிராங்கி (வேந்தன் வெள்ஹீ) வேந்தன் - ஹிந்ணிரன். “வேந்தன் மேய தீம்புனல் உலகம்.” - (தொல். அகத்.) அரம்பையராம் தெய்வப் பெண்டிர் மன்னவன் ஒருவனைக் கண்டு, அவன் அழகால் மயங்கி அவனை நெருங்கி வர, ஹிந்ணிரன் மன்னனை எணிர்த்து பின்றானாக; ஹிந்ணிரன் மன்னனால் வெல்லப்படுவதாகப் பாடுதல் ‘வச்ஞிராங்கி’ என்பதாம். வச்ஞிரம்- ஹிந்ணிரன் படைக்கருஜீ. அவனை வெற்றி கொள்ளுதலால் வச்ஞிராங்கி எனப்பட்டது. “அரம்பையர் ஹிவனழகாற் - சாலவர, ஹிந்ணிரன் எணிர்க்க ஹிறைவெல்லப் பாடல் மகிழ்ந்ணிலங்கு வச்ஞிராங்கி.” - (நிரபந்தத் ணிரட்டு 38) வசனசம்நிரதம் (எணிருரையாட்டு) “ சாற்றுவன எல்லாம் தகைஹி ரணமொஷீயாச் சாற்றல் வசனசம்ப்ர தாயமே.” - (நிரபந்தத் ணிரட்டு 64) சொல்பவற்றையெல்லாம், தகவார்ந்த வகைழீல் எணிளீட்டு ஜீளங்கும் மொஷீழீனால் மறுத்துரைத்தல், ‘வசன சம்ப்ரதாயம்’ என்னும் நூஸீன் நுவல்பொருள். ஹிரணம் - எணிளீடை, முரண். வசந்தமாலை தென்றலை வருதித்து அந்தாணியாகப் பாடுவது வசந்த மாலையாம். “வசந்த வருணனை வசந்தமாலை.” - (ஹிலக்கண ஜீளக்க்ம பாட்டியல். 76) “தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை யெனப் பெயர் வைக்கப் படுமே.” - (முத்துனிளீயம். 1063) வசைப்பாட்டு கடைபிலை காண்க. வஞ்ஞிமாலை எப்பொருளைப் பற்றியாழீனும் வஞ்ஞிப்பாவால் பாடுதல் வஞ்ஞிமாலை எனப்படும். வஞ்ஞிமாலை வரலாற்று வஞ்ஞி, அமர்க்கள வஞ்ஞி போன்றது என்னும் நவநீதப்பாட்டியலுரை (48). வண்ணம் வண்ணமாவது வண்தித்துப் பாடப்படும் பாடல். அஃது ஹிசைப்பாடல். வண்ணம் தொல்காப்நியனாரால் சுட்டப்படுகின்றது. அதன் வகைகளும் பாஅவண்ணம், தாஅவண்ணம் என எண்ணப்படுகின்றது. ஒஸீநயம் கருணிய அமைப்பு வண்ணம் என்பது வெஹீப்படத் ணிகழ்கின்றது. கஸீப்பாஜீன் உறுப்பான ‘வண்ணகமும்’ ஹிவ்வகைப் பட்டதே. கம்பர் பாடல்கஹீலும் வண்ணம் உண்டு. கம்பன் பாடிய வண்ணம் 96 என்பதொரு வழக்கு. ஆழீரத்துக்கு மேலும் வண்ணம் ஹிசைத்த வளமார்ந்த பாவலர் அருணகிளீயார். அவர்க்கு முன்னே வண்ண ஹிசைழீல் கொடி கட்டிப் பறந்தவர் ஆளுடையநிள்ளை யாராம் தலீழ் ஞானசம்பந்தர்; நின்னே வண்ண ஹிசைழீல் பேருலாப் போந்தவர் வண்ணச் சரபம் தண்டபாதி அடிகள்; பட்டினத் தாளீன் உடற்கூற்று வண்ணம் உலகறிந்தது. ஹிசுலாலீயப் புலவர்கள் ஞிலரும் வண்ணம் பாடுதஸீல் ஹிணையற்றுத் ணிகழ்ந்தனர் என்பதற்குச் சான்று பாட்சாப் புலவர் ஹியற்றிய வண்ணங்கள், வண்ணக்குஷீப்புகள் என்னும் நூல். அகப்பொருள் நுவல்வதாய் எழுந்த வண்ணம், மெய்ப் பொருள் கிளப்பதாகஷிம் ணிகழும். ஞில வண்ணங்கஹீன் சந்தச் சுவைக்கு ஒவ்வாப் பொருஹீஷீஷி அதன் பெருமையைக் குன்றச் செய்து ஜீடுவதாகஷிம் உள்ளது. வண்ணஜீருத்தம் ஓரடிக்குப் பணினாறு கலை வகுத்து, ஹிப்படி நாலடிக்கும் அறுபத்துநாலு கலை வகுத்து, வண்ண ஜீருத்தமாகப் பாடப் படுவது வண்ண ஜீருத்தம். - (நவநீதப் பாட்டியல். 31) “ எட்டுக் கலையாய் ஹிடைழீட் டெதுகையாக் கட்டுக் கலைக்குமுக் கண்தியாத் - ணிட்டத்ணில் தொங்கலும் எட்டாய்த் தொடைமூன்று நான்காறாய்ப் பங்குபெறும் வண்ணப் பரப்பு.” - (ஹிலக்கண சூடாமதி) - (நவநீதப் பாட்டியல். 31 மேற்) வண்ணம் பார்க்க. வணக்கம் வணக்கப் பொருளமைந்த பாடல்களாலாகிய நூல் வகை வணக்கம் எனப்படுகின்றது. வணக்கம் ஹிறைவனைஜிம், ஹிறைமை சார்ந்த அடியார், ஆஞிளீயர், ஆகியோரைஜிம் முன்வீலைப் பொருளாகக் கொண்டு ஜீளங்குகின்றது. வணக்க நூல்களுள் முன்னோடிஜிம் புகழ் லீக்கவைஜிமாக ஜீளங்குவன மௌன குரு வணக்கம், பரஞிவ வணக்கம் என்பன. வதனசந்ணிரோதயம் (முகமணி) “ தூணி ஒருஜீவந்து சொல்லுவதாய், மான்முகத்துக்(கு) ஏதம் மணியென்(று) ஹிதமுரைத்தே - ஓதுகஸீ வெண்பாவாய் மாமதுரம் ஏற்றதாய்ப் பாடுதலே அண்வதன சந்த்ரோ தயம்.” - (நிரபந்தத்ணிரட்டு 67) தூணி ஒருத்ணி வந்து சொல்லுவதாகஷிம், தலைஜீழீன் முகத் துக்க மணி எவ்வகையானும் ஒப்பாகாது என்று புனைந்து கூறு வதாகஷிம் பொருளமைணிஜிடையது ‘வதனசந்ணிரோதயம்’ ஆகும். அந்நூல், கஸீவெண்பாவால் பாடப்படும். “ மாதர் முகம்போல் ஒஹீஜீட வல்லையேல் காதலை வாஷீ மணி.” என்னும் குறளே (1118), மாதர்முகம்போல் ஒஹீஜீடவல்லதன்று மணி என்னும் புனைவைஜிட் கொண்டதே. நிள்ளைத் தலீஷீல் வரும் அம்புஸீப்பத்து ஒப்பும் உறழ்ஷிம் கூறிப் பாடப்படுவதே. பாஜீகத்ணில் ஹித்தகு புனைஷி லீகஷிண்டு. ஹிவற்றை யெல்லாம் வாங்கிக் கொண்டு வளர்ந்த ஹிலக்கிய வகை ஈது. ‘ஒருஜீ’ என்பது ‘ஒருத்ணி’ என்பதன் புணிய ஆட்ஞி. ஹிவீத், ‘தூணி தலைஜீயை அகன்று தவீயே வந்து’ என்னும் பொருளதுமாம். வர்திப்பு (வண்திப்பு) புனைந்துரை வகையால் ஜீளீத்துப்பாடுதல், வண்திப்பு ஆகும். வண்ணப்பாடல் வேறு; வண்திப்பு வேறு; வண்திப்பு எஹீய நடைஜிம் தெஹீசொல்லும் உடையதாகச் செல்லும். ‘அழகர் வர்திப்பு’ என்பதொருநூல், சோலைமலை அழகர் ஞிறப்புகளை ஜீளக்குவதாம். வரலாற்று வஞ்ஞி ஒருவன் வனப்பு, ஆற்றல், கல்ஜீத்ணிறம், குடிப்நிறப்பு, குணநலம் முதஸீயவற்றை வஞ்ஞிப்பாவால் வாழ்த்ணிப் பாடுவது வரலாற்று வஞ்ஞியாகும். (நவநீதப் பாட்டியல். 48 (குறிப்புரை) ) “ஜீழுலீய குலமுறை நிறப்புமேம் பாட்டின் பலஞிறப் நிசையைஜிம் வஞ்ஞிப் பாவால் வழுத்தல் வரலாற்று வஞ்ஞியாம் என்ப.” - (முத்துனிளீயம். 1072) “வரலாற்று வஞ்ஞி, ஞாலமேல் தானை நடப்பது சொல்லல்” வரலாற்று வஞ்ஞி என்பார் ஹிலக்கண ஜீளக்கப்பாட்டியலார் (109). வருக்கக்குறள் மொஷீக்கு முதலாக வரும் எழுத்துகள் எல்லாம், பாடல் முதலெழுத்துகளாக முறையே வர குறள்வெண்பாவால் பாடுவது வருக்கக்குறள் எனப்படும். தண்டபாதி அடிகள் வருக்கக்குறள் யாத்துளார். அணில் 249 பாடல்கள் உள. வருக்கக்கோவை அகர முதலாக மொஷீக்கு முதலாக வரும் எழுத்துகள் எல்லாம், பாடல் முதலெழுத்தாக வரக் கட்டளைக் கஸீத் துறையாகப் பாடுவது வருக்கக் கோவையாகும். “அகர முதலா கியவாம் அக்கர வருக்க மொஷீக்கு முதல்வரு மெழுத்து முறையே கட்டளைக் கஸீத்துறை யாக வழுத்துவ ததுவே வருக்கக் கோவை.” (முத்துனிளீயம் 1044) கோவைப்பா, கட்டளைக்கஸீத்துறைப்பாவாம். வருக்கமாலை மொஷீக்கு முதலாக வரும் வருக்க எழுத்துகளுக்கெல்லாம் ஒவ்வொரு கஜீ கூறுதல் வருக்கமாலையாகும். “வருக்கத் ணினைச் சொலல் வருக்க மாலை.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 66) “ மொஷீக்குமுத லாகிய எழுத்துக் கெல்லாம் வருக்கம் உரைப்பது வருக்க மாலை.” - (பன்வீருப் பாட்டியல். 283) ஹிவீ, உழீரானும் கசதநபமவ என்னும் உழீரோடு கூடிய மெய் ஏழானுமாக எட்டு ஆஞிளீயப்பா வந்தால் அவை வருக்கமாலை எனஷிம் கூறுவாரும் உளர் என்பார் ஹிலக்கண ஜீளக்கப் பாட்டியலார் (66). வருக்கக்கோவை கட்டளைக் கஸீத்துறையாக வரும் என்பது போன்ற வரம்பு வருக்கமாலைக்கு ஹில்லை என்க. எப்பாவானும் எவ்ஜீனத்தானும் வருமெனக் கொள்க. வருக்கச் சந்தவெண்பா அகரமுதலாக மொஷீமுதல் வரும் எழுத்துகள் எல்லாம் முறையே பாடல் முதலெழுத்தாய் வரச் சந்த வெண்பாவால் பாடப்பெறும் நூல் வருக்கச் சந்தவெண்பா எனப்பெயர் பெறும். சரவணப் பெருமாள் கஜீராயர் ஹியற்றிய ‘கந்த வருக்கச் சந்தவெண்பா’ ஹிதற்கு எடுத்துக்காட்டாகும். ஹிந்நூல் 102 பாக்களைஜிடையது. வருக்க எழுத்துகள் அ க ச த ந ப ம என்னும் ஏழுவளீசைழீலும் வளீசைக்குப் பன்வீரண்டாக எழுத்துகள்: 84 வகர வளீசைழீல் (வ, வா, ஜீ, னி, வெ, வே, வை, வெள) 8 யகர வளீசைழீல் (ய, யா, ஜி, யூ, யோ, யௌ) 6 ஞகர வளீசைழீல் (ஞ, ஞா, சி, ஞெ) 4 ஆக எழுத்துகள் 102 வருக்கமாலை, வருக்கக்கோவை காண்க. வஷீநடைச்ஞிந்து ஹிரண்டடிகளாய் ஓரbதுகைஜிடையதாய், ஒவ்வோர் அடிஜிம் மூன்று சீர்களும் தவீச்சொல்லும், நின்னும் நான்கு சீர்களும் உடையதாய் அமைந்துள்ள ஞிந்து நடைழீல் வருவது வஷீநடைச்ஞிந்து ஆகும். அடியார் கூட்டம் தம் ஊளீல் ஹிருந்து தாம்வஷீபட ஜீரும்பும் ஹிறைவன் ணிருக்கோழீல் கொண்டுள்ள ஹிடம் வரைக்கும் உள்ள வஷீகளைஜிம், வனப்புகளைஜிம், ஊர்களைஜிம், உயர்ஷிகளைஜிம், ஞிந்துப்பா நடைழீல் கூறுவது வஷீநடைச்ஞிந்தாம். வஷீநடைச் செலஷி வகைழீல் முற்பட ஹிருந்ததாகக் கூறப் படும் நூல் ‘செங்கோன் தரைச்செலஷி’; அந்நூலையடுத்துப் பாடப்பட்டதாகக் கிடைத்துள்ள ஒரு ஞிதைஷி நூல் ‘தகடூர்’ யாத்ணிரை.’ ணிருப்பரங்கிளீ வஷீநடைச்ஞிந்து என்னும் நூல் ஓடாத்தூர் என்னும் ஊளீல் ஹிருந்து ணிருப்பரங்குன்றம் வரைக்கும் வந்து மீண்டும் ஓடாத்தூர் செல்லுதலைக் குறிப்பது. ஒரு தலைவன் தன் தலைஜீயை ஜீஹீத்துக் கூறிக்கொண்டு போவதாகப் பல் வேறு சந்தநடைழீல் நடக்கின்றது. அதனைப் பாடியவர் ஓடாத் தூர் ஹிராமசாலீப் புலவர் என்பார். ஞில வஷீநடைச் ஞிந்துகள் வஷீநடைக் காவடிச்ஞிந்து எனஷிம் படுதல் உண்டு. காவடிச்ஞிந்தும் வஷீநடைச்ஞிந்தும் பொருளாலும் போக் காலும் ‘ஹிரட்டைப்நிறஜீ’ எனலாம். வஷீமொஷீத் ணிருஜீராகம் ஹிராகம் - ஹிசை. ஹிப்பெயரால் ணிருப்நிரமபுரப் பணிகமொன்று தேவாரத் ணில் உள்ளது. ஹிது யாப்நியலால் பெற்ற பெயர் என்பது வெஹீப்படுகின்றது. “சுரருலகு நரர்கள்பழீல் தரதிதலம் முரதிஷீய அரணமணில்முப் புரமெளீய ஜீரஷிவகை சரஜீசைகொள் கரமுடைய பரமவீடமாம் வரமருள வரன்முறைழீ வீரைபிறைகொள் வருசுருணி ஞிரஷிரைழீனாற் நிரமனுயர் அரனெஷீல்கொள் சரணஜீணை பரவவளர் நிரமபுரமே.” ‘நிரமபுரம்’ என்பதற்கு ஏற்ப எதுகை வஷீமொஷீதலாதலறிக. ஹிவ்வாறே வேணுபுரம் என்பதற்கு, “தாணுலீகு வாதிசைகொள் தாணுஜீயர் பேணுமணி காணுமளஜீற் கோணுநுதல் நீணயவீ கோதில்நிடி மாதிமது நாணும்வகையே ஏணுகளீ பூணஷீய வாதியல்கொள் மாதிபணி சேணமரர்கோன் வேணுஜீனை யேதிநகர் காணறிஜீ காணநடு வேணுபுரமே.” என வந்துளதும், புகஸீமுதஸீய நிறவூர்ப் பெயர்களும் வஷீ யெதுகைபடவே வந்துளதும் அறிக. ஹிதனால் சீகாஷீப் பன்வீரு பெயர்களும் வந்த வரலாற்றினை, அவ்வஷீயே மொஷீதஸீன் வஷீமொஷீ எனப் பெயர்பெற்றது என்பது தேவாரப் பணிப்நில் ணிருத்தம்பெறவேண்டும் என்பது புலப்படும் (தேவாரம் - தல முறைப்பணிப்பு, ணிருப்பனந்தாள் 1961 பணிப்பு: குறிப்புரை ). வளமடல் ‘மடல்’ காண்க. வள்ளைப்பாட்டு உலக்கைப்பாட்டு, வள்ளைப்பாட்டே. சுண்ணம் ஹிடித்தல் என்பதும் வள்ளைப்பாட்டே. “ பவள உலக்கை கையால் பற்றித் தவள முத்தம் குறுவாள்.” கண்குவளை அல்ல; கொலைக்கொடியவை என்பது ஞிலம்பு. குறுவாள் - குற்றுவாள். பரதிழீல் பேய்கள் கூஷீடுதற்கு அளீஞிகுற்றுதல் ஜீளீவாக வரும். ஞிந்தாமதிச் சுண்ணலீடிப்பு தேர்ச்ஞிலீக்கது. கஹீற்றுக்கோடு உலக்கை; சேம்நின் ஹிலை சுளகு; மூங்கில் நெல்லை, சந்தன உரஸீல் பெய்து ஹிடித்தல் ஆகியன பற்றிக் கஸீத்தொகை ஒஸீக்கும் (44). சுண்ணலீடிக்கும் ஆர்ப்பென்ன மெஸீயதா? “ஆடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை, ஆர்ப்ப ஆர்ப்ப நாமுமவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப பாடக மெல்லடி ஆக்கு மங்கை பங்கன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்ன கோஷிக்கு ஆடகப்பொற் சுண்ண லீடித்துநாமே” (7) வாகனக்கஜீ (ஊர்ணிப்பா) “ஊர்ணி வால்வேள் ஏறே” என்பது சங்கப்பாடல், ஊர்ணி ழீல் ஏறி ஹிறைவன் உலாக் கொள்ளுங்கால் பாடப்படும் பாடல் வாகனக்கஜீ என்பதாம். ணிருஜீழாக் காலங்கஹீல் ஊர்ணிச் ஞிறப்பைஜிம், ஹிறைவர் ஞிறப்பைஜிம், உலாச் ஞிறப்பைஜிம் கொண்டு பாடும் தவீப்பாடல் வாகனக்கஜீ எனப்படுமாழீனும், ஒரு நூல்வகைழீனதாகச் சுட்டப்படுதலுண்டு. ஹிதனை, வாகனமாலை என்று கூறும் மாறனலங்காரம். ஆகஸீன், பல பாடல்கள் பாடப்படுவதும் உண்டு என்பது ஜீளங்கும். ‘மாலை’ என்பது தவீப்பாடலன்றே. பன்மலர்த் தொடையல் ஆழீற்றே. கொட்டையூர் பெருமாள்கோழீல் வாகனக்கஜீ, ‘ணிருப் புல்லணை வாகனக்கஜீ’ என்பவை ஹிவ்வகைய. வாகைமாலை பகைவரை வென்று புகழ்படைத்து வாகைமாலை சூடு வதை ஆஞிளீயப்பாவாற் கூறுவது வாகைமாலையாகும். “ மாற்றாரை வென்று வாகை சூடுவதை அகவஸீ னாலறை வதுவாகை மாலை.” - (முத்துனிளீயம். 1780) “ வாகை மாலையே வட்காரை வென்று வாகைத்தார் சூடும் வயமது வழுத்தலே - (நிரபந்ததீபம் 49) வாகை = வெற்றி. ஹிந்நாளை ஜீளையாட்டு முதஸீயவற்றில் பெறும் வெற்றியைஜிம் ‘வாகை சூடுதல்’ என்னும் வழக்கிருத்தல் அறிக. ஹிவீ ஹிருமடியாக ‘வெற்றிமாலை’ சூடினான் என்பதும் அறிக. வாடாதமாலை மையலால் தவம் புளீய ஜீருப்பலீக்க கன்வீயர் எழுவரும் மாலை தருவதாகப் பாடுதல் வாடாதமாலை எனப்படும். “ மாலால் தவம்புளீந்து மாதுலகேழ் கன்வீமார் மாலைதரல் வாடாத மாலையாம்.” - (நிரபந்தத்ணிரட்டு 25) வாதோரண மஞ்சளீ யானையை வயப்படுத்ணி அடக்கினவருக்கும், எணிர்த்த யானையை வெட்டி அடக்கினவருக்கும், பற்றிப் நிடித்துச் சேர்த்தவருக்கும், அவர்தம் னிரப்பாட்டின் ஞிறப்பை வஞ்ஞிப் பாவால் தொகுத்துப்பாடுவது வாதோரண மஞ்சளீயாகும். “யானை வயப்படுத்ணி அடக்கின வருக்கும் எணிர்பொரும் யானையை ஈரவெட்டி அடக்கின வருக்கும் அதட்டிப் நிடித்துச் சேர்த்த வருக்கும் னிரச் ஞிறப்பை வஞ்ஞியாற் பாடுவ ததுவா தோரண மஞ்சளீ எனப்பெயர் வைக்கப் படுமே.” - (முத்துனிளீயம். 1079) ‘யானைத் தொஷீல்’ காண்க. வாஜிறை வாழ்த்து “வாஜிறை வார்ழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுஷிம் போல வெஞ்சொல் தாங்குதல் ஹின்றி வஷீநவீ பயக்குமென் றோம்படைக் கிளஜீழீன் வாஜிறுத் தற்றே.” என்பது தொல்காப்நியம் கூறும் வாஜிறை வாழ்த்ணின் ஹிலக்கணம். வாஜிறை வாழ்த்து, பனுவல் பிலையை அடைஜிங்கால் அதன் அமைணியை, “வாஜிறை வாழ்த்தே வன்சொல்பொறுத்து வாஷீஎன வெண்பா ஆஞிளீயம் வகுத்தலே.” என்கிறது நிரபந்ததீபம். வாஜிறை வாழ்த்து மருட்பாஜீல் வருமெனத் தொல் காப்நியர் சுட்டுவார். நிரபந்ததீபத்தார் வெண்பாவானும் ஆஞிளீயத்தானும் வருமென்றார். ஹிரண்டு பாத்தன்மைஜிம் ஒருபாடஸீல் ஹிடம் பெறின் மருட்பாவாம். அவை தவீத் தவீவளீன் வெண்பா என்றும் அகவல் என்றும் பெயர் பெறு மாம். ஆகஸீன் மூவகை யாப்பும் பொருந்தும் என்க. வாழ்த்து வாழ்த்ணிப் பாடப்படும் பொருள் வகையால் பெற்ற பெயர் வாழ்த்து ஆகும். வாழ்த்து வாஜிறை வாழ்த்து, ஹியன்மொஷீ வாழ்த்து, கடஷிள் வாழ்த்து எனப் பலவகைப்படும். ஹிக்காலைழீல் நாட்டு வாழ்த்து, மொஷீவாழ்த்து என்பனஷிம் ஹிணைக்கத்தக்கன. ஆங்கிலர் ஆட்ஞிக் காலத்ணில் ‘அரசவாழ்த்து’ என நாள்வஷீ வாழ்த்தாகக் கல்ஜீ பிலையந்தோறும் பாடப்பட்டதுண்டு. புறநானூற்றில், ஹியன்மொஷீ வாழ்த்துப் பாடல்கள் பல உள. அவை, புலவர்களால் புரவலனை நேளீல்கண்டு பாடப் பட்டவை. அவ்வாழ்த்ணியலே நின்னே தவீநூலுருக்கொள்ளச் செய்தது எனலாம். ‘போற்றி’, ‘அடிபோற்றி,’ ‘போற்றிபோற்றி’ ‘வாஷீ’ என வாழ்த்துவகை வருதல் கடஷிள் வாழ்த்தாக ஹிய லுதல் பரக்கக் காணக் கூடியதாம். “நமஞிவாயம் வாழ்க நாதன்தாள் வாழ்க’ எனத் தொடங்கும் ஞிவபுராணம் வாழ்த்ணில் தொடங்கிப் போற்றி ழீல் நடக்கின்றது. போற்றித் ணிருவகவல் பெயரே பொரு ளமைணியைச் சுட்டும். ஹிறைவன் ணிருப்பெயர் சொல்ஸீ வாழ்த்துரைக்கும் ‘வாஷீத்ணிருநாமம்’ எனப்படும் நூல்கள் ஹிவ்வாழ்த்து வகைழீல் எழுந்தனவே. வாள்ஜீருத்தம் (வாட்பா) வாட்படையைப் பற்றிப் பத்து ஆஞிளீய ஜீருத்தம் ஹியற்று வது வாள்ஜீருத்தம் எனப்பெறும். - (நவநீதப் பாட்டியல். 41) ஜீசயம் (வருகை அல்லது தோற்றரஷி) ஜீசயம் என்னும் பெயளீல் உள்ள நூல்கள் பெருநூல்கஹீன் சுருக்க நூல்களாக ஹியல்கின்றன. ஹிவ்வகைழீல் தண்டபாதி அடிகள் ஹியற்றிய ‘கௌமார ஜீசயம்’ குறிப்நிடத்தக்கது. அது 16 உட்நிளீஷிகளைக் கொண் டுள்ளது. அவை: அவதாரம், தளீசனம், ஜீளையாடல், கருணை வென்றி, உபதேசம், ஈகை, அநிமானம், ஐயமறுத்தல், ணிரு வாய்மலர்தல், சத்ணியம், செஜீகொடு ஜீனவல், வல்லபம் வேண்டல், புகழ் வேண்டல், ணிருவடிவேண்டல், காப்புக்கூறல் என்பன. கௌமார ஜீசயம் என்பது ‘ணிருமுருகன் தோற்றரஷி’ என்பதாம். ஜீசய ஜீத்தாரம் (வெற்றி ஜீளக்கம்) எண்ணிசை மேலும் படைகொண்டு சென்று, ஆங்குள்ள அரசர்கள் பதிந்து கப்பம் செலுத்த, அவர்களைப் பகையாகக் கொள்ளாமல் அவர்கள் நாட்டை அவர்களே ஆளஜீட்டு வருதல் பற்றிக் கூறும் பனுவல் ஜீசய ஜீத்தாரம். “ அட்டணிக்குப் பாலர் ணிறைதர வாள்ஹிறைவன் ஜீட்டு வரல்ஜீசய ஜீத்தாரம்.” - (நிரபந்தத்ணிரட்டு 48) ஹிது ‘ணிசைவெற்றி’ (ணிக்குஜீசயம்) என்பதுமாம். ஜீடயசந்ணிரோதயம் (காதல் பிலாத் தோற்றம்) ஜீடயம் = காதல். உள்ளத்ணில் ஊன்றிய மயலை ஜீளீத்து வெண்திலஷி ஒஹீகாலும் பொழுணில் கூறுதல் ஜீடய சந்ணி ரோதயம் எனப்படும். கஸீத்தாஷீசையால் சொல்லப்படும். பிலவொஹீயால், நிளீஷிக்கு ஆட்பட்ட தலைவன் தலைஜீயர் வெதும்புதல் பாஜீக அமைப்நில் பெருவரஜீனதாம். ‘சந்ணிரோபாலம்பனம்’, ‘மன்மதோபாலம் பனம்’ என நூல்கஹீல் ஹிடம் பெற்றுள. ஹிராமகாதைழீல் ஹிவ்வண்ணனை லீகப் பெருக்கமாக உள்ளது. ஹித்தகைய பாஜீகக் காட்ஞியை வாங்கிக் கொண்டு எழுந்த ஞிறுநூல், ‘ஜீடயசந்ணிரோதயம்’ ஆகும். “நாட்டுமயல், வெண்திலஜீற் கூறல் ஜீடயசந்ணிரோதய மாம், எண்ணுங்கஸீத்தாஷீசை’ என்பது நிரபந்தத்ணிரட்டு (46). ஜீடுகஜீ ‘ஜீடுகதை’ உரைநடை வஷீப்பட்டது. ‘ஜீடுகஜீ’ பாடல் வஷீப்பட்டது. ஆஞிளீயர் தொல்காப்நியர் எழுவகை யாப்புகளைக் குறிக் குங்கால் (செய். 78) “நொடியொடு புணர்ந்த நிஞி” என்ப தொன்றனைச் சுட்டுகின்றார். “நிஞியாவது உவமையை அடிப் படையாகக்கொண்டு தோன்றும் ஜீடுகதைப் பாட்டு வகை” என்பர். நிஞி ஹிருவகைப்பட்டு ஹியலுதலை, “ ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் தோன்றுவது கிளந்த துதிஜீனாலும் என்றிரு வகைத்தே நிஞிவகை பிலையே.” எனத் தெஹீஜீப்பார் ஆஞிளீயர் (தொல். செய். 176) ஹிதற்கு, “நிறைகவ்ஜீ மலை நடக்கும்” என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம்; ஹிஃது யானையென்றாவது. “முத்துப்போற் பூத்து முணிளீற் களாவண்ண நெய்த்தோர் குருணி பிறங்கொண்டு - ஜீத்துணிர்த்து.” என்பதும் அது. ஹிது கமுகின் மேற்று. “ நீராடான் பார்ப்பான் பிறஞ்செய்யான் நீராடில் ஊராடு நீளீற்காக் கை.” என்பது தோன்றுவது கிளந்த துதிஜீனான் வந்தது. ஹிது “நெருப்பென்றாவது” என்பார் பேராஞிளீயர். ஜீடுகதை என வழக்கில் உள்ளனஷிம் எதுகை மோனை முதஸீய தொடைநயம் உடையனவாகவே உலாஷிதல் எவரும் அறிந்தது. எவீனும் புலமக்களால் யாப்நியல் தவறாமல் செய்யப் படுவது ஹிவ்ஜீடுகஜீயாம். தண்டபாதியடிகள் பாடிய ‘ஜீடு கஜீ’, ஹிருபது பாடல்களைஜிடையது ஒன்றும், பத்துப் பாடல்களைஜிடையதொன்றும் ஆக ஹிரண்டுள. தவீப்பாடல் கஹீலும் ஜீடுகஜீப்பாடல்கள் உண்டு. ஜீண்ணப்பம் வேண்டுகை என்னும் பொருளது ஜீண்ணப்பமாகும். ஹிறைவன் ணிருமுன்வீலைழீல் பின்று வேண்டும் வகையால் அமைந்துளது ஜீண்ணப்பப் பாடல்கள். நீத்தல் ஜீண்ணப்பம் மதிமொஷீயார் அருஹீயது. நிள்ளைப் பெருஜீண்ணப்பம், நிள்ளைச் ஞிறு ஜீண்ணப்பம் முதலாகப் பல ஜீண்ணப்பங்கள் வள்ளலார் அருஹீயவை. ஹிவை ஜீருத்த யாப்பால் அமைந்தவை. நீத்தல் ஜீண்ணப்பம் ஐம்பது பாடல்களால் முடிமுதல் தொடையால் நடைழீடுகின்றது. ஜீண்ணப்பம் பல்வகைப் பாக்களால் பத்தடுக்கிப் பாடப் பெறும் என்பது மாம்பழக் கஜீச்ஞிங்க நாவலர் ஹியற்றிய பழவீக் கோழீல் ஜீண்ணப்பம் என்னும் நூலால் அறியப்பெறும். அணில், கஸீஜீருத்தம், ஆஞிளீயஜீருத்தம், கொச்சகக் கஸீப்பா, சந்தக் கொச்சகக் கஸீப்பா, கட்டளைக் கஸீத்துறை, கஸீபிலைத்துறை, வஞ்ஞித்துறை ஆகியவை ஹிடம் பெற்றன. அந்நூல் 120 பாடல் களைக் கொண்டுள்ளது. ஜீண்ணப்பப் பொருளமையக் கஸீவெண்பாவால் பாடுவது ‘ஜீண்ணப்பக் கஸீவெண்பா’ எனப்பெறும். வள்ளலார் அருஹீய ஜீண்ணப்பக் கஸீவெண்பா ஹிவ்வகையைச் சார்ந்தது. 417 கண்திகளால் அமைந்த அந்நூல் 290-291 ஆம் கண்திகஹீல், “ நீறுடையாய் ஆறுடைய நீண்முடியாய் நேளீடளீய னிறுடையாய் பின்றனக்கோர் ஜீண்ணப்பம் - மாறுபட எள்ளல் அடியேன் எனக்குள் ஒஹீயாமல் உள்ள படியே உரைக்கின்றேன்.” என்று தொடங்கித் தம் ஜீண்ணப்பத்தை ஜீழுலீயதாய் உரைத்து, - “நீ தயஷி சூழ்ந்ணிடுக என்னைஜிபின் தொண்டருடன் சேர்த்தருள்க வாழ்ந்ணிடுக பின்தாள் மலர்.” என்று பிறைகின்றது. ஜீருத்தம் (மண்டஸீப்பு) யாப்பால் பெற்ற பெயர் ஜீருத்தம் என்பது. ஹிவீ, ஒரு சாரார் வரலாறு தழுஜீயது என்றும் கூறுவர். ஆழீன், அவர் சுட்டும் வரலாறும் ஜீருத்தயாப்பால் ஹியன்றுளதாகஸீன், யாப்பே கொளத்தகும். ஜீருத்த யாப்பால் ஹியன்ற ஒரு நூல் ‘நளீஜீருத்தம்’. அது ணிருத்தக்க தேவரால் ஹியற்றப்பெற்றது. கிஹீஜீருத்தம், எஸீஜீருத்தம் முதஸீயனஷிம் ஹிருந்த செய்ணிகள் உண்டு. நம்மாழ்வார் அருஹீய ‘ணிருஜீருத்தம்’ கட்டளைக் கஸீத் துறையாக அமைந்துளது. ஆழீன் ஹிப்பெயராட்ஞி புதுமை யானது. ணிருமஷீசையார் பாடிய ஜீருத்தம் சந்தவகைழீனதாகஸீன் ணிருச்சந்த ஜீருத்தம் எனப்படுகின்றது. முதலாறு சீர்களும் மாச்சீராகஷிம் ஏழாம் சீர் ஜீளாச்சீராகஷிம் வருதல் சந்த ஜீருத்த யாப்பாகும். “பளீஞிலை யானை வாள்குடை வேல்செங் கோலொடு நாடுஊர் உரைப்நின் அகவல் ஜீருத்தம் பத்தென வேண்டினர் புலவர்.” என்பது பன்வீரு பாட்டியல். அகவல் ஜீருத்தம் என்பது ஆஞிளீய ஜீருத்தம். அறுசீர் முதலாக நீண்டுவரும் பாட்டே ஆஞிளீயஜீருத்தம் ஆகும். பளீ யாவது குணிரை; ஞிலையாவது ஜீல். அவை பளீஜீருத்தம், ஞிலை ஜீருத்தம் எனப்பெயர் பெறும் என்க. ஹிவீ, ஆனைஜீருத்தம், குணிரைஜீருத்தம், வாள்ஜீருத்தம், குடைஜீருத்தம், செங்கோல் ஜீருத்தம், ஜீல் ஜீருத்தம், வேல் ஜீருத்தம், நாட்டுஜீருத்தம், நகர் ஜீருத்தம் என ஒன்பது வகை காட்டுவார் நவநீதப் பாட்டியலார் (41). நகர்ஜீருத்தத்தை ஊர்ஜீருத்தம் என்பார் முத்துனிளீயனார். “ ஜீல்வா ளொடுவேல் செங்கோல் யானை குணிரை நாடூர் குடைழீவ் வொன்பதும் பப்பத் தகவல் ஜீருத்தத் தாலே ஒன்பது வகைஜிற உரைப்பது ஜீருத்த ஹிலக்கணம் என்மனார் ஹியல்புணர்ந் தோரே.” - (முத்துனிளீயம். 1126) (ஹிவ்ஜீருத்தங்களை அவ்வப் பெயர்கஹீல் காண்க.) ஜீல்லுப்பாட்டு ஜீல்லடி - ஜீல்லடிப்பாட்டு என்பதும் ஹிது. ஜீல்-படைக்கருஜீயாகப் பழமை தொட்டே வழங்கி ஜிள்ளது. அதன் அமைப்நில் ‘ஜீல்யாழ்’ என்னும் ஹிசைக் கருஜீஜிம் ஹிருந்துளது. ‘ஜீல்பூட்டு’ அல்லது ‘பூட்டுஜீல் பொருள் கோள்’ என ஹிலக்கண ஆட்ஞிஜிம் பெற்றுளது. ‘வல்ஜீல் ஓளீ’ என்பவன் ஜீல்லாண்மை தவீச்ஞிறப்புடையதாம். ஜீல்ஸீன் தோற்றம் வானஜீல்லை பினைஷிகூரச் செய்துளது. அது ‘ணிரு ஜீல்’ எனக் குறிக்கப்படும் ஞிறப்புடையதாழீற்று. ஜீல்லடிப்பாட்டு ஞிந்துவகைப்பாடலால் ஹியலும்; ஹிரு சீரடி ஹிரண்டு ஹிரண்டாய் ஹிணைஜிம்; அடிகள் மோனைத் தொடைழீல் ஹியலும்; பொருளுக்கு ஏற்ற சந்தத்தோடும் அமைஜிம்; முன்பாட்டு, நின்பாட்டு, ஜீல்லடி, குடமடி எல்லாம் ஹிணைந்து சதங்கை ஒஸீயோடு வெஹீப்படுங்கால் கேட்பவரை வயப்படுத்துதல் கண்கூடு. பழங்கதை, சமுதாயக் (குமுகாயக்) கதை ஹிவற்றைப் பற்றிய ஜீல்லடிப்பாடல்கள் பாடப்படுகின்றன. ஞிலப்பணிகாரம், ஹிராமாயணம் முதஸீய காஜீயச் செய்ணிகளும், நல்லதங்காள் கதை, கட்டபொம்மன் கதை முதஸீயனஷிம் கல்லா மக்களுக்கும் கஹீப்பூட்டுவனவாய் ஜீல்லடிப் பாடலாய் அமைகின்றன. ஹிடைழீடையே வரும் உரை நடைச்செய்ணி கதையைச் சுருக்கஷிம் பெருக்கஷிம், துணையாகின்றது. சாத்தூர் நிச்சைக்குட்டிழீன் ஜீல்லுப்பாட்டு அண்மைக் காலத்தே ஞிறப்புடன் ஜீளங்கிற்று. ஜீல்ஜீருத்தம் (ஜீற்பா) ஜீற்படையைப் பற்றிப் பத்து ஆஞிளீய ஜீருத்தம் யாப்பது ஜீல்ஜீருத்தமாம். - (நவநீதப்பாட்டியல். 41) ஜீலாசம் (முகவம்) பாட்டுடைத் தலைவன் உலாக் கண்ட மகஹீர் தம் காதலை வெஹீப்படுத்ணி ஜிரைப்பதாகஷிம், கனஷிபிலை உரைப்பதாகஷிம், தலைவன் அருள் வரப்பெறுவதாகஷிம் கஷீநெடில் ஆஞிளீய ஜீருத்தத்தால் பாடப்பெறும் ஒரு நூல் வகை ஜீலாசம் என்ப தாம். பன்வீருசீர்க் கஷீநெடிலடி ஆஞிளீய ஜீருத்தமாகவருவதும், ‘மா மா காய்’ என்னும் அமைப்பு நான்கு கொண்டது ஓரடியாய் வருவதும் ஜீலாச நூல்களால் அறியக்கிடக்கின்றன. ஹிரட்டுறல், மடக்கு ஆகியவை பாடல்தோறும் வர ஹியற்றுவது ஜீலாச மரபாகும். ஜீலாசம் நூறு பாடல்களாலும், அதற்குக் குறைந்தும் வருவதுண்டு. மாம்பழச்ஞிங்க நாவலரால் ஹியற்றப் பெற்ற ‘சந்ணிரஜீலாசம்’, கடிகை முத்துப்புலவரால் ஹியற்றப் பெற்ற ‘சமுத்ணிரஜீலாசம்’, சேறை கணபணிக் கஜீராயரால் ஹியற்றப் பெற்ற ‘நணிஜீலாசம்’ ஆகியவற்றைக் காண்க. ஜீலாசங்கஹீல் புதுமையானது ‘பஞ்சலட்சணத் ணிருமுக ஜீலாசம்’ என்பது. ஹிதன் பெயரைக் கேட்ட அளஜீல் ஐந் ணிலக்கணம் கூறும் நூல்போலும் என எண்ண நேரலாம். ஆழீன் பஞ்சகால பிலையை ஜீளீத்துக்கூறும் நூலாக உள்ளது. ஞிவ கங்கைத் துரைஞிங்க அரசர்மேல் ஜீல்ஸீயப்பக் கஜீராயரால் பாடப்பட்டது ஹிப்பஞ்சலட்சணத் ணிருமுக ஜீலாசமாம். நகைச் சுவை லீக்கதாக அங்கதப் பொருளுக்கு எடுத்துக்காட்டாக ஹிந்நூல் அமைந்துளது. ஜீலாசப் பெயருடைய ஞில நூல்கள் நாடகமாக உள்ளன. “அளீச்சந்ணிர ஜீலாசம்,’ ‘தமயந்ணி ஜீலாசம்’ என்பன போல்வன அவை. ஜீளக்கம் எடுத்துக்கொண்ட பொருளை ஜீளக்குவதாக அல்லது ஜீளக்குதஸீல் ஜீளக்குப் போல்வதாக அமைந்த ஒரு நூல் வகை ஜீளக்கம் எனப்படுகின்றது. மனவாசகங்கடந்தார் ஹியற்றியது ‘உண்மை ஜீளக்கம்’: உமாபணியார் ஹியற்றியது ‘உண்மைநெறி ஜீளக்கம்.’ ஹிவை மெய்ப்பொருள் ஜீளக்கவஷீ வந்தவை. குமரகுருபரர் அருஹீய ‘நீணிநெறி ஜீளக்கம்’ அறநெறி ஜீளக்கமாம். மேஷீஜீளக்கம் என்பதொருநூல் வேளாளர் வரலாற்று ஜீளக்கமாக அமைந்துள்ளது. ஞித்தர்பாடல் தொகுணிழீல் ‘நெஞ்சறி ஜீளக்கம்’ உண்டு. ஜீளக்குபிலை வேலும் வேல்தலைஜிம் ஜீலங்காது ஓங்கியவாறு போலக் கோலொடு ஜீளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு கூறுவது ஜீளக்கு பிலையாகும். “ வேலும்வேற் றலைஜிம் ஜீலங்கா தோங்கிய வாறுபோற் கோலொடு ஜீளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவ தாக உரைப்பது ஜீளக்கு பிலையென ஜீளம்பப் படுமே.” - (முத்துனிளீயம். 1097) ஹிதனைத், “ துளக்கலீல் மன்னர்க் காம்ஜீளக் குரைப்பது ஜீளக்கு பிலையென வேண்டினர் புலவர்.” என்றார் பன்வீரு பாட்டியலார் (325). வேந்தன் ஜீளக்கைப் பற்றிக் கூறுவதும், அவனைக் கணிருடன் ஒப்நிட்டுக் கூறுவதும் ஜீளக்குபிலை என்னும் துறை யாகப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். (200, 201). ஜீனாஜீடை ஜீனாஜீடை என்பது ஜீனாஷிம் ஜீடைஜிமாக அமைந்த பாடல்களால் ஆகிய நூல்வகையைக் குறிப்பதாழீற்று. தாமே ஜீனாவை எழுப்நிக்கொண்டு ஜீடைழீறுப்பதாக ஷிம், நிறர் கேட்ட ஜீனாஷிக்கு ஜீடைழீறுப்பதாகஷிம் ‘ஜீனா ஜீடை’ அமைதலுண்டு. ஆளுடையநிள்ளையார் தாமே ஜீனா எழுப்நி ஜீடை ழீறுப்பதாகப் பல பணிகங்கள் பாடிஜிள்ளார். மதிமொஷீயாளீன் ‘ணிருச்சாழல்’ ஜீனாஷிம் ஜீடைஜிமாக அமைந்துளது. சாற்றல் - மறுமொஷீ கூறல். சாழல் ழூ சாடல். முத்துராமஸீங்க சேதுபணி ஜீனாஜீய ஜீனாக்களுக்குச் சரவணப்பெருமாள் கஜீராயர் ஜீடைழீறுத்தாக 78 பாடல்கள் தவீச்செய்ஜிட் ஞிந்தாமதிழீல் ஹிடம் பெற்றுள. ஜீனாஷிரை “ செந்நெ லங்கழ வீப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிஷீ ழீற்பவ ளம்புரை பூந்தராய்த் துன்வீ நல்ஸீமை யோர்முடி தோய்கழ மிர்சொமிர் நின்னு செஞ்சடை ழீற்நிறை பாம்புடன் வைத்ததே.” “கழமிர், சடைழீற்நிறை பாம்புடன் வைத்தது சொமிர்” என்னும் ஜீனாஷிரை ஹிருத்தலால் ஹிப்பூந்தராய்ப்பணிகம் ஜீனாஷிரை எனப்படுகிறது. ‘ஜீனாஜீடை’க்கும் ஹிதற்கும் வேற்றுமை, ‘ஜீடை’ ஹின்மையே. ஹிப்பணிகம் ஞானசம்பந்தர் அருஹீயது. வெட்ஞிமாலை சீளீய னிரனொருவன் பகைவரூர் சென்று பசுபிரை கவர்ந்து வருவதை லீகுத்துக் கூறுவது வெட்ஞிமாலையாகும். ஹிதனை னிரவெட்ஞி மாலை என்றும் கூறுவர். “ ஆவீரை கவர்ந்து வருபவன் வெற்றி ஜீளம்புதல் னிர வெட்ஞி மாலை.” - (முத்துனிளீயம். 1069) வெண்புணர்ச்ஞி மாலை தண்டகமாலை காண்க. வெற்றிக்கரந்தை பகைவர் கொண்ட தம் பசுபிரையைக் கரந்தைப் பூமாலை சூடிப் போய் மீட்பது பற்றிக் கூறுவது வெற்றிக் கரந்தையாகும். ஹிதனை வெற்றிக் கரந்தை மஞ்சளீ என்றும் கூறுவர். “தழுவார் கொண்ட தந்பிரை மீட்போர் கரந்தை புனைந்து கனன்றுலவை ழீற்செமிஹி மீட்பதைக் கூறல் வெற்றிக் கரந்தை.” - (முத்துனி. 1070) வேட்டல் வேட்டல் - ஜீரும்புதல்; வேண்டுதல் பொருளும் வேட்ட லாக வரும். ஞானசம்பந்தர், பாடிய ‘மழை வேட்டல்’ தேவாரத்து ஹிடம்பெற்றுள்ளது. வேட்டலைப் பெருவரஜீற்றாகச் செய்தவர் தலீழ்த் தென்றல் ணிரு.ஜீ.க. ஆவார். ஹிறைவர் பலர் பெயளீலும் ‘அருள்வேட்டல்’ பாடிய அவர், புதுமை வேட்டலும், பொதுமை வேட்டலும் பாடுகிறார். கிறித்துஜீன் அருள்வேட்டலும், நநிகளருள் வேட்டலும் ஹிசைக் கிறார். வேடர் ஜீனோதம் (வேடந்தணைதல்) தன்னை அடைவதை ஜீரும்பாத நங்கையை அடைவதற்குத் தக்க வேடத்தைக் கொண்டு சென்று வயப்படுத்துதல் பற்றிக் கூறுவது வேடர் ஜீனோதம் என்னும் பனுவல் செய்ணி. “மேவலுறா மானையொரு வேடத்தான் மேஷிதல் மேவலுறு வேடர் ஜீனோதமாம்.” - (நிரபந்தத்ணிரட்டு 63) முருகன் வள்ஹீயை அடைந்த தொன்மக்கதையை உட்கொண்டு ஹித்தகு ஞிறுபனுவல் கிளர்ந்ததாகலாம். வேலன், வேடன், முதுவன், என முந்பிலை கொண்டு முடித்துக்கொண்ட கதையைக் கருதுக. வேடுபறி வஷீயே செல்வார் வைத்ணிருக்கும் பொருள்களை வேடர்கள் சென்று வஷீப்பறி செய்ததைப் பற்றிய பனுவல் வேடுபறி. சுந்தரர் கூடலை யாற்றூர் வஷீயே போனபோது ஹிறைவன் பூதகண வேடரைக் கொண்டு பொன்மதிகளைப் பறிப்நித்து, மீட்டஹீத்த செய்ணி பற்றியமைந்த ஒரு நூல் சுந்தரர் வேடுபறி என அமைந்தது. “ (சரசுவணிமால் சுவடி (681 ஆ) ) வேந்தன்குடைமங்கலம் கொற்றவன் குடையைச் ஞிறப்நித்து நேளீசை வெண் பாவால் பாடுவது வேந்தன் குடைமங்கலம் எனப்பெறும். நேளீசை வெண்பாஜீன் முன் ஹிரண்டு அடிகஹீலும் குடைத்தொஷீலும், தவீ பிலை தொடங்கிப் நின்வீரண்டு அடிகஹீலும் வேந்தன் புகழும் கூறப்பெற்றுக் ‘குடை என்று முடிஜிம் அமைணிஜிடையது குடைமங்கலப் பாட்டு. முன்மூன்று அடிகளும் கட்டளை அடிகளாக அமைதல் வேண்டும் என்றும், கட்டளையாவது குற்றியஸீகரம், குற்றிய லுகரம், ஒற்று, ஆய்தம் நீங்கிய உழீர்மெய் அளவால் ஒத்து ஹிருத்தல் என்றும் கூறுவர். ‘கடைமங்கலம்’ ஒரு புறத்துறை ஆதலைப் புறப்பொருள் வெண்பாமாலையால் அறிக (222). “முன்னீ ரடிழீலும் குடைத்தொஷீல் ஹியம்நிஜிம் நின்னீ ரடிழீல் தவீபிலை ஹிரட்டிஜிம் கொற்றவற் புகழ்ந்து குடையென முடிக்கும் நற்றிற நேளீசைக் குடைவெண் பாட்டே.” “அதுவே, குடைச்சொற் ஞிந்தடி ஈற்றில்வைத் தந்தக் குடைச்சொல் லாணிக் குறளகத் தடக்கி ஈற்றய லடிழீனும் ஈற்றினும் ஹிறைவனைப் போற்றிப் புகழ்ந்து புகறல் வேண்டும்.” (ஹிந்ணிரகாஹீயார்) - (பன்வீருப் பாட்டியல். 199, 200) “ஒட்டிய குடைப்பொருள் உரைக்கும் நேளீசை கட்டளை யாகுதல் கடனென மொஷீப.” கட்டளை என்பது கருதுங் காலை ஈற்றடி ஒஷீய ஏனைமூன் றடிஜிம் பாற்படும் எழுத்ணின் பகுணிஒப் பதுவே.” “ஹிதற்கே யாமெழுத் தெண்ணுங் காலைக் குற்றிய ஸீகரமும் குற்றிய லுகரமும் ஒற்றுமாய் தமுமொஷீத் துழீர்மெய்ஜிங் கொளலே.” - (பன்வீருப் பாட்டியல். 201, 203) வேல்ஜீருத்தம் (வேற்பா) வேற்படையைப் பற்றிப் பத்து ஆஞிளீய ஜீருத்தம் பாடுவது வேல்ஜீருத்தம் என்பதாகும். - (நவநீதப் பாட்டியல். 41) வேலன் வஷீபாட்டு வஷீப்பட்டது, வேல்வஷீபாடு. வேல் உடையான் வேலனாழீனமை வேற்ஞிறப்பை வெஹீப்படுத்தும். வேல்வஷீபாட்டு ஹிடமே ‘படைனிடு’ எனப்பட்டதும், படைனிட்டுப் பணிகம் அது பெற்றதும் அறியத்தக்கவை. வேவீல்மாலை ஹிளவேவீலைஜிம், முதுவேவீலைஜிம் ஞிறப்நித்துப் பாடுவது வேவீல்மாலை எனப்படும். “ வேவீலைப் பாடுதல் வேவீல் மாலை.” - (ஹிலக்கண ஜீளக்கம் பாட்டியல். 73) “ வேவீலொடுமுணிர் வேவீலும் புனைந்து ஜீளம்புதல் வேவீன்மாலை யாகும்.” - (முத்துனிளீயம். 1062) அறுவகைப் பெரும் பொழுதுகஹீல் ஹிருவகையை உள் ளடக்கியது வேவீல். ஹிளவேவீல் செல்வன் காமன், ஆகஸீன் அவன் வண்திப்பும் ஹிம்மாலைழீல் ஹிடம் பெறுவதாம். 