சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 20 கம்பராமாயணம் தொகுப்பு (பாகம் - 2) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 20 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 584 = 592 படிகள் : 1000 விலை : உரு. 370/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும்இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580 பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையா யிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை கம்பராமாயணம் தொகுப்பு சுந்தர காண்டம் 1. கடல் தாவு படலம் 5 2. ஊர்தேடு படலம் 13 3. காட்சிப் படலம் 33 4. நிந்தனைப் படலம் 43 5. உருக் காட்டு படலம் 53 6. சூடாமணிப் படலம் 62 7. பொழில் இறுத்த படலம் 74 8. கிங்கரர் வதைப் படலம் 79 9. சம்புமாலி வதைப் படலம் 84 10. பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம் 88 11. அட்ச குமாரன் வதைப் படலம் 94 12. பாசப் படலம் 99 13. பிணி வீட்டு படலம் 106 14. இலங்கை எரியூட்டு படலம் 125 15. திருவடி தொழுத படலம் 130 யுத்த காண்டம் 1. கடல் காண் படலம் 147 2. இராவணன் மந்திரப் படலம் 149 3. இரணியன் வதைப் படலம் 166 4. வீடணன் அடைக்கலப் படலம் 183 5. இலங்கைக் கேள்விப் படலம் 208 6. வருணனை வழி வேண்டு படலம் 214 7. வருணன் அடைக்கலப் படலம் 219 8. சேது பந்தனப் படலம் 223 9. ஒற்றுக் கேள்விப் படலம் 229 10. இலங்கை காண் படலம் 238 11. இராவணன் வானரத்தானை காண் படலம் 240 12. மகுட பங்கப் படலம் 244 13. அணிவகுப்புப் படலம் 250 14. அங்கதன் தூதுப் படலம் 253 15. முதற் போர்ப் படலம் 262 16. கும்பகருணன் வதைப் படலம் 272 17. மாயா சனகப் படலம் 304 18. அதிகாயன் வதைப் படலம் 316 19. நாக பாசப் படலம் 332 20. படைத் தலைவர் வதைப் படலம் 354 21. மகரக் கண்ணன் வதைப் படலம் 359 22. பிரமாதிரப் படலம் 362 23. சீதை களங்காண் படலம் 374 24. மருத்து மலைப் படலம் 379 25. களியாட்டுப் படலம் 388 26. மாயா சீதைப் படலம் 391 27. நிகும்பலைப் படலம் 402 28. இந்திரசித்து வதைப் படலம் 413 29. இராவணன் சோகப் படலம் 423 30. படைக் காட்சிப் படலம் 430 31. மூலபல வதைப் படலம் 434 32. வேலேற்ற படலம் 443 33. வானரர் களம் காண் படலம் 448 34. இராவணன் களம் காண் படலம் 449 35. இராவணன் தேர் ஏறு படலம் 453 36. இராமன் தேர் ஏறு படலம் 456 37. இராவணன் வதைப் படலம் 458 38. மண்டோதரி புலம்புறு படலம் 470 40. பிராட்டி திருவடி தொழுத படலம் 477 41. மீட்சிப் படலம் 494 42. திருமுடி சூட்டு படலம் 513 43. விடை கொடுத்த படலம் 517 பாட்டு முதற் குறிப்பு அகராதி 524 சுந்தர காண்டம் 1. கடல் தாவு படலம் கடவுள் வாழ்த்து அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப், பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வே றுபாடு உற்ற வீக்கம் கலங்குவது எவரைக் கண்டால்? அவர்,என்ப கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே; மறைகளுக்கு இறுதி ஆவார். 1 சுந்தர காண்டம்: அழகான பல செய்திகளைப்பற்றிக் கூறும் பகுதி; சுந்தரம் - அழகு. கடல்தாவு படலம்: அனுமான் கடலைத் தாண்டிச் சென்றதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. அலங்கலில் - மாலையில். அரவுஎன - பாம்பின் தோற்றம் உண்மையுணர்ந்தவுடன் மறைவதுபோல. விலங்கிய - ஒன்றோடு ஒன்று கலந்த. விகாரப்பாட்டின் - காரியத்தின். வேறுபாடு உற்ற - வேறுபாட்டால் உண்டான. வீக்கம் - அறியாமையின் மிகுதி. எவரைகண்டால் கலங்குவது - யாரைக்கண்டால் அழியக்கூடும்? `அவர் கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் அன்றே; மறைகளுக்கு இறுதி ஆவார்.’ வான் உலகைக் கண்டு இலங்கையோவென ஐயுறல் ஆண்தகை ஆண்டுஅவ் வானோர் துறக்கநாடு அருகில் கண்டான் ஈண்டுஇது தான்கொல் வேலை இலங்கைஎன்று ஐயம் எய்தா; வேண் தரு விண்ணாடு என்னும் மெய்ம்மைகண்டு உள்ளம் மீட்டான்; காண்தரு தோகை உம்பர் இல்’எனக் கருத்துள் கொண்டான். 2 2. ஆண்தகை - அனுமான். ஐயம் எய்தா - ஐயம் எய்தி. வேண்தரு - ஆசையைத் தரும். காண்தகு கொள்கை - காணத் தகுந்த சிறந்த கொள்கையையுடைய. உம்பர்இல் - தேவர் உலகம். மாருதி இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல் கண்டெனென் இலங்கை மூதூர், கடிபொழில், கனக நாஞ்சில் மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த வெண்தளக களப மாட வீதியும், பிறவும்’ என்னா அண்டமும் திசைகள் எட்டும் அதிரத்,தோள் கொட்டி, ஆர்த்தான். 3 3. கடி - மணம் வீசும்... நாஞ்சில் - மதில் உறுப்பு. மண்டலம் - வட்டமான. வெண்தளம் - வெண்மையான தளம். களபம் - யானைகள் போகின்ற. மகேந்திர மலையின் நிலைமை தாரகை, சுடர்கள், மேகம், என்றிவை தவிரத் தாழ்ந்து பார்இடை அழுந்து கின்ற படர்நெடும் பனிமாக் குன்றம், கூர்உகிர்க் குவவுத் தோளான் கூம்பெனக், குமிழி பொங்க ஆர்கலி அழுவத்து ஆழும் கலம்எனல் ஆயிற்று அன்றே. 4 4. `குன்றம்... கலம்எனல் ஆயிற்று’. தாரகை - நட்சத்திரங்கள். சுடர்கள் - சூரிய சந்திரர்கள். பார்இடை - நிலத்துள். பனி - குளிர்ந்த. உகிர் - நகம். கூம்பு - பாய்மரம். கடல்உறு மத்துஇது என்னக் கார்வரை திரியும் காலை மிடல்உறு புலன்கள் வென்ற மெய்த்தவர், விசும்பின் உற்றார் திடல்உறு கிரியில் தத்தம் செய்வினை முற்றி முற்றா, உடல்உறு பாசம் வீசா, உம்பர்ச்செல் வாரை ஒத்தார். 5 5. கார்வரை - மேகம்படிந்த மகேந்திரமலை. திரியும்காலை - அதிர்ந்த பொழுது. திடல்உறு கிரியில் - மேடான மலையிலே. முற்றிமுற்றா - எல்லாவற்றையும் முடித்து. வீசா - வீசி. மாருதிக்கு வாழ்த்து இத்திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும் முத்திறத்து உலகத் தாரும், முறைமுறை விசும்பின் மொய்த்தார்; தொத்துறு மலரும், சாந்தும், சுண்ணமும், இனைய தூவி `விக்கக சேறி’ எற்hர்; வீரனும் விரைவது ஆனான். 6 6. தொத்துறு மலரும் - கொத்தாகிய மலர்களையும். வித்தக - அறிஞனே! அனுமான் பாய்ச்சல் `இலங்கையின் அளவிற்று அன்றால் இவ்வுரு எடுத்த தோற்றம்; விலங்கவும் உளதன்று’ என்று விண்ணவர் வியந்து நோக்க, அலங்கல்தாழ் மார்பன், முன்தாழ்ந்து, அடித்துணை அழுத்த லோடும், பொலம்கெழு மலையும், தாளும், பூதலம் புக்க மாதோ. 7 7. தோற்றம் - காட்சி. விலங்கவும் - தடைப்படவும். முன்தாழ்ந்து - முன்வளைந்து. அடித்துணை - அடிகளை. வால்விசைத்து எடுத்து, வன்தாள் மடக்கி,மார்பு ஒடுக்கி, மானத் தோள்விசைத் துணைகள் பொங்கக், கழுத்தினைச் சுருக்கித், தூண்டும், கால்விசைத் தடக்கை நீட்டிக், கண்புலம் கதுவா வண்ணம் மேல்விசைத்து எழுந்தான்,உச்சி விரிஞ்சன்நாடு உரிஞ்ச வீரன். 8 8. மானம்தோள் - பெரிய தோள்களாகிய. விசைத்துணைகள் - விரைந்து செல்லும் இரண்டும். பொங்க - பூரிப்படைய. கால்விசை - காற்றைப் போன்ற விரைவையுடைய. கதுவா வண்ணம் - பார்க்கமுடியாதபடி. விரிஞ்சன் - பிரமன். அனுமான் கடல் தாண்டும் காட்சி இசையுடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும், பசையுடை மரனும், மாவும், பல்உயிர்க் குலமும், வல்லே திசைஉறச் சென்று சென்று, செறிகடல் இலங்கை சேரும் விசைஇல ஆகித் தள்ளி, வீழ்வன என்ன வீழ்ந்த. 9 9. வல்லே - விரைவில். திசைஉற - அனுமான்சென்ற திசையிலே அவனுடன். மாவொடு, மரமும், மண்ணும், வல்லியும் மற்றும் எல்லாம் போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத் தூவின கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ. 10 10. போர்க்க - மறைய. சேவகன் - இராமன். சேராமுன்னம் - வந்து சேர்வதற்கு முன்பே. விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த, மண்ணவர் இறைஞ்சச் செல்லும் மாருதி, மறம்உள் கூர, அண்ணல்வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னம் என்னாக் கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலைஅம் கிரியும் ஒத்தான். 11 11. மறம்உள்கூர - பகைமை உள்ளத்தில் மிகுதியாக. கண்ணுதல் ஒழிய - பரமசிவன் இல்லாமல். தடக்கைநா லைந்து, பத்துத் தலைகளும், உடையான் தானே, அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன் அறுத லோடும், கெடக்குறி யாக, மாகம் கிழக்குஎழு வழக்கு நீங்கி, வடக்கெழுந்து இலங்கை செல்லும் பரிதிவா னவனும் ஒத்தான். 12 12. கெடக்குறியாகி - கெடுவதற்கான அடையாளமாகி. மாகம் - வானத்தில். வழக்கு - வழக்கம். `நீங்கிச் செல்லும் பரிதி வானவனும் ஒத்தான்’. கேழ்உலாம் முழுநி லாவின் கிளர்ஒளி இருளைக் கீறப் பாழிமா மேரு நாண விசும்பிடைப் படர்ந்த தோளான், ஆழிசூழ் உலகம் எல்லாம் அரும்கனல் முருங்க உண்ணும் ஊழிநாள் வடபால் தோன்றும் உவாமுழு மதியும் ஒத்தான். 13 13. `அரும்கனல், ஆழிசூழ் உலகம் எல்லாம் முருங்க உண்ணும் ஊழிநாள்’. முருங்க - அழிய. உவாமுழுமுதி - பௌரணையில் தோன்றும் பூரணச் சந்திரன். மாருதி முன் மைந்நாக மலை வேறு இந்நாகம் அன்னான் எறிகால்என ஏகும் வேலைத், திந்நாக மாவில் செறிகீழ்த் திசைகாவல் செய்யும் கைந்நாகம், அந்நாள் கடல்வந்ததோர் காட்சி தோன்ற, மைந்நாகம் என்னும் மலை,வான்உற வந்தது அன்றே. 14 14. இ நாகம் அன்னான் - இந்த மலைபோன்ற அனுமான். திந்நாகம் - திசையானைகளிலே. மாவில்செறி - பெரிய ஒளிபொருந்திய. கைந்நாகம் - கையையுடைய யானை. எழுந்தோங்கி, விண்ணொடு மண்ஒக்க, இலங்கும் ஆடி உழுந்தோடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி கொழுந்தோடி நின்ற கொழுங்குன்றை, வியந்து நோக்கி, அழுங்கா மனத்து அண்ணல் `இதுஎன்கொல்’ எனாஅயிர்த்தான். 15 15. இலங்கும்ஆடி - விளங்குகின்ற கண்ணாடியின்மேல். உழுந்து ஓடு காலத்துஇடை - உழுந்து உருண்டோடுகின்ற காலத் திற்குள். உம்பரின் உம்பர் - மேலும் மேலும். அருங்கா - அஞ்சாத. அந்தக் குன்றம் தலைகீழாகப் புரண்டு விழும்படி உதைத்துத் தள்ளிவிட்டு உயரத்தில் எழும்பிப் பாய்ந்தான் அனுமான். உந்தாமுன் உலைந்துஉயர் வேலை ஒளித்த குன்றம் சிந்தாகுலம் உற்றது; பின்னரும், தீர்வில் அன்பால் வந்துஓங்கி, ஆண்டுஓர் சிறுமா னிடவே டம்ஆகி `எந்தாய் இதுகேள்’என இன்னஇ சைத்தது; அன்றே. 16 16. வேலை - கடல். சிந்தாகுலம் - மனத்துயரம். இந்திரன் மலைகளைச் சிதைத்த போது என்னைக் காற்றரசன் காத்தான்; நீ அவன் காதலன் ஆதலான் உன்னை இளைப்பாற்ற வந்தேன். `கார்மேக வண்ணன் பணிபூண்டனன், காலின் மைந்தன் தேர்வான் வருகின்றனன் சீதையைத்; தேவர் உய்யப் பேர்வான் அயல்சேறி, இதில்பெரும் பேறுஇல்’ என்ன நீர்வே லையும்என்னை உரைத்தது; நீதி நின்றாய்! 17 17. பணி - கட்டளையை; ஊழியத்தை. பூண்டனன் - மேற்கொண்டு. தேர்வான் - தேடும்பொருட்டு. பேர்வான் - செல்கின்றவனான அனுமான். நற்றாயினும் நல்லன் எனக்குஇவன், என்று நாடி இற்றேஇறை எய்தினை; ஏய்ந்தது கோடி என்னால்; பொன்தார் அகல்மார்ப! தம்இல்உழை வந்த போதே உற்றார்செயல் மற்றும்உண் டோ.’என உற்று உரைத்தான். 18 18. என்றுநாடி - என்று உன்னை அறிந்து. இற்றேஇறை எய்தினை - இப்பொழுதே சிறிது வந்தாய். `என்னால் ஏய்ந்தது கோடி’. இல்உழை - வீட்டிற்கு. உரைத்தான் உரையால் `இவன்ஊறுஇலன்’ என்பது உன்னி, விரைத்தா மரைவாள்முகம் விடு விளங்க, வீரன் சிரித்தான் அளவே; சிறிதுஅத்திசைச் செல்ல நோக்கி வரைத்தாழ் நெடும்பொன் குடுமித்தலை மாடு கண்டான். 19 19. விட்டுவிளங்க - ஒளிவிட்டுப் பிரகாசிக்க. சிறிதுஅளவே அத்திசை செல்லநோக்கி - சிறிதளவு அக்கீழ்த்திசையிலே பார்வை செல்லப் பார்த்து. தாழ்வரை - வணங்கிய மலையின். தலைமாடு - தலையை. `வருந்தேன் இது,என்துணை வானவன் வைத்த காதல்! அருந்தேன் இனியாதும்ஒன்று ஆசை நிரப்பி அல்லால்; பெரும்தேன் பிழிசாலும்நின் அன்பு பிணித்த போதே இருந்தேன்; நுகர்ந்தேன்; இதன்மேல் இனியீவது என்னோ?’ 20 20. வானவன்காதல் வைத்ததுணை - வாயுபகவான் அன்பு வைத்த துணைவனே. ஆசைநிரப்பி - ஆசையை முடித்து. `ஈண்டே கடிதுஏகி, இலங்கை விலங்கல் எய்தி, ஆண்டான் அடிமைத்தொழில் ஆற்றிஎன் ஆற்றல் கொண்டே மீண்டால் நுகர்வென் நின்விருந்து,’என வேண்டி மெய்ம்மை பூண்டான் அவன்,கண்புலம் பின்பட முன்பு போனான். 21 21. இங்கை விலங்கல் - இலங்கையாகிய மலையை. அது இமயத்தின் சிகரம் ஆதலின் மலை என்று சொல்லப்பட்டது. சுரசை என்பவள் அனுமானைத் தடுத்தல் `தீயே எனல்ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய் ஆயே விரைவுற்றுஎனை அண்மினை, வண்மை யாள! நீயே இனிவந்துஎன் நிணங்கொள் பிணங்கு எயிற்றின் வாயே புகுவாய்! வழிமற்றிலை வானின்;’ என்றாள். 22 22. செவ்வாய் ஆயே - செய்கின்றவன் ஆகி. பிணங்கு - வளைந்த. `பெண்பால் ஒருநீ; பசிப்பீழை ஒறுக்க நொந்தாய்! உண்பாய் எனதுஆக்கையை; யான்உத வற்கு நேர்வல்! விண்பால வர்நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் நண்பால் எனச்சொல்லினன் நல்லறி வாளன்; நக்காள். 23 23. பீழை - நோய். ஒறுக்க - துன்புறுத்த. அவள்; உன்னைத் தின்றே தீர்வேன் என்றாள்; `உன் வாயில் நுழைகின்றேன் வல்லையானால் தின்னுக’ என்றான் அனுமான். அவன் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு அவள் வாயிலே நுழைந்தான்; மூச்சுவிடுமுன் வெளியில் வந்தான். அவள் அனுமனை வாழ்த்திச் சென்றாள். அனுமனும் அப்பாற் சென்றான். அங்காரதாரையின் எதிர்ப்பு வெம்கார் நிறப்புணரி வேறேயும் ஒன்று,அப் பொங்குஆர் கலிப்புனல் தரப்,பொலிவ தேபோல் `இங்குஆர் கடத்திர்எனை?’ என்னா எழுந்தாள் அங்கார தாரை,பிறிது ஆலாலம் அன்னாள். 24 24. புணரி - கடல். வேறேயும்ஒன்று - வேறொன்றை. `பொங்கு புனல் ஆர்கலி தர’பிறிது ஆலாலம் - வேறொரு விஷம். நின்றாள் நிமிர்ந்து,அலை நெடும்கடலின் நீர்தன் வன்தாள் அலம்ப,முடி வான்முகடு வெளவ; அன்றுஆய் திறத்தவள் அறத்தைஅரு ளோடும் தின்றாள் ஒருத்திஇவள், என்பது தெரிந்தான். 25 25. `வெளவ நிமிர்ந்து நின்றாள்’. அன்று - அப்பொழுது. ஆய்திறத்தவன் - அனுமான். அனுமான் `ஏன் வழியடைத்தாய்! நீ யார்? ஏன் நின்றனை?’ என்றபோது அவள் கூறியது பெண்பால் எனக்கருது பெற்றிஒழி, உற்றால் வண்பால் அவர்க்கும்உயிர் வீடுறுதல் மெய்யே! கண்பால் அடுக்கஉயர் காலன்வரு மேனும் உண்பேன் ஒருத்தி;அது ஒழிப்பதுஅரிது’ என்றாள். 26 26. உற்றால் - நெருங்கினால். வீடுறுதல் - நீங்குதல். கண்பால் அடுக்க, கண்ணுக்கு நேரே. ஒருத்தி உண்பேன் - நான் ஒருத்தியாகவே நின்று உண்பேன். திறந்தாள் எயிற்றைஅவள்; அண்ணல்இடை சென்றான்; அறந்தான் அரற்றியது; அயர்த்துஅமரர் எய்த்தார் இறந்தான் எனக்கொடு;ஓர் இமைப்பதனின் முன்னம் பிறந்தான் எனப்பெரிய கோளரி பெயர்ந்தான். 27 27. -. விரைந்து இலங்கையை நோக்கிச் சென்றான்; இலங்கையை உற்றால் இடையூறுகள் நீங்கும் என்று கருதிச் சென்றான். வேறு தசும்புடைக் கனகம் நாஞ்சில் கடிமதில் தணித்து நோக்கா, அசும்புடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி விசும்பிடைச் செல்லும் வீரன் விலங்கி,வேறு இலங்கை மூதூர்ப் பசும்புடைச் சோலைத்து ஆங்கோர் பவளமால் வரையில் பாய்ந்தான். 28 28. கனகம் தசும்பு நாஞ்சில் உடை - பொன்னால் ஆகிய கலசங்களையும் உறுப்புக்களையும் உடைய. அசும்பு உடை பிரசம் - ஊறுகின்ற தேனையுடைய. விலங்கி - விலகி. புடைபசும் சோலைத்து - பக்கத்திலே பசுமையான சோலையையுடைய. நன்னகர் அதனை நோக்கி நளினக்கை மறித்து, `நாகர் பொன்னகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா! அந்நகர் இதனின் நன்றேல் அண்டத்தைமுழுதும் ஆள்வான் இந்நகர் இருந்து வாழான்! இதுஅதற்கு ஏது’ என்றான். 29 29. நளினக்கை மறித்து - தாமரை மலர்போன்ற கையைக் கவித்து. நாகர் - தேவர். பொன்னகர் - அமராவதி. ஆள்வான் - ஆளுகின்ற இராவணன். 2. ஊர்தேடு படலம் இலங்கையின் சிறப்பு பொன்கொண்டு இழைத்த?மணி யைக்கொடு பொதிந்த? மின்கொண்டு அமைத்த?வெயி லைக்கொடு சமைத்த? என்கொண்டு இயற்றிய எனத்தெரிவு இலாத, வன்கொண்டல் விட்டு,மதி முட்டுவன மாடம். 1 ஊர்தேடு படலம்: அனுமான் இலங்கையிலே சீதை யைத் தேடிய நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. `எனத் தெரிவுஇலாத மாடம்’ வன்கொண்டல் விட்டு - வலிமையுள்ள மேகமண்டலத்தைக் கடந்து. மதிமுட்டுவன - சந்திரமண்டலத்தை முட்டுவன. மரம்அ டங்கலும் கற்பகம்; மனையெலாம் கனகம்; அரம டந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு; அமரர் உரம்அ டங்கிவந்து உழையராய் உழல்குவர்; ஒருவர் தரம்அ டங்குவது அன்றுஇது; தவம்செய்த தவம்;ஆல். 2 2. சிலதியர் - குற்றேவல் செய்யும் பெண்கள். ஒருவர்தாம் - ஒருவர் சொல்லுந்தரத்திலே. தேவர் என்பவர் யாரும்இத் திருநகர் வீரர்க்கு ஏவல் செய்பவர்; செய்கிலா தவர்,எவர் என்னின், மூவர் தம்முளும் இருவர்என் றால்இனி முயலின் தாஇல் மாதவம் அல்லது பிறிதுஒன்று தகுமோ? 3 3. இனிமுயலின் - இனி முயன்றாலும். ஒருவன் - பிரமன். பிறிது ஒன்று தகுமோ - வேறொன்று செய்யத் தகுமோ. திருகு வெம்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார், அருகு போகின்ற திங்களும் மறுஅற்றது; அழகைப் பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின்; பசும்பொன் உருகு கின்றது போன்றுளது உலகுசூழ் உவரி. 4 4. துன்ஒளி - நெருங்கிய ஒளி. பாய்தலின் - பரவியிருத் தலால். தேனும், சாந்தமும், மான்மதம் செறிநறும் சேறும், வான நாள்மலர்க் கற்பக மலர்களும், வயமாத் தான வாரியும், நீரொடு மடுத்தலின் தழீஇய மீனும் தானும்ஓர் வெறிமணம் கமழும்அவ் வேலை. 5 5. மான்மதம் - கஸ்தூரி. வயம் மா தான வாரியும் - வலிமையுள்ள யானைகளின் மத வெள்ளமும். வெறிமணம் - நறுமணம். அரக்கர்களின் ஆனந்த வாழ்வு பாடு வார்பலர்; என்னின்,மற்று அவரினும் பலரால் ஆடு வார்கள்;மற்று அவரினும் பலர்உளர், அமைதி கூடு வார்இடை இன்இயம் கொட்டுவார்; முட்டுஇல் வீடு காண்குறும் தேவரால் விழுநடம் காண்பார். 6 6. அமைதி கூடுவார் இடை - அமைதியுடன் கூடியிருப் பவர்களிடையிலே. இன்இயம் - இனிய வாத்தியங்களை. இழையும், ஆடையும், மாலையும், சாந்தமும் ஏந்தி உழையர் என்னநின்று உதவுவ நிதியங்கள்; ஒருவர் விழையும் போகமே இங்கிது; வாய்கொடு விளம்பின் குழையும்; நெஞ்சினால் நினையினும் மாசுஎன்று கொள்ளும். 7 7. போகமே - போகமெல்லாம். குழையும் - மெலியும். நிதியங்கள் - சங்கநிதி பதுமநிதி முதலியன. பளிக்கு மாளிகைத் தலந்தொறும், இடந்தொறும், பசும்தேன் துளிக்கும் கற்பகத் தண்நறும் சோலைகள் தோறும், அளிக்கும் தேறல்உண்டு, ஆடுநர், பாடுநர் ஆகிக் களிக்கின் றார்அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன். 8 8. தண்நறும் - குளிர்ந்த நறும் மணம் வீசும். தேறல் - தேன் (மது). வேறு காயத்தால் பெரியர், வீரம் கணக்குஇலர்; உலகம் கல்லும் ஆயத்தார்; வரத்தின் தன்மை அளவற்றார்; அறிதல் தேற்றா மாயத்தார்; அவர்க்குஎங் கேனும் வரம்புஉண் டாமோ? மற்றுஓர் தேயத்தார் தேயம் சேறல், தெறுவிலோர் செருவில் சேறல். 9 9. ஆயத்தார் - கூட்டத்தார். வரம்பும் - எல்லையும். `மற்றோர் தேயத்தார் தேயம் சேறல் தெறுவிலோர் செருவில் சேறல்’. தேயம் சேறல் - இலங்கையுள் சென்றால். தெறுவிலோர் - வலிமையற்றவர்கள். செருவில் - போரை மேற்கொண்டு. சேறல் - சேர்வதை ஒக்கும். கழல்உலாம் காலும், கால வேல்உலாம் கையும், காந்தும் அழல்உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை; அன்னார் குழல்உலாம் களிவண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா மழலையாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை; மாதோ! 10 10. அன்னார் - அவ்வரக்கர்களின். குஞ்சியா - தலைமை யினால். பஞ்சி குன்றா - தங்கள் பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு கலையாத. ஊடிய காதலியரைத் தேற்ற அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவது ஆடவர்களின் இயல்பு. ஒறுத்தலோ நிற்க; மற்றோர் உயர்படைக்கு ஒருங்குஇவ் வூர்வந்து இறுத்தலும் எளிதா? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே? கறுத்தவாள் அரக்கி மாரும், அரக்கரும், கழித்த வீசி வெறுத்தபூண் வெறுக்கை யாலே தூரும் இவ் வீதி எல்லாம். 11 11. இறுத்தலும் - தங்குதலும். எளிதா - எளிதாகுமா? கறுத்த - சினந்த. விற்படை பெரிதுஎன் கேனோ? வேற்படை மிகும்என் கேனோ? மல்படை உடைத்துஎன் கேனோ? வாள்படை வலிதுஎன் கேனோ? கற்பணம், தண்டு, பிண்டி பாலம்,என்று இனைய காந்தும் நற்படை பெரிதுஎன் கேனோ? நாயகற்கு உரைக்கும் நாளில். 12 12. கற்பணம் - நெருஞ்சி முள்ளைப்போல் இரும்பால் செய்தது. பிண்டிபாலம் - எறிகின்ற ஆயுதவகைகளில் ஒன்று. அனுமான் இவ்வாறு பலவும் எண்ணித் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு அக்குன்றின் ஒருபுடை இருந்தான்; கதிரவனும் மறைந்தான். ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்; ஆய்வினை மனத்திலான்; அறிஞர் சொல்கொளான்; வீவினை நினைக்கிலான்; ஒருவன் மெய்இலான்; தீவினை எனஇருள் செறிந்தது எங்குமே. 13 13. ஏய்வினை - தன் மனம்போன போக்கில் நடந்து. `மெய்இலான் ஒருவன்’. வண்மை நீங்காநெடு மரபின் வந்தவள் பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் திண்மை நீங்காதவன் சிறைவைத் தான்,எனும் வெண்மை நீங்கியபுகழ் விரிந்தது என்னவே. 14 14. பேதையை - சீதையை. வெண்மை நீங்கியபுகழ் - வெண்ணிறம் போன புகழ். கரும்புகழ்; பழி. அவ்வழி அவ்விருள் பரந்த; ஆயிடை எவ்வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்; தெவ்அழி அந்தரத் திசையர் ஆகையால் வெவ்வழி இருள்தர மிதித்து மீச்செல்வார். 15 15. தெவ்அழி - பகை அழிந்த. மதித்து - மதங்கொண்டு. சித்திரப் பத்தியின் தேவர் சென்றனர், `இத்துணைத் தாழ்த்தனம் முனியும்’ என்றுதம் முத்தின்ஆ ரங்களும், முடியும், மாலையும் உத்தரீ யங்களும் சரிய ஓடுவார். 16 16. சித்திரப்பத்தியின் - ஓவிய வரிசையைப்போல. வானத்திலே சந்திரன் வருகை தீண்டரும் தீவினை தீக்கத் தீந்துபோய் மாண்டற உலர்ந்தது, மாரு திப்பெயர் ஆண்தகை மாரிவந்து அளிக்க, ஆயிடை ஈண்டுஅறம் முளைத்தென, முளைத்தது இந்துவே. 17 17. தீவினைதீக்க - தீவினை சுட்டதனால். தீந்துபோய் - கருகி. மாண்டுஅற உலர்ந்தது - இறந்து அடியோடு அழிந்த அறம். சந்திரனுக்கு அறம் உவமை. `வந்தனன் இராகவன் தூதன்! வாழ்ந்தனன் எந்தையே இந்திர னாம்’என்று ஏம்உறா அந்தம்இல் கீழ்த்திசை அளகம் வாள்நுதல் சுந்தரி முகம்,எனப் பொலிந்து தோன்றிற்றே! 18 18. ஏம்உறா - இன்பம் உற்று. இந்திரன், கீழ்த்திசைக் காவலன். வீசுறு பசுங்கதிர்க் கற்றை வெண்ணிலா ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது, காசுறு கடிமதில் இலங்கைக் காவல்ஊர் தூசுஉறை யிட்டது போன்று தோன்றிற்றால். 19 19. ஆசுற - விரைந்து. காசுஉறு - பொன்னால் அமைந்த. காவல் ஊர் தூசு உறையிட்டது போன்று - காவல் பொருந்திய துணியாகிய உறையினால் மூடியதுபோல். இகழ்வரும் பெரும்குணத்து இராமன் எய்ததுஓர் பகழியின், செலவென, அனுமன் பற்றினால் அகழ்புகுந்து, அரண்புகுந்து, இலங்கை அன்னவன் புகழ்புகுந்து உலாயதுஓர் பொலிவும் போன்றதே. 20 20. பகழியின் செலவுஎன - அம்பின் வேகத்தைப்போல. அனுமன் பற்றினால் - அனுமானுடைய தொடர்பினால். அன்னவன்புகழ் - அந்த இராமனுடைய புகழ். மாருதி இந்நகருட்புகுதல் எப்படி என்று எண்ணினான்; கோட்டை மதிலை அடைந்தான். இதைத் தாண்டுதல் அரிது என்று கருதினான்; கோட்டையின் வாயிலை அடைந்தான். வேறு மேருவை நிறுத்திவெளி செய்ததுகொல்? விண்ணோர் ஊர்புக அமைத்தபடு கால்கொல்? உலகுஏழும் சோர்வில நிலைக்கநடுவு இட்டதொரு தூணோ? நீர்புகு கடற்குவழி யோ?என நினைந்தான். 21 21. வெளி - இடைவெளி. படுகால் - ஏணி. சோர்வுஇல - வீழ்ந்து விடாமல். நடுவிட்ட - நடுவிலே நாட்டிய. படைக்கலமேந்திய காவலர்கள் கோட்டை வாயிலைக் காத்து நிற்பதைக் கண்டான். இந்த வாயில் வழியே செல்வதை விட எவ்வாறேனும் மதிலைத் தாண்டிச் செல்வதே தக்கது என்று எண்ணினான். ஆதலால் அவ்வாயிலைக் கடந்து, மதிலின் மற்றோர் புறத்தை அடைந்தான். இலங்கைமா தேவியின் எதிர்ப்பும் பணிவும் வேறு எட்டுத் தோளாள்; நாலு முகத்தாள்; உலகேழும் தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள்; சுழல்கண்ணாள்; முட்டிப் போரில் மூவுல கத்தை முதலோடும் கட்டிச் சீறும் காலன் வலத்தாள்; கமைஇல்லாள். 22 22. தொட்டுப்பேரும் - பரவி மீளும்படியான. போரில் முட்டி - போரிலே மோதி. கட்டிச் சீறும் - கட்டிவிட்டுப் பின்னும் கோபிக்கின்ற. எல்லாம் உட்கும் ஆழிஇலங்கை இகல்மூதூர் நல்லாள்; அவ்வூர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்; நில்லாய்! நில்லாய்! என்றுரை நேரா, நினையாமுன் வல்லே சென்றாள்; மாருதி கண்டான் `வருவ’ என்றான். 23 23. எல்லாம் உட்கும் - எல்லா உயிர்களும் அஞ்சத்தக்க. மூதூர் நல்லாள் - மூதூர்க்கு நன்மையைச் செய்கின்றவள். அ ஊர் வைகு - அவ்வூர் முழுவதும் தங்கும்படியான. உறைஒக்கும் - உறையைப்போன்ற (பை). நேரா - நேர்ந்து. `ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவில்லாய்! சாகா மூலம் தின்றுஉழல் வார்மேல் சலம்என்னாம்! பாகார் இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே! போகாய்’ என்றாள் பொங்குஅழல் என்னப் புகைகண்ணாள். 24 24. சாகாமூலம் - இவைகளையும் கிழக்குகளையும். சலம் - கோபப்படுவதனால். பாகுஆர் - காவலுக்கு வேண்டிய அங்கங்கள் நிரம்பிய. இஞ்சி - கோட்டை. களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம்மூள, விளியா நின்றே, `நீதி நலத்தின் வினைஓர்வான், அளியால், இவ்வூர் காணும் நலத்தால் அணைகின்றேன் எளியேன் உற்றால் யாவது உனக்குஇங்கு இழவு’என்றான். 25 25. `களியா உள்ளத்து அண்ணல், நீதிநலத்தின் வினை ஓர்வான், கதம் மூளவிளியா நின்றே’ களியா - செருக்கடையாத. கத - சினம். விளியா - அடக்கி. அளியான் - ஆசையினால். நலத்தால் - நல்லெண்ணத்துடன். `சிவபெருமான் போன்றவர்களும் இவ்வூரில் நுழைய அஞ்சுவர்; உன்னால் இவ்வூரை எப்படிப் பார்க்க முடியுமா?’ என்று சொல்லிச் சிரித்தாள். மாருதி மனத்துள் நகைத்தான். `நான் இவ்வூரைக் காணாமல் போகேன்’ என்றான். `வஞ்சம் கொண்டான், வானரம் அல்லன்! வருகாலன் துஞ்சும் கண்டால் என்னை; இவன்,சூழ் திரைஆழி நஞ்சம் கொண்டார் கண்ணுத லைப்போல் நகுகின்றான்; நெஞ்சம் கொண்டே கல்என நின்றே நினைகின்றாள்.’ 26 26. நஞ்சம்கொண்டு ஆர் - நஞ்சை எடுத்து உண்ட. `நெஞ்சம் கல் எனக்கொண்டு நின்றே’. இவ்வாறு எண்ணி ஒரு மூவிலைச் சூலத்தை மாருதியின் மேல் வீசினாள்; அவன் அதைப் பிடித்து ஒடித்தான். வழங்கும் தெய்வப் பல்படை காணாள், மலைவான்மேல் முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்; கழங்கும் பந்தும் குன்றுகொடு ஆடும் கரம்ஓச்சித் தழங்கும் செந்தீச் சிந்த அடித்தாள் தகைவுஇல்லாள். 27 27. தகைவுஇல்லாள் - தடுப்பற்றவளாகிய இலங்காதேவி. முரற்றி - ஆரவாரம் புரிந்து. கழங்கும் பந்தும் - கழங்காகவும் பந்தாகவும். குன்று கொடு - குன்றுகளை எடுத்துக்கொண்டு. அடியா முன்னம் அங்கை அனைத்தும் ஒருகையால் பிடியா `என்னே பெண்இவள், கொல்லின் பிழை?’ என்னா ஒடியா நெஞ்சத்து ஓர்அடி கொண்டான்; உயிரோடும் இடியேறு உண்ட நாகம் எனப்பார் இடைவீழ்ந்தாள். 28 28. பிடியா - பிடித்து. என்னா - என்று நினைத்து. ஒடியா நெஞ்சத்து - தளராத அவள் மார்பிலே. ஓர்அடி கொண்டான் - ஓர் அடி கொடுத்தான். இலங்கைமாதேவி கூறுவது வேறு `ஐயகேள்! வையம் நல்கும் அயன்அருள் அமைதி யாக எய்தி,இம் மூதூர் காப்பென், இலங்கைமா தேவி என்பேன்; செய்தொழில் இழுக்கி னாலே திகைத்துஇந்தச் சிறுமை செய்தேன்; `உய்தி’என்று அளித்தி யாயின் உணர்த்துவல் உண்மை.’ என்றாள். 29 29. அருள் அமைதியாக - கட்டளை அமைந்த காரணமாக. செய்தொழில் - நான் செய்யும் காவல் தொழில். இழுக்கினாலே - அழிதலால். `எத்தனை காலம் காப்பல் யான்இந்த மூதூர்?’ என்றுஅம் முத்தனை வினவி னேற்கு, `முரண்வலிக் குரங்குஒன்று உன்னைக் கைத்தலம் அதனால் தீண்டின் கழிவது;அன்று என்னைக் காண்டி; சித்திர நகரம் பின்னைச் சிதைவது திண்ணம்; என்றான். 30 30. முரண்வலி - மிகுந்த வலிமை. கழிவது - உன் காவல் நீங்குவதாகும். அன்று - அந்நாளில் வந்து. `அன்னதே முடிந்தது ஐய! `அறம்வெல்லும், பாவம் தோற்கும்’, என்னும்ஈது இயம்ப வேண்டும் தகையதோ! இனிமற்று உன்னால் உன்னிய எல்லாம் முற்றும்; உனக்கும் முற்றாதது உண்டோ? பொன்நகர் புகுதி’ என்னாப் புகழ்ந்தனள்; இறைஞ்சிப் போனாள். 31 31. -. அனுமானும் இராமனை உள்ளத்திலே எண்ணி மதிலைத் தாவி உள்ளே சென்றான்; மாளிகைகளின் ஒளியால் நகருள் இருள் இன்மை கண்டான். `பொசிவுறு பசும்பொன் குன்றில், பொன்மதில் நடுவண், பூத்து வசைஅற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து, அசைவுஇல்இவ் இலங்கை மூதூர், ஆர்இருள் இன்மை யாலோ, நிசிசரர்ஆயி னார்இந் நெடுநகர் நிருதர் எல்லாம்?’ 32 32. பொசிவுஉறு - இளகும் தன்மையுள்ள. மாடத்து - மாளிகைகளை யுடைய. இலங்கை மூதூர் - இலங்கை என்னும் பழமையாகிய ஊரில். நிருதர் எல்லாம் - அரக்கர்கள் எல்லாம். நிசிரர் - இரவில் சஞ்சரிப்பவர். ஆயினார் - ஆயிவிட்டார். என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னாத், தன்தகை அனைய மேனி சுருக்கி,மா ளிகையில் சாரச் சென்றனன், என்ப மன்னோ; தேவருக்கு அமுதம் ஈந்த குன்றென, அயோத்தி வேந்தன் புகழ்எனக் குவவுத் தோளான். 33 33. வீதி - வீதியின் நடுவிலே. இழுக்கம் - தவறாகும். தன்தகை அனைய - தனது அளவிடற்கரிய பெருமையை ஒத்த. மேனி - உடம்பை. சார - ஓரமாக. தன் உடம்பைச் சுருக்கிக் கொண்டு நடுவீதியிலே செல்லாமல் மாளிகைகளின் ஓரமாகவே சென்றான் மாருதி. மாருதி கண்ட காட்சி ஆத்துறு சாலை தோறும், ஆணையின் கூடந் தோறும், மாத்துறு மாடந் தோறும், வாசியின் பந்தி தோறும், காத்துறு சோலை தோறும், கரும்கடல் கடந்த தாளான், பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டின், போனான். 34 34. ஆத்துறு சாலை - பசுக்கள் நிறைந்த கொட்டில்கள் - மாத்துஉறு மாடம் - பெருமை பொருந்திய மாடங்கள். காத்துறு - காவல் மிகுந்த. பொறிவரி - புள்ளிகளும் கோடுகளும் பொருந்திய. சங்கொடு, சிலம்பும், நூலும், பாதசா லகமும் தாழப் பொங்குபல் முரசம் ஆர்ப்ப, இல்உறை தெய்வம் பேணிக், கொங்கலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணி கொட்டி, மங்கல கீதம் பாட, மலர்ப்பலி வகுக்கின் றாரை. 35 35. நூலும் - நூலில்கோத்த மாலைகள். பாதசாலகம் - பாதசரம். பாணிகொட்டி - கைகளால் தாளம்போட்டு. பலிவகுக்கின்றாரை - அர்ச்சனை செய்கின்றவர்களை. இழைதொடர் வில்லும்,வாளும், இருளொடு மலைய, யாணர்க் குழைதொடர் நயனக் கூர்வேல் குமரர்நெஞ்சு உருவக் கோட்டி முழைதொடர் சங்கு பேரி முகில்என முழங்க,மூரி மழைதொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின் றாரை. 36 36. இழைதொடர் - ஆபரணங்களிலிருந்து வீசும். வில், வாள், போன்ற ஒளி. யாணர்க்குழை - அழகிய குழைகளை யுடைய காதுகள் வரையிலும். கூர்வேல் - கூரிய வேற்படையை. கோட்டி - செலுத்தி. முழைதொடர் - உள்ளே துளையைக் கொண்ட. மூரி - பெரிய. கோவையும் குழையும் மின்னக், கொண்டலின் முரசம் ஆர்ப்பத் தேவர்நின்று ஆசி கூற, முனிவர்சோ பனங்கள் செப்பப், பாவையர் குழாங்கள் சூழப், பாட்டொடு வான நாட்டுப் பூவையர் பலாண்டு கூறப், புதுமணம் புணர்கின் றாரை. 37 37. சோபனங்கள் - மங்கலர கீதங்கள். பாவையர்குழாங்கள் பாட்டொடு சூழ. அனுமான் கும்பகருணனைக் காணல் இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர், எஞ்சில் விஞ்சை முயல்கறை இலாத திங்கள் முகத்தியர், முதலி னோரை மயக்கற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும், கயக்கம்இல் துயிற்சிக் கும்ப, கருணனைக் கண்ணில் கண்டான். 38 38. நாகியர் - நாககன்னியர். மயக்கற - ஐயம்இன்றி. கயக்கம்இல் - கலக்கம் இல்லாத. துயிற்சி - தூக்கத்தையுடைய. வேறு ஓசனை ஏழுஅகன்று உயர்ந்தது; உம்பரின் வாசவன் மணிமுடி கவித்த மண்டபம் ஏசுற விளங்கியது; இருளை எண்வகை ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது. 39 39. ஓசனைஏழ் அகன்று உயர்ந்தது - கும்பகர்ணன் படுக்கை அறை ஏழு யோசனை அகலமும் உயரம் உடையது. வாசவன் - இந்திரன். முடிகவித்த - முடி சூடிக்கொண்ட. மண்டபம் - சுதர்மை என்னும் மண்டபம். ஏசுஉற - இகழ்ச்சியடையும்படி. ஆசையின் திசைகளில். அன்னதன் நடுவண்ஓர் அமளி மீமிசைப் பன்னக அரசெனப், பரவை தான்என, துன்இருள் ஒருவழித் தொக்க தாம்என, உன்அரும் தீவினை உருக்கொண்டு என்னவே. 40 40. பன்னக அரசுஎன - ஆதிசேஷனைப்போல. துன்இருள் - அடர்ந்த இருட்டு. மூசிய உயிர்ப்புஎனும் முடுகு வாதமும், வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால் நாசியின் அளவையின் நடத்தக் கண்டவன், கூசினன், குதித்தனன் விதிர்த்த கையினான். 41 41. மூசிய - அடர்ந்த. உயிர்ப்பு - மூச்சு. வாதம் - காற்று. நிறுவி - நிறுத்தி. நாசியின் அளவையின் - மூக்கு வரையிலும். நடத்தக்கண்டு - அவன் - அனுமான். விதிர்த்த - உதறிய. தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல் இடைபுகல் அரியதோர் உறக்கம் எய்தினான்; கடையுக முடிவுஎனும் காலம் பார்த்து,அயல் புடைபெய ரா,நெடும் கடலும் போலவே. 42 42. தடைபுகு மந்திரம் தகைந்த - தடைபொருந்திய மந்திரத் தால் கட்டுப்பட்ட. இடைபுகல் அரியது - இடையூறில்லாத. புடைபெயராத - பொங்காத. வேறு ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர் கோஎ னாநின்ற குணம்இலி இவன்எனக் கொண்டான்; காவல் நாட்டங்கள் பொறிஉகக் கனல்எனக் கனன்றான்; ஏவ னோஇவன்? மூவரின் ஒருவனாம் ஈட்டான். 43 43. ஆவது ஆகிய - அவ்வாறான. அரக்கன் - கும்பகருணன். அரக்கர் கோ - இராவணன். குறுகி நோக்கி,மற்று, அவன்தலை ஒருபதும், குறித்த இறுகு திண்புயம் இருபதும், இவற்கிலை; என்னா மறுகி, ஏறிய முனிவுஎனும் வடவைவெம் கனலை அறிவெ னும்பெரும் பரவைஅம் புனலினால் அவித்தான். 44 44. குன்றுஒத்து இறுகு - மலைபோன்ற திண்மையான. மறுகிஏறிய முனிவு - மாறுபட்டு எண்ணியதனால் வந்த கோபம். வடவை வெம்கனல் - வடவாக்கினி. சினத்துக்கு வடவையும், அறிவுக்குப் புனலும் உவமைகள். இவன் வாழ்வும் இன்னும் சில பகல் தான் என்று கருதி அவ்விடத்தை விட்டு அகன்றான் மாருதி. மாட கூடங்கள், மாளிகை ஒளிகள், மகளிர் ஆடு அரங்குகள், அம்பலம், தேவர்ஆ லயங்கள், பாடல் வேதிகை பட்டிமண் டபம்முதல் பலவும் நாடி ஏகினன் இராகவன் புகழ்எனும் நலத்தான். 45 45. மாளிகை ஒளிகள் - மாளிகை வரிசைகள். பாடல் வேதிகை - இசைபாடும் மேடைகள். அனுமான் வீடணனைக் காணல் ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக் காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான்; வேந்தர், வேதியர், மேல்உளோர், கீழ்உளோர் விரும்பப் போந்த புண்ணியன் கண்அகல் கோயிலுள் புகுந்தான். 46 46. காந்தள் மெல்விரல் - காந்தள்போன்ற மெல்லிய விரல்களையுடைய. போந்த - பிறந்த. புண்ணியன் - புண்ணிய வானாகிய விபீஷணன். கண்அகல் - இடம் அகன்ற. பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப், பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத் தோர்பால் வெளித்து வைகுதல் அரிதுஎன, அவர்உரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமம்அன் னான்தனை உற்றான். 47 47. பளிக்குவேதிகை - பளிங்கு மேடையிலே. பவழத்தின் கூடத்து - பவழத்தாலாகிய கூடத்திலே. பசுந்தேன் - புதிய தேன். வெளித்து வைகுதல் - வெண்மை நிறமுடன் வாழ்வது. அரிதுஎன - முடியாதது என்று. அவர்உரு மேவி - அவ்வரக்கர்களைப் போலவே கருநிறம்பெற்று. உற்று நின்று?அவன் உணர்வைத்,தன் உணர்வினால் உணர்ந்தான்; `குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன்’எனக் கொண்டான்; செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறைச் சென்றான்; பொற்றை மாடங்கள் கோடிஓர் நொடியிடைப் புக்கான். 48 48. செற்றம் நீங்கிய - பகைமை நீங்கிய. ஒருசிறை - ஒரு பக்கம். பொற்றை - அழகான. இந்திரசித்தன் உறையுளில் புகுந்து அவனைக் காணுதல் முக்கண் நோக்கினன் முதல்மகன், அறுவகை முகமும் திக்கு நோக்கிய புயங்களும், சிலகரந் தனையான்; ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின் றானைப் புக்கு நோக்கினன் புகைபுகா வாயிலும் புகுவான். 49 49. முதல் மகன் - உரிமை மகனான முருகன். சிலகரந்து அனையான் - சில மறைந்து வந்ததைப் போன்றவன். ஒக்கம்; ஒக்குஅம் - ஒத்த அழகிய. `வளையும் வாள்எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ? அளையில் வாள்அரி அனையவன் யாவனோ? அறியேன் இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும் உளது’என உணர்ந்தான். 50 50. கணிச்சியான் மகனோ - சிவகுமாரனோ. அளையில் - மலைக்குகையில் வாழும். வாள்அரி - கொடிய சிங்கம். உளையஉள்ள - வருந்திப் புரிய வேண்டிய. `இவனை இன்துணை உடையபோர் இராவணன், என்னே, புவனம் மூன்றையும் வென்றதுஓர் பொருள்எனப் புகறல்! சிவனை, நான்முகத்து ஒருவனைத், திருநெடு மாலாம் அவனை அல்லவர், நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?’ 51 51. புவனம் மூன்றையும் வென்றதுஎன்றே - உலகம் மூன்றையும் வென்றதில் என்ன வியப்பிருக்கிறது? ஓர்பொருள் - அதை ஒரு பெரிய காரியம். என்று புகலேன் - என்று சொல்ல மாட்டேன். என்று கைம்மறித்து இடைநின்று காலத்தை இழப்பது அன்று, போவது!என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத் துன்று மாளிகை ஒளிகள் துரிசுஅறத் துருவிச் சென்றுதேடினன் இந்திர சித்தினைத் தீர்ந்தான். 52 52. கைமறித்து - கையை அசைத்து. இடைநின்று - இவ்விடத்தில் நின்று. காலத்தை இழப்பது அன்று - காலத்தைப் போக்குவது சரிஅன்று. பேர்வது - இதைவிட்டு நீங்குவதுதான் நன்று. ஆயிரம் ஆயிரத்து - ஆயிரக் கணக்கில். தீர்ந்தான் - நீங்கினான். அக்கன் மாளிகை கடந்துபோய் மேல்அதி காயன் தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவித் தக்க மந்திரத் தலைவர்மா மனைகளும் தாவிப் புக்கு நீங்கினன் இராகவன் சரம்எனப் புகழோன். 53 53. அக்கன் - அட்ச குமாரன்; இராவணன் மகன்; மண்டோதரியின் மகன்; இந்திரசித்துக்கு இளையவன். அதிகாயன் - இராவணன் மகன்; தாந்ய மாலினி என்பவளுக்குப் பிறந்தவன். மந்திரத்தலைவர்கள் - மந்திரிமார்கள். இன்னர் ஆம்இரும் பெரும்படைத் தலைவர்கள் இருக்கைப் பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்; கன்னி மாநகர்ப் புறத்துஅவன் கரந்துறை காண்பான் சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 54 54. கன்னிமாநகர்ப்புறத்து - அழகிய பெரிய இலங்கையில். அவன் - இராவணன். கரந்துஉறை - ஒளிந்து வாழும் இடத்தை. நடுவணது - நடுவில் உள்ளதாகிய. வேறு அன்ன வேலை அகழியை ஆர்கலி என்ன வேகடந்து இஞ்சியும் பிற்படத் துன்அ ருங்கடி மாநகர் துன்னினான்; பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம். 55 55. ஆர்கலி என்னவே - கடலைத் தாண்டியதுபோலவே. இஞ்சியும் - மதிலும். துன்னஅரும் - யாரும் நெருங்கமுடியாத. கரிய நாழிகை பாதியில், காலனும் வெருவி யோடும் அரக்கர்தம் வெம்பதி, ஒருவ னேஒரு பன்னிரண்டு ஓசனைத் தெருவும், மும்மைநூ றாயிரம் தேடினான். 56 56. கரிய - நள்ளிரவிலே. நாழிகை பாதியில் - அரை நாழி கையில். மும்மை நூறு ஆயிரம் - மூன்று நூறு ஆயிரம் தடவை. வேறு ஆயபொழுது அம்மதில் அகத்துஅரசர் வைகும் தூயதெரு ஒன்றொடுஒரு கோடிதுரு விப்போய்த் தீயவன் இருக்கைஅயல் செய்தஅகழ் இஞ்சி மேயது கடந்தனன் வினைப்பகையை வென்றான். 57 57. தூயதெரு - சுத்தமான தெருக்கள். ஒன்றொடு ஒருகோடி - இரண்டு கோடிகளையும். இருக்கை அயல்செய்த - இருப்பிடத்திற்கு அருகிலே கட்டப்பட்டுள்ள. அகழ் இஞ்சி - அகழும், மதிலும். மேயது - பொருந்தியதையும். போர்இ யற்கை இராவணன் பொன்மனை சீர்இ யற்கை நிரம்பிய திங்களாத் தார கைக்குழு வின்தழு வித்தொடர் நாரி யர்க்குறை வாம்இடம் நண்ணினான். 58 58. சீர்இயற்கை - சிறந்த தன்மை. தாரகைக் குழுவில் - நட்சத்திரக் கும்பலைப்போல. உறைவுஆம் இடம் - வசிப்பதற்கு ஆகிய இடத்தை. முயல்க ரும்கறை நீங்கிய மொய்ம்மதி அயர்க்கும் வாள்முகத்து ஆர்அமுது அன்னவர், இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார், நயக்கும், மாளிகை வீதியை நண்ணினான். 59 59. மொய்மதி - கலைநிரம்பிய மதியும். அயர்க்கும் - ஒப்பாக மாட்டாமல் வருந்தும். வாள்முகத்து - ஒளியுள்ள முகத்தைப் பெற்ற. ஆர்அமுது அன்னவர் - அரிய அமுதம் போன்றவர். அத்தி ரம்புரை யானை அரக்கன்மேல் வைத்த சிந்தையர்; வாங்கும் உயிர்ப்புஇலர்; பத்தி ரம்புரை நாட்டம் பதைப்புஅறச் சித்தி ரங்கள் எனஇருந் தார்,சிலர். 60 60. அத்திரம் புரையானை - மலைபோன்ற யானைகளை யுடைய உயிர்ப்பு - மூச்சு. பத்திரம் - மலர்இதழ். நாட்டம் - கண். பதைப்புஅற - இமைப்பின்றி. அள்ளல் வெம்சர மாரனை அஞ்சியோ, மெள்ள இன்கன வின்பயன் வேண்டியோ, கள்ளம் என்கொல் அறிந்திலம், கண்முகிழ்த்து உள்ளம் இன்றி உறங்குகின் றார்சிலர். 61 61. அள்ளல் - மிகுந்த. இன்கனவின் - நல்ல கனவின். கள்ளம் - வஞ்சக எண்ணம். கண்முகிழ்த்து - கண்களை மூடிக்கொண்டு. உள்ளம் இன்றி - நெஞ்சில் அமைதி இல்லாமல். `ஆவது ஒன்றுஅரு ளாய்!எனது ஆவியைக் கூவு கின்றிலை; கூறலை’ என்று;எனாப் பாவை பேசுவ போல்,கண் பனிப்புஉறப் பூவை யோடும் புலம்புகின் றார்சிலர். 62 62. ஆவது ஒன்று அருளாய் - எனக்கு ஆகவேண்டியது ஒன்றையும் செய்யாதிருக்கின்றாய். ஆவியை - ஆவியாகிய இராவணனை. ஆவி - உயிர். பாவை - பதுமை. பனிப்புஉற - நீர்பொருந்த. பூவை - கிளி. இனைய தன்மை இயக்கிய ஈண்டிய மனைஓர் ஆயிரம் ஆயிரம் வாயில்போய் அனைய வன்குலத்து ஆய்இழை யார்இம் நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான். 63 63. அனையவன் - அந்த இராவணனுடைய. குலத்து ஆய்இழையார் இடம் - குலமகளிர் வாழும் இடத்தை. நினைவின் - நினைத்தபடியே. இவ்வாறே அரக்க மாதர் நாலுகோடிபேர் உறையும் தெருவையும், சித்தியர் என்னும் தேவ மாதர்கள் விஞ்சை மாதர்கள் உறையுளையும் பார்த்துப் போனான். இறுதியில் இராவணன் இருக்கையை எய்துகின்றவன் மண்டோதரியின் மாளிகையைக் கண்டான்; அரம்பையர் முதலியோர் அடிவருட உறங்குகின்ற அவளைக் கண்டு `இவள்தான் சனகியோ?’ என்று ஐயுற்றான். `மானு யர்த்திரு வடிவினள் அவள்;இவள் மாறுகொண் டனள்;கூறின் தான்இ யக்கியோ, தானவர் தையலோ, ஐயுறும் தகைஆனாள்; கான்உ யர்த்ததார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையர்க்கு, மீன்உ யர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை’ என்றான். 64 64. மானுயர் - மானிட மங்கையின். இராமன்மேல் நோக்கிய - இராமன்மேல் வைத்த. காதல் மங்கையர்க்கு - காதலையுடைய மகளிர்க்கு. மீன் உயர்த்தவன் - மீன்கொடியை உயர்த்தவன்; மன்மதன். `இலக்க ணங்களும் சிலஉள என்னினும், `எல்லைசென்று உறுகில்லா அலக்கண் எய்துவது அணியதுஉண்டு,’ என்றெடுத்து அறைகுவது இவள்யாக்கை; மலர்க்க ரும்குழல் சோர்ந்து,வாய் வெரீஇச்,சில மாற்றங்கள் பறைகின்றாள்; உலக்கும் இங்குஇவள் கணவனும், அழிவும்இவ் வியன்நகர்க்கு உளது.’என்றான். 65 65. எல்லைசென்று உறுகில்லா - எல்லையில்லாத. அலக்கண் எய்துவது - துன்பம் வருவது. அணியது - சமீபத்தில் உண்டு. பறைகின்றாள் - சொல்லுகின்றாள். உலக்கும் - இறப்பான். இராவணன் இருக்கையுள் நுழைதல் புக்கு நின்று,தன் புலன்கொள நோக்கினன், பொருவரும் திருஉள்ளம் நெக்கு நின்றனன், `நீங்கும்அந் தோஇந்த நெடுநகர்த் திருஎன்னா, எக்கு லங்களின் யாவரே ஆயினும், இருவினை எல்லோர்க்கும் ஒக்கும், ஊழ்முறை அல்லது வலியதுஒன்று இல்’என உணர்வுற்றான். 66 66. புலன்கொள - கண்ணும் அறிவும் பொருந்த. நெக்கு - இளகி. ஊழ்முறை அல்லது - விதியின் ஒழுங்கைத் தவிர. நூல்பெ ருங்கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன், மறம்கூரும் வேல்பெ ரும்கடல் புடைபரந்து ஈண்டிய, வெள்ளிடை வியன் கோயில் பால்பெ ரும்கடல் பன்மணிப் பல்தலைப் பாம்பணை, அதன்மீது மால்பெ ரும்கடல் வதிந்ததே அனையதுஓர் வனப்பினன் துயில்வானை. 67 67. மறம்கூரும் - வலிமை நிறைந்த. வேல் பெரும்கடல் - வேலையுடைய சேனைக்கடல். வெள்இடை - வெளியிடம் நிறைந்த. பால்பெரும்கடல் - பாற்கடலில். பாம்பணை அதன்மீது - ஆதிசேடனாகிய பாம்பின்மேல். மால் பெருங்கடல் - மிகப்பெரிய கடல். துயில்வானை - தூங்குகின்ற இராவணனை. `துயில்வானை கேள்வியான் நோக்கினன்’. வேறு வெள்ளிவெண் சேக்கை வெந்து பொறிஎழ, வெதும்பும் மேனி புள்ளிவெண் மொக்குள் என்னப் பொடித்துவேர் கொதித்துப்பொங்கக் கள்அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பி னானை. 68 68. சேக்கை - படுக்கை. மேனி - உடம்பிலே. புள்ளிவெண் மொக்குள் என்ன - கொப்புளங்கள்போல. வேர் - வேர்வை. மாலை - மாலைகளிலே மொய்க்கும். தும்பி - ஆண் வண்டு. வண்டு - பெண் வண்டு. சாம்ப - வாட. தேவியல் நேமி யானின் சிந்தைமெய்த் திருவின் ஏகப், பூவியல் அமளி மேலாப் பொய்உறக்கு உறங்கு வானைக், காவிஅம் கண்ணி தன்பால் கண்ணிய காதல் நீரின், ஆவியை, உயிர்ப்புஎன்று ஓதும் அம்மியிட்டு அரைக்கின் றானை. 69 69. தேஇயல் நேமியானின் - தெய்வத்தன்மையமைந்த திருமாலைப் போல. மெய்த்திருவின்ஏக - உண்மையான இலக்குமியின் மேற்செல. கண்ணிய - நினைத்த. ஆவியை - உயிரை. உயிர்ப்பு - பெருமூச்சு. காதலை நீராகவும், உயிர்ப்பை அம்மியாகவும், ஆவியை அரைக்கப்படும் பொருளாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. இராவணனைக் கண்ட அனுமான் கடுஞ்சினம் தோள்ஆற்றல் என்னாகும்? மேல்நிற்கும் சொல்என்னாம்! வாள்ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி,என் தாள்ஆற்ற லால்இடித்துத், தலைபத்தும் தகர்த்து,இன்றுஎன் ஆள்ஆற்றல் காட்டேனேல், அடியேனாய் முடியேனே.’ 70 70. ஆள் ஆற்றல் - அடிமைத் திறத்தை. `காட்டேனேல் தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும்சொல் என்னாம்?’ மேல் - வருங்காலத்தில். நிற்கும்சொல் - அழியாமல் நிற்கும் புகழ். என்றுஊக்கி, எயிறுகடித்து, இருகரனும் பிசைந்துஎழுந்து, நின்றுஊக்கி உணர்ந்துரைப்பான்; `நேமியோன் பணிஅன்றால், ஒன்றுஊக்கி ஒன்றுஇழைத்தல் உணர்வுடைமைக்கு உரித்துஅன்றால்; பின்தூக்கின், இதுசாலப் பிழைபயக்கும்;’ எனப்பெயர்ந்தான். 71 71. ஊக்கி - உற்சாகம்கொண்டு. ஊக்கி உணர்ந்து - முயன்று எண்ணிப்பார்த்து. பணி - கட்டளை. ஒன்று ஊககி - ஒன்று செய்ய முனைந்து. ஒன்று இழைத்தல் - மற்றொன்றைச் செய்தல். பின்தூக்கின் - பின்பு ஆராய்ந்தால். ஆலம்பார்த்து உண்டவன்போல் ஆற்றல்அமைந்து உளர்எனினும், சீலம்பார்க்க உரியவர்கள், எண்ணாது செய்பவோ? மூலம்பார்க் குறின்,உலகை முற்றுவிக்கும் முறைத்துஎனினும் காலம்பார்த்து, இறை,வேலை கடவாத கடல்ஒத்தான். 72 72. ஆலம்பார்த்து உண்டவன் - சிவபெருமான். சீலம்பார்க்க உரியவர்கள் - ஒழுக்கத்தைப்பார்க்க உரியவர்கள். மூலம் - காரணம். இறை - சிறிது. வேலை கடவாத - கரையைத் தாண்டாத. அந்நிலையான் பெயர்த்துரைப்பான், `ஆய்வளைக்கை அணியிழையார் இந்நிலையான் உடன்துயில்வார் உளர்அல்லர்; இவன்நிலையும், புல்நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை;பூவை நன்னிலையில் உளள்என்னும் நலன்எனக்கு நல்கும்;ஆல்.’ 73 73. புல்நிலைய - அற்பத் தன்மையுள்ள. பூவை - சீதாபிராட்டி. நலன் - சுபச் செய்தியை. அனுமான் சீதையைக் காணாமல் சிந்தை நொந்து கூறியது கொன்றானோ? கற்புஅழியாக் குலமகளைக் கொடும்தொழிலால் தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை;சிறியோன் ஒன்றானும் உணரகிலேன்; மீண்டினிப்போய் என்உரைக்கேன்? பொன்றாத பொழுதுஎனக்குஇக் கொடுந்துயரம் போகாது;ஆல்.’ 74 74. சிறை செறித்தானோ - சிறையில் அடைத்தானோ. பொன்றாத பொழுது - சாகாவிட்டால். `கண்ணியநாள் கழிந்துள;ஆல், கண்டிலம்ஆல்; கனம்குழையை `விண்அடைதும்’ என்றாரை ஆண்டுஇருத்தி விரைந்தயான் எண்ணியது முடிக்ககிலேன்; யான்முடியாது இருப்பேனோ? புண்ணியம்என்று ஒருபொருள்என் உழைநின்றும் போயது;ஆல். 75 75. கண்ணிய நாள் - குறிக்கப்பட்ட நாள். யான்முடியாத - இனிமேல் நான் இறக்காமல். `ஏழுநூறு ஓசனைசூழ்ந்து எயில்கிடந்தது இவ்இலங்கை வாழும்மா மன்உயிர்,யான் காணாத மற்றுஇல்லை; ஊழியான் பெரும்தேவி ஒருத்தியுமே யான்காணேன், ஆழிதாய், இடர்ஆழி இடையேவீழ்ந்து அழிவேனோ?’ 76 76. சூழ்ந்து - சுற்றி. மன்உயிர் - மன்னுயிர்களிலே. ஒருவரை யும் - ஒருவரை மட்டும். ஆழிதாய் - கடலைத் தாண்டிவந்தும். `வல்அரக்கன் தனைப்பற்றி, வாய்ஆறு குருதிஉகக், கல்அரக்கும் கரதலத்தால், காட்டுஎன்று காண்கேனோ? எல்அரக்கும் அயில்நுதிவேல் இராவணனும், இவ்வூரும் மெல்அரக்கின் உருகிவிழ, வெம்தழலால் வேய்கேனோ?’ 77 77. வாய்ஆறு - வாயின்வழியே. கல்அரக்கும் - மலையையும் அழுந்தும்படி செய்யும். எல்அரக்கும் - கதிர் ஒளியையும் துன்புறுத்தும்படியான. வேய்கேனோ - மூடுவனோ. `வானவரே முதலோரை வினவுவனேல், வல்அரக்கன் தான்ஒருவன் உளனாக, உரைசெய்யும் தருக்குஇலர்;அல், ஏனையர்கள் எங்குஉரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ? ஊன் அழிய நீங்காத உயிர்சுமந்த உணர்வுஇல்லேன்.’ 78 78. உளன்ஆக - இருப்பதனால். உரைசெய்யும் - சொல்லும். தருக்கு - வலிமை. எள்உறையும் ஒழியாமல் யாண்டையினும் உளனாய்த்,தன் உள்உறையும் அழகனைப்போல் எம்மருங்கும் உலாவுவான்; புள்உறையும் மானத்தை உறநோக்கிப் புறம்போவான், கள்உறையும் மலர்ச்சோலை அயல்ஒன்று கண்உற்றான். 79 79. எள்உறையும் ஒழியாமல் - என்அளவு இடத்தையும் விடாமல். ஒருவனைப்போல் - ஒப்பற்றவனைப்போல. மானத்தை - மண்டபத்தை. புறம் - வெளி. கள் - தேன். 3. காட்சிப் படலம் `மாடுநின்றஅம் மணிமலர்ச் சோலையை மருவித் தேடி, அவ்வழிக் காண்பெனேல் தீரும்என் சிறுமை; ஊடு கண்டிலென் என்னில்பின் உரியதுஒன்று இல்லை; வீடு வேன்;மற்றுஇவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி. 1 காட்சிப் படலம்: சீதையை அனுமான் பார்த்ததைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. மாடுநின்ற - பக்கத்திலேயிருந்த. அம்மணி மலர்ச் சோலையை - அந்த அழகிய பூஞ்சோலையை. என்சிறுமை - என் துன்பம். ஊடு - அச்சோலை யினிடையே. உரியது - வேறு செய்வதற்கு உரியது. விலங்கல்மேல் - மலைமேல் உள்ள. வீட்டி - அழித்து. வீடுவேன் - இறப்பேன். என்று சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்; ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்; அன்று வாள்அரக் கன்சிறை அவ்வழி வைத்த துன்றுஅல் ஓதிதன் நிலைஇனிச் சொல்லுவான் துணிந்தாம். 2 2. வானவர் ஒன்றி - தேவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து. துன்று அல்ஓதி - நிறைந்த இருள்போன்ற கூந்தலையுடைய சீதையின். வன்ம ருங்குல்வாள் அரக்கியர் நெருக்கஅங்கு இருந்தாள்; கல்ம ருங்குஎழுந்து என்றும்ஓர் துளிவரக் காணா நல்ம ருந்துபோல், நலன்அற உணங்கிய நங்கை, மெல்ம ருங்குல்போல் வேறுஉள அங்கமும் மெலிந்தாள். 3 3. வன்மருங்குல் - வலிய இடையை உடைய. கல்மருங்கு - கல்லில். துளி - மழைத்துளி. உணங்கிய - வருந்திய. `வேறுள அங்கமும் மருங்குல் போல் மெலிந்தாள்.’ துயில்எ னக்,கண்கள் இமைத்தலும், முகித்தலும், துறந்தாள் வெயில்இ டைத்தந்த விளக்குஎன ஒளியிலா மெய்யாள்; மயில்இ யல்குயில் மழலையாள், மான்இளம் பேடை அயில்எ யிற்றுவெம் புலிக்குழாத்து அகப்பட்டது அன்னாள். 4 4. வெயில் இடைத்தந்த - வெயிலிலே வைத்த. மான் இளம்பேடை - இளம் பெண்மான். விழுதல், விம்முதல், மெய்யுற வெதும்புதல், வெருவல், எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித் தொழுதல், சோருதல், துளங்குதல், துயர்உழந்து உயிர்த்தல், அழுதல் அன்றி,மற்று அயல்ஒன்றும் செய்குவது அறியாள். 5 5. விம்முதல் - விம்மிவிம்மி அழுதல். மெய்உற வெம்புதல் - உடல் மிகவும் வெப்பமடைதல். ஏங்குதல் - இளைத்தல். துளங்குதல் - நடுங்குதல். `அரிது போகவோ விதிவலி கடத்தல்’என்று அஞ்சிப் `பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச், சுருதி, நாயகன் வரும்வரும் என்பதுஓர் துணிவால், கருதி, மாதிரம் அனைத்தையும் அளிக்கின்ற கண்ணாள். 6 6. `விதிவலி கடத்தல் போகவோ அரிது’ பாரா - பார்த்து. சுருதி நாயகன் - இராமன். ஆவி அம்துகில் புனைவதுஒன்று அன்றி,வேறு அறியாள்; தூவி அன்னம்,மென் புனல்இடைத் தோய்கிலா மெய்யாள்; தேவு, தெண்கடல் அமிழ்துகொண்டு அநங்கவேள் செய்த ஓவி யம்புகை உண்டதே ஒக்கின்ற உருவாள். 7 7. ஆவி அம் துகில் - ஆவி போன்ற அழகிய உடையை. தூவி அன்னம் - சிறகுகளையுடைய அன்னம் போன்றவள். தேவு - தெய்வத்தன்மை பொருந்திய. அநங்கவேள் - மன்மதன். `நான் இலங்கையில் இருப்பதை இளவல் அறியானோ? என்னைக் காக்க வந்த கழுகரசன் மாண்டான். என் நிலையை அறிவிப்பார் வேறு யார் உண்டு?’ என்று எண்ணி ஏங்கினாள். சீதையின் சிந்தனை `என்னை, நாயகன், இளவலை எண்ணிலா வினையேன் சொன்ன வார்த்தைகேட்டு, அறிவிலள், எனத்துறந் தானோ? முன்னை ஊழ்வினை முடிந்ததோ? என்றென்று முறையால் பன்னி, வாய்புலர்ந்து உணர்வுதேய்ந்து ஆர்உயிர் பதைப்பாள். 8 8. `எண்ணிலா வினையேன் இளவலைச் சொன்னவார்த்தை கேட்டு, என்னை நாயகன், அறிவிலள்எனத் துறந்தானோ’. ஊழ்வினை - ஊழ்வினையால் இவ்வாறு. `அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்?’என்று அழுங்கும்; `விருந்து கண்டபோது என்உறு மோ?’என்று விம்மும்; `மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு’என்று மயங்கும்; இருந்த மாநிலம் செல்அரித் திடவும்ஆண்டு எழாதாள். 9 9. மெல்அடகு - மெல்லிய இலை உணவு. செல்அரித்திடவும் - கரையான் அரித்துவிடவும். `பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும்வந்து எய்திக் கொற்ற மாநகர்க் கொண்டுஇறந் தார்கொலோ? குறித்துச் சொற்ற ஆண்டெலாம் உறைந்துஅன்றி அந்நகர்த் துன்னான்; உற்றது உண்டு;’எனாப், படர்உழந்து உறாதன உறுவாள். 10 10. குறித்துச்சொற்ற - குறித்துச் சொன்ன. உற்றது உண்டு - அவர்களுக்கு நேர்ந்த துனபம் ஏதோ உண்டு. உறாதன - அடையமுடியாத துன்பங்களை. மெய்த்தி ருப்பதம் மேவுஎன்ற போதினும் இத்தி ருத்துறந்து ஏகுஎன்ற போதினும் சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள். 11 11. திருப்பதம் - செல்வமாகிய அரச பதவியை. மேவு - அடைக. ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, `எம்பிநின் தம்பி,நீ தோழன்;மங்கை கொழுந்தி.’ எனச்சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள். 12 12. அம்பி கடாவிய - ஓடம் செலுத்திய. வாழி நண்பு - அழியாத நட்பு. உரங்கொள் தேம்மலர்ச் சென்னி, உரிமைசால் வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன், திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள். 13 13. உரங்கொள் தேம் மலர் சென்னி - வலிமையைக் கொண்ட தேன் சொரியும் மலர்களை அணிந்த தலையிலே. திரங்கு - சுருண்ட. தம்பி பரதன். பரித்த செல்வம் ஒழியப் படரும்நாள், அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து,அவன் கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டு,இறை சிரித்த செய்கை நினைந்துஅழும் செய்கையாள். 14 14. பரித்த செல்வம் - தாங்கிய அரச செல்வம். அருத்தி - ஆசையையுடைய. மழுவின் வாளினன், மன்னரை மூவெழு பொழுதில் நூறிப், புலவுஉறு புண்ணின்நீர் முழுகி னான்தவ மொய்ம்பொடு மூரிவில் தழுவும் மேன்மை நினைந்துஉயிர் சாம்புவாள். 15 15. மழுவின் வாளினன் - பரசுராமன். மூவெழுபொழுதில் - இருபத்தொரு தலைமுறை வரையிலும். புலவுஉறு - புலால் நாற்றம் பொருந்திய. தவமொய்ம்பு - தவவலிமை. மூரி - பெரிய. சாம்புவாள் - சோர்வாள். ஏக வாளி,அவ் விந்திரன் காதல்மேல் போக ஏவி, அதுகண் பொடித்தநாள், காகம் முற்றும்ஓர் கண்இல ஆகிய வேக வென்றியைத் தன்தலை மேல்கொள்வாள். 16 16. ஏகவாளி - ஒரு கணையை. அவ்விந்திரன் காதல்மேல் - அந்த இந்திரன் மகனாகிய சயந்தன்மேல். அது - அவ்வாளி. கண்பொடித்த நாள் - அக்காகத்தின் கண்ணைக்கெடுத்த நாள்முதல். வேக வென்றியை - விரைந்த வெற்றியை எண்ணி. காக்கை வடிவில் வந்த சயந்தன்மேல் இராமன் கணையை ஏவிக் கண்ணைப் பறித்தான் என்பது கதை. வெவ்வி ராதனை மேவுஅரும் தீவினை வவ்வி, மாற்றரும் சாபமும் மாற்றிய அவ்வி ராமனை உன்னித்தன் ஆர்உயிர் செவ்வி ராது,உணர்வு ஓய்ந்து,உடல் தேம்புவாள். 17 17. மேவு - பொருந்திய. அரும் - கொடிய. செவ்இராது - செம்மையாக இல்லாமல். தேம்புவாள் - வாடுவாள். அரக்கியர் அனைவரும் உறங்க, திரிசடையைப் பார்த்துச் சீதை உரைத்தல். ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால் தாயினும் இனியவள், தன்னை நோக்கினாள்; `தூயநீ கேட்டிஎன் துணைவி ஆம்’எனா, மேயதோர் கட்டுரை விளம்பல் மேயினாள். 18 18. -. `நலம்துடிக் கின்றதோ? நான்செய் தீவினை சலம்துடித்து இன்னமும் தருவது உண்மையோ? பொலம்துடி மருங்குலாய்! புருவம், கண்முதல், வலம்துடிக் கின்றில; வருவது ஓர்கிலேன்;’ 19 19. நலம் துடிக்கின்றதோ - நன்மைக்காகத் துடிக்கின்றதோ? தீவினை - பாவமானது. சலம்துடித்து - வஞ்சகமாகத் துடித்து. தருவது - தீமையைத் தருவது. உண்மையோ - உண்டோ. வலம் துடிக்கின்றில - வலம் துடிக்கவில்லை; இடந்துடிக்கின்றது. `முனியொடு, மிதிலையின் முதல்வன் முந்தும்நாள் துணியறு புருவமும், தோளும், நாட்டமும், இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டுஎன, நனிதுடிக் கின்றன, ஆய்ந்து நல்குவாய்.’ 20 20. -. `மறந்தனென்; இதுவும்ஓர் மாற்றம் கேட்டியால்; அறம்தரு சிந்தை,என் ஆவி நாயகன் பிறந்தபார் முழுவதும் தம்பி யேபெறத் துறந்து,கான் புகுந்தநாள் வலம்து டித்ததே.’ 21 21. பிறந்த பார் - பிறந்து உரிமைபெற்ற அரசு. நஞ்சுஅனை யான்,வனத்து இழைக்க நண்ணிய வஞ்சனை நாள்வலம் துடித்த; வாய்மையால் எஞ்சல; ஈண்டுதாம் இடம்து டிக்கும்ஆல்; `அஞ்சல்’என்று இரங்குவதற்கு அடுப்பது யாது?’என்றாள். 22 22. நஞ்சு அனையான் - இராவணன். `வனத்து வஞ்சனை இழைக்க நண்ணிய நாள்’. எஞ்சல - வீண்போகவில்லை. இரங்குவதற்கு - இரங்கிக் கூறும்படி. திரிசடையின் மொழிகள் என்றலும் திரிசடை, `இயைந்த சோபனம்! நன்றுஇது நன்று’எனா நயந்த சிந்தையாள், உன்துணைக் கணவனை உறுதல் உண்மையால், அன்றியும் கேட்டி,என்று அறைதல் மேயினாள். 23 23. -. `உன்நிறம் பசப்புஅற, உயிர்உ யிர்ப்புற. இன்நிறத் தென்இசை இனிய நண்பினால், மின்நிற மருங்குலாய்! செவியில் மெல்லென பொன்நிறத் தும்பிவந்து ஊதிப் போயது;ஆல்.’ 24 24. உன்நிறம் பசப்பு அற - உன் நிறமான பசலை நீங்க. உயிர் உயிர்ப்பு உற - உயிர் கிளர்ச்சியடைய. இன்நிறம் தென்இசை - இனிய தன்மையுள்ள அழகிய இசையை. தும்பி - வண்டு. `ஆயது தேரின்,உன் ஆவி நாயகன் ஏயது தூதுவந்து எதிர்தல் உண்மை;ஆல், தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்,என் வாயது கேள்’என மறித்தும் கூறுவாள். 25 25. ஆயது தேரின் - உண்டாகிய சகுனத்தை ஆராய்ந்தால். ஏயது – செலுத்தப் பட்டதாகிய. எதிர்தல் - காண்பது. என்வாய் அதுகேள் - என்பால் நிகழ்ந்ததையும் கேட்பாயாக. இராவணன் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தென் திசைச் சென்றான்; அவனது உய்யான வனம் தீப்பற்றி எரிந்தது; விண்மீன்கள் உதிர்ந்தன; கற்பக மலர்மாலைகள் புலால் நாற்றம் நாறின; விளக்குகளை இருள் விழுங்கிற்று; தோரணங்கள் அறுந்தன; யானைகளின் மருப்புக்கள் ஒடிந்தன; பூரண கும்பங்களிலே நறவு பொங்கிற்று; இரத்த மழை பொழிந்தது; மங்கையர்களின் தாலி தாமே அறுந்து வீழ்ந்தன. `மன்னவன் தேவிஅம் மயன்ம டந்தைதன் பின்அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன; துன்அரும் சுடர்சுடச் சுறுக்கொண்டு ஏறிற்றால்; இன்னல்உண்டு எனும்இதற்கு ஏது என்பதே.’ 26 26. மயன்மடந்தை - மண்டோதரி. பிறங்கி - நிலைகுலைந்து, துன்அரும் சுடர் - நெருங்கமுடியாத நெருப்பு. சுட - சுட்டதனால். சுறுக்கொண்டு - சுர்என்று பற்றிஎரிந்து தீநாற்றம் வீசின. ஏதுஈது - காரணம் இதுதான். என்றனள் இயம்பி,`வேறு இன்னும் கேட்டியால்! இன்றுஇவண் இப்பொழுது இயைந்தது ஓர்கனா; வண்துணைக் கோளரி இரண்டு, மாறுஇலாக் குன்றிடை உழுவையம் குழுக்கொண்டு ஈண்டியே.’ 27 27. மாறுஇலா - ஒப்பில்லாத. குன்றிடை - குன்றில் வாழும். உழுவையம் குழுக்கொண்டு - புலிக்கூட்டங்களைச் சேர்த்துக் கொண்டு. `உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம் நிரம்புற வளைந்தன, நெருக்கி நேர்ந்தன; வரம்புஅறு பிணம்படக் கொன்று, மாறுஇலா; புரம்புக இருந்ததுஓர் மயிலும் போயது;ஆல்.’ 28 28. மதகரி - மதயானைகள். நிரம்புற - நிறையும்படி. நெருக்கி நேர்ந்தன - போர்செய்து எதிர்ந்தன. குரம்புஅறு - அளவில்லாத. மாறு இலா - பகையற்ற. புரம்புக - தனது நகரத்திற்குச் செல்ல. `ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய சேய்ஒளி விளக்கம்ஒன்று ஏந்திச், செய்யவள் நாயகன் தனிமனை நின்று, நண்ணுதல் மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய்!’ 29 29. மாட்டிய - இணைத்த. சேய்ஒளி - மிகுந்த ஒளியை யுடைய. நாயகன் - இராவணன். `வீடணன் கோயில் நண்ணுதல் மேயினள்’. `இச்சமயத்தில் என்னை எழுப்பினை இன்னும் கனவு முடியவில்லை;’ என்றாள் திரிசடை. `நீ குறைக்கனவையும் காண்க’ என்றாள் சீதை. இச்சமயம் அனுமான் அவ்விடத்தை அடைந்தாள். அரக்கியர் தோற்றம் வயிற்றிடை வாயினர், வளைந்த நெற்றியில் குயிற்றிய விழியினர், கொடிய நோக்கினர் எயிற்றினுக்கு இடைஇடை யானை, யாளி,பேய் துயில்கொள்வெம் பிலன்எனத் தொட்ட வாயினார். 30 30. குயிற்றிய - செய்த. வெம்பிலன்என் - கொடிய சுரங்கம் என்று சொல்லும்படி. ஒருபது கையினர், ஒற்றைச் சென்னியர்; இருபது தலையினர், இரண்டு கையினர்; வெருவரு தோற்றத்தர், விகட வேடத்தர்; பருவரை எனமுலை பலவும் நாற்றினர். 31 31. வெருவரு - அருவறுக்கத்தக்க. நாற்றனிர் - தொங் கினவர்கள். கரி,பரி வேங்கை,மாக் கரடி, யாளி,பேய் அரி,நரி நாய்என அணிமு கத்தினர்; வெரிந்உறு முகத்தினர்; விழிகள் மூன்றினர்; புரிதரு கொடுமையர்; புகையும் வாயினார். 32 32. -. எண்ணினுக்கு அளவுஇடல் அரிய ஈட்டினர்; கண்ணினுக்கு அளவுஇடல் அரிய காட்சியர்; பெண்எனப் பெயர்கொடு திரியும் பெற்றியர்; துண்எனத் துயில்உணர்ந்து எழுந்து சுற்றினார். 33 33. -. ஆயிடை உரைஅவிந்து, அழகன் தேவியும் தீஅனை யவர்முகம் நோக்கித் தேம்பினாள்; நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான், ஓய்விலன்; உயர்மரப் பணையின் உம்பரான். 34 34. `ஓய்விலன் நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான்’ பணையின் உம்பரான் - கிளையின் மேலிருந்தான். அனுமான் அரக்கியர் இடையிலே சீதையைக் காணல் கடக்கரும் அரக்கியர் காவல் சுற்றுளாள் மடக்கொடி சீதையாம் மாத ரேகொல்? ஆம் கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந் தடத்துஇடை இருந்ததுஓர் அன்னத் தன்மையாள். 35 35. கடல்துணை நெடிய - கடல்அளவு நீண்ட. நீர்பெரும் தடத்திடை - நீர் நிறைந்த பெரிய குளத்திலே. அன்னத்தன்மையாள் - அன்னத்தின் இயல்புள்ளவள். `மூவகை உலகையும் முறையின் நீக்கிய பாவி,தன் உயிர்கொள்வான் இழைத்த பண்புஇதுஆல் ஆவதே! அரவுஅணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன்,இவள் கமலச் செல்வியே.’ 36 36. பாவி இராவணன். உயிர்கொள்வான் - உயிருடன் வாழ்வதற்கு. ஆவதோ - அது நடக்கக்கூடியதா? `வீடினது அன்றுஅறன்; யானும் வீகலேன்; தேடினென் கண்டனென் தேவி யே!’எனா, ஆடினன், பாடினன், ஆண்டும் ஈண்டும்பாய்ந்து ஓடினன்; உலாவினன்; உவகைத் தேன்உண்டான். 37 37. அறன் வீடினது அன்று - அறம் அழிந்ததில்லை. `மாசுண்ட மணிஅனாள், வயங்கு வெங்கதிர்த் தேசுஉண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்; காசுஉண்ட கூந்தலாள் கற்பும், காதலும் ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறுஉண்டோ?’ 38 38. கதிர்தேசு உண்ட - சூரிய ஒளியினால் சூழப்பட்ட. காசுஉண்ட - அழுக்குப்படிந்த. ஈறு - முடிவு. `தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர்; அறமும் ஈறுஇன்றால், யாவதுஇங்கு இனிச்செயல் அரியது எம்பிராற்கு? ஆவஎன் அடிமையும் பிழைப்பின் றாம்;அரோ!’ 39 39. பிழைத்திலர் - தவறு செய்திலர். ஆவ; ஆஅ - வியப்புக்குறி. `தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ? கற்பின் காவலோ? அருமையே! அருமையே! யார்இது ஆற்றுவார்? ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ?’ 40 40. நல்வினைக் கருமம் - நல்வினையாகிய காரியம். ஒருமையே - இது ஒப்பற்ற தன்மையாகும். இவ்வாறு நினைந்து அனுமான் மரச்செறிவிலே மறைந்திருந்தான். 4. நிந்தனைப் படலம் இராவணன் வருகை சிகரவண் குடுமி நெடுவரை எவையும் ஒருவழித் திரண்டன சிவண, மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண்திறல் தோள்புடை வயங்கச், சகரநீர் வேலை தழுவிய கதிரின், தலைதொறும் தலைதொறும் தயங்கும், வகையபல் மகுடம் இளவெயில் எரிப்பக், கங்குலும் பகல்பட வந்தான். 1 நிந்தனைப் படலம்: சீதை இராவணனை இகழ்ந்துரைத் ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. சிவண - ஒப்ப. `சகரநீர்வேலை தழுவியகதிரில் மகரிகை வயிர குண்டலம் அலம்பு திண்திறல் தோள்புடை வயங்க’ சகரநீர் வேலை - கடல். தழுவியகதிரில் - தழுவிய சூரியனைப்போல. மகரிகை வயிரகுண்டல - மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட வயிரகுண்டலங்கள். அலம்பு - அசைகின்ற. நீல்நிறக் குன்றின் நெடிதுறத் தாழ்ந்த நீத்தவெள் அருவியின், நிமிர்ந்த பால்நிறப் பட்டின் மாலைஉத் தரியம் பண்புறப், பசும்பொன்ஆ ரத்தின் மால்நிற மணிகள் இடையுறப் பிறழ்ந்து வருகதிர் இளவெயில் பொருவச், சூழ்நிறக் கொண்மூக் கிழித்துஇடை துடிக்கும் மின்என, மார்பின்நூல் விளங்க. 2 2. நீத்தம்வெள் அருவியின் - வெள்ளமாகிய வெண்மை நிறமுள்ள அருவியைப்போல. மாலை - மாலiயாகிய. பண்புஉற - அழகாக விளங்க. ஆரத்தின் - மாலையால். மால்நிற மணிகள் - சிறந்த நிறமுள்ள மணிகள். இடைஉற - இடையிலே பொருந்த. பிறழ்ந்து - விளங்கி. பொருவ - ஒப்ப. சூழ்நிறக் கொண்மூ - கருக்கொண்ட மேகத்தை. மார்புக்கு நீலநிறக்குன்றும் மேகமும்; மேலாடைக்கு அருவி; பொன்னாரத்தில் உள்ள மணி ஒளிக்கு இளவெயில்; பூணூலுக்கு மின்னல்கொடி; உவமைகள். மாலையும், சாந்தும், கலவையும், பூணும், வயங்குநுண் தூசொடு, காசும் சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும் கொண்டுபின் தொடரப், பாலின்வெண் பரவைத் திரைகரும் கிரிமேல் பரந்துஎனச் சாமரை பதைப்ப, வேலைநின்று உயரும்முயல்இல்வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க. 3 3. நுண்தூசொடு - மெல்லிய ஆடைகளோடு. காசு - பொன். தொழுதி - தொகுதி. பதைப்ப - ஆட. சாமரத்திற்குப் பாற்கடலின் அலையும், வெண்குடைக்கு முயல் இல்லாத முழுமதியும் உவமைகள். கேடகத் தோடு, மழு,எழு, சூலம், அங்குசம், கப்பணம் கிடுகோடு ஆடகச் சுடர்வாள், அயில்,இலை, குலிசம், முதலிய ஆயுதம் அனைத்தும், தாடகைக்கு இரட்டி எறுழ்வலி தழைத்த தகைமையர், தடவரை பொறுக்கும் சூடகத் தடக்கைச், சுடுசினத்து அடுபோர் அரக்கியர் தலைதொறும் சுமப்ப. 4 4. எறுழ்வலி - மிகுந்த வலிமை. தடவரை பொறுக்கும் - பெரிய மலையைத் தாங்கும். ஆடகம் - கங்கணம். அனுமான் பொறுமை இனையதுஓர் தன்மை எறுழ்வலி அரக்கர் ஏந்தல்,வந்து எய்துகின் றானை, அனையதுஓர் தன்மை, அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவுற நோக்கி, `வினையமும், செயலும், மேல்விளை பொருளும், இவ்வழி விளங்கும்’என்று எண்ணி, வனைகழல் இராமன் பெரும்பெயர் ஓதி, இருந்தனன் வந்துஅயல் மறைந்தே. 5 5. எய்துகின்றானை - அடைகின்றவனை. அனையது ஓர்தன்மை - அப்படிப்பட்ட ஒப்பற்ற தன்மையுள்ள. அஞ்சனை சிறுவன் - அனுமான். வினையமும் - தந்திரமும். ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும், அல்லவும், வேறுஅயல் அகல மேயினன், பெண்ணின் விளக்கெனும் தகையாள் இருந்துழி; ஆண்டுஅவள், வெருவி, போயின உயிரள் ஆம்என நடுங்கிப், பொறிவரி, எறுழ்வலிப், புகைக்கண், காய்சின உழுவை தின்னிய வந்த கலைஇளம் பிணைஎனக் கரைந்தாள். 6 6. மேயினன் - வந்தான். பொறிவரி - புள்ளிகள் பொருந்திய கோடு. காய்சினம் - சுடுகின்ற கோபம். உழுவை - புலி. கலை இளம்பிணை - கலையாகிய இளைய பெண்மான். புலி இராவணனுக்கும். பெண்மான் சீதைக்கும் உவமைகள். வேறு கூசி, ஆவிகுலைவுறு வாளையும், ஆசை யால்,உயிர் ஆசுஅழி வானையும், காசுஇல் கண்இணை சான்றுஎனக் கண்டனன் ஊசல் ஆடி உளையும்உ ளத்தினான். 7 7. கூசி - அஞ்சி. உயிர்ஆசு - உயிருக்குப் பற்றுக்கோடான உடம்பு. காசுஇல் - குற்றமற்ற. வாழி சானகி! வாழிஇ ராகவன்! வாழி நான்மறை! வாழியர் அந்தணர்! வாழி நல்அறம்! என்றுஉற வாழ்த்தினான்; ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான். 8 8. -. இராவணன் இரப்புரை அவ்வி டத்துஅருகு எய்தி அரக்கன்தான், `எவ்வி டத்துஎனக்கு இன்அருள் ஈவது? நொவ்இ டைக்குயி லே!நுவல்க!’ என்றனன், வெவ்வி டத்தை அமுதுஎன வேண்டுவான். 9 9. எவ்விடத்து - எப்பொழுது. நொவ்இடை - வருந்துகின்ற இடையையுடைய. ஈசற்கு ஆயினும் ஈடுஅழி வுற்று,இறை, வாசிப் பாடுஅழி யாத மனத்தினான் ஆசைப் பாடும்அந் நாணும் அடர்த்திடக் கூசிக்கூசி இனையன கூறினான். 10 10. ஈசற்காயினும் - ஈசனுக்குக்கூட. வாசிப்பாடு - பெருமிதம். அடர்த்திட - துன்புறுத்த. இன்று இறந்தன, நாளை இறந்தன, என்தி றம்தரும் தன்மையிது ஆல்!எனைக் கொன்று இறந்தபின் கூடுதி யோ!குழை சென்று இறங்கி மறம்தரும் செங்கணாய்!’ 11 11. என்திறம் தரும் - என்பால் அருள்செய்யும். இது(ஆல்) - இத்தன்மை. கொன்று - துன்புறுத்தி. இறந்தபின் - நான் மாண்டபின். குழைசென்று - காதளவு சென்று. இறங்கி - மீண்டு. மறம்தரு - கொலைத்தொழில் செய்கின்ற. `ஈண்டு, நாளும், இளமையும், மீண்டில; மாண்டு மாண்டு பிறிதுஉறும் மாலைய; வேண்டும் நாள்,வெறி தேவிளிந் தால்,இனி யாண்டு வாழ்வது? இடர்உழந்து ஆழ்தியோ?’ 12 12. ஈண்டு நாளும் - நிரம்பிய வாழ்நாளும். பிறிதுஉறும் மாலைய - வேறுபடும் தன்மையுடையன. வேண்டும் - விரும்பும். விளிந்தால் - இறந்தால். `வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல் கேட்டும், காண்டற்கு இருத்திகொல் கிள்ளைநீ! நாட்டும் கால்,நெடு நல்லறத் தின்பயன் ஊட்டும் காலத்து, இகழ்வது உறும்கொலோ?’ 13 13. வீட்டும் காலத்து - நான் இராமனைக் கொல்லும்போது. நாட்டுங் கால் - சொல்லுமிடத்து. இகழ்வது - இகழத்தக்க தீமை. `தேவ தேவியர் சேவடி கைதொழும், தாவில் மூவுல கின்தனி நாயகம், மேவு கின்றது நுன்கண்; விலக்கினை; ஏவர் ஏழையர் நின்னின்? இலங்குஇழாய்!’ 14 14. தனிநாயகம் - ஒப்பற்ற தலைமை. நுன்கண்- உன்னிடம். இலங்கு இழாய் - விளங்கும் அணிகளையுடையவளே! சீதையின் சீற்றம் `அஞ்சினை ஆதலால்,அன்று ஆரியன் அற்றம் நோக்கி, வஞ்சனை மான்ஒன்று ஏவி, மாயையால் மறைந்து வந்தாய்! உஞ்சனை போதி யாயின், விடுதி!உன் குலத்துக் கெல்லாம் நஞ்சினை எதிர்ந்த போது நோக்குமே நினது நாட்டம்.’ 15 15. ஆரியன் - இராமன். அற்றம் நோக்கி - இல்லாத சமயம் பார்த்து. மாயையால் - வஞ்சகத்தால். நினதுநாட்டம் நோக்குமோ - உனதுகண் அதைப் பார்க்குமோ. `பத்துள தலையும், தோளும், பலஉள பகழி தூவி வித்தக வில்லி னாற்குத் திருவிளை யாடற்கு ஏற்ற சித்திர இலக்கம் ஆகும்; அல்லது செருவில் ஏற்கும் சத்தியை போலும் மேல்நாள் சடாயுவால் தரையின் வீழ்ந்தாய்!’ 16 16. -. `தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்றாய்; அன்றெனின் இறத்தி அன்றே? நோற்றநோன்பு, உடைய வாழ்நாள், வரம்,இவை நுனித்த எல்லாம் கூற்றினுக்கு அன்றே, வீரன் சரத்துக்கும் குறித்தது உண்டோ? 17 17. நுனித்த எல்லாம் - மற்றும் ஆராய்ந்து தேடியவைகளை எல்லாம். கூற்றினுக்கு அன்றே - கூற்றுவனுக்குத்தான் தடை யாகும். சரத்துக்கும் - அம்புக்கும். குறித்தது - எல்லை குறித்தது. `மறம்திறம் பாத தோலா வலியினர் எனினும், மாண்டார் அறம்திறம் பினரும், மக்கட்கு அருள்திறம் பினரும் அன்றே; பிறந்துஇறந்து உழலும் பாசப் பிணக்குஉடைப் பிணியின் தீர்ந்தார், துறந்துஅரும் பகைகள் மூன்றும் துடைத்தவர், பிறர்யார் சொல்லாய்?’ 18 18. மறம் திறம்பாத - வீரம் குறையாத. `அறம்திறம்பினரும், மக்கட்கு அருள்திறம்பினரும், மாண்டார் அன்றே’. பாசப்பிணிக்கு - ஆசைத் துன்பம். தென்தமிழ் உரைத்தோன் முன்னாத், தீதுதீர் முனிவர் யாரும் புன்தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்! நோற்கிலெம்; புகுந்த போதே கொன்றுஅருள்! நின்னால் அன்னார் குறைவது சரதம்! கோவே!’ என்றனர்; யானே கேட்டேன்; நீஅதற்கு இயைவ செய்தாய். 19 19. உரைத்தோன் - இலக்கணம் கூறியவன். முன்னா - முதலிய. குறைவதுசரதம் - அழிவது நிச்சயம். `உன்னையும் கேட்டு, மற்றுஉன் ஊற்றமும், உடைய நாளும், பின்னைஇவ் அரக்கர் சேனைப் பெருமையும், முனிவர் பேணிச் சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும், தாளும் சின்னபின் னங்கள் செய்த அதனைநீ சிந்தி யாயோ!’ 20 20. உன்னையும்கேட்டு - உன்னைப்பற்றியும் கேட்டறிந்து. உன்ஊற்றமும் - உன்னுடைய வலிமையையும். உம்பியர் - கரதூடண, திரிசிரர்கள். அதனை - அவ்வீரத்தை. `கடிக்கும்வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின் றோயை, `அடுக்கும்ஈது, அடாது,`என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி, இடிக்குநர் இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி, உன்னை முடிக்குநர், என்ற போது, முடிவுஅன்றி முடிவது உண்டோ?’ 21 21. `அரவும் மந்திரம் கேட்கும்’ கேட்கும் - கேட்டுக் கட்டுப்படும். ஈது அடுக்கும் அடாது - இது பொருந்தும் பொருந்தாது. ஆன்ற ஏதுவோடு - சிறந்த காரணத்தோடு. அறிவுகாட்டி - சொல்லி அறிவூட்டி. உள்ளார் - உன்னுடன் உள்ளவர்கள். முடிக்குநர் - தீர்த்துக் கட்டுகின்றவர்கள். இராவணன் கோபம் என்று அறத்துரை கேட்டலும், இருபது நயனம் மின்தி றப்பன ஒத்தன; வெயில்விடு பகுவாய் குன்று இறத்தெழித்து உரப்பின்; குறிப்பதுஎன் காமத் தின்தி றத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை. 22 22. அறத்துஉரை - அறம் பொருந்திய சொல்லை. மின்திறப்பன ஒத்தன - மின்னல் மேகத்தைத் திறந்துகொண்டு வெளிவருவ போன்றன. பகுவாய் - பிளந்தவாய். தெழித்து உரப்பின - அதட்டிக் கத்தின. தகைமை - தன்மை. வளர்ந்த தாளினன், மாதிரம் அனைத்தையும்மறைவித்து அளந்த தோளினன், அனல்சொரி கண்ணினன் `இவளைப் பிளந்து தின்பென்’என்று உடன்றனன்; பெயர்ந்தனன்; பெயரான்; கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர்எதிர் கிடப்ப. 23 23. உடன்றனன் - சினந்து நின்றான். பெயர்ந்தனன் - சிறிது நகர்ந்தான். பெயரான் - அடியெடுத்து வைக்கமாட்டான். எதிர்எதிர் - ஒன்றோடு ஒன்று. கிடப்ப - இசைந்து நிற்க. `சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடப்ப பெயரான்’. அன்ன காலையில், அனுமனும், `அருந்ததிக் கற்பின் என்னை ஆளுடை நாயகன் தேவியை, என்முன் சொன்ன நீசன்,கை தொடுவதன் முன்,துகைத்து உழக்கிப் பின்னை நின்றது செய்குவென்’ என்பது பிடித்தான். 24 24. துகைத்து உழக்கி - அரைத்துக் கலக்கி. பின்னை - அதன்பிறகு. நின்றது - செய்யவேண்டியதை. `தனியன் நின்றனன்; தலைபத்தும் கடிதுஉகத் தாக்கிப், பனியின் வேலையில் இலங்கையைக் கீழ்உறப் பாய்ச்சிப், புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென் இனிதின்’; என்பது நினைந்தனன்; கரம்பிசைந்து இருந்தான். 25 25. கடிதுஉக - விரைவில் சிந்தும்படி. பனியின் வேலையில் - குளிர்ந்த கடலில். கீழ்உற - அடியிலே போகும்படி. மீண்டும் இராவணன் கூறுதல் `ஒன்றுகேள் உரைக்க, நிற்குஓர் உயிர்என உரியோன் தன்னைக் கொன்றுகோள் இழைத்தால், நீநின் உயிர்விடில் குற்றம் கூடும் என்தன்ஆர் உயிரும் நீங்கும்; என்பதை இயைய எண்ணி அன்றுநான் வஞ்சம் செய்தது; ஆர்எனக்கு அமரின் நேர்வார்?’ 26 26. கொன்றுகோள் இழைத்தால் - கொன்றபின் உன்னைக் கொண்டு வந்தால். குற்றம் கூடும் - குற்றம் உண்டாகும். `குற்றம் கூடும் என்றன் ஆருயிரும்’ என்று சேர்த்தும் பொருள் கூறலாம். நேர்வார் - எதிர் நிற்பவர். `மூவரும் தேவர் தாமும் முரண்உக முற்றும் கொற்றம், பாவைநின் பொருட்டி னால்ஓர் பழிபெறப், பயன்தீர் நோன்பின் ஆஇயல் மனிதர் தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டுக் கூவிநின்று ஏவல் கொள்வென்; காணுதி குதலைச் சொல்லாய்!’ 27 27. கொற்றம் - வெற்றியானது. ஓர்பழிபெற - ஓர் பழியைச் சுமக்க. பயன்தீர் நோன்பின் - பயனற்ற தவத்தையுடைய. ஆஇயல் - பசுவின் தன்மையுள்ள. ஈண்டுக்கூவி - சேரும்படி அழைத்து. `பதவியல் மனித ரேனும், பைந்தொடி, நின்னைத் தந்த உதவியை உணர நோக்கின், உயிர்க்கொலைக்கு உரியர் அல்லர்; சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய்திறன், தேர்ந்தது எண்ணின், இதம்நினக்கு ஈதே ஆகின், இயற்றுவல், காண்டி! இன்னும்’. 28 28. பதவுஇயல் - புல்லின் தன்மையுள்ள; அற்பமான. அவர்க்கு சிதைவுறல் வேண்டின் - அவர்க்கு அழிவு வருவதை விரும்பினால். செய்திறன் - அதற்காகச் செய்யவேண்டியதை. தேர்ந்தது - முடிவாக. இதம் - நன்மை. `பள்ளநீர் அயோத்தி நண்ணிப், பரதனே முதலி னோர் ஆண்டு உள்ளவர் தம்மை யெல்லாம் உயிர்குடித்து, ஊழித் தீயின் வெள்ளநீர் மிதிலை யோரை வேர்அறுத்து, எளிதின் எய்திக் கொள்வென்நின் உயிரும்; என்னை அறிந்திலை குறைந்த நாளோய்!’ 29 29. -. இவ்வாறு சீதையைப் பயமுறுத்திவிட்டு, அரக்கி யரைத் தனியாக அழைத்து, சீதையின் மனத்தை எப்படி யாவது மாற்றும்படி அவர்களிடம் கூறிச் சென்றான் இராவணன். அரக்கியர்கள் சீதையை மிரட்டுகின்றனர். `வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன்மைந்தன்; ஐயன், வேதம் ஆயிரம் வல்லோன்; அறிவாளன்; மெய்அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினைவென்றோன் செய்யும் புன்மை யாதுகொல்?” என்றார் சிலர்எல்லாம். 30 30. நான்முகன்மைந்தன் மகன்மைந்தன் - பிரமனுடைய மகனுக்குப் பேரன். ஐயன் - அழகுள்ளவன். வினைவென்றான் - தீவினையை வென்றவன். புன்மை - இழிவு. சிலர் - பெண்கள்; அரக்கியர்கள். `புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகைவெம்தீ ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வுஇல்லாய்! இக்கணம் இற்றாய்! உன்இனம் எல்லாம் இனிவாழா! சிக்க உரைத்தேம்!’ என்றுதெ ழித்தார் சிலர்எல்லாம். 31 31. புக்கவழி - புகுந்தகுலம். போந்தவழி - பிறந்தகுலம். ஒக்க - ஒரு தன்மையாக. இற்றாய் - அழிந்தாய். சிக்க - உறுதியாக. அரக்கியர்கள் ஆர்ப்பாட்டங் கண்டு சீதையின் துன்பமும் நகைப்பும் இன்னோர் அன்ன எய்திய காலத்து, இடைநின்றாள் `முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவுஅம்மா! பின்னே வாளா பேதுறு வீரேல் பிழை’என்றாள், `அன்னே நன்று’என் றாள்;அவர் எல்லாம் அமைவுஉற்றார். 32 32. இன்னோர் அன்ன - இத்தகைய துன்பத்தை. இடைநின்றான் - நடுநிலையிலே உள்ளவளாகிய திரிசடை. பேதுறுவீரேல் - கலங்குவீரானால். அமைவுஉற்றார் - அடங்கினார்கள். அறிந்தார் அன்ன முச்சடை என்பாள், அதுசொல்லப் பிரிந்தார் சீற்றம்; மன்னனை அஞ்சிப் பிரிகில்லார்; செறிந்தார் ஆய தீவினை அன்னார், தெறல்எண்ணார்; நெறிந்தார் ஓதிப் பேதையும் ஆவி நிலைநின்றாள். 33 33. அறிந்தார்அன்ன - அறிந்தவரை ஒத்த. மன்னனை அஞ்சி - இராவணனுக்கு அஞ்சி. பிரிகில்லார் - சீதையைவிட்டு நீங்காம லிருந்தனர். தெறல் எண்ணார் - துன்புறுத்த எண்ணாராயினர். நெறிந்து ஆர்ஓதி - சுருண்ட கூந்தலையுடைய. 5. உருக் காட்டு படலம் அனுமான் சீதையைக் காணற்கேற்ற காலம் இதுதான் என்று கருதினான். தூங்காதிருந்த அரக்கியர்கள் தூங்கும் படி ஒரு விஞ்சை புரிந்தான். அவர்கள் உறங்கிவிட்டனர். சீதையும் அதைப் பார்த்தாள்; அஞ்சினாள்; துன்புற்றாள். சானகியின் சலிப்பும் துணிவும் `கல்லா மதியே! கதிர்வாள் நிலவே! செல்லா இரவே! சிறுகா இருளே! எல்லாம் எனையே முனிவீர்! நினையா வில்லா ளனையா தும்விளித் திலிரோ?’ 1 உருக் காட்டு படலம்: சீதையின்முன் அனுமான் தன் உண்மையான வடிவத்தைக் காட்டியதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. சிறுகா - குறையாத. விளித்திலிரோ - கேட்டிலீர்களோ? வில்லாளன் - இராமன். `பேணும் உணர்வே! உயிரே! பெருநாள் நாண்இன்று உழல்வீர், தனிநா யகனைக் காணும் துணையும் கழிவீர் அலிர்!நன் பூணும் பழியோ டுபொருந் துவதோ?’ 2 2. பெருநாள் - பல நாட்களாக. கழிவீர்அலீர் - போகாமல் இருப்பீர்களாக. `பொறையிருந்து ஆற்றி,என் உயிரும் போற்றினேன் அறையிரும் கழலவன் காணும் ஆசையால்; நிறையிரும் பல்பகல், நிருதர் நீள்நகர்ச் சிறைஇருந் தேனைஅப், புனிதன் தீண்டுமோ?’ 3 3. பொறை இருந்து ஆற்றி - பொறுத்திருந்து. அறை - சப்திக்கின்ற. கழலவன் - கழலவனை. நிறை இரும் பல் பகல் - பல நாட்கள். `உன்னினர் பிறர்என உணர்ந்தும், உயர்ந்துஅவர் சொன்னன சொன்னன செவியில் தூங்கவும், மன்உயிர் காத்து,இரும் காலம் வைகினேன்; என்னின்வேறு அரக்கியர் யாண்டை யார்கொலோ?’ 4 4. பிறர் உன்னினர் என உணர்ந்தும் - பிறர் என்மீது ஆசைவைத்தார் என்பதை அறிந்தும். உய்ந்து - பிழைத்திருந்து. இரும்காலம் - நெடுங்காலம். `பிறர்நெஞ்சு புகாத தன்மையே சிறந்த கற்பென்பது தமிழர் கொள்கை.’ `பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன்அலது என்றுஉயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்; புறன்அலர் அவன்உறப் பொழுது போக்கி,யான் அறன்அலது ஆற்றுவேன் என்கொண்டு ஆற்றுகேன்?’ 5 5. பேணுதல் - ஆதரித்தல். திறன்அலது - தகுதிஅன்று. அவன் புறன் அலர்உற - அவன் வெளியில் பழிச்சொல்லை அடையவும். வேறுஎன் கொண்டு - வேறு எந்த நன்மையை எண்ணிக்கொண்டு. ஆற்றுகேன் - உயிர் வாழ்வேன். `எப்பொழுது இப்பெரும் பழியின் எய்தினேன் அப்பொழு தேஉயிர் துறக்கும் ஆணையேன்; ஒப்பரும் பெருமறு உலகம் ஓத,யான் துப்பழிந்து உய்வது துறக்கம் துன்னவோ?’ 6 6. ஆணையேன் - முறையை உடையேன். பெருமறு - பெரிய பழியை. உலகம்ஓத - உலகம்கூற. துப்பு அழிந்து - பெருமை குலைந்து. `வஞ்சனை மானின்பின் மன்னைப் போக்கி,என் மஞ்சனை வைதுபின் வழிக்கொள் வாய்,எனா நஞ்சுஅனை யான்அகம் புகுந்த நங்கையான் உஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ?’ 7 7. என்மஞ்சனை - என் மைந்தன்போன்ற இலக்குவனை. அகம்புகுந்த - உள்ளத்தில் புகுந்த. `அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசற வில்பணி கொண்டுஆரும் சிறையின் மீட்டநாள் `இல்புகத் தக்கலை’ என்னின், யான்உடைக் கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்?’ 8 8. ஆசுஅற - அடியோடு அழியும்படி. யான்உடை கற்பினை - என்னுடைய கற்பை. `ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறு’எனாச் `சாதல்காப் பவரும்என் தவத்தின் சாம்பினார்; ஈதுஅலாது இடமும்வே றில்லை;’ என்றுஒரு போதுஉலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 9 9. சாதல் காப்பவரும் - சாதலைக் காப்பவரும். தவத்தின் - தவத்தால். சாம்பினார் - தூங்கினார். போதுஉலாம் - மலர்கள் அசைகின்ற. அனுமான் தோற்றம் கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்; கொண்டனன் துணுக்கம் ;மெய் தீண்டக் கூசுவான்; `அண்டநா யகன் அருள் தூதன் யான்’எனா தொண்டைவாய் மயிலினைத் தொழுது தோன்றினான். 10 10. கருத்தும் - சீதாதேவியின் கருத்தையும். தொண்டைவாய் - சிவந்த வாயையுடைய. `அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால், குடைந்துஉலகு அனைத்தையும் நாடும் கொட்பினால், மிடைந்தவர் உலப்புஇலர்; தவத்தை மேவலால், மடந்தையின் சேவடி வந்து நோக்கினேன்.’ 11 11. குடைந்து - துளைத்து. கொட்பினால் - கொள்கையினால். மிடைந்தவர் - கூடினவர். உலப்புஇலர் - அளவற்றவர்கள். ஈண்டுநீ இருந்ததை இடரின் வைகுறும் ஆண்டகை அறிந்திலன்; அதற்குக் காரணம் வேண்டுமே! அரக்கர்தம் வருக்கம் வேரொடு மாண்டில; ஈதுஅலால் மாறு வேறுஉண்டோ?’ 12 12. காரணம் வேண்டுமே - காரணம் சொல்லவேண்டுமா? மாண்டில - அழியவில்லை. மாறுவேறு உண்டோ - வேறு காரணம் உண்டோ? `ஐயுறல்! உளதுஅடை யாளம்! ஆரியன் மெய்உற உணர்த்திய உரையும் வேறுஉள; கைஉறு நெல்லிஅம் கனியில் காண்டி; ஆல் நெய்உறு விளக்குஅனாய்! நினையல் வேறு!’என்றான். 13 13. -. சீதையின் சிந்தனை என்றவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும், முனிவும் எய்தி, `நின்றவன் நிருதன் அல்லன்; நெறிநின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்; அல்லன் ஆகில்விண்ணவன் ஆதல் வேண்டும்; நன்றுஉணர்வு உரையும் தூயன்; நவைஇலன் போலும்!’ என்னா. 14 14. இரக்கமும் முனிவும் எய்தி - கருணையும் சினமும் அடைந்து. உணர்வுநன்று - அறிவுநன்று. நவை - குற்றம். `அரக்கனே ஆக, வேறோர் அமரனே ஆக, அன்றிக் குரக்கினத்து ஒருவ னேதான் ஆகுக; கொடுமை ஆக; இரக்கமே ஆக; வந்துஇங்கு எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்;இதின் உதவி உண்டோ?’ 15 15. -. எனநினைந்து எய்த நோக்கி `இரங்கும்என் உள்ளம்; கள்ளம் மனன்அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்ல, நினைவுடைச் சொற்கள்; கண்ணீர் நிலம்புகப் புலம்பா நின்றான்; வினவுதற்கு உரியன்; என்னா வீரநீ யாவன்’ என்றாள். 16 16. எய்தநோக்கி - நன்றாகப் பார்த்து. கள்ளம் - வஞ்சகத்தை. வஞ்சகர் மாற்றம் அல்லன் - வஞ்சகர்போன்ற சொல்லை உடையவன் அல்லன். நினைவுடைச் சொற்கள் - வருத்தத்துடன் கூடிய சொற்களை உரைத்து. அனுமான் அறிமுகம் செய்து கொள்ளல் இராமன் சீதையைப் பிரிந்த பின், சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டது முதல், தான் அங்கதனுடன் தென்திசையிலே அவளைத் தேடி வந்தது வரை உள்ள வரலாற்றை உரைத்தான். அனுமான்; `நீ இராகவன் உருவத்தை உணர்வாயோ?’ என்றாள் சீதை. அவன் இராமன் வடிவழகை அப்படியே எடுத்துரைத் தான்; பின்னும்சில செய்திகளை மொழிந்தான். `நடத்தல்அரிது ஆகும் நெறி; நாள்கள்சில; தாயர்க்கு அடுத்தபணி செய்துஇவண் இருத்தி;என அச்சொற்கு உடுத்ததுகி லோடும்,உயிர் உக்கஉட லோடும், எடுத்தமுனி வோடும்,அயல் நின்றதும் இசைப்பாய்.’ 17 17. `நெறிநடத்தல் அரிதாகும்’ நாள்கள்சில - நான் திரும்பும் நாள்கள் சிலவேதான். உயிர்உக்க உடலோடும் - உயிர் நீங்கியது போன்ற உடம்போடும். எடுத்த - மேலெழுந்த. `நீண்டமுடி வேந்தன்அருள் ஏந்தி,நிறை செல்வம் பூண்டு,அதனை நீங்கிநெறி போதல்உறு நாளின், ஆண்டநகர் ஆரையொடு, வாயில்அக லாமுன், யாண்டையது கான்என இசைத்ததும் இசைப்பாய்.’ 18 18. ஆண்டு அநகர் ஆரையோடு - ஆங்கு அந்த நகரின் மதிலோடு. கணையாழி காட்டல் `மீட்டும்உரை வேண்டுவன இல்லைஎன மெய்ப்பேர் தீட்டியது, தீட்டரிய செய்கையது, செவ்வே நீட்டுஇது,என நேர்ந்தனன் எனா’நெடிய கையால், காட்டினன்ஓர் ஆழி;அது வாள்நுதலி கண்டாள். 19 19. தீட்டியது - எழுதியது. தீட்டுஅரிய செய்கையது - எழுதற்கரிய வேலைப்பாடு அமைந்தது. செவ்வே நீட்டு இது - நன்றாகக்கொடு இதை. கணையாழி கண்ட சீதையின் நிலைமை இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ? மறந்தவர் அறிந்துஉணர்வு வந்தனர்கொல் என்கோ? துறந்தஉயிர் வந்துஇடை தொடர்ந்ததுகொல் என்கோ? திறம்தெரிவது என்னைகொல்இ நன்னுதலி செய்கை! 20 20. `இந்நன்னுதலி செய்கை திறம் தெரிவது என்னைகொல்’ செய்கைதிறம் - செய்கையின் தன்மை. இழந்தமணி புற்றுஅரவு எதிர்ந்ததுஎனல் ஆனாள்; பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள், குழந்தையை உயிர்த்தமல டிக்குஉவமை கொண்டாள், உழந்துவிழி பெற்றதுஓர் உயிர்ப்பொறையும் ஒத்தாள். 21 21. உழன்று - கண்ணில்லாமல் வருந்திப் பின்பு. உயிர்ப் பொறையும் - உடம்பையும். வாங்கினள்; மார்பினிடை வைத்தனள்; சிரத்தால் தாங்கினள்; மலர்க்கண்மிசை ஒத்தினள்; தடந்தோள் வீங்கினள்; மெலிந்தனள்; குளிர்ந்தனள்; வெதுப்போடு ஏங்கினள்; உயிர்த்தனள்; இதுஇன்னதுஎனல் ஆமோ? 22 22. -. இருந்து,பசி யால்இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும்அமுது ஆகியது; அறத்தவரை அண்மும் விருந்தும்எனல் ஆகியது; வீயும்உயிர் மீளும் மருந்தும்எனல் ஆகியது; வாழி!மணி ஆழி! 23 23. அறத்தவரை - இல்லறத்தாரை. அண்மும் - அடையும். விருந்தும். - விருந்தாளியும். வீயும் - இறக்கும். சீதாதேவியின் மகிழ்ச்சி மொழிகள் `மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன், தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்குச், செயல்என்னால் எளியது உண்டே? அம்மையாய் அத்தன் ஆய அப்பனே! அருளின் வாழ்வே! இம்மையே, மறுமை தானும் நல்கினை இசையோடு;’ என்றாள். 24 24. முதல்வன் - இராமன். தூதுஆய் - தூதனாகவந்து. என்னால் செயல் எளியது உண்டோ - என்னால் எளிதாகச் செய்யக்கூடியது ஒன்று உண்டோ. `பாழிய பணைத்தோள் வீர! துணையிலேன், பரிவு தீர்த்த வாழிய வள்ள லே,யான் மறுவுஇலா மனத்தேன் என்னின், ஊழிஓர் பகலாய் ஓதும் யாண்டெலாம் உலகம் ஏழும் ஏழும்வீ வுற்ற ஞான்றும் இன்றுஎன இருத்தி!’ என்றாள். 25 25. பாழிய - வலிமையுள்ள. மறுஇலா - குற்றமற்ற. ஊழி - பல ஊழிகள். ஓர்பகலாய் ஓதும் - ஒரு பகலாகச் சொல்லப்படும். யாண்டெலாம் - பல்லாண்டுகள். வீவுஉற்ற - அழிந்த. இன்றுஎன - இன்றுபோல். `மீண்டுஉரை விளம்பல் உற்றாள்’ விழுமிய குணத்தோய்! வீரன் யாண்டையான் இளவ லோடும்? எவ்வழி எய்திற்று உன்னை; ஆண்தகை, அடியேன் தன்மை ஆர்சொல அறிந்தது? என்றாள் தூண்திரள் தடம்தோ ளானும், உற்றது சொல்லல் உற்றான். 26 26. உன்னை எவ்வழி எய்திற்று - உன்னை எவ்விடத்தில் கண்டு அடைந்தான். ஆண்தகை - இராமன். உற்றது - நடந்ததை. இராமன் சீதையைத் தேடி வரும்போது சடாயுவைக் கண்டது முதல், சுக்கிரீவன் சேனைகள் சீதையைத் தேடிச் சென்றிருப்பது வரையில் உள்ள எல்லாச் செய்திகளையும் இயம்பினான் அனுமான். அன்பினன் இவ்வுரை உணர்த்த, ஆரியன் வன்பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் என்புஉற உருகினள்; இரங்கி ஏங்கினள்; துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 27 27. அன்பினன் - அனுமான். வன்பொறை நெஞ்சினன் - மிக்க பொறுமையுள்ள நெஞ்சினனாகிய இராமனது. உன்னுவாள் - நினைத்து. நீ கடலைக் கடந்தது எவ்விதம் என்ற சீதைக்கு அனுமான் உரைத்தது `சுருங்குஇடை! உன்ஒரு துணைவன் தூயதாள் ஒருங்குடை உணர்வினோர், ஓய்வுஇல் மாயையின் பெரும்கடல் கடந்தனர் பெயரும், பெற்றிபோல், கருங்கடல் கடந்தனென் காலினால்’ என்றான். 28 28. தூய தாள் ஒருங்கு உடை - பரிசுத்தமான பாதத்தில் ஒன்றுபடுகின்ற. உணர்வினோர் - அறிவுள்ளவர்கள். மாயையின் பெரும்கடல் - மாயையாகிய பெரிய கடலை. காலினால் - காற்றின்மூலம். `இத்துணைச் சிறியதுஓர் ஏண்இல் யாக்கையை! தத்தினை கடல்;அது, தவத்தின் ஆயதோ! சித்தியின் இயன்றதோ! செப்பு வாய்’என்றாள் முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள். 29 29. ஏண்இல் - வலிமையற்ற. யாக்கையை - உடம்பையுடை யவனாகிய நீ. தத்தினை - தாண்டினாய். அனுமான் தன் உருக்காட்டல் சுட்டினன்; நின்றனன்; தொழுத கையினன்; விட்டுஉயர் தோளினன்; விசும்பின் மேக்குஉயர் எட்டரும் நெடுமுகடு எய்த; நீளுமேல் முட்டும்என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான். 30 30. சுட்டினன் - நினைத்தான். விட்டு உயர் தோளினன் - தன் நிலையை விட்டு உயர்ந்த தோளை உடையவனாய். விசும்பின் மேக்கு உயர் - வானத்தின் மேல் உயர்ந்த. நெடுமுகடு - நீண்ட உச்சி. ஏண்இலது ஒருகுரங்கு ஈதுஎன்று எண்ணலா ஆணியை, அனுமனை அமைய நோக்குவான் சேண்உயர் பெருமைஓர் திறத்தது அன்று?எனா நாண்உறும், உலகுஎலாம் அளந்த நாயகன். 31 31. ஏண்இலது - வலிமையற்றதாகிய. ஆணியை - அச்சாணி போன்றவனை. நோக்குவான் - பார்த்தவனாய். ஓர் இடத்தது அன்று - ஓர் இடத்திலே இருப்பதன்று. `உலகெலாம் அளந்த நாயகன் நாண்உறும்’ நாயகன் - திரி விக்கிரமமூர்த்தி. லஞ்சிஅம் மருங்குல்அம் மறுவில் கற்பினாள், கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்; துஞ்சினர் அரக்கர்என்று உவக்கும் சூழ்ச்சியாள், `அஞ்சினென் இவ்வுரு அடங்கு வாய்’ என்றாள். 32 32. -. சீதையின் மகிழ்ச்சி `முழுவதும் இவ்வுருக் காண முற்றிய குழுஇலது உலகு;இனிக் குறுகுவாய்;’ என்றாள்; எழுவினும் எழில்இலங்கு இராமன் தோள்களைத் தழுவினள் ஆம்,எனத் தளிர்க்கும் சிந்தையாள். 33 33. காணமுற்றிய - காணக்கூடிய. எழுவினும் - தூணைவிட. தளிர்க்கும் - களிக்கின்ற. ஆண்தகை அனுமனும் `அருள்அது ஆம்’எனா மீண்டனன் விசும்புஎனும் பதத்தை மீச்செல்வான், காண்டலுக்கு உரியதுஓர் உருவு காட்டினான்; தூண்டல்இல் விளக்குஅனாள் இனைய சொல்லினாள். 34 34. -. வேறு ஆழி நெடுங்கை ஆண்தகைதன் அருளும் புகழும் அழிவுஇன்றி ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளைஆனாய்! பாழி நெடுந்தோள் வீரா!நின் பெருமைக்கு ஏற்பப் பகைஇலங்கை ஏழு கடற்கும் அப்புறத்தது ஆகாது இருந்தது இழிவுஅன்றோ?’ 35 35. பாழி நெடும்தோள் - வலிய நீண்ட தோளையுடைய. அப்புறத்தது ஆகாது இருந்தது - அப்புறத்தில் இல்லாமல் இருந்தது. `மின்நேர் எயிற்று வல்அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப் பின்னே பிறந்தான் அல்லதுஓர் துணைஇ லாத பிழைநோக்கி, உன்னா நின்றே உடைகின்றேன்; ஒழிந்தேன் ஐயம்; உயிர்உய்ந்தேன்; என்னே நிருதர் என்ஆவர்? நீயே எம்கோன் துணைஎன்றால்.’ 36 36. வீக்கம் - மிகுதி. பின்னே பிறந்தான் அலது - இலக்கு வனைத் தவிர. பிழை - குறை. உயிர் உய்ந்தேன் - உயிர்பெற்றேன். மாண்டேன் எனினும் பழுதுஅன்றே; இன்றே மாயச் சிறைநின்றும் மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்க ளோடும் வேர்அறுத்தேன்; பூண்டேன் எம்கோன் பொலன்கழலும்; புகழே அன்றிப் புன்பழியும் தீண்டேன்; என்று மனம்மகிழ்ந்தாள் திருவின் முகத்துத் திருஆனாள். 37 37. ஒறுத்தாரை - துன்புறுத்தியவர்களை. திருவின் முகத்து - இலக்குமியின் முன்னிலையிலே. அனுமான் பணி மொழி அண்ணல் பெரியோன், அடிவணங்கி, அறியஉரைப்பான் `அருந்ததியே வண்ணக் கடலின் இடைக்கிடந்த மணலில் பலரால், வானரங்கள்; எண்ணற்று அரிய படைத்தலைவர்; இராமற்கு அடியார்; யான்அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப்போந்தேன்;ஏவக் கடவபணிசெய்வேன்.’ 38 38. யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் - நான் அந்த வானரர்களின் கூட்டத்தில் ஒருவன். என - என்று சொல்லும்படி. 6. சூடாமணிப் படலம் நான் உன்னை இராமனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று அனுமான் உரைத்தல் `கேட்டி,அடி யேன்உரை, முனிந்தருளல், கேளாய் வீட்டியிடும் மேல்அவனை வேறல்வினை அன்றால்; நீட்டிஇனி என்பயன்! இராமன்எதிர் நின்னைக் காட்டிஅடி தாழ்வென்;இது காண்டி,இது காலம்’. 1 சூடாமணிப் படலம்: சீதை சூடாமணி என்னும் இரத்தினத்தை அடையாளமாக அனுமானிடம் அளித்த நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. வீட்டியிடுமேல் - உன்னைக் கொன்றுவிடுவானாயின். அவனை வேறல் - அதன்பின் அந்த இராவணனைக் கொல்லு வதால். வினைஅன்று - காரியம் இல்லை. பொன்திணி பொலன்கொடிஎன் மெல்மயிர் பொருந்தித் துன்றிய புயத்துஇனிது இருக்க;துயர் விட்டாய்; இன்துயில் விளைக்க;ஓர் இமைப்பின்இறை வைகும் குன்றிடை உனைக்கொடு குதிப்பென்;இடை கொள்ளேன்;’ 2 2. பொருந்தித் துன்றிய - அமைந்து நிறைந்த. இன்துயிர் விளைக்க - இனிய தூக்கம் உண்டாகும்படி. இடைகொள்ளேன் - இடையில் எங்கும் தங்கேன். `இலங்கையொடும் ஏகுதிகொல், என்னினும், இடந்துஎன் வலம்கொள் ஒரு கைத்தலையில் வைத்து,எதிர் தடுப்பான் விலங்கினரை நூறி,வரி வெம்சிலையி னோர்தம் பொலன்கொள்கழல் தாழ்குவென்; இதுஅன்னைபொருள் அன்றால்.’ 3 3. இலங்கையொடும் ஏகுதிகொல் என்னினும் - இலங்கை நகருடன் சேர்த்து எடுத்துச் செல்வாயோ என்றாலும், ஒருகைத் தலையில் - ஒரு கையில். நூறி - பொடி பண்ணிவிட்டு. அன்னை இது பொருள் அன்றால் - அன்னையே இது எனக்கு ஒரு பெரிய காரியம் அன்று. `அருந்ததி உரைத்தி! அழகற்குஅருகு சென்று,`உன் மருந்தனைய தேவி,நெடு வஞ்சர்,சிறை வைப்பில் பெருந்துயரி னோடும்ஒரு வீடுபெறு கில்லாள் இருந்தனள்;’ எனப்பகரின், என்அடிமை என்ஆம்?’ 4 4. -. `இருக்கும்மதில் சூழ்கடி இலங்கையை, இமைப்பின் உருக்கிஎரி யால்,இகல் அரக்கனையும் ஒன்றா முருக்கி, நிருதக்குலம் முடித்து,வினை முற்றிப் பொருக்ககல்க’ என்னினும் அதுஇன்றுபுரி கின்றேன்.’ 5 5. இருக்கும் - நீ சிறையிருக்கும். கடி - காவல். `எரியால் உருக்கி’ ஒன்றாமுருக்கி - முழுவதும் அழித்து. பொருக்க - விரைவாக. `வேறுஇனி விளம்பஉளது அன்று;விதி யால்இப் பேறுபெற என்கண்அருள் தந்தருளு; பின்போய் ஆறுதுயர்; அம்சொல்இள வஞ்சிஅடி யன்தோள் ஏறு;கடிது; என்றுதொழுது, இன்அடி பணிந்தான். 6 6. பேறுபெற - பாக்கியத்தைப் பெற. என்கண் - என்பால். வேறு ஏய நன்மொழி எய்த விளம்பிய தாயை முன்னிய கன்றுஅனை யான்தனக்கு ஆய தன்மை அரியதுஅன் றால்எனத், தூய மென்சொல் இனையன சொல்லினாள். 7 7. ஏய நன்மொழி - தகுந்த சொற்களை. எய்த - பொருந்துமாறு. தாயை முன்னிய - தாயை எதிர்ப்பட்ட. ஆயதன்மை - அத்தகைய செய்கை. சீதையின் மறுமொழி அரியது அன்றுநின் ஆற்றலுக்கு; ஏற்றதே தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே; உரியது அன்றுஎன ஓர்கின்றது உண்டு;அதுஎன் பெரிய பேதைமைச் சில்மதிப் பெண்மையால். 8 8. -. `வேலை யின்இடை யேவந்து வெய்யவர் கோலி வெம்சரம் நின்னொடும் கோத்தபோது ஆலம் அன்னவற்கு அல்லை,எற்கு அல்லையால்; சால வும்தடு மாறும் தனிமையோய்!’ 9 9. கோலி - வளைத்துக்கொண்டு, ஆலம் அன்னவர்க்கு அல்லை - நஞ்சு போன்ற அரக்கரை எதிர்த்துப் போர்செய்யவும் முடியாமல். எற்குஅல்லை - என்னைக் காக்கவும் முடியாமல். தனிமையோய் - தனியனாவாய். `அன்றி யும்பிறிது உள்ளதுஒன்று; ஆரியன் வென்றி வெம்சிலை மாசுணும்; வேறுஇனி நன்றி என்பதுஎன்? வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?’ 10 10. மாசுணும் - பழியைப்பெறும். இனிவேறு நன்றி என்பது என் - இனிவேறு நன்மை என்பதுதான் என்ன, நாய்களின் - நாய்களாகிய அரக்கர்களிடம். நின்ற - நிலைத்து நின்ற. `கொண்ட போரின்எம் கொற்றவன் வில்தொழில் அண்டர் ஏவரும் நோக்க,என் ஆக்கையைக் கண்ட வாள்அரக் கன்விழிக், காகங்கள் உண்ட போதுஅன்றி, யான்உளென் ஆவனோ?’ 11 11. -. `பொன்பி றங்கல் இலங்கை, பொருந்தலர் என்பு மால்வரை ஆகில தேஎனின், இற்பி றப்பும், ஒழுக்கும், இழுக்கம்இல் கற்பும் யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்?’ 12 12. பொன்பிறங்கல் - பொன்மயமான மலைமேல் உள்ள. பொருந்தலர் - பகைவர்களின். எற்பு - எலும்பு. `அல்லல் மாக்கள் இலங்கைஅது ஆகுமோ, எல்லை நீத்த உலகங்கள் யாவும்என் சொல்லி னால்சுடு வேன்,அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன்.’ 13 13. இலங்கைஅது ஆகுமோ - இலங்கை ஒன்றைமட்டுமா? எல்லை நீத்த - அளவுகடந்த. `வேறும்உண்டுஉரை, கேள்,அது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனிஅல் லால்,இடை ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக் கூறும்; இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?’ 14 14. ஆறும் ஐம்பொறி - அடங்கிய ஐம்பொறிகளையுடைய. `தீண்டி னான்எனில், இத்தனை சேண்பகல் ஈண்டு மோஉயிர் மெய்யின்? இமைப்பின்முன் மாண்டு தீர்வென்என் றே,நிலம் வன்கையால் கீண்டு கொண்டுஎழுந்து ஏகினன் கீழ்மையான்.’ 15 15. சேண்பகல் - நெடுங்காலம். உயிர்மெய்யின் ஈண்டுமோ - அவன் உயிர் அவன் உடலில் தங்கியிருக்குமோ. கீண்டுகொண்டு - பெயர்த்துக் கொண்டு. `மேவு சிந்தையில் மாதரை மெய்தொடின் தேவு வன்தலை சிந்துக நீஎன பூவில் வந்த புராதன னேபுகல் சாவம் உண்டு;எனது ஆர்உயிர் தந்ததால்.’ 16 16. மேவு சிந்தைஇல் - விரும்பும் மனம் இல்லாத. தேவு - பரவிய. புராதனன் - நான்முகன். `அன்ன சாவம் உளதுஎன, ஆண்மையான், மின்னும் மோலியன் மெய்ம்மையன், வீடணன் கன்னி, என்வயின் வைத்த கருணையாள், சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான்.’ 17 17. துணுக்கம் - என் அச்சத்தை. அகற்றுவான் - நீக்கும் பொருட்டு. `துணுக்கம் அகற்றுவான் சொன்னது உண்டு.’ `ஆயது உண்மையின், நானும்,அது அன்றுஎனின் மாய்வென் மன்ற; அறம்வழு வாதுஎன்றும், நாய கன்வலி எண்ணியும், நான்உடைத் தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்.’ 18 18. மன்ற: அசை. நான்உடை - என்னுடைய. தூய்மை - கற்பு. தூங்கினேன் - தாங்கினேன். `ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்துகொண்டு ஈண்டு வைத்தது, இளவல் இயற்றிய நீண்ட சாலையொ டும்நிலை நின்றது; காண்டி ஐயநின் மெய்உணர் கண்களால்.’ 19 19. -. `ஆதலால் நீ எண்ணியது ஏற்றதன்று; வேத நாயகன்பால் மீளுதலே தக்கது.’ என்றாள் சீதை. `நன்று! நன்று!இவ் வுலகுடை நாயகன் தன்து ணைப்பெரும தேவி,தவத் தொழில்;’ என்று சிந்தை களித்துஉவந்து ஏத்தினான்; நின்ற சங்கை இடரொடு நீங்கினான். 20 20. நின்ற சங்கை - உள்ளத்துள் இருந்த ஐயமும். இடர் ஒடுங்கினான் - துன்பமும் நீங்கினான். `நீ இன்னும் சிலபகல் வருந்தாமல் இரு. இராமனுக்கு யான் என்ன கூறவேண்டும்’ என்று பணிவுடன் கேட்டான் அனுமான். சீதை கூறிய செய்திகள் `இன்னும் ஈண்டுஒரு திங்கள் இருப்பல்யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்! பின்னை ஆவி பிடிக்ககி லேன்;அந்த மன்னன் ஆணை; இதனை மனக்கொள்நீ.’ 21 21. -. `ஆரம் தாழ்திரு மார்பற்கு அமைந்ததுஓர் தாரம் தான்அலள் ஏனும், தயாஎனும் ஈரம் தான்அகத்து இல்லைஎன் றாலும்,தன் வீரம் காக்கலை வேண்டுஎன்று வேண்டுவாய்.’ 22 22. -. `ஏத்தும் வென்றி இளையவற்கு ஈதுஒரு வார்த்தை கூறுதி; மன்அரு ளால்எனைக் காத்தி ருந்த தனக்கே கடன்,இடை கோத்த வெம்சிறை வீடு;’என்று கூறுவாய். 23 23. இடைகோத்த - நடுவில் நேர்ந்த. வெம்சிறைவீடு - கொடிய சிறையிலிருந்து விடுதலை செய்தல். `திங்கள் ஒன்றின்என் செய்தவம் தீர்ந்ததுஆல், இங்கு வந்தில னேஎனின், யாணர்நீர்க் கங்கை ஆற்றங் கரை,அடி யேற்கும்தன் செங்கை யால்கடன் செய்கென்று, செப்புவாய்.’ 24 24. `திங்கள் ஒன்றின் இங்கு வந்திலனே எனின் என்செய்தவம் தீர்ந்தால்’. `சிறக்கும் மாமியர் மூவர்க்கும், `சீதைஆண்டு இறக்கின் றாள்,தொழு தாள்’,எனும் இன்னசொல், அறத்தின் நாயகன் பால்அருள் இன்மையால், மறக்கும் ஆயினும், நீமற வேல்ஐயா!’ 25 25. -. `வந்துஎ னைக்கரம் பற்றிய வைகல்வாய், `இந்த இப்பிற விக்கு,இரு மாதரைச் சிந்தை யாலும் தொடேன்;’என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்!’ 26 26. இந்த இப்பிறவிக்கு - எடுத்த இப்பிறப்பில். இருமாதரை - இரண்டாவதான ஒருத்தியை. தொடேன் - நினையேன். `ஈண்டு நான்இருந்து இன்உயிர் மாயினும், மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் தீண்டல் ஆவதுஓர் தீவினை தீர்வரம் வேண்டி னாள்தொழுது’ என்று விளம்புவாய்.’ 27 27. -. `அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய்மணிப் புரசை யானையில் வீதியில் போதவும், விரசு கோலங்கள் காண விதியிலேன்; உரைசெய்து என்னை?என் ஊழ்வினை உன்னுவேன்.’ 28 28. ஆய்மணி - சிறந்த மணியையும். புரசை - கழுத்திலே கயிற்றையும் உடைய. யானையின் - பட்டத்து யானை மீதேறி விரசு - கொள்ளுகின்ற. `தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும், அன்னை நோய்க்கும், பரதன்அங்கு ஆற்றுறும் இன்னல் நோய்க்கும்அங்கு ஏகுவது அன்றியே என்னை நோக்கியிங்கு எங்ஙனம் எய்துமோ?’ 29 29. -. `எந்தை,யாய், முதலிய கிளைஞர் யார்க்கும்,என் வந்தனை விளம்புதி; கவியின் மன்னனைச் சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப்போய் அந்தம்இல் திருநகர்க்கு அரசன் ஆக்குஎன்பாய்.’ 30 30. கவியின் மன்னனை - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்கிரீவனைப் பார்த்து. சுந்தரத்தோளனை - இராமனை. சீதைக்கு அனுமான் உரைத்த ஆறுதல் `வீவாய் நீஇவண், மெய்அஃதே! ஓய்வான் இன்உயிர் உய்வான்ஆம்! போய்,வான் அந்நகர் புக்குஅன்றோ, வேய்வான் மௌலியும் மெய்அன்றோ!’ 31 31. இன்உயிர் ஓய்வான் - இனிய உயிர் தளர்ந்து வருந்தும் இராமன் `அந் நகர்புக்கு மௌலியும் வேய்வான் அன்றோ; மெய்அன்றோ’. `கைத்தோ டும்சிறை, கற்போயை வைத்தோன், இன்உயிர் வாழ்வானாம்! பொய்த்துஓர் வில்லிகள் போவாராம்! இத்தோடு ஒப்பது யாதுஉண்டே?’ 32 32. கைத்துஓடும் - வெறுத்து விலக்கும்படியான. சிறை - சிறையிலே. கற்போயை - கற்புடைய உன்னை. பொய்த்து - பின்னடைந்து. `நல்லோய்! நின்னை நலிந்தோரைக் கொல்லோம், எம்உயிர் கொண்டுஅங்கே எல்லோ மும்செல, எம்கோனும் வில்லோ டும்செல வேண்டாவோ?’ 33 33. -. `பூண்டாள், கற்புடை யாள்பொய்யாள், தீண்டா வஞ்சகர் தீண்டாமுன், மாண்டாள், என்று மனம்தேறி மீண்டால் வீரம் விளங்காதோ!’ 34 34. -. `முன்னே கொல்வான் மூவுலகும், பொன்னே ஓங்கிய போர்வில்லான், என்னே! நின்நிலை ஈதுஎன்றால் பின்னே செம்மை பிடிப்பானோ?’ 35 35. செம்மை பிடிப்பானோ - சாந்தத்தைப் பின்பற்றுவானோ. வேறு `வினைஉடை அரக்காரம் இருந்தை வெந்துக, சனகிஎன்று ஒருதழல் நடுவண் தங்கலான், அனகன்கை அம்புஎனும் அளவுஇல் ஊதையால் கனகம்நீடு இலங்கைநின்று உருகக் காண்டி;ஆல்.” 36 36. இருந்தை வெந்துஉள - கரிகள் வெந்துபோகும்படி. ஊதையால் - காற்றால். அரக்கர்; கரி. இராமன் அம்பு : காற்று, இலங்கை ; பொன். `தாக்குஇகல் இராவணன் தலையில் தாவின பாக்கியம் அனைய,நின் பழிப்புஇல் மேனியை, நோக்கிய கண்களை, நுதிகொள் மூக்கினால் காக்கைகள் கவர்ந்துகொண்டு உண்ணக் காண்டி!ஆல்.’ 37 37. தாக்கு,கல் - போர்செய்யும் வலிமையுள்ள. தாவின - தாவினவாய். நுதிகொள் - கூர்மைபொருந்திய. `ஈண்டுஒரு திங்கள்இவ் இடரின் வைகுதல் வேண்டுவது அன்று;யான் விரைவில் வீரனைக் காண்டலே குறை;பினும் காலம் வேண்டுமோ? ஆண்தகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ?’ 38 38. -. `ஆவிஉண்டு என்னும்ஈது உண்டு;உன் ஆர்உயிர்ச் சேவகன் திருஉருத் தீண்டத், தீய்ந்திலாப் பூஇலை; தளிர்இலை; பொரிந்து வெந்திலாக் காஇலை; கொடிஇலை; நெடிய கான்எலாம்.’ 39 39. -. `மத்துறு தயிர்என வந்து சென்றுஇடை தத்துறும் உயிரொடும், புலன்கள் தள்உறும் பித்தும்,நின் பிரிவினில் பிறந்த வேதனை எத்தனை உள,அவை எண்ணும் ஈட்டவோ?’ 40 40. தத்துறும் தடுமாறும். உயிரொடு - உயிரும். புலன்கள் தள்ளுறும் - ஐம்புலன்கள் சோர்கின்ற. எண்ணும் ஈட்டவோ - எண்ணி உரைக்கும் தன்மையுள்ளனவோ. `இந்நிலை உடையவன் தரிக்கும் என்று,எணும்? பொய்ந்நிலை காண்டி,யான் புகன்ற யாவும்;உன் கைந்நிலை நெல்லிஅம் கனியின் காட்டுகேன் மெய்ந்நிலை உணர்ந்துநீ விடைதந்து ஈகென்றான்.’ 41 41. தரிக்கும்எனும் - உயிர்வாழ்வான் என்று நினைக்கின்ற. பொய் நிலை - பொய்யை. காண்டி - காண்பாய். `தீர்த்தனும், கவிக்குலத்து இறையும், தேவிநின் வார்த்தைகேட்டு உவப்பதன் முன்னர், மார்க்கடல் தூர்த்தன, இலங்கையைச் சூழ்ந்து மாக்குரங்கு ஆர்த்தன கேட்டு,உவந்து இருத்தி, அன்னைநீ!’ 42 42. -. `எண்ணரும் பெரும்படை, நாளை இந்நகர் நண்ணிய பொழுது,அதன் நடுவண், நங்கைநீ விண்உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவின் கண்ணனை என்நெடும் புயத்தில் காண்டி!ஆல்.’ 43 43. விண்டுவில் - விஷ்ணுவைப்போல. `அங்கதன் தோள்மிசை, இளவல், அம்மலைப் பொங்குவெம் கதிர்எனப் பொலியப், போர்ப்படை இங்குவந்து இறுக்கும்;நீ இடரின், எய்துறும், சங்கையும் நீங்குதி! தனிமை நீங்குவாய்.’ 44 44. இடரின் எய்துறும் சங்கையும் நீங்குதி - துன்பத்தால் அடையும் சந்தேகம் எல்லாம் தவிர்வாயாக. `குராவரும் குழலிநீ, குறித்த நாளினே, விராவரு நெடும்சிறை மீட்க லான்எனில், `பராவரும் பழியொடு பாவம் பற்றுதற்கு இராவணன் அவன்,இவன் இராமன்; என்றனன். 45 45. குராவரும் - மருதோன்றி மலர்களின் மணம் வீசும். விராவரும் - பொருந்தியிருக்கின்ற. பராவரும் - பரவுகின்ற. மகிழ்ந்த சீதையின் மாற்றம் `நாகம் ஒன்றிய நல்வரை யின்தலை, மேல்நாள், ஆகம் வந்துஎனை அள்உகிர் வாளின் அளைந்த காகம் ஒன்றை, முனிந்து,அயல் கல்எழு புல்லால் வேக வெம்படை விட்டது, மெல்ல விரிப்பாய்!’ 46 46. நாகம் ஒன்றிய - வானை அளாவிய. நல்வரையின்தலை - சித்திர கூட பருவதத் திலே. வந்துஎனை ஆகம் - வந்து என்னுடைய மார்பிலே. வாளின்அள் உகிர்அளைந்த - வாள் போன்ற கூர்மையான நகத்தினால் குத்திய கல்எழு புல்லால் - கல்லில் முளைத்த புல்லால். `என்ஒர் இன்உயிர் மென்கிளிக்கு, ஆர்பெயர் ஈகேன் மன்ன!, என்றலும், `மாசறு கேகயன் மாது,என் அன்னை தன்பெயர் ஆக;’என, அன்பினொடு அந்நாள் சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி! மெய்ம்மை தொடர்ந்தோய்!’ 47 47. -. என்று உரைத்து,இனி இத்தனை பேர்அடை யாளம் ஒன்று உணர்த்துவது இல்,என எண்ணி உணர்ந்தாள்; தன்தி ருத்துகிலில்பொதிவுவுற்றது; தானே வென்றது அச்சுடர் மேலொடு கீழ்உற மெய்யால். 48 48. மேலோடு கீழ்உற - மேல் உலகமும் கீழ் உலகமும் பொருந்த. மெய்யால் - தன் உருவால். `மேலொடு கீழ்உற மெய்யால்தானே வென்றது அச்சுடர்’. வாங்கி னாள்தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா ஏங்கி னாள்;அவ் அனுமனும் என்கொல் இதுஎன்னா வீங்கி னான்,வியந் தான்;உலகு ஏழும் விழுங்கித் தூங்கு கார்இருள் முற்றும் இரிந்தது சுற்றும். 49 49. வாங்கினாள் - எடுத்தாள். மன்னனைமுன்னா - இராமனை எண்ணி. சுற்றும் இரிந்தது - சுற்றிலும் ஓடிவிட்டது. `சூடை யின்மணி கண்மணி ஒப்பது; தொல்நாள் ஆடை யின்கண் இருந்தது; பேர்அடை யாளம்; `நாடி வந்துஎனது இன்உயிர் நல்கினை! நல்லோய்! கோடி!’என்று, கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். 50 50. சூடையின்மணி - சூடாமணி; சூளாமணி என்றும் கூறலாம். தொல்நாள் - நெடுநாட்களாக. கோடி - கொள்க. தொழுது வாங்கினன், சுற்றிய தூசினில் முற்றப் பழுது உறாவகை பந்தனை செய்தனன்! வந்தித்து, அழுது, மும்மை வலம்கொடு இறைஞ்சினன்; அன்போடு, எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால். 51 51. சுற்றிய தூசினில் - உடுத்த ஆடையில். பந்தனை - பத்திரப்படுத்துதல். முடிச்சு என்றும் கூறலாம். 7. பொழில் இறுத்த படலம் `நாம் இங்கு வந்ததன் அறிகுறியாக ஏதேனும் ஒரு பெரிய செயலைச் செய்யவேண்டும்’ என்று எண்ணினன் அனுமான். `ஈனம்உறு பற்றலரை எற்றி,எயில் மூதூர் மீனநில யத்தின்உக வீசி,விழி மானை மானவன் மலர்க்கழலின் வைத்தும்இலென், என்றால் ஆனபொழுது எப்பரிசின், நான்அடியன் ஆவேன்?’ 1 பொழில் இறுத்த படலம்: சீதை தங்கியிருந்த சோலையை அனுமான் அழித்த நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. பற்றலர் - பகைவர். மீனநிலயம் - கடல். எப்பரிசில் - எவ்வகையில். `வஞ்சனை அரக்கனை நெருக்கி,நெடு வாலால் அஞ்சினொடும் அஞ்சுதலை தோள்உற அசைத்தே, வெம்சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலன்; என்றால் தஞ்சம்,ஒரு வர்க்கொருவர் என்றல்தக வாமோ?’ 2 2. ஒருவர்க்கொருவர் தஞ்சம் என்றல் - ஒருவர்க்கொருவர் உதவிசெய்தல் என்பது. தகவுஆமோ - தகுதியுடையதாகுமோ? (ஆகாது). `கண்டநிரு தக்கடல், கலக்கினென் வலத்தில், திண்திறல் அரக்கனும் இருக்க,ஓர் திறத்தின் மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்துக கொண்டு,சிறை வைத்திடுவ தால்,குறையும் உண்டோ?’ 3 3. `வலத்தில், கண்ட நிருதக்கடல் கலக்கினன்’ வலத்தில் - வல்லமையால். கலக்கினன் - கலக்கி. இருக்க - பார்த்துக் கொண்டிருக்க. மண்ட உதரத்தவள் - மண்டோதரி. `இப்பொழி லினைக்கடிது இறுக்குவென்; இறுத்தால் அப்பெரிய பூசல்,செவி சார்தலும், அரக்கர், வெப்புஉறு சினத்தர், எதிர் மேல்வருவர்; வந்தால் `துப்புஉற முருக்கிஉயிர் உண்பல்;’இது சூதால். 4 4. இறுக்குவென் - அழிப்பேன். வெப்புஉறு - கொடுமை பொருந்திய. துப்புஉற முருக்கி - வலிமைகொண்டு அழித்து. `வந்தவர்கள் வந்தவர்கள்; மீள்கிலர்; மடிந்தால் வெம்திறல் அரக்கனும் விலக்கரு வலத்தால் முந்தும்,எனின், அன்னவன் முடித்தலை முசித்து,என் சிந்தைஉறு வெம்துயர் தவிர்த்து,இனிது செல்வேன்.’ 5 5. முடித்தலையிடித்து - முடிபுனைந்த தலைகளிலே குட்டி. சோலையின் சிதைவு என்றுநினை யா,இரவி, சந்திரன் இயங்கும் குன்றம்,இரு தோள்அனைய தன்உருவு கொண்டான்; அன்றுஉலகு எயிற்றிடைகொள் ஏனம்எனல் ஆனான்; துன்றுகடி காவினை அடிக்கொடு துகைத்தான். 6 6. குன்றம் - மேருமலை. ஏனம் - பன்றி. துன்று கடிகாவினை - அடர்ந்த காவல் உள்ள பொழிலை. வேரொடு மறிந்தசில; வெந்தசில; விண்ணில் காரொடு செறிந்தசில; காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில; தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில; உக்கசில நெக்க. 7 7. காலினொடு வேலை தூர் ஒடு பறிந்தசில - சில மரங்கள் காற்றுடன் கடலிலே புதரோடுபோய் விழுந்தன. தும்பி - வண்டுகள். புள்ளினொடு, வண்டும்,மிஞி றும்,கடிகொள் பூவும், கள்ளும்,முகை யும்,தளிர்க ளோடுஇனிய காயும், வெள்ளநெடு வேலையிடை மீன்இனம் விழுங்கித் துள்ளின; மரம்பட நெரிந்தன துடித்த. 8 8. மிஞிறு - வண்டுகளில் ஒருவகை. கடி - மணம். ஊனம் ஊற்றுஇடை மண்ணின் உதித்தவர் ஞானம் முற்றுபு நண்ணினர் வீடுஎனல் ஆன கற்பகத் தண்தலை; விண்தலம் போன புக்கன; முன்உறை பொன்நகர். 9 9. ஞானம் முற்றுபு - ஞானம் நிறைந்து. கற்பகத் தண்டலை - கற்பகச் சோலை. `தண்டலை, வீடு நண்ணினர் எனல்ஆன.’ வேங்கை செற்று, மராமரம் வேர்பறித்து, ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்துஉராய்ப், பாங்கர் சண்பகப் பத்தி பறித்து,அயல் மாங்க னிப்பணை மட்டித்து மாற்றியே. 10 10. செற்று - அழித்து. உராய் - விரைந்து. பணை - கிளைகளை. மட்டித்து - முறித்து. குழையும், கொம்பும், கொடியும், குயில்குலம் விழையும் தண்தளிர்ச் சூழலும், மெல்மலர்ப் புழையும், வாசப் பொதும்பும், பொலன்கொள்தேன் மழையும், வண்டும் மயிலும் மடிந்தவே. 11 11. மெல்மலர் புழையும் - மெல்லிய மலர்கள் பூத்த நுழை வாயில்களும். பொதும்பும் - புதர்களும். சந்திரன் மறைந்து இருள் சூழ்தல் காசறு மணியும், பொன்னும், காந்தமும் கஞல்வ தாய மாசறு மரங்க ளாகக் குயிற்றிய மதனச் சோலை, ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய விளக்கி னாலே விளங்கின உலகம் எல்லாம். 12 12. காந்தமும் - சூரியகாந்தம் சந்திரகாந்தம் என்னும் கற்களும். கஞல்வதாய் - விளங்குவதாகிய. மதனச்சோலை - களிப்பைத்தரும் சோலை. ஆசை - திசை. கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு, கண்கள் குதறின; பறவை வேலை குளித்தன; குளித்தி லாத பதறின பதைத்த; வானில் பறந்தன; பறந்து பார்வீழ்ந்து உதறின சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 13 13. `விலங்கு உள்ளம் வெருவிக் கதறின; கலங்கின; கண்கள் குதறின.’ குதறின - பிதுங்கின. பதறின பதைத்த - பதைபதைத்தன. பொய்ம்முறை அரக்கர் காக்கும் புள்உறை புதுமென் சோலை, விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும்அவ் விருக்கம் ஒன்றும், மும்முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன அம்முறை, ஐயன்வைகும் ஆல்என நின்றது அம்மா. 14 14. பொய்முறை அரக்கர் - பொய்யையே ஒழுக்கமாகக் கொண்டிருக்கும் அரக்கர். அம்முறை - அக்காலத்தில். இச்சமயத்தில் இரவு கழிந்தது; பகலவன் கிழக்கில் எழுந்தான் தாழ்இரும் பொழில்கள் எல்லாம் துடைத்துஒரு தமியன் நின்றான்; எழினோடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்; ஆழியின் நடுவண் நின்ற அருவரைக்கு அரசும் ஒத்தான்; ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான். 15 15. அளந்தவன் - திரிவிக்கிரமன். ஆழியின் - பாற்கடலின். அருவரைக்கு அரசு - மந்தரமலை இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கிப் பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புரிந்து நோக்கி, `அன்னைஈது என்னை மேனி! யார்கொல்?’ என்று அச்சம்உற்றார்; நன்னுதல் தன்னை நோக்கி `அறிதியோ நங்கை’ என்றார். 16 16. புரிந்து நோக்கி - விரும்பிப் பார்த்து. நன்னுதல் தன்னை - சீதா பிராட்டியை. தீயவர் தீய செய்தல், தீயவர் தெரியின் அல்லால், தூயவர் துணிதல் உண்டோ? நும்முடைச் சூழல் எல்லாம்; ஆயமான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த மாயம்என்று உரைக்க வேயும் மெய்என மையல் கொண்டேன். 17 17. சூழல் - மாயங்கள். அம்மான் - அந்த மானானது. அரக்கர் செய்த மாயம் - அரக்கர்களால் செய்யப்பட்ட வஞ்சகம். வெள்ளிஅம் கிரியைப் பண்டு அவ்வெம்தொழில் அரக்கன் வேரொடு அள்ளினன் என்னக் கேட்டான்; அத்தொழிற்கு இழிவு தோன்றப், புள்ளிமா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல, வள்உகிர்த் தடக்கை தன்னால் மண்ணின்றும் வாங்கி அண்ணல். 18 18. -. விட்டனன் இலங்கை தன்மேல்; விண்உற விரிந்த மாடம் பட்டன; பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற; சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும்; கெட்டனர் வீரர் அம்மா! பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 19 19. மாடம் பட்டன - மாடங்களில் பட்டன. பகுத்தன - பிளந்தன. துளங்கினர் - நடுங்கினர். அரக்கர்கள் முறையீடு அரிபடு சீற்றத் தான்தன், அருகுசென்று, அடியில் வீழ்ந்தார்; `கரிபடு திசையின் நீண்ட காவலாய்! காவல் ஆற்றோம்! கிரிபடு குவவுத் திண்தோள் குரங்குஇடை கிழித்து வீச எரிபடு துகிலின் நொய்தின் இற்றது கடிகா’ என்றார். 20 20. அரிபடு - சிம்மத்தினிடம் தோன்றிய. இடைகிழித்து வீச - சோலையில் புகுந்து மரங்களை முறித்து வீசுவதனால். `சொல்லிட எளியது அன்றால் சோலையைக், காலில், கையில், புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப், பொன்னால் வில்லிடு வேரம் தன்னை, வேரொடு வாங்கி வீசச் சில்இடம் ஒழியத், தெய்வ இலங்கையும் சிதைந்தது.’ என்றார். 21 21. பொன்னால் வில்இடு - பொன்னால் செய்யப்பட்டு ஒளி வீசுகின்ற. வேரம்தன்னை - செய்குன்றை இராவணன் நகைப்பு `ஆடகத் தருவின் சோலை பொடிபடுத்து, அரக்கர் காக்கும் தேடரும் வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா! கோடரம் ஒன்றே; நன்றுஇது! இராக்கதர் கொற்றம்; சொற்றல் மூடரும் மொழியார்’ என்ன மன்னனும் முறுவல் செய்தான். 22 22. ஆடகத்தருவின் சோலை - பொன்மயமான அரங்களை யுடைய சோலையை. கோடரம் - குரங்கு. அனுமான் ஆரவாரம் மண்டலம் கிழிந்த வாயின், மறிகடல் மோழை மண்ட, எண்திசை சுமந்த மாவும், தேவரும் இரியல் போகத் தொண்டைவாய் அரக்கி மார்கள் ஆல்வயிறு உடைந்து சோர அண்டமும் பிளந்து விண்டது ஆம்என அனுமன் ஆர்த்தான். 23 23. மண்தலம் கிழிந்த வாயில் - பூமி பிளந்த வழியிலே. மறிகடல் அலைவீசும் கடல்நீர். மோழை மண்ட - மொட்டை யாகப் பாய்ந்து நிறைய. 8. கிங்கரர் வதைப் படலம் இராவணன் உத்தரவு அருவரை முழையின் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி வெருவரும் முழக்கும், ஈசன் வில்இறும் ஒலியும் என்னக், குருமணி மகுட கோடி முடித்தலை குலுங்கும் வண்ணம் இருபது செவியின் ஊடும் நுழைந்ததுஅவ் எழுந்த ஓசை. 1 கிங்கரர் வதைப் படலம்: அனுமானைக் கொல்ல வந்த அரக்க வீரர்களை அனுமான் அழித்த நிகழ்ச்சியைக் கூறும் பகுதி. 1. முட்டும் - தாக்குகின்ற. அசனி - இடியின். குருமணி - பிரகாசிக்கும் இரத்தினங்களையுடைய. புல்லிய முறுவல் தோன்றப், பொறாமையும் சிறிது பொங்க, எல்லையில் ஆற்றல் மாக்கள் எண்இறந் தாரை ஏவி. `வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றிக், கொல்லலிர், குரங்கை நொய்தின் பற்றுதிர், கொணர்திர்’ என்றான். 2 2. வல்லையின் - விரைவில். அகலாவண்ணம் - ஓடிவிடாத படி. வானையும் வழியைமாற்றி - ஆகாய வழியையும் தடுத்து. நொய்தின் - எளிதில். நானிலம் அதனில் உண்டு போர்என நவிலின், அச்சொல் தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர், தெரித்தும் என்னின், கானினும் பெரியர், ஓசை கடலினும் பெரியர், கீர்த்தி வானினும் பெரியர், மேனி மலையினும் பெரியர்; மாதோ! 3 3. -. திருகுறும் சினத்துத் தேவர், தானவர் என்னும் தெவ்வர் இருகுறும்பு எறிந்து நின்ற இசையினார்; வசைஆம் ஈதுஓர் பொருகுறும்பு என்று வென்றி புணர்வது; பூவுண் வாழ்க்கை ஒருகுறும் குரங்கென்று எண்ணி, நெடிதுநாண் உழக்கும் நெஞ்சர். 4 4. தெவ்வர் இருகுறும்பு - பகைவர்களாகிய இரு விரோதிகளையும். `பொரு குறும்பு என்று வென்றி புணர்வது ஈதுஓர் - வசைஆம்.’ குறும்பு - சிறுபகை. வசை - பழியாகும். பூஉண் வாழ்ககை - பூவின் தேனை உண்டு வாழும். ஒருகுறும் குரங்கு - ஒரு சிறிய குரங்கு. அரக்கர்கள் போருக்கெழுதல் கட்டிய வாளர்; இட்ட கவசத்தார்; கழலர்; திக்கைத் தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக் கொட்டிய பேரி என்ன, மழைஎனக் குமுறும் சொல்லர். 5 5. தட்டிய - தொட்ட. ஈட்டிக் கொட்டிய - சேர்த்து முழக்கிய. பொன்நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளார்; மின்நின்ற படையும் கண்ணும் வெயில்விரிக் கின்ற மெய்யர்; எனஎன்றார்க்கு என்,என் என்றார்; எய்தியது அறிந்தி லாதார்; முன்நின்றார் முதுகு தீயப் பின்நின்றார் முடுகு கின்றார். 6 6. முன் நின்றார் முதுகு தீய - முன்னே நிற்பவர்களின் முதுகு சுடும்படி. முடுகுகின்றார் - விரைகின்றார். தெருஇடம் இல்என்று எண்ணி வான்இடைச் செல்கின் றாரும், புருவமும், சிலையும் கோட்டிப், புகைஉயிர்த்து உயிர்க்கின் றாரும்; ஒருவரின் ஒருவர் முந்தி முறைமறுத்து உருக்கின் றாரும்; விரிவுஇலது இலங்கை என்று வழிபெறார் விழிக்கின் றாரும். 7 7. முறை மறுத்து - முறை தவறியதனால் அவர்கள்மேல். உருக்கின்றாரும் - கோபிக்கின்றவர்களும். இவன்இவன் இவன்என நின்றார்; இதுஎன முதலில் எதிர்ந்தார் பவனனில் முடுகி நடந்தார்; பகல்இரவு உறமிடை கின்றார், புவனியும், மலையும், விசும்பும் பொருவரும் நகரும் உடன்போர் துவனியில் அதிர, விடம்போல் சுடர்விடு படைகள் துரந்தார். 8 8. இதுஎன - நாம் செய்யவேண்டியது இதுவென்று. பவனன் - காற்று. உடன்போர் துவனியின் அதிர - ஒன்றாகப் போர்முழக்கத்தால் அதிர்ச்சியடைய. அரக்கர், அனுமான் போர் அறவனும் அதனை அறிந்தான்; அருகினின் அழகின் அமைந்தார் இறவினின் உதவு நெடும்தார் உயர்மரம் ஒருகை இயைந்தான்; உறவரு துணைஎன நின்றுஆங்கு உதவிய அதனை உவந்தான், நிறைகடல் கடையும் நெடும்தாள் மலைஎன, நடுவண் நிமிர்ந்தான். 9 9. அறவன் - அனுமான். அழகின் அமைந்தார் - அழகான போர்க் கோலத்துடன் சூழ்ந்து கொண்டவர்களின். இறவினில் - மரணத்துக்கு. நெடும்தார் உயர் - நீண்டு வரிசையாக உயர்ந்த. பருவரை புரைவன வன்தோள், பனிமலை அருவி நெடும்கால் சொரிவன பலஎன, மண்தோய் துறைபொரு குருதி சொரிந்தார்; ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர்தலை உடைய உருண்டார்; அருவரை நெரிய விழும்பேர் அசனியும் அசைய அறைந்தான். 10 10. வன்தோள் - வலிய தோள்களிலிருந்து. `பனிமலை நெடும்கால் அருவி பல சொரிவனஎன... சொரிந்தார்.’ நெடும்கால் - நீண்ட வாய்க்கால்களாக. பற்றித் தாளொடு தோள்பறித்து எறிந்தனன்; பாரில் இற்ற வெம்சிறை வெற்பினம் ஆம்எனக் கிடந்தார்; கொற்ற வால்இடைக் கொடும்தொழில் அரக்கரை அடங்கச் சுற்றி வீசலின், பம்பரம் ஆம்எனச் சுழன்றார். 11 11. `வெம் சிறைஇற்ற வெற்பினம் ஆம்என பாரில் கிடந்தார்’ வெற்பினம் - மலைக்கூட்டம். ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல்உடல் தோறும் கூடிக் கொன்றனன் சிலவரைக்; கொடிநெடு மரத்தால் சாடிக் கொன்றனன் சிலவரைப்; பிணந்தொறும் தடவித் தேடிக் கொன்றனன் சிலவரைக்; கறங்குஎனத் திரிவான். 12 12. கூடி - நெருங்கி. கொடி நெடுமரத்தால் - கொடிபடர்ந்த நீண்ட மரத்தால். கறங்கு - காற்றாடி. எடுத்து அரக்கரை எறிதலும், அவர்உடல் எற்றக் கொடித்திண் மாளிகை இடிந்தன; மண்டபம் குலைந்த; தடக்கை யானைகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த; பிடிக்கு லங்களும் புரவியும் அவிந்தன பெரிய. 13 13. -. தத்தம் மாடங்கள் தம்உட லால்சிலர் தகர்த்தார்; தத்தம் மாதரைத் தம்கழ லால்சிலர் சமைத்தார்; தத்தம் மாக்களைத் தம்படை யால்சிலர் தடிந்தார்; எற்றி மாருதி தடக்கைக ளால்விசைத்து எறிய. 14 14. மாதரை - மனைவியரை. சமைத்தார் - அழித்தார். தத்தம் மாக்களை - தங்கள் தங்கள் குழந்தைகளை. ஆடல் மாக்களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி, `வீடு நோக்கியே செல்’கென்று சிலவரை விட்டான்; கூடி னார்க்குஅவர் உயிர்எனச் சிலவரைக் கொடுத்தான்; ஊடி னார்க்குஅவர் மனைதொறும் சிலவரை உய்த்தான். 15 15. -. மேவும் வெம்சினத்து அரக்கர்கள், முறைமுறை விசையால் ஏவும் பல்படை, எத்தனை கோடிகள் எனினும், தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த பூவும், புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில். 16 16. தூவும் - இன்புற்று வாழும். தெரிந்தில - வேற்றுமை தெரியாமல் இருந்தன. எஞ்சல் இல்கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ, நஞ்சம் உண்டவர் ஆம்என அனுமன்மேல் நடந்தார் துஞ்சி னார்அலது, யாவரும் அமர்த்தொழில் தொலைவுற்று அஞ்சி னார்இல்லை; அரக்கரில் வீரர்மற்று யாரே? 17 17. எஞ்சல் இல் - இராவணன் சேனைகளின் குறைவற்ற. அரக்கரில் - அரக்கரைவிட. வந்த கிங்கரர், ஏஎனும் மாத்திரை மடிந்தார் நந்த, வானத்து நாயகர் ஓடினர்; நடுங்கிப் பிந்து காலினர், கையினர், பெரும்பயம் பிடரின் உந்த, ஆயிரம் பிணக்குவை மேல்விழுந்து உளைவார். 18 18. மடிந்தார் நந்த - மாண்டுமடிய. பிந்து - பின்வாங்குகின்ற. பிடரின் உந்த - பிடரியைப் பிடித்துத் தள்ளிச் செல்ல. உளைவார் - வருந்துவார். தூதர்கள் அறிவிப்பு விரைவின் உற்றனர், விம்மினர், யாதொன்றும் விளம்பார்; கரத லத்தினால், பட்டதும் கட்டுரைக் கின்றார்; தரையில் நிற்கிலர், திசைதொறும் நோக்கினர் சலிப்பார்; அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான். 19 19. -. இராவணன் கேள்வி `இறந்து நீங்கின ரோ?இன்றுஎன் ஆணையை இகழ்ந்து துறந்து நீங்கின ரோ?அன்று வெம்சமர் தொலைந்தார் மறந்து நீங்கின ரோ?என்கொல் வந்தது?’என்று உரைத்தான் நிறம்செ ருக்குற வாய்தொறும் நெருப்புஉமிழ் கின்றான். 20 20. தொலைந்தார் - தோற்றவர்கள் மறந்து - தம் உறவினரை மறந்து. நிறம் செருக்குஉற - தம் கரியநிறம் விளக்கமாகத் தெரியும்படி. அனுமான் ஆண்மையுரைத்தல் `சலம்தலைக் கொண்டனர் ஆய தன்மையார் அலந்திலர் செருக்களத்து அஞ்சி ணார்அலர்; புலம்தெரி பொய்க்கரி புகலும் புன்கணார் குலங்களின் அவிந்தனர் குரங்கி னால்;’என்றார். 21 21. சலம்தலைக் கொண்டனர் - கோபத்தை மிகுதியாகக் கொண்டவர். அலந்திலர் - ஓடியவர்கள் அல்லர். புலம்தெரி - மனம் அறிந்தும். மீட்டவர் உரைத்திலர், பயத்தின் விம்முவார்; தோட்டுஅலர் இனமலர்த் தொங்கல் மோலியான், `வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரை கேட்டதோ? கண்டதோ? கிளத்து வீர்!’என்றான். 22 22. பயத்தின் விம்முவார் - அச்சத்தால் நடுங்கி நின்றார். தோட்டு அலர் - இதழ்கள் விரிந்த. தோடு; தோட்டு. `கண்டனம் ஒருபுடை நின்று கண்களால்; தெண்திரைக் கடல்என வளைந்த சேனையை மண்தலம் திரிந்து,ஒரு மரத்தி னால்உயிர் உண்டது;அக் குரங்கு;இனம் ஒழிவது அன்று;’என்றார். 23 23. உண்டது - உயிரைக் குடித்தது. இனம் - இன்னும். ஒழிவது அன்று - போகவில்லை. 9. சம்புமாலி வதைப் படலம் சம்புமாலி போருக் கெழுதல் கூம்பின கையன் நின்ற, குன்றுஎனக் குவவுத் திண்தோள் பாம்புஇவர் தறுகண் சம்பு மாலிஎன் பவனைப் பாரா, `வாம்பரித் தானை யோடு வளைத்ததுஅதன் மறனை மாற்றித் தாம்பினில் பற்றித் தந்துஎன் மனச்சினம் தணித்தி;’என்றான். 1 சம்புமாலி வதைப் படலம்: சம்புமாலி என்னும் வலிமையுள்ள அரக்கனை அனுமான் கொன்ற நிகழ்ச்சியைக் கூறும் பகுதி. 1. பாம்பு இவர் - பாம்பின் இயல்பைக்கொண்ட. பாரா - பார்த்துவாம் - தாவுகின்ற. மறனைமாற்றி - வலிமையை அடக்கி. ஆயவன் வணங்கி `ஐய அளப்பரும் அரக்கர் முன்னர் நீஇது முடித்தி என்று நேர்ந்தனை, நினைவின் எண்ணி ஏயினை என்னப் பெற்றால், என்னின்யார் உயர்ந்தார்?’ என்னாப் போயினன்; இலங்கை வேந்தன் போர்ச்சினம் போவது ஒப்பான். 2 2. நினைவின் எண்ணி - உள்ளத்திலே நினைத்து. ஏயினை - ஏவினாய். ஆயிரம் ஐந்தொடு ஐந்தாம் ஆழிஅம் தடம்தேர்; அத்தேர்க்கு ஏயின இரட்டி யானை; யானையின் இரட்டி பாய்மா; போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. 3 3. ஆழி - சக்கரம். தேர் பதினாயிரம்; யானை இருபதினா யிரம்; குதிரை நாற்பதாயிரம்: காலாட்படை எண்பதாயிரம்; வந்தன. அந்நெடும் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்றப், பொன்நெடும் தேரில் போனான்; பொருப்பிடை நெருப்பின் பொங்கித் தன்நெடும் கண்கள் காந்தத், தாழ்பெரும் கவசம் மார்பின் மின்னிட, வெயிலும் வீச, வில்லிடும் எயிற்று வீரன். 4 4. `எயிற்று வீரன்... போனான்.’ பொருப்புஇடை நெருப்பின் பொங்கி - மலையிலே பற்றிய நெருப்பைப்போல் சினந்து. எயிற்று வீரன் - பற்களையுடைய சம்புமாலி. அனுமான் ஆரவாரம் நந்தன வனத்துள் நின்ற நாயகன் தூதன் தானும், `வந்திலர் அரக்கர்’ என்னும் மனத்தினன், வழியை நோக்கிச் சந்திரன் முதல வான மீன்எலாம் தழுவ நின்ற இந்திர தனுவில் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான். 5 5. தோரணம் - தோரண வாசலின் உச்சியில். இவர்ந்து நின்றான் - ஏறி நின்றான். செல்லொடு மேகம் சிந்தத், திரைக்கடல் சிலைப்புத் தீர; கல்அளைக் கிடந்த நாகம் உயிரொடு விடமும் காலக்; கொல்இயல் அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்சம்; வீரன் வில்என இடிக்க; விண்ணோர் நடுக்குற வீரன் ஆர்த்தான். 6 6. செல்லொடு - இடியுடன். சிலைப்பு - ஆரவாரம். கல்அளை - மலைகளின் புற்றுக்களிலே. கொல்இயல் - கொல்லுந்தன்மை பொருந்திய. வீரன் வில் - இராமனுடைய வில். நின்றன திசைக்கண் வேழம் நெடும்களிச் செருக்கு நீங்கத்; தென்திசை நமனும் உள்ளம் துணுக்கெனச் சிந்தி; வானில்; பொன் றல்இல் மீன்கள் எல்லாம் பூஎன உதிரப், பூவும் குன்றமும் பிளக்க; வீரன் புயத்திடைக் கொட்டி ஆர்த்தான். 7 7. நெடு களி செருக்கு - மிகுந்த மதச்செருக்கு. பொன்றல்இல் - அழியாத. மீன்கள் - நட்சத்திரங்கள். பூவும் - நிலமும் அரக்கர் தடுமாற்றம் அவ்வழி அரக்கர் எல்லாம் அலைநெடும் கடலின் ஆர்த்தார்; செவ்வழிச் சேறல் ஆற்றார்; பிணப்பெரும் குன்றம் தெற்றி வெவ்வழி குருதி வெள்ளம் புடைமிடைந்து உயர்ந்து வீங்க எவ்வழிச் சேறும் என்பார்; தமர்உடம்பு இடறி வீழ்வார். 8 8. தெற்றி - தடுத்து. வெவ்வழி - சூடாக வழிந்தோடும். வீங்க - பெருக. அரக்கர்களுடன் அனுமான் போர் கருங்கடல் அரக்கர்தம் படைக்கலம், கரத்தால் பெருங்கடல் உறப்,புடைத்து இறத்துஉகப் பிசைந்தான்; விரிந்தன பொறிக்குலம் நெருப்புஎன வெகுண்டு ஆண்டு; இருந்தவன் கிடந்ததுஓர் எழுத்தெரிந்து எடுத்தான். 9 9. பெரும்கடல்உற - பெரிய கடலிலேபோய் விழும்படி. பொறிக்குலம் - தீப்பொறிகள். எழு - இரும்பு உலக்கை. வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார், மருண்டனர், மயங்கினர், மறிந்தனர் இறந்தார்; உருண்டனர், உலைந்தனர் ஓடினர் பிழைத்தார்; சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர்; மலைந்தார். 10 10. மலைந்தார் - அனுமானுடன் போர்செய்த அரக்கர் களிலே பலர். தொலைந்தனர் - ஓடினர். கரிகொடு கரிகளைக் களப்படப் புடைத்தான்; பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்; வரிசிலை வயவரை வயவரின் மடித்தான்; நிரைமணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான். 11 11. களம்பட - போர்க்களத்தில் அழியும்படி. வயவரை - வீரர்களை. அண்ணல்அவ் அரியினுக்கு அடியவர், அவன்சீர் நண்ணுவர் எனும்பொருள் நவைஅறத் தெரிப்பான்; மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் கண்ணினும், மனத்தினும், தனித்தனிக் கலந்தான். 12 12. சீர்நண்ணுவர் - சிறப்பைப் பெறுவர். வலித்தார் - வலிமையுடன் பொருத அரக்கர்களின். கானே காவல் வேழக கணங்கள், கதவாள் அரிகொன்ற, வானே எய்தத், தனியே நின்ற மதமால் வரைஒப்பான், தேனே புரைகண் கனலே சொரியச் சீற்றம் செருக்கினான் தானே ஆனான் சம்பு மாலி காலன் தன்மையான். 13 13. கானேகாவல் - காட்டையே உறையுளாகக்கொண்ட. அரிகொன்ற - சிங்கத்தால் கொல்லப்பட்டனவாய். ஒப்பான் - சம்புமாலி. தேனேபுரை - தேன்போன்ற நிறத்தையுடைய. `காலன் தறுகண்ணான் சம்புமாலி தானே ஆனான்.’ ஏதி ஒன்றால், தேரும் அஃதால், எளியோர் உயிர்கோடல் நீதி அன்றால், உடன்வந் தாரைக் காக்கும் நிலையில்லாய் சாதி! அன்றேல் பிறிதுஎன் செய்தி! அவர்பின் தனிநின்றாய் போதி! என்றான் பூத்த மரம்போல் புண்ணால் பொலிகின்றான். 14 14. ஏதி - படையும். சாதி - என்னுடன் போர்புரிந்தால் இறப்பாய். சம்பு மாலியின் சரங்களைத் தடுத்து அவனைக் கொல்லல் சலித்தான் ஐயன், கையால், எய்யும் சரத்தை உகச்சாடி ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்பத், தேரின் உட்புக்குக் கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தின் இடையிட்டு வலித்தான், பகுவாய் மடித்து, மலைபோல் தலைமண் இடைவீழ. 15 15. ஐயன் சலித்தான் - அனுமான் சிறிது சோர்வுற்றான். கலித்தான் சிலையை - வீரமுழக்கம் புரிந்து கொண்டிருந்த சம்புமாலியின் வில்லை. வலித்தான் - இழுத்தான். `கழுத்தின் இடையிட்டு மலைபோல் தலை மண்ணிடை வீழப் பகுவாய் மடித்து வலித்தான்?’ புக்கார் ஒற்றர் பொலந்தார் அரக்கன் பொருஇல் பெரும்கோயில்; விக்கா நின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார் நக்கான் அரக்கன் `நடுங்கல்’ என்றான், `ஐய நமர்எல்லாம் உக்கார், சம்பு மாலி உலர்ந்தான்; ஒன்றே குரங்கு;’ என்றார். 16 16. -. இதுகேட்டு வெகுண்ட இராவணன் `நானே சென்று அக்குரங்கைப் பிடிப்பேன்’ என்று எழுந்தான். அப்பொழுது சேனைத் தலைவர் ஐவர் `நாங்கள் செல்கின்றோம்’ என்று நவின்றனர். 10. பஞ்ச சேனாபதிகள் வதைப்படலம் போருக்கெழுந்த இராவணனைத் தடுத்து பஞ்ச சேனாபதிகள் கூறுதல் `இலங்கு வெம்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன், உலங்கின் மேல்எழுந் தன்ன,நீ குரங்கின்மேல் உருத்தால் அலங்கல் மாலைநின் புயம்நினைந்து, அல்லும்நன் பகலும் குலுங்கும் வன்துயர் நீங்கும்ஆல், வெள்ளியம் குன்றம்.’ 1 பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்: படைத் தலைவர்கள் ஐவரை அனுமான் கொன்ற நிகழ்ச்சியைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. எறுழ்வலி - மிகுந்த வலிமையுள்ள கலுழன் - கருடன். உலங்கின் மேல் - கொசுவின்மேல். எழுந்தன்ன - போருக்குப் புறப்பட்டதுபோல. குலுங்கும் - நடுங்கும். `அன்றி யும்உனக்கு ஆள்இன்மை தோன்றுமால்! அரச! வென்றி யில்லவர், மெல்லியோர் தமைச்,செல விட்டாய்! நன்றி இன்றுஒன்று காண்டியேல், எமைச்செல நயத்தி.’ என்று, கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான். 2 2. எமைசெல நயத்தி - எம்மை அனுப்ப விரும்பு. இறைஞ்சினர் - வணங்கினர். சேனாபதியர் புறப்பாடு ஆழித் தேர்த்தொகை ஐம்பதி னாயிரம்; அஃதே சூழிப் பூண்கைக்குத் தொகைஅவற்று இரட்டியின் தொகைய ஊழிக் காற்றுஅன்ன புரவி;மற்று அவற்றினுக்கு இரட்டி பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. 3 3. சூழி - முகபடாத்தையணிந்த. பூட்கைக்கும் தொகை - யானைக்கும் தொகையாகும். தொக்க தாம்படை, சுரிகுழல் மடந்தையர் தொடிக்கை, மக்கள், தாயர்,மற்று யாவரும் தடுத்தனர் மறுகி; `ஒக்க ஏகுதும், குரங்கினுக்கு உயிர்தர; ஒருவர் புக்கு மீண்டிலர்,’ என்றுஅழுது இரங்கினர் புலம்பி. 4 4. -. கைப ரந்துஎழு சேனைஅம் கடல்இடைக் கலந்தார் செய்கை தாம்வரும தேர்இடைக் கதிர்எனச் செல்வார்; மெய்க லந்தமா நிகர்வரும் உவமையை வென்றார்; ஐவ ரும்பெரும் பூதம்ஓர் ஐந்தும்ஒத்து அமைந்தார். 5 5. கைபரந்து - பக்கமெல்லாம் பரந்து. செய்கை தாம்வரும் - வேலைப்பாடுகள் பொருந்திய. மெய்கலந்த - உடம்பைப்பெற்ற. மால் - மேகத்திற்கு. நிகர்வரும் - நிகராக வருகின்றவர்கள் என்று சொல்லுகின்ற. முந்து இயம்பல கறங்கிட முறைமுறை பொறிகள் சிந்தி, அம்புறு கொடுஞ்சிலை உரும்எனத் தெறிப்பார்; வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார்; இந்தி யம்பகை ஆயவை ஐந்தும்ஒத்து இயைந்தார். 6 6. இயம் - வாத்தியங்கள். கறங்கிட - ஒலிக்க. பொறிகள் - தீப்பொறிகள். வலியார் - அடங்காத வலிமையுள்ளவர்கள். மலைகளை நகும்தட மார்பர்; மால்கடல் அலைகளை நகுநெடும் தோளர்; அந்தகன் கொலைகளை நகுநெடும் கொலையர்; கொல்லன்ஊது உலைகளை நகும்அனல் உமிழும் கண்ணினார். 7 7. நகும் - சிரிக்கும்; பரிகசிக்கும்; அந்தகன் - எமன். இவ்வகை ஐவரும் எழுந்த தானையர் மொய்கிளர் தோரணம் அதனை முற்றினார்; கையொடு கையுற அணியும் கட்டினார்; ஐயனும் அவர்நிலை அமைய நோக்கினான். 8 8. மொய்கிளர் - அனுமான் வலிமையுடன் நிற்கும். கையொடு கைஉற - பக்கத்தோடு பக்கம் பொருந்துமாறு. அணியும் கட்டினார் - சேனைகளை அணிவகுத்தனர். மாருதியின் மகிழ்ச்சி `இற்றனர் அரக்கர்இப் பகல்உ ளே’எனாக் கற்றுணர் மாருதி களிக்கும் சிந்தையான், முற்றுறச் சுலாவிய முடிவுஇல் தானையைச் சுற்றுஉற நோக்கித்,தன் தோளை நோக்கினான். 9 9. -. அனுமான் பேர் உருக்கொண்டு அரக்கர்களைக் கொன்றழித்தல் வீங்கிய வீரனை, வியந்து நோக்கிய தீங்குஇயல் அரக்கரும் திருகி னார்சினம், வாங்கிய சிலையினர், வழங்கி னார்படை; ஏங்கிய சங்கினம்; இடித்த பேரியே. 10 10. -. உதைக்கும்வெம் கரிகளை; உழக்கும் தேர்களை; மிதிக்கும்வன் புரவியைத், தேய்க்கும் வீரரை அதுக்கும்வல் எழுவினால் அரைக்கும்; மண்இடைக் குதிக்கும்வன் தலையிடைக் கடிக்கும் குத்துமால். 11 11. -. பிறைக்கடை எயிற்றின, பிலத்தின் வாயின; கறைப்புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின; உறைத்தபு படையின; உதிர்ந்த யாக்கைகள் மறைத்தன மகரதோ ரணத்தை வான்உற. 12 12. பிறைகடை எயிற்றின - பிறைபோன்ற கடைவாய்ப் பற்களை உடையன. பொறிகளோடு - தீப் பொறிகளுடன். கறைப்புனல் - இரத்தம். உறைதபு படையின - உறைகள் நீங்கிய ஆயுதங்களை உடையன. மறைத்தன - அவைகள் மறைத்தன. மகரதோரணத்தை - மீன்வடிவாகச் செய்யப்பட்டிருக்கும் தோரண வாசலை. முழுமுதல், கண்ணுதல், முருகன் தாதை,கைம் மழுஎனப் பொலிந்துஒளிர் வயிர வான்தனி எழுவினில், பொலங்கழல் அரக்கர் ஈண்டிய குழுவினைக், களப்படக் கொன்று நீக்கினான். 13 13. வயிரவான் தனி எழுவினில் - உறுதியான சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணால். உலந்தது தானை; உவந்தனர் உம்பர்; அலந்துஅலை வுற்றது அவ்வழி இலங்கை; கலந்தது அழுகுர லின்கடல் ஓதை; வலம்தரு தோளவர் ஐவரும் வந்தார். 14 14. அலைந்து அலைவுற்றது - வருந்திக் குழப்பமடைந்தது. ஆழி - கடல் சூழ்ந்த. அவர்கள் ஆயிரக் கணக்கான அம்புகளை ஏவினர்; அவைகளை அழித்து அவர்களில் ஒருவனை அனுமான் கொன்றான். மற்றொருவனைத் தேருடன் தூக்கி வானில் வீசினான். அவன் நிலத்தில் வீழ்ந்து மாண்டான். அதன்பின், மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார், தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார்; வேண்டிய வெம்சமம் வேறு விளைப்பார், `யாண்டுஇனி ஏகுதி’ என்றுஎதிர் நின்றார். 15 15. வெம்சமம் - கொடிய போர். திரண்டுஉயர் தோள்இணை அஞ்சனை சிங்கம், அரண்தரு விண்உறை வார்களும் அஞ்ச, முரண்தரு தேர்அவை, ஆண்டுஒரு மூன்றின் இரண்டை, இரண்டுகை யில்கொடு எழுந்தான். 16 16. அரண்தரு - காவல் அமைந்த. முரண்தரு - வலிமை பொருந்திய. ஆண்டு ஒரு மூன்றின் - அங்குள்ள மூன்றினுள். தூங்கின பாய்பரி சூதர் உலைந்தார்; வீங்கிய தோளவர் விண்ணின் விசைத்தார் ஆங்கது கண்டுஅவர் போய்அக லாமுன் ஓங்கினன் மாருதி, ஒல்லையின் உற்றான். 17 17. பரி - குதிரை. சூதர் - தேர் ஓட்டுவோர். அவர் - அச்சேனாதிபதிகள். போய் அகலாமுன் - மறைவதற்குமுன். ஓங்கினன் - உயர்ந்து வளர்ந்தான். உற்றான் - அவர்களை அடைந்தான். கால்நிமிர் வெம்சிலை கையின் இறுத்தான் ஆனவர் தூணியும் வாளும் அழித்தான்; ஏனைய வெம்படை இல்லவர் எஞ்சார், வான்இடை நின்று,உயர் மல்லின் மலைந்தார். 18 18. எஞ்சார் - பின்வாங்காதவர்களாய். மல்லின் - மல்யுத்தத்தால். வெள்ளை எயிற்றர், கறுத்துஉயர் மெய்யர், பிள்ள விரித்த பிலப்பெரு வாயர், கொள்ள உருத்துஅடர் கோள்அரவு ஒத்தார்; ஒள்இகல் வீரன் அருக்கனை ஒத்தான். 19 19. அடர் - நெருக்குகின்ற. கோள்அரவு - வலிமையுள்ள பாம்புகளை. ஒள்இகல் வீரன் - புகழத்தக்க வலிமையுள்ள வீரனாகிய அனுமான். தாம்பென வாலின் வரிந்துஉயர் தாளோடு ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான், பாம்புஎன நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார்; ஆம்பல் நெடும்பகை போல்அவன் நின்றான். 20 20. ஏம்பல் இலார் - சலிப்பில்லாதவர்கள். ஆம்பல் - அல்லி மலர். ஆம்பலின் பகைவன் சூரியன். அல்லி பகலில் மலராது. அனுமனுக்குச் சூரியன் உவமை. வேறு வஞ்சமும் களவும் வெஃகி, வழிஅலா வழிமேல் ஓடி, நஞ்சினும் கொடியர் ஆகி, நவைசெயற்கு உரிய நீரார் வெம்சின அரக்கர்,ஐவர், ஒருவனே வெல்லப் பட்டார்; அஞ்சுஎனும் புலன்கள் ஒத்தார்; அவனும்நல் அறிவை ஒத்தான். 21 21. ஐவர் - பஞ்ச சேனாபதிகள். அஞ்சுஎனும் புலன்கள் ஒத்தார் - ஐம்புலன்களைப் போன்றார். அவனும் - அந்த அனுமானும். `தானையும் உலந்தது, ஐவர் தலைவரும் சமைந்தார், தாக்கப் போனவர் தம்மில் மீண்டோம் யாம்,அமர் புரிகி லாமை; வானையும் வென்று ளோரை வல்லையின் மடிய நூறி, ஏனையர் இன்மை சோம்பி இருந்ததுஅக் குரங்கும்;’ என்றார். 22 22. சமைந்தார் - அழிந்தார். வல்லையின் - விரைவிலே. மடிய நூறி - இறக்கும்படி கொன்று. ஏனையர் இன்மை - பொருவோர் எவரும் இன்மையால். 11. அட்ச குமாரன் வதைப் படலம் அட்ச குமாரன் வேண்டுகோள் படைத் தலைவர்கள் ஐவரும் பட்டதை அறிந்து சினந்த இராவணனை, அட்சகுரமான் பணிந்தான். `அக் குரங்கை நான் வென்று வருகின்றேன்; விடை தருக’ என்றான். `அண்டர்கோன் தன்னைப் பற்றித் தருகெனா, அடியேன் நிற்கக் கொண்டனை என்முன் தன்னைப் பணி;என நெஞ்சம் கோடல் உண்டு;அது தீரும் அன்றே உரன்இலாக் குரங்குஒன் றேனும் எண்திசை வென்ற நீயே ஏவுதி என்னை’ என்றான். 1 அட்ச குமாரன் வதைப் படலம்: இராவணன் மகனாகிய அட்ச குமாரன் என்பவன் அனுமானால் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. `அடியேன் நிற்க, அண்டர்கோன் தன்னைப்பற்றிக் கொணர்கென என்முன் தன்னைப் பணிகொண்டனை.’ நெஞ்சம் கோடல் உண்டு - உள்ளத்தில் கொண்ட குறை ஒன்றுண்டு. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு, கைதவம் கண்ணி ஈண்டுஓர் சிறுபழி இழைக்கும் கற்பான் எய்தினன் இமையா முக்கண் ஈசனே, என்ற போதும் நொய்தினின் வென்று பற்றித் தருகுவென் நொடியில் நுன்பால். 2 2. கோடரம் - குரங்கு. கற்பான் - நினைப்புடன். நொய்தினில் - எளிதில். எனஇவை இயம்பி `ஈதி விடை’என இறைஞ்சி நின்ற வனைகழல் வயிரத் திண்தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கித் `துனைபரித் தேர்மேல் ஏறிச் சேறி’என்று இனைய சொன்னான் புனைமலர்த் தாரி னானும் போர்அணி அணிந்து போனான். 3 3. -. அட்சகுமாரனுடன் சென்ற சேனைகள் ஆறுஇரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி வேறுஇலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர் ஏறிய தேரர் சூழ்ந்தார்; இறுதியில் யாவும் உண்பான் சீறிய காலத் தீயின் செறிசுடர்ச் சிகைகள் அன்னார். 4 4. -. மந்திரக் கிழவர் மைந்தர், மதிநெறி அமைச்சர் மக்கள், தந்திரத் தலைவர் ஈன்ற தநயர்கள், பிறரும், தாதைக்கு அந்தரத்து அரம்பை மாரில் தோன்றினர் ஆதி யோர்கள் எந்திரத் தேரர் சூழ்ந்தார்; ஈர்இரண்டு இலக்கம் வீரர். 5 5. -. தீச் சகுனங்கள் காகமும், கழுகும்பேயும், காலனும் கணக்குஇல் காலம் சேகுற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்லப், பாகுஇயல் கிளவிச் செவ்வாய்ப் படைவிழிப் பணைத்த வேய்த்தோள் தோகையர் மனமும், தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற. 6 6. சேகுஉற - உறுதியாக. வினையில்செய்த - தம் காரியத் தால் செய்த தொக்க தும்பியும் - கூட்டமான வண்டுகளும். ஓங்குஇரும் தடம்தேர் பூண்ட உளைவயப் புரவி ஒல்கித் தூங்கின வீழத்,தோளும் கண்களும் இடத்துத் துள்ள, வீங்கின மேகம் எங்கும் குருதிநீர்த் துளிகள் வீழ்ப்ப, ஏங்கின காகம் ஆர்ப்ப இருள்இல்விண் இடிப்ப மாதோ. 7 7. உளை - பிடரிமயிர் உள்ள. ஒல்கி தூங்கினவீழ - தளர்ந்து தூங்கி விழவும். குருதிநீர் துள்ளி - இரத்த நீர்த்துளியை. இருள்இல் - மேகம் அற்ற. விண் இடிப்ப - வானம் இடியிடிக்க. வெள்ளவெம் சேனை சூழ, விண்உளோர் வெருவி விம்ம, உள்ளம்நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்னத் துள்ளிய சுழல்கண் பேய்கள் தோள்புடைத்து ஆர்ப்பத், தோன்றும் கள்அவிழ் அலங்க லானைக் காற்றின்சேய் வரவு கண்டான். 8 8. அனுங்கி - வருந்தி. உறுவது - வரப்போவதைப்பற்றி. அலங்கலான் - அட்ச குமாரன். அனுமான் நினைப்பு `இந்திர சித்தோ? மற்றுஅவ் இராவண னேயோ?’ என்னாச் சிந்தையின் உவகை கொண்டு, முனிவுற்று குரக்குச் சீய `வந்தனன்; முடிந்தது அன்றோ மனக்கருத்து;’ என்ன வாழ்த்திச் சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான். 9 9. `இந்திரசித்தோ இராவணனேயோ வந்தனன்?’ என்று எண்ணினான் அனுமான். `எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல், யான்முன் நோற்ற புண்ணியம் உளதாம்; எம்கோன் தவத்தொடும் பொருந்தி னானே! நண்ணிய நானும் நின்றேன்; காலனும் நணுகி நின்றான் கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான்.’ 10 10. தவத்தொடும் பொருந்தினானே - நல்வினைப்பயன் அமைந்தவன் ஆனால். பழியிலது உருஎன் றாலும் பல்தலை அரக்கன் அல்லன்; விழிகள்ஆ யிரமும் கொண்ட வேந்தைவென் றானும் அல்லன்; மொழியின்மற்று அவர்க்கு மேலான்; முரண்எழில் முருகன் அல்லன்; அழிவில்ஒண் குமரன் யாரோ அஞ்சனக் குன்றம் அன்னான். 11 11. -. அட்சகுமாரன் அலட்சியம் என்றவன் உவந்து விண்தோய் இந்திர சாபம் என்ன நின்றதோ ரணத்தின் உம்பர் இருந்தஓர் நீதியானை வன்தொழில் அரக்கன் நோக்கி வாள்எயிறு இலங்க நக்கான் கொன்றதுஇக் குரங்கு போலாம் அரக்கர்தம் குழாத்தை’ என்றான்.12 12. -. தேர்ப்பாகன் தெளிவுரை அன்னதாம் நகுசொல் கேட்ட சாரதி’ஐய கேண்மோ இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்; இகழல்; அம்மா! மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்குஎன்றால் மற்றும் உண்டோ? சொன்னது துணிவில் கொண்டு சேறி!’ என்று உணரச் சொன்னான். 13 13. உலகுஇயல் - உலகில் நிகழ்வதை. இகழல் - இகழாதே. மன்னன் - இராவணன். சொன்னது - நான் சொல்லியதை. துணிவில்கொண்டு - மறவாமல் உறுதியாக மனத்தில் வைத்துக் கொண்டு. இது கேட்ட அட்சன், `இக் குரங்கை மட்டும் அன்று. குரங்கின் மூலத்தையே அழிப்பேன்’ என்றான். அரக்கர் சிதைவு ஆர்த்துஎழுந்து அரக்கர் சேனை, அஞ்சனைக்கு உரிய குன்றைப் போர்த்தது; பொழிந்தது அம்மா! பொருபடைப் பருவ மாரி! வேர்த்தனர் திசைகாப் பாளர்; சலித்தது விண்ணும் மண்ணும்; தார்த்தனி வீரன், தானும் தனிமையும் அவர்,மேல் சார்ந்தான். 14 14. தார்தனி வீரன் - வெற்றிமாலை அணிதற்குரிய ஒப்பற்ற வீரனாகிய. அனுமான். காய்எரி, முளிபுல் கானில் கலந்துஎனக், காற்றின் செம்மல், ஏஎனும் அளவில் கொல்லும் நிருதர்க்குஓர் எல்லை இல்லை; போயவர் உயிரும் போகித் தென்புலம் படர்தல், பொய்யாது; ஆயிர கோடி தூதர் உளர்கொலோ நமனுக்கு அம்மா! 15 15. காய்எரி - சுடுகின்ற நெருப்பானது. காய்புல் கானில் - காய்ந்த புல் உள்ள காட்டில். ஏஎனும் அளவில் - விரைவில். அட்சன் அழிவு அட்சனும் அனுமனும் கடும்போர் புரிந்தனர்; அட்சன் வில் முறிந்தது. அவன் வாளும் முறிந்தது. இருவரும் மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் அட்சன் அனுமான் வாலில் கட்டுண்டான். அனுமான் கையால், பற்கள் சிந்தும்படி கன்னத்தில் அறையுண்டான். நீத்தாய் ஓடின உதிரப் பெருநதி நீரா கச்,சிலை பாராகப், போய்த்தாழ் செறிதசை அரிசிந் தினபடி, பொங்கப், பொரும்உயிர் போகாமுன் மீத்தாம் நிமிர்சுடர் வயிரக் கைகொடு பிடியா, விண்ணொடு மண்காணத் தேய்த்தான்; ஊழியின் உலகுஏழ் தேயினும் ஒருதன் புகழ்இறை தேயாதான். 16 16. நீத்துஆய் ஓடின - வெள்ளமாகிய ஓடிய. சிலை - அம்மிக்கல். பார் - நிலம். அரிசிந்தினபடி - அரிசியைப்போல. மீதாம் - மேலே பாய்கின்ற. நிமிர்சுடர் வயிரம் - நிறைந்த ஒளியுள்ள வயிரம்போன்ற. சிறை - சிறிதும். உதிரம் நீராகவும், நிலம் அம்மியாகவும், தசை அரிசியாகவும், உருவகம் செய்யப்பட்டன. மீனாய் வேலையை உற்றார் சிலர்;சிலர் பசுவாய் வழிதொறும் மேய்வுற்றார்; ஊன்ஆர் பறவையின் வடிவா னார்சிலர்; சிலர் நான் மறையவர் உருஆனார்; மான்ஆர் கண்இள மடவார் ஆயினர்; முன்னே தம்குழல் வகிர்வுஉற்றார் ஆனார் சிலர்;சிலர் `ஐயா நின்சரண்’ என்றார், நின்றவர் அரிஎன்றார். 17 17. ஊன்ஆர் - மாமிசத்தைத் தின்னுகின்ற. முன்னே - அனுமான் எதிரிலே. தம்தா ரமும்,உறு கிளையும், தமைஎதிர் தழுவும் தொறும்`நும தமர்அல்லேம்; வந்தேம் வானவர்’ என்றே கினர்சிலர்; சிலர்`மா னுயர்’என வாய்விட்டார்; மந்தா ரம்கிளர் பொழில்வாய் வண்டுகள் ஆனார் சிலர்;சிலர் மருள் கொண்டார்; இந்துஆர் எயிறுகள் இறுவித் தார்,சிலர்; எரிபோல் குஞ்சியை இருள்வித்தார். 18 18. -. ஓடினார் உயிர்கள்நாடு உடல்கள்போல் உறுதியால் வீடினார்; வீடினார் மிடைஉடல் குவைகள்வாய் நாடினார், மடநலார்; நவையிலா நண்பரைக் கூடினார்; ஊடினார் உம்பர்வாழ் கொம்புஅனார். 19 19. `வீடினார்மிடை உடல்குவைகள் வாய்நாடினார் மடநலார், உறுதியால் வீடினார்’. வீடினார் - இறந்தவர்களின். மிடைஉடல் குவைகள்வாய் - நெருங்கிய பிணக் குவியலிலே. வீடினார் - இறந்தார். நண்பரை - கணவரை. அட்சன் அழிவு கேட்டு வருந்தல் கயல்மகிழ் கண்இணை கலுழி கான்றுஉகப், புயல்மகிழ் புரிகுழல் பொடிஅ ளாவுற அயன்மகன் மகன்மகன் அடியில் வீழ்ந்தனள் மயன்மகள் வயிறுஅலைத்து அலறி மாழ்கினாள். 20 20. கலுழி கான்றுக - நீர்வந்து சிந்த. பொடி - புழுதி. மயன்மகள் - மண்டோதரி. தாவரும் திருநகர்த் தைய லார்முதல் ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்; காவலன் கால்மிசை விழுந்து காவல்மாத் தேவரும் அழுதனர்; களிக்கும் சிந்தையார். 21 21. -. 12. பாசப் படலம் அட்சன் அழிவுகேட்ட இந்திரசித்தன் கோபம் தம்பியை உன்னும் தோறும் தாரைநீர் ததும்பும் கண்ணான், வம்புஇயல் சிலையை நோக்கி வாய்மடித்து உருத்து நக்கான், `கொம்புஇயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான்! எந்தை புகழ்அன்றோ தேய்ந்தது;’ என்றான். 1 பாசப் படலம்: அனுமானை இந்திரசித்து பிரமபாசத் தால் பிணித்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. வம்புஇயல் - போர் செய்வதற்கு ஏற்ற. கொம்புஇயல் - மரக்கிளைகளிலே சஞ்சரிக்கின்ற. மாய வாழ்க்கை - நிலை யில்லாத வாழ்வையுடைய. குரங்கா ஆற்றல் - தாழ்வடையாத வலிமையுள்ள. இந்திர சித்தன் இராவணன்பால் செல்லுதல் தாள்இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான், தறுக ணானும் தோள்இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்; வாள்இணை நெடும்கண் மாதர் வயிறுஅலைத்து அலறி மாழ்க, மீளிபோல் மொய்ம்பி னானும் விலக்கினன்; விளம்பல் உற்றான். 2 2. தறுகணானும் - இராவணனும். மீளி - சிங்கம். மொய்ம்பினானும் - வலிமையுள்ள இந்திரசித்தும். இந்திர சித்தன் சொற்கள் `ஒன்றும்நீ உறுதி ஓராய்! உற்றுஇருந்து உளைய கிற்றி, வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், மன்னா, `சென்றுநீர்பொருதிர்’ என்று திறத்திறம் செலுத்தித், தேயக் கொன்றனை நீயே அன்றோ அரக்கர்தம் குழுவை’ எல்லாம். 3 3. உறுதி - நன்மையை. உற்று இருந்து - துன்பத்தை அடைந்திருந்து. மரபுளி - முறையாக. திறம்திறம் - வரிசை வரிசையாக. `கிங்கரர், சம்பு மாலி, கேடிலா ஐவர், என்றுஇப் பைங்கழல் அரக்க ரோடும் உடன்சென்ற பகுதிச் சேனை, இங்குஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்குஅது, எந்தாய்! சங்கரன், அயன்,மால் என்பால் தாம்எனும் தகையது ஆமே.’ 4 4. பகுதிச்சேனை - பாகமாகிய சேனையிலே. எனும்தகையது ஆமே - என்று எண்ணத்தகுந்த பெருமையுடையது ஆகும். `திக்கய வலியும் மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கைலை யோடும், உலகுஒரு மூன்றும் வென்றாய்! அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி, புக்குஇனி வென்றும் என்றால், புலம்புஅன்றிப் புலமைத்து ஆமோ.’ 5 5. திக்கயம் - திசை யானைகள். ஆற்றல் காண்டி - ஆற்றலைக் காட்டும் படி விட்டுவிட்டாய். வென்றும் - வெல்வோம். புலம்புஅன்றி - பிதற்றலே அல்லாமல். இந்திரசித்து போருக்குப் புறப்படல் `ஆயினும் ஐய, நொய்தின், ஆண்தொழில் குரங்கை, யானே ஏஎனும் அளவில் பற்றித் தகுவென்; இடர்என்று ஒன்றும் நீஇனி உழக்கற் பாலை அல்லை,நீடு இருத்தி!’ என்னாப் போயினன் அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான். 6 6. -. சென்றனன் என்ப மன்னோ, திசைகளோடு உலகம் எல்லாம் வென்றவன் இவன்என் றாலும், வீரத்தே நின்ற வீரன், அன்றுஅது கண்ட ஆழி அனுமனை, அமரின் ஆற்றல் நன்றுஎன உவகை கொண்டான், யாவரும் நடுக்கம் உற்றார். 7 7. அன்று அதுகண்ட - அப்பொழுது அவ்வாறு போர் செய்து நின்ற. ஆழி அனுமனை - ஆழ்ந்த அறிவுள்ளவனாகிய அனுமானைப்பற்றி. வெப்புஅடை கில்லா நெஞ்சில் சிறியதுஓர் விம்மல் கொண்டான்; `அப்புஅடை வேலை யன்ன பெருமையர், அற்ற லோடும் ஒப்புஅடை கில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே; எப்படை கொண்டு வெல்வது இராமன்வந்து எதிர்க்கின்?’ என்றான். 8 8. வெப்பு அடைகில்லா நெஞ்சில் - இதுவரையிலும் கவலை அடைந்தறியாத தனது உள்ளத்திலே. விம்மல் - ஏக்கம். அப்புஅடை - நீர்நிறைந்த. கண்அனார், உயிரே ஒப்பார், கைப்படைக் கலத்தின் காப்பார், எண்ணலாம் தகையர் அல்லர், இறந்துஎதிர் கிடந்தார் தம்மை, மண்உளே நோக்கி நின்று, வாய்மடித்து உருத்து, மாயாப் புண்உளே கோல்இட்டு அன்ன, மானத்தால் புழுங்கு கின்றான். 9 9. எண்ணல்ஆம் தகையர் அல்லர் - எண்ணக்கூடிய அளவில்லாதவர்கள். மாயா - ஆறாத. `கான்இடை, அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், யான்உடை எம்பி வீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம் மானிடர் இருவ ராலும், வானரம் ஒன்றி னானும், ஆனதே உள;என் வீரம் அழகிற்றே அம்ம!’ என்றான். 10 10. ஆனஇடத்து - உண்டானபோது. உளஎன் வீரம் - இருக்கின்ற எனது வீரம். நீப்புஉண்ட உதிர வாரி, நெடுந்திரைப் புணரி தோன்ற, ஈர்ப்புஉண்டற்கு அரிய வாய பிணக்குவடு இடறிச் செல்வான்; தேய்ப்புஉண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள், தீயில் காய்ப்புஉண்ட செம்பில் தோன்றக், கறுப்புஉண்ட மனத்தன் ஆனான். 11 11. நீர்ப்பு உண்ட - நீரின் தன்மை பொருந்திய. ஈர்ப்புண்டற்கு - இரத்த வெள்ளத்தால் இழுக்கப்படுவதற்கு. அரியவாய - முடியாத. தம்பியாக்கை - தம்பியின் உடம்பை. கறுப்பு உண்ட - கோபம்கொண்ட’. மனத்தன் தம்பியாக்கை கண்டான்.’. ஆற்றலன் ஆகி அன்பால் அறிவுஅழிந்து அயரும் வேலை, சீற்றம்என்று ஒன்று தானே மேல்நிமிர் செலவிற்று ஆகித், தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துறந்தது அம்மா! ஏற்றம்சால் ஆணிக்கு ஆணி எதிர்செலக் கடாயது என்ன. 12 12. மேல்நிமிர் செலவிற்று ஆகி - மேலே வளர்ந்து செல்லுவதாகி. உள்உற - உள்ளே அடங்கும்படி. துரந்தது - விரட்டி அடக்கிவிட்டது. ஏற்றம்சால் - ஏறுகின்ற. இந்திரசித்தைக் கண்டு அனுமான் எண்ணுதல் `கட்டேறு நறும்கமழ் கண்ணிஇக் காளை, என்கைப் பட்டால், அதுவேஅவ் விராவணன் பாடும் ஆகும்; `கெட்டோம்’ எனஎண்ணி,இக் கேடுஅரும் கற்பி னாளை விட்டுஏகும்; அதுஅன்றி அரக்கரும் வெம்மை தீர்வார்.’ 13 13. கட்டுஏறும் நறும்கமழ் - கட்டப்பட்ட நறுமணம் வீசுகின்ற. கைபட்டால் - கையால் இறந்தால். பாடு - துன்பம். கேடுஅரும் - பழுதற்ற. அரக்கரும் அனுமானும் பொருதல் அக்காலை அரக்கரும், ஆனையும், தேரும், மாவும் முக்கால் உலகம்ஒரு மூன்றையும்’ வென்று முற்றிப் புக்கானின் முன்புக்கு, உயர்பூசல் பெருக்கும் வேலை; மிக்கானும் வெகுண்டுஓர் மராமரம் கொண்டு மிக்கான். 14 14. முக்கால் - மூன்று தடவை. முற்றி - முடித்து. புக்கானின்முன் - புகுந்த இந்திரசித்துக்கு முன்னே. புக்கு - புகுந்து. மிக்கானும் - உயர்த்தோனாகிய மாருதியும். பிடிஉண் டார்களும், பிளத்தல்உண் டார்களும், பெருந்தோள் ஒடிஉண் டார்களும், தலைஉடைந் தார்களும், உருவக் கடிஉண் டார்களும், கழுத்துஇழந் தார்களும், கரத்தால் அடிஉண் டார்களும் அச்சம்உண்ட hர்களும் அரக்கர். 15 15. உருவக் கடியுண்டார்களும் - பற்கள் உடம்பில் ஊடுருவும்படி கடிபட்டவர்களும். தேரும், யானையும், புரவியும், அரக்கரும் சிந்திப் பாரின் வீழ்தலும், தான்ஒரு தனிநின்ற பணைத்தோள் வீரர் வீரனும், முறுவலும் வெகுளியும் வீங்க, `வாரும் வாரும்’என்று அழைக்கின்ற அனுமன் மேல் வந்தான். 16 16 சிந்தி - சிதறி. வீரர்வீரனும் - இந்திரசித்தும். இந்திர சித்தன் ஆதிசேடனும் நடுங்கும்படி வில்லின் நாணைத் தெறித்தான். அந்த நாண் அறும்படி அனுமான் தோள் புடைத்தான். இந்திர சித்தின் வீரவுரை `நல்லை! நல்லை!இஞ் ஞாலத்துள் நின்ஒக்க நல்லார் இல்லை! இல்லையால்! எறுழ்வலிக்கு யாரொடும் இகல வல்லை! வல்லை!இன்று ஆகும்நீ படைத்துள வாழ்நாட்கு எல்லை! எல்லை!’ என்று இந்திர சித்துவும் இசைத்தான். 17 17. நல்லார் - நல்ல வீரர்கள். எறுழ்வலிக்கு - மிகுந்த வலிமையில். யாரொடும் இகல - யாருடனும் போர்புரிய. `நாளுக்கு எல்லையும், நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்கு எல்லையும், கொடும்தொழிற்கு எல்லையும், கொடியீர் வாளுக்கு எல்லையும் வந்தன; வகைகொண்டு வந்தேன் தோளுக்கு எல்லைஒன்று இல்லை;’என்று அனுமனும் சென்றான். 18 18. நாளுக்கு - உங்கள் வாழ்நாளுக்கு. கோளுக்கு - கொள்கைக்கு. வந்தன - வந்துவிட்டன. வகைகொடு வந்தேன். அதற்குரிய ஆற்றலுடன் வந்தேன். தோளுக்கு - எனது தோள் வலிமைக்கு. அம்புகளுக்கு அஞ்சாது உயர்ந்து நின்ற அனுமானைக் கண்டு இந்திர சித்து வியத்தல் பாகம் அல்லது கண்டிலன், அனுமனைப் பார்த்தான், மாக வன்திசை பத்தொடும் வரம்புஇலா உலகிற்கு ஏக நாதனை எறுழ்வலித் தோள்பிணித்து ஈர்த்த மேக நாதனும், மயங்கினன் ஆம்என வியந்தான். 19 19. மாகவன்திசை - வான முதலிய வலிய திசைகள். ஏகநாதனை - ஒரே தலைவனாகிய இந்திரனை. மேகநாதனும் - இந்திரசித்தும். இந்திர சித்தன் தேர், குதிரை, சாரதி முதலியவை களை அனுமான் அழித்தான். எல்லாப் படைகளையும் சிதைத்த அனுமானைக் கண்டு வியந்த இந்திர சித்தன் இறுதியாக அவன்மேல் பிரமாஸ்திரத்தை ஏவினான். அனுமான் கட்டுண்ணல் தணிப்ப ரும்பெரும் படைக்கலம், தழல்உமிழ் தறுகண் பணிக்கு லங்களுக்கு அரசினது உருவினைப் பற்றித், துணுக்கம் உற்றுஉயர் கலுழனும் துணுக்குறச் சுற்றிப் பிணித்தது, அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க. 20 20. தணிப்பரும் - அடக்கமுடியாத. பணிக்குலங்களுக்கு - பாம்பினத்திற்கு. அரசினது - அரசாக இருக்கும்படியான. உருவினைப்பற்றி - வடிவம் கொண்டு. பிறங்க - நன்றாக. திண்என் யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக, அண்ணல் மாருதி அன்று,தன் பின்சென்ற அறத்தின் கண்ணின் நீரொடும், கனகதோ ரணத்தொடும், கடைநாள் தண்என் மாமதி கோளொடும், சாய்ந்துஎனச் சாய்ந்தான். 21 21. திருக - கட்டியவுடன். கடைநாள் - ஊழியிறுதியில். கோளொடும் - இராகுவென்னும் கிரகத்துடன். சாய்ந்த மாருதி, சதுமுகன் படைஎனும் தன்மை ஆய்ந்து, `மற்றுஇதன் ஆனையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று;’என்று எண்ணினான்; கண்முகிழ்த்து இருந்தான்; `ஓய்ந்தது ஆம்இவன் வலி’என அரக்கன்வந்து உற்றான். 22 22. கண் முகிழ்த்து - கண்களை மூடிக்கொண்டு. அரக்கன் - இந்திரசித்து. உற்ற காலையில், உயிர்கொடு திசைதொறும் ஒதுங்கி அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள்எயிற்று அரக்கர் சுற்றும் வந்து,உடல் சுற்றிய தொளைஎயிற்று அரவைப் பற்றி ஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர் பலர்;ஆல். 23 23. சுற்றும்வந்து - எல்லாத் திக்கிலிருந்தும் வந்து. ஆர்த்தனர் - ஆரவாரம் புரிந்தனர். தெழித்தனர் - அதட்டினர். அனுமான் கட்டுண்டது கண்டு ஆரவாரம் `குரக்கு நல்வலம் குறைந்தது’என்று ஆவலம் கொட்டி இரைக்கும் மாநகர், எறிகடல் ஒத்தது;எம் மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது, தேவர் அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன் அனுமன். 24 24. ஆவலம் கொட்டி - பரிகசித்து ஓசையிட்டு. மாநகர் - இலங்கைமா நகரானது. எம்மருங்கும் திரைக்கும் - எப்பக்கங்களிலும் சுற்றி இறுக்குகின்ற. மாசுணம் - பாம்புருவான பிரமாஸ்திரம். `அரக்கர், தேவர் ஒத்தனர்.’ கறுத்த மாசுணம் கனகமா மேனியைக் கட்ட, அறத்துக்கு ஆங்குஒரு தனித்துணை எனநின்ற அனுமன், மறத்து மாருதம் பொருதநாள், வாள்அரா அரச புறத்துச் சுற்றிய மேருமால் வரையையும் போன்றன. 25 25. கனகமாமேனியை - பொன்னிறமான பெரிய உடம்பை. மறத்து - வலிமையுடன். மாருதம் - காற்று. வாள் அராஅரசு. - ஒளிபொருந்திய ஆதிசேடன். வந்து இரைத்தனர், மைந்தரும், மகளிரும்; மழைபோல் அந்த ரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார் முந்தி உற்றபேர் உவகைக்குஓர் கரைஇலை; மொழியின் இந்தி ரன்பிணிப்பு உண்டநாள் ஒத்ததுஅவ் விலங்கை. 26 26. அந்தரம் - வானம். விசும்பு - மேல் உலகம். ஆர்ப்பார் - ஆரவாரம் செய்பவர் ஆயினர். 13. பிணி வீட்டு படலம் அனுமானைக் கண்ட அரக்கர்களின் ஆத்திரம் எய்யுமின்! ஈருமின்! எரிமின்! போழுமின்! கொய்யுமின்! குடரினைக் கூறு கூறுகள் செய்யுமின்! மண்இடைத் தேய்மின்! தின்னுமின்! உய்யுமேல் இல்லைநம் உயிர்’என்று ஓடுவார். 1 பிணிவீட்டு படலம்: அனுமன் பிரமாஸ்திரக் கட்டி லிருந்து விடுபட்டதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. ஈருமின் - வெட்டுங்கள். போழுமின் - பிளவுங்கள். மைத்தடம் கண்ணியர், மைந்தர், யாவரும் பைத்தலை அரவுஎனக் கனன்று, `பைதலை இத்தனை பொழுதுகொண்டு இருப்ப தோ!’எனா மொய்த்தனர், கொலைசெய்ய முயல்கின் றார்சிலர். 2 2. பைத்தலை அரவுஎன - படமுள்ள பாம்புபோல. பைதலை - இக்குரங்குப்பயலை. `எந்தையை, எம்பியை, எம்மு னோர்களைத் தந்தனை போக’எனத் தடுக்கின் றார்பால்; `அந்தரத்து அமரர்தம் ஆணை யால்இவன் வந்தது’என்று உயிர்கொள மறுகி னார்பலர். 3 3. உயிர்கொள - அத்தேவர் உயிர்களைக் கவர. பலர் மறுகினார் - பலர் மனத்தில் பகைகொண்டனர். வடியுடைக் கனல்படை வயவர், மால்கரி, கொடிஉடைத் தேர்,பரி, கொண்டு வீசலின் இடிபடச் சிதைந்தமால் வரையின், இல்எலாம் பொடிபடக் கிடந்தன கண்டு, போயினான். 4 4. வடிவு - கூர்மை. மால்கரி - பெரிய யானை. இடிபடச் சிதைந்த - இடி விழுந்ததால் சிதைந்துபோன. மால்வரையின் - பெரிய மலைபோன்ற. காந்துறு கதழ்எயிற்று அரவின் கட்டுஒரு பூம்துணர் சேர்த்துஎனப் பொலியும் வாள்முகம்; தேர்ந்து,உறு பொருள்பெற எண்ணிச் செய்யுமின்! வேந்துஉறல் பழுது’என விளம்பு வார்சிலர். 5 5. காந்துறு - கோபிக்கின்ற. கதழ் எயிற்று - கொடுமையான பற்களையுடைய. பூந்துணர் சேர்த்துஎன - பூமாலையில் பிணித்ததுபோல. வேந்து உறல் பழுது - இவன் வேந்தனை அடைதல் குற்றமாகும். ஐம்பதினாயிரம் வீரர்கள் அனுமனைப் பற்றி இழுத்துச் சென்றபோது பார்த்தவர் பேச்சு அரமியத் தலந்தொறும், அம்பொன் மாளிகைத் தரம்உறு நிலைதொறும், சாள ரந்தொறும், முரசுஎறி கடைதொறு இரைத்து மொய்த்தனர் நிரைவளை மகளிரும், நிருத மைந்தரும். 6 6. அரமியத்தலம் - நிலாமுற்றம். மாளிகைத்தரம் உறு - மாளிகைகளின் மேலே உள்ள. நிலைதொறும் - இடங்கள் தோறும். சாளரம் - பலகணி. `கையிலையின் ஒருதனிக் கணிச்சி வானவன், மயில்இயல் சீதைதன் கற்பின் மாட்சியால், எயில்உடைத் திருநகர் சிதைப்ப, எய்தினன் அயில்எயிற்று ஒருகுரங் காய்;’என் பார்பலர். 7 7. கணிச்சி - மழுவாயுதம். அயில் எயிற்று - கூர்மையான பற்களையுடைய. அரக்கரும், அரக்கியர் குழாமும், அல்லவர் கரக்கிலர் நெடுமழைக் கண்ணின் நீரது; விரைக்குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ? இரக்கமோ? அறத்தினது எண்மை எண்ணியோ? 8 8. `நெடுமழைக் கண்ணின் நீர்அது கரக்கிலர்’. கரக்கிலர் - ஒளிக்காதவராயினர். மெலிவு - துன்பம். எண்மை - எளிமை. மாருதியின் மனத்தில் எண்ணியவை ஆண்தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் மீண்டிலன்; வேறலும் விரும்பல் உற்றுஇலன்; `ஈண்டவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனைக் காண்டலே நலன்;’எனக் கருத்தின் எண்ணினான். 9 9. மீண்டிலன் - பாசத்திலிருந்து மீளான். வேறலும் - கொல்லு வதையும். விரும்பல் உற்றிலன் - விரும்பான். ஈண்ட இதுவே தொடர்ந்து - நெருங்க இதன் மூலமாகவே தொடர்ந்து சென்று. `எந்தையது அருளினும், இராமன் சேவடி சிந்தைசெய் நலத்தினும், சீதை, வானவர் தந்துள வரத்தினும், தறுகண் பாசமும் சிந்துவென்; அயர்வுறு சிந்தை சீரிது;ஆல்,’ 10 10. எந்தை - எம் தந்தையாகிய வாயுபகவான். தறுகண் - கொடுமையான. அயர்வுஉறு சிந்தை - சோர்வடைந்திருக்கின்ற கருத்தே. சீரிது - சிறந்தது. ஆல்; அசை. `வளைஎயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து அளவுறு முதியரும் அறிய, ஆணையால் விளைவினை விளம்பினால், மிதிலை நாடியை இளகினன், நயந்தவன் ஈதல் ஏயும் ஆல்.’ 11 11. மந்திரத்து அளவுறும் - ஆலோசனை மன்றத்தில் கலந்திருக்கும். மிதிலைநாடியை - சீதாதேவியை. `அல்லதுஉம் அவன்உடைத் துணைவர் ஆயினார்க்கு எல்லையும் தெரிவுறும்; எண்ணும் தேறலாம்; வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்துஉரை சொல்லும்தம் முகம்எனும் தூது சொல்லவே. 12 12. எல்லையும் - அளவும். எண்ணும் - எண்ணத்தையும். `வாலிதன் இறுதியும், மரத்துக்கு உற்றதும், கூலவெம் சேனையின் குணிப்புஇல் ஆண்மையும், மேலவன் காதலன் வலியும், மேன்மையும் நீல்நிறத்து இராவணன் நெஞ்சில் தைக்கும்;ஆல்.’ 13 13. இறுதியும் - முடிவும். மரத்துக்கு - மராமரங்களுக்கு. வெம்கூலம் சேனையின் - கொடிய குரங்குப் படையின். குணிப்புஇல் ஆண்மையும் - அளவற்ற வீரத்தையும். மேலவன் காதலன் - சூரிய குமாரனாகிய சுக்கிரீவன். `ஆதலால் அரக்கனை எய்தி, ஆற்றலும், நீதியும் மனக்கொள நிறுவி, நின்றதில் பாதியின் மேல்செல நூறிப் பைப்பயப் போதலே கருமம்;’என்று அனுமன் போயினான். 14 14. நின்றதில் - மீதியாக நின்ற சேனைகளில். பாதியின்மேல் செலநூறி பாதிக்குமேல் அழித்து. அனுமன் பிடிபட்டதை அறிந்த சீதையின் துயரம் ஒவி யம்புகை உண்டது போல்ஒளிர் பூவின் மெல்இயல், மேனி பொடிஉறப், பாவி வேடன்கைப் பார்ப்புறப், போதுறும் தூவி அன்னம்அன் னாள்,இவை சொல்லினாள். 15 15. பார்ப்புஉற - தன் குஞ்சு அகப்பட்டுக்கொள்ள. பேதுறும் - அதனால் வருந்துகின்ற. `உற்றுஉண் டாய விசும்பை உருவினாய்; முற்றுண் டாய்கலை யாவையும் முற்றுஉறக் கற்றுஉண் டாய்!ஒரு கள்ள அரக்கனால் பற்றுஉண் டாய்;இது வோஅறப் பான்மையே!’ 16 16. உற்று உண்டாய - மிகவும் பரந்துள்ள. உருவினாய் - ஊடுருவினாய். முற்றுண்டாய் - நிறைந்தாய். கற்றுண்டாய் - கற்றுணர்ந்தாய். அறப் பான்மையோ - அறத்தின் இயல்போ. `ஆழி காட்டிஎன் ஆர்உயிர் காட்டினாய்க்கு ஊழி காட்டுவென்; என்றுஉரைத் தேன்;அது வாழி காட்டுவது உண்டு;உன் வரைப்புயப் பாழி காட்டிய பழியையும் காட்டினாய்.’ 17 17. ஆழி - கணையாழி. வாழி காட்டும் - சாவா நிலையைத் தரும். பாழி காட்டி - வலிமையைக்காட்டி. பழியையும் காட்டினாய் - நீங்காத பழியையும் தேடிக்கொண்டாய். `கண்டு போயினை, நீள்நெறி காட்டிட, மண்டு போரின் அரக்கனை மாய்த்து,எனைக் கொண்டு மன்னவன் போம்,எனும் கொள்கையைத் தண்டி னாய்,எனக்கு ஆர்உயிர் தந்தநீ!’ 18 18. நீள்நெறி காட்டிட - நீண்ட வழியைக்காட்ட இலங்கைக்குவந்து. மன்னவன் - இராமன். தண்டினாய் - தொலைந்துவிட்டாய். ஏயப் பன்னினள் இன்னன; தன்உயிர் தேயக், கன்று பிடியுறத் தீங்குஉறும் தாயைப் போலத், தளர்ந்து மயங்கினாள்; தீயைச் சுட்டதுஓர் கற்புஎனும் தீயினாள். 19 19. ஏய - தகுதியாக. சீதைக்குக் கன்றையிழந்த பசு உவமை. இராவணன் அரியாசனத்திருத்தலை அனுமான் காணல் வான ரங்களும் வானவர் இருவரும், மனிதர் ஆன புன்தொழி லோர்என இகழ்கின்ற அவரும், ஏனை நின்றவர் இருடியர் சிலர்ஒழிந்து யாரும் தூந வின்றவேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற. 20 20. வானவர் இருவரும் - தேவர்களான திருமால் சிவன் இருவரும். சிலர் ஒழிந்து யாரும் - இவர்களிலே சிலர் தவிர எல்லோரும். தூநவின்ற வேல் - தசைபொருந்திய வேலையுடைய. ஊடி னார்முகத்து உறுநறை ஒருமுகம் உண்ணக், கூடி னார்முகக் களிநறை ஒருமுகம் குடிப்பப், பாடி னார்முகத்து ஆர்அமுது ஒருமுகம் பருக, ஆடி னார்முகத்து அணிஅமுது ஒருமுகம் அருந்த. 21 21. உறுநறை - சுவைநிறைந்த தேனை. களிநறை - களிப்பைத்தரும் தேனை. அணிஅமுது - அழகான அமுதத்தை. தேவ ரோடுஇருந்து அரசியல் ஒருமுகம் செலுத்து, மூவ ரோடுமா மந்திரம் ஒருமுகம் முயலப், பாவ காரிதன் பாவகம் ஒருமுகம் பயிலப், பூவை சானகி நினைப்பொடும் ஒருமுகம் பொருந்த. 22 22. மூவரோடு - மந்திரி. பிரதாணி, சேனாபதிகள் என்னும் மூவருடன். மாமந்திரம் - சிறந்த ஆலோசனையை. பாவகாரிதன் - பாவம் செய்கின்ற அவன்தன். பாவகம் - கருத்தை. பயில - வெளியிட. பூவை - கிளிபோன்ற. காந்தள் மெல்விரல் சனகிதன் கற்புஎனும் கடலை நீந்தி ஏறுவது எங்ஙன்என்று ஒருமுகம் நினையச், சாந்து அளாவிய கோதைநன் மகளிர்தற் சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் ஒருமுகம் இயல்புடன் இலங்க. 23 23. தன் சூழ்ந்தார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள். ஏந்தும் ஆடியின் - ஏந்தியிருக்கின்ற கண்ணாடியிலே. இராவணனைக் கண்ட அனுமான் தனக்குள் சிந்தித்தல் இருந்த எண்திசைக் கிழவனை மாருதி எதிர்ந்தான்; கரும்திண் நாகத்தை நோக்கிய கலுழனில் கனன்றான்; `திருந்து தோள்இடை வீக்கிய பாசத்தைச் சிந்தி, உருந்து, நஞ்சுபோல் பவன்வயின் பாய்வென்,’என்று உடன்றான். 24 24. சிந்தி உருந்து - சிதறச்செய்து சினந்து. வயின் - மேல். உடன்றான் - கோபித்தான். `உறங்கு கின்றபோது உயிர்உண்டல் குற்றம்என்று ஒழிந்தேன்; பிறங்கு பொன்மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்; திறங்கள் என்பல சிந்திப்பது? இவன் தலை சிதறி, அறம்கொள் கொம்பினை மீட்டு,உடன் அகல்வன்;’ என்றுஅமைந்தான். 25 25. ஒழிந்தேன் - கொல்லாமற் போனேன். பலதிறங்கள் சிந்திப்பது என் - பலவகையாவது எண்ணுவது ஏன்? என்று அமைந்தான் - என்று நினைத்தான். `தேவர், தானவர் முதலினர், சேவகன் தேவி காவல் கண்டுஇவண் இருந்தவர் கட்புலன் கதுவப், பாவ காரிதன் முடித்தலை பறித்திலென் என்றால், ஏவது யான்இனி மேல்செயும் ஆள்வினை?’என்றான். 26 26. `யான் இனிமேல் செயும் ஆள்வினை ஏவது என்றான்’. ஆள்வினை - அடிமைத்தொழில. ஏவது - யாதுண்டு? `நீண்ட வாள்எயிற்று அரக்கனைக், கண்களின் நேரே காண்டல் வேண்டி,இவ் வுயிர்சுமந்து எதிர்சில கழறி மீண்ட போதுஉண்டு வசைப்பொருள்; வென்றிலேன் எனினும், மாண்ட போதிலும், புகழ்அன்றி மற்றும்ஒன்று உண்டோ?’ 27 27. மீண்டபோது - திரும்பிப் போவேனாயின். வசை பொருள் உண்டு - பழியாகிய பயன்தான் உண்டு. என்று? `தோள்இடை இறுக்கிய பாசம்இற்று ஏகக், குன்றின் மேல்எழு கோள்அரி ஏறுஎனக், குதியின் சென்று கூடுவல்;’ என்பது சிந்தனை செய்யா நின்று, `காரியம் அன்று’என நீதியின் நினைந்தான். 28 28. இற்றுஏக - அறுந்து விழும்படி. கோள்அரி - வலிமையுள்ள சிங்கம். குதியின் சென்று கூடுவல் - ஒரு குதிப்பிலேபோய்ச் சேர்வேன். செய்யாநின்று - செய்துபின். `கொல்லல்ஆம் வலத்தனும் அல்லன்; கொற்றமும் வெல்லல்ஆம் தரத்தனும் அல்லன்; தொல்லைநாள் அல்எலாம் திரண்டுஅன நிறத்தன் ஆற்றலை வெல்லலாம்; இராமனால்; பிறரும் வெல்வரோ?’ 29 29. கொல்லல்ஆம் - எவராலும் கொல்லத்தக்க. கொற்றமும் - வலிமையும். வெல்லல்ஆம் தரத்தனும் - வெற்றி பெறத்தக்க தன்மையுள்ளவனும். தொல்லை நாள் - முன்னாளின். `இராமனால் வெல்லலாம்; பிறரும் வெல்வரோ?’ `என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டுஇவன் தன்னையும் வெலற்கு அரிது எனக்குத்; தாக்கினால் அன்னவே காலங்கள் கழியும்; ஆதலால் துன்அரும் செருத்தொழில் தொடங்கல் தூயதோ?’ 30 30. அன்னவே - அவ்வாறே. துன்அரும் - அணுகமுடியாத. `ஏழுஉயர் உலகங்கள் யாவும் இன்புஉறப் பாழிவன் புயங்களோடு அரக்கன் பல்தலைப் பூழியில் புரட்டல்என் பூணிப்பு அம்,என ஊழியான் விளம்பிய உரையும் ஒன்றுஉண்டால்!’ 31 31. பாழிவன் புயங்களோடு - பருத்த வலிமைபொருந்திய தோள்களுடன். பஃறலை - பல தலைகளையும். என் பூணிப்புஆம் - என் விரதமாகும். `இங்குஒரு திங்களே இருப்பல் யான்’என அம்கண்நா யகன்தனது ஆணை கூறிய மங்கையும், இன்உயிர் துறத்தல் வாய்மையால் பொங்குவெம் செருஇடைப் பொழுது போக்கினால்.’ 32 32. அம்கண் நாயகன் தனது - அழகிய கண்களையுடைய தனது கணவன்மேல். `ஆதலால் அமர்த்தொழில் அழகிற்று அன்று;அரும் தூதன்ஆம் தன்மையே தூய்து’என்று உன்னினான் வேதநா யகன்தனித் துணைவன், வென்றிசால் ஏதில்வாள் அரக்கனது இருக்கை எய்தினான். 33 33. வென்றிசால் - வெற்றி நிறைந்த. ஏதில் - பகைமையுடைய. அரக்கனது - இராவணனுடைய. இருக்கை - சபா மண்டபத்தை. தீட்டிய வாள்எனத் தெறுகண் தேவியர் ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்குக், காட்டினன் அனுமனைக், கடலின் ஆர்அமுது ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான். 34 34. தெறுகண் - ஆடவர்களின் மனவலிமையை அழிக்கின்ற கண்களை யுடைய. வேந்தற்கு இராவணனுக்கு. ஓட்டினான் - இந்திரசித்து. அனுமானை, அரக்கன் சினத்துடன் வினவியது `நேமியோ! குலிசியோ! நெடும்க ணிச்சியோ! தாமரைக் கிழவனோ! தறுகண் பல்தலைப் பூமி தாங்கு ஒருவனோ! பொருது முற்றுவான், நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்.’ 35 35. நேமி - திருமால். குலிசி - இந்திரன் - கணிச்சி - சிவன். தாமரைக் கிழவன் - நான்முகன். பொருது முற்றுவான் - போர்செய்து முடிக்க. `நின்றுஇசைத்து உயிர்கவர் நீலக் காலனோ? குன்றுஇசைத்து அயில்உற எறிந்த கொற்றனோ? தென்திசைக் கிழவனோ திசைநின்று ஆட்சியர் என்றுஇசைக் கின்றவர் யாருள் யாவன்நீ?’ 36 36. நின்று இசைத்து - நடுநிலையிலே நின்று. குன்று இசைத்து - மலையிலேபட்டு. அயில்உற - கூர்மையான வேலாயுதம் அதனுள் புகும்படி. கொற்றனோ - முருகனோ. தென்திசைக் கிழவன் - அகத்தியன். `அந்தணர், வேள்வியின் ஆக்கி, ஆணையின் வந்துஉற விடுத்ததுஓர் வயவெம் பூதமோ? முந்துஒரு மலர்உளோன் `இலங்கை’ முற்றுறச் சிந்து’எனத் திருத்திய தெறுகண் தெய்மோ?’ 37 37. ஓர்வயம் வெம்பூதமோ - ஒரு வெற்றியுள்ள கொடுமை யான பூதமோ? இலங்கை முற்றுறச் சிந்து - இலங்கை முழுவதையும் அழிப்பாயாக. `யாரைநீ? என்னை இங்கு எய்து காரணம்? ஆர்உனை விடுத்தவர்? அறிய ஆணையால் சோர்விலை சொல்லுதி!’ என்னச் சொல்லினான் வேரொடும் அமரர்தம் புகழ்வி ழுங்கினான். 38 38. -. அனுமான் அளித்த விடை சொல்லிய அனைவரும் அல்லென் சொன்னஅப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்; அல்லிஅம் கமலமே அனைய செங்கண்ஓர் வில்லிதன் தூதன்யான்; இலங்கை மேயினேன்.’ 39 39. -. `அனையவன் யார்என அறிதி ஆதியேல், முனைவரும், அமரரும், மூவர் தேவரும் எனையவர் எனையவர் யாவர், யாவையும் நினைவரும் இருவினை முடிக்க நின்றுளோன்.’ 40 40. முனைவரும் - முனிவர்களும். ஏனையவர் எனையவர் யாவர் - மற்றவர் மற்றவர் யாவரும். யாவையும் - எல்லாப் பிராணிகளும். நினைவுஅரும் - நினைக்கவும் முடியாத. `ஈட்டிய வலியும் மேல்நாள் இயற்றிய தவமும், யாணர்க் கூட்டிய படையும், தேவர் கொடுத்தநல் வரமும், கொட்பும், தீட்டிய வாழ்வும் எய்தத் திருத்திய பிறவும் எல்லாம், நீட்டிய பகழி ஒன்றால் முதலொடும் நீக்க நின்றான்.’ 41 41. யாணர் - புதிதாக. கொட்பும் - சிறப்பும். தீட்டிய வாழ்வும் - குறித்துவைத்துள்ள செல்வ வாழ்வும். முதலொடும் - அடியோடும். `தேவரும் பிறரும் அல்லன்; திசைக்களிறு அல்லன்; திக்கின் காவலர் அல்லன்; ஈசன் கைலைஅம் கிரியும் அல்லன்; மூவரும் அல்லன்;மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப் பூவல யத்தை ஆண்ட புரவலன் புதல்வன் ஆவான்.’ 42 42. `உன்னை அழிக்க நின்றவன் மனிதனேதான்’ புரவலன் - தசரதன். `போதமும், பொருந்து கேள்விப் புரைஅறு பயனும், பொய்தீர் மாதவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும் முற்றும் யாதுஅவன் நினைந்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின், வேதமும் அறனும் சொல்லும்; மெய்அற மூர்த்தி வில்லோன்.’ 43 43. போதமும் - அறிவும். புரைஅறு - குற்றம் அற்ற. சார்ந்த - அடைந்த. தீரா - அழியாத. அன்னபயத்தன - அந்தப் பயனைத் தருவன. ஏதுவேண்டின் - காரணம் அறிய விரும்பினால். `காரணம் கேட்டி ஆயின், கடையிலா மறையின் கண்ணும் ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான்; போர்அணங்கு இடங்கர் கவ்வப் பொதுநின்று, முதலே என்ற வாரணம் காக்க வந்தான், அமரரைக் காக்க வந்தான்.’ 44 44. கடையிலா - அழிவில்லாத. மறை - வேதம். ஆரணம் - உபநிடதம். போல் அணங்கு இடங்கர் - போரிலே துன்புறுத்தும் முதலை. பொதுநின்று - பொதுவாக நின்று. முதலே - ஆதிமூலமே. வாரணம் - கஜேந்திரன். `மூலமும் நடுவும் ஈறும் இல்லதுஓர் மும்மைத்து ஆய காலமும் கணக்கும் நீத்த காரணன், கையில் ஏந்திச் சூலமும், திகிரி சங்கும், கரகமும் துறந்து, தொல்லை ஆலமும், மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு, அயோத்தி வந்தான்.’ 45 45. இல்லது - இல்லாததாகிய. ஓர் மும்மைத்தாய - ஒரு மூன்றாகிய. காலமும் - காலத்தையும். கணக்கும் - எல்லையும். காரணன் - எல்லாவற்றுக்கும் காரணமானவன். திகிரி சங்கும் - சக்கரமும் சங்கும். கரகமும் - கமண்டலமும். ஆலம் - ஆலிலையும். அலரும் - தாமரை மலரும். `அயோத்தி வந்தான் காரணன்.’ அறம்தலை நிறுத்தி, வேதம் அருள்சுரந்து அறைத்த நீதித் திறம்தெரிந்து உலகம் பூணச், செந்நெறி செலுத்தித், தீயோர் இறந்துஉக நூறித், தக்கோர் இடர்துடைத்து ஏக, ஈண்டுப் பிறந்தனன், தன்பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். 46 46. அறம் தலைநிறுத்தி - தருமத்தை நிலைநாட்டி. `நீதி உலகம் பூண’ செம்மைநெறி செலுத்தி - நல்வழியிலே நடத்தி. ஈண்டு - இவ்வுலகில். `அன்னவற்கு அடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்; நல்நுதல் தன்னைத் தேடி நால்பெரும் திசையும் போந்த மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி தன்மகன், அவன்தன் தூதன், வந்தெனென் தமியேன்’ என்றான். 47 47. -. இராவணன் நகைப்பும் கேள்வியும் என்றலும் இலங்கை வேந்தன், எயிற்றுஇனம் எழிலி நாப்பண் மின்திரிந்து என்ன நக்கு, `வாலிசேய் விடுத்த தூத! வன்திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை நன்றுகொல்?’ என்ன லோடும் நாயகன் தூதன் நக்கான். 48 48. எயிற்றினம் - பல் வரிசைகள். எழிலி நாப்பண் - மேகத்தின் நடுவிலே. மின்திரிந்து என்ன - மின்னல் உலவுவது போல் - காணப்பட. நக்கு- நகைத்து. அனுமான் அளித்த மறுமொழி `அஞ்சலை அரக்க! பார்விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே; வெம்சின வாலி மீளான்! வாலும்போய் விளிந்தது அன்றே; அஞ்சன மேனி யான்தன் அடுகணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன்; எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல்;’ என்றான். 49 49. -. இரவாணன் `என்உடை ஈட்டி னால்,அவ் வாலியை எறுழ்வாய் அம்பால் இன்உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்? அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல் உற்ற தன்மையை உரைசெய்!’ என்னச் சமீரணன் தனயன் சொல்வான். 50 50. என்உடை ஈட்டினால் - என்ன காரணத்தால். நாடல்உற்ற - தேடத் தொடங்கிய. சமீரணன் தனயன் - வாயுபுத்திரனாகிய அனுமான். அனுமான் `தேவியை நாடி வந்த செங்கணாற்கு எங்கள் கோமான் ஆவிஒன் றாக நட்டான் `அரும்துயர் துடைத்தி’, என்ன, ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன், உருமை யோடும் கோவியல் செல்வம் முன்னே கொடுத்து,வா லியையும் கொன்றான்.’ 51 51. `அரும்துயர் துடைத்திஎன்ன ஆவிஒன்றாக நட்டான்’ உருவத்தன் - இராமன். உருமையோடும் - உருமையென்னும் பெயருள்ள மனைவியுடன். கோவியல் - அரசியல். உருமை சுக்கிரீவன் மனைவி. வாலியால் கவர்ந்து கொள்ளப்பட்டிருந்தவள். `பின்னர் நான்கு திங்கள் கழிந்த பின், எம் தலைவன் விருப்பத்தின்படி தேவியைத் தேடி வந்தோம்.’ என்றான் அனுமான். இராவணன் `உம்குலத் தலைவன் தன்னோடு ஒப்புஇலா உயர்ச்சி யோனை வெம்கொலை அம்பின் கொன்றாற்கு, ஆள்தொழில மேற்கொண்டீரேல் எங்குஉலப் புறும்நும் சீர்த்தி; நும்மொடும் இயைந்தது என்றால், மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ!’ 52 52. கொன்றாற்கு - கொன்ற இராமனுக்கு. ஆள்தொழில - அடிமைத் தொழில செய்வதை. நும்சீர்த்தி உலப்புறும் - உம்புகழ் அழியும். நும்மொடும் இயைந்தது என்றால் எங்கு - உங்களோடு பொருந்தியிருக்கின்றது என்றால் எங்கே பொருந்தியிருக்கும்? மாதுமை - பெண்தன்மை. `தம்முனைக் கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற உம்இனத் தலைவன் ஏவ, யாதுஎனக்கு உரைக்கல் உற்றது? எம்முனைத் தூது வந்தாய்! இகல்புரி தன்மை என்னை? நும்மினைக் கொல்லாம், நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி!’ என்றான். 53 53. அன்னான் - அன்னானை. நும்மினைக்கொல்லாம் - உன்னைக் கொல்ல மாட்டோம். அஞ்சலை நுவல்தி - அஞ்சாமல் கூறுக. அனுமான் கூறிய அறிவுரைகள் துணர்த்த தார்அவன் சொல்லிய சொற்களைப் புணர்த்து நோக்கிப், `பொதுநின்ற நீதியை உணர்த்தி னால்அது உறும்’என, உன்அரும் குணத்தி னானும், இனையன கூறினான். 54 54. துணர்த்த தாரவன் - பூங்கொத்துக்களால் தொடுத்த மாலையைப் பூண்ட இராவணன். புணர்த்து நோக்கி - சேர்த்துப் பார்த்து. அதுஉறும் - அது தகுதியாகும். உன்அரும் குணத்தினான் - அனுமான். `வறிது வீழ்த்தனை வாழ்க்கையை, மன்அறம் சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்; இறுதி உற்றுளது ஆயினும், இன்னும்ஓர் உறுதி கேட்டி; உயிர்நெடிது ஓம்புவாய்.’ 55 55. தீமை திருத்தினாய் - தீமையையே செய்தனை. இறுதி உற்றுளது - முடிவுக்காலம் வந்துவிட்டது. `போய்இற் றீர்!நும் புலன்வென்று போற்றிய ஆலாயின் தீர்வுஅரிது ஆகிய மாதவம்; காயின் தீர்வுஅரும் கேடுஅரும் கற்பினாள், தீயின் தூயவ ளைத்,துயர் செய்ததால்.’ 56 56. `துயர் செய்ததால்... மாதவம்... போய் இற்றீர்’. ஆயின் - ஆராய்ந்தால். காயின் - துன்புறுத்தினாலும். போய் இற்றீர் - போய் அழிந்தீர். `தீமை நன்மையைத் தீர்த்தல்ஒல் லாது,எனும் வாய்மை நீக்கினை; மாதவத் தால்வந்த தூய்மை, தூயவள் தன்வயின் தோன்றிய நோய்மை யால்துடைக் கின்றனை; நோக்கலாய்.’ 57 57. தீமை - பாவமானது. நன்மையை - புண்ணியத்தை. தீர்த்தல் ஒல்லாது - அழிக்கமுடியாது. தூய்மை - நன்மையை. நோய்மையால் - துன்பத்தால். `திறம் திறம்பிய காமச் செருக்கினால் மறந்து, தத்தம் மதியின் மயங்கினார், இறந்து இறந்துஇழிந்து ஏறுவ தேஅலால் அறம் திறம்பினர் ஆர்உளர் ஆயினார்?’ 58 58. திறம் திறம்பிய - முறைகெட்ட. மறந்து - அறத்தை மறந்து. இழிந்து ஏறுவது அலால் - தாழ்வடைந்து போவதல்லாமல். `ஆயினார் அறம்திறம்பினர் ஆர்உளர்’. ஆயினர் - அழியாமல் இருக்கின்றவர். `பொருளும் காமமும் என்றுஇவை போக்கி,வேறு இருள்உண் டாம்என எண்ணலர்; ஈதலும் அருளும் காதலில் தீர்தலும் அல்லதுஓர் தெருள்உண் டாம்என எண்ணலர் சீரியோர்.’ 59 59. இவைபோக்கி - இவைகளைத் தவிர. வேறு இருள் - வேறு அறியாமை. ஓர்தெருள் - ஓர் அறிவுடைமை. எண்ணலால் - எண்ண மாட்டார்கள். சீரியோர் - சிறந்தோர். `இச்சைத் தன்மையி னில்பிறர் இல்லினை நச்சி நாளும் நகைஉற நாண்இலன் பச்சை மேனி புலர்ந்து, பழிபடூஉம் கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ?’ 60 60. இல்லினை - மனைவியை. நச்சி - விரும்பி. நாளும் நகைஉற - ஒவ்வொரு நாளும் பிறரால் நகைக்கப்படும் நிலையைப் பெற்றும். பச்சை மேனி புலர்ந்து - கொழுமையான உடம்பு வற்றி. கொச்சை - இழிவான. சீர்மையின் கூடுமோ - நல்ல குணத்துடன் சேருமோ. `வெறுப்புஉண் டாய ஒருத்தியை வேண்டினால், மறுப்புஉண் டாயபின், வாழ்கின்ற வாழ்வினின், உறுப்புஉண் டாய்நடு ஓங்கிய நாசியை அறுப்புஉண் டால்அது அழகுஎனல் ஆகுமோ?’ 61 61. வாழ்வினின்- வாழ்வைவிட. உறுப்பு நடுஉண்டாய் ஓங்கி - உறுப்புக்களின் இடையிலே தோன்றி வளர்ந்த. `ஆத லால்தன் அரும்பெறல், செல்வமும், ஓது பல்கிளை யும்,உயி ரும்பெறச் சீதை யைத்தருக என்றுஎனச் செப்பினான் சோதி யான்மகன் நிற்கு;’எனச் சொல்லினான். 62 62. கிளையும் - உறவினரும். பெற - நிலைபெற. தருக என்றுஎன - தருக என்று சொல் என. சோதியான்மகன் - சுக்கிரீவன். என்ற லும்’இவை சொல்லியது எற்கு,ஒரு குன்றின் வாழும் குரங்குகொல் ஆம்?இது நன்று! நன்று! என மாநகை செய்தனன்; வென்றி என்றுஒன்று தான்அன்றி வேறுஇலான். 63 63. -. `குரங்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும் இருக்க, நிற்க,நீ என்கொல் அடா,இரும் புரத்தி னுள்தரும் தூது புகுந்தபின், அரக்க ரைக்கொன்றது? அஃதுஉரை யாய்!’என்றான். 64 64. இரும் புரத்தினுள் - பெரிய இலங்கையுள். தரும்தூது புகுந்தபின் - ஒருவர் அனுப்பும் தூதாக வந்தபின். காட்டு வார்,இன்மை யால்,கடி காவினை வாட்டி னேன்,என்னைக் கொல்லவந் தார்களை வீட்டி னேன்,பின்னும் மென்மை யினால்உன்தன் மாட்டு வந்தது காணும் மதியினால்.’ 65 65. வாட்டினேன் - அழித்தேன். மென்மையினால் - என்னுடைய அடக்கத்தினால்தான். அனுமானைக் கொல்ல இராவணன் பணித்தல் என்னும் மாத்திரத்து, ஈண்டுஎரி நீண்டுஉக மின்னும் வாள்எயிற் றன்சினம் வீங்கினான், `கொன்மின்!’ என்றனன், கொல்லியர் சேர்தலும், `நின்மின்!’ என்றனன் வீடணன் நீதியான்.’ 66 66. ஈண்டுஎரி நீண்டுஉக - மிகுந்த கோபக்கனல் நெடுந்தூரம் பரவ. கொல்லியர் - கொலைகாரர். தூதனைக் கொல்லல் நீதி அன்றெனல் ஆண்டு எழுந்துநின்று அண்ணல் அரக்கனை நீண்ட கையன் வணங்கினன்; நீதியான்; `மூண்ட கோபம் முறையதுஅன் றாம்’என வேண்டும் மெய்உரை பைய விளம்பினான். 67 67. அண்ணல் அரக்கனை - சிறந்தவனாகிய இராவணனை. நீதியான் - விபீடணன். மெய்உரை - உண்மையான நீதி மொழியை. பைய - மெதுவாக. `அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்து, தக்கோய், இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன்நீ! இயம்பு தூது வந்தெனென்’ என்ற பின்பும் கொல்லியோ மறைகள் வல்லோய்!’ 68 68. அந்தணன் - பிரமன். அறத்தின் ஆற்றல் தந்தவன் - அறத்தின் ஆற்றலால் படைத்தவன். அன்புக்கு - அருளைப்பெற. ஆன்ற - சிறந்த. உணர்ந்து - அறிந்துசெய்து வரம்பெற்றவனே. `பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டின்உள் புறத்துள், பொய்தீர் வேதம்உற்று இயங்கு வைப்பின், வேறுவேறு இடத்து, வேந்தர் மாதரைக் கொலைசெய் தார்கள் உளர்என வரினும், வந்த தூதரைக் கொன்று ளார்கள் யாவரே தொல்லை நல்லோர்?’ 69 69. பூதலப்பரப்பின் - நில உலகில். அண்டப் பொகுட்டின் உட்புறத்துள் - அண்டத்துள். `பகைப்புலன் அணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட தகைப்புலக் கருமத் தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும் நகைப்புலன் பிறிதுஉண் டாமே? நம்குல நவைஇன் றாமோ?’ 70 70. பகைப்புலன் - பகைவர் நாட்டை. உய்த்தார் - தன்னை அனுப்பியவர்கள். பற்றார் - பகைவர்களின். மிகைப்புலன் - கோப உணர்ச்சியை. தகைப்புலக் கருமத்தோரை - சிறந்த அறிவுள்ள செய்கைபடைத்த தூதர்களை. `முத்தலை எஃகன், மற்றை முராந்தகன், முனிவன் முன்னா அத்தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்று ஆம்;ஆல் எத்தலை உலகம் காக்கும் வேந்தநீ, வேற்றோர் ஏவ இத்தலை எய்தி னானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும்.’ 71 71. எஃகன் - சூலத்தையுடையவள்; சிவபிரான். முராந்தகன் - திருமால். முனிவன் - பிரமன். முன்னா - முதலிய. அத்தலை - அத்தலைவர்களாகிய. நம்மைநோனா - நம்மைக்கண்டு பொறுக்காத. எத்தலை - எவ்விடத்தில் உள்ள. `இளையவள் தன்னைக் கொல்லாது, இருசெவி மூக்கொடு ஈர்ந்து `விளைவுஉரை’ என்று விட்டார், வீரர்ஆய் மெய்ம்மை ஓர்வார்; களைதியேல் ஆவி, நம்பால் இவன்வந்து கண்ணில் கண்ட அளவு,உரை யாமல் செய்தி ஆதி,’என்று அமையச் சொன்னான். 72 72. வினைவுஉரை - நடந்ததைச் சொல்லுக. கண்ட அளவு - பலவற்றையும். செய்தி ஆதி - செய்துவிடுகின்றாய். வீடணன் விளம்பியதை ஒத்துக்கொண்ட இராவணன், `அனுமான் வாலிலே தீயிட்டு ஊரைச்சுற்றி அடித்து விரட்டுங்கள்’ என்று உரைத்தான். மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம்பெற்ற எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த, தமக்குஇயைந்த பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடைபிழைத்த, கண்ணில் கண்ட வன்பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார். 73 73. பெண்ணிற்கு இசையும் - பெண்ணின் கழுத்திலே பொருந்தும். மங்கலத்தின் - தாலியிலே. வன்பாசம் - வலிய கயிறுகள். அனுமான் மகிழ்ச்சி `கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே, விடுவித்து அளித்தார் தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர்வென்றி; சுடுவிக் கின்றது இவ்வூரைச் சுடுகென்று உரைத்த துணிவு’என்று நடுவுற்று அமையம் உறநோக்கி முற்றும் உவந்தான் நவைஅற்றான். 74 74. கடவுள்படை - பிரமாஸ்திரம். `இவர்வென்றி வென்றேன் அன்றோ’. சுடுவிக்கின்றது - என்னைச் சுடச்செய்வது. துணிவு - முடிவாகும். நடுஉற்று - அவர்களின் நடுவிலே. அனுமான் வாலிலே துணிகளைச் சுற்றினார்; நெய்யை ஊற்றி நெருப்பிட்டார்; `தூது வந்த குரங்கைக் காணுங்கள்;’ என்று பறையடித்துத் தெரிவித்தார். அரக்கர் ஆரவாரமும் சீதையின் துயரமும் ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப் பார்போல்; அங்கோடுஇங்கு ஈர்த்தார்; முரசம் எற்றினார்; இடித்தார், தெழித்தார்; எம்மருங்கும் பார்த்தார்;ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும் உயிர்பதைத்தாள்; வேர்த்தாள்; உலந்தாள்; விம்மினாள்; விழுந்தாள்; அழுதாள்; வெய்துஉயிர்த்தாள். 75 75. -. `தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவுஇல்லா நாயே அனைய வல்அரக்கர் நலியக் கண்டால் நல்காயோ, நீயே உலகுக்கு ஒருசான்று; நிற்கே தெரியும், கற்பு;அதனில் தூயேன் என்னின் தொழுகின்றேன்,எரியே அவனைச் சுடல்!’என்றாள். 76 76. -. அனுமான் செய்கை வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி, வெம்தீ நிற்பினும், சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி, அற்பினால் அறாத சிந்தை அனுமனும், `சனகன் பாவை கற்பினால் இயன்றது’ என்னப் பெரியதுஓர் களிப்பன் ஆனான். 77 77. வெற்பினால் இயன்றது அன்ன - மலையினால் ஆனது போன்ற. தன்னைப் பிணித்த பாசத்தைப் பிடித்திருந்த ஆயிரக் கணக்கான அரக்கர்களை அனுமான் உதறித் தள்ளினான்; வானத்தில் தாவினான். துன்னலர் புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லை யோனும், பன்னின பொருளும் நாணப், பாதகர் இருக்கை பற்ற, மன்னனை வாழ்த்திப், பின்னை வயங்குஎரி மடுப்பன், என்னாப் பொன்னகர் மீதே தன்போர் வாலினைப் போக விட்டான். 78 78. துன்னலர் - பகைவர். தொல்லையோன் - பழையவன்; சிவபெருமான். பன்னின - அவனுக்கு உதவின என்று சொல்லப்பட்ட. 14. இலங்கை எரியூட்டு படலம் வாசல் இட்ட எரி,மணி மாளிகை மூச முட்டி, முழுதும் முருக்கலால், ஊசல் இட்டென ஓடி உலைந்து,உளைப் பூசல் இட்ட இரியல் புரம்எலாம். 1 இலங்கை எரியூட்டு படலம்: அனுமான் இலங்கையை நெருப்பினால் சுட்டு எரித்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. வாசல் இட்டஎரி - மாளிகைகளின் வாசல்களிலேவைத்த தீ. மூசமுட்டி - நெருங்கப்பிடித்து. முருக்கலால் - அழித்தலால். உளைபூசல் இட்ட - வருந்திடச் சத்தமிட்ட. இரியல்புரம் எலாம் - ஓடுகின்ற அந்நகரத்தில் உள்ளவர்கள் எல்லாம். ஓடி உலைந்து ஊசல் இட்டென - ஓடித்திரிந்து ஊசலாடினர்போல. இல்லில் தங்கு வயங்குஎரி யாவையும் சொல்லில் தீர்ந்தன போல்வன; தொல்உருப் புல்லிக் கொண்டன; மாயைப் புணர்ப்புஅறக் கல்லித் தம்இயல்பு எய்தும் கருத்தர்போல். 2 2. சொல்லில் தீர்ந்த போல்வன - கட்டளையிலிருந்து விடுபட்டவை போன்றன. மாயைப் புணர்ப்பு - மாயையின் சேர்க்கையை. அறக்கல்வி - அடியோடு அகழ்ந்தெறிந்து. கருத்தர் - அறிஞர். பொடித்து எழுந்து பெரும்பொறி போவன இடிக்கு லங்களின் வீழ்தலும், எங்கணும் வெடித்த; வேலை வெதும்பிட, மீன்குலம் துடித்து வெந்து புலந்துஉயிர் சோர்ந்தவால். 3 3. பொடித்து எழுந்து - சிதறி மேலெழுந்து. வேலை - கடல்நீர். வெதும்பிட - வெப்பம் அடைய. பேய மன்றினில் நின்று பிறங்குஎரி மாயர் உண்ட நறவு மடுத்தது;ஆல் தூயர் என்றிலர் வைகுஇடம் துன்னினால் தீயர் அன்றியும், தீமையும் செய்வர்ஆல். 4 4. பேயம் மன்றினில் - மதுபானம் உள்ள இடத்திலே. பிறங்கு - விளங்குகின்ற. மாயர் - அரக்கர்கள். வைகுஇடம் - தீயவர்கள் வாழும் இடத்தை. `நற்க டன்இது, நம்உயிர் நாயகன் மற்க டம்தெற மாண்டனன்; வாழ்வுஇலம்; இல்க டந்துஇனி ஏகலம் யாம்;எனா விற்க டந்த நுதல்சிலர் வீடினார். 5 5. மற்கடம் தெற - குரங்கினால் கொல்லப்பட்டு. இல்கடந்து - வீட்டைத்தாண்டி. வில்கடந்த - வில்லின் வடிவைவென்ற. வேறு கரிந்து சிந்திடக், கடுங்கனல் தொடர்ந்துஉடல் கதுவ, உரிந்த மெய்யினர் ஓடினர் நீர்இடை ஒளிப்பார்! விரிந்த கூந்தலும் குஞ்சியும், மிடைதலில் தானும் எரிந்து வேகின்றது ஒத்ததுஅவ் எறிதிரைப் பரவை. 6 6. உடல்கதுவ - உடம்பிலே பற்றிக்கொள்ள. மிடைதலில் - நெருங்கிக் கிடப்பதனால். கூந்தல்; பெண்களுடைய மயிர். குஞ்சி; ஆண்களின் மயிர். வெருளும் வெம்புகைப் படலையின் மேற்செல வெருவி, இருளும் வெம்கடல் விழுந்தன; எழுந்தில பறவை; மருளின் மீன்கணம் விழுங்கிட உலந்தன; மனத்துஓர் அருள்இல் வஞ்சரைத் தஞ்சம்என்று அடைந்தவர் அனைய. 7 7. வெருளும் - அஞ்சத்தக்க. மீச்செல வெருவி - மேலே பறக்க அஞ்சி. இருளும் - கருநிறமுள்ள. மருளின் மயக்கத்தை யுடைய. உலந்தன - அழிந்தன. அந்நெருப்பு, இராவணன் ஏழு நிலையுள்ள மாளிகை யையும் பற்றியது. அதையும் எரித்தது. அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும், புனைம ணிப்பொலி புட்பக விமானத்துப் போனார்; நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும் வினையி லாமையின், வெந்ததுஅவ் விலங்கல்மேல் இலங்கை. 8 8. நினையும் மாத்திரை - நினைக்கும் அளவில். நினையும் வினையிலாமையின் - நினைக்கும் இயல்பு இல்லாமையால். விலங்கல் - மலை. இராவணன் இந்நெருப்புக்குக் காரணம் என்ன என்றல் ஆழித் தேரவன், அரக்கரை அழல்எழ நோக்கி, `ஏழுக்கு ஏழுஎன அடுக்கிய உலகங்கள் எரியும் ஊழிக் காலம்வந்து உற்றதோ? பிறிதுவேறு உண்டோ? பாழித் தீச்சுட வெந்ததுஎன் நகர்?’ எனப் பகர்ந்தான். 9 9. ஆழித்தேரவன் - இராவணன். `பாழித்தீச்சுட நகர்வெந்தது என் எனப் பகர்ந்தான்’. பாழித்தீ - பெரு நெருப்பு. கரங்கள் கூப்பினர், தம்கிளை திருவொடும் காணார் இரங்கு கின்றவல் அரக்கர்,ஈது இயம்பினர், `இறையோய் தரங்க வேலையின் நெடிய,தன் வால்இட்ட தழலால் குரங்கு சுட்டதுஈது’ என்றலும் இராவணன் கொதித்தான். 10 10. தரங்கவேலையின் நெடிய - அலைகடலைவிட நீண்ட. ஈது - இதுதான். உற்றுஅக லாமுன், செற்ற குரங்கைப் பற்றுமின் என்றான்; முற்ற முனிந்தான். 11 11. செற்ற - தீமைசெய்த. முற்ற - மிகவும். சார்அயல் நின்றார் வீரர் விரைந்தார்; நேருதும் என்றார்; தேரினர் சென்றார். 12 12. சார்அயல் - சார்ந்து பக்கத்தில். தேரினர் - தேரில் ஏறியவர்களாய். நீர்கெழு வேலை நிமிர்ந்தார் தார்கெழு தானை சமைந்தார்; போர்கெழு மாலை புனைந்தார் ஓர்எழு வீரர் உயர்ந்தார். 13 13. வேலை - கடல்போல். நிமிர்ந்தார் - பொங்கி எழுந்து. தார்கெழு - வரிசைபொருந்திய. உயர்ந்தார் - போருக்குப் புறப்பட்டனர். விண்ணினை வேலை விளிம்புஆர் மண்ணினை ஓடி வளைந்தார்; அண்ணலை நாடி அணைந்தார்; கண்ணினில் வேறுஅயல் கண்டார்; 14 14. வேலை விளிம்புஆர் - கடலாகிய எல்லையை உடைய. வேறு அயல் - தனியே ஒருபுறத்தில். பற்றுதிர்! பற்றுதிர்! என்பார்; எற்றுதிர்! எற்றுதிர்! என்பார்; முற்றினர்; முற்றும் முனிந்தார்; கற்றுணர் மாருதி கண்டான். 15 15. எற்றுதிர் - தாக்குங்கள். `முற்றும் முனிந்தார் முற்றினர்’. முற்றினர் - சுற்றிக் கொண்டார்கள். பாதவம் ஒன்று பறித்தான், மாதிரம் வாலின் வளைத்தான் மோதினன்; மோத முனிந்தார் ஏதியும் நாளும் இழந்தார். 16 16. பாதவம் - மரம். மாதிரம் - திசை. மோத - அடிக்க. முனிந்தார் - சினந்த அரக்கர்கள். ஏதியும் - படைக்கலமும். நாளும் - ஆயுளும். சுற்றின தேரினர், தோலா வில்தொழில வீரம் விளைத்தார், எற்றினன் மாருதி, எற்ற உற்றுஎழு வோரும் உலந்தார். 17 17. எற்ற - அடிக்க. உற்று - அந்த அடியைப்பெற்று. `எழுவோரும் உலந்தார்’. விட்டுஉயர் விஞ்சையர் `வெம்தீ உள்துயர் சானகி உறையும் புள்திரள் சோலை புறத்தும் சுட்டுஇலது’ என்பது சொன்னார். 18 18. வீட்டுஉயர் - வானத்தின் உயரத்தில். உள்துயர் - உள்ளத் துயர். புள்திரள் சோலை - பறவைகள் கூடும் சோலையின். வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்; வெம்திறல் வீரன் வியந்தான்; `உய்ந்தெனென்’ என்ன உயர்ந்தான் பைந்தொடி தாள்கள் பணிந்தான். 19 19. -. பார்த்தனள் சானகி, பாரா வேர்த்துஎரி மேனி குளிர்ந்தாள்; `வார்த்தைஎன்? வந்தனை’ என்னாப் போர்த்தொழில் மாருதி போனான். 20 20. வார்த்தைஎன் - சொல்லக்கூடிய சொல் என்ன? என்றாள் சீதை. வந்தனை - வணக்கம். என்னா - என்று சொல்லி. தெள்ளிய மாருதி சென்றான்; `கள்ள அரக்கர்கள் கண்டால் எள்ளுவர், பற்றுபவர்,’ என்னா ஒள்எரி யோனும் ஒளித்தான். 21 21. -. 15. திருவடி தொழுத படலம் அனுமான் இலங்கையில் ஒரு குன்றின்மேல் ஏறி, இராமனை வணங்கிப் பாய்ந்து வான்வழிச் சென்றான். மைநாக மலையை எய்தி, எல்லாவற்றையும் உரைத்து விட்டுத் தன்னை எதிர்பார்த்திருந்த வானர வீரர்களிடையே வந்து குதித்தான். வானரர்களின் மகிழ்ச்சியும் உபசரிப்பும் போய்வரும் கருமம் முற்றிற்று, என்பதுஓர் பொம்மல் பொங்க, வாய்வெரீஇ நின்ற வென்றி வானர வீரர் மன்னோ, பாய்வரும் நீளத்து ஆங்கண் இருந்தன, பறவைப் பார்ப்புத் தாய்வரக் கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார், அம்மா. 1 திருவடி தொழுத படலம்: இலங்கைக்குச் சென்று சீதையைக்கண்டு திரும்பிய அனுமான் இராமன் திருவடி களை வணங்கி, சீதையைக் கண்டதையும், அவள் சிறப்பை யும் கூறும் பகுதி. 1. பொம்மல் பொங்க - மகிழ்ச்சி மேலோங்க. பாய்வரும் நீளத்து ஆங்கண் - பாய்ந்து உள்ளேபுகும் கூட்டில். இருநதன பறவைப் பார்ப்பு - இருந்தவைகளான பறவைக் குஞ்சுகள். `வானரவீரர் உவகையில் தளிர்த்தார்.’. அழுதனர் சிலவர்; முன்னின்று ஆர்த்தனர் சிலவர்; அண்மித் தொழுதனர் சிலவர்; ஆடித் துள்ளினர் சிலவர்; அள்ளி முழுதுஉற விழுங்கு வார்போல் மொய்த்தனர் சிலவர்; முற்றும் தழுவினர் சிலவர்; கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி. 2 2. `சிலவர் தாங்கிக்கொண்டு சுமந்தனர்’ சிலவர் - சிலர். `தேனொடு கிழங்கும், காயும், நறியன அரிதில் தேடி மேன்முறை வைத்தேம்; அண்ணல்! நுகர்ந்தனை மெலிவு தீர்தி மானவாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம்’என்று தாம்நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார். 3 3. தாம் நுகர் - தாங்கள் உண்ணக்கூடிய. சாகம் - இலை உணவுகள். அனுமான் சீதையைக் கண்ட செய்தி கூறல் வாலிகா தலனை முந்தை வணங்கினன்; எண்கின் வேந்தைக் கால்உறப் பணிந்து, பின்னைக் கடன்முறை கடவோர்க் கெல்லாம் மேல்உற இயற்றி `ஆங்கண் இருந்துஇவண் இருந்தோர்க்கு எல்லாம் ஞாலநா யகன்தன் தேவி சொல்லினள் நன்மை’ என்றான். 4 4. வாலிகாதலன் - அங்கதன். எண்கு - கரடி. எண்கின்வேந்து - சாம்பவான். என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சித் தாழா நின்றனர்; உவகை பொங்க, விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்; `சென்றது முதலா வந்தது இறுதியாச் செப்பற் பாலை வன்திறல் உரவோய்’ என்னச் சொல்லினன் மருத்தின் மைந்தன். 5 5. வன்திறல் உரவோய் - வலிய திறமையும் பலமும் உள்ள மாருதியே. ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லிப், பூண்டபேர் அடையா ளம்கைக் கொண்டதும் புகன்று, போரில் நீண்டவாள் அரக்க ரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும் விளம்பான், தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி. 6 6. அரும்தவம் - சிறந்த கற்பொழுக்கத்தை. அமையச் சொல்லி நன்றாக உரைத்து. `பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை உரைசெய, ஊர்தீ யிட்டது ஓங்குஇரும் புகையே ஓதக், கருதலர் பெருமை, தேவி மீண்டிலாச் செயலே காட்டத் தெரிதர உணர்ந்தேம்; பின்னர் என்இனிச் செய்தும்?’ என்றார். 7 7. கருதலர் பெருமை - பகைவர்களின் பெருமையை. `யாவதும் இனிவேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை; சேவகன் தேவி தன்னைக் கண்டமை விரைவின் செப்பி ஆவதுஅவ் அண்ணல் உள்ளத்து அருந்துயர் ஆற்ற லேயாம்; போவது புலமை;’ என்னப் பொருக்கென எழுந்து போனார். 8 8. ஆவது - நாம் செய்யக்கூடியது. `ஆவது சேவன் தேவிதன்னை’ போவது புலமை - நாம் இராமனிடம் போவதே அறிவுடைமை. ததிமுகன் பட்டபாடு வழி நடந்த வானரர்கள் நடுப்பகலில் சுக்கிரீவனுடைய மது வனம் ஒன்றையடைந்து அதிற் புகுந்து தேனருந்தி ஆரவாரித்தனர். இதைக் கண்ட அம்மதுபவனக் காவலனாகிய ததிமுகனும், அவன் படைகளும் வானரங் களை விரட்டினர். வானரர்கள் அங்கதனைச் சரண் அடைந்தனர். அங்கதன் ததிமுகனைப் பிடித்து அறைந்து நீ போய் உன் அரசனிடம் சொல் என்று விரட்டினான். அலைபுனல் குடையு மாபோல் மதுக்குடைந்து ஆடித், தத்தம் தலைவர்கட்கு இனிய தேனும், கனிகளும், பிறவும் தந்தே உலைவுறு வருத்தம் தீர்த்திட்டு உபவனத்து இருந்தார்; அப்பால் சிலைவளைத்து உதவும் தேரோன் தெறுவெயில் தணிவு பார்த்தே. 9 9. மதுக்குடைந்து ஆடி - மதுபானத்திலே முழுகி விளையாடி. உலைவுறும்வருத்தம் - சோர்வடையும் துனபம். தேரோன் - சூரியன். தெறும் வெயில் - சுடுகின்ற வெய்யில். இச்சமயத்தில் இராம பிரான் நிலைமை தண்டல்இல் நெடுந்திசை மூன்றும் தாயினர் கண்டிலர் மடந்தையை; என்னும் கட்டுரை உண்டுஉயிர் அகத்துஎன ஒறுக்க வும்,உளன் திண்திறல் அனுமனை நினையும் சிந்தையான். 10 10. தண்டல்இல் - தடையில்லாமல். கட்டுரை - சொல். அகத்து உயிர் உண்டுஎன - உடம்பினுள் உயிர்உண்டு என்று சொல்லும் அளவிலே வைத்து. ஒறுக்கவும் - துன்புறுத்தவும். `திண்திறல் அனுமனை நினையும் சிந்தையான் உளன்’. ஆரியன், அரும்துயர் கடலுள் ஆழ்பவன் `சீரியது அன்றுநம் செய்கை, தீர்வுஅரும் மூரிவெம் பழியொடும் முடிந்த தாம்’எனச் சூரியன் சிறுவனை நோக்கிச் சொல்லினான். 11 11. ஆரியன் - இராமன். `நம்செய்கை சீரியதுஅன்று’. சீரியது - பயன் உள்ளது. மூரிய - பெரிய. `குறித்தநாள் இகந்தன, குன்றத் தென்திசை வெறிக்கரும் குழலியை நாடல் மேயினார் மறித்துஇவண் வந்திலர்; மாண்டு ளார்கொலோ; பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோ?’ 12 12. இகந்தன - கழிந்தன. வெறிகரும் - மணம் கமழும் கருமையான. பிறித்து - பிறிது. பெற்றி - தன்மை. `மாண்டனள் அவள்,இவள் மாண்ட வார்த்தையை மீண்டுஅவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று;எனா பூண்டதுஓர் துயர்கொடு பொன்றி னார்கொலோ? தேண்டினர் இன்னமும் திரிகின் றார்கொலோ?’ 13 13. பூண்டதுஓர் துயர்கொடு - மேற்கொண்ட ஒப்பற்ற துயரத்தால். `கண்டனர் அரக்கரைக் கறுவு கைம்மிக மண்டுஅமர் தொடங்கினார், வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில்மே யினர்கொல்; வேறுஇலாத் தண்டல்இல் நெடும்சிறைத் தளைப்பட் டார்கொலோ?’ 14 14. கறுவு கை மிக - கோபம் மிகுந்து. தொடங்கினர் - தொடங்கினவர்கள். விண்தலம் - வானுலகம். வேறுஇலா - தப்பிக்க வேறு வழியில்லாமல். தண்டல் இல் - நீங்காத. `கூறின நாள்,அவர் இருக்கை கூடலம் ஏறல்அஞ் சுதும்,என இன்ப துன்புகள் ஆறினர், அருந்தவம் அயர்கின் றார்கொலோ? வேறுஅவர்க்கு உற்றதுஎன்? விளம்பு வாய்.’ என்றான். 15 15. கூறினநாள் - கெடுவைத்த நாளிலே. ஏறல் அஞ்சுதும் - இனி அங்கே சேர அஞ்சுகின்றோம். இன்பு துன்புகள் ஆறினர் - இன்பதுன்பங்களை மறந்தவர்களாய். ததிமுகன் வரவும் மகிழ்வும் என்றுரைத்து இடர்உழந்து இருக்கும் வேலையில், வன்திறல் ததிமுகன் வான ரேசன்முன் தன்தலைப் பொழிதரு குருதி தன்னொடும், குன்றுஎனப் பணிந்தனன் இருகை கூப்பியே. 16 16. -. எழுந்துநின்று `ஐயகேள்! இன்று நாளையோடு அழிந்தது மதுவனம் அடைய;’ என்றலும், வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே, `மொழிந்திடுஅங்கு யார்அது முடித்து ளோர்?’என. 17 17. -. `நீலனும், குமுதனும், நெடிய குன்றமே போல்உயர் சாம்பனும், புணரி போர்த்துஎன மேல்எழு சேனையும் விரைவில் வந்துஉறாச் சால்புடை மதுவனம் தனைஅ ழிப்பவே.’ 18 18. புணரி போர்த்து என - கடல்வந்து மூடினதைப்போல. வந்துஉறா- வந்து அடைந்து. சால்புஉடை - பெருமையுடைய. `அவர்களைத் தடுத்த நமது சேனையை அங்கதன் அடித்து வெருட்டினான்; என்னையும் குத்தினான்; உன்னையும் இகழ்ந்தான்; உன்னிடம் உரைக்கும்படி என்னை ஏவினான்.’ என்றான் ததிமுகன். சுக்கிரீவன் இராமனுக்குரைத்த ஆறுதல் மொழிகள் ஏம்பலோடு எழுந்துநின்று இரவி கான்முளை பாம்பணை அமலனை வணங்கிப் பைந்தொடி மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையைத் தாம்புகன் றிட்டது,இச் சலம்,’என்று ஓதினான். 19 19. ஏம்பலோடு - மகிழ்ச்சியுடன். மெய்மையைத்தாம் - உண்மையையே. இச்சலம் - இக்கொடுஞ் செயல். `பண்தரு கிளவியாள் தன்னைப் பாங்குறக் கண்டனர்; அன்னதுஓர் களிப்பி னால்,அவர் வண்டுறை மதுவனம் அழித்து மாந்தியது; அண்டர்நா யகஇனி அவலம் தீர்’கென்றான். 20 20. -. சுக்கிரீவன் ததிமுகனிடம் கேட்டது `யார்அவண் இறுத்தவர் இயம்பு வாய்.’என `மாருதி, வாலிசேய், மயிந்தன் சாம்பவன் சோர்வுஅறு பதினெழு வோர்கள் துன்னினார் ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’ 21 21. அவண் இறுத்தவர் யார் - அங்கே வந்து தங்கியது யார்? துன்னினார் - வந்து சேர்ந்தனர். என்றுஅவன் உரைத்தபோது, இரவி காதலன், வன்திறல் ததிமுகன் வதனம் நோக்கியே, `ஒன்றுஉனக்கு உணர்த்துவது உளது, வாலிசேய் புன்தொழில் செய்கைசேர் புணர்ப்பன் அல்லன்;ஆல்.’ 22 22. வாலிசேய் - அங்கதன். புன்தொழில செய்கைசேர் - இழிதொழிலைச் செய்கின்ற. புணர்ப்பன் - தன்மையுள்ளவன். `கொற்றவன் பணிதலைக் கொண்டு, தென்திரை சுற்றிய திசையெலாம் துருவித் தோகையைப் பற்றிய பகைஞரைக் கடிந்து, பாங்கர்வந்து உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையே?’ 23 23. கொற்றவன் - இராமன். துருவி - தேடிப்பார்த்து. கடிந்து - அழித்து. பாங்கர் - மதுவனத்தின் பக்கம். உரைப்பது - சினந்துரைப்பது. என்னை - எப்படி? `அன்றியும் வாலிசேய் அரசுஅது ஆதலின், பின்றுதல் அரிது;அரோ பிணங்கும் சிந்தையாய்! ஒன்றும்நீ உணரலை; உறுதி வேண்டுமேல், சென்றுஅவன் தனைச்சரண் சேர்தி மீண்டு’என்றான். 24 24. அரசுஅது ஆதலின் - இளவரசன் ஆதலால். பின்றுதல் அரிது - பகைத்தல் கூடாது. திரும்பி வந்து பணிந்த ததிமுகனுக்கு அங்கதன் கூறிய ஆறுதல் `போழ்ந்தன யான்செய்த குறைபொ றுக்’கெனா வீழ்ந்தனன் அடிமிசை வீழ வாலிசேய் தாழ்ந்துகைப் பற்றிமெய் தழீஇக்கொண்டு `உம்மையான் சூழ்ந்ததும் பொறுக்கெனா’ முதன்மை சொல்லினான். 25 25. போழ்ந்தன - வாளால் பிளந்தவைபோன்ற. குறை - குற்றங்களை. உன்னை - உனக்கு. சூழ்ந்தது - செய்த துன்பத்தை. அனுமான் இராமனுக்குச் செய்தி சொல்ல முதலில் புறப்பட்டான்; நடுப்பகல் நீங்கிய பின் வானரப் படைகள் எல்லாம் புறப்பட்டன. இப்புறத்து இராமனும், இரவி சேயினை ஒப்புற நோக்கி,`வந்து உற்ற தானையர் தப்பறக் கண்டனம் என்ப ரோ?தகாது அப்புறத்து என்பரோ? அறைதி யால்!’என்றான். 26 26. ஒப்புறநோக்கி - தகுதியமையப்பார்த்து. தப்புஅற - தவறு இல்லாமல்; நிச்சயமாக. தகாது - பொருந்தச் சொல்லாமல். அப்புறத்து - இவ்வுலகுக்கு அப்பால் உள்ளாள். அனுமான் வரவுகண்டு ஆனந்தம் என்புழி அனுமனும், இரவி என்பவன் தென்புறத்து உளன்எனத் தெரிவது ஆயினான்; பொன்பொழி தடக்கைஅப் பொருவில் வீரனும் அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான். 27 27. இரவி - சூரியன். அமைய - நன்றாக. எய்தினன் அனுமனும், எய்தி, ஏந்தல்தன் மொய்கழல் தொழுகிலன், முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன் கையினன்; வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான். 28 28. மொய்கழல் - புகழ்பொருந்திய பாதத்தை. வையகம் தழீஇ - நிலத்தில் வீழ்ந்து. திண்திறல் அவன்செயல் தெரிய நோக்கினான், `வண்டுஅறல் ஓதியும் வலியள்; மற்றுஇவன் கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று!’எனக் கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான். 29 29. திண்திறலவன் - மிகுந்த வலிமையுள்ள அனுமான். வண்டு அறல் ஓதியும் - வண்டும் கருமணலும் போன்ற கூந்தலை யுடையவள். கொள்கை யான் - திறமையுள்ள இராமன். அனுமான் உரைத்த மகிழ்ச்சி மொழிகள் `கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்; அண்டநா யக!இனித் துறத்தி! ஐயமும், பண்டுள துயரும்,`என்று அனுமன் பன்னுவான். 30 30. அண்டநாயக - உலகத் தலைவனே. கண்டனென் சீதையைக் கண்களால் - என்கண்களாலேயே சீதையைக் கண்டேன். வேறு `உன்பெரும் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் தன்பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்; என்பெரும் தெய்வம் ஐயா! இன்னமும் கேட்டி’ என்பான். 31 31. மன்பெரு மருகி - மன்னனுடைய சிறந்தமருமகள். தலைமை சான்றாள் - பெருமை நிறைந்துள்ளாள். சானகியின் மாட்சி `உன்குலம் உன்னது ஆக்கி, உயர்புகழ்க்கு ஒருத்தி ஆய தன்குலம் தன்னது ஆக்கித், தன்னைஇத் தனிமை செய்தான் வன்குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து, என்குலம் எனக்குத் தந்தாள்; என்இனிச் செய்வது எம்மோய்!’ 32 32. எம்மோய் - எமது அன்னையாகிய சீதாதேவி. என்குலம் - எனது குலச் சிறப்பை. தனிமை செய்தான் - துன்பம் செய்தவனாகிய இராவணன். `வில்பெருந் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்; இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும்பொறை என்பது ஒன்றும், கற்புஎனும் பெயரது ஒன்றும், களிநடம் புரியக் கண்டேன்.’ 33 33. இல்பிறப்பு - உயர் குடிப்பிறப்பு. இரும்பொறை - பெரிய பொறுமைக் குணம். கற்புஎனும் பெயரது ஒன்றும் - கற்பென்னும் பெயரையுடையதாகிய ஒரு சிறந்த குணமும். `வேலையுள், இலங்கை என்னும் விரிநகர் ஒருசார், விண்தோய் காலையும் மாலை தானும் இல்லதுஓர் கனகக் கற்பச் சோலைஅங்கு அதனின், உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில்; இருந்தாள் ஐய! தவம்செய்த தவமாம் தையல்.’ 34 34. வேலையுள் - கடலின் நடுவிலே உள்ள. ஒருசார் - ஒரு பக்கத்தில். காலையும் மாலை தானும் - சந்தியும் அந்தியும். விண்தோய் கனக கற்பச்சோலை அங்கதனில் - வானளாவிய பொன்மயமான கற்பக மரங்கள் அடர்ந்த சோலையில். `மண்ணொடும் கொண்டு போனான்; வான்உயர் கற்பி னாள்தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்; உலகம் பூத்த கண்ணகன் கமலத்து அண்ணல் “கருத்திலாள் தொடுதல் கண்ணின் எண்ணரும் கூறாய் மாய்தி” என்பதுஓர் மொழிஉண்டு’ என்பான். 35 35. வான்உயர் - மிகவும் சிறந்த. உலகம் பூத்த - உலகைப் படைத்த. கண்அகல் கமலத்து அண்ணல் - பெரிய தாமரை மலரில் உள்ள பிரமன். கருத்து இலாள் - சம்மதம் இல்லாதவளை. தொடுதல் கண்ணின் - வலியத் தொடுவதற்கு எண்ணினால். எண்ணரும் கூறாய் - பல கூறுகளாய் வெடித்து. `தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது; அநந்தன் உச்சி கிழிந்திலது; எழுந்து வேலை மீண்டில; சுடர்கள் யாவும் விழுந்தில; வேதம் செய்கை மாண்டிலது; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ!’ 36 36. திசைமுகன் - நான்முகன். முட்டை - அண்டம். கீண்டிலது - பிளக்கவில்லை. வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி வரவில்லை. வாய்மையால் - உண்மையாயிருத்தலால். சானகியைக் கண்ட தன்மையைச் சாற்றுதல் `இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்திப் பொலங்குழை அவரை யெல்லாம் பொதுஉற நோக்கிப் போந்தேன்; அலங்குதண் சோலை புக்கேன்; அவ்வழி அணங்கு அனாளைக் கலங்குதெண் திரையிற்று ஆய கண்ணின்நீர்க் கடலில் கண்டேன். 37 37. அலங்கு தண் சோலை - அசைகின்ற குளிர்ந்த சோலையுள். கலங்குதென் திரையிற்றுஆய - கலங்குகின்ற தெளிந்த அலைகளையுடைய கடலைப் போன்ற. `அரக்கியர் அளவற் றார்கள், அமரர்தம் குழுவும் அஞ்சச் செருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க, இரக்கம்என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தித் தருக்குஉயர் சிறையுற் றன்ன தகையள்,அத் தமியள்; அம்மா.’ 38 38. செருக்கினர் காப்ப - செருக்குடன் காவல் காக்க. தருக்கு உயர்சிறை - கொடுமை நிறைந்த சிறையிலே. உற்றுஅன்ன - இருந்ததுபோல. தகையினள் - தன்மையுள்ளவள். `மாண்புஇறந்து அமைந்த கற்பின் வாள்நுதல், நின்பால் வைத்த சேண்பிறந்து அமைந்த காதல், கண்களில் தெவிட்டித் தீராக் காண்பிறந் தமையால், நீயே கண்அகல் ஞாலந் தன்னுள் ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை ஆதி அன்றே.’ 39 39. மாண்புஇறந்து அமைந்த - பெருமை இயல்பாகவே தோன்றி அமைந்த. சேண்பிறந்து அமைந்த காதல் - உயர்வாகத் தோன்றி அமைந்த காதலை. கண்களின் - கண்களால். தெவிட்டித்தீரா - தெவிட்டாமல். காண் பிறந்த மையால் - காண் பிறந்தமையால். உண்டனை ஆதி - அடைந்தவள் ஆயினை. `தையலை வணங்கற்கு ஒத்த இடம்பெறும் தன்மை நோக்கி, ஐய!யான் இருந்த காலை; அலங்கல்வேல் இலங்கை வேந்தன் எய்தினன்; இரந்து கூறி இறைஞ்சினன்; இருந்து, நங்கை வெய்துரை சொல்லச் சீறிக் கோறல்மேல் கொண்டு விட்டான்.’ 40 40. இடம்பெறும் தன்மைநோக்கி - காலத்தைப்பெறும் தன்மையைப் பார்த்து. வெய்துரை - கடுமொழிகள். கோறல் மேல்கொண்டு விட்டான்- கொல்லத் துணிந்தான். `ஆயிடை அணங்கின் கற்பும், ஐயநின் அருளும், செய்ய தூயநல் அறனும் என்றுஇங்கு இனையன தொடர்ந்து காப்பப் போயினன்; அரக்கி மாரைச் `சொல்லுமின்’ பொதுவின் என்றுஆங்கு ஏயினன்; அவர்எ லாம்என் மந்திரத்து உறங்கி இற்றார்.’ 41 41. தொடர்ந்து காப்ப - விடாமல் காப்பாற்ற. போயினன் - தேவியைக் கொல்லாமல் விட்டுப்போனான். சொல்லுமின் - புத்திசொல்லுங்கள். பொதுவின் ஏயினன் - பொதுவாக உத்தரவிட்டான். உறங்கியிற்றார் - தூங்கிவிட்டனர். `அன்னதுஓர் பொழுதின், நங்கை ஆர்உயிர் துறப்ப தாக உன்னினள்; கொடிஒன்று ஏந்திக், கொம்பொடும் உறைப்பச் சுற்றித், தன்மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையின் தடுத்து,நாயேன் பொன்அடி வணங்கி நின்று, நின்பெயர் புகன்ற போதில்.’ 42 42. கொம்பொடும் உறைப்பச்சுற்றி - மரக்கிளையிலே உறுதியாகச் சுற்றிக்கட்டி. தன் மணிக்கழுத்தில் - தனது அழகிய கழுத்திலே. இதுவும் அரக்கர் வஞ்சமோ என்று கருதினள், ஆயினும், `நான் இறக்கும்போது அஞ்சன வண்ணன் பெயர் கூறினை; என் இறப்பைத் தடுத்தனை’ என்று கண்ணீர் விட்டாள். `அறிவுறத் தெரியச் சொன்ன பேர்அடை யாளம் யாவும் செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவுஅற எண்ணி, வண்ண மோதிரம் காட்டக் கண்டாள் இறுதியில் உயிர்தந்து ஈயும் மருந்துஒத்தது அனையது எந்தாய்!’ 43 43. திருக்கம் இன்மை - வேற்றுமை இல்லாமையை. முறிவுஅற - நன்றாக. அனையது - அம்மோதிரம் `வாங்கிய ஆழி தன்னை, வஞ்சர்ஊர் வந்தது ஆம்என்று ஆங்குஉயர் மழைக்கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி, ஏங்கினள் இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி வீங்கினள்; வியந்தது அல்லால் இமைத்திலள், உயிர்ப்பு விண்டாள்.’ 44 44. ஆயிரம் கலசம் நீரால் ஆட்டி - ஆயிரம்குட நீரால் குளிப்பாட்டி. உயிர்ப்பு விண்டாள் - பெருமூச்சு விட்டாள். `அன்னவர்க்கு, அடிய னேன்,நின் பிரிந்தபின் அடுத்த எல்லாம் சொல்முறை அறியச் சொல்லித் `தோகைநீ இருந்த சூழல் இன்னதுஎன்று அறிகி லாமே இத்தனை தாழ்த்தது’ என்றே மன்னநின் வருத்தப் பாடும், உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள்.’ 45 45. அன்னவர்க்கு - அப்பிராட்டியாருக்கு. சூழல் - இடம். உயிர்ப்பு வந்தாள் - உயிர்விடாமல் இருந்தாள். சூளாமணியைக் கொடுத்தல் `இங்குஉள தன்மை எல்லாம் இயைபுளி இயம்பக் கேட்டாள்; அங்குஉள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்; `திங்கள்ஒன்று இருப்பென் இன்னே; திருஉளம் தீர்ந்த பின்னை மங்குவென் உயிரோடு;’ என்றுன் மலர்அடி சென்னி வைத்தாள்.’ 46 46. இயைபுளி இயம்ப - முறையாகக் கூற. திருவுளம் தீர்ந்த பின்னை- இராமனுக்கு மனமில்லையானால் அதன்பின். உயிரொடு மங்குவென் - உயிருடன் மறைவேன்; இறப்பேன். `வைத்தபின், துகிலின் வைத்த மாமணிக்கு அரசை வாங்கிக் கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள் ஆர வித்தக காண்டி!’ என்று கொடுத்தனன் வேத நன்னூல் உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான். 47 47. வித்தக - அறிவுருவானவனே. வேதம் நல்நூல் உய்த்துள காலம் எல்லாம் - வேத ஒழுக்கமும் அறநூல் ஒழுக்கமும் நிலவியிருக்கின்ற காலம் எல்லாம். பைப்பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, மெய்உற வெதும்பி, உள்ளம் மெலிவுஉறும் நிலையை விட்டான்; அய்யனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று அன்றே கைபுக்க மணியின் காட்சி. 48 48. பைப்பையப் பயந்த காமம் - மெதுவாக உள்ளே எழுந்த காமம். பரிணமித்து - வளர்ந்து. உள்ளம் மெலிவுஉறும் நிலையை - உள்ளம் தளர்ச்சியடைகின்ற தன்மையை. மணி - சூடாமணி. பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித் துடித்தன மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி; மடித்தது மணவாய்;ஆவி வருவது போவது ஆகித் தடித்தது மேனி; என்னே! யார்உளர் தன்மை தேர்வார்! 49 49. போந்து - தோன்றி. பொங்கி - பூரிப்படைந்து. மணிவாய் - அழகிய வாய். மேனி தடித்தது - உடம்பு பருத்தது. தன்மை - அவன் இயல்பை. தேர்வார் - அறிவார். ஆயிடைக் கவிக ளோடும் அங்கதன்; முதலின் ஆயோர் மேயினர்; வணங்கிப் புக்கார் வீரனைக், கவியின் வேந்தைப்; போயின கருமம் முற்றிப் புகுந்ததுஓர் பொம்மல் தன்னால் சேய்இரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தார் ஆனார். 50 50. வீரனை - இராமனையும். கவியின் வேந்தை - சுக்கிரீவனையும், முற்றி - முடித்து. பொம்மல் தன்னால் - மகிழ்ச்சி யினால். சேய் இரு மதியம் என்ன - உயர்ந்த பெரிய சந்திரன் என்று சொல்லும்படி. திகழ்தரும் - விளங்குகின்ற. ஆண்டையின் அருக்கன் மைந்தன் `ஐயகேள் அரிவை நம்பால் காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ ஈண்டுஇனும் இருத்தி போலாம்” என்றனன், என்ற லோடும் தூண்திரண்டு அனைய தோளான் பெருக்கென எழுந்து சொன்னான். 51 51. காலம் தாழ - காலம்போக. என்றனன் - என்று கூறினான் இராமன். தோளான் - சுக்கிரீவன். பொருக்கென - உடனே. சுக்கிரீவன் படைகளுக்கு உத்தரவிடுதல் `படைகள் எல்லாம் உடனே புறப்படுக’ என்றான். உடனே வானரப் படைகள் தென் திசை நோக்கிப் படர்ந்தன. அப்பொழுது சுக்கிரீவன் பணித்ததாவது: நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான் `நந்தம் பால்வரும் சேனை தன்னைப் பகைஞர்வந்து அடரா வண்ணம், சால்புற முன்னர்ச் சென்று, சரிநெறி துருவிப் போதி, மால்தரு களிறு போலும் படைஞர்பின் மருங்கு சூழ.’ 52 52. நேமியோன் - இராமன். நம் தம்பால் வரும் - நமது பக்கம் சூழ்ந்து வரும். அடரா வண்ணம் - அழிக்காதபடி. சரிநெறி துருவிப்போதி - சரியான வழியைக்கண்டு செல்வாயாக. என்றுஉரைத்து எழுந்த வேலை, மாருதி இருகை கூப்பிப், `புன்தொழில் குரங்கு எனாது,என் தோள்இடைப் புகுதி’ என்னாத் தன்தலைப் படியில் தாழ்ந்தான்; அண்ணலும் சரணம் வைத்தான் வன்திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான். 53 53. -. `நீஇனி என்தன் தோள்மேல் ஏறுதி! நிமல!’ என்ன வாய்புதைத்து இறைஞ்சி நின்ற வாலிகா தலனை நோக்கி நாயகற்கு இளைய கோவும் நன்று’என அவன்தன் தோள்மேல் பாய்தலும், தகைப்பில் தானை படர்நெறி படர்ந்தது அன்றே. 54 54. பாய்தலும் - ஏறியதும். தகைப்பு இல் தானை - தடுத்தற்கரிய வானர சேனை. படர் நெறி - போகவேண்டிய வழியிலே. பரந்தது - பரவிச் சென்றது. வையகம் அதனில் மாக்கள் மயங்குவர், வயவெம் சேனை எய்திடின்; என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவப், பெய்கனி, கிழங்கு, தேன்,என்று இனையன பெறுதற்கு ஒத்த செய்யமால் வரையே, ஆறாச் சென்றது,அத் தகைப்புஇல் சேனை. 55 55. இனையன பெறுதற்கு ஒத்த - இவைகளை அடைவதற்கு ஏற்ற. செய்யாமல் வரையே ஆறா - நல்ல பெரிய மலைகளை வழியாகக் கொண்டு. `தகைப்புஇல் சேனை சென்றது’. வீரரும் விரைவில் போனார்; விலங்கல்மேல் இலங்கை, வெய்யோன் பேர்வுஇலாக் காவல் பாடும், பெருமையும், அரணும், கொற்றக் கார்நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பி லாத, வார்கழல் அனுமன் சொல்ல வழிநெடிது எளிதில் போனார். 56 56. இலங்கை வெய்யோர் - இலங்கையில் வாழும் கொடியவர்கள். கணிப்பு இலாத - அளவற்ற பெருமைகளை. `வெய்யோன் கொற்றம் கார் நிறத்து அரக்கர் என்போர் பேர்விலாக் காவல்பாடும் பெருமையும் அரணும் முதலிய கணிப்பிலாத’. இவ்வாறு பன்னிரண்டு நாட்கள் நடந்து சென்று தென்திசைக் கடலைக் கண்டனர். யுத்த காண்டம் 1. கடல் காண் படலம் காப்பு ஒன்றே என்னின் ஒன்றேயாம்; பலவென்று உரைக்கின் பலவேயாம்; அன்றே என்னின் அன்றேயாம்; ஆமே என்னின் ஆமேயாம்; இன்றே என்னின் இன்றேயாம்; உளதுஎன்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை; நமக்குஇங்கு என்னோ பிழைப்பு அம்மா! 1 யுத்த காண்டம்: இராம-இராவண யுத்தத்தைப்பற்றிக் கூறும் பகுதி. கடல்காண் படலம்: இராமன், சுக்கிரீவன் முதலி யவர்களுடன் வந்து தெற்குக் கடலைக் கண்டதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. நம்பிகுடி வாழ்க்கை நன்றே - கடவுளுடைய குடிவாழ்வு நன்று. நமக்கு இங்கு - நமக்கு இவ்வுலகில். பிழைப்பு என்னோ - அக்கடவுளை நம்பிப் பிழைப்பது எப்படி? இராமன் கடலைக் காணுதல் பொங்கிப் பரந்த பெரும்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச், சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்குஇனமாம் கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும்துயில்வுற்று இதழ்குவிக்கும் கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்உற்றான். 2 2. புறத்தும் அகத்தும் புடைசுற்ற - வெளியிலும் உள்ளத்திலும் சுற்றித் திரிய. சங்கின் - சங்கைப்போல. துயில்வுற்று - தூங்கி. கண்ணன் - இராமன். இராமன் கண்ணுக்கு இனம் தாமரை மலர்கள். சேய காலம் பிரிந்துஅகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால் மாயன் வந்தான், கண்வளர்வான், என்று கருதி, வரும்தென்றல், தூய மலர்போல் நுரைத்தொகையும், முத்தும் சிந்திப் புடைசுருட்டிப் பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பம்மா! 3 3. சேயகாலம் - நீண்டகாலம். பிரிந்து அகலத் திரிந்தான் மாயன் - பிரிந்து போய்த் திரிந்தவனாகிய திருமால். கண்வளர் வான் - படுத்து உறங்குவான். படுப்பதே ஒத்த - பரப்பியதை ஒத்திருந்தன. நென்னல் கண்ட திருமேனி, இன்று பிறிதாய் நிலைதளர்வான் தன்னைக் கண்டும் இரங்காது, தனியே கதறும் தடங்கடல்வாய், பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள்உயிர்க்கும் புன்னைக் குறும்பூ நறும்சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே. 4 4. பின்னல் - ஒன்றோடு ஒன்று தொடர்ந்த. தென்றல் - தென்றல் காற்றானது. கள் உயிர்க்கும் - தேனைச் சிந்துகின்ற. குறும்பூ - சிறிய பூவில் உள்ள. நறும் சுண்ணம் - நறுமணமுள்ள மகரந்தப் பொடிகளை. இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர்;கொடியேன் தந்த பாவை, தவப்பாவை, தனிமை தகவோ; எனத்தளர்ந்து, சிந்து கின்ற நறும்தரளக் கண்ணீர் ததும்பித், திரைத்துஎழுந்து, வந்து வள்ளல் மலர்த்தாளில் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே. 5 5. பேதை - பேதையாகிய சீதை. நீங்கா இடர் இருந்தாள் - நீங்காத துன்பத்தில் இருநதான். தனிமை தகவோ - தனித்து வருந்தல் தக்கதோ. தரளம் கண்ணீர் ததும்பி - முத்துக்களாகிய கண்ணீர் நிறைந்து. கொங்கைக் குயிலைத் துயர்நீக்க, இமையோர்க்கு உற்ற குறைமுற்ற, வெம்கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேற்செல்லும் கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களிகூர, அங்கைத் திரள்கள் எடுத்தோடி ஆர்ப்பது ஏய்க்கும் அணிஆழி. 6 6. கொங்கைக் குயில்; சீதாதேவி. குறைமுற்ற - குறையை முடிக்க. கைவெம் சிலையன் - கையிலே கொடிய வில்லை யுடையவன். முனிவின்மேல் - கோபத்துடன். ஆர்ப்பது ஏய்க்கும் - ஆரவாரிப்பதை ஒக்கும். இன்ன தாய கரும்கடலை எய்தி, இதனுக்கு எழுமடங்கு தன்னது ஆய நெடுமானம், துயரம், காதல், இவைதழைப்ப, `என்னதாகும் மேல்வினை’என்று இருந்தான் இராமன்;இகல் இலங்கைப் பின்ன தாய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவோம். 7 7. இவை தழைப்ப - இவைகள் மேலோங்க. இகல் இலங்கை - வலிய இலங்கையிலே. பின்னதுஆய - எரியூட்டியபின் தோன்றிய. 2. இராவணன் மந்திரப் படலம் பூவரும் அயனொடும் புகுந்து, பொன்னகர் மூவகை உலகினும் அழகு முற்றுற, ஏவின இயற்றினன் கணத்தின், என்பர்ஆல்; தேவரும் மருள்கொளத் தெய்வத் தச்சனே. 1 இராவணன் மந்திரப் படலம்: இராவணன், தனது ஆலோசனைக் குரியவர்களுடன் சேர்ந்து இனி என்ன செய்யலாம் என்பதைப்பற்றி ஆலோசித்ததைப்பற்றிக் கூறும் பகுதி. 1. பூவரும் அயனொடும் - தாமரை மலரில் வாழ்ந்துவரும் பிரமதேவனுடன். தேவரும் மருள்கொள - தேவர்களும் மயங்கும்படி. `தெய்வத் தச்சன் கணத்தின் ஏவின இயற்றினன்.’ ஏவின - கட்டளையிட்டபடி. பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை நன்னகர் நோக்கினான்; நாகம் நோக்கினான்; `முன்னையின் அழகுடைத்து’என்று மொய்கழல் மன்னனும் உவந்து,தன் முனிவும் ஆறினான். 2 2. பொற்புடை - அழகுடைய. நாகம் நோக்கினான் - தேவலோகத்தையும் பார்த்தான். மொய்கழல் - வலிமையும், வீரகண்டாமணியும் உடைய. மன்னன் - இராவணன். திருநகர் முழுவதும் திருந்த நோக்கிய பொருகழல் இராவணன், `அயற்குப் பூசனை வரன்முறை இயற்றி,நீ வழிக்கொள் வாய்’ என்றான், அரியன தச்சற்கும் உதவி ஆணையான். 3 3. `இராவணன்; ஆணையான், தச்சற்கும் அரியன உதவி, அயற்குப் பூசனை வரன்முறை இயற்றி நீ வழிக்கொள்வாய் என்றான்’ ஆணையான் – அதிகாரத்தை யுடையவன். அரியன உதவி - அரும் பொருள்களைக் கொடுத்து. இராவணன் கொலு வீற்றிருத்தல் வரம்பெறு சுற்றமும், மந்தி ரத்தொழில் நிரம்பிய முதியரும் சேனை நீள்கடல் தரம்பெறு தலைவரும் தழுவத் தோன்றினான் அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான். 4 4. தாரினான் - மாலையையுடைய இராவணன். வரம்பெறு - தவம் புரிந்து வரம்பெற்ற. தரம்பெறு - உயர்வுபெற்ற. தழுவ - சூழ்ந்திருக்கும்படி. `முனைவரும், தேவரும், மற்றும் முற்றினார் எனைவரும் தவிர்’கென, ஏய ஆணையான்; புனைகுழல் மகளிரோடு, இளைஞர்ப் போக்கினான், நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான். 5 5. நிகழ்த்தும் - ஆலோசிக்கவேண்டும் என்னும். முனைவர் - முனிவர். முற்றினார் - கூடியிருந்தவர்கள். `பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், தண்டல்இல் மந்திரத் தலைவர் சார்’கெனக் கொண்டுஉடன் இருந்தனன்; கொற்ற ஆணையால் வண்டொடு, காலையும், வரவும் மாற்றினான். 6 6. வண்டொடு காலையும் - வண்டுகளையும் காற்றையும். வரவுமாற்றினான் - வராமல் தடுத்தவனாகிய இராவணன். தண்டல்இல் - பிரியாத. ஆன்றமை கேள்வியர் எனினும், ஆண்தொழிற்கு ஏன்றவர், நண்பினர் எனினும், யாரையும், வான்துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர் போன்றவர் அல்லரைப், புறத்துப் போக்கினான். 7 7. வான்துணைச் சுற்றத்து - சிறந்த துணையாக நிற்கும் சுற்றத்தவர்களான. அல்லரை யாரையும் - அல்லாதவர்கள் அனைவரையும். அமைச்சர்களை நோக்கி இராவணன் பேசுகின்றான் `தாழ்ச்சிஇங்கு இதனின்மேல் தருவது என்இனி? மாட்சி,ஓர் குரங்கினால் மறுகி மாண்டதால்; ஆட்சியும் அரசும்என் அமைவும் நன்று?எனாச் சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான். 8 8. மறுகி மாண்டது - கலங்கி அழிந்தது. என்அமைவும் - என் படையின் தன்மையும். சூழ்ச்சியின் கிழவரை - மந்திரிமார் களை. ஆல்; அசை. `சுட்டது குரங்கு,எரி சூறை ஆடிடக், கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும் பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்; இட்டஇவ் அரியணை இருந்தது என்உடல்.’ 9 9. `எரி சூறைஆடிடக் குரங்குசுட்டது’ பட்டனர் - இறந்தனர். பரிபவம் - துன்பம். `மற்றுஇலது ஆயினும், மலைந்த வானரம் இற்றுஇலது ஆகியது, என்னும் வார்த்தையும் பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர்அலால் முற்றுவது என்இனிப் பழியின் மூழ்கினாம்.’ 10 10. இற்றுஇலது ஆகியது - அழிந்துபோய் விட்டது. பழியில் மூழ்கினாம் - பழியிலே வீழ்ந்தோம். சேனைத் தலைவன் கூற்று `வஞ்சனை மனிதரை இயற்றி, வாள்நுதல் பஞ்சுஅன மெல்அடி மயிலைப் பற்றுதல், அஞ்சினர் தொழில்என அறிவித் தேன்;அது தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோய்!’ 11 11. மனிதரை வஞ்சனை இயற்றி - மனிதரை வஞ்சித்து. மயிலை; சீதையை. தஞ்சென - உறுதி என்று. `கரன்முதல் வீரரைக் கொன்ற கள்வரை, விரிகுழல் உங்கைமூக்கு அரிந்த வீரரைப் பரிபவம் செய்ஞ்ஞரைப் படுக்க லாத,நீ அரசியல் அழிந்ததுஎன்று அயர்தி போலும்;ஆல் 12 12. பரிபவம் செய்ஞ்ஞரை - நமக்குப் பழியுண்டாகும்படி செய்கின்றவர்களை. படுக்கலாத - கொல்லாமலிருக்கின்ற. `தண்டம்என்று ஒருபொருட்கு உரிய தக்கரைக் கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர்; வண்டுஅமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ! விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர்.’ 13 13. தக்கரை - வஞ்சகர்களை. கண்டவர் உலகம் காவலர் - கண்டவரான மன்னர். பொறுப்பரோ - பொறுத்துக் கொண்டி ருப்பரோ? விண்டவர் - பகைவர்களின். `வெம்மையோர் வணங்கி வாழ்வரோ’. `போயின குரங்கினைத் தொடர்ந்து போய்,இவண் ஏயினர் உயிர்குடித்து, எவ்வம் தீர்கலெம்; வாயினும், மனத்தினும், வெறுத்து வாழ்துமேல் ஓயும்நம் வலி;’என உணரக் கூறினான். 14 14. இவண் ஏயினர் - இங்கே அக்குரங்கை அனுப்பியவர் களுடைய. ஓயும் - அடங்கும். முதலமைச்சன் மகோதரன் பேச்சு `வெள்ளிஅம் கிரியினை விடையின் பாகனோடு அள்ளி,விண் தொடஎடுத்து ஆர்த்த ஆற்றலாய்! சுள்ளியில் இருந்துறை குரங்கின் தோள்வலிக்கு எள்ளுதி போலும்நின் புயத்தை எம்மொடும்.’ 15 15. சுள்ளியில் - மரத்தின் காய்ந்த கிளையில். எம்மொடும் - எம்மொடு கூட இருந்தும். `நின்புயத்தை எள்ளுதி போலும்.’ எள்ளுதி - இகழ்கின்றாய். `இடுக்குஇவண் இயம்புவது இல்லை; ஈண்டுஎனை விடுக்குவை ஆம்எனில், குரங்கை வேர்அறுத்து, ஒடுக்கரு மனிதரை உயிர்உண்டு, உன்பகை முடிக்குவென் யான்;’என முடியக் கூறினான். 16 16. இடுக்குஇவன் - துன்பத்தைப்பற்றி இங்கே. இயம்புவது இல்லை - பேசுவதில் பயன் இல்லை. வச்சிரதத்தன் வார்த்தை போய்இனி மனிதரைக், குரங்கைப் பூமியில் தேயுமின் கைகளால் தின்மின்! என்றுஎமை ஏயினை இருக்குவது அன்றி என்இனி ஆயும்இது? எம்வயின் அயிர்ப்புஉண் டாம்கொலோ?’ 17 17. ஏயினை இருக்குவது அன்றி - ஏவிவிட்டு நீ சும்மா இருப்பதைத் தவிர. இனிஆயும் இது என் - இன்னும் யோசனை செய்துகொண்டிருப்பது ஏன்? துள்முகன் சொற்கள் `திக்கயம் வலிஇல; வேர் மெல்லியர்; முக்கணான் கயிலையும் முரண்இன்று ஆயது; மக்களும் குரங்குமே வலிய வாம்எனின் அக்கட! இராவணற்கு அமைந்த ஆற்றலே!’ 18 18. -. `எரிஉற மடுப்பதும், எதிர்ந்து ளோர்படப் பொருதொழில் யாவையும் புரிந்து போவதும், வருவதும் குரங்கு;நம் வாழ்க்கைஊர்கடந்து, அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்!’ 19 19. நம் வாழ்க்கை ஊர்கடந்து - நாம் வாழும் ஊரைத்தாண்டி. `ஆழி நீந்துதல் இராக்கதர்க்கு அரிதுகொல்?’ `ஒல்வது நினையினும், உறுதி ஓரினும், வெல்வது விரும்பினும், விளைவு வேண்டினும், செல்வதுஅங்கு; அவர்உழைச் சென்று தீர்ந்துஅறக் கொல்வது கருமம்;’என்று உணரக் கூறினான். 20 20. விளைவு - நம் காரியம் நிறைவேறுவதை. அங்கு செல்வது - கடலைத்தாண்டி அங்கே போவதும். தீர்ந்துஅற - அவர்கள் ஒழிந்துபோகும் படி. கொல்வது - கொல்லுவதும். இவர்களை அடுத்துப் பெரும்பக்கன், பிசாசன், பானுகோபன், வேள்விப் பகைஞன், புகைக் கண்ணன் என்பவர்களும் மேற் கூறியவர்களின் கருத்தையே வலியுறுத்தினர். கும்பகருணன் அறிவுரைகள் வெம்புஇகல் அரக்கரை விலக்கி, `வினைதேரா நம்பியர் இருக்க,`என நாயகனை முன்னா, `எம்பிஎன கிற்கில்உரை செய்வல்இதம்’ என்னா கும்பகரு ணப்பெயரி னான்இவை குறித்தான். 21 21. வெம்புஇகல் - வேதனையும் பகைமையும் உடைய. வினைதேரா - செய்யும் காரியத்தை அறியாத. நம்பியர் - பெரியோர். இதம் உரை செய்வல் - நன்மையைச் சொல்லு கின்றேன். `நீஅயன் முதற்குலம் இதற்குஒருவன் நின்றாய்! ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்துஅறிவு அமைந்தாய்! தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய்! ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ?’ 22 22. ஒருவன் நின்றாய் - தலைவனாக இருக்கின்றாய். தீயினை நயப்புறுதல் - நெருப்பை விரும்புவது போன்ற. செய்வினை தெரிந்தாய் - காரியத்தைச் செய்யக் கருதினாய். ஏயின - ஊழ்வினையால் ஏவப்பட்டனவாகி. உறத்தகைய - வருவதற்கு உரியன. இத்துணையவேயோ - இவ்வளவுதானோ. `ஓவியம் அமைந்தநகர் தீஉண உளைந்தாய்! கோவியல் அழிந்ததுஎன, வேறுஒரு குலத்தோன் தேவியை நயந்துசிறை வைத்தசெயல் நன்றோ? பாவியர் உறும்பழி; இதின்பழியும் உண்டோ?’ 23 23. கோஇயல் - அரசியல். பாவியர் - பாவத்தை உடையவர்கள். உறும்பழி - அடையக்கூடிய பழி இதுவாகும். `நன்னகர் அழிந்ததுஎன நாணினை; நயத்தால் உன்உயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் ஒள்நகை தரத்தர, ஒருத்தன்மனை உற்றாள் பொன்அடி தொழத்தொழ, மறுத்தல்,புகழ் போலாம்!’ 24 24. நயத்தால் - விருப்பத்தால். ஒள்நகை தரத்தர - ஒளிபொருந்திய சிரிப்பைக் காட்டக்காட்ட. ஒருத்தன் மனைஉற்றாள் - மற்றொருவன் மனைவியாக அமைந்தவளின். மறுத்தல் - அவள் மறுத்துப் பேசுவதைக் கேட்டிருத்தல். `என்றுஒருவன் இல்உறை தவத்தியை, இரங்காய் வன்தொழிலி னாய்,அறம் துறந்துசிறை வைத்தாய்! அன்றுஒழிவது ஆயின அரக்கர்புகழ் ஐய! புன்தொழிலி னார்இசை பொறுத்தல் புலமைத்தோ!’ 25 25. என்று - என்றைக்கு. இரங்காய் - இரக்கமின்றி. `அரக்கர் புகழ் அன்று ஒழிவது ஆயின’. புன்தொழில் - இழிதொழில். இசைபொறுத்தல் - புகழைத் தாங்க நினைத்தல். `ஆசில்,பர தாரம்அவை அம்சிறை அடைப்பேம்! மாசில்புகழ் காதல்உறு வேம்!வளமை கூரப் பேசுவது மானம்!இடை பேணுவது காமம்; கூசுவது மானுடரை! நன்றுநம கொற்றம்!’ 26 26. ஆசுஇல் - குற்றமில்லாத. பரதாரம் - பிறன்மனைவியை. வளமை கூர - பெருமை மிகும்படி. இடை பேணுவது - இதற்கிடையிலே ஆதரிப்பது. கொற்றம் - வெற்றி. `சிட்டர்செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்; மட்டுஅவிழ் மலர்க்குழலி னாளை,இனி மன்னா விட்டிடுது மேல்எளியம் ஆதும்;அவர் வெல்லப் பட்டிடுது மேல்,அதுவும் நன்று;பழி அன்றால்.’ 27 27. சிட்டர் - பெரியோர்கள்; சிஷ்டர். மட்டு அவிழ் மலர் - தேன் சிந்துகின்ற மலர்களை அணிந்த. எளியம் ஆதும் - இகழ்ச்சிக்குரியவர்கள் ஆவோம். மட்டு - தேன். `மரன்படர் வனத்துஒருவ னே,சிலை வலத்தால் கரன்படை படுத்து,அவனை வென்றுகளை கட்டான்; நிரம்பிடுவது அன்றுஅதுவும், நின்றதுஇனி நம்பால் உரம்படுவ தே;இதனின் மேல்உறுதி உண்டோ?’ 28 28. ஒருவனே - இராமன் ஒருவனே. படுத்து - வீழ்த்தி. களைகட்டான் - களையெடுத்தான் .அதுவும் நிரம்பிடுவது அன்று - அவன் செயலும் முடிந்து போனது அன்று; இன்னும் உண்டு. `நம்பால் இனி நின்றது’ உரம் படுவதே - நமது வலிமையைக் காட்ட வேண்டியது தான். `வென்றிடுவர் மானுடவர் ஏனும்,அவர் தம்மேல் நின்றுஇடை விடாது,நெறி சென்றுஉற நெருக்கித் தின்றிடுதல் செய்கிலம் எனில்,செறுந ரோடும் ஒன்றிடுவர் தேவர்,உலகு ஏழும்உடன் ஒன்றாம். 29 29. `அவர் தம் மேல் சென்று நின்று இடைவிடாது உற நெருக்கித் தின்றிடுதல். உறு நெருக்கி - மிகவும் துன்புறுத்தி. செறுநரோடும் - அப்பகைவரோடும். `ஊறுபடை ஊறுவதன் முன்னம்,ஒரு நாளே ஏறுகடல் ஏறி,நரர் வானரரை எல்லாம் வேறுபெய ராதவகை, வேரொடும் அடங்க நூறுவது வேகருமம்;’ என்பது நுவன்றான். 30 30. ஊறு படை - பெருகிவரும் படைகள். ஊறுவதன் முன்னம் - நமது நகரத்தில்வந்து நிரம்புவதற்கு முனபே. ஏறுகடல் ஏறி - நீர்நிறைந்த கடலைத்தாண்டி. நூறுவதுவே - கொல்லுவதே. இராவணன் பாராட்டுரை `நன்றுஉரைசெய் தாய்குமர! நான்இது நினைந்தேன்; ஒன்றும்இனி ஆய்தல்பழுது; ஒன்னலரை எல்லாம் கொன்றுபெயர் வோம்;நமர் கொடிப்படையை எல்லாம் இன்றெழுக என்;’என இராவணன் இசைத்தான். 31 31. ஒன்றும் இனி ஆய்தல் பழுது - இனி ஒன்றையும் யோசிப்பது குற்றமாகும். ஒன்னலர் - பகைவர். எழுதல் - புறப்படச் செய்தல். இந்திரசித்தன் ஆலோசனை என்றுஅவன் இயம்பியிடும் எல்லையினில் `வல்லே சென்றுபடை யோடு,சிறு மானுடர் சினப்போர் வென்றுபெயர் வாய்அரச! நீகொல்!என வீரம் நன்றுபெரிது!’ என்றுமகன் நக்கு,இவை புகன்றான். 32 32. மானுடர் சினப்போர் - மானிடருடன் சினத்துடன் போர்புரிந்து. மகன் - இந்திரசித்து. நக்கு - நகைத்து. `முற்றும்உள தாம்உலகம் மூன்றும்எதிர் தோன்றிச் செற்றமுத லாரொடு செறுத்தது ஓர் திறத்தும், வெற்றிஉன தாகவிளை யாதுஒழியின், என்னைப் பெற்றும்இலை; யான்நெறி பிறந்தும்இலென்;’ என்றான். 33 33. முற்றும் உளது ஆம். முழுவதும் உள்ளதாகிய. செற்ற முதலாரொடு - சினந்த கடவுளர்களோடு கூடி. செறுத்தது ஓர் திறத்தும் - போர் செய்த ஓர் நிலையிலும். நெறி - முறையாக. `குரங்குபட, மேதினி குறைத்தலை நடப்,போர் அரங்குபட, மானுடர் அலந்துஅலை படப்,பார் இரங்குபடர் சீதைபட, இன்றுஇருவர் நின்றார் சிரம்குவடு எனக்கொணர்தல், காணுதி சினத்தோய்!’ 34 34. குரங்கு பட - குரங்குகள் மாள. குறைத்தலை நடம் - கவந்தங்கள் நடனமாடும். போர் அரங்குபட - போர்க்கள மாகும்படி. பார் இரங்கு படர் - உலகம் இரங்கத்தக்க துன்பத்தை. சிரம் குவடு என - தலைகளை மலைபோல. `யானையிலர்; தேர்,புரவி யாதும்இலர்; ஏவும் தானைஇலர்; நின்றதவம் ஒன்றும்இலர்; தாமோ கூனல்முது கின்சிறு குரங்குகொடு வெல்வார் ஆனவரும் மானுடர்!நம் ஆண்மைஅழகு அன்றோ?’ 35 35. நின்ற தவம் - சிறந்துநின்ற தவம். குரங்குகொடு - குரங்குகளின் துணைகொண்டு. `நீரும்,நில னும்,நெடிய காலும், நிமிர் வானும் பேர்உலகில் யாவும்ஒரு நாள்புடை பெயர்த்தே யாரும்ஒழி யாமை,நரர் வானரரை யெல்லாம் வேரும்ஒழி யாதவகை கொன்றுஅலது மீளேன்’. 36 36. புடைபெயர்த்து - நிலைபெயரும்படி செய்து. யாரும் ஒழியாமை - எவரும் மீதம் இல்லாதபடி. வேரும் ஒழியாத வகை - வேரும் மிச்சமில்லாதபடி. வீடணன் இந்திரசித்தைக் கடிந்துரைத்தல் என்றுஅடி இறைஞ்சினன் எழுந்து;`விடை ஈமோ வன்தொழிலி னாய்!’எனவும், வாள்எயிறு வாயில் தின்றனன் முனிந்து,நனி தீவினையை எல்லாம் வென்றவரின் நன்றுஉணரும் வீடணன் விளம்பும். 37 37. இறைஞ்சினன் எழுந்து - வணங்கி எழுந்து. ஈமோ - ஈந்தருளுக. வாள்எயிறு - கூர்மையான பற்களை. வாயில் தின்றனன் - வாயால் கடித்து. முனிந்து - சினந்து. வென்றவரின் - வென்றவர்களைப்போல. வேறு `நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை போலுமால், உறுபொருள் புகலும் பூட்சியோய்! காலம்,மேல் விளைபொருள், உணரும் கற்புஇலாப் பாலநீ! இனையன பகரல் பாலையோ?’ 38 38. நுணங்கிய அறிவு - நுட்பமான அறிவுரைகளை. நோக்கினை போலும் - ஆராய்ந்தவனைப் போல. மால் உறு பொருள் புகலும் - பெருமையுள்ள விஷயத்தைக் கூறும். பூட்சியோய் - கொள்கையையுடையவனே. கற்புஇலா - கல்வியறிவில்லாத. `கருத்திலான் கண்இலான் ஒருவன், கைக்கொடு திருத்துவான் சித்திரம், அனைய செப்புவாய்! விருத்தர்,மே தகையவர், வினைஞர் மந்திரத்து இருத்தியோ இளமையால் முறைமை எண்ணிலாய்.’ 39 39. இளமையால் முறைமை எண்ணிலாய் - இளமைப் பருவத்தால் இன்னது செய்வது என்ற முறையை அறியாதவனே. கருத்திலான் கண் இலான் ஒருவன் - அறிவும் கண்ணும் இல்லாத ஒருவன். கைக்கொடு - கையினால். `அறம்துறந்து அமரரை வென்ற ஆண்தொழில் திறம்தெரிந் திடின்,அது தானும் செய்தவம் நிறம்திறம் பாவகை இயற்றும் நீதியால்; மறம்துறந் தவர்தரும் வரத்தின் வண்மையால்.’ 40 40. ஆண் தொழில்திறம் - வீரச் செய்கையின் தன்மையை. தெரிந்திடின் - ஆராய்ந்தால். நிறம் திறம்பா வகை - அதன் தன்மை கெடாமல். நீதியால் - நீதியாலும். மறம் துறந்தவர் - தேவர்கள். வன்மையால் - பலத்தாலுமே யாகும். `வினைகளை வென்றுமேல் வீடு கண்டவர் எனைவர்என்று இயம்புகேன்! அவர்தம் ஈகையால் முனைவரும், அமரரும் முன்னும் பின்னரும் அனையவர் திறத்துளார் யாவர் ஆற்றினார்.’ 41 41. அவர் தம் ஈகையால் - அவர் அருளால். `முனைவரும் அமரரும், முன்னும் பின்னரும், வினைகளை வென்று, மேல், வீடு கண்டவர் எனைவர் என்று இயம்புகேன்’ எனைவர் - எத்தனை பேர். அனையவர் திறத்துளார் - அவர்களைச் சேர்ந்தவர்களில். யாவர் ஆற்றினார் - யார்தான் தீமை செய்தவர்கள்? `பிள்ளைமை விளம்பினை பேதை நீ’என ஒள்ளிய புதல்வனை உரப்பி `என்உரை எள்ளலை யாம்எனின், இயம்பல் ஆற்றுவென், தெள்ளிய பொருள்;’என அரசற் செப்பினான். 42 42. பிள்ளைமை - சிறுபிள்ளைத் தன்மையால். தெள்ளிய பொருள் - தெளிவான உண்மைப் பொருளை. இயம்பல் ஆற்று வென் - சொல்லுவேன். அரசன் - அரசனாகிய இராவணனுக்கு. வீடணன் விளக்க உரைகள் `எந்தைநீ! யாயும்நீ! எம்முன் நீ!தவ வந்தனைத் தெய்வம்நீ! மற்றும் முற்றும்நீ! இந்திரப் பெரும்பதம் இழக்கின் றாய்,என, நொந்தெனென் ஆதலின், நுவல்வது ஆயினேன்.’ 43 43. தவ வந்தனை- மிகவும் வணக்கத்துக்குரிய. முற்றும் நீ - எல்லாமும் நீயே. `கற்றுறு மாட்சி,என் கண்,இன்று ஆயினும், உற்றுறு பொருள்தெரிந்து உணர்தல் ஓயினும், சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும், முற்றுறக் கேட்டபின் முனிதி! மொய்ம்பினோய்!’ 44 44. கற்று உறு மாட்சி - கல்வியால் அமைந்த பெருமை. என்கண் - என்னிடம். உற்றுஉறு - இப்பொழுது வந்துள்ள. ஓயினும் - இன்றேனும். சொற்றுஉறு - சொல்லப்படும். `கோநகர் முழுவதும், நினது கொற்றமும், சானகி எனும்பெயர், உலகின் தம்மனை ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது,ஓர் வானரம் சுட்டது,என்று உணர்தல் மாட்சியோ?’ 45 45. தம்மனை ஆனவள் - தாயானவளின் (சீதையின்). அல்லது - என்று உணரவேண்டுமே அல்லாமல். மாட்சியோ - சிறந்த அறிவாகுமோ. எண்பொருட்டு ஒன்றிநின்று எவரும் எண்ணினால் விண்பொருட்டு ஒன்றிய உயர்வும், மீட்சியும் பெண்பொருட்டு; அன்றியும் பிறிதுஉண் டாம்எனின் மண்பொருட்டு; அன்றியும் வரவும் வல்லவோ?’ 46 46. எண்பொருட்டு - உண்மையை எண்ணி அறியும் பொருட்டு. ஒன்றி நின்று - அந்த நினைப்பிலேயே ஈடுபட்டு நின்று. விண்பொருட்டு. வானத்தை அளாவ. மீட்சியும் - அழிவும். `மீனுடை நெடும்கடல் இலங்கை வேந்துஎன்பான் தான்உடை நெடும்தவம், தளர்ந்து சாய்வது,ஓர் மானுட மடந்தையால்; என்னும் வாய்மொழி தேனுடை அலங்கலாய்! இன்று தீர்ந்ததோ?’ 47 47. முன் தான் உடை - முன்பு தான் தவத்தால் பெற்றுள்ள. தீர்ந்ததோ - நிறைவேறியதோ? `ஏறிய நெடுந்தவம் இழைத்த எல்லைநாள், ஆறிய பெருங்குணத்து அறிவன் ஆணையால், கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை; வேறுஇனி அவர்வயின் வென்றி யாவதோ? 48 48. ஏறிய - சிறந்த. இழைத்த எல்ல நாள் - செய்த காலத்தில் அறிவன் - நான்முகன். கொற்றம் - வெற்றிபெற வேண்டும் என்று. கொள்ளலை - வரங்கொள்ளவில்லை. `மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள், நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால் கூலவான் குரங்கினால் குறுகும் கோள்அது; வாலிபால் கண்டனம்; வரம்புஇல் ஆற்றலாய்!’ 49 49. கூல வான் குரங்கினால் - தானியங்களைத் தின்னும் பெரிய குரங்கினால். குறுகும் - அடையும். கோள்அது - வலிமையாகிய அதனை. `தீயிடைக் குளித்தஅத் தெய்வக் கற்பினாள் வாயிடை மொழிந்தசொல் மறுக்க வல்லமோ? `நோய்உனக்கு யான்’என நுவன்று ளாள்,அவள் ஆயவள் சீதை,பண்டு அமுதில் தோன்றினாள்.’ 50 50. தெய்வக் கற்பினான் - தெய்வத் தன்மையுள்ள கற்புடையவளாகிய வேதவதி என்பவள். அவள் சீதை ஆயவள் - அவளே சீதையானவள். அமுதில் - அமுதத்துடன். இராமன் பெருமையை எடுத்துரைத்தல் `சம்பரப் பெயர்உடைத் தானவர்க் கிறைவனைத் தனுவ லத்தால், அம்பரத் தூடுபுக்கு, அமர்இடை தலைதுமித்து, அமரர் உய்ய, உம்பருக்கு இறைவனுக்கு அரசளித்து உதவினான், ஒருவன், நேமி இம்பரில் பணிசெயத், தசரதப் பெயரினான் இசைவ ளர்த்தான்.’ 51 51. தனுவலத்தால் - வில் வலிமையால். அம்பரத்தூடுபுக்கு - வானிலே புகுந்து. தலைதுமித்து - தலையைத் துண்டித்து. நேமி - அவனுடைய அதிகாரச் சக்கரமே. `அனையவன் சிறுவர்,எம் பெரும!உன் பகைஞர்ஆல் அவரை அம்மா இனையர்என்று உணர்தியேல், `இருவரும் ஒருவரும் எதிர்இ லாதார், முனைவரும், அமரரும், முழுதுணர்ந் தவர்களும், முற்றுமற்றும் நினைவரும் தகையர்;’நம் வினையினால் மனிதராய் எளிதின் நின்றார்.’ 52 52. ஒருவரும் எதிர் இலாதார் - ஒருவரும் ஒப்பில்லா தவர்கள். நினைவு அரும் தகையர் - நினைத்தற்கரிய பெருமை யுள்ளவர்கள். நம் வினையினால் - நாம் செய்த வினையினால். (தீவினையால்; நல்வினையால்) கோசிகப் பெயர்உடைக் குலமுனித் தலைவன்,அக் குளிர்ம லர்பேர் ஆசனத் தவனொடு,எவ் வுலகமும், தருவன்,என்று அமையல் உற்றான்; ஈசனில் பெறும்படைக் கலம்,இமைப் பளவின்எவ் வுலகம் யாவும் நாசம்உற் றிடநடப் பனகொடுத்து, அவைபிடித்து உடையர் நம்ப!’ 53 53. ஈசனில் பெறும - ஈசனிடம் பெற்ற. நடப்பன - செல்வன. `எறுழ்வலிப் பொருவில்தோள் அவுணரோடு, அமரர்பண்டு இகல்செய் காலத்து, உறுதிறல் கலுழன்மேல் ஒருவன்நின்று அமர்செய்தான் உடைய வில்லும், தெறுசினத் தவர்கள்முப் புரம்நெருப் புறஉருத்து எய்த அம்பும், குறுமுனிப் பெயரினான், நிறைதவர்க்கு இறைதரக், கொண்டு நின்றான்.’ 54 54. எறுழ்வலி - மிகுந்த வலிமையுள்ள. இகல் செய் - போர் செய்த. உறுதிறல் - மிகுந்த. வலிமையுள்ள. கலுழன் - கருடன். தெறுசினத்தவர்கள் - கொல்லும் சினத்தையுடையவர்களின். உருத்து - சினந்து குறுமுனி - அகத்தியன். `துஞ்சுகின் றிலர்களால் இரவுநண் பகலும்,நின் சொல்ல ஒல்கி, நெஞ்சுநின்று அயரும்இந் நிருதர்;பேர் சனகியாம் நெடிய தாய நஞ்சுதின் றவர்கள்தாம் நண்ணுவார் நகரம்;என்று எண்ணி நம்மை அஞ்சுகின் றிலர்கள்;நம் அருள்அலால் சரண்இலா அமரர் ஐயா!’ 55 55. நின் சொல்ல ஒல்கி - உன்னிடம் சொல்ல அஞ்சிப் பின்வாங்கி. `அமரர் அஞ்சுகின்றிலர்கள்’. `இன்னம்ஒன்று உரைசெய்கேன், இனிதுகேள்! எம்பிரான்! இருவர்ஆய அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார், மன்னுநம் பகைஞராம் வானுளோர்; அவரொடும் மாறு கோடல் கன்மம்அன்று; இதுநமக்கு உறுதிஎன்று உணர்தலும் கருமம்அன்றால்.’ 56 56. மாறுகோடல் - பகைமை கொள்ளுதல். கன்மம் அன்று - செய்யத் தக்க காரியம் அன்று. உறுதி - நன்மை. வேறு `இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச, வசையும் கீழ்மையும் மீக்கொளக், கிளையொடும் மடியாது, அசைவில் கற்பின்அவ் அணங்கைவிட்டு அருளுதி! அதன்மேல் விசையம் இல்;’எனச், சொல்லினன் அறிஞரின் மிக்கான். 57 57. எஞ்ச - அழிய. மீக்கொள - மேலோங்க. மடியாது - மாண்டு போகாமல். விசையம் - வெற்றி. இராவணன் சீற்ற மொழிகள் `இச்சை நல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்! பிச்சர் சொல்லுவ சொல்லினை! என்பெரு விறலைக் கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை; குறித்தது அச்ச மோ!அவர்க்கு அன்பினோ! யாவதோ! ஐயோ?’ 58 58. இச்சை நல்லன - விரும்பத்தக்க நல்லவைகளாகிய. பிச்சர் - பித்தர்கள். கொச்சை - இழிவான. குறித்தது - எண்ணியது. `ஈங்கு மானுடப் புழுக்களுக்கு இலைவரம் என்றாய்; தீங்கு சொல்லினை! திசைகளை உலகொடும் செருக்கால் தாங்கும் யானையைத் தள்ளி,அத் தழல்நிறத்தவனை ஓங்கல் தன்னொடும் எடுக்கமுன் வரம்கொண்டது உண்டோ?’ 59 59. மானுடப்புழுக்களுக்கு இலைவரம் - மானிட உயிர்களைக் கொல்லும் வரம் பெற்றிலை. தழல் நிறத்தவனை - சிவபெருமானை. `மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை, வானோர் சினக்கொ டும்படை செருக்களத்து என்னைஎன் செய்த? எனக்கு நிற்க,மற்று என்னொடுஇங்கு ஒருவயிற்று உதித்த உனக்கு மானிடர் வலியராம் தகைமையும் உளதோ?’ 60 60. மனக் கொடு அன்றியும் - மனத்தினால் நினைக்காமலே. வறியன - வீண் வார்த்தைகளை. `நந்தி சாபத்தின் நமைஅடும் குரங்குஎனின், நம்பால் வந்த சாபங்கள் எனைப்பல, அவைசெய்த வலிஎன்? இந்தி ராதியர், சித்தர்கள், இயக்கர்,நம் இறுதி சிந்தி யாதவர் யார்?அவை நம்மைஎன் செய்த?’ 61 61. நந்தி சாபத்தின் - நந்தியின் சாபம் காரணமாக. அடும் - கொல்லும் எனைப்பல - எத்தனையோ பல. `அரங்கில் ஆடுவாற்கு அன்புபூண்டு உடைவரம் அறியேன், இரங்கி யான்நிற்ப, என்வலி அவன்வயின் எய்த, வரம்கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும்வே றுள்ள குரங்கெ லாம்எனை வெல்லும்என்று எங்ஙனம் கோடி?’ 62 62. உடைவரம் அறியேன் - அவள் பெற்றுள்ள வரத்தை அறிய மாட்டேன். `என் வலி அவள் வயின் எய்த, யான் இரங்கிநிற்ப’ கோடி - கொள்வாய்? `நீல கண்டனும் நேமியும் நேர்நின்று பொரினும் ஏலும் அன்னவர் உடைவலிஅவன்வயின் எய்தும்; சால அன்னது நினைத்து,அவன் எதிர்செலல் தவிர்ந்து வாலி தன்னைஅம் மனிதனும் மறைந்துநின்று எய்தான்.’ 63 63. -. `ஊன வில்இறுத்து, ஓட்டைமா மரத்துள்அம்பு ஓட்டிக் கூனி சூழ்ச்சியால் அரசிழந்து, உயர்வனம் குறுகி, யான்இ ழைத்திட இல்இழந்து, இன்உயிர் சுமக்கும் மானி டன்வலி நீஅலாது ஆர்உளர் மதிப்பார்?’ 64 64. ஊனவில் - ஒடிந்தவில்லை. இறுத்து - முறித்து. ஓட்டை மாமரத்துள் - போரை விழுந்த பெரிய மரத்துள். யான் இழைத்திட - நான் வஞ்சனை செய்ய. இல் - மனைவியை. மீண்டும் வீடணன் விளம்புதல் என்று தன்உரை இழித்து,`நீ உணர்விலி’ என்னா, `நன்று போதிநாம் எழுகெ’னும் அரக்கனை நணுகி, `ஒன்று கேள்இனம் உறுதி’என்று அன்பினன் ஒழியான், துன்று தாரவன், பின்னரும் இனையன சொன்னான். 65 65. போதும் நாம் எழுக - போர் செய்யப் போவோம் நாம், புறப்படுங்கள். எனும் என்று - சொல்லிய. துன்றுதாரவன் - மலர்கள் நிறைந்த மாலையை அணிந்த வீடணன். `தன்னின் முன்னிய பொருள்இலா ஒருதனித் தலைவன், அன்ன மானுடன் ஆகிவந்து அவதரித்து அமைந்தான், சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்; இன்னம் ஏகுதி போலும்;’என்று அடிதொழுது இரந்தான். 66 66. தன்னின் முன்னிய - தன்னைவிட முதன்மையான. `தலைவன் உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால், சொன்ன நம்பொருட்டு, அன்ன மானுடனாகி வந்து அவதரித்து அமைந்தான்.’ இராவணன் மறுமொழி அச்சொல் கேட்டுஅவன் `ஆழியான் என்றனை ஆயின் கொச்சைத் துன்மதி! எத்தனை போர்இடைக் குறைந்தான்? இச்சைக்கு ஏற்றன யான்செய்த இத்தனை காலம் முச்சற் றான்கொல்,அம் முழுமுத லோன்’என முனிந்தான். 67 67. ஆழியான் - திருமால். கொச்சைத் துன்மதி - இழிவான துர்ப்புத்தியை யுடையவனே. குறைந்தான் - தோற்றான். முச்சு அற்றான் கொல் - மூச்சில்லாமல் இருந்தானோ. முச்சு - மூச்சு. `இந்தி ரன்தனை இரும்சிறை இட்டநாள், இமையோர் தந்தி கோடுஇறத் தகர்த்தநாள், தன்னையான் முன்னம் வந்த போர்தொறும் துரந்தநாள், வானவர் உலகைச் சிந்த வென்றநாள், சிறியன்கொல்? நீசொன்ன தேவன். 68 68. தந்திகோடு - திக்கு யானைகளின் தந்தங்கள். இற - ஒடியும்படி தகர்த்த நாள் - ஒடித்த நாளில். துரந்த நாள் - துரத்திய நாளில். சிந்த - நிiகுலையும்படி. `வெஞ்சி னம்தரு போரில்என் னுடன்எழ வேண்டா இஞ்சி மாநகர் இடம்உடைத்து, ஈண்டுஇனிது இருத்தி; அஞ்சல்! அஞ்சல்!’என்று அயல்இருந் தவர்முகம் நோக்கி, நஞ்சின் வெய்யவன், கையெறிந்து உரும்என நக்கான். 69 69. இஞ்சி - மதில் சூழ்ந்த. வெய்யவன் - கைகொடி யோனாகிய இராவணன். கையெறிந்து - கொட்டி. பின்னும் வீடணன் `ஐயநின் தரம்அலாப் பெரியோர் முன்னை நாள்இவன் முனிந்திடக் கிளையொடும் முடிந்தார் இன்னம் உண்டு;யான் இயம்புவது இரணியன் என்பான் தன்னை உள்ளவா கேட்டி;’என்று உரைசெயச் சமைந்தான். 70 70. நின் தரம் அலா - உன்னைப் போன்றவர் அல்லாத. பெரியோர் - உன்னைவிடத்தவ வலிமை படைத்தோர். சமைந்தான் - தொடங்கினான். 3. இரணியன் வதைப் படலம் இரணியன் பெருமை `எற்றை நாளினும் உளன்எனும் இறைவனும், அயனும், கற்றை அம்சடைக் கடவுளும் காத்து,அளித்து, அழிக்கும் ஒற்றை அண்டத்தின் அளவினோ! அகன்புறத்து உலவா மற்றை அண்டமும் தன்பெய ரேசொல வாழ்ந்தான். 1 இரணியன் வதைப் படலம்: இரணியனைத் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்று வீழ்த்தியதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. இறைவனும் - திருமாலும். கடவுள் - சிவபெருமான். அளவினோ - அளவுமட்டுமா? `தாம ரைத்தடங் கண்ணினான் பேர்அவை தவிர, நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவிலத், தூம வெம்கனல், அந்தணர் முதலினர் சொரிந்த ஓம வேள்வியின், இமையவர் பேறெலாம் உண்ணும். 2 2. தாமரைத் தடம் கண்ணினான் - தாமரை போன்ற பெரிய கண்களையுடைய திருமால். தடம் தாமரைக் கண்ணினான் - குளத்திலே மலர்ந்த தாமரை போன்ற கண்களையுடையவன்; என்றும் உரைக்கலாம். பேர் அவைதவிர - பேர்களாகிய அவைகளைத் தவிர. தன்னதே நாமம் - தன்னுடைய பெயரையே. தூமம் - புகை. பேறு எலாம் - அவிர்ப்பாகங்களை எல்லாம். `காவல், காட்டுதல், துடைத்தல்,என்று இத்தொழில் கடவ மூவ ரும்அவை முடிக்கிலர்; பிடிக்கிலர் முறைமை; ஏவர் மற்றவர்; யோகியர் உறுபதம் இழந்தார்; தேவ ரும்அவன் தாள்அலால் அருச்சனை செய்யார். 3 3. காட்டுதல் - படைத்தல். துடைத்தல் - அழித்தல். இத் தொழில் கடவ - இத் தொழிலைச் செய்வதற் உரிய. `முறைமை பிடிக்கிலார்! உறுபதம் - தாங்கள் அடையும் பதத்தை. `மருக்கொள் தாமரை நான்முகன், ஐம்முகன் முதலோர் குருக்க ளோடு,கற்று ஓதுவது அவன்பெரும் கொற்றம், சுருக்கில் நான்மறை தொன்றுதொட்டு உயிர்தொறும் தோன்றாது இருக்கும் தெய்வமும் `இரணிய னேநம’ என்னும். 4 4. மருக்கொள் - வாசனை பொருந்திய. ஐம்முகன் - சிவபெருமான். உரை தொறும் - சொற்கள் தோறும். தோன்றாது இருக்கும் - மறைந்திருக்கும். `பெண்ணில், பேர்எழில் ஆணினில், அலியினில், பிறிதும் உள்நிற் கும்உயிர் உள்ளத்தில், இல்லத்தில், உலவான்; கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான்; மண்ணில் சாகிலன், வானினும் சாகிலன், வரத்தால். 5 5. உலவான் - அழிய மாட்டான். யாவினும் - எவற்றாலும். கழியான் – ஒழிய மாட்டான். `பூதம் ஐந்தினும் பொருந்திய உருவினால் புரளான்; வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்; தாதை தான்வந்து தனிக்கொலை சூழினும் சாகான்; ஈதுஅ வன்நிலை; எவ்உல கம்கட்கும் இறைவன். 6 6. பொருந்திய - அமைந்த. புரளான் - இறந்து படமாட்டான். தாதை தான் வந்து - பிரமனே தோன்றி. பிரகலாதன் சிறப்பு `ஆய வன்தனக்கு அருமகன்; அறிஞரின் அறிஞன்; தூயர் என்பவர் யாரினும், மறையினும் தூயன்; நாய கன்;தனி ஞானி;நல் அறத்துக்கு நாதன்; தாயின் மன்உயிர்க்கு அன்பினன்; உளன்ஒரு தக்கோன். 7 7. நாயகன் - தலைவன். தனி ஞானி - ஒப்பற்ற அறிவன். தாயின் - தாயைப் போல. மன் உயிர்க்கு - நிலைத்த உயிர்களிடம். தக்கோன் - சிறந்தவன்; பிரகலாதன். குருவும் மாணவனும் `ஓதப் புக்கபின், `உந்தைபேர் உரை’என லோடும், போதத் தன்செவித் தொளைஇரு கைகளால் பொத்தி, `மூதக் கோய்!இது நற்றவம் அன்று’என மொழியா. வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான். 8 8. ஓதப்புக்க பின் - சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய பின்; ஆசிரியன். போத - நன்றாக. நல்தவம் அன்று - நல்ல செயல் அன்று. மொழியா - சொல்லி. `ஓம்ந மோநாராய ணாய’என்று உரைத்து,உளம் உருகித், தான்அ மைந்துஇரு தடக்கையும் தலைமிசைத் தாங்கிப், பூநி றக்கண்கள் புனல்உக, மயிர்ப்புறம் பொடிப்ப, ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்க. 9 9. அந்தணன் நடுங்க... தான் அமைந்து.. இருந்தவன்! தான் அமைந்து - தான் அடங்கி. பூநிறக்கண்கள் - தாமரை மலர் போன்ற கண்கள். புனல் உக - நீர்சிந்த. `கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும்; கெடுவாய் படுத்துஒழிந்தனை பாவி;எத் தேவரும் பகர்தற்கு அடுத்தது அன்றியே, அயல்ஒன்று பகர,நின் அறிவில் எடுத்தது என்இது? என்செய எண்ணினை?’ என்றான். 10 10. கொடுவாய் - தீமையிலே. படுத்து ஒழிந்தனை- தள்ளிவிட்டனை. அத்தேவரும் பகர்தற்கு - அத்தேவர்களாலும் சொல்லுவதற்கு. அடுத்தது அன்றியே - தகுதியற்றதாகிய. அயல் ஒன்று பகர - வேறு ஒன்றைச் சொல்ல. `என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; இனைய உன்னை உய்வித்து,இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து, முன்னை வேதத்தின் முதற்பெயர் மொழிவது மொழிந்தேன்; என்னை குற்றம்நான் இயம்பியது, இயம்புதி?’ என்றான். 11 11. முன்னை வேதத்தின் - பழமையான வேதத்திலே. முதல் பெயர் மொழிவது - முதன்மையான பெயராகக் கூறப்படு வதையே. `முந்தை வானவர் யாவர்க்கும் முதல்வற்கும் முதல்வன் உந்தை; மற்றவன் திருப்பெயர் உரைசெயற்கு உரிய; அந்த ணாளனேன் என்னினும் அறிதியோ ஐயோ!; எந்தை இப்பெயர் உரைத்துஎனைக் கெடுத்திடல்;’ என்றான். 12 12. -. `வேத பாரகன் அவ்வுரை விளம்பலும், விமலன் `ஆதி நாயகன் பெயர்அன்றி யான்பிறிது அறியேன்; ஓத வேண்டுவது இல்லை;என் உணர்வினுக்கு ஒன்றும் போதி யாததும் இல்லை;என்று இவைஇவை புகன்றான். 13 13. வேதபாரன் - வேதங்களைப்பாராயணம் செய்தவன்; வேதியன். என் உணர்வினுக்கு - என் அறிவுக்கு. போதியாததும் ஒன்றும் இல்லை - சொல்லித்தராதது வேறு ஒன்றுமேயில்லை. `ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை; அறிந்தோர் ஓரச் சொல்லுவது எப்பொருள்? உபநிட தங்கள் தீரச் சொல்லுவ; தேவரும் முனிவரும் செப்பும் பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும்ஒன்று உளதோ?’ 14 14. ஓர - உணரும் படி. தீரச் சொல்லுவ - முடிவாகச் சொல்லுவனவாகிய. `எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த தனக்கும், வேறுஉள சராசரம் அனைத்திற்கும் தலைவன், மனக்கு வந்தனன்; வந்தன யாவையும்; மறையோன் உனக்கும் இன்னதின் நல்லதுஒன்று இல்’என உரைத்தான். 15 15. மனக்கு வந்தனன் - மனத்திலே தோன்றினான். யாவையும் வந்தன - எல்லா அறிவும் என்னிடம் வந்தன. அந்தணன் இச்செய்தியை இரணியனிடம் ஓடி உரைத்தான். அவன் மைந்தனை அழைத்து, “அந்தணன் சொல்லுக்கு எதிராக நீ கூறியது யாது?” என்றான். அதற்குப் பிரகலாதன் உரைத்ததாவது. `காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால் சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன் நாமம்; அன்னது கேள்;`நமோ நாராய ணாய.’ 16 16. காமம் யாவையும் - அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும். காமம் - இன்பம். அப்பதம் - அந்நிலைகளை. சேம வீடுற - அழியாத வீட்டை அடையும்படி. வேள்வியின் உறுபதம் - யாகத்தால் கிடைக்கும் பதவிகளிலே. `தோற்றம் என்னும்அத் தொல்வினைத் தொடுகடல் சுழிநின்று ஏற்றும் நன்கலன்; அரும்கலன்; யாவர்க்கும் இனிய மாற்றம்; மங்கலம்; மாதவர் வேதத்தின் வரம்பின் தேற்றம்; மெய்ப்பொருள்; தெரிந்தமற்று இதன்இலை சிறந்த.’ 17 17. தோற்றம் - பிறப்பு. தொல்வினை -பழவினையாகிய .தொடுகடல் சுழி நின்றும் - ஆழமான கடற் சுழலிலிருந்தும். நன்கலன் - நல்ல மரக்கலம். அரும்கலன் - பூணத்தக்க சிறந்த அணிகலன். மாற்றம் - மொழி. தேற்றம் - தெளிந்த பொருள். மற்று இதன் சிறந்த தெரிந்த இலை - வேறு இதை விடச் சிறந்தனவென்று காண்பவை இல்லை. இரணியன் சினந்துரைத்தல் `இற்றை நாள்முதல் யான்உள நாள்வரை, இப்பேர் சொற்ற நாவையும், கருதிய மனத்தையும் சுடும்,என் ஒற்றை ஆணை;மற்று யார்உனக்கு இப்பெயர் உரைத்தார்? கற்றது ஆரொடு? சொல்லுதி! விரைந்து’எனக் கனன்றான். 18 18. என் ஒற்றை ஆணை - எனது ஒப்பற்ற உத்தரவு. ஆரொடு - யாரிடம்? `பேதைப் பிள்ளைநீ பிழைத்தது பொறுத்தனென்; பெயர்த்தும் ஏதில் வார்த்தைகள் இனையன விளம்பலை; முனிவன் யாது சொல்லினன் அவையவை இதம்என எண்ணி `ஓது போ’என உரைத்தனன் உலகெலாம் உயர்ந்தோன். 19 19. பிழைத்தது - தவறு செய்ததை. ஏதுஇல் - பயனற்ற. ஓது போ - ஒதுக உன் தந்தையின் பெயரை. பிரகலாதன் அறிவுறுத்தல் வேறு `சித்தென அருமறைச் சிரத்தில் தேறிய தத்துவம் அவன்;அது தம்மைத் தாம்உணர் வித்தகர் அறிகுவர்; வேறு வேறுஉணர் பித்தரும் உளர்சிலர்; வீடு பெற்றிலார்’. 20 20. சித்து என - அறிவின் உருவம் என்று. அருமறைச் சிரத்தில் - அரிய வேதாந்தத்தால். தேறிய - தெளிந்த. தத்துவம் - உண்மை. அது - அதனை. `கண்ணினும் கரந்துளன்; கண்டு காட்டுவார் உள்நிறைந் திடும்உணர் வாகி உண்மையால் மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் எண்ணினும் நெடியவன்; ஒருவன்; எண்இலான்.’ 21 21. கரந்துளன் - மறைந்திருப்பான். கண்டு காட்டுவார் - அறிந்து எடுத்துரைப்பவர்களின். உள் நிறைந்திடும் - உள்ளத்தில் நிறைகின்ற. எண் இலான் - எண்ணிற்கு அடங்காதவன். `காமமும் வெகுளியும் முதல கண்ணிய தீமையும், வன்மையும், தீர்க்கும் செய்கையான்; நாமமும், அவன்பிற நலிகொ டாநெடும் சேமமும், பிறர்களால் செப்பற் பாலவோ?’ 22 22. முதல கண்ணிய - முதலியனவாக எண்ணப்பட்ட. அவன் - அவனுடைய. பிற நலி கொடா - பிற உயிர்களுக்குத் துன்பந்தராமல் பாதுகாக்கும். நெடும் சேமமும் - பெரிய நன்மையும். `காலமும், கருவியும், இடனும் ஆய்க்,கடைப் பால்அமை பயனும்ஆய்ப், பயன்துய்ப் பானும்ஆய்ச், சீலமும், அவைதரும் திருவும் ஆய்உளன்; ஆலமும் வித்தும்ஒத்து அடங்கும் ஆண்மையான்.’ 23 23. கடைப்பால் அமை - இறுதியிலே அமைந்த. சீலமும் - ஒழுக்கமும். ஆலமும் வித்தும் ஒத்து - ஆலமரத்தையும் அதன் விதையையும்போல. `ஓம்எனும் ஓர்எழுத்து அதனின் உள்உயிர் ஆம்;அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான்; தாமமூ வுலகமும் தழுவிச் சார்தலால், தூமமும், கனலும்போல், தொடர்ந்த தோற்றத்தான்.’ 24 24. தாம மூவுலகமும் - பெரிய இடமாகிய மூன்றுலகங் களிலும். தழுவி - பரந்து. தூமம் - புகை. கனல் - நெருப்பு. `காலையில் நறுமலர், ஒன்றக் கட்டிய மாலையின் மலர்புரை, சமய வாதியர், சூலையின் திருக்குஅலால், சொல்லு வோர்க்கெலாம் வேலையும் திரையும்போல் வேறு பாடுஇலான்.’ 25 25. மலர் புரை - மலர்களைப்போல ஒன்றுபட்ட. சமயவாதியர் - மதங்களைப்பற்றி வாதிப்பவர்கள். குலையின் திருக்கு அலால் - மனநோயின் வேறு பாட்டால் பேதம் காணப்படுமே அல்லாமல். சொல்லுவோர்க்கு எலாம் - உண்மையுணர்ந்து உரைப்போர்க்கெல்லாம். `இன்னதோர் தன்மையன் இகழ்வுற்று, எய்திய நன்னெடும் செல்வமும், நாளும் நாம்அற மன்உயிர் இழத்தி,என்று இறைஞ்சி வாழ்த்தினேன் சொன்னவன் நாமம்;’என்று உணரச் சொல்லினான். 26 26. இன்னதோர் தன்மையன் - இத்தகைய ஒப்பற்ற தன்மையுள்ளவனை. நாளும் - ஆயுளும். நாம்அற - பெயரே இல்லாமல் அழிய. பிரகலாதனைக்கொல்ல முயலல் வேறு `வேறும்என்னொடு தரும்பகை பிறிதுஇனி வேண்டலென்;வினையத்தால் ஊறி என்னுளே உதித்தது; குறிப்பினி உணர்குவது உளதுஅன்றால்; ஈறுஇல் என்பெரும் பகைஞனுக்கு அன்புசால் அடியென்யான் என்கின்றான்; கோறிர்!’ என்றனன்; என்றலும், பற்றினர் கூற்றினும் கொலைவல்லார். 27 27. வேறும் - வேறு எதுவும். என்னொடு தரும்பகை - எனக்குச் செய்யும் பகைமை. வினையத்தால் - இவன் செயலால். என்உளே - என்உள்ளத்திலே. உதித்தது - பிறந்தது. குறிப்பு - எண்ணத்தை. ஈறுஇலன் - முடிவில்லாதவனாகிய. கோறிர் - கொல்லுங்கள். தாயின் மன்உயிர்க்கு அன்பினன் தன்னை,அத் தவம்எனும் தகவுஇல்லோர். ஏஎ னும்துணை மாத்திரத்து எய்தினர்; எய்தன, எறிதோறும் தூய வன்தனைத் துணைஎன உடையஅவ் ஒருவனைத், துன்னாதார் வாயின் வைதன ஒத்தன, அத்துணை மழுவொடு கொலைவாளும். 28 28. தகவு இல்லோர் - இழிந்தவர்கள். எய்தன - அவர்கள் வீசி எறிந்த படைகள். துன்னாதார் - பகைவர்கள். வாயின் வைதன - வாயினால் வைத சொற்களை. இதை இரணியனுக்கு அறிவித்தனர். அதன்பின் அவன் கட்டளைப்படி, நெருப்பிலே தள்ளினர்; எட்டு நாகங்களையும் விட்டுக் கடிக்கச் செய்தனர்; யானையால் நசுக்க முயன்றனர்; ஒன்றாலும் பிரகலாதன் இறந்திலன். கல்லுடன் பிணைத்துக் கடலில் போட்டனர். மோதுற்று ஆர்திரை வேலையின் மூழ்கான், மீதுற்று ஆர்சிலை மீதுகி, டந்தான்; ஆதிப் பண்ணவன் ஆயிரம் நாமம் ஓதுற் றான்,மறை ஒல்லை உணர்ந்தான். 29 29. மோதுற்று ஆர்திரை - மோதி ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய. மீதுற்று ஆர் சிலை மீது - மேலே வந்து மிதக்கின்ற மலையின்மேல். பண்ணவன் - பெருமையுள்ளவன். தலையில் கொண்ட தடக்கையி னான்,தன் நிலையில் திரியான், மனத்தின் நினைந்தான்; சிலையில், தண்புன லில்,சினை ஆலின் இலையில், பிள்ளை எனப்பொலி கின்றான். 30 30. தன் நிலையில் திரியான் - தன் நிலையிலிருந்து மாறுபடாமல். சிலையில் - கல்லின்மேல். சினைஆலின் இலையில் - கிளையிலே தோன்றிய ஆல் இலையில். பிள்ளை - கிடக்கின்ற பிள்ளையைப்போல. பிரகலாதன் இறவாததை அறிந்த இரணியன் பெருங்கோபம் `ஊனோடு, உயிர்,வே றுபடா உபாயம், தானே உடையன் தனிமா யையினால்; யானே உயிர்உண் பல்’எனக் கனலா. வானே ழும்,நடுங் கிட,வந் தனன்;ஆல் 31 31. ஊனோடு உயிர் வேறுபடா - உடம்பிலிருந்து உயிர் பிரிந்து போகாத. உபாயம் - தந்திரம். `தனி மாயையினால் ஊனோடு உயிர் வேறுபடா உபாயம் தானே உடையன்’. கனலா - கோபித்து. வான்ஏழும் - வானுலகம் ஏழும். வந்தா னைவணங் கி,`என்மன் உயிர்தான் எந்தாய், கொளஎண் ணினையேல், இதுதான் உம்தா ரியதுஅன்று; உலகுயா வும்உடன் தந்தார் கொளநின் றதுதான்.’ எனலும். 32 32. உம் தாரியது அன்று - உமது வசப்பட்டது அன்று. தந்தார் கொள - தந்த கடவுளே கொள்ளும்படி. வேறு `ஏவரே உலகம் தந்தார்? என்பெயர் ஏத்தி வாழும் மூவரே? அல்லர் ஆகில் முனிவரே? முழுதும் தோற்ற தேவரே? பிறரே? யாரே? செப்புதி! தெரிய;’ என்றான் கோவம்மூண்டு எழுந்தும் கொல்லான், காட்டுமேல் காட்சி கொள்வான். 33 33. காட்டுமேல் - காட்டுவானாயின். காட்சி கொள்வான் - காணுதற்கு எண்ணங்கொண்டவன். இறைவன் இன்னான் என்றல் `உலகுதந் தானும், பல்வேறு உயிர்கள்தந் தானும், உள்உற்று அலைவுஇலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின் றானும், மலரினில் மணமும், எள்ளில் எண்ணெயும், போல எங்கும் அலகில்பல் பொருளும் பற்றி, முற்றிய அரிகாண்! அத்தா.’ 34 34. உள் உற்று - உள்ளே அமைந்து. அத்தா - அப்பனே. `மூன்றுஅவன் குணங்கள்; செய்கை மூன்று;அவன் உருவம் மூன்று; மூன்றுகண் சுடர்கள் சோதி மூன்று;தன் உலகம் மூன்று; தோன்றலும், இடையும், ஈறும், தொடங்கிய பொருள்கட் கெல்லாம் சான்றுஅவன்; இதுவே வேத முடிவு;இது சரதம்’ என்றான். 35 35. சோதிச் சுடர்கள் மூன்று - ஒளிபொருந்திய கதிர், மதி, தீ என்னும் மூன்று சுடர்களும், மூன்று கண் - அவனுடைய மூன்று கண்கள், உலகம் மூன்றுதன் - உலகம் மூன்றும் அவனுடையவை. இரணியன் கேள்வி என்றலும், அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்; `ஒன்றல்இல் பொருள்கள் எல்லாம் ஒருவன்புக்கு உறைவன் என்றாய்; நன்று!அது கண்டு, பின்னர் நல்லவா புரிதும்; தூணில் நின்றுஉளது என்னில், கள்வ! நிரப்புதி நிலைமை!’ என்றான். 36 36. ஒன்றல்இல் - ஒன்றோடு ஒன்று பொருத்தமில்லாத. பொருள்கள் எல்லாம் - பொருள்களில் எல்லாம். நல்லஆ - தகுந்தவாறு. நிலையை நிரப்புதி - உனது நிலைமையை மெய்ப்பித்துக் காட்டுக. இறைவன் எங்கும் உள்ளான் `சாணினும் உளன்ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்;மா மேருக் குன்றினும் உளன்;இந் நின்ற தூணினும் உளன்;நீ சொன்ன சொல்லினும் உளன்;இத் தன்மை காணுதி விரைவின்;’ என்றான்;`நன்று’எனக் கனகன் நக்கான். 37 37. ஓர்தன்மை - ஒரு தன்மையாக. சத கூறு இட்ட - நூறு பாகமாகப் பிரித்த. கோணினும் - பிரிவினும். கனகன் - இரணியன். `உம்பர்க்கும், உனக்கும் ஒத்து,இவ் உலகெங்கும் பரந்து ளானைக், கம்பத்தின் வழியே காணக் காட்டுதி! காட்டி டாயேல், கும்பத்தின் கரியைக் கோள்மாக் கொன்றென, நின்னைக் கொன்று,உன் செம்புஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்,’ என்றான். 38 38. ஒத்து - உதவி செய்பவனாகி. கம்பத்தின் வழியே - தூணிடத்தில். கும்பத்தின் - மத்தகத்தையுடைய. கோள்மா - வலிமையுள்ள சிங்கம். செம்பு ஒத்த - செம்பின் நிறத்தைப் போன்ற. `என்உயிர் நின்னால் கோறற்கு எளியதுஒன்று அன்று; யான்முன் சொன்னவன், தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றான் ஆயின்’ என்உயிர் யானே மாய்ப்பல்; பின்னும்வாழ்வ உகப்பன் என்னில், அன்னவற்கு அடியேன் அல்லேன்;’ என்றனன்; அறிவின் மிக்கான். 39 39. கோறற்கு - கொல்லுவதற்கு. வாழ்வு உகப்பன் - உயிர் வாழ்வதை விரும்புவேன். என்னில் - ஆயின். இரணியன் தூணை அறைதல் நசைதிறந்து இலங்கப் பொங்கி, `நன்று!நன்று’ என்ன நக்கு விசைபிறந்து உருமு வீழ்ந்தது என்ன,ஓர் தூணின், வென்றி இசைதிறந்து அமர்ந்த கையால் எற்றினான்; எற்ற லோடும், திசைதிறந்து, அண்டம் கீறச் சிரித்தது செங்கண் சீயம். 40 40. நசை - தன் விருப்பம். திறந்து இலங்க - வெளிப்பட்டுத் தோன்ற. பொங்கி - சினம் மிகுந்து. விசை பிறந்து - வேகத்துடன். உருமு - இடி. வென்றி இசை திறந்து - வென்றியாகிய புகழ் வெளிப் பட்டு. அமர்ந்த - இருந்த. எற்றினான் - அடித்தான். திசைதிறந்து - திசைகள் பிளந்து. அண்டம் கீறி - உலகைக் கிழித்து. பிரகலாதன் மகிழ்ச்சி நாடிநான் தருவென் என்ற நல்அறி வாளன், நாளும் தேடிநான் முகனும் காணாச் சேயவன் சிரித்த லோடும், ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங்கை சூடினான்; தொழுதான்; ஓடி உலகெலாம் துகைத்தான் துள்ளி. 41 41. அல்அறிவாளன் - பிரகலாதன். சேயவன் - தொலைவில் உள்ளவன். அரற்றினான் - கூச்சலிட்டான். சிரத்தில் - தலையில். துள்ளி துகைத்தான் - துள்ளி மிதித்தான். இரணியன் சின மொழி `ஆரடா சிரித்தாய்! சொன்ன அரிகோலோ! அஞ்சிப் புக்க நீரடா! போதாது என்றுநெடும்தறி நேடி னாயோ! போரடா பொருதி ஆயின் புறப்படு! புறப்படு!’என்றான். பேர்அடா நின்ற தாளோடு, உலகெலாம் பெயரப் போவான். 42 42. நீர் - கடல். நெடும் தறி - நீண்ட தூணை. பேர்அடா நின்ற - எங்கும் பெயர் பொருந்திநின்ற. தாளோடு - வலிமையுடன். உலகுஎலாம் பெயர - உலக முழுவதும் அதிரும்படி. போவான் - நடக்கின்றவனாகிய இரணியன். நரசிங்கமூர்த்தியின் தோற்றம் பிளந்தது தூணும், ஆங்கே பிறந்தது சீயம், பின்னை வளர்ந்தது திசைகள் எட்டும்; பகிரண்ட முதல மற்றும் அளந்தது;அப் புறத்துச் செய்கை ஆர்அறிந்து அறைய கிற்பார்? கிளர்ந்தது; ககன, முட்டை, கிழிந்தது கீழும் மேலும். 43 43. ககன முட்டை கிளர்ந்தது கீழும் மேலும் கிழிந்தது - வானத்தும் உலகத்தும் பரந்ததனால் கீழுலகமும் மேல் உலகமும் பிளந்தது. பேர்உடை அவுணர் தம்மைப் பிறைஎயிற்று அடக்கும்; பேரா, பார்இடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி மேருவில் புடைக்கும்; மாள விரல்களால் பிசையும்;வேலை நீரிடைக் குமிழி ஊட்டும் நெருப்பிடைச் சுரிக்க நீட்டும். 44 44. பேர்உடை - பெரிய உருவத்தையுடைய, பெரிய வலிமையுள்ள. எயிற்று - பற்களிடையிலே. பேரா - மீண்டு. பகிர் அண்டம் - உலகத்துக்கு வெளிப்புறம். சுரிக்க - கருகிப்போகும்படி. யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர்இ ராமை ஊனொடும் தின்னும்; பின்னை ஒலிதிரைப் பரவை ஏழும் மீனொடும் குடிக்கும்; மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில்; தான்ஒடுங் காதுஎன்று அஞ்சித் தருமமும் சலித்தது அம்மா. 45 45. தான் ஒடுங்காது என்று - இதன் ஆத்திரந்தான் அடங்காது எ ன்ற சலித்தது - சோர்வடைந்தது. கனகனும், அவனில் வந்த, வானவர் களைகண் ஆன அனகனும் ஒழியப், பல்வேறு அவுணர்ஆ னவரை எல்லாம் நினைவதன் முன்னம் கொன்று நின்றதுஅந் நெடும்கண் சீயம்; வனைகழல் அவனும் மற்றுஅம் மடங்கலின் வரவு நோக்கி. 46 46. கனகனும் - இரணியனும். அனகனும் - பிரகலாதனும். ஒழிய - தவிர. வனைகழல் அவனும் - இரணியனும். சீயம்; மடங்கல் - சிங்கம். இரணியன் எதிர்ப்பு வயிரவாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும் வட்டச் செயிர்அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய, அயிர்படர் வேலை ஏழும், மலைகளும் அஞ்ச ஆர்த்து,அங்கு உயிர்உடை மேரு என்ன வாய்மடித்து, உருத்து நின்றான். 47 47. வானகம் மறைக்கும் - வானத்தை மறைக்கும். செயிர் அறு கிடுகும் - குற்றமற்ற கேடயத்தையும். அயிர் படர் - நுண்ணிய மணல் நிறைந்த. வணங்கினால் வாழ்வாய் நின்றவன் தன்னை நோக்கி, `நிலைஇது கண்டு நீயும் ஒன்றும்உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே; வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி! வணங்க வே,உன் புன்தொழில் பொறுக்கும்; என்றான், உலகெலாம் புகழ நின்றான். 48 48. உலகு எலாம் புகழ நின்றான் - பிரகலாதன். நின்றவன் தன்னை நோக்கி - இரணியனைப் பார்த்து. அரியையும் கொன்று உன்னையும் கொல்வேன் கேள்இது! `நீயும் காணக் கிளர்ந்த,கோ ளரியின் கேழ்இல் தோளொடு, தாளும் நீக்கி, நின்னையும் துணித்துப், பின்என் வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ?’ என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான். 49 49. நீயும் காணக் கிளர்ந்த - நீயும் நானும் பார்க்கும்படி எழுந்த. கேழ்இல் - ஒப்பில்லாத. துணித்து - துண்டித்து. இரணியன் வதை ஆயவன் தன்னை, மாயன், அந்தியின், அவன்பொன் கோயில் வாயிலின், மணிக்க வான்மேல், வயிரவாள் உகிரின் வாயின், மீயெழு குருதி பொங்க, வெயில்விரி வயிர மார்பு தீஎழப் பிளந்து நீக்கித், தேவர்தம் இடுக்கண் தீர்த்தான். 50 50. அந்தியின் - அந்தி நேரத்திலே. மணிக் கவான் மேல் - அழகிய துடையின்மேல் வைத்துக்கொண்டு. வயிர வாள் உகிரின் வாயின் - வயிர வாள்போன்ற நகத்தின் முனையினால். மீஎழு - மேலே எழுகின்ற. தேவர்கள் நடுக்கம் நோக்கினார் நோக்கி னார்முன், நோக்குறு முகமும், கையும், ஆக்கையும், தாளும் ஆகி, எங்கணும் தானே ஆகி, வாக்கினால், மனத்தி னால்,மற்று அறிவினால், அளக்க வாரா மேக்குஉயர் சீயம் தன்னைக், கண்டனர் வெருவு கின்றார். 51 51. நோக்கினார் நோக்கினார்முன் - பார்க்கின்றவர்கள் கண்முன்பெல்லாம். நோக்குறு முகமும் - பயங்கரமான பார்வையையுடைய முகமும். அளக்க வாரா - அளந்து காண்பதில் அடங்காத. மேக்குஉயர் - மேலே உயர்ந்த. சீயம் தன்னை- சிங்கத்தை. சினம் தணிந்து அருளுதல் வேறு `எஞ்சும் உலகுஅனைத்தும் இப்பொழுதே என்றென்று நெஞ்சு நடுங்கும் நெடும்தே வரைநோக்கி, `அஞ்சன்மின்!’ என்னா அருள்சுரந்த நோக்கினால், கஞ்ச மலர்பழிக்கும் கைஅபயம் காட்டினான். 52 52. நெடும் தேவரை நோக்கி - பெரிய தேவர்களைப் பார்த்து. கஞ்ச மலர் - தாமரை மலரை. கைஅபயம் - கையால் அபயத்தை. இலக்குமியைக் கண்டு காதல் கூர்தல் பூவில் திருவை, அழகின் புனைகலத்தை, யாவர்க்கும் செல்வத்தை, வீடென்னும் இன்பத்தை, ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளைத், தேவர்க்கும் தம்மோயை, ஏவினார் பால்செல்ல. 53 53. தேவர்க்கும் தம்மோயை - தேவர்களுக்கெல்லாம் தாயை. பால் செல்ல ஏவினார் - நரசிம்மமூர்த்தியின் பக்கத்தில் செல்லும்படி அனுப்பினார்கள். செந்தா மரைப்பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை, நறுந்தாழ் இளம்கொழுந்தை, முந்தா உலகும், உயிரும், முறைமுறையே தந்தாளை நோக்கினான், தன்ஒப்புஒன்று இல்லாதான். 54 54. செம்மாந்து - களித்து. நந்தா - ஒளி கெடாத. நறும்தாழ் - நறுமணம் பொருந்திய. முந்தா - முந்தி; முதலில். தீதிலா ஆக,உலகீன்ற தெய்வத்தைக் காதலால் நோக்கினான்; கண்ட முனிக்கணங்கள் ஓதினார் கீர்த்தி; உயர்ந்த பரம்சுடரும் நோதல்ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான். 55 55. தீது இலா ஆகா - தீதின்றிப் போகும்படி. கண்ட - அதைக் கண்ட. பரஞ்சுடரும் - நரசிம்மமூர்த்தியும். நோதல் - துன்புறுதல். அன்பனையே - பிரகலாதனையே. பிரகலாதனைப் புகழ்தல் `உந்தையை, உன்முன்கொன்று, உடலைப் பிளந்துஅளையச் சிந்தை தளராது, அறம்பிழையாச் செய்கையாய்! அந்தம்இலா அன்புஎன்மேல் வைத்தாய்! அளியத்தாய்! எந்தை! யினிஇதற்குக் கைம்மாறு யாது?’என்றான். 56 56. பிளந்து அனைய - பிளந்து பிசைய. சிந்தை தளராது - அதைக் கண்டும் உள்ளம் சோராமல் நின்று. அறம்பிழையா - அறந்தவறாத. அளியத் தாய் - அன்புக்குரியவனே. பிரகலாதன் வேண்டுகோள் `முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை; பின்பு பெறும்பேறும் உண்டோ? பெறுகுவனேல், என்பு பெறாத இழிபிறவி எய்தினும்,நின் அன்பு பெறும்பேறு அடியேற்கு அருள்.’என்றான். 57 57. பெறப்பெற்ற - அடைந்த. பேறோ - செல்வமோ. முடிவில்லை - அழியாதது. பின்பு - இதன் பின்பு. என்பு - எலும்பு. பெறுகை - பெறுவதுவே. பெறும்பேறு - பெறக்கூடிய செல்வத்தை. நரசிம்மன் அருள் செய்தல் `நல்லறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல்அருளும், எல்லையில ஞானமும், ஈறுஇலா எப்பொருளும், தொல்லைசால் எண்குணனும், நின்சொல் தொழில்செய்க! மல்லல் உருஒளியாய் நாளும் வளர்கநீ!’ 58 58. எண்குணனும் - எட்டுக் குணங்களும். இயற்கையறிவு; முற்றும் உணர்தல்; தன்வசம்; தூய உடல்; பாசங்களின் நீங்கல்; பேரருள்; முடிவில் ஆற்றல்; வரம்பில் இன்பம்; இவை எண்குணம். என்று வரம்அருளி, எவ்வுலகும் கைகூப்ப, `முன்றில் முரசம் முழங்க முடிசூட்டி நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்துஇவனுக்கு ஒன்று பெருமை உரிமைபுரி’ கென்றான். 59 59. ஒன்று பெருமை - பொருந்திய பெருமையுள்ள அரசாட்சியை. உரிமை புரிக - உரிமையாகச் செய்க. தேமன் உரிமை புரியத், திசைமுகத்தோன் ஓமம் இயற்ற, உடையான் முடிசூட்டக், கோமன் னவன்ஆகி, மூவுலகும் கைக்கொண்டான் நாம மறைஓதாது ஓதி நனிஉணர்ந்தான். 60 60. தேமன் - இந்திரன். உடையான் - சிவன். கோமன்னவன் ஆகீ - சிறந்த மன்னவனாகி. நாம மறை - சிறந்த வேதங்களை. `ஈதுஆகும் முன்நிகழ்ந்தது; எம்பெருமான்! என்மாற்றம் யாதானும் ஆக, நினையாது இகழ்தியேல், தீதாய் விளைதல்நனி திண்ணம்,எனச் செப்பினான் மேதாவி கட்கெல்லாம் மேலாய மேன்மையான். 61 61. யாதானும்ஆக - எப்படியேனும் ஆகட்டும் என்று. நனி திண்ணம் - மிகவும் உறுதி. மேன்மையான் - வீடணன். 4. வீடணன் அடைக்கலப் படலம் இராவணன் வீடணன்மேற் சினத்தல் கேட்டனன் இருந்தும்,அக் கேள்வி தேர்கலாக் கோட்டிய சிந்தையன், உறுதி கொண்டிலன்; மூட்டிய தீஎன முடுகிப் பொங்கினான், ஊட்டுஅரக்கு ஊட்டிய அனைய ஒண்கணான். 1 வீடணன் அடைக்கலப் படலம்: இராவணன் தம்பி யாகிய வீடணன், இராமனைத் தஞ்சம் அடைந்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. கேட்டனன் இருந்தும் - கேட்டும். அக்கேள்வி தேர்கலா - அக்கேள்வியின்மூலம் அறிவு பெறாத. கோட்டிய - மாறுபட்ட. ஊட்டு அரக்கு ஊட்டிய - சிவந்த அரக்கைச் சேர்த்தது. `இரணியன் என்பவன் எம்ம னோரினும் முரணியன்; அவன்தனை முருக்கி மாற்றினான் அரணியன்; என்றுஅவற்கு அன்பு பூண்டானை மரணம்என்று ஒருபொருள் மாற்றும் வன்மையோய்!’ 2 2. முரணியன் - வலிமையுள்ளவன். முருக்கி மாற்றினான் - கொன்றழித்தான். அரணியன் - சரண் அடைந்தோரைப் பாதுகாப்பவன். `ஆயவன், வளர்த்ததன் தாதை ஆகத்தை மாயவன் கல்லிய மகிழ்ந்த மைந்தனும், ஏயும்நம் பகைவனுக்கு இனிய நண்புசெய் நீயுமே நிகர்;பிறர் நிகர்க்க நேர்வரோ?’ 3 3. ஆயவன் - அத்தகையவனாகிய. ஆகத்தை - மார்பை. ஏயும் - பொருந்திய. நிகர் - ஒப்பாவீர்கள். `நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை, திண்ணிதுஉன் செயல்!பிறர் செறுநர் வேண்டுமோ?’ 4 4. நண்ணின - நமக்குப் பகைவராக வந்த. உன்செயல் திண்ணிது - உன்செய்கை வலிமை உள்ளது. வேறு `அன்று வானரம் வந்துநம் சோலையை அழிப்பக், `கொன்று தின்றிடு மின்!’எனத், `தூதரைக் கோறல் வென்றி அன்று’என விலக்கினை; மேல்விளைவு எண்ணித் துன்று தாரவன் துணைஎனக் கோடலே துணிந்தாய்.’ 5 5. துன்று தார்அவன் - மலர்நிறைந்த மாலையையுடைய இராமனை. கோடலே - கொள்ளுவதையே. `அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள்அலை; தஞ்சென மனிதர்பால் வைத்த சார்பினை; வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை; நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ? 6 6. தஞ்சென - அடைக்கலம் என்று. சார்பினை - பற்றுள்ளவன் ஆயினை. அரோ; அசை. `பழியினை உணர்ந்துயான் படுக்கி லேன்உனை; ஒழிகிலை புகலுதல்; ஒல்லை நீங்குதி; விழிஎதிர் நிற்றியேல் விளிதி!’ என்றனன் அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான். 7 7. பழியினை உணர்ந்து - பழிச்சொல் உண்டாகுமே என்பதை அறிந்து உனைப்படுக்கிலேன் - உன்னைக் கொல்லாமல் விட்டேன். விளிதி - இறப்போய். வீடணன் வானத்திற் சென்று நின்று நல்லுரைகள் நவிலல் `வாழியாய்! கேட்டியாய்! வாழ்வு கைம்மிக ஊழிகாண் குறும்நினது உயிரை ஓர்கிலாய்! கீழ்மையோர் சொற்கொடு, கெடுதல் நேர்தியோ? வாழ்மைதான் அறம்பிழைத் தவர்க்கும் ஆகுமோ?’ 8 8. வாழ்வு கைம்மிக - வாழ்க்கை மேம்பட. ஊழி காண்குறும் - ஊழியின் முடிவைக் காண்கின்ற. கெடுதல் நேர்தியோ - கெடுவதற்குச் சம்மதிக்கின்றாயோ. `புத்திரர், குருக்கள்,நின் பொருஇல் கேண்மையர், மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர், இத்தனை பேரையும் இராமன் வெம்சரம் சித்திர வதைசெயக் கண்டு தீர்தியோ?’ 9 9. கண்டு தீர்தியோ - கண்டபின் உயிர்விடுவாயோ. `எத்துணை வகையினும் உறுதி எய்தின ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை; அத்த!என் பிழைபொறுத்து அருளு வாய்’என உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான். 10 10. எத்துணை வகையினும் - பல வகையிலும். உறுதி எய்தின - நன்மை அமைந்தனவும். ஒத்தன - நீதிக்கு ஒத்தனவுமான பொருள்களை. அனலன, அநிலன், அரன், சம்பாதி என்ற அமைச்சர்கள் நால்வரும் வீடணனுடன் சென்றனர். அவர்கள் கடலைக் கடந்து இராமன் இருந்த இடத்தை அடைந்தனர். வீடணன் துணைவர்களிடம் கேட்டல் `அறம்தலை நின்றவற்கு அன்பு பூண்டனென்; மறந்தும்நல் புகழ்அலால் வாழ்வு வேண்டிலென்; `பிறந்தஎன் உறுதிநீ பிடிக்க லாய்’எனத் துறந்தனென்; இனிச்செயல் சொல்லு வீர்!’என்றான். 11 11. - . அமைச்சர்கள் உரை `மாட்சியின் அமைந்தது வேறு மற்றிலை; தாழ்ச்சியில் பொருள்தரும் தரும மூர்த்தியைக் காட்சியே இனிக்கடன்;’ என்று கல்விசால் சூழ்ச்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார். 12 12. மாட்சியின் அமைந்தது - சிறந்தது. தாழ்ச்சி இல் பொருள் - அழியாத செல்வத்தை. காட்சியே - காணுவதே. வீடணன் உரை `நல்லது சொல்லினீர்! நாமும் வேறுஇனி அல்லது செய்துமேல் அரக்கர் ஆதும்;ஆல் எல்லைஇல் பெரும்குணத்து இராமன் தாள்இணை புல்லுதும்; புல்லி;இப் பிறவி போக்குதும்.’ 13 13. அல்லது - வேறு ஒன்றை. ஆல்; அசை. புல்லுதும் - அடைவோம். `முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பிலென்; அன்புறக் காரணம் அறிய கிற்றிலேன்; என்புறக் குளிரும்;நெஞ்சு உருகும்; மேலவன் புன்புலப் பிறவியின் பகைஞன் போலும்;ஆல். 14 14. என்பு உறக்குளிரும் - எலும்பு மிகவும் குளிர்ச்சி அடைகின்றது. மேலவன் - மேலோனாகிய இராமன். புன்புலம் - அற்பமான அறிவையுடைய. `ஆதிஅம் பரமனுக்கு அன்பும், நல்அறம் நீதியின் வழாமையும், உயிர்க்கு நேயமும், வேதியர் அருளும்நான் விரும்பிப் பெற்றனென், போதுறு கிழவனைத் தவம்முன் பூண்டநாள்.’ 15 15. நல்லறம் நீதியின் - நல்லறமாகிய நீதியிலிருந்து. போதுஉறு கிழவனை - நான்முகனை நோக்கி. பெற்றனன் - பெற்றேன். `ஆயது பயப்பதுஓர் அமைதி ஆயது; தூயது நினைந்தது; தொல்லை யாவர்க்கும் நாயகன் மலர்க்கழல் நணுகி, நம்மனத்து ஏயது முடித்தும்;’என்று இனிது மேவினான். 16 16. ஆயது - அந்த வரம். பயப்பது ஓர் அமைதிஆயது - பலன் தருவதாகிய ஒரு சமயம் வந்தது. ஏயது - பொருந்தியதை. இருள்இடை எய்துவது இயல்பன் றாம்எனப் பொருள்உற உணர்ந்தஅப் புலன்கொள் கேள்வியார் மருள்உறு சூழலின் மறைந்து வைகினார்; உருள்உறு தேரவன் உதயம் எய்தினான். 17 17. இருள்இடை எய்துவது - இருள் பொருந்திய நேரத்தில் அடைவது. புலன்கொள் - நுண்ணுணர்வு பொருந்திய. மருள்உறு - மறைவுள்ள. சூழலின் - இடத்தில். இராமன் காலைக்கடன் கழிக்கக் கடற்கரையை அடைந்தான் தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய திரள்மணிக் குப்பையும், கனக தீரமும், மருளும்மென் பொதும்பரும், மணலின் குன்றமும், புரள்நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான். 18 18. தரளம் - முத்து. கனக தீரம் - பொற்குவியல். புரிந்து - ஆவலுடன். மின்நகு மணிவிரல் தேய, வீழ்கணீர் துன்அரும் பெரும்சுழி அழிப்பச் சோர்வினோடு இன்னகை நுளைச்சியர் இழைக்கும் ஆழிசால் புன்னைஅம் பொதும்பரும், புக்கு நோக்கினான். 19 19. மின்நகும் - மின்னலைப் பார்த்துச் சிரிக்கும். துன்அரும் - ஒன்று சேராதா. பெரும்சுழி - கூடலாகிய பெரிய சுழியை. இழைக்கும் - நிலத்திலே சுழித்துக்கொண்டிருக்கின்ற. நுளைச்சியர் - நெய்தல் நிலப் பெண்கள். அருந்துதற்கு இனியமீன் கொணர, அன்பினால் பெரும்தடம் கொம்பிடைப் பிரிந்த சேவலை, வரும்திசை நோக்கிஓர் மழலை வெண்குருகு இருந்தது கண்டுநின்று, இரங்கல் எய்தினான். 20 20. கொணர -கொண்டுவரும் பொருட்டு. பிரிந்த சேவலை - பிரிந்து போன ஆண் பறவையை. அன்பினால் பெரும்திடம் கொம்பிடை - அன்புடன் பெரிய நீண்ட கிளையிலே. குருகு - பெண் நாரை. இத்திறம் எய்திய காலை, எய்திய வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் ஒத்தனன் இராமனும்; உணர்வு தோன்றிய பித்தரின் ஒருவகை பெயர்ந்து போயினான். 21 21. எய்துறும் வித்தகர் சொற்களால் - வந்த அறிஞர்களின் உரைகளால். ஒத்தனன் இராமனும் - மனந்தெளிந்த இராமனும். இராமன் தன் துணைவர்களுடன் அமர்ந்திருந்தான். இவ்வமயம் வீடணன் வானரப் படையின் அருகடைந்தான். `இராகவா சரணம்’ என்று கூவினான். இச்சொல் இராமன் காதில் விழுந்தது. அவன் உடனே உரைத்ததாவது: `எந்தையே! இராகவ! சரணம்!’ என்றசொல் தந்தவர் எனைவரோ சாற்று மின்!’என மந்தணம் உற்றுழீஇ, வயவெம் சேனையின் முந்திணர்க்கு உற்றதை மொழிகு வாம்;அரோ. 22 22. மந்தணம் உற்றுழீஇ - ஆலோசனை செய்துகொண்டி ருந்தபோது. சேனையின் முந்தினர்க்கு - படையின் முன்னணியிலே நின்றவர்களிடம். உற்றதை - நிகழ்ந்ததை. வானரர்கள் வீடணன் முதலியோரை வளைத்துக் கொண்டனர் முற்றிய குரிசிலை, முழங்கு தானையின் உற்றனர் நிருதர்வந்து என்ன ஒன்றினார், எற்றுதிர்; பற்றுதிர் எறிதிர், என்றுஇடை சுற்றினர்; உரும்எனத் தெழிக்கும் சொல்லினார். 23 23. முற்றிய குரிசிலை - அடைந்த வீடணனை. ஒன்றினார் - சுற்றிக் கூடினவர்கள். எற்றுதிர் - கொல்லுங்கள். பற்றுதிர் - பிடியுங்கள். எறிதிர் - அடியுங்கள். தெழிக்கும் - அதட்டும். `தந்தது தருமமே கொணர்ந்து, தான்இவன் வெம்தொழில் தீவினை பயந்த மெய்ம்மையான் வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்;நம் சிந்தனை முடிந்தன’ என்னும் செய்கையார். 24 24. `வந்தனன் இவன்தான் வெம்தொழில் தீவினை பயந்த மெய்ம்மை யான் இலங்கையர் மன்னன் ஆகும்’ வந்தனன் - தானே வந்தவனாகிய. மெய்ம்மையான் - உண்மையானவனாகிய. `இருபது கரம்,தலை ஈரைந்து, என்னும்அத் திருஇலிக்கு அன்னவை சிதைந்த வோஎன்பார்; பொருதொழில் எம்மொடும் பொருதி போர்என்பார்’ ஒருவரின் ஒருவர்சென்று, உறுக்கி ஊன்றுவார். 25 25. பொருதொழில் எம்மொடும் - போர்த் தொழிலை யுடைய எங்களோடும். உறுக்கி - சினந்து. ஊன்றுவார் - முன்னிற்பார் ஆயினர். இராமனிடமிருந்து வந்தோர், வானரரை விலக்கி வீடணனைக் காணுதல் இயைந்தன இயைந்தன, இனைய கூறலும், மயிந்தனும், துமிந்தனும், என்னும் மாண்பினர், அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் நயந்தெரி காவலர் இருவர் நண்ணினார். 26 26. இயைந்தன இயைந்தன - தம் மனத்தில் தோன்றியன வாகிய. இனைய - இவைபோன்ற சொற்களை. அயிந்திரம் நிறைந்தவன் - ஐந்திர இலக்கணத்தைக் கற்று நிரம்பியவனாகிய அனுமான். நயம் - நீதி. மயிந்தன், துமிந்தன் என்பவர்கள் அசுவினி தேவர்களின் குமாரர்கள். விலக்கினர் படைஞரை, வேதம் நீதிநூல் இலக்கணம் நோக்கிய இயல்பார்; எய்தினார் `சலக்குறி இலர்,’என அருகு சார்ந்தனர்; புலக்குறி அறநெறி, பொருந்த நோக்கினார். 27 27. `வேதம் நீதிநூல் இலக்கணம் நோக்கிய இயல்பர் படைஞரை விலக்கினர்’ இயல்பர் - இயல்புள்ளவர்களாகிய மயிந்தனும் துமிந்தனும். சலக்குறிஇலர் – வஞ்சனை யைக் காட்டும் அடையாளம் அற்றவர்கள். புலக்குறி - அறிவுக்கான அடையாளம். அறநெறி - தரும நெறியைப் பின்பற்றும் அடையாளம். பொருந்த - அவர்களிடம் பொருந்தியிருப்பதை. மயிந்தன் கேள்வி `யார்?இவண் எய்திய கருமம் யாவது? போர்அது புரிதிரோ? புறத்துஓர் எண்ணமோ? சார்வுற நின்றநீர் சமைந்த வாறெலாம் சோர்விலிர் மெய்ம்முறை சொல்லு வீர்,’என்றான். 28 28. புறத்துஓர் எண்ணமோ வேறொரு நினைப்போ. சமைந்த ஆறு எலாம் - எண்ணிய விதங்களையெல்லாம். என்றான் - என்று மயிந்தன் கேட்டான். அனலன் அளித்த விடை `பகலவன் வழிமுதல், பாரின் நாயகன் புகல்அவன் கழல்அடைந்து உய்யப் போந்தனன்; தகவுறு சிந்தையன்; தரும நீதியன்; மகன்மகன் மைந்தன்நான் முகற்கு; வாய்மையான்.’ 29 29. பகலவன் வழிமுதல் - சூரியகுலத் தலைவன். புகல் - சரணமாக. நான்முகற்கு மகன் மகன்மைந்தன் - பேரன். `சுடுதியைத் துகில்இடைப் பொதிந்த துன்மதி! இடுதியே? சிறையிடை இறைவன் தேவியை; விடுதியேல் உய்குதி! விடாது வேட்டியேல் படுதி!என்று உறுதிகள் பலவும் பன்னினான்.’ 30 30. சுடுதியை - சுடுகின்ற நெருப்பை. துன்மதி - கெட்ட புத்தியை யுடையவனே. வேட்டியேல் - அவளை விரும்புவா யானால். படுதி - இறந்து விடுவாய். `மறம்தரு சிந்தையன் மதியின் நீங்கினான்; `பிறந்தனை பின்புஅதில் பிழைத்தி! பேர்குதி! இறந்தனை நிற்றியேல்’ என்ன, இன்னவன் துறந்தனன்;’ எனவிரித்து அனலன் சொல்லினான். 31 31. மறம்தரு - பாவச் செயல்களையே நினைக்கின்ற. பின்பு பிறந்தனை - என்பின் பிறந்தாய். அதின் - அதனால். பிழைத்தி - உயிர்பிழைத்தாய். எனவிரித்து - என்று விளக்கமாக. மயிந்தன் மட்டும் இராமனிடம் திரும்புதல் தருமமும், ஞானமும், தவமும் வேலியாய், மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க், கருணைஅம் கோயிலுள் இருந்த கண்ணனை, அருள்நெறி எய்திச்சென்று அடிவ ணங்கினான். 32 32. மருவரும் - பொருந்திய. கண்ணனை - இராமனை. அருள்நெறி எய்தி - அருளைப்பெற்று. இராமன் `நீ கண்டதும் கேட்டதும் யாதென’ மயிந்தன் கூறுதல் `விளைவினை அறிந்திலம்; வீட ணப்பெயர் நளிர்மலர்க் கையினான், நால்வ ரோடுஉடன் களவியல் வஞ்சனை இலங்கை காவலற்கு இளவல்,நம் சேனையின் நடுவண் எய்தினான்.’ 33 33. களவியல் வஞ்சனை - திருட்டுத்தனமும் வஞ்சனையும் பொருந்திய. இளவல் - தம்பியாகிய வீடணன். `கொல்லுமின்! பற்றுமின்!’ என்னும் கொள்கையால் பல்பெரும் தானைசென்று அடர்க்கப், பார்த்து,யாம் `நில்லுமின்’ என்று;நீர் யாவிர்? நும்நிலை சொல்லுமின்?’ என்ன,ஓர் துணைவன் சொல்லினான். 34 34. கொள்கையால் - எண்ணத்துடன். அடர்க்க - போர் செய்யப் போவதை. `முரண்புகு தீவினை முடித்த முன்னவன் கரண்புகு சூழலே சூழக் காண்பதுஓர் அரண்பிறிது இல்என, அருளின் வேலையைச் சரண்புகுந் தனன்’என, முன்னம் சாற்றினான். 35 35. முரண்புகு தீவினை - மாறுபாடு பொருந்திய தீச்செயலை. முன்னவன் - இராவணன். கரண்புகு சூழலேசூழ - மனம்போன போக்கிலே போனதால். அருளின் வேலையை - கருணைக் கடலாகிய உன்னை. `ஆயவன் தருமமும், ஆதி மூர்த்திபால் மேயதோர் சிந்தையும், மெய்யும், வேதியர் நாயகன் தரநெடும் தவத்தின் நண்ணினன்; தூயவன்’ என்பதுஓர் பொருளும் சொல்லினான். 36 36. ஆயவன் - அவன். மேயதுஓர் - பொருந்தியதாகிய ஒப்பற்ற. வேதியர் நாயகன்தர - பிரமன் கொடுக்க. நண்ணினன் - அடைந்தான். `கற்புடைத் தேவியை விடாது காத்தியேல் எற்புஉடைக் குன்றம்ஆம் இலங்கை; ஏழைநின் பொற்புடை முடித்தலை புரளும்:’ என்றுஒரு நற்பொருள் உணர்த்தினன்’ என்றும் நாட்டினான். 37 37. காத்தியேல் - சிறை வைப்பாயானால். இலங்கை எற்பு உடைக்குன்றம்ஆம் - இலங்கை எலும்புநிறைந்த மலையாகிவிடும். ஏழை - அறிவற்ற. எலும்பு; என்பு : எற்பு. `ஏந்துஎழில் இராவணன் `இனைய சொன்னநீ சாம்தொழிற்கு உரியைஎன் சார்பு நிற்றியேல்; ஆம்தினைப் பொழுதினில் அகறி யாம்’எனப் போந்தனன்; என்றனன்;’ புகுந்தது ஈதுஎன்றான். 38 38. ஏந்து எழில் - தாங்கிய அழகையுடைய. சார்பு - பக்கத்தில். `நிற்றியேல் சாம்தொழிறகு உரியை’ அகறியாம் - போவாயாக. புகுந்தது. நடந்தது. இராமன் வீடணனைப் பற்றி நண்பர்களின் கருத்துரைகள் கேட்டல் அப்பொழுது இராமனும், அருகின் நண்பரை `இப்பொருள் கேட்டநீர் இயம்பு வீர்!இவன் கைப்புகல் பாலனோ? கழியல் பாலனோ? ஒப்புற நோக்கிநும் உணர்வி னால்;’என்றான். 39 39. இப்பொருள் கேட்டநீர் - இச்செய்தியைக் கேட்ட நீங்கள். கைப்புகல் பாலனோ - சேர்வதற்குத் தகுந்தவனோ. நும்உணர்வினால் ஒப்புற நோக்கி - உங்கள் அறிவைக் கொண்டு ஒத்துப் பார்த்து. `இயம்புவீர் என்றான்’. சுக்கிரீவன் தன் கருத்தைக் கூறல் `தகைஉறு தம்முனைத், தாயைத், தந்தையை, மிகைஉறு குரவரை, உலகின் வேந்தனைப், பகைஉற வருதலும் துறந்த பண்புஇது நகைஉறல்; அன்றியும் நயக்கற் பாலதோ?’ 40 40. தகைஉறு - பெருமை அமைந்த . மிகைஉறு - சிறப்புள்ள. பகை உற வருதலும் - பகைவர் நெருங்கி வந்தவுடன். துறந்த பண்பு - கைவிட்ட தன்மையாகிய. இது நகைஉறல் - இது நகைக்கத் தக்கதாகும். `வார்க்குறு வனைகழல் தம்முன் வாழ்ந்தநாள் சீர்க்குஉற வாய்,இடைச் செறுநர் சீறிய போர்க்கு,உறவு அன்றியே புகுந்த போது,இவன் ஆர்க்குஉறவு ஆகுவன்? அருளின் ஆழியாய்!’ 41 41. அருளின் ஆழியாய் - கருணைக் கடலே. வார்க்குறு - வார்த்துச் செய்யப்பட்டு. வனைகழல் - வேலைப்பாடமைந்த வீரகண்டாமணியைத் தரித்த. சீர்க்கு - செல்வத்திற்கு. உறவாய் - உரிமை யுடையவனாயிருந்து. `கூற்றுவன் தன்னொடுஇவ் வுலகம் கூடிவந்து ஏற்றன என்னினும், வெல்ல ஏற்றுளேம்; மாற்றவன் தம்பி,நம் மருங்கு வந்துஇவண் தோற்றுமோ? அன்னவன் துணைவன் ஆகுமோ?’ 42 42. உலகம் கூடிவந்து - உலகம் முழுவதும் சேர்ந்துவந்து. ஏற்றன என்னினும் - எதிர்த்தனவாயினும். ஏற்றுளேம் - துணிந்து ஒப்புக் கொண்டுள்ளோம். `அரக்கரை ஆசுஅறக் கொன்று, நல்அறம் புரக்கவந் தனம்,’எனும் பெருமை பூண்டநாம், இரக்கம்இல் அவரையே துணைகொண் டேம்எனின் `சுருக்கம்உண்டு எம்வலிக்கு’ என்று தோன்றும்;ஆல். 43 43. ஆசுஅற - அடியோடு அழிய. சுருக்கம் உண்டு - குறைவு உண்டு. `வஞ்சனை இயற்றிட வந்த வாறு,அலால், தஞ்சென நம்வயின் சார்ந்து ளான்அலன்; நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ? அஞ்சன வண்ண!’என்று அறியக் கூறினான். 44 44. நயந்து கோடியோ - விரும்பி ஏற்றுக்கொள்ளுவாயோ. சாம்பவன் தன் எண்ணம் இயம்பல் `அறிஞரே ஆயினும், அரிய தெவ்வரைச் செறிஞரே ஆவரேல், கெடுதல் திண்ணம்ஆம்; நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பதுஓர் குறிநனி உளது,என உலகம் கொள்ளுமோ?’ 45 45. செறிஞரே ஆவரேல் - சேர்வாரேயானால். நெறிதனை - அவர்களுடைய நல்ல நெறியை. நிருதர் - அரக்கர்களிடம். நிற்பதுஓர் - இருப்பதாகிய ஒரு. குறி நனி உளதுஎன - வஞ்சனை எண்ணம் மிகவும் உண்டு ஆதலால். உலகம் கொள்ளுமோ - உலகம் இதை ஒப்புக்கொள்ளுமோ. `வெற்றியும் தருகுவர்; வினையும் வேண்டுவர்; முற்றுவர்; உறுகுறை முடிப்பர்; முன்பினால் உற்றுறு நெடும்பகை உடையர்; அல்லதூஉம் சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ?’ 46 46. உற்றுஉறு நெடும்பகை உடையர் - பொருந்திய பெரிய பகைமை யுள்ளவர்கள் நண்பர்போல நின்று. வினையம் - வஞ்சனை. செறிதல் - சேர்தல். `வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு ஏதமும், இமையவர்க்கு இடரும், ஈட்டிய பாதகர், நம்வயின் படர்வர் ஆம்எனின் தீதுஇலர் ஆய்நமக்கு அன்பு செய்வரோ?’ 47 47. -. `கைப்புகுந்து உறுசரண் அருளிக் காத்துமேல், பொய்க்கொடு வஞ்சனை புணர்ந்த போதினும், மெய்க்கொள விளியினும், விடுதும் என்னினும் திக்குஉறும் நெடும்பழி; அறமும் சீறும்;ஆல்.’ 48 48. கைப்புகுந்து - நம் பக்கம் அடைந்து. உறுசரண் அருளி - ஏற்ற அபயத்தைக் கொடுத்து. காத்துமேல் - காப்போமானால். புணர்த்த போதினும் - செய்த போதிலும். மெய்க்கொள - உண்மையாகவே. விளியினும் - நமக்குச் சாவு நேர்ந்தாலும். `நெடும்பழி திக்கு உறும்.’. `மேல்நனி விளைவது விளம்பல் வேண்டுமோ? கானகத்து, இறைவியோடு உறையும் காலையில், மான்என வந்தவன் வரவை மானும்,இவ் ஏனையன் வரவும்;’என்று இனைய கூறினான். 49 49. -. நீலன் நினைத்ததை உரைத்தல் `காலமே நோக்கினும், கற்ற நூல்களின் மூலமே நோக்கினும், முனிந்து போந்தவன் சீலமே நோக்கி,யாம் தெளிந்து தேறுதற்கு ஏலுமே;’ என்றெடுத்து இனைய கூறினான். 50 50. சீலமே நோக்கி - ஒழுக்கத்தைப் பார்த்து. தெளிந்து தேறுதற்கு - தெளிந்து நம்புவதற்கு. ஏலுமே - ஏற்குமோ? மாருதியின் முகத்தை இராமன் நோக்க, அவன் வணங்கி உரைத்த வாய்மொழிகள் `தூயவர் துணிதிறன் நன்று, தூயதே! ஆயினும் ஒருபொருள் உரைப்பென் அழியாய்! தீயன்என்று இவனையான் அயிர்த்தல் செய்கிலேன்; மேயின சிலபொருள் விளம்பக் கேட்டியால்.’ 51 51. தூயவர் - குற்றமற்றவர்களாகிய அமைச்சர்கள். துணி திறம் - ஆராய்ந்துரைத்த செய்தி. அயிர்த்தல் - சந்தேகித்தல். `வண்டுளர் அலங்கலாய்! வஞ்சர் வாண்முகம் கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதலம் உண்டுஎனின் அஃதுஅவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ? விண்டவர் நம்புகல் மருவி வீழ்வரோ?’ 52 52. வண்டுஉளர் - வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கின்ற. கைதவம் - வஞ்சனை. விண்டவர் - பகைவர். நம்புகல் மருவி - நம்மை அடைக்கலமாகச் சேர்ந்து. வீழ்வரோ - வாழ விரும்புவாரோ. `உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தன் முகங்களே விளம்பும்; ஆதலால், கள்ளத்தின் விளைவெலாம் கருத்தில் ஆம்;இருள் பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?’ 53 53. கருத்தில்ஆம் - உள்ளத்திலே தங்கியிருக்கும். இருள் பள்ளத்தின் அன்றியே - இருட்டு பள்ளத்தில் தங்கியிருக்குமே அல்லாமல். வெளியில் பல்குமோ - வெளியில் பரவி நிற்குமோ. `வாலிவிண் பெற,அரசு இளைய வன்பெறக், தோலிய வரிசிலை வலியும், கொற்றமும், சீலமும் உணர்ந்து,நின் சேர்ந்து தெள்ளிதின் மேல்அரசு எய்துவான் விரும்பி மேயினான்.’ 54 54. கோரிய - முயன்ற. நின்சேர்ந்து - உன்னை அடைந்து. தெள்ளிதின். உறுதியாக. மேல்அரசு எய்துவான் - மேலான அரசைப் பெறும் பொருட்டு. இளையவன் - சுக்கிரீவன். `செறிகழல் அரக்கர்தம் அரசு, சீரியோர் நெறியலது; ஆகலின், நிலைக்க லாமையும், எறிகடல் உலகெலாம் இளவற்கு ஈந்ததுஓர் பிறிவரும் கருணையும், மெய்யும் பேணினான்.’ 55 55. இளவற்கு ஈந்தது - பரதனுக்குக் கொடுத்ததாகிய ஒப்பற்ற. பிறிவரும் கருணையும் - நீங்காத அருளையும். மெய்யும் - உண்மையையும். பேணினான் - விரும்பி வந்தனன். `காலம்அன்று இவன்வரு காலம்’ என்பரேல், வாலிதன் உறுபகை வலிதொலைத் தலால் `ஏலும், இங்கு இவற்குஇனி இறுதி’ என்றுனை மூலம் என்று உணர்தலால், பிரிவு முற்றினான்.’ 56 56. வாலிதன் - வாலியின். உறுபகை வலி - பெரிய பகைமை யான வலிமையை. இங்கு இவற்கு - இங்கு இவ்விராவணனுக்கும். இனி இறுதி ஏலும் - இனி முடிவுக்காலம் வரும். பரிவு - அன்பு. `தீத்தொழில் அரக்கர்தம் மாயச் செய்வினை வாய்த்துளர், அன்னவை உணரும் மாண்பினால் காய்த்தவர் அவர்களே கையுற் றார்நமக்கு; ஏத்தரும் உறுதியும் எளிதின் எய்தும்ஆல்.’ 57 57. காய்த்தவர் - அவர்களுடன் கோபங் கொண்டவர்கள். நமக்கு கை உற்றார் - நமக்கு அகப்பட்டார். ஏத்தஅரும் - பாராட்ட முடியாத; சிறந்த. உறுதி - நன்மை. `கொல்லுமின்! இவனை;’என்று அரக்கன் கூறிய எல்லையில், `தூதரை எறிதல் என்பது புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில் வெல்லலாம் பின்னை;’என்று இடைவி லக்கினான். 58 58. எறிதல் என்பது - கொல்லுதல் என்பது. புல்லிது - இழிந்த செய்கை. பழியொடும் புணரும் - பழியுள்ள செயலாகும். `மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும் தூதரைக் கோறலும் தூய்துஅன்று ஆம்;’என ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.’ 59 59. மறத்து நீங்கிய - போரிலிருந்து விலகிய. ஆதரை - வலிமையற்ற வரை. ஏதுவில் சிறந்தன - காரணங்களில் சிறந்தவைகளை. `எல்லையில், நான்,இவன் இரண மாளிகை செல்லிய போதினும், திரிந்த போதினும், நல்லன நிமித்தங்கள் நனிந யந்துள; அல்லதும் உண்டுநான் அறிந்தது, ஆழியாய்!’ 60 60. எல்லியில் - இரவில். இரண மாளிகை - பொன்மயமான மாளிகையினுள். நல்லன - நல்லவைகளாகிய. நனி நயந்துள - மிகவும் விரும்புமாறு காணப்பட்டன. `நிந்தனை நறவமும், நெறியில் ஊன்களும் தந்தன கண்டிலென்; தரும தானமும், வந்தனை நீதியும், பிறவும், மாண்பமைந்து அந்தணர் இல்எனப் பொலிந்தது ஆம்;அரோ.’ 61 61. நெறிஇல் - ஒழுக்கத்திற்குப் பொருந்தாத. ஊன்களும் - மாமிசங்களும். தந்தன - கொணர்ந்து வைத்திருக்க. மாண்பு அமைந்து - சிறப்போடு பொருந்தி. `அன்னவன் தனிமகள் `அலரின் மேல்அயன் சொன்னதுஓர் சாபம்உண்டு; உன்னைத் துன்மதி, நன்னுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று’என என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.’ 62 62. தனிமகள் - சிறந்த புதல்வியாகிய திரிசடை. என்உடை - என்னை ஆளுகின்ற. இறைவி - சீதாபிராட்டி. வேறு `பெற்றுடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும், உன்கை வில்தொடையின் விடுகணையால் வெந்துஒழியும், எனக்கருதி, விரைவின், வந்தான்; உற்றுடைய மனவலியும், ஊக்கம்மிக பெருந்தொழிலும், உணர்ந்து நோக்கின், மற்றுடையர் தாம்உளரோ வாள்அரக்கன் அன்றியே தவத்தின் வாய்ந்தார்.’ 63 63. வில் தொடையின் - வில்லிலிருந்து தொடர்ச்சியாக. தவத்தின் மிக்கார் - தவத்திலே சிறந்த அரக்கருள்ளே. வாள்அரக்கன் அன்றியே - இந்த வீடணனைத் தவிர. உற்றுடைய - அடைந்துள்ள. மற்று உடையார் தாம் உளரோ - வேறு உள்ளவர்களும் இருக்கின்றனரோ. `தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர் மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் ஆவத்தின் வந்து,அபயம் என்றானை, அயிர்த்துஅகல விடுதி ஆயின் கூவத்தின் சிறுபுனலைக் கடல்அயிர்த்தது ஒவ்வாதோ கொற்றவேந்தே? 64 64. மூண்டு நின்றாய் - முன்னின்றாய். ஆவத்தின் - ஆபத்துக் காலத்திலே. அயிர்த்து - ஐயுற்று. கூவத்தில் - கிணற்றில் உள்ள. `பகைப்புலத்தோர் துணைஅல்லர்,’ என்றுஇவனைப் பற்றோமேல் அறிஞர் பார்க்கின் நகைப்புலத்தது ஆம்அன்றே; நல்தாயம் உளதாய பற்றால் மிக்க தகைப்புலத்தோர், தந்தைதாய், தம்பியர்கள் தனயர்இவர் தாமோ அன்றோ; மிகைப்புலத்து விளைகின்றது ஒருபொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவார்.’ 65 65. பகைப் புலத்தோர் - பகைவர் பக்கமிருந்து வந்தவர். பற்றாமேல் – ஏற்காமலிருப் போமாயின். நகைப்புலத்தது ஆம் - நகைப்பதற்கு இடமாகிவிடும். நல்தாயம் உளதாய - நல்ல உரிமை உள்ளவராகிய. பற்றால் மிக்க தகைப்புலத்தோர் - பேராசை மிகுந்த சிறந்த அறிவுள்ளவர்களாகிய. மிகைப்புலத்து - உயர்வுக்கு. விளைகின்றது ஒருபொருளை - காரணமாகிய ஒன்றை. விளிஞர் - கொல்லுதற்கு உரியவர். `ஆதலால், இவன்வரவு நல்வரவே எனஉணர்ந்தேன் அடியேன் உன்தன் வேதநூல் எனத்தகைய திருஉளத்தின் குறிப்பறியேன்’ என்று விட்டான் காதல்நான் முகனாலும் கணிப்பரிய கலைஅனைத்தும், கதிரோன் முன்சென்று ஓதினான், ஓதநீர்க் கடந்து,பகை கடிந்துஉலகை உய்யச் செய்தான். 66 66. உய்யச் செய்தான் - பிழைககச் செய்தவனாகிய மாருதி. என்று விட்டான் - என்று சொல்லி முடித்தான். இராமன் அனைவர்க்கும் தன் எண்ணத்தை எடுத்துரைத்தல் மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து, அமிழ்தின் மாந்திப், `பேர்அறி வாள நன்று! நன்று!’எனப், பிறரை நோக்கிச், `சீர்இது, மேல்இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்!’என்னா ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார். 67 67. வினைய வார்த்தை - கருத்துநிறைந்த சொற்களை. சீரிது - சிறந்தது. மேல்இம் மாற்றம் - இனிமேல் நான் கூறும் இச்சொல்லை. `கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று, காதல் அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி யில்லை; பெருத்துயர் தவத்தி னாலும் பிழைபபிலன், என்னும் பெற்றி திருத்தியது ஆகும் அன்றே நம்வயின் சேர்ந்த செய்கை.’ 68 68. கருத்துஉற நோக்கி - அறிவால் நன்றாக எண்ணிப் பார்த்து. காதல் அருத்தியும் - மிகுந்து ஆவலும். அறிவினுக்கு அவதி இல்லை - அவனுடைய அறிவுக்கு எல்லையில்லை. நம்வயின் சேர்ந்த செய்கை - நம்மிடம் சேர்ந்த செயல் ஒன்றே. `பெருத்துஉயர்....ஆகும் அன்றே’. `மற்றுஇனி உரைப்பது என்னோ! மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி! அன்னது அன்றெனின் பிறிதொன் றாலும் வெற்றியே பெறுக, தோற்க, வீக,வீ யாது வாழ்க; பற்றுதல் அன்றி, உண்டோ, அடைக்கலம் பகர்கின்றானை.’ 69 69. வடித்துச சொன்ன - ஆராய்ந்து கூறிய. பெற்றியே பெற்ற - தன்மையே சிறந்தது. பிறிதொன்றானும் - வேறு ஒன்றாக ஆயினும். வீக - அழிக. `இன்றுவந் தான்என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக் கொன்றுவந் தான்என்று உண்டோ? அடைக்கலம் கூறு கின்றான்; துன்றிவந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே; பின்னைப் பின்றும்என் றாலும, நம்பால் புகழ்அன்றிப் பிறிதுண் டாமோ?’ 70 70. அடைக்கலம் கூறுகின்றான் - அடைக்கலம் என்ற அம்மொழியைப் புகன்றவன். இன்று வந்தான் - இன்றுதான் வந்தான். துன்றிவந்து - நெருங்கி வந்து. பின்றும் - மாறுபடும். `பிறந்தநாள் தொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி மறந்தநாள் உண்டோ? என்னைச் சரண்என வாழ்கின் றானைத் துறந்தநாள் இறந்த நாள்ஆம் துன்னினான் சூழ்ச்சி யாலே இறந்தநாள் அன்றோ, என்றும் இருந்தநாள் ஆவது;’ என்றான். 71 71. துலைபுக்க பெரியோன் - புறாவுக்காகத் தராசில் ஏறிநின்ற சிபியின். வாழ்கின்றானை - வாழ விரும்பியவனை. துன்னினான் - சேர்ந்தவனுடைய. `இடைந்தவர்க்கு, அபயம் யாம்என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை கடைந்தவர்க்கு ஆகி, ஆலம் உண்டவன் கண்டி லீரோ! உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளதுஒன்று ஈயான் ஆயின் அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம்என்னாம்! ஆண்மை என்னாம்?’ 72 72. இடைந்தவர்க்கு - அஞ்சிப் பின்னடைந்தவர்க்கு. ஆகி - அபயம் அளிப்பவனாகி. ஆலம் உண்டவன் - நஞ்சுண்ட சிவபிரான் தன்மையை. `சரண்எனக்கு யார்கொல்’ என்று சானகி அழுது சாம்ப, `அரண்உனக்கு ஆவன்;வஞ்சி! அஞ்சல்!’என்று அருளின் எய்தி, முரண்உடைக் கொடியோன் சொல்ல, மொய்அமர் முடித்துத், தெய்வ மரணம்என் தாதை பெற்றது என்வயின் வழக்குஅன் றாமோ?’ 73 73. சாம்ப - சோர்வடைய. உனக்கு அரண் ஆவன் - உனக்குப் பாதுகாப்பாவேன். முரண்உடை கொடியோன். வலிமையுள்ள கொடியவனாகிய இராவணன். மொய்அமர் - நெருங்கிய போரை. வழக்குஅன்று ஆமோ - முறைமை அன்றோ. `உய்யநிற்கு அபயம்’ என்றான் உயிரைத்தன் உயிரை ஓம்பாக் கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலோனும், மையற நெறியின் நோக்கி, மாமறை நெறியின் நின்ற மெய்யினைப் பொய்என் றானும், மீள்கிலா நரகில் வீழ்வார்.’ 74 74. ஓம்பா - பாதுகாக்காத. கையன் - வஞ்சகன். மைஅற - குற்றமற்ற. நெறியின் நோக்கி - நன்னெறியிலே நின்று எண்ணிப் பார்த்து. `காரியம் ஆக, அன்றே ஆகுக, கருணை யோர்க்குச் சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ? பூரிய ரேனும், தம்மைப் புகல்புகுந் தோர்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார் எண்இலா அரசர்; அம்மா.’ 75 75. காரியம் - நினைத்த காரியம். ஆக - முடியட்டும். அன்றே ஆகுக - முடியாமல் போகட்டும். பூரியர் ஏயும் - அற்பர்களாயினும். பொன்றா - அழியாத. `ஆதலால், அபயம் என்ற பொழுதத்தே, அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது, இயம்பினீர் என்பால் வைத்த காதலால்; இனிவேறு எண்ணக் கடவதுஎன்? கதிரோன் மைந்த! கோதுஇலா தவனை நீயே என்வயின் கொணர்தி!’ என்றான். 76 76. கடப்பாடு - கடமை. கோது இலாதவனை - குற்றமற்ற வீடணனை. சுக்கிரீவனும் வீடணனும் சந்தித்தல் தொல்பெரும் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார் புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே; ஒல்லைவந்து உணர்வும் ஒன்ற, இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவின் தோளார். 77 77. ஒல்லைவந்து உணர்வும் ஒன்ற - விரைவில் சேர்ந்து இருவர் அறிவும் ஒன்றுபட. எழுவின் தோளார் - தூண்போன்ற தோள்களையுடையவர்கள். `இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர்’ எல்லி - இரவு; வீடணன். பகல் - சூரியன்; சுக்கிரீவன். தழுவினர் நின்ற காலைத், `தாமரைக் கண்ணன் தங்கள் முழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால், உவகை மூள, வழுவல்இல் அபயம் நின்பால் வழங்கினன்; அவன்பொன் பாதம் தொழுதியால் விரைவின்;’ என்று கதிரவன் சிறுவன் சொன்னான். 78 78. வழுவல்இல் - என்றும் நீங்குதல் இல்லாத. வீடணன் உவகை மொழிகள் சிங்கஏறு அனையான் சொன்ன வாசகம், செவிபு காமுன், கங்குலின் நிறத்தி னான்தன் கண்,மழைத் தாரை கான்ற; அங்கமும் மனம்அதுஎன்னக் குளிர்ந்தது;அவ் அகத்தை மிக்குப் பொங்கிய உவகை என்னப் பொடித்தன உரோமப் புள்ளி. 79 79. சிங்கஏறு அனையான் - சுக்கிரீவன். கண்மழைத் தாரைகான்ற - கண்கள் மழைத் தாரைகளைச் சிந்தின. அவ்அகத்தை மிக்கு - அந்த மனத்தை மீறி. `பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரிந்த, பாவி வஞ்சனுக்கு இனைய என்னை, வருகஎன்று அருள்செய் தானோ? தஞ்செனக் கருதி னானோ? தாழ்சடைக் கடவுள் உண்ட நஞ்செனச் சிறந்தேன் அன்றோ? நாயகன் அருளின் நாயேன்.’ 80 80. பாவி வஞ்சகனுக்கு - பாவியாகிய வஞ்சகனுக்கு. அருளின் நாயேன் - அருளையுடைய அடியேன். `தாழ்சடைக் கடவுள் உண்ட நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ’. `தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும், செய்ய சிந்தைப் பேர்அரு ளாளர் தத்தம் செய்கையில் பிழைப்பது உண்டோ? கார்வரை நிறுவித் தன்னைக் கனல்எழக் கலக்கக் கண்டும், ஆர்கலி அமரர் உய்ய அமிழ்துபண்டு அளித்தது அன்றே?’ 81 81. தீர்வரும் - நீங்காத. செய்ய சிந்தை - தூய மனமுள்ள. கார்வரை - கரிய நிறமுள்ள மந்தரமலையை. `துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன், என்னை உறஉவந் தருளி, மீள அடைக்கலம் உதவி னானே; அறவினை இறையும் இல்லா, அறிவிலா, அரக்கன் என்னும் பிறவியும் பெயர்ந்தேன், பின்னும் நரகினில் பிழைப்ப தானேன்.’ 82 82. உறவு உவந்தருளி - உறவாக மகிழ்ந்தேற்று. மீளா - கைவிடாத. நரகினில் - நரகத்தில் சேர்வதிலிருந்து. பிழைப் பதானேன் - தப்பித்தேன். இருவரும் இராமன் இருக்குமிடம் வருதல் மொய்தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல, மைதவழ் கிரியும், மேருக் குன்றமும் வருவது என்னச், செய்தவம் பயந்த வீரர், திரள்மரம் ஏழும் தீய எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்தச் சென்றார். 83 83. மொய் தவழ் கிரிகள் - வலிமை பொருந்திய மலைகள். மை தவழ்கிரியும் - மைநாக பர்வதமும். பயந்த - பெற்ற. சூழல் - இடத்தை. வீடணனுடைய உருக்கமும் பணிவும் `கற்றைவெண் நிலவு நீங்கக், கருணையாம் அமிழ்தம் காலும் முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தி னானைப்; பெற்றவன் அளித்த மோலி, இளையவன் பெறத்,தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னி யானை.’ 84 84. காலும் - சிந்துகின்ற. முற்றுறு கலையிற்று ஆய - நிறைந்த கலைகளையுடைய. முகத்தினான் - இராமன். பெற்றவன் - தந்தை. இளையவன் - பரதன். சிற்றவை - சிறியதாய். அளித்தமோலி - கொடுத்த சடைமுடி. வீரனை நோக்கி, அங்கம் மெல்மயிர் சிலிர்ப்பக், கண்ணீர் வார,நெஞ்சு உருகிச், `செங்கண் அஞ்சன மலைஅன்று ஆகில் கார்முகில் கமலம் பூத்தது; அன்று,இவன் கண்ணன் கொல்ஆம்; ஆர்அருள் சுரக்கும் நீதி அறநிறம் கரிதோ?’ என்றான். 85 85. வார - ஒழுக. நீதிஅறம் நிறம் - நீதியாகிய அறத்தின் நிறம். `மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச், செம்மணி மகுடம் நீக்கித், திருவடி புனைந்த செல்வன் தம்முன்னார் கமலத்து அண்ணல் தாதையார், சரணம் தாழ, எம்முனார் எனக்குச் செய்த உதவி’என்று ஏம்பல் உற்றான். 86 86. திருவடி புனைந்த - பாதுகையை முடியாகத் தரித்த. செல்வன் - வீடணன். தம்முன்ஆர் கமலத்து அண்ணல் - தம்முனனே பொருந்திய தாமரையோனாகிய பிரமனுடைய. தாதையார் - தந்தையார். சரணம் தாழ - பாதங்களில் வணங்கும் படி. என்முனார் - என் தமயன். உதவி என்று - உதவி சிறந்தது என்று. ஏம்பல் - மகிழ்ச்சி. `பெரும்தவம் இயற்றி னோர்க்கும், பேர்வரும் பிறவி நோய்க்கும் மருந்துஎன நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான் இருந்தனன்; நின்றது என்னோ இயம்புவது? எல்லை;தீர்ந்த அருந்தவம் உடையர் அம்மா அரக்கர்’என்று அகத்துள் கொண்டான். 87 87. அரக்கர் தீர்ந்த அருந்தவம் உடையர் - அரக்கர்கள் ஒழிந்த அருந்தவத்தை உடையராயினர். அகத்துள் கொண்டான் - மனத்துள் எண்ணிக் கொண்டான் வீடணன். கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன், கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல் இரங்கினன் நோக்குந் தோறும், இருநிலத்து இறைஞ்சு கின்றான்; வரங்களின் வாரி அன்ன தாள்இணை வந்து வீழ்ந்தான். 88 88. கரங்கள்மீ - கரங்களைத் தலையின்மேல். முடியன் - முடியையுடைய வீடணன். இரங்கினன் - இரங்கி. வரங்களின் வாரி - வரங்களின் கடல் போன்ற. அழிந்தது பிறவி, என்னும், அகத்துஇயல் முகத்தில் காட்ட, வழிந்தகண் ணீரின், மண்ணில் மார்புற வணங்கி னானைப், பொழிந்ததுஓர் கருணை தன்னால் புல்லினன், என்று தோன்ற, `எழுந்துஇனிது இருத்தி’ என்னா, மலர்க்கையால் இருக்கை ஈந்தான். 89 89. என்னும் அகத்து இயல் - என்று நினைக்கின்ற உள்ளத்தின் தன்மையை. கருணை தன்னால் - இரக்கத்துடன். என்னா - என்று சொல்ல. ஆழியான் அவனை நோக்கி, அருள்சுரந்து, உவகை கூர்ந்தே, `ஏழினோடு ஏழாய் நின்ற உலகும்,என் பெயரும்,எந்நாள் வாழும்நாள், அன்று காறும், வாள்எயிற்று அரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே, தந்தேன்;’என்றான். 90 90. ஆழியான் - இராமன். அவனை நோக்கி - வீடணனைப் பார்த்து. இராமன் வீடணனுக்கு முடி சூட்டும்படி உரைத்தல் `உஞ்சனென் அடிய னேன்’என்று ஊழ்முறை வணங்கி நின்ற அஞ்சன மேனி யானை, அழகனும் அருளின் நோக்கித், `தஞ்சநல் துணைவன் ஆன தவறுஇலாப் புகழான் தன்னைத் துஞ்சல்இல் நயனத்து ஐய!சூட்டுதி மகுடம்;’ என்றான். 91 91. ஊழ்முறை - முறைப்படி. தஞ்சம்நல் துணைவனான - சரணடைந்து நல் துணைவனாகிய. துஞ்சல்இல் நயனத்துஐய - தூங்காத கண்களையுடைய ஐயனே (இலக்குவன்). வீடணன் பாதுகை சூட்டவேண்டல் விளைவினை அறியும் மேன்மை வீடணன், `என்றும் வீயா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய! களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர. இளையவன் கவித்த மோலி, என்னையும் கவித்தி!’ என்றான். 92 92. விளைவினை - நடக்கப்போகும் நிகழ்ச்சியை. வீயா - அழியாத. களவுஇயல் அரக்கன் - வஞ்சனைத் தொழிலையுடைய இராவணன். கடன்மை - தொடர்பு. துர - நீங்க. இளையவன் - பரதனுக்கு. இராமன் சகோதரத் தன்மை `குகனொடும் ஐவர் ஆனேம்; முன்பு;பின் குன்றுசூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்; எம்உழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகல்அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ 93 93. குன்று சூழ்வான் - மேருமலையைச் சுற்றிவருகின்ற சூரியன். அகன் அமர் - உள்ளம் நிறைந்த. நுந்தை - உன் தந்தையாகிய தசரதன். `நடுவினிப் பகர்வது என்னே! நாயக! நாயி னேனை, உடன்உதித் தவர்க ளோடும், ஒருவன்என்று, உரையா நின்றாய்! அடிமையின் சிறந்தேன்’ என்னா, அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித், தொடுகழல் செம்பொன் மோலி, சென்னியில் சூட்டி நின்றான். 94 94. அயிர்ப்பொடு அச்சம் நீங்கி - ஐயமும் பயமும் ஒழிந்து. கழல் தொடு - பாதத்திலே அணிந்த. செம்பொன்மோலி - செம்பொன்னாற் செய்த பாதுகையாகிய கிரீடத்தை. வீடணனுக்கு வாழ்த்து திருவடி முடியில் சூடிச், செங்கதிர் உச்சி சேர்ந்த அருவரை என்ன நின்ற, அரக்கர்தம் அரசை நோக்கி, இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் உற்றார்; பொருவரும் அமரர் வாழ்த்திப் பூமழை பொழிவது ஆனார். 95 95. செங்கதிர் உச்சி சேர்ந்த - சூரியன் உச்சியிலே சேரப் பெற்ற. அருவரை என்ன - பெரிய மலைபோல. `மொழிந்தசொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினில் முறைமை நீங்கி இழிந்தஎன் மரபும் இன்றே உயர்ந்தது;என்ற இடரில் தீர்ந்தான் செழுந்தனி மலரோன்; பின்னை, `இராவணன் தீமைச் செல்வம் அழிந்தது’என்று, அறனும் தன்வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே. 96 96. செழும்தனி மலரோன் - நான்முகன். முறைமை நீங்கி - நீதி தவறி. இழிந்த - தாழ்வடைந்த. மரபு - வழி; பரம்பரை. ஆவலம் - ஆரவாரம். இன்னதோர் செவ்வித் தாக, இராமனும், `இலங்கை வேந்தன் தன்நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்பப், பன்னெடும் தானை சூழப், பகலவன் சேயும் நீயும் `மன்னெடும் குமர! பாடி வீட்டினை வலஞ்செய்’ கென்றான். 97 97. இன்னது ஓர் செவ்வித்து ஆக - இத்தகைய ஒரு சமயம் நேர்ந்த போது. பாடி வீட்டினை - படைகள் தங்கியிருக்கும் இடத்தை. என்றான் - என்று இலக்குவனிடம் உரைத்தான். வீடணன் ஊர்வலம் வருதல் அந்தம்இல் குணத்தி னானை, அடியினை முடியி னோடும், சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க, `இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன்’என்று ஏத்தி, மந்தரத் தடந்தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை. 98 98. குணத்தினானை - வீடணனை. அடியிணை முடியினோடும் - பாதுகை களாகிய முடியுடன். பாடி வைப்பை - படை வீட்டை. மந்திரத் தடந்தோள் வீரர் - மந்திரமலைபோன்ற பெரிய தோள்களையுடைய வானர வீரர்கள். `இற்றைநாள் அளவும் யாரும், இருடிகள், இமையோர், ஞானம் முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து நின்றார், மற்றும்மா தவரும் எல்லாம். வாள்எயிற்று இலங்கை வேந்தன் பெற்றதுஆர் பெற்றார்?’ என்று வியந்தனர் பெரியோர் எல்லாம். 99 99. ஞானம் முற்றினார் - அறிவு முதிர்ந்தோர். வாள் எயிற்று இலங்கை வேந்தன் - கூர்மையான பற்களையுடைய இலங்கை மன்னனாகிய வீடணன். 5. இலங்கைக் கேள்விப் படலம் சூரியன் மறைவு வந்துஅடி வணங்கிய நிருதர் மன்னவற்கு, அந்தம்இ லாததுஓர் உறையுள் அவ்வழி தந்தனன் விடுத்தபின், இரவி தன்கதிர் `சிந்தின வெய்ய’என்று எண்ணித் தீர்ந்தனன். 1 இலங்கைக் கேள்விப் படலம்: இராமன் இலங்கையின் இயல்பைப்பற்றி வீடணனிடம் கேட்டறிதலைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. அந்தம் இலாதது - அழிவில்லாததாகிய. உறையுள் - தங்கும் இடம். சிந்தின வெய்ய - சிதறின தீமைகள்; (தீமைகள் ஒழிந்தன). `என்று எண்ணி இரவி தன்கதிர் தீர்ந்தனன்’. இரவி - சூரியன். அந்திமாலைத் தோற்றம் சந்திவந் தனைத்தொழில் முடித்துத், தன்னுடைப் புந்திநொந்து, இராமனும் உயிர்ப்பப், பூங்கணை சிந்திவந்து இறுத்தனன் மதனன்; தீநிறத்து அந்திவந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2 2. தன்னுடைப் புந்தி - தனது மனம். உயிர்ப்ப - பெருமூச்சுவிட. இறுத்தனன் - தங்கினன். தீ நிறத்து - தீப்போன்ற நிறத்தையுடைய. அண்டம் கறுத்தது. விண் மீன் தோற்றம் மாத்தடம் திசைதொறும் மறைந்த வல்இருள், கோத்தது, கரும்கடல் கொள்ளை கொண்டுஎன; நீத்தநீர்ப் பொய்கையின் நிறைந்த நாண்மலர் பூத்துஎன, மீன்குலம் பொலிந்தது அண்டமே. 3 3. மாதடம் - பெரிய அகன்ற. கோத்தது - ஒன்று சேர்ந்தது. கருங்கடல் - பெரிய கடலை. கொள்ளை கொண்டுஎன - வாரிக்கொண்டது என்று சொல்லும்படி. நீத்த நீர் - வெள்ளமாகிய நீர் நிறைந்த. மீன் குலம் - நட்சத்திரக் கூட்டம். சந்திரன் தோற்றம் ஒன்றும்உள் கறுப்பினோடு, ஒளியின் வாள்உரீஇத் தன்தனி முகத்தினால் என்னைத் தாழ்த்தற, வென்றவள் துணைவனை `இன்று வெல்குவேன் என்றது போலவந்து எழுந்தது இந்துவே. 4 4. ஒன்றும் உள்; உள் ஒன்றும் - உள்ளே பொருந்திய. ஒளியின் வாள் உரீஇ - ஒளியினை உடைய வாள்போன்ற கண்களைத் தரித்து. தாழ்த்தற - தோற்று ஓடும்படி. வென்றவள் - சீதை. இந்து - சந்திரன். மன்மதன் அம்பும் நிலவும் கரத்தொடும் பாழிமாக் கடல்க டைந்துளான் உரத்தொடும், கரனொடும் உயர ஓங்கிய மரத்தொடும் தொளைத்தவன், மார்பில், மன்மதன் சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரைவாள். 5 5. கரத்தொடும் - கையினால். பாழி மாக்கடல் - வலிமையுள்ள பெரிய கடலை. கடைந்துளான் உரத்தொடும் - கடைந்தவனாகிய வாலியின் மார்பினோடும். மரத்தொடும் - மராமரத்தொடும். இராமன் துயரம் உடலினை நோக்கும்,இன் உயிரை நோக்கும்;ஆல், இடரினை நோக்கும்;மற்று யாதும் நோக்கலன்; கடலினை நோக்கும்;அக் கள்வன் வைகுறும் திடரினை நோக்கும்;தன் சிலையை நோக்கும்;ஆல். 6 6. அக்கள்வன் வைகுறும் - அக்கள்வனாகிய இராவணன் வாழும். திடரினை - திட்டாகிய இலங்கையை. சுக்கிரீவன் தேறுதல் மொழி ஆயதோர் அளவையின் அருக்கன் மைந்தன்`நீ தேய்வதுஎன்? காரியம் நிரப்பும் சிந்தையை; மேயவன் தன்னொடும் எண்ணி, மேல்இனித் தூயது நினைக்கிலை!’ என்னச் சொல்லினான். 7 7. ஆயது ஓர் அளவையின்- அச்சமயத்தில். நிரப்பும் சிந்தையை நீ தேய்வது என் காரியம் - எண்ணியதை முடிக்கும் மனம் உள்ள நீ வருந்துவது என்ன செய்கை. மேயவன் - வந்தவனாகிய வீடணன். தூயது - செய்ய வேண்டிய நன்மையை. வீடணனை அழைத்தல் அவ்வழி உணர்வுவந்து அயர்வு நீங்கினான், `செவ்வழி அறிஞனைக் கொணர்மின்!’ என்றனன்; `இவ்வழி வருதி,’என்று இயம்பஎய்தினான் வெவ்வழி விலங்கிநல் நெறியை மேவினான். 8 8. செவ்வழி அறிஞனை- நல்வழியை உணர்ந்த வீடணனை. வெவ்வழி விலங்கி - தீ நெறியிலிருந்து விலகி. மருக்கிளர் தாமரை வாச நாள்மலர் நெருக்கிடு தடம்என, இருந்த நீதியான், திருக்கிளர் தாமரை பணிந்த செம்மலை, `இருக்கஈண்டு எழுந்து’என இருந்த காலையில். 9 9. நெருக்கிடு - நெருக்கியிருக்கின்ற. தடம் என - தடாகம் போல். இராமன் உடம்பு தடாகம்; அவன் கை, கால், கண், வாய்கள் தாமரை மலர்கள். நீதியான் - இராமன். செம்மலை - வீடணனை. இலங்கையின் அமைப்பு யாது? `ஆர்கலி இலங்கையின் அரணும், அவ்வழி வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும், தார்கெழு தானையின் அளவும், தன்மையும், நீர்கெழு தன்மையாய் நிகழ்த்து வாய்’என்றான். 10 10. நீர் கெழு தன்மையாய் - நற்பண்புகள் நிறைந்த சிறந்த வீடணனே. வார் கெழு கனைகழல் - நீளமான ஒலிக்கின்ற வீர கண்டாமணியை அணிந்த. அரக்கன் - இராவணன். இலங்கையைப்பற்றி வீடணன் உரைத்தல் `மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும், இரும்கடி அரணமும், பிறவும், எண்ணினால் சுருங்கிடும், என்பல, சொல்லி? சுற்றிய கரும்கடல் அகழ்அது; நீரும் காண்டிரால்.’ 11 11. மருங்குடை - பக்கங்களில் உள்ள. வினையமும் - சூழ்ச்சிகளும். பொறியின் - இயந்திரங்களின். இரும் கடி - வலிய காவல் பொருந்திய. அரணமும் - பாதுகாவலும். சுருங்கிடும் - குறைந்துபோகும். `அன்றியும், அவன்அகன் கோயில் ஆய்மணி முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின், ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார், குன்றினும் வலியவர், கோடி கோடி;ஆல்.’ 12 12. கோயில் - அரண்மனையின், ஆய்மணி முன்றிலின் - சிறந்த மணிகளால் ஆகிய வாயிலில். முறைமை - நிலைமையை. `தேர்பதி னாயிரம் பதுமம்; செம்முகக் கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால்வயத்து ஊர்பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம் தார்வரு புரவியின் இரட்டி சாலுமே.’ 13 13. கார் வரை - கரிய மலைபோன்ற யானைகள், இரட்டி சாலும் - இரட்டிப்பாக நிறைந்திருக்கும். `பேயனேன் என்பல பிதற்றிப்; பேர்த்துஅவன் மாயிரு ஞாலத்து வைத்த மாப்படை, தேயினும், நாள்எலாம் தேய்க்க வேண்டுவது ஆயிர வெள்ளம்,என்று அறிந்தது ஆழியாய்!’ 14 14. பேர்த்து - பலவிடங்களிலிருந்தும் கொண்டுவந்து. மாப்படை - பெரிய படை. `இலங்கையின் அரண்இது; படையின் எண்இது; வலங்கையில் வாள்சிவன் கொடுக்க வாங்கிய அலங்கல்அம் தோளவன் துணைவர், அந்தம்இல் வலங்களும், வரங்களும், தவத்தின் வாய்த்தவர். 15 15. -. இவ்வாறு கூறி, மற்றும் இராவணன் படைத் தலைவர்கள். அவர்களுக்கடங்கிய படைகளின் எண்ணிக்கை; இந்திரசித்துவின் ஆற்றல், அதிகாயன் வல்லமை இவை களையும் எடுத்துரைத் தான். இராவணனுடைய ஏனைய புதல்வர்களான தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா என்பவர்களின் வீரத்தையும் விளம்பி இராவணன் பெருமையையும் கூறுகின்றான். `என்று உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும் குன்று உலப்பினும் உலப்புஇலாத் தோளினான், கொற்றம் இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சிலநாள் சென்று உலப்பினும் நினக்குஅன்றிப் பிறர்க்குஎன்றும் தீரான்.’ 16 16. தோளினான் கொற்றம் - தோளையுடைய இராவணனுடைய வெற்றியை. என்று உலப்புறச் சொல்லுகேன் - என்று தான் முழுவதும் சொல்லி முடிப்பேன். உலப்பினும - அழியினும். நினக்கன்றி - உன்னால் அழிககப்படுவானே அல்லாமல். பிறர்க்கு என்றும் தீரான் - பிறரால் என்றும் அழிக்கப்படமாட்டான். அனுமான் ஆற்றலை அறிவித்தல் `ஈடு பட்டவர் எண்ணிலர்; தோரணத்து எழுவால் பாடு பட்டவர் படுகடல் மணலினும் பலர்;ஆல்; சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி துரந்த ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.’ 17 17. ஈடு பட்டவர் - போரிலே ஈடுபட்டவர். தோரணத்து எழுவால் - தோரண வாசலின் தூணால். பாடுபட்டவன் - துன்புற்றவர். துரந்த - விரட்டப்பட்ட. `எம்கு லத்தவர் எண்பதி னாயிரர் இறைவர் கிங்க ரப்பெயர் கிரிஅன்ன தோற்றத்தர் கிளர்ந்தார்; வெம்க ரத்தினும், காலினும், வாலினும் வீக்கச் சங்க ரற்குஅழி முப்புரத் தவர்எனச் சமைந்தார்.’ 18 18. கிளர்ந்தார் - ஊக்கமுடன் போருக்கெழுந்தார். வீக்க - கட்டி அடித்தலால். சமைந்தார் - அழிந்து போனார்கள். `சேனைக் காவலர் ஓர்ஐவர் உளர்;பண்டு தேவர் வானைக், காவலும், மானமும் மாற்றிய மறவர்; தானைக் கார்வரும் கடலொடும், தமரொடும், தாமும் யானைக் கால்பட்ட செல்லென ஒல்லையின் அவிந்தார்,’ 19 19. உளர் - இருந்தனர். தேவர் வானை - தேவலோகத்தை. தானை - சேனையாகிய. கார் வரும் கடலொடும் - கருமை பொருந்திய கடலோடும். ஐவர்: விரூபாட்சன், யூபாட்சன், துர்த்தர்டன், பிரகசன், பாச கர்ணன் என்பவர்கள். `வெம்பு மாகடல் சேனைகொண்டு எதிர்பொர வெகுண்டான் அம்பும் ஆயிரத்து ஆயிரம், இவன்புயத்து அழுத்தி, உம்பர் வானகத்து ஒருதனி நமனைச்சென்று உற்றான், சம்பு மாலியும், வில்லினால் சுருக்குண்டு தலைவ.’ 20 20. வெம்பு மா கடல் - கொதிக்கின்ற பெரிய கடல்போன்ற. பொர - போர் செய்ய. வெகுண்டான் - சினந்தெழுந்தான். `காந்தும் ஆனையின் கரன்முதல் வீரரும், கவியின் வேந்தும், என்றிவர் விளிந்தவா கேட்டன்று; இலங்கை தீந்த வாகண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப் போந்த வாகண்டும், நான்,இங்குப் புகுந்தது புகழோய்.’ 21 21. காந்தும் ஆனையின் - சினம் கொள்ளும் யானைபோன்ற. கவியின் வேந்தும் - வாலியும். கேட்டன்று - கேட்டதனால் மட்டும் அன்று. இராமன் மாருதியைப் புகழ்தல் `கூட்டி னார்படை பாகத்தின் மேல்படக் கொன்றாய்! ஊட்டி னாய்எரி ஊர்முற்றும்; இனிஅங்கொன்று உண்டோ? கேட்ட வாற்றினால் கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும் மீட்டி லாதது,என் வில்தொழில் காட்டவோ? வீர!’ 22 22. கூட்டினார் படை - போர் செய்வதற்காகச் சேர்ந்தவர் களின் படையை. பாகத்தின் மேல் பட - பாதிக்குமேல் அழியும்படி. `என்னது ஆக்கிய வலியொடு,அவ் இராவணன் வலியும் உன்னது ஆக்கினை, பாக்கியம் உருக்கொண்டது ஒப்பாய்! முன்னது ஆக்கிய மூவுலகு ஆக்கிய முதலோன் பின்னது ஆக்கிய பதம்நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.’ 23 23. என்னது ஆக்கிய வலியொடு - என்னுடைய வலிமையுடன். முதலோன் - பிரமனுக்கு. பின்னது ஆக்கிய - பின் பெறுவதற்காக உண்டாக்கிய. பதம் - பதவியை. அனுமான் அடக்கம் என்று கூறலும், எழுந்துஇரு நிலன்உற இறைஞ்சி, ஒன்றும் பேசலன், நாணினன், வணங்கிய உரவோன்; நின்ற வானரத் தலைவரும், அரசும்,அந் நெடியோன் வென்றி கேட்டலும் வீடுபெற் றார்என வியந்தார். 24 24. எழுந்து - அனுமான் எழுந்திருந்து. வணங்கிய உரவோன் - வணங்கிய வலிமையுள்ள மாருதி. `நிலன்உற இறைஞ்சி வணங்கிய வரவோன் ஒன்றும் பேசலன் நாணினன்.’ நெடியோன் - அனுமான். 6. வருணனை வழி வேண்டு படலம் `நமது சேனை கடலைக் கடக்க வேண்டும்; இதற்காக வருணனை வேண்டுக’ என்றான் வீடணன். இராமன், கடற்கரையிலே, தர்ப்பைப் புல்லிலே, படுத்து வருண மந்திரத்தை உருப்போட்டான். ஏழு நாட்கள் உருப்போட்டும் வருணன் வந்திலன். அதனால் இராமன் சினமுற்றான். இராமன் கோபித்துக் கூறியவை `ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர்பால் ஒருவர் சென்று வேண்டுவ ரேல்,அவர் சிறுமையில் தீரார்; இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான் நன்று! நன்று!`என நகையொடும் புகைஉக நக்கான். 1 வருணனை வழிவேண்டு படலம்: இராமன் வருணனை நோக்கி, கடலைக் கடப்பதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் படி வேண்டியதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. வேண்டலர் ஆயினும் - தேவையில்லாதவர்களானாலும். வேண்டுவரேல் - ஏதேனும் ஒன்றை விரும்புவாராயின். சிறுமையில் தீரார் - இழிவிலிருந்து நீங்காதவராவர். எறிகடல் - அலைவீசுகின்ற கடலிலே. நெறிதனை - வழியை. புகைஉக - கோபப் புகை போன்ற. `பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்iமையன், ஆதலின், `தகைசால் வீரம் நீங்கிய மனிதன்’என்று இகழ்ச்சிமேல் விளைய ஈரம் நீங்கியது எறிகடல் ஆம்;’என இசைத்தான். 2 2. பாரம் நீங்கிய - வலிமையற்ற. தகைசால் - பெருமை நிறைந்த. மேல் வினைய - மிகுதியாகத் தோன்ற. ஈரம் நீங்கியது - இரக்கம் தவிர்ந்தது. `கானி டைப்புகுந்து, இரும்கனி, காயொடு நுகர்ந்த ஊன்உ டைப்பொறை உடம்பினன் என்றுகொண்டு உணர்ந்து மீன்உ டைக்கடல் பெருமையும், வில்லொடு நின்ற மானு டச்சிறு தன்மையும், காண்பர் ஆல் வானோர்.’ 3 3. என்று கொண்டு - என்று எண்ணிக்கொண்டு. உணர்ந்த - தன்னைப் பெரியவனாக எண்ணிக்கொண்டிருக்கின்ற. `மறுமை கண்டமெஞ் ஞானியர் ஞாலத்து வரினும், வெறுமை கண்டபின், யாவரும் யாவதும் விரும்பார் குறுமை கண்டவர் கொழும்கனல் என்னினும் கூசார், சிறுமை கண்டவர் பெருமைகண்டு அல்லது தேறார்.’ 4 4. வெறுமை கண்டபின் - அவரிடம் ஒன்றும் இல்லையென்று அறிந்த பின். குறுமை கண்டவர் - தோற்றத்தில் சிறியவராகக் காணப்பட்டவர். கனல் என்னினும் - தீப்போன்றவர் ஆயினும். சிறுமை கண்டவர் - இழிவைக் கண்களால் பார்த்தவர். தேறார் - தெளிவடைய மாட்டார். கடலின்மேல் அம்பெய்தலும், கடல் பட்ட பாடும் இராமன், இலக்குவன் கையில் இருந்த வில்லை வாங்கி நாணேற்றிக் கணை தொடுத்துக் கடல் நீரைப் பருகும்படி ஏவினான். மொய்த்த மீன்குலம் முதல்அற முருங்கின, மொழியின் பொய்த்த சான்றவன் குலம்எனப் பொருகணை எரிய; உய்த்த கூம்பொடு நெடும்கலம் ஓடுவ கடுப்பத், தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம். 5 5. பொரு கணை எரிய - போர்செய்யும் அம்புகளால் எரிந்ததனால். `மொழியில் பொய்த்த சான்றவன் குலம் என மொய்த்த மீன்குலம் முதலற முருங்கின’. முருங்கின - அழிந்தன. உய்த்த கூம்பொடு - செலுத்திய பாய்மரத்துடன். தாலமீன் சாலம் - தாலமீன்களின் கூட்டம். தாலமீன் - ஒருவகை மீன். சிந்தி ஓடிய குருதி,வெம் கனலொடு செறிய அந்தி வானகம் கடுத்ததுஅவ் அளப்பரும் அளக்கர்; பந்தி பந்திக ளாய்,நெடும் கடும்கணை படர வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சிலமீன். 6 6. குருதி - இரத்தம். வெம்கனலொடு செறிய - கொடிய அம்புகளாகிய நெருப்புடன் கலந்து. படர - பரந்ததனால். தெய்வ நாயகன் தெரிகணை, திசைமுகத்து ஒருவன் வைவு இதாம்எனப் பிழைப்பில; மனத்தினும் கடுக, வெய்ய வன்னெருப்பு இடையிடை பொறித்தெழ, வெறிநீர்ப் பொய்கை, தாமரை பூத்துஎனப், பொலிந்தது புணரி. 7 7. வைவு இதுஆம் என - சாபம் இது என்று சொல்லும்படி. பிழைப்பு இல - தவறாவாயின. பொறித்து எழ - பொறிகளைச் சிந்த. வெறிநீர்ப் பொய்கை - மணமுள்ள நீர்த் தடாகத்திலே. கடல் தாமரை பூத்த தடாகம் போல் காணப்பட்டது. செப்பின், மேலவர் சீறினும் அது,சிறப் பாதல் தப்பு மோஅது கண்டனம், உவரியில்; தணியா உப்பு வேலைஎன்று உலகுறு பெரும்பழி நீங்கி, அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ அளக்கர்? 8 8. அது - அதனால். சிறப்பு ஆதல் - பெருமையுண்டாவது. தப்புமே - தவறுமோ? அப்புவேலையாய் - அம்புக் கடலாய். அம்பு; அப்பு. தாரை உண்டபேர் அண்டங்கள் அடங்கலும், தானே வாரி உண்டு,அருள் செய்தவர்க்கு, இதுஒரு வலியோ? `பாரை உண்பது படர்புனல்; அப்பெரும் பரவை நீரை உண்பது நெருப்பு;’எனும், அப்பொருள் நிறுத்தான். 9 9. தாரையுண்ட - ஒழுங்காக அமைந்த. வலியோ - வலிமையான செயலோ? பாரை - உலகத்தை. பரவை நீரை - கடலை. நிறுத்தான். நிலைநாட்டினான். வேறு மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் கங்குலும், பகலும்,அக் கடலுள் வைகுவார்; அங்கம்வெந் திலர்அவன் அடிகள் எண்ணலால்; பொங்குவெம் கனல்எனும் புனலில் போயினார். 10 10. -. தாம்நெடும் தீதைகள் உடைய தன்மையார், மாநெடும் கடலிடை மறைந்து வைகுவார்; தூநெடும் குருதிவேல் அவுணர் துஞ்சினார்; மீன்நெடும் குலம்என மிதந்து வீங்கினார். 11 11. தூ நெடும் - மாமிசத்தை உடைய நீண்ட. குருதி வேல் அவுணர் - இரத்தம் படிந்த வேலையுடைய அரக்கர்கள். செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ, நெறி உறு செலவின, தவத்தின் நீண்டன, உறுசினம் உறப்பல உருவு கொண்டன, குறுமுனி எனக்கடல் குடித்த கூர்ங்கணை 12 12. கூர்ங்கணை - கூர்மையான அம்புகள். செறிவுறு - மிகுந்த. நெறி உறு - விட்ட நெறியிலே சேர்கின்ற. உறுசினம் உற - மிகுந்த சினம் பொருந்த. குறுமுனி - அகத்தியர். மோதல்அம் கனைகடல் முருக்கும் தீயினால் பூதலம் காவொடும் எரிந்த; பொன்மதில் வேதலும் இலங்கையும் மீளப் போயின தூதன்வந் தான்எனத் துணுக்கம் கொண்டதால். 13 13. -. காலவான் கடுங்கனல் சுற்றும் கவ்வலால், நீலவான் துகிலினை நீக்கிப், பூநிறக் கோலவான் கழி,நெடும் கூறை சுற்றினாள் போல,மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். 14 14. காலவான் கடும் கனல் - காலனைப் போன்ற கொடிய தீ. பூ நிற - சிவந்த நிறத்தைக்கொண்ட. கோல - அழகிய. வான்கழி நெடும் கூறை - மிகவும் நீண்ட சேலையை. சுற்றினாள்போல - கட்டிக்கொண்டவளைப்போல. வருணன் வராதது கண்ட இராமன் சதுமுகன் படையை ஏவினான் மழைக்குலம் கதறின; வருணன் வாய்உலர்ந்து அழைத்தனன்; உலகினில் அடைத்த ஆறெலாம்; இழைத்தன, நெடும்திசை யாதும் யாவரும் பிழைப்பிலர் என்பதுஓர் பெரும்ப யத்தினால். 15 15. `உலகினில் ஆறெலாம் அடைந்த’. அடைந்த - தூர்ந்துபோயின. நெடும் திசை யாதும் - நீண்ட திசைகள் எல்லாம். பெரும் பயத்தினால் இழைத்தன - பெரிய பயத்துடன் ஆலோசனை செய்தன. வருணன் அடைக்கலம் புகுதல் இரக்கம்வந்து எதிர்ந்த காலத்து, உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும்நா யகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் கண்டும் வரக்கரு தாது தாழ்த்த வருணனின், மாறு கொண்டார் அரக்கரே அல்லர்;என்னா அறிஞரும் அல்லர் உற்றார். 16 16. காக்கும் - தன் வயிற்றுள் ஒளிக்கும். தானும் - வருணன் தானும். வருணனின் - வருணனைப்போல. அரக்கரே - அரக்கர்கள்தாம். அல்லர் - வேறு ஒருவரும் இல்லை. 7. வருணன் அடைக்கலப் படலம் வருணன் வருதல் `நீஎனை நினைந்த தன்மை, நெடும்கடல் முடிவில் நின்றேன் ஆயினேன் அறிந்தி லேன்’என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க, காய்எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத் தூடே தீயிடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான். 1 வருணன் அடைக்கலப் படலம்: வருணன், இராமனிடம் அடைக்கலம் புகுவதைக் கூறும் பகுதி. 1. அயிர்ப்பு நீங்க - சினம் நீங்கும்படி. காய் எரிப் படலை - காய்கின்ற தீப்படலம். தரங்கம் - அலை. வந்தனன் என்ப மன்னோ மறிகடற்கு இறைவன் வாயில் சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த நெஞ்சன், வெந்துஅழிந்து உருகும் மெய்யன், விழுப்புகைப் படலம் விம்ம, அந்தரின் அலமந்து அஞ்சித், துயர்உழந்து, அலக்கண் உற்றான். 2 2. விழுப்புகைப் படலம் - மிகுந்த புகைக் கூட்டம். விம்ம - சூழ்ந்ததனால். அந்தரின் - குருடரைப்போலத் தடுமாறிக் கொண்டு. அலக்கண் - துன்பம். `நவையறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின் கவையம்,நின் சரணம் அல்லால் பிறிதுஒன்று கண்டது உண்டோ? இவைஉனக்கு அரிய வோதான்! எனக்கென வலிவே றுண்டோ? அவையம்!நின் அவையம்!’ என்னா அடுத்தடுத்து அரற்று கின்றான். 3 3. கவையம் - பாதுகாவல். நின் சரணம் அல்லால் - உன்னுடைய பாதமே அல்லாமல். `ஆழிநீ! அனலும் நீயே! அல்லவை எல்லாம் நீயே! ஊழிநீ! உலகும் நீயே அவற்றுறை உயிரும் நீயே! வாழியாய்! அடியேன் உன்னை மறப்பனோ? வயங்கு செந்தீச் சூழ்உற உலைந்து போனேன்; காத்தருள் சுருதி மூர்த்தி!’ 4 4. வயங்கு செந்தீச் சூழ்உற - விளங்குகின்ற செந்தீச் சுற்றிக்கொண்ட தால். உலைந்து போனேன் - வருந்தினேன். `அன்னைநீ! அத்தன் நீயே! அல்லவை எல்லாம் நீயே! பின்னும்நீ! முன்னும் நீயே! பேறும்நீ! இழவும் நீயே! என்னை,நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே! ஈசன் ஆய உன்னைநீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை. 5 5. என்னை நீ இகழ்ந்தது என்றது - என்னை நீ இகழ்ந்தாய் என்று கோபித்தது. எங்ஙனே - எப்படிப் பொருந்தும். பாயிருள் சீக்கும் தெய்வப் பரிதியைப் பழிக்கும் மாலை, மாயிரும் கரத்தான், மண்மேல், அடியுறை யாக வைத்துத், `தீயன சிறியோர் செய்தால், பொறுப்பதே பெரியோர் செய்கை; ஆயிரம் நாமத்து ஐயா! சரணம்!’என்று அடியில் வீழ்ந்தான். 6 6. பாய் இருள் சீக்கும் - பரவிய இருளைக் கிழிக்கின்ற. தெய்வப் பருதியைப் பழிக்கும். தெய்வத்தன்மை அமைந்த சூரியனையும் பழிக்கத்தக்க ஒளிபொருந்திய. மாலை - முத்துமாலை ஒன்றை. மாயிரும் கரத்தான் - மிக நீண்ட கைகளையுடைய வருணன். அடியுறையாக - காணிக்கைப் பொருளாக. பருப்பதம் வேவது என்னப், படர்ஒளி படரா நின்ற உருப்பெறக் காட்டி நின்று `நான்உனக்கு அபயம்’என்ன அருப்பறப் பிறந்த கோபம் ஆறினான்; ஆறா ஆற்றல் நெருப்புறப் பொங்கும் வெம்பால் நீர்உற்றது அன்ன நீரான். 7 7. பருப்பதம் - மலை. உருப்பெறக் காட்டிநின்ற - உருவம் காணப்படும்படி காட்டிநின்று. என்ன - என்று வருணன் கூற. பிறந்த கோபம் அருப்பு அற - தோன்றிய சினம் சிறிதும் இல்லாமல். ஆறா ஆற்றல் - தணியாத வல்லமையுள்ள. நெருப்பு உற - நெருப்பிலே இருந்ததனால். `ஆறினாம்! அஞ்சல்! உன்பால் அளித்தனம் அபயம்! அன்பால் ஈறிலா வணக்கம் செய்து,யாம் இரந்திட எய்தி டாதே சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவ தாகக் கூறுதி அறிய’ என்றான்; வருணனும் தொழுது கூறும். 8 8. சீறும் ஆ கண்டு - கோபிக்கும் அச்செயலைக் கண்டு. வந்த திறத்தினை - ஓடிவந்த தன்மையை. வருணன் வரத்தாழ்த்தமைக்குக் காரணம் கூறல் `பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால் வந்தி லேன்நான்; தீர்த்தநின் ஆணை! ஏழாம் செறிதிரைக் கடலில் மீனின் போர்த்தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன் புகுந்ததுஒன்றும்.’ 9 9. பார் தனில் - உலகிலே. தேவர் பால் - தேவராகிய உமது பக்கம். தீர்த்த - பரிசுத்தமானவனே. இராமன் என் அம்புக்கு இலக்கம் யாது எனலும், வருணன் கூறலும் என்றலும் இறங்கி ஐயன் `இத்திறம் நிற்க இந்தப் பொன்றல்இல் பகழிக்கு அப்பால் இலக்கம்என் புகறி!’என்ன; நன்றென வருணன் `யானும், உலகத்து நலிவு தீரக் குன்றுஎன உயர்ந்த தோளாய்! கூறுவல்’ என்று கூறும். 10 10. பொன்றல் இல் - அழியாத. இலக்கம் - குறி. புகறி - சொல்லுக. நலிவு தீர - துன்பம் ஒழியும்படி. `மன்னவ! மருகாந் தாரம் என்பதோர் தீவின் வாழ்வார், அன்னவர் சதகோ டிக்கு மேல்உளார், அவுணர் ஆயோர், தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்; மின்உமிழ் கணையை, வெய்யோர் மேற்செல விடுதி!’ என்றான். 11 11. சத கோடிக்கு மேல் - நூறு கோடிக்கு மேல். தீந்தன - அழிந்தன. மின் உமிழ் - ஒளியைச் சிந்துகின்ற. நேடிநூல் தெரிந்து ளோர்க்கும், உணர்விற்கும், நிமிர நின்றான். `கோடிநூ றாய தீய அவுணரைக் குலங்க ளோடும் ஓடிநூ று;’என்று விட்டான்; ஓர்இமை ஒடுங்கா முன்னம் பாடிநூ றாகநூறி, மீண்டதுஅப் பகழித் தெய்வம். 12 12. நேடி - ஆராய்ந்து. ஓடி நூறு - சென்று கொல்லுக. பாடி - அவர்கள் தங்கியிருந்த படை வீட்டை. நூறாக நூறி - பொடியாக அழித்து. ஆய்வினை யுடையர் ஆகி, அறம்பிழை யாதார்க் கெல்லாம், ஏய்வன நலனே அன்றி, இறுதிவந்து இயைவது உண்டோ? மாய்வினை இயற்றி முற்றும், வருணன்மேல் வந்த சீற்றம் தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே. 13 13. ஆய்வினை - ஆராய்ச்சியை. இறுதி - அழிவு. மாய்வினை இயற்றி முற்றும் - இறக்கும்படி செய்து முடிப்பதற்காக. பாபமே இயற்றி னாரைப், பன்னெடும் காதம் ஓடித், தூபமே பெருகும் வண்ணம், எரிஎழச் சுட்டது அன்றே; தீபமே அனைய, ஞானத் திருமறை முனிவர் செப்பும் சாபமே ஒத்தது அம்பு; தருமமே வலியது; அம்மா. 14 14. தூபமே பெருகும் வண்ணம் - புகை மிகும்படி. முனிவன் செப்பும் - முனிவன் மொழியும். இராமன் வருணனிடம் வழி வேண்டுதல் `மொழிஉனக்கு அபயம் என்றாய், ஆதலால் முனிவு தீர்ந்தேன்; பழிஎனக்கு ஆகும் என்று, பாதகர், பரவை என்னும் குழியினைக் கருதிச் செய்த, குமண்டையைக் குறித்து நீங்க, வழியினைத் தருதி’ என்றான் வருணனை நோக்கி வள்ளல். 15 15. எனக்குப் பழிஆகும் என்று - எனக்குத் தீங்கு உண்டாகும் என்று. குமண்டையை - குற்றத்தை. குறித்து நீங்க - பார்த்துக் கடக்க. வருணன் சேது கட்டும்படி சொல்லுதல் கல்லென வலித்து நிற்பின், கணக்கில உயிர்கள் எல்லாம் ஒல்லையின் உலந்து வீயும்; இட்டதுஒன்று ஒழுகா வண்ணம் எல்லையில் காலம் எல்லாம் ஏந்துவென் எளிதின்; எந்தாய்! செல்லுதி சேது என்றுஒன்று இயற்றிஎன் சிரத்தின் மேலாய். 16 16. ஒழுகா வண்ணம் - நழுவாதபடி. சிரத்தின் மேலாய் - தலையின் மேல் இருக்கும்படி. சேது என்று - சேது என்று சொல்லப்படும். ஒன்று - அணை ஒன்றை. இவ்வாறுகூறி வருணன் விடை பெற்றுச் சென்றான். இராமனும் சேது என்னும் அணையைக் கட்டும்படி உத்தர விட்டான். 8. சேது பந்தனப் படலம் அளவறும் அறிஞரோடு, அரக்கர் கோமகற்கு இளவலும், இனிதுஉடன் இருக்க எண்ணியே, விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான்; `நளன்வரு’ கென்றனன் கவிக்கு நாயகன். 1 சேது பந்தனப் படலம்: இலங்கைக்குச் செல்வதற் காகக் கடலிலே சேதுவைக் கட்டிய வரலாற்றை எடுத்துரைக்கும் பகுதி. 1. அரக்கர் கோமகற்கு இளவல் - வீடணன். விளைவன - மேலே நிகழ்வதற்குச் செய்யவேண்டுவனவற்றை. நளன்: வானரத் தச்சன் பெயர். வந்தனன் வானரத் தச்சன், `மன்னநின் சிந்தனை என்’எனச் `செறிதி ரைக்கடல் பந்தனை செய்குதல், பணிந மக்கு’என நிந்தனை இலாதவன், செய்ய நேர்ந்தனன். 2 2. பந்தனை செய்குதல் - அணை கட்டுதல். பணி - கடமை. சாம்பன் உத்தரவு இளவலும், இறைவனும், இலங்கை வேந்தனும், அளவுஅறு நம்குலத்து அரசும், அல்லவர் வளைதரும் கருங்கடல் அடைக்க வம்எனத் தளம்மலி சேனையைச் சாம்பன் சாற்றினான். 3 3. வம் - வாருங்கள். தனம் மலி - படைவீட்டிலே நிறைந் திருந்த. வானரங்களின் பணி பேர்த்தன மலைசில, பேர்க்கப் பேர்க்கநின்று ஈர்த்தன சில;சில சென்னி ஏந்தின; தூர்த்தன சில;சில தூர்க்கத் தூர்க்கநின்று ஆர்த்தன; சில,சில ஆடிப் பாடின. 4 4. சில மலை பேர்த்தன - சில வானரங்கள் மலைகளைப் பெயர்த்தன. ஈர்த்தன - இழுத்தன. காலிடை ஒருமலை உருட்டிக், கைகளின் மேலிடை ஒருமலை வாங்கி, விண்தொடும் சூல்உடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய, வாலிடை ஒருமலை ஈர்த்து வந்த;ஆல். 5 5. காலிடை - காலினால். சூல் உடை - நீராகிய கருவை உடைய. மழைமுகில் சூழ்ந்து சுற்றிய - மழைபெய்யும் மேகம் நிறைந்திருந்த. ஒரு மலை வாலிடை ஈர்த்து வந்தவால் - ஒரு மலையை வாலினால் இழுத்துக்கொண்டு வந்தன. ஆல்: அசை. நளன் ஆற்றல் முடுக்கினன் தருகென, மூன்று கோடியர் எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு அடுக்கினன்; தன்வலி காட்டி, ஆழியை நடுக்கினன்; நளன்எனும் நவையின் நீங்கினான். 6 6. `நளன்எனும் நவையின் நீங்கினான்’. முடுக்கினன் - விரைவு படுத்தினான். மஞ்சினில் திகழ்தரும் மலையை, மாக்குரங்கு எஞ்சுறக் கடிதுஎடுத்து எறிய வே,நளன் விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில் தஞ்சம்என் றோர்களைத் தாங்கும் தன்மைபோல். 7 7. மாக்குரங்கு - பெரிய குரங்குகள். எஞ்சுற - மிகுதியாகச் சூழ்ந்து. வெண்ணெயில் சடையன் - வெண்ணெய் நல்லூரில் உள்ள சடையப்பன். அணை கட்டும் போது ஆழ்கடலின் தோற்றம் மண்உறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம், கண்நிறை பூவும், காயும், கனிகளும், பிறவும் கவ்வா வெண்ணிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன, மேல்மேல் உள்நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த. 8 8. மண்உற - மண்ணிலே பட. சேற்றுள் புக்கு - சேற்றுக்குள் புகுந்து. சுரிகின்ற - மறைகின்ற. மாலைக் குன்றம் - வரிசையான மலைகள். குன்றத்திற்கு உவமை உலோபர். வறியவர் என்ன - வறியவர்போல் நின்றன. மீன்களுக்கு உவமை வறியவர். கறங்கெனத் திரியும் வேகக் கவிக்குலம், கையின் வாங்கிப் பிறங்குஇரும் கடலில் பெய்த போழ்தத்தும், பெரிய பாந்தள் மறம்கிளர் மான யானை வயிற்றின வாக, வாய்சோர்ந்து உறங்கின; `கேடுற் றாலும் உணர்வரோ உணர்வு இலாதார்?’ 9 9. கறங்குஎன - காற்றாடிபோல. கவிக்குலம் - வானரக் கூட்டம். பாந்தள் - பாம்பு. யானை வயிற்றின ஆக - யானை தம் வயிற்றில் இருக்கவும். வாய் சோர்ந்து - வாயைப் பிளந்து கொண்டு. கூர்உடை எயிற்றுக் கோண்மாச் சுறவினம் எறிந்து கொல்லப் போர்உடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும் நீர்இடைத் தோற்ற அன்றே; `தம்நிலை நீங்கிற்று என்றால் ஆர்இடைத் தோலார் மேலோர்?’ அறிவிடை நோக்கின் அம்மா. 10 10. கூர்உடை எயிற்று - கூர்மையான பற்களைக்கொண்ட. கோண்மாசுறவு இனம் - வலிமையுள்ள விலங்கினமாகிய சுறாமீன்கள். அரி - சிங்கம். யாளிப்போது - சிங்கக் குட்டிகளும். ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும், ஒன்றோ, வள்ளியர் ஆயோர் செல்வம் மன்உயிர்க்கு உதவும் அன்றே; துள்ளின குதித்த, வானத்து உயர்வரைக் குவட்டில் தூங்கும் கள்ளினை நிறைய மாந்திக், கவியெனக் களித்த மீன்கள். 11 11. ஒள்ளிய உணர்வுகூட - சிறந்த அறிவோடு பொருந்தி. ஒன்றோ - உறுதியாக. வள்ளியர் - கொடுக்குந் தன்மையுள்ளவர். தூங்கும் கள்ளினை - தொங்கும் தேன் அடையில் உள்ள தேனை. கவிஎன - குரங்குகளைப்போல. வேறு வவ்வி லங்கு, வளர்த்தவர் மட்டுஅருள் செவ்வி லங்கல்இல் சிந்தையின் தீருமோ? `இவ்வி லங்கல்,வி டேம்’இனி, என்பபோல் எவ்வி லங்கும்வந்து எய்தின வேலையே. 12 12. வவ்விலங்கு - பிற உயிர்களைத் தின்னும் விலங்குகளும். செவ்விலங்கல்இல் சிந்தையின் - நன்மையை மறவாத சிந்தையி லிருந்து. அருள் தீருமோ - அருள் நீங்கிவிடுமோ. இவ்விலங்கல் - இந்த மலையை. புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்புளார் தலையின் மேல்வைத்த கையினர் சாற்றுவார், `மலையி லேம்,முற்றும் மாறுஇனி வாழ்வதுஓர் நிலையி லேம்;’என்று இலங்கை நெருங்குவார். 13 13. புலையின் வாழ்க்கை - இழிதொழிலையே வாழ்க்கை யாகக்கொண்ட. மாறு இனி - வேறு இனி. ஏய்ந்த தம்உடம்பு இட்ட உயிர்க்கிடம் ஆய்ந்து கொள்ளும் அறிஞரின், ஆழ்கடல் பாய்ந்து, பண்டுறை யும்மலைப் பாந்தள்கள், போந்த மாமலை யின்முழை புக்கவே. 14 14. உயிர் ஏய்ந்த தம் உடம்பு இட்டஇடம் - தம் உயிருக்குப் பொருந்திய தம் உடம்பை வைத்த இடத்தை. ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் - மீண்டும் தேடி அடையும் சித்தர்களைப்போல். போந்த மாமலையின் முழை - கடலிற் சேர்ந்த பெரிய மலைகளின் குகைகளிலே. புக்கவே - மீண்டும் புகுந்தன. பாம்புகளுக்குச் சித்தர்கள் உவமை. குமுதன் இட்ட குலவரை, கூத்தரின் திமிதம் இட்டுத் திரியும், திரைக்கடல் துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்; அமிதம் இன்னும் எழும்எனும் ஆசையால். 15 15. குல வரை - பெரிய மலையினால். திமிதம் இட்டு - ஓசையிட்டு. துமிதம் - துளி. வானவர் ஊர்புக - தேவலோகத்தில் சென்று தெறிக்க. எண்ணில் எண்கினம் இட்ட கிரிக்குலம், உண்ண உண்ணச்சென்று, ஒன்றினொடு ஒன்றுஉறச், சுண்ண நுண்பொடி ஆகித் தொலைந்தன; புண்ணி யம்பொருந் தாத முயற்சிபோல். 16 16. எண்கு இனம் - கரடிக் கூட்டம். உண்ண உண்ணச் சென்று - ஒன்றை ஒன்று விழுங்குவதுபோலச் சென்று. உற - மோத. சுண்ணம் நுண்பொடி - மிகுந்த பொடியாகி. ஆய்ந்து, நீளம் அரிது சுமந்தன, ஓய்ந்த கால, பசியின் உலந்தன; ஏந்து மால்வரை வைத்து,அவற்று ஈண்டுதேன் மாந்தி, மாந்தி, மறந்து துயின்ற;ஆல். 17 17. ஆய்ந்து - மலையைத் தேடி எடுத்து. நீளம் அரிது சுமந்தன - நீண்ட வழியிலே அருமையாகச் சுமந்து வந்த குரங்குகள். ஓய்ந்த கால - தளர்ந்த கால்களை உடையனவாகி. பசியின் உலந்தன - பசியினால் வருந்திய வைகள். ஏந்து - சுமந்த. போதல் செய்கு நரும்,புகு வார்களும் மாதி ரந்தொறும் வானர வீரர்கள், `சேது எத்துணை சென்றது?’என் பார்சிலர்; `பாதி சென்றது’ எனப்பகர் வார்சிலர். 18 18. மா திரந்தொறும் - திசைகள் தோறும். `போதல் செய்வார்களும் புகுவார்களும் ஆகிய வானர வீரர்கள்’ எத்துணை சென்றது - எவ்வளவு தூரம் கட்டப்பட்டது. நெடும்பல் மால்வரை தூர்த்து நெருக்கவும், துடும்பல் வேலை துளங்கியது இல்லை;ஆல் இடும்பை, எத்தனை யும்அடுத்து எய்தினும், குடும்பம் தாங்கும் குடிப்பிறந் தாரினே. 19 19. இடும்பை - துன்பம். அடுத்து - சேர்ந்து. துடும்பல் வேலை - ஓசையுள்ள கடல். பழும ரம்பறிக் கப்,பற வைக்குலம், தழுவி நின்றுஒரு வன்தனித் தாங்குவான் விழுத லும்புகல், வேற்றிடம் இன்மையால் அழுதுஅ ரற்றும் கிளைஎன ஆன;ஆல். 20 20. பழுமரம் - ஆலமரத்தை. விழுதலும் - இறந்ததும். புகல் - தங்குவதற்கு. கிளைஎன - உறவினரைப்போல. `பறவைக்குலம் கிளைஎன ஆன’. மூசு வண்டினம், மும்மத யானையின் ஆசை கொண்டன போல்தொடர்ந்து ஆடிய, ஓசை மாக்கடல் குன்றொடு ஒளித்தலும், வேசை மங்கையர் அன்புஎன, மீண்டவே. 21 21. மூசு வண்டினம் - மொய்த்த வண்டுகள். யானையின் - யானையின் பால். ஆடிய - பறந்து விளையாடின. நிலம் அரங்கிய வேரொடும் நேர்பறித்து அலம ரும்துயர் எய்திய ஆயினும், வலம ரங்களை விட்டில, மாசுஇலாக் குலம டந்தையர் என்னக் கொடிகளே. 22 22. நிலம் அரங்கிய - நிலத்திலே அழுந்திய. வல மரங்களை - வலிமையுள்ள மரங்களை. கொடிகளுக்குக் குலமடந்தையர் உவமை. ஓடும் ஒட்டரின், ஒன்றின்முன் ஒன்றுபோய்க் காடும், நாடும், மரங்களும், கற்களும், நாட நாட நளிர்கடல் வைப்பில்ஓர் பூடும் ஆகுதல் இல்லை,இப் பூமியில். 23 23. ஓடும் ஓட்டரின் - ஓடுகின்ற ஓட்டக்காரர்களைப்போல. நளிர் கடல் வைப்பில் - குளிர்ந்த கடலிடத்தில் சேர்க்க. நாட நாட - தேடத் தேட பூடும் ஆதல் இல்லை - ஓர் பூண்டும் காணப் படாமல் போயிற்று. உற்ற தால்அணை ஓங்கல் இலங்கையை முற்ற மூன்று பகல்இடை; முற்றவும் பெற்ற ஆர்ப்பு விசும்பு பிறந்ததால்; மற்றுஇவ் வானரம் பிறிதொரு வான்கொலோ! 24 24. மூன்றுபகல் இடை - மூன்று நாட்களில். `அணை ஓங்கல் இலங்கையை முற்ற உற்றது; ஆல்’. பெற்ற ஆர்ப்பு - அப்பொழுது வானரங்களால் செய்யப்பெற்ற ஆரவாரம். ஓங்கல் - மலை. நாடு கின்றதுஎன் வேறுஒன்று? `நாயகன் தோடு சேர்குழ லாள்துயர் நீக்குவான், ஓடும் என்முதுகு இட்டு’என ஓங்கிய, சேடன் என்னப், பொலிந்தது சேதுவே. 25 25. நீக்குவான் - நீக்கும் பொருட்டு. என் முதுகு இட்டு ஓடும் - என் முதுகில் அடிவைத்து ஓடுங்கள். என ஓங்கிய - என்று உயர்ந்திருக்கின்ற. சேடன் - ஆதீசேஷன். ஆன பேர்அணை அன்பின் அமைந்தபின், கான வாழ்க்கைக் கவிக்குல நாதனும், மான வேற்கை இலங்கையர் மன்னனும், ஏனை யோரும், இராமனை எய்தினார். 26 26. அன்பின் அமைந்தபின் - அன்பினால் உருவாகியபின். கவிக்குல நாதன் - சுக்கிரீவன். மானவேல்கை - சிறந்த வேலைக் கையிலேகொண்ட. 9. ஒற்றுக் கேள்விப் படலம் இராமனும் படைகளும் சேதுவைக் கடத்தல் நெற்றியின் அரக்கர்பதி செல்ல,நிறை நன்னூல் கற்றுணரும் மாருதி கடைக்குழை வரத்,தன் வெற்றிபுனை தம்பியொரு பின்புசெல, வீரப் பொன்திரள் புயக்கரு நிறக்களிறு போனான். 1 ஒற்றுக் கேள்விப் படலம்: இராவணன், தன் ஒற்றர் களின் மூலம் வானரப் படையைப்பற்றிக் கேட்டறியும் செய்தியைக் கூறும் பகுதி. 1. நெற்றியின் - முன் வரிசையில். அரக்கர் பதி - வீடணன். கடைக்குழை வர - படையின் பின்னிடத்திலே வர. கருநிறக்களிறு - இராமன். இரும்கவிகொள் சேனை,மணி ஆரம்இட றித்,தன் மருங்குவளர் தெண்திரை வயங்குபொழில் மான ஒருங்குநனி போயின உயர்ந்தகரை ஊடே; கருங்கடல் புகப்பெருகு காவிரி கடுப்ப. 2 2. மணிஆரம் இடறி - மணிகளும் சந்தனக்கட்டைகளும் காலில் தடுக்கும்படி. வயங்குபொழில - விளங்குகின்ற சோலை மருங்கு வளர் தெண்திரை மான - பக்கத்திலே உள்ள தெளிந்த அலைகளையுடைய கடலை ஒத்திருக்க. வானர சேனைக்குக் காவிரி உவமை. ஓதிய, குறிஞ்சிமுத லாயநிலம் உள்ள, கோதில அருந்துவன, கொள்ளையின் முகந்துற்று யாதும்ஒழி யாவகை சுமந்துகடல் எய்தப் போதலினும், அன்னபடை பொன்னிஎனல் ஆன. 3 3. நிலம் உள்ள - நிலத்தில் உள்ள. கோது இல அருந்துவன - நல்ல உணவுப் பொருள்களை. கொள்ளை முகந்துற்று - குவியலாக வாரிக்கொண்டு. அன்ன படை - அந்த வானரப்படை. இராமன் அக்கரையை அடைதல் பெருந்தவம் முயன்றுஅமரர் பெற்றிடும் வரத்தால், மருந்துஅனைய தம்பியொடும், வன்துணைவ ரோடும், அருந்ததியும் வந்தனைசெய் அம்சொல்இள வஞ்சி இருந்தநக ரின்புறம்ஓர் குன்றிடை இறுத்தான். 4 4. வன் துணைவரோடும் - வலிமையுள்ள தோழர் களோடும். அம் சொல் இள வஞ்சி - அழகிய சொல்லையுடைய இளமை யான வஞ்சிக்கொடி போன்ற சீதை. இறுத்தான் - தங்கினான். சேனைகளுக்குப் படை வீடு அமைத்தான் நளன்; இராமனுக்கும் தனியாக ஓர் பர்ணசாலை அமைத்தான். வாயினும், மனத்தி னானும் வாழ்த்தி,மன் உயிர்கட்கு எல்லாம் தாயினும் அன்பி னானைத் தாள்உற வணங்கித், தத்தம் ஏயின இருக்கை நோக்கி, எண்திசை மருங்கும் யாரும் போயினர்; பன்ன சாலை இராமனும் இனிது புக்கான். 5 5. அன்பினானை- இராமனை. தத்தம் ஏயின - தங்கள் தங்களுக்கு அமைந்த. அருக்கன் மறைந்தான்; வெண் திங்கள் வந்தது; இராமன் சீதையை எண்ணிச் சிந்தை வருந்தி இருந்தான். வீடணன் ஒற்றர்களைக் கண்டறிதல் இற்றிது கால மாக, இலங்கையர் வேந்தன் ஏவ, ஒற்றர்வந்து அளவு நோக்கிக் குரங்கென உழல்கின் றாரைப், பற்றினன் என்ப மன்னோ, பண்டுதான் பலநாள் செய்த நற்றவப் பயன்தந்து உய்ப்ப முந்துறப் போந்த நம்பி. 6 6. இற்றிது காலம் ஆக - இவ்வாறு இருக்கும் போது. அளவுநோக்கி - சேனையின் அளவைப் பார்த்து. உழல்கின்றாரை - திரிகின்றவர்களை. தந்து உய்ப்ப - தூண்டுதல் செய்து செலுத்த. முந்துறப் போந்த நம்பி - அரக்கர்கள் மாளும் முன்பே வந்த நம்பியாகிய விபீஷணன். பற்றினன் - பிடித்தான். பேர்வுறு கவியின் சேனைப் பெருங்கடல் வெள்ளந் தன்உள், ஓர்வுறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான், சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தெறித்த வேனும் நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான். 7 7. சேனை - சேனையாகிய. ஓர்வுறும் மனத்தன்ஆகி - ஆராய்கின்ற உள்ளத்தன் ஆகி. சேர்வுறு பாலின் வேலை - நிறைந்த பாற்கடலிலே. நீரன் ஆனான் - தன்மையுள்ளவன் ஆனான். கூட்டிய விறல்திண் கையால் குரங்குகள் இரங்கக் குத்தி, மீட்டுஒரு வினைசெய் யாமல், மாணையின் கொடியால் வீக்கிப் பூட்டிய கையர், வாயால் குருதியே பொழிகின் றாரைக், காட்டினன் கள்வர் என்னாக்! கருணைஅம் கடலும் கண்டான். 8 8. கூட்டிய விறல் திண் - மிகுந்த வெற்றியும் வலிமையும் உள்ள. வீக்கி - கட்டி. மாணை; ஒருவகைக் கொடி. பாம்பிழைப் பள்ளி வள்ளல், பகைஞர்என்று உணரான், பல்லோர் நோம்பிழை செய்த கொல்லோ குரங்குஎன இரங்கி நோக்கித், `தாம்பிழை செய்தா ரேனும் `தஞ்சம்’என்று அடைந்தோர் தம்மை நாம்பிழை செய்ய லாமோ? நலியலீர் விடுமின்’ என்றான். 9 9. பாம்பு இழை பள்ளி - பாம்பால் செய்த படுக்கையை யுடைய வள்ளல் - திருமாலாகிய இராமன். நோம்பிழை - வருந்தத்தக்க குற்றத்தை. `இவர்கள் வானரர் அல்லர்; அரக்கர்கள்; இவன் சுகன்; இவன் சாரன்’ என்று கூறி ஒரு மந்திரத்தை மனத்தில் நினைத்தான் வீடணன். அவர்கள் குரங்குரு மறைந்தது. மின்குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து, வெற்பின் நின்ற வன்கணார் தம்மை நோக்கி, மணிநகை முறுவல் தோன்றப், புன்கணார் புன்மை நீக்கும் புரவலன் `போந்த தன்மை என்கொல்ஆம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல்’ என்றான். 10 10. மின்குலாம் - ஒளி வீசுகின்ற. வெருவந்து - அஞ்சிவந்து. வெற்பின் - மலைபோல. புன்கணால் - இழிந்தவர்களின். புன்மை - இழிவை. `இராவணன் ஏவலால் உளவு பார்க்க வந்தோம்’ என்றுரைத்த அவர்களிடம் இராமன் கூறியது. `எல்லையில் இலங்கைச் செல்வம், இளையவற்கு ஈந்த தன்மை சொல்லுதிர்; மகர வேலை கவிக்குல வீரர் தூர்த்துக் கல்லினில் கடந்த வாறும் கழறுதிர்; காலம் தாழ்த்த வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர்! 11 11. மகர வேலை - சுறா மீன்கள் நிறைந்த கடலை. கல்லினில் கடந்த ஆறும் - கல்லால் கட்டிய அணையின் வழியே தாண்டிய விதத்தையும். `தாழ்விலாத் தவத்துஓர் தையல் தனித்துஒரு சிறையில் தங்கச், சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத்,தன் சுற்றத் தோடும் வாழ்வெலாம் தம்பி கொள்ள, வயங்குஎரி நரகம் என்னும் மீள்வுஇலாச் சிறையின் வைப்பேன்;’ என்பதும் விளம்பு வீரால். 12 12. தவத்து ஓர் தையல் - தவத்தையுடைய ஒப்பற்ற சீதை. வயங்கு எரி நரகம் என்னும் - விளங்குகின்ற தீயாகிய நரகம் என்னும். இராவணன் மந்திராலோசனை அரவ மாக்கடல் அஞ்சிய அச்சமும், உரவு நல்அணை ஓட்டிய ஊற்றமும், வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் இரவின் எண்ணிட வேறுஇருந் தான்;அரோ. 13 13. மாக்கடல் - பெரிய கடல் தெய்வமாகிய வருணன். ஓட்டிய - கட்டிய. ஊற்றமும் - வலிமையையும். வேறு - தனியாக. உணர்வுஇல் நெஞ்சினர் ஊமர், உரைப்பொருள் புணரும் கேள்வியர் அல்லர், பொறிஇலர், கொணரும் கூனர், குறளர், கொழும்சுடர் துணரும் நல்விளக்கு ஏந்தினர் சுற்றினார். 14 14. உரைப்பொருள் - பேசுகின்ற விஷயத்தை. புணரும் - அறிந்து கொள்ளும். கேள்வியர் - கேட்குந் தன்மையுள்ளவர். பொறிஇலர் - கண் காது முதலியவை பழுதுபட்டவர். துணரும் - கொத்தாக உள்ள. `மனிதர்கள் அருகில் வந்து விட்டனர். இனி நாம் என்ன செய்யலாம்’ என்றான் இராவணன். அப்பொழுது அவன் பாட்டனான மாலியவான் கூறியதாவது:- `கால வெம்கனல் போலும் கணைகளால் வேலை வெந்து நடுங்கி வெயில்புரை மாலை கொண்டு வணங்கிய வாறுஎலாம் சூலம் என்னஎன் நெஞ்சைத் தொளைக்கும்;ஆல்.’ 15 15. கால வெம் கனல் - ஊழிக்காலக் கொடுந்தீ. வெயில் புரை - வெய்யில்போன்ற ஒளியையுடைய. ஆல்; அசை. `சுட்ட வாகண்டும் தொல்நகர், வேலையைத் தட்ட வாகண்டும், தாவற்ற தெவ்வரைக் கட்ட வாகண்டும், கண்எதி ரேவந்து விட்ட வாகண்டும் மேல்எண்ண வேண்டுமோ?’ 16 16. தட்டவா கண்டும் - தடுத்ததைக் கண்டும். தாவற்ற தெவ்வரை - வருணனுடைய அழியாத பகைவர்களை. கட்டவா கண்டும் - களைந்ததைக் கண்டும். மேல் எண்ணம் வேண்டுமோ - மேலும ஆலோசிக்க வேண்டுமோ. இராவணன் ஏளன மொழி என்று தாயைப் பயந்தோன் இயம்பலும், தின்று வாயை விழிவழித் தீஉக `நன்று! நன்று!நம் மந்திரம் நன்று!’எனா `என்றும் வாழ்தி இளவலொடு ஏகு!’என்றான். 17 17. என்று தாயைப் பயந்தோன் - என்று தன் தாயைப் பெற்ற வனாகிய மாலியவான். இராவணன் தாய் கேகசி என்பவள். மந்திரம் - ஆலோசனை. இளவலோடு - விபீஷணனுடன். மாலியவான் மௌனம் `ஈன மேகொல் இதம்’என எண்ணுறா மோனம் ஆகி இருந்தனன் முற்றினான்; ஆன காலை அடியின் இறைஞ்சிஅச் சேனை நாதன் இனையன செப்பினான். 18 18. ஈனமே கொல் இதம் - இழிவுதானோ பிறர்க்கு நலம் செய்தல். முற்றினான் - அறிவு நிறைந்தவன்; அல்லது வயது முதிர்ந்தவன். சேனைத் தலைவன் பேச்சு `கூசும் வானரர் குன்றுகொடு இக்கடல் வீசி னார்எனும் வீரம் விளம்பினாய்! ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய ஈச னோடும் எடுத்ததும் இல்லையோ? 19 19. கூசும் - அஞ்சும். ஓங்கலை - கயிலை மலையை. அதுகொடு என்சில? ஆர்அமர் மேல்இனி மதிகெ டுந்தகை யோர்வந்து நாம்உறை பதிபு குந்தனர்; தம்மைப் படுப்பதுஓர் விதிகொடு உந்த விளைந்தது தான்,என்றான். 20 20. ஆர்அமர் மேல் - பொருந்திய போரின் மீது. தம்மைப் படுப்பது ஓர் - தம்மை அழிப்பதாகிய ஒரு. விதிகொடு உந்த - விதிகொண்டு தள்ள. உளவு பார்க்கச் சென்ற தூதர்கள் வந்தனர் மனைக்கண் வந்துஅவன் பாதம் வணங்கினார்; பனைக்கை வன்குரங் கின்படர் சேனையை நினைக்கும் தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்; கனைக்குந் தோறும் உதிரங்கள் கக்குவார். 21 21. மனைக்கண் வந்து - மந்திராலோசனை மண்டபத்தில் வந்து. அவன் - இராவணனுடைய. பனைக்கை - பனைமரம் போன்ற கைகளையுடைய. படர் - பரந்த. வானர சேனையின் பெருமையையும் இராமன் பெருமையையும் உரைத்தல் `அடியம் அந்நெடும் சேனையை, ஆசையால் முடிய நோக்கல்உற் றேம்;முது வேலையின் படியை நோக்கிஎப் பாலும் படர்குறும் கடிய வேகக் கலுழனின் கண்டிலேம்.’ 22 22. முடிய - முழுவதும். முதுவேலையின் படியை - பழமையான கடலின் தன்மையை. எப்பாலும் படர்குறும் - எப்பக்கமும் பறக்கும். கலுழனின் - கருடனைப்போல. `தார்உ லாம்மணி மார்ப!நின் தம்பியே தேர்உ லாவு கதிரும், திருந்துதன் பேர்உ லாவும் அளவினும் பெற்றனன், நீர்உ லாவும் இலங்கை நெடும்திரு.’ 23 23. தன்பேர் உலாவும் அளவினும் - தன் பெயர் உலவும் வரையிலும். `இலங்கைநெடும் திருநின் தம்பியே பெற்றனன்’. `மருந்து தேவர் அருந்திய மாலைவாய், இருந்த தானவர் தம்மை, இரவிமுன் பெரும்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின், தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான்.’ 24 24. இருந்த - தேவர்களில் மறைந்திருந்த. தானவர்தம்மை - அசுரர்களை. மாயற்கு - திருமாலுக்கு. பெற்றியின் - தன்மையில். `சரங்கள் இங்குஇவற் றால்,பண்டு தான்உடை வரங்கள் சிந்துவென்’ என்றனன்; `மற்றுஎமை குரங்கு அலாமை தெரிந்தும்,அக் கொற்றவன் இரங்க உய்ந்தனம்; ஈதுஎங்கள் ஒற்று;’என்றார். 25 25. இங்கு சரங்கள் இவற்றால் - இங்குள்ள அம்புகளாகிய இவற்றால் இரங்க - கருணைகாட்ட. இராவணன் `இனி நாம் என்ன செய்யலாம்’ என்றபோது சேனைத்தலைவன் சொல்லியது `ஆயிரம் வெள்ள மான அரக்கர்தம் தானை, ஐயா! தேயினும் ஊழி நூறு வேண்டும்;ஆல் சிறுமை என்னோ? நாயினம் சீயம் கண்டது ஆம்என நடப்பது அல்லால், நீஉருத்து எழுந்த போது குரங்குஎதிர் நிற்பது உண்டோ?’ 26 26. தேயினும் - அழிவதாயினும். சிறுமை என்னோ - நமக்குச் சிறுமை என்ன வந்து விட்டது? நாய்இனம் - நாய்கள். சீயம் கண்டதாம்என - ஒரு சிங்கத்தைக் காண்பதுபோல. நடப்பது அலால் - நாம் நடந்துகொள்ள வேண்டுமே அல்லாமல். `வந்தவர், தானை யோடு மறிந்துமாக் கடலில் வீழ்ந்து சிந்தினர் இரிந்து போகச், சேனையும், யானும் சென்று? வெம்தொழில் புரியும் ஆறு காணுதி! விடைஈ’ கென்ன இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏயச் சொன்னான். 27 27. சிந்தினர் இரிந்துபோக - சிதறி ஓடிப்போகும்படி. புரியும்ஆறு - செய்வதை. இந்திரன் முதுகுகண்ட - இந்திரனைப் புறமுதுகுகாட்டி ஓடும் படி செய்த. மீண்டும் மாலியவான் எழுந்தான். `திருமாலே இராமன்; ஆதிசேடனே இலக்குவன்; இந்திரனே அங்கதன்; அக்கினி தேவனே நீலன்; அனுமானைக் கண்ணுதல் என்றும் நான் முகன் என்றும் கூறுகின்றனர்; தேவர்கள் குரங்குகளாக வந்தனர், இலக்குமியே சீதாதேவி; இலங்கையைக் காத்துவந்த இலங்கைமா தேவி போய் விட்டாள். இவ்வுண்மைகளை உன் தம்பியும் உரைத்துப் போனான்’ என்றான். `ஈதெலாம் உணர்ந்தேன் ஆயும், என்குலம் இறுதி உற்றது ஆதியின் இவனால் என்றும், உன்தன்மேல் அன்பி னாலும், வேதனை நெஞ்சின் எய்த வெம்பியான் விளைவ சொன்னேன் சீதையை விடுதி ஆயின் தீரும்,இத் தீமை;’ என்றான். 28 28. இறுதி உற்றது - அழிந்தது. ஆதியின் இவனால் என்றும் - முன்பு இத்திருமாலினால்தான் என்றும். விளைவ - நிகழப் போவனவற்றை. இராவணன் கொதிப்புரை மற்றெலாம் நிற்க, அந்த மனிதர்,வா னரங்கள், வானின் இற்றைநாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை சொற்றவாறு அன்றி யேயும், `தோற்றிநீ’ என்றும் சொன்னாய்; `கற்றவா நன்று’ போவென்று இனையன கழறல் உற்றான். 29 29. நீ தோற்றி என்னும் - நீ தோற்பாய் என்றும். கற்றவா நன்று - நீ அறிந்தது நன்று. `பேதைமா னுடவ ரோடு, குரங்குஅல, பிறவே யாகப் பூதல வரைப்பின், நாகர் புரத்தின்அப் புறத்தது ஆகக் காதுவெம் செருவேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும், சீதைதன் திறத்தின் ஆயின் அமர்த்தொழில் திறம்பு வேனோ?’ 30 30. பூதல வரைப்பின் - நிலஉலக எல்லையில் உள்ளோரா கட்டும். நாகர் புரத்தின் - நாகர் உலகில் உள்ளோராகட்டும். அப்புறத்தில் ஆக - அதற்கு அப்புறத்தில் உள்ளவர் ஆகட்டும். காது - மோதுகின்ற. காந்தினர் - கோபித்தவர்களாய். ஆயின் - ஆராய்ந்தால். சீதை தன் திறத்தின் - சீதையின் பொருட்டாக. திறம்புவேனோ - மாறுபடுவேனோ. `யார் எதிர்ப்பினும் அஞ்சேன்.’ என்றான். இதற்குள் பொழுது விடிந்தது; இராவணன் சபை கலைந்தது; கதிரவன் கிழக்கிலே உதித்தான். 10. இலங்கை காண் படலம் அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று பொருந்திய காதல் தூண்டப், பொன்னகர் காண்பான் போலப், பெருந்துணை வீரர் சுற்றத், தம்பியும் பின்பு செல்ல, இருந்தமான் மலையின் உச்சி ஏறினன்; இராமன்; இப்பால். 1 இலங்கை காண் படலம்: இராமன் இலங்கையின் தோற்றத்தை, ஒரு மலைமேல் ஏறிநின்று கண்டதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. இருந்த - அவன் தங்கியிருந்த. மான் மலையின் உச்சி - சுவேல மலையின் உச்சியிலே. செருமலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல, இருதிறல் வேந்தர் தாங்கும் இனைநெடும் கமலக் கையான், பொருவலி வயவெம் சீயம், யானையும் புலியும் சுற்ற அருவரை இவர்வது ஆங்கோர் அரிஅரசு அனையன் ஆனான். 2 2. செரு மலி - போரிலே சிறந்த. இருதிறல் வேந்தர் - இரண்டு வலிமை அமைந்த அரசர்கள்; அவர்கள் சுக்கிரீவன், விபீஷணன். இவர்வது ஆங்குஓர் - ஏறுவதாகிய ஒப்பற்ற. அரிஅரசு அனையன் ஆனான் - சிங்கராஜனைப்போல் இராமன் விளங்கினான். கதம்மிகுந்து இரைத்துப் பொங்கும் கனைகடல் உலகம் எல்லாம், புதைவுசெய் இருளில் பொங்கும் அரக்கர்தம் புரமும், பொற்பும், சிதைவுசெய் குறியைக் காட்டி, வடதிரைசச் சிகரி ஒன்றின், உதயம்அது ஒழியத் தோன்றும், ஒருகரு ஞாயிறு ஒத்தான். 3 3. கதம் மிகுந்து - சினம் மிகுந்து. புதைவுசெய் - மூடுகின்ற. இருளில் பொங்கும் - இருளைப்போல மிகுந்திருக்கும். குறியை - தீ நிமித்தத்தை. சிகரி - மலை. உதயம் அது ஒழிய - வழக்கமாகத் தோன்றும் உதயகிரியை விட்டு. இராமன் கருஞாயிறு போன்றான். அணைநெடும் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன் பிணைநெடும் கண்ணி என்னும் இன்உயிர் பிரிந்த பின்னைத், துணைபிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்கு கின்றான்; இணைநெடும் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான். 4 4. அணைநெடும் கடலில் தோன்ற - அணையானது நீண்ட கடலிலே காணப்பட. பிணை - மான் கண்களைப் போன்ற இராமன் இலங்கையின் சிறப்பை இலக்குவனுக்கு உரைத்தல் `நம்திரு நகரே ஆதி வேறுள நகர்கட் கெல்லாம் வந்தபேர் உவமை கூறி, வழுத்துவான் அமைந்த காலை, இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்; அந்தரம் உணர்தல் தேற்றார் அரும்கவிப் புலவர் அம்மா!’ 5 5. அந்தரம் - இந்நகருக்கும் தேவருலகுக்கும் உள்ள வேற்றுமையை உணர்தல் தேற்றார் - உணர மாட்டார். `விற்படி திரள்தோள் வீர! நோக்குதி! வெம்கண் யானை அல்படி நிறத்த வேனும், ஆடகத் தலத்தை ஆழக் கல்படி வயிரத் திண்கால் நகங்களில் கல்லிக் கையால் பொற்படி என்னப் பூசிப் பொன்மலை என்னப் போவ.’ 6 6. அல் படி - இருள் பொருந்திய. ஆடகத் தலத்தை - பொன்னிலத்தை. ஆழ - ஆழமாக. கல் படி - கல்லைப் போன்ற. `நன்னெறி அறிஞ நோக்காய்! நளிநெடும் தெருவின் நாப்பண், பண்மணி மாடப் பத்தி நிழல்படப் படர்வ; பண்பால் தம்நிறம் தெரிகி லாத; ஒருநிறம் சார்கி லாத; இன்ன துஓர் குலத்த என்று புலப்படா; இவுளி எல்லாம்.’ 7 7. நாப்பண் - நடுவிலே. மாடப்பத்தி - மாளிகை வரிசை களின். படர்வ - செல்கின்றன வாகிய. இவுளி - குதிரை. `காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற தேவர்தம் தச்சன், நீலக் காசினால் திருந்தச் செய்த; ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர், ஈட்டி வைத்த பாவபண் டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய்.’ 8 8. கார்முகம் - வில். நீலக் காசினால் - நீல இரத்தினங்களால். செய்த - செய்யப்பட்டவை. ஈட்டிவைத்த - சேர்த்து வைத்த. பாவ பண்டாரம் - பாவநிதிச் சேமிப்பு. `நாள்மலர்த் தெரியல் மார்ப! நம்பலம் காண்பான், மாடத்து யாழ்மொழித் தெரிவை மாரும் மைந்தரும் ஏறு கின்றார் `வாழ்வுஇனிச் சமைந்தது அன்றே’ என்றுமா நகரை எல்லாம் பாழ்படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்!’ 9 9. மாடத்து - மாடியின் மேலே. சமைந்தது - முடிந்தது. இரியல் போவார் - நீங்கிப்போகின்றவரை. பரிசு - தன்மை. இன்னவாறு இலங்கை தன்னை, இளையவற்கு இராமன் காட்டிச் சொன்னவா சொல்லா வண்ணம், அதிசயம் தோன்றும் காலை, அன்னமா நகரின் வேந்தன், அரிக்குலப் பெருமை காண்பான், சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான். 10 10. சொன்னவா சொல்லா வண்ணம் - சொல்லியவை களையே மீண்டும் சொல்லாதபடி. அரிக் குலப் பெருமை - வானரர் கூட்டத்தின் பெருமையை. 11. இராவணன் வானரத்தானை காண் படலம் `கவடுஉகப் பொருத காய்களிறு அன்னான், அவள்துயக் கின்மலர் அம்புற, வெம்பும் சுவடுஉடைப் பொருவில் தோள்கொடு அனகேம் குவடுஉடைத் தனிஒர் குன்றுஎன நின்றான். 1 இராவணன் வானரத் தானை காண் படலம்: இராவணன் வானரப் படையின் பெருக்கத்தைக் கண்டது பற்றிக் கூறும் பகுதி. 1. கவடு உகப் பொருத - மரக்கிளைகள் முறியும்படி மோதிய. காய் - சினமுள்ள. அன்னான் - இராவணன். அவள் துயக்கின் - அச் சீதையின் மேல் கொண்ட ஆசையால். அனேகம் குவடு உடை - பல சிகரங்களை உடைய. பொலிந்தது ஆங்குமிகு போர்என லோடும்; நலிந்த நங்கைஎழி லால்,வலி நாளும் மெலிந்த தோள்கள்வட மேருவின் மேலும் வலிந்து செல்ல,மிகைச் செல்லும் மனத்தான். 2 2. போர் பொலிந்தது - போர் தோன்றிவிட்டது. நலிந்த நங்கை எழிலால் - துன்புற்ற சீதையின் அழகால். நாளும் வலி மெலிந்த - நாள் தோறும் வலிமை குறைந்த. மிசைச் செல்லும் - போரின் மேல் பொருந்திய. கைத்த ரும்கவரி வீசிய காலாள், நெய்த்து இருண்டுஉயரும் நீள்வரை மீதில், தத்தி வீழ்அருவி யின்திரள் சால, உத்த ரீகம்,நெடு மார்பின் உலாவ. 3 3. காலால் - காற்றால். நெய்த்து - நெய்பூசப்பட்டது போல் பளபளப் புடையவ னவாய். திரள் சால் - திரளைப்போல. உத்தரீகம் - அங்க வஸ்திரம். வீழி யின்கனி இதழ்ப்,பணை மென்தோள், ஆழி வந்தஅர மங்கையர், ஐஞ்ஞூற்று ஏழி ரண்டினின் இரட்டி, பயின்றோர், சூழ்இ ரண்டுபுடை யும்முறை சுற்ற. 4 4. வீழி இன்கனி இதழ் - விழுகின்ற இனிய கனி போன்ற இதழையும். பணை - மூங்கில் போன்ற. ஐந்நூற்று ஏழ் இரண்டினின் இரட்டி - பதினான்காயிரம். நஞ்சும் அஞ்சும்விழி நாரியர் நாகர், வஞ்சி அஞ்சும்இடை மங்கையர், வானத்து அம்சொல் இன்சுவை அரம்பைய ரோடும் பஞ்ச மும்சிவணும் இன்னிசை பாட. 5 5. நாகர் - நாக கன்னிகையர். பஞ்சமம் சிவணும் - பஞ்சமம் என்னும் பண்ணை ஒத்த. வேத்தி ரத்தர்,எரி வீசி விழிக்கும் நேத்தி ரத்தர்,இறை நின்றுழி நில்லாக் காத்தி ரத்தர்,மனை காவல் விரும்பும் சூத்தி ரத்தர்,பதி னாயிரர் சுற்ற. 6 6. வேத்திரத்தர் - பிரம்புகளையுடையவர்கள். இறை நின்றுழி நில்லா - சிறிதும் நின்றவிடத்திலே நிற்காத. காத்திரத்தர் - திரிந்து கொண்டே இருக்கின்ற உடம்புள்ளவர். இராவணன் இராமனைக் காணல் தோர ணத்தமணி வாயின் மிசைச்,சூல் நீர்அ ணைத்தமுகில் ஆம்என நின்றான்; ஆர ணத்துஅமுதை, அம்மறை தேடும் கார ணத்தை,நிமிர் கண்கொடு கண்டான். 7 7. தோரணத்தன்- தோரணங்களையுடைய. மணிவாயின் மிசை - மணிகள் பதித்துச் செய்த வாசலின் மேல். சூல் நீர் அணை - சூல் கொண்ட நீர் நிறைந்த. ஆரணத்து அமுது; அம்மறை தேடும் காரணன்; இராமன். மடித்த வாயினன்; வயங்குஎரி வந்து பொடித்து இழிந்தவிழி யன்;அது போழ்தின் இடித்த வன்திசை, எரிந்தது நெஞ்சம், துடித்த கண்ணினொடு இடத்திரள் தோள்கள். 8 8. பொடித்து - பொறிகளாக. இழிந்த - விழுந்த. வன்திசை இடித்த - வலிய திசைகளிலே இடிபோன்ற முழக்கம் எழுந்தன. `கண்ணினொடு இடத்திரள் தோள்கள் இடம் துடித்த’. `ஏனை யோன்இவன் இராமன், எனத்தன் மேனி யேஉரைசெய் கின்றது; வேறுஇச் சேனை யோரை அடையத் தெரி!’என்னத் தான்வி னாவ,எதிர் சாரன் விளம்பும். 9 9. மேனியே - உடம்பின் நிறமே. சாரன் - சாரன் என்னும் பெயருள்ளவன். `இங்குஇ வன்,`படை இலங்கையர் மன்னன் தங்கை’ என்னலும், முதிர்ந்த சலத்தால் அங்கை வாள்கொடு,அவள் ஆகம்விளங்கும் கொங்கை நாசி,செவி, கொய்து குறைத்தான்.’ 10 10. இங்கு இவன் - இங்கு காணப்படும் இவள்தான். படை இலங்கையர் மன்னன் - படைகளையுடைய இலங்கையர் கோன். சலத்தால் - சினத்தால். `அறக்கண் அல்லதுஒரு கண்இலன் ஆகி, நிறக்க ரும்கடலுள் நேமியின் நின்று? துறக்கம் எய்தியவ ரும்,துற வாத உறக்கம் என்பதனை ஓட முனிந்தான்.’ 11 11. நேமியின் நின்று - சக்கராயுதத்தைப் போல நின்று. முனிந்தான் - வெறுததவன்; இலக்குவன். ஏனைய வானர வீரர்கள் ஒவ்வொருவரையும், இன்னார் இன்னார் என்று கூறியபின், சேனையின் பெருக்கத்தைப் பின்வருமாறு சுட்டினான். வேறு `அண்ணல் கேள்!இவர்க்கு உவமையும், அளவும்ஒன்று உளதோ? விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள் மீனை எண்ணி நோக்கினும், இக்கடல் மணலினை எல்லாம் கண்ணின் நோக்கினும், கணக்கிலை’ என்றனன் காட்டி. 12 12. அளவும் - கணக்கும். குணிப்பினும் - கணக்கிட்டாலும். சினம்கொள் திண்திறல் அரக்கனும் சிறுநகை செய்தான், `புனம்கொள் புன்தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்! வனங்க ளும்,படர் வரைதொறும், திரிதரும் மானின் இனங்க ளும்பல, என்செயும் அரியினை’ என்றான். 13 13. சிறுநகை - இகழ்ச்சியைக் காட்டும் புன்னகை. புனம் கொள் - காட்டு வாழ்க்கையைக் கொண்ட. புன்தலை - சிறிய தலையையுடைய. மானின் இனங்களும் பல - மான்கூட்டங்கள் பலவாக இருந்தாலும். 12. மகுட பங்கப் படலம் இச்சமயத்தில், இராமன், வீடணனை நோக்கி, `மதிலின் மேல் நின்று நம்மைக் காண்போர் யாவர்?’ என்றான். அப்பொழுது வீடணன் கூறினான். `நாறு தன்குலக் கிளையெலாம் நரகத்து நடுவான் சேறு செய்தவன், உருப்பசி, திலோத்தமை முதலாக் கூறு மங்கையர் குழாத்திடைக், கோபுரக் குன்றத்து ஏறி நின்றவன், புன்தொழில் இராவணன்;’ என்றான். 1 மகுட பங்கப் படலம்: சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்ந்து அவன் தலையில் இருந்த கிரீடங்களைச் சேதப் படுத்தியது பற்றிக் கூறும் பகுதி. 1. நாறு - நாற்றுக்களாகிய. தன் குலக்கிளை எலாம் - தன் குலத்தாரை யெல்லாம். கருதி மற்றொன்று கழறுதல் முனம்,விழிக் கனல்கள் பொருது புக்கன; முந்துறச் சூரியன் புதல்வன், சுருதி அன்னதாய், சிவந்தநற் கனியென்று சொல்லப் பருதி மேல்பண்டு பாய்ந்தவன் ஆம்,எனப் பாய்ந்தான். 2 2. கழறுதல் முனம் - சொல்லுவதற்கு முன்பே. விழிக்கனல்கள் பொருது புக்கன - விழியிலே தீப்பொறிகள் மோதிக்கொண்டு வந்து நிலத்தில் புகுந்தன. பாய்ந்தவன் ஆம் என - பாய்ந்தவனைப் போல. `சூரியன் புதல்வன் பாய்ந்தான்.’ பள்ளம் போய்ப்புகும் புனல்எனப், படியிடைப் படிந்து தள்ளும் பொற்கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்; வெள்ளம் போல்கண்ணி அழுதலும், இராவணன் மேல்தன் உள்ளம் போல்செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான். 3 3. படியிடைப் படிந்து தள்ளும் - நிலத்தின்மேல் படிந்து அழுந்தியிருக்கின்ற. பொன் கிரி சலிப்புற - இலங்கை சோர்வடை யும்படி. சார்ந்தான் - சேர்ந்தவனாகிய சுக்கிரீவன். உள்ளம்போல் - மனவேகத்தைப் போல். கரிய கொண்டலைக், கருணைஅம் கடலினைக் காணப், பெரிய கண்கள்பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும், உரிய குன்றிடை உரும்இடி வீழ்தலும், உலைவுற்று இரியல் போகின்ற மயில்பெரும் குலம்என, இரிந்தார். 4 4. உலைவுற்று - நிலை குலைந்து. இரியல் போகின்ற - ஓடிப்போகின்ற. இரிந்தார் - ஓடி விட்டனர். சுக்கிரீவ இராவணப் போர் காலஇருள் சிந்துகதி ரோன்மதலை, கண்உற்று, ஏலஎதிர் சென்று,அடல் இராவணனை எய்தி, நீலமலை முன்கயிலை நின்றதுஎன நின்றான், சூலம்வர அன்றுஅதன்முன் நின்றசிவன் அன்னான். 5 5. கால இருள் சிந்து - கருமையான இருளை ஓட்டுகின்ற. ஏல எதிர் சென்று - ஏற்றபடி அவன் எதிரிலே சென்று. ஆலம் வர - நஞ்சுதோன்ற. வந்தவனை, நின்றவன் வலிந்துஎதிர் மலைந்தான்; அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அறைந்தான்; எந்திரம் எனக்கடிது எடுத்துஅவன் எறிந்தான்; கந்துகம் எனக்கடிது எழுந்துஎதிர் மலைந்தான். 6 6. வந்தவனை - வானரப்படையைக் காணவந்த இராவணனை. நின்றவன் - எதிரே சென்று நின்றவனாகிய சுக்கிரீவன். அவன் - அந்த இராவணன். கந்துகம் - பந்து. படிந்தன மரம்தரை; பகிர்ந்தன பரப்பும்; கொடும்சினம் முதிர்ந்தனர்; உரத்தின்மிசை குத்த நெடும்சுவர் பிளந்தன; நெரிந்தநிமிர் குன்றம் இடிந்தன, தகர்ந்தன இலங்கைமதில் எங்கும். 7 7. பரப்பும் பகிர்ந்தன - நிலப் பரப்பும் பிளந்தன. உரத்தின் - வலிமையுடன். மிசை குத்த - மேலே குத்தியதனால். நெடும் சுவர் - நீண்ட மதில் சுவர். செறிந்துயர் கறங்குஅனையர் மேனிநிலை தேரார்; பிரிந்தனர், பொருந்தினர் எனத்தெரிதல் பேணார்; எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர்என முன்னின்று அறிந்திலர் அரக்கரும்; அமர்த்தொழில் அயர்ந்தார். 8 8. கறங்கு அனையர் - காற்றாடி போன்றவர்களின். அமர்த்தொழில் - அவ்விருவரும் புரியும் போர்த் தொழிலைக் கண்டு. அயர்ந்தார் - சோர்ந்தனர். சுக்கிரீவனைக் காணாமல் இராமன் வருந்துதல் இன்னதுஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி வண்ணன் மன்உயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்; `உன்னிய கருமம் எல்லாம் உன்னொடும் முடிந்த’ என்னாத் தன்உணர்வு அழிந்து, சிந்தை அலம்வந்து, தளர்ந்து சாய்ந்தான். 9 9. எழிலி வண்ணன் - மேக நிறத்தனாகிய இராமன். சிந்தை அலம் வந்து - மனம் வருந்தி. `ஒன்றிய உணர்வே ஆய ஓர்உயிர்த் துணைவ! உன்னை இன்றி,யான் உளனாய் நின்று,ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்; அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை; அரக்கர்க்கு எல்லாம் வென்றியும் கொடுத்தாய்! அந்தோ! கெடுத்ததுஉன் வெகுளி’ என்றான். 10 10. ஒன்றிய உணர்வே ஆய - ஒன்றுபட்ட அறிவையுடைய. யான் உளனாய் நின்று - நான் இருந்து. வெகுளி - கோபம். `ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்ததுஎன் கருமம்; அந்தோ! என்றானும் யானோ வாழேன்! நீஇலை எனவும் கேளேன்! இன்றாய பழியும் நிற்க, நெடும்செருக் களத்தின் என்னைக் கொன்றாயும் நீயே! உன்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன்.’ 11 11. எனவும் - என்று கூறுவதையும். கேளேன் - கேட்கப் பொறுக்க மாட்டேன். குணங்கள் தீயோன் - இராவணன். `இறந்தனை என்ற போதும், இருந்துயான் அரக்கர் என்பார் திறம்தனை உலகின் நீக்கிப் பின்உயிர் தீர்வென் என்றால், `புறம்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தி னானை மறந்தனன் வலியன் என்பார்;’ ஆதலால் அதுவும் மாட்டேன்.’ 12 12. அரக்கர் என்பார் திறம்தனை - அரக்கர் என்பவர்களின் கூட்டத்தை. புறம்தரு பண்பின் ஆய - பாதுகாக்கும் தன்மை பொருந்திய. மறந்தனன் வலியன் - மறந்தவன் வீரனோ? `அழிவது செய்தாய் ஐய! அன்பினால் அளியத் தேனுக்கு; ஒழிவரும் உதவி செய்த உன்னையான் ஒழிய வாழேன்; எழுபது வெள்ளந் தன்னுள் ஈண்டோர்பேர் எஞ்சாது ஏகிச் செழுநகர் அடைந்த போழ்தும், இத்துயர் தீர்வது உண்டோ?’ 13 13. அளியத்தேனுக்கு - காப்பாற்றப் படத்தக்க எனக்கு. `அன்பினால் அழிவது செய்தாய் ஐய’ உன்னை ஒழிய யான் வாழேன் - நீ இல்லாமல் நான் வாழ மாட்டேன். எஞ்சாது - குறையாமல். சுக்கிரீவன் இராவணன் மகுட மணிகளைப் பறித்துத் திரும்புதல் என்றுஅவன் இரங்கும் காலத்து, இருவரும் ஒருவர் தம்மின் வென்றிலர் தோற்றி லாராய் வெம்சமம் விளைக்கும் வேலை, வன்திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கிப், `பொன்றினென் ஆகின் நன்று’என்று அவன்வெள்க இவனும் போந்தான். 14 14. இருவரும் - இராவண சுக்கிரீவர்கள் இருவரும். மௌலிய மணிகளை - முடியில் உள்ள இரத்தினங்களை. அவன் - இராவணன். இவனும் - சுக்கிரீவனும். கொழுமணி முடிகள் தோறும் கொண்டநல் மணியின் கூட்டம், அழுதுஅயர் கின்ற அண்ணல், அடித்தலத்து அமரச் சூட்டித், தொழுதுஅயல் நாணி நின்றான்; தூயவர் இருவ ரோடும் எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர்உயிர் எய்திற்று அன்றே. 15 15. கொண்டன - பறித்துக்கொண்டு வந்தனவாகிய. தூயவர் இருவர் - இராம இலக்குவர். யாக்கைக்கு - உடம்புக்கு. என்புறக் கிழிந்த புண்ணின் இழி,பெரும் குருதி யோடும் புன்புலத்து அரக்கன் தன்னைத் தீண்டிய புன்மை போக அன்பனை அமரப் புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான், தன்பெரு நயனம் என்னும் தாமரைத் தடத்து நீரால். 16 16. புன்புலத்து - அற்ப அறிவு படைத்த. புன்மைபோக - இழிவு நீங்க. அமரப் புல்லி - அன்புடன் தழுவிக் கொண்டு. `ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை; அங்கும் இங்கும் பேர்கின்றது ஆவி; யாக்கை பெயர்கின்றது இல்லைப் பின்னைத் தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை;’ என்று தெண்ணீர் சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை நோக்கிச் சொல்லும். 17 17. ஈர்கின்றது அன்று - பிளக்கின்றது. ஏ; அசை. தேர்கின்ற - ஆராய்ந்து அறிகின்ற. `சிந்தை திகைத்தனை அன்றோ’. சுக்கிரீவனை நோக்கி இராமன் கூறியன `கல்லினும் வலிய தோளாய்! நின்னை,அக் கருணை இல்லோன் கொல்லுதல் செய்தான் ஆகில், கொடுமையால் குற்றம் பேணிப், பல்பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி, வெல்லினும் தோற்றேன் யானே, அல்லனோ விளிந்தி லாதேன்.’ 18 18. கொடுமையால் - கொடுமையுடன். குற்றம் பேணி - அவனுடைய குற்றத்தைக் கருதி. பகழி மாரி - அம்பு மழையால். பறிய - பிடுங்கப்படும்படி. நூறி - கொன்று. `பெருமையும், வண்மை தானும், பேர்எழில், ஆண்மை தானும், ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே; அருமையும், அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் இருமையும் கெடுத்தல் உற்றாய்! என்நினைந்து என்செய் தாய்நீ!’ 19 19. ஒருமையின் - ஒரே நிலையில் நின்று. உணரநோக்கின் - தெரியும் படி ஆராய்ந்தால். ஊற்றம் - வலிமை. அடர்ந்து நின்ற - நெருங்கி நிற்கின்ற. அயர்ந்தாய் - மறந்தனை. `இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி ஆயின் நன்னுதல் சீதை யால்என்? ஞாலத்தால் பயன்என்? நம்பீ! உன்னையான் தொடர்வென்; என்னைத் தொடரும்இவ் வுலகம் என்றால் பின்னைஎன் இதனைக் கொண்டு, விளையாடிப் பிழைப்ப செய்தாய்?’ 20 20. பின்னை என் இதனை நோக்கில் - பின்னை ஏன் இதனை எண்ணிப் பார்க்க வில்லை? சுக்கிரீவன் பணிவுரை என்றனன், என்ற லோடும், இணைஅடி இறைஞ்சி, ஆங்குக் குன்றுஉறழ் குலவுத் திண்தோள் கொற்றவல் வீரன் காணத், தன்தனி உள்ளம் நாணாத், தழல்விழிக் கொலைவெம் சீயம் நின்றுஎன, எருத்தம் கோட்டி, நிலன்உற நோக்கிக் கூறும். 21 21. நாணா - நாணி. தழல் விழி - தீப்போன்ற கண்களை யுடைய. எருத்தம் கோட்டி - தலை குனிந்து. எருத்தம் - கழுத்து. `காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்ட மாட்டேன்; நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்; கேட்டிலேன், அல்லேன் இன்று கண்டும்அக் கிளிஅன் னாளை மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன்; வெறும்கை வந்தேன்.’ 22 22. நயக்க மாட்டேன் - விரும்பிச் செய்ய மாட்டேன். வெறும் கை வந்தேன் - வெறுங்கையுடன் மீண்டு வந்தேன். `நூல்வலி காட்டும் சிந்தை நும்பெரும் தூதன் வெம்போர் வேல்வலி காட்டி னார்க்கும், வில்வலி காட்டி னார்க்கும், வால்வலி காட்டிப் போந்த வளநகர் புக்கு, மற்றுஎன் கால்வலி காட்டிப் போந்தேன்; கைவலிக்கு அவதி உண்டோ?’ 23 23. நூல் வலி காட்டும் - நூல்களைக் கற்று அறிவின் வலிமையைக் காட்டும். தூதன் - தூதனாகிய மாருதி. போந்த - திரும்பிய. கால்வலி - காலின் வலிமையை. கால்பாக வலிமையை. அவதி - எல்லை. வீடணன் சுக்கிரீவன் வீரத்தைப் புகழ்தல் `வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி மேலே ஓங்கிய அல்ல வோ;மற்று இனிஅப்பால் உயர்ந்தது உண்டோ? தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும் சீரிது அம்மா! வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய்!’ 24 24. சிரத்தின் மேலும் உயிரினும் - தலையைக் காட்டிலும் உயிரைக் காட்டிலும். சீரிது - இந்த மணிகள் உயர்ந்தவை. `தொடிமணி இமைக்கும் தோளாய்! சொல்இதின் வேறும் உண்டோ? வடிமணி வயிர வெவ்வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான் முடிமணி பறித்திட் டாயோ! இவன்இனி முடிக்கும் வென்றிக்கு அடிமணி இட்டாய் அன்றே அரிக்குலத்து அரச!’ என்றான். 25 25. கொடி மணி - தோள் வளையங்களில் உள்ள மணிகள். வடிமணி - கூர்மையான அழகு பொருந்திய. இவன் - இராமன். அடிமணி - அடிக்கப்படும் மணியை; அடிப்படையாக உள்ள மணிகளை. இராமனும் வீடணன் விளம்பியதை ஒப்புக் கொண்டான்; இச்சமயம் கதிரவன் கரந்தான்; இராமன் தனது இருக்கையை எய்தினன். இராவணன் நாணத்துடன் தலை குனிந்து சென்றான். 13. அணிவகுப்புப் படலம் மானத்தான் ஊன்றப் பட்ட மருமத்தான், வதனம் எல்லாம் கூனல்தா மரையின் தோன்ற, வான்தொடும் கோயில் புக்கான்; பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; ஆடல் தானத்தான் அல்லன்; மெல்என் சயனத்தான் உரையும் தாரான். 1 அணி வகுப்புப் படலம்: வானரப் படைகளும், அரக்கர் படைகளும் போர் புரிவதற்கு அணி வகுத்து நின்றதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. மானத்தான் ஊன்றப்பட்ட - மானத்தால் வருந்திய. கூனல் - வளைந்த. உரையும் தாரான் - பேச்சும் கொடுக்காதவன் ஆயினான். இச்சமயத்தில் வானர சேனையின் அணிவகுப்பை அறிந்து வரச் சென்ற சார்த்தூலன் என்பவன் வந்தான். “மேலை வாயிலில் பதினேழு வெள்ளம் சேனையுடன் மாருதி; சுக்கிரீவன் பதினேழு வெள்ளம் படையுடன் இராமனைச் சூழ்ந்து நிற்கின்றான். தெற்கு வாயிலில் அதே அளவு சேனையுடன் அங்கதன்; கிழக்கு வாயிலில் பதினாறு வெள்ளம் சேனையுடன் நீலன்; இரண்டு வெள்ளம் சேனைக்கு அனைவர்க்கும் உணவு தேடித் தரும் வேலை; உன் தம்பிக்கு வாயில்கள்தோறும் சென்று உளவு பார்க்கும் வேலை. இவ்வாறு படையமைத்து இராமனும் இளை யவனும் போரை எதிர்பார்த்து நிற்கின்றனர்.” என்றான். உடனே இராவணன் ஒருமணி மண்டபத்தை எய்தி, ஆசனத்தில் அமர்ந்தான். அமைச்சர்கள் வந்தனர். `வானர சேனைகள் நகரை வளைத்தன. நாம் என்ன செய்யலாம்’ என்றான் இராவணன். நிகும்பன் கூற்று குரங்குப்படை எழுபது வெள்ளம்; நமது படை ஆயிர வெள்ளம்; அது மட்டுமா? எழு,மழு, தண்டு, வேல்,வாள், இலைநெடும் சூலம், என்றிம் முழுமுதல் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த போது, தொழுதுதம் படைகள் கைவிட்டு ஓடுவர் சுரர்கள் என்றால் விழுமிது! குரங்கு வந்து வெறுங்கையால் கொள்ளும் வென்றி! 2 2. முழு முதல் படைகள் - பெரிய படைகளை. முனைந்த போது - போர் செய்யப் புகுந்த போது. சுரர்கள் - தேவர்கள். விழுமிது - சிறந்தது. ஈதுஇவண் நிகழ்ச்சி என்னா, எரிவிழித்து இடியின் நக்குப் பூதலத்து அடித்த கையன் நிகும்பன்,என்று ஒருவன் பொங்க; `வேதனைக் காமம்அந்தோ வேரொடும் கெடுத்தது’ என்னா மாதுலத் தலைவன், பின்னும் அன்பின்ஓர் மாற்றம் சொன்னான். 3 3. ஈது இவண் நிகழ்ச்சி என்னா - இதுதான் இங்கு இனி நடக்கவேண்டியது என்று. பொங்க - கோபம் மிகுந்து நிற்க. மாதுலத் தலைவன் - பாட்டனாகிய தலைவன்; மாலி. மாலியவான் மதியுரை புக்குஎரி மடுத்துஇவ் வூரைப் பொடிசெய்து போயி னாற்குச் சக்கரம் உண்டோ? கையில் தனுஉண்டோ? வாளி உண்டோ? இக்கிரி பத்தின் மௌலி இனமணி அடங்கக் கொண்ட சுக்கிரி வற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும். 4 4. புக்கு எரி மடுத்து - புகுந்து தீ வைத்து. மேயினாற்கு - போன மாருதிக்கு. இக்கிரி பத்தின் - இந்த மலைபோன்ற பத்துத் தலைகளிலும் உள்ள. மௌலி இன மணி அடங்க - முடியில் உள்ள சிறந்த இரத்தினங்கள் முழுவதையும். இடந்து - பிளந்து. `ஆதலால் சீதையை அவர்கள்பால் விட்டுச் சரணடைதலே சிறந்தது” என்றான். இராவணன் சினமொழி என்புழி மாலி தன்னை எரிஎழ நோக்கி, “என்பால் வன்பழி தருதி போலாம்; வரன்முறை அறியா வார்த்தை அன்பழி சிந்தை தன்னால் அடாதன அறையல்” என்றான் பின்பழி எய்த நின்றான்; அவன்பின்னைப் பேச்சு விட்டான். 5 5. வரன் முறை அறியா வார்த்தை - நீ கூறியவைகள் ஒழுங்கு முறையை உணராத சொற்கள். இதன்பின் இராவணன் கீழை வாயிலில் இருநூறு வெள்ளம் சேனையுடன் படைத் தலைவனைக் காவல் வைத்தான். அவ்வளவு படைகளுடன் மகோதரனையும், பெரும் பக்கனையும் தெற்கு வாயிலில் நிறுத்தினான். அவ்வளவு சேனையுடன் இந்திரசித்தை மேலை வாயிலில் நிறுத்தினான். நகருக்கு விரூபாக்கனைக் காவலாக வைத்தான். தானே இருநூறு வெள்ளப் படையுடன் வடக்கு வாயிலில் நின்றான். இச்சமயம் இரவு நீங்கப் பகலவன் கிளம்பினான். கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம், காணும் நலம்கிளர் தேவர்க் கேயோ, நான்மறை முனிவர்க் கேயோ பொலம்கெழு சீதைக் கேயோ, பொருவலி இராமற் கேயோ இலங்கையர் வேந்தற் கேயோ யாவர்க்கும் செய்தது இன்பம். 6 6. கலங்கிய - கலங்குதற்கு உரிய. கங்குல்ஆகி - இரவாகி நின்ற. நீங்கிய கற்பம் - நீங்கிய கற்ப காலமானது. கற்பம்; நீண்டபொழுது `யாவர்க்கும் இன்பம் செய்தது.’ அளித்தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி வெளிப்படல் அரிதுஎன்று உன்னி, வேதனை உழக்கும் வேலை, களித்தவன் களிப்பு நீக்கிக், காப்பவர் தம்மைக் கண்உற்று ஒளித்தவர் வெளிப்பட்டு என்னக், கதிரவன் உதயம் செய்தான். 7 7. அளித்தகவு இல்லா - இரக்கமாகிய பெருங்குணம் இல்லாத. ஆற்றல் அமைந்தவன் - வலிமையுள்ள அரசனது. வேதனை உழக்கும் வேலை - சிற்றரசர்கள் துன்புற்று வருந்தும் போது. களித்தவன் - செருக்குற்ற அம்மன்னவனுடைய. களிப்பு நீக்கி - செருக்கை அழித்து. 14. அங்கதன் தூதுப் படலம் இராமன் பதினேழு வெள்ளம் சேனையுடன் வடக்கு வாசலில் இராவணனை எதிர்பார்த்து நின்றபோது, வீடணனை நோக்கி உரைத்தல் தூதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி, `மோதினை விடுதி யோ’என்று உணர்த்தவே, மறுக்கும் ஆயின் காதுதல் கடன்;என்று உள்ளம் கருதியது; அறனும் அஃதே; நீதியும் அஃதே; என்றான் கருணையின் நிலயம் அன்னான். 1 அங்கதன் தூதுப் படலம்: இராவணனிடம் அங்க தனைத் தூதாக அனுப்பியதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. தூண்டி - தூண்டுதல் செய்து அனுப்பி. காதுதல் - அதன்பின் போர் செய்தலே. கருணையின் நிலயம் - கருணையின் இருப்பிடமான இராமன். அரக்கர்கோன் அதனைக் கேட்டான், `அழகிற்றே ஆகும்’ என்றான்; குரக்கினத்து இறைவன் கேட்டுக் `கொற்றவர்க்கு உற்றது’ என்றான்; `இரக்கம்அது இழுக்கம்’ என்றான் இளையவன்; `இனிநாம் அம்பு துரக்குவது அல்லால், வேறுஓர் சொல்உண்டோ?’என்னச் சொன்னான். 2 2. அரக்கர் கோன் - வீடணன். உற்றது - ஏற்றதே. இழுக்கம் - குற்றமாகும். இலக்குவன் மறுப்புரை `வாழியாய்! நின்னை அன்று வரம்பறு துயரின் வைகச், சூழ்விலா வஞ்சம் சூழ்ந்து,உன் துணைவியைப் பிரிவு செய்தான்; ஏழையாள் இடுக்கண் நோக்கி, ஒருதனி இகல்மேல் சென்ற, ஊழிகாண் கிற்கும் வாழ்நாள் உந்தையை, உயிர்பண்டு உண்டான்.’ 3 3. சூழ்விலா வஞ்சம் - எண்ணிப்பார்க்க முடியாத பெரிய வஞ்சகத்தை சூழ்ந்து - எண்ணி. ஏழையாள் - சீதையின். உந்தையை - உம் தந்தையான சடாயுவின். `அன்னவன் தனக்கு, மாதை விடில்உயிர் அருளு வாயேல், என்னுடை நாமம் நிற்கும் அளவெலாம், இலங்கை மூதூர் மன்னவன் நீயே என்று வந்துஅடைந் தவற்கு வாயால் சொன்னசொல் என்ஆம்? முன்னம் சூளுறவு என்ஆம்? தோன்றல்!’ 4 4. முன்னம் சூளுறவு - அரக்கரை அழிப்பேன் என்று முன்பு கூறிய சபதம். `அறம்தரு தவத்தை ஆயும் அறிவினால், அவற்றை முற்றும் மறந்தனை எனினும், மற்றுஇவ் இலங்கையின் வளமை நோக்கி., `இறந்துஇது போதல் தீது’என்று இரங்கினை எனினும், எண்ணின் சிறந்தது போரே’ என்றான்; சேவகன் முறுவல் செய்தான். 5 5. அவற்றை - முன் கூறியவற்றை. இலங்கையின் வளமை நோக்கி - இலங்கை நகரின் செல்வச் செழிப்பைப் பார்த்து. இது இறந்து போதல் - இது அழிந்து போவது. சேவகன் - வீரனாகிய இராமன். `அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த நயத்துறை நூலின் நீதி, நாம்துறந்து அமைதல் நன்றோ? புயத்துறை வலிய ரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல் சயத்துறை; அறனும் அஃதே;’ என்றிவை சமையச் சொன்னான். 6 6. அயர்த்திலென் - மறந்தவன் அல்லேன். முடிவும் அஃதே - முடிவாகச் செய்வதும் போரே தான். நயத்துறை நூலின் - நீதி நெறிகளை உரைக்கும் நூல்களிலே கூறப்பட்ட. நீதி - நீதி மொழியை. நாம் துறந்து அமைதல் நன்றோ - நாம் கை விட்டு அதற்கு மாறாகச் செய்தல் நல்லதோ. சயத்துறை - வெற்றிக்கு வழி. அங்கதனைத் தூதாக விடுத்தல் `மாருதி இன்னம் செல்லின், மற்றுஇவன் அன்றி வந்து சாருநல் வலியோர் இல்லை, என்பது சாரும் அன்றே; ஆர்இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும், ஒன்னார் வீரமே விளைப்ப ரேனும் தீதின்றி மீள வல்லான்.’ 7 7. சாருதல் வலியார் - சேர்வதற்கு உரிய வல்லமை உள்ளவர். ஒன்னார் - பகைவர். நன்றென அவனைக் கூவி, `நம்பிநீ நண்ண லார்பால் சென்றுஉளது உணர ஒன்று செப்பினை திரிதி!’ என்றான்; அன்றவன் அருளப் பெற்ற, ஆண்தகை, அலங்கல் பொன்தோள் குன்றினும் உயர்ந்தது என்றால், மனநிலை கூற லாமே? 8 8. நண்ணலார் பால் - பகைவர் பக்கம். திரீதி - மீண்டு வருக. அலங்கல் பொன்தோள் - மாலையை அணிந்த அழகிய தோள்கள். இராவணற்கு உணர்த்த வேண்டுவன இவை எனல் `என்அவற்கு உரைப்பது?’ என்ன, `ஏந்திழை யைக்கை விட்டுத் தன்உயிர் பெறுதல் நன்றோ? அன்றெனில் தலைகள் பத்தும் சின்னபின் னங்கள் செய்யச் செருக்களம் சேர்தல் நன்றோ? சொன்னவை இரண்டின் ஒன்றே துணிகெனச் சொல்லிடு.’ என்றான். 9 9. -. `அறத்துறை அன்று; வீரற்கு அழகும்அன்று; ஆண்மை யன்று; மறத்துறை அன்று; சேமம் மறைந்துஉறைந்து ஒதுங்கி வாழ்தல்; நிறத்துஉற வாளி கோத்து நேர்வந்து நிற்கும் ஆகின் புறத்துற எதிரே வந்து போர்தரப் புகல்தி!’ என்றான். 10 10. அறத்துறை அன்று - தரும நெறி அன்று. மறத்துறை அன்று - வீரநெறியும் அன்று. சேமம் - பாதுகாப்புள்ள இடத்திலே. நிறத்துஉற - மார்பிலே அழுந்த. புறத்து உற - வெளியே தோன்ற. போர்தர - போர் செய்யும்படி. புகல்தி - சொல்லுக. பார்மிசை வணங்கிச், சீயம் விண்மிசைப் படர்வ தேபோல் வீரன்வெம் சிலையில் கோத்த அம்பென, விசையில் போனான், `மாருதி அல்லன் ஆகில், நீ,எனும் மாற்றம் பெற்றேன்; யார்இனி என்னோடு ஒப்பார்?’ என்பதுஓர் இன்பம்உற்றான். 11 11. இன்பம் உற்றான் - மகிழ்ச்சியடைந்தவனாகிய அங்கதன். சீயம் - சிங்கம் ஒன்று. விசையில் - வேகமாக. அங்கதன் இராவணன் முன் செல்லல் அழுகின்ற கண்ணர் ஆகி,`அனுமன்கொல்?’ என்ன அஞ்சித் தொழுகின்ற சுற்றம் சுற்றச், சொல்லிய துறைகள் தோறும் மொழிகின்ற வீரன் வார்த்தை முகந்தொறும் செவியின் மூழ்க, எழுகின்ற சேனை நோக்கி இயைந்துஇருந் தானைக் கண்டான். 12 12. சுற்றம் சுற்ற - உறவினர்கள் சூழ. சொல்லிய துறைகள் தோறும் - சொல்லப்பட்ட ஒவ்வொரு துறையிலும் உள்ள. வீரர் மொழிகின்ற வார்த்தை - வீரர்கள் சொல்லுகின்ற சொற்கள். இயைந்து - பொருந்தி. இன்றிவன் தன்மை எய்த நோக்கினால், எதிர்ந்த போரில் வென்றஎன் தாதை மார்பில் வில்லின்மேல் கணைஒன்று ஏவிக் கொன்றவன் தானே வந்தான்; என்றுதான் குறிப்பின் அல்லால், ஒன்றுஇவன் தன்னைச் செய்ய வல்லரே உயிர்க்கு நல்லார்? 13 13. கொன்றவன் தானே வந்தான் - கொன்றவனே கொல்ல வந்தான். உயிர்க்கு நல்லார் - தமது உயிர்க்கு நன்மை செய்ய நினைப்பவர். `இவன் தன்னை ஒன்று செய்ய வல்லரோ’ ஒன்று - ஏதேனும். `அணிபறித்து அழகு செய்யும் அணங்கின்மேல் வைத்த ஆசைப் பிணிபறித்து, இவணை யாவர் முடிப்பவர் படிக்கண்? பேழ்வாய் பணிபறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி மணிபறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன்’ என்றான். 14 14. அணி பறித்து - ஆபரணங்களை நீக்கி. ஆசைப் பிணி பறித்து - ஆசை நோயைப் பிடுங்கி. படிக்கண் - பூமியிலே. பேழ்வாய்ப் பணி பறித்து - பிளந்தவாயையுடைய பாம்பைத் தூக்கிக் கொண்டு கலுழனின் - கருடனைப் போல. நெடுந்தகை விடுத்த தூதன், இனையன நிரம்ப எண்ணிக், கடுங்கடல் விடமும், கூற்றும் கலந்து,கால் கரமும் காட்டி, விடும்சுடர் மகுடம் மின்ன, விரிகடல் இருந்தது என்னக் கொடுந்தொழில் மடங்கல் அன்னான், எதிர்சென்று குறுகி நின்றான். 15 15. தூதன் - அங்கதன். விரிகடல் - பெரிய கடலானது .`கடும்கடல் விடமும், கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி, விடும் சுடர் மகுடம் மின்ன இருந்தது என்ன.’ கொடுந்தொழில் மடங்கல் அன்னான் - இருந்த கொடும் செயலையுடைய சிங்கம் போன்ற இராவணன். இராவணன் கேள்வி நின்றவன் தன்னை அன்னான் நெருப்புஎழ நிமிரப் பார்த்து,`இங்கு இன்றுஇவண் வந்த நீயார்? எய்திய கருமம் என்னை? கொன்றுஇவர் தின்னா முன்னம் கூறுதி தெரிய?’ என்றான்; வன்திறல் வாலி சேயும் வாள்எயிறு இலங்க நக்கான். 16 16. -. அங்கதன் விடை `பூதநா யகன்,நீர் சூழ்ந்த புவிக்குநா யகன்,இப் பூமேல் சீதைநா யகன்,வே றுள்ள தெய்வநா யகன்,நீ செப்பும் வேதநா யகன்,மேல் நின்ற விதிக்குநா யகன்தான் விட்ட தூதன்யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்;’ என்றான். 17 17. இப்பூமேல் - இந்த இலங்கையின்மேல் உள்ள. பணித்த மாற்றம் - கட்டளையிட்ட மொழிகளை. சொல்லிய- சொல்லு வதற்காக. இராவணன் `கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி சங்கமும் தரித்த மால்,மற்று இந்நகர் தன்னைச் சாரார்; அங்கவர் தம்மை அன்றி, மனிதனுக் காக, அஞ்சாது இங்குவந்து, இதனைச் சொன்ன தூதன்நீ யாவன்?’ என்றான். 18 18. -. அங்கதன் இந்திரன் செம்மல் பண்டு,ஓர் இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும், வாலிடைத் தூங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்; தேவர் உண்ண மந்திரப் பொருப்பால் வேலை கலக்கினான்; மைந்தன்;’ என்றான். 19 19. இந்திரன் செம்மல் - வாலி. தூங்கச் சுற்றி - தொங்கும்படி சுற்றி. சிந்துரக் கிரிகள் தாவி - யானைகள் வாழும் மலைகளிலே பாய்ந்து. வேலை கலக்கினான் - கடலைக் கடைந்தவன். இராவணன் `உந்தைஎன் துணைவன் அன்றே? ஓங்குஅறச் சான்றும் உண்டால்! நிந்தனை இதன்மேல் உண்டோ நீஅவன் தூதன் ஆதல்? தந்தனன் நினக்கு யானே வானரத் தலைமை; தாழா வந்தனை! நன்று செய்தாய்! என்னுடை மைந்த!’ என்றான். 20 20. ஓங்கும் அறச்சான்றும் உண்டு ஆல் - சிறந்த நல்ல சாட்சியும் உண்டு; ஆல்; அசை. நீ அவன் தூதன் ஆதல் இதன் மேல் - நீ அவனுடைய தூதனாகின்ற இதைவிட. நிந்தனை உண்டோ - பழி வேறுண்டோ? `தாதையைக் கொன்றான் பின்னே தலைசுமந்து இருகை, நாற்றிப், பேதையன் என்ன வாழ்ந்தாய்! என்பதுஓர் பிழையும் தீர்ப்பாய்! சீதையைப் பெற்றேன்! உன்னைச் சிறுவனும் ஆகப் பெற்றேன்; ஏதுஎனக்கு அரியது?’ என்றான் இறுதியின் எல்லை கண்டான். 21 21. இருகை தலை சுமந்து - இரண்டு கைகளைத் தலைமேல் வைத்துக் கொண்டும். நாற்றி - முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டும். பிழையும் - வசை மொழியையும். இறுதியின் எல்லை - ஆயுளின் எல்லையை. `அந்நரர் இன்று நாளை, அழிவதற்கு ஐயம் இல்லை; உன்அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி ஊழிக் காலம்; பொன்அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய, மன்னவ னாக யானே சூட்டுவன் மகுடம்;’ என்றான் 22 22. பொன் அரி சுமந்த பீடத்து - பொன்னாலாகிய சிங்கம் சுமந்த ஆசனத்திலே வைத்து; சிம்மாசனம். அங்கதன் இகழ்ச்சி அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கித், துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்; `இங்குநின் றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி, உங்கள்பால் நின்றும், எம்பால் போந்தனன் உம்பி” என்றான். 23 23. துங்க வன் தோளும் - தூய்மையான வலிமையுள்ள இரண்டு தோள்களும். `வாய்தரத் தக்க சொல்லி, என்னைஉன் வசம்செய் வாயேல், ஆய்தரத் தக்கது அன்றோ? தூதுவந்து அரசது ஆள்கை, நீதரக் கொள்வேன் யானே, இதற்குஇனி நிகர்வேறு எண்ணின், `நாய்தரக் கொள்ளும் சீயம் நல்அரசு!’ என்று நக்கான். 24 24. `தூது வந்து அரசுஅது ஆள்கை’ ஆய்தரத் தக்கது அன்றோ - ஆராயத் தக்கதன்றோ. நீ தரக் கொள்வேன் யானே - நீ கொடுக்க நான் அரசை ஏற்றுக் கொள்வேனோ? அடுவெனே என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், `அந்தோ தொடுவெனே குரங்கைச் சீறிச் சுடர்ப்படை’ என்று தோன்றா நடுவனே செய்யத் தக்க நாள்உலந் தார்க்குத் தூத! படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி!’ என்றான். 25 25. அடுவெனே - கொல்லுவேன். பொங்கி ஓங்கிய. கோபம் மிகுந்து எழுந்த. அரக்கன் - இராவணன். நடுவன் - எமன். நாள் உலந்தார்க்கு - ஆயுள் அழிந்தவர்களுக்கு. படுவது - இறப்பது. அங்கதன் தான் வந்த காரியத்தை அறிவித்தல் `கூவியின்று என்னை `நீபோய்த் தன்குலம் முழுதும் கொல்லும் பாவியை அமருக்கு, அஞ்சி அரண்புக்குப் பதுங்கி னானைத் தேவியை விடுக! அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண் ஆவியை விடுக! என்றான், அருள்இனம் விடுகி லாதான்.’ 26 26. `அருள் இனம் விடுகிலாதான்’ இன்று என்னைக் கூவி, பதுங்கினானை - பதுங்கிய இராவணனைக் கண்டு. `பருந்துணப் பாட்டி யாக்கை படுத்தநாள், படைஞ ரோடும் மருந்தினும் இனிய மாமன் மடிந்தநாள், வனத்துள் வைகி இருந்துழி வந்த தங்கை மூக்கும்வெம் முலையும் எம்பி அரிந்தநாள், வந்தி லாதான் இனிச்செய்யும் ஆண்மை உண்டோ?’ 27 27. பாட்டி - தாடகை. மாமன் - சுபாகு; தாடகையின் மகன்; மாரீசனின் சகோதரன். `கிளையொடும் படைஞ ரோடும், கேடுஇலா உயிர்கட்கு எல்லாம் களைஎனத் தம்பி மாரை வேரொடும் களையக் கண்டும் இளையவன் பிரிய மாயம் இயற்றி,ஆ யிழையை வெளவும் வளைஎயிற்று அரக்கன் வெம்போர்க்கு இனிஎதிர்வருவது உண்டோ?’ 28 28. உயிர்கட்கு எல்லாம் கேடு இலா - உலகத்து உயிர்களுக்கெல்லாம் தீமை இல்லாதபடி. களை என - களை எடுப்பது போல. தம்பிமாரை - கர. தூஷண, திரிசிரர்களை. ஆயிழை - சீதை. `ஏந்திழை தன்னைக் கண்உற்று, எதிர்ந்தவர் தம்மை எற்றிச், சாந்துஎனப் புதல்வன் தன்னைத் தரையிடைத் தேய்த்துத், தன்ஊர் காந்துஎரி மடுத்துத், தானும் காணவே கடலைத் தாவிப் போந்தபின், வந்தி லாதான், இனிப்பொரும் போரும் உண்டோ?’ 29 29. எற்றி - கொன்று. புதல்வன் - புதல்வனாகிய அட்சகுமாரனை. `என்றிவை இயம்பி வாஎன்று ஏவினன் என்னை; எண்ணி ஒன்றுனக்கு உறுவது உன்னித் துணிந்துரை; உறுதி பார்க்கின் துன்றுஇரும் குழலை விட்டுத் தொழுதுவாழ்; சுற்றத் தோடும் பொன்றுதி ஆயின் என்பின் வாயிலில் புறப்படு;’ என்றான். 30 30. ஒன்று உனக்கு உறுவது உன்னி - இவற்றுள் உனக்கு நன்மை தருவது ஒன்றை ஆராய்ந்து. சுற்றத்தொடும் தொழுது வாழ் - சுற்றத்தாரோடும் வணங்கி வாழ்க. பொன்றுதியாயின் - இறப்பாயானால். இராவணன் கோபம் சொற்ற வார்த்தையைக் கேட்டலும், தொல்உயிர் முற்றும் உண்பது போலும் முனிவினான், `பற்று மின்!கடி தின்;நெடும் பார்மிசை எற்று மின்!’என நால்வரை ஏவினான். 31 31. தொல் உயிர் - பழமையான உயிர். பார்மிசை - நிலத்திலே. எற்றுமின் - அறையுங்கள். தன்னைப் பிடிக்க வந்தார்களைக் கொன்று விட்டு, வான் வழியே வந்து இராமன் பாதங்களை வணங்கினான் அங்கதன். உற்ற போதுஅவன் உள்ளக் கருத்தெலாம் கொற்ற வீரன் `உணர்த்’தென்று கூறலும், `முற்ற ஓதிஎன்? மூர்க்கன் முடித்தலை அற்ற போதுஅன்றி ஆசை அறான்;’ என்றான்; 32 32. உற்றபோது - அங்கதன் வந்த போது. முற்ற ஓதி என் - முழுவதும் சொல்லி என்ன பயன்? ஆசை அறான் - ஆசை ஒழியான். 15. முதற் போர்ப் படலம் தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கிய, மடங்கல் அன்ன, அவ் வானர மாப்படை, இடங்கர் மாஇரி யப்,புனல் ஏறிடத், தொடங்கி வேலை அகழியைத் தூர்த்தது;ஆல். 1 முதல் போர்ப் படலம்: முதல் நாள் நடந்த போரைப் பற்றிக் கூறும் பகுதி. 1. தடம் கொள் - பருமையைக் கொண்ட. இடங்கர் மா இரிய - முதலை முதலிய உயிர்கள் நீங்கவும். புனல் ஏறிட - நீர் நிலத்தின் மேல் ஏறி வரவும். தொடங்கி - போர் தொடங்கி. விளையும் வென்றி இராவணன் மெய்ப்புகழ், முளையி னோடும் களைந்து முடிப்பபோல், தளைஅ விழ்ந்த கொழுந்தடந் தாமரை வளையம் வன்கையில் வாங்கின வானரம். 2 2. தளை அவிழ்ந்த - முறுக்கு அவிழ்ந்த. வளையம் - அடிப் பாகத்தை. இகழும் தன்மையன் ஆய இராவணன் புகழும் இன்றொடு போயின தாம்;என, நிகழும் கள்நெடு நீலம் உகுத்தலால், அகழி தானும் அழுவது போன்றதே. 3 3. நிகழும் கள் - பெருகும் தேனையுடைய. நெடு நீலம் - நீண்ட குவளை மலர்கள். முகிழ்த்தலால் - மூடிக்கொள்ளுவதால். தன்மைக் குத்தலை ஆய தசமுகன் தொன்மைப் பேர்அகழ், வானரம் தூர்த்ததால்; இன்மைக் கும்,ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும் வன்மைக் கும்,ஓர் வரம்பும்உண் டாம்கொலோ? 4 4. தசமுகன் - இராவணனுடைய. தன்மைக்குத் தலைஆய - மேன்மைக் கெல்லாம் சிறந்த இடமான. தொன்மைப் பேர் அகழ் - பழமையான பெரிய அகழியை. ஓர் வரம்பும் - ஓர் எல்லையும். பற்கொ டும்,நெடும் பாதவம் பற்றியும், கற்கொ டும்,சென்றது அக்கவி யின்கடல்; விற்கொ டும்,நெடு வேல்கொடும், வேறுஉள எல்கொ டும்படை யும்கொண்டது, இக்கடல். 5 5. பற்கொடும - பற்களாலும். பாதவம் - மரம். இக்கடல் - அரக்கர்களின் சேனைக் கடல். எல்கொடும் படையும் - ஒளி பொருந்திய கொடுமையான ஆயுதங்களையும். வானரர் அரக்கர் போர் கடித்த; குத்தின கையில்; கழுத்துஅறப் பிடித்த; வள்உகி ரால்பிளவு ஆக்கின; இடித்த; எற்றின எண்இல் அரக்கரை முடித்த; வானரம் வெம்சினம் முற்றின. 6 6. வன் உகிரால் - கூர்மையான நகங்களால். வெம் சினம் முற்றின வானரம் - கொடுஞ்சினம் நிறைந்த குரங்கினங்கள். `கடித்த.... முடித்த. எறிந்தும், எய்தும், எழுமுளைத் தண்டுகொண்டு அறைந்தும், வெவ்அயில் ஆகத்து அழுத்தியும், நிறைந்த வெம்கண் அரக்கர் நெருக்கலால், குறைந்த வானர வீரர் குழுக்களே. 7 7. எழு முளைத் தண்டு கொண்டு - இரும்புத் தூண் போன்ற பூண் கட்டிய தண்டாயுதத்தினால். அறைந்தும் - அடித்தும். நிறைந்த வெம் கண்நிறைந்த கொடுமையான கண்களையுடைய; மிகுந்த கொடுமையைத் தம்மிடத்தே யுடைய. இதன்பின் அரக்கர் படைகள் அழிந்தன. படைத் தலைவர்கள் பலர் மாண்டனர். சுக்கிரீவன், நீலன், அங்கதன், மாருதி முதலியோர் `கடும்போர் புரிந்தனர். படைகள் அழிந்ததையும், படைத்தலைவன் மாண்டதையும் இராவணன் அறிந்தான். இராவணன் போருக்கெழுதல் கருப்பைப் போல்குரங்கு எற்றக், கதிர்கழல் பொருப்பை ஒப்பார்தாம் இன்று பொன்றினார்; அருப்பம் என்று பகையையும், ஆர்எழல் நெருப்பை யும்இகழ்ந் தால்,அது நீதியோ? 8 8. கருப்பைப் போல் - எலியைப் போன்ற. குரங்கு எற்ற - குரங்குகள் தாக்க. அருப்பம் என்று - அற்பமானவை என்று. ஊன்றிய பெரும்படை உலைய, உற்றுடன் ஆன்றபோர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்தெழத் தோன்றினன், உலகெலாம் தொடர்ந்து நின்றன மூன்றையும் கடந்துஒரு வெற்றி முற்றினான். 9 9. ஊன்றிய பெரும்படை - நிலைத்து நின்ற பெரிய வானரப் படை. உலைய உற்று - வருந்தும்படி வந்து. உடன் ஆன்ற - தன்னுடன் நிறைந்து வந்த. உலகு எலாம் மூன்றையும் - உலகம் முழுவதாகிய மூன்றையும். இராவணன் வருகை அறிந்து இராமன் போர்க்கோலம் பூணல் ஆங்கவன் அமர்த்தொழிற்கு அணுகி னான்என, `வாங்கினென் சீதையை’என்னும் வன்மையால் தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வுஅற, வீங்கின ஆரியன் வீரத் தோள்களே. 10 10. ஆங்கவன் - இராவணன். சீதையை வாங்கினன் - சீதையை மீட்டேன். தேய்வு அற - தேய்வு நீங்கும்படி. தொடையுறு வற்கலை ஆடை சுற்றி,மேல் புடைஉறு வயிரவாள் பொலிய வீக்கினான்; இடையுறு கருமத்தின் எல்லை கண்டவர் கடையுறு நோக்கினில் காணும் காட்சியான். 11 11. வற்கலை ஆடை - மர வுரியாகிய ஆடையை. புடைஉறு - பக்கத்திலே அமைகின்ற. வீக்கினான் - கட்டினான். இடை உறு - இடையூறாக வந்த. கடையுறு நோக்கினில் - இறுதியின். பல்இயல் உலகுறு பாடை, பாடுஅமைந்து, எல்லையில் நூற்கடல் ஏற நோக்கிய, நல்இயல் நவைஅறு கவிஞர் நாவரும் சொல்எனத் தொலைவுஇலாத் தூணி தூக்கினான். 12 12. உலகுறு பல் இயல் பாடை - உலகிலே அமைந்த பல தன்மைகளையுடைய பல மொழிகளிலும். பாடு அமைந்து - சிறந்த தேர்ச்சியமைந்து. எல்லையில் நூல் கடல் - அளவற்ற கலைக் கடலை. ஏற நோக்கிய - நன்றாக அறிந்த. சொல்என - சொற்களைப் போல. நாற்கடல் உலகமும், விசும்பும் நாண்மலர் தூர்க்க,வெம் சேனையும் தானும் தோன்றினான்; மாற்கடல் வண்ணன்தான் வளரும் மால்இரும் பாற்கட லோடும்வந்து எதிரும் பான்மைபோல். 13 13. உலகமும் - உலகில் உள்ளவர்களும். விசும்பும் - வானுலகில் உள்ளவர்களும். தூர்க்க - நிறைக்க. மால் கடல் - கரிய கடல் போன்ற. மால் இரும் - மிகப் பெரிய. இராமன், கருங்கடல்; வானரப்படை, பாற்கடல். இராவணன் செய்கை அவ்வழி, இராவணன், அமரர் அஞ்சத்,தன் வெவ்விழி நெருப்புக, வில்லின் நாணினைச் செவ்வழிக் கோதையில் தெறிக்க, சிந்தி, ஆங்கு எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம். 14 14. செவ்வழி - நன்றாக. கோதையின் - கையிலே கட்டிய தோலுடன்; கோதை - போர் வீரர்கள் முன் கையில் அணியும் கையுறை போன்ற ஒரு கருவி. பொரக்,கரு நிறநெடு விசும்பு போழ்பட, இரக்கம்இல் இராவணன் எறிந்த நாணினால் குரக்கினம் உற்றதுஎன், கூறின் தன்குலத்து அரக்கரும் அனையதுஓர் அச்சம் எய்தினார். 15 15. பொர - போர் செய்வதற்காக. போழ்பட - பிளவுபட. உற்றது என் - அடைந்த துன்பம் மட்டும் என்ன? வீடணன் ஒருவனும், இளைய வீரனும், கோடுஅணை குரங்கினுக்கு அரசும், கொள்கையால் நாடினர் நின்றனர்; நாலு திக்கினும் ஓடினர் அல்லவர்; ஒளித்தது உம்பரே. 16 16. கோடு அணை - மரக் கிளைகளிலே வாழ்கின்ற .கொள்கையான் - வலிமையால். நாடி நின்றனர் - மேலே செய்ய வேண்டியதை எண்ணிக் கொண்டு நின்றனர். உம்பர் - தேவர்களும். ஒளித்தது - ஒளித்துக் கொண்டது. சுக்கிரீவன், மாருதி முதலினோர் இராவணனுடன் போர் செய்து சோர்வுற்றனர்; குரங்குப் படைகள் குலைந்தன. உடனே இலக்குவன் தோன்றினான். தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையைநாண் எறிந்தான்,தீய மாயத்தின் இயற்கை வல்லார் நிலைஎன்னை; முடிவின் மாரி ஆயத்தின் இடிஇது என்றே அஞ்சின உலகம்; யானை சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம். 17 17. மைந்தன் - மைந்தனாகிய இலக்குவன். முடிவின் ஊழிக் காலத்தில் பெய்யும். மாரி ஆயத்தின் - மேகக் கூட்டத்தின். யானை - யானை யானது. ஆற்றல்சால் அரக்கன் தானும், அயல்நின்ற வயவர் நெஞ்சம் வீற்றுவீற் றாகிஉற்ற தன்மையும், வீரன் தம்பி கூற்றின்வெம் புருவம் அன்ன சிலைநெடும் குரலும் கேளா ஏற்றினன் மகுடம், `என்னை இவன்ஒரு மனிதன்’ என்றான். 18 18. அரக்கன் - இராவணன். வயவர் - வீரர்களின். வீற்று வீற்று. ஆகி உற்ற தன்மை யும் - துண்டு துண்டாக்கிப் பிளந்த தன்மையையும். வீரன் தம்பி - இலக்குவனுடைய. கேளா - கேட்டு. கட்டமை தேரின் மேலும், களிநெடும் களிற்றின் மேலும், விட்டெழு புரவி மேலும், வெள்எயிற்று அரக்கர் மேலும், முட்டிய மழையின் துள்ளி முறையின்றி மொய்க்கும் ஆபோல், பட்டன பகழி; எங்கும் பரந்தது குருதிப் பௌவம். 19 19. கட்டு அமை - உறுதியுள்ள. களி நெடும் - செருக்குள்ள உயர்ந்த. வீட்டு எழு - விட்டுப் பாய்ந்து ஓடுகின்ற. அரக்கர் படைகள் இலக்குவனைச் சுற்றுதல் `உறுபகை மனிதன், இன்றுஎம் இறைவனை உறுகிற் பானேல் வெறுவிது நம்தம் வீரம்,’ என்றுஒரு மேன்மை தோன்ற எறிபடை, அரக்கர் ஏற்றார்; ஏற்றகை மாற்றான் என்ன வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேற்சென்று என்ன. 20 20. உறுபகை மனிதன் - பெரிய பகைவனாகிய மனிதன் ஒருவன். உறுகிற்பானேல் - நெருங்குவானாயின். ஏற்றகை மாற்றான் என்ன - இரந்து ஏந்திய கையில் ஒன்றும் கொடாமல் மறுக்க மாட்டான் என்னும். ஒருவன் வண்மை பூண்டவன் மேல் - ஒருவனாகிய வள்ளல் தன்மையைக் கொண்டவன் எதிரில். வறியவர் சென்று என்ன - வறியோர் சென்றதைப் போல. அரக்கர் ஏற்றார் - அரக்கர்கள் இலக்குவன் எதிரே வந்தனர். சாய்ந்தது நிருதர் தானை; தமர்தலை இடறித் தள்ளுற்று ஓய்ந்தன; ஒழிந்த ஓடி உலர்ந்தன; ஆக, அன்றே வேய்ந்தது வாகை, வீரற்கு இளையவன் வரிவில்; வெம்பிக் காய்ந்ததுஅவ் விலங்கை வேந்தன் மனம்எனும் காலச் செந்தீ. 21 21. தமர்தலை இடறித்தள்ளுற்று - தம்மவர்களின் தலைகள் அறுத்துத் தள்ளப்பட்டு உயிர் நீங்கின. ஒழிந்தன மற்றவை ஓடி உலந்தன ஆக - மற்றவைகள் ஓடி அழிந்தனவாகலின். இச் சமயத்தில் இராவணன் புகுந்து இலக்குவனது அம்புப் புட்டிலை அறுத்தான். உடனே மாருதி தோன்றினன்; இராவண னுடன் மற்போர் புரிந்தான். மாருதியால் குத்துண்ட இராவணன் தள்ளாடினான். `வலிஎன்பதும் உளதேஅது நின்பாலது மறவோய்! அலிஎன்பவர் புறம்நின்றவர்; உலகுஏழையும் அடர்த்தாய்; சலிஎன்றுஎதிர் மலரோன்உரை தந்தால்இறை சலியேன்; மெலிவென்பது உணர்ந்தேன்;எனை வென்றாய்இனி விறலோய்!’ 22 22. `வலி என்பதும் அது நின்பாலதே உளது மறவோய்’ புறம் நின்றவர் அலி என்பவர் - புறத்திலே நிற்பவர் அலிகளே யாவர். என்று புகழ்ந்தான். மாருதியின் மார்பிலே குத்தினான்; அவனும் தள்ளாடினான். இச்சமயத்தில் வானரப் படைகள் ஒன்று கூடி அரக்கரைச் சாடின. அரக்கர்கள் அஞ்சியோடினர். இராவணன் சினப்போர் `கொல்வென்இக் கணமே மற்றுஇவ் வானரக் குழுவை; வெல்வென் மானுடர் இருவரை;’ எனச்சினம் வீங்க வல்வன் வார்சிலை பத்துடன் இடக்கையின் வாங்கித், தொல்வன் மாரியில், தொடர்வன சுடுசரம் துரந்தான். 23 23. வல் வன் வார்சிலை - மிகுந்த வலிமையுள்ள நீண்ட விற்கள். தொல்வன் மாரியின் - பழமையான வலிமையுள்ள மழையைப் போல. தொடர்வன - தொடர்ச்சியாக. போர்க்களக் காட்சி அந்தி வானகம் ஒத்ததுஅவ் அமர்க்களம்; உதிரம் சிந்த வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால் பந்தி பந்தியாய் மடிந்தது வானரப் பகுதி; வந்து மேகங்கள் படிந்தன பிணப்பெரு மலைமேல். 24 24. -. நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் இராவணன் கணை மாரியால் கலங்கினர். வானரப் படைகள் சிதறின. இச்சமயம் இலக்குவன் சினந்து கணை ஏவி இராவணன் கைவில்லைத் துணித்தான். இராவணன் இலக்குவனைப் புகழ்தல் `நன்று போர்வலி! நன்றுபோர் ஆள்வலி! வீரம் நன்று! நோக்கமும் நன்று!கைக் கடுமையும் நன்று! நன்று கல்வியும்! நன்றுநின் திண்மையும், நலனும்;’ என்று கைம்மறித்து இராவணன் `ஒருவன்நீ’ என்றான். 25 25. போர் ஆள் வலி - போர் வீரன் வலிமை; போர் முறையைக் கையாளும் வலிமை. என்று இராவணன் கைமறித்து - என்று சொல்லி இராவணன் கையை மடக்கிக் கொண்டு. `கானின் அன்று,இகல் கரன்படை படுத்தஅக் கரியோன் தானும், இந்திரன் தன்னைஓர் தனுவலம் தன்னால் வானில் வென்றஎன் மதலையும், வரிசிலை பிடித்த யானும், அல்லவர் யார்உனக்கு எதிர்?’என்றும் உரைத்தான். 26 26. கானின் - காட்டிலே. இகல் - போரிலே. என் மதலையும் - என் மகனாகிய இந்திரசித்தும். இலக்குவனை வில்லால் வெல்ல முடியாது என்றறிந்த இராவணன் ஒரு வேற்படையை அவன் மார்பிலே ஏவிச் சாயும்படி செய்தான். சாய்ந்த இலக்குவனை இரவாணன் தூக்கிச் செல்ல முயன்றான்; முடியவில்லை. உடனே அனுமான் புகுந்து இளையோனை எடுத்துச் சென்றான். இராமன் அனுமான் தோளில் அமர்ந்து போர் செய்யப் புறப்படுதல் ஓதம் ஒத்தனன் மாருதி; அதன்அகத்து உறையும் நாதன் ஒத்தனன் என்னிலோ, துயில்கிலன் நம்பன்; வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்;வேறு இதின்இலை பொருவே. 27 27. ஓதம் - பாற்கடலை. நாதன் - தலைவனாகிய திருமாலை. என்னிலோ நம்பி துயில்கிலன் - என்றாலும் நம்பன் தூங்க வில்லை. வேதத்தின் சிரத்தின் போதும் - வேதத்தின் முடிவிலே உள்ள அறிவு. அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர்குறித்து அமைந்தான், எண்அ ரும்பெருந் தனிவலிச் சிலையைநாண் எறிந்தான்; மண்ணும், வானமும், மற்றைய பிறவும்தன் வாய்ப்பெய்து, உண்ணும் காலத்துஅவ் உருத்திரன் ஆர்ப்புஒத்தது ஓதை. 28 28. எண் அரும் - நினைக்கவும் முடியாத. பெரும் தனிச் சிலையை - பெரிய ஒப்பற்ற வில்லை. ஆர்ப்பு - ஆரவாரத்தை. ஒன்று, நூற்றினோடு ஆயிரம் கொடுந்தலை உருட்டிச் சென்று தீர்வில, எனைப்பல கோடியும் சிந்தி நின்ற தேரொடும், இராவணன் ஒருவனும் நிற்கக், கொன்று வீழ்த்தினது இராகவன் சரம்எனும் கூற்றம். 29 29. இராகவன் சரம் எனும் கூற்றம் ஒன்று - இராமனுடைய அம்பு என்னும் எமன் ஒன்றே. தீர்வு இல - அவ்வளவோடு நிற்காமல். எனைப்பல கோடியும் சிந்தி - எத்தனையோ பல கோடி வீரர்களைச் சிதற அடித்து. இராமன் தன் கணைகளால், இராவணன் வில், அவன் தேர்க் குதிரைகள், குடை, கொடி, மார்புக் கவசம், இவைகளை யெல்லாம் அழித்தான். மேலும், மின்னும் பன்மணி மவுலிமேல் ஒருகணை விட்டான், அன்ன, காய்கதிர் இரவிமேல் பாய்ந்தபோர் அனுமன் என்னல் ஆயதுஒர் விசையினில் சென்று?அவன் தலையில் பொன்னின் மாமணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த. 30 30. அன்ன - அந்தக்கணை. தலையில் - தலையிலிருந்த. வீழ்த்த - தள்ளிற்று. சொல்லும் அத்தனை அளவையில் மணிமுடி துறந்தான்; எல்இ மைத்துஎழு மதியமும், ஞாயிறும் இழந்த அல்லும் ஒத்தனன்; பகலும்ஒத் தனன்;அமர் பொருமேல் வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன். 31 31. எல் இமைத்து எழு மதியமும் - ஒளிவிட்டுப் புறப்படும் சந்திரனையும். ஞாயிறும் இழந்த - சூரியனையும் இழந்த. `விறலோன் மணிமுடி துறந்தான்’. மாற்ற ரும்தட மணிமுடி இழந்தவாள் அரக்கன், ஏற்றம் எவ்வுல கத்தினும் உயர்ந்துளன் எனினும், ஆற்றல் நன்னெடும் கவிஞன்,ஓர் அங்கதம் உரைப்பப், போற்ற ரும்புகழ் இழந்தபேர் ஒருவனும் போன்றான். 32 32. மாற்ற அரும் தடம் - மாற்ற முடியாத பெரிய. ஆற்றல் நல்நெடும் கவிஞன் - கல்வி யறிவாற்றலுடைய நல்ல பெரிய கவிஞன் ஒருவன். அங்கதம் உரைப்ப - வசைப் பாடல் பாடியதனால். பேர் - பெருமையுள்ள. `அறம்க டந்தவர் செயல்இது’என்று உலகெலாம் ஆர்ப்ப, நிறம்க ரிந்திட, நிலம்விரல் கிளைத்திட நின்றான்; இறங்கு கண்ணினன், எல்அழி முகத்தினன், தலையன், வெறுங்கை நாற்றினன், விழுதுடை ஆல்அன்ன மெய்யன். 33 33. அறம் கடந்தவர் செயல் இது என்று - அறத்தைக் கை விட்டவர் செயல் இப்படித்தான் ஆகும் என்று சொல்லி. வெறும் கை நாற்றினன் - வெறுங் கைகளைத் தொங்க விட்டான். நின்ற வன்நிலை நோக்கிய, நெடுந்தகை, இவனைக் கொன்றல் உன்னிலன், `வெறுங்கைநின் றான்’எனக் கொள்ளா; `இன்று அவிந்தது போலும்உன் தீமை’என்று இசையோடு ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான். 34 34. `வெறுங்கை நின்றான் எனக் கொள்ளா கொன்றல் உன்னிலன்’ அவிந்தது - மறைந்தது. இசையோடு ஒன்ற வந்தன - சொல்லோடு கூடி வந்தனவாகிய. அறத்தி னால்அன்றி, அமரர்க்கும் அரும்சமம் கடத்தல் மறத்தி னால்அரிது; என்பது மனத்திடை வலித்தி! பறத்தி நின்னெடும் பதிபுகக் கிளையொடும்; பாவி! இறத்தி! யான்அது நினைக்கிலென் தனிமைகண்டு இரங்கி!’ 35 35. அரும் சமம் கடத்தல் - அரிய போரிலே வெல்லுதல். `பாவி, கிளையொடும் நின் நெடும்பதி புக’ பறத்தி - விரைந்து போ. இறத்தி - இந்நேரம் மாண்டிருப்பாய். `சிறையில் வைத்தவள் தன்னைவிட்டு உலகினில், தேவர் முறையில் வைத்து,நின் தம்பியை இராக்கதர் முதல்பேர் இறையில் வைத்து,அவற்கு ஏவல்செய்து இருத்தியேல், இன்றும் தரையில் வைக்கிலென் நின்தலை வாளியின் தடிந்து.’ 36 36. உலகினில் - இவ்வுலகில். தேவர் முறையில் வைத்து - தேவர்களை அவர்கள் இருக்க வேண்டிய முறையிலே வைத்து. இராக்கதர் - அரக்கர்களுக்கு. முதல்பேர் இறையில் வைத்து - முதன்மையான பெரிய அரச பதவியில் வைத்து. தடிந்து - அறுத்து. `அல்லை யாம்எனில், ஆர்அமர் ஏற்றுநின்று ஆற்ற வல்லை யாம்எனில், உனக்குள வலியெலாம் கொண்டு `நில் ஐயா,என நேர்நின்று பொன்றுதி எனினும் நல்லை ஆகுதி; பிழைப்புஇனி உண்டென நயவேல்.’ 37 37. என நேர் நின்று - என்று சொல்லி நேரில் எதிர்த்து நின்று. நல்லை ஆகுதி - நல்லவனாவாய். நயவேல் - உயிரில் விருப்பம் வைக்காதே. `ஆள் ஐயா!உனக்கு அமைந்தன, மாருதம் அறைந்த, பூளை ஆயின கண்டனை; `இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா’என நல்கினன்; நாகுஇளம் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுஉடை வள்ளல். 38 38. நாகு இளம் கமுகின் - மிகவும் இளமையான பாக்கு மரத்தின் மேல். வாளை தாவுறும் - வாளை மீன்கள் பாய்கின்ற நீர் வளம் உள்ள. ஆள் ஐயா - ஆளுகின்ற ஐயனே. உனக்கு அமைந்தன - உன்னுடைய சேனைகள். மாருதம் அறைந்த - பெருங்காற்றால் மோதப்பட்ட. பூளை ஆயின - பூனைச் செடிகளைப் போல ஆயின. 16. கும்பகருணன் வதைப் படலம் வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும், தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோடு இலங்கை புக்கான். 1 கும்பகருணன் வதைப் படலம்: இராவணன் தம்பியாகிய கும்ப கருணன் கொல்லப்பட்டதைப்பற்றிக் கூறும் பகுதி. 1. வாரணம் - திக்கு யானைகளுடன். இராவணன் தனது மார்பின் வலிமை, தோள் வலிமை, நாவின் வன்மை, முடிகள், வாள் வலிமை, வீரம் இவைகளை யெல்லாம் போர்க்களத்தில் இழந்தான். கிடந்தபோர் வலியார் மாட்டே கெடாதவா னவரை எல்லாம், கடந்துபோய், உலகம் மூன்றும் காக்கின்ற காவ லாளன், தொடர்ந்துபோம் பழியி னோடும், தூக்கிய கரங்க ளோடும், நடந்துபோய் நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2 2. கிடந்த போர் வலியார் மாட்டே - பொருந்திய போர் புரியும் வலிமை உள்ளவர்களிடமும். கெடாத - தோற்காத வெற்றியை யுடைய. கடந்து போய் - போரிலே வெற்றி கொண்டு. தூக்கிய - சுமந்த. நாகம் - அஸ்தமன கிரி. மாதிரம் எவையும் நோக்கான்; வளநகர் நோக்கான், வந்த காதலர் தம்மை நோக்கான்; கடல்பெரும் சேனை நோக்கான்; தாதுஅவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத், தான்ஓர் பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான். 3 3. மாதிரம் - திசைகள். தாது அவிழ் - மலர்களிலிருந்து மகரந்தங்கள் சிந்துகின்ற. மந்திரச் சுற்றத் தாரும், வாள்நுதல் சுற்றத் தாரும், தந்திரச் சுற்றத் தாரும், தன்கிளைச் சுற்றத் தாரும், எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றித், தான்ஓர் சிந்துரக் களிறு கூடம் புக்கெனக் கோயில் சேர்ந்தான். 4 4. தந்திரச் சுற்றத்தாரும் - படைத் தலைவர்களும். எந்திரப் பொறியின் - இயந்திரப் பதுமைகளைப் போல. சிந்துரக் களிறு - குங்குமம் பூசிய யானை. கூடம் - யானை கட்டும இடம். எண்டிசையிலும் உள்ள அரக்கர் படைகள் அனைத்தையும் அழைக்கும்படி தூதர்களிடம் கூறினான். பின்னர் ஓர் படுக்கையிலே போய் படுத்தான். பண்நிறை பவளச் செவ்வாய்ப் பைந்தொடிச் சீதை என்னும் பெண்இறை கொண்ட நெஞ்சில், நாண்நிறை கொண்ட பின்னர், கண்இறை கோடல் செய்யான்; கையறு கவலை சுற்ற உன்நிறை மானந் தன்னை உமிழ்ந்துஎரி உயிர்ப்பது ஆனான். 5 5. பண் நிறை - இசை போன்ற சொற்கள் நிறைந்த. இறை கொண்ட - தங்கிய. நாண் நிறை கொண்ட பின்னர் - நாணம் நிறைந்த பின்னர். இறைகண் கோடல் செய்யான் - சிறிதும் உறங்க மாட்டான். கையறு கவலை சுற்ற - மிகுந்த கவலை சூழ்ந்துகொள்ள. எரி - தீப்போல. வான்நகும், மண்ணும் எல்லாம் நகும்,மணி வயிரத் தோளான், `நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர்’என்று அதற்கு நாணான்; `வேல்நகு நெடும்கண், செவ்வாய், மெல்இயல் மிதிலை வந்த சானகி நகுவள்’ என்றே மானத்தால் சாம்பு கின்றான். 6 6. வான் நகும் - வானோர் பார்த்துச் சிரிக்கின்ற. மண்ணும் எல்லாம் நகும் - மண்ணுலகம் எல்லாம் பார்த்துச் சிரிக்கின்ற. வேல் நகும் நெடும் கண்ட - வேற்படையை இகழ்கின்ற நீண்ட கண்களையும். சாம்புகின்றான் - வாடுகின்றான். மாலியவான் வந்து அமர்ந்து இராவணனை உசாவுதல் இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கிப் `பொருந்தவந்து உற்ற போரில் தோற்றனை போலும்’ என்னா வருந்தினை மனமும்; தோளும் வாடினை நாளும் நாடாப் பெரும்தவம் உடைய ஐயா! என்உற்ற பெற்றி’ என்றான். 7 7. இருந்தவன் - உட்கார்ந்திருந்த மாலியவான். இயற்கையை - தன்மையை. எய்த நோக்கி - உற்றுப் பார்த்து. உற்ற பெற்றி என் என்றான் - வந்த விதம் என்ன என்றான். இராவணன் உரைத்த மறுமொழி `முளைஅமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வன் ஆகக் கிளைஅமை புவனம் மூன்றும் வந்துடன் கிடைத்த வேனும், வளைஅமை வரிவில் வாளி மெய்உற வழங்கும் ஆயின் இளையவன் தனக்கும் ஆற்றாது என்பெரும் சேனை நம்ப.’ 8 8. கிளை அமை - தொடர்ச்சியாக அமைந்த. மெய்உற - உடம்பிலே தைக்கும்படி. நம்ப - பெரியோனே. `நல்இயல் கவிஞர் நாவில் பொருள்குறித்து அமர்ந்த நாமச் சொல்எனச், செய்யுள் கொண்ட தொடைஎனத், தொடையை நீக்கி எல்லையில் சென்றும் தீரா இசைஎனப், பழுது இலாத பல்அலங் காரப் பண்பே, காகுத்தன் பகழி’ மாதோ. 9 9. நாமச் சொல் என - சிறந்த மொழியைப் போல. செய்யுள் கொண்ட - செய்யுளில் அமைந்துள்ள. நீக்கி - தவிர்த்து. பல் அலங்காரப் பண்பே - பலவிதமான அலங்காரத் தன்மையைக் கொண்டதே. மாது, ஓ; அசைகள். `வாசவன், மாயன், மற்றை மலர்உளோன், மழுவாள் அங்கை ஈசன்என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி, நாசம்வந்து உற்ற போதும, நல்லதுஓர் பகையைப் பெற்றேன்; பூசல்வண்டு உறையும் தாராய்! இதுஇங்குப் புகுந்தது’ என்றான். 10 10. இனிவரும் இனைய தன்மை - இகழ்ச்சி பொருந்திய இத்தகைய தன்மையுள்ள. இவரால் அன்றி - இவர்களால் அல்லாமல். நாசம் - அழிவு. பூசல் வண்டு - ஆரவாரம் புரியும் வண்டுகள். மாலியவான் உரைத்தது `உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார் விளைவன சொன்ன போதும் கொள்கிலை; விடுதல் கண்டாய்! கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை,நம் கல்வி, செல்வம் களைவுஅரும் தானை யோடும் கழிவது காண்டி’ என்றான். 11 11. உளைவன எனினும் - உள்ளத்தை வருந்துவன ஆயினும். விளைவன - வரக்கூடிய தீமையைக் குறித்து. கொள்கிலை - ஏற்றுக்கொள்ள வில்லை. மாலியவானைத் தடுத்து மகோதரன் உரைத்தல் ஆயவன் உரைத்த லோடும், அப்புறத்து இருந்த, ஆன்ற மாயைகள் பலவும் வல்ல மகோதரன், கடிதின் வந்து, தீயெழ நோக்கி `என்இச் சிறுமைநீ செப்பிற்று’ என்னா, ஓயுறு சிந்தை யானுக்கு உறாதபேர் உறுதி சொன்னான். 12 12. ஓய்வுறு சிந்தையானுக்கு - சோர்வடைந்த உள்ளத்தை யுடைய வனுக்கு. உறாத - அடையாத. பேர் உறுதி - பெரிய நன்மையை. `நன்றிஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து, வேறு வென்றியே ஆக, மற்றுத் தோற்றுஉயிர் விடுதல் ஆக, ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது; ஒல்கிப் பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை’. 13 13. நயத்தினை நயந்து - இனிமையை விரும்பி. நன்று ஈது என்று கொண்டால் - நன்மை இதுதான் என்று ஒன்றிலே துணிவு கொண்டால். உரியது போலாம் - உரிய செயலாகும். ஒல்கிப் பின்றுமேல் - தளர்ந்து பின்வாங்குமாயின். `பின்னை பழியொடு நரகம் அவனுக்கு அன்றோ’. `வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவார்; எவர்க்கும் மேலாய் நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே;’ என்றனர் அறிஞர் அன்றே; ஆற்றலுக்கு எல்லை உண்டோ? புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ புகழ்க்கு மேலோய்!’ 14 14. நெறியும் அஃதே - உலக நடப்பும் அதுதான். புன்தவர் இருவர் - அற்பமான தவசிகள் இருவர் (இராம இலக்குவர்). `தேவியை விடுதி ஆயின், திறல்அது தீரும் அன்றே; ஆவியை விடுதல் அன்றி அல்லதுஒன்று ஆவது உண்டோ? தாவரும் பெருமை ஐயா! நீஇனித் தாழ்த்தது என்னே? காவல விடுதி! இன்றுஇக் கையறு கவலை நொய்தின்.’ 15 15. திறல் அது தீரும் அன்றே - வலிமையால் ஆகிய அப்புகழ் ஒழியும் அன்றோ? தாவரும் - கெடாத. `காவல இன்று இக்கையறு கவலை நொய்தின் விடுதி’ நொய்தின் - விரைவில். `இனிஇறை தாழ்த்தி ஆயின், இலங்கையும், யாமும் எல்லாம் கனிஉடை மரங்கள் ஆகக் கவிக்குலம் கடக்கும் காண்டி! பனிஉடை வேலைச் சின்னீர் பருகினன் பரிதி என்னத் துனிஉழந்து அயர்வது என்னோ? துறத்தியால் துன்பம்’ மன்னோ. 16 16. கனி உடை மரங்களாக - பழங்கள் நிறைந்த மரங்களாகக் கொண்டு. கடக்கும் - வெற்றி கொள்ளும். பனி உடை - குளிர்ச்சி பொருந்திய. வேலைச் சின்னீர் - கடலின் சிறிது நீரை. துன்பம் துறத்தி ஆல் என்றான் - துன்பத்தை விடுக என்றான். ஆல்; அசை. `முன்உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர் பின்உனக்கு ஏவல் செய்ய உலகுஒரு மூன்றும் பெற்றாய்; புல்நுனைப் பனிநீர் அன்ன மனிதரைப் பொருள்என்று உன்னி என்,உனக்கு இனைய கும்ப கருணனை இகழ்ந்தது எந்தாய்?’ 17 17. -. இராவணன் மகிழ்வுரை `பெறுதியே எவையும் சொல்ல; பேர்அறி வாள! சீரிற்று அறிதியே! என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ? `உறுதியே சொன்னாய்,’ என்னா உள்ளமும் வேறு பட்டான்; இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண் டாமோ? 18 18. `எவையும் சொல்லப் பெறுதியே’ சீரிற்று - சிறந்த காரியத்தை இறுதியே நேர்வதானால் - அழிவுக் காலம் வருவதானால். கும்பகருணனை எழுப்புதல் `நன்றுஇது கருமம்’ என்னா நம்பியை நணுக ஓடிச் சென்றுஇவன் தருதிர் என்றான்; என்றலும் நால்வர் சென்றார்; தென்திசைக் கிழவன் தூதர் தேடினர் செல்வார் என்னக், குன்றிலும் உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 19 19. நணுக - அடையும்படி. தென் திசைக் கிழவன் - எமன். கொற்றம் மாக்கோயில் - வெற்றி பொருந்திய சிறந்த அரண் மனையை. `உறங்கு கின்ற கும்ப கன்ன! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்கு கின்ற தின்று காண்! எழுந்தி ராய்!எ ழுந்திராய்! கறங்கு போல வில்பி டித்த கால தூதர் கையிலே உறங்கு வாய்!உ றங்கு வாய்இ னிக்கி டந்து உறங்குவாய்!’ 20 20. இறங்குகின்றது - அழிகின்றது. இன்று காண் - இன்று அதைக் காண்பாயாக. என்று ஈறு இலாஅ ரக்கர் இன்ப மாய வாழ்வெலாம் சென்று தீய நும்மு னோன்தெ ரிந்து தீமை தேடினான்; இன்று இறத்தல் திண்ணம்ஆக இன்னும் உன்உ றக்கமோ? அன்று அலைத்த செங்கை யால்அ லைத்துஅ லைத்துஉ ணர்த்தினார். 21 21. உன் உறக்கமே - உன் தூக்கமா? அன்று அலைத்த செங்கையால் - அப்பொழுது ஆட்டி அலைத்த சிவந்த கைகளால். உணர்த்தினார் - எழுப்பினார். அவன்மேல் குதிரைகளை ஏவியும், மல்லர்கள் முயன்றும் எழுப்ப முடியவில்லை. ஆயிரம் வீரர்கள் உலக்கைகளால் அவன் கன்னத்தில் அடித்தனர் அப்பொழுதுதான் எழுந்தான் கும்ப கருணன். விண்ணினை இடறும் மோலி, விசும்பினை நிறைக்கும் மேனி, கண்எனும் அவைஇ ரண்டும் கடல்களின் பெரிய ஆகும்; எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் மண்ணினை அளந்து நின்ற மால்என வளர்ந்து நின்றான். 22 22. இடறும் - தடவும். எண்ணினும் பெரியன் ஆன - எண்ணத்திலும் பெரியவனாகிய. பின்னோன் - தம்பியாகிய கும்பகருணன் தோற்றத்துக்குத் திரிவிக்கிரம மூர்த்தி உவமை. கும்பகருணன் உறக்கத்திலிருந்து எழுந்ததும் அறுநூறு வண்டி உணவையும், ஆயிரம் குடம் கள்ளையும் உண்டான். அப்படியும் பசி அடங்காமல் ஆயிரம் எருமைக் கடாக்களையும், யானைகளையும், இன்னும் கண்ணிற் கண்டவற்றையும் தின்றான். சிறிது பசி தணிந்து தூக்கக் கலக்கத்துடன் இருந்தான். `கூயினன் நும்முன்’ என்றவர் கூறலும் போயி னன்நகர் பொம்என்று இரைத்துஎழ, வாயில் வல்லை நுழைந்து, மதிதொடும் கோயில் எய்தினன் குன்றன கொள்கையான். 23 23. நகர் பொம் என்று - நகரில் உள்ளோர் பொம்மென்ற ஒலியுடன். வல்லை - விரைவில். குன்றுஅன - மலைபோன்ற. கொள்கையான் - வலிமையுள்ளவன். வன்து ணைப்பெருந் தம்பி வணங்கலும் தன்தி ரண்டதோள் ஆரத் தழுவினன் நின்ற குன்றுஒன்று நீள்நெடும் காலொடும் சென்ற குன்றைத் தழீஇஅன்ன செய்கையான். 24 24. ஆர - பொருந்த. நீள் நெடும் காலொடும் - நீண்ட கால்களோடும். இராவணன் கும்பகருணனுக்குப் போர்க்கோலம் புனைதல் உடன்இ ருத்தி, உதிரத்தோடு ஒள்நறைக் குடன்நி ரைத்து,அவை ஊட்டித் தசைகொளீஇக், கடல்நு ரைத்துகில் சுற்றிக், கதிர்க்குழாம் புடைநி ரைத்துஒளிர், பல்கலன் பூட்டினான். 25 25. ஒள் நறைக் குடன் - நல்ல நிறமுள்ள தேன் குடங்களை. நிரைத்து - வரிசையாக வைத்து. தசை கொளீஇ - மாமிசங் களையும் ஊட்டி. கடல் நுரைத்துகில் - கடல் நுரை போன்ற ஆடையையும். என்னை அலங்கரிப்பது ஏன்? அன்ன காலையில், `ஆரம்பம் யாவையும் என்ன காரணத் தால்,’என்று இயம்பினான்; மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத் துன்னு தோளும், இடந்துடி யாநின்றான். 26 26. அன்ன காலையில் - அப்பொழுது. ஆரம்பம் யாவையும் - தொடங்கிச் செய்யப் படும் காரியங்களை யெல்லாம். விண்ணினைத் துன்று - வானத்தை நெருங்குகின்ற. போருக்குப் போ `வான ரப்பெருந் தானையர், மானுடர், கோந கர்ப்புறம் சுற்றினர்; கொற்றமும் ஏனை உற்றனர்; நீஅவர் இன்உயிர் போன கத்தொழில் முற்றுதி போய்’என்றான். 27 27. தானையர் மானுடர் - சேனைகளையுடையவர்களான மனிதர்கள். ஏனை கொற்றமும் உற்றனர் - மற்றும் வெற்றியும் பெற்றனர். போனகத் தொழில் - உண்ணும் தொழிலை. கும்பகருணன் அறிவுரைகள் `ஆனதோ வெம்சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர்இனம் தவிர்ந்தது இல்லையோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?’ 28 28. -. `கிட்டிய தோசெருக், கிளர்பொன் சீதையைச் சுட்டிய தோ?முனம் சொன்ன சொற்களால் திட்டியின் விடம்அன்ன கற்பின் செல்வியை விட்டிலை யோ?இது விதியின் வன்மையே!’ 29 29. கிளர் பொன் - விளங்குகின்ற பொன்னை ஒத்த. சொற்களால் - சொற்களை ஏற்றுக்கொண்டு. திட்டிவிடம்; ஒருவகைப் பாம்பு; அதன் பார்வை பட்டாலே எரிந்துவிடுவர். திட்டி; திருஷ்டி. கொடுத்தனை இந்திரற்கு உலகும், கொற்றமும்; கெடுத்தனை நின்பெரும் கிளையும்; நின்னையும் படுத்தனை; பல்வகை அமரர் தங்களை விடுத்தனை, வேறுஇனி வீடும் இல்லை;ஆல்,’ 30 30. படுத்தனை - அழித்துக் கொண்டாய். வீடும் இல்லை - விடக் கூடியது ஒன்றும் இல்லை. `அறம்உனக்கு அஞ்சிஇன்று ஒளித்த தால்;அதன் திறம்முனம் உழத்தலின், வலியும் செல்வமும் நிறம்உனக்கு அளித்தது;இங்கு அதனை நீக்கினாய்; இறவின்இங்கு யார்உனை எடுத்து நாட்டுவார்?’ 31 31. அதன் திறம் முனம் உழத்தலின் - அதன் வழியிலே நின்று முன்பு நீ வருந்தித் தவம் புரிந்தமையால். வலியும் செல்வமும் - வலிமையும் செல்வத்தையும். உனக்கு நிறம் அளித்தது - உனக்குப் பெருமை யுண்டாகும்படி கொடுத்தது. இறவின் - இறந்து போனால். `தஞ்சமும், தருமமும், தகவு மேஅவர்; நெஞ்சமும், கருமமும், உரையு மே;நெடு வஞ்சமும் பாவமும், பொய்யும் வல்லநாம் உஞ்சுமோ? அதற்கொரு குறைஉண் டாகுமோ?’ 32 32. அவர் தஞ்சமும் தருமமும் தகவுமே - அவ்விராம பிரான் தஞ்சம் அளிப்பவரும், தருமமாயிருப்பவரும், பெருமையுள்ள வரும் ஆவர். `தையலை விட்டு,அவன் சரணம் தாழ்ந்து;நின் ஐஅறு தம்பியொடு அளவ ளாவுதல் உய்திறம்; அன்றுஎனின், உளது, வேறும்ஓர் செய்திறம்; அன்னது தெரியக் கேட்டி;ஆல்’ 33 33. ஐஅறு - ஐயம் கொள்வதற்கு இடமில்லாத. தம்பியோடு - வீடணனுடன். உய்திறம் - உய்யும் வழியாகும். `பந்தியில் பந்தியில் படையை விட்டு,அவை சிந்துதல் கண்டு,நீ இருந்து தேம்புதல் மந்திரம் அன்று;நம் வலியெ லாம்உடன் உந்துதல் கருமம்;’என்று உணரக் கூறினான். 34 34. மந்திரம் அன்று - சிந்திக்கத் தக்கது அன்று. உடன் உந்துதல் - ஒன்றாகச் சேர்த்து அனுப்புவது தான். கருமம் - செய்ய வேண்டிய காரியமாகும். இராவணன் கோபத்துடன் கூறுதல் `உறுவது தெரியஅன்று உன்னைக் கூயது; சிறுதொழில் மனிதரைக் கோறி சென்று;எனக்கு அறிவுடை அமைச்சன்நீ அல்லை; அஞ்சினை வெறுவிதுஉன் வீரம்!’என்று இவைவி ளம்பினான். 35 35. உன்னைக் கூயது - உன்னை அழைத்தது. உறுவது தெரிய அன்று - இனி வரப்போவதைத் தெரிந்து கொள்ளுவதற்காக அன்று. `மறம்கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை; இறங்கிய கண்முகிழ்த்து இரவும் எல்லியும் உறங்குதி போய்;’என, உளையக் கூறினான். 36 36. மறம் கிளர் - வீரத் தன்மை விளங்குகின்ற. செருவினுக்கு உரிமை - போர் புரிவதற்கு உரிய. மாண்டனை - வலிமையை அடைந்திருக்கின்றாய். பிறங்கிய - விளங்கிய. இறங்கிய - பள்ளமான. முகிழ்த்து - மூடி. `மானுடர் இருவரை வணங்கி, மற்றும்அக் கூன்உடைக் குரங்கையும் கும்பிட்டு, உய்தொழில், ஊன்உடை உம்பிக்கும் உனக்கு மேகடன்; யான்அது முடிக்கிலேன் எழுக போகெ’ன்றான். 37 37. -. `தருகஎன் தேர்படை; சாற்றுஎன் கூற்றையும்; வருகமுன் வானமும் மண்ணும் மற்றவும்; இருகைவன் சிறுவரொடு ஒன்றி, என்னொடும் பொருகைவெம் போர்;’எனப் போதல் மேயினான். 38 38. என் கூற்றையும் - என் கொள்கையையும். என்னொடும் வெம்போர் பொருகை - என்னொடும் கொடிய போர் புரிவதற்காக. வானமும் - வானத்தில் உள்ளவரும். மண்ணும் - மண்ணில் உள்ளவரும். மற்றவும் - மற்ற இடங்களில் உள்ளவர் களும். இருகை வன் சிறுவரோடு - இரண்டு கைகளையுடைய வலிமையுள்ள சிறுவர்களுடன். ஒன்றி வருக - சேர்ந்து வருக. உடனே கும்பகருணன் இராவணனை வணங்கிக் கூறுதல் வென்றுஇவண் வருவன்என்று உரைக்கி லேன்;விதி நின்றது; பிடர்பிடித்து உந்து கின்றது; பொன்றுவென்; பொன்றினால், பொலன்கொள் தோளியை நன்றுஎன நாயக! விடுதி! நன்றுஅரோ.’ 39 39. பொலன் கொள் - அழகமைந்த. தோளியை - தோளை யுடைய சீதா தேவியை. விடுதி - விடுவாயாக. நன்று - அதுவே சிறந்ததாகும். அரோ; அசை. `என்னைவென்று உளர்எனில், இலங்கை காவல! உன்னைவென்று உயருதல் உண்மை; ஆதலால் பின்னைநின்று எண்ணுதல் பிழை;அப் பெய்வளை தன்னைநன்கு அளிப்பது தவத்தின் பாலதே.’ 40 40. -. `இற்றைநாள் வரைமுதல் யான்முன் செய்தன குற்றமும் உளஎனில் பொறுத்தி கொற்றவ! அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய! பெற்றனென் விடை;’எனப் பெயர்ந்து போயினான். 41 41. -. அவ்வழி இராவணன் அனைத்து, நாட்டமும் செவ்வழி நீரொடும் குருதி தேக்கினன்; எவ்வழி யோர்களும் இரங்கி ஏங்கினார்; இவ்வழி அவனும்போய் வாயில் எய்தினான். 42 42. அவ்வழி - அப்பொழுது. அனைத்து நாட்டமும் - எல்லாக் கண்களிலும். செவ்வழி - நேரே வழிந்து விழுகின்ற. எவ்வழியோர்களும் - எல்லா உறவினர்களும். இவ்வழி - இச்சமயத்தில். அவனும் - கும்பகருணனும். படைகளுடன் வரும் கும்பகருணனைக் கண்ட இராமன் `இவன் யார்?’ என்றதும் வீடணன் உரைத்தல் `ஆழி யாய்இவன் ஆகுவான், ஏழை வாழ்வுடை எம்முனோன் தாழ்வி லாஒரு தம்பியோன்; ஊழி நாளும் உறங்குவான்.’ 43 43. ஏழை வாழ்வு உடை - அறிவற்ற வாழ்வையுடைய. எம்முனோன் - எமது தமயனாகிய இராவணனுடைய. `தருமம் அன்றுஇது தான்;இதால் வரும் நமக்குஉயிர் மாய்வு;எனா உருமின் வெய்யவ னுக்குஉரை இருமை மேலும் இயம்பினான்.’ 44 44. உருமின் வெய்யவனுக்கு - இடியைக் காட்டினும் கொடியவனாகிய இராவணனுக்கு. இருமை மேலும் - இரண்டு தடவைக்கு மேலும். `உரை இயம்பினான்’. `மறுத்த தம்முனை வாய்மையால் ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்; வெறுத்தும் மாள்வது மெய்எனா இறுத்து நின்எதிர் எய்தினான்.’ 45 45. வாய்மையால் - உண்மை உரைகளால். ஒறுத்தும் - கண்டித்தும். ஆவது - நன்மையாவதை. மாள்வது மெய்எனா இறுத்து - இறப்பது உண்மை யென்று சொல்லிவிடு. சுக்கிரீவன் உரைத்தது என்றுஅவன் உரைத்த லோடும் இரவிசேய் `இவனை இன்று கொன்றுஒரு பயனும் இல்லைக்; கூடுமேல் கூட்டிக் கொண்டு நின்றது புரிதும்; மற்றுஇந் நிருதர்கோன் இடரும் நீங்கும்; நன்றுஎன நினைந்தேன்’ என்றான் நாதனும் நயன்ஈது என்றான். 46 46. நின்றது - மேலே செய்ய வேண்டி நின்ற செயலை. நிருதர்கோன் - விபீஷணன். நாதனும் - இராமனும். நயன் - நன்று. வீடணன் கும்பகருணனைச் சந்திக்க ஒப்புக்கொள்ளுதல் ஏகுதற்கு உரியார் யாரே என்னலும், இலங்கை வேந்தன், `ஆகின்மற்று அடிய னேசென்று, அறிவினால் அவனை உள்ளம் சேகுஅறத் தெருட்டி ஈண்டுச் சேருமேல் சேர்ப்பேன்;’ என்றான்; மேகம்ஒப் பானும் `நன்று போ’கென்று விடையும் ஈந்தான். 47 47. ஆகின் - நன்மையாகுமானால். உள்ளம் சேகு அற - மனத்தில் உள்ள குற்றம் நீங்கும்படி. தெருட்டி - தெளிவடையச் செய்து. மேகம் ஒப்பான் - இராமன். வீடணனைக் கண்டு கும்பகருணன் பேசுதல் முந்திவந்து இறைஞ்சி னானை, மோந்து,உயிர் மூழ்கப் புல்லி, `உய்ந்தனை ஒருவன் போனாய், எனமனம் உவக்கின் றேன்,என் சிந்தனை முழுதும் சிந்தத், தெளிவிலார் போல மீள வந்ததுஎன் தனியே?’ என்றான்; மழையின்நீர் வழங்கும் கண்ணான் 48 48. மோந்து - முத்தமிட்டு. உயிர் மூழ்கப் புல்லி - உயிர் ஒன்றாகும் படி தழுவிக் கொண்டு. சிந்தனை முழுதும் சிந்த - எண்ணம் எல்லாம் சிதறும்படி. `அவயம்நீ பெற்ற வாறும், அமரரும் பெறுதல் ஆற்றா, உவயலோ கத்தின் உள்ள சிறப்பும்கேட்டு உவந்தேன் உள்ளம்; கவிஞரின் அறிவு மிக்காய்! காலன்வாய்க் களிக்கின் றேம்பால் நவைஉற வந்தது என்நீ? அமுதுண்பாய் நஞ்சுஉண் பாயோ?’ 49 49. அமரரும் பெறுதல் ஆற்றா - தேவர்களும் பெற முடியாத. உவயலோகத்தின் உள்ள சிறப்பும் - இரண்டுலகங்களிலும் உள்ள செல்வத்தையும் பெற்று. நவை இலை - குற்றமற்ற நீ. `குலத்துஇயல்பு அழிந்த தேனும், குமர,மற்று உன்னைக் கொண்டே புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று, என்னா, வலத்துஇயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை உலத்தினை, திரிய வந்தாய், உளைகின்றது உள்ளம்; அந்தோ!’ 50 50. வலத்து இயல் - வெற்றித் தன்மை பொருந்திய. திரிய வந்தாய் - மீண்டும் வந்தாய். வாயை உலத்தினை - வாயைக் காயும்படி செய்தாய். `அறப்பெரும் துணைவர் தம்மை `அபயம்’என்று அடைந்த நின்னைத் துறப்பது துணியார், தங்கள் ஆருயிர் துறந்த போதும்; இறப்புஎனும் பயத்தை விட்டாய்! இராமன்என் பானைப் பற்றிப் பிறப்புஎனும் புன்மை தீர்ந்தாய்! நினைந்துஎன்கொல் பெயர்ந்த வண்ணம்.’ 51 51. பெயர்ந்த வண்ணம் - திரும்பி வந்த விதம். என் கொல் நினைந்து - என்ன நினைந்தோ? `அறம்என நின்ற நம்பற்கு அடிமைபெற்று, அவன்த னாலே மறம்என நின்ற மூன்றும் மருங்குஅற மாற்றி, மற்றும் திறம்என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ! பிறர்மனை நோக்கு வேமை உறவுஎனப் பெறுதி போலாம்.’ 52 52. மறம் என - பாவம் என. நின்ற மூன்றும் - நின்றனவாகிய திரிபு, ஐயம், அறியாமை என்னும். மூன்றும் மருங்கு அற மாற்றி - மூன்றையும் அடியோடு அழித்து. திறம் என நின்ற தீமை - வலிமையுள்ளது என நின்ற தீமையை. `நீதியும், தருமம் நின்ற நிலைமையும், புலமை தானும், ஆதிஅம் கடவு ளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய், வேதியர் தேவன் சொல்லால், விளிவுஇலா ஆயுப் பெற்றாய்! சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய்!’ 53 53. தருமம் நின்ற நிலைமையும் - தருமத்திலே நிலைத்து நிற்கும் நிலைமையும். புலமை - அறிவு. வேதியர் தேவன் - பிரம்மதேவன். புன்மை - இழிவு. ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்; மாற்றஅரும் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்; கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற; தோற்றல்எம் பக்கல் ஐய! வெவ்வலி தொலைய வந்தாய்! 54 54. -. `அய்யநீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே உய்கிலை என்னின், மற்றுஇவ் அரக்கராய் உள்ளோம் எல்லாம் எய்கணை மாரி யாலே இறந்துபாழ் முழுதும், பட்டால், கய்யினால் எள்நீர் நல்கிக், கடன்கழிப் பாரைக் காட்டாய்!’ 55 55. -. `வருவதும் இலங்கை மூதூர்ப் புலையெலாம் மாண்ட பின்னைத்; திருஉறை மார்ப னோடும் புகுந்து,பின் என்றும் தீராப் பொருவரும் செல்வம் துய்க்கப், போதுதி விரைவின்;’ என்றான்; `கருமம்உண்டு உரைப்பது’ என்றான்; `உரை!’எனக், கழறல் உற்றான். 56 56. புலை எலாம் - இந்த அற்பர்கள் எல்லாம். வருவதும் - வருவதாகும். திருஉறை மார்பன் - இராமன். செல்வம் துய்க்க - செல்வத்தை அனுபவிப்பாயாக. விரைவின் போதுதி - விரைந்து செல்க. வீடணன் நல்லுரைகள் `இருள்உறு சிந்தை யேற்கும் இன்அருள் சுரந்த வீரன் அருளும்நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி மருள்உறு பிறவி நோய்க்கு மருந்தும்ஆம்; மாறிச் செல்லும் உருள்உறு சகட வாழ்க்கை ஒழித்து,வீடு அளிக்கும் அன்றே;’ 57 57. இருள் உறு - அறியாமை பொருந்திய. அருளும் - அருள்புரிவான். ஒன்றோ - அது மட்டுமோ? `எனக்குஅவன் தந்த செல்வத்து இலங்கையும், அரசும் எல்லாம், நினக்குநான் தருவன்; தந்து,உன் ஏவலின் நெடிது நிற்பேன்; உனக்குஇதின் உறுதி இல்லை; உத்தம! உன்பின் வந்தேன் மனக்குநோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு! வாழி!’ 58 58. செல்வத்து - செல்வத்தையுடைய. மனக்கு நோய் துடைத்து - மனத்தில் உள்ள துன்பத்தை நீக்கி. `தீயவை செய்வர் ஆகில், சிறந்தவர், பிறந்த உற்றார், தாய்அவர், தந்தை மார்,என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்? நீஅவை அறிதி அன்றே? நினக்குயான் உரைப்பது என்னோ? தூயவை துணிந்த போது பழிவந்து தொடர்வது உண்டோ? 59 59. -. மக்களைக், குரவர் தம்மை, மாதரை, மற்று ளோரை, ஒக்கும்இன் உயிர்அன் னாரை, உதவிசெய் தாரோடு ஒன்றத் `துக்கம்இத் தொடர்ச்சி’ என்று துறப்பர்ஆல் துணிவு பூண்டோர்; மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே? 60 60. உதவி செய்தாரோடு ஒன்ற - உதவி செய்தவரோடும் கூட. துக்கம் இத்தொடர்ச்சி - இப்பந்தம் துக்கம் தருவதாகும். மிக்கது - சிறந்த செயலாகிய இதுவே. தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர் வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மை தானோ? ஆய்வினை உடையை அன்றே! அறத்தினை நோக்கி, ஈன்ற தாய்வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான். 61 61. வீவினை உறுதல் - இறந்து போதல். ஆய்வினை - ஆராய்ச்சியை. தாய்வினை செய்ய அன்றோ - தாய் தீய செயலைச் செய்ததால் அன்றோ. உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து,அதன் உதிரம்ஊற்றிச், சுடல்உறச் சுட்டு, வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்; கடல்இடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்; மடல்உடை அலங்கல் மார்ப! மதிஉடை யவர்க்கு மன்னோ. 62 62. தோன்றிற்று ஒன்றை - தோன்றியதாகிய கட்டி ஒன்றை. சுடல் உற - காரத்தை வைத்து. கோட்டம் தேய்த்து - வாசனைப் பொருளாகிய கோட்டத்தைத் தேய்த்து. காக்கலாம் நும்முன் தன்னை எனின்,அது கண்ட தில்லை; ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை; தீக்கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருமுன் ஆவி போக்கலாம்! புகலாம் பின்னை நரகுஅன்றிப் பொருந்திற்று உண்டோ? 63 63. தீக்கலாம் கொண்ட தேவர் - கொடிய கலகத்தைப் பெற்று வருந்திய தேவர்கள். பின்னை புகல்ஆம் நரகு அன்றி - பின்னர் புகுவதற்காகும் நரகத்தைத் தவிர. `மறங்கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை, மண்ணின் மேலா இறங்கினை; இன்று காறும் இளமையும் வறிதே ஏக உறங்கினை, என்பது அல்லால் உற்றதுஒன்று உளதோ? என்நீ அறம்கெட உயிரை நீத்து, மேற்கொள்வான் அமைந்தது ஐயா!’ 64 64. இறங்கினை - பிறந்து விட்டாய். உற்றது ஒன்று உளதோ - அடைந்த நன்மை ஒன்றேனும்? உண்டோ? நீ அமைந்தது என் - நீ இருந்தது ஏன்? `திருமறு மார்பன் நல்க அநந்தரும் தீர்ந்து, செல்வப் பெருமையும் எய்தி வாழ்தி! ஈறிலா நாளும் பெற்றாய்! ஒருமையே அரசு செய்வாய்! உரிமையும் உனதே! ஒன்றும் அருமையும் இவற்றின் இல்லைக்; காலமும் அடுத்தது ஐயா! 65 65. ஒருமையே - ஒப்பற்றவனாக இருந்து. `இவற்றின் ஒன்றும் அருமையும் இல்லை’ காலமும் அடுத்தது - காலமும் வந்தது. `முனிவரும் கருணை வைப்பர்; மூன்றுல கத்தும் தோன்றி இனிவரும் பகையும் இல்லை; ஈறுஉண்டுஎன்று இரங்கல் வேண்டா; துனிவரும் செறுந ரான தேவரே துணைவர் ஆவர்; கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருத லாமோ?’ 66 66. துனிவரும் - வலிமை கொண்டு போர் செய்யும். செறுநரான - பகைவர்களான. `வேதநா யகனே உன்னைக் கருணையால் வேண்டி விட்டான், காதலால், என்மேல் வைத்த கருணையால்; கருமம் ஈதே; ஆதலால் அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய! போதுவாய் நீயே!’ என்னப், பொன்அடி இரண்டும் பூண்டான். 67 67. -. கும்பகருணன் தந்த மறுமொழி தும்பிஅம் தொடையல் மாலைச் சுடர்முடி, படியில் தோயப், பம்புபொன் கழல்கள், கையால் பற்றினன் புலம்பும், பொற்றோள் தம்பியை எடுத்து, மார்பில் தழுவித்,தன் தறுகண் ஊடு வெம்புணீர் சொரிய நின்றான்; இனையன விளம்பல் உற்றான். 68 68. தும்பி - வண்டுகள் மொய்க்கின்ற. அம் தொடையல் மாலை - அழகாகத் தொடுத்த மாலையை அணிந்த. படியில் தோய - நிலத்தில் படும்படி வணங்கி. வெம்புணீர் - வெம்மை யான இரத்தம். `நீர்க்கோல வாழ்வை நச்சி, நெடிதுநாள் வளர்த்துப், பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்கொடாது அங்குப்போகேன் தார்க்கோல மேனி மைந்த! என்துயர் தவிர்த்தி ஆயின், கார்க்கோல் மேனி யானைக் கூடுதி கடிதின்;’ ஏகி. 69 69. நீர்க்கோல வாழ்வை நச்சி - நீர்மேல் எழுத்துப் போன்ற வாழ்க்கையை விரும்பி. தார்க்கோல மேனி - மாலையணிந்த அழகிய உடம்பையுடைய. `கடிதின் ஏகிக் கூடுதி’. `மலரின்மேல் இருந்த வள்ளல் வழுவிலா வரத்தி னால்நீ உலைவுஇலாத் தருமம் பூண்டாய்; உலகுள தனையும் உள்ளாய்; தலைவன்நீ உலகுக் கெல்லாம்; உனக்குஅது தக்க தே;ஆல், புலைஉறு மரணம் எய்தல் எனக்குஇது புகழ தே,ஆல்.’ 70 70. புலைஉறு மரணம் - இழிவு பொருந்திய மரணத்தை. எய்தல் இது - அடைதலாகிய இதுவே. `கருத்திலா இறைவன், தீமை கருதினால், அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்; தீராது ஆயின் பொருத்துறு பொருள்உண் டாமோ! பொருதொழிற்கு உரியர் ஆகி ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது; அம்மா.’ 71 71. கருத்து இலா - அறிவில்லாத. திருத்தலாம் ஆகின் - திருத்தக் கூடுமானால். திருத்தலாம் ஆம் அன்றே - நலமாகும் அன்றோ? `தும்பிஅம் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச், சுற்றும் வெம்புவெம் சேனை யோடும், வேறுள கிளைஞ ரோடுதம், உம்பரும் பிறரும் காண, ஒருவன்மூ வுலகை ஆண்டான், தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்.’ 72 72. -. `செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி, வம்புஇட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி, அம்பிட்டுத் துன்னம் கொண்ட புண்உடை நெஞ்சோடு, ஐய! கும்பிட்டு வாழ்கி லேன்யான், கூற்றையும் ஆடல் கொண்டேன்.’ 73 73. செல்வம் தேறி - செல்வத்தை நிலையென்று நம்பி. வம்பு இட்ட - நறுமணம் தருகின்ற. அம்பு இட்டுத் துன்னம் கொண்ட - அம்பு பட்டுத் தொளையுண்ட. `தாழ்க்கிற்பாய் அல்லை, என்சொல் தலைக்கொளத் தக்கது என்று கேட்கிற்பாய் ஆயின் எய்தி, அவரொடும் கேழீஇய நட்பை வேட்கிற்பாய்; `இனிஓர் மாற்றம் விளம்பினால் விளைவுஉண்டு’ என்று சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழநிற்பாய்!’ என்னச் சொன்னான். 74 74. தலைக் கொள்ளத் தக்கது என்று - ஏற்றுக்கொள்ளத் தக்கது என்று. கெழீஇய - பொருந்திய. வேட்கிற்பாய் - விரும்புவாயாக. விளைவு உண்டு என்று - நன்மை விளைவது உண்டென. சூழ்க்கிற்பாய் அல்லை - நினைக்காதே. `போதிநீ ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம், நின்ற வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை ஆதிநூல் மரபி னாலே கடன்களும் ஆற்றி, ஏற்றி மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி!’ மன்னோ! 75 75. வேண்டினை பெற்று - வேண்டிய அவன் உத்தரவைப் பெற்று. மெய்ம்மை ஆதி நூல் - உண்மையான முதல் நூலாகிய வேதம். `ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது; அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம், சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!’ 76 76. ஆகும் காலத்து ஆகுவது - முடியும் காலத்தில் முடிவது முடிந்தே தீரும். அழிவது அழிந்து சிந்திப் போகுவது - அழியக் கூடியது அழிந்து சிதைந்தே போகும். சேகுஅறத் தெளிந்தோர் - குற்றமறத் தெரிந்தவர்கள். இவ்வாறு உரைத்து வீடணனைத் தழுவிக் கொண்டான் கும்ப கருணன். வீடணன், தமையனை வணங்கினான்; அரக்கர் படைகள் வீடணனை வணங்கின; அவன் இராமன் பால் திரும்பி வந்தான். வீடணன் இராமனிடம் விளம்பியது எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி `எந்தாய்! உய்திறன் உடையார்க்கு அன்றோ அறன்வழி ஒழுகும் உள்ளம்; பெய்திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயரும் தன்மை செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும்;’ என்றான். 77 77. உய்திறன் உடையார்க்கு அன்றோ - தீமையிலிருந்து தப்பிக்கும் தன்மை யுள்ளவர்களுக்கன்றோ? உள்ளம் - மனம் உண்டு. இராமன் மறுமொழி கொய்திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் நொய்தினில் துளக்கி, `ஐய! நின்எதிர் நும்முன் னோனை எய்துஉறத் துணித்து வீழ்த்தல் இனிதுஅன்றென்று இனைய சொன்னேன் செய்திறன் இனிவேறு உண்டோ? விதியையார் தீர்க்க கிற்பார்?’ 78 78. கொய்திறம் சடையின் கற்றை - நெரித்து விடுதற்குரிய தன்மையுள்ள சடைக் கற்றையால் ஆகிய. கொந்தளம் - மயிர் முடியை. உறத் துணித்து வீழ்த்தல் - துண்டாகும்படி அறுத்துத் தள்ளுவது இச்சமயத்தில் அரக்கர் படைகளும் வானரப் படைகளும் பொருதன. கும்பகருணனும் போர்க்கு வந்தான். குரங்குகள் அவன்மேல் மலைகளையும் மரங்களையும் பிடுங்கிச் சாடின. கும்பகருணனைக் கண்டு வானரப் படைகள் ஓட்டம் குன்றின்வீழ் குரீஇக்கு ழாத்தின், குழாம்கொளக் குதித்துக், கூடிச் சென்றுமேல் எழுந்து பற்றிக், கைத்தலம் தேயக் குத்தி, வன்திறல் எயிற்றால் கவ்வி, வள்உகிர் மடியக் கீளா, `ஒன்றும்ஆ கின்றது இல்லை,’ என்றுஇழிந்து ஓடிப் போன. 79 79. குரீஇக் குழாத்தின் - குருவிக் கூட்டத்தைப் போல. வள்உகிர் மடிய கீளா - கூர்மையான நகங்கள் மடங்கும்படி கீறி. ஒன்றும் ஆகின்றது இல்லை - நம்மால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. என்று இழிந்து - என்று உணர்ந்து இறங்கி. பின்னர் நீலன் கும்பகருணனை எதிர்த்தான். அவனைக் கும்பகருணன் அலட்சியம் செய்தான். அங்கதன் எதிர்த்தான். அங்கதனைப் பார்த்துக் கும்பகருணன் கூறல் நின்றவன் தன்னை, அன்னான் நெருப்புஎழ நிமிர நோக்கிப், `பொன்றவந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ? அன்றுஅவன் மகனோ? எம்ஊர் அனல்மடுத்து அரக்கர் தம்மை வென்றவன் தானோ? ஆரோ? சொல்லுதி! விரைவின்;’ என்றான். 80 80. நின்றவன் தன்னை - நின்ற அங்கதனை. அன்னான் - கும்பகர்ணன். புரவலன் - சுக்கிரீவன். அங்கதன் `நும்முனை வாலின் சுற்றி, நோன்திசை நான்கும் தாவி, மும்முனை நெடுவேல் அண்ணல் முளரிஅம் சரணம் தாழ்ந்த வெம்முனை வீரன் மைந்தன்; நின்னைஎன் வாலின் வீக்கித் தெம்முனை இராமன் பாதம் வணங்கிடச் செல்வன்;’ என்றான். 81 81. நோன் திசை - வலிய திக்கள். மும்முனை நெடு வேல் - சூலாயுதம். வெம்முனை வீரன் - கொடிய போரிலே வல்ல வீரனாகிய வாலியின். வீக்கி - கட்டி. தெம்முனை - பகைவரோடு முனைந்து போர் செய்கின்ற. கும்பகருணன் `உந்தையை, மறைந்துஓர் அம்பால் உயிர்உண்ட உதவி யோற்குப் பந்தனை; பகையைச் சென்றுக் கொடுக்கிலை என்னில், பாரோர் நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய், நேரே வந்தனை; புரிவர் அன்றே வீரராய் வசையில் தீர்ந்தார்.” 82 82. பந்தனை - கட்டுப்பட்டிருந்தாய். பகையைச் செற்று - அவர்களின் பகைவரை அழித்து. கொடுக்கிலை என்னில் - வெற்றியைத் தாராயானால். `இத்தலை வந்தது என்னை இராமன்பால் வாலின் ஈர்த்து வைத்தலைக் கருதி அன்று! வானவர் மார்பில் தைத்த முத்தலை அயிலின் உச்சி, முதுகுஉற, மூரி வால்போல் கைத்தலம், அவையும் நாலக் கிடத்தலைக் கருதி’என்றான். 83 83. அயில் - வேல். உச்சி - முனையானது. மூரிவால் போல் - வலிமையுள்ள வாலைப் போல. நால - தொங்கும்படி. கும்பகருணனும் அங்கதனும் புரிந்த மற்போரில் அங்கதன் சோர்வடைந்தான். அச்சமயம் மாருதி தோன்றினான். மாருதி ஒரு குன்றைக் கையில் ஏந்தி நின்று கூறுதல் `எறிகுவன் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை அறிகுவர் எவரும்; பின்னை, யான்உன்னோடு அமரும் செய்யேன்; பிறிகுவன்; உலகில் வல்லோய் பெரும்புகழ் பெறுதி’ என்றான். 84 84. ஆற்றல் மறிகுவது அன்றி - ஆற்றல் அழிந்து போகாமல். வல்லை - உடனே. மாற்றினை என்னின் - தடுத்துக் கொள்ளு வாயானால். குன்றைக் கும்பகருணன் மேல் விசினான். கும்ப கருணன் அதைத் தோளில் ஏற்றான்; சிறிதும் கலங்காது நின்றான். இளக்கம்ஒன்று இன்றி நின்ற இயற்கைபார்த்து, `இவனது ஆற்றல் அளக்குறல் பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா; துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி பிளக்குமேல் பிளக்கும்;’ என்னா மாருதி பெயர்ந்து போனான். 85 85. இளக்கம் - தளர்ச்சி. துளக்குறு நிலையன் அல்லன் - சலிப்படையக் கூடியவன் அல்லன். சுந்தரத் தோளன் - இராமனுடைய. கும்பகருணன் வானரப் படைகளை நொறுக்கினான். பாதிப் படைகள் அழிந்தன. ஏனையோர் ஓடினர். இதைக் கண்டு இலக்குவன் அரக்கர் படையைத் தாக்கினான். செருவின் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த வரிவில் ஆண்மையும், நோக்கிய, புலத்தியன் மருமான், `திரிபு ரம்செற்ற தேவனும் இவனுமே, செருவின் ஒருவி லாளர்’என்று ஆயிரம் கால்எடுத்து உரைத்தான். 86 86. பெருமையும் - மிகுதியையும். மருமான் - வழித் தோன்றலாகிய கும்பகருணன். ஒரு விலாளர் - ஒப்பற்ற வில் வீரர்கள். ஆயிரம் கால் - ஆயிரந்தடவை. கும்பகருணன் தேரிலும், இலக்குவன் மாருதியின் தோளிலும் நின்று போர்புரிந்த போது கும்பகருணன் கூறியது `இராமன் தம்பிநீ, இராவணன் தம்பிநான், இருவேம் பொராநின் றேம்இது, காணிய வந்தனர் புலவோர்; பராவும் தொல்செரு முறைவலிக்கு உரியன பகர்ந்து விராவும் நல்அமர் விளைக்குதும் யாம்,`என விளம்பா. 87 87. பராவும் - போற்றத் தக்க. செரு முறை - போர் முறையிலே. வலிக்கு உரியன - வலிமைக்கு ஏற்ற சொற்களை. விராவும் - வீரம் கலந்த. `பெய்த வதத்தின்ஓர் பெண்கொடி எம்முடன் பிறந்தாள்; செய்த குற்றம்ஒன்று இல்லவள், நாசி,வெம் சினத்தால் கொய்த கொற்றவ! மற்றவள் கூந்தல்தொட்டு ஈர்த்த கைத லத்திடைக் கிடத்துவென்; காக்குதி!’ என்றான். 88 88. பெய் தவத்தின் - தங்கிய தவத்தினால். கை - கையை. தலத்திடை - நிலத்திலே. கிடத்துவென் - கிடக்கும்படி செய்வேன். இலக்குவன் கூறிய மொழி அல்லி னால்செய்த நிறத்தவன், அனையது பகர மல்லி னால்செய்த புயத்தவன் `மாற்றங்கள் நும்பால் வில்லி னால்சொல்லின் அல்லது, வெம்திறல் வெள்கச் சொல்லி னால்சொலக் கற்றிலம் யாம்;’எனச் சொன்னான். 89 89. நிறத்தவன் - கும்பகருணன். புயத்தவன் - இலக்குவன். வெம்திறல் வெள்க - கொடிய வலிமைக்கு நாணம் உண்டாகும் படி. இலக்குவனும் கும்பகருணனும் கடும்போர் புரிந்தனர். இலக்குவன் மாருதியின் தோளிலிருந்து இறங்கிக் கீழே நின்று பொருதான். அப்பொழுது கும்பகருணன் ஏவிய பெரிய அரக்கர் படை இலக்குவனைச் சூழ்ந்து கொண்டன. இச்சமயம் சுக்கிரீவன் வந்து கும்பகருணனை எதிர்த்தான்; இருவரும் மற்போர் புரிந்தனர். உறுக்கினர் ஒருவரை ஒருவர்; உற்றுஇகல் முறுக்கினர் முறைமுறை; அரக்கன் மொய்ம்பினால் பொறுக்கிலா வகை,நெடும் புயங்க ளால்பிடித்து இறுக்கினன் இவன்சிறிது உணர்வும் எஞ்சினான். 90 90. `ஒருவரை ஒருவர்’ உறுக்கினர் - அதட்டினர். முறைமுறை உற்று இகல் முறுக்கினர் - முறைமுறையே பொருந்தி நின்று போர் புரிந்தனர். இவன் - சுக்கிரீவன். உணர்வும் எஞ்சினான் - உணர்ச்சியும் குறைந்தான். உணர்விழந்த சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கினான்; நகருக்குள் புகத் தொடங்கினான். அது கண்டு வானரர்கள் அரற்றினர். புழுங்கிய வெம்சினத்து அரக்கன் போகுவான் அழுங்கல்இல் கோள்முகத்து அரவம் ஆயினான்; எழும்கதிர் இரவிதன் புதல்வன், ஏண்உற விழுங்கிய மதிஎன மெலிந்து தோன்றினான். 91 91. போகுவான் - போகின்றவன். அழுங்கல் இல் - துன்பம் இல்லாமல் எளிதிலே. கோள் முகத்து - பற்றிக்கொள்ளும் தன்மையுள்ள. மாருதியின் செயல் `ஒருங்குஅமர் புரிகிலேன் உன்னொடு யான்,’என நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்; கருங்கடல் கடந்தஅக் காலன், காலன்வாழ் பெருங்கரம் பிசைந்து,அவன் பின்பு சென்றனன். 92 92. நேர் இலன் - எதிர்த்துப் போர் புரியாதவன் ஆனான். காலன் - காலனைப் போன்ற மாருதி. வானரங்களின் முறையீடு ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர், `நாயகர் எமக்கினி யாவர் நாட்டினில்? காய்கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன் போயினன் அரக்கன்’என்று இசைத்த பூசலார். 93 93. ஆயிரம் பெயரவன் - சகஸ்ரநாமன்; இராமன். இசைத்த பூசலார் - சொல்லிய ஆரவாரத்தை உடையவராயினர். இராமன் கும்பகருணனைத் தடுத்தல் தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான்; காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான்; ஏஎனும் அளவினில், இலங்கை மாநகர் வாயில்சென்று எய்தினான், மழையின் மேனியான். 94 94. மழையின் மேனியான் - மேகம் போன்ற மேனியை உடைய இராமன். தீயினும் முதிர்வுற - தீயை விட மிகுதியாக. இராமனைக் கண்ட கும்பகருணன் பேச்சு உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம் நம்பியை முனிந்திலேன், நயக்கும் வாலிதன் தம்பியை முனிந்திலேன்; சமரம் தன்னில்யான் அம்புஇயல் சிலையினாய் புகழ்அன்று ஆதலால். 95 95. ஊர்தியாம் நம்பியை - வாகனமாகிய மாருதியை. சமரம் - போர். தேடினென் திரிந்தனென் நின்னைத், திக்கிறந்து ஓடியது உன்படை; உம்பி ஓர்ந்துஒரு பாடுஉற நடந்தனன்; அனுமன் பாறினன்; ஈடுறும் இவனைக்கொண்டு எளிதின் எய்தினேன். 96 96. உம்பி ஓர்ந்து - உன் தம்பி இதை அறிந்து. ஒருபாடு உற - ஒரு பக்கமாக ஒதுங்கி. பாறினன் - வலிமை குறைந்தான். ஈடு உறும் - வல்லமை குறைந்த. ஏதிவெம் திறலினோய் இமைப்பி லார்எதிர் பேதுறு குரங்கையான் பிணித்த கைப்பிணி கோதைவெம் சிலையினால் கோடி வீடுஎனில் சீதையும் பெயர்ந்தனள் சிறைநின்று ஆம்;என்றான். 97 97. ஏதி வெம் திறலினோய் - படைக்கலத்தை யுடைய கொடிய வலிமை யுள்ளவனே. இமைப்பிலோர் - தேவர்கள். கோதை வெம் சிலையினால் - நாணோடு கூடிய கொடிய வில்லினால். வீடு கோடி எனின் - விடுதலை செய்வாயானால். என்றலும் முறுவலித்து இராமன், `யான்உடை இன்துணை ஒருவனை எடுத்த தோள்எனும் குன்றினை அரிந்து,யான் குறைக்கி லேன்,எனின் பின்றினன் உனக்கு,வில் பிடிக்கி லேன்;’என்றான். 98 98. -. கும்பகருணன் நெற்றியிலே இரு கணைகளை ஏவினான் இராமன் குன்றின்வீழ் அருவியின் குதித்துக், கோத்துஇழி புன்தலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும், இன்துயில் உணர்ந்தென, உணர்ச்சி எய்தினான்; வன்திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 99 99. அருவியில் குதித்து - அருவியைப் போல வெளி வந்து. கோத்து இழி - தொடர்ந்து ஒழுகுகின்ற. முகத்தைப் போர்த்தலும் - சுக்கிரீவனுடைய முகத்தை மூடியவுடன். நெற்றியின் நின்றுஒளி நெடிது இமைப்பன, கொற்றவன் சரம்;எனக் குறிப்பின் உன்னினான்; சுற்றுஉற நோக்கினன்; தொழுது வாழ்த்தினான் முற்றிய பொருட்கெலாம் முடிவு ளான்தனை. 100 100. கொற்றவன் - இராமன். உன்னினான் - நினைத்தான். சுற்றுற நோக்கினான் - சுற்றிலும் உற்றுப் பார்த்தான். கண்டனன் நாயகன் தன்னைக், கண்உறாத் தண்டல்இல், மானமும் நாணும் தாங்கினான்; விண்டவன் நாசியும், செவியும் வேரொடும் கொண்டனன், எழுந்துபோய்த் தமரைக் கூடினான். 101 101. கண் உறா - பார்த்து. தண்டல்இல - நீங்காத. விண்டவன் - பகைவனாகிய கும்பகருணனுடைய. சுக்கிரீவனைக் கண்டு இராமன் மகிழ்ச்சி காந்துஇகல் அரக்கன்வெம் கரத்து நீங்கிய ஏந்தலை, அகமகிழ்ந்து எய்த நோக்கிய வேந்தனும், `சானகி இலங்கை வெம்சிறைப் போந்தனன் ஆம்’எனப் பொருமல் நீங்கினான். 102 102. காந்து இகல் அரக்கன் - கோபிக்கும் வலிமையுள்ள அரக்கனாகிய கும்பகருணனுடைய. இலங்கை வெம்சிறை போந்தனன் ஆம்என - இலங்கையில் உள்ள கொடிய சிறையிலிருந்து விடுபட்டு வந்தனளாம் என்று எண்ணி. பொருமல் - துன்பம். கும்பகருணன் சினமும் போரும் அக்கணத்து அறிவுவந்து அணுக, அங்கைநின்று உக்கனன் கவிஅரசு என்னும் உண்மையும், மிக்குஉயர் நாசியும், செவியும், வேறுஇடம் புக்கதும், உணர்ந்தனன் உதிரப் போர்வையான். 103 103. உதிரப் போர்வையான் - உதிரத்தைப் போர்வையாகக் கொண்டிருக்கும் கும்பகருணன். ஏசிஉற்று எழும்;விசும் பினரைப் பார்க்கும்;தன் நாசியைப் பார்க்கும்;முன் நடந்த நாள்உடை வாசியைப் பார்க்கும்;இம் மண்ணைப் பார்க்கும்;ஆல் `சீசிஉற் றது;’எனத் தீயும் நெஞ்சினான். 104 104. சீசி உற்றது என - சீச்சி இவ்வாறு வந்ததே என்று. தீயும் நெஞ்சினன் - புழுங்கும் உள்ளத்தான். வாசியை - மூச்சை. ஆல்; அசை. உடனே கும்பகருணன் வாளேந்திப் போர் புரிந்தான். வானரப் படைகள் சின்ன பின்னமாயின. அது கண்டு இராமன் அவன் எதிர் நின்று பொருதான். கும்பகருணன் பிடித்திருந்த, வாளைக் கணையால் வீழ்த்தினான். இச் சமயத்திலே இராவணன் அனுப்பிய உதவிப் படைகள் வந்தன. வில்வினை ஒருவனும் `இவனை வீட்டுதற்கு ஒல்வினை இது’வெனக் கருதி ஊன்றினான்; வல்வினை தீயன பரந்த போதுஒரு நல்வினை ஒத்தது நடந்த தானையே 105 105. வில்வினை ஒருவனும் - விற்றொழிலையுடைய ஒப்பற்ற இராமனும் `தீயன வல்வினை பரந்தபோது.’ ஒரு நல்வினை ஒத்தது - அதைத் தடுக்கும் ஒரு நல்வினை வந்ததை ஒத்தது. வேறு வேத நாயகன் வெம்கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறுஇட்டு ஓதுகின்றதுஎன்? உம்பரும், அரக்கர்வெம் களத்துவந்து உற்றாரைக் காதல் விண்இடைக் கண்டனர்; அல்லது கணவர்தம் உடல்நாடும் மாதர் வெள்ளமேகண்டனர்; கண்டிலர் மலையினும் பெரியாரை. 106 106. வழக்கத்தின் - செலவின். வெவ்வேறு இட்டு - வெவ்வேறாகப் பிரித்து வைத்து. படைகள் அழிந்து தனித்து நின்ற கும்பகருணனைப் பார்த்து இராமன் பேசுதல் `ஏதி யோடுஎதிர் பெரும்துணை இழந்தனை, எதிர்ஒரு தனிநின்றாய், நீதி யோனுடன் பிறந்தனை ஆகலின், நின்உயிர் நினக்குஈவென், போதி யோ?பின்றை வருதியோ? அன்றுஎனில், போர்புரிந்து இப்போதே சாதி யோ?நினக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்துஅம்மா!’ 107 107. ஏதியோடு எதிர் - ஆயுதங்களுடன் நின்று எதிர்க்க வல்ல. நீதியோன் - வீடணன். சமைவுறத் தெரிந்து - நன்றாக ஆராய்ந்து. இழைத்த தீவினை இற்றிலது ஆகலின், யான்உனை இளையோனால் அழைத்த போதினும் வந்திலை; அந்தகன் ஆணையின் வழிநின்றாய்! பிழைத்த தால்உனக்கு அரும்திரு, நாளொடு பெருந்துயில்; நெடுங்காலம் உழைத்து விடுவது ஆயினை; என்உனக்கு உறுவதுஒன்று உரை;’என்றான். 108 108. இழைத்த - செய்த. இற்றிலது - அழியவில்லை. அந்தகன் - எழன். கும்பகருணன் கூற்று `மற்றெ லாம்நிற்க, வாசியும், மானமும், மறத்துறை வழுவாத கொற்ற நீதியும், குலமுதல் தருமமும் என்றுஇவை குடியாகப் பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்துதன் பெரும்செவி மூக்கோடும் அற்ற எங்கைபோல், என்முகம் காட்டிநின்று ஆற்றலென் உயிர்;அம்மா,’ 109 109. வாசியும் - பெருமையும். மானமும் - குலப் பெருமையும். மறத்துறை வழுவாத - வீரத் துறையிலே தவறாத. கொற்ற நீதியும் - அரச நீதியும். குலமுதல் தருமம் - சிறந்த குல தருமமும். உயிர் ஆற்றலென் - உயிரைத் தாங்கி யிருக்கமாட்டேன். ஒருத்தன் நீதனி உலகுஒரு மூன்றிற்கும் ஆயினும், பழியோரும் `கருத்தி னால்வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன்ஓராய்! செருத்திண் வாளினால், திறத்திறன், உங்களை அமர்த்துறைச் சிரங்கொய்து பொருத்தி னால்,அது பொருந்துமோ? தக்கது புகன்றிலை போல்;’ என்றான். 110 110. பழி ஓரும் - பழி இன்னது என்று உணரும். அமர்துறை - போர்க்களத்திலே. அது பொருந்துமோ -அது போதுமான தாகுமோ? பின்னர் கும்பகருணன் வாள் கொண்டு பொருதான்; சூலம் கொண்டு பொருதான். இராமன் அவன் கரங்களை அறுத்துத் தள்ளினான். கால்கொண்டு பொருதான். அவைகளையும் அறுத்தான். இறுதியில் வருந்தினான் கும்பகருணன். `அய்யன் வில்தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ!யான் கய்யும் கால்களும் இழந்தனென்; வேறுஇனி உதவலாம் துணைகாணேன்; மய்யல் நோய்கொடு முடித்தவா தான்,என்றும் வரம்புஇன்றி வாழ்வானுக்கு உய்யு மாறுஅரிது,’ என்றும்தன் உள்ளத்தின் உணர்ந்துஒரு துயர்உற்றான். 111 111. மய்யல் நோய் கொடு - காம நோய் கொண்டு. முடித்தவாதான் - தன் ஆயுளை முடித்துக் கொண்டதுதான் என்னே! உய்யுமாறு அரிது - தப்பித்து வாழ்வது அரிது. இராமனிடம் கும்பகருணன் வேண்டுகோள் `புக்குஅடைந்த புறவுஒன்றின் பொருட்டாகத், துலைபுக்க மைக்கடம்கார் மதயானை, வாள்வேந்தன் வழிவந்தீர்! இக்கடன்கள் உடையீர்நீர்! எம்வினைதீர்த்து உம்முடைய கைக்கடைந்தான் உயிர்காக்கக் கடவீர்எங் களைக்கூட்டால்.’ 112 112. மைக்கடம் கார் - கரிய மதநீரை மேகம்போல் சிந்துகின்ற. வாள் வேந்தன் - வாள் வேந்தனாகிய சிபிச் சக்கரவர்த்தியின். இக்கடன்கள் உடையீர் நீர் - இக்கடமைகளை உடைய நீர். கைக்கு அடைந்தான் - பக்கத்தில் சேர்ந்தவனாகிய வீடணனுடைய. கடைக் கூட்டால் - வேண்டுகோளால். `நீதியால் வந்ததுஒரு நெடும்தரும நெறிஅல்லால் சாதியால் வந்தசிறு நெறிஅறியான் என்தம்பி; ஆதியாய்! உனைஅடைந்தான்; அரசர்உருக் கொண்டுஅமைந்த வேதியா! இன்னம்உனக்கு அடைக்கலம்யான் வேண்டினேன்.’ 113 113. -. `வெல்லுமா நினைக்கின்ற வேல்அரக்கன் `வேரோடும் கல்லும் முயல்கின்றான், இவன்’என்னும் கறுவுடையான்; ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்; கொல்லுமால் அவன்இவனைக் குறிக்கோடி கோடாதாய்.’ 114 114. கோடாதாய் - நீதி தவறாதவனே. குறிக்கோடி - குறிப்பாக வைத்துக்கொள். `தம்பியென நினைந்துஇரங்கித் தவிரான்அத் தகவுஇல்லான்; நம்பிஇவன் தனைக்காணின் கொல்லும்;இறை நல்கானால்; உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒருபொழுதும் எம்பிபிரி யான்ஆக அருளுதி!யான் வேண்டினேன்.’ 115 115. இறை நல்கான் ஆல் - சிறிதும் இரங்கமாட்டான். ஆல்; அசை. `மூக்கிலா முகம்என்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார்; நோக்காமை நுன்கணையால் என்கழுத்தை நீக்குவாய்! நீக்கியபின் நெடும்தலையைக் கரும்கடலுள் போக்குவாய்! இதுநின்னை வேண்டுகின்ற பொருள்;’என்றான். 116 116. -. `வரங்கொண்டான் இனிமறுத்தல் வழக்குஅன்று’என்று ஒருவாளி, உரம்கொண்ட தடம்சிலையின் உயர்நெடுநாண் உள்கொளுவாச், சிரம்கொண்டான்; கொண்டதனைத் திண்காற்றின் கடும்படையால், அரம்கொண்ட கரும்கடலின் அழுவத்துள் அழுத்தினான். 117 117. வழக்கு அன்று என்று - முறைமை அன்று என்று கருதி. நாண் உள் கொளுவா - நாணிலே பொருத்தி விடுத்து. சிரம் கொண்டான். - தலையை அறுத்தான். காற்றின் கடும்படை - வாயு அஸ்திரம். அரம் கொண்ட - பாதலம் வரையில் ஆழ்ந்துள்ள. அழுவத்துள் - நடுவிலே. ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுதஇசை பாடினார்; மாதவரும், வேதியரும் பயம்தீர்ந்தார்; கூடினார் படைத்தலைவர் கொற்றவனைக்; குடர்கலங்கி ஓடினார் அடல்அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான். 118 118. கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார் - இராமனைச் சுற்றிப் படைத் தலைவர்கள் வந்து கூடினார்கள். அடல் - வலிமை. 17. மாயா சனகப் படலம் இராவணனுடைய மந்திராலோசனை சபைக்கு மகோதரன் வந்தான். அவனிடம் `சீதையின் அன்பைப் பெற்று என் மனக் கவலை தீர வழி கூறுக’ என்று வேண்டினான் இராவணன். மகோதரன் `மருத்தனைச் சனகன்போல் உருமாற்றிக் கட்டிக் கொணர்வேன். அவன் சீதையின் மனத்தை மாற்றுவான்’ என்றான் சீதையைப் பயமுறுத்த, இராவணன் தன் பரிசனங்களுடன் அவள் இருந்த இடத்தை அடைந்தான், அவள் எதிரே ஒரு ஆசனத்தில் அமர்ந்தான். இராவணன் வேண்டுதல் `வஞ்சனேன், எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த நெஞ்சுநேர் ஆனது; உம்மைநினைப்புவிட்டு ஆவி நீக்க அஞ்சினேன்; அடிய னேன்நும் அடைக்கலம்! அமுதின் வந்தீர்.’ 1 மாயாசனகப் படலம்: பொய்யான ஜனகனைக் கொண்டு வந்து காட்டிச் சீதையைப் பயமுறுத்தியதைப் பற்றிச் சொல்லும் பகுதி. 1. நாளும் தேய்ந்த நெஞ்சு நேர் ஆனது - ஒவ்வொரு நாளும் மெலிந்து வந்த மனம் இப்பொழுது நேர்மை அடைந்து விட்டது. `ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாகக் கூசமூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக் கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த ஆசைநோய் கொன்றது என்னா ஆண்மைதான் மாசு ணாதோ?’ 2 2. கொற்றத்தேன் - வெற்றியையுடையான். வீரக் கோட்டி பேசுவார் ஒருவற்கு - வீரர் வரிசையிலே வைத்துப் பேசப்படும் ஒருவனுக்கும். ஆவி தோற்றிலன் - உயிர் தோற்றேன் அல்லேன். `அறம்தரு செல்வம் அன்னீர்! அமுதினும் இனியிர்! என்னைப் பிறந்திலன் ஆக்க வந்தீர்! பேர்எழில் மானம் கொல்ல மறந்தன பெரிய; போன வரும்;எனும் ஆசை தன்னால் இறந்துஇறந்து உய்கின் றேன்யான், யார்இது தெரியும் ஈட்டார்?’ 3 3. பேர் எழில் - உமது பெரிய அழகு. மானம் கொல்ல - எனது பெரிய மானத்தை அழிக்க. பெரிய மறந்தன - பெரிய விஷயங்கள் எல்லாம் மறந்து போயின. தெரியும் ஈட்டார் - அறியும் தன்மை உள்ளவர். `அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல் இந்திரன் உணர்த்த நல்கி எய்தினாள், இழுக்குற் றாளோ? மந்திரம் இல்லை, வேறோர் மருந்தில்லை மையல் நோக்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுதுஅலால்; அமுதச் சொல்லீர்!’ 4 4. அந்தரம் உணரின் - முடிவாக ஆராய்ந்தால். உணர்த்த நல்கி - தன் காதலை உணர்த்த அவனுக்கு இரங்கி. எய்தினாள் - இன்பம் உற்றாள். என்றுரைத்து எழுந்து சென்றுஅங்கு, இருபதுஎன்று உரைக்கும் நீலக் குன்றுஉரைத் தாலும் நேராக் குலவுத்தோள் நிலத்தைக்கூட, மின்திரைத்து, அருக்கன் தன்னை விரித்துமீன் தொக்கது ஒன்று நின்றுஇமைக் கின்றது என்ன முடி,படி, நெடிதின் வைத்தான். 5 5. மின் திரைத்து - மின்னலை ஒன்று சேர்த்து. என்ன முடி - என்னும் படியான முடி. படி - நிலத்திலே. சீதையின் அலட்சியப் பேச்சு வல்லியம் மருங்கு கண்ட மான்என, மறுக்கம் உற்று, மெல்இயல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்மு கின்றாள்; `கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய’ என்னாப் புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினாள் புகல்வது ஆனாள். 6 6. வல்லியம் மருங்கு கண்ட - புலியைப் பக்கத்திலே பார்த்த. மறுக்கம் உற்று - கலக்கம் அடைந்து. கிடந்தது புல்லிய ஒன்றை - தரையிலே கிடந்ததாகிய அற்பமான துரும்பு ஒன்றை. `பழிஇது, பாவம் என்று, பார்க்கிலை, பகரத் தக்க மொழியிவை அல்ல என்பது உணர்கிலை! முறைமை நோக்காய்! கிழிகிலை நெஞ்சம்! வஞ்சக் கிளையொடும் இன்று காறும் அழிகிலை; என்ற போதுஎன் கற்புஎன்னாம்! அறந்தான் என்னாம்!’ 7 7. பகரத் தக்க - சொல்லத் தக்க. முறைமை நோக்காய் - நீதியைக் கருத மாட்டாய். நெஞ்சம் கிழிகலை - நெஞ்சு பிளக்க மாட்டாய். `ஊண்இலா யாக்கை பேணி, உயர்புகழ் சூடாது, உன்முன் நாண்இலாது இருந்தேன் நல்லேன்! நவைஅறு குணங்கள் என்னும் பூண்எலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக், காணலாம் இன்னும், என்னும் காதலால் இருந்தேன்; கண்டாய்!’ 8 8. ஊண் இலா - உணவு இல்லாமல் இளைத்த. நவை அறு - குற்றம் அற்ற. `சென்றுசென்று அழியும் ஆவி திரிக்குமால், செருவில் செம்பொன் குன்றுநின்று அனைய தம்பி, புறக்கொடை காத்து நிற்பக், கொன்றுநின் தலைகள் சிந்தி, அரக்கர்தம் குலத்தை முற்றும் வென்றுநின்று அருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை.’ 9 9. தம்பி - இலக்குவன். புறக்கொடை காத்து நிற்ப - நீ புறமிட்டு ஓடுவதைத் தடுத்து நிற்க. அருளும் கோலம் - அருள் செய்கின்ற கோலத்தை. காணிய கிடந்த வேட்கை - காணுவதற்கு உள்ளத்திலே கிடந்த ஆசைதான். சென்று சென்று அழியும் - போய்ப் போய் அழிகின்ற. ஆவி திரிக்கும் ஆல் - உயிரைத் திரும்பும்படி செய்கின்றது. `எனக்குஉயிர் பிறிதும் ஒன்றுண்டு என்றுஇரேல்; இரக்கம் அல்லால் தனக்குஉயிர் வேறுஇன் றாகித், தாமரைக் கண்ண தாகிக், கனக்கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி, யார்க்கும், மனக்குஇனிது ஆகி நிற்கும் அஃதன்றி; வரம்பு, இலாதாய்!’ 10 10. வரம்பு இலாதாய் - கட்டுப்பாடு இல்லாதவனே. `அஃது அன்றி, எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல்.’ இராவணன் கோபித்துக் கூறுதல் என்றனள், என்ற லோடும் எரியுறு கண்ணன், தன்னைக் கொன்றுஅன மானம் தோன்றக், கூற்றுஎனச் சீற்றம் கொண்டான்; `வென்றுஎனை இராமன் உன்னைமீட்டபின் அவனோடு ஆவி ஒன்றென வாழ்தி போல்!’என்று இடிஉரும் என்ன நக்கான். 11 11. எரிஉறு கண்ணன் - தீப்பொருந்திய கண்ணையுடைய இராவணன் இடி உரும் ஒக்க - பெரிய இடியைப் போல. `இனத்துளார் உலகத் துள்ளார், இமையவர் முதலி னார்என் சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன் தன்னை புனத்துழாய் மாலை யான்என்று உவக்கின்ற ஒருவன் புக்கு,உன் மனத்துளான் எனினும் கொல்வென்; வாழுதி பின்னை;’ மன்னோ. 12 12. இனத்துள் ஆர் உலகத்துள்ளார் - கூட்டமாகிய இவ்வுலகத்தில் உள்ளவர்கள். யாவர் தீர்ந்தார் - யார்தான் தப்பினவர்கள்? `வளைத்தன மதிலை; வேலை வகுத்தன வரம்பு; வாயால் உளைத்தன குரங்கு பல்கால், என்றுஅகம் உவந்தது உண்டேல், இளைத்தநுண் மருங்குல் நங்காய்! என்எதிர் எய்திற்று எல்லாம் விளக்குஎதிர் வீழ்ந்த விட்டில் பான்மைய; வியக்க வேண்டா.’ 13 13. வேலை வரம்பு வகுத்தன - கடலில் கரை கட்டின. உளைத்தன - ஒலித்தன. விட்டில் பான்மைய - விட்டில் பூச்சிகளின் தன்மையை அடையும். என்று உரைத்த இராவணன், `அயோத்தியில் உள்ளாரைப் பற்றிக் கொணர்க! இன்றேல் அவர்கள் தலைகளைக் கொணர்க; என்று சொல்லி வீரர்களை விட்டிருக்கின்றேன். உன் தந்தையையும் கொண்டுவரக் கூறியுள்ளேன்’ என்றான். என்றுஅவன் உரைத்த காலை `என்னைஇம் மாயம் செய்தாற்கு ஒன்றும்இங்கு அரியது இல்லை’ என்பதுஓர் துணுக்கம் உந்த, நின்றுநின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள், நெருப்பை மீளத் தின்றுதின்று உமிழ்கின் றாரின் துயருக்கே சேக்கை யானாள். 14 14. என்னை இம் மாயம் செய்தாற்கு - என்னை இப்படி வஞ்சனை செய்து சிறையில் வைத்தவனுக்கு. துணுக்கம் உந்த - பயம் தூண்ட. சேக்கை- இடம். இத்தலை இன்ன செய்த விதியினார் என்னை, இன்னும் அத்தலை அன்ன செய்யச் சிறியரோ; வலியர் அம்மா, `பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும்’ என்னாக் கைத்தனள் உள்ளம், வெள்ளக் கண்ணின்நீர்க் கரையி லாதாள். 15 15. வெள்ளக் கண்ணின் நீர் - வெள்ளம் போலக் கண்ணிலிருந்து வடிகின்ற நீருக்கு. கரை இலாதாள் - எல்லை இல்லாதவளான சீதை. இத்தலை - இவ்விடத்தே. அத்தலை - அயோத்தி முதலிய அவ்விடங்களிலே. இச்சமயத்தில் மகோதரன், மருத்தனைச் சனகனாக மாற்றிக் கட்டி இழுத்து வந்தான். சனகன் இராவணனை வணங்கி அழுது அரற்றினான். சனகனைக் கண்ட சானகியின் துன்பம் கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள்; கமலக் கால்கள் நெய்எரி மிதித்தால் என்ன நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம் மெய்என எரிந்தாள்; ஏங்கி விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்; பொய்என உணராள், அன்பால் புரண்டனள் பூசல் இட்டாள். 16 16. மெய் என நெஞ்சம் எரிந்தாள் - உடம்பைப் போலவே உள்ளமும் எரிந்தாள். `எந்தையே! எந்தை யே!என் பொருட்டினால் உனக்கும் இக்கோள் வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர் தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!” என்னும்; வெம்துயர் வீங்கித் தீவீழ் விறகென வெந்து வீழ்வாள். 17 17. உனக்கும் இக்கோள் - உனக்கு இந்தத் துன்பம். என்னும் - என்று கதறுவாள். `இட்டுண்டாய்! அறங்கள் செய்தாய்! எதிர்ந்துளோர் இருக்கை எல்லா சுட்டுண்டாய்! உயர்ந்த வேள்வித் துறையெலாம் கரையும் கண்டாய், மண்டுண்டார், மனிதர்த் தின்ற வஞ்சரால், வயிரத் திண்தோள் கட்டுண்டாய்! என்னே யானும் காண்கின்றேன் போலும்! கண்ணால்.’ 18 18. மட்டு உண்டார் - கள்ளை உண்டவர். மனிதர்த் தின்ற - மனிதர்களைத் தின்ற. `பண்பெற்றா ரோடு கூடாப் பகைபெற்றாய், பகழி பாய விண்பெற்றாய்! எனினும் நன்றால்! வேந்தராய் உயர்ந்த மேலோர் எண்பெற்றாய்! பழியும் பெற்றாய்! இதுநின்னால் பெற்றது அன்றால்! பெண்பெற்றாய் அதனால் பெற்றாய்; யாவர்நின் பேறுபெற்றார்!’ 19 19. பண் பெற்றாரோடு கூடா - நற்குணங்கள் உள்ளவரோடு சேராத. பகை பெற்றாய் - கெட்டவர்களின் விரோதத்தை அடைந்தாய். எண் பெற்றாய் - சிறப்பாக எண்ணப் பெற்றாய். `இருந்துநான் பகையை எல்லாம் ஈறுகண்டு அளவில் இன்பம் பொருந்தினேன் அல்லேன்; எங்கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்; வருந்தினேன் நெடுநாள்; உம்மை வழியொடு முடித்தேன்; வாயால், அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா!’ 20 20. பகையை எல்லாம் ஈறு கண்டு - பகைவரை எல்லாம் அழியும்படி செய்து. வழியொடு - குலத்தொடு. முடித்தேன் - அழித்தேன். `கொல்எனக் கணவற்கு ஆங்கோர் கொடும்பகை கொடுத்தேன்; எந்தை கல்எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்; இல்எனச் சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் அல்லனோ? எளிய னோயான் அளியத்தேன் இறக்க லாதேன்?’ 21 21. ஆங்கு ஓர் - பஞ்சவடியிலே ஒரு. கொடும் பகை - மாய மானாகிய கொடிய பகையை. இரண்டுக்கும் - புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டுக்கும். `இணையறு வேள்வி மேல்நாள் இயற்றிஈன்று எடுத்த எந்தை புணைஉறு திரள்தோள் யாத்துப் பூழியில் புரளக் கண்டேன்; மணவினை முடித்துஎன் கையை மந்திர மரபில் தொட்ட கணவனை வினையேன் காண்டல் இன்றியே கழிகின் றேனோ?’ 22 22. புணை உறு திரள் தோள் - தெப்பம் போன்ற திரண்ட புயங்களை. பாத்து பூமியில் புரளக் கண்டேன் - கட்டப்பட்டுப் புழுதியிலே புரள்வதைக் கண்டேன். இனைய - இவ்வாறு. கழிகின்றேனோ - உயிர் விடுவேனோ? `சரதம்;மற்று இவனைத் தந்தார், தவம்புரிந்து ஆற்றல் தாழ்ந்த பரதனைக் கொணர்தற்கு ஏதும ஐயுறவு இல்லை; பன்னாள் வரதனும் வாழ்வான் அல்லன்; தம்பியும் அனையன் வாழான்; விரதம்உற்று அறத்தில் நின்றாற்கு இவைகொலாம் விளைவ மென்மேல்.’ 23 23. இவனைத் தந்தார் - இந்தச் சனகனைக் கட்டிக் கொணர்ந்தவர்கள். சரதம் - நிச்சயம். வரதனும் - இராமனும். பன்னாள் வாழ்வான் அல்லன் - பல நாட்கள் வாழமாட்டான். இவ்விதம் கலங்கிய சீதையிடம் இராவணன் இயம்புதல் `காரிகை நின்னை எய்தும் காதலால், கருதல் ஆகாப் பேர்இடர் இயற்றல் உற்றேன்; பிழைஇது பொறுத்தி! இன்னும் வேர்அற மிதிலை யோரை விளிகிலேன்; விளிந்த போதும் ஆர்உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை அன்னாய்!’ என்றான் 24 24. விளிகிலேன்- கொல்லமாட்டேன். விளிந்த போதும் - நான் மாண்டாலும். `இலங்கைஊர் இவனுக்கு ஈந்து வேறிடத்து இருந்து வாழ்வேன்; நலம்கிளார் நிதிஇ ரண்டும் நல்குவென்; நாமத் தெய்வப் பொலம்கிளர் மானம் தானே பொதுஅறக் கொடுப்பென்; புத்தேள் வலம்கிளர் வாளும் வேண்டில் வழங்குவேன்; யாதும் மாற்றேன்.’ 25 25. நிதி இரண்டும் - சங்கநிதி பதுமநிதி இரண்டையும். `இந்திரன் கவித்த மௌலி, இமையவர் இறைஞ்சி ஏத்த மந்திர மரபின் சூட்டி, வானவர் மகளிர் யாரும் பந்தரின் உரிமை செய்ய, யான்இவன் பணியின் நிற்பேன்; சுந்தரப் பவள வாயால் ஒருமொழி சிறிது சொல்லின்.’ 26 26. இந்திரன் கவித்த மௌலி - இந்திரன் சூட்டியிருக்கும் முடியை. மந்திர மரபின் சூட்டி - மந்திரமோதி முறைப்படி சூட்டி. பந்தரின் - பந்தல் போலச் சூழ்ந்து நின்று; அடிமைகளைப் போல. `எந்தைதன் தந்தை தாதை, இவ்வுலகு ஈன்ற முன்னோன், வந்துஇவன் தானே வேட்ட வரம்எலாம் வழங்கும்; மற்றை அந்தகன் அடியா செய்கை ஆற்றும்;ஆல் அமிழ்தின் வந்த செந்திரு நீர்அல் லீரேல் அவளும்வந்து ஏவல் செய்யும்.’ 27 27. முன்னோன் - பிரமன். இவன் தானே வேட்ட - இவன் விரும்பிய. அந்தகன் - காலன். அடியாரின் - அடிமையாளைப் போல. செய்கை ஆற்றும் - பணியாற்றும். ஆல்; அசை. `தேவரே முதலா, மற்றைத் திண்திறல் நாகர், மண்ணோர், யாவரும் வந்து நுந்தை அடிதொழுது ஏவல் செய்வார்; பாவைநீ இவனின் வந்த பயன்பழுது ஆவது அன்றால்; மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்துஅது முடித்தி!’ என்றான். 28 28. இவனின் வந்த - இவன் குடியிலே பிறந்த. பயன் பழுது ஆவது அன்று - பயன் வீணாகி விடாது. ஆல்; ஆசை. அது முடித்து - நீ பிறந்த பயனை நிறைவேற்றுக. சீதையின் ஆத்திரப் பேச்சு `இத்திருப் பெறுகிற் பானும் இந்திரன்; இலங்கை நுங்கள் பொய்த்திருப் பெறுகிற் பானும் வீடணன்; புலவர் கோமான் கைத்திருச் சரங்கள் உன்றன் மார்பிடைக் கலக்கற் பால; மைத்திரு நிறத்தான் தாள்என் தலைமிசை வைக்கற் பால.’ 29 29. புலவர் கோமான் - இராமனுடைய. மார்பிடை கலக்கற்பால - மார்பிலே ஊடுருவத்தக்கன. `புன்மக கேட்டி கேட்டற்கு இனியன; புகுந்த போரின் உன்மகன் உயிரை எம்மோய்ச் சுமித்திரை உய்ய ஈன்ற நன்மகன் வாளி நக்க, நாய்அவன் உடலை நக்க, `என்மகன் இறந்தான்’ என்ன நீஎடுத்து அரற்றல்;’ என்றாள். 30 30. புன் மக - அற்பத்தன்மையுள்ள சிறியோனே. எம்மோய் - எம் அன்னையாகிய. சுமித்திரை உய்ய ஈன்ற - சுமித்திரை உலகம் உய்யும்படி பெற்றெடுத்த . நீ எடுத்து அரற்றல் - நீ குரல் எடுத்து அலறுவதே நடை பெறும். உடனே இராவணன் சினந்தான்; சீதையைக் கொல்ல ஓடினான். மகோதரன் `இவள், தந்தையின் ஏவலால் இசைவாள். கொல்லாதே!’ என்று தடுத்தான். இராவணன் தனது ஆசனத்தில் அமர்ந்தான். அப்பொழுது புழுதியிலே கிடந்த பொய்ச் சனகன் புகல்கின்றான்: `பூவின்மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை யுற்றாள்; பாவியான் பயந்த நங்கை, நின்பொருட் டாகப் பட்டேன்; ஆவிபோய் அழிதல் நன்றோ? அமரர்க்கும் அரசன் ஆவான் தேவியாய் இருத்தல் தீதோ? சிறையிடைத் தேம்பு கின்றாய்.’ 31 31. தெய்வத் தையல் - இலக்குமி. பட்டேன் - துன்புற்றேன். தேம்புகின்றாய் - வருந்துகின்றாய். `என்னைஎன் குலத்தி னோடும் இன்உயிர் தாங்கி, யீண்டு நன்னெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும், உன்னைவெம் சிறையின் நீக்கி, இன்பத்துள் உய்ப்பாய்!’ என்னாப் பொன்அடி மருங்கு வீழ்ந்தான்; உயிர்உகப் பொருமு கின்றான். 32 32. இன்உயிர் தாங்கி - இனிய உயிரைக் காத்து. துய்ப்பேன் ஆக்கினை நல்கி - அனுபவிப்பவனாகச் செய்து. சீற்றம் கொண்ட சீதையின் உரைகள் அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி, வெவ்வுயிர்த்து ஆவி தள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க, `இவ்வுரை எந்தை கூறான் இன்உயிர் வாழ்க்கை பேணிச்; செவ்வுரை அன்றுஇது’ என்னாச், சீறினள், உளையச் செப்பும். 33 33. வெவ் உயிர்த்து - பெருமூச்சு விட்டு. ஆவி தள்ளி - மூச்சடைத்து. `இன்னுயிர் வாழ்க்கை பேணி இவ்வுரை எந்தை கூறான்’ உளைய - சனகன் உருக் கொண்டவன் உள்ளம் வருந்தும்படி. `அறம்கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபுக்கு ஆன்ற மறம்கெட, மெய்ம்மை தேய, வசைவர, மறைகள் ஓதும் திறம்கெட, ஒழுக்கம் குன்றத், தேவரும் பேணத் தக்க நிறம்கெட இனைய சொன்னாய்! சனகன்கொல் நினையின் ஐயா!’ 34 34. மறைகள் ஓதும் திறம் கெட - வேதங்கள் கூறும் கொள்கை அழிய. நிறம் கெட - புகழ் கெட. `வழிகெட வரினும், தத்தம் வாழ்க்கைதேய்ந்து இறினும், மார்பம் கிழிபட, அயில்வேல் வந்து கிழிப்பினும், சான்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது அல்லால், முறைகெடப் புறம்நின்று ஆர்க்கும் பழிபட வாழ்கிற பாரும் பார்த்திவர் உளரோ; பாவம்!’ 35 35. வழி - சந்ததி. முறை கெட - நீதிகெட. புறம் நின்று ஆர்க்கும் - வெளிப்புறத்தில் நின்று ஆரவாரிக்கும். பழிபட - பழி தோன்ற. பார்த்திவர் உளரோ - அரசர்களில் யாரேனும் உள்ளனரோ? `நீயும்,நின் கிளையும், மற்றுஇந் நெடுநில வரைப்பும், நேரே மாயினும், முறைமை குன்ற வாழ்வெனோ? வயிரத் திண்தோள் ஆயிரம் நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்; நாயினை நோக்கு வேனோ, நாண்துறந்து ஆவி நச்சி?’ 36 36. -. `வரிசிலை ஒருவன் அல்லால், மைந்தர்என் மருங்கு வந்தார் எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக் கேற்ற அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும் நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட் டோனே?’ 37 37. அரியொடும் - சிங்கத்துடன். அங்கணத்து - சேற்று நிலத்திலே உள்ள. அழுக்குத்தின்னும் - அழுக்கடைந்த உயிர்களைத் தின்னுகின்ற. இராவணன் கோபித்து மாயா சனகனைக் கொல்ல வாளை உருவியபோது சீதை சொல்லியது `என்னையும் கொல்லாய்; இன்னே இவனையும் கொல்லாய்; இன்னும் உன்னையும் கொல்லாய்; மற்றுஇவ் உலகையும் கொல்லாய் யானோ இன்னலும் நீங்கி, என்றும் கெடாப்புகழ் எய்து கின்றேன்; பின்னையும் எம்கோன் அம்பின் கிளையொடும் பிழையாய்’ என்றாள். 38 38. -. மகோதரன் `சனகன் மேல் குற்றம் இல்லை; அவனைக் கொல்ல வேண்டாம்;’ என்று தடுத்தான். இச்சமயத்திலே கும்பகருணன் இறந்த செய்தியைத் தூதர்கள் வந்து இராவணன் காதிலே மறைவாகக் கூறினர். பிரிவுஎன்னும் பீழை தாங்கள் பிறந்தநாள் தொடங்கி என்றும் உறுவதொன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான், எறிவரும் அமரில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன அறிவழிந்து, அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற. 39 39. பீழை - துன்பம். உறுவது ஒன்று இன்றி - அடைவ தில்லாமல். எறி வரும் - படைகளை வீசும்படி வருகின்ற. அவசன் - துன்பம் பெற்றவனாய். அண்டம் முற்ற - உலகம் முழுவதும் கேட்கும்படி. `மின்இலைய வேலோனே, யான்உன் விழிகாணேன் நின்நிலையா தென்னேன், உயிர்பேணி நிற்கின்றேன்; உன்நிலைமை ஈதாயின், ஓடைக் களிறுந்திப், பொன்உலகம் மீளப் புகாரோ? புரந்தரனார்.’ 40 40. மின் இலைய - மின்னுகின்ற தட்டையான முனையை யுடைய. ஓடை - முகபடாம். இராவணன் துயரம் `வல்நெஞ்சின் என்னைநீ, நீத்துப்போய் வான்அடைந்தால்? இன்னம் சிலரோடு ஒருவயிற்றில் யார்பிறப்பார்? மின்அஞ்சு வேலோய்! விழிஅஞ்சி வாழ்கின்றார் தம்நெஞ்சம் தாமே தடவாரோ வானவர்கள்?’ 41 41. வல்நெஞ்சின் என்னை - கல்லினும் வலிய நெஞ்சமுடைய என்னை. இன்னம் - இனிமேல். தம்நெஞ்சம் - தமது மார்பை. `கல்அன்றோ நீராடும் காலத்துஉன் கால்தேய்க்கும் மல்ஒன்று தோளாய் வடமேரு? மானுடவன் வில்ஒன்று நின்னை விளித்துளது, என்னும் சொல்அன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றால்?’ 42 42. மல் ஒன்று - வலிமை பொருந்திய. விளித்து உளது - கொன்று விட்டது. `செந்தேன் பருகித், திசைதிசையும் நீவாழ உய்ந்தேன்; இனியின்று நானும் உனக்குஆவி தந்தேன்; பிரியேன், தனிப்போகத் தாழ்க்கிலேன்; வந்தேன் தொடர மதக்களிறே! வந்தேனால்!’ 43 43. நீ வாழ - நீ வாழ்ந்ததனால். திசை திசையும் உய்ந்தேன் - திசைகளில் எல்லாம் வெற்றி பெற்று வாழ்ந்தேன். சீதையின் குதூகலம் அண்டத்து அளவும் இனைய பகர்ந்துஅழைத்துப் பண்டைத்தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்; தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர்பொடிப்பக், கெண்டைத் தடங்கண்ணாள், உள்ளே கிளுகிளுத்தாள். 44 44. அண்டத்து அளவும் - வானத்தை முட்டும்படியான. இனைய - இம்மொழிகளை. பாரித்தான் - விளக்கினான். இராவணன் என்பதற்குக் கதறியவன், என்பது பொருள். தொண்டை- ஆதொண்டைக் கனிபோன்று சிவந்த. கிளுகிளுத் தாள் - குதூகலமடைந்தாள். இராவணன் சீற்றம் `தாவரிய பேர்உலகத்து இன்றென் சரம்கோலி யாவரையும் கொன்றடக்கி, என்றும் இறவாத மூவரையும், மேலைநாள் மூவா மருந்துண்ட தேவரையும் வைப்பேன் சிறை!’ என்னச் சீறினான். 45 45. சரம் கோலி - மரணத்தைத் தொடுத்து விட்டு. மூவா மருந்து - தேவாமிர்தம். அக்கணத்து, மந்திரியார் ஆற்றச் சிறிதுஆறி `இக்கணத்து மானிடவர் ஈரக் குருதியால் முக்கைப் புனல்உகுப்பென் எம்பிக்கு’ எனமுனியாத் திக்குஅனைத்தும் போர்கடந்தான் போயினான் தீவிழியான். 46 46. என முனியா - என்று சினந்து. போர்கடந்தான் - போரிலே வெற்றி பெற்றவன். `சனகனைச் சிறையிடுங்கள்’ என்று கூறி மகோதரனும் போனான். பின்னர் திரிசடை `இங்கு வந்தவன் சனகன் அல்லன்; மருத்தன் என்னும் மாயையில் வல்ல அரக்கன்; ஆதலால் நீ அஞ்சற்க’ என்று உண்மையை உரைத்தாள். சானகியும் சிறிது அமைதியுடன் இருந்தாள். 18. அதிகாயன் வதைப் படலம் இராவணன் துக்கத்துடன் இருந்தான்; அமைச்சர்கள் தொழுது நின்றனர். தம்பி இறந்த துயரம் தாங்க முடியவில்லை அமைச்சர்களால் தம்பியைக் காக்க முடியவில்லையே என்ற ஆத்திரம்! இவையிரண்டும் அவன் நெஞ்சை யடைத்தன. இராவணன் கொதிப்புரை `உம்மையின் நின்றுநாள் உலகம் மூன்றும்என் வெம்மையின் ஆண்டது; நீர்என் வென்றியால் இம்மையின் நெடுந்திரு எய்தி னீர்;இனிச் செம்மையின் நின்றுஉயிர் தீர்ந்து தீர்திரால்.’ 1 அதிகாயன் வதைப் படலம்: இராவணன் மகனாகிய அதிகாயன் கொல்லப்பட்டதைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. உம்மையின் நின்று - முன்னாளிலிருந்து. என் வெம்மையின் - எனது வீரத்தால். ஆண்டது - ஆண்டதாகும். `அல்லதும் உண்டுஉமக்கு உரைப்பது; ஆர்அமர் வெல்லுதும் என்றிரேல் மேற்செல் வீர்!இனி வல்லது மடிதலே என்னின் மாறுதிர்! சொல்லும்நும் கருத்’தென முனிந்து சொல்லினான். 2 2. இனி வல்லது - இனிச் செய்யக் கூடியது. மடிதலே என்னின் - இறத்தல் தான் என்று அஞ்சுவீரேல். மாறுதிர் - போருக்குச் செல்லாதீர்கள். இராவணன் மகன் அதிகாயன் வீரமொழி `காய்ப்புண் ட,நெடும் படை,கை உளதாத் தேய்ப்புண் டவனும் சில,சில கணையால் ஆய்ப்புண் டவனும், அவர்சொல் வலத்தால் ஏய்ப்புண் டவனும் என,எண் ணினையோ?’ 3 3. காய்ப்பு உண்ட - காய்ச்சி அடிக்கப்பட்ட. நெடும்படை - நீண்ட ஆயுதம். தேய்ப்புண்டவன் - அட்சகுமாரன். சில சில்கணையால் - சில சிறிய அம்புகளால். ஆய்ப்பு உண்டவனும் - உயிர் ஒடுங்கிய கும்பகருணனும். அவர் சொல் வலத்தால் - அவர்களின் சொல் வன்மையால். `உம்பிக்கு உயிர்ஈறு செய்தான் ஒருவன், தம்பிக்கு உயிர்ஈறு சமைத்து, அவனைக் கம்பிப் பதுஓர்,வன் துயர்கண் டிலனேல் நம்பிக்கு ஒருநன் மகனோ இனியான்?’ 4 4. செய்தான் ஒருவன் - செய்த ஒருவனுடைய. கம்பிப்பது - நடுங்கச் செய்வதாகிய. நம்பிக்கு - பெருமையில் சிறந்த உனக்கு. `கிட்டிப் பொருது,அக் கிளர்சே னையெலாம் மட்டித் து,உயர்வா னரர்வன் தலையை வெட்டித் தரையிட்டு, இருவில் லினரைக் கட்டித் தருவென்! இதுகா ணுதியால்.’ 5 5. மட்டித்து - தரை மட்டமாக்கி. இருவில்லினரை - பெரியவில்லை யுடையவர்களை. அதிகாயன் போருக்குப் புறப்பட்டான்; அவனுடன், மூவாயிரம் கோடி படைகளும், கும்பன், நிகும்பன், அகம்பன் என்னும் படை வீரர்களும் சென்றனர். அதிகாயன் மயிடனை இலக்குவன் பால் தூது விடுதல் `அம்தார் இளவற்கு, அயர்வெய் தி,அழும் தம்தா தைமனத்து இடர்தள் ளிடுவான், உந்துஆர் துயரோ டும்உருத்து எரிவான் வந்தான், எனமுன் சொல்வழங்கு குதி;’யால்; 6 6. உந்து ஆர் துயரோடும் - தள்ளும் நிறைந்த துன்பத்துடன். உருத்து எரிவான் - சினந்து எரிகின்றவனாகிய அதிகாயன். `செரு,ஆ சையினார் புகழ்தே டுறுவார் இருவோ ரையும்நீ, வலைஉற்று, எதிரே பெருவோர் நமனார் பதிபுக்கு உறைவோர், வருவோ ரை,எலாம் வருக;’என் னுதியால். 7 7. வலை உற்று - விரைவிலே அடைந்து. வல்லை; வலை. நமனார் பதி புக்கு உறைவோர் - எமனுலகுபுகுந்து உறைவோர் ஆகிவிடுவர். `வேறே, அவ்இலக் குவன்என் னவிளம்பு ஏறே, வருமேல், இமையோர் எதிரே கூறே பலசெய்து, உயிர்கொண்டு, உனையும் மாறே ஒருமன் எனவைக் குவென்;ஆல்.’ 8 8. ஏறே - ஆண் சிங்கம் போன்றவன். பல கூறே செய்து - பல துண்டுகளாகச் செய்து. மாறே - இவ்வுதவிக்குக் கைம்மாறாக. ஒரு மன் என - ஒரு அரசன் என்று சொல்லும்படி. மயிடன் தூது செல்லல் ஏகித் தனிசென்று, எதிர்எய் தல்உறும் காகுத் தனைஎய் தியகா லையின்வாய், வேகத் தோடுவீ ரர்,விடைத்து எழலும், `ஓகைப் பொருள்உண் டென’ஓ தினன்;ஆல். 9 9. காகுத்தனை - இராமனை. வேகத்தோடு - கோபத்தோடு. ஓகைப் பொருள் - மகிழ்வதற்குரிய ஒரு செய்தி. இராமன், `தூதனைத் துன்புறுத்தாதீர்’ என்று வீரர் களை விலக்கினான். `நீ வந்த காரியம் யாது?’ என்றான். `இளையோனிடம் இயம்புவது ஒன்றுண்டு’ என்றான் மயிடன். இளையோன் `சொல்லுக’ என்று முன்வந்தான். மயிடன் உரைத்தல் `உன்மேல் அதிகா யன்,உருத் துளனாய், நன்மே ருவின்நின் றனன்நா டி;அவன் தன்மேல் எதிரும் வலிதக் குளையேல் பொன்மே னிய!என் னொடுபோ துதி;’ஆல். 10 10. உருத்துளனாய் - கோபங்கொண்டவனாகி. வலி தக்கு உளையேல் - வலிமை பெற்றிருப்பாயானால். `சையப் படிவத்து, ஒருதந் தையைமுன், மெய்எப் படிசெய் தனன்நும் முன்,விரைந்து, அய்யப் படல்!அப் படிஇப் படியில் செய்யப் படுகிற் றி!’தெரித் தனென்ஆல். 11 11. சையப் படிவத்து - மலை வடிவத்தையுடைய. முன் மெய் எப்படி செய்தனன் நும்முன் - முன்பு உடம்பை எப்படிச் செய்தானோ உன்முன்னவன். செய்யப்படுகிற்றி - செய்யப் படுவாய். ஆல்; அசை. இலக்குவன் போருக்குப் புறப்பட, வீடணன் அதிகாயன் ஆற்றலை விளக்குதல் `ஓவா நெடுமா தவம்,ஒன் றுடையான், தேவா சுரர்,ஆ தியர்,செய் செருவில், சாவான்; இறையும் சலியா வலியான், மூவா முதல்நான் முகனார் மொழியால்.’ 12 12. ஓவா - அழியாத. இறையும் - சிறிதும். மொழியால் - வரத்தால். `கற்றான் மறைநூ லொடுகண் ணுதல்பால்; முற்றா தனதே வர்முரண் படைதாம் மற்றுஆ ரும்வழங் க,வலார் இலவும் பெற்றான்; நெடிதுஆண் மைபிறந் துடையான்.’ 13 13. தேவர் முற்றாதன - தேவர்களால் அறியப்படாதனவும். மற்று ஆரும் வழங்க வலார் இலவும் - வேறு யாரும் வழங்க வல்லவாக்ள் இல்லாதனவுமாகிய. முரண்படைகள் - வலிமை யுள்ள ஆயுதங்களையும். `அறன்அல் லதுஅல் லதுமாறு அறியான்; மறன்அல் லதுபல் பணிமற்று அணியான் திறன்அல் லதுஓர்ஆ ருயிரும் சிதையான்; உறன்நல் லதுபேர் இசைஎன்று உணர்வான்.’ 14 14. அறன் அல்லது அல்லது மாறு அறியான் - அறம் அல்லாததைத் தவிரவேறு ஒன்றையும் உணரான். மறன் அல்லது - வீரம் அல்லாத. திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் - வலிமையற்ற ஓர் உயிரையும். `பேர் இசை உறன் நல்லது’. `காயத்து உயிரே விடுகா லையினும், மாயத் தவர்கூ டிமலைந் திடினும், தேயத் தவர்செய் குதல்செய் திடினும், மாயத் தொழில்செய் யமதித் திலன்;ஆல்,’ 15 15. செய்குதல் - சூழ்ச்சி செய்தலை. மாயத்தொழில் - வஞ்சகத் தொழில். ஆல்; அசை. என்று சொல்லி `முன்பு திருமாலொடு பொருது மடிந்த மது கைடவர்களிலே, கைடவனே இவ்வதிகாயன்’ என்றான் வீடணன். இராமன் இலக்குவன் புயவலிமையைப் புகழ்தல் `எண்ணா யிரகோ டிஇரா வணரும், விண்நா டரும்,வேறு உலகத்து எவரும், நண்ணா ஒருமூ வரும்,நண் ணிடினும், கண்ணால் இவன்வில் தொழில்கா ணுதி!யால்.’ 16 16. -. `வான்என் பதுஎன்;வை யகம்என் பதுஎன்;மால் தான்என் பதுஎன்;வே றுதனிச் சிலையோர், யான்என் பதுஎன்;ஈ சன்என்;வா னவர்தம் கோன்என் பதுஎம் பிகொதித் திடுமேல்?’ 17 17. -. `தெய்வப் படையும், சினமும், திறனும், மையற்று ஒழிமா தவம்,மற் றும்எலாம் எய்தற்கு உளவோ? இவன்இச் சிலையில் கைவைப்பு அளவே இறல்,கா ணுதியால்!’ 18 18. மையற்று ஒழி மாதவமும் - குற்றமற்ற சிறந்த தவமும். எய்தற்கு உளவோ - இவன் எதிரில் வந்து நிற்பதற்கான வலிமையைப் பெற்றுள்ளனவோ? இறல் - அழிவதை. `என்தே வியை,வஞ் சனைசெய்து எழுவான் அன்றே முடிவான்; இவன்,அன் னவள்சொல் குன்றேன், எனஏ கியகொள் கையினால், நின்றான் உளன்ஆ கி;நெடுந் தகையாய்!’ 19 19. குன்றேன் - மீற மாட்டேன் என்று சொல்லி. ஏகிய - அவளைத் தனியே விட்டுப் பிரிந்த. கொள்கையினால் - செய்கையினால். உளன் ஆகி நின்றான் - அவ்விராவணன் உயிருள்ளவனாக நின்றான். `கொல்வா னும்இவன், கொடியோ ரைஎலாம் வெல்வா னும்இவன்; அடல் விண்டுஎன ஒல்வா னும்இவன்; உடனே ஒருநீ செல்வாய்!’ எனஏ வுதல்செய் தனன்;ஆல். 20 20. அடல் கண்டு என - வலிமையுள்ள திருமாலைப் போல. ஏல்வானும் - போர்செய்பவனும். இலக்குவன் இராமன் அடிகளை வணங்கி விடை பெற்று, வீடணனுடன் போர்க்களம் புகுந்தான். அரக்கர் வானரர் போர் தோல்படத் துதைந்துஎழு வயிரத் தூண்நிகர் கால்படக், கைபடக், கால பாசம்போல் வால்படப் புரண்டனர் நிருதர்; மற்றவர் வேல்படப் புரண்டனர் கவியின் வீரரே. 21 21. தோல்பட - யானைகள் மாள. துதைந்து எழு - நெருங்கி உயர்ந்த. கால்பிடித்து ஈர்த்துஇழி குருதிக் கண்ணகண் சேல்பிடித்து எழுதிரை ஆற்றில், திண்நெடும் கோல்பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல், வால்பிடித்து ஒழுகின கவியின் மாலையே. 22 22. குருதிக் கண்ண - இரத்தத்திலே. சேல் பிடித்து - சேல் மீன்கள் பொருந்தி. குரங்கின் வரிசைக்குக் குருடர் கூட்டம் உவமை. பாய்ந்தது நிருதர்தம் பரவை; பன்முறை காய்ந்தது கடும்படை கலக்கிக்; கைதொறும் தேய்ந்தது சிதைந்தது;சிந்திச் சேண்உறச் சாய்ந்தது; தகைப்பெரும் கவியின் தானையே. 23 23. பன்முறை கடும்படை கலக்கிக் காய்ந்தது - பல தடவை கடும் படையானது கலங்கச் செய்து கோபித்தது. கவியின் தானை கை தொறும் தேய்ந்தது; சிதைந்தது; முந்திச் சேண் உறச் சாய்ந்தது. கைதொறும் - அணிகள் தோறும். இலக்குவன் வில்லில் நாணேற்றினான் நூல்மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள் மேல்மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும், கால்மறைந்து ஒளிப்பிலாக், கடையின், கண்அகல் நான்மறை ஆர்ப்புஎன நடந்தது அவ்வொலி. 24 24. கடையின் - ஊழிக்காலத்தில். கண் அகல் நான்மறை ஆர்ப்பு என - மறையாத பெரிய வேதத்தின் ஆரவாரத்தைப் போல. அரக்கர் சேனை, இலக்குவனால் அழிதல் ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும், ஏனைவெம் புரவியின் உதிரத்து ஈட்டமும் கானினும் மலையினும் பரந்த, கால்புனல் மானயா றாம்எனக் கடல்ம டுத்தவே. 25 25. கால் புனல் - கால்வாய்களின் வழியோடும் நீர். மான யாறும் என - பெரிய ஆற்றைப் போல. வைவன முனிவர்சொல் அனைய வாளிகள் கொய்வன தலைகொள, குறைத்த லைக்குழாம் கைவளை வரிசிலைக் கடுப்பின் கைவிடா எய்வன எனைப்பல; இரத வீரரே. 26 26. முனிவர் வைவன சொல் - முனிவர்களின் சாபம் போன்ற. இரத மேலன குறைத்தலைக் குழாம் - இரதங்களின் மேல் உள்ள் தலையற்ற கவந்தங்கள். எனைப்பல எய்வன - இன்னும் பல அம்புகளை எய்வனவாம். தாதையைத், தம்முனைத், தம்பி யைத்,தனிக் காதலைப் பேரனை, மருக னைக்களத்து ஊதையின் ஒருகணை உருவ மாண்டனர், சீதைஎன்று ஒருகொடும் கூற்றம் தேடினார். 27 27. காதலைப் பேரனை - அன்புள்ள புத்திரனை. (காதலை - புத்திரனை. பேரனை - பெயரனை. என்றும் கூறலாம்). ஊதையின் - பெருங்காற்றைப் போன்ற. தாருகன், காலன், குலிசன், காலசங்கள், மாலி, மருத்தன் என்னும் படைத்தலைவர்கள் இலக்குவனால் கொல்லப்பட்டனர். இலக்குவனைச் சூழ்ந்த ஆயிரக் கணக்கான யானைப் படைகளையும் அழித்தான். இலக்குவனை எதிர்த்த ஒரு கோடி யானைப் படைகளின் கதி உலகத்துள மலைஎத்தனை, அவையத்தனை உடனே கொலநிற்பன, பொருகிற்பன, புடைசுற்றின; குழுவாய் அலகற்றன, சினமுற்றிய, அனல்ஒப்பன அவையும் தலைஅற்றன, கரம்அற்றன, தனிவில்தொழில் அதனால். 28 28. அலகற்றன - அளவற்றன. அவையும் - அவ்யானைகளும். அனுமானும் போர்க்களம் புகுந்தான்; யானைப் படைகளை அழித்தான்; தேவாந்தகன் என்பவனைக் கன்னத்திலே அறைந்து கொன்றான். அதிகாயன் சினத்துடன் அனுமானைப் பார்த்து உரைத்தல் `இன்றல்லது, நெடுநாள்உனை ஒருநாளினும் எதிரேன், ஒன்று அல்லது செய்தாய்பல; இளையோனையும், உனையும், வென்றல்லது மீளாதவென் மிடல்வெம்கணை மழையால், கொன்றல்லது செல்லேன்!இது கொள்!’என்றனன் கொடியோன். 29 29. மிடல் - வெம்கணை - வலிமையுள்ள கொடிய கணை. கொடியோன் - கொடியவனாகிய அதிகாயன். அனுமான் திரிசிரனைக் கொல்லுதல் `பிழையாதுஇது, பிழையாது,’எனப் பெரும்கைத்தலம் பிசையா மழையாம்எனச் சிரித்தான்,வட மலையாம்எனும் நிலையான்; `முழைவாள்அரி அனையானையும் எனையும்மிக முனிவாய்! அழையாய்!திரி சிரத்தோனையும், நிலத்தோடும்இட்டு அரைப்பான்.30 30. பிசையா - பிசைந்து. மழையாம் என - மழையில் தோன்றும் இடிபோல. வடமலை - இமயம். முழை - குகை. அப்பொழுது திரிசிரன் தேரூர்ந்து வந்து அனுமானுடன் எதிர்த்துப் போர் புரிந்தான். தேர்மேல்செலக் குதித்தான்;திரி சிரத்தானைஓர் திறத்தால் கார்மேல் துயில் மலைபோலியைக், கரத்தால்பிடித்து எடுத்தான், பால்மேல்படுத்து அரைத்தான்,அவன் பழிமேற்படப் படுத்தான்; `போல்மேல்திசை நெடுவாயிலின் உளதுஆம்’எனப் போனான். 31 31. பார்மேல் படுத்து - நிலத்திலே கிடத்தி. அவர் பழி மேற்பட -அவர்கள் பழி பெருகும்படி. அதிகாயன் இலக்குவனை எதிர்த்தல் தேர்ஒலி கடலைச் சீறச், சிலைஒலி மழையைச் சீறப், போர்ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போகத், தார்ஒலி கழற்கால் மைந்தன், தானையும், தானும் சென்றான்; வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசயம் வேண்ட. 32 32. மைந்தன் - அதிகாயன். வீரனும் - இலக்குவனும். அங்கதன் தோள்மேல் இலக்குவன் அமர்தல் ஆம்என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்மேல் தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனில் தாங்கி நின்ற கோமகன் ஆற்றல் நோக்கிக், குளிர்கின்ற மனத்தர் ஆகிப் பூமழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர் புலவர் எல்லாம். 33 33. புலவர் எல்லாம் - தேவர்கள் அனைவரும். `வாழ்த்திப் புகழ்ந்தனர்’. அதிகாயன் ஆர்ப்பாட்டம் `உம்ஐயனே காக்க; மற்றுஅங்கு உமைஒரு கூறன் காக்க; இமையவர் எல்லாம் காக்க; உலகம்ஓர் ஏழும் காக்க; சமையும்உன் வாழ்க்கை இன்றோடு;’ என்றுதன் சங்கம்ஊதி, அமைஉருக் கொண்ட கூற்றை நாண்எறிந்து உருமின் ஆர்த்தான். 34 34. உன் வாழ்க்கை இன்றோடு சமையும் - உன் வாழ்வு இன்றோடு முடிந்து விடும். அமை உருக்கொண்ட கூற்றை - மூங்கில் வடிவு கொண்டிருக்கும் எமனாகிய வில்லை. இலக்குவன் சூளுரை அன்னது கேட்ட மைந்தன், அரும்புஇயல் முறுவல் தோன்றச், `சொன்னவர் வாரார், யானே தோற்கினும் தோற்கத் தக்கேன்; என்னைநீ பொருது வெல்லின் அவரையும் வென்றி’என்னா மின்னினும் மிளிர்வது ஆங்கோர் வெம்சரம் கோத்து விட்டான். 35 35. அரும்பு இயல் - முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட. முறுவல் தோன்ற - பற்கள் தோன்றும்படி சிரித்து. மின்னினும் - மின்னலை விட. மிளிர்வது - பிரகாசிக்கின்ற. அதிகாயன் வீரப்போர் விட்டவெம் பகழி தன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான் சுட்டதோர் கணையி னாலே விசும்பிடைத் துணித்து நீக்கி, எட்டினோடு எட்டு வாளி,`இலக்குவ விலக்காய்!’ என்னா திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான். 36 36. வெற்பினை வெதும்பும் - மலையையும் வாடச் செய்யும். தோளான் - தோளையுடைய அதிகாயன். திட்டியின் விடத்து கண்ணால் விஷத்தைக் கக்கும். அங்கதன் நெற்றி மேலும், தோளினும், ஆகத் துள்ளும், புங்கமும் தோன்றா வண்ணம் பொருசரம் பலவும் போக்கி, வெம்கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச் சங்கமும் ஊதி, விண்ணோர் தலைபொதிர் எறிய ஆர்த்தான். 37 37. புங்கமும் தோன்றா வண்ணம் - கணையின் நுனியும் காணாதபடி. பொதிர் எறிய - நடுங்கும்படி. அதிகாயன் மரணம் வாலிசேய் மேனி மேலும், மழைபொரு குருதி வாரி கால்உயர் வரையின் செங்கேழ் அருவிபோல் ஒழுகக் கண்டான்; கோல்ஒரு பத்து நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து, மேலவன் சிரத்தைச் சிந்தி, வில்லையும் துணித்தான் வீரன். 38 38. கால் உயர் வரையின் - வலிமையுடன் உயர்ந்த மலையி லிருந்து. செம் கேழ் - சிவந்த நிறமுள்ள. பின்நின்றார், முன்நின் றாரைக் காணலாம் பெற்றித் தாக, மின்நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும்; அந்நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன்; ஆவி நீங்கான், பொன்னின்ற வடிம்பின் வாளி மழைஎனப் பொழியும் வில்லான். 39 39. பொன்னின்ற வடிம்பின் - பொன்னால் அமைந்த விளிம்பினையுடைய. வாளி - அம்புகளை. நன்றுஎன உவந்து, வீரன், நான்முகன் படையை வாங்கி, மின்தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்; குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டுஅவ் வாளி சென்றது விசும்பின் ஊடு; தேவரும் தெரியக் கண்டார். 40 40. மின்தனி திரண்டது என்ன - மின்னல் தனித்துத் திரண்டு உருப்பெற்றது போன்ற. இலக்குவனுக்கு வாழ்த்து பூமழை பொழிந்து வானோர் போயதுஎம் பொருமல் என்றார்; தாம்அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளித்; தீமையும் திகைப்பும் நீங்கித் தெளிந்தது குரங்குச் சேனை; கோமகன் தோளின் நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான். 41 41. இரிந்தனர் - ஓடினர். கோமகன் - அங்கதன். கொற்றம் - பெற்றி. வெம்திறல் சித்தி கண்ட வீடணன், வியந்த நெஞ்சன், அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான்; ஐயன் மந்திர சித்தி அன்ன சிலைத்தொழில் வலியீது ஆயின், இந்திர சித்த னார்க்கும் இறுதியே இயைவது;’ என்றான். 42 42. வெம் திறல் சித்தி கண்ட - கொடிய வல்லமையான் பயனைக்கண்ட. அரக்கர் சார்பில் எதிர்த்த நராந்தகனை அங்கதன் கொன்றான்; மத்தனை, நீலன் கொன்றான். உன்மத்தன் வயிர மார்பின் உரும்ஒத்த கரம்சென்று உற்ற வன்மத்தைக் கண்டும், மாண்ட மதமத்த மலையைப் பார்த்தும் சன்மத்தின் தன்மை யானும், தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக்கூட் டானும் வயமத்தன் கடிதின் வந்தான். 43 43. மார்பின் - மார்பிலே. உரும் ஒத்த - இடியைப் போன்ற. வன்மம் - வலிமை. கடைக் கூட்டானும் - பயனாலும். பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினைப் பழித்த தோளன்; வெய்யன்என்று உரைக்கச் சாலத் திண்ணியான்; வில்லின் செல்வன்; பெய்கழல் அரக்கர் சேனை ஆர்த்தெழப் பிறங்கு பல்பேய் ஐயிரு நூறு பூண்ட ஆழிஅம் தேரின் மேலான். 44 44. -. இவ்வாறு வந்த வயமத்தனை இடபன் எதிர்த்துப் பொருது கொன்றான். உடனே கும்பன் புகுந்து போர் புரிந்தான். கும்பன் சுக்கிரீவன் போர் மத்தச்சின மால்களிறு என்ன மலைந்தார் பத்துத்திசை யும்செவிடு எய்தின; பல்சால் தத்தித்தழு வித்,திரள் தோள்கொடு தள்ளிக், குத்தித்,தனி குத்துஎன மார்பு கொடுத்தார். 45 45. மத்தச் சின மால் களிறு - மத்தகத்தையுடைய சினம் பொருந்திய பெரிய யானை. நிலையில்சுட ரோன்மகன் வன்கை நெருங்க, கலையில்படு கம்மியர் கூடம் அலைப்ப உலையில்படு இரும்பென வன்மை ஒடுங்க, மலையின்பிளவு உற்றது தீயவன் மார்பம். 46 46. கலையில் படு - தொழிலில் பயிற்சி பெற்ற. கூடம் அலைப்ப - சம்மட்டி அடித்ததனால். மலையில் - மலை போல. `செய்வாய்இகல்’ என்றுஅவன் நின்று சிரித்தான்; ஐவாய்அர வம்முழை புக்கென, ஐயன் கை,வாய்வழி சென்று,அவன் ஆருயிர் கக்கப், பைவாய்நெடு நாவை முனிந்து பறித்தான். 47 47. ஐயன் - சுக்கிரீவன். பைவாய் - பையைப் போல அமைந்த. நிகும்பன் அங்கதன் போர் அக்காலை நிகும்பன் அனல்சொரி கண்ணன் புக்கான்,`இனி எங்கட போகுவது’ என்னா மிக்கான்எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்; எக்காலமும் இல்லதுஓர் பூசல் இழைத்தார். 48 48. மிக்கான் எதிர் - சினமிகுத்து வந்தவன் எதிரில். நிகும்பனை அனுமான் கொல்லல் தடையேதும்இல் சூலம், முனிந்து, சலத்தால் விடையேநிகர் அங்கதன் மேல்விடு வானை, இடையேதடை கொண்டு,தன் ஏடுஅவிழ் அங்கைப் படையேகொடு கொன்றுஅடல், மாருதி போனான். 49 49. சலத்தால் - சினத்துடன். தடை கொண்டு - தடுத்து. ஏடு அவிழ் - இதழ்கள் விரிந்த மலர் போன்ற. அம் கைப் படையேகொடு - அழகிய கையாகிய படையினாலேயே. அரக்கர்கள் ஓட்டம் நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்; பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்; வன்தாள்மரம் வீசிய வானர வீரர் கொன்றார்;மிகு தானை அரக்கர் குறைந்தார். 50 50. தடுப்பவர் இன்மை - தடுத்துக் காப்பாற்றுவோர் இல்லாமையால்; நெளிந்தார் - பின்னடைந்து ஓடினர். பரிபட்டு நின்று விழச்சிலர் பதைத்தார்; கரிபட்டு உருளச்சிலர் கால்கொடு சென்றார்; நெரிபட்டு அழிதேர்இடை யேசிலர் நின்றார்; எரிபட்ட மலைக்கண் இருந்தவர் என்ன. 51 51. பரி பட்டு விழ - குதிரைகள் இறந்து விழுந்ததனால். கரி - யானை. நெரிபட்டு - நெருக்கப்பட்டு. இருகணும் திறந்து நோக்கி, அயல்இருந்து இரங்கு கின்ற, உருகுதம் காத லோரை, `உண்ணும்நீர் உதவும்’ என்றார்; வருவதன் முன்னம் மாண்டார் சிலர்;சிலர் வந்த தண்ணீர் பருகுவார்; இடையே பட்டார் சிலர்;சிலர் பருகிப் பட்டார். 52 52. -. மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி உக்கனர் என்ன வீசித், தம்மைக்கொண்டு ஓடிப் போனார்; கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதறக் காலால் திக்கொடு நெறியும் காணார், திரிந்துவந்து உயிரும் தீர்ந்தார். 53 53. ஆவி உக்கனர் - உயிரை விட்டனர். தம்மைக் கொண்டு - தம்மைக் காத்துக் கொண்டு. அதிகாயனும், படைவீரர்களும் அழிந்தது கேட்டு இராவணன் வருந்தல் ஏங்கிய விம்மல், மானம், இரங்கிய இரக்கம், வீரம், ஓங்கிய வெகுளி, துன்பம் என்றுஇவை ஒன்றற்கு ஒன்று தாங்கிய தரங்கம் ஆகக், கரையினைத் தள்ளித் தள்ளி வாங்கிய கடல்போல் நின்றான், அருவிநீர் வழங்கும் கண்ணான். 54 54. தாங்கிய தரங்கம் ஆக - தள்ளப்பட்டு மோதுகின்ற அலைகளைப் போலிருக்க. வாங்கிய - பின்வாங்கிய. திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப் பிசைஉறும் கையை; மீசை சுறுக்கொள உயிர்க்கும்; பேதை நசையிடைக் கண்டான் என்ன நகும்;அழும்; முனியும் நாணும். 55 55. நசையிடை - ஆசையால். பேதை கண்டான் என்ன - அறியாமையைப் பெற்றவன் போல. மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்; எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒருகணத்து எற்ற எண்ணும்; `பெண்எனும் பெயர எல்லாம் பிளப்பென்’என்று எண்ணும்; எண்ணிப் புண்இடை எரிபுக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும். 56 56. எற்ற எண்ணும் - அழிக்க நினைக்கும். பெயர எல்லாம் - பெயருள்ளவைகளை யெல்லாம். எரி - தீ. அதிகாயன் அன்னை, தானமாலை புலம்பல் `இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள்என்று அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்! மந்தரத்தோள் என்மகனை, மாட்டா மனிதன்தன் உந்துசிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தாயே!’ 57 57. ஏத்தும் அளியத்தேன் - போற்றும் அன்புக்குரிய நான். மந்தரத்தோள் - மந்தர மலை போன்ற தோளை. மாட்டா - அரக்கர்க்கு எதிர் நிற்க மாட்டாத. `அக்கன் உலந்தான்! அதிகாயன் தான்பட்டான்! மிக்கதிறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்! மக்களினில் இன்றுள்ளான் மண்டோ தரிமகனே! திக்கு விசயம் இனிஒருகால் செய்யாயோ!’ 58 58. உலந்தான் - அழிந்தான். வீடினார் - அழிந்தார்கள். `ஏதையா சிந்தித்து இருக்கின்றாய்! எண்இறந்த கோதையார் வேல்அரக்கர் பட்டாரைக் கூவாயோ! பேதையாய்க் காமம் பிடிப்பாய்! பிழைப்பாயோ! சீதையால் இன்னும் வருவ சிலவேயோ?’ 59 59. கோதையார் - மாலையணிந்த. பட்டாரை - இறந்தவர் களை. வருவ - வரக்கூடிய பழிகள். `உம்பி, உணர்வுடையான், சொன்ன உரைகேளாய்; நம்பி குலக்கிழவன் கூறும் நலம்ஓராய்! கும்ப கருணனையும் கொல்வித்து,என் கோமகனை அம்புக்கு இரையாக்கி, ஆண்டாய் அரசுஐய!’ 60 60. உம்பி - உன் தம்பியாகிய வீடணன். நம்பி - சிறந்த வனாகிய. குலக் கிழவன் - குலத்தலைவன் மாலியவான். என்று பலபலவும் பன்னி, எடுத்தழைத்துக் கன்று படப்பதைத்த தாய்போல் கவல்வாளை, நின்ற உருப்பசியும், மேனகையும் நேர்ந்துஎடுத்துக் குன்று புரையும் நெடும்கோயில் கொண்டணைந்தார். 61 61. எடுத்து அழைத்து - குரல் எடுத்துக் கூவி. கன்றுபட - கன்று இறந்து பட. கவல்வாளை - துன்புறுகின்றவளை. நேர்ந்த - முன் வந்து. குன்றுபுரை - மலையைப் போன்ற. இலங்கை நகரம் முழுவதும், ஆர்கலி போல் அழுகுரல் ஓசை நிரம்பியிருந்தது. 19. நாக பாசப் படலம் இந்திரசித்தின் செயல் குழுமிக் கொலைவாட்கண் அரக்கியர் கூந்தல் தாழ, தழுவித் தலைப்பெய்து,தம் கைகொடு மார்பின் எற்றி, அழும்இத் தொழில்யாதுகொல், என்றுஓர் அயிர்ப்பும் உற்றான், எழிலித் தனிஏறென இந்திர சித்து எழுந்தான். 1 நாக பாசப் படலம்: இந்திரசித்தன். நாகாஸ்திரத்தால் இலக்குவன் முதலியோரைப் பிணித்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. தழுவித் தலைப் பெய்து - ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு. மார்பின் எற்றி - மார்பிலே அடித்துக் கொண்டு. எழிலி தனி ஏறு என - மேகத்தின் ஒப்பற்ற இடியேற்றைப் போல. கேட்பின் இடையுற்றது என்?என்று, கிளத்தல் யாரும் மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்; ஓட்டா நெடுந்தேர் கடிதுஓட்டி இமைப்பின் உற்றான்; காட்டா தனகாட்டிய தாதையைச் சென்று கண்டான். 2 2. யாரும் கிளத்தல் மாட்டாது - யாவரும்சொல்ல முடியாமல். மாற்றம் - சொல். காட்டாதன - இதற்குமுன காட்டாத துன்பங்களை யெல்லாம். கண்டான் இறைஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி, `உண்டாயது என்இவ்வுழி’ என்றலும், `உம்பி மாரைக் கொண்டான் உயிர்காலனும்; கும்ப நிகும்ப ரோடும் விண்தான் அடைந்தான் அதிகா யனும்,வீர!’ என்றான். 3 3. இறை ஆறிய - சிறிது ஆறுதலடைந்த. `உம்பிமாரைக் காலன் உயிர் கொண்டான்.’ இந்திரசித்தின் துயரம் சொல்லாத முன்னம், சுடரைச் சுடர்தூண்டு கண்ணான், பல்லால் அதரத்தை அதுக்கி,விண் மீது பார்த்தான்; `எல்லா ரும்இறந் தனரோ?’என ஏங்கி நைந்தான், வில்லா ளரைஎண்ணின் விரற்குமுன் நிற்கும் வீரன். 4 4. சுடர் - கோபக்கனலானது. சுடரைத் தூண்டு கண்ணான் - தீப்பொறி விழும்படி செய்கின்ற கண்ணையுடையவன். அதரம் அதுக்கி - உதட்டைக் கடித்து. விரற்கு - விரல் விடுவதிலே. முன் நிற்கும் - முதல் விரலாக நிற்கும். அதிகாயனை இலக்குவன் கொன்றான் என்று அறிந்ததும் இந்திரசித்து உரைத்தல் `கொன்றார் அவரோ! கொலைசூழ் கெனநீ கொடுத்தாய்! வன்தா னையர்மானுடர் வன்மை அறிந்து மன்னா; என்றா னும்எனைச்செல ஏவலை; இற்றது என்னா நின்றான், நெடிதுன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்.’ 5 5. -. `அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்து ளானை, விக்கற் கொடுவெவ்வுரைத் தூதுவன் என்று விட்டாய்! புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்! மக்கள் துணைஅற்றனை! இற்றதுஉன் வாழ்க்கை மன்னோ!’ 6 6. விக்கல் கொடு - தடுமாற்றம் கொண்டு. வெவ்வுரைத்தூ துவன் - அவன் ஒரு விரும்புதற்குரிய வார்த்தைகளைக் கூறும் தூதுவன். புக்கு அத்தலைப்பு எய்தல் - நமது செய்திகள் யாவும் சென்று அப்பக்கம் சேர்வதைப்பற்றி. `மருந்தே நிகர்எம்பிதன் ஆருயிர் வெளவி னானை விருந்தே எனஅந்தகற்கும் ஈகிலென், வில்லும் ஏந்திப் பொருந்தே வர்குழாம்நகை செய்திடப் போந்து பாரின் இருந்தேன் எனின்,நான்அவ் இராவணி அல்லென்’ என்றான். 7 7. போந்து - தோற்றுத் திரும்பி வந்து. இராவணி - இராவணன்மகன் இந்திரசித்தன் போர்க்களம் புகுதல் தேர்ஆயிரம் ஆயிர கோடிதன் மாடு செல்லப், போர்ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போதத், தார்ஆர் புரவிக் கடல்பின் செலத்,தா னைவீரர் பேர்ஆழி முகம்செலச், சென்றனன் பேர்ச்சி யில்லான். 8 8. பேர் ஆழி முகம் செல - பெரிய கடல் முள்னே போக. பேர்ச்சி இல்லான் - கலக்கம் அற்றவன். வருவோன் யார் என்ற இலக்குவற்கு வீடணன் கூறல் `யார்இவன், வருபவன் இயம்பு வாய்;’என வீரவெம் தொழிலினான் வினவு, வீடணன் `ஆரிய! இவன்இகல் அமரர் வேந்தனைப் போர்கடந் தவன்!இன்று வலிது போர்;’என்றான். 9 9. -. அரக்கர் வானரர் கடும் போர் இருதிரைப் பெருங்கடல், இரண்டு திக்கினும் பொருதொழில் வேட்டுஎழுந்து ஆர்த்துப் பொங்கின வருவன போன்றன; மனத்தி னால்சினம் திருகின எதிர்எதிர் செல்லும் சேனையே. 10 10. சினத்தினால் மனம் திருகின - கோபத்தால் உள்ளம் மாறுபட்டனவாகி. `எதிர் எதிர் செல்லும் சேனை பொங்கின வருவன போன்றன’. கற்பட, மரம்படக், கால வேல்பட, விற்படு கணைபட வீழும் வீரர்தம் எல்படும் உடல்பட, இரண்டு சேனையும் பிற்பட நெடுநிலம் பிளந்து பேருமால். 11 11. இரண்டு சேனையும் பிற்பட - இருபக்கத்துப் படைகளும் பின்னடைந்து ஓடும்படி. `கற்பட.... பிளந்து பேரும்; ஆல்’ ஆல்; அசை. வெட்டிய தலையன நரம்பு வீசமேல் முட்டிய குருதிய, குரங்கின் மொய்உடல் சுட்டு,உயர் நெடுவனம் தொலைந்த பின்,நெடும் கட்டைகள் எரிவன போன்று காட்டுவ. 12 12. நரம்பு வீச - நரம்புகள் வீசியதனால். மேல்முட்டிய - வானத்தை முட்டிய. குருதிய - இரத்தத்தையுடைய. `உடல்..... காட்டுவ.’ இச்சமயத்தில் மாருதியைக் கண்ட இந்திரசித்தன் பேச்சு `நில்ல டா!சிறிது நில்ல டா!உனை நினைத்து வந்தனன் முனைக்குநரன்; வில்எ டாமை,நினது ஆண்மை பேசி,உயி ரோடு நின்றுவிளை யாடினாய்! கல்அ டா,நெடும ரங்க ளோ,வரு கருத்தி னேன்வலிக டப்பவோ சொல்ல டா!’என இயம்பி னான்இகல் அரக்கன்; ஐயன்,இவை சொல்லினான். 13 13. வரு கருத்தினேன் வலி - போர் செய்ய வருகின்ற கருத்துள்ள எனது வலிமையை. அடா கல் நெடு மரங்களோ கடப்பவோ - அடா! கற்களோ பெரிய மரங்களோ வெல்லக் கூடியவை? மாருதியின் மறுமொழி `வில்எ டுக்கஉரி யார்கள் வெய்ய,சில வீரர் இங்கும்உளர், மெல்லியோய்; கல்எ டுக்கஉரி யானும் நின்றனன்;அது இன்று நாளையிடை காணலாம்; எல்எ டுத்தபடை இந்தி ராதியர்,உ னக்குஇடைந்து, உயிர்கொடு ஏகுவார்; புல்எ டுத்தவர்கள் அல்லம், வேறுசில போர்எ டுத்துஎதிர் புகுந்துளோம். 14 14. அல் எடுத்த - ஒளி வீசுகின்ற. புல் எடுத்தவர்கள் அல்லம் - புல்லை வாயால் கவ்வியவர்கள் அல்லோம். `என்னொ டேபொருதி யோ?அது அன்றெனின், இலக்குவப் பெயரின், எம்பிரான் தன்னொ டேபொருதி யோ?சொல்,உந்தைதலை தள்ள நின்றதனி வள்ளலாம் மன்னொ டேபொருதி யோ?உரைத்தது மறுக்கிலோம்;’ எனவ ழங்கினான் பொன்னொ டேபொருவின் அல்லது,ஒன்றொடு பொருப்ப டாஉயர்வுபு யத்தினான். 15 15. ஒன்றொடு பொருப்படா - ஒன்றுடன் ஒப்புமையில்லாத. வழங்கினான் - கூறினான். இந்திரசித்தின் கேள்வி `எங்கு நின்றனன் இலக்கு வப்பெயர்அவ் ஏழை! எம்பிஅதி காயனாம் சிங்கம் வந்தவனை வென்று, தன்உயிர் எனக்கு வைத்ததுஓர்சி றப்பினான்; அங்க வன்தனை மலைந்து கொன்று,முனிவு ஆற வந்தனன்; அதுஅன்றியும், உங்கள் தன்மையின் அடங்கு மோ,உலகு ஒடுக்கும் வெங்கணை தொடுப்பினே.’ 16 16. தன் உயிர் எனக்கு வைத்தது - தன் உயிரை நான் கொல்லுவதற்காக வைத்திருக் கின்றவனாகிய. உங்கள் தன்மையின் - உங்களைக் கொல்லுந் தன்மையுடன். `இந்திரசித்தன் மாருதியின் மேல் அம்பெய்தான்; அங்கதன், நீலன் முதலியவர் களையும் எதிர்த்தான்; வானரசேனை நிலைகுலைந்தது. இது கண்ட இலக்குவன் போர் செய்ய முன்னின்றான். இலக்குவன் மேல் அரக்கர் படைகள் பாய்ந்தன; அவைகளை அழித்தான் அவன். இந்திரசித்து வற்றிய கடலுள் நின்ற மலைஎன, மருங்கின் யாரும் சுற்றினர் இன்றித் தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித் தெற்றின புருவத் தோன்,தன் மனம்எனச் செல்லும் தேரான் உற்றனன் இளைய கோவை; அனுமனும் உடன்வந்து உற்றான். 17 17. துள்ளித்தெற்றின புருவத்தோன் - துடித்து நெருங்கிய புருவத்தை யுடையவன். இலக்குவன் மாருதி தோளிலும், இந்திரசித்தன் தேரிலும் நின்று போர்புரிதல் அரியினம் பூண்ட தேரும், அனுமனும் அனந்த சாரி புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவ ரேயு எரிகணைப் படலம் மூட, இலர்,உளர் என்னும் தன்மை தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன திசைகள் எல்லாம். 18 18. அரியினம் - குதிரைகள். அனந்த சாரி புரிதலின் - அளவற்றுத் திரிந்ததனால். திரிந்தது - சுழன்றது. புலவரேயும் - தேவர்களும். செவிடு செல்ல - செவிடாகும்படி. எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும் மொய்கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை பெய்கணைப் பொதிக ளாலே வளர்ந்தது; பிறந்த கோபம் கைமிகக் கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர். 19 19. பெய் கணைப் பொதிகளாலே - சொரிந்த அம்புக்கு வியல்களால். கைமிக - மிகவும் அதிகமாக. ஆசை எங்கணும் அம்புக, வெம்புபோர் ஓசை விம்ம, உருத்திர ரும்உடல் கூச, ஆயிர கோடி கொலைக்கணை வீசி விண்ணை வெளியிலது ஆக்கினான். 20 20. ஆசை எங்கணும் - திசைகளில் எல்லாம். அம்பு உக - கணைகள்சிந்த. விம்ம - அதிகப்பட. அத்தி றத்தினில், அனகனும் ஆயிரம் பத்தி பத்தியின் எய்குவ பல்கணை சித்தி ரத்தினில் சிந்தி, இராவணன் புத்தி ரற்கும்ஓர் ஆயிரம் போக்கினான். 21 21. அனகனும் - இலக்குவனும். பத்தி பத்தியின் - வரிசை வரிசையாக. தெரிகணை மாரி பெய்யத், தேர்களும், சினைக்கை மாவும், பரிகளும், தாமும் அன்று பட்டன கிடக்கக் கண்டார்; இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேரார் ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார். 22 22. தெரிகணை மாரி பெய்ய - தெரிந்தெடுத்த அம்புகளை மழைபோலச் சொரிய. சினைக் கை மாவும் - பெரிய கையையுடைய யானையும். வெம்கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார்; செங்குழல் கற்றை சோரத் தெரிவையர் எதிர்ப்பத், தெய்வப் பொங்குபூம் பள்ளி புக்கார், அவர்உடல், பொருந்தப் புல்லி, அங்கு அவர் ஆவியோடும், தம்உயிர் போக்கி அற்றார். 23 23. பொங்கு பூம் தெய்வப் பள்ளி - சிறந்த மெல்லிய தெய்வலோகத்தை. அவர் உடல் - அக்கணவன்மார்களின் உடம்புகளை. அங்கு - அப்பொழுது. தம் உயிர் - மனைவிமார்கள் தங்கள் உயிரையும். பொறிக்கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் மறிக்கொளும் சிறுவர் தம்மை, மற்றுள சுற்றத் தோரைக், குறிக்கொளும் என்று கூறி, அவர்முகம் குழைய நோக்கி, நெறிக்கொளும் கூற்றை நோக்கி, ஆருயிர் ஒறுத்து நீத்தார். 24 24. பொறிக்கொடும் பகழி மார்பர் - தீப் பொறிகளைச் சிந்தும் கொடிய அம்பு தைத்த மார்பையுடையவர்கள். மறிக் கொளும் சிறுவர் தம்மை - தம்மை மதிக்கும் குழந்தைகளை. சுற்றத்தோரை - சுற்றத்தினரைப் பார்த்து. இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் கடும்போர் நடந்தது. இந்திரசித்துச் சிறிது சோர்வடைந்தான். அப்பொழுது இந்தி ரசித்தின் தேர்க்காவலர்கள், தேர்மீது வந்து, மாருதியின் மேலும் இலக்குவன் மேலும் கணைகளைச் சிந்தினர். இலக்குவன் அவர்கள் தேரை அழித்தான். அவர்கள் வயிரத் தண்டைத் தாங்கிப் போர் புரிந்தனர். அத்தண்டுகளை மாருதி பறித்துக் கொண்டான். தண்டுஅவன் கையது ஆன தன்மையைத், தறுக ணாளர் கண்டனர்; கண்டு, செய்யல் ஆவது ஒன்றும் காணார்; `கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும்’என்று அச்சம் கொண்டார்; உண்டசெஞ் சோறு நோக்கார் உயிருக்கே உதவி செய்தார். 25 25. தண்டு - தண்டாயுதம். செம்சோறு நோக்கார் - நல்ல சோற்றைப் பற்றி நினையாதவராய். கதிரவன் மறையும் வேளை வந்தது. `இன்னும் கால் நாழிகையில் கொன்றால் ஆயிற்று; இன்றேல் அரக்கர் பலம் பெறுவர்’ என்றான் வீடணன். உடனே இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்தான். இந்திரசித்தன், நாகக் கணையை விடுக்க நினைத்து வானத்தில் மறைந்தான். இந்திரசித்தன் அணு உருக் கொள்ளுதல் தணிவறப் பண்டு செய்த தவத்தினும், தருமத் தானும், பிணிஅறுப் பவரின் பெற்ற வரத்தினும், பிறப்பி னானும், மணிநிறத்து அரக்கன் செய்த மாயமந் திரத்தி னானும், அணுஎனச் சிறியது ஆங்கோர் ஆக்கையும் உடையான் ஆனான். 26 26. பிணி அறுப்பவரின் - பிறவிப் பிணியை நீக்குகின்ற கடவுளர் மூலம். மணி நிறத்து - நீலமணி போன்ற நிறத்தை யுடைய. இந்திரசித்தின் மறைவு கண்டு மகிழ்ச்சி ஆயின காலத்து ஆர்த்தார், அமர்த்தொழில் அஞ்சி அப்பால் போயினன் என்பது உன்னி, வானர வீரர் போல்வார்; நாயற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான்; மாயையைத் தெரிய உன்னார், போர்த்தொழில் மாற்றி நின்றார். 27 27. மாயையைத் தெரிய உன்னார் - இந்திரசித்தின் வஞ்சகச் செயல்களைத் தெரிந்து கொள்ள நினைக்காதவர்களாய். அதுகணத்து அனுமன் தோள்நின்று ஐயனும் இழிந்து, வெய்ய கதுவலிச் சிலையை, வென்றி அங்கதன் கையது ஆக்கி, முதுகுஉறச் சென்று நின்ற கணையெலாம் முறையின் வாங்கி, விதுவிதுப்பு ஆற்றல் உற்றான், விளைகின்றது உணர்ந்தி லாதான். 28 28. வெய்ய கது வலிச் சிலையை - கொடுமை பொருந்திய வலிமையுள்ள வில்லை. முதுகு உறச் சென்று நின்ற - முதுகில் மிகுதியாகத் தைத்திருந்த. விது விதுப்பு - இளைப்பை. அரவக் கணையால் நேர்ந்த அவதி விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்த லோடும் எட்டினோடு இரண்டு திக்கும் இருள்திரிந்து இரிய ஓடிக், கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை தட்டவான் வயிரத் திண்தோள் மலைகளை உளைய வாங்கி. 29 29. இருள் திரிந்து இரிய - இருட்டு மறைந்தோட. தட்ட வான் - அகன்ற பெரிய. உளைய - வருந்தும்படி. வாங்கி - இழுத்து. இறுகுறப் பிணித்த லோடும் யாவையும் எதிர்ந்த போதும் மறுகுறக் கடவான் அல்லன்; மாயம்என்று உணர்வான் அல்லன்; உறுகுறைத் துன்பம் இல்லான் ஒடுங்கினன்; செய்வது ஓரான்; அறுகுறைக் களத்தை நோக்கும்; அந்தரம் அதனை நோக்கும். 30 30. மறுகு உறக் கடவான் அல்லன் - கலக்கம் அடையத் தக்கவன் அல்லன். உறுகுறை துன்பம் - உள்ளத்தில் பொருந்திய குறையாகிய துன்பம். அறு குறை களத்தை - தலை அற்ற கவந்தங்கள் ஆடும் போர்க்களத்தை. அனுமான் நிலைமை கால்உடைச் சிறுவன் `மாயக் கள்வனைக், கணத்தின் காலை, மேல்விசைத்து எழுந்து நாடிப், பிடிப்பென்’என்று உறுக்கும் வேலை, ஏல்புடைப் பாசம், மேல்நாள், இராவணன் புயத்தை வாலி வால்பிணித்து என்னச் சுற்றிப் பிணித்தது வயிரத் தாளை. 31 31. கால் உடைச்சிறுவன் - வாயுபுத்திரனாகிய அனுமான். உறுக்கும் வேலை - கோபிக்கும் சமயத்தில். ஏல்பு உடை பாசம் - துன்புறுத்தும் இயல்யுள்ள நாக பாசமானது. மற்றையோர் தமையும் எல்லாம், வாள்எயிற்று அரவம் வந்து சுற்றின வயிரத் தூணின்; மலையினில் பெரிய தோள்கள் இற்றன; இற்ற வென்ன இறுக்கின; இளகா உள்ளம் தெற்றென உடைய வீரர், இருந்தனர் செய்வது ஓரார். 32 32. இளகா உள்ளம் தெற்றென உடையவீரர் - தளராத உள்ளத்தைத் தெளிவாகக் கொண்ட வீரர்கள். செய்வது ஒரார் இருந்தனர் - இன்னது செய்வது என்று அறியாமல் இருந்தனர். `ஆர்இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல், மாருதி, பிழைத்தான் கொல்லோ’ என்றனர்; மறுகி நோக்கி வீரனைக் கண்டு, `பட்டது இதுகொல்ஆம்’ என்று விம்மி, `வார்கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல்?’ என்பார். 33 33. -. இலக்குவன் நிலைமை வெப்பாரும் பாசம் வீக்கி, வெம்கணை வளைக்கும் மெய்யன், ஒப்பாரும் இல்லான் தம்பி, உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான், `இப்பாசம் மாய்க்கும் மாயம் யான்வல்லென்’ என்பது ஓர்ந்தும், அப்பாசம் வீச, ஆற்றாது அழிந்தநல் அறிவு போன்றான். 34 34. வெப்பு ஆரும் - கொடுமை பொருந்திய. பாசம் வீக்கி - நாகபாசத்தால் கட்டுப்பட்டு. உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் - அப்பாசத்தை அகற்றும் வழியை உணர்ந்திருந்தும் துன்பம் அனுபவித்தான். இப்பாசம் - இந்த உலக பாசத்தை. வீச ஆற்றாது - களைந்தெறிய முடியாமல். அழிந்த - வருந்திய. இந்திரசித்தன் களிப்புடன் ஏகல் மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான்; அரக்கன் மைந்தன் தயங்குபேர் ஆற்ற லானும் தன்உடல் தைத்த வாளிக்கு உயங்கினான்; உளைந்தான்; வாயால் உதிரநீர் உமிழா நின்றான். 35 35. மண்ணை முயங்கினார் - மண்ணிலே வீழ்ந்து கிடந்தனர். மேனி எல்லாம் - உடம்புகளை எல்லாம். மூடினான் - அம்பு களால் மறைத்தான். தயங்கு பேர் ஆற்றலானும் - விளங்குகின்ற பேராற்றல் உடையவனும். உயங்கினான் - தளர்ந்தான். `சொற்றது முடித்தேன், நாளை என்உடல் சோர்வை நீக்கி, மற்றது முடிப்பென்;’ என்னா எண்ணினன்; `மனிதன் வாழ்க்கை இற்றது; குரங்கின் தானை இறந்தது;’என்று, இரண்டு பாலும் கொற்றமங் கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான். 36 36. கொற்ற மங்கலங்கள் - வெற்றியைக் குறிக்கும் மங்கல முழக்கங்கள். இலக்குவன் நிலைகண்டு வீடணன் புலம்பல் பாசத்தால், ஐயன் தம்பி, பிணிப்புண்ட படியைக் கண்டு, `நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான்ஒரு தமியென் நின்றேன்; தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார்?’ என்று நையும், வாசத்தார் மாலை மார்பன் வாய்திறந்து அரற்றல் உற்றான். 37 37. -. `கொல்வித்தான், உடனே நின்றங்கு என்பரோ? கொண்டு போனான் வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ? விளைவிற்கு எல்லாம் நல்வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ? நயந்தோர் தத்தம் கல்வித்தாம் வார்த்தை, என்று, கரைவித்தான் உயிரைக் கண்போல். 38 38. விளைவிற்கு எல்லாம் - நடந்தவைகளுக்கெல்லாம். நல்வித்தாய் - நல்ல விதையாக; காரணமாக. கல்வித்தாம் வார்த்தை - கல்வி பொருந்திய சொல். `போர்அவன் புரிந்த போதே, பொருஅறு வயிரத் தண்டால், தேரொடும் புரண்டு வீழச் சிந்தி,என் சிந்தை செப்பும் வீரம்முன் தெரிந்தேன் அல்லேன்; விளிந்திலேன்; மெலிந்தேன்; இஞ்ஞான்று ஆர்உறவு ஆகத் தக்கேன்! அளியத்தேன்! அழுந்து கின்றேன்!’ 39 39. வீரம் முன் தெரித்தேன் அல்லேன் - வீரத்தை முன்பே காட்டினவன் அல்லேன். அளியத்தேன் அழுந்துகின்றேன் - இரங்கற்கு உரியேன் துன்பத்துள் ஆழ்கின்றேன். அனலன் வீடணனைத் தேற்ற, அவன் இராமனிடம் சென்று நடந்ததை நவில, இராமன் வந்து இலக்குவன்மேல் வீழ்ந்து புலம்புதல் தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்; தூமலர்க் கண்ணை நோக்கும்; மார்பிடைத் துடிப்புஉண்டு என்னா ஏம்உறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்தன் மார்பின் ஏற்றும்; பூமியின் வளர்த்தும்; `கள்வன் போய்அகன் றானோ?’ என்னும். 40 40. குறங்கைத் தட்டும் - துடையைத் தட்டுவான். ஏம் உறும் - மகிழ்ச்சி அடைவான். வளர்த்தும் - படுக்க வைப்பான். வில்வினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயா அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; `பாரைக் கல்லுவென் வேரொடு’ என்னும்; பவளவாய் கறிக்கும்; கற்றோர் சொல்லினை நோக்கும்; தன்கைப் பகழியை நோக்கும் தோளான். 41 41. வீக்கினை - கட்டினை. வீயா - விடியாத. கறிக்கும் - கடிப்பான். இராமன் வீடணனைப் பார்த்துப் பேசுதல் எடுத்தபோர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு அடுத்தது,என்று என்னை வல்லை அழைத்திலை; அரவின் பாசம் தொடுத்தகை சரத்தி னோடும் துணித்துஉயிர் குடிக்க; என்னைக் கெடுததனை வீட ணாநீ!’ என்றனன் கேடி லாதான். 42 42. வல்லை அழைத்திலை - விரைவில் அழைக்காமற் போனாய். கை - கையை. துணித்து - துண்டித்து. அவ்வுரை அருளக் கேட்டாங்கு அழுகின்ற அரக்கன் தம்பி, `இவ்வழி அவன்வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்த போதும் வெவ்வழி யவனே தோற்கும், என்பது விரும்பி நின்றேன்; தெய்வவன் பாசம் செய்த செயல்,இந்த மாயச் செய்கை.’ 43 43. ஏற்பது - போர் ஏற்பதை. வெவ்வழி அவனே - தீ நெறியை உடைய அவ்விந்திர சித்தனே. `பின்னரும் வணங்கி ஏதும் பிழைத்திலம் பெரும! யாரும் இன்உயிர் துறந்தார் அல்லர்; இறுக்கிய பாசம் இற்றால் புல்நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்? இன்னல்உற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம்!’ என்றான். 44 44. புல் நுனைப்பகழிக்கு - மெல்லிய முனையையுடைய அம்புக்கு. ஓயும்தரத்தரோ - சோர்வடையும் தன்மையுள்ள வரோ. இராமன் சினமொழிகள் `வரம்கொடுத்து, இனைய பாசம் வழங்கினான் தானே நேர்வந்து இரங்கிடத் தக்கது உண்டேல் இகழ்கிலென்; இல்லை என்னின் உரம்கெடுத்து, உலகம் மூன்றும் ஒருவன்ஓர் அம்பின் சுட்ட புரங்களின் தீய்த்துக் காண்பென் பொடி,ஒரு கடிகைப் போழ்தின்.’ 45 45. இரங்கிடத் தக்கது உண்டேல் - மனம் இரங்கி நன்மை செய்வதானால். இகழ்கிலன் - அதை வெறுக்க மாட்டேன். உலகம் மூன்றும் உரம் கொடுத்து - மூன்றுலகங்களின் வலிமையையும் அழித்து. தீத்து - எரித்து, `ஒருகடிகைப் போதின் பொடி காண்பேன்’. `எம்பியே இறக்கும் என்னின், எனக்குஇனி, இலங்கை வேந்தன் தம்பியே! புகழ்தான் என்னை, பழியென்னை அறந்தான் என்னை? நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே. உம்பரும் உலகத் துள்ள உயிர்களும் உதவி பார்த்தால்.’ 46 46. உதவி பார்த்தால் - உதவியை எண்ணிப் பார்த்தால். `உம்பரும், உலகத்துள்ள உயிர்களும் நம்பியே என்னைச் சேர்ந்த’ நண்பரின் - வானர வீரர்களைவிட. நல்ல ஆமே - நல்லவை யாகுமோ? என்றுகொண்டு இயம்பி, `ஈண்டுஇங்கு ஒருவன்,ஓர் இடுக்கண் செய்ய வென்றுஇவண் உலகை மாய்த்தல் விதிஅன்றால்’ என்று விம்மி, நின்றுநின்று உன்னி உன்னி நெடிது,உயிர்த்து அலக்கண் உற்றான்; தன்துணைத் தம்பி தன்மேல், துணைவர்மேல் தாழ்ந்த அன்பான். 47 47. அன்பான் - அன்புள்ள இராமன். அரும் உலகை வென்று மாய்த்தல் - அரிய உலகை யெல்லாம் வென்று அழிப்பது. விதி அன்று ஆல் - முறையன்று. ஆல்; அசை. மீட்டும்வந்து, இளைய வீரன் வெற்பன்ன விசயத் தோளைப் பூட்டுறு பாசம் தன்னைப்; பன்முறை புரிந்து நோக்கி, வீட்டியது என்னில் பின்னை வீவன்என்று எண்ணும், வேதத் தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக்கைமால் யானை அன்னான். 48 48. வீட்டியது என்னின் - வீழ்த்தியது ஆனால். வீவன் - இறப்பnன். வேதத் தோட்டியான் - வேதமாகிய அங்குசத்தின். தொடக்கில் - தொடர்பில். இது கண்டு என்ன ஆகுமோ என்று தேவர்கள் அஞ்சியபோது கலுழன் புறப்பட்டு வந்தான் அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல்ஆசை எங்கும் அழியா வில்லைச் செலுத்தி நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர, எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி இடைநின்ற மேரு எனும்அத் தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர. 49 49. அல்லை - இருட்டை. அகல் ஆசை - பரந்த திசைகள். வில்லை. ஒளியை. எல்லைக் குயிற்றி எரிகின்ற - பகலைச் செய்து பிரகாசிக்கின்ற. பொருப்பின் மிசையே - மலையின் மேல். சுடரோனின் - சூரியனைக் காட்டிலும். மும்மை சுடர - மூன்று மடங்கு ஒளி வீச. பன்னா கர்சென்னி மணி,கோடி கோடி பலகொண்டு செய்த வகையால், மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர்பூண், வயங்க வெயில்கால் பொன்னால் இயன்ற நகைஓடை பொங்க; வனமலை மார்பு புரளத்; தொன்னாள் பிரிந்த துயர்தீர, அண்ணல் திருமேனி கண்டு தொழுவான். 50 50. பன்னாகர் சென்னி - நாகர்களின் தலையில் உள்ள. மின்னால் இயன்றது - மின்னலால் செய்யப்பட்டது. மிளிர்பூண் - பிரகாசிக்கும் ஆபரணங்களும். நகை ஓடை பொங்க - நகையாகிய நெற்றிப்பட்டயம் விளங்க. வனமாலை - துளசி மாலை. தொழுவான் - தொழும் பொருட்டு. வந்தாய், `மறைந்து பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன்தன் முதலோர் தம்தாதை தாதை இறைவா, பிறந்து விளையாடு கின்ற தனியோய்! சிந்தா குலங்கள் களைவாய்! தளர்ந்து துயர்கூரல் என்ன செயலோ? எந்தாய் வருந்தல்! உடையாய் வருந்தல்!’ எனஇன்ன பன்னி மொழிவான். 51 51. மறைந்து வந்தாய் - தன் வடிவம் மறைந்து பிறந்து வந்தாய். பிரிவால் வருந்தும் - இலக்குவன் பிரிவினால் வருந்துகின்ற. கலுழன் வாழ்த்து `தேவாதி தேவா பலரா லும்முந்து திருநாமம் ஓது செயலோய்! மூவாதுஎந் நாளும் உலகுஏ ழொடுஏழும் அரசாளும் மேன்மை முதல்வா! மேவாத இன்பம் அவைமேவி,மேவ நெடுவீடு காட்டுஅம் முடியாய்! ஆஆ வருந்தி அழிவாய் கொல்ஆர்இவ் அதிரேக மாயை அறிவார்?’ 52 52. முந்து - சிறந்த பழமையான. மூவாது எந்நாளும் - அழியாமல் எந்நாளும். மேவாத இன்பம் அவைமேவி - அடைய முடியாத இன்பங்களை அடைந்து. மேவ - உன்னை அடையும் படி. அதிரேகமாயை - பெரிய மாயையை. `தான்அந் தம்இல்லை, பலவென் னும்ஒன்று; தனிஎன்னும் ஒன்று; தவிரா ஞானம் தொடர்ந்த சுடர்என் னும்ஒன்று; நயனம் தொடர்ந்த ஒளியால் வானம் தொடர்ந்த பதம்என் னும்;ஒன்று மறைநாலும் அந்தம் அறியாது ஆனந் தம்என்னும்; அயல்என் னும்;ஆர்இவ் அதிரேக மாயை அறிவார்?’ 53 53. தவிரா ஞானம் - நீங்காத அறிவால். நயனம் தொடர்ந்து ஒளியால் - கண் ஒளியால். வானம் தொடர்ந்த - வானத்திலே அமைந்த. அதிரேகமாயை - மகாமாயை. `சொல்ஒன்று உரைத்தி, பொருள்ஆதி, தூய மறையும் துறந்து திரிவாய் வில்ஒன்று எடுத்தி, சரம்ஒன்று எடுத்தி மிளிர்சங்கம் அங்கை உடையாய்! கொல்என்று உரைத்தி, கொலையுண்டு நிற்றி! கொடியாய்உன் மாயை அறியேன்! அல்என்று நிற்றி, பகல்ஆதி, யார்இவ் அதிரேக மாயை அறிவார்?’ 54 54. சொல் ஒன்று உரைத்தி - சொல்லாகிய ஓர் உருவுள்ளவன் என்று சொல்லப்படுவாய். மறையும் துறந்து - வேதங்களையும் நீக்கி. கொல் என்று உரைத்தி - அரக்கரைக் கொல் என்று சொல்லுகின்றாய். கொலை உண்டு நிற்றி - அரக்கர் வடிவாகிக் கொல்லப்பட்டும் நிற்கின்றாய். அதிரேகமாயை - பெருமாயை. மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி, மயலாரும் யானும் அறியேம்; துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒருதன்மை சொல்ல அரியாய்! பிறந்தாயும் ஒத்தி; பிறவாயும் ஒத்தி; பிறவாமல் நல்கு பெரியோய்! அறந்தான் நிறுத்தல் அரிதாக ஆர்இவ் அதிரேக மாயை அறிவார்?’ 55 55. மயல் - உன்னுடைய மாயத்தை. ஆரும் - மற்றவர்களும், ஒருதன்மை சொல்ல - இன்ன தன்மையுள்ளவன் என்று சொல்ல. அறியாய் - முடியாதவனே. என்றின்ன பன்னி அழிவான் எறிந்த எரிசோதி கீற, இருள்போய்ப் பொன்துன்னி அன்ன வெயில்வீசு கின்ற பொருள்கண்டு நின்ற புகழோன் நின்றுன்னி உன்னி, இவன்யாவன் என்று, நினைகின்ற எல்லை நிமிரச் சென்றுன்னும் முன்னர் உடன்ஆ யினான்,இவ் உலகேழும் மூடு சிறையான். 56 56. அழிவான் - வருந்துகின்றவனாகிய கலுழன். எறிந்த - வீசிய. எரிசோதி - மிகுந்த ஓளி. கீற இருள்போய் - கிழித்ததனால் இருள் கெட்டு. பொன் துன்னி அன்ன - பொன்னைச் சேர்ந்தது போன்ற. என்று நினைக்கின்ற எல்லை - என்று நினைக்கும் போது. சிறையான் - சிறகையுடைய கலுழன். நிமிரச் சென்று - நேரேபோய். நாகபாசம் ஒழிந்து வானரர் எழுந்தனர் வாசம் கலந்த மரைநாள நூலின் வகையென்பது என்னை, மழைஎன்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல், சரராமன் வெண்ணெய் அணுகும், தேசம் கலந்த மறைவாணர், செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம். 57 57. ஆசங்கை - சந்தேகம். கொடை மீளி - கொடையிலே வல்லவனாகிய. சரராமன் - சரராமன் என்பவனுடைய. வெண்ணெய் அணுகும் - வெண்ணெய் நல்லூரை அடைகின்ற. தேசம் கலந்த - தேசத்தோடு ஒன்றுபட்ட. பாசம் கலந்த - உறவினர்களைச் சேர்ந்த. பதகன் துரந்த உரகம் - பாதகன் விட்ட நாகபாசம். மரை நாள நூலின் - தாமரைத் தண்டிலே உள்ள நூலின். வகை என்பது என்னை - வகையைப் போலமென்மை யான தன்மையை அடைந்தது என்று சொல்வதிலே பெருமைதான் என்ன? தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால், உரும்ஒத்த வெம்கண் வினைதீய வஞ்சர் உடல்உய்ந் ததுஇல்லை; உலகின் கருமத்தின் நின்ற கவிசேனை வெள்ளம், மலர்மேல் அவ்அண்ணல் கடைநாள் நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலைநின்ற தெய்வ நெறியால். 58 58. தருமத்தின் ஒன்றும் ஒழுகாத - தருமத்திலே ஒன்றையும் பின் பற்றி நடக்காத. தகையால் - தன்மையால். வஞ்சர் - அரக்கர் களின். உலகின் கருமத்தின் நின்ற - உலகின் நன்மைக்கான செயல்களிலே ஈடுபட்டிருந்த. இளையான் எழுதல் இளையான் எழுந்து தொழுவானை, அன்பின் இணையார மார்பின் அணையா, விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளிவந்தது என்ன வியவாக், கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா எழுந்து தழுவா, முளையாத திங்கள் உகிரான் முன்வந்து முறைநின்ற வீரன் மொழிவான். 59 59. ஆரம் இணை - மாலை பொருந்திய. அணையா - அணைத்து. வியவா - வியந்து. கிளையார்கள் அன்ன துணை யோரை - உறவினர்களைப் போன்ற இத்துணைவர்களை. ஆவி கெழுவா எழுந்து தழுவா - உயிரைத் தழுவிக் கொள்ளுவது போல எழுந்து தழுவிக் கொண்டு. உகிரான் முன் - நகத்தையுடைய கலுழன் முன். வீரன் - இராமன். இராமன் கலுழனை `நீ யார்’ என்று கேட்டுப் புகழ்தல் `அய்யநீ யாரை? எங்கள் அருந்தவப் பயத்தின் வந்து எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்ம னோரால் கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி செய்திறம் இலையால்!’ என்றான், தேவர்க்கும் தெரிக்கொ ணாதான். 60 60. தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் - தேவர்களாலும் விளக்கிக் காட்ட முடியாதவனாகிய இராமன். கையுறை - காணிக்கை. கோடற்கு - ஏற்றுக் கொள்ளுவதற்கு. மீட்சி செய்திறம் - எதிர் உதவி செய்யுந்தன்மை. `கண்டிலை முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன்ஒன்று எம்பால் கொண்டிலை; கொடுப்பது அல்லால் குறைஇலை இதுநின் கொள்கை; உண்டு,இலை, என்ன நின்ற உயிர்தந்த உதவி யோனே; பண்டுஇலை நண்பு; நாங்கள் செய்வதுஎன்? பகர்தி!’ என்றான். 61 61. `முன்பு கண்டிலை’ எம்பால் கடன் ஒன்று கொண்டு இலை’ கடன் - உதவி. கலுழன் இராமனை விட்டு நீங்குதல் `பறவையின் குலங்கள் காக்கும் பாலகன், பழைய நின்னோடு உறவுள தன்மை யெல்லாம் உணர்த்துவென், அரக்க னோடுஅம் மறவினை முடித்த பின்னர் வருவென்’என்று உணர்த்தி, `மாயப் பிறவியின் பகைஞ! நல்குவிடை!’எனப் பெயர்ந்து போனான். 62 62. பாலகன் - காவலன். மறவினை - வீரச் செயல். ஆரியன் அவனை நோக்கி, `ஆர்உயிர் உதவி, யாதும் காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடன்மை ஈதால்; பேர்இய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்?’ என்றான். 63 63. ஆரியன் அவனை நோக்கி - இராமன் அக்கலுழனுடைய செயலைப் பார்த்து. கடன்மை - தன்மை. பேர் இலாளர் - பெருந்தன்மையுள்ளவர்கள். ஆரவாரம் புரிய வேண்டுமென அனுமன் கூறுதல் `இறந்தனன் இளவல்’ என்னா இறைவியும் இடுக்கண் எய்தும்; மறந்தனர் உறங்கு கின்ற வஞ்சரும் மறுகி, மீளப் பிறந்தனர் என்று கொண்டு,ஓர் பெரும்பயம் பிடிப்பர் அன்றே; அறம்தரு சிந்தை அன்ப! ஆர்த்தும்என்று அனுமன் சொன்னான். 64 64. இடுக்கண் - துன்பம். மறுகி - மனங்கலங்கி. ஆர்த்தும் - ஆரவாரம் செய்வோம். அவ்வாறே அனைவரும் அண்டம் நடுங்க ஆரவாரம் புரிய அதனை இராவணன் கேட்டல் பழிப்பறு மேனி யாள்பால், சிந்தனை படரக், கண்கள் விழிப்பிலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும் குழிப்பரிது ஆய மார்பை, மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்தவாள் அரக்கன் கேட்டான். 65 65. பழிப்பு அறு மேனியாள் - குற்றமற்ற உடலுள்ள சீதை. படா - செல்ல. சால - மிகவும். குழிப்பரிது ஆய - புண்படுத்த முடியாத. கொற்ற வாளி - வெற்றி பொருந்திய அம்பு. சிங்கஏறு அசனி ஏறு கேட்டலும், சீற்றச் சேனை பொங்கியது என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, `போரில் மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது’ என்னா அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல்தோள் குலுங்க நக்கான். 66 66. சிங்க ஏறு - ஆண்சிங்கம் போன்ற இராவணன். அசனியேறு கேட்டதும் – இடி யேற்றைப் போன்ற ஆரவாரத்தைக் கேட்டதும். வலியது - வலிமை பொருந்தியதுதான். இராவணன் இந்திரசித்தன் மாளியை அடைதல் என்பது சொல்லிப் பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன் ஒன்பது கோடி வாட்கை அரக்கர்வந்து உழையின் சுற்றப், பொன்பொதி விளக்கம் கோடி பூங்குழை மகளிர் ஏந்தத் தன்பெரும் கோயில் நின்றும் மகன்தனிக் கோயில் சார்ந்தான். 67 67. உழையர் சுற்ற - பக்கத்தினராய் சூழ. பொன் பொதி - பொன் போல் நிறைந்த. விளக்கம் - விளக்குகள். மகன் - இந்திர சித்தன்; அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம் பொருக்கெனச் சென்று புக்கான்; புண்ணின்நீர் குமிழி பொங்கத் தரிக்கிலன், மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன கருக்கிளர் மேகம் அன்ன, களிறுஅனை யானைக் கண்டான். 68 68. ஆடகம் - பொன். புண்ணின் - புண்ணிலிருந்து வடிகின்ற இரத்தம். நீர்க்குமிழி பொங்க - நீர்க்குமிழியைப் போல் மிகுந்து வர. மடங்கல் ஏற்றால் - ஆண் சிங்கத்தால். இந்திரசித்தன் நிலைமை எழுந்தடி வணங்கல் ஆற்றான், இருகையும் அரிதின் ஏற்றித், தொழும்தொழி லானை நோக்கித், துணுக்குற்ற மனத்தன் `தோன்றல் அழுங்கினை வந்தது? என்னை அடுத்தது?’என்று எடுத்துக் கேட்டான் புழுங்கிய புண்ணி னானும் இனையன புகறல் உற்றான். 69 69. அரிதின் ஏற்றி - கஷ்டத்துடன் தலையின்மேல் வைத்து. என்று எடுத்து - என்று பலதடவை. இளையோன் வீரத்தை இந்திரசித்தன் புகழ்தல் `இந்திரன், விடையின் பாகன் எறுழ்வலிக் கலுழன் ஏறும் சுந்தரன், அருக்கன், என்றுஇத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில் நொந்திலென்; இனையது ஒன்று நுவன்றிலென்; மனிதன் நோன்மை மந்தரம் அனைய தோளாய், வரம்புஉடைத் தன்று மன்னோ!’ 70 70. எறுழ் வலி - மிகுந்த வலிமையுள்ள. மனிதன் நோன்மை - மனிதனுடைய வலிமை. `இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணில், தளைஅவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று அன்றால்; விளைவுகண்டு உணர்தல் அல்லால்! வென்றிமேல் விளையும் என்பது உளைவுதீர்ந்து அன்றோ?’ என்றான், உற்றுளது உணர்ந்தி லாதான். 71 71. உற்றுளது - போர்க்களத்தில் நிகழ்ந்துள்ளதை. உணர்ந்திலாதான் – அறியாத வனாகிய இந்திரசித்து. நம்வயின் - நம்மிடம். தங்கிற்று அன்று - கட்டுப்பட்டது அன்று. `நான் மாயையாலும் நாகபாசத்தாலுமே அவர்களை வென்றேன். இலக்குவன் மடிந்தான்; வானரர்கள் மாண்டனர்; இராமன் ஒருவனே மீதம்;’ என்றான் இந்திரசித்தன்; உடனே `இலக்குவன் வில்லோசையும், வானரங்களின் ஆரவாரமும் கேட்டிலையோ?’ என்றான் இராவணன். இந்திரசித்தன் வியப்புரை `அய்ய!வெம் பாசந் தன்னால் ஆர்ப்புண்டார், அசனி என்னப் பெய்யும்வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார், உணர்வு பேர்ந்தார் உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ; ஒழிக்க ஒன்றோ! `செல்வம்’என்று எண்ணின், தெய்வச் செயல்ஒன்றாம் தெரியின்.’ என்றான். 72 72. உணர்வு பேர்ந்தார் - உணர்வு மீண்டார். உய்யுநர் - பிழைத்தார். ஒழிக்க ஒன்றோ - வேறு ஒன்றோ. செய்வம் என்று எண்ணின் - நாம் ஒன்றைச் செய்வோம் என்று நினைத்தால். தெரியின் - ஆராய்ந்தால். இச்சமயத்திலே தூதர் வந்தனர்; போர்க்களத்திலே நிகழ்ந்ததைக் கூறினர். இராவணன் கலுழன் மேல் கடுஞ்சினம் உற்றான். இந்திரசித்தை நோக்கி `நீயே அவர்களைச் சென்று அழித்து வருக’ என்றான். இந்திரசித்தன் மீண்டும போர் புரிய உடன்படல் `இன்றுஒரு பொழுது தாழ்த்து,என் இகல்பெரும் சிரமம் நீக்கிச்; சென்றுஒரு கணத்தின், நாளை நான்முகன் படைத்த தெய்வ வென்றிவெம் படையி னால்,உன் மனத்துயர் மீட்பென்.’ என்றான்; `நன்று’என அரக்கன் போய்த்தன் நளிமணிக் கோயில் புக்கான். 73 73. என் இகல் பெரும் - என்னைத் துன்புறுத்தும் பெரிய. நளி மலர் - குளிர்ந்த மலர் போன்ற. 20. படைத் தலைவர் வதைப் படலம் ஆர்த்தெழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்பப் போர்த்தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர் புகுந்து மொய்த்தார்; தார்த்தட மார்பன் தன்னைத், `தாவிடை’ என்னச் சார்ந்தார்; பார்த்தனன் அரக்கர் கோனும் `போம்’எனப் பகரும் காலை. 1 படைத் தலைவர் வதைப் படலம்: இராவணனுடைய சேனைத் தலைவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. ஆர்த்து எழும் - ஆரவாரித்து எழுந்த. பொங்கினர் - கோபம் மிகுந்தவராய். தார்த்தட மார்பன் - மாலையை அணிந்த அகன்ற மார்பையுடைய இராவணனை. மாபெரும் பக்க னோடு, வான்புகைக் கண்ணன் வந்துஇங்கு ஏவுதி எம்மை என்பார், அவர்முகம் இனிதின் நோக்கிப், `போவது புரிதிர்;’ என்னப் புகறலும், பொறாத தூதர் `தேவமற்று இவர்கள் செய்கை கேள்’எனத் தெரியச் சொன்னார். 2 2. -. இவர்கள் தோற்று வந்தவர்கள் என்று தூதர்கள் உரைத்தல் ஆனையும், பரியும்,தேரும், அரக்கரும், அமைந்த ஆழித் தானைகள் வீய,நின்ற தலைமகன் தனிமை ஓரார், `மானவன் வாளி வாளி’ என்கின்ற மழலை வாயார் போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்.’ என்றார். 3 3. தனிமை ஓரார் - தனிமையை நினைக்காதவர்களாய். மானவன் – இலக்குவ னுடைய. மழலை வாயார் - குளறும் சொல்லையுடையவராய். போனவர் - ஓடிப் போன வர்கள். சேனைகள் மேல் இராவணன் சீற்றம் அற்றுஅவர் கூறலும், ஆர்அழ லிற்றாய் முற்றிய கோபம் முருங்க, முனிந்தான்; இற்று,இது வோ,இவர் சேவகம்? என்னாப், `பற்றுமின்’ என்றனன், வெம்மை பயின்றான். 4 4. அற்று - அவ்வாறு. ஆர் அழலிற்றாய் - நிறைந்த நெருப்பின் தன்மையாய். முருங்க - உள்ளத்திலே பொருந்த. `ஏற்றம் இனிச்செயல் வேறுஇலை, ஈர்மின் நாற்றம் நுகர்ந்துஉயர் நாசியை; நாமக் கோல்தரு திண்பணை கொட்டினிர் கொண்டு,ஊர் சாற்றுமின்! `அஞ்சினர்’ என்றுரை தந்தே.’ 5 5. ஏற்றம் - தகுந்ததாக. ஈர்மின் - அறுப்பீர்கள். கோல்தரு - கோலைக் கொண்டு. நாமம் திண்பணை - அச்சம் தரும் வலிய பறையை. அக்கண மே,அயில் வாளினர் நேரா, மிக்குயர் நாசியை, ஈர விரைந்தார் புக்கனர்; அப்பொழு தில்,`புகழ் தக்கோய்! தக்கிலது’ என்றனன், மாலி தடுத்தான். 6 6. அயில் - கூர்மை பொருந்திய. நேரா - முன்வந்து. ஈர - அறுக்க தக்கிலது - தகுதியன்று. அவ்வீரர்கள் வேண்டுகோளின்படி அவர்களைப் போருக்கனுப்புதல் விட்டனை எம்மை விடுத்தினி, வெம்போர் பட்டனர் என்று, படுத்தனர் அல்லால்; கெட்டனர் என்பது கேளலை என்னா; ஒட்டினர், ஆவி முடிக்க உவந்தார். 7 7. வெம்போர் பட்டனர் - கொடிய போரிலே இறந்தனர். என்று - என்றாவது. படுத்தனர் - எதிரிகளை அடுத்தனர். ஒன்றோ - என்ற ஒன்றையாவது கேட்பாய். கெட்டனர் - தோற்று ஓடினர். ஓட்டினர் - சேர்ந்தனர். அன்னவர் தம்மொடும், ஐயிரு வெள்ளம் மின்னு படைக்கை அரக்கரை விட்டான்; சொன்ன தொகைக்குஅமை யானை, சுடர்த்தேர், துன்னு வயப்பரி யோடு, தொகுத்தான். 8 8. சுடர்த் தேர் - ஒளி பொருந்திய தேர். வயப்பரி - வெற்றியுள்ள குதிரை. பெரும்பக்கன், புகைக் கண்ணன், வச்சிர வெயிற்றன், பிசாசன், சூரிய சத்துரு, மாலி என்பவர்கள் பத்து வெள்ளம் படைகளுடன் போர்க்களம் புகுந்தனர். எரிந்தெழு பல்படை யின்ஒளி யாணர் அரும்கலம் மின்ஒளி தேர்,பரி, யானை பொருந்திய பண்ஒளி, தார்ஒளி பொங்க இரிந்தது பேர்இருள், எண்திசை எங்கும். 9 9. எரிந்து எழு - விளங்கித் தோன்றும். அரும்கலன் - சிறந்த ஆபரணங்களின். பண் ஒளி - சிறந்த அலங்காரங்களின் ஒளி. தார்ஒளி - மாலைகளின் ஒளி. `பொங்க எண்திசை தோறும் பேர்இருள் இரிந்தன’. எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான், `வெய்துஇவண் வந்தவன் மாயையின் வெற்றி செய்தவ னேகொல்? தெரித்தியிது’ என்றான் ஐயம்இல் வீடணன் அன்னது உரைப்பான். 10 10. வெய்து இவண் வந்தவன் - ஆத்திரத்துடன் இங்கே வந்தவன். மாயையின் - வஞ்சகத்தினால். `வருகின்றவர்கள் சிறந்த வீரர்கள்; மாபக்கன், புகைக் கண்ணன், வச்சிரதந்தன், பிசாசன், சூரியவிரோதி, வேள்விப் பகைஞன், மாலி என்பவர்கள் அவர்கள்’ என்றான் வீடணன். ஆர்த்துஎதிர் நடந்ததுஅவ் அரியின் ஆர்கலி தீர்த்தனை வாழ்த்தி;ஒத்து இரண்டு சேனையும் போர்த்தொழில் புரிந்தன; புலவர் போக்குஇலார், வேர்த்துஉயிர் பதைத்தனர்; நடுங்கி விம்மியே. 11 11. அரியின் ஆர்கலி - குரங்குச் சேனையாகிய ஒலி பொருந்திய கடல். தீர்த்தன் - இராமன். புலவர் - தேவர்கள். தூமக் கண்ணனும் அனுமனும் எதிர்எதிர் தொடர்ந்தார்; தாமத்து அங்கதன் மாபெரும் பக்கனைத் தடுத்தான்; சேமத் திண்சிலை மாலியும், நீலனும் செறுத்தார்; வாமப் போர்,வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார். 12 12. தொடர்ந்தார் - தொடர்ந்து போர் செய்தார். தாமத்து - மாலையையுடைய. செறுத்தார் - சினங்கொண்டு பொருதார். சூரி யன்பெரும் பகைஞனும் சூரியன் மகனும் நேர்எ திர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின் பகையும் ஆரி யன்தனித் தம்பியும் எதிர்எதிர் அடர்ந்தார்; வீர வச்சிரத்து எயிற்றனும் இடபனும் மிடைந்தார். 13 13. சூரியன் மகன் - சுக்கிரீவன். அடர்ந்தார் - போர் செய்தார்கள். மிடைந்தார் - நெருங்கி நின்று பொருதனர். படைத்தலைவர் முடிவு வெங்கண் வெள்எயிற்று அரக்கரில், கவிக்குல வீரச் சிங்கம் அன்னபோர் வீரரில், தலைவராய்த் தெரிந்தார் அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர்சென்று அடர்ந்தார், பொங்கு வெம்செருத் தேவரும் நடுக்குறப் பொருதார். 14 14. தலைவராய்த் தெரிந்தார் - தலைவர்களாகச் சிறந்தவர்கள். அடர்ந்தார் - போர் செய்தார்கள். `தேவரும் நடுக்குறப் பொங்கு வெம் செருப்பொருதார்’. பத்து வெள்ளம் சேனைகளிலே ஆறு வெள்ளத்தை இராமன் அழித்தான்; நாலு வெள்ளத்தை இலக்குவன் சிதைத்தான். உப்பு டைக்கடல் மடுத்தன உதிரம்;நீர் ஓதம் அப்பொடு ஒத்தன கடுத்தில; ஆர்கலி முழுதும் செப்பு உருக்கெனத் தெரிந்தது; மீன்குலம் செருக்கித் துப்பொடு ஒத்தன; முத்தினம் குன்றியின் தோன்ற. 15 15. அப்பொடு ஒத்தன கடுத்தில - தண்ணீரோடு ஒத்திருக்க வில்லை. ஆர்கலி - கடல். செப்பு உருக்கு என - செம்பை உருக்கியது போல. செருக்கி - களித்து. துப்பொடு - பவளத்தைப் போல. கதிரவன் உதயம் அதிரும் வெம்செரு அன்னதொன்று அமைகின்ற அளவில், கதிர வன்,கொழும் சேய்ஒளிக் கற்றைஅம் கரத்தால், எதிரும் வல்இருள கரிஇறுத்து எழுமுறை மூழ்கி உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம்என உதித்தான். 16 16. கொழும் சேய் ஒளி - சிறந்த நீண்ட ஒளியாகிய. கற்றை அம்கரத்தால் - திரண்ட கரத்தினால். வல் இருள் கரி - வலிய இருட்டாகிய யானையை. இறுத்து - அழித்து. அரக்கர் என்றபேர் இருளினை இராமனாம் அருக்கன் துரக்க; வெம்சுடர்க் கதிரவன் புறத்துஇருள் தொலைக்கப் புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல நிரக்கும் நல்ஒளி பரந்தன உலகெலாம் நிமிர. 17 17. புரக்கும் வெய்யவர் - காக்கும் கதிரவர்கள். நிரக்கும் - நிறைகின்ற. `உலகெலாம் நிமிரப் பாய்ந்தன. அரக்கியர் துயரம் எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர், எரிவீழ் அல்லி சுற்றிய கோதையர் களம்புகுந்து அடைந்தார்; புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார் வல்லி சுற்றிய மாமரம் நிகர்த்தனர் வயவர். 18 18. எல்லி சுற்றிய - இரவிலே திரிகின்ற. எரிவீழ் - தீயும் தோற்கின்ற. அல்லி சுற்றிய - சிவந்த பூவிதழ்களைச் சுற்றி முடித்த. புல்லி முற்றிய உயிரினர் - கணவன்மார்களைத் தழுவி முடிந்துபோன உயிரையுடையவர்கள். வல்லி - கொடிகள். மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப் போரி யாக்கைகள் நாடி,அப் பொருகளம் புகுந்தார், பேரி யாக்கையின் பிணப்பெரும் குன்றிடைப் பிறந்த சோரி யாற்றிடை அழுந்தினர்; இன்உயிர் துறந்தார். 19 19. மாரி ஆக்கிய மழைபோல நீரை உண்டாக்கிய. சோரி ஆற்றிடை - இரத்த ஆற்றிலே. அரக்கர் படைகளும், படைத்தலைவர்களும் அழிந்த செய்தியைத் தூதர்கள் சென்று இராவணனிடம் இயம்பினர். 21. மகரக் கண்ணன் வதைப் படலம் இன்றுஊதியம் உண்டுஎன இன்ன கைபால் சென்றுஊதின தும்பிகள்; தென்தி சையான் வன்தூதரும் ஏகினர்; வஞ்ச னையான் தன்தூதரும் ஏகினர் தம்ந கர்வாய். 1 மகரக் கண்ணன் வதைப் படலம்: கரன் மகனாகிய மகரக் கண்ணன் என்பவன் போர்க்களத்தில் இராமனால் கொல்லப்பட்ட செய்தியைக் கூறும் பகுதி. 1. இன்நகைபால் - இனிய பற்களையுடையவள் பால்; சீதை. தும்பிகள் - வண்டுகள். தென்திசையான் - எமன். வஞ்சனையான் - இராவணன். சொன்னார் அவர்சொல் செவியில் தொடர்வோன், இன்னா தமனத் தின்இலங் கையர்கோன், வெம்நா கம்உயிர்த் தெனவிம் மினன்ஆல். அன்னான் நிலைகண்டு அயல்நின்று அறைவான். 2 2. இன்னாத - துன்பம் அடைந்த. வெம் நாகம் உயிர்த்துஎன - கொடிய நாகம் மூச்சுவிட்டது போல. ஆல்; அசை. மகரக் கண்ணன் வேண்டுதல் `முந்தே எனதா தையைமொய் யமர்வாய் அந்தோ! உயிர்உண் டவன்ஆர் உயிர்மேல் உந்தாய்! எனையா தும்உணர்ந் திலையோ? எந்தாய்! ஒருநீ இடர்கூ ருதியோ?’ 3 3. மொய்அமர்வாய் - வலிய போரிலே. உந்தாய் - செலுத்தமாட்டாய். எனையாதும் - என்னைப்பற்ற ஒன்றும். `அரும்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை, அழுத கண்ணள், பெரும்திருக் கழித்தல் ஆற்றாள், `கணவனைக் கொன்று பேர்ந்தோன் கருந்தலைக் கலத்தின் அல்லால் கடன்அது கழியேன்’ என்றாள்; பருந்தினுக்கு இனிய வேலாய் இன்அருள் பணித்தி’ என்றான். 4 4. அம்மனை - அன்னை. பேர்ந்தோன் - நீங்கியவனுடைய. கரும்தலை - கரிய தலையாகிய. கடன் அது - கணவனுக்கு ஆற்ற வேண்டிய இறுதிக் கடனை. பெரும்திரு கழித்தல் ஆற்றாள் - சிறந்த தாலியையும் நீக்குதல் செய்யாள். அவ்வுரை மகரக் கண்ணன் அறைதலும் அரக்கன் `ஐய செவ்விது சேறி, சென்றுன் பழம்பகை தீர்த்தி’ என்றான்; வெவ்வழி அவனும் பெற்ற விடையினன், தேர்மேல் கொண்டான் வவ்விய வில்லான் போனான், வரம்பெற்று வளர்ந்த தோளான். 5 5. செவ்விது சேறி - நன்றாகச் செல்லுக. வெவ்வழி அவனும் - கொடிய நெறியையுடைய அவனும். வவ்விய வில்லான் - பிடித்த வில்லையுடையவனாய். மகரக் கண்ணன் தனது ஐந்து கோடி சேனை களுடனும், இராவணன் அனுப்பிய ஐந்துவெள்ளம் படைகளுடனும் போர்க்களம் புகுந்தான். வண்டுலாம் அலங்கல் மார்பன் மகராக்கன், மழையேறு என்னத் திண்திறல் அரக்கன், கொற்றப் பொற்றடம் சில்லித் தேரைத் தண்டலை மருத வைப்பின் கங்கைநீர் தழுவும் நாட்டுக் கொண்டல்மேல் ஒட்டிச் சென்றான்; குரக்கினப்படையைக் கொன்றான். 6 6. கொள்ள பொன்தடம் சில்லித்தேரை - வெற்றி பொருந்திய பொன்னாலாகிய சக்கரங்களையுடைய தேரை. தண்டலை மருத வைப்பின் - சோலைகள் அமைந்த மருத நிலத்தையுடைய. கொண்டல்மேல் - இராமன் மேல். `என் தந்தையைக் கொன்ற பழியைத் தீர்க்க வந்தேன்’ என்ற மகரக் கண்ணனை நோக்கி இராமன் கூறியது தீயவன் பகர்ந்த மாற்றம், சேவகன் தெரியக் கேட்டான்; `நீகரன் புதல்வன் கொல்லோ! நெடும்பகை நிமிர வந்தாய்! ஆயது கடனே அன்றோ? ஆண்பிறந்து அமைந்தார்க்கு ஐய! ஏயது சொன்னாய்!’ என்றான் இசையினுக்கு இசைந்த தோளான். 7 7. நெடும் பகை நிமிர வந்தாய் - பெரிய பகையைப் போக்க வந்தாய். ஆண் பிறந்து அமைந்தார்க்கு - ஆணாகப் பிறந்து வீரம் பொருந்தியவர்க்கு. ஆயது - அவ்வாறு செய்வது. ஏயது - ஏற்றதையே. மகரக் கண்ணன் மாயப் போர் பல புரிந்தான்; இறுதியில் இராமன் கணையால் மாண்டான். அவனுக்குத் துணையாக வந்த குருதிக் கண்ணனை, நளனும், சிங்கனைப் பனசனும் எதிர்த்துக் கொன்றனர். தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை மராமரம் மலைஎன்று இன்ன வழங்கவும் வளைந்த தானை பராவரும் கோடி ஐந்தும் வெள்ளம்நால் ஐந்தும் பட்ட இராவணன் தூதர் போனார்; படைக்கலம் எடுத்தி லாதார். 8 8. தராதலம் - பூமி. வளைந்த தானை - சுற்றிய அரக்கர் சேனை. 22. பிரமாஸ்திரப் படலம் கரன்மகன் பட்ட வாரும், குருதியின் கண்ணன் காலின் சிரன்நெறிந்து உக்க வாறும், சிங்கனது ஈறும், சேனைப் பரம்இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகரக் கேட்டான்; வரன்முறை தவிர்ந்தான்; `வல்லைத் தருதிர்என் மகனை;’ என்றான். 1 பிரமாஸ்திரப் படலம்: இந்திரசித்தன் பிரம்மாஸ் திரத்தால் இலக்கு வளையும் வானர சேனைகளையும் அழித்ததைப்பற்றிக் கூறும் பகுதி. 1. குருதியின் கண்ணன் - இரத்தக் கண்ணன். காலின் - குரங்கின் காலால். சேனைப்பரம்இனி உலகுக்கு ஆகாது - சேனையைத் தாங்கும் பாரம் இனி உலகத்துக்கு இல்லாமல் ஆகி விட்டது என்பதையும். வரன் முறை தவிர்ந்தான் - இராவணன். தூதர் அழைக்க இந்திரசித்தன் வருதல் வணங்கி`நீ ஐய! நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன உணங்கலை! இன்று காண்டி, உலப்பறு குரங்கை நீக்கிப் பிணங்களின் குப்பை, மற்றை நரர்உயிர் பிரிந்த யாக்கை, கணம்குழைச் சீதை தானும் அமரரும் காண்பர்’ என்றான். 2 2. உலப்பறு - அளவற்ற. குரங்கை நீக்கி - குரங்குப் படைகளை அழித்து. நரர் - இராம இலக்குவர்களின். உயிர் பிரிந்த யாக்கை - உயிர் நீங்கிய உடம்புகளை. கணம் குழை - கூட்டமான காதணிகளையுடைய. அவன் அறுபது வெள்ளம் சேனைகளுடன் போர்க் களத்தை யடைந்து தனது வலம் புரிச் சங்கத்தை ஊதினான். செங்கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் செல்வன் தானும் அங்கதப் பெயரி னானும், அண்ணலும், இளைய கோவும், வெம்கதிர் மவுலிச் செங்கண் வீடணன் முதலாம் வீரர், இங்கிவர் நின்றார்; அல்லது இரிந்தது சேனை எல்லாம். 3 3. சமீரணன் செல்வன் - வாயுவின் புதல்வன். இரிந்தது - ஓடி விட்டது. மாருதியின் தோளில் இராமனும், அங்கதன் தோளில் இலக்குவனும் அமர்ந்து பொருதல் இமைப்பதன் முன்னம், வந்த இராக்கத வெள்ளம் தன்னை, குமைத்தொழில் புரிந்த வீரர், தனுத்தொழில் குறித்து,இன்று எம்மால் அமைப்பதுஎன்? பிறிதொன்று, உண்டோ? மேருஎன்று அமைந்த வில்லால் உமைக்கொரு பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 4 4. குமைத்தொழில் புரிந்த - அழிக்கும் தொழிலைச் செய்த. அமைப்பதுஎன் - சொல்லக்கூடியது யாது? புரங்களின் - திரிபுரங்களைப் போல. ஒருங்கி வீழ்ந்த - அழிந்து விழுந்தன. இந்திரசித்தன் திகைப்பு `செய்கின்றார் இருவர் வெம்போர்; சிதைகின்ற சேனை நோக்கின், `ஐயந்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக’ என்று வைகின்றார் அல்லர் ஆக; வரிசிலை வலத்தால் மாள எய்கின்றார் அல்லர்; ஈதுஎவ் இந்திர சாலம்’ என்றான். 5 5. `இருவர் வெம்போர் செய்கின்றார்’ அவிக - ஒழிந்து போக. வைகின்றார் - சாபம் இடுகின்றார். அல்லர்ஆக - இவ்வாறில்லாமல். அறுபது வெள்ள மாய அரக்கர்,தம் ஆற்றற்கு ஏற்ற எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும், பொறிவனம் வெந்த போலச், சாம்பராய்ப் போயது அல்லால், செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும். 6 6. பெய்வ - சொரிவன. எற்றுஉறு - தாக்குகின்றனவாகிய. பொறிவனம் - வண்டுகள் மொய்க்கின்ற மலர் வனம். செறிவன இல்லா ஆற்றை - நெருங்கிவந்து போர் செய்தல் இல்லாத தன்மையை. அங்கதர் அனந்த கோடி உளர்எனும்; அனுமன் என்பார்க்கு இங்கினி உலகம் எல்லாம் இடம்இலை போலும் என்னும்; எங்கும்இம் மனிதர் என்பார் இருவரே கொல்என்று உன்னும்; சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகி லாதான். 7 7. வீரர் கடுமையை - அங்கதன் அனுமான் ஆகிய வீரர் களின் கடுமையை. கடுமையை - விரைந்து செல்லும் தன்மை. இந்திரசித்தைக் கண்டதும் இலக்குவன் உரைத்தல் `இந்திரன் பகைஎனும் இவனை, என்சரம் அந்தரத்து அரும்தலை அறுக்க லாதுஎனின், வெந்தொழில் செய்கையான் விருந்தும் ஆய்,நெடும் மைந்தரில் கடைஎனப் படுவென்; வழியாய்.’ 8 8. அரும் தலைஅந்தரத்து அறுத்திலாது எனின் - அரிய தலையை வானத்திலே அறுத்துத் தள்ளாதாயின். வெம் தொழில் செய்கையன் - கொடுந்தொழிலைச் செய்யும் எமனுடைய. நெடும் மைந்தரின் - பெருமையுள்ள மனிதர்களிலே. `கடிதினில் உலகெலாம் கண்டு நிற்க,என் அடுசரம் இவன்தலை அறுத்தி லாதுஎனின், முடியஒன்று உணர்த்துவென்; உனக்கு, நான்முயல் அடிமையின் பயன்இகந்து அறுவது ஆகெ’ன்றான். 9 9. முடிய - முடிவாக. நான்முயல் - நான் முயன்று செய்கின்ற. இகந்து அறுவதாக- நீங்கிப் போகக் கடவது. இலக்குவனுக்கு வாழ்த்து வல்லவன், அவ்வுரை வழங்கும் காலையில், `அல்லல்நீங் கினம்’என அமரர் ஆர்த்தனர்; எல்லையில் உலகமும் யாவும் ஆர்த்தன; நல்லறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 10 10. வல்லவன் - வல்லவனாகிய இலக்குவன். எல்லைஇல் - அளவற்ற. முறுவல்வாள் முகத்தினன் முளரிக் கண்ணனும், `அறிவென்நீ அடுவல்என்று அமைதி யாம்எனின், இறுதியும் காவலும், இயற்றும் ஈசரும் வெறுவியர்; வேறுஇனி விளைவது யாது?’என்றான். 11 11. முளரிக் கண்ணனும் - இராமனும். முளரி - தாமரை. முறுவல் வாள் முகத்தினன் - புன்சிரிப்புடைய ஒளி பொருந்திய முகத்தினனாய். அறிவைநீ - அறிவுடைய நீ. இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் - அழித்தல் காத்தல் ஆக்குதல் செய்யும் கடவுளரும். வெறுவியர் - ஒன்றும் அற்றவராவர். இலக்குவன், இராமன், அரக்கர்களுடன் செய்த போர் சொல்இது கேட்டு,அடி தொழுது, `சுற்றிய பல்பெருந் தேரொடும், அரக்கர் பண்ணையைக் கொல்வென்இங்கு அன்னது காண்டி கொல்’எனா, ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான். 12 12. அடிதொழுது - இராமன் அடிகளை வணங்கி. பண்ணையை - கூட்டத்தை. ஒல்லையில் - விரைவில். ஆன காலையில், இராமனும், அயில்முகப் பகழி சோனை மாரியில் சொரிந்தனன் அனுமனைத் தூண்டி, வான மானங்கள் மடிந்தெனத் தேரெலாம் மடிந்த; தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன். 13 13. அனுமனைத் தூண்டி - அனுமானை இந்திரசித்தனிடம் போகும்படித் தூண்டி. சோனை மாரியின் - பெரு மழையைப் போல. மானங்கள் - விமானங்கள். மறிந்துஎன - ஒடிந்து வீழ்ந்தன போல. இந்திரசித்தன் கேள்வி `இருவிர் என்னொடு பொருதிரோ? அன்றுஎனின் ஏற்ற ஒருவர் வந்துஉயிர் தருதிரோ? உம்படை யோடும் பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும் தருவென் இன்றுமக்கு ஏற்றுளது யான்’எனச் சலித்தான். 14 14. பொன்றுதல் புரிதிரோ - இறத்தலைச் செய்கின்றீரோ. சலித்தான் - கூறினான். இலக்குவன் விடை `வாளின் திண்சிலைத் தொழிலினின் மல்லினின் மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் பெற்றினும், அமரில் கோள்உற்று, உன்னொடு குறித்துஅமர் செய்துஉயிர் கொள்வான் சூள்உற் றேன்!இது சரதம்.’என்று இலக்குவன் சொன்னான். 15 15. ஆளுற்று எண்ணிய - பழகி அறிந்த. கோள்உற்று - வலிமை அமைந்து. உன்னொடு குறித்து அமர் செய்து - உன்னுடன் நேர் நின்று போர் புரிந்து. இந்திரசித்தன் இயம்பிய சூளுரைகள் `முன்பி றந்தஉன் தமயனை, முறைதவிர்த்து உனக்குப் பின்பி றந்தவன் ஆக்குவென்; பின்பிறந் தோயை முன்பி றந்தவன் ஆக்குவென்; இதுமுடி யேனேல், என்பி றந்தத னால்பயன் இராவணற்கு என்றான். 16 16. பின் பிறந்தவன்; பின்பு இறந்தவன். முன் பிறந்தவன்; முன்பு இறந்தவன். இவ்வாறு இரு பொருள் கொள்க. `இலக்குவன் எனும்பெயர் உனக்கு இயைவதே என்ன, இலக்கு என்கணைக்கு ஆக்குவென்; இதுபுகுந்து இடையே விலக்கு வென்என, விடையவன் விலக்கினும், வீரம் கலக்கு வென்;இது காணும்உன் தமையனும் கண்ணால்.’ 17 17. இயைவதே ஆக்கி - பொருந்தும்படி செய்து. வன்கணைக்கு இலக்கு ஆக்குவன் - எனது வலிய கணைக்குக் குறியாக்குவேன். இலக்குவன்; இந்திர சித்தின் அம்புக்கு இலக்காக இருப்பவன். `அறுப தாகிய வெள்ளத்தின் அரக்கரை, அம்பால் இறுவது ஆக்கிய இரண்டுவில் லினரும்கண்டு இரங்க, மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள, வெறுவது ஆக்குவென் உலகைஇக் கணத்தின்ஓர் வில்லால்.’ 18 18. மறுஅது ஆக்கிய - அரக்கர்க்குப் பழியை உண்டாக்கிய. வெறுவிது ஆக்குவென் - ஒன்றுமில்லாமல் செய்து விடுவேன். இலக்குவன் கூறிய பதில் `அரக்கர் என்பதுஓர் பெயர்படைத் தவர்க்கெலாம், அடுத்த புரக்கும் நன்கடன் செயவுளன் வீடணன், போந்தான்; கரக்கும் நுந்தைக்கு நீசெயக் கடவன கடன்கள் இரக்கம் உற்றுஉனக்கு அவன்செயும்;’ என்றனன் இளையோன். 19 19. கரக்கும் நுந்தைக்கும் - பதுங்கி யிருக்கும் உன் தந்தைக்கும். இந்திரசித்தன் இலக்குவன் போர் ஆன காலையில், அயில்எயிற்று அரக்கன்நெஞ்சு அழன்று, வானும் வையமும், திசைகளும், யாவையும் மறையப் பானல் சோலையைப் பருகுவ, சுடர்முகப் பகழி, சோனை மாரியின், இருமடி, மும்மடி, சொரிந்தான். 20 20. பானல் - கடலையும். பெரிய சோலையை - சோலை யையும். பருகுவ உண்டு அழிப்பனவாகிய. சுடர்முகப் பகழி - ஒளி பொருந்திய முனையையுடைய அம்பு. மெய்யிற் பட்டன படப்,படா தனவெலாம் விலக்கித், தெய்வப் போர்க்கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி, அய்யற்கு ஆங்குஇளம் கோளரி, அறம்இலான் அறைந்த பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினில் புக்கான். 21 21. மெய்யில் பட்டன பட - உடம்பில் பட்ட அம்புகள் அழிய. படாதன எல்லாம் - படாத அம்புகளை எல்லாம். விலக்க - தடுக்க. கண்இ மைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான், அண்ணல், மற்றவன் ஆக்கைகண்டு அறிகிலன் ஆகிப், பண்ண வற்கு,`இவன் பிழைக்குமேல் படுக்கும்நம் படையை, எண்ண மற்றிலை; அயன்படை தொடுப்பல்;’ என்று இசைத்தான். 22 22. மற்றவன் - இந்திரசித்தனுடைய. பண்ணவற்கு - இராமனுக்கு. நம் படையைப் படுக்கும் - நமது சேனையை அழிக்கும். பிரமாத்திரம் விடவேண்டாம் என இராமன் தடுத்தல் ஆன்ற வன்அது பகர்தலும், `அறநிலை வழாதாய்! ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில்,இவ் வுலக மூன்றை யும்சுடும்; ஒருவனால் முடிகிலது’ என்றான் சான்ற வன்;அது தவிர்ந்தனன் உணவுடைத் தம்பி. 23 23. ஆன்றவன் - சிறந்தவனாகிய இலக்குவன். அற நிலை வழாதாய் - தரும மூர்த்தியாகிய இலக்குவனே. ஒருவனால் முடிகிலது - ஒருவனைக் கொல்லுவதோடு நின்று விடாது. இந்திரசித்தன் எண்ணம் மறைந்து போய்நின்ற வஞ்சனும், அவருடைய மனத்தை அறிந்து, தெய்வவான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்; பிரிந்து போவதே கருமம்இப் பொழுது;எனப் பெயர்ந்தான்; செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார். 24 24. தெய்வ வான்படை - பிரமாஸ்திரம். அமைந்தான் - நினைத்தான். ஆவலம் கொட்டினர் - பரிகசித்துக் கை கொட்டினர். இராம இலக்குவர்கள் போர் ஒழிந்தனர். கதிரவனும் மறைந்தான். வீடணனை உணவு சேர்க்க உத்திரவிட்டு, இலக்குவனைப் படைகளைக் காக்கும்படி பணித்து, இராமன் கணைகளுக்குப் பூசை செய்யப் போனான். இச்சமயத்தில் இந்திரசித்தன் இலங்கையில் புகுந்தான். தானே முதலில் நான்முகன் படையை விடப் போவதாகக் கூறி அதற்கான வேள்வி செய்யத் தொடங்கினான். இராவணன், மகோதரனையும் அகம்பனையும் போர்க் களத்திற்கு அனுப்பினன். அகம்பன் அனுமானால் கொல்லப்பட்டான். மகோதரன் இலக்குவனுடன் பொரும் போது, இலக்குவன் பாசுபதப் படையை விட்டான்; மகோதரன் மறைந்து போனான். பிறகு இந்திரன் போல் உருக்கொண்டு பொருதான். இந்திரசித்தன் பிரமாத்திரம் விடுதல் இன்ன காலையில், இலக்குவன் மேனிமேல் எய்தான் முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம், பொன்னின் மால்வரைக் குரீஇஇனம் மொய்ப்பன போலப் பன்ன லாம்தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த. 25 25. பொன்னின் மால் வரை - பொன்மயமான பெரிய மலையின்மேல். பன்னலாம் தரம் அல்லன - சொல்லக்கூடிய தன்மை யல்லாதனவாகிய. `வெம்கண் வானரக் குழுவொடும் இளையவன் விளிந்தான்; இங்கு வந்திலன், அகன்றனன் இராமன்;’என்று இகழ்ந்தான்; சங்கம் ஊதினன், தாதையை வல்லையில் சார்ந்தான், பொங்கு போர்இடைப் புகுந்துள பொருள்எலாம் புகன்றான். 26 26. -. இராவணன் கேள்வி, இந்திரசித்தன் விடை `இறந்தி லன்கொல்ஆம் இராமன்;’என்று இராவணன் இசைத்தான்; `துறந்து நீங்கினன்; அல்லனேல் தம்பியைத் தொலைத்துச், சிறந்த நண்பரைக் கொன்று,தன் சேனையைச் சிதைக்க மறந்து நிற்குமோ மற்றவன் திறன்;’என்றான் மதலை. 27 27. துறந்து நீங்கினன் - விட்டுப் போய்விட்டான். மற்றவன் திறன் மறந்து நிற்குமோ - அவன்தன் வீரத்தை மறந்து சும்மா நிற்பானோ? மதலை - மகன். இந்திரசித்தன் தன் மாளிகைக்குச் சென்றான்; மகோதரனும் போர்க்களத்திலிருந்து தப்பித்து வந்தான். இவ்வமயம் இராமன் போர்க்களத்தை அடைந்து அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டான். இராமன் கண்ட போர்க்களக் காட்சி சுக்கி ரீவனை நோக்கித்,தன் தாமரைத் துணைக்கண் உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிதுநின்று உயிர்த்தான்; `தக்க தோஇது நினக்கு’என்று தன்மனம் தளர்ந்தான்; பக்கம் நோக்கினன், மாருதி தன்மையைப் பார்த்தான். 28 28. உக்க - சிந்திய. நின்று நெடிது உயிர்த்தான் - நின்று பெருமூச்சு விட்டான். `கடல்க டந்துபுக்கு அரக்கரைக் கருவொடும் கலக்கி, இடர்க டந்துநான் இருக்க, நல்கியது இதுவோ! உடல்க டந்தனவோ உன்னை அரக்கன்வில் உதைத்த அடல்க டந்தபோர் வாளி;’என்று ஆகுலித்து அழுதான். 29 29. நீ நல்கியது - நீ உதவி செய்தது. உடல் கடந்தனவோ - உடம்பைத் துளைத்துப் போயினவோ. ஆகுலித்து - வாய்விட்டு. `முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும், பின்னைச் சானகி உதவியும் பிழைத்தன; பிறிதுஎன்? புன்மைச் செய்தொழில் என்வினைக் கொடுமையால்; புகழோய்! என்னைப் போல்பவர் ஆர்உளர் ஒருவர்?’என்று இசைத்தான். 30 30. பிறந்த புன்மைச் செய்தொழில் - தோன்றிய இழிவான செய்யுந் தொழிலையுடைய. என்வினைக் கொடுமையால் - எனது தீவினையின் கொடுமையால். பிழைத்தன - பயனற்றன. `புன்தொ ழில்புலை அரசினை வெஃகினேன், பூண்டேன்; கொன்று ஒருக்கினென் எந்தையைச்; சடாயுவைக் குறைந்தேன்; இன்று ஒருக்கினேன் இத்தனை வீரரை; இருந்தேன்; வன்தொ ழிற்குஒரு வரம்புஉண் டாய்வர அற்றோ?’ 31 31. புன் தொழில் புலை அரசனை - இழிந்த செயலை யுடைய அற்பமான அரசாட்சியை. வெஃகினேன் பூண்டேன் - விரும்பி மேற்கொண்டேன். வன் தொழிற்கு - எனது கொடுந்தொழிலுக்கு. உண்டாய் வர அற்றோ - உண்டாகக் கூடியதோ. `தமைய னைக்கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை அமைய நல்கினேன்; அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்; கமைபி டித்துநின்று உங்களை இத்துணை கண்டேன்; சுமைஉ டற்பொறை சுமக்கவந் தனென்;’எனச் சொன்னான். 32 32. கமை பிடித்து நின்று - பொறுமையைப் பின்பற்றி நின்று. உங்களை இத்துணை கண்டேன் - உங்களை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகக் கண்டேன். சுமை உடல் பொறை - சுமையாகிய உடல் பாரத்தை. விடைக்கு லங்களின் இடைஒரு விடைகிடந்து என்னக், கடைக்கண் தீஉக அங்கதக் களிற்றினைக் கண்டான்; `படைக்க லம்சுமந்து உழல்கின்ற பதகனேன், பழிபார்த்து அடைக்க லப்பொருள் காத்தவாறு அழகிது!’என்று அழுதான். 33 33. விடைக்குலங்கள் - காளைக் கூட்டங்கள். காத்த ஆறு - காத்த விதம். `அடைக்கலப் பொருள்’ வாலியின் சொல்லை நினைவுறுத்தியது. உடல்இ டைத்தொடர் பகழியின், ஒளிர்கதிர்க் கற்றைச் சுடர்உ டைப்பெரும் குருதியால் பாம்பெனச் சுமந்த மிடல்உ டைப்பிண மீமிசைத், தான்பண்டை வெள்ளக் கடல்இ டைத்துயில் வான்அன்ன தம்பியைக் கண்டான். 34 34. ஒளிர் கதிர்க் கற்றை - விளங்குகின்ற ஒளிக் கூட்டம். சுடர் உடை - பிரகாசிக்கின்ற. பொருமி னான்;அகம் பொங்கினான்; உயிர்முற்றும் புகைந்தான்; குரும ணித்திரு மேனியும் மனம்எனக் குலைந்தான்; தருமம் நின்றுதன் கண்புடைத்து அலமரச் சாய்ந்தான், உருமி னால்இடி உண்டதுஓர் மராமரம் ஒத்தான். 35 35. குருமணி - ஒளிபொருந்திய நீல இரத்தினம் போன்ற. அலம்வர - வருந்தும்படி. உருமினால் இடி உண்ட - இடியால் அடிபட்ட. தாங்கு வார்இல்லை; தம்பியைத் தழீக்கொண்ட தடக்கை வாங்கு வார்இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை; பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர்; பட்ட தீங்கு தான்இது; தமியனை யார்துயர் தீர்ப்பார்? 36 36. தடக்கை வாங்குவார் இல்லை - பெரிய கைகளைப் பிடித்துத் தூக்குகின்றவர்கள் இல்லை. ஈங்கு தான் பட்டது இது - இங்கே அடைந்த துன்பம் இதுவாகும். தேவர்கள் துயரம் வான நாடியர் வயிறுஅலைத்து அமுதுகண் மலிநீர் சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சொரிந்தார்; ஏனை நிற்பவும், திரிபவும், இரங்கின; எவையும் ஞான நாயகன் உருவமே யாகலின் நடுங்கி. 37 37. கண்மலி நீர் - கண்ணில் பெருகிய நீரை. சோனை மாரியின் - விடாமழையைப் போல. `எவையும் ஞானநாயகன் உருவமேயாகலின், நடுங்கி, ஏனை நிற்பவும் திரிபவும் ஏங்கின’. இராமன் உணர்வு வந்து புலம்புதல் அண்ண லும்சிறிது உணர்வினோடு, அயாவுயிர்ப்பு அணுகக் கண்வி ழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்; `விண்ணை உற்றனன்; மீள்கிலன்;’ என்றுஅகம் வெதும்பிப், புண்ணின் உற்றதோர் எரிஅன்ன துயரினன் புலம்பும். 38 38. உணர்வினோடு - அறிவோடு. அயாவுயிர்ப்பு அணுகி - பெரு மூச்சும் பெற்று. ஆகம் வெதும்பி - மனம் வேதனைப்பட்டு. துயரினன் புலம்பும் - துன்பம் உற்றவனாய்ப் புலம்புகின்றான். `பயிலும் காலம் பத்தொடு நாலும் படர்கானத்து, அயில்கின் றேனுக்கு, ஆவன நல்கி, அயிலாதாய்! வெயில்என்று உன்னாய், நின்று தளர்ந்தாய்! மெலிவுஎய்தித் துயில்கின் றாயோ? இன்றிவ் வுறக்கம் துறவாயோ?’ 39 39. பத்தொடு நாலும் பயிலும் காலம் - பதினான்கு ஆண்டுகள். வாழும் காலமாகக் கொண்டு. படர் கானத்து - வந்த காட்டிலே. நல்கி - கொடுத்தல்லாமல். அயிலாதாய் - உண்ணா தவனே. `மண்மேல் வைத்த காதலின், மாதர் முதலோர்க்கும் புண்மேல் வைத்த தீநிகர் துன்பம் புகுவித்தேன்; பெண்மேல் வைத்த காதலின் இப்பே றுகள்பெற்றேன்; எண்மேல் வைத்த என்புகழ் நன்றால் எளியேனோ?’ 40 40. எண்மேல் வைத்த - பெருமையாக எண்ணும்படி வைத்த. எளியேன் ஓ - ஏழையேன்; ஓ; இரக்கத்தைக் குறித்தது. `மாண்டாய் நீயோ, யான்ஒரு போதும் உயிர்வாழேன்; ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான்; பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார்; வேண்டா வோநான் நல்லறம் அஞ்சி மெலிவுற்றால்.’ 41 41. நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் வேண்டாவோ - நான் நல்ல தருமத்திற்குப் பயந்து மெலிந்தால் இத்தனை துன்பங்களும் வர வேண்டாமோ? `அறம்,தாய், தந்தை, சுற்றமும், மற்றும் எனை அல்லால் துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணைவந்து பிறந்தாய், என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவற்றாய்! இறந்தாய் உன்னைக் கண்டும் இருந்தேன் எளியேன்!ஓ!’ 42 42. மற்றும் எனை அல்லால் - மற்றவைகளும் என்னைத் தவிர வேறில்லையென்று. துறந்தாய் - அவைகளை விட்டாய். இருந்தேன் - உயிரோடு சும்மா இருந்தேன். `கொடுத்தேன் அன்றே வீடண னுக்குக் குலம்ஆள முடித்தோர் செல்வம்; யான்முடி யாதே முடிகின்றேன்; படித்தேன் அன்றே பொய்ம்மை? குடிக்குப் பழிபெற்றேன்; ஒடித்தேன் அன்றே என்புகழ் நானே, உணர்வுஅற்றேன்.’ 43 43. குலம்ஆள - அரக்கர் குலத்தை ஆளும் அரசாட்சியை. முடித்தோர் - நம்மை அழித்தவர்களின் செல்வத்தை. யான் முடியாதோ - நான் அழிக்காமலே. பொய்ம்மை படித்தேன் - பொய் பேசினேன். என்றுஎன்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடைஅஃகிச் சென்றுஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவுஎய்தப், பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத் தொடுபுல்லி, ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான் துயில்வுற்றான். 44 44. இடை அஃகிச் சென்று - இடையிலே சோர்வடைந்து போய். ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த - ஒன்று ஒன்றோடு பொருந்தி இந்திரியங்கள் எல்லாம் நிலை குலைய. பொன்றும் என்னும் - இறங்கும் என்னும் நிலையில் உள்ள. இந்நிலை கண்டு தேவர்கள் வருந்தல் `வருவாய் போல வாராதாய், வந்தாய் என்று மனம்களிப்ப வெருவாது இருந்தோம், நீஇடையே துன்பம் விளைக்க மெலிகின்றாய்; கருவாய் அளிக்கும் களைகண்ணே! நீயே இடரைக் காவாயேல் திருவாழ் மார்ப! நின்மாயை எம்மால் தீர்க்கத் தீருவதோ?’ 45 45. வந்தாய் என்று - அரக்கரைக் கொல்லப் பிறந்தாய் என்று. கருவாய் - கருவிலே வந்து பிறந்து. இச்சமயத்தில் தூதர்கள் சென்று `உன் மகனால் இளையோன் மாண்டான்; அதைக் கண்ட இராமனும் உயிர் விடுத்தான்; உன்பகை ஒழிந்தது, என்று இராவணனிடம் உரைத்தனர். 23. சீதை களங்காண் படலம் இராவணன் மருத்தனை அழைத்தான்; போர்க் களத்தில் கிடக்கும் அரக்கர் பிணங்களை யெல்லாம் கடலிலே தள்ளிவிட்டுச் சீதையை விமானத்தில் ஏற்றிக்கொண்டு போய்ப் போர்க்களத்தைக் காட்டும்படி பணித்தான். கண்டாள் கண்ணால் கணவன்உரு அன்றி ஒன்றும் காணாதாள், உண்டாள் விடத்தை எனஉடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன்ஓய்ந்தாள்; தண்தா மரைப்பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள்; பெண்தான் உற்ற பெரும்பீழை, உலகுக் கெல்லாம் பெரிதன்றோ? 1 சீதை களங்காண் படலம்: சீதை, வானரப் படைகள் இறந்தும், இராமன் முதலியோர் சோர்ந்தும் கிடந்த போர்க்களத்தைக் கண்டு வருந்துவதைக் கூறும் பகுதி. 1. காணாதாள் - காணாதவளாகிய சீதை. கண்டாள் - போர்க்களத்திலே இராமன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள். பெரும்பீழை - பெரிய துன்பம். மங்கை அழலும், வானாட்டு மயில்கள் அழுதார்; மழவிடையோன் பங்கில் உறையும் குயில்அழுதாள்! பதுமத் திருந்த மாதுஅழுதாள்; கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடம்கண்ணன் தங்கை அழுதாள்; இரங்காத அரக்கி மாரும் தளர்ந்துஅழுதார். 2 2. கமலம் தடம் கண்ணன் தங்கை - தாமரை மலர் போன்ற பெரிய கண்களையுடையவனாகிய திருமாலின் தங்கையான துர்க்கா தேவியும். பொன்தாழ் குழையாள் தனையீன்ற, பூமா மடந்தை புலந்துஅழுதாள்; குன்றா மறையும், தருமமும்மெய் குலைந்து குலைந்து தளர்ந்துஅழுத; பின்றாது உடற்றும் பெரும்பாவம் அழுத; பின்என் பிறர்செய்கை? நின்றார் நின்ற படிஅழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள். 3 3. பொன்தாழ் குழையாள்தனை - பொன்னால் செய்து தொங்குகின்ற காதணியை யுடைய சீதையை. புலந்து - இரக்க முற்று. பின்றாது உடற்றும் - பின்னடையாமல் நின்று துன்புறுத்தும். நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை, நீரால் தெளித்து, நெடும்பொழுதின், இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர்வந்து ஏங்கினாள்; கனத்தின் நிறத்தான் தனைப்பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால் சினத்தின் அலைப்பாள் எனக்,கண்ணைச் சிதையக் கையால் மோதினாள். 4 4. நெடும் பொழுதின் - நீண்ட நேரம் கழிந்தபின். உயிர் வந்து ஏங்கினாள் - உயிர்தோன்றி வருந்தினாள். கனத்தின் நிறத்தான் தனை - மேகத்தின் நிறமுள்ள இராமனை. கயலை - கயல் மீனை. கமலத்தால் - தாமரையால். `எண்ணா மயலோ டும்இருந் ததுநின் புண்ஆ கியமே னிபொருந் திடவோ! மண்ணோர் உயிரே! இமையோர் வலியே! கண்ணே! அமுதே! கருணா கரனே!’ 5 5. எண்ணா - உன்னையே எண்ணிக்கொண்டு. மயலோடும் - துன்பத்துடனும். இருந்தது - உயிர் வாழ்ந்தது. `மேவிக் கனல்முன் மிதிலைப் பதிஎன் பாவிக் கைபிடித் ததுபண் ணவநின்! ஆவிக்கு ஒருகோள் வரவோ; அலர்வாழ் தேவிக்கு அமுதே! மறையின் தெளிவே!’ 6 6. மிதிலைப் பதி மேவி கனல் முன் - மிதிலையிலே வந்து தீயின் முன்னே. ஒருகோள் - ஒருதீமை. `உய்யாள் உயர்கோ சலைதன் உயிரோடு; அய்யா! இளையோர் அவர்வாழ் கிலரால்! மெய்யே வினையெண் ணிவிடுத் தகொடும் கைகே சிகருத்து இதுவோ, களிறே!’ 7 7. மெய்யே வினை எண்ணி - உண்மையாகவே தீமையை நினைத்து. விடுத்த - காட்டிற்கு அனுப்பிய. `மேதா! இளையோய்! விதியார் விளைவால் போதா நெறிஎம் மொடுபோ துறுநாள், `மூதா னவன்முன் னர்முடிந் திடு’எனும் மாதா உரையின் வழிநின் றனையோ!’ 8 8. மேதா - அறிவுள்ளவனே. விதியார் விளைவால் - விதியின் செயலால். போதாநெறி - போவதற்குத் தகாத காட்டு வழியிலே. மூது ஆனவன் - உன்னிலும் முதிர்ந்தவனாகிய இராமன். இவ்வாறு வருந்திய சீதை விமானத்திலிருந்து இராமன் மேல் வீழ்ந்து இறக்கத் துணிந்தாள். அவளைத், திரிசடை கட்டிப் பிடித்துக் கொண்டாள்; விழாமல் தடுத்தாள். திரிசடையின் தேறுதல் மொழிகள் `மாயமான் விடுத்த வாறும், சனகனை வகுத்த வாறும், போயநாள் நாக பாசம் பிணித்தது போன வாறும், நீஅமா நினையாய்! மாள நினைத்தியோ! நெறியி லாரால் ஆயமா மாயம்; ஒன்றும் அஞ்சலை; அன்னம் அன்னாய்!’ 9 9. போய நாள் - சென்ற நாளில். அமா நீ நினையாய் - அம்மா நீ நினைக்க மாட்டாய். ஆய - உண்டாகிய. `கண்டஅக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும் தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும் அண்டர்நா யகன்தன் வீரத் தன்மையும், அயர்த்தாய் போலும்; புண்டரீ கற்கும் உண்டே இறுதி!இப் புலையர்க்கு அல்லால்.’ 10 10. செய்கையும் - நடந்த செயலையும். அயர்த்தாய் - மறந்தாய். புண்டரீகற்கும் - சிறந்த தாமரை மலர் போன்ற கண்களையுடையவனாகிய இராமனுக்கும். `ஆழியான் ஆக்கை தன்னில் அம்பொன்றும் உறுக்கி லாமை, ஏழைநீ காண்டி அன்றே; இளையவன் வதனம் இன்னும் ஊழிநாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல் வாழியாற்கு இல்லை; வாளா மயங்கலை, மண்ணில் வந்தாய்!’ 11 11. ஆழியான் - இராமனுடைய. ஆக்கை தன்னில் - உடம்பிலே பட்டு. ஏழை நீ - அறிவில்லாத நீ. ஊழிநாள் இரவி என்ன - ஊழியிறுதிக் காலத்துச் சூரியனைப் போல. வாழியாற்கு - பணி செய்து வாழ்கின்ற இலக்குவனுக்கு. `ஓய்ந்துளன் இராமன் என்னின், உலகம்ஓர் ஏழும் ஏழும் தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என்ஆம்? வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர்எலாம்; வெருவல் அன்னை! ஆய்ந்துஅவை உள்ள போதே அவர்உளர்; அறமும் உண்டால்.’ 12 12. தீர்ந்தறும் - அழிந்து போகும். வீய்ந்துறும் - மடிந்து விடும். விரிஞ்சன் முன்னா - பிரமன் முதலிய. ஆய்ந்தவை - ஆராயப்பட்ட உலகம். அவர் உளர் - இராமபிரான் உயிருடன் இருக்கின்றார். `மாருதிக்கு இல்லை அன்றே மங்கையின் வரத்தி னாலே ஆருயிர் நீங்கல்; நின்பால் கற்புக்கும் அழிவுண் டாமே? சீரியது அன்றுஇது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை; பேரும்இப் பொழுதே; அவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ?’ 13 13. அழிவுண்டாமே - அழிவுண்டோ? இது ஒன்றும் சீரியது அன்று - இது ஒன்றும் வலிமையுள்ளது அன்று. இப்பொழுதே பேரும் - இப்பொழுதே நீங்கிவிடும். `மங்கலம் நீங்கி னாரை, ஆருயிர் வாங்கி னாரை நங்கைஇக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்; இங்குஇவை அளவை யாக இடர்க்கடல் கடத்தி;’ என்றாள்; சங்கையள் ஆய தையல் சிறிதுஉயிர் தரிப்பது ஆனாள். 14 14. மங்கலம் நீங்கினாரை - தாலியிழந்தவர்களையும். ஆருயிர் வாங்கினாரை - தமது உயிரை இழந்தவர்களையும் (பிணங்களையும்). நவையிற்று அன்று - குற்றம் உள்ளது அன்று. அளவையாக - அளவாகக் கொண்டு சங்கையள் ஆய தையல் - சந்தேகம் கொண்டவளான சீதை. `அன்னைநீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆத லாலே உன்னையே தெய்வ மாக்கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்; இன்னம்இவ் விரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது அன்றே;’ என்றனள் முளரி நீத்தாள். 15 15. முளரி நீத்தாள் - தாமரையைத் துறந்த திருமகளான சீதை அழிந்திலது - கெட்டுப்போகவில்லை. `நாண்எலாம் துறந்தேன்; இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும் பூண்எலாம் துறந்தேன்; என்தன் பொருசிலை மேகம் தன்னைக் காணலாம் என்னும் ஆசை தடுக்க,என் ஆவி காத்தேன்; ஏண்இலா உடலம் நீக்கல் எளிதுஎனக்கு;’ எனவும் சொன்னாள். 16 16. இல்லின் - இல்லறத்திலே வாழும். நன்மையின் - நன்மை யினையுடைய. நல்லார்க்கு எய்தும் - நல்ல பெண்களுக்குப் பொருந்திய. பூண் எலாம் - ஆபரணமாகிய குணங்களை யெல்லாம். ஏண்இலா உடலம் நீக்கல் - பெருமையற்ற என் உடம்பைத் துறத்தல். தையலை, இராமன் மேனி ததைத்தவேல் தடம்கண் ணாளைக், கைகளின் பற்றிக் கொண்டார்; விமானத்தைக் கடாவு கின்றார்; மெய்உயிர் உலகத் தாக விதியையும் வலித்து விண்மேல் பொய்உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போனார். 17 17. மேனிதைத்த -உடம்பிலேயே பதிந்து போன. மெய்உயிர் - உண்மையான உயிர். உலகத்து ஆக - இவ்வுலகத்தில் இருக்கவும். விதியையும் வலித்து - விதியையும் பலவந்தமாக இழுத்துக் கொண்டு. 24. மருத்து மலைப் படலம் உணவு தேடச் சென்ற வீடணன் அவ்வினையை முடித்தான்; போர்க்களத்தை அடைந்தான். நோக்கினான் கண்டான்; பண்டுஇவ் வுலகங்கள் படைக்க நோற்றான் வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும் தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான். 1 மருத்து மலைப் படலம்: மருத்து மலை - மருந்து மலை. அனுமான் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டு வந்து பிரமாஸ்திரத்தால் இறந்தவர்களை யெல்லாம் எழுப்பி யதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. நோற்றான் - தவம் செய்தவனாகிய பிரம்மனுடைய. வாக்கினால் - சாபத்தினால். தாக்கினார் - தாக்கப்பட்டவர் களாய் எல்லாம் பட்ட தன்மையை - எல்லோரும் இறந்து கிடந்த இயல்பை. நோக்கினான் கண்டான் - நேரே கண்டான். தேக்கினான் என்ன - உண்டபின் என்று சொல்லும்படி. விளைந்தவாறு உணர்கி லாதான் ஏங்கினான், வெதும்பி னான்மெய் உளைந்துஉளைந்து உயிர்த்தான்; ஆவி, உண்டு,இலை, என்ன ஓர்ந்தான்; வளைந்துபேய்க் கணமும், நாயும், நரிகளும் இரிய வந்தான்; இளைங்களி றோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். 2 2. மேல் உளைந்து உளைந்து - மேலும் வருந்தி வருந்தி. இரிய - ஓடும்படி. வந்தான் - வந்த வீடணன். இளங்களிறு - இலக்குவன். ஆயினும், `இவருக் கில்லை அழிவு’எனும் அதனால் ஆவி போயினது இல்லை; வாயால் புலம்பலன்; பொருமிப் பொங்கித் தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன், தெரிய நோக்கி; `நாயகன் மேனிக் கில்லை வடு’என நடுக்கம் தீர்ந்தான். 3 3. அதனால் - அந்த நம்பிக்கையினால். தெரியலான் - முதலில் உண்மையை உணராதவனாயிருந்து பின்னர். தெரிய நோக்கி - ஆராய்ந்து பார்த்து. `நான்முகன் படையால் தான் இது நேர்ந்தது’ என்று உணர்ந்த வீடணன், ஒரு கொள்ளிக் கட்டையைக் கையில் கொண்டு தனக்குத் துணையாவாரைத் தேடிச் சென்றான்; அனுமனைக் கண்டான். வாய்மடித்து, இரண்டு கையும் முறுக்கித்,தன் வயிரச் செங்கண் தீஉகக், கனகக், குன்றின் திரண்டதோள் மழையைத் தீண்ட, ஆயிர கோடி யானைப் பெரும்பிணத்து அமளி மேலான், காய்சினத்து அனுமன் என்னும் கடல்கடந் தானைக் கண்டான். 4 4. திரண்ட தோள் மழையைத் தீண்ட - குவிந்த தோள்கள் மேக மண்டலத்தைத் தொடும்படி. அமளிமேலான் - படுக்கையின் மேலே கிடக்கின்ற. கண்டு,தன் கண்க ளூடு மழைஎனக் கலுழி வார, `உண்டுஉயிர் என்பது உன்னி, உடல்களை, ஒன்றுஒன் றாக விண்டநீர்ப் புண்ணின் நின்று மெல்என வாங்கிக், கையால் கொண்டல்நீர் கொணர்ந்து கோல முகத்தினைக் குளிரச் செய்தான். 5 5. கண்டு - அனுமானைக் கண்டு, கலுழி வார - கண்ணீர் வெள்ளம் ஒழுக. உன்னி - நினைத்து. விண்ட நீர் புண்ணினின்றும் - வெளிவருகின்ற இரத்த நீரையுடைய புண்களிலிருந்து. கொண்டல் நீர் - மேகத்திலிருந்து பிழிந்தநீரை. உயிர்ப்புமுன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்க்க, ஊடு வியர்ப்புள தாகக், கண்கள் விழித்தன, மேனி மெல்லப் பெயர்த்துவாய் புனல்வந்து ஊற, விக்கலும் பிறந்த தாக, அயர்த்திலன், இராமன் நாமம் வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். 6 6. ஊடு வியர்ப்பு உளது ஆக - இதனிடையே வியர்வை தோன்றியதாக. பெயர்த்து - அசைத்து. அயர்த்திலன் - மறவாதவனாய். அழுகையோடு உவகை யுற்ற வீடணன், ஆர்வம் கூரத் தழுவினன், அவனைத் தானும் அன்பொடு தழுவித் `தக்கோய் வழுவிலன் அன்றே வள்ளல்’ என்றனன்; `வலியன் என்றான்; தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான் 7 7. தானும் - அனுமான்தானும் வழுவிலன் - தீங்கில்லா தவன். வலியன் - நன்றாக இருக்கின்றான். இருவரும் இராமன் நிலையைக் கண்டு வருந்தினர். அவர்கள் சாம்பனைத் தேடிச் சென்று கண்டனர். சாம்பன் உயிர்த் தெழுந்தான். அவன், இராமனும் படைகளும் பிழைக்க உடனே சஞ்சீவி மலையைக் கொணரும்படி மாருதியிடம் உரைத்தான். `மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும், மெய்வேறு வகிர்க ளாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒருமருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும். மீண்டேயும் தம்உருவே அருளுவதோர் மெய்மருந்தும் உள;நீ வீர! ஆண்டுஏகிக் கொணர்தி;’என அடையாளத் தொடும்உரைத்தான் அறிவின் மிக்கான. 8 8. மெய் வேறு வகிர்களாக - உடம்பு வேறு வேறு பிளப்புக்களாக. கீண்டாலும் - பிளந்தாலும். படைக்கலங்கள் - உடம்புள் மறைந்த ஆயுதங்களை. கிளர்ப்பது ஒன்றும் - வெளிப்படுத்துவதாகிய மருந்து ஒன்றும். அறிவின் மிக்கான் - சாம்பவான். மேரு மலைக்குப் பதினையாயிரம் யோசனைக்கு அப்பால் உள்ள சஞ்சீவி மலையை நோக்கி அனுமான் புறப்பபடுதல் எண்ணுக்கும் அளவி லாத அறிவினோர் இருந்து நோக்கும் கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான்; மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும் விண்ணுக்கும் அளவை யான மேருவின் மீது சென்றான். 9 9. எண்ணுக்கும் - யாருடைய மனத்துக்கும். அளவு இலாத - அளந்தறிய முடியாத. கடியன் ஆனான் - காணமுடியாத வேகத்தையுடைய வனானான். அளவை ஆய - அளக்கும் கருவியாக நிற்கின்ற. அன்னமா மலையின் உம்பர், உலகெலாம் அமைத்த அண்ணல் நன்னகர் அதனை நோக்கி, அதன்நடு நாப்பண், நாமப் பொன்மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும் தன்மையும் கண்டு, கையால் வணங்கினான் தருமம் போல்வான். 10 10. அதன் நடு நாப்பண் - அதன் நடுவான இடத்திலே. நாமப்பொன் மலர்ப் பீடந்தன் மேல் - சிறந்த அழகிய தாமரை மலர்ப் பீடத்திலே. தருவனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கித் தாழப், பொருவது முனிவர் வேதம் புகழ்ந்துரை ஓதை பொங்க, மருவிரி துளவ மோலி, மாநிலக் கிழத்தி யோடும் திருவொடும், இருந்த மூலத் தேவையும் வணக்கம் செய்தான். 11 11. தருவனம் ஒன்றில் - மரங்கள் அடர்ந்த காடு ஒன்றிலே. வானோர் தலைத்தலை மயங்கித்தாழ - தேவர்கள் ஒவ்வொரு வரும் தம் உணர்வு குறைந்து வணங்கவும். மருவிரி துளவமோலி - மணங்கமழ்கின்ற துளசி மாலையை அணிந்த முடியோடு. மாநிலக் கிழத்தியோடு - பூமா தேவியோடும். மூலத்தேவையும் - ஆதிமூலத் தெய்வத்தையும். ஆயதன் வடகீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி, ஐந்து கதிர்முகக் கமலம் காட்டித் தூயபேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த, சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான். 12 12. அருக்கர் ஆன்ற - சூரியர்களிடத்திலே நிறைந்த. காய் கதிர்பரப்பி - இருளையோட்டும் ஒளியைப் பரப்பிக்கொண்டு. ஐந்து கதிர் முகம் கமலம் காட்டி - ஐந்து ஒளி பொருந்திய முகத்தாமரைகளைக் காட்டிக் கொண்டு. தூவிய மலரின் சூழ்ந்த - அருச்சித்த மலர்கள் சூழப்பட்டிருந்த. ஒருவனை - சிவபெருமானை. இந்திரன் இருக்கும் இடம், எண்திசைக் காவலர்கள். உத்தர துருவம் இவைகளைக் கண்டான். தெற்கே இருளிருக்கும் போது வடக்கே பகலாயிருக்கும் என்பதைத் துருவத்தில் கண்டான். சுவர்க்கக் காட்சி வன்னிநாட் டியபொன் மௌலி வானவன், மலரின் மேலான், கன்னிநாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா வினோதன் தெய்வப் பொன்னிநாட்டு உவம வைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான். 13 13. வன்னி நாட்டிய பொன் மௌலி - நெருப்பை நாட்டியது போன்ற பொன்னிறமுள்ள சடை முடியை உடைய. வானவன் - சிவபெருமான் .நாள் கன்னி திருவைச் சேர்ந்த - என்றும் அழகு மாறாத இலக்குமியை மார்பிலே கொண்ட. கண்ணன் - திருமால். ஆளும் காணி - ஆட்சிபுரியும் இடமான. சென்னி - சோழன். நாள் தெரியல் வீரன் - புதிய மலர் மாலையை அணிந்த வீரன். பொன்னி - காவிரி. நீலமால் வரையைத் தாண்டி சஞ்சீவி மலையைக் கண்டு பாய்தல் பாய்ந்தனன் பாய்த லோடும் அம்மலை பாத லத்துச் சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன; தடுத்து வந்து காய்ந்தன; நீதான் யாவன்? கருத்துஎன் கொல்? கழறு கென்ன ஆய்ந்தவன் உற்ற தெல்லாம் அவற்றினுக்கு அறியச் சொன்னான். 14 14. காக்கும் தெய்வம் - மருந்துகளைக் காவல்காக்கும் தெய்வங்கள். சலித்தன - சோர்வுற்றன. காய்ந்தன - சிவந்தன. ஆய்ந்தவன் - எல்லா நூல்களையும் ஆராய்ந்து அறிவு நிரம்பிய வனாகிய அனுமான். உற்றதன்மை - தான் வந்த விதத்தை. தெய்வங்கள் மாருதியைத் தடுக்க வில்லை; மருந்தைக் காத்திருந்த சக்கராயுதமும் விலகியது. அப்பொழுது அவன் செய்த செயலாவது. இங்குநின்று இன்னன மருந்துஎன்று எண்ணினால், சிங்கும்ஆல் காலம்;என்று, உணர்ந்த சிந்தையான், அங்கது வேரொடும் அங்கை தாங்கினான், பொங்குநல் விசும்பிடைக் கடிது போகுவான். 15 15. இங்கு நின்று - இங்கு நின்று கொண்டு. இன்னனமருந்து - இன்ன இன்ன மருந்துகள்தாம் நமக்கு வேண்டியவை என்று. காலம் சிங்கும் - காலம் கடந்து விடும். அங்கு அது - அப்பொழுது அந்த மலையை. இச்சமயத்திலே போர்க்களத்தில் சோர்ந்து கிடந்த இராமனுடைய பாதங்களை வீடணனும் சாம்பனும் வருடினர். அவன் கண் விழித்தான். இருவரையும் கண்டு களித்தான். இராமன் துயரம் `அய்யன்மீர்! நமக்குஉள்ள அழிவுஇது ஆதலின் செய்வகை பிறிதுஇலை; உயிரின் தீர்ந்தவர் உய்கிலர்; இனிச்செயற்கு உரியது உண்டுஎனின் பொய்யிலீர் புகலுதிர்! புலமை உள்ளத்தீர்!’ 16 16. -. `சீதைஎன்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை யாதுஎன உணர்த்துகேன்! உலகொடு இவ்வுறாக் காதைவன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன்.’ 17 17. உலகொடு இவ்வுறா - உலகத்தோடு இங்கே பொருந்தாத. காதை - என்கதையை. வன்பழியொடும் - அழியாத பழியுடன். நிறுத்திக் காட்டினேன் - நிலைபெறும்படி செய்து வைத்தேன். `மாயையிம் மான்என எம்பி வாய்மையால் தூயன உறுதிகள் சொன்ன சோற்கொளேன்! போயினென்; பெண்உரை மறாது போனதால், ஆயதுஇப் பழியுடை மரணம்; அன்பினீர்!’ 18 18. மாயையிம் மான் - வஞ்சகத்தால் வந்தது இந்த மான். வாய்மையால் - உண்மையுடன். தூயன உறுதிகள்சொன்ன - தூயனவாகவும் நன்மைகளாகவும் சொன்ன. `கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால் மண்டமர் புரிந்தனென், வலியின்; ஆர்உயிர் கொண்டிலன், உறவுஎலாம் கொடுத்து மாளநான் பண்டுஉடைத் தீவினை பயந்த பண்பினால். 19 19. உறவுஎலாம் மாளக் கொடுத்து - உறவினர் எல்லாரையும் இறக்கும்படி பறிகொடுத்து. நான் - நின்ற நான். தேவர்தம் படைக்கலம் தொடுத்துத் தீயவன் சாவது காண்டும்;என்று இளவல் சாற்றவும் ஆவதை இசைத்திலென்; அழிவது என்வயின் மேவுதல் உறுவதுஓர் விதியின் வெம்மையால். 20 20. என்வயின் - என்பால். அழிவது மேவுதல் உறுவது ஓர் - ஒழிவதைப் பொருந்தி வருகின்றதாகிய ஒரு. விதியின் வெம்மையால் - விதியின் கொடுமையால். `இளையவன் இறந்தபின் எவரும் என்?எனக்கு அளவறு கீர்த்திஎன்? அறம்என்? ஆண்மைஎன்? கிளையுறு சுற்றம்என்? அரசுஎன்? கேண்மைஎன்? விளைவுதான் என்?மறை விதிஎன்? மெய்ம்மைஎன்?’ 21 21. எவரும்என் - யாரால்தான் என்ன பயன்? கேண்மை - நட்பு. விளைவுதான் என் - நன்மை விளைவதனால்தான் என்ன பயன்? `தாதையை இழந்தபின், சடாயு இற்றபின், காதல்இன் துணைவரும் மடியக், காத்துஉழல் கோதுஅறு தம்பியும் விளியக், கோள்இலன் சீதையை உகந்துளான் என்பர் சீரியோர்.’ 22 22. சீரியோர் - அறிவு ஒழுக்கங்களிலே சிறந்தவர்கள். கோள் இலன் - சிறந்த கொள்கையற்றவன். இவ்வாறு வருந்தி `நான் உயிர் துறப்பேன்’ என்ற இராமனுக்குச் சாம்பன் உரைத்தது. `பெருந்திறல் அனுமன்ஈண்டு உணர்வு பெற்றுளான்; அரும்துயர் முடிக்குறும் அளவில் ஆற்றலான்; மருந்துஇறைப் பொழுதினில் கொணர்கு வாய்எனப் பொருந்தினன்; வடதிசை கடிது போயினான். 23 23. மருந்து இறைப் பொழுதினி - சஞ்சீவி மருந்தைச் சிறிது நேரத்திலே. பொருந்தினவன் - அதற்குச் சம்மதித்தவனாய். `ஆர்கலி கடைந்தநாள் அமுதின் வந்தன; கார்நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன; மேருவின் உத்தர குருவின் மேல்உள; யாரும்உற்று அணுகிலா அரணம் எய்தின.’ 24 24. காப்பன - காக்கப்படுவன. மேருவின் உத்தர குருவின்மேல் உள - மேரு மலைக்கும் வடக்கே குருநாட்டிற்கும் அப்பால் உள்ளன. யாரும் உற்று அணுகிலா - யாரும் சென்று சேர முடியாத. அரணம் - காப்பு. `சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்உறப் பொருத்துவது ஒன்று; போயின நல்உயிர் நல்குவது ஒன்று; நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று; தொல்லையோய்!’ 25 25. தொல்லையோய் - பழமையானவனே. சல்லியம் - உடலுக்குள் புகுந்திருக்கும் ஆயுதங்களை. சந்துகள் புல்உற - பிளவுகள் பொருந்தும்படி. நல்நிறம் தொல்லையது ஆக்குவது - நல்ல உடம்பை முன் போலவே செய்வது. இச்சமயத்தில் அனுமான் சஞ்சீவி மலையுடன் வந்து, மலையை வானத்தில் நிறுத்தி, அவன் மட்டும் நிலத்தில் இறங்கினன். அனைவரும் உயிர் பெற்று எழுதல் காற்றுவந்து அசைத்தலும், கடவுள் நாட்டவர் போற்றினர்; விருந்துவந்து இருந்த புண்ணியர் ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்; கூற்றினை வென்றுதம் உருவும் கூடினார். 26 26. கடவுள் நாட்டவர் - தேவர்கள். விருந்து வந்திருந்த புண்ணியர் - இவ்வுலகுக்கு விருந்தாக வந்திருந்த தேவர்களாகிய வானவர்கள். ஏற்றம் - மேன்மை. `அரக்கர்தம் யாக்கைகள் அழிவில் ஆழியில் கரக்கல்உற்று ஒழிந்தன ஒழியக், கண்டன மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; குரக்கினம் உய்ந்தது கூற வேண்டுமோ?’ 27 27. கரக்கல்உற்று ஒழிந்தன - மறைந்து உயிர் பெறாமல் போயினவாகிய. ஒழிய - அவைகளைத் தவிர. கண்டன மரக்கலம் முதலனவும் - காணப்பட்ட மரக்கலங்களில் உள்ள பிணங்கள் முதலியவைகளும். உய்ந்து வாழ்ந்தன - உயிர் பெற்று வாழ்ந்தன. ஓங்கிய தம்பியை உயிர்வந்து, உள்ளுற வீங்கிய தோள்களால் தழுவி, வெம்துயர் நீங்கினன் இராமனும்; உலகின் நின்றில தீங்கு;உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். 28 28. உயிர் வந்து ஓங்கிய தம்பியை - உயிர் பெற்று எழுந்த தம்பியை. உள்உற வீங்கிய தோள்களால் - மனத்திலே மகிழ்சசி தோன்ற அதனால் பூரித்த தோள்களால். மறுக்கம் - துன்பம். நான்முகன்படை இராமனை வணங்கிச் செல்ல, இராமன் அனுமனைத் தழுவி, மகிழ்ந்து, கூறுகின்றான். `அழியும் கால்தரும் உதவிக்கு ஐயனே! மொழியுங் கால்தரும் உயிரும் முற்றுமே; பழியும் காத்து,அரும் பகையும் காத்து,எமை வழியும் காத்தனை, மறையும் காத்தனை.’ 29 29. ஐயனே அழியும்கால் தரும் உதவிக்கு - உயிர் போகும் போது செய்யும் உதவிக்கு எதிராக. மொழியுங்கால் - சொல்லுங்கால். தரும் உயிரும் முற்றும் ஏ - கொடுக்கின்ற உயிரினாலும ஈடு செய்ய முடியுமோ. வழியும் - குலத்தையும். `இன்று வீகலாது, எவரும் எம்முடன் நின்று வாழுமா நெடிது நல்கினாய்! ஒன்றும் இன்னல்நோய் உறுகி லாதுநீ என்றும் வாழ்தியால்! இனிதுஎன் ஏவலால்.’ 30 30. இன்று வீகலாது - இன்று மாண்டு போகாமல். நெடிது நல்கினாய்- பேருதவி புரிந்தாய். அனுமனை அனைவரும் வாழ்த்துதல் மற்றை யோர்களும் அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார், பிறந்த காதலார், சுற்றும் மேயினார்; தொழுது வாழ்த்தினார்; உற்ற ஆறுஎலாம் உணரக் கூறினான். 31 31. வண்மையால் - கொடைத் தன்மையால். பிறந்த காதலர் - தோன்றிய பிரியாத அன்புள்ளவர்களாய். சுற்றும் மேயினார் - சுற்றிலும் வந்து சூழ்ந்தனர். உற்ற ஆறு எலாம் - நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம். சாம்பன் `சஞ்சீவிமலையை அதன் இடத்திலேயே சேர்த்து விடுக’ என்று அனுமானிடம் மொழிந்தான். அவன் அதை எடுத்துக் கொண்டு வடதிசை நோக்கிச் சென்றான். 25. களியாட்டுப் படலம் இன்னதுஇத் தலைய தாக; இராவணன் எழுந்து பொங்கித் தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம் கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக் கன்னிநல் மயில் அனாரை நெடும்களி ஆட்டம்கண்டான். 1 களியாட்டுப் படலம்: படை வீரர்கள் விருந்துண்டு களித்துக் கூத்தாடுவதற்கு இராவணன் செய்த ஏற்பாட்டைப் பற்றிக் கூறும் பகுதி. 1. எழுந்து பொங்கி - எழுந்து ஊக்கம் மிகுந்து. சமைத்த கீதம் - அமைக்கப்பட்ட சங்கீதத்தை. கெண்டை - கெண்டை மீனாகிய கண்களையுடைய. களியாட்டம் - கள்ளுண்டு ஆடும் ஆட்டம். அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர், குரும்பைஅம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர், கோதுஇல் கரும்பினும் இனிய சொல்லார் சித்தர்தம் கன்னி மார்கள் வரம்புஅறு சும்மை யோர்கள் மயில்குலம் மருள வந்தார். 2 2. வரம்பு அறு சும்மையோர்கள் - அளவற்ற கூட்ட மானவர்கள். மருள - மயங்கும்படி. நற்பெரும் கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி, முற்பயம் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றிப் பிற்பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால் வஞ்சன் செய்த கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம். 3 3. கல்விச் செல்வம் - கல்வியாகிய செல்வத்தால். நவை அறு நெறியை நண்ணி - நல் வழியிலே ஒழுகி. முன்பயன் அறிந்த - மேலே நிகழப்போகும் பயனை அறிந்த. பழகி - பொருந்தி. முற்றி - அறிவு முதிர்ந்து. பின்பயன் உணர்தல் தேற்றா - பின்னால் வரும் பயனை அறிந்து கொள்ளாத. கற்பனை என்ன - ஏமாற்றச் செய்கையைப்போல. கோத்தமே கலையி னோடும் துகில்மணிக், குறங்கைக் கூடக், காத்தன கூந்தல் கற்றை, அற்றம்அத் தன்மை கண்டு, வேத்தவை `கீழ்உ ளோர்கள் கீழ்மையே விளைத்தார், மேலாம் சீர்த்தவர், செய்யத் தக்க கருமமே செய்தார்’ என்ன. 4 4. துகில் - ஆடை. குறங்கைக் கூட - நழுவித் துடையில் சேர. அற்றம் - மானத்தை. `கூந்தலை கற்றை அத்தன்மை கண்டு அற்றம் காத்தன’ வேத்தவை - அரச சபையிலே. அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல்நின் றாரைத் தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி ஒருவர்மேல் ஒருவர் புக்கு முழுகுவர், குருதி வாட்கண் முகிழ்த்துஇடை மூரி போவர். 5 5. துவர்வாய் - சிவந்த வாய். ஒல்கிஒல்கி - தளர்ந்து தளர்ந்து. மூரி போவர் - சோம்பல் முறிப்பார்கள். இப்பாடல் குடித்தோர் நிலை கூறிற்று. மாப்பிறழ் நோக்கி னார்தம் மணிநெடும் குவளை வாட்கண் சேப்புற, அரத்தச் செவ்வாய்ச் செங்கிடை வெண்மை சேர, காப்புறு படைக்கைக் கள்வ நிருதர்க்கோர் இறுதி காட்டி, பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்ததுஓர் பழனம் போன்ற. 6 6. மா பிறழ் - மான் கண்ணைப் போல் பிறழ்கின்ற. சேப்புஉற - செம்மை நிறம் அடைய. அரத்தம் - பவளம். செம்கிடை - நல்ல நெட்டி. பூ பிறழ்ந்து - பூக்களின் நிறம் மாறி. மாதர் கூட்டம் பூத்த வயலுக்கு ஒப்பு. வானரப் படையின் ஆர்ப்பொலி கேட்டல் முத்தன்மை மொழியல் ஆகா முகிழ்இள முறுவல் நல்லார், இத்தன்மை எய்தல் நோக்கி, அரசுவீற்று இருந்த எல்லை, அத்தன்மை யஅரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை மத்தன்மெய் மயங்க வந்து செவிதொறும் மடுத்தது; அன்றே. 7 7. முத்து அன்மை மொழியல் ஆகா - முத்து அல்லாத மற்றொன்றை உவமையாகச் சொல்ல முடியாத. முகிழ் - காணப்படும். மத்தன் - காமப் பைத்தியனாகிய அவனுடைய. மெய் மயங்க - உடல் சோர்வடையும்படி. மடுத்தது அன்றே - நுழைந்தது. ஆடலும், களிப்பின் வந்த அமலையும், அமுதின் ஆன்ற பாடலும், முழவின் தெய்வப் பாணியும் பவள வாயார் ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலைவெவ் உரையும் எல்லாம் வாடல்மெல் மலரே ஒத்த; ஆர்ப்பொலி வருத லோடும். 8 8. அமலையும் - ஆரவாரமும். முழவின் தெய்வப் பாணியும் - முழவென்னும் வாத்தியத்தின் தெய்வத்தன்மையுள்ள ஓசையும். வாடல் - வாடிப்போன. முத்தம்வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக்கண் வேலால் குத்துவார் கூட்டம் எல்லாம் வானரக் குழுவில் தோன்ற, மத்துவார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும் பத்துவாள் மதிக்கும் அந்நாள் பகல்ஒத்தது இரவு பண்பால். 9 9. கூட்டம் எல்லாம் - பெண்கள் கூட்டம் எல்லாம். உள்ளம் மறுகுற - மனங் கலங்க. வாள்மதிக்கும் - ஒளி பொருந்திய சந்திரர்களுக்கும். இரவு அந்நாள் பண்பால் பகல் ஒத்தது - இரவாகிய அந்த நாள். தன்மையால் பகல் போன்று இருந்தது. தூதர்களால் இராவணன், வானரப்படைகள் பிழைத்ததை உணர்தல் ஈதுஇடை யாக வந்தார், அலங்கல்மீது ஏறி னார்போல் ஊதினார், வேய்கள் வண்டின் உருவினார், உற்ற எல்லாம்; `தீதிலர் பகைஞர்’ எண்ணத் திக்கென்ற மனத்தன், தெய்வப் போதுகு பந்தர் நின்று மந்திரத்து இருக்கை புக்கான். 10 10. ஈதுஇடையாக - இச்சமயத்திலே. வண்டின் உருவினார் வேய்கள் - வண்டுருவாக ஒற்றர்கள். ஊதினார் - காதிலே ஊதினார்கள். தெய்வப் போதுஉகு - கற்பக மலர்கள் சிந்துகின்ற. மந்திரத்து இருக்கை - மந்திராலோசனை செய்யும் இடம். 26. மாயா சீதைப் படலம் இராவணன் மந்திராலோசனை மைந்தனும், மற்று ளோரும், மகோதரப் பெயரி னானும் தந்திரத் தலைமை யோரும், முதியரும், தழுவத் தக்க மந்திரர் எவரும் வந்து மருங்குறப் படர்ந்தார்; பட்ட அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். 1 மாயா சீதைப் படலம்: பொய்ச் சீதை ஒருத்தியை உண்டாக்கி, அவளை இந்திரசித்தன் அனுமான் எதிரிலே கொன்றதைப்பற்றிக் கூறும் பகுதி. 1. தந்திரத் தலைமையோர் - சேனைத்தலைவர்கள். தழுவத்தக்க - சேர்த்துக்கொள்ளத் தகுந்த. மந்திரர் எவரும் - மந்திராலோசனைக்குரியவராய் உள்ள எல்லோரும். அந்தரம் முழுதும் - துன்பங்களை யெல்லாம். மாலியவான் அறிவுரை `நம்கிளை உலந்த தெல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே வெம்கொடும் தீமை தன்னால் வேலையில் இட்டி லோமேல்; இங்குள எல்லாம் மாள்தற்கு இனிவரும் இடையூறு இல்லைப் பங்கயத்து அண்ணல் மீளாப் படைபழுது உற்ற பண்பால்.’ 2 2. வேலையில் இட்டிலோ மேல் - கடலில் போடாம லிருந்தால். உலந்த - இறந்த. பங்கயத்து அண்ணல் மீளாப் படை - பிரமாத்திரம். `இலங்கையின் நின்று? மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து, வலம்கிளர் மருந்து? நின்ற மலையொடும் கொணர வல்லான், அலங்கல்அம் தடந்தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் கலங்கல்இல் உலகுக் கெல்லாம் காரணம் கண்ட ஆற்றால்.’ 3 3. உலகுக்கெல்லாம் - உலகத்திற்கெல்லாம். கலங்கல் இல் - அழியாமலிருக்கின்ற. காரணம் - மருந்தாகிய காரணத்தை. கண்ட ஆற்றால் - கண்டு கொண்டு வந்த விதத்தினால். `நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையா நின்ற குன்றைப் பாரினில் கிழிய வீசின் ஆர்உளர் பிழைக்கல் பாலார்? போரினில் பொருவது எங்கே? போயின அனுமன் பொன்மா மேருவைக் கொணர்ந்துஇவ் வூர்மேல் இடும்எனின் விலக்கல் ஆமோ?’ 4 4. இலங்கையா நின்ற குன்றை - இலங்கையாக நின்ற இத்திரிகூட மலையை. நீரினைக் கடக்க வாங்கி - கடலை விட்டுப் பெயர்த்து எடுத்து. `இறந்தனர் இறந்து தீர; இனிஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உள்ளோம்; உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி மறந்தனம் எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து,அவ் அறம்தரு சிந்தை யோரை அடைக்கலம் புகுதும் ஐயா!’ 5 5. இறந்தனர் இறந்து தீர - மாண்டனர் மாண்டவர்களாகவே போகட்டும். இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் - இனி வேறு ஒரு பிறவியிலே வந்து பிறந்தாரைப் போல ஆவோமாயின். உள்ளோம் - உயிருடன் உள்ளவராவோம். `வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி வேலையை வென்று கும்ப கருணனை வீட்டி னானை, ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார்? சூலியைப் பொருப்பி னோடும் தூக்கிய விசயத் தோளாய்!’ 6 6. ஆலியின் - மழையின். மொக்குள் - குமிழி. நீர்க்குமிழி அரக்கர்க்கு உவமை. சூலி - பரமசிவன்; சூலாயுதத்தை உடையவன் சூலி. `மறிகடல் குடித்து, வானம் மண்ணொடும் பறிக்க வல்ல, எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும், சிறுவனும், நீயும் அல்லால் யார்உளர் ஒருவர்? தீர்ந்தார்; வெறிதுநம் வென்றி’ என்றான் மாலி,மேல் விளைவது ஓர்வான். 7 7. மறிகடல் - மடங்கி வீழ்கின்ற கடல் நீரை. சிறுவனும் - இந்திர சித்தும். தீர்ந்தார் - மற்றவர்கள் ஒழிந்தனர். நம்வென்றி வெறிது - நமக்கு வெற்றி உண்டுஎன்பது வெறும் பேச்சு. இராவணன் கோபித்துக் கூறுதல் கட்டுரை அதனைக் கேளா, கண்எரி கதுவ நோக்கிப் `பட்டனர் அரக்கர் என்னில், படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது;நல் கிளிஅன் னாளை விட்டிட எண்ணி யோநான் பிடித்தது வேட்கை வீய?’ 8 8. கண்எரி கதுவ நோக்கி - கண்களில் தீப்பற்றும்படி பார்த்து. அரக்கர் பட்டனர் என்னில் - அரக்கர்கள் அழிந்தனராயினும். `மைந்தன்என்? மற்றை யோர்என்? அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்! உய்ந்துநீர் போவீர்! நாளை ஊழிவெம் தீயின் ஓங்கிச் சிந்தினென் மனித்த ரோடுஅக் குரங்கினைத் தீர்ப்பென்’ என்றான் வெம்திறல் அரக்கர் வேந்தன்; மகன்இவை விளம்பல் உற்றான். 9 9. நீர் உய்ந்து போவீர் - நீங்கள் பிழைத்துப் போங்கள். ஓங்கி - புறப்பட்டுப் போய். சிந்தினென் - கணைகளைச் சிந்தி. வேந்தன் மகன் - இந்திரசித்து. இந்திரசித்தன் கூற்று உளதுநான் உணர்த்தல் பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்; தளமலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி அளவிலது அமைய விட்டது, இராமனை நீக்கி அன்றால்; விளைவுஇலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா. 10 10. உணர்ந்தனை கோடல் உண்டேல் - உணர்ந்து கொள்வாயானால். நான் உணர்த்தல்பாலது உளது - நான் உணர்த்தக்கூடியது உண்டு. தளமலர்க்கிழவன் - பிரமன். `மானிடன் அல்லன்! தொல்லை வானவன் அல்லன்; மற்று மேல்நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யில் சொன்ன, யான்எனது எண்ணல் தீர்ந்தார் எண்உறும் ஒருவன், என்றே, தேன்நகு தெரியல் மன்னா சேகுஅறத் தெரிந்தது அன்றே.’ 11 11. மேல் நிமிர் - மேன்மை பொருந்திய. யான் எனது எண்ணல் தீர்ந்தார் - நான், என்னுடையது என்னும் நினைப்பு நீங்கியவர்களால். சேகுஅற - குற்றமற்ற. நிகும்பலை வேள்வி செய்து அவர்களை அழிப்பேன் எனல் `அனையது பிறவும் நிற்க, அன்னது பகர்தல் ஆண்மை வினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க வீர! இனையல்நீ! மூண்டு யான்போய் நிகும்பலை விரைவின் எய்தித் துனிஅறு வேள்வி வல்லைத் தொடங்கினால் முடியும் துன்பம்.’ 12 12. ஆண்மை வினையன அன்று - வீரச் செயல்கள் அல்ல. மூண்டுயான் போய் - விரைந்து யான் சென்று. துனிஅறு - துன்பந் தீர்க்கும். இராவணனும் இசைந்தான். “ஒரு மாயச் சீதையைக் கொண்டு போய் அவர்கள் முன் வெட்டிக் கொல்ல வேண்டும்; அயோத்தியில் உள்ளாரையும் அழிக்கப் போகின்றோம் என்று போக்குக் காட்ட வேண்டும்; அவர்கள் அயோத்திக்குப் புறப்படு வார்கள்; இதற்குள் நான் வேள்வியை முடித்து விடுவேன்.” என்றான் இந்திரசித்தன். இவ்வமயம், சுக்கிரீவன், இராமன் அனுமதிபெற்று, இலங்கையைச் சுட்டெரிக்கும் படி வானரங்களைப் பணித்தான் .அவைகள் கொள்ளிக் கட்டைகளால் இலங்கையைக் கொளுத்திக் கொண்டிருந்தன. சஞ்சீவி மலையை அதனிடத்தில் வைத்துத் திரும்பிய மாருதி மாயா சீதையைக் காணுதல் மேற்றிசை வாயிலை மேவிய வெம்கண் காற்றின் மகன்தனை, வந்து கலந்தான், மாற்றல்இல் மாயை வகுக்கும் வலத்தான், கூற்றையும் வென்றுஉயர் வட்டணை கொண்டான். 13 13. மாற்றல்இல் - மாற்ற முடியாத. உயர்வட்டணை கொண்டான் - பெரிய தாளமிட்டவனாகிய இந்திரசித்தன். வந்து கலந்தான் - வந்து எதிர்ப்பட்டான். சானகி ஆம்வகை கொண்டு சமைத்த, மான்அனை யாளை வடிக்குழல் பற்றா, ஊன்நகு வாள்,ஒரு கைக்கொடு உருத்தான் ஆனவன், இன்னன சொற்கள் அறைந்தான். 14 14. சமைத்து - செய்து. வடிக்குழல்பற்றா - தேன் வடிகின்ற கூந்தலைப் பிடித்து. ஊன் நகும் - மாமிசம் தோன்றும். உருத்தான் ஆனவன் - கோபித்தவனாகிய இந்திரசித்து. `வந்துஇவள் காரண மாக மலைந்தீர்! எந்தை இகழ்ந்தனன்; யான்இவள் ஆவி சிந்துவென்!’ என்று செறுத்துஉரை செய்தான்; அந்தம்இல் மாருதி அஞ்சி அயர்ந்தான். 15 15. செறுத்து உரை செய்தான் - கோபித்துக் கூறினான். அந்தம்இல் மாருதி - அது கேட்ட அழிவில்லாத அனுமான். அயர்ந்தான் - மனம் சோர்ந்தான். அனுமன் இரக்க மொழிகள் யாதும் இனிச்செயல் இல்என எண்ணா `நீதி உரைப்பது நேர்’என ஓராக் `கோதுஇல் குலத்துஒரு நீகுணம் மிக்காய்! மாதை ஒறுத்தல் வசைத்திறம் அன்றோ?’ 16 16. நீதி உரைப்பது - நீதி மொழி கூறுவதுதான். நேர்என ஓரா - சரியான வழியென்று நினைத்து. கோது இல்குலத்து - குற்றமற்ற குலத்திலே பிறந்த. `மண்குலை கின்றது; வானம் நடுங்கிக் கண்குலை கின்றது; காணுதி கண்ணால்! எண்குலை கின்றது; இரங்கல் துறந்தாய்! பெண்கொலை செய்கை பெரும்பழி அன்றோ?’ 17 17. மண்குலைகின்றது - மண் உலகில் உள்ளவர்களும் நடுங்குகின்றனர். வானமும் - வானில் உள்ளவர்களும். நடுங்கிக் கண்குலைகின்றது - பயந்து கண்கள் நடுங்குகின்றனர். எண் - எண்ணம். இந்திரசித்தன் இரக்கம் இன்றி மாயா சீதையை வெட்டிக் கொன்றான்; `அயோத்தியில் உள்ளாரையும் அழிக்கச் செல்கின்றேன்’ என்று சேனையுடன் புட்பக விமானத்தை வடதிசையில் ஓட்டிச் சென்றான். நிகும்பலையை அடைந்தான். அனுமான் அழுங்கல் `பெரும்சிறைக் கற்பி னாளைப் பெண்ணினைக் கண்ணிற் கொல்ல, இரும்சிறகு அற்ற புள்போல், யாதும்ஒன்று இயற்றல் ஆற்றேன், இரும்சிறை அழுந்து கின்றேன்; எம்பிரான் தேவி பட்ட அரும்சிறை மீட்ட வண்ணம் அழகிது! பெரிதும் அம்மா!’ 18 18. பெரும் சிறை - பெரிய சிறையிலே வைக்கப்பட்டிருந்த. கண்ணில் கொல்ல - கண் எதிரே கொல்லவும். இரும்சிறை - பெரிய சிறையிலே. `வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்னச் செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான், உள்ளம் தேற `அஞ்சொலாள் இருந்தாள்; கண்டேன்; என்றயான் `அரக்கன் கொல்லத் துஞ்சினாள்;’ என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈது;ஆல்.’ 19 19. துஞ்சினாள் - இறந்தாள். தோற்றம் ஈது - என் பிறவி இப்படி ஆயிற்று. ஆல்; அசை. `அரும்கடல் கடந்து,இவ் வூரை அள்எரி மடுத்து, வெள்ளக் கருங்கடல் கட்டி, மேருக் கடந்துஒரு மருந்து காட்டிக் குரங்குஇனி உன்னோடு ஒப்பார் இல்,எனக் களிப்புக் கொண்டேன்; பெரும்கடல் கோட்டம் தேய்த்தது ஆயதுஎன் அடிமைப் பெற்றி.’ 20 20. பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது - பெரிய கடலிலே கோட்டத் தைக் கரைத்துத் தேய்த்ததைப் போன்றது. அடிமைப் பெற்றி - அடிமையின் தன்மை. மாருதி இராமனை எய்திச் செய்தி கூறல் சிங்கஏறு அனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான்; அங்கமும், மனமும், கண்ணும் ஆவியும் அலக்கண் உற்றான்; பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடும் புரத்தைப் போர்ப்ப வெம்கணீர் அருவிசோர, மால்வரை என்ன வீழ்ந்தான். 21 21. வீரன் - வீரனாகிய இராமனுடைய. ஆவியும் அலக்கண் உற்றான் - உயிரும் துடிக்கும்படி துன்புற்றான். பொங்கிய பொருமல் வீங்கி - மிகுந்த துக்கம் எழுந்து. உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப - மூச்சையும் உடம்பையும் மூட. வீழ்ந்தவன் தன்னை வீரன், `விளைந்தது விளம்பு’ கென்னாத் தாழ்ந்துஇரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கி லாதான், `ஆழ்ந்தெழு துன்பத் தாளை, அரக்கன்,இன்று அயில்கொள் வாளால் போழ்ந்தனன்;’ என்னக் கூறிப் புரண்டனன் பொருமு கின்றான். 22 22. வீழ்ந்தவன் தன்னை - வீழ்ந்தவனாகிய அனுமானை நோக்கி. தரிக்கிலாதான் - துன்பந் தாங்க - முடியாத அனுமான். ஆழ்ந்தெழு துன்பத்தாளை - சீதையை. அரக்கன் - இந்திரசித்து. சீதையின் நிலைகேட்டு இராமன் முதலியோர் துக்கம் சித்திரத் தன்மை யுற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்; மித்திரர் வதனம் நோக்கான்! இளையவன் வினவப் பேசான்; பித்தரும் இறைபொ, றாத, பேர்,அபி மானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க, உயிர்இலன் என்னச் சாய்ந்தான். 23 23. பித்தரும் இறை பொறாத - பித்தர்களும் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாத. சத்திரம் - படைக்கலம். நாயகன் தன்மை கண்டும், தமக்குஉற்ற நாணம் பார்த்தும் ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும், வாயொடு, மனமும், கண்ணும், யாக்கையும் மயர்ந்து சாம்பித் தாயினை இழந்த கன்றில், தம்பியும் தவத்தன் ஆனான். 24 24. அயர்ந்து சாம்பி - தளர்ந்து ஒடுங்கி. கன்றில் - கன்றைப் போல. தவத்தன் ஆனான் - நிலத்திலே விழுந்து கிடந்தான். தொல்லையது உணரத் தக்க வீடணன் துளக்கம் உற்றான்; எல்லையில் துன்பம் ஊன்ற இடைஒன்றும் தெரிக்கி லாதான் `வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால் விளைந்தது என்னாக் கொல்வதும் அடுக்கும்’, என்று மனத்தின்ஓர் ஐயம் கொண்டான். 25 25. தொல்லையது - நடந்ததைப்பற்றி. உணரத்தக்க - அறியும் தகுதியுள்ள. துளக்கம் உற்றான் - நடுக்கம் அடைந்தான். கொல்வதும் அடுக்கும் - கொல்வதும் நடக்கக் கூடியதுதான். இராமன் மூர்ச்சை தெளிந்து எழுந்தபின் இலக்குவன் உரைத்தல் `தையலைக் கணையி லாளைத், தவத்தியைத், தருமக் கற்பின் செய்வதும் தன்னை, மற்றுன் தேவியைத், திருவைத், தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால், வேதனை உழப்பது இன்னும் உய்யவோ! கருணை யாலோ, தருமத்தோடு உறவும் உண்டோ?’ 26 26. வெய்யவன் - கொடியவனாகிய இத்திரசித்தன். உய்யவோ - வாழவோ. `அரக்கர்என்? அமரர் தாம்என்? அந்தணர் தாம்என்? அந்தக் குருக்கள்என்? முனிவர் தாம்என்? வேதத்தின் கொள்கை தான்என்? செருக்கினர் வலியர் ஆகி, நெறிநின்றார் சிதைவர் என்றால் இருக்கும்இது என்ஆம்? இம்மூன்று உலகையும் எரிம டாதே? 27 27. செருக்கினர் வலியர் ஆகி - கர்வம் கொண்டவர்கள் பலம் பெற்றவர்களாகி. நெறி நின்றார் சிதைவர் என்றால் - நன்னெறியிலே நின்றவர் அழிவார் என்றால். எரிமடாது - தீக்கு இரையாக்காமல். இருக்கும் இதுஎன் - சும்மா இருக்கின்ற இதனால் என்ன பயன்? `புக்குஇவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன திக்கெலாம் சுட்டு, வானோர் உலகெலாம் தீய்த்துத் தீர்க்கத் தக்கநாம் கண்ணீர் ஊற்றித் தலைசுமந்து இருகை நாற்றித் துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் அன்றே?’ 28 28. தீர்க்கத் தக்க நாம் - முடிக்கத் தக்க ஆற்றலுடைய நாம். கண்ணீர் ஆற்றி - கண்ணீர் விட்டு. தலை சுமந்து - தலையைக் கவிழ்ந்து சுமந்து. இருகை நாற்றி - இரண்டு கைகளையும் தொங்க விட்டுக் கொண்டு. சிறுமையாய் - இழிவாக. `அங்கும்இவ் அறமே நோக்கி, அரசுஇழந்து, அடவி எய்தி, மங்கையை வஞ்சன் பற்ற, வரம்புஅழி யாது வாழ்ந்தேம்! இங்கும்இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கிப், பொங்குவன் தளையில் பூட்டி ஆள்செயப் புகல்வர் அன்றே?’ 29 29. இருத்துமேல் - இருப்போமானால். எளிமை நோக்கி - நமது ஆற்றாமையைக் கண்டு. பொங்கு வன்தளையில் பூட்டி - பெரிய வலிய விலங்கினால் பூட்டி. ஆள்செய்ய - அடிமைவேலை செய்யும்படி. இவ்வமயம், சுக்கிரீவன் `நான் இராவணனைப் பழிவாங்குவேன்’ என்று இலங்கைமேல் பாயத் தொடங் கினான். உடனே மாருதி, இந்திரசித்தன் அயோத்தி நோக்கிப் புறப்பட்டதையும் கூறினான். இராமன் உறவினர்க்காக உள்ளம் வருந்துதல் அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று அனந்தர் நீங்கி எழுந்தனன் என்னத் துன்பக் கடலின்நின்று ஏறி ஆறாக் கொழுந்தறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட உழுந்துஉருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான். 30 30. துன்பக் கடலின் நின்றுஏறி - சீதையின் செய்தியால் நேர்ந்த துக்கக் கடலிலிருந்து கரையேறி. உழுந்து உருள் பொழுதும் - உளுந்து உருள்கின்ற அவ்வளவு சிறு பொழுதுகூட. மறுக்கம் உற்றான் - கலக்கம் அடைந்தான். `தீரும்இச் சீதை யோடும் என்கில தன்றுஎன் தீமை; வேரொடு முடிப்ப தாக விளைந்தது; வேறும் இன்னும் ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென்; அதனை ஐய! பேர்உறும் அவதி உண்டோ? எம்பியர் பிழைக்கின் றாரோ?’ 31 31. -. `தாதைக்கும், சடாயு வான தந்தைக்கும், தமியள் ஆய சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன் தீமை; பேதைப்பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழையி லாத காதல்தம் பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும், காட்டிற்று அன்றே?’ 32 32. `ஒருவன் தீமை தாதைக்கும்....தீர்ந்திலது’ காட்டிற்று - எமனைக் காட்டி விட்டது. அன்றே - அல்லவா? `மாகவான் நகரம் செல்ல, வல்லையன், வயிரத் தோளாய்! ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி! நின்ற எல்லாம் சாக;மற்று இலங்கைப் போரும் தவிர்க;அச் சழக்கன் கண்கள் காகம்உண் டதற்பின் மீண்டும் முடிப்பன்என் கருத்தை’ என்றான். 33 33. மாக வான் நகரம் செல்ல - சிறந்த பெரிய அயோத்தி நகரை அடைய. வல்லையின் - விரைவிலே. ஏகுவான் உபாயம் உண்டேல் - போவதற்கான தந்திரம் இருக்குமானால். இலக்குவன் பரதன் வீரத்தைப் பகர்தல் `தீக்கொண்ட வஞ்சன் வீசத் திசைமுகன் பாசம் தீண்ட வீக்கொண்டு வீழ யானோ பரதனும்? வெய்ய கூற்றைக் கூக்கொண்டு, குத்துண்டு, அன்னான் குலத்தொடும் நிலத்தன் ஆதல் போய்க்கண்டு கோடி அன்றே;’ என்றனன் புழுங்கு கின்றான். 34 34. வஞ்சன் - இந்திரசித்தன். வீக்கொண்டு வீழ - இறந்து விழுந்து விட. கூக் கொண்டு - கூவிக் கொண்டு. போய்க்கண்டு கோடி அன்றே - போய்ப் பார்த்துக் கொள்ளப் போகிறாய் அல்லவா? `நானே அயோத்தியில் சேர்ப்பnன்’ என்று அனுமான்வேண்ட, இராம இலக்குவர்கள், அவன் தோளில் ஏறத் துணிந்தபோது வீடணன் விளம்பியது `பத்தினி தன்னைத் தீண்டிப், பாதகன் படுத்த போது, முத்திறத்து உலகும் வெந்து, சாம்பராய் முடியும் அன்றே! இத்திறம் ஆன தேனும் அயோத்திமேல் போன வார்த்தை சித்திரம்; இதனை எல்லாம்தெரியலாம் சிறிது போழ்தின்.’ 35 35. படுத்தபோது - கொன்றபோது. அத்திறம் ஆனதேனும் - அவ்வாறு நடந்ததா யினும். சித்திரம் - வேடிக்கையாகும். `இமையிடை யாக, யான்போய் ஏந்திழை இருக்கை எய்தி, அமைவுற நோக்கி, உற்றது அறிந்துவந்து அறைந்த பின்னர்ச் சமைவது செய்வது ஒன்று;’ வீடணன் விளம்பத், `தக்கது, அமைவது;’ என்று இராமன்சொன்னான்; அந்தரத்து அவனும்சென்றான். 36 36. சமைவது ஒன்று செய்வது - ஏற்றது ஒன்றைச் செய்வதாகும். தக்கது - தகுந்தது. அமைவது - பொருத்தமானது. வீடணன் சீதையைக் காணல் வண்டினது உருவம் கொண்டான்; மானவன் மனத்தில் போனான்; தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே கண்டனன் என்ப மன்னோ, கண்களால், கருத்தா; ஆவி உண்டுஇலை என்னச் செய்த ஓவியம் ஒக்கின் றாளை. 37 37. மானவன் - இராமன். தானே - வீடணன் தானே. `கண்களால் கருத்தால் கண்டனன் என்பமன்னோ.’ இந்திரசித்தன் நிகும்பலைக்குச் சென்றதையும் வீடணன் அறிந்து திரும்புதல் `இருந்தனள் தேவி; யானே எதிர்ந்தனன் கண்க ளால்;நம் அருந்ததி கற்பி னாளுக்கு அழிவுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்; முருங்குஅழல் வேள்வி முற்றி முதல்அற முடிக்க மூண்டான்.’ 38 38. யானே கண்களால் எதிர்ந்தனென் - நானே என் கண்ணாரக் கண்டேன். முருங்கு அழல் - அழிக்கும் தீயினால். முதல்அற - நாம் அடியோடு அழியும்படி. மூண்டான் - போர் செய்து முடிக்க எண்ணினான். வானரப் படைகள் மகிழ்ச்சியடைய இராமன் வீடணனைப் புகழ்தல் வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன் தன்னை, மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, `ஐய! தீர்வது பொருளோ துன்பம்! நீஉளை; தெய்வம் உண்டு; மாருதி உளன்;நாம் செய்த தவம்உண்டு; வலியும் உண்டு;ஆல்.’ 39 39. துன்பம் தீர்வது பொருளோ - துன்பம் ஒழிவது ஒரு பெரிய காரியமோ. வீடணன் வேண்டுகோள் என்றலும் இறைஞ்சி `யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார்; வென்றியும் அரக்கர் மாடே; விடைஅருள்! இளவ லோடும் சென்றுஅவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பன்;’ என்றான் `நன்று!அது புரிதிர்!’ என்னா நாயகன் நவில்வது ஆனான். 40 40. அரக்கர்மாடே - அரக்கர் பக்கமே யாகும். 27. நிகும்பலைப் படலம் இலக்குவனுக்கு இராமன் உரைத்த அறவுரை தம்பியைத் தழுவி, ஐயன், `தாமரைத் தவிசின் மேலான் வெம்படை தொடுக்கும் ஆயின், விலக்கும்அது அன்றிவீர அம்புநீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை, உம்பரும் உலகும் எல்லாம் விளியும்;அஃது ஒழிதி.’ என்றான். 1 நிகும்பலை யாகப் படலம்: நிகும்பலை என்னும் இடத்திலே இந்திர சித்தன் செய்யத் தொடங்கிய யாகத்தை இலக்குவன் முதலியோர் சென்று அழித்ததைப்பற்றி உரைக்கும் பகுதி. 1. தாமரைத் தவிசின் மேலான் - பிரமதேவன். விளியும் - அழியும். `முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன்னின்று ஒக்கவே விடுமே; விட்டால், அவற்றையும் அவற்றின் ஓயத் தக்கவாறு இயற்றி, மற்றுன் சிலைவலித் தருக்கி னாலே, புக்கவன் ஆவி கொண்டு, போதுதி; புகழின் மிக்கோய்!’ 2 2. ஓயத்தக்கவாறு இயற்றி - அடங்கும்படி செய்து. தருக்கினாலே - மிகுதியினால். வில், கவசம், அம்புக்கூடு அளித்தல் `இச்சிலை இயற்கை, மேல்நாள் தமிழ்முனி இயம்பிற்று எல்லாம் அச்சுஎனக் கேட்டாய் அன்றே? ஆயிர மௌலி அண்ணல் மெய்ச்சிலை; விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப் பெற்ற கைச்சிலை கோடி’ என்று கொடுத்தனன் கவசத் தோடும். 3 3. அச்சுஎன - குறிப்பாக. ஆயிர மௌலி அண்ணல் - திருமால். விரிஞ்சன் - பிரமன். ஆணிஇவ் வுலகுக் கான ஆழியான், புறத்தின் ஆர்த்த தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லித், தாணுவின் தோற்றத் தானைத் தழுவினன்; தழுவ லோடும், சேண்உயர் விசும்பில் தேவர் `தீர்ந்ததுஎம் சிறுமை’ என்றார். 4 4. இவ்வுலகுக்கு ஆணியான - இவ்வுலகத்திற்கு அச்சாணியான. புறத்தின் ஆர்த்த - முதுகிலே கட்டிய. தாணுவின் - மலையின் (மலைபோன்ற) சிறுமை - துன்பம். இலக்குவன் நிகும்பலைக்குச் செல்லல் `மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவ ரோடும் வீரநீ சேறி!’ என்று விடைகொடுத்து அருளும் வேலை, ஆரியன் கமல பாதம், அகத்தினும் புறத்தும் ஆகச், சீரிய சென்னி சேர்த்துச், சென்றனன் தருமச் செல்வன். 5 5. தருமச் செல்வன் - தருமத்தின் செல்வமாகிய இலக்குவன். `ஆரியன் கமலபாதம்.... சென்றனர்.’ தான்பிரி கின்றி லாத தம்பி,வெம் கடுப்பின் செல்லா ஊன்பிரி கின்றி லாத உயிர்என, மறைத லோடும், வான்பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில் தான்பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். 6 6. வெம் கடுப்பின் - மிகுந்த விரைவுடன். ஊன் - உடம்பை விட்டு. உயிர்என - உயிர் பிரிகின்றதைப் போல. வான்பெரு வேள்வி - விசுவாமித் திரன் செய்த மிகப்பெரு வேள்வியை. இராமன் தயரதனை ஒத்தான். நிகும்பலையில் இலக்குவன் சேனா பதியே முதல்சே வகர்தாம் ஆனார், நிமிர்கொள் ளிகொள்அங் கையினார் கானார் நெறியும் மலையும் கழியப் போனார் கள்நிகும் பலைபுக் கனரால். 7 7. நிமிர்கொள்ளி - நீண்ட கொள்ளிக்கட்டை. கான்ஆர் - காடுகள் அமைந்த. நேமிப் பெயர்யூ கம்நிரைத் து,நெடும் சேமத் ததுநின் றது;தீ வினையோன் ஓமத்து அனல்,வெவ் வடவைக்கு உடனே பாமக் கடல்நின் றதுஒர்பான் மையதை. 8 8. நேமிப்பெயர் - சக்கரவாளம் என்னும் பெயர் கொண்ட. பாம்அக் கடல் - பரந்த அக்கடலில். யாகக்கனல் வடவாமுகாக் கினியை ஒத்தது. வழங்கா சிலைநாண் ஒலிவா னில்வரும் பழம்கார் முகம்ஒத் த;பணைக் குலமும் தழங்கா கடல்வாழ் வனபோல்; தகைசால் முழங்கா முகில்ஒத் தனமும் முரசே 9 9. வானில் வரும் பழங்கார்முகம் - வானவில். கார்முகம் - வில். பணைக்குலம் - வாத்தியக் கூட்டம். தழங்கா - முழங்கா. மும் முரசு - கொடை முரசு, வீரமுரசு, தியாக முரச. வலியா னஇரா கவன்வாய் மொழியால் சலியா தநெடும் கடல்தான் எனலாய் ஒலியாது உறுசே னையைஉற்று, ஒருநாள் மெலியா தவர்ஆர்த் தனர்,விண் கிழியே. 10 10. ஒலியாது உறு சேனையை - ஓசையிடாமல் உள்ள அரக்கர் சேனையை. மெலியாதவர் - மெலியாதவர்களாகிய குரங்குப் படையினர். ஆர்த்தார் எதிர்,ஆர்த் த,அரக் கர்குலம்; போர்த்தார் முரசங் கள்புடைத் த;புகத் தூர்த்தார் இவர்கற் படை;சூல் முகிலின் நீர்த்தா ரையின்,அம்பு அவர்நீட் டினரால். 11 11. ஆர்த்தார் எதிர் - ஆரவாரித்த வானரர்களுக்கு எதிராக. போர்த்தார் முரசங்கள் - போருக்குரிய வரிசையான முரசங்கள். வென்றிச் சிலைவீ ரனை,வீ டணன்,`நீ நின்றுஇக் கடைதா ழுதல்நீ தியதோ? சென்றுஇக் கடிவேள் விசிதைத் திலையேல் என்றுஇக் கடல்வெல் குதும்யாம்?’ என்றான். 12 12. நின்று - சும்மா நின்று. இக்கடை - இப்பொழுது. கடிவேள்வி - கடியத்தகுந்த யாகத்தை; சிறந்த யாகத்தை. அக்கா லைஇலக் குவன்,அப் படையுள் புக்கான், அயில்அம் பு,பொழிந் தனன்;ஆல் உக்கார், அவ்அரக் கர்தம்ஊர் ஒழியப் புக்கார் நமனார் உறைதென் புலமே. 13 13. உக்கார் - உயிர்விட்டனர். `தம் ஊர் ஒழிய நமனார் உறை தென்புலம் புக்கார்.’ கால்எனக், கடுஎனக், கலிங்கக் கம்மியர் நூல்என, உடல்பொறை தொடர்ந்த நோய்எனப், பால்உறு பிரைஎனக், கலந்து பன்முறை, வேல்உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். 14 14. கால் - காற்று. கடு - நஞ்சு. கலிங்கம் கம்மியர் - துணி நெய்கின்றவர்களின். உடல்பொறை - உடம்பாகிய சுமையை. ஓமவெம் கனல்அவிந்து, உழைக்க லப்பையும், காமர்வெண் தருப்பையும், பிறவும் கட்டற, வாமமந் திரத்தொழில் மறந்து, மற்றவன் தூமவெம் கனல்எனப், பொலிந்து தோன்றினான். 15 15. ஓம வெம்கனல் - ஓமமாகிய கொடிய நெருப்பு. உழை கலப்பையும் - பக்கத்திலிருந்த நவதானியங்களும். கட்டு அற - அடியோடு அழிய. வாமம் - சிறந்த. தூமம் - புகையை யுடைய. அக்கணத்து, அடுகளத்து, அப்பு மாரியால் உக்கவர் ஒழிதர, உயிரு ளோர்எலாம் தொக்கனர் அரக்கனைச் சூழ்ந்து; சுற்றுஉறப் புக்கது கவிப்பெரும் சேனைப் போர்க்கடல். 16 16. அடுகளத்து - போர்க்களத்திலே. அப்பு மாரியால் - அன்பு மழையினால். அம்பு; அப்பு. உக்கவர் ஒழிதர - மாண்டவர்களைத் தவிர. தொக்கனர் - கூடினர். இந்திரசித்தின் கவலை மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட, முடிவி லாமுரண் சேனையும் பாழ்படச், சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட, இனைய செப்பினான். 17 17. மோனமும் - அமைதியும். மந்திரத்து ஏனையும் - மந்திரத்திற்குரிய மற்றவைகளும். `தொடங்கிய வேள்வியின் தூம வெம்கனல் அடங்கியது, அவிந்துளது அமையு மாம்அன்றே? இடம்கொடு வெம்செரு வென்றி இன்றுஎனக்கு அடங்கியது என்பதற்கு ஏது ஆகும்;ஆல்.’ 18 18. அடங்கியது அவிந்துளது - அடங்கி அவிந்ததே. அமையும் ஆம் - போதுமானதாகும். கொடு இடம் வெம் செரு - கொடுமைக்கு இடமான கடிய போரிலே. வென்றி இன்று எனக்கு அடங்கியது - வெற்றி இல்லையென்ற நிலை எனக்குப் பொருந்தியது. `அங்கது கிடக்க,நான் மனிதர்க்கு ஆற்றலென் சிங்கினென், என்பதுஓர் எளிமை தேய்வுற இங்குநின்று இவையிவை நினைவது என்இனி? பொங்குபோர் ஆற்றஎன் தோளும் போனவே?’ 19 19. சிங்கினென் - வலிமை குறைந்தேன். எளிமை தேய்வுற - இழிவு போக. தோளும் போனவே - தோள் வலிமையும் போய் விட்டனவோ? `மந்திர வேள்விபோய் மடிந்தது ஆம்எனச் சிந்தையின் நினைந்துநான் வருந்தும் சிற்றியல் அந்தரத்து அமரரும் `மனிதர்க்கு ஆற்றலன்; இந்திரற் கேஇவன் வலி’ என்று ஏசவோ!’ 20 20. சிற்றியல் - அற்பத்தன்மை. மனிதர்க்கு ஆற்றலன் - மனிதர் முன்னே வல்லமை அற்றவன். ஏசவோ - இகழவோ. மாருதி இந்திரசித்தனை இகழ்ந்து கூறியது `நான்உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் சானகி தன்னை வாளால் தடிந்ததோ! தனதன் தந்த மானமேல் சேனை யோடும் வடதிசை நோக்கி மீது போனதோ! கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்.’ 21 21. நயமொழி ஒன்றும் கேளாய் - நீதி மொழி ஒன்றையும் கேட்காதவனாய். தனதன் தந்த - குபேரனால் கொடுக்கப்பட்ட. போனதோ - போனது என்ன ஆயிற்று? `தடந்திரைப் பரவை அன்ன சக்கர வியூகம் புக்குக் கிடந்தது கண்டது உண்டோ? நாண்ஒலி கேட்டி லோமே? தொடர்ந்துபோய் அயோத்தி தன்னைக் கிளையொடும் துணிய நூறி நடந்ததுஎப் பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே!’ 22 22. சக்கர வியூகம் புக்கு - சக்கர வியூகமாக அமைந்த படையுள்ளே புகுந்து. நடந்தது எப்பொழுது - திரும்பி வந்தது எப்பொழுது? `ஏந்துஅகல் ஞாலம் எல்லாம் இனிதுறத் தாங்கி நிற்கும் பாந்தளின் பெரிய திண்தோள் பரதனைப், பழியில் தீர்ந்த வேந்தனைக் கண்டு, நீநின் வில்வம் காட்டி, மீண்டு போந்ததோ உயிரும் கொண்டே? ஆயினும் புதுமை அன்றே.’ 23 23. ஏந்து அகல் - பலபொருள்களையும் தாங்கி யிருக்கின்ற அகன்ற. ஞாலம் எல்லாம் - உலகம் முழுவதையும். பாந்தளின் - ஆதி சேடனை விட. புதுமை அன்று - அதிசயம் அன்று. `அம்பரத்து அமைந்த வல்வில், சம்பரன் ஆவி வாங்கி, உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த, நம்பியை, முதல்வரான மூவர்க்கும் நால்வ ரான தம்பியைக் கண்டு, நின்றன் தனுவலம் காட்டிற்று உண்டோ?’ 24 24. அம்பரத்து - வானத்திலே. நம்பியை - சிறந்தவனை. மூவர்க்கும் - மூவர்க்கும் பின்னே. நால்வர் ஆன - நால்வர் என்று சொல்லும்படியான. `கொல்வென்’ என்று உன்னைத் தானே குறித்து,ஒரு சூளும் கொண்ட வில்லிவந்து அருகு சார்ந்து,உன் சேனையை முழுதும் வீட்டி, `வல்லைநீ பொருவாய்’ என்று விளிக்கின்றான்; வரிவில் நாணின் ஒல்ஒலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்புஒன்று ஆமோ?’ 25 25. சூளும் கொண்ட - சபதமும் கொண்ட. வீட்டி - அழித்து. ஒல் ஒலி - ஒல் என்னும் ஓசை. உறுப்பு ஒன்று ஆமோ - ஒரு அங்கமாகுமோ. `மூவகை உலகம் காக்கும் முதலவன் தம்பி பூசல், தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார் யாவரும் காண நின்றார்; இனிஇறை தாழ்பபது என்னோ? சாவது சரதம் அன்றோ?’ என்றனன் தருமம் காப்பான். 26 26. பூசல் - போரைக்காண. திறம் திறத்து உலகம் சேர்ந்தார் - பல வகையான உலகிலும் உள்ளவர்கள். தருமம் காப்பான் - மாருதி. சினமுற்ற இந்திரசித்தன் மாருதியை நோக்கிப் பேசுதல் `இலக்குவன் ஆக, மற்ற இராமனே ஆக, ஈண்டு விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்குன் வெள்ளம் குலக்குல மாக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும் அலக்கணும், முனிவர் தாமும் அமரரும் காண்பர் அன்றே.’ 27 27. விலக்குக - தடுப்பார்களாக. குலக்குலமாக - கூட்டம் கூட்டமாக. கொற்றமும் - என் வெற்றியையும். அலக்கணும் - துன்பத்தையும். `யான்உடை வில்லும், என்பொன் தோள்களும் இருக்க, இன்னும் ஊன்உடை உயிர்கள் யாவும் உய்யுமோ? ஒளிப்பி லாமல், கூன்உடைக் குரங்கி னோடு, மனிதரைக் கொன்று சென்று,அவ் வானினும் தொடர்ந்து கொல்வென்; மருந்தினும் உய்ய மாட்டீர்!’ 28 28. ஒளிப்பு இலாமல் - ஒளிந்து கொள்ளுவதற்கு இடமில்லாமல். கூன் உடை - வளைந்த முதுகையுடைய. இந்திரசித்தன் எய்தகணைகளை எல்லாம் தடுத்தான் இளையோன். இந்திரசித்தன் பாசு பத பாணம் விட்டபோது அனைவரும் நடுங்கினர். வீடணன் அச்சம் பார்த்தான்நெடுந் தகைவீடணன், உயிர்கால்உறப் பயத்தால் வேர்த்தான்,`இது விலக்குந்தரம் உளதோ, முதல் வீரா! தீர்த்தா!’என அழைத்தான், அதற்கு இளம்கோளரி சிரித்தான்; போர்த்தார்,அடல் கவிவீரரும் அவன்தாள்நிழல் புகுந்தார். 29 29. உயிர் கால் உற - உடம்பிலிருந்து உயிர் வெளிவரும்படி, `பயத்தான் வேர்த்தான்’ அடல் கவி வீரரும் - போர் செய்கின்ற வானர வீரர்களும். போர்த்தார் - ஒன்று கூடி. இலக்குவன் பாசுபதத்தைப் பாசுபதத்தால் தடுத்தான். அனைவரும் மகிழ்ந்தனர். தன் தோல்விக்கு வீடணன் காரணம் எனக் கருதிய இந்திரசித்தன் அவனை இகழ்ந்துரைத் தான். `முரண்தடம் தண்டும் ஏந்தி, மனிதரை முறைமை குன்றப், பிரட்டரின் புகழ்ந்து புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின்சென்று, இரட்டுறு முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின் றாயைப் புரட்டுவென் தலையை இன்று, பழியொடும் ஒழிவென்;’ போல்ஆம். 30 30. முரண் தடம் தண்டும் ஏந்தி - வலிமையுள்ள பெரிய தண்டாயுதத்தை ஏந்திக் கொண்டு. பிரட்டரின் - சாதி விலக்குச் செய்யப்பட்டவனைப் போல. இரட்டுறும் – அடிக்கப் படுகின்ற. பழியொடும் ஒழிவன் - சிற்றப்பனைக் கொன்றான் என்னும் பழியோடும் மறைவேன். நீர்உள தனையும் உள்ள மீன்என, நிருதர் எல்லா வேர்உள தனையும் வீவர் இராவண னோடு! மீளார்; ஊர்உளது; ஒருவன் நின்றாய் நீஉளை; உறைய நின்னோடு ஆர்உளார் அரக்கர் நிற்பார்? அரசுவீற் றிருக்க; ஐயா?’ 31 31. வேர் உள தனையும் - அடியோடு. மீளார் - ஒருவர்கூட உயிருடன் திரும்ப மாட்டார்கள். `பனிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் தனிமுதல் தலைவன் ஆனாய்; உன்னைவந்து அமரர்தாழ்வார்; மனிதருக்கு அடிமை யாய்நீ இராவணன் செல்வம் ஆள்வாய்; இனிஉனக்கு என்னோ மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே?’ 32 32. மேலோன் - மேலோனாகிய பிரமதேவனுடைய. தனி முதல் தலைவன் ஆனாய் - ஒப்பற்ற முதன்மையான தலை வனானாய். என்னோ - என்ன குறைவு? `எழுதிஏர் அணிந்த திண்தோள் இராவணன், இராமன் அம்பால் புழுதியே பாயல் ஆகப் புரண்டநாள், புரண்டு மேல்வீழ்ந்து அழுதியோ! நீயும் கூட ஆர்த்தியோ! அவனை வாழ்த்தித் தொழுதியோ! யாதோ செய்யத் துணிந்தனை விசயத் தோளாய்?’ 33 33. விசயத்தோளாய்! எழுதி - கலவைச் சந்தனம் பூசி. ஏர் அணிந்த அழகைப் பூண்ட. பாயல் - படுக்கை. நீயும்கூட ஆர்த்தியோ - நீயும் பகைவருடன் கூடி மகிழ்ந்து ஆரவாரம் செய்வாயோ? `ஊன்உடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர்வந்து எய்தும் மானிடர், இலங்கை வேந்தைக் கொல்வரே! நீயும் அன்னான் தான்உடைச் செல்வம் துய்க்கத் தகுதியே! சரத்தி னோடும் வானிடைப் புகுதி அன்றே! யான்பழி மறுக்கில்!’ என்றான். 34 34. மருந்தினால் - சஞ்சீவியினால். கொல்வரே - கொல்லப் போகின்றனரோ? தகுதியே - தகுந்தவனாவாயோ. யான் பழி மறுக்கில் - யான் பழியை மறுக்காமல் கொல்லேனாயின். சரத்தினோடும் வான்வழிப் புகுதி அன்றே - என் அம்பால் வானுலகத்தை அடைவாய் அன்றோ? இந்திரசித்தனுக்கு வீடணன் விளம்பியது அவ்வுரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி செவ்விதில் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி `வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய! இவ்வுரை கேட்டி’ என்னா இனையன விளம்பல் உற்றான். 35 35. அமையக் கேட்ட - நன்றாகக் கேட்ட. செவ்விதில் துளக்கி - நன்றாக அசைத்து. பாவம் வெவ்விது - பாவம் கொடுமையானது. `தருமமே சால விழுமிது’. `அறம்துணை ஆவது அல்லால்; அருநரகு அமைய நல்கும் மறம்துணை யாக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்! துறந்திலேன் மெய்ம்மை; பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்; பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்,அவன் பிழைத்த போதே.’ 36 36. மறம் - பாவம். `எய்தும் பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் மெய்ம்மை துறந்திலேன்’ அவன் பிழைத்தபோதே - அந்த இராவணன் தீமை செய்த போதே. `உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும் கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே! பெண்டிரின் திறம்பி னாரைத் துறந்தது பிழையிற்று ஆமோ?’ 37 37. வலியால் ஒன்றும் கொண்டிலன் - வலிமையால் ஒன்றையும் கைப்பற்றிக் கொண்டவன் அல்லேன். உண்டே - என்பால் தீமைகள் உண்டோ? பெண்டிரில் - பெண்கள் பால். திறம்பினாரை - முறை தவறி நடந்தவர்களை. `மூவகை உலகம் ஏத்தும் முதலவன்; எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன், தேவி, கற்பினில் சிறந்து ளாளை நோவன செய்தல் தீது,என்று உரைப்ப,நுன் தாதை சீறிப் போ;என உரைக்கப் போந்தேன்; நரகதில் பொருந்து வேனோ?’ 38 38. நோவன - துன்புறும் செயல்களை. நரகு அதில் பொருந்துவேனோ - நரகத்தில் சேர்வேனோ. `வெம்மையில் தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு வீயும் உம்மையே புகழும் பூண்க! துறக்கமும் உமக்கே ஆக! செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு, அறத்தைத் தேறும் எம்மையே, பழியும் பூண்க! நரகமும் எமக்கே ஆக.’ 39 39. வெம்மையால் - கொடுந்தன்மையுடன். வேட்டதே வேட்டு - மனம் விரும்பியதையே விரும்பிச் செய்து. வீயும் - அழியும். செம்மையில் பொருந்தி - நல்ல குணத்தோடு இருந்தது. `அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும்அது அறிந்து, ஞானத் திறத்தினும் உறும்என்று எண்ணித் தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்; புறத்தினில் புகழே ஆக! பழியொடும் புணர்க! போகச் சிறப்பினிப் பெறுக! தீர்க!’ என்றனன் சீற்றம் இல்லான். 40 40. என்னும் அது அறிந்து - என்னும் அந்த உண்மையை அறிந்து. ஞானத்திறத் தினும் உறும் என்று எண்ணி - இராமனை அடைவது ஞானத்தன்மைக்கும் பொருந்தும் என்று நினைத்து. போதச் சிறப்பு - மிகுந்த பெருமையை. உடனே இந்திரசித்தன் சினந்தான். ஒருகணையை வீடணன் கழுத்தை நோக்கி ஏவினான். அதை இலக்குவன் தடுத்தான். ஒரு வேற்படையை விடுத்தான். அதையும் பொடி செய்தான் இலக்குவன். வீடணன் சினந்தெழுந்து, தன் கைத்தண்டால் இந்திரசித்தனது தேர்ப்பாகனையும் குதிரைகளையும் அழித்தான். அவ்வமயம் இந்திரசித்தன் மறைந்தான்; இலங்கையில் புகுந்தான்; இராவணனைக் கண்டான். 28. இந்திரசித்து வதைப் படலம் இந்திரசித்தைக் கண்ட இரவாணன் கேள்வி `விண்ணிடைக் கரந்தான்’ என்பார்; `வஞ்சனை விளைக்கும்’ என்பார்; கண்ணிடைக் கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும் காலை புண்ணிடை யாக்கைச் செந்நீர் இழிதரப் புக்கு நின்ற எண்ணுடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான். 1 இந்திரசித்து வதைப் படலம்: இந்திரசித்து கொல்லப் பட்ட நிகழ்ச்சியை உரைக்கும் பகுதி. 1. கண்ணிடை - கண்ணெதிரே. கலக்கம் நோக்கி - அவன் போர் செய்து கலக்கியதை எண்ணி. எண் உடை - எண்ணத் தகுந்த. `தொடங்கிய வேள்வி, முற்றுப் பெற்றிலாத் தொழில்,நின் தோள்மேல் அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவில் யாக்கை நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப் படம்குறை அரவம் ஒத்தாய்! உற்றது பகர்தி!’ என்றான். 2 2. - . இந்திரசித்தன் உண்மை உரைத்தல் `சூழ்வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்கச், சுற்றி வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி, ஆள்வினை, ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி ஆர்க்கும் தாழ்விலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான்.’ 3 3. சூழ் வினை மாயம் எல்லாம் - எண்ணிச் செய்த வஞ்சகங்களை எல்லாம். சுற்றி - சூழ்ந்து நின்று. நூறி - அழித்து. படைகள் மூன்று - பிரமாத்திரம், சக்கராயுதம், பாசுபதம். `நிலம்செய்து விசும்பும் செய்து நெடியமால் படை,நின் றானை வலம்செய்து போவ தானால், மற்றினி வலியது உண்டோ? குலம்செய்த பாவத் தாலே கொடும்பழி தேடிக் கொண்டாய்; சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே.’ 4 4. நிலம் செய்து விசும்பும் செய்து - நிலத்தையும் படைத்து வானையும் படைத்துப் பெருமை பெற்ற. சலம் செயின் - கோபிப்பானாயின். `முட்டிய செருவில் முன்னம், முதலவன் படையை என்மேல் விட்டிலன் உலகை அஞ்சி! ஆதலால் வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான்! இன்னமும் கிளர வல்லான்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்.’ 5 5. உலகை அஞ்சி - உலகத்தை அழித்து விடும் என்று பயந்து. கிளரவல்லான் - ஊக்கத்துடன் போர் செய்ய வல்லவன். சுட்டிய - பெருமையுள்ள. `ஆதலால் அஞ்சி னேன்என்று அருளலை; ஆசை தான்அச் சீதைபால் விடுவை யாயின் அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல் காதலால் உரைத்தேன்;’ என்றான்; உலகெலாம் கலக்கி வென்றான். 6 6. என்று அருளலை - என்று நினைக்காதே. வென்றான் - வென்றவனாகிய இந்திரசித்து. இராவணன் வீரவுரை இயம்பலும், இலங்கை வேந்தன் எயிற்றுஇள நிலவு தோன்றப் புயங்களும் குலுங்க நக்குப் `போர்க்குஇனி ஒழிநீ போத மயங்கினை மனமும்; அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய! சயங்கொடு தருவென் இன்றே மனிதரைத் தனுஒன் றாலே’. 7 7. போர்க்கு இனி ஒழிநீ - இனி போருக்குப் போகாமல் நீங்குவாய். போத - மிகவும். `முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும், பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்றுஅவர்ப் பெயர்வர் என்றும் உன்னை,`நீ அவரை வென்று தருதி’என்று உணர்தும் அன்றால், என்னையே நோக்கி யான்இந் நெடும்பகை தேடிக் கொண்டேன்!’ 8 8. அவர் வென்று பெயர்வர் என்றும் - அவர்களை வெற்றி கொண்டு திரும்புவார்கள் என்றும். அன்று - நான் இச் செயலில் தலையிட வில்லை. என்னையே நோக்கி - என் வலிமையையே எண்ணி. ஆல்; அசை. `பேதைமை உரைத்தாய் பிள்ளாய்! உலகெலாம் பெயரப் பேராக் காதைஎன் புகழி னோடும் நிலைபெற, அமரர் காண மீதெழு மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால், சீதையை விடுவது உண்டோ? இருபது திண்தோள் உண்டால்.’ 9 9. உலகெலாம் பெயர - உலகமெல்லாம் அழிந்தாலும். பேராக் காதை - அழியாத கதையாக. என் புகழினோடும் நிலைபெற - என்புகழோடும் நிலைக்கும்படி. `வென்றிலேன் என்ற போதும், வேதம்உள் ளளவும் யானும் நின்றுளென் அன்றோ, மற்ற இராமன்பேர் நிற்கும் ஆயின்; பொன்றுதல் ஒருகா லத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?’ 10 10. பொன்றுதல் - இறத்தல். ஒரு காலத்துத் தவிருமோ - ஒரு காலத்திலாயினும் நீங்குமோ? `சொல்லியென் பலவும்? நீநின் இருக்கையைத் தொடர்ந்து தோளில் புல்லிய பகழி வாங்கிப், போர்த்தொழில் சிரமம் போக்கி, எல்லியும் கழித்தி, என்னா எழுந்தன; எழுந்து பேழ்வாய் வல்லியம் முனிந்தால் அன்னான் வருகதேர் விரைவில்’ என்றான். 11 11. தோளில் புல்லிய - தோளில் அழுந்திடக் கிடந்த. பகழி வாங்கி - அம்புகளைப் பிடுங்கி. எல்லியும் - இராப் பொழுதையும். பேழ் வாய் வல்லியம் - பிளந்த வாயை யுடைய புலி. இந்திரசித்தன் மீண்டும் போருக்குப் புறப்படுதல் எழுந்தவன் தன்னை நோக்கி, இணையடி இறைஞ்சி, `எந்தாய் ஒழிந்தருள் சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி! யான்போய்க் கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி’ என்னா மொழிந்தனன்; தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியல் உற்றான். 12 12. உறுதியை - உறுதிமொழியை. பொறுத்தி - பொறுத்துக் கொள்; மறவாமல் தாங்கிக் கொண்டிரு. நல்லவா - அவைகள் நன்மையாக இருப்பதை. படைக்கல விஞ்சை, மற்றும் படைத்தன பலவும், தன்பால் அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்மேல் ஆக்கிக், கொடைத்தொழில் வேட்டோர்க் கெல்லாம் கொடுத்தனன்; கொடியோன் தன்னைக் கடைக்கணால் நோக்கி நோக்கி இருகணீர் கலுழப் போனான். 13 13. கொடைத் தொழில் - கொடுக்குந் தொழிலிலே தலை நின்று. வேட்டோர்க்கு எல்லாம் - விரும்பியவர்களுக்கு விரும்பியவற்றை எல்லாம். இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி `விலங்கல்அம் தோள! நின்னைப் பிரிகலம் விளிதும்;’ என்று வலங்கொடு தொடர்ந்தார் தம்மை `மன்னனைக் காமின்! யாதும் கலங்கலிர்! இன்றே சென்று மனிதரைக் கடப்பென்’ என்றான். 14 14. விலங்கல் அம் தோள - மலைபோன்ற அழகீய தோளை யுடையவளே. விளிதும் - இறப்போம். வலம்கொடு - வலமாகச் சுற்றிக் கொண்டு. கடப்பல் - வெற்றி கொள்வேன். வணங்குவார், வாழ்த்து வார்,தன் வடிவினை நோக்கித் தம்வாய் உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவல் உற்ற கணம்குழை மகளிர் ஈண்டி இரைத்து,அவர் கடைக்கண் என்னும் அணங்குடை நெடுவேல் பாயும் அமர்கடந்து, அரிதில் போனான். 15 15. உணங்குவார் - காய்கின்றவர்களும். வெருவல் உற்ற - அஞ்சிய. கணம் குழை மகளிர் - கூட்டமான காதணியை யுடைய பெண்கள். அமர் கடந்து - போரை வென்று. போர்க்களத்திலே இந்திரசித்தைக் காணாத இலக்குவன், வீடணனிடம் `இந்திரசித்தன் ஓடி விட்டானோ?’ என்றான். அச்சமயம் இந்திரசித்தன் தேர்மேல் வந்து கடும்போர் புரிந்தான்; அம்புக் கூட்டை உடைத்து அவன் தேர்ச் சாரதியை அழித்தான் இலக்குவன். பிறகு இந்திர சித்தன் தானே தேரை ஓட்டிக் கொண்டு உடம்பிலே பதிந்திருந்த அம்புகளைப் பிடுங்கி வில்லிலே தொடுத்து விட்டுப் போர் புரிந்தான். அது கண்டு அனைவரும் வியந்தனர். வீடணன் விளம்பியது `தேரினைக் கடாவி வானில் செல்லினும் செல்லும்; செய்யும் போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய்அக் காரினைக் கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி; வீர!மெய்ப் பகலின் அல்லால் விளிகிலன் இருளின், வெய்யோன்.’ 16 16. கடா- செலுத்தி. போரினைக் கடந்து - போரின் முறையை மீறி. மாயம் புணர்க்கினும் புணர்க்கும் - வஞ்சகத்தைச் செய்தாலும் செய்வான். காரினை - மேக மண்டலத்தை. மெய் பகலின் அல்லால் - உண்மையான பகலிலே இறப்பானே அல்லாமல். வெய்யோன் இருளிள் விளிகிலன் - கொடியான் இருளில் இறக்க மாட்டான். சூரியன் உதயம் விடிந்தது பொழுதும், வெய்யோன் விளங்கினன் உலக மீதாய்; இடும்சுடர் விளக்கம் என்ன அரக்கரின் இருளும் வீயக் கொடும்சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து குன்ற முடிந்தனன் அரக்கன்’ என்னா முழங்கினர் உம்பர் முற்றும். 17 17. இடும் சுடர் விளக்கம் என்ன - ஒளி விடும் விளக்கைக் கண்டது போல. வீய - அழிய. கொடும் சினமாயச் செய்கை - கொடுமையான சினத்துடன் கூடிய வஞ்சகச் செய்கை. வீடணன் உண்மையை விளம்பல் `ஆர்அழி யாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த தேர்அழி யாத போதும், சிலைகரத்து இருந்த போதும், போர்அழி யான்இவ் வெய்யோன்; புகழ்அழி யாத பொற்றோள் வீர!இது ஆணை;’ என்றான், வீடணன் விளைவது ஓர்வான். 18 18. ஆர் அழியாத - ஒளி குன்றாத. இது ஆணை - இது உறுதி. விளைவது ஓர்வான் வீடணன் - வரப்போவதை அறிபவனாகிய வீடணன். இலக்குவன் செய்த தந்திரம் பச்சைவெம் புரவி வீயா, பல்இயல் சில்லி பாரின் நிச்சயம் அற்று நீங்கா, என்பது நினைந்து, வில்லின் விச்சையின் கணவன் ஆனான், வின்மையால் வயிரம் இட்ட அச்சினோடு, ஆழி, வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி. 19 19. வீயா - அழியாது. பல் இயல் - பலவேலைப்பாடு அமைந்த. சில்லி - சக்கரம். விச்சை - வித்தை. வின்மையின் - வில் வல்லமையால். சிலைஅறாது எனினும், மற்றத் திண்ணியோன் திரண்ட தோளாம் மலைஅறாது ஒழியாது; என்னா வரிசிலை ஒன்றும் வாங்கிக் கலைஅறாத் திங்கள் அன்ன வாளியால் கையைக் கொய்தான் விலைஅறா மணிப்பூ ணோடும் வில்லொடும் நிலத்து வீழ. 20 20. சிலை அறாது எனினும் - வில் ஒடிந்து போகா விட்டாலும். அறாது ஒழியாது - அறுந்து போகாமல் நிற்காது. கலை ஒறா - ஒளி நீங்காத. திங்கள் அன்ன வாளியால் - பிறைச் சந்திரனைப் போன்ற அம்பால். விலை அறா - விலை முடிவு சொல்ல முடியாத. மொய்அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பி னால்,அப் பொய்அறச் சிறிதுஎன்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த மைஅறக் கரிதுஎன்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன கைஅறத் தலைஅற் றார்போல், கலங்கினார் நிருதர் கண்டார். 21 21. மொய் அற மூர்த்தி அன்ன - நிறைந்த தரும தேவதை போன்ற. பொய் அறச் சிறிது என்று எண்ணும் - பொய்யை மிகவும் சின்னக் காரியம் என்று நினைக்கும். பூத்த மைஅறக் கரிது - காணப்பட்ட மையைவிட மிகவும் கருமையானது. கைஅற - கை அற்று வீழ்ந்ததும். அன்னது நிகழும் வேலை, ஆர்த்தெழுந்து அரியின் வெள்ளம், மின்எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் கொல்நகக் கரத்தால், பல்லால், மரங்களால், மானக் குன்றால், பொன்னெடு நாட்டை யெல்லாம் புதுக்குடி ஏற்றிற்று அன்றே. 22 22. மானக் குன்றால் - பெரிய குன்றுகளால். நெடும் பொன் நாட்டை எல்லாம் - நீண்ட பொன்னாடு முழுவதையும். புதுக்குடி ஏற்றிற்று - புதுக்குடிகளைக் குடியேறும்படி செய்தது. இந்திரசித்தன் மாயப்போர் காற்றென, உரும்ஏ றென்னக், கனல்எனக், கடைநாள் உற்ற கூற்றம்ஓர் சூலம் கொண்டு குறுகியது என்னக், கொல்வான் தோற்றினான்; அதனைக் காணா, இனித்தலை துணிக்கும் காலம் ஏற்றதுஎன்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். 23 23. கொல்லான் தோற்றினான் - கொல்லும் பொருட்டுத் தோன்றினான். காணா - கண்டு. துணிக்கும் - அறுக்கும். துண்டிக்கும். இந்திரசித்தன் இறப்பு `மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற் பால, இறையவன் இராமன் என்னும் நல்அற மூர்த்தி என்னின், பிறைஎயிற்று இவனைக் கோறி!’ என்றுஒரு பிறைவாய் வாளி நிறைஉற வாங்கி விட்டான் உலகெலாம் நிறுத்தி நின்றான். 24 24. கோறி - கொல்க. பிறைவாய் வாளி - பிறை போன்ற வாயையுடைய கணையை. நிறை உற வாங்கி - மிகுந்த பலத்துடன் வில்லை வளைத்து. நிறுத்தி நின்றாள் - நிலைக்கச் செய்து நின்றவனாகிய இலக்குவன். நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான் நாமவேல் தானும், மற்றை நான்முகன் படையும் நாணத், தீமுகம் கதுவ ஓடிச் சென்றுஅவன் சிரத்தைத் தள்ளிப் பூமழை வானோர் சிந்தப் பொலிந்ததுஅப் பகழிப் புத்தேன். 25 25. நேமியும் - சக்கரப் படையும். குலிசவேலும் - வச்சிரா யுதமும் நாமவேல்தானும் - அச்சந்தரும் முத்தலைவேலும். தீ முகம் கதுவ - தீ தன் முகத்திலே பற்றி எரியும்படி. அவன் - அந்த இந்திரசித்தன். அரக்கர் ஓட்டம் உயிர்இறப் புக்க காலை, உள்நின்ற உணர்வி னோடும் செயிர்அறு பொறியும், அந்தக் கரணமும் சிந்து மாபோல், அயில்எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற எயில்உடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார். 26 26. உயிர் இறப் புக்க காலை - உயிர் இறந்து போகும்போது. உணர்வி னோடும் - அறிவோடு. செயிர் அறு பொறியும் - குற்றம் அற்ற ஐம்பொறிகளும். அந்தக் காரணமும் - உட்கருவிகளும். சிந்துமாபோல் - அழிவதைப் போல. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கும் உட்கருவி. தேவர்கள் மகிழ்ச்சி வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளித லோடும், `செல்லாதுஅவ் விலங்கை வேந்தற்கு அரசு’எனக் களித்த தேவர் எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது, கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார். 27 27. தூசு நீக்கி - ஆடைகளை அவிழ்த்து. ஏறிட ஆர்த்தபோது - எறிந்து வீசி ஆரவாரம் செய்தபோது. கொல்லாத விரதத்தார்தம் - அருக மதத்தவர்களின். கடவுளர் கூட்டம் ஒத்தார் - தெய்வங் களின் கூட்டத்தைப் போன்றனர் அருகதே வருக்கு ஆடையில்லை. இறந்த வானரங்கள் பிழைத்தல் `அறந்தலை நின்றார்க்கு இல்லை அழிவு’எனும் அறிஞர் வார்த்தை சிறந்தது; சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகிப் பறந்தலை அதனில், மற்றுஅப் பாதக அரக்கன் கொல்ல இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த. 28 28. பறந்தலை அதனில் - போர்க்களத்திலே. எழுந்தன - உயிர்பெற்று எழுந்தன. அங்கதன் இந்திரசித்தன் தலையை ஏந்திச் செல்லல் ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன்செந் தலையை, அங்கை தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலிசேய், தூசி செல்ல, மேக்குஉயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளினர் தொடர்ந்து வீசும் பூக்கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் இளவல் போனான். 29 29. உள்ளம் கூர்ந்த - உள்ளத்திலே மகிழ்ச்சி மிகுந்த. தூசி செல்ல - படைகளின் முன்னே செல்ல. வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற விழியன், மேன்மேல் ஓங்கிய உவகை ஊறும் உள்ளத்தன், உம்பர்க் காசு தேங்கிய கடலை முன்னான் திரித்தவன் சேய்,செங் கையால் தாங்கிய குரிசில், பற்றிக் கொணர்ந்திடும் தலையைக் கண்டான். 30 30. திரித்தவன் சேய் - கடைந்தவனாகிய வாலியின் மகன். `செங்கையால் தாங்கிய பற்றிக் கொணர்ந்திடும் தலையைக் குரிசில் கண்டான்’. இராமன் மகிழ்ச்சி `தென்தலை ஆழி சூழ்ந்த திண்மதில் இலங்கை காக்கும் புன்தலைக் கள்வன் பெற்ற புதல்வனை, இளவல் வீழ்த்த, வன்தலை எடுத்து நீமுன் வருதலால், வான ரேச! என்தலை எடுக்க லானேன்! இனிக்குடை எடுப்பேன்!’ என்றான். 31 31. தென்தலை - தெற்குத் திசையிலே. என்தலை எடுக்கலானேன் - என் தலையை நிமிர்ந்து நடக்கலானேன். இனி குடை எடுப்பேன் - இனிப் பூச் சக்கரக்குடையை யுடைய அரசும் பெறுவேன். வரதன்,போய் மறுகா நின்ற மனத்தினன்; மாயத் தோனைச் சரதம்போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான்; விரதம்பூண்டு உயிரி னோடும் தன்னுடைய மீட்சி நோக்கும் பரதன்போன்று இருந்தான்; தம்பி வருகின்ற பரிசு பார்த்தான். 32 32. வரதன் - இராமன். போய் மறுகா நின்ற மனத்தினன் - மிகவும் கலங்குகின்ற நெஞ்சன். சரதம் போர் வென்று மீளும் - உண்மையான போர் முறையில் வென்று திரும்பும். தன்னுடை மீட்சி - தனது வரவை. பரிசு - தன்மையை. வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத் தன்புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை; அன்புகொல்! அழுக ணீர்கொல்! ஆனந்த வாரி யேகொல்! என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்! யார்அது ஓர்வார்? 33 33. வன்புலம் கடந்து மீளும் - வலிய போர்க்களத்திலே வெற்றி பெற்றுத் திரும்புகின்ற. மாலை - ஆசையை வெளிப் படுத்தும்படி. வந்தவர்களை எதிர் கொண்ட இராமன் அடிகளிலே, இந்திர சித்தன் தலையை வைத்து வணங்கி நின்றான் அங்கதன். தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன்தோள் மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்; சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்;செய்த கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன் களிப்புக் கொண்டான். 34 34. கொற்றவை தழீஇய - வீரம் பொருந்திய; கொற்றவை என்னும் தெய்வத்தின் தன்மையைப் பொருந்திய. காளமே கத்தைச் செக்கர் கலந்தென, கரிய குன்றில் நாள்வெயில் பரந்ததுஎன்ன, நம்பிதன் தம்பி மார்பில் தோளின்மேல் உதிரச் செங்கேழ்ச் சுவடுதன் உருவில் தோன்ற தாளின்மேல் வணங்கி னானைத் தழுவினன் தனித்தொன்று இல்லான்; 35 35. தனித்து ஒன்று இல்லான் - தனித்த உவமை ஒன்றும் இல்லாதவனாகிய இராமன். காளமேகத்தைச் செக்கர் கலந்து என - கரிய மேகத்தைச் செவ்வானம் சேர்ந்தது போல. நாள் வெயில் - காலை வெய்யில். உதிரச் செங்கேழ் சுவடு - இரத்தத்தின் செந்நிறச் சுவடு. தன் உருவில் - தன் உடம்பில் காணப்பட. இராமன் பாராட்டுரை கம்ப மதத்துக் களியானைக் காவல் சனகன் பெற்றெடுத்த கொம்பும், என்பால் இனிவந்து குறுகி னாள்என்று அகம்குளிர்ந்தேன். வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் `தம்பி யுடையான் பகைஅஞ்சான்’ என்னும் மாற்றம் தந்தனையால். 36 36. கம்பமதத்துக் களியானை - கட்டுத்தறி பொருந்திய மதம் உள்ள ஆண் யானைகளையுடைய. காவல் - அரசு காவலை யுடைய ஜனக வேந்தன். கொம்பும் - இளம் கிளை போன்ற சீதையும். வம்பு செறிந்த - மணம் நிறைந்த. மறையோன் - பிரமதேவன். மாற்றம் - பழ மொழி. தந்தனை - நிலை நாட்டினாய் - ஆல்; அசை. தூக்கிய தூணி வாங்கித், தோளொடு மார்பைச் சுற்றி வீக்கிய கவசம் பாசம் ஒழித்து,அது விரைவின் நீக்கித், தாக்கிய பகழிக் கூர்வாய் தடிந்தபுண் தழும்பும் இன்றிப் போக்கினன் தழுவிப் பல்கால் பொன்தடம் தோளின் ஒற்றி. 37 37. தாக்கிய - சுமந்த. வாங்கி - அவிழ்த்து. வீக்கிய - கட்டிய. பாசம் - கட்டினை. தடிந்த - அறுத்த. `ஆடவர் திலக! நின்னால் அன்று;இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று; வேறுஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று; வீடணன் தந்த வென்றி! ஈது’என விளம்பி மெய்ம்மை, ஏடுஅவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால். 38 38. இகல் - வலிமையுள்ள. சேடனால் - சிறந்தவனால். `என மெய்ம்மை விளம்பி’. 29. இராவணன் சோகப் படலம் பல்லும் வாயும், மனமும்,தம் பாதமும் நல்உ யிர்ப்பொறை யோடு நடுங்குவார் `இல்லை ஆயினன் உன்மகன் இன்று’எனச் சொல்லி னார்,பயம் சுற்றத் துளங்குவார். 1 இராவணன் சோகப் படலம்: இந்திரசித்தின் இறப்புணர்ந்த இராவணன் துக்க மடைந்ததைப் பற்றிக் கூறும் பகுதி. சோகம் - துக்கம். 1. நடுங்குவார் - நடுங்குகின்ற தூதர்கள். துளங்குவார் - நடுங்குவார். தூதர் நிலையைக் கூறியது இச்செய்யுள். மாடு இருந்தவர், வானவர், மாதரார், ஆடல் நுண்இடை யார்,மற்றும் யாவரும் `வீடும் இன்றுஇவ் உலகு’என விம்முவார், ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர். 2 2. மாடு - பக்கத்தில். ஆடல் - அசைகின்ற. இன்று இவ் உலகு வீடும் - இன்று இவ்வுலகம் அழியும். திருகு வெம்சினத் தீநிகர் சீற்றமும், பெருகு காதலும், துன்பம் பிறங்கிட, இருபது என்னும் எரிபுரை கண்களும் உருகு செம்பென ஓடியது ஊற்றுநீர். 3 3. திருகு வெம்சினம் - எல்லாம் கெடுவதற்குக் காரணமான கொடிய சினமாகிய. தீ நிகர் சீற்றமும் - தீயைப்போன்ற கோபமும். பிறங்கிட - விளங்கும்படி. மைந்த வோ!எனும்; மாமக னே!எனும்; எந்தை யோ!எனும்; என்உயி ரே!எனும்; முந்தி னேன்உனை நான்உளெ னே!எனும்; வெந்த புண்இடை வேல்பட்ட வெம்மையான். 4 4. உனை முந்தினேன் நான் உளெனே என்னும் - உனக்கு முற்பட்டவனாகிய நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேனே என்பான். புரந்த ரன்பகை போயிற்றுஅன் றோஎனும்; அரந்தை வானவர் ஆர்த்தன ரோ!எனும்; கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும், நிரந்த ரம்பகை நீங்கின ரோ!எனும். 5 5. புரந்தரன் - இந்திரன். அரந்தை வானவர் -துன்பம் அடைந்திருந்த தேவர்கள். கரந்தை சூடியும் - சிவபெருமானும். ஐய னே!எனும் ஓர்தலை; யான்இனம் செய்வ னேஅரசு! என்னும்அங்கு ஓர்தலை; கைய னேன்உனைக் காட்டிக் கொடுத்தநான் உய்வெ னே!என்று உரைக்கும்அங்கு ஓர்தலை. 6 6. கையனேன் - அற்பனாகிய. உய்வனே - பிழைப்பேனோ? எழுவின் கோலம் எழுதிய தோள்களால் தழுவிக் கொள்கலை; என்னும்அங்கு ஓர்தலை உழுவைப் போத்தை, உழை,உயிர் உண்பதே! செழுவில் சேவக னே!எனும் ஓர்தலை. 7 7. எழுவின் - இரும்புத்தூணைப் போன்ற. கோலம் எழுதிய தோள்களால் - சந்தனக் குழம்பால் கோலம் எழுதப்பட்ட புயங்களால். உழுவைப் போத்தை - புலிக்குட்டியை. உழை உண்பதே - மான் தின்னுவதோ? செழு வில் சேவகனே - சிறந்த வில்வீரனே. நீலம் காட்டிய கண்டனும், நேமியும், ஏலும் காட்டின் எறிந்த படைக்கெலாம் தோலும் காட்டித் துரந்தனை; மீண்டும்நின் ஓலம் காட்டிலை யோ!எனும் ஓர்தலை. 8 8. ஏலும் காட்டின் - ஏற்ற கூட்டமாக. எறிந்த - வீசிய. தோலும் காட்டி - தோல்வியை உண்டாக்கி. துரந்தனை - விரட்டினை. ஓலம் - குரலை. துஞ்சும் போது துணைபிரிந் தேன்,எனும்; வஞ்ச மோ,எனும்; வாரலை யோ,எனும்; நெஞ்சு நோவ நெடுந்தனி யேகிடந்து அஞ்சி னேன்!என்று அரற்றும்அங்கு ஓர்தலை. 9 9. வாரலையோ - வரமாட்டாயோ. நெடும் தனியே கிடந்து - நீண்ட நேரம் தனியாகக் கிடந்து. காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ. பாக சாதனன் மௌலியோ டும்பறித்து ஓகை மாதவர் உச்சியின் வைத்தநின் வாகை நாள்மலர் என்னும்மற்று ஓர்தலை. 10 10. பாகசாதனன் - இந்திரனுடைய. மௌலியோடும் பறித்து - கிரீடத்துடன் மாலையையும் பறித்தது கண்டு. ஓகை - மகிழ்ச்சி. உச்சியின் வைத்த - உன் தலையிலே சூட்டிய. வாகை நாள்மலர் - வெற்றியைக் காட்டும் புதிய மலரை. `சேல்இ யல்கண், இயக்கர்தம் தேவிமார், மேல்இ னித்தவிர் கிற்பர்கொல்? வீரநின் கோல விற்குரல் கேட்டுக் குலுங்கித்,தம் தாலி யைத்தொடல்,’ என்னும் மற்றோர் தலை. 11 11. கோல - அழகிய. குலுங்கித் தம் தாலியைத் தொடல் - நடுங்கித் தங்கள் தாலியைத் தொடுவதை. சேல்இயல் கண் - சேல் மீன் போல் புரளும் தன்மையுள்ள கண்களையுடைய. `கூற்றம் உன்எதிர் வந்துஉயிர் கொள்வதுஓர் ஊற்றந் தான்உடைத்து அன்று,எனை யும்ஒளித்து ஏற்ற எவ்வுலகு உற்றனை, எல்லைஇல் ஆற்ற லாய்’என்று உரைக்கும்அங்கு ஓர்தலை. 12 12. ஊற்றம்தான் உடைத்து அன்று - வலிமையைக் கொண்டிருக்க வில்லை. இராவணன் போர்க்களத்தில் புகுந்து மகனைக் காணுதல் கைகண் டான்,பின் கரும்கடல் கண்டுஎன மெய்கண் டான்,அதன் மேல்விழுந் தான்;அரோ பெய்கண் தாரை அருவிப் பெருந்திரை மொய்கண்டு ஆர்திரை வேலையை மூடவே. 13 13. கை கண்டான் - கையைக் கண்டான். கண் பெய் தாரை - கண்களிலிருந்து ஊற்றுகின்ற தாரையாகிய. திரைவேலையை - அலைகடலை. கண்டி லன்தலை, காந்திஅம் மானிடன் கொண்டு இறந்தனன் என்பதும் கொண்டவன்; புண்தி றந்தன நெஞ்சன், பொருமலன், விண்தி றந்திட விம்மி அரற்றினான். 14 14. காந்திஅம் மானிடன் - சினங்கொண்ட அம் மனிதன். கொண்டு இறந்தனன் - கொண்டு போனான். விண்திறந்திட - வானம் பிளக்கும்படி. `பூண்டொரு பகைமேல் புக்குஎன் புத்திர னோடும் போனார் மீண்டிலர், விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவ ரோடும் ஆண்டுள குரங்கும், ஒன்றும், அமர்க்களத் தாரும் இன்னும் மாண்டிலர், இனிமற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை.’ 15 15. பூண்டு - போர்க்கோலம் பூண்டு. விரதியர் - தவசிகளான இராம இலக்குவர். `கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னி மார்கள், சிந்துஒக்கும் சொல்லி னார்,உன் தேவியர், திருவின் நல்லார், வந்துற்று’எம் கணவன் தன்னைக் காட்’டென்று மருங்கில் வீழ்ந்தால், அந்தொக்க அரற்ற வோநான்; கூற்றையும் ஆடல் கொண்டேன்.’ 16 16. சிந்து ஒக்கும் - இசையைப் போன்ற. திருவின் நல்லார் - இலக்குமியைக் காட்டிலும் அழகுள்ளவர்கள். அந்து ஒக்க - அப்படியே அவர்களைப் போலவே. `சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ நினைத்தது முடித்து நின்றேன்; நேர்இழை ஒருத்தி நீரால் எனக்குநீ செய்யத் தக்க கடன்எலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வது ஆனேன், என்னின்யார் உலகத்து உள்ளார்.’ 17 17. கொற்றம் முற்ற - வெறியை அடைய. மேவ - அடைய. முடித்து நின்றேன் - நிறைவேற்றி நின்ற நான். ஒருத்தி நீரால் - ஒருத்தியின் காரணமாக. இந்திரசித்தன் உடலைத் தாங்கிக் கொண்டு இராவணன் இலங்கையுள் புகுதல் ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வ ராய தேவியர் குழாங்கள் சுற்றிச், சிரத்தின்மேல் தளிர்க்கை சேர்த்தி ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப,ஒல்லை கோவியல் கோயில் புக்கான் குருதிநீர்க் குமிழிக் கண்ணான். 18 18. புரள்வன ஒப்ப - புரள்வதைப் போலப் புரண்டு அழ. ஒல்லை - விரைவில். கோவியல் கோயில் - அரசனுக்கு அமைக்கப்பட்ட அரண்மனைக்குள். மண்டோதரியின் புலம்பல் தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் மிதிக்கின் றாள்போல் நிலையின்மேல் மிதிக்கும் தாளள், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள், கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கணை உயிரைக் கொள்ள மலையின்மேல் மயில்வீழ்ந்து என்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 19 19. நிலையின்மேல் - நிலத்தின்மேல். கொலையின்மேல் குறித்த - கொல்லுவதிலே எண்ணம் கொண்ட. `கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தேஉன் சிலையினால் அரியை வெல்லக் காண்பதுஓர் தவமும் செய்தேன்; தலையிலா ஆக்கை காண எத்தவம் செய்தேன் அந்தோ! நிலைஇலா வாழ்வை இன்னும் நினைவெனோ நினைவி லாதேன்.’ 20 20. கலையினால் திங்கள் போல - கலையினால் வளர்கின்ற பிறைச்சந்திரனைப் போல. அரியை - சிங்கத்தை. சிலை - வில். `முக்கணான் முதலி னோரை உலகொரு மூன்றி னோடும் புக்கபோர் எல்லாம் வென்ற நின்றஎன் புதல்வன் போலாம் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன்; வானமேரு உக்கிட அணுஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா?’ 21 21. புக்க போர் எல்லாம் - புகுந்த சண்டையில் எல்லாம். வானமேரு உக்கிட - வானத்தை முட்ட வளர்ந்த மேருமலை சிதறும்படி. `பஞ்சுஎரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே; மீண்ட தில்லை; அஞ்சினேன்! அஞ்சி னேன்அச் சீதைஎன்று அமுதால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளைஇத் தகையன் அன்றோ?’ 22 22. பஞ்ச எரியுற்றது என்ன - பஞ்சிலே தீப்பற்றியது போல. பரவை எல்லாம் - கடல் முழுவதும். இராவணன், `சீதையைக் கொல்வேன்’ என்று சினந்து ஓடும்போது மகோதரன் தடுத்தல் ஓடுகின் றானை நோக்கி, உயர்பெரும் பழியை உச்சிச் சூடுகின் றான்,என்று அஞ்சி, மகோதரன் துணிந்த நெஞ்சன், மாடுசென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி’நின் புகழ்க்கு மன்னா கேடுவந்து அடுத்தது’ என்னா இனையன கிளத்தல் உற்றான். 23 23. உயர் பெரும் பழியை - அழியாத பெரிய பழியை. உச்சி சூடுகின்றான் என்று அஞ்சி - தலையிலே சுமந்து கொள்ளப் போகின்றானே என்று பயந்து. மாடு சென்று - இராவணன் பக்கத்திலே போய். `நீர்உள தனையும், சூழ்ந்த நெருப்புள தனையும், நீண்ட பார்உள தனையும், வானப் பரப்புள தனையும், காலின் போர்உள தனையும், பேராப் பெரும்பழி பிடித்தி போலாம்; போர்உள தனையும் வென்று, புகழ்உள தனையும் உள்ளாய்!’ 24 24. போர் உளதனையும் வென்று - உள்ள போர் அத்தனையிலும் வெற்றிபெற்று. புகழ் உள தனையும் உள்ளாய் - புகழ் முழுவதையும் கொண்டிருப்பவனே. அனையும் - வரையும்; அளவும். `மங்கையைக், குலத்து உளாளைத், தவத்தியை முனிந்து வாளால் சங்கைஒன்று இன்றிக் கொன்றால், `குலத்துக்கே தக்கான்’ என்று கங்கைஅம் சென்னியானும், கண்ணனும், கமலத் தோனும் செங்கையும் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறியன் என்னா.’ 25 25. சங்கை ஒன்று இன்றி - கூச்சம் சிறிதும் இல்லாமல். சிறியன் என்னா - அற்பன் என்று. நிலத்துஇயல்பு அன்று; வானின் நெறிஅன்று; நீதிஅன்று; தலத்துஇயல்பு அன்று; மேலோர் தருமமேல் அதுவும் அன்று; புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய், வலத்தியல்பு அன்று; மாயாப் பழிகொடு மறுகு வாயோ?’ 26 26. புண்ணிய மரபு பூண்டாய் - நல்ல குலத்தில் பிறந்தவன் என்ற புகழ் பெற்றவனே. நிலத்து இயல்பு அன்று - உலகத்தார் இயல்பு அன்று. வானின் நெறி அன்று - வானுலகத்தாரின் முறையும் அன்று. தவத்து இயல்பு அன்று - மற்ற உலகத்தாரின் தன்மையும் அன்று. `இன்றுநீ இவளை வாளால் எறிந்துபோய், இராமன் தன்னை வென்றுமீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்பு வாயோ? பொன்றினள் சீதை; என்றே போவர்கள் அவர்தாம்; அல்லால் வென்றிட முடியாது என்னும் வீரமோ விளம்பல்’ என்றான். 27 27. எறிந்து போய் - கொன்று விட்டுப் போய். எய்தினை - அடைந்த பின். வெதும்பு வாயோ - வருந்துவாயோ. போவர்கள் - போர் புரியாமல் போய் விடுவார்கள். இராவணன் செய்கை என்னலும் எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு, மீண்டு மன்னவன், `மைந்தன் தன்னை மாற்றலர் வலிதின் கொண்ட சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும்கொண்டு அன்றிச் சேர்கேன்; தொல்நெறித் தைலத் தோணி வளர்த்துமின்?’ என்னச் சொன்னான். 28 28. இட்டு - போட்டு விட்டு. மாற்றலர் -பகைவர்கள். தோணி - தொட்டி. 30. படைக் காட்சிப் படலம் அத்தொழில் அவரும் செய்தார்; ஆயிடை அனைத்துத் திக்கும் பொத்திய நிருதர் தானை கொணரிய போன தூதர் ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர்; `இலங்கை உன்ஊர் பத்தியின் அடைந்த தானைக்கு இடம்இலை பணிஎன்? என்றார். 1 படைக் காட்சிப் படலம்: இராவணன் மூல பலப் படையைப் பார்வையிட்டதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. பொத்திய - நிறைந்திருந்த. கொணரிய - கொண்டு வரும் பொருட்டு. பத்தியின் - வரிசையாக. ஏம்பல்உற்று எழுந்த மன்னன் எவ்வழி எய்திற்று; என்றான் கூம்பல்உற்று உயர்ந்த கையர், `ஒருவழி கூற லாமோ வாம்புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத் தாம்பொடித்து எழுந்த தானைக்கு உலகுஇடம் இல்லை’ என்றார். 2 2. ஏம்பல் உற்று - துக்க மடைந்து. கூம்பல் உற்று - கூப்பி. வாம் புனல் - தாவுகின்ற நீரையுடைய. பொடித்து - தோன்றி. `நெருக்குடை வாயி லூடு புகும்எனின், நெடிதுகாலம் இருக்கும்அத் தனையே என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி, அரக்கனது இலங்கைஉற்ற, அண்டங்கள் அனைத்தின் உள்ள கருக்கினர் மேகம் எல்லாம் ஒருங்குடன் கலந்தது என்ன. 3 3. `அண்டங்கள் அனைத்தின் உள்ள கருக்கிளர் மேகம் எலலாம் ஒருங்குடன் கலந்தது என்ன அரக்கனது இலங்கை உற்ற’. அதுபொழுது அரக்கர் கோனும் அணிகொள்,கோ புரத்தின் எய்திப் பொதுஉற நோக்கல் உற்றான்; ஒருநெறி போகப் போக விதிமுறை காண்பன் என்னும் வேட்கையான், வேலை ஏழும் கதும்என ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 4 4. ஒரு நெறி போகப் போக - ஒரு வழியிலே கண் பார்வை செல்லச் செல்ல அதைத் தடுத்து. விதி முறை காண்பன் என்னும் - அணி வகுத்திருக்கும் முறையிலே ஒவ்வொன்றாக. காண்பேன் என்னும். வேட்கையான் - விருப்பம் உள்ளவனாய். கதும்என - திடீர் என்று. மாதிரம்ஒன்றி னின்று, மாறுஒரு திசைமேல் மண்டி ஓதநீர் செல்வது அன்ன தானையை, உணர்வு கூட வேதவே தாந்தம் கூறும் பொருளினை விரிக்கின் றாபோல், தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொன்னார். 5 5. மாதிரம் ஒன்றின் நின்று - ஒரு திசையிலிருந்து. மாறு ஒரு திசை மேல் மண்டி - வேறொரு திசையின்மேல் நெருங்கி. உணர்வுகூட - அறிவுண்டாகும்படி. `காளி யைப்பண்டு கண்ணுதல் காட்டிய காலை மூள முற்றிய சினக்கடும் தீயிடை முளைத்தோர்; கூளி கட்குநல் உடன்பிறந் தார்;பெரும் குழுவாய் வாள்இ மைக்கவும், வாள்எயிறு இமைக்கவும் வருவார்.’ 6 6. காட்டிய காலை - தோற்கும்படி ஊர்த்துவ நடனம் செய்து காட்டிய பொழுது. ஊர்த்துவ நடனம்; ஒருகாலை ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலைத் தலைக்கு மேலே தூக்கி நின்று ஆடுவது. மூள முற்றிய - காளிக்கு மூண்டு முதிர்ந்த. கூளிகட்கு - பேய்களுக்கு. இமைக்கவும் - மின்னவும். `பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர், தீவம் தோன்றிய முழைத்துணை எனத்தெறு கண்ணர், கோவம் தோன்றிடின் தாயையும் உயிர்உணும் கொடியோர், சாவம் தோன்றிட வடதிசை மேல்வந்து சார்வார்.’ 7 7. தீவம் தோன்றிய - விளக்குகள் காணப்படுகின்ற. முழைத்துணை என - இரண்டு குகைகள் என்று கூறும்படி. தெறு கண்ணர் - அச்சந்தரும் கண்களை உடையவர்கள். சாவம் - வில். `காலன் மார்புழைச் சிவன்கழல் பட,அன்று கான்ற வேலை யேஅன்ன குருதியில் தோன்றிய வீரர், சூலம் ஏந்திமுன் னின்றவர்; இந்நின்ற தொகையார் ஆல காலத்தின், அமிழ்தின்முன் பிறந்தபோர் அரக்கர்.’ 8 8. மார்புழை - மார்பிலே. அன்றுகான்ற - அப்பொழுது வெளிவந்த. வேலையே அன்ன - கடல் போன்ற இரத்தத்திலே. தொகையார் - கூட்டத்தினர். படைத் தலைவர்கள், `துயருக்கு என்ன காரணம்’ என்று இராவணனைக் கேட்டல் `மாத ரார்களும், மைந்தரும், நின்மருங்கு இருந்தார் பேது றாதவர் இல்லை;நீ வருந்தினை பெரிதும்; யாது காரணம் அருள்’என அனையவர் இசைத்தார்; சீதை காதலின் பிறந்துள பரிசுஎலாம் தெரித்தான். 9 9. இருந்தார் - இருந்தவர்களிலே. பேதுறாதவர்கள் - கலக்கம் அடையாத வர்கள். பிறந்துள - தோன்றிய. பரிசு எலாம் - நிலைமை முழுவதையும். வன்னி என்பவன், `அவர்கள் யார்’ என்றபோது மாலியவான் உரைத்தது `கொற்ற வெம்சிலைக் கும்பகன் னனும்,நுங்கள் கோமான் பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும், மற்றை வீரரும், இந்திர சித்தொடு மடிந்தார்; இற்றை நாள்வரை யானும்மற்று இவருமே இருந்தோம்.’ 10 10. -. `ஒருகு ரங்குவந்து, இலங்கையை மலங்குஎரி ஊட்டித், திருகு வெம்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்துப், பொருது, தூதுரைத்து ஏகியது அரக்கியர் புலம்பக், கருது சேனையாம் கடலும்,மாக் கடலையும் கடந்து.’ 11 11. மலங்கு எரி ஊட்டி - கலங்கும்படி நெருப்புக்கு உணவாக்கி. திருகு - அழிக்கின்ற. `கண்டி லீர்கொலாம், கடலினை மலைகொண்டு கட்டி மண்டு போர்செய வானரர் இயற்றிய மார்க்கம்; உண்டு வெள்ளம்ஓர் எழுபது; மருந்துஒரு நொடியில் கொண்டு வந்தது மேருவிற்கு அப்புறம் குதித்து.’ 12 12. -. `இதுஇ யற்கை;ஓர் சீதைஎன்று இருந்தவத்து இயைந்தாள், பொதுஇ யற்கைதீர் கற்புடைப் பத்தினி பொருட்டால், விதிவி ளைத்தது;அவ் வில்லியர் வெல்க;நீர் வெல்க; முதுமொ ழிப்பதம் சொல்லினேன்;’ என்றுரை முடித்தான். 13 13. முது மொழி - பழமையான மொழிகளால். பதம் சொல்லினென் - நடந்துள்ள நிலைமையைக் கூறினேன். வன்னி இராவணனைக் கேட்டல் வன்னி, மன்னனை நோக்கி;நீ இவர்எலாம் மடிய என்ன காரணம் இகல்செயாது இருந்தது?’என்று இசைத்தான்; `புன்மை நோக்கினென்! நாணினால் பொருந்திலேன்’ என்றான்; `அன்ன தேல்இனி அமையும்என் கடன்அஃது’ என்றான். 14 14. வன்னி - உடனே வன்னி என்பவன். இவன் புஷ்கரத் தீவுக்கு அரசன். படைத் தலைவர்களில் ஒருவன். இகல் - போர். புன்மை நோக்கினன் - அற்பம் என்று நினைத்தேன். இராவணன் உரைத்த பதில் `மூது ணர்ந்த,இம் முதுமகன் கூறிய முயற்சி சீதை என்பவள் தனைவிட்டுஅம் மனிதரைச் சேர்தல்; ஆதி யின்தலை செயத்தக்கது; இனிச்செயல் அழிவால் காதல் இந்திர சித்தையும் மாய்வித்தல் கண்டும்.’ 15 15. மூது உணர்ந்த - பழமையை அறிந்த. முயற்சி - செயலாவது. ஆதியின் தலை - முன்பே. `விட்டம் ஆயினும் மாதினை, வெம்சமம் விரும்பிப், பட்ட வீரரைப் பெறுகிலம்; பெறுவது பழியால்; முட்டி மற்றவர் குலத்தொடும் முடிக்குவது அல்லால் கட்டம் அத்தொழில்; செருத்தொழில் இனிச்செயும் கடமை.’ 16 16. மாதினை விட்டம் ஆயினும் - சீதையை விட்டோம் ஆயினும். முட்டி - போர் புரிந்து. அத்தொழில் கட்டம் - சீதையை விடுவிப்பது என்னும் அச்செயல் கஷ்டமான தாகும். செருத்தொழில் - போர்தான். என்று எழுந்தனர்; இராக்கதர், `இருத்திநீ யாமே சென்று, மற்றவர் சில்உடல் குருதிநீர் தேக்கி, வென்று மீளுதும்; வெள்குது மேல்,மிடல் இல்லாப் புன்தொ ழில்குலம் ஆதும்;’என்று உரைத்தனர் போனார். 17 17. என்று எழுந்தனர் - என்று சொல்லிப் போருக்கு எழுந்தவர்களாகிய அரக்கர்கள். சில் உடல் - சிறிய உடலின். தேக்கி- குடித்து. மிடல் - வலிமை. 31. மூலபல வதைப் படலம் அறத்தைத் தின்று,அருங் கருணையைப் பருகி,வேறு அமைந்த மறத்தைப் பூண்டு,வெம் பாவத்தை மணம்புணர் மணாளர்; நிறத்துக் கார்அன்ன நெஞ்சினர்; நெருப்புக்கு நெருப்பாய்ப் புறத்தும் பொங்கிய பங்கியர்; காலனும் புகழ்வார். 1 மூல பலவதைப் படலம்: இராவணனுடைய மூல பலமான படைகள் அனைத்தும் கொல்லப்பட்டதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. வேறு அமைந்த - அறத்துக்கு எதிராகப் பொருந்திய. மறத்தைப் பூண்டு - வீரத்தைத் தரித்து. நிறத்துக்கார் அன்ன - நிறத்தினால் மேகத்தைப் போன்ற கருமையான. பங்கியர் - மயிருள்ளவர். சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர்வாள், கோல வெம்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சார வான்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால்,சிவன், குமரன்என்று இவரையும் கடப்பார். 2 2. வாங்கிடின் - கையில் பிடித்தாலும். சாலவான் தண்டு - மிகவும் பெரிய கதாயுதத்தை. கடப்பார் - வெற்றி கொள்வார். வானரப் படைகளின் ஓட்டம் புற்றின் நின்றுவல் அரவினம் புறப்படப், பொருமி, `இற்றது எம்வலி’ என,விரைந்து இரிதரும் எலிபோல், மற்ற வானரப் பெருங்கடல் பயங்கொண்டு, மறுகிக், கொற்ற வீரரைப் பார்த்திலது, இரிந்தது குலைவார். 3 3. பொருமி - வருந்தி. குலைவால் திரிந்தது - பயத்தால் கலைந்து ஓடின. அணையின் மேற்சில சென்றன; ஆழியை நீந்தப் புணைகள் தேடின சில;சில நீந்தின போன; துணைக ளோடும்புக்கு அழுந்தின சில;சில தோன்றாப் பணைகள் ஏறின; மலைமுழை புக்கன பலவால். 4 4. புணைகள் - தெப்பங்களை. தோன்றா - காணாமலிருக்கும் படி. பணைகள் - மரக்கிளைகளிலே. முழை - குகைகளிலே. வானரப் படைத் தலைவர்களும் மறைந்தனர்; சுக்கிரீவன், அங்கதன், அனுமான் மூவருமே ஓடாமல் நின்றனர். அப்பொழுது இராமன், `இப்படை எங்கிருந்து வந்தது’ என்று வீடணனைக் கேட்டான். வீடணன் உரைத்தது `ஈண்டுஇவ் அண்டத்துள் இராக்கதர் எனும்பெயர் எல்லாம் மூண்டு வந்தது தீவினை முன்னின்று முடுக்க; மாண்டு வீழும்இன்று, என்கின்றது என்மதி; வலிஊழ் தூண்டு கின்றது’என்று அடிமலர் தொழுதுஅவன் சொன்னான். 5 5. மூண்டு வந்தது - ஒன்று சேர்ந்து வந்தது. வலி ஊழ் தூண்டுகின்றது - வலிய ஊழ் வினை தூண்டுகின்றதனால். என்மதி - எனது அறிவு. ஓடிய சேனையை அழைக்கும்படி இராமன் உரைத்தல் கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளரக் `காட்டு கின்றனென், காணுதி ஒருகணத்து’ என்னா `ஓட்டின் மேல்கொண்ட தானையைப் பயந்துடைத்து, உரவோய்! மீட்டி கொல்’என அங்கதன் ஓடினன் விரைந்தான். 6 6. ஓட்டின் மேல் கொண்ட - ஓட்டத்தின் மேல் குறிவைத்து ஓடிய - மீட்டிகொல் - திரும்ப அழைத்து வருவாயோ. விரைந்தான் ஓடினன் - விரைந்து ஓடினான். படைத் தலைவர்களை அங்கதன் அழைத்தபோது அவர்கள் அஞ்சிக் கூறியது `அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர் தனுவின் ஆற்றலும் தம்உயிர் தாங்கவும் சாலா; கனியும் காய்களும் உணவுள; முழைஉள கரக்க; மனிதர் ஆளின்என்? இராக்கதர் ஆளின்என் வையம்?’ 7 7. தம் உயிர் தாங்கவும் சாலா - தமது உயிரைக் காத்துக் கொள்ளவும். போதாது. கரக்க முழை உள - மறைந்து வாழக் குகைகள் இருக்கின்றன. `தாம்உ ளார்அல ரேபுகழ் திருவொடும் தரிப்பார்? யாம்உ ளோம்எனின் எம்கிளை உள்ளதுஎம் பெரும! போமின் நீர்என்று விடைதரத் தக்கனை; புரப்போய்ச் சாமின் நீர்என்றல் தருமம்அன்று’ என்றனர் தளர்ந்தார். 8 8. தாம் உளார் - தாம் உயிரோடு இருந்தால்தான். அலரே - பழியையாவது. திருவொடும் புகழ் - செல்வத்துடன் புகழை யாவது. தக்கனை - உரியவன். புரப்போய் - காக்கின்றவனே. சாமின் நீர் - சாகுங்கள் நீங்கள். தளர்ந்தார் - சோர்ந்தார். சாம்பனைப்பார்த்து அங்கதன் உரைத்தல் சாம்பனை வதனம் நோக்கி வாலிசேய்; `அறிவு சான்றோய்! பாம்பணை அமல னேமற்று இராமன்என்று, எமக்குப் பண்டே, ஏம்பல்வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லை யோநீ! ஆம்பல்அம் பகைஞன், தன்னோடு அயிந்திரம் அமைந்தோன் அன்னாய்!’ 9 9. பாம்பணை அமலனே - திருமாலே. ஏம்பல் வந்து எய்த - மகிழ்ச்சி உண்டாகும்படி. ஆம்பல் அம்பகைஞன் தன்னோடு - அழகிய அல்லியின் பகைவனான சூரியனிடம். அயிந்திரம் அமைந்தோன் - இந்திர வியாகரணத்தைக் கற்ற அனுமானை. `தேற்றுவாய் தெரிந்து, சொல்லால் தெருட்டி,இத் தெருள்இ லோரை ஆற்றுவாய் அல்லை, நீயும் அஞ்சினை போலும் ஆவி போற்றுவாய், என்ற போது புகழ்என்னாம் புலமை என்னாம்? கூற்றின்வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார்?’ 10 10. தெரிந்த சொல்லல் தேற்றுவாய் - ஆராய்ந்த சொல்லால் தேற்றக் கூடிய நீ. இத்தெருள் இலோரை - இந்தத் தெளிவற்றவர்களை தெருட்டி - தெரியும்படி செய்து. ஆற்றுவாய் அல்லை - இவர்கள் பயத்தைத் தணிக்கவில்லை. இறைமை கொண்டார் - தலைமை பெற்றவர். `எத்தனை அரக்க ரேனும் தருமம்ஆண்டு இல்லை அன்றே; அத்தனை அறத்தை வெல்லும் பாவம்என்று அறிந்தது உண்டோ? பித்தரைப் போல நீயும் இவரொடும் பெயர்ந்த தன்மை ஒத்திலது’ என்னச் சொன்னான்; அவன்இவை உரைப்பது. 11 11. அத்தனை அறத்தை - மிகுதியான தருமத்தை. பெயர்ந்த தன்மை - ஒடிவந்த காரியம். ஒத்திலது - பொருத்த மற்றது. அவன் - சாம்பவான். சாம்பன் அளித்த விடை நாணத்தால் சிறிது போழ்து நலங்கினன் இருந்து, பின்னர், `தூண்ஒத்த திரள்தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம், காணத்தான், நிற்கத் தான்,அக் கறைமிடற் றவற்கும், ஆமோ? கோணற்பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ?’ 12 12. நலங்கினன் இருந்து - மனம் வாடியவனாய் நின்ற. அரக்கர் தோற்றம் - அரக்கர் கும்பலின் காட்சியை. கோணல் பூ உண்ணும் - கோணலான பூவில் உள்ள தேனை உண்ணும். `மாலியைக் கண்டேன்! பின்னை மாலிய வானைக் கண்டேன்; காலநே மியையும் கண்டேன்! இரணியன் தனையும் கண்டேன்; ஆலமா விடமும் கண்டேன்!, மதுவினை அனுச னோடு வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்குள மிடுக்கும் உண்டோ?’ 13 13. மாலி, மாலியவான் என்பவர் இராவண குல முன்னோர்கள். கால நேமி; நூறு தலைகள் நூறு கைகள் படைத்தவன்; இரணியன் மகன். மதுவினை அனுசனோடும் - மது என்பவனை அவன் சகோதரனுடன்; மது, கைடவன் என்பவர்கள். `வலிஇதன் மேலே பெற்ற வரத்தினர்; மாயம் வல்லோர்; ஒலிகடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின் கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால் மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டாய்?’ 14 14. வலி இதன்மேலே - வலிமையாகிய இதற்கு மேலே. விண்ணவர் வெருவல் கண்டால் - தேவர்களும் - அஞ்சுவதைப் பார்த்தால். மெலிகுவது அன்றி உண்டோ - குரங்குகள் மெலிகுவதைத் தவிர வேறொன்று உண்டோ. `ஆகினும் ஐயம் வேண்டா; அழகிதன்று, அமரின் அஞ்சிச் சாகினும், பெயர்ந்த தன்மை பழிதரும், நரகில் தள்ளும்; ஏகுதும் மீள; இன்னம் இயம்புவது உளதால்; ஐய! மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும்?’ 15 15. பெயர்ந்த தன்மை - ஓடிவந்த தன்மை. அமர் - போர். மீள ஏகுதும் - ஆதலால் திரும்பச் செல்வோம். அங்கதன் அளித்த விடை `ஒன்றும்நீர் அஞ்சல் ஐய! யாம்எலாம் ஒருங்கே சென்று நின்றும்ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்த கொன்றுபோர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி; அன்றேல் பொன்றுதும் அவனோடு’ என்றான்; `போதலே அழகிற்று’ என்றான். 16 16. நேமியான்தானே - இராமபிரான் தானே. நேர்ந்து - அவர்களுடன் எதிர் நின்று. போதலே அழகிற்று - மீண்டு போவதே சிறந்தது. மாருதியுடனும், சுக்கிரீவனுடனும் நின்று வானரப் படையைக் காக்கும்படி இலக்குவனுக்கு உரைத்தான் இராமன். இலக்குவன் இணங்கினான். அப்பொழுது அனுமான். தான் இராமனுடன் இருக்க விரும்பினான். அப்பொழுது இராமன் உரைத்தது. `ஐயநிற்கு இயலாது உண்டோ? இராவணன் அயலே வந்துற்று எய்யும்வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால், மொய்அமர்க் களத்தின் உன்னைத் துணைபெறான் என்னின், முன்ப செய்யும்மா வெற்றி உண்டோ? சேனையும் சிதையும் அன்றே.’ 17 17. வில் கரத்து வீரன் - வில்லைக் கையிலே கொண்ட வீரனாகிய. ஏற்றால் - போர் செய்தால். முன்ப - வலிமையுள்ளவனே. `ஏரைக்கொண்டு அமைந்த குஞ்சி இந்திர சித்துஎன் பான்தன் போரைக்கொண்டு இருந்த முன்னாள், இளையவன் தன்னைப் போக்கிற்று ஆரைக்கொண்டு உன்னால் அன்றே, வென்றதுஅங்கு அவனை? இன்னம் வீரர்க்கும் வீர நின்னைப் பிரிகலன் வெல்லும் என்பேன்.’ 18 18. ஏரைக்கொண்டு - அழகைக்கொண்டு. குஞ்சி - ஆண் மயிரைக் குறிப்பது. `சேனையைக் காத்து,என் பின்னே திருநகர் தீர்ந்து போந்த யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து,எண் தீர்ந்த வானைஇத் தலத்தி னோடும் மறையொடும் வளர்த்தி’ என்றான், ஏனைமற்று உரைக்கி லாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 19 19. யானையை - ஆண் யானை போன்ற இலக்குவனை. இறைவனை - சுக்கிரீவனை. எண் தீர்ந்த - எண்ண முடியாத சிறந்த. இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும்அனுப்பினான்.சுக்கிரீவன், அனுமான், வீடணன் ஆகியோருடன், இலக்குவன், வானர சேனையைக் காக்கச் சென்றான். இராமன் போர்க் கோலம் பூண்டான். வில்லினைத் தொழுது வாங்கி ஏற்றினான்; வில்நாண் மேருக் கல்எனச் சிறந்த தேயும், கருணைஅம் கடலே அன்ன எல்ஒளி மார்பில் வீரக் கவசம்இட்டு இழையா வேதச் சொல்எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி. 20 20. இழையா - ஒருவராலும் செய்யப்படாத. தொலையா - வற்றாத. `வில் நாண்.... புறத்துத் தூக்கி, வில்லினைத் தொழுது வாங்கி ஏற்றினான்’. தேவர்களும் முனிவர்களும் வாழ்த்துரைத்தல் `கண்ணனே; எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது ஒண்ணுமே நீஅ லாதுஓர் ஒருவர்க்குஇப் படைமேல் ஊன்றல் எண்ணமே முடித்தி!’ என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம். 21 21. கவசமே - பாதுகாப்பே. எண்ணமே முடித்தி என்னா - எங்கள் எண்ணத்தை முடிப்பாயாக என்று. முனிவரே முதல்வர் ஆய அறத்துறை முற்றி னோர்கள் தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும் தரிக்க லாதார், பனிவரும் கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், `பாவத்து அனைவரும் தோற்க; அண்ணல் வெல்க’என்று ஆசி சொன்னார். 22 22. அறத்துறை முற்றினோர்கள் - அறநெறியிலே தவறாதவர்கள். தரிக்கலாதார் - கண்டு மனத்துயர் தாங்க முடியாதவர்களாய். மூல பலப்படை அழிவு வஞ்சவினை செய்து,நெடு மன்றில்வளம் உண்டு,கரி பொய்க்கும் மறம்ஆர் நெஞ்சம்உடை யோர்கள்குலம் ஒத்தனர் அரக்கர்;அறம் ஒக்கும் நெடியோன் நஞ்சநெடு நீரினையும் ஒத்தனன்; அடுத்துஅதனை நக்கி னரையும், பஞ்சம்உறு நாளில்வழி யோர்களையும், ஒத்தனர் அரக்கர் படுவார். 23 23. நெடுமன்றில் - பெரிய நீதி மன்றத்திலே. வஞ்ச வினை செய்து - வஞ்சகத் தொழில் செய்து. வளன் உண்டு - செல்வம் பெற்று உண்டு. கரிபொய்க்கும் - பொய் சாட்சி புகலும். மறம் ஆர் - பாவம் பொருந்திய. நஞ்ச நெடு நீரினையும் - விஷம் நிறைந்த பெரிய நீரையும். படுவார் அரக்கர் - இருக்கின்ற அரக்கர்கள். ஊன்ஏறு படைக்கை வீரர் எதிர்எதிர், உருவந் தோறும், கூன்ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் வான்ஏறி னார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும், தான்ஏறி வந்த தேரே ஆக்கினான் தனிஏறு அன்னான். 24 24. ஊன் ஏறு படைக்கை - மாமிசம் பொருந்திய ஆயுதங்களைக்கையிலே கொண்ட. உருவந்தோறும் - அவரவர்கள் உருவங்களுக்கு முன்னே. கூன் ஏறு - வளைந்த. கடுப்பின் கொட்பால் - வேகத்தின் சுழற்சியால். வாள் ஏறினார்கள் தேரும் - சிறந்தவர்கள் விட்டுச் சென்ற தேர்களும். தேரே ஆக்கினான் - தேர்போலத் தோன்றும்படி செய்தான். காய்இரும் சிலைஒன் றேனும், கணைப்புட்டில் ஒன்ற தேனும், தூய்எழு பகழி மாரி மழைத்துளித் தொகையின்மேல; ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செங்கை; ஆயிரம் கையும் கூடி இரண்டுகை ஆனது அன்றே. 25 25. காய் இரும் சிலை - சினந்து போர் செய்யும் பெரிய வில். தூய் எழு - தூவி எழுகின்ற. பகழி - அம்பு. விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படைஈ றாக கொண்டுஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது அமரர் கூட்டம்; அண்டமும் கீழ்மேல் ஆக ஆகியது; அதனை அண்ணல் கண்டுஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் காத்தான். 26 26. விண்டு - விஷ்ணு. வெய்யவன் - சூரியன். தான்அவை தொடுத்த போது தடுப்பரிது; உலகம் தானே பூநனி வடவைத் தீயின் புக்கெனப் பொரிந்து போம்என்று ஆனது தெரிந்த வள்ளல் அளப்பரும் கோடி அம்பால் ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான். 27 27. பூ - மலரானது. நனி - மிகுந்த. இட்டான் - அறுத்துக் குவித்தான். ஆயிர வெள்ளத் தோரும் அடுகளத்து அவிந்து வீழ்ந்தார்; மாயிரு ஞாலத் தாள்,தன் வன்பொறைப் பாரம் நீங்கி மீஉயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கொலி வேலை நின்றும் போய்ஒரு கண்டத் தோடும் கோடியோ சனைகள் பொங்கி. 28 28. மாயிரு ஞாலத்தாள் - பூமிதேவி. ஒருங்கு அண்டத்துடன் போய் - ஒன்றாக உலகத்துடன் எழுந்து சேர்ந்து. மீ - மேலே. தாய்படைத் துடைய செல்வம் ஈகெனத் தம்பிக்கு ஈந்து, வேய்படைத் துடைய கானம், விண்ணவர் தவத்தின் மேவி, தோய்படைத் தொழிலால் யார்க்கும் துயர்துடைத் தானை நோக்கி, வாய்படைத் துடையார் எல்லாம் வாழ்த்தினார்; வணக்கம் செய்தார். 29 29. தாய் - சிறிய தாயான கைகேசி. வேய் - மூங்கில். கானம் - காட்டை. தோய் - பொருந்திய. தீமொய்த்த அனைய செங்கண் அரக்கரை முழுதும் சிந்திப், பூமொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான்; பேய்மொய்த்து, நரிகள் ஈண்டிப் பெரும்பிணம் பிறங்கித் தோன்றும் ஈமத்துள், தமியன் நின்ற கறைமிடற்று இறைவன் ஒத்தான். 30 30. தீ மொய்த்த அனைய - தீப்பற்றியது போன்ற. சிந்தி - அழித்ததனால். ஈமத்துள் - சுடு காட்டில். அண்டமாக், களமும், வீந்த அரக்கரே உயிரும் ஆகக் கொண்டதுஓர் உருவம் தன்னால் இறுதிநாள் வந்து கூட, மண்டுநாள் மறித்தும் காட்ட, மன்உயிர் அனைத்தும் வாரி உண்டவன் தானே ஆன தன்ஒரு மூர்த்தி ஒத்தான். 31 31. அண்டமாக்களமும் - போர்க்களம் அண்டமாகவும். இறுதி நாள் வந்துகூட - ஊழிக்காலம் வந்து சேர. மண்டும் நாள் மறித்தும் காட்ட - படைக்கும் நாள் நெருங்கும் போது மீண்டும் அவ்வுயிர்களைக்காட்ட. உண்டவன்தானே ஆன - உண்டவனாகிய. தன் ஒரு மூர்த்தி ஒத்தான் - தன் உருவமான ஒப்பற்ற மூர்த்தியைப் போன்றான். 32. வேலேற்ற படலம் அரக்கர் சேனைஓர் ஆயிர வெள்ளத்தை, `அமரில் துரக்க மானிடர் தம்மை’என்று ஒருபுடை துரந்து, வெருக்கொள் வானரச் சேனைமேல் தான்செல் வான்விரும்பி இருக்கும் தேரொடும் போயவன் இராவணன் எதிர்ந்தான். 1 வேலேற்ற படலம்: இராவணன், வீடணன்மேல் வீசிய வேற் படையை இலக்குவன் தன் மார்பில் ஏற்றுக் கொண்டதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. மானிடர் தம்மை துரக்க - மனிதர்களை விரட்டுக. ஒரு புடைதுரந்து - ஒரு பக்கத்தில் துரந்து. வெருக்கொள் - அச்சங்கொண்ட. ஆளி போன்றுளன் எதிர்ந்தபோது, அமர்க்களத்து அடைந்த ஞாளி போன்றுள என்பதுஎன்? நள்இருள் அடைந்த காளி போன்றனன் இராவணன்! வெள்ளிடைக் கரந்த பூளை போன்றதுஅப் பொருசினத்து அரிகள்தம் புணரி. 2 2. ஆளிபோன்றுளன் - சிங்கம் போன்றவனாகிய இராவணன். ஞானி - நாய். வெள்ளிடை - வெட்ட வெளியிலே. கரந்த - காற்றால் மறைந்த. பூளை - பூளைப் பூண்டு. அரிகள் தம் புணரி - குரங்குச் சேனையாகிய கடல். இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி `அரிகள் அஞ்சன்மின்! அஞ்சன்மின்!’ என்றுஅருள் வழங்கித் திரியும் மாருதி தோள்எனும் தேர்மிசைச் சென்றான்; எரியும் வெம்சினத்து இராவணன் எதிர்புகுந்து ஏற்றான். 3 3. விலக்கி - தடுத்து. அருள் வழங்கி - கருணையுடன் சொல்லி. ஏற்றான் - போரை ஏற்றான். இராவணன் விடும் அம்புகளையெல்லாம் இலக்குவன் அழித்தான். இலக்குவன் பக்கத்திலிருந்த வீடணன் மேல் இராவணன் கடுஞ்சினம் உற்றான்; அவனைக் கொல்லக் கருதி ஒரு வேற்படையை அவன் மீது ஏவினான். வேற் படைகண்டு வீடணன் அச்சம் எறிந்த காலையில், வீடணன், அதன்நிலை எல்லாம் அறிந்த சிந்தையின் ஐயஈது என்உயிர் அழிக்கும்; பிறிந்து செய்யலாம் பொருள்இலை, என்றலும் பெரியோன், `அறிந்து போக்குவல் அஞ்சல்நீ’ என்றிடை அணைந்தான். 4 4. பிறிந்து செய்யலாம் பொருள் இலை - இதை மீறிச் செய்யக் கூடிய தொரு காரியம் இல்லை. பெரியோன் - இலக்குவன். இடை அணைந்தான்- அவ்விடத்தைச் சேர்ந்தான். எய்த வாளியும், ஏவின படைக்கலம் யாவும், செய்த மாதவத்து ஒருவனைச் சிறுதொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன; `வீடணன் மாண்டான்; உய்தல் இல்லை;’என்று உம்பரும் பெருமனம் உலைந்தார். 5 5. எய்த வாளியும் - இலக்குவன் விட்ட அம்புகளும். ஏவின - மற்றும் அனுப்பிய. `தோற்பன் என்னினும் புகழ்நிற்கும் தருமமும் தொடரும்; ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்?நெடும் பழிவந்து தொடர்வதன் முன்னம் ஏற்பன் என்தனி மார்பின்’என்று இலக்குவன் எதிர்ந்தான். 6 6. தோற்பன் என்னினும் - உயிர் விடுவேனாயினும். எதிர்த்தான் - அந்த வேற்படைக்கு எதிரே நின்றான். இலக்கு வற்குமுன் வீடணன் புகும்;இரு வரையும் விலக்கி அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கிக் கலக்கும் வானரக் காவலன்; அனுமன்முன் கடுகும்; அலக்கண் அன்னதை இன்னதுஎன்று உரைசெயல் ஆமோ? 7 7. வானரக் காவலன் - சுக்கிரீவன். அலக்கண் அன்னதை - துன்பமான அந்த நிலையைப் பற்றி. முன்நின் றார்எலாம் பின்உறக், காலினின் முடுகி `நின்மின்! யான்இது விலக்குவென்’ என்றுஉரை நேரா, மின்னும் வேலினை, விண்ணவர் கண்புடைத்து இரங்கப் பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக. 8 8. பின்உற - பின்னடையும்படி. காலின் முடுகி - காற்றைப் போல விரைந்து. உரை நேரா - உரைத்து. முதுகிடைப்போக - அவ்வேல் மார்பிலே நுழைந்து முதுகின் வழியே போயிற்று. வீடணன் எதிர்ப்பு `எங்கு நீங்குதி!’ நீஎன வீடணன் எழுந்தான், சிங்க ஏறுஅன்ன சீற்றத்தான்; இராவணன் தேரில் பொங்கு பாய்பரி சாரதியொ டும்படப் புடைத்தான், சங்க வானவர் தலைஎடுத் திடநெடும் தண்டால். 9 9. பொங்கு பாய்பரி - விரைவாகப் பாய்கின்ற குதிரைகளும். சாரதியொடும் - சாரதியும். பட - அழியும்படி. புடைத்தான் - அடித்தான். சங்க வானவர் - கூட்டமான தேவர்கள். இராவணன் இலங்கையடைதல் சேய்வி சும்பினின் நிமிர்ந்துநின்று இராவணன் சீறிப், பாய்க டும்கணை பத்துஅவன் உடல்புகப் பாய்ச்சி, ஆயி ரம்சரம் அனுமன்தன் உடலினில் அழுத்திப் போயி னன்,செரு முடிந்ததுஎன்று, இலங்கையூர் புகுவான். 10 10. சேய் விசும்பினின் - தூரமான வானத்தினிலே. நிமிர்ந்து நின்று - உயர்ந்து நின்று. `செரு முடிந்தது என்று போயினன் இலங்கை ஊர் புகுந்தான்.’ செரு - போர். `வென்றி என்வயம் ஆனது, வீடணப் பசுவைக் கொன்று இனிப்பயன் இல்லை’என்று இராவணன் கொண்டான்; நின்றி லன்,ஒன்றும் நோக்கிலன், முனிவெலாம் நீத்தான், பொன்தி ணிந்தன மதில்உடை இலங்கையூர் புகுவான். 11 11. வீடணப் பசுவை - வீடணப் பிராணியை. நீத்தான் - விட்டான். வீடணன் துயரம் அரக்கன் ஏகினன், வீடணன் வாய்திறந்து அரற்றி, இரக்கந் தான்என இலக்குவன் இணைஅடித் தலத்தில் கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன்; கலுழ்ந்தான்; குரக்கு வெள்ளமும் தலைவரும் துயர்இடைக் குளித்தார். 12 12. கரக்கல் ஆகலா - ஒளித்தல் இல்லாத. கலுழ்ந்தான் - கண்ணீர் விட்டு அழுதான். சாம்பவன் கருத்துப்படி அப்பொழுதே அனுமான் பாய்ந்து சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தான்; இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான். இலக்குவன் மாருதியைப் புகழ்தல் எழுந்துநின்று, அனுமன் தன்னை, இருகையால் தழுவி, `எந்தாய்! விழுந்திலன் அன்றோ மற்றுஅவ் வீடணன்’ என்ன, விம்மித் தொழும்துணை அவனை நோக்கித், துணுக்கமும், துயரும் நீங்கிக், `கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்;’என்று உவகை கொண்டான். 13 13. வீடணன் விழுந்திலன் அன்றோ - வீடணன் இறக்காமல் இருக்கின்றான் அல்லவோ. விம்மி தொழும் துணை அவனை நோக்கி - வருந்தி வணங்குகின்ற வீடணனைப் பார்த்து. துணுக்கம் - அச்சம். தருமம்என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை, இன்னே கருமம்என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால், அருமைஎன் இராமற்கு அம்மா? அறம்வெல்லும் பாவம் தோற்கும்! இருமையும் நோக்கின் என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 14 14. இன்னே கருமம் என்று. இப்பொழுதே செய்யக் வடிய காரியம் என்ற. அனுமன் ஆக்கிக்காட்டிய தன்மை கண்டால் - அனுமான் கண்கூடாகச் செய்து காட்டிய விதத்தைப் பார்த்தால். இருமையும் - இம்மை மறுமை இரண்டையும். அனைவரும் இராமன்பால் சென்றனர்; அவன் நடந்த நிகழ்ச்சிகளைச் சாம்பவனால் அறிந்தான். இராமன் இலக்குவனைப் புகழ்தல் இளவலைத் தழுவி `ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற வளவினம்; அடைந்தோர்க்கு ஆகி மண்உயிர் கொடுத்த வண்மைத் துளவுஇயல் தொங்க லாய்நீ! அன்னது துணிந்தாய் என்றால் அளவியல் அன்று; செய்தற்கு அடுப்பதே யாகும்; அன்றே.’ 15 15. வளவினம் - வள்ளல் தன்மையை உடையரானோம். வண்மை - வள்ளல் தன்மையுள்ள. துளவு இயல் தொங்கலாய் - துளசியால் ஆகிய மாலையை அணிந்தவனே. அளவு இயல் அன்று - பெருமை பொருந்தியது அன்று. `புறவுஒன்றின் பொருட்டா யாக்கை புண்உற அரிந்த புத்தேள் அறவனும், ஐய நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே? பேர்அரு ளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்குஇடர் காண்கின்’ என்றான் 16 16. புத்தேள் அறவனும் - தெயவத்தன்மை பொருந்திய அறத் தோனான சிபியும். பிறவினை - வேறொன்றை. தமர்க்கு - தம்மைச் சேர்ந்தோர்க்கு. இடர் காண்கின் - துன்பம் வருவதைக் கண்டால். பின்னர் இராமன் போர்க்கோலங் களைந்து, வில்லை அனுமன் கையிலே கொடுத்து ஒரு குன்றின்மேல் அமர்ந்து இளைப்பாறினான். ஆயபின், கவியின் வேந்தும், அளப்பரும் தானை யோடும் மேயினன் இராமன் பாதம் விதிமுறை வணங்கி; வீந்த தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார்; ஓய்வுறும் மனத்தார்; ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார். 17 17. ஆயபின் - இவ்வாறு நிகழ்ந்த பின். வீந்த தீயவர் - அழிந்த அரக்கர்களின். பெருமை - பெருக்கம். ஓய்வுறும் மனத்தார் - சோர்வடைந்த மனத்தரானார். `மூண்டெழு சேனை வெள்ளம் உலகுஒரு மூன்றின் மேலும் நீண்டுள, அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது?’ என்னத் தூண்திரண்டு அனைய திண்தோள் சூரியன் புதல்வன் சொல்லக்; `காண்டிநீ அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை’ என்றான். 18 18. எங்ஙனம் நிமிர்ந்தது - எவ்வாறு கொன்று வெற்றி பெற்றது? 33. வானரர் களம் காண் படலம் தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட, எழுகென விரைவில் சென்றார், இராவணற்கு இளவ லோடும்; கழுகொடு, பருந்தும், பாறும், பேய்களும், கணங்கள் மற்றும் குழுவிய களத்தைக் கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார். 1 வானரர் களம் காண் படலம்: வானர வீரர்கள், இராமனால் அரக்கர்கள் கொல்லப் பட்டுக் கிடந்த போர்க் களத்தைக் கண்டதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. பாறு - பருந்து வகைகளில் ஒன்று. கணங்களும் - காக்கை முதலிய கூட்டங்களும். ஏங்கினார்; நடுக்கம் உற்றார்; இரைத்துஇரைத்து உள்ளம் ஏற வீங்கினார்; வெருவல் உற்றார்; விம்மினார் உள்ளம் வெம்ப ஓங்கினார்; மெள்ள மெள்ள உயிர்நிலைத்து உவகை ஊன்ற ஆங்குஅவர் உற்ற தன்மை யார்அறிந்து அறைய கிற்பார்? 2 2. -. அப்படைகளின் வரலாற்றை வானர வீரர்களுக்கு வீடணன் எடுத்து விளம்பினான்; அவர்கள் இராமனுடைய வீரத்தைக் கண்டு வியப்புற்றனர்; இராமனிடம் திரும்பி வந்தனர். ஆரி யன்தொழுது ஆங்கவன் பாங்கு,அரும் போர் இயற்கை நினைந்துஎழும் பொம்மலார், பேர்உ யிர்ப்பொடு இருந்தனர்; பின்புஉறும் காரி யத்தின் நிலைமை கழறுவாம். 3 3. ஆரியன் தொழுது - இராமனை வணங்கி. எழும் பொம்மலார் - தோன்றிய துன்பம் உள்ளவர்களாய். 34. இராவணன் களம் காண் படலம் அலக்கண் எய்தி அமரர் அழிந்திட உலக்க வானர வீரரை ஓட்டி,அவ் இலக்கு வன்தனை வீடி இராவணன் துலக்கம் எய்தினன் தோம்இல் களிப்பினே. 1 இராவணன் களம் காண் படலம் : மூல பலப் படைகள் கொலையுண்ட போர்க்களத்தை இராவணன் கண்டு திகைத்ததைப் பற்றிக் கூறும் பகுதி. 1. அமரர் அலக்கண் எய்தி அழிந்திட - தேவர்கள் துன்புற்றுச் சோர்வடைய. உலக்க ஒட்டி - வலிமை சிதையும்படி துரத்தி. துலக்கம் - விளக்கம். பொருந்து பொன்பெரும் கோயிலுள் போர்த்தொழில் வருந்தி னர்க்குத்,தம் அன்பினின் வந்தவர்க்கு, அருந்து தற்குஅமை வாயின ஆக்குவான் விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 2 2. அருந்துதற்கு அமைவாயின - அருந்துவதற்கு ஏற்றவைகளை. விருந்து அமைக்க - விருந்து செய்ய. வான நாட்டினரையும், மற்றவரையும் அழைத்து விருந்துக்கு வேண்டியன அமைக்கும்படி இராவணன் உத்தரவிட்டான். நறவும், ஊனும் நவைஅற நல்லன பிறவும், ஆடையும் சாந்தமும் பெய்ம்மலர்த் திறமும், நானப் புனலொடு சேக்கையும், புறமும் உள்ளும் நிறையப் புகுந்த; ஆல். 3 3. நவை அற நல்லன பிறவும் - குற்ற மற்ற நல்ல பண்டங்கள் ஏனையவும். மலர்த்திறமும் - பூவகைகளும். நானப் புனலொடு - நறுமணம் கலந்த நீரோடு - நானம்; கத்தூரியுமாம். நான நெய்நன்கு உரைத்து, நறும்புனல் ஆன கோதற ஆட்டி அமுதொடும் பானம் ஊட்டிச் சயனம் பரப்புவான் வான நாட்டியர் யாவரும் வந்தனர். 4 4. நான நெய் - வாசனைத் தைலம். நன்கு உரைத்து - நன்றாகத் தேய்த்து. சயனம் பரப்புவான் - படுக்கை விரிப்பதற்காக. அவர்கள் நடனத்தை அரக்கர்களும், இராவணனும் கண்டு களித்திருக்கும் போது தூதர்கள் வந்தனர். நடுங்கு கின்ற உடலினர், நாஉலர்ந்து ஒடுங்கு கின்ற உயிர்ப்பினர்; உள்அழிந்து இடுங்கு கின்ற விழியினர்; ஏங்கினார் பிடுங்கு கின்ற உரையினர் பேசுவார். 5 5. உள் அழிந்து - மனம் வருந்தி. இடுங்குகின்ற விழியினர் - ஒடுங்குகின்ற கண்களை உடையவர்களாய். `இன்றுயார் விருந்துஇங்கு உண்பார்? இகல்முகத்து இமையோர் தந்த வென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை, நின்றுளார் புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம் ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது;’ என்றார். 6 6. இகல் முகத்து - போர்க்களத்திலே. நின்றுளார் புறத்தது ஆக - நின்ற சேனைகள் போர்க்களத்திலே நிற்க. நான்கு மூன்று கடிகையில் - ஏழு நாழிகையில். உலந்தது - அழிந்தது. `வலிக்கடன் வான்உ ளோரைக் கொண்டுநீ வகுத்த போகம் `கலிக்கடன் அளிப்பல்’ என்று நிருதர்க்குக் கருதி னாயேல், பலிக்கடன் அளிக்கற் பாலை! அல்லதுஉன் குலத்தின் பாலோர் ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர்உளார் உளரே உள்ளார்.’ 7 7. வலிக்கடன் - வலிமையின் தன்மையால். நீ வகுத்த போகம் - நீ செய்தமைத்த விருந்தாகிய இன்பத்தை. கலிக்கடன் அளிப்பன் என்று - மகிழ்ச்சிக்கான கடமையாகக் கொடுப்பேன் என்ற. பலிக்கடன் - இறந்தார்க்குச் செய்யும் இறுதிப் பலிக்கடனாக. ஈட்டரும் உவகை யீட்டி இருந்தவன், இசைத்த மாற்றம் கேட்டலும், வெகுளி யோடு, துணுக்கமும், இழவும் கிட்டி, ஊட்டுஅரக்கு அனைய செங்கண் நெருப்புக, உயிர்ப்பு வீங்கத், தீட்டிய படிவம் என்னத் தோன்றினன் திகைத்த நெஞ்சன். 8 8. இசைத்த மாற்றம் - ஒற்றர்கள் உரைத்த சொற்களை. இழவும் - துன்பமும். ஊட்டு அரக்கு அனைய - செவ்வாக்கைச் சேர்த்தது போன்ற. தீட்டிய - எழுதிய. `என்னைக் காட்டிலும் வலிமையுள்ள அவர்கள், எப்படி இறந்திருக்க முடியும்?’ என்று இரவாணன் ஐயுற்ற போது மாலியவான் கூறியது:- `அளப்பரும் உலகம் யாவும் அளித்துக், காத்து, அழிக்கின் றான்,தன் உளப்பெரும் தகைமை தன்னால் ஒருவன்,என்று உண்மை வேதம் கிளப்பது கேட்டும் அன்றே; அரவின்மேல் கிடந்து மேனாள், முளைத்தபேர் இராமன்; என்ற வீடணன் மொழிபொய்த்து ஆமோ?’ 9 9. தன் உளப் பெரும தகைமை தன்னால் - தன் உள்த்தின் நினைப்பான பெருந்தன்மையினால். கேட்டும் அன்றே - கேட்கின்றோம் அன்றோ? முளைத்த - அந்நாளில் பிறந்த. `பட்டதும் உண்டே, உன்னை இந்திரச் செல்வம்; பற்று விட்டது மெய்ம்மை; ஐய மீண்டொரு வினையம் இல்லை; கெட்டதுஉன் பொருட்டி னாலே நின்னுடைக் கேளிர் எல்லாம்; சிட்டது செய்தி என்றான்;’ அதற்குஅவன் சீற்றம் செய்தான். 10 10. பட்டதும் உண்டே - முன்பு பற்றியதும் உண்டு. சிட்டது - நல்லொழுக்க முள்ள செய்கையை. `இலக்குவன் தன்னை வேலால் எறிந்து,உயிர் கூற்றுக்கு ஈந்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; அதனைக் கண்டால் உலக்கும்ஆல் இராமன்; பின்னர் உயிர்பொறை உகவான்; உள்ள மலக்கம் உண்டாகின் ஆக; வாகைஎன் வயத்து.’ என்றான். 11 11. உற்ற மலக்கம் - அடைந்த துன்பம். உண்டாகின் ஆக - என்னிடம் உண்டானால் உண்டாகட்டும். வாகை - வெற்றி. இலக்குவன், மருந்தால் உயிர் பெற்றதைத் தூதர்கள் உரைத்தும் இராவணன் நம்பவில்லை. தேறிலன், ஆத லாலே மறுகுறு சிந்தை தேற, ஏறினன் கனகத் தாரைக் கோபுரத்து உம்பர், எய்தி ஊறின சேனை வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம் காறின உள்ளம் நோவக் கண்களால் தெரியக் கண்டான். 12 12. தேறிலன் ஆதலாலே - ஒற்றர் உரைத்ததை நம்பவில்லை ஆதலால். மறுகுறு - மயங்குகின்ற. சிந்தை தேற - மனம் தெளியும் படி. கனகதாரை - பொன்னொளி வீசும். ஊறின - மிகுந்த. காறின - வருந்திய. உள்ளம் நோவ - மனம் இன்னும் வருந்தும்படி. கொய்தலைப் பூசல் பட்டோர் குலத்தியர், குவளை தோற்று நெய்தலை வென்ற வாள்கண், குமுதத்தின் நீர்மை காட்டக், கைதலை வைத்த பூசல், கடலொடு நிமிரும் காலைச் செய்தலை உற்ற ஓசைச் செயல்அதும் செவியில் கேட்டான். 13 13. பூசல் தலை கொய்பட்டோர் - போரிலே தலை அறுக்கப்பட்டவர்களின். குலத்தியர் - மனைவிமார்கள். கை தலை வைத்த பூசல் - கையைத் தலைமேல் வைத்துக்கொண்டு போடும் கூச்சல். கடலொடு நிமிரும் காலை - கடலின் ஓசைக்கு மேல் அதிகப்படும்போது. குமிழிநீ ரோடும் சோரிக் கனலொடும், கொழிக்கும் கண்ணான் தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழங்கச் சாய்ந்தார், அமிழ்பெரும் குருதி வெள்ளம் ஆற்றுவாய் முகத்தில் தேக்கி உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம்வந்து உடற்றக் கண்டான். 14 14. குமிழி நீரோடும் - கொப்புளித்து வழிகீன்ற கண்ணீ ரோடும். சோரி - இரத்தத்தோடும். கனலொடும் - நெருப்போடும். கொழிக்கும் - விளங்கும். ஆற்றுவாய் தேக்கி - ஆற்றின் வழியே முகத்துவாரத்தால் குடித்து. உமிழ்வதே ஒக்கும் - மீண்டும் உமிழ்வதைப் போல. வேலை ஓதம் - கடல் அலைகள். வந்து உடற்றக் கண்டான் - வந்து மோதுவதைக் கண்டான். வற்றாத அம்புக்கு, அழியாத தமிழ் மரபு உவமை. விண்களில் சென்ற வன்தோள் கணவரை, அலகை வெய்ய புண்களில் கைகள் நீட்டி, புதுநிணம் கவர்வ நோக்கி, மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள்உகிரின் மானக் கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 15 15. அலகை - பிசாசு, வள் உகிரின் - தங்கள் கூர்மையான நகத்தால். மானக் கண்களை - அப்பிசாசின் பெரிய கண்களை. சூன்று - அகழ்ந்து. விண்பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்; மண்பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்; கண்பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்; புண்பிளந் தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போனான். 16 16. ஒல்க - தளரும்படி. வீக்கம் - பெருக்கம். கவந்தம் - தலையில்லாத உடல். நகைபிறக் கின்ற வாயன், நாக்கொடு கடைவாய் நக்கப் புகைபிறக் கின்ற மூக்கன், பொறிபிறக் கின்ற கண்ணன், மிகைபிறக் கின்ற நெஞ்சன், வெம்சினத் தீ,மேல் வீங்கி சிகைபிறக் கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான். 17 17. பொறி - தீப்பொறி. மிகை - மிகுந்த துன்பம்; மிகுந்த ஆத்திரம். மேல் வீங்கி - மேல் எழுந்து. சிகை - அச்சினத் தீயின் கொழுந்துபோல். பிறக்கின்ற - உண்டாகின்ற. 35. இராவணன் தேர் ஏறு படலம் அரக்கர் படைகள் அனைத்தையும் திரட்டல் பூதரம் அனைய மேனிப் புகைநிறப் புருவச் செந்தீ மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முகத்து நோக்கி, `ஏதுளது இறந்தி லாதது, இலங்கையுள் இருந்த சேனை யாதையும் எழுகென்று, ஆனை மணிமுரசு எற்று’ கென்றான். 1 இராவணன் தேர் ஏறு படலம்: இராவணன் தேரில் ஏறிக்கொண்டு போர்ககளத்தை அடையும் நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் பகுதி. 1. பூதரம் மலை செம்தீ - சிவந்த தீப்போன்ற கண்களையும் உடைய. மோதரன் - மகோதரன். எற்றுக - அடிக்க. எற்றின முரசி னோடும், ஏழ்இரு நூறு கோடி கொற்றவாள் நிருதர் சேனை குழீஇயது, கொடித்திண் தேரும் சுற்றுஉறு தொளைக்கை மாவும், துரகமும், பிறவும் தொக்க வற்றிய வேலை என்ன இலங்கையூர் வறளிற் றாக. 2 2. தொளைக்கை மா - யானை. துரகம் - குதிரை. வறளிற்றாக - வறண்டு போக. இராவணன் போர்க்கோலம் ஈசனை, இமையா முக்கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையில் செய்து, திருமறை புகன்ற தானம் வீசினன் இயற்றி, மற்றும், வேட்டன வேட்டோர்க் கெல்லாம் ஆசற நல்கி, ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவது ஆனான். 3 3. இருமைக்கு ஏற்ற பூசனை - இம்மை மறுமைக்கு ஏற்ற பூசையை. வீசினன் இயற்றி - வீசி. வேட்டன - விரும்பியவற்றை. ஒல்கா - சோர்வடையாத. `வருக தேர்’என வந்தது, வையமும், வானும் உரக தேயமும் ஒருங்குடன் ஏறினும், உச்சிச் சொருகு பூஅன்ன சுமையது, துரகம் இன்று எனினும் நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது ஓர் நினைப்பில். 4 4. உரகதேயமும் - நாக லோகமும். பூ அன்ன சுமையது - மலரைப் போன்ற சுமையாகக் கொள்ளத் தக்கது. நினைந்துழி - போக வேண்டும் என்று நினைத்த இடத்திலே. நினைப்பில் - நினைத்த உடனே. பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த போரில் செல்வது; போய்நெடு முகட்டிடை விரிஞ்சன் ஊரில் செல்வது;எவ் உலகினும் செல்வதுஓர் இமைப்பின். 5 5. -. அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி, இனையர் என்பதுஓர் கணக்கிலா மறையவர் எவர்க்கும், வினையின் நன்னிதி முதலிய அளப்பரும் வெறுக்கை நினையின் நீண்டதுஓர் பெருங்கொடை அரும்கடன் நேர்ந்தான். 6 6. இனையர் - இவ்வளவினர். வினையின் - செய்ய வேண்டிய முறைப்படி. வெறுக்கை - செல்வங்களை. நினையின் நீண்டது - நினைப்பில் அடங்காத. அரும்கடன் - அரிய கடமையை. நேர்ந்தான் - செய்தான். ஏறி னான்தொழுது, இந்திரன் முதலிய இமையோர் தேறி னார்களும் தியங்கினார்; மயங்கினார்; திகைத்தார்; வேறு தாம் செயும் வினையிலை மெய்யின்ஐம் புலனும் ஆறி னார்களும் அஞ்சினார் உலகெலாம் அனுங்க. 7 7. வினையிலை - வினையில்லாமல். மெய்யின் ஐம்புலனும் - உடம்பில் உள்ள ஐம்புலன்களும். ஆறினார்களும் - அடங்கி யவர்களும். அனுங்க - வருந்தும்படி. மன்றல் அம்குழல் சனகி,தன் மலர்க்கை யால் வயிறு கொன்று, அலம்தலைக் கொடு,நெடும் துயர்இடைக் குளித்தல்; அன்றிது என்றிடின் மயன்மகள் அத்தொழில் உறுதல்; இன்று இரண்டின்ஒன்று ஆக்குவென் தலைப்படின்;’ என்றான். 8 8. தலைப்படின் - நான் போர் செய்யப் புகுந்தால். வயிறு கொன்று - வயிற்றில் அடித்துக் கொண்டு. அலந்தலைக் கொடு - துன்புற்று. வீடணன், இராவணன் போருக் கெழுந்ததை இராமனுக்கு அறிவித்தல் `எழுந்து வந்தனன் இராவணன், இராக்கதத் தானைக் கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ! குலுங்குற்று அழுந்து கின்றது நம்பலம்; அமரரும் அஞ்சி விழுந்து சிந்தினர்’ என்றனன் வீடணன் விரைவான். 9 9. தானை - படை. கொழுந்து - முன்னணிப் படை. முந்தியது உற்றது - முன்னே வந்து சேர்ந்தது. நம்பலம் - நமது சேனை. அழுந்துகின்றது - பயத்தில் முழுகுகின்றது. 36. இராமன் தேர் ஏறு படலம் தொழுங்கையொடு, வாய்குழறி, மெய்ம்முறை துளங்கி விழுந்துகவி சேனையிடு பூசல்மிக, விண்ணோர் அழுந்துபடு, பால்அமளி அஞ்சல்என அந்நாள் எழுந்தபடி யேகடிது எழுந்தனன் இராமன். 1 இராமன் தேர் ஏறு படலம்: இராமன் இந்திரனால் அனுப்பப்பட்ட தேரிலே ஏறிப் போருக்குப் புறப்படுவதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. மெய்ம் முறை துளங்கி - உடம்பு முறையே நடுங்கி. பூசல்மிகு - ஓசை மிகுந்தவுடன். அழுந்து படு - துனபுற்ற. பால் அமளி - பாற் கடல் கடுக்கை. கடக்களிறு எனத்தகைய கண்ணன்,ஒரு காலன் விடக்கயிறு எனப்பிறழும் வாள்வலன் விசித்தான்; `மடக்கொடி துயர்க்கும்,நெடு வானின்உறை வோர்தம் இடர்க்கடலி னுக்கும்முடிவு இன்று;’என இசைத்தான். 2 2. விடக்கயிறு - விஷக்கயிறு. (பாசம்) பிறழும் - விளங்கும். மடக்கொடி - சீதை. இராமனுக்குத் தேர் அனுப்பும்படி சிவபெருமான் கூறுதல் `மூண்டசெரு இன்றளவின் முற்றும்; இனி வெற்றி ஆண்தகையது உண்மை;இனி அச்சம்இகல் வுற்றீர்; பூண்டமணி ஆழி,வய மா,நிமிர் பொலந்தேர் ஈண்டவிடு வீர்!அமரில்!’ என்றுஅரன் இசைத்தான். 3 3. ஆண் தகையது - இராமனுடையது. வய மா - வெற்றி யுள்ள குதிரை பூட்டி. நிமிர் பொலந்தேர் - உயர்ந்த அழகிய தேரை. ஈண்ட - சேரும்படி. இந்திரன் அனுப்பிய தேரைக் கண்டு, தேர்ச்சாரதியிடம், `நீ யார்?’ என்று இராமன் கேட்டபோது சாரதி கூறியது `முப்புரம் எரித்தவனும், நான்முகனும் முன்னாள் அப்பகல் இயற்றியுளது; ஆயிரம் அருக்கர்க்கு ஒப்புடையது; ஊழிதிரி நாளும்உலைவு இல்லா இப்பொருவில் தேர்வருது இந்திரனது; எந்தாய்!’ 4 4. அருக்கர்க்கு - சூரியர்களுக்கு. ஊழி திரிநாளும் - ஊழி மாறுகின்ற காலத்திலும். அய்யன்இது கேட்டு,இகல் அரக்கர்அகன் மாயச் செய்கைகொல், எனச்சிறிது சிந்தையில் நினைந்தான்; மெய்யவன் உரைத்ததுஎன வேண்டி,இடை பூண்ட மொய்உளை வயப்பரி மொழிந்தமுது வேதம். 5 5. மெய் அவன் உரைத்தது என - உண்மைதான் அவன் கூறியது என்று. வேண்டி - விரும்பி. இடை பூண்ட - தேரினிடம் அமைந்திருக்கின்ற. மொய் உளை - நெருங்கிய பிடரி மயிர்களை யுடைய. வயப்பரி - வெற்றியுள்ள குதிரைகள். இல்லைஇனி ஐயம்,என எண்ணிய இராமன், நல்லவனை `நீஉனது நாமம்நவில்; கென்ன, வல்இதனை ஊர்வதுஒரு மாதலி எனப்பேர் சொல்லுவர்’ எனத்தொழுது நெஞ்சினொடு சொன்னான். 6 6. நல்லவனை - சாரதியைப் பார்த்து. வல் இதனை - வலிமை யுள்ள இத்தேரை. நெஞ்சினொடு - அன்புள்ள உள்ளத்தோடு. மாருதியை நோக்கி,இள வாள்அரியை நோக்கி `நீர்கருது கின்றதை நிகழ்த்தும்;’என நின்றான்; ஆரியன் வணங்கிஅவர் `ஐயம்இலை, மெய்யே, தேர்இது புரந்தரனது,’ என்றனர் தெளிந்தார். 7 7. இளவாள் அரியை - இலக்குவனை. புரந்தரன் - இந்திரன். விழுந்துபுரள் தீவினை நிலத்தொடு வெதும்பத், தொழும்தகைய நல்வினை களிப்பினொடு துள்ள, அழுந்துதுய ரத்துஅமரர், அந்தணர்,கை முந்துற்று எழுந்துதலை ஏற,இனிது ஏறினன் இராமன். 8 8. நிலத்தொடு வெதும்ப - மண்ணோடு சோர்ந்துவிட. முந்துற்று எழுந்து - முன்னே எழுந்து. 37. இராவணன் வதைப் படலம் அன்னது கண்ணில் கண்ட அரக்கனும், அமரர் ஈந்தார் மன்நெடும் தேர்,என்று உன்னி வாய்மடித்து எயிறு தின்றான்; பின்அது கிடக்க என்னாத், தன்னுடைப் பெரும்திண் தேரை `மின்நகு வரிவில் செங்கை இராமன்மேல் விடுதி’ என்றான். 1 இராவணன் வதைப் படலம்: இராவணன் கொல்லப் பட்டதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. எயிறு தின்றான் - பல்லைக் கடித்தான். மின் நகு - மின்னலைப் போல விளங்குகின்ற. வரிவில் - கட்டமைந்த வில்லை யுடைய. அப்பொழுது `என்னை இலக்குவனோடு போர் செய்ய அனுப்புக’ என்று வேண்டிய மகோதரனிடம் இராவணன் சொல்லியது `அம்புயம் அனைய கண்ணன் தன்னை,யான் அரியின் ஏறு தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற தம்பியைத் தடுத்தி ஆயின், தந்தனை கொற்றம்;’ என்றான்; வெம்புஇகல் அரக்கன் `அஃதே செய்வென்’என்று அவனின் மீண்டான். 2 2. அரியின் ஏறு - ஆண் சிங்கம். தும்பி - யானை. கொற்றம் - வெற்றி. வெம்பு இகல் - சினத்தையும் வலிமையையும் கொண்ட. அரக்கன் - மகோதரன். இலக்குவனைத் தேடிச் சென்ற மகோதரன் இராமனை எதிரில் கண்டு அவனுடன் பொருது இறத்தல் வில்ஒன்றால், கவசம் ஒன்றால், விறல்உடைக் கரம்ஓர் ஒன்றால் கல்ஒன்று தோளும் ஒன்றால், கழுத்துஒன்றால், கடிதின் வாங்கி செல்ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான்; செப்பி வந்த சொல்ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன் அரக்கன் துஞ்சி. 3 3. கல் ஒன்று - மலைபோன்ற. வாங்கி - வளைத்து. செல் ஒன்று - மேகம் மழை பெய்வதைப் போல. துணிந்தனன் - துண்டானான். மகோதரன் மாண்டது கண்ட இராவணன், இராமனை எதிர்க்க முனைந்தபோது கண்ட சகுனங்கள் உதிர மாரி சொரிந்தது உலகெலாம் அதிர வானம் இடித்தது; அருவரை பிதிர வீழ்ந்தது அசனி; ஒளிபெறாக் கதிர வன்தனை ஊரும் கலந்ததால். 4 4. அசனி - இடி. ஊரும் - ஊர்கோள்; பரிவட்டம். வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல்இல் ஏவும் வெம்சிலை நாண்இடை இற்றன; நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப் பூவின் மாலை புலால்வெறி பூத்தவால். 5 5. வாவும் - பாய்கின்ற. வாசிகள் - குதிரைகள். வாங்கல் இல் - பின் வாங்குதல் இல்லாத. புலால் வெறி - புலால் நாற்றம். இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம்செய் துன்னி மித்தங்கள் தோன்றின; தோன்றவும் அன்னது ஒன்றும் நினைந்திலன்; `ஆற்றுமோ என்னை வல்ல மனித்தன்?’என்று எண்ணுவான். 6 6. சினைந்திலன் - பொருட்படுத்தாதவனாய். வல்ல என்னை - வல்லமை யுள்ள என்னோடு. மனிதன் ஆற்றுமோ - மனிதன் போர் செய்ய முடியுமோ. இராம இராவணப் போர் கரும மும்,கடைக் கண்உறு ஞானமும், அருமை சேரும் அவிஞ்ஞையும், விஞ்ஞையும், பெருமை சால்கொடும் பாவமும், பேர்கலாத் தரும மும்எனச், சென்றுஎதிர் தாக்கினார். 7 7. கடைக்கண் உறு - கருமத்தின் இறுதியிலே உண்டான. அருமை சேரும் - நன்மையின்மையைச் சேர்க்கும். அவிஞ்ஞையும் - அறியாமையும். விஞ்ஞையும் -அறிவும். ஞானம், அறிவு, தருமம் இவைகள் இராமனுக்கு உவமைகள். ஏழு வேலையும் ஆர்ப்பெடுத்து என்னலாம் வீழி வெங்கண் இராவணன் வில்ஒலி; ஆழி நாதன் சிலைஒலி அண்டம்விண்டு ஊழி பேர்வுழி மாமழை ஒத்ததால். 8 8. ஆர்ப்பு எடுத்து - ஆரவாரித்தது. வீழி வெம்கண் - விழுதுபோன்ற கொடிய கண்களையுடைய. ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் வீங்கு வெம்சின வீரர் விழுந்தனர்; ஏங்கி நின்றது அலால்ஒன்று இழைத்திலர்; வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார். 9 9. வாங்கு சிந்தையர் - இழந்த சிந்தையராய். உடையான்முயன்று ஒருகாரியம் உறுதீவினை உடற்ற இடையூறுஉறச் சிதைந்தாங்கெனச், சரம்சிந்தின, விறலும்; தொடையூறிய கணைமாரிகள் தொகைதீர்த்தவை துரந்தான்; கடையூறுஉறு கணமாமழை கால்வீழ்ந்தெனக் கடியான். 10 10. முயன்று ஒரு காரியம் - முயன்று செய்யும் ஒரு காரியம். உறு தீவினை உடற்ற - புகுந்த தீவினை வருத்துதலால். சரம் விறலும் சிந்தின - இராவணன் விட்ட அம்புகளின் வலிமையும் சிதைந்தன. கடையூறு உறு - ஊழிக்காலத்திலே வந்த. கணமா மழை - கூட்டமான மேகங்களின். கால் வீழ்நதென - மழைக்கால்கள் வீழ்ந்தவைகளைப் போல. தொடையூறிய - தொடர்ச்சி நிறைந்த. தொகை தீர்த்தவை - அளவற்றைவைகளை. செந்தீவினை மறைவாண னுக்கு ஒருவன்,சிறு விலைநாள் முந்துஈந்ததுஓர் உணவின்பயன் எனல்ஆயின, முதல்வன் வந்துஈந்தென் வடிவெம்கணை; அனையான்வகுத்து அமைத்த வெம்தீவினைப் பயன்ஒத்தன அரக்கன்சொரி விசிகம். 11 11. செந்தீவினை - வேள்வித் தொழிலையுடைய. சிறு விலை நாள் - பஞ்ச காலத்தில். முந்து - முன் வந்து. விசிகம் - அம்பு. இராவணன் விட்ட படைகளை எல்லாம் இராமன் பயனற்று வீழும்படி செய்தான்; இதனால், இராவணன் பலம் குன்றிவந்தது. அவன் சேனைகளும் அழிந்தன. அப்பொழுது, இராவணன் மாயாஸ்திரத்தை ஏவினான். தேய நின்றவன் சிலைவலம் காட்டினான்; `தீராப் பேயை என்பல துரப்பது?இங்கு இவன்பிழை யாமல் ஆய தன்பெரும் படையொடும் அடுகளத்து அவிய மாயை யின்படை தொடுப்பென்’ என்ற இராவணன் மதித்தான். 12 12. தேய நின்றவன் - அழிய நின்ற இராவணன். தீரா பல பேயை துரப்பது என் - முடிவில்லாமல் பல பேய்ப் படைகளைச் செலுத்துவதால் என்ன பயன். இவன் - இராமன். ஆயி ரம்பெரு வெள்ளம்என்று அறிஞரே அறைந்த காய்சி னப்பெரும் கடற்படை களப்பட்ட எல்லாம் ஈச னின்பெற்ற வரத்தினால் எய்திய என்ன தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திகைக்க. 13 13. எய்திய என்ன - உயிர் பெற்று வந்தன என்று சொல்லும்படி. இதைக்கண்ட இராமன், இதன் காரணம் என்னவென்று மாதலியைக் கேட்டான். அதற்கு மாதலி தந்த விடை இருப்புக் கம்மியற்கு இழைநுழை ஊசிஎன்று இயற்றி விருப்பின் `கோடியால் விலைக்கு’எனும் பதடியின் விட்டான்; கருப்புக் கார்மழை வண்ண!அக் கடுந்திசைக் களிற்றின் மருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். 14 14. விலைக்குக் கோடியால் - விலைக்கு வாங்கிக் கொள்க. பதடி - அறிவில்லாதவன். மாயை - மாயாஸ்திரம். `வீக்கு வாய்அயில் வெள்எயிற்று அரவின்வெவ் விடத்தை மாய்க்கு மாநெடு மந்திரம் தந்ததுஓர் வலியின் நோய்க்கும், நோய்தரு வினைக்கும்நின் பெரும்பெயர் நொடியின், நீக்கு வாய்!உனை நினைக்குவார் பிறப்புஎன நீங்கும்.’ 15 15. வாய் வீக்கு அயில் - வாயில் நிறைந்த கூர்மையான. பாம்பின் விடத்தை மந்திரத்தால் நீக்கும் வழக்கம் உண்டு. இராவணன் மாயக்கணை ஏவியபோது, இராமன் ஞானக்கணையை விடுதல் `வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர் உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத் துரத்தி யால்’என ஞானமாக் கடுங்கணை துரந்தான் சிறத்தி னால்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 16 16. சிரத்தினால் மறை இறைஞ்சவும் - தலையால் வேதங்கள் வணங்கவும். தேடவும் சேயோன் - தேடிக் காணவும் முடியாத தூரத்தில் உள்ள இராமன். துறத்தல் ஆற்றுறும் ஞானமாக் கடும்கணை தொடர, அறத்த லாதுசெல் லாதுநல் அறிவுவந்து அணுகப், பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை மறத்த லால்தந்த மாயையின் மாய்ந்ததுஅம் மாயம். 17 17. துறத்தல் ஆற்றுறும் - விடப்பட்ட. அறத்து அலாது செல்லாது - நம்வழியிலே செல்லும் படியான. பிறத்தல் ஆற்றுறும் - பிறத்தலைச் செய்யும். அம்மாயம் மாய்ந்தது - அந்த மாயாஸ்திரம் அழிந்தது. இராவணன் சூலப்படையை, இராமன் மேல் எறிந்தான் அது மார்பில் பட்டுப் பொடியாக உதிர்ந்தது. அப்போது இராவணன் எண்ணியவை `சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம் அவனோ அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோ தான்அவ் வேத முதற்கா ரணன்?’என்றான். 18 18. அடுகின்றான் - அழிக்கின்றான். தவனோ என்னின் - தவசியோ என்றால். இவனோதான் - இவன்தானோ. `யாரே னும்தான் ஆகுக; யான்என் தனியாண்மை பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்; நேரே செல்வென்; கொல்லும்; அரக்கன் நிமிர்வெய்தி வேரே நிற்கும் மீள்கிலன்’ என்னா விடல்உற்றான். 19 19. தனி ஆண்மை பேரேன் - ஒப்பற்ற ஆணமைத் தன்மையிலிருந்து நீங்கேன். நிமிர்வு எய்தி - நிமிர்ந்து. வேரே நிற்கும் - வேரோடி நிற்கும். என்னா அரக்கன் விடல் உற்றான் - என்று இராவணன் அம்புகளை விடத் தொடங்கினான். நீருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படைநெஞ்சில் கருதித், தன்பால் வந்தது அவன்கைக் கொடு,காலன் விருதைச் சிந்தும் வில்லின் வலித்துச் செலவிட்டான் குருதிச் செங்கண் தீஉக ஞாலம் குலைவுஎய்த. 20 20. அவன் - அந்த இராவணன். விருதைச் சிந்தும் - வெற்றியைச் சிதறச் செய்யும். வலித்து - இழுத்து. `குருதிச் செங்கண் தீ உக ஞாலம் குலைவு உற செலவிட்டான்’. அவ்வாறு உற்ற ஆடுஅர வம்தன் அகல்வாயால் கவ்வா நின்ற மால்வரை முற்றும் அவைகண்டான், எவ்வாய் தோறும் எய்தின என்னா, எதிர்எய்தான், தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 21 21. ஆடு அரவம் - ஆடுகின்ற பாம்பு போன்ற நிருதிப் படை. `மால்வரை முற்றும் கவ்வா நின்ற’ தவ்வா - கெடாத. காருடம் - கருடன். ஒக்கநின் றுஅமர் உடற்று காலையில், முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு நெக்கன விஞ்சைகள்; நிலையில் தீர்ந்தன; மிக்கன இராமற்கு வலியும் வீரமும். 22 22. விஞ்சைகள் நெக்கன - வித்தைகளைப் பற்றிய நினைவுகள் குறைந்தன. தீர்ந்தன - மறைந்தன. வேதியர் வேதத்து மெய்யன்; வெய்யவர்க்கு ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்; சாதியின் நிமிர்ந்ததுஓர் தலையைத் தள்ளினான், பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால். 23 23. வெய்யவர்க்கு ஆதியன் - கொடியோர்க்குத் தலை வனான இராவணன். சாதியின் - தலைகளின் கூட்டத்திலே. பாதியின்மதி - பிறைமதி. இறந்ததோர் உயிர்,உடன் கருமத்து ஈட்டினால் பிறந்துளது ஆம்எனப், பெயர்த்தும் அத்தலை மறந்திலது எழுந்தது; மடித்த வாயது; சிறந்தது தவம்அலால் செயல்உண் டாகுமோ? 24 24. உடன் - இறந்த உடனே. கருமத்தின் ஈட்டினால் -கர்மத்தின் கூட்டத்தால். தலைஅறின் தருவதுஓர் தவமும் உண்டு,என நிலையுறு நேமியான் அறிந்து, நீசனைக், கலைஉறு திங்களின் வடிவு காட்டிய சிலைஉறு கையையும் தலத்தில் சேர்த்தினான். 25 25. தருவது ஓர் - மீண்டு முளைப்பதாகிய ஒரு. சிலை உறு - வில்லமைந்த. தலத்தில் - நிலத்தில். அறுந்த கையை ஆயுதமாகக் கொண்டு போர்புரிந்த இராவணன் தலைகள் சுக்குநூறாகும்படி இராமன் அறுத்தல் நீர்த்த ரங்கங்கள் தோறும், நிலந்தொறும் சீர்த்த மால்வரை தோறும், திசைதொறும் பார்த்த பார்த்த இடந்தொறும் பல்தலை ஆர்த்து வீழ்ந்தன அசனிகள் வீழ்ந்துஎன. 26 26. நீர்த்த வங்கங்கள் - கடல் அலைகள். அசனிகள் வீழ்ந்தென - இடிகள் வீழ்ந்ததைப் போல. பல்தலை - பல தலைகளும். பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் பழுது செல்லும்அன் றேமற்றைப் பண்பெலாம்; தொழுது சூழ்வன முன்னின்று தோன்றவே கழுது சூன்ற இராவணன் கண்எலாம். 27 27. நீட்டிய பொழுது - நீண்ட காலம் நுகர்ந்த. பண்பெலாம் - நற்குணங்கள் எல்லாம். பழுது செல்லும் அன்றே - கெட்டுப் போகும் அன்றோ. தொழுது சூழ்வன கழுது - வணங்கி வலம் வரும் பேய்கள். சூன்ற - அகழ்ந்தன. மீண்டும் இராவணன் பலபடைகளைச் சுமந்து போர் புரிந்தபோது, இராமன் கணைகளால் அவன் உடம்பைத் துளைத்தல் மயிரின் கால்தொறும் வார்கணை மாரிபுக்கு உயிரும் தீர உருவின, ஓடலும் செயிரும் சீற்றமும் நிற்கத்; திறல்திரிந்து அயர்வு தோன்றத் துளங்கி அழுங்கினான். 28 28. உருவின ஓடலும் - நுழைந்து ஓடியபின். செயிரும் சீற்றமும் நிற்க - பகையும் கோபமும் ஓடாமல் நிலைக்க. திறல் திரிந்து - வலிமை மாறி. இச்சமயத்தில் இராவணனுடைய சாரதி அவன் தேரைச் சிறிது ஒதுக்கி நிறுத்தியபோது, மாதலி இராவணனைக் கொல்லும்படி இராமனிடம் உரைக்க, இராமன் சொல்லியது படைது றந்து மயங்கிய பண்பினான் இடைபெ றும்துயர் பார்த்து,இகல் நீதியின் கடைது றந்து,உயிர் கோடலும் நன்மையோ; கடைது றந்தது போர்என் கருத் தென்றான். 29 29. இகல் நீதியின் நடை துறந்து - வலிமையுள்ள நீதியின் முறையைக் கைவிட்டு. என் கருத்து போர் கடை துறந்தது - என் எண்ணம் போரிலிருந்து விடுபட்டது. இராவணன் சோர்வு நீங்கி எதிரே பார்த்த போது இராமனைக் காணவில்லை. சாரதியால் நடந்ததை அறிந்து அவனைச் சினந்து கூறியது. `தேர்தி ரித்தனை, தேவரும் காணவே; வீர விற்கை இராமற்கு வெண்ணகை பேர உய்த்தனை யே;பிழைத் தால்’எனா சார திப்பெய ரோனைச் சலிப்புறா. 30 30. தேர் திரித்தனை - தேரை வேறு இடத்திற்கு மாற்றினாய். வெள்நகைபோ - வெண்மையான பற்கள் தோன்றச் சிரிப்பு வரும்படி. பிழைத்தாய் - பிழைசெய்தாய். `தஞ்சம் நான்உனைத் தேற்ற, தரிக்கிலா வஞ்ச! நீபெரும் செல்வத்து வைகினை; அஞ்சி னேன்எனச் செய்தனை; ஆதலால் உஞ்சு போதி கொலாம்’என்று உருத்துஎழா. 31 31. நான் தஞ்சம் உனைத் தேற்ற - நான் தஞ்ச மடைந்த உன்னைக் காப்பாற்ற. உஞ்சு - உயிர் பிழைத்தது. இவ்வாறு கோபித்துச் சாரதியை வாளால் வெட்டப் போனான் இராவணன். அப்பொழுது சாரதி கூறியது. `ஆண்தொ ழில்துணிவு ஓய்ந்தனை; ஆண்டுஇறை ஈண்ட நின்றிடின் ஐயனே! நின்உயிர் மாண்டது அக்கணம் என்று,இடர் மாற்றுவான் மீண்டது இத்தொழில்; எம்வினை மெய்ம்மையால்.’ 32 32. துணிவு ஆண்தொழில் ஓய்ந்தனை - துணிந்து செய்யும் வீரப் போரிலே சோர் வடைந்தாய். `ஓய்வும், ஊற்றமும், நோக்கி உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்; மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால் காய்வு தக்கதுஅன் னால்;கடை காண்டியால்.’ 33 33. ஓய்வும் ஊற்றமும் - சோர்வும் வலிமையும். உயிர்ப் பொறை சாய்வு - உயிர்ப்பாரம் ஒழிவதை. காய்வு - சினத்தல். சாரதியின் சொல்லுக்கு இரங்கிய இராவணன் மீண்டும் இராமன் எதிரே வந்து போர் புரிதல் காற்றின் வெம்கணை கோடியின் கோடிகள் தூற்றி னான்வலி மும்முறை தோற்றினான்; வேற்றொர் வாள்அரக் கன்என வெம்மையால் ஆற்றி னான்செருக்; கண்டவர் அஞ்சினார். 34 34. வெம்மையால் - கோபத்துடன். செரு - போர். இராமன் பிரமாத்திரத்தால் இராவணனைக் கொல்லல் அவைஅ னைத்தும் அறுத்துஅகன் வேலையில் குவைஅ னைத்தும்எ னக்குவித் தான்;குறித்து `இவைஅ னைத்தும் இவனைவெல் லா’எனா நவைஅ னைத்தும் துறந்தவன் நாடினான். 35 35. வேலையில் - கடலில். அனைத்தும் குவை என - எல்லாம் குவியல் என்று சொல்லும்படி. கண்ணி னுள்மணி யூடு கழிந்தன எண்ணின் நுண்மண லின்பல வெம்கணை; புண்ணி னுள்நுழைந்து ஓடிய புந்தியோர் எண்ணின் நுண்ணிய; என்செயல் பாற்றுஎனா? 36 36. `கண்ணினுள் மணியூடு கழிந்தன வெம்கணை எண்ணின் நுண் மணலின் பல’ புந்தியோர் - அறிவுள்ளவர்களின். எண்ணின் - நுண்ணறிவைவிட. முந்தி வந்துஉலகு ஈன்ற முதற்பெயர் அந்த ணன்படை வாங்கி அருச்சியா சுந்த ரன்சிலை நாணில் தொடுப்புறா மந்த ரம்புரை தோள்உற வாங்கினான். 37 37. அந்தணன் படை - பிரமாஸ்திரம். தொடுப்புறா - தொடுத்து. புரை - ஒத்த. அக்க ணத்தின் அயன்படை ஆண்தகைச் சக்க, ரப்படை யோடுந்தழீஇச் சென்று புக்கது, அக்கொடி யோன்உரம்; பூமியும், திக்க னைத்தும், விசும்பும் திரிந்தவே. 38 38. `அக்கொடியோன் உரம் புக்கது’. உரம் - மார்பு. திரிந்த - மாறுபட்டன. முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்னாள் `எக்கோடி யாராலும் வெலப்படாய்’ எனக்கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்று இராகவன்தன் புனித வாளி. 39 39. முதல்வன் - நான் முகன். எக்கோடி யாராலும் - எவ்விடத்தில் உள்ள தேவர் களாலும். செருக்கடந்த - போரிலே வென்ற. இராவணன் முகங்களின் பொலிவு வெம்மடங்கல் வெகுண்டனைய சினம்அடங்க, மனம்அடங்க, வினையம் வீயத், தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல்அடங்க, மயல்அடங்க, ஆற்றல் தேயத், தம்அடங்கு முனிவரையும் தலைஅடங்கா, நிலைஅடங்கச் சாய்ந்த நாளின், மும்மடங்கு பொலிந்தன,அம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா! 40 40. வெம் மடங்கல் - கொடிய சிங்கம். வினையம் வீய - வஞ்சகம் ஒழிய. தெவ் மடங்க - பகைவர்கள் அடங்கும்படி. மயல் அடங்க - சீதையின் மேல் வைத்த காமம் அடங்க. `பூதலத்தின் ஆக்குவாய் நீவிடும்இப் பொலந்தேரை’ என்ற போதின் மாதலிப்பே ரவன்கடவ, மண்தலத்தின் அப்பொழுதே வருத லோடும்; மீதலைத்த பெருந்தாரை விசும்பளப்பக் கிடந்தான்தன் மேனி முற்றும் காதலித்த உருவாகி, அறம்வளர்க்கும் கண்ணாளன், தெரியக்கண்டான். 41 41. கடவ - பூதலத்தில் செலுத்த. மீது அலைத்த பெரும் தாரை - மேலே அலை மோதிக் கொண்டிருந்த பெரிய இரத்தப் பெருக்கு. விசும்பு அளப்ப - வானத்தைத் தடவும்படி. `தேரினைநீ கொடுவிசும்பில் செல்’கென்ன மாதலியைச் செலுத்திப் பின்னர்ப் பாரிடமீ தினின்அணுகித், தம்பியொடும், படைத்தலைவர் எவரும் சுற்றப், போரிடை மீண்டு ஒருவருக்கும் புறம்கொடாப் போர்வீரன், பொருது வீழ்ந்த சீரினையே மனம்உவப்ப உருமுற்றும் திருவாளன் தெரியக் கண்டான். 42 42. போரிடை மீண்டு - போரிலே திரும்பி. பொருது வீழ்ந்த சீரினையே - போர் செய்து மாண்ட சிறப்பையே. அலைமேவும் கடல்படைசூழ் அவனியெலாம் காத்தளிக்கும் அடல்கை வீரன், சிலைமேவும் கடும்கணையால், படுகளத்தே மனத்தீமை சிதைந்து வீழ்ந்தான், மலைமேலும் செலற்கு ஒத்துப் பொதுநின்ற செல்வத்தின் புன்மைத் தன்மை நிலைமேலும் இனிஉண்டோ? நீர்மேலைக் கோலம்எனும் நீர்மைத்து அன்றே? 43 43. அடல் கை - வலிமையுள்ள கையையுடைய. வீரன் - இராமன். புலைமேலும் - கீழ்மையான செயல்களிலும். வென்றியால் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவி னாலும் பொன்றினான் என்று தோளைப் பொதுஅற நோக்கும் பொற்புக் குன்றிஆ சுற்றது அன்றே, இவன்எதிர் குறித்த போரில் பின்றியான் முதுகில் பட்ட பிழம்புள தழும்பின் அம்மா. 44 44. பின்றியான் - முன்பு பின்னடைந்த இவன். தழும்பின் பிழம்பும் உள - காயத்தின் அடையாளம் உண்டு. தோளை பொது அற நோக்கும் பொற்பும் - என் தோளை ஒப்புமை அற்றதாக எண்ணி நோக்கும் அழகும். குன்றி ஆசுற்றது அன்றே - குறைந்து குற்ற மடைந்தது அன்றோ? கார்த்த வீரியனால் கட்டுண்ட இவனை, நான் கொன்றது எனக்கு வெற்றியன்றென இராமன் கூறியபோது வீடணன் சொல்லியது அவ்வுரைக்கு இறுதி நோக்கி வீடணன், அருவிக் கண்ணன் வெவ்வுயிர்ப் போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன் `செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ’ என்னா எவ்வுயிர்ப் பொறையும் நீங்க இரங்கிநின்று இனைய சொன்னான். 45 45. செவ்வியின் தொடர்ந்த அல்ல - நன்மையோடு பொருந்தாத சொற்களை. `ஆயிரம் தோளி னானும், வாலியும் அரிதின், ஐய, மேயின வென்றி, விண்ணோர் சாபத்தின் விளைந்த, மெய்ம்மை தாயினும் தொழத்தக் கான்மேல் தங்கிய காதல் தன்மை நோயும்,நின் முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற் பாலார்?’ 46 46. ஆயிரந்தோளினான் - கார்த்த வீரியார்ச்சுனன். நுவலல் பாலார் - வீரம் பேசுவோர். `அன்னதோ’ என்னா ஈசன், ஐயமும், நாணும் நீங்கித், தன்னதோள் இணையை நோக்கி, `வீடணா தக்கது அன்றால், என்னதோ இறந்து ளான்மேல் வயிர்த்தல்;நீ இவனுக்கு, ஈண்டு, சொன்னதோர் விதியி னாலே கடன்செய்யத் துணிதி’ என்றான். 47 47. வயிர்த்தல் - வைராக்கியம் காட்டுதல். என்னதோ - என்ன செய்கை. 38. மண்டோதரி புலம்புறு படலம் வீடணன் இராவணன் மீது விழுந்து புலம்புதல் `உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகிஎனும் பெருநஞ்சு, உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்;நீயும் களப்பட் டாயே! எண்ணாதேன் எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணுதியோ? எண்ணி ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே!’ 1 மண்டோதரி புலம்புறு படலம்: இரவாணன் மனைவி மண்nடோதரி புலம்புகின்ற பகுதியைக் கூறுவது. 1. எண்ணாதேன் - உனக்குத் தீங்கு நினைக்காதவனாகிய நான். எண்ணிய சொல் - ஆராய்ந்துரைத்த சொற்களை. பிரளயம் - பெருவெள்ளம். `ஓராதே ஒருவன்தன் உயிர்ஆசைக் குலமகள்மேல் உடைய காதல் தீராத வசைஎன்றேன்; எனைமுனிந்த முனிவுஆறித் தேறி னாயோ? போர்ஆசைப் பட்டெழுந்த குலம்முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற பேராசை பெயர்ந்ததோ? பெயர்ந்துஆசைக் கரிஇரியப் புருவம் பேர்த்தாய்!’ 2 2. ஓராதே - அறியாமல். ஒருவன் உயிர் ஆசை - மற்றொருவனுடைய உயிர் போன்ற காதலுள்ள. ஆசைக் கரி பெயர்த்து இரிய - திசையானைகள் இடம் விட்டு ஓட. புருவம் பேர்த்தோய் - புருவத்தை நெரித்தவனே. `கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என்று, அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ்அதுக்கும் கொடும்பாவி, நெடும்பாரப் பழிதீர்ந் தாளோ? நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி! நம்மோடு எல்லாரும் பகைஞரே! யார்முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய்.’ 3 3. கொல்லாத - துன்புறுத்தாத. மைத்துனன்; இராவணனுக்கு மைத்துனன்; சூர்ப்ப நகையின் கணவன்; சுந்தன். கொடும்பாவி - சூர்ப்பநகை. `போர்மகளைக், கலைமகளைப், புகழ்மகளைத் தழுவியகை பொறாமை கூரச் சீர்மகளைத், திருமகளைத், தேவர்க்கும் தம்மோயைத் தெய்வக் கற்பின் பேர்மகளைத், தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா! பின்னைப் பார்மகளைத் தழுவினையோ! திசையானை மறுப்புஇறுத்த பணைத்த மார்பால்.’ 4 4. பேர் மகளை - புகழ் பெற்ற சீதாதேவியை. தழுவுவான் - தழுவ எண்ணியதனால். பணைத்த - அகன்ற. இராவணன் மனைவியர் புலம்பல் அழைப்பொலி முழக்கெழ, அழகு மின்னிடக் குழைப்பொலி நல்அணிக் குலங்கள் வில்இட, உழைப்பொலி உண்கணீர்த் தாரை மீதுக மழைப்பெரும் குலம்என வான்வந் தார்சிலர். 5 5. குழைப் பொலி - காதணிகளுடன் விளங்குகின்ற. வில்இட - ஒளிவீச. உழைப் பொலி - மானின் கண்களைப் போல் விளங்குகின்ற. தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் எழுஉயர் புயங்களும், மார்பும் எங்கணும் குழுவினர் முறைமுறை கூறு கொண்டனர், அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 6 6. எழுஉயர் - தூணைப்போல் உயர்ந்த. கூறு கொண்டனர் - உடம்பின் பகுதியைத் தழுவிக் கொண்டவர்களாகி. இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் மயக்கம்இல் சித்தியர், விஞ்சை மங்கையர் முயக்கியல் முறைகெட முயங்கி னார்கள்தம் துயக்கிலா அன்புமூண்டு எவரும் சோரவே. 7 7. உரகர் ஏழையர் - நாகர்மகளிர். தம் துயக்கு இலா அன்பு மூண்டு - தம்முடைய மாறாத அன்பு மிகுந்து. முயக்கு இயல் முறைகெட - தழுவிக் கொள்ளும் முறை தவறி. முயங்கினார் - தழுவிக் கொண்டனர். `அறம்தொலை வுற,மனத்து அடைத்த சீதையை மறந்திலை யோ,இனும் எமக்குஉன் வாய்மலர் திறந்திலை; விழித்திலை, அருளும் செய்கிலை; இறந்தனை யோ?’என இரங்கி ஏங்கினார். 8 8. தொலைவுற - அழிய. இரங்கி ஏங்கினார் - அழுது வருந்தினர். மண்டோதரியின் புலம்பல் அன்னேயோ அன்னேயோ ஆகொடியேற்கு அடுத்தவாறு அரக்கர் வேந்தன் பின்னேயோ இறப்பது?முன் பிடித்திருந்த கருத்ததுவும் பிடித்தி லேனோ? முன்னேயோ விழிந்ததுவும் முடித்தலையோ படித்தலைய! முகம்காட் டாயோ! என்னேயோ! என்னேயோ! இராவணனார் முடிந்தபரிசு இதுவோ பாவம்!’ 9 9. அடுத்தது - நேர்ந்தது. முன் பிடித்திருந்த - முன்பு உறுதியாகக் கொண்டிருந்த. முன்னேயோ - முன்புறமோ. முடித் தலையோ படித்தலைய - முடிகள் பொருந்திய தலைகளோ பூமியில் கிடந்தன. `வெள்எருக்கம் சடைமுடியான் வெற்புஎடுத்த திருமேனி, மேலும் கீழும் எள்இருக்கும் இடன்இன்றி, உயிர்இருக்கும் இடம்நாடி இழைத்த வாறோ! கள்இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?’ 10 10. இழைத்தவாறோ - இவ்வாறு செய்த விதமோ. கள் இருக்கும் - தேன் இருக்கும். `காந்தையருக்கு அணிஅனைய சானகியார் பேரழகும், அவர்தம் கற்பும் ஏந்துபுயத்து இராவணனார் காதலும்,அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர்பிரான் தயரதனார் பணிதன்னால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா!’ 11 11. காந்தையருக்கு - பெண்களுக்கெல்லாம். தேவர்க்கும் திசைக்கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங்கண் மாற்கும், ஏவர்க்கும் வலியானுக்கு என்றுண்டாம் இறுதிஎன ஏமாப் புற்றேன்; ஆவற்கண் நீஉழந்த அருந்தவந்தின் பெரும்கடற்கும், வரம்என்று ஆன்ற காவற்கும், வலியான்ஓர் மானுடவன் உளன்என்னக் கருதி னேனோ?’ 12 12. ஏமாப்பு - உள்ளச் செருக்கு. `அறைகடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும்,பேர் அறிஞர்க் கேயும் உரைகடையிட்டு அளப்பரிய பேராற்றல், தோள்ஆற்றற்கு உலப்போ இல்லை திரைகடையிட்டு அளப்பரிய வரம்என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரைகடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பயன்நின் பெருமை பார்ப்பேன்?’ 13 13. உரைகடை யிட்டு - வார்த்தைகளைக் கொண்டு உலப்பே யில்லை. அழிவே யில்லை. திரைகடையிட்டு - அலைகளை எண்ணி. பிரைகடையிட்டு. பிரையைக் கடை நாளில் இட்டு. என்று அழைத்தனள், ஏங்கி எழுந்துஅவன் பொன்த ழைத்த பொருஅறு மார்பினைத், தன்த ழைக்கை ளால்தழு வித்,தனி நின்ற ழைத்து உயிர்த் தாள்,உயிர் நீங்கினாள். 14 14. தன் தழைக்கைகளால் - தனது செழித்த கைகளால். வீடணன், இறந்தோர் அனைவர்க்கும் இறுதிக்கடன் ஆற்றல் கடன்கள் செய்து முடித்துக், கணவனோடு உடைந்து போன மயன்மக ளோடு,உடன் அடங்க, வெம்கன லுக்குஅவி ஆக்கினான், குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். 15 15. குடம்கொள் நீரினும் - குடத்திலே உள்ள நீரைவிட. கண் சோர் - கண்களிலிருந்து ஒழுகுகின்ற. மயன்மகள் - மண்டோதரி. அவி - பலி. மற்றை யோர்க்கும், வரன்முறை யால் வகுத்து உற்ற தீக்கொடுத்து, உண்குறும் நீர்உகுத்து, `எற்றை யோர்க்கும் இவன்அலது இல்’எனா வெற்றி வீரன் குரைகழல் மேவினான். 16 16. உற்ற தீக் கொடுத்து - பொருந்திய ஈமக்கடன்களை யெல்லாம் செய்து. நீர் உகுத்து - நீர்க்கடன்களையும் செய்து. எற்றையோர்க்கும் - அரக்கர்கள் எல்லோருக்கும். வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும் `சிந்தை வெந்துயர் தீருதி தெள்ளியோய்! முந்தை எய்தும் முறைமை இதுஆம்’எனா அந்தம் இல்இடர்ப் பாரம் அகற்றினான். 17 17. அந்தம் இல் - அளவில்லாத. இடர்ப்பாரம் - துன்பமாகிய பாரத்தை. 39. வீடணன் முடிசூட்டு படலம் இராமன் வீடணனுக்கு ஆறுதல் கூறுதல் `வருந்தல், நீதி மனுநெறி யாவையும் பொருந்து கேள்விப் புலமையி னோய்’எனா அரும்த வப்பய னால்அடைந் தாற்கு அறைந்து இருந்த வத்துஇளை யோற்குஇது இயம்பினான். 1 வீடணன் முடி சூட்டு படலம்: விபீஷணனுக்கு முடி சூட்டியதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. அரும்தவப் பயனால் - சிறந்த தவத்தின் பயனாக. அடைந்ததற்கு - தன்னை அடைந்த வீடணனுக்கு. இளையோன் - இலக்குவன். இலக்குவனை நோக்கி வீடணனுக்கு முடிசூட்டும்படி இராமன் கூறல் சோதி யான்மகன், வாயுவின் தோன்றல்,மற்று ஏதில் வானர வீரரொடு ஏகி,நீ ஆதி நாயகன் ஆக்கிய நூல்முறை நீதி யானை நெடுமுடி சூட்டுவாய். 2 2. ஆதி நாயகன் - பிரமதேவன். நூல் முறை - வேத விதிப்படி. முடி சூட்டுதல் மெய்கொள் வேத விதிமுறை, விண்ணுளோர் தெய்வ நீள்புனல் ஆடல் திருத்திட, ஐயன் ஆணையி னால்,இளம் கோளரி கையி னால்மகு டங்கவித் தான்;அரோ. 3 3. -. கரிய குன்று கதிரினைச் சூடி,ஓர் எரிம ணித்தவி சில்பொலிந்து என்னவே, விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன்,நீடு அரிய ணைப்பொலிந் தான்தமர் ஆர்த்தெழ. 4 4. -. வணங்கிய வீடணனை இராமன் வாழ்த்துதல் `உரிமை மூவுல கும்,தொழ, உம்பர்தம் பெருமை நீதி அறன்வழிப் பேர்கிலாது, இருமை யேஅரசு ஆளுதி, ஈறுஇலாத் தரும சீல’என் றான்,மறை தந்துளான். 5 5. பேர்கிலாது - தவறாமல். இருமையே - இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று. பன்னு நீதிகள் பற்பல கூறி,மற்று `உன்னு டைத்தவ ரோடுஉயர் கீர்த்தியோய்! மன்னி வாழ்’கென்று உரைத்து,அடல் மாருதி தன்னை நோக்கினன், தாயர்சொல் நோக்கினான். 6 6. உன் உடைத்தவரோடு - உன் சுற்றத்தார்களுடன். அடல் - வலிமை. 40. பிராட்டி திருவடி தொழுத படலம் இப்பு றத்து,இன எய்துறு காலையில் அப்புறத்த தை உன்னி, அனுமனை துப்பு உறச்செய்ய, வாய்மணித் தோகைபால் செப்புறு இப்படிப் போய்,எனச் செப்பினான். 1 பிராட்டி திருவடி தொழுத படலம்: சீதா பிராட்டி சிறை வீடு பெற்று வந்து, இராமன் திருவடிகளை வணங்கிய நிகழ்ச்சியை உரைப்பது. 1. இப்புறத்து - இவ்விடத்தில். இன; இன்ன - இச்செய்தி. அப்புறத்தை - அந்தப் பக்கத்திலிருந்த சீதாதேவியை. துப்பு உற செய்ய வாய் - பவளம் போன்ற மிகச் சிவந்த வாயை யுடைய. மணி - அழகிய. மாருதி சீதையிடம் சென்று வெற்றி கூறுதல் வணங்கி, அந்தம்இல் மாருதி, மாமலர் அணங்கு சேர்கடி காவுசென்று அண்மினான்; உணங்கு கொம்புக்கு உயிர்தரு நீர்எனச், சுணங்கு தோய்முலை யாட்குஇவை சொல்லுவான். 2 2. மாமலர் அணங்கு - சீதாதேவி. உணங்கு - வாடுகின்ற. சுணங்கு தோய் - தேமல்படிந்த. சோபனம் - மங்கலம். ஆழியான் - கடல்போன்றவனாகிய. சூழியானை - முக படாத்தையுடைய யானையாகிய இராமன். `ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்! வாழி சோபனம்! மங்கல சோபனம் ஆழி யான அரக்கனை ஆரியச் சூழி யானை துகைத்தது சோபனம்!’ 3 3. -. பாடி னான்திரு நாமங்கள்; பன்முறை, கூடு சாரியில் குப்புற்றுக் கூத்துநின்று ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச் சூடி நின்றனன் குன்றன்ன தோளினான். 4 4. கூடு சாரியில் குப்புற்று - கூடிய வலது சாரி இடது சாரியாகக் குதித்து. அலங்குற - நடுங்கும்படி. `தலைகி டந்தன, தாரணி தாங்கிய மலைகி டந்தன போல்;மணித் தோள்நிரை அலைகி டந்தென ஆழி கிடந்தன; நிலைகி டந்த, உடல்நிலத் தே’என்றான். 5 5. `தாரணி தாங்கிய மலை கிடந்தனபோல் தலை கிடந்தன’ தோள்நிரை - தோள் வரிசை. இராவணன் தலைகளுக்கு மலை உவமை; தோள்களுக்கு அலைகள் - உவமை. சானகியின் மகிழ்ச்சி ஆம்பல் வாயும் முகமும், அலர்ந்திட தேம்பும் நுண்இடை தேய, திரள்முலை ஏம்பல் ஆசைக்கு இரட்டிவந்து எய்தினாள் பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள். 6 5. தேம்பும் - வருந்தும். ஏம்பல் ஆசைக்கு - ஏங்கிய ஆசைக்கு. பாம்புகான்ற - பாம்பு பிடித்துப் பிறகு உமிழ்ந்த. பாம்பு கான்ற பனிமதி சீதைக்கு உவமை. அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்; இனையது இன்னது இயம்புவது என்பதுஓர் நினைவி லாது நெடிதுஇருந் தாள்;நெடு மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 7 7. நெடுமனையின் - சிறந்த இல்லற வாழ்வின். `யாது இதற்கொன்று இயம்பவென்’ என்பது மீது உயர்ந்த உவகையின் விம்மலோ; தூது பொய்க்கும்என் றோ?எனச் சொல்லினான் நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள். 8 8. இதற்கு யாது ஒன்று இயம்புவென் - இச்சொல்லுக்கு விடையாக எதைச் சொல்லுவேன். விம்மலோ - மிகுதியோ. சீதையின் சிறப்புரை `முன்னை நீக்குவென் மொய்சிறை,’ என்றநீ பின்னை நீக்கி உவகையும் பேசினை; `என்ன பேற்றினை ஈகுவது? என்பதை உன்னி நோக்கி உரைமறந்து ஓவினேன்’. 9 9. மொய் சிறை - வலிமையான சிறையை. என்ன பேற்றினை - எந்தச் செல்வத்தை. ஓவினேன் - பேசாமலிருந்தேன். `உலகம் மூன்றும் உதவற்கு, ஒருதனி விலையி லாமையும் உன்னினென்; மேல்அவை நிலையி லாமை நினைந்தனென்; நின்னை,என் தலையி னால்தொழ வேதகும், தன்மையோய்!’ 10 10. ஒரு தனி - அவை ஒரு சிறிதும். விலை இலாமையும் - விலை மதிப்பு இல்லை என்பதையும். ஆத லான்ஒன்று உதவுதல் ஆற்றலேன்; `யாது செய்வது?’என்று எண்ணி இருந்தனென்; வேத நல்மணி வேகடம் செய்தன்ன தூத; என்இனிச் செய்திறம்? சொல்என்றாள். 11 11. வேகடம் செய்து அன்ன - சுத்தம் செய்ததைப் போன்ற; வேகடம் செய்தல் - அழுக்கு அகற்றுதல். செய்திறம் - செய்யத்தக்கது. அனுமன் கேட்ட வரம் `எனக்கு அளிக்கும் வரம்,எம் பிராட்டிநின் மனக் களிக்குமற்று உன்னைஅம் மானவன் தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? புனக்க ளிக்குல மாமயில் போன்றுளாய்!’ 12 12. மனக் களிக்கும்; மனம் களிக்கும் - மனம் மகிழும்படி. தக்கதோ - தகுந்தது வேறு உண்டோ. புனம் களி குலம் மாமயில் - புனத்திலே களித்திருக்கும் உயர்ந்த இனமான சிறந்த மயில். திரிசடையைத் தவிர, ஏனைய அரக்கியரை அழிக்க, அனுமான் சீதையை வேண்டினன்; அது கேட்ட அரக்கியர் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்பினர். அப்பொழுது சீதை சொல்லியது. அன்னை, `அஞ்சன்மின்! அஞ்சன்மின்! நீர்’எனா, மன்னு மாருதி மாமுகம் நோக்கி,`வேறு என்ன தீமை இவர்இழைத் தார்;அவன் சொன்ன சொல்லினது அல்லது? தூய்மையோய்!’ 13 13. -. `யான்இ ழைத்த வினையினின், இவ்விடர் தான்அ டுத்தது தாயினும் அன்பினோய்! கூனி யின்கொடி யார்அல ரே,இவர்; போன அப்பொருள் போற்றலை புந்தியோய்!’ 14 14. -. `எனக்கு நீஅருள் இவ்வரம்! தீவினை தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் மனக்கு நோய்செயல்’ என்றனள்; மாமதி தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள். 15 15. சழக்கியர் - அறிவற்றவர்கள். மனக்கு - மனத்திற்கு. இராமன், `சீதையைச் சீரொடும் அழைத்து வருக’ என்று வீடணனிடம் கூறினான். அவன் சீதையிடம் வந்து இராமன் கருத்தைத் தெரிவித்தான். அப்பொழுது சீதை உரைத்தது. `யான்இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள் கோனும்,அம் முனிவர் தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற வான்உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி; மேல்நினை கோலம் கோடல் விழுமியது அன்று; வீர!’ 16 16. காண்டல் மாட்சி - காண்பதே சிறந்ததாகும். மேல் நினை - மேலாக நினைக்கின்ற. கோலம் கோடல் - அலங்காரம் செய்து கொள்ளுதல். என்றனள் இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன் `நீலக் குன்றுஅன தோளி னான்தன் பணியினின் குறிப்புஇது’ என்றான்; `நன்று’என நங்கை நேர்ந்தாள் நாயகக் கோலம் கொள்ளச்; சென்றனர் வான நாட்டுத் திலோத்தமை முதலோர் சேர. 17 17. பணியினால் குறிப்பு இது - கட்டளையில் உள்ள கருத்து இதுவாகும். நாயகக் கோலம் கொள்ள - சிறந்த அலங்கரிப்பைக் கொள்ள. காணியைப் பெண்மைக் கெல்லாம்; கற்பினுக்கு அணியைப்; பொற்பின் ஆணியை; அமிழ்தின் வந்த அமிழ்தினை; அறத்திiன் தாயைச்; சேண்உயர் மறையை எல்லாம் முறைசெய்த செல்வன் என்ன வேணியை அரம்பை மெல்ல விரல்முறை சுகிர்ந்து விட்டாள். 18 18. பெண்மைக்கெல்லாம் காணியை - பெண் தன்மைகளுக் கெல்லாம் விளை நிலமானவளை. பொற்பினுக்கு ஆணியை - அழகீன் உரையாணியை. வேணியை - சடையை. சுகிர்த்து விட்டாள் - சிக்கு நீக்கிச் சீவி விட்டாள். சீதையை அழைத்து வருதல் மண்டல மதியின் நாப்பண் மான்இருந் தென்ன, மானம் கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட, மண்டிவா னரரும் ஓட, அரக்கரும் புறம்சூழ்ந்து ஓட அண்டர்நா யகன்பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 19 19. மண்டலம் - வானமண்டலத்தில் உள்ள. மதியின் நாப்பண் - சந்திரன் நடுவிலே. அருளில் - அவன் கட்டளையின் படி. அரும்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் மருங்கு,பின், முன்செல வழியின்று என்னலாய் நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால், கரும்கடல் முழக்கெனப் பிறந்த கம்பலை. 20 20. ஓச்சலால் - அடித்து விரட்டியதனால். கம்பலை பிறந்த - ஓசைகள் உண்டாயின. அவ்வழி, இராமனும் அலர்ந்த தாமரைச் செவ்விவாள் முகங்கொடு செயிர்த்து நோக்குறா; `இவ்வொலி யாவது’என்று இயம்ப, இற்று?எனாக் கவ்வையில் முனிவரர் கழறி னார்;அரோ. 21 21. அவ்வழி - அப்பொழுது. செவ்வியாள் முகம்கொடு - அழகிய ஒளி பொருந்திய முகத்தினால். செயிர்த்து - சினந்து. இற்றுஎனா - இன்னது என்று. கவ்வைஇல் - குற்றம் அற்ற. முனிவரர் வாசகம் கேட்பு றாதமுன், நனிஇதழ் துடித்திட, நகைத்து, வீடணன் தலைஎழ நோக்கி’நீ தகாத செய்தியோ? புனிதநூல் கற்றுணர் புந்தி யோய்’என்றான். 22 22. கேட்புறா முன் - கேட்பதற்கு முன்பே. இதழ் - உதடுகள். எழ நோக்கி - நன்றாகப் பார்த்து. கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால் நெடுந்திசைத் தேவரும், நின்ற யாவரும் அடைந்தனர்; உவகையான் அடைகின் றார்களைக் கடிந்திட யார்சொனார்? கருது நூல்வலாய். 23 23. -. ஆதலால் அரக்கர் கோவே! அடுப்பதுஅன்று உனக்கும், இன்னே சாதுவ மாந்தர் தம்மைத் தடுப்பது’என்று அருளிச், செங்கண் வேதநா யகன்தான் நிற்ப, வெய்துயிர்த்து, அலக்கண் எய்திக், கோதிலா மனனும், மெய்யும், குலைந்தனன் குணங்கள் தூயோன். 24 24. இன்னே - இப்பொழுதே. சாதுவ மாந்தர் தம்மை - சாந்தமான மக்களை. சீதை இராமனைக் காணுதல் அருந்ததி அனைய நங்கை, அமர்க்களம் அணுகி, ஆடல் பருந்தொடு, கழுகும், பேயும், பசிப்பிணி தீரு மாறு விருந்திடு வில்லின் செல்வன், விழாஅணி விரும்பி நோக்கிக், கருந்தடம் கண்ணும், நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள். 25 25. அணிவிழா - அழகிய போர்க் கோலத்தை. இனைய - இவைகளை. `சீலமும் காட்டி,என் கணவன் சேவகக் கோலமும் காட்டி,என் குலமும் காட்டி,இஞ் ஞாலமும் காட்டிய கவிக்கு, நாள்அறாக் காலமும் காட்டும்கொல், என்தன் கற்பு’என்றாள். 26 26. சீலமும் காட்டி - எனது கற்பொழுக்கத்தையும் சொல்லிக் காட்டி. சேவகக் கோலமும் - வீரத் தோற்றத்தையும். இஞ்ஞாலமும் காட்டிய - இவ்வுலகத்தையும் அழியாமல் இருக்கும்படி வைத்த. எச்சில்என் உடல்,உயிர் ஏகிற் றே;இனி நச்சிலை; என்பதோர் நவையி லாள்,எதிர் பச்சிலை வண்ணமும், பவள வாயும்ஆய்க், கைச்சிலை ஏந்திநின் றானைக் கண்உற்றாள். 27 27. என் உடல் எச்சில் - என் உடம்பு இராவணனால் எச்சிலாயிற்று. உயிர் ஏகிற்று - உயிரும் போயிற்று. இனி நச்சுஇலை - இனிஎனக்கு ஒரு ஆசையும் இல்லை. பிறப்பினும் துணைவனைப் பிறவிப் பேரிடர் துறப்பினும், துணைவனைத் தொழுது நான்இனி மறப்பினும் நன்று;இனி மாறு வேறுவீழ்ந்து இறப்பினும் நன்றென; ஏக்கம் நீங்கினாள். 28 28. பிறப்பினும் - வேறு பிறப்பெடுத்தாலும். பிறவிப் பேர்இடர் - பிறவிப் பெருந் துன்பத்தால். `துணைவனைத் துறப்பினும்’ தொழுது - தொழுது விட்டதனால். கற்பினுக்கு அரசினைப், பெண்மைக் காப்பினைப், பொற்பினுக்கு அழகினைப், புகழின் வாழ்க்கையைத், தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை, அற்பின்அத் தலைவனும் அமைய நோக்கினான். 29 29. பெண்மைக் காப்பினை - பெண் தன்மைக்குப் பாதுகாவலாக இருக்கின்றவளை. அற்பின் - அன்புடன். அமைய - நன்றாக. சுணங்குறு துணைமுலை முன்றில், தூங்கிய அணங்குறு நெடும்கணீர் ஆறு பாய்தர வணங்குஇயல் மயிலினைக், கற்பின் வாழ்வினைப் பணம்கிளர் அரவுஎன எழுந்து பார்ப்புறா. 30 30. முன்றில் - முகட்டில். சுணங்கு - தேமல். தூங்கிய - அசைந்த. அணங்குஉறு - துன்பம் உற்றதால் தோன்றிய. பணம் கிளர் - படம் எடுத்து விளங்கும். பார்ப்பு உறா -பார்த்து. `ஊண்திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை; முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டுறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்துஇவண் மீண்டதுஎன் நினைவு’எனை விரும்பும்’ என்பதோ?’ 31 31. ஊண்திறம் - உணவு வகைகளை. உவந்தனை - விரும்பி உண்டவளாகிய நீ. அடங்கினை - வாழ்ந்தாய். பணிந்த சீதையைப் பார்த்து இராமன் சொல்லியது `உன்னைமீட் பான்பொருட்டு, உவரி தூர்த்து,ஒளிர் மின்னைமீட் டுறுபடை அரக்கர் வேர்அறப், பின்னைமீட் டுறுபகை கடந்தி லேன்;பிழை என்னைமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன்.’ 32 32. மீட்பான் பொருட்டு - மீட்கும் பொருட்டு. மின்னை மீட்டுறு படை - மின்னலையும் புறமிட்டு ஓடச் செய்யும்ஒ ளியுள்ள ஆயுதங்களை யுடைய. என்னைப் பிழை மீட்பான் பொருட்டு - என்னுடைய குற்றத்தை மீட்கும் பொருட்டு. `மருந்தினும் இனிய,மன் உயிரின் வான்தசை அருந்தினை யே?நறவு அமைய உண்டியே? இருந்தனை யே?இனி எமக்கும் ஏற்பன விருந்துள வோ?உரை; வெம்மை நீங்கினாய்!’ 33 33. வெம்மை நீங்கினாய் - அன்பற்றவளே. வான்தசை - சுவை மிகுந்த மாமிசத்தை. நறவு - கள்ளை. அமைய - மிகுதியாக. `கலத்தினில் பிறந்தமா மணியின் காந்துறும் நலத்தின்நிற் பிறந்தன நடந்த; நன்மைசால் குலத்தினில் பிறந்திலை; கோள்இல் கீடம்போல் நிலத்தினில் பிறந்தமை நிரப்பி னாய்அரோ!’ 34 34. கலத்தினில் பிறந்த மாமணியின் - ஆபரணங்களில் பதித்துத் தோன்றுகின்ற சிறந்த மணியைப் போல. காந்துறும் நலத்தின்நின் பிறந்தன - காணப்படும் நற்குணங்களினால் உன்னிடம் பிறந்த நன்மைகள். நடந்த - உன்னைவிட்டு ஓடிவிட்டன. கோள்இல் கீடம்போல் - வலிமை யற்ற புழுவைப் போல. நிரப்பினாய் - முழுவதும் செய்து காட்டினை. `பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்புஎனும் திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும், உண்மையும், நீஎனும் ஒருத்தி தோன்றலால் வண்மையில் மன்னவன் புகழின் மாய்ந்ததால்.’ 35 35. வண்மையின் மன்னவன் - கொடைத் தன்மையில்லாத மன்னவனுடைய. புகழின் - புகழைப்போல. `யாதுயான் இயம்புவது? உணர்வை யீடறச் சேதியா நின்றதுன் ஒழுக்கச்; செய்தியால்; சாதியால்; அன்றுஎனில் தக்கது ஓர்நெறி போதியால்;’ என்றனன் புலவர் புந்தியான். 36 36. ஈடுஅற - வலிமைகெட. சேதியா நின்றது - அறுக்கின்றது. சாதி ஆல் - இறந்துபோ. ஆல் ; அசை. போதிஆல் - போவாயாக; ஆல்; அசை. இராமன் உரைகேட்டு அனைவரும் அரற்றச் சீதை மொழிவது கண்இணை உதிரமும், புனலும் கான்றுக, மண்ணினை நோக்கிய, மலரின் வைகுவாள், புண்ணினைக் கோல்உறுத்து அனைய பொம்மலால், உள்நினைப்பு ஓவிநின்று, உயிர்ப்பு வீங்கினாள். 37 37. பொம்மலால் - உள்ளத் துயரால். ஓவி - நீங்கி. உயிர்ப்பு வீங்கினாள் - பெருமூச்சு விட்டாள். மருந்துஅடர் சுரத்திடைப் பருகும் நீர்நசை வருந்துஅரும் துயரினால் மாளல் உற்றமான், இருந்தடம் கண்டு,அதில் எய்து றாவகைப், பெரும்தடை உற்றெனப், பேதுற் றாள்;அரோ. 38 38 சுரத்திடை - பாலைவனத்திலே. நீர் நசை வருந்து - நீர் வேட்கையால் வருந்துகின்ற. இரும்தடம் கண்டு - பெரிய நீர் நிலையைக் கண்டு. பேதுற்றாள் - மயங்கினாள். `மாருதி வந்துஎனைக் கண்டு `வள்ளல்நீ சாருதி ஈண்டு’எனச் சமையச் சொல்லினான்; யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ! சோரும்என் னிலை;அவன் தூதும் அல்லனோ?’ 39 39. அமையச் சொல்லினான் - எனக்கு ஆறுதல் உண்டாகும் படி உரைத்தான். `எத்தவம், எந்நலம், என்றன் கற்பு,நான் இத்தனை காலமும் உழந்த ஈதெலாம் பித்துஎன லாய்,அறம் பிழைத்த தால்,அன்றே உத்தம நீமனத்து உணர்ந்தி லாமையால்.’ 40 40. அறம் பிழைத்தால் - அறம் தவறியதனால். `பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்குகைத் தாங்கிய தரும மூர்த்தியும், அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும் மங்கையர் மனநிலை உணர வல்லரோ?’ 41 41. அனைத்தும் நோக்கினும - எல்லாவற்றையும் பார்ப்பா ராயினும். வல்லரோ - ஆற்றல் உள்ளவரோ. `ஆதலின், புறத்துஇனி யாருக் காகஎன் கோதறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்? சாதலின் சிறந்ததுஒன்று இல்லை; தக்கதே, வேதநின் பணி;அது விதியும்;’ என்றனள். 42 42. புறத்து இனி யாருக்காக என் கோதறு தவத்தினை - வேறுஇனி யாருக்காக என் குற்றமற்ற கற்பின் தன்மையை. கூறிக்காட்டுகேன் - சொல்லிக் காட்டப் போகின்றேன். இளையவன் தனைஅழைத்து `இடுதி தீ’என வளைஒலி முன்கையாள் வாயின் கூறினாள்; உளைவுறும் மனத்தவன், உலகம் யாவுக்கும் களைகணைத் தொழ;அவன் கண்ணின் கூறினான். 43 43. உளைவுறும் மனத்தவன் - வருந்துகின்ற மனத்தினனாகிய இலக்குவள். களைகணை - புகலிடமான இராமனை. கண்ணின் - கண் குறிப்பால். சீதை தீயின் அருகு சென்றபோது நிகழ்ந்தது தீயிடை அருகுறச் சென்று, தேவர்க்கும் தாய்,தனிக் குறுகலும், தரிக்கி லாமையால் வாய்திறந்து அரற்றின் மறைகள் நான்கொடும், ஒய்வில்நல் அறமும்,மற்று உயிர்கள் யாவையும். 44 44. தரிக்கிலாமையால் - அதைக்கண்டு பொறுக்க முடியால். சீதை தீப்புகுதல் கனத்தினால் கடந்தபூண் முலைய கைவளை `மனத்தினால், வாக்கினால், மறுவுற் றேன்எனில், சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா’ என்றாள்; புனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 45 45. கனத்தினால் கடந்த - பருத்த. பூண் - ஆபரணம். மறு உற்றேன் எனின் - குற்றமடைந்தேன் ஆயின். வனம்துழாய் - அழகிய துளசி மாலையை அணிந்த. நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்ததன் கோயிலே எய்து வாள்எனப் பாய்ந்தனள்; பாய்தலும் பாலின் பஞ்சுஎனத் தீய்ந்ததுஅவ் வெரி,அவள் கற்பின் தீயினால். 46 46. நிவந்த - உயர்ந்த. பாலின் பஞ்சுஎன - வெண்மையான பஞ்சுபோல். அழுந்தின நங்கையை அங்கை யால்சுமந்து எழுந்தனன், அங்கி,வெந்து எரியும் மேனியான், தொழும்கரத் துணையினன், சுருதி ஞானத்தின் கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 47 47. சுருதி - வேதத்தில் சொல்லப்படுகின்ற. ஞானத்தின் கொழுந்தினை - ஞானக் கொழுந்தாகிய இராமனை வணங்கி. பூசலிட்டு - சப்தமிட்டு. தீக்கடவுள் சீதையைக் கையிலேந்தி வந்த போது, இராமன், அவனை நீ யார் என அக்கினி கூறியது `அங்கியான், என்னை,இவ் அன்னை கற்புஎனும் பொங்குவெம் தீச்சுடப் பொறுக்கி லாமையால் இங்குஅணைந் தேன்;உறும் இயற்கை நோக்கியும், சங்கியா நிற்றியோ? எவர்க்கும் சான்றுளாய்.’ 48 48. யான் அங்கி - யான் தீத்தேவன். உறும் இயற்கை நோக்கியும் - எனக்கு நேர்ந்த தன்மையைப் பார்த்தும். சங்கியா நிற்றியோ - சந்தேகிக்கின்றாயோ. `ஐயுறு பொருள்களை, ஆசின் மாசுஒரீஇக் கைஉறு நெல்லிஅம் கனியின் காட்டும்,என் மெய்உறு கட்டுரை கேட்டும் மீட்டியோ, பொய்உறா மாருதி உரையும் போற்றலாய்!’ 49 49. ஆசின் மாசு ஓரீஇ - நன்றாகக் குற்றங்களை நீக்கி. மெய்உறு கட்டுரை - உண்மை பொருந்திய சொல்லை. கேட்டு மீட்டியோ - கேட்ட பிறகாவது சீதையை மீட்டுக் கொள்ள மாட்டாயோ. `பெய்யுமே மழை?புவி பிளப்பது அன்றியே செய்யுமே பொறை?அறம் நெறியில் செல்லுமே? உய்யுமே உலகு?இவள் உணர்வு சீறினால் வையுமேல் மலர்மிசை அயனும் மாயுமே!’ 50 50. இவள் உணர்வு சீறினால் - இவள் உள்ளத்திலே கோபம் கொண்டால். மழை பெய்யுமே - மழை பெய்யுமோ? பொறை செய்யுமோ - பொறுத்திருக்குமோ? `அழிப்பில சான்றுநீ உலகுக்கு; ஆதலால் இழிப்பில சொல்லிநீ, இவளை யாதும்ஓர் பழிப்பிலள் என்றனை; பழியும் இன்று;இனிக் கழிப்பிலள்;’ என்றனன் கருணை உள்ளத்தான். 51 51. உலகுக்கு அழிப்புஇல சான்று நீ - உலகத்திற்கு அழியாத சாட்சி நீ. இழிப்பில சொல்லி - இழிவுக்கு இடமில்லாத சிறந்தவைகளைக் கூறி. பழிப்பு இலள் - குற்றமற்றவள். கழிப்பு இலள் - கைவிடப்பட மாட்டாள். நான்முகன் தோன்றிச் சீதையை ஏற்றுக் கொள்ள வேண்டுதல் `மன்னர்! தொல்குலத்து அவதரித் தனைஒரு மனிதன் என்ன உன்னலை உன்னை,நீ இராமகேள்! இதனைச் சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்தமெய்த் துணிபு நின்அ லாதுஇல்லை; நின்னின்வேறு உளதுஇலை நெடியோய்!’ 52 52. -. `என்உ ருக்கொடுஇவ் வுலகினை ஈனுதி; இடையே உன்உ ருக்கொடு புகுந்துநின்று ஓம்புதி; உமையோன் தன்உ ருக்கொடு துடைத்தி;மற்று இதுதனி அருக்கன் முன்உ ருக்கொடு பகல்செயும் தரத்தது முதலோய்.’ 53 53. தனி அருக்கன்முன் உருக்கொடு - ஒப்பற்ற சூரியன் நம்கண் முன்னே தன் உருவைக் கொண்டு. `இனையது ஆகலின், எமையும்,மூன்று உலகையும் ஈன்று, மனையின் மாட்சியை வளர்த்தஎம் மோயினை, வாளா முனையல்’ என்றுஅது முடித்தனன்; முந்துநீர் முளைத்த சினையின் பந்தமும், பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 54 54. முந்துநீர் முளைத்த - முன்பு நீரிலே தோன்றிய. சினையின் பந்தமும் - முட்டை போன்ற உலகையும். பகுதிகள் அனைத்தையும் - இவ்வுலகின் கூறுபாடுகள் அனைத்தையும். எம்மோயினை - எம் அன்னையை. வாளா முனையல் - வீணாக வெறுக்காதே. சிவபெருமான் சொல்லியது என்னும் மாத்திரத்து ஏறுஅமர்க் கடவுளும் இசைத்தான், `உன்னை நீஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய்! முன்னை ஆதியாம் மூர்த்திநீ! மூவகை உலகின் அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந்து அமைந்தாள்!’ 55 55. ஏறுஅமர்க் கடவுளும் - காளையில் அமர்ந்த சிவபெரு மானும். `துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லைஎவ் வுலகும் பிறக்கும் பொன்வயிற்று அன்னை;இப் பெய்வளை; பிழைக்கின் இறக்கும் பல்உயிர்; இறைவநீ இவள்திறத்து இகழ்ச்சி மறக்கும் தன்மையது’ என்றனன் மழுவலான் வழுத்தி. 56 56. பொன் வயிற்று - அழகிய வயிற்றை யுடைய. பிழைக்கின் - நீ தவறு செய்தால். வரதர்க்கும் வரதன் - வரம் கொடுக்கும் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவன். இச்சமயத்தில் வானத்திலிருந்து தசரதன் இரா மனைக் காண வந்தான். அவன் அடிகளில் இராமன் வணங்கினான். தசரதன் இராமனை மார்போடு தழுவிக் கொண்டான். தசரதன் உரைத்தவை `அன்று, கேகயன் மகள்கொண்ட வரம்எனும் அயில்வேல் இன்று காறும்என் இதயத்தின் இடைநின்றது; என்னைக் கொன்று நீங்கலது; இப்பொழுது அகன்றது;உன் குலப்பூண் மன்றல் ஆகமாம் காந்தமா மணியின்று வாங்க.’ 57 57. குலப்பூண் - சிறந்த ஆபரணத்தை அணிந்த. மன்றல் ஆகமாம் - மணம் பொருந்திய மார்பாகிய. காந்த மாமணி - காந்தமாகிய சிறந்த மணி. இன்று வாங்க - இப்பொழுது இழுத்ததனால். உன் மார்பாகிய காந்த மணி இழுத்ததனால் கைகேசியின் வரமான வேல் நீங்கிற்று. `மைந்த ரைப்பெற்று வான்உயர் தோற்றத்து மலர்ந்தார் சுந்த ரப்பெரும் தோளினாய்! என்துணைத் தாளின் பைந்து கள்களும் ஒக்கிலர் ஆம்எனப் படைத்தாய்; உய்ந்த வர்க்குஅரும் துறக்கமும் புகழும்பெற்று உயர்ந்தேன்.’ 58 58. வான் உயர்தோற்றத்து மலர்ந்தார் - மிகவும் சிறந்த தோற்றத்துடன் விளங்கினவர்களும். பைந்துகட்கு - பசுமையான தூசுகளுக்கு. உயர்ந்தவர்க்கு அரும் - தீவினையிலிருந்து தப்பினவர்களுக்கும் கிடைப்பதற்கு அருமையான. என்று, மைந்தனை எடுத்துஎடுத்து இறுகுறத் தழுவிக் குன்று போன்றுள தோளினான் சீதையைக் குறுகத், தன்து ணைக்கழல் வணங்கலும் கருணையால் தழுவி நின்று, மற்றிவை நிகழ்த்தினான் நிகழ்த்தரும் புகழோன். 59 59. - . தசரதன் சீதையை வேண்டுதல் `நங்கை! மற்றுநின் கற்பினை உலகுக்கு நாட்ட அங்கி புக்கிடுஎன்று உரைத்தது, அதுமனத்து அடையேல்; சங்கை உற்றவர் தேறுவது உண்டு;அது சரதம்; கங்கை நாடுஉடைக் கணவனை முனிவுறக் கருதேல்.’ 60 60. அதுமனத்து அடையேல் - அதை மனத்திலே குறையாகக் கொள்ளாதே. சங்கை உற்றவர் - சந்தேகம் கொண்டவர்கள். பெறுவதும் உண்டு - இவ்வாறு செய்து உண்மையைக் காணப் பெறுவதும் உண்டு. அது சரதம் - அது உலக வழக்கம். `பொன்னைத் தீயிடைப் பெய்வது,அப் பொன்னுடைத் தூய்மை தன்னைக் காட்டுதற்கு எ ன்பது, மனக்கொளல் தகுதி; உன்னைக் காட்டினன் கற்பினுக்கு அரசி’என்று `உலகில் பின்னைக் காட்டுதற்கு அரியது’என்று எண்ணி,இப் பெரியோன்.’ 61 61. -. `பெண்பி றந்தவர் அருந்ததி யேமுதற் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! மண்பி றந்தகம் உனக்கு;நீ வானின்றும் வந்தாய்! எண்பு இறந்தநின் குணங்களுக்கு இனிஇழுக்கு இலை;யால்’. 62 62. பெருமைப் பண்பு இறந்தவர்க்கு - கற்பாகிய பெருங் குணத்திலே சிறந்தவர்க்கு. எண்பு இறந்த - அளவு கடந்த. தசரதன் இலக்குவனைப் புகழ்தல் என்னச் சொல்லிஅவ் வேந்திழை திருமனத்து யாதும் உன்னச் செய்வதுஓர் முனிவின்மை மனங்கொளா உவந்தான்; பின்னைச் செம்மல்அவ் விளவலை, உள்அன்பு பிணிப்ப தன்னைத் தான்எனத் தழுவினன், கண்கள்நீர் ததும்ப, 63 63. ஏந்திழை - சீதை. உன்னச் செய்வது ஓர் - நினைக்கச் செய்வதாகிய ஒரு. முனிவு இன்மை - கோபம் இல்லாமையை. கொளா - கொண்டு. செம்மல் - தசரதன். இளவல் - இலக்குவன். `கண்ணின் நீர்ப்பெருந் தாரை,மற் றவன்சடைக் கற்றை மண்ணின் நீத்தம்ஒத்து இழிதரத் தழீஇநின்று, `மைந்த! எண்ணின் நீக்கரும் பிறவியும் என்நெஞ்சின் இறந்த புண்ணும் நீக்கினை தமையனைத் தொடர்ந்துடன் போந்தாய்!’ 64 64. மற்றவன் - இலக்குவனது. மண்ணின் நீத்தம் ஒத்து - குளிக்கும் வெள்ளத்தைப் போல. இழிதர - ஒழுகும்படி. எண்ணின் நீக்கரும் - எண்ணத் தொலையாத. இறந்த புண்ணும் - மிகுதியாக நின்ற புண்ணையும். இராமனும் தசரதனும் என்று பின்னரும் இராமனை `யான்உனக்கு ஈவது ஒன்று கூறுதி உயர்குணத் தோய்’என `உனையான் சென்று வான்இடைக் கண்டுஇடர் தீர்வென்என்று இருந்தேன்; இன்று காணப்பெற் றேன்;இனிப் பெறுவதென்?’ என்றான். 65 65. -. `ஆயி னும்உனக்கு அமைந்ததுஒன்று உரை’என அழகன், `தீயள் என்று,நீ துறந்தஎன் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தரு’கெனத் தாழ்ந்தான்; வாய்தி றந்துஎழுந்து ஆர்த்தன உயிர்எலாம் வழுத்தி. 66 66. -. `வரத கேள்,எனத் தயரதன் உரைசெய்வான்; மறுஇல் பரதன் அன்னது பெறுக!தான் முடியினைப் பறித்து,இவ் விரத வேடம்மற்று உதவிய பாவிமேல் விளிவு சரதம் நீங்கல தாம்’என்றான்; தழீஇயகை தளர. 67 67 விளிவு - கோபம். சரதம் நீங்கல - உண்மையாகவே இன்னும் நீங்கவில்லை. தாம்; அசை. `ஊன்பி ழைக்கிலா உயிர்நெடிது அளிக்கும்நீள் அரசை, வான்பி ழைக்குஇது முதல்எனாது, ஆள்வுற மதித்து, யான்பி ழைத்ததுஅல் லால்,என்னை யீன்றஎம் பிராட்டி தான்பி ழைத்ததுஉண் டோ’என்றான்; அவன்சலம் தவிர்ந்தான். 68 68. வான்பிழைக்கு இதுமுதல் எனாது - பெரிய குற்றத்துக்கு இது காரணமாகும் என்று எண்ணாமல். ஆள்வுற மதித்து - ஆள நினைத்து. யான் பிழைத்தது அல்லால் - நான் குற்றம் புரிந்தேனே அல்லாமல். சலம் - கோபம். இராமன் விரும்பிய வரங்களைத் தந்து தசரதன் சென்றான். தேவர்கள் இராமனை, `நீ விரும்பும் வரங்களைக் கேள்’ என்றனர். அவன் போரிலே மாண்ட வானரங்கள் எல்லாம் உயிர்பெற்றெழ வேண்டினான். பின்னும் ஓர்வரம் `வானரப் பெருங்கடல் பெயர்ந்து மன்னு பல்வனம், மால்வரைக் குலங்கள்,மற்று இன்ன துன்இ டங்கள்,காய், கனி,கிழங் கோடு,தேன் துற்ற, இன்உ ணீர்உள ஆகென’ இயம்பிடு கென்றான். 69 69. பெயர்ந்து மன்னும் பல்வனம் - போய்த் தங்கும் பல காடுகளும். மால்வரைக் குலங்கள் - பெரிய மலைகள். துன் இடங்கள் - சேரும் இடங்கள். தேன்துற்ற - தேன் நிறைய. இன்உணீர் - இனிய உண்ணும் நீரும். அவ்வாறே வரந்தந்தனர்; இராமன் வனவாச காலம் முடிந்ததைத் தேவர்கள் நினைப்பூட்டினர். இன்று சென்றுநீ பரதனை எய்திலை என்னின் பொன்று மால்அவன் எரியிடை; அன்னது போக்க வென்றி வீரநீ போதியால், என்பது விளம்பா நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 70 70. -. 41. மீட்சிப் படலம் விமானம் உண்டு என வீடணன் உரைத்தல் `இயக்கர் வேந்தனுக்கு, அருமறைக் கிழவன்அன்று ஈந்த, துயக்கு இலாதவர் மனம்எனத் தூயது; சுரர்கள் வியக்க வான்செலும் புட்பக விமானம்உண்டு;’ என்றே மயக்கி லான்சொலக் கொணருதி வல்லையின் என்றான். 1 மீட்சிப் படலம்: இராமன், முதலியோர் இலங்கையி லிருந்து திரும்புவதைக் கூறும் பகுதி. 1. இயக்கர் வேந்தன் - குபேரன். துயக்கு இலாதவர் - மாசற்றவர்களின். சுரர்கள் - தேவர்கள். விமானம் வந்தது. இராமனும், இளையோனும், சீதையும் விமானத்தண்டை நெருங்கினர். வீடணனைப் பார்த்துக் கூறியது வீடணன்தனை அன்புற நோக்குறா, விமலன், `தோடு அணைந்ததார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது;உன் மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி,நீள் அரசின் நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால்!’ 2 2. தோடு அணைந்த தார் - பூவிதழ்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த. மவுலி - முடி. நாடு அணைந்தவர் புகழ்ந்திட - நாட்டில் உள்ள அனைவரும் புகழும்படி. சுக்கிரீவனைப் பார்த்து `வானரங்களுடன் ஊருக்குப் போய் இளைப்பாறுக’ என்றான். அங்கதன், சாம்பன், நீலன், பனசன் அனுமான் முதலியவர்களிடம் இவ்வாறே உரைத்தான். ஐயன் இம்மொழி புகன்றிடத், துணுக்கமோடு, அவர்கள் மெய்யும் ஆவியும் குலைதர, விழிகணீர் ததும்பச், செய்ய தாமரைத் தாளிணை முடிஉறச் சேர்த்தி, `உய்கி லேம்நின்னை நீங்கின்’என்று இனையன உரைத்தார். 3 3. துணுக்கமோடு - துக்கத்துடன். - ஆவி - உயிர். குலைதர - வருந்த. உய்கிலேம் - பிழைக்கமாட்டோம். `பார மாமதில் அயோத்தியின் எய்தி,நின் பைம்பொன் ஆர மாமுடிக் கோலமும், செவ்வியும், அழகும், சோர்வி லாதுயாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து பேர வேஅருள்;’ என்றனர் உள்ளன்பு பிணிப்பார். 4 4. செவ்வியும் - காலமும். அளவையும் - வரையிலும். அன்பி னால்அவர் மொழிந்தவா சகங்களும், அவர்கள் துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி,`நீர் துளங்கல்! முன்பு நான்நினைந்து இருந்ததுஅப் பரிசு;நும் முயற்சி பின்பு காணுமாறு உரைத்தது;’என்று உரைத்தனன் பெரியோன். 5 5. நீர் துளங்கல் - நீங்கள் மனம் கலங்க வேண்டாம். அப்பரிசு - அவ்விதந்தான். அனைவரும் புட்பக விமானத்தில் ஏறினர்; இராமன் எண்ணப்படி விமானம் இலங்கையைச் சுற்றிச் சென்றது; இந்திரசித்தன், இராவணன் இறந்த இடங்களை இராமன் சீதைக்குக் காட்டினான். இராமன் சேதுவின் பெருமையைச் சீதைக்குரைத்தல் `நன்னுதல்! நின்னை நீங்கி நாள்பல கழிந்த பின்றை, மன்னவன் இரவி மைந்தன் வான்துணை யாக நட்ட பின்னை,மா ருதிவந்து உன்னைப் பேதுஅறுத்து, உனது பெற்றி சொன்னபின், வான ரேசர் தொகுத்ததுஇச் சேது கண்டாய்!’ 6 6. உன்னைப் பேதுறுத்து - உன்னைத் தெளிவுறுத்தி. உனது பெற்றி சொன்னபின் - மீண்டு வந்து உனது நிலையைக் கூறிய பிறகு. வானரேசர் - வானரத் தலைவர்கள். `மற்றுஇதன் தூய்மை எண்ணின் மலர்அயன் தனக்கும் எட்டா; பொற்றொடித் தெரிவை யான்என் புகலுகேன் கேட்டி; அன்பால் பெற்றதாய் தந்தை யோடு, தேசிகர்ப் பிழைத்துச், சூழ்ந்த சுற்றமும் கெடுத்து ளோரும், எதிர்தரின், சுரர்கள் ஆவார்.’ 7 7. தூய்மை - பரிசுத்தம். தேசிகன் பிழைத்து - குருவுக்கும் தீமை புரிந்து. சுற்றமும் கெடுத்துளோரும் - சுற்றத்தாரையும் கெடுத்த பாவிகளும். எதிர்தரின் - காண்பார்களாயின். `கங்கையே, யமுனை,கோதா வரி,நரு மதை,காவேரி பொங்குநீர் நதிகள் யாவும், படிந்துஅலால் புன்மை போகா; சங்குஎறி தரங்க வேலை தட்ட,இச் சேது என்னு இங்கிதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீக்கும் அன்றே. 8 8. படிந்து அலால் - மூழ்கினால் அல்லாமல். புன்மை போகா - தீவினைகள் நீங்கமாட்டா. சங்கு எறி - சங்குகளைக் கரையிலே வீசுகின்ற. தட்ட - தடுத்த. தெவ்அடும் சிலைக்கை வீரன், சேதுவின் பெருமை யாவும், வெவ்விடம் பொருது, மீண்டு, மிளிர்தரும் கருங்கண், செவ்வாய், நொவ்இடைக், குயில்அன் னாட்கு நுவன்றுழி, `வருணன், நோனாது இவ்விடை வந்து கண்டாய் சரண்என இயம்பிற்று;’ என்றான். 9 9. தெவ்அடும் - பகைவர்களைக் கொல்லுகின்ற. வெவ்விடம் பொருது - கொடிய நஞ்சுடன் போர் செய்து. நொஇடை - வருந்துகின்ற சிறிய இடை. நோனாது - பொறுக்க முடியாமல். `இதுதமிழ் முனிவன் வைகும் இயல்தரு குன்றம்; முன்தோன்று உதுவளர் மணிமால் ஓங்கல்; உப்புறத்து உயர்ந்து தோன்றும் அதுதிகழ் அனந்த வெற்பு,என்று அருள்தர,`அனுமான் தோன்றிற்று எது,என அணங்கை நோக்கி, இற்றுஎன’ இராமன் சொன்னான். 10 10. இயல்தரு - அழகைத் தருகின்ற. குன்றம் - பொதிகை மலை. மணிமால் ஓங்கல் - நீல மணிபோன்ற திருமால் வாழும் திரு வேங்கடம். விமானம் பல மலைகளையும் கடந்து, கிட்கிந்தையை அடைந்தது. சீதை, வானர மாதர்களையும் அழைத்துச் செல்ல விரும்பினாள். அவ்வாறே அவர்களையும் விமானத்தில் ஏற்றிக் கொண்டு பரத்துவாசன் ஆசிரமத்தை அடைந்தனர். உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்துஉம்பர் ஓங்கும் பொன்னின் நாடுவந்து இழிந்தெனப் புட்பகம் தாழ, என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர்போய்ப் பன்னு மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 11 11. உன்னும் மாத்திரத்து - விமானம் இறங்க வேண்டும் என்று இராமன் நினைத்தவுடனே. நாயகன் - இராமன். அடியின் வீழ்தலும் எடுத்துநல் ஆசியோடு அணைத்து, முடியை மோயினன் நின்றுழி, முளரிஅம் கண்ணன் சடில நீள்துகள் ஒழிதர, தனதுகண் அருவி நெடிய காதல்அம் கலசம்அது ஆட்டினன், நெடியோன். 12 12. மோயினன் - முத்தமிட்டு. சடிலம் - சடாமுடியில் உள்ள. நெடியோன் - பெரியோனாகிய பரத்துவாசன். கருகும் வார்குழல் சனகியோடு இளவல்கை தொழுதே அருகு சார்தர அருந்தவன் ஆசிகள் வழங்கி, உருகு காதலன் ஒழுகுகண் நீரினன், உவகை பருகும் ஆர்அமிழ்து ஒத்து,உளம் களித்தனன், பரிவால். 13 13. உருகுகாதலன் - மனம் உருகும் அன்புடையவனாய். உவகை - மகிழ்ச்சியுடன். பரத்துவாசன் வாழ்த்து வான ரேசனும் வீடணக் குரிசிலும், மற்றை ஏனை வீரரும் தொழுதொறும் ஆசிகள் இயம்பி, ஞான நாதனைத், திருவொடும் நன்மனை கொணர்ந்தான் ஆன மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்றே. 14 14. -. பன்னசாலையுள் அழைத்துச் சென்று, உபசரித்தபின் பரத்துவாசன் கூறியது `முனிவர், வானவர், மூவுல கத்துஉளோர் யாரும், துனிஉ ழந்திடத் துயர்தரு, கொடுமனத் தொழிலோர் நனிம டிந்திட, அலகைகள் நாடகம் நடிப்பக், குனியும் வார்சிலைக் குரிசிலே என்இனிக் குணிப்பாம்.’ 15 15. துனி உழந்திட - அச்சத்தால் வருந்தும்படி. நனி மடிந்திட - அடியோடு மடியும்படி. அலகை - பேய். குணிப்பாம் - கூறுவோம். பரத்துவாசன் இராமனை நோக்கி `நீ வேண்டும் வரம் கேள்’ என, இராமன் உரைத்தல் அரியினம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும், வானம் சொரிதரு பருவம் போன்று, கிழங்கொடு கனிகாய் துன்றி விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்குகென்று இயம்பு’ கென்றான்; புரியும்மா தவனும்,`அஃதே ஆ`கெனப் புகன்றிட் டானால். 16 16. அரியினம் - குரங்கினங்கள். அடவிகள் - காடுகள். துன்றி - நிறைந்து. மாதவன் - பரத்துவாசன். பரத்துவாசன் உறையுளில் அனைவரும் விருந் துண்டனர். அப்பொழுது இராமன் தன் வருகையைப் பரதனுக்கு அறிவிக்கும்படி, அனுமானிடம் கணை யாழியைக் கொடுத்து அனுப்பினான். அனுமான் செலவு தந்தை வேகமும்,தனது நாயகன் தனிச் சிலையின் முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகிச் சிந்தை பின்வரச் செல்பவன், குகற்கும் அச்சேயோன் வந்த வாசகம் கூறி,மேல் வான்வழிப் போனான். 17 17. சாயகக் கடுமையும் - அம்பின் விரைவும். பிற்பட முடுகி - பின்னடையும்படி விரைந்து. இவ்வாறு முனிவன், புகழ்ந்துபேசி, அனைவர்க்கும் விருந்திட்டான் அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுதுஇனிது அளிப்ப, ஐயன் கருந்தடம் கண்ணி யோடும், களைகணாம் துணைவி யோடும் விருந்துஇனிது அருந்தி, நின்ற வேலையின் வேலை போலும் பெருந்தடம் தானை யோடும் கிராதர்கோன் பெயர்ந்து வந்தான். 18 18. அருந்தவன் - பரத்துவாசன். கிராதர் கோன் - குகன். தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்; தழுவினன் எடுத்து மார்பில், தம்பியைத் தழுவு மாபோல் வழுஇல வலியர் அன்றோ மக்களும் மனையும்’ என்றான். 19 19. துளங்கினன் - நடுங்கினான். சூழஓடி - சுற்ற ஓடிவந்து. வழுவிலா - குற்றமற்ற. வலியர் - வன்மையுள்ளவர்; நன்றாக வாழ்கின்றனர். `அருள்உனது உளது நாயேற்கு; அவர்எலாம் அரிய ஆய பொருள்அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்க லாதேன்; மருள்தரு மனத்தி னேனுக்கு இனிதன்றோ வாழ்வு மன்னோ?’ 20 20. `உளது அருள் உளது நாயேற்கு’ அரியஆய - சிறந்த. புணர்ப்பினால் - அன்பினால். தெருள்தரும் - அறிவுடைய. ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை `ஐய! நீஇவை உரைப்பது என்னே! பரதனின் நீவேறு உண்டோ? போய்இனிது இருத்தி’ என்ன, புளிஞர்கோன் இளவல் பொன்தாள், மேயினன் வணங்கி, அன்னை, விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். 21 21. -. தொழுதுநின் றவனை நோக்கித், துணைவர்கள் தமையும் நோக்கி முழுதுணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; `முழுநீர்க் கங்கை தழுவுஇரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்; வழுவிலா எயினர் வேந்தன்; குகன்எனும் வள்ளல்’ என்பான். 22 22. -. அண்ணல்அஃது உரைத்த லோடும், அரிக்குலத்து அரசன் ஆதி நண்ணிய துணைவர் யாரும் இனிதுஉறத் தழுவி நட்டார்; கண்அகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல வண்ணமால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான். 23 23. -. கதிரவன் உதிப்ப, காலைக் கடன்கழித்து இளவ லோடும் அதிர்பொலன் கழலி னான்அவ் அருந்தவன் தன்னைஏத்தி விதிதரு விமானம் மேவி, விளங்கிழை யோடும் கொற்றம் முதிர்தரு துணைவ ரோடும் முனிமனம் தொடரப் போனான். 24 24. -. பரதனின் நிலைமை நந்தி யம்பதி யின்தலை, நாள்தொறும் சந்தி யின்றி, நிரந்தரம் தம்முனார் பந்தி அம்கழல் பாதம் அருச்சியா, இந்தி யங்களை வென்றுஇருந் தான்அரோ! 25 25. சந்திஇன்றி - காலை, நண்பகல், மாலை என்ற சந்திப் பொழுதில் தான் வணங்குவது என்றில்லாமல். பந்தி - ஒழுங்கான. நோக்கின் தென்திசை அல்லது நோக்குறான்; ஏக்குற்று ஏக்குற்று, `இரவி குலத்துளான் வாக்கில் பொய்யான்; வரும்!வரும்!’ என்றுஉயிர் போக்கிப் போக்கி உழக்கும் பொருமலான். 26 26. பொருமலான் - துன்பத்தையுடைய பரதன். யாண்டு வந்துஇங்கு இறுக்கும்என்று எண்ணினான், `மாண்ட சோதிட வாய்மைப் புலவரை ஈண்டு கூய்த்தரு கெ’ன்ன,வந்து எய்தினார்; `ஆண்ட கைக்குஇன்று இறுதி’என் றார்;அரோ. 27 27. மாண்ட - சிறந்த. கூய்த்தருகென்ன - கூவி அழைக்க வென்று. அறுதி - முடிவு. பரதன் துயரம் `எனக்கு இயம்பிய நாளும்,என் இன்னலும், தனைப்ப யந்தவள் நேயமும் தாங்கி,அவ் வனத்து வைகல்செய் யான்;வந்து அடுத்ததுஓர் வினைக்கொ டும்பகை உண்டென;’ விம்மினான். 28 28. வந்து அடுத்தது ஓர் - வந்து சேர்ந்ததாகிய ஒரு. வினைக் கொடும் பகை உண்டு - தீவினையாகிய கொடிய பகை ஒன்று உண்டு. `மூவ கைத்திரு மூர்த்தியர் ஆயினும், பூவ கத்தில், விசும்பில், புறத்தினில், ஏவர் நிற்பர் எதிர்நிற்க, என்னுடைச் சேவ கற்’கென ஐயமும் தேறினான். 29 29. -. `என்னை `இன்னும், அரசியல் இச்சையான் அன்னன் ஆகின் அவன்அது கொள்க’என்று உன்னி னான்கொல்? உறுவது நோக்கினான்; இன்ன தேநலன் என்றுஇருந் தான்;அரோ.’ 30 30. இச்சையன் - ஆசையையுடையவன். அது கொள்க - அவ்வரசாட்சியை ஏற்றுக்கொள்க. உறுவது - நன்மையாவதை. அரோ; அசை. சத்துருக்கனை அழைத்து அவனிடம் பரதன் கூறுதல் தொழுது நின்றதன் தம்பியைத், தோய்கணீர் எழுது மார்பத்து, இறுகத் தழுவினான், அழுது, `வேண்டுவது உண்டுஐய! அவ்வரம் பழுது இலாமை யினால்தரல் பாற்று’ என்றான். 31 31. தோய்கணீர் எழுதும் மார்பத்து - நிறைந்த கண்ணீர் புரண்டோடும் மார்பிலே. பழுதிலாமையினால் - குற்றமற்றது ஆதலால். தரல்பாற்று - தரக்கூடியதுதான். `என்அது ஆகுங்கொல் அவ்வரம் என்றியேல், சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன், மின்னு தீயிடை யான்இனி வீடுவென், மன்னன் ஆதி,என் சொல்லை மறாது;’என்றான். 32 32. -. இதுகேட்ட சத்துருக்கன், வருந்திக் கூறுதல் கேட்ட தோன்றல் கிளர்தடக் கைகளால் தோட்ட தன்செவி பொத்தித், துணுக்குறா ஊட்டு நஞ்சம் உண்டான்ஒத்து உயங்கினான்; நாட்ட மும்,மன மும், நடுங் காநின்றான். 33 33. -. விழுந்து, மேக்குயர் விம்மலன், வெய்துயிர்த்து எழுந்து, `நான்உனக்கு என்ன பிழைத்துளேன்? அழுந்து துன்பத்தி னாய்!’என்று அரற்றினான் கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 34 34. மேக்கு உயர் - மேலும்மேலும் பெருகுகின்ற. விம்மலன் - துன்பத்தை உடையவனாய். `கான்ஆள, நிலமகளைக் கைவிட்டுப் போவானைக், காத்துப், பின்பு போனானும் ஒருதம்பி; போனவன்தான் வரும்அவதி, போயிற்று, என்னா, ஆனாத உயிர்விடஎன்று அமைவானும் ஒருதம்பி; அயலே நாணாது, யானாம்இவ் அரசுஆள்வென்? என்னேஇவ் வரசாட்சி? இனிதே! அம்மா!’ 35 35. வரும் அவதி - வருகின்ற காலம். போயிற்று என்னா - கடந்து போய்விட்டது என்ற. ஆனாத - அமைதி அற்றிருந்த. `மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன்;’ என்னும் சொல்நிற்கும் என்றுஅஞ்சிப், புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கி னாயே! என்னின்பின் இவன்உளனாம் என்றேஎன் அடிமையுனக்கு இருந்த தேனும் உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும்’ என்றான். 36 36. மன்னின்பின் - இராமனுக்குப் பிறகு. சொல்நிற்கும் - பழிச் சொல் நிலைத்திருக்கும். முன்னில் - எண்ணிப் பார்த்தால். பின் இருந்ததுவும் - உனக்குப் பின் உயிர் வாழ்ந்து இருந்ததுவும். சத்துருக்கனைத் தீமூட்டும்படி பரதன் உரைத்தல் முத்துருக்கொண்டு அமைந்தனைய முழுவெள்ளிக், கொழுநிறத்து, முளரிச் செங்கண் சத்துருக்கன் அஃதுரைப்ப, `அவன்இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான்இங்கு ஒத்திருக்க லால்அன்றே; உலந்ததன்பின் இவ்வுலகை உலைய ஒட்டான்; அத்திருக்கும் கெடும்;உடனே புகுந்தாளும் அரசு;எரிபோய் அமைக்க;’ என்றான். 37 37. முழு வெள்ளிக் கொழுநிறத்து - நல்ல வெள்ளி போன்ற சிறந்த நிறத்தையும். முளரி - தாமரை. ஒத்து இருக்கலால் அன்றே - நாட்டை ஆளச் சம்மதித் திருப்பதனால் தான். உலந்ததன் பின் - நான் இறந்தபின். அத்திருக்கும் கெடும் - அக்குற்றமும் அழியும். தீயில்விழச் சென்ற பரதனைக் கோசலை தடுத்தல் `மன்இ ழைத்ததும், மைந்தன் இழைத்ததும் முன்இ ழைத்த விதியின் முயற்சியால்; பின்இ ழைத்ததும் எண்ணில்அப் பெற்றியால்; என்இ ழைத்தனை என்மக னே?’என்றாள். 38 38. மன் இழைத்தலும் - அரசன் செய்ததும். மைந்தன் - இராமன். அப்பெற்றியால் - அத்தன்மையால்தான். `நீயிது எண்ணினை யேல்,நெடு நாடு,எரி பாயும்; மன்னரும் சேனையும் பாய்வர்;ஆல் தாயர் எம்அளவு அன்று, தனிஅறம் தீயின் வீழும், உலகும் திரியும்;ஆல்.’ 39 39. தாயர் எம்அளவு அன்று - தாய்மார்களாகிய நாங்கள் தீப்பாய்வது மட்டும் அன்று. உலகும் திரியும் - உலகமும் கலக்கம் அடையும். `தரும நீதியின் தன்பயன் ஆவதுஉன் கரும மேஅன்றிக், கண்டிலம் கண்களால்; அருமை ஒன்றும் உணர்ந்திலை! ஐயநின் பெருமை ஊழி திரியினும் பேருமோ?’ 40 40. ஒன்றும் - சிறிதும். ஊழி திரியினும் - இறுதிக் காலத்திலே உலகம் அழிந்தாலும். `எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின்அரு ளுக்குஅருகு ஆவரோ? புண்ணி யம்எனும் நின்உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’ 41 41. -. `இன்று வந்தில னேஎனின், நாளையே ஒன்றும் வந்துனை; உன்னி உரைத்தசொல் பின்றும் என்றுண ரேல்;பிழைத் தான்எனின்; பொன்றும் தன்மை புகுந்தது போய்;’என்றாள். 42 42. வந்து உனை ஒன்றும் - வந்து உன்னை அடைவான். பொன்றும் தன்மை போய் புகுந்தது - இறக்கும் தன்மை போய்ச் சேர்ந்தது; இறந்தான். `ஒருவன் மாண்டனன் என்றுகொண்டு ஊழிவாழ் பெருநி லத்துப் பெறல்அரும் இன்உயிர்க் கருவும் மாண்டுஅறக் காணுதி யோ?கலைத் தருமம் நீஅலது இல்எனும் தன்மையாய்!’ 43 43. என்று கொண்டு - என்று நினைத்துக் கொண்டு. ஊழிவாழ் - ஊழிக்காலம் வரை யிலும் வாழ்கின்ற. கருவும் - கற்பமும். மாண்டுஅற - மாண்டு அழியும்படியான செயலைச் செய்ய. காணுதியோ - நினைக்கின்றாயோ. கலைத்தருமம் - நூல்களில் சொல்லப்பட்ட அறம். தீயில் விழாமல் தடுத்த கோசலைக்குப் பரதன் கூறியது `யானும் மெய்யினுக்கு இன்உயிர் ஈந்துபோய் வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்; கானுள் எய்திய காகுத்தற் கேகடன்? ஏனை யோர்க்கும்இது இழுக்கில் வழக்கன்றோ?’ 44 44. இது - இவ்வாறு செய்தல். இழுக்கு இல் வழக்கு அன்றோ - குற்றமற்ற முறையாகும் அன்றோ. காகுத்தன் - இராமன். `தாய்சொல் கேட்டலும், தந்தைசொல் கேட்டலும், பாசத்து அன்பினைப் பற்றுஅற நீக்கலும், ஈசற் கேகடன், யான்அஃது இழைக்கிலென்; மாசற் றேன்இது காட்டுவென் மாண்டு’ என்றான். 45 45. பாசத்து அன்பினை - தொடர்புடைய அன்பை. ஈசற்கே - இராமனுக்கே. பரதன் தீயில் விழச் சென்றபோது மாருதியின் வரவு `அய்யன் வந்தனன்! ஆரியன் வந்தனன்! மெய்யின் மெய்அன்ன நின்உயிர் வீடினால் உய்யு மேஅவன்?’ என்றுரைத்து உள்புகாக் கையி னால்,எரி யைக்,கரி ஆக்கினா. 46 46. வீடினால் - போனால். அவன் உய்யுமே - அவ்விராமன் உயிர் வாழ்வானா? உள்புகா - கூட்டத்துக்குள் புகுந்து. ஆக்கி, மற்றவன் ஆய்மலர்த் தாள்களைத் தாக்கத், தன்தலை தாழ்ந்து வணங்கிக்,கை வாக்கின் கூடப் புதைத்து,`ஒரு மாற்றம்நீ தூக்கிக் கொள்ளத் தகும்;’எனச் சொல்லினான். 47 47. ஆய்மலர்த் தாள்களை - ஆராய்ந்த தாமரை மலர் போன்ற பாதங்களை. தன் தலை தாக்க - தன் தலை பொருந்தும் படி. கை வாக்கில் கூட - கை வாயிலே சேர. மாற்றம் - வார்த்தை. தூக்கிக்கொள்ளத் தகும் - ஏற்றுக் கொள்ளத் தகுந்தது. `இன்னம் நாழிகை எண்ஐந்து உளஐய! உன்னை முன்னம்வந்து எய்த உரைத்தநாள்; இன்னது இல்லை எனின்,அடி நாயினேன் முன்னம் வீழ்ந்துஇவ் எரியின் முடிவென்;ஆல்’ 48 48. உரைத்த நாள் - சொன்ன தவணையாகிய நாள். எண் ஐந்து - நாற்பது. `எங்கள் நாயகற்கு இன்அமுது ஈகுவான் பங்க யத்துப் பரத்துவன் வேண்டலால், அங்கு வைகினன், அல்லது தாழ்க்குமோ? இங்கண், நல்லதுஒன்று இன்னமும் கேட்டி;ஆல்.’ 49 49. பங்கயத்து - தாமரையில் உள்ள பிரமனைப் போன்ற. இங்கண் - இப்பொழுது. மாருதி காட்டிய கணையாழியைக் கண்டு பரதன் மகிழ்ச்சி காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும், மூட்டுதீ வவ்விடம் உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நன்மருந்து ஒத்த தாம்;அரோ, ஈட்டிய உலகுக்கும் இனைய வேந்தற்கும். 50 50. வல்லிடம் உற்று - கொடிய விஷத்தை உண்டு. முற்றுவார்க்கு - உயிர் முடிகின்றவர்களுக்கு. ஊட்டிய - ஊட்டப்பட்ட. மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேல்அணைத்து ஆதரம் பெறுதற்கு ஆக்கை யோ?எனா ஓதினர் நாண்உற ஓங்கி னான்;தொழும் தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான். 51 51. ஆதரம் பெறுதற்கு ஆக்கையோ - இராமன் அன்பைப் பெறுவதற்கான உடம்போ இவன் உடம்பு. ஓங்கினான் - பரதன் தன் உடம்பு பருத்தான். அழும்;நகும்; அனுமனை ஆழிக் கைகளால் தொழும்;எழும்; துள்ளும்;வெம் களிது லக்கலால் விழும்;அறிந்து ஏங்கும்;போய் வீங்கும்; வேர்க்கும்அக் குழுவொடும் குனிக்கும்;தன் தடக்கை கொட்டும்;ஆல். 52 52. ஆழிக் கைகளால் - மோதிரத்தைப் பெற்ற கைகளால். அழிந்து ஏங்கும் - மனம் குலைந்து ஏங்குவான். போய் வீங்கும் - மகிழ்ச்சி மிகுந்து போய் உடல் பூரிக்கும். குனிக்கும் - கூத்தாடுவான். வேதியர் தமைத்தொழும்; வேந்த ரைத்தொழும்; தாதியர் தமைத்தொழும்; தன்னைத் தான்தொழும்; ஏதும்ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்கும்;ஆல். காதல்என் றதுவும்ஓர் கள்ளின் தோன்றிற்றே. 53 53. காதல் என்றதுவும் - அன்பு என்று சொல்லப்பட்டதும். ஓர் கள்ளின் தோன்றிற்றே - ஒப்பற்ற கள்ளிலிருந்து பிறந்ததே போலும். `மறையவர் வடிவுகொண்டு அணுக வந்தனை இறைவரின் ஒருத்தன்என்று எண்ணு கின்றனென், துறைஎனக்கு யாதெனச் சொல்லு சொல்’என்றான் அறைகழல் அனுமனும் அறியக் கூறுவான். 54 54. இறைவரின் - கடவுளர்களிலே. துறை - வழி காணும்படி. `காற்றினுக்கு அரசன்பால் கவிக்கு லத்தினுள் நோற்றனள் வயிற்றின்வந்து உதித்து, நும்முனாற்கு ஏற்றிலா அடித்தொழில் ஏவல் ஆளனேன் மாற்றினென் உரு,ஒரு குரங்கு மன்ன!யான்.’ 55 55. கவிக் குலத்தினுள் - குரங்கின் குலத்திலே. நோற்றனள் - தவஞ்செய்த ஒருத்தியின். ஏற்றுஇலா - இதைவிட உயர்வு என்று ஒன்றும் இல்லாத. ஏறு; ஏற்றுஎன நின்றது. என்று உரைத்து, மாருதி தனது உண்மை உருவைக் காட்டினான். அது கண்ட பரதன், அவன் உருவைச் சுருக்கிக் கொள்ளும்படி வேண்ட, அவ்வாறே சுருங்கிய உருவுடன் நின்றான் மாருதி. அவனுக்குப் பரதன் பல பரிசுகளை நல்கினான். இராமன் சித்திர கூடத்தை விட்டுச் சென்றது முதல் பரத்துவாசன் ஆசிரமத்தை அடைந்தது வரையில் அனைத்தையும் அனுமான் உரைத்தான். காலின்மா மதலை சொல்லப், பரதனும் கண்ணீர் சோர, `வேலைமா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட நீலமா முகில்பின் போனான் ஒருவன்;நான் நின்று நைவேன் போலுமால் இவைகள் கேட்பேன்; புகழ்உடைத்து அடிமை மன்னோ.’ 56 56. காலின் மாமதலை - காற்றின் சிறந்த புதல்வனாகிய அனுமான். வேலை - கடலிலே. வேட்டம் கொண்ட - அரக்கர் களை வேட்டையாடிய. போனான் ஒருவன் - சென்றவனாகிய இலக்குவனே சிறந்தவன். அன்னதுஓர் அளவையின் விசும்பின் ஆயிரம் துன்இரும் கதிரவர் தோன்றி னார்என பொன்அணி புட்பகப் பொருஇல் மானமும் மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார். 57 57. அளவையின் - நேரத்தில். துன்இரும் - நெருங்கிய பெரிய. அரசனும் - இராமனும். ஊண்உடை யாக்கைவிட்டு உண்மை வேண்டிய வான்உடைத் தந்தையார் வரவு கண்டென கான்இடைப் போகிய கமலக் கண்ணனைத் தான்உடை உயிரினைத், தம்பி நோக்கினான். 58 58. ஊண் உடை - உணவால் உயிர்வாழும் தன்மையுள்ள. வான் உடை - வானத்தை வாழ்விடமாகக் கொண்ட. தம்பி - பரதன். கெட்டவான் பொருள்வந்து கிடைப்ப, முன்புதாம் பட்டவான் படர்ஒழிந் தவரில், பையுள்நோய் சுட்டவன், மானவன் தொழுதல் உன்னியே விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையோன்; 59 59. கெட்ட வான்பொருள் - கெட்டுப்போன ஒரு சிறந்த பொருள். வந்து கிடைப்ப - தானே வந்து அகப்பட. வான்படர் - பெரிய துன்பம். ஒழிந்தவரில் - நீங்கினவரைப் போல. பையுள் நோய் - துன்ப நோயை. சுட்டவன் - சுட்டெரித்தவனாய். மானவன் - இராமனை. மாருதி விமானத்தின் முன் சென்று இராமனை வணங்கினான்; நந்திக் கிராமதில் நடந்தவைகளைக் கூறினான். ஆனதோர் அளவையின் அமரர் கோனெடும் வானவர் திருநகர் வருவ தாம்என, மேல்நிறை வானவர் வீசும் பூவொடும் தான்உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 60 60. ஆனது ஓர் அளவையின் - அப்படியான ஒரு சமயத்தில். விமானத்திற்கு, தேவேந்திரன் நகரமாகிய அமராவதி உவமை. தாயருக்கு, அன்று சார்ந்த கன்றுஎனும் தகையன் ஆனான்; மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்; ஆயிளை யார்க்குக் கண்ணுள் ஆடுஇரும் பாவை ஆனான்; ஓய்உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர்புகுந் தாலும் ஒத்தான். 61 61. மாயையின் - மாயையிலிருந்து. பிரிந்தோர்க்கெல்லாம் - விடுபட்ட வர்களுக்கெல்லாம். மனோலயம் வந்தது - மனம் ஒன்று படும்நிலை கிடைத் ததை. ஆய்இளையார்க்கு - சிறந்த இளையவர்களான பரதசத்துருக்கனர் களுக்கு. இரும்பாவை - கருவிழி. ஓய் உறுத்து உவந்த - ஓய்ந்து உயிர் நீங்கிய. எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்றதாய் எதிர்ந்தது ஒத்தான்; அளிவரு மனத்தோர்க் கெல்லாம் அரும்பத அமுதம் ஆனான்; ஒளிவரப் பிறந்தது ஒத்தான் உலகினுக்கு; ஒண்க ணார்க்குத் தெளிவரும் களிப்பு நல்கும் தேம்பிழித் தேறல் ஒத்தான். 62 62. எளிவரும் - மெலிவடைந்த. அளிவரும் - அன்பு பொருந்திய. ஒளிவர – ஒளி யுண்டாகும்படி. தெளிவு அரு - தெளிவில்லாத. தேம்பிழி - இனிமையாகப் பிழிந்தெடுத்த. மக்கள் மகிழ்ச்சி ஆவிஅங்கு அவன்அ லால்மற்று இன்மையால், அனையன் நீங்கக், காவிஅம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும் மாவியல் ஒண்க ணாரும், மைந்தரும், வள்ளல் எய்த ஓவியம் உயிர்பெற் றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 63 63. காவிஅம் - நீலோற்பலமலர்கள் நிறைந்த அழகிய. கவன்று - கவலை யுடன். மாஇயல் - மாஉருவின் தன்மையைக் கொண்ட. ஓவியம் - சித்திரம். வணக்கமும் வாழ்த்தும் அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை தனை,யினிது அளித்த தாயர் மூவரும், தம்பி மாரும், புனையும்நூல் முனிவன் தானும், அணுகுற விமானத் துற்ற வனைகழல் குரிசில், முந்தி மாதவன் தாளில் வீழ்ந்தான். 64 64. அனையர் ஆகி - அத்தன்மையுள்ளவர்களாகி. அருளின் வேலைதனை - அருட்கடலாகிய இராமனை. புனையும் நூல் - தரித்த பூணூலையுடைய. முனிவன் - வசிட்டன். மாதவன் - வசிட்டன். எடுத்தனன் முனிவன் மற்றவ் விராமனை ஆசி கூறி, அடுத்தன துன்பம் நீங்க, அணைத்துஅணைத்து அன்பு கூர்ந்து விடுத்துழி; இளைய வீரன் வேதியன் தாளில்வீழ, வடித்தநூல் முனியுஅன்போல் வாழ்த்தினான் ஆசி கூறி. 65 65. அடுத்தன துன்பம் - தன் மனத்திலே பொருந்தியிருந்த துன்பம். வடித்த நூல் முனியும் - ஆராய்ந்தறிந்த நூலறிவினை யுடைய வசிட்டனும். கேகையன் தநயை முந்தக் கால்உறப் பணிந்து, மற்றை மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண் ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவித் தத்தம் செய்யதா மரைக ணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 66 66. கேகையன் தநயை - கேகயன் மகளான கைகேசியினை. மஞ்சனம் - நீராட்டுதல் ஆகிய. அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்; தன்னிகர் இலாத வென்றித் தம்பியும், தாயர் தங்கள் பொன்அடித் தலத்தில் வீழத் தாயரும் பொருந்தப் புல்லி, `மன்னவற்கு இளவல் நீயே வாழி!’என்று ஆசி சொன்னார். 67 67. மன்னவற்கு - இராமனுக்கு. இளவல் நீயே - தகுந்த தம்பி நீயே தான். சேவடி இரண்டும், அன்பும், அடியுறை யாகச் சேர்த்திப் பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப், பொருமி, விம்மி, நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி; ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன் அழுது சோர்வான். 68 68. அடியுறையாக - பாதகாணிக்கையாக. பரதனை - பரதனைப்பார்த்து. பொருமி விம்மி - மிகவும் வருந்தி. நாவிடை - நாவினால். பெயர்ப்பது - சொல்லுவது. தழுவினன் நின்ற காலை தத்திவீழ் அருவி காலும் விழுமலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி வழுவுறப், பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை கழுவினன் உச்சி மோந்து, கன்றுகாண் கறவை அன்னான். 69 69. தத்தி வீழ் - குதித்து விழுகின்ற. சாலும் - போன்ற. மூரி - மிகுந்த. முருகின் செவ்வி - மாறாத தன்மையுள்ள அழகு. இராமன் பசுவாகவும். பரதன் கன்றாகவும் காணப்பட்டனர். இலக்குவன் பரதனை வணங்குதல் அனையதுஓர் காலத்து அம்பொன் சடைமுடி அடிய தாக கனைகழல் அமரர் கோமான் கட்டவன், படுத்த காளை துனைபரி, கரிதேர், ஊர்தி என்றிவை பிறவும் தோலின் வினைஉறு செருப்புக்கு ஈந்தான் விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். 70 70. அமரர் கோமான் - தேவர்தலைவனாகிய இந்திரனை. கட்டவன் – தோற்கடித்த வனாகிய இந்திரசித்தனை. படுத்த - அழித்த. இராமன் தன் சகோரதர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப் படுத்துதல் பின்இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கி, வீங்கும் தன்இணைத் தோள்கள் ஆரத் தழுவி,அத் தம்பி மாருக்கு இன்உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும் மன்உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 71 71. வீங்கும் - உயர்ந்த. ஆர - பொருந்த. வந்தவர் - இராமனுடன் வந்தவர்கள். சுமந்திரன் வந்து இராமனை வணங்குதல் அழுகையும், உவகை தானும், தனித்தனி அமர்செய்து ஏறத் தொழுதனன்; எழுந்து விம்மிச் சுமந்திரன் நிற்ற லோடும் தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்; `வழுவினி உளதன்று; இந்த மாநிலக் கிழத்திக்கு’ என்றான். 72 72. அமர்செய்து ஏற - போர்செய்து ஒன்றைஒன்று முந்த. பரதன் பலரையும் உபசரித்தல் குரக்கினத்து அரசைச், சேயைக், குமுதனைச், சாம்பன் தன்னைச், செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும்அத் திறத்தி னோரை, அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முகமன் கூறி மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான். 73 73. சேயை - அங்கதனை. செருக்கிளர் - போரிலே சிறந்த. அத்திறத்தினோரை - அத்தகையோரை. அடைவின் - முறைப்படி. 42. திருமுடி சூட்டு படலம் நம்பி,அப் பரத னோடும் நந்திஅம் பதியை நண்ணி, வம்புஅலர் சடையும் மாற்றி, மயிர்வினை முற்றி,மற்றத் தம்பிய ரோடும் தானும் தண்புனல் படிந்த பின்னர் உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பச் செய்தார். 1 திருமுடி சூட்டு படலம்: இராமனுக்கு முடீ சூட்டி யதைப் பற்றிக் கூறும் பகுதி. 1. நம்பி - இராமன். வம்பு அலர் - நறுமணம் வீசும்; ஒப்பனை - அலங்காரம். ஒப்ப - தகுதியாக. ஊழியின் இறுதி காணும் வலியினது, உயர்பொன் தேரின் ஏழ்உயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்தப், பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரி பற்றப், பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன்கோல் கொள்ளப் போனான். 2 2. ஊழியின் இறுதி காணும் - யுகத்தின் முடிவையும் காணும். வலியினது - வலிமையுள்ளதாகிய. ஏழுஉயர் - ஏழு முழம் உயர்ந்த. பாழிய - வலிமையுள்ள. தம்பி - சத்துருக்கனன். பூழியை - புழுதியை. வீடணக் குரிசில், மற்றை வெம்கதிர் சிறுவன், வெற்றிக் கோடணை குன்றம் ஏறிக் கொண்டல்தேர் மருங்கு செல்லத், தோடுஅணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்லச், சேடணைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 3 3. வெற்றிக் கோடு அணை - வெற்றியுள்ள தந்தங்கள் பொருந்திய. குன்றம் ஏறி - மலையாகிய யானை மீதேறி. தோடு அணை - மலர் இதழ்களைக் கொண்ட. தூசி செல்ல - முன்னணியிலே போய்க் கொண்டிருக்க. கோடையில் வறந்த மேகக் குலம்எனப், பதினால் ஆண்டு பாடுறு மதம்செய் யாத பணைமுகப் பரும யானை, காடுறை அண்ணல் எய்தக், கடாம்திறந்து உகுத்த வாரி ஓடின, உள்ளத் துள்ள களிதிறந்து உடைந்த தேபோல். 4 4. பாடுறு - வெளிப்படுகின்ற. மதம் செய்யாத - மதத்தைவெளியிட்டுக் காட்டாத. பணை முகப் பரும யானை - தந்தங்களையுடைய பெரிய யானைகள். கடாம்திறந்து உகுத்த வாரி - மதநீரைத்திறந்து சிந்திய வெள்ளமானது. திறந்து உடைந்தது போல் - திறந்து வெளிப்பட்டதைப் போல. துரகத்தார் புரவி எல்லாம், மூங்கையர் சொல்பெற்று என்ன, அரவப்போர் மேகம் என்ன ஆலித்த; மரங்கள் ஆன்ற பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும் புருவத்தார் மேனி எல்லாம் பொன்னிறப் பசலை பூத்த. 5 5. துரகம் புரவியெல்லாம் - விரைந்து செல்லும் தன்மை யுள்ள மாலையை அணிந்த குதிரைகள் எல்லாம்; மூங்கையார் - ஊமையர்கள். போர்அரவம் மேகம் என்ன - இடியாகிய போர் முழக்கம் செய்யும் மேகத்தைப் போல. ஆலித்த - ஆரவாரம் செய்தன. ஆயதோர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணித், தாயரை வணங்கித், தங்கள் இறையொரு, முனியைத் தாழ்ந்து, நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தி யோடும், சேயொளிக் கமலத் தாளும், திருநடம் செய்யக் கண்டான். 6 6. ஆயதோர் அளவில் - அச்சமயத்தில். நாயகக் கோயில் எய்தி - அரங்கநாதனுடைய கோயிலை அடைந்து. கமலத்தாள் - இலக்குமி. பின்னர் வீடணன் முதலியோர் அரச மாளிகை களைக் கண்டு களித்தனர். இரத்தின மாளிகையையும், நான்முகன் இக்குவாகுவுக் களித்த இலக்குமி மாடத்தையும் பார்த்து வியந்தனர். திருமுடி சூட்ட நாள் குறிப்பிடப்பட்டது; அனுமானால் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டன; புதிய மண்டபத்திலே இராமன் முடி சூட்டிக் கொள்ள அமர்ந்தான். மாணிக்கப் பலகை தைத்து, வயிரத்தின் கால்கள் சேர்த்தி, ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம் ஏண்உற்ற பளிக்கு மாடத்து இட்டனர், அதனின் மீது சேண்உற்ற திரள்தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 7 7. ஆணிப்பொன் சுற்றிமுற்றி - ஆணிப்பொன்னால் சுற்றலும் செய்து முடித்து. ஏண் உற்ற - சிறப்பமைந்த. பூண்உற்ற - அணிகலன்களைப் பூண்ட. அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலிநாட்டுச் சந்தணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர் `உய்ந்தனம் அடியம்’ என்னும் உவகையாம் உவரி காண வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 8 8. ஆலிநாட்டு - மழை வளம் நிறைந்த நாட்டைச் சேர்ந்த. (சோழநாடு) சந்து அணி - சந்தனம் அணிந்த. உவகையாம் உவரிகாண - ஆனந்தமாகிய கடல் தோன்ற. மங்கலத்து உரிமை மாக்கள் - மங்கலநாளைக் காணும் உரிமையுள்ள மக்கள். முடி சூட்டு விழா மங்கல கீதம், பாட மறைஒலி முழங்க, வல்வாய்ச் சங்கினம் குமுறப், பாண்டில், தண்ணுமை ஒலிப்பத், தாவில் பொங்குபல் இயங்கள் ஆர்ப்பப், பூமழை பொழிய, விண்ணோர் தங்கள்நா யகனை வெவ்வேறு எதிர் அபிடேகம் செய்தார். 9 9. பாண்டில் - தானம். தண்ணுமை. மத்தளம். தாவுஇல் - குற்றமற்ற. பொங்கு பல் இயங்கள் - ஓசை மிகுந்த பல்வேறு வாத்தியங்கள். வெவ்வேறு எதிர்ந்து - தனித்தனியாக வைத்து. மாதவர், மறைவ லாளர், மந்திரக் கிழவர், மற்றும் மூதறி வாளர், உள்ளம் சான்றவர், முதல்நீர் ஆட்டச்; சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும், தீதிலா இலங்கை வேந்தும், பின்அபி டேகம் செய்தார். 10 10. மந்திரக்கிழவர் - ஆலோசனைக்குரிய அமைச்சர்கள். மூதறிவாளர் உள்ள - சிறந்த அறிவினராக உள்ள. சான்றவர் - பெரியோர். மரகதச் சயிலம், செந்தா மரைமலர்க் காடு பூத்துத், திரைஎறி கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்பப் பெருகிய செவ்வி கண்டார், பிறப்புஎனும் பிணிகள் தீர்ந்தார். 11 11. மரகதச் சயிலம் - பச்சைமலை ஒன்று. திவலையால் - நீர்த்துளியால். செய்ய - சிவந்த ஒளியுள்ள. பெருகிய செவ்வி - மிகுந்த அழகை. அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தப், பரதன்வெண் குடைக விக்க, இருவரும் கவரி வீச, விரைசெறி குழலிஓங்க, வெண்ணெய்ஊர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி. 12 12. இருவரும் - இலக்குவ சத்துருக்கனர். விரைசெறி குழலி - நறுமணம் நிறைந்த கூந்தலையுடைய சீதை. பன்னெடும் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற பின்,நெடும் கணவன் தன்னைப் பெற்று,இடைப் பிரிந்து முற்றும் தன்னெடும் பீழை நீங்கத் தழுவினாள் தளிர்க்கை நீட்டி நன்னெடும் பூமி என்னும் நங்கைதன் கொங்கைஆர. 13 13. நெடும் கணவன் தன்னை - சிறந்த கணவனை. இடைப் பிரிந்து - நடுவிலே சிலகாலம் பிரிந்து பின்னர். முற்றும் தன்நெடும் பீழை நீங்க - முழுவதும் தனதுபெரிய துன்பம் நீங்கும்படி. விரதநூல் முனிவன் சொன்ன விதிமுறை வழாமை நோக்கி, வரதனும், இளைஞர்க்கு ஆங்கண் மாமணி மகுடம் சூட்டிப், பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும் கரைதெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 14 14. வழாமை நோக்கி - தவறாமல் பார்த்து. நடாவுற - நடத்தும்படி. வாழ்த்து மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி; நன்னூல் முறைசெயும் அரசர், திங்கள் மும்மழை வாழி `மெய்ம்மை இறையவன் இராமன் வாழி! இக்கதை கேட்போர் வாழி! அறைபுகழ்ச் சடையன் வாழி! அரும்புகழ் அனுமன் வாழி! 15 15. நன்னூல் முறை - நீதிநூல் முறையிலே. செயும் அரசர் - அரசாட்சி செய்கின்ற அரசர்களும். 43. விடை கொடுத்த படலம் விரிகடல் நடுவுள் பூத்த மின்என ஆரம் வீங்க, எரிகதிர்க் கடவுள் தன்னை இனமணி மகுடம் ஏய்ப்பக், கருமுகிற்கு அரசு, செந்தா மரைமலர்க் காடு பூத்து,ஓர் அரியணைப் பொலிந்த தென்ன, இருந்தனன் அயோத்தி வேந்தன். 1 விடை கொடுத்த படலம்: இராமன், அனைவர்க்கும் விடை கொடுத்து அனுப்பியதைப் பற்றி உரைக்கும் பகுதி. 1. ஆரம்வீங்க - முத்து மாலை ஒளிவீச. இனமணி மகுடம் - சிறந்த இரத்தினங்களைப் பதித்துச் செய்த கிரீடம். ஏய்ப்ப - ஒப்ப. மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்தத், தந்திரத் தலைவர் போற்றத், தம்பியர் மருங்கு சூழச், சிந்துரப் பவளச் செவ்வாய்த் தெரிவையர் பலாண்டு கூற, இந்திரற்கு உவமை ஏய்ப்ப, எம்பிரான் இருந்த காலை. 2 2. மந்திரக்கிழவர் - மந்திரிமார்கள். சிந்துரப் பவளம் செவ்வாய் - செந்நிறமுள்ள பவளம் போன்ற சிவந்தவாய்களை யுடைய. ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற வானர ரோடும் வெய்யோன் மகன்வந்து வணங்கிச் சூழத், தேன்நிமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில், செய்ய மானவாள் அரக்க ரோடும் வந்தடி வணங்கிச் சூழ்ந்தான். 3 3. வெள்ளத்து உற்ற - வெள்ளத்தோடு பொருந்திய. வெய்யோன் - சூரியன். தேன்நிமிர் அலங்கல் பைந்தார் - தேன்நிறைந்து அசைகின்ற புதிய மலர்மாலையை யுடைய. செய்ய மான - நல்ல மானத்தையுடைய. வெற்றிவெம் சேனை யோடும், வெறிப்பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன், கல்திரள் வயிரத் திண்தோள் கடுந்திறல் மடங்கல் அன்னான், எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் தொழுது சூழ்ந்தான். 4 4. வெறிப்பொறி புலியின் வெவ்வால் - சினத்தையும் புள்ளிகளையும் உடைய புலியின் கொடியவாலை. சுற்று உறத்தொடுத்து வீக்கும் அரையினன் - சுற்றிக்கட்டி இறுக்கிய இடுப்பையுடையவன். கல்திரள் - கல்திரண்டது போன்ற. கடும் திறல் மடங்கல் - மிகுந்த வலிமை பொருந்திய சிங்கம். வள்ளலும், அவர்கள் தம்மேல் வரம்பின்றி வளர்ந்த காதல் உள்உறப் பிணித்த செய்கை, ஒளிமுகக் கமலம் காட்டி, அள்ளுறத் தழுவி னான்போன்று அகம்மகிழ்ந்து இனிதின் நோக்கி, `எள்ளல்இ லாத மொய்ம்பீர்! ஈண்டுஇனிது இருத்திர்!’ என்றான். 5 5. உள்உறப்பிணித்த செய்கை - உள்ளத்திலே உறுதியாக இருக்கும் செயலை. கமலம் காட்டி - கமலத்தால் அறிவித்து. கமலம் - தாமரை. அள்ளுற - அழுந்து. நன்னெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச் சொன்னெறி அறிவு நீரார், தோம்அறு புலமைச் செல்வர், பன்னெறி தோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர், மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற; மன்னோ. 6 6. நன்னெறி அறிவு சான்றோர் - நல்வழியிலே ஒழுகும் அறிவிலே சிறந்தவர்கள். சொல் நெறி - பேசும் நெறியை. தோம்அறு - குற்றம் அற்ற. பல்நெறிதோறும் தோன்றும் - பல நெறிகளையும் அறிந்து விளங்கும். பருணிதர் - அறிவுள்ளவர்கள். இவ்வாறு இரண்டு திங்கள் கழிந்தன. இராமன் எல்லோர்க்கும் பரிசளித்தான். முடி சூட்டு விழாவுக்கு வந்திருந்த மன்னர்களுக்குப் பரிசளித்தான்; அவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்ல விடையும் அளித்தான். இராமன் தன் துணைவர்களுக்குப் பரிசளித்தல் சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈன்ற காலத்து உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத் தோடும், கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும், அம்பரம் தன்னை நீத்தான் அலரிகா தலனுக்கு ஈந்தான். 7 7. ஈன்ற காலத்து - இராமனைப் பெற்ற காலத்தில். கடகம் - கங்கணம். கொம்புடை மலை - யானை. குரகதம் - குதிரை. அம்பரம் - வானம். அலரி காதலன் - சூரியன் புதல்வன். அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம் அங்கதம் என்னும் நாமம் அழகுறத் திருத்து மாபோல், அங்கதம் கன்னல் தோளாற்கு அயன்கொடுத் ததனை ஈந்தான் அங்குஅதன் பெருமை மண்மேல் ஆர்அறைந்து அறைய கிற்பார்? 8 8. அங்கதம் இலாத - குற்றமற்ற. திருத்துமா போல் - திருத்தமாக வழங்கச் செய்வது போல. அங்குஅதம் கன்னல் தோளாற்கு - அங்கே பகைவர்களை அதம் செய்த இனிய தோளையுடைய இட்சுவாகு மன்னனுக்கு. அயன் கொடுத்த அதனை - பிரமதேவன் கொடுத்த அந்தத் தோளணியை. பின்னரும் அவனுக்கு, ஐயன், பெருவிலை ஆரத் தோடு மன்னுநுண் தூசும் மாவும் மதமலைக் குழுவும் ஈந்து, `உன்னைநீ அன்றி இந்த உலகினில் ஒப்பி லாதாய் மன்னுக கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி’ என்றான். 9 9. ஆரத்தோடு - முத்துமாலையுடன். மன்னும் நுண்தூசும் - அழகு பொருந்திய மெல்லிய ஆடைகளும். மாவும் - குதிரைகளும். மதமலை - யானை. மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்துஇனிது அருளின் நோக்கி `ஆர்உத விடுதற்கு ஒத்தார் நீஅலால்; அன்று செய்த பேர்உத விக்கு, யான்செய் செயல்பிறிது இல்லை; பைம்பூண் போர்உத வியதிண் தோளால், பொருந்துறப் புல்லு’ கென்றான். 10 10. `போர் உதவிய பைம்பூண் திண்தோளால்’ போர் உதவிய - போரிலே உதவி செய்த. என்றலும் வணங்கி, நாணி வாய்புதைத்து, இலங்கு தானை முன்தலை ஒதுக்கி நின்ற, மொய்ம்பனை முழுதும் நோக்கிப், பொன்திணி வயிரப் பைம்பூண், ஆரமும், புனைமென் தூசும், வன்தி றல் கயமும், மாவும் வழங்கினன்; வழங்கு சீரான். 11 11. இலங்குதானை - விளங்குகின்ற உடையின். முன்தலை ஒதுக்கி - முன்தானையைப் பறக்காமல் தள்ளிப் பிடித்துக் கொண்டு. மொய்ம்பனை - மாருதியை. கயமும் - யானைகளும். பூமலர்த் தவிசை நீத்துப், பொன்மதில் மிதிலை பூத்த தேமொழித் திருவை, ஐயன் திருவருள் முகத்து நோக்கப் பாமறைக் கிழத்தி யீந்த பருமுத்த மாலை கைக்கொண்டு ஏம்உறக் கொடுத்தாள், அன்னாள் இடர் அறிந்து உதவி னாற்கே. 12 12. திருவை - சீதையை. திருவருள்முகத்து நோக்க - அருள் கொண்டு முகத்தைப் பார்க்க. பாமறைக் கிழத்தி - கலைமகள் அளித்த. ஏம்உற - மகிழ்ச்சி பொருந்த. இடர் - துன்பம். அவ்வகை, அறுபத் தேழு கோடியாம் அரியின் வேந்தற்கு எவ்வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறிப், பவ்வம்ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம், பார்மேல் கவ்வையற்று, இனிது வாழ்க, கொடுத்தனன் கடைக்கண் நோக்கம். 13 13. அரியின் வேந்தர்க்கு - வானரவேந்தர்களுக்கெல்லாம். திறனும் – பொருள் களையும். பவ்வம் ஒத்து - கடலைப்போல. பல்கும் - பெருகும். கவ்வையற்று - துன்பமின்றி. மின்னைஏர் மௌலிச் செங்கண், வீடணப் புலவர் கோமான் தன்னையே இனிது நோக்கிச், `சராசரம் சூழ்ந்த சால்பின் நின்னையே ஒப்பார் நின்னை அலதுஇலர் உளரேல் ஐய பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று;’ என்றான். 14 14. மின்னை ஏர் - மின்னலைப்போன்ற. சுமந்த சராசரம் - இவ்வுலகில் உள்ள உயிர்ப் பொருள் உயிரில்லாத - பொருள் களிலே. சால்பின் - நிறைந்த குணங்களை யுடைய. பொரு அன்று - ஒப்பாகாது. “சால்பின் நின்னையே ஒப்பார் உளரேல், நின்னை அலது இலர்” என்று மாற்றிப் பொருள் கொள்க. என்றுரைத்து, அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு, வன்திறல் களிறும், தேரும், வாசியும் மணிப்பொன் பூணும், பொன்திணி தூசும், வாசக் கலவையும், புதுமென் சாந்தும் நன்றுற அவனுக்கு ஈந்தான், நாகணைத் துயிலைத் தீர்ந்தான். 15 15. வாசியும் - குதிரைகளும். பொன்திணி தூசும் - பொன்னாடைகளும். நாகஅணை - பாம்புப்படுக்கையின். சிருங்கபே ரம்என் றோதும் செழுநகர்க்கு இறையை நோக்கி, `மருங்குஇனி உரைப்பது என்னோ மறுஅறு துணைவற்கு’ என்னாக் கருங்கைமாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும் ஒருங்குற உதவிப், பின்னர் உதவினன் விடையும்; மன்னோ. 16 16. மருங்கு இனி - உன்னிடம் இனிமேல். மறுஅறு - குற்றம் அற்ற. கரும்கை - வலியகையையுடைய. மாக்களிறும் - பெரிய யானையும். கனகம் - பொன். அனுமனை, வாலி சேயைச், சாம்பனை, அருகன் தந்த கனைகழல் காலி னானைக், கருணைஅம் கடலும் நோக்கி, `நினைவதற்கு அரிது, நும்மைப் பிரிகென்றல்; நீவிர் வைப்பும் எனது;அது காவற்கு, என்றன் ஏவலின் ஏகும்;’ என்றான். 17 17. கனைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டாமணியணிந்த. நீவிர் வைப்பும் எனது - உங்கள் நாடும் என்னுடையதே. இலங்கைவேந் தனுக்கும், இவ்வாறு இனியன யாவும் கூறி, அலங்கல்வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருள லோடும், நலங்கொள்பேர் உணர்வின் மிக்கோர், நாம்உறு நெஞ்சர், பின்னர்க் கலங்கலர் `ஏய செய்தல் கடன்’எனக் கருதிச் சூழ்ந்தார். 18 18. மதுகை அண்ணல் - வலிமையுள்ள இராமபிரான். நலம்கொள் - நன்மை நிறைந்த. ஏய செய்தல் - இராமன் மனத்திற்கு ஏற்றதைச் செய்வதே. பரதனை, இளைய கோவைச், சத்துருக் கினனைப், பண்பார் விரதமா தவனைத், தாயர் மூவரை, மிதிலைப் b பான்னை, வரதனை வலங்கொண்டு ஏத்தி வணங்கினர், விடையும் கொண்டே, சரதமா நெறியும் வல்லோர், தத்தம் பதியைச் சார்ந்தார். 19 19. சரதமா நெறியும் வல்லோர் - உண்மையான சிறந்த ஒழுக்கத்திலே வல்லவர்களான அவர்கள். குகனைத்தன் பதியின் உய்த்துக், குன்றினை வலம்செய் தேரோன் மகனைத்தன் புரத்தில் விட்டு, வாள்எயிற்று அரக்கர் சூழக் ககனத்தின் மிசையே எய்திக் கனைகடல் இலங்கை புக்கான் அகன்உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன்சென்று அன்றே. 20 20. அகன் உற்ற - மிகுந்த. ககனம் - வானம். கனைகடல் - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த. ஐயனும் அவரை நீக்கி, அருள்செறி துணைவ ரோடும் வையகம் முழுதும் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல, செய்யமா மகளும், மற்றைச் செகதல மகளும், சற்றும், நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 21 21. செய்ய மா மகள் - இலக்குமி. செகதலமகள் - பூமிதேவி. நையும் ஆறு இன்றி - வருந்தாமல். உம்பரோடு இம்பர் காறும், உலகம்ஓர் ஏழும் ஏழும், `எம்பெரு மான்’என்று ஏத்தி இறைஞ்சிநின்று ஏவல் செய்யத், தம்பிய ரோடும், தானும், தருமமும் தரணி காத்தான் அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்திவந்து இறுத்த காளை. 22 22. அம்பரத்து - வானத்திலிருந்து. அனந்தர் - தூக்கம். இறுத்த காளை - தங்கிய காளை போன்ற இராமன். இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றித், தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானும் ஆகப், பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகரு வார்கள், நராபதி ஆகிப், பின்னும் நமனையும் வெல்லுவாரே. 23 23. தராதலம் - மண்ணுலகம். பராபரம் - உயர்வுக்கும் உயர்வு. பண்பினை - சிறந்த குணக்குன்றைப்பற்றி. பகருவார்கள் - பேசுகின்றவர்கள் நராபதி ஆகி - அரசராகி; மக்கள்தலைவராகி. பாட்டு முதற் குறிப்பு அகராதி (எண் - காண்ட எண், படல எண், பாட்டு எண்) அ அஃது ஐய நினை 1,5,32 அகல் இடம் 2,9,11 அக்கணத்தின் அயன் 6,37,38 அக்கணத்து அடுகளத்து 6,27,16 அக்கணத்து அறிவு 6,16,103 அக்கணத்தில் ஐயனும்,3,11,33 அக்கணத்து மந்திரியார்,6,17,46 அக்கணமே அயில் 6,20,6 அக்கப் பெயரோனை 6,19,6 அக்கன் உலந்தான் 6,18,58 அக்கன் மாளிகை 5,2,53 அக்காலை அரக்கரும் 5,12,14 அக்காலை இலக்குவன் 6,27,13 அக்காலை நிகும்பன் 6,18,48 அங்கதம் இலாத 6,43,8 அங்கதர் அனந்த 6,22,7 அங்கதன் அதனை 6,14,23 அங்கதன் தோள் 5,6,44 அங்கதன் நெற்றி 6,18,37 அங்கதன் பெயர்த்தும் 4,11,55 அங்கது கிடக்க 6,27,19 அங்கவர் பண்ணை 1,18 அங்கி நீரினும் 2,11,67 அங்கி மேல் 2,5,10 அங்கியான் என்னை 6,40,48 அங்கு உறுவன் 1,7,19 அங்கு நின்றெழுந்து 1,9,8 அங்கும் இவ் அறமே 6,26,29 அங்குள கிளை காவற்கு 2,8,31 அச்சநுண் 1,19,4 அச்சொல் கேட்டு 6,2,67 அச்சொல் கேளா 2,3,23 அஞ்சம் iபுயும் 2,7,3 அஞ்சலள் ஐயனது 2,3,14 அஞ்சலை அரக்க 5,13,49 அஞ்சனக் குன்றம் 2,61 அஞ்சன வண்ண 1,9,23 அஞ்சன வண்ணன் 2,13,19 அஞ்சி மந்தரை 2,2,43 அஞ்சிறை குருதியாறு 3,13,19 அஞ்சினன் அஞ்சி 3,6,38 அஞ்சினை ஆதலால் 5,4,15 அஞ்சினை ஆதலின் 6,4,6 அஞ்சொல் கிளி 3,14,20 அடங்கவும் வல்லீர் 4,17,6 அடரும் செல்வன் 2,10,18 அடாநெறி 1,20,1 அடித்தலம் 2,14,72 அடியம் அந்நெடும் 6,9,22 அடியா முன்னம் 5,2,28 அடியினால் உல 4,4,5 அடியின் வீழ்தலும் 6,41,12 அடுப்பவரும் பழி 1,8,14 அடுவென என்ன 6,14,25 அடைந்தவன் 1,17,1 அடைந்தனென் அடி 5,5,11 அடைந்து அவண் 2,3,5 அடைவரும் 2,12,11 அட்டிலும் 2,4,101 அணங்கார் பாகனை 4,8,4 அணங்குவாள் 2,2,24 அணி பறித்து 6,14,14 அணை நெடும் 6,10,4 அணையின் மேற்சிலை 6,31, 4 அண்ட கோளகைக்கு 1,9,9 அண்டத்து அளவும் 6,17,44 அண்ட மாக்களமும் 6,31,31 அண்டர் கோன் 5,11,1 அண்ணல் அஃது 6,41,23 அண்ணலும் அது 2,8,25 அண்ணல் அன்ன 2,4,111 அண்ணலும் விரும்பி 2,8,12 அண்ணலும் சிறிது 6,22,38 அண்ணல் அஞ்சன 6,15,28 அண்ணல் அவ்அரி 5,9,12 அண்ணல் கேள் 6,11,12 அண்ணல் பெரியோன் 5,5,38 அண்ணல் முனிவற்கு 1,7,22 அதிகம் நின்று 3,6,6 அதிசயம் ஒருவரால் 3,13,29 அதிரும் வெம் செரு 6,20,16 அது கணத்து அனுமன் 6,11,28 அது கொடு என்சில 6,9,20 அது பெரிதறிந்த 4,11,47 அது பொழுது 6,30,40 அத்தலைத் தானையன் 3,7,30 அத்தா இது கேள் 4,7,21 அத்திரம் புரை 5,2,60 அத்திருத்தகு 4,5,17 அத்திறத்தினில் 6,19,21 அத்தொழில் அவரும் 6,301 அந்தகனும் உட்கிட 3,9,2 அந்தணர் அருந்தவர் 2,4,94 அந்தணர் ஆசி 1,23,18 அந்தணர் உறையுளை 2,11,55 அந்தணன் வணிகர் 6,42,8 அந்தணர் வேள்வியின் 5,13,37 அந்தணர் உலகம் 5,12,68 அந்த நற்பெரும் 2,14,56 அந்தமில் காலம் 4,11,24 அந்தம் இல் குணத்தினானை 6,4,98 அந்தம் இல் நோக்கு 1,10,18 அந்தரம் உணரின் 6,17,4 அந்தியில் வெயில் 2,5,3 அந்தி வந்து 3,14,1 அந்தி வானகம் 6,15,24 அந்நகர் அணி 2,2,20 அந்நகர் இன்று 2,2,20 அந்தரர் 6,14,22 அந்நிலை கண்ட 4,11,45 அந்நிலை யான் 5,2,73 அந்நெடும் 2,14,45 அந்நெடும் தானை 5,9,4 அப்படை 2,13,3 அப்பொழுது 6,4,39 அமிர்துகு குதலை 1,5,28 அமிழ் இமை 1,22,3 அமிழ் துற 4,14,9 அம்கண் 1,14,7 அம்சிறை அறுபதம் 3,7,36 அம்தார் இளவற்கு 6,18,6 அம்பரத்து அமைந்த 6,27,24 அம்பிலே 3. அம்புயத்து 1,17,4 அம்புயம் அனைய 6,37,2 அம்மான் நகருக்கு 1,4,1 அம்முனி 2,9,10 அயர்த்திலென் 6,14,6 அயல் இனிது 4,11,70 அயன் உடை 4,6,6 அயன் புதல்வன் 1,12,6 அயாவுயிர்த்து 2,14,30 அயிர்த்தனன் ஆகும் 3,12,43 அய்ய நீ அயோத்தி 6,16,55 அய்ய நீ யாரை 6,19,60 அய்ய வெம்பாச 6,19,72 அய்யன் இது 6,36,5 அய்யன்மீர் நமக்கு 6,24,16 அய்யன் வந்தனன் 6,41,46 அய்யன் வில் 6,16,111 அரக்கரும் அரக்கியர் 5,13,8 அரக்கரை ஆசு அற 6,4,43 அரக்கர் என் அமரர் 6,26,27 அரக்கர் என்பது ஓர் 6,20,17 அரக்கர் என்ற பேர் 6,20,17 அரக்கர் ஓர் அழிவு,4,7,41 அரக்கர் சேனை 6,32,1 அரக்கர் கோன் 6,14,2 அரக்கர் தம் 6,24,27 அரக்கர் பாவமும் 2,2,50 அரக்கனும் மைந்தன் 6,19,68 அரக்கனே ஆக 5,5,15, அரக்கன் ஏகினன் 6,32,12 அரக்கியர் அளவற்றார் 5,15,38 அரங்கிடை 1,3,10 அரங்கில் ஆடுவாற்கு 6,2,62 அரசர் இல் பிறந்து 2,2,37 அரசர் தம் 1,6,1 அரசியல் பாரம் 4,7,90 அரசு வீற்றிருந்து 5,6,28 அரண்தரு திரள் 3,12,50 அரத்தம் உண்டு 1,21,3 அரமடந்தையர் 1,9,5 அரமியத்தல 5,13,6 அரம்சுட 2,14,15 அரம்பையர் 6,25,2 அரவ மாக்கடல் 6,9,13 அரவாகி 3,1,18 அரன் அதிகன் 4,13,2 அரிந்தமன் சிலை 4,4,7 அரிது போகவோ 5,3,6 அரிபடு சீற்ற 5,7,20 அரியணை அனுமன் 6,42,12 அரியதாம் 2 8 14 அரியது அன்றுநின் 5,6,8 அரியவன் 2,14,32 அரியினம் சென்ற 6,41,16 அரியினம் பூண்ட 6,19,18 அருணன் தன் 3,4,15 அருத்தியின் 2,9,7 அருந்ததி 2,9,4 அருந்ததி அணைய 6,10,1 அருந்ததி அனைய 6,40,25 அருந்ததி உரைத்தி 5,6,4 அருந்ததிக்கு அருகு 4,15,5 அருந்தவம் 2,13,13 அருந்தவம் புரிதுமோ 4,16,3 அருந்தவன் 6,41,18 அருந்துதற்கு 6,4,20 அருந்தும் மெல் 5,3,9 அரும் கடல் 6,26,20 அரும்குல 6,40,20, அரும் சிறப்பு 2,1,15 அரும் தவமுனிவரும் 1,5,4 அரும்துயர்க் கடலுள்6,21,4 அருவரிய 1,1210 அருவரை முழை 5,8,1 அருள் உனது 6,41,20 அரை கடையிட்ட 3,12,22 அரைசன் 1,24,7 அலக்கணும் 3,1330 அலக்கண் எய்தி 6,34,1 அலங்கலில் 5,1,1 அலங்கல் வேற்கை 3,9,14 அலங்காரம் 3,4,12 அலங்கு தோள்வலி 4,7,27 அலர்ந்த 2,11,11 அலை உருவக் 1,12,12 அலைகடல் நடுவண் 1,5,6 அலைநெடும் 2,12,23 அலைபுனல் குடை 5,15,9 அலைமேவும் கடல் 6,37,43 அல் அணை 2,12,30 அல் இறுத்தன் 3,4,26 அல்லதும் உண்டு 6,18,2 அல்ல தூடம் 5,13,12 அல்லலும் 2,9,13 அல்லல் உற்றேனை 3,13,12 அல்லல் மாக்கள் 5,6,13 அல்லித் தாமரை 3,4,24, அல்லினால் செய்த 6,16,89 அல்லினை 1,10,23 அல்லைஆண்டு 2,13,35 அல்லைச்சுருட்டி 6,19,49 அல்லையாம் எனில் 6,15,37 அவயம் நீ பெற்ற 6,16,49 அவனி காவல் 2,4,,3 அவன் அவை உரைத்த 4,16,11 அவன் அன்னது 1,24 ,9 அவித்த ஐம் 2,12,19 அவை அனைத்தும் 6,37,35 அவ்வகை அறு 6,43,13 அவ்வயின் அரசவை 2,4,84 அவ்வயின் அவ் 3,6,16 அவ்வழி அரக்கர் 5,9,8 அவ்வழி அவனை 2,13,31 அவ்வழி அவ்விருள் 5,2,15 அவ்வழி அனையன 3,12,32 அவ்வழி இராமனும் 6,40,21 அவ்வழி இராவணன்6,15,14 அவ்வழி இராவணன் அனைத்து 6,16,42 அவ்வழி இளவல் 3,11,47 அவ்வழி உணர்வு 6,5,8 அவ்வாறு உற்ற 6,37,21 அவ்விடத்து அருகு 5,4,9 அவ்விடை எய்திய 3,14,10 அவ்வுரை 3,6,19 அவ்வுரை அமைய 4,7,74 அவ்வுரை அமைய கேட்ட 6,27,35 அவ்வுரை அருள 6,19,43 அவ்வுரை இராமன் 1,9,15 அவ்வுரை கேட்ட நங்கை 6,17,33 அவ்வுரை கேட்டு ,6,68 அவ்வுரை கேட்டலும் 2,11,29 அவ்வுரைக்கு 6,37,45 அவ்வுரை மகரக்கண்ணன் 6,2,5 அவ்வேலையிராமனும் 4,7,18 அழிகின்ற 9,19,8 அழிந்த 3,6,42 அழிந்தது பிறவி 6,4,89 அழிந்தவன் 1,24,18 அழிந்துளார் அவர் அழிப்பில சான்று 6,40,51 அழியும் கால் தரும் 6,24,29 அழிவது செய்தாய் 6,12,13 அழிவரும் அரசியல் 2,11,58 அழிவரும் தவ 1,23,9 அழுகின்ற கண்ணர் 6,14,12 அழுகுவர் நகுவர் 6,25,5 அழுகையும் 6,41,72 அழுகையோடு உவகை 6,24,7 அழுதனர் சிலவர் 5,15,2 அழுது தாயரோடு 2, 4,104 அழுந்திய சிந்தையள் 3,14,12 அழுந்திய பாலின் 6,26,30 அழுந்தின நங்கையை 6,40,47 அழும் நகும் 6,41,52 அழைப் பொலி 6,38,25 அளப்பரும் உலகம் 3,34,9 அளவறும் அறிஞரோடு 6,8,1 அளவில்கார் 4,10,9 அளி அன்னதொர் 2,7,2 அளிக்கும் 2,10,3 அளித்தகவு இல்லா 6,3,7 அள்ளல் 2,4,36 அள்ளல் வெம்சர 5,2,61 அறக்கண் அல்லது 6,11,11 அறத்தினால் அன்றி 6,15,35 அறத்தினைப் பாவம் 6,27,40 அறத்துறை அன்று6,4,10 அறத்தைத் தின்று 6,31,1 அறந்தலை நின்றார்க்கு 6,28,28 அறந்தனை நினை 2,14,28 அறந்தனை வேர் 2,11,23 அறந்தானே 2,13,40 அறம் துணை 6,27,36 அறம் தொலைவுற 6,38,8 அறப்பெரும் துணைவர் 6,16,51 அறம் உனக்கு 6,16,31 அற என நின்ற 6,16,52 அறம் எனக்கு 2,4,13 அறம் கடந்தவர் 6,15,33 அறம் கெட 2,11,52 அறம் கெடவழக்கு 6,17,34 அறம் கொளாதவர் 3,8,5 அறம் தருசெல்வம் 6,17,3 அறம்தரு தவத்தை 6,14,5 அறம் தலை நிறுத்தி 5,13,44 அறம் தலை நின்ற 6,4,11 அறம் தலை நின்றி 3,13,44 அறம் தவா நெறி3,3,15 அறம் தனால் 3,12,13 அறம் தாய்தந்தை 6,22,42 அறம் துறந்து 6,2,40 அறம் நிரம்பிய2,2,25 அறவனும் அதனை 5,8,9 அறன் அல்லது 6,18,14 அறிஞரும் 2,12,24 அறிஞரே ஆயினும் 6,4,45 அறிந்தார் அன்ன 5,4,33 அறிவுறத் தெரிய 5,15,43 அறுபதாகிய 6,22,18 அறுபதினாயிரர் 2,4,95 அறுபதின் ஆயிரம் 1,5,3 அறுபது வெள்ள 6,22,6 அறை கடையிட்டு 6,38,13 அறை கழல் 2,10,5 அறை கழல் அலங்கல் 4,7,44 அறையும் ஆடு 1,கா.வ. 7 அற்புதன் அரக்கர் 5,5,8 அற்றதாகிய 4,5,3 அற்றனசிரம் 3,7,32 அற்று அவர் 6,20,4 அனகமா நெறி 3,21,31 அனகனும் இளைய 3,16,5 அனிகம் வந்து 1,20,6 அனுமனை வாலி 6,42,17 அனுமன் ஆற்றலும் 6,31,6 அனுமன் என்பவனை 4,7,85 அனைத்துலகினும் 3,21,37 அனைய காலையில் 5,14,8 அனைய தன்மையள் 2,2,51 அனைய தாகிய 4,21,5 அனையது ஆதலின் 2,1,36 அனையது ஓர் 6,41,70 அனையது பிறவும் 6,26,12 அனைய தேரினை 6,35,6 அனையதோர் 1,23,14 அனைய பொன்னி 4,5,16 அனைய வேலை 2, 4, 112 அனையவள் கருத்தை 3,4,23 அனையவன் மண்டபம் 11,23,5 அனையவன் யார் 5,13,40 அனையவள் சிறுவர் 6,2,52 அனையவன் யார் 1,23,5 அனைய வேலை அனையள் 6,40,7 அனையள் ஆகி 3,11,23 அனைவரும் அனையர் 6,41,64 அன்பினன் இவ்வுரை 5,5,27 அன்பினால் அவர் 6,41,5 அன்பு இழைத்த 2,4,12 அன்றிடர் விளைத்தவர் 3,9,3 அன்றியும் 6,5,12 அன்றியும் உனக்கு 5,10,2 அன்றியும் ஒன்றுளது 4,11,65 அன்றியும் பிறிது 5,6,10 அன்றியும் வாலிசேய் 5,15,24 அன்று கேகயன் 6,40,57 அன்று தீர்ந்தபின் 2,14,50 அன்று முதல் 1,13,8 அன்று மூலம் 3,1,20 அன்று வானரம் 6,4,5 அன்றெனில் 2,12,14 அன்ன காலையில் 4,11,20 அன்ன காலையில்,அனுமனும் 5,4,24 அன்ன காலையில் ஆரம்பம் 6,16,26 அன்ன காலையில் ஆண்தகை 4,11,20 அன்ன சாவம்5,6,17 அன்ன தம்பியும் 1,6,18 அன்னதன் நடுவண் 5,2,40 அன்ன தன்மை 4,7,59 அன்ன தன்மையர் 4,7,24 அன்ன தன்மையள் 2,4,108 அன்னதாகிய 4,1,8 அன்ன தாம் இருக்கை 3,16,2 அன்ன தாம் ஒரு சொட்ல 5,3,13 அன்னதாயினும் 4,4,11 அன்ன தாயர் 2,4,121 அன்னது ஓர் 5,15,42 அன்னது ஓர் பொழுதின் 6,41,57 அன்னது கண்ணில் 6,37,1 அன்னது கேட்ட6,18,35 அன்னது கேட்டவள் 4,7,9 அன்னது நிகழும் 6,28,22 அன்னதே முடிந்தது 5,2,31 அன்ன தொண்டை 4,5,13 அன்னதோ என்னா 6,37,47 அன்ன தோன்றலும் 4,11,8 அன்னமா மதிலுக்கு 1,3,6 அன்னமா மலையின் 6,24,10 அன்னமும் 1,23,24 அன்னமும் 6,41,67 அன்ன ம் அரி 1,22,19 அன்னவர் 2,4,86 அன்னவர்க்கு 5,15,45 அன்னவர் தம்மொடும் 6,20,8 அன்னவளை 1,22,10 அன்னவள் கூறுவாள் 2,5, 20 அன்னவள் உரைத்தலோடும் 3,6,23 அன்னவள் தன்னை 3,10,48 அன்னவற்கு அடிமை 5,13,47 அன்னவன் 2,4,89 அன்னவன் அமைச்சரை 3,10,9 அன்னவன் உரைகேளா 2,8,29 அன்னவன் சிறுவ 4,12,19 அன்னவன் தனக்கு 6,14,4 அன்னவன் தனிமகள் 6,4,62 அன்னவன் தான் 1,5,11 அன்னவன் நடுவுற 3,7,31 அன்னவன் விட 4,5,2 அன்னவாம் உரை 4,3,7 அன்ன வேலை 5,2,55 அன்னளாயும் 2,2,5 அன்னாள் அதுகூற 3,10,62 அன்னேயோ 6,38,9 அன்னை அஞ்சன் 6,40,13 அன்னை நீ அத்தன் 6,7,5 அன்னை நீ உரைத்தது 6,23,15 அன்னையர் 2,4,80 ஆ ஆகாசெய்தாய் 5,2,24 ஆகாதது 2,4,77 ஆகினும் ஐயம் 6,31,15 ஆகின் ஐய 2,4,16 ஆகுநர் யாரையும் 4,10,14 ஆகுவது ஆகும் 6,16,76 ஆகொடியாய் 2,3,16 ஆக்கரிய 3,6,72 ஆக்கி மற்றவன் 6,41,47 ஆக்கினேன் மனத்து 3,9,13 ஆக்கையின் நின்று 6,28,29 ஆங்கவன் அமர் 6,15,10 ஆங்கவள் மார்பொடு 3,14,19 ஆங்கு அவ்வாசகம் 2,4,8 ஆங்கு நின்ற 6,37,9 ஆசில் பரதாரம் 6,2,26 ஆசு அலம்புரி 1,1,1 ஆசை எங்கணும் 6,19,20 ஆசை நீளத்து 3,11,36 ஆசையும் விசும்பும் 1,5,21 ஆசையுற்று 1,13,32 ஆடகத் தருவின் 5,7,22 ஆடகமால் வரை 1,13,15 ஆடலும் களிப்பின் 6,25,8 ஆடல் மாக்களிறு 5,8,15 ஆடல்மான் 2,2,19 ஆடவர் 1,16,2 ஆடவர் திலக 6,28,38 ஆடினார் வானவர்கள் 6,16,118 ஆடுகின்றனர் 2,2,2 ஆடு கொடிப்படை 2,13,15 ஆணி இவ்வுலகு 6,27,4 ஆணையின் ஆண்டவள் அன்பின்3,16,3 ஆண்டாயிடை 3,12,56 ஆண்டான் இன்னன 3,15,13 ஆண்டு அவன் 3,4,16, ஆண்டு அவ்வள்ளலை 4,1,11 ஆண்டு எழுந்து 5,13,67 ஆண்டு நின்றும் 5,6,19 ஆண்டுற்ற அணங்கினை 3,13,1 ஆண்டை அந்நிலை 2,2,1 ஆண்டையான் 3,12,25 ஆண்டையான் அரசு 3,12,38 ஆண்டையின் அருக்கன் 5,15,51 ஆண் தகை அம்மொழி 2,4,18 ஆண்தகை அனுமனும் 5,5,34 ஆண்தகை ஆண்டு 5,1,2 ஆண்தகை தேவி 5,15,6 ஆண்தகையர் 3,3,9 ஆண் தொழில் துணிவு 6,37,32 ஆதரித்து 1,10,2 ஆதலால் 3,13,42 ஆதலால் அன்னதே 4,6,15 ஆதலால் அவ் அரசிலம் 4,11,11 ஆதலால் அஞ்சி 6,28,6 ஆதலால் அபயம் 6,4,76 ஆதலால் அமர் 5,13,33 ஆதலால் அரக்கர் 6,40,24 ஆதலால் அரக்கனை 5,13,14 ஆதலால் இவன் 6,4,66 ஆதலால் இராமனுக்கு 2,1,21 ஆதலால் இறத்தலே 5,5,9 ஆதலால் தன் 5,13,62 ஆதலால் முனியும் 2,12,29 ஆதலானும் அவன் 4,7,63 ஆதலான் ஒன்று 6,40,11 ஆதலின் 3,2,13 ஆதலின் புறத்து 6,40,42 ஆதி அம்பரமனுக்கு 6,4,16 ஆதி அந்தம் 1, கா.வ 3 ஆதி அரசன்2,4,45 ஆதி நான்முகன் 3,1,7 ஆதிப்பிரமனும் 3,15,21 ஆதித்தன் 1,12,2 ஆத்துறுசாலை 5,2,34 ஆம்ஆம் அது 3,10,63 ஆம் என அமலன் 6,18,33 ஆம் எனில் 2,14,69 ஆம்பல் வாயும் 6,406 ஆய காலையில் 2,11,17 ஆயகாலையின் 2,8,1 ஆய குன்றினை 4,15,8 ஆய சூழல் 3,4,30 ஆயதன் வடகீழ் 6,24,12 ஆயது அவ்வழி 2,1,30 ஆயது அறிந்தனர் 1,8,9 ஆயது உண்மையின் 5,6,18 ஆயது செய்கை 3,15,24 ஆயது தேரின் 5,3,25 ஆயது பயப்பது 6,4,16 ஆயபின் கவியின் 6,32,17 ஆயன பிறவும் 6 41,21 ஆயபேர் 2,2,29 ஆயபொழுது 5,2,57 ஆயதோர் அவதி 4,3,13 ஆயதோர் அஎவில் 6,42,6 ஆயதோர் அளவை 6,5,7 ஆயமாமரம் 4,4,6 ஆயவள் 2,14,48 ஆயவன் உரைத்த 6,16,12 ஆயவன் ஒரு பகல் 1,5,1 ஆயவன் தருமமும் 6,4,36 ஆயவன் தனக்கு 6,3,7 ஆயவன் தன்னை 6,3,50 ஆயவன் வணங்கி 5,9,2 ஆயவன் வளர்த்த 6,4,3 ஆயன நிகழும் 2,3,48 ஆயன பலவும் பன்னி 4,7,95 ஆயிடை அணங்கின் 5,15,41 ஆயிடை அமுதின் 3,6,37 ஆயிடை அரக்கன் 5,4,6 ஆயிடை உரை 5,3,34 ஆயிடைக் கவி 5,15,50 ஆயிடைத் தாரை 4,7,5 ஆயிடைத் திரிசடை 5,3,18 ஆயிடைப் பருவம் வந்து 1,5,19 ஆயிரம் கோடி தூதர் 4,11,31 ஆயிரம் 3,2,12 ஆயிரம் ஆயிரம் 3,7,12 ஆயிரம் ஐந்தொடு 5,9,3 ஆயிரம் திருவிளக்கு 5,3,29 ஆயிரம் தோளினாலும் 6,37,46 ஆயிரம் பெயரவன் 6,16,93 ஆயிரம் பெரு 6,37,13 ஆயிரம் வெள்ள 6,9,26 ஆயிரத் வெள்ள 6,31,28 ஆயின காலத்து 6,19,27 ஆயினும் இவருக்கில்லை 6,24,3 ஆயினும் உனக்கு 6,40,66 ஆயினும் ஐய 5,12,6 ஆயுயர் உம்பர் 4,16,24 ஆய் தந்து 2,4,64 ஆய்ந்து நீளம் அரிது 6,8,12 ஆய்வரும் 3,10,5 ஆய்வரும் பெருவலி 3,3,2 ஆய்வினை யுடையர் 6,7,13 ஆய்வுறு பெருங்கடல் 3,14,26 ஆயிரம் தாழ்திரு ஆரடா சிரித்தாய் 6,3,42 ஆரம் தாழ்திரு 5,6,22 ஆரியம் முதலிய 4,1,7 ஆரியன் 2,5,25 ஆரியன் அரும் 5,15,11 ஆரியன் அருளில் 4,9,20 ஆரியன் அவகை 6,19,63 ஆரியன் தொழுது 6,33,3 ஆரும் பின்னர்2,4,118 ஆரைச் சொல்லுவது 6,3,14 ஆர் அழியாத 6,28,18 ஆர் இது தீர்க்க 6,19,33 ஆர்கலி இலங்கையின் 6,5,10 ஆர்கலி கடைந்த 6,24,24 ஆர்கொலோ உரை 4,11,26 ஆர்க்கின்ற பின் 4,7,17 ஆர்த்தனர் 2,2,17 ஆர்த்தார் அண்டத்து 5,13,75 ஆர்த்தார் எதிர் 6,27,11 ஆர்த்தியும் 1,19,15 ஆர்த்துஎழுந்து,5,11,14 ஆர்த்து எதிர் 6,20,11 ஆர்த்தெழும் ஓசை 6,20,1 ஆலயம் புதுக்குக 1,5,26 ஆலம் உலகில் 1,10,31 ஆலம் பார்த்து 5,2,72 ஆவது ஆகிய 5,2,43 ஆவது ஒன்று 5,2,62 ஆவி அங்கு 6,41,63 ஆவி அம்துகில் 5,3,7 ஆவி உண்டு 5,6,39 ஆவியின் இனிய 6,29,18 ஆவுக்காயினும் 3,3,16 ஆவும் அழுத 2,4,42 ஆழநீர்க் கங்கை 5,3,12 ஆழநெடுந்திரை 2,13,10 ஆழிகாட்டி என் 5,13,17 ஆழிசூழ் 2,3,52 ஆழித்தேரவன் 5,14,9 ஆழித் தேர்த் தோகை 5,10,3 ஆழி நீ அனலும் நீயே 6,7,4 ஆழி நெடுங்கை 5,8,35 ஆழிப்பொன் தேர் 2,3,31 ஆழியாய் இவன் 6,1643 ஆழியான் அவனை 6,4,90 ஆழியான் அனைய 4,9,19 ஆழியான் ஆக்கை 6,23,11 ஆழியை 2,12,16 ஆழிவேந்தன் 2,6,13 ஆழ்ந்த பேர் 2,2,27 ஆளான் 2,4,44 ஆளிபோன்றுளான் 6,32,2 ஆளும் நாயகன் 3,15,18 ஆள்ஐயா உனக்கு 6,15,38 ஆறிய அறி வன் 1,8,2 ஆறினன் 2,5,21 ஆறினாம் அஞ்சல் 6,7,8 ஆறு இரண்டு 5,11,4 ஆறு கண்டனர் 2,9,17 ஆறு செல்லச் 2,6,20 ஆறுடன் செல்பவர் 4,6,11 ஆறுதன் 2,11,57 ஆறுபத்தெழு 4,12,3 ஆறுபாய் அரவம் 1,2,3 ஆறுமனம் அஞ்சினம் 3,10,32 ஆறும் 2,11,6 ஆறெலாம் 1,19,2 ஆற்றலன் 2,11,27 ஆற்றலன் ஆகி 5,12,12 ஆற்றல் 1,18,10 ஆற்றல்சால் 6,15,18 ஆற்றாது பின்னும் 4,7,20 ஆன காலையில் அயில் 6,22,20 ஆன காலையில் இராமனும் 6,22,13 ஆனதூய 1,18,4 ஆனதோர் 6,41,60 ஆனதோ வெம்சமம் 6,16,28 ஆனபேர் அணை 6,8,26 ஆனபேர் அரசிழந்து 4,13,15 ஆனவன் 2,11,20 ஆனவன் போனபின் 1,24,22 ஆனவன் இங்கு உறை 1,8,7 ஆனவன் உரைக்க 3,11,18 ஆனையின் குருதியும் 6,18,25 ஆனையும் பரியும் 6,20,3 ஆன்ற பேர் 2,12,15 ஆன்றமை கேள்வியர் 6,2,7 ஆன்றவர்க்கு உரிய 4,9,18 ஆன்றவன் 2,3,8 ஆன்றவன் அது 6,22,23 ஆன்றான். 2,4,67 இ இகழும் தன்மையன்,6,15,3 இகழ்வரும் பெரும் 5,2,20 இக்கணம் 3,13,37 இங்கு இவன் படை 6,11,10 இங்கு உள தன்மை 5,15,46 இங்கு ஒரு திங்களே 5,13,32 இங்கு நின்று 6,24,15 இசையுடை அண்ணல் 5,1,8 இசையும் செல்வமும் 6,2,57 இச்சிலை இயற்கை 6,27,3 இச்சை நல்லன 6,2,58 இச்சைத் தன்மை 5,13,60 இடம்படு 1,23,20 இடிகொள் 2,10,11 இடுக்கு இவண் 6,2,16 இடைந் தவர்க்கு 6,4,72 இடைந்து போய் 3,12,5 இட்டுண்டாய் 6,17,18 இணையறு வேள்வி 6,17,22 இதவியல் 2,14,63 இது இயற்கை 2,14,63 இது தமிழ் முனிவன் 6,41,10 இத்தலை இன்ன 6,17,15 இத்தலை வந்தது 6,16,83 இத்திருப் பெறுகி 6,17,29 இத்திறத்த 2,4,22 இத்திறத்தின் 2,4,14 இத்திறம் எய்திய6,4,21 இத்திறம் நிகழும் 5,1,6 இத்துணைச் சிறியது 5,5,29 இந்த நெடுஞ் சொல் 2,3,15 இந்திரசித்தோ 5,11,9 இந்திர நீலம் ஒத்து 1,10,26 இந்திரற்கு இந்திரன் 3,12,33 இந்திரற்கும் தோலாத 6,18,57 இந்திரனும் 3,6,59 இந்திரன் எனின் 3,3,12 இந்திரன் கவித்த 6,17,26 இந்திரன் சசியை 3,10,43 இந்திரன் செம்மல் 6,14,19 இந்திரன் தனை 6,2,68 இந்திரன் நகரமும் 4,14,6 இந்திரன் பகை 6,22,8 இந்திரன் விடையின் 6,19,70 இந்து அன்ன 6,1,5 இந்நாகம் அன்னான் 5,1,14 இந்நிலை உடையவன் 5,6,41 இந்நிலை விரைவின் இப்புறத்து இராமனும் 5,15,26 இப்புறத்து இன 6,40,1 இப் பொழிவினை 5,7,4 இப்பொழுது 2,3,53 இமைப்பதன் முன்னம் 6,22,4 இமையவர் 3,6,21 இமை யிடையாக 6,26,36 இம்பர் நாட்டில் 5. தனி இம்மலை நாட்டில் இம்மலை யிருந்து 4,2,11 இம்மைக்கு உறவோரும் 3,13,4 இயக்கர் வேந்தனுக்கு 6,41,1 இயக்கியர் அரக்கி 5,2,38 இயக்கியர் அரக்கியர் 6,38,7 இயம்பலும் இலங்கை 6,28,7 இயன்றது 2,13,33 இயைந்த நாள் 4,11,44 இயைந்தன இயைந்தன 6,4,26 இரக்கம் 3,3,9 இரக்கம் வந்து 6,6,16 இரணியன் என்பவன் 6,4,2 இரதம் 2,11,48 இரதம் 2,6,6 இரந்தனன் பின்னும் 4,7,78 இரந்தனென் எய்திய 3,14,13 இரந்தான் 2,3,26 இரவிதன் குலத்து 1,1,9 இரவிதன் புதல்வன் 4,2,16 இராமன் தம்பி நீ 6,16,87 இராவணன் தன்னை 6,43,23 இரியல் போகின்ற 6,32,3 இருகணும் திறந்து 6,18,52 இருக்கும் மதில் 5,6,5 இருதிரைப் பெருங்கடல் 6,19,10 இருத்தி நீ இறை 4,7,15 இருத்தி யீண்டு 2,8,13 இருநிலம் 2,14,34 இருந்த அந்தணறோடு 2,6,10 இருந்த எண்திசை 5,13,24 இருந்த குலக்குமார் 1,12,1 இருந்த மாக்கரன் 3,7,1 இருந்தவன் 3,12,28 இருந்தவன் இலங்கை 6,16,7 இருந்தனள் இருந்தவளை 4,14,14 இருந்தனன் உலகங்கள் 3,10,13 இருந்தனள் தேவி 6,26,38 இருந்தனென் எந்தை 3,16,4 இருந்து நான்பகை 6,17,20 இருந்து பசியால் 5,5,23 இருந்தவன் யாவது இருபது கரம் 6,4,25 இருப்புக் கம்மியற்கு 6,37,14 இருமை நோக்கி 4,7,47 இருமையும் 2 14,15 இருமையும் நோக்குறும் 4,7,11 இரும் கவி கொள் 6,9,2 இரு வரத்தினத்தில் 2,2,53 இருவரும் 2,4,79 இருவர் போர் 4,7,45 இருவர் மானிடர் 3,7,3 இருவிர் என்னொடு இருவினையும் இடை 4,13,4 இருள் இடைஎய்து 6,4,17 இருள்உறு சிந்தை 6,16,57 இரைத்த நெடும் 3,10,1 இரைத்தனர் 2,1,99 இலக்கணங்களும் 5,2,65 இலக்குவ 2,14,19 இலக்குவற்கு முன் 6,32,7 இலக்குவன் ஆக 6,27,27 இலக்குவன் எனும்6,22,17 இலக்குவன் தன்னை 6,34,11 இலங்கு வெம்சினத்து 5,10,1 இலங்கை அரசன் 1,7,17 இலங்கை ஊர் 6,17,25 இலங்கையின் அரண் 6,5,15 இலங்கையின் அளவிற்று 5,1,7 இலங்கையின் நிருதர் 6,28,14 இலங்கையின் நின்று 6,26,3 இலங்கையை இடந்து 4,17,8 இலங்கையை முழுதும் 5,15,37 இலங்கையொடும் 5,6,3 இலங்கை வேந்தனுக்கும் 6,43,18 இலைமுக 1,14,4 இல் இயல்புடைய 3,15,12 இல்லறம் துறந்த 4,7,34 இல்லாத உலக 4,2,13 இல்லில்தங்கு 5,14,2 இல்லை இனி 6,36,6 இல்லை என்று 2,6,7 இல்லையே நுசுப்பு 1,13,31 இவனை இன்துணை 5,2,51 இவன் இவன் 5,8,8 இவ்வகை ஐவரும் 5,10,8 இவ்வண்ணம் 1,9,21 இவ்வழி எண்ணி 4,2,9 இவ்வழியாம் 4,6,1 இழந்த மணி 5,5,21 இழிந்த தாயர் 2,13,144 இழைகளும் 1,10,13 இழை குலாம் 1,22,6 இழை தொடர் 5,2,36 இழைத்த தீ 2,1,17 இழைத்த தீவினை 6,16,108 இழையும் 2,11,66 இழையும் ஆடையும் 5,2,7 இளக்கம் ஒன்று 6,16,85 இளவலும் இறைவனும் 6,8,3 இளவலைத் தழுவி 6,32,15 இளவலை நோக்கினன் 3,15,3 இளைய பைம் 1,20,7 இளையவள் தன்னை 5,13,72 இளையவன் இறந்தபின் 6,24,21 இளையவன் ஏகலும் 3,12,15 இளையவன் தனை 6,40,43 இளையவன் தன்மை 6,19,71 இளையான் 2,4,58 இளையான் எழுந்து 6,19,59 இறத்தலும் பிறத்தல் 4,9,9 இறந்ததோர் உயிர் 6,37,24 இறந்தனர் இறந்து 6,26,5 இறந்தனை என்ற 6,12,12 இறந்தவர் பிறந்த 5,5,20 இறந்தனன் இளவல் 6,19,64 இறந்தான் 2,11,41 இறந்திலன் 2,1,19 இறந்திலன் கொல் 6,22,27 இறந்து நீங்கினரோ 5,8,20 இறப்பெனும் 2,1,14 இறு குறப்பிணித்த 6,19,30 இறுதியை 3,4,4 இறைஞ்ச 1,21,3 இறை தவிர்ந்திடுக 1,5,24 இறை திறம்பினனால் 4,7,36 இறைவ 3,4,28 இறைவன் சொல் 2,1,38 இற்றனர் அரக்கர் 5,10,9 இற்றிது காலமாக 6,9,6 இற்றை நாள் 6,4,99 இற்றை நாள்முதல் 6,3,18 இற்றை நாள்வரை 6,16,41 இற்றோடிய 1,24,8 இனத்துளார் உலக 6,17,12 இனி இறை தாழ்த்தி 6,16,16, இனி வன் புதல்வற்கு 2,4,29 இனிய சொல்லினன் 2,2,12 இனியதோர் 3,3,7 இனிய நாட்டினில் 1,9,11 இனைய ஆதலின் 3,7,23 இனைய தன்மை 5,2,63 இனையது ஆகலின் 6,40,54 இனையது ஆதலின் இனையது ஓர் 5,4,5 இனையநாட்டினில் 1,9,11 இனைய மாற்றம் 4,11,10 இனைய யாவையும் 2,10,12 இனையராம் என்னை 4,11,28 இனையவாறு உரை 4,13,17 இனையன நிகழ்ந்த 1,8,4 இன் உயிர்க்கும் 1,12,4 இன் தளிர்க்க 1,6,7 இன்றல்லது நெடுநாள் 6,18,29 இன்றிவன் தன்மை 6,14,13 இன்று இறந்தன 5,4,11 இன்று ஊதியம் உண்டு 6,21,1 இன்று ஒருபொழுது 6,19,73 இன்று சென்று 6,40,70 இன்று நின் பெரும் 1,9,4 இன்று நீ இவளை 6,29,27 இன்று யார் 6,34,6 இன்று வந்தான் 6470 இன்று வந்தில 1426 இன்று வீகலாது 6,24,30 இன்ன ஆகி 6,37,6 இன்ன காலையில் 6,22,25 இன்னணம் 2,12,25 இன்ன தாயகரும் 6,1,7 இன்னது இத்தலைய 6,25,1 இன்னது ஓர் தன்மை 6,12,9 இன்னதோர் செவ்வி 6,4,97 இன்னதோர் தன்மை 6,37,6 இன்னபோது 3,10,7 இன்னம் ஒன்று 4,7,83 இன்னம் ஒன்று உரை 6,2,54 இன்னர் 2,14,7 இன்னர் ஆம் இரும் 5,2,54 இன்னம் நாழிகை 6,41,48 இன்னவாறு இலங்கை 6,10,10 இன்னவை தகையை 4,9,10 இன்னன நிகழும் 5,7,16 இன்னும் ஈண்டு 5,6,21 இன்னும் நாடுதும் 4,11,5 இன்னே இன்னே 2,3,22 இன்னே பலவும் 2,4,34 இன்னோர் அன்ன 5,4,32 ஈ ஈக்கள் வண்டோடு 1,1,8 ஈங்கு மானுட 6,12,59 ஈசற்கு ஆயினும் 5,4,10 ஈசனார் கண்ணின் 3,10,40 ஈசனே முதலா 6,17,2 ஈசனை இமையா 6,35,3 ஈசன் ஆண்டிருந்த 3,12,34 ஈசன் முதல் 3,11,12 ஈசன் மேனியை 4,12,7 ஈடுபட்டவர் 6,5,17 ஈட்டரும் உவகை 6,34,8 ஈட்டிய வலியும் 5,13,41 ஈட்டு 2,11,15 ஈண்டினிது உறைமின் 4,17,11 ஈண்டினி நிற்றல் 4,11,39 ஈண்டு இவ் அண்டத்துள் 6,31,5 ஈண்டு ஒரு 5,6,38 ஈண்டு தாழ்க்கின்றது 4,12,9 ஈண்டு நாளும் 5,4,12 ஈண்டு நான் இருந்து 5,6,27 ஈண்டு நீ இருந்ததை 5,5,12 ஈண்டு நின்று ஏகி 4,9,9 ஈண்டுரைத்த 2,4,7 ஈண்டுறைதி 3,3,23 ஈண்டேகடிது 5,1,21 ஈது ஆகும் முன் 6,3,61 ஈது இடையாக 6,25,10 ஈது இவண்நிகழ்ச்சி 6,13,3 ஈது முன் நிகழ்ந்த 1,5,7 ஈதெலாம் உணர்ந்தேன் 6,9,28 ஈந்து அளவு 1,23,27 ஈந்தே கடந்தான் 1,4,3 ஈரநீர் படிந்து 1,2,11 ஈரம் ஆவதும் 4,7,60 ஈரம் நீங்கிய 4,3,23 ஈர்கின்றது அன்றே6,12,17 ஈர்ந்த நுண் 4,1,3 ஈறில் நல்லறம் 1,7,25 ஈனமே கொல் 6,9,18 ஈனம் உறு 5,7,1 ஈன்றவர் இடர் 3,15,11 ஈன்றவனோ 3,15,19 உ உஞ்சனென் ஆடி 6,4,91 உடலிடைத்தோன் 6,16,62 உடலினை நோக்கும் 6,5,6 உடல் இடை 6,22,34 உடன் இருத்தி 6,16,25 உடைந்தார்களை 3,7,27 உடையான் முயன்று 6,37,10 உணர்வு இல் 6,9,14 உண்டிலென் 6,27,37 உண்டு 2,13,24 உண்டு இழந்த 3,1,11 உண்டுகொல் 2,14,29 உண்டெனு 4,7,80 உண்ணா அமுது 1,16,9 உண்ணாதே உயிர் 6,38 1 உதவாமல் ஒருவன் 4,11,38 உதிக்கும் 2,4,63 உதிரமாரி 6,37,4 உதைக்கும் வெம்கிரி 5,10,11 உந்தாமுன் உலைந்து 5,1,16 உந்தை 3,4,23 உந்தை என் 6,14,20 உந்தை தீமையும் 2,14,54 உந்தையை உன் 6,3,56 உந்தையை மறைந்து 6 16,82 உந்தையோ 2,12,7 உப்புடைக் கடல் 6,20,15 உமைக்கு 2,2,9 உமைக்கு ஒரு1,3,2 உமையாள் 1,10,11 உம் ஐயனே 6,18,34 உம்குலத் தலைவன் 5,13,52 உம்பரோடு இம்பர் 6,43,22 உம்பர்க்கும் 6,3,38 உம்பி உணர்வு 6,18,60 உம்பிக்கு உயிர் 6,18,4 உம்பியை முனிந்திலேன் 6,16,95 உம்மையான் 2,1,16 உம்மையின் நின்று 6,8,1 உயரும் சார்விலா 1,2,20 உயரும் விண்ணிடை 3,6,52 உயிர் அருள் 2,3,44 உயிர் இற 6,28,26 உயிர்ப்பிலன் 2,6,9 உயிர்ப்பு முன் 6,24,6 உய்யநிற்கு 6,4,74 உய்யா 2,11,43 உய்யாள் உயர் 6,23,7 உய்விடத்து 3,4,18 உய்வுறுத்துவென் 4,14,5 உரங்கொள் 5,3,13 உரத்தினர் உரும் 3,7,13 உரத்தினால் 4,7,23 உரம் நெரிந்து 3,6,60 உரம்பொரு 5,3,28 உரிமை 2,1,33 உரிமை மூவுலகும் 6,39,5 உருகு காதலின் 2,10,2 உருப்பொடியா 3,6,56 உருள் உடை 3,3,13 உருமை என்றி 4,3,21 உரை செய 1,13,33 உரை செயின் 1,10,28 உரை செய் 1,13,33 உரைசெய்மன்னர் 2,11,64 உரை செய்யும் 1,6,8 உரை செய்வானர 4,11,22 உரை செய்து 2,5,22 உரைத்த 3,3,18 உரைத்த 3,7,24 உரைத்த பின் 2,4,84 உரைத்தலும் 3,4,11 உரைத்தவாசகம் 2,14,6 உரைத்தான் 5,1,19 உலகத்துள மலை 6,18,28 உலகம் மூன்றும் 6,40,10 உலகம் யாவையும் 1,கா.1 உலகம் ஏழினோடு 4,3,24 உலகு ஒரு 3,4,7 உலகு தந்தானும் 6,3,34 உலகெலாம் 1,24,12 உலந்தது தானை 5,10,14 உழக்கு மறை 3,3,20 உழுந்திட 1,14,6 உழைவரின் 6,4,2 உழைத்தவல் 4,7,10 உளது நான் 6,26,10 உளப் பருவம் 1,7,16 உளம் கோடற்கு 3,6,84 உளைவன எனினும் 6,16,11 உளைவுறு துயர் 3,12,24 உள்ளத்தின் உள்ளதை 6,4,53 உள்ளிய காலையின் 1,7,10 உறங்குகின்ற 6,16,20 உறங்குகின்றபோது 5,13,25 உறத்தகும் அரசு 2,1,26 உறவுண்ட சிந்தை 4,11,48 உறவெதுப்புறும் 4,10,8 உறுக்கினர் ஒருவரை 6,16,90 உறுபகை மனிதன் 6,15,20 உறுவது தெரிய 6,16,35 உற்றகாலையில் 5,12,23 உற்றதால் அணை 6,8,24 உற்றது கொண்டு 2,1,6 உற்றபோது அவன் 6,14,32 உற்று அகலா 5,14,11 உற்று நின்று 5,2,48 உற்றுள 2,9,12 உற்று உண்டாய 5,13,16 உன் குலம் உன்னது 5,15,32 உன்நிறம் பசப்பு 5,3,24 உன் பெரும் தேவி5,15,31 உன்மத்தன் வயிர 6,18,43 உன் மேல் அதிகாயன் 6,18,10 உன்வயின் உறுதி 3,11,16 உன்னினர் பிறர் 5,5,4 உன்னுபேர் 1,20,9 உன்னும் மாத்திரத்து 6,14,11 உன்னை நீ உள்ளவாறு 4,16,20 உன்னை மீட்பான் 6,40,32 உன்னையும் கேட்டு 5,4,20 ஊ ஊக்கம் 1,17,8 ஊக்கித்தாங்கி 3,6,50 ஊடினார் முகத்து 5,3,21 ஊண் இலன் ஆம் 3,12,16 ஊண் இலா 6,17,8 ஊண் உடை 6,41,58 ஊண் திறம் 6,40,31 ஊருணி நிறை 2,1,42 ஊரும் ஆளும் 4,11,4 ஊருவில் தோன் 3,10,12 ஊழி பெயர்ந்தென1,11,8 ஊழி பேரினும் 4,4,2 ஊழியின் இறுதி 6,42,2 ஊறுபடை ஊறு 6,2,30 ஊறு பேர் 1,19,12 ஊற்றமே மிக 2,8,6 ஊற்றம் உற்றுடை 4,7,58 ஊற்றுறு கண்ணின் 3,14,25 ஊனம் உற்று 5,7,9 ஊனவில் இறுத்து 6,2,64 ஊனோடு உயிர் 6,3,31 ஊன் அளைந்த 2,11,5 ஊன் உடை 6,27,34 ஊன் ஏறு 6,31 24 ஊன் பிழை 6,40,68 ஊன்றிய தேரி 3,7,37, ஊன்றிய பெரும் 6,15,9 எ எக்குறியொடு 4,14,15 எங்கணும் நாடினன் 3,14,11 எங்கள் செய் 1,22,11 எங்கள் நாயகற்கு 6,41,49 எங்கு நின்றனன் 6,19,16 எங்கு நீங்குதி 6,32,9 எச்சில் என் 6,49,27 எஞ்சல் இல் 5,8,17 எஞ்சும் உலகு 6,3,52 எடுத்த 2,14,3 எடுத்த போர் 6,19,42 எடுத்தனன் 6,41,65 எடுத்து அரக்கரை 5,8,13 எடுத்துப் பாரிடை 4,7,26 எட்டுத் தோளாள் 5,2,22 எண் அருநல 1,10,14 எண் இல 1,23,25 எண் இலா அருந்தவ 1,6,10 எண்ணிய 1,24,17 எண்ணரும் பெரும் 5,6,43 எண்ணா மயலோடும் 6,23,5 எண்ணாயிர கோடி 6,18,16 எண்ணிய இருவர் 5,11,10 எண்ணிய பொருள் 1,24,17 எண்ணிய சாகத்தம் 4, தனி எண்ணில் எண் கினம் 6,8,16 எண்ணில் கோடி 6,41,41 எண்ணினுக்கு அளவு 5,3,33 எண்ணின் நான்முகர் 4,12,1 எண்ணுக்கும் அளவிலா 6,24,9 எண்ணுதற்கு 1,8,18 எண் தகும் 3,6,3 எண் தவ 1,23,6 எண் பொருட்டு 6,2,46 எண் மையார் 3,12,4 எதிர் கொடு 2,7,6 எதிர் வரும் அவர்களை 1,5,31 எத்தவம் எந்நலம் 6,40,40 எத்தனை அரக்க 6,31,11 எத்தனை காலம் 5,2,30 எத்துணை வகையினும் 6,4,10 எந்தாய் 3,2,4 எந்தை 2,14,61 எந்தை கேள் 4,11,9 எந்தை தன் 6,17,27 எந்தை நீ 3,13,46 எந்தைநீ யாயும் 6,2,43 எந்தை மற்றவன் 4,3,20 எந்தையது அருளினும் 5,13,10 எந்தையாய் 5,6,30 எந்தையும் 2,11,28 எந்தையும் முனி 4,16,6 எந்தையே இராகவ 6,4,22 எந்தையே எந்தையே 4,7,,93 எந்தையே எந்தையே என் 6,17,17 எந்தையே ஏவ 2,3,51 எந்தையை எம்பி 5,13,3 எந்நிறம் உரை 4,13,10 எப்பொழுது 5,5,6 எம்குலத் தலைவர் 1,5,2 எம் குலத்தவர் 6,5,18 எம்பியே இறக்கும் 6,19,46 எம்மன்னன் 1,13,7 எம்முணாள் நங்கை 1,8,5 எயிறு அலைத்து 3,12,1 எயிறுடை 3,6,11 எய்என எழு 1,4,8 எய்த அம்பு 1,24,16 எய்த காலமும் 3,8,7 எய்தல் காண்டு 4,4,8 எய்த வாளியும் 6,32,5 எய்தி மேல்4,11,12 எய்திய வேலையில் 2,14,44 எய்திய முனிவரை 3,3,8 எய்திய சேனையை 6,20,10 எய்திய நிருதர் 6,16,77 எய்தினன் அனுமனும் 5,15,28 எய்தினன் இருந்தவர் 4,16,7 எய்தினன் மானவன் 4,11,67 எய்யவும் எய்த 6,19,19 எய்யுமின் ஈருமின் 5,13,1 எய்வளைவில் 1,22,15 எரிஉற மடுப்பதும் 6,2,19 எரிந்தெழு 1,7,8 எரிந்தெழு பல்படை 6,20,9 எரியின் 3,1,9 எலியெலாம் 2,13,6 எல் ஒடுங்கிய 2,14,26 எல் பொரு நாகர் 4,1,4 எல்லா உலகிற்கும் 3,2,5 எல்லாம் உட்கும் 5,2,23 எல்லி சுற்றிய மதி 6,20,18 எல்லியில் நான் 6,4,18 எல்லீரும் சேறல் 4,16,8 எல்லை நம் இறுதி 4,16,8 எல்லையில் 1,9,19 எல்லையில் இலங்கை 6,9,11 எவ்வழி யிருந்தான் 4,2,14 எவ்வுழை இருந்தனன் 4,14,18 எழுக சேனை 2,11,3 எழுகின்ற திரை 4,15,4 எழுதிரர் அணிந்த 6,27,33 எழுந்தடி வணங்கல் 6,19,69 எழுந்தது 2,12,20 எழுந்தவன் தன்னை 6,28,12 எழுந்தனர் 3,3,6 எழுந்தனன் இளையவன் 23,14,12 எழுந்தனன் வல் 4,7,1 எழுந்து நின்று ஐய 5,15,17 எழுந்து நின்று அனுமன் 6,32,13 எழுந்து வந்தனன் 6,35,9 எழுந்தோங்கி 5,1,15 எழுமழு தண்டு 6,13,2 எழுவது ஓர் 3,4,14 எழுவரோடு 3,7,15 எழுவினும் மலையினும் 4,11,57 எழுவின் கோலம் 6,29,7 எழுவுறு 3,5,3 எளிவரும் 6,41,62 எள் உறையும் 5,2,79 எள் ஒத்த 1,19,10 எள்ளும் ஏனலும் 1,2,9 எறிகுவன் இதனை 6,10,84 எறிதரும் அரியின் 1,2,9 எறிந்த காலையில் 6,32,4 எறிந்தன 2,11,21 எறிந்தார் என 3,7,26 எறிந்தும் எய்தும் 6,15,7 எறுழ் வலிப் பொருவில் 6,2,54 எற்றின 6,35,2 எற்றை நாளிலும் 6,3,1 என இவை அன்ன 2,13,30 எனஇவை இயம்பி 5,11,3 எனக்கு அவன் 6,16,58 எனக்கு அளிக்கும் 6,40,12 எனக்கும் இயம்பிய 6,41,28 எனக்கு உயிர் 6,17,10 எனக்கு நல்லையும் 2,2,40 எனக்கும் நான் 6,3,15 என நினைந்து இனைய 4,3,11 என நினைந்து எய்த 5,5,16 எனக்கு நீ 6,40,15 எனப்பல 3,4,9 எனைத்துள 2,14,21 என் அது ஆகு 6,41,32 என் அவற்கு 6,14,9 என் அனைய முனி 1,6,6 என் இது 1,13,4 என் உடை ஈட்டினால் 5,13,50 என் உயிர் நின்னால் 6,3,39 என் உருக்கொடு என் எனக்கு 4,4,13 என் ஒக்கும் 3,11,24 என் ஓர் இன் 5,6,47 என்தாய் உன் என் தாரம் 3,13,26 என் தேவியை 6,18,19 என்பது சொல்லி 6,19,67 என்பது சொல்லிய 2,14,70 என்பதைக் கேட்ட 2,13,36 என்பன சொல்லி 2,13,17 என்பன பலவும் 4,2,5 என் புகழ் 2,13,29 என்புழி அனுமனும் 5,15,27 என்புழி மாலி 6,13,5 என்பு தோல் 2,2,10 என்புறக் கிழிந்த 6,12,16 என் வயின் உற்ற 3,10,37 என்ற அக் குரங்கு 4,3,16 என்ற சொல்லர் 3,4,20 என்ற தென் 4,5,18 என்ற நாட்டினை 2,11,13 என்ற பின் 2,4,92 என்றம் முனி 2,4,28 என்றலால் 2,14,64 என்றலுமே 2,13,38 என்றலும் அரச 1,5,18 என்றலும் அவுணர் 6,3,36 என்றலும் இராமனை 1,7,12 என்றலும் இருந்தவள் 4,14,17 என்றலும் இலங்கை 5,13,48 என்றலும் இவை 5,13,64 என்றலும் இளைய 3,13,45 என்றலும் இரங்கி 6,7,10 என்றலும் இறைஞ்சி 6,26,40 என்றலும் இவை 5,13,63 என்றலும் கரங்கள் 5,15,5 என்றலும் கேட்டனன் 4,16,14 என்றலும் திரிசடை 5,3,23 என்றலும் முறுவலித்து 6,16,98 என்றலும் வணங்கி 6,43,11 என்றவள் உரைத்த 4,11,33 என்றவள் மேல் 3,6,86 என்றவற்கு இயம்பி 4,7,86 என்றவன் இயம்பலும் 3,12,9 என்றவன் இறைஞ்ச 5,5,14 என்றவன் உரைத்தலும் 4,11,59 என்றவன் உவந்து 5,11,12 என்ற வாசகம் 2,1,28 என்றனள் இயம்பி 5,2,33 என்றனள் என்ன 2,3,40 என்றனள் இறைவி 6,40,17 என்றனன் இயம்பி 5,2,33 என்றனன் இனைய 4,7,99 என்று அவன் இயம்பிடும் 6,2,32 என்றனள் என்ற 6,17,11 என்றனன் என்ற 6,12,21 என்றனன் என்றலும் 1,6,12 என்றனன் என்ன 1,24,13 என்றான் என்னா 3,15,14 என்றிவள் உரைத்த 3,12,51 என்றிவை இயம்பி 6,14,30 என்றினைய வன்துயர் 3,10,22 என்றின்ன பன்னி 6,19,56 என்று அடி இறைஞ்சி 6,2,37 என்றனள் இயம்பி 5,3,27 என்று அவன் இரங்கும் 6,12,14 என்று அவன் உரைத்த போது 5,15,22 என்று அவன் உரைத்த லோடும் 6,16,46 என்று அவன் உரைத்த காலை 6,17,14 என்று அவ்வந்தணன் 1,7,4 என்று அழைத்தனள் 6,38,14 என்று அறத்துரை 5,4,22 என்று இன்ன 3,6,65 என்று ஈறு இலா 6,16,21 என்று உரைத்து 5,6,48 என்று உலப்புற 6,5,16 என்று ஊக்கி 5,2,71 என்று எழுந்தனர் 6,30,17 என்று என்று 6,22,44 என்று என்று ஏங்கும் 6,22,44 என்று ஒருவன் 6,2,25 என்று கூறலும் 6,5,24 என்று கூறி 2,11,65 என்றுகை 5,2,52 என்று கொண்டு 6,19,47 என்று கொண்டுள் 1,13,24 என்று சிந்தித்து 2,10,17 என்று சோலைபுக்கு 5,3,2 என்று தன் உரை 6,2,65 என்று தாயை 6,9,17 என்று தோள் 5,13,28 என்று நல் 2,9,6 என்று நினையா 5,7,6 என்று பல பலவும் 6,18,61 என்று பின்னரும் இராமனை6,40,65 என்று பின்னரும் 2,4,5 என்று மைந்தனை 6,40,59 என்றும் உளமேல் 4,14,21 என்றுரைத்து அமரர் 6,43,15 என்றுரைத்து இடர் 5,15,16 என்றுரைத்து எழுந்த 5,15,53 என்று உரைத்து எழுந்து 6,14,5 என்று வரம் அருளி 6,3,59 என்றெழுந்து 2,13,21 என்றோ 2,4,39 என்ன இத்தகைய 4,7,91 என்ன உரை 3,11,14 என்னக் கேட்டு 2,13,43 என்னச் சொல்லி 6,4063 என்னது ஆக்கிய 6,5,23 என்ன மற்று 4,9,15 என்னலும் 1,5,17 என்னலும் எடுத்த 6,29,28 என்னலோடும் 3,7,8 என்னா அடி 1,24,11 என்னுடைச் சிறு 4,6,9 என்னும் அளவில் 3,13,9 என்னும் மாத்திரத்து 3,9,8 என்னும் மாத்திரத்து ஈண்டு 5,13,66 என்னும் மாத்திரத்து ஏறு 6,40,55 என்னும் வேலை 2,11,63 என்னுயிர்க்கு இறுதி 4,7,98 என்னே நிருபன் 2,4,48 என்னை இன்னும் 6,41,30 என்னை உய் வித்தேன் 6,3,11 என்னை என் குலத்தி 6,17,32 என்னைத் தரும் 3,14,22 என்னை நாயகன் 5,3,8 என்னை நீங்கி 2,4,17 என்னை யீன்றவன் 4,3,26 என்னையும் கொல்லாய் 6,17,38 என்னையும் வெலற்கு 5,13,30 என்னையே இராவணன் 3,10,17 என்னை வென்று 6,16,40 என்னொடே பொருதியோ 6,19,15 ஏ ஏகம் முதற்கல்வி 1,3,17 ஏகவாளி 5,3,16 ஏக வேண்டும் 4,4,1 ஏகி இனி 3,3,28 ஏகித்தனி சென்று 6,18,9 ஏகி மன்னனை 1,11,1 ஏகுகின்ற தம் 1,3,7 ஏகுதற்கு உரியார் 6,16,47 ஏகு நீ அவ்வழி 4,16,10 ஏகுமின் ஏகி 4,17,7 ஏகும் அளவையின் 1,24,2 ஏகும் நல்வழி 1,11,5 ஏக்கம் இங்கு 3,8,3 ஏங்கிய விம்மல் 3,18,54 ஏங்கினன் 2,11,31 ஏங்கினார் நடுக்கம் 6,33,2 ஏங்குவாள் தனிமையும் 3,13,14 ஏசி உற்று எழும் 6,16,104 ஏண் இலது 5,5,31 ஏதி ஒன்றால் 5,9,14 ஏதியோடு எதிர் 6,16,107 ஏதி வெம் திறலினோய் 6,16,97 ஏதையோ சிந்தித்து 6,18,59 ஏத்தினள் எய்தலும் 3,12,26 ஏத்தும் வென்றி 5,6,23 ஏத்துவாய்மை 3,7,9 ஏந்தலும் இதனை 4,9,12 ஏந்தல் இவ்வகை 5,2,46 ஏந்திழை தன்னை 6,14,29 ஏந்தினன் இருகை 3,13,48 ஏந்து அகல் 6,27,23 ஏந்து எழில் 6,4,38 ஏமுறு நிலையினன் 3,12,18 ஏம்பலோடு எழுந்து 5,15,19 ஏம்பல் உற்று 6,30,2 ஏய நன்மொழி 5,6,7 ஏயப் பன்னினள் 5,13,19 ஏயவரங்கள் 2,3,10 ஏயின நறவு 4,11,49 ஏய்ந்த காலம் 2,11,8 ஏய்ந்ததம் 6,8,14 ஏய் வினை இறுதியில் 5,12,13 ஏரைக் கொண்டு 6,31,18 ஏர் துறந்த 2,11,7 ஏவம் பாராய் 2,3,29 ஏவரே உலகம் 6,3,33 ஏவலும் 1,24,21 ஏவிய குரிசில் 2,5,1 ஏவிய மொழி கேளா 2,8,22 ஏவின வள்ளுவர் 2,2,15 ஏவினான் 2,6,16 ஏவுகூர் 4,7,76 ஏழு உயர் உலகங்கள் 5,13,31 ஏழு நூறு ஓசனை 5,2,76 ஏழுபத்து ஆகிய 4,6,14 ஏழு மாக் கடல் 4,12,4 ஏழு மாமரம் 4,4,9 ஏழு வேலையும் 4,4,10 ஏழு வேலையும் ஆர்பெடுத்து 6,37,8 ஏழை சோபனம் 6,40,3 ஏழை தன் செயல் 2,4,113 ஏழ் இரண்டு 2,5,18 ஏறிய நெடுந்தவம் 6,2,48 ஏறினான் தொழுது 6,35,7 ஏற்ற நெடும் கொடி 3,6,87 ஏற்ற பேர் உலகெலாம் 4,7,12 ஏற்றம் இனிச் செயல் 6,20,5 ஏற்றவர்க்கு 2,11,60 ஏற்றவளை 3,6,70 ஏற்றிய வில்லோன் 6, 1 6,54 ஏற்றின முரசினோடும் 6,35,2 ஏனைய பிறரும் 6,43,3 ஏனையோன் இவன் 6,11,9 ஏன்றனன் 2,4,91 ஏன்றுன் 2,11,45 ஐ ஐயகேள் வையம் 5,2,29 ஐயநான் அஞ்சி 4,11,54 ஐயநிற்கு இயலாது 6,31,17 ஐய நீ 2,14,42 ஐய நுண் மருங்குல் 3,11,26 ஐயநும் மோடும் 4,11,36 ஐயுறல் உளது 5,5,13 ஐயநுங்கள் 4,7,64 ஐயனும் அச்சொல் 2,3,42 ஐயனும் அவரை 6,43,21 ஐயனும் இளவலும் 1,5,29 ஐயனே எனும் 6,29,6 ஐயன் இம்மொழி 6,41,3 ஐயன் வில் 1,13,17 ஐயுறு பொருள்களை 6,40,49 ஐவனக் குரல் 2,10,10 ஒ ஒக்க நின்று 6,37,22 ஒடிக்குமேல் வட 4,12,2 ஒட்டிய 2,1,13 ஒதுங்கலாம் நிழல் 4,14,3 ஒத்த சிந்தையர் 2,1,39 ஒப்பு இறையும் 3,1,19 ஒரு காலத்து 3,6,63 ஒரு குரங்கு 6,30,11 ஒருங்கு அமர் புரிகிலென் 6,16,92 ஒருத்தன் நீ தனி 6,16,110 ஒரு பகல் உலகெலாம் 1,5,20 ஒரு பகல் பழகினார் 3,12,10 ஒருபது கையினார் 5,3,3 ஒரு மகள் 2,14,16 ஒருவனோ 3,6,27 ஒருவன் மாண்டனன் 6,41,43 ஒரு வில் 2,10,4 ஒலி கடல் உலகம் 4,7,42 ஒல்லைச் செரு 4,7,16 ஒல்வது நினையினும் 6,2,20 ஒள்ளிது உன் 3,6,36 ஒள்ளிய உணர்வு 6,8,11 ஒறுத்தலோ நிற்க 5,2,11 ஒன்றாக நினை 6,12,11 ஒன்றாகி 3,2,9 ஒன்றா நின்ற 2,3,28 ஒன்றிய உணர்வே 6,12,10 ஒன்று கேள் உரைக்க 5,4,26 ஒன்ற நூற்றினோடு 6,15,29 ஒன்றும் உள் கறுப்பினோடு 6,5,4 ஒன்றும் நீ உறுதி 5,12,3 ஒன்றும் நீர் 6,31,16 ஒன்றும் நோக்கலர் 3,7,4 ஒன்றும் வேண்டலர் 6,6,1 ஒன்றே என்னின் 6,1,1 ஓ ஓங்கிய தம்பியை 6,4,28 ஓங்கு இரும் தடம் 5,11,7 ஓங்குமரன் 3,3,26 ஓங்குயர் 3,4,3 ஓசனை ஏழு அகன்று 5,2,39 ஓசை பெற்று உயர் 1,கா.வ, 4 ஓடா நின்ற 4,1,9 ஓடிக் கொன்றனன் 5,8,12 ஓடினார் உயிர்கள் 5,11,19 ஓடுகின்றானை 6,29,23 ஓடும் ஓட்டரின் 6,8,28 ஓத நெடும் கடல் 1,5,12 ஓதப் புக்க பின் 6,3,8 ஓதம் ஒத்தனன் 6,15,27 ஓதம் நீர் மண் 3,15,6 ஓதிமம் 3,5,1 ஓதிய குறிஞ்சி 6,9,3 ஓம வெம் கனல் 6,27,15 ஓம் எனும் ஓர் 6,3,24 ஓம் நமோ நாராயணாய 6,3,9 ஓய்ந்துளன் இராமன் 6,23,12 ஓய்வும் ஊற்றமும் 6,37,33 ஓராதே ஒருவன் 6,38,2 ஓலம் ஆர் கடல் 3,15,7 ஓவா நெடும் மாதவம் 6,18,12 ஓவிய உருவ 4,7,82 ஓவியம் அமைந்த 6,2,23 ஓவியம் புகை 5,13,15 க கங்கை இரு 2,13,18 கங்கை என்னும் 2,7,5 கங்கையாளோடு 2,9,15 கங்கையும் பிறை 6,14,18 கங்கையே முதலிய 3,10,11 கங்கையே யமுனை 6,41,8 கசட்டுறு 1,5,15 கச்சோடு 2,8,5 கஞ்சத்து 1,22,5 கடக்கரும் அரக்கியர் 5,3,35 கடக்களிறு 6,36,2 கடல் உறு மத்து 5,1,5 கடல் கடந்து 6,22,9 கடவுள் படையை 5,13,74 கடன்கள் செய்து 6,38,15 கடிகை ஓர் 2,6,3 கடிக்கும் வல் 5,4,21 கடிதினில் உலகெலாம் 6,22,9 கடிது சென்று 4,5,1 கடித்த குத்தின 6,15,6 கடுகிய 1,14,1 கடும் கரன் 3,9,4 கடுந்திறல் அமர்க்களம் 6,40,23 கடையுற 1,19,18 கட்டமை தேரின் 6,15,19 கட்டிய சுரிகை 2,13,5 கட்டிய வாளர் 5,8,5 கட்டினன் 2,14,14 கட்டுரை அதனை 6,26,8 கட்டுரையின் தம 1,8,15 கட்டேறு நறும் 5,12,13 கணம் குழை 1,12,17 கண் அனார் 5,12,9 கண் இணை 6,40,37 கண் இமைப்பதன் 6,22,22 கண்ட அக்கனவும் 6,20,10 கண்ட அக் குமரனும் 1,8,22 கண்ட கல்மிசை 1,9,12 கண்ட நிருத 5,7,3 கண்ட வானரம் 1,8,22 கண்டனம் ஒரு புடை 5,8,23 கண்டனர் அரக்கரை 5,15,14 கண்டனன் அனுமனும் 5,5,10 கண்டனன் இராமனை 3,3,21 கண்டனன் என்ப 4,3,8 கண்டனன் நாயகன் 6,16,101 கண்டனென் இராவணன் 6,24,19 கண்டனென் இலங்கை 5,1,3 கண்டனென் கற்பினுக்கு 5,15,30 கண்ட வானரம் 4,11,7 கண்டார் பொய்கை 4,15,1 கண்டாள் 6,23,1 கண்டாள் மகனும் 2,4,71 கண்டான் இறை 6,19,8 கண்டிலன் தலை 6,29,14 கண்டிலீர் கொலாம் 6,30,12 கண்டிலை முன்பு 6,19,61 கண்டு கைதொழுது 2,1,29 கண்டு தன் 6,24,5 கண்டு நின்று 3,9,9 கண்டு நோக்க 3,7,6 கண்டு போயினை 5,13,18 கண்டேன் 2,4,32 கண்ணனே எளியேம் 6,31,21 கண்ணிய கணிப்பரும் 4,11,68 கண்ணிய நாள் 5,2,75 கண்ணிய தருதற்கு 3,16,1 கண்ணில் 2,4,49 கண்ணினால் 1,21,2 கண்ணினும் 6,3,21 கண்ணினுள் 6,37,36 கண்ணின் நீர் 6,40,64 கண்ணுக்கு 1,16,18 கண்ணுற்றான் வாலி 4,7,37 கண்ணே வேண்டும் 2,3,21 கதம் எனும் 4,2,4 கதம் கொள் 1,15,2 கதம் மிகுந்து 6,10,3 கதறின வெருவி 5,7,13 கதிரவன் உதிப்ப 6,41,24 கதிரவன் சிறுவன் 3,15,25 கந்தர்ப்பர் 6,29,16 கந்தையே 1,20,3 கம்ப மதத்து 6,28,36 கம்பம் இல் 1,10,21 கயங்கள் 1,10,30 கயம் தரு 1,8,17 கயம் ரதம் 1,13,27 கயல் மகிழ் 5,11,20 கரக்கரும் 3,3,3 கரங்கள் குவித்து 1,13,11 கரங்கள் கூப்பினர் 5,4,10 கரங்கள் மீச்சுமந்து 6,4,88 கரத்தொடும் 6,5,5 கரனையும் மறந்தான் 3,10,50 கரன் மகன்பட்ட 6,22,1 கரன் முதல் 6,2,12 கரிகொடு 5,9,11 கரிந்து சிந்திட 5,14,6 கரிபரி வேங்கை 5,3,32 கரிய குன்று 6,39,4 கரிய கொண்டலை 6,12,4 கரிய நாழிகை 5,2,56 கரியோடு கரி 1,3,14 கருகும் வார் 6,41,13 கருங்கடல் 5,9,9 கருதி மற்றொன்று 6,12,12 கருத்திலா இறைவன் 6,16,71 கருத்திலான் கண் 6,2,39 கருத்து ஒரு 1,19,13 கருத்துற நோக்கி 6,4,68 கருப்பைப் போல் 6,15,8 கருமமும் கடை 6,37,7 கருமலை 3,4,8 கரும் கடை 1,22,16 கரும்புகால் 1,6,19 கரை தெரிவு 1,23,4 கலங்கிய கங்குல் 6,13,6 கலத்தினில் 6,40,34 கலந்தவர்க்கு 1,19,1 கலம் சுரக்கும் 1,2,15 கலவைகள் 1,23,1 கலைகளின் பெருங்கடல் 3,7,29 கலை கொண்டு 4,4,3 கலைமான் 3,11,20 கலையினால் திங்கள் 6,29,20 கல் அணை 4,11,58 கல் அன்றோ 6,17,42 கல் இடை 1,1,11 கல் ஈரும் 3,6,64 கல் காணும் 2,13,19 கல் நகு திரள் 2,14,47 கல்லாது நிற்பார் 1,3,16 கல்லா மதியே 5,5,1 கல்லினும் 6,12,18 கல்லுவென் 2,8,27 கல்லென வலித்து 6,7,16 கல்வியின் திகழ் 4,10,21 கல்வியும் 2,2,38 கவடு உக 6,11,1 கவருடை 1,8,21 கவிஅமை 2,2,16 கவி குலத்து 4,7,76 கழல் உலாம் 5,2,10 கழுந்தராய் 6, தனி களிக்கும் மஞ்ஞை 4,10,6 களித்த கண் 1,19,7 களிப்படா4,1,6 களியா உள்ளத்து 5,2,25 கள் அவிழ் 2,3,7 கள் உடை 3,10,20 கள் மணி 1,19,9 கறங்கு தண் 1,9,1 கறங்கென 6,8,9 கறுத்த மாசுணம் 5,12,25 கறுத்த மாமுனி 1,6,13 கற்பட மரம் 6,19,11 கற்பழியாமை 3,13,13 கற்பினுக்கு 6,40,29 கற்புடைத் தேவியை 6,4,37 கற்றான் மறை 6,18,13 கற்றுறு மாட்சி 6,2,44 கற்றை அம் 3,6,5 கற்றை வார் 1,20,8 கற்றை வெண் 6,4,84 கனகனும் 6,3,46 கனத்தினால் 6,40,45 கனியும் கந்தமும் 4,3,18 கன்றுயிர் 2,11,56 கன்னல் 1,11,4 கன்னி 2,4,96 கன்னி இள 3,3,27 கன்னி நெடுமா 4,14,10 கன்னியர்க்கு 2,1,10 கன்னியை2,11,58 கா காகமும் கழகும் 5,11,6 காகம் ஆடு 6,29,10 காக்கலாம் நும் 6,16,63 காக்கவோ 4,11,17 காசடை விளக்கிய 4,1,5 காசறு மணியும் 5,7,12 காட்டிய மோதிரம் 6,41,50 காட்டிலே 6,12,22 காட்டுவார் இன்மை 5,13,65 காணியை 6,40,18 காண்பார்க்கும் காதல் உன் 2,2,48 காத்தனர் 1,8,19 காந்தர்ப்பம் 3,6,28 காந்தள் மெல் 5,13,23 காந்து இகல் 6,16,102 காந்தும் ஆனை 6,5,21 காந்துறு கதழ் 5,13,5 காந்தையர்க்கு 6,38,11 காமமும் 6,3,22 காமம் யாவையும் 6,3,16 காமரம் முரலும் 3,10,38 காம்பு உற 3,6,83 காயத்தால் 5,2,9 காயத்து உயிரே 6,18,15 காயம்கன 3,11,21 காயம் வேறாகி 3,11,31 காயும் கானல் 2,7,9 காய் இரும்சிலை 6,31,25 காய் எரி கனலும் 4,2,7 காய் எரி முளி 5,11,15 காய்ப்புண்ட 6,18,3 காரணம் இன்றி 1,14,20 காரணம் கேட்டி 5,13,44 காரிகை நின்னை 6,17,24 காரியம் ஆக 6,4,75 கார் இயன்ற 4,7,49 கார் எனக்கடிது 2,13,32 கார் குலாம் 2,8,16 கார்ப்பொரு 2,14,25 கார்மேக 5,1,17 கார்வானம் 2,4,75 கால இரு 6,12,5 காலமும் இடனும் 2,1,7 காலமும் கருவியும் 6,3,23 காலமே நோக்கினும் 6,4,50 காலம் அன்று 6,4,56 காலம் இன்றியும் 2,9,19 காலம் நுனித்து 1,8,10 காலவான் 6,6,14 கால வெம்கனல் 6,9,15 காலம் ஆற்றல் 6,30,8 காலன் ஆற்றல் 4,7,72 காலன் மார்புழை 6,30,8 காலிடை ஒருமலை 6,8,5 காலின் மாமதலை 6,41,56 காலை என்று 2,14,9 காலைக் கதிரோன் 2,4,53 காலையில் நறு மலர் 6,3,25 கால் உடை 6,19,31 கால் எனக்கடு 6,27,14 கால் நிமிர் 5,10,18 கால் பிடித்து 6,18,22 காவலன் ஈண்டு 3,12,7 காவல் திண் 3,6,74 காவலன் பயந்த 6,10,8 காவல் காட்டுதல் 6,3,3 காவல் மாமதி 4,11,18 காவியும் ஒளிர் 1,5,27 காவியும் குவளையும் 1,20,5 காவியோ கயலோ 3,6,45 காழம் இட்ட 2,8,2 காள மேகத்தை 6,28,35 காளியை 6,30,6 காற்றினுக்கு 6,41,55 காற்றினையும் 3,6,55 காற்றின் வெம் 6,37,34 காற்று வந்து 6,24,36 காற்றென உரும் 6,28,23 கானகம் 2,5,23 கானமதின் 3,6,62 கானிடை அடைந்து 3,10,26 கானிடைப் புகுந்து 6,6,3 கானில் உயர் 3,6,14 கானின் அன்று 6,15,26 கானே, காவல் 5,9,3 கான் ஆள 6,41,35 கான் இடை 5,12,10 கான் தலை 2,13,2 கான் புக்கிடினும் 2,4,73 கான்புறம் 2,5,16 கி கிங்கரர் சம்பு 5,12,4 கிடந்த போர் 6,16,2 கிட்டிப்பொருது 6,18,5 கிட்டியதோ 6,16,29 கிளையொடும் 614,28 கிள்ளையோடு 2,4,41 கீ கீதங்கொள் 3,13,43 கு குகனைத்தன் பதியின் 6,43,20 குகனொடும் 6,4,93 குகன் என 2,13,4 குடையர் 1,14,14 குடையினன் 2,9,8 குடையொடு 1,14,15 குணங்களால் 1,9,24 குணடலம் 3,10,10 குதித்தனன் 2,14,13 குமரர் 3,1,3 குமிழி நீரோடும் 6,34,14 குமுதன் இட்ட 6,8,15 குயின்றன 2,5,5 குரக்கினத்து 6,41,73 குரக்கு நல் 5,12,24 குரக்கு வார்த்தை 5,13,64 குரங்குபட 6,2,34 குரங்குறை 4,9,11 குராவரும் 5,6,45 குரிசிலும் 2,12,17 குருக்களை 2,11,33 குருதி மாமழை 3,7,20 குலத்தாலும் 3,6,76 குலத்து இயல்பு 6,16,50 குலம் இது கல்வி 4,7,39 குலம் முதல் 2,1,5 குலைவுறல் 3,12,53 குவளையின் 2,3,36 குழல் படைத்து 4,13,9 குழுமிக் கொலை 6,19,1 குழுவுநுண் துளை 2,10,7 குழைக்கின்ற 2,4,1 குழையும் கொம்பும் 5,7,11 குழையுறு 3,7,18 குறித்த நாள் 5,15,12 குறித்த வெம் 3,13,34 குறுகி நோக்கி 5,2,44 குற்றம் ஒன்றில்லை 2,11,34 குற்றம் வீந்த 3,12,3 குன்றிசைத்தன 4,14,1 குன்றிடை இவரும் 3,11,30 குன்றினில் 2,14,74 குன்றின் வீழ் அருவியின் 6,16,99 குன்றின் வீழ் 6,16,79 குன்று சூழ்ந்த 4,15,9 குன்றுறை 2,9,5 குன்றென 1,4,7 கூ கூசி ஆவி 5,4,7 கூசும் வானரர் 6,9,19 கூட்டம் 4,3,12 கூட்டிய விறல் 6,9,8 கூட்டினார் 6,5,22 கூட்டு ஒருவரையும் 4,7,43 கூம்பினகையன் 5,9,1 கூயினன் 6,16,23 கூர் உடை 6,8,10 கூலத்தார் 3,10,56 கூவா முன்னம் 2,8,10 கூவியின்று 6,14,26 கூறா முன்னும் 2,3,33 கூறிய தூதரும் 1,14,3 கூறிய முனிவனை 2,14,65 கூறிய வாசகம் 4,16,21 கூறின நாள் 5,15,13 கூற்றம் இல்லை 1,2,16 கூற்றம் உன் 6,29,12 கூற்றம் போலும் 1,14,11 கூற்றுவன் 6,4,42 கூனி போன 2,3,1 கெ கெடுத்து ஒழிந்தனை 6,3,10 கெட்டவான் 6,41,59 கெட்டாய் 3,13,2 கே கேகயன் 1,23,23 கேடகத்தட 3,7,33 கேடகத்தோடு 5,4,4 கேட்ட அண்ணலும் 6,31,6 கேட்டதோன்றல் 6,41,33 கேட்டவளும் 4,14,19 கேட்டனன் அமலனும் 4,5,5 கேட்டனன் இருந்தும் 6,4,1 கேட்டனன் கிராதர் 2,13,27 கேட்டனென் கண்டிலென் 3,12,30 கேட்டனென் நறவால் 4,11,53 கேட்டார் 3,15,16 கேட்டி அடியேன் 5,6,1 கேட்டு உவந்த 3,4,27 கேட்டே இருந்தேன் 2,4,37 கேட்பின் இடை 6,19,2 கேழ் உலாம் 5,1,13 கேள் இது 6,3,49 கை கை என 1,16,7 கை கண்டான் 6,29,13 கைகயன் 6,41,66 கைகளை 6,17,16 கைகொள் 3,1,23 கைக்களிறு 3,7,35 கை தவம்1,13,3 கைதவம் இயற்றி 4,7,88 கைத்த சிந்தை 3,13,21 கைத்தரும் 6,11,3 கைத்தோடும் 5,6,32 கை பரந்து 5,10,5 கைப் புகுந்து 6,4,48 கையால் 2,4,46 கையைக் கையின் 2,4,10 கையோடு 2,3,18 கைவரை 1,7,20 கையிலையின் 5,13,7 கொ கொங்கை 6,1,6 கொடிய 2,11,37 கொடியவர் 2,11,47 கொடியாள் இன்ன 2,3,27 கொடுத்தவில்லை 3,9,10 கொடுத்தனை 6,16,30 கொடுத்தேன் 6,22,43 கொடும் திறல் 4,6,13 கொண்ட போரின் 5,6,11 கொண்டான் 3,12,57 கொய்தலைப் பூசல் 6,34,13 கொய்தளிர் 5,11,2 கொய்திற 6,16,78 கொலை துமித்து 3,6,51 கொல் ஆழி 1,11,7 கொல் என 6,17,21 கொல்லல் ஆம் 5,13,29 கொல்லல் உற்றனை 4,7,57 கொல்லாத 6,38,3 கொல்லுமின் இவனை 6,4,58 கொல்லுமின் பற்று 6,4,34 கொல்வானும் 6,18,20 கொல்வித்தான் 6,19,38 கொல்வென் இக்கணமே 6,15,23 கொல்வென் என்று 3,27,25 கொழுநன் 2,4,31 கொழுமணி 6,12,15 கொள்ளான் 2,3,19 கொள்ளைப் போர் 1,19,17 கொற்றநின் 4,7,7 கொற்றவர் 2,3,41 கொற்றவன் அது 2,4,116 கொற்றவன் பணி 5,15,23 கொற்றவெம் 6,30,10 கொன்றார் 6,19,5 கொன்றோனோ 5,2,74 கோ கோசிகப் பெயர் 6,2,53 கோடுறுமால் 4,13,6 கோடையில் 6,42,4 கோதமன் தன் 1,12,14 கோதறத்தவம் 2,14,27 கோதறு 1,23,8 கோதாவரியே 3,12,62 கோதைகள் சொரிவன 1,2,18 கோதைவில் 2,8,17 கோத்த மேகலை 6,25,4 கோநகர் 6,2,45 கோபமும் மறனும் 3,10,49 கோமகன் 1,23,17 கோமுனியுடன் 1,13,30 கோவியல் தருமம் 4,7,40 கோவையும் 5,2,37 கோளும் 2,2,8 ச சகரர் தம் 1,9,10 சங்கம் கை 1,22,7 சங்கினம் 1,23,7 சங்கு சக்கர 4,3,25 சங்கொடு 5,2,35 சங்கோடு 1,13,2 சந்தவார் 1,14,13 சந்திரற்கு 2,1,3 சந்தி வந்தனை 6,5,2 சம்பரப் பெயர் 6,2,51 சம்பரன் தன்னை 6,43,7 சரங்கள் 6,9,25 சரண் எனக்கு 6,4,73 சரதம் இப்புவி 2,2,34 சரதம் மற்று 6,17,23 சரம் பயில் 1,16,3 சலம் தலை 5,8,15 சலித்தான் 5,9,15 சல்லியம் 6,24,26 சா சாணினும் உளன் 6,3,37 சாம்பனை வதனம் 6,31,9 சாய்ந்தது 6,15,21 சாய்ந்த மாருதி 5,12,22 சார் அயல் 5,15,12 சார வந்து 3,1,5 சாற்றிய1,14,5 சானகி ஆம் 6,26,14 சான்றவர் ஆக 2,14,66 சான்றவர் சான்றவ 1,5,16 சான்றவர் பழி 4,16,7 சான்றென 1,20,10 சி சிகரவண் குடுமி 5,4,1 சிங்க ஏறு அசனி 6,19,66 சிங்க ஏறு அனைய 2,8,15 சிங்க ஏறு அனைய வீரக் 6,26,21 சிங்க ஏறு அனையான் 6,4,79 சிங்கக் குருளை 2,4,50 சிட்டர் செயல் 6,2,27 சிதை வகல் 4,11,35 சித்தம் 2,4,19 சித்திரத் தன்மை 6,26,23 சித்திரப்பத்தி 5,2,16 சித்தென 6,3,20 சிந்தி ஓடிய 6,6,6 சிந்தை உவந்து 1,8,11 சிந்தை நல்லற 4,7,69 சிந்தையில் 4,2,2 சிந்தையின் 3,6,4 சிருங்க பேரம் 6,43,16 சிருங்கி 2,8,7 சிலை அறாது 6,28,20 சிவந்த வாய் 2,2,32 சிவனும் மலர் 3,6,79 சிவனோ அல்லன் 6,37,18 சிறக்கும் செல்வம் 2,2,4 சிறக்கும் மாமியர் 5,6,25 சிறந்த தம்பி 2,4,15 சிறந்தார் 2,11,46 சிறியர் என்று 4,9,6 சிறு காலை 3,2,6 சிறையில் 6,15,36 சிற்குணத்தார் 1, கா.வ.2 சிற்றிடைச் சீதை 3,10,51 சினக் குறும்பு 2,11,24 சினக்கொடு 2,14,4 சினத்தொடும் 6,29,17 சினம் கொள் 6,11,13 சினையது 4,7,73 சினையின் 1,17,10 சீ சீதை என்று 6,24,17 சீரை சுற்றி 2,4,117 சீலமும் காட்டி 6,40,26 சீலமும் தருமமும் 2,14,41 சீலம் அல்லன 2,2,13 சீறினன் உரை 3,12,49 சீறுவாய் அல்லை 4,1,30 சீற்றம் 2,4,70 சு சுக்கிரீவனை 6,22,28 சுடுதியைத் துகில் 6,4,30 சுடுமயானத்திடை 2,13,41 சுட்டது 6,2,9 சுட்டவா கண்டும் 6,9,16 சுட்டினன் 5,5,30 சுணங்குறு 6,40,30 சுந்தர வதன 1,16,6 சுருங்கு இடை 5,5,26 சுருதி நாண் 4,10,7 சுழி உடைத்தாய் 2,11,40 சுழிகொள் 1,14,8 சுழிபடு கங்கை 1,7,11 சுழியும் குஞ்சி 1,14,9 சுற்றத்தார் 2,13,37 சுற்றம் 2,8,8 சுற்றிய கடல் 1,16,1 சுற்றிய சீரை 2,4,93 சுற்றின தேரினர் 5,14,17 சுற்றினர் 2,12,2 சுற்றுற 3,7,28 சூ சூடக அரவு 1,7,15 சூடின 2,11,36 சூடையின் மணி 5,6,50 சூதகற்றும் 4,13,5 சூரியன் பெரும் 6,20,13 சூர் அறுத்த 3,3,17 சூலமும் பாசமும் 3,7,14 சூலம் வாங்கிடின் 6,31,2 சூழிமால் 4,3,2 சூழ்வினை 6,28,3 செ செக்கர் 1,12,13 செங்கண் ஏறி 3,9,5 செங்கதிர் 6,22,3 செஞ்சேவகனார் 3,12,60 செந்தழல் 2,9,9 செந்தாமரைக் கண் 3,10,60 செந்தாமரைப் பொகுட்டில் 6,3,54 செந்தீவினை 6,37,11 செந்தேன் 6,17,43 செப்பின் 6,6,8 செப்பும் 1,10,10 செப்புநற்கு 3,10,16 செம்பிட்டு 6,16,73 செம்பு காட்டிய 3,8,2 செம்மை சேர் 4,11,32 செயலைச் செற்ற 4,7,48 செய்கின்றார் 6,22,5 செய்தபின் 1,8,8 செய்தனர்கள் 3,10,27 செய்தும் என்று 4,16,5 செய் மறந்தன 2,4,103 செய்யக் கடவ 2,6,15 செய்வன 4,9,5 செய்வாய் 6,18,47 செரு ஆசை 6,18,47 செருக்கடை 3,3,25 செருமலி 6,10,2 செருவின் 6,16,86 செல்லும் 2,4,68 செல்லொடு 5,9,5 செல்வர் 4,15,12 செவிகளை 3,12,54 செவிவயின் 1,14,22 செவ்விநறும் 1,5,13 செவ்விய 1,3,1 செவ்வேலவர் 3,2,1 செறிகழல் 6,4,55 செறிந்துயர் 6,12,8 செறிவுறு 6,6,12 சொற்றதும் 4,11,51 சென்றனன் 5,12,7 சென்ற தேரை 3,8,6 சென்று சென்று 6,17,10 சே சேட்டு இளம் 4,15,11 சேண் உயர் 2,14,23 சேண் உற 3,6,25 சேந்தொளி 2,9,3 சேய காலம் 6,1,3 சேயிழை 3,12,42 சேய் விசும்பின் 6,32,10 சேல் இயல் 6,29,11 சேல் உண்ட 1,2,7 சேவடி இரண்டும் 6,41,68 சேனாபதியே 6,27,7 சேனைக் காவலர் 6,5,19 சேனையும் 4,11,29 சேனையை 6,31,19 சை சையப்படிவத்து 6,18,11 சையம்புக 1,24,5 சையம் வேரோடும் 4,7,28 சொ சொல் இது 6,22,12 சொல் உடையார் 3,13,27 சொல் என்றன் 3,10,36 சொல் ஒக்கும் 1,7,28 சொல் ஒன்று 6,19,54 சொல் பிறந்தார்க்கிது 3,10,18 சொல் பெற்ற 2,14,36 சொல்லாத 6,19,4 சொல்லிட எளியது 5,7,21 சொல்லிய அனைவரும் 5,13,39 சொல்லியென் பலவும் 6,28,11 சொல்லும் அத்தனை 6,15,31 சொற் கலை 1,10,3 சொற்றது முடித்தேன் 6,19,36 சொற்ற வார்த்தை 6,14,31 சொற்றாள் 2,4,27 சொற்றேன் முந்துற 4,8,6 சொன்னார் அவர் 6,21,2 சோ சோதியான் மகன் 6,39,2 சோர்வாளை 2,4,72 ஞா ஞாலமும் நாற்றிசை 4,7,4 ஞான முனிக்கொரு 1,13,13 த தகை உறு 6,4,40 தக்க இன்ன 4,7,71 தங்கள் நாயகரின் 1,8,6 தங்கு பேர் 1,3,4 தங்கையும் அவ்வழி தசும்புடை 5,11,28 தஞ்சமும் 6,16,32 தஞ்சம் இவ்வுலகம் 2,12,8 தஞ்சம் நான் 6,37,31 தடக்கை 5,1,12 தடக்கையால் 2,5,12 தடங்கொள் 6,15,1 தடந்திரை 6,27,22 தடுத்து இமை 1,13,16 தடைபுகு 5,2,42 தடையேதும் 6,18,49 தணிப்பரும் 5,12,20 தணிவறப்பண்டு 6,9,26 தண் எனும் 3,16,7 தண்டம் 6,2,13 தண்டலை 1,2,4 தண்டல் 5,15,10 தண்டு அவன் 6,19,25 ததையும் 1,11,6 தத்தம் மாடங்கள் 5,8,14 தந்தது தருமமே 6,4,24 தந்திருந்தனர் 4,3,6 தந்தை வேகமும் 6,41,17 தமிழ் எனும் 1,7,13 தமையனைக் கொன்று 6,22,32 தம் உயிர்க்கு 2,1,8 தம் தாதை 3,13,24 தம் தாரமும் 5,11,18 தம்பி தலையற்ற 3,9,1 தம் நேர் 1,10,12 தம்பியர் 4,7,14 தம்பியும் 1,20,4 தம்பியென 6,16,115 தம்பியை உன்னும் 5,12,1 தம்பியைத் தழுவி 6,27,1 தம்முனைக்கொல் 5,13,53 தம் முன்னே 2,13,20 தயரதன் 1,13,18 தயரதன் தொல் 3,12,29 தயிர் உடைக்கும் 3,4,13 தரங்கவார் 1,14,10 தரளமும் 6,4,18 தராதல 6,21,8 தராவலய 3,10,33 தருக என் 6,16,38 தருமத்தின் 6,19,58 தருமநீதி 6,41,40 தருமமும் ஞானமும் 6,4,32 தருமமும் தகவும் 4,2,3 தருமமே 5,3,40 தருமம் அன்று 6,16,44 தருமம் இன்னது 4,7,62 தருமம் என்று 2,12,4 தருமம் என்று 4,10,13 தருமம் என்று அறிஞர் 6,32,14 தருவது 3,10,47 தருவனத்துள் 1,6,9 தருவனம் 6,24,11 தரை அளித்த 3,6,82 தலை அறின் 6,37,25 தலை கிடந்தன 6,40,5 தலைமையும் 4,10,3 தலையில் கொண்ட 6,3,30 தலையினை நோக்கும் 6,28,34 தலையின் மேல் 6,29,19 தழங்கிய 1,10,20 தழுவின 2,13,26 தழுவினர் தழுவினர் 6,38,6 தழுவினர் நின்ற 6,4,78 தழுவினன் 6,41,69 தளை அவிழ் 1,5,22 தள்ளரிய ,112,9 தள்ளாவினை3,14,21 தள்ளி ஓடி 1,18,7 தனயர் 2,14,58 தனி இருந்தனள் 3,6,48 தனியன் நின்றனன் 5,4,25 தனை ஒவ்வாத 1,9,2 தன் அடி 4,7,101 தன் துணை,4,11,6 தன்மைக்குத்தலை 6,15,4 தன்னை நோக்கி 5,6,29 தன்னை முனி 3,11,10 தன்னின் முன்னிய 6,2,66 தன் முன்னே 2,13,20 தா தாக்கணங்கு 1,21,5 தாக்கிய 3,15,8 தாக்கு இகல் 5,6,37 தாங்கினன் 4,6,5 தாங்குவார்6,22,36 தாதியர் 1,10,22 தாது உகு 1,1,12 தாதை அப்பரிசு 2,1,37 தாதை கூறலும் 3,4,22 தாதைக்கும் 6,26,32 தாதையை இழந்த பின் 6,24,22 தாதையைக் கொன்றான் 6,14,21 தாதையைத் தம் 6,18,27 தாதை வாயில் 2,4,119 தாமரைக் கை 6,19,40 தாமரைத் தட 6,3,2 தாமரை மலர்க்கு 4,14,12 தாமரை வதனம் 4,11,23 தாமரை வன 3,12,11 தாம் உளார் 6,31,8 தாம் உறு 3,6,24 தாம் நெடும் 6,6,11 தாம் பென 5,10,20 தாயருக்கு 6,41,61 தாயரும் அருந்தவ 2,12,26 தாயரும் கிளைஞரும் 2,4,98 தாயர் தவ்வையர் 2,4,114 தாயின் நீங்க 3,4,19 தாயின் மண் 6,3,28 தாயே அனைய 5,13,76 தாய் ஆற்று 2,4,74 தாய் உரை 2,13,28 தாய் உரைத்த 2,4,6 தாய் என உயிர்க்கு 4,7,77 தாய் எனத் தகைய 4,16,23 தாய் ஒக்கும் 1,4,2 தாய் கையில் 2,3,46 தாய் சொல் 6,41,45 தாய் தன்னை 3,1,16 தாய் பசி 2,11,53 தாய்ப் படை 6,31,29 தாய்வரம் 2,14,57 தாரகை உதிரு 3,13,36 தாரகை சுடர் 5,1,4 தாரம் மற்றொரு 4,7,52 தாரை உண்ட 6,6,9 தாரையும் சங்கமும் 2,12,21 தார் உலாம் 6,9,23 தாலி ஐம்படை 1,2,21 தாவரிய 6,17,45 தாவரும் இருவினை 1,7,7 தாவரும் திரு 5,11,21 தாவரும் நாண் முதல் 2,12,22 தாவில் மாமணி 2,3,3 தாழ் இரும் 5,7,15 தாழ்க்கிற்பாய் 6,16,74 தாழ்ச்சி 6,2,8 தாழ்தலும் 4,2,20 தாழ்வித்தீர் 4,11,41 தாழ்விலாத் 6,9,12 தாளை ஏய் 1,18,3 தாள் இணை கழல்கள் 1,15,9 தாள் இணை வீழ்ந்தான் 5,12,2 தாள் உடை 3,12,35 தாறு நாறுவ 4,5,15 தானமும் 2,1,41 தானையும் உலந்தது 5,10,22 தான் அந்தம் 6,19,53 தான் அவை 6,31,27 தான் பிரிகின் 6,27,6 தி திக்கயம் 6,2,18 திக்கயவலி 5,12,5 திங்கள் ஒன்றின் திங்கள் மேவும்1,7,1 திசையினை 6,18,55 திண் என் 5,12,21 திண்திறல் 5,15,29 திரண்ட 2,1,22 திரண்டு உயர் 5,10,16 திரிசிரா 3,7,38 திருகு நினத்தர் 3,11,2 திருகுவெம் 5,2,4 திருகுவெம் சினம் 6,29,3 திகுறும் 5,8,4 திருநகர் தீர்ந்த 2,8,18 திருநகர் முழுவதும் 6,2,3 திருநகர்க்கு 2,5,4 திருமகள் 4,6,7 திருமறுமார்பன் 6,16,65 திருவடி முடியில் 6,4,95 திருவின் 1,21,12 திருவுளம் 2,8,28 திரையார் 2,4,26 திறத்தினாலோ 3,11,5 திறத்து 3,14,8 திறந்தாள் 5,1,27 திறம்திறம் 5,13,58 திறம் தெரி 3,12,44 திறம்பினீர் 4,11,16 திறையோடும் 1,12,11 தினைச் சிலம்பு 1,2,13 தீ தீக்கொண்ட 6,26,34 தீட்டிய வாள் 5,13,34 தீண்டரும் 5,2,17 தீண்டலும் உணர்ந்த 2,2,23 தீண்டலும் மார்பிடை 4,11,69 தீண்டிலன் 5,15,36 தீண்டினான் 5,6,15 தீதறும் 4,4,4 தீதிலா ஆக 6,3,55 தீதிலா உதவி 1,9,22 தீதில் வரவாக 3,6,17 தீதென்று 1,7,23 தீத்தொழில் 6,4,57 தீமை நன்மை 5,13,30 தீ மொய்த்த 6,31,30 தீய மந்தரை 2,2,49 தீயவரோடு 1,15,5 தீயவர் தீய 5,7,17 தீயவன் 6,21,7 தீயவை 6,16,59 தீயன இராமனே 2,11,32 தீயன கொடிய 2,11,61 தீயன வகை 2,8,26 தீயிடை அருகுற 6,40,44 தீயிடைக் குளித்த 6,2,50 தீயினும் 6,16,94 தீயே எனல் 5,1,22 தீரும் இச்சீதை 6,26,31 தீர்த்தனும் 5,6,42 தீர்வரும் 6,4,81 தீவிழி 1,9,18 தீவினை ஒருவன் 6,16,61 தீவினை நல் 4,10,17 து துஞ்சினானை 2,6,14 துஞ்சுகின்றிலர் 6,2,55 துஞ்சும்போது 6,29,9 துஞ்சுவது 3,12,9 துடி எறி 2,13,8 துணர்த்த 5,3,54 துண் எனும் சொல்லாள் 2,3,43 துண் எனும் நெஞ்சினள் 2,14,46 துப்பினின் 1,14,21 தும்பி அம் 6,16,68 தும்பி அம் தொடையல் 6,16,68 தும்பியின் 2,8,21 துயில் என 5,3,4 துரகத்தார் 6,42,5 துறக்கம் உற்றார் 4,13,7 துறக்கும் தன்மை 6,40,56 துறத்தலும் 2,14,39 துறத்தல் 6,37,17 துறந்து ,2,4,107 துறவியின் 6,4,82 துறைநறும் 2,7,11 துறையும் 4,15,3 துனியின்றி 1,12,7 துன்பினை 4,2,8 துன்பு தோன்றிய 4,3,27 துன்புளது 2,8,30 துன்றுபுரி 1,22,12 துன்னலர் 5,13,78 தூ தூக்கிய 6,28,37 தூங்கின 5,10,17 தூடணன் திரிசிரா 3,7,16 தூடணன் விடுசரம் 3,8,4 தூண்ட நின்ற 3,1,21 தூண்டும் 2,2,47 தூண்தர 2,13,34 தூதர் வந்தனர் 2,11,1 தூதுவன் 6,14,1 தூநின்ற 1,12,5 தூமகேது 2,2,14 தூமக்கண்ணனும் 6,20,12 தூமவேல் 1,8,23 தூயமெல் 1,6,3 தூயவர் 6,4,51 தூயவன் 63,6,20 தூய்மையன் 3,4,2 தூளியின் 2,14,11 தெ தெண்டிரை 3,13,46 தெய்வநாயகன் 6,6,7 தெய்வப்படையும் 6,18,18 தெரிகணை மாரி 6,19,22 தெரிகணை மூழ்கலின் 3,7,34 தெரிஞ்சுற 3,3,4 தெரு இடம் 5,8,7 தெருண்ட 1,15,3 தெருள் உடை 2,3,54 தெவ் அடும் 6,41,9 தெழித்தனள் 2,2,30 தெளிந்து 4,11,50 தெள்ளிய அமுது 3,15,5 தெள்ளிய மாருதி 5,14,21 தெள்வார் 1,3,15 தெறுத்து 3,1,22 தென் தமிழ் உரைத்தோன் 5,4,19 தென் தமிழ் நாட்டு 4,13,8 தென் தலை 6,28,31 தே தேடினென் 6,16,96 தேட்டந்தான் 3,6,69 தேமன் உரிமை 6,3,60 தே மொழி 3,15,2 தேயத்தின் 6,15,17 தேயநின்றவன் 6,37,12 தேயா நின்றாய் 3,10,57 தேரினைக் கடாவி 6,28,16 தேரினை நீ 6,37,42 தேரின் ஆழி 3,13,22 தேரின் சுவடு 2,6,19 தேரும் மாவும் 2,11,16 தேரும் யானையும் 5,12,16 தேரைவன் 4,15,10 தேர் ஆயிரம் 6,19,8 தேர் இனம் 3,7,11 தேர் ஒலி 6,18,32 தேர் கொண்டு 2,6,5 தேர் திரித்தனை 6,37,30 தேர் பதினாயிரம் 6,5,13 தேர் மிசை 1,23,3 தேர் மேல் 6,18,31 தேவ தேவியர் 5,4,14 தேவ பாடையின் 1,கா.வா, 8 தேவருக்கொரு 4,2,1 தேவரும் அவுணரும் 3,12,23 தேவரும் பிழைத்திலர் 5,3,39 தேவரும் பிறரும் 5,13,42 தேவரே 6,17,28 தேவரோ 4,7,30 தேவரோடு 5,13,22 தேவர் ஆர்த்தெழு 3,8,8 தேவர் என்பவர் 5,2,3 தேவர்க்கும் தானவர்க்கும் 6,4,64 தேவர்க்கும் திசை 6,38,12 தேவர்தம் 6,24,20 தேவர் தானவர் 5,13,26 தேவாதிதேவா 6,19,52 தேவிநீங்க 4,11,11 தேவிமாரை 2,6,16 தேவியர் 1,22,1 தேவியல் நேமி 5,2,69 தேவியும் 2,5,8 தேவியை நாடி 5,13,51 தேவியை விடுதி 6,16,15 தேவிவேறு 4,9,13 தேவுமாதவன் 1,6,20 தேறிலன் 4,3,10 தேறினன் 4,3,10 தேற்றுவாய் தெரிந்து 6,31,10 தேற்றுவாய் நீஉளை 4,10,12 தேனிடை 3,12,48 தேனுடைய 3,6,57 தேனும் சாந்தமும் 5,2,5 தேனொடு 5,15,3 தேன் அடைந்த 2,14,38 தேன் உள 2,8,24 தேன் தரும் 2,14,49 தேன்படி 4,1,2 தை தையலாளை 1,18,6 தையலாள் 1,9,16 தையலை இராமன் 6,23,17 தையலைத் துணை 6,26,26 தையலை வணங்க 5,15,40 தையலை விட்டு 6,16,33 தையல் தன் 2,5,26 தொ தொகையில் 2,14,53 தொக்கதாம் 5,10,4 தொடங்கிய வேள்வி 6,28,2 தொடங்கிய வேள்வியின் 6,27,18 தொடிமணி 6,12,25 தொடுததகல் 2,5,6 தொடை ஊற்றின் 1,6,11 தொடையுறு 6,15,11 தொண்டை 2,2,22 தொல் இருள் 3,14,29 தொல் பெரும் 6,4,77 தொல்லையது 6,26,25 தொழுங்கை 6,36,1 தொழுதனர் 6,33,1 தொழுனன் 6,41,19 தொழுதுநின்றதன் 6,41,31 தொழுதுநின் றவனை 6,41,22 தொழுதுயர் 2,14,24 தொழுது வாங்கினன் 5,6,51 தோ தோகையர் 1,13,14 தோகையும் 3,15,10 தோமறு 3,12,19 தோயும் 1,2,12 தோய்ந்தும் 3,2,7 தோரண 6,11,7 தோல்பட 6,18,21 தோளையே 3,10,41 தோள் ஆற்றல் 5,2,70 தோள் கண்டார் 5,2,70 தோற்பன் 6,32,6 தோற்றம் 6,3,17 தோற்றனை 5,4,17 தோற்றிய 4,11,56 தோன்றலும் இறத்தல் 4,7,96 தோன்றலும் தொன்னகர் 3,10,15 தோன்றல் 4,11,42 தோன்றிய கூனியும் 2,2,21 தோன்றிய தோன்றல் 3,7,19 தோன்றிய புளிரை 2,13,7 ந நகை இகழ்ந்தன 2,11,6 நகை பிறக்கின்ற 6,34,17 நங்கை மற்று 6,40,60 நசை திறந்து 6,3,40 நசையாலே 3,6,61 நஞ்சம் அன்னவரை 4,11,3 நஞ்சினில் நளிர் 4,10,1 நஞ்சினும் 1,17,3 நஞ்சு அட எழுதலும் 1,8,24 நஞ்சு அனையான் 5,3,22 நஞ்சு அஞ்சும் 6,11,5 நடத்தல் அரிது 5,5,17 நடந்த கோசலை 2,4,25 நடந்தனர் 3,4,1 நடுங்கின மலைகளும் 3,12,27 நடுங்கினன் 2,12,9 நடுங்குகின்ற 6,34,5 நடுவினிப் பகர்வது 6,4,94 நடையின் நின்று 1,கா.வ.9 நண்ணின மனிதர் 6,4,6 நதியினும் 1,17,5 நதியின் 2,4,62 நந்தன வனத்து 1,3,14 நந்தன வனத்துள் 5,9,5 நந்தா விளக்கனைய 2,14,35 நந்தி சாபத்தின் 6,2,61 நந்தியம் பதியிடை 6,41,25 நந்தியம்பதியின் 2,14,73 நம் கிளை உலந்த 6,26,2 நம் குல குரவர்கள் 2,1,11 நம் குலத்து 2,14,20 நம் திருநகரே 6,10,5 நம்பி அப்பரதனோடும் 6,42,1 நம்பியும் 2,13,23 நம்பியைக் காண 1,13,19 நய்யா நின்றனென் 4,8,5 நலம் கிளர் 2,3,37 நலம் கொள் தேவரின் 2,1,32 நலம் கொள் மைந்தனை 4,7,66 நலம் துடிக்கின்றதோ 5,3,19 நல் இயல் கவிஞர் 6,16,9 நல் தாதையும் நீ 2,4,65 நல்லது சொல்லினீர் 6,4,13 நல்லவன் 2,12,18 நல்லவும் ஒன்றோ 4,17,3 நல்லவும் தீயவும் 2,1,9 நல்லறமும் மெய்ம்மையும் 6,3,58 நல்லன நிமித்தம் 4,2,22 நல்லை நல்லை 5,12,17 நல்லோய் நின்னை 5,6,33 நவையறும் உலகிற்கு 6,7,13 நவ்வி வீழ்ந்தென 2,3,4 நறவும் ஊனும் 6,34,3 நறிதா நல் அமிர்து 4,8,3 நற்கடன் இது 5,14,5 நற்கலை 3,6,7 நற்பெரும் கல்வி 6,25,3 நற்றாயினும் நல்லன் 5,1,18 நனைவரு கற்பக 1,6,2 நன் சொற்கள் 2,4,69 நன்றி ஈது என்று 6,16,13 நன்றி கொன்று 4,11,2 நன்று இது கருமம் 6,16,19 நன்று உரை செய்தாய் 6,2,31 நன்று என உவந்து 6,18,40 நன்று சொல்லினிர் 3,7,7 நன்று சொல்லினை 2,2,54 நன்று தீதென்று 4,7,70 நன்று நன்று 5,6,20 நன்று நன்றெனா 4,3,28 நன்று போர் வலி 6,15,25 நன்று மன்னன் 2,4,11 நன்றென அவனை 6,14,8 நன்னகர் அதனை 5,1,29 நன்னகர் அழிந்தது 6,2,24 நன்னுதல் நின்னை 6,41,6 நன்னெறி அறிஞ 6,10,7 நன்னெறி அறிவு 6,4,36 நன்னெறி என்னினும் 2,12,13 நா நாகம் ஒன்றிய5,6,46 நாகம் எனும் 2,3,11 நாடி ஒன்று 2,2,52 நாடி நாம் கொணருதும் 4,16,4 நாடி நான் தருவென் 6,3,42 நாடிய பொருள் 7, தனி நாடுகின்றது என் 6,8,25 நாடுதலே நலம் 4,16,13 நாடும் பல சூழல்கள் 3,14,23 நாட் செய்த 3,13,39 நாணத்தால் சிறிது 6,31,12 நாண் உலாவு 1,13,20 நாண் எலாம் துறந்தேன் 6,23,16 நாயகன் அல்லன் 4,9,8 நாயகன் வனம் 2,4,106 நாயகன் பின்னும் 2,6,8 நாயகன் தன்மை 6,26,24 நாரம் கொண்டார் 3,11,6 நாரணன் 2, தனி நாரியர் இல்லை 2,3,17 நாவின் நீத்து 2,11,12 நாளுக்கு எல்லையும் 5,12,18 நாள் மலர்த் தெரியல் 6,10,9 நாறு தன்குல 6,12,1 நாறு பூங்குழல் 1,17,9 நாற்கடல் உலகமும் நான நெய் 6,34,4 நானிலம் அதனில் 5,8,3 நான் உனை இரந்து 6,27,21 நி நிகழ்ந்ததை நினைத்ததிலை3,11,9 நித்திய 1,14,24 நிந்தனை நறவமும் 6,4,61 நிரம்பினான் ஒருவன் 4,9,17 நிருதர் தம் 3,6,30 நிருதாதியர் வேர் 3,12,61 நிருதித் திக்கில் 6,37,20 நிருப நின்குல 2,1,23 நிலத்து இயல்யு 6,2926 நிலமகட்கு 1,16,4 நிலம் அரங்கிய 6,8,2 நிலம் செய்தவம் 1,6,5 நிலம் செய்து 6,28,4 நிலையிலா உலகினிடை 3,10,2 நிலையில் சுட 6,18,46 நிலையெடுத்து 3,6,53 நில்லடா சிறிது 6,19,13 நில்லடீ இ3,6,49 நில்லா உலகின் 3,11,22 நில்லும் நில்லும் 3,1,6 நிறப் பெரும் 2,5,15 நிறைமதி 1,14,16 நிறையின் 2,14,52 நிற்கின்ற செல்வம் 4,7,87 நிற்றி ஈண்டு 2,8,11 நினைந்த முனி 1,13,9 நினைப்பும் உயிர்ப்பும் 6,23,4 நின்கண் 2,4,60 நின் மகன் 2.3.24 நின்ற கொடை 2.13.14 நின்ற பேர் 4.7.13 நின்றவள் 3.6.41 நின்றவனை 3.3.22 நின்றவன் தன்னை அன்னான் 6,14,16 நின்றவன் தன்னை 2,3,50 நின்றவன் தன்னை நோக்கி 6,3,48 நின்றவன் தன்னை நெருப்பு6,16,80 நின்றவன் நிலை 6,15,34 நின்றன திசைக்கண் 5,9,7 நின்றனர் செய்வது 4,14,4 நின்றனள் 3,6,10 நின்றனள் ஆசை 3,14,4 நின்றார்கள் 6,18,50 நின்றாள் 5,1,25 நின்றான் நெஞ்சின் 2,8,9 நின்றான் எதிர் 3,2,2 நின்நிலள் 3,6,41 நின்று இசைத்து 5,13,36 நின்று உயிர் 2,6,4 நின்று தொடர்ந்து 2,3,6 நின்று பல் உயிர் 3,14,6 நின்றும் சென்றும் 3,11,8 நின்றே நெறி 1,24,3 நின்னால் இயல் 3,2,3 நீ நீ அயன் 6,2,22 நீ ஆதி 3,1,15 நீ இனி என் 5,15,54 நீ இனும் 2,11,39 நீ எனை 6,7,1 நீக்கம் 1,10,34 நீ செய்கை 3,15,22 நீட்டிய நாவினர் 4,14,2 நீண்ட மால் வரை 2,10,1 நீண்ட முடி 5,5,18 நீண்ட வாள் 5,13,27 நீண்டான் 2,4,59 நீதியார் 4,3,3 நீதியால் 6,16,113 நீதியில் 4,17,5 நீதியும் 6,16,53 நீத்தமும் 3,6,8 நீத்தாய் 5,11,16 நீந்தரும்6,40,46 நீப்பு உண்ட 5,12,11 நீயிதுஎண்ணினை 6,41,39 நீயிரே நினைவின் 4,17,9 நீயும் நின் 6,17,36 நீரிடை உறங்கும் 1,2,5 நீரினைக் கடக்க 6,26,4 நீரும் நிலனும் 6,2,36 நீர் உள எனின் 2,4,82 நீர் உளதனையும் சூழ்ந்த 6,29,24 நீர் உளதனையும் 6,27,31 நீர் எலாம் 4,11,21 நீர் கெழு 5,14,13 நீர்க் கோல 6,16,69 நீர் திரை 1,15,4 நீர்த் தரங்கங்கள் 6,37,26 நீர் புகும் 3,15,9 நீல கண்டனும் 6,2,63 நீல மாமணி 3,6,1 நீலம் காட்டிய 6,29,8 நீல வல்லிருள் 2,14,8 நீலனும் குமுதனும் 5,15,18 நீலனை நெடிது 5,15,52 நீல் நிற 5,4,2 நீறாம் மேருவும் 4,8,7 நீறு அணிந்து 1,1,2 நு நும் முனை வாலின் 6,16,81 நூ நூபுரமும் 3,6,15 நூலினால் 6,2,38 நூல் இயற்கையும் 4,7,51 நூல் பெருங்கடல் 5,2,67 நூல் மறைந்து 6,18,24 நூல் வலி 6,12,23 நூற்கடல் 1,23,26 நெ நெடுந்தகை 6,14,15 நெடும்பல் மால் 6,8,19 நெட்டிலைச்சரம் 3,11,34 நெய் அடை தீ 4,10, 11 நெய் திரள் 1,10,4 நெய்ந்நிலைய3,10,21 நெய்யுடை 4,7,100 நெய் வளர் 1,22,4 நெருக்கி உள் 1,10,24 நெருக்குடை 6,30,3 நெறிந்து நிமிர் 4,14,13 நெற்றியின் அரக்கர் 6,9,1 நெற்றியின் நின்று 6,16,100 நென்னல் கண்ட 6,1,4 நே நேடி நூல் 6,7,12 நேமிப் பெயர் 6,27,8 நேமியும் குலிச 6,28,25 நேமியோ குலிசியோ 5,13,35 நேர் ஒடுங்கல் 1,15,1 நை நைவளம் 1,22,13 நைவீர் 2,13,39 நோ நோக்கிய 1,10,15 நோக்கினன் அவர் 1,7,9 நோக்கினன் நின்றனன் 4,16,19 நோக்கினார் நோக்கி 6,3,51 நோக்கினால் 2,12,3 நோக்கினான் கண்டான் 6,24,1 நோக்கினான் நெடிது 4,3,9 நோக்கின் தென் 6,41,26 நோம் உறும் 1,10,19 நோயும் இன்றி 2,6,11 ப பகலவன் வழி 6,4,29 பகை உடை அரக்கர் 3,11,29 பகைப் புலத்தோர் 6,4,65 பகைப் புலன் அணுகி 5,13,70 பங்கயச் செல்வியை 3,6,12 பங்கயத்து ஒருவனும் பச்சிலை கிழங்கு 4,11,64 பச்சை வெம் 6,28,19 பஞ்சின் மெல் அடியாள் 4,7,94 பஞ்சு அரங்கு 1,13,21 பஞ்சு எரி 6,29,22 பஞ்சு ஒளி 3,6,13 பஞ்செனச் சிவக்கும் 6,4,80 படம் கிளர் 1,5,23 படர் எலாம் 2,13,42 படர்ந்தொளி 1,10,27 படிந்தன மரம் 6,12,7 படியின் மேல் 1,7,6 படை ஒழிந்திடுக 1,5,25 படைக்கல விஞ்சை 6,28,13 படை துறந்து 6,37,29 பட்டதும் உண்டே 6,34,10 பணி மொழி 2,8,32 பண்கள் வாய் மிழற்றும் 1,2,6 பண்டிதர் பழையவர் 6,2,6 பண்டே உலகேழினும்3,10,58 பண்டையில் நாசி 3,14,15 பண்தரு கிளவி 5,15,20 பண் நிறை பவள 6,16,15 பண் பெற்றாரோடு 6,17,19 பண்புற 3,6,31 பதவியல் மனிதரேனும் 5,4,28 பத்தினி தன்னை 6,26,35 பத்துள தலையும் 5,4,16 பந்தியில் பந்தியில் 6,16,34 பந்தினை இளையவர் 1,2,17 பம்பி மேகம் 1,1,3 பயிலும் காலம் 6,22,39 பயில் குரல் 4,14,8 பரக்க என் பகர்வது 3,12,8 பரதனும் இளவலும் 1,5,30 பரதனும் பின்னுளோனும் 4,16,9 பரதனை இளைய 6,43,19 பரத்தின் 2,14,1 பரவ கேள்வியும் 2,14,55 பராவரும் 2,2,26 பரிதி வானவனும் 2,6,2 பரித்த செல்வம் 5,3,14 பரிபட்டு நின்று 6,18,51 பரிவு அறு 1,24,19 பரிவு இகந்த 2,4,110 பருகிய நோக்கெனும் 1,10,16 பருஞ்சு இறை 3,13,18 பருதி வானவன் 1,7,5 பருந்துணப் பாட்டி 6,14,27 பருப்பதம் வேவது 6,7,7 பருவரை புரை 5,8,10 பல் இயல் உலகுறு 6,15,12 பல் தொடுத்தன்ன 2,8,3 பல் பதினாயிரம் 1,23,12 பல்லாயிரம் இருள் 3,7,25 பல்லும் வாயும் 6,291 பல் வகைத் துறையும் 3,13,49 பழி இது பாவம் 6,17,7 பழிப்பறு மேனி 6,19,65 பழியிலது உரு 5,11,11 பழியினை உணர்ந்து 6,4,7 பழுமரம் பறிக் 6,8,20 பளிக்கு மாளிகை 5,2,8 பளிக்கு வேதிகை 5,2,47 பள்ள நீர் அயோத்தி 5,4,29 பள்ளம் போய்ப்புகும் 6,12,3 பறவையின் குலங்கள் 6,19,62 பற்கொடும் நெடும் 6,15,5 பற்றி ஆன்ற 4,7,55 பற்றித் தாளொடு 5,8,11 பற்று அவா 1,7,3 பற்று உறு 2,11,26 பற்றுதிர் 5,14,15 பற்றுவான் இனி 3,11,32 பனி நின்ற 3,1,14 பனி மலர் 6,27,32 பனையவாம் 2,1,43 பன்னாகர் சென்னி 6,19,50 பன்னு நீதிகள் 6,39,6 பன்னெடும் காலம் 6,42,14 பா பாகத்தில் ஒருவன் 3,10,44 பாகம் அல்லது 5,12,19 பாகொன்று குதலை 14,16,27 பாக்கியம் 2,2,35 பாசத்தால் ஐயன் 6,19,37 பாசிழை 1,17,2 பாடல் நீத்தன 2,11,9 பாடினான் திரு 6,40,4 பாடுவார் பலர் 5,2,6 பாதவம் ஒன்று 5,15,16 பாந்தளின் மகுட 1,5,9 பாபமே இயற்றினாரை 6,7,14 பாம்பிழைப் பள்ளி 6,9,9 பாயிருள் சீக்கும் 6,7,6 பாய்ந்தது நிருதர் 6,18,23 பாய்ந்தனன் 6,24,14 பார மாமதில் 6,14,4 பாரம் நீங்கிய 6,6,2 பாரில் செல்வது 6,35,5 பார்தனில் பொறையின் 6,7,9 பார்த்தனள் சானகி 5,14,20 பார்த்தான் நெடு 6,27,29 பார்மிசை வணங்கி 6,14,11 பாலமை தவிர் நீ 4,7,97 பாவமும் அரும் - துயரும் 2,3,47 பாவமும் நின்ற 2,13,12 பாவம் தோன்றிய 6,30,7 பாவியராம் இவர் 3,14,16 பாவையும் அதனை 3,12,67 பாழிப் புயம் 1,24,4 பாழிய பணைத்தோள் 5,5,23 பானல் அம் 1,16,5 பி பிடி உண்டார்களும் 5,12,15 பிடி எலாம் மதம் 3,7,22 பிடித்து நல்கு 3,12,2 பிணி அரங்க 1,12,3 பிரிந்துறை 4,10,2 பிரிபவர் யாவரும் 3,14,28 பிரிவு என்னும் பீழை 6,17,39 பிலம் புக்காய் 4,7,53 பிழைத்தது 1,9,20 பிழையாதது இது 6,18,30 பிளந்தது தூணும் 6,3,43 பிள்ளைச் சொல் 3,13,32 பிள்ளை போல் பேச்சினாளை 3,10,45 பிள்ளைமை விளம்பினை 6,2,42 பிறத்தல் என்று 2,5,13 பிறந்த நாள் 6,4, 71 பிறந்து இறந்து போய் 2,2,41 பிறப்பினும் துணைவனை 6,40,28 பிறர் மனை எய்திய 5,5,5 பிறைக்கடை எயிற்றின 5,10,12 பின் இணை 6,41,71 பின் குற்றம் 2,4,61 பின் நின்றார் இனையர்3,11,28 பின் நின்றார் முன் 6,18,39 பின்னரும் அப்பெரியவன் 3,4,25 பின்னரும் அவனுக்கு 6,43,9 பின்னரும் கூறுவான் 4,16,12 பின்னரும் வணங்கி 6,19,44 பின்னரும் விளம்புவான் 4,11,72 பின்னவன் உரையினை 3,13,10 பின்னும் ஓர் வரம் 6,40,69 பின்னும் தம்பியை 2,10,19 பின்னும் பகர்வாள் 2,4,78 பின்னும் வீடணன் 6,2,70 பின்னை ஏதும் 3,1,13 பு புகல் இடம் 2,4,97 புக்க நகரத்தினிது 4,14,11 புக்க வழிக்கும் 5,4,31 புக்கார் அரசன் 2,6,21 புக்கார் ஒற்றர் 5,9,16 புக்கு அடைந்த புரவு 6,16,112 புக்கு அவளோடும் 1,9,17 புக்கு இவ்வூர் 6,26,28 புக்கு உறை 2,9,14 புக்கு எரி மடுத்து 6,13,4 புக்கு நின்று 5,2,66 புகை உடைத்து 4,9,4 புண்ணியம் 2.1.24 புண்ணியம் புரிந்தோர் 1,3,3 புதிய கூற்றனையாள் 1,7,26 புத்தான கொடு வினையோடு 1,5,10 புத்திரர் குருக்கள் 6,4,9 புயல் தரு மத 4,2,18 புரசை மாக்கரி 2,1,27 புரந்தரன் பகை 3,4,6 புரந்தரன் பகை போயிற்று 6,29,5 புரம் பற்றிய போர் 3,13,6 புரியும் தன் மகன் 2,2,46 புலம்புறு 2,11,50 புலிதானே 3,6,54 புலையின் வாழ்க்கை 6,8,13 புல்லிய முறுவல் 5,8,2 புல்லினன் 2,14,31 புல் துனை நீரின் 3,12,55 புவி புகழ் சென்னி 4,14,7 புவிப்பாவை 2,4,51 புவியினுக்கு 3,5,1 புழுங்கிய வெம் சினத்து 6,16,91 புழைத்த வாளி 3,11,37 புள்ளி மால் வரை 1,1,4 புள்ளினொடு வண்டும் 5,7,8 புறத்தினி உரைப்ப 3,11,17 புறம் எலாம் 1,19,5 புறவு ஒன்றின் 6,32,16 புறவொன்றின் 1,5,14 புற்றின் நின்று 6,31,2 புனமயில் சாயல் 3,12,21 புனைந்திலன் 2,4,2 புன் தொழில் புலை 6,22,31 புன் மக கேட்டி 6,17,30 பூ பூசலின் எழுந்த 1,10,5 பூண்ட பேர் 2,5,7 பூண்ட மாதவன் 2,9,16 பூண்ட மானமும் 3,14,5 பூண்டாள் கற்புடை 5,6,34 பூண்டொரு பகை 6,29,15 பூத நாயகன் 1,9,3 பூத நாயகன் நீர் 6,14,17 பூதம் அத்தனையும் 3,1,4 பூதம் ஐந்தினும் 6,3,6 பூதரம் அனைய 6,35,1 பூதலத்தரசை 1,24,14 பூதலப் பரப்பின் 5,13,69 பூ நிரைத்தும் 1,1,17 பூ நெருங்கிய 4,5,14 பூப் பொதி அவிழ்ந்தன 3,12,17 பூமலர்த் தவிசை 6,43,12 பூமழை பொழிந்து 6,18,41 பூரியர் 2,9,1 பூவரு பொலன் 2,1,4 பூவரும் அயனொடும் 6,2,1 பூவிரி 2,13,1 பூவிலோன் 3,6,18 பூவில் திருவை 6,3,53 பூவின் மேல் இருந்த 6,17,31 பெ பெண் என உட்கும் 2,3,13 பெண்ணில் பேர் எழில் 6,3,5 பெண்ணை வன் செறும் 2,8,4 பெண் தனி 3,13,35 பெண்பால் உரு 3,10,61 பெண்பால் என 5,1,26 பெண்பால் ஒரு நீ 5,1,23 பெண் பிறந்தாள் 6,40,62 பெண்மையும் பெருமையும் 6,40,35 பெண் வழி 1,10,25 பெய் கடலை 1,13,23 பெய் தவத்தின் 6,16,88 பெய்யுமே மழை 6,40,50 பெய்யும் மாரியால் 1,6,14 பெரிதும் 3,4,29 பெருத்த 1,21,10 பெருந்தவம் முயன்று 6,9,4 பெருமகன் என் வயின் 2,1,20 பெருமகன் என் வயின் பிறந்த 2,14,22 பெருமையும் வண்மை 6,12,19 பெருமையோர் ஆயினும் 64,6,8 பெரும் குலா உறு 3,6,85 பெரும் சிறை 6,26,18 பெரும் தடங்கண் 1,2,14 பெரும் தவம் இயற்றி 6,4,87 பெருந்திசை அனைத்தையும் 4,11,73 பெருந்திறல் அனுமன் 6,24,23 பெறல் அரும் திரு 4,11,1 பெறுதியே எவையும் 6,16,18 பெறுவதன் 2,14,40 பெற்ற தாயரும் 5,3,10 பெற்றுடைய பெரு 2,4,47 பெற்றுடைய மண் 6,4,63 பே பேசலன் 3,6,26 பேசினனுக்கு எதிர் 3,14,17 பேடிப் போர் 3,6,71 பேணும் உணர்வே 5,5,2 பேதாய் பிழை 3,13,3 பேதியாது 3,1,1 பேதைப்பிள்ளை 6,3,19 பேதையர் எதிர்குவர் 4,7,8 பேதை மானுட 6,9,30 பேதைமை உரைத்தாய் 6,289 பேய மன்றினில் 5,14,4 பேயனேன் என் 6,5,14 பேர் உடை அவுணர் 6,3,44 பேர்த்தன மலை சில 6,8,4 பேர்வுறு கவியின் 6,9,7 பை பைந்தொடி ஒருத்தி 2,4,83 பைந்தொடிக்கு 4,10,15 பைப் பயப் பயந்த 5,15,48 பொ பொங்கிப் பரந்த 6,1,2 பொங்கும் படை 1,24,6 பொங்கு வெம் 3,13,31 பொசிவுறு பசும்பொன் 5,2,32 பொடித்தன உரோமம் 5,15,49 பொடித்து எழுந்து 5,14,3 பொடியுடைக் கானம் 1,7,30 பொய்கை அம் 1,14,17 பொய்க்கரி 2,11,54 பொய்த்தல் இல் 4,9,16 பொய்ந்நின்ற நெஞ்சின் 3,10,59 பொய்ம் முறை 2,8,23 பொய்ம் முறை அரக்கர் 5,7,14 பொய்யிலாதவன் 4,3,22 பொய்யினும் பெரிய 6,18,44 பொரக் கரு நிறநெடு 6,15,15 பொரு களிறு 1,14,23 பொருதமை புண்ணே 5,15,7 பொரு திறத்தானை 3,6,32 பொருந்திய மகளிரோடு 1,2,8 பொருந்து பொன் 6,342 பொருமினான் அகம் 6,22,35 பொருவரிய 3,1,17 பொருவரு வேலை 4,17,12 பொருவில் 2,4,105 பொருளும் காமமும் 5,13,59 பொருள் உடை அவ்வுரை 4,11,71 பொலிந்தது ஆங்கு 6,11,2 பொழிந்த நெய் 1,13,10 பொழியும் 2,7,8 பொழுது நீட்டிய 6,37,27 பொறிக் கொடும் 6,19,24 பொறியின் யாக்கையை 4,7,67 பொறையிருந்து ஆற்றி 5,5,3 பொற்பின் நின்றன 1,2,22 பொற்புடை 3,6,40 பொற்றொடி 1,14,25 பொன் அரும் 1,19,16 பொன் ஆர் 2,4,40 பொன் உடை 1,24,15 பொன் உருவ 3,6,80 பொன் கொண்டு 5,2,1 பொன் தாழ் குழையாள் 6,23,3 பொன் திணி பொலன் 5,6,2 பொன் திரள் 1,23,13 பொன் நின்று 5,8,6 பொன் நெடும் 1,7,29 பொன் பால் பொருவும் 4,1,10 பொன் பிறங்கல் 5,6,12 பொன் மயமான 3,10,54 பொன் மா மௌலி 4,9,1 மொன்னினும் மணியினும் 6,2,2 பொன்னின் ஒளி 1,22,9 பொன்னின் சோதி 1,10,9 பொன்னின் முன்னம் 2 4 35 பொன்னை ஏர் 1,9,14 பொன்னைத் தீயிடை 6,40,61 பொன்னைப் போல் 3,6,34 போ போகின்றாளை 2,4,24 போக்கினீர் 3,6,77 போதகம் 1,3,6 போதமும் பொருந்து 5,13,43 போதல் செய்கு 6,8,18 போதி என் 2,2,42 போதி நீ ஐய 6,16,78 போயின குரங்கினை 6,2,14 போய் இனி மனிதரை 6,2,17 போய் இற்றீர் 5,13,56 போய் வரும் கருமம் 5,15,1 போர் அவன் புரிந்த 6,19,39 போர் இயற்கை 5,2,58 போர் என்ன 1,17,7 போர் மகளை 6,38,4 போர் முன் எதிர்ந்தால் 4,17,4 போவது புரிவல் யான் 3,12,14 போர்ந்தன யான் போழ்ந்தன 5,15,25 ம மகன் வயின் 2,1,40 மக்களைக் குரவர் 6,16,60 மக்களைச் சுமந்து 6,18,53 மக்களை மறந்தனர் 2,4,100 மங்கல அணியை 4,11,27 மங்கல கீதம் 6,42,9 மங்கலம் நீங்கி 6,23,14 மங்கலம் பொருந்திய 6,6,10 மங்கை அஃது 3,12,41 மங்கை அம்மொழி 2,4,3 மங்கை அழலும் 6,23,2 மங்கையர் இவளை 4,13,11 மங்கையர்க்கு 2,7,10 மங்கையர் திறத்து 3,10,8 மங்கையர் பொருட்டால் 4,9,7 மங்கையர் மேனி4,11,40 மங்கையைக் குலத்து 6,29,25 மஞ்சனம் விதிமுறை 4,11,61 மஞ்சினில் திகழ்தரும் 6,8,7 மஞ்செனத் திரண்ட 4,2,10 மஞ்சொக்கும் அளக 3,10,39 மடங்கள் போல் 1,6,4 மடந்தை 2,10,6 மடித்த பில வாய்கள் 3,10,25 மடித்த வாயினன் 6,11,8 மணமும் இல்லை 4,7,65 மணியும் பொன்னும் 1,1,6 மண் ஆள்கின்றார் 2,3,30 மண் உருத்து 1,7,14 மண் உறச் சேற்றுள் 6,8,8, மண் உறுசுடர் 1,23,10 மண் உறு முரசினம் 2,1,2 மண் குலைகின்றது 6,26,17 மண் செய்த 2,4,43 மண்டல மதியின் 6,40,19 மண்டலம் கிழிந்த5,7,23 மண்ணிடை உயிர் 1,4,5 மண்ணிடை விழுந்த 4,16,26 மண்ணில் கண்ட 5,13,73 மண்ணினை எடுக்க 6,18,56 மண்ணின் நோக்கரு 3,7,5 மண்ணின் மேல் அவன் 3,13,23 மண்ணொடும்கொண்டு 5,15,35 மண்மேல் வைத்த 6,22,40 மதவியல் குரக்கு 4,7,89 மத்தச் சின மால் 6,18,45 மத்துறு தயிர் 5,6,40 மந்தரைக் கூற்றமும் 2,12,27 மந்தரை பின்னரும் 2,2,36 மந்தியும்2,10,13 மந்திரக் கிழவரும் 5,11,5 மந்திரக் கிழவர் 6,43,2 மந்திரக் கிழவர் 1,2,1 மந்திரச் சுற்ற 6,16,4 மந்திரத் தனி 4,11,12 மந்திர வேள்வி 6,27,20 மயங்கினான் வள்ளல் 6,19,35 மயிரின் கால் 6,37,28, மயிலும் பெடையும் 3,14,9 மயில் உடைச் சாயலாளை 3,10,52 மயில் போல் 1,17,6 மயில் முதல் 4,2,6 மரகதச் சயிலம் 6,42,11 மரங்கள் போல் நெடு 3,7,10 மரபுளி 3,15,1 மரம் அடங்கலும் 5,2,2 மரன் ஏயும் 3,6,58 மரன் படர் வனத்து 6,2,28 மராமரம் 1,13,28 மருக்கிளர் தாமரை 6,5,9 மருக்கொள் தாமரை 6,3,4 மருங்கிலா 1,10,17 மருங்குடை வினையமும் 6,5,11 மருந்தனைய தங்கை 3,10,34 மருந்தினும் இனிய 6,40,33 மருந்து அடர் 6,40,38 மருந்து தேவர் 6,9,24 மருந்தே நிகர் 6,19,7 மருவினிய 3,4,17 மருவொன்று 3,6,33 மருள் மயங்கு 1,21,9 மலரின் மேல் இருந்த 6,16,70 மலைகளும் மரங்களும் 3,3,1 மலைகளை நகும் 5,10,7 மலைந்த போது 4,7,25 மலையே போல்வான் 4,15,2 மலையே மரனே 3,12,59 மல்லன் மா நகர் 4,13,16 மல்வலான் 1,13,34 மழுவின் வாளினன் 5,3,15 மழைக்குலம் கதறின 6,6,15 மழைத்த விண் அகம் 4,16,1 மள்கல் இல் 4,10,16 மறங்கிளர் செருவில் 6,16,64 மறந்தனென் இதுவும் 5,3,21 மறந்தாயும் ஒத்தி 6,19,55 மறந்திலள் 2,2,33 மறந்திலன் கவியின் 4,11,37 மறப்பிலள் 1,19,14 மறம் கிளர் செரு 6,16,36 மறம் தரு சிந்தையன் 6,4,31 மறம் திறம்பல் 4,7,61 மறம் திறம்பாத 5,4,18 மறிகடல் குடித்து 6,26,72 மறுத்த தம்முனை 6,16,45 மறுத்தனை என 3,11,15 மறுமை 6,6,4 மறைகளே தேற 6,28,24 மறைந்துபோய் நின்ற 6,22,24 மறையவர் வடிவு 6,41,54 மறையவர் வாழி 6,42,15 மறையின் 2,14,5 மற்றவன் 2,1,25 மற்றிலேன் எனினும் 4,7,84 மற்றினி உதவி 4,7,81 மற்றினி உரைப்பது 4,3,17 மற்று இதன் 6,41,7 மற்று இலது ஆயினும் 6,2,10 மற்று இனி உரைப்பது 6,4,69 மற்றுள செய்வன 1,23,22 மற்றெலாம் நிற்க 6,16,109 மற்றெல்லாம் நிற்க 6,9,29 மற்றையோர்களும் 6,24,31 மற்றையோர்க்கும் 6,38,16 மற்றையோர் தமையும் 6,19,32 மற்றொருத்தன் 4,7,50 மனக்கொடு அன்ற 6,2,60 மனைக்கண் வந்து 6,9,21 மனையின் 2,7,7 மன் இழைத்தலும் 6,41,38 மன் நெடுங்கழல் 2,2,3 மன்மதனைஒப்பர் 3,10,28 மன்றலின் 1,23,16 மன்றல் அம்குழல் 6,35,8 மன்னர் இன்றியே 2,11,68 மன்னர் தொல் 6,40,52 மன்னவ மருகாந்தரம் 6,7,11 மன்னவர் தருதிறை 1,3,11 மன்னவர் வருவாரும் 1,23,2 மன்னவன் இருக்க 2,14,62 மன்னவன் தேவி 5,3,26 மன்னவன் பணி 2,3,55 மன்னா நீ நின் 3,11,4 மன்னின் பின் 6,41,36 மன்னும் பல் உயிர் 1,7,24 மா மாகந்தமும் 2,7,4 மாகவான் நகரம் 6,26,33 மாசுண்ட மணி 5,3,38 மாட கூடங்கள் 5,2,45 மாடு இருந்தவர் 6,29,2 மாடு நின்ற 5,3,1 மாடு பற்றி 4,7,68 மாட்சியின் அமைந்தது 6,4,12 மாணிக்கப் பலகை 6,42,7 மாண்டனள் அவள் 5,15,3 மாண்டனன் 2,11,38 மாண்டாய் நீயோ 6,22,41 மாண்டாரை உய்விக்கும் 6,24,8 மாண்டார் மாண்டார் 3,121,7 மாண்டேனே அன்றோ 5,13,25 மாண்டேன் எனினும் 5,5,37 மாண்பு இறந்த 5,15,39 மாதயாவுடைய 3,1,12 மாதரார்களும் 6,30,89 மாதரைக் கோறலும் 6,4,59 மாதர் இன்னணம் 1,21,11 மாதர்கள் கற்பின் 2,3,34 மாதவத்து 3,3,11 மாதவரை 1,22,14 மாதவர்க்கு 2,4,21 மாதவர் மறை 6,42,10 மாதவன் தனை வரன்2,1,31 மாதிரப் பொருப்போடு 4,2,15 மாதிரம் எவையும் 6,16,3 மாதிரம் ஒன்றி 6,30,5 மாத்தடம் திசை 6,5,3 மாத்திரை 1,13,29 மாபெரும் பக்கனோடு 6,20,2 மாப்பிறழ் நோக்கினார் 6,25,6 மாப் போரில் 3,6,75 மாமுனிவர்க்கு 2,13,16 மாயப் பிறவி 3,15,23 மாயமான் விடுத்த 6,23,9 மாயமேல் மடியும் 3,11,27 மாயிரு விசும்பின் 1,9,13 மாயையால் மதி 4,3,5 மாயையிம்மா ன் 6,24,18 மாய்ந்தவர் மாய்ந்தவர் 1,8,13 மாரர் உளரே 3,10,31 மாரி ஆக்கிய 6,20,19 மாருதி இன்னம் சொல்லின் 6,14,7 மாருதிக்கு இல்லை 6,23,13 மாருதி தன்னை 6,43,10 மாருதி மாற்றம் 4,11,40 மாருதி முதல்வர் 6,27,5 மாருதியும் மற்றவள் 4,14,20 மாருதியைநோக்கி 36,36,7 மாருதி வந்து மாருதி வினைய 6,4,67 மாலியைக் கண்டேன் 6,31,13 மாலும் அக்கணம் 1,7,27 மாலையும் சாந்தும் 5,4,3 மாலை வந்து 2,10,15 மாலை வாய் 2,8,20 மால் பெரும் கடகரி 4,7,1 மாவொடு மரமும் 5,1,10 மாள்வதே பொரு 3,11,39 மாளும் என்றே 2,11,42 மாற்றரும் தட 6,15,32 மாற்றம் அஃது 2,2,28 மாற்றம் அஃது உரைத்த 4,2,12 மாற்றம் என் இனி 3,11,38 மாற்றம் என் பகர்வது 3,12,6 மாற்றம் யாது 1,13,1 மானத்தான் ஊன்ற 6,13,1 மானமும் பாழ்பட 6,27,17 மானம் நேர்ந்து 1,1,5 மானவள் உரைத்த 3,12,45 மானிடன் அல்லன் 6,26,11 மானின் நோக்கியர் 1,18,9 மானுடர் இருவரை 6,16,37 மானுயர்த்திரு 5,2,64 மான் இனம் 1,21,1 மி மிக்க வேந்தர் 1,18,5 மின் இலைய வேலே 6,17,40hனே மின் உருக் கொண்ட 4,2,21 மின் என விளக்கென 1,3,9 மின் ஒத்த 2,4,55 மின் குலாம் எயிற்றர் 6,9,10 மின் திரண்டு 3,12,46 மின் நகு மணி 6,4,19 மின் நேர் எயிற்று 5,5,36 மின் பொருவு 2,3,45 மின்மினி ஒளி 6,4,86 மின்னுடன் 2,5,24 மின்னும் பன்மணி 6,13,30 மின்னை ஏர் 6,43,14 மீ மீட்டவர் உரைத்திலர் 5,8,22 மீட்டும் உரை மீட்டும் ஒன்று 4,11,14 மீட்டும் ஒன்று 3,12,65 மீட்டும் வந்து 6,19,48 மீண்டுஉரை விளம்பல் 5,5,26 மீண்டு உரை 5,5,19 மீண்டும் எய்தி 2,11,14 மீனாய் வேலையை 5,11,17 மீனுடைய நெடும் 6,2,47 மீன் கொண்டு 3,10,46 மீன் பொலி 2,5,2 மீன்நீர் 2,6,17 மு முகந்தனர் 1,14,2 முக்கணான் படையும் 6,27,2 முக்கணான் முதலினோரை 6,29,21 முக்கண் நோக்கினன் 5,2,49 முக்கோடி வாழ்நாளும் 6,37,39 முடிப்பன் இன்றொரு 3,9,6 முடிவுற இன்னன 2,5,11 முடுக்கினன் தருகென 6,8,6 முட்டிய செருவில் 6,28,5 முட்டி வான் முகடு 4,5,4 முத்தமிழ்த் துறையின் 1,கா.வ. 6 முத்தம் வாள் முறுவல் 6,25,9 முத்தலை எஃகன் 5,13,71 முத்தன்மை மொழியல் 6,25,7 முதல்வன் 2,11,25 முத்திருத்தி 3,1,2 முத்துருக் கொண்டு 6,41,37 முத்தேவரின் மூல 3,13,5 முந்தி வந்து 6,16,48 முந்தி வந்து உலகு 6,37,37 முந்திய எம்பி 4,16,25 முந்தி வந்து இறைஞ்சி முந்து இயம் பல 5,10,6 முந்து முக்கனியும் 1,2,10 முந்தும் சுனை 3,12,63 முந்தே என் தாதையை 6,21,3 முந்தை வானவர் 6,3,12 முப்பரம் பொருளுக்குள் 1,23,11 முப்புரம் எரித்தவனும் 6,36,4 மும்மை சால் 4,7,33 மும்மை புரி 1,15,6 முமமையாம் உலகம் 5,5,24 முயல் கரும் கறை 5,2,59 முரசறை செழும் கடை 1,5,5 முரண் உடை 4,3,15 முரண் தடம் 6,27,30 முரண் புகு தீவினை 6,4,35 முல்லையும் 2,4,115 முல்லையைக் குறிஞ்சி 1,1,10 முழங்கு திண் 1,3,12 முழவினில் வீணையில் 3,10,19 முழவு எழும் 2,4,102 முழுமுதல் கண்ணுதல் 5,10,13 முழுவதும் இவ்வுரு 5,5,33 முளை அமைதிங்கள்6,16,8 முள்பு நின் 4,7,75 முறுவல் வாள்முக 6,22,11 முறை தெரிந்து 2,12,6 முறைமை அன்றென்பது 2,4,4 முறைமையால் 2,5,19 முறையுடை எம்பியார் 4,16,15 முற் பயந்து 2,3,38 முற்றிய அரக்கர் 3,15,4 முற்றிய குரிசிலை 6,4,23 முற்றும் உளதாம் 6,2,33 முற்றும் நீர் உலகம் 4,17,10 முனியும் முனியும் 2,4,29 முனியும் தம்பியும் 1,11,2 முனியொடு மிதிலை 5,3,20 முனிவரர் வாசகம் 6,40,22 முனிவரும் கருணை 6,16,66 முனிவரும் மறை 4,15,6 முனிவரே முதல்வர் 6,31,22 முனிவரோடு 3,6,29 முனிவர் வந்து 3,9,11 முனிவர் வானவர் 6,41,15 முனிவனும் 2,14,68 முனைவரும் 6,2,5 முனைவரும் தேவரும் 4,3,4 முன் உலகு அளித்து 1,7,18 முன் உனக்கு இறைவர் 6,16,17 முன் நின்றார் 6,32,8 முன் பிறந்த உன் 6,22,16 முன்பு நான் அறிகிலா 4,13,14 முன்பு நின் தம்பி முன்பு நின்று 2,5,14 முன்பு பெறப் பெற்ற 6,3,57 முன்புறக் கண்டிலென் 6,4,14 முன்னர்க் கோசிகன் 2,4,20 முன்னர் வந்துதித்து 2,14,60 முன்னவன் 2,13,11 முன்னும் நீ சொல்லிற்று 4,11,43 முன்னுறப் பணித்தவர் 2,14,67 முன்னே கொல்வான் 5,6,35 முன்னே நெடு 1,24,1 முன்னை ஊழ்வினை 2,1,35 முன்னை நும்குல 2,11,62 முன்னைத் தேவர் 6,22,30 முன்னை நாள் 4,13,12 முன்னை நீக்குவென் 6,40,9 முன்னையர் 2,12,28 முன்பு நின்று முன்னையோர் இறந்தார் 6,28,8 மூ மூக்கிலா முகம் 6,16,116 மூசிய உயிர்ப்பு 5,2,41 மூசு வண்டினம் 6,8,21 மூடிய இம் 1,8,16 மூடினது இருட்படலை 3,10,23 மூட்டிய பழி எனும் 4,11,63 மூண்ட சினத்தவர் 5,10,15 மூண்ட செரு 6,36,12 மூண்டெழு காதலான் 2,11,19 மூண்டெழு சேனை 6,32,18 மூதுணர் ந்த 6,30,15 மூத்தவற்கு 2,2,44 மூலமும் நடுவும் 5,13,45 மூவகை அமரரும் 3,14,27 மூவகை உலகினும் 3,10,6 மூவகை உலகையும் 5,3,36 மூவகை உலகம் 6,27,26 மூவகை ஏத்தும் 6,27,38 மூவகைத் திரு 6,41,20 மூவரும் தேவர் 5,4,27 மூளும் உளதாய பழி 3,10,35 மூள் அமர் 4,10,18 மூன்று அவன் 6,3,35 மூன்று உளு 4,1,1 மூன்றுலகினுக்கும் 2,12,10 மெ மெய் கொள் 6,39,3 மெய்த் திருப்பதம் 5,3,11 மெய்யார் 2,4,38 மெய்யிற் பட்டன 6,22,21 மெய்யுற உணர்வு 3,14,2 மெய்யே என்றன் 2,3,25 மெய்யை 2,4,56 மெய் வரத்தினன் 2,1,10 மே மேகம் அவை 1,7,21 மேகம் மா மலை 4,10,19 மேதா இளையோய் 6,23,8 மேருவை நிறுத்தி 5,2,21 மேலவன் திரு 4,3,1 மேலை விரிஞ்சன் 4,17,1 மேல்உயர் கயிலை 6,2,49 மேல் நனி விளைவது 6,4,49 மேவரும் உணர்வின் 1,3,5 மேவாதார் 3,2,8 மேவிக் கனல் முன் 6,23,6 மேவி நிலத்தில் 2,3,12 மேவி மெல் மலராள் 2,2,6 மேவினள் பிரிதல் 1,8,3 மேவினார் 1,18,8 மேவு கானம் 2,10,16 மேவு சிந்தையில் 5,6,16 மேவும் வெம் சின 5,8,16 மேற்றிசை வாயிலை 6,26,13 மேனாள் அவன் 3,11,19 மை மை அறு 2,11,51 மைத்தடம் கண்ணியர் 5,13,2 மைந்தரும் முதியரும் 4,11,60 மைந்த நம்குல 2,1,34 மைந்தரை இன்மையின் 2,1,18 மைந்தரைப் பெற்று 6,40,58 மைந்தவோ எனும் 6,29,4 மைந்தனும் மற்றுளோரும் 6,26,1 மைந்தன் என் 6,26,9 மையவாம் 1,18,2 மையறு தவத்தின் 4,3,14 மையறு மலரின் 1,10,1 மொ மொய் அற மூர்த்தி 6,28,21 மொய் தவழ் கிரிகள் 6,4,83 மொய்த்த மீன் 6,6,5 மொய்த்தனர் 1,13,5 மொய்ம் மாண் 2,4,30 மொய்யுறு 2,10,14 மொழி உனக்கு 6,7,15 மொழி தரும் 3,12,66 மொழிந்த சொல் 6,4,96 மோ மோதல் அம் கனை 6,6,13 மோதிரம் வாங்கி 6,41,51 மோதுற்று ஆர்திரை 6,3,29 யா யாண்டு வந்து 6,41,27 யாது இதற்கொன்று 6,40,8 யாதும் அறியாய் 3,11,11 யாதும் இனிச்செயல் 6,26,16 யாது யான் 6,40,36 யாமும் எம் இருக்கை 1,7,32 யாரேனும் தான் 6,37,19 யாரை நீ என்னை 5,13,38 யாரொடும் பகை 2,2,7 யார் அவண் இறுத்தவர் 5,15,21 யான் இவண் எய்திய 6,4,28 யார் இவன் வருபவன் 6,19,9 யார் என விளம்பு 4,2,17 யாவது எவ்வுலகத்தினின் 4,12,8 யாவதும் இனி 5,15,8 யாவரும் அவ்வயின் 4,16,2 யாழ்க்கும் 1,19,6 யானும் மெய்யினுக்கு 6,41,44 யானை சுற்றின 2,11,4 யானையிலர் தேர் 6,2,35 யானையும் தேரும் 6,3,45 யான் இவண் 6,40,14 யான் இழைத்த 6,40,14 யான் உடை 6,27,28 யான் வரும் 3,2,11 வ வச்சையாம் 3,8,1 வஞ்சகக் கொடிய வஞ்சமும் களவும் 5,10,21 வஞ்சமோ 2,4,9 வஞ்சம் கொண்டான் 5,2,26 வஞ்ச வினை 6,31,23 வஞ்சனேன் 6,17,1 வஞ்சனை அரக்கனை 5,7,2 வஞ்சனை இயற்றிட 6,4,44 வஞ்சனைக் கொடு 3,6,44 வஞ்சனைத் தீவினை 4,10,20 வஞ்சனை மனிதரை 6,2,11 வஞ்சனை மானின் 5,5,7 வஞ்சனையால் வந்த 3,13,28 வஞ்சி அம் 5,5,32 வஞ்சியை அரக்கனும் 3,13,20 வஞ்சியை எங்கும் 6,26,19 வடகலை 8 தனி. வடங்களும் 1,13,25 வடசொற்கும் 4,13,3 வடித்தாழ் 2,6,12 வடியுடை 5,13,4 வடுக்கண் 3,13,33 வடுவின் 2,10,9 வணங்கி அந்தம் இல் 6,40,2 வணங்கி நீ ஐய 6,22,2 வணங்குவார் 6,28,15 வண்டலங்கு 3,10,3 வண்டினது 6,26,37 வண்டுலாம் 6,21,6 வண்டு வாழ் 1,17,11 வண்டுளர் அலங்கலாய் 6,4,52 வண்டுளர் கோதை 3,14,3 வண்டுறை 3,5,2 வண்ணமாலை 1,10,32 வண்ண வாய் 1,2,7 வண்ண வில் 4,10,4 வண்மை இல்லை 1,2,23 வண்மை நீங்கா 5,2,14 வந்த கிங்கரர் 5,8,18 வந்தடி வணங்கிலள் 1,13,26 வந்தடி வணங்கி நின்ற 4,11,34 வந்தது சேனை 3,7,17 வந்த நம்பி 1,6,16 வந்த நின்னை 4,7,56 வந்த மந்திரி 3,10,64 வந்த மாதவ 2,14,2 வந்தவர்கள் 5,7,5 வந்தவர் சொல்ல 5,14,19 வந்தவர் தானை 6,9,27 வந்தவள் 2,3,49 வந்தவனை 6,12,6 வந்தனன் அரசன் 1,20,2 வந்தனன் இராகவன் 5,2,18 வந்தனன் என்ப 6,7,2 வந்தனன் வானர 6,8,2 வந்தனென் அடியனேன் 3,14,24 வந்தனென் வந்தனென் 4,7,3 வந்தனை 3,10,29 வந்தாய் மறைந்தது 6,19,51 வந்தானை முகம் 3,6,66 வந்தானை வணங்கி 6,3,32 வந்திலர் மைந்தர் 3,13,16 வந்து அடி 6,5,1 வந்து இரைத்தனர் 5,12,26 வந்து இவள் 6,26,15 வந்து எதிரே 2,13,25 வந்து எனை 5,6,26 வந்து கார் 3,6,43 வந்து தாயை 2,11,18 வந்து தாழ்ந்த 6,38,17 வந்து நோக்கினள் 3,6,47 வந்தெனன் 4,7,3 வம்பு இழை 3,13,41 வயிர வாள் 6,3,47 வயிர வான் 1,4,6 வயிற்றிடை 5,3,30 வரங் கொண்டான் 6,16,117 வரத கேள் 6,40,67 வரதன் பகர்வான் 2,4,51 வரதன் துஞ்சினான் 2,14,51 வரதன் போய் 6,28,32 வரத்தின் 6,37,16 வரப்பு 1,10,6 வரம் கொடுத்து 6,19,45 வரம் கொள 2,3,9 வரம்பெலாம் 1,2,2 வரம் பெறு 6,2,4 வரன் நில் 2,14,59 வரிசிலை உழவனும் 3,2,10 வரிசிலை ஒருவன் 6,17,37 வரிசிலை 3,11,25 வரிவில் 2,4,18 வருக தேர் 6,35,4 வருகலை 1,5,8 வருத்தமும் 4,11,62 வருந்தல் 6,39,1 வருந்தா 2,6,18 வருந்தித்தான் 2,7,12 வருந்தேன் 5,1,20 வரும் இவள் 3,6,35 வரும் புண்டரம் 3,13,8 வருவதும் 6,16,56 வருவாய் 6,22,45 வரை செய்தாள் 4,13,13 வரை சேர் 4,8,2 வலக்கார் 2,4,57 வலங்கொள் 4,15,7 வலம் கொடு 1,23,21 வலி இதன் 6,31,14 வலி என்பது 6,15,22 வலிக்கடன் 6,34,7 வலியன் 2,11,2 வலியான 6,27,10 வல் அரக்கரின் 2,4,109 வல் அரக்கன் 5,2,77 வல் நெஞ்சின் 6,17,41 வல்லவன் 6,22,10 வல்லியம் பலதிரி 3,3,10 வல்லியம் மருங்கு 6,17,6 வல்லியை 1,22,8 வவ் விலங்கு 6,8,12 வழங்கா 6,27,9 வழங்கும் தெய் 5,2,27வ வழி கெட 6,17,35 வள அரசு 4,9,21 வளர்ந்த 5,4, 23 வளை எயிற்றவர் 3,6,39 வளை எயிற்று 5,13,11 வளைகள் 2,10,8 வளைத்தன 6,17,13 வளைந்தவாறு வளைபயில் 1,19,11 வளையும்வாள் 5,2,50 வள் உகிர் 1,10,7 வள் உறு 2,12,5 வள்ளலும் 6,43,5 வள்ளலை 1,23,15 வள்ளல் சேக்கை 1,11,3 வள்ளல் மனத்தை 1,13,12 வள்ளல் தேவியை 4,13,1 வள்ளற்கு 4,7,19 வள்ளியும் 4,16,16 வறிது வீழ்த்தனை 5,13,15 வற்கலையர் 3,10,30 வற்கலையின் 2,13,22 வற்றிய கடலுள் 6,19,17 வனத்திடை 3,12,40 வனத்தினன் 2,11,30 வனை கழல் 3,4,5 வன்துணை உளன் 3,13,10 வன்துணைப் பெரும் 6,16,24 வன் தெறு 2,14,10 வன் பணை 3,10,55 வன்புலக் கல்மன 2,5,9 வன்புலம் 6,28,33 வன் மருங்குல் 5,3,3 வன்மை தரித்தோர் 3,11,1 வன்னி நாட்டிய 6,24,13 வன்னி மன்னனை 6,30,14 வா வாக்கினால் வரந்தர 2,11,35 வாக்கினால் அன்னான் 3,12,64 வாக்கிற்கு ஒக்க 3,7,2 வாங்கரும் பாதம் 1,2,1 வாங்கிய ஆழி 5,15,44 வாங்கிய மணிகள் 6,12,24 வாங்கினள் மார்பினிடை 5,5,22 வாங்கினாள் தன் 5,6,49 வாங்கு வேய்ங்கழை 2,9,18 வாங்கும் வில்லன் 3,14,4 வாசத் தாரவன் 4,7,32 வாசநாள் மலரோன் 1,7,31 வாசமென்கல 1,10,35 வாசம் கலந்த மரை 6,19,57 வாசல் இட்ட 5,14,1 வாசவன் மாயன் 6,16,10 வாம மேகலை 1,14,12 வாயினும் மனத்தினானும் 6,9,5 வாய் ஒளி 2,11,22 வாய் தரத் தக்க 6,14,24 வாய் மடித்து 6,24,4 வாய்மையும் மரபும் 4,7,38 வாய்மை சால் 4,9,3 வாரணத்து 1,7,2 வாரணம் பொருத 6,16,1 வார்க்குறு வனைகழல் 6,4,41 வார்த்தை மாறு 1,8,20 வாலி காதலனும் 4,9,14 வாலி காதலனை 5,15,4 வாலி சேய் மேனி 6,18,38 வாலி தன் இறுதி 5,13,13 வாலியும் ஏக 4,8,1 வாலியை வாளி 6,26,6 வாலி விண்பெற 6,4,54 வால் விசைத்து 5,1,8 வாவும் வாசிகள் 6,37,5 வாழி சானகி 5,4,8 வாழியாய் கேட்டி 6,4,8 வாழியாய் நின்னை 6,14,3 வாழும் மறை 3,3,24 வாழ்த்தினார் 2,4,120 வாழ்வார் 1,தனி வாழ்வித்தீர் எனை 4,16,22 வாழ்வினை 2,4,87 வாளின் திண் சிலை 6,22,15 வாளின் வாய்களை 3,7,21 வாளை உகள 1,22,18 வாள் அரம் 1,10,8 வாள் அரி 3,12,47 வாள் உலாம் 3,10,4 வாள் தொடு 2,11,49 வாள் நித்தில 2,4,76 வானகம் மின்னினும் 4,10,10 வான நாடியர் 6,22,37 வானம் ஆள 4,7,54 வானரங்களும் 5,13,20 வானரங்கள் வெருவி 4,11,19 வானரப் பெரும் 6,16,27 வானர வேந்தனும் 4,11,66 வானரேசனும் 6,41,14 வானவரே முதலோரை 5,2,78 வானின் 2,1,1 வானோர் கொள்ளார் 2,3,20 வான் ஆள்பவன் 3,13,7 வான் உற நிமிர்ந்தான் 1,3,8 வான் என்பது 6,18,17 வான் காப்போர் 3,6,73 வான் தனில் 3,6,9 வான் நகும் 6,16,6 வி விடன் ஒக்கும் 1,19,3 விடிந்தது பொழுதும் 6,28,17 விடியல் காண்டலின் 3,6,46 விடுதேர் என 3,12,58 விடைக் குலங்களின் 6,22,33 விட்டபேர் உணர்வினை 4,6,4 விட்டம் ஆயினும் 6,30,16 விட்ட வெம் பகழி 6,18,36 விட்டனன் அரக்கன் 6,19,29 விட்டனன் இலங்கை 5,7,19 விட்டனை 6,20,7 விட்டு உயர் 5,14,18 விண்களில் சென்ற 6,31,26 விண்டாரே 3,6,78 விண்டுவின் படை 6,31,26 விண்ணவர் ஏத்த 5,1,11 விண்ணவர் ஏவல் 3,12,52 விண்ணவர் போய 1,8,1 விண்ணாட்டவர் 2,4,52 விண்ணிடை 2,14,33 விண்ணிடைக் கரந்தான் 6,28,1 விண்ணிடை வெய்யவன் 3,13,15 விண்ணினை இடறும் 6,16,22 விண்ணினை வேலை 5,15,15 விண்ணின் தீம்புனல் 4,12,6 விண்ணின் நீங்கிய 3,9,12 விண்ணு நீர் 2,14,43 விண்ணுளே 1,13,22 விண் தொட 2,3,39 விண் பிளந்து 6,34,16 விதியது வலி 3,10,53 விம்மினன் 2,14,71 விரத நூல் 6,42,14 விரி இருள் 2,8,19 விரி கடல் நடுவுள் 6,43,1 விரிந்த வலயங்கள்3,10,24 விரிந்திடு தீ 1,12,8 விரிந்து 3,6,67 விரிமணி 1,14,18 விரிமலர் 1,10,29 விருந்தும் ஆகி 4,3,19 விரும்பு எழில் 4,6,12 விரை செய் 1,10,33 விரைவின் உற்றனர் 5,8,19 விலக்கலை விடு விடு 4,7,6 விலக்கினர் படை 6,4,27 விலங்கு எழில் 4,6,10 வில் இயல் 3,5,5, வில் எடுக்க 6,19,14 வில் ஒக்கும் 3,10,42 வில் ஒன்றால் 6,37,3 வில் தடம் 2,4,88 வில் பெரும் தட 5,15,33 வில்லார் 2,11,44 வில்லாளர் ஆனார்க்கு 6,28,27 வில்லினால் துரப்பு 4,7,31 வில்லினை நோக்கும் 6,19,41 வில்லினைத் தொழுது 6,31,20 வில்வினை ஒருவனும் 6,16,105 விழிக்கும் 2,4,33 விழுதல் விம்முதல் 5,3,5 விழுந்து புரள் 3,36,8 விழுந்து மேக்குயர் 6,41,34 விழையுறு 4,10,5 விளிவார் விளிவது 1,24,10 வினைந்தவாறு 6,24,2 விளையும் தன் புகழ் 2,3,2 விளையும் வென்றி 6,15,2 விளைவினை அறிந்திலம் 6,4,33 விளைவினை அறியும் 6,4,92 விற்படி திரள் 6,10,6 விற்படை பெரிது 5,2,12 வினவிய 3,4,10 வினை உடை 5,6,36 வினைகளை வென்ற 6,2,41 வினைக்கு 2,5,17 வீ வீக்கு வாய் அயில் 6,37,15 வீங்கிய தோளன் 6,28,30 வீங்கிய வீரனை 5,10,10 வீசுறு பசுங்கதிர் 5,2,19 வீடணக்குரிசில் 6,42,3 வீடணன் ஒருவனும் 6,15,16 வீடணன் தனை 6,41,2 வீடினது அன்று 5,3,37 வீட்டினுக்கு அமைவதான 3,16,6 வீட்டும் காலத்து 5,4,13 வீதி வாய் 1,21,4 வீந்தாளே 2,3,32 வீரத் திறலோர் 4,7,22 வீரம் அன்று 4,7,46 வீரரும் விரைவில் 5,15,56 வீரனும் ஐய 6,26,39 வீரனை நோக்கி 6,4,85 வீரன் அஃது 3,6,22 வீவாய் நீ இவண் 5,6,31 வீழியின் கனி 6,11,4 வீழ்ந்தவன் தன்னை 6,26,22 வீற்றாக்கிய 2,4,54 வெ வெங்கண் வெள் 6,20,14 வெஞ்சினம் தரு 6,2,69 வெட்டிய தலையன 6,19,12 வெப்பழியா 3,6,81 வெப்பழியாது 3,11,3 வெப்பாரும் பாசம் 6,19,34 வெப்பு அடைகில்லா 5,12,8 வெப்புறு செந்தீ 4,17,2 வெம் கணை திறந்த 6,19,23 வெம் கண் வானர 6,22,26 வெம் கதம் இல்லவள் 3,14,18 வெம் கதம் வீசிய 4,16,18 வெம் கார் நிற 5,1,24 வெம் சுடர் 3,13,38 வெம் திறல் சித்தி 6,18,42 வெம் மடங்கல் 6,37,40 வெம்மை தீர் 3,12,36 வெம்மையில் தருமம் 6,27,39 வெம்பு இகல் 6,2,21 வெம்பு மா கடல் 6,5,20 வெயில் இள 2,9,2 வெயில் நிறம் 1,15,8 வெய்யகனல் 1,23,19 வெயின் முறைக்குல 2,2,39 வெய்ய மாமுனி 1,9,6 வெய்தின் நீ வருதல் 4,11,25 வெய்யதோர் வெய்யவன் தன் 3,11,35 வெய்யோன் 2,7,1 வெருண்டனர் 5,9,10 வெருவும் ஆலமும் 1,9,7 வெருளும் வெம்புகை 5,14,7 வெல்லுமா நினைக்கின்ற 6,16,114 வெவ்வரம் 2,4,90 வெவ்விடம் 2,2,25 வெவ்விராதனை 5,3,17 வெளிறு நீங்கிய 2,9,20 வெள் எயிற்று 1,14,19 வெள் எருக்கம் 6,38,10 வெள்கிட மகுடம் 4,7,35 வெள்ள நீர் 2,1,12 வெள்ள நெடு 1,15,7 வெள்ளமும் 1,4,4 வெள்ள வெம் 5, 11,8 வெள்ளி அம் 5,7,18 வெள்ளி அம் 6,2,15 வெள்ளிய ,2,218 வெள்ளியை 1,8,12 வெள்ளி வெண் 5,2,68 வெள்ளை எயிற்றர் 5,10,19 வெறுப்பு 5,13,61 வெற்பிடை 3,12,20 வெற்பினால் 5,13,77 வெற்றி கூறிய 3,9,7 வெற்றியர் உளர் 3,13,17 வெற்றியும் தருகுவர் 6,4,46 வெற்றி வீரனது 4,7,29 வெற்றி வெம் 6,43,4 வென்றவர் தோற்பர் 6,16,14 வென்றி 3,14,7 வென்றி என் வயம்6,32,11 வென்றிச்சிலை 6,27,12 வென்றிடுவர் மானுடவர் 6,2,29 வென்றியால் 6,37,44 வென்றிலேன் என்ற 6,28,10 வென்றிவாள் 1,6,17 வென்றி விற்கை 6 வென்று இவண் 6,16,39 வே வேங்கை செற்று 5,7,10 வேண்டின 3,3,5 வேண்டும் 2,14,37 வேத நாயகனே 6,16,67 வேத நாயகன் 6,16,106 வேத பாரகன் 6,3,13 வேதமும் வேதியர் 3,12,39 வேதமும் வேள்வியும் 6,4,47 வேதனை அரக்கர் 4,14,16 வேதனைக் கூனி 2,2,31 வேதனை செய் 3,11,13 வேதியர் தமை 6,41,53 வேதியர் வேதத்து 6,37,23 வேத்தவை 2,12,12 வேத்திரத்தர் 6,11,6 வேந்தரே 2,3,35 வேந்தன் வீயவும் 3,3,14 வேந்தன் விண் 3,4,21 வேரொடு மறிந்த 5,7,7 வேர்த்து 1,21,8 வேலையின் இடை 5,6,9 வேலையுள் இலங்கை 5,15,34 வேறு இனி விளம்ப 5,6,6 வேறும் உண்டு 5,6,14 வேறும் என்னொடு 6,3,27 வேறே இவ் இலக்குவன் 6,18,8 வை வைத்த பின் உரிமை 4,7,92 வைத்த பின் துகிலின் 5,15,47 வைத்தனம் இவ்வழி 4,6,2 வையகம் துறந்து 2,14,17 வையகம் அதனில் 5,15,55 வையம் மன் உயிராக 2,2,1 வையம் என்னை 1,கா.வ.,5 வையம் தந்த 5,4,30 வையம் நீ வானும் நீ 4,4,12 வைவன முனிவர் 6,8,26