நமக்கு நாமே உதவி டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2002 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. நமக்கு நாமே உதவி தேசிய விருது பெற்ற பேராசிரியர் பல்கலைப் பேரறிஞர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI ராஜ்மோகன் பதிப்பகம் ‘லில்லி பவனம்’ 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி. நகர், சென்னை-600 017. தொலைபேசி: 24342232 நூல் விபர அட்டவணை நூலின் பெயர் : நமக்கு நாமே உதவி மொழி : தமிழ் பொருள் : சுய முன்னேற்றம் ஆசிரியர் : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (1937 – 2001) பதிப்பு : முதல் பதிப்பு அக்டோபர் 2002 நூலின் அளவு : கிரவுன் படிகள் : 1200 அச்சு : 12 புள்ளி தாள் : வெள்ளை பக்கங்கள் : 96 நூல் கட்டுமானம் : பேப்பர் அட்டைக்கட்டு * * * விலை ⁠ : ரூ. 20-00 * * * உரிமை : ஆசிரியருக்கு வெளியிட்டோர் : ராஜ்மோகன் பதிப்பகம் 8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017 தொலைப்பேசி: 4332696 அச்சிட்டோர் : எவரெடி பிரிண்டர்ஸ் தி.நகர், சென்னை - 600 017. தொலைப்பேசி: 8252271 பதிப்புரை பல்கலைப் பேரறிஞர், டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்திற்காக வாழ்ந்தவர். திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பதுபோல, பல அரிய காரியங்களை நிறைவேற்றினார். சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார். தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக ‘விளையாட்டு இலக்கியத் துறை’ என்ற புதிய துறையை உருவாக்கினார். முதன் முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதிமுடித்த இவர், இதுவரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார். இதற்காக, தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தார். முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று “விளையாட்டு இசைப்பாடல்கள்” என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டுள்ளார். முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக் காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994-ஆம் ஆண்டு “ஓட்டப் பந்தயம்” என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார். முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தி வந்தார். முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக தேகநலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தி வந்தார். விளையாட்டுத் துறைபற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக வெளியிட்டுள்ளார். முதன் முதலாக ‘உடற் கல்வி மாமன்றம்’ என்ற அமைப்பை 1996ம் ஆண்டுதொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றி மகிழ்ந்தார். வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, முதன் முதலாக மாறுபட்டு ஆய்வுசெய்து ‘திருக்குறள் புதிய உரை’ என்னும் நூலில் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் ஓர் உடலியல் நூல் என விளக்குகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனையாளரின் ‘நமக்கு நாமே உதவி’ என்ற நூலினை நாங்கள் வெளியிடுவதில் மகிழ்கிறோம். பதிப்பகத்தார் முன்னுரை ‘நமக்கு நாமே துணை’ இந்த நினைவுதான் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு நிம்மதி தரும் பெருந்துணை. மற்றவர்கள் உதவுவார்கள் என்று நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே நின்று விடுவது தான் பெருங் கொடுமையாகப் போய் விடுகிறது. நமது உயர்வுக்கு நாம் உழைப்பதன் மூலம்தான் உதவிக் கொள்ள வேண்டும். அதாவது. நம் வயிற்றுப் பசிக்கு நாம் சாப்பிடுவதுபோல. பிறர் சாப்பிட்டால் நம் பசி தீராது. அதுபோலத்தான், பிறர் உழைப்பும் நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் பயன் கொடுக்காது. பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் சிலர். ஆரம்பத்திலேயே அழிந்துபோன கதை ஆயிரம் உண்டு. பாதிதூரம் சென்று, பொருளையும் புகழையும் பறி கொடுத்துவிட்டு, பரிதவித்து நின்றவர்கள் அநேகம் பேர்கள். முடிவுக்கு வந்து விட்டாலும், முகம் நிமிர்த்திப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்களை சுமந்து கொண்டு கலங்கியவர்கள் கணக்கில் அடங்க மாட்டார்கள். எனவே, எந்தக்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் பலமுறை சொந்த சிந்தனைக்கு இடம் கொடுத்து, ஆராய்ந்திட வேண்டும். அனுபவப் பட்டவர்களிடம் அறிவுரை கேட்கலாம். அவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருள் சிறப்பினைத் தெரிந்து கொண்டு, சீர்துக்கிப் பார்த்து செயல்படுபவர் தான் செம்மையானவர்களாகிறார்கள். பிறரைப் பார்த்து, பிறர் அனுபவங்களை அறிந்து, உங்கள் திறமைகளை மதிப்பிட்டு, அதன்பின் நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுங்கள். அந்த முறைதான் உங்களுக்கு உதவும். இந்நூலில் எழுதப்பெற்றிருக்கும் கருத்துக்கள் யாவும், கற்பனைக் கலா மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, மந்திர தந்திரக் காட்சிகளை விவரிக்கும் தன்மை போல் எழுதப்பட்டவை அல்ல. நான் என் வாழ்க்கையில் பட்ட பாடுகள், அடைந்த அனுபவங்கள். ஆட்பட்ட அல்லல்கள், பிறர் உதவியை நம்பி ஏமாந்த பேரிடர்கள். அவற்றால் தெரிந்து கொண்ட உண்மைகள்தான் இதில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்து, பலதொழில் நிறுவனங்களுக்கு விளையாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று, இன்று பல தொழில்களைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் எனது வாழ்க்கை அனுபவங்களின் சாறுதான் இந்த நூலாகும். வாழ்க்கையில் தனித்தன்மையுடன் உயர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது. நீங்கள் படித்துப் பயன்பெற விரும்புகிறேன். அழகுற அச்சிட உதவிய ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும், அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள். லில்லி பவனம் அன்பன்⁠⁠ சென்னை - 17 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆசிரியரின் பிற நூல்கள் 01. விளையாட்டுக்களின் விதிகள் 02. விளையாட்டுக்களின் கதைகள் 03. விளையாட்டுக்களில் வினோதங்கள் 04. விளையாட்டு உலகில் வீரக் கதைகள் 05. விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும் 06. விளையாட்டுக்களில் வினாடி வினா-விடை 07. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள் 08. விளையாட்டு விழா நடத்துவது எப்படி? 09. விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி? 10. விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி 11. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம், தமிழ், அகராதி 12. நலமே நமது பலம் 13. உடற்கல்வி என்றால் என்ன? 14. உலக நாடுகளில் உடற்கல்வி 15. உடலழகுப் பயிற்சி முறைகள் 16. உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் 17. தேகத்தை தெரிந்து கொள்வோம் 18. பெண்களும் பேரழகு பெறலாம் 19. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள் 20. பேரின்பம் தரும் பிராணாயாமம் 21. பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள் 22. பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள் 23. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் 24. நீங்களும் உடலழகு பெறலாம் 25. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் 26. நீங்களும் உயரமாக வளரலாம் 27. நீங்களும் வலிமையோடு வாழலாம் 28. நீங்களும் நோயில்லாமல் வாழலாம் 29. நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம் 30. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 31. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் 32. உடலழகுப் பயிற்சி முறைகள் 33. உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 34. உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 35. கிரிக்கெட் ஆட்டத்தின் கதை 36. கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி - பதில் 37. கேரம் விளையாடுவது எப்படி? 38. சதுரங்கம் விளையாடுவது எப்படி? 39. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை 40. அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள் 41. குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி? 42. முக அழகைக் காப்பது எப்படி 43. தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் 44. பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்? 45. 1984ல் ஒலிம்பிக் பந்தயங்கள் 46. பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் 47. சியோல் ஒலிம்பிக் பந்தயங்கள் 48. இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 49. வெற்றி விளையாட்டு காட்டுகிறது (சிறுகதை) 50. அர்த்தமுள்ள விளையாட்டுக்கள் 51. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு விளையாட்டும் 52. மறைந்து கிடக்கும் மனித சக்தி 53. குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் 54. விளையாட்டுத் துறையில் தமிழிலக்கிய வளர்ச்சி 55. குறளுக்குப் புதிய பொருள் 56. வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 57. வள்ளுவர் வணங்கிய கடவுள் 58. திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால் மட்டும்) 59. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? 60. தெரிந்தால் சமயத்தில் உதவும் 61. வானொலியில் விளையாட்டுக்கள் 62. நமக்கு நாமே உதவி 63. விளையாட்டு ஆத்திச்சூடி 64. வாழ்க்கைப் பந்தயம் 65. சிந்தனைப் பந்தாட்டம் 66. அவமானமா? அஞ்சாதே! 67. அனுபவக் களஞ்சியம் 68. பாதுகாப்புக் கல்வி 69. சடுகுடு ஆட்டம் 70. மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள் 71. வேஷங்கள் விளையாடுகின்றன (சிறுகதைகள்) 72. பண்புதரும் அன்புக் கதைகள் 73. நல்ல பாடல்கள் 74. நல்ல நாடகங்கள் 75. நவரச நாடகங்கள் 76. நவனின் நாடகங்கள் 77. சுவையான நாடகங்கள் 78. நல்ல நல்ல கதைப் பாடல்கள் 79. Quotations on Sports and Games 80. General Knowledge in Sports and Games 81. How to break ties in Sports and Games? 82. Physical Fitness and Health 83. நிமிர்ந்து நில் துணிந்து செல் 84. உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள் 85. புதுப்புது சிந்தனைகள் 86. விளையாட்டுக்களின் வரலாறும் விளையாடும் முறைகளும் 87 உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாட நூல் (6ஆம் வகுப்பு) 88. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (7ஆம் வகுப்பு) 89. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (8ஆம் வகுப்பு) 90. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (9ஆம் வகுப்பு) 91. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (10ஆம் வகுப்பு) 92. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (11 ஆம் வகுப்பு) 93. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (12 ஆம் வகுப்பு) 94. Health and Physical Education Work Text Book (VI-Std) 95. Health and Physical Education Work Text Book (VII-Std) 96. Health and Physical Education Work Text Book (VIII-Std) 97. Healtll and Physical Education Work Text Book (IX-Std) 98. Health and Physical Education Work Text Book (X-Std) 99. Health and Physical Education Work Text Book (XI-Std) 100. Health and Physical Education Work Text Book (XII-Std) 101. வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 102. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல் 103. நீங்களும் இளமையாக வாழலாம் 104. கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் 105. விளையாட்டு அமுதம் 106. விளையாட்டு உலகம் 107. விளையாட்டுச் சிந்தனைகள். 108. விளையாட்டு விருந்து 109. சிந்தனைச் சுற்றுலா 110, கைப்பந்தாட்டம் 111. கால்பந்தாட்டம் 112. கூடைப்பந்தாட்டம் 113. பூப்பந்தாட்டம் 114. வளைகோல் பந்தாட்டம் 115. வளையப்பந்தாட்டம் 116. மென் பந்தாட்டம் 117. கோ கோ ஆட்டம் 118. நல்ல கதைகள் 1 119. தெய்வ மலர் 120. செங்கரும்பு (கவிதைத் தொகுப்பு) 121. கடவுள் கைவிட மாட்டார் 122. வேஷங்கள் விளையாடுகின்றன 123. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? 124. விளையாட்டுப் பொது அறிவுநூல் 125. General Knowledge for Competitive Exams. 126. சாந்தி தமிழ் வாசகம் 127. சாந்தி A, B, C Books 128. நன்நெறிக் கல்வி 9ம் வகுப்பு 129. நன்நெறிக் கல்வி 10ம் வகுப்பு 130. நவனார் உரை நூல் பொருளடக்கம் வ.எண் பக்கம் தலைப்பு 1. அறிவா! உறவா?! 11 2. இதுதான் இதமான சமயம் 16 3. உழைப்பே உற்சாகம் 23 4. தொழிலைத் தேர்ந்தெடுக்கும் திறம்! 31 5. தொழிலும் சிந்தனையும் 40 6. முடிவு எடுப்பதுதான் முக்கியம் 48 7. நம்மாலும் முடியும் 55 8. நமக்குள்ளே ஒரு சக்தி 63 9. சக்தியும் சாமர்த்தியமும் 72 10. கவனமும் புவனமும் 79 11. வாழ்வில் ஏற்றம் பெறுவோம் 94  1 அறிவா! உறவா?! நமக்கு நாமே உதவி! நம்பிக்கையான விஷயம். ஆமாம். தன்னம்பிக்கையின் திடமான பகுதி இது. வாழ்க்கைத் தொடருக்குள் வந்து போகும் உறவல்ல இது வந்து, வாழ்ந்து, வளர்ந்து, வாழ வைத்துக் கொண்டிருக்கும் வளமான உயிர்மை இது. பெருமை இது! தனியாகப் பிறந்து வந்திருக்கிறோம். இது இயற்கையின் இயல்பான தத்துவம். தனித்தனியாக வந்தவர்கள், அணி அணியாக சேர்ந்து வாழக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது செயற்கை தந்த மகத்துவம் இயற்கையும் செயற்கையும் கலந்த, இதமான கலவையின் பதமான இழுவைதான் நாம் வாழும் வாழ்க்கை. நாம் சேர்ந்து வாழத்தான் செய்திருக்கிறோமே தவிர, செழிப்போடு வாழ உதவக் கற்றுக்கொண்டிருக்கிறோமா என்றால், இதில் ஒரு பகுதிதான் உண்மை. மறுபகுதி மனக் கசப்பான உண்மை. தர்மம் இல்லாத மர்மம் கலந்த மனிதத்தனங்களின் பொய்மை வேஷங்கள். உதவி வரைத்தன்று உதவி... கைமாறு கருதாத உதவி, கடமை நிறைந்த உதவி, கருணை மிகுந்த உதவி, என்பதெல்லாம் இலக்கிய நயமானவை, நடைமுறைக்கு நான்கடி தூரம் தள்ளியே நிற்பவை. யாருக்கு உதவி? எப்படி உதவி? எப்பொழுது உதவி? வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி... நாம் உதவினால் நமக்கென்ன லாபம் என்று கணக்குப் பார்த்துக் கணிக்கின்ற உதவி, பணத்திற்காக, பதவிக்காக உடல் இன்பத்திற்காக முன்வந்து செய்கின்ற உதவி. பரிசு என்ற போர்வையில் இலஞ்சம், வஞ்சம். இப்படியெல்லாம் ‘உதவிகள்’ உதைபட்டு அலைகின்ற ‘உணர்ச்சி பூர்வமான’ நமது வாழ்க்கையில். நமக்கு யார் வந்து உதவுவார்கள்? உற்சாகப் படுத்துவார்கள்? உயர்வைக் காட்டுவார்கள்? யாருமே இல்லை! தாழ்ந்தால் ஏசவும், வாழ்ந்தால் முட்டாள்தனமாகப் பேசவும் கற்றுக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். கஷ்டப்படும் காலத்தில் உதவுவது போல நடித்துவிட்டு, முன்னேறும் நேரத்தில் முடிச்சுக்களைப் போட்டு முடக்கிவிடுகின்ற தந்திர நரிகளின் தனிக் கவனிப்பிலே நாம் வாழ்கிறோம். நமது உயர்வில் சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள்தாம். நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நம்புவது பேதமை. பிறர் உதவினால் பெற்றுக் கொள்ளலாம். நன்றி சொல்லலாம். ஆனால், பிறர் நமக்கு உதவுவார்கள், உதவித்தான் ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமை. மடமை நிறைந்த கொடுமை. நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களெல்லாம் நமக்கு வழிகாட்டிகள். ஆமாம், வழிகாட்டி மரங்கள் இருப்பது போல வழிகாட்டி மரமானது வழியைத்தான் காட்டும், துணைக்கு வராது. நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நாம் அப்படித்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு யார் உதவி செய்வார்கள் என்றால், அதற்கு ஒரே பதில் நாம்தான். ‘தானே தனக்குத் தலைவனும், நட்டானும்!’ என்று ஒரு பாடல். ’தன்னைத் தலையாகச் செய்வானுந்தான். “தானே தனக்குப் பெருமையும் சிறுமையும்”. இந்தப் பாடல் வரிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் வயிற்றுப் பசிக்கு நாம்தான் சாப்பிட வேண்டும். பிறர் சாப்பிட்டால் நமக்கு எப்படி பசி அடங்கும்! நமது நோய்க்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும். பிறர் சாப்பிட்டால் என்ன பயன் கிடைக்கும்? நமது முன்னேற்றத்திற்கு நாம்தான் உழைக் வேண்டும். பிறரை எதிர்பார்த்து என்ன பயன்? மனிதனை மிருகங்களிலிருந்து பிரித்து, வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டுவது ஆறாவது அறிவு. அதுதான் பகுத்தறிவு. ஆறாவது அறிவு உணரச் செய்வது மட்டுமல்ல. அனைத்தையும் அறிய உதவுகிறது. ஆய்ந்து செயல்பட உதவுகிறது. அருமையான முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, இந்த அகிலத்து சக்திகளை ஆக்ரமித்துக் கொள்ளவும், ஆட்டிப் படைக்கவும், அரிய யுக்திகளை வளர்த்துக் கொள்ளவும் ஆறாவது அறிவு உதவுகிறது. ‘இந்த அறிவுதான் நம்மை உயர்த்ததும், வேறு எந்த உறவும் அல்ல’ என்பதுதான் அறிவுள்ளவர்கள் தீர்மானித்து முடிவு செய்து, வாழ வேண்டிய விஷயமாகும். நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், நாம்தான் நமக்கு உதவிக்கொள்ள வேண்டும். நாம்தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டு வழி நடத்திச் சென்றாக வேண்டும். நாம்தான் பல சோதனைகளில் ஆட்பட்டு, சோதனைக்குட்பட்டு, சாதனைகளைச் செய்தாக வேண்டும். எப்படி? 2 இதுதான் இதமான சமயம் இதுவரை வாழ்ந்து கொண்டு வருகிறோம். நிச்சயம், நமக்கு இதில் எவ்வித ஐயமும் இல்லை. எதிர்க் காற்றில் பட்டம் ஏறி பறப்பது போல, எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதிலும் நமக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. காலிலே இடித்துக் கொண்ட பிறகு கீழே கிடக்கும் கல்லைப் பார்க்கிறோம். தலையிலே முட்டிக் கொண்ட பிறகு, மேலே இருக்கும் பொருளைப் பார்க்கிறோம். வலியிருக்கும் வரை அதை சபிக்கிறோம். பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். வாழ்க்கையில் இதுபோல எத்தனையோ சந்தர்ப்பங்கள், சம்பவங்கள். காலிலோ தலையிலோ இடித்துக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள, நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதோ ஒரு நினைவில், ஏதோ ஒரு கவலையில், ஆழ்ந்து மூழ்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். அதுதான் நம்மை ஆட்டிப்படைத்து, அறிவுக் கண்ணை மறைத்து, அல்லாட வைத்து விடுகிறது. இதுதான் இதமான சமயம், நம்மை நாம் அறிந்து கொள்ள, ஏனென்றால், பிறர்தான் நம்மை உயர்த்த முடியும் - உற்சாகப்படுத்த முடியும், உதவ முடியும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த புண்ணாக்கு நம்பிக்கையை இன்றுப் புறம்தள்ளிவிட்டு, முன்னோக்கி நடக்கும் ஒரு முழு நம்பிக்கையான சக்தியை மனதில் ஏற்றிக்கொள்ள முன் வந்திருக்கிறோம். நம்மைப் பற்றி நாமே சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய, புரிந்து கொள்ள, யார் என்று தெரிந்து கொள்ள, ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு சுறு சுறுப்பாக நிமிர்ந்து நிற்கிறோம். நமது எதிர்கால ஏற்றமான முன்னேற்றங்களுக்கு இதுதான் முதல் படி என்பதால் தான், இந்த நேரத்தை இதமான சமயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். சத்தமிட்டுக் கொண்டிருக்கும் சமுத்திரத்தில், சதா காலமும் முரட்டு அலைகள், முண்டி எழுந்து கொண்டுதான் இருக்கும். பேய்க் காற்றுகள் வாய்விட்டு அலறி பிரலாபித்துக் கொண்டுதான் இருக்கும். இந்தக் காற்றுக்கும் அலைக்கும் பயந்து கொண்டு கப்பலை செலுத்தாமல் இருப்பதில்லை கப்பல் தலைவன். பயம் இல்லாமல் ஓட்டுவது ஒருபுறம் இருந்தாலும், பாய்ந்து வரும் அலைகளையும் காற்றையும் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டு, வெற்றிகரமாகக் கப்பலைச் செலுத்தி, குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் கொண்டு செல்கிறானே, அவன்தான் சிறந்த தலைவன் ஆவான். வாழ்க்கைக் கடலில் விளையாத எதிர்ப்புக்களா? துன்பங்களா? இவற்றை சமாளித்துச் செல்பவன் சாதாரண மனிதன். சமாளிப்பதற்கு மேலே சாதனை புரிகிறவன் தான் சாமர்த்தியசாலி. சந்தோஷக்காரன். பிறர் போற்றும் பெரிய நிலையில் உயர்பவனாவான். இது எப்படி முடியும் என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது! ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே அளப்பரிய ஆற்றல், அதிகமான திறமை, நிறைந்து கிடக்கின்றன. அதனைத் தெரிந்து கொள்ளத் தவறுகிறவன் ஜடமாகக் கிடக்கிறான். தெரிந்துகொண்டு பயன்படுத்தாதவன் விலங்காகத் திரிகிறான். தெரிந்து கொண்டு துணிந்து முனைகிறவனே, தேர்ந்து வாழ்கிறான். செழிப்பாக வாழ்கிறான். சிறந்த ஞானி என்பவன் எவன்? தன்னைப் பற்றி சிந்திக்கிறவனும், தன்னை உணர்ந்து கொள்பவனுமே அந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறான். நாம் ஞானியாக வேண்டாம். நம்மை நாமே அறிந்து கொள்ள முயன்றிடுவோம். நமக்கு இப்பொழுது அதுவே போதும். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக் கடிகம் ஒன்றில், ஓர் ஆராய்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து விளங்கிய 1500 திறனாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கருத்தறிந்தபோது, ஓர் உண்மையைக் கண்டறிந்தார்கள். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே சிறப்பான திறமைகள் இருக்கின்றன. அந்த அரிய பரிசினைப் பயன்படுத்திக் கொண்டால், பிரமாதமாக வாழலாம். பிரபலமாக வாழலாம் என்பதுதான் அந்தப் பேருண்மை. குள்ளன் ஒருவன் இமயமலை உச்சியில் ஏறி நின்றாலும், அவன் குள்ளனாகத் தான் தெரிவான். உயரமானவன் கிணற்றுக்குள்ளே நின்று கொண்டிருந்தாலும், அவன் உயரமானவன் தான். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமக்குள்ளே இருக்கும் திறமையை புரிந்து கொண்டோமானால், பார்த்துக் கொள்ள வேண்டிய திறமையையும் வகுத்துக் கொள்ளமுடியும். அதற்கு மனம் வேண்டும். சோம்பேறித்தனம் கொண்டவர்கள்தான் குள்ளர்கள். அவர்களால் உயர முடியாது. முடியும் என்று நம்புபவர்கள்தான் உயரமானவர்கள். அவர்களால் நிச்சயம் உயர்ந்து காட்ட முடியும். எப்படி? நாம் எல்லோரும் ஆசைக்குட்பட்டவர்கள்தான். சில சமயங்களில் ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். அந்த சபலத்தில் எழுகின்ற சலனத்தில் தான் நாம் சஞ்சலப்பட்டுப் போய்விடுகிறோம். ஏன் இப்படி? நாம் எப்பொழுதும் தூரத்திலிருக்கும் ஒரு பொருளின் மங்கலான காட்சியில்தான் மயங்கி, கஷ்டப்பட்டுக் காணத் துடிக்கிறோம். அதன் அரசாட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கையிலிருக்கும் பொருளின் துல்லியமான காட்சியை நாம் மதிப்பதில்லை, அதன் பெருமையும் நமக்குத் தெரிவதில்லை. வராத எதிர்கால இன்பத்தை நோக்கி ஏங்குகிறோம். வந்திருக்கும் நிகழ்கால இன்பத்தை விலக்கி வைத்துவிட்டு வேதனைப்படுகிறோம். இப்படி ஏட்டிக்குப் போட்டியாக, செயல்களை நீட்டிக் கொண்டு போனால் நம்மால் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு எதிரி வேறு யாருமில்லை. அவரேதான். நமக்கு நாமே உதவி என்பது நடைமுறை உண்மை. ஆனால் நமக்கு நாமே எதிரிகள் என்றால் அது நாம் மாறி நடந்து கொள்கின்ற முறைகளால் வருவது என்பதை மட்டும் உணர்ந்தால் போதும். வலிமையான மக்களும், வலிமையான ஒரு நாடும், நிகழ்காலத்தில் செயல்படுகிறது. இனிய எதிர்காலத்தை உருவாக்குகிறது என்ற ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தில் உழைத்து எதிர்காலத்தில் பலனை எதிர்பார்க்கிற பண்புகள், உண்மையான அறிவாகும். நிகழ் காலத்தில் கனவு காண்பவன், நித்திய நோயாளியாக, வறுமையில் வதியும் கயவாளியாகவே வாழ்வான். கனவு கண்டு கொண்டு கிடப்பவனுக்கு கடமையாற்றத் தெரியாது. அவனது உடலும் மனதும் ஒத்துழைக்காது. அவனால் செயல் படவே முடியாது. ‘ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுவது என்பதே பெரிய காரியம்’ என்கிறார் ஒரு மேல் நாட்டறிஞர். ஒரு நல்லசெயலில் இறங்குவதே மகிழ்ச்சியான காரியம். மகிழ்ச்சி என்பதே நல்ல செயலில் ஈடுபடுவதுதான். அந்த செயலில் தான் ஆற்றல்கள் விளையும்! சில சமயங்களில் செயல்களில் ஈடுபடும் பொழுது மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஆனால், மந்தமாக உட்கார்ந்து கிடப்பவர்களுக்கும் மகிழ்ச்சி இல்லையே! ஆனால் ’காரியம் ஆற்ற முனைகிறவர்களுக்குக் கடவுளே வந்து உதவுவார்’ என்ற ஒரு முதுமொழியையும் இங்கே நாம் நினைவு கூர்வோம். நமது திறமை என்ன என்று உணரும் நாள் இந்நாள். நாம் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிடுகிற திறமை நமக்குள்ளே இருக்கிறது. ஆற்றல் கொள்ள வைக்கிறது. ஆற்றலோ அதனை செயல்படுத்துகிறது. அறிவு எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்த்து விடுகிறது. சோம்பேறித்தனமோ வராத முடிவுக்காகவே வருந்தித் துடிக்கிறது. நாம் ஆற்றலை அறிந்து, அறிவினை வளர்த்துக் கொள்வது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மையான பணியாகும். 3 உழைப்பே உற்சாகம் வாழ்கையின் இலட்சியம் ஒரு நிலையான புகழைப் பெறுவதுதான். இந்த உலகில் இருந்து விட்டுச் சென்ற ஒருவரது சம்பவங்களை எதிர்காலத்தில் வாழ்கின்ற மக்கள் நினைத்துப் பார்த்துப் போற்றி, தாங்களும் அதுபோல வாழ்ந்து பார்க்க முயல்கின்ற அடிச்சுவடுகளைப் பதித்துவிட்டுச் செல்கின்ற அருமையான வாழ்க்கை முறையே நிலையான புகழாகும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புகழுடன் இருந்து விட்டுச் செல்ல வேண்டுமென்றுதான் விரும்புகின்றார்கள். ஆனால், ஆசை இருப்பதுபோல, செயல்முறை அமைவதில்லை. காரணம் - மனிதர்கள் எல்லோரிடமும் திறமைகள் சக்திகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் செயல்படும் தன்மையில் தான் பற்றில்லை, பொறுப்பில்லை, ஈடுபாடுள்ள உழைப்பில்லை. உழைப்பில் வாராத வெற்றிகளே இல்லை. இந்த உண்மையை உணர்ந்து பாராட்டி பின்பற்றுபவர்களே வாழ்க்கையில் உயர்கின்றார்கள். இலட்சிய வாழ்வு வாழ்கின்றார்கள். “மனிதன் என்பவன் உழைப்பாளியே. தினம் உழைக்க மறுக்கிறவன் மனிதனல்ல” என்கிறார் மேனாட்டு அறிஞர் ஒருவர். ஏனென்றால், உழைப்பு என்பது மனித வாழ்வுக்கு உணவு போன்றது. இன்பமே வேண்டும் என்ற மனப்பாங்கு ஒருவரது வாழ்க்கையை பாலைவனமாக மாற்றி விடுகிறது. உழைப்புதான் வாழ்க்கை என்றால், அது எப்படி என்று இப்பொழுது உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதல்லவா. நியாயமான எதிர்பார்ப்புதான் இது. எவன் ஒருவனுக்கு செய்வதற்கு வேலை இருக்கிறதோ அவனே பரிபூரண ஆசிகளைப் பெற்றிருப்பவன். எவன் தனக்குரிய வேலையைத் தெரிந்து கொள்ளாமல், ஏய்த்துத் திரிந்து சோம்பேறியாக வாழ்கிறானோ, அவன் ஒரு குட்டிச் சாத்தான் ஆவான். ஆமாம், அவன் தன்னையும் மாய்த்துக் கொள்கிறான். தன்னைச் சார்ந்தவர்களையும் தீர்த்து விடுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வேலை நிச்சயம் வேண்டும். கட்டாயமாக வேண்டும். உழைக்கத் தெரிந்தவனே மனிதன். அதனால்தான் ஒரு பழமொழி இப்படிச் சொல்லிச் செல்கிறது. ‘ஒரு மனிதனுக்கு உண்மையான நண்பர்கள் அவனுடைய பத்து விரல்களே!’ இந்த உழைப்பிற்கு ஆதாரமான விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு சிலர் பிச்சையெடுக்கவும், வழிப்பறி செய்யவும். ஒரு சிலர் கொலை கொள்ளை செய்யவும் முயல்கின்றார்கள் என்றால் அவர்களை முட்டாள்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவன் செய்கின்ற அவனது வேலையை வைத்துக் கொண்டே, அவன் எப்படிப் பட்டவன் என்பதைத் தெரிந்துக் கொள்ள முடியும். முடியாதா என்ன? வேலை என்பது ஒருவனை வெளிப்படுத்திக் காட்டும் இயல்புள்ளது. அவனது குணாதிசயங்களை பிரதிபலித்துக் காட்டுவதும் ஆகும். ஆகவே, தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒரு வேலையே, அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காட்டிவிடும் என்பதால் நாம் மிகவும் கவனமாக வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரணம், நமக்கு நாமே உதவி என்பதால்தான். நம்மை உயர்த்திக் கொள்ளத்தான் நாம் முயல்கின்றோம். தாழ்த்தவோ வீழ்த்தவோ இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எவ்வாறு நமக்குரிய வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் வேலையைப் பற்றிய விவரத்தைப் புரிந்து கொள்வோம். வீட்டுக்கு வாசற்படி போல இது இருக்கிறது. வேலை என்பது வாழ்வின் ஆதாரம் மட்டுமல்ல. வேலையில் ஈடுபடும்பொழுது, அது நமக்கு அளிக்கின்ற சுகங்கள் பல. பணம்தான் ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்பதல்ல. ஒரு வேலையில் ஈடுபட்டு, அந்த வேலையை சிறப்பாக முடித்து, சிறந்த சாதனை புரியும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கும் இதய நிம்மதிக்கும் ஈடான நேரம் எதுவுமே இல்லை. வேலையானது மகிழ்ச்சியை மட்டுமா விளைவிக்கிறது? வேறுபல சிறப்புக்களையும் அல்லவா விரைந்து கொடுக்கிறது! ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால் மூன்றுதரமான குணாதிசயங்கள் கொண்டிருக்க வேண்டும். 1. உண்மையான உழைப்பு, 2. உறுதியான உழைப்பு, 3. உற்சாகமுள்ள உழைப்பு. இந்த மூன்றையும் கொஞ்சம் நிதானமாகவே சிந்தித்துப் பாருங்கள் விளங்கும். உண்மையான, உறுதியான, உற்சாகமுள்ள உழைப்பு, மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொண்டு வந்து தருகின்றன. எப்படி? அவை மனத்தின் அனத்தல்களை (பிரச்சினைகளை) விரட்டியடிக்கின்றன. அதற்குப் பக்கபலமாக விளங்கும் கெட்ட குணங்களை விட்டொழிக்கச் செய்கின்றன. அதற்கும் மூலகாரணமாக இருக்கும் வறுமையை வரவிடாமல் செய்கின்றன. ஆகவே, உழைப்பே உற்சாகம், உற்சாகமே உழைப்பு என்ற ஓர் இலட்சியத்தை நாம் கடைப் பிடித்துக் கொண்டால் வாழ்வும், வளமும், புகழும் பெருமையும் நமது காலடியில் வந்து தவம் கிடக்காதா என்ன? இது எப்படி முடியும்? என்று எதிர் கேள்வி போடுபவர்களுக்கு இந்த நிலை வராது. வரவே வராது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை கெட்டவர்கள். தம்மைப் பற்றித் தாழ்வாகவே தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள். உழைப்பின்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். ஏனெனில், உழைப்பு என்பதும் வேலை என்பதும் ஒருவரை ஆட்டிப்படைத்து, உலக வாழ்க்கையின் இன்பங்களிலிருந்து வேறுபடுத்திவிடும் என்று தவறான கருத்துகளை அவர்கள் கொண்டிருப்பதால் தான். வேலையும் உழைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை இனிக் காண்போம். வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லாம் கடுமையான உழைப்பாளிகளே. அலுவலகத்தில் நாள் பூராவும் வேலை செய்து விட்டு, அதை வீட்டிற்கும் கொண்டு வந்து, இரவு நெடுநேரம் செய்து விட்டு, உறங்குகின்றவர்களும் கடுமையான உழைப்பாளிகள் தானே என்று கேட்பவர்களும் உண்டு. அவர்கள் உழைப்பாளிகள் தான். ஆனால் புத்திசாலிகள் அல்ல. உழைப்பு புத்திசாலித்தனத்துடன் அமைய வேண்டும். முட்டாள்கள் புரிந்து கொண்ட கடைசியாகச் செய்கின்ற காரியத்தை, புத்திசாலிகள் முதலிலேயே செய்து விடுகின்றார்கள் என்கிற ஒரு மேதாவியின் கருத்தை இங்கே நாம் ஆராய வேண்டும். ஒரு வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாலேயே அவர் சிறந்த உழைப்பாளி என்பவராகி விட மாட்டார். குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே செய்வதுதான் புத்திசாலித்தனம். கடினமாக உழைக்கின்ற உள்ளம் மட்டும் போதாது. விரைவாக முடித்து விட்டு, ஓய்வாகவும் இருக்கத் தெரிய வேண்டும். செய்கின்ற வேலையை செய்கின்ற இடத்திலேயே விட்டு விட்டு வரத் தெரிய வேண்டும். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று வேலையை சேர்த்து வைத்துக் கொள்பவர்கள், சித்ரவதைப்படுவார்களே தவிர, சந்தோஷமாக மீண்டும் உழைப்பில் ஈடுபட முடியாது. உழைப்பில் முன்னேற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்கள், மேலும் நெஞ்சில் சில கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். காரணமில்லாமல் கோபப்படுவது ஒன்று அது மனதையும் கெடுக்கும். சுமுகமான சூழ்நிலையையே பாதித்து விடும். அடுத்தது அநாவசியமான பேச்சு, தன்னை அறிவாளி என்று வெளிப்படுத்த முனைந்து, அசடராகக் காண்பித்துக் கொள்ளச் செய்துவிடும். அநாவசியமான பேச்சு தேவையற்றதாகும். தேவைப்படும்படியான தன்மையில், சுருக்கமாக, தெளிவாக இதமாகப் பதமாகப் பேச வேண்டும். அதுவே உழைக்கும் இனிய நிலையை உருவாக்கும். மற்றொன்று காரணமில்லாமல் கருத்தை மாற்றிக் கொள்வது, என்ன நடக்கும் என்று முடிவறியாமல், செயலை மாற்றி அமைப்பது; முன் பின் தெரியாதவர்கள் சொல்லில் நம்பிக்கை கொள்வது, எதிரிகளை நண்பர்களாக எண்ணிப் பழகுவது. இவை எல்லாம் ஒருவரை முட்டாளாக வெளிபடுத்திக் காட்டுவதுடன், நல்ல செயலாற்றல் இல்லாதவர்கள் என்பதையும் தெளிவாக்கி விடும். ஆகவே, உழைப்பு என்பது மனிதர்க்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று எண்ணி மகிழ்ந்து, செயல்பட்டு கடுமையாக உழைப்பவர்களே வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். ‘தைரியமாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும்’ என்கிறார் நேரு. “வேலையைத் தொடங்குவதே சிறந்த வெற்றிதான்.” என்கிறார் இன்னொருவர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிவு கற்பிக்கிறது. அதை முடித்து வெற்றி காண்கிறது உழைப்பு. இறுதியாக ஒன்று. ஒரு பணியில் ஈடுபடும் பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள்ளாற்றல், திறமை தேவைப்படுகிறது. மனித சக்தியும் திறமையும் அதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. எனவே, மகிழ்ச்சிதரும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் உழைக்காமல் மகிழ்ச்சி இல்லை. உற்சாகத்துடன் உழைப்போம். அது நம்மை உயர்த்தித்தான் நிற்கும். நாம் உயர வேண்டுமானால், நமக்கு நாம் தான் உதவிக் கொள்ள வேண்டும். வேறு வழியேயில்லை!  4 தொழிலைத் தேர்ந்தெடுக்கும் திறம்! ஒரு பட்டதாரி ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டே ஏதாவது ஒரு தொழிலைச் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆசையைப் புரிந்து கொண்டான் ஒருவன். தினமும் வீட்டுக்கு வந்து பால் கொடுக்கும் பழக்கம் உள்ள பால்காரன் அவன். ஒரு பால் மாடு வாங்கி விட்டீர்களானால், தினம் பால் வாங்கும் செலவு போக, பத்து ரூபாயாவது மிஞ்சும் என்று ஆசை காட்டினான். கையிலிருந்த 2000 ரூபாயைப் போட்டு, எருமைமாடு ஒன்றை அந்த ஆசிரியர் வாங்கினார். அவரால் மாட்டைப் பார்த்துக் கொள்ள முடியுமா? பால்காரனையே முழுதாக நம்பினார். பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அவனே மாட்டுக்குப் பொறுப்பாளியானான். அவன் செலவு என்று சொன்னது தான் கணக்கு. லாபம் என்று தந்தது தான் வரவு. ‘சைட் பிசினஸ்’ என்பார்களே. அப்படி நடந்து வந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம், மாடு அவனுடையது என்று சொல்லிக் கொண்டே வந்த பால்காரன், ஒரு நாள் மாட்டை ஓட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். பதட்டப்பட்ட ஆசிரியர், மாடு தன்னுடையது என்று தடுத்தார். அவன் மறுத்தான். மற்றவர்களும் அவர் பேச்சை நம்ப மறுத்தார்கள். மாடு பால்காரன் மாடாகப் போயே விட்டது. வருத்தப்பட்டார் ஆசிரியர். தனது நண்பர்களிடம் கூறினார். அவர்கள் கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், உண்மையாகவே பட்டது. ‘உங்களுக்குத் தெரிந்த தொழிலை, உங்கள் கெளரவத்திற்கு ஏற்ற தொழிலைச்செய்திருந்தால். இந்த கதி வருமா?’ உண்மைதானே! இரண்டாயிரத்தை இழந்து அந்த உண்மையை உணர்ந்தார். அத்துடன், படித்த முட்டாள் என்ற பட்டத்தையும் பக்கத்து வீட்டார் வழங்க, பெற்றுக் கொண்டார். அடுத்ததாகவும் ஒரு தொழிலில் மாட்டிக் கொண்டார். தன் கூட இருப்பவனுக்கு உதவவேண்டும்! அத்துடன் தனக்கும் வருமானம் வேண்டும் என்று இரட்டை இலட்சியத்துடன் ஒரு தொழிலைத் துவங்கினார் அதே ஆசிரியர். தொடங்கிய தொழிலோ சைக்கிள் கடை. என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சைக்கிள் கடை பொறுப்பில் இருந்த ‘அவன்’ அதில் வந்த வருமானத்தையெல்லாம் தனதாக்கிக் கொண்டான். எப்பொழுதோ போய், கடைக்குச் சென்று, சிறிதுநேரம் இருந்துவிட்டு வருகின்ற பழக்கம் உள்ள ‘அவர்’. பாவம் - நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக சைக்கிள்கள் காணாமல் போகத் தொடங்கின. வருமானம் குறைந்தது. செலவோ அதிகமாகியது. அவர் கேட்கும் கேள்விகளுக்கு, அவன் கூறிய காரணம் அவரைக் குழப்பியது. கொஞ்சங் கொஞ்சமாகப் பிரச்சனைகள் பெருகின. உடும்பைப் பிடிக்கப் போய், உடும்பு கையைக் கெளவிக் கொள்ள, ‘உடும்பு வேண்டாம் கை கிடைத்தால் போதும்’ என்று ஓடி வந்தவனைப் போல. வந்த விலைக்கு சைக்கிள் கடையை விற்று விட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவந்தார் அவர். தனக்குத் தெரிந்த தொழிலை அவர் தேர்ந்து எடுக்கவில்லை. தன் அந்தஸ்துக்கு ஏற்ற தொழிலாகவும் பார்க்கவில்லை. பிறரை நம்பித் தொழில் ஆரம்பித்தால் பெருத்த இழப்புதான் ஏற்படும் என்ற பேருண்மையை மட்டும் அப்பொழுது புரிந்து கொண்டார். துன்பம் தான் தொடர்கிறது என்றாலும், அவரால் ‘சும்மா’ இருக்க முடியவில்லை. கெளரவமான தொழிலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது மனதுக்கு சமாதானமாக இருந்தது. வருமானம் அதிகம் இல்லையென்றாலும், வாழ்வுக்கு கெளரவம் கிடைத்தது. போட்டோ ஸ்டுடியோ தொழில் அது. அதைப் பற்றிய ‘ஆன்னா ஆவன்னா கூட அவருக்குத் தெரியாவிட்டாலும், ஓர் அசட்டுத் தைரியம். 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்காரரை நியமித்தார். லாபம் அதிகம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இல்லாமல் தொழிலோ ஓடிக் கொண்டிருந்தது’. ஒரு நாள் அந்த முதலாளி ஊரில் இல்லாத சமயம், திருமண வைபவத்திற்கு போட்டோ பிடிக்க ஒப்புக் கொண்டு போனார் அந்தத் தொழிலாளி. 20போட்டோ எடுத்ததில் ஒன்றைத் தவிர எல்லாமே பாழாய் போயிருந்தது தவறுசெய்தவன் தொழிலாளி. அதற்குரிய தண்டனையை அடைந்ததோ அந்த முதலாளி. “இப்படி போட்டோ எடுத்து எங்கள் திருமண வைபவத்தையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்களே! இனிமேல் நாங்கள் திருமணமா செய்து கொள்ளப் போகிறோம்! நீங்கள் போட்டோ எடுத்த லட்சணம்...” பாருங்க என்று காட்டிப் பலவாறாகப் பேசிவிட்டுப் போய்விட்டார் பாதிக்கப்பட்ட அந்த மணமகன். முடிவு! தனக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்ட அந்த ‘அவர்’, போட்டோ கடையையும் மூடிவிட்டார்... பாவம்! இதுபோல எத்தனையோ சுவையான சம்பவங்களைக் கூறலாம். தெளிந்த அறிவுள்ளவர்கள் கூட, தங்களுக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்டதால், தங்கள் சொத்தையும் இழந்து, சுகத்தையும் இழந்து சோகத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள். ஒருவர் உலகில் உயிர் வாழ்வதற்கு, ஒன்று உத்தியோகத்தில் சேர்ந்தாக வேண்டும். அல்லது தொழில் முறை சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டாக வேண்டும். இரண்டில் ஒன்றை - எதுவாக இருந்தாலும் மனிதர்கள் தேர்ந்தெடுத்துத் தான் வாழ்ந்தாக வேண்டும். அது எப்படி என்று எது என்று தேர்ந்தெடுப்பதில் தான் திறமும் தேர்ச்சியும் இருக்கிறது. மனதுக்குப் பிடித்த வேலையை அல்லது வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் மனிதர்க்கு உரிய மதிக்கூர்மையாகும் என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும். ‘மனிதர்கள் தங்களுக்குரிய வேலையை அல்லது தொழிலை தேர்ந்தெடுப்பதில்லை. அவைகள் தாம் மனிதனை ஆட்கொண்டு விடுகின்றன.’ என்ற வாசகமும் உண்மைதான். இதுதான் இயற்கையின் எழுதாத விதிமுறையாகும். இதனை உணர்ந்து ஒரு மேதை கூறுகிறார் இப்படி, ‘இந்த உலகம் ஒரு வைக்கோற்போர் போன்றது. அதனை மனித இனம் என்ற கழுதைகள் சுமந்து கொண்டும், இழுத்துக் கொண்டும் திரிய வேண்டியதுதான்.’ அதனால் தான், நமக்குரிய நிலை என்ன, நம்மால் என்ன முடியும் என்று, நமது வாழ்க்கைக்கு உதவுகின்ற பணியினை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முன் வர வேண்டும். தேர்ந்தெடுப்பதால் கிடைப்பன! 1. சிறந்த உழைப்பாளர்கள் அல்லது தேர்ந்த அறிவாளர்கள் தாங்கள் எதை அதிகமாக விரும்புகின்றார்களோ அந்தப் பணியில் தான் ஆர்வம் காட்டி, தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். 2. அப்படி அவர்கள் ஆசைப்பட்டதைத் தெரிவு செய்து கொள்வதன் காரணமாக, அவர்களுக்கு உள்மனதிலே திருப்தியும் சமாதானமும் ஏற்படுகிறது. திருப்திதானே தொடர்ந்து பணியாற்றும் திறமைகளையும் சக்தியினையும் அளிக்கிறது! வளர்க்கிறது! 3. அப்படித் தேர்ந்தெடுப்பதானது ஆற்றலை அளிப்பதுடன், ஆழ்ந்த அறிவினையும் கொடுக்கிறது. இதனால் சாமர்த்தியமாக எந்தப் பணியையும் சாதிக்கின்ற தெளிவும் வலிவும் கிடைத்து விடுகின்றது. அதற்குரிய பரிசாக, பதவி உயர்வோ, பணவரவோ, புகழோ, அதிகார பலமோ எதுவும் கிடைப்பதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது. 4. பணியோ வியாபாரமோ எதுவாக இருந்தாலும், அதை பாரமாகக் கருதாமல், கடனே என்று நினைக்காமல், விதியே என்று தொடராமல், செய்யும் பொழுதே சந்தோஷமாகச் செய்யும் சிந்தையை இந்தத் தேர்ந்தெடுக்கும் பணி அளிக்கிறது. 5. செய்யும் தொழிலில் சந்தோஷம் இருப்பதால், இறுதி முடிவும், அதற்குரிய பலனும் சிறப்பாகவே அமைகின்றன. விரைவாகவும் பணி முடிகிறது. அதன் விளைவுகளும் நேர்த்தியாகவே நிறைவுபெற்று வருகின்றன. எவ்வாறு தேர்ந்தெடுப்பது? நமக்கென்று ஒரு பணியை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்றால், அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதால் தான். ‘நமக்கு நாமே உதவி’ என்பதை நம் மனதில் கொண்டு தான் நடந்து கொள்ள வேண்டும். “பிறர் கையை எதிர்பார்த்துப் பிழைப்பது பேதையின் செயலாகும்! பிறரை நம்புவதே இறுதியில் வறுமையில் கொண்டு போய் விட்டுவிடும்” என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஆகவே, தொழிலை எப்படித் தேர்ந்தெடுப்பது? அறிவுள்ள மனிதன் ஒருவன் தனக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, தன்னை ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்குரிய தகுதிகளையும், திறமைகளையும், ஒருவாறு சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். அதிக எச்சரிக்கையுடன் இருந்து தேர்ந்தெடுக்க முயற்சிப்பது அதிக அறிவுடமையைக் குறிக்காது. அதனால், நமது உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்ததாகும். இதயம் மிகச் சிறியதுதான். ஆனால் அதனுள் இருந்து வெளிக் கிளம்பும் நினைவுகளோ வான வீதியையும் வளைத்துப் பிடித்து முற்றுகையிட்டு, மோதிச் சாய்க்கும் வலிமை உடையது. ஆகவே, ஆசைப்படுவனவற்றையெல்லாம் நாம் ஆக்ரமித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. வாழ்க்கையைப் பிரச்சினையாகவும் கருதிவிடக் கூடாது. நமக்குரிய தொழில், நம்மை யாரென்று வெளிப்படுத்திக் காட்டக் கூடியது. ஆகவே, தேர்ந்தெடுக்கும் பொழுது, இது நமக்குப் பொருந்தும். இது நம்மால் முடியும். இதில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதனால் நம் திறமைவளரும், பெருமை உயரும் என்பதை ஆய்ந்தறிந்து மேற் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுப்பதில் திறம் காட்டி விட்டால், பிறகு தெளிவான வழியும், வலிவான அறிவும் நமக்கு வந்து விடும். பிறகு சாதிப்பது கடினமான காரியமா என்ன?  5 தொழிலும் சிந்தனையும் புதிதாக வாங்கிய சைக்கிள் மீது, ஒருவன் முகத்தில் பெருமை பொங்க, கம்பீரமாக ஏறி அமர்ந்து, ஓட்டிக் கொண்டு சென்றான். சைக்கிளை ஓட்டும் வரை, சைக்கிளும் ஓடும்வரை, சைக்கிளும் அழகாக இருந்தது. சைக்கிள் ஒட்டுபவனையும் பார்க்க அழகாக இருந்தது. உட்கார்ந்தபடி ஒட்டிய அவன், சைக்கிளை மிதிக்காமல் இருந்தான். சைக்கிள் நின்று விட்டது. அடுத்த நிலை என்ன? ஓடாத சைக்கிள் விழுந்து விட்டது. அது மட்டுந்தானா? அவனுந்தான். சைக்கிள் ஒட்டுவதில் தான் இந்த நிலைமை வருமா என்றால் இல்லை. தொழில் செய்யும் பொழுதும் தான். வாழ்க்கையிலுந்தான் இந்த நிலைமை இருக்கிறது. ஓடாத நீர் குட்டையாகிறது. கடைசியில் சாக்கடையாகிறது. ஓடாத எந்திரம் துருப்பிடிக்கிறது. பிறகு ஓடாமலே ஓட்டையாகிப் பயனற்றுப் போகிறது. மனித உடலும் அப்படித்தான் என்றால், அவன் செய்யும் தொழிலுக்கும் அதே கதிதான்! ‘தொடர்ந்து தொழிலை செய்து கொண்டே இரு. இல்லாவிடில், உன் தொழிலில் நஷடம் அடைந்து விடுவாய்.’ இதுதான் வியாபாரத்தின் நுணுக்கமாகும். எந்தத் தொழிலும் தொடங்கிய உடனேயே பிரபலமாகி விடாது. பெரும் லாபத்தைத் தந்து விடாது. ஆரம்பத்தில் ஆயிரம் கஷடங்கள். அநேக சிக்கல்கள். அடிமேல் அடிகள். எதிர்பாராத பிரச்சினைகள். நல்லதும் கூட கெட்டதாகத் தெரியும். கெடுபிடிகள், ஏமாற்றங்கள், எதிர் தாக்குதல்கள். தொழிலில் எல்லாமே உண்டு. வருமானம் சும்மா வருமா? தொழிலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறவர்களால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும். மக்கள் மனதிலே ஒரு நம்பிக்கையை ஊட்டும் வரை செய்யும் தொழிலைத் தொடர்ந்து தான் ஆக வேண்டும். எப்படி தொழிலில் வெற்றி பெறுவது? கடுமையான உழைப்பின் மூலம் தான் வெற்றிபெற முடியும். எந்தப் பிரச்சினையையும் கடுமையாக எடுத்துக் கொள்வதால் அல்ல. அதாவது துரும்பைத் தூணாக்கிக் கொண்டு பார்ப்பது. அற்ப விஷயத்தையும் அலசி அலசி பூதாகரமாக்குவது. இவைகள் மனதைக் கலங்கடித்து விடும். ஆகவே, கடுமையாக உழைத்தால் தொழிலில் மேன்மை கிடைக்கும். கடுமையாக காரியங்களை கருத்தில் கொண்டால், கஷ்டங்களே லாபமாகும். இன்பங்களே நஷ்டமாகிவிடும். இதனை எப்படி ஏற்பது? தீர்ப்பது? வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், அதை ஏற்கும் மனோபாவத்தில் தான் இருக்கிறது. பெரிய புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கேற்ப மனதை ஒரு நிலைப்படுத்தி, அதனை சமாளிக்கும் திறம் படைத்தவர்களால்தான், நஷ்டத்தையும் லாபமாக்கிப் பார்க்க முடியும். லாபமாக்கிக் காட்டவும் முடியும். அதாவது ஏற்கும் மனோபாவம். சிக்கலாக்கும் மன வலிமை அல்ல. தொழில் செய்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்வது நல்லது. அதாவது தொழில் அல்லது ஒரு வியாபாரத்தை விளையாட்டு என்றும் கூறலாம். வெறியூட்டும் போர் என்றும் கூறலாம். சில சமயங்களில் விளையாட்டுப் போர் என்று கூட நாம் கூறலாம். போர் என்றால் எதிரியை வீழ்த்தி வெல்லுதல். விளையாட்டு என்றால் எதிரியை வீழ்த்துவது போல் பாசாங்கு பண்ணி, போக்குக் காட்டி வெல்லுதல். தொழில் துறையில், போரிடுவது போல திட்டங்களைத் தீட்ட வேண்டும். விளையாட்டில் மேற்கொள்ளும் திறன் நுணுக்கங்களைப் போல, எதிரிகள் மேல் வெற்றி கொள்ளுதல் வேண்டும். போரில் பொறாமையும், விளையாட்டில் பொச்சரிப்பும் தோல்வியைத் தந்து விடும். தொழிலிலும் பொறாமையே வரக் கூடாது. எதிரி எப்படி சமாளிக்கிறான் என்று அலசிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை தான் வேண்டும். ஆகவே, விளையாட்டுப் போராக தொழிலை மேற்கொண்டால் அங்கே, வெற்றிதான் விளையுமே தவிர, தோல்வி தலைகாட்ட வாய்ப்பே இல்லை. தொழிலுக்கு சோர்வும் சோம்பலும் பொல்லாத எதிரிகள் ஆவார்கள். எவ்வளவுக்கு நாம் உழைக்கிறோமோ அந்த அளவுக்கு தொழில் விருத்தியடைந்து விடும். வேறு வழியேயில்லை. நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சிதான். வீட்டில் குப்பையைக் கிளறுகின்ற கோழியைப் பாருங்கள். அது குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் வரை அதற்கு ஏதாவது தின்னுவதற்குத் தீனி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அது தன் கிளறலை நிறுத்துகிற பொழுது, கிடைக்கும் ஆதாயமும் நின்று போகிறது. தொழிலும் அப்படித்தான். துணிவாக, தெளிவாக தொழிலில் ஈடுபடும் வரை ஆதாயம் இருக்கத்தான் உண்மையோடு ஒரு தொழிலை உருவாக்குவது மிகவும் கஷ்டமான காரியம் தான், அழிப்பதோ மிகவும் எளிது. சட்டி பானை பண்ணுகிற தொழிலாளிக்கு ஆறு மாதம் வேலை. அவற்றை உடைக்கிற ஊதாரிக்கோ அரை நிமிடம் போதும். தொழிலை வளர்க்க விரும்புபவர்கள் அதைத் தொழிலாகக் கொள்ள வேண்டும். பொழுது போக்கு அம்சம் என்று கருதி விடக்கூடாது. பொழுது போக்கிடத் தொழில் என்றால், இறுதியில் அழுது வடியத்தான் நிலைமை வரும். தொழில் என்பது தெய்வம். உழைப்பு என்பது மதம். திட்டம் என்பது ஆலயம். சுறுசுறுப்பு என்பது பக்தி நாணயம் என்பது நியமங்கள் முயற்சி என்பது வேதங்கள் இப்படி எண்ணுகிறவன் தான் தொழிலில் சிறக்க முடியும். பிறரை நம்பித் தொழிலை ஆரம்பிப்பவன் பேதை, பிறரை நம்பித் தொழிலை விடுபவன் பைத்தியக்காரன். பிறர் வந்து தொழிலை முன்னேற்றுவார்கள் என்று நம்புபவன் கோமாளி. தனது உழைப்பை நம்புகிறவன், தனது உழைப்பில் வாழ்கிறவன் தான் முன்னேற முடியும். ஒரு விளையாட்டு வீரன் பந்தாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பந்தை எங்கு நின்று அடிப்பது, அந்தப் பந்து போய் எங்கு விழும்? அதை எதிராளி எப்படி ஆடுவான்? அதை எப்படி எடுத்தாடுவது என்பதாக, தனது மனதுக்குள்ளே ஒரு மனோ பார்வையை (Mental Visuvalization) அவன் மனதில் வைத்துக் கொண்டு தான் ஆடுவான். அப்படித்தான் ஆடவேண்டும். அப்படி அவன் விளையாடா விட்டால், அவன் சிறந்த விளையாட்டு வீரன் இல்லை. அவன் சாதாரண விளையாட்டுக்காரன் தான். அவன் ஆயிரம் பேர்களில் ஆயிரத் தொன்றாகத்தான் இருப்பான். ஆயிரத்தில் ஒருவனாக அவனால் வரமுடியாது. அதே போல, தொழிலில் ஈடுபடுபவருக்கும் இந்த மனோ காட்சிகள் வேண்டும். முன்னதாகத் திட்டங்களும், திட்டங்களை செயல்படுத்தும் கட்டங்களும் தெரிந்தாக வேண்டும். வரப்போகும் காரியங்களைப் பற்றிய வரன் முறைகள் தெரிந்திருக்க வேண்டும். தொழில் செய்வது நமக்காக, நமது முன்னேற்றத்திற்காக, நமது நல்ல வாழ்வுக்காக. நமக்கு நாமே தான் உதவி செய்து கொள்ள வேண்டும். எந்த வேலையையும் முதலில் மனதுக்குள் போட்டு அலசிவிட வேண்டும். மார்க்கங்களையும், வழிமுறைகளையும், தீர்க்கமாகப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். செய்யப் போகும் செயல்முறைகளை ஒரு முறையாவது மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்ப்பதும், மாற்று முறை ஏதாவது வந்தால் அதையும் மாற்றுத் திட்டமாக வைத்துக் கொள்வதும் தொழிலுக்குரிய சிந்தனைகளாகும். தொழிலில் சுறுசுறுப்பாக விளங்குபவன் கஷ்டத்தைக் கூற மாட்டான். கண்ணீர் விட மாட்டான். காரணம் என்ன ஏனென்றால், அவனுக்குத் தான் நேரம் இருக்காதே! ஏன் என்றால், தொழில் என்பது வாழ்க்கையின் சந்தோஷமாகும். சந்தோஷத்தை விரிவு படுத்திக் கொள்பவன் புத்திசாலி. புத்திசாலிதான் புகழ்பெற முடியும். அதற்கு அடிப்படை நமக்கு நாமே உதவிக் கொள்வது தான்.  6 முடிவு எடுப்பதுதான் முக்கியம்! ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருந்தாக வேண்டும். முடிவு நேர்வதற்கு இடையில் காலதாமதம் நேரலாம். அவ்வளவுதான். ஆகவே, முடிவுக்காக நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ ஓரிடத்தில் ஊற்றாகத் தோன்றுகின்ற ஆறுக்கு முடிவு கடல்தான். இடைக் காலத்தில் ஏற்படுகின்ற உறவு ஆறுகள், கிளைநதிகள் எல்லாம் பயணத்தில் வந்து போகும் அன்றாட நிகழ்ச்சிகள். நாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். நமது வாழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை நாம் அறியாததா? அதுபோலவேதான் ஒரு செயலும், நாம் தொடங்குகிற செயல், நம்மையறியாமல் ஏற்படுவது அல்ல. எண்ணித் துணிந்து, எத்தனையோ வழி முறைகளை ஆய்ந்து, அவற்றில் தோய்ந்து, வெளி வந்ததன் விளைவுதான் அது. ஆரம்பிக்கவே பயப்படுகிறவன் எவனும் அரை நொடிக்கூட தொடர முனைய மாட்டான். ஏனெனில் அவனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கையற்றவர்கள் கோழைகள். 'கோழைகளுக்குக் குலைக்கத்தான் தெரியும். கடிக்க முடியாது’ இப்படி கேலியாக பேசுபவர்களும் உண்டு. ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது. அதனை முடிக்கின்ற வழிகளையும், முறைகளையும், நியதிகளையும் நாம் முதலிலேயே நன்கு ஆராய்ந்து தொடங்கி விடுகிறோம். காரியத்தை ஆரம்பித்த பிறகு, நமது கவனமெல்லாம் முடிவிலேதான். அதாவது முடிக்கும் காரியத்திலேதான் இருக்க வேண்டும். ‘முடித்துத்தான் ஆக வேண்டும்’ என்ற முயற்சியுடன் காரியத்தைத் தொடங்குபவன், முனைப்புள்ளவன். நிச்சயம் அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவான். அது எப்படிப்பட்ட முடிவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவன்தான் காரியவாதி. கடமையே கண்ணானவன், கருமமே கருத்தாகக் கொண்டவன். முடிவு முழுமையானதாக, சிறந்ததாக (Perfection) இருக்க வேண்டும் என்பதில் கவலையில்லாத முனைப்புக் கொண்டு, தயக்கம் கொள்ளாமல் உழைப்பவன் அவன். ஏனெனில், ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்யச் செய்ய, அதில் பழக்கம் ஏற்படுகிறது. பக்குவம் உண்டாகிறது. தெளிவு கிடைக்கிறது. தேர்ச்சி நிலைக்கிறது. அதில் ‘பர்பெக்‌ஷன்’ தானாகவே பரிணமித்துக் கொள்கிறது. எனக்கு ‘பர்பெக்‌ஷன்’ தான் வேண்டும். அப்பொழுதுதான் நான் அந்தக் காரியத்தை ஆரம்பிப்பேன் என்று யாராவது சொன்னால், அவன் காரியவாதி அல்ல... பேசிக் கொண்டே பொழுதைப் போக்கும் பயந்தாங் கொள்ளி ஆவான். பேசுவதிலேயே இன்பம் கண்டு, பேசுவதிலேயே பிறரிடம் மரியாதை பெற்று. காலப் போக்கில் கேலிக்குரிய மனிதனாகப் போகிறவன் அவன். எப்படியென்றால், தான் தொடங்கப் போகும் காரியம் வெற்றி தருமோ, தராதோ என்ற குழப்பங்களுக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பவன். இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவன் சரியான முடிவுக்கு வரமுடியாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டேதான் கிடப்பான். அவனைப்போல் அவதிப்படும் ஆள் வேறு யாராகவும் இந்த உலகில் இருக்க முடியாது. நல்லதோ கெட்டதோ முடிவெடுக்கத் தெரிந்தவன் மட்டுமே நிம்மதியாக வாழ்கிறான். நேர்த்தியாக செயல்படுகிறான். நிறைவான காரியங்களில் நேர்த்தியாக ஈடுபடுகிறான். நிலையான புகழை அடைகிறான். ஏனென்றால், உலகில் உள்ள எல்லா காரியங்களுமே முடிவினால் மட்டுமே ஏற்பட்டுவிடுவதல்ல. அதிகமான வாய்ப்புக்களால் தான் நடைபெறுகின்றன. நாம் எடுக்கின்ற முடிவோ நமது இலக்கினைக் குறித்துக் காட்டுகிறது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நமது இலட்சியப் பயணத்தைத் தொடங்கி வைக்கிறது. அதில் தவறு நேரலாம். தவறு நேர்ந்தால் என்ன? தவறு நேர்கிறது என்று அறியும் பொழுது அதனைத் தவிர்த்துவிட முயலலாம். அதைச் சரி செய்து மேற்கொண்டு நடக்க முயற்சிக்கலாம். நாம் செய்வது சரி என்று தெரிந்தால், இன்னும் உறுதியாகச் செல்லலாம். இதுதான் வாழ்க்கை முறை. அதைவிட்டுவிட்டு, தன்னம்பிக்கை இல்லாமல், ஒரு முடிவெடுக்கத் தெரியாமல், செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வருவது, ஆறறிவுடைய மனிதர்க்கு அழகல்லவே! “நீ என்ன செய்யப் பேகிறாய்? நீ என்ன செய்வாய்?” என்ற சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் தடுமாறி நின்று பேதலித்து நிற்பவன், ஒரு அவமானச் சின்னமாகத்தான் அடுத்தவர்களுக்குத் தெரிவானே தவிர, வேறெப்படித் தெரிவான்? 'நான் என்ன செய்ய வேண்டும். நான் என்ன செய்யக் கூடாது' என்று முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மனிதன்தான் செயற்கரிய செயல்களைச் செய்பவனாகத் திகழ்கிறான். எதற்கும் முடிவுதான் முக்கியம். ஆரம்பிக்கிறவன், அதற்குரிய முடிவினை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்துப் பணியில் எனக்கு ஏற்பட்ட பிடிப்பினால், செய்கின்ற ஒரு உத்தியோகத்தைத் தொடர்வதா விடுவதா என்ற பிரச்சினை எழுந்தது. இரண்டாயிரம் ரூபாய் வருமானம் வருகின்ற பதவி அது. அதை விட்டால்தான், எழுத்தில் கவனம் செலுத்த முடியும். விடுவது என்று, முடிவு எடுத்தாகி விட்டது. வருமானம் அந்த அளவுக்கு வருமா? வராவிட்டால், என்ன ஆவது? ‘வசதி வசதி’ என்ற வாழ்க்கை வசதிவந்து குழப்பத் தொடங்கியது. அப்படி வருமானம் வராவிட்டால், எழுத்து இலட்சியப்பணி, தோற்றுவிட்டால், ஆலமரத்தடியில் - போய் தங்கியாவது பிழைத்துக் கொள்ளலாம். வாழ்வைப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கிடையில், வேறு ஒரு பணியில் ஈடுபடலாம் என்றெல்லாம் தோல்வி பற்றிய முடிவுக்கு மாற்று வைத்துக் கொண்டேன். அந்தப் பணியை உடனே விட்டுவிட்டேன். _ அப்பொழுது எனக்கிருந்த துணிவு ஒரு முடிவினை எடுக்கும் துணிவுதான். எழுத்துப் பணியை தொடர்வதென்ற முடிவுதான். அந்த நோக்கத்திலே மிகவும் உறுதியோடு இருந்ததால், நுழைந்து பார்த்து நோகச் செய்த நலிவுகள் எல்லாம், வால்களை சுருட்டிக் கொண்டு வந்த வழியாக ஓடி விட்டன. ஆகவே, முடிவு எடுப்பது மட்டும் முக்கியமல்ல. அந்த முடிவுக்கு இறுதி வடிவம் வரும்போது ஏற்படுகின்ற விளைவுகளைச் சந்திக்கும் திறமைகளையும் இடையிடையே இடைவிடாது வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். நல்லதோ கெட்டதோ வரும் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, மேலும் மேலும் செயலாற்றல் பெற விழைந்தால் போதும் தேர்ச்சிகள் தானாக வந்து சரணடைந்துக் கொள்ளும். தடுமாறாத, தன்னம்பிக்கையுள்ள எண்ணங்களே நமக்குத் துணை வாழ்வுக்கு அந்தச் செல்வம் தான் முக்கியம். நல்ல செல்வம் என்பது அடுத்தவரை நேசிப்பதும், அவர்களால் நேசிக்கப் படுவதும்தான். இலட்சியவாதிகளுக்கு இந்தச் செல்வம் நிறையவே கிடைக்கும். நல்ல செல்வத்தை எப்படிப் பயன்படுத்துவது? புத்திசாலித் தனமாக, வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சி செல்வத்தை அடைய மாறாத புத்திசாலித்தனம் தான் வேண்டும். அதற்கு வரும் முடிவுகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டாக வேண்டும். வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் வாகனம்தான் பத்திரமாகப் போய்ச் சேருகிறது. நமது பத்திரத்திற்கும், பாதுகாப்பான வாழ்வுக்கும் நமக்கு நாமே துணை. நமக்கு நாமே உதவிக் கொள்வோம். உலகை வெல்வோம் என்று பயணத்தைத் தொடங்குவோமே!  7 நம்மாலும் முடியும் நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? மேலேநட; நடந்து கொண்டேயிரு. அதாவது வாழ்ந்து கொண்டேயிரு. வாழ்ந்து கொண்டேயிருப்பது என்றால் விலங்குகளின் வாழ்க்கை ஆவதா? அப்படியென்றால், மனித வாழ்க்கை என்றால் என்ன பொருள்? வளர்ந்து கொண்டே வாழ்வது. வளர்ச்சி என்றால், வயதால் பெறும் உடல் முதிர்ச்சி அல்ல. வாழ்வின் எழுச்சி, முன்னேற்றமான நிகழ்ச்சிகள். மனிதன் வந்தான், வாழ்ந்தான், மடிந்தான் என்ற சாதாரண வாழ்க்கை அறிவுடையோர்க்கு அழகல்ல. மனிதர்கள் அனைவருக்கும் ஆண்டவன் பல அரிய சக்திகளைத் தந்திருக்கிறான். ஆற்றல்களை, அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தந்திருக்கிறான். வெந்த சோறும், விரித்த படுக்கையும், வீணான பேச்சும் மட்டுமே போதும் என்பவர்கள் வீணாகிப் போன உயிர்ப்பிண்டங்கள். தலையிருந்தும் தள்ளாடுகின்ற முண்டங்கள். நமக்கு இறைவன் கொடுத்த திறமையிருக்கிறது. முயற்சித்துப் பார்ப்போம், என்று முனைபவர்களே மனிதர்கள். நம்மால் முடியும் என்ற செயலில் இறங்கி விடுபவர்கள் தான் ஆண்மையாளர்கள். ஆற்றல் நிறைந்தவர்கள். வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும். காரியத்தில் ஈடுபட்டோம். கஷ்டப்பட்டோம். நமது கடமையை நிறைவேற்றி விட்டோம். இனிமேல் கவலையேயில்லை என்று எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்பவர்கள்தான் இலட்சியவாதிகள். எல்லோரும் இலட்சியவாதிகளாக ஆகிவிட முடியுமா? அது கஷ்டம் தான். ஆனால், எந்தக் காரியத்தை நினைத்தாலும். ‘நம்மால் முடியுமா? நிச்சயம் முடியாது’ என்று, நான்கு அடிகள் பின்னால் நடப்பது தான் மனிதர்க்கு அழகல்ல என்கிறேன். சிறந்த பலமுள்ள மனிதர்களால் முடியும். சிந்தித்ததை செயல்படுத்த முடியும். பயந்தாங்கொள்ளிகள், பலமற்ற பலவீன மனிதர்களால் ஆசைப்படத் தான் முடியும். அரங்கேற்றிக் கொள்ள முடியாது. பலம் என்றால் என்னவென்று நினைக்கின்றீர்கள்? மனோபலம். வெறும் உடல்பலம் மட்டும் போதாது. அதனுள்ளே உள்ள மன பலம் (Will Power). விடா சக்தி. இந்த விடாசக்தி என்கிற மனோபலம் சிறந்த தேகம் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. இதனால் என்ன நடந்து விடும் என்று நீங்கள் கேட்கும் வினா எனக்கும் கேட்கிறது. இத்தகைய விடா முயற்சியுள்ள மனோபலம் உள்ளவர்கள் இந்த உலகத்தார்களுக்கு ஏற்ற முறையில் வரவழைத்துக் கொண்டு, வடிவமைத்துக் கொண்டு விடுகின்றார்கள். இவர்களின் காலடியில் உலகம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் எண்ணியதை முடிக்கும் திண்ணியர்களாக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகின்றார்கள். ஆகவே, நாம் ஒன்றை மட்டும் நினைவு கொண்டே ஆக வேண்டும். வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் வேண்டும். தினம் அதை நோக்கியே நமது பயணம் தொடர வேண்டும். நமது முழு பலத்தையும் முழு மனத்தையும் அதிலே ஈடுபடுத்திக் கொண்டு விட வேண்டும். பெரிய இலட்சியத்திற்காக முயன்று, தோற்றாலும் பரவாயில்லை, யானை பிடிக்கும் முயற்சியில் தோற்பது கேவலமில்லை. ஒரு நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது பெரிய கெளரவமான காரியமுமல்ல. மனிதனை உயர்திணை என்பார்கள். அவனது சிந்தனையும் செயலும் உயர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும். நம்மிடையே வாழ்பவர்கள் பலர், தாங்களாகவே தங்கள் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, குலைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று ஓர் எல்லை கட்டிக் கொண்டு முடங்கிப் போகின்றார்கள். இவ்வாறு குறுகிய எல்லைக்குள்ளே கோட்டை கட்டிக் கொண்டு, சும்மா கிடக்க முயல்வது தான் மனிதர்களின் முன்னேற்றத்தின் தடைக் கல்லாக விளங்குகிறது. ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோற்றுப் போவது வீரம். தாழ்ந்த மனப்பான்மை என்பது பாவம். தனக்கு எதுவுமே செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருவது மன்னிக்கப் படாத மாபெரும் குற்றமாகும். 1954ஆம் ஆண்டு வரை, ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க முடியாது என்று உலகமே நினைத்து, ஒரு முடிவோடு இருந்தது. ஆனால், தன்னால் ஒடமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ரோகர் பானிஸ்டர் என்னும் வீரர். அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் ஓடி முடித்தனர். இப்பொழுது 4 நிமிடங்களுக்குள்ளே நூறு தடவை ஓடி ஒரு உலக சாதனையையே செய்திருக்கிறார் ஜான் வாக்கர் என்பவர். மனித சக்திக்கு எல்லையே கிடையாது. 100 மீட்டர் தூரத்தை 12 வினாடிகளில் 1896ம் ஆண்டு ஓடினார்கள். இப்பொழுது 9.9 வினாடிகளில் ஓடி சாதிக்கிறார்கள். 6 அடி உயரம் தாண்டினால் மிக அற்புதம் என்றனர் அந்த நாட்களில், இப்பொழுது 7½ அடி உயரம் தாண்டி, இன்னும் உயரே மனிதனால் தாண்ட முடியும் என்று சாதித்துக் காட்டுகின்றனர். அறுபது அடி தூரம் இரும்புக் குண்டெறிந்தவரை பீமன், மகாபலசாலி என்று 1960ஆம் ஆண்டு வருணித்தார்கள். இன்று 75 அடி தூரம் எறிகின்றார்கள். அது எப்படி? மனிதனால் விரைவாக ஓட முடியும், உயரமாகத் தாண்ட முடியும், அதிக தூரம் எறிய முடியும் என்பதை நிரூபிக்கத் தானே ஒலிம்பிக் பந்தயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஒலிம்பிக் பந்தயத்தின் லட்சியம். விரைக, உயர்க, வலிமை பெறுக என்றால், வாழ்வின் லட்சியமும் அப்படித் தானே அமைந்திருக்கிறது. ஆகவே, நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் தான் வாழ்வின் வெற்றியை எட்டிப் பிடிக்கின்றார்கள். நம்மால் முடியாது என்று நினைப்பவர்கள், தனக்குள்ளே அமிழ்ந்து போய் விடுகின்றார்கள். தனக்குத்தானே உதவிக் கொள்ளாதவன் தரித்திரர்களாகத் தான் மாறி விடுகின்றார்கள். அதே சமயத்தில், உயர்ந்த சாதனையாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லோரும், தற்காலிகமாக எதிர்படும் தடைகளை எல்லாம், தடைகள் என்று தடுமாறாமல், தயங்கி நிற்காமல், தாண்டி வந்து விடுகின்றார்கள். இந்த சாமர்த்தியம் எப்படி அவர்களுக்கு வருகிறது? அவர்கள் தங்கள் திறமைகளை சாமர்த்தியமாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். அந்தத் திறமைகளை அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் உணர்வுகளை செயல்படுவதற்கு ஏற்ப திறப்படுத்திக் கொள்கிறார்கள். அத்துடன், தங்கள் முயற்சிகளைத் தொடங்குவதற்கேற்ப முன்னேற்பாடுகளில் முனைகின்றார்கள். அத்துடன், அதே கவனத்துடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இணைந்து கொள்கின்றார்கள். ஆகவே தான், சாதனையாளர்கள் என்னும் புகழுடன் சரித்திரம் படைத்து விடுகின்றார்கள். இலட்சியமே ஒருவரை, எப்படிப்பட்டவராக அவர் விளங்கினாலும், வலிமையாளராக மாற்றி விடுகிறது. இலட்சியம் தான் ஒருவரை இணையிலா செயல் வீரராக ஆக்கி விடுகிறது. மண் வீடு கட்டி முடித்து விட்டு, அது காற்றில் கலைந்து விழும்போது, கண் கலங்கிக் கவலைப்படுபவராகத்தான் பலர் வாழ்கின்றார்கள். காகிதத்தில் கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு அது நீருள் மூழ்கும்போது நொந்து மனத்தால் நைந்து போகின்ற மனிதர்களாகத் தான் பலர் வாழ்கின்றார்கள். பனிக்கட்டியால் சிலை செய்து, அது வெயிலின் கொடுமையால் கரைந்து விழும்போது, கதறுகின்ற மாக்களாகத்தான் பலர் இன்றும் காட்சியளிக்கின்றார்கள். ஒரு மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று இப்பொழுது எண்ணிப்பார்ப்போம். ஒருவனது பார்வையில் அவனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது தான் முதற்படி. அந்தப் பார்வை வழியே, எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புவது இரண்டாம் படி. தனது எதிர்கால வெற்றி தான் போடுகின்ற திட்டத்தில் தான் உள்ளது என்று முனைவது மூன்றாவது படி. தன்னால் தனது திட்டத்தில் வெற்றி பெற முடியும் என்று நம்பி, செயலைத் தொடர்வது நான்காவது படி. இப்படி, படிப்படியாக இலட்சியப் பணியில் நாம் இணைந்து கொண்டால், நமது வாழ்வு இன்பலோகமாகவே விளங்கும். இன்பக்கனிகளே குலுங்கும். இப்படி செய்ய முடியுமா என்று கேட்பவர்கள் உண்டு. எல்லா மனிதர்களுக்கும் வலிமையில் குறைவை ஆண்டவன் வைக்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ள சுய நம்பிக்கையில் தான் குறையுள்ளவர்களாக வாழ்கிறார்கள். உலகத்தில் நடக்கும் எல்லாமே நமது முடிவுபோல நிகழ்வதில்லை, அதிர்ஷ்டத்தால்தான் நடைபெறுகிறது என்பதை மட்டும் நம்புகிறார்கள். அப்படி வாழக்கூடாது என்பது தான் நமது விருப்பம். நமக்கு நாமே உதவிக் கொள்ள, நம்மால் முடியும் என்று காரியங்களைத் தொடர வேண்டும். அதிலே இலட்சிய நினைவுகள் படர வேண்டும். அப்பொழுது தான் எண்ணியதை எண்ணியது போலவே அடைவோம்..... அந்தக் கடமையை இன்றே தொடரலாம் அல்லவா!  8 நமக்குள்ளே ஒரு சக்தி! முன்னேறி விட வேண்டும் என்று மனதில் ஆசையானது கோட்டை கட்டிக் கொண்டு கிடக்கிறது. ஆலமரம் போல் விரிந்து பரந்து அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. முன்னேறி விடுவது என்றால் என்ன? நாட்களை தள்ளிக் கொண்டே போய் விடுவது என்பதா அர்த்தம். இல்லையே! இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். எத்தனையோ கோடி மக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டார்கள். வாழ்கின்றார்கள். வந்தும் வாழப் போகின்றார்கள். அவர்களைப் போல நாமும் ஓர் அலைக்குமிழாய் நுரைத்து, காற்றில் வெடித்துக் காணாமல் போவதற்குத்தானா நாம் இந்த அற்புதமான மனிதப் பிறப்பை எடுத்திருக்கிறோம். இல்லையே! எல்லாரும் புகழ்வது போல ஓர் அற்புதமான காரியத்தை செய்து புகழ் பெறுவதுதான் நமது தலையாய நோக்கம். “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது தானே அந்த லட்சியம்! புகழ் பெறுவது என்பது உயர்ந்த பணியில், ஒப்பற்ற செயலால், திரண்ட செல்வத்தால், தர்மத்தால், தன்னிகரில்லாத தொண்டினால் என்று எத்தனையோ வகைகளில் கிடைக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய கடமையாகும். எனக்கு அந்த திறமையே இல்லையே! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பும் இல்லையே! எனக்கு எந்த விதமான வசதியும் இல்லையே! என்று பேசிக் கொண்டே கிழமாகிப் போய் மறையும், பேர் வழிகள் தாம், பிரபஞ்சத்தில் பல கோடி மக்களாக இருக்கின்றார்கள். இப்படி ஒரு வாழ்க்கைமுறை இருக்கிறதா? அதற்கு இப்படி வழி வகைகள் உண்டா? நானும் முயற்சித்து பார்க்கிறேனே! என்று முனையும் மக்கள் தான், முன்னேறி வருகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தாம் உலக மக்களிடையே உயர்ந்த நிலைமையில் வாழ்கின்றார்கள். உன்னதமான தலைமையில் வாழ்ந்து வழிகாட்டுகின்றார்கள். அப்படி என்றால் அதில் உள்ள ரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களும் மனிதர்கள் தாமே? அவர்கள் எப்படி இப்படி மாறினார்கள்? தேறினார்கள்? வாழ்க்கை உயரத்திற்கே ஏறினார்கள்? அதுதான் முன்னேற்றத்தின் ரகசியம். “மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போய்விடுவான்? கல்லினுள் தேரைக்கும், முட்டையில் கருவுக்கும் உணவு தருகிற ஆண்டவன், என்னைக் கைவிடவா போகிறான்?” விதிதான் வாழ்வை வழி நடத்துகிறது. மதியால் என்ன முடியும்? எனக்கு இன்னும் வேளை வரவில்லை. எல்லாவற்றிற்கும் இறைவன் அருளிருந்தால் போதும்; கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கொட்டுவான். ஓர் அமைதியான மன நிலைக்காக உருவாக்கிச் சொன்ன வார்த்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையையே வடிவமைத்துக் கொள்ளும் மனிதர்கள் தாம், மேற்கூறியவாறு முணுமுணுத்துக் கொண்டு வாழ்ந்து செல்கின்றார்கள். இறைவன் எப்பொழுது உதவி செய்கிறான் என்றால், வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்பவர்களுக்குத்தான் என்கிறார் வள்ளுவர். உழுகின்ற காலத்தில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்கள் அறுவடை செய்கின்ற காட்சியைப் பார்த்து அழுது கொண்டு தவிப்பார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை. இன்றைய சோம்பேறி நாளைய பிச்சைக்காரன். இந்தப் பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது. நமது தகுதியை எண்ணி ஆராய்ந்து, ‘இதுதான்’ என வரையறுத்து முடிவுசெய்து கொண்டு, இப்படித்தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, கஷடங்களைப் பொருட்படுத்தாமல் காலத்தைப் பயன்படுத்தி உழைப்பவனே கர்ம வீரனாக, கலங்காத தீரனாக மாறுகிறான். நமது உழைப்புக்கோ, முன்னேற்றத்திற்கோ மற்றவர்கள் வந்து உதவி செய்வார்கள். உயரும் வரை அருகில் நிற்பார்கள்; நமது வெற்றியில் மற்றவர்கள் மகிழ்வார்கள் என்பன போன்ற எண்ணங்களை, நாம் கொஞ்சங் கூட நினைக்கக் கூடாது. நம்பக் கூடாது. எதிர்பார்க்கவும் கூடாது. மேல் நாட்டுப் பெண்மணி ஒருவர், நம் நாட்டிற்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் தங்கியிருந்து விட்டு, தனது தாய்நாட்டுக்கு மீண்டும் செல்கிறபோது. அவரை ஒருவர் விசாரித்தாராம். எங்கள் இந்தியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று! மிகவும் நல்லவர்கள். பயபக்தியுள்ளவர்கள் என்றெல்லாம் வருணித்த அந்தப் பெண்மணி, இறுதியாக ஒரு கருத்தைக் கூறினார்களாம். ‘யாராவது அடி மட்டத்திலிருந்து மேலே உயர முற்படும் போது, அனுதாபத்துடன் ஆதரவு தந்து உதவி செய்வார்கள். அவர் முன்னேறத் தொடங்கிவிட்டார் என்று அறிந்து கொண்டால், அவரை எல்லோரும் சேர்ந்து அழுத்தி விடுவார்கள்’ என்று அந்த மங்கை திருவாய் மலர்ந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கையில் வந்தது. அனுதாபத்துக்காக பிறர் தம்மைப் போற்ற வேண்டும் என்பதற்காக உதவ முற்படுபவர்கள் சிலர். பலரோ, மற்றவர்கள் முன்னே உதவுவதுபோல் பாசாங்கு செய்து விட்டு, பிறகு பின் வாங்கி விடுவார்கள். தோற்றுப் போக வேண்டிய விதங்களிலெல்லாம் மறைமுகமாக வேலை செய்து விடுவார்கள். இதுதான் உலக நியதி. ஒருவரது துன்பத்தைக் கேட்டு வருந்துவதுபோல் மகிழ்கிற கூட்டம் தான் சமுதாயமாக இருக்கிறது. ஒருவரது இன்பத்தினைக் கேட்கவே யாருமே வரமாட்டார்கள். ஏனெனில், மனித குலத்தின் வாடிக்கையோ, பொறாமை குணத்தில் தான் பொசிங்கிக் கொண்டு கிடக்கிறது. அதனால்தான், ‘துன்பத்தில் நண்பனைப்பார்’ என்ற பழமொழி இருக்கிறது. பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நினைப்பது பேதமை. வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், வந்து வணங்கி, வாழ்த்தி, மகிழ்வது போல் மனங்கசிகிற மக்களே நம்மைச் சுற்றியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடவே கூடாது. நம் வாழ்க்கையில் உயர்வதற்கு, ஒரு சிலர் வழி காட்டுவார்கள். இன்னும் சிலர், தொடக்க முயற்சிக்குத் துணையாக சில அறிவுரைகளைக் கூறி ‘அப்படி இப்படி’ என்ற பெரிய மனிதத் தன்மையுடன் பலாபலன்களைப் பொழிந்துவிட்டுப் போவார்கள். அதனால்தான் முன்னோர்கள் ஓர் அருமையான தத்துவார்த்த பழமொழி ஒன்றை வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள். “எட்டுகிற மட்டும் தான் ஏற்றி விடுவார்கள்.” மரத்தின் மீது ஏறமுயலுகிற ஒருவனுக்கு, மரத்தடியில் நிற்பவர்கள் கைகள் எட்டுகிற உயரம் வரைக்கும் தான் தூக்கி விட முயற்சிப்பார்கள். அதற்குப் பிறகு அவனது சாமர்த்தியம். ஏறும் சாமர்த்தியம் இருந்தால் ஏறிப் பார்ப்பான் இல்லையென்றால், யாரும் இறக்கி விடாமலேயே அவனே கீழே சரிந்து வீழ்ந்து கிடப்பான். மரம் ஏறத்தெரிகிற திறன், மரம் ஏற முடியும் என்ற நம்பிக்கை எப்படியும் ஏறி விடுவேன் என்ற வைராக்கியம் மரத்தின் உச்சிக்குப் போய் விட வேண்டும் என்கிற இலட்சியம். அதனை மறிக்க வருகின்ற கவக்டத்தை முறியடிக்கும் மனோபலம். இத்தனையும் இருந்தால் அவன் மரத்தின் உச்சிக்கு ஏறிட முடியும். அப்படிப்பட்ட சாமர்த்தியம் தான் வாழ்க்கைக்கும் வேண்டும். மரத்தின் உயரத்திற்கு ஏறி கனிகள் பறிப்பதுபோல, வாழ்க்கை மேம்பாட்டுக்கு வந்து, புகழைப் பெறுவது தான் நமது இலட்சியம். கூக்குரலிட்டுக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்குள்ளே போய், சத்தமிட முடியாது மெளனியாகப் போகிறான் ஒரு மனிதன். இதுதான் தற்போது சமுதாய தர்மமாக இருக்கிறது. பேச்சுகளுக்கிடையே சத்தமிட்டுப் பேச முடியாது. ஊமையாகிப் போகிறவன் போல, வாழ்க்கைக் கஷடங்களுக்கிடையே மனிதன் வலிமையுடன் முன்னேற முடியாமல் மனம் புழுங்கி தவிக்கிறான். தளர்கிறான். வசதிகள் ஒருவனை வீரமுடையவனாக, விவேகமுடையவனாக மாற்றாது. உண்டாகும் கஷ்டங்கள் தான் ஒருவனை மனிதனாக மாற்றும் சக்தியை உடையவையாக விளங்குகின்றன. உழைப்பு உடலை வலிமையாக்குவது போல, கஷ்டங்கள் மனதை வலிமையுடையதாக்குகின்றன. ஆகவே, நமது முன்னேற்றத்திற்கு உதவிகள் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால் அது பேரிழப்பாகவே முடியும். ‘நமக்குள்ளே ஒரு சக்தி இருக்கிறது’ என்பதை நாம் நினைத்துப் பார்க்கவே மறந்து விடுகிறோம். எண்சாண் உடம்பு என்று நமது உடம்பின் அளவைக் குறித்துக் காட்டுவார்கள். யானைக்கும் அது அளவால் எட்டு சாண் என்றால், எறும்பும் அதன் அளவால் எட்டு சாண்தான் என்று கூறுபவரும் உண்டு. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மனிதராகப் பிறந்து விட்டாலே. அவரவருக்கு என்று ஒரு சக்தியும் சாமர்த்தியமும் இருக்கத்தான் இருக்கிறது. இந்தக் குறிப்பை நாம் மறந்து விட்டு மயானப் புலம்பலில் மயங்கிக் கிடக்கிறோம். அனுமாருக்கு அதனால் விசுவரூபம் எடுக்க முடியும் என்பதை, இராமர் வந்து கூறுகிறவரைக்கும் தெரியாமல் இருந்தது என்பது இராமாயணத்தில் ஒரு குறிப்பு. அனுமாருக்கு ஒரு இராமர் வந்து உணர்த்துவது போல, யாராவது ஒருவர் உங்களுக்கு வந்து உணர்த்தத்தான் செய்வார். அந்தக் குறிப்பை உன்னிப்பாய் கவனித்து உணர்ந்து குறிப்புக் கேற்றபடி தன்னைத் தயார் செய்து கொள்வது தான் சாமர்த்தியசாலிகளின் சிறப்புப் பண்பாகும். ‘சந்தர்ப்பத்தினை விரைவாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனையே விவேகி’ என்பார்கள். அதுபோலவே, தன்னுடைய உண்மை நிலையை உணரும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எறிந்த பந்து மேலும் மேலும் எகிறிக்குதிப்பதுபோல, செயல்களாற்றுவது தான் சிறந்த மனிதர்களுக்குரிய சத்தியாகும். நமக்குள்ளே ஒரு சக்தி என்றால், அது - நமக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது என்று அறியும் சக்தி. நாம் முயன்றால், இதுவே நம்மால் வெற்றி பெற முடியும் என்று விளங்கிக் கொண்டு, தொடங்குகின்ற சக்தி. இந்த சக்தியானது, நம்முடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிற சக்தியாகும். அதனை அடுத்துக் காண்போம்.  9 சக்தியும் சாமர்த்தியமும் நமக்கென்று சில சக்தியும், சாமர்த்தியமும் உண்டு. நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கையற்றவன் நடைப்பிணம் போன்றவன். நமக்குள்ள சக்தி, திறமை, சாமர்த்தியம் என்ன வென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவைகள் அன்றாடம் நாம் செய்கின்ற செயல்களிலே தொனித்து நிற்கும், தனித்து நிற்கும். சில சமயங்களில் செழித்தும் நிற்கும். இருக்கும் சக்தியை திறமையை நமக்குள் எவ்வளவு என்று தெரிந்கொள்ள வேண்டும். அதற்கு நம்மை நாமே கொஞ்சம் தயார் செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றியே பேசிப் பேசி, மற்றவர்கள் குறைகளையே ஏசி ஏசி, மற்றவர்கள் மேல் வெறுப்பையே வீசி வீசிப் பழக்கப்பட்டவர்கள் தாம் மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ‘உன்னைப் பற்றி சிந்தித்துப் பார்’ என்று சில அறிஞர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ‘என்னைப் பற்றி நான் சிந்தித்ததால் தான், சிலை வடிக்கும் சிற்பி, சிந்தனைச் சிற்பியானேன்.’ என்று சாக்ரடீஸ் அன்று கூறினார். தன்னைப் பற்றி சிந்திப்பது என்பது, தன்னைப் பற்றிப் பெருமையாக மற்றவரிடம் பேச அல்ல. தன்னைப்பற்றி மற்றவரிடம் பீற்றிக்கொள்ள அல்ல. தன்னைப்பற்றி சிந்திப்பது தற்பெருமையை வளர்க்க அல்ல. தனது திறமையை அளக்க. வளர்க்க. தற்பெருமை தலைகுனிவுக்கு ஆளாக்கி விடும். தனது அரிய திறமையை செல்லரிக்கச் செய்துவிடும். வளரும் பாங்கினை வேரோடு வெட்டிச் சாய்த்து விடும். இங்கே நாம் சொல்வது தன் நினைவு. சுய நினைவு. தனக்குள்ளே திறமையின் தகுதி அளவு என்ன? அதை வளர்க்க தான் என்ன செய்ய வேண்டும்? அதை எங்கே, எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும். என்பது தான் சாமர்த்தியம். சக்தியின் ஆரம்பம். நமக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதை நிறைவேற்ற ஒரு நேரம் இருக்கிறது. அதற்குரிய சாமர்த்தியம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உபத்திரவமாகும். உதவி என்பது சொல்லில் இருந்தால், ஏட்டில் சர்க்கரை என்று எழுதியிருப்பது போல் தான். ஏட்டு சர்க்கரை இனிக்காது. பேச்சு உதவி பலிக்காது. பிரயோஜனப் படாது. மீன் பிடிக்க விரும்புகிறவன், தூண்டில் எடுத்துக் கொண்டு ஆதாரமாக புழுக்களையும் கொண்டு சென்று, மீன்கள் இருக்கும் இடம் தேர்ந்து அமர்ந்து, எச்சரிக்கையுடன் கவனமாக இருந்து, மிதப்பின் நிலையறிந்து செயல் பட்டால் தான், மீன்களைப் பிடிக்க முடியும். வீட்டில் படுத்துக் கொண்டால், வீண் தானே! வீட்டுக்கா, மீன்கள் ஓடிவரும்? நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை, நாளைக்கு நமக்கு - எல்லாம் வந்து விடும். கை கூடிவிடும் என்பதாகும். தூரத்தில் தெரிகின்ற மங்கிய பொருளைப் பார்த்துப் பெறும் மகிழ்ச்சியைத் தான் நாம் அனுபவிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே யொழிய. களிக்க நாம் தயாராக இல்லை. நாம் ஒரு சில இடங்களுக்கு அங்குமிங்கும் போய் வருகிறோம் என்பதாலேயே நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பலர் எண்ணித் திருப்திப்பட்டுக் கொண்டு விடுகின்றார்கள். நாம் செய்யும் செயல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் வளர்ச்சி என்று சொல்லி விட முடியாது. நமது எல்லா இயக்கங்களும் முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன என்றும் கூறிவிட முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்து செய்வதுதான் சாமர்த்தியம். ஒவ்வொரு காரியத்திலும் சங்கடங்கள், தடைகள் வரும். நேரும், அவற்றை சந்திப்பதிலும், சமாளிப்பதிலும், சரிகட்டுவதிலும், சாதிப்பதிலும் தான் சக்தியும் திறமையும் நிறைந்து கிடக்கின்றன. நமக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும் என்று நம்பி உழைப்பது அறிவாளியின் செயலாகும். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கிடப்பது முட்டாள்களின் பண்பாகும். சாமர்த்தியத்திற்கு ஓர் இலட்சியம் உண்டு. அது சக்தியை சரியான வழியில் பயன்படுத்தி, முன்னேற்றப் பாதையில் நடத்தி விடுவதுதான். உலகத்தில் முன்னேறிய பல மேதைகள், சாமர்த்தியசாலிகள் இப்படித்தான் கூறுகின்றார்கள். “நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தத் திசை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறோம். என்பதைப் பொறுத்தே நமக்கு உதவி கிடைக்கிறது. உயர்வும் கிடைக்கிறது” என்பதாக. “ஆகா! நாம் நல்ல நினைவுகளுடனே இருக்கிறேன். எனக்கும் எல்லாமே நல்லதாகத்தான், நடக்கும்” என்று எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் நிறைய பேர் உண்டு. நல்ல நினைவுகள், நல்ல கனவுகள் கொண்டிருப்பது நியாயம் தான். அவைகள் செயல் ரூபம் பெறும் போதுதான் சிறப்புப் பெறுகின்றன. மதிப்பும் பெறுகின்றன. இவற்றையெல்லாம் ஒருவர் தனிமையில் இருக்கும்போது தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்த்துக் கொள்ள உதவும். மனிதன் தனிமையில் இருக்கும் போதுதான், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவனாக, மரபுக்கும் தருமத்திற்கும் மதிப்பளிப்பவனாக விளங்குகிறான். மற்றவர்களோடு சேர்ந்து கொள்ளும் பொழுது, மாறுபட்ட குணாதிசயங்களில் முடங்கிப்போய் விடுகிறான். அதனால் தான் அறிவாளிகள் எல்லோரும் ‘தனிமையே இனிமை’ என்று பேசினர். பிறருக்கும் உபதேசித்தனர். அதற்காகத் தனியாகவே இருக்க வேண்டும் என்பது நமது வாதமல்ல. காலையில் தூங்கி விழித்தவுடனே, மற்றவர்களைப் பற்றி யோசிக்காது. நாம் இன்று செய்ய வேண்டியது என்ன என்று யோசித்துத் திட்டமிடுகிற சிந்தனை வேண்டாமா! அது தான் தனி சிந்தனை. நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டு நடந்து கொள்கிறவர்கள் தாம் சோம்பலின்றி, திகைப்பின்றி, சுறுசுறுப்பாகக் காரியமாற்றிக் கொண்டும், அதனை முடித்த திருப்தியில் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள். நாம் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடாதவர்கள், அவர்களுக்கு அவர்களே எதிரிகளாகி விடுகின்றார்கள். ஏனென்றால், திட்டமிடாத வாழ்க்கை சுற்றுச் சுவர் இல்லாத வீடாகப் போகின்றது. திட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை தீட்டுவதுதான் சாமர்த்தியமாகும். வானொலி, தொலைக்காட்சி போன்ற நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். அங்கு பணியாற்றும் தயாரிப்பாளர்கள். தாங்கள் அடுத்த மாதத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, அதற்கான வழிமுறைகளைக் கடைப் பிடித்து, வேண்டிய யாவையும் செய்து தயாராகிக் கொண்டு விடுவார்கள். அப்படிப்பட்ட எதிர்காலத் தாயார் நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும். பத்திரிக்கைகளில் நீங்கள் படிக்கும்பொழுது, தலைவர்களைப் பற்றிய செய்திகள், இன்னும் பிற விஷயங்களை உடனடியாக பிரசுரிப்பதைப் பார்த்து, நீங்கள் ஆச்சரியம் அடைவதுண்டு. அங்கே பணியாற்றுபவர்கள், எதிர்காலத்திற்கு இவையெல்லாம் தேவை என்று முன்னுணரும் அறிவினை வளர்த்துக் கொண்டு பணிபுரிகின்றார்கள். அப்படிப்பட்ட எதிர்கால முன்னுணரும் அறிவு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.  10 சுவனமும் புவனமும் புவனம் என்றால் உலகம். நாம் வாழும் (உலகத்தில்) புவனத்தில் நன்றாக வாழவேண்டு மென்றால் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். சிறக்க வேண்டும். எப்படி எப்படி வாழ்ந்தால், நமக்கு நாமே உதவிக் கொள்ள முடியும் என்பதையெல்லாம் இனி தொகுத்துக் காண்போம். இது நமது செளகரியத்திற்காக சுகம் மிகும் வாழ்க்கைக்காக!! 1. பணமும் மனமும் ஓரிடத்தில் கூட உறுதியாக, நிலையாக நிற்க முடியாத பணந்தான், தினம் உருண்டோடும் பண்பு கொண்ட பணந்தான், இன்று உலகத்தை ஆட்டுவிக்கின்ற திரண்டதோர் தெய்வீக சக்தியாக விளங்குகிறது. ‘கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்ற பாடல் வரி, இப்பொழுது முனைமழுங்கிய கத்திபோல, வலுவு இழந்து தவிக்கிறது. ‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்று எடுத்தத் தாயும் வேண்டாள், செல்லாது அவன் வாய்ச் சொல்’ என்ற பாடல் தான் இன்று உண்மையாகத் தெரிகிறது. திரிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். தன் கையெழுத்துப் போடக்கூடத் தடுமாறும் குடும்பம் அது. வெளியில் போய் சொன்னால்கூட மற்றவர்கள் வெறுத்து ஒதுக்குகிற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவன். தெரு நடை பாதையில் சிறுகடை ஒன்றை ஆரம்பித்தான். சொற்ப ஜீவனம், அற்ப ஜீவனந்தான். அவனது அதிர்ஷடம், தனது தொழிலைத் தொடங்கி விட்டது. நடைபாதை கடை வியாபாரம் செழித்துக் கொண்டது. பத்தே ஆண்டுகளில் அவனது குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகிவிட்டது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அப்படியே தலைகீழாக மாறி விட்டனர். அதுமட்டுமா? அவர்களை அலட்சியப்படுத்திப் பேசி, மதிப்புத்தர மறுத்த அக்கம் பக்கத்தார், சுற்றத்தார் கூட எல்லாமே மாறி விட்டனர். அவர்களைப் பார்த்த இடத்தில் பணிவான வணக்கம். பேசும்போது குழைவு. பக்கம் வந்தால் தாழ்வு, நெளிவு, பணம் வந்த பிறகு, பிறரின் செயல் முறைகள் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டதே! காரணம் பணம்தான், படிப்பு, பண்பு, பேரறிவு, ஒழுக்கம் இவையெல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டது பணம். பணம் உள்ளவன் எப்படியிருந்தாலும் போற்றுகிறது. பணத்திற்கு அவ்வளவு சக்தி. பணம் வைத்திருப்பவன், எப்படியிருந்தாலும், அவனைப் பெருமைப் படுத்தி விடுகிறது இந்தச் சமுதாயம். மானம்கெட்ட சமுதாயம். இந்தப் பணத்தைப் பற்றி ஏன் இவ்வாறு கொஞ்சம் அழுத்தமாக எழுதுகிறேன் என்றால், இந்தச் சமுதாயம் பணத்தைத் தான் பெருமையாகக் கருதுகிறது. பணம் தான் மக்களிடத்தில் எல்லாவற்றிற்கும் ‘பிளஸ் பாயிண்டாக’ இருக்கிறது. இந்த சமுதாயத்தில் நாம் கெளரவமாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் பணம் சம்பாதிப்பதை முதற்படியாகக் கொள்ள வேண்டும். படிப்பு, அறிவு, ஞானம், கடின உழைப்பு, உயர்ந்த பண்பாடு இவையெல்லாம் ஓர் உடல் போன்றது அந்த உடல் எழுந்து நடமாட உயிர் வேண்டுமல்லவா? அந்த உயிர் தான் நாம் பெருமையாகப் பேசிக் கொண்டு வருகிற பணம். நாம் பணம் சம்பாதிப்பதைத் தான் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது பேச்சம், பண்பும், உண்மையும், உயர்ந்த லட்சிய வாழ்வும் மக்களிடையே எடுபடும். பிரபலமாகும். அப்படிப் பட்ட பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றால், நேர்வழியில் தான், நியாயமான வழியில். நமது உழைப்புக்கேற்ற ஊதியமாக, பிறர் பொருளைக் கவராத வகையில் பணத்தை சம்பாதிக்க வேண்டும். நமக்கு பணம் முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. பணத்திற்காக நாம் அதன் பின்னால் அலையக் கூடாது. நமக்குப் பணம் உதவுவது போல, நாம் விடுகிற ஏவலை செய்வதுபோல, பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல வழியில், நியாயமான முறையில் பணம் திரட்டும் பண்பில் தான் நமது மனம் செல்ல வேண்டும், செலுத்தப்பட வேண்டும் என்பது தான் நன்மைகளைத் தரும். இந்த வாசகத்தை நீங்கள் என்றும் நினைவில் நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது ‘I Need Money, but i am not after Money’. இறுதியில் ஒன்று, பணம் இல்லாத மனிதன் வெறும் வில்லாகத் தான் இருப்பான். அதாவது வளைந்து போய். பணம் என்ற அம்பினை நாணில் வைத்து இழுக்கும்போது தான் மனிதன் என்ற வில் எழுச்சி பெறுகிறது. வீரம் அடைகிறது. வெற்றியாகத் தனது கடமையை செய்து முடிக்கிறது. அம்பும் வேகமாக விரைந்து செல்கிறது. அதனால் தான். (அம்பு என்ற) பணம். பாதாளம் வரைக்கும் பாயும் என்றனர். இராமரின் அம்பு ஏழு மலைகளை குடைந்து செல்லவில்லையா அப்படித்தான் பணம் தேடும் இலட்சியத்தை முதலில் கொள்வோம். 2. எண்ணமும் திண்ணமும் நமது வாழ்க்கையின் இலட்சியம் முதலில் பணம். பிறகு புகழ். ஏழைக்குரிய புகழ் அவனை மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாக்கிவிடும். தமிழகத்தில் தலைசிறந்த கவிஞர் என்று போற்றப்படும் ஒருவர், ஏழை. புகழ் இருக்கும் அளவுக்குப் பொருள் வசதி இல்லாதவர். அவரால் கார் வாங்க முடியவில்லை. வெளியிலே போக ‘டாக்சியும்’ வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பஸ்ஸில் போகிறார். பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார். அவரைப் பார்க்கிறவர்கள். ‘ஐயோ பாவம்’ என்று அனுதாபப்படுகிறார்கள். அவரது அறிவும், ஞானமும், புகழும் பெருமையும் அவரை கெளரவிக்கவில்லையே! ஏன்? ஏனென்றால், புகழுக்கேற்றபடி, அவர் சில ‘பந்தாக்களை’ செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சில பணக்காரத் தனங்களை செய்யும் பொழுதுதான் சமுதாயம் சம்மதிக்கிறது. சிறப்பாக சேர்த்துக் கொள்கிறது சரித்திரக் கதாநாயகனாக சித்தரித்துப் போற்றுகிறது. பணமும் புகழும் நாம் விரும்பியவுடனேயே வந்து சேர்ந்து விடுவதில்லை. ‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடிப்பாடி மகிழும். அதாவது நிலா தன் அருகிலே வந்து விட்டது போல உணர்வுடன் ஆடும். ஆனால் நிலா வானத்திலே. பாடும் குழந்தைகள் பூமியிலே! அதுபோல, ‘பணமே புகழே வா வா’ என்று பலர் பாடிக் கொண்டேயிருப்பார்கள். பணமும் இராது. புகழும் வராது. அவர்கள் காலம் கடைசி வரை அப்படியே பாடிப் பாடி ஏங்கியவாறே அழிந்து போகும். நிலா எப்படி நம்மிடம் வராதோ, அப்படியே தான் பணமும், புகழும். உங்களுக்குத் தெரியுமே நிலாவை நாடி மனிதர்கள் தானே சென்றார்கள். அதற்கு எத்தனைக் காலம் முயற்சித்தார்கள்! முனைப்புடன் செயல் பட்டார்கள்! அப்படித்தான் நாமும் பாடுபட்டு முன்னேற வேண்டும். நேர் வழியில் பணத்தையும் புகழையும் ஈட்டியவர்கள் எல்லாம், எண்ணத்தால் முதலில் இலட்சிய வாதிகளாகி, பிறகு உண்மையுடன் உழைப்பைத் தொடர்ந்ததால் உயர்ந்தவர்கள் ஆனவர்கள். தனக்கு எதுவும் சரியில்லை. நேரமே அமையவில்லை, எனக்கு வாய்ப்பே இல்லை, நான் துரதிர்ஷடக் கட்டை, என்று புலம்புகிற தவளை வாயர்கள். பணத்தையும் புகழையும் மட்டும் இழக்கவில்லை, பிறர ஏளனத்திற்கு ஆளாகி, அவமானத்திற்குள்ளகின்றார்கள். எண்னத்தில் முழுமை செயலில் வலிமை செல்லும் பாதையை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றிவிடும் என்பதை எல்லோறும் உணர்ந்தே ஆகவேண்டும். எண்ணத்தில் திண்ணமாக இருப்போர்க்கு எல்லாமே நல்லதாகத் தான் மாறும், நான் உயர்ந்து விடுவேன். இது தான் என் இலட்சியம் என்று முடிவு செய்து கொண்டு முழு மூச்சாக உழைப்பவர்கள் தான் முன்னேறுகிறார்கள். திண்ணம் என்பதை ஆங்கிலத்தில் (Will power) என்று கூட நாம் கூறலாம். இந்தத் திண்ணம் என்பது எடுத்த காரியத்தை விட்டு விடாது. தொடர்ந்து துணிந்து செய்கின்ற விட முயற்சியாகும். வேண்டாதவைகளை ஒதுக்கி விட்டுவிட்டு, வேண்டுபவைகளை விடாமல் தொடரும். மனப் பாங்கும். மாபெரும் முயற்சியும் தான் திண்ணம் என்று புகழ்ந்துரைக்கப்படுகிறது. 3. காலம், நேரம், இடம். ஒரு பழமொழியை இங்கு நாம் தெரிந்து கொள்வோம். “வேத வாக்கியங்களின் அர்த்தங்களை தனது செயலுக்கேற்ப தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டு தான் விரும்பியவண்ணம் சைத்தான் செய்து வெற்றி கொள்கிறது” என்பதுதான் அந்தப் பழமொழி. அந்த மொழியின் வழியினை முழுதுமாக நாம் பற்றுக் கொள்ளக் கூடாதுதான். ஆனால் அதன் அடிப்படைப் பொருளை நாம் உணர்ந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்வது நான் அறிவுடமையாகும். தான் நினைத்துக் கொண்டு ஒரு காரியத்தைத் தொடரும் போது கடைசிவரை அப்படியே நடந்து விடுவதில்லை. ஏறுக்கு மாறாக நடப்பது தானே இயற்கை. நினைத்தது போல் நடக்கவில்லையே என்று நிலைகுலைந்து நின்று போனால், அதில் என்ன ஆண்மை இருக்கிறது. ஆகவே, எது நமக்கு உதவியாக முன்னேற உதவுகிறதோ, எந்த வழி நமக்கு எளிதாக நடைபோட வாய்ப்பளிக்கிறதோ, அவற்றை ஏற்று, பயன்படுத்தி, வெற்றிகரமாக செயல்களை விரைந்து முடிப்பது தான் விவேகமாகும். சைத்தான் தவறான முறைகளைப் பின்பற்றி, தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் என்பார்கள். அந்த சைத்தான் முறை வேண்டாம். நமது காரியம் நடந்தேற, நல்ல வழிகளில் நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் கண்ணுங் கருத்துமாக இருந்திட வேண்டும். தவறான வழிகளில் பெறுகிற வெற்றி, தவறான ஆசைகளுக்கே தூண்டுகோலாகிவிடும். தூய்மையான வழிகளில் வந்து சேரும் திரவியம், தீயவைகளுக்கு உட்படுத்தி, தீராத துன்பங்களையே துணையாக்கித் தந்துவிடும். வேப்ப மரத்தின் எந்த பாகமும் கசப்புதான். தீமையின் மூலம் தேடுகிற புகழும், திரட்டுகிற செல்வமும் தீமைகளையே தரும். எனவே, நமக்கு நாமே உதவிக்கொள்ள முனையும் போது, ஏற்கனவே திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாத பொழுது, ஏற்படுகிற சந்தர்ப்பங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த அணுகு முறையாகும். அதனால், காலம், நேரம், இடம் பார்த்து, கவனமாக இருந்து, எதிர்த்து வருகிற செயல்களுக்கேற்ப தந்திரமாக, தன் திறத்துடன் செயல்பட்டு, ஜெயித்துக் கொள்ள வேண்டும். காலத்தை வீணாக்காமல் கணக்கிட்டு, நேரம் பார்த்து செயல்பட்டு, இடம் தெரிந்து திறமைகளைப் பிரயோகித்து விட்டால் வெற்றிகள் வந்து குவிந்து விடுமே! 4. செயலும் பலனும் கிணற்றில் குப்பைகளை வாரிக் கொட்டிவிட்டு, அதிலிருந்து நல்ல தண்ணீரைக் குடிப்பதற்காக எடுக்க விரும்புகிறவன், கேடு கெட்ட முட்டாளாகத்தான் இருப்பான்! சுத்தமான தண்ணீர் வேண்டும் என்று சுகம் கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது. இதனால் தான் நல்ல நீரை விரும்புகிறவன் கிணற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்டவைகள் அதில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல மனம் என்ற கிணற்றில், நல்ல தண்ணிர் என்ற நினைவுகள் ஊறிக் கொண்டேயிருக்கும். தீய நினைவுகள், தீய பழக்கங்கள் என்ற குப்பைகள் மனக் கிணற்றில் விழாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு, ‘தாகம் தீர்க்கும்’ தூய தண்ணீர் கிடைப்பதுடன், ‘சுகம்’ கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது. இதனால் தான் நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு என்பதை வற்புறுத்தி எழுதிவருகிறேன். இப்படிப்பட்ட பண்பார்ந்த மனம், நல்ல வலிமையான உடல் செழிப்பினால்தான் வரும், வளரும். சோம்பேறித் தெரு நாய்கள், முயல்களை விரட்டத்தான் முடியும். வலிமையான வேட்டை நாய்களே, முயல்களை விரட்டிப் பிடிக்க முடியும் என்கிற பழமொழியை இங்கே நினைவு கூர்வோம். வலிமையான உடலில் விளையும் நலமான சிந்தனைகள், நல்ல செயல்களில் ஈடுபடும் பொழுதுதான், எதிர்பார்க்கும் இனிய பலன்களைக் கொடுக்கும். வேட்டை நாய்களைப் போல செயல்களில் ஈடுபட வேண்டும். விரட்டும் வேலை எளிது. பிடிக்கும் வேலையோ பெரிது. அதுபோலவே, செய்யும் தொழிலை செய்வது போன்ற ஆரவார பாவனையுடன் செய்வது எளிது. ஆனால் பலனும் குறைவுதான். அப்படிச் செய்வதை நம்மை நாமே குழியில் வீழ்த்திக் கொள்வது போலாகும். அவ்வாறு செய்வதைவிட்டு, நமக்கு உதவுகின்ற வகையில், பலன்கள் பெறுகின்ற வழியில் நமது சிந்தனைகளும் செயல் முறைகளும் விளங்க வேண்டும். 5. தடைகளை உடைக்கும் ஆற்றல் அமைதியான கடலில் கப்பல் விடுவதென்றால், எல்லோராலும் தான் முடியும் கொந்தளிக்கும் சூறாவளியில், மலை உயரம் எழும்புகிற அலைகளுக்கிடையில், கொட்டும் மழையில், கப்பலைச் செலுத்துவது என்பது தேர்ந்த மாலுமிகளால், நல்ல கப்பல் தலைவர்களால் மட்டுமே முடியும். அதுபோலவே, சாதாரண நேரங்களில், சமர்த்தாகப் பேசி, சாதுர்யமாக வேலைகளை முடித்து விடுவோம் என்பது சாமான்ய மனிதர்களாலும் முடியும். தவிர்க்க முடியாத தடைகள், குழப்பிவிடுகின்ற குயுக்திகள், சதித்திட்டம் போல் விளங்கும் சந்தர்ப்பங்கள், மீறி வர முடியாத அளவுக்குப் பிரச்சினைகள். இவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதுதான் வீரத்திற்கு அழகாகும். விவேகிகளின் செயலுமாகும். ஆகவே, எதிர்ப்புக்களைக் கண்டு இடறி விழாத பண்புள்ளவர்கள். அவற்றை எத்தி உதைத்துவிட்டு, பாதையை ராஜ பாதையாக ஆக்கிக் கொள்பவர்களால் தான் வெற்றியாளர்களாக விளங்க முடியும். வாழ்வையும் வெற்றி கொள்ள முடியும். 6. நாவும் நயமும் அன்பு தான் உலகை ஆள்கிறது. அன்பான சொல் தான் கேட்பவரை மகிழ்விக்கிறது. அன்பான நடத்தையே அடுத்தவர்களிடம் பிரியத்தையும் மரியாதையும் பெற்றுத் தருகிறது. நமது முயற்சியைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களும், நமது வெற்றியைப் பற்றி வன்மையாக விமர்சிப்பவர்களும், நமது தோல்வியைக் கண்டு விலா எலும்புகள் ஒடிய சிரிப்பவர்களும் தான் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அப்படிப்பட்டவர்களிடமும் நாம் அன்பாகத் தான் பேச வேண்டும். அன்பாகவே நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அன்புடன் பழகிடவே முயல வேண்டும். ஏனெனில், பேசுகிற சொல்லும், வீசுகிற கல்லும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து சேராது. பேசிய சொல் பேசியது தான். வீசிய கல்வீசியதுதான். வாழ்வில் முன்னேற விரும்புபவர்கள், நாவை மிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் சொல் மட்டுமே முதலில் ஒருவரை வசீகரிக்கிறது. அல்லது விரோதியாக்குகிறது. முன்னேற விரும்புகிறவர்களுக்கு பல நல்ல நண்பர்கள் கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் எதிரி என்று யாரும் இருக்கக்கூடாது. ஏனெனில், நமது முன்னேற்றத்தின் வேகத்தை எங்கிருந்தோ ஓர் எதிரியால் மிக எளிதாகத் தடுத்து விட முடியும். வீணானத் தடைகளை நாமே ஏன் விளைவித்துக் கொள்ள வேண்டும்? ஆகவேதான், செயலில் விவேகம் காட்டுவது போல. சொல்லிலும் விவேகம் காக்க வேண்டும் என்று கூறுகிறோம். 7. நாணயம் வேண்டும் உறுதியான மனம், உறுதியான எண்ணங்கள், உறுதியான சொல்லாற்றல், உறுதியான தொடர் செயல்கள் எப்பொழுதும் வெற்றிகளை உறுதி செய்வனவாகும். பிறருக்கு உதவி செய்யாமல் கூட இருக்கலாம். உபத்திரவம் செய்யாமல் இருப்பதுதான் உத்தமமான பண்பு என்று கூறுவார்கள். அதுபோலவே, பிறருக்கு உதவுகிறேன் என்று பேசாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதுதான் விவேகம். ஏனெனில், ஒரு பறவையானது அதன் குரலைக் கொண்டே அறியப்படுவது போல, (முன்னேற விரும்பும்) ஒருவரது நாணயமும் அவர் சொல்லாலே அறியப்படுகிறது. ஒருவர் காலால் தடுமாறி விடலாம். விழலாம். ஆனால் சொல்லால் தடுமாறி வாழவே கூடாது. முட்டாள்கள்தான் தங்கள் சொற்களால் தங்களையே முழுதாக அதாவது மட்டரகமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அறிவாளிகளோ அர்த்த ராத்திரியில் அற்புத முழு நிலவாக ஒளிர்ந்து கொள்கிறார்கள். ஆகவே, நாணயத்தை வெளிப்படுத்தும் சொற்களைப் பேசுவதும், அவற்றைக் கண்ணியத்துடன், கடமை உணர்வுடன் காப்பாற்றிக்கொள்வதும். முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவனவாகும். 8. சிக்கனமும் செலவும் ஒருவர் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என்பதில் அல்ல பெருமை. அவர் எவ்வளவு சேர்த்து வைக்கிறார் என்பதில்தான் பெருமை. ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு சம்பாதித்து விட்டு 1200 ரூபாய் செலவு செய்பவரை விட, மாதத்திற்கு 500 ரூபாய் சம்பாதித்து, 50 ரூபாய் சேர்த்து வைப்பவரே சிறந்தவராவார். ஒரு பைசா கூட ஒரு நாளைக்கு சேர்த்து வைக்காதவர் பணக்காரர் ஆகிடுவார் என்கிற பேச்சுக்கு இடமேயில்லை. இன்றைய செலவாளி நாளைய பிச்சைக்காரன் ஆவான். பணத்தால் மட்டும் தான் சேர்க்க முடியுமா? உடலாலும்தான். உடல் சக்தியை ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள், உருக்குலைந்து போயொழிவார்கள். இன்றைய உடல் சக்தியை, இளமை சக்தியைச் சேர்த்துவைக்காமல் சீரழிக்கிற செலவாளி, நாளைய நோயாளியாவான் என்பதற்கு சந்தேகமே இல்லை. நீங்கள் பெரும் பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். பணத்தை சிக்கனப்படுத்தத் தெரிந்துகொண்ட அவர்களால், உடல் சக்தியை சிக்கனப்படுத்தாமல் செலவு செய்துவிட்டதால், சேர்த்தப் பணத்தை அனுபவிக்க முடியாமல், செத்தும் சாகாத நடைப்பிணங்களாய், நோய்களால் நொறுக்குண்டு கிடக்கின்றார்கள். நோய் என்பது உடல் உழைக்க மறுத்து செய்கின்ற ‘ஸ்டிரைக்’ போன்றதாகும். பலவாறான பேய்ச் செயல்களால் பாதிக்கப்பட்ட உடல்தான் நோய்வாய்ப்படுகிறது. பணத்தைச் செலவு பண்ணாமல் சேர்த்து வைக்கிறவன் பணக்காரன் ஆகிறான். உடல் சக்தியை செலவு செய்யாமல் சேர்த்து வைக்கிறவன் பலவான் ஆகிறான். முன்னேற விரும்புகிறவர், அவருக்கு அவரே செய்துகொள்கின்ற உதவியாவது - பணத்தைச் சேர்ப்பது போலவே உடல் சக்தியையும் நேர்த்தியாக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். உங்கள் உயர்ந்த நினைப்பும், உன்னத உழைப்பும், உங்களை நிச்சயம் காக்கும். உங்களுக்கு கட்டாயம் உதவும். உங்களது எதிர்காலத்தை ஒளி மிகுந்ததாகப் பிறப்பிக்கும். நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். சரித்திரம் படையுங்கள். எழுச்சியுடன் உழைப்பவருக்கு இறைவன் உதவி என்றுமே உண்டு!  11 வாழ்வில் ஏற்றம் பெறுவோம் இதுவரை நாம் படித்த கருத்துக்களை நம்முடைய வாழ்வில் கடைபிடித்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம். காரியம் என்ன செய்தோம்! பூரிப்போடு சொல்லி மகிழ்கின்ற அளவுக்கு புதிதாக என்ன சாதித்தோம்? சோற்றுக்கு உழைத்ததும் - நாக்குப் போட்டியில் சுவைத்ததும் - வயிற்று உழைப்பிலே களைத்ததும், நோய்கள் நெருப்பிலே சளித்ததும் தான் நமது சாதனைகளாகத் தெரிகின்றன! புதிய உயிர்களை உற்பத்தி செய்வதையே பொழுதுபோக்காய் கொண்டு விட்ட காரியத்தையும் இடம் தேடி மடம்தேடி சுகம் தேடி! இளிச்சவாயர்களாக அலைந்ததையும். வாய்ப்பேச்சில் இன்பம்! வன்மொழியில் இன்பம்! வழியில் யாரைப் பார்த்தாலும் வக்கணையாய் வம்புப் பேச்சு. காக்கைக் கண்களால் கருடப் பார்வை பார்த்து, கால நேரத்தை அழித்த கதையெல்லாம் உண்டு! எல்லோரும் ஒன்றை எண்ணிக் கொள்ள வேண்டும். நன்னெறி நூலை நமக்கு நல்கி, நல்ல புகழிற்கு உரிய குமரகுருபர சுவாமிகள் என்பவர், கோடிட்டுக் காட்டிய குறிப்பொன்று, இவ்வாறு அமைகிறது. நீரில் குமிழியாய் இளமை இருக்கிறது. நீரில் திரளும் அலைகள் போல் செல்வம் இருக்கிறது. நீரில் எழுதிய எழுத்து போல்தான் நிலவுகிற நமது வாழ்க்கை இருக்கிறது. நொடியில் ஒடிந்து, மறைந்து போகிற நூதனத் தன்மைதான் நமது வாழ்வமைப் பாய் விளங்குகிறது. நில்லாத வாழ்க்கை, மனிதர்க்கெல்லாம் நிலையாத வாழ்க்கை என்கிற இதுபோல் நினைவுகளை சற்று தூரம் எறிந்துவிட்டு, அணையாத ‘ஜோதியாக’ வாழ்வை ஏற்றிப் பார்க்க, உங்களை யெல்லாம் பெருமையுடன் அழைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் திறமை இருக்கிறது. உண்மை நிலை இதுதான். தமது திறமையை தகுதியுடன் வளர்த்துக் கொண்டு, தான் உயர்ந்து கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கும் தொண்டு செய்கிற சக்தியும் சாமர்த்தியமும் சமுதாயத்தில் பிறந்த எல்லோர்க்கும் உண்டு. ‘எப்பொழுதும் போய் விடுவோம்’ என்ற எண்ணத்தைத் தள்ளிவிட்டு, இருந்து என்ன புண்ணியம் என்ற கீழ் நினைவை கிள்ளிவிட்டு; இருக்கும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்கிற வேட்கையை வளர்த்து விட்டு, நீங்கள் வளமோடு வாழ வேண்டும். வழியறிந்து உழைக்க வேண்டும். வள்ளல்களாகப் பிழைக்க வேண்டும். வானளாவிய இன்பத்தில் திளைக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஆர்வமுடன் பயணத்தைத் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மண்ணுலகில் வந்து வாழ்ந்து மறைந்து போகிறவர்கள் மனிதர்கள். மண்ணுலகில் வாழ்கிற மக்களிடம் வந்து வாழப்போகிற மக்களிடம் நெஞ்சில் அமர்ந்து நிலையாக, நினைவாகக் கொஞ்சும் இடத்தில் கோலாகலமாய் இருந்து வாழ்கிற சாதனை படைத்தவர்களையே பூரிப்போடு அமரர் எனப் போற்றுகின்றனர். அத்தகைய அமரர் பேரினை எடுக்க வேண்டும். நீங்கள் ஆற்றலுள்ள மனிதர்களாய் பணியாற்றி, மக்கள் மனதிலே இடம் பெறுகிற அமரர்களாய் மாறி, திரளான புகழில் தேவர்களாய் விளங்கி, தேனான வாழ்வு வாழ வேண்டும் என்று எனது இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்! எல்லா நலமும் பெற்று ஏற்றமுடன் வாழ்கவே! வாழ்கவே! இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Deepa arul kaniyam Fathima kaniyam Balu1967 Balajijagadesh Arularasan. G Info-farmer * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html