தமிழ்ப் பழமொழிகள் 1 கி. வா. ஜகந்நாதன் 2006 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 1 தொகுத்தவர் கி. வா. ஜகந்நாதன் ஜெனரல் பப்ளிஷர்ஸ் ஜெனரல் பப்ளிஷர்ஸ் முதற் பதிப்பு – 2001 இரண்டாம் பதிப்பு – 2006 உரிமை பதிப்பு © ஆசிரியருக்கு விலை ரூ. 100.00 ஜெனரல் பப்ளிஷர்ஸ் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, தபால் பெட்டி நெ. 617, மயிலாப்பூர், சென்னை–600 004. தொலைபேசி : 494 1314 Jai Ganesh Offset Printers, Chennai - 600 004. முகவுரை இந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்ள ஆடவர்களிடமும் பெண்மணிகளிடமும் கேட்டுப் பழமொழிகளை எழுதி வந்தேன். பெரும்பாலும் முதிய பெண்மணிகளே பல பழமொழிகளைச் சொன்னார்கள். பழமொழியை முதுமொழி என்றும் வசனம் என்றும் கூறுவர். பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை. இந்தப் பழமொழிகளில் பல்வேறு சாதியினரைக் குறை கூறி உள்ளவை பல உண்டு. அவற்றைக் கண்டு அந்தச் சாதியைச் சேர்ந்த அன்பர்கள் சினம் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். இழித்துக் கூறுவதில் எந்தச் சாதியினரையும் விட்டு வைக்கவில்லை. பார்ப்பனர்களை இழித்துக் கூறும் பழமொழிகள் பல. அத்தகையவற்றை அப்படி அப்படியே காட்டியுள்ளேன். தமிழ் மக்களுடைய எண்ணம் எவ்வாறு படர்ந்தது என்பதை இவை காட்டுகின்றன. நாடோடி இலக்கியத்தைச் சார்ந்தவை பழமொழிகள். அறிவு தெரிந்த சிறுவர் முதல் முதுமை உடையவர்கள் வரை யாவரும் தாம் பேசும் பொழுது பழமொழிகளை ஆளுவார்கள். அவரவர்களுடைய அனுபவத்துக்கு ஏற்ற வகையில் அவை இருக்கும். உபநிடதம், இலக்கிய இலக்கணங்கள் ஆகியவற்றைப் பற்றிய பழமொழிகளும் உண்டு. விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், ஊர்வன, புழுபூச்சிகள் முதலியவற்றைப் பற்றிய பழமொழிகள் பல. இவற்றை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதலாம். பல பெரியோர்களுடைய வரலாறுகள் சம்பந்தமான பழமொழிகளும் உண்டு. கம்பன், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களைப் பற்றிய பழமொழிகள் சில உள்ளன. சில சில ஊர்களைப் பற்றிய பழமொழிகளும் பல உண்டு. அந்த ஊர்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைப் பற்றிய பழமொழிகளும் உள்ளன. இவ்வாறு பல பல துறைகளில் அமைந்த இந்தப் பழமொழிகள் அறிவைத் தூண்டுகின்றவை. தமிழ் மக்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள பழமொழிகளைப் படித்து இன்புறுவார்கள் என்று நம்புகிறேன். கி. வா. ஜகந்நாதன் 'காந்தமலை' சென்னை—28 4—5—88 உட்தலைப்புகள் ‘அ’ வரிசை ‘ஆ’ வரிசை ‘இ’ வரிசை ‘ஈ’ வரிசை ‘உ’ வரிசை ‘ஊ’ வரிசை ‘எ’ வரிசை ‘ஏ’ வரிசை ‘ஐ’ வரிசை ௳ முருகன் துணை தமிழ்ப் பழமொழிகள் அஃகமும் காசும் சிக்கெனத் தேடு, (அஃகம்.தானியம்; சிக்கென -விரைவாக.) (கொன்றை வேந்தனில் உள்ளது; பழமொழி போல வழங்குகிறது.) அஃகம் சுருக்கேல். (ஆத்தி சூடியில் உள்ளது. பழமொழி போல் வழங்குகிறது.) அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது. (கிளி பேசுவது.) அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா? அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும். 5 அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம். அக்கரைக்கு இக்கரை பச்சை. அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும். 10 அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம். அக்கரை வந்து முக்காரம் போடுது, (முக்காரம் - முழக்கம்.) அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா? அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க (மொகுடு-கணவன், குக்க-நாய்.) அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன? 15 அக்காக்காயாகச் சுற்றுகிறான். அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான். அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண். அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி. அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? 20 அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்? அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு. (பி-ம்.) இருந்தால். அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு. (பி-ம். இருந்தால், மச்சானும் உறவு. அக்காள் உறவும் மச்சான் பகையுமா? 25 (பி-ம்.) பகையும் ஆகுமா? அக்காள் செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு. அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா? அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். (அக்காள்-மூதேவி, தங்கை-சீதேவி.) அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது. அக்காள் வந்தாள்; தங்கை போனாள். 30 (அக்காள்- மூதேவி, தங்கை - சீதேவி.) அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும். அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம். அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா? அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்? அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள். 35 (பா-ம்.) தங்கை அவிசாரி ஆனாள். தனிவழி போனாளாம். அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு. (பா.ம்.) மச்சான் உறவு. அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும். அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர். அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா? அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது. 40 அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? (பாம்.) நாய்க்குக் கூட அகவிலை தெரியும். அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல, (பா-ம்.) அழுமா? அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே. அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல. அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி. 45 அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான். (பா-ம்.) பகவானுக்கு, கருத்து: கறுப்பாய் இருக்கிறான். அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா? (பா.ம்.) வெண்ணெய்ப் பொம்மை, அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல். (பா-ம்.) பிரயோகித்தது போல். அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும். அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா? 50 (பா-ம்.) விஷம் இருக்காது. அக்கினியைக் குளிப்பாட்டி ஆனைமேல் வைத்தாற் போல, (கருத்து: எல்லாம் கறுப்பு.) அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல. அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா? (பா-ம்.) கக்குகிற பிள்ளை. அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை. அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? 55 (அக்குத் தொக்கு-சம்பந்தம்.) அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும், வெட்கம் சிக்கு இல்லாதவன் ரோஷமும் மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும், அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கிறான். அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன், அகங்கை புறங்கை ஆனாற் போல. அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? 60 அகடவிகடமாய்ப் பேசுகிறான். அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே. (அகத்தியை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பர்.) அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன? அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார். அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா? 65 அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம். அகத்திலே உண்டானால் அம்பி சமத்து. அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம். {பா-ம்.) அகத்துக்காரப் பிராம்மணன் அடிமுண்டை என்றால். அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம். அகத்துக்கு அழகு அகமுடையாள். 70 அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல். (அசல்-அயல்.) அகத்துக்கு முகம் கண்ணாடி. அகத்துக்கு மூத்தது அசடு. அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான். அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே. 75 அகதிக்கு ஆகாசமே துணை. அகதிக்கு ஆண்டவன் துணை. (பா-ம்.) தெய்வமே துணை. அகதி சொல் அம்பலம் ஏறாது. அகதி தலையில் பொழுது விடிந்தது. அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம். 80 அகதியை அடித்துக் கொல்லுகிறதா? (பா-ம்) பிடித்து. அகதியைப் பகுதி கேட்கிறதா? அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா. அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும். அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு. 85 (பா-ம்.) ஒன்பதாம் இடத்தில் ராஜா. அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர். அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில். (தண்டம் பட்டுக் கணவாய் வடஆர்க்காட்டு மாவட்டத்தில் உள்ளது.) அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது? (பா-ம்.) களவு செய்வான். அகப்பை அறுசுவை அறியுமா? அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி. 90 அகப்பைக்குக் கணை வாய்த்தது போல. அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை? அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி? அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே. அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான். 95 அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும். (பா-ம்.) குறையும். அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? அகம் ஏறச் சுகம் ஏறும். அகம் குளிர முகம் மலரும். (பா-ம்.) அகம் மலர. அகம் குறைந்தால் அஞ்சும் குறையும் 100 அகம் மலிந்தால் அஞ்சும் மலியும். (பா-ம்.) எல்லாம் மலியும். அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது. அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்; அம்மாளுக்குச் செய்தால் அவமானம். அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா. அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன். 105 (பா-ம்.) அடுத்தகத்துக்காரி சிரிப்பாள். அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம். (பா-ம்.) மைத்துனனை, அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம். அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும். அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா? அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது. 110 அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு. (பா-ம்) தப்பு. இல்லை, அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன். அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது. (பா-ம்) பீளைவிட்டது. அழுததனால் அப்படி ஆயிற்று. அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான். அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும், 115 அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி. அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்? அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம். அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம். அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும். 120 அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம். (பா-ம்.) பலம் உண்டானால். அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு. அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும். அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது. அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம். 125 அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான். (பா-ம்.)அந்திக் கண்ணன். அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன? அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு. அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை. அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா? 130 (பா-ம்.) சொல்லலாகாது. அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம். அகமுடையானைக் கொன்ற அற நீலி. அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது. அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா? (பா-ம்) ஆடலாமா, ஆட்டம். அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்? 135 அகர நாக்காய்ப் பேசுகிறான். அகராதி படித்தவன். அகல் வட்டம் பகல் மழை. அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை. (பா-ம்.) நீண்ட உறவு. அகல இருந்தால் பகையும் உறவாம். 140 அகல இருந்தால் புகல உறவு. அகல இருந்து செடியைக் காக்கிறது. அகல உழுவதை ஆழ உழு, (பா-ம்.) அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது; அதனையும் அடுக்கு உழு. அகலக் கால் வைக்காதே. 145 அகல விதை; ஆழ உழு. அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன். அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்? அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை. அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை. அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை. 150 அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான். (நாஞ்சில் நாட்டு வழக்கு.) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம். அகா நாக்காய்ப் பேசுகிறான். அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது. அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? 155 அகிலும் திகிலுமாக. அகோர தபசி வபரீத சோரன். (பா-ம்.) நிபுணன். அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி. அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா? அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார். 160 (பா-ம்.) சேர். அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை, (பா-ம்.) அலைசொணாதே. தோஷம் போகாது. அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது. அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும். அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது. அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை. 165 அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள். (பா-ம்.) கொத்துமல்லி என்பாள். அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே. (பா-ம்.) அங்காடி விலையை அதறப் பதற அடிக்காதே. அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே. அங்காடி நாய் போல அலைந்து திரியாதே. அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. 170 அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம். அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும். (பா-ம். )அகப்பைக் கூழ். அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன். அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு. (பாம்.)அங்கிடு தொடுப்பி - கோள் கூறுபவள். அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது. 175 அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம். (பா-ம்.) இங்கே வாடி ஆலாய்ப் பறக்கலாம். அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா. அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான். (பா-ம்.) இருப்பாள். அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான். அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன். 180 (பா-ம்.) திம்மட்டிராயன். அங்கும் சோதி; அடியேனும் சோதி. (சுவாதித்திருநாளிடம் ஒருவன் சொன்னது.) அங்குஸ்தி இங்குஸ்தி. அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம். அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு. அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? 185 (பெண் கேட்கப் போனவன் கூறியது) அங்கே போனேனோ செத்தேனோ? அங்கேயும் தப்பி இங்கேயும் தப்பி அகப்பட்டான் தும்மட்டிக் காய்ப் பட்டன். அங்கை நெல்லிக்கனி. (ப-ம்.) பழம். அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான். (ப-ம்.) இல்லாதவன். அச்சம் ஆண்மையைக் குறைக்கும். 190 (ப-ம்.) குலைக்கும். அச்சாணி அன்னதோர் சொல். (ப-ம்.) போன்றதோர். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா? (அழுவணம்-மருதோன்றி. ) அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான். (அச்சி-ஓர் ஊர்: சுமத்ராவில் உள்ளது) அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன். 195 அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல. அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில். (பாலக்காட்டு வழக்கு, அச்சி விட்டில் சங்கடம் வந்தால் பிராமணன் புறப்பட வேண்டும்.) அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா? அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? (ப-ம்.) தேர் ஓடுமா? பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடாது. 200 (பா-ம்.) ஓடுமா. அச்சு ஒன்றா வேறா? அசடு வழிகிறது. அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல். அசந்தால் வசந்தா, அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி. 205 அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே. அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும். (ப-ம்.) வீட்டுப் பிராம்மணா. அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான். அசல் வாழ ஆறு மாசம் பட்டினி. அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? 210 அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை. அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா? அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா? அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான். அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. 215 அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது. அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு. அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்? அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை. (பா-ம்.) பந்தம். அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான். 220 அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்? அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி. அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்? (பா-ம்.) ஆவாய். அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான். அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள். 225 அஞ்சி அஞ்சிச் சாகிறான். அஞ்சி ஆண்மை செய்ய வேணும். அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை. அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே. அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது. 230 அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான். அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை. (அஞ்சு-செடியில் ஐந்து இலைகள் இருக்கும் சமயம்.) அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா? அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான். (பா-ம்.) அறுபதுக்குமேல் கொஞ்சினாலும். அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது. 235 அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய். அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை. அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும். அஞ்சினவனைப் பேய் அடிக்கும். 240 (பா-ம்.) அஞ்சினாரை. அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே. அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும். அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான். அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு. (முதியவர்களைச் சொல்வது) அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும். 245 அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது. (பா-ம்.) கோபம் ஆகாது. அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம். அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்? அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி. அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம். 250 அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை. அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி. அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை. அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார். அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும். 255 அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள். அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே. அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது. அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும் (பா-ம்.) அஞ்சும் மூன்றும் அடுக்காக இருந்தால் அறியாச் சிறுக்கியும். அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. 260 அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல். அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது. அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான். அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது. அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி. 265 அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம். அஞ்சு வயசில் ஆதியை ஓது. அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம். அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும். அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல். 270 அஞ்சு விரலும் சமமாக இருக்குமா? (பா-ம்.) ஒரு மாதிரி. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம். அஞ்சூரான் பஞ்சு போல. (பா-ம்.) புஞ்சை போல. அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும். 275 அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம். அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள். அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம். (பா-ம்.)பெட்டை. அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல. அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும். 280 (பா-ம்.) தொட்டதெல்லாம் நட்டம். அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. அட்டாதுட்டிக் கொள்ளித் தேள். அட்டாரைத் தொடாக் காலம் இல்லை. (பழமொழி நானூறு) அட்டாலும் பால் சுவையில் குன்றாது. (வாக்குண்டாம்.) 285 அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு. அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே. அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்? அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை. அட்டை மாதிரி உறிஞ்சுகிறான். 290 அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான். அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே. அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும். அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம் சாக்கடையில். 295 (பா-ம்.) சகதியிலே. அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே. அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல. அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்? (பா-ம்.) அடக்கம் உள்ள. அடக்கம் ஆயிரம் பொன் பெறும். அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார். 300 அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை. அடக்கமே பெண்ணுக்கு அழகு; அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான். அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி. அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல. 305 அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண். அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு: நமக்கும் பொல்லாப்பு. அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான். அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும். அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி. 310 அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக்கலாகாது. அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே! அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. [யாழ்ப்பாண வழக்கு] அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா? அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார். 315 அடர உழு; அகல விதை. அடர விதைத்து ஆழ உழு. அட ராவணா என்றானாம். அடா என்பவன் வெளியே புறப்பட்டான். அடாது செய்தவர் படாது படுவர். 320 அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும். அடி அதிசயமே, சீமைச் சரக்கே! அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை. (பி-ம்.) அடி அப்பம். அடி அற்ற பனைபோல் விழுந்தான். அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது 325 (பா-ம்.) பனமரம் போல. அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா? அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார். அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை. (பா-ம்.) மந்திரியும் இல்லை, பிடி என்கிற ராஜாவும். அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம். அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம். 330 (பா-ம்.) புத்திரவெகு பாக்கியம் நமஸ்து. அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம். அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம். அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம். அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்? அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே? 335 அடிக்க அடிக்க அம்மியும் நகரும். அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள். அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும். (பி-ம்.) எழும்பும். அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும். அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும். 340 அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு. அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா? அடிக்கிற கைதான் அணைக்கும். அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும். அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம். 345 அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை. (பா-ம்.) அடிப்பதும், அணைப்பதும் அடிக்கும் காற்றிலே எடுத்துத் துரற்ற வேண்டும். அடிக்கும் சரி, பிடிக்கும் சரி. அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு. அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல. 350 அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா? அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரைச் சவாரி பண்ணினானாம். அடி சக்கை பொடி மட்டை அடி சக்கை, லொட லொட்டை அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார். 355 அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே. அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும். அடித்த எருக்கும் குடித்த கூழுக்கும் சரி. (பா-ம்.) அடித்த உழவுக்கும் வார்த்த கூழுக்கும். அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு. அடித்தது ஆலங்காடு. 360 அடித்த நாய் உழன்றாற் போல. அடித்த மாடு சண்டி. அடித்தவன் பின்னால் போனாலும் போகலாம்; பிடித்தவன் பின்னால் போகக்கூடாது. அறுபதுக்குமேல் கொஞ்சினாலும் அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது. அடித்தா பால் புகட்டுகிறது? 365 அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது; அடித்தால் கூட அழத் தெரியாது. அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே. அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே. அடித்தாலும் புருஷன், அணைத்தாலும் புருஷன். 370 (பா-ம்) புடைத்தாலும் புருஷன். அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு. அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி. அடித்தான் பிடித்தான் வியாபாரம். அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா? அடித்துப் பழுத்தது பழமா? 375 அடித்துப் பால் புகட்டுகிறதா? அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான். அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை. அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும். அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும். 380 (இல்லை.) அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும். (செவ்வை ஆகா. ) அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது. அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்; அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம். அடி நொச்சி; நுனி ஆமணக்கா? 385 (அடி நா, நுனி நா.) அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை. அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம். அடிபட்ட நாய் போல. அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே. அடிபட்டவன் அழுவான். 390 அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும். அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு. அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். (பா-ம்.) தேயும், அடிமை படைத்தால் ஆள்வது கடன். 395 அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு. அடியாத பிள்ளை படியாது. (பணியாது.) அடியாத மாடு படியாது. அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு. அடியுண்ட வேங்கை போல. 400 அடியும் நுனியும் தறித்த கட்டை போல. அடியும் பட்டுவிட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்? அடியும் பிடியும் சரி. அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன். அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு. 405 அடியைப் பிடியடா பாரத பட்டா! அடியை விட ஆவலாதி பெரியது. அடியோடு அடிக் கரணம். அடிவண்டிக் கிடாப் போலே. அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல. 410 அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல. அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது. அடிவானம் கறுத்தால் ஆண்டை வீடு வலுக்கும். அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள். அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா? 415 அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல். அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும். (இருக்கிறது என்கிறான்.) அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது. (துடுப்பால் குழைந்தது.) அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது. அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா? 420 (எதற்கு?)  அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா? (அடுக்குகிற வருத்தம், உடைக்கிற பூனைக்கு.) அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம். அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும். அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம். அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும். 425 அடுத்தவரை அகல விடலாகாது. அடுத்தவரைக் கெடுக்கலாகாது. அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல. அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்? அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான். 430 (கெடுப்பான்.) அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது. அடுத்தவனைக் கெடுக்கலாமா? அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம். 435 (உத்தியோகம் வந்தால்.) அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம். (இடித்துக் கொண்டாளாம்.) அடுத்தாரைக் கெடுக்கிறதா? அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான். அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார். 440 அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும். (எடுத்த காரியம், கொடுத்த உதவியும் முடியும்.) அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை. அடுத்துக் கெடுப்பவர். அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை. (தொடர்ந்து கெடுப்பாள் வேசி.) அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும். 445 அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும். (வாக்குண்டாம்.) அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு. அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம். அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம். அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம். 450 அடுப்பு அடியில் பூனை தூங்க. அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை. அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு? அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்? அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும். 455 அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம். (அம்மையார் மேல்.) அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா? அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும். அடுப்புக்கு ஒரு துடுப்பா? அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு. 460 அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது. அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு. (வாய்த்த மனைவியும் போனாள்.) அடுப்பும் நெருப்பும் பயப்படுமா? (யாழ்ப்பாண வழக்கு.) அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம். அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா. 465 (இடக்கர்.) அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம். அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார். அடை தட்டின வீடு தொடை தட்டும். அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா. அடைந்தோரை ஆதரி. 470 அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம். அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும். அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி. அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம். அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல. 475 அடை மழையும் உழவு எருதும். அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை. (கொடி மழை.) அடையலரை அடுத்து வெல். (அடையலர்-பகைவர்.) அடையா, அப்பமா, விண்டு காட்ட? அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது. 480 (இல்லை.) அண்டங் காக்காய் குழறுகிறது போல. அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா? அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே. (அண்டத்துக்கு உள்ளது.) அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு. அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா? 485 அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம். (ஆலமரம்.) அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும். அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? 490 அண்டை அயலைப் பார்த்துப் பேசு. அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே. அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல. (ஆண்டை மேலுள்ள.) அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும். அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே! 495 அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல. அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா. அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே? அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல. அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம். 500 அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை? (அண்டைவிட்டு மீனாட்சிக்கும் அடுத்த வீட்டுக் காமாட்சிக்கும்.) அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான். (திரிப்பான்.) அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது. 505 (அன்றறுகிற, நின்றறுகிறது.) அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம். (மைத்துனிக்கு.) அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ? (எப்போது சாவான்.) அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு. (பணச்சு.) அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது. (அரைஞாண் கயிற்றுக்குச் சரி.) அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ. 510 அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி. அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம், அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே. அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ? அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்? 515 அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம். (பிள்ளையை வளர்ப்பதை விட.) அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு. அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி. அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது. (சிற்றப்பா.) அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை. 520 அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா. அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன். அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான். அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா? அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான். 525 (போகிறாள்.) அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா? (அரை நாழிகை.) அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ. அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா? அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள். (வீட்டாள்.) அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம். 530 (மதனி.) அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான். அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல. அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல. அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது. அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா? 535  அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும். அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ. அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர். (அண்ணாதுாரில் பிணத்தாழி கட்டித் தொங்க விட்டிருப்பார்களாம். சதண்டி: ஓரூர்.) அண்ணாமலைக்கு அரோ ஹரா! அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம். 540 அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா? (மன்னார்சாமியைக் கேட்பானேன்? மன்னார்சாமி மருள் வந்து.) அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை. அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் படிக்க வேண்டுமா? (படிக்கத் தெரியாதா?) அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும். அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது. 545 அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும். அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை. (அண்ணாவி-உபாத்தியாயர், அடைமுறை.) அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை. அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான். (மோளுதல்-சிறுநீர் கழித்தல்.) அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா? 550 அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு. அண்ணாவுக்கு மனசு வரவேணும்; மதனி பிள்ளை பெற வேணும். அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு. அணி இலாக் கவிதை பணி இலா வனிதை. அணி எல்லாம் ஆடையின்பின். 555 (பழமொழி நானூறு.) அணி பூண்ட நாய் போல. அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது. அணில் ஏற விட்ட நாய் போல. அணில் ஏறித் தென்னை அசையுமா? (அசைத்து, ஆடி விடுமா?) அணில் ஓட்டமும் ஆமை நடையும். 560 (அணில் ஊணும்.) அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே, அணில் நொட்டிப் பனை முறியுமா? அணில் நொட்டியா தென்னை சாயும்? அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும், அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல. 565 அணில் வாயாற் கெட்டாற் போல. அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம். அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ? அணு அளவு பிசகாது. அணு மகா மேரு ஆகுமா? 570 அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து. அணுவும் மகமேரு ஆகும். அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு (உருவகம்.) அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்? 575 (மறிப்பவர்.) அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா? (வராது.) அணை கடந்த வெள்ளம் அழைக்கத் திரும்புமா? அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம். (லட்சணம்.) அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது? அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு. 580 அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல, அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள், அத்தான் அரை அகமுடையான்.  அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு. அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம். 585 அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா? (இடக்கர். ) அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு. (அத்திக்காயை.) அத்திப் பூவை ஆர் அறிவார்? அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? 590 அத்தி பூத்தது ஆரும் அறியார்? அத்தி பூத்தாற் போல் அத்தி மரத்தில் தொத்திய கிளி போல, (கனி போல.) அத்தி முதல் எறும்பு வரை (அத்தி-யானை,) அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது. 595 அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார். அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான். அத்து மீறினால் பித்து. அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை. அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி. 600 அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி, அத்தை இல்லா வீடு சொத்தை. அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல, அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு. அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா? 605 அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு. அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா. அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு, அத்தைச் சொல்லடா சீமானே, அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்? 610 அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை. அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல, அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா? (கிடைப்பாளா?) அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா? அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன். 615 அத்தையடி மாமி, கொத்துதடி கோழி. அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று. அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும். அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல். அதமனுக்கு ஆயிரம் ஆயுசு. 620 அதர்மம் அழிந்திடும். (செயங்கொண்டார் சதகம்.) அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள். அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும். அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி, அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது. 625 அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம். அதிக ஆசை அதிக நஷ்டம். அதிக ஆசை மிகு தரித்திரம். அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா? அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம். 630 அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது. அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை. அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும். அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு? அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும். 635 அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா? அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது. அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு.  அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா? அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம். 640 (ஒன்றானால்.) அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு. அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும். அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது. அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது. 645 அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது. (வேங்கடம்மா. கொதிக்கிற கஞ்சி.) அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம். அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம். அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை. அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை. 650 (அடித்தால்.) அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை. அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும். அதிர் வெடி கேட்ட குரங்கு. அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது. 655 அதிர்ஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம். அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும். அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி. அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம் (கெட்டவனுக்கு.) அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும். 660 அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல. அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும். அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை. (ஐயரும் இல்லை.) அதிர அடித்தால் உதிர விளையும். அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி. 665 அதிலும் இது புதுமை; இதிலும் அது புதுமை. அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை. (செத்தது வைத்த.) அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி. அதி விநயம் தூர்த்த லட்சணம். அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி. 670 (விருஷ்டி-மழை. ) அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை. (பத்துக் கவலை.) அது எல்லாம் உண்டிட்டு வா என்பான். அது எல்லாம் ஐதர் காலம். அது எல்லாம் கிடக்கிறது ஆட்டடா பூசாரி, அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது? 675 அதுக்கு இட்ட காசு தண்டம். அதுக்கு இட்ட காசு மினுக்கிட்டு வருவாள், அரிவாள் மணைக்குச் சுருக்கிட்டுத் தா. அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான். (இருப்பான்.) அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம். அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே! 680 அதுவும் போதாதென்று அழலாமா இனி? (அழுகிறதா?) அதைக் கை கழுவ வேண்டியதுதான். அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்? (வலிப்பானேன்?) அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு. அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன். 685 (எடுத்துவிடுகிறேன்.) அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல. அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை. (அப்புறம் போனாலும் வழி இல்லை.) அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான். அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு. அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று. 690 (அந்தகன்-யமன்.) அந்தணர்க்குத் துணை வேதம்! அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும். அந்தப் பருப்பு இங்கே வேகாது. அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும். அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது. 695 (அழகு அழுகிறது.) அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல, அந்தரத்திலே விட்டு விட்டான். அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான். அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது. அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது? 700 (சொல்லி அழுகிறது.) அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி. அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும். அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான். அந்திச் சிவப்பு அடை மழைக்கு அடையாளம். அந்திச் செவ்வானம் அப்போதே மழை. 705 அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை. அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே. அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு. அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது, அந்திப்பீ, சந்திப்பீ பேணாதான் வாழ்க்கை சாமப்பீ தட்டி எழுப்பும் 710 அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா. (பிடித்த பிசாசும் விடா.) அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள். அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா. அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல. அந்து ஊதும் நெல் ஆனேன். 715 (நெல்லைப் போல் ஆனேன். அந்து-ஒருவகைப் பூச்சி.) அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான். (அந்திக் கண்ணிக்கு.) அந்நாழி அரிசி, முந்நாழிப் பருப்பு, இருநாழி நெய். (கண்ணபுரம் முனையதரையன் பொங்கல்.) அந்நிய மாதர் அவதிக்கு உதவார். அநாதைக்குத் தெய்வமே துணை. அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள். 720 அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும். அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல. அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. 725 அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை. (அவள்.) அப்படிச் சொல்லு ரங்கம். அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு. அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும். அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ? 730 அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு. அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும். அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில் அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா. அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா? 735 அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல. அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி. (திருச்செங்காட்டங்குடி உற்சவத்தில்.) அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும். அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா? அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா? 740 அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது. அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா? (செத்து. ) அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான். அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான். அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான். 745 அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது. அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை. அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா. அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம் (நாஞ்சில் நாட்டு வழக்கு.) அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான். 750 (மகன்.) அப்பனுக்கு மூத்த சுப்பன். அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல. அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான். அப்பா என்றால் உச்சி குளிருமா? அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி. 755 அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு. அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா? அப்பா வலக்கை; அம்மா இடக்கை. அப்பாவி உப்பு இல்லை. அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது. 760 அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா? அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை. அப்பியாசம் குல விருது. அப்பியாசம் கூசா வித்தை. அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை. 765 அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு. அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி. அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன். அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம். அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம். 770 அபாயத்திற்கு உபாயம். அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா? அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான். அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா? அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா. 775 (குறும்பும், அம்பட்டக் கிருதாவும், போகாது. அடடா சொல்லவா?) அம்பட்ட வேலை அரை வேலை. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும். (அத்தனையும் மயிர்.) அம்பட்டன் கைக் கண்ணாடி போல. அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும். அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல. 780 அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா? (பஞ்சமா?) அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல. அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா? அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல. அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும். 785 (வந்தால் அடைப்பம் சரியாய் இருக்க வேணும்.) அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா? அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல. அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி, (அம்பத்தூர்-மதுரை மாவட்டத்தில் உள்ளதோர் ஊர்.) அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன? (அம்பர்-அம்பர் மாகாளம்.) அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன? 790 (அரண்மனையில் இருந்தால் என்ன?) அம்பலத்தில் அவல்பொரி போலே. அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான். (அமுது அடக்கம் பண்ண.) அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல. (கட்டுப் பொதி.) அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது. அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம். 795 அம்பலம் வேகிறது. அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான். (அமைத்தாற் போல.) அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது. அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா? (நரி கொள்வார்களா?) அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர். 800 அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது. (குழை கட்டினால்.) அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம். அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன். அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா? அம்மன் காசு கூடப் பெறாது. 805 (அம்மன் காசு-புதுக்கோட்டையில் வழங்கிய சிறிய காசு.) அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா? அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும். (மதுரையில்.) அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும். அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா? அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல. 810 அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? (வேறா? ஒரு கேடா?) அம்மா கோதண்டராமன். அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவார். அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும். அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே. 815 அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம். அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம். அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரயாய்ப் போச்சு. அம்மாவுக்குப் பின் அகமுடையான். அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? 820 (கூடவா?) அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ? அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும். அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது. (வடுகு.} அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி. அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ? 825 (வரமாட்டாள்.) அம்மான் மகளுக்கு முறையா? அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா? (வரிக்க.) அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை. அம்மி இருந்து அரணை அழிப்பான். (அம்மி-மறைந்து.) அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்? 830 அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ? அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள். அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம். அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல். (இலவம் பஞ்சு எனக்கு என்ன கதி என்றாற் போல்.) அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன? 835 அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும். அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை. அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள். (பரணி நூலில்.) அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி. 840 அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே. அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்? அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி. அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு. (முழுக்காசு.) அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? 845 அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம். (கற்றைத் துக்கம்.) அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும். அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா? அமர்க்களப்படுகிறது. அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 850 அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம். அமரிக்கை ஆயிரம் பொன் பெறும். அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி. (கருக்கலிலே.) அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு. அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம். 855 அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா? (சும்மா அகப்படுமா?) அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா? அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா? அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா? அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே. 860 (அமிஞ்சி-கூலி இல்லா வேலை.) அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது. அமிஞ்சி வேலை. அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான். அமுத்தல் பேர் வழி. 865 அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ? அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம். (அதிகம்.) அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும். அமைதி ஆயிரம் பெறும். அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும். 870 அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று. அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான். அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே. (அயலான்.) அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா? (வீட்டான் பிள்ளை.) அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும். 875 அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது. அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். (ஆந்தையாய்.) அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு. அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும். அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான். 880 அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு. அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா? அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல். அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது. (சமைப்பை.) அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. 885 (எழுதின எழுத்தில்.) அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது. அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல். அயிலாலே போழ்ப அயில். (பழமொழி நானூறு.) அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு. அர்ச்சுன சந்நியாசி. 890 அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு? அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு? அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும் அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில். அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை. 895 அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள். அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான். அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா. அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? 900 அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ? (ஆண்டிக்கு இடுவது.) அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா? அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா? அரங்கன் சொத்து அக்கரை ஏறாது. அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது. 905 அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ? (தொண்டரடிப் பொடியாழ்வார் சொன்னதாகக் கதை.) அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று. அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும். அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு? 910 அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம். அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம். (பிடித்த சனியன்.) அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே. அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார். அரசன் அளவிற்கு ஏறிற்று. 915 அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும். (யாழ்ப்பாண வழக்கு ஒறுப்பான்.) அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும். (கேட்கும்.) அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி. அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம். 920 அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா? அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு. அரசன் இல்லாப் படை அம்பலம். அரசன் இல்லாப் படை வெட்டுமா? அரசன் இல்லாப் படை வெல்வது அரிது. 925 அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி. அரசன் எப்படியோ அப்படியே குடிகள். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. (குடிகள்.) அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும். அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள். 930 (கத்தரிக்காய்.) அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல. அரசன் சீறின் ஆம் துணை இல்லை. அரசன் நினைத்த அன்றே அழிவு. அரசன் மெச்சியவள் ரம்பை. அரசன் வரை எட்டியது. 935 அரசன் வழிப்பட்டதே அவனி. அரசன் வழிப்படாதவன் இல்லை. அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது. அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது. அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை. 940 அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா? அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல். (சம்சாரி-பயிரிடுகிறவன்.) அரசனுக்குத் துணை வயவாள். அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம். அரசனும் சரி, அரவும் சரி. 945 (பாம்பும்.) அரசனும் சரி அழலும் சரி. (நெருப்பும்.) அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான். அரசனும் நெருப்பும் பாம்பும் சரி. அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம். (முட்டி-பிச்சை.) அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது. 950 (மயிர் மாத்திரமாக இருக்கிறது.) அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல. அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல. அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும். (பகைத்த.) அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும். அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம். 955 அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும். அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல. அரசு இல்லாப் படை வெல்வது அரிது. அரசு உடையானை ஆகாசம் காக்கும். அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 960 (வெற்றி வேற்கை.) அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே. அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல். அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே. அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை. (காத்தவனும் வீண் போகான்.) அரண்மனை காத்தவனுக்கும் அடுப்பங்கரை காத்தவனுக்கும் குறைவு இல்லை. 965 அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள். அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம். அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம். அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை. (பழுது போவது இல்லை.) அரணை அலகு திறக்காது. 970 அரணை கடித்தால் உடனே மரணம். (அப்போதே.) அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும். அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும். அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல். (நல்லது.) அரமும் அரமும் கூடினால் கின்னரம். 975 (தாக்கினால்.) அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும். (சீரங்கத்தில் தாயாருக்கு அமுது செய்விப்பார்.) அரவத்தைக் கண்டால் கீரி விடுமா? அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே. அரவின் வாய்த் தேரைபோல. அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 980 (வெற்றி வேற்கை.) அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது. (இல்லாமல்.) அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார். அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார். அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி. அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான். 985 . அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா? (அதிகாரம் பண்ணலாமா?) அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம். அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம். அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம். அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம். 990 அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. (வீட்டுக்காரன் அவன்.) அரிசி அள்ளின காக்கைபோல. அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். (உழக்கு.) அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா? அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு. 995 அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை. அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை. அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு. (தண்டலையார் சதகம்.) அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை. (அள்ளவும் முடியவில்லை. ஊதவும் முடியவில்லை.) அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும். 1000 அரிசிக்குத் தக்க கனவுலை. அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது. அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன? அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா? (என்ன சாப்பாடு?) அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? 1005 அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா? அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது. (அகமுடையான்.) அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி. அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது. அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல 1010 அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே! அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை. அரிசிப் பொதியுடன் திருவாரூர். (பொரியுடன், யாழ்ப்பாண வழக்கு.) அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம். அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா? 1015 (மறந்த உலைக்கு உப்பு ஏன் குறைவா?) அரிசியும் உமியும் போல. அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும். அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி. அரித்தவன் சொறிந்து கொள்வான். அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ? 1020 அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி. அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல். அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது. அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு. அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே. 1025 (அசம்பாவிதக் கவிராயர் பாடியது, ஜனத் தொகை ஒரே மாதி; இருக்குமாம்.) அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல். அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான். (திரிகிறான்.) அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு. (அல்ல என்கிறவன் வாயில் மண்ணு.) அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும். (யாழ்ப்பாண வழக்கு.) அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே. 1030 அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ? அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே. அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி. அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும். அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும். 1035 (அசையும்; கெடும்.) அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான். அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம். அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள். அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது. அருக்காமணி முருக்கம் பூ. 1040 அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா? (அழி.) அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது. அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா? அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது. (அருங்கோடை போலும்.) அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம். 1045 (ரோகம்.) அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். (ஆகாசமெல்லாம் பேய்.) அருணாம்பரமே கருணாம்பரம். அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா? அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. 1050 அரும்பு ஏறினால் குறும்பு ஏறும். அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா? (நரம்பு கோணினால் நாம் அதற்கென் செய்வோம்.) அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை. அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது. (இல்லாத வீட்டில். எருமையும் சேராது.) அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன? 1055 அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன? (இருந்தென்ன? இறந்தென்ன?) அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம். அருமை பெருமை அறிந்தவன் அறிவான். அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது. அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது. 1060 (விறுவிறுத்த பட்டினி.) அருவருப்பான சோற்றைக்காட்டிலும் விறுவிறுப்பான பசி மேலானது. அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும். அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும். 1065 அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா? (அழுது படைப் பார்களா?) அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது. அரைக் கல்வி முழு மொட்டை. (அறக்கல்வி.) அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம். அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது. 1070 அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா? அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா? (கிடையாது.) அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை. அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது. 1075 (போன வெட்கம் வருமா?) அரைக் காசுக்கு மலம் தின்பவன். அரைக் காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது. (ஆயிரம் மரக்கால் பொன்.) அரைக் காசு கொடுத்து அழச்சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல. அரைக் காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாளாம். அரைக் காசு சேர்த்து முடிப்பணம் ஆக்குவது போல. 1080 அரைக் காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டும். அரைக் காசும் முதல் இல்லை; அங்கங்கே வைபோகம். அரைக் காசு வேலை ஆனாலும் அரசாங்க வேலை. அரைக் காசை ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசு ஆக்குகிறவளும் பெண்சாதி. அரைக்கிற அரிசியை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்பனோடே போனாளாம். 1085 அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக்கிறவள் ஒன்று நினைத்துக் குடிக்கிறான். அரைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்கும். (பி.ம்) அறைக்கீரை. அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது. அரைகட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா? அரை குழைத்தாலும் குழைத்தாள்; அரிசியாக வைத்தாலும் வைத்தாள். 1990 (கொழித்தால் கொழித்தேன். வைத்தேன்.) அரை குறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறையும் நிறைவாகிவிடும். அரை குறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே. அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல. அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா? (உபகாரமா?) அரைச் செட்டு முழு நஷ்டம். 1095 அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச்சொல் முழுச்சொல் ஆகுமா? (ஆகும்.)  அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா? அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி. (ஆய் விடுகிறவளும்.) அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி. அரைத்ததையே அரைப்பது போல. 1100 அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல். அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது. அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை. அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன், அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல. 1105 அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி. (மிஞ்சினது.) அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம். அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம். (விடிய விடிய) அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா? அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? 1110 அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை. அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம். அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது. அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை. அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை. 1115 அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம். அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும். அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா? அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல். அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி. 1120 அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா. அரையும் குறையும். அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா? (ஆகும்.) அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா? அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா? 1125 அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல. அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு. அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும். அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம். (மல்லல் ஒரு காலம் ) அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம். 1130 அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும். அல்லவை தேய அருள் பெருகும். அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா. அல்லாதவன் வாயில் கள்ளை வார். அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல். 1135 அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம். அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு. அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும். அல்லும் பகலும் கசடு அறக் கல். அல்லோல கல்லோலப் படுகிறது. 1140 அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம். (அத்திம்பேரைக் காட்டினாளாம்.) அலுத்துக் கொழுத்து அக்காளண்டை போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம். அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம். அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம். அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும். 1145 அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா? அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது? (ஒழியும்.) அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல. (அடங்கின பிறகு.) அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை. (பழமொழி நானுாறு.) அலைகடலுக்கு அணை போடலாமா? 1150 அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை. அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு. அலை மோதும் போதே கடலாட வேண்டும். (தலை முழுகவேண்டும்.) அலையில் அகப்பட்ட துரும்பு போல. அலையும் நாய் பசியால் இறக்காது. 1555 அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது. அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ? அவகடம் உடையவனே அருமை அறியான். அவகுணக்காரன் ஆகாசம் ஆவான். அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா? 1160 அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு. (தெலுங்கும் தமிழும் கலந்தது. ஆக்கு-இலை, நாக்கு-எனக்கு, சேத்திலே-கையிலே.) அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு. அவசரக் குடுக்கை. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம். அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே. 1165 அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது. (அரிக்கும் சட்டியிலும்.) அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான். அவசரத்திலும் உபசாரமா? அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது. அவசரத்துக்குத் தோஷம் இல்லை. 1170 (பாவம் இல்லை.) அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம். (புணர அழைத்தாளாம்.) அவசரப் படேல், அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது. (அரிசிச் சாலிலும்.) அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது. அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 1175 அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை. அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம். அவதந்திரம் தனக்கு அந்தரம். அவதிக் குடிக்குத் தெய்வமே துணை. அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி. 1180 (நல்லது.) அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான். (அவமானம் செய்து, பேசுகிறதா?) அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார். அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான். அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான். அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி. 1185 அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை. அவருடைய இறகு முறிந்து போயிற்று. அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும். அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும். (வடமன்-பிராம்மணரில் ஒரு பிரிவினன்.) அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை. 1190 (ஆதிலிங்கத்துக்கு.) அவரை நட்டால் துவரை முளைக்குமா? (விதைத்தால், போட்டால் விளையுமா?) அவல் பெருத்தது ஆர்க்காடு. அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே. அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை. (பார்க்க வேணுமா?) அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது. 1195 (குணத்துக்கு.) அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான். (சுலபமாய்.) அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல. (அவலைச் சாக்கிட்டு.) அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு. அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம். (என்பது புண்ணியம்.) அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா? 1200 அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள். (ஆயிரம் பேர் வருவார்கள். லட்சம் பேர் மயங்கிப் போவார்கள்.) அவள் அழகைப் பார்த்தால் கிள்ளித் தின்னலாம் என்று இருக்கிறது (போலிருக்கிறது.) அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான். அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள். (பண்ணி ஏழு வலம் வருவாள்.) அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது. 1205 அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது. அவள் சாட்டிலே திரை சாட்டா? அவள் சொல் உனக்குக் குரு வாக்கு. அவள் பாடுவது குயில் கூவுவது போல. அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை. 1210 அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம். அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது. அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும். அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு. 1215 அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும், அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா? அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? அவன் அசையாமல் அனுவும் அசையாது. அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. 1220 அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார். அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான். அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு. அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி. அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும். 1225 அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும். அவன் அன்றி ஓரணுவும் அசையாது. அவன் ஆகாரத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான், அவன் இட்டதே சட்டம். அவன் இவன் என்பதைவிட அரி அரி என்பது நலம். 1230 அவன் உள் எல்லாம் புண்; உடம்பெல்லாம் கொப்புளம். அவன் உனக்குக் கிள்ளுக் கீரையா? அவன் எங்கே இருந்தான்? நான் எங்கே இருந்தேன்? அவன் எரி பொரி என்று விழுகிறான். அவன் என் தலைக்கு உலை வைக்கிறான். 1235 அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான். அவன் எனக்கு அட்டமத்துச் சனி. அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி. அவன் ஓடிப் பாடி நாடியில் அடங்கினான். அவன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பத்திதான் எழுதியிருக்கிறது. 1240 (அவன் செட்டியார்.) அவன் கல்வெட்டான ஆள்; அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான். அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான். அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன். அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது. 1245 (அழிக்க.) அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு திரான் போடு. (மொந்தை போடு.) அவன் கெட்டான் என் கொட்டிலின் பின்னே. அவன் கெட்டான் குடியன்; எனக்கு இரண்டு திரான் வாரு. அவன் கேப் மாறி, அவன் தம்பி முடிச்சு மாறி. அவன் கை மெத்தக் கூர் ஆச்சே. 1250 அவன் கை மெத்த நீளம். அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான். அவன் கொஞ்சப் பள்ளியா? அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம். 1255 அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும். அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது. அவன் சிறகு ஒடிந்த பறவை. (இல்லாத பறவை.) அவன் செய்த வினை அவனைச் சாரும். அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை. 1260 அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான். அவன் சோற்றை மறந்துவிட்டான். அவன் தம்பி அங்கதன். (மகன்.) அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது. அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான். 1265 அவன் தவிடு தின்று போவான். அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்? அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன். அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான். அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள். 1270 அவன் நா அசைந்தால் நாடு அசையும். அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான். அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும். அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான். அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால். 1275 அவன் பின்புறத்தைத் தாங்குகிறான். அவன் பூராய மாயம் பேசுகிறான். அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம். அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும். அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை. 1280 அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை. அவன் மனசே அவனுக்குச் சாட்சி. அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது. அவன் மிதித்க இடம் பற்றி எரிகிறது. அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது. 1285 அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன். (மெத்தப் பேச்சுக்காரன்.) அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம். அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி. அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன். (வென்றவன்.) அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது. 1290 அவனண்டை அந்தப் பருப்பு வேகாது. அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு. அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை. அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை. அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை. 1295 அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது. அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும். அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம். அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம். 1300 அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம். அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்? அவனுக்க ஜெயில் தாய் வீடு. அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும். அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது. 1305 அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது அவனே வெட்டவும் விடவும் கர்த்தன். அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான். அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான். (இருக்கிறான்.) அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது. 1310 அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது. அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு. அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும். அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது. 1315 (பி-ம். திருடி) அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா? அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம். அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை. அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா? அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது. 1320 அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை. அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை. அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி. அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது. அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும். 1325 அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது. அவிசாரி வாயாடுகிறாற் போலே. அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது. அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன். அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன். 1330 அவித்த பயறு முளைக்குமா? அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி. அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று. (நலம்.) அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம். (பி. ம்.) நாய். அவிழ்த்து விட்ட காளை போல. 1335 அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம். அவிழ்த்து விட்டால் பேரளம் போவான். அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும். (பி. ம்.) பணம். அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான். அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன். 1340 அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர். (பி. ம்.) தம் மனிதர். அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல. அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான். அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி. அழகிலே அர்ஜூனனாம்; ஆஸ்தியிலே குபேரனாம். 1345 அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி. அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே மிதந்த சாணிக் கூடை அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா? அழக இருந்து அழும்; அதிர்ஷ்டம் இருந்து உண்ணும். (பி-ம்.) அழகு இருந்து என்ன பண்ணும்? அழகு இருந்து உண்ணுமா? அதிருஷ்டம் இருந்து உண்ணுமா? 1350 அழக இருந்து என்ன? அதிருஷ்டம் இருக்க வேண்டும். அழகு இல்லாதவள் மஞ்சள் பூசினாள்: ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள். அழக ஒழுகுகிறது; நாய் வந்து நக்குகிறது: ஓட்டைப் பானை கொண்டு வா, பிடித்து வைக்க. அழகு ஒழுகுகிறது, மடியில் கட்டடி கலயத்தை. (கட்டடா.) அழகுக்கா மூக்கை அறுப்பாள்? 1355 அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும். அழகுக்கு அழகு செய்வது போல. அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும். அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும். அழகுக்கு மூக்கை அழித்து விட்டாள். 1360 அழகு கிடந்து அழும்; அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும். அழகு கிடந்து புலம்புகிறது; அதிர்ஷ்டம் கண்டு அடிக்கிறது. அழகு சொட்டுகிறது. அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா? அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. 1365 அழகு வடியது; கிளி கொஞ்சுது. அழச் சொல்கிறவன் பிழைக்கச் சொல்லுவான்; சிரிக்கச சொல்கிறவன் கெடச் சொல்லுவான். அழப் பார்த்தான் கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும். அமலாம் என்று நினைப்பதற்குள் அகமுடையான் அடித்தானாம். அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவினன் ஆக்குவார். 1370 அழித்தால் ஐந்த ஆள் பண்ணலாமே! அழித்துக் கழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயர் இட்டானாம்! அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன? அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன? (பி-ம்) அழிந்த நந்தவனத்தில். அழிந்தவன் ஆரோடு போனால் என்ன? 1375 அழிய உழுது அடர விதை. அழியாச் செல்வம் விளைவே ஆகும். அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு. அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன். அழிவுக்கு முன்னால் அகந்தை. 1380 அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம். அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம். அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல. அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும். அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது. 1385 (பி-ம்.) இழுக்குக் குணம். அழுகலுக்கு ஒரு புழுத்தல். அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன். அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக் கூடாது. அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு. (பி-ம்.) கொடுத்த கதை போல. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம். 1390 (பி-ம்.) காட்டுகிறது போல அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும், அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது. அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது. அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான். அழுகின பழம் ஐயருக்கு. 1395 அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான். அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி. அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே. அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில். அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான். 1400 அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான். அழுத கண்ணீரும் கடன். அழுத கண்ணும் சிந்திய மூக்கும். அழுத பிள்ளை உரம் பெறும். அழுத பிள்ளைக்கு வாழைப்பழம். 1405 அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம். அழுத பிள்ளை பசி ஆறும். (பி-ம்.) பிள்ளை பிழைக்கும். அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம். அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம். 1410 அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை. அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை. (பி-ம்.) அகங்காரம் அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம். அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ? அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். 1415 (பி-ம்.) அழுதும் அழுதும், அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு. அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும். அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை? (பி-ம்.) பணயம். அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. (யாழ்ப்பாண வழக்கு.) அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை. 1420 அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல. அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும். (பி-ம்.) ஆற்றுவார் அற்ற. அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே. அழையாத வீட்டில் நுழையாத விருந்து. அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. 1425 அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி. அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி. (பி-ம்.) விருந்தாளி. அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும். அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்? அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது. 1430 (பி-ம்.) இல்லாது சொல்லாது. அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி. (பி-ம்.) கங்கா பவானி, அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன். (பி-ம்.) இட்டால். அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான். அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம். அள்ளி நடுதல் கிள்ளி நடுதல். 1435 அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது. அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும். அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது. அள்ளும்போதே கிள்ளுவது. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம். 1440 அளக்கிற நாழி அகவிலை அறியுமா? (பி-ம்.) அளவு அறியுமா? அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை. அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு. அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும். அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும். 1445 (பி-ம்.) ஒழிந்து வழிந்து வழிந்து. அளந்த நாழி கொண்டு அளப்பான். அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது. அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும். அளவு அறிந்து அளித்து உண். (ஆத்தி சூடி. ) அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும். 1450 அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை. அளவு இட்டவரைக் களவு இடலாமா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது. அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே. 1455 அளுங்குப்பிடி பிடித்தாற் போல. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா? (பி-ம்.) பொன் கொடுத்தாலும். அற்பச் சகவாசம் பிராண சங்கடம். (பி-ம்.) பிராண கண்டிதம். அற்ப சகவாசம் பிராண சங்கடம். 1460 (பி-ம்.) சிநேகிதம். அற்ப சந்தோஷம். அற்ப சுகம், கோடி துக்கம். அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம். (பி-ம்.) கிடைத்தால். அற்பத்திற்கு அழகு குலைகிறதா? அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும். 1465 (பி-ம்.) அறைத் தூசியைப் பெருக்கும். அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும். அற்பம் அற்பம் அன்று. அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று. அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான். 1470 (பி-ம்.) பணம் வந்தால் இடம் அறியான். அற்பன் பவிஷு அரைக்காசு பெறாது. அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். (அடை மழையில் கோடைக்கானல் போவான்.) அற்றதுக்கு உற்ற தாய். அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம். அற்றது பற்று எனில் உற்றது வீடு. 1475 (கொன்றை வேந்தன்.) அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை. அறிக் கல்வி முழு மொட்டை. அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான். அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது. ஆறக் குழைத்தாலும் குழைப்பாள்; அரிசியாய் வைத்தாலும் வைப்பாள். 1480 அறக் கூர்மை முழு மொட்டை. அறங்கையும் புறங்கையும் நக்குதே. (பி-ம்.) அகங்கையும். அறச் செட்டு முழு நஷ்டம். அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி. அற நனைந்தவருக்குக் கூதல் என்ன? 1485 (பி-ம்.) குளிர் என்ன? அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும். அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல. (இது தவறான பாடம்.) அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம். அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான். (பி-ம்.) கொள்ளவும். அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம். 1490 அறப் பேசி உறவாட வேண்டும். அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு. (பழமொழி நானூறு.) அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும். அறம் செய்ய அல்லவை நீங்கி விடும். அறம் பெருக மறம் தகரும். 1495 அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை. அறம் வெல்லும்; பாவம் தோற்கும். அற முறுக்கினால் அற்றுப் போகும். (பி-ம்.) முறுக்கு. அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும். அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும். 1500 அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல். (பி.ம்.) காடிப் பானையில் அறவில்............. வாணிகம். அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல். அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது. அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல். 1505 அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான். அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை----- (பி-ம்.) அறிந்த பார்ப்பான் தோசைக்குப் போனால். அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை. (யாழ்ப்பாண வழக்கு பனாட்டு-பன வெல்லத்தில் பண்ணும் தின்பண்டம் பினாட்டுத்தட்டை.) அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல. (பி-ம்.) வழக்கு பிடித்து இட்டாற் போல. அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? 1510 அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும். அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல். அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு. அறிய அறியக் கெடுவார் உண்டா? (பி-ம்.) கெட்டவர். அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல். 1515 அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல். அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள். அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு. (பி-ம்) பொறியாய். அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு. அறியாப் பிள்ளை புத்தியைப் போல. 1520 அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா? அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார். அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார். அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா? அறிவினை ஊழே அடும். 1525 (பழமொழி நானூறு.) அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே. அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது? அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன? அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான். 1530 அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும். அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை. அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான். அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது. 1535 அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை. அறிவு உடையார் ஆவது அறிவார். அறிவு உடையாரை அடுத்தால் போதும். அறிவு உடையாரை அரசனும் விரும்பும். 1540 (வெற்றி வேற்கை.) அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை. அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா? அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன? அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம். அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும். 1545 அறிவு புறம் போய் ஆடினது போல. (பி-ம்.) ஆண்டது போல. அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன். அறிவு மனத்தை அரிக்கும். அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவார். அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம். அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம். 1550 (பி-ம்)உதவும். அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம். அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை. அறுக்கப் பிடித்த ஆடுபோல. அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள். அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை. 1555 அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி. அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது. அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும். அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான். அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான். 1560 அறுகு போல் வேர் ஓடி. அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும். அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான். அறுத்த கோழி துடிக்குமாப் போல. அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல. 1565 அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல. அதுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல. அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை. அறுத்தவளுக்குச் சாவு உண்டா? அதுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான். 1570 (ஆண்டி வந்தாலும் பிச்சை போட மாட்டான்.) அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம். (பி-ம்) அறுத்து விட்டதாம். அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி. (பொன்னுருவி-கர்ணன் மனைவி.) அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும். அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன். அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம், 1575 அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது. அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம். அறு நான்கில் பெற்ற புதல்வன். அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார். (ஐந்து பெண்சாதி.) அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். 1580 அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம். அறுபதாம் கலக்கம். (அறுபது-அறுபது பிராயம்.) அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும். (பி-ம்.) அடியில் இறங்கித்தான் பிச்சை எடுக்க வேண்டும். அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு. அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1585 (யாழ்ப்பாண வழக்கு.) அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம். அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம். (பி-ம்.) கிறுகிறுப்பு. அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை. அறுபது நாளைக்கு எழுபது கதை. (பி-ம்.) இருபது கதை. அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம். 1590 அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி. (பி-ம்.) நான்கு. அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது. அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை. (பி-ம்.) விலைமாது கையில். அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது. (பிள்ளை.) அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான். 1595 அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான். அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்? அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன். (பி-ம்.) மிரட்டன். அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும். அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா? 1600 அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும். அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம். அன்பின் பணியே இன்ப வாழ்வு. அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே. அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே. 1605 அன்பு இருக்கும் இடம் அரண்மனை. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும். அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்? அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை. 1610 அன்பு இலாதார் பின்பு செல்லேல். (குறள், 1255) காளிங்கன் உரை. அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது. அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம். அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான். அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி. 1615 அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை. அன்புடனே ஆண்டவனை வணங்கு. அன்பே சிவம். (திருமந்திரம்.) அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம். (பி-ம்.) வெகுதானம். அன்பே மூவுலகுக்கும் ராஜா. 1620 அன்றாடம் காய்ச்சி. அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது. அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம். அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது. அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே. 1625 அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது. அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான். (பி-ம்.) அறைக்கு எழுதுவானா? அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும். அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல. அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை. 1630 அன்று கண்டனர் இன்று வந்தனர். (பி-ம்.) கண்டவர். அன்று கழி, ஆண்டு கழி. அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது. அன்று குடிக்கக் தண்ணீர் இல்லை; ஆனை மேல் அம்பாரி வேணுமாம். அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே. 1635 அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும். அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும். அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா? அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல். (பி-ம்.) பழத்திலும், களாப்பழம். அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு. 1640 அன்று பார்த்ததற்கு அழிவில்லை. அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர். அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல். அன்று விட்ட குறை ஆறு மாசம். அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம். 1645 அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது. அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும். அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா. அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம். (பி-ம்.) இன்றைக்குக் குடை. இடையன் தரித்திரம். அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு. 1650 (பி-ம்.) அன்னைக்கு. அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா? அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது. (பி-ம்.) ஆயிரம் ரூபாயை விட. அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும். (பி-ம்.) உறைக்கும். அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல். (பி-ம்.) பெரிது. அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது. 1655 அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது. (யாழ்ப்பாண வழக்கு.) அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும். அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு. அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது? (பி-ம்.) சரி. அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு. 1660 அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம். (தண்டலையார் சதகர்.) அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல. அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான். அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது. அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1665 அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா? அன்னம் இறங்குவது அபான வாயுவால். அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும். அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை. அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1670 அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும். அன்னம் வில்வாதி லேகியம். அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை. அன்னமயம் பிராண மயம். அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன். 1675 அன்னமோ ராமசந்திரா. அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான். அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான். அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான். அன்னிய மாதர் அவதிக்கு உதவார், 1680 (பி-ம்.) உதவுவாரா? அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான். (பி-ம்.) ஆருக்கும் ஆகான். அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (கொன்றை வேந்தன்.) அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது? அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது. 1685 அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும். அனலில் இட்ட மெழுகுபோல. அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள். அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான். அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும். 1690 (பி-ம்.) அனுபோகம் மிகும்போது. அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம். அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம். அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்? அனுமார் தம்பி அங்கதன் போலே. அனுமார் வால் நீண்டது போல. 1695 அஜகஜாந்தரம். அஜாகளஸ்தம் போல். அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு. அஷ்டதரித்திரம். 1700 அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது. அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு. (பி-ம்.) ஆத்தாள் வீடு. அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான். (பி-ம்.) பிட்டுக்கொண்டு. அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன். அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான். 1705 அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன். அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது. அஷ்டமத்துச் சனி போல. அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல. அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும். 1710 அஷ்டமி நவமி ஆகாச பாதாளம். அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது. அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது. அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம். அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம். 1715 (பி-ம் ) அஸ்தமனத்துச் செவ்வானம். அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது. அஸ்தியிலே ஜூரம். அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா. அக்ஷர லக்ஷம் பெறும். ஆ ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும். 1720 ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா. ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா? (பி-ம்.) இடுவது யார்? ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு. (பி-ம்.) அறியாதவள் புளியைக் குத்தினானள், இல்லாதவள் மஞ்சளைப் பூசினாள். ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ? (பி-ம்.) நம் வீட்டில், அடிக்கிற பிள்ளை. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா? 1725 (பி-ம்.) பொறுத்தவனுக்கு ஆறப் பொறாதோ? பொறுத்த உனக்கு. ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும். ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது. ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான். ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு. ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே! 1730 ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே. (பி-ம்.) கண்ணே. ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள். ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன். ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே. ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன். 1735 ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே. ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ். (பி-ம்.) அன்னம் பாழ். ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம். ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான். 1740 ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி. ஆகாசக் கோட்டை கட்டியது போல. ஆகாசத் தாமரை. ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா? ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. 1745 ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள். ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல். ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே. ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா? (பி-ம்.) பருந்தா எடுத்துக் கொண்டு போகிறது? ஆகாசத்தையும் வடிகட்டுவேன். 1750 (பி-ம்.) வடிகட்டுவான். ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான். (பி-ம்.) கடிக்காலாமா? ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா? ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி. ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே! 1755 ஆகாச வர்த்தகன். ஆகாச வல்லிடி அதிர இடித்தது. ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும். ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது. ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி. 1760 ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு, ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்? ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம். ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள். ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும். 1765 ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அடுத்த வீட்டுக்காரனை என்ன செய்யும்? ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்? ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்? ஆகாதே உண்டது நீலம் பிறிது. (பழமொழி நானூறு.) ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா? 1770 ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை. ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி. ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல. ஆகாயததைப் படல் கொண்டு மறைப்பது போல. ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான். 1775 ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம். ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா? ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று. ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை. (பி-ம்.) மணல் கொண்டிருந்தால். ஆகாயம் விழுந்து விட்டது போல. 1780 ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா? ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள். ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும். ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம். ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது. 1785 ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான். (பி-ம்.) விடியாது. ஆகும் காய் பிஞ்சிலே தெரியும். ஆகும் காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள். ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும். ஆகும் காலம் எல்லாம் அவிசாரி போய் விட்டுச் சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்றாளாம். 1790 (பி-ம்.) அங்கும் இங்கும் ஆடி. ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும், ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர். ஆங்காரிகளுக்கு அதிகாரி, ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி. ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன் பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான். 1795 ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா? ஆச்சானுக்குப் பீச்சான் ; மதனிக்கு உடன் பிறந்தான், ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான். (பி-ம்.) நெல்லுக்குத்துக்காரிக்கு. ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே. ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும். 1800 ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி. ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது. ஆசந்திரார்க்கம். (சந்திரர் சூரியர் உள்ளவரையில்.) ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான். (பி-ம்.) ஆசிரயித்த. ஆசன கீதம் ஜீவன நாசம். 1805 ஆசாபாசம் அந்தத்தில் மோசம். ஆசாரக் கள்ளன். (தண்டலையார் சதகம்.) ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம். ஆசாரப் பார்ப்பான் ...............க்குப் போனானாம்; பறையன் கோசம் தலையில் அடிபட்டதாம். ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி. 1810 (பா-ம்.) தோசைபெட்டி. ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே! ஆசாரி குத்து. ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல். (செத்தான்-செதுக்கமாட்டான்.) ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது? ஆசாரியருக்கு ..............தலை அம்பட் ........................................... 1815 (தென் கலை வைணவ விதவைகள்.) ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு. ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும். ஆசிரியர் சொல் அம்பலச் சொல், ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை. ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது. 1820 ஆசை அண்டினால் அழுகையும் அண்டும். ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா? ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே. ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி. ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க. 1825 ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க. (பா-ம்.) ஆடு மேய்க்க, கழுதை மேய்க்க. ஆசை உண்டானால் பூசை உண்டு. ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும். ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும். ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. 1830 ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா? ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே. ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை. ஆசைக்கு அளவு இல்லை. (பா-ம்.) ஓர் அளவில்லை, தாயுமானவர் பாடல். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை. 1835 ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும். ஆசைக்கு ரோசம் இல்லை. ஆசை கடுக்குது; மானம் தடுக்குது. ஆசை காட்டி மோசம் செய்கிறதா? ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை. 1840 ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது? (ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாங்கொலோ, கம்பராமாயணம்.) ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான். ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று. (பி-ம்.) ஆசைப்பட்டது. ஆசைப்பட்டு மோசம் போகாதே. 1845 ஆசைப்படுவது அவ்வளவும் துன்பம். ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ? (பா-ம்.) மலை பெரிதோ? ஆசை பெருக அலைச்சலும் பெருகும். ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது. ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை? 1850 ஆசையும் நாசமும் அடுத்து வரும். ஆசை ரோசம் அறியாது. ஆசை வெட்கம் அறியுமா? ஆசை வைத்தால் நாசந்தான். ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும். 1855 (பா-ம்.) பிடித்துக் கொடுக்கும். ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ? ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது. ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம். ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து நாட்டுப் புறத்துக்கு வந்தான். ஆட்டம் நாலு பந்தி; புறத்தாலே குதிரை. ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா? 1860 ஆட்டமும் கூத்தும் அடங்கின அத்தோடே. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அடைப்பக் கட்டைக்கு ஒரு துடைப்பக் கட்டை. (பா-ம்.) சீட்டாள், அடுப்புக் கட்டிக்கு, துடுப்புக் கட்டை. ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ, ஈனாதோ? ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம்; வீட்டிலே கரண்டிபால் இல்லை. ஆட்டிலே பாதி ஓநாய். 1865 ஆட்டி விட்டால் ஆடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை. ஆட்டின் கழுத்து உறுப்புப் போல. ஆட்டு உரம் ஒராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும். ஆட்டு உரம் பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும். ஆட்டு எரு அந்த வருஷம்; மாட்டு எரு மறு வருஷம். 1870 (பா-ம்.) அந்தப் போகம், மறு போகம். ஆட்டு எரு அவனுக்கு; மாட்டு எரு மகனுக்கு. ஆட்டுக்கடாச் சண்டையிலே நரி அகப்பட்டதுபோல. (பா-ம்) ஆட்டுக்கிடா, நரி செத்தது போல. ஆட்டுக்கடா பின் வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். ஆட்டுக்கடா முறைத்தது போல முறைக்கிறான். ஆட்டுக் கறியும் நெல்லுச் சோறும் தம்மா கும்மா; அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா. 1875 ஆட்டுக்கிடையிலே ஓநாய் புகுந்ததுபோல. (பா-ம்.) ஆட்டுக்கிடா புகுந்தது போல. ஆட்டுக்கு அதர் உண்டு. ஆட்டுக்கு ஒத்தது குட்டிக்கு. ஆட்டுக்குச் சுகமானபின் ஆட்டுமயிரைக்கூட இடையன் சாமிக்குக் கொடுக்க மாட்டான். ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனைஉயரம் வருமா? 1880 ஆட்டுக்குட்டிக்கு ஆனை காவு கொடுக்கிறதா? ஆட்டுக்குட்டிமேல் ஆயிரம் பொன்னா? ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக்கொண்டு ஊர் எங்கும் தேடினது போல. (பா-ம்.) காடு எங்கும். ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது. ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி? 1885 (பா-ம்.) தோற்ற கிழப்புலியா? ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; இந்த மதிகெட்ட மாட்டுக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயங்காருக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஐயம் பிடாரிக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா? காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா? 1890 ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கிறது: (+ மாட்டுக்கு வால் மட்டந்தட்டி வைத்திருக்கிறது.) ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே. (பா-ம்.) அலைகிறது போல. ஆட்டுத்தலைக்கு ஓச்சன் பறக்கிறது போல. ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல. ஆட்டு மந்தையிலே கோனாய் புகுந்தாற் போல. 1895 ஆட்டுமந்தையைக் காக்கும் நாய் வீட்டுப் புழுக்கையைக் கூடத்தான் காக்க வேணும். ஆட்டு வாணிகர் ஆலிங்கனத்தைவிடக் கூட்டு வாணிகர் குட்டு நல்லது. (கூட்டு-வாசனைத் திரவியம்.) ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான். ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம். 1900 (பா-ம்.) மனுஷனையே. ஆட்டைக் கழுதையாக்கிய அரிட்டாப் பாடி. (அரிட்டாப்பாடி-மேலூருக்கும் அழகர் கோவிலுக்கும் இடையே உள்ள சிற்றுார்.) ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும். (பா-ம்.) பிடிக்கப் பார்க்கிறான். ஆட்டைக்கு ஒரு முறை காணக் கோட்டை இல்லையோ? ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான். ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல். 1905 ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல. ஆட்டை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தையோ? ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம். ஆடத் தெரியாத தேவடியாள் கூடம் கோணல் என்றாளாம். (பா-ம்.) கோணம், காணாது, போதாது. ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு (+ என்ற கதை.) 1910 ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல. ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம். ஆடமாட்டாத தேவடியாள் பந்தல் கோணல் என்றாளாம். (பா-ம்.) கூடம். ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன். (வம்புப்பிரியை என்பது கருத்து.) ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல. 1915 ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது. ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல். (பா-ம்.) வேடிக்கை பார்க்கிறதா ஆடாச் சாதி ஊடாச் சாதியா? ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு. (பா-ம்.) அறுத்தாச்சு. ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு. 1920 ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி? ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும். (-ஆடி மாதம் மழை பெய்து, ஈரமண்ணில் காலடி புதையுமானால் கார்த்திகையிலும் அதற்குப் பின்னும் மழை இல்லை.) ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும். ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில். ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலை நெல் விற்கும். 1945 ஆடி அரை மழை. ஆடி அவரை தேடிப் போடு. ஆடி அழைக்கும்; தை தள்ளும். (பண்டிகைகளை.) ஆடி அறவெட்டை, அகவிலை நெல் விலை. ஆடி அறவெட்டை, போடி உன் ஆத்தாள் வீட்டுக்கு. 1930 (பா-ம்.) அரை வட்டை. ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு, புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து. ஆடி இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா. ஆடி ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி. ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று. ஆடி ஓடி நிலைக்கு வந்தது. 1935 ஆடி ஓய்ந்த பம்பரம் போல. ஆடி ஓய்ந்தால் அங்காடிக்கு வர வேண்டும். ஆடிக்கரு. (-கர்ப்போட்டம்.) ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போம். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். 1940 ஆடிக் காற்றில் அம்மி ஆகாயத்தில் பறக்கும். ஆடிக் காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவம் பஞ்சு என்ன சேதி என்று கேட்டதாம். (பா-ம்.) அம்மியே மிதக்கும் போது. ஆடிக் காற்றில் அம்மியும் நகரும். ஆடிக் காற்றில் ஆலாய்ப் பறத்தல். ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி? 1945 ஆடிக் காற்றில் இலவம் பஞ்சு பறந்தது போல. ஆடிக் காற்றில் உதிரும் சருகு போல. ஆடிக் காற்றில் எச்சில் இலைக்கு வழியா? (பா-ம்.) எச்சிற் கல்லைக்கு. ஆடிக் காற்றில் பூளைப்பூப் பறந்தாற்போல். ஆடிக் காற்று எச்சிற் கலைக்கு வழியா? 1950 ஆடிக் காற்று நாடு நடுக்கும். ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை. (பா-ம்.) காற்றும் ஆகாத நாளைக்கு. ஆடிக்கு அடைபட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே! ஆடிக்கு அழைக்காத மாப்பிள்ளையைத் தேடிச் செருப்பால் அடி. ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்து அடி. 1955 ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடி மயிரைப் பிடித்துச் செருப்பால் அடி. ஆடிக்கு ஒரு தடவை, ஆவணிக்கு ஒரு தடவை. ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம். ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும். ஆடிக்குத் தை ஆறு மாசம். 1960 ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம். ஆடி கழிந்த ஐந்தாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான். ஆடிச்சீர் தேடி வரும். ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி. ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான். 1965 ஆடித் தவித்த குரங்கு மத்தளத்தில் ஏறி இருப்பது போல. ஆடித் தென்றல் நாடு நடுங்கும். ஆடி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்தது. ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது. ஆடிப் பட்டம் அஞ்சு விதை; அக்கிரகாரம் நிறைய நெல். 1970 ஆடிப்பட்டம் தேடி விதை. ஆடிப் பண்டிகை தேடி அழை. ஆடிப் பருத்தியைத் தேடி விதை. ஆடி பதினைந்தில் ஐம்மூன்று நாழிகையில் ஓடும் கதிரோன ஒளிகுறைந்தால் நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும். ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு. 1975 ஆடிப் பிள்ளை தேடிப் புதை. (பிள்ளை-தென்னம்பிள்ளை.) ஆடிப் பிறை தேடிப் பார். (பா-ம்.) தேடிப் பிடி. ஆடிப் பெருங் காற்று. ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல். ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற. 1980 ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும். ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம். (பா-ம்.) வலி எடுத்ததாம். ஆடி மாதத்தில் நாய் போல. ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும். ஆடி மாதம் அடி வைக்கக் கூடாது. 1985 ஆடிமாதம் அவரை போட்டால் கார்ர்த்திகை மாதம் காய்காய்க்கும். ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா. (பா-ம்.) மிடறும், வாயும். ஆடிய கூத்தும் பாடிய ராகமும். ஆடியில் ஆனை ஒத்த கடா, புரட்டாசியில் பூனைபோல ஆகும். 1990 ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை. ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும். ஆடி வரிசை தேடி வரும். ஆடி வாழை தேடி நடு. ஆடி விதை தேடி நடு. 1995 (பா-ம்.) தேடிப்போடு; விதைக்க வேணும். ஆடி விதைப்பு, ஆவணி நடவு. (பா-ம்.) ஆவணி முளைப்பு. ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமம். ஆடி வெள்ளம் ஓடி வர. ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர். ஆடு அடித்த வீட்டில், நாய் காத்தாற் போல. 2000 ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம். ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித்தாலும் மறு நாள் காணாது. (பா-ம்.) மத்தியான்னம் காணாது. ஆடு அப்பூ, ஆவாரை முப்பூ. (பா-ம்.) ஆடி ஆப்பு, ஆவிரை மூப்பு. ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்? ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம். 2005 ஆடு இருக்க இடையனை விழுங்குமா? ஆடு இருக்கப் புலி இடையனை எடாது. ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை. ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா. ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான். 2010 ஆடு ஊடாடக் காடு விளையாது. ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான். (பா-ம்.) அகப்பட்டு விழித்த கதை. ஆடு ஓடின காடும் அடி ஓடின வெளியும் விருத்தி ஆகா. ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவராம். ஆடு கட்ட வீடு இல்லை; ஆனை வாங்கப் போனானாம். 2015 ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; அகமுடையான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம். ஆடு கடிக்கிறதென்று இடையன் உறி ஏறிப் பதுங்கிடுவானாம். ஆடு கடிக்கிறதென்று தீயில் விழுந்தாற் போல் ஆச்சுது. ஆடுகளின் சட்டியை நாய் உருட்டுவது போல. ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது. 2020 ஆடு கால் பணம், கோசம் முக்கால் பணம். ஆடு கிடந்த இடத்தில் அதன் மயிரும் கிடவாமல் அழிந்து போவார். ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று. ஆடு கிடந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா. ஆடு கெட்டவன் ஆடித் திரிவான்; கோழி கெட்டவன் கூவித் திரிவான். 2025 ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா? ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான். ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது. ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம். ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம். 2030 (பா-ம்.) இடையனுக்குத் தானே? ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன? ஆடு கொழுத்தால் ரோமத்தில் தெரியும். ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும். ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா? ஆடு தழை மேய்ந்தாற் போல. 2035 (பா-ம்.) தின்பது போல. ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை? ஆடுதன் துருப்புச் சொன்னால் அடிப்பது டைமன் தானே? ஆடுதன் ராஜா மாதிரி. ஆடு திருடிய கள்ளன் போல விழிக்கிறான். ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி. 2040 ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம். (பா-ம்.) இரண்டு ஆடு தின்பாளாம். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். {பா-ம்.) கோனாய். ஆடு நனைகிறதென்று தோண்டான் அழுகிறதாம். ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா? ஆடு பகை, குட்டி உறவா? 2045 ஆடு பட்டியிலே இருக்கும் போதே கோசம் தன்னது என்கிறான். ஆடு பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும். ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல். ஆடு பிடிக்கப்போய் ஓநாயிடம் அகப்பட்டுக் கொண்டது போல். ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான். 2050 (பா-ம்.) கொடேன். ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும். ஆடும்காலத்தில் தலைகீழாக நடந்தால் ஓடும் கப்பறையும் ஆவான். ஆடும் காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும். ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன் ஓடும் சிந்தை ஒன்பதாயிரம். ஆடு மந்தையிலே இருக்கும்போதே கோசம் என்னுடையது என்றானாம். 2055 ஆடு மிதித்த தொழியை விட்டு ஆறின தொழியை வாங்கு. ஆடு மலைமேல் மேய்ந்தாலும் குட்டி கோனானது. ஆடு மலையேறி வந்தாலும் குட்டி கோனானோடே. ஆடு மறித்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா? ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா. 2060 (தண்டு - சேனை.) ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண். ஆடு மேய்த்த இடத்தில் அரை மயிர்கூட இல்லை. ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும். ஆடு மேய்ந்த காடு போல. ஆடு மேய்வது போல். 2065 ஆடு யாரை நம்பும்? ஆடுவதும் ஆடி அவரைக் காயும் பறித்தாச்சு. ஆடுவதே மணியமாய் இருக்கிறான். ஆடு வரும் பின்னே, தலை ஆடி வரும் முன்னே. ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம். 2070 ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே. ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை? ஆடு வைத்தவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா? ஆடு வைப்பதிலும் ஆழ உழுவதே நலம். ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை. 2075 (ஆடே படைப்பு, ஆரியம் - கேழ்வரகு.) ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன். ஆடை இல்லாப் பெண்பிள்ளை அரைப் பெண்பிள்ளை. ஆடை உடையான் அவைக்கு அஞ்சான். ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது. ஆடை பாதி, அமுத்தல் பாதி. 2080 ஆடை பாதி, அழகு பாதி. ஆடையைத் தின்றால் வெண்ணெய் இல்லை. (பா-ம்.) உண்டா? ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும். ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம். ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம். 2085 ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும். ஆண் ஆயிரம் ஒத்தாலும் பெண் நாலு ஒவ்வாது. ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ. (யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.) ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை. ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல. 2090 ஆண் கேடு அரசு கேடு உண்டா? (பா-ம்.) கேடும் இல்லை. ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா? ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண். ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம். ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். 2095 ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம். ஆண்டவன் விட்ட வழி. ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது. ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும். ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2100 ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு. ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது. ஆண்டால் அம்மியும் தேயும். ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம். ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம். 2105 (பஞ்சநதம்-திருவையாறு.) ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது. ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல. ஆண்டி எப்போது சாவான்? மடம் எப்போது ஒழியும்? ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன? ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ? 2110 ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன? (பா-ம்.) நமக்கு என்ன? ஆண்டிக்கு அவன் பாடு; தாதனுக்குத் தன் பாடு. (தாசனுக்கு.) ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச் சொல்வான். ஆண்டிக்கு இடுகிறதே பாரம். ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை? 2115 ஆண்டிக்கு எதற்கையா ஆனை? ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்? ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து. ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு? ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ? அவன் சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? 2120 ஆண்டிக்குப் பிச்சையா? அவன் குடுவைக்குப் பிச்சையா? ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை. (பா-ம்.) பார்பபானுக்கு அதுவும் இல்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல. ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே. (பா-ம்.) அவன் தோண்டி கிடக்கிறது தெருவிலே. ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே. 2125 ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே. (சோளி - பை.) ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல். ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல். ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு (பா-ம்.) அவலம். ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்? 2130 ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது. ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு? ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர். ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது. ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம். 2135 ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள். ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ். (பா-ம்.) அஞ்சும் பிடாரி. ஆண்டி மகன் ஆண்டி. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான். ஆண்டி மடம் கட்டினது போலத்தான். 2140 ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும். (பா-ம்.) முட்டிக் கொண்டால். ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிறும். ஆண்டியும் பார்ப்பானும் தோண்டியும் கயிறும் போல. ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம். (பா-ம்.) அன்னத்துக்கு. ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். 2145 ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாதனைக் கண்டால் ரங்கன். (+ என்கிறான்.) ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை. ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில். (பா-ம்.) மாண்டார் திரும்புவார்களா? ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான். ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது. 2150 (பா-ம்.) ஊனக் கண்ணுக்கு. ஆண்டைக்கு ஆளைக் காட்டுகிறான்; ஆண்டை பெண்டாட்டிக்கு ஆள் அகப்படுவது இல்லை. ஆண்டை கூலியைக் குறைத்தால் சாம்பான் வேலையைக் குறைப்பான். ஆண்டைமேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித்தான். (பா-ம்.) ஆற்றினான். ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபசாரம். ஆண் நிழலில் நின்று போ; பெண் நிழலில் இருந்து போ. 2155 ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு. ஆண் பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும். (அநியாயப்பட்டால் வெளிப்படையாகச் சொன்னால்.) ஆண் பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருந்தாலும் அக்காளும் தங்கையும் ஒத்திரார்கள். ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்? ஆண்பிள்ளையை அடித்து வளர்; முருங்கையை ஒடித்து வளர். 2160 ஆண் முந்தியோ? பெண் முந்தியோ? ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம். ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான். (பா-ம்.) ஆயுதத்தின் மேல் குறை சொல்லுவான். ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும். ஆணவம் அழிவு. 2165 ஆணன் உறவுண்டானால் மாமி மயிர் மாத்திரம். ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் எருமை. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை கேடு செய்யாதே. (பா-ம்.) பிழை சொல்லாதே. ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை. ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது. 2170 ஆணுக்குப் பெண் அழகு. ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா? ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு. ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம். ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். 2175 (பா-ம்.) பிடித்து வளர்; தட்டி வளர். ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு. (பா-ம்.) சந்தியும் வேண்டாம். ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி, (நீலி-ஔரி; அது மருந்தை முறிக்கும்.) ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம். ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம். (பா-ம்.) அன்றாடம் வீட்டில் கோதானம். ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான். 2180 ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள். ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம். ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான். ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது. ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது? 2185 ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன். ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா? (பா-ம்.) அறியான். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. (+ஆவேசம் கொண்டவனுக்கு மதியூகம் தட்டு.) ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது. ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது. 2190 (பா-ம்.) பொறுத்தாலும் பொறுக்காது; அடக்கப்படாது. ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம். ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான். (பா-ம்.) கோத்திரம். ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது? ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும். (பா-ம்) நஷ்டத்தை. ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது. 2195 ஆத்திரம் பெரிது; ஆனாலும் மூத்திரம் பெரிது. ஆத்தும சுத்தியாகிய நெஞ்சில் இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன? ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும். ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம். (இவை செங்கற்பட்டுக் கருகிலுள்ள ஊர்கள்.) ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம். 2200 ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான். ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ. (யாழ்ப்பாண வழக்கு.) ஆத்ம சுத்தி என்கிற நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்கு பஞ்ச லக்ஷணம் தெரிந்து என்ன பயன்? ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம். (பகவத்கீதையைப் பற்றியது.) ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது. 2205 ஆதரவும் தேவும் ஐந்து வருஷத்திலே பலன் ஈயும். ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு. ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு. ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம். ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா? 2210 ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றோடே போவாரோ? (பா-ம்.) செட்டி ஆற்றோடே போகிறானாம். ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான். ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை. ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன். ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர். 2215 ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர். ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது. (பா-ம்.) சனித்தொழில். ஆதி முற்றினால் வியாதி. ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா? ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது. 2220 ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை. ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான். ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ? ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி. ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல. 2225 ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை. (பா-ம்.) நண்பனை. ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான். ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான். ஆபத்தில் சிநேகிதனை அறி. ஆபத்துக்கு உதவாத நண்பனும் சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான். 2230 ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டியை அழகுக்கா வைத்திருக்கிறது? (பா-ம்.) ஆகாத. ஆபத்துக்கு உதவினவனே நண்பன். (பா-ம்.) பந்து. ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி அகமுடையான். (பா-ம்.) விலைமாது புருஷன். ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல. ஆபத்துக்குப் பாபம் இல்லை. 2235 (பா-ம்.) தோஷமில்லை. ஆபத்து சம்பத்து. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு? ஆபஃபுனந்து, ஒருபிடி நாகக் கொழுந்து. ஆபால கோபாலம். ஆபீஸ் பண்ணி ருபீஸ் வாங்கி ஜோபியில் போடுகிறான். 2240 ஆபீஸில் ஐயா அதிகாரம்; அகத்தில் அம்மா அதிகாரம். ஆம் என்ற தோஷம், கனத்தது வயிற்றிலே. ஆம் என்றும் ஊம் என்றும் சொல்லக் கூடாது. ஆம் காலம் ஆகும்; போம் காலம் போகும். ஆம் காலம் எல்லாம் அவிசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்றாளாம். 2245 ஆமணக்கு எண்ணெய் வார்த்துப் புட்டம் கழுவினாற் போல. ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது. ஆமணக்கு முத்து ஆணி முத்து ஆகுமா? ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா? ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும். 2250 ஆமை எடுக்கிறது மல்லாத்தி; நாம் அதைச் சொன்னால் பொல்லாப்பு. (பா-ம்.) ஆமை சுடுகிறது. ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி. ஆமை கிணற்றிலே, அணில் கொம்பிலே. ஆமை தன் வாயால் கெட்டது போல. ஆமை திடலில் ஏறினாற் போல. 2255 ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா. ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ். ஆமை மல்லாத்துகிறாற் போல. ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம். 2260 ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம். ஆமை வேகமா, முட்டை வேகமா? ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது. ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம். ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான். 2265 ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும். ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும். ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை ஜட்ஜ் வேலை பார்க்கிறான். ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது. ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும். 2270 ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன். ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது. ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல. (பா-ம்.) ஐந்நூற்றிலே விழித்தாள்; காலை வைக்கிறது. ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம். ஆயிரம் அரைக் காசு. 2275 ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள். ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது. ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது. (பா-ம்.) ஆகுமா? ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா? 2280 ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான். (பா-ம்.) தொந்தோம் தொந்தோம் என்று. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்; அரைப்பணம் உடையான் ஆடி விழுவான். ஆயிரம் உளி வாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும். ஆயிரம் எறும்பும் ஆனைப்பலம். ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்கும். 2285 ஆயிரம் கட்டு ஆனைப் பலம். ஆயிரம் கப்பியில் நழுவின சுப்பி. ஆயிரம் கல நெல்லுக்கு ஓர் அந்துப் பூச்சி போதும். ஆயிரம் காக்கைக்கு ஒரு கல். ஆயிரம் காக்கைக்குள் ஓர் அன்னம் அகப்பட்டது போல. 2290 ஆயிரம் காலத்தில் ஆனி அடி அருகும்; தேக்கு நீர் வற்றும்; தேவதாரு பால் வற்றும். ஆயிரம் காலத்துப் பயிர். ஆயிரம் காலம் குழலில் இட்டாலும் நாயின் வால் நிமிர்ந்து விடுமா? ஆயிரம் காலே அரைக்காற் பணம். ஆயிரம் காலே மாகாணி. 2295 ஆயிரம் குணத்துக்கு ஒரு லோப குணம் தட்டு. ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும். ஆயிரம் குதிரையை அற வெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச் சேரியில் நாயோடு பங்கம் அழிகிறான்? ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் சூரியனைப் பார்க்க முடியுமா? ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம். 2300 ஆயிரம் கொடுத்து ஆனை வாங்குகிறோமே, அது பல் விளக்குகிறதா? ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்? ஆயிரம் கோழி தின்ற வரகு போல். ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை. ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து. 2305 ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சமுசாரி ஆவாளா? ஆயிரம் தடவை சொல்லி அழுதாச்சு. ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது. ஆயிரம் நட்சத்திரம் கூடிச் சந்திரன் ஆகுமா? ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. 2310 (பா-ம்.) ஆகுமா? ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும். ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு. ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா? (பா-ம்.) உதைத்துக் கொண்டால் என்ன? ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு. ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை. 2315 ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும். (பா-ம்.) சொல்வான். ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல. ஆயிரம் பாம்பினுள் அகப்பட்ட தேரைபோல. ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது. ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன? 2320 ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். (பா.ம்.) வேரைக் கண்டவன்; அரைப் பரியாரி. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை. (பா-ம்.) ஒரு தாலி கட்டி வை. ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு. ஆயிரம் பொன் பெற்ற ஆணை பல் விளக்குகிறதா? ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு. 2325 (பா-ம்.) கழுதைக்கு. ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும். ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா? (பா-ம்.) ஆயிரம் வராகன் அழுவதா? ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும். ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை. ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா? 2330 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆனை வாங்கி ஆறு காசு கொடுத்துச் சவுக்கு வாங்கவில்லை. (பா-ம்.) அரைக்காசு. ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம். ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது. ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது. ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது. 2335 ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா? ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது. ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன். (பா-ம்.) கண்டவன். ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. 2340 ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை. ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும். ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா? ஆயுதப் பரீக்ஷை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன். (பா-ம்.) நூற்றில். ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா? 2345 ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல. (ஆயோதனம்-யுத்தம்) ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்? ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன். ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும். ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும். 2350 ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும். ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக் குளிப்பார்களா? ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு. (பா-ம்.) நான் ஆவேன். ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ? ஆர்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை. 2355 ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது. ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது. ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது. (பா-ம்.) பட்டாலும். ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்? ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று. 2360 ஆர் குத்தினாலும் அரிசி ஆனால் சரி. (பா-ம்.) ஆகவேண்டும். ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன? ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். (பா-ம்.) அடுப்புக் கல். ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும். ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர். 2365 ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்? ஆர்மேல் கண்? அனந்திமேல் கண். ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது? ஆர் வாழ்வுதான் சதம்? ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது. 2370 ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது. ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று. ஆரம்ப சூரத்தனம். (பா-ம்.) சூரத்வம். ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ? ஆராகிலும் படி அளந்து விட்டதா? 2375 (பா-ம்.) அடி. ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும். ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே. ஆரால் கெட்டான் நோரால் கெட்டான். (நோரு-வாய்: தெலுங்கு.) ஆரால் கேடு, வாயால் கேடு. ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல. 2380 ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண். ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி. ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும். (பா-ம்.) பொறுக்கும். ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி? (பா-ம்.) ஆடுவேன். ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்? 2385 ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான். (பா-ம்.) பகைக்கும். ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான். ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே. ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது ? 2390 ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை. ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன். ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை. ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி. ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம். 2395 ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு. ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான். (பா-ம்.) ஆகுமா? ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை. ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா? ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது. 2400 ஆரைக் காது குத்துவது? ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே. ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்? (பா-ம்.) காருக்கு ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது. ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும். 2405 (களைபோக்கல் கடினம்.) ஆரோக்கியம் பெரும் பாக்கியம். ஆரோக்கியமே ஆயுசு விருத்தி. ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம். (பா-ம்.) எவனோ; ஏனோ. ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு. (குறவர் பேச்சு.) ஆல் என்னிற் பூல் என்னுமாறு 2410 (பழமொழி நானூறு.) ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி. ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர். (பா-ம்.) ஆல்போல் கிளைத்து விழுது விட்டு. ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான். ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான். ஆலசியம் அதிக விஷம். 2415 (பா-ம்.) அமுதமும் விஷம். ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது. ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா? ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல. (பா-ம்.) தடவிப் பார்த்தது போல. ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம். ஆலமரத்தை விழுது தாங்குவது போல. 2420 ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா? (பா-ம்.) ஆர் சீட்டு அனுப்புவது? ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும். ஆலயம் அறியாது ஓதிய வேதம். ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான். (பா-ம்.) எடுத்து, ஆலயம் தகர்த்து அன்னதானம் பண்ணுகிறான். 2425 ஆலயம் தொழுவது சாலவும் நன்று. (கொன்றை வேந்தன்.) ஆலின்மேற் புல்லுருவி. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. (தாலும் இரண்டும்; எண்கள்; நாலடியாரும் குறளும். ) ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம். (இவை செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்.) ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது. 2430 ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. (பா-ம்.) கருப்பட்டி. ஆலைக் கரும்பு போலவே நொந்தேன். ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன். (வேலை-கடல்.) ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல. ஆலை பாதி; அழிம்பு பாதி. 2435 ஆலை வாயிலே போன கரும்பு போல். ஆலை விழுது தாங்கினது போல. ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள். (நிதானமாகச் செய்யலாம் என்பது கருத்து.) ஆவணி அழகன். (வெற்றிலை.) ஆவணி அழுகல் தூற்றல். 2440 (பா-ம்.) ஆவணி மாதம் அழுகைத் தூற்றல். ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள. (பா-ம்.) இலை உதிர. ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி. ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும். ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும். ஆவணி மாதம் அழுகைத் துாற்றல். 2445 ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை. ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம். ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு. ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும். ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும். 2450 ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான். ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும். ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை. 2455 ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான். ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும். ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ? (உள்ள இடத்தில் சாவார் உண்டா?) ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி. ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம். 2460 ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும். ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்? ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா? ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம். (ஆழ்வார், நம்மாழ்வார்.) ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ? 2465 (ஐயங்காரும் வேண்டுமோ?) ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது. ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம். ஆழ உழுதாலும் அடுக்க உழு. ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே. ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான். 2470 ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள். ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு. (+ என்ற கதை) ஆழம் அறியாமல் காலை விடாதே. (இடாதே.) ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம். (ஓங்கில்-ஒரு வகை மீன்.) ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டது போல. 2475 ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம். ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார். (மூழாக்கு-மூன்று ஆழாக்கு.) ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை. ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன? ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது. 2480 (காழி-சீகாழி.) ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான். (நாமக்கல் தாலுக்காவில் உள்ள ஊர்கள் இவை.) ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும். ஆழும் பாழும் ஆகிறது. ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா? ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று. 2485 ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம். ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது. ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு. ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது? ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும். 2490 ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும். ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா? ஆள் இருக்கக் குலை சாயுமா? (கொலை) ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும். ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ். 2495 ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல. (இல்லாத ஊரில்.) ஆள் இல்லாப் படை அம்பலம். ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி. ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா? ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா? 2500 ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும். (இளந்தலை-குறைவு; கனம் இன்மை.) ஆள் இளந்தலை கண்டு தோணி மிதக்கும். ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான். ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும். ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும். 2505 ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான். ஆள் ஏற நீர் ஏறும். ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும். ஆள் கண்ட சமுத்திரம். ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி. 2510 (மிரட்டுமாம்.) ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக கொடுக்கும். ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா? ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன். (விதுரன்.) ஆள் கால், வாய் முக்கால். ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். 2515 ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு. ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும். ஆள் பாதி, அலங்காரம் பாதி. ஆள் பாதி, ஆடை பாதி. ஆள் பாதி, ஏர் பாதி. 2520 ஆள் பாரம் பூமியிலே. ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம். ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி. ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை. ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது. 2525 ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம். ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது. ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம். ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்? (பெண்டு ஒரு கேடு.) ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள். 2530 ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது; (+சீர் இல்லாக் கல்யாணம் செய்தாலும் நிறக்காது.) ஆளன் இல்லாத பெண்ணுக்கு வாழ்வு இல்லை. ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி. ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம். 2535 ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று. ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும். ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது. ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான். ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள். 2540 (ஆற்றல் உள்ளவன் என்பது பொருள். அம்மாப்பேட்டை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது.) ஆளுக்கு ஆள் வித்தியாசம். ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும். (+வேண்டாமா?) ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை. (ஆண்டியின் தல.) ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது. ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை. 2545 ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு. ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல். ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது. ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம். (ஆளுக்குச் சற்றே.) ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான். 2550 ஆளும் அம்பும். ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்? ஆளை அடித்தால் அரைப்பணம். ஆளை அறிந்து தாண்டுகிறதா? ஆளை அறிந்துதான் அறுக்கிறான். 2555 ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும். ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும். ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு. ஆளைக் கண்ட சமுத்திரம். ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி. 2560 ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய். (ஏய்க்குமாம் பிசாசு.) ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை. ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா? ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே. ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ? 2565 ஆளை நீட்டிப் போடு. ஆளைப் பார் சோளக்காட்டிலே. (சோளக் கொல்லையிலே.) ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி. ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான். ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல. 2570 ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை. ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான். ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான். (பார்த்துத்தான்.) ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான். ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது. 2575 ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை. ஆளைப் பார்; முகத்தைப் பார். ஆற்றங்கரை மரம் விழும். (மரம் போலே.) ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர். ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும். 2580 ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான். ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான். (அம்பலத்திலே கொண்டு வந்தானாம்.) ஆற்றில் இருந்து அரஹராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன். ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று. (போல.) ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல். 2585 ஆற்றில் கரைத்த மஞ்சள். (அரைத்த மஞ்சள்.) ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்? ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர். ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே. 2590 (ஆற்று மணலிலே ஆயிரம் குழி.) ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம். ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது. ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால். ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும். ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி. 2595 (அம்மாகுடி, ஆத்தாகுடி.) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. (கொட்டினாலும் கொட்டு.) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு. ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல. (சுந்தரர் கதை.) ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம். ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று. 2600 ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது. ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன். ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன். ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது. ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும். 2605 ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா? ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல. (இருந்த வாழ்வும், அரசன் அருகில் இருந்த.) ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை. ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல். ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம். 2610 ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா? (பார்ப்பான் துணை அல்ல, பயற்றங்காய் கறியா?) ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை. ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்? ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம். 2615 ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம். ஆற்றுக்கும் போகவேண்டாம்; செருப்பையும் கழற்ற வேண்டாம். ஆற்றுக்கு மிஞ்சி அரஹராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன். ஆற்றுக்குள்ளே போய் அரஹரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம். (ஆற்றுக்குள்ளே நின்று.) ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான். 2620 ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான். ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும். ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம். ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை. ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ? 2625 ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை. ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம். (மாற்று மண்.) ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும். ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான். ஆற்று மணலை அளவிடக் கூடாது. 2630 ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது. ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ? ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும். ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை. 2635 ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்? ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம். ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன். (ஆண்டாள் கவிராயர் கூற்று.) ஆற்றை அடைக்கும் அதிவிடையம். (ஆற்றுடைப்பை, கிராணி வயிற்றுப் போக்கிற்கு அதி விடையம் மருந்து.) ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்? 2640 ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு. ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்? ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி. ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ? 2645 ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை. ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால். ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்? ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ? (கருப்பு-பஞ்சம்.) ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன். ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே. 2650 (திருநெல்வேலி மாவட்டப் பழமொழி.) ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே. ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான். (தெப்பக்காரனுக்கு ஒரு காசு.) ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். 2655 ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது. ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூல கொடுக்க மாட்டேன் என்றானாம், (போகிறதே அல்லாமல் தெப்பக்காரனுக்கு ஒரு காசு கொடுக்கிறது இல்லை.) ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும். ஆறாம் திருநாள் ஆனை வாகனம். ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆனான வாழ்வு நீறாய் விடும். 2660 (ஆனான குடித்தனம்.) ஆறாம் மாசம் அரைக் கல்யாணம். ஆறா மீனின் ஓட்டம். ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான். ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம். (ஆண்பிறந்தால்.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. 2665 ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும். ஆறின சோறு பழஞ் சோறு. ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். 2670 (அசடு-பொறுக்கு.) ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார், ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும். ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ். (இல்லை, வாக்குண்டாம்.) ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை. ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. 2675 ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்? ஆறுக்கு இரண்டு பழுதில்லை. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ ஆர்? நான் ஆர்? ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே. ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது. 2680 (தள்ளுகிறது.) ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்? (அரைச் சீலையை, அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்.) ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம். ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை. ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலியை விடு. (முதலையை.) ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. 2685 ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி. ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய். (வாழை.) ஆறு கொத்து, நூறு தண்ணீர். (வாழை.) ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ? ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல். 2690 ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்? ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம். ஆறு நிறைய நீர் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். (ஜலம், வெள்ளம்.) ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ? ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு? 2695 ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும். ஆறு நேராய்ப் போகாது. ஆறு நேரான ஊர் நில்லாது. ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும். ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 2700 ஆறு பார் ஒத்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும். ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு. ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண். ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம். ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம். 2705 ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு. (சொல்வதே.) ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை, ஆறும் கருவில் அமைத்தபடி. (ஆறு-பேர், இன்பம், தாரம், பிணி, மூப்பு, சாக்காடு.) ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து. 2710 ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா? ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது. ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல. ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை. ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே. 2715 ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன். (சோறு கொண்டு; ஆன்டான் கவிராயர் கூற்று.) ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும். (கருப்பு.) ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும். ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன? ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே! 2720 ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ? ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது. ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா? ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர. ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு. 2725 (புதிய தர்மகர்த்தா சொன்னது.) ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான். (விழிக்கிறேன்.) ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான். ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல. ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு. (எங்கும் உண்டு.) ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி. 2730 (துரத்து உறவுக் குறிப்பு.) ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார். ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம். (ஆதித்த வாரம்.) ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா? ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி. ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும். 2735 ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது. ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அநுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம். ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே! ஆனி அடி எடார்; கூனி குடி புகார். (அடிஇடாதே, குடி போகாதே, கூனி-பங்குனி மாதம்.) ஆனி அடி வைத்தாலும் கூனி குடி புகாதே. 2740 (அடியிடாதே.) ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல். ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது. ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு. ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு. ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு. 2745 ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு. ஆனித் தூக்கம். ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும். ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல். (திருக்குற்றாலத்தில்.) ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே. 2750 ஆனியும் கூனியும் ஆகா. ஆனை அசைந்து உண்ணும். ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும். ஆனை அசைந்து வரும்; அடி பெயர்ந்து வரும். ஆனை அசைந்து வரும்; அடி மேகம் சுற்றி வரும். 2755 ஆனை அசைந்து வரும்; பூனை பாய்ந்து வரும். ஆனை அசைந்து வாங்கும், வீடு அசையாமல் வாங்கும். ஆனை அடம் பிடிக்கிறது போல. (அடம் வைத்ததுபோல.) ஆனை அடம் வைத்தாற்போல் அமர அமரப் பதித்த வைத்திருக்கிறார். ஆனை அடமும் பூனைப் பாய்ச்சலும். 2760 ஆனை அடியில் அடங்கா அடி இல்லை. ஆனை அடியும் சரி, குதிரை குண்டோட்டமும் சரி. ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானை அடியிலேதான். ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானையத்தனை தீத்தான்படும். ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா? 2765 ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது. ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலிவளையைக்காக்கும். ஆனை அரசு செய்த காட்டிலே பூனை அரசு செய்வது போல. ஆனை அரைக் காசுக்குக் கிடைத்தாலும் வேண்டாம். ஆனை அழிகுட்டி போட்டாற் போல. 2770 ஆனை அழிப்பது தெரிய வில்லையாம்; ஆடுஅழிப்பது தெரிகிறதாம். ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும். ஆனை அழுதால் பாகன் பழியா? ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும். ஆனை அறிவு பூனைக்கு ஏது? 2775 ஆனை ஆங்காரம் அடி பேரு மட்டும். ஆனை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும். ஆனை ஆயிரம் கேட்டாலும் கொடுப்பானே கர்ணப்பிரபு. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா? ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா? 2780 ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம். ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா. ஆனை இருந்தால் சேனைக்குப் பலம். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது. 2785 ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம். ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி. ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா? ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்? ஆனை உண்ட விளாங்கனி போல. 2790 ஆனை உயரம் பூனை ஆகுமா? ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும். ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி. ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ? ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே. 2795 (வைணவர் சொல்வது.) ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே? ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா? ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை. ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்? (ஏறியும்.) ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல. 2800 (ஏறியும்.) ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல. ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன். ஆனை ஏறினால் வானம் எட்டுமோ? ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும். ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான். 2805 ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான். ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை. ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா? ஆனைக்கண் ஐசுவரியம். ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம். 2810 ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல. ஆனைக் கவடும் பூனைத் திருடும். ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம். ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ? ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல. 2815 ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம். ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம். ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும். ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு. ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது 2820 ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல. ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல. ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல. ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்? ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும். 2825 ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம். ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு. ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி. ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம். (அறுபது அடி, அருங்குள்ளனுக்கு எழுபது அடி.) ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்? 2830 ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும், (நீதி வெண்பா.) ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி. ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல. ஆனைக்கு இல்லை கானலும் மழையும். (வெற்றி வேற்கை.) ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய். 2835 ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள். ஆனைக்கு ஏற்ற கண்ட்ர கோடாலி. ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு. ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி. 2840 ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல. ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார். ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது. ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர. ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி. 2845 ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல, ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை. ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா? ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும். (தின்னும்.) ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்? 2850 ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல. ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல. ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா? ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி. ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம். 2855 ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது. ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா? ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா? ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும். ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை? 2860 ஆனைக்குத் தேரை இட்டது போல, (தேரையூன் இரை இட்டது போல.) ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை. ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு. ஆனைக் குப்பத்தான் போலே, (ஆனைக்குப்பம்-திருவாரூருக்கு அருகில் உள்ள ஓர் ஊர், போக்கிரி என்று பொருள்.) ஆனைக்குப் பனை சர்க்கரை. 2865 ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது. ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே! ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும். ஆனைக்கும் அடி சறுக்கும். ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும். 2870 ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும். ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி? ஆனைக்கும் உண்டு அவகேடு. ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி. ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு. 2875 ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம். ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு. ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க. ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது. ஆனைக்கு முன் முயல் முக்கினது போல. 2880 ஆனைக்கு ராஜா மூங்கில் தடி. ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா? ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு. ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா? (வேகிற சோற்றில் பூனைக்குப் பங்கு இல்லையாம்.) ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல. 2885 ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்? ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா? ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும். (கயிற்றைக் கொடுத்தது போல.) ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர். ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான். 2890 ஆனை கட்டி ஆளும் அரசனோ? ஆனை கட்டி உழுகிறான். ஆனை கட்டித் தீனி போட முடியுமோ? ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா? ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை. 2895 ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும். ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா? ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல, ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா? ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம். 2900 ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல. (அடக்கியது போல.) ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன? (பூனை கறுத்தால் உதவி என்ன?) ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்? (ஆகும்?) ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன? ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும். 2905 ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான். ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை. ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா? ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல. ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை. 2910 (இடக்கர்.) ஆனை குட்டி போட்டாற் போல். ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல. ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும். (நாஞ்சில் நாட்டு வழக்கு.) ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம். (என்று நம்பி.) ஆனை குட்டையைக் குழப்புவது போல. 2915 ஆனை குடிக்கும் ஜலம் பூனை குடிக்குமா? ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ? ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம். ஆனை குளிக்கச் செம்பு ஜலமா? ஆனை குளித்த குளம் போல. 2920 ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது? ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா? ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா? ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல. ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல. 2925 (குடத்தில்.) ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா? ஆனை கேடு, அரசு கேடு உண்டா? ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா? ஆனை கொடுத்து ஆடு வாங்கினான். ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா? 2930 (கொண்டும்.) ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும், ஆதுை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு. ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது? ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு! ஆனைக் கவடும் பூனைத் திருடும். 2935 ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன். ஆனை சிங்கக்குட்டி போடுவது போல. ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம். ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். 2940 ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை. ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா? ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது. ஆனைத் தோலை எலி கரண்டினது போல. ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம். 2945 ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா. ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா? ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல. ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல. (தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல.) ஆனை தன் பலம் அறியாது. 2950 ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல. ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல. ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல. ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது. ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை. 2955 ஆனை தின்ற விளாங்கனி போல. ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது. (ஆனைக்காவில்.) ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான். ஆனை தொட்டாலும் மரணம் வரும். 2960 ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை. ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம். ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல. (ஆனை கலைத்த கதை, அழுவதைப் போல, தவளை கனைத்ததாம், தவளை கலைத்த கதை.) ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை. ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும். 2965 ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா? ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா? ஆனைப் பசிக்குச் சோளப் பெரியா? (சோளப் பொரி தாங்குமா?) ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை. ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான். 2970 ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு. ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல. ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல். ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா? ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா? 2975 ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா? (குதிரைப் பிரமாணம், குதிரை மட்டம்.) ஆனை பழக்க ஆனை வேண்டும். ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்? ஆனை பார்க்க வெள்வெழுத்தா? 2980 ஆனை பிடிக்கப் பூனைச் சேனை. ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்? ஆனை புக்க புலம் போல. (புறநானுாறு.) ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா. ஆனை புலி வந்தாலும் தாண்டுவான். 2985 ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது. ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே. (உதிராதே.) ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன? ஆனை போக அதன் வால் போகாதோ? ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல். 2990 ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா? ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும். (ஆயிரம் பெண் இருந்தாலும்.) ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான். ஆனை போனதே வீதி. ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா? 2995 (வழியிலே.) ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா? ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது. ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான். ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்? ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது. 3000 ஆனை மதர்த்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதர்த்தால் கீரைத்தண்டு. ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம். ஆனை மிதித்த காசு பானை நிரம்பும். ஆனை மிதித்தால் பிழைப்பார்களா? ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா? 3005 ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும். ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர். ஆனை முட்டத் தேர் நகரும். ஆனை முதல் எறும்பு வரைக்கும். ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி. 3010 ஆனை முன்னே முயல் முக்கினது போல. ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம். ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா? (தழை கிடைக்காமல்.) ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா? ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால். 3015 ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள். ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா? ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார். ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா? (இடுகிறதா?) ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல். 3020 ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல. (போகிறவனை) ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று அஞ்சுவானா? ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி மலத்தின்மேல் விழுவதா? ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்? ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார். 3025 ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன். ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு யோகந்தான். ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல் போகிறவன் குந்து காலன். (வருகிறவன்.) ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது. (போகிறவன் பானையோடு தின்றான்.) ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா? 3030 ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது. ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம். ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம். ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல. ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல. 3035 ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா? ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா? ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும். ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம் அனர்த்தம். ஆனையும் ஆனையும் முதுகுரைஞ்ச இடையிலிருந்து கொசு நசுங்குகிறது. 3040 ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட கொசுவைப் போல. (முட்டும் போது கொசுவின் கதி என்னாவது?) ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன. ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது. (ஆனையும் பூனையும்.) ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க முடியாது. 3045 ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது. ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம். ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்? ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான். ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா? 3050 ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா? ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது. ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள். ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா? (போட்டாற் போல.) ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா? 3055 ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா? ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள். (சுளகாலே மறைக்க முடியுமா?) ஆனையைக் குளிப்பாட்ட அண்டா ஜலம் போதுமா? ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல். ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல. 3060 ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா? ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல். ஆனையைச் சுளகால் மறைப்பது போல. ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா? 3065 ஆனையைத் துரத்த நாயா? (யாழ்ப்பாண வழக்கு.) ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல. (குடத்துள்.) ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா? ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும். ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார். 3070 ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர். ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா? ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம். ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா? ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும். 3075 ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா? ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா? ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம். (பானையில் அடைப்பதும்.) ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம். ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. 3080 (வித்துவானுக்கும்.) ஆனையைப் பூனை மறைத்ததாம். ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி. ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்? ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர். ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்? 3085 ஆனையை வாங்கலாமா லஞ்சம்? ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான். ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான். ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது? 3090 (வைத்தியம்.) ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான். ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி. ஆனை லத்தி ஆனை ஆகுமா? ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி கிழிந்து போகும். ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன். 3095 (சப்பாணி கண்டால் தவழ்வேன்.) ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற வேண்டும். ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான். ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே. (வைணவர் கூற்று.) ஆனை வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான். ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு நிறையாது. 3100 ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே: ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது. (ஆனை வலம் போனாலும் பூனை வலம் போகக் கூடாது.) ஆனை வாகனம் ராஜ லட்சணம். ஆனைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா. 3105 ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல். ஆனை வாயில் போன கரும்பு போல. (கரும்பு மீளுமா?) ஆனை வாயில் போன விளாம் பழம் போல. ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா? (பூனை வால் பிடித்துக் கரை ஏறலாமா?) ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது என்ன? 3110 ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன? ஆனை விலை, குதிரை விலை. ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி. ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும். ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம். 3115 ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம் ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா? ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம். ஆனை வெளுக்கத் தாழி செய்தது போல. ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால். 3120 ஆஜ்யம் பூஜ்யம். (ஆஜ்யம் - நெய்.) ஆஷ்டுக் குட்டி வந்து வேஷ்டியைத் தின்கிறது; ஓஷ்டு ஓஷ்டு. ஆஷாட பூதிக்கு ஆயிரம் சொர்க்கம். ஆஸ்தி இல்லாதவன் அரை மனிதன். (மனிதன் அல்லாதவன்.) ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை. 3125 ஆஸ்தி உள்ளவனுக்கு நாசம் இல்லை. ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும். ஆஸ்திக்கு மிகுந்த அபராதமும் இல்லை; தலைக்கு மிஞ்சின தண்டமும் இல்லை. ஆஸ்தி பாஸ்தி. இ இக்கரைக்கு அக்கரை பச்சை. 3130 (இக்கரை மாட்டுக்கு.) இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல். இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழு கொம்பு வைக்கிறான். இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான். இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன? இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு. 3135 இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம். இங்கு இருந்த பாண்டம் போல. (இங்கு-பெருங்காயம்.) இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா வெங்கா? இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக் காட்டுகிறான். இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம். 3140 இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது. இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான். இச்சித்த காரியம் இரகசியம் அல்ல, (அல்லவோ?) இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட். (தெலுங்கு, இச்சிப் பெட்டின வாரிக்கு-கொடுத்து வைத்தவருக்கு.) இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே. 3145 இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை. இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்? இச்சையும் இல்லை; இருமையும் இல்லை. இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான். 3150 இசை இல்லாப் பாட்டு இழுக்கு. (இசைவு.) இசைவில்லாப் பாட்டு இழுக்கு. இசைவு வந்தது வடமலை அப்பா! (வடமலை-திருப்பதி.) இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே! (எலுமிச்சம் பழம் போல இனிப்பாய் இருக்கும். வெல்லம் போலப் புளிக்கும்.) இஞ்சி தின்ற குரங்கு போல. (போலப் பஞ்சரிக்கிறான்.) இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? 3155 இஞ்சி லாபம் மஞ்சளிலே. இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட. இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. (நக்கின-உண்ட.) இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம். இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? 3160 இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது. இட்ட குடி கெடுமா? இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது. இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா? இட்டத்தில் ஒன்றும் குறையாது. 3165 (குறைவில்லை.) இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ? (ஏறாசைப் படுகிறதா?) இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை. இட்டது எல்லாம் பயிர் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை. இட்டம் அற்ற முனியன், அட்டமத்துச் சனியன். 3170 இட்டலிக் குப்பன். இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள். இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை. (இட்டவள்-உணவு படைத்தவள்.) இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான். 3175 இட்டார்க்கு இட்ட படி. இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர். இட்டாருக்கு இட்ட பலன். (ஏரி அடித்தார்க்குக் கோடி பலன், ஏறி அடித்தார்க்கு.) இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன். இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும். 3180 இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும். இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது. இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது. இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை. (உலகினில் இல்லை, யாரும் இல்லை.) இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை. 3185 இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு. இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு. இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும். இடக்கண், வலக்கண். இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே. 3190 இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது. இடக்குக் குடை பிடிக்கலாமா? இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை. இடது கை பிட்டத்துக்கு எளிது. இடது கை வலது கை தெரியவில்லை. 3195 இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை, (அதனால்தான் அவள் மெத்தப் பதிவிரதை.) இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம். இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம். இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான். இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம். 3200 இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். இடம் பட வீடு இடேல். (ஆத்தி சூடி) இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது. இட மாட்டாதவன் எச்சில் என்றானாம். இட வசதி இல்லாத பதிவிரதை. 3205 இடறின காலிலே இடறுகிறது. இடன் அறிந்து ஏவல் செய். இடாதவனுக்கு இட்டுக் காட்டு. இடான், தொடான், மனுஷர்மேல் செத்த பிராணன். இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன். 3210 இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது. இடி ஓசை கேட்ட பாம்பு போல. (நாகம் போல.) இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான். இடிக்கிற வானம் பெய்யாது. இடிக்குக் குடை பிடிக்கலாமா? 3215 இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு அஞ்சுவானா? இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல. இடி சோறு தின்கிறான். இடித்த புளி போல் இருக்கிறான். இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு. 3220 இடித்த வானம் பெய்யாது. இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப் போடுவது போதும். இடிந்து கிடந்த அம்பலம் போல. இடியேறு கேட்ட நாகம் போல. (இடியேறுண்ட.) இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது. 3225 இடி விழுந்த மரம்போல ஏங்குதல். இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம். இடுகிற தெய்வம் எங்கும் இடும். இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப் பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன? (இடுகிறவள், தன்னவள்.) இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு வார்த்தை வரும். 3230 இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும். இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி. (கைலாசம்.) இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை. இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு. இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான். 3235 இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே. இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை. (இராப் பகல் இல்லை.) இடும்பும் கரம்பும் அழியும். இடும்பைக்கு ஈன்ற தாய் போல. இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம். 3240 (பெறுவது.) இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார். இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு. இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா? (கெடுவார் கெடுப்பதா? கெடுக்காதே.) இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி கொடுத்து நாலாசை தீர்த்தாளாம். இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை. 3245 இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான். இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ? இடைக் கோழி இராத் தங்குமா? இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம். (மருத்துவம் பார்த்தது போல.) இடைச்சி ஆத்தாள் தோளிக்கு. 3250 இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி. இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான். இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி. இடை சாய்ந்த குடம் கவிழும். இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான். 3255 இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா. இடைப் புத்தி பிடரியிலே. (இடையன்.) இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ? இடையன் எறிந்த மரம் போல. இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல. 3260 இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு. (விடிய விடிய.) இடையன் கல்யாணம் விடியும் பொழுது. இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி. இடையன் செய்வது மடையன் செய்யான். இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு தேடினாற் போல். 3265 இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது. இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல். (சாத்தான் வந்த கதை போல.) இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல. (இடைக்குடி பொறாதது போல.) இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான். இடையன் வெட்டின கொம்பு போல. 3270 இடையன் வெட்டு அறா வெட்டு. இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை. (ஆண்டி - சிவனடியான், தாதன் - திருமால் அடியான்.) இடையனுக்குப் பிடரியிலே புத்தி. இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ். (சாவி.) இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக. 3275 (இடை-இடைக்காடர்; கடை-வள்ளுவர்) இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய். இண்டம் பிடித்தவன். இணக்கம் அறிந்து இணங்க வேண்டும். இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது? இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி. 3280 இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு. இணை பிரியா அன்றில் போல. (பிரிந்த.) இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது? (ஆகும்?) இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை. 3285 இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்னான். இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே. இது எமன் ஆச்சே! இது எல்லாம் பொம்மலாட்டம். இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம். 3290 இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா? (பட்டணமா?) இது சொத்தை; அது புழுத்தது. இது சொத்தை; அது புளியங்காய் போல. இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை. இது பெரிய இடத்துப் பேச்சு. 3295 இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி. (பரிகாரி-வைத்தியன்.) இந்த அடிக்கு எந்த நாயும் சாகும். இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம். இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை. இந்த உலக வாழ்வு சதமா? 3300 இந்த ஊருக்கு எமனாக வந்தான். இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்? இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான். இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா? (கருப்பு-பஞ்சம்.) இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி. 3305 இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்? (இத்தனை திருநாமம்.) இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும். இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா? இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு. இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று. 3310 இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்? இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை. இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா? இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை. (அப்பா என்று கூப்பிட.) இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா? 3315 இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது. இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம். இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர். இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்? இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது. 3320 இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே. இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள். (மறைப்பான்.) இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல. இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை. 3325 இந்திரைக்கு மூத்தவள் மூதேவி. (இந்திரை-திருமகள்.) இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி. இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை. இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான். (இம்பூரல்-தூதுவளை போன்ற ஒரு செடி, இருமலுக்கு ஏற்றது.) இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு. 3330 (இம்மி நுண் பொருள்.) இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம். இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும். இமயம் முதல் குமரி வரையில். இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது. 3335 இயற்கை அழகே லேசான ஆபரணம். இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ? (சேர்க்கை.) இரக்கப் போனாலும் சிறக்கப் போ. (இறக்கப் போனாலும், பரக்கப் போக வேண்டும்.) இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது, (நெஞ்சு இரும்பு.) இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும். 3340 இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல. இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது. (குட்டியானான்.) இரண்டு ஆட்டில் ஓராடு விழிக்கிறது போல். இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி. (ஊட்டின.) இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம். 3345 இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது; இருட்டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான். இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா? (கால் வைத்தவனைப் போல.) இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் புண்டரீகாக்ஷன். இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு. (இரண்டு கையையும் அடித்தால்தான் சத்தம்.) இரண்டு கை போதாது. 3350 இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான். இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு புலவர்கள், இரண்டு தாசிகள், இரண்டு வைத்தியர்கள், இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கள். இரண்டு தோணியில் கால் வைக்கிறதா? (ஓடத்தில்.) இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே. (போட்ட எலும்பு மாதிரி.) இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது. 3355 இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு. இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம். இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்? இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி? (கொண்டை என்ன கொண்டை?) இரண்டும் இரண்டு அகப்பை; இரண்டும் கழன்ற அகப்பை. 3360 இரண்டும் கெட்டான் பேர்வழி. இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி. இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான். (கெண்டை ஏறிக் கொட்டானாம். கெண்டை-கெண்டைக்கால்.) இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல. இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை. 3365 இரந்து உண்டவன் இருந்து உண்ணான். இரந்து குடித்தாலும் இருந்து குடி. இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும். (யாழ்ப்பாண வழக்கு.) இரந்தும் பருந்துக்கு இடு. (கொடு.) இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன். 3370 இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா? இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை. (என்றும்.) இரப்பவனுக்குப் பஞ்சம் என்றைக்கும் இல்லை. இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா? (வெண் சோறு.) இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. 3375 இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா? இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து. (யாழ்ப்பாண வழக்கு.) இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன். இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா. இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம். 3380 (யாழ்ப்பாண வழக்கு.) இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா? இரவல் சதமா? திருடன் உறவா? இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம். (இடுப்புச் சீலையை.) இரவல் சோறு தஞ்சம் தாங்காது. (தாங்குமா.) இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை. 3385 இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார். இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான். (கொடிய சுகமாம், யாழ்ப்பாண வழக்கு.) இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு. இரவிமுன் பணி போல. இரவியைக் கண்ட இருள் போல. 3390 இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை. இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே. (அரவு-ராகு காலம்.) இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும். இரவு உண்ணான் பருத்திருப்பான். (அருத்தா பத்தி.) இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு. 3395 இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா? இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல். இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை. (இராக் கண்ட சனி.) இராச் செத்தால் பகல் பிழைக்கிறான். (சூரியன்.) இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை. 3400 இராப்பகல் கண்ணிலே. இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா? (அக விலையைக் குறைத்த கதை.) இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம். இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா? இராப் பட்டினி, பகல் கொட்டாவி. 3405 இராப் பட்டினி பாயோடே. இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும். இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது. (பகல் பிறந்த பெண்ணும்.) இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான். இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம். 3410 இராவணன் என்றால் படையும் நடுங்கும். இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா? (இரிசி-பேடி,) இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது. இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல், (படுக்கப் பாய் கேட்பான்.) இருக்க இருக்க எல்லாம் இசைவாகும். 3415 இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை. இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு. இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும். இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல. இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம். 3420 இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும். இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு. இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம். இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம். இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம். 3425 இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வயாய்ச் சிரைப்பான். (ஒழுங்காய், சரியாய், இருந்தால் தானே.) இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? (நம்மவன் ஆனால்.) இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு. (எங்கும் வீடு.) இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து. இருக்கும் இடம் ஏவுமா? 3430 இருக்கும் போதே இரக்கப் போவானேன்? இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது. இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது. இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும். இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி. 3435 இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன; கறுப்பாய் இருந்தால் என்ன? இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது. (இருட்டுள்ளே போனாலும் திருட்டுக் கை போகாது.) இருட்டிலே குருட்டு ஆண்டி. இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல. இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி. 3440 இருட்டுக்கு எல்லாம் சரி. இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம். இருட்டு வீட்டில் குருட்டு ஆனை. இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம். இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது. 3445 (போனாலும், திருட்டுக் கை போகாது.) இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல; இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல. இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ? இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல், இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள். 3450 இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு. இருதயத்து எழுந்த புண் போல. இருதலைக் கொள்ளி எறும்பு போல். (ஆனேன்.) இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது. இருதலை மணியன் பாம்பைப் போல். 3455 இருதலை வழக்கு நூலினும் செம்மை. இரு தோணியில் கால் வைக்காதே. இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள். (யாழ்ப்பாண வழக்கு.) இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம். (யாழ்ப்பாண வழக்கு.) இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும். 3460 இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று. இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி. இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல. (வீடூர்ப் பறைவனுக்கு.) இருந்தல்லவோ படுக்க வேணும்? இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. 3465 இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான். (நெடுந்தூரம் போவான்.) இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல. இருந்தவனுக்குப் போனவன் குணம். இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம். இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன். 3470 (சப்பன்.) இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது. (இடுவது உரம்.) இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி. இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர். இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன். இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி. 3475 இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு. (நவாப் ஷா; பக்கிரி ஷா.): இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி. இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று. இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம். இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல். 3480 (வலமும், ஜலமும்.) இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே. இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை. இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு. (வாங்க வேணும்.) இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது. (கடன் கொடுத்து.) இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான். 3485 (கெடுத்தான் பாவி, கெடுத்தான் முருகப்பன்.) இரு நாய்க்கு இட்ட எலும்பு போல. இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்? இருப்பது பொய்; போவது மெய். இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே. இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை. 3490 இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம். இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா? இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும். இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா? இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும். 3495 இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும். இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா? இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல். இரும்புத் தூணைச் செல் அரிக்குமா? இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? 3500 இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா. (துரும்பு பிடித்தவன் கையும் கரும்பு பிடித்தவன் கையும்.) இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும். இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது. இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி. (எலி தின்றது என்கிறான் இடக்கன்.) இரும்பை எலி தின்னுமா? 3505 இரும்பை எறும்பு அரிக்குமா? இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு போகாதா? (பிள்ளையை.) இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ? இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம். (அவலம்.) இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது. 3510 இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை. (இருவரும்.) இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை. இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்? இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே! இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா? 3515 (எலிக்குஞ்சு.) இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? இருளன் ராஜவிழி விழிப்பானா? இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம். இரை விழுங்கின பாம்பு போல. இல்லது வாராது; உள்ளது போகாது. 3520 இல்லறம் அல்லது நல்லறம் அன்று. இல்லறம் நல்லறம். இல்லறம் பெரிது; துறவறம் சிறிது. (துறவறம் பழிப்பு.) இல்லாத சொல் அல்லல்படும். இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்? 3525 இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. இல்லாதவன் கோபம் பொல்லாதது. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி. (மைத்துனி, யாழ்ப்பாண வழக்கு.) இல்லாதவன் பொல்லாதவன். இல்லாதவன் வீட்டில் இருபத்தேழு குழந்தைகள். 3530 இல்லாதவனுக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. இல்லாதவனோ, பொல்லாதவனோ? இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம். இல்லாது சொல்லி அல்லற்படுதல். இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது. 3535 இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன். இல்லார் இருமையும் நல்லது எய்தான். இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா? இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை. இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா. 3540 (தெலுங்கு, வீட்டை மெழுகிவிட்டால் பண்டிகை வந்துவிடுமா என்பது பொருள்.) இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது? இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது. (இல்லை என்ற இடத்தில்.) இல்லையா இலை மறைவு, காய் மறைவு? இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று. (பழமொழி நானூறு.) இல்லோர் இரப்பது இயல்பு. 3545 இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள். இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான். இலக்கணம் புலவர்க்கு அணிகலன். இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை. இலங்கையைச் சுட்ட குரங்கு. 3550 இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது. இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு. இலவு காத்த கிளி போல. இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம். இலுப்பைப் பூப்போல். 3555 இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல். இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு. இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும். (பட்டையும்.) இலை சாய்கிற பக்கம் குலை சாயும். (இலை-வாழைஇலை.) இலை தின்னி காய் அறியான். 3560 (இலை-வாழை இலை.) இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது. இலைப் புரை கிளைத்தல். (சீவக சிந்தாமணி.) இலைமறை காய் போல். இலை மறைவு, காய் மறைவு. இலை மறைவு, தலை மறைவு. 3565 இலையும் பழுப்பும் எங்கும் உண்டு. இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது. இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது. இவன் ஊராருக்குப் பிள்ளை. இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான். 3570 இவன் புத்தி உலக்கைக் கொழுந்து, (குந்தாணி வேர்.) இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்ப்பது அரிது. இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன். இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம். இழந்த சொத்துப் பெரிய சொத்து. 3575 இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு. இழவுக்கு வந்தவர்கள் எல்லாம் தாலி அறுப்பார்களா? இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம். இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. இழவு சொன்னவன் மேலா பழி? 3580 (பேரிலேயா?) இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும். இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார். இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார். இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி. 3585 இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும். இழுத்து மூட வேணும். இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்? இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு. இழை ஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும். 3590 இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான். இளங் கன்று பயம் அறியாது. (இளமறி.) இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா? இளநீர்க் காய் உதிர்க்கிறது போல. 3595 இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம். இளமையில் கல்வி எப்போதும் நிற்கும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து. இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை. (மிடிமை.) இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது. 3600 இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில். இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம். இளமையில் முயற்சி முதுமையில் காக்கும். இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல. இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்? 3605 இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள். இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம். இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறி அடித்தானாம் தவசிப் பிள்ளை. (இடக்கர்.) இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு. (பழமொழி நானுாறு.) இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு. 3610 இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல, இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர். இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார். இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ? இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும். 3615 இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண். இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு. இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை. இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான். 3620 இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும். இளைத்தவன் சிநேகிதனைச் சேர். இளைத்தவன் தலையில் ஈரும் பேனும். இளைத்தவன் தலையில் சொட்டு. (கொட்டு.) இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி. 3625 (மைத்துனி.) இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம். இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான். இளைத்து இனத்தாரிடம் போவானேன்? இளைது என்று பாம்பு இகழ்வார் இல். (பழமொழி நானூறு.) இளையாள் இலை தின்னி; மூத்தாள் காய் அரிவாள். 3630 இளையாள் முகமோ, இழையாடிக் காற்றோ? இளையாள் மோகம் கண்ணை மறைக்கிறது. இளையாளே வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம். இளையாளைக் கிழவன் அரிக்கிறது போல. இளையானே ஆயினும் மூத்தாளே ஆகும் மகன். 3635 (பழமொழி நானூறு.) இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு. இறகு இல்லாப் பறவைக்கு உட்கார ஒரு நாழிகை இல்லை. இறகு முற்றிப் பறவை ஆனால் எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும். இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்; ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கு துறையிலே நீச்சானால் ஏறு துறையிலே எப்படி? 3640 (இறங்கும்போதே, ஏறு கரையில்.) இறங்கு பொழுதிலே மருந்து குடி. இறடுங்கால் இறடும். இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம். இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும். 3645 இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு. இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும். இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும். இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி. இறாக் கறியோ, புறாக் கறியோ? 3650 இறுகினால் களி; இளகினால் கூழ். இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது. இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும். (ஊறும்.) இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். 3655 இறைக்கிற கிணறு சுரக்கும். இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும். இறைக்கும் கிணறு ஊறும். இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான். இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா? 3660 (கழுத்தில் போட்டுக் கொள்ளலாமா? எலும்பைக் கோத்துக் கழுத்தில் அணியலாமா?) இறைத்த கிணறு ஊறும்; இறையாத கிணறு நாறும். (பாழ், ஊறுமா?) இறைத்த கிணறு சுரக்கும். இறைத்தோறும் ஊறும் கிணறு. (பழமொழி நானுாறு.) இறையாத கிணறு பாழும் கிணறு. இறைவனை ஏற்று; அரசனைப் போற்று. 3665 இன்சொல் இடர்ப்படுவது இல்லை. இன்சொல்லால் இடர் வராது. இன்சொல்லே ஏற்றம் தரும். இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு. இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல. 3670 இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை. இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம். இன்பமும் துன்பமும் இணை விடா. இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம். இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு. 3675 இன்பமும் துன்பமும் பொறுமையிலே. இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு. இன்று அற்று இன்று போகிறதா? இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை. இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி. 3680 இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும். இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும். இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா? இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு. இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை. 3685 இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான். (அறுக்க மாட்டானா?) இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது. இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம், இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை, இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும். 3690 தமிழ்ப்பழமொழிகள் 159 இன்றைக்கு செத்தால் நாளைக்கு இரண்டு நாள் இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம் (இன்னும்) இன்னம் இன்னம் இசைச்சொல் அனேகம் இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல இன்னமும் பேயோடேனும் பிரிவு. 3695 (பழமொழி நானூறு) இன்றும் கிடக்குது ரியோ ரியோ இனக்கூட்டு ஆனாலும் நிலக்கூட்டு ஆகாது இனத்தால் இனம் ஆகும்;பணத்தால் ஜனம் ஆகும் இனத்தை இனம் சேரும் இனத்தை இனம் தழுவும். 3700 இனம் இனத்தோடு சேரும்;பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடே;வெள்ளாடு தன்னோடே இனம் கெட்ட ஏகாதசிக்கு என்ன பலகாரம்? இனம் பிரிந்த மான் போல 3705 இனாம் வந்த மாட்டை நிலவில் கட்டி ஓட்டு என்றானாம் இனிமேல் எமலோகம் பரியந்தம் சாதிக்கலாம் இனிமேல் ஒரு தெய்வத்தை கை எடுக்கிறதா? இஷ்கா இஷ்பாவாக இருக்கிறான் இஷ்டம் அற்ற முனியன் அஷ்டமத்து சனியன் 3710 இஷ்ராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். (இஷ்ரா-சமிக்கனை) ஈ அடித்தான் காப்பி. (காப்பி மாதிரி.) ஈ ஏறி மலை சாயுமா? ஈ எறும்பு எண்ணாயிரமும் சிரிக்கிறது. 3715 ஈ என்று போயிருக்கிறான். ஈ ஏறி மலை குலுங்கினது போல. ஈ ஓட்டுகிறான். ஈக் கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா? ஈக் கலையாமல் தேன் எடுப்பார்கள்; எடுக்காமல் பிடிப்பார்கள். 3720 ஈக்கும் ஆனைக்கும் சம்பந்தமா? ஈக்கும் நாய்க்கும் தடை இல்லை. ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை. ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில். ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான். 3725 ஈச்சங் கள் எதிலும் குளிர்ச்சி. ஈச்சங் காட்டில் எருமை குடி இருந்தது போல. ஈச்சங் குலையில் தேன் வைத்த மாதிரி. ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான். (தோற்றிய வசனம்.) ஈச்சமுள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை, பூவுக்கு மணம் இல்லை என்கிறான். 3730 (மங்கிலியத்துக்கு.) ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது. ஈசல் பறந்தால் மழை. ஈசல் பிறந்தால் மழை மாறும். ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல. ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும். 3735 ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது. (விழுந்தது.) ஈசல் பொறுக்கி பேசவும் அறியான். ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை. (மடிந்ததே.) ஈசலுக்கு இறகு முளைத்தாற் போல, ஈசலுக்கு எல்லாம் பகை. 3740 ஈசன் எப்படி அப்படித் தாசன். ஈசன் கருணை பேசுதல் அரிது. ஈசனுக்கு ஏது நீச பங்கம்? ஈசனுக்கு ஒப்பு எங்கும் இல்லை. (இங்கு ஒன்றும் இல்லை.) ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா? 3745 ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து. ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும். ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும். ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம். ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். 3750 ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு. ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு. ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும். ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும். (எட்டு முழம் பாயும்.) ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை. 3755 ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி. ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி. (இடுகுமரி.) ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது. (ஈடன்-பலம் உள்ளவன், நுளம்பு-கொசு.) ஈடு ஆகாதவனை எதிராக்காதே. (எதிர்க்காதே.) ஈடு இணை அற்றது. 3765 ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை. ஈடும் எடுப்பும் இல்லாதது. ஈடு ஜோடு எங்கும் கிடையாது. ஈடு ஜோடு சொல்ல முடியாது. ஈதல் உடையானை யாவரும் புகழ்வர். ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது. ஈப்பாக்கு வைத்த மாதிரி. ஈப் பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம். ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல. 3770 (யாழ்ப்பாண வழக்கு.) ஈமக் கடனை எழுந்து முறை செய். ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல. ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல. ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா? ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. 3775 (கண்டு.) ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா? ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான். ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு. ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம். 3780 ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன? ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம். ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன? (இறந்து என்ன.) ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன? (இண்டஞ்செடி தாழ்ந்து என்ன? தழைத்து என்ன?) ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான். 3785 ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். (உடைமையை, கொன்றை வேந்தன். இருபொருள்.ஈயார்-கொடுக்காதவர்; ஈ என்னும் பறவை, தேட்டை-சேமித்த பொருளை; சேமித்த தேனை. தீயார்-கெட்டவர்; நெருப்பை மூட்டுபவர்.) ஈயார் பொருளுக்குத் தீயார். ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி. (களை எடு, களை பிடுங்கு.) ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. 3790 ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு. ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும். ஈர் உருவப் பேன் அகப்படும். (அகப்படுமா?) ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல. ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். 3795 ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல, ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான். (அறுக்கிறதா?) ஈரத்தில் ஏரைப் பிடி. ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான். ஈர நாவுக்கு எலும்பு இல்லை. 3800 ஈர நிலத்தில் ஏரைப் பிடி. ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும். ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா? (ஈயும் மொய்க்காது. ஈரம் உள்ள இடத்திலே.) ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும். ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன? 3805 (ஈரம்-அன்பு.) ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர். ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும். ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர். ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது. ஈரம் போகாமல் எருவை மூடு. 3810 ஈர மரத்தில் வயிர ஆணி கடாவினது போல. ஈரலிலே மயிர் முளைத்தவன். ஈர விதைப்பும் ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை. ஈர வெங்காயத்திற்கு இருபத்திரண்டு புரை. (இருபத்தெட்டு.) ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை. 3815 ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான். ஈரை நினைப்பான், பேரை மறப்பான். (மறக்கான்.) ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது. ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை. ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார். 3820 (கண்டால்.) ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா? ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும். ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு. ஈவோனுக்கு ஒரு போஜனம்; இரப்போனுக்கு ஏராளம். ஈழத்தில் செக்கு ஆட, இங்கே பதம் பார்க்க. 3825 ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் குட்டியை எதிர்த்துக் குடாப்பில் போடு. ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும். ஈன்ற புலி போலே. ஈன்ற மாடு இறை வானத்தைப் பிரிப்பது போல். ஈன்றவள் தாய் பாட்டி; இத் தாயியின் தாய் பூட்டி. 3830 (பீட்டி.) ஈன்றோர் நஞ்சில் சான்றோர் இல்லை. (ஈன்றோரைவிட.) ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான். ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ். ஈனரை அடுத்தால் மானம் அழியும். ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. 3835 (நக்கவும்.) ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான். ஈனனுக்கு இரு செலவு. ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய். ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம். (காயாப் புழுங்கல், யாழ்ப்பாண வழக்கு.) உ உகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சல் பயிர் ஆகுமா? 3840 உகிர்ச் சுற்றின்மேல் அம்மி விழுந்தாற் போல். (உலக்கை விழுந்தாற் போல.) உங்கள் அப்பன் ஆர்க்காட்டு நவாபா? உங்கள் அப்பன் ஏழரைக் கோடி. (கொங்கு நாட்டு வழக்கு.) உங்கள் அப்பன் சீமை ஆளுகிறானா? உங்கள் அப்பன் செத்தான்; பழி உன்னை விடேன். 3845 உங்கள் அப்பன் பூச்சிக்குப் பயப்பட்டானா, உன் பூச்சிக்குப்பயப்பட? உங்கள் உறவிலே வேகிறது ஒருகட்டு விறகிலே வேகிறது மேல். உங்கள் பெண்டுகள் கொண்டான் அடித்தால் கண்கள் கொள்ளாது. உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ? உங்களைக் கடலிலே கை கழுவினேன். 3850 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம். (திருவாசகம்.) உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை. (பல்லி வாக்கு.) உச்சந் தலையில் செருப்பால் அடித்தது போல. உச்சந் தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா? உச்சந் தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம். 3855 உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார். (சோதிடம்.) உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும். (ஸ) உச்சஸ்தானே ஷு பூஜித. உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே? உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது. 3860 உச்சி குளிர்ந்தது. உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன். (புறநானூறு, 229.) உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம். (உயிர்.) உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய். உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும். 3865 உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி. உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா? உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்? உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்; இரும்பானாலும் ஆகும். உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு. 3870 உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா? உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி. உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா? உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான். 3875 உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல. (போயிற்றாம்.) உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய். உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன். (எடுத்தால்.) உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம். உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை. 3880 உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா? (உடம்புக்குப் பால் குடிக்கா விட்டாலும் ஊருக்குப் பால் குடிக்க வேண்டும்.) உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்? உடம்பு போனால் போகிறது; கை வந்தால் போதும். (உடும்பு.) உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன? உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு. 3885 (உடம்பை முறித்து, கடம்பமரக் கட்டிலில்.) உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது. உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா? உடம்போடே பிறந்தது. உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம். உடல் இரண்டு, உயிர் ஒன்று. 3890 உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை. (உள்ளவனுக்கு.) உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா? உடலுக்குக் கை துரோகம். 3895 உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா? உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது? உடலும் உயிரும் போல. உடன் பிறந்தே கொல்லும் வியாதி. உடன் பிறப்பால் தோள் வலி போம். 3900 (உடன் பிறப்பு உள்ளவனுக்கு.) உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ். உடாப் புடைவை பூச்சிக்கு இரை. உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும். உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு. உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன? 3905 உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல. (உடுத்தின புடைவை.) உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன். உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன். (யாழ்ப்பாண வழக்கு.) உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம். உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா? 3910 உடும்பு உடும்பே இண்டிக்குப் போ. (தெலுங்கு, இண்டிக்கு-வீட்டுக்கு.) உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு. (உனக்கு இரண்டு நாக்கா?) உடும்புப் பிடி. உடும்பு பிடித்தது போதும்; கையை விடு. உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும். 3915 உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும். (கையை விடு.) உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ? உடைத்த சட்டி உலைக்கு உதவாது, உடைத்து ஓடு பொறுக்குகிறான். உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா? 3920 உடைந்த சங்கு ஊது பரியுமா? (பரியுமா.-பரவச் செய்யுமா.) உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே. உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா? உடைமை என்பது கல்வி உடைமை. உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு. 3925 உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா? உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா. (வெற்றி வேற்கை.) உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை. உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை. (பாரா விட்டால்.) உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும். உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை, உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி. உடையவன் பாராப் பயிர் உருப்படுமா? உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. (பாராப் பயிர்.) உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது. உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது. (யாழ்ப்பாண வழக்கு, ஜனன மரணப் பதிவு செய்பவன் வராவிட்டாலும் அவன் கைத்தடியை அனுப்பினால் போதும். பொல்-தடி.) உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம். உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன? உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும். உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா? 3940 உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா? உண்கிற சோறு வெல்லம். (வெள்ளம்.) உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா? உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள். உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும். 3945 உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு. (களைப்பு.) உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும். உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல். (உடம்பு.) உண்ட சுற்றம் உருகும். உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல். 3950 உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா? உண்டதுதானே ஏப்பம் வரும்? உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம். உண்ட பிள்ளை உரம் பெறும். (உரம் செய்யும்.) உண்ட பேர் உரம் பேசுவார். 3955 உண்ட வயிற்றுக்கு உபசாரமா? உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல. உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும். உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது. (போகிறதா?) உண்டவன் உரம் செய்வான். 3960 உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான். உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள். உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? (இரண்டகம் நினைத்தல்.) உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா? 3965 உண்டார் மேனி கண்டால் தெரியும். உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும். உண்டால் கொல்லும் விஷம். உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ? உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு. 3970 உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன? உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா? உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும். உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம். உண்டான போது கோடானுகோடி. 3975 உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா? உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம். உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம். 3980 (தரையில், தெருவில்.) உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை. உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம். உண்டு கண்ட பூனை உறியை உறியைத் தாவும். உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ. உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை. 3985 உண்டு கெட்டான் பார்ப்பான், உடுத்துக் கெட்டான் துலுக்கன். (உண்டு கழித்தவன், உடுத்துக் கழித்தவன்.) உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா? (இராது.) உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன? உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்? உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான். 3990 உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல. உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன் உண்ண உணவும் நிற்க நிழலும். உண்ணக் கை சலித்திருக்கிறான். உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும். 3995 உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை. உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே, உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம். உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி. உண்ண வா என்றால் குத்த வருகிறான். 4000 (வருகிறாய்.) உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை. உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது. உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன். உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும். உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். 4005 உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது. உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது. உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது. உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன். உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல். 4010 உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே! (ஓமல் ஆனேனே.) உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன். உண்ணி கடித்த நாய் உதறுவது போல. உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும். (உண்ணி-பையன், நாஞ்சில் நாட்டு வழக்கு.) உண்ணுகிற சோறு வெல்லம். 4015 உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா? உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது. உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி. உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா (தவளை,) உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி. 4020 (தின்னுவாளாம் குந்தமாதேவி, ஏறுவாளாம் சீதா தேவி.) உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும். உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல். உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம். உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள். உண்பார் பாக்கியம், சம்பா விளையும். 4025 உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது. உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி. (சேப்பெருமாள்.) உண்பான், தின்பான் நயனப்ப செட்டி; உடன் கட்டை ஏறுவான் பெருமாள் செட்டி. உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி. 4030 உண்மை உயர்வு அளிக்கும். (தரும்.) உண்மைக்கு உத்தரம் இல்லை. உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை. உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும். உண்மை நன்மொழி திண்மை உறுத்தும். 4035 உண்மைப் படு, உறுதிப்படு. உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன். உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல். உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி. (உணவும் சரி.) உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில். 4040 உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை, உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம். உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார். உத்தமனுக்கு உடம்படிக்கை ஏன்? உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை. 4045 உத்தமனுக்கு ஓலை எதற்கு? உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம். (பா-ம்.) போக்கிரிக்கும். உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை. உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும். உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி. 4050 உத்தராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு காணியும். (ஊர் வாரியில் ஒரு வேலியும்.) உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா? உத்தியோகத்துக்குத் தக்க ககம். உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது. உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு. 4055 (குண்டை-மாடு,) உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே. உத்தியோகம் புருஷ லக்ஷணம். உதட்டில் ஒட்டாமல் பேசுகிறான். .............................. .......................................................................... 4060 (பா-ம்.) நெஞ்சிலே. உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை. உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும். உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ? உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும். உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா. 4065 உதட்டுத் துரும்பு ஊதப் போகாது. (பா-ம்.) போதாது. உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும். உதடு ஒட்டாமல் பேசுகிறான். உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம். (உள்ளங்காலைத் தேய விடு.) உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய. 4070 (பழம் சொரிய.) உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம். உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா. உதர நிமித்தம் பகுக்குத வேஷம். (பஜகோவிந்தம்.) உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல. உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே. 4075 உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம். உதவி செய்வாருக்கு இடையூறு ஏது? உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா? உதறு காலி முண்டை உதறிப் போட்டாள். உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள். 4080 (பா-ம்.) எடுத்தாள். உதாரிக்குப் பொன் துரும்பு. உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல். உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது. உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்? உதிரம் உறவு அறியும். 4085 உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது. (நெஞ்சு சீழ் கட்டிக் கொள்ளும்.) உதைத்த காலை முத்தம் இடுவது. உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா. உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான். உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான். 4090 உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல. உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது. உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும். உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும். உப்பு இட்டவரை உள்ளளவும் நினை. 4095 உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய். உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார், (பப்பு-பருப்பு.) உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும். உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது. (இல்லை.) உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன? 4100 உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே. உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான். (பா-ம்.) ஒரு மிடாக் கஞ்சி உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை. உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார். (உந்தியா - இருக்கிறதா, - பப்பு - பருப்பு.) உப்பு உள்ள பாண்டம் உடையும். 4105 உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும். உப்புக் கட்டினால் உலகம் கட்டும். உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல. (விழிக்கிறாள்.) உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா? உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான். 4110 உப்புக்கும் உதவாத விஷயம். உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான். உப்புச் சட்டியும் வறை ஓடும் விற்றுக்கடனைக் கொடுத்து விட்டான். உப்புச் சப்பு இல்லாத காரியம் உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும். 4115 (யாழ்ப்பாண வழக்கு.) உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது. உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா? உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உப்பு நளபாகமாய் இருக்கிறது. உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம். 4120 (பா-ம்.) சேர்ந்தால் உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம், உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம். உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம், உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம். உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும். 4125 உப்பும் இல்லை, சப்பும் இல்லை. உப்பும் இல்லை, புளியும் இல்லை. உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே! உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா? உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ? 4130 உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு. உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு. (தண்ணீர் விடு, உப்பு போடு.) உப்பு முதல் கர்ப்பூரம் வரையில். உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான். (உப்புப் பொதிக்காரன், வெற்றிலைக்காரன்.) உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை? 4135 (வாசனை.) உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா? உப்பு வைத்த பாண்டம் உடையும். உப்பு வைத்த மண்பாண்டம் போல. உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம். உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ? 4140 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே. உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான். உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும். உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும். 4145 உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம். உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா? உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே. உபகாரம் வீண் போகாது. உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். 4150 உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம். (வீட்டிலே.) உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா? (எண்ணுகிறதா?) உபசார வார்த்தை காசு ஆகுமா? உண்டால் ஒழியப் பசி தீருமா? உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு. உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம். 4155 உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான். உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா? உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி, (மீனாட்சி. காமாட்சி.) உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ? உமி குத்திக் கை நோகலாமோ? 4160 உமி குற்றிக் கை வருந்துமாறு (பழமொழி நானூறு.) உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல. உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை. உமியைக் குத்திக் கை சலித்தது போல. உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு. 4165 (அயர்ந்த.) உயர்ந்த காற்றைக் காற்று மோதும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா? (கருடன்.) உயிர் அறியும் உறவு, உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல. உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். 4170 உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம். (உப்பு விற்றுப் பிழைக்கலாம், உண்ணலாம்.) உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை, உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா? உயிர் என்ன வெல்லமா? உயிர் காப்பான் தோழன். 4175 உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம். உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது. உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை. உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று, உயிரும் உடலும் போல. 4180 (உடம்பும்.) உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும். உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ? உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம். உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை. ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல. உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம். 4185 உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா? உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா? உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை. உரத்தைத் தள்ளுமாம் உழவு. உாம் உதவுவது ஊரார் உதவார். 4190 உரம் ஏற்றி உழவு செய். உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான், உரல் பஞ்சம் அறியுமா? உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? 4195 (அகப்பட்டு, அஞ்சுகிறதா?) உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா? உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா? (மாட்டிக்கொண்டு பயப்பட்டால் தீருமா?) உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான். உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி. உரலுக்குப் பஞ்சம் உண்டா? 4200 உரலுக்குள் தலையை விட்டு உலக்கைக்கு அஞ்சலாமா? உரலும் கொடுத்துக் குரலும் போக வேண்டும். உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை என்றானாம் ஒரு சோம்பேறி. உரித்த வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும். உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது. 4205 உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு. உரியை இரட்டித்தால் உழக்கு. உரு ஏறத் திரு ஏறும். உருக்கம் உருக்கமாய் ஊட்டி உள்ளே போச்சுது. உருக்கம் உள்ள சிற்றாத்தை, ஒதுக்கில் வாடி கட்டி அழலாம். 4210 உருக்கின நெய் வார்த்தாலும் கண்ட நியாயத்தான் சொல்லுவேன். உருக்கின நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைத் சொல்லுவான். உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவுமாம்; வரிசை கண்ட மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம். உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன். (புளியங்காய்.) உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை. 4215 உருட்டுப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும். உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும். உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும். உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும். 4220 உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும். உருப்படத் திருப்படும். உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டு விண்டு தின்றானாம். உருவத்தினால் அல்ல; பேச்சினால் கிளி நன்கு மதிக்கப்படும். உருவத்தை அல்ல; குணத்தைப் பார். 4225 உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல். உருவிய வாளை உறையில் இடாத வீரன். உருவின கத்தி உறையில் அடங்கும். உருளுகிற கால் பாசி சேர்க்காது. உரைத்த கட்டை வாசனை பெறும். 4230 உரையார் இழித்தக்க காணிற் கனா. (பழமொழி நானுாறு.) உல்லாச நடை மெலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு. (நெய்.) உலக்கைக்குப் பூண் கட்டினது போல. உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும். உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று. 4235 உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல. உலக்கைப் பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா? (அசையாதவன், அசைவானா?) உலக்கை பெருத்து உத்தரம் ஆயிற்று. உலக்கையாலே காது குத்தி உரலாலே தக்கை போட்டது போல உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய். 4240 உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது? உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே. (திவாகரம்.) உலகம் பல விதம் உலகம் முழுவதும் உடையான் அருள். உலகமே ஒரு நாடக சாலை. 4245 உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும். உலகின்கண் இல்லததற்கு இல்லை பெயர். (பழமொழி நானூறு.) உலர்ந்த தலைக் கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா. உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை. உலுத்தனுக்கு இரட்டைச் செலவு. 4250 உலையில் ஈ மொய்த்ததுபோல. உலை வாய் மெழுகு உருகுவது போல. உலை வாயை மூடினாலும் மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது. உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது. உவர் நிலத்தில் இட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம். 4255 உழக்கில் கிழக்கு மேற்கு. (மேற்கா.) உழக்கிலே கிழக்கு மேற்கு எது? உழக்கிலே வழக்கு. உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள். உழக்கு உள்ளூருக்கு; பதக்குப் பரதேசிக்கு. 4260 உழக்கு உற்றாருக்கு; பதக்குப் பரதேசிக்கு. உழக்கு உற்றாருக்கும் பதக்குப் பரதேசிக்கும் ஆனால் உழுதவனுக்கு என்ன? உழக்கு உறிஞ்சப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சுதாம். உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம். உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய்ப் பதக்கு நெல்லைப் பன்றி தின்றதாம். 4265 (தின்றது போல.) உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து இளநீர் குடிப்பானேன்? உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்? உழக்கு விற்றாலும் உரலுக்குப் பஞ்சமா? உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா? உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம். 4270 உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம். உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது. உழவில் பகை ஆனால் எருவிலும் தீராது. உழவிலே இல்லாவிட்டால் மழையிலே. உழவிலே பகை எருவிலும் தீராது. 4275 உழவினும் மிகுந்த ஊதியம் இல்லை. (சிறந்த.) உழவுக்குப் பகை எருவில் தீருமோ? உழவின் பகை எருவிலும் தீராது. உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால். உழவு அற உழுதவன் விளைவு அற விளையும். 4280 (ஏற விளையும்.) உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான். உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும். உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும். (விளைவு அற விளையும்.) உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே. உழவுக்கு ஏற்ற கொழு. 4285 உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம். (ஊணுக்கு முன்னே வரும். ) உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா. (சரி.) உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம். உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை. உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை. 4290 உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா? உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ. உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே. உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா? (என்றால், ஊரிலே.) உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள். 4295 உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று. உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம். உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா? (குண்டை-எருது.) உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம். உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம். உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல். 4300 உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம். (ஆள் தேவை இல்லை.) உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா? உழுகிற மாட்டை எருது நக்கினது போல. உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல. உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. 4305 உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா? (போகும்.) உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும். உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான். உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4310 (உழக்கு நெல்லும்.) உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும். உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம். உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார். (ஒரு முடி தின்னவிடார்.) உழுத காலாலே உழப்பி விடு. உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது. 4315 உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம். (அடித்துக் கட்டி உழுதானாம்.) உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது. (உழவுகோல் கூட மிச்சம் இல்லை.) உழுதவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார். உழுதவன் கெட்டது இல்லை. 4320 உழுது இல்லாது உலகில் ஒன்றும் செல்லாது. (இல்லாதது.) உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை ஒரு காலும். உழுது உப்பு விதைத்து விடுவேன். உழுது உலர்ந்தது பழுது ஆகாது. உழுது உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும். 4325 உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி. உழுந்து அரைத்த அம்மி போல. உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ? உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறை கொண்டாடும். உழுபவன் கணக்கு எடுத்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4330 உழுவார் உலகத்துக்கு ஆணி. உழுவார் கூலிக்கு அழுவார். உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது. உழுவானுக்கு ஏற்ற கொழு; ஊராருக்கு ஏற்ற தொழு. உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார். 4335 உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது. உழைக்கிற கழுதை எந்நாளைக்கும் உழைத்தே தீர வேண்டும். (என்றைக்கும்.) உழைத்த அளவுக்கு ஊதியம். உழைப்பவன் ஒரு கோடி; உண்பவன் ஒன்பது கோடி. உழைப்பாளி சுகம் அடைந்தால் வரப்பு ஏறிப் பேளமாட்டான். 4340 (ஏறுவானா.) உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி. உழைப்புக்குத் தகுந்த ஊதியம். உள் ஆள் இல்லாமல் கோட்டை அழியாது. உள் ஆளும் கள்ளாளும் கூட்டமா? உள் இருந்தாருக்குத் தெரியும் உள் வருத்தம். 4345 உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான். உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான். உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல. (ஈஷுவார் போல.) உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம். உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. 4350 உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல. உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்? உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை. உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி. உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும். 4355 உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான். (ஆட உழைத்தான்.) உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும். உள்ளங்கை நெல்லிக் கனி போல. உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல. உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்? 4360 (பூணுக்கு.) உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன். உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை. உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா? உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை. உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல. 4365 உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான். உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன். உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு. உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும். 4370 உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும். உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம். உள்ளதுக்குக் காலம் இல்லை. உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ? உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை. 4375 (உழவினை.) உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல. உள்ளது போகாது; இல்லது வராது. உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு! (உள்ளதும் கெட்டதடா.) உள்ளதும் போச்சு, பிள்ளை பள்ளிக்கூடம் போய். உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு. 4380 உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன். உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார். உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம். உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும், உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு. 4385 உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை. (சொன்னால் ஊருக்குப் பொல்லாதவன்.) உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன். உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல். உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும். உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும். 4390 உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை. உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம். (கண்ணனுக்கு.) உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து. உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன். (நொள்ளைக் கண்ணன்.) உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு. 4395 உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான். உள்ளம் அறியாத கள்ளம் இல்லை. உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும். உள்ளம் களிக்கக் கள் உண்டு கலங்காது. உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய. 4400 (பழம்.) உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். (பழமொழி நானூறு.) உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது? உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும் மெழுகுண்டையும். உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும். உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல. 4405 உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம். உள்ளி இட உள்ளி இட உள்ளே போச்சுது. உள்ளிக்கு நாற்றம் உடந்தை. உள்ளிப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும். உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும். 4410 உள்ளுக்குள்ளே கொட்டின தேளே, ஒரு மந்திரம் செய்கிறேன் கேளே. உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி. உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது. உள்ளூர்க் குறுணியும் சரி; அசலூர்ப் பதக்கும் சரி. உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்கு போல. 4415 உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி. உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உறவும். உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ? உள்ளூர்ப் புலி, வெளியூர் எலி. உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை. 4420 உள்ளூர்ப் பெண்ணும் அசலூர் மண்ணும் ஆகா. உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் ஒன்று. (சரி.) உள்ளூர் மேளம். உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான். உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம். 4425 உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா? உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா? உன்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்? உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை. உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே. 4430 உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா. உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம். உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்? உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா? உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு. 4435 (டம்பம்.) உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம். (கோலார் தங்க வயலில்.) உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய. உளவன் இல்லாமல் ஊர் அழியுமா? உளவு இல்லாமல் களவு இல்லை. (நடக்குமா?) உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா? 4440 உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே. உளி எத்தனை? மலை எத்தனை? உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா? உளுவைக் குட்டிக்கு ராய பாரமா? உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான். 4445 உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான். உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம். உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம். உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும் 4450 (பாரதம்.) உற்ற பேர்களைக் கெடுக்கிறதா? உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ? உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான். உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும். (வேறாய் விளையும், பேறாய் விளையும்.) உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள். 4455 உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான். (ஒரு பிள்ளை, நாலு பிள்ளை.) உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை. உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார். (பார்த்தால்.) உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல. உறக்கம் சண்டாளம். 4460 உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி. (தீரா வழக்கு, தேறா வழக்கு.) உறங்கின நரிக்கு உணவு கிட்டாது. உறவிலே நஞ்சு கலக்கிறதா? உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம். (வேவதைவிட, வேகலாம்.) உறவு உண்ணாமல் கெட்டது; உடை உடுக்காமல் கெட்டது. 4465 உறவு உறவுதான்; மடியிலே கைவைக்காதே. உறவுக்கு ஒன்பது படி; ஊருக்குப் பத்துப் படி. உறவுக்கு ஒன்பது படி; பணத்துக்குப் பத்துப் படி. உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம். (துணை.) உறவுதான்; பயிரிலே கை வாயாதே. 4470 உறவுதானே உணர்ந்து கொள்ளும். உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது. உறவுபோல் இருந்து குளவிபோல் கொட்டுகிறதா? உறவும் பகையும் ஒரு நிலை இல்லை. உறவும் பாசமும் உதட்டோடே. 4475 உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது; விழுங்கவும் முடியாது. உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம். உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே. உறவைப்போல் இருந்து குளவியைப்போல் கொட்டுவர். உறள் பால தீண்டா விடுவது அரிது. 4480 (பழமொழி நானூறு.) உறி அற மூளி நாய்க்கு வேட்டை. உறிப் பணம் போய்த் தெருச் சண்டை இழுக்கிறது. (இழுத்தாளாம்.) உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே. உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் அலைவானேன்? உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி? 4485 உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன். உறுதி எதிலும் பெரிது. உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது. உறு தீங்குக்கு உதவாதவன் உற்றவனா? உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல. 4490 உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும். உன் இழவு எடுக்க. உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது. உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது. உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா? 4495 உன் எண்ணத்தில் இடி விழ. உன் எண்ணத்தில் எமன் புகுத. உன் காரியம் முப்பத்திரண்டிலே . உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே. உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை. 4500 உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம். (திருவாசகம்.) உன் கொண்டை குலைய. உன் சமர்த்திலே குண்டு பாயாது. உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை. உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன். 4505 உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன். உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ. உன் தொடையைப் பாம்பு பிடுங்க. (தொண்டையை.) உன் நெஞ்சில் தட்டிப் பார். (தொட்டுப்பார்.) உன் பாடு கொள்ளைதானே? 4510 உன் பாடு யோகம். உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க. உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ. உன் பொங்கு மங்க. உன்மத்தம் பிடித்தது போல. 4515 உன் மதம் மண்ணாய்ப் போக. உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று. (முஸ்லீம் வழக்கு, மஹலூத்-காலக்ஷேபம்.) உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா? உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே. உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும். 4520 (வெளிப்பட்டுப் போச்சு.) உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும். (நாகர்கோயிலில் மண் பிரசாதம்.) உன் வாயிலே சீதேவி. உன் வாயிலே மண் விழ. உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்? உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம். 4525 உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய். உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும். உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும். (அறுத்து. ) உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக. உன்னை ஒண்டிப் பாடை கட்ட. 4530 உன்னைக் கடலிலே கை கழுவினேன். உன்னைக் கேடு அடிக்க. உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன். உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி. உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்? 4535 உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை. (கைவல்ய நவநீதம்.) உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட, உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி, உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது. உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன். 4540 உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி. உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே. உன்னை வாரிக் கொண்டு போக. உன்னை வெட்டிப் பலி போட. உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம். 4545 (பிறப்பதில்.) உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை. உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை. உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல. உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ? உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான். 4550 உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசுl; நேற்றோடு போச்சு புரட்டாசு. (புரட்டாசி.) உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம். (யான்.) உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும். உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே. உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம். 4555 உனக்கு முதுகு வளைகிறதா? ஊ ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டளாம் மீனாட்சி. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. ஊக்கமது கைவிடேல். (ஆத்தி சூடி.) ஊசல் ஆடித் தன் நிலையில் நிற்கும். 4560 ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார். (உற்றார் அதுதானும் கொடார்.) ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்த்தது போல. (பார்க்கிறதா?) ஊசிக் கணக்குப் பார்க்கிறான். ஊசிக்கு அடிப்புறம் கனமா? தலைப்புறம் கனமா? ஊசிக்கு ஊசி எதிர் ஏறிப் பாயுமா? 4565 (எதிர் ஊசி பாயாது.) ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான். ஊசிக் குத்தின்மேல் உரல் விழுந்த கதை. ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன்? ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல, ஊசி கொள்ளப் போய்த் துலாக் கணக்குப் பார்க்கிறதா? 4570 ஊசி கோக்கிறதற்கு ஊரில் உழவாரம் ஏன்? ஊசித் தொண்டையும் தாழி வயிறும். (கலப்பட்ட வயிறும்.) ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம். ஊசி பொன்னானால் என்ன விலை பெறும். ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது. 4575 ஊசி போலத் தொண்டை; கோணி போல வயிறு. ஊசி போலத் தொண்டையும் சால் போல வயிறும். (உஷ்டேரி போல வயிறும்.) ஊசி போல மிடறும் தாழி போல வயிறும். ஊசி மலராமல் சரடு ஏறுமா? ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா? 4580 ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும். ஊசி முனையிலே நிற்கிறான். ஊசி மூஞ்சியை ஊதை என்ன செய்யும். (ஊசி மூஞ்சி-தூக்கணங்குருவி.) ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக்கிறது. 4585 ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான். ஊசியும் சரடும் போல. ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சிநேகம் இழுக்கும். (நட்பு.) ஊசியைத் தொட்டு உரலை விழுங்குவது போல. ஊசி விழுந்தால் ஒலி கேட்கும். 4590 ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது. ஊடும் பாவும் போல. ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடி ஓடி நெய்வான்? ஊண் அருந்தக் கருமம் இழப்பர். ஊண் அற்ற போதே உடல் அற்றுப் போம். 4595 ஊண் அற்ற போதே உளம் அற்றது போல. ஊண் அற்ற போதே உறவு அற்றது. (அற்றாரோடு.) ஊண் அற உயிர் அறும். ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும். ஊண் பாக்கு ஒழிய வீண் பாக்கு ஆகாது. 4600 ஊன் மிச்சம் உலகாளலாம். ஊண் மிச்சம் உழவிலும் இல்லை. ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான். ஊணினால் உறவு; பூணினால் அழகு. ஊணினால் புத்தி: பூணினால் சாதி. 4605 ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு. ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து. (முந்தி, பிந்தி.) ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி. (ஊணும் உறையுளும்.) ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா? 4610 ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது. ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல. ஊத்தைப் பெண் பெற்ற பிள்ளை கழுவக் கழுவத் தேயும். ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை. (உண்டவனும்.) ஊத்தை போனாலும் உள்வினை போகாது. 4615 (ஊழ்வினை.) ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு. ஊத்தை வாயன் தேடக் கர்ப்பூர வாயன் தின்ன. ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன. (நாறல் வாயன்.) ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி. (உப்பு.) ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு. 4620 ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ். ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும். ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும். ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். (ஆமை வீட்டைக் கெடுக்கும்.) ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும். 4625 ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும். (ஆமை கிணற்றைக் கெடுக்கும்.) ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம். ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன். ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன். ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி. 4630 ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.) ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா? ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல. ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம். ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான். 4635 (யாழ்ப்பாண வழக்கு.) ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான். ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க. ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும். ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம். 4640 ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல. (செவிடும்.) ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல். ஊமையை விட உளறு வாயன் மேல். ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும். ஊர் அறிந்த பார்ப்பான். 4645 ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு? ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம். (துரைக்கு.) ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது? ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம். (பேண.) ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா? 4650 ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது. (கொண்டாட்டம், அழகு.) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு. (கொள்ளை.) ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது. ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள. ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது. 4655 ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும், ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்? ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு. ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. 4660 ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி? ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி. (பேர்.) ஊர் எச்சம்; வீடு பட்டினி. (யாழ்ப்பாண வழக்கு.) ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே. ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை. 4665 ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல். ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம். ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ? ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி? (என் பேர் முத்தி.) ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் புரண்டு அழுதால் வருமா? 4670 ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும். ஊர் எனப்படுவது உறையூர். (இறையனார் அகப்பொருள் உரை.) ஊர் ஒக்க ஓட வேண்டும். ஊர் ஓச்சன் பட்டினி. ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம். 4675 ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம், ஊர் ஓட உடன் ஓட. ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு. ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. (யாழ்ப்பாண வழக்கு.) ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன். 4680 ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை. ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான். ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல. ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது. ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே. 4685 ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா? ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல். ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம். ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம். ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா? 4690 ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக. ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்? ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை. (கோப்பறிந்தால்.) ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம். ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு. 4695 ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா? (பூநூல்.) ஊர் நடு நின்ற ஊர் மரம் போல. ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல. ஊர் நல்லதோ? வாய் நல்லதோ? ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே. 4700 ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள். ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு. (உதட்டுக்குத்தான் சேதம்.) ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான். ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி. ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா? 4705 ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம். ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல. ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது. ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா? ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. 4710 ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா? ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும். ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம். ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும். (விளைந்தால்.) ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு. 4715 ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான். ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான். ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். (திரிகிறான்.) ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே. ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன். 4720 ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே. ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான். ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான். ஊரார் சொத்துத் தூமகேது. (பொருள்.) ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். 4725 ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். ஊரார் புடைவையில் தூரம் ஆவது. ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே! ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார். 4730 ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே. ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி. ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி. ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள். ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. 4735 ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது. ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா? ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா? ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான். ஊரான் மகன் நீரோடே போன கதை. 4740 ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார். ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல. ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும். ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான். ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம். 4745 ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும். ஊரில் பஞ்சம் நாயில் தெரியும். ஊரில் பெண் திரண்டால் எனக்கு என்ன ஆச்சு: உனக்கு என்ன ஆச்சு. (புரோகிதர் கூற்று.) ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம். ஊரிலே ஒரு குடியும் அல்ல; ஏரியிலே ஒரு பயிரும் அல்ல. 4750 ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம். ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான். ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான். ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல். ஊருக்கு ஆகாதது உடம்புக்கும் ஆகாது. 4755 ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா? (ஆகான்.) ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான். ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன். ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி. 4760 ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார். ஊருக்கு உழைக்கிற கிராமணி. ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி. ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா? ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல. 4765 (காடிப் பானையில், கழுநீர்ப் பானையில்,) ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை. ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான். ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான். ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்? (தாசி.) ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி. 4770 ஊருக்கு ஒருவன் துணை. ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல். ஊருக்குக் கடைசி உலகம்பட்டி. (நகரத்தார் ஊர்களுக்குள் கடைசி.) ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம். ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா? 4775 ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும். ஊருக்குப் போகிறவர் வேலை சொன்னால் ஓடி ஓடிச் செய்தாலும் தீராது. ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை. ஊருக்கு மாரடித்து ஒப்புக்குத் தாலி கட்டுகிறாளாம். ஊருக்கு முந்தி விளக்கு ஏற்றினால் உயர்ந்த குடியாக ஆகலாம். 4780 ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும். ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை. ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான். ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும். ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான். 4785 ஊருடன் கூடி வாழ். (ஊரோடு ஒத்து வாழ்.) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. ஊரே தாய்; வேலியே பயிர். ஊரை அடித்து உலையில் போடுகிறான். 4790 ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ? ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்! ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான். ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம். ஊரைக் காட்ட ஒரு நாய் போதும். 4795 ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன். ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன். ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி. ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே. 4800 ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ? ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான். ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை. ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது. ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல். 4805 (பீடையைப் பிடித்து. ) ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை. (வீட்டை.) ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம். ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம். ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை. ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. 4810 ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு. (ஒக்க நடு.) ஊரோடு ஒட்டி வாழ். (ஒன்றி வாழ்.) ஊரோடே ஒக்கோடே. ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும். ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை. 4815 ஊழி பெயரினும் கலங்கார் உறவோர். ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல். ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ? ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும். ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல. 4820 ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று. ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே. ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல். (பா-ம்.) ஊத்தை. ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும். (பா-ம்.) ஊத்தை. ஊற்றை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை. 4825 (பா-ம்.) ஊத்தை. ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம். (பா-ம்.) ஊத்தை. ஊறச்சே துடைக்க வேண்டும். ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான். ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி. (கண்ணங்குடி, சிக்கலுக்குப் பக்கத்தில் இருக்கிறது.) ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான். 4830 ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல. ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல. ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது. ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்? 4835 ஊனம் இல்லான் மானம் இல்லான். ஊனுக்கு ஊன் உற்ற துணை. எ எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல. எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்? (உபசாரம், எக்கு-இடுப்பு.) எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ. 4840 எகனை முகனை பார்க்கிறான். எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார். (போய் வந்தார்.) எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்? (வீட்டுக்கு.) எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள். எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை. 4845 எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை. எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள். எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம். எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம். எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே? 4850 (பெருமாள்தானே.) எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான். எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன். (காவிரிபின் கூற்று, ஏறிப் பாயாது.) எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது. எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன். எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி. 4855 (பார்.) எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை. எங்கும் பருத்தி எழுபது பலம். எங்கும் பொன்னம்பலந்தான். எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை. எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம். 4860 எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும். எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும். எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும். எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு. எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது. 4865 எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம். எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய். எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும். எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது. எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள். 4870 எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும். எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும். (தீட்டுத் துடைக்கும்.) எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்? எச்சில் இலைக்கு அலையும் நாய் போல. எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது. 4875 (எச்சில் தீட்டுக்கு.) எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது. எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா? எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா. எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல. எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி. 4880 எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு. எச்சில் இலை கண்ட நாய் போல. எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா? எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு. 4885 எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா? (எச்சிலிலைக் கணக்குக் கேட்கச் சொன்னார்களா?) எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை? எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான். (கையாலும்.) எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா? (பிச்சை எடுப்பானா?) எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும். 4890 எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை. எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா? எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார். எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா? (அடங்குமா?) எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை. 4895 எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல. எச்சிலைத் தின்று பசி தீருமா? எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம். எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம். எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள். 4900 எட்கிடை நெற்கிடை விட்டு எழுது. எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்? எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல. எட்டாத பழம் புளிக்கும். எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே. 4905 எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல. எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு. எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை. எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர். (இடம்.) எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும். 4910 எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது. எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும். எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல். எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது. 4915 எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன். எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது. (இனிப்பு.) எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு. எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல். (இச்சிக்கிறதா?) எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம். 4920 எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான். எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா? எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன? எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும். (பச்சென்று இருந்தால் கண்ணுக்கு அழகு.) எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே. 4925 (வைத்த மரம் தோப்பாக வேணும்.) எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம். (பக்ஷம்.) எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா? எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா? (உண்ணலாமா?) எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும். (எட்டியுடன் கூடி.) எட்டின மட்டும் வெட்டும் கத்தி; எட்டாத மட்டும் வெட்டும் பணம். 4930 எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது. எட்டினால் குடுமியைப் பிடித்து எட்டாவிட்டால் காலைப் பிடிப்பது. (தலையை.) எட்டு அடி வாழை, கமுகு; ஈரடி கரும்பு, கத்தரி; இருபதடி பிள்ளை (பிள்ளை-தென்னம் பிள்ளை. ) எட்டு அடி வாழையும் பத்தடி பிள்ளையும். (பிள்ளை-தென்னம் பிள்ளை.) எட்டு ஆள் வேலையை ஒரு முட்டாள் செய்வான். 4935 எட்டு இருக்கிறது, எழுந்திரடி அத்தையாரே. எட்டு எருமைக்காரி போனாளாம், ஓர் எருமைக்காரியிடம். எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான். எட்டு என்றால் இரண்டு அறியேன். எட்டுக் கிழவருக்கு ஒரு மொட்டைக் கிழவி. 4940 எட்டுக் குட்டுக் குட்டி இறங்கிக் காலைப் பிடிக்கிறது. எட்டுக் கோவில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி. எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை. எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும். எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம். 4945 எட்டு நாயும் பெட்டைக் குட்டியும் போல். எட்டுப் படி அரிசியும் ஒரு கவளம்; ஏழூர்ச் சண்டை ஒரு சிம்மாளம். எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும். எட்டும் இரண்டும் அறியாதவன். எட்டும் இரண்டும் அறியாத பேதை. 4950 எட்டு மாசம் குளிர்ந்திருந்தால். எட்டு மாட்டுக்கு ஒரு சாட்டை. எட்டு முழமும் ஒரு சுற்று; எண்பது முழமும் ஒரு சுற்று. எட்டு வருஷத்து எருமைக் கடா ஏரிக்குப் போக வழி தேடுகிறது. (ஈட்டுப் பிராயத்து.) எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம். 4955 (வட்டம்-தையல். ) எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி. எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே. (எட்டேகால் லக்ஷணமே-அவலக்ஷணமே. எமனேறும்வாகனம்- எருமைக்கடா.) எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க. எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம். எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம். 4960 (விழுந்தாற் போல.) எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை. (எருமைச்சுமை.) எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா? (கோபாலம்-பிச்சை.) எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு. (முட்டி, பல்லக்கா. ) எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை. எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம். 4965 எடுத்த அடி மடங்குமா? எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது. எடுத்த கை சிவக்கும். எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்? எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும். 4970 எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும். எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான். (செத்தான்.) எடுத்து ஆளாத பொருள் உதவாது. எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா. (எருது மாடு ஆகாது.) எடுத்து எறிந்து பேசுகிறான். 4975 எடுத்துக் கவிழ்த்துப் பேசுகிறான். எடுத்துச் சொல்; முடித்துச் சொல். எடுத்துப் பிடித்தால் வெட்டுவேன் என்ற கதை. எடுத்துப் போட்டு அடிக்கிறது; முறத்தைப் போட்டுக் கவிழ்க்கிறது. எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பான். 4980 எடுத்து விட்ட எருது போல. எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்? எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்? எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும். எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லக்கு. 4985 எடுப்பார் கைப் பாவை போல. எடுப்பார் கைப் பிள்ளை. (கைக் குழந்தை.) எடுப்பார் மழுவை; தடுப்பார் புலியை; கொடுப்பார் அருமை. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைத்தாற் போல இருக்கும். (தம்பி.) எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு. 4990 எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும். எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா? எண் அற்றவர் கண் அற்றவர்; எழுத்தற்றவர் கழுத்தற்றவர். (இல்லாதவன்.) எண் அறக் கற்று எழுத்து அற வாசித்தாலும் பெண்புத்தி பின் புத்திதான். எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. 4995 என்சாண் இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே. எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். எண்சாண் உடம்பு இருக்கக் கோவணத்திலே விழுந்ததாம் இடி. எண்சாண் உடம்பும் ஒரு சாண் ஆனேன். 5000 எண்ணத்தில் மண் விழுந்தது. எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது. (ஏடு இடம் கொள்ளாது.) எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம். (மண்ணைத்தின்ன, நொண்டிக்குதீரை வந்து.) எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம். எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல். 5005 (என்னச் சுற்ற.) எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான். எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய். எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய். எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய். (ஏளனம்.) எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய். 5010 எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். எண்ணிச் சுட்டது தேசை. எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி. எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே. (மாப்பிள்ளை.) எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு. 5015 எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு. (குறள்.) எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை. எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது. எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய். 5020 எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி? எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி. எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல். எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 5025 எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம். எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை. எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல. எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல. 5030 எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்? எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி, எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்? எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது. 5035 (தலை சீவி.) எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும். எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி. (குடித்த நாய் இருக்க.) எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை. (செலவே ஒழிய, பிழைக்காது, பிழைத்தபாடு இல்லை.) எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்? எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ? 5040 எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ? எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா? (எண்ணெய் மிஞ்சுமோ?) எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான். எண்ணெயில் விழுந்த ஈயைப் போல. எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது. 5045 (எண்ணெயைத் துடைக்கலாம், எழுத்தை அழிக்க முடியுமா?) எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்! எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம். எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு. எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன். எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது. 5050 (நாவிதன் கூற்று.) எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை. எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான். எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா? (எத்தனை தேய்த்தாலும் போகாது.) எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை. எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ? 5055 எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது. எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான். (தின்னான்.) எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை. 5060 எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான். எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை. எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான். (நோரு-வாய்.) எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம். (பிழைக்கலாம்.) எத்திக் கழுத்தை அறுக்கிறதா? 5065 எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது. (இரவிலே தாலாட்டுவது.) எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி. (கேப்பை-கேழ்வரகு.) எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே. (யாழ்ப்பாண வழக்கு.) எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம். எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான். 5070 எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி. (பரிகாரி-வைத்தியன், பிணியாளி.) எத்தைத் தின்றால் பித்தம் தீரும்? எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான். எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும். எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன். 5075 எதார்த்த வாதி வெகுஜன விரோதி. (பொதுஜன விரோதி, மகாஜன துவேஷி.) எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு. எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும். 5080 எதிர் நீச்சம் போடுகிறான். எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு. எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே? எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு. எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம். 5085 எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம். எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா? (பேசுகிறதா?) எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா? எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம். 5090 எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல். எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது? எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்? 5095 எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர். எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது. எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம். எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது. எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன? 5100 எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது. எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும். எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? எந்தப் பொருளும் கந்த புராணத்திலே. (‘புளுகும்’ என்பது தவறான பாடம்.) எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்? 5105 எந்த மனசும் மைந்தனை வெறுக்குமா? எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு. எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான். எப்படியாவது என் கோயில் வாழ. எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய். 5110 எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது. எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி? எம்மதமும் சம்மதம். எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான். எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும். 5115 எமன் கடாவை ஏரில் பூட்டினது போல, எமன் கையில் அகப்பட்ட உயிர் போல, எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா? எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்? எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா? 5120 எமன் வாயிலிருந்து மீண்டது போல. (வந்தது போல.) எமனுக்கு வழி காட்டுவான். எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல. எமனையும் நமனையும் பலகாரம் செய்வான். எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான். 5125 எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்? எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே. (தீயில் வார்த்தாற் போல்.) எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல. 5130 எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். (இழுத்தால்.) எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல். எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா? எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா? (எண்ணெய் ஊற்றியது போல.) எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி. 5135 எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல. எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல. எரிகிற புண்ணில் புளி இட்டது போல. எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல. எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி. 5140 எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல். எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான். எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம். (எடுத்தது. ) எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல. 5145 எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்? எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல. எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா? எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை. எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது. 5150 எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல். எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே. எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல. எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம். (பயிர்.) எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை. 5155 எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான். எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல. எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா? எருக்குழியின்றி ஏர் பிடியாதே. எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும். 5160 எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு. எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான். எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம். எருதில் ஏழை உண்டா? எருதின் நோய் காக்கை அறியுமா? 5165 எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து. எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும். எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும். எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல. (தொழுவத்திலே-கொட்டகையிலே.) எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல. 5170 எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது? எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம். (உண்ணிக்கு நாக்கு வாங்குகிறதாம்.) எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும். எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும். எருதுக்குச் சூடு போட்டது போல. 5175 (எருமைக்கு.) எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா? எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி. எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும். எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய். எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய். 5180 (இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் ஏழே கடுக்காய், எட்டே கடுக்காய்.) எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான். எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல. எருது சுமந்தது; கோணி கொண்டது. எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும். எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா? 5185 (தோழம்-தொழுவம்.) எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா? எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா? எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்? எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? (காக்கை அறியுமா?) எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும். 5190 எருது பொதி சுமந்தாற் போல. எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல. எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது? எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா? எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல. 5195 எருப்போட்டு ஏர் இடு. எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே. எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா? எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்? எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம். 5200 எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய். (ஒரு பீர் பால் தா. கொடுக்காதா என்றானாம்.) எருமைக் கன்று அருமைக் கன்று. எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை. எருமைக்குச் சூடு போட்டது போல. எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா? 5205 எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும். எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது. (முறை.) எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா? (ஏற்குமா?) எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா? (எக்கியத்திற்கு.) எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல. 5210 எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும். எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும். எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல. (எருமைமேல்.) எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான். எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது. 5215 எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல. (கருத்து; அசுத்தம்.) எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல. எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான். (எரு முட்டை.) எருமை மூத்திரம் லேகியத்திற்கு ஆகுமா? (எக்கியத்திற்கு.) எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா? 5220 எருமை வாங்குமுன் ஏன் விலை கூறுகிறாய்? எருமை வாங்கும்முன் நெய் விலை பேசுகிறதா? பிள்ளை பெறுமுன் பெயர் வைக்கிறதா? எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறுகிறதா? எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல. எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல. 5225 எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும். எல்லப்ப செட்டி லக்க ஏக லக்க, (லக்க-கணக்கு.) எல்லா ஓட்டும் குல்லாவிலே. எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே. (எல்லா ஒட்டும்.) எல்லாம் அதிசயந்தான்; ஆக்குகிறது பூஜ்யந்தான். 5230 எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை. (ஏதும்.) எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறதா? எல்லாம் அறியாதவனும் இல்லை; யாதும் அறிந்தவனும் இல்லை. எல்லாம் இருக்கிறது பெட்டியிலே, இலைக்கறி கடையச் சட்டி இல்லை. (கீரை கடைய.) எல்லாம் ஈசல் செயல். 5235 எல்லாம் ஏறி இளைத்த குதிரையின்மேல் தம்பி பொற்பட்டம் கட்டிப் புறப்பட்டான். எல்லாம் களத்தின்மேல் விளைவு. எல்லாம் கிடக்க எருதுக்குச் சீமந்தமாம். எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன? எல்லாம் கிடக்கக் கிழவனைத் தூக்கி மணையில் வைத்தாளாம். 5240 எல்லாம் சரி என்று எண்ணலாமா? எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான். எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி. (காடிப் பானையில்.) எல்லாம் தபோபலத்தால் கைகூடும். எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை. 5245 (நிமிர்த்தி.) எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது. எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது. (ஒன்று.) எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன். எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான். எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து. 5250 எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை. எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும். (எல்லாவற்றுக்கும்.) எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது. எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல. எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம். 5255 எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்? எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான். எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான். எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம். எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம். 5260 எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள். எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள். எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான். (சிரட்டை-கொட்டங்கச்சி.) எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார். எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார். 5265 எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள். (நாமம்.) எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள். எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான். எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம். எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள். 5270 எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா? (மனிதர் எல்லாம்.) எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம். எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்? எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்? (பல்லக்கை யார் தூக்குவார்கள்.) எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு. 5275 எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான். எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம். எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும். எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு. எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள். 5280 எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல, எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை. எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான். எல்லி செட்டி லக்க ஏக லக்க. (லக்க - கணக்கு.) எல்லை கடந்தால் தொல்லை. 5285 எல்லை சுற்றின பிடாரி மாதிரி. எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார். எலக்ட்ரியை நம்பி இலை போடாதே. (எலக்ட்ரி-மின்சாரம்.) எலி அம்மணத்தோடே போகிறது என்கிறான். எலி அழுது புலம்பினாலும் பூனை விட்டுவிடுமா? 5290 (பூனை பிடித்து விடாது.) எலி அறுக்கும்; தூக்க மாட்டாது. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். எலி எட்டப் பாம்பு குடிகொள்ள. எலிக்கு அஞ்சிச் சந்நியாசம் போனது போல. எலிக்கு அஞ்சுவான்; புலிக்கு அஞ்சானாம். 5295 எலிக்கு அநுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளியார்க்கு அநுகூலம் வலியார் அரசனுக்கு அஞ்சுதல். எலிக்கு இரணம்; பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குத் திண்டாட்டம்; பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல. (வீட்டில் தீ வைத்தது போல, வீட்டைக் கொளுத்தியது போல.) எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம். 5300 எலிக்குப் பூனை பயப்படுமா? எலிக்கு மணியம், சுவரை அறுக்கிறது. எலிக்கு வலி, பூனைக்குக் கொண்டாட்டம். எலி கடித்தால் சிறுபாலை அடி. (செருப்பாலே அடி.) எலி தலையிலே கோடரி விழுந்தது போல. 5305 எலி தலையிலே கோபுரம் இடிந்து விழுந்தது போல. எலிப் பகை தொலைக்க, இருந்த வீட்டில் தீயிடல் போல. எலிப் பாழாக இருந்தாலும் தனிப் பாழாக இருக்க வேண்டும். எலிப் புழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந்தென்ன? எலி பூனைக்குச் சலாம் போடுவது போல. 5310 எலி பூனைய வெல்லுமா? எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா? எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார். எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும். (சிறங்கை-சிறு அங்கை.) எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல. 5315 எலியும் பூனையும் போல. எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா? எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ? எலியைத் தவற விட்ட பூனை போல. எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்? 5320 எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும். எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல. எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான். எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும். எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல். 5325 எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா? (வேட்டைக்குத் தவில் அடிப்பா?) எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும். (எல்லாப் பக்கமும் பேசும்; எப்படி வேண்டுமானாலும் பேசும்.) எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்? எலும்பு ருசியை நாய்தான் அறியும்? 5330 எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்? (இருந்த பல்லும்.) எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான். எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல. எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல. எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம். 5335 எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும். எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும். எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று. எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா? எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம். 5340 எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்? எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே! எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று. எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி. எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை. 5345 (எறிவான்.) எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை. (கிழித்து.) எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல. எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன். எழுத்து எண்ணிப் படித்தவன். எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர். 5350 (உதட்டுக்குப் பால் மாறிய வருத்தம் அடைவர், செட்டி நாட்டு வழக்கு.) எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான். எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம். எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும். எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல். 5355 எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம். எழுதிய விதி அழுதால் திருமா? எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான். எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல. 5360 எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல. எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது. எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை. எழுந்ததும் தொழு; தொழுததும் படு. எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க. 5365 எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள். எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை, எழுந்திருப்பான்; கால் இல்லை. எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில். (பழமொழி நானூறு.) எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும். 5370 எழுபது பேரைக் கொன்ற படுநீலி. (நீலி கதை.) எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது. எள் உருண்டை போல. (சிறுமை.) எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான். எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான். 5375 எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு. (யாழ்ப்பாண வழக்கு) எள் போட்டால் எள் விழாது. எள் விதைத்த காட்டில் கொள் முளையாது. எள் விதைத்தால் துவரை விளையுமா? எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே! 5380 எள் விழுந்தால் கீழே விழாது. எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை. எள்ளுக்காய் பிளந்த விவகாரம். எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும். எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல. 5385 எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர் செய். எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு. எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு. (எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.) எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும். எள்ளுக்குள் எண்ணெய் போல. 5390 எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும். (எண்ணெய் போல.) எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி. எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள். எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம். எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும். 5395 (எள்ளைத் தின்றால்.) எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய். எள்ளுப் பயிருக்கு எழுபது நாள். எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது. (விழாது.) எள்ளும் அரிசியும் கலந்தாற் போல. எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும். 5400 எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம். எள்ளும் கொள்ளும் எழுபது நாள். எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான். எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான். எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன். 5405 (முகம் கழுவினேன்.) எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும். எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல். எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும். எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு. எள்ளுள் எண்ணெய் போல். 5410 எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான். எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல. எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல. (பங்கு வைப்பது போல.) எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும். எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி. 5415 எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது, எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம். எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான். (அடிக்கிறான்.) எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான். எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி. 5420 (கொள்ளலாமா?) எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும். எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும். (அடித்தால்.) எற்று சால் எண்ணாயிரம் பொன். (விநாயகர் கணக்குப் பிள்ளையாக வந்து மன்னனிடம் சொன்னது, ) எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு. எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா? 5425 எறிந்த கல் விழுகிற மட்டும். எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல. எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா? எறிவானேன்? சொறிவானேன்? எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது. 5430 எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா? எறும்பு இட்டலியைத் தூக்கியது போல. எறும்பு ஊர்வது போல. எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். எறும்பு ஊரக் கல்லும் தேயும். 5435 (கற்குழியும்.) எறும்பு ஊரில் பெரும்புயல் வரும். எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா? எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி. (தண்டலையார் சதகம்.) எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும். எறும்புக் கடிக்கு மருந்தா? 5440 எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம். எறும்புக்குத் தெரியாத கரும்பா? எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம். எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல். எறும்பு கடிக்கப் பொறுக்காதா?. 5445 எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும். எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம். எறும்பு தின்றால் நூறு வயசு. எறும்பு நுழைந்த ஆனைக் காது போல. எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். 5450 எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல. எறும்பும் தன் கையால் எண் சாண். எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும். எறும்பு முதல் ஆனை வரையில். என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று. 5455 என் கிண்டி லட்சம் பொன். என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும். என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. என் கை பூப்பறிக்கப் போகுமா? என் கையிலே எலும்பு இல்லையா? 5460 என் கை வெல்லம் தின்கிறதா? என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்? என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு. என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன். என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே. 5465 (என் பவிஷூ, என் பேச்சு.) என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும். என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை. என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள். என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள். என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார். 5470 (வளர்த்தாள்.) என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள். என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய். என் முகத்தில் கரி தடவாதே. (சாணி பூசாதே.) என் முகத்தில் கரி பூசினாயே! என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை. 5475 என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது. என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன். என் வயிற்றிலே பாலை வார்த்தாய். என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு. என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? 5480 என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ். என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள். என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை. என்றும் காய்க்கும் எலுமிச்சை. என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம். என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான். என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே. என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும். என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே. என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது? 5490 (போடுகிறவளுக்கு.) என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே! (சின்னமலைக் கவுண்டன் கொங்குநாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்தவன்.) என்ன சொன்னாலும் என் புத்தி போகாது. என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம். என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்? என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய். 5495 என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான். என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்? என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம். என்னடா பிரம்ம வித்தையோ? என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது. 5500 என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம். என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும். (செரிக்கும்.) என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை. என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை. என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா! 5505 (ஆண்டவனே!) என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது. என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம். என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே? என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி. என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம். 5510 என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்? என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம். என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான். (கேடு கெட்டவன்.) என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை. என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு. 5515 என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி. என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன். என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய். என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன். 5520 (விடுவான்.) என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை. (அழகு.) என்னை நம்பாதே, தாலி வாங்காதே. என்னைப் பவிஷு ஆற்றுகிறான். என்னைப் பார் என் மேனி அழகைப் பார். என்னைப் போலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை. 5525 என்னையும் பார்த்து இரவல் கேட்கிறதா? என்னை விடைந்தால் உன்னை விடைவேன்; அம்மலாமா? எனக்கா கல்யாணம் என்றானாம். எனக்கு அஷ்டமத்துச் சனி. எனக்கு ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. 5530 எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஓர் அடி அடிக்கலாம். எனக்குக் கட்டின லிங்கத்தைக் குழிப்பாக்கு விளையாடுவேன். எனக்குக் கொடுக்கிறதைக் கொடுத்தால் போகிறேன். எனக்குப் பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன். எனக்குப் பாக்குப் பிடிக்கப் பார்க்கிறான். 5535 எனக்கு வேண்டாம் பூசணிக்காய். எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின. ஏ ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம். (ஏ ஊர்-எந்த ஊர், தெலுங்கு.) ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே. (கெட்டவனே.) ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள். 5540 ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல். ஏகாதசிக்கு மா இடித்தாற் போல. ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை. ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை. 5545 ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம். ஏகாதசி மரணம், துவாதசி தகனம். ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா? ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை. ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா? 5550 ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல. ஏகாக்ஷி லோக நாசினி. ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி. எச்சிலும் பேச்சிலும் வல்லவனே. 5555 ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு. ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை. ஏட்டிக்குப் போட்டி, ஏணிக்குக் கோணி. ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது. ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா? 5560 (தித்திக்குமா?) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? (கூட்டுக்கு.) ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ? ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான். (வழி எங்கே? போகிறவன் தலைமேலே.) ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான். ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன். 5565 ஏடு அறியாதவன் பீடு பெறாதவன். (அறியான், பெறான்.) ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம். ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி. ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான். ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? 5570 ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான். ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான். ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா. ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா? 5575 ஏணிக்குக் கோணி. ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும். ஏணிக் கொம்புக்கு எதிர்க் கொம்பு போடலாமா? ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா? (ஏணிக் கழிக்கு.) ஏணி, தோணி, வாத்தியார், நாரத்தங்காய். 5580 (அண்ணாவி.) ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா? ஏணி வைத்தாலும் எட்டாது. ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா? ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல். (தேவாரம்.) எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. 5585 ஏதுக்கு வீணும் சாணும். ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா. ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி? ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம். ஏந்தாழை என்றால் கோந்தாழை. 5590 ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம். ஏமாந்த சோணகிரி. ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை. ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். (மேய்த்தால்.) ஏர் அற்றவன் இரப்பாளி. 5595 ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும். ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது. ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர். ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும். (மச்சான் முறை.) ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா? 5600 ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று. ஏர் நடந்தால் பேர் நடக்கும். ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம். ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம். ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான். 5605 ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும். ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும். ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா? ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான். (பிட்டம்.) ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை. 5610 ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம். ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம். ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது. (ஏரி-திமில்.) ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும். ஏரி நிறைந்தால் கரை கசியும். 5615 (நீர் கசியும்.) ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது. (கட்டுதல், உடைத்தல்.) ஏரி பெருகில் எங்கும் பெருக்கு. ஏரி மடை என்றால் நோரி மழை. ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது. (மதியாது.) ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள். 5620 (போனால் ஏரியா நாறும்.) ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா? (ஏரியை மதியாது.) ஏரியோ தண்ணீர், சூரிய தேவா. ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ? ஏரை இழந்தார் பேரை இழந்தார். (இழந்தாயோ, இழந்தாய்.) ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம். 5625 ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல. ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும். (பணம், எங்கே போனாலும்.) ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது. ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும். ஏவா மக்கள் மூவா மருந்து. 5630 ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; இயற்றுகிறவனுக்குத் தலைச்சுமை. (செய்கிறவனுக்கு.) ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை. ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள். (உள்ளே வைத்தாலும், தாழறை வழியே சோரம் போவாள்.) ஏழாம் பொருத்தம். ஏழாயிரம் பொன் பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம். 5635 ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம். ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல். எழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை. ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார். ஏழு ஊருக்கு ஒரு கொல்லன். 5640 (குறுந்தொகை.) ஏழு ஊருக்கு ஒரு தட்டான். ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும். ஏழுமலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது. ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும். ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். 5645 ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும். ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ? ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே. ஏழை என்றால் எவர்க்கும் எளிது. ஏழை என்றால் மோழையும் பாயும். 5650 ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு. ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை. ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம். ஏழைக்குத் தெய்வமே துணை. (தண்டலையார் சதகம்.) ஏழைக்கும் மோழைக்கும் இடுதேள் பட்டேனே. 5655 ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை. (காடுகாள்-துர்க்கை.) ஏழைக்கு வாழை. ஏழைக் குறும்பு. ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது. ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே. 5660 ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான். ஏழை சொல் அம்பலம் ஏறாது. ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல். ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை. ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. 5665 (இறைவனே.) ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா? (வேண்டும்.) ஏழை பேச்சு அம்பலம் பாயுமா? ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல. ஏழை வீட்டில் சனீசுவரன் புகுந்த மாதிரி. 5670 ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல். ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன். ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி? ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி. (துர்ப்பிணி, துர்க்குணி.) ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம். 5675 ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம். (அழகேலம்.) ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி. ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம். ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை. ஏற்பது இகழ்ச்சி. 5680 ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும். ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம். ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம். ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும். ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. 5685 ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு. (வேண்டும்.) ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும். (சாணானாய்ப் பிறக்க வேண்டும்.) ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம். (நொண்டிக்குக் கோபம்.) ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம். 5690 ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம். (முடியாத, எண்ணாயிரங்காய்.) ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை. ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய். ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா! (வாங்கினாற் போல்.) ஏறாத வார்த்தை வசமாகுமா? 5695 ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும். ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல. ஏறா மேடும் பாயாத் தண்ணீரும். ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய். ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும். 5700 ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல. ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி. ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா? ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல். (செட்டி நாட்டு வழக்கு.) ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம். 5705 (மொண்டிக்கு.) ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம். (இறங்கினால் குற்றம்.) ஏறுகிற குதிரைக்கு எருதே மேல். ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம். ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்? (பிட்டத்தை.) ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. 5710 ஏறும் தேமல், இறங்கும் தேமல். ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும். ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல. (ஏறா மடைக்கு.) ஏறு மாறாய்ப் பேசுகிறதா? ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். 5715 ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது. ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல? ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை. ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான். 5720 ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான். ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான். ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா? ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம். 5725 ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம். ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே. ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி. ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே? ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல். 5730 (சோர்ந்திருக்கிறாய்.) ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம். ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை. ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை. (எடுத்துப் பார்ப்பாரும்.) ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை. (பார்ப்பாரும்.) ஏன் கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால எல்லாரும் சுகந்தான். 5735 (தண்டலையார் சதகம்.) ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம். ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன். ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன். ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல். ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம். 5740 (கண்டாளாம்; பிடித்தாளாம்.) ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி, ஏனோ தானோ எவனோ செத்தான். ஏனோ தானோ என்றிருத்தல். ஐ ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி. ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை. 5745 (ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.) ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக் காசு. ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன்தானே வரும்? ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது. ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்க்கு. 5750 (தன் காரம்.) ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாது பேய்ச் சுரைக்காய். ஐதது நெல்லு; அடர்ந்தது சுற்றம். ஐதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும்; ஐதர் காலம். ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை. 5755 ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு. ஐந்து வயதில் ஆதியை ஓது. ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாறு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர். ஐந்து விரலும் ஐந்து கன்னக்கோல். ஐந்து விரலும் ஒன்று போல இருக்குமா? 5760 ஐந்துாரான் புஞ்சை போல. ஐப்பசி அடை மழை; கார்த்திகை கடு மழை. ஐப்பசி அழுகல் தூற்றல். ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி. ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை. 5765 ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி. ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி. ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம். ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது. ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு. 5770 (கைப்பாதி கொண்டு.) ஐம்பசிப் பணி அத்தனையும் மழை. (அப்போதே மழை.) ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும். ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும். ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி. ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும். 5775 (பயன் இல்லை.) ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து. ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும். ஐப்பசி மாதம் அடை மழை. ஐப்பசி மாதம் அழுகைத் துாற்றல்; கார்த்திகை மாதம் கனத்த மழை. (அழுகல் தூற்றல்; அடை மழை.) ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை. 5780 ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை. ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை. ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை. ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை. (நாஞ்சில் வழக்கு.) ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம். 5785 (அருக்கோலை கட்டி.) ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா? ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது. ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி. ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா? 5790 ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்? ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார். (ஐயங்கார்-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.) ஐயங்காரும் தத்துக் கொடுப்பார். (தொத்து.) ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன். ஐயப்பட்டால் பைய நட. 5795 ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல. (விட்ட கதை.) ஐயப்பா கையை விடு. ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது. ஐயம் உண்டானால் பயம் உண்டு. ஐயம் ஏற்றும் அறிவே ஓது. 5800 ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை. ஐயம்பேட்டைத் துலுக்கன் போல். (வலுச்சண்டைக்கு வருவான்.) ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள். ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான். ஐயர் உருள; அம்மை திரள. 5805 ஐயர் என்பவர் துய்யர் ஆவர். ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை. ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும். ஐயர் பாதி, அரண்மனை பாதி. (புதுக்கோட்டையில்.) ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? 5810 ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது. ஐயன் அளந்த படி. ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ? ஐயனார் கோயில் ஆனையைப் போல. 5815 ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி. (தெய்வம்.) ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி. (அடிமண்ணை மிதித்தவர், அத்தனை பேரும் பிடாரி.) ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும். ஐயனார் படையில் குயவனார் பட்டது போல. ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும். 5820 ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள். ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல. ஐயாசாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு. (ஐயாத்துரைக்கு.) ஐயா சொல்படி காலைக் கிளப்படி. ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு. 5825 ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே. (கொட்டு முழக்கு.) ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு. ஐயா நாளிலே அம்மா மூடு பல்லக்கு ஏறினாள். ஐயா நூற்பது அம்பியின் அரைஞாண் கயிற்றுக்கும் ஆகாது. ஐயா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும். 5830 ஐயாவுக்கு வித்தை இல்லை; அம்மாளுக்குக் கர்வம் இல்லை. ஐயா வீட்டுக் கூழுக்கு அப்பணையங்கார்த் தாதாவா? ஐயாவைத் தவிர ஆனைதாண்டவ புரத்தார் அத்தனை பேரும் அயோக்கியர்கள். ஐயா வையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா? ஐயைந்தில் பிறத்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும். 5835 ஐயோ என்றால் ஆறு மாசத்துப் பாவம் சுற்றும். ஐயோ பாவ மென்றால் கையோடே. ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி, கி.வா.ஜ. இவர் 11.4.1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை வாசுதேவ ஐயர், தாயார் பார்வதி அம்மாள். இவர் பள்ளியில் படிக்கும்போதே ‘விவேக சிந்தாமணி’ பாடல்களை மனப்பாடம் செய்து, அதற்கு அர்த்தம் சொல்லுவார். அந்தப் பருவத்திலேயே இவர் மேலும் சில தமிழ்ப் புத்தகங்களை வாங்கி, மனப்பாடம் செய்து விட்டு, தானும் அதேபோல் பாடல்களை எழுதி விடுவாராம். இந்த ஆற்றலால் ரெயிலில் போய்வரும் போது கூட ரெயில் ஓட்டத்தின் குதியோசைக்கு ஏற்ப ஏதாவது பாடிக் கொண்டே இருப்பாராம். இவரது கன்னி முயற்சியில் உருவானது. ‘போற்றிப் பந்து’ என்னும் பதிகம். வடுவூர் துரைசாமி ஐயங்கார் நடத்தி வந்த ‘ஒற்றுமை’ பத்திரிகையில் அது வெளியானது. 1927-ல் இவர் மகாவித்துவான் உ.வே. சுவாமிநாத ஐயரிடம் மாணாக்கராகச் சேர்ந்தார். 1933-ல் இவர் ‘வித்துவான்’ பட்டம் 1949-ல், காஞ்சி மஹா சுவாமிகள் இவருக்கு ‘திருமுருகாற்றுப்படை அரசு’ என்ற பட்டத்தையும், 1951-ல் ‘வாகீச கலாநிதி’ என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்.1982-ம் ஆண்டு ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவுப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியம் சமயம் ஆகிய இரு துறைகளிலும் உரையாற்றுவதில் வல்லவர், நூற்றுக் கணக்கான தமிழ் நூல்களை எழுதிய இவர் 4.11.1988-ம் ஆண்டு தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டார். இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Info-farmer The employee kaniyam Sasi kaniyam TNSE Mahalingam VNR Pavithra Kannan Aarlin Raj A Sridhar G TVA ARUN 2405:204:5123:8F3D:CCBE:73E8:EA5E:1272 2409:4072:6018:3BF5:6419:362:89D3:9710 2401:4900:258B:45CA:0:5F:843A:1F01 Balajijagadesh 223.182.240.153 Ayyan Vadivel Rajendran Nallathambi Manikandan Nagaraj R Neyakkoo Deepa arul * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html