அமிழ்தின் ஊற்று புலவர் த. கோவேந்தன் 1955 8 அக்டோபர், 2020 அன்று விக்கிமூலத்தில் இருந்து பதிவிறக்கப்பட்டது உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. *** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. *** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. அமிழ்தின் ஊற்று த. கோவேந்தன் கவிமனை சைதாப்பேட்டை வேலூர்  முதற்பதிப்பு அக்டோபர் 1955 விலை: அணா மூன்று விற்பனை உரிமை: மக்கள் மன்றம் 38, சாமிபண்டாரம் தெரு, சென்னை-2. முன்னுரை "தொகைபோட் டுவாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்ணு றங்காய்" ---புரட்சிக் கவிஞர் ⁠அரிய இனிய இரண்டன் புளத்தின் காதல் வானிலே வாழ்வுப் பயிர் நிலைக்கப் பொழியும் செல்வமே குழந்தை யமிழ்து. அதன் இன்பமும் பயனும் அன்பும் அருமை மிக்கது! பெருமைக்குரியது!-குழந்தைகளைப் பற்றிப் பாடாத கவிஞர்களே கிடையாது! அவர் தம் சிறு சிறு விளயாட் டும், சிரிப்பும், மழலையும், அழுகையும், நடத்தலும், பேசலும் பாடலும, உள்ளத்தில் உணர்வோவியமாகின்றது. அந்த உணர்வோவியத்தின் சிறு கலையோவியமே இக்கவியோவியம்! அன்பு த. கோவேந்தன் உள்ளடக்கம் வாழ்த்து நீ யார்? தவழ்தல் மழலை கண்ணுறங்காய் அழுகை சிரிப்பு கொட்டு! முத்தம் வருகை ! கதை! சிறு பறை! சிற்றில் சிதைத்தல் ! சிறு தேர் வாழ்த்து ஆண்பெண்ணின் அகவ ரங்கின் அற்புதக் கனவில் கூடி, மாண்புடன் காதல் படி, மகிழ்வலை நடன மாடி, காணமில் கதைய மைப்பில் நவரசம் கூட்டிக் காட்டி, விணையின் பொன்னி சைபோல் வெளிவந்த குழந்தாய் வாழ்க! மனிதமா இனத்தில் இன்பம் மாமழை பொழிந்து வாழ்வில் இனிதான செல்வ மெல்லாம் இசைததமிழ எனவ ளர்த்துப் புனிதமா ஞானப் பைங்கூழ் புதையாது காட்டும் அன்பே! தனித்தொளிர் காதற் பாட்டின் தண்மனப் பெட்ட கம்! வாழ்கநீ இரண்டு ளத்தேன் வார்த்திடும வாழ்க்கைப் பாட்டே! வாழ்கநீ மனிதர்க் கிங்கு மகிழ்தருஉம் அமுத வானே ! வாழ்கநீ உலகிற் இங்கோர்! உறுதியை வழங்கும் பாலே! வாழ்கநீ குடும்பங் காண வளர்ந்திடும் குலவிளக்கே! நீ யார்? புதிதான் உணர்ச்சி வானில் பூத்திட்ட சோதிப் புள்நீ ! புதிதான் எண்ண யாழில் புதைந்தெழும் இசை மணம்நீ! புதிதான் இதயப் பாட்டில் பொருள்நிறைக் காவி யம்நீ! புதிதான் அனுப வத்தில் புகழ்தரும் உண்மை யும்நீ!  கண்ணீரும் புன்சி ரிப்பும் கண்டஓர் அற்பு தம்நீ ! எண்ணங்கள் ஒன்று கூடி எடுத்தஓர் பொற்கோ யில்நீ! மண்ணுெடு விண்க லந்து மணந்திடும் அழுத மும்நீ! பெண்ணுெடிங் காண்க லந்து பெற்ற ஒர்செல்வ மும்நீ! ஊழுழி கனவார் வத்தில் உயிர் பெற்ற சிற்பக் காநீ ஊழுழி செயலார் வத்தில் உருப்பெற்ற தூய்த மிழ்நீ! ஊழுழி இதயார் வத்தில் ஓங்கிய மழைமின் னல்நீ! ஊழுழி, அன்பார் வத்தில் உலவிய காதற் பாநீ! தவழ்தல் இருமனக் கனவில் வந்து தவழ்கனை: எண்ணப் பாலை அருந்தினை அழகை யுண்டிங் கரும்பினை; பத்துத் திங்கள் இருட்கடல் கடந்து வந்தாய் ! இன்பத்தை என்ன சொல்வேன்? இருந்தமிழ்த் தேனே! வானே! என்னிடம் தவழ்ந்து வாராய்!  இதயததில் தவழ்ந்தாய் தாயின் எழில்நகில் தவழ்ந்தாய் உள்ளம் புதிதான் உணர்வு பொங்க புரண்டாய்என் மார்பின் மீது! சதகோடி இன்பஞ் சேர்க்கும் தமிழ்வடி வான கண்ணே முதலிரா காத லின்ப முகங்காட்டித் தவழ்ந்து வாராய்! கற்பனைக் கவிதை ஏட்டில் கலத்தலாய் தவழ்ந்து வாராய்! பொற்கதிர் கடலில் நீந்திப் பூரிக்கும் கனவாய் வாராய்! கற்சுவர் ஒவி யத்தின் கலையெனத் தவழ்ந்து வாராய்! அற்புதத் தென்றல் பண்ணின் அலையெனத் தவழ்ந்து வாராய்! மழலை உயர்மலை அருவிக் கூத்தின் ஒருகாதல் அமுதப் பாட்டும் நயமிகு வேய்ங்கு ழல்தன் நவநவ கனவுப் பாட்டும் துயரமா உலக மிக்கும் தூய்தமிழ் விணைப் பாட்டும் மயல்தரூஉம் டிமலைக் கிங்கே இணையிலை குல்வா போநீ!  மண்ணுல கின்ப மெல்லாம் மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே. விண்ணெலாம் தோற்க; இன்பப் பழச்சுவை எலாம் ஒதுங்க விண்ணுலா புள்ளி னத்தின் விழைமன இசை மறக்க எண்ணிலா மழ்லைப் பேச்சில் இணைத்தனை இசைமின் சோதி! நினதெழில் மழலை ஞாலம் நிறைந்திடும் புளக மூட்டும்! நினதுயிர் மழலை விண்ணில் நிறைந்திடும் கால் மணக்கும் நினதுயிர் மழலை, கல்லை நிகரிலா தங்க மாக்கும்! நிணதொளிக் கனவில் வாழ நிதமும்நீ மிழலை தாராய்!  மண்ணுல கின்ப மெல்லாம் மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே. விண்ணெலாம் தோற்க; இன்பப் பழச்சுவை எலாம் ஒதுங்க விண்ணுலா புள்ளி னத்தின் விழைமன இசை மறக்க எண்ணிலா மழ்லைப் பேச்சில் இணைத்தனை இசைமின் சோதி! நினதெழில் மழலை ஞாலம் நிறைந்திடும் புளக மூட்டும்! நினதுயிர் மழலை விண்ணில் நிறைந்திடும் கால் மணக்கும் நினதுயிர் மழலை, கல்லை நிகரிலா தங்க மாக்கும்! நிணதொளிக் கனவில் வாழ நிதமும்நீ மிழலை தாராய்! கண்ணுறங்காய் குலாலம் பேச வந்த கொல்வேறே வீரத் தோளே ! குலகலம் காட்ட வந்த குணக்குன்றே பண்பு யிர்ப்பே ! குலநலம் செழிக்க வந்த செந்தமிழ்க் கூத்தே ! சான்றே ! குலகலம் காட்டி வெற்றி கூட்டினை கண்ணு றங்காய்!  கண்மலர் தேன்சிட் டைப்போல் களிப்புடன் சிறக டித்து மண்மலர் காட்டர் இன்பம் மனத்திலே கூட்டிற் றன்பே ! விண்மலர்ச் சிரிப்பும் ஒப்போ! வியப்படா கண்ண ரும்பு! பண்மலர் தநதாய் போதும் பாசமே கண்ணு றங்காய்! மண்ணுல கின்பக் தந்தாய் மானுடன் அமர னுனேன் விண்ணுல கின்ப மெல்லாம் விணடா உன்அன் பின்முன் எண்ணுல கின்பக் காட்சி இருவிழி. மூடிக் காண்பாய் பெண்ணுல கிருந்து வந்த பெரும்பேறே கண்ணு றங்காய் ! அழுகை வாகனத் தேனை யுண்டு வையகம் வாழும்; நின்றன் ஊனகத் தன்பும் பண்பும் உயிர்வளர் எழிலும் என்றன் ஞானகம் உண்டு வாழும் நலம்பல கண்டேன்; இந்நாள் தேனகம் வருந்து வானேன் சேதிசொல் அழாதே டாநீ!  செழித்தெழும் பயிர்க்கு லத்தைச் சிதைத்திடும் பூச்சி யைப்போல் செழிந்திருநி துயர்வு கொண்ட திராவிடர் நாட்டில் மேளுள் கழிசடை ஆரி யர்கள் கலந்தபாம் தீமை எண்ணி அமுதனை போலும்; வேண்டாம் ஆரியம் அழுத லைப்பார். முப்பாலைத் தொட்டி லாக்கி முத்தமிழ் மஞ்சம் வேய்ந்திங் கெப்பாங்கும் புறஅ கத்தின் எழில்மணிக் கவி இழைத்துக் கப்புகழ் பத்துப் பாட்டின் காட்சியைத் தொங்க விட்டேன் அற்புதக் கலித்தொ கைப்பால் அளித்தேன்நான் அழாதே டாநீ! சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் நாங்கள் இருவரும் மெய்ம்ம றந்து கயனத்தின் பாசக் கூத்தால் நலங்காண உளமி ரண்டும் பயின்றன தமிழின் காதல்! பண்பட்ட காதல் வாழ்வின் பயனுக வந்த கண்ணே பவளவாய்ச் சிரிப்பைக காட்டாய்! முத்தெழிற் காட்சி கொல்லோ! மோகன முல்லைப் பாட்டோ ! புத்தெழில் நிலாப் புகுந்து புறப்படும் கனவும் ஈதோ ! தித்திக்கும் மின்னல் ஆமோ! தண்டலை மயில்அ ரும்போ ! முத்தமிழ்ச்செல்வா நின்றன் பாற்கடல் முறல் காட்டாய் ! உன்அன்னை மேனுள் காதல் உளங்கவர் சிரிப்பை ஈங்காள் நன்றென்று காதல் கொண்டேன். ஐம்புல நலன்க ளெல்லரம் கொண்டுட்டும் போதும், பின்னைல் குடிதாங்கி மகிழ்ந்த போதும் உணமையில் உன்சி ரிப்பைக் காண்கிலேன் சிரிப்பாய் கண்ணே!  கொட்டு! தேனலை துளும்பும் அல்லி தூயமு திதம்தி றந்து மீனலைக் குமின்சி ரிப்பைக் கொட்டுவை மின்னல் தோற்கும்! வானக நிலவோ வாயுள் பாலொளிக் கலைவ ளர்க்கும் ! ஞானப்ப்பொன். கவிபோல் பாடி களிர்மலர்க்கரங்கள் கோட்டு !  புதையுண்ட வைரச் சிற்பம் புத்தெழில் பெற்ற தைப்போல் புதைந்திட்ட காதல் உள்ளப் பூரிப்பில் பிறந்த பொன்னே ! மதுவூறும் உணர்ச்சிப் பொய்கை மாறிய வடிவம் நீயோ ? புதுவான வில்போல் குந்தி பொங்கிரீகரங்கள் கொட்டு! வாழ்க்கையைப் பாட லாக்கி வகைவகைத் தாளங் கொட்டு ! வாழ்க்கையைப் பண்ப டுத்த வள்ளுவன் முப்பால் கூட்டி வாழ்க்கையை இன்ப மாக்க வன்னக்கை இரண்டும் கொண்டு! வாழ்க்கையை வீணை யாக்கி வாரிசை முழங்கக் கொட்டு! முத்தம். எழிலோ டெழில்க டந்த இன்பமா எழிற்பே ராழி ! அழியாது காதல் வாழ்வில் அற்புத வடிவாய் வந்தாய் ! கொழித்திடும் அமுத வெள்ளம் முக்கனி குளிர்தேன் கன்னல் வழிந்திட இன்ப முத்தம் தந்திட வாராய் செல்வா!  இளந்தளிர் பாம்கை நிட்டி தாமரை முகத்தில் வானின் வளர்மதி பொட்ட ஈந்தாய் வண்டமிழ் மமலை ஈந்தாய் அளவிலா ஆடல் காட்டி ஆரமு தோவி யம்போல் உளத்திலே உவகை பெய்தாய் ஒருமுத்தம் தாடா கண்ணே ! ஐம்புல இன்பந தன்னை உன்அன்னைகதாள்; அந்த ஐம்புல இனபங் தோற்க ஆருயிர் செல்வ மேஉன் பைம்புனல் மேனி நாளும் பாய்ச்சுதே இனபங் கோடி! கைம்மலர் தொட்டனைததுக் கவிமுத்தம் தாராய் வாழ்வே! வருகை ! கண்ணிலே பிறந்து காதற் கருத்திலே செயல் கனிந்து பெண்ணஇவளர்ந்து பீன்னர் பேச்சிலே தாம் குழைத்து மணணிலே தவழ்ந்தாய் எங்கள் மனத்திலே மகிழ்வை யூட்டி என்னிலா ஆட்டம் ஆடும் இருவிழிப் பாவாய் வாராய்! ஆனந்தத் தோடுள் ளாழும்: ஆசையுள் மனிதர் காணும். ஆனந்தத் தெல்லை நியே! அறம்பொருள் இன்பம் கூட்டும் ஆனந்தத் துயர்வும் நீயே! அன்புல கெங்கும் கானும் ஆனந்தத் துயிர்ப்பும் நீயே ! அன்பிடைக் காப்பே! வாராய்! வாழ்வான தமிழே வாவா..! வாழ்வான அமுதே வாவா ! வாழ்வான கதிரே வாவா ! வாழ்வான நிலவே வாவா ! வாழ்வான உலகே வாவா! வாழ்வான சுகமே வாவா ! வாழ்வான பாட்டே வாவா ! வாழ்வான செல்வ மேவா!. கதை!  அழகினுக் கழகாய் மாளா அழிகினுக் கணியாய் வந்த பழந்தமிழ் நல்வி ருந்தே ! பல்கலைக் கூட்டு யிர்ப்பே ! இழைந்திடும் ஈருஉள் ளத்தின் வனப்பில்லை இணைந்த சீரே ! பிழையிலா உன்நெஞ் சத்தின் பெருங்கதை கூரு யோநீ!  அன்னையின் மடிஇ ருந்து வந்தனை அவள்உள் ளத்தே என்றுநீ புகுந்தாய் ? தந்தை இதயத்தில் உலவி ளுயோ ? என்னென்ன கண்டாய் ? அன்னைர் எழிலினை மாந்தி வந்தாய் ! மின்னிய உளங்கண் டாயோ மேலோனே கதையைச் சொல்லு ! உலகத்து மொழிக் ளெல்லாம் உன்னுடை மொழிக் ளன்ருே உலகத்துப் பொருள்க ளெல்லாம் உன்னுடை பொருள்க ளன்ருே உலகத்து உயிர்கள் எல்லாம் உன்னுடை உறவும் அன்ருே உலகத்து நாய கன்நீ உரையாயோ கதைகள் கோடி! சிறு பறை! எழுபிறப் பின்பங் கோடி இணைந்தநல் பண்பின் சான்றே ! விழுப்புணை அணியாய்க் கொண்ட வீரமாத் தமிழின் தூணே! இழிநிலை திராவி டத்தே ஏற்றினர் ஒருசார் கும்பல். ஒழித்திடு!புதுமை சேர்க்க சிறுபறை கொட்ட டாநீ! மூவேந்தர் ஆண்ட இந்த முத்தமிழ்த் திராவி டத்தே பாவேந்தர் கனவை எல்லாம் மெய்ப்பித்தார் பாங்கென் சொல்வேன் சாவேந்தும் ஆளி யர்கள் சஞ்சலச் சுனையாய்ச் செய்தார் கோவேந்தே! குடிவி ளங்க சிறுபறை கொட்ட டாநீ ! கல்தோன்றி மண்தோன் ருத காலத்தின் முன்பே தோன்றி, தொல்புகழ் வீரம் ; கல்வி ; தூய்தமிழ் ; வாழ்க்கை : செல்வம் எல்லையின் றிருந்த நாட்டில் ஏற்றினர் வஞ்ச னைத்தீ ! கொல்லேறே ! தமிழர் ஒங்க சிறுபறை கொட்ட டாநீ ! சிற்றில் சிதைத்தல் ! பூவாத தாம ரைக்கா புதுமலர் பேதைப் பெண்கள் நாவாரப் பாடி வீதி நாப்பணில் கனவார் வத்தைக் கோவாநல் இல்ல மாக்கிக் குடும்பத்தை நடத்து வார்கள் நோவாத இளம்நெஞ் சங்கள் நோந்திடும் ! சிதையேல் சிற்றில் !  குடும்பநல் விளக்கை ஏந்தி, குடித்தன முறையில் வெற்றி கொடுததிடும் துணைந லங்கள் ஆயமோ டுறவு கொண்டிங்(கு) எடுப்பார்கள், பிஞ்சுள் ளத்தில் இனிவ ரூஉம் வாழ்வில் லத்தை கொடுப்பவன் ; எடுப்ப வன்நீ! கொள்கைபோல் சிதையேல் சிற்றில் ! அழகினுக் கழகாய் ஆவி அள்ளிடும் மாணிக் கப்பொன் அழலினில் அமுதம் கொட்டி அமைத்திவண் உவமை இன்றி சுழன்றுலா பேதைச் சிற்ப கற்பகத் தோட்டத் துள்ளே நுழைந்துநீ சிதையேல் சிற்றில் நொந்திடும் அரும்பு நெஞ்சம் ! சிறு தேர் மாணிக்கச் சிற்பக் கூத்தில் வானத்து மீனி ழைத்துப் பானுவை மதியை ஒடும் உருளையின் பக்கம கூட்டி ஆணிப்பொன் குழமபைக் கொட்டி அற்புதக் கலைக்கோ யில்போல் காணிக்கை தந்தேன் கண்ணே ! சிறுதேரை உருட்டி வாராய் !  தங்கத்தின் குன்றெ டுத்துக் கைவல்ல தச்சன் ஞால மெங்கெங்கும் சிறந்து யர்ந்து மின்னிடும் வைரங் கூட்டி பொங்கிப்பல் கலைவ ளர்க்கும் புத்தொளிக் கல்லி ழைத்து மங்கையின் கனவாய் வந்த மணித்தேரை இழுத்து வாராய் ! பொங்கிடும் கடலுக் கப்பால் பொற்கன வாயி ரம்போல் மங்கல வாழ்த்துப்பாடி ஞாயிறு மகிழ்ந்தெ ழும்பும் இங்கந்தக் காட்சி தன்னை ஈருயிர் கலந்த வாழ்வே சங்கத்துத் தமிழாய்க் கண்டேன் தரளத்தேர் இழுத்து வாராய் ! * * * மான்விழி அச்சகம், சென்னை, 2. இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது[1]. இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: Abinaya Murthy TVA ARUN Arun kaniyam Arularasan. G Balajijagadesh Info-farmer * * * ↑ http://ta.wikisource.org ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ ↑ http://www.gnu.org/copyleft/fdl.html