[] 1. Cover 2. Table of contents எழு எழு   காமேஷ்   kameshvimala14@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - காமேஷ் - kameshvimala14@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/ezhu மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation எழு சிறுகதைகள் காமேஷ் கலை இலக்கியப் பிரிவு மாணவர் இலயோலா கல்லூரி நூலாசிரியர்: காமேஷ் முதல் பதிப்பு ஜனவரி 2023 பதிப்பாசிரியர்:பேரா.முனைவர் இரா. காளீஸ்வரன் வடிவமைப்பு: சூரியசந்திரன் ** வெளியீடு:மாற்று ஊடக மையம், 19B/F1, முனுசாமி தெரு, வெங்கடேஷ் நகர், விருகம்பாக்கம், சென்னை-600092 கைபேசி:9094799688 ** மின்னஞ்சல்: amctn10@gmail.com என்னுரை எழு என்னும் பெயர் கொண்ட இந்த சிறுகதை புத்தகம் உற்சாகத்தை ஊட்டும் உணவாகும் சமுதாயத்தில் மிக உயர்ந்தவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் சாதித்தவர்கள் இவை அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவைகளில் முக்கியமான ஒன்று புத்தகமும் ஆகும் நாம் புத்தகங்களை படிக்கும் போது நம்மை மறந்து புத்தகங்களின் உலகத்திற்கு செல்லும் போது அத்தகைய புத்தகங்கள் நம்மை மாற்றி நம் வாழ்க்கையே மாற்றுகின்றன என்று பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அந்த உணர்வை இந்த எழு என்னும் சிறுகதை புத்தகத்தை படிக்கும் போது நாம் கண்டிப்பாக உணர்வோம் இந்த எழு என்னும் புத்தகத்தில் 25 சிறுகதைகள் உள்ளன இந்த 25 சிறுகதை அனைத்தும் கற்பனையின் அடிப்படையில் உருவாகினவகைகள் கற்பனையில் உருவாகும் கதையும் ஒரு சிலர் வாழ்க்கையே கூட மாற்றும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் அவர்கள் தோல்வி நேரத்தில் ஆறுதல் மற்றும் உற்சாகம் ஓட்டும் விதமாக பயன் அளிக்கக்கூடிய ஒரு புத்தகம் (எழு) -காமேஷ் ஊர்க்காவலன் தடைகளை தட்டிக் கழிப்பதை விட தகர்த்து போடுவது தான் புத்திசாலித்தனம் கண்மணிப்பூர் என்ற ஒரு கிராமம் இருந்தது அந்த கிராமம் மலைப்பிரதேசம் மாலை நேரங்களில் சாலையில் காற்றுடன் மழை பெய்தால் மரங்கள் சாலையில் விழுவது வழக்கம் அனைவரும் அதை தகர்க்க எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் வேறு வழியாக சென்று விடுவார்கள், ஒருநாள் அந்த பகுதி தலைவர் திருமூர்த்தி இதைத்தொடர்ந்து பார்த்து கொண்டு இருந்தார் சாலையில் மரம் விழுந்த சில நாள் கழித்து அவர் அந்த சாலையை சுத்தம் செய்வார். ஒருநாள் அவர் ஒரு தீர்மானம் எடுத்தார் இந்த ஊரில் தடைகளை தகர்க்கும் ஒரு வாலிபனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, தனது பல நாள் கனவை ஒரு தீர்மானமாக எடுத்தார். மரம் விழுந்த அந்த சாலையை சுத்தம் செய்து விட்டு அவர் நினைத்தபடி ஒரு வீர வாலிபனை தேர்ந்தெடுத்து அந்த ஊர் காவலன் என்று அறிவிக்க வேண்டும் என்றார். ஆனால் அதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் திருமூர்த்தி செயல்பட தொடங்கினார். திருமூர்த்தி தன் வேலைக்காரனை அழைத்து மக்கள் நடக்கிற பாதையில் ஒரு பாரையை வைக்க சொன்னார் அந்த வேலைக்காரன் அப்படியே செய்தான். திருமூர்த்தி இப்பொழுது பார்க்க தொடங்கினார் அந்த கல்லை யார் தகர்த்துப் போடுகிறார்கள் என்று, சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் அந்த கல் அங்கே தான் இருந்தது, ஏழு நாள் கழித்து வந்து பார்த்தால் அந்த கல் அங்கே தான் இருந்தது, யாரும் அதை தகர்த்து போடவில்லை அனைவரும் அதை தாண்டி தான் செல்கிறார்கள் சிலரால் அந்த கல்லை தகர்க்க முடியும் என்று தெரிந்தும் அதை பண்ணாமல் போனார்கள். ஒரு பத்து நாள் சென்றது ஒரு நாள் ஒரு வாலிபன் வந்து பார்த்து என்ன இந்த கல் சாலையில் செல்பவர்களுக்கு தடையாக இருக்கிறதே என்று எண்ணி அந்த பாறையை தகர்த்து வீழ்த்தினான். பிறகு அந்த வாலிபனுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது அந்தப் பாறைக்கு கீழே ஒரு பெட்டி இருந்தது அந்தப் பெட்டியை திறந்து பார்த்தால் அதில் ஒரு காகிதம் இருந்தது அந்த காகிதத்தை பிரித்து படித்தால், வாழ்த்துக்கள் இந்த ஊர் காவலனே என்று எழுதி இருந்தது. பிறகு ஒரு விலாசம் இருந்தது அங்கே வா என்று எழுதி இருந்தது. பிறகு அந்த வாலிபன் அந்த விலாசத்திற்கு சென்று பார்த்தல் ஒரு பெட்டி இருந்தது அந்த பெட்டியை திறந்து பார்த்தால் தங்க கட்டிகள் இருந்தது. அந்த வாலிபனுக்கு ஒரே மகிழ்ச்சி, உடனே அந்த இடத்துக்கு திருமூர்த்தி வந்து வாழ்த்துக்கள், தடைகளை தகர்க்கும் நாயகனே என்று நடந்தவற்றை எல்லாம் கூறி அவனுக்கு ஒரு காவலன் என்ற பொறுப்பை கொடுத்தார் வாய்ப்புகள் வாய்ப்புக்கள் உங்கள் கதவை தட்டவில்லை என்றால் அவைகளை தட்டும் படியான கதவை நீங்களே உருவாக்குங்கள் ஒரு பனிமலை தேசம் இருந்தது அந்த பனிமலையில் ஒரு எட்டு நாய்கள் இருந்தது. அந்த பனிமலை சதுரமாக இருக்கும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிறிதளவு பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்தில் தான் தண்ணீர் சுரக்கும் அந்த எட்டு நாய்களில் ஒரே ஒரு நாய் மட்டும்தான் அந்த பள்ளத்தில் சுரக்கும் தண்ணீரை குடிக்கும் மற்ற நாய்களை குடிக்கவும் விடாது கிட்ட நெருங்கவும் விடாது. ஒரு நாய் மட்டும் தனியாகவே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும் மற்ற ஆறு நாய்களும், அந்த ஒரு நாய் தண்ணீர் குடிப்பதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் இது சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. அந்த ஆறு நாய்களும் பொறாமையுடனும், தாகத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கும். தனியாகவே இருக்கும் அந்த ஒரு நாய் இந்த ஆறு நாய்களும் ஏமாந்த நாய்கள் என்று நினைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருக்கும். ஒரு நாள் தனியாகவே இருந்த அந்த நாய் ஒரு தீர்மானம் எடுத்தது தண்ணீர் குடிப்பதற்கு நாமே ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அது ஒரு பனிமலை என்றதால் தரைகள் கண்ணாடி போல் இருக்கும் அந்த நாய் தன் இரண்டு காலைகளை பயன்படுத்தி குதித்துக் கொண்டிருந்தது. மற்ற ஆறு நாயும் அந்த தண்ணீர் குடிக்கும் அந்த ஒரு நாயும் இந்த நாயை வேடிக்கையாக பார்த்தது அனைத்து நாய்களும் என்ன ஆகிவிட்டது இந்த நாய்க்கு என்று குழம்பிப் பார்த்தது. சிறிது நேரம் கழித்து அந்த நாய் குதித்த இடத்தில் ஒரு விரிசல் ஏற்பட்டது விடாமல் குதித்து குதித்து அங்கே ஒரு பள்ளத்தை உருவாக்கியது பிறகு அங்கேயும் தண்ணீர் சுரக்க ஆரம்பித்து பார்த்த ஆறு நாய்கலும் அங்கே சென்று தாகத்தை தீர்த்தன வாய்ப்புகள் நமக்கு ஒருவர் தருவார் என்று காத்திருப்பதை விட நாமே ஒரு வாய்ப்பை உருவாக்குவது சிறந்த முயற்சி சுயநலமும் பொதுநலமும் நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல நம்மால் எத்தனை பேர் வாழறாங்க என்பதுதான் முக்கியம் ஒரு ஊரில் ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தது அந்த குடும்பத்தில் தாய் தகப்பன் பிள்ளைகள் மற்றும் ஒரு பாட்டி இருந்து வந்தார்கள். தினமும் அந்த பாட்டி தன் பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வாள் தினமும் பள்ளிக்கு செல்லும் போது தன் பேரனுக்கு ஒவ்வொரு கதை சொல்வது வழக்கம். போகும் வழியில் ஒரு சிலை ஒன்று இருந்தது பேரன் பாட்டியை பார்த்து, இந்த சிலை இங்கே வர காரணம் என்ன பாட்டி என்று கேட்டான். அதற்கு அந்தப் பாட்டி தன் பேரனிடம் இந்த ஊரில் இருட்டையர்கள் இருந்தார்கள் அவர்கள் பெயர் அரசு,முரசு. அரசு தன்னை பற்றி மட்டுமே யோசிப்பான் முரசு மற்றவர்களை பற்றி மட்டுமே யோசிப்பான். அப்பொழுது இந்த ஊரில் வாழ்வதற்கே அஞ்சுவார்கள் ஏனென்றால், சுற்றி ஒரே காடாக இருக்கும். அரசு முரசு இருவரும் படித்து முடித்தார்கள். முரசு வேலைக்கு செல்ல தொடங்கினான் உடனே தான் நினைத்தபடி சேவை செய்யவும் ஆரம்பித்தான் உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்பது, போன்ற வசதிகளை செய்து வந்தான். அரசு முரசு இவர்களின் தாய்க்கு உப்பு நோய் இருந்தது இவர்கள் படிக்கும் போதே தாய் மரித்து விட்டால். அதே உப்பு நோய் அரசுக்கும் முரசுக்கும் தொடர்ந்து இருந்தது அந்த உப்பு நோய் சில நாட்கள் செல்ல செல்ல தன் வேலையை காட்டத் தொடங்கியது அரசு தன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தன் உடம்பிற்கு மருத்துவமனையில் செலவு செய்ய தொடங்கினான். முரசு தான் சம்பாதித்த பணத்தை தன் உடம்பை கூட பார்த்துக் கொள்ளாமல் தன் மக்களுக்கு செலவு செய்தான். பலபேர் பசியை ஆற்றி இருக்கிறான். ஒரு சில பேருக்கு படிக்க வைக்க பணம் கொடுத்து உதவ இருக்கிறான். பாட்டி தன் பேரனை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் உன் அப்பா நன்றாக சம்பாதிக்கிறார் என்றால் அதற்கு காரணம் முரசு தான்.படிப்பு செலவுக்கு நிறைய பணம் கொடுத்து உதவி இருக்கிறார் என்று பாட்டி தன் பேரனுக்கு சொன்னார். பிறகு சிறிது நாள் கழித்து முரசு உடம்பு முடியாமல் இறந்து விட்டான். ஆனால் அரசு மருந்து மாத்திரை மூலம் சில நாட்கள் உயிரோடு இருந்தான் பிறகு அவனும் மரித்துவிட்டான். ஆனால் இந்த ஊருக்கே உதவி செய்து ஊரையே மாற்றிய முரசுவின் மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் நன்றாக வாழ்ததைவிட அவனால் நன்றாக வாழ்ந்தவர்கள் தான் அதிகம். எனவே, இந்த ஊர் மக்கள் முரசுக்கு ஒரு சிலை வைத்து விட்டார்கள். பேரன் தன் பாட்டியைப் பார்த்து அருமையான கதை பாட்டி என்று பேரன்பாட்டியை பார்த்து சொன்னான் அதற்கு பாட்டி கதை அல்ல நிஜம். நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல நம்மால் எத்தனை பேர் வாழறாங்க என்பதுதான் முக்கியம் எண்ணம் போல் வாழ்வு நம்ம என்ன பண்றமோ அதற்கான பலன் தான் நமக்கு வந்து சேரும் அதனால் நல்லதே செய்வோம் கங்கா என்ற ஒரு தொழிலதிபர் இருந்தான் அவனுக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் இருந்தனர். கங்காவுக்கு சமூக சேவை செய்வது மிகவும் பிடிக்கும் நிறைய சேவைகளை தன் ஊரில் செய்திருக்கிறான். கங்காவின் மகன்கள் பெயர் சோமு, காமு ,ராமு இவர்கள் மூன்று பேரும் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. இவர்கள் தந்தையே ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால் தந்தையுடன் வேலை செய்யலாம் என்று இருந்தார்கள். மூன்று பேருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். கங்கா சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் இந்த தீபாவளி பண்டிகைக்கு ஒரு மூன்று கஷ்டப்படும் குடும்பத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மளிகை சாமான் வாங்கி தர வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தார். தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ரூபாய் 5000 கொடுத்து மளிகை சாமான் வாங்கி வர சொன்னார் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். அப்பொழுது கங்காவின் வாலிப நண்பன் ஒருவன் அவன் சமூக சேவையை கேள்விப்பட்டு கங்காவை பார்க்க வந்தான். அவன் அயல் நாட்டில் மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் அவர் வந்து கங்காவை பார்த்து, உன் சேவையை இந்த ஊர் மக்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்களே என்று கேட்டார். உடனே அவர் கங்காவுக்கு பரிசாக அவன் சேவைக்கு தேவைப்படும் விதமாக தீபாவளி பட்டாசு மல்லிகை சாமான்கள் அனைத்தையும் கொடுத்தார். இது நான் உனக்கு கொடுக்கும் பரிசு இந்த முறை உன் பணத்தில் சேவை செய்ய வேண்டாம் நான் கொடுத்த இந்த பொருளை உன் மக்களுக்கு கொடு என்று சொல்லி அந்த அயல் நாட்டு தொழிலதிபர் சென்று விட்டார். இப்பொழுது கங்கா தேர்ந்தெடுத்த மூன்று குடும்பங்களுக்கும் தன் நண்பன் கொடுத்த பொருளை அவர்களுக்கு கொடுத்து விட்டான். அவருடைய மூன்று மகன்களும் சந்தைக்கு சென்றார்கள் சோமு நேர்மையாக 5 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கினான். காமு, ராமு ரூபாய் 3000 துக்கு மட்டுமே பொருட்களை வாங்கினார்கள் அதுவும், மட்டமான பொருட்களை வாங்கினார்கள். நமக்காகவா வாங்குகிறோம் யாரோ ஒருவருக்கு தானே என்று ரூபாய் 2000 தன்னுடைய செலவிற்கு எடுத்துக் கொண்டார்கள். இப்பொழுது மூன்று பேரும் தன் தந்தையிடம் வந்து நின்றார்கள் தந்தை கங்கா அவர்களைப் பார்த்து என்ன இவ்வளவு நேரம் என்று கேட்டு, என் சிறுவயது நண்பன் ஒருவன் அந்த மூன்று குடும்பத்திற்கான பொருட்களை வங்கி கொண்டு வந்தான், அதனால் இந்த பொருட்களை இந்த மாதத்திற்கு உங்கள் குடும்பங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி சென்று விட்டார். இப்பொழுது காமுவும் ராமவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பிறகு இருவரும் நம்ம என்ன பண்றமோ அதற்கான பலன் தான் நமக்கு வந்து சேரும் என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு சென்றனர். சாதனையாளன் துன்பம், தொல்லை, துயரம், கஷ்டம், கண்ணீர், கவலை, வேதனை, சோதனை இவை அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது அந்த பள்ளிக்கூடத்தில் உள்ள தமிழ் வாத்தியார் பாடத்தை வகுப்பறையில் எடுப்பதை விட அதிகமாக மரங்கள் அருகில் மைதானங்களில் தான் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பார். ஏனெனில் கருத்துக்கள் புரியும்படி எடுப்பார் இப்படியே போய்க் கொண்டிருந்தது ஒரு நாள் வாத்தியார் பிள்ளைகள் அனைவரையும் ஒரு ஆற்றங்கரை ஓரமாக வரச் சொன்னார் அன்றைக்கு ஒரு அரசு விடுமுறையாக இருந்தது பிள்ளைகள் அனைவரும் வாத்தி இன்றைக்கு புது விதமாக பாடம் எடுக்க போகிறார் என்று எண்ணி ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்தார்கள். வாத்தியார் அந்தப் பிள்ளைகளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு இப்பொழுது அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன் என்று இதைப்பற்றி ஓர் சிறிய எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் என்று சொன்னார் பிள்ளைகள் சரி என்றார்கள். வாத்தியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார் அப்பொழுது ஓர் சத்தம் வந்தது என்னவென்று பார்த்தால் ஒரு படகு ஆற்றில் மிக வேகமாக வருகிறது வாத்தியார் அதை பார்த்தும் பாக்காதது மாதிரி பிள்ளைகளிடம் என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார் அதற்கு பிள்ளைகள் படகு ஒன்று ஆற்றில் போனது வாத்தியாரே என்று சொன்னார்கள். வாத்தியார் திரும்பத் திரும்ப என்ன பார்த்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார் பிள்ளைகள் என்னாச்சு அவருக்கு வெயிலில் மூளை ஏதாவது குழம்பி விட்டதா என்று யோசிக்க தொடங்கினார்கள். அப்பொழுது வாத்தியார் வாழ்க்கைக்கு தேவையான ஒரு விஷயம் எதை பார்த்தீர்கள் என்று கேட்டார் அனைவரும் திருத்திரு என்று முழித்தார்கள் வாத்தியார் அதற்கு படகை சுற்றி தண்ணீர் இருந்ததினால் படகு மிகுந்தது, படகுக்குள் தண்ணீர் போனால் என்ன ஆகும் என்று கேட்டார் அதற்கு ஒரு மாணவன் படகு மூழ்கி உள்ளே போய்விடும் அத்தோடு அந்த படகு அவ்வளவு தான் என்றான் அப்பொழுது வாத்தியார் நடந்து கொண்டே சொல்கிறார், அந்த படகு தண்ணீரை எல்லாம் ஏற்றுக் கொண்டால் அது மூழ்கி விடும் அதன் பிறகு அந்த படகு ஆற்றில் சுலபமாக பயணம் செய்ய முடியாது அதே மாதிரி தான் நம் வாழ்க்கையும் துன்பம், தொல்லை, துயரம், கஷ்டம், கண்ணீர், கவலை, வேதனை, சோதனை, எல்லாம் இருக்க, இவை எல்லாவற்றையும் எவன் ஒருவன் தன் தலைக்குள்ளே ஏற்றி மனச்சோருக்குள்ளே போகிறானோ அவனுடைய வாழ்க்கை என்ற பயணத்தில் பயணிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும் "இவை அனைத்தையும் கடந்து ஜெயிக்கிற மனிதன் தான் சாதனையாளன்" என்றார். குழந்தைகள் புரிந்தும் புரியாத மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே சென்றார்கள். மீண்டும் எழுதல் உடைந்த மனிதன் தன்னை மீண்டும் கட்டியெழுப்புவதை விட வலிமையானது எதுவும் இல்லை கண்ணன் என்ற ஒரு சின்ன பையன் இருந்தான் அவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் விடுமுறை நாட்களில் தன் மாமா வீட்டிற்கு செல்வான் எதற்கு செல்வான் என்றால் தன் மாமி அவனுக்கு நிறைய கதைகளை சொல்லி அவனுக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டாக்குவார். அதேபோல் இந்த விடுமுறைக்கும் கண்ணன் தன் மாமா வீட்டிற்கு சென்று இருந்தான். மாமி கண்ணனை பார்த்து என்ன நடந்தது ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு கண்ணன் எனக்கு படிப்பே ஏற மாட்டேங்குது என்னுடைய ஆசிரியர்கள் என்னை பார்த்து நீ உருப்படவே மாட்ட என்கிறார்கள் என் நண்பர்களும் என்னை பார்த்தும் பார்க்காதது போல செல்கிறார்கள் என்றான் அதற்கு மாமி இதற்காகவா உடைந்து போயிருக்கிறாய் என்று சொல்லி மாமியார் அவனைப் பார்த்து ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள் அதில் மூத்தவனும் இளையவனும் நன்றாக படித்து படிப்பை முடித்து விட்டார்கள் கடைசி மகனுக்கு படிப்பு ஏறவில்லை இதை நினைத்து நினைத்து அவன் மிகவும் மனமடைந்து போனான் தன் தகப்பனுக்கு வயது சென்று உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது தன் தகப்பன் கடைசி மகனுக்கு நான்கு மாட்டை வாங்கி கொடுத்துவிட்டு மற்ற இரண்டு மகன்களுக்கும் தன் சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு அவன் மரித்து விட்டான் இப்பொழுது கடைசி மகனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மற்ற இரண்டு மகன்களும் சொத்தை எடுத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று விட்டார்கள். இப்பொழுது கடைசி மகனுக்கு இருக்கிற ஒரே சொத்து நான்கு மாடுகள் மட்டும் தான் அவன் ஒரு தீர்மானம் எடுத்தான். என்னை நானே தான் செதுக்கி கொள்ள வேண்டும் என்று, அந்த நான்கு மாட்டையும் வளர்க்கத் தொடங்கினான் அந்த மாடுகள் சாணம் அதிகமாக போட ஆரம்பித்தது, மாட்டுக்குத் தேவையில்லாதவகைகள் மனிதனுக்கு தேவை என்று எண்ணி அந்த சானத்தை எல்லாம் நிலத்தில் பரப்பி விட்டு சந்தைக்கு சென்று ஒரு மூட்டை மாங்கொட்டைகளை வாங்கி உழந்து தன் நிலத்தில் விதைத்தான் ஒரு சில வருடத்திற்கு பிறகு எல்லாம் மரம் ஆகிவிட்டது ஒரு பெரிய இடத்தை வாங்கி மாந்தோப்பை வைத்தான் இப்பொழுது அவன் ஒரு மிகப்பெரிய விற்பனையாளராக இருக்கிறான். அவன் வேற யாரும் இல்லை உன் மாமா தான் அவன் என்று மாமி சொன்னார். இப்போது கண்ணனுக்கு ஒரே ஆச்சரியம் மாமி கண்ணனை பார்த்து “உடைந்து மனிதன் தன்னை மீண்டும் கட்டி எழுப்புவதை விட வலிமையானது எதுவும் இல்லை” என்றாள் கஷ்டமும் கவலையும் கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாக இருக்காதீர்கள் ஒருபோதும் கஷ்டங்கள் தீராது ஒரு நகரத்தில் ஓர் பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. அருகில் ஒரு விளையாட்டு அரங்கமும் இருந்தது. அங்கு ஒரு பயிற்சியாளர் இருந்தார் அவர் பெயர் நீலவேணி. அந்த பயிற்சியாளருக்கு ஒரு 50 வயது இருக்கும். ஒரு நாள் அந்த விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு மாணவர்களுக்கான விளையாட்டு கழக கூட்டம் நடந்தது. அப்பொழுது அங்கே நீலவேணியை ஊக்க பேச்சுக்காக அழைத்து இருந்தார்கள். அவர்களும் சென்றிருந்தார்கள். இப்பொழுது அவர்களுடைய நேரம் வந்தது. அவர்களும் மேடையில் சென்று பேச தொடங்கினார்கள். நீலவேணி பிள்ளைகளை பார்த்து, எத்தனை பேர் விளையாட்டில் தோற்று போனால் கவலை படுவீர்கள் என்று கேட்டார்கள். சில பேர் கைகளை உயர்த்தினார்கள். உடனே அவர்கள் கைகளை இரக்க சொல்லி தன் உரையை தொடங்கினார்.என் பயிர்ச்சி பயனத்தில் நான் இரண்டு மாணவர்களைபற்றி மட்டும் உங்களிடம் பேச விரும்புகிறேன்.ஒருவன் பெயர் யோகேஷ் மற்றொருவன் பெயர் : பிரவீன் இருவருக்கும் நான் சமமாகத்தான் பயிற்சி கொடுத்தேன். இரண்டு பேருக்கு தடைகளப் போட்டி பயிற்சி கொடுத்தேன். அதில் இரண்டு பேரும் தொடர்ந்து 4 முறை தோற்று கொண்டே இருந்தார்கள். அதன் பிறகு தடைகளை போட்டிக்கு யோகேஷ் மட்டும்தான் வந்து இருந்தான். பிரவீன் வரவில்லை யோகேஷை பார்த்து ஏன் பிரவீன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு யோகேஷ், அவன் கவலையாகவே இருக்கிறான். பயிற்ச்சிக்கு கூட வர மறுக்கிறான் என்றான். சரி நீ வா என்று யோகேஷை அழைத்து சென்றேன். ஆனால் 5தாவது போட்டியிலும் அவன் தோற்று போனான். இப்பொழுது எனக்கே சலிப்பு வந்துவிட்டது நானும் தீவிரமாக பயிற்சி கொடுப்பதை நிறுத்தி விட்டேன். பிரவீனும் கவலையோடே எதோ ஒரு மூட்டை தூக்கும் வேலைக்கு சென்று விட்டான். சிறிது நாட்கள் சென்றது. யோகேஷ் விடாமல் பயிற்சி செய்து கொண்டே இருந்தான். ஒரு மாவட்ட போட்டி வந்தது அதில் யோகேஷ் பங்கு பெற்றான். நான் எதிர்பார்க்கவே இல்லை. யோகேஷ் அந்த போட்டியில் வெற்றி பெற்றான். அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி பெற்று, படி படியாக மேலே மேலே ஜெயிக்க தொடங்கினான். யோகேஷ் இப்பொழுது அவன் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை செய்கிறான் ஆனால் பிரவீன் இன்னும் மூட்டைத் தூக்கிக் கொண்டு கஷ்டப்படுகிறான். இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் “கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாகவே இருக்காதீர்கள் ஒருபோதும் கஷ்டங்கள் தீராது” என்றார் நீவேணி வெற்றியும் தோல்வியும் வெற்றி ஒருபோதும் இறுதியல்ல தோல்வி ஒருபோதும் உறுதியல்ல ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய மைதானம் இருந்தது அந்த மைதானத்தில் தடைகள போட்டியில் பயிற்சி பெற்று வந்தவன் திரு.அன்புமணி. தன் நண்பன் ராமதாசும் கூடவே பயிற்சி பெற்று வருவான். இருவரும் நல்ல நண்பர்கள். ஒவ்வொரு போட்டி வரும்போதும், அன்புமணி கண்டிப்பாக ஜெயித்து விடுவான். ஆனால் அவன் நண்பன் ராமதாசோ விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தான், ஆனால் தோற்றுவிடுவான். அன்புமணி படி படியாக வெற்றி பெற்று தடைகளப் போட்டியில் ஒரு பதிவை ஏற்படுத்தி விட்டான். அன்புமணிக்கு ஒரே சந்தோஷம் அதனுடன் தலைகனமும் ஆரம்பமாக தொடங்கி விட்டது. தன் நண்பனை தள்ளி வைக்க தொடங்கினான். இப்படியே நடந்து கொண்டு இருந்தது. ராமதாஸ் முதன் முறையாக ஒரு மாநில போட்டியில் வெற்றி பெற்றான். அதன் பிறகு அவன் விடாமல் ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் பயிற்சி பெற்று தேசிய அளவு போட்டிக்கு பங்கு பெற்றான். அந்த போட்டியில் படுத்தோல்வி அடைந்தான். ஆனாலும் விடாமல் ராமதாஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஒன்று மிகப்பெரிய தடைகள போட்டியை நடத்தினது. உலக அளவில் அது ஒளிபறப்பாக்கப்பட்டது. இந்தியாவில் நடக்கிற IPL போல் இருந்தது. அதில் ராமதாஸ் பங்கு பெற்றான் கூடவே அன்புமணியும் பங்கு பெற்றான் போட்டி ஆரம்பமானது வீரர்கள் ஆர்வத்துடன் தடைகளை கடந்தார்கள் போட்டி சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது கடைசியில் ராமதாஸ் உலக சாதனை செய்து விட்டான். அவனுக்கே ஆச்சரியம், அரங்கம் ஆச்சரியத்துடனும் உற்சாகத்துடனும் ராமதாஸ் பெயரை கத்திக்கொண்டே இருக்க தொடங்கினது ராமதாஸ் உலக சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டான். இப்பொழுது பின்னால் இருந்த அன்புமணி தன் மனதில் “வெற்றி ஒருபோதும் இறுதியல்ல தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல” என்று எண்ணி அரங்கத்தை விட்டு வெளியேறினான். காலமாற்றம் ஒரு நாள் உன்னை நம்பாத மக்கள் அவர்கள் உங்களை எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் ஒரு மனிதன் ஒரு கிராமத்தை நோக்கி தன் சொகுசு காரில் செல்கிறான். இப்பொழுது அந்த ஊர் கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம் யார் இது. இந்த ஊரில் சொகுசு காரா? என்று. நான்கு வருடத்துக்கு முன்பு அந்த கிராமத்தில் ஒரு வாலிபன் வசித்து வந்தான். அவன் அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவன் நன்றாக படித்து பள்ளி படிப்பு கல்லூரி படிப்பை முடித்தான். இப்பொழுது, அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று வழக்கம் போல் எல்லாரும் கேட்க தொடங்கினார்கள். அந்த வாலிபனுக்கு, தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று ஒரு கனவு. அவன் பள்ளி பருவத்தில் கலைநிகழ்ச்சியில் நன்றாக நடித்து முதலிடம் பிடிப்பான். இப்பொழுது அவன் ஊர் மக்கள் அவனை பார்த்து கேட்கிறார்கள், என்ன செய்ய போகிறாய் என்று அதற்கு அவன் நான் சினிமா துறைக்கு முயற்சி செய்ய போகிறேன் நான் நடிகனாக போகிறேன் என்றான். ஊர் மக்கள் ஒரே சிரிப்பு ஒரே கேளி கிண்டல் அந்த வாலிபனுக்கு மிகவும் அவமானம் ஆகிவிட்டது. யாரும் தன்னை நம்பவில்லை என்று மனவருத்தமும் உண்டானது.பிறகு அவன் ஒரு தீர்மானம் எடுத்தான். இந்த ஊரில் இருந்தால் நம்மை கேளி, கிண்டல் மட்டும்தான் செய்வார்கள் யாரும் நம்மை ஊக்கப் படுத்த மாட்டார்கள் என்று எண்ணி, தன் தாய், தந்தையிடம் நான் படித்த படிப்பிற்கு சென்னையில் வேலை செய்ய போகிறேன் என்று கூறி விட்டு சென்னைக்கு வந்துவிட்டான். சென்னைக்கு வந்து, தான் படித்த படிப்பிற்குக்கான ஒரு சிறிய கம்பனியில் வேலைக்கு சேர்ந்தான். கூடவே சினிமா வாய்பையும் தேடி அலந்தான் அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு சினிமா நபர்களிடமும் நெருங்க கூட முடியவில்லை. அநேக கஷ்டங்கள், பல சினிமா இயக்குனர்களின் அலுவலகத்திற்கு சென்று தான் பள்ளி பருவத்தில் நடித்த கானொலிகளை காண்பித்து இருக்கிறான். பெரியதாக யாரும் மதிக்கவில்லை. பல இயக்குனர்களின் உதவி இயக்குனர்களிடம் அறிமுகமாகி நன்றாக பழகி வாய்ப்புகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு நாள் ஒரு பிரம்மாண்ட இயக்குனரின் உதவி இயக்குனர் அழைத்து இருந்தார். அடுத்த படம் எடுக்க தயாராகி விட்டார்கள். அந்த உதவி இயக்குனர் இவனை பார்த்து அடுத்த வாரம் தணிக்கை நடைபெறும், வந்து நடித்து காண்பித்து விட்டு போ. தேர்ந்தெடுத்தால் உன்னை அழைப்பார்கள் என்றார். அடுத்த வாரம் வந்தது. அந்த இயக்குனரின் அலுவலகத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் ஓர் புறா ஒன்று இறகில் அடிபட்டு கீழே விழுந்துகிடந்தது. அவன் போய் அந்த புறாவை எடுத்து மருந்து தடவி அந்த புறாவை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டான். இப்பொழுது இயக்குனர் வருகிறார். இந்த வாலிபனை மட்டும் அழைத்து நீ தான் நான் நினைத்து கதாபாத்திரத்தின் சரியான ஆள் என்றார். அனைவருக்கும் ஓர் ஆச்சரியம். என்ன இது தணிக்கை நடக்கவே இல்லை அதுக்குள்ளவே எப்படி இந்த வாலிபனை தேர்ந்தெடுத்தார் என்று நினைத்தார்கள். உடனே இயக்குனர் என் படத்துக்கு துணை நடிகனாக ஒரு புறாக்களை பராமரிக்கும் கதாபாத்திரம் தேவைப்பட்டது. நான் மறைமுகமாக தணிக்கை வைத்தேன் ஒரு காயப்பட்ட புறாவை வைத்து, யாரும் அதை கண்டு கொள்ள கூட இல்லை. இந்த வாலிபன் மட்டும் தான் நான் மறைமுகமாக வைத்த தனிக்கையில் வெற்றி பெற்றான் என்றார். இப்பொழுது படம் எடுக்கப்பட்டு படம் வெளியானது அந்த படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு குறிப்பாக அந்த வாலிபன் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு. அந்த வெற்றியுடன் அவன் தன் கிராமத்திற்கு சொகுசு காரில் சென்றான். அவன் காரைத் திறந்து வெளியே வருகிறான் அனைவருக்கும் ஆச்சரியம் எல்லோரும் பிரமித்து பார்த்தார்கள் “ஒரு நாள் உன்னை நம்பாத மக்கள் அவர்கள் உங்களை எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும்” தயக்கமும் தாமதமும் தயங்கி நிற்பதும் தாமதிப்பதும் உன் வெற்றியை தள்ளி வைக்கும் ஒரு கல்லூரியில் நீண்ட காலமாக ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வந்தார். அது ஓர் MBA துரை. அந்த ஆசிரியர் பெயர் ஐயமாலா. அந்த ஆசிரியர் புதுமையாக வரும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும் / மாணவர்களுக்கு தான் கடந்து வந்த பாதையில் ஒரு 3 மாணவர்களை பற்றி எப்போதும் கூறுவது வழக்கம். இப்பொழுதும் முதல் ஆண்டு ஆரம்பமாக தொடங்கினது. கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஐயமாலாவை பேசும்படி அழைத்தார்கள். வழக்கம் போல் தன் உரையை தான் சந்தித்த மூன்று மாணவர்களை பற்றிச் சொல்ல தொடங்கினார்கள். நான் கடந்து வந்த பாதையில் மூன்று மாணவர்களை மறக்கவே முடியாது. நீங்கள் அனைவரும் இந்த படிப்பை முடித்துவிட்டு கண்டிப்பாக வணிக துரையாளராக அல்லது, தொழிலதிபராக தான் ஆவீர்கள். அதேபோன்று தான் நான் பார்த்த அந்த மூன்று பேரும் தொழிலதிபராக வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஒருவன் பெயர் சுரேஷ், இன்னொருவன் பெயர்: நேத்தாஜி மற்றொருவன் பெயர்: அபிஷேக். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த படிப்பை முடித்துவிட்டு நாம் மேலே உயர்ந்து செல்வதற்கு இரண்டு விஷியங்கள் தடையாக இருக்கும் அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அது என்னவென்றால்: தயக்கம், தாமதம். ஆம், சுரேஷ்-க்கு ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று கனவு இருந்தது. ஆனால் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற ஒரு தயக்கமும் இருந்தது. அவன் நிறைய கம்பனிகளில் தற்குறிப்பு (Resume) கொடுப்பான். அவர்கள் அவனை அழைக்கும் போது தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் இருப்பார்களே என்று தயங்கி செல்லவே மாட்டான். ஆனால் அபிஷேக் தைரியமும், துணிவும் உடையவன். தன் படிப்பை முடித்துவிட்டு ஒரு கம்பனியில் 6 மாதங்கள் பனி புரிந்தான். பின்பு அவனே ஒரு சொந்த வியாபாரம் செய்ய தொடங்கினான்.இன்றைக்கு அவன் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கிறான்.அதே தொகுதி (Batch) - யில் படித்த நேத்தாஜி ஒரு சோம்பேறி. ஆனால் அவன் நன்கு திறமை உடையவன். ஒரு பெரிய கம்பெனியில் வேலைவாய்ப்பு வந்தது. அங்கே அவர்கள் நேர்காணல் வைத்தார்கள் அவர்கள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் சரியாக பதில் அளித்த நேத்தாஜியை பார்த்து: அலுவலகர் ஒரு கேள்வி கேட்டார்; உனக்கு எத்தனை மணிக்கு நேர்காணல் ஆனால் நீ இப்பொழுது வந்த நேரம் என்ன? என்று கேட்டார். அதற்கு நேத்தாஜி திரு திரு என முழித்தான். அலுவலகர் நேத்தாஜியை பார்த்து: சரியான நேரத்திற்கு வந்தவனை நேர்காணல் செய்து அவனுக்கு வேலையை கொடுத்து விட்டோம். நீ தாமதமாக வந்த காரணத்தினால் இந்த வேலை உனக்கு இல்லை என்று அனுப்பி விட்டார். பிறகு நேத்தாஜி ஒர் சிறிய கம்பெனியில் வேலை செய்து வந்தான் அவர்கள் மூவருக்கும் 30 வயது கடந்து திருமணமும் ஆனது.ஒரு நாள் அபிஷேக் எதிர்பார்க்காத விதமாக ஒரே இடத்தில் இருவரையும் சந்தித்தான். இருவரும் அபிஷேக்கின் வளர்ச்சியை பார்த்து வியந்தார்கள். அபிஷேக் அவர்களை நலம் விசாரித்து பேசினான். இருவரும் தங்கள் கஷ்டங்களை அபிஷேக்கிடம் சொன்னார்கள். உடனே அபிஷேக் தன் நண்பன் கம்பெனியை அறிமுகம் செய்து அங்கே போய் வேலை செய்யுங்கள் உங்கள் தொழிலில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என்று சொன்னான். அவர்களும் கேட்டுவிட்டு அங்கே போய் சிறிது காலம் வேலை செய்தார்கள்.அவர்கள் படிப்படியாக உயர தொடங்கினார்கள், ஆனால் அவர்கள் வயதுக்கு அவர்கள் கடந்து வந்த உயரம் குறைவு. இப்பொழுது ஆசிரியர் ஜெயமாலா இதிலிருந்து உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் “தயங்கி நிற்பதும் தாமதிப்பதும் உன் வெற்றியை தள்ளி வைக்கும்” இவைகளை தள்ளி விட்டு முன்னேறிப் போய்க் கொண்டே இருக்க வேண்டும் நிராகரிப்பும் வெற்றியும் உன்னை நிராகரித்த இடத்தில் நிராகரிக்க முடியாத அளவிற்கு வளர்வது தான் உண்மையான வெற்றி ஒரு நகரத்தில் விக்ரம் என்பவன் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக இரண்டு மிக பெரிய கல்லூரியில் பதிவு செய்திருந்தான். அவன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உடையவன். அவன் பதிவு செய்துவிட்டு பிறகு அவனும் அவன் தாயும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போய் அந்த இரண்டு கல்லூரியிலும் சேர முயற்சி செய்தார்கள். ஆனால் முடிய வில்லை தன் தாயிக்கு ஒரே மனகஷ்டம், விக்ரமுக்கு கால்பந்து விளையாடில் ஆர்வம் உடையவனாய் இருந்தபடியால் அவன் விண்ணப்பித்த கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேர வேண்டும் என்பதுதான் அவன் கனவு, ஆசை.ஆனால், நிறைவேறவில்லை வேறு வழி இல்லாமல் ஒரு வருடம் வீணாக்க வேண்டாம் என்று எண்ணி வேறு ஒரு சிறிய கல்லூரியில் சேர்ந்து விட்டான் விளையாட்டை ஒரு தனியார் மைதானத்தில் பயின்று வந்தான் கடினமாக உழைத்து ஒரு முழுமையாக கால்பந்து விளையாட்டு வீரனாக மாறினான். இவன் இந்த விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சுலபமான பட்ட படிப்பை தேர்ந்தெடுத்தான் அவன் எடுத்தப் படிப்பு B.A வரலாறு.கால் பந்து போட்டியில் விக்ரம் பங்குப் பெற்று, மாநில அளவில் வெற்றி பெற்று செய்தித்தாளில் வரும் அளவிற்கு உயர்ந்தான். அவன் தாய்க்கு மிகவும் சந்தோஷம் தன் மகனே ஒரு வெற்றி வீரனாக, அனைவருக்கும் சொல்வார் இப்பொழுது, அவனை தனியார் நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்துக்கொள்ள சொன்னார்கள். அவனும் கலந்துக்கொண்டு ஆட்டநாயகனாக அந்த தனியார் நிறுவனத்திற்கு ஜெயித்துக் கொடுத்தான். அடுத்த தேசிய அளவிலான போட்டி வந்தது அதிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றான். இப்பொழுது அவன் இளங்கலை பட்டத்தையும் முடித்து விட்டான். முதுகலை பட்ட படிப்பிற்காக திரும்பவும் தான் நினைத்து அந்த இரண்டு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து விட்டு விளையாட்டு பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினான் அவன் தான் விண்ணப்பித்த கல்லூரிக்கு முயற்சி செய்யவே இல்லை. ஆனால், அவன் விண்ணப்பித்த சில வாரங்களிலேயே இரண்டு கல்லூரியில் இருந்தும் விடாமல் தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருந்தது மற்றும் தொலைபேசி செய்தியும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் அப்பொழுது அவன் தன் தாயிடம் இந்த கல்லூரி அழைப்பை பற்றி பேசினான் அதற்கு அவன் தாய் எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாயோ அதே இடத்திற்கு இப்பொழுது நீ தேவைப்படுகிறாய் என்றார் “உன்னை நிராகரித்த இடத்தில் நிராகரிக்கவே முடியாத அளவிற்கு வளர்வது தான் உண்மையான வெற்றி” ஏமாந்தவனும் ஏமாற்றுபவனும் உலகம் ஏமாந்தவன் சொன்னால் கேட்காது ஏமாற்றுபவன் சொன்னால் கேட்கும் சுரேஷ்குமார் என்ற ஒரு வாலிபன் ஒரு சிறிய கார் (showroom) காட்சியரையில் வேலை செய்து கொண்டிருந்தான். நேர்மையான ஒரு மகன் சிறிது காலம் அந்த கார் காட்சியரையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு தான் வேலை செய்யும் அந்த கார் கம்பெனியின் மேல், உத்தியோகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஓர் ஆசை இருந்தது. அதற்கான முயற்சிகளையும் அவன் எடுத்துக் கொண்டுதான் இருந்தான். ஒரு நாள் அவன் கம்பெனியில் வேலை பார்த்த வீரப்பன் என்பவர் சுரேஷை பார்த்து மேல் உத்தியோகத்திற்கு செல்லும் முயற்சியை எடுப்பதை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். நீ எனக்கு ஒரு மூன்று லட்சம் கொடு இதே கம்பெனியில் உன்னை விற்பனை நிர்வாகியாக (sales executive) மாற்றுகிறேன் என்றார் அதற்கு சுரேஷ் வீரப்பனிடம் உங்களால் அந்த அளவிற்கு என்னை எப்படி மாற்ற முடியும் என்று கேட்டான். அதற்கு வீரப்பன் அது உனக்கு எதற்கு உனக்கு இந்த பதவி வேண்டும் என்றால் நான் கேட்பதை கொடு. உன்னை நான் விற்பனை நிர்வாகியாக மாற்றுகிறேன் என்றான். அதற்கு சுரேஷ் சரி நீங்கள் ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் நான் இரண்டு வாரத்திற்குள் பணம் தருகிறேன் என்றான் இரண்டு வாரம் கழித்து சுரேஷ் கடன் வாங்கி வீரப்பனுக்கு மூன்று லட்சம் கொடுத்தான் வீரப்பன், சில நாட்கள் காத்திரு நான் கண்டிப்பாக அந்த பதிவை வாங்கி கொடுக்கிறேன் என்றான். ஆனால் அந்த பதவி சுரேஷுக்கு கிடைக்கவே இல்லை. வீரப்பனிடம் போய் கேட்டான் அதற்கு அவன் சில காலம் பொறு என்று கோபமாக சொன்னான் சுரேஷ் மிகவும் பயந்துவிட்டான். மறுநாள் வீரப்பன் வேலைக்கு வரவில்லை அதன் பிறகு அவன் தொடர்ந்து வேலைக்கு வரவில்லை சுரேஷ் தொடர்பு கொண்டாலும் பதில் வரவில்லை தொலைபேசி எண்ணும் வேலை செய்யவில்லை சுரேஷ் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தான். பின்பு தான் வாங்கின கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கத் தொடங்கினான் அப்படியே நாட்கள் சென்றது ஒரு நாள் சுரேஷ் தன் நண்பன் ரவி என்பவனை எதிர்பார்க்காத விதமாக ஒரு டீ கடையில் சந்தித்தான். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள் சுரேஷை ரவியை பார்த்து இப்பொழுது நீ எங்கே வேலை செய்கிறாய் என்று கேட்டான் அதற்கு ரவி நானும் ஒரு கார் ஷோரூம் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன் எனக்கு என் கம்பெனி தலைவரின் உதவியாளர் சில காலத்தில் விற்பனை மேலாளர் பதவி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்றான். உடனே சுரேஷ் ஆச்சரியம் பட்டு, பணம் ஏதாவது கேட்டார்களா என்று கேட்டான் அதற்கு ரவி ஆமாம் ஐந்து லட்சம் கேட்டார்கள் இவ்வளவு பெரிய பதவிக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமா என்றான். உடனே சுரேஷ் நான் அந்த உதவியாளரை பார்க்க முடியுமா என்று கேட்டான் ரவி சரி வா என்று அழைத்துக் கொண்டு போய் காண்பித்தான் சுரேஷ் அது வீரப்பனாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் சென்றான். ஆனால் அது வீரப்பன் இல்லை வேறு ஒருவர். சுரேஷ் ரவியிடம் நானும் இப்படித்தான் கொடுத்து ஏமாந்து விட்டேன் நீயும் அப்படி செய்து ஏமாந்து விடாதே என்றான். அதற்கு ரவி கோபம் கொண்டு உனக்கு பொறாமை என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். ரவி 5 லட்சம் கடன் வாங்கி தன்னிடம் உள்ள பொருட்களை அடமானம் வைத்து பணத்தை அந்த உரிமையாளரிடம் கொடுத்து விட்டான் அந்த உதவியாளர் ரவியை பார்த்து அடுத்த வாரம் உனக்கு வேண்டிய அந்த பணி வரும் என்று சொல்லிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டான். மறுநாளிலிருந்து அந்த உதவியாளர் வரவே இல்லை ரவிக்கு ஒரே படபடப்பு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை ரவி சென்று அந்த கார் கம்பெனி தலைவரிடம் உங்கள் உதவியாளர் ஏன் வரவே இல்லை என்றான். அதற்கு அந்த தலைவர் அவன் என் உதவியாளர் இல்லை ரவி, அவன் என் வீட்டு வேலைக்காரன் சும்மா உதவிக்கு இருக்கட்டும் என்று நான் என்னுடன் வைத்துக் கொண்டிருந்தேன் அவன் கடந்த வாரம் என்னிடம் வந்து நான் வெளியூருக்கு செல்கிறேன் என் சம்பளத்தை கொடுங்கள் என்று சொல்லி சம்பளத்தை பெற்றுக்கொண்டு சென்று விட்டான். நான் கொடுத்த கைபேசியை தான் அவன் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தான். போகும்போது அந்த கைபேசியையும் கொடுத்துவிட்டு சென்று விட்டான். ஏன் என்ன ஆனது என்று சொல்லி அந்த கம்பெனி முதலாளி கேட்டார், ரவி அதற்கு எதுவும் சொல்லாமல் மனம் பாரம் தாங்க முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முயற்சி செய்து தற்கொலையும் செய்து கொண்டான். இந்த மரண செய்தியை சுரேஷ் கேள்விப்பட்டு கவலையுடன் மரணத்திற்கு வந்தான் சுற்றி இருப்பவர்களை என்ன எப்படி இது நடந்தது என்று சுரேஷ் கேட்டான். சுரேஷிடம், ரவிக்கு கடன் கொடுத்த இருவர்களும் அடகு வியாபாரியும் தனியாக வந்து, மூன்று வாரத்துக்கு முன்பு ரவி இவ்வளவு அடகு வைத்தான் இவ்வளவு கடன் வாங்கினான் இதற்கு நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது தற்கொலை செய்து கொண்டான் என்றார்கள். அதைக் கேட்டு சுரேஷ் ஓரமாய் போய் அமர்ந்து தன் மனதில் “உலகம் ஏமாந்தவன் சொன்னால் கேட்காது ஏமாற்றுபவன் சொன்னால் கேட்கும்” நான் எவ்வளவோ சொன்னேனே லஞ்சம் யாருக்கும் கொடுத்து இப்படிப்பட்ட பதவி வாங்காதே ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என் பேச்சை அவன் கேட்காமல் இப்பொழுது தற்கொலை செய்து கொண்டானே என்று மன வருத்தத்துடன் சோகமாக இருந்தான். ஆணியும் ஏணியும் நமக்கு ஏற்படும் தோல்வியை ஆணியாய் நினைத்தால் உருத்தும் ஏணியாய் நினைத்தால் உயர்த்தும் சஞ்சனா என்ற ஒரு மகள் இருந்தால் அவள் சதுரங்க போட்டி விளையாடும் ஆர்வமுடைய ஒரு மகள். அவள் பள்ளியில் ஒரு நாள் சதுரங்க போட்டி நடைபெற்றது அதில் அவள் பங்கு பெற்று விளையாடத் தொடங்கினால் முதல் சுற்று முடிந்தது அதில் சஞ்சனா படுதோல்வியை சந்தித்தால் அவளுக்கு ஒரே மன உளைச்சல் அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை இன்னொரு முறை விளையாட ஒரு வாய்ப்பு இருக்கிறது ஆனால் அந்த சுற்று நாளை நடைபெறும் இவள் அதிலும் தோற்றுவிட்டால் கால் இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்பு கிடையாது என்று தன் மனதில் அந்த தோல்வியையே நினைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள். அதையே நினைத்து அவள் சோகமாக இருந்தாள். இவள் சோகமாக இருப்பதை அவள் தந்தை பார்த்து ஏன் என்ன ஆனது, ஏன் சோகமாய் இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இவள் நடந்தவற்றை எல்லாம் கூறி தன் மனக்கஷ்டத்தை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டாள். அதற்கு அவள் தந்தை சஞ்சனாவை ஊக்கப்படுத்தி, என்னுடன் நீ சதுரங்க போட்டி விளையாட வா என்று அழைத்தார். அவள் அரை மனதுடன் தன் தந்தையுடன் விளையாட சம்மதித்தாள் அவள் தன் தந்தைக்கு இந்த சதுரங்கப் போட்டி பெரிய அளவில் விளையாட தெரியாது ஏதோ ஒரு அளவிற்கு விளையாடுவார் என்று எண்ணி விளையாட தொடங்கினாள். தந்தை அவளைப் பார்த்து நீ என்னுடன் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடு தோற்றாலும் பரவாயில்லை தொடர்ந்து விளையாடு இன்றைக்குள் எத்தனை போட்டி நீ என்னுடன் விளையாடி தோற்றாலும் பரவாயில்லை கண்டிப்பாக உன்னால் ஜெயிக்க முடியும் அதற்குப் பிறகு நான் உனக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார். அவள் சரி என்று தன் தகப்பனுடன் விளையாட தொடங்கினாள் முதல் போட்டியில் தோற்று விட்டாள் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி விளையாட தொடங்கினாள் அதிலும் தோற்றுவிட்டாள் மூன்றாவது போட்டி தொடங்கினது சஞ்சனா தன் மனதில் இவர் இந்த அளவிற்கு எப்படி விளையாடுகிறார் இவர் இந்த அளவில் விளையாட மாட்டாரே என்று எண்ணி சற்று குழம்பி ஒரு தீர்மானம் எடுத்தால் இந்த முறை கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி விளையாடினாள் அதிலும் தோல்வி நாலாவது முறை விளையாடும் போது சஞ்சனா தன் மனதில் தோன்றிய புதிய திறன்களை வைத்து விளையாடத் தொடங்கினாள் அதிலும் தோல்வி ஐந்தாவது முறையும் தோல்வி ஆராவது முறையும் தோல்வி ஒவ்வொரு தோல்வியும் நினைத்து நினைத்து இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்று எண்ணி ஏழாவது முறை வென்று விட்டாள். தன் தந்தை அவளைப் பார்த்து இன்னும் ஒரு முறை விளையாடலாம் வா என்று அழைத்தார் அதிலும் வெற்றி பெற்றாள். அதன் பிறகு தந்தை சஞ்சனாவை பார்த்து நான் என் வாலிப வயதில் இந்த போட்டியில் ஆர்வம் உடையவனாக சுற்றி திரிந்தேன் கடுமையாக விளையாடுவேன் இந்த சதுரங்கப் போட்டியில் நான் கடுமையாக விளையாடி மாநில அளவில் சதுரங்க விளையாட்டு வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநில விளையாட்டு வீரனாகவும் மாறினேன் என்றார். சஞ்சனாவுக்கு ஒரே ஆச்சரியம் ஏனென்றால் ஒரு மாநில விளையாட்டு வீரனையே நான் தோற்கடித்து விட்டேன் என்று, தந்தை சஞ்சனாவை பார்த்து நீ பள்ளியை விட்டு வந்தவுடன் மன கஷ்டமாக இருப்பதை பார்த்துவிட்டு உனக்கு நான் ஆறுதல் சொல்லிவிட்டு போயிருக்க முடியும் ஆனால் ஏன் இவ்வளவு முறை விளையாட வைத்தேன் தெரியுமா? நீ உனக்கு ஏற்பட்ட தோல்வியை நீ ஆணியாக நினைத்தால் உருத்தி கொண்டே இருக்கும் ஆனால் ஏணியாக நினைத்தால் உயர்த்தும். நீ என்னுடன் இத்தனை முறை தோற்றும் அந்த தோல்வியை ஆணியாக எண்ணாமல் ஏணியாக எண்ணியதால் தான் உன்னால் ஜெயிக்க முடிந்தது உயரவும் முடிந்தது மாநில அளவில் விளையாடிய என்னையே உன்னால் ஜெயிக்க முடிகிறது நாளைக்கு நடக்கும் போட்டியில் நீ கண்டிப்பாக ஜெயிப்பாய் போ என்றார். சஞ்சனா சரி என்று சொல்லி தனக்குள் ஒரு நம்பிக்கையை வரவைத்து கொண்டால் நாளைக்கு தன்னால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று எண்ணி சென்றாள் ஒருவேளை தோற்றாலும் பரவாயில்லை முயற்சித்தால் அடுத்த போட்டி வைத்தால் அதில் கண்டிப்பாக என்னால் ஜெயிக்க முடியும் என்று எண்ணினால். அடுத்த நாள் வந்தது போட்டி தொடங்கியது சஞ்சனா சுலபமாக ஜெயித்தால் அதன் பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு படியாக ஜெயித்து இறுதிப்போட்டியையும் வென்று விட்டால். பிறகு அந்த மகிழ்ச்சியான செய்தியை தன் தகப்பனிடம் கூறினாள். அதற்கு அவள் தந்தை நான் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொள் உனக்கு ஏற்பட்ட தோல்வியை நீ ஆணியாக நினைத்தால் உன்னை உறுத்தும் ஆனால் ஏணியாக நினைத்தால் உன்னை உயர்த்தும். ஏற்படும் தோல்வியை ஏணியாக நினைத்து மேலே சென்று கொண்டே இரு வெற்றி உன்னை தேடி வந்து கொண்டே இருக்கும் என்று தன் மகளுக்கு சொல்லிக் கொடுத்தார். உழைப்பும் உயர்வும் தன் வாலிப வயதில் கஷ்டப்பட்டு உழைக்காதவன் தன் முதிர் வயதில் கண்ணீர் சிந்துவான் காவலூர் என்ற ஒரு சிறிய கிராமம் இருந்தது அதில் மகேஷ் என்ற ஒரு எட்டு வயது மகன் இருந்தான். அவன் வீட்டு எதிரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது அந்த குடும்பத்தில் தந்தை தாய் மற்றும் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். மகேஷ் எப்போதும் அந்த எதிர் வீட்டு பிள்ளைகளையும் அவர்கள் தந்தையையும் பார்ப்பது வழக்கம். ஏனென்றால் அந்த தந்தை எப்போதும் கண்டித்துக் கொண்டே இருப்பார் படி படி என்று “இப்பொழுது கஷ்டப்பட்டால் தான் முதிர் வயதில் நிம்மதியாக இருக்க முடியும்” என்று சொல்வார். அந்தப் பிள்ளைகள் இரண்டு பேரும் தன் தகப்பன் சொல்வதை கடினமாக பார்ப்பார்கள். ஆனால், மூத்த மகன் மற்றும் தகப்பன் கண்டிப்பை ஏற்றுக் கொள்வான் இளைய மகன் தன் தகப்பன் கண்டிப்பை அசட்டை பண்ணுவான். இவைகளையெல்லாம் மகேஷ் பார்த்துக்கொண்டே வளர்ந்தான். அந்த எதிர் வீட்டுப் பிள்ளைகளிள் மூத்த மகன் கடினமாக படிக்க தொடங்கினான். இளைய மகன் சோம்பேறியாகவே இருந்தான். மூத்த மகன் பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரியில் இலங்களை மற்றும் முதுகலை பட்டத்தையும் பெற்று நல்ல ஒரு நிலையில் ஒரு பெரிய நிறுவன அதிகாரியாக அமருகிறான். ஆனால் இளைய மகன் பத்தாம் வகுப்பில் தோல்வியை சந்தித்து அதற்கு மேல் அவன் படிப்பை வேண்டாம் என்று தன் வாலிப நண்பர்களுடன் நாட்களை வீண் செய்தான். ஒரு மூன்று வருடம் கழித்து அவனுக்கு வாழ்க்கை பயம் வரத் தொடங்கியது அவன் ஒரு முயற்சி செய்தான். ஏதாவது, ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கேட்க வேண்டும் என்று வேலை கேட்க தொடங்கினான் எங்கும் கிடைக்கவில்லை செல்லும் இடமெல்லாம் படிப்பும் பட்டமும் கேட்கிறார்கள் இவனுக்கு ஒரே மன கஷ்டம் என்ன செய்வது என்றே தெரியவில்லை கடைசியில் லாரி (Mechanic)பொறிமுறையாளர் கடையில் வேலைக்கு சேர்ந்து தினமும் மன வருத்தத்துடன் வேலை செய்து வந்தான். இவை அனைத்தையும் மகேஷ் பார்த்துக் கொண்டே இருந்தான் மகேஷ் மனதில் ஒரு தீர்மானம் எடுத்தான் " தன் வாலிப வயதில் கஷ்டப்பட்டு உழைக்காதவன் தன் முதிர் வயதில் கண்ணீர் சிந்துவான்" என்று எண்ணி நாம் இப்பொழுது இருந்தே கடினமாக உழைக்க வேண்டும், அப்பொழுது தான் பிற்காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும் என்று தீர்மானித்தான். பொய்யும் உண்மையும் பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம் கணேசன் என்ற ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் மூன்று கடைகளை சொந்தமாக வைத்துக் கொண்டிருந்தார். அந்த மூன்று கடையிலும் இரண்டு இரண்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்து நடத்தி வந்தார். அனைத்து தொழிலாளர்களிடமும் செல்போன் மூலமே விசாரித்து வந்தார். அந்த மூன்று கடையின் ஒரு கடையில் ராயுடு ,மதன்குமார் என்று இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதில் மதன்குமார் அதிகமாக பொய்களை மட்டும் சொல்லி திரிவது அவரது வழக்கம். ராயுடு உண்மைகளை மட்டுமே பேசுவான் உண்மையாகவும் இருப்பான். முதலாளி தினமும் செல்போனில் பேசி கடை வியாபாரத்தை பற்றி விசாரிப்பார். மதன் குமார் தன் வீட்டில் இருந்தபடியே நான் கடையில்தான் இருக்கிறேன் ஐயா, வியாபாரம் எல்லாம் அருமையாக போகிறது என்று பொய் பொய்யாக சொல்லுவான். பிறகு முதலாளி ராயுடுவிற்கு ஃபோன் செய்வர், ராயுடு போன்காலை அட்டென்ட் செய்து ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் சிறிது தாமதம் ஆகிவிட்டது நான் வந்து விடுகிறேன் என்று உண்மையை சொல்வான். அதற்கு முதலாளி ராய்டுவை திட்டிவிட்டு காலை கட் செய்து விடுவார். இன்னொரு நாள் கால் செய்து விசாரிக்கும் போது மதன் வீட்டில் இருந்தபடியே ஐயா நான் கடையில்தான் இருக்கிறேன் என்று பச்சையாக பொய் சொன்னான். அதற்கு முதலாளி சரி என்று வைத்து விட்டார், அடுத்து ராயுடுவிற்கு கால் செய்தார் ராய்டு, ஐயா நான் இன்னும் பத்து நிமிடங்களில் கடைக்குப் போய் விடுவேன் என்று சொன்னான் அதற்கு முதலாளி தினமும் தாமதமாக வருவதே உனக்கு வேலை என்று சொல்லி திட்டி விட்டு காலை கட் செய்து விட்டார். இதே தினமும் நடந்து கொண்டிருந்தது . ஒரு நாள் கடைக்கு முதலாளி நேரடியாக வந்துவிட்டார். கடையில் ராயுடு மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தான் முதலாளி ராயுடுவை பார்த்து மதன் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த கடை வாடிக்கையாளர்கள் முதலாளியை பார்த்து இந்த கடையில் இவர் ஒருவர் மட்டும்தான் இருப்பார் நீங்கள் மதன் எங்கே என்று யாரைக் கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள், முதலாளிக்கு ஒரே ஆச்சரியம், உடனே மதனுக்கு கால் செய்தார் மதன் காலை அட்டென்ட் செய்து, ஐயா கடையில் தான் இருக்கிறேன் என்றான் உடனே முதலாளி நானும் கடையில் தான் இருக்கிறேன் உன்னை காணவில்லையே என்று கேட்டு, ராயுடு மட்டும்தான் இருக்கிறான் என்றார், உடனே மதன் ஐயா நான் அருகில் தான் இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்றான் முதலாளி காலை கட் செய்தார். சிறிது நேரம் கழித்து மதன் வீட்டிலிருந்து ஓடி கடைக்கு வந்தான் முதலாளி மதனை பார்த்து நீ தினமும் என்னிடம் பொய் மட்டும் சொல்லி என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் இனிமேல் நீ என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் நின்று விடு என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். மதன் தலை குனிந்தபடியே மீண்டும் தன் வீட்டிற்கு சென்றான். ராயுடு தன் மனதில் “பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்” என்று தன் வேலையை பார்க்க தொடங்கினான். நாளும் மாற்றமும் நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது லிங்காபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது, அந்த கிராமம் மிகவும் செழிப்பான ஒரு கிராமம். அதில் சேகர் என்ற ஒரு விவசாயி வசித்து வந்தார். அவர் மிகவும் தாழ்மையானவர், அமைதியானவர், கடினமாக உழைப்பவர் அவருக்கு மகன், மகள் இருந்தார்கள் அவருடைய மனைவியும் அவர் செய்யும் தொழிலுக்கு எல்லாம் துணையாக இருப்பாள். சேகர் ஒரு வெங்காயம் நாத்து நடும் விவசாயி இவர் நிலத்தில் மட்டும் நடுத்தர விளைச்சல் பலன் மட்டுமே தரும் ஆனால் இவருடைய நண்பர்கள் நிலத்தில் எல்லாம் அதிக அளவில் விளைச்சல் தரும். இதைப் பார்த்த சேகர் அவர்கள் மீது சிறிது அளவு கூட பொறாமைப்பட மாட்டார் அவர்களுடன் போட்டியும் போட மாட்டார் இவர் உண்டு இவர் வேலை உண்டு என்று இருப்பார். சேகர் தன்னுடைய நிலத்தில் நல்ல விளைச்சல் பலன் தருவதற்கு எவ்வளவோ முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். அவர் மனைவி அவரைப் பார்த்து ஒரு நாள் நீங்கள் வேறு ஏதாவது விளைச்சல் செய்யலாமே ஏன் இந்த வெங்காயம் விளைச்சலை செய்து விட்டு இதுவே விதி என்று கிடக்கிறீர்கள் இதை விட்டு விடுங்கள் வேறு ஏதாவது செய்யலாம் வாருங்கள் என்றாள் அதற்கு சேகர் கொஞ்சம் பொறு எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறாது என்று சொல்லி தன் வேலையை பார்த்தார். ஒரு நாள் நன்கு காற்று மழை அதிகமாக வீசியது அந்த மாவட்டம் முழுதும் வீசியது நல்ல காற்று மழை அனைத்து விவசாயிகளின் விளைச்சலும் பாழாயின அனைத்து செடிகளும் மிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், போன்ற செடிகள் எல்லாம் வேருடன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு போயின கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மழை காற்று தொடர்ந்து இருந்தது. சேகரின் வெங்காயச் செடியும் மண்ணில் இருந்து வெளியே வந்தன. ஆனால், சேகரின் எல்லா செடியிலும் கொத்து கொத்தாக வெங்காயம் இருந்தது மற்ற யார் நிலத்திலும் இந்த அளவில் இல்லை பிஞ்சுகளாக தான் இருந்தது. அந்த நேரம் பார்த்து வெங்காயம் விலை மிக அதிகமாக உயர தொடங்கினது ஒரு கிலோவே மிக அதிக விலையில் இருந்தது. லிங்காபுரம் கிராமத்திலேயே சேகரின் நிலத்தில் மாத்திரம் தான் அந்த நேரம் பார்த்து நன்கு விளைச்சல் பலன் கொடுத்து. அவர் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் பார்த்து இன்னொரு நிலத்தையே வாங்கி விட்டார். பிறகு சேகர் தன் மனைவியை பார்த்து மிகவும் சந்தோஷத்துடன் நான் சொன்னது போலவே நடந்திருச்சு பார்த்தியா " நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது" கஷ்டங்களே அனுபவங்களாக வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகம் வரவில்லை என்றால் நமக்கு பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும் சங்கர் என்கிற ஒரு தொழிலதிபர் இருந்தார் அவர் பல தொழிலுக்கு முதலாளியாக இருந்தார். இவர் சங்கர் ஓட்டல், சங்கர் மளிகை கடை, சங்கர் துணிக்கடை ,சங்கர் ஆட்டோ, சங்கர் டிராவல்ஸ் என இவர் பல தொழிலுக்கு முதலாளியாக இருந்தார். இவருக்கு சண்முகம் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் ஒரு நாள் சங்கரிடம் வந்து, நீ மட்டும் எப்படி இத்தனை தொழிலுக்கு முதலாளியாக இருக்கிறாய். எப்படி, இத்தனை தொழில்களை செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு சங்கர் எனக்கு பல தொழில்களின் விஷயங்களைப் பற்றி தெரியும் எனவே என்னால் இத்தனை தொழில்களையும் நம்பிக்கையாக செய்ய முடிகிறது என்றான். அதற்கு சண்முகம் அதுதான் எப்படி என்று கேட்டார், சங்கர் அதற்கு என் தந்தை எனக்கு அறிவு தெரிவதற்கு முன்பே இருந்து போய்விட்டார் என் தாய் எனக்கு அறிவு தெரிந்த உடன் இருந்து போய்விட்டார். மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலைக்கு ஆளானேன். அதன் பிறகு என்னை நானே பார்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு முதலாவது ஒரு ஓட்டலில் பாத்திரங்களை கழுவும் வேலைக்கு சேர்ந்தேன் சிறிது நேரம் அங்கே வேலை பார்த்தேன் ஹோட்டல் எப்படி நடத்துவது என்று கற்றுக் கொண்டேன், பிறகு எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை கடைக்கு மளிகை சாமான் போடுவார் அவருடன் சிறிது நாள் கூட வேலை செய்தேன். அதன்பிறகு ஒரு டிராவல்ஸ் ஏஜென்சியில் வண்டிகளை சுத்தம் செய்யும் வேலைக்கு சேர்ந்தேன். அங்கிருந்த ட்ராவல்ஸ் உரிமையாளர் எனக்கு ஆட்டோ ஓட்டும் வேலையை கற்றுக் கொடுத்தார் அங்கே நான் ஆட்டோவும் ஓட்ட கற்றுக் கொண்டேன் டிராவல்ஸ் எப்படி நடத்த வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன், பிறகு எனக்கு சிறுவயதில் நெருங்கிய நண்பர் ஒருவன் இருந்தான் அவன் துணிக்கடையை நடத்தினான் அவனுடன் சிறிது காலம் பார்ட்னராக இருந்தேன் இவ்வளவு விஷயங்கள் தொழிலில் எனக்கு தெரியும். ஒவ்வொரு படியாக தொழில் பற்றி கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு இடத்திலும் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு ஒவ்வொரு வேலையும் கற்றுக் கொண்டேன். இப்பொழுது நான் கற்றுக் கொண்ட வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கி நானே முதலாளியாக இருந்து நடத்துகிறேன் “நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகம் வரவில்லை என்றால் நமக்கு பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும்” என்று சங்கர் அவர் நண்பர் சண்முகத்தை பார்த்து இதுதான் நான் கடந்து வந்து பாதை என்று சொன்னார். எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் எதிர்த்து வாழு! ஒருவரையும் ஒருபோதும் எதிர்பார்த்து வாழாதே! பட்டாலும் என்ற ஒரு சிறிய கிராமம் இருந்தது அது மிகவும் அழகான ஒரு கிராமம் அந்த கிராமத்தில் ஊர் தலைவர், எல்லா முறையும் ஒருவர் மட்டுமே நிற்பார் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள், அவர் பெயர் காந்தா ராமன். ஊர் மக்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருந்தார் அந்த கிராமத்தில் தேர்தல் காலம் நெருங்கத் தொடங்கினது மக்கள் யாரும் போட்டி போட முன்வரவில்லை மிகவும் அஞ்சினார்கள். அரசியல் ஆர்வம் உடையவர்கள் கூட இவருக்கு பயந்து இவருக்கு கீழே உள்ள பதவிகளுக்கு மட்டும் வார்டு நம்பர், பகுதி கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு மட்டும் போட்டி போட்டு நின்றனர் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நிற்கவில்லை. இந்த கவுன்சிலர், வார்டு நம்பர் பதவிக்கு கூட இவரை எதிர்பார்த்து வாழும் ஊர் மக்கள் மட்டும் தான் நின்றார்கள் தேர்தலில் மற்ற யாரும் நிற்கவில்லை. சிறிது நாள் கழித்து ஊரில் ஒரு சின்ன சலசலப்பு என்னவென்றால் அதே கிராமத்தில் சஞ்சய் என்ற ஒரு வாலிபன் இளங்கலை பட்டம் படித்து முடித்தவன். அந்த வாலிபன் தலைவர் பதவிக்கு எதிர்த்து போட்டியிட போவதாக சலசலப்பு, பிறகு அதுவே உண்மையாக மாறியது இப்பொழுது காந்தா ராமனுக்கு ஒரே ஆச்சரியம் மற்றும் ஒரே கோபம். காந்தா ராமன் நேரடியாக சஞ்சய் வீட்டிற்கே சென்று பேசிப் பார்த்தார். சஞ்சய் விட்டுக் கொடுக்கவே இல்லை நான் எதிர்த்து நின்றே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தான் காந்தாராமன் தம்பி நீ என்னை எதிர்தே நில் என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால், தன் மனதில் சின்ன தம்பி இவனுக்கு என்ன தெரியப்போகுது இவன் எப்படி என்னை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே போனான். தேர்தல் நடந்தது தேர்தல் முடிவுகள் வந்தது அதிசயமாக சஞ்சய் அமோக வெற்றி பெற்றான் காந்த ராமனுக்கு ஒரே குழப்பம் ஒரே எரிச்சல் யாரிடமும் பேசாமல் தன் வீட்டிற்கே சென்று விட்டார். பதவியேற்பு நிகழ்ச்சி வந்தது சஞ்சய் ஊர் மக்கள் முன்னால் பதவி ஏற்றுக்கொண்டான் சிறிது நேரம் மக்களுடன் மைக்கில் பேசினான். நன்றி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் எதிர்த்து வாழ வேண்டும் ஒருவனையும் எதிர்பார்த்து வாழக் கூடாது இந்த வார்டு நம்பர், கவுன்சிலர் எல்லாம் ஒருவரை எதிர்பார்த்து போட்டியிட்டார்கள் அது தவறு எப்பொழுதும் “எதிர்த்து வாழ வேண்டும் ஒருவரையும் எதிர்பார்த்து வாழக் கூடாது” என்று சொல்லி அடுத்த வேலையை பார்க்க தொடங்கினான். சோதனையும் சாதனையும் சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருக்க வேண்டும் கரன் என்ற ஒரு வாலிப மகன் இருந்தான் அவனுக்கு லோகேஷ் என்ற ஒரு நண்பனும் இருந்தான். கரன் மிகவும் சுறுசுறுப்பானவன் லோகேஷ் ஒரு சோம்பேறி இரண்டு பேருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் மாநில அளவில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. இரண்டு பேரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்ய தொடங்கினார்கள். இப்படியே சில நாட்கள் சென்றது பிறகு பலத்த மழை தொடங்கியது அந்த மழை இரண்டு வாரமாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது இந்த காரணத்தினால் லோகேஷ் பயிற்சி கூடத்திற்கு செல்லவில்லை. ஆனால் கரன் மட்டும் விடாமல் செல்வான் அதன்பிறகு மீண்டும் லோகேஷ் பயிற்சி பண்ண தொடங்கினான். அதன் பிறகு கல்லூரி செமஸ்டர் தேர்வின் காரணமாக லோகேஷ் உடற்பயிற்சி செய்யவில்லை. ஆனால் கரன் மட்டும் தன் தேர்வுக்கு படித்துவிட்டு கிடைக்கும் நேரங்களில் பயிற்யையும் செய்தான். ஒரு சிறிய போட்டி வந்தது அதில் கரன் பங்கு பெற்று போட்டியில் ஜெயித்து விட்டான், பிறகு மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு தயாரானான் ஆனால் லோகேஷ் சிறிய சிறிய காரணங்களை காட்டி உடற்பயிற்சி கூடத்திற்கு தொடர்ந்து செல்ல மாட்டான் பிறகு சிறிது நாள் கழித்து மிஸ்டர் தமிழ்நாடு போட்டி வந்தது கரன் பங்கு பெற்று அருமையாக ஜெயித்து விட்டான். கரனுக்கு ஒரே மகிழ்ச்சி லோகேஷ் கரனை பார்த்து எப்படிடா உன்னால் முடிந்தது என்று கேட்டான் அதற்கு கரன் லோகேஷை பார்த்து “சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நாமாக இருக்க வேண்டும்” என்றான். நீ கால சூழ்நிலையால் பயிற்சியை விட்டு விட்டாய் நான் விடாமல் பயிற்சி செய்தேன் இப்பொழுது ஜெயித்து விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். வாழ்தலும் வரலாற்றில் வாழ்தலும் நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்ல இந்த சரித்திரம் நம்ம பேரை சொல்லணும் சீர் புறம் என்ற ஒரு சின்ன நகரம் இருந்தது அதில் மோகன் என்ற ஒரு சகோதரன் இருந்தான் நல்ல வசதிகள் உடைய ஒருவன் ஒருநாள் மோகன் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான். அருகில் அவன் மகன் அமர்ந்திருந்தான். மோகன் செய்தித்தாளை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது “உடனே அவன் மகன் என்ன நடந்தது ஏன் அப்பா அழுவுறீங்க என்று கேட்டான்” அதற்கு மோகன் இது ஆனந்த கண்ணீர் பா என்னுடன் படித்த என் நண்பன் இன்றைக்கு இந்த செய்தித்தாளில் வந்திருக்கிறான். அவன் சிறு வயதில் நடிப்பில் மிகவும் ஆர்வம் உடையவனாக இருப்பான் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கும் அனாதை குழந்தைகளுக்கும் உணவு வாங்கி கொடுப்பான் இரண்டு பேரும் பள்ளி வரை ஒன்றாக படித்தோம் கல்லூரி படிப்பின் போது பிரிந்து விட்டோம். அவன் கல்லூரி முடித்துவிட்டு ஒரு children’s trust (NGO) வைத்து விட்டான். நான் படித்த படிப்பிற்கு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன் அவன் முழு நேரமாக அந்த trust ல் வேலை செய்வான் நேரம் கிடைக்கும்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை தேடுவான் சில நேரங்களில் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு முழு நேரமும் நடிக்கும் வாய்ப்பை தேடுவான். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறான். ஆனால் இன்றைக்கு உலகமே பார்க்கும் வகையில் கதாநாயகனாக நடித்திருக்கிறான் இன்றைக்கு செய்தித்தாளிலும் வந்திருக்கிறான். அவன் நடிப்பிற்கு தேசிய விருது பெற்றிருக்கிறான் எனக்கு இன்றைக்கு பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பா இன்றைக்கு அவன் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறான் நீயும் ஒன்று கற்றுக்கொள் “நம்ம எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்ல இந்த சரித்திரம் நம்ம பேரை சொல்லணும்” அது போல வாழனும் என்றான். ரசிப்பும் ருசிப்பும் ரசிப்பதையெல்லாம் அடைய நினைக்கிறோம் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம் அறிவழகன் என்பவர் ஒருவர் இருந்தார் அவருக்கு மாளிகை வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. ஆனால் இவர் ஒரு சிறிய வீட்டில் தான் வாழ்ந்து வந்தார், எங்கே மாளிகை வீட்டை பார்த்தாலும் நின்று ரசித்து விட்டு தான் வருவார். எப்படி எல்லாம் விதவிதமாக மாளிகை வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து பல திட்டங்களை வைத்திருந்தார். இந்த நிறம் அடிக்க வேண்டும் இந்த மாடல் வைக்க வேண்டும் என்று பல திட்டங்களை வைத்திருந்தார். நிறைய வேலைகளை செய்து பணத்தை சேகரித்தார் வீடு கட்டுவதற்கு தேவையான அளவு பணமும் சேகரித்து வைத்திருந்தார். இப்பொழுது அவர் நினைத்தபடி அந்த மாளிகை வீட்டை கட்டுவதற்கான வேலையையும் தொடங்கினார். ஒரு ஆறு மாதம் கழித்து பார்த்தவுடன் ஓரளவுக்கு வேலை முடிந்து விட்டது. அடுத்து மூன்று மாதம் கழித்துப் பார்க்கும்போது முழு வேலையும் முடிந்து விட்டது. அந்த நேரம் பார்த்து இவருக்கு வெளிநாட்டில் வேலை வந்தது வேலைக்கு சென்றார். அதன் பிறகு அடுத்த மூன்று வருடம் கழித்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் அதன் பிறகு இன்னொரு நாட்டில் வேலை வருகிறது அங்கேயும் சென்று விட்டார் கடைசியில் நாடு நாடாக சென்று 15 வருடம் கழித்து திரும்பவும் சொந்த ஊருக்கு வருகிறார். வந்து தான் கட்டிய வீட்டில் அமர்ந்து பார்க்கிறார். தன் மனதில் இந்த வீடு கட்டுவதற்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனால், நான் இப்பொழுது கட்டிய இந்த வீட்டின் அழகை ரசிக்கவே மறந்து விட்டேன். “ரசிப்பதையெல்லாம் அடைய நினைக்கிறோம் அடைந்ததை எல்லாம் ரசிக்க மறக்கிறோம்” என்று நினைத்தபடியே தன் அறைக்குள் சென்று ஓய்வு எடுத்தார். பாதையும் பயணமும் எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு ஜஸ்டின் என்ற ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் மிகப்பெரிய ஒரு தொழில் அதிபர் அவர் ஒரு கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அங்கே அவரும் சென்றார் சில நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்று முடிந்தது. பிறகு ஜஸ்டினை ஒரு சில வார்த்தைகளை பேசும்படி அழைத்தார்கள். இவரும் மாணவர்கள் முன்னால் பேசத் தொடங்கினார். ஜஸ்டின் மாணவர்களிடம், நான் என்னைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன் நான் என் வாழ்க்கையில் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் காரணம் ஒன்றுதான் அது என்னவென்றால் எல்லோரும் தேர்ந்தெடுத்த ஒரு படிப்பை நான் நிராகரித்து விட்டு எனக்கான ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து மிகவும் கடினமான ஒரு படிப்பை தேர்ந்தெடுத்தேன். கஷ்டப்பட்டு படித்தேன். இப்பொழுது உங்கள் முன்னால் நிற்கிறேன். நீங்களும், எல்லோரும் இந்த படிப்பை படிக்கிறார்கள் நாமும் படிப்போம் என்று ஒருவரை பார்த்து பின் தொடராதிருங்கள் உங்களுக்கு என்று ஒரு கனவை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு என்ன படிப்போ அதை தேர்ந்தெடுத்து படியுங்கள் நிச்சயமாக நீங்களும் சாதிப்பீர்கள். இப்பொழுது நீங்கள் அனைவரும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டீர்கள் இப்பொழுது நான் சொன்னதை உங்கள் முதுகலை படிப்பிற்கு பயன்படுத்துங்கள் என்றார். உங்களுக்கான பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள் அனைவரும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வார்கள் என்று ஜஸ்டின் மாணவர்கள் முன்னால் சொன்னார். மாணவர்கள் அனைவரும் ஒரு நல்ல செய்தியை கேட்டோம் என்ற மனதுடன் பட்டம் பெற்றனர். பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை அதுபோல தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதில்லை ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கல்லூரி இருந்தது. அந்த கல்லூரியில் (philosophy department) தத்துவத்துறை இருந்தது. அந்த தத்துவத்துறை வாத்தியார் பிள்ளைகளுக்கு சிறப்பான முறையில் மனதில் பதியும் வகையில் பாடம் எடுப்பார் ஒரு நாள் பிரச்சனையைப் பற்றி பாடம் எடுத்தார் பிள்ளைகளைப் பார்த்து இங்கு எத்தனை பேர் பிரச்சனை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. அதற்கு வாத்தியார் எதிர்பார்த்த விஷயம் தான் சரி, நான் ஒரு சின்ன செயல்பாடு தருகிறேன் அதை செய்கிறீர்களா? என்று கேட்டார் பிள்ளைகள் அதற்கு சரி என்று கூறினார்கள். நான் ஒரு பாத்திரத்தை பதுக்கி வைத்திருக்கிறேன் அது இந்த வகுப்பில் தான் இருக்கிறது நீங்கள் அந்த பாத்திரத்தை தேட வேண்டும் என்று சொன்னார். பிள்ளைகள் ஆர்வத்துடன் தேடினார்கள் ஐயப்பா என்ற ஒரு மாணவன் அந்த பாத்திரத்தை கண்டுபிடித்து விட்டான் பிறகு வாத்தியார் அந்த பாத்திரத்தை வாங்கி டேபிளில் வைத்து விட்டு இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டார், பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். வாத்தியார் பிள்ளைகளை பார்த்து நான் உங்களுக்கு கொடுத்த இந்த செயல்பாடு தான் ஒரு பிரச்சனை நீங்கள் கண்டுபிடித்த இந்த பாத்திரம் தான் தீர்வு இந்த தீர்வாகிய பாத்திரத்தை பதிக்கி வைத்தது நான்தான் செயல்பாடு என்ற பிரச்சனையை கொடுத்ததும் நான் தான். அதேபோல் தான் நம் வாழ்க்கையிலும் தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு செயல்பாடு என்ற பிரச்சனையை கொடுத்ததும் நான்தான் தீர்வு என்ற பாத்திரத்தை வைத்ததும் நான்தான் அதேபோல் “சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை அதேபோல தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதில்லை” எனவே பிரச்சினைகளை பார்த்து பயந்து விடாதீர்கள் தீர்வு இல்லாத பிரச்சனையே இல்லை என்று வாத்தியார் அருமையான முறையில் பிரச்சனையை பற்றி விளக்கி பாடம் எடுத்தார். கிடைத்தலும் இழந்தலும் இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இரண்டு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு இமான் என்ற ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு ஆசை அது என்னவென்றால் BMW கார் வாங்க வேண்டும் என்று எங்கு BMW காரை பார்த்தாலும் அதன் அழகை உற்று ரசிப்பது இவரின் வழக்கம் ஆனால் இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மாதம் 20,000 ரூபாய் மட்டும் சம்பாதிப்பவர் ஒருநாள் இவர் தன் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கத் தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் பணம் சேர்த்து வைக்கவும் தொடங்கினான். தன் வீட்டிற்குள்ளே காரை நிறுத்துவதற்கு இடத்தைக் கூட சீர்படுத்தி விட்டான். இப்பொழுது கார் (showroom) காட்சியரைக்கு சென்று விலையை விசாரித்தான். அவர்கள் சொன்ன தொகை இவனிடம் இருந்தது உடனே மறுநாளே அந்த பணத்தை கட்டி விட்டு அவன் நினைத்தபடியே BMW காரையும் வாங்கி விட்டான். அதன் அழகை தினமும் ரசிப்பான் ஓட்டவும் தொடங்கினான் அடுத்து இவனுக்கு இன்னொரு ஆசை வந்தது Rolls-royce கார் வாங்க வேண்டும் என்று ஒரு புது ஆசை வந்தது பிறகு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கினான் rolls-royce கார் வாங்க வேண்டும் என்றால் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தான் அந்த தொழிலில் முன்னேறி விட்டு rolls-royce கார் வாங்க வேண்டும் என்று தீர்மானித்தான். ஒரு தொழில் தொடங்கினார் முதலீடு வேண்டும் என்பதற்காக தான் ஆசை பட்டு வாங்கிய BMW காரை விற்று விட்டான். தன் காரை விற்ற மொத்த பணத்தையும் அந்த தொழில் முதலீட்டில் போட்டான் எதிர்பார்க்காத விதமாக ஆபார தோல்வியை சந்தித்தான். அடுத்த வேலை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டான். ரோட்டில் ஒரு ஓரமாக நின்று கொண்டு, அருகில் இருந்த ஒரு BMW காரை பார்த்து, தன் மனதில் “இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இரண்டு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்குப் பின்பு” என்று நினைத்துக் கொண்டே கடந்து சென்றான். வெற்றியும் தோல்வியும் எங்கே விழுந்தோம் என்பதை விட எங்கே கவனத்தை சிதறவிட்டோம் என்பதை கவனித்து பாருங்கள் விழவே மாட்டீர்கள் ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கமல்ராஜ் என்பவன் இருந்தான். இவனுக்கு அருள் என்ற ஒரு நண்பனும் இருந்தான் நன்கு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேரும். சிறிது காலம் சென்றது கமல்ராஜ் கணக்கில் ஒரு பாடம் எடுக்கும் நேரத்தில் சிறிது விளையாட்டு புத்தியவுடன் சாதாரணமாக விட்டு விட்டான் கவனிக்கவில்லை மற்ற பாடங்களை எல்லாம் நன்கு கவனித்தான். ஆனால் கணக்கில் மட்டும் சிறிது கவனக்குறைவாய் இருந்தான். ஆனால் அருள் அனைத்து பாடங்களையும் நன்கு கவனித்தான். SSLC தேர்வு வந்தது ஆங்கிலம் தமிழ் தேர்வுகளை கமல்ராஜ் நன்றாக எழுதினான் கணக்கில் மிகவும் கொடுமையாக எழுதினான். இவனுக்கு ஒரே மன கஷ்டம் மற்ற அறிவியல் சமூக அறிவியல் பாடங்களை நன்றாக எழுதினான். ஒரு மாதம் கழித்து தேர்வு முடிவுகள் வெளியானது அருள் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களை எடுத்தான். ஆனால் கமல் ராஜ் கணக்கில் தோல்வியை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளானான். அருள் கமலுக்கு ஆறுதல் கூறி “நாம் எங்கே விழுந்தோம் என்பதை விட எங்கே கவனத்தை சிதறவிட்டோம் என்பதை கவனித்து பார்த்தால் விழவே மாட்டோம்” என்று கூறி நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன் நீ கவலைப்பட வேண்டாம். அடுத்த முறை இந்த தேர்வு வைக்கும் போது நீ கண்டிப்பாக தேர்ச்சி பெறுவாய் என்று ஆறுதல் கூறினான். கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account