[] 1. Cover 2. Table of contents twitter இழைகள் twitter இழைகள்   தொகுப்பு - லெனின் குருசாமி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : Royalty-Free License கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/twitter_threads மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/ramana_maharishi This Book was produced using LaTeX + Pandoc பதிப்புரிமை Twitter Royalty-free License Twitter-ன் content policy-ன் படி இதில் உள்ள பதிவுகள், அப்பதிவுகளை இட்டவர்களுக்கே சொந்தம். பதிவுகளில் உள்ள படங்களுக்குக் காப்புரிமை மாறலாம். தொகுப்புரை கடந்த 6-7 ஆண்டுகளாக ட்விட்டரில் உலா வந்தாலும், சொந்தமாக ஒரு பதிவும் இடவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டுச் செல்வேன். அதில் பல பதிவுகள்/இழைகள் பயனுள்ளதாகவும் எக்காலத்திற்கும் தேவைப்படுவதாகவும் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஒன்றிய’ அரசின் செயல்பாடு சமூக வலைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததை நாம் அறிவோம். ஒரு வேளை அரசியல் காரணங்களுக்காகத் தனி நபர்களின் சமூக வலைத்தள கணக்குகளையோ அல்லது மொத்த சமூக வலைத்தளத்தையோ முடக்கினால் என்ன ஆகும் ? பல வருடங்களாகப் பலரும் பதிந்த பல ஆயிரம் பதிவுகள் (தமிழில் மட்டும்) காணாமல் போகலாம். எனவே ஒரு சிறு முயற்சியாக, அவ்வப்போது என் கண்ணில் பட்ட thread-களை தொகுத்து மின்னூலாக FreeTamilEbooks.com தளத்தில் வெளியிடுவது என முடிவு செய்தேன். Thread-களை தவிரப் போகிற போக்கில் எழுதிய சிறு துணுக்குகள், கவிதைகள் எனப் பல ஆயிரம் பதிவுகள் இருக்கலாம். இது போன்று சமூக வலைத்தளங்களில் (microblog) மட்டுமே எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் தயவு கூர்ந்து இணையதளம், பிளாக் அல்லது வேர்டுபிரஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் எழுதி பிறகு இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் பதியலாம். இதன்மூலம் அப்பதிவுகள் வருங்காலத்திலும் கிடைக்க வாய்ப்புண்டு. இவை அல்லாமல் நாம் அனைவரும் பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் (decentralized social network) என்ற தொழினுட்பத்தில் இயங்கக்கூடிய mastodon போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயமும் உள்ளது. microblogger-களுக்கு இம்மின்னூல் ஏதேனும் ஒரு விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நம்புகிறேன். கடந்த ஒரு வாரமாக இந்த Thread-களை தொகுத்து மின்னூலாக வெளியிட உதவிய ஐஸ்வர்யா லெனின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவண் லெனின் குருசாமி தன்னார்வலர் கணியம் அறக்கட்டளை Under Dog Effect [theroyalindian] #Under_Dog_Effect என்றால் என்ன..! ‘மான்கராத்தே’ திரைப்படத்தின் Climax காட்சியில் நிஜமான குத்து சண்டை வீரர் பீட்டரும், மான்கராத்தே பீட்டரும் (சிவகார்த்திகேயனும்) மோதும் காட்சி வரும்) […] அந்த இறுதி காட்சியில் குத்து சண்டையே தெரியாத சிவகார்த்திகேயன் வெல்ல வேண்டும் என்று தான் ஒரு சாதாரண சினிமா ரசிகனா நமது எதிர்பார்ப்பு அமைந்திருக்கும். ஒரு நல்ல வலிமையான நபருக்கும், (அவருடன் ஒப்பிடும்போது) அவரை விட மிகக் குறைவான வலிமை கொண்ட நபருக்கும் இடையில் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது. நாம் யார் பக்கம் இருப்போம். […] அந்த வலிமையான நபருக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனில்…, அதை பார்க்கும் நாம் இயல்பாகவே அந்த வலிமை குறைந்த நபர் பக்கம் தான் இருப்போம். நம் மனமும் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்பும். இதில் நாம் மட்டும் அல்ல நம் சமூகமும் (பெரும்பாலான தருணங்களில்) இத்தகைய வலிமை குறைந்த நபர்களின் வெற்றியை தான் விரும்புகிறது. இது போன்ற வலிமை குறைந்தவர்களை தான் UnderDog என குறிப்பிடுகிறோம். இது ஒரு சமூக விளைவு. (Social Effect) நம்முடைய இந்த மனநிலைக்கு காரணம் நாமும் ஏதாவது ஒரு தருணங்களில், ஏதோ ஒரு நபரிடம் இதுபோன்று UnderDog ஆக போட்டியிட்டு தோற்று போய் இருப்போம். அத்தகைய சூழ்நிலைகளில் நாம் பெற்ற தோல்விகள் தான் நம்முடைய இந்த மனநிலைக்குக் காரணம். இதில் ⭐வலிமையானவர் ⭐வலிமை இல்லாதவர் என்பது ஒரு உதாரணம் தான். இது எல்லா தளங்களிலும் இருக்கிறது.அது ஒரு - போட்டியாக, - பந்தையமாக, - போராட்டமாக, - சண்டையாக, - வியாபாரமாக, - அரசியலாக - ஏன் ஒரு குற்றமாக கூட இருக்கலாம். இந்த எல்லா தளங்களிலும், - வலிமையானவன் x சாமானியன், - அதிகாரமிக்கவன் x அதிகாரமற்றவன் - பணக்காரன் x ஏழை - மெத்தபடித்தவன் x பாமரன் - காவலன் x குற்றவாளி என்ற வர்க்க வேறுபாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். மேற்சொன்ன இவர்களை, இரு பெரும் கூறுகளாக வகைப்படுத்தலாம்..! அதாவது 1. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள்.இவர்கள் Top Dog or Favourite Dog என அழைக்கப்படுகிறார்கள். 2. வெற்றி வாய்ப்புகளில் இருந்து அதிக தூரம் உள்ளவர்கள்.இவர்கள் தான் Under Dog என அழைக்கப்படுகிறார்கள். நம்மை போன்ற சாமானியர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் Under Dog தான். - சமுதாயத்தில் - கல்வியில் - வேலை வாய்ப்பில் - நமக்கான உரிமைகளில் ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒருவலியவனிடம், ஏதோ ஒரு தருணத்தில் தோற்றுப்போய் இருப்போம்..! […] சமூகத்தில் நிலவும் இந்த Under Dog விளைவை, ஒரு சந்தைப்படுத்துதல் யுக்தியாக (Marketing Strategy) நிறுவனங்களும் தேர்தல் அரசியல் யுக்தியாக ( Election Politics Strategy) கட்சிகளும் மக்களிடம் நன்மதிப்பைப் பெற பயன்படுத்துகின்றன..! நிறைவாக, Money Heist - ல் புரபசர் சொல்லுவார், “நாம் பணயக்கைதிகள் யாரையும் கொல்லக்கூடாது. அப்போதுதான் பொதுமக்கள் நம்மை நம்புவார்கள்.அவர்கள் நம்மை ‘Under Dog’ என நினைத்துக் கொண்டிருக்கும் வரை தான் நமக்கு அவர்களின் ஆதரவு இருக்கும். அவர்கள் நம்மை ஹீரோக்களாக கொண்டாடுவார்கள்.!” ஸ்ட்ரெய்சண்ட் விளைவு [theroyalindian] #Streisand_Effect “என்னடா இது பெயரே வாய்க்குள்ள நுழைய மாட்டேங்குது” ன்னு நீங்க நினைக்கிறக்கிற Mind Voice இங்க வரைக்கும் கேட்குது..!😂 முதல்ல ஒரு எஸ்டிடி ய பார்த்ததிட்டு வந்துடுவோம்..! #பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட் இவங்க ஒரு அமெரிக்க பெண்மணி..!👩‍🦰 […] வெறுமனே பெண்மணி னு சொன்னா சாமி கண்ணை குத்திடும். ஏன்னா இவங்க ஒரு - பிரபல பாடகி, - பிரபல ஹாலிவுட் நடிகை, - பிரபல இசை ஆல்பங்களை வெளியிட்டார், - பிரபல இசை ஆர்வலர், - பிரபல ஃபிலிம் மேக்கர், - பிரபல கொடை வள்ளல் அப்படின்னு ஏகப்பட்ட ‘#பிரபல’ க்களை போட்டுகிட்டே போலாம்..!😂 […] இவங்க 1942 ல அமெரிக்கா ல நியூயார்க் நகரத்துல பிறந்திருக்காங்க..! இவங்க அம்மா டயானா, அப்பா இம்மானுவேல்_ஸ்ட்ரெய்சண்ட். அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார். அப்பா பொண்ணுங்கறது னால அப்பாவோட பெயர இன்னமும் தன் பெயர் கூட சேர்த்து வச்சிருக்காங்க..!😊 தன்னுடைய பதினாறு வயசுல வீட்ட விட்டு வெளிய வந்து ஒரு தியேட்டர்ல வேலைக்கு சேர்ந்தாங்க.! (வர்றவங்களுக்கு அவங்களுடைய சரியான இருக்கையை காட்டுற வேலை) 🙄 அப்புறம் தன்னுடைய பதினெட்டாவது வயசுல ஒரு இரவு விடுதியில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தாங்க.! இதுதான் அவங்க வாழ்க்கையில் திருப்புமுனை..!😊 அப்புறம் மேடை பாடகின்னு தனக்கிருந்த இசை மற்றும் பாடும் திறமையாலும், மெல்ல மெல்ல முன்னேறி நிறைய பாடல் ஆல்பங்களை வெளியிட, ஆரம்பிச்சாங்க..! சிறந்த பாடகி, அப்புறம் அவங்க வெளியிட்ட ஆல்பங்கள் எல்லாம் செம ஹிட்..,💁 வேறென்ன வேணும் ஹாலிவுட் அங்களை இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டது.!🙏 அப்புறம் அவங்க ‘தொட்டதெல்லாம் பொன்’ தான்..! ஒரு பக்கம் புகழ் இன்னொரு பக்கம் செல்வம் இது இரண்டுமே நல்லா பெருகிடுச்சு..!😊 அமெரிக்காவின் மிகவும் பிரபலமான பெண்மணியாக மாறினாங்க..! அவங்க ஆல்பம் எல்லாம் கன்னாபின்னானு வித்து தீர்ந்தது..! இந்த காசுல ஏராளமான தான தர்மங்களும் பண்ணாங்க..! இவங்க வாங்குன விருதுகளை பற்றி சொன்னாலே இவங்க எவ்ளோ பெரிய ஆளுன்னு நமக்கு புரியும்..! - ஒன்பது கோல்டன் குளோப் விருதுகள் - அஞ்சு எம்மி விருதுகள் - இரண்டு ஆஸ்கார் விருதுகள் - பத்து கிராமி விருதுகள் - கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது - கிராமி லெஜன்ட் விருது - டோனி விருது அப்புறம், - Israel Freedom Medal - இஸ்ரேல் வழங்கும் மிக உயரிய விருது - நாலு Peabody விருதுகள் ன்னு அவங்க வாங்கின விருதுகளும், கௌரவங்களும், பதக்கங்களும் எக்கச்சக்கம்..! இப்போ புரிஞ்சிருக்குமே அவங்க எவ்வளவு பெரிய கை ன்னு..!😂 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சின்ன கடற்கரை நகரம் தான் மெலிபூ (Malibu). லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு முப்பது மைல் மேற்கே இது இருக்கு..! இந்த நகரம் “ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் வீடு” (“Home to Hollywood Super Stars”) ன்னு என சொல்லப்படுகிறது..! […] அவ்வளவு ஒரு அழகான கடற்கரை நகரம். . ஹாலிவுட் நடிகர் நடிகைகள், டைரக்டர்கள் ன்னு 90 சதவீத ஹாலிவுட் பிரபலங்கள் இங்க தான் வசிக்கிறாங்க..! இங்க தான் நம்ம #பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட் அவங்க வீடும், ம்..ஹும்..ஹும், சொகுசு பங்களாவும் இருக்கு..! கடற்கரை நகரமாக இருந்தாலும் கடல்மட்டத்திலிருந்து 100 அடிக்கு மேல இருக்குது..! இதனால இந்த கடற்கரையில அடிக்கடி மண்சரிவும், கடல் அரிப்பும் ஏற்படுகிறது. இந்த கடல் அரிப்பை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், “#California_Coastal_Record_Projects” ன்னு ஒரு அமைப்பை 2002 ல ஏற்படுத்தியிருக்காங்க..! இவங்க Helicopterல போய் (அப்பெல்லாம் Drone Camera கிடையாது Boss😎) அந்த கடற்கரையோட புகைப்படங்களை எடுத்து அதோட Website ல தொடர்ந்து Update பண்ணிட்டே வருவாங்க. இப்படி வெவ்வேறு காலகட்டத்தில.., எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் கடல் அரிமானத்தின் தீவிரத்தை புரிஞ்சிக்க முடியும்..! இப்படி ஏதேச்சையாக #அடெல்மேன் ங்கற ஒரு Photographer எடுத்து Upload செஞ்ச ஒரு Photo ல நம்ம #பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட் அவங்களோட பங்களாவும் இருந்திருக்கு.! இது தான் அந்த Photo👇 […] இதை யாரோ அவங்க கிட்ட சொல்ல, டென்ஷனான அவங்க என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) பறிபோய்டிச்சுன்னும், அந்த போட்டோவ உடனடியா அந்த வெப்சைட்டில் இருந்து நீக்கனும்ன்னும், அந்த போட்டோகிராஃபர் மேல, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கோர்ட்ல வழக்கு தொடர்ந்தாங்க..!🙄 இங்க தான் Commedy யே 😂 அவங்க வழக்கு தொடர்ந்தப்போ அந்த போட்டோவ, அந்த வெப்சைட்டில் இருந்து வெறும் 6 பேர்தான் டவுன்லோட் பண்ணி வச்சிருந்தாங்க. அதுல ரெண்டு பேரு அந்த அம்மாவோட Lawyers..!😂 இவங்க வழக்கு போட்டது தெரிஞ்சதும்.., ஊரே பரபரப்பாகி எல்லாரும் அந்த போட்டோவ பார்க்கணும்னு ங்கற.. ஆர்வத்துல அந்த Websiteல போய் பார்க்க ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட ஒரு நாலுலட்சம் பேர் அத Download பண்ணிட்டாங்க.!🙄 எந்த Photo வ மறைக்கனும், நீக்கனும்னு நினைச்சசு வழக்கு போட்டாஙகளோ,அதுவே அந்த Photo ஊர் புல்லா பிரபலமாக காரணமாகிடுச்சு.!😂 (கோர்ட்டும் இந்த Caseஅ தள்ளுபடி பண்ணிடிச்சு) […] இப்படியாக, “ஒரு விஷயத்தை மறைக்க அல்லது நீக்க அல்லது தணிக்கை செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் காரணமாக அந்த விஷயம் மிகவும் வேகமாக பரவும் நிகழ்வுக்கு பெயர்தான் #ஸ்ட்ரெய்சண்ட்_விளைவு”😂 (இணையதளத்தின் மூலமாக இது இன்னும் மிக வேகமாகப் பரவுகிறது) 🔥 இது ஒரு எதிர்மறையான விளைவு..!🤦 ரெம்டெசிவிர் [Mr_Bai007] #Remdesivir #COVID19 இந்திய முழுவதும் கொரோன தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,அதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பயன்படுத்தும் ஒரு மருந்தாக இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் இந்த […] மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு உள்ளது. அரசின் சார்பிலும் முக்கிய ஊர்களில் மருந்துகள் விநியோகிக்கபட்டு வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக நின்று மருந்தை வாங்கி செல்கின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவைப்படுமா […] என்றால் கிடையாது,அதுகுறித்து தான் இந்த #Thread ல பார்க்க போறோம். கொரோனா நோய் ஆரம்பித்த நேரம் முதல் தனது முகநூலில் அதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளை சிறந்த தரவுகளோடு பகிர்ந்து வரும் #டாக்டர்பாரூக்அப்துல்லாஹ் அவர்கள் இந்த Remdesivir மருந்து பற்றியும் விளக்கமாக எழுதி உள்ளார்கள், […] அவர் எழுதிய பதிவை பகிர்கிறேன் படித்து அறிந்து கொள்வோம்……….. தற்போது இந்தியாவில் எங்கு காணினும் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ப்ரிஷ்க்ரிப்ஷன் சீட்டில் ரெம்டெசிவிர் தேவை என்று எழுதிக் கொடுத்து விட நோயாளியின் உறவினர்கள் […] அங்குமிங்கும் அலைந்து திரிவதைப்பார்க்கையில் உள்ளம் நொந்து போகின்றது ஒரு பக்கம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் ரெம்டெசிவிர் அனைவருக்கும் தேவையான மருந்தன்று . அது உயிர் காக்கும் மருந்தன்று என்று தெரிவித்துள்ளது. மிக மிக தேவையான நபர்களுக்கு மட்டும் மருத்துவர் பரிந்துரையில் அந்த மருந்து வழங்கப்பட்டால் தான் அந்த மருந்தினால் நன்மை உண்டாகிறது. அனைவருக்கும் தேவையில்லை என்ற செய்தியைக் கூறுகின்றது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட் நோயில் அதன் பங்கு குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் மற்றம் அதன் விவரங்களைப் பார்த்து சிறந்த முடிவுக்கு வர இயலும்.ரெம்டெசிவிர் மருந்தானது வெக்லுரி எனும் பெயரில் ஹெப்பாடைட்டிஸ் சி எனும் கல்லீரல் கிருமித்தொற்றுக்கு எதிரான வைரஸ் கொல்லியாக கண்டறியப்பட்டது கோவிட் நோய் பரவத்தொடங்கிய கடந்த ஆண்டில் இந்த நோய்க்கு எதிராக இந்த மருந்து வேலை செய்கிறது என்று அந்த மருந்து தயாரிக்கும் கில்லாடு நிறுவனம் கூறியதும் உலகமே பரபரப்பானது. இந்த மருந்து வழங்கப்பட்டவர்கள் ஏனையோரை விட 65% அதிக உடல் நல முன்னேற்றத்தை 11வது நாளில் காண்கிறார்கள் என்றது அதன் ஆய்வு கில்லாடு நிறுவனம் தான் செய்த ஆராய்ச்சியில் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்தை மிதமான கொரோனா தொற்றுக்குள்ளாகி (MODERATE) மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகளுக்கு வழங்கும் போது நோய்க்குறியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுகிறது என்று கூறியது. இதனையொட்டி அமெரிக்கா தீவிர கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை உபயோகிக்க அவசர கால முன் அனுமதி வழங்கியது.இந்த மருந்து உண்மையிலேயே மரணங்களைக் குறைக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய மிகப்பெரிய ஆய்வொன்றை SOLIDARITY எனும் பெயரில் 30 நாடுகளில் 405 மருத்துவமனைகளில் செய்தது. ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்ட மக்களுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படாத மக்களுக்கும் இடையே 28 நாட்கள் கழித்து மரண விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா என்று ஆய்வு செய்தது. இதில் ரெம்டெசிவிர் ஊசி போடப்பட்ட 2743 பேரில் கோவிட் நோய்க்கு 301 பேர் மரணமடைந்தனர் (11%) ரெம்டெசிவிர் போடப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்ட 2708 பேரில் 303 பேர் மரணமடைந்தனர் (11.2%) இரண்டு குழுக்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தோன்றவில்லை. எனவே உலக சுகாதார நிறுவனம் - ரெம்டெசிவிர் மருந்து கோவிட் நோயால் மரணமடைவதை தடுப்பதில்லை. - வெண்ட்டிலேட்டர் தேவையை குறைப்பதில்லை - மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் காலத்தையும் குறைப்பதில்லை என்று கூறியது. ஆனால் இத்தோடு கதை முடியவில்லை NEJM எனும் மருத்துவ இதழில் ஜில்லாடு நிறுவனம் நிதி உதவி செய்து - நடத்திய ஆய்வான ACTT-1 வெளியிடப்பட்டது - அந்த ஆய்வில் 1062 பேர் பங்குகொண்டனர் - அவர்கள் இரு சரிசமமான குழுக்களாக பிரிக்கப்பட்டு - 541பேருக்கு ரெம்டெசிவிர் ஊசி வழங்கப்பட்டது - 521 பேருக்கு ரெம்டெசிவிர் தவிர்த்த மற்றொரு ப்ளாசீபோ ஊசி வழங்கப்பட்டது ஆய்வு முடிவில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்ட மக்கள் குணமடைய சராசரியாக 10 நாட்கள் எடுத்துக்கொண்டனர். ப்ளாசீபோ குழுவில் குணமடைய 15 நாட்கள் சராசரியாக எடுத்துக் கொண்டனர் 28 நாட்கள் கழித்து ரெம்டெசிவிர் குழுவில் 11.4% மரணமடைந்தனர் அதுவே ப்ளாசீபோ குழுவில் 15.2% பேர் மரணடைந்தனர் இதன் முடிவாக ரெம்டெசிவிர் ப்ளாசீபோவை விட நோய் தன்மையை கட்டுப்படுத்தி விரைவில் குணமளிக்கிறது என்று அந்த ஆய்வு கூறியது. ஆகஸ்ட் 21,2020 அன்று JAMA எனும் மருத்துவ இதழில் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது அதில் 5 நாட்கள் ரெம்டெசிவிர் பெற்ற நபர்கள் இந்த மருந்து பெறாத நபர்களை விட சீக்கிரம் குணமடைகிறார்கள் ஆயினும் மரணங்களைக் குறைப்பதில் ரெம்டெசிவிருக்கு பெரிய பங்கு இருப்பது போல் தோன்றவில்லை என்றது. லான்சட் இதழில் வெளியிடப்பட்ட சீனாவின் ஹூபய் மாகாணத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் ரெம்டெசிவிரால் சிறந்த நோய் குணமாக்கும் பலனை எட்டமுடியவில்லை என்று தெரிவித்தது. லான்சட் இதழில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான ரெம்டெசிவிரின் பங்கு எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது சாதாரண(Mild) மற்றும் மிதமான( Moderate) கொரோனாவுக்கும் செயற்கை சுவாசம் தேவைப்படாத மக்களுள் ரெம்டெசிவிர் தேவையற்றது. தீவிர தொற்று ஏற்படும் நிலையில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் தேவையுடன் இருப்பவர்களுக்கும் தொற்றின் அறிகுறிகள் தோன்றிய பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவிர் வழங்கப்படும் போது குணமாகத்தேவையான நாட்களின் எண்ணிக்கை குறைகிறது மற்றும் நோய் அடுத்த நிலைக்கு முற்றுவதைத் தவிர்க்கிறது. ஆனால் அதி ஓட்ட ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கும் வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களைக் குணப்படுத்துவதில் இந்த மருந்தின் பங்கை வரையறுக்க முடியவில்லை ( UNCERTAIN) என்று கூறியுள்ளது ரெம்டெசிவிர் குறித்த நமது கருத்து 1. ரெம்டெசிவிர் பெரிய அளவில் உயிரைக் காக்கும் என்று பெரிய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நிறுவ முடியவில்லை. எனவே ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை என்று மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் வலிமை பெறுகின்றன. 2. மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு அதிலும் ஆக்சிஜன் தேவை இருப்பவர்களுக்கு, ரெம்டெசிவிர் நோய் ஏற்பட்டு குணமாகும் காலத்தை குறைக்கிறது. 3. ஆக்சிஜன் தேவையுள்ள தொற்று தீவிரமாகும் வாய்ப்புள்ளவர்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவிர் ஆரம்பிப்பது நோய் அடுத்த நிலைக்கு செல்லாமல் இருக்க உதவுகிறது. 4.கொரோனா தொற்று கண்டறியப்படும அனைவருக்கும் ரெம்டெசிவிர் பயனளிப்பதில்லை. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் எனும் சிறிய அங்கத்தினருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவை. ரெம்டெசிவிர் இல்லாமலும் கொரோனா தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்துள்ள தமிழக சுகாதாரத்துறை தனது ப்ரோடோகாலில் மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளை ரெம்டெசிவிர் இல்லாமலேயே சிறப்பாக சிகிச்சை அளிக்குமாறு வகுத்துள்ளது. மிதமான தீவிர கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளில் தேவைப்படுவோருக்கு மட்டும் ரெம்டெசிவிர் உபயோகிக்கலாம் என்று ப்ரோடோகால் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சொந்தங்களே தயவு செய்து ரெம்டெசிவிருக்காக அலைந்து திரியாதீர்கள் ரெம்டெசிவிர் இல்லாவிட்டாலும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் ஆக்சிஜன் வெண்ட்டிலேட்டர் ரத்த உறைதல் தடுக்கும் மருந்து ஸ்டீராய்டு மருந்து - சிறப்பான மருத்துவர்கள் - சிறப்பான செவிலியர்கள் - மருத்துவ பணியாளர்கள் இவர்கள் கூட்டு சேர்ந்து பல மரணங்களைத் தடுத்து வருகிறார்கள். எனவே ரெம்டெசிவிருக்காக பணத்தை அதிகமாக செலவழிக்க வேண்டாம். அலைந்து திரிய வேண்டாம். கூட்டம் போட்டு கொரோனாவை வாங்க வேண்டாம். அரசின் அறிவிப்புகளை கடைபிடியுங்கள். எம்.எல்.ஏ-க்கள் [Mr_Bai007] தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர்,இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.அந்த தேர்தலில் நாம் நம்ம தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை #MLA […] தேர்ந்துதெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப போகிறோம் அதற்கு முன்னர் நாம் தேர்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது, அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும்,MLA ஆகுவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த #Thread ல பார்ப்போம். முதலில் பொறுப்புகள் பற்றிப்பார்ப்போம், நீங்கள் தேர்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் உங்கள் தொகுதியின் பிரதிநிதி உங்கள் தொகுதியில் குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்பவர்,உங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவர் இவை பொறுப்புகள். இரண்டாவது தகுதிகள் பற்றி பார்ப்போம், போட்டியிடும் வேட்பாளர் முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்,அவருக்கு 25 ஆகியிருக்க வேண்டும்,நல்ல புத்தி சுவாதீனத்துடன் இருக்க வேண்டும்,அவருக்கு கிரிமினல் குற்றவாளியாக இருக்க கூடாது (எதாவது ஒரு வழக்கில் நீதிமன்றத்தால் இவர் தேர்தலில் போட்டியிட தடை என்று தீர்ப்பு வழங்கபட்டு இருக்க கூடாது) இவை அனைத்தும் தகுதிகள். அடுத்ததாக MLA-விற்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றி பார்ப்போம். அவருடைய மாத சம்பளம் RS.1,05,000,அத்துடன் அவர் தங்கும் விடுதி,தொலைத்தொடர்பு,இணைய சேவைகள்,மருத்துவ செலவுகள் அனைத்தும் இலவசம்.MLA-வாக இருக்கையில் அவர் மரணித்தால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் RS.5,00,000 இழப்பீடாக கொடுக்கப்படும்.அவர் ஒய்வு பெற்றபிறகு அவருக்கு ஓய்வூதியமாக Rs.20,000 கொடுக்கப்படும்.அதுமட்டுமின்றி தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடம் தோறும் சுமார் 3 கோடி ருபாய் கொடுக்கப்படும். இவை அனைத்தும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு கிடைக்கப்போகிறது.அதுமட்டுமின்றி உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பற்றி அறிய தேர்தல் ஆணையம் சார்பாக அவர்களது இணையத்தளத்தில் போட்டியிடும் வேட்பாளரை பற்றி முழுவிபரங்கள் இருக்கிறது அதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். Website Link: #tnelections (affidavit.eci.gov.in) சூயஸ் கால்வாய் Blockage [Mr_Bai007] உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கிற #suezcanel Blockage பத்தி தான்.இந்த #Thread la பாக்க போறோம்.முதல்ல சூயஸ் கால்வாய் பத்தி பாத்ருவோம்,மத்திய தரைக்கடலையும்(Mediterranean sea) செங்கடலையும்(Red sea) இணைக்கும் பகுதி தான் இந்த சூயஸ் கால்வாய்,ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான […] சுருக்கமான கடல்வழி இந்த பகுதிதான்,இந்த பகுதியில தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ராட்ச கப்பல்கள் கடந்து செல்கின்ற முக்கியமான கடல் பகுதி உலக வர்த்தகத்துல 12 சதவீதம் இந்த கால்வாய் மூலம் கடந்து செல்கின்ற கப்பல்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது அந்தளவுக்கு இந்த பகுதி ஒரு முக்கியமான […] கடல் வழி போக்குவரத்துக்கு பகுதி இப்ப அந்த இடத்துல தான் ஒரு விபத்து நடந்து இருக்கு எப்பொழுதும் போல அந்த கடற்பகுதியை கடக்க முயன்ற ஒரு கப்பல் அந்த கால்வாய் கடக்கும் பொழுது திடிர்னு அடிச்ச தீவிரமான காற்றால கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி […] திருப்ப முடியாதபடி மாட்டிக்கொண்டது. அதே வேகத்தில் கப்பலின் பின் பகுதி மேற்குப் பக்கமாக இழுபட்டு கால்வாயின் மறு கரையில் சென்று மோதி மேற்கொண்டு நகர முடியாமல் இறுகியது,இதனால மற்ற கப்பல்கள் செல்ல முடியாமல் அந்த பாதை அடைபட்டு இருக்கிறது ஒரு நாளைக்கு அந்த பகுதியை கப்பல்கள் கடக்க […] வேண்டும் இந்த விபத்தினால் மற்ற கப்பல்கள் அனைத்தும் பாதியிலே நின்று கொண்டுஇருக்கிறது அனைத்துமே சரக்கு கப்பல்கள்,விபத்தில் மாற்றி கொண்ட கப்பலை மீட்க சில வாரங்கள் ஆகும்னு சொல்றாங்க.. அடுத்தாத மாற்றி கொண்ட அந்த கப்பல் பத்தி பாப்போம் தைவான் நாட்டை சேர்ந்த Evergreen நிறுவனத்தின் உடைய […] கப்பல் அது இந்த கப்பலின் மொத்த எடை 2,00,000 டன்.அதேபோல இந்த கப்பல் 2,20,000 டன் கொள்கலன்களை எடுத்துச் செல்லக்கூடியது.இந்த விபத்து நாள 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு தேங்கி இருக்குதாம். ஹோன்ஜாக் [theroyalindian] #Honjok 😊 இது என்ன கொரியன் பட டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா..! 🤔 சரி அதுக்கும் இங்க கீழே இருக்கிற புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா..! 🤔 அப்படின்னா சரி வாங்க ஜாலியாக பயணிக்கலாம்..! 🧞 #Niva #Thread […] மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள். பிறகு அந்த கூட்டம் பெரிய, பெரிய குழுக்களாகவும், பிற்காலத்தில் சிறிய சிறிய குழுக்களாகவும் பிரிந்து வாழ ஆரம்பித்தது. இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்..! மனிதன் இப்படி கூட்டமாகவும், குழுக்களாகவும் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவனுக்குள் இருந்த ஒருவித அச்ச உணர்வு தான்..! மேலும் இவ்வாறு வாழும் போது வேலைகளும் பொறுப்புகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.! இதையெல்லாம் வழிநடத்த, கண்காணிக்க அந்த குழுவிற்கு ஒரு தலைவன்/தலைவி இருந்தார்கள்.! […] அதன் தொடர்ச்சி தான் அந்த சிறு குழுக்கள் குடும்பம் என்ற சமூக அமைப்பாக வளர்ச்சி அடைந்து கூட்டு குடும்ப வாழ்க்கை முறை தோன்றியது..! அந்த கூட்டுக் குடும்பம் வாழ்க்கை தான் தற்போது சிறு குடும்ப அளவில் - கணவன், மனைவி மற்றும் குழந்தை என சுருங்கி விட்டது..! […] உதாரணமாக வீட்டில் எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். யாரும் இல்லாமால் நாம் மட்டும் தனியாக இருக்கும் போது எவ்வளவு தனிமையாக உணருவோம்..! அதனால் தான், “தனிமையிலே இனிமை காண முடியுமா..!” என்றெல்லாம் பாடல் எழுதினார்கள்..!😊 […] ஆனால் இத்தகைய குடும்ப சூழல் மற்றும் உறவுகளில் நாட்டமில்லாமல் தனிமை விரும்பிகளாக தற்காலத்தில் பலர் வாழத் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு தனிமையிலே இனிமை காணும் வாழ்க்கை முறை தான் #ஹோன்ஜாக் வாழ்க்கை முறை. #ஹோன்ஜாக் என்பது இவ்வாறு வாழும் வாழ்க்கை முறையை குறிக்கும் ஒரு #கொரியன் சொல். […] - நான் - என் வேலை - என் விருப்பம் - என் வாழ்க்கை - என் பொழுதுபோக்கு என்பதே இதன் அடிப்படை நாதம். இந்த கலாச்சாரம் கொரிய மக்களிடையே சம காலத்தில் வேகமாக பரவியுள்ளது. கொரியா மற்றும் அல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளிலும், இந்தியா, சீனா போன்று குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடுகளிலும் இத்தகைய வாழ்வியல் முறை வேகமாக பரவி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கால இளைஞர்கள்/யுவதிகள் மத்தியில் இத்தகைய வாழ்க்கை முறை வேகமாக பரவ பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றுள் சில, - குடும்பம் சாராமல் தனியாக வாழும் போது கிடைக்கும் அதிகப்படியான தனி மனித சுதந்திரம். - குடும்ப உறவுகள் மற்றும் பொறுப்புகள் ஒரு வித சுமையாக தோன்றுவது. 🔥இதை சுமை என்ற சொல்வதை விட ஒரு வித பய உணர்வு என்று கூட சொல்லலாம்..! - வேலைவாய்ப்பின்மை அல்லது குறைந்த ஊதியம். இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள். - இன்னும் பலருக்கு இத்தகைய வாழ்க்கை முறையே பிடித்திருக்கும், அவர்கள் ‘தனிமை விரும்பிகள்’ ஆக இருப்பதும் ஒரு காரணம். ஒருவர் முழுமையாக இந்த #ஹோன்ஜாக் வாழ்க்கை முறையை மேற்கொள்ளாமல், ஒரு சில விஷயங்களில் மட்டும் தனிமை விரும்பிகளாக இருப்பதை வைத்து இதை மேலும் சில வகையாக பிரித்திருக்கிறார்கள்..! - ஹோன்-பாப் (Hon-Bap) - ஹோன்-நொல் (Hon-Nol) - ஹோன்-சுல் (Hon-Sul) #ஹோன்பாப் இவர்களுக்கு தனியாக உணவு சாப்பிடுவது என்பது மிகவும் பிடித்தமானது. இவர்களுக்காகவே தனி மேஜை மற்றும் தனி இருக்கை கூடவே தனியாக இசை கேட்கும் விதமாக நிறைய உணவகங்கள் கொரியாவில் உள்ளன. […] #ஹோன்நொல் ஓய்வு நேரங்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிடாமல் தனியாக தங்களுடைய பொழுதை கழிப்பவர்கள். “தனியாக அப்படி என்ன பண்ணுவாங்க” என்று மட்டும் கேட்க கூடாது.! 😂 இசை கேட்பது, தியேட்டருக்கு போறது, கற்பனையில் புரள்வது இப்படி ஏதாவது செய்து பொழுதை போக்கு வார்கள் போல.! #ஹோன்சுல் “உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா” என தனியாக மது அருந்தும் மதுப்பிரியர்கள் தான் இந்த ஹோன்சுல் வகை மனிதர்கள். இவர்களுக்கு என்றே பித்யேக பார்கள் கொரியாவில் நிறைய உள்ளன..!🍸🍷🥃 […] இப்போ போய் மறுபடியும் இந்த இழையில் முதலில் உள்ள ட்வீட்ட படிச்சு பாருங்க, அந்தப் படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரிஞ்சிருக்கும்..!😂 நம்ம சந்துல ஒரு பிரபலம் தன்னுடைய பயோ ல்ல ஹோன்ஜாக் ன்னு தான் வைத்திருந்தார். அவர் யாருன்னு நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க..!🤔 சார்லஸ்டார்வின் [KingKuinsan] #CharlesDarwin #சார்லஸ்டார்வின் நம்மில் பலர் இவரை பற்றி நன்கு/ஓரளவு அறிந்திருப்போம் அதற்கு காரணம் அவர் அறிமுகப்படுத்திய பரிணாமக்கொள்கை. “அப்படி என்ன உள்ளது அக்கொள்கையில்?” என்று வினவினால். “என்னதான் இல்லை அதில்” என்பதை பதிலாக கொடுக்கலாம். […] ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு முதன்மைக்கொள்கை தான் #பரிணாமவளர்ச்சிக்கொள்கை. அதற்கான காரணம் அன்றைய காலத்தில் உலகின் & உயிர்களின் தோற்றம் பற்றி பரவலாகக் காணப்பட்ட ஒரே ஒரு கொள்கை #படைப்புக்கொள்கை தான். அதாவது இவற்றையெல்லாம் படைத்தது கடவுள் தான் என்ற மூடத்தனமான கொள்கை மக்கள் […] மனதில் வேரூன்றிக் காணப்பட்டது/காணப்படுகிறது. அவற்றையெல்லாம் தகர்க்கும் விதத்தில் இவரது இக்கொள்கை அமைத்திருந்தது. “இவர் மட்டும் தான் அதை முன்வைத்தாரா?” என்றால் நிச்சயம் இல்லை இவருக்கு முன்னரே பலர் முன் வைத்தனர் ஆதாவது ஆதாரபூர்வமான தகவலின் படி #CarlLinnaeus என்பவரே இதை முதன் முதலில […] முன்மொழிந்தார். ஆனாலும் அன்றைய சூழலில் இது இறை நம்பிக்கைக்கு எதிரான கருத்து என்பதாலும் இவரிடம் இவற்றை உறுதி செய்ய போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இக்கொள்கை நிராகரிக்கப்பட்டது.ஆனாலும் டார்வினால் இவற்றை நிரூபிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் டார்வின் மேற்கொண்ட 5 ஆண்டு கடற்பயணம். […] அவர் ஒரு ஆய்விற்காக மேற்கொண்ட இப்பயணத்தின் போது பார்த்த விலங்குகள் பறவைகளை பற்றி குறிப்பெடுத்தார் அதன்போதே பல உயிரினங்களின் எலும்புகளையும் எச்சங்களை சேகரித்தார் அதை வைத்தே ஆய்வுகளிலும் ஈடுபட்டார். அதாவது கடலில் உள்ள ஆமைக்கும் தரையிலுள்ள ஆமைக்கும் பல வேறுபாடுகள் காணப்பட்டன. […] அவற்றை வைத்து அவை தமது வாழிடங்களிற்கு ஏற்ப இசைவடைகின்றதை கண்டுபிடித்தார். அவை மட்டுமல்ல உலகில் உள்ள உயிரிகள் அனைத்துமே அடிக்கடி பரிணாமம் அடைந்துகொண்டே இருப்பன என்று முன்மொழிந்தார். அந்த வகையில் *மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது) […] மரபு வழி (ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்) உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது) மூன்று பரிணாம […] அம்சங்களை முதன்மையாக எடுத்துரைத்தார். இரு அம்சத்தின் அடிப்படையில் தான் “தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும், தகுதியற்றவை அழிந்துவிடும்” என்றார் இதைத்தான் “வலியது வாழும்” என்பார்கள். இறைவன் தான் எல்லாம் அவர் படைத்தவை தான் இவை எல்லாம் என்ற கூற்றை அறிவியலால் பொய்யாக்கினார் […] இத்தனைக்கும் இவரே கிறிஸ்தவ பாதிரியார் ஆவதற்கு படிக்க சென்ற மாணவர் தான்.பைபிளை ஆய்வு செய்யத்தொடங்கிய இவரின் முயற்சியும் இவரது கடற்பயணமும் இவரை மட்டுமன்றி உலகத்தின் போக்களையே மாற்றியமைக்க வித்திட்டது இதுவும் “ஆண்டவரின் அற்புதம்” என்று கடந்து சொல்லவேண்டியது தான். […] அன்று பலரை சின்னத்திற்கு உள்ளாக்கியது #ஆதாம் #ஏவாள் கதையை பொய்யாக்கும் விதமாக இவர் கூறிய “மனிதன் குரங்கில் இருந்து உருவானான்” என்ற கூற்றுத்தான். அதற்கு பல எதிர்ப்புகள் உருவாக்கியும் அவரது ஆதாரங்கள் ஆணித்தனமாக முன்மொழியப்பட்டதால் பலரால் அன்றே ஏற்றுக்கொள்ளப்பட்டது […] ஆனால் இன்றோ சிம்பன்சிகளது மரபணுவும் மனிதர்களது மரபணுவும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதை நவீன தொழில்நுட்பங்களின் உறுதிப்படுத்தி டார்வின் கூற்றிற்கு வலுச்சேர்க்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய பெருந்தகையின் பிறந்தநாளை நினைவுகூருவோம் ☺️ #HappyBirthdayDarwin ❤️ Charles Robert Darwin 🎂 […] #கீழடியில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(#Nano) தொழில்நுட்பம்! […] @KingKuinsan #கீழடி யில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(#Nano) தொழில்நுட்பம்! Discovery of #CarbonNanotubes in 6th Century BC potteries from #Keezhadi, India [Article number: 19786] இது சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அவர்களுக்காகவே இந்த பதிவு 📜 […] தங்கம் வைரம் வைடூரியம் என்று பெறுமதியானவைகள் மட்டும் தான் புதையல்கள் கிடையாது,பழம்பெரும் பொருட்களும் வரலாற்று சான்றுகளுமே புதையல்கள் தான் அந்தவகையில் நமது கீழடியும் ஒரு புதையல் சுரங்கம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. காரணம் இதைத்தோண்டத்தோண்ட புதையல்கள் கிடைத்துக்கொண்டே போகின்றன. […] அந்தவகையில் கீழடியிலிருந்து மனித எலும்புகள், நெல்மணிகள், தங்க அணிகலன்கள், பானைஓடுகள், முதுமக்கள்தாழிகள்,ஆமை சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் என்பன கிடைக்கப்பெற்றன. அத்தோடு மட்டுமல்லாமல் இன்னும் பல அரிய புதையல்கள் கிடைக்குமென்று எதிர்பார்த்து நடாத்தப்பட்ட ஆறாம்கட்ட […] அகழ்வாய்வின் பயனாக இன்னும் பல பானையோடுகள் கிடைத்தன. பானையோடுகள் முதல் கட்ட ஆய்விலேயே கிடைத்தன தான் இருப்பினும் பின்னர் கிடைத்த பானைகள் முன்னர் கிடைத்தவையை போன்றே கருப்பு சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும் பானையின் உட்பகுதியில் உள்ள பூச்சு பளபளப்பாக இருந்தமையால் அதனை ஆய்வு செய்யும் […] முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.அதற்கு காரணம் இவ்வளவு ஆண்டுகளாகியும் நிறம்மங்காமையே ஆகும். எனவே அது தொடர்பான ஆய்வின் முடிவாக அவர்கள் பயன்படுத்திய பூச்சு கலவையில் மீனுண் / நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தியிருந்தமை ஆய்வாளர்களை வியப்புக்குள்ளாக்கியது. […] அதற்கான காரணம் என்னவென்றால் இதுவரை உலகெங்கும் கிடைத்த ஆகப்பழமையான மீனுண் தொழில்நுட்பங்கள் 1000 ஆண்டுகள் கூட பழமையானவை கிடையாது ஆனால் இன்று கீழடியில் கிடைத்தது 2600 ஆண்டுகள் பழமை என்பதே. இதற்காக அவர்கள் Raman Spectroscop Transmission Electron Microscopy […] X-ray Photoelectron Spectroscopy என்பவை பயன்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது. இப்போது Carbon NanoTube (கரிம மீனுண் குழாய்) என்றால் என்ன என்பது பற்றி மேலோட்டமாக பார்க்கலாம். ஒரு மீட்டரை நூறு கோடியாக பிரித்தால் அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். Nano(n)=0.000000001 […] இவ்வாறான நுண்ணிய அளவிடையில் அறுங்கோண வடிவில் வலுவான சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களால் ஆன ஒற்றை அடுக்கு அமைப்பே கிராபீன்(Graphene) மூலக்கூறு ஆகும். இந்த கிராபீன் படலத்தைப் பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டினால் கிடைப்பதுதான் கார்பன் நானோ குழாய்கள். […] இவற்றில் ஒற்றைச் சுவர் கொண்டதாகவும், பல்சுவர் கொண்டதாகவும் இரண்டு விதமான கார்பன் நானோ குழாய்கள் இருக்கின்றன இதில் பல்சுவர் கொண்டவை ஒன்றுமேற்பட்ட சுவர்களை ஒன்றன் மேல் ஒன்று வைத்து சுருட்டியாதாக இருக்கும் இதுவே மிக வலிமையானதும் கூட கீழடியில் அதிகம் கிடைத்தது இந்த வகையே. […] இந்த நானோ குழாயை உருவாக்க உரிய வேதிப்பொருட்களும் கலவைகளும் தகுந்த அளவில் கலப்பது மட்டுமன்றி 12000°C - 16000°C அளவுக்கு வெப்பப்படுத்த வேண்டும். எனவே இவையொன்றும் எதேர்ச்சியாக உருவாக்கப்பட்டவை கிடையாது திட்டமிட்ட அறிவியல் நுணுக்கங்களை தெரிந்தே உருவாக்கி இருக்கிறார்கள். […] நிச்சயமாக அவர்களுக்கு இதுதான் கார்பன் இது கார்பன் குழாயை உருவாக்கும் என்று தெரிந்திராது,அவர்களுக்கு தெரிந்தது ஒரு வலுவான பூச்சு கிடைக்கும் இது பானையை உடையாது வைத்திருக்கும் என்பதே. இதில் வியப்பு என்னவென்றால் சாதாரணமாக இங்கு கிடைத்த நானோ குழைய்களின் விட்டம் 0.6 nm ஆனால் அறிவியல் […] விதிப்படி இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 0.4 nm அமைப்பது மட்டுமே சாத்தியம்.இதை பார்த்து அறிவியல் உலகே வியக்கிறது என்று புகழ்பெற்ற சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. #தமிழன்டா Source - #Kuinsan #குயின்சன் (nature.com) (nature.com/articles/s4159…) (hindutamil.in/news/opinion/c…) Digi Wallet [vinothpaper] #Digi_wallet #thread டிமானிசேஷன் அறிவிச்சு நாலு வருஷம் ஆச்சு. செம்ம பிளாப். அந்த டைம்ல என்ன பண்றதுன்னு தெரியாம தான் மோடி இந்தியா மூவஸ் டு கேஸ்லஸ் எக்கானமினு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் கீழ நாலு போட்டோ ல இருக்க அந்த கியூ ஆர் கோட நிறைய இடத்துல பார்க்க ஆரம்பிச்சு இருப்போம். […] பெட்ரோல் பங்க் ல ஆரம்பிச்சு துணிக்கடை, ஹோட்டல், பூக்கடை பானிபூரி கடை வரைக்கும் வந்துருச்சு. பேடிஎம் கூகுள் பே போன்பே அப்படின்னு எல்லாருமே அவனோட வேலட்ட ஃப்ரீயா எல்லா கடைகளுக்கும் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குன்னு தனியா பிராசஸிங் ஃபீஸ் கிடையாது. போன் நம்பர் யூஸ் பண்ணி ஈஸியா பணம் அனுப்பலாம். கிட்டத்தட்ட இப்ப எல்லா ஏடிஎம் வாசலையும் க்யூல நிற்கிறது குறைஞ்சிடுச்சு. மணி பர்ஸ் யாருமே யூஸ் பண்றதில்ல. கிட்டத்தட்ட எல்லா பில் கவுண்டரில் இந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் தான் இருக்கு. இது யூஸருக்கு வேணா ஈசியா இருக்கலாம். ஆனா கடை வச்சிருக்கவங்களுக்கு மிகப் பெரிய தலைவலி அது தெரியாம எல்லாரும் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பெரிய பெரிய கடைகள்ள மட்டும்தான் முன்னாடியெல்லாம் சரியான ஜிஎஸ்ட் பில் போயிட்டு இருந்துச்சு. ஆனா இப்ப ஜிஎஸ்டி ஸ்லாப்க்கு மேல விற்பனை பண்ற எல்லாரும் சரியான ஜிஎஸ்ட் பில் போடணும் கவர்மெண்ட்க்கு சரியான டேக்ஸ் கட்டணும். கியூ ஆர் கோட் ஸ்கேனிங் மூலமா டைரக்டா உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு பணம் போகிறப்ப அந்த ஒவ்வொரு டிரன்சாக்சன்க்கும் விற்பனையாளர் சரியான கணக்கு வச்சிருக்கணும். ஒரு ஸ்லாப்க்கு மேல நீங்க விக்கிர ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை விலையை விட ஜிஎஸ்டி சேர்த்துதான் பில் பண்ணனும் இதனால விலை அதிகமாகும். அதை கஸ்டமர் கிட்ட சொல்லி அந்த அதிகமான விலைக்கி விக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிடும். இல்லன உங்க லாபத்த குறச்சாகணும். ஏனா இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. கவர்மெண்ட் வாட்சிங் யு. கவர்மெண்ட் இப்ப கொஞ்சம் ஸ்லாக்கா இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாள்ள இதெல்லாம் டைட் பண்ண ஆரம்பிக்கிறப்ப எல்லா எண்டர்ப்ரணர் சோலி முடிஞ்சு. எல்லாரும் பொருளுக்கு டாக்ஸ் போட ஆரம்பிச்சுடுவாங்க. விலைவாசி அதிகமாகும். கடை காரவங்க இந்த டிஜி வேலட் இல்லாம இருக்கவும் முடியாது. வர எல்லா கஸ்டமரும் போன் பே இருக்கா? கூகுள் பே இருக்கானுதான் கேட்குறாங்க. சோ பணத்திற்கான தேவை குறைந்து நம்பருக்கான தேவை அதிகமாகிவிட்டது. 10 ரூ பானி பூரியை இனி 11.80 பைசா கொடுத்து வாங்க தயாராகிக்கோங்க மக்களே. இது நாட்டுக்கு வரி வசூலில் நல்லதே. ஆனா அந்த வரிய திரும்ப யாரு திருடி திங்கிறானுங்கனுங்குறதுதான் விசயமே. கொஞ்சம் கொஞ்சமா எல்லா கடைகளும் கேஸ்லஸ்ஸாக மாறிடும். எல்லா வியாபாரியும் ஒழுங்கா வரி கட்டியே ஆகணும். எல்லா வாடிக்கையாளரும் வரியோடதான் பில்லு கட்டணும். விலை வாசி கூடதான் போகுது. நன்றி வணக்கம். உஷார் அய்யா உஷாரு Online Offers உஷாரு [theroyalindian] #உஷார்_அய்யா_உஷாரு 😊 #Online_Offers_உஷாரு 😊 ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.! அது பற்றிய #இழை #Thread வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!🧞 #MarketSurvey #OnlineShopping #Offers எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே.. எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊 திருச்சியில், - Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு, - பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு, - திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள் - மொபைல் ஷோரூம்கள், என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊 இதில் கிடைத்த சிலபல அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!😊 (நேற்று மாலை மிதமான குளிர்ந்த காற்று லேசான தூறல், இன்று காலை மேக மூட்டமான வானிலை எல்லாம் நமக்கு உகந்ததாக இருந்தது.! நேற்று இரவு பெய்த மழையில் திருச்சி மாநகரமே கழுவி விட்டது போல் பளிச்சென்று இருந்தது.!😊) #Mobiles மொபைலை பொருத்தவரை ShowRoom களைவிட ஆன்லைனில் நல்ல அதிகப்படியான மாடல்களும், Offer களும் உள்ளன. ஷோரூம் செல்வதே டெமோ பார்க்கலாம் என்பதற்காகத்தான். பெரும்பாலான மாடல்களுக்கு டெமோ பீஸ் அங்கு இல்லை.மேலும் ஆன்லைன் விலைக்கும் அவர்கள் சொல்லும் விலைக்கும் 5 முதல் 10% வித்தியாசம் அதிகமாக உள்ளது..! மேலும் மொபைல்களுக்கு ஆன்லைனில் நல்ல Exchange Offer, Bank Offer வேற உள்ளது. அதையும் சேர்த்து பார்த்தால் நமக்கு இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும். எனவே மொபைல், Laptops மற்றும் Electronics பொருட்கள் போன்றவற்றுக்கு ஆன்லைன் சிறந்தது..! விலையும் குறைவாகவே உள்ளது.‌.! #Home_Appliances ‘நேரில் சென்று விசாரித்து வாங்கலாம்’ என்று எடுத்த முடிவு எவ்வளவு நல்லது என உணர்ந்து கொண்டது இங்கேதான். TV, Fridge, Washing Machine, AC இவற்றில் பெரும்பாலான Branded (Sony, Samsung, LG, Panasonic) Model களுக்கு ShowRoom FinalPrice க்கும் Online OfferPrice க்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதே நிதர்சனம்..! ஒரு Branded TV யின் Online Price 43000. Show Room Price 45000. விலையை சொல்லும்போதே சேல்ஸ்மேன் இது இறுதியான விலை அல்ல, நாம் மேனேஜரிடம் பேசி வாங்கும் போது மேலும் குறைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். Online விலையை காண்பித்து பேரம்பேசிய பிறகு 43500க்கு இறுதி செய்தார்கள். பெரிய அளவில் மெனக்கெடல் எதுவும் இல்லை. மேலும் ஸ்டெபிலைசர் நல்ல விலைக்கு குறைத்துக் கொடுத்தார்கள். (Onlineஐ விட சிறிது கம்மி) இங்கு நாம் Picture Clarity, Sound, Connectivity போன்றவற்றை வாங்கும்போதே Check பண்ணி வாங்கிக்கொள்ளலாம். ஏதாவது குறைகள் இருந்தால் அங்கேயே புதிது மாற்றிக்கொள்ளலாம். இரண்டு மாதம் முன்பு நண்பன் ஆன்லைனில் TV வாங்கிய பொழுது அவனுக்கு Sep 2019 Mfg தான் அனுப்பியிருந்தார்கள். ஆனால் தற்போது ஷோரூமில் உள்ளதெல்லாம் 2020 ஜூன், ஜூலை மாடல்கள்..! இது மிகவும் முக்கியமானது..! #Kitchen_Appliances Online ல் Offer என்ற பெயரில் எப்படி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை..! Cookers, Tawa, Stove, Stand, Vessels, Containers எல்லாமே Online தள்ளுபடி விலையை விட மிகக் குறைவான விலையில் மார்க்கெட்டில் கடைகளில் கிடைக்கிறது..! மேலும் இவற்றை நேரடியாக வாங்கும் போது, - கைப்பிடி லூசா இருக்கிறதா, - மூடி நன்றாக மூடுகிறதா, - பொருளின் தரம், - Finishing (பிசிறு, கோட்டிங் கலர்) - அளவில் ஒப்பீடுகள் (Size Comparison) - Functioning என நமக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து வாங்கலாம்..! #Furnitures இந்த Survey Program Start பண்ணதுக்கு‌ முக்கிய காரணம் நண்பருக்கு Sofa ஒன்று வாங்க வேண்டும் என்ற காரணம் தான். 3 Seater Sofa க்கள் 7000 முதல் கிடைக்கிறது.! நல்லவே இருக்கு.! நார்மலான Online Price ஐ விட 10 - 15% கம்மியா தான் இருக்கு..!🙄 பேரம் பேசினால் இன்னும் நல்லா கம்மியா வாங்கலாம்.அது நம்ம திறமையை பொறுத்து.! Show Rooms ல Customised Options கிடைக்குது. நம்ம சொல்ற மாதிரி, 🔥Rexin Colour, - Rexin Quality, - Sofa Leg Height, - Inclination Angle - Arms இதெல்லாம் கூட நம்ம விருப்பத்திற்கு ஏற்ப செஞ்சு தர்றாங்க..! Order குடுத்தா செஞ்சு வர்றத்துக்கு ஒரு 15-20 நாள் ஆகும். அதே மாதிரி கட்டில், பீரோ, இதுக்கும் நிறையவே நல்ல நல்ல Options இருக்கு.! Diwali offer ஆ Free Pillows வேற தர்றாங்க..!😂 ஆனா, Wooden TV Stands ஐ பொறுத்த வரை Onlineல தான் விலை குறைவாகவும், நிறைய Modelsம் இருக்க..! Furniture Itemsஐ பொறுத்த வரை Online ல உள்ள பெரிய பிரச்சனை நம்ம இடத்துக்கு டெலிவரி பண்ணுவாங்களா அப்படிங்கறது தான். நிறைய மாடல்ஸ்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊர்களுக்கே டெலிவரி ஆப்ஷன்ஸ் இல்லை. (நெல்லை, மதுரை,கோவை) சென்னை மட்டும் ஏதோ பரவால்ல.! அதனால Local Show Rooms தான் Bestu.!😊 #Dress_And_Fashion ஒரு மாதத்திற்கு முன்பு சென்ற போது அவ்வளவாக புது புது டிசைன்கள் வந்திருக்கவில்லை. இப்பொழுது நிறைய கலெக்ஷன்ஸ் வந்துள்ளது.துணியை பொருத்தவரை அதைத்தொட்டு பார்த்து வாங்கும் போது தான் திருப்தி கிடைக்கும். ஆன்லைனுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் ஆஃபர்கள் இல்லை என்றாலும் விலை திருப்திகரமாகவே உள்ளது.! மேலும் துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகளை பொருத்தவரை ஜவுளிக்கடைகள் தான் Best..! ஆன்லைனை விட - ஏகப்பட்ட டிசைன்கள் - பல்வேறு ரகங்கள் - பல்வேறே தரங்கள் என விதவிதமாக Show Room கள் என்றுமே முன்னிலை வகிக்கிறது..! மேலும்,பெண்களின் பேராதரவு உள்ளவரை எந்த Online தளங்களாலும் ஜவுளிக்கடைகளை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது நிதர்சனம்.! #Conclusion - ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதற்கு முன் நம்ம ஊர்களில் உள்ள பெரிய கடைகளில் ஒரு ரவுண்டு விசிட் அடித்துவிட்டு முடிவு செய்வது நல்லது..! #மேலும்_சில_அனுபவங்கள்..!😊 - கொரோனா காலமென்பதால் முக கவசம் இல்லாமல் எந்த கடையிலும் நம்மை அனுமதிப்பதில்லை..! - பெரும்பாலான ஷோரூம்களில் உள்ளே செல்லும் முன் நம் உடல் வெப்பநிலை பரிசோதித்தார்கள். மேலும் Sanitizer தருகிறார்கள். 🔥ஆனால் பெரிய பெரிய Show Room ங்களில் ஏசி போடவில்லை என்பதால் நமக்கு மூச்சு முட்டல் தான் ஏற்படுகிறது. - பெரிய பெரிய Fans வைத்திருந்தாலும் போதுமான அளவுக்கு காற்று கிடைப்பதில்லை. - கடைகளில் கூட்டம், நெருக்கடி, இதனால் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் சிரமம். 🔥 போதுமான காற்றோட்ட வசதியும் இடைவெளியும் இல்லாததால் நமக்கு வியர்த்துக் கொட்டுகிறது. மேலும் மூச்சு முட்டல் வேறு.! - எப்படியாவது சீக்கிரம் ஷாப்பிங் முடித்தால் போதும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடுகிறது.! - தண்ணீர் பாட்டிலை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.இது மிகவும் அவசியமானது.!😊 - நிறுவனங்களை பொறுத்தவரை Lock Down க்கு பிறகு மிகப் பெரிய பண்டிகை காலம் மற்றும் வியாபார வாய்ப்பு இது என்பதால், வரும் வாடிக்கையாளர்களை முன்பை விட நன்றாகவே நடத்துகிறார்கள். - நம்மை எப்படியாவது வாங்க வைத்து விட வேண்டும் என்பதில் தான் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்..! இந்த மாபெரும் பண்டிகை கால சலுகை என்பது ஆன்லைன் தளங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள கடைகளிலும் ஷோரூம்களில் கிடைக்கிறது என்பதே உண்மை..! மேலும் இந்த சலுகைகள் தீபாவளி வரை தொடரும் என்று அவர்கள் சொல்கிறார்கள்..! 😊 (எனவே ஆன்லைனில் தவறவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம்.!) ஒருவேளை இது LockDown னினால் ஏற்பட்ட வியாபார பாதிப்பின் விளைவாக கூட இருக்கலாம்..! எது எப்படியோ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது தான் நமது புத்திசாலித்தனம்…!😊 மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊 நன்றி மக்களே..! எந்த மொபைல் வாங்கலாம் ? [nkchandar] ஒரு நல்ல மொபைல் வாங்கணும் ங்கிறது பொண்ணு பாத்து கல்யாணம் பண்றமாதிரி அவ்ளோ சாதாரணம் கெடையாது 😐. அதுக்கு என்னன்னா factors consider பண்ணனும்னு பாப்போம். இந்த அமேசான் sale day அல்லது பிளிப்கார்ட் Big Billion dayல மொபைல் வாங்குற ஐடியால இருக்குறவங்க கண்டிப்பா படிங்க.  #Thread […] ஒரு மொபைல் வாங்கணும்னா கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளணும். 1. Brand 2. RAM & Memory 3. Processor 4. Battery Capacity 5. Display 6. Camera முதல்ல Brand. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கம்பெனி மொபைல்கள் மேல ஈர்ப்பு இருக்கும். தப்பில்ல. ஆப்பிள் யூஸ்ஸர்ஸ் அவ்ளோ சீக்கிரம் ஆன்ட்ராய்டு பக்கம் வரமாட்டாங்க. அது போல ஆன்ட்ராய்டுலயே samsungல ஆரம்பிச்சு vivo வரை பல brandகள் மார்க்கெட்ல கெடைக்கிது. மொதல்ல இவங்க origin of countries பாத்துருவோம். இந்திய மொபைல் மார்க்கெட்ல 75% சீன கம்பெனிகளின் ஆதிக்கம் தான். அதுல ஒரு சூட்சுமம் என்னன்னா Vivo, Oppo, Realme, Oneplusன்னு பெயரளவில் பிரிஞ்சுக்கிடந்தாலும் எல்லாம் ஒரே கம்பெனி கீழ தான் வருது (BBK). அதாவது மாவு ஒன்னு தான். Product தான் தோசை இட்லி ஊத்தப்பம்ன்னு வேற வேற. அதே போல Redmi, Poco ரெண்டும் ஒரே கம்பெனி. Asus தைவான். Lenovo ஹாங்காங், samsung கொரியா, Honor Huawei சீனா. இது போக சில iqoo 3 போன்ற Sub**randகளும் இருக்கு. சுருக்கமா சொல்லனும்னா நாம் தமிழர் மய்யம் ரஜினி மக்கள் மன்றம் ன்னு நீங்க பாத்துப்பாத்து போடப்போற ஓட்டு பிஜேபிக்கு போற மாதிரி உங்க பட்ஜெட் கூட brand பக்கம் போகவைக்கும். 40k பட்ஜெட் இருந்தா தாராளமா Oneplus போகலாம். 15-20k னா vivo oppoவ செட்டில் ஆகிடலாம். எல்லாம் ஒரே கம்பெனி தான். அடுத்தது RAM & Memory. இதுல பெரிய option கெடையாது. External memory வழக்கொழிந்து போயிட்ட காலத்துல 256GB வரை memory கிடைக்கிது. மொபைல்ல படம் பாக்குறவங்க, மீம் கிரியேட்டர்ஸ், கேம் ளாடுறவங்க 6GB RAM போயிடறது நல்லது. கீழ்கண்ட RAM+Memory combinations தவிர நமக்கு பெரிய choice இல்ல. 3GB+32GB 4GB+64GB 6GB+128GB 6GB+256GB 8GB+256GB அடுத்து Processorஇது கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற மாதிரி. மிஸ் ஆச்சு, மொபைல் இருக்கிறவரை ரணவேதனை தான். இதை மட்டும் சரியா choose பண்ணிட்டா பக்கா மொபைல் உங்க கைல. Processorகள்ல மூணேமூணு தான் இந்திய மார்க்கெட்ல இருக்கு. 1. Snapdragon 2. Helio 3. Exynos இந்தியால விக்கிற மொபைல்கள்ல 98% Snapdragon (SD) தான் இருக்கு. கிட்டத்தட்ட monopoly. மொபைல் விலைல 35% வரை இதுவே எடுத்துக்கும். performance அப்புடி. மொபைல் வாங்கும்போது SD இருக்கான்னு பாத்து வாங்குறது கிட்னிக்கு நல்லது. அதுவும் 7&8 சீரிஸ் SD உள்ள மொபைல் வாங்கிட்டா இன்னும் சிறப்பு. onlineனில் saleல 90% மொபைல்கள் SD தான் வருது. Oneplus மொபைல்கள் ஏன் இவ்ளோ costly இருக்குன்னா அந்தந்த வருடங்கள்ல வெளிவர்ற SDய புடிச்சுப்போட்டு ரிலீஸ் பண்றனால தான். 99% பிரீமியம் மாடல் மொபைல்கள் SDஇல்லாம வர்றதே இல்ல. SD ஏன் trustable Processorனு technicalல வேற ஒரு பதிவுல பாப்போம் Onlineன்னு இல்லாம கடைகள்ல மொபைல் வாங்க போனீங்கன்னா SD Processor உள்ள மொபைல்களை விரல்விட்டு எண்ணிடலாம். SD நிகரான Processorன்னா MediaTek கம்பெனியோட Helio Processor. Performance லெவல்ல SDக்கு சளச்சதில்ல ன்னாலும் ஏனோ மக்களால்/Brandகளால் விரும்பப்படுறது இல்ல. ஆனாலும் Vivo Oppo போன்ற Brandகள் பத்துல ஒரு மொபைல் Helio Processorரோட வெளியிடுறாங்க. காரணம் SDய விட Helio விலை குறைவு. அந்த விலை வித்தியாசம் மொபைல் விலையிலும் எதிரொளிக்கும்ல. அதுனாலேயே கடைகள்ல கிடைக்கிற மொபைல்கள் onlineல கிடைக்கிறது இல்ல. விலையும் குறைவா இருக்கும். அம்மாம்பெரிய கம்பெனி நானு தம்மாத்துண்டு Processor செய்யமாட்டேனானு வேட்டிய மடிச்சுக்கட்டி உருவாக்கின Processor தான் Exynos. இன்னும் பெருசா self எடுக்காத Processsor. சொந்தமா ஹோட்டல் வச்சுருக்குறவன் பக்கத்துக்கு ஹோட்டல்ல போய் பிரியாணி சாப்பிட்டு வர்ற மாதிரி அவனே SD தான் யூஸ் பண்றான் Battery Capacityய முழுக்கமுழுக்க screen sizeசை பொறுத்துதான் இருக்கு. Screen size 6"களுக்கு நெருக்கி இருந்தால் battery குறைந்தது 4500mAH இருக்கும் பட்சத்தில் ஒருநாள் சார்ஜ் தேவை பூர்த்தியாகும். Battery capacity ஏறஏற மொபைல் வெயிட் கூடும். இப்போதெல்லாம் mid range மொபைல்களிலேயே 5000-6000mAH அசால்டாக வருகிறது. உட்சபட்சமா Samsung M51ல 7000mAH. Displayகளை பொறுத்தவரை mid range மொபைல்கள்ல bestu Samsung தான். அவன் தர்றமாதிரி Amoled display+கிளாரிட்டி எந்த மொபைல்களிலும் இல்லைனு அடிச்சு சொல்லலாம். Vivo Oppoகள்ல மத்த Specகாக Displayல compromise ஆகித்தான் ஆகணும். வேற வழியில்ல. கடைசியா Camera. Nokia மட்டுமே சில மாடல்கள்ல Zeiss லென்ஸ் பயன்படுத்துது. அதுவும் வாழ்ந்துகேட்ட ஜெமீன் மாதிரி கேவலமாக தான்ருக்கு. 2 front 4 rear கேமரான்னு வர ஆரம்பித்திருக்கும் நிலையில் விருப்பம்போல தேர்வு செய்யலாம். இதிலும் arranged marriage போல் options அவ்வளவாக வாய்ப்பதில்லை. ஆன்லைன் சாப்பிங் - ராசதந்திரங்கள் [nkchandar] Online shopping பரவலாகிவிட்ட இந்திய சூழலில் amazon, flipkart, myntra போன்ற சைட்களில் சரியான/குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான ராசதந்திரங்களை ஒவ்வொன்றாக பாப்போம்.  (இதுல snapdeal குரூப்ல டூப்பு 😂) #Thread #BigBillionDays #AmazonGreatIndianFestival […] Duopolyயாக இந்திய online வர்த்தகத்தை ஆட்டுவிக்கும் amazon மற்றும் flipkart வாடிக்கையாளர்களை ஈர்க்க வருடம் முழுவதும் ஏதாவது கொரளி வித்தைகளை செய்துகொண்டு தான் இருக்கிறது. அதுவும் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை holiday day saleகளாக 80% வரை அள்ளியெறிவது வழக்கம். ஒரு Productடை onlineனில் வாங்க நினைக்கும் பட்சத்தில் மூன்று விஷயங்களை கருத்தில் கொள்வது நல்லது. ஒன்று நம்பகமான site. அதாவது amazon flipkart போன்ற siteகளின் URL களை சரி பார்த்து address barரில் பூட்டு சிம்பிள் உள்ளதா என்று சரி பார்த்து சைட்களில்  உள்நுழைவது அவசியம். […] பிரபல சைட்கள் போலவே sale போட்ட நாட்களில் மட்டும் சில போலி சைட்களை உலாவவிட்டு காசடிக்கும் மோசடி வேலை சமீப வருடங்களில் மிக அதிகமாக நடக்கிறது. நாம் தவறான சைட்களில் purchase செய்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமையே நமது காசை இழந்துகொண்டிருப்போம். இதில் விடும் காசுக்கள் dream11ல் கட்டும் காசு போல தான். திரும்பி வர வாய்ப்பே இல்லை. அடுத்தது எந்த product வாங்கினாலும் ஒரு நம்பகமான sellerரிடமிருந்து வாங்குவது. நல்ல&proven sellerரால் மட்டுமே max discount ontime delivery return policy, defectless product போன்றவற்றை குடுக்க இயலும் மூன்றாவது மிகமுக்கியம், எந்த சைட்டில் எந்த நேரத்தில் எப்போது விலை குறைந்து விற்பர் போன்ற விவரங்களை product வாங்குவதற்கு முன்பே அறிவது. இதற்காகவே சில அன்னவெறி கண்ணையன் வகை appகள் Google Playstoreரில் கிடைக்கிறது. இவ்வகை appகள் Sale நேரங்களில் பலவகைகளில் கைகொடுக்கும். எனக்கு தெரிந்து கீழ்கண்ட இரண்டு appகள் உங்க மொபைலில் install செய்துகொள்வது சிறப்பு. 1. Buyhatke Shopping Assistant App, 2. Price History for Amazon Flipkart […] இதை உபயோகிப்பது மிகஎளிது. உதாரணமாக amazon firetv stick வாங்க போகிறீர்கள் என்றால் அதன் இன்றைய விலையை amazon சைட்டே காட்டும். ஆனால் அது சரியான விலைதானா, கடந்தகாலங்களில் எவ்வளவு விலை குறைவாக அது விற்கப்பட்டது என்று இந்த appகளில் சரி பார்க்கலாம். […] அதற்கு firetv stickகின் லிங்க்கை இந்த appகளுக்கு share செய்யவேண்டும். (வட்டமிட்ட icon) Share ஐகான் தொட்டதும் இந்த லிஸ்ட்டில் Assistantக்கு share செய்யவேண்டும். உடனே onscreenனிலேயே அதன் விலை ஏற்றஇறக்கங்கள் தெரியவரும். […] Onscreen graphல் கடந்தகாலங்கில் எவ்வளவுக்கு விற்றார்கள் என்று தெரிந்து கொள்வது மட்டுமில்லாமல் வரும்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதா என்று கூட கணிக்கலாம். அதுபோக மற்ற சைட்களில் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்று ஒரே இடத்தில் பார்த்து அந்த சைட்களில் purchase செய்துகொள்ளலாம். […] இதுபோக flash மற்றும் lightning saleகளும் திடீரென்று அறிவிக்கும். [@Techglares]{.underline} போன்ற handleகள் இது போன்ற offerகளை முடிந்தளவு நேரத்திற்கு தெரியப்படுத்திக்கிறது. இது போன்ற handle களை பின்தொடரலாம். இது போன்று உங்களுக்கு தெரிந்த app மற்றும் சைட்களை கமெண்ட் செய்யுங்கள். நன்றி 🙏 List of deal accounts. பெஸ்ட் டீல் மற்றும் லூட்களுக்கு இந்த handleகளை follow செய்துகொள்ளுங்கள். நன்றி - [@NeoDravidian]{.underline} Twitter Bot [theroyalindian] #டிவிட்டர்_போட் 😊 #Twitter_Bot என்பது என்ன..! என்ன செய்கிறது..! இது பற்றிய #இழை #Thread 🧞 #Internet_Bot ‘போட்’ என்பது இணையதளங்கள் அல்லது சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட வேலைகளையை செய்ய பயன்படும் ஒரு மென்பொருள். #Technology #Trending #Software #bot […] இது இணையதளங்களில் பெரும்பாலும் தானியங்கு (Automatic) முறையில் வேலைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (Programmed).இதனால் இது இணையதள ரொபோட் (Internet Robot) என அழைக்கப்படுகிறது. இதை சுருக்கமாக Internet Bot எனவும் அழைக்கிறார்கள். உதாரணமாக நாம் ஒரு இணையதள பக்கத்துக்குள் செல்லும்போது அங்கே, - “May I Help you” அல்லது - “I am your Assistant” இதுபோன்று PopUp தோன்றும். இதில் நாம் அந்த இணையதளம் வழங்கும் சேவைகள் சம்பந்தமான கேள்விகளை உள்ளீடு செய்தால் அதற்கான விடைகள் கிடைக்கும். இது நமக்கு சில அடிப்படை விபரங்களை மட்டுமே தரவல்லது.! (Based on Programing) இது, - "Frequently Asked Questions & Answers. - Simple Logical Based Questions & Answers. - Key Words Based Replies. இது போன்று எளிமையான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வகையான இணையதள Bot ஆகும். இவ்வாறு நம் தேவைக்கேற்ப Program செய்வதன் மூலம் Bot-ஐ நாம் வேறு வேறு பணிகளுக்கு சிறப்பாக பயன்படுத்தலாம். இதே Bot ஐ - Data Mining - Privacy Theft - Tracking - Malwares என தவறாக பயண்படுத்தவும் முடியும்.! (கீழே சில இணையதளங்கள் மற்றும் Appல் பயன்படும் Bots இன் ScreenShots) […] #Twitter_Bot டிவிட்டர் போட் என்பதும் ஒரு மென்பொருளே..! இது டிவிட்டரில் நாம் செய்ய வேண்டிய, - Like - Retweet - Time Interval Tweets - DM - Follow/Unfollow - Reply - Comment போன்ற பணிகளை செய்ய பயன்படுகிறது.நம் Twitter அக்கவுண்டை Bot உடன் இணைத்தால் போதும்,பிறகு இந்த Bot Software ல் உள்ள நமது Instructions க்கு ஏற்ப நமது Account ஆனது செயல்படும்..! Bot ன் அம்சங்கள், - மிக வேகமானது - எதையும் தவற விடாது - கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுவதால் நேரம் மிச்சம் - Trending செய்வது. இந்த BOT உடன் இணைக்கப்பட்ட ID களும் சாதாரண ID க்கும் எந்த வித்தியாசமும் இருக்காது..!🙄 இந்த Bot கள் பெரும்பாலும், - ஒரு குறிப்பிட்ட #HashTags உள்ள Tweet களை - ஒரு குறிப்பிட்ட #KeyWords உள்ள Tweet களை - ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் #செய்திகள்/#வானிலை -ஐ - ஒரு சில டிவிட்டர் Actions-ஐ இதுபோன்ற ஏதாவது ஒன்றை Like, Tweet, Retweet செய்யவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, -  [@WeTamilans]{.underline} இந்த BOT ஆனது #Tamil #TamilNadu இந்த Hash Tag பயன்படுத்தும் பெரும்பாலான Tweets களை RT செய்கிறது..! […] -  [@tamilnetbot]{.underline} இந்த BOT ஆனது என்ற இணையதளத்தில் வரும் அனைத்து செய்திகளையும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் Tweet செய்கிறது. (TamilNet.com) […] -  [@bot_tamil]{.underline} இந்த BOT ஆனது ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை தமிழ் திரைப்படத்தின் பாடல் வரிகளை இணையதளத்தில் இருந்து எடுத்து Tweet செய்கிறது..! […] - [@VerifTracker]{.underline} இந்த BOT ஆனது எந்தெந்த ID எல்லாம் Twitter ஆல் Verified செய்யப்பட்டு Badge கொடுக்கப்படுகிறதோ அந்த ID களை இது உடனே Tweet செய்கிறது. இது ஒரு BOT என அறியாமல் நம்மவர்கள் நிறைய பேர் அதில் சென்று தங்களுடைய ID ஐயும் Verify செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்..!😂 […] இந்த மாதிரி நிறைய Twitter IDs, BOT கூட Connect ஆகி இருக்கும். நம்ம பார்த்தா உதாரணங்களில் எல்லாம் ID யுடைய Bio வை படிச்சாலே அது BOT ன்னு புரிந்துவிடும். ஆனால் ஒரு சில BOTs சாதாரணமாக நாம் பயன்படுத்தக்கூடிய பெயர்களைக் கொண்ட ID பேர்லையே இருக்கும். இவற்றை கண்டறிவது சுலபம் தான். 📜ஒரே நாளில் மிக அதிகமான Tweetகள் அதிலிருந்து செய்யப்பட்டிருக்கும். - நீங்கள் ரிப்ளை செய்தால் அதிலிருந்து ரிப்ளை வராது. - ஒரு குறிப்பிட்ட HashTags or Keywords கொண்ட பதிவுகளை அது திரும்பத் திரும்ப Retweet செய்து கொண்டிருக்கும். 📜பெரும்பாலும் RT தான் இந்த BOTகளை சாதாரணமாக நினைக்க வேண்டாம். இவற்றை பயன்படுத்திதான் குறிப்பிட்ட சில #HashTags எல்லாம் Twitter ல் Trending செய்யப்படுகிறது. - சில நடிகர்நடிகைகளின் பிறந்தநாள் - கட்சிகளின் சாதனைகள் - அரசியல் தேவைக்கான செய்திகள் - வணிக நிறுவனங்கள் - வணிகம்,அரசியல் சார்ந்த இன்னும் பல.. ஆரம்பத்தில் இந்த BOT களை பயன்படுத்தி ஒரு பிரபல ஹாலிவுட் பாடகரின் பிறந்தநாள் #Hastag ஐ #Trending ல் கொண்டு வந்தார்கள். எதிர்பார்த்ததைவிட ட்வீட்டுகள் அதிகம் விழுந்தன. சந்தேகம் அடைந்த எதிர்த்தரப்பு, அதே #Hashtag ல் அந்த பாடகரை கழுவி ஊற்றி ட்வீட் செய்தார்கள். விவரம் அறியாத BOTகள் 😂 அதையும் ReTweet செய்து தெறிக்க விட்டன..! அப்படி கழுவி ஊற்றிய ஒரு Tweet அதிகப்படியான RT மற்றும் லைக்குகளை அள்ளியது. பிறகு தான் பாடகரின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் HashTag ஐ BOT களின் உதவியுடன் டிரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள் என தெரியவந்தது..!😂 இப்போது எல்லாம் BOTs ன் சாப்ட்வேர் Programming Advanced ஆக உள்ளது. இதுபோல அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க, KeyWords or HashTag உள்ள Tweetகளில் வேறு ஏதாவது தவறான Content or வார்த்தைகள் உள்ளனவா என சரிபார்த்த பிறகுதான் BOT Software, அந்த Tweet ஐ RT மற்றும் Like செய்கிறது 😂 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் கவனங்களையும் எண்ணங்களையும் திசைதிருப்ப இந்த BOTs உடன் இணைக்கப்பட்ட சமூக வலைதள ID க்கள் பெரும் பங்கு வகிக்கித்து என்பது குறிப்பிடத்தக்கது.! மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊 நன்றி மக்களே..! இணையதள பரிவர்த்தனைகள் [theroyalindian] #Online_Transactions 😊 #இணையதள_பரிவர்த்தனைகள் நாம் நம் மொபைல் மூலமாக பண பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றிய #இழை #Thread 😊 #Banking #MobileBanking #Safe_Transaction வாங்க பாதுகாப்பான பரிவர்த்தனைகளை தொடருவோம்..!🧞 […] நமது Online Transactionsகளை - Personal Fund Transfer (குடும்பத்துக்கு , நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, வாடகை அனுப்புவது.. etc) - Bill Payments (Credit card Bill, EB bill…etc) - Ticket Bookings (Train, Bus, Movies..etc) - Recharges (Mobile, DTH..etc) என வகைப்படுத்தலாம்..😊 இது ஒரு புரிதலுக்காக மட்டுமே..! இணையதள வங்கி பரிமாற்றங்களின் மூலம் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் நடைபெறுகிறது. அவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் ஆன்லைன் மூலமாக வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் போது சில பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது நலம்..! #Some_Good_Practices 😊 - பரிவர்த்தனைகளை தொடங்கும் முன்பு உங்கள் மொபைல் போனில் Data/Wifi சிக்னல் நன்றாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள். சிக்னல் சரியாக இல்லையெனில் பரிவர்த்தனைகள் பாதியிலேயே நின்று விடும்.சில நேரங்களில் அக்கவுண்ட்டில் பணம் கழிக்கப்பட்டு இருக்கும்.😕 ஆனால் பரிவர்த்தனை முழுமை அடைந்து இருக்காது. (பணம் சரியாக போய் சேர்ந்திருக்காது) இதை Unsuccessful அல்லது Failed Transactions என குறிப்பிடுவார்கள். இதில் வரும் Transaction எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நலம். இரண்டொரு நாளில் பணம் தானாக திரும்ப நமது வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். இல்லாதபட்சத்தில் அந்த எண்ணை குறிப்பிட்டு வங்கிகளுக்கு புகார் அனுப்பலாம்..! - பண பரிவர்த்தனையை தொடங்கும் முன்பு மொபைல் போனில் நாம் Open செய்து வைத்திருக்கும் பிற அப்ளிகேஷன்கள் அனைத்தையும் குளோஸ் செய்துவிடுவது நலம். அல்லது ஏதாவது Download அல்லது Upload நடந்து கொண்டிருந்தால் அது முடிந்த பிறகே உங்கள் Transactionகளை தொடங்குங்கள் இது எதற்காக என்றால், - Backgroundல் Open ல் இருக்கும் Appsகள் சில நேரம் அவற்றை Refresh or Update செய்து கொண்டு இருக்கும்.இது இணைய வேகத்தை பாதிக்கும். - இது போலத்தான் Download & Upload களும்.இதுவும் இணைய வேகத்தை பாதிக்கும் - சில Appகள் நமது நடவடிக்கைகளை கண்காணிக்க வாய்ப்புள்ளது.(நாம தானே கண்ணமூடிட்டு App Download பண்ணும் போது கேட்குற எல்லா Permissionsக்கும் OK கொடுத்திருப்போம்)😂 📜 சில வகை Malwares, Spywares Gaming, Photo Editing போன்ற Appகளில் குடியிருக்கும்.எனவே Appsகளை Close செய்வது உத்தமம். 🔥முக்கியமாக SMS அல்லது WhatsApp மூலம் வரும் Link கள் மூலமாக வங்கிகளின் இணையதள பக்கத்திற்கு செல்லவேண்டாம். நீங்களே நேரடியாக வங்கி Domain Name ஐ Browserல் Type செய்யுங்கள். Login ID & Password Type செய்ய Virtual Key Boards பயன்படுத்துங்கள். (இது கொஞ்சம் கடுப்பாத்தான் இருக்கும்) - Chrome, Safari, Mozilla போன்ற Standard ஆன Browser களை பயன்படுத்துங்கள். தெரியாத Browser களை உபயோகிக்க வேண்டாம். - அது போல Browser Appஐயும் எப்பொதும் Latest Updated Version ல் வைத்துக் கொள்ளுங்கள். - Bank WebSite ‘https’ connection தானா என்பதையும் இந்த Lock Symbol 🔒 உள்ளதா என்பதையும் எப்போதும் மறவாமல் கவனியுங்கள். - இப்போது எல்லா வங்கிகளுக்கும் Appகள் உள்ளன. எனவே Website மூலமாக நடைபெறும் NetBankingஐ விட Apps முலம் நடைபெறும் Mobile Banking ஒரளவு பாதுகாப்பானது தான். Net Bankingல் கிடைக்கும் வங்கி சேவைகளில் 90% இந்த Mobile Bankingலும் கிடைக்கிறது.😊 - Banking Apps களையும் Update ல் வைத்திருங்கள்.! இந்த Banking App ஐ Login செய்ய Net Banking ID & Password க்கு பதில் PIN பயன்படுத்தலாம். இது எளிதானதும் கூட..! PIN மிக பாதுகாப்பானது, யாராவது Miss Use செய்ய முயன்றாலும் 3 முறை தவறான பின் கொடுத்தால் நான்காவது முறை A/C Lock ஆகிவிடும்! 🔥Banking App களுக்கு Login செய்ய Bio Metrics ஐ பயன்படுத்துவதை தவிர்க்கலாம். (என் தனிப்பட்ட கருத்து) விபத்து, கேளிக்கை அல்லது நம் சுயநினைவு இல்லாத தருணங்களில் நம் Mobile தவறான நபர்களிடம் சிக்கினால் நாம் Finger Print, Face ID பயன்படுத்தி இரண்டே நிமிடங்களில் மொத்த பேங்க் பேலன்ஸையும் காலி செய்து விடலாம்..! - Main Bank Account தவிர்த்து Paytm, Airtel போன்ற ஏதாவது ஒரு Payment Banks ல் Account வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு சிறிய தொகையை இருப்பு வைத்துக்கொண்டு இதன் வழியாக டிக்கெட் புக்கிங், ரீசார்ஜ், போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் 😊 - இதன் மூலம் அடிக்கடி மெயின் Banking ஆக்கவுண்டை பயன்படுத்துவது தவிர்க்கப்படும். மேலும் இதுபோன்ற Payment Bank களில் நிறைய ஆஃபர்களும் கிடைக்கும். பாதிக்கப்பட்டாலும் இழப்பு என்பது பெரிதாக இருக்காது. - அடுத்து, Amazon Pay, Phone Phe போன்ற Digital Gateway தளங்களில் OTP யை Enable செய்து வைத்துக்கொள்ளுங்கள்.! இது உங்கள் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.! - மேலும் இது போன்ற Digital Gate way தளங்களில் நீங்கள் Add செய்யும், - Debit Card ல் A/C Balance குறைந்த அளவிலும், - Credit Card ல் Credit Limit குறைவாகவும், இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.!😊 - உங்களிடம் உள்ள அனைத்து Debit/Credit Card களை இது போன்ற Gateway தளங்களில் அல்லது App களில் Add செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். - Auto Debit எனும் Option நல்லது தான்..! நம்முடைய Bill களை எல்லாம் சரியான நேரத்தில் இதன் மூலம் கட்டிவிடலாம். But, Billing ல தப்பு இருந்து Amount அதிகமா Bill போட்டிருந்தான்னா, நீங்க கவனிக்கலைன்னா Auto Debit ல Amount ஆட்டோமேட்டிக்கா கழிஞ்சிடும். அப்புறம் Refund வாங்க நாமதான் படாதபாடுபடனும். So, கொஞ்சம் கவனம் தேவை..! - எல்லா Transactions முடிஞ்ச பிறகும் அந்த Transaction Successful அல்லது Failed ன்னு ஒரு Message அந்த Screen லையே Display ஆகும். அதை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சுக்கோங்க. சில நேரங்களில் அது உங்களுக்கு தேவைப்படும். சில Banking Apps ல் இந்த மெசேஜை Directஅ ஷேர் பண்ணவும் முடியும். அப்படி இருந்தா WhatsApp பண்ணி வெச்சுக்கோங்க.! 🔥 Transactions முடிஞ்சதுக்கு அப்புறம் App or Website ல இருந்து மறக்காமல் Logout பண்ணிடுங்க..! அப்புறம் வழக்கமா நம்ம எல்லா Banks ம் சொல்ற, - அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுவது - Alfa Numeric + Spl Character காம்பினேஷன்ல பாஸ்வேர்டு வைக்கிறது - பாஸ்வேர்டை யாரிடம் பகிராமல் இருப்பது - பொது இடங்களில் கிடைக்கும் Unsecured Wifi ல் Banking வேலைகளை தவிர்ப்பது - அடிக்கடி Account ஸ்டேட்மெண்ட் சரிபார்ப்பது - Account ஏற்படும் சந்தேகத்திற்கிடமான செயல்களை வங்கிக்கு தெரிவிப்பது… என, இப்படி மானே தேனேன்னு போட்டு கிட்டே போலாம் 😂 இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்நு நம்மை 99 சதவீதம் தற்காத்துக் கொள்ளலாம்..! இதை 100% தடுக்க முடியாதா என்று கேட்டால்.. நிச்சயம் முடியாது..! ஏனெனில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது வகையில் ஆன்லைன் பண மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டியதை கற்றுக்கொண்டு நம்மை மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..!😊 “ஒன்றை மட்டும் கூறிக்கொண்டு நிறைவு செய்கிறேன் - வங்கி ஊழியர்கள் நம்மிடம் ஒருபோதும் OTP கேட்கமாட்டார்கள். அதை யாரிடமும் கூற வேண்டாம்.!”😊 நன்றி மக்களே..! திராவிட இயக்கங்களில் பிராமணர்களின் பங்கு [girinath_2] திராவிட இயக்கங்களில் பிராமணர்களின் பங்கு. #Thread வ.ரா.1889-1951 திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர். முழு பெயர் #வரதராஜ_ராமசாமி. காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர்.ஒருகட்டத்தில் இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார். #பெரியார் […] சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார். குல ஆச்சாரங்களை கைவிட்டார். குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார். குடுமியை துறந்தார் சாகும் வரை சடங்குகளுக்கும் மூட பழக்கங்களுக்கும் எதிராக செயல்பட்டார். பெரியார் மீது பற்று கொண்டார் திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார். #பெரியார் […] ஏ.எஸ்.கே. 1907-1978 தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார். 1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும் தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது. பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள் ஏற்ற தாழ்வுகளையும் கண்டு மனம் குமுறினார். விளைவாக பெரியாருடன் கைகோர்த்தார். #ஆவியூர்சீனிவாசகிருஸ்ணமாச்சாரி எனும் தன் பெயரை ஏஎஸ்கே என மாற்றிக்கொண்டார். இவருடைய பகுத்தறிவின் சிகரம் பெரியார் என்னும் நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாதது என்பதை விளக்க கூடியது. #பெரியார் ஏஎஸ்கே அண்ணன்கள் துரைசாமி சாதி கடந்த மணமும், பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்து கொண்டனர். ஏஎஸ்கே மணம் செய்து கொள்ளாதவர். ந.சுப்பிரமணியன்.1915-2013 சிதம்பரத்தில் ஆச்சாரியமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தார். #பெரியார் சாதிக்கொடுமைகள் உண்டாக்கிய கோபம் தான் இவரையும் திராவிட இயக்கம் சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் சேர்ந்தது. தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி மீது மரியாதை கொண்டு இருந்தார். தான் இறந்தால் தன் உடலுக்கு அருகில் தானும் வீரமணியும் உள்ள படத்தை வைக்ககோரினார். #பெரியார் விபி.இராமன்.1932-1991 சென்னையில் ஆச்சாரமான ஐயர் குடும்பத்தில் பிறந்தவர் #வேங்கடபட்டாபிராமன் சட்டவல்லுனர் திராவிட இயக்கத்தின் பால் கொண்ட நாட்டமும் மாநிலங்கள் உரிமையில் கொண்டிருந்த அக்கரையும் திமுகவில் இணைத்தது திமுகவுக்கான சாசனத்தை உருவாக்க பேரறிஞர்அண்ணா தேர்ந்தேடுத்த மூவர் […] குழுவில் ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன்,இவர்களுடன் வி.பி.ராமனும் இணைந்து பணி செய்தார். * சின்னக்குத்தூசி.1934-2011 திருவாரூர் ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்தார். இயற்பெயர் #ரா_தியாகராஜன் இளமையிலே சாதிக்கு எதிரான உணர்வை பெற்றவர். #பெரியார் […] திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்ச்சி பள்ளியின் தொடக்க ஆண்டில் படித்த மாணவர்களில் ஒருவர். பெரியாரியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். குத்தூசியின் எழுத்தால் கவரப்பட்டு தன் பெயரை சின்ன குத்தூசி என்று மாற்றிக்கொண்டார். பின்னாளில் திமுகவின் இதழியல் குரல் ஆனார். #பெரியார் முரசொலியில் இவரின் எழுத்துக்களுக்கு தனி வாசகர் வட்டமே இருந்தது. * நன்றி: திரு.Napa #fb #பெரியார் (m.facebook.com/story.php?stor…) கோடாக் vs பியூஜி ஃபிலிம் [theroyalindian] #Kodak vs #Fuji_Film 😊 கோடாக் vs பியூஜி_ஃபிலிம் 😊 இரண்டு பாரம்பரியமான புகைப்பட நிறுவனங்களுக்கு இடையே நடந்த #சுவாரஸ்யமான சம்பவங்கள் 😂 #இழை #Thread #PhotographyDay #camera #photograghy வாங்க ஜாலியாக பயணிப்போம் 🧞 […] “அனேகமாக 1990 க்கு முற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பல புகைப்படங்கள் யாவும், இவ்விரு நிறுவனங்கள் தயாரித்த கேமிராக்கள் மற்றும் ஃபிலிம்கள் கொண்டே எடுக்கப்பட்டன.!” இதில் #கோடாக் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம். #பியூஜி_ஃபிலிம் ஜப்பானை சேர்ந்த நிறுவனம். #கோடாக்_நிறுவனம் The East Man Kodak Company என்பதையயே Kodak என சுருக்கி செல்லமாக அழைத்தார்கள். (நம்மூரு கிருஷ்ணமூர்த்திய ‘கிச்சா’ ன்னு கூப்பிடற மாதிரி..!)😂 இது 1888 ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.🙄 புகைப்பட துறையில் #Kodak பாரம்பரியமான ஒரு மிகப்பெரிய நிறுவனம்..!😊 […] அக்காலகட்டத்தில், புகைப்படத்துறை சம்பந்தமான ‘அ’ முதல் ‘ஃ’ வரையான அனைத்து பொருட்களையும் அவர்கள் தான் தயாரித்தார்கள். அதனை சிறந்த முறையில் சந்தைபடுத்தவும் செய்தாராகள்..! அன்றைய புகைப்பட சந்தையின் Monopoly அவர்கள் தான்.😊 அப்படி என்னெல்லாம் தயாரித்தார்கள் ன்னு பார்ப்போம்..! - புகைப்படம் எடுக்கும் கேமரா (Camera) - அதில் பயன்படும் ஃபிலிம் சுருள் (Film Roll) - அந்த பிலிம் சுருளை Develop செய்ய பயன்படும் எந்திரம். (Film Roll Developing Machine) - Developer ல் பயன்படும் வேதிப்பொருட்கள் (Developer Chemicals) - அச்சு எந்திரம் (Photo Printers) - அச்சு காகிதம் (Printing Paper) - அச்சு மை (Printing Ink) - புகைப்படங்களை பாதுகாக்கும் ஆல்பம் (Photo Albums) - துணைக் கருவிகள் (Camera Accessories) […] Kodak தனது எல்லா தயாரிப்புகளையும் இரண்டு வகையாக பிரிச்சு வியாபாரம் பண்ணாங்க.! - Camera, Developer Machine, Printers இதெல்லாம் பிரதான பொருட்கள். (Main Products) - FilmRolls, DeveloperChemicals, Photo PrintingSheets, PrintingInk, Accessories இதெல்லாம் நுகர் பொருட்கள் (Consumables) இந்த Main Products ஐ மிகக்குறைந்த தள்ளுபடி விலையில் கொடுப்பாங்க..! அதைத் தொடர்ந்து பயன்படுத்த தேவையான அதோட நுகர் பொருட்களை (Consumables) தொடர்ந்து வாங்கணும். இப்படி நாம தொடர்ந்து வாங்குற Consumables மூலமா அவங்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். இதன் மூலமா நாம் அந்த நிறுவனத்தோட நிரந்தர வாடிக்கையாளராகவும் மாறிடுறோம்.இப்படிதான் Kodak நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நல்லலாபம் பார்த்தார்கள். இத #Razor_Blade_Business_Model ன்னு சொல்லுவாங்க.!😊 ஒருபக்கம் பிசினஸ் டெக்னிக்ஸ் அப்படின்னு இருந்தாலும் இன்னொரு பக்கம் அவங்களுடைய அப்டேட்ஸ். Kodak நிறுவன் தொடர்ந்து அவங்களோட Products அ Update பண்ணிட்டு வந்துட்டே இருந்தாங்க. கேமரா ல நிறைய புது புது Models கொண்டு வந்தாங்க, மற்றும் புது புது Technologyகளையும் புகுத்துனாங்க..!😂 - Compact Size Camera - Fixed Focus Camera - Black&White Film - Monochrome Film - Colour Film - Retina Series Camera(35 mm) - Brownie Camera - Instamatic Camera (Point&Shoot) - Military Use Cameras - Digital Camera - MegaPixel Sensor - Digital Single Lens Reflex(DSLR) Camera […] இன்னும் நிறைய இருக்கு..! (முக்கியமானதை மட்டும் தான் குறிப்பிட்டு இருக்கேன்) இப்படி ஏகப்பட்ட Updates & Innovations😊 இப்படி 1900 களில் Pickup ஆன இந்த Kodak ங்கற Byepass Rider 1984 வரை சும்மா அடிச்சு நகர்த்தி Full Swing ல தான் போய்கிட்டு இருந்தது 😂 இப்படி FullSwing ல போய்கிட்டு இருந்தாலும் 1984ஆம் ஆண்டு இதுக்கு ஏற்பட்ட ஒரு BreakDown இதன் சந்தைமதிப்பை பெரிதும் பாதித்தது அது என்னங்கறதை பார்க்கலாம் #பியூஜி_ஃபிலிம்_நிறுவனம் இது 1934ஆம் ஆண்டு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இவங்க ஆரம்பத்தில் PhotoFlims தயாரிச்சாங்க […] ஒரு பத்து பதினைந்து வருஷத்துல மெல்ல மெல்ல Motion Film, X-Ray Film, Lens, Camera ன்னு கடைய பெருசா விரிக்க ஆரம்பிச்சாங்க..!🙄 இவங்க 1962 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள Xerox ங்கற நிறுவனத்துடன் கைகோர்த்து Fuji Xerox Corporation Ltd ன்னு ஒரு Joint Venture நிறுவனத்தை தொடங்குறாங்க.!😊 […] இதன் மூலமாக மருத்துவ துறைக்கு தேவையான Photo Imaging சம்பந்தமான பல உபகரணங்களை தயாரிக்க ஆரம்பிக்கிறாங்க. இவங்க உருவாக்குன Computer Radiography (CR) க்கு நல்ல வரவேற்பு. இது மருத்துவர்களிடமும், மருத்துவ பணியாளர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது. இந்த Product நல்லாவே Hit ஆகுது. […] (X-Ray எடுக்கும்போது நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் படும் கதிர்வீச்சின் தாக்கம் பெருமளவு இதனால் குறைக்கப்பட்டது.!)😊 இந்த மாபெரும் வெற்றியூடன் FujiFilms அமெரிக்காவின் மார்க்கெட்டிலையும் 1980களின் தொடக்கத்தில் நுழையிறாங்க.!😊 இதுவரைக்கும் எந்த விதமான போட்டியாளரும் இல்லாமல் கோலோச்சிக் கொண்டிருந்த கோடாக் நிறுவனத்திற்கு இது ஒரு பேரிடி.! ஏன்ன இது வரைக்கும் Kodak என்ன புதுசா கொண்டு வந்தாலும் அதை தான் அமெரிக்கமக்கள் கொண்டாடிட்டு இருந்தாங்க. போட்டியாளர்கள் இல்லா சந்தையாக இருந்ததனால Kodak நிறுவனத்திற்கு பெரிசா மெனக்கெட வேண்டிய அவசியம் ஏற்படலை Fuji Films அறிமுகப்படுத்திய விலை குறைவான Films அமெரிக்காவுல நல்ல வியாபாரம் ஆச்சு. இந்த Periodல தான் 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடைபெற்ற Olympics க்கான Title Sponsor ஆ FujiFilms கைப்பற்றறினாங்க.! இது அமெரிக்காவில் FujiFilmsன் சந்தைமதிப்பு & BrandName மேலும் உயர காரணம் ஆச்சு இதுதான் Kodakங்கற வண்டி Break Down ஆன கதை.! அதுக்கு அப்புறம் FujiFilms அமெரிக்காவிலேயே Factoryய திறந்து Business அ நல்லா டெவலப் பண்ணிட்டாங்க. 1984 - 1991 வரைக்கும் Kodak நல்லாவே தாக்குபிடிச்சாங்க..! ஆன இந்த 1991 க்கு அப்புறம் Digital Photography ல ஏற்பட்ட அசுரத்தனமான வளர்ச்சி Kodak நிறுவனத்தை சரிவை நோக்கி கொண்டு போச்சு..!🤔 Fuji Films அமெரிக்காவுல Success ஆன அளவுக்கு Kodak ஆல ஜப்பான்ல வெற்றியடைய முடியல.🙁 வெறுத்து போன Kodak 1995ல FujiFilms மேல அமெரிக்க அரசாங்கம் மூலமா உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO) வழக்கு போட்டாங்க..! அதாவது "Fuji Films நிறுவனம் …Kodakக்கு எதிராக ஜப்பான் Film Marketல வெற்றி பெற முடியாத படி மறைமுகமா, சில உள்குத்து வேலைகளை செய்யுறாங்கன்னு“🙄 வழக்கை விசாரித்த WTO 1998ல Kodak ட்டா,” தம்பி, போய் புள்ளகுட்டிய படிக்க வைக்குற வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்கன்னு" அட்வைஸ் பண்ணி Case அ தள்ளுபடி பண்ணிட்டாங்க..!😂 Digital வளர்ச்சி ஏற்படுத்த போகும் வணிக சந்தை மாற்றங்களை புரிஞ்சுகிட்ட FujiFilms நிறுவனம், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள புகைப்பட கருவிகள், டிஜிட்டல் சாதனங்கள்,அழகுசாதனப் பொருட்கள், உயிரியல் மருத்துவம் சார்ந்த சேவைகள், மருத்துவ புகைப்பட உபகரணங்கள்ன்னு தங்களை மேம்படுத்திக்கிட்டாங்க […] ஆனா,ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பம் கடைசியில கடனாளிங்கற பேரு வராம இருக்க எப்படி தங்களிடம் உள்ள பாரம்பரியமான சொத்துக்களை எல்லாம் விற்று சமாளிப்பாங்களோ,அதே நிலைமை தான் 2012 ஆம் ஆண்டு Kodak நிறுவனத்துக்கும் ஏற்பட்டுச்சு. திவாலாகுவதை தவிர்க்க தங்களுடைய புகழ்பெற்ற பல Patent Rights களை Adobe Systems, Apple, Amazon, Google, Facebook, Microsoft போன்ற நிறுவனங்களிடம் விற்று நிலைமையை சமாளிக்க வேண்டியதாயிற்று..!🙁 நஷ்டத்தில் இயங்கிய சில துணை நிறுவனங்களையும் இழுத்து மூடினார்கள்..! பிறகு, நிலைமையை சமாளிக்க பல மாற்றங்களை செய்தாலும் எதுவும் பெருசாக இலாபத்தை கொண்டுவரல.!🙄 கடைசியா ஒரு நல்ல செய்தி என்னன்னா கொரோணா காரணமா அமெரிக்காவுல குறைஞ்சு போன மருந்துகளின் கையிருப்பை மீண்டும் அதிகரிக்க, மருந்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு கோடாக்கிற்கு 765 மில்லியன் டாலர் கடன் வழங்க டிரம்ப் அரசு முன்வந்தது இருக்கிறது..!😊 ஒருவிஷயம் தெளிவாக தெரியுது, இந்த Digital Photography தொழில்நுட்பம் சந்தைக்கு வந்த பிறகுதான் போட்டிய சாமாளிக்க முடியாமல் Kodak நிறுவனம் வீழ்ச்சியை நோக்கி சென்றது.🙁 இதுல,ரொம்ப ஆச்சர்யமான விஷயம் என்னென்னா, இந்த Digital Camera வை 1975 களிலேயே கண்டுபுடிச்சு அதுக்கான Patent Rights ம் வாங்கியிருந்தாங்க Kodak.🙄அதுல பயன்படும் Megapixel Senor ம் இவங்களோட கண்டுபிடிப்பு தான்!😂 (இந்த தொழில்நுட்பத்த Canon, Sony எல்லாம் 1990 கள்ல தான் கஷ்டப்பட்டு Develop பண்ணாங்க.!😂) 1980 களிலேயே Digital Cameras ஐ சந்தைபடுத்தலாம் என நிறைய யோசனைகள் Kodak இடம் முன்வைக்கப்பட்ட போது, பழம்பெருமை பேசிய சில சீனியர்கள், இதனால் Film Roll, Developers போன்ற நமக்கு லாபம் தரும் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நமக்கு நஷ்டம் ஏற்படும் என தவறாக அனுமானித்தார்கள். Kodak நிறுவன வரலாற்றில் இது ஒரு மாபெரும் வரலாற்று பிழை.!🙄 அத கண்டுபிடிச்சவரையுமே ரொம்ப நையாண்டி பண்ணாங்க.! தொல்காப்பியம் உணர்த்தும் 3 உண்மைகள் மாதிரி இந்தரெண்டு நிறுவனங்களும் நமக்கு 3 உண்மைகளை உணர்த்துராங்க - ஒரு துறையில் மட்டுமே வணிக ரீதியான கவனம் செலுத்தாமல், அது சார்ந்த அல்லது சாராத மற்ற பல்வேறு துறைகளிலும் வணிகங்களை உருவாக்கி செயல்படவேண்டும். (பல்துறை வணிகம்) - புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிச்சா மட்டும் போதாது, அதை யாரு மலிவான விலையில் மக்களுக்கு கொடுக்குறாங்களோ அவங்கதான் ஜெயிக்கிறாங்க. - ஒரு துறையோட எதிர்காலம் எப்படி இருக்கும்,அதுக்கு நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் முன்னரே கணித்து செயல்படுதல் மிகஅவசியம்.😊 ரேசர் பிளேடு வணிக மாதிரி [theroyalindian] #Razor_Blade_Business_Model 😊 #ரேசர்_பிளேடு_வணிக_மாதரி இது என்ன என்பதை எளிமையாக புரிந்து கொள்ள இந்த #இழை #Thread😂 “வணிகம் என்பதே இலாபம் என்ற ஒற்றை மைய இலக்கை நோக்கி கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலந்தி வலை போன்ற ஓர் அமைப்பு..!” ….. யாரோ ஒருவர் சொன்னது 🙄 […] வணிகத்தில் மேற்கோள்ளப்படும் அனைத்து செயல்களும், இறுதியில் இலாபம் ஈட்டுதல் என்னும் ஒற்றை புள்ளியில் வந்து நிறைவு பெறுகிறது..!😂 இந்த இலாபம் ஈட்டுதல் என்னும் ஒரே இலக்கை அடைய வேண்டி பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன நிறுவனங்கள்.! (சிறு வியாபரம் முதல் பெரும் வணிகம் வரை)🙄 அப்படிப்பட்ட வியாபார யுக்திகளில் ஒன்று தான் இந்த “Razor Blade Business Model” - நம் வசதிக்காக இனி இதை #RBBModel என அழைப்போம்.!😊 #ஒரு_உதாரணம் கொசு விரட்டிகளை தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் Liquid Refill Cartridge (Mosquito Repellent Liquid) தனியாக வாங்கினால் ஒன்று 70 ரூபாய். அதையே Machine உடன் சேர்த்து Combo Offer என்ற பெயரில் 85 ரூபாய் க்கு விற்கிறார்கள்.🤔 அப்படியென்றால் அந்த Machine விலை (85-70) வெறும் 15 ரூபாய் தானா..!🙄 நிச்சயமாக இல்லை.! இதன் விலை அதை விட நிச்சயமாக பல மடங்கு அதிகம் இருக்கும்.! பிறகு ஏன் இவ்வளவு மலிவான விலையில் தருகிறார்கள்..!🤔 இங்கு தான் உள்ளது சூட்சமம்.🙄 ஒருவர் முதன்முதலில் இதை வாங்க வருகிறார் என கொள்வோம், அவருக்கு Machine மற்றும் Liquid Refill Catridge என இரண்டும் தேவைப்படும். எனவே ஒரு 15 ரூபாய் அதிகம் கொடுத்தால் “Machine ம் சேர்ந்து கிடைக்கிறதே” என இந்த Combo Pack ஐ பெருமையுடன் தேர்வு செய்வார்..! பிறகு மாதாமாதம் 70 ரூபாய் கொடுத்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் Refill Catridge வாங்குவதன் மூலம் அந்நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளராக மாறிவிடுகிறார்..! அவர் முதல் சில மாதங்களில் வாங்கும் Catridge மூலம் Machineக்கான அடக்கவிலை நிறுவனத்திற்கு திரும்ப கிடைத்துவிடும்..!😂 பிறகு அவர்கள் ஈட்டுவது எல்லாம் வெறும் இலாபம் அல்ல, கொள்ளை இலாபம்.🙄 இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது., - Machine தான் பிரதான பொருள் (Primary Product, ஒருமுறை வாங்குவது)😊 - Refill Catridge தான் நுகர் பொருள் (Consumables, தேவைக்கு ஏற்ப தொடர்ந்து வாங்கி கொண்டே இருப்பது)😊 ஒரு பிரதான பொருளை (Main Product) - மிகக் குறைந்த விலையில், (அதாவது உற்பத்தி செலவை விட மிகவும் குறைந்த விலையில்) விற்கப்படுவதன் மூலமாகவோ அல்லது - இலவசமாக கொடுக்கப்படுவதன் மூலமாகவோ - அதை வாங்கும் உங்களை, அந்த Main Product ஐ பயன்படுத்த தேவையான - நுகர் பொருட்களை(Consumables) தொடர்ந்து வாங்கச் செய்து, - உங்களை அந்நிறுவனத்தின் நிரந்தர வாடிக்கையாளராக (Permanant Coustomer)ஆக மாற்றுவதும், - பிறகு நீங்கள் தொடர்ந்து வாங்கும் Consumables மூலம் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் இந்த வித்தைக்கு பெயர் தான் Razor Blade Business Model.😂 “Give them Razor and Sell them Blades” என்ற ஆங்கில பழமொழி மற்றும் #RBBModel இவையெல்லாம் Disposable Razors ஐ கண்டுபிடித்த #King_Camp_Gillette என்பவரை பெருமைபடுத்துபவை ஆகும். இவர் 1901 ல் Gillette Safety Razor Company என்ற பிரபல நிறுவனத்தை உருவாக்கியவர். 😊 ஆனால் இந்த #RBBModel ஐ இவர் உருவாக்கவில்லை.🤔 இவரது நிறுவனத்திற்கு போட்டியான மற்ற Razor நிறுவனங்கள் தான் இதை உருவாக்கி வெற்றிகரமாக இலாபம் ஈட்டினார்கள்.😂 ஆரம்பத்தில் Gillette நிறுவனத்தின் ரேசர்கள் விலை மிக அதிகம் (காப்புரிமை பிரச்சினையால்). அப்பிரச்சனை தீர்ந்த பிறகு தான்‌ 1920 ளில் Gillette நிறுவனம் மலிவு விலை ரேசர்களை #RBBModel முறையில் சந்தைபடுத்தியது. இன்றுவரை அது அவர்களுக்கு இலாபகரமான மற்றும் வெற்றிகரமான ஒரு வணிக மாதிரி..!😊 இந்த #RBBModel லில் உள்ள மிகப் பெரிய பின்னடைவு யாதெனில் போட்டி நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு Consumables ஐ விற்க ஆரம்பித்தால் Main Products தயாரிக்கும் நிறுவனத்தின் கதை கந்தலாகி விடும்..!😂 அவர்களின் பிழைப்பே அந்த Main Products ஐ சார்ந்து அமோகமாக நடைபெறும் Consumables ன் வியாபாரம் தான்.!😂 #உதாரணம்: நாம் முதலில் பார்த்த அந்த Machine + Liquid Catridge Offer ஐ அந்த பிரபல 😂 நிறுவனம் இப்போது குறைத்து விட்டது அல்லது ஒவ்வொரு Brand Liquid Catridge க்கு ஏற்ப பிரத்தேயமாக வடிவமைக்கப்பட்ட தனித்தனி Machineகளை கொண்டு வந்து விட்டது.!🙄 இதற்கு காரணம், இதன் பிரபல போட்டிநிறுவனம் ‘எல்லா Machineகளிலும் வேலை செய்யுக்கூடிய வகையில் Catridge தயாரித்து குறைந்த விலைக்கு சந்தைபடுத்தியதே’ இந்த #RBBModel வெறும் Razor, Mosquito Liquid Machine போன்ற சில்லறை வணிகத்தில் தான் கை கொடுக்கும் என நினைத்தால் அது தவறு..! அதற்காக மேலும் சில உதாரணங்களை பார்க்கலாம்..!😊 - DTH Service இதில் Set Top Box தான் Main Product. இதை இலவசமாகவோ அல்லது தள்ளுபடியிலோ தருகிறார்கள். இதில் பிரதி மாதம் நாம் செலுத்தும் சந்தா மூலம் அவர்களுக்கு நல்ல லாபம்..! - ரிலையன்ஸ் மொபைல் இந்தியாவில் மொபைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் போன். Main Product ஆன Phone இலவசமாகவே வழங்கப்பட்டது. நாம் மாதாமாதம் செய்யும் ரீசார்ஜ் அவர்களுக்கு இலாபம் + வருமானம்.!😊 - Kodak பிரபல Camera தயாரிப்பு நிறுவனமான Kodak இதன் கேமரா& பிரிண்டர் போன்ற Main Productsஐ தள்ளுபடி விலையில் வழங்கியது. இதில் கேமராவில் தொடர்ந்து பயன்படுத்தபடும் ஃபிலிம் சுருள், பிரிண்டரின் அச்சு காகிதம் மற்றும் அச்சு மை போன்ற நுகர்பொருட்கள் வாயிலாக அமோகமாக மகசூலை அள்ளினார்கள்😂 - அணுசக்தி ஒப்பந்தங்கள். இந்த அணுசக்தி ஒப்பந்தங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த #RBBModel படிதான் செயல்படுத்தப்படுகிறது. அணுசக்தி பயன்பாட்டிற்கு தேவையான Nuclear Reactors ஐ ஒரு நாடு மற்ற நாட்டிற்கு உதவிக்கரம் என்ற பெயரில் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ வழங்கும்.! அதை தொடர்ந்து இயக்கத் தேவையான எரிபொருட்களை (யுரேனியம்) அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிப்பார்கள்.! இதில் Nuclear Reactor Maintenance என்ற வகையிலும் கல்லா கட்டும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறும்.!😂 குறிப்பு:முதல் Thread ல் குறிப்பிட்ட அந்த ‘யாரோ ஒருவர்’ நான் தாங்க..!😂 ராம்நாமி பழங்குடியினர் [theroyalindian] #ராம்நாமி_பழங்குடியினர் “ஆச்சரியங்கள் நிறைந்த இந்தியாவின் தனித்துவமான பழங்குடியினர்” 😊 மறுக்கப்பட்ட ஆலய பிரவேச உரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் அறப்போராட்டத்தின் கதை ..!🙏 #Thread #இழை […] 🔥“Kill them with your Success & Burry them with your Smile..!”🔥 என 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதியினரை அகிம்சையால் அலற விட்ட ராமபிரானின் “உண்மையான” ( மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்கிறேன் உண்மையான) பக்தர்கள்..!😂 #வரலாறு சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராம்நாமி என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என மதிப்பிடப்படுகிறது..!😊 அந்தப் பகுதியில் உள்ள ராமரின் ஆலயங்களில் இவர்கள் தினமும் சென்று வழிபாடு செய்து வருபவர்கள். இந்த பழங்குடியின மக்கள் ராமரை தங்கள் தெய்வமாக, உயிரினும் மேலாக நினைத்து வழிபட்டு வந்தவர்கள். 🤗 சுமார் 120-150 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த வந்த பகுதியில் (தற்போதைய சட்டீஸ்கர் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகள்) உள்ள ஆலயங்களில் சென்று ராமபிரானை வழிபட ஆதிக்க சாதியினரால் உரிமை மறுக்கப்படுகிறது. 😠 திடீரென தங்கள் ஆலய உரிமை பறிக்கப்பட்டதால், ராமபிரானை இனி தரிசிக்க முடியாது எனவும், ராமபிரானை தங்களிடமிருந்து அவர்கள் பிரித்துவிட்டதாகவும் வருந்திக் கண்ணீர் வடிக்கிறார்கள் அவர்கள்..!😢 அதனால் அவர்கள் ஒரு சபதம் ஏற்கிறார்கள்..! அதாவது “நாங்கள் எங்கள் உடல் முழுவதும் ராமபிரான் பெயரை பச்சைக் குத்திக் கொள்வோம். நீங்கள் யாரடா எங்களையும் ராமரனயும் பிரிக்க..! இனி எவராலும் எங்களையும் ராமனையும் பிரிக்க முடியாது.” #அறச்சீற்றம் “இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்., அவர் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், எங்கள் பக்தி உண்மையானது” … என்பதை உயர் சாதி இந்துக்களுக்கு நெற்றி பொட்டில் அடித்தது போல உணர்த்தவே அவர்கள் இறைவனின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்தி கொள்ள தொடங்குகிறார்கள்..!🙄 […] இதைக் கேள்வியுற்ற ஆதிக்கசாதியினர் அவர்களுக்கு வெவ்வேறு வழிகளில் இன்னல்களை கொடுக்கிறார்கள்.! அவற்றையெல்லாம் அவர்கள் அகிம்சை வழியில் முறியடித்து இறைவனின் திருநாமத்தை தங்கள் உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்ள தொடங்கினார்கள்..!😊 […] இந்த பழக்கத்தை முதன்முதலில் #பரசுராமர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முத்த பழங்குடி நபர் தோற்றுவித்தார் என்று நம்பப்படுகிறது. இதே பழக்கம் பல தலைமுறைகளாக இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. ராமபிரானின் நாமத்தை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொள்வதால் இராமநாமி என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது “ராமனின் பெயரை உடையவர்கள்” என்பது இதன் பொருள். 😊 […] இவர்களிடம் பல ஆச்சரியங்கள் உள்ளன, - அவர்கள் மற்றவர்களைப் போல ஆலய உரிமை கோரி போராட்டங்கள் நடத்த வில்லை. - தங்களுக்கு உரிமை மறுத்த சாதியினருக்கு எதிராகவும் எந்த போராட்டங்களையும் அவர்கள் நிகழ்த்தவில்லை. மாறாக அகிம்சை முறையில் அவர்களுக்கு தங்கள் பக்தியை நிரூபித்தார்கள். - இவர்கள் தினமும் காலை மாலை மற்றும் இரவு எப்பொழுதும் ராம நாம ஜெபம் செய்கிறார்கள்..! - அவர்கள் அதன் பிறகு ஆலயங்களுக்கும் செல்வதேயில்லை. ( “போடா, ஆண்டவனே நம்ம பக்கம்” )😂 - அவர்கள் பகுதியில் நடைபெற்ற பல்வேறு மதமாற்ற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. […] - இவர்கள் சைவ உணவை மட்டும் உட்கொள்கிறார்கள். - இவர்களின் வீடுகளில் ராமாயணம் புத்தகம் கண்டிப்பாக இருக்கும். வீடுகளின் சுவர்களிலும் ராம் ராம் என்று எழுதி இருப்பார்கள். - பெரும்பாலும் “ராம், ராம்” என்று எழுதப்பட்ட துணிகளையே தங்கள் மேலாடைகளாக அணிகிறார்கள்..! […] - உலகிலேயே, இறைவனின் பெயரை முகம் கை கால் என உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ளும் பழங்குடி இனம் இவர்கள்தான்..! - இவர்களில் இன்னும் பலரோ, தங்கள் நாக்கு மற்றும் இமைகளிலும் கூட ராம் ராம் என பச்சை குத்திக் கொள்கிறார்கள். “ஒட்டு மொத்த சமூகம் தங்களை புறக்கணித்த போதும், மதம் மாறாமல், யாரையும் பழிக்காமல் தங்களுக்கென ஒரு தனித்துவமான அடையாளங்களை உருவாக்கி, அறச்சீற்றத்துடன் இன்றும் தனித்துவமாக வாழும் இவர்கள், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மூடர்களுக்கு சிம்மசொப்பனமே..!”😊 #ஜெய்_ஸ்ரீராம்..! 🙏 […] Google Advertising ID  [theroyalindian] இந்த #Google_Advertising_ID 😊 அப்படின்னா என்ன..! இது எதுக்காக.! என்ன Use.!🤔 அது பற்றிய #Thread #இழை வாங்க ஜாலியா பயணிப்போம்..!🧞 Voter ID, Adhar ID மாதிரி இதுவும் உங்களுக்கான ஒரு IDதான்.😊 இத நம்ம Google அண்ணன் நாம்ம Apply பண்ணாமலே நம்ம Android Mobileக்கு கொடுத்திருக்காரு.!😂 […] உங்களிடம் ஒரு Android Mobile இருக்குன்னா உங்களுக்கும் ஒரு Google Advertising ID நிச்சயமாக இருக்கும் முதலில் இதை உங்க(Android) Mobile ல Check பண்ணி பாருங்க. Settings > Google > (Services & Preference) > Ads> Your Advertising ID> நீளமா ஒரு AlphaNumeric Combination இருக்குதா […] இந்த நீளமான AlphaNumeric Combination தாங்க உங்க #Google_Advertising_ID.!🙄 “தீரன்-அதிகாரம் ஒன்று” இந்தபடம் வந்த Time ல ஒரு WhatsApp Message பரவலா வலம் வந்துச்சு. வடமாநில கொள்ளை கும்பல் ஒன்னு தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாகவும்,பகலில் அவங்க நம்ம ஏரியாக்கு வந்து நோட்டமிடுவதாகவும் அப்படி நோட்டமிட்ட வீடுகளில் சில குறியீடுகளை சாக்பீஸ் ல எழுதிவச்சிட்டு போறதாகவும், Nite இந்த குறியீடுகளை வச்சுதான் வீடுகளை தேர்ந்தெடுத்து கொள்ளை அடிக்கறாங்கன்னும் சொல்லி பயமுறுத்தும் விதமாக இருந்திச்சு.! So, “நீங்க உங்க Compound சுவர், Gate இதுல ஏதாவது குறியீடு,Markings இருந்தா.. அழிச்சுடுங்க” ன்னு எச்சரிக்கை மணி அடித்து நிறைவடையும் அந்த மெசேஜ். (இந்த செய்தி பிறகு செய்தித்தாள்களிலும் கூட வந்தது) ஆன அதுல ஒரு Interesting ஆன விசயம் என்னன்னா அந்த Msg கூட சில குறியீடுகளையும் Share பண்ணி இருப்பாங்க.! 🔥 பெண்கள் மட்டும் உள்ள வீடு, 🔥எளிதான இலக்கு […] - நுழைவது ஆபத்து - செழிப்பான வீடு - கவனம் தேவை - எதுவும் தேறாது - கேமரா, அலாரம் உள்ளது இப்படியா வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை, அவங்க நடவடிக்கை சொத்து,வசதின்னு அதுக்கு ஏத்தமாதிரி குறியீடுகளை போடுறாங்கன்னு அந்த Msgல இருக்கும் […] (அந்த Msg படிச்சுட்டு நா எங்க வீட்டு Compound சுவரு, Gate இதையெல்லாம் போய் ஒரு Round ஆராய்ச்சி வேற பண்ணிட்டு வந்தேன்..!😂) சரி, இப்போ ஏன் சம்பந்தமே இல்லாம இந்த கதை ன்னு கேட்கிறீங்களா.! 😂 சரி, சம்பந்தபடுத்திருவோம் 🤗நீங்க பல லட்சம் போட்டு கட்டின வீட்டுல Easy ஆ கொள்ளையடிக்க எவனோ ஒருத்தன் உங்க Activities அ கவனிச்சு உங்க வீட்டு சுவத்துல ஒரு Identification Mark போடும் போது, 🙄 🤗நீங்க சில பல ஆயிரங்கள்ல வாங்கின ஒரு Android Mobile Phone ல Easy யா விளம்பரம் பண்ண, உங்களோட Activities அ Track பண்ணி கவனிச்சு நம்ம Google அண்ணனும் ஒரு Identification Mark போடாமலா இருப்பாரு…!😂 (அதுவும் Google பெத்தெடுத்த தவப் புதல்வன் தான் நம்ம Android பையன்)🙋 அப்படி அவரு (Google) உங்க Phone ல டீஜன்டா போடுற Identification Mark தான் இந்த #Google_Advertising_ID..!🙄 Intialஆ ஒரு Random Alfa Numeric நம்பர் தான் உங்க Advertising ID யா இருக்கும்.இது Google நமக்கு கொடுக்கும். இதுல எந்த வித Detailsம் இருக்காது. ஒவ்வொரு Android Mobileலயும் Advertising IDயும் வேறவேற AlfaNumeric Combinationல தான் இருக்கும்.அதனாலதான் இது ஒரு Unique ID(தனித்துவமானது)🙋 உங்க Apps ல நீங்க பண்ற Activities, - தேடல்கள் - Searchs - முன்பதிவுகள்-Bookings - வாங்குவது-Purchase - பரிமாற்றங்கள் -Transactions - பதிவிறக்கங்கள் - Downloads - விளையாட்டுகள் - Gaming Activities ன்னு இப்படி உங்களளோட ஆர்வத்தை (Intrest) வச்சு ஒரு Profile - Build பண்ண தொடங்குறாங்க நீங்க தொடர்ந்து Apps பயன்படுத்தும் போது 🙋உங்க Activitiesஅ வச்சு (மேலே குறிப்பிட்ட Activities தவிர இன்னும் பல Activities) 🙋அப்புறம் உங்க Location 🙋உங்களோட Usage Pattern இதெல்லாம் வச்சு உங்களுக்குன்னு ஒரு Profile Create பண்றாங்க. இந்த Intrest ங்கறது People to People மாறுபடும் ங்கறதுனால, ஒவ்வொருத்தரோட Profilesம் வேறவேற மாதிரி இருக்கும். இந்த Activity Based Profile தான் உங்க Advertising ID ல இருக்கும். உங்க ID ய Access பண்றது மூலமா மேலே சொன்ன உங்களோட Activities, Intrest இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.🙄 இப்போ இந்த Advertising ID ன்னா என்னனு ஓரளவுக்கு புரிஞ்சிருக்கும். சரி, இந்த ID எதுக்குன்னு கேட்டா… நம்ம Android Mobile ல நாம் Use பண்ற Apps ல விளம்பரம் பண்றதுக்குன்னு எளிதாக சொல்லிடலாம் அப்போ இந்த Cookies ம் விளம்பரம் பண்ணதான Use ஆகுது. அப்போ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் ஒரு காலத்துல எல்லாமே நாம் Website ல தான் Browse பண்ணோம். உதாரணமாக Amazon ல பொருள் வாங்கனும்னா, ன்னு Amazon னோட website அ தான் பயன்படுத்துவோம். Android ன் அசுர பாய்ச்சலுக்கு அப்புறம் இந்த Applications, அதாவது Apps பிளாட்பாரம் நல்ல Develop ஆகிடுச்சு. (amazom.com) […] ஒவ்வொரு Websiteம் பெரும்பாலும் நமக்கு இப்போ ஒரு App வடிவில் கிடைக்குது. இப்ப நாம Amazon websiteஅ பயன்படுத்துவதை விட Amazon App அ தான் அதிகமாக பயன்படுத்துறோம். புரிஞ்சிருக்குமே அதான், Websitesல Ads வருவதற்கு Cookies பயன்படுது. அது மாதிரி Appsல Ads வருவதற்கு Advt ID பயன்படுது (But,Cookies &Advt IDக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு) சரி இந்த Google Advertising IDனால என்ன Use.! 🔥As a User நமக்கு பெருசா எந்த Useம் இல்ல.ஆனா Googleட்ட கேட்டா உங்களுக்கு ஏற்ற Intrest Based Ads காட்டவும்,எங்கள் சேவைகளை இன்னும் சூப்பராக வழங்குவோம்ன்னும் சூப் 🍜 குடுப்பான். 🔥இப்போ இந்த Intrest Based Ads ங்கற பெயரை கூட Personalized Ads ன்னு மாத்திட்டான்..!😂 🔥அடுத்து App Developers பணம் சம்பாதிக்க இது use ஆகுது. நீங்க Active Users அதிகம் உள்ள Apps வச்சிருந்து, அதுல GoogleAds க்கு Permission கொடுத்துட்டீங்கன்னா, போதும்.. AdMob வழியாக Google, […] உங்க App ஐ Use பண்றவங்க Advt ID க்கு ஏத்தமாதிரியான Ads களை அவங்க Appல போட்டு உங்களுக்கு Commision கொடுத்துருவான்💰😂 🔥அடுத்து Google அண்ணாச்சி கல்லா கட்ட இது பெரிதும் உதவுது இத படிச்சிட்டு கடுப்புல ரம்யாகிருஷ்ணன் மாதிரி "#கட்டப்பா ன்னு கத்தனும்ன்னு தோணிச்சின்னா சில Tips. 😊 🤷இந்த Advt ID ஒரு Resettable ID. So, என்னதான் Google உங்க Activities Base பண்ணி ஒரு Profile Create பண்ணி வச்சிருந்தாலும்,இதை Reset பண்றது மூலமா,உங்களுக்கு வேறஒரு புது ID Assign ஆகிடும். எல்லாமே மறுபடியும் முதல்ல இருந்து தான் Start ஆகும்.😂 இது மூலமா Targeted Ads ஐ தவிர்க்கலாம். […] 🤷 Settings ல போய் “Opt out for Ads Personalisation” ங்கறத Enable பண்ணிடுங்க.😂 இதன்மூலம் 📜Apps உங்கள் Advt ID ஐ பயன்படுத்துவது, 📜உங்க Activities ஐ வைத்து Profile Build பண்ணுவது, 📜உங்க Activities க்கு ஏற்ற மாதிரி விளம்பரங்கள் காட்டப்படுவது எல்லாம் தவிர்க்கப்படும்..!😊 […] 🤷இதன் மூலம் உங்கள் Activities லாம் Play Store ஆல் நேரடியாக கண்கணிக்கப்படுது ஓரளவு குறையும். சுத்தமா நிறுத்த முடியாதான்னு கேட்ட ஊ..ஊஹூம்.😩 🤷அதான் ஒரு App அ, Download பண்ணும் போதே ஊருப்பட்ட Permissionsக்கு ‘Ok’ கொடுத்து வச்சிடுறோமே..!😂 இந்த Advt ID Android ல மட்டுமல்ல மற்ற Operating Systems லயும் இருக்கு..! Android ன் Advt ID ய #AAID - Android Advertising ID ன்னும் இதே மாதிரி Apple iOSன் Advt ID ய #IDFA - Identifiers For Advertisers ன்னும் குறிப்பிடுறாங்க..!😊 இதெல்லாம் தான் Advertising ID பத்தின Basics..! […] குக்கீஸ் [theroyalindian] #Cookies #குக்கீஸ் இது தான் நண்பர் கேட்ட கேள்விக்கு பதில்.!😊 சரி,Cookies அப்படின்னா என்ன.! இந்த First Party, Third Party Cookies லாம் யாரு வாங்க ஜாலியா பயணிப்போம்.!🧞 #Thread #இழை நீங்க ஒரு வேலைக்காக Online ல Apply பண்ணனும். ஆதனால.. […] இப்போ நீங்க ஒரு Job Website க்கு போய் ஒரு Online Application, Fill up பண்றீங்க. First Page la உங்கள் பற்றிய தகவல்களை Fill up பண்றீங்க, அடுத்தது Second Page ல, படிப்பு, Past Experience ன்னு நீளமா போகுது, அடுத்து Third Page la மிச்ச சொச்ச தகவல்களையும் Fill up பண்ணியாச்சு..! கடைசியாக Fourth Pageல சில Documents Upload பண்ணா முடிஞ்ச்சு. இப்போ திடீர்ன்னு Power Cut ஆனா வரும் பாருங்க ஒரு Tension.😠 இப்போ Power வந்த உடனே மறுபடியும் அந்த Website குள்ள போறீங்க, Fill up பண்ணதெல்லாம் அங்கேயே இருக்குமா.! 🤔 இருக்கும்.!😊 அந்த Websites ல Cookies Enabled ஆகவும், Browser ல Cookies Allowed ஆகவும் இருக்கும் பட்சத்தில் நீங்க விட்ட இடத்திலிருந்து தொடரலாம். (95% Websites& Browsersல Default ஆகவே இப்படிதான் இருக்கும்) முந்தின 3 Pageலையும் நீங்க Fillup பண்ணது அப்படியே இருக்கும். நீங்க Fourth Pageல Balance உள்ளத மட்டும் Fillup பண்ணா போதும்! Over😊 நீங்க Browse பண்ற Website ல என்ன Browse பண்றீங்க என்ற விபரங்களை ஒரு சின்ன File ஆ மாத்தி, அந்த Website உங்க கம்ப்யூட்டர்ல உங்க Browser ன் உதவியுடன் Store பண்ணி வச்சுக்கும். இத தான் #Cookies ன்னு சொல்றோம்.!😂 Nxt time நீங்க அந்த Websiteக்கு போகும் போது இந்த Cookies அந்த Web Server உடன் Connectஆகி நீங்க அந்த Particular Websiteல எந்த இடத்துல நிறுத்துனீங்களோ அங்க இருந்து தொடர உதவுது.நீங்க Browsing பண்ணிட்டு இருக்கும் போதே Websites, Cookies ஐ உருவாக்கி அதை உங்க கணினில Store பண்ணிடும். Websiteகள் Cookies ஐ அந்த Sessionலயே Frequentஆ Update பண்ணிட்டே வந்துரும். ஒரு Website, தன்னோடு User க்கு அவரோட Browsing Experience ஐ - எளிதாக்கவும் (Simplyfy) - விரைவாக்கவும் (Speed up) - மேம்படுத்தவும்(Improve) - சம்பந்தபட்ட தகவல்களை மேலும் தரவும் (Give More Relevant Datas) - சிறப்பாக பயன்படுத்தவும் (Better Utilisation) இந்த Cookies ஐ உருவாக்குது.🤷 சின்ன உதாரணம்: 🤷 நண்பருக்கு தொடர்ந்து கடுமையான தலைவலி. ஒரு Check up பண்ணிடலாம்ன்னு பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்தரிக்கு போறோம். Receiption ல Entry போட்டவுடனே ஒரு File தர்றாங்க. Nxt Ground floor ல இருக்கிற General Dr. அ பார்க்க சொல்றாங்க. அவர் Checkup பண்ணிட்டு BP பார்க்க சொல்றாரு. BP Normal ன்னு வந்தும், Eye Checkup பண்ண எழுதி தர்றாரு. உடனே நண்பரை First Floor ல இருக்குற கண் டாக்டர் ட்ட கூட்டிட்டு போறாங்க. அவரும் Eye Checkup பண்ணிட்டு Normal ஆ தான் இருக்கு, Don’t worry, One week இந்த Tablets சாப்பிடுங்க. அப்புறமா வாங்க பார்ப்போம்ன்னு சொல்லி அனுப்பிட்டாரு. இப்போ One week கழிச்சு நண்பர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு போனாரு. Reception ல அந்த File ஐ காட்டின உடனே அத பார்த்துட்டு நேரே First Floor ல இருக்கிற கண் டாக்டர் Room ல கொண்டுபோய் விடுராங்க.! நிற்க..! ( நண்பருக்கு என்ன ஆச்சுன்னு அப்புறம் பார்ப்போம்)😂 நம்ம விஷயத்துக்கு வருவோம்..!😊 முதல் தடவ ஆஸ்பத்திரிக்கு வந்தபோது நண்பர், General Dr, BP Checkup ன்னு கடந்து கடைசியா தான் Eye Dr. கிட்ட வந்தாரு. இப்போ இரண்டாவது தடவ வந்த உடனே அவர பத்தி எதுவும் விசாரிக்காமல், அந்த File ஐ காட்டினதுமே (Receptionல தந்தது) நேரா நண்பரை கொண்டு போய் கண் Doctor கிட்ட விட்டுட்டாங்க.!😂 புரிதலுக்காக ஒரு Comparison.🤔 அந்த ஆஸ்பத்திரியை ஒரு Web Site ன்னு Imagine பண்ணிக்கலாம். ஒவ்வொரு Dr Room மும் அந்த Website ல உள்ள ஒரு Web Page.. ஆஸ்பத்திரிக்கு போறது தான் Browse பண்றது.! Second time,வந்தப்ப நண்பர், Direct ஆ Eye Dr. ட்ட போக காரணமான அந்த File தான் Cookies.!😂 இந்த File அ ஆஸ்பத்திரி ரிசப்ஷனிஸ்ட் உங்கிட்டயே குடுத்துருவாங்க. இது உங்கிட்ட தான் இருக்கும் அதுல உங்க Treatment பற்றிய தகவல்கள் இருக்கும். (Test Reports, Results, Prescription) இது உங்களோட Hospital Vist ஐ Easy ஆக்க உங்களுக்கும் அந்த Hospital க்கும் இடையில் மட்டுமே பயன்படும். 😊 இதுபோல உருவாக்கப்படுகின்ற Cookies ஐ உங்க Browser ல இருந்து அந்த Particular Website மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால தான் #Fisrt_Party_Cookies ன்னு சொல்றோம்.🤷 அப்போ #Third_Party_Cookies ங்கறது. அதே Hospitalல ஒரு Medical Insurance Agentம் இருக்காரு. அவரும் உங்களை Follow பண்ணி, உங்க Treatment விபரங்களை ஒரு File ஆ போட்டு அதை மற்ற Hospitals கூடவும் Share பண்ணிடுறாரு. இப்போ மத்த Hospitals உங்களுக்கு வலை விரிப்பாங்க. - உங்க Problemக்கு எங்ககிட்ட செலவு கம்மி. - நாங்க சீக்கிரம் Cure பண்ணிடுவோம். - Insurance Claim பண்ணிக்கலாம். - Discount அது இதுன்னு 😂 இந்த மாதிரி நீங்க ஒரு Website ல Browse பண்ணிட்டு இருக்கும்போது உங்களை பற்றிய உங்களுடைய Browsing Details அ இன்னொரு Website ஒரு (சின்ன File ஆ) Cookies அ Create பண்ணா அதுதாங்க #Third_Party_Cookies. இது எப்படி சாத்தியம்.🙄 எப்படி Hospital ல அந்த Insurance Agent உங்கள் Follow பண்ணி Details Collect பண்ணினாரோ, அதே மாதிரி நீங்க Browse பண்ற Website ல உள்ள Other Site Links,🔗 Facebook Like Symbol👍, Ad PopUps🐣 இப்படி எதையாவது Click பண்ணறது மூலமா நீங்க Click பண்ண அந்த Link Websites ம் உங்க Browser ல ஒரு Cookies அ Create பண்ணிடும். இது தான் #Third_Party_Cookies. இப்படி Create செய்யப்படும் ThirdParty Cookiesஅ மற்றொரு Websiteனாலையும் எளிதா பயன்படுத்திக்கொள்ள முடியும். இது பெரும்பாலும் உங்கள் தேடலுக்கேற்ப விளம்பரங்களை காட்டுவதற்கு தான் பயன்படுகிறது. இதனால தான் நீங்க Amazonல ஒரு Productஅ Search பண்ண அது Facebook & Google யும் Ads ஆ வருது அதேநேரம் இந்த Third Party Cookies ஐ பயன்படுத்தி, 🙄 உங்க தகவல்களை எளிதாக திருட முடியும் (Data Theft) 🙄 உங்களை கண்காணிக்க அல்லது பின்தொடர முடியும். (Tracking) 🙄 தனியுரிமை பிரச்சினை (Privacy Issues) 🙄Credit Card details உள்ள Cookiesஅ Hack பண்றது மூலமா பணமோசடியும் பண்ண முடியும். சரி, First Party, Third Party ன்னு இருக்கறப்போ #Second_Party_Cookies ன்னு ஒன்னு இருக்கா..! 😂 நிச்சயமாக இருக்கு..🙋 நாம் Hospital கதைக்கு மீண்டும் வருவோம். நண்பருக்கு BP, Eye Test, இப்படி எல்லாம் Ok. குடுத்த மாத்திரை எல்லாம் சாப்டாச்சு.ஆனாலும் தலைவலி இன்னும் Cure ஆகல..! 😕 உடனே அவர பக்கத்துல இருக்குற இன்னொரு பெரிய Hospital க்கு Refer பண்றாங்க. அப்படி பண்ணும் போது அவரோட Case File யும் அவங்களே அந்த Hospital க்கு அனுப்பிடுறாங்க. இது மாதிரி ஒரு Website அதோட Cookies Data வ இன்னொரு Website க்கு கொடுத்தாலோ or Share பண்ணாலோ அதான் #Second_Party_Cookies இது பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட இரண்டு Websites க்கு இடையே Business Agreements மூலமா நடக்கும். உதாரணம் : Travel & Ticket Booking Websites, அவங்க Cookies அ Hotel Room Booking Websites கூட Share பண்றது.😂 உலகம் முழுவதும் இந்த Third Party Cookies க்கு பலத்த எதிர்ப்பு இருக்கு.!😠 அதனால் தான் Mozilla & Apple Safari இந்த ரெண்டு Browser ம் Default ஆகவே, இந்த Third Party Cookies ஆ Disable பண்ணி இருக்காங்க.! Internet Explorer, MS Edge, Opera இப்படி மத்த Browsers ம் இத சீக்கிரமே அவங்களோட வரப்போற Updates ல கொண்டு வந்துடுவாங்க.!😊 Google Chrome Browser மட்டும் தான் இத 2022 வரைக்கும் ஒத்தி வச்சிருக்காங்க.😂 (அவங்களோட 80-85% வருமானமே இந்த Third Party Cookies மூலம் கிடைக்க கூடிய விளம்பர வருவாய் தான்..!) உங்க புரிதலுக்காக [@vikatan]{.underline} website டோட Cookies & Privacy Policyயின் சில Screenshots குடுத்திருக்கேன்..! 😂 […] Google Ads and Google Adsense என்றால் என்ன ? [theroyalindian] #Google Ads & Google Adsense என்றால் என்ன.! இந்த #Google_Ads & #Google_Adsense என்றால் என்ன.! என்ன வித்தியாசம்..! அது பற்றிய #Thread #இழை வாங்க ஜாலியா பயணிப்போம்..!🧞 #Online_Advertisement #Digital_Advertising ஒரு குட்டி Story 🙄 ஒரு பிரபல நிறுவனத்தின் தலைவரும் அவரது மகனும் ஒருநாள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.! […] அப்போது மகன் கேட்டான் “அப்பா நம்ம நிறுவனம் தான் மிகவும் பிரபலமாயிற்றே, மக்கள் நம் பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள், பிறகு ஏன்னப்பா அதற்கு விளம்பரம் என்ற பெயரில் இவ்வளவு பணத்தை வீணாக செலவு செய்கிறீர்கள்..!” அதற்கு தந்தை புன்னகைத்தவாரே கேட்டார் " இப்போ ஓடிட்டு இருக்கிற இந்த ரயில்ல இருந்து இதோட இஞ்சினை கழட்டிவிட்டால் என்னப்பா ஆகும்..!" மகன் பளிச்சென்று சொன்னான் “கொஞ்ச நேரம் இதே வேகத்துல ரயில் ஓடும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும்” தந்தை நிதானமாக தொடர்ந்தார் "இந்த இஞ்சின் மாதிரி தான்..ப்பா விளம்பரங்களும்..!, அத நிப்பாட்டிட்டா நம்ம வியாபாரமும் இதே மாதிரி கொஞ்ச நாள் இதே வேகத்துல ஓடும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும்..!" மகனுக்கு இப்போது, வியாபாரத்திற்கு விளம்பரங்கள் எவ்வளவு அவசியம் (மன்னிக்கவும் 🤫) அத்தியாவசியம் என புரிந்துவிட்டது..! ஆம், விளம்பரங்கள் இது இல்லாமல் இவ்வுலகில் வணிகம் என்பதே இல்லை. கடலை மிட்டாயில ஆரம்பிச்சு கம்ப்யூட்டர் வரையிலும், கல்வி ல தொடங்கி கப்பல் பயணம் வரையிலும் எல்லாவற்றிக்கும் விளம்பரம் தான்..! இந்த விளம்பரங்கள் எல்லாம் நமக்காகத்தான். ஆமா நாம்தான், அதாவது வாடிக்கையாளர்கள் தான் ஒரு வியாபாரத்தின் ஆணிவேர். இப்படி “விளம்பரங்கள் சூழ் வணிக உலகு” ல தான் நாம் குடித்தனம் நடத்திகிட்டு இருக்கோம். இந்த விளம்பரங்களை பொதுவாக இரண்டா வகைப்படுத்தலாம். 1.வணிகம் சார்ந்தது (Business Ads) 2.வணிகம் சாராதது (Non Business Ads) வணிகம் சாரதது இதுல பார்த்தா 1.அரசாங்க அறிவிப்பு 2.பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள், வரவேற்புகள் 3.கட்சி சார்ந்த அல்லது அமைப்பு சார்ந்த அல்லது தனிநபர் பற்றிய விளம்பரங்கள் 4.பொதுவான அறிவிப்புகள் (கோவில் கும்பாபிஷேகம், இரத்ததான முகாம்) இன்னும் ஏராளமா இதுபோல வகைப்படுத்தலாம். 🔥வணிகம் சார்ந்தது (Business or Commercial Ads) இவ்வகை விளம்பரங்கள் பொதுவே ஒன்றை, - அறிமுகப்படுத்துதல்(Introducing) - சந்தைப்படுத்துதல்(Marketing) - பிரபலப்படுத்துதல்(Branding or Popularizing) என்று வணிகம் மற்றும் வருவாய் (Revenue) என்ற இரண்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும். 90 களுக்கு முன்பு வரை இந்த Print Media (அச்சு) தான் மிகப்பிரபலமான ஒன்று. அதனால் செய்தித்தாள்கள்,வார இதழ்கள்,Posters, Bit-Notice இவற்றின் மூலம்தான் பெரும்பாலான விளம்பரங்கள் தரப்பபட்டன. அச்சு வடிவில் இருந்த விளம்பரங்கள் 90 களுக்கு பின் தொலைக்காட்சி, வானொலி இவற்றின் தயவால் ஒலி, ஒளி […] (Audio & Video) வடிவங்களாக அசுர வேகத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்தது.! 2000 வது ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த விளம்பரத்துறையிலும் பெரும் தாக்கத்தையும் கொண்டு வந்தது..! இங்குதான் நம்ம Google அண்ணனும் Entry குடுக்காரு. ஆம் விளம்பரங்களும் Digital‌ மயமாயின..! அது என்ன Digital விளம்பரங்கள்..! நீங்க ஒரு Website அ Browse பண்ணிட்டு இருக்கும் போது , - “Online ல் கபடி விளையாடி பணம் வெல்லுங்கள்” ன்னு OverNite ல ஒபாமா ஆகுற ஆசையை தூண்டும் Pop Ups - “முப்பதே நாளில் முப்பது கிலோ உடல்பருமனை குறைக்க.!” ன்னு அதிகப்பிரசங்கித்தனம் பண்ணும் Links🤨 […] - திடீர்ன்னு ஒரு மூலையில இருந்து பறந்து வந்து(Screenல தான்) பூ தூவி “Congrats,You won 20 lakhs,To claim your prize click”ன்னு கொரளி வித்தகாட்ற Objects - நாம் படிக்க கூடிய செய்திகளுக்கு இடையிடையே வந்து Distrub பண்ற பெட்டி விளம்பரங்கள் - Page திறந்தவுடனையே AutoPlay ஆகும் Videos இதெல்லாம் தாங்க Digital Ads. இதெல்லாம் சாத்தியமாக்கும் Google Advertising Networkன் இரு கண்மணிகள் தான் இந்த - Google Ads - Google AdSense #Google_Ads வியாபரம் பண்றவங்க எல்லாம் தங்களோட Products அ online ல விளம்பரப்படுத்த இங்கே தான் அணுகனும். Email ID மற்றும் உங்களைப்பற்றிய, ஒரு […] சில Formal நலம் விசாரிப்புகள், அவ்வளவுதான் உங்க Registeration முடிஞ்ச்சு. இனிமே நீங்க விளம்பரங்கள் தரலாம். நீங்க கொடுக்கிற Ads , 🙋அதோட Audience views, 🙋அவங்க அத Click செஞ்சு View பண்றது , 🙋Web Page ல space occupancy, எத்தனை தடவை திரும்ப திரும்ப வரனும், (Ad Frequency) 🙋யாரை Reach பண்ணனும் (ASL-Age, Sex, Location) அதாவது எந்த பாலினம், எந்த வயதை சார்ந்தவர்கள், எந்த ஊருல வாழ்றவங்க இப்படின்னு Products யார்,யாரை Reach பண்ணுமோ அவங்களை தேர்ந்தெடுத்து விளம்பரம் பண்றது. இத தான் Target Audience or Viewers ன்னு சொல்றாங்க.. இந்த மாதிரி சில T&C ய பொறுத்து தான் விளம்பரத்திற்கான Rate Fix ஆகும். அதுவும் Online ல Real Time Auction ல..! 🙄 #Google_AdSense இப்போ உங்களிடம் ஒரு Website இருக்கு. அத Daily ஒரு 10000 பேரு பாக்குறாங்கன்னு வச்சுக்குவோம், உங்களுக்கு வருமானம் வரப்போகுதுன்னு அர்த்தம். […] ஆமா உங்க Website ல சின்னதாவோ, பெருசாகவோ இடம் குடுத்தா போதும். Google உங்களுக்கு பணம் குடுத்து அந்த இடத்துல அவங்க விளம்பரம் பண்ணிப்பாங்க..! இதுக்கு நீங்க Google AdSense ல பதிவு பண்ணனும். இது கொஞ்சம் நீளமான நலம் விசாரிப்பு தான்🤔 உங்களை பற்றிய வழக்கமான கேள்விகள், அப்புறம், உங்க Website பற்றிய தகவல்கள், புள்ளிவிவரங்கள்,etc.. நீங்க தரக்கூடிய Ad Space, அனுமதிக்க கூடிய Ad formats ன்னு கொஞ்சம் Detailingஆ தரனும் உங்க Site Popularity&Traffic Publishings, Content Reach, Ad clicks,Ad space Ad frequency இதெல்லாம் வச்சுதான் உங்களுக்கு Payment☺️ Ok. Ok. வரேன்..☺️ புரியற மாதிரி சொல்லனும்னா, நண்பர் தோசை மாவு வியாபாரம் பார்க்கிறார்.! அது பத்தின விவரங்களை Posters ஆ அடிச்சிட்டாரு. இனிமே அத நல்லா மக்கள் கூடுற இடமா, அவங்க கண்ணுலபடுறப்ல பார்த்து ஒட்ட வேண்டியது தான். அந்த Poster ஒட்டற வேலையைத்தான் #Google_Ads பார்க்குது. எங்க, எப்படி, எத்தனை, எந்த Size ல ஒட்டனும்ங்கறத பொறுத்து Poster ஒட்டுறவருக்கு நாம் காசு குடுக்கனும். Google Adsம் இந்தமாதிரி நம்ம ஏற்கனவே பார்த்த சில Terms & Conditions பொறுத்து விளம்பரம் கொடுக்கறவங்கள்ட்ட இருந்து காசு வாங்குது. சரி, இந்த Posters அ முடிவெட்டுற கடை, Cycle கடைல எல்லாம் ஒட்டுனா ஏதாவது பிரையோஜனம் இருக்கா..! ஊ..ஊஹும். ஆனா இதையே நண்பரின் தோச மாவு கடை இருக்கும் Area ல பெண்கள் கூடும் இடங்களா பார்த்து அதாவது, தண்ணி பிடிக்கும் இடம், விளக்கு பூஜை நடைபெறும் கோவில், பஸ் Stop, பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இப்படின்னு ஒட்டுனா..🤔 ஆமா, வியாபாரம் அமோகமாக நடக்கும். (Target Audience) இந்த மாதிரி விளம்பரம் செய்ய அந்த இடத்தோடு Owner நமக்கு இடம் தரனும், அவங்க இடத்துல விளம்பரம் வைக்க இடத்தோட Owner க்கும் நாம் காசு தரனும். எந்த இடங்கள்ல யாரு அதிகம் வருவா,எந்த மாதிரி Reach ஆகும்.இதெல்லாம் நமக்கு தெரிஞ்சிருக்கனும். ‘விளம்பரம் செய்ய இடம் வாடகைக்கு விடப்படும்’ ன்னு உள்ள இடங்களை சரியா தேர்வு செய்து, அத தரம் பிரிச்சு, அந்த இடங்களை தேவைக்கேற்ப Poster ஒட்டறவருக்கு கொடுக்கற வேலையத்தான் இந்த Google AdSense பார்க்குது. So, இந்த Online விளம்பரங்கள் கொடுக்கின்ற Business Firms கிட்ட, நம்ம GoogleAds வழியாக காசு வாங்கி அதை AdSence மூலமா நல்ல Webpages ஆ தேர்ந்தெடுத்து, Page ownersக்கும் நல்லா காசு கொடுத்து அந்த Web pages ல விளம்பரம் போட்டு கல்லா கட்டுற வித்தை தான் இந்த Online Digital Ads. இந்த வித்தையை செய்யும் வித்தைகாரன் தான் Google Advertising Network.! பறவை மனிதன் பால்பாண்டி [skpkaruna] பறவை மனிதன் பால்பாண்டி. பாப்பா., அங்கே பார்! அதுதான் கூழைக்கிடா..pelican., இதுக்கு பேர் பாம்புதாரா ..இங்கிலீஷ்லே.. என பைனாகுலரை மகளிடம் தந்து கொண்டே யோசிச்சேன். Darters சார் என்றது ஒரு குரல். திரும்பினால் வெள்ளந்திச் சிரிப்போட மெலிதாக ஒருவர்., […] ஐ! எவ்ளோ பேர்ட்ஸ்! வெளிநாட்டுப்பறவைகள் எல்லாம் எவ்ளோ அழகா இருக்குல்லே என்றான் மகன். தம்பி, இங்கே இருக்கும் பறவைகள் எல்லாம் அவங்க அம்மா இங்கேயே முட்டை போட்டு, இங்கேயே குஞ்சா பொறிஞ்சு, இங்கேயே உணவூட்டப்பட்டு, இங்கேயே பறக்கக் கத்துகிட்டு, வருடத்துக்கு எட்டு மாசம் இங்கேயே இருப்பவை.. ரஷ்யாவிலே, யூரோப்லே, வட ஆப்பிரிக்காவிலே பனி உருகி ஏரி,குளம்லாம் தெரியும்போது உள்ளே நிறைய மீன்கள் கிடைக்கும். அதை சாப்பிட வருஷத்துக்கு நாலு மாசம் அங்கே போயிட்டு, முட்டை போட திரும்ப இதே கூந்தன்குளத்துக்கு வந்துரும். இப்போ சொல்லுங்க! இதுங்களுக்கு சொந்த ஊர் எது? வருஷத்துக்கு எட்டு மாசம் வாழும் நம்ம இந்தியாவா? 4 மாசம் வலசை போய் விட்டு வரும் ஐரோப்பாவா? இந்தியா என்றனர் கோரஸாக எனது பிள்ளைகள். 48 வது வயதில் நானும் புதிதாகக் கற்றுக்கொண்ட பாடம் அது. கற்றுக் கொடுத்த ஆசான் பால் பாண்டி எனும் பறவை மனிதன். நெல்லை கூந்தன்குளம் உலகப் புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் என்பதை நாம் அறிவோம். அந்தக் குளம் இன்னமும் உயிர்ப்போடு, வெளிநாடுப் பறவைகளின் சே..சே! நமது நாட்டுப் பறவைகளின் சொர்க்கமாக, பாதுகாப்பாக இருப்பதின் காரணம், தனது வாழ்நாள் எல்லாம் இந்தப் பறவைகளுக்காகவே அர்பணித்து வாழும் இந்த Bird Watcher பால்பாண்டியும், அவரது மனைவி மறைந்த வள்ளித்தாய் இருவரும்தான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் பல மைல்கள் குளங்களிலும், கண்மாய்களிலும் அலைந்துத் திரிந்து பறவைகள் கட்டியிருக்கும் கூடுகள் பத்திரமாக உள்ளனவா என பார்ப்பதுதான் கணவன், மனைவியின் முழுநேர வேலையாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? பல சமயங்களில் கூடுகளில் இருந்து குஞ்சுகள் எகிறி கீழே விழுந்து விடும். அவைகளால் பறந்து மீண்டும் கூட்டில் ஏற முடியாது. இதற்காகவே காத்திருக்கும் நரி போன்ற சிறுவிலங்குகள் அவைகளை தின்றுவிடும் முன்பு, மீட்டெடுத்து மீண்டும் கூட்டில் சேர்ப்பார் இந்தப் பறவை மனிதன். பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பறவைகள் கூடு கட்டியுள்ளன என்பது இவருக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால், இவரிடம் சொல்லிவிட்டுதான் கூடே கட்டுமோ என நாம் வியக்கும் வண்ணம் இவருக்கும், அந்தப் பறவைகளுக்கும் அத்தனை அந்நியோன்யம் உண்டு. மனிதர்களில் மாமனிதராக வாழும் இவர் ஓர் அபூர்வப் பிறவி. சென்ற ஆண்டு நல்ல மழைப் பெய்து குளங்கள் எல்லாம் நிரம்பி ஏறக்குறைய அத்தனை வகைப் பறவைகளும் வந்து கூடு கட்டியவுடன் என்னை புறப்பட்டு வரும்படி பலமுறை அழைத்தார். என்னால் போக முடியவில்லை. இந்த ஆண்டும் குளங்கள் நிரம்புகின்றன. எப்படி இருக்கிறார் பால்பாண்டி என அழைத்தபோது, பெரிய விபத்தில் சிக்கி மீண்டதை அறிந்தேன். பால்பாண்டியின் ஒரே கவலை சொந்த வீடோ, சொகுசான வாழ்க்கையோ, தன் பிள்ளைகளின் எதிர்காலமோ அல்ல. எப்போதுமே அவருடைய கவலை அன்றைக்கு மீன் வாங்கத் தேவையான காசை எப்படி புரட்டுவது என்பதுதான். ஆம்! எப்படியும் ஒரே நேரத்தில் நூறு பறவைக் குஞ்சுகளையாவது இந்தத் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளைப் போல பராமரித்து வருவார்கள். தங்களிடம் கிடைக்கும், தாங்கள் ஈட்டும் பணம் அத்தனையும் செலவிட்டு மீன்கள் வாங்கி வந்து சொந்தப் பிள்ளக்கு ஊட்டுவதைப் போல ஊட்டி விடுவார்கள். இப்படியான மனிதர்கள் இருப்பதால்தான், தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்றாக கூந்தன்குளம் சரணாலயம் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் மகத்தான மைந்தர்கள் என நான் எப்படி தி.க.சி, வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா போன்ற ஆளுமைகளைக் கருதுகிறேனோ, அதே போலவே இந்தப் பறவை மனிதன் பால்பாண்டியையும் பார்க்கிறேன். இவரைப் பற்றிய குறிப்புகளை உடன் இணைக்கிறேன். தவறாமல் யூ டியூப் வீடியோவையும் பாருங்கள். இப்படியான மனிதர்களால்தான் இவ்வுலகம் உய்யும் என்கிறார் திருவள்ளுவர். இப்போது வேண்டுகோள் : இவரைப் போல பறவைகள் குறித்து அறிந்த வெறொரு மனிதர் நான் அறிந்து இல்லை. புகழ்பெற்ற சலீம் அலிக்கு நிகரானவர். ஆனால் படிக்காதவர். இவரது ஒரே வருமானம், சரணாலயத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து பெறும் சன்மானம் மட்டும்தான். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக கரோனா பேரிடரால் பயணிகள் வருகை ஏதுமின்றி மிகவும் துன்பப்படுகிறார்! இதற்கிடையில் இவருக்கு நேர்ந்த விபத்து வேறு! சரணாலயம் மூடப்பட்டுள்ளது என்பது பறவைகளுக்குத் தெரியாதே! எனவே கூட்டிலிருந்து கீழே விழும் குஞ்சுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணி இவரால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே தேவை அவைகளுக்கு தினமும் மீன் வாங்கவும், இவரது வாழ்வாதாரத்துக்குமான பணம்தான். பால்பாண்டியின் வங்கி எண்ணை இத்துடன் இணைத்துள்ளேன். (youtu.be/-jN458NTdTg) நண்பர்கள் உங்களால் இயன்றதை அவருக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கோருகிறேன். அந்தப் பறவைகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது. ஆயிரம் ரூபாய் கிடையாது. ஒன்றிணைவோம் வா விற்கு அழைத்து உதவி கோர தெரியாது. அவைகளுக்கென இருப்பது பால்பாண்டி மட்டுமே!. பால்பாண்டிக்கு ஆதரவாக நாம் இருப்போம். நன்றி. பறவை மனிதன் பால்பாண்டி க்கு உதவிட முன்வரும் நல் உள்ளங்களுக்கு நன்றி.. 🙏 s palpandi SBIN 0001021 State Bank of India Nanguneri mobile no : 94862 05438 (youtu.be/dPm7p8eVroY) […] முதல் உதவி என்னிடமிருந்து. பால்பாண்டிக்கு உதவிய விவரத்தை நண்பர்கள் (விரும்பினால்) இங்கே பின்னூட்டமாக இடவும். அவரை அழைத்துச் சொல்லி விடுகிறேன். தனது வங்கிக்கணக்கில் பணம் வந்துள்ளதைக் கூட அறிய இயலாத கிராமத்து மனிதர் அவர். […] மாற்று பிரபஞ்சமும் நுண்நொதுமியும் [KingKuinsan] Parallel Universes & Neutrino (மாற்று பிரபஞ்சமும் நுண்நொதுமியும்) #ParallelUniverses என்பது #ParallelDimension, #AlternateUniverse or #AernateReality ஆகிய மாற்று பெயர்களால் ஆங்கிலத்திலும் #மாற்றுபிரபஞ்சம், #மாற்றுபரிணாமம் அல்லது #இணையானஉலகம் பெயர்களால் தமிழிலும் 👇 […] அழைக்கப்படும். அதாவது நாம் வாழும் பிரபஞ்சம் அல்லது உலகம் போன்றே இன்னொரு பிரபஞ்சம் இருக்கும் என்பது தான் இந்த மாற்று பிரபஞ்சஞ்சத்திற்கான அடிப்படை கோட்பாடு இது ஒரு மிகப்பெரிய விவாதம் இதைப்பற்றி இன்னொரு பதிவில் தெளிவாக குறிப்பிடுகிறேன். அதற்கு முன் இது உள்ளது என்பதை மேலும் 👇 […] வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது.அது என்னவென்றால் பூமியில் இருந்து பிரபஞ்சத்துக்கு செல்லும் நுண்நொதுமிகள் தான். இதை விரிவாக கூறமுன்னர் நுண்நொதுமி என்றால் என்ன என்று சாராம்சமாக கூறுகிறேன். நியூட்ரினோ (Neutrino) அல்லது நுண்நொதுமி என்பது அணுவின் 👇 […] அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும்.அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நொதுமி (நியூட்ரான்/#Nutron) போன்று நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. 👇 […] சரி இவ்வாறான அணுவிலும் சிறிய நுண்நொதுமிகள் எவ்வாறு மாற்றுப்பிரபஞ்சத்திற்கு சான்றாக அமையலாம் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்.ஆமாம் அதற்கு அண்மையில் #ANITA (Antarctic Impulsive Transient Antenna) வை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற நுண்நொதுமியின் பயணமே காரணம் […] அதாவது வழக்கமாக அனைத்து மூலப்பொருட்களும் பிரபஞ்சத்தில் இருந்து பூமியை நோக்கி பயணம் செய்யும் ஆனால் அண்மையில் ஒரு நுண்நொதுமி பூமியில் இருந்து பிரபஞ்சத்தை நோக்கி பயணம் செய்துள்ளது. இதுவரை பிரபஞ்சத்தில் இருந்து வரும் நுண்நொதுமி எங்கே உருவாகிறது என்பதை அறிய முடியாதிருந்தது […] ஆனால் இப்பொழுது ஒரு முடிவிற்கு வர வைத்துள்ளது இந்நிகழ்வு அதாவது இப்பிரபஞ்சத்தை போன்ற இன்னோர் பிரபஞ்சத்தில் உருவாகி வழக்கமாக பூமியை அடைகின்றதென்பதையும் நம்பூமியை போன்ற ஆனால் Reverce இல் இயங்கும் இன்னொரு கிரகம் உள்ளது என்பதையும் முன்வைக்கின்றனர் ஆராச்சியாளர்கள்.👇 […] ஆனால் இதன் உண்மைத்தன்மை பற்றி இனிவரும் காலங்களில் தான் அறிய முடியும். Neutrino Reverse இல் சென்றதற்கு ஒளித்தெறிப்பு காரணமில்லை என்றும் முடிவை அறிவித்துள்ளனர். உங்கள் ஆர்வத்தை பொறுத்து Parallal Universe பற்றி நீண்ட நெடிய பதிவு கொடுப்பேன். நன்றி தமிழ் சினிமாக்களில் சில அம்மாக்கள் [Vgananathan] #Thread தமிழ்சினிமா நாயகர்களால் ஆளப்படுவது. நாயகர்களை கரையேற்றும் இடர்கடப்பான் குணச்சித்திரங்கள். அதன் உச்சம் ‘அம்மா’. கமர்ஷியல், செண்டிமெண்ட் நிரந்தரஉணர்படியாக பயன்படுத்தப்பட்டாலும்,திரை அம்மாக்களின்தாக்கம் அசாத்தியமானது. சில அம்மாக்கள் கீழே […] இப்படி ஒரு அம்மா ! சினத்தில் அன்பு, அன்பில் நாடு, இரண்டும் சாசனம் நாடுகாப்பான் என்பதைத்தாண்டிய ஆத்ம மகனன்பு மாற்றாள் சிசு பாகுபலியிடம். அதுவே கதையின் ஆணிவேர். ராஜமாதா வழுக்கலில் அம்மா தோற்றாள்; அம்மாவாக மாறி இறுதியில் ராஜமாதா வென்றாள் சிவகாமியின் தாய்மையை புரிதல் மிகமுக்கியம் […] மற்ற அம்மாஞ்சி அம்மாக்களிடம் ‘தெரிந்தே மகனுக்காகச் செய்கிறோம்’ என்ற குறைந்தபட்ச திட்டமிடல் தெரியும். வேலு அம்மாவிடம் துளியும் இருக்காது இந்த வெகுளித்தூய்மை புதியது மசாலாசினிமா உருவாக்கும் வாழ்வியல் தாக்கத்திற்கு சாட்சிஅது பல கமர்ஷியல் அம்மாக்கள் முயன்றுகொண்டேஇருக்கிறார்கள் இதை […] நிஜக்குந்தியைவிட நேர்மையானவள்; காந்தாரியைவிட வைராக்கியமானவள்; பிரசவம் போல் உணர்ச்சிகரமானவள். அந்த கண்களில் தான் எவ்வளவு உணர்ச்சி? ‘ப்பே’ சொன்னாலும் அடங்காத பீறிடல். ஏனெனில், சின்னத்தாயவள் ! […] படமே உணர்ச்சிப்பெட்டகம் என்பதால் நிறைய காட்சிகளை சொல்லலாம். ஆனால், இந்த ஒரு போஸ்டர், வார்த்தைகளற்றது ! ஒடிசலாக, இடுங்கி, அழுந்தி, கையில் மகள் - முன்னால் மகன், இருளும் மலையை வெறித்தலில்தான் எத்தனை உணர்ச்சி. மகேந்திரன் சார் அம்மாவாக இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார். […] கலாச்சாரத் தாய் அந்நியமாகும் வலி ‘என்புள்ள தங்கபாண்டி’ இழுவை குரல் ஒடிகையில், ‘வாடா தங்கம் வாடா’ பின்னணியில் அடிவயிறு பிசையும் அடிவாங்கிய பிள்ளைகளைபிரபு காப்பாற்றும்காட்சியில்,‘என்புள்ளை வீசுனஅருவாளுக்குவெலபேச முடியாதவைங்க’ என பீறிட்டு ராதிகா என்ற பிசாசு பேயாட்டம்ஆடியிருக்கும் […] ராம், தென்மேற்கு பருவக்காற்று சரண்யா, பிரத்யேக அம்மா ஆனால், காதல் தெரிந்து பரத்தை இரண்டாவது முறையாக நாசர் அடிக்கும்போது, ’உங்கப்பா இப்டி உடைஞ்சு நான் பாத்ததேயில்லயே என போகிற போக்கில் அழும் சரண்யா, கோடிக்கணக்கானவர்கள் வீட்டில் வாழும் அசல் அம்மா. எம்டன் கணவனையும் நேசிக்கும் அம்மா […] ‘….ஆனா பேரை மட்டும் சொல்லிராதப்பா…’ என்னனவோ பேசிய அம்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரேகாட்சியில் மிகவலிமையான தேசியத்துவம் பேசிய அம்மா. மிகமிக எதார்த்தமான முகவெட்டும், உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட நடிகை அவர். இந்த ஒரு காட்சிதான் ரமணாவை அர்த்தப்படுத்தியது. […] விவரம் புரியா மகனின் விதவைத்தாய். விதவைத்தாய்க்கு பொட்டு வைத்து, தாலி கட்டி, சாந்தமுகுர்த்தம் என வன்மத்தோடு கேலி பேசும் எஜமானியக் காட்சி, தமிழ் சினிமா கமர்ஷியல் கால்குலேஷன் உச்சம். முகத்தில் தண்ணீரை ஊத்தும்போதும் அந்த ரியாக்‌ஷன்! மனோரமா எனும் அம்மாக்களுக்கெல்லாம் அம்மா ! […] ‘’எடுத்துக்கங்க, கூட்டிட்டு போங்க, அவளோட ஜீவாவ அவக்கிட்டயே கொடுத்துருங்க..’ ‘அவ ஒரு ராத்திரி வெளில தங்கிரக்கூடாது’ என்கிற அறைகூவலிலிருந்து, ‘பெத்தவளுக்குதாண்டா எல்லாம் புரியும்’ என வந்துசேரும் தாய்மையின் மர்மம்தான் காதலுக்கு மரியாதை. எழுதும்போதே இளையராஜா செவிக்குள் இசைக்கிறார் […] வயிற்றில் வெறுமை [socialaayvalan] #வயிற்றில்_வெறுமை நாம என்ன கஷ்டத்தில் இருந்தாலும் குடும்பத்தில் தாளாத்துயரத்தில் அழுது புரண்டு ஆற்றாமையில் இருந்தாலும், கணவன் மனைவியிடையே மனசங்கடங்கள் வந்தாலும், அண்ணன் தம்பி மன வருத்தம் இருந்தாலும் கோபத்தில் சாப்பிடமாட்டோம்! #Thread […] ஆனால், பாவம் அந்த சாப்பாடு அது அனைவரையும் சாந்தப்படுத்தவே இயற்கை படைத்திருக்கிறது. ஆமாம் நாம் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் சாப்பாடு சாப்பிட்டவுடன் சாந்தமாகி இளைப்பாறுவோம். நன்றாக கவனித்தால் நமது உடலும் மனமும் சரியாக இயங்க வயிறு முக்கிய பங்காற்றுகிறது. எங்கள் பகுதிக்கு மீன் விற்க ஒரு இளம்பெண் வருவார். அவர் எப்போதும் சிடு சிடு என இருப்பார். எங்க ஏரியா பெண்கள், விலை கேட்டு வாங்கக்கூட பயப்படுவாங்க. சடுக்கென கோபத்தில் ஏடாகூடமாக பேசுவதால் வியாபாரமே ஆகாமல் பகல்வரை மீன் கூடையுடன் சுற்றி சுற்றி வருவார். ஒருநாள் நான் மீன் வாங்க கூப்பிட்டுவிட்டேன். விலை குறைத்து கேட்க கோபப்பட்டார். அக்கா கொஞ்சம் தண்ணி குடிங்க என்றேன். வேண்டாம் என சொல்லிட்டாங்க. மீண்டும், அக்கா இப்பத்தான் டீ போட்டேன் சூடா இருக்கு இருங்க என ஒரு டம்ளர் டீ யும், இரண்டு பிஸ்கட்டும் கொடுத்து முதல்ல இத சாப்பிடுங்க பிறகு நான் மீன் வாங்குறேன்னு சொல்லி கொஞ்ச ஆசுவாசப்படுத்தினேன் கொஞ்சம் நேரம் கழித்து அவங்களே மீன் விலைய குறைச்சு எடைதொங்க தொங்க மீன் அள்ளி போட்டு கொடுத்து புது உற்சாகத்தோட அடுத்த தெருவிற்கு வியாபாரம் செய்ய கிளம்பி போனாங்க. அரை மணி நேரத்தில் கூடை மீனை விற்றுவிட்டதாக சொல்லி மீண்டும் ஒரு சிரிப்ப அன்பளிப்பா கொடுத்துவிட்டு போனாங்க. இதில் பாருங்க வயிற்றுப் பசியோட யாரிடமும் சிரித்துப் பேசமுடியாது. அந்த மீன்கார அக்கா காலை உணவை சாப்பிடாம காய்ந்த வயிரோட வியாபாரம் செய்ததால அவங்க தொழில சரியா செய்ய முடியல. அதை வெளிக்காட்டவும் முடியல. வயிறு கொஞ்சம் நிறைந்தவுடன் கனிவு வருகிறது. இன்றைய நிலையை எண்ணிப் பாருங்க… எளிய மக்கள் தினக்கூலிகள் நிலை எப்படி இருக்கும்? உணவு சமைக்க பணம் வேண்டும். அதற்கு பணிக்கு செல்ல வேண்டும். இன்றைய நிலையில் இவர்கள் எப்படி சாப்பிடுவார்கள்? எப்படி இவர்கள் உயிர்காக்கப்படும். அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எத்தனை நாளைக்கு வரும்? நினைக்கும் போதே தலை சுற்றுகிறது. வசதி இருக்கும் மக்கள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவ முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாக வைக்கனும். சக மனிதன் [socialaayvalan] #சக_மனிதன் “அம்மா குப்பை வண்டி மா…” என காலையில் ‌நாம்‌ கச்சிதமாக ஆபிஸ் கிளம்பிக்கொண்டிருக்கும்‌‌ நேரத்தில் மணியோசையுடன்‌ வீதியில் ஒரு குரல் கேட்கும். நாம் நேற்று சேர்த்து வைத்த அத்தனை குப்பைகளையும் கெட்டுப்போன கழிவுகளையும் மூக்கை பொத்திக் கொண்டு #Thread […] அந்த குப்பை வண்டியில் கொட்டுவிட்டு திரும்பி பார்ககாமல் வேகமாக வீடு திரும்புவோம். இப்படி தினம் ஒன்றா இரண்டா. இது போதாதென்று வேறு இடமே இல்லாது போல் சாக்கடையில் அனைத்து நெகிழிகளையும்(plastics) போட்டு அடைத்து போய் நாற்றம்‌ எடுக்கும். அதை சுத்தம் செய்ய வரும் துப்புரவு பணியாளர்களையும் விட்டு வைக்கின்றோமா? சரியா சுத்தம்‌ பன்றதில்லைனு காலைலையே அந்த திட்டு திட்டுவோம். அனைத்தையும் சகித்துக்கொண்டு “சரிங்கம்மா சரிங்க”னு முகம் சுழிக்காம நம்ம சொல்றபடி சுத்தம் செஞ்சு குடுப்பாங்க. பதிலுககு நாம் நேத்து மிஞ்சின சாதத்தை கவர்ல கட்டி குடுப்போம். அதை வெச்சு வயித்து பசியை கொஞ்சம் போக்கிக்குவாங்க. அதுலயும் சமீபத்துல கொரோனா வந்திருக்க நேரத்துல அவங்க பணி மிகப்பெரியது. ஆனா, ஒரு வீட்டில் ஒரு பெண்‌ சரியா சாக்கடை சுத்தம் பண்ணலைனு பணியாளர் பெண்ணை மிதித்து சாக்கடையிலே தள்ளின வீடியோ வைரல் ஆகியது. இன்னோரு செய்தியில அதிகாரம் படைத்த ஒருவர் துப்புரவு பணியாளரை அநாகரிகமாக கேவலபடுத்தி வசை சொற்களை கொண்டு திட்டினார். நாம விளக்கேற்றுவது, கைதட்டுவது, கால் கழுவி விடுவதை இவர்கள் எதிர்பார்ப்பதில்லை. தினம் நம்ம சுற்றம் நல்லா இருக்கனும்னு நம்ம யாரும் செய்ய முடியாத கற்பனையில் கூட நினைக்க நம்ம கிட்ட எதிர்பார்க்கிறது எல்லாம் ஒன்று தான். அவங்களையும் சக மனதனாக மதிக்கனும் என்கிறது தான். அவங்க பிள்ளைங்களும் படிச்சு சமூகத்துல நல்ல வாழ்க்கைய வாழனும் அப்டிங்கறது மட்டும் தான் கண்டிப்பாக நாம எல்லோரும் அவர்களுக்கு துணையாக நிற்ப்போம் என நம்புறேன் கொரோனா விழிப்புணர்வு [__MOmuS] #Thread [மனசுக்குள்ள எவ்ளோ உயிர் பயம் இருந்தாலும், வெளிய பதட்டப்படாம இருங்க..] [நோய் அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவமனைக்கு போங்க..] [அதிகமா கூட்டம் போடாதீங்க..] [முடிஞ்சவரை வீட்லயே படுத்து தூங்குங்க..] [அடிக்கடி கை கழுவுங்க..] [தேவையில்லாத யாருக்கும் கை குடுங்காதீங்க..] [பஸ்ல ட்ரெயின்ல போனா அதிகமா கம்பியை, சீட்ட தொடாதீங்க.] [தேவையில்லாமல் வதந்திய பரப்பாதீங்க..] [பயப்படாம சிக்கன், மட்டன் சாப்பிடுங்க..] [Whatsapp வதந்திகள நம்பாதீங்க] வடிவேலுவை நான் ஏன் ஆதரிக்கிறேன். [__MOmuS] #Thread [பகுத்தறிவு சிந்தனை] [சாதி மறுப்பு] [தமிழ் வளர்ச்சி மற்றும் இந்தி எதிர்ப்பு] [தமிழர்கள் மீது அக்கறை] [பொருளாதார வளர்ச்சி] [அனைவருக்கும் கல்வி] [மதச்சார்பின்மை] [ஒடுக்குமுறை எதிர்ப்பு] [ஊழல் செய்யாத தலைவர்] [நீண்ட வலராறு] [கொள்கை பிடிப்பு] VPN என்றால் என்ன ? [KingKuinsan] #VPN என்றால் என்ன என்று இந்த #Thread ல் பார்க்கவுள்ளோம்.எனவே சற்று உங்கள் நேரத்தை ஒதுக்கி ஆதரவு அளியுங்கள்.இது ஆங்கில பட விரும்பிகள் மற்றும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏. #Threads👇 […] #VirtualPrivateNetwork என்பதின் குறுகிய வடிவமே #VPN என்பதாகும். அதாவது மெய்நிகர் தனியார் பிணையம் என்பது இதனுடைய தமிழ்ப்பதம்.இது இணையத்தை மறைமுகமாக அல்லது சொந்த அடையாளத்தை மறைத்து பயன்படுத்துவதற்காக இயங்கிவரும் தனியார் சேவை. சட்டத்திற்கு எதிரானது ⚠️ […] அப்படி இருக்கையில் ஏன் VPN பயன்படுத்த வேண்டும்? ஏனெனில் அனைத்து வலைத்தளங்களும் அனைத்து நாட்டிலும் இயங்க அனுமதி கிடையாது. எனவே ஒரு நாட்டினால் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பயன்படுத்தத்தவே இது முக்கியமாக உதவுகிறது. […] உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் TamilRockers போற்ற வலைப்பக்கங்களும் பல ஆபாச வலைத்தளங்களும் இப்படி தடை செய்யப்பட்டவை தான். அதை விட முக்கியமாக நாம் அன்றாடம் பார்க்கும் #Youtube ல் கூட இந்த நாட்டிற்கு இவ்வளவு தான் என்று வரையறை உள்ளது. […] நீங்கள் அமெரிக்காவில் இருந்து #NASA பற்றி தேடும் போது கிடைக்கும் தரவுகளுக்கும் ரஸ்சியாவில் இருந்து தேடும் போது கிடைக்கும் தரவுகளுக்கும் வித்தியாசம் உண்டு. அதே போல பல கல்வி சார் வலைப்பக்கங்கள் உதாரணத்திற்கு #HACK செய்வது,அணு குண்டு தயாரிப்பு, ஆயுத தயாரிப்பு. […] விண்வெளி ரகசியம், மருத்துவ குறிப்பு போன்றவை மட்டுப்படுத்த பட்டுள்ளன எனவே அவை VPN பயன் படுத்தி வல்லரசு நாடுகளின் Location ல் இருந்து பார்க்க வேண்டும் அல்லது DarkWeb ல் பார்க்க வேண்டும். இலங்கையர்களை பொறுத்த வரை பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பற்றி தெரிந்துக்களது ஏனெனில் .. […] கடந்த ஆண்டு அடிக்கடி சமூக வலைத்தளங்களும் இணையத்தளங்களும் நாள் கணக்கில் முடக்க பட்டன எனவே இலங்கையர்கள் VPN பயன் படுத்தினர். 2018 ல் உலகில் அதிகளவு VPN தரவிறக்கிய & பயன்படுத்திய நாடு என்ற பெயரையும் பெற்றுக்கொண்டது. […] நீங்கள் Mobile பாவனையாளராக இருந்தால்(Play Store) & Personal Computer பாவனையாளராக இருந்தால் கீழுள்ள படங்களில் உள்ள VPN களை தரவிறக்கி கொள்ளுங்கள். […] பொதுவாக சிறந்த VPN இலவசமாக கிடைக்கும் ஆனால் அவற்றின் நம்பிக்கைத்தன்மை பற்றி சரியாக தெரியாது ஆனால் விலைக்கு கொள்வனவு செய்யும் VPN கள்.மிகவும் பாதுகாப்பு நிறைந்தவை அதாவது நீங்கள் எந்த IP Address பயன்படுத்துகிறீர்கள் என்பது VPN Provider நிறுவனத்திற்கே தெரியாத அளவு பாதுகாப்பானது. […] DarkWeb Access 2/ Illegal Website Access 3/ Banned Movie Website Access 4/ Security Purpose 5/ Porn Movie Website Accessபோன்றவையே குறிப்பிட்டு சொல்லலாம்.இனியும் VPN பற்றிய தெளிவின்மையை போக்குங்கள் பிறருக்கும் பகிருங்கள். பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன ஆகும்? [KingKuinsan] பூமியானது 365 நாட்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதும், இதனால் இரவு பகல் ஏற்படுகிறது என்றும் அனைவரும் அறிந்தது.ஆனால் பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது கற்பனை செய்ததுண்டா? […] மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி 1670 Km/h வேகத்தில் சுற்றும் பூமியானது,திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும்,உயிரினங்களும் சுமார் 1670 Km வேகத்தில் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும். அதாவது 28 Km/m வேகத்திலும்,5௦௦ M/s வேகத்திலும் இது நிகழும். […] கடல்நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 Km வேகத்தில் 28 Km பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிடும். […] அனைத்து உயிரினங்களும் உடமைகளும் 1670Km வேகத்தில் பறக்கும் பொழுது அதே அசுர வேகத்தில் சுனாமியும் நம்மோடு பயணிக்கும். (கற்பனை செய்து பாருங்கள் ) […] இதே வேகத்தில் தொடந்து பயணிப்போமானால் காற்று அழுத்தத்தால் உடல் சிதறி இறக்க வாய்ப்பு உண்டு.அதே நேரத்தில் இந்நிகழ்வால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தால் பல அணுகுண்டுகளுக்கு நிகரான தாக்கம் ஏற்படும். இதனால் பல கட்டடங்கள் இருக்கும் இடம் தெரியாது அழிந்து போகும். […] பூமி சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே வருடத்தில் 6 மாதம் இருளிலும் மீதம் 6 மாதம் பகலிலும் இருக்கும். இதனால் ஒரு வருடத்தில் உள்ள 365 நாட்களும் ஒரேஒரு நாளாக மாறிவிடும். […] தொடர்ந்து 6 மாதமாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பாலைவனமாகவும், தொடர்ந்து 6 மாதமாக இருளில் இருக்கும் பகுதிகள் பனிபொழிவு அதிகரித்து பனிபிரதேசமாகவும் மாறிவிடும். […] பூமி தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே,பூமியை சுற்றியுள்ள காந்த மண்டலம் செயலிழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்களினால் பூமியில் உள்ள மீத உயிர்களும் அழிந்துவிடும்.அதீத வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி முற்றாக பூமி நீரால் மூழ்கடிக்கப்படும். […] பின்னர் அதீத வெப்பத்தின் காரணமாக நீர் உறிஞ்சப்பட்டு ஒரு கட்டத்தில் பூமியே பாலைவனமாகி விடும். சிறு நுண்ணுயிர்க்கூட வாழ தகுதியற்ற உலகமாக நம் பூமி மாறிவிடும்😤. […] பொதிகை - மலரும் நினைவுகள் [rajeshkmoorthy] மாலை 5:30 மணிக்கு மேல தான் Regional Service ன்னு தமிழ் செய்திகளோடு ஆரம்பிப்பான். வயலும் வாழ்வும், செய்திகள், ஒரு நாடகம் (செவ்வாய் special) அப்புறம் மூடிடுவான் கடைய 10 மணிக்கு. மறுபடியும் ஹிந்தி நிகழ்ச்சிகள் தொடங்கும். வெள்ளிக்கிழமை 7 மணிக்கு எதிரொலி ன்னு ஒரு நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி கடைசியில, ஞாயிறு என்ன படம் போடுறாங்கன்னு சொல்லுவாங்க. அதுக்காக அந்த மொக்கையான லெட்டர் படிக்கிற நிகழ்ச்சியை வாய போளந்துகிட்டு பார்த்த காலம் உண்டு. தூர்தர்ஷன் தொடக்க இசையே ஒரு சாவு ஊர்வலத்துக்கு வாசிக்கிற ஷெனாய் மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி நான் தூர்தர்ஷன் பார்த்த வரைக்கும் B&W லேயே இருந்துச்சி. ஒரு நாளைக்கு 30 நிமிஷம் தான் நியூஸ். அந்த செய்திகள்ல, அரசு விதிகள் படி என்ன சொல்லணுமோ, அதைதான் சொல்லுவாங்க. ஒன்னும் பெருசா சுவாரசியம் இருக்காது. முந்தின நாள் இரவு MGR இறந்த செய்தியை, அடுத்த நாள் 7:00 மணி செய்திகள் ல தான் சொன்னாங்க. மெகா சீரியல்கள் - ராமாயணம், மகாபாரதம், சந்திரகாந்தா, ஜுனூன் போன்ற மொழி மாற்ற (டப்பிங்) சீரியல்கள் ரொம்ப famous. வாய போளந்துகிட்டு பார்த்த நாளெல்லாம் உண்டு. ஒவ்வொரு ஞாயிறும் மதியம் தேசிய விருதுகள் வாங்கின இந்திய திரைப்படங்களை (Regional language movies) போடுவாங்க. 13 வாரங்களுக்கு ஒரு முறை தமிழ் படம் போடுவாங்க. வீடு, சம்சாரம் அது மின்சாரம் இந்த படங்களை தவிர வேற எதுவும் பார்த்ததா நினைவிலில்லை. Chitrahaar - சனிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்தி திரை இசை பாடல்கள் போடுவாங்க. அதுவும் பல நேரம் பழைய பாடல்கள் தான். புது பாடல்கள் வருவது ரொம்பவே குறைவு. ஒளியும் ஒலியும் - தமிழ் பட பாடல்கள். ஒவ்வொரு வெள்ளி இரவு 7:30 மணிக்கு. அதே பழைய பாடல்கள் தான். புது பாடல் வர்றதே பெரிய விஷயமா இருக்கும். மெட்ரோ சேனல் வந்த பிறகு, compearing (மெட்ரோ பிரியா 😍), புது பாடல்கள், நிறைய சீரியல்கள் (எஸ். வீ. சேகர், கிரேஸி மோகன்) வந்தது. கொஞ்சம் colorful ஆ ஆனா மாதிரி ஒரு பீலிங். ஒவ்வொரு செவ்வாய் இரவும் ஒன்னரை மணி நேரத்துக்கு ஒரு drama போடுவான். ஸ்டூடியோ ல செட் போட்டு எடுப்பாங்க. ஏழை வீடா இருந்தாலும் எல்ல கதவுக்கும் screen இருக்கும் (🤣🤣). இப்போ நினைச்சி பார்த்தா அதெல்லாம் எவ்ளோ மொக்கை ன்னு ஆச்சரியமா இருக்கும். அதை கூட விட்டு வைக்கல நானு. ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் என்னன்னா, இன்னைக்கும் தூர்தர்ஷன் அப்படியே தான் இருக்குது. அவங்கள பொறுத்த மட்டும், காலம் 80’ஸ் ல அப்படியே நின்னு போச்சு (மொழி படம் பாஸ்கர் மாதிரி). யாராவது தேசிய தலைவர்கள் இறந்துட்டா, எத்தனை நாள் துக்கம் அனுசரிக்கிறாங்களோ அத்தனை நாளும் யாராவது சோகமா இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வாசிக்கிற நிகழ்ச்சியை போட்டுடுவான். ரொம்ப த்ராபையா இருக்கும் காந்தி ஜெயந்தி அன்னைக்கு தேசிய சேனல் ல “காந்தி” படமும், தமிழ் சேனல் ல “நாம் இருவர்” படமும் confirmed. எனக்கு தெரிஞ்சி இன்னைக்கு வரைக்கும் அதை follow பண்றாங்க ன்னு நினைக்கிறேன். சுதந்திர தினத்துக்கு “பாரத விலாஸ்” படம் confirmed. தூர்தர்ஷன் பாக்காம விட்டது அப்படி ஒன்னும் loss ஆ தெரியல. காலம் மாற மாற, அவங்க மாறாம இருந்தது தான் முக்கிய காரணம். எதையாவது போடுவோம் ன்னு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க இன்னமும். Once upon a time, a monopoly, now, competition to none. That’s the sad part. DTH சேவையை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்தது தூர்தர்ஷன் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆரம்ப காலங்களில், அனைத்து DD சேனல்களும் தெரியும் வகையில் விற்பனை செய்யப்பட்டது (அனைத்து சேனல் களும் இலவசம்). பின்னாளில் Sun TV யும் சேர்க்கப்பட்டது. எப்படிலாம் சாவு வருது [Sangeeth_I] 1927ல America Tennesseeல 74 வயசு பெரியவர் ஒருத்தரு வாழை பழத்தோல் வழுக்கி விழுந்து இறந்துருக்காரு . அவரோட Death Certificate இதுதான் 👇 […] Final destination படம் மாதிரி தான்  சாவு மனுசனுக்கு எப்டினாலும் வரும் . நாம most ah பாக்குற சாவு Accidents Diseases Animal attacks Natural disasters Suicide தான் … ஆனா நிறைய பேர் டிசைன் டிசைனாலா செத்துருக்காய்ங்க . மேல வீடியோல அந்த பெரியவரு கோவில்ல செத்தாரு 2014 Chicagoல Sarah Beanன்ற தன் Boyfriend ஓட walking போனப்ப Churchல இருந்த Gargoyle விழுந்து செத்துட்டாங்க 2014 Turkeyலகடவுளுக்கு (அல்லாவுக்கு)படைக்கப்பட வச்சுருந்த ஆடு ஒன்னு 13வயசு பையன் தலைல விழுந்து சாவடிச்சிருக்கு ஆட்டுகாரருக்கு ஆடு கட்ட இடம் இல்லாம மாடில போய் கட்டி வச்சுருந்துருக்காரு கீழ விளையாண்டுட்டுருந்த பையன் மேலஆடு கூரைய பிச்சிட்டு நேரா அவன் தலைல விழுந்து சாகடிச்சிருக்கு […] இப்டி தான் சாவு எங்க எப்ப வரும்ன்னு சொல்ல முடியாது . அது கோவிலோ ,மசூதியோ , சர்ச்சோ . நீ சாகும் போது எந்த கடவுளும் வந்து காப்பாத்தாது . இதே மாதிரி தலைல விழுந்த Listல 455BCல Father of Greek tragedyன்னு சொல்ல கூடிய  Aeschylus ( Playwriter ) வெட்ட வெளில உக்காந்து கக்கா போய்ட்டு இருந்தப்ப Lammergeier vulture சாப்டுறதுக்காக ஆமைய தூக்கிட்டு போறப்ப ஆம தவறி Aeschylus தலைல ஆம விழுந்து செத்துட்டாரு . […] 1988 New Yorkல Dobbs Ferryன்றவரு waking போய்ட்டு இருந்தப்ப Air Conditioner 7வது மாடில இருந்து விழுந்து செத்தாரு . […] 2010 Colombiaல 69 வயசு Jose Abelino Ramirezன்ற பெரியவர் வீட்டுக்கு வெளிய தென்ன மரத்துக்கு கீழ உக்காந்து இருக்கும் போது 39 அடி உயரத்துல இருந்து இளநி விழுந்து செத்தாரு .. […] Fact என்னனா இளநி விழுந்து சாவுறது Shark கடிச்சி சாவுறத விட 15% better . […] இதே மாதிரி 1931ல Pianoவ மாடிக்கு தூக்குனப்ப கயிறு அறுந்து விழுந்து ஒருத்தர் செத்துருக்காரு . […] 1983 San Franciscoல Strip club bouncer Jimmy Ferrozzoன்றவர் தன் Girlfriend கூட Piano மேல உக்காந்து sex வச்சுட்டு இருந்தாரு . Actual ah அந்த Piano Performanceக்காக கயிறுல கட்டப்பட்டு இருந்துச்சு . Switch UP Down  பண்ணா அது மேல ,கீழ போகும் . வெறித்தனமா Sex வச்சுட்டு இருந்தனால கை Up switchல பட்டு Piano வோட Jimmy மேல போய் செவருல இடிச்ச sex வச்சிக்கிட்டே செத்தாரு . அந்த பொண்ணு அவருக்கு கீழ இருந்தனால தப்பிச்சிருச்சு . Irony ( முரண் )ன்னு ஒன்னு சொல்லுவாங்க தெரியுமா அந்த மாதிரி சாவுல்லா நடந்துருக்கு . American jogging guruன்னு சொல்லக் கூடிய Jim Fixx . இவரு 1977ல Complete book of runningன்னு book எழுதி இருக்காரு . Americans ஓட fitness revolutionக்கு காரணாமே நானும் என்னோட booksம் தான்னு பெருமையா சொன்னாரு . […] Teenageல அவரு Over weight ஆகவும் Heavy smokerஆவும் இருந்தாரு . அப்பறம் தான் work out பண்ணி இந்த புக் எழுதுனாரு Running தான் மனுசன ரொம்ப வருசத்துக்கு வாழ வைக்கும்ன்னு சொன்னாரு ஆனா இந்த மனுசன் செத்தது jogging போறப்ப தான் Heart attack வந்து செத்தாரு சாவும் போது இவரு வயசு 52 . […] July 9 1993 Torantoல canadian lawyer Garry hoyன்றவர் Toranto - Dominian centreல சில பேர் கூட்டிட்டு மாடிக்கு போனாரு . அங்க இருக்க glass window buildings ரொம்ப strong ஆனது . என்ன செஞ்சாலும் உடையாதுன்னு சொல்லி காட்டிருக்காரு . அத நிரூபிக்க அவரு உடம்பால கண்ணாடிய இடிச்சிருக்காரு . கண்ணாடி உடையல . அவரு நேரம் அந்த ஜன்னல் லூசாகி கண்ணாடியோட சேந்து வந்து விழுந்து செத்து போய்ட்டாரு . […] 1912ல France parachute engineer Reicheltன்றவரு புது model parachute ஒன்னு கண்டுபிடிச்சு testing இல்லாமயே demonstration கொடுக்குறேன்னு Eiffel towerல இருந்து குதிச்சு parachute work ஆகாம கீழ விழுந்து செத்தே போய்ட்டாரு . […] 1871ல American Lawyer Clementன்றவரு , Courtல அவரோட clientக்கா வாதாடிட்டு இருந்தாரு . அதாவது அவரு client கொல பண்ணலன்னும் . அது accidentன்னும் வாதாடிட்டு இருந்தாரு . அப்ப தன் client என்ன பண்ணாரோ அத Judge முன்னாடி செஞ்சு காமிச்சு நிரூபிக்கிறேன்னு துப்பாக்கிய தலைல வச்சு சுட்ருக்காரு . அவரு துப்பாக்கி குண்டு இல்லன்னு நினச்சு சுடு அவரு நேரம் அதுக்குள்ள குண்டு இருந்து செத்தே போய்ட்டாரு  ! அவரு client அந்த caseல இருந்து விடுதலை பண்ணிட்டாங்க […] Hans steininger 16th centuryல Austria  Braunauவோட mayor . இவருக்கு 4 அடிக்கு தாடி இருக்கும் .   இவரு தாடிய எப்பவுமே கட்டி தனியா ஒரு துணில தான் வச்சுருப்பாரு . […] 1567ல இவரு ஊர்ல ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துல கூட்ட நெரிசல்ல இவரு ஓடும் போது சொந்த தாடியே இழுத்து கழுத்து உடஞ்சு செத்து போய்ட்டாரு . தன் சொந்த தாடியால செத்து போய்ட்டாரு மனுசன் பாவம் . இவரோட தாடி இப்ப Museumல இருக்கு […] Californiaல Jose Luis Ochoaன்றவர் சேவல் சண்ட விடும் போது சேவல் கால்ல கட்டிருந்த கத்தி குத்தி செத்துட்டாரு . US சேவ சண்ட Illegal (bbc.com/news/world-us-…) 2013 Brazilல Joao Maria de Souzaன்றவர் தூங்கிக் கிட்டு இருக்கும் போது பக்கத்து தொழுவத்துல இருந்த தப்பிச்சு வந்த  இவரு வீட்டுக்கு பின்னாடி மாடில நின்னுருக்கு இருட்டுக்குள்ள நகரும் போது 8 அடி உயரத்துல இருந்து இவரு குடிசைய பிச்சிகிட்டு இவரு மேல விழுந்து இந்த மனுசன சாவடிச்சிருச்சு […] Australiaல Sam Ballardன்ற 28 வயசு பைய்யன் friendsக்கு முன்னாடி அட்ட பூச்சிய சாப்டுறேன்னு சொல்லி சீன் போட்டு Rat Lungwarmன்ற parasites தாக்கி செத்துப் போய்ட்டான் . […] இதே மாதிரி 2012 Floridaல ஒருத்தன் cockroach சாப்டுற competitionல கலந்து கரப்பன் பூச்சி சாப்டு Asphyxia வந்து செத்து போய்ட்டான் . […] 2014ல chinese chef Peng Fanன்றவரு hotelக்கு வந்த customersக்கு Snake Soup prepare பண்ணிட்டு இருந்தாரு . அது வந்து Indochinese spitting cobra பாம்பு . Chef பாம்ப கொன்னு அது தலைய வெட்டி ஒரு ஓரமா போட்டு சூப் செஞ்சுருக்காப்டி […] 20 நிமிசம் கழிச்சு வெட்டி போட்ட தல மட்டும் வந்து Chef ah கொத்தி neurotoxic விசத்த அவரு உடம்புல ஏத்தி chef ah கொன்னுருச்சு . சில பாம்புகளுக்கு வெட்டி போட்டாலும் அத தலைல சில மணி நேரம் உயிர் இருக்கும் . […] Adolf frederick இவரு முன்னாள் sweden ஓட King . இவரு அதிகமா சாப்டுற பழக்கம் இருக்கவரு . Feb 10 1771ல இவரு ஒரே நாள்ல Caviar , Lobster , Sauerkraut , Smoked herring , Shampain & இன்னும் 14 வகையான சாப்பாடு ஒன்னா சேத்து சாப்ட்டு Digestive problem வந்து செத்தே போய்ட்டாரு […] 2013ல UK 13 வயசு பொண்ணு 2வாரமா bathroom போகாம இறந்துடுச்சு . 1975 UKல KungFu Kapersன்ற series பாத்து 25 நிமிசம் விடாம சிரிச்சு heart rhythm disorder, Long QT syndromeன்னால Cardiac arrest வந்து செத்து போய்ட்டாரு . […] இதே மாதிரி 1989ல ஒருத்தர் A Fish Called Wanda படம் பாத்து சிரிச்சே செத்து போய்ட்டாரு . […] 2014ல Romaniaல ஒருத்தன் bathtubல குளிச்சிட்டு மொபைல்ல charge போட்டு Twitter use பண்ணிட்டு இருக்கும் போது ட்விட்டர் யூஸ் பண்ணி செத்தான் . இப்டி மனுசன் டிசைன் டிசைனா செத்துருக்கான் . சாவு எந்த ரூபத்துலனாலும் வரும் . யாராது ஒரு ஆள் இறந்துட்டா என்ன செய்வோம் ? ஒன்னு எரிப்போம் ! இல்ல பொதைப்போம் !! இல்லாட்டி மிஷின்ல போட்டு 1200ல இருந்து 1400 Fahrenheitல எரிச்சு அத சாம்பலாக்கி கொண்டு போய்ருவோம் . […] புதைச்சா 6ல இருந்து 8 அடிக்கு குழி தோண்டி அதுல உடம்ப போட்டு மண்ண மேல மூடிருவோம் . Coffin ( சவப்பெட்டி )யோட வச்சா 50 இல்லனா 60 வருசம் வரைக்கும் எலும்புக் கூடா இருக்கும் . Coffin இல்லாம வச்சா 8ல 12 வருசத்துக்கு  இருக்கும் . […] அந்த காலத்துலயும் இதே மாதிரி எரிக்கிறது , பொதைக்கிறது இருந்துருக்கு & இன்னும் வேற மாதிரியும் பண்ணிருக்காங்க Endocannibalism இறந்தவங்க உடம்ப சாப்டுறது . இப்பயும் இந்தியால அகோரிஸ்  , Papua new guinea , South America & Africaலயும் EndoCannibalism இருந்துருக்கு . இது பசிக்காக அவங்க பன்றது Kind of Respect & இறந்தவங்க power நமக்கு வரும்ன்ற நம்பிக்கைல தான் இத பண்ணிருக்காங்க . […] 1972 Andes Airplane crash ஆச்சு அதுல உயிர் பொழச்சு 16 பேர் Uruguayans பசி தாங்க முடியாம கூட பயணிச்சு செத்து போனவங்க உடம்ப சாப்ட்டு தான் உயிர் பொழச்சாங்க . இது Traditional இல்ல பசி , Survivingக்காக பண்ணது . […] Israel Qafzeh caveல மூனாயிரம் வருசத்துக்கு முன்னாடியே இறந்தவங்கள எரிச்சதுக்கான தடயங்கள Archiologists கண்டுபிடிச்சுருக்காங்க . […] Neanderthals காலத்துல Excarnation பண்ணாங்க … அதாவது எரிக்கும் போதோ இறந்த மனுசனோட flesh & organs ah எடுத்துருவாங்க வெறும் skeleton ah மட்டும் எரிப்பாங்க . இது மரியாதைக்காகவும் , Animals தோண்டி இறந்த உடம்ப சாப்டுற கூடாதுன்னும் பண்ணிருக்காங்க . […] Giza Pyramid & Egyptலலாம் Tomb ( சமாதி )வச்சு தான் இறுதி சடங்கு முடிச்சாங்க . Embalming பண்ணி அந்த உடம்ப Tombல வச்சு எரிச்சுடுவாங்க . […] Egyptians நம்பிக்கை படி embalming பண்ற mummies எல்லாம் கொஞ்ச நாள்ல உயிர் வந்துரும்ன்னு நம்பிக்கை வச்சுருந்தாங்க . எல்லாருக்கும் embalming பண்ணிற முடியாது . […] Particular people மட்டும்தான் tombல இடம் கிடைக்கும் . அவங்கள தான் embalming பண்ணுவாங்க . slavesக்கு இல்ல . Slaves ah எரிக்கிறதுக்கு Mastabaன்ற இடம் இருந்துச்சு . […] Vikings புதைக்கவும் , எரிக்கவும் செஞ்சாங்க . […] Vikings Funeral boatல இறந்த பிணத்த போட்டு அதுல தீ பிடிச்ச அம்பு விட்டு எரிக்கிறது பண்ணாங்க . ரொம்ப ரொம்ப Special ஆன ஆளுக்கு மட்டும்தான் அப்டி death cermony பண்ணுவாங்க . […] Vikings மக்கள்ல சோம்போறியாவோ இல்ல நோய் வந்தவங்களோ இருந்தா Helheimன்ற இருட்டான இடத்துல தனியா விட்டு சாகடிச்சிருவாங்க . […] Vikingsல சிறந்த போர் வீரனா இருந்தா Valhallaன்ற இடத்துல சிறப்பான சலுகை எல்லாம் கிடைக்கும் . Mostly vikings ah பொதைக்கும் போதோ எரிக்கும் போதோ அவங்க use பண்ண Swords , Axe அவங்க பயன்படுத்துன குதிரைய வச்சு கூட புதைச்சுடுவாங்க . […] அப்பறம் இந்தியால Sati( உடன் கட்டை ஏறும் வழக்கம் )ன்னு ஒரு கேவலமான ரூல் இருந்துச்சு . Husband செத்துட்டா wifeம் எரியிற தீல விழுந்து செத்துரனும் . […] West Papua new guineல பழங்கால சம்ப்ரதாய படி ஒரு ஆண் இறந்துட்டா அவனோட Wife & குழந்தைகள் கை விரல கோடாரியால வெட்டிருவாங்க . […] Thailand people ஒரு ஆள் செத்த அந்த ஆவி உடம்ப விட்டு போக சில நாள் ஆகும்ன்னு நம்பிக்க .வச்சுருக்காங்க அதுனால சாவு விழுந்த இடத்துல Mini casino , card games , dance எல்லாம் பண்ணுவாங்க. Madagascarல Famadihanaன்ற funeral tradition இருக்கு . Malagasyன்ற மக்கள் இத follow பண்றாங்க. இந்த tradition படி deadbody decompose ஆகுற வரைக்கும் wait பண்ணனும் . deadbody ah sheet இல்லனா துணிய வச்சு சுத்தி ஊர்க்கு வெளிய வச்சுருவாங்க .இத ஆக சில வருசங்கள் ஆகும் . […] உலகத்துலயே japanese people தான் அதிக வயசு வரைக்கும் உயிரோட இருக்காங்க. Japanese Manன்னா average life span 78.8 years. womenன்னா 85.5 years . காரணம் healthy food . Fish& vegetables அதிகம் சேக்குறாங்க . Hard work & 60 வயசுக்கு மேலயும் Exercise பண்றாங்க கம்மியான வயசு வரைக்கும் உயிரோட இருக்கவங்க Africans . இன்னும் அங்க தேவையான அளவு health care sectors கூட வரல . சாவுக்கு அப்பறம் என்ன ஆவோம் ? நிறைய பேர் நினைக்கிறது செத்ததுக்கு அப்பறம் இன்னொரு வாழ்க்கை தொடரும் . இல்லனா சொர்கம் நரகத்துக்கும் போவோம்ன்னு . 2014 Telegraph பண்ண survey படி 60% நாம இன்னொரு வாழ்க்கைய தொடருவோம்ன்னு தான் சொல்லிருக்காங்க . 2015 USல பண்ண surveyபடி 72% சாவுக்கு  அப்பறம்  சொர்கம் நரகத்துக்கு போவோம்ன்னு தான் சொல்லிருக்காங்க . First நாம Heart நின்னதும் சாகுறோம் . அப்பறம் ரத்த ஓட்டம் நின்னுரும் . அப்பறம் நம்ம மூளைல electrical activity நின்னுரும் . அப்பறம் நம்ம muscles relax ஆகும் . வாய் தொறந்துரும் . உதடு வீங்கும் . உடம்பு temperature குறையும் . செத்து போன அடுத்த 3 மணி நேரத்துக்கு அப்பறம் chemical changes நம்ம உடம்புல ஆகும் . இதுக்கு அப்பறம் நிறைய medical terms வருது . அதெல்லாம் சொல்லனும்னா நான் டாக்டரா இருக்கனும் . Redditல ஒருத்தன் சொல்லிருக்கது என்னன்னா Car Accident ஆகி சாவோட எல்லைக்கே போய்ட்டு வந்துருக்கான் போல . வெறும் emptinessம் , No consciousness  இருட்டா தான் இருந்துச்சுன்னு சொல்றான் . Irish Philosopher Berkeley சாவுக்கு அப்பறம் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க தன் friend ah பக்கத்துல நிப்பாட்டிக்கிட்டு தூக்குல தொங்கிருக்காரு . குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம் கயிற அறுத்து விட்ற சொல்லி . […] அவரு சாவோட எல்லைக்கு போனப்ப பூமிக்கு வானத்துக்கும் இடைல என்னவோ இருக்குன்னு சொல்றாரு . என்னன்னு அவருக்கும் தெரில எனக்கும் புரியல . French philosopher Rene descartes என்ன சொல்றாருன்னா மனுசன் உடம்ப விட்டு உயிர் போகும் போது ஏதோ ஒன்னு பூமில நீடிச்சு இருக்கும்ன்னு சொல்றாரு . […] 3, 60,000 பேர் ஒரு நாளைக்கு பொறக்குறாங்க . கிட்டத்தட்ட ஒரு Secondக்கு ரெண்டு பேர் செத்து போறாங்க . ஒரு நிமிசத்துக்கு 105 பேர் சாகுறாங்க . ஒரு மணி நேரத்துக்கு 6,316 பேர் சாகுறாங்க ஒரு நாளைக்கு 151,600 பேர் சாகுறாங்க நம்ம ஊர பொறுத்த வரைக்கும் நல்ல சாவுக்கான definition என்னனா தூங்கி கிட்டு இருக்கும் போதே உயிர் போனும்ன்றது தான் . வாய்ப்பில்ல ராஜா . உன் சாவு எப்டினாலும் வரும் . VTV படத்துல சிம்பு சொல்ற மாதிரி Loveன்றத நாம தேடி போக கூடாது . அது நம்மல தேடி வரனும் . அது மாதிரி தான் சாவும் நம்மள தேடி வரனும் . நாம அத தேடி போக கூடாது . இதுல எப்டி ஈஸியா சாகுறது, கஷ்டப்பட்டு சாவுறது , வலி இல்லாம சாகுறதுன்னுலா எழுதனும்ன்னு ஆச தான் . இழவெடுத்தவய்ங்க அத ட்ரை பண்ணுவாய்ங்க . சாவ பத்தி இன்னும் 60+ ட்வீட் இந்த threadலயே continue பண்ணலாம் அவ்ளோ இருக்கு இதுக்கு மேல எழுதுனா bore அடிச்சிரும் . முடிச்சிக்கிறேன் FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.