[] 1. Title Page 2. Cover 3. Table of Contents ஸ்வாதிகாவின் கிறுக்கல்கள் ஸ்வாதிகாவின் கிறுக்கல்கள்   ஸ்வாதிகா   swathika.suriyakumar@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-NC-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/swathika_scribbles மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/swathika_scribbles This Book was produced using LaTeX + Pandoc பெட்ரா (Petra) […] பெட்ரா நெபாடியர்களால் கட்டப்பட்டது. பழைய ஏற்பாடு காலத்தில் இந்தியா, சீனா வரை சென்று வணிகம் செய்தவர்கள் நெபாடியர்கள். இவர்கள் அரேபியர்கள் என்று சொல்லப்பட்டாலும், எங்கிருந்து வந்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. இவர்கள் ஐரோப்பாவிலிருந்து தொடங்கி இந்தியா, சீனா வரையில் சென்ற வணிகப் பாதையில் மிக முக்கியமான இடத்தில் இருந்ததால், பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அகழ்வாராய்ச்சி செய்தபோது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பானைகளின் துண்டுகள் கிடைத்திருக்கின்றன பெட்ராவில். இவர்கள் பாலைவனத்துக்கு மத்தியில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கட்டிய கனவு நகரம்தான் பெட்ரா. 40 மீட்டர்கள் உயரமுள்ள இந்தக் கட்டிடம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மலையைக் குடைந்து, ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. கிழக்கில் சீனாவையும், மேற்கில் ரோமையும் இணைக்கும் வியாபார மையமாக இருந்த பெட்ராவை கடந்து தினமும் ஏராளமான வணிகர்கள் வண்டிகளில் பொருட்களை கொண்டு சென்றார்கள். வந்தவர்கள் ஓய்விற்காகவும், தங்களின் கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவும், பெட்ராவில்தான் ஒன்று கூடுவார்கள். தண்ணீர் கிடைப்பது அரிதான இடமாக பெட்ரா இருந்தது. மழையும் அரிது, அருகில் நீர்நிலைகளும் இல்லை. எனவே நீர் வினியோகம், பாசன முறைகள், அணைகள் என எல்லாமும் திட்டமிட்டு கட்டப்பட்டு மக்களின் உபயோகத்தில் இருந்தன. இப்படி மலைக்குள் குடைந்து அணை கட்டி இவ்வளவு கடினமான வாழ்கையை வாழ வேண்டிய அவசியம் என்ன? இருந்தது அது தார் வணிகம். அக்காலத்தில் திரவ தங்கம் என்று அழைக்கப்பட்டு விலை மதிப்பில்லாததாக இருந்தது தார். இந்த தார் வணிகம் பெட்ரா வை சுற்றி தான் அமைந்து இருந்தது அதற்கு முக்கிய காரணம் Dead Sea எனப்படும் சாக்கடலில் கிடைக்கும் நிலகீல் (Asphalt). இந்த பெட்ரா (பாறை க்கு கிரேக்க வார்த்தை) பைபிளில் வருகிறது பைபிளில் சேலா (பாறை க்கு Hebrew வார்த்தை) என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது சொடோம் (Sodom) க்கு அருகில் உள்ள நகரம் என பைபிளில் உள்ள விவரிப்பு மூலமாக தெரிந்து கொள்ளலாம். Siddim என்றால் Salt Lake (Dead Sea). சொடோம் நகரத்தில் மக்கள் குடியேற காரணமே பெட்ரா வாக தான் இருக்க முடியும். இந்த பெட்ரா சாக்கடலில் இருந்து 130 km தெற்கே இருக்கிறது. இந்த சாக்கடல் முழுவதும் Asphalt (கறுப்பு தார்) நிறைந்து உள்ளது. பெட்ரோலியம் தாதுவைக் காய்ச்சி வடித்தால் அடியில் தங்கும் உபபொருளும் இதுவே. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனிய நகரத்து சாலைகளில் ஆஸ்பால்ட்டை பயன்படுத்தியுள்ளனர். எகிப்தில் mummification எனப்படும் சடலங்களை பதப்படுத்தும் முறையில் இந்த Asphalt என்னும் நிலகீல் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரசீக மொழியில் மும்மியா என்ற வார்த்தைக்கு நிலக்கீல் என பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடலில் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது. சாக்கடலில் இந்த நிலக்கீல் அபாரிதமாக கிடைத்தது. இந்த நிலக்கீல் பெட்ரா நகரம் வழியாக Rome முதல் சீனா வரை வணிகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பைபிளில் Sodom வீரர்கள் தப்பி செல்லும்போது தார் குழிகளில் விழுந்ததாக கதைகள் உண்டு. நிலநடுக்க பகுதியான இந்த பெட்ரா, Sodom இல் தீப்பிழம்புகள் எப்போதும் நிலநடுக்கத்தை தொடர்ந்து வரும். அது போக இந்த ஜோர்டான் ஐ சுற்றி இருக்கும் உப்பு மலைகள் முழுவதும் தார், கந்தகம் நிறைந்து இருக்கிறது இவை நிலநடுக்கத்தின் போது தீப்பிழம்பாக வெடித்து Sodom நகரத்தின் மீது விழும். இதை வைத்து தான் Sodom Gomorrah கதைகள் பைபிளில் பின்னப்பட்டு இருக்கின்றன. பண்டோரா (Pandora) பண்டோரா (Pandora), கிரேக்க புராணத்தின் படி, பூமியின் முதல் பெண். கிரேக்க கடவுளான ஜீயஸ் ஒரு மாஸ்டர் பிளானோடு பண்டோராவை படைத்தார். ப்ரோமிதியஸ் (Prometheus) ஜீயஸ் க்கு தெரியாமல் மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்தார். இதற்காக ப்ரோமிதியஸ் ஐ தண்டித்த கடவுள் (அது தனி கதை அதை அப்புறமா சொல்றேன்!), மனிதர்களையும் தண்டிக்க விரும்பினார். அதற்காக உருவாக்கப்பட்டவள் தான் பண்டோரா.  ஹெஃபாஸ்டஸ் (Hephaestus) அவளை களிமண்ணிலிருந்து உருவாக்கினார், அவளை அழகியாக வடிவமைத்தார், அப்ரோடைட் (Aphrodite) அவளுக்கு பெண்மையை வழங்கினார் மற்றும் அதீனா (Athena) தனது கைவினைகளைக் கற்றுக் கொடுத்தாள். ஜீயஸ், ஹெர்ம்ஸை (Hermes) அழைத்து பாண்டோராவிற்கு பிடிவாதம், ஏமாற்றுதல், ஆர்வம் போன்ற குணங்களை  வழங்க  உத்தரவிட்டார்.  ஒவ்வொரு கடவுளும்  அவளுக்கு ஒரு பரிசை வழங்கினார்கள், எனவே, கிரேக்க மொழியில் அவளுடைய பெயர் “எல்லா பரிசுகளையும் தாங்கியவர்” என்று பொருள்.   பண்டோராவுக்கு ஒரு பெட்டி அல்லது ஜாடி வழங்கப்பட்டது, கிரேக்க மொழியில் “பித்தோஸ் (pithos)” என்று அழைக்கப்படுகிறது. கடவுள்கள் அவளுக்கு வழங்கிய பரிசுகள் எல்லாம் அந்த பெட்டியில் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அந்தப் பெட்டியைத் எப்போதும் திறக்க கூடாது என்று எச்சரித்தார்கள். (திறக்காமலே இருக்கிறதுக்கு எதுக்கு பரிசு?!) பின்னர் ஹெர்ம்ஸ் அவளை ப்ரோமிதியஸின் சகோதரர் எபிமீதியஸிடம் அழைத்துச் சென்றார்.  கடவுளர்களிடமிருந்து எதையும் ஏற்க வேண்டாம் என்று ப்ரோமிதியஸ் (அனுபவம்!) எபிமீதியஸுக்கு அறிவுறுத்தியிருந்தார், ஆனால்  எபிமீதியஸ்  பண்டோராவைப் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி உடனே அவளை மணமுடித்தார். பண்டோரா கொஞ்ச நாள் அவளது ஆர்வத்தை அடக்க முயன்றாள், ஆனால் இறுதியில் அவளால் ஆர்வத்தை தாங்க முடியவில்லை; பெட்டியைத் திறந்தாள். பெட்டியில் பரிசு என்று சொல்லி கடவுள்கள் குடுத்தது எல்லாம் நோய்களும் கஷ்டங்களும் தான். கடவுள்கள்கள் பெட்டியில் மறைத்து வைத்திருந்த அனைத்து நோய்களும் கஷ்டங்களும் வெளியே வரத் தொடங்கின. பண்டோரா பயந்துப்போனாள் , ஏனென்றால் பெட்டியில் இருந்து பொறாமை, குரோதம், பகை, வலி, நோய், பசி, வறுமை, போர், இறப்பு போன்றவை ஒவ்வொவன்றாக வெளியே வந்து மனிதர்களை அடைந்தது. எல்லா தீய சக்திகளும் வெளியே வருவதைக் கண்டு, முடிந்தவரை விரைவாக பெட்டியை மூட முயன்றாள் பண்டோரா, இறுதியில் உள்ளே “நம்பிக்கை” மட்டும் இருக்கும்போது பெட்டியை மூடினாள். பண்டோரா புராணத்தின் முக்கிய நோக்கம் உலகில் ஏன் தீமை இருக்கிறது என்ற கேள்விக்கு விடை  காண்பதுதான். இன்றைய நாளில் “பண்டோராவின் பெட்டியைத் திறப்பது (opening a Pandora’s box)” என்ற ஆங்கில மொழிச் சொல்லாடல் (idiom) ஓர் சிறிய அல்லது களங்கமில்லாத செயல் மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, மிகுந்த தாக்கமேற்படுத்துகின்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது. லிலித் (Lilith) […] லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண்.  Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல  midrashic  நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்) தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன. லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது  லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது. கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு  லிலித் மறுத்ததாகவும்  கதை சொல்கிறது.  மண்ணிலிருந்து இருவரும் சமமாக உருவாக்கப்பட்டதால், அவள் அவனுக்கு கீழே இருக்க வேண்டியதில்லை என்று லிலித் எதிர்ப்பு குரல் குடுத்து இருக்கிறாள். இதற்கு ஆதாம் ஒப்புக்கொள்ளாத நிலையில் லிலித் ஈடன் தோட்டத்தை விட்டு வெளியேறுகிறாள். ஆதாம் லிலித் தனக்கு கீழ்ப்படியாமல் வெளியேறியதாக கடவுளிடம் கூறியதும், கடவுள் மூன்று தேவதைகளை அனுப்பினார்,  Senoi, Sansenoi,  மற்றும்   Sammangelof  அந்த மூன்று தேவதைகள்  ஒரு குகையில் லிலித்தை குழந்தைகளுடன் கண்டனர், ஆனால் லிலித் மீண்டும் தோட்டத்திற்கு வர மறுத்து விட்டாள். தேவதைகள் அவர்கள் சொன்னபடி கேட்டு தோட்டத்திற்கு திரும்பாவிட்டால்  தினமும் லிலித்தின் 100 குழந்தைகளை கொன்றுவிடுவோம் என்று சொன்னார்கள். அதற்கு பழிவாங்க தான் லிலித் பெண்கள் வயிற்றில் இருக்கும்போதே அவர்கள் குழந்தைகளை கொல்லுவதாகவும் அதனால் தான் சில குழந்தைகள் இறந்தே பிறப்பதாகவும்  கூறப்படுகிறது. மேலும்  ஆண் குழந்தைகள் பிறந்து 8 நாட்களுக்கு (விருத்தசேதனம் செய்யப்படும் வரை) லிலித்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்து  20 நாட்களுக்கு ஆபத்தில் உள்ளனர் என்றும் கதைகள் சொல்லுகின்றன.  சிறிது நாட்களுக்கு பிறகு, லிலித் மீண்டும் தோட்டத்திற்குத் சென்றாள், ஆனால் ஆதாமுக்கு ஏற்கனவே மற்றொரு துணையான ஏவாள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். பழிவாங்குவதற்காக, ஆதாம் தூங்கிக்கொண்டிருந்தபோது லிலித் அவனுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுத்தாள் அவைதான் demons என்று கூறப்படும் பேய்கள். ஆங்கில பேய் படங்களில் வரும் demons களின் வரலாறு இதுதான்.  லிலித் பொதுவாக யூத நாட்டுப்புறக் கதைகள் மற்றும்  midrashic  நூல்கள் ஆகியவற்றில் காணப்பட்டாலும், தோற்றம் சுமேரிய கதைகள் (சுமேரியாவில் லிலிட்டு) ஆகும். சுமேரிய கதைகளில் லிலிட்டு ஒரு பெண் பேய் இரவில் ஆண்களுடன் அவர்கள் தூக்கத்தில் உறவு கொள்ளும் பேய். லிலித்தின் முதல் யூதக் கதை Ben Sira வால் சொல்லப்பட்டது. Ben Sira ஒரு கதை சொல்லி அவரது கதைகள்  Alphabet of ben Sirach  (700 மற்றும் 1000 AD) என்று அழைக்கப்படுகிறது.  Nebuchadnezzar II  (பாபிலோனிய பேரரசர்) பென் சிராவின் கதைகள் பற்றி கேள்விப்பட்டு அவரை அரசவைக்கு வரவழைத்தார். அங்கு Nebuchadnezzar II க்கு சுமேரிய கதையான  லிலிட்டு வில் ஆதாமையும் இணைத்து Ben Sira சொன்னதுதான் லிலித் கதை.  பெண்ணியவாதிகள் அவளை முதன் முதலில் பெண் உரிமைக்காக குரல் குடுத்தவளாக பார்க்கிறார்கள். அவள் ஆதாமிடம் தன்னை சமமாக நடத்தும்படி கேட்கிறாள் அதற்கு அவன் ஒப்புக்கொள்ளாதபோது விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவனை விட்டு செல்கிறாள். ஒரு யூத பெண்ணிய பத்திரிகையின் பெயர்  Lilith!  இந்த பத்திரிக்கையின் வெளியீட்டாளர்கள் லிலித்தை  சுதந்திரத்தின் சின்னம் என்று சொல்கிறார்கள். இருப்பினும், அவளை இன்னும் ஒரு பேய் என்று நினைப்பவர்கள், Lilith பெயரை பயன்படுத்தும் பெண்ணியவாதிகளை ஆண்களை வெறுப்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். பெண்ணியவாதிகள் பயன்படுத்தும் எந்த சின்னமும் எப்போதும் சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது. லிலித்தின் கதை உண்மையா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. லிலித்  ஒரு தன்னிச்சையான சுயமான முடிவெடுக்கும்  பெண், அவள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து குரல் கொடுக்கிறாள். எப்போது எல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்களோ அப்போது எல்லாம் அவர்களை பேய் என்றோ witch (சூனியக்காரி) என்றோ முத்திரை குத்துவது வழக்கமான ஒன்றாக தான் இருந்து இருக்கிறது. லிலித் குழந்தைகள் கொல்கிறாள், ஆண்களுடன் தூக்கத்தில் உறவு கொள்கிறாள் என்றெல்லாம்  லிலித்தை பற்றி சொன்னாலும், அவள் இன்னும் பெண் விடுதலையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள்.  Narcissus […] கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான். ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள். யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான். எக்கோ , விரக்தியில், தன் வாழ்நாள் முழுவதும் காடுகளிலும் மலையிலும் சுற்றித் திரிந்தாள், அவளிடம் எஞ்சியிருப்பது அவளது எதிரொலி மட்டுமே. பழிவாங்கும் தெய்வமான Nemesis நடந்ததை கண்டு கோபமுற்று Narcissus ஐ தண்டிக்க முடிவு செய்தாள். Nemesis அவனை ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே, Narcissus தண்ணீரில் தன் பிரதிபலிப்பைக் கண்டான், தனது பிரதிபலிப்பை பார்த்து அது தான் என்று உணராமல் அதைக் காதலித்தான். ஆரம்பத்தில் அது ஒரு பிரதிபலிப்பு என்பதை உணரவில்லை, அதைப் புரிந்து கொண்டபோது, தனது காதல் கைக்கூடாது என்று அதே தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். புராணத்தின் படி, Narcissus இன்னும் பாதாள உலகில் Styx நீரில் தன் உருவத்தை பார்த்து தன்னையே காதலித்து கொண்டு இருக்கிறான். Narcissistic personality disorder, என்கிற ஆளுமை கோளாறின் பெயர் காரணம் Narcissus கதை. இந்த மனக்கோளாறு கொண்டவர்கள் narcissist என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் Narcissus ஐ போல தன்னையே காதலிப்பவர்கள். தான் என்ற பெருமை, அகம்பாவம் கொண்டவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் தனக்கு சேவகம் செய்யவே அல்லது தனது துதி பாடவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். நாசீசிஸ்டுகள் தாங்கள் எல்லோரையும் விட சிறந்தவர்கள் என்று நம்புகிறார்கள், மேலும் அதற்கான அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிறிய விமர்சனத்தை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. எல்லாவற்றையும் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்து கொள்வார்கள். இத்தகைய narcissist கள் நம்மை சுற்றி நிறைய இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு விலகி இருத்தல் நமது மனநலனுக்கு நன்று. முதல் மனிதன் உருவான கதை: (பைபிள்/குரான்/தோரா) கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான். இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க. மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை. அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது. எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும். உலகம் முழுவதும் ஒன்றுதான். சின்ன சின்ன வேறுபாடுகள் மட்டும் தான். கிரேக்க கதைகளில் Prometheus மண்ணில் இருந்து மனிதனை உருவாக்குகின்றான், Athena அந்த மண் பொம்மையில் தனது சுவாசத்தை செலுத்தி அதற்கு உயிர் கொண்டு வருகிறாள். ஹிந்து மதத்தில் கூட பார்வதி விநாயகரை இப்படிதான் உருவாக்குவது போன்ற ஒரு கதை இருக்கிறது. மாயன்கள் சோளத்தில் இருந்து கடவுள் மனிதனை உருவாக்கினான் என்று நம்பினார்கள். இவர்களின் அன்றைய பிரதான உணவு சோளம். இப்படி எல்லாவற்றையும் உருவாக்கிய கடவுள். நுண்ணுயிரிகளை எப்போது உருவாக்கினார் எப்படி உருவாக்கினார் என்று ஒண்ணுமே சொல்லலை. […] இது Cistine Chapel கூரையில் Michelangelo வால் வரையப்பட்ட பிரசித்தி பெற்ற சித்திரம் “Creation of Adam”   படைப்பை பற்றி இரண்டு வெவ்வேறு ஆதியாகமக்கணக்குகள் உள்ளன: 1வது, ஆதியாகமம் 1: 1-2: 3, இதில் 6 நாட்களில் முதலில் மிருகங்களை உருவாக்கிவிட்டு இறுதியாக மனிதனை உருவாக்குகிறார் கடவுள்; இரண்டாவது ஆதியாகமம் 2: 4-25, அதில் படைப்பின் வரிசை வேறுபட்டது: கடவுள் முதலில் மனிதனை உருவாக்குகிறார், பின்னர் விலங்குகளை உருவாக்கி ஆதாமிடம் பெயரிடுவதற்காக கொண்டு வருகிறார். மைக்கேலேஞ்சலோ Creation of Adam என்ற தனது ஓவியத்தின் கருப்பொருளுக்காக இரண்டாவது கதையை எடுத்து இருக்கிறார். இந்த ஓவியத்தின் மூலம் அவர் சொல்ல வருவது என்ன என்பதை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. இந்த ஓவியத்தில், கடவுள் ஒரு வெள்ளை ஆடையால் மூடப்பட்ட ஒரு வயதான வெள்ளை தாடி மனிதராக சித்தரிக்கப்படுகிறார், ஆதாம்  முழு நிர்வாணமாக கீழ் இடதுபுறத்தில் இருக்கிறான். கடவுள் இறக்கைகள் இல்லாமல் தேவதூதர்களால் தாங்கியபடி இருக்கிறார். கடவுளின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நீட்டப்பட்ட ஆதாமின் இடது கையைத் தொட கடவுளின் வலது கை நீட்டப்பட்டுள்ளது (Mirror image). 1990 ஆம் ஆண்டில், இந்தியானாவின் ஆண்டர்சனில் மருத்துவர் Frank Meshberger , கடவுளின் உருவத்தின் பின்னால் சித்தரிக்கப்பட்ட வடிவம் உடற்கூறியல் ரீதியாக மனித மூளையுடன் பொருந்துகிறது என்று சுட்டிக்காட்டினார். […] ஓவியத்தின் எல்லைகள் முன்பக்க மடல், optic chiasm, மூளை அமைப்பு, பிட்யூட்டரி சுரப்பி மற்றும் major sulci of cerebrum ஆகியவற்றுடன் ஒத்து போகின்றதாக கூறினார். அதாவது மனிதனின் மூளை தான் ஆதாம் கதையை படைத்தது என்று அவர் சொல்ல வருகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா? பிரசவத்திற்கு பிறகான கருப்பையில் கடவுள் இருப்பது போலவும், ஆதாம் ஒரு பெண்ணின் உடற்பகுதியில் படுத்துக் கொண்டு இருப்பதை போலவும் இருப்பதாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் குழு வெளியிட்ட மற்றொரு ஆராய்ச்சி கூறுகிறது. […] 1. மஞ்சள் அம்பு பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் கருப்பையின் mucosa வின் மடிப்புகளை ஒத்திருக்கிறது. கருப்பை தசையில் பிரசவத்திற்கு பிறகுதான் மடிப்புகள் தோன்றும் 2. நீல அம்பு கருப்பையின் வாயை குறிக்கிறது. 3. ஆதாம் ஒரு பாறையில் ஓய்வெடுப்பதாக இருக்கிறது, அந்த காலத்தில் பாறையில் ஓய்வெடுப்பது என்பது தாய்மையை குறிக்கும் ஒரு சின்னமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 4. ஆரஞ்சு அம்பு ஒரு பெண் உடலின் முலைக்காம்பை சித்தரிக்கிறது. 5. வெளியில் தொங்கி கொண்டு இருக்கும் பச்சை நிற துணி அப்போதுதான் அறுத்த தொப்புள் கொடியை சுட்டி காட்டுகிறது. இதன்மூலம் மனிதன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து தான் வந்தான் என்று மைக்கேலேஞ்சலோ சொல்ல வந்ததாக எடுத்துக்கொள்ளலாமா? Bible 40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread. முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur’an னிலும் இடம்பெற்று இருக்கிறது. இதை எழுதியவர் மோசஸ் (இறை தூதர்) என்று நம்பப்படுகிறது. ஆனால் எழுதப்பட்டு இருக்கும் மொழி நடை மோசஸ் காலத்திற்கு மிகவும் பின்தங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பைபிள் இக்காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று வைத்து கொண்டால், மோசஸ் ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்தவர். கிறிஸ்து பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று வைத்து கொண்டும் பைபிளில் ஓவ்வொருவருக்கும் குடுக்கப்பட்டு உள்ள வயதை கொண்டும் கணக்கிட்டால் ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் கிமு 4000 ஆண்டில் நடகின்றன. இதே காலகட்டத்தில் உலகில் சுமேரியா மற்றும் எகிப்து நாகரீகம் தழைத்து வளர்ந்து கொண்டு இருந்தது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் விவசாயம் பரவிக்கொண்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் தான் பைபிளில் கடவுள் வானத்தையும் பூமியையும் பொறுமையாக படைத்து கொண்டு இருந்தார். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். சூரியனை படைக்கவில்லை அப்படியானால் பூமி gravitational orbit இல்லாமல் எப்படி சுற்றி கொண்டு இருந்தது தெரியவில்லை. சரி அது போகட்டும் அதாவது astrophysics advanced subject. ஆனா சூரியன் இல்லாமலே வெளிச்சம் உண்டாக கடவது என்றார் வெளிச்சம் உண்டாகிவிட்டது. வெளிச்சம் வரணும் அப்படின்னா light source என்று ஒண்ணு இருக்கணுமா இல்லையா? இது ஒண்ணாங் கிளாஸ் பாட புஸ்தகத்துலயே வருது. அப்புறம் தேவன் வெளிச்சத்திற்கு பகல் இருட்டுக்கு இரவு என்று பெயர் வைத்தார் ஒரு நாள் ஆயிடுச்சாம். சூரியனும் இல்ல பூமி சூரியனை சுற்றி வரவும் இல்லை ஆனா simple ஆ ஓரு நாள் ஆயிடுச்சு. அடுத்து செடி கொடி மரம் எல்லாம் உருவாகிடுச்சு சூரியன் இல்லாமலேயே. இப்படியே மூணு நாள் ஓடிப்போச்சு. […] எப்படி கணக்கு பண்ணாங்கன்னு தெரியலை. மூணு நாளைக்கு அப்புறம் தான் பொறுமையா பகல் க்கு சூரியன் இரவுக்கு நிலா என்று படைக்கிறார் ஆண்டவர். இது போக நட்சத்திரங்களையும் படைக்கிறார். சூரியனே ஒரு நட்சத்திரம் அப்படின்றது வேற விஷயம். எல்லா நட்சத்திரங்களையும் பூமிக்கு மேலயே வச்சு இருக்கிறார். பைபிளில் வரும் விவரிப்புகளை கொண்டு பார்த்தால் பூமி இப்படிதான் இருந்திருக்க வேண்டும். […] நாலு நாள் ஆகுது, பறவைகளை படைக்கிறார். பரிணாம கொள்கை படி பார்த்தா மிருகங்களில் இருந்து தான் பறவைகள் வருகின்றன. ஆனா இங்க மிருகங்களுக்கு முன்னாடியே பறவை வந்தாச்சு. 5வது நாள் ல மிருங்கங்களை படைக்கிறார். பைபிளில் ஒரே கதை இரண்டு முறை ஆதியாகமத்தில் வருவதை பைபிள் படித்தவர்கள் பார்த்திருப்பார்கள். அதே போல இந்த இரண்டு version இல் ஒன்றில் கடவுளை YHVH (Lord) Yahveh (Jehovah அல்ல) என்றும் மற்றொன்றில் Elohim (கடவுள்கள் (gods)) என்று இருப்பதையும் பார்க்கிறோம்.  Yahveh என்று பயன்படுத்தும் ஆதியாகமத்தை  J document (950 bce) என்றும் Elohim என்று பயன்படுத்தும் ஆதியாகமத்தை E document  (900–800 bce) என்றும் அறிஞர்கள் அழைக்கிறார்கள். இதில் J document பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும் முன் எழுதியது E document பாபிலோனுக்கு நாடுகடத்திய பின் எழுதியது. இறுதியில் ஆசாரியர்கள்  J document மற்றும் E document இரண்டையும் இணைத்து, புதிதாக “P”, என்னும் material உம்  சேர்த்து ஆதியாகமத்தை தொகுத்து இருக்கிறார்கள். documentary hypothesis எனப்படும் theological model கொண்டு Pentateuch ஐ (மோசே வால் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள்) ஆராயும்போது E document தான் முதலில் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று அறியமுடிகிறது. இந்த முதல் E document இல் ஆதாமும் ஏவாளும் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகிறார்கள்.  ஆதியாகமம் 1:27 “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”  பின்னாடி வந்த J document இல் தான் ஆதாமிற்காக ஏவாள் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.  ஆதியாகமம் 2:20 –  ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. ஆதியாகமம் 2:22 – தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். இப்படி இரு வேறு கதைகள் இருக்க அதை சமன் செய்ய உருவானதே யூத நாட்டுப்புற கதையான Lilith. அதிலும் அவளை பேயாக மாற்றி மட்டம் தட்டிவிடுவார்கள். முன்னர் எழுதிய கதை ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அந்தஸ்தை குடுப்பதையும் பின்னர் வந்த கதைகள் பெண்ணை மட்டம் தட்டி ஆணை உயர்த்துவதையும் பார்க்கலாம். Mel Gibson Mel Gibson அ எல்லாருக்கும் தெரியும். அவர் நடிச்ச Brave Heart படம் பார்த்து உருகி இருப்போம். அவர் இயக்கிய Apocalypto படம் பார்த்து உறைந்து இருப்போம். அவரை பற்றி DGS தினகரன் ஒரு முறை உருக்கமான கதை ஒண்ணு சொன்னாரு. கேட்டு கண்ணுல ஜலம் வைக்காத குறை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடின உழைப்பாளி தனது குடும்பத்தை நியூயார்க் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிழைப்பதற்காக அழைத்துச் சென்றார். இந்த மனிதனுக்கு ஒரு அழகான இளம் மகன், அவர் சர்க்கஸில் ஒரு ட்ரேபீஸ் கலைஞராக அல்லது ஒரு நடிகராக சேர விரும்பினார். இந்த அழகிய இளைஞன், ஒரு சர்க்கஸ் வேலை அல்லது சினிமா வாய்ப்பு வரும் வரும் வரை உள்ளூர் கப்பல் கட்டடங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்தார், இது நகரத்தின் மோசமான பகுதியின் எல்லைக்குள் இருந்தது, அதாவது குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி. ஒரு நாள் மாலை, வேளையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற இந்த இளைஞன் ஐந்து கொள்ளையர்களால் தாக்கப்பட்டான். தனது பணத்தை கொடுக்காமல், அவர்களுடன் அவன் சண்டையிட்டான். அவனால் 5 பேரை எதிர்த்து சண்டை போட முடியவில்லை. அவர்கள் அவனது முகத்தை பூட்ஸால் பிசைந்து, அவனை கொடூரமாக அடித்து, அவனை கொன்று போட்டுவிட்டார்கள். சவக்கிடங்கிற்கு செல்லும் வழியில் ஒரு போலீஸ்காரர் அவனது கை ஆடுவதை கண்டார், உடனடியாக அவனை மருத்துவமனையில் அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அவனை பார்த்த மருத்துவர் அதிர்ந்து போய்விட்டார், அந்த இளைஞனுக்கு ஒரு முகம் இல்லை. ஒவ்வொரு கண் சாக்கெட்டும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது, மண்டை ஓடு, கால்கள் மற்றும் கைகள் முறிந்து இருந்தன, மூக்கு உண்மையில் முகத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது, பற்கள் அனைத்தும் போய்விட்டன, மற்றும் தாடை முற்றிலும் கிழிந்து இருந்தது. அவனது உயிரைக் காப்பாற்றிய போதிலும், அவன் மருத்துவமனையிலேயே ஒரு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டி இருந்தது. அவன் இறுதியாக வெளியேறும்போது முகம் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. எல்லோரும் போற்றிய அழகான இளைஞனாக அவன் இல்லை. அந்த இளைஞன் மீண்டும் வேலை தேடத் தொடங்கியபோது, ​​அவன் முகத்தின் விகாரத்தின் காரணமாக அனைவராலும் நிராகரிக்கப்பட்டான். ஒரு circus முதலாளி அவனை சர்க்கஸில் நடந்த குறும்பு நிகழ்ச்சியில் ’The man who had no face” என்று அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் கோமாளித்தனமாக அவன் ஏதேதோ செய்து மக்களை கவர முயன்றான் ஆனால் யாரும் அவனை பார்க்க விரும்பவில்லை. அவனுக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றின. இப்படியாக ஐந்து ஆண்டுகளாக போனது. ஒரு நாள் அவன் ஒரு தேவாலயத்தைக் கடந்து செல்லும்போது யாரோ அவனை அழைப்பது போல இருந்தது. தேவாலயத்திற்குள் நுழைந்த அவனை ஒரு பாதிரியாரை எதிர்கொண்டார். அவர் அவன் மீது பரிதாபப்பட்டு, அவன் சிறந்த கத்தோலிக்கனாக இருப்பேன் என்று உறுதியளித்தால், அவனது வாழ்க்கையை மீட்டெடுக்க செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்வேன் என்று கூறினார். அவனது சித்திரவதை வாழ்க்கையிலிருந்து அவனை விடுவிப்பதற்கான கடவுளின் கருணையாக அவன் இதை பார்த்தான். அந்த இளைஞன் ஒவ்வொரு நாளும் சர்ச் க்கு சென்றான், தன் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து, மன அமைதியையும், கடவுளின் பார்வையில் தான் மிகச் சிறந்த மனிதனாக இருக்கும் கிருபையையும கொடுக்கும்படி கேட்டான். பாதிரியார், தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ஆஸ்திரேலியாவின் சிறந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் சேவைகளைப் பெற முடிந்தது. மருத்துவர் பாதிரியாரின் சிறந்த நண்பராக இருந்ததால் அவர் அந்த இளைஞருக்கு எந்த செலவுமின்றி சிகிச்சை அளிக்க முன்வந்தார். அவன் மீண்டும் பழைய அழகிய இளைஞன் ஆனான். அவன் ஒரு அற்புதமான, அழகான மனைவி மற்றும் பல குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டான், மேலும் திரை துறையில் மிகப்பெரிய ஆளாக வந்தான். தன்னை ஆசிர்வதித்த இறைவனை பெருமைப்படுத்தும் படி ” The Passion of the Christ” என்ற ஒரு திரைப்படத்தையும் எடுத்தான். தனது வாழ்க்கையையும் “The man without a face” என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தான். அந்த இளைஞன். . . மெல் கிப்சன். இப்படி ஒரு miracle உண்மையில் நடந்ததா அப்படினு ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இந்த கம்பி கட்டும் கதை எப்படி தோன்றியது என்று தெரிய வந்தது. Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சதுரங்க வேட்டை படத்துல “நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க” அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது. 1993 இல் எடுக்கப்பட்ட The Man Without a Face 1972 இல் எழுதப்பட்ட Isabelle Holland இன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். Mel Gibson வாழ்க்கைக்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சரி இந்த கதையின் தோற்றத்தை பார்ப்போம். Paul Harvey America வானொலி பேச்சாளர்.ஒரு தலைமுறைக்கே வரலாற்றையும் நிகழ்காலத்தையும் விவரித்தவர். அவர் ஒரு தீவிர வலதுசாரி பழமைவாதி. ஒவ்வொரு வாரமும் தனது புகழ்பெற்ற The Rest of the Story நிகழ்ச்சியில் செய்திகளை கதைகள் போல சுவாரசியமாக சொல்லுவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, 1970 களில் இருந்து 2009 இல் அவர் இறக்கும் வரை, வாரத்தில் ஆறுநாட்கள் வரலாற்றின் முக்கிய செய்திகளை மக்களுக்கு கதைபோல தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். இவர் 24 June 2000 இல் Mel Gibson பற்றி தனது The Rest of the Story நிகழ்ச்சியில் பேசினார் . வழக்கம்போல் கதை சுவாரஸ்யத்திற்காக கொஞ்சம் பட்டிங் டிங்கேரிங் செய்து அவர் சொன்ன கதை இதோ, Ollie Gerrick என்கிற காவலர் அந்த சிறுவனின் முகம் அடித்து நொறுக்கப்பட்ட விதத்தை பார்த்து இனி அவன் உயிர்பிழைக்க மாட்டான் என்று நினைத்தார். ஆம்புலன்ஸ் வந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றத. மருத்துவமனையில் அவன் கண் விழித்ததும் அந்த இளைஞன் மறுநாள் தான் செல்ல வேண்டிய audition ஐ நினைவு கூர்ந்தான். மறுநாள் காலையில், அவன் படுக்கையில் இருந்து எழுந்து கண்ணாடியில் பார்த்தான், அவனால் அவனையே அடையாளம் காணமுடியவில்லை. ஆயினும்கூட, அவன் audition க்கு சென்றான். 1977 மேட் மேக்ஸின் முரட்டுத்தனமான பாத்திரத்தில் நடிக்க ஒருவனை தயாரிப்பாளர்கள் தேடிக்கொண்டிருந்தனர், Mel Gibson காயங்கள் உள்ள முகத்துடன் audition க்கு வந்ததை பார்த்ததும் அந்த முரட்டு பாத்திரத்துக்கு சரியான ஆள் இவன்தான் என்று உடனே தேர்தெடுத்தனர். இதுதான் Paul Harvey சொன்ன கதை. 2004 The Passion of the Christ திரைப்படம் Mel Gibson தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்தது. அந்த சமயத்தில் Paul Harvey சொன்ன பட்டிங் டிங்கேரிங் கதையுடன் இன்னும் சற்று கம்பி கட்டி இணையத்தில் முன்பு சொன்ன கதை வைரலாக பரவியது. அதில் கொஞ்சம் கடவுள் என்னும் மசாலா தெளித்து பின்னர் DGS தினகரன் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான  சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது. இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர். ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான். யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். படத்தில் இயேசுவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு தலைமை தாங்கிய யூத பாதிரியார் கயபாஸ், “இயேசுவை கொன்ற பாவம் நம் மீதும் நம் பிள்ளைகளின் மீதும் இருக்கிறது” என்ற சர்ச்சைக்குரிய வரியை வருத்தத்துடன் கூறுமாறு இருக்கிறது. யூத குழுக்களின் எதிர்ப்பு காரணமாக, வரிக்கான subtitle நீக்கப்பட்டன, ஆனால் வரிக்கான ஆடியோ (ஹீப்ரு மொழியில்) படத்தில் உள்ளது. Judah Maccabee என்கிற யூத பரிசேயர் பற்றிய படத்தை எடுப்பதற்காக Warner Bros. உடன் உடன்படிக்கை செய்து இருந்தார் Mel Gibson. ஆனால் திரைக்கதை எழுத்தாளர் Joe Eszterhas ன் ஸ்கிரிப்ட்டில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி Warner Bros. “The Maccabees” படத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கு Joe Eszterhas ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் Mel Gibsonக்கு இந்த படத்தை எடுப்பதில் உண்மையில் எந்த விருப்பமும் இல்லை என்றும் யூத எதிர்ப்பாளர் என்கிற அவரது பெயரை சரி செய்யவே இந்த படம் எடுப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் Gibson னின் முக்கிய குறிக்கோள் யூதர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதாகும் என்றார். ஒன்றாக பணியாற்றும்போது யூதர்களை தொடர்ந்து கிப்சன் Hebes என்றும் oven dodger என்றும் தொடர்ந்து அழைத்ததாகவும், ஹோலோகாஸ்ட் ஒரு கட்டுக்கதை என்றதாகவும், ஒரு கட்டத்தில், Torah வில் (யூதர்களின் புத்தகம்) கிறிஸ்தவ குழந்தைகளை பலியிடுவதை பற்றி இருப்பதாகவும் கிப்சன் கூறியதாக Eszterhas குற்றம் சாட்டினார். ஆனால் இந்த எல்லா குற்றச்சாட்டுகளையும் Mel Gibson மறுத்து இருக்கிறார். Mel Gibson தற்போது “Rothchild” என்ற படத்தில் “Whitelaw Rothchild” என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். Rothchild ஒரு யூத வம்சாவளி குடும்பம். இல்லுமினாட்டி கதைகள் எல்லாம் இந்த குடும்பத்தை சுற்றிதான் பின்னப்பட்டு இருக்கும். யூத எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமான பெயர் Rothchild. இவருடைய எல்லா படங்களிலும் வன்முறை அதிகமாக இருக்கும். மனைவியை அடித்ததாக கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மேல் வழக்குகளும் உண்டு. கில்கமேஷ் […] 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கதை கில்கமேஷ். இந்த கதையின் Akkadian version Nineveh யில் , Ashurbanipal நூலகத்தின் இடிபாடுகளில், 1849 இல் தொல்பொருள் ஆய்வாளர் Austin Henry Layard என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 3000 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதி என்கிறார்கள். 12 களிமண் கற்களில் கியூனிஃபார்மில் எழுதப்பட்ட இந்த அக்காடியன் பதிப்பு கிமு 1300 முதல் 1000 வரை உள்ள காலகட்டத்திற்கு உரியது என்று கூறப்படுகிறது. அதற்கு முன் வாய் வழியாக எத்தனை ஆண்டுகள் இந்த கதை கூறப்பட்டதோ தெரியவில்லை. எத்தனை பழையது என்று பார்த்தால்: *ரிக் வேதம் – கி.மு. 1500-1200 *Torah/பழைய ஏற்பாடு – கி.மு. 500 *பார்சிகளின் அவெஸ்தா – கி.மு. 5ம் நூற்றாண்டு. *சீனாவின் “Four Classics” – கி.மு. 4ம்/3ம் நூற்றாண்டு. *தொல்காப்பியம்- கி.மு. 3ம் நூற்றாண்டு. எகிப்திய நாகரீகம்தான் மிகப் பழையது என்பார்கள். ஆனால் கில்கமேஷ் கதை அதற்கும் முன் எழுதப்பட்டு இருப்பதால் எகிப்தின் பல கதைகளின் தாக்கம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கில்கமேஷின் கதை மிகவும் எளிமையானது. பலசாலி அரசன் கில்கமேஷ் உருக் (Uruk, இன்றைய ஈராக்) நகரத்தை ஆள்கிறான். அவனை எதிர்க்க யாருமில்லாததால் எல்லார் வீட்டு பெண்களிடமும் தான் இஷ்டப்பட்டபோது போய் வருகிறான். அவனுக்குப் போட்டியாக எங்கிடு என்ற காட்டு மனிதனை கடவுள்கள் உருவாக்குகிறார்கள். பெண்ணையே பார்த்திராத அவனை ஒரு தாசியின் மூலம் நகரத்துக்கு அழைத்து வருகிறார்கள். கில்கமேஷும் எங்கிடுவும் முதலில் போரிடுகிறார்கள், பிறகு நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். ஹம்பாபா என்ற ராட்சதனை வெல்கிறார்கள். இஷ்டார் என்ற பெண் கடவுள் கில்கமேஷ் மீது மோகம் கொள்கிறாள். ஆனால் கில்கமேஷ் மறுக்கிறான். ஒரு பெரும் எருதை கில்கமேஷ் மீது இஷ்டார் ஏவுகிறாள். நண்பர்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். கோபம் கொள்ளும் கடவுளர் இரு நண்பர்களில் ஒருவர் இறக்கட்டும் என்று சபிக்கிறார்கள். எங்கிடு இறக்கிறான். நண்பனின் சாவைக் கண்டு அஞ்சும் கில்கமேஷ் சாவை வென்ற ஒரே மனிதனான உட்னாபிஷ்டிமைத் தேடிச் செல்கிறான், சாவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தோல்விதான். கடைசியில் அவன் இறப்பதோடு கதை முடிகிறது. கில்காமேஷின் மரண பயம் உண்மையில் அர்த்தமற்ற பயம் மற்றும் அவர் அழியாமையை வெல்லத் தவறினாலும், தேடல்தான் அவரது வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது. இந்த கருப்பொருளை தான் எழுத்தாளர்கள் மற்றும் தத்துவவாதிகள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஆராய்ந்துள்ளனர். Gilgamesh தந்தை, தாய், காதலி, என்று எல்லோருக்கும் பின்கதைகள் இருக்கின்றன. அந்த பின் கதைகள் தான் உலகின் பல் வேறு கதைகளுக்கு தாக்கமாக இருந்து இருக்கிறது. உட்னாபிஷ்டிம் ஐ தழுவி தான் நோவா, டியூகாலியன், மனு கதைகள் எழுதப்பட்டு இருக்க கூடும். எங்கிடுவை நகரத்துக்கு அழைத்து வருவது ரிஷ்யசிருங்கரை நினைவுபடுத்துகிறது. நசிகேதனைத்தான் கில்கமேஷில் பார்க்கிறோம். கில்கேமேஷின் சகோதரி இன்னான்னா தனது தோட்டத்தில் ஒரு மரத்தை நட்டு, அது வளர்ந்ததும் அதில் இருந்து இருக்கை படுக்கை செய்யலாம் என்று நினைக்கிறாள் , அதை பாதுக்காக்க கில்கேமேஷ் உதவியை நாடுகிறாள். ஆனால் அந்த மரத்தை ஒரு பாம்பு வேரிலும், அதன் மையத்தை லிலிட்டு என்கிற ஒரு பெண் பேயும், மற்றும் அதன் கிளைகளை அன்சு பறவை ஆகியவைகள் தாக்குகின்றன. இந்த கதை பைபிளில் வரும் ஏவாள் கதையை நினைவுபடுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொண்டது பைபிள் தான் முன்னர் உலகின் பழமையான புத்தகம் என்று கருதப்பட்டது அதில் வரும் கதைகள் வேறு எங்கும் இல்லை என்று நம்பப்பட்டது. ஆனால் உண்மையில் பைபிளின் பல கதைகள் மிகவும் பழைய சுமேரிய புராணங்களை தழுவி எழுதப்பட்டதே. ஏவாள் பிறந்த கதை […] முதல் பெண், மனைவி மற்றும் அனைத்து உயிர்களின் தாய். இவை குறிப்பிடத்தக்க சாதனைகள் என்றாலும், ஏவாளைப் பற்றி வேறு எதுவும் பைபிள்/Qur’an/Torah வில் இல்லை. பல பெண்களைப் போலவே, ஏவாளின் சாதனைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆதியாகமம் புத்தகத்தின் 2ம் அத்தியாயத்தில் , ஆதாமுக்கு ஒரு துணை மற்றும் உதவியாளர் இருப்பது நல்லது என்று கடவுள் முடிவு செய்தார். ஆதாம் ஆழ்ந்த உறக்கத்தில் விழ, கடவுள் அவனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து (லிலித்தை போல மண்ணிலிருந்து உருவாக்கினால் எங்கே இவளும் சம உரிமை கேட்பாளோ என்று இந்த புதிய முறையை கடவுள் பின்பற்றி இருக்கிறார். ஆதமிலிருந்து உருவாக்கப்பட்டதால் ஏவாள் ஆதாமிற்கு கீழ்படிந்து நடக்க வேண்டி இருந்தது) ஏவாளை உருவாக்க பயன்படுத்தினார். கடவுள் பெண்ணை ezer என்று அழைத்தார், ஹீப்ரு மொழியில் “உதவி” என்று பொருள். ஆதாம் மனித இனத்தின் இனப்பெருக்கத்தில் அவளது பங்கைக் குறிப்பிட்டு, “உயிர்” என்று பொருள்படும் “ஏவாள்”  என்கிற பெயரை அந்த பெண்ணிற்கு குடுத்தான். ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் உருவாகி இருந்தால் (cloning) அவளது genotype 44XY என்று இருக்கும் அதாவது ஒரு ஆண்! இப்போதான் கதையில் ஒரு திருப்பம் வருது. ஒரு பாம்பு என்ன பண்ணுது. நேரா ஏவாள் கிட்ட போய் நன்மை தீமை அறியத்தக்க கனியை சாப்பிடு என்று சொல்லுது.  (பாம்பு என்ன மொழியில் பேசி இருக்கும் என்று தெரியவில்லை அநேகமாக Hebrew அல்லது Aramaic la ல பேசி இருக்கும்.) ஏவாள் சொல்லுறா இல்ல இல்ல இதை சாப்பிட்டா உடனே இறந்து போய்விடுவோம் என்று கடவுள் சொல்லி இருக்கிறார் என்று. ஆனா பாருங்க ஆதாம் கிட்ட கடவுள் எதேன் தோட்டத்து rules and regulations சொல்லும்போது ஏவாள் பிறக்கவே இல்லை. கடவுள் நேரடியாக இதை ஏவளிடம்  சொல்லியது போல தெரியவில்லை. அநேகமாக ஆதாம் பின்பு ஏவாள்டம் சொல்லி இருக்கலாம். So Eve க்கு அந்த கனியை பற்றிய தீவிரத்தன்மை தெரியாமல் இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம். பாம்பு சொல்லுது இல்ல இல்ல அதெல்லாம் நீங்க சாக மாட்டிங்க (கடவுள் ஆதாம் கிட்ட நீ இத சாப்பிட்டா உடனே இறந்து விடுவாய் என்று சொல்லி இருப்பார். உலகின் முதல் பொய்! ஆனாலும் ஆதாம் அதை சாப்பிட்டு 930 வருடங்கள் உயிருடன் இருப்பான்.) இதை சாப்பிட்டால் நன்மை எது தீமை எது என்று தெரிந்துகொள்ளும் அறிவு பிறக்கும் என்று. ஆக அதை சாப்பிடும் வரை நன்மை எது தீமை எது என்று differentiate பண்ணி பார்க்கும் அறிவு ஆதாம் ஏவாள் இருவருக்கும் இல்லை. அப்படியானால் கடவுள் செய்யகூடாது என்று சொன்ன ஒன்றை செய்வது தவறு என்று அலசி பார்க்கும் அறிவு அவர்களிடம் இல்லை. அப்போ அந்த கனியை அவர்கள் உண்டது அவர்கள் குற்றம் இல்லை. ஏவாள் அந்த கனியை பறித்து ஆதாமிடம் தருகிறாள். அவனும் சாப்பிட்டான். எனக்கு கீழ்படிந்து இருக்கும் பெண் வேண்டும் என்பதுதான் ஆரம்பம் முதலே ஆதாமின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கடவுள் பண்ணாதே என்று சொன்ன ஒன்றை ஏவாள் செய்யும்போது ஆதாம் என்ன செய்ய வேண்டும் அவளை கண்டித்து திருத்த வேண்டும் அது போக கடவுள் இவனிடம் தான் rules and regulations எல்லாம் சொல்லி இருக்கிறார். ஆனால் ஆதாம் வசதியாக அதை எல்லாம் மறந்து விட்டு ஏவாள் மீது பழியை போட்டு விட்டான். ஏவாளுடைய கதை கில்கமெஷில் வரும் இன்னான கதை போல இருக்கிறது. கிரேக்க புராணங்களில் வரும் Pandora கதையுடனும் ஒத்து இருக்கிறது. இருவருமே உலகின் முதல் பெண்கள். இருவருமே கடவுள் செய்யகூடாது என்று சொன்ன ஒன்றை செய்தவர்கள். அவர்களின் ஆர்வத்தின் காரணமாக, உலகம் இன்று சபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு கதைகளிலிருந்தும், பெண்கள் எப்போதுமே வஞ்சகத்தின்  குற்றவாளிகளாகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதையும்,  இந்த உலகின் ஒவ்வொரு தீமைக்கும் பெண்களே காரணம் என்று ஆண்கள் எழுதிய புராணங்கள் கூறுவதையும் நாம் பார்க்கலாம். உலகம் எங்கும் “ஆவதும் பெணணாலே அழிவதும் பெண்ணாலே” தான். இந்து புராணங்களில் கூட எல்லா அழிவிற்கும் பெண்களின் ஆர்வமும், சொல் பேச்சு கேளாமையும் தான் காரணமாக சொல்லப்படுகிறது. கடவுளுக்கு கீழ்ப்படியாமல் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியும் கனியை உண்டது தான் உலகின் ஆதி பாவம் (original sin) என்று அழைக்கப்படுகிறது. Isaac […] பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான். Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான். ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன். ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர். இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர். அதனால் பயமா கூட இருக்கலாம். சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க. அப்படின்னா அது இன்னும் மோசம் அப்பா கொன்னே போட்றுவாரு ன்னு இன்னும் கூட Isaac க்கு திகிலா இருக்கும். இஸ்மாயில் போனவுடன், ஐசக் வீட்டில் ஒரே குழந்தை, அவரது பெற்றோரின் வாழ்க்கை அவரைச் சுற்றி வந்தது. Isaac ஒருபோதும் எதையும் விரும்பவில்லை. அதனால் தான் பாருங்க 40 வயசு ஆகியும் எந்த பொண்ணையும் பார்க்காம பயத்துலயே இருந்து இருக்காரு. அப்பா கோவபட்டு பாலைவனத்தில் விட்டாலும் விடலாம் அல்லது கத்தியை தூக்கினாலும் தூக்கலாம் எதுக்கு வம்பு? இப்படி பயந்த பிள்ளையவே இருந்து இருக்காரு பாவம். சாரா இறந்த அப்புறம் தான் ஆபிரகாம் க்கு மகன் பற்றிய சிந்தனையே வருது. என்னடா இவன் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கானே என்று. உடனே வேலைக்காரனை கூப்பிட்டு கானான் நாட்டில் இருந்து பொண்ணு வேணாம் அவங்க எல்லாம் மோசமானவங்க (அவங்க இருக்கிறதே கானான் தேசம். அதனால் தான் Isaac லவ் பண்ணலையோ என்னமோ ஏற்கனவே வாய்க்கா தகராறு இதுல கானான் பொண்ணை கூட்டிட்டு வந்தா அவ்ளோதான் என்று நினைச்சு இருப்பான். பாவம் பயந்த புள்ள.) நீ போய் வடக்கு மெசொப்பொத்தேமியாவில் ஷேமின் சந்ததியினரில் இருந்து ஒரு பொண்ணை பார்த்து கூட்டிட்டு வா என்று சொல்றாரு. அப்படி அந்த வேலைக்காரன் போய் பார்த்து கூட்டிட்டு வந்த பொண்ணு தான் Rebekah. ஆபிரகாமின் சகோதரனின் பேத்தி ரெபெக்கா. வேலைக்காரன் போற வழி எல்லாம் Rebekah கிட்ட Isaac புகழ் பாடிகிட்டே போறான். ஐசக் ஒரு அடக்கமான (வழக்கமாக இதை ஒரு பொண்ணுக்கு தானே அந்த காலத்துல சொல்லுவாங்க. ஒருவேளை அப்படி இருக்குமோ?), லேசான நடத்தை உள்ள, அமைதியான மனிதர். சண்டையைத் தவிர்ப்பதற்காக அவர் எந்த அளவிற்கும் செல்வார் (ஆதி 26:18-25). அவர் ஒரு தியான மனிதர், விரைவான சிந்தனையாளர் அல்ல மாறாக அமைதியாகவும் ஒதுங்கியே இருப்பவர் (ஒரு வேளை பொண்ணுங்க தான் Isaac அ விரும்பலையோ என்னமோ) அப்புறம் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாதப்போ வழக்கமாக மனைவியின் பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தை பெற்று கொள்வார்கள் ஆனா மாதொருபாகன் காளி மாதிரி Isaac நினைத்து இருக்கலாம். அப்படியும் குழந்தை பிறக்காமல் போனால் என்ன செய்வது என்று? அல்லது நம்ம அம்மா சாரா Hager அ விரட்டி விட்ட மாதிரி Rebekah வும் செய்தால் என்ன ஆவது? முதல் குழந்தையை பாலைவனத்தில் கொண்டுவிடும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது? இப்படி எல்லாம் யோசித்து பயந்து இருக்கலாம். பயந்த புள்ள தானே நம்ம Isaac. சரி நம்ம prayer மட்டும் பண்ணுவோம் safe bet என்று முடிவு எடுத்து இருக்கலாம். Isaac எந்த அளவுக்கு பயந்த ஆளு அப்படின்னா அப்பா இறந்த பிறகு பஞ்சம் உண்டாயிற்று. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். ஈசாக்கின் மனைவியான Rebekah மிகவும் அழகானவள். அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் Rebekah தன் மனைவி என்று சொல்ல அஞ்சி, “அவள் என் சகோதரி” என்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக்கொள்வார்கள் என எண்ணினான். எப்படி பாருங்க? இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எப்படி துணிஞ்சு காதலிப்பாங்க? இல்ல இந்த மாதிரி ஆளை தான் எந்த பொண்ணு விரும்பும்? இந்த Rebekah pregnant ஆ இருந்தபோது கடவுள் அவகிட்ட நிறைய பேசி இருக்காரு. ஆனா இவ எதையும் Isaac கிட்ட சொல்லல. (ஆதி 25:23) ஐசக்கிடம் எதைப் பற்றியும் பேசுவது ஏன் அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது? அவன்கிட்ட சொல்றதும் ஒண்ணு தான் சொல்லாம இருகிறதும் ஒண்ணுதான் என்று நினைத்து இருக்கலாம். காதல்ல முக்கியமான விஷயம் communication. நல்லா பேச முடிந்த ஒரு ஆளை தானே பெண்கள் விரும்புவார்கள். ஆக தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும், தவறு செய்ய துணிச்சல் இருந்தும் தவறு செய்யாதவன் தான் நல்லவன் தவறு செய்ய வாய்போ அல்லது தவறு செய்ய தைரியம் இன்றி தவறு செய்யாமல் இருப்பவன் புனிதன் அல்ல. (“காதல் ஒன்றும் தவறு அல்ல”.) அகோரா (Agora) […] அகோரா, அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான பண்டைய போரை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம். அதன் மையத்தில் நான்காம்  நூற்றாண்டை சார்ந்த விஞ்ஞானி, கணிதவியலாளர், தத்துவவாதி, வானியலாளர் மற்றும் ஆசிரியராக இருந்த, எகிப்தில் மதிக்கப்படும் ஹைபதியா இருக்கிறார். ஹைபதியா வியாபார குடும்பத்தில் பிறந்தவர் . அவரது தந்தை தியோன் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார், அந்த நூலகத்தின் நோக்கம் உலகின் அனைத்து அறிவையும் சேகரிக்க வேண்டும் என்பது. அறிஞர்கள் பண்டைய உலகம் முழுவதிலுமிருந்து பயணம் செய்து, ஆராய்ச்சி செய்து கையெழுத்துப் பிரதிகளை வழங்கினர். இவைகள் 391 A.D. கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது, மேலும் கணக்கிட முடியாத இழப்பைச் சுற்றியுள்ள ஆண்டுகளில் “அகோரா”சந்தித்தது. படத்தின் தலைப்பு பண்டைய கிரேக்க நகர-மாநிலங்களில் உள்ள பொது மக்கள் கூடும் இடங்களுக்கான பெயரைக் குறிக்கிறது. நூலகம் அத்தகைய ஒரு அகோராவாக இருந்தது. கிரேக்க மற்றும் ரோமானிய மதங்களுக்கும் கிறிஸ்தவம் என்கிற புதிய மதத்திற்கும் இடையில் நடக்கும் மத சண்டை படத்தின் ஒரு முக்கிய புள்ளி. இரு தரப்பினரும் தங்கள் எதிரிகள் தீயவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளனர். ரத்தம் சிந்தப்படுகிறது. இந்த போர் நூலகத்தின் அழிவில் உச்சக்கட்டத்தை அடைகிறது. முடிந்தவரை ஹைபதியா நூல்களை காப்பாற்ற போராடுகிறாள். இன்று நம்மிடம் இருக்கும் அரிஸ்டாட்டில் மற்றும் கிரேக்க புத்தகங்களுக்கு காரணம் ஹைபதியாவாக இருக்கலாம். அவரது கண்டுபிடிப்பான , ஹைட்ரோமீட்டர், வளைகுடாவில் இன்று தண்ணீரில் இருந்து எண்ணெயை அவற்றின் குறிப்பிட்ட அடர்த்திகளால் வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தின் முக்கியமான கருப்பொருள்கள் – மத மோதல், அடிப்படைவாதம், அறிவியலின் மர்மங்கள், மக்கள் பயத்திலும், தப்பெண்ணத்திலும் வாழும்போது ஏற்படும் வன்முறை, மற்றும் பன்முகத்தன்மையை பேணுவதில் உள்ள சிரமம் – அவை இன்றைய சூழலிலும் இருக்கிறது. அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. Before Common Era (BCE)/Common Era (CE) மனிதனைப் போலவே, காலெண்டர்களும் உருமாறி கொண்டே இருக்கின்றன. ரோமன் காலண்டர் பின் ஜூலியன் காலண்டர் , தற்போது நாம் பயன்படுத்துவது 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XIII அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டர். சமீப காலமாக சில இடங்களில் நீங்கள் CE அல்லது BCE என்று வருடங்களை குறிப்பிடுவதை பார்த்து இருக்கலாம். அவை AD (anno Domini) மற்றும் BC (before Christ) என்பதின் புதிய வடிவம். CE (Common Era) மற்றும் BCE (Before Common Era). எளிமையாகச் சொன்னால், BCE (Before Common Era) என்பது கி.மு. BC (கிறிஸ்துவுக்கு முன்/Before Christ) இன் மதச்சார்பற்ற பதிப்பாகும். CE (Common Era) என்பது AD (ann Domini) இன் மதச்சார்பற்ற பதிப்பாகும், ann Domini பொருள் லத்தீன் மொழியில் “கர்த்தருடைய ஆண்டில்”. அறிவியல் துறைகளில் தற்போது BCE / CE வடிவமைப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர். BCE/ CE வடிவமைப்பின் பயன்பாடு 1708 ஆம் ஆண்டிற்கு முந்தைய கையெழுத்துப் பிரதிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது, எனவே இந்த அமைப்பு ஓரளவிற்கு பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. BCE/ CE வடிவமைப்பை 100 ஆண்டுகளுக்கும் மேலாக யூத கல்வியாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். BCE/ CE உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் BCE/ CE 1980 களில் இருந்து பல இடங்களில் பயன்பாட்டில் இருந்தபோதிலும், BC/AD தான் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்து தேசிய பாடத்திட்டம் புத்தகங்களில் BCE/ CE முறையை அமல்படுத்தியது ஆனால் பெருத்த எதிர்ப்பை சந்தித்தால் இந்த முறையை திரும்ப பெற்றது. X Y குரோமோசோம் […] குரோமோசோம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். பெண் என்றால் இரண்டு X குரோமோசோம் (XX) ஆண் என்றால் ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் (XY). ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு எடுப்பது ஆணிடம் இருந்து வரும் அந்த Y குரோமோசோம் தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். தெரியாத ஒன்று ஆதியில் வெறும் X குரோமோசோம் மட்டும் தான் இருந்தது. Y குரோமோசோம் பின்னர் X குரோமோசோமில் இருந்து உருவானது. அப்படின்னா முதலில் உருவானது பெண் தான் பெண்ணில் இருந்து உருவானவன் தான் ஆண். ஆதாம் தான் முதலில் வந்தான் என்கிற கதை வெறும் கதை தான்! Y குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இவை இரண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோசோம் களில் இருந்து “செக்ஸ்” குரோமோசோம்களாக பரிணமித்தன. இது முக்கியமானது, ஏனென்றால் பல உயிரினங்களுக்கு நம்மைப் போல ஒவ்வொரு பாலினத்திற்கும் ஒரு தனிப்பட்ட குரோமோசோம் இல்லை. சில உயிரினங்கள் சூழலின் அடிப்படையில் ஆண் அல்லது பெண்ணாகின்றன. கற்பனை செய்து பாருங்கள் மனிதனால் இடத்திற்கு ஏற்றபடி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற முடிந்தால் எப்படி இருக்கும்? X குரோமோசோம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது and பெண் வளர்ச்சியுடன் தொடர்பில்லாத பல மரபணுக்களைக் கொண்டுள்ளது. அதாவது பாலின வேறுபாடு க்கு மட்டும் அல்ல உயிர் வாழ தேவையான முக்கிய அம்சங்கள் X குரோமோசோம் இல் இருக்கின்றது. Y குரோமோசோம் அடிப்படையில் ஆண் பாலியல் உடற்கூறியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான மரபணுவை (SRY) வைத்திருக்கிறது. Y குரோமோசோம் இருந்தால், உங்களுக்கு ஒரு ஆண்குறி கிடைக்கும், அது இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு யோனி கிடைக்கும் (எளிமையாக சொல்வதென்றால் இவ்வளவு தான்). Y குரோமோசோம் X-குரோமோசோமை விட மிகச் சிறியது. இதில் பாலூட்டிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான சில மரபணுக்கள் இல்லை. Y குரோமோசோம் பெரும்பாலும் பாலிண்ட்ரோம் மரபணுக்களைக் கொண்டுள்ளது, அவைகளால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆதி பாவம்/முதல் பாவம் (original sin) […] ஏவாள் கதையில் எப்படி பாம்பு பேச்சை கேட்டு ஏவாள் அந்த பழத்தை தானும் உண்டு ஆதாமையும் உண்ண செய்தாள் என்று பார்த்தோம். அது தான் மனிதர்களின் ஆதி பாவம் அதாவது முதல் பாவம் (original sin). அதனால் தான் மனித இனம் சபிக்கபட்டு இருக்கிறது. அவங்க ரெண்டு பேரும் பழத்தை சாப்பிட்டதும் (ஞானப் பழம்! எல்லா மதத்திலும் இப்படி ஒரு பழம் வருது.) அறிவு வந்துருச்சு. உடனே ஆடை இல்லாமல் இருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கி மறைந்து கொள்கிறார்கள்.  இப்போ எல்லாம் அறிந்த கடவுள் வந்து ஆதாமை காணோம் என்று தேடுறார் சும்மாசுக்கும் தான்! எப்படி Zeus மனிதர்களை தண்டிக்கணும் என்று master plan போட்டு Pandora வை உருவாக்கி அவள் மூலம் தீயவைகளை பூமியில் விட்டு ஆனால் பழியை Pandora மேல் போட்டாரோ அதே போல. எல்லாம் அறிந்த கடவுளுக்கு நடந்தது என்ன என்று தெரியாமல் இருக்குமா? அவர்தான் ஆதாமை, ஏவாளை, நன்மை தீமை அறியும் கனியை, ஏதேன் தோட்டத்தை, அந்த பாம்பை எல்லாம் உருவாக்கியவர். அப்போ நடந்ததிற்கு யார் காரணம்? அந்த பாம்பா? ஏவாள் ஆ? இல்ல கடவுளா?  கடவுளுக்கு தெரியாது என்றே வைத்து கொண்டால் சர்வ வல்லமையும் பொருந்தியவர் என்பது அடிபட்டு போகுது. இல்ல தெரிஞ்சே நம்மள deal la ல விட்டாரு அப்படின்னா கடவுள் அன்பானவர் அப்படின்றது அடிபட்டு போகுது. நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ  அப்படினு கடவுள் ஆதாமைப் பார்த்து கேட்கிறார். இந்த இடத்தில ஒரு சந்தேகம். கடவுள் சாயல்ல தான் மனிதனை கடவுள் படைத்து இருக்கிறார். அப்போ கடவுள் ஆடை இல்லாமல் தான் ஆதாம் ஏவாள் முன்னாடி தோன்றினாரா? ஆதாம் ஏவாள் ஆடை இல்லாமல் இருந்தபோது கண்டிப்பாக இவரும் ஆடை அணிந்து இருக்க மாட்டார் என்று வைத்து கொள்வோம். (ஏன் என்றால் கடவுள் மட்டும் ஆடை அணிந்து, ஆதாம் ஏவாளை ஆடை இல்லாமல் அவர் உலவ விட்டு இருந்தால்… கடவுளை பற்றி என்ன நினைக்க தோன்றுகிறது? உடனே ஆதாம் ஏவாள் கடவுளுக்கு குழந்தை மாதிரி என்று சொல்ல வேண்டாம்.) அவர்கள் இருவரும் அத்தி இலையில் ஆடை தைத்து அணிந்து கொண்டபின் கடவுளும் அத்தி இலையில் ஆடை அணிந்து கொண்டாரா? அல்லது ஆடை இல்லாமலே அவர்கள் முன் தோன்றினாரா? கடவுளும் ஆடை அணிய ஆரம்பித்தார் என்று வைத்து கொண்டால் மனிதன் இலையில் இருந்து துணிக்கு மாறும்போது அவரும் மாறி கொண்டாரா அல்லது இலை போதும் என்று இருந்து விட்டாரா? இல்லை துணிக்கு மாறி இருந்தால் அடுத்து அடுத்து மனிதன் ஃபேஷன் மாறி கொண்டே இருக்கும்போது அவரும் மாறி கொண்டே இருப்பாரா? (இல்லை நிரந்தரமா வெள்ளை அங்கி சிவப்பு துப்பட்டா போதும் என்று நினைத்தால் அந்த பேஷன் நிலைக்கு அவர் எப்படி வந்தார்? அது போதும் என்றால் அதன் முக்கியத்துவம் என்ன? அவரது உடை பருத்தியா? பட்டா? கம்பளியா? தைத்தவர் யார்? ஏன் மனிதர்களுக்கு அதை பற்றி சொல்லவில்லை?) அடுத்து கடவுள் பாம்பை பார்த்து இதுக்கு தண்டனையா நீ இனிமே வயிற்றினால் நகர்ந்து, (அப்படியானால் அதற்கு முன் பாம்பு எப்படி போய் இருக்கும்? வயிற்றில் ஊர்ந்து செல்லும் ஒரே அல்லது முதல் உயிரினம் பாம்பு அல்ல, எனவே வயிற்றில் ஊர்ந்து செல்வதற்காக கடவுளின் சாபத்தின் முக்கியத்துவம் என்ன? ) உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்று சபித்தார். பாம்பு மண்ணையா சாப்பிடுது? ஏன் மண்ணை சாப்பிட வேண்டும்? உயிரோடு இருப்பதற்கு யாரும் மண்ணை சாப்பிடுவதில்லை. பல விலங்குகள் கொஞ்சம் மண்ணை உண்கின்றன. ஆனால் நமக்குத் தெரிந்த எந்த விலங்குகளும் மண்ணை மட்டுமே உண்டு உயிர் வாழ்வது இல்லை. ஏவாளை முட்டாளாக்க சாத்தான் பாம்பின் வடிவத்தைப் பயன்படுத்தினால், கடவுள் ஏன் பாம்பை சபித்தார்?  Aphrodite […] Aphrodite க்கு அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் கண்டிப்பாக தெரிந்த கிரேக்க கடவுள் தான். காதல், அழகு, ஆசை, மற்றும் கவர்ச்சியின் கடவுள். ஆண் பெண் இருவரையும் தன் அழகால் மயக்க  Aphrodite ஆல்  முடியும்.  அதுமட்டுமல்ல வணிகம், போர், அரசியலிலும் கூட Aphrodite  இன் பங்கு உண்டு. கடலில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறாள். கிரேக்க கடவுளான Aphrodite இன் ரோமன் version தான் Venus. Zeus ஓட அப்பா Cronus அவரோட அப்பா  Uranus (Father Sky) கிட்ட இருந்து ஆட்சியை பறிக்க அவரை castrate பண்ணும் போது அவரோட ஆணுறுப்பு கடல் ல போய் விழுது. அந்த கடல்ல  இருந்து நுரையாய் பிறந்தவள் தான் Aphrodite. இது ஒரு கதை. இன்னொரு கதை ல Zeus க்கும் Dione க்கும் பிறந்தவள் Aphrodite. முதல் கதையை சொன்னது  Hesiod இரண்டாவது கதையை சொன்னது Homer. இப்படி ரெண்டு கதை இருந்தா நல்லா இல்லையே என்று மக்கள் feel பண்ணப்போ அதை தீர்த்து வைக்க Plato ஒரு வழி சொன்னாரு. மொத்தம் ரெண்டு Aphrodite ஒண்ணு ‘Heavenly Aphrodite’ இன்னொண்ணு ‘Pandemic Aphrodite’. Aphrodite க்கும் சுமேரியாவின் Inanna (Ishtar) விற்கும் (கில்கமெஷ் கதையில் பார்த்து இருப்பீர்கள்) நிறைய ஒற்றுமைகள் இருக்கு. Aphrodite கதையே கூட  Inanna (Ishtar) கதையில் இருந்து வந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  சரி இப்போ Aphrodite பற்றிய அந்த சுவாரசியமான விஷயத்துக்கு வருவோம். Troy படம் எல்லாரும் பார்த்து இருப்பீங்க. பிராட் பிட் நடித்த  Troy படம் Homer ஓட காவியம் ‘The Iliad’ base பண்ணி எடுத்தது. […] இதுல வர  Trojan War க்கு காரண கர்த்தாவே நம்ம Aphrodite தான். Peleus மற்றும் Thetis கடவுள்களுக்கு திருமணம் நடக்கும் போது அந்த விழாவில் , Eris (கலகத்தின் கடவுள். நம்ம ஊர் நாரதர் மாதிரி!) ஒரு தங்க ஆப்பிளை (எல்லா கதைகளிலும் ஆப்பிள் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறது!) எல்லாருக்கும் காண்பித்து அழகான ஒரு பெண் கடவுள் இதை எடுத்துக்கொள்ளலாம் என்று கலகத்திற்கு விதையை தூவுகிறாள்.  Hera, Athena, மற்றும் Aphrodite மூன்று பெண் கடவுள்களுக்கும் அந்த ஆப்பிளின் மேல் ஆசை வருகிறது. சண்டையும் வருகிறது. (சரஸ்வதி சபதம் போல!) Zeus இந்த சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண விழாவிற்கு வருகை தந்த Troy நாட்டு இளவரசன் Paris ஐ கேட்கிறார். Paris ஐ கைக்குள்ள போட மூன்று தெய்வங்களும் அவனுக்கு ஒரு offer குடுக்க தயாரா இருக்காங்க. Athena அவனுக்கு வலிமையையும், யாராலும் அவனை வெல்ல முடியாத தன்மையையும் தருவதாக சொல்கிறாள். Hera அவனுக்கு Asia மற்றும் Europe முழுவதும் தருவதாக சொல்கிறாள். Aphrodite உலகிலேயே அழகான பெண்ணை அவனுக்கு தருவதாக சொல்கிறாள். இந்த dealing  அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. Paris தங்க ஆப்பிளை எடுத்து Aphrodite க்கு தருகிறான். இப்போ உலகத்துலேயே அழகான பெண் யாரு என்று பார்த்தால் Sparta வை ஆண்டு கொண்டு இருந்த Menelaos இன் மனைவி Helen,  Helen க்கு திருமணம் ஆகி இருந்தாலும் Paris க்கு வாக்கு குடுத்து விட்டதால் Paris மேல் Helen க்கு காதல் வர செய்கிறாள் Aphrodite.  Paris, Helen ஐ கடத்தி சென்றதும் அவளை மீட்க  Menelaos சென்றதாலும் உருவானது தான் Trojan போர். கணினியில் Trojan Horse என்று வைரஸ் க்கு சொல்வார்கள். அதன் பெயர் காரணமும் இதுதான். Troy நாடு மிக வலிமையான கோட்டையை கொண்டது. அதை உடைத்து கொண்டு உள்ளே செல்வது சாத்தியமில்லாததாக இருந்தது. […] பல நாள் போர் முடிவில் Spartan கள் இனி எங்களால் போரிட முடியாது. உங்களை வெல்ல முடியாது என்பதற்கு அடையாளமாக ஒரு மிகப்பெரிய மரக்குதிரையை பரிசாக தருகிறோம் என்று ஒரு மரக்குதிரையை கோட்டை வாசலில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். Trojan கள் வெற்றி களிப்பில் அந்த மரக்குதிரையை ஆராயாமல் கோட்டைக்குள் கொண்டு செல்வார்கள். […] கோட்டைக்குள் இரவில் மரக்குதிரைக்குள் ஒளிந்து இருந்த Spartan கள் வெளியில் வந்து Troy நகரத்தையே சூறையாடிவிடுவார்கள்.  அது போலதான் Trojan horse என்னும் virus  ஒரு  legitimate software. போலவே  பயனாளர்களின் கணினியில் புகுந்துவிடும்.  மொத்தத்தில் Troy நகரம் அழிய காரணமாக இருந்தது Aphrodite தான்.  பென்சிலின் (Penicillin) […] வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த உலகின் போக்கையே மாற்றியவை. அவற்றுள் மிக முக்கியமானது பென்சிலின் (penicillin) கண்டுபிடிப்பு!  Penicillin கண்டுபிடிப்பால் அதுவரை மரணமடையக்கூடிய தொற்றுக்கள் ஆன bacterial endocarditis, பாக்டீரியா மூளைக்காய்ச்சல் மற்றும் pneumococcal pneumonia போன்றவை எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்களாக மாறின. இரண்டாம் உலகப் போரில்  பென்சிலின் பங்கு அளப்பரியது. லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றதை மாற்றிய பெருமை penicillin ஐ தான் சாரும்.  பென்சிலின் இல்லாமல் உலகம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை.   1930 களில் நிமோகாக்கால் நிமோனியாவுக்கு ஆரம்ப சிகிச்சைகளாக ஆன்டிசெரா மற்றும் சல்போனமைடுகள் இருந்தன, penicillin கண்டுபிடிக்கபட்டதும் இந்த சிகிச்சை பயன்பாடு நிறுத்தப்பட்டது, மேலும் அனைவரும் பென்சிலின் பயன்படுத்தத் தொடங்கினர். […] Penicillin கண்டுபிடிப்பு ஸ்ட்ரெப்டோமைசின், அமினோகிளைகோசைடுகள், டெட்ராசைக்ளின் போன்ற புதிய antibiotic கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. Antibiotics இல்லாமல் இன்று எந்த தொற்றும் குணமடைவது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். எந்தவித randomized, controlled trial உம் இல்லாமல் பென்சிலின், நிமோகாக்கால் நிமோனியா மற்றும் பாக்டீரியா எண்டோகார்டிடிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்த பட்டது என்பது சுவாரஸ்யமான ஒரு தகவல், ஏனென்றால் சிகிச்சையில் உள்ள வேறுபாடு தெளிவாகத் தெரிந்ததால், கட்டுப்பாட்டு சோதனையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போனது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த penicillin கண்டுபிடிப்பு ஒரு தற்செயல் நிகழ்வு என்றால் நம்ப முடிகிறதா? […] 1928 இல் அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கால் (Sir Alexander Fleming) உயிர் காக்கும் தோழன் என்று போற்றப்படும் பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வகத்தை சுத்தமாக பராமரிப்பதில் அவ்வளவு ஈடுபாடு இல்லாதவராம் பிளெமிங். இரண்டு வார விடுமுறையிலிருந்து தனது லண்டன் ஆய்வகத்திற்கு வந்த பிறகு, சரிவர சுத்தம் செய்யாத Agar plateல் தானாக வளர்ந்த பூஞ்சையைச் சுற்றி ஒரு மண்டலம் இருப்பதை அவர் கவனித்தார். இதில் அவர் வளர்க்க நினைத்த பாக்டீரியா (Staphylococci) வளரவில்லை. அதை பரிசோதித்த பிறகு, அது பெனிசிலியம் நொடேடம்  (Penicillium notatum) பூஞ்சை என்பதை அவர் தெரிந்து கொண்டார். இப்பெனிசிலின் கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்ததுதான், ஆனால் பிளெமிங்கின் நுணுகி ஆராயும் தன்மையே இதற்குக் காரணம் எனில் மிகையன்று.  […] ருமாட்டிக் காய்ச்சல் (Rheumatic fever), சிபிலிஸ் (Syphilis), டெட்டனஸ் (Tetanus), மூளை உறைக் காய்ச்சல் போன்றவை கடுமையான நோய்கள். அவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்கள் வளர ‘டிரான்ஸ்பெப்டிடேஸ் (Transpeptidase)’ என்னும் என்சைம் உதவுகிறது. இந்த என்சைம்களை அழிக்கும் அற்புதச் செயலைத்தான் பெனிசிலின் செய்கிறது! 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் / உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலை எடுத்தால் அதில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் பெயர் கண்டிப்பாக இருக்கும். கடந்த ஆயிரமாண்டு காலங்களில் சிறந்த கண்டுபிடிப்புகளை பட்டியல் எடுத்தால் அதில் Penicillin கண்டுபிடிப்பு கண்டிப்பாக இருக்கும். காலப்பயணம் (Time travel) […] எனக்கு பொதுவாக time travel என்பதில் நம்பிக்கை இல்லை. அதற்கான சாத்திய கூறுகள் உண்டு என்று தோன்றவில்லை. இயற்பியலின் அடிப்படை causality என்பதை time travel மீறுவதாக நினைக்கிறேன். சரி விஷயத்துக்கு வருவோம். Time travel படம் நாம் நிறைய பார்த்திருப்போம், கதைகள் படித்து இருப்போம். இதில் சொல்லப்படும் விஷயங்களை பார்க்கலாம். Time travel ல இருக்கும் சாத்தியக்கூறுகள் என்னவெல்லாம் என்று முதலில் பார்ப்போம்: 1. இறந்த காலத்தை மாற்ற முடியும் அதன் மூலம் எதிர் காலமும் மாறும். 2. இறந்தகாலம், எதிர்காலம் இரண்டும் மாறாதது. நாம் கால பயணம் மூலம் எடுக்கும் முடிவுகள் தான் நம்முடைய எதிர்காலம் இறந்தகாலம் எல்லாவற்றிற்கும் காரணம். 3. நாம் இறந்த காலம் எதிர்காலம்  ஆகியவற்றுக்கு போகும்போது அங்கு நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.  அடுத்து paradox க்கள் அதாவது முரண்கள் கால பயணத்தில் நிறைய முரண்கள் இருக்கின்றன. அதாவது ஒரு கதையில் லாஜிக் இடிக்குது என்று சொல்லுவோம் அல்லவா அது போல காலப்பயணம் இருப்பதாக வைத்து கொண்டால் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அவைதான் Time travel paradox. 1. Groundhog paradox (time loop paradox): Groundhog day படத்தை தழுவி இந்த பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஹீரோ time loopல் சிக்கி அதே நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் சந்திக்கிறார். Time loop ஐ  தகர்ப்பதற்காக வித்தியாசமாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். Doctor Strange படத்தில் Strange,  Dormammu வை வீழ்த்த ஒரு time loop ஐ உருவாக்குவார். Dormammu வால் அந்த time loopல் இருந்து வெளி வர முடியாமல் அங்கேயே சிக்கி கொள்ளும். 2. Predestination paradox: அதாவது நீங்கள் இறந்த காலத்திற்கு சென்று எதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த செயல் தான் நீங்கள் மாற்ற வேண்டும் என்று நினைப்பதற்கான காரணத்தையே உருவாக்குகிறது. உதாரணமாக உங்கள் நண்பர் ஒரு கார் விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார். அவரை காப்பற்ற வேண்டி அந்த விபத்து நடந்த நேரத்திற்கு அவரை எச்சரிக்கை செய்ய காரில் வேகமாக செல்கிறீர்கள். கடைசியில் பார்த்தால் உங்கள் கார் மோதிதான் அவர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார். 3. Bootstrap paradox: மிகவும் பிரபலமான paradox. இந்த வார்தைக்கான அர்த்தம் நமது ஷூ லேசை வைத்து நம்மையே நாம் தூக்க முடியுமா? முடியாது! இதுதான் இதில் முரண்பாடு. Terminator படத்தில், Skynet என்னும் AI John Connor ஐ கொல்வதற்காக கடந்த காலத்திற்கு செல்கிறது. அங்கு அதனுடைய விடுப்பட்ட பாகத்தில் இருந்து reverse engineering மூலம் எதிர்காலத்தில் Skynet என்னும் AI ஐ மனிதன் உருவாக்குகிறான். அதாவது Skynet இருப்பதால்தான் Skynet ஐ  உருவாக்க முடிகிறது. Skynet ஐ உருவாக்கியதால் தான் Skynet இருக்கிறது. 4. Grandfather paradox: ஒரு நபர் காலப்பயணம் செய்து தனது தாத்தா, தனது பாட்டியை சந்திக்கும் முன் தாத்தாவை தீர்த்துக்கட்டி விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, பாட்டியை சந்திக்கும் முன்னரே தாத்தா கொல்லப்படுகிறார், அவர் இல்லாமல் அவரது மகன் (நபரின் தந்தை) பிறந்திருக்க முடியாது, பின்னர் கால பயணம் செய்த நபரும் பிறந்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் கால பயணம் செய்த நபர் எப்படி தோன்றினார்? இந்த முரண்பாடு தான் grandfather paradox. Back to the Future  படத்தில்  time traveler Marty McFly கடந்த காலத்திற்கு செல்லும் போது அவனது தாயும் தந்தையும் சந்திக்கும் தருணத்தை நிறுத்தி விடுகிறார். இதன் மூலம் Marty McFly பிறப்பு கேள்விக்குரியது ஆகிறது. Marty McFly பிறக்கவில்லை என்றால் எப்படி வந்து இந்த சந்திப்பை தடுக்க முடியும்? இது தான் grandfather paradox. 5. Let’s kill hitler paradox: ஹிட்லரைக் கொல்வதில் அதே grandfather paradox முரண்பாடு ஏற்படுகிறது. நீங்கள் குழந்தை ஹிட்லரை ஒழித்து நாஜிக்களின் எழுச்சியைத் தடுத்தால், நீங்கள் இரண்டாம் உலகப் போர் ஏற்படாத ஒரு உலகத்தை உருவாக்குகிறீர்கள், இதனால் நீங்கள் காலத்திற்குத் திரும்புவதற்கு எந்த காரணமும் இல்லை. நீங்கள் கடந்த காலத்திற்கு போகாத காரணத்தால், ஹிட்லர் சாகாமல் நாஜிக்களின் எழுச்சியை உருவாக்குகிறார், நாம் தொடங்கிய இடத்திற்குத் திரும்பிவிட்டோம். இதுதான் Let’s kill hitler paradox. 6. Causal paradox: ஒரு எதிர்கால நிகழ்வு கடந்த நிகழ்வுக்கு காரணமாக இருக்கும்போது நிகழ்கிறது, இது எதிர்கால  காரணமாகும். இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைவெளி உள்ளன, ஆனால் அவற்றின் தோற்றத்தை தீர்மானிக்க முடியாது. புரியலையா?? இப்போ predestination படத்தை எடுத்துக்கோங்க அதுல heroine ஒருவனை காதலித்து ஏமாந்து பின் அவளது வாழ்கை திசை மாறி போகிறது அவள் ஆணாக மாறிவிடுகிறாள். ஆணாக மாறியபின் heroine அவளது காதலனை சந்திக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த போகிறாள் ஆனால் இவள் தான் அவளின் காதலனே. தடுத்து நிறுத்த போனதால் தான் இவளை அவள் சந்திக்கிறாள். சந்திக்காமல் இருந்தால் தடுத்து நிறுத்த வர மாட்டாள். இதில் எது ஆரம்ப புள்ளி என்று கண்டுபிடிப்பது கடினம். எந்த நிகழ்விற்கு எந்த நிகழ்வு காரணகர்த்தா என்று கண்டுபிடிப்பது சிக்கலாக இருக்கிறது. 7. Fermi paradox: அதாவது கால பயணம் என்பது சாத்தியமான ஒன்றாக இருந்தால் எதிர்காலத்தில் இருந்து time travelerகள் நம் காலத்திற்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு கால பயணியை நாம் சந்திக்கவில்லை. அதனால் கால பயணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றாகிறது. 8. Newcomb’s paradox: காலபயணம் சாத்தியம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எதிர்காலத்திற்கு சென்று பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு lottery ticket வாங்கி பெரும் பணக்காரர் ஆகிறீர்கள். பின் நீங்கள் கடந்த காலத்திற்கு வந்து அந்த lottery ticket வாங்கும் தருணத்திற்கு வருகிறீர்கள். அப்போது உங்கள் முன் பல தேர்வுகள் இருந்தும் கூட நீங்கள் ஒரு குறிப்பிட்ட lottery ticket ஐ மட்டுமே தேர்வு செய்வீர்கள். இது free will எனப்படும் உங்கள் தேர்வு சுதந்திரத்தை பாதிக்கிறது. சுருங்க சொன்னால் எதிர்காலம் என்று ஒன்று நாம் பார்ப்பதற்கு முன்பாகவே தீர்மானிக்க பட்டு இருந்தால் அது தேர்வு சுதந்திரத்தை பாதிக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் வாங்கிய lottery ticket க்கு பரிசு விழவில்லை ஆனால் எந்த ticket க்கு பரிசு விழும் என்பதை பார்த்துவிட்டீர்கள். பின் கடந்து காலத்திற்கு வந்து உங்கள் தேர்வை நீங்கள் மாற்றினாலும் அது உங்கள் தேர்வு சுதந்திரத்தை பாதிக்கிறதாக தான் இருக்கும். இதுதான் Newcomb’s paradox. காலப் பயணம் சரியான கணிப்புகளைச் செய்வதற்கான ஒரு வழிமுறையாக இருந்தால், சரியான கணிப்புகள் தோன்றும் சுதந்திர விருப்பத்திற்கு (free will) முரணானது, ஏனெனில் வெளிப்படையாக சுதந்திர விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பது இப்போது  கால பயணம் செய்பவருக்கு ஏற்கனவே தெரிந்த முடிவுகள் ஆகிவிடுகின்றன. Rhonda Byrne’s The Secret (விமர்சனம் ) […] எந்த புத்தகத்திற்கும் நான் இதுவரை விமர்சனம் எழுதியதில்லை. நல்லா இருக்கு என்றால், நல்லா இருக்கு கண்டிப்பா படிங்க. நல்லா இல்லை என்றால் எதுவும் சொல்லாமல் கடந்து விடுவேன். ஆனால் இந்த புத்தகத்திற்கு எழுத வேண்டும் என்று தோன்றியது காரணம் அது முன்வைக்கும் போலி அறிவியலுக்காக. மதத்தை விடவும் ஆபத்தானது இந்த போலி அறிவியல். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை தோலுரிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. என்னை கேட்டால் most overrated  book என்றால் அது  Rhonda Byrne’s The Secret  book தான். இந்த  Rhonda Byrne’s The Secret  ஆரம்ப பக்கம் அட்டகாசமா இருந்தது அதாவது என்னமோ சொல்ல போறாங்க அப்படிங்கற மாதிரி பெரிய build up குடுத்து  கடைசில “நல்லது நினைச்சா நல்லது நடக்கும்” என்கிற அவ்வையார் காலத்து பழமொழியை, விக்ஸ் அப்படின்றத தான் சுத்தி சுத்தி எழுதி இருக்கேன் range க்கு சொல்லி இருக்கு இந்த புத்தகம். அவ்வப்போது சில self-help அதாவது சுய முன்னேற்ற புத்தகங்கள் வெளிவருவதும், கல்லா கட்டுவதும், லட்சக்கணக்கான வாசகர்கள் அதை படிப்பதும் வாங்கி அலமாரியில் வைத்து அழகு பார்ப்பதும் நடக்க கூடிய ஒன்றுதான். Napoleon Hill இன் Think and Grow Rich, Norman Vincent Peale இன் The Power of Positive Thinking, Tony Robbins  இன்  Unleash the Giant Within கடைசியாக இப்போது  Rhonda Byrne’s The Secret, இந்த சுய முன்னேற்ற புத்தகங்களில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைப்பது தான். பாசிட்டிவ் திங்கிங், லட்சியம் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள், ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுங்கள், விமர்சனம் மற்றும் தாழ்வு மனப்பான்மையை தவிர்த்திடுங்கள், எதை நோக்கி செல்ல வேண்டுமோ அதையே ஒரு தவம் போல செய்யுங்கள் என்று அதே மாவு தான். அதை வைத்து இட்லி, தோசை என்று வித விதமாக சுடுகிறார்கள். என்ன காலத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாறுதல்கள் இருக்கும், புதிதாக வந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை புகுத்தி இருப்பார்கள்.  Byrne இன் “The Secret” தற்போதைய social media/smartphone யுகத்தில் நீ தான் உலகத்தில் முதன்மையானவன், உன்னை சுற்றி தான் உலகமே இயங்குகிறது என்கிற தாற்பரியத்தை எடுத்துரைக்கிறது. Norman Vincent Peale புத்தகத்திலாவது எதோ சில நல்ல அறிவுரைகள், எப்படி திட்டமிடலாம் செயல்படுத்தலாம் என்பது போன்று இருக்கும். இதில் அதுவுமில்லை. சரி “The Secret”  சொல்லும் அந்த ரகசியம் என்ன? “law of attraction” ஆம்! அதாவது நாம் எதை நினைக்கிறோமோ அது நடக்குமாம். இதெல்லாம் ஆகாது நான் எக்ஸாமில் fail ஆகிவிடுவேன் என்று நினைத்தால் கட்டாயம் fail ஆகிவிடுவோம் ஆனால் நான் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருவேன் என்று நினைத்தால் கண்டிப்பாக முதல் மாணவியாக வருவோமாம். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தமிழாசிரியர் சொல்லுவார் வீட்டில் கண்ணில் படும் இடத்தில் எல்லாம் state first state first என்று எழுதி வைக்க வேண்டுமாம் தூங்கி விழித்ததும் அதை தான் முதலில் பார்க்க வேண்டும், பையில் பென்சில் பாக்ஸில் எல்லாவற்றிலும் எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுவார் நாங்களும் நாடி நரம்பு புடைக்க எல்லா இடத்திலும் எழுதி வைத்தோம் ஆனால் ஒருத்தர் கூட state first வரவில்லை.  19ஆம் நூற்றாண்டில் Phineas Quimby என்பவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அப்போது சிகிச்சை இல்லாத காரணத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்த அவர். வலியை மறக்க குதிரை சவாரி செய்வார். அந்த நேரத்தில் அவருக்கு சுத்தமாக வலி தெரியாது. இதை வைத்து மூளை விருப்பமான காரியத்தில் ஈடுபடும்போது எப்படி வலி தெரிவது இல்லை என்று ஆராய்ந்து அவருக்கு தெரிந்தவற்றை சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அதுதான் இந்த “Law of Attraction” என்கிற கட்டுக்கதை பிறக்க ஆரம்பம். அதை மையமாக வைத்து 1877 இல் ரஸ்சியாவில் Helena Blavatsky, என்பவர் பிரபலப்படுத்தியது தான் “Law of Attraction” பிறகு இதை மையமாக வைத்து பலர் பல சுய முன்னேற்ற புத்தகங்களை எழுதி தள்ளி இருக்கிறார்கள். Norman Vincent Peale போன்றவர் இந்த “Law of Attraction” பற்றி கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தாலும்  Byrne சும்மா energy,  frequency, உன் மண்டை ஒரு tower,  cosmos என்று சகட்டு மேனிக்கு அடித்துவிட்டு இருக்கிறார். 26 ஆம் பக்கத்தில் quantum என்ற வார்த்தையை பார்த்ததுமே லேசாக கண்ணை கட்டியது. யாராவது physics அ வைத்து மனம் எப்படி வேலை செய்கிறது என்று சொல்கிறேன் என்று ஆரம்பித்தால், அப்படியே திரும்பி எதிர் பக்கமா ஓடிருங்க. மனசு எப்படி வேலை செய்கிறது மூளை எப்படி வேலை செய்கிறது என்று எல்லாம் விளக்க “psychology” மற்றும் “neuroscience” துறைகள் இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் Quantum physics உள்ளே எப்படி வந்தது என்று புரியவில்லை. இந்த NASA வே சொல்லியது, சித்தர் சொல்லி இருக்கிறார் வகையறாவில் new admission quantum physics போல. எல்லாவற்றையும் quantum physics வைத்து விளக்குகிறார்கள். இன்னும் cooking show ல மட்டும் தான் இந்த மீன் குழம்பு எப்படி வைப்பது என்று Quantum physics இல் இருக்கிறது என்று சொல்லவில்லை. சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. Byrne அவருக்கு தெரிந்த pseudoscientific jargon எல்லாம் போட்டு ஒரு அவியல் வைத்து இருக்கிறார். சரி எனக்கு தெரிந்த ஒரு jargon அ போடுவோம். இது தான் “illusion of knowledge,” social scientists என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு விஷயத்தை பற்றி நமக்கு அறை குறையாக தெரியும்போது அதை பற்றி பேசி பேசி நமக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது போன்ற ஒரு எண்ணம் நமக்கே வந்து விடும் ஆனால் நமக்கு உண்மையில் எதுவும் தெரியாது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு Elizabeth Holmes அந்த கதையை அப்புறமா சொல்றேன். நீங்கள் கடனைப் பற்றி கவலைப்பட்டு கொண்டே இருந்தால் “என்னால் கடனை அடைக்க முடியாது” என்று நீங்களே சொல்லிக் கொண்டால், பிரபஞ்சம் அதற்கு ஏற்ற மாதிரி நடக்கும், நீங்கள் எப்போதும் ஏழையாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் பணக்காரர் மற்றும் வெற்றிகரமானவர் என்று நீங்கள் நம்பினால், பிரபஞ்சம் இந்த vibrationக்கு பதிலளிக்கும் நீங்கள் விரும்பும் செல்வத்தையும் வெற்றியையும் உங்களுக்கு வழங்கும். ரொம்ப சுலபமாக இருக்கிறது அல்லவா. நாம ரொம்ப குண்டா இருக்கோம் ஒல்லியா ஆகவே மாட்டோம் என்று நினைத்தால், நீங்கள் எப்போதும் ஒல்லி ஆக மாட்டீர்கள், ஏனென்றால் பிரபஞ்சம் உங்கள் எண்ணத்தை போல உங்களை குண்டாகவே வைத்திருக்கும். நீங்கள் அழகானவர் என்று நீங்கள் நம்பினால், பிரபஞ்சம் magic மாதிரி உங்களை தடால் என்று அழகாக மாற்றி விடும். நீங்கள் gym க்கு போகாமலே 6 பேக்ஸ் வைத்து கொள்ளலாம் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், நான் அழகு எனக்கு 6 பேக்ஸ் இருக்கு என்று ஆணித்தரமாக நம்ப வேண்டியது மட்டுமே. அதிக எடை obese patients க்கு Byrne சொல்லும் அறிவுரை நம்ம எடையை நாம மறந்திடனுமாம் எடை அதாகவே குறைந்து விடுமாம். ஹீலர் பாஸ்கர் சொல்லும் சக்கரை வியாதி எல்லாம் ஒண்ணுமே இல்ல வகையறா. சரி இந்த புத்தகத்திலேயே நிறைய பேர் இது வேலை செய்கிறது என் வாழ்வில் இதை சாதித்தேன் அதை சாதித்தேன் என்று கூறுகிறார்கள். எப்படி இது வேலை செய்கிறது என்று பார்போம். ‘Confirmation bias’ என்று ஒரு psychological concept  இருக்கிறது. நம்மை சுற்றி ஒரு நாளில் பல விஷயங்கள் நடக்கும் அதை எல்லாவற்றையும் கவனிப்பது என்பது ஒரு சாதாரண மனிதனால் முடியாத காரியம். நமக்கு எது தேவையோ அதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். உதாரணமாக சொல்கிறேன். ஒரு நாள் இரவு தூத்துக்குடியில் இருந்து பாளையம்கோட்டைக்கு காரில் போய்க்கொண்டு இருந்தோம். Headlight திடீர்னு போய்டுச்சு என்ன செய்ய என்று தடுமாறி இருட்டில் மெல்ல வண்டியை  உருட்டி கொண்டு வரும்போது, எங்களை overtake பண்ணி இன்னொரு கார் எங்கள் முன்னாடி போனது அந்த காரில் இருந்து வரும் வெளிச்சத்தில் நாங்கள் அதன் பின்னாடியே வந்து ஊர் சென்று சேர்ந்து விட்டோம். அந்த கார் நாங்கள் பின்தொடர வசதியாக எங்கள் வேகத்திற்கு ஈடுகொடுத்து மெல்ல சென்று கொண்டு இருந்தது. காரின் பின்னாடி “என் சமூகம் உன் முன்பாக செல்லும்” என்கிற Bible வசனம். இதை பார்த்ததும் என் கணவர் புல்லரித்து போய் விட்டார். பார்த்தாயா கர்த்தர் நமக்காகவே அனுப்பி இருக்கிறார் என்று. இதுதான் confirmation bias. தூத்துக்குடியிலும் சரி palayamkottai யிலும் சரி கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகம். எல்லா வண்டியிலும் இந்த வசனம் தான் முக்கால்வாசி எழுதி இருக்கும். கண்டிப்பாக நீங்கள் எப்போது சென்றாலும் ஒரு வண்டி இந்த வசனத்துடன் உங்களை தாண்டி செல்வது நிச்சயம் நாம் கவனித்து இருக்க மாட்டோம் அவ்வளவு தான். இன்று எப்படியாவது ஊர் போய் சென்று சேர வேண்டும் என்ற பயத்தில் சுற்றி நடக்கும் அனைத்திலும் நாம் கவனம் இருக்கிறது. இதை எல்லாம் நான் எடுத்து சொன்னபோது என் கணவர் ஏற்று கொள்ளவில்லை பின் அதற்கு அடுத்த முறை செல்லும்போதெல்லாம் நான் கடந்து செல்லும் வண்டிகளின் பின்னாடி பார்ப்பேன் அதில் இந்த வசனம் இருக்கும் வண்டிகளை இவருக்கு சுட்டி காட்டுவேன். ஒவ்வொரு முறையும் ஒரு நாலு வண்டியாவது இந்த வசனத்துடன் கடந்து செல்லும். ஆக நாம் எதை விரும்புகிறோமோ எதை நம்புகிறோமோ அதில் தான் நம் கவனம் செல்லும் அது தான் நம் மனதில் ஏறும். ஏன் இப்படி? நம் மூளை இருக்கிறதே அது வடிவமைக்கப்பட்ட விதம் அப்படி. எது நமக்கு தேவையோ அதில் மட்டுமே அது கவனம் செலுத்தும். நாம் தொடர்ந்து அடிக்கும் பெர்ஃப்யூம் மணம் நமக்கு தெரிவது இல்லை. ஏனென்றால் அது பழகிவிட்டது அதாவது மூளையை பொறுத்தவரை இந்த மணத்தால் ஆபத்து ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டது அதனால் அதை நமக்கு உணர்த்துவது தேவையற்ற வேலை என்று அந்த தகவலை அது புறக்கணித்து விடுகிறது. நீண்ட கால நண்பன் ஒருவன் நமது நம்பிக்கையை உடைத்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவன் இதற்கு முன்னால் பேசிய பலவற்றிற்கு நமக்கு புதிய அர்த்தம் தோன்றும் ஓஹோ இதனால் தான் அன்று இப்படி செய்தானா? இப்படி சொன்னான என்று. அதற்கு முன்பு வரை நாம் அதில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். இந்த confirmation bias ஐ தான் “Thoughts as Vibrations” , “laws of attraction” என்றெல்லாம் பட்டிங் டிங்கரிங் பண்ணி The Secret புத்தகம் நமக்கு சொல்கிறது. நம்மை பற்றி நாம் positive ஆக நினைக்க துவங்கும்போது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்கள் மீது நாம் கவனம் செலுத்துவோம் அதை வெளிக்கொணருவோம். இதில் என்ன பிரச்னை என்றால் இது overdose ஆகும் போது வரும் பின்விளைவுகள் ஆபத்தானது. இந்த புத்தகம் நம்மை நான் அழகானவள், மிகப்பெரிய பணக்காரி, அறிவானவள் என்றெல்லாம் நம்ப சொல்கிறது. அதாவது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையை வைக்க சொல்கிறது அப்படி குருட்டுத்தனமாக நம்பி கொண்டு இருக்கும் போது ஒரு கட்டத்தில் நாம் அதை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவோம் நமது நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடக்க ஆரம்பிப்போம் என்று Rhonda Byrne நினைக்கிறார் போலும். இது ஏதோ சின்ன விஷயங்களுக்கு சரிப்பட்டு வரலாம். நண்பன் படத்துல வர மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு all is well, all is well ன்னு சொல்லிட்டா சரியா போய்டும் என்று நம்பலாம். Chernobyl ல core reactor வெடிச்ச பிறகு all is well, all is well அப்படின்னா core meltdown தானாகவே நின்று போய்விடுமா? அல்லது அந்த firefighter க்கு third degree radiation burns அவருகிட்ட positive ஆ think பண்ணுங்க உங்க மனைவி கர்ப்பமாக இருக்காங்க அவங்களுக்காக எழுந்து வாங்க இப்படி எல்லாம் சொல்லி அவரும் நாம் எழுந்து வந்துவிடுவோம் நமக்கு ரேடியேஷன் தாக்கமே இல்லை நமது உடல் மிக நன்றாக இருக்கிறது என்று பாஸிட்டிவ் எனர்ஜியை கொண்டு வந்தா உயிர் பிழைக்க முடியுமா?  Rhonda Byrne நீங்கள் உங்களை சிறிதும் சந்தேகப்படவே கூடாது. Negative thoughts கொஞ்சம் கூட இருக்கவே கூடாது நீங்கள் அழகானவர், பணக்காரர், சாதனையாளர் என்று நம்பிக்கொள்ளுங்கள் தானாகவே அது நடக்கும் என்கிறார். அதாவது சுருங்க சொன்னால் மீரா மிதுனை போல நம்மை இருக்க சொல்கிறார். ஒருவேளை மீரா மிதுன் இந்த புத்தகத்தை படித்து இருப்பாரோ என்னவோ. நான் தான் சூப்பர் மாடல், தமிழ் சினிமாவே என் நடிப்பு திறமையை கண்டு ஆடி போய் இருக்கிறது, எனக்கு ஈடு யாரும் இல்லை, சூர்யாவின் நடிப்புகூட என் நடிப்புக்கு முன் சுமார் தான் என்றெல்லாம் அவர் ஆழமாக நம்பி கொண்டு இருக்கிறார் அப்படியே நம்பி கொண்டே இருந்தால் சூப்பர் மாடல் ஆகிவிடலாம் என்று இந்த புத்தகத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டாரோ என்னவோ. இதுதான் “delusionally positive” thinking. இந்த positive thinking “The Secret” போன்ற புத்தகங்கள் படிப்பதற்கு நன்றாக இருக்கும். மோட்டிவேஷனல் வீடியோ பார்த்த ஒரு ரெண்டு நாளைக்கு நாடி நரம்பு புடைக்க நாம் சுத்துவோம் அல்லவா அது போல. “Think positive and good things will happen.” x 199 pages விலை 240/-. நல்ல marketing மூலம் ஒரு ஒன்னுமில்லாத புத்தகத்தை எப்படி best-seller ஆக்கலாம் என்பதற்கு இந்த புத்தகம் நல்ல உதாரணம். வேறு வேறு வார்த்தைகளில் சில பல உணர்ச்சிகரமான கதைகள் மூலம் இந்த புத்தகம் 199 பக்கங்களில் திரும்ப திரும்ப சொல்வது, “நல்லது நினைச்சா நல்லது நடக்கும்.”  Positive attitude இருந்தால் நமது மூட் நல்லா இருக்கும் naturally நாம் செய்யும் வேலைகளும் சிறப்பாக அமையும் அவ்வளவு தான் ஆனால் இது என்னமோ பெரிய மாயம் அதிசயம் என்பதுபோல நீட்டி முழக்கி… அதே சமயம் positive ஆக நினைப்பதாலயே எல்லாம் சுபமாக முடியும் என்றும் அர்த்தம் இல்லை. The secret of “The Secret”,  Rhonda Byrne இந்த புத்தகத்தை எழுதி நன்றாக காசு பார்த்து விட்டார் அதுதான். இது முழுக்க முழுக்க spirituality, metaphysics and manifestation என்கிற பெயரில் இருக்கும் pseudoscience தவிர வேறு ஒன்றும் இல்லை. “Like attracts like” என்பது  New Thought philosophy. Charles Hannel என்பவரால் முன்மொழியப்பட்டது. இந்த New Thought philosophy ஒரு philosophy யே அல்ல. Astrology மற்றும் numerology கதைகளை எல்லாம் Quantum physics பெயரில் சொல்லப்பட்டு இருக்கிறது. நமக்குள் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்து இருக்கிறது அதை தட்டி எழுப்புவது எப்படி போன்றவைகள் மக்களை வெகுவாக கவர்கின்றன. அதாவது எல்லா மனிதர்களும் தங்களுக்குள் மிக பெரிய ஆற்றல் ஒளிந்து இருப்பதாக நம்புகிறார்கள். நான் special, தனித்துவம் உடையவன் எனக்கு சில ஆற்றல்கள் இருக்கின்றன, திறமைகள் இருக்கின்றன என்று நம்புவதில் எல்லோருக்கும் ஒரு சுகம் இருக்கிறது. அதனால் தான் இந்த மாதிரியான புத்தகங்கள் வேகமாக விற்கின்றன. பின் குறிப்பு: இந்த புத்தகத்தை எழுதிய Rhonda Byrne மேல் பலகோடி ருபாய் மோசடி செய்த வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. பங்குதாரர்களிடம் பண மோசடி செய்து விட்டாராம். நான் பெரிய பணக்காரி நான் பெரிய பணக்காரி என்று நினைத்து Law of Attraction மூலம் சுற்றி இருக்கும் பணத்தை எல்லாம் Attract செய்துவிடலாம் என்று நினைத்திருப்பார் போல. ஆதி பாவம்/முதல் பாவம் (பிரசவ வலி) பார்ட் 2 கடவுள் பாம்பை தண்டித்ததற்கு பின் அப்படியே திரும்பி ஏவாளை பார்த்தார். “நீ கர்ப்பவதி ஆக இருக்கும்போது உன் வேதனையை பெறுக பண்ணுவேன். வேதனையோடு நீ பிள்ளை பெறுவாய்” என்று சாபமிட்டார். மனிதன் மட்டும்தான் வேதனையோடு பிள்ளை பெருகிறானா? மிருகங்கள் பிரசவ வேதனையை அனுபவிப்பது இல்லையா?  இந்த மிருகங்கள் இருக்குல்ல பொதுவாவே வலியை நம்மை மாதிரி ரொம்ப வெளிப்படுத்தாது. மனிதர்கள் தான் வலியின் போது குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போடுவார்கள். மிருகங்கள் மெல்லிய முனகலோடு நிறுத்திவிடும். அதற்கு காரணம் காட்டில் வலியில் கத்தி சிங்கம் புலி என்று, அதாவது வேட்டையாடும் மிருங்கங்கள் காதில் விழுந்து அவை வந்து விடக்கூடாதே என்று (survival mechanism). Quiet திரைப்படத்தில் கதாநாயகி பிரசவத்தின் போது கத்தாமல் இருக்க தன்னை அடக்கி கொள்ளுவாள் அது போல. அதனால் அதற்காக வலியில்லை என்று அர்த்தமில்லை. இந்த பைபிள் எழுதிய மக்கள் அதிகபட்சம் பார்த்த மிருங்கங்கள் கால்நடைகள் மட்டுமே அவை பிரசவத்தின் போது அவ்வளவு கத்துவது இல்லை. அதனால் மிருகங்களுக்கு வலியில்லை நமக்கு மட்டும்தான் வலி என்று நினைத்து இந்த கதையை ஜோடித்து இருக்கலாம்.  […] பிரசவத்தின் போது வலியை வெளிப்படுத்தும் மிருகங்கள் உண்டு. llamas மற்றும் alpacas வலியில் ஓலமிடும்.  இன்னொரு விஷயம் பரிணாம வளர்ச்சியில் நமது இடுப்பு எலும்பு குறுகிவிட்டது. நாலு காலில் நடக்கும் மிருகங்களுக்கு இடுப்பு அகலமாக இருக்கும் மற்றும் குழந்தையின் தலை சின்னதாக இருக்கும். பெரிய இடுப்பெலும்பை வைத்துக்கொண்டு நேராக நடக்க (bipedalism) இயலாது. மனித பெண்ணின் பிரசவம் கொஞ்சம் சிக்கலானது. முதலில் அவ்வளவு பெரிய மூளையுடைய தலை ஒரு சின்ன பாதை வழியில் வெளிவர வேண்டும், எலும்பிலான இடுப்பெலும்பு bony pelvis ஐ வளைத்து நெளிக்க இயலாது. குரங்குகள் நேராக நடக்காவிட்டாலும் சிறிது குனிந்தே நடக்கின்றன, அவற்றிக்கும் பெரிய இடுப்பெலும்புகள் இல்லை, ஆனால் அவை ஈன்றெடுக்கும் குட்டிகள் சிறிய தலையுடனே பிறக்கின்றன. […] மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Australopithecines யின் பிறந்த குழந்தையின் மூளை எடை 130 – 170 கிராம்கள்.  Homo sapiens, அதாவது நமக்கு பிறந்த குழந்தையின் மூளை எடையானது 400 கிராம்களுக்கு மேல். இந்த உடல் எடையுடன் மூளை எடை brain to body ratio வை வைத்து பார்த்தால் உலகில் உள்ள விலங்குகளிலேயே மனிதர்களுக்குத்தான் அதிகம். […] Australopithecus க்கும் இப்பொழுது வாழும் மற்ற விலங்குகளுக்கு பிரசவம் சுலபம் தான், உடல் வெளிவந்தால் போதும், ஆனால் நமக்கு நேராக நடப்பது, சிறிய இடுப்பெலும்பு போன்ற structual adaptationsஐ சமாளிக்க பிரசவ முறையில் இயற்கை சிறிது மாற்றங்களை கொண்டு வந்தது, அதாவது நேராக குழந்தை வெளிவராமல் தலை உடலுக்குள் திரும்பி, தலை முதலில் mid pelvis க்குள் வரவேண்டும் பின்னர் தலை ஒரு விதமாக திரும்பி தோள்ப்பட்டை sagittal plane வாயிலுக்கு நேராக align ஆக வேண்டும் அப்பொழுது தான் pubis க்கு கீழாக குழந்தை வெளி வர முடியும். இந்த வகையான தலை திரும்பும் birth mechanics மனிதனை தவிர வேறு எந்த விலங்கிலும் (சில குறிப்பிட்ட குரங்கினங்களை தவிர), நம் முன்னோர்களிலும் இல்லை. இந்த தகவமைப்பு rotational birth pattern சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம். ஆனாலும் இருப்பதிலேயே மோசமான பிரசவம் கழுதைப்புலி (Spotted hyenas) ஓடதுதான். பெண் கழுதைப்புலிக்கு ஆணைவிட அதிக testosterone சுரப்பு இருக்கும். அதனால் ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி பெண் கழுதைப்புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர். `சூடோபெனிஸ்’ (Pseudopenis) என்று சொல்லுவார்கள். உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாற்றால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தரும். பெண் தன்னுடைய குட்டிகளைப் போலி ஆண் குறி வாயிலாகத்தான் பிரசவிக்க முடியும்.  அது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. சம்பந்தப்பட்ட இரண்டு உயிர்களுக்கும் அது மறுபிறவி தான். கழுதைப்புலியின் 23 இன்ச் அளவுக்கு விரிவடைகின்ற போலியான ஆணுறுப்பில் 2 கிலோ எடை கொண்ட குட்டியை பிரசவிப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. இந்தத் தருணத்தில் இரண்டு பேரில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். முதல் குட்டியைப் பிரசவிக்கும் பெண் கழுதைப்புலிகளில் 15% இறந்துவிடுகின்றன என்கிறது ஓர் ஆய்வு. சில குட்டிகள் பிறக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிற சம்பவங்களும் நிகழும். சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன.  […] ஆக கழுதைப்புலி பைபிள் வசனத்தை “அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்” பார்த்தா நான் என்ன தக்காளி தொக்கா என்று கேட்கும். இத்தகைய கொடிய பிரசவ முறையை பெற கழுதைப்புலி ஒருவேளை அந்த ஆப்பிள் மரத்தையே சாப்பிட்டு விட்டதோ என்னமோ? சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஏவாள் அந்த ஆப்பிளை சாப்பிட்டதால் அந்த பாவத்திற்கு தண்டனையா கொடுக்கப்பட்டது தான் பிரசவ வலி. அப்படின்னே வச்சுப்போம். இயேசு தான் பின்னர் நமது எல்லா பாவங்களுக்கும் உயிரை விட்டார் அல்லவா? அப்போ இந்த பிரசவ வலி போயிருக்கணுமா இல்லையா?  […] சரி கடவுள் பிரசவ வலியை தண்டனையா குடுத்தார். ஆனா அறிவியல் என்ன கொடுத்துச்சு? anesthesia கொடுத்துச்சு. 1847 இல் James Young Simpson என்பவர்  chloroform க்கு மயக்கம் தரும் குணம் இருப்பதை கண்டுபிடித்தார். 8 November 1847 இல் பிரசவத்தின் போது chloroform  பயன்படுத்தி வலியில்லாமல் பிரசவிக்க முடியும் என்பதையும் கண்டு அதை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டார். உடனே நம்ம மதவாதிகள் சும்மா இருப்பாங்களா? அபச்சாரம் அபச்சாரம், கடவுள் தண்டனையா குடுத்த வலியை இப்படி புறம்தள்ளுவதாவது? வலியில் பிறந்தால் தான் பாவம் போகும். இல்லை என்றால் குழந்தை நரகத்திற்கு தான் போகும் என்று எல்லாம் எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள்.  […] 1853 இல் கர்ப்பமாக இருந்த Queen Victoria இதைப்பற்றி கேள்விப்பட்டு, Simpson ஐ வரவழைத்தார். தனது ஏழாவது பிரசவத்திற்கு chloroform தரச்சொன்னார். எதிர்ப்பு குரல் கொடுத்தவர்கள் அடங்கி போனார்கள். ராணியை எதிர்த்து எப்படி பேசுவது? ஆனாலும் ராணியின் மருத்துவர் கிளார்க் அவரிடம் லேசுபாசாக சொல்லி பார்த்தார். ராணி எதையும் சட்டை செய்யவில்லை. நீ குழந்தை பெற போகிறாயா? இல்ல நான் பெற போகிறேனா? என்று கூட ராணி கேட்டு எல்லார் வாயையும் அடைத்து இருக்கலாம். சினிமாவில் வருவதை போல கிளரொபோர்ம் முக்கிய கைக்குட்டையை முகர்ந்து (ஆனால் சினிமாவில் காட்டப்படுவதுபோல உடனே மயக்கம் வராது குறைந்தது 1 மணி நேரம் ஆகும்.) 53 நிமிடங்களுக்கு பிறகு மயக்கமுற்று Prince Leopold ஐ சிறிதுகூட வலியின்றி வெற்றிகரமாக பெற்றெடுத்தார் Queen Victoria. அன்றில் இருந்து பிரசவத்திற்கு anaesthesia பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பெண்கள் வலியில்லாமல் குழந்தைகளை பிரசவிக்க தொடங்கினார்கள்.  chloroform இல் சில பல குறைகள் இருக்க தான் செய்தது. அதை எல்லாம் கால போக்கில் அறிவியல் சரி செய்து இன்று பெண்கள் பிரசவத்தின்போது முழு சுயஉணர்வுடன் வலியில்லாமல்  குழந்தை பெற முடிகிறது. Queen Victoria க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். Clash of Titans ஆரம்பத்தில் பூமியில் குழப்பம் மட்டுமே இருந்தது. அது பூமியை ஒரு இருள் போல போர்த்தி இருந்தது. குழப்பம் விலகியதும் பூமி  மற்றும் மலைகள், கடல் மற்றும் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுடன் வானம் (யுரேனஸ்) ஆகியவை உண்டானது.  […] Uranus (வானம்) தான் முதல் கடவுள். பிரம்மன் போல. பின்னர் யுரேனஸும் பூமியும் (Gaia) ஒன்றாக வந்து பல டைட்டான்களைப் (உபரி கடவுள்கள்) பெற்றெடுத்தன. ஆனால், யுரேனஸ் தனது குழந்தைகளில் ஒருவர் தனது சிம்மாசனத்தை கைப்பற்றுவார் என்று பயந்தார். நிறைய கதைகளில் மகன் வந்து நம்மை கொன்று ஆட்சியை பிடித்து விடுவான் என்று இந்த அப்பாக்களுக்கு ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. கிரேக்கத்திலேயே இதற்கு புகழ் பெற்ற கதை ஒன்று உண்டு Oedipus!. Freud க்கு மிகவும் பிடித்த கதை. அவரது எல்லா உளவியல் theory க்கு பின்னாலும் Oedipus தான் இருக்கிறான். அதுவும் ஒரு சுவாரசியமான கதை தான் அதை அப்புறமா சொல்றேன். அதனால் Uranus எல்லா பிள்ளைகளையும் பூமியின் ஆழத்தில் அடைத்து வைத்தார். (கம்சன் தேவகி கதை நியாபகம் வருகிறதா?) ஆனால் அவரது மகன், குரோனஸ் (Cronus) அவரை  வீழ்த்தி கடவுள்களின் தலைவரானார். அவர் ரியாவை (Rhea) மணந்தார். Cronus தங்கச்சி தான் Rhea. அவங்களுக்கு ரெண்டு பசங்க, மூணு பொண்ணுங்க: ஹேடீஸ், போஸிடான், ஹேரா, ஹெஸ்டியா மற்றும் டிமீட்டர். […] குரோனஸ் க்கும் அவங்க அப்பாவை போலவே எங்கே பையன் நம்மள போட்டு தள்ளிட்டு தலைவன் ஆகிவிடுவானோ என்ற பீதி இருந்தது. எனவே, அவர்கள் பிறந்ததும், ​​அவர் குழந்தைகளை எல்லாம் அப்படியே முழுங்கிவிட்டார். இருப்பினும், ஆறாவது முறை கர்ப்பமான ரியா எங்கே மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்ட கதி இந்த குழந்தைக்கும் வருமோ என்று பயந்து, கிரீட்டில் உள்ள ஒரு மலையில் இரகசியமாக பிரசவித்து, அங்கு பிறந்த குழந்தையை மறைத்து வைத்தார். அவள் அந்த குழந்தைக்கு ஜீயஸ் (Zeus) என்று பெயரிட்டாள் (கிரேக்க கதைகளின் ஹீரோ). […] குரோனஸை ஏமாற்ற ஒரு கல்லை துணியில் சுற்றி இதுதான் ஆறாவது குழந்தை என்று தர, அவருக்கு புதிதாகப் பிறந்த குழந்தை என்று நினைத்து குரோனஸ் விழுங்கினார். வன தேவதைகள் (Nymphs) ஜீயஸை கவனித்து குழந்தைக்கு ஆட்டின் பாலை ஊட்டினார்கள். அவர் வளர்ந்த பின் தன் தந்தையைக் கண்டு அவரை ஏமாற்றி மது மற்றும் கடுகு கலவையை குடிக்க வைத்தார், இது அவரது வயிற்றில் உள்ள ஜீயஸின் மூத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை வெளி வர செய்தது. அவர்கள் எல்லோரும் முழுதாக வளர்ந்த நிலையில் வெளியில் வந்தார்கள்.  இப்படித்தான் clash of Titans தொடங்கியது, டைட்டான்களுக்கும் மற்ற கடவுள்களுக்கும் சண்டை நடந்தது. ஜீயஸ் வென்று அண்ட சராசரதிற்கும் அதிபதி ஆனார். […] ஆணாதிக்கம் (Patriarchy) ஆணாதிக்கம் (Patriarchy) என்பது நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு நயவஞ்சக சித்தாந்தமாகும் (ideology; கருத்தியல்). ஆணாதிக்கம் ஆண்களை உயர்ந்ததாக கருதுகிறது. (ஆண் குறில் அல்ல நெடில்!) மேலும் இது பாலினம் மட்டுமல்ல, சாதி, இனம், வர்க்கம், உடல் போன்றவற்றையும் அடிப்படையாகக் கொண்ட குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் சிலருக்கு மட்டுமே முன்னுரிமை (சலுகை) அளிக்கிறது. ஆணாதிக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆளோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனமோ, கட்சியோ அல்ல. ஆணாதிக்கத்திற்கு எந்தவொரு தலைமையகமும் இல்லை. ஆணாதிக்கம் என்பது ஒரு நயவஞ்சக சித்தாந்தமாகும். இது நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் (ஊடகங்கள், இசை, பொழுதுபோக்கு, பள்ளிகள், புத்தகங்கள், மதங்கள், மொழிகள், சட்டங்கள், பணியிடங்கள், உறவுகள் போன்றவை) ஊடுருவி இருக்கிறது. ஆணாதிக்கம் என்ற சொல் ஏனோ தெரியவில்லை ஆண்களை மிகவும் பாதிக்கிறது. அந்த சொல்லில் ஆண் என்ற வார்த்தை இருப்பதால் இருக்கலாம். ஆணாதிக்கம் என்றவுடன் என்னையா சொல்ற நான் ஆதிக்கம் செலுத்தியதை பாத்தியா? என்று சண்டைக்கு வருகிறார்கள். ஆணாதிக்க கருத்தியலை கடைபிடிப்பது ஆணாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு பெண்ணாக கூட இருக்கலாம் (Internalised misogyny). ஆணாதிக்கத்தை அகற்ற, நாம் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வேண்டும். நம்மை நாமே பயிற்றுவிப்பதின் மூலம் விழிப்புணர்வைப் பெற வேண்டும். வாசித்தல், சிந்தித்தல், கவனித்தல் மற்றும் தொடர்ந்து கேள்விகளை கேட்பது “சக மனிதர்கள் மீது எப்படி எல்லாம் அடக்கு முறைகளை நாம் கட்டவிழ்க்கிறோம்?  ஒருவர் மீது ஒருவர் அதிகாரத்தை துஷ்ப்பிரயோகம் பண்ணும்போது நாம் அதை எவ்வாறு நியாயப்படுத்துகிறோம்?” “ஏன் ஒருவர் உயர்ந்தவர்? இன்னொருவர் தாழ்ந்தவர்?” என்று எல்லாம் நமக்கு நாமே கேள்விகள் கேட்க வேண்டும். ஆணாதிக்கத்தை அகற்றுவது என்பது ஒரு இயக்கம், ஒரு கணம் அல்ல. இது ஒரு தொடர்ச்சியான வாழ்க்கை முறை, ஒரு முறை பணி அல்ல. ஆணாதிக்கமானது, ஆண்களுக்கு சலுகைகளை/முன்னுரிமைகளை வழங்குகிறது அதற்கு பதிலாக அவர்கள் அந்த ஆணாதிக்கத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது, அவர்கள் இணங்கவில்லை என்றால், அவர்களுக்கு முழு சலுகைகளும் கிடைக்காது,  எ.கா. ஒரு ஆணாக இருப்பதன் மூலம் ஆணுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் ” ஒரு ஆணாக இருப்பது” என்றால் என்ன? ஆணாதிக்கத்தில் “ஒரு ஆண்” என்று அங்கீகரிக்கப்பட , அவன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ள வேண்டும் (எந்த உணர்ச்சியையும் காட்டாதே, கடினமாக இரு, பெண்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்துதல் போன்றவை). இல்லையெனில், நீ ஆண் தானா? என்று எள்ளி நகையாடப்படுகிறார். நீ எல்லாம் ஒரு பொம்பளயா? என்றால் எந்த பெண்ணும் அதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்து கொள்வது இல்லை ஆனால் நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா? என்றால் அது ஒரு பெரிய அவமானமாக ஆண்கள் எடுத்து கொள்கிறார்கள். ஆணாதிக்கம் ஆணையிடும் விதத்தில் ஆண்கள் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் மீது கடுமையான விளைவைக் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று, பாரம்பரிய ஆண் குணங்கள் தான் பிரதானமாக இருக்கிறது. முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிற குணங்கள் கீழானதாக கருதப்படுகின்றன. அதனால் தான் பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் மோசமாக நடத்தப்பபடுகிறார்கள். பெரும்பாலான ஆண்கள், உதாரணத்திற்கு நான் ஏதேனும் விலங்குகளை உபயோகப்படுத்தினால் விலங்குகளுடன் என்னை எப்படி ஒப்பிடலாம் என்று பொங்கி எழுவதும் ஆணாதிக்க சிந்தனையின் விளைவே. ஒரு ஆணாக மேம்பட்ட குணங்களுடன் பிறந்திருக்கும் என்னை விலங்கோடு ஒப்பிடுவதா என்ற எண்ணமே. ஆண் தன்மைக்கு உதாரணமாக சொல்லும் விலங்குகளை சொல்லும்போது கோவம் வருவது இல்லை அது அல்லாமல் மற்ற விலங்குகளோடு ஒப்பிடும் போது வெகுண்டு எழுகிறார்கள். ஆணாதிக்க சமூகம் எப்படி தோன்றியது? 1. வேட்டையாடும் சமூகமாக இருந்தவரை பாலினபேதம் இருந்தது இல்லை. ஏனெனில் ஆண் பெண் இருவருமே வேட்டையாடுகிறார்கள் / சேகரிக்கிறார்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  2. குடியேறும் முயற்சியில் அதாவது ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கி வாழும்போது வேட்டையாடுதல் / சேகரிப்பதற்கு பதிலாக விவசாய வாழ்க்கை முறைக்கு மனிதர்கள் மாறினார்கள். இந்த காலம் கற்கால புரட்சி என்று அழைக்கப்பட்டது. 3. இந்த மாற்றம் அதிக பிறப்புகளுக்கு வழிவகுத்தது (உணவைத் தேடுவதில் குறைந்த நேரம், உடலுறவு கொள்ள அதிக நேரம்). அதிகமான குழந்தைகளைக் கொண்டிருப்பது advantage, ஏனென்றால் விவசாயத்திற்கு உதவ அதிக நபர்கள் கிடைக்கிறார்கள். இந்த காலம் கற்கால மக்கள் தொகை மாற்றம் என்று அழைக்கப்பட்டது. 4. பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தில் பிஸியாக இருந்தபோது, ஆண்கள் விவசாய சொத்துக்களின் உரிமையை ஏற்றுக்கொண்டனர். அது அந்தக் காலத்திற்கு ஒரு தர்க்கரீதியான பாலினப் பிரிவாக இருந்தது. 5. பெண்களுக்கு சொந்தமான சொத்துக்கள் இல்லாததால், திருமணத்தின் போது ஒரு பெண் தன் தந்தையிடமிருந்து கணவரின் இல்லத்திற்குச் செல்வாள். இந்த நடைமுறை “பேட்ரிலோகல்” குடியிருப்பு (patrilocality) என்று அழைக்கப்படுகிறது.  6. அப்போதிருந்து, நிலம் மற்றும் வளங்கள் மீது அதிகாரம் இருந்ததால் பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்களாக பார்க்கத் தொடங்கினர். 7. பெண்களே ஆண்களுக்கு “சொத்து” ஆனார்கள்- பாலியல் மற்றும் இனப்பெருக்கதிற்கு மட்டுமே தேவைப்படுபவர்களாக மாறிப்போனார்கள். சரியான வாரிசுக்கு சொத்தை அனுப்புவதற்காக, குழந்தையின் தந்தையை உறுதி செய்வதற்காக பெண்களின் பாலியல் தன்மை கட்டுப்படுத்தப்பட்டது. 8. பாலினங்களுக்கிடையிலான சமத்துவமின்மை புதிய இயல்பானதாக மாறியது. ஆகவே ஆணாதிக்க முறை பிறந்து அதனுடன் பாலியல் தவிர பல ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டு வந்தது (எ.கா. அடிமைத்தனம், இனவாதம், முதலாளித்துவம், சாதியியம்…)  தொல்பொருளியலால் பைபிளை நிரூபிக்க முடியுமா? […] பழங்கால நகரமான Gath நகரில் பிலிஸ்டின் கல்லறை, மற்றும் அரசர் சாலமன் காலத்தை சார்ந்த அரண்மனை, போன்ற கண்டுபிடிப்புகளால், theists “இது பைபிள் உண்மை என்பதை நிரூபிக்கிறது”  என்கிறார்கள் ஆனால் இது பைபிள் உண்மை என்பதை நிரூபிக்கிறதா? சில தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பைபிளை நிரூபிக்கும் என்பது சரியானது அல்ல. பைபிளை நிரூபிக்க விரும்புவோர் அதற்கென்றே பிரத்தியோக தொல் பொருள் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களது நோக்கம் பைபிள் உண்மை என்று நிரூபிப்பதே. இது Biblical archaeology என்று அழைக்கப்படுகிறது. வேதாகமத்தில் கூறப்பட்டு இருக்கும் வரலாற்றின் காலம் சுமார் 2,000 ஆண்டுகள் ஆகும், மேலும் இன்றைய ஈராக்கில் உள்ள யூப்ரடீஸ் கரையிலிருந்து எகிப்தில் நைல் நதி டெல்டா வரை உள்ள இடங்களை உள்ளடக்கியது பைபிள். பைபிளின் பரப்பு பெரிதாக இருந்தாலும், தொல்பொருளியல் கருவிகள் பெருகிய முறையில் குறுகிவிட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டேவிட் அரசருக்கு எழுதப்பட்ட proto-Hebrew inscriptions போல குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டறிவதாகக் வைத்து கொள்வோம். இது “பைபிள் உண்மை என்பதை நிரூபிக்காது”. டேவிட் என்று இஸ்ரேலில் ஒரு ஆட்சியாளர் இருப்பதற்கான புறச்சான்றிய சாட்சியுடன் ஒத்திருக்கிறது என்று அது வெறுமனே நிரூபிக்கும். அவ்வளவுதான். தொல்பொருளியல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கண்டுபிடிப்புகள் பைபிளின் மகத்தான வரலாற்றுப் பதிவுக்கு வரும்போது ஒன்றுமே இல்லாதது. அதாவது ஒருவன் கொலையாளி என்று நிரூபிக்க அசைக்க முடியாத பல ஆதாரங்கள் தேவைப்படும். வெறுமனே அவன் சட்டை பட்டன் கொலை நடந்த இடத்தில் இருந்தது என்பதை மட்டும் கொண்டு அவன் கொலையாளி என்று நிரூபிக்க முடியாது அல்லவா அது போல. தொல்பொருள் ஆராய்ச்சியால் பைபிளின் இறையியல் கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முடியாது. உதாரணமாக, பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து கொள்வோம். அது ஒரு வரலாற்று புனைவு. ஆனால் உண்மையில் இருக்கும் இடங்களில் நடப்பது போன்ற புனைவு. அந்த கதையில் வரும் பெருவுடையார் கோயில், வீராணம் ஏரி, கடம்பூர், திருவையாறு, இதெல்லாம்  இருப்பதால் பூங்குழலி உண்மையில் இருந்தாள் என்றும் அவள் அருள்மொழி வர்மன் மேல் மையல் கொண்டு இருந்தாள் என்றும் ஆகிவிடாது. அதே போல பைபிளை எழுதியவர்கள் அவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் அவர்களை சுற்றி இருந்த புவியியல் அமைப்பு அடிப்படையில் எழுதிய கதை. அதனால் அந்த காலத்து தொன்மங்கள் இருப்பதால் அவற்றில் நடந்தவை உண்மை என்று அர்த்தம் ஆகாது. […] Sodom என்ற ஊர் இருந்ததும், அதில் நிலநடுக்கம் எரிமலை வெடிப்புகள் போன்றவை ஏற்பட்டதும் ஆராய்ச்சியில் தெரிய வந்து இருக்கிறது (பார்க்க பெட்ரா பதிவு). ஆனால் இதனாலேயே Lot இருந்தான், அவனது மனைவி உப்பு தூண் ஆனாள், பின் அவன் அவனுடைய மகள்களுடன் உறவு கொண்டான் என்பது உண்மை ஆகிவிடாது. இது உண்மை என்று அறுதியிட்டு சொல்ல கூடுதல் தகவல்கள் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. நின்று கொண்டே இருக்கும் ஒரு எலும்பு கூடு  கந்தகத்தால் சூழ்ந்து கல்லாக மாறி அதை நாம் ஆராயும் போது அந்த எலும்பு கூடு பைபிள் காலத்தை சார்ந்தது என்று ஒரு ஆதாரம் கிடைத்தால் ஒருவேளை அது தான் lot மனைவி என்று நாம் நினைக்க ஏதுவாக இருக்கும். ஆனால் அந்த மாதிரி எதுவும் கிடைக்க வில்லையே. வெறும் Sodom நகரம் இருந்தது அந்த பெயர் பைபிளில் இருக்கிறது அதனால் பைபிள் உண்மை என்று சொல்வது, பெருவுடையார் கோயில் இருக்கிறது அதனால் பொன்னியின் செல்வன் புதினத்தில் வருவது எல்லாமே உண்மை என்று சொல்வதற்கு சமம். Biblical archaeology 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், பைபிளின் வரலாற்றுத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் தோன்றியது . 1920 களுக்கு இடையில், முதலாம் உலகப் போருக்குப் பிறகு , பாலஸ்தீனம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தபோது William F. Albright மற்றும் G. Ernest Wright போன்ற நபர்களால் வழிநடத்தப்பட்ட Levantine archaeology ஆதிக்கம் செலுத்தியது . இந்த வேலைக்கு பெரும்பாலும் தேவாலயங்கள் மற்றும் இறையியலாளர்கள் நிதியளித்தனர். இந்த Biblical archaeology இல் பல போலி கண்டுபிடிப்புகளும் உள்ளன. அதில் புகழ்பெற்ற ஒன்று, James Ossuary! (Ossuary என்பது இறந்தவர்களின் எலும்புகள் கொண்ட கல்லால ஆன பெட்டி) 2002 ஆம் ஆண்டில் எலும்புகள் கொண்ட பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெட்டியில் , “ஜேக்கப், ஜோசப்பின் மகன் மற்றும் இயேசுவின் சகோதரர்” என்று பொறிக்க பட்டு இருந்ததாக கூறப்பட்டது. உண்மையில் இந்த பெட்டி கண்டுபிடிக்க பட்டு பல முறை கை மாறியது. அதன் நடுவில் இந்த வாசகம் அந்த பெட்டியில் பொறிக்க பட்டதாக தெரிகிறது. Oded Golan என்பவர் மேல் வழக்கும் தொடுக்கப்பட்டது. இது போல பல போலி கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வருவதும் பின் அதை ஆராய்ச்சியாளர்கள் போலி என்று ஒதுக்குவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. […] William G. Dever என்கிற தொல் பொருள் ஆராய்ச்சியாளர், இது போன்ற பைபிள் ஆராய்ச்சிகளில் பிரசித்தி பெற்றவர். அவர், ” தொல்பொருளியல் நிச்சயமாக பைபிளின் உண்மைத்தன்மையை நிரூபிக்காது … அது உண்மையில் பைபிளை கேள்விக்குள்ளாக்குகிறது. பலர் வேதாகமத்தை நிரூபிக்க தொல்பொருள் உள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால் எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் அப்படி நினைக்கவில்லை. ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், அறிஞர்கள், பெரும்பாலும் மேற்கத்திய அறிஞர்கள், தொல்பொருள் தரவைப் பயன்படுத்தி பைபிளை நிரூபிக்க முயன்று இருக்கலாம். William Albright, என்கிற மிகப்பெரிய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்  அடிக்கடி “தொல்பொருள் புரட்சி” பற்றி பேசுவார். இப்போது, புரட்சி வந்துவிட்டது ஆனால்  Albright  நினைத்த விதத்தில் இல்லை. உண்மை என்னவென்றால், தொல்பொருளியல் எபிரேய பைபிளின் வரலாற்றுத்தன்மை மற்றும் புதிய ஏற்பாட்டின் உண்மையை நிரூபிப்பதைக் காட்டிலும் அதிகமான கேள்விகளை எழுப்புகிறது, அது சிலருக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறது” என்கிறார். Comte de Saint-Germain […] Comte de Saint-Germain வரலாற்றில் அடிக்கடி அடிபடும் பெயர். இவர் ஒரே ஆள் தானா? அல்லது ஒரே பெயரில் பல ஆட்களா என்பதில் குழப்பங்கள் உண்டு. இருப்பினும் பெரும்பாலான தகவல்கள் அவர் 1690 களில் பிறந்ததாக கூறுகிறது. அன்னி பெசன்ட் அவரது புத்தகமான The Comte De St. Germain: The Secret of Kings, 1690 இல் டிரான்சில்வேனியாவின் இளவரசர் பிரான்சிஸ் ராகோசி II இன் மகனாக பிறந்தார் என்று வலியுறுத்துகிறார். பெரும்பாலானவர்கள், அவர் இயேசுவின் காலத்தில் உயிரோடு இருந்தார் என்றும், கானாவில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகிறார்கள். கி.பி 325 இல் நிக்கேயா கவுன்சிலில் அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை பற்றிய சுவாரசியமான தகவல் செயின்ட்-ஜெர்மைன் ஒரு ரசவாதி என்பது. மேலும், ரசவாதம் மூலம் இறவாதன்மையை அடையாளம் என்று கூறப்படுகிறது. கவுண்ட் டி செயிண்ட்-ஜெர்மைன், ரசவாதத்தின் இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. செயின்ட்-ஜெர்மைன் ஒரு ரசவாதி என்பதால் அவர் இறவாதன்மையை அடைந்து இருக்கலாம். வரலாறு நெடுக்க அடிபடும் பெயர் ஒரே ஆளை சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செயிண்ட்-ஜெர்மைன் பெயர் ஐரோப்பாவில் 1742 இல் பிரபலமடைந்தது. அவர் ஐந்து வருடங்கள் Shah of Persia’s கோர்ட்டில் தங்கியிருந்தார். அவர் அரச மற்றும் பணக்காரர்களை அறிவியல் மற்றும் வரலாறு பற்றிய பரந்த அறிவு, அவரது இசைத் திறன், எளிதான வசீகரம் ஆகியவற்றால் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ரஷ்யன் மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளை சரளமாக பேச தெரியுமாம், சீன, லத்தீன், அரபு – பழங்கால கிரேக்கம் மற்றும் சமஸ்கிருதம் கூட நன்கு அறிந்திருந்தாக நம்பப்படுகிறது. புகழ்பெற்ற தத்துவஞானி, வால்டேர் செயிண்ட்-ஜெர்மைன் பற்றி “அவர் ஒருபோதும் இறக்காத ஒரு மனிதன், எல்லாவற்றையும் அறிந்தவர்” என்று கூறி இருக்கிறார். 18 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை அவரை பற்றிய குறிப்புகள் அங்கங்கே இருக்கிறது. 1880 மற்றும் 1900 க்கு இடையில், புகழ்பெற்ற ஆன்மீகவாதி Helena Blavatsky உட்பட தியோசோபிகல் சொசைட்டியின் உறுப்பினர்கள், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் “மேற்கின் ஆன்மீக வளர்ச்சியை” நோக்கி செயல்படுவதாகவும் கூறியபோது, ​​செயிண்ட்-ஜெர்மைனின் பெயர் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. 1972 இல் பாரிசில் Richard Chanfray என்ற நபர் நான் தான் புகழ்பெற்ற செயிண்ட்-ஜெர்மைன் என்று அறிவித்தார். அவரது கூற்றை நிரூபிக்க தொலைக்காட்சியில் தோன்றி கேமராக்களுக்கு முன்பாக ஈயத்தை தங்கமாக மாற்றி காட்டினார். சான்ஃப்ரே பின்னர் 1983 இல் தற்கொலை செய்து கொண்டார். ஆக இந்த கவுண்ட் செயிண்ட்-ஜெர்மைன் என்பவர் யார்? அவர் சாக ரகசியத்தைக் கண்டுபிடித்த ரசவாதியா? time traveler ஆ? அல்லது ஒரு புத்திசாலி மனிதரின் கதை சில பல சுவாரசியங்கள் சேர்த்து அருமையான புராணக்கதையாக மாறியதா? Netflix series “Outlander” time travel பற்றியது. அதில் கதாநாயகி 1945 ஆம் ஆண்டில் இருந்து 1745 ஆம் ஆண்டிற்கு செல்கிறாள். இதில் Comte de Saint Germain character வருகிறது. Comte de Saint Germain ஒரு time traveler என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் மறைமுகமாக சொல்ல பட்டு இருக்கிறது. […] பெண் என்பவள் உடமை இந்த பெண் இப்படி உடை அணிய வேண்டும் அப்படி உடை அணிய வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாமே patriarchy ல இருந்து கிளை விடுவது தான். அதாவது பெண் என்பவள் உடமை. ஆணின் property. அதாவது தோட்டம், ஆடு, மாடு, வீடு, கார் மாதிரி பெண்ணும் ஆணின் உடமை. திருமணத்திற்கு முன் அப்பாவின்/சகோதரனின் பொறுப்பு அதன்பின் கணவன்/பையனின் பொறுப்பு. இந்த உடமை அப்படின்ற எண்ணம் இருப்பதால் தான் தங்கத்தை பெட்டிக்குள்ள வைக்கிறேன், இனிப்பை ஈ மொய்க்காம மூடி வைக்கிறேன், சேலையை முள்ளு படாம பாக்குறேன் என்று அஃறிணை கூட பெண்களை ஒப்பிடுற மனம் வருது. எப்படி தோட்டத்தில் இருந்து வரும் காய்கள் அந்த தோட்டக்காரனுக்கு சொந்தமோ, மாடு கறக்கும் பால் பால்காரன் க்கு சொந்தமோ, அது மாதிரி பெண்கள் பெற்று எடுத்தும் தரும் பிள்ளைகள் அந்த ஆணுக்கு சொந்தமாகி விடுகிறது அப்பாவோட initial போட்டாச்சு. இப்போ எப்படி வேலி போட்டு, தண்ணி பாய்ச்சி, உரம் போட்டு, தோட்டத்தை பராமரித்து அதனால் வரும் வருமானத்தை அனுபவிக்கிறானோ அதே போல பெண்களை நிமிர்ந்து பாக்காதே, ஒழுங்கா டிரஸ் பண்ணு, அங்க போகாதே இங்க போகாதே என்று பராமரித்து அவளால் சந்ததியை பெருக்கி கொள்கிறார்கள். தோட்டத்தில் இன்னார் தோட்டம் அப்படினு வேலி போட்டு போர்டு வைக்குற மாதிரி, பெண்ணுக்கு கழுத்துல தாலியை (தாலி பெண்ணுக்கு வேலி ) கட்டி Mrs. ன்னு போட்டு இன்னார் மனைவி ன்னு வச்சிட வேண்டியது. அதுல பாருங்க இந்த தோட்டம் ஒரு அஃறிணை பேசாது. நீ தண்ணி ஊத்தாட்டி ஏன் ன்னு கேக்காது, நான் நல்லா பராமரிக்கற ஆள் கிட்ட போறேன்னு சொல்லாது, நீ என்ன என்னை பாக்கிறது நானே என்னை பாத்துக்கிறேன் ன்னு சொல்லாது. ஆனா பெண் அப்படி இல்லை. ஆணுக்கு இருப்பது போலவே அவளுக்கும் மூளையும், அதில் எண்ணங்களும், மனசும் அதில் ஆசைகளும் இருக்கும் இல்லையா… எங்கே அவள் சிந்தித்து புத்திசாலித்தனமா வேலியை உடைச்சுட்டு போய்டுவாளோ என்று நினைத்து உருவாக்கி வைத்துதான் இந்த நல்ல குடும்பத்து பொண்ணுங்க, அடக்கமான பொண்ணுங்க இப்படி பண்ண மாட்டங்க அப்படின்ற லேபிள். பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற திருக்குறள் ஒரு patriarchal statement தான். பெண்ணை ஒரு உடமையாக தான் பார்க்கிறது. அடுத்தவன் பொருளை எடுக்க கூடாது. அடுத்தவன் மாடு புல் போட்டால் இழுத்து கொண்டு போய்விடலாம் என்பதை போல, சும்மா பார்த்தா அடுத்தவன் பொண்டாட்டி வந்துருவா அதுனால நீ பண்ணாத என்பதாக இருக்கிறது.மாடு அவன் property அவன் காசு குடுத்து வாங்கி இருக்கிறான் அதுனால நீ திருடாதே என்பது போல அடுத்தவன் பொண்டாட்டி அவன் property அதை பார்க்காதே. அந்த பெண்ணுக்கு என்று சுயபுத்தி இருக்கும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் கணக்கில் வரவில்லை. விருப்பம் இல்லாத பெண்ணை பார்க்காதே என்றல்லவா இருக்க வேண்டும். மாடு தெய்வம் என்று சொல்லும் நாம் அதை வீட்டின் பூஜை அறையில் வைப்பது இல்லை கொல்லையில் தான் கட்டி வைத்து இருக்கிறோம். மாடு பால் தரும் என்று நாமாகவே சொல்லி கொள்கிறோம். மாடு என்ன நம்மளை வா வா என்று அழைத்தா தருகிறது. அப்படி பார்த்தால் மனிதன் ரத்தம் தருவான் என்று கொசு சொல்லிக்கொள்ளலாமா? நமது ஆழ்மனதிற்கு தெரியும் நாம் பசுவை exploit செய்கிறோம் என்று அதனால் வரும் குற்ற உணர்வை மறைக்கவே பசு தெய்வம், அது பால் தரும் என்ற பிதற்றல்கள் எல்லாம் அதன் நீட்சியே பெண் என்பவள் தெய்வம், தங்கம் போன்ற பிதற்றல்களும் பெண்ணை exploit செய்வதை மறைக்கவே. பெண் என்பவள் காலம் காலமாக ஒரு உடமையாகவே கருதப்படுகிறாள். ஆடு, மாடு, கோழி, பைக், டிவி இதை போல ஆணுக்கு பெண் என்பவள் ஒரு உடமை. பாதுகாக்க வேண்டிய பொருள் என்பதாக patriarchy சமுதாயம் கற்பிக்கின்றது. உடமையாளர் இல்லாத பொருளை யார் வேண்டுமானாலும் எடுத்து விடலாம் என்ற எண்ணத்துலயே உடன்கட்டை ஏறும் வழக்கம். விதவை பெண்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல பலதார திருமணங்களில் எத்தனை விதவை பெண்களை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற வழக்கம். குழந்தை இல்லாமல் கணவன் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களை மனைவியால் அனுபவிக்க முடியாது. அதற்காக கணவனது சகோதரனை மணந்து அவன் மூலம் கிடைக்கும் ஆண் வாரிசால் மட்டுமே அந்த சொத்தை அனுபவிக்க முடியும். (levirate marriage). இப்படி பெண்களை வெறும் பொருளாக மட்டுமே கருதும்போது வரக்கூடிய எண்ணங்கள் தான் தாலி ஏன் போடல? ஏன் விளக்கேத்தலை? ஏன் புடவை கட்டலை? ஏன் துப்பட்டா போடல? என்ற கேள்விகள் எல்லாம்… காந்தி சொல்கிறார் என்று ஒரு பெண் நடுராத்திரி நிறைய நகைகளை அணிந்து கொண்டு தனியாக செல்கிறாளோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லுவேன் என்று. இதில் பெண்ணின் உடலுக்கும், நகைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. என்று ஒரு பெண் தனது வாழ்க்கையை அவளே தேர்ந்து எடுக்கிறாளோ அப்படி தேர்ந்து எடுக்கும் அளவிற்கு அவளுக்கு கல்வியும் மனப்பக்குவமும் முதிர்ச்சியையும் தரும் அளவிற்கு இந்த சமுதாயம் முன்னேறி இருக்கிறதோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்று பொருள். ஈவ் மரபணு (Eve Gene) […] மைட்டோகாண்ட்ரியா என்பது நமது செல் க்குள் இருக்கும் சிறிய உறுப்புகள் ஆகும், இது செல் வேலையைச் செய்வதற்கான ஆற்றலை உருவாக்குகிறது. மைட்டோகாண்ட்ரியாவிற்கு சொந்த மரபணு மற்றும் அதன் செல்லுலார் டி.என்.ஏ மூலக்கூறு உள்ளது. அவை விந்தணுக்களில் இல்லை. […] அவை தாயால் மட்டுமே பரவுகின்றன. நீங்கள் ஆணோ பெண்ணோ உங்களது மைட்டோகாண்ட்ரியல் DNA உங்கள் தாயிடம் இருந்தே வருகிறது. உங்கள் தாய்க்கு அவரது தாயிடம் இருந்து கிடைக்கிறது. [ Mitochondrial Eve (also mt-Eve, mt-MRCA) is the matrilineal most recent common ancestor (MRCA)] இப்படியே பின்னோக்கி சென்றால் அனைத்து மனித சமூகத்திற்கும் இருக்கும் மைட்டோகாண்ட்ரியல் DNA ஒரு பெண்ணிடம் இருந்தே வந்து இருக்கிறது. இதை தான் ஈவ் மரபணு என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவருமே ஒரே தாயில் இருந்து வந்தவர்கள் தான். இதில் மன்னர் பரம்பரை மண்ணாகட்டி பரம்பரை, தலையில் இருந்து வந்தேன் தோளில் இருந்து குதித்தேன், ஆண் நெடில் உயர்ந்தவன் என்றெல்லாம் பிதற்றுவது பைத்தியக்காரத்தனம். நான் புத்தக பிரியை ஆன கதை எல்லாரும் முதலில் படிக்க ஆரம்பித்த புத்தகம் எது என்று கேட்ட போது ராஜேஷ்குமார் நாவல்கள்,  அப்துல் கலாம் புத்தகங்கள் என்று எல்லாம் சொன்னார்கள். நான் முதலில் வாங்கி படித்ததே தெனாலி ராமன், முல்லா நஸ்ருதீன், பீர்பால் கதைகள் தான். வெகு சிறு வயதிலேயே கதை புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். என் வீட்டில் எல்லோரும் புத்தக பிரியர்கள் தான். அப்பா சரித்திர நாவல் பிரியர். பத்திரிக்கைகளில் வரும் சரித்திர கதைகளை எல்லாம் கூட பைண்ட் செய்து வைத்து இருப்பார். அம்மா புத்தகங்கள் படிக்க மாட்டார். ஆனால் எல்லா பத்திரிக்கைகளும் படித்து விடுவார். வீட்டில் இல்லாத வார, மாத இதழ்களே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அண்ணனும் அதே. அவனும் தீவிர வாசிப்பாளர். ஆங்கில நாவல்கள், கம்யூனிச புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் எல்லாம் அவனது விருப்பம். இப்படி புத்தக குவியல்களுக்குள் இருந்ததால் புத்தக வாசிப்பு இயல்பாகவே வந்துவிட்டது. பள்ளியிலும் புத்தக வாசிப்பை உற்சாகப்படுத்தும் விதமாக புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்வது, நடமாடும் புத்தக லைப்ரரி கொண்டுவருவது, புத்தக விற்பனையாளர்களை அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்வார்கள். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால். வீட்டில் எப்போதும் தனியாக தான் இருப்பேன். குழந்தையாய் இருக்கும் போது வீட்டில் என்னை வைத்து பூட்டி வைத்து விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அண்ணனுக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம் அவனும் வெளியில் சென்று விடுவான். ஆகையால் எனக்கு துணையாக இருந்தது புத்தகங்கள் தான். தொலைக்காட்சியில் அத்துணை ஆர்வம் எப்போதும் இருந்தது இல்லை. கார்ட்டூன் கூட அப்போது எல்லாம் மாலையில் போட்டதை மறுநாள் காலையில் போடுவார்கள். முந்தாநாள் மதியம் போட்டதை இன்று மதியம் போடுவார்கள். Bore! எனது ஆர்வத்தை பார்த்து வீட்டிலும் எனக்கு ஏற்ற புத்தகங்கள் வாங்கி தருவார்கள். பிறந்தநாள் பரிசாக புத்தகங்கள் தான் கிடைக்கும். கோகுலம், அம்புலிமாமா, ரீடர்ஸ் டைஜஸ்ட், ராணி முத்து,  போன்ற புத்தகங்களுக்கு எல்லாம் நான் சந்தாதாரர். சுட்டி விகடன் வந்ததும் சுட்டி விகடன். சுட்டி விகடன் கதை சொல்லும் போட்டியில் கலந்து கொண்டு எனது புகைப்படம் கூட வந்து இருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்கள், நாளிதழில் கூட வரும் சிறுவர் மலர், தங்க மலர், சிறுவர் மணி இதையும் விட்டு வைப்பது இல்லை. Cycle வாங்கி குடுத்ததும் நானும் என் தோழியும் சென்ற முதல் இடம் மாவட்ட கிளை நூலகம் தான். 11 வயது என்பதால் புத்தகங்கள் எடுக்க முடியாது அதனால் நானும் அவளும் விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை நூலகத்திலேயே பொழுதை கழிப்போம். எங்களுடைய இந்த ஆர்வத்தை பார்த்து அந்த librarian அவரது கார்டை குடுத்தார். அதில் முதலில் எடுத்தது முல்லா நஸ்ருதீன் கதைகள் தான். நானும் என் தோழியும் ஒரு நோட்டில் எந்தெந்த book எந்தெந்த வரிசையில் இருக்கிறது என்றெல்லாம் எழுதி வைப்போம். அதை பார்த்த அவர் இதெல்லாம் waste நாளைக்கு இந்த book இந்த இடத்தில் இருக்கும் என்பது நிச்சயமில்லை என்றார். இப்படி தொடங்கியது என் நூலக பயணம். அதன்பின் ஏழாம் வகுப்பிலேயே அந்த கிளை நூலகத்தில் உறுப்பினர் ஆயாச்சு. 12ஆம் வகுப்பு முடிந்ததும் மாவட்ட தலைமை நூலகத்தில் உறுப்பினர். கல்லூரியில் சேர்ந்ததும் அதெல்லாம் போதாது என்று கூடுதலா ஒரு தனியார் lending library இல் உறுப்பினர். PG சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அந்த பல்கலைக்கழக நூலகத்தில் தான் எனது முதல் வேலை. Part time job! சிறுவயதிலேயே சிறார் புத்தகங்கள் bore அடித்து போனது. அப்போவே ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், எண்டமூரி வீரேந்திரநாத், பாலகுமாரன், அனுராதா ரமணன், பாக்கியம் ராமசாமி போன்றவர்களின் புத்தகங்களை படிப்பேன். ஒரு எழுத்தாளர் ஒரு சமயம் என்று வைத்து கொண்டு லைப்ரரியில் வரிசையாக அவரது புத்தகங்களை எல்லாம் முடித்த பின் அடுத்த எழுத்தாளர்களுக்கு செல்வேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாலகுமாரன் புத்தகம் படித்து கொண்டு இருப்பேன். இதற்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு இருந்தது இந்த வயசுல பாலகுமாரன் book ஆ என்று. பள்ளியிலும் கூட இடைவேளைகளில், சில சமயம் வகுப்பு நடக்கும் போது கூட மறைத்து வைத்து கதை புத்தகங்கள் படித்து கொண்டு இருப்பேன். சீதாப்பாட்டி, அப்புசாமி கதையை படித்து வகுப்பில் என்னை மறந்து சிரித்து அடி வாங்கி இருக்கிறேன். பாலகுமாரனின் இனிது இனிது காதல் இனிது புத்தகத்தை பையில் வைத்து இருந்ததற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியில் முட்டி போட்டு இருந்து இருக்கிறேன். இது ஒரு பக்கம் இருந்தாலும் பள்ளியில் எந்த போட்டி நடந்தாலும் என்னை கேட்காமலே பெயர் கொடுத்து விடுவார்கள். மாவட்ட அளவில் கட்டுரை போட்டி நடக்கிறதா? அதற்கு பள்ளி சார்பாக செல்ல ஆள் இல்லையா? கூப்பிடுங்கள் ஸ்வாதியை என்பது போல் தான் இருந்தது. அந்த வயதில் மற்ற பிள்ளைகளை காட்டிலும் அதிக புத்தகங்களை படித்து இருந்ததால் அந்த அறிவை எல்லாம் பயன்படுத்தி எதையேனும் எழுதி பரிசு வாங்கிவிட்டு வந்து விடுவேன். ஒருமுறை கவிதை போட்டிக்கு பெயர் கொடுத்து இருந்தார்கள். ஒன்பதாவது வகுப்பில் என்று நினைக்கிறேன். கவிதை என்றால் என்னவென்றே தெரியாது என்னால் போகவே முடியாது என்று நான் ஒரே பிடிவாதம். சும்மா போய்ட்டு வா நீ பரிசு வாங்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்கள். ஆனால் எனக்கு அதில் சம்மதமில்லை. எந்த போட்டியில் பங்கு பெற்றாலும் சுவாதி நிச்சயம் ஒரு பரிசை வாங்கி விடுவாள் என்று பெயர் எடுத்த இருந்த எனக்கு எதுவும் தெரியாமல் சென்று வெறும் கையோடு வர விருப்பம் இல்லை. உடனே போனேன் நூலகத்திற்கு, வைரமுத்து, கண்ணதாசன், வாலி கவிதைகள் எல்லாம் எடுத்து படித்தேன். கல்யாண்ஜி / வண்ணதாசன் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தது. கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு மாதிரி அறிந்து கொண்டேன். முடிந்தவரை எதுகை மோனை வார்த்தைகளை போட வேண்டும். அல்லது வசன கவிதைகள் என்று பாரதியார் ஸ்டைலில் எழுதலாம். முக்கியமானது சொல்ல வந்த கருத்தை நேரடியாக சொல்ல கூடாது ஏதேனும் உவமை வைத்து தான் சொல்ல வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு கவிதை போட்டிக்கு சென்றேன் தலைப்பு அங்கு தான் தருவார்கள் தலைப்பு தந்த உடன் எழுத வேண்டும். கொடுத்த தலைப்பு தென்றல். எழுதி முதல் பரிசும் வாங்கிவிட்டேன். அந்த ஊக்கத்தில் பள்ளி நடத்தும் பத்திரிக்கை ‘அரும்பு’, மற்றும் சிறுவர் மாத இதழ்களில் எல்லாம் நிறைய கவிதைகள் எழுதி அனுப்பி  பரிசு பெற்று இருக்கிறேன். நிறைய கதை, கவிதை, கட்டுரை போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு பரிசு வாங்கி இருக்கிறேன் அதற்கு காரணம் புத்தக வாசிப்பு தான். நாடகம் எல்லாம் எழுதி பள்ளி விழாவில் அரங்கேற்றி இருக்கிறேன். முத்தமிழ் விழா என்று இயல், இசை, நாடகத்தை பெருமைப்படுத்தும் விழா ஒன்று எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் அதில் பெரும்பங்கு எனதே. வருடா வருடம் தமிழின் பெருமைகளை விளக்கும் விதமாக ஒரு நாடகத்தை போடுவேன். அதில் TR மாதிரி கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் நானே. அந்த வருடம் புதிதாக வந்த தமிழ் ஆசிரியர், Jasmine sister எனது தமிழ் உச்சரிப்பை பார்த்து, ழா னவும் வராது, ளா னவும் வராது ஆனா நீ தான் தமிழின் பெருமையை பற்றி பேசும் ஹீரோவா?  அட சீ போ என்று விட்டார்கள். ஒரே அழுகை! அந்த பக்கமாக வந்த, இனிது இனிது காதல் இனிது புத்தகத்தை வைத்து இருந்ததற்காக ஒரு நாள் முழுக்க என்ன வெளியில் முட்டி போட வைத்த தலைமை ஆசிரியர் பதறி தமிழ் ஆசிரியரிடம் சென்று “ஐயோ இந்த பொண்ணுதாங்க இதுக்கு கதை, திரைக்கதை வசனம் எல்லாமே” என்று எடுத்துரைக்க அதை கேட்டு ஆச்சரியப்பட்டு பின்னர் என் அழுத முஞ்சியை பார்த்து பரிதாபப்பட்டு “சரி நான் உனக்கு உச்சரிப்பு எல்லாம் சொல்லி தருகிறேன். அதை கேட்டு நீ ஒழுங்காக பேசினால் தான் நடிக்கலாம்” என்றார். ஆனா பாருங்க அது என்னமோ இந்த ழ, ள, வாயிலேயே வரல அது போக ர, ற க்கு வேற உச்சரிப்பு வித்தியாசம் இருக்கிறதாம். இது ஆகுற கதை இல்ல என்று அன்னிக்கு முழுக்கு போட்டது தான் பேச்சு போட்டி, நடிப்பு எல்லாம். இப்படி என் எழுத்துக்கு விதை போட்டது வாசிப்பு அனுபவம் தான். உலகை பற்றிய அகன்ற பார்வையையும் வாசிப்பு தரும். ஒருமுறை குழந்தைகள் தின விழாவிற்கு வந்த collector தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க கூடாது குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்ல… உடனே நான் எழுந்து பட்டாசு வாங்குவதை நிறுத்திவிட்டால் அவர்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு போக போகிறார்கள். அவர்கள் என்ன விருப்பட்டா பட்டாசு செய்கிறார்கள்? வறுமையினால் தானே செய்கிறார்கள். நாம் வறுமையை ஒழிக்க வேண்டுமா? அல்லது பட்டாசை ஒழிக்க வேண்டுமா? என்று கேட்க கலெக்டர் இது ஒரு நல்ல கேள்வி மாணவ சமுதாயம் இம்மாதிரியான கேள்விகளை கேட்க வேண்டும் very good very good என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆனால் அவர் போனபின் தலைமை ஆசிரியர் May Santhiyagu என்னை பேசிய பேச்சுக்கு பேசாம பட்டாசு ஆலைக்கே வேலைக்கு போய்விடலாம் என்று தோன்றியது. அது ஒரு கனாக்காலம், பயமறியாத காலம், பின்விளைவுகள் பற்றி கவலைப்படாத காலம். கேள்விகள் கேட்டு ஆசிரியரையே அழ வைப்பது எல்லாம் உண்டு. ஆயிஷா கதையில் வரும் ஆயிஷா போலதான். நல்லவேளை அதில் வரும் ஆசிரியர்கள் போல இல்லை எனது ஆசிரியர்கள். இப்படி நீர் சூழ் உலகு போல புத்தகங்கள் சூழ் உலகு எனது உலகு. 96 படத்தில் வகுப்பு நேரத்தில் ஜானுவை பாட சொல்வது போல. நான் வகுப்பில் கதைகள் சொல்லி கொண்டு இருப்பேன். கல்லூரி வந்தபின் தமிழ் நூல்கள் ஆர்வம் குறைந்து ஆங்கில நூல்கள் மேல் ஆர்வம் அதிகரித்து விட்டது. தமிழ் ஆங்கிலம் என்பதைவிட கதைகளில் இருந்து non fiction க்கு ஆர்வம் போய்விட்டது. தமிழில் non fiction அத்துணை சிறப்பாக இல்லை என்று அப்போது முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு இருந்து இருக்கிறேன். அதன்பின் தமிழ் புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே நின்று ஆங்கில புத்தகங்களில் மூழ்கிவிட்டேன். இப்போது தான் டிவிட்டர் வந்ததில் இருந்து நல்ல தமிழ் புத்தகங்கள் பற்றி பார்த்து மறுபடி தமிழுக்கு வந்து இருக்கிறேன். இப்படிப்பட்ட தென்னை மரத்தில் தான் இந்த மாட்டை காட்டுகிறோம் என்று மாட்டுக்கு கட்டுரை எழுதின மாதிரி. இப்படி எல்லாம் நான் இருக்க காரணமே புத்தக வாசிப்பு தான்.  Tall el-Hammam தான் Sodom நகரமா? […] கடந்த பல ஆண்டுகளாக, பல Evangelical archaeologists மற்றும் Biblical scholars பைபிளில் சொல்லப்படும் Sodom, Dead Sea க்கு  வடகிழக்கில் காணப்படும் Tall el-Hammam தான் என்கிறார்கள்.  Sodom  நகரத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுவது பல கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த முடிவை நிராகரிக்க பல காரணங்கள் உள்ளன.  Tall el-Hammam  ஏன் பைபிளில் வரும் Sodom  இல்லை என்பதை பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் :  (1)  Sodom  எப்போது அழிக்கப்பட்டது?  (2)  Patriarchs (Abraham, Isaac, and Jacob)  ஆயுட்காலம் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும்?  (3)  Sodom  அதன் அழிவுக்குப் பிறகு மீண்டும் மக்களால் வாழும் இடமாக மாற்றப்பட்டதா ? இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள்  Tall el-Hammam  ஏன் பைபிளில் வரும்  Sodom அல்ல என்பதைக் காட்டும். Sodom கதையை படித்து இருப்பீர்கள் (இல்லை என்றால் எனது blog இல் படிக்கவும்). Sodom அழிவு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகும் போது என்ன நேரிடும் என்பதை இது காட்டுகிறது. (Matthew 10:15; 11:23–24; Luke 17:28–29) […] Tall el-Hammam தான்  Sodom என்பதை முதலில் சொன்னவர் evangelical archaeologist Dr. Steven Collins. (Biblical archaeology பற்றியும் நான் தனியாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதையும் பார்க்கவும்.) ஆதியாகமம் 13:10–12 வரிகளில் இருந்து  Sodom, Dead Sea க்கு வடகிழக்கில் இருப்பதாக முடிவுக்கு வந்தார் Steven Collins. ஆதியாகமம் 13:3 இல் Lot பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாக Abraham மிடம் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி  Dead Sea க்கு வடக்கே Jordan valley ஐ அடைந்ததாக இருக்கிறது. “அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான்.” இதை எல்லாம் வைத்து தோராயமாக Collins, Tall el-Hammam தான்  Sodom என்று சொன்னாலும் அப்படியே வைத்துக்கொண்டாலும் சில விஷயங்கள் இடிக்கின்றன. Lot சென்ற சோவார்  (Zoar) எனும் ஊர் Arnon River பக்கத்தில் இருப்பதாக Collins சொல்கிறார். அப்படி வைத்து கொண்டால் Sodom (Tall el-Hammam) இல் இருந்து Zoar (Arnon River) க்கு 27km தூரம் வருகிறது. பாதி ராத்திரிக்கு மேல் கிளம்பி விடியலுக்கு முன் நடந்தே இந்த 27km தூரத்தை கடப்பது நிச்சயம் முடியாத ஒன்று.(Genesis 19:20–23) Tall el-Hammam அழிவு ஒரு தீயினால் ஏற்பட்டு இருக்கிறது. இந்த அதிகபட்ச வெப்பநிலை அங்கு உபயோகத்தில் இருந்த மண்பாண்டங்களை, கட்டுமான கற்களை  உருக்கி இருக்கிறது. மண்பாண்டங்களின் வயதை வைத்து ஆராயும் போது இந்த அழிவு 1750–1650 BC க்குள்  நடந்து இருக்க வேண்டும் என்று Collins சொல்கிறார். திரும்பவும் இந்த இடம் 1000 BC யில் (Iron Age) இல் மனிதர்களால் வாழுமிடம் ஆக்கப்பட்டு இருக்கிறது. இந்த கால வரையறைகள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரிந்துகொண்டவை. பைபிள் சொல்லும் காலம் என்ன? பைபிள் காலத்தை கண்டுபிடிக்க நாம்  exodus நிகழ்ந்த காலத்தை முதலில் வரையறுக்க வேண்டும். அதன்பின் Patriarchs ( Abraham, Isaac, and Jacob) இவர்கள் வயது காலம் ஆகியவற்றை பார்க்க வேண்டும். இதில் இன்னொன்று இவர்கள் வயது எல்லாம் 175, 150 என்று பைபிளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வயதை அப்படியே எடுத்துக்கொள்வதா? அல்லது அவை symbolic என்று ஒதுக்குவதா என்று முடிவு செய்ய வேண்டும். அடுத்து  Sodom இன் அழிவிற்கு பின் மீண்டும் மக்கள் அங்கு வாழ்ந்ததாக பைபிள் குறிப்பிடுகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 1. பைபிள் படி சோதோம் எப்போது அழிக்கப்பட்டது? Collins காலத்தை நிறுவுவதில் அத்துணை ஆர்வம் காட்டவில்லை. “புவியியல் தரவும் அதன் உறுதியும் கால நிச்சயமற்ற தன்மையை விட முக்கியமான ஒன்றாக இருக்கிறது ” என்கிறார். மறுபுறம், Olson என்னும் அறிஞர் Tall el-Hammam அழிக்கப்பட்ட காலம் தான்,  Tall el-Hammam  Sodom ஆ இல்லையா  என்பதற்கான வலிமையான வாதம் என்கிறார். ஏனெனில் இது ஆபிரகாமின் வாழ்க்கையின் பைபிள் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால்,  ஆபிரகாமின் வாழ்க்கை கிமு 2166-1991 க்கு இடையில் என்று பைபிள் குறிக்கிறது. அப்படியானால் 1750-1650 BC க்கு இடையில் அழிந்த  Tall el-Hammam  Sodom மாக இருக்க முடியாது.  ஒரு உறுதியான காலவரிசையை நிறுவுவதில் பழைய ஏற்பாடு  1 இராஜாக்கள் 6: 1 உதவுகிறது : “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.” 1 கிங்ஸ் 6: 1 இல் உள்ள தகவல்கள் மிகவும் துல்லியமான காலவரிசையைப் பயன்படுத்துகின்றன (அதாவது, 480 வது ஆண்டு, 4 வது ஆண்டு, 2 வது மாதம்) மற்றும் எகிப்திலிருந்து வெளியேற்றம் கோவில் கட்டப்படுவதற்கு 480 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறது.  480 ஆண்டுகள், கிமு 967 மே மாதம் தொடங்கியது. கிமு 967 தேதி,  Tyre  இன்  காப்பகப் பதிவுகள் ஆலயத்தைக் கட்டுவதற்காக சாலமோனுக்குப் பொருட்களை அனுப்பிய தேதியுடன் ஒத்து போகிறது.  Collins,    exodus 1416-1386 BC க்குள் நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்.   நியாயாதிபதிகள் 11:26 இல் ஜெப்தாவின் அறிக்கையில் காலம் மேலும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: “இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?” Exodus   கிமு 1446 தான் நடந்தது என்று நிறுவும் இது போன்ற பல  சான்றுகள் பைபிளில் இருந்தே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ------------------------------------------------------------------------ Basic Old Testament Chronological Scheme 2166 BC Birth of Abram 2091 BC Abram leaves Ur 2067 BC Destruction of Sodom 1876 BC Jacob moved to Egypt 1446 BC Exodus from Egypt 1406 BC Israelites crossed into Canaan 967 BC Construction of Solomon’s Temple ———————————————- ———————————-  பைபிள் Sodom 2067 BC இல் நடந்தது என்று தெரிவிக்கிறது ஆனால் ஆராய்ச்சியாளர்கள் Tall el-Hammam  கிமு 1750-1650 க்கு இடையில் அழிக்கப்பட்டது என்கிறார்கள். கிட்டத்தட்ட இது  300-400 ஆண்டுகளுக்கு வித்தியாசம் ஆகிறது. 2. அடுத்து Collins Sodom அழிவை எப்படியேனும் கிமு 1750-1650 க்கு இடையில் கொண்டு வர வேண்டும் என்று patriarchs ஆயுட்காலத்தை (ஆபிரகாம், 175; ஐசக், 180; ஜேக்கப், 147; மற்றும் ஜோசப், 110) கையில் எடுக்கிறார். அதாவது அப்ரஹாமிற்கு 175 வயது என்றால் 175 வயது அல்ல அது ஒரு உருவகமாக சொன்னது பைபிளில் இருக்கும் எல்லா வயதுமே அப்படிதான். உண்மையில் அப்ரஹாமிற்கு 75 இல் இருந்து 95 வயதிற்குள்ளாக தான் இருக்க முடியும் என்கிறார். ஆனால் இந்த வாதமும் அடிபட்டு போகிறது. “ இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.  ” (யோபு  42:16), இஸ்ரவேல் முடியாட்சியின் காலத்தில் ” யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான் (2 நாளாகமம் 24:15),  ஆபிரகாம் கானான் நாட்டிற்குச் செல்ல ஹரனை விட்டு வெளியேறும்போது அவருக்கு 75 வயது (ஆதியாகமம் 12: 4) மற்றும் அவர் அங்கு 10 ஆண்டுகள் வாழ்ந்தபோது, அவரது மனைவி சாரா தரிசாக இருந்ததால், அவரும் அவரது எகிப்திய வேலைக்காரர் ஆகரும் இஸ்மாயிலை கருத்தரித்தனர் (ஆதியாகமம் 16) பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு 99 வயதாக இருந்தபோது, கடவுள் ஆபிரகாமுடன் விருத்தசேதன உடன்படிக்கை செய்தார் (ஆதியாகமம் 17: 1, 24). ஆபிரகாமுக்கு அவரது மகன் ஐசக் பிறந்தபோது 100 வயது (ஆதியாகமம் 21: 5; ரோமர் 4:19). ஆபிரகாம் 175 வயதாக இருந்தார், அவர் “நல்ல வயதிலும், வயதானவராகவும், முழு வயதிலும் இறந்துவிட்டார்” (ஆதியாகமம் 25: 7-8).   இவ்வாறு தெளிவான வயது குறிப்பிடப்பட்டு இருப்பதால் வயது உருவகம் என்கிற வாதமும் அடிபட்டு போகிறது. 3. சோதோம் அதன் அழிவுக்குப் பிறகு மீண்டும் வாழ்ந்ததா? சோதோமின் அழிவை விவரிக்க ஆதியாகமம் 6-7 ல் வெள்ளத்தின் விவரிப்பே இங்கும் பயன்படுகிறது. கடவுள் நோவாவின் நாட்களில் பூமியில் “மழை” வெள்ளத்தின் நீரை அனுப்பியதைப் போலவே , அவர் சோடோம் மற்றும் கொமோரா மீது ஒரு கந்தகம் மற்றும் நெருப்பை “மழை” போல பெய்ய வைத்தார். வெள்ளத்தின் போது பூமி நீரால் அழிக்கப்பட்டது போல , நெருப்பு பிரளயம் சோதோமை அழித்தது. கந்தகம் மற்றும் நெருப்பு மழை பொழிவதன் மூலம் , சோதோம், பள்ளத்தாக்கு, அனைத்து மக்களும், மற்றும் தரையில் வளர்ந்த அனைத்தும். அனைத்தும் அழிக்கப்பட்டன; அது ஒரு முழு பேரழிவு. தீர்க்கதரிசிகள் பாபிலோன், ஏதோம், மோவாப் மற்றும் அம்மோனின் தீர்ப்பை சோதோம் மற்றும் கொமோராவின் தீர்ப்புடன் ஒப்பிடுகின்றனர் (ஏசாயா 13: 19-20; எரேமியா 49: 17-18; 50: 39-40; செப்பனியா 2: 9) அங்கு யாரும் மீண்டும் வாழ மாட்டார்கள் என்கிறார்கள். Tall el Hammam அழிவு  1750-1650 BC நடந்தது. பின்னர் இரும்பு யுகம் 1000 BC  இல், மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டது.  எசேக்கியேல் 16:53 இல், “நான் சோதோமின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுப்பேன்” என்று யெகோவா அறிவித்தார்.  “நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன். ” Collins, Tall el Hammam இல் 1000 BC  இல் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டதிற்கு இந்த வசனத்தை உதாரணமாக காட்டுகிறார். ஆண்டவர் உறுதி அளித்தது போல மீண்டும் அங்கு மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்கிறார். ஆனால் எசேக்கியேல் எழுதப்பட்ட காலம் கி.மு. 592. Tall el Hammam இல் மக்கள் குடியேறிய காலம் கி.மு. 1000 எசேக்கியேல் எழுதப்பட்ட காலதிற்கு 500 ஆண்டுகள் முன்.  எசேக்கியேலின் நாளில் சோதோம் மறுசீரமைப்பு தேவைப்பட்டால், அதன் ஆரம்ப அழிவுக்குப் பிறகு அது ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை இது குறிக்கும். எனவே,  கி.மு. 1000  Tall el Hammam மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டது என்ற உண்மையோடு  இது முரண்படுகிறது.  தீர்க்கதரிசி ஏசாயா, பாபிலோன் தேசத்தின் எதிர்கால அழிவு பற்றி கணிக்கும்போது (ஏசாயா 13: 19-20): “ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.  இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.” என்கிறார் இது சோதோம் அழிந்தபிறகு பிறகு அதில் மீண்டும் மக்கள் குடியேறவில்லை என்று அர்த்தமாகிறது . இது போல இன்னும் பல வசனங்கள் சோதோம் அழிவிற்கு பின் அங்கு மக்கள் வசிக்கவில்லை என்பதையே வலியுறுத்துகிறது  மேலும்,   ரோமானிய காலத்தில் ரோமானியர்கள் Tall el-Hammam இல் சூடான நீரூற்றுக்கு அருகில் ஒரு குளியல் வீட்டைக் கட்டினர், ரோமானியர்களிடத்தில் அது புழக்கத்தில் இருந்து இருக்கிறது. அதேசமயம்  மத்தேயு 11:23 இல்,  “கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும்.” என்று இயேசு சொல்வதின் மூலம் Sodom, Tall el-Hammam அல்ல என்பது புலப்படுகிறது. Sodom and Gomorrah Disclaimer: 18+, மனம் புண்படும் sensitive மக்கள் தயை கூர்ந்து மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்… பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் நிறைய சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. அவற்றில் ஒரு காவிய கதை தான் Sodom மற்றும் Gomorrah. ஆதியாகமாம் 18:20 இல் கதை தொடங்குகிறது… “பின்பு கர்த்தர் சோதோம் கொமோரா கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின் படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.” எல்லாம் அறிந்த, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் Sodom மற்றும் Gomorrah நகரத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க மெனகெட்டு கீழே இறங்கி வருகிறார் (ஞான கண் வேலை செய்யவில்லை போலும்). ஆபிரகாம் க்கு கடவுள் ரொம்ப கோபக்காரர் என்று தெரியும் என்பதால் கடவுளிடம் ஒரு bargain நடக்கிறது. ஆபிரகாம், ஒரு 50 நீதிமான்கள் இருந்தா கூட நீங்க அந்த நகரங்களை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று கேட்கிறார். இப்படியே பேசி பேசி ஒரு 10 நீதிமான்கள் வரை கொண்டு வந்தார் ஆபிரகாம். (நீதிமான்கள், as always not people “men”) எதுக்கு இந்த தேவை இல்லாத bargain scene என்று தெரியவில்லை? கடவுளுக்கு ஏதுமே தெரியாத மாதிரியே ஆபிரகாம் deal பண்ணிகிட்டு இருக்கிறார். கடவுள் ஆபிரகாமிடம் எதும் தெரியாதது போல நடிக்கிறாரா? அல்லது உண்மையாகவே அங்கு என்ன நடக்குது ஏது நடக்குது என்று தெரியவில்லையா? நமக்கு புரியவில்லை. Cut பண்ணா அடுத்த scene. ரெண்டு தூதர்கள் (angels) லோத்து (Lot) வீட்டு வாசல்ல (Sodom) வந்து அமர்ந்து இருக்கிறார்கள். அவங்களை பார்த்த லோத்து அவங்களை உள்ள கூப்பிட்டு சாப்பாடு போட்டு படுக்க வைத்தார். திடீர்னு சம்பந்தமே இல்லாத விஷயங்கள் எல்லாம் பைபிள்ல நடக்கும். நாங்க ஏன்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போக போறோம் அப்படின்ற மாதிரியான விஷயங்கள் நடக்கும். அதே மாதிரி ஊர்ல இருக்கிற ஆம்பளைங்க எல்லாம் சின்ன பையன்ல இருந்து தாத்தா வரைக்கும் கிளம்பி வந்து லோத்து கிட்ட உன் வீட்டுக்கு ரெண்டு தூதர் வந்து இருக்காங்களாம் அவங்கள வெளில அனுப்பு நாங்க matter பண்ண போறோம் அப்படினு கூப்பிடுறாங்க. என்னடா இது ன்னு நீங்க பீதி ஆகாதீங்க இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு அடுத்து வருது. லோத்து உடனே எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட் அ அனுப்ப முடியாது ஆனா என்கிட்ட ரெண்டு கன்னி பெண்கள் இருக்காங்க. என்னோட பொண்ணுங்க தான்!!! அவங்களை நான் அனுப்பறேன் நீங்க என்ன வேணும்னா பண்ணிக்கோங்க அப்படினு சொல்றாரு. இவரு தான் நீதிமானாம்!!! உண்மையான நீதிமான் என்ன பண்ணனும்? என்ன வெட்டி போட்டா கூட பரவாயில்லை என் வீட்டுல இருக்கிற யாருக்கும் எதுவும் நடக்க நான் விட மாட்டேன் அப்படின்னு சொல்லணும் ல. ஆனா சொல்லல இந்த பாசமிகு தந்தை… Sorry நீதிமான்! இதே மாதிரி hindu mythology la ல ஒரு கதை சிவன் வந்து சிவனடியார் மாதிரி வேஷம் போட்டு ராஜா வீட்டுக்கு போவார். நல்லா சாப்டுட்டு ராஜா பக்தியை டெஸ்ட் பண்ண எனக்கு ஒரு பொண்ணு வேணும்ன்னு கேப்பார். சிவனடியார் கேட்டதை இல்லை என்று சொல்ல கூடாதாம். ஆனா பொண்ணும் அப்போ ஒண்ணும் இல்லாததால் அவர் மனைவியையே அதாவது ராணியையே அனுப்புவாராம். சிவன் சந்தோஷப்பட்டு நான் just உன்னோட பக்தியை டெஸ்ட் பண்ண பாத்தேன் chill ன்னு போய்டுவாராம். இதெல்லாம் என்ன ஒரு sadistic மனப்பான்மை?! நான் உன் பக்தியை சோதிக்கிறேன், விசுவாசத்தை சோதிக்கிறேன் அப்படின்னு… இப்படி சோதித்து தான் கடவுளுக்கு நம் மனது தெரியும் என்றால் நீ என்ன கடவுள்? தெரிந்தும் சோதிக்கிறார் என்றால் என்ன ஒரு குரூர மனப்பான்மை… இந்த வல்லவன் படத்தில் வரும் ரீமாசென் போல. Tattoo போடு ஏன்னா நீ என்ன லவ் பண்ற ல… நான் எடுத்த வாந்தியை அள்ளு ஏன்னா நீ தான் என்ன லவ் பண்ற ல… என்பது போல ஒரு teenage immature girl மாதிரி நடந்து கொள்கிறார் கடவுள்… லவ் பண்ணலை அப்படின்னா மூஞ்சில ஆசிட் அடிக்கற மாதிரி நம்மள நரகத்தில் தள்ளுகிறார். இதுதான் patriarchy! பெண்கள் வெறும் உடமை அப்படினு நினைப்பதால், ஆடு மாடு மாதிரி யார்கிட்ட வேணும்ன்னா நான் அனுப்புவேன், வேணும்னா வச்சுப்பேன்… பெண்களுக்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்க கூடாது…. Back to story, நம்ம நீதிமான் வெத்து sorry லோத்து சொன்னதை ஊர்காரங்க கேக்கலை. ரொம்ப பேசுனா அவங்களுக்கு முன்னாடி உன்ன தான் பண்ணுவோம் ன்னு லோத் அ அட்டாக் பண்ண வராங்க. அந்த ரெண்டு தூதர்களும் லோத் கிட்ட கடவுள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து ஊரையே அழிக்க போறாரு நீ உன் family ய கூட்டிகிட்டு escape ஆய்டு அப்படினு சொல்றாங்க. சரி நான் போறேன் but நான் பக்கத்து ஊருக்கு போற வரைக்கும் வெயிட் பண்ணுங்க அதுக்குள்ள அழிச்சுறாதீங்க நான் வயசானவன் மெதுவா தான் போக முடியும் ன்னு சொல்றான். சரி ஓகே நீ safe place போற வரைக்கும் வெயிட் பண்றோம் ஆனா நீ திரும்பி மட்டும் பார்க்க கூடாது அப்படின்னு warn பண்ணி அனுப்புறாங்க. Again, எப்படி ஈவ் கிட்ட direct அ rules and regulations அ சொல்லாம அவளை பலிகடா ஆக்குனான்களோ, அதே போல lot மனைவி கிட்ட அந்த angel direct அ warning அ சொல்லல lot கிட்ட தான் சொல்லுது. […] லோத் அவன் ரெண்டு பொண்ணுங்க மனைவியோடு சோவார் என்னும் ஊருக்கு போய் சேருகிறான். கடவுள் plan படி வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வரப்பண்ணி, Sodom மற்றும் Gomorroh ரெண்டு ஊரையும் பொட்டல் காடாக ஆக்கினார். (இதுதான் அந்த வரலாற்று அழிவு!) […] லோத்  மனைவியோ warning அ மறந்து பின்னிட்டு பார்த்து, உப்புத்தூண் ஆனாள். இந்த lot மனைவி பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. பாவம்! அவள் செய்த தவறு என்ன? அவள் வளர்ந்து வாழ்ந்த ஊரை கடைசியாக ஒரு முறை திரும்பி பார்க்க எண்ணினாள். அவளுடைய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உயிருடன் எரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். துக்கம் தாங்க முடியாமல் கடைசி முறை அவர்கள் முகத்தை பார்த்திட திரும்பி இருக்கலாம். ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. தூதர்கள் பார்க்க கூடாது என்று சொன்னால் கூடாது தான். இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட். […] அப்புறம் லோத்து சோவாரில் இருக்க பயந்து தன்னுடைய இரண்டு பெண்களுடன் மலை மேல் ஏறி தங்கி கொண்டான். அந்த ரெண்டு பொண்ணுங்களும் Sodom மற்றும் Gomorrah தான் உலகத்துலேயே ஊரு போல வேற ஊரே இல்ல அப்படின்னு நினைச்சு (பைபிள் ல வர எல்லாருமே middle East அ தாண்டி ஊரே இல்ல ன்னு தான் நினைச்சுகிட்டு இருக்காங்க) ஊர்ல எல்லாருமே இறந்து போய்ட்டாங்க நமக்கு ஜோடி யாரும் இல்ல so நாம அப்பா கூட இருந்து ஆளுக்கு ஒரு பிள்ளையை பெற்று கொள்வோம் வேறு வழி இல்லை என்று முடிவு எடுக்கிறாங்க. நீதிமானின் பெண்கள் ரெண்டு பேரும் அப்பாவை நல்லா குடிக்க வச்சு அப்பாவுக்கு தெரியாம அவர் கூட இருந்து ஆளுக்கு ஒரு பிள்ளையை பெற்று கொள்கிறார்கள். இது எதுவுமே நீதிமான் லோத்து க்கு தெரியவே தெரியாதாம்…  அதுல பாருங்க, இதுக்கு அந்த பருத்தி மூட்டை கோடோன்லயே இருந்து இருக்கலாமே அப்படின்ற மாதிரி, Sodom மற்றும் Gomorrah ரொம்ப மோசமான ஊராம் இவன் அவளை வச்சு இருக்கானாம் அவன் இவளை வச்சு இருக்கானாம் ச்சச்சே அது போக homosexuality வேற அதுனால இந்த நீதிமான் குடும்பத்தை கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்து incest பண்ண விட்டு இருக்காரு கடவுள். இதுக்கு அவங்க அந்த ஊர்லயே இருந்து இருக்கலாம்… இந்த incest க்கு எந்த தண்டனையும் இல்ல… சொன்ன பேச்சை கேட்காம திரும்பி பார்த்தா நான் ரொம்ப கோவமா ஆயிடுவேன், உப்புதூண் ஆக்கிடுவேன்! ஆனா incest க்கு எல்லாம் எந்த தண்டனையும் இல்ல. அட்லீஸ்ட் ஒரு தூதரை அனுப்பி “ஹே mental கொஞ்சம் தள்ளி போனா வேற ஊரு இருக்கு அங்க போய் settle ஆகுங்க என்று சொல்லி இருக்கலாம்.” ஆனா scene interesting ஆ இருந்ததால் கடவுளும் தூதர்களும் மெய் மறந்து விட்டார்கள் போல… இதுதான் காவிய கதை Sodom மற்றும் Gomorrah. இப்போ இந்த Sodom மற்றும் Gomorrah உண்மையில் இருந்ததா? (இந்த கண்றாவி கதை உண்மையில் நடந்தா என்ன? நடக்காட்டி என்ன?) Tall el-Hammam தான் இந்த  Sodom மற்றும் Gomorrah வா? Tall el-Hammam எப்படி அழிந்தது? என்பதை எல்லாம் அப்புறமா சொல்றேன்…. அறிவியல் பெயர்கள் ஏன் லத்தீனில் இருக்கின்றன? எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும். காரணம், ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு. செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார். இன்னொருவர் மந்தாரா பூவோட  குணாதிசியங்கள் பற்றி  விளக்குறார். ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா ஆனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க. இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.  […] சரி ஏன் லத்தீன்? Carl Linnaeus (1707–1778) என்பவர் தான் இந்த லத்தீன் மொழியில் உயிரினங்களுக்கு ரெண்டு பேரு ( binomial nomenclature, genus and species) தர முறையை கொண்டு வந்தவர். […] லத்தீன் அவர்  காலத்துலயே அழிந்துவிட்ட மொழி. யாரும் பயன்படுத்துவது இல்லை. அதுனால அதுல பெயர் வச்சா யாரும் நொள்ளை நொட்டை சொல்லமாட்டாங்க என்று start பண்ணி இருக்கார். அது போக  கிரேக்க அறிஞர்கள் தான் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருக்கிறார்கள். அதற்கு கிரேக்க மொழியில் தான் பெயர் வைத்து இருக்கிறார்கள். கிரேக்கமும் லத்தீனும், ஒரே மொழியில் இருந்து கிளைவிட்டதால் நிறைய சொற்கள் இரண்டிற்கும் பொதுவானதாக இருக்கும். அதனாலும் Linnaeus லத்தீனை தேர்ந்து எடுத்து இருக்கலாம். ஆங்கில மொழியில் பெரும்பாலான வார்த்தைகள் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழியில் இருந்து வந்தவை தான். […] சுவையான தகவல், Johann Siegesbeck என்கிற தாவரவியலாளர் Linnaeus இன் பெயர் வைக்கும் முறையை கடுமையா விமர்சனம் பண்ணி இருக்காரு. அதுல கடுப்பான Linnaeus ஐரோப்பா ல இருக்கிற ஒரு களை செடி, விவசாய நிலத்தில் நாம ஒண்ணுத்துக்கும் ஆகாதது என்று புடிங்கி போடுவோம்ல அது போன்ற ஒரு களைக்கு  Siegesbeckia என்று பெயர் வைத்து இருக்கிறார். அடுத்து நம்ம ஸ்டைல் ல முடிப்போம் ஆக உயிரினங்களுக்கு எல்லாம் பெயர் வைத்தது பைபிள் ல வர Adam இல்ல Carl Linnaeus!!! வைரஸும் கடவுளும்  இந்த உலகமும், உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் தான் உருவாக்கினார் என்றால், நோய்களையும் கடவுள் தான் உருவாக்கி இருப்பார். நாம பைபிள் ல பார்க்கிறோம் கடவுள் பல வாதைகளை அனுப்பிதான் தண்டிக்கிறார். அதே சமயம் நான் உன்னுடன் இருக்கும் வரை வாதை உன் கூடாரத்தை அணுகாது அப்படினும் சொல்றார். ஆக நோய்களை உருவாக்கி அனுப்புறது அதை சரி செய்வது கடவுளின் department. பழைய ஏற்பாடு முழுவதும் யார் எல்லாம் கடவுளுக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்களை தண்டிக்க கடவுள் பல்வேறு வகையான வாதைகளை அதாவது நோய்களை அனுப்புகிறார். இதுவே புதிய ஏற்பாடு ல பார்த்தீங்க அப்படின்னா இயேசு எல்லா வித நோய்களையும் குணப்படுத்துறார் மருந்து மூலமாக அல்ல அவருடைய தெய்வீக சக்தியால். […] பாவங்கள் மன்னிக்கப்படும்போது வாதை போய்விடுகிறது. உபாகமம் 28:15-68 முழுக்க எப்படி எல்லாம் கடவுள் சாபமிடுவார் அப்படினு ஒரு லிஸ்ட் இருக்கு அதுல முக்காவாசி நோய்கள் தான். ஆக நோய் என்பது கடவுளின் சாபம். எதுக்கு இவ்ளோ நீட்டி முழக்கி ஒரு முன்னுரை என்றால் ஆரம்பத்துலயே நோய்க்கான காரணம் கடவுள் என்று establish பண்ண வேண்டி இருக்கு இல்லாட்டி சாத்தான் தான் காரணம் என்று எளிதா சொல்லிட்டு போயிருவாங்க அதுக்காக. இப்போ கிருமிகளால் வரும் நோய் எப்படி வருகிறது? எதனால் வருகிறது? கிருமி அப்படின்னா என்ன அப்படின்னு பார்ப்போம். கொரோனா வைரஸ்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் பெரிய குழு. அதில் பல்வேறு வகை இருக்கிறது. அவை பெரும்பாலும் ஒட்டகங்கள், பூனைகள் மற்றும் வெளவால்களுக்கு இடையில் மாறி மாறி வருகின்றன. சில சமயங்களில் மக்களைப் பாதிக்கின்றன. விலங்குகளில், கொரோனா வைரஸ்கள் பசுக்கள் மற்றும் பன்றிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் கோழிகளுக்கு மேல் சுவாச நோயை ஏற்படுத்தும். மனிதர்களில், சில கொரோனா வைரஸ்கள் ஜலதோஷம் போன்ற லேசான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும், சில COVID போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். கொரோனா வைரஸ்கள் பெயர் காரணம் அவற்றின் மேற்பரப்பு  கிரீடம் போன்ற அமைப்பு இருப்பதால் அந்த பெயர். லத்தீன் மொழியில் Corona என்றால் கிரீடம் என்று பொருள். 1960 களின் நடுப்பகுதியில் மனித கொரோனா வைரஸ்கள் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டன. அன்று முதல் நீண்ட காலமாக பொது சுகாதார அதிகாரிகளால் கொரோனா வைரஸ்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய்களைப் புரிந்துகொள்ள உதவும் உயிரியலின் அடிப்படை கொள்கை ஒன்று உள்ளது, ஆனால் இந்த ஆத்திகர்களுக்கு பரிணாமத்தை பேசினால் பிடிப்பது இல்லை. பரிணாமம் என்று ஆரம்பித்தாலே அடுத்து வர செய்தியை எல்லாம் mute இல் போட்டு விடுவார்கள். அதனால நாம அத பற்றி பேசாம பரிணாமம் தவறு அவர்கள் சொல்வது தான் சரி என்றே வைத்து கொண்டு மேலே தொடர்வோம். கடவுள் தான்  நுண்ணுயிரிகளை உருவாக்கி இருக்கிறார். அந்த நுண்ணுயிரிகள் மற்ற உயிரினங்களுக்குள் வாழும்படி செய்து இருக்கிறார். வெளவால்கள் உடலில் எண்ணற்ற கொரோனா வைரஸ்கள் மற்றும் filoviruses கள் அதாவது   Mengla, Marburg மற்றும் Ebola போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வைரஸ்களால்  வெளவால்களுக்கு எந்தவித நோயும் ஏற்படுவது இல்லை. கடவுள் வைரஸ்களைக் கையாளக்கூடிய நோயெதிர்ப்பு மண்டலத்தை வெளவால்களுக்கு தந்து இருக்கிறார். ஆனால் யாருக்காக இந்த உலகத்தையே உருவாக்கினாரோ, யாரை அவர் சாயலிலேயே படைத்தாரோ அந்த மனிதர்களுக்கு இந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை தரவில்லை.  சிம்பன்ஸிகளின் சில வகைகள் இப்போது SIV க்கு  எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை  உருவாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருக்கிறது. அதற்காக  சிம்பன்ஸிகள்  பிரார்த்தனை செய்ததா? அல்லது  சிம்பன்ஸிகளின் பாவமன்னிப்பை ஏற்று கொண்டு கடவுள் இந்த எதிர்ப்பு சக்தியை தந்தாரா தெரியவில்லை. […] பெண் அனோபிலஸ் கொசு உடம்பில், Plasmodium falciparum (மனித மலேரியா உருவாக்கும் கிருமி ) எந்த விதமான நோயையும் ஏற்படுத்துவதில்லை.  Anopheles கொசு வின் நோயெதிர்ப்பு அமைப்பு  Plasmodium falciparum  ஒட்டுண்ணியை தன் உடம்பில் வளரவிட்டு வெற்றிகரமாக மனிதர்களுக்கு கடத்துகிறது.  Plasmodium falciparum ஒட்டுண்ணி மனித இரத்த அணுக்களில் நுழையும் போது என்ன நடக்கும் என்பதை நாம் அறிவோம். மலேரியாவால் ஆண்டுதோறும் 4,00,000 பேர் இறக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் ஐந்து வயதுக்குட்பட்ட ஆப்பிரிக்க குழந்தைகள். […] Plasmodium falciparum  இன்  வாழ்க்கைச் சுழற்சிக்கு ஒரு பெண் அனோபிலஸ் கொசு (primary host) மற்றும் மனிதர்கள் (secondary host) தேவை. கொசு ஒரு கடத்தி (vector) மற்றும் host  ஆகும். பெண் அனோபிலஸ் கொசுக்களுக்கு அதன் முட்டைகளை வளர்க்க ஒரு இரத்த உணவு தேவைப்படுகிறது, இதனால் அது மனிதர்களைக் கடித்து நமது இரத்தத்தில் உள்ள புரதத்தை சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. (இது யாருடைய யோசனை?) எனவே மலேரியாவின் கேரியர், அதான் பெண் கொசு ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் ஒட்டுண்ணியிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் வளர்த்து கொண்டு அந்த கிருமியை மனிதர்களுக்கு கடத்தி சாவடித்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் நம்மை தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்போது, ​​இந்த  கிருமியும் கூடவே சேர்ந்து அதற்கேற்ப தன்னை மாற்றி கொண்டு நமக்கு டப் கொடுக்கிறது. Duffy Negative Mutation  என்று அழைக்கப்படும் ஒரு பிறழ்வு (mutation) காரணமாக ஆப்பிரிக்கர்கள் Plasmodium vivax க்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தனர். ஆனா இப்போ இல்ல! ஏன்? இந்த  Plasmodium vivax  கடவுளை நோக்கி செய்த தவத்தின் பயனால் கடவுள்  அந்த mutation அ  உடைத்து ஆப்பிரிக்கர்களை தாக்கும் வல்லமையை  Plasmodium vivax  க்கு அருளி இருக்கிறார்! Artemisinin மலேரியா எதிர்ப்பு மருந்தாக Tu Youyou வால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​இது ஒரு அதிசய மருந்து இனி மலேரியாவில் இருந்து விடுதலை என்று மனித இனம் சந்தோச கூச்சலிட்டது. ஆனா அந்த சந்தோசம் கொஞ்ச வருடங்கள் கூட நீடிக்கவில்லை. ஏன்? ஏன்னா  Plasmodium falciparum கடுமையான பிரார்த்தனைகள் மூலமாக இந்த மருந்துக்கு resistance அ develop பண்ணிட்டு. வட போச்சே அப்படினு நாம கன்னத்துல கை வச்சுக்கிட்டு உக்கார்ந்தது தான் மிச்சம். […] பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் வைரஸ்கள் பாதிக்கின்றன. ஒரு வைரஸ் இன்னொரு வைரஸை அட்டாக் பண்ணுது,  பாக்டீரியாவையும்  அட்டாக் பண்ணுது. உண்மையில், பூமியில் உள்ள பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியோபேஜ்கள் (bacteriophages) ஆகும், அவை பாக்டீரியாவைக் கொல்வதில் specialist . பாலூட்டிகள், amphibians, ஊர்வன போன்றவற்றை மட்டுமே பாதிக்கும் வைரஸ்கள் உள்ளன (missile  மாதிரி targeted அட்டாக்) உண்மையில் கடவுள் வைரஸ் க்கு தனியா வானத்துல ரசிகர் மன்றம் வச்சு இருப்பாரு ன்னு நினைக்கறேன். எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் தான். தூணிலும் துரும்பிலும் கடவுள் இருக்காரோ இல்லையே வைரஸ் கண்டிப்பா இருக்கு. உங்களுக்கு லேசான சளியை எந்த வைரஸ் ஏற்படுத்துதோ அந்த  வைரஸ் தம்பி தான்  இந்த COVID pandemic க்கு காரணம். ஒரு நாவல் கொரோனா வைரஸ் ஏன் ஒரு பிரச்சனையாக இருக்கு? ஒரு வைரஸ் ஒரு புதிய ஹோஸ்டுக்குள் நுழையும்போது இந்த மாதிரியான விபரீதங்கள் நடக்குது. ஆனால் ஒரு திறமையான மற்றும் கருணையுள்ள கடவுள் நமக்கு இதற்கான நோயெதிர்ப்பை குடுத்து இருக்க வேண்டாமோ? கடவுள் வெளவால்கள் மற்றும் கொசுவுக்கு குடுத்த அந்த எதிர்ப்பு சக்தியை நமக்கு குடுக்க நாம எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்கு? முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்ய வேண்டி இருக்கு, 5 வேளை தொழுகை நடத்த வேண்டி இருக்கு, பால் அபிஷேகம் பண்ண வேண்டி இருக்கு. ஆனா இப்படி எதுவுமே பண்ணாம ஒரு வெளவால் அசால்ட்டா  நோய் எதிர்ப்பு சக்தியை வச்சு இருக்கு. என்ன கொடுமை சரவணன் இது?  நோய்களின் வழிமுறைகள் பற்றி மக்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். பெரியம்மை 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் 300 மில்லியன் மக்களைக் கொன்றது.  Yersinia pestis, plagueற்கு காரணமான, இது  கிமு 3000 இல் இருந்து மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறது. இந்த பாக்டீரியத்தின் பல்வேறு வகைகள் மனிதர்களை அவ்வப்போது கொன்று குவித்து இருக்கிறது.  Antonine plague  2 ஆம் நூற்றாண்டில் 5 மில்லியன் மக்களைக் கொன்றது, ஸ்பானிஷ் காய்ச்சல் 1918 ஆம் ஆண்டில் 50 மில்லியன் மக்களைக் கொன்றது.  Athenian plague  5 ஆம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்கர்களை அழித்தது, மேலும் பண்டைய எகிப்தியர்கள் தொற்றுநோய்கள் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகளை விட்டுச் சென்றனர். இன்னும் நிறைய சொல்லலாம். நோய்க்கிருமிகள் ஏன், எப்படி வெளிப்படுகின்றன என்பது பற்றி அறிவியல் நன்கு ஆராய்ந்து விளக்கி வருகிறது.  Avian flu வின் பல்வேறு strains ஏன் உள்ளன என்பதையும் அவை கடந்த காலங்களில் மனிதர்களுக்குள் எப்படித் தாவியது என்பதையும், எதிர்காலத்தில் இன்னும் எவ்வாறு செய்யக்கூடும் என்பதையும் அறிவியல் அறிந்து வைத்து இருக்கிறது.  […] எந்த கடவுள் நமக்கு நோய்  எதிர்ப்பு சக்தியை தரவில்லையோ,  அதே கடவுள் பாக்டீரியாவிற்கு வைரஸ் ஐ அழிக்க  CRISPR போன்ற கருவியை குடுத்து இருக்கிறார்.  அதற்காக  பாக்டீரியா எந்த கடவுளுக்கும்  பால் காவடி எடுக்கவில்லை. சரி வைரஸை அழிக்க  பாக்டீரியா கிட்ட CRISPR இருக்கு அப்போ பாக்டீரியோபேஜ்களில் anti-CRISPR இருக்குமா? அதிலென்ன சந்தேகம் இருக்கு! இந்த பாக்டீரியா வைரஸை அழிக்க  CRISPR ஐ உருவாக்கினதும் கொஞ்சம் காலத்தில் வைரஸ் அப்போ நான் என்ன தக்காளி தொக்கா அப்படின்னு  anti-CRISPR அ உருவாக்கிடுச்சு. இந்த வைரஸும் இதுக்கு எந்த பால் காவடியும் எடுக்கலையாம். […] நான் என்ன நினைக்கிறேன் உண்மையில் கடவுள் இருந்தால், அது ஒரு வைரஸா தான் இருக்க வேண்டும் !!  கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவுக்காக கோடிக்கான மக்கள் விதவிதமா பிரார்த்தனை பண்ணிட்டு இருக்காங்க. உண்மையில் கடவுள் வேலை செய்வதாக இருந்தால் வெளவால்களுக்கு இணையான ஒரு நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிட்டி இருக்க வேண்டும். வெளவால்கள் உடம்பில் பல வகையான வைரஸ்கள் இருக்கின்றன ஆனால் அவை நன்றாக தான் இருக்கின்றன. ஆக கடவுள் திறமையற்றவர், கருணையற்றவர், அல்லது அப்படி ஒருவர் இல்லை. அல்லது பேட்மேன் கடவுளாக இருக்கலாம் !! Source : Tavian Oladapo, Microbiologist Apocalyptic stories (Book of Daniel (2 BCE)) […] இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான்.  Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய… […] அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு அப்படின்னா…. […] தலைமுறை தலைமுறையாக இந்த  ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த மாதிரியான ஒரு hopeless condition ல அவங்களுக்கு தேவையா இருக்கிறது ஒரு மிக பெரிய miracle. ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட தலையீடு மட்டுமே அவங்களை காப்பற்ற முடியும் அப்படின்னு நம்புறாங்க. ஒரு பெரிய பேரழிவு நிகழ்வு உலகை மூழ்கடிக்கும். தீயவர்கள் அழிக்கப்படுவார்கள், மற்றும் கடவுளின் (அவங்க கடவுள் Jehovah) ராஜ்யம் எல்லா காலத்திலும் நிறுவப்படும் அப்படின்றதுதன் apocalyptic கதைகளின் basic. இந்த கதைகளின் நோக்கம் மக்கள் தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க ஊக்குவிப்பதாகும். அபோகாலிப்டிக் கதைகள் அவர்களுக்கு விடிவு காலம் நெருங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற உறுதியை அளிக்கிறது. இந்த கதைகளின் அமைப்பு பாத்திங்கனா ஒரு தீர்க்கதரிசி இருப்பாரு அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் கிடைக்கும் கனவு, உள்ளுணர்வு, அசிரீரி இப்படி ஏதாவது. எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் அப்படினு ஒரு sequence of events அவருக்கு தெரியும். உதாரணமாக, ஒரு வருஷத்தில் A சம்பவம் நடக்கும் 10 வருஷத்தில் B சம்பவம் நடக்கும் 100 வருஷத்தில் C சம்பவம் நடக்கும்.  இப்போ A and B அவங்க காலகட்டத்துலேயே நடக்கும் இந்த A and B சம்பவங்கள் நடந்ததால் C என்கிற சம்பவம் கட்டாயமாக 100 வருடம் கழித்து நடந்தே தீரும் இதுதான் இந்த கதைகளின் அமைப்பு. அதாவது கடவுளுக்கு கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாம் தெரியும் என்பதால் எதிர் காலத்தில் நடக்க போவதை அவருக்கு பிரியமான ஒரு ஆள்கிட்ட சொல்லி வைக்கிராரு. (See கடவுளும் paradox களும்) எப்போவும் இந்த மாதிரி apocalyptic சம்பவங்கள் climax (அதாவது C  சம்பவம்) எப்போ நடக்கும் அப்படின்னா விசுவாசிகள் ரொம்ப கொடூரமாக துன்புறுத்தப்படும் போது இந்த climax C சம்பவம் நடக்கும். பகை நாட்டு மக்கள், obviously, வேற மதத்து மக்கள் கடவுளின் தேர்ந்தெடுக்க பட்ட மக்களை படாதபாடு படுத்தி அது ஒரு extreme எல்லை க்கு போகும்போது கடவுள் வந்து ருத்ரதாண்டவம் ஆடி உலகத்தை அழிச்சிருவாரு. […] Antiochus Epiphanesஸின் (கிரேக்க அரசர்) கீழ் யூதர்களின் துன்புறுத்தல் தான் டேனியல் புத்தகம் எழுத காரணம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், யூதர்கள் கிரேக்க கடவுள்களை வணங்க மறுத்து, Yahweh விற்கு தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால் அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டது. பல யூதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்தியோகஸ் மற்றும் அவரது சிரிய அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தனர், ஆனால் சிலர் தண்டனையின் போதும் தங்கள் நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருந்தனர். இந்த விசுவாசம் மிகவும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நபர்களை ஊக்குவிக்க, டேனியல் புத்தகம் எழுதப்பட்டது. புத்தகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, ஒன்று பாபிலோனிய சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த மற்றும் அந்தியோகஸின் கீழ் யூதர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை அனுபவித்த எபிரேயர்களைப் பற்றிய தொடர் கதையாகும். மற்றொரு பகுதி, நேரடியாக அபோகாலிப்டிக் வடிவத்தில், எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் தொடர்ச்சியான தரிசனங்களைக் கொண்டுள்ளது. புத்தகத்தின் முதல் பாகத்தில் நான்கு இளம் ஹீப்ருக்கள் ராஜாவின் கட்டளை படி விக்கிரக ஆராதனையில் ஈடுபட மறுத்ததன் விளைவாக, நெருப்பு உலைக்குள் வீசப்பட்டனர். ஆனால் கடவுள் அவர்களை காப்பற்றுகிறார். அவர்களின் ஆடைகளில் புகை வாசனை கூட இல்லாமல், உலைகளில் இருந்து காயமின்றி வெளிவருகிறார்கள். மற்றொரு கதையில், டேனியலை அழிக்க ஒரு சதி உருவாக்கப்பட்டது, அவர் ஒரு எபிரேயராக இருந்தாலும், அரசாங்கத்தில் ஒரு முக்கியமான பதவியை வகிக்கிறார். அரசனால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களைத் தவிர வேறு எந்த கடவுளுக்கும் பிரார்த்தனை செய்வது, தடை செய்யப்பட்டு இருக்கிறது. டேனியல் இந்த கட்டளையைப் புறக்கணித்து, ஜெருசலேமை நோக்கி ஜன்னல்களைத் திறந்து கொண்டு யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபிக்கிறார் இதற்கு தண்டனையாக சிங்கங்களின் குகைக்குள் தள்ளப்பட்டார் ஆனால் கடவுள் அவரை காப்பற்றுகிறார். […] புத்தகத்தின் அபோகாலிப்டிக் பகுதிகளில், சில கனவுகள் மற்றும் தரிசனங்கள் பாபிலோனிய சிறைப்பிடிக்கப்பட்ட காலத்திலிருந்து கடவுளின் ராஜ்ஜியத்தை நிறுவுவது வரை நாடுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கணிப்புகளாக விளக்கப்படுகின்றன. ஒரு அத்தியாயத்தில், மன்னர் நேபுகாத்நேச்சரின் கனவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.  மற்றொரு தரிசனத்தில், கடலில் இருந்து வெளிவரும் நான்கு மிருகங்களை டேனியல் பார்க்கிறார்.  இந்த மிருகங்களில் ஒன்று கழுகின் இறக்கைகள் கொண்ட சிங்கம்; மற்றொன்று வாயில் மூன்று விலா எலும்புகளைக் கொண்ட ஒரு கரடி; மூன்றாவது மிருகம் நான்கு தலைகள் மற்றும் நான்கு இறக்கைகள் கொண்ட சிறுத்தை; மற்றும் நான்காவது மிருகம்  பயங்கரமானதாக விவரிக்கப்பட்டுள்ளது: இது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் கொண்டுள்ளது, அவற்றில் மனிதக் கண்களும், கொடூரமான விஷயங்களைப் பேசும் வாயும் கொண்ட மற்றொரு கொம்பு உள்ளது. மற்ற தரிசனங்களில் ஒரு ஆட்டுக்கடா மற்றும் ஒரு ஆடு ஆகியவை அடங்கும்.  […] மேலோட்டமா பார்த்தா டேனியல் க்கும் பாபிலோனிய மதவாதிகளுக்கும் எதிரான சண்டை போல தெரியலாம். ஆனால் உண்மையான cosmic war  இஸ்ரேலின் கடவுளுக்கும், பாபிலோனிய கடவுளுக்கும் இடையில் உள்ளது. அதைதான் டேனியல் புத்தகம் சொல்கிறது. சரி இந்த Daniel யார்? […] கிமு 587 இல் மன்னர் Nebuchadnezzar ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு, வழக்கம் போல ஜெருசலேம் கோவிலை சூறையாடினர். பின்னர், யூதா நாட்டில் இருந்த புத்திசாலியான வலிமையான இளைஞர்களை Babylon க்கு நாடு கடத்தி அங்கு அரண்மனையில் வேலை பார்க்கும்படி ஆணையிட்டார். பல கடவுள்களை வழிபடும் Babylon தேசத்திற்கு ஒரு இளைஞனாக டேனியல் நாடு கடத்தப்பட்டார், அவர் பாபிலோன் அரசர்களுக்கு சேவை செய்த போதிலும், Jehovah வை தவிர வேறு தெய்வங்களை வழிபடவில்லை. அவரது மூன்று நெருங்கிய நண்பர்களுடன் (Shadrach, Meshach and Abednego), டேனியல் ஆரம்பத்தில் Nebuchadnezzar அரசவையில் பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர் அவருக்கு நேபுகாத்நேச்சர் மற்றும் பின்னர் வந்த அரசர்கள் பெல்ஷாசர், சைரஸ் மற்றும் டேரியஸ் ஆகியோரின் கீழ் முன்னணி அரசாங்க பதவிகள் வழங்கப்பட்டன. பாபிலோனில் உள்ள தலைமை அதிகாரி டேனியலுக்கு Belteshazzar பெயரைக் கொடுத்தார், அதாவது “Beltis, protect the king.” டேனியல் புத்தகம் தீர்க்கதரிசிகள் (Nevi’im) பிரிவில் காணப்படவில்லை, மற்றும் டேனியல் யூத மதத்தில் ஒரு தீர்க்கதரிசியாக கருதப்படவில்லை. ஏனென்றால், விவிலிய தீர்க்கதரிசியின் யூத வரையறை படி, தீர்க்கதரிசி கடவுளுடன் நேரடி தொடர்புகொண்டு இருக்க வேண்டும். மறுபுறம், டேனியல் பரிசுத்த ஆவியால் (Ruach HaKodesh) பின்னர் நடப்பவற்றை தெரிந்து கொண்டார். அவர் உண்மையில் கடவுளைப் பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை. டேனியல் மற்றும் எஸ்தரின் இரண்டு புத்தகங்களிலும் இந்த வகையான பரிசுத்த ஆவியின் உத்வேகத்தை நாம் காண்கிறோம். உண்மையில், எஸ்தரின் புத்தகத்தில், கடவுளின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு புத்தகங்களின் யூத ஹீரோக்கள் ஒரு பேகன் ராஜ்ஜியத்தில் வைக்கப்படுகிறார்கள், அங்கு இறைவன் ஈசாயா, எரேமியா மற்றும் சகரியா ஆகியோருடன் பேசுவதைப் போல அவர்களிடம் பேசுவதில்லை. டேனியலுக்குப் பிறகான 600  ஆண்டுகளைப் பற்றி கனவு பேசுகிறது, எனவே கிபி 70 வரை. வெறும் இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகளை பற்றியும் ராஜ்ஜியங்களை பற்றியுமே இந்த கனவு தீர்க்கதரிசனமாக சொல்கிறது.  இந்தியா, சீனா போன்ற நாடுகளை காணோம். […] கனவில் குறிப்பிடப்பட்ட நான்கு பேரரசுகள்: 1. தங்கத் தலை நேபுகாத்நேசரின் பேரரசு, பாபிலோனியப் பேரரசு என்று கூறப்படுகிறது. தங்க தலை – பாபிலோன் (கிமு 626-539) பாபிலோன் எவ்வளவு பிரம்மாண்டமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தாலும், அது எப்போதும் அதிகாரத்தில் நிலைத்திருக்காது. ஒரு பலவீனமான ராஜ்யம் (v.39) எழுந்து அதை அழிக்கும். 2. வெள்ளி மார்பகம் மற்றும் கைகள் Medo-Persiaவின் வலுவான Achaemenid பேரரசு வெள்ளி மார்பகம் மற்றும் ஆயுதங்கள்-மெடோ-பெர்சியா (கிமு 539-331) இந்த ராஜ்யம் மேதியர்கள் மற்றும் பாரசீகர்களின் ஒருங்கிணைந்த சக்தியாகும். இது பலவீனமானது, ஆனால் அது கிமு 539 இல் பாபிலோனை வென்றது, அது நடந்தபோது டேனியல் அங்கு இருந்தார்.  3. வெண்கல தொடைகள் (சிறுத்தையுடன் ஒப்பிடுகின்றன) Macedonian Greek பேரரசு . வெண்கலத்தின் தொடை-கிரீஸ் (கிமு 331-168) அர்பேலா போரில், கிரேட் அலெக்ஸாண்டர் கிரேக்கத்தை உலக வல்லரசின் பீடத்தில் நிறுத்தி பெர்சியர்களை வென்றார்.  4. இரும்பு  கால்கள் ரோமானியப் பேரரசு  (கிமு 168 – கிபி  476) பிட்னா போர் கிரேக்க ஆட்சியின் முடிவையும் சீசர்களின் கீழ் ரோமின் அதிகாரத்தின் விடியலையும் கொண்டு வந்தது  . சீசர் அகஸ்டஸின் ஆட்சிக் காலத்தில் இயேசு இந்த உலகிற்கு வந்தார். 5. கலப்பு இரும்பு மற்றும் களிமண் அடிகள் – பிரிக்கப்பட்ட ரோம் (கிபி  476 – தற்போது) 6. பின்னர் எந்த கையாலும் வெட்டப்படாத வேகமான பாறையால் இது அழிக்கப்படுகிறது. அதுதான் கிறிஸ்து. அவரது ஆட்சி  பூமி முழுவதும் பரவுகிறது. அதுதான் உலகம் முழுவதும் மலை குவியல்களாக இருக்கிறது. இந்த பேரரசுகளின் பெயர்களை டேனியல் சொல்லவில்லை மாறாக உமக்கு பின்னால் வரும் அரசுகள் என்று பொதுவாக சொல்கிறார். இந்த  பேரரசுகளின் பெயர்கள் பின்னாளில் இதுவாக தான் இருக்கும் என்று கிறிஸ்தவர்களால் கொடுக்கப்பட்ட விளக்கம். […] Ark of covenant கும் நெபுச்சட்னேசர் கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நேபுகாத்நேச்சார் கனவு ஒரு அபோகாலிப்டிக் தீர்க்கதரிசனம். நேபுகாத்நேச்சார் ஜெருசலேம் கோயிலை எரித்து அதன் செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.   Ark of covenant ல இருக்கிற gold எல்லாம் எடுத்துட்டு மரப்பெட்டியை தூக்கி கடாசி இருப்பாரு. Logical explanation. Ark of covenant சொர்க்கத்திற்கு அப்படியே பறந்து போய்டுச்சு ன்னு சிலர் சொல்லுவாங்க ஆனா பைபிள் ல அப்படி இல்ல. ஜெருசலேமை அழித்த அப்புறம் Ark of covenant இன் தலைவிதி தெரியவில்லை. சிலர்  இது சாலமன் மற்றும் ஷீபாவின் illegitimate மகனால் திருடப்பட்டு எத்தியோப்பியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அக்ஸூமில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைக்க பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.  […] Medusa (மெடுசா) […] Medusa (மெடுசா) கிரேக்க புராணங்களில் வரும் ஒரு பாத்திரம். Clash of Titans படத்தில் மெடுஸாவை பார்த்து இருப்பீர்கள். தலையில் விஷப் பாம்புகள் தலைமுடியை போல நெளிந்துகொண்டும், பார்த்தவுடன் உங்களை கல்லாக மாற்றும் கண்களையும் கொண்டவள் மெடுசா. இந்த அகோரமான ராட்சசியை Perseus எப்படி முறியடித்தான் என்கிற வீரமான கதை தான் Clash of Titans. […] ஆனால் எல்லா வரலாறுக்கும் மறுபக்கம் உள்ளது என்பது போல Medusa வின் கதைக்கும் இன்னொரு துயரமான மறுபக்கம் இருக்கிறது. இந்த உலகமும் அதில் எழுதப்படும் வரலாறும் ஆண்களின் சக்தியையும் வீரத்தையும் நிலைநாட்டும் ஒன்றாகவே இருக்கிறது. அறிவியல், அரசியல், வீட்டில் என எல்லா இடத்திலும் பெண்களின் சாதனைகள் மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. கிரேக்க புராணங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? Medusa கதையும் அதில் ஒன்று தான். […] ஆரம்பத்தில் Medusa தங்க நிற கூந்தலுடைய அழகான, கனிவான இயல்புடைய பெண். Medusa, Athena கோவிலின் தலைமை பூசாரி. Athena, போர் மற்றும் ஞானத்தின் பெண் தெய்வம். Athena கோவிலின் பூசாரிகள் கன்னி பெண்ணாக இருக்க வேண்டும். தங்கள் வாழ்நாளை Athena காக தியாகம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.  Medusa, Athena மீது கொண்ட பக்தியால் திருமணமே செய்து கொள்ளாமல் அந்த கோவிலிலேயே பூசாரியாக இருக்கிறாள். […] ஒருநாள் Poseidon (Neptune) என்னும் கடலின் கடவுள், Athena கோவிலில் Medusa வை பார்க்கிறான். Poseidon உம் Athena வும் எதிரிகள்.மெதுசாவைப் பார்த்து அவளின் அழகில் மயங்கிய Poseidon அவளை நெருங்கும்போது மெடுசா Athena வின்  விசுவாசமான பூசாரியாக இருந்ததால் அவனை  நிராகரித்தாள். உடனே ஆண்கள் என்ன செய்வார்கள்? அதேதான்! ஒரு கடவுளான தன்னை கேவலம் ஒரு மானிட பெண் அலட்சியப்படுத்துவதா என்ற கோவத்தில் Poseidon அவளை கோவிலில் வைத்தே பலாத்காரம் செய்கிறான். இதில் Poseidon க்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். மெடூஸாவை அடைந்தது போலவும் ஆயிற்று அதீனாவை அவமானப்படுத்தியது போலவும் ஆயிற்று. பழைய படங்கள்ல பார்க்கிற மாதிரி கெடுத்தவன் தான் அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்ற  பாடாவதி ரூல்ஸ் படி automatic ஆ மெடுசா இப்போ Poseidon மனைவி ஆகிவிடுகிறாள். Medusa, Athena விடம் மன்னிப்பு கோரி தன்னை மீண்டும் பூசாரியாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறாள்.  நியாயமா பார்த்தா இவ்ளோ அட்டூழியம் நடக்கும்போது சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த Athena தான் மெடுசா  கிட்ட மன்னிப்பு கேட்கணும்.  ஆனால் அதீனா கோபத்தில் மெடூஸாவிற்கு சாபமிட்டாள். (Athena ரொம்ப காலமாகவே Medusa வின் அழகின் மீது பொறாமைகொண்டவள் என்றும் கோவிலுக்கு வருபவர்கள் Medusa வின் அழகையே புகழ்ந்து பேசியதில் கடுப்பில் இருந்ததால் தான் உடனே Medusa வை காப்பாற்ற வரவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.) அவள் அழகால் தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும், இந்த காலத்தில் எல்லாரும் சொல்வதுபோல  நீ ஏன் வாசல் ல போய்  நின்ன? அதனால் தான் அவன் உன்னை rape செய்தான். இனி நீ அழகில்லாமல் போவாய். உன் தங்க நிற கூந்தல் விஷ பாம்புகளாக மாறும், உன் பளிங்கு மேனி மீன் செதில்களாக மாறும், உன் பார்வை பட்ட எந்த ஆணும் கல்லாய் மாறுவான் என சாபமிட்டு அவளை ஒரு ஆளில்லாத தீவில் இருக்கும்படி சபித்தாள். மெதுசா அவளது ஊரில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு தீவுக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் தனியாக இருந்தாள், அவளை கண்ட எல்லோரும் பயத்தில் அவளை கொல்ல துடித்தனர். ஆண்கள் அவள் முன் கல்லாக மாறுவதைக் கண்டு மெதுசா பயந்தாள் மற்றும் தன்னை சபித்ததற்காக கடவுள்களின் மீது கோபமடைந்தாள். தன்னைக் கொல்ல அனுப்பப்பட்ட ஆண்களை அவள் பழிவாங்கினாள். அவளது தீவில் அடி எடுத்து வைக்கும் எல்லாருக்கும் அவள் மூலம் மரணம் காத்து இருந்தது. செய்யாத தவறுக்காக இங்கு மெடுசா தண்டிக்கப்படுகிறாள். Athena, Poseidon மேல் இருந்த கோவத்தை அப்பாவி மெடுசா மேல் காட்டுகிறாள். ஒரு பெண்ணாகவும், தனது கோவிலின் பூசாரி என்கிற அடிப்படையிலும் அவள் Medusa விற்கு ஆதரவாக செயல்பட்டு இருக்க வேண்டும். மற்றொரு கோணத்தில், ஆண்களின் கொடூரத்திலிருந்து தன்னைக் காக்கும் சக்தியை  Athena  மெதுசாவை ஆசீர்வதித்ததாக சிலர் வாதிடுகின்றனர். ஆனால், மெதுசா ஆண்களால்  ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறாள். மெடுசா ஒரு rape victim. அன்றும் சரி இன்றும் சரி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களை தான் நாம் குற்றம் சொல்லி தண்டித்து வருகிறோம். முதலில், அவளுக்கு உதவக்கூடிய நிலையில் உள்ள ஒரு பெண் கடவுளே அவளை தண்டிக்கிறாள். இன்றும் கூட பல பெண்கள் சக பெண்களை character assassination செய்வதை பார்க்கிறோம். Medusa வின் கதை ஒரு  சோகக் கதை. அதில் மிக பெரிய சோகம் என்னவென்றால் வரலாறு மெடுசாவை ஒரு பாதிக்கப்பட்டவளாக சித்தரிக்காமல் ஒரு அரக்கியாக சித்தரிப்பதுதான். இன்றும் கூட பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்லும் வழக்கம் தான் இருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டால், நீ என்ன ஆடை அணிந்தாய்? ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாய்? ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்றெல்லாம் நாம் குறை சொல்லுவது பாதிக்கப்பட்டவர்களை தான். யாருக்கு நாம் உதவி செய்ய வேண்டுமோ அவர்களையே நாம் குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறோம். உண்மையில், உண்மையான அரக்கர்கள்  Poseidon போன்று பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குபவர்கள்,  Perseus போன்று   பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள்  மற்றும்  Athena  போன்று பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லுபவர்கள் (victim**lamers). Lucifer யார்? […] சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் Devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் கண்டுபிடிப்பவர் என்று பொருள். “Devil’s advocate” என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில்  வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள். அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil’s advocate எனப்படுகிறார்.  கத்தோலிக்க திருச்சபை ஒருவருக்கு புனிதர் பட்டம் குடுக்கும்முன் அவருக்கு ஏன் குடுக்க கூடாது என்று வாதிட ஒருவரை நியமிக்கும் அவர் Devil’s advocate எனப்படுவார். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் ஏன் குடுக்க கூடாது என்று   Devil’s advocate ஆக வாதாடியவர் Christopher Hitchens.  நானும் பலமுறை Devil’s advocate ஆக இருப்பேன். நான் ஆதரிக்கும் கருத்தையே இன்னொருவர் ஆதரிக்கும்போது அவரிடம் எதிர் கேள்விகள் கேட்டு எனது தரப்பை வலுப்படுத்திக்கொள்வேன்.  […] Daimon என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது Demon என்கிற சொல். Daimon என்றால் அறிவு என்று பொருள். மொத்தத்தில் சாத்தான் என்பவன் அறிவானவன், கேள்வி கேட்பவன், குற்றம் கண்டுபிடிப்பவர். யூத மதத்தில்  சாத்தானும் நரகமும் இல்லை. இவை இரண்டும் பின்னாளில் கிரேக்க மற்றும் ரோமனிய மதங்களில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு வந்தவை. Torah வில் வரும் Sheol என்கிற வார்த்தை நரகத்தை சொல்லுவதாக சொல்லுவார்கள் ஆனால் Sheol என்கிற வார்த்தையின் அர்த்தம் கல்லறை. கிரேக்க மொழியில் Torah வை மொழிமாற்றம் செய்கையில் இது Hades என்று மாற்றப்பட்டது அதற்கும் கல்லறை என்று தான் அர்த்தம். ஏவாளிடம் ஆப்பிளை சாப்பிட சொல்லிய பாம்பை வெறும் சர்ப்பம் என்றும், விலங்குகளில் அது மிகவும் தந்திரமுள்ளது என்றுதான் Torah  குறிப்பிடுகிறதே ஒழிய அது சாத்தான் என்று குறிப்பிடவில்லை. அந்த பாம்பு தான் சாத்தான் என்பது பின்னாளில் கிறிஸ்துவ மதத்தில் ஏற்பட்ட நம்பிக்கை. (கிரேக்க மற்றும் ரோமனிய மதங்களின் தாக்கம்). Lucifer என்பது உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பு தவறு. Lucifer என்றால் சாத்தான் இல்லை. Lucifer என்கிற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் விடிவெள்ளி அதாவது Venus. […] லூசிபர் என்ற பெயர் எபிரேய பைபிளில் இல்லை. Jerome எழுதிய லத்தீன் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்பட்ட தவறு இது. King James Bible தான் ஆங்கில மொழியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பைபிள். உலகெங்கும் அதிக மக்கள் King James Bible தான் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள். […] இந்தப் பதிப்பில் லூசிஃபர் என்ற பெயர் சரியாக ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசாயா 14:12 “How art thou fallen from heaven, O Lucifer, son of the morning! how art thou cut down to the ground, which didst weaken the nations!” இந்த King James Bible ஹீப்ரூ மொழியில் இருந்து மொழிபெயர்க்க பட்டதல்ல மாறாக, 400 CE இல் Jerome என்பவரால் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட Latin Vulgate இல் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. […] “Quomodo cecidisti de caelo lucifer qui mane oriebaris? corruisti in terram, qui vulnerabas gentes?” இதனுடைய மொழிபெயர்ப்பு தமிழ் பைபிளில் சரியாக இருக்கிறது. “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!” லத்தின் மொழியில் விடி வெள்ளிக்கு Lucifer என்று பெயர். லத்தின் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்கையில் morning star என்று மாற்றாமல் Lucifer என்றே வைத்தது தவறாகி போனது. சரி அப்படியே Lucifer என்று தவறாக வைத்தாலும் எப்படி அது சாத்தான் என்று ஆனது? அது அடுத்த கதை.  ஏசாயா 14:12 ஒரு உருவகமாக எழுதப்பட்டது.  ‘விடி வெள்ளி’ என்பது பாபிலோனிய அரசன் Nebuchadnezzar II  ஐக் குறிக்கிறது, அவர் கிமு 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்-6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இன்றைய மத்திய கிழக்கின் பெரும்பகுதியை வென்றார். ஜெருசலேமில் மீண்டும் மீண்டும் அவருக்கு எதிரான போராட்டங்கள் வந்து கொண்டே இருந்ததை அடுத்து, Nebuchadnezzar அவருக்கு எதிரான முக்கியமான யூதக் குடும்பங்களை கிமு 597 இல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பாபிலோனிய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தார். இந்த சிறையில்தான் தோரா விற்கு final touch கிடைத்தது. ஏசாயா 14 இல் பெரும்பாலானவை பாபிலோனிய நாடு எப்படி Jehovah வை விட்டு வேறு தெய்வங்களை வழிபடுகின்றன இவை எவ்வாறு பாபிலோனிய நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி பேசுகின்றன.  இது சாத்தானைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில கிறிஸ்தவர்கள் சாத்தான் Nebuchadnezzar மூலம் வேலை செய்கிறார் என்று வாதிட்டாலும், பைபிளில் நேரடியாக அப்படி ஒன்றும் இல்லை. Nebuchadnezzar ஜெருசலேம் முதற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளை கைப்பற்றினாலும் ஆண்டவர் எப்படி  இறுதியில் Nebuchadnezzar ஐ வீழ்த்தி யூதர்களை காப்பாற்றுவார் என்பதை ஏசாயா சொல்கிறது. ஏசாயா 14:12 இல் உள்ள தவறாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வரி, எப்படி Lucifer என்றால் Satan என்று ஆனது? மக்கள் லத்தீன் பயன்படுத்துவதை நிறுத்தியதால், வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தை அவர்கள் அறிந்து இருக்கவில்லை. லூசிஃபர் என்ற வார்த்தையை ஒரு தனி நபரின் பெயராக புரிந்து கொள்ளத் தொடங்கினர். 1320 இல் Dante, Divine Comedy என்னும் கவிதையை எழுதியபோது, ​​நரகத்தின் 9 வது வளையத்தில் லூசிஃபர் அமர்ந்து இருக்கிறான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். […] 1654 ஆம் ஆண்டில்,  Joost van den Vondel  என்பவர் (டச்சு மொழியில் கவிதைகள் இயற்றுபவர்) லூசிஃப்பரை சாத்தான் என்று விவரித்து ஒரு கவிதை நாடகம் இயற்றினார். 1667 இல்,  Milton னின் Paradise Lost  என்னும் கவிதை லூசிபர் எப்படி ஒரு தேவதையாக சொர்க்கத்தில் இருந்தது பின்னர் எப்படி தனது கர்வத்தால் நரகத்திற்கு தள்ளப்பட்டது என்பதை ஒரு கதையாக விவரிக்கிறது. […] காலப்போக்கில், இந்த பிரபலமான படைப்புகள் கிறிஸ்தவ கதைகளில் கலந்தன, Lucifer என்றால் சாத்தான் என்றும் நிலைத்துவிட்டது. தேவதைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் மனிதர்களுக்கு தேர்வு சுதந்திரம் (free will) உள்ளது. தேவதைகளுக்கு அது கிடையாது. அதாவது ரோபோ போல கடவுள் சொல்வதை மட்டும் செய்யும். அப்படி இருக்க, லூசிபர் ஒரு தேவதை என்றால் free will இல்லாத தன்னிச்சையாக சிந்திக்க தெரியாத லூசிபர் எப்படி கடவுளுக்கு எதிராக கலகம் செய்ய முடியும்? எப்படி சம உரிமை கோர முடியும்? Free will இருந்தும், அறிவும் இருந்துமே மனிதர்களால் சமஉரிமை கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. தேவதை என்னும் பெயரில் இருக்கும் ஒரு ரோபோவுக்கு எப்படி புரியும்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு, Judas தன்னை காட்டிகொடுப்பன் என்று முன்னரே ஏசுவுக்கு தெரிந்தது போல, லூசிபர் தன்னை எதிர்த்து கலகம் செய்வான் என்பதும் முன்கூட்டியே தெரிந்து இருக்கும். அப்படி இருக்க அதை ஏன் தடுக்கவில்லை? தனக்கு எதிராக ஒரு எதிரியை தானே உருவாக்கிவிட்டு அவனை அடக்க முடியாமல் திணறும் கையாலாகாத தன்மையை என்னவென்று சொல்வது? கடவுள் நெருப்பை/அறிவை திருடிய கதை: […] Prometheus, ஜீயஸ் க்கு எதிராக Titanகள்  போர் புரிந்தபோது Titanகளுக்கு ஆதரவாக இருந்தவர். இதற்காக மற்ற Titanகளுடன் Prometheus யும் பாதாள உலகத்தில் (Tartarus) தள்ளினார் Zeus. ஆனால் Prometheus நேரடியாக போரில் ஈடுபடாததால் அவரை மன்னித்து Zeus, Prometheus இடம் மனிதனை உருவாக்கும் பொறுப்பை குடுத்தார். Prometheus களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார். குழந்தைகளுக்கு எப்படி விளையாடும் பொம்மை மேல் பாசமும் அன்பும் இருக்குமோ அதுபோல Prometheus க்கு அவர் உருவாக்கிய மனிதர்கள் மேல் ரொம்ப அன்பு வந்துவிட்டது. அந்த அன்பின் பரிசாக அவர்  மனிதர்களுக்கு நெருப்பை  பரிசாக குடுக்க எண்ணினார். ஆனால் நெருப்பு கடவுள்களுக்கு சொந்தமானது அதை மனிதர்களுக்கு குடுக்க கூடாது என்று Zeus தடுப்பார் என்பதால் அவருக்கு தெரியாமல் நெருப்பை மனிதர்களுக்கு திருட்டுத்தனமாக தர முடிவெடுத்தார். தங்க ஆப்பிள்க்காக கடவுள்கள் சண்டை போட்டு கொண்டு இருந்ததை Aphrodite கதையில் பார்த்தோம் அல்லவா? எல்லா கடவுள்களின் கவனமும் அந்த சண்டையில் இருந்தது முக்கியமாக Zeus இன்  கவனம் முழுவதும் அதில் இருந்தது. அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்டு யாருக்கும் தெரியாமல் Prometheus, Hephaestus என்னும் நெருப்பு கடவுளின் இருப்பிடத்தில் இருந்து நெருப்பை எடுத்து ஒரு பூசணிக்காய்குள் மறைத்து வைத்து (Halloween pumpkin) பூமிக்கு வந்து மனிதர்களிடம் குடுத்தார். […] இதை கேள்விப்பட்டதும் Zeus வெகுண்டெழுந்தார். ஏற்கனவே Titan களுக்கு ஆதரவாக Prometheus இருந்து இருக்கிறார். ஏற்கனவே வாய்க்கா தகராறு இதுல இது வேறயா? பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த Zeus,  Hephaestus ஐ  அழைத்து Prometheus ஐ Caucasus மலையில் கட்டி போட சொன்னார். பின் நெருப்பை திருடி மனிதர்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக ஒரு கழுகு வந்து அவரது ஈரலை உயிரோடு இருக்கும்போதே கொத்தி தின்னும் என்றும் மறுநாள் மறுபடி அந்த ஈரல் வளர்ந்துவிடும் கழுகு மறுபடி வந்து கொத்தி தின்னும் என்று தண்டனை வழங்கினார். […] இந்த கதையில் ஏன் “நெருப்பை” திருடினார் என்பதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. நெருப்புதான் மனித வாழ்க்கையை மாற்றி போட்ட முதல் கண்டுபிடிப்பு. உணவை சமைத்து உண்ணவும், குளிரில் இருந்து தப்பிக்கவும், விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும், நெருப்பை சுற்றி அமர்ந்து இருக்கும்போது மனிதர்களிடையே தகவல் பரிமாற்றம் உறவு போன்றவற்றை வளர்க்கவும் என மனிதர்களை அடுத்த level க்கு கொண்டு சென்றது நெருப்புதான். நெருப்பு இல்லாமல் இன்றைய மனிதன் இல்லை. நெருப்பின் முக்கியத்துவத்தை பற்றி ஒரு புத்தகமே போடலாம். […] இன்னொரு விதமாகவும் பார்க்கலாம் நெருப்பு என்றால் தீ இல்லை. Spark அதாவது அறிவு, ஒரு ஐடியா! இந்த கார்ட்டூன்களில் எல்லாம் ஐடியா வந்தால் மண்டை மேல் ஒரு பல்பு எரிகிறது அல்லவா? அதுபோல நெருப்பு என்றால் ஒரு Spark! […] மனிதர்கள் எல்லாவற்றிக்கும் கடவுள்களையே நம்பி இராமல், அவர்கள் தங்களுக்கு தேவையானதை அவர்களே உருவாக்கிக்கொள்ள புது புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்த தேவையாக இருந்தது ஒரு spark. அதைத் தான் Prometheus திருடி மனித இனத்திடம் குடுத்து இருக்கிறார். நோய் வந்துவிட்டதா? மாரியாத்தா  உனக்கு கண்ணு இல்லையாடி என் பிள்ளையை காப்பாற்று என்று கடவுளை நம்பி இருக்காமல் நாமே மருந்து, ஊசி என்று மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து  நோய்களை குணப்படுத்தலாம்.  இந்த விடுதலையை தான் Prometheus குடுத்து இருக்கிறார். அதனால் தான் Zeus க்கு அப்படி ஒரு கோவம் வந்து இருக்கிறது. ஆதாமும் ஏவாளும் அப்பளை தின்றதும் கடவுளுக்கு வந்த கோவம் கூட இதே தான். மனிதர்கள் இனி ஒவ்வொன்றுக்கும் நம்மை நம்பி இருக்க போவது இல்லை என்கிற ஆற்றாமை and கோவம். November story, Disney+ Hotstar சீரிஸ் அதில் பசுபதி அதனக்கு கிடைத்த குழந்தை தன்னை விட்டு எங்கு சென்று விட கூடாது என அந்த குழந்தைக்கு சில மருந்துகளை குடுத்து மூளை வளர்ச்சி குன்ற செய்து தன்னுடனே வைத்து நன்றாக பார்த்து கொள்கிறார். இது ஒரு வித மனநிலை குறைபாடு. அதன் பெயர் Munchausen syndrome by proxy (MSBP) அல்லது Factitious disorder imposed on another (FDIA). […] இதை பற்றிய சுவாரசியமான ஆங்கில படங்கள் உண்டு Run (Netflix) மற்றும் The 9th Life of Louis Drax. இந்த மனநோய் கொண்டவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் தன்னை விட்டு போக கூடாது அல்லது தன்னை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நோயை இவர்களே உண்டாக்குவார்கள். உதாரணம் food poison ஐ கலந்து விடுவது பின் ராத்திரி முழுவதும் அவர்களுக்கு சேவகம் செய்வது, மருந்து குடுப்பது, உணவு ஊட்டி விடுவது இப்படி. இதை பார்க்கிற மூன்றாம் நபர்கள் “சே என்ன ஒரு அன்பு அக்கறை இவரை மாதிரி கவனித்து கொள்ள முடியாது” என்று சிலாகிக்கும்போது, அது இவர்களுக்கு extra kick. கடவுளுக்கு கூட இந்த மனநோய் உண்டு என்று சொல்லலாம். அவரே bomb வைப்பாராம் அப்புறம் அவரே எடுப்பாராம் என்ற கதை தான். இன்னும் எளிதாக சொல்லுவதென்றால் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது.  இத்தகைய மனநோய் பிடியில் இருந்து நம்மை விடுவிக்க தான் Prometheus உம், பைபிளில் வரும் பாம்பும் போராடி இருக்கின்றன. இரண்டு கதைகளிலும் ஆப்பிள் தான் உதவி இருக்கிறது. இன்றும் கூட ஆப்பிள் தான் தகவல்களை நம் முன் வந்து கொட்டுகிறது. இப்படி கஷ்டப்பட்டு பெற்ற அறிவை பயன்படுத்துங்க கடவுள் என்னும் சங்கிலியை அறுத்துவிடுங்க.  கடவுளும் paradox களும் Time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள். 1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்): கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது. 11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும். வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது. இதை எல்லாம் செய்ய தவறியதால் கடவுள் கருணையே வடிவானவர் என்பதில் லாஜிக் இடிக்கிறது. 2. Paradox of Free will: கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்பதால் நான் அடுத்து என்ன செய்ய போகிறேன் என்பது முன்கூட்டியே தெரியும் அதாவது எல்லாம் முன்கூட்டி தீர்மானிக்க பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் எனது தேர்வு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. அதுபோக எனது தவறுகளுக்கு நான் பொறுப்பு கிடையாது. எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதால் அந்த நாடகத்தில் நான் எனது role ஐ செய்கிறேன் அவ்ளோதான். நியாய தீர்ப்பு நாளன்று எனது தவறுகளுக்கு தண்டனை வழங்க கூடாது. ஏனென்றால் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்த ஒன்றை தான் நான் செயல்படுத்துகிறேன். நான் அடுத்து என்ன செய்வேன் என்று கடவுளுக்கு தெரியதென்றால் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பது பொய் ஆகின்றது. 3. Paradox of Omni potency/Omniscient: கடவுளுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும் என்று வைத்து கொள்வோம் அதாவது ஹிட்லர் யூதர்களை கொல்லுவான் என்று முன்கூட்டியே தெரியும் ஆனால் அதை தடுத்து நிறுத்த முடியாது என்றால் கடவுளால் எல்லாம் செய்ய முடியும் (omnipotent) என்பது அடிபட்டு போகிறது. கடவுளால் எல்லாம் செய்ய முடியும் ஹிட்லரை முன்கூட்டியே தடுத்து நிறுத்த முடியும் ஆனால் அவன் என்ன செய்ய போகிறான் என்பது அவருக்கு தெரியாது என்றால், கடவுள் எல்லாம் அறிந்தவர் (omniscient) என்பது அடிபட்டு போகிறது. எல்லாம் தெரியும், எல்லாம் செய்ய முடியும் ஆனால் செய்ய முடியாது என்றால் முதல் paradox வருகிறது paradox of omnibenevolent god அதாவது கடவுள் கருணை அற்றவர் நடக்கும் கொடுமைகளை வேடிக்கை பார்க்கிறார். இல்லை free will concept தான் செயல்படவிடாமல் தடுக்கிறது என்றால் இரண்டாவது paradox, paradox of free will வருகிறது. Big Bang உம் கடவுளும் கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X  என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.” “ஏன் நைல் நதியில் வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை, ஆகையால் Hapi என்னும் தெய்வம் தான் அதற்கு காரணம்!” “நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை, எனவே Poseidon!” “இடி மின்னலுக்கு காரணம் புரியவில்லை, ஆகையால் Thor!” இப்படியே பல நூற்றாண்டுகளாக விளக்க முடியாத பலவற்றுக்கு ஒரு கடவுளை பதிலாக முன்னிறுத்துகிறார்கள், மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் கூற்று தவறு என்று அறிவியல் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து விளக்கி கொண்டு இருக்கிறது. ஒன்றை சொன்னதும் அடுத்ததிற்கு தாவிவிடுவார்கள். அப்படியானால்  இதற்கு காரணம் சொல்லு தெரியலையா? அப்போ கடவுள் இருக்கிறார்… அவர்தான் இதை எல்லாம் செய்தார்! அறியாமை ஒருபோதும் ஆதாரமாகாது. Big Bang க்கு முன்னாடி என்ன நடந்து இருக்கும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்கு முன் நடந்ததுக்கு கடவுள் காரணமாக இருக்கலாமா? இருக்கலாம். அது உங்களுடைய கடவுளாக இருக்கலாம், Odin ஆக இருக்கலாம், இன்னும் மக்களால் அறியப்படாத கடவுளாக கூட இருக்கலாம். இது ஏற்று கொள்ள கூடிய வாதமா? இல்லை. நீங்கள் ஒரு தகவலை முன்வைக்கிறீர்கள் என்றால், ஒன்று அதை சோதித்து இல்லை என்று  நிரூபிக்க முடியும் (falsifiable claim) அல்லது சோதிக்கவே முடியாதது (non-falsifiable claim). Falsifiable claim என்பது, நாம் ஒருவர் முன்மொழியும் ஒன்றை சோதித்து பொய் என்று நிரூபிக்க கூடிய ஒன்று. உதாரணமாக ஒரு கல்லை கீழே போட்டால், அது பூமியை அடையும் முன் சிறகு விரித்து பறந்து செல்லும் என்று சொன்னால். அந்த கூற்றை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சோதித்து இல்லை என்று சொல்ல முடியும். இது falsifiable claim. Non-falsifiable claim என்பது சோதிக்க முடியாதது. அந்த கல் பறக்கும், ஆனால் அந்த கல்லுக்குள் இருக்கும் கல் ஆவி மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே பறக்கும். அது சோகமாக இருந்தால் பறக்காது என்றால் இதை யாராலும் நிரூபிக்க முடியாது. நீங்கள் ஒன்று கல்லுக்கு ஆவி இருக்கிறது என்று நம்பலாம் அல்லது நம்பாமல் போகலாம். அந்த கல்லுக்குள் இருக்கும் ஆவியை நாம் அளந்து பார்க்கவோ சோதித்து பார்க்கவோ முடியாது. அந்த கல் பறந்தாலும் சரி, பறக்காமல் கீழே விழுந்தாலும் சரி அது கல்லுக்குள் ஆவி இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகாது. இப்போது கடவுளை பற்றி முன்வைக்கும் ஆதாரங்கள் எல்லாம் முக்கால்வாசி பொய் என்று நிரூபிக்க பட்டுவிட்டது (falsifiable claims). மீதி இருப்பவை எல்லாம் non-falsifiable claims க்கு அடியில் வருகிறது. அவற்றை சோதிக்கவும் முடியாது நிரூபிக்கவும் முடியாது. இதனாலேயே அவை எல்லாம் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் ஆகிவிடாது. நிரூபிக்க கூடிய சோதனைகள் (testable claims) எல்லாம்  கடவுள் பொய் என்றே கூறுகின்றன. ஆகையால் Big Bang க்கு காரணம் கடவுள் என்பதை ஏற்க என்பதை சாத்தியக்கூறுகளும் இல்லை. இறுதியாக Big Bang க்கு முன்னர் என்ன நடந்தது? எதுவுமே இல்லாமல் Big Bang மட்டும் எப்படி நிகழக்கூடும்? என்கிற கேள்விக்கு, “இப்போதைக்கு தெரியாது” என்பது ஏற்றுக்கொள்ள கூடிய பதிலே. எப்போதெல்லாம் அறிவியல் “இப்போதைக்கு தெரியாது”,  என்று கூறுகிறதோ அப்போதெல்லாம் ஆத்திகர்கள் அந்த இடத்தை கடவுள் என்ற ஒன்றை வைத்து நிரப்புகிறார்கள். இதை “God of the gaps argument” என்று சொல்லுவார்கள். பதில் தெரியாத கேள்விக்கு கடவுள் என்கிற பதிலை போட்டு நிரப்புவது என்று அர்த்தம். நாளையே Big Bang க்கு முன்னர் என்ன நடந்தது எப்படி பிரபஞ்சம் உருவாகி இருக்கும் என்றெல்லாம் தீர்க்கமாக அறிவியல் சொல்லிவிட்டால் உடனே அப்போ இதற்கு என்ன பதில் தெரியதல்லவா? அதுதான் கடவுள் என்று ஒன்றை நிச்சயம் எடுத்து கொண்டு வருவார்கள். கடவுள் எப்போதும் இல்லாத இடத்தில் தான் இருக்கிறார் ஏனென்றால் கடவுள் என்று ஒன்று இல்லை. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.