[] வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள் (கட்டுரைகள்-கதைகள்-கவிதைகள்) வலிப்போக்கன் மின்னூல் வெளியீடு - http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution 4.0 International License. This book was produced using PressBooks.com. Contents - வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள். (கட்டுரைகள்-கதைகள்-கவிதைகள்) - நூல் ஆசிரியர் அறிமுக உரை - சிறுகதைகள் மற்றும் அனுபவக்கதைகள் - 1. நல்லம்மாள் மகன் என்ன லூசா..? உண்மைக்கதை - 2. வெள்ளை கொக்கு என் கைளிலே..................சிறுகதை - 3. குழந்தையை கொன்றது ..வீட்டுக்காரியான பேய்தான்!???????????? - 4. ஆசை.........காட்டி....................சிறுகதை - 5. அதிலிருந்து இதிலோ.............இதிலிருந்து அதிலோ்........சிறுகதை - 6. பொழப்பும்........ பப்ளிசிட்டியும்......... குட்டிக்கதை - 7. மனிதனை சூழ்ந்து திட்டிய காக்கைகள்.....!!! - 8. ரோட்டிலும்,தரிசு இடங்களிலும் மலம் கழித்தது காந்திக்காலம்?இப்போ..ஆத்துபக்கம் ஓடுவது இந்தியாவின் வல்லரசு காலம்?... - 9. ஒன் பாட்டி போரும்....அதன்பிற கூத்துகளும்..........நடந்தகதை!!! - 10. நீங்க....தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா........!!! - கட்டுரைகள் - 11. மேல் சாதிக்காரர்கள் மதம் மாறலாம் சாதி மாறலாம்.ஆனால்....... - 12. சாதிவெறி குல தெய்வத்துக்கு தங்கக்......காப்பு...... - 13. மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள். - 14. இவரெல்லாம் பகுத்தறிவு பாசறையில் இருந்தவராம்............!!! - 15. வாழ்த்தா............................எதுக்கு?????? - 16. யானையை புடுச்சு பானைக்குள் அடக்க முயலும் கேச்ரிவால்.... - 17. மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!... - 18. இறைவனையும்,மன்னனையும் பாடி வந்த கீர்த்தனையை மாற்றிய கவிஞர் - 19. போதையில் தப்பிக்க மறந்த தம்பதி......!! - 20. இதற்கு என்ன அர்த்தம்...??? - 21. குரு தட்சனையாக வாயிலே கொள்ளிக் கட்டையை வைக்கலாம்.!!! - கவிதைகள் - 22. அப்போதும்------இப்போதும் - 23. விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் இடையில் குல்லாக்கண்டனும் - 24. இயற்கையின் விதியை மீற வைத்த சமூகம்............... - 25. வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்.......... - 26. அறிவு இருக்கா!...இல்லையா...? - 27. முட்டை உருண்டையா? ஒலகம் உருண்டையா?? - 28. ஈரை பேன் ஆக்கி....பேன்-னை பெருமாள் ஆக்கி.................. - 29. அதென்ன ..லோக்(கு)பால்................. - 30. நாய்களும் .........மனிதர்களும்............. - 31. இவரு வேற மாதிரி..................... - Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 1 வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள். (கட்டுரைகள்-கதைகள்-கவிதைகள்) [Cover Image] வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அலவங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக  இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என்  பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததில் சில நல்லவற்றை  மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ்  உரிமையின் மூலமாக  திரு.த. சீனிவாசன் அவர்களால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் freetamilebooks.com குழுவைச்  சேரும்.. இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில்  வாழ்த்துக்கள் என்றால் freetamilebooks.com குழுவைச் சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் எனக்கு மட்டுமே உரிமையானவை.. (உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா) வலிப்போக்கன் valipokken@gmail.com அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com 2 நூல் ஆசிரியர் அறிமுக உரை எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை. எனக்கு  நண்பராக இருந்தால் பாசத்துடன் திட்டுவீர்கள். குடும்பத்துக்கு உறவினர்காளக இருந்தால் பரிதாபப்படுவீர்கள். என்னை பிடிக்காதவர்களாக இருந்தால் பொறாமையால் எனக்கு இம்சையும் அவஸ்தையும் கொடுப்பார்கள். நான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன் அதுமுதல் என்து வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன. நான் தற்போது 54 வயதானாலும் வேலை செய்ய தயங்குவதில்லை. வேலை இல்லாததால் அந்த நேரத்தில் மின்சாரம் இருக்கும் நேரங்களில் என்து அக்கா மகன்களான என் மருமகன்கள் கனணியில்லாத போது  பதிவிட்டு வருகிறேன். நான் திருமணம் ஆகாதவன் அதற்கு காரணம் பல…. அவற்றில் ஒன்று பிரதானம் இது. எனது தாய் தந்தையர் படிக்காதவர்.எனது தந்தை பண்ணடிமையாக இருந்து பொழப்பை ஓட்டியவர். என் அய்ந்தாவது வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என்னையும் என் தமக்கையையும் வளர்க்க. கிடைக்கும் அணைத்து வேலைகளுக்கும் என் தாயார் சென்று விடுவதால்…என் தமக்கையின் பாதுகாப்பில் வளர்ந்தேன. என் அக்காவுக்கு சிறு வயதிலேயே  திருமணம் முடிக்கப்பட்டு ஏழுகுழந்தை பெற்றெடுத்து அதில் மூன்று தவறிவிட இரண்டு பெண்,இரண்டு ஆண குழந்தைகளுடன் நடுத்தர வயதில் பார்வை பறி போய்விட்டது. சிறு வயதில் என்னை பாதுகாத்து பாராமரித்து வந்த அந்த நன்றியினால். என்னைவிட்டால் அவருக்கு யாருமில்லாததால்… என் அக்காவுக்காவும் அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காவும்என் அக்காவின் கணவர் என் தாய் மாமனின் மகன் என்பதால் “ பெற்றால்தான் பிள்ளையா..? வளர்த்தாலும் பிள்ளைதான் என்பதற்க்காக……….. என்னுடைய வாழ்க்கைக்கு படகை ஓட்டுவதற்க்காக சில நல்ல நண்பர்களின் உதவியால் வங்கி கடன் பெற்று பைண்டிங்-பிரிண்டிங் தொழிலை சொந்தமாக நடத்திக் கொண்டு வந்தேன. குடும்பம் மொத்தமாக உழைத்து வந்தோம்  தற்பொழுது என்து மருமகன்கள் என் வழிப்படி நிர்வகித்து  வேலை செய்து வருகிறார்கள். மேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம். வேலை  கேட்டு (ஒர்க ஆர்டர்) போவது மாதிரி..மின் நூல் தொகுப்பாளரும்  வெளியீட்டுளாருமான  திரு.த. சீனிவாசன் அவர்களுக்கு மனு போட்டேன. அவரும்  என் மனுவை ஒதுக்கி விடாமல் காலம் கடந்தேயாயினும் என் மனுவை ஏற்று பத்தோடு பதினொன்றாக இல்லாமல் நான் விரும்பும்படியாக என் பதிவுகளை உங்களுக்காக செதுக்கி வடிவமைத்து  இந்த மின் நூலை வெளியிட்டுள்ளார்கள். freetamilebooks.com குழுவிற்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!!! வலிப் போக்கன் -- -- valipokken@gmail.com http://valipokken.blogspot.com/ [pressbooks.com] 1 சிறுகதைகள் மற்றும் அனுபவக்கதைகள் 1 நல்லம்மாள் மகன் என்ன லூசா..? உண்மைக்கதை மாநகராட்சியின் 69 வது வார்டில் துப்பரவு ஊழியராக பணியாற்றி தனது 58 வயதில் பணி நிறைவு பெற்றவர் திருமதி நல்லம்மாள். திருமதி நல்லம்மாளுக்கு முதலாவதாக ஒரு பொண்ணும் இரண்டாதவதாக ஒரு ஆணும் உள்ளனர். திருமதி நல்லம்மாளின் கனவர் ,மகனின்  நான்கு வயதில்  பரலோகம் சென்று விட்டார். படிப்பும்,விவரமும்,ஆதரவும் இல்லாமல் திக்கு தெரியாத காட்டில் தனித்து விடப்பட்ட நல்லம்மாள் தவியாய் தவித்துப்போனார். தனது கனவர் பன்னை அடிமையாய் வேலை பார்த்த ஆண்டைகளின் வீடுகளிலே வீட்டுப் பணிப்பெண்ணாக தன் வாழ்வைத் தொடர்ந்தார். வீட்டு வேலை செய்து வந்தபோது  சில நல்லவர்களின்  மனைவிமார்களின் உதவியால் ஊராட்சி வார்டுகளில்  துப்பரவு சிப்பந்தியாக  சேர்க்கப்பட்டு, ஊராட்சி வேலை நேரம் போக , மீதி நேரத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டதுக்கு நன்றிக்கடனாக ஆண்டைகளின் வீடுகளிலும் வேலை செய்து வந்து தன் குடும்ப வண்டியை ஓட்டி வந்தார் திருமதி நல்லம்மாள். ஊராட்சி நகராட்சியாக மாறி நகராட்சி மாநகராட்சியாக ஆகி 35ஆண்டுகள்  பணியாற்றி 58வயது ஆகியவுடன் பணி ஓய்வு பெற்றார். .தன்னுடைய பணப்பலன் பெருவதற்க்காக மூன்று ஆண்டு காலமாக  நல்லம்மாளின் மகன்  மண்டல அலுவலகத்துக்கும் தலைமை அலுவலகத்துக்குமாக அலைந்து போட வேண்டியவர்களுக்கு போடு பணம் போட்டு,மொய் செய்ய வேண்டியவர்களுக்கு மொய்யெழுதி .கடைசியாக 35 வருட பணிக்காலத்தை கணக்கில் சேர்க்காமல் 28 வருடத்தை மட்டும் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு .ஒரு லட்சத்து அய்ம்பத்திஅஞ்சு ஆயிரத்தை   பணப்பலனாக பெற்றார் திருமதி நல்லம்மாள். அந்த ஒரு லட்சத்து ஐம்பதைந்தாயிரத்துக்கான செக்கை.“பாக்கியா” பைன்னாசில் கொடுத்து பணமாக பெற்று…..திருமதி நல்லம்மாளும் அவரது மகனும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கியதுமே………அவர்களை சுற்றி  ஒரு கூட்டமே கூடியது. கூடி நின்ற கூட்டத்திடம் நல்லம்மாளின் மகன் சொன்னான். “அய்யா. அம்மா உங்களிமிடருந்து என்அம்மா வாங்கிய கடனை இல்லை என்று சொல்லவில்லை.  என் அம்மாவின் பணப்பலன் குறைவாக வந்துள்ளது. எனது தாயாரின் பணிப்பதிவேட்டில் பணிபுரிந்த நாட்களை பதிவு செய்யும் அலுவலர்கள் ஆறு வருடங்களை பதிவிடாததால். பணப்பலன் குறைந்தற்கு காரணம். இந்த ஒரு லட்சத்து அய்ம்பத்திஅய்ந்தாயிரத்தை வைத்துக்கொண்டு .வட்டியும் அசலுமாக சேர்த்து உங்கள் அனைவரது கடனையும் அடைக்க முடியாது. ஆகையால் வட்டியை கேட்காமல்.அசலை மட்டும் வாங்கிச் செல்லுமாறு உங்கள் பனிவோடு கேட்டுக் கொள்கிறேன் என்றான். கடன் கொடுத்த கூட்டத்திலிருந்து பிச்சைத்தேவரும், கழுவாயி யாத்தா,மாயக்கா,பேச்சியக்கா.ஆகியோர் அவர்களுக்கே உரித்தான வட்டார மொழியில் சத்தம் போட்டார்கள். யப்பே…..ய்……..ய்…… என்னா…………ம்….. இதென்னப்பா பேச்சு……வட்டி என்ன கொஞ்சமா? .விடுறதுக்கு….. …….ஏய்ய் நல்லம்மா…….என்னா……….ஓ………மகன் இப்படி சொல்றான்.       இதுக்குத்தான் நீ கேட்டவுடனே……..கடன தந்தோம்மாக்கும்………..இதென்ன  வழுவட்ட பேச்சு என்றார் பேச்சியக்கா.. என்னப்பா……………நல்லம்மா மகனே……….இதுதான் உன் நேர்மையாக்கும சரியில்லப்பா…..வட்டியும் அசலையும் கொடுக்கப் பாரு .என்றார் பிச்சைத்தேவர். “யப்பா………ய்ய்….நல்லம்மா மகனே……….ஒங்கம்மா கூட வேல பாக்கறவளுக்கு ஓங்கம்மா எங்கிட்ட கடன்வாங்கிக் கொடுத்தா…………அவளுக ஒங்கம்மாவ ஏமாத்தி புட்டாளுக………….. அவளுக மாதிரி நீ………..எங்கள ஏமாத்திரி யாக்கும் ஒழுங்கா..மரியாதையா வட்டி மொதலுமாக காச வச்சுட்டு போ……….ஆமா. நீ ஏமாந்ததுக்கு நாங்கலா பொறுப்பு……சே…..என்றார் கழுவாயி.யாத்தா…… சரித்தா…………….எங்கம்மாவின் இரக்க குணத்த சாதகமாக பயன் படுத்திக் கிட்டாக……அவுககிட்ட கேட்டபோது,வாங்கினவுகல்ல பூச்சான் வீட்டுக்காரம்மா மட்டும்தான்  உங்ககிட்டஒத்துகிட்டு  .நல்லம்மக்காகிட்ட கேக்காதீங்க நானு தந்துரேன் சொன்னாங்க…….மத்தவங்க எங்கம்மாகிட்ட கடன் வாங்கித்தரச் சொல்லவே இல்லேன்னு சொல்லிட்டாங்க…..அவுககிட்ட எப்படி வாங்குறதுன்னு சொல்லுங்க  என்றான் நல்லம்மா மகன். கந்தசாமி பிள்ளை மட்டும்..அய்யா,நல்லம்மாமகனே,…… எங்களுக்கு ஒழிச்சுவிடப்பா…………… நாங்க போறோம்…………என்றார். ஏற்கனவே தனது தாயிடம் யார் யாரிடம் கடன் வாங்கிய விபரம்.வட்டி கொடுத்த விபரம், உடன் வேலை பார்த்தவங்களுக்கு கடன் வாங்கி கொடுத்த விபரத்தையெல்லாம் தன் தாயிடம் கேட்டு எழுதி வைத்துக்கொண்டதைக் கொண்டும் .அதோடு கடன் கொடுத்தவர்கள் உண்மையைச் சொல்கிறார்களாக என்றும். அவர்களிடம் மீண்டும் கேட்டு அவர்களிமிருந்து தனது தாயார் வாங்கிய கடன் பணத்தை  எண்ணிக் கொடுத்தான். அரிசி கொடுத்தே கடனை எற்றி வைத்த அரிசிகாரம்மா . மட்டும் பத்தாயிரத்துக்கு இருபதாயிரம் என்று சத்தியம் பன்னி சாதித்தார். அரிசிகாரம்மா………..நீங்க ரேசன் அரிசிய தீட்டி நல்ல அரிசின்னு  அதிக விலைக்கு வித்து கடன ஏத்தினது எல்லாம் எனக்கு தெரியும்…….ம்மா……. என் அம்மாவால நானும் ஏமாந்தினது வாஸ்தவம்தான். அதுக்காக இன்னமும் ஏமாத்தினா எப்படிம்மா…………… ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க……….ஒங்களுக்கு பயந்துகிட்டு. நான் பணம் தரல……………எங்கம்மா ஒங்கிட்ட கை நீட்டி வாங்கியிருச்சென்னு தான் . வாங்கின பணத்தை திரும்பத் தர்ரேன். போலீஸ.கோர்ட்டு போனால் ஒங்களால் கொடுத்த பணத்தை வாங்க முடியுமா……??? எங்கம்மா என்ன ஒங்களிடம் எழுதியா…….கொடுத்திருக்கு…………..நான்  பணம் இல்லேன்னா என்ன செய்விங்க……….கொன்றுவிங்களா……… அவனவன் எழுதிக் கொடுத்த பணத்தையே வாங்க முடியுமா..???….தவிக்கிறது ஒங்களுக்கு தெரியுமா.?……… அரிசிகாரம்மாவுடன் கூட வந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும். “இந்தாம்மா………..நல்லம்மா மகன் பொய் சொல்லமாட்டான். அவன் அப்பன் அம்மாவை விட ஒருபடி மேல இருக்கான்..  கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிறது பெரிய விசயம்.. நீ ரேசன் அரிசிய கொடுத்து கடன ஏத்தினத புட்டு வச்சிட்டான் ….உள்ளது மோசம் போயிரும் பாத்துக்க என்றதும். நல்லம்மா மகனே…………மன்னிச்சிருப்பா……………சும்மா….சொன்னேன்ப்பாஃ எல்லாக் கடனும் பத்தாயிரத்துக்குல்லதான் வருது. மன்னிச்சுறுப்பா நல்லம்மா மகனே……நீ கொடுக்கறத………….கொடுப்பா என்றார் அரிசிகாரம்மா. கடைசியாய் பிச்சைத்தேவர்.மாயக்கா.பேச்சியக்கா…….. மூவரும்  புலம்பியபடி சரி….நல்லம்மா மகனே, அசல கொடு………. ஒங்கத்தாவின் வேறுபணம் எதுவும் வாங்கினால்…பின்னாடி……வட்டிய கொஞ்சம் கொஞ்சமாக கொடு என்றார்கள். பின்னாடியெல்லாம் கொடுக்க முடியாது. எங்காத்தாவுக்கு பென்சனே ரெண்டாயிரம்தான் வரும்……. அதவச்சுதான் நானும் எங்காத்தாவும் கஞ்சி குடிக்கனும்…….அதையும் ஒங்கிட்ட குடுத்திட்டா நாங்க எப்படி கஞ்சி குடிக்கிறது என்றபோதுதான் நல்லம்மா மகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற விபரம் அங்கு இருந்தவர்களுக்கு தெரிந்தது. திருமதி நல்லம்மாளின் ஓய்வுப் பணத்தை கொண்டு திருமதி நல்லம்மாள் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய கடனையும் தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடனையும் தன் மகன் மூலமாக அனைத்து கடனையும் அடைத்துவிட்டு மீதி இருந்த ஒன்பதாயித்து சில்லரையுடன்  நல்லம்மா கவலையுடன் தன் மகனை தொடர்ந்தார். நல்லம்மாள் கவலையுடன் இருப்பதை பார்த்ததும் நல்லம்மா மகன் சொன்னான். அவுங்ககிட்ட வாங்கின பணத்தை தானே அடச்சோம் கவலைய விடும்மா….. கஞ்சி இல்லேன்னாலும் கடன் இல்லாம இருக்கலாம் என்று தேற்றினான். திருமதி.நல்லம்மாளின் ஓய்வூதிய பணப்பலன் பணத்தை நல்லம்மா மகன் கூடி நின்ற கூட்டத்திடம் எண்ணி கொடுப்பதைக்.தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என்னவென்று  விசாரித்து தெரிந்து கொண்ட பின்…………….. ”நல்லம்மாள்  மகன் என்ன லூசா” என்று கேட்டபடி வியப்புடன் சென்றார்கள். 2 வெள்ளை கொக்கு என் கைளிலே..................சிறுகதை நகராட்சி ஆரம்ப பள்ளியில் இருக்கும்  அய்ந்தாவது வரை படித்துவிட்டு அடுத்தாக ராஜம் வித்தியாலய நடுநிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பில் புதிதாய் வந்த சேர்ந்த மாணவன் பெயர் கணேசன். புதிய இடத்தால்.புதிய முகத்தால் ஏற்ப்பட்ட மிரட்சியால் சில நாட்கள் யாருடனும் ஒட்டாமல் இருந்தான. அந்த மிரட்சியுடனும் பயத்துடனும் ஒட்டாமல் இருந்த நாட்களில் இவனுடன் நட்பு  பாராட்டினான் உடன் படித்த முருகேசன் என்பவன். நாட்கள் சென்று வாரங்கள் கடந்து மாதங்கள் வந்தன. கணேசனுக்கு மிரட்சியுமில்லை.படிக்காததினால் டீச்சர் அடிக்கும்  பிரம்பு அடிக்கும் பயமில்லாமல் மரத்துப் போயின அவனுக்கு.. கணேசனுடைய டீச்சர் ஊதிவிட்டால்,தூசியைவிட முன்னே பறந்து செல்லும் ஒல்லிக் குச்சி டீச்சர். மற்ற டீச்சரெல்லாம் குட்டி யானை மாதிரி இருந்தாலும் இவன் டீச்சர் ஒல்லியாகவே இருந்தார் . அதோடு எப்பப் பார்த்தாலும் கைக்குட்டையால் மூக்கை சிந்திக் கொண்டே இருக்கும். அந்த டீச்சர் வீட்டுப்பாடம் எழுதி வராததினால்.டீச்சரைவிட கொஞ்சம் தடியாக இருக்கும் குச்சியால் கணேசனை அடிக்கும்போது, கணேசனுக்கு டீச்சர்மேல் கோபம் வருவதற்குப் பதிலா.பரிதாபம்தான் வரும்  . தன்னை அடித்தாவது டீச்சருக்கு பலம் வரட்டும் என்பான். வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டு  வராததற்கு அதுவும் ஒரு காரணமாக்கி விட்டான் சில வேளைகளில், குச்சியை தூக்கி அடிக்க முடியாமல். வகுப்புக்கு வெளியில் முட்டி போட வைத்து விடுவார். கணேசனுக்கும் முருகேசனுக்கும் அடி வாங்குவதைவிட முட்டி போடுவது மிகவும் சிரமாயிருந்தது. சிரமாயிருந்தது என்பதைவிட பயமாக இருந்தது. அதற்குக் காரணம் பள்ளி பிரின்சிபால் அய்யாவின் கொட்டுதான். முட்டி போட்டு இருப்பதை அய்யா பார்த்துவிட்டால்.அவ்வளவுதான் அய்யாவிடம் கொட்டுவாங்காமல் தப்பிக்க முடியாது. அப்படி கொட்டு வாங்கி விட்டால் ஒரு வாரத்துக்காகவது மண்டை வீங்கி வலி எடுக்கும். இந்த வலிக்கு பயந்தேதான். ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு வகுப்பு மாணவ-மாணவியரும்  பள்ளி யை சுத்தம் செய்ய அதிகாலை ஆறு மணிக்கு  தவறாமல் சென்றுவிடுவார்கள். பள்ளியின் சுத்தம் செய்யும் வேலைக்கு செல்லாதவர்கள் அன்று முழுவதும் முட்டி போடுவதோடு அந்த அய்யாவின் கொட்டு வேறு வாங்கி தொலைக்கனும். இந்தக் கொட்டுக்கு பயந்தே,முட்டி போடச் சொல்லும் நாட்களில் மாணவர்கள் அழுது புரண்டு அழுது விடுவார்கள்.  ஒரு வகுப்புக்கு முப்பது மாணவ மாணவியர்கள் உள்ளதில் கணேசனையும் முருகேசனையும் சேர்த்து ஆறு பேர்கள்தான் வீட்டுப்பாடம் எழுதி வராதவர்கள். கொ்ட்டுக்கு பயந்த முருகேசன்  வீட்டுப்பாடத்தை தனக்கு எழுதிக் கொண்டு, சீக்கிரமாகவே வகுப்புக்கு  வந்து நண்பனுக்கு எழுதிக் கொடுப்பான். கணேசன் வீடு பள்ளிக்கு சற்று தொலைவில், முருகேசன் வீடோ,ரெம்ப தூரத்தில். இப்படியாக நண்பர்கள் இருவரும் அய்யாவின் கொட்டுலிருந்து தப்பித்து வந்தனர். ஒரு நாள் ஒல்லி டீச்சரின் அடி குச்சி காணாமல் போய்விட்டது. ஒல்லி டீச்சருக்கோ நண்பர்கள் இருவருர் மீது சந்தேகம். நண்பர்கள் இருவருக்கும்  டீச்சரிடம் போட்டு கொடுக்கும்  சக மாணவனான சேது ராமன் மீது சந்தேகம் டீச்சர் நண்பர்கள் இருவரையும் மிரட்டி உருட்டி பார்த்தும் சத்தியம்மேல் சத்தியம் செய்து தங்களுக்கு தெரியாது என்று சாதித்தனர். நண்பர்கள் இருவரும் கொதித்து போயி. அன்று மதியம்  அன்றைய தமிழ்நடிகர். ஜேம்ஸ்பான்டான ஜெய்சங்கர் பாணியில் சேதுராமனை டூசு்ம் டசும் கொடுத்து விட்டனர். அடி வாங்கிய சேதுராமனோ.ஒன்னுக்கு ரெண்டா.டீச்சரை ஒல்லீக்குச்சி தேவாங்கு என்று கேலி செய்வதாக  மூட்டி கொடுத்துவிட்டதோடு, அடி குச்சியை  இவர்கள் ஒடித்துவிட்டதாகவும் பொய் சொல்லி ஒடித்த குச்சியை டீச்சரிடம் கொண்டு வந்து கொடுத்தான். ஏற்கனவே,நண்பர்கள் இருவரையும் சந்தேகம் கொண்ட டீச்சர் கோபம் கொண்டு கொதித்து போயி,நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அவுங்க அவுங்க அப்பா.அம்மாவை கூட்டிட்டு வரனும்.கூட்டிட்டு வரலேன்னா அய்யா விடம் சொல்லிடுவேன் என்று டீச்சர் கண்டிப்பாக சொல்லி விட்டார். நண்பர்கள் இருவரையும் மாட்டி விட்ட சந்தோசத்தில் சேதுராமனும் அவனின் சேத்தாளிகளும் காலரை தூக்கவிட்டுக் கொண்டு டீச்சரிடம் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டனர். மறுநாள் நண்பர்கள் இருவரும் வகுப்புக்கு வந்தவுடன் டீச்சரிடம் தங்கள் அம்மாக்கள் நாளைக்கு வருவதாக சொல்லியதை சொன்னார்கள். டீச்சர் சந்தேகம் கொண்டு பார்க்க…, சத்தியம் செய்தார்கள். இவர்களின் சத்தியத்தை நம்பாத டீச்சர் இவர்கள் இருவரையும் தனியாக உட்கார வைத்தார். அடுத்த ஆறாம் வகுப்பு  “பி” பிரிவு டீச்சர் லீவு போட்டுள்ளதால் அந்த வகுப்பை கவனிப்பதற்க்காக, வகுப்பு தலைவி கிருஷ்ன வேணியை கவனிக்க சொல்லிவிட்டு, சத்தம் போடக்கூடாது, அமைதியா.க பாடம் படிக்கனும் என்று மிரட்டல் விட்டுட்டு அடுத்த வகுப்புக்கு சென்று விட்டார் டீச்சர். தனியாக அமர்ந்திருந்த கணேசனும் முருகேசனும் கசு குசுன்னு மெதுவாக பேசினார். இதைக கவனித்த கிருஷ்னவேணி “ டேய் கணேசா………..பேசாதடா.. பேர எழுதி வச்சுருவேன் ஆமா…… என்றாள். முருகேசன், ஒரு விரலைக்காட்டி“பிளீஸ்” ஒரு வாட்டி.இனிமே பேசமாட்டான் என்று வேண்டினான். சிறிது நேரம் வகுப்பு அமைதியாக இருந்தது. ஒவ்வொரு மாணவ மாணவியரும் அமைதியாக தங்களின் விரல்களை பார்த்த வண்ணம் ஊமைச் சாடையாக  கிசு கிசுத்தனர். நண்பர்கள் இருவரும் என்னவென்று கவனித்தனர். கைகளிலுள்ள விரல் நகங்களில் வெள்ளை கொக்கு இருக்கிறதா என்று பார்த்தனர். சிலருக்கு வெள்ளை சிறு புள்ளியாகவும் சிலருக்கு விரல் நகங்கள் மஞ்சளாகவும் பலருக்கு எதுமே இல்லாமல் இருந்தன. சேதுராமன்  பத்து விரல் கை  நகங்களில் ஒரு நகத்தில் மட்டும் வெள்ளை கொக்கு இருப்பதை அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தான். கணெசனும் தன்விரல் நகங்களை பார்த்தான் அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பத்துவிரல் நகத்திலும் வெள்ளை கொக்கு பறந்தபடி இருந்தது. தன் நண்பன் முருகேசனிடம் காட்டினான். ”டேய, ஆமடா”  என்று வாய் பொளந்தான். சேது ராமனை தோற்கடித்த சந்தோசத்தில்“ வெள்ளை கொக்கு என் கைகளிலே” என்று கத்தியபடி மற்ற மாணவர்களிடம் தன் கை விரல் நகங்களிலுள்ள வெள்ளை கொக்குவை காட்டி வெற்றி முழக்கமிட்டான். அந்த வெற்றி முழக்கத்துக்கு அறிகுறியாக வகுப்பு கரும்பலகையில் கிருஷ்னவேணியால் கணேசன் பெயரும் முருகேசன் பெயரும், பொறிக்கப்பட்டன. மூன்றாதவதாக சேது ராமன் பெயரும் மற்ற சிலரது பெயரும் எழுதப்பட்டன. பின் குறிப்பு—- கைவிரல் நகங்களில் வெள்ளை கொக்கு பறந்து இருந்தது இரத்த சோகையின் அறிகுறி என்று பத்தாவது படித்து பெயில்  ஆகி  ஊரு சுற்றிக் கொண்டு இருந்த பின்னாளில்தான்  தெரிந்தது கணேசனுக்கு…… 3 குழந்தையை கொன்றது ..வீட்டுக்காரியான பேய்தான்!???????????? நடக்கும் வயதுள்ள பெண் குழந்தை ஒன்று.ஆங்கில புத்தாண்டு அன்று தீடிரென்று இறந்துவிட்டது. குழந்தையின் தாய் இரவில் சீட்டு விளையாடிய களைப்பால் பகலில் தூங்கிவிட்டதால்,வீட்டிற்குள் விளையாடிய குழந்தை தவழந்து வந்து அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வட்டையில்  தலை கீழாய் விழுந்து மூச்சு திணறி இறந்து விட்டது. அருகிலுள்ள சிலர் பெரிய (அரசு) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லி 108க்கு போன் செய்ய சொன்னபோது சின்ன குழந்தையை அறுத்து சின்னா படுத்தி விடுவார்கள் என்ற காரணத்தை சொல்லி தவிர்க்கப்பட்டது. இறந்த குழந்தையை புதைப்பதற்க்காக மாநகராட்சி மாயனத்தை அனுகியவர்கள், மருத்துவ சான்று இல்லாமல் புதைக்க முடியாது என்று மயான ஊழியர்கள் மறுத்து விட்டனர்.( அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியததால்) அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் குழந்தை இறந்த காரணத்தை சொல்லி, இறந்தற்க்கான சான்று கேட்டபோது.அந்த மருத்துவரும் இறந்த சான்று தர மறுத்துவிட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். சிறு குழந்தை என்ற காரணத்தால் பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்ப்பதாக மீண்டும்  சொல்லப்பட்டது. ஒருவழியாக அருகில் வசித்த  குழந்தையின் தாய்மாமன் முயற்சியில்.ரெண்டு ஆட்டோ பிடித்து தொலைவிலுள்ள மயானத்தில் குழந்தையை அடக்கம் செய்துவிட்டார்கள். இரண்டு நாள் கழித்து, குழந்தையின் தாயானவள் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம். கதை சொன்னாள். அவள் குடியிருக்கும் வீட்டின் ஓனர் பொம்பளை.ஒரு வருடத்துக்கு முன் மண்ணணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாள். அவள்தான் பேயாக வந்து தன் குழந்தையை கொன்றதாக சொன்னாள். அந்த வீட்டுக்காரியும் இவளும் இணைபிரியாதவர்க்ள் ஆச்சே, எனப்து பற்றி தெரிந்தவர்கள்  “நீயும் அவளும் இணைபிரியாத தோழிகளே” அவள் எப்படி உன் குழந்தையை கொள்வாள் என்று கேட்டபோது…………. அதற்கும் ஒரு கதை சொன்னாள். அந்த பாசத்தால்தான் என்னை தூக்கதில் எழுந்திருக்கவிடாமல் அமுக்கவிட்டு என் குழந்தையை தண்ணிரீல் முக்கி கொண்று விட்டாள் என்றாள். இதற்கு ஆதரவாக.. செத்துப்போன வீட்டுக்காரியின் இன்னொரு வீட்டில் குடியிருந்து வந்த பெண்ணுக்கு குறை மாசத்திலேயே குழந்தை இறந்து பிறந்ததாக கூறினாள். துக்கம் விசாரிக்க வந்தவளில் ஒருத்தி கேட்டாள்,வீட்டுக்காரியின் மகளும்தான் குழந்தை பெத்து இருக்காளே! அவ குழந்ததை சாகலையே என்றாள். அதான் எனக்கும் தெரியல………… என்று மழுப்பினாள். ஒரு வாரம் கழித்து வீட்டுக்காரியின் மகளின் மூலம் கெட்டிக்காரியின் புளுகு வெளி வந்தது. வீட்டுக்காரியின் மகள், குழந்தையின் தாய்.மற்றும் வீட்டுக்காரியின் மகளின்  சித்தி .இன்னொருவர் ஆக இவர்கள். இரவு முழுவதும் காசுக்கு சீட்டு விளையாடும் விளையாட்டு அதிகாலையில்தான முடிந்ததாம். அவளின் கனவனோ இரண்டு நாட்களுக்கு முன்னமே வெளியூரிருக்கு வேலை சென்று விட்டதால…………  காலையில் வீட்டு வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டு படுத்து விட்டாள். தூங்கிக் கொண்டு  இருக்கும் பொழுது குழந்தை அழுததால்………….. குழந்தைக்கு சரமரியாக அடி கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டாள். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால், வீட்டுக்காரியின் மகளானவள். அவள் வீட்டிற்க்குள் எட்டி பார்த்து இருக்கிறாள். அப்போது,குழந்தையின் அழுகையால் கோபமுற்ற தாயானவள். குழந்தையை தூக்கி தண்ணீர் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் வாழியில் தலைகீழாக முக்கு முக்கி தரையில் பொத்தென்று போட்டுவிட்டாள்.பிறகு  இதை கவனித்தக் கொண்டு இருந்த வீட்டுக்காரியின் மகளை வெளியே  அனுப்பிவிட்டு பொத்தென்று போடப்பட்ட குழந்தையை பார்த்தாள். குழந்தை இறந்து விட்டது. தூக்கம் களைந்தவளாக, குழந்தை விளையாடும்போது  தண்ணீரில் முழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்துவிட்டாள். குழந்தை இறந்த செய்தி கேட்டு. நாலு வீடு தள்ளி குடியிருக்கும் தாயானவளின்  தம்பி, வந்து.“ இரவெல்லாம் சீட்டு விளையாடிததால் குழந்தையை கவனிக்காமல் கொன்றுவிட்டாய் என்று நாலு போடு போட்டான். அவனைத் தொடர்ந்து தாயானவளின் தாயும் அவளின் அக்காமார்களும் அடித்து துவைத்து திட்டினார்கள். உண்மை  இப்படி இருந்த போதிலும், தன் குற்றத்தை மறைக்க,…….. தீ கொளுத்தியின் மகளானான தீயிட்டு செத்த வீட்டுக்காரிதான் பேயாக வந்து என் குழந்தையை கொன்றாள் என்று தான் சொல்லிக் கொண்டு திரிகிறாள்.. தெரியாதவர்களும் “நம்பிக்கை தானே வாழ்க்கை” என்ற ரீதியாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். செத்தவர்களெல்லாம் பேயாக வந்து கொன்றால்……… எத்தனை பேர் உயிர் மிஞ்சுவார்கள். அப்படி செத்தவர்கள் பற்றி தெரிந்தவர்கள். ஒரு புள்ளி விபரம் சொல்லுங்களேன். 4 ஆசை.........காட்டி....................சிறுகதை புதுசா தவனை தொழிலுக்கு வந்த தவனைக்காரனிடம், தவனை வாங்கியே பழக்கப்பட்ட ஒருவன். ஒரு லட்சம்வரை தவனை வாங்கி இருந்தான்.இரண்டு மாதங்கள் வரை தவனை செலுத்திய தவனை வாங்கியவன். தவனை கொடுத்தவன் தொழிலுக்கு புதியவன் என்பதினால் தவனை கொடுக்காமல் எமாற்றும் திட்டத்தோடு அவனுடன் சண்டையிட்டான். இதனால் தவனை கொடுத்தவனுக்கும் தவனை வாங்கியவனுக்கும் மனஸ்தாபம் ஏற்ப்பட்டது. தவனை வாங்கியவன் தவனைத் தொகையை இன்னைக்கு தாரேன். நாளைக்கு தாரேன் என்று நாட்களை கடத்தி வந்தான். தவனை கொடுத்தவனோ, தெரியாத் தனமா இத் தொழிலுக்கு வந்துவிட்டனே! என்று தன் நண்பரிகளிடம் புலம்பியபடி சலிக்காமல் கேட்டு அலைந்து கொண்டு இருந்தான். கொடுத்த பணத்தையாவது  வாங்கிவிட வேண்டும் என்று மனதில் கங்கணம் செய்து கொண்டு இருந்தான். மூன்று பைசா வட்டிக்கு வாங்கி மாதம் தவறினாலும் வட்டியை தவறாமல் செலுத்தி வரும்  நேர்மையாளனின் ஒருவனின் மூலமாக தெரிந்த நண்பரின் ஆலோசனைப்படி…… முதலில் தவனை கொடுக்கும் தவனை பார்ட்டிகளிடம் ஆலோசனையை கேட்டான். அந்த தவனை பார்ட்டிகளோ…..மிரட்டல்,கடத்தல்,அடித்தல், கொடுத்த பணத்திற்கு ஈடாக பெருமான பொருளை எடுத்துக் கொள்ளுதல்,கட்டபஞ்சாயத்து செய்தல். போலீசில் மோசடி புகார் செய்தல்.போன்ற பல அனுபவங்களை சொன்னார்கள். புதிய தவனைகாரனுக்கு அந்த வழிகளில் செல்வது  சரியாகப்படவில்லை, கம்பும் உடையாமல் பாம்பும் சாகமால் இருப்பது போன்ற வழிகளை யே தேடினான். ஒருநாள்  ஆலோசனை கேட்டதின்படி தனக்கு தெரிந்த பேங்க்காரன் ஒருவனிடம் ஒரு லட்சம் கடன் பெற்றவனைப்பற்றி சொல்லி பணத்தை வசூல் செய்யும் வழி கேட்டான். அந்தப் பேங்காரனோ.தனக்கு இவ்வுளவு கமிஷன் கொடுத்தால். பணத்தை பெற்று தருவதாக சொன்னான். கடைசியாக. புதுத்தவனைக் காரனும் பேங்க்காரனும் சில  உடன் படுக்கை செய்து கொண்டனர். சில நாள் கழித்து தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது டிப்டாப் ஆசாமி ஒருத்தன் இவர்களுக்கு அருகில் வந்தான். வந்தவன். ஒரு நோட்டீசை கெர்டுத்து அரசு அங்கீகாரம் பெற்ற இன்வெஸ்ட கம்பெனி, உத்தரவதமானது, கஷ்டப்பட்டு ரெண்டு லட்சம் கட்டினால்.அடுத்த ரெண்டெ வருசத்தில் ஐந்து லட்சம் உங்களுக்கு கிடைக்கும், மந்திரமும் இல்லை. மாயமும் இல்லை நிஜம்… இப்படி நிறைய பேரு கட்டி வாங்கிட்டாங்க…….. ஒரு குடும்பத்துல ஒரு நபருக்கு ஒரு தடவைதான் சான்ஸ்…..  அடுத்த சான்ஸ் மற்றவங்களுக்கு.இத்திட்டம் குறுகிய காலம் வரைக்கும்தான்  என்று நம்பும்படியாக அளந்து விட்டான். தவனை வாங்கியவனிடம் சென்று ரெண்டு லட்சம் இல்லேன்னாலும் ரெண்டு பேர் சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம் கட்டிவிட்டு ரெண்டு வருசம் கழித்து ஐந்து லட்சம் வரும்போது ரெண்டரையாக பிரித்துக் கொள்ளலாம் .“ வீடு தேடி வர்ர சீதேவிய ஊதாசினப்படத்தக்கூடாது என்றான். தவனை கொடுத்தவனும் தவனை வாங்கியவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தவனை வாங்கியவன் .டிப்டாப் ஆசாமியிடம் மேலும் சில சந்தேகங்களை கேட்டான். பணத்தோடு,ரெண்டு பாஸ்போர்ட் போட்டோ ரெண்டு.ரேஷன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, ஜெரக்ஸ்சுடன் ஒரிசினலுடன் ஆபிசுக்கு வரவேண்டும் என்றான். தவனை கொடுத்தவன். தவனை வாங்கியவனிடம் சொன்னான். ஏப்பா……. எனக்கு தர வேண்டிய ஒரு லட்சத்த எப்படியாவது பொரட்டு,நானும் ஒரு லட்சம் தர்ரேன். ரெண்டு பேர்லேயும் கட்டுவோம். அஞ்சு லட்சத்தில் பாதியாக பிரித்துக் கொள்வோம், எனக்கு  நீ ஒரு லட்சம் தரவேண்டியதில்லை என்றான். டிப்டாப் ஆசாமி, விசிட்டிங்கார்டை ரெண்டு பேரிடமும் கொடுத்துவிட்டு  சில விசயங்களில் சட்டுபுட்டுன்னு முடிவெடுக்கனும், லேட்டானா  வாய்ப்பு கை நழுவிப் போயிடும் என்றான். மறுநாள் தவனை வாங்கியவன். தனக்கு தெரிந்தவர்களிடம் இனஸ்வெஸ்ட கம்பெனியைப்பற்றி விசாரித்தான். தன் பொன்டாட்டியின் நகைகளை விற்றான். ரெண்டு லட்சத்தை தேத்தியவுடன் தான் மட்டும் தனியாக “ரெண்டு லட்சம் கட்டினா அஞ்சு லட்சம்” கொடுக்கும்  இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனிக்கு புறப்பட்டான். 5 அதிலிருந்து இதிலோ.............இதிலிருந்து அதிலோ்........சிறுகதை ----------------- [] tamil.yahoo.com ----------------- ஒரு வாரத்துக்கு மேல் கடுமையான வேலை,அந்த வேலையின் காரணமாக நேரத்துக்கு சரியாக உணவு உண்ணமுடியவில்லை,  நல்ல தூக்கமும் இல்லை வேலையை முடித்த மறுநாள் இரவில் பயங்கரமான.தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வயிற்று வலி. என்ன செய்தும் வலியை குறைக்க முடியவில்லை.நேரம் இரவு 12 மணிக்கு மேல்,பக்கதில் இருக்கும் கிளினிக் எதுவும் இல்லை. அரசு மருத்துவமனையோ தூரத்தில் உள்ளது. அப்படியே,அரசு மருத்துவமனைக்கு சென்றாலும்  உடனடியாக கவனித்து விட மாட்டார்கள்.“ இந்நேரத்தில் வந்து ஏன்டா ?எங்க உயிர வாங்குறீங்க!”என்று திட்டுவார்கள். வேறு வழியில்லை என்றும்  கெஞ்சினால் நோயாளியை  ஓரமாக சாய்த்து வைக்கச் சொல்லுவார்கள். காசும்மாச்சு,மயிருமாச்சு, இரவும்பகலுமா வேலை பார்த்த காசைக் கொண்டு.ஆட்டோவைப் பிடித்து, சற்று தூரத்தில் இருந்த 24 மணி நேர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவிர் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது. உள் நோயாளியாக தங்க வைக்கப்பட்டுதினசரி 3 அல்லது 4 குளுகோஸ் பாட்டிலுடன் ஊசியும் ஏற்றப்பட்டு.மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. வயிற்றை பட்ம் பிடித்து பார்த்தில் குடல்களில அதிகமான புண்கள்., கேன்சராக ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பிவிட்டதாக வழி மொழியப்பட்டது. தினசரி  காலை மாலை மருத்துவரும் செவிலியர்களும் வந்து பார்வையிட்டனர்.. வசூல்ராஜாவானர் ஏழை நோயாளிடம் விசாரனை செய்தார். “தண்ணி அடிப்பிங்களா?” “இல்ல,சார்” “பாக்கு போடுவிங்களா? ” “இல்லசார்” “பீடி.சிகரெட் ……….” சிறு வயதிலிருந்து எந்தப் பழக்கமும் இல்ல சார்.” ”அன் மேரிடா” “ஆமாம் சார்” “ஏன்” “அது பெரிய கதை சார்,” வசூல்ராஜாவானர். அந்த நோயாளியை ஆச்சரியமாய் பார்த்தார். “தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்திருந்தால்,வெறும் வயிற்றில் தண்ணி அடித்தால் குடல் வெந்து போகும் என்ற பயத்தில் பாரில் விற்கும் சிக்கனையோ,அல்லது முறுக்கையோ ஏதாவது ஒன்றை உள்ளே தள்ளி இருப்பீர்கள்..” அங்கு கொடுக்க வேண்டியதை , மொத்தமாய் இங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. “ தண்ணி அடிப்பதெற்கெல்லாம்,  தினசரி வருமாணம் இல்லை.சார், “இப்ப மட்டும் பணம் எப்படி வந்தது.” “ எப்படித்தான் நீங்கள்  இருந்தாலும். “அதிலிருந்து இதிலோ………இதிலிருந்து அதிலோ…………”தப்பிக்கவே முடியாது என்பதை புரிஞ்சிக்கிங்க………….என்றார் வசூல்ராஜா. வயிற்றுவலி குணமாகி வீட்டிற்கு வந்த போது, கடன் கொடுத்தவர்கள் நலன் விசாரிக்க வந்தபோது தான் தெரிந்தது. இராப்பகலா உழைத்து சம்பாதித்த பணமும் போயி,மேற்க்கொண்டு கடனும் எகிறி இருப்பது. இனி, கடனை அடைக்க உழைப்பு, ஆஸ்பத்தரி செலவு, திரும்பவும் கடன்……உழைப்பு……. இப்போதுதான் எனக்கு புரிந்தது.என் மண்டை தரையில் சாய்கிற வரைக்கும்..“ “அதிலிருந்து இதிலோ……இதிலிருந்து அதிலோ…….. .தப்பிக்கவே முடியாது என்று” 6 பொழப்பும்........ பப்ளிசிட்டியும்......... குட்டிக்கதை நண்பர்கள் நால்வர்  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன் சொன்னான். மது அருந்துதல்,புகை பிடித்தல் உடலுக்கு தீங்கானது என்று ஒரு கொசுறு விளம்பரம் வந்து கிட்டே இருக்குதே…….. அடுத்தவன்.சொன்னான். அந்தக் கொசுறு விளம்பரம் டிவிக்காரனுக்கு நிரந்தரமாப் போச்சு, சராயக்கடக்காரனுக்கு நிரந்தர விளம்பரமாப் போச்சு.. மற்றொருவன் சொன்னான. ஓஓ..நாயும்,…ஆஆட்டுகுட்டியும் படத்திலே சாரயக்கடைக்காரனுக்கு இந்த கொசுறு விளம்பரமும் கிடையாது………… முதலாவதுகாரன் சொன்னான்………இந்தப் படத்துக்காக மிஷ்கின் தெருவுல போஸ்டரு ஒட்டினாரு……….ப்பா……… கடைசியா ஒருவன் சொன்னான. “டேய்,..சோமாரி………….மிஷ்கின் தெருவுல போஸ்டர் ஒட்டுனது  பப்ளிசிட்டிக்கு நம்மவூர் ஏமாளி ,தெருத்தெருவா  போஸ்டர்ஒட்டுறது வயத்து பொழப்புக்கு…. மற்ற மூவரும் அவனை பார்க்க திரும்பிய போது கரண்ட் போச்சுது. +-----------------------------------------------------------------------+ |   | | | | [Photo] | +-----------------------------------------------------------------------+ | | +-----------------------------------------------------------------------+ -- -- 7 மனிதனை சூழ்ந்து திட்டிய காக்கைகள்.....!!! [] காற்றும் மழையும் சேர்ந்து வந்தபோது, மனிதனின் வீட்டு குடிசை முன் மரம் ஒன்று ஆடி அசைந்து  குடிசையின் மீது விழுவேன் என்று மனிதனுக்கு பயம் காட்டியது. அந்த மரத்தின் அடிப்பாகத்தில் பெருச்சாளிகள் துளையிட்டு  இருந்ததால் மரத்தின் அடிப்பாகம் பலமில்லாமல் இருந்தது. பலகாலமாக அவ்வப்போது காற்றும்.மழையும் சேர்ந்தோ தனித்தோ வந்து மனிதனை மிரட்டி பயம் காட்டி யது இதனால் ,மரம் தன்வீட்டின் மேல் விழுந்து விடுமோ என்ற பயத்தில் மனிதன் தூங்க முடியாமல் தவித்தான். எப்படிபட்டாவது பலத்தை (பணத்தை) சேர்த்துக்கொண்டு, காற்று மழையுடன்  கூட்டணி அமைத்து தன்னை பயமுறுத்தும் மரத்துக்கு தக்கப்பாடம் கற்பிக்க எண்ணினான் மனிதன்.. சில மாதங்களில். மனிதன் சில தியாகங்களை செய்து ,வரும் வருவாயில் சிக்கனமாக இருந்து பலத்தை சேர்த்துக்கொண்டான். மூன்று வேலையாட்கள் கேட்ட , ஒரு நாளில் முடிக்கிறமோ, அரைமணி நேரத்தில் முடிக்கிறமோ, எங்களுக்கு ஒருநாள் கூலி 600ரூபாயை கொடுத்து விடவேண்டும் என்ற கூலியை  100யை குறைத்து மூன்று பேருக்கு கூலியாக 500X3= 1500 ஆக  கொடுத்து காற்று,மழையுடன் சேர்ந்து பயமுறுத்திய மரத்தை வெட்டி கீழே சாய்த்தான். அன்று மரத்தின் மிரட்டலின் பயம் இல்லாமல் தூங்கினான் மனிதன். காலையில் தூங்கி எழுந்து வெளியே வந்த மனிதனை ,காக்கைகள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கா..கா…கா…  தங்களுக்கு உரித்தான  வசவு  வார்த்ததைகளில் திட்டிக்  தீர்த்துக் கொண்டு இருந்தன. நேற்று, மரத்தை வெட்டும்போது, மரத்தில் வசித்து வந்த காக்கைகள். தங்கள் பொழப்பை தேடி வெளியே சென்று விட்டதால் ,அவைகள்  இல்லை, இருந்திருந்தால், மறியலே, நடந்திருக்கும்……..காக்கைகள் திட்டுவதை கேட்டு மௌனமாக இருந்த மனிதன்.. திடீரென்று. ஞாபகம் வந்தவனாக வெட்டி எறிந்த மரத்தின் தலைப்பாகத்தை தேடி ஓடினான். மரத்தின் தலைப்பாகத்தில் காக்கைகள் கட்டிய கூடுகள் கலையாமல் இருந்தன. உற்றுப் பார்த்ததில் கூட்டுகுள்ளே, முட்டைகளோ, குஞ்சுகளோ இல்லை. முகத்தில் நிம்மதி வந்தவனாக. மனிதன், தன் மொழியில் பேசினான். காக்கைகளா?. நான் உங்கள் வீட்டை  அபகரிக்கவோ,கெடுக்கவோ, இல்லை, என்னை பயமுறுத்திய மரத்திலிருந்து என்னையும் என்வீட்டையும் பாது காத்து கொள்ளவே கூலி கொடுத்து பாடம் புகட்டினேன். சத்தியமாக உங்களை அப்புறப்படத்தவேண்டும் என்ற எண்ணம் துளியளவு இல்லை, உங்களுக்கோ, உங்கள் கூட்டுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் சொல்வவதை நீங்கள் நம்பாத பட்சத்தில். நீங்கள்.என் மண்டயை கொத்தி உங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வெட்டிய மரத்தின் மேலே அமர்ந்தான் மனிதன். சூழ்ந்திருந்த காக்கைகள், ஒவ்வொன்றாக தங்கள் வசவுகளை  வெளியிட்டு பின் மெது மெதுவாக வசவுகளை குறைத்துக்கொண்டன. கூட்டுக்கு சொந்தக்காரன இரண்டு காக்கைகள் மட்டும் கலையாமல் இருந்த கூட்டின் குச்சிகளையும,முட்களையும் கட்டுக்கம்பிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள மரத்துக்கு சென்றன. மனிதனும்  காக்கைகள் மன்னித்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்நதான். 8 ரோட்டிலும்,தரிசு இடங்களிலும் மலம் கழித்தது காந்திக்காலம்?இப்போ..ஆத்துபக்கம் ஓடுவது இந்தியாவின் வல்லரசு காலம்?... முன்னுரை,தெளிவுரை மற்றும் பதவுரை (உலக கழிப்பறை தினத்திற்க்காக.மீள்பதிவு)இக்கதை நாயகர்க்கு கழிப்பரையே கோயில் மலமே சாமி. கெட்டியான மலம் கருப்பசாமி,வயிற்றாலை மற்றும் தண்ணியான மலம் காளியாத்தா,மற்றும் மாரியாத்தா,திறந்த வெளிகழிப்பிடமே பெரியகோயில்.அடுத்ததெளிவுரைகள் தங்கள் மடல் கண்டுஇது இட்டுக்கட்டிய கதையல்ல சொந்த அனுபவத்தில்.நடந்தவை. காந்தி வாங்கி தந்த சுதந்திர இந்தியாவிலிருந்து வல்லரசு இந்தியா வரை  நடந்து கொண்டு இருப்பவை. ……….. [Photo] காலைபொழுது விடிந்து சற்று வெளிச்சம் வந்தாலும் தெருவிலுள்ள ரோட்டிலுளள விளக்குகள் அனைக்கப்படாமல் இருந்தன. மக்கள்  நடமாட்டம் இல்லையென்றாலும், டீக்கடையில் அய்ந்தாரு மனிதர்கள் இருந்தனர். ஒருசில பெண்கள் தத்தம் வீடுகளின் வாசல்களை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுயிருந்தனர்.அவருக்கு காலையில்தான் நன்றாக தூக்கம் வரும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரோ,அல்லது பின்னரோ, தாமதமாக தூங்கினாலும் காலை தூக்கம்தான் நிம்மதியான தூக்கமாக இருந்தது.அந்த நிம்மதியான தூக்கத்தை கெடுப்பதறக்காக இயற்கையும் அவரின் தெருவிலுள்ள மக்கள் அவருக்கு இடைஞ்சல் கொடுப்பது போல் தன் பங்குக்கு இடைஞ்சல் கொடுத்தது. அது அவரை சாமி கும்பிடுவதற்கு அதிகாலையில் எழுப்பி விடும்.ஓரளவு சமாளித்து பார்ப்பார் முடியாது. அருள் வந்துவிடும் கட்டியிருக்கும் கையிலியால் கண்களை துடைத்துக் கொண்டு,முகம் கழுவுவதற்குகூட தாக்கு பிடிக்க முடியாமல், அவசர அவசரமாக எழுந்து சைக்கிளை, எடுத்துக் கொண்டு உருட்டிக்கொண்டே தெருவைக் கடந்து  (தெருவில் சைக்கிள் ஓட்டிச் செல்லக்கூடாதென்று தெரு நாட்டாமையின் உத்தரவு) மெயின் ரோட்டுக்கு வந்த பின் சைக்கிளில் ஏறி ஒருசில தெருவை கடந்து விவசாயம் இல்லாமல் காய்ந்து பொட்டலாக கிடக்கும் இடத்தைத் தேடி ஓடி.,அந்த பொட்டல் வெளியில் சாமியை கும்பிட்ட பிறகுதான் அவருக்கு பரபரப்பும். கைகால் சோர்வும் அருளும் குறைந்து சகஜ நிலமைக்கு வருவார். இவர் சைக்கிளில் வேகமாக வயற்காட்டு பக்கம் வருகிறார் என்றால் சாமி கும்பிடுவதற்குத்தான் என்று தெரிந்து சட்புட்னுன்னு ஒதுங்கி  கொள்வார்கள். [] சில நாட்களில் நன்றாக தூக்க கலக்கத்தில் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தில் என்னதான்  வேகமாக  சென்றாலும்  அருள்முற்றி உள்ளாடைகளிம்.கைலிகளிலும் சாமி கும்பிட்டுவிடுவார்உடம்புக்கு முடியதா நாட்களில் காளியாத்தா,மாரியாத்தா நிலைமை இதைவிட மோசமாகிவிடும். அவரின்மேல்  அவருக்கே ஆத்திரம் வந்துவிடும்.தன் இயலாமையை எண்ணி தன்னைத்தானே மோசமாக திட்டிக்கொள்வார்காளியாத்தா-மாரியாத்தா சாமி கும்பிட்ட நாட்களில் ஓடும் பம்பு செட்டைத்தேடி நாயாய் அலைந்து அதில் ஓடும் பம்ப் செட்டில் சாமி கும்பிட்ட துணிகளை அலசி குளித்துவிட்டுதான் வீட்டுப்பக்கமே வருவார்.இப்படி பலமுறை நடந்துள்ளதால் பலமுறை எச்சரிக்கையாக இருந்து வந்தார். அவர் குடியிருக்கும் வழக்கிடைச்சொத்தில் அவருடைய தந்தைவழி பங்காளிகளுடனும் தெருநாட்டாமைகளிடமும் அடிதடியில் இறங்கி போலீஸ் வழக்கு என்று அழைந்து சென்று விடாப்பிடியாக போராடிபணக்கஷ்டத்துடன் உறுதியாக நின்று வீட்டுக்கருகில் கோயில் (கழிப்பறை)கட்டி முடிக்கிற வரைக்கும் காளியாத்தா மாரியாத்தாவுக்கு பயந்து எச்சரிக்கையாகவே இருந்து வந் தார்.முன்னோரு காலத்தில்அவர் குடியிருக்கும் தெருப்பகுதி பறைச்சேரியாக இருந்தது .மாநகராட்சியின் கடைசி வார்டாக இருந்தாலும் ,நகரத்தை ஒட்டிய கிராமாமாகத்தான் இருந்தது. அதுவும் வல்லரசு இந்தியாவில் பறையத்தெருவாகவே வளர்ச்சி அடைந்தது. அவருக்கு பதிணைந்து வயதிற்குமேல் இருக்கும்போது,அவரின் வீட்டைச்சுற்றி பகலிலும் இருட்டாக.. குட்டி பனைமரங்கள் நிறைந்த பனங்குட்டிகளும் தென்னை மரங்கள் நிறைந்த தென்னந்தோப்புகளும் இருந்தன. அனறைய காலங்களில் ஆண்களும் பெண்களும் சாமி கும்பிடுவதற்கு பகலில் பனங்குட்டியையும் இரவில்தென்னந்தோப்புக்கு நடுவே செல்லும் ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தார்கள. அப்போதெல்லாம் எந்த சாமி அருள்வந்தாலும் கும்பிடுவதற்கு எந்தவித சிரமும்ஏற்ப்பட்டதில்லை.இரவில் சாமிகும்பிடும்போதுகூடசினிமா பார்த்துவிட்டுஆட்கள் ரோடு வழியாகவரும்போதுகூட எழுந்து நின்றுஆட்கள் சென்ற பின் சாமி  கும்பிடுவதில்கூட சிரமம்  ஏற்ப்பட்டதில்லை []இரவில் சாமி கும்பிட்ட இடத்தை பகலில் போய் பார்த்தால்   ஒரே சாமி குவியல்களாத்தான் இருக்கும். அந்தரோட்டில் லாரி வந்தால் சனங்கள் கும்பிட்ட சாமிகள் எல்லாம் லாரி டயரில் ஒட்டி சிறிது தூரத்துக்கு ஒரே சாமியாகத்தான் சிதறி இருக்கும். செருப்பில்லாமல் நடக்கமுடியாத அளவுக்கு சாமிகள் இருக்கும் .இதில்  சாமிகளின் வாசனை வேறு தூக்கியடிக்கும். நாகரிகமும் மக்கள் தொகையும் வளர வளர, பனங்குட்டியும், தென்னந்தோப்பும் அழிக்கப்பட்டு பிளாட்டாக மாறி காந்திதெரு, முத்துதெரு,நேதாஜி தெரு என்று பல தெருவாக மாறிவிட்டன. இப்படி மாறின பிறகுதான் சாமி கும்பிடுவதற்காக சொந்த(கழிப்பறை) கோயிலின் அவசியம் தெரிந்தது. இதைத்தான் மகஇகதோழர்கள்,கருவக் காடெல்லாம் கட்டிடமா ஆச்சு, வெளிக்கு போவதேபெரும்பாடாச்சுன்னு  பாட்டாலே..ஃ… வல்லரசு இந்தியாவின் வளர்ச்சியை பொளந்து காட்டினாங்க………அந்தத் பறையத் தெருவுக்கும் ஒரு தாதா வும் நாட்டமையும் இருந்தார்கள் ஆம்பிள நாட்டாமை மின்சார வாரியத்திலும் பொம்பள நாட்டாமையின் கனவர் பென்னரிலும் வேலை யில் இருந்ததினால் அவர்கள் மட்டுமே சொந்தமாக கோயில் கட்டியிருந்தார்கள். மற்றவர்களுக்கு சாமி கும்பிட வழியில்லை .கோயில் கட்ட வசதியுமில்லை.அந்த தெருவைச்சுற்றி குடியிருப்பு கட்டிட வீடுகள் வந்ததினால் அவர் குடியிருக்கும் தெரு  தனித்தீவாக்கப்பட்டது.அந்த சேரி மக்களுக்காக இலவசமாக பொதுக்கோயில்(பொது கழிப்பறை) மாநகராட்சியால் கட்டப்பட்டது இந்தக் கோயில் சேரியிலுள்ள தெருமக்களுக்கு மட்டும் தான் என்பதால் கிரில் கதவு டன் பூட்டு போடடு சாவி தெரு நாட்டாமை வசம் ஒப்படைக்கப்பட்டது.தெரு நாட்டாமைக்கும் அவருக்கும் ஏற்ப்பட்ட சொந்த இடப்பிரச்சினையில்  தெருநாட்டாமை அவருடைய வழக்கிடைச் சொத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்தோடு தெரு நாட்டாமையையே எதிர்த்தால் பொது கழிவறையை அவர் பயன்படுத்தவும் தடைபோட்டு இருந்தார் நாட்டமை.. அதனால் முன் பகையை காரணம்காட்டி அவருக்கும் அவரின் குடும்பத் தார்க்கும் பொது கோயிலை (கழிப்பறையை)பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவருடைய சகோதரியின் மகள்கள்  பொது கழிப்பறையின்  சாவியைக்கேட்டால் சாவியை மறைத்து வைத்து விட்டு காணவில்லை என்பார்கள்.தெருவிலுள்ள மற்றவர்களிடம் உண்மையாக  காணவில்லையா?என்று கேட்டால் ஆம்பிள நாட்டாமை, மற்றும் பொம்பள நாட்டாமையின் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து வருவதால்  தங்களை காலி பண்ணச் சொல்வார்கள் என்ற பிரச்சினை வரும் என்பதால் உண்மையை  சொல்லமாட்டார்கள்.   இரு நாட்டாமைகளுக்கு சொந்தமாக கோயில் இருந்தாலும்  கோயிலின் செப்டிங் டேங்கு நிரம்பி விடும் என்பதால்  பொதுக்கோயிலுக்குதான் அவர்களும் ,அவர்கள் குடும்பத்தாரும் சாமி கும்பிட வருவார்கள். இரண்டுமூன்றுவருஷம்தான் அந்தபொதுக்கோயிலும் உயிர்வாழ்ந்தது.. தண்ணிவசதி  இல்லாததாலும்  போதிய பராமரிப்பு இல்லாதாலும்.மனித சாமிகளும் மலைபோல குவிந்து  நாற்றம் ஏற்பட்டு யாருக்கும் பயன்படாமல்போய்விட்டது..தற்போது அந்தக் கோயில் இடிக்கப்பட்டு  பாதாள சாக்கடைதிட்டத்தின் கழிவு நீரேற்று நிலையமாக மாறிவிட்டதுஇப்போது அவர் அறைநூற்றாண்டு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.சமீபத்தில்தான் நாண்கு தொட்டிகள் கொண்ட கழிவறையை கட்டி யள்ளார். அந்தக் கோயிலை கட்டவிடாமல் அவரின் பங்காளிகளும் தெரு நாட்டாமையும் அவர்களின் வாரிசுகளும் கொடுத்த இம்சைகளுக்கும் நாட்டமைக்கும் நாட்டாமையின் மகன்களில் ஒருவர் விடுதலை சிறுததையில் முக்கிய  பொருப்பில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாக போலீசின் மிரட்டலுடன் ஆள்பலமும்  பணபலமும் இல்லாமல் போராடினார்.பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் கட்டி அனுமதி பெற்று இணைப்பு கொடுக்க முயன்றபோது இரு தெரு நாட்டாமைகளும் அவர்களின் வாரிசுகளும் கூட்டமாக வந்து இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டனர் வேலையாட்களை மிரட்டிவிரட்டினர். மநகராட்சியிடம் கேட்டபோது அது  பொது பாதையென்று சான்று அளித்தனர்..ஆண் நாட்டாமையோ பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க கூடான்னு  என்றும், பாதையானது தங்களுக்கு மட்டுமே பொதுவானது என்றும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக் கூடாதுதென்று டவுன் முனசிப் கோர்ட்டில்அவர்மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரனைக்கு வந்த பொழுது விசாரனைக்கு வராமல், உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்தரியில் இருந்ததாக பொய் சான்று வாங்கிதந்து வழக்கை மீண்டும் நடத்த மனு  செய்துள்ளார் வருடம் ஒன்று ஆகியும் வழக்கு விசாரனைக்கு வரவில்லை. ஒன்றோடு மூன்றாக வழக்கு  நிலுவையில்………. பொது இடத்தை தனதுஇடம் என்று எந்த ஆவணமும் இல்லாமல் வழக்கு போட்டு இழுத்தடிக்கும“ கில்லாடிகளா இருக்கிறார்கள். பல்வேறு இன்னல் தொல்லைகளுக்கிடையில்சொந்தமாக கோயில் கட்டிய பிறகும் பரபரப்பும் அருளும் தீர்ந்தபாடில்லை அவருக்கு. காலையில் எழுந்து கோயிலுக்கு போனால் அவரின் தாயாரோ, சகோதரியோ யாரவது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். திறந்வெளி கோவில்களும் வீடுகளாக மாறிவிட்டதால் இருபது நிமிட நேரத்தில் சைக்கிளில் ஆற்றுக்கு சென்று இயற்கையின் அவஸ்தையை (சாமி கும்பிடுவது)போக்கி விட்டு ஆற்றினிலே குளித்துவிட்டு நிதனமாக பரபரப்பு இல்லாமல் வீடுவந்து சேருவார். இதுவும் தெரு நாட்டாமைகளுக்கும் நாட்டாமையின் வாரிசுகளுக்கும் பிடிக்கவில்லை. பொறாமையாக இருக்கும். எவ்வளவு இம்சை கொடுத்தும் அசையாமல் இருக்கிறானே என்று… தொடர்ந்து அவஸ்தையை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்..  இதோடு அவர்கட்டிய கழிவறை நிரம்பி விட்டால் அதை அப்புறப்படுத்துவதற்கும்  தடை ஏற்ப்படுத்துகிறார்கள்.  இவர்களோடும் இவர்களின் வாரிசுகளோடும் ,  இயற்கையோடும் வரும் சண்டையில்  தொடர்ந்து போராடிக் கொண்டு வாழ்ந்து வருபவர்க்கே இவ்வளவு இம்சைகள் இருக்கும்போது,வாடகைவீட்டில் குடியிருப்போரும் குடிசையில் குடியிருப்போருக்கும் இம்சைகள் இல்லாமலா இருக்கும்.இத்தகைய இம்சைகளைப்பற்றி தெரியாதவர்கள் அறியாதவர்கள் 2000,மூனாயிரம் செல்போன்கள் வைத்திருப்பவர்களைப்பார்த்து செல்போன் இருக்கு! கழிப்பறை இல்லை என்று ஏளனமாக பதிவர்கள் பதிவிட்டடு இருக்கிறார்கள். கழிப்பறை கட்டுவதற்கு இருக்கும் இம்சைகள் போல் செல்போன் வாங்குவதற்கு இம்சைகள் இருந்தால்  எல்லோர் கைகளிலும் செல்போன் இருக்குமா………………… ?????  உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கும் வல்லரசு இந்தியாவில்.!!!!! [] [] 9 ஒன் பாட்டி போரும்....அதன்பிற கூத்துகளும்..........நடந்தகதை!!! ஆங்கிலேயனை எதிர்த்து போரிட்டு மாய்ந்த விடுதலை வீரர்களையெல்லாம் சாதித் தலைவராகவும், சாதிவெறி பிடித்து கட்டபஞ்சாயத்து செய்த ஊள்ளுர் தலைவரெல்லாம் தேசிய தலைவராகவும் மாற்றி விட்ட  இந்தக் காலத்தில் சாதிவெறியின் குல தெய்வத்தின் பூஜைக்காக சிவகங்கை.இராமநாதபரம் மாவட்டங்களில் ஒன் பாட்டி போர் தடை போடப்பட்டுருந்த நேரம் அந்த ஒன் பாட்டி போர் போடப்பட்டுருந்த நாட்களில் சிவகுமார் என்பவரும்   காசுபாண்டி என்ற பெயரும் கொண்ட வருமான பள்ளிப் பருவத்து நண்பர்களான இருவரும் ஒரு பஸ் நிறுத்தத்தில் சந்தித்து  தங்கள் தங்கள் வாழ்நிலையைப்பற்றியும் வேலை நிலைமைகளைப் பற்றியும் தங்களுடன் படித்த மற்ற நண்பர்களைப்பற்றியும்.தீபாவளிக்காக  வழங்கப்பட்ட போனசு தொகைகளைப்பற்றியம் அலாவலவிக் கொண்டு இருந்தனர். நண்பர்களின் பேச்சு,ரெம்ப சந்தோசமாகவும்.நகைச்சுவையாகவும் பழைய நிணைவுகளை அசை போடுவதாகவும் இருந்தது. நண்பர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த  மற்ற சிலரும் மலரும் நினைவாக கேட்டு ரசித்துக் கொண்டு இருந்தனர் அப்போது, காக்கி சட்டை அணிந்த ஒரு உருவம். பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகியதால் ஏற்பட்ட சத்தத்தோடு அவர்களுக்கு அருகில் வந்தது. நண்பர்கள் பைக் சத்தத்தைக்கேட்டு தங்கள் பேச்சை நிறுத்தி அந்த காக்கி சட்டை உருவத்தை பார்த்தனர். வந்து நின்ற காக்கி சட்டை உருவம், இவர்களைப் பார்த்து ஒருமையில்  உருமியது.. பக்கத்தில் நின்றவர்களை கடிக்காத குறையாக குலைத்தது. திடுக்கிட்ட நண்பர்கள் இருவரும்  வந்து நின்ற அந்த உருவத்துக்கு   வணக்கம் செய்தனர். அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த உருவம். பைக்கின் சத்தத்தை குறைத்து உறுமியபடி அவர்களின் பெயர்,ஊர்.தொழில் சாதி முதலானவற்றை விசாரித்தது. நண்பர்கள் இருவரும் தத்தம் சாதிகளைத்தவிர மற்ற விபரங்களை சொன்னார்கள். அதில் திருப்தி அடையாத  தீராத அந்த உருவம், பக்கத்தில நின்ற அப்பாவிகளை  விரட்டியது. விரட்டுபட்டவர்கள் தாங்கள் இந்தஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் தீபாவளி க்காக பொருட்கள்  வாங்கிக் கொண்டு ஊர் செல்வதற்க்காக பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக பணிந்து சமர்பித்தார்கள். அந்தப் பணிவால் ஆத்திரம் குறைந்த அந்த உருவம்,தான்  சப் ஆய்வாளர் என்று சொல்லாமல் வெளிப்படுத்தி, அந்த இரண்டு நண்பர்களிடம் தோரனையாக பேசியது. ஒன்பாட்டிபோர் போடப்பட்டு இருக்கிறது. இரண்டு பேர்,மூன்று பேர் ,இப்படி கூட்டமாக நிற்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேட்டுவிட்டு நண்பர்களை எச்சரித்தது. ஆட்டோ எதுவும் வரவில்லை, வரவேண்டிய பஸ்சும் வரவில்லை. பஸ்சுக்காகத்தான் நிற்கிறோம் என்றார்கள் நண்பர்கள் இருவரும் சமாதானமடையாத அந்த உருவம் நண்பரகள்   இருவரையும்  சேர்ந்து நிற்பதை தடுத்து தனித்தனியாக நிற்க உத்தவிட்டது. மற்றவர்களையும் அப்படியே தனித்தனியாக கழட்டிவிட்டது. கடைசியாக அந்த உருவம் தன் கையிலிருந்த வயர்லெஸ் ஒலி பேசியுடன் இரைச்சலாக கத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகன்றது. அந்த காக்கி சட்டை உருவம் அவர்கள் கண்களிலிருந்து வரைக்கும் அந்த பஸ் நிறுத்தம் அமைதியாக இருந்தது. சாதிவெறி குல தெய்வ பூஜை கொண்டாட்த்துக்காக ஒன்பாட்டிபோர்(144) தடையுத்தரவு போடப்பட்டு இருப்பதால்,  சாதிவெறி கொண்டாட்த்தில் அசாம்பாவிதம் நடக்காமல்இருப்பதற்கும். துப்பாக்கிசூடு நடைபெறுவதை தவிர்ப்பதற்க்காகவும், அரசு சார்பிலும் சாதிவெறி கொண்டாட்டம் நடைபெறு வதால்  அந்த கொண்டாட்த்தில் அமைச்சர் பெரு மக்களும், அவர்களைச் சார்ந்து எதிர்க்கட்சி தலைகளும், அதற்குப்பின் சாதிவெறி.மதவெறி அமைப்பகளும் விழாவில் கலந்து கொள்வதால்……………. அவர்களை பாதுகாப்பதற்கும் விழாவை  அமைதியாக நடப்பதற்குமாக, தென் மண்டல ஐ.ஜி உள்பட,ஆறு ஐ.ஜிக்களும், எட்டு எஸ்பிக்களும், அய்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிஸ்காரர்களும் பாது காப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இவர்களோடு, ஆளில்லாத உளவு விமானங்களும்,பாரா மோட்டார் கேமரா மூலமும் கண்காணிப்பு ஏற்ப்படுத்தி  தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர். இத்தோடு சாதிவெறியின் மாவட்ட முழுவதும் ஒன்பாட்டி தடையுத்தரவு அமுல் படுத்திவிட்டு, சாதிவெறி பக்தர்கள்  வாடகை வாகனங்களில் வருவதற்கு தடையத்தரவு இருப்பதால் சாதிவெறி குலதெய்வத்தின் சமாதியான இடத்துக்கு சிறப்பு பஸ் வசதியும் இயக்கப்பட்டன. இவ்வளவு கெடுபிடிகளுடன் சாதிவெறி குல தெய்வ கொண்டாட்டம் நடைபெறுவதால் அந்தந்த மாவட்ட எல்லைகளில்  சோதனை சாவடி திறக்கப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பட்டய கிளப்பிக் கொண்டு கண்காணிக்கப்பட்டன. இப்படி தூள்பரப்பி பட்டய கிளப்பி ஒன்பாட்டிபோரை அமுல் படுத்தி கண்காணித்து கொண்டு இருக்கும்பொழுது………… அம்மன்பட்டியை சேர்ந்த  ஐநூறு சாதிவெறி பக்தர்கள், ஒன்பாட்டிபோரை மீறி  நீண்ட தடிக்கம்புகள் சகிதமாக போலீஸ் தடையை மீறியும் சில போலீசை தாக்கி விட்டும்  கமுதி வழியாக தங்கள் நடைபயணப்போரை தொடங்கி விட்டார்கள். இதனால் அரண்டு பயந்து போன எஸ்பிக்கள்,ஏஸ்பிக்கள், உயர் போலீசு அதிகாரிகள், நடைபயண பக்தர்களை தடுத்து நிறுத்தி, ஒன்பாட்டி போரை விளக்கி இரண்டு பேருக்கு மேல்,அதுவும் தடிக்கம்புகளுடன் செல்லக்கூடாது என்றும் அதனால் பஸ்ஸில் செல்ல அறிவுறுத்தினர். ஒன்பாட்டிபோருக்காக எங்களை பஸ்ஸில் போகச் சொல்வதா ..? என்று கோபம் கொண்ட  குல தெய்வத்தின் பக்தர்கள். பஸ்ஸில் போகச் சொல்வதை கண்டித்து மறியல் செய்தனர். மறியலில் பெருமாள் தெவன்பட்டி போன்ற அருகருகே உள்ள ஊரின் குலதெய்வ பக்தர்களும் சேர்ந்து கொள்ள சாதிவெறி பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. உடனே.ஒன்பாட்டிபோரை அமுல்படுத்தும் அதிகாரிகள் யார் யாருக்கோ போன் பேசினர், பிறகு அவர்களின் உத்தரவுபடி, அசம்பாவிதத்தை தடுக்கும் முகமாக ஒன்பாட்டிபோரை மறந்து,பக்தர்களை நடைபயணமாக செல்ல அனுமதித்தனர். சாதிவெறி குலதெய்வத்தின் சமாதி  இருக்கும் இடத்தி்ல் அய்ந்துஆயிரம் போலீசும்,தென் மாவட்டங்களில் இருப்பதைந்தாயிரம் போலீசையும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதால்……… அரண்டு.மிரண்டு போன  நடப்பு மற்றும் வருங்கால சாதிவெறித் தலைகள் எல்லாம் எதற்கு வம்பு பின்னாடி பாத்துக்கிறலாம் என்ற ரீதியில் அந்தந்த மாவட்ட,.மாநகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி நகரங்களில் நிறுவப்பட்டுள்ள சாதிவெறி குல தெய்வத்தின் சிலைகளையே சமாதியின் வழிபாட்டுத்தலமாக மாற்றி,போலீசு பாதுகாப்போடு பால்குடம்,வேல்குடம்,காவடி,முளைப்பாரி   மேளதாளங்கள் போன்ற சகல அம்சங்களுடன் சென்று கொண்டாடினார்கள். மேற்பட்ட சம்பவங்களுடன், அமைச்சர் பெரு மக்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதும்,  முப்படை தளபதியை வரவேற்க சென்றவர்கள் மீது கல்லெறியபட்டதும் புரடசி புயலும் தன்னை பின் தொடர்ந்து வந்த புரட்சிப்படையை தடுத்து தன் படையை திருப்பி அனுப்பியது, மோடியின் அல்லக்கைகள்,தேசிய விழவாக கொண்டாட போவதாக சவுடால் விட்டது போன்ற எல்லா களக்காட்சிகளையும் அனைத்துவித  தினசரி பத்திரிகைகளிலும்,  எல்லா  தொலைக்காட்சிகளிலும் நேரடி யாகவும்    ஒளி-ஒலி பரப்பு செய்யப்பட்டன. மேற்படி ஒன்பாட்டி போர் களக்காடசிகளை.  படித்தும் பார்த்தும் இருந்த இரு நண்பர்களான ,காசுப்பாண்டியும் சிவக்குமாரும் ,பஸ் நிறுத்தத்தில் ஒரு காக்கி சட்டை உருவும் செய்த அலப்பரையை நிணைத்து கைப்பேசியில்   பேசிக் கொண்டனர். “ஒன் பாட்டி போரின் ” போர்களக்காட்சியெல்லாம் பாத்து வெறுத்துப் போனதாக சொல்லி, அலப்பரை செய்த உருவத்தைப்பற்றி தகவல் கேட்டார் காசப்பாண்டி.. அதற்கு சிவகுமார்சொன்னார். அது எவனா…இருந்துட்டு போகட்டும் “ போலீசே சாதிவெறி போலீசாகத்தான் இருக்குதுன்னு வினவு தளத்துல படித்த கட்டுரை எடுத்துக்காட்ட, பரமக்குடி சம்பவத்தையும் ஒன்பாட்டி போர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பார்க்கச் சொன்னார் சிவக்குமார். கடைசியாக, காசுபாண்டி சொன்னார். நவம்பர்புரட்சிதினவிழா, கூட்டத்துக்கு வருமாறு ஒரு தோழரு சொன்னாரு, நீயும்வா,நாம ரெண்டு பேரும் போவோம். அங்கபோயி புரட்சிகர உணர்வை பெற்று வருவோம்  தவறவிடவெண்டாம்  வா..என்றார் கண்டிப்பா வர்ரேன். நீ எங்க வீட்டுக்கு வந்துடு சேர்ந்தே போவோம்…. என்று பதில் சொன்னார் சிவக்குமார். 10 நீங்க....தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா........!!! [Photo] தீபாவளி அன்னிக்கு தொலை காட்சியால் ஒரே தொல்லையாக இருந்தது, கைகாலும் சும்மா இருந்ததால, கைக்கும் காலுக்கும் வேல கொடுக்குற துக்காகவும்  , மக்கள் எப்படியெல்லாம் தீபாவலிய கொண்டாடுறாங்கன்னு பார்ப்பதற்க்காகவும், அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து வாக்கிங் போயிட்டு வரலாமுன்னு  வீதி வழியா போய்கிட்டு இருந்தேன். ஒன்னாவது தெருவிலிருந்து என் வீட்டுக்கு அருகிலுள்ள மெயின் ரோட்டு வரைக்கும் உள்ள கடைகளெல்லாம் அடப்பு, ஆனா, அதில. ஒரே ஒரு கடை மட்டும் ஜெக ஜோதியா ஒளி வீசிகிட்டு இருந்தது. அந்தக் கடையில ஒரே வெள்ளையும் சொள்ளையுமான கூட்டம்……. அது எந்தக் கடைன்னு ஒங்களுக்கு  படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கும் இருந்தாலும், தெரியாதவங்களுக்கு சொல்லனும்ல……. அதனால ,அந்தக் கடை  வேறு கடை இல்லங்க………….ஒயின் ஷாப்புங்க, அந்தஒயின்ஷாப்ப கடந்துதான் நான் போகனும்  வரனும்.. அத அவாய்ட் பண்ணாம போகவம் வரவும் முடியாதுங்க…….. அந்தக் கடைக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு கூடாரத்துல“ உங்கள் உதவிக்கு காவல்நிலையம்னு இருக்கிற.  இடத்த போட்டு அது பக்கத்துல தொலை பேசி எண் எழுதிய போர்டு ஒன்னு மாட்டி இருந்தது.ச்சுங்க……… அத இப்பதாங்க…நானும் பார்க்குறேனுங்க.. நா………..அத பாத்தபடி முகத்த வேறு பக்கமா திருப்பி கிட்டு போனேனா………. ஒரு குடி மகன் என்ன தடுத்துட்டாருங்க……………. என்னா,அந்த போர்டையே பாத்துகிட்டு போறீரு……….அந்த மகன் சொன்னாருங்க…….. அப்புறம் அவரே..பேசினாருங்க………போலீசக்காரன் செல் நம்பர போடலேன்னு…. பாக்குறீரா……………ன்னு கேட்டுன்னு  சிரிச்சாருங்க……. பதிலக்கு சிரிக்கலைன்னா அந்த குடிமகனுக்கு கோபம் வருமுன்னு  எனக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால……. நானும் பதிலக்கு பல்ல மட்டும் காட்டினேனுங்க……………. நான் பல்ல காட்டினனோ, இல்லையோ.அத பாத்துட்டு.இன்னொரு குடி மகன் தள்ளாடி தள்ளாடி  வந்து.என் தோள் பட்டையில கைய வச்சாருங்க……. அவரும். பொன்னான ஒரு கேள்விய கேட்டாருங்க…………. என்னாது தீபாவலி அதுவுமா…….கருப்பு சட்டய போட்டுகிட்டு, தீ  பாவ  லீக்கு   ட்ரெஸ்  எடுக்கலை யான்னு………………… நா………….அந்தக் குடி மகன திரும்பி பார்த்து பதில் சொல்றதுக்குல்ல.முதல் குடி மகனே……. பதில்  சொன்னாரு…………பாய்காட் பன்னுறாருன்னு………..என்றார்….. ரெண்டாவது குடி மகனறாருக்கு, நானு யாருன்னு திடீரென்று ஞாபகம் வந்திருச்சு போல……… ஓ……ஓ…………….ஓ……….காம்ரேட்………காம்ரேட்……….. என்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு விரல்களில் ம ற்ற விரல்களை மடக்கிவைத்து ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி தலையை பல தடவை ஆட்டி ஆட்டி சொன்னார். இப்படியே விட்டால் என்னைச் சுற்றி  குடி மகன்கள் கூடி விடுவார்கள் என்பதால் நல்லபடியாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் முகமாக.. தோழர் ஒருவர் என்னை பார்க்க, பஸ்நிறுத்தில் நிற்கிறார்.  அவரை பார்க்க செல்ல வேண்டும். பிறகு பேசலாம் என்று   அவர்களின் ஒப்புதலை பெற்று நடையை கட்டினேன். கொஞ்ச தூரம் சென்று,வீட்டுக்கே செல்லலாம், என்று திரும்பி பார்த்தால்…மூனு நாலு குடி மகன்கள் நின்று கொண்டு இருந்தார்கள். மனதை மாற்றிக் கொண்டு வாக்கிங் செல்ல தொடங்கினேன். பைபாஸ் ரோட்டைக் கடந்து பிக் பஜார் பில்டிங்கிட்ட நடந்து வரும்பொழுது. அங்கு    கணவனும் மனைவி மான ரெண்டு பேர் வழி மறித்து தீபாவளி வாழ்த்து சொன்னார்கள். எதுக்குங்க…வாழ்த்து.. நாந்தான் தீபாவலியே கொண்டாடடுறதே..இல்லையே என்றேன்.  ரெண்டு பேருமே சேர்ந்து ..நீங்க…..தீபாவளிய  கொண்டாட மாட்டிங்களா ….? என்று கேட்டார்கள். அவர்களுக்கு தியரியை  எடுத்து சொல்வதை விட்டுட்டு, சிம்பிளிக்கா..சில விபரங்களை மட்டும் சொன்னேன். எனக்ககு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீபாவலியை கொண்டாடடுவது இல்லை, அன்று புத்தாடை துணிமணியும் எடுப்பதில்லை. அணிவதுமில்லை, என்றேன். ஆட்டுகறிகூட எடுத்து சமைத்து சாப்பிடுவதில்லையா என்றார்கள் வியப்புடன. அவர்களுக்கு   தோழர்களின் மொழியின் சில விளக்கங்கள் சொன்னேன். விலை அதிகமிருப்பதால் காந்தி(ஆட்டுகறி) எடுப்பதில்லை..பறவையில் ஊசி ஏற்றி பெருக்க வைப்பதால் அதையும் சாப்பிடுவதில்லை.  காங்கிரசும் (மாட்டுக்கறி) வரவர ரப்பராக இருப்பதால். சாப்பிடுவதில்லை. “நவம்பர் 7 புரட்சி தின”த்தில் மட்டும்  சமைத்து சாப்பிட்டுக் கொள்வது…. இந்திய்ன் பார்லி மென்ட் ( கருப்பு பன்னி) மற்றும் அய்ரோப்பிய பார்லிமெண்ட (வெள்ளைப்பன்னி) இரண்டையும் தொடுவதே இல்லை.. என்றேன். அடப்பாவி!  தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா !!! என்று கேட்தற்க்கா இம்புட்டு விவரம் என்பது போல்  கணவனனமனைவி இருவரின்  வாய்  திறந்து இருக்க………….அவர்களிடம் விடைபெற்று, “ விட்டா போதுமடா…….. சாமி” என்று வாக்கிங்கை பாதியிலயே முடித்துக் கொண்டேன. 2 கட்டுரைகள் 11 மேல் சாதிக்காரர்கள் மதம் மாறலாம் சாதி மாறலாம்.ஆனால்....... கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து டீக்கடை வைத்த அங்கயற்கன்னி என்பவர்க்கு . அன்று அவர்க்குதபால் வரும்போது அங்கயற்க்கன்னி வலையன் என்று வரும். அந்த அங்கயற்கன்னி வலையன் இன்று..அங்கயற்கன்னி பிள்ளையாக மாறி.சேனைத்தலைவர் அறக்கட்டளையின் முக்கியஸ்தராகவும்,வ.உ.சி பேரவையின் பிரமுகராகவும் மாறிவிட்டார். அந்த பிள்ளை சாதியைச் சேர்ந்த ஒருவர். அய்யர்வீட்டுப் பொன்னை கலியாணம் செய்து பிறந்த தன் மகன்களை அய்யராக்கி சான்றிதழும் பெற்றுவிட்டார். பிரமலைக்கள்ளர், சேர்வை,கள்ளர் இந்த சாதியை சேர்ந்தவர்களெல்லாம் தேவர்சமூகமாகவும் முக்குலுத்தோராகவும் மாறிக்கிறலாம்.  அல்லது சாதி மாறாமல் கிறிஸ்தவ மதத்துக்கும்  மாறிக்கிறலாம் இப்படி மேல் சாதியின்னு சொல்லிக் கொல்பவரெல்லாம் மதம் மாறாமல் சாதி மாறலாம்…அல்லது மதம் மாறலாம் சாதி மாறலாம்  ஆனால்………. காலங்காலமாக மேற்படியார்களால் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் மதம் மாறினாலும்,பெயர் மாறினாலும் சாதி இழிவு மட்டும் மாறுவதில்லை, சாதியை மாற்றிக் கொண்டாலும் சாதிவெறிக்கொண்ட சமூகக்கூட்டம். மாற்ற விடுவதில்லை. சரி… சாதியும் வேண்டாம் மதமும் வேண்டாம் என்றால் அரசும் விடுவதாக இல்லை. 12 சாதிவெறி குல தெய்வத்துக்கு தங்கக்......காப்பு...... தலைக்கு,கைக்கு,மார்புக்கு,இடுப்புக்கு,இடுப்புக்கு கீழ்….இப்படி ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 13 கிலோ எடை கொண்ட 4கோடியே 70 இலட்சம் மதிப்பு கொண்ட தங்கத்தை “ சாதிவெறி குல தெயவத்துக்கு தமிழகத்து அனைத்து மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தன் வேண்டுதலை . வீடியோ கான்பிரசிங் மூலம் அல்லாமல் நேரடியாக வருகை தந்து  தமிழகத்தை ஆளும் புர்ச்சி தலவி தன் பொற்கரங்களால் அணிவித்தார். இந்த 13 கிலோ எடை கொண்ட தங்கத்தை,உள்ளுர் கொள்ளையர்களோ, வெளியூர் கொள்ளையர்களோ,வீராதி வீரர்களோ,சூராதி சூரர்களோ,அபேஸ் பண்ண முடியாத அளவுக்கு உள்ளேயும் வெளியேயும்,24 மணி நேரமும் விட்டால் 48மணி நேரமும் தங்கத்தை பாதுகாக்க பாதுகாப்பு ஏற்ப்படுத் தப்பட்டுள்ளது. இத்தகைய பாது காப்பையும் மீறி ஹைடெக் திருட்டு கொள்ளையர்களின் திறமையை மனதிற் கொண்டு……. சாதிவெறிகுல தெய்வ கொண்டாட்டத்தின் போது தங்கத்தை அணிவிப்பதும் சாதிவெறி கொண்டாட்டம் முடிந்த பின்பு தங்கத்தை கழட்டுவதும் இப்படி ஒவ்வொரு சாதிவெறி விழா கொண்டாட்டத்தின் போது மாட்டுவதும் கழட்டவதும் அப்படி கழட்டப்ட்ட தங்கத்தின் எடையை பரிசோதனை செய்து. பரிசோதனை முடிந்த பின் பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சிகளால் சாதிவெறியை பாதுகாத்ததுமாச்சு,அந்த சாதிவெறி குல தெய்வத்துக்கு  தங்கம் அணிவித்த பேரும்மாச்சு……. அடுத்த ஆதிக்க சாதித்தலைவர்களும் தங்கம் கேட்க வழிகாட்டியதுமாச்சு, தமிழக வரலாற்றில் சாதிவெறி குலப் பெருமையை நிலை நாட்டிய  தங்கத்தாரகை என்ற பெருமையும்மாச்சு……..எப்படி!!! 13 மழுங்கடித்துவிட்ட சிந்தனையை, ஆளாளுக்கு சிந்தியுங்கள் என்கிறார்கள். இருக்கிற எல்லா பத்தரிக்கைகளும் சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்,சாதிவெறி கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களின் மூளையின் சிந்தனையை மழுங்கடித்துவிட்டார்கள். அப்படி மழுங்கடித்துவிட்ட  மூளையை  தேர்தல் வந்தவுடன் ஆளாளுக்கு சிந்திக்க சொல்கிறார்கள் இவர்கள். ..மழுங்கடிக்கப்பட்டவர்கள் சிந்திக்கதான் முடியுமா??????????????…………………… தமிழ்நாட்டில் அதிமுக நடத்துவது ஆட்சி அல்ல. காட்சி, அதற்கு விரைவில் வரப்போகிறது வீழ்ச்சி-அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்—- ————திமுக பொருளாளர் ஏழ்மை,வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக.தற்போதைய அட்சியாளர்கள் மதுவை கொடுத்து ஏழைகளின் வாழ்வை சீரழித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மதுவை ஒழிக்க முடியாது.. பணமா? மானமா?பெண்களே முடிவு செய்ய வேண்டும்———-அனைத்து சாதிவெறி சமுதாய தலைவர்-பாமக.. மதுரை மாவட்த்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்களின் பங்களிப்பு இருந்தால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எனவே,பெண்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற,நல்லவர்களை தேர்வு செய்ய சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.——மதுரை மாவட்ட ஆட்சியர் ஜனநாயக உரிமையை செயல்படத்தாமல் யாரையும் கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. நண்மை செய்யக்கூடியவர்கள் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்———————-மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தேர்தலில் வாக்களிப்பது அனைவரது அடிப்படை கடமை. வாக்காளர்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்கள் குறுகிய கண்ணோட்டத்தில் வாக்களிக்காமல் நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்——————– குடி அரசு தலைவர். 14 இவரெல்லாம் பகுத்தறிவு பாசறையில் இருந்தவராம்............!!! சோழவந்தான் அருகே,காடுபட்டியை சேர்ந்தவர் குணசேகரன் வயது40 .இவர்.செல்லம்பட்டி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர். இவர் தனியார் நிதி நிறவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே விவசாயமும் செய்து வந்தார். இவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் நிதியை பெற்று,தனியார் நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். செலுத்திய தொகைக்கான பாண்ட் காலம் முடிந்தவுடன் பணத்தை திருப்பி தர நிதி நிறுவணம் மறுத்துள்ளது. இதனால் பணம் கொடுத்தவர்கள் குணசேகரனைன தொடர்ந்து கேட்டு வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குணசேகரன் விட்டுக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிதி நிறுவனத்தின் மெத்தனப்போக்கால் தற்கொலை செய்து கொள்கிறேன். என்றும்,மனைவி குழந்தைகளை மாமியார் வசம் ஒப்படைத்து விடும்மாறு தெரிவித்துள்ளார். சாகும்வரை மூத்திரப்பையுடன்  விடாது,அயராது மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் இருந்தவர்க்கு நீதிமன்றம்,பத்திரிகை,போராட்டம் போன்ற வடிவங்கள் தெரியாமல் தற்கொலைக்கு போனது கொடுமையிலும் கொடுமை………………….. 15 வாழ்த்தா............................எதுக்கு?????? -------------- [] eluthu.com - -------------- அம்பது வருசத்தை கடந்துவிட்ட எனக்கு இரவில்  சரியாக தூக்கம் வருவதில்லை. சனவரி 1யை முன்னிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு வருத்தப் படாத வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களால் எழுப்பப்பட்ட வெடிச்சத்தத்தாலும் கூச்சலாலும் அமைதியாக படுத்திருக்க முடியாமல் புரண்டு கொண்டு இருந் தேன். அதன் பலனாக அதிகாலையில் நன்றாக தூங்கி கொண்டு இருந்த நேரத்தில்…………. என் கைப்பேசி விடாமல் ஒலித்தது. விடாது ஒலித்ததன் பயனாக, அந்தத் தூக்கத்திலும் கேட்காத  என் காதுக்கு ஒலி கேட்டு, எழுந்து நமக்கு பெரிய வீடும் இல்ல, சின்ன வீடும் இல்ல, அதிகாலையில்  யாரா இருக்கும் என யோசித்து  கைப்பேசியை எடுத்து “யாரு, என்ன விசயம் ” என்ற போது, “வாழ்த்துக்கள் அண்ணே” சொன்னது.ஒரு குரல். “வாழ்த்துக்கள் அண்ணே” என்று சொன்னது. என் காதுக்கு “வாழ்த்துக்கள் வெண்ணே” என்று  பதிவானது. ஒரு கணம் “என்னடா…….“வாழ்த்துக்கள் வெண்ணே”ங்கிறாங்கே………..என நிணைத்து நிதானத்துக்கு வந்து…………… “வாழ்த்தா………………எதுக்கு”?? திரும்ப கேட்டபோது……… “புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதில் வந்தது. “புத்தாண்டா”……..அதத்தான் “தைலிருந்து ஏப்ரல்லுக்கு மாத்திட்டாங்கல்ல” என்றபோது…….. “அது தமிழ்புத்தாண்டு………இது ஆங்கில புத்தாண்டு  என்றது எதிர்முனை. “ நான்.ஆங்கிலேயேன் இல்லையே”………….. என்றேன் திரும்பவும். “நீங்கள்,ஆங்கிலேயேன் இல்லையென்றாலும். ஆங்கிலேயே காலண்டர்கள் தேதிகைளைத்தானே பயன்படுத்துகிறீர்கள். அதற்குத்தான் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார். “அட, இதுக்கெல்லாமாவா ……….வாழ்த்துச்சொல்லுவாங்க., என்றுவிட்டு………….. எதுஎதுக்கெல்லாம் வாழ்த்து சொல்லனும் என்று நானும் ஒரு சில தியரியை சொன்னேன். எனக்கு கல்யாணம் ஆகி………….ஆகியிருந்தால் அந்த நாளுக்கு வாழ்த்து க்கள் சொல்லலாம், எனக்கு குழந்தை பிறந்திருந்தால் அந்த நாளுக்கு, குடிசை வீட்டிலிருந்த நான், சென்டிரிங் வீட்டிற்கு மாறியிருந்தால் அந்த நாளுக்கு, இப்படி பல டிப்சுகளை சொல்லி இவற்றுகளுக்குத்தான் வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்றேன்……………. இப்படியாக.நானும் வாழ்த்துக்கள் சொன்ன வருத்தப்படாத வாலிபரும் முப்பது நிமிடத்துக்கு மேல் பேசி, வருத்தப்படாத வாலிபரை,வருத்தப்படும் வாலிபராக ஆக்கி விட்டேன. ….இனி யாருக்காவது வாழ்த்து சொல்லும்போது,கண்டிப்பாக என்னை ஞாபகத்துல வச்சுருக்குவாருல்ல…………… நான் சொன்ன மொக்கைகளை “வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சொல்லி.வருத்தபடுவாருல……, கோபம் கொப்பளிக்க  “காலையில ஒருத்தனுக்கு வாழ்த்து சொன்னேன்டா”…….  என்ன கொன்னுன்டான்டா என்று சொல்லுவாருல…………. அதனால………….வாழ்த்து சொல்லும்போது, காரணகாரியம்,நேரம்காலம் பாத்து சொல்லனும்..புரியுதா………………… 16 யானையை புடுச்சு பானைக்குள் அடக்க முயலும் கேச்ரிவால்.... [] ஆமஆத்மியின்  டெல்லிமுதல்வர்  ராம்லீலா மைதானத்தில் இருந்து டெல்லி வாழ் மக்களுக்கு யானையை புடிக்க ஒரு வழி சொல்லியிருக்கிறார். இப்படி…………….. மக்களே!  உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். லஞ்சம் வாங்குவோரை  திருத்த (தண்டிக்க அல்ல) ஒரு வழி வைத்திருக்கிறோம். நாங்கள் இரண்டு நாளில் போன் நம்பர் தருவோம், அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் நீங்கள் போனாலும்.அங்கு யாராவது லஞ்சம் கேட்டால்..உடனே, அங்கேயே உட்கார்ந்து லஞ்சம் தர தயராக இருங்கள். எங்கள் லஞ்ச ஒழிப்பு படை வந்து கையும் களவுமாக பிடித்து விடும் அப்புறம்…………………… அப்புறமென்ன…………………..யானையை புடிச்சு பானைக்குள் அடைத்த கதைதான்…………………. ஐஐடி யில் மெக்கானிக் படித்த மூளைக்கு ஒரு வழி தெரிந்தால்………. லஞ்சத்திலே ஊறி கொளுத்து வளர்ந்துள்ள யானைக்கு எத்தனை வழி தெரிந்திருக்கும்…………. லஞ்ச ஒழிப்பு படையே லஞ்சம் வாங்குவது தெரியாத ஐஐடி முதல்வர் லஞ்ச யானையை பிடித்து பானைக்குள் அடைக்க போகிறாராம். கேப்பையில் நெய் ஒழுகிறது என்று நம்பும்  கேனையர்களாக இருக்குவரை.இப்படிபட்ட கூத்துகளும் நடக்கும்தான். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாத்துகிறவர்கள் இ.இ..இருப்பார்கள்.இதுவும் ஐஐடி மூளை சொன்னதுதான்…. 17 மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!... ---------------- [] panippulam.com ---------------- மார்கழி மாதம் பிறந்து விட்டாலே.பதினோரு மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாத்த்திற்கு யோக்கியர்கள் வேடம் தரித்து விடுகிறார்கள். என்னென்ன அயோக்கிய தனங்கள் இருக்கிறதோ அத்துனை தனங்களிலும் புகுந்து விளையாடியவர்கள், புதிய அயோக்கிய தனங்களுக்காக இந்த ஒரு மாதத்தில் யோக்கியர்களாக வலம் வருகிறார்கள். அதிகாலையில் எழுந்து குளிரில் நீராடி நெற்றியில் பட்டையிட்டு.மார்கழி மாத சீருடை அணிந்து. காட்சி அளிப்பார்கள். நாங்கள்தான் மார்கழி மாத யோக்கியர்கள் என்று பறை சாட்டுவார்கள். சாஸ்திரப்படி பதினோறுமாத பாவம் ஒரு மாதத்தில் தீர்த்துவிடுமாம். பதினோறு மாதம் கடவுளை நிணைக்காதவர்கள். ஒரு மாதத்தில் நிணைத்தால் பதினோறு மாத பலன் கிடைக்குமாம். அந்த ஒரு மாதத்தில் பலன் கிடைத்தவுடன் அடுத்த பதினோறு மாதத்தில் பழைய புதிய அயோக்கிய தனங்களில் ஈடுபாட்டாலும் அதனால் கெடுதல் ஏற்ப்படாதாம். கடலில் மீன் பெருக தடைகாலம்  இருப்பது மாதிரி, பதினோறு மாத அயோக்கிய தனங்கள் செய்யும் அயோக்கியர்களுக்கு மார்கழி மாதம் தடைகாலம். சாதராண அப்பிராணி குடுமபங்களைச சேர்ந்தவர்களுக்கு இந்த மார்கழி மாத தடைகாலத்தை பற்றி அவ்வளவாக தெரிய வாய்பில்லை என்றாலும் அவர்களும் இந்த மார்கழி மாத தடைகாலத்தை இப்படி பயன் படுத்துகிறார்களாம் பதினோறு மாதம் குடியே கதியின்னு கிடப்பவனை,மார்கழி மாத அயோக்கியர்கர்களின் தடைகாலத்தை பயன்படுத்தியவது ,குடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில்  பயன் படுத்திக் கொள்கிறார்கள். பழைய பழமொழியான “யோக்கியன் வாரான், செம்பை எடுத்து உள்ளே வை ”என்பதை இப்படிக் கூறலாம்………… ”மார்கழி மாத யோக்கியன் வாரான். செல்போனை எடுத்து உள்ளே வை” என்று “ மார்கழி மாதத்து யோக்கியர்கள் வருகிறார்கள்  மாராப்பை  இழுத்து மூடிவை” தொடர்புடைய பதிவு.http://valipokken.blogspot.com/2013/01/11-1.html 11மாத அயோக்கியர்களும் ஒரு மாத யோக்கியர்களும் 18 இறைவனையும்,மன்னனையும் பாடி வந்த கீர்த்தனையை மாற்றிய கவிஞர் இறைவனை நிணைத்து மனம் உறுகி பாடி வேண்டுதலையும், நாட்டை ஆளும் மன்னனை புகழ்ந்து பாடி பரிசினை பெருவதும்மே,கீர்த்தனை பாடல்களாக இருந்து வந்தன.தமிழ் கவிஞர்களுக்கு அப்படிப்பட்ட, இல்லாத ஒன்றிடம் வேண்டுவதும், இருப்பவர்களை புகழ்ந்து பாடி யாகசம் பெறுவதும்மாக இருந்த கீர்த்தனைப் பாடல்களை மாற்றி,எல்லா தொழில் முறைகளுக்கும்,ஏழை எளியவர்களுக்கும், சாதரணமான வர்களுக்கும்  புரியும் வண்ணம் பாடல் கீர்த்தனைகளை பாடி,பாடல்(கவிதை) உலகில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர்  கவிஞர். கவிதைகளிலே தமிழே கோலோச்ச வேண்டும என்று தன் கவிதைகளிலே, பாடல்களிலே  அதை நடைமுறைப்படுத்தியவர் கவிஞர் தமிழ்நாட்டில் தமிழ்க் கவிஞர்களிலே,உறையாடல்கள்  இன்றி முழுக்க,முழுக்க கவிதையிலே நாடகம் எழுதியவர். இவர் எழுதிய “புரட்சிகவி” என்ற கவிதை நாடகம். இந்திய வரலாற்றில் இலக்கிய உலகில், கவிதையிலே.இரண்டுமணி நேரம் நாடகமாக நடந்தது. இந்த நாடகத்துக்கு “தந்தை பெரியார்” தலைமை வகித்து அவரின் பாராட்டைப் பெற்ற  கவிஞர். தன் பாடல்களிலே,மூடப்பழக்த்தை சாடி, அறிவியலை மிகுதியாக இழைய விட்டிற்கும் பெருமைக்குரிய கவிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். [Photo] 19 போதையில் தப்பிக்க மறந்த தம்பதி......!! [] தமிழ்நாட்டில் காவேரி பாக்கம் என்ற ஊர், அந்த ஊருக்கு அடுத்த ஊர் அய்யம்பேட்டைசேரியை ச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்கள் இருவரும் ஒருநாள் டாஸ்மாக்கின் மீது ஆசைப்பட்டனர். அந்த ஆசையை பூர்த்தி செய்வதற்க்காக,தங்கள் இருவருடன் மேலும் இருவரை சேர்த்துக்கொண்டு கடப்பாரையுடன் இரவில்  டாஸ்மாக் கடைக்கு சென்றனர் டாஸ்மாக் கடைக்கு அருகில் சென்றவர்கள். ஏற்கனவே,கடையில் பெரிய பூட்டு போட்டு பூட்டியிருப்பதை அறிந்திருந்ததால, கொண்டுவந்த கடப்பாறையைக் கொண்டு டாஸ்மாக் கடையில துளையிட்டனர். துளை வழியாக அங்கியிருந்த 24 மது பாட்டில்களையும் எடுத்தனர். 24 மது பாட்டில்கள் கிடைத்த சந்தோசத்தில். மது பாட்டில்களை கணவனும் மனைவியுமாக போட்டி போட்டு காலி செய்தனர். இதனால் போதை மயக்கத்தில் சந்தோசமாக அங்கயே படுத்துவிட்டனர். இவர்களுடன்  வந்த மற்ற இருவர்கள் தமபதிகளுக்கு இடையூறு கொடுக்காமல் அங்கிருந்து  நழுவி  விட்டனர். காலையில் சூரியன் உதித்தது.  தம்பதிகள் இருவரும் போதை தெளியாமல் படுத்திருந்தனர். அவ்வழியே சென்ற அவ்வூர்க்காரர்கள் தம்பதிகள் மேல் இரக்கம் கொண்டு பிடித்து  வைத்துக் கொண்டு போதையை தெளிய வைத்தனர். செய்தி அறிந்து அலுவலக நேரத்தில் டாஸ்மாக்கின் சூப்பர்வைசர் வந்தார். பூட்டை திறந்தார், பாட்டில்களின் ஸ்டாக்கை சரிபார்த்தார். அதில் 15 ஆயிரம் மதிப்புள்ள 171 பாட்டில்கள் குறைவதாகவும். கல்லாவில் இருந்த 1.500 ரூபாயும் காணாமல் போனதாகவும் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசு,பழைய குற்றவாளிகளையும்,ஏப்ப.சாப்பைகளையும் தேடி அலையாமல் நோகாமல் நொடுகாமல் “போதையில் தப்பிக்க மறந்த தம்பதிகளை கைது செய்தது. போதை தெளிந்ததும் அந்த தம்பதிகளால் தப்பிக்க முடியவில்லை……. 20 இதற்கு என்ன அர்த்தம்...??? [] கடந்த மூன்று நாட்களுக்கு முன் எனது கனணிக்கு வயிற்றுவலி வந்துவிட்டதுஃ அதனால், அதுவால் எந்த வேலையும் செய்ய முடியா நிலைக்கு ஆகிவிட்டது. அந்த நேரம் பார்த்து,எனக்கும் வயிற்றுவலி வந்துவிட்டது. எனக்கு வயிற்றுவலி வந்ததன் காரணம் தெரிந்துவிட்டது. முந்தின நாள் இரவில் பெய்த மழையில் நணைந்துவிட்டேன். விடாது மழையுடன் நானும் விடாது மழையுடன் நணைந்து குளித்துவிட்டு உணவு உண்டதில் ரேஷன் கடையில் வாங்கிய வெறும துவரம்பருப்பு கூட்டுடன்.ரசம் கலந்து சாப்பிட்டதால் மறுநாள் செமிக்காமல் வயிறு ஊதி வலி எடுக்க ஆரம்பித்தது. வசூல் ராசாக்கல் எம்பிபிஎஸ்-ன் வசூல் சீசன் மாதமாக இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டு வைத்தியம் செய்து கொண்டும், எந்த வேலையும் செய்யாமல் வலியால் ஏற்பட்ட வயிற்றை தடவிக் கொண்டு நேரத்தையும் நாளையும் கடத்திக் கொண்டு இருந்தேன். இரவு வந்தது.வலியாலும், எதுவும் சாப்பிடாததாலும்,தூக்கம் வரவில்லை.புத்தகமும் படிக்கமுடியவில்லை, கைப்பேசியையும் நோண்ட முடியவில்லை. படுக்கையில் புரண்டு படுப்பதும், பிறகு எழுந்து வயிற்றை அமுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதுமாக இருந்தேன. மழையும் பெய்து கொண்டு இருந்தது. அதிகாலையில் என்னை அறியாமல் தூக்கம் வந்தது. தூக்கத்தில் கனவும் வந்தது. கனவில்,என் தொழில் சம்பந்தமான வேலைக்கு என்னை ஒருவர் ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறார். கம்பெனி அருகில் சென்றவுடன்,என்னை வாயிலில் நிற்கச் சொல்லிவிட்டு,அந்தநபர் கம்பெனிக்குள் செல்கிறார். சென்றவர்.நெடுநேரமாகியும் வராததால். நின்று கொண்டே இருந்த நான். சோர்வை  தவிர்ப்பதற்க்காக அந்த வீதிவழியே சிறிது தூரம் நடந்தேன். நடைபயின்று வந்த தெருவானது.திடீரென்று  பாதை மாறிவிட்டது.தெரிந்தது. எந்தப்பக்கம் செல்வதென்று தெரியவில்லை. வேறு ஒரு தெருவில் வந்தபோது.தெருவின் இருபக்கங்களிலும் ஏராளமான கடைகள். அந்தத் தெருவழியே வந்தபோது. ஒரு கண்ணாடி கடைக்குள் வந்துவிட்டேன.  அந்தக் கடைக்குள் என்னைச் சுற்றிலும் கண்ணாடிகள், கண்ணாடியில் என் உருவம் தெரியவில்லை. கடையை விட்டு வெளியே வரவும் பாதை தெரியவில்லை. கண்ணாடிக் கடைக்குள் அடைபட்ட நான் வெளியே வரமுடியாமல்.கண்களை மூடி,வயிற்றை கைகளால் அமுக்கியபடி அமர்ந்திருந்தேன. கண் முழித்தபோது விடிந்திருந்தது. வயிற்று வலி மட்டும் விடாமல் இருந்தது 21 குரு தட்சனையாக வாயிலே கொள்ளிக் கட்டையை வைக்கலாம்.!!! பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு, படிக்கிற பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக் கொடுத்தாரு…………. பிள்ளைகளா…..சரசுவதி பூஜையில நீங்க படிக்கிற புத்தகங்களையெல்லாம் வைத்து வழிபட்டால் நீங்கள் சிறந்த அறிவைப் பெறலாம். அதனால. சரசுவதி பூஜை அன்னிக்கு விளையாட போயி.மிஸ் பண்ணாம சரசுவதி பூஜையில கலந்து வழிபடுங்கள் என்றார். எது எதெல்லாம்  பார்த்ததையும் கேட்டதையும் கேள்வியா கேட்டு, அவுங்க அப்பனையும் ஆத்தாளையும் துளைத்தெடுத்து ,அதனால, ஆத்தாளிடம் திட்டு வாங்கியும் சோர்ந்து போகாத பள்ளிக்கூடம் படிக்கும் பிள்ளைகள். ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் குருவான வாத்தியார் சொல்வதில் மட்டும் கேள்விக் கேட்காமல்……………… சரசுவதி பூஜையில் புத்தகத்தை வைத்து வழிபட்டால்,பள்ளி கூடத்துக்கு செல்லும் போது புத்தக மூட்டையை சுமக்காமல் தூக்கி எறிந்து விட்டு செல்லலாம். ஸ்கூல்பீஸ்,வேன்பீஸ்  போன்ற பீஸெல்லாம் கட்டாமல் இருக்கலாம் பரிட்சையில் பாசாவதற்கு விநாயகரிடம்  தேங்கய் உடைக்க வேண்டுவது இல்லாமல், பரிட்சை எழுதாமலே பாசாகலாம், சேட்டைகள் செய்தாலும்  ஆத்தாளிடமும் அப்பனிடமும் அடி வாங்காமல் தப்பிக்கலாம். மற்றபடி வாத்திமாரிடம் லீவு லெட்டர் கொடுக்காமல் லீவு போ்ட்டுக்கலாம். இப்படியெல்லாம் நல்லதை கொடுக்கும் சரசுவதி பூஜையை வழிபடச் சொல்லும்  வாத்திமாரின் வாய்களிலே…. கொள்ளிக் கட்டையை  குரு தடசனையாக வைக்கலாம். 3 கவிதைகள் 22 அப்போதும்------இப்போதும் அது அப்போது எல்லோரையும் போலவே வாழ ஆசைப்பட்டேன் என்றான்.- அவளை காண்பதற்கு முன்னால் இது இப்போது எல்லோரும் என்னைப் போல  வாழ ஆசைப படக்  கூடாது என்றான்—–அவளை காதலித்த  பின்னால் 23 விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் இடையில் குல்லாக்கண்டனும் ---- [] ---- முன்னோரு காலத்திலே் நடாறுமாசம்……….. காடாறு மாசம்முன்னு நாட்டை ஆண்ட. பட்டி விக்கிரமாதித்த ராஜா கதையைப்போல. இருபத்தியோராம் நூற்றாண்டில்-கார்பரேட் இந்திய நாட்டை விடாக் கண்டன் காங்கிரசு அஞ்சு வருசமும் கொடாக்கண்டன் பிஜேபி அஞ்சு வருசமும் மாறிமாறி ஏலம் போட்டு ஆண்டு வந்த காலத்திலே….. விடாக்கண்டன் ஆண்ட போதும்சரி……..கொடாக் கண்டன் ஆளும்போதும் சரி,நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. இவ்விரு கண்டன்களுக்கு மத்தியில் நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கையில் இடையில் ஒரு குல்லாக் கண்டன் வந்தாலும்………. தண்ணிரின்றி வற்றிப் போன நாட்டில் தேனாறும் பாலாறும் சர்ரென்று பாய்ந்துதான் வந்திடுமா……….????….. 24 இயற்கையின் விதியை மீற வைத்த சமூகம்............... பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவன் கேட்டான் நீண்ட நாள் கழித்து சந்தித்த சந்திப்பின் போது ….. நண்பா….. திருமணம் முடித்து விட்டாயா? குழந்தைகள் எத்தனை? அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? என்று…………… மனைவி.குழந்தைகள் எந்த வாய்ப்பும் இன்று வரை  கிட்டவில்லை என்றான் நண்பன். கோபம் கொண்டு நண்பன் சொன்னான் இயற்கை விதியை மீறி விட்டாயாடா!! சமூகம் உன்னை சின்னா பின்னா படுத்தி விடும்மடா? நண்பனுக்கும் நண்பனுக்கும் தொடர்ந்த வாதங்கள் முடிவதாய் இல்லை  முடிவாக ……….. நண்பனின்  மேல்  வருத்தம் கொண்ட நண்பனிடம் நண்பன் இயற்கை விதியை மீற வைத்ததே ஏற்றத் தாழ்வாக நிலவும் சமூகம்தான் என்றான்…………. 25 வாய்ச் சொல்லில் ஏமாற்றும் வேட்பாளர்கள்.......... இருபத்தியொரு வயதில் எனக்கு கிடைத்த உரிமை என்ற வோட்டை விலைவாசியை குறைப்பதாக வாக்களித்த கட்சிக்கு வாக்கு அளித்தேன்……….. அடுத்த தேர்தல் வரும் வரை விலை வாசி குறையவே இல்லை இருபத்தியாரு வயதில் எனக்கு  வழங்கிய உரிமை என்ற வோட்டை இலஞ்சத்தை அடியோடு  ஒழிப்பதாக வாக்களித்த வேட்பாளர்க்கு என் வாக்கை  போட்டேன். அந்த வேட்பாளர் திரும்பவும் வாக்கு கேட்டு   வந்த பின்னும் இலஞ்சம் ஒழியவே இல்லை. முப்பத்தியோரு வயதில் மீண்டும் கிடைத்த உரிமையான வோட்டை வேலை வாய்ப்பை பெருக்குவோம் என்று முழங்கிய தலைவருக்கு திரும்பவும் என் வாக்கை பதிந்தேன. சீக்கிரமாக வந்த இத்தினியாவது தேர்தல் முடிந்து அடுத்தக் கட்சி நாற்காலி பதவியில் அமரும்  வரை எனக்கு வேலை கிடைக்கவே இல்லை. முப்பத்தியாறு வயதில் தொடர்ந்து கிடைத்த உரிமையான என் வோட்டுக்காக…….. ஓட்டு வாங்கும் போது ஓடி வந்து ஏமாத்தி உத்தமனைப் போல் வாய்ச் சொல்லில் பறை சாற்றி சென்றவர்களின் உதிர்ந்த மயிரைக் கூட   புடுங்க முடியாது என் ஓட்டால் என்று  பட்ட அனுபவத்தால் உணர்ந்து கொண்டேன. என்க்கு கிடைத்த வாக்கு  எனும் உரிமைச் சீட்டால் பேண்ட குழந்தையின் மலத்தைக் கூட அப்புறப்  படுத்த முடியா யென்பதை கண்டுணர்ந்தேன்……… வரும் தேர்தல் என்ன? எத்தினியாவுது தேர்தல் என்று பீத்தீனால் என்ன? என் வாக்குக்கு அதிகாரம் கிடைக்கும்  வரை………. . எவனுக்கும் எவளுக்கும் அவர்கள் கொள்ளை அடித்து சுகபோகமாய்  வாழ நான் வாக்களிப்பதில்லை என்று..முடிவெடுத்தேன். நான் வாககு அளிப்பதும் வாக்கு அளிக்காமல் இருப்பதும்……. என்து உரிமை……… 26 அறிவு இருக்கா!...இல்லையா...? யோவ்    யாருய்யா…   அது அறிவு     இருக்கா        இல்லையா இப்படி     ஒடுற      பஸ்சுல இருந்து    எச்சில   துப்புறது. ………………………………………. யோவ்     யாருய்யா    அது அறிவு      இருக்கா        இல்லையா இன்னு      கேக்கிறது    உமக்கு அறிவு        இருக்கா       இல்லையா இப்படித்தான்  பஸ்சுல இருந்து எச்சிலை          துப்பும்    போது குறுக்கால      வேகமா    வர்ரதா! போய்ய்யா!      போ          போய்ய்யா! 27 முட்டை உருண்டையா? ஒலகம் உருண்டையா?? உலகம் உருண்டைன்னு சொல்லக் கேள்வி சத்தியாமா அந்த உருண்டய நேர்ல பாத்ததில்ல…….. முட்டை உருண்டைன்னு ஒலகத்துக்கே தெரியும் போது எனக்கு தெரியாம இருக்குமா………… முட்டை குஞ்சாவதற்கு சூடு வேணும். சூடு இல்லாட்டி முட்டை குளு முட்டையா ஆகிடும். ஒலகத்துக்கும் சூடு தேவை. அந்த சூடு இல்லாததால்  ஒலகத்தில் வாழும் குஞ்சுகளுக்கு சூடும் சொரனையும் வெட்கமும் மானமும் ஓடியே போச்சு………. இப்போ சொல்லுங்க முடடை உருண்டையா? ஒலகம் உருண்டையா?? 28 ஈரை பேன் ஆக்கி....பேன்-னை பெருமாள் ஆக்கி.................. -------------------- [] www.geevanathy.com -------------------- பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்…………. “ரெட்ட இலக்கி” ஓட்டு போட்டீயே என்னா? கிடச்சதது என்று………………. அது கேட்டு பட்டிக்காட்டு வாக்காளர் இப்படிச் சொன்னார்……….. அந்து துளைபோட்டு எலி கொரித்துவிட்டு மக்கிபோன மிச்ச மீதியை கடைசியா……. மாதத்தில் பனிரெண்டு நாளுக்கு என் குடும்பம் சாப்பிட விலையில்லா அரிசி தர்ராங்க………….. விலையில்ல அரிசி இட்லிக்கு  வர வே மாட்டேன் என்று சொன்னாலும் அதை அரைக்க விலை இல்லா கிரைண்டர் தந்தாங்க…………. வராத இட்லிக்கு சட்னி அரைக்க விலையில்லா  மிக்ஸி கொடுத்தாங்க……………… உண்ட மயக்கம் தீர்க்க… மின் பில் கட்டும் டேபிள் விசிறி தந்தாங்க………….. தூங்கி எழுந்தவுடன் சோம்பல் போக்க வேலை செய்வதற்கு ஆடு……மாடு. தாராக…………….. வரும் பொங்கலுக்கு பொங்க வைக்க… பொங்க சரக்கோட இலவசமாக வேட்டி இல்லாதவுகளுக்கு வேட்டியும் சேலை இல்லாதவுகளுக்கு சாயம் போகும் சேலையும்…………… பொங்கல சந்தோசமாக டாஸ்மாக் அருந்தி கொண்டு ஆடுவதற்கு ஒரு நூறு ரூபாயும் இலவசமா தரப் போறாங்க………………. பட்டியல் போட்டு சொல்லி முடித்த பட்டிக் காட்டு வாக்கு ஆளர்.. பட்டணத்து வாக்கு ஆளரிடம்  கேட்டார். பட்டணத்து வாக்கு ஆளர்க்கு எதுவும் கிடைக்கலீயோ………. என்று…………….. “சட்டு என்று” பட்ட ணத்து வாக்காளர் சொன்னார்……….. “ஓ…..கிடச்சிருக்கே…!!!….. காலை விடிந்தவுடன். நகரத்து வாசிகளுக்கு குறைந்த விலையில் “அம்மா..”..உணவகத்தில் இட்லி சட்னியுடன் குடுக்குறாங்க…………………. மதியம் சாம்பார் சாதத்துடன் சப்ளை பன்னுறாங்க………………. சாப்பிடும் போது விக்கி கிட்டா…….. சாப்பிட்ட பின்பு தாகம் எடுத்தா “அம்மா” வாட்டர் நீட்டுறாங்க………… வரும் பிரதம.. தேர்தல்ல ரெட்ட இலைக்கே ஓட்டு போட்டா……………….. அம்மா செங்கோட்டை எக்ஸ்பிரசுல போயி செங்கோட்டை நாற் காலியில் ஒக்காந்தங் கண்ணா……………… ஈரை பேன் ஆக்கி பேன் னை பெருமாளா ஆக்கி. அந்தப் பெருமாள. எல்லார்க்கு கிடைக்க செய்து விடுவாங்கல்ல……….. என்ன நான் சொல்றது………..!!!!!!!!!! 29 அதென்ன ..லோக்(கு)பால்................. [] வாலிபால் -புட்பால் விளையாடிய வர்களுக்கு தெரியும்…………………. கிரிகெட்பால்-சிக்ஸர்பால் பார்த்தவர்களுக்கு தெரியும்…………………. மாட்டுப்பால்- ஆட்டுப்பால் குடித்தவர்களுக்கு தெரியும்……………. “அதென்ன லோக்(கு)பால்”…… பார்ஆளும் மன்றத்திலும் சட்ட மன்றத்திலும் சொகமாய் படுத்து புரளும் பன்றிகளுக்கு தெரியும்………………. படி அரிசியில் முனி அரிசி சோமாறும் சோமாறிகளுக்கு தெரியும்…………………. படி அளக்காமல் மொத்தமாய்  பதுக்கும் பதுக்கல் பேர்வழிக்கு தெரியும்……………. எல்லாப் புகழையும் மொத்தமாய் அள்ளும் பெரிசு அன்னா கசரேவும் ஆத்மி கேசரி வாலுக்கும் தெரியும்…………….. “லோகபால் நிறைவேறியது” புரட்சி திட்டமுனு சொல்லித் திரிந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் பல்லு போயி ஒன்றிரண்டு சொத்தை பல்லைக்காட்டி. கொண்டு நிக்க மாட்டாமல் நிக்குது. இந்த லோக்(கு) பாலும் லோக்கு பால் அல்ல லாக்கு பால்லுன்னு சந்தி சிரிக்கத்தான் போகுது………………. 30 நாய்களும் .........மனிதர்களும்............. ---------------------------- [] www.tamilaustralian.com.au ---------------------------- நாய் ஒன்று பழைய தெருவிலிருந்து புதிய தெருவுக்கு வந்தது. புதிய தெருவில் பழைய நாயொன்று புதிதாய் வந்த நாயை கண்டது சட்டென எழுந்து தன் கோரப் பற்களை காட்டி குரைத்தது. உர்ர்ர்…………உர்ர்ர்… லொள்ள்ள்…..லொள் ஒரு நாய் குரைத்ததும் பல நாய்களும்………. சேர்ந்து குரைத்தது. லொள்.லொள் லொள் லொள்..லொள்..லொள் வந்த நாயோ சற்று பலமுள்ளது அதுவும் தன் வீரத்தை காட்டியது உர்ர்ர்ர்ர…………உர்ர்ர்ர்ர் உர்ர்ர்ர்ர………….உர்ர்ர்ர்ர் புதிய தெருவிலே இருந்த பழைய நாயும்-பழைய தெருவில் இருந்து வந்த புதிய நாயும் ஒன்றுடன் ஒன்று மோதின. பழைய தெருவில் இருந்து புதிய தெருவுக்கும் புதிய தெருவில் இருந்து பழைய தெருவக்கும் போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்த மனிதர்கள் நாயின் சத்தத்தை கேட்டும் அதன் பற்களை கண்டும் எட்டடி தள்ளி சென்று பதினாறு அடி வேகத்தில் கடந்தார்கள்…….. டாஸ்மாக் குடி மக்களோ போதை தெளியாத சாக்கில் தூரத்தே நின்றனர். பழைய தெருவென்ன புதிய தெருவென்ன நாய்களை ப் போல மனிதர்களும் குரைப்பதால் தானே, “நாயே” நாய்களே……….. என்று பட்டம் வாங்குகிறார்கள். 31 இவரு வேற மாதிரி..................... [] நிழலில் நல்லவராக, கெட்டவர்களை அழிக்கும வல்லவராக,அநியாயத்தை தட்டிக் கேட்கும் உத்த மனாக நடித்தவரு……………. நிஜத்தில். …….. குடி குடியை மட்டுமா கெடுக்கும். குடிப்பவரும் அல்லவா குடிக்காத மக்களையும்  குடிக்க சொல்லி குடியை கெடுக்கிறார்…. தெருவுக்கு தெரு கடையை திறந்து இருக்கும்போது குடிப்பதில் என்ன தப்புன்னு குடிப்பதை நியாயப் படுத்தும் முற்போக்கு கட்சி அதுக்கு ஒரு தலைவர்………… வருபவனுக்கெல்லாம் ஓட்டு போடு வதையே உரிமையாக கொண்டாடும் பரதேசிகளுக்கு எப்போது தான் புரியும்.. ………………………. இவரு வேற மாதிரி என்பது. 1 Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948 நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? - Shrinivasan tshrinivasan@gmail.com - Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org - Arun arun@fsftn.org -  இரவி Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/