[] []     இளைய பாரதி- யின்  யாவையும் எழுத நினைக்கிறேன் யாவரையும் எழுத நினைக்கிறேன்   து.தர்மராஜ்   நூல் : யாவையும் எழுத நினைக்கிறேன் யாவரையும் எழுத நினைக்கிறேன்   ஆசிரியர் : து.தர்மராஜ்   மின்னஞ்சல் : dharma786dharma@gmail.com அட்டைப்படம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com   மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com   வெளியிடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC   உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். நானும் இந்த நூலும் அறிமுகமாகிறோம்    நான்வாழ்ந்த நாட்களும் வாழ நினைத்த நாட்களையும் கவிதையாக எழுத நினைத்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...  எழுத்தில் பிழையோ   எண்ணத்தில் பிழையோ இருந்தால்  உங்கள் சகோதரனாகிய என்னிடம் சொல்லுங்கள் ...  நான் வரைமுறை அற்ற எழுத்தாளன் எனக்கு இதை இப்படித்தான் எழுத வேண்டும் அதை அப்படித்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் வரைமுறைகள் தெரியாது...  என் எண்ணங்களில் உள்ளவைகளை எழுத்துக்களாக உங்களிடம் சேர்க்கிறேன் ...  கடலாய்க்கிடக்கும் ஏமாற்றங்களும் நினைவுகளும்   என்னை இந்த புத்தகங்களோடு அலையாய் அடித்துக்கொள்ள சொல்கினறன ...  வானமாய்க்கிடக்கும் வர்ணனைகளுடன் இந்த தர்மனின்  வார்த்தைகளையும் கொஞ்சம் வாசியுங்கள்…  எதாவது செய்யும் நேரம் நம்முடன் இருப்பவர்களைவிட இருந்தவர்களின் நினைவுகள் அதிகம்தானே அப்படி பட்டவைகளை அவளுடன் இருந்த நாட்களையும் இருக்க நினைத்த நாட்களையும் என் சிந்தனைகளோடு சேர்த்துள்ளேன் ....  இப்படியாக நானும் இந்த நூலும் அறிமுகமாகிறோம்...      து.தர்மராஜ்   இளங்கலை அறிவியல் - தகவல்தொழிநுட்பம்,   டிப்ளமோ - தொழில்துறை பாதுகாப்பியல்   முதுகலை அறிவியல் - சுற்றுச்சூழல்  அறிவியல்          D.Dharmaraj  B.sc (Information Technology), Diploma in Industrial Safety, M.sc (Environmental Science) Phone: 6381199415 Email:dharma786dharma@gmail.com Instagram: ilayabharathy_vlogs      தான் எழுத படிக்க தெரியாத போதும் என்னை பிறர் படிக்கும் அளவிற்கு புத்தகம் எழுத செய்த ( படிக்க வைத்த ) என் தாய் தந்தையருக்கு இந்த புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன் ....    நான் கண்ட  முதல் காதல்  முதல் காதலர்கள்  இவர்கள் தான்  தி. துரைராஜ்  து. நாகராணி    இவர்களின் மூன்றாம் கவிதை நான்             ஒரு நடுத்தரனாக  இந்த சமுகத்தில் நான் நாளும் பார்ப்பவைகள்     அவஸ்திகளையும் ஆக்கங்களையும்   இருக்கங்களையும்   இன்னல்களிலும்   எரிச்சல்களிலும்   ஏக்கங்களிலும்   ஐயங்களிலும் வாடல்களையும்   வசதிகளையும்   வரட்சிகளையும் வரைவுகளையும்   கடந்து இளைப்பாற யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உலகை ரசிக்கும் ஒருவரில்  நானும் உள்ளேன்   உங்களைப்போல...   நடுத்தரனாக நான் என்னை சுற்றி நடப்பவைகளை இந்த ஏட்டில் எழுத நினைக்கிறேன்     வாசியுங்கள் முடிந்தால் என்னையும்…             பொருளடக்கம் (1-6 நிதமும் புது கவிதையாய்) 11  7. உலகனாய் ஒன்றினைவோம்.... 13  8. மாற்றம் 15  9. மறதி 16  10.கடவுள் இல்லை 17  11. நேரம் 18  12. சமமில்லை 19  13.பெண் 20  14.விலைவாசி ஏற்றம் 22  15. இளைஞனின் கனவு 23  16. கைபேசி இல்லா கைகள் இருந்தால் சொல்லுங்கள் 24  17.மனிதன் 25  18.பறவைகள் 26  19.எழுத்து 27  20.உலகம் 28  21.நட்பு 29  22.காதல் 30  23.அவளும் அவனை காதல் செய்தாள் 32  24.அனாதைகள் ஆதரவற்றோர்கள் 33  25. போக்குவரத்து காவலர்கள் 35  26.வேசிகள் 36  27. எங்கள் நாட்டின் அரசியல் 38  28.யாவரும் இங்கே ஒட்டுண்ணிகளே 39  29.வானம் 40  30. அவர் கலியுக கர்ணனாம் 42  31.மதுவால் உலகை அழித்திடுவோம் 44  32.யாசகம் 46  33 . மனிதம் 48  34 . வரைமுறை 49  35.புத்தகம் 50  கணியம் அறக்கட்டளை 53      1. (1-6 நிதமும் புது கவிதையாய்)   1.எழுந்த போது பார்த்த அந்த எதிர் வீட்டு குழந்தையையும்... எழ முடியாமல் தவிக்கும் அந்த கிழவனையும்...     2.நான் வாங்காத போதும் வணக்கம் சொல்லும் அந்த செய்தித்தாள் காரணையும்.... வாங்குவதற்காக வசை வாங்கும் அந்த வசதியான வீட்டு காரரையும்....    3.அளவு பாலில் தண்ணீர் என கூறி பாக்கெட் பாலிற்க்கு மாறி போன எங்கள் ஊரையும். அந்த பால்  கம்பெனிக்கு பால் ஊற்றும் அந்த பழைய பால் காரரையும்....    4.காலையில் காபி யோ டீ யோ குடித்தால் தான் சோம்பல் போகும் என கூறும் ஓர் கூட்டமும். காலையில் பசி என கூறி காபியோ டீயோ குடித்து விட்டு ஓர் கூட்டம் ஒடும் ஒட்டமும்...    ஒரே சாலையில்...    5. அலுவலகத்திற்கு செல்ல பெட்ரோல் இல்லையே என ஓதி ஒட்டும் வாகன ஓட்டிகளையும்....    அரை கிலோ மீட்டர்க்கு காரை எடுத்து வளைக்க இடம் இல்லாமல் டிராஃபிக் செய்யும் அந்த  நான்கு சக்கர பணக்காரரையும்     6. ஒவ்வொரு தெரு முனையிலும் பார்க்கிறேன் எல்லா வித வாழ்வை வாழ்பவர்களையும்  இரண்டு ரூபாய் இட்லி கடை முதல் இருபது ரூபாய் இட்லி கடை வரை...  நூறு ரூபாய் சம்பளத்தில் அழகாய் வாழ்பவர்களையும்   நூறாயிரம் சம்பாரித்தும் அமைதியில்லாமல்  வாழ்பவர்களையும்....  இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தரன் நான் உணவு உடை உறைவிடம் இவை யாவும் இந்த பதினைந்து ஆயிரத்தில் தான் ...    யாவும் இந்தியன் என சொன்ன போதும் அவன் ஹிந்தி காரன் என்று துரத்துவதில் அர்த்தம் இல்லையே....    அப்படியானால் அந்த தாரவி தமிழர்களும் விரட்ட பட வேண்டியவர்கள் தானே...  ஜாதி   மதம் குலம் கோத்திரம்   எவனோ சொன்ன அறிவியலில்.. எவனோ சொன்ன அறிவில்லா பிரிவினைகள் இவை    மாவட்ட வாரி   மாநில வாரி  நாடு வாரி     யாவும் மனிதன்  பிரித்தது தானே  யாவும் யாவருக்கும் கிடைக்க வேண்டி பிரித்தவைகள் தானே இதில் ஏன் பிரிவினை  உலகனாய் ஒன்றினைவோம்....    2. 8. மாற்றம் இரவும் பகலும்  மாறும் மாற்றம்  மக்கள் மனதில்  இல்லை ஏக்கம்..  மாறாதிருக்க...  போதும் என்ற எண்ணம் இருந்தால் போதும் இந்த உலகை ரசிக்க அப்படி நீயும் இல்லை நானும் இல்லை வா போட்டியும் பொறாமையும் கொள்வோம் ஒன்றாக வாழ்ந்தே ...   (எங்கோ எங்கோ படித்திருக்கிறேன் உயிருடன் இருந்தது போதும் வாழ தொடங்குங்கள் என ...)   மேலே சொன்னவைகளில் எனக்கு கொஞ்சம் கம்மி ஆததால் உங்கள் பார்வையும் எந்தன் பார்வையும் கொஞ்சம் மாறிடும் உலகை பார்ப்பதில் ...   3. 9. மறதி அதுவும் இதுவும்  ஆகும் நேரம்   பழமை ஒன்றை  எரியும் நோக்கம்   எல்லோருக்கும் இங்கே  இயல்பாய் இருக்கும்...  உனக்கும் எனக்கும்   கூட அவ்வாரே இருக்கும்...  மனிதன் என்றும்   மறந்திற மாறி ....  மறக்காதவன் இங்கே பைத்தியமாகி....  திரிவான் அவனுக்கொரு   வீதி ......அடைக்கலம் கொடுக்க இல்லாமலா போகும்    பைத்தியம் என்றோ உலகம் சொல்லும் பாக்கியம் என்றே நானே சொல்வேன்… கடவுள் இல்லை  என சொல்லி என்ன பயன்  கஷ்டத்தில் முதலில் உன்னை  அல்லவோ நினைக்கிறேன்...  கடவுளே...    எப்படியாவது நீ இருந்துவிடு புண்ணியம் கோடி செய்திட வேண்டி உன்னையாரும் தேடுவதில்லை பாவங்கள் கூடி பயந்திட்ட பின்னே ஐயோ கடவுளே என்பவரை விடுத்து பசிக்கிவேண்டுபவர்களையாவது நீ கண்டுகொள்ளே ... இப்படியே   தொடர்ந்திடாது இந்த நொடி.....  அவனும் விழுவான்  அவனும் அழுவான்  உன் துயரும்   நிம்மதியும் கூட  ஒரு நாள் இல்லாமல் போகும்  இருக்கும் போதே   ஆடிக்கொள்..  வற்றிய ஆறு   ஓரு நாளில் குளிர்ந்திடும் அல்லவா  அதுபோல் வாழ்க்கையும் மாறும் ஒரு நாளில் அல்ல ஒரு நாள்....  படுத்துக்கொண்டே கனவை கண்டு என்னை குறையும் கூறாதே இந்த புத்தகம் படித்து உன் கவலையும் போகாதே நீயே ஓடி ஓயும் பொழுதே உன்னுடன் கொஞ்சம் வெற்றிகளும் உந்தன் வெற்றிடத்தை நிரப்பிடுமே.     யாதிலும் சமமில்லை  யாவரும் சமமில்லை  எதிலும் சமமில்லை  எவரும் சமமில்லை  நிலையில்லா உலகில்   சமநிலையும் சமமில்லை   சமபந்தி என்று அழைத்தான் அந்த சாதிக்காரன் அங்கும் இந்த சாதிக்காரன் இங்கும் இருவரின் மிச்சமாய் சமமாய் இருந்தவற்றை கலந்து சரியாக பிரித்திக்கொள்ள தெரியாத தெருநாய்கள் சமமாய் உண்டன அவைகளுக்குள் சாதிகள் தெரியாததால் ...   பெற்றாலும் பிறந்தாலும் நட்பாலும்   இணைந்தாளும் காதலியாய்   இருந்தாலும்   பிரிந்தாலும்   மனந்தாலும் மறந்தாலும்   இன்பமாய் இருந்தாலும்  துன்பமே நீ கொடுத்தாலும்  துணையாக இருந்தாலும்  இணையாக இருந்தாலும்  மாது அவள் இல்லா உலகம்   மனிதம் அற்று போவானே....  என சொன்னாலும்   மடி அவிழ்த்து பார்ப்பவனும்   மானபங்கம் செய்பவனும் இங்கேதான் உள்ளானே  சட்டமும் சாமியும்   எதோ அந்த நேரம் தூங்கிப்போகும்  என சொல்ல்வானே இந்த புத்தக கிறுக்காணும்  வாங்க முடியா விலைக்கு விற்கும் பொருட்களையும் விற்பவனையும்  திட்டு தீர்க்கிறான் அவனும் என்னை போன்ற நடுத்தரன் தான்..  மலையை எட்டி கட்டி மாடிவீடுகளையும்   பலிங்குகளையும் பார்த்து பேசிகொள்கிறான் …  கடைசி மனிதன் அவன் தான் என்பதைபோல உலகை ரசிப்பதாக மலையின் ஓரம் வீட்டைக்கட்டி அந்த காட்டின் ஜீவராசிகள் அவன் வீட்டில் தொல்லை செய்வதாகவும் கூறிக்கொள்கிறேன் அவன் மாண்ட பின்பு அவனை போன்ற மனிதன் தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும் என்பதை மறந்து ஆட்டம் கொள்கிறான்   தனிமையே சுகம் என அவனை அவனே ஏமாற்றிக்கொண்டு       எங்கு இருந்திடா இவ்வளவு பணம் வந்தது என்று  17- வயதில் ஆரம்பமாகிய   (பந்தய வாகனம்) இரண்டு சக்கர வாகன கனவு 27 வயதில் மைலேஜ் கிடைக்கும் குடும்ப வாகனமாக நிறைவேறும் போது எல்லா ஆசைகளும் ஆசைகள் மட்டும் தான் என புரியும் நேரம் ...  அவனுக்காக எதையும் வாங்குவதை விட்டு விடுகிறான் ....    குடும்ப தலைவனாக மாறி        புத்தகங்களுக்கு அவர்களை வைத்து உயிர் ஊட்டுகிறேன்    என நாளும் நான் சுற்றி வரும் பாதைகள் எல்லாம் தொலைவுகிறேன்     நூலகம் இருந்த இடங்களில் எல்லாம் கரையான்கள் ஆண்டு வருகிறது என தெரியும் நேரம் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் அவைகளுடன் போர் செய்ய போகலாம் என்று..    இந்த புத்தகங்களை படிக்க ஆசை கொண்டேன் நீங்களும் போருக்கு தயாரானாள் சொல்லுங்கள் உங்கள் படைத்தலைவனாக நான் இருக்கிறேன் எந்தன் புத்தகங்களும் பேனாக்களும் உங்களுக்காக காத்து கிடக்கின்றன .       வானகத்தில் தான் தங்கியிருந்தான்   கட்டையும் கல்லையும் குடைந்து வீடு செய்தான்   வீடுகள் சேர்த்து வீதிகள் செய்தான்   வீதிகள் சேர்த்து ஊரை அடைந்தான்   ஊரை சேர்த்து நகரம் நகர்ந்தான் ...  யாவும் இன்பம் காணபோது மீண்டும் கானகம் செய்து தனிமையில் ஓர் கூரையை நெய்து இயற்கையை ரசித்தான் ...    மீண்டும் மனிதன் வானரமாக மாறவும் செய்வானோ   ஏன் இந்த சிறை எண்ணையாரும் நீங்கள் கூண்டில் அடைக்காத போது  எனக்கு இந்த உயிரில் எந்த பயமும் இல்லையே நீங்கள் அளிக்கும் நவதானியங்களும் நன்றென கொடுக்கும் செயற்கை தீவனங்களும் இல்லாத போது எங்கு வேண்டுமானாலும் சுற்றித்திரியும் சுதந்திரம் இருந்தது உங்களைப்போல் என்னையும் இந்த கூண்டில் அடைக்கசெய்வதில் நியாமில்லையே எங்களுக்கும் உங்களைப்போல் வீடு கட்டிக்கொள்ளவும் தெரியும் எங்களை விடுவியுங்கள் என்றது அந்த சிறைப்பட்ட பறவைகள்.  ஆனால் நாங்கள்தான் மனிதர்கள் ஆயிற்றே எப்படி உங்களையெல்லாம் புரிந்து கொள்வோம் எங்களையே நாங்கள் புரிந்து கொள்ளாபோது       இன்றெல்லாம் யாரும் எழுதுவதே இல்லை அந்த பள்ளியும் கல்லூரியும் கூட இன்று எழுத்து என்னும் கலையை விரும்புவதில்லை போலும்   கடிதம் ஒன்றை நிப்பாட்டதிருந்த  நாள்வரை யாவரின் கையெழுத்தும் இங்கே ஒன்றை ஒன்றை போட்டிபோட்டனவே காதல் கடிதம் கூட இன்று குறைந்து குறுஞ்செய்தியை போய்சேர்ந்தன பக்கங்களை தாண்டிய வரிகளால் அவனோ அவளோ பிரமித்து நின்ற நாட்கள் யாவும் இங்கு கடந்த காலமாகிபோகின.    சொல்லமுடியா வார்த்தைகளை இன்றும் நான் எழுதித்தான் சொல்லுகிறேன் இந்த பழக்கம் என்றும் மாற மனநிலை போதும் என்னை இங்கு யாரும் அறியாபோதும் என் எழுத்தில் என்னை படிப்பார்கள் ஆனால் அவனும் ஓர் கவிஞனே ...      ஏன் இந்த ஓட்டம் இருட்டை நோக்கியும் பகலை நோக்க்கியும் பயணிக்கும் இந்த மனிதர்களுக்கு ஏன் புரிவதில்லை 100 வருடங்களுக்கு மேல் இந்த உலகம் நம்மை சுமக்கப்போவதில்லை இந்த உடலும் உயிரும் இணைந்து இருப்பதுமில்லை என்று ....  இவையாவும் எனக்கு அவையாவும் உனக்கு என யார் சொன்னது இந்த வாழ்வின் நிரந்தரம் நினைவுகள் மட்டுமே தவிர ஏதும் நிரந்தரம் இல்லையே இந்த நினைவுகளைக்கூட இப்பொழுதெல்லாம் மறந்து விடுகின்றன.  உங்களுக்குள் நீங்களே பிரிந்து என்னையும் பாகம் பிரித்ததேனோ  என்று உலகமும் சொன்னது   அவனோ அவளோ அவனுக்கெனவோ அவளுக்கெனவோ ஓர் வாழ்வை அடையும் வரை உன்னையே உலகம் என சுற்றித்திரிவான் அந்த வாழ்வில் பயணிக்க ஆரம்பித்த பிறகு அவனோ அவளோ பிரிந்து சென்றால் என குறை சொல்வதில் நட்பென்பதும் கேட்டுத்திரிகிறதே அவளுக்கோ அவனுக்கோ-வான வாழ்வு அவை அவனும் மனிதன் தானே ....  குறைசொல்லாதீர்கள்   நட்பின் காதலையும் காதலியுங்கள்   நட்புக்களில் பிரிவென்பதே கிடையாதே  பிரிவையும் காதலியுங்கள் நல்ல நண்பர்களாய்     (நான் கூட இங்கு அவனாக இருந்திருக்கலாம்)  முதல்காதல்   பள்ளியறையில் அரை டிரௌசர் மாறி முழுக்கால் சட்டையணியும் போதே ஆரம்பிக்கிறது ...  அவளும் அங்கு தான் இருந்தால் இத்துணைநாளாகவும் ஆனால் இந்த பருவ காதல் அவளையே அவனுக்கு எனோ புதுமுகமாய் தோன்றச்செய்கிறதே .  எப்படி சொல்வது அந்த ஒருதலைக்காதலை   சொன்னால் என்ன தான் ஆகிவிடப்போகிறது   எப்பொழுதாவது பேசுபவள் எப்பொழுதும் பேசமாட்டாள்   இல்லை எப்பொழுதும் பேசாதிருக்க மாட்டாள் என்ற எண்ணங்கள் அந்த முதல் காதலை அவளிடம் கொண்டு சேர்க்கும் முன்னே அவள் பெயரை அவனுக்கென அழைத்து அவளிடம் இவன் காதல் செய்வதை கொண்டு சேர்கிறான் அந்த நண்பன் ...    ஏற்ப்பாளோ இல்லை ஏமாற்றுவாளோ என காத்திருக்கிறான் அந்த கல்விசாலையில் காதல் பரிட்சையும் எழுதி ...      உன்னை அவள் அலைகிறாள் என்ற அவளின் தோழியின் பேச்சை கேட்டதும் அவன் நனைந்த மழையை இந்த பூமி இதுவரை கண்டிராதுபோலும்     முதல்முறை சந்திப்பும் அல்ல   முதல்முறை பேச்சும் அல்ல   இருந்தும் அவை காதலுக்கு   புதிதுதானே..      எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் ஆனால் நாங்கள் எங்களுக்குள் வைத்துக்கொண்ட பெயர் கடவுளின் குழந்தைகள் ...  கடவுள்கள் சிலர் கண்களுக்கு மட்டும்தான் தெரிவார்கள் அதேபோல் தான் நாங்களும் சிலரின் கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறோம்   எங்களுக்கும் உங்களைப்போல் வாழ ஆசைதான் என்ன செய்வது என தெரியாது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எதோ உண்டு எங்கோ இறக்கிறோம்....  வாழும் போதும் ஆசை பட்டவைகள் கிடைப்பதில்லை எங்களுக்கு ...  மலர்வளையங்களும் மாலைகளும் எதிர் பாக்க உள்ளம் இறந்த போது ஓர் துளி கண்ணீர் கேட்கிறது அதுவும் இங்கே எங்களுக்கு கிடைப்பதில்லை   அன்பு   பாசம்   காதல்   காமம்   என அனைத்தும் பார்க்க மட்டும் தான் முடிகிறது இந்த சுவரில்லா உலகை   வீடாக ஏற்றுக்கொண்ட எங்களால் ...  உங்களுக்காக உங்கள் பாதையை மறைத்து நிற்கிறோம் நாங்கள் இப்படியாக எங்களை போக்குவரத்து காவலர்கள் என்பார்கள்     எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நீங்கள் இடது வலது செல்லவேண்டியதை கட்டிகொழிக்கிறோம் என்று அர்த்தமில்லை   உங்கள் இடதோ வலதோ இல்லாமல் போய்விடக்கூடாதென்பற்காகவே உங்களை இடதும் வலதும் வந்து இந்த உலகை ரசிக்க செய்யச்சொல்கிறோம்  உங்கள் பையில் உள்ள காசை எங்களிடம் தருவதாக நினைக்க வேண்டாம் அப்படியாவது இன்னொருமுறை உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நாங்கள் ஊட்டும் நினைவலைகள் அவைகள் பொழுபோக்கிற்காக நிற்கவில்லை நாங்கள் உங்கள் போக்குவரத்துக்காக நிற்கிறோம் எங்களுக்காகவாவது கொஞ்சம் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்       எங்கோ படித்திருக்கிறேன் பத்துக்குமேல் பத்தினி இல்லை என்று     கற்பு என்னும் ஒன்றை எதை வைத்து கண்டுபிடிப்பது   யார் அந்த சாண்றிதழ் கொடுப்பது   ஏதேனும் விதிமுறைகள் உண்டோ   ஏதேனும் தேர்வுகள் உண்டோ   இருந்தால் நீங்கள் அந்த பட்டம் பெற்றிருப்பின் அதையும் கொண்டு வாருங்கள் ...    உலகின் மிக கொடியவைகளில் ஒன்றே மனது ஏற்க மறுத்தவனுக்கு உடலையும் ஊடலையும் கொடுப்பது ...  அப்படியானால் அந்த கட்டாய திருமணத்தின் மணமகளும்   ஜாதிய திருமணத்தின் மணமகளும் கூட எங்களை போல வேசிகள் தானே ...  அந்த தங்க சரட்டைதான் அவர்களின் விலை போல எங்களுக்கு  இந்த ருபாய் நோட்டுகளை போல அவர்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவுசெய்கிறார்கள் போல     எங்களின் பெயர் வேசிகள்   உங்கள் அறியாமையை என்ன செய்வதோ   எங்களுக்கும் உங்களைப்போல் ஒருத்தனின் அன்புக்கும் மனைக்கும் சொந்தமாகத்தான் ஆசை என்ன செய்வது இப்படியாகிவிட்டோமே ஆனால் வருகிற ஆண்ங்களுக்கெல்லாம் உங்களைப்போல மனைவிகள் இல்லைபோலும் எங்களை அந்த இரவுக்கு மட்டும் மணந்துகொள்கிறார்கள் ....        எங்கள் தமிழில் போதுமான கெட்டவார்த்தைகள் இல்லாததால் இவர்களை நான் எழுத முயற்சிக்கவில்லை   வாக்கு திருடர்களையும்   ஓட்டை விற்கும் வேசிகளையும்    கடைசி அரசியல் தலைவரும்   கடந்த மாதம் காலமானார்   28 - 12 - 2023         இவன் எனக்கு என்னசெய்து விட போகிறான்   அவன் எனக்கு என்ன செய்துவிட போகிறான்   இவனால் அவனால் என்ன பயன்   இவனும் அவனும் உனக்கு ஏதும் செய்யபோதும்   எவனோ ஒருவனை நீயும் சார்ந்துதான் உள்ளாய்  யாவரும் இங்கே ஒட்டுண்ணிகளே   யாவரும் ஒட்டிவாழ்வோம் முடிந்தால்  4. 29.வானம்   இந்த மனிதர்களை போல் ஒன்னுள்ளும் எத்தனை மாற்றங்கள்   காலைப்பொழுதில் இருக்கும் நீயா என தோன்றச்செய்யும் அந்த மதியவேளை   மதியபொழுதில் இருக்கும் நீயா என தோன்றச்செய்யும்   மாலை வேளை  மாலைப்பொழுதில் இருக்கும் நீயா என தோன்றச்செய்யும் இரவு வேளை   எத்தனை உலகம் உனக்கு   உன் உலகில் மக்கள்தொகை கணக்கெடுக்க நினைக்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்து மறைகிறான் ஒருவன் விண்மீன்களின் விளையாட்டுப்பிள்ளை எனக்கூறி ...  எத்தனை கலியுகம் கண்டாலும் இரவில் நிலவை பார்த்து உணவை உண்ணும் மழலைகள் இன்னும் பிறந்துகொண்டுதானே இருக்கின்றன ..    உனக்கும் இன்பம் துன்பம் இருக்கும் தானே   அதனாலே தானே இங்கே தேய்பிறையும் வளர்பிறையும் போலும்   என்ன செய்வது எங்கள் வாழ்வும் அப்படித்தானே   நான் சொல்வதும் சரிதானே நிலவே குறையாக இருந்தால் நீ குறையாத பௌர்ணமியாக இருந்துகொள்ளேன்..   என் மழலைக்கு சோறூட்டும்போது உன்னை புகழ்ந்து கொள்கிறேன் 30. அவர் கலியுக கர்ணனாம் எங்கே போனீர்கள்  அவர் உங்களுக்காக குரல் கொடுத்த போது  கொரோனா உங்கள் உறவுகளை பறித்த போது அவர்கள் இறுதி தூக்கத்திற்கும் இடம் கொடுத்தவரை எப்படி மறக்க மனம் வந்தது .  இருக்கும் போது நகைத்தாயே உன் சிரம் கவிழ்த்துக்கொள்   மனிதன் மனிதனாய் இருப்பது இவர்களை போல சில உள்ளம் கொண்டவர்களாலே அண்ணா விற்கும் MGR க்கும் இந்த தமிழகம் கண்டிராத கூட்டம் வெள்ளம் போல கண்ணீர் .  அறிவித்தார் வறுமை ஒழிப்பு தினமாய் அவர் கண்ணில் பசி என நினைப்பவர்கூட யாரும் இல்லா உலகமாய்   உனக்கும் எனக்கும் இந்த செல்வம் இருந்தால் உலகை மறந்து ஊரை சுற்றி வலமாய் வந்திருப்போம் .  இவர் போல யாரும் இங்கே இல்லை   அவர் ரத்தங்களுக்காவது  ஓர் வாய்ப்பை தாருங்கள் உங்களுக்காக ..  கேவலம் இந்த 200 ரூபாய்க்கு   கேவல படாதீர்கள்     விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி    31.மதுவால் உலகை அழித்திடுவோம்   எங்கள் தமிழகமாம்   எந்நேரமும் மது கிடைக்குமாம்  என்ன   10ருபாய் சில்லறை அதிகம்.   சொல்ல மறந்து விட்டேன்   எங்கள் வீட்டின் பெண்கள் யாரும் நகைகள் அணிவதேயில்லை  நாட்டின் வறுமை கருதி நாட்டின் நலனுக்காக குடிக்கும் எங்கள் ஆண்களின் தியாகத்திற்க்காக யாவையும் அடகோ விற்கவோ வேண்டிருக்கிறது.    பொங்கல் அன்று தரும் புடவைகள் வெள்ளைநிறமாக இருந்தால் இன்னும் நன்று ...  குடிப்பவர்கள் கூடி குடிக்க அந்த குடி இங்கே பல குடும்பங்களை பறிக்கிறதே எனக்கூறி அடுத்த தேர்தலிலும் எங்கள் அரசியல் தலைவர்கள் ஓட்டை கேட்பார்களே எங்கள் குடிமகன்களும் குடித்திவிட்டு ஓட்டை தானம் செய்வார்களே ...  கேவலமாகத்தானே இருக்கிறது ... எங்கள் நிலைமை  ஆமாம் யாவரும் இங்கே யாசிகளே அன்பையோ ஆறுதலையோ பண்பையோ பணத்தையோ யாரிடமாவது திரும்ப கொடுக்க முடியாதவர்கள் யாவும் இங்கே யாசகமாகி போகிறதே ...   எங்களுக்கும் உங்களிடம் கைநீட்டாதிருக்க ஆசைதான் என்ன செய்வது எங்கள் வாயும் வையறுமல்லவோ கேட்க மறுக்கின்றன...   எங்கள் பெற்றோரோ எங்கள் பிள்ளைகளோ சரியில்லைபோலும் யாரை நங்கள் குறை சொல்ல யாசித்து வாழ் என கடவுள் சொல்லும்போது ...   அமாம் சொல்ல மறந்துவிட்டேன் அவனுக்கே மனிதன்தானே மலர்களும் மகுடமும் சூடி அழகு பார்க்கிறான் ... கடவுள் தெரியமாட்டார்போலும் என்னருகில் அவரும் யாசகம் செய்வாரோ என்னவோ ...   அமாம் நங்கள் மனிதர்கள் தான் ஆனால் எங்களுக்குள் அணைக்க முடியா நெருப்பொன்று உண்டு பொறாமை . நல்லவைகள் வேண்டுமென நினைப்போம் அனால் எங்களால் அந்த நல்லவைகள் வேண்டுமென நினைக்க மாட்டோம் . ஆறுதல்களும் கூறிக்கொள்வோம் ஆள் மறைவில் மாறுதலாகவும் கூறிக்கொள்வோம் அன்பென கூறிக்கூறி தொல்லைகளும் செய்வோம் ஜாதி மதம் எனும்பேரில் கொலைகளும் செய்வோம் மாமிச உண்ணிகள் தான் நாங்களும் பேச்சென்று ஒன்று இருந்ததால் எங்களை நாங்களே மனிதர்கள் என கூறிக்கொண்டோம் .   இதுதான் இவ்வளவுதான் இதைத்தான் இப்படித்தான் என்னுடையது உன்னுடையது   சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாவற்றிற்கும் ஓர் வரைமுறை வைத்திருக்கிறோம் ஆசைகளுக்கு தவிர   அறிவியலால் என் முன்னோர்கள் சொன்ன கூற்று இன்று மூடநம்பிக்கைகளாக மாறி நிற்கின்றன   காலநிலையை பொறுத்த குறிப்புகள் இன்று மூடநம்பிக்கைகளாக பின்பற்றப்படுகின்றன அமாம் இன்று அதை நாங்கள் நொறுக்கு தீனி பையாக கூட உபயோகிப்பதில்லை யாவும் இங்க டிஜிட்டல் மையமாக மாறி போனதால் அல்ல புத்தகம் என ஒன்று இருப்பதை நாங்கள் மறந்ததால்   நீங்கள் படிப்பீர்களாயின் இந்த புத்தகத்தை புரிந்தால் பிறருக்கும் கொடுத்து மகிழுங்கள் அதுவே புத்தக உலகின் மிகப்பெரிய நன்றியுணர்வாகும் ….   உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு உங்கள் நினைவுகளையும் கவிதையாக வடித்து தரப்படும்   பாடல்களும் எழுதிதரப்படும் தொடர்புகொள்ளுங்கள்   நன்றி….     உங்கள் குறிப்புகளை நோக்கி இந்த வார்த்தைகளை வீசுகிறேன் நீங்களும் உங்கள் கருத்துக்களை இங்கே வீசிடுங்கள் Phone: 6381199415 Email: dharma786dharma@gmail.com Instagram: ilayabharathy_vlogs    []                   5. கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com  - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com  - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்.   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.     வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account