[] [மழையில் குளித்த வெயில் ] மழையில் குளித்த வெயில் விக்கி [Creative Commons License] மழையில் குளித்த வெயில் by விக்கி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted. This book was produced using Pressbooks.com. Contents - மழையில் குளித்த வெயில் - என்னோடு கரையப்போகும் முன் ..... - 1. வரிகள் 1 - 2. வரிகள் 2 - 3. வரிகள் 3 - 4. வரிகள் 4 - 5. வரிகள் 5 - 6. வரிகள் 6 - 7. வரிகள் 7 - 8. வரிகள் 8 - 9. வரிகள் 9 - 10. வரிகள் 10 - 11. வரிகள் 11 - 12. வரிகள் 12 - 13. வரிகள் 13 - 14. வரிகள் 14 - 15. வரிகள் 15 - 16. வரிகள் 16 - 17. வரிகள் 17 - நன்றியுரை - எங்களைப் பற்றி 1 மழையில் குளித்த வெயில் [Cover Image] மழையில் குளித்த வெயில் விக்கி புகைப்படம்: ராகவன்   Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND) 2 என்னோடு கரையப்போகும் முன் ..... இந்த மின்னூலை தேர்ந்தெடுத்து வாசிக்கபோகும் எல்லோருக்கும் என் ஆழ்மனதிலிருந்து நன்றிகள் .கவிதை எழுதும் பழக்கத்தை காதல் தொடங்கிவைத்ததால் என் முதல் நூலை அதோடு தொடங்குகிறேன் .   காதல் கவிதை என்றதும் அலுத்துவிடுகிறதா ?? சரி , எல்லாவற்றையும் ரசிப்பவரா ? கற்பனை பிடிக்குமா ?ஆம் என்றால் உங்களுக்காக இந்த மின்னூல் . இதில் சிலவற்றை என் சொந்த பேஸ்புக் பக்கத்தில் எடுத்தது .   வரிகளை எழுதி எழுதி நான் கரைவதுபோல் . என்னோடு சேர்ந்து நீங்கள் கரைய தொடர்கிறேன் …. “ எல்லா பொருளும் தண்ணீரில் கரையாது ! எல்லா சோகமும் கண்ணீரில் மறையாது !! ”   e-mail : msvickyms@gmail.com                               இப்படிக்கு watsapp no: +91 8807224345                    ம.சே.விக்னேஷ்வர் (எ) விக்கி [pressbooks.com] 1 வரிகள் 1 இறைவன் எண்ணிக்கைக்கு முடிவுண்டு .. எண்களுக்கு முடிவில்லை … இதை உணர்ந்தவர்களுக்கு புரிவதுண்டு … எண்ணுபவர்களுக்கு புரிவதில்லை !! ------------------------------------------------------------------------     என் அம்மாவுக்காக ஒரு உடல் இரு உயிர் அன்று … இரு உடல் ஒரு உயிர் இன்று … உன் வயிற்றில் பிறக்கத்தான் பத்து மாதம் கருவறையில் தவம் கிடந்தேனோ என் அம்மா !!! ------------------------------------------------------------------------     நானும் காதலித்தேன் காதல் என்ற வார்த்தையை அவள் காதலிக்கவில்லை … எனவே காதலிக்கவில்லை என்ற வார்த்தையை நான் காதலித்தேன் !!! ------------------------------------------------------------------------     தீண்டாமை என்னை தொட்டு பேசி விடு …. தீண்டாமை பாவச் செயலாம் !! ------------------------------------------------------------------------   2 வரிகள் 2 காதல் தவறு ! காதல் செய்வது தவறு என்ற பெண்ணே .. உன் தவறை எப்போது திருத்திக்கொள்ளப்போகிறாய் !!!   ------------------------------------------------------------------------     இசை வெற்றிடத்தில் இசை கேட்கிறது ! என் மனதில் நீ பேசிய பேச்சுக்கள் !!   ------------------------------------------------------------------------     நிறம் புல்வெளியில் தூங்கினாலும் உன் மடியில் தூங்கியதாக உணர்கிறேன் … பச்சை உனக்கு பிடிக்கும் என்பதால் !! ------------------------------------------------------------------------     தேடாதே உன் கண்ணில் மை தீட்டி வீணாக என்னைத் தேடாதே…. ஏனெனில் அங்கே தான் நான் தொலைந்தேன்!!! ------------------------------------------------------------------------     ஊனம் நீ பேசுகையில் நான் ஊமை தான்… நீ பேசாமல் இருக்கையில் நான் காது கேளாதவனும் ஆகிறேன்!! ------------------------------------------------------------------------     ஏன்னென்றால் என் மேல் மட்டும் ஏன் இந்த காதல் என்கிறாய்!! நீ என்ன காகித பூவா உன் மேல் பனித்துளி படராமல் இருக்க?? ------------------------------------------------------------------------   3 வரிகள் 3 பார்க்காதே உன் கண்ணில் பட்ட மின்னலே துடிதுடித்து சாகிறதென்றால்…. என் கதி என்ன ?? சற்று சிந்தித்துப் பார்!!! ------------------------------------------------------------------------   நினைத்தது நீ கையில் சிக்கா காற்று என நினைத்தேன் ! பின்பு தான் தெரிந்தது நீ கண்ணில் சிக்கிய தூசி என்று!! இன்று வரை உறுத்துகிறாய் கண்ணில் நின்று…. ------------------------------------------------------------------------   அறிந்தேன் அறிந்தேன்!! என் மனம் ஒரு வட்டம்! எப்படி என்கிறாயா?? அது எங்கே சுற்றினாலும் உன்னில் முடிகிறது!! ------------------------------------------------------------------------   யாசிக்கிறேன் உன் மௌன தவத்தை உடைத்து… உன்னுடன் பேசும் வரத்தை தா… இங்கு தவம் செய்பவளும் நீ ! வரம் தருபவளும் நீ!! ------------------------------------------------------------------------   அளவு அளவில்லாமல் பேசியவள்… அளந்து பார்த்து பேசுகிறாள்… அளக்க முடியாத வேதனையில் நான் !!! ------------------------------------------------------------------------   4 வரிகள் 4 ஆன்மீகம்   சிந்தித்தால் வினா! எழுதினால் ஆச்சர்யம்!! மொத்தத்தி்ல் அவளும் ஒரு ஆன்மீகம்!! ------------------------------------------------------------------------     காட்டிக் கொடுத்தது   காற்றின் உருவம் கேட்டேன் உன்னைக் காட்டியது ! நீரின் நிறம் கேட்டேன் உன்னைக் காட்டியது !! உயிர் சென்று சேரும் இடம் கேட்டேன் உன்னைக் காட்டியது !!! ------------------------------------------------------------------------     என்னில் கலந்தவள்   நீ என் சிரிப்பில் கலந்ததால் சிரிக்கிறேன் .. நீ என் அழுகையில் கலந்ததால் அழுகிறேன் … நீ என் உயிரிலும் கலந்ததால் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் என் உயிரே…. ------------------------------------------------------------------------     எல்லாம் நீ   என் உயிர் உள்ள வரை நினைத்திருந்தேன் என் உயிர் நீ தான்  என்று… என் மரணத்தின் போது தான் தெரிந்தது என் மரணமும் நீ தான் என்று …. ------------------------------------------------------------------------   5 வரிகள் 5 பெண்மை   உன் பார்வையில் கண்டுகொண்டேன் என்னையல்ல பொறுமையை ! உன் முகத்தில் கண்டுகொண்டேன் அழகையல்ல தன்னம்பிக்கையை ! உன் உதட்டில் கண்டுகொண்டேன் சிரிப்பையல்ல சிந்தனையை ! உன் நடையில் கண்டுகொண்டேன் நாணத்தையல்ல வீரத்தை ! மொத்தத்தில் உன்னிடம் கண்டுகொண்டேன் பெண்மையையல்ல வாழ்க்கையை !!! ------------------------------------------------------------------------     வருத்தம்   என்நிழலும்உன்னைவிட்டுபிரிய வருந்துமே ! உனக்கு வருத்தமில்லையா?? ------------------------------------------------------------------------     மறந்திடுமா ?   கண்மூடினால் நடப்பது நின்றிடுமா? என் கண்ணுக்கு எட்டாத இடம் சென்றால் உன் நினைவு மறந்திடுமா ?? ------------------------------------------------------------------------     அவளின்பொட்டு   இரண்டு வானவில்லுக்கு நடுவில் ஒளிராத நிலா !!! ------------------------------------------------------------------------   6 வரிகள் 6 அவளின் பெயர்   மூன்றெழுத்தில் கவிதை அம்மா என்றால் மூன்றெழுத்தில் மூன்று கோடி கவிதை அவளின் பெயர் !! ------------------------------------------------------------------------     நான் கொண்டு வரவா ??   மின்னலின் கிளையினில் பூக்கும் பூக்களை கொண்டு வரவா ?? என் காதலை சொல்லும் போது ??? ------------------------------------------------------------------------     ஆனால்   உன் அழகால் நான் உன்னை காதல் செய்ய நினைத்தேன் .. ஆனால் .. உன் அன்பால் என்னை உன் அடிமையாக்கிவிட்டாய் … ------------------------------------------------------------------------     நினைவுப்பரிசு   உனக்காக நான் வாங்கிய என் நினைவுப்பரிசு …. நீ ஏற்க மறுத்ததால் அது உன் நினைவுப்பரிசு ஆனதோ !! ------------------------------------------------------------------------     ஓவிய மேகம்   வானமும் உன் முகத்தை வரைந்து பார்க்க ஆசைப்படுகிறதோ ?? மேகங்களாய் அதன் தோற்றத்தை மாற்றி … ------------------------------------------------------------------------   7 வரிகள் 7 கிரகணம்   உன் கண்கள் என்ன சூரிய கிரகணமோ ? உன் கண்கள் பார்த்த பின்பு  தான் பார்வைக்கு பதிலாக என் மனதை இழந்தேனோ ??? ------------------------------------------------------------------------      உன்னை தேடும் பறவை   அலைந்து திரிந்து பறக்கும் பறவைகளுக்கு என்றும் வியர்ப்பதில்லை …. உன்னைக் காணவே வெளியில் அலையும் எனக்கு என்றும் சோர்வு வருவதில்லை ! ------------------------------------------------------------------------     ஐம்பூதம்   தூக்கி எறிந்தேன் என் காதலை தூக்கி எறிந்தாலும் பூமியை விட்டு மறையவில்லை ! எரித்துவிட்டேன் என் காதலை எரித்தாலும் அதில் உள்ள அன்பு பிரியவில்லை ! தலை மூழ்கிவிட்டேன் என் காதலை தலை மூழ்கினாலும் அவளின் நினைவு கரையவில்லை ! தென்றலோடு பறக்கவிட்டேன் என் காதலை காற்றோடு விட்டாலும் அவளின் வார்த்தை என்னை விட்டு நகரவில்லை ! புதைத்துவிட்டேன் என் காதலை புதைத்தாலும் காதலின் பொக்கிஷம் மக்கவில்லை ! ------------------------------------------------------------------------   8 வரிகள் 8 தேங்கி நிற்கும் நாட்கள்   உன்னை எண்ணியே எழுதும் எழுத்துக்கள் கவிதைகளாய் ஓடிவிட … உன்னை நினைத்தே  வாழும் நாட்கள் கவலைகளாய்  தேங்கி நிற்கிறதே …. ------------------------------------------------------------------------   காத்திருப்பேன்!   சொல்லிய காதல் சில நேரம் வருங்காலமாக மாறலாம் … சொல்லிய காதல் சில நேரம் இறந்தகாலமாக மாறலாம் …. சொல்லாத காதல் என்றும் நிகழ்காலமே … காத்திருக்கும் எந்த காலத்திலும் !!! ------------------------------------------------------------------------     அவளுக்கு பிடித்ததும் பிடிக்காததும்   சூரியன் பிடிக்குமாம் ஒளி பிடிக்காதாம் ! மயில் பிடிக்குமாம் தோகையை பிடிக்காதாம் ! விண்மீன்கள் பிடிக்குமாம் மின்னுவது பிடிக்காதாம் ! மலர்கள் பிடிக்குமாம் தேன் பிடிக்காதாம் ! இயற்கை பிடிக்குமாம் வியக்க பிடிக்காதாம் ! மழை பிடிக்குமாம் மேகம் பிடிக்காதாம் ! வண்ணங்கள் பிடிக்குமாம் வானவில் பிடிக்காதாம் ! கவிதை பிடிக்குமாம் ரசிக்க பிடிக்காதாம் ! என் பேச்சுக்கள் பிடிக்குமாம் கேட்க பிடிக்காதாம் ! என் பார்வை பிடிக்குமாம் பார்க்க பிடிக்காதாம் ! என்னை பிடிக்குமாம் என் காதலை  பிடிக்காதாம் ! ------------------------------------------------------------------------   9 வரிகள் 9 கரைந்துவிடும்   என் உயிரில் நீ வாழ்வது சர்க்கரையில் ஒட்டிய மன் போல … மன்னை அகற்ற நினைத்தால் சர்க்கரை கரைந்துவிடாதா ?? ------------------------------------------------------------------------     சொர்க்கமா ?? நரகமா ??   என் மரணத்தின் பின்பு உன் மனதோடு வாழ்ந்தால் அதுவே சொர்க்கம் !! என் மரணத்தின் பின்பு  உன் மனதிலிருந்து மரணமடைந்தால் அதுவே நரகம் !!! ------------------------------------------------------------------------     ஜல்லிசை ! உன் காலுக்கும் இசையை கற்றுவித்திரிக்கிறாயோ !! பல இசை விருதுகள் உன் காலடியில் உன் கொலுசு ஜல்லிசையில் !!! ------------------------------------------------------------------------     அமுதம்   அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பார்கள் ! நான் அளவுக்கு மீறி காதலித்ததால் தான் நீயும் நஞ்சாகி போனாயோ ?? ------------------------------------------------------------------------   10 வரிகள் 10 இயற்கை   நீ கூந்தலில் சூடிய பூவையும் … மலையில் விழும் நீர்வீழ்ச்சியையும் … எனக்கென்னவோ இரண்டாக பார்க்கத் தெரியவில்லை!!! ------------------------------------------------------------------------     மொத்தத்தின் மீதம்   மௌனத்தின் மீத வார்த்தை உந்தன் மொழியா ? கவிதையின் மொத்த சுவை உந்தன் சிரிப்பா ? கதிரவனின் மீத வெயில் உந்தன் நிறமா ? இரவின் மொத்த இருளும் உந்தன் களைப்பா ? ------------------------------------------------------------------------     விழியஞ்சல் தினமும் சோதனை செய்யமாட்டாயா ? கோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும் என் விழியஞ்சல் உன் கண்ணில் !!! ------------------------------------------------------------------------     எது அழகு ? தொலைவில் இருக்கும் நிலவழகா ? அருகில் இருக்கும் நீயழகா ? பட்டிமன்றம் நடத்தும் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனின் விழிகள் !!! ------------------------------------------------------------------------   11 வரிகள் 11 உண்மை   உண்மையில் நான் ஹரிச்சந்திரன் இல்லை ! உன் அழகைப் பற்றி வர்ணிக்கும் போது மட்டும் தவிர !! ------------------------------------------------------------------------     சுத்தம்   கங்கை அசுத்தமாகிவிட்டதாம் ! ஒருமுறை நீ அதில் குளித்துவிட்டு போ …. சுத்தமாகிவிடும் !! ------------------------------------------------------------------------     கவிதை நோட்டு   உன் பெயரை என் நோட்டில் எழுதி சென்றாய் ! அன்று முதல் இன்று வரை அதுவே என் முதல் கவிதை நோட்டு !! ------------------------------------------------------------------------     பெயர்   நீயோ உன் பெயர் வேறேதோ சொல்கின்றாய் ! எல்லோரும் உயிர் பறிப்பதெல்லாம் எமன் என்கிறார்கள் !! ------------------------------------------------------------------------     காலம்   காலம் பொன் போன்றதாம் ! எனவே அதை உனக்கு அலங்கரித்தே ரசிக்கிறேன் !! ------------------------------------------------------------------------   12 வரிகள் 12 உன்னைத் தேடி   என் மூச்சு வேண்டுமானாலும் ஆக்ஸிஜனை தேடலாம் ! ஆனால் என் விழி என்னவோ உன்னைத் தேடியே !! ------------------------------------------------------------------------     மை   என் ஆண்மை அவளின் பெண்மை சேர்ந்தது போல் !! என் பேனா மை  அவளின் கண்மை சேர்ந்ததால் இதோ “கவிக்குழந்தை” !!! ------------------------------------------------------------------------     கருந்துளை   அதென்ன கண்களில் கருவிழியா ? கருந்துளையா ? யோசிக்க தொடங்கியவர்கள் யாரும் தப்பியதில்லை … அதில் நானும் ஒருவன் …. ------------------------------------------------------------------------     ஏமாறுகிறேன்   ஏமாறுகிறேன் எனத் தெரிந்தே ஏமாறுகிறேன் … நிலவு தரையிறங்கும் என்று உணவு உண்ணும் பிள்ளைப் போல !!! ------------------------------------------------------------------------     தனி உலகம்   தினமும் கனவுலகில் உன்னை பதிவிறக்கம் செய்து … இவ்வுலகில் தரையிறக்குவேன் !! இங்கு நீயும் நானும் மெய்நிகரின்(virtuality) மெய் !!! ------------------------------------------------------------------------   13 வரிகள் 13 என் எழுத்து   உன் பெயரை எழுதி தவழ்ந்துக் கொண்டிருந்த என் எழுத்துக்கள் .. கவிதைகளாய் எழுந்து ஓடுகின்றது உன் கன்னக்குழியை நோக்கி !! ------------------------------------------------------------------------     விளையாட்டு   என் விழிகளில் பயணித்து இமை எனும் கடற்கரையில் நின்று கண்ணீரில் கால் நனைத்து விளையாடுகிறாய் … பொழுதுபோகவில்லையா ?? ------------------------------------------------------------------------     உன் தாகம்   என் கண்ணீர் உன் தாகத்தை  தீர்க்குமெனில் உன் தாகம் தீரும் வரை நான் அழுவேன் !! ------------------------------------------------------------------------     கவிதை ரகசியம்   உனக்கே தெரியாமல் கவிதை எடுக்கிறேன் கவிதை களஞ்சியம் உன் கண்கள் !! உனக்கே தெரியாமல் கவிதையை களவாடுகிறேன் கவிதைகளின் ரகசிய அறை உன் நினைவுகள் !! ------------------------------------------------------------------------   14 வரிகள் 14 எங்கும் நீ   என்னையே பார்த்துக்கொண்டே இருக்கிறான்  என்று சொல்கிறாயே ! எங்கும் நீயாகவே தெரிகிறாய் இதை நான் எங்கு போய் சொல்வது ?? ------------------------------------------------------------------------      நீ… நான்   விண்ணாக நான் மழையாக நீ  ! கோபுரம் நான் சிலையாய் நீ ! கரும்பாக நான் தேனாக நீ ! கடலாக நான் அலைகளாய் நீ ! பள்ளமாக நான் மேடாக நீ ! உடலாக நான் உயிராக நீ ! நீயின்றி நானில்லை … நான் இருந்தாலும் மதிப்பில்லை !!! ------------------------------------------------------------------------     காதல் கணிதம்   உன் விழி வட்ட பாதையில் என் காலத்தை கழித்து கொண்டிருக்க.. நீ என் காலத்தை பெருக்கிக்கொண்டே போனால் என்ன அர்த்தம் ?? ------------------------------------------------------------------------      முடியாதவை   உன் அழகு … நீரின் சுவை … இவ்வுலகில் யாராலும் விவரிக்க முடியாதவை !! ------------------------------------------------------------------------   15 வரிகள் 15  போகமாட்டேன்   நீ கடந்து போன மேகம் என்றாலும் .. நான் கடந்து போகா வானம் !! ------------------------------------------------------------------------     கற்பனை கதவு   என் காதல் கற்பனை கவிதையின் கடவுச்சொல் நீ ! கற்பனையின் கதவும் நீ !! ------------------------------------------------------------------------     என் பார்வை   DSLR – நிழற்படக்கருவி எல்லாம் அதன் வில்லை சரிபார்த்துக்கொள்ளும் … என் பார்வையே உன்னை அழகாக படம் எடுக்கும்போது !!! ------------------------------------------------------------------------     இருந்தாலும் மயில் இறகு அழகாய் இருந்தாலும் பூ ஜாதி இல்லை !! பூவே நீ அழகாய் இருந்தாலும் மலர் ஜாதி இல்லை !! பெண் ஜாதி .. நீயடி !!! ------------------------------------------------------------------------   16 வரிகள் 16 காதல் குழந்தை   பிரசவித்த குழந்தை அழுவதால் உணர்த்துகிறது “நான் உயிரோடு இருக்கிறேன்” என்று ! பிரசவித்த காதல் இப்போது அழுவதால் உணர்கிறேன் “என் காதல் உயிரோடு இருக்கிறது” என்று ! ------------------------------------------------------------------------     எனக்கு பிடித்தது   பித்து பிடித்து போனதால் உன் பின்னே அலைந்த காலம் உண்டு ! பித்து பிடித்துப்போனதால் பிதற்றி தள்ளுகிறேன் இன்று ! ------------------------------------------------------------------------     நினைவிருக்கிறது …   என் மனைவி நீ என பதிவு செய்த நாள் ! என் உயிரின் மறுபாதி இவ்வுலகை கண்ட நாள் ! குழம்பாதே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்புக் காதலி !!! ------------------------------------------------------------------------     நாட்டுக்காக மன்னுக்கு இறையாகாதே இறந்த பின் ! மன்னுக்காக இறையாகு  இறக்கும் முன் !!! ------------------------------------------------------------------------   17 வரிகள் 17  என் பெயர் … நான் மொழி வெறியன் அல்ல … மொழியின் சுவைக்கு அடிமையானவன் !   நான் மதத்திற்கு எதிரானவன் அல்ல… சமரசத்தை என்றும் விரும்புபவன் !   நான் பிற கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகாதவன் அல்ல … இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவன் !   நான் செயற்கையை வரவேற்காதவன் அல்ல … இயற்கையை அணு அணுவாய் ரசிப்பவன் !   நான் வெற்றிக்கு உழைக்காதவன் அல்ல … சிறு உணர்ச்சிக்கும் வீழ்பவன் !   கடவுளை அடுத்து நான் மட்டுமே “வேறு உலகில் அதிக நேரம் வாழ்பவன் ” கற்பனைக்கு அப்பாற்பட்டவன் …   என் பெயர் கவிஞன் !! -தொடரும் ------------------------------------------------------------------------   1 நன்றியுரை என்னோடு சேர்ந்து மழையில் நணைந்து கரைந்தவர்களுக்கும் , என்ன எழுதியிருக்கிறான்?? என ஏமாற்றமடைந்தவர்களுக்கும் இந்த மின்னூலை வாசித்ததற்காக என் முதல் நன்றிகள் . ஏமாற்றமடைந்திருந்தால்  மன்னிக்கவும். பிடித்திருந்தால் பகிரவும் .   உங்களுக்கு பிடித்திருந்தால் முதலாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Mail, Watsapp –ல் கருத்துக்களை தெரிவிக்கலாம் .   இந்நூலை உருவாக்க உதவிய கா.பாலபாரதி, அன்வர்  அவர்களுக்கும் அனைத்து மின்னூல் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் . 2 எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/