[] 1. Cover 2. Table of contents மனதில் தோன்றியவை மனதில் தோன்றியவை   கவின் பிரகாஷ்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - கவின் பிரகாஷ் - prakashcool2016@outlook.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/manathil_thondriyavai மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: கவின் பிரகாஷ் - prakashcool2016@outlook.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Kavin Prakash - prakashcool2016@outlook.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/manathil_thondriyavai This Book was produced using LaTeX + Pandoc முன்னுரை சில வருடங்களாக அவ்வப்போது மனதில் தோன்றிய விஷயங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரைப் புத்தகம். முதல் முதல் இடம், முதல் வேலை, முதல் காதல், முதல் தேதி என எல்லாவற்றிலும் முதல் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம். கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுப்பது தான் பல மேட்ச்சுகளில் திருப்புமுனையாக அமையும். அதுவும் முதல் பந்தில் முதல் விக்கெட் என்றால் இன்னும் சிறப்பு. இரயில் பயணங்களில் புத்தகங்கள் விற்பது, பொம்மைகள் விற்பது, திண்பண்டங்கள் விற்பது என பல வியாபாரிகளைப் பார்த்திருப்போம். ஒரு பெட்டியில் முதல் பொருளை விற்கும் வரை தான் அவருக்கு கொஞ்சம் சிரமம். யாராவது ஒருவர் ஒரு பொருளை வாங்கினால், பிறகு ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்து விடும். முதலில் வரும் வாய்ப்பை சரியாக உபயோகப்படுத்தினால் பின் வருந்த வேண்டி இருக்காது. கிடைத்த வாய்ப்பை தாமதிக்காமல் பயன்படுத்தி உலகப் புகழ் பெற்றவர்களும் உண்டு. ‘நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது யார்’ என கேட்டால் உடனே பதில் சொல்லி விடுவீர்கள், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று. ஆனால் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் எட்வின் ஆல்ட்ரின், நிலவுக்கு சென்ற அப்போலோ விண்கலத்தின் பைலட். ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்படையில் பணிபுரிந்தவர், மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர், மிகவும் தைரியசாலியான ஆம்ஸ்ட்ராங் இணை விமானியாக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நிலவை நோக்கி அப்போலோ விண்கலத்தில் பயணித்தனர். விண்கலம் நிலவை அடைந்ததும், நாசாவிலிருந்து ‘பைலட் பர்ஸ்ட்’ என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரின் மனதில் சின்ன தயக்கம். ‘நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைக்கிறோம்; புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் இருக்கிறோம்; கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது; புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால்? எரி மணலாக இருந்து காலை பொசுக்கி விட்டால்? தயக்கத்தில் நிறைய நேரம் தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ’கோ-பைலட் நெக்ஸ்ட்’. கட்டளை வந்த அடுத்த நொடி நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார். உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலில் வருபவரை மட்டும் தான் இந்த உலகம் நினைவில் வைத்துக் கொள்ளும் என்பதில்லை. தயக்கம், பயம் இவை இரண்டும் நம் வெற்றியை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இப்படி எல்லாவற்றிலும் முதலுக்கே தனிச்சிறப்பு என்பதால் இந்த இரண்டு, மூன்று மற்றும் மற்ற நம்பர்கள் எல்லாம் என்ன சார் ஆவது என நீங்கள் நினைக்கலாம். இரண்டாம் இடத்தில் ஒருவர் இருப்பதனால் தான் மற்றவருக்கு முதல் இடம் கிடைக்கிறது. அதனால் மற்ற இடங்களும் சிறந்த இடங்கள் தான் என்றாலும் முதலுக்கே முன்னுரிமை எனப் பழகிவிட்டோம். மாற்று வழி இப்பொழுது உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி. 10 பேர் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தவர் இரண்டாவது வீரரை முந்தி ஓடினால் எந்த இடத்தை அடைந்திருப்பார்? முதலிடம் என நம்மை அறியாமல் சொல்வோம், ஆனால் அவர் இப்பொழுது இரண்டாவது இடத்தைத் தான் பிடித்திருப்பார். ஏனெனில் அனைவருக்கும் முன்னால் ஒருவர் ஓடிக் கொண்டிருக்கிறார். சில நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது தான் தமக்கு பிடித்திருக்கிறது என்பார்கள். ஏனென்றால் அப்பொழுது தான் முதலிடத்தை அடைவதற்கான பயிற்சியும், முயற்சியும் எப்பொழுதும் இருக்கும் என்பார்கள். வெற்றி பெறுவதற்கு இரண்டாவது வழி அதாவது மாற்று வழி இருக்கவே செய்கிறது. மாற்று வழிச் சிந்தனைகளை ஆங்கிலத்தில் lateral thinking என்று அழைக்கிறார்கள். இந்த வார்த்தையை அறிமுகப்படுத்திப் பிரபலமாக்கியவர் எழுத்தாளர் எட்வர்ட் டி பொனே (Edward De Bone). எந்த ஒரு வேலையையும் இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு நேர்வழி முறை இருக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்றி யோசிப்பதை தான் மாற்று வழிச் சிந்தனை என அழைக்கிறோம். அமெரிக்காவில் டெலிபோன் டைரக்டரி புத்தகத்தை அச்சிட்டு உலகம் முழுவதும் அனுப்பும் ஒரு நிறுவனத்திற்கு மாதம் தபால் செலவு மட்டும் பல லட்சங்களைத் தாண்டும். திடீரென்று அந்த நிறுவனத்திற்கு பெரிய பணப் பிரச்சனை வந்தது. செலவுகளை சமாளிக்க ஊழியர்கள் தலையில் கை வைக்க நினைத்து நூறு பேரை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் இருந்தது நிறுவனம். அந்நிறுவனத்தின் சாதாரண ஊழியர் ஒருவர் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யாமல் தபால் செலவை குறைப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம் என யோசனை கூறினார். அப்போது அவர்கள் அச்சிட்ட புத்தகங்களின் சராசரி எடை 510 கிராம். ஒரு புத்தகத்தை தபாலில் அனுப்பும் போது அது 500 கிராம் எடைக்கு அதிகமாக இருந்தால் 50 ரூபாயும், 500 கிராமுக்கு குறைவாக இருந்தால் 20 ரூபாயும் செலவு ஆனது. செலவைப் பாதிக்கு மேல் குறைக்கும் பொருட்டு புத்தக எடையை குறைக்க அனைவரும் ஆராய்ச்சி செய்தனர். இங்குதான் மாற்றுச் சிந்தனை முறை கை கொடுத்தது. தாங்கள் அச்சிடும் புத்தகத்தின் ஓரத்தை ஐந்து மில்லி மீட்டர் அகலத்துக்கு வெட்டினால் இருபது கிராம் எடை குறையும் என்று கண்டுபிடித்தார் அந்த ஊழியர். இந்த யோசனையை செயல்படுத்தினால் நிறுவனத்திற்கு சில லட்சம் ரூபாய் சேமிக்க முடியும் என்பது உறுதியானது. இந்த சிந்தனையால் நிர்வாகத்துக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். மாற்று வழியில் சாதித்து வெற்றி பெற்ற இன்னொருவரின் கதை இது. ஒரு இளைஞன் பிரபலமான சாப்ட்வேர் கம்பெனிக்கு இன்டர்வியூ சென்றான். நேர்காணலில் திறம்பட செயல்பட்டாலும் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்களின் மின்னஞ்சல் முகவரி அதாவது ஈமெயில் ஐடி என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. இளைஞரிடம் ஐடி இல்லாததால் வேலைக்கு தேர்வாகவில்லை. சோகமாக வெளியே வந்தவன் சிறிது நேரம் அருகில் இருந்த வெங்காயக் கடைக்கு முன் நின்று கொண்டிருந்தான். எதேச்சையாக வெங்காய வியாபாரத்தை கவனித்ததில் கடை முதலாளிக்கு நல்ல விற்பனையும், லாபமும் கிடைப்பதைக் காணமுடிந்தது. சற்றும் தாமதிக்காமல் தானும் வெங்காய வியாபாரத்தில் ஈடுபட நினைத்தான். சொற்ப முதலீட்டில் சின்னக் கடையை ஆரம்பித்தவன் வியாபார யுக்தியைக் கற்றுக் கொண்டு சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தான். சில வருடங்களிலேயே அந்த ஊரின் மிகப்பெரிய வெங்காய வியாபாரி ஆனான். செல்வம் பெருகப் பெருக வங்கியில் கணக்குத் தொடங்கி சேமிக்க ஆசைப்பட்டான். அருகில் உள்ள வங்கிக்குச் சென்று கணிசமான தொகையை வைப்பு வைக்க விசாரித்தான். உடனே ஒரு விண்ணப்ப படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னார் வங்கி மேலாளர். அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின் மின்னஞ்சல் முகவரி கேட்கப்பட்ட இடத்தில் காலியாக விட்டான். மேனேஜர் கேட்டார், “ஈமெயில் ஐடி இல்லாமலேயே இவ்வளவு பெரிய வியாபாரியாகி செல்வந்தர் ஆகிவிட்டீர்களே உங்கள் பெயரில் ஒரு ஈ-மெயில் ஐடி மட்டும் இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் ஆகி இருப்பீர்கள்?” என்று. அதற்கு இளைஞன் சொன்னான், “ஒன்றும் ஆகியிருக்காது, பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் ஒரு சாதாரண ஊழியராக இருந்திருப்பேன்”. ஆக குறையாக பார்க்கப்பட்ட ஒரு முக்கியமில்லாத விஷயத்தை உதாசீனப்படுத்தி வெற்றி பெற்றதற்கு இளைஞனின் மாற்றுச் சிந்தனையே காரணம். புகழ் பெற்ற திருடன் ஒருவன் இருந்தான். அவனுடைய மகனுக்கு அப்பாவின் தொழில் நுணுக்கம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. தன் விருப்பத்தை அப்பாவிடம் சொல்ல, திருடனும் அன்றிரவு திருடக் கூட்டி செல்வதாக உறுதி அளித்தான். இரவு ஒரு பெரிய வீட்டின் உள்ளே இருவரும் புகுந்தனர். துணிமணிகள் இருந்த அறையில் மகனை உள்ளே அனுப்பி அவைகளை எடுத்து வரச் சொன்னான். மகன் உள்ளே போனதும் கதவை வெளியே தாளிட்டு விட்டு வீட்டில் அனைவரையும் எழுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக தன் வீட்டுக்கு வந்து விட்டான் திருடன். மறுநாள் காலை, களைப்புடனும், கோபத்துடனும் மகன் வருவதை கண்டான் திருடன். “அப்பா” என்று கத்திக் கொண்டே வந்தவன், “எதுக்கு என்னை அறையில பூட்டி விட்டு வந்தீங்க? நான் மட்டும் சாமர்த்தியமாக தப்பிச்சு வரலைன்னா, என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?” என்றான். அதுக்கு அப்பா திருடன் சொன்னான், “இது தான் மகனே தொழிலின் அடிப்படைப் பயிற்சி”. இந்தப் பயிற்சியும், முயற்சியும் எப்படி இருக்கு?. கல்வி மழைக் கால மண் வாசனை மாதிரி எப்போது நினைத்தாலும் சந்தோஷமான உணர்வு வருவது பள்ளிக் கால வாழ்க்கையை நினைக்கும் போது தான். ஒவ்வொருவருக்கும் பள்ளிகள் ஏட்டுப்படிப்புடன் வெவ்வேறு பாடங்களை, அனுபவங்களைத் தந்திருக்கும். இப்போதும் பள்ளி மாணவர்களை பார்க்கும் போது இன்னமும் மாணவர்களாகவே இருந்திருக்கலாம் என்று கூட தோன்றும். ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் நான் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு பள்ளி மாணவர்கள் நிறுத்தி லிப்ட் கேட்டார்கள். நானும் வண்டியை நிறுத்தி ‘இரண்டு பேரும் என்னுடன் வர முடியாது, யாராவது ஒருத்தர் என் கூட வாங்க’ என்றேன். ‘சரி அண்ணா’ என்று கூறி விட்டு ஒருவன் ஏறி உட்கார்ந்தான். பள்ளி வந்ததும் வண்டியை நிறுத்தினேன், பார்த்தால் இரண்டு பேர் இறங்கி ஓடினார்கள். நான் ஹெல்மெட் போட்டிருந்ததால் என் பின்னால் இருவரும் உட்கார்ந்து இருந்ததை கவனிக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே வண்டியை கிளப்பினேன். சிறு வயதில் நமக்கு இருக்கும் விளையாட்டுத்தனம், துடுக்குத்தனம் பெரியவர்களானதும் பொறுப்புகள் வருவதால் மறைந்து ஒரு பக்குவம் வந்து விடுகிறது. ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அம்மா, அப்பா காலை கட்டிக்கொண்டு அழுவதில் தொடங்கி புது புத்தக வாசனையை முகர்ந்து கொண்டு படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தி, பிடித்தமான நண்பர்களையும், ஆஸ்தான ஆசிரியர்களையும் உருவாக்கிய பள்ளிகள் என்றும் நினைவில் இருக்கும். என் அப்பா ஒரு அரசு ஊழியர் என்பதால் அவ்வப்போது ஏற்படும் பணி மாற்றத்தால் கிண்டர் கார்டன், மெட்ரிகுலேஷன், அரசு பள்ளி என வெவ்வேறு பள்ளிகளில் படித்த அனுபவம் எனக்கு உண்டு. எப்படி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு ஆஸ்தான ஆசிரியர் இருப்பாரோ, அது போல ஆசிரியர்களுக்கும் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக்கவனம் இருக்கும். ஆசிரியர்கள் தன்னை நோக்கி பாடம் எடுக்கிறார் என்ற பிரமையும் மாணவனுக்கு இருக்கும். முன்பெல்லாம் அரசு பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி என இரண்டே வகை பள்ளிகள் தான் இருந்தன. இப்பொழுது என்னவென்றால் CBSE, ICSE, மாண்டிசோரி, மெட்ரிகுலேசன், சமச்சீர் கல்வி திட்டம், அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி என கல்வி முறையில் பல சாய்ஸ்கள் உள்ளன. கல்வி ஒருவனை பண்பட்ட மனிதனாக்கும் என்பது உண்மை என்றால் பழங்காலத்தை விட இப்போது குற்றங்கள் குறைந்துள்ளனவா? நாகரீக வளர்ச்சி ஒரு புறம் இருக்க அதற்கேற்ப புது வகையான குற்றங்களும் மோசடிகளும் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே ஏட்டுக் கல்வியுடன் போதனை வகுப்புகளுக்கான தேவையும் உண்டு என்று உணர வேண்டிய தருணம் இது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் மனதளவில் நிறைய வேறுபாடுகள் இருக்கும். கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதும், ஆங்கிலம் பேச தடுமாறுவதும் சாதாரணமாக நடப்பவை தான். ஆனால் மனதில் முயற்சியும், நம்பிக்கையும் இருந்தால் அவர்கள் ஒரு போதும் நகரத்து ஆங்கில பள்ளி மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளியில் படித்து இன்று உலகம் போற்றும் தலைவர்களாகி இருப்பவர்களே இதற்கு உதாரணம். அரசுப் பள்ளியில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக முன்னேறிய நாதெள்ளா சத்யா சொல்வதை கேளுங்கள். ‘எனது கல்வி ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆரம்பித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பில் முடிந்தது. அதன் பின் கடைநிலை ஊழியராக ’சன் டெக்னாலஜி’ யில் சேர்ந்தேன். 1992- ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அதன் தலைமை செயல் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆனால் இந்த முன்னேற்றத்தை அடைய நான் பட்ட கஷ்டங்கள் பல. பள்ளியில் சுமாராகப் படித்தாலும் நான் என்றுமே கற்பவன்!’ எப்போதும் கற்றுக் கொண்டே இருப்பதும், திறமையை வளர்ப்பதுமாக இருந்தால், உச்சத்தை எட்ட முடியும்!. ஒரு சின்னக் கதை! ஒரு பையன் யோகா வகுப்பில் சேர்ந்தான். மறுநாள் குரு கிட்ட ’தியானம் ரொம்ப கொடுமையா இருக்கு குருஜி! மனசு அலை பாயுது, கால் வலிக்குது, தூக்கமா வருது’னு சொன்னான். ‘இது கடந்து போகும்!’ என்றார் குருஜி. ஒரு வாரம் போச்சு பையன் மறுபடியும் குரு கிட்ட வர்றான். ‘தியானம் ரொம்ப அருமையா இருக்கு, குருஜி! மிகவும் ஆழமாக, அமைதியாக, உயிரோட்டமாக உணர்கிறேன்’ என்றான். ‘இதுவும் கடந்து போகும்’ என்றார் குருஜி. அனுபவம் என்பது தலை வழுக்கையான பிறகு கிடைக்கும் சீப்பை போன்றது. வைரஸும் விழிப்புணர்வும் எனது அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் மேனரிசம் கவனிக்கும் பொழுது வித்தியாசமாக இருக்கும். நடக்கும் போது கைகள் இரண்டையும் தன் நெஞ்சுக்கு அருகில் வைத்துக் கொண்டு நடப்பார். அனாவசியமாக எங்கும் கை வைக்க மாட்டார். கதவுகளை திறக்கும் பொழுது யார் கையும் படாத இடத்தில் கையை உயரமாக வைத்து தள்ளுவார். அடிக்கடி ரெஸ்ட் ரூம் சென்று கைகளை சோப் வாஷ் போட்டுக் கழுவி கொண்டிருப்பார். யாருடனும் கை குலுக்கமாட்டார், நாங்கள் கொடுக்கும் அறிக்கைகளில் கையெழுத்து போடும் பொழுது கூட பட்டும் படாமல் நாசூக்காக போடுவார். இதையெல்லாம் மூன்று வருடமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் கை வைக்கும் இடங்களில் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். அதைத் தொட்டு நாம் நோயாளியாக வேண்டாம் என்ற அவரது முன்னெச்சரிக்கை நடவடிக்கையே நான் மேலே சொன்ன அனைத்தும். இன்று உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் நாம் அனைவரும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிய வேண்டிய தருணம் இது. மக்களிடையே விழிப்புணர்வு ஓரளவு வந்திருக்கிறது என்பதை கவனித்து பார்க்கும் பொழுது தெரிகிறது. வீட்டின் வெளியே வாளி நிறைய டெட்டால் கலந்த நீரையோ, மஞ்சள் கலந்த நீரையோ காண முடிகிறது. வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் பொழுது கை கால் அலம்பி விடும் பழக்கம் நம்மிடையே இருந்த ஒன்றுதான். நாகரீக வளர்ச்சியில் மறைந்து விட்டு மீண்டும் பழக்கத்திற்கு வந்திருக்கிறது. இனி மக்கள் கும்பல் கும்பலாக வெளியிடங்களில் கூடுவதிலும், தேவையில்லாமல் வெளியில் உணவு சாப்பிடுவதிலும் ஓரளவு சுயக்கட்டுப்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பஸ் பயணங்களில் கம்பியை தொடுவது, அடுத்தவருடன் கை குலுக்குவது, பொதுப் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களை கையாளும் பொழுது என்று அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு மக்கள் இருப்பார்கள் என்றே நம்புவோம். வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது அத்தியாவசிய பணிக்கு வெளியே செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்தோ, கைக்குட்டையை முகத்தில் மூடியோ உலாவுவதை காணமுடிகிறது. முகக்கவசங்களுக்கு திடீர் தட்டுப்பாடு வர அவைகளை பதுக்கும் வியாபாரிகள் பற்றிய செய்திகளும் வரத்தான் செய்கின்றன. அதிக லாபம் சம்பாதிக்க முகமூடிகளை பதுக்குபவர்களைத் தான் உண்மையான முகமூடி கொள்ளையர்கள் என்று சொல்ல வேண்டும். போலியோ வைரஸ் உருவாக்கிய தாக்கத்தால் உலகெங்கிலும் போலியோ நோயின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அரசாங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று போலியோ நோய் ஒழிக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். ஒரு சிறுவனுக்கு நாய்க்குட்டி ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை. நாய் வியாபாரியிடம் சென்று நாய்க்குட்டிகளை காண்பிக்கச் சொன்னான். நாய்க்குட்டிகளை காண்பித்த வியாபாரி ஒரு குட்டியின் விலை 250 ரூபாய் சொன்னார். பையனிடம் இருந்ததோ நூறு ரூபாய்தான். ஒரு நாய்க்குட்டி மட்டும் மற்ற குட்டிகளிடம் சேராமல் தவ்வித் தவ்வி தனியாக நின்று கொண்டிருந்தது. காரணம் கேட்ட சிறுவனிடம் கடைக்காரர் சொன்னார் ‘தம்பி, அந்த நாய்க்குட்டிக்கு கால் ஊனம், அதை யாரிடமும் விற்க முடியாது’ என்று. சிறுவன் சொன்னான், ‘பரவாயில்லை அண்ணா, நான் வாங்கிக் கொள்கிறேன். அதுவும் 250 ரூபாய் கொடுக்கிறேன். இப்ப 100 ரூபாயும் மாத மாதம் மிச்ச பணத்தையும் கொடுத்து விடுகிறேன்’. கடைக்காரர் ‘தம்பி, அந்த நாய்க்குட்டி உன்னிடம் ஓடியாடி விளையாட முடியாது, உனக்கு ஏமாற்றமாக இருக்கும்’ என்றார். உடனே சிறுவன் தன் பேண்டை தூக்கி போலியோ பாதிக்கப்பட்டிருந்த காலை காண்பித்தான். அந்த நாய்க்குட்டியை புரிந்து கொண்டு விளையாட்டு காண்பிக்க தன்னால் மட்டும் தான் முடியும் என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றான். . பொதுவாக ஒரு உயிர்கொல்லி வைரஸ் தோன்றும் இடம் குறித்து எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட விரும்பாத நிலையில் அவை எப்படி உருவாகின்றன என்ற கேள்வி நம்மிடையே எழத்தான் செய்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பல்வேறு புவியியல் மாற்றத்தால் புது புது வைரஸ்கள் மனிதனைத் தாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இன்று உலக மக்கள் தொகை 700 கோடி. முதல் 100 கோடி ஜனத்தொகையை எட்ட இந்த பூமிக்கு 3 லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் 100 கோடியில் இருந்து 700 கோடியை தொட சில நூற்றாண்டுகளே தேவைப்பட்டுள்ளது. ஒட்டகம், பன்றி, வவ்வால், மீன் போன்ற விலங்குகளிலிருந்து தான் புது புது வைரஸ்கள் மனிதனை தாக்குகின்றன என்று சொல்லப்படுகிறது. வைரஸ்கள் தன்னிச்சையாக வாழாது, அவை ஏதாவது ஒரு விலங்கின் செல்களை ஆக்கிரமித்து அங்கு வளர ஆரம்பிக்கின்றன. என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்து பகுத்தறிவு பெற்று இன்றைய நாகரீக மனிதன் இருந்தாலும் வைரஸின் பார்வையில் அவனும் ஒரு விலங்கினம் தான். இந்த பூமி தோன்றியதிலிருந்து எண்ணற்ற உயிரினங்கள் தோன்றியுள்ளன, பல உயிரினங்கள் அடியோடு அழிந்து போயுள்ளன. உயிரினங்கள் தோன்றுதலும், அழிதலும் ஒரே கோட்பாட்டில் தான் இயங்குகின்றன. அது, “Survival of the fittest”. நீரின்றி அமையாது உலகு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு முதலில் கொடுத்து உபசரிப்பது குடிநீரைத் தான். உலகில் வேறு எங்கும் இவ்வாறு உபசரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தமிழர் பண்பாட்டில் இது ஒரு முக்கியமான செயல். தவிக்கிற வாய்க்கு தண்ணீர் கொடுக்காத கலாச்சாரம் இன்று பெருகி வரக் காரணம் உலகில் குறைந்து வரும் நன்னீர் தான். பெரு நகரங்களில் வசிக்கும் குடும்பங்கள் வருமானத்தில் கணிசமான பங்கை குடிநீருக்கு செலவழிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி கேன்களில் வாங்கப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதும் மிகப்பெரிய கேள்வி. நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் உள்ளூரில் இருக்கும் சிறு நிறுவனமாக இருக்கட்டும், பன்னாட்டு நிறுவனமாக இருக்கட்டும், அவை எதுவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எந்த பங்களிப்பும் செய்வதில்லை என்பது வேதனைக்குரிய நிஜம். நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார், ‘இன்றைய தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் நாம் அவற்றை சேமிக்கும் முறை தான்; பழங்காலத்தில் நீர் கிணற்றிலும், குளத்திலும், ஏரியிலும் சேமிக்கப்பட்டு மாசுபடாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று மிகப் பெரிய கான்கிரீட் தொட்டியிலும், பிளாஸ்டிக் டேங்கிலும், கேன்களிலும் சேமிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இயற்கையான சுழற்சி பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவின் முறையே மாறிவிட்டது’ என்று. அது ஒரு புறம் உண்மை என்றாலும், நன்னீரின் அளவு குறைந்து வருவதற்கு காரணம் மனிதன் உருவாக்கிய சாம்பல் நீர்தான். நிறங்களின் அடிப்படையில் நீர் மூன்றாக பிரிக்கப்படுகிறது. அவை 1) பச்சை நீர் 2) நீல நீர் 3) சாம்பல் நீர். பச்சை நீர் என்பது வளிமண்டலத்து நீர். நீல நீர் என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகள். இவை இரண்டும் நீர் சுழற்சிக்கு காரணமானவை. இவற்றோடு மனிதன் உருவாக்கும் கழிவு நீரான சாம்பல் நீர் கலந்த பின் நீர் சிக்கல் உருவாகிறது. உதாரணத்திற்கு ஒரு லிட்டர் கசடு எண்ணெய் ஒரு குளத்தில் கலக்கப்பட்டால், அது ஒரு லட்சத்து 58 ஆயிரம் லிட்டர் நன்னீரைப் பாழாக்கிவிடும். இந்த உதாரணத்தை உலகம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணக்குப்படி நகரத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு தேவைப்படும் நீரின் அளவு 140 லிட்டர். அதுவே சிற்றூரில் வாழும் மனிதனுக்கு தேவைப்படுவதோ 40 லிட்டர் தான். நகரமயமாக்கல் காரணமாக வேலை வாய்ப்பை நகரத்தில் மட்டும் ஏற்படுத்தி ஒரு மனிதன் உபயோகப்படுத்தும் நீரை 140 லிட்டர் அளவுக்கு உயர்த்தியதும் நீர் பற்றாக்குறைக்கு காரணம். தனிமனித தேவை மட்டுமல்லாமல், நீரைச் சார்ந்த மின்சாரம், பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள் என நகரத்தில் நீரின் பயன்பாடு சிற்றூரை விட அதிகம். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், உலகில் 80 சதவீத நீர் மறுசுழற்சி செய்யப்படாமல் வீணாகிறது எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தினாலே 50 சதவீத தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மறைநீர் பொருளாதாரம் குறித்தும் இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. ஒரு தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால் அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இருப்பதில்லை. இது தான் மறைநீர் எனப்படுகிறது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாளும் நாடுகள், மழை நீர் கொள்கையை நன்றாக புரிந்து வைத்துள்ளன. அதிக நீர் தேவைப்படும் பொருட்களை அந்த நாடுகள் உற்பத்தி செய்வதில்லை. சீனாவின் பிரதான உணவான பன்றி இறைச்சியை ஒரு கிலோ உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 6000 லிட்டர் மறைநீர் தேவைப்படுகிறது. அதனால் சீனாவில் பன்றி உற்பத்திக்கு ஏகப்பட்ட கெடுபிடியும், இறக்குமதிக்கு தாராளமும் காண்பிக்கப்படுகிறது. அதே போன்று ஒரு கிலோ ஆரஞ்சு பழத்திற்கு 560 லிட்டர் நீர் தேவைப்படுவதால், சொட்டு நீர் பாசனத்தில் முன்னணியில் திகழும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இந்தியாவிலோ நேர்மாறாக லட்சக்கணக்கான லிட்டர் நீரை குடிக்கும் கார் தொழிற்சாலைகளும், தோல் தொழிற்சாலைகளும் மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் தொழிற்புரட்சி காரணமாக சில நன்மைகளுக்காக தொடங்கப்பட்டு மறைமுகமாக நீர் வளத்தை இழந்து கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மறைநீரின் ஏற்றுமதியும், இறக்குமதியும் சமநிலை அடைந்தால் மட்டுமே நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். நீர் சிக்கலைத் தீர்க்க தற்போது இரண்டு வகையான தீர்வுகள் வைக்கப்படுகின்றன. ஒன்று நீராதாரத்தை குளங்கள் மற்றும் அணைகள் கட்டி பெருக்குவது. இரண்டாவது நீரை சேமிப்பது. பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்களால் முதலாவது தீர்வு சற்றே கடினம் தான். உலகில் உள்ள நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதமிருக்கும் 2.5 சதவீதம் நன்னீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிப்பதே எதிர்கால சந்ததியினருக்கு நல்லது. “மரம் வெட்டிய முதல் நாளே விற்பனைக்கு வந்தது நீர்” -கவிஞர் அ. வேளாங்கண்ணி ஆசிரியர் குறிப்பு கவின் கார்த்திக்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த கவின் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். பிரகாஷ் : கோயம்புத்தூரில் செலவு தணிக்கையாளராக இருப்பவர் பிரகாஷ். இருவருக்கும் பகுதி நேர எழுத்து பணியில் ஆர்வம் உள்ளது. FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.