[] [cover image] 1. Cover 2. Table of contents போராளிகளை போற்றுவோம் போராளிகளை போற்றுவோம்   சடையன் பெயரன்   tsuresh250@gmail.com   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/Poralikalai_Potruvom}   This book was produced using pandoc மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: அ.ஷேக் அலாவுதீன், தமிழ் இ சர்வீஸ் - tamileservice17@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: A.Shaik Alauvdheen - tamileservice17@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/poralikalai_potruvom This Book was produced using LaTeX + Pandoc அணிந்துரை இன்றைய காலச் சூழலில் சாதிய மதவாத ஆதிக்கமும், தீண்டாமையும், ஒடுக்குமுறையும், ஆணவப்படுகொலைகளும்,பாலியல் வக்கிரங்களும் அன்றாடம் நடந்து  கொண்டேயிருக்கின்றது. இதனை  அடியோடு அழிக்கவே மக்கள்களத்தில் பல போராளிகள் போராடிவருகின்றனர். “போராளிகளை போற்றுவோம்” என்கின்ற இந்த கவிதை நூலினை எழுதியுள்ள திரு.சடையன்பெயரன் அவர்கள், இளயதலைமுறையினர் போராடிய மற்றும் போராடும் தலைவர்களின் போர்குணத்தையும், தியாகத்தையும் அறிந்துகொண்டு போராட்டக்களங்களில் பங்குப்பெற வேண்டும். என்ற எண்ணத்தோடு இந்த கவிதை நூலினை சிறப்பாகவும், தெளிவாகவும்  படைத்துள்ளார். இதனைத்தான்  புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்,  “போராடுவதன் மூலம்தான்  விடுதலைப் பெறமுடியும்” “ஆடுகளைத்தான் கோயில்கள் முன்பாக வெட்டுகிறார்களேவொழிய சிங்கங்களை அல்ல! ஆடுகளாக இருக்க வேண்டாம்! சிங்கங்களைப் போன்று வீறு  கொண்டெழுங்கள்” என்று தெளிவாக அறிவுறுத்தினார். அதுபோலவே நூல் ஆசிரியர் திரு.சடையன்பெயரன் அவர்களும் நம்மை போராடதயார் செய்வது பாராட்டுதலுக்குறியதாகும். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் குறித்த கவிதையில் இங்கிலீசு துரைகளுக்கே இந்துவெறியை விளக்கியவர்! இந்தியாவே நமதென்று இங்கிலாந்தில் முழங்கியவர்! என்று மிகவும் தெளிவாக எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது! மேலும் போராளிகள் பொழுதுபோக்குக்காக போராடாமல், கொள்கைவெறியோடு போராடவேண்டும் என்பதனை, தந்தை பெரியார் குறித்த தனது கவிதையில் மூத்திர சட்டியோடு மூச்சுள்ளவரை நின்றவர்! முற்றும் முழுதுமாக  மனுநீதி கொன்றவர்! என்று எழுதியுள்ளளார்.இந்த வரிகள் நூலினை படிப்போரை போராட  தூண்டுகிறது! போராளிகள் அல்லது பொதுசேவை புரிவோர்கள் அல்லது தலைமை பதவி (ஆளும்) வகிப்போர்கள் நிதானமாகவும், நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டுமென்பதற்கு, கருமவீரர் காமராசர் அவர்கள் குறித்த கவிதையில் அரசியல் ஆடம்பரம் அப்பழக் கற்றவர்! அரசர்களை உருவாக்கும் அறிஞராய் இருந்தவர்! என்று அற்புதமாக எழுதியிருக்கின்றார்! எந்தவொருவரும் புறவழியாகவோ அல்லது அதிகார பணபலத்தின் முலமாகவோ                                                             போராளியாக முடியாது! நேரடியாக கொடுமைகளை அனுபவித்தவர்கள்தான், போராளிகளாக எழுச்சிபெறமுடியும்! அதன்படி வந்தவர்தான் தியாகத் தலைவர் அறிவர் எழுச்சித்தமிழர்.தொல்.திருமாவளவன் அவர்கள்! கோடானகோடி இளைஞர்களை  ஒன்றிணைத்து வீரியத்தோடு இன்றைக்கு போராடிவருகின்றார். அவரைப்பற்றி  பாடுகின்ற கவிஞர் சடையன்பெயரன் அவர்கள் அதிகார திமிரை அடித்து உதைத்தவர்! - திருமா  ஆணவ கொடுமைக்கு  அடங்க மறுத்தவர்! என்று படிப்பவர்களை உசுப்பேற்றுகின்றார். இன்னும் மகத்தான போராளிகளைப்பற்றியும், சாதி ஒழிப்பாளர்களைப்பற்றியும், சமத்துவ காதலர்களைப்பற்றியும் விரிவாகவும்,கவிதைநயத்தோடும் இந்தநூலில் எழுதியிருப்பது பிரமிப்பின் உச்சமாகும்! நூலாசிரியர் திரு.சடையன் பெயரன்  அவர்களின் கவிதை படைப்புகள் போராளிகளை போற்றவும், போராடுபவர்களை உற்சாகப்படுத்தவும், இத்தகைய காலச்சூழலில் சமூக விடுதலையை கட்டமைக்கவும் ஒரு பொக்கிஷமாகவும்,அறிவுசார் ஆயுதமாகவும் அமைந்துள்ளது பெருமைக்குறியதாகும்.மேலும் நூலாசிரியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு இன்னும்பல கவிதை படைப்புக்களை படைத்து வாழ்வில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன்! அன்புடன் க.அ.சக்திவேல் (எ)சங்கத்தமிழன், மாநில து.செயலாளர், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நெய்வேலி. புரட்சியாளர் அம்பேத்கர் ஆயிரமாயிர ஆண்டுகளாய்  அடிமை யாக்கினாரை  அதிரச் செய்தவரே அண்ணல் அம்பேத்கர் விழுகிறவீழ்கிற ஆடுகளாய்  மடமை செய்தோரை  மிரளச் செய்தவரே அண்ணல் அம்பேத்கர் அதிரடி படைதிரட்டி  அறிவாயுத நிதிபுரட்டி  அடிமைத்தன மறுத்தவரே அண்ணல் அம்பேத்கர் சிதையுண்ட  கல்கூட்டி  சிற்பமாய் நிலைநாட்ட   சிந்தனை  யுளியெடுத்தவரே அண்ணல் அம்பேத்கர் இருட்டில்  கிடந்தநம்மை  இணையற்ற  மனிதராக்க  இந்திய  சட்டம்தந்தவரே அண்ணல் அம்பேத்கர் இனிநாங்கள்  ஆடுகளல்ல இணையில்லா  சிங்கங்களென்று இராணுவ  மொழிதந்தவரே அண்ணல் அம்பேத்கர் கொத்தடிமை  பிறப்பென்று  கொக்கரித்த  கூட்டங்களை கோயிலுக்குள்  நுழைந்தடித்தவரே அண்ணல் அம்பேத்கர் இந்துமத கோரங்களை  இயலாதோர் பொய்களென்று இடுகாட்டில் சுட்டெரித்தவரே அண்ணல் அம்பேத்கர் இனியெப்போதும் பிறப்பதில்லை  இவர்போல  ஓரறிஞ்சன் -  நாம்  இவர்வழி  பயணிப்போம்! இவர்கருத்தை நெஞ்சேற்போம் உலகுள்ளவரை மறைவதில்லை  உத்தமர்தம் அறிவாற்றல் -  நாம்  உள்ளமேற்று துதிப்போம் உலகைமாற்ற பயணிப்போம் திவான்பகதூர்   தாத்தா   இரட்டைமலை சீனிவாசன் இங்கிலீசு துரைகளுக்கே இந்துவெறியை விளக்கியவர் இந்தியாவே நமதென்று இங்கிலாந்தில் முழங்கியவர் அண்ணலுக்கு துணையாக அரும்பணிக ளாற்றியவர் அன்றைக்கே பறையனென்று அச்சிதழை நடத்தியவர் மாகாண சபைதனிலே மக்கள்பணி யாற்றியவர் மறுக்கப்பட்ட யுரிமைதனை மலையாய்சுட்டி காட்டியவர் வட்டமேசை மாநாட்டில் வாதயுரை நிகழ்த்தியவர் வருங்கால இந்தியாவை வடிவமைக்க யுதவியவர் தலித்துகள் தாத்தாவென்று உரிமைபட உழைத்தவர் தமிழ்நாட்டு அரசியலுக்கு உதயசூரியனை கொடுத்தவர் பறையனென்று மார்புதனில் பதிந்துவைத்து நின்றவர் பார்ப்பவர்கள் பணிந்துபோகும் பண்புகளோடு வாழ்ந்தவர் திவான்பகதூர் பட்டத்தோடு தினமுழங்கி நிமிர்ந்தவர் அய்யோத்தி தாசரோடு அரசியல்களம் கண்டவர் கோழியாளத்தில் பிறந்து கொள்கைகளை வகுத்தவர் கோயமுத்தூர் சென்று கோட்பாடுகளை பரப்பியவர் இரட்டைமலை சீனிவாசன் இரட்டைவாக்கு கேட்டவர் இருட்டைபிளந்து இன்றளவும் இதயமெங்கும் நிறைந்தவர் புகழ்பரப்பி பூவுலகில் புத்தனாக முளைத்தவர் புழுத்துபோன சாதியத்தை புரட்சிசெய்து யொழித்தவர் தேசிய தலைவராக தெம்பூட்டி மிளிர்ந்தவர் தேய்ந்துபோன தலித்துகளை தேற்றியிங்கே காத்தவர் அண்ணனுக்கு முன்பாகவே மீசைமுறுக்க சொன்னவர் அண்ணலுக்கு இணையாகவே மின்சாரமாய் பாய்ந்தவர் இணையற்ற தலைவராம் இரட்டைமலை சீனிவாசன் ஈடற்ற யாளுமையாம் இவர்போற்றி வாழ்ந்திடுவோம் பெருந்தலைவர்  எம்.சி.ராஜா மயிலை சின்னசாமிக்கு மகுடத்தோடு மலர்ந்தவரே தலித்துகள் விடுதலைக்கு தமிழ்நாட்டில் பிறந்தவரே எம்மின மீட்சிக்கு, ஏய்ப்பாரின் சூழ்ச்சிக்கு வலையாமல் நின்றவரே வரலாற்றில் நிலைத்தவரே ஆங்கிலேய ஆட்சிக்கு, அரசுதந்த நிமிர்வுக்கு ஆதரவாய் இருந்தவரே அதிகாரம்  வென்றவரே அண்ணலை எதிர்த்ததெல்லாம் ஆளுமையை நிலைநாட்ட இன்னலை கண்டபின்னே இழப்பேற்று அழுதவனே நீதானே வரலாறு நீசசாதி அடலேறு பறையரென்றால் வீரமென்று பற்றவைத்த பேறாறு சட்டமன்றம் முதல்சென்றாய் சரித்திரத்தில் முன்நின்றாய் தீண்டாமை கொடுமைக்கு தீர்வெழுதி போய்மறைந்தாய் தியாகத்தில் தீபமானாய் திருமாவின் தாகமானாய் சிறப்பள்ளி தருமளவு சிறுத்தைகளின் தலைவனானாய் நீபிறந்த நாள்தனிலே நின்புகழை பாடுகின்றோம் வான்சொறிந்த மேகப்பூவை வாரியள்ளி தூவுகின்றோம் அறிவாசான்   தந்தை பெரியார் கடவுள் கற்பு, கற்பனையே யென்றவர் காதல் கல்யாணம், கட்டுபாடொழி யென்றவர் விதி விதவை, விட்டொழி யென்றவர் சோதிடம் சொர்க்கம், சோத்துக்கானவழி யென்றவர் கனிவு கற்பம், கட்டாயமா யென்றவர் சடங்கு சாஸ்திரம், சரியா யென்றவர் சாதி சனாதனம், சாகட்டு மென்றவர் மதம் மனுதர்மம், மடைமையே யென்றவர் அழகு ஆண்மை, அற்பமே யென்றவர் தகுதி தாரம், தகர்தெறி யென்றவர் ஆசை ஆடம்பரம், அவசியமா யென்றவர் ஆதிக்கம் அடிமைத்தனம், அடித்து யுதைத்தவர் மொழி மோகம் மூழ்காதே யென்றவர் மோட்சம் நரகம் மூடத்தன மென்றவர் மூத்திர சட்டியோடு மூச்சுள்ளவரை நின்றவர் முற்றும் முழுதுமாக மனுநீதி கொன்றவர் தெற்காசிய கண்டத்தின் சாக்ரட்டீசாய் வாழ்ந்தவர் திராவிட தேசியத்தின் சரித்திரமாய் யெழுந்தவர் பச்சைதமிழர்   காமராசர் ஏடெடுத்து படிக்காமல் ஏழைகளை படித்தவர் பட்டங்களை வாங்காமல் பட்டறிவு வாய்த்தவர் நாட்டு விடுதலைக்கு நாளெல்லாம் யுழைத்தவர் படிக்காத மேதையென்று பாமரனில் நிலைத்தவர் அரசியல் ஆடம்பரம் அப்பழுக் கற்றவர் அரசர்களை உருவாக்கும் அறிஞராய் இருந்தவர் முதல்வராய் யிருக்கையிலும் முனிவராய் வாழ்ந்தவர் இந்தியாவே கிடைக்கயிலும் இசையாமல் யிருந்தவர் ஊர்தோறும் பள்ளிகளை உறக்கமின்றி திறந்தவர் உணவிட்டு ஏழைபிள்ளை ஊக்கம்பெற உழன்றவர் ஏழை பங்காளனாய் எப்பொழுதும் நின்றவர் எளிமையாய் துறவியாய் எந்நாளும் திகழ்ந்தவர் நேர்மைக்கு தலைவனாய் நெடும்பயணம் செய்தவர் சுயநலமே யில்லாமல் சுத்ததங்க மானவர் தொழிலை பெருக்கும் தொலைநோக்கு கொண்டவர் அணையை யெழுப்பும் அறிவெய்தி முடித்தவர் பொற்கால ஆட்சியை தமிழருக்கு தந்தவர் பொல்லாப்பு யில்லாமல் தன்னலத்தை மறந்தவர் கல்வி கடவுளாய் மக்களை காத்தவர் கடைசி மனிதனுக்கும் மாற்றத்தை கொடுத்தவர் கருப்பு காந்தியென போற்றுதலை பெற்றவர் கர்ம வீரரென பொன்னுலகம் படைத்தவர் ஒத்த காசுகூட சேர்க்காமல் வாழ்ந்தவர் ஒழுக்க நெறிகளிலே செந்தமிழாய் மிளிர்ந்தவர் பச்சை தமிழரென்று பார்போற்ற நடந்தவர் பார்க்கும் யிடமெல்லாம் பள்ளியாக்கி சென்றவர் தமிழ்தேச போராளி தோழர்.தமிழரசன் தனித்தமிழ் நாடுகேட்டு தனிப்படையை கட்டியெழுப்பிய, தனிப்பெரும் தலைவர்தான் தமிழரசன் தமிழ்தேச யுரிமைகேட்டு தாக்குதலை முடுக்கிவிட்ட, தமிழ்மான மறவன்தான் தமிழரசன் செந்தமிழின் தோளுயர்த்த சேயனையினை புடம்போட்ட, செருக்கள வீரன்தான் தமிழரசன் இந்தியத்தை வேரருக்க இளையர்களை யெழுப்பிவிட்ட, இன்னொரு சே_தான் தமிழரசன் சாதியத்தை வெட்டிவீழ்த்த சரித்திர யறிக்கைதந்ந, சமர்க்கள வேங்கைதான் தமிழரசன் சேரிக்குள் படுத்துறங்கி செத்தமாட்டு கறித்தின்று, செம்படை யமைத்தவன்தான் தமிழரசன் அதிகார பெருந்திமிரை அணுகுண்டால் சிதறவிட்ட, அன்னைதமிழ் அடலேறுதான் தமிழரசன் விடுதலை தாகத்தினை வீதியெங்கும் வீசவைத்த, விடுதலை படைநெருப்பே தமிழரசன் திருந்தாத ஆண்டைகளை தீயிட்டு போசுக்கிபோட்ட, திருமாவின் அண்ணனே தமிழரசன் சனாதன யடிமைகளின் சரித்திர யிருட்டடிப்பை, சரித்து புதைத்தவனே தமிழரசன் பொதுவுடமை போரொன்றை பொருப்பேற்று நடத்திச்சென்ற, போராளி போர்மறபே தமிழரசன் தமிழ்தேசிய தலைவர்  மேதகு பிரபாகரன் தமிழின வரலாற்றில் தானாய் முளைத்தவன் தனிநாடு கட்டமைத்து தன்னாட்சி புரிந்தவன் முப்படையை யுருவாக்கி முழுவெற்றி பெற்றவன் முடிவற்ற யினப்பகையை முழுவதுமாய் புதைத்தவன் வீரத்தை நிலைநாட்டி வீதிகளை யமைத்தவன் விவேகத்தை முதலாக்கி விடுதலையை படைத்தவன் உலகத்தில் தமிழினத்தை உயரத்தில் வைத்தவன் உறங்காமல் உண்ணாமல் உணர்வோடு யுழைத்தவன் வன்னி காடுகளில் வாழ்க்கையை தொலைத்தவன் வற்றாத பேரூற்றாய் வீரத்தை கொடுத்தவன் சிங்கள கொற்றத்தை சிதறடித்து நின்றவன் சிந்தித்து விடுதலைக்கு சீற்றமாய் யெழுந்தவன் புலிகளின் தாகத்தை புரட்சியில் தீர்த்தவன் புத்தமத துரோகத்தை புலிப்படையால் தகர்த்தவன் பெண்களை யமைப்பாக்கி பெரும்படை  வேய்ந்தவன் பெருந்தீயாய் வெகுண்டெழுந்து பெரும்போரை புரிந்தவன் போர்க்கள நெறிமுறையை பொருப்பாக காத்தவன் பொல்லாத குண்டுகளை போடாமல் தவிர்த்தவன் செந்தமிழர் நேயத்தை சிறப்பாக செய்தவன் செருக்கள வீரத்தை செந்தீயில் வார்த்தவன் தியாகச்செல்வி தோழர் செங்கொடி தமிழின துயரத்தை தன்னுயிரால் துடைத்தவள்-தோழா தன்மான வீரத்தை தன்னுடலால் படைத்தவள் ஏழுதமிழர் தூக்குகயிற்றை எரிநெருப்பால் யருத்தவள்-தோழா எழுச்சிபெறா தமிழினத்தால் எரியும்தீயில் குதித்தவள் செந்தமிழர் யினமீட்பை செந்தீயால் விதைத்தவள்-தோழா செத்துவிழும் ஈழத்தமிழர் செங்குருதி படித்தவள் மகத்தான மக்கள்மன்ற மடிதனிலே வளர்ந்தவள்-தோழா மாவீர பரம்பறையில் மகுடமாய் சேர்ந்தவள் தமிழச்சி தீரத்தை தரணிக்கு யுரைத்தவள்-தோழா தவறான நீதியினை தடம்போட்டு தடுத்தவள் சாந்தனையும் முருகனையும் சதைவெந்து காத்தவள்-தோழா பேரறி வாளனுக்காய் பெருந்தியாகம் புரிந்தவள் கரும்புலி களம்நிற்கும் காட்சியினை படைத்தவள்-தோழா கட்டங்கா கோபத்தினை கட்டித்தீயில் வடித்தவள் பிரபாகரன் பிள்ளையாக பிறப்பெடுத்து முடித்தவள்-தோழா பழங்குடி சேரிக்குள்ளே பாசறையை யமைத்தவள் சமத்துவ காதல் போராளி தோழர்.இளவரசன் மாடும் மனிதனுமா மாலை மாற்றிக்கொண்டார்கள்? மடையர்களே, மனதை மாற்றிக்கொண்டதை மாற்றுத்திருமணம் யென்கின்றீர்? காளையும் கழுதையுமா கல்யாணம் கட்டிக்கொண்டது? கருங்காளிகளே, கருத்தொத்து கைசேர்த்துகொண்டதை கலப்புதிருமணம் யென்கின்றீர்? இரும்புபிலும் ஈயத்திலுமா இதயத்தை பெற்றுக்கொண்டீர்? இழிபிறவிகளே, இளவரசன் செய்தகாதல் இன்னுமா புரியவில்லை? உள்நெஞ்சை கேளுங்கள் ஊரையும் எரித்துவிட்டீர் ஊனர்களே, உண்மையான காதலையும் உயிரோடு புதைத்துவிட்டீர் தண்டவாளம் வாயிருந்தால் தயங்காமல் சாட்சிசொல்லும் தற்கொலையா நடந்தேரியது? தன்சாதி வெறியேறி, தமிழன்செய்த கொலையென்று சேரிக்காரன் காதலித்தால் சேர்ந்துவந்து கொலைசெய்வீர் செந்தமிழர் நாமென்று சேரிக்குள்ளே சூழ்ச்சிசெய்வீர் இளவரசன் கோகுல்ராஜ் இரையாகி வீழ்ந்தார்கள் இந்துமத சாதிவெறி இழிசெயலால் மாண்டார்கள் தீப்பிடித்த தர்மபுரி தனலினிலே  வெந்தார்கள் துருபிடித்த பழைமைவெறி துரோகத்தால் சிதைந்தார்கள் இனியொரு இளவரசனை இழக்காமல் காக்கவேண்டும் இளந்தமிழர் மனத்தையேனும் இந்தவெறினின்று மீட்கவேண்டும் இளவரசா இளவரசா நின்நினைவு அகலாது இவனரசா அவனரசா நின்தியாகம் மறையாது வீரவணக்கம் செலுத்துகின்றோம் வீரனுன்னை போற்றுகின்றோம் விடுதலைக்காய் தலைகொடுத்த வரலாற்றை பேசுகின்றோம் காதலுள்ள காலம்வரை கண்மணியே நீயிருப்பாய் கதலர்கள் வணங்குகின்ற கடவுளாக வீற்றிருப்பாய் சாதி ஒழிப்பு போராளி தோழர் கௌசல்யா சங்கர் காதலை கொன்ற சாதியை, கௌசல்யா கொன்று சாதனை செய்திருக்கின்றார் கணவனை கொன்ற கயவர்களை, கண்ணகியாய் நின்று களத்தில் சுட்டெரித்திருக்கின்றார் கத்தியை தீட்டிய பேடிகளை நொருக்க, புத்தியை தீட்டி பெரியாரை பற்றியிருக்கின்றார் ஏற்ற துணைவன் உயிரை குடித்த, ஏற்ற தாழ்வை உடைத்து நொருக்கியிருக்கின்றார் பெண்னை யடிமையென்ற பார்ப்பன சாத்திரத்தை, பெரியார் தடியைக்கொண்டு பெயர்த்து வீசியிருக்கின்றார் உடுமலை சாதிவெறி உடைபட தடைபட, உரிமைக் குரலினை உரத்து எழுப்பியிருக்கின்றார் தாயும் பொய்தான் தழைத்த சாதியாலென்ற, தமிழர் இழிவை தங்கை துடைத்திருக்கின்றார் பிறப்பில் இழிவு பிறப்பால் உயர்வென்ற, பிற்போக்கு தனத்தின் பிடரியில் உதைத்திருக்கின்றார் திவ்யாக்கள் போனாலென்ன திமிர்சாதி ஆதிக்கத்தை, கௌசல்யாக்கள் முடிப்பார்களென்று காட்டி களத்திலிருக்கின்றார் கௌரவ கொலையா கௌசல்யா வருவாரென்ற, கலகத்தை உருவாக்கி காதலில் வென்றுயிருக்கின்றார் உயிரை ஆயுமாக்கிய வீரமங்கை அனிதா வீரவணக்கம் மட்டும்தான் விடுதலை சிறுத்தைகளுக்கு விதியென்றால்-விதியை மாற்றியெழுதுவோம்  எச்சரிக்கை தனிநாடு மட்டும்தான் தலித்துகளுக்கு  தீர்வென்றால்-தயங்காமல் தாக்குதல்தொடுப்போம் எச்சரிக்கை சாதியம் மட்டும்தான் சாமானியர்களுக்கு சட்டமென்றால்-சட்டத்தை கிழித்தெரிவோம் எச்சரிக்கை சேரிகள் மட்டும்தான் அதிகாரங்களுக்கு அலட்சியமென்றால்-அதிகாரத்தை அடித்துநொருக்குவோம் எச்சரிக்கை அயுதம் மட்டும்தான் ஆணவத்தை அடக்குமென்றால்-ஆணவமே அணுகுண்டுவெடிப்போம் எச்சரிக்கை காலனிகள் மட்டும்தான் காவிகளுக்கு கைபாவையென்றால்-இனி கத்திகள்வீசுவோம் எச்சரிக்கை பொருத்து போவதுதான் பறையர்களுக்கு பொதுநீதியென்றால்-சாதிவெறியே போரைதொடுப்போம் எச்சரிக்கை பூநூல் மட்டும்தான் பாரதத்தின் புனிதநூலென்றால்-புனிதத்தை புரட்டியெடுப்போம் எச்சரிக்கை உயிர்பலி மட்டும்தான் உழைக்கும்மக்கள் ஊதியமென்றால்-உங்களுக்கு உயிர்யிருக்காது எச்சரிக்கை நீட் தேர்வில்தான் நீங்கள்சொல்லும் நாட்டுப்பற்றென்றால்-எங்களுக்கு நாடேவேண்டாம் எச்சரிக்கை அனிதா கொலைதான் அரசுக்கு கொள்கைமுடிவென்றால்-அரசை அழித்தொழிப்போம் எச்சரிக்கை நான் இந்துவல்ல தலித் பகவத் கீதையை பார்க்கவு மில்லை, படிக்கவு மில்லை-நான் எப்படியடா இந்து பகவான் கோயிலில் நுழையவு மில்லை, நுழையவிடுவது மில்லை-நான் எப்படியடா இந்து ஊரின் தெருவில் நடக்கவு மில்லை, நடந்தால்யேற்பது மில்லை -நான் எப்படியடா இந்து ஒரே சுடுகாட்டில் எரிப்பது மில்லை, எங்களைபுதைப்பது மில்லை -நான் எப்படியடா இந்து காலணி பற்றிய கவலையு மில்லை, கலங்கமு மில்லை -நான் எப்படியடா இந்து வாழ்கை முறையே ஒன்றாக யில்லை,                              ஒரேயிடத்திலு மில்லை -நான் எப்படியடா இந்து சங்கரா சாரியராய் ஆகவு மில்லை, ஆகப்போவது மில்லை -நான் எப்படியடா இந்து                                 ஆகம விதிகளை அறியவு மில்லை, அறியவிடுவது மில்லை -நான் எப்படியடா இந்து கருவறை கடவுளிடம் போகவு மில்லை, போகவிடுவதே யில்லை -நான் எப்படியடா இந்து சாஸ்திரம் யறிந்திட வழியு மில்லை! சாஸ்திரமொழியு மில்லை -நான் எப்படியடா இந்து சூத்திர பட்டத்தில் அடங்கவு மில்லை, அடங்குயினமு மில்லை -நான் எப்படியடா இந்து பூநூல் காரனை யேற்கவு மில்லை, யேற்றுபிழைப்பது மில்லை -நான் எப்படியடா இந்து மனுவின் விதியை மதிப்பதே யில்லை, மதியையிழப்பதே யில்லை -நான் எப்படியடா இந்து புராண புளுகை நம்புவது மில்லை, நம்பிநகர்வது மில்லை -நான் எப்படியடா இந்து கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account