[] [] பல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம்    க.பிரகாஷ்        மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com  உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம்       பொருளடக்கம வாழ்த்துரை 4  வாழ்த்துரை 6  அணிந்துரை 7  அணிந்துரை 8  என்னுரை 9  இதுவரை நான்………….. 11  இணையம் 12  இணையமும் தமிழும் 20  மின்னூல் 24  மின்நூலகம் 32  நினைவாற்றலும் - நினைவகமும் 44  அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை 50  நீதி இலக்கியத்தில் கூறும் அறக்கொள்கைகள் 56  இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு 62  திருக்குறளில் வாழ்வியல் கூறுகள் 67  சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது 70  குறுந்தொகையும் - குறிஞ்சியும் 76  நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம் 79  போயர் இனமக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள் 82  போயரின மக்களின் நாட்டுப்புற விளையாட்டுக் கலைகள் 86    வாழ்த்துரை மானுடம் தழைக்க இலக்கியங்கள் ஆணிவேராக விளங்குகின்றன. அந்த ஆணிவேரின் கிளைகளாக இலக்கியப் பிரிவுகள் அமைகின்றன. அப்பிரிவுகளில் நவீன உலகின் கண்களாக விளங்குவது கணினி ஆகும். அகில உலகையும் ஒரு குவளைக்குள் அடக்கிக் காட்டுவது இதன் முக்கியச் சிறப்பாகும். அதன் பல பயன்பாடுகளில் ஒன்று இணையம் (INTERNET) என்பது. இன்று இணைத்தின் உதவியால் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. மனிதனை உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடவிட்டு அறிவைச் சாணை தீட்டுகிறது. ‘பல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம்’ என்ற நூலில் 15 கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் மின்நூலில் வெளியானவை. இவற்றுள் ஐந்து கட்டுரைகள் கணினித் துறையுடன் தொடர்புடையவை, நீதிநூல்கள் தொடர்பானவை ஐந்து; சங்க இலக்கியம் தொடர்புடையன இரண்டு; நாட்டுப்புறவியலுடன் தொடர்புடையன மூன்று. இவ்வாறு நெடிய தமிழ் இலக்கியப்பரப்பை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. பாராட்டுக்குரியது. இணையம் தொடர்பான கருத்தாக்கங்கள் மிகவும் அரியன. தமிழில் இணையம் பற்றிப் பலர் எழுதியிருந்தாலும் இந்நூலில் உள்ள இணையம் பற்றிய கட்டுரைகள் ஆழமான கருத்துக்களை எளிய முறையில் வெளிப்படுத்தும்போக்கில் அமைந்துள்ளன. இணையம் பற்றியும், மின்னூல், மின்நூலகம் பற்றியும் இதைவிட எளிதாகச் சொல்ல முடியாது என்று கூறும்படி மிகமிகத் தெளிவான நடையில் அமைந்துள்ள கட்டுரைகள் படிப்போர்க்கு உலகப் பயன் நல்குவன. மனிதனை நல்நெறிப்படுத்தத் தோன்றியவை அற இலக்கியங்கள். முக்காலத்திற்கும் ஏன் எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மையன. அவற்றிலுள்ள கல்விச் சிந்தனைகள், அறக் கொள்கைகள் தக்க சான்றுகளின் அடிப்படையில் மிக நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. இல்லறம் கூறும் அறங்களாக மனைமாட்சி, அன்பு, அடக்கமுடைமை, புகழ், நல்லொழுக்கம் போன்றவற்றை விளக்கியுள்ளமை சிறப்பானதாகும். எக்காலத்திற்கும் ஏற்ற கருத்தை நல்கும்  நுண்நலம் காட்டும் சமுதாயத்தில் குடிகொண்ட பண்புகளையும், திருக்குறளில் இடம்பெற்றுள்ள மனித வாழ்வியல் கூறுகளாக  விளங்கும்  ஆன்மீக அறம், ஈதல் அறம், காதல் அறம் பற்றிய செய்திகள் விழுமிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. குறுந்தொகையும், குறிஞ்சியும் பற்றி விளக்கும் கட்டுரை மிகச் சிறப்பானது. நிலப்பாகுபாடு, வட்டாரச் சாயல்கள், ஐவகை நிலத்தார், திணைபற்றிய விளக்கம், குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள குறிஞ்சித்திணை அகச்செய்திகள் பற்றிய விளக்கங்கள் புதுமுயற்சியுடன்  புதுப்  பொலிவைத்  தருவதாக  அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தில் களவும் கற்பும் உறவாடிய நிலையை விளக்கும் கட்டுரை பாராட்டும்படி உள்ளது. சங்க இலக்கியக் கூறுகளை விளக்கி, அதில் ஐந்திணைகளில் காணப்படும் காதல் குறிப்பு, களவு, கற்பு, இல்லறம், காதலின் பெருமை, கற்புப் பற்றிக் குறிக்கும் சொற்கள், அதற்கான விளக்கங்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன. அடுத்து, நாட்டுப்புறவியல் தொடர்பான மூன்று கட்டுரைகளில் முதலில் நாட்டுப்புற மக்கள் இயற்கையுடன் வாழ்வதால் அவர்கள் கைக்கொண்ட வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், பச்சிலை வைத்தியம் எனப் பலவித வைத்தியமுறைகளை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளமை பாராட்டுக்குரியது. அடுத்து போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள், அவர்களது நாட்டுப்புற விளையாட்டுக் கலைகளான குரங்காட்டம், பேந்தா, கொத்தாட்டம் போன்றவை பற்றிய செய்திகள் பட விளக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தரமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட பாங்கு பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும்  உரியது. நூலாசிரியர் செல்வன் க. பிரகாஷ் என் அன்பு  மாணவர். பணிவும் ஒழுக்கமும் மிக்கவர். என் மாணவர் என இவரைச் சொல்லிக் கொள்ளும்போதெல்லாம் மனம் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறது. எந்தப் பணியிலும் ஓர் ஒழுங்கு, நேர்த்தியுடன் செயல்படுபவர். முதல் மாணவர்க்குரிய அத்தனை இலக்கணங்களும் அமையப் பெற்றவர். படிப்பில் பேரார்வம் உடையவர். குறுகிய காலத்தில் பல நூல்களைப் படைத்துள்ளார். இந்த நூலைப் பொறுத்தமட்டில் அவர் விரும்பும் கணினித் துறையுடன் அதைப் பயன்படுத்தி நூலாக்கம் செய்யும் முயற்சியில் முதல்படியில் நிற்கிறார். பல அரிய செய்திகளை ஆய்வியல் நெறிப்படி கட்டுரையாக்கம் செய்து மின்னிதழில் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் அதன் பொருண்மையை விளக்கும் நோக்கில் ஒன்றிற்கு ஒன்று போட்டியிடுகின்றன. சொல்லவந்த செய்திகளை நேராக - எளியமுறையில் - படிப்போர்க்குப் புரியும் வண்ணம் முயன்று வெளியிட்டுள்ளார். இதைப்போல எளிய நடையில் மின்னிதழ் கட்டுரைகள்  வருவது   கடினம். க. பிரகாஷ்  அவர்கள்  இத்தகு மேன்மைகளுடன் சீரும் சிறப்பும் மிக்க அரிய கட்டுரைகள் படைத்துள்ளமை எனக்கு வியப்பளிக்கிறது. இக்கட்டுரைகளை மின் நூலாக்கம் செய்து பல வழிமுறைகளில் இதைப் படிப்போர்க்கு இன்பம் அளிக்கும் வகையில் வெளியிட உள்ளார் என்பதை நினைக்குந்தொறும் உள்ளம் பூரிப்படைகிறது. இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப இத்தகைய அரிய பெரிய புதிய பணிகளை அவர் மேலும் மேலும் செய்ய வேண்டும். எதிர்காலச் சந்ததிகளுக்கு  ஒரு முன்னோடியாகத் திகழவேண்டும். பாரதி கூறியபடி, “புத்தம்  புதிய  கலைகள் - பஞ்ச  பூதச்  செயல்களின்  நுட்பங்கள்”   பற்றிய அறிவியலைத் தமிழில் கொணர எல்லாம்வல்ல இறைவன் அனைத்து வல்லமைகளையும் அவருக்குத் தரவேண்டும் என வாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பேரும் பெருமையும் பெற மனம் நிறைந்த அன்புடனும் பாசத்துடனும் அக்கறையுடனும்  வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன்    (முனைவர் ஓ. பாலகிருஷ்ணன்)  உதவிப் பேராசிரியர் பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் வாழ்த்துரை முனைவர் ச. தங்கமணி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துரை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்.   பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துரையில் தொழில் நுட்பக் கள ஆய்வுப்பணியாளராகப் பணியாற்றி வரும் க.பிரகாஷ் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்நூல்.இந்நூலினை படித்தறிந்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். என்மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல மலர்கள் சேர்த்துக் கட்டப்படும் மாலை போல் இணையம், மின்னூல், நினைவாற்றலும் நினைவகமும், அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை போன்ற தலைப்புகளில் அரிய செய்திகளை இந்நூலாசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார்.     அன்புக்குரிய மாணவர் க.பிரகாஷ் அவர்கள் பற்பல நூல்கள் எழுதி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற மீண்டும் வாழ்த்துகிறேன். அணிந்துரை உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வந்திருப்பதைப் பார்க்கிறோம். இவ்வளர்ச்சி பொதுவாக சமூக வளர்ச்சியோடும், அதன் வாழ்வோடும் தொடர்புடையது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபோது அக்கண்டுபிடிப்பு ஓர் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டுச் சென்றதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டபோது மிகப்பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட்டதையும் பார்க்கிறோம். ஆகவே எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் மனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் துணைபுரிந்துகொண்டு வருவதை நாம் காணலாம். இன்றைய சூழலில் இணையம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சாதனம். ஒவ்வொரு நாளும் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதையும் பார்க்கிறோம். அப்படி என்னதான் இந்த இணையத்தில் உள்ளது? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டோமென்றால், அதற்கு விடையாக மற்றொரு கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. அதாவது இணையத்தில் என்ன இல்லை? என்பதுதான் அந்தக் கேள்வியாகும். எனவே, இணையம் இன்று ஒவ்வொரு தனிமனிதனையும் ஏதேனும் ஒரு வகையில் ஆக்கிரமித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இணையம் இல்லா கல்வி, இணையம் இல்லா சமூகம், இணையம் இல்லா உலகம் என்பது இனிவரும் காலங்களில் எண்ணிப்பார்க்க முடியாது. இந்தச் சூழலில் இணையத்தை இலக்கியப் பரவலாக்கத்திற்கும், அதன் வாயிலாக இலக்கிய நுகர்விற்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இணையமும் இலக்கியமும் என்ற இந்த நூலில் இடம்பெற்றுள்ள 15 கட்டுரைகளும் இணையம் சார்ந்தவை. அவை, கணினி துறையோடும், சங்க இலக்கியத்தோடும், நீதிநூல்களோடும் தொடர்பு கொண்டவை. இவற்றையெல்லாம் மின்நூலாகவும், மின்நூலகமாகவும் மாற்றியமைக்க வேண்டியது நமது கடமையாகும். அதாவது தமிழை இணையவயமாக்குதல் என்ற குறிக்கோளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் உலக அளவில் தமிழின் பயன்பாடு பரவலாக்கம் பெறும். அதற்கு இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயனள்ள வகையில் அமையும் என்றால் அது மிகையாகாது. இன்றைய தேவை தமிழை – தமிழ் இலக்கியத்தை இணையவயமாக்குவதற்கு உரிய மென்பொருள் (ளுழகவறயசந), அதற்கான வழிமுறைகள், அதன்வழி பரவலாக்கம் செய்தல். இந்நூல் தமிழ்மொழி வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதற்கு பயன்படும் ஒரு கருவிநூலாக அமைந்துள்ளது. நல்ல பல கட்டுரைகளைத் தொகுத்து அவற்றை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவகையில் உருவாக்கியுள்ள ஆய்வாளர் திரு. க. பிரகாஷ் அவர்களை நான் வாழ்த்துகிறேன் - பாராட்டுகிறேன். அவர் இதுபோன்ற நல்ல பல நூல்களை சமுதாயத்தேவை கருதி எழுதவேண்டும் என்பதே என் விருப்பம்.   முனைவர் வே. தயாளன்  பேராசிரியர்  &  தலைவர் மொழியியல் துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் - 641 046   அணிந்துரை முணைவர் வ.ஜெயா தமிழ்ப் பேராசிரியர்  மற்றும் தலைவர் பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்   இலக்கியம் என்பது வாழ்வியலை எடுத்துக்கூறுவது; இலக்கு + இயம். ஓர் இலக்கை அல்லது குறிக்கோளைச் சிறிது கற்பனை கலந்து இயம்புவது. ஒவ்வொரு இலக்கியமும் தனக்கெனத் தனித்திறன் பெற்று விளங்கக் கூடியது. சங்க இலக்கியத்தில் காதலும், வீரமும் அதிகமாகப் பேசப்பட்டன. காதல், வீரம் இரண்டையும் விளக்க இயற்கை பின்புலமாக அமைந்து. அதனுடன் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க முறைகள் ஆங்காங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’    “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறு”    ‘நட்டவர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்’    ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்’     என்பன போன்ற முத்தான வரிகள் அக்காலச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டும். சமணர், பெளத்தரின் வருகைக்குப் பின்னர் நீதி இலக்கியங்கள் அல்லது அற இலக்கியங்கள் தோன்றலாயின. சமூகத்தில் புரையோடியிருந்த சாதி வேற்றுமைகளையைக் களைய பாடுபட்டது. அச்சமயங்கள் அனைத்து மக்களுக்கும் கல்விகற்க வேண்டும் என்று சாதி வேறுபாடு இருக்கக்கூடாது. அனைவரும் வரையறைக்குட்பட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல அறக்கருத்துக்களை இலக்கியங்கள் வாயிலாக எடுத்துக் கூறலாயினர். கல்வி, குடும்பம், பொருளாதாரம், அரசியல், நட்பு, வணிகம், தொழில் முறைகள், வானியல், சோதிடம், பல்வேறு கலைகள் குறித்த செய்திகளும், வாழ்வியல் விழுமியங்கள் குறித்த செய்திகளும் அவ்விலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இன்றைய காலகட்டத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஊடகத்தமிழாகும். ஊடகத்தில் இணையம் இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எழுதுவது குறைந்து வருகிறது. இணையத்தின் வாயிலாக பல இலக்கியங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது. இணைய இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்களால் அதிகம் வாசிக்கப்படக்கூடிய பல நாளிதழ்கள் மின்னிதழ்களாக வந்து கொண்டிருக்கின்றன. இணையத்திற்கெனத் தனி பல்கலைக்கழகமும் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் இந்நூலாசிரியர் இணையம் குறித்த பல்வேறு கருத்துகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சங்க இலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்க்கை குறித்தும், நீதி இலக்கியங்கள் வெளிப்படுத்தும் அறக் கருத்துக்களையும் விவரித்துள்ளார். இது இவரது மூன்றாவது நூலாகும் இவரது முயற்சி பாரட்டுதற்குரியது. இன்னும் பல நூல்களை எழுதி வெளியிட வேண்டும் என்று மனதார பாராட்டுகிறேன் ஏனெனில் இந்நூலாசிரியர் எனது மானவர். இளம்வயதிலேயே பல நூலுக்குச் சொந்தக்காரர். ஆகவே அவரது எழுத்துப்பணி சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.             என்னுரை இணையம் இன்று உலக முழுவதும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் புதுக்கண்டுப்பிடிப்பு என்று கூறலாம். மிகப்பழைய தகவல்களையும், இன்று புதிதாகத்தோன்றக் கூடிய பலபுதிய தகவல்களையும் பெற இணையம் உதவிவருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனைச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  திண்ணியர் ஆகப்பெறின்” ( குறள் - 666)   என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே  செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக, இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல், நீங்கள் எதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ! அதனை இணையத்தில் சென்று ஒருசில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம். “கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி” எனபோற்றப்படும் தமிழ்மொழியானது ஓலைச்சுவடி காலம் தொடங்கி பல்வேறு விதமான காலகட்டங்களை கடந்து இணையம் வரைவளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞாணயுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ்மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்து விட்டது. இன்றைய தொழில் நுட்ப உலகத்தில் அச்சிட்ட புத்தகங்களைத் தவிர்த்துவிட்டு மின்புத்தகங்களை அதிகமாக வாசிக்கவும் உருவாக்கவும் கற்று கொண்டனர். ஒரு புத்தகத்தை காதால் கேட்டும், கண்களால் பார்த்து படிக்கும் அளவிற்கு மென்பொருட்கள் இணையத்தில் வளர்ச்சியடைந்துவிட்டது. இன்றைய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஊர்ப்புறம் நகர்புறம் என பல நூலகங்கள் இருந்தாலும் அதை படிப்பவரின் எண்ணிக்கை மிககுறைவு தான். இணைய வளர்ச்சியின் காரணமாகவும் , திறன்பேசி, மடிக்கணினி ஆகிய கருவிகள் வளர்ந்து இருக்கும் நிலையில் இக்கருவிகளில் பல இலட்சம் புத்தகங்களை உள்ளடக்கச் செய்து, நினைத்த நேரத்தில் படிக்கும் அளவிற்கு  தொழில் நுட்பம் வளர்ந்து இருக்கின்றன. எனவே இணையத்திலும் பல நூலகங்களை அமைத்து பல நூல்களைப்  பதிவு செய்து வருகின்றனர். ஒரு மனிதன் வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி பேசிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு. அது போல் இலக்கியங்களில் கூறும் அற இலக்கியங்களின் கல்விச் சிந்தனை, நீதி இலக்கியங்கள் கூறும் அறக் கொள்கைகள், இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு, வள்ளுவத்தில் சமுதாயம், திருக்குறளில் மனிதவாழ்வியல் கூறுகள் என்ற தலைப்புகளில் அற வாழ்வியலை எடுத்துரைக்கின்றது. கிராமப்புற மக்களிடயே காணப்படும் நாட்டுப்புற மருத்துவ முறைகளை கொண்டு இயற்கையுடன் வாழ்வதால் அவர்கள் கைக்கொண்ட வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், பச்சிலை வைத்தியம் எனப் பலவித வைத்தியமுறைகளை மற்றும் போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள், அவர்களது நாட்டுப்புற விளையாட்டுக் கலைகளான குரங்காட்டம், பேந்தா, கொத்தாட்டம் போன்றவை  பற்றிய கள ஆய்வு செய்து தரவுகளுடன் எடுத்துரைக்கின்றேன்.     க.பிரகாஷ் எம்.ஏ., எம்.பிஃல்., (பிஎச்.டி)  தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் - 46 இதுவரை நான்………….. இந்நூலின் ஆசிரியர் க. பிரகாஷ்  தருமபுரி மாவட்டம் சந்தப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை க.கந்தசாமி தாய் க.லாதா. மற்றும் உடன் பிறந்த சாகோதரர்கள் க.குமரேசன் க.சின்னதுரை. பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், முதுகலைப்பட்டமும் பெற்றவர். இப்பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளராகவும், பகுதிநேர முனைவர் பட்டமும் மேற்கொண்டு வருகிறார். இளங்கலைப் படிப்பை அரூர் முத்துமாசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், உயர்நிலைக்கல்வியை சந்தப்பட்டியிலும் மேல் நிலைக்கல்வியை இராமியம்பட்டியிலும் பயின்றவர். இவர் தகவல் தொடர்பியலிலும், நாட்டுப்புறவியலிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இதுமட்டுமல்லாமல் சங்க இலக்கியம், நீதி இலக்கியம், சிறுகதை, கவிதை என இருபதுக்கும் மேற்பட்டப் படைப்புகளை இணைய இதழ்களில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஓவியப் போட்டியில் தேசிய அளவிலான சான்றிதழ் பெற்றவர்.  இவருடைய  முதல் நூல் “தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்”. இரண்டாவது நூல் “தருமபுரி வட்டார நாட்டுப்புற மருத்துவம்”. மூன்றாவது நூல்"பல் நோக்குக் கட்டுரைக் களஞ்சியம்"  ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.      இணையம் இணையம் இன்று உலக முழுவதிலும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் புதுக்கண்டுபிடிப்பு என்று கூறலாம். மிகபழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக் கூடிய பலபுதிய தகவல்களையும் பெற இணையம் உதவிவருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனைச் செய்துபார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இணையத்தில் படைப்பாளர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். அவை இலக்கியம், இலக்கணம், திரைப்படம், வரலாறு, புவியியல், வானியல், அறிவியல், கணிதம், சோதிடம், பக்தி, பொதுஅறிவு, மருத்துவம், சித்தம், யோகம், சமையல்குறிப்பு, ஓவியக்கலை, விளையாட்டு போன்ற எண்ணற்ற தலைப்புகளில் தகவல்களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தகவல்களை இணையத்தில் இணைத்துவிட்டால் யாரும் எந்த நேரமும் சென்று அந்த தகவல்களைப் பெறமுடியும். முற்காலத்தில் ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றிதெரிந்து கொள்ள வேண்டுமாயின் நூலகங்களுக்குச் சென்று அலையவேண்டிய சூழல் இருந்தன. இப்பொழுது தேவையான ஒன்றையோ அல்லது கருத்தையோ, ஒருவர்பற்றிய தகவல்களையோ, தெறிந்து கொள்ள நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் கையடக்க கருவியான அலைபேசி மற்றும் திறன்பேசி, நுண்ணரிபேசி, வில்லை, மாத்திரை, மடிகணினி, கணினி போன்றவற்றில் இணைய வசதிப்பெற்று கருத்துகளைத் தெறிந்துகொள்ளலாம். இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், தகவல்கள் பரிமாற்றலாம், பொழுது போக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இதுபோன்ற பல தகவல்களைப் பெற்று மனநிறைவு பெறசெய்வது இணையமாகும். அந்த அளவிற்கு இணையம் இன்று வளா்ந்து கொண்டேவருகின்றது.   “எண்ணிய  எண்ணியாங்கு எய்துப எண்ணியார்  திண்ணியர் ஆகப் பெறின்” ( குறள் - 666)   என்ற குறளில் எண்ணியவார் எண்ணியபடியே  செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல் நீங்கள் எதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை இணையத்தில் சென்று ஒருசில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம். இணையம் சொற்பொருள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப்பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகெங்கும் கணிப்பொறியில் உள்ள செய்திகளின் இணைப்பே இணையம் ஆகும். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் World Wide Web என்பர். இதனை சுருக்கமாக WWW என்றும் W3 The Web என்றும் குறிப்பிடுவதுண்டு.       இணைய வரலாறு இன்றைய உலகம் இணைய வழிகாட்டுதலின்படி பீடுநடைபோடுகிறது எனில் அதுமிகையன்று. 1950 ஆம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயன்கள் பெரிது வான்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினார். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள் வரிசைப்படுத்தும் முறைகள் மற்றும் தரவுப் பொதுநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் தொடங்கினார். இணையத் தந்தையாக ஜே.சி.ஆர்.லிக்லைடர் என்பவரை அழைக்கின்றனர். அரிய கண்டுபிடிப்புக்கு வித்திட்டவர்கள் பிரிட்டானிய நாட்டு அறிஞர்களான “சார்லஸ்காவ் மற்றும் ஜார்ஜ்ஸ் ஹாக்மேன்”ஆகியோர் ஆவார். 1996 இல்ஃபைபர் நூலிழையின் உதவியால் தகவல்களை ஒளிப்பிம்பங்களாக மாற்றி நெடுந்தொலைவு அனுப்பமுடியும் என்று கண்டு பிடித்தனர். 1980 இல் பிரான்ஸ் நாட்டில் மினிடெல் என்பவர் தொலை பேசிக் கம்பிவழியிலான தகவலறியும் சேவையைத் துவக்கினார். 1992 நவம்பர் மாதம் டெல்ஃபி என்ற நிறுவனம் பெரிய அளவிலான தகவல் சேவையைத் தொடங்கியது. 1993 செப்டம்பர் 15 இல் மிகப்பெரும் அளவிலான தேசியத் தகவல் பரவலுக்கான திட்டம் ஒன்றை அமெரிக்க அரசு வரைவு செய்தது. 1993 இல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் (National Centre For Super Computing) என்ற மையத்தைச் சார்ந்த மாணவர்கள் பலவசதிகள் கொண்ட இணையத் தேடலுக்கான மென்பொருள் திரையைக் கண்டறிந்தனர். இது மொசைக் என்றழைக்கப்பட்டது. இதனை மார்க் ஆண்டர்சன் மொசைக் என்பவர் கண்டறிந்தார். வலைப்பின்னல் மையம் வலைப்பின்னல் என்பது மீள்கருவிமையம் என்று குறிப்பிடுவார். பலசுருளிணைகள் ஒளியிழை, ஈத்தர்நெட் கருவிகளை ஒன்றாக இணைத்து அவற்றை ஒற்றை வலைப்பின்னல் கூறாகச் செயல் பட உதவும் கருவியாகும். 1994 இல் WWW என்ற வலைப்பின்னலாக அமைந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் கருவியாக உரு மாற்றம் பெற்றது. இதன் மூலம் தகவல்களை மட்டும்மல்லாத படங்களையும் பார்க்க முடிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொ்ன் என்னும் அணுத்துகள் இயற்பியல் நிறுவனம் உலகு தழுவிய விரிவுவலை முறையைக் கொண்டு வந்தது. 1995 இல் கொரிய நாட்டில் பிறந்தபின் அமெரிக்காநாட்டில் குடியுரிமை பெற்ற நாம் ஜீன்பெய்க (Nam Jun Paik) என்பவர் (Yber Town) என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்தார். இணையத்தை வழிநடத்து வோர் இணையத்தை தனிமனிதனோ அல்லது குழுவோ கட்டுப்படுத்து வதில்லை எனினும் இணையத்தினை வழிநடத்த இணையக் கழகத்தைக் கணினி வல்லுநர்கள் இலாபநோக்கமின்றி நடத்தி வருகின்றனர். அவற்றுள் iab, ietf ஆகிய இரண்டு கழகங்கள் குறிப்பிடத்தக்கன. IAB - Internet Architecture Board IETF - Internet Engineering Test Force   IAB என்பது கணினிகளை இணையத்தில் இணைப்பதற்கான வரைறை ஆகும். இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கு முகவரிகளை இது வழங்குகிறது. மேலும் தேவைப்படுகின்ற நேரங்களின் தேவைகேற்ப வரையறைகளை மாற்றி அமைக்கும் பணியையும் இக்கழகம் செய்கிறது. IETF என்பது கணினியின் தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும் அதனால் இணையத்தில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்கள் குறித்து முடிவுசெய்கிறது. இணைய விதிமுறைகளைக் கண்காணிப்பதற்காக The Internet Society Overseas for the Development of the Internet என்ற அமைப்பும் இணைய தளங்களை மேற்பார்வையிடுவதற்காக World Wide Web Consortium என்ற அமைப்பு செயல்பட்டுவருகின்றன. இணைய வசதி வழங்குவோர் இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டணம் செலுத்தி இணைய இணைப்புப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் Service provider என்று அழைக்கப்படும். தமிழில் சேவை வழங்குநர் என்று கருதப்படுவதுண்டு. அமெரிக்காவில் GTR, MCI, SEINT, UUNET, AOL ஆகிய நிறுவனங்கள் இணைய சேவையை வழங்குகின்றன. இந்தியாவில் VSNL, BSNL, DISHNET, STFY, AIRTEL, RELIANCE, TATA INDICOM முதலிய பல நிறுவனங்கள் இச்சேவையை அளிக்கின்றன. இணைய சேவை வசதி என்று குறிப்பிடுவதுண்டு. இணைய இணைப்பு பெற தேவையானவை இணைய இணைப்பு பெறுவதற்குக் கணினி, தொலைபேசி, இணைப்பு (Modem) பாங்கு ஆகிய மூன்று இருந்தால் போதும். இணைய வசதிபெற்றிடலாம். இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிடம் கட்டணம் செலுத்தி இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் அளவிற்கேற்ப உரிய தொகையானது முன்தொகையாக வோபின் தொகையாக வோசெலுத்தப்பட வேண்டும். இணைய முகவரி ஒவ்வொருவருக்கும் ஒருபெயர் மற்றும் முகவரி இருப்பதுபோல் ஒவ்வொரு இணைய தளத்திற்கும் ஒருபெயர் மற்றும் முகவரி இருக்கிறது. இதனை இணைய முகவரி என்று கூறுவதுண்டு. http;//www.prakashtamil.blogspot.com  இம் முகவரியில் ஐந்து பகுதிகள் உள்ளன. http - Hypertext transport protocol என்பதன் சுருக்கமாகும். (மீயுரைப் பரிமாற்றநெறி முறை) www - Worldwide web  என்பதன் சுருக்கமாகும். (வையவரிவலை) prakashtamil - குறிப்பிட்ட ஓர் இணையதளத்திற்கு வழங்கப்படும் பெயர் ஆகும்.   blogspot - தனியார் நிறுவனத்தின் பெயர்   com - Commerce  என்பது சுருக்கம். இதன் பொருள்   இணையதளத்தின் தன்மையைக் குறிப்பிடுவதாகும்.   “சுவிட்சர்லாந்து நாட்டில்‘செர்ன் என்னும் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்கும் பெர்னர்லீ என்ற இயற்பியல் வல்லுநர் பணியாற்றினார். இவர் 1989 இல் உலகளாவிய வலைப்பின்னலுக்கு WWW world wide web  என்ற பெயரிட்டார்.” டிம்பெர்னா்லீ இணையத்துக்கு அடிப்படையான மூன்று கருத்துக்களை கண்டுபிடித்தார். அவை   http  url html   httpHypertext transfer protocol என்பதன் சுருக்கமே ஆகும். (மீவுரைப் பரிமாற்ற நெறி முறை)  வையக வலைபிதழ் தகவலைப் பெறுவதற்கான விதிமுறை புரோட்டோக்கால் எனப்படும். தொடக்கம் செய்திபடம் எழுத்து முடிவு இவையென இந்த விதி முறைகள் மூலம் முன்பே தீர்மானித்தார். URL - Uniform Resource Locator  என்பதன் சுருக்கமே ஆகும். சீரான வள இடங்காட்டி இணையத்தில் உள்ளத் தகவலின் இருப்பிடம் காட்டும் முகவரியே இதுவாகும்.  இந்த முகவரியைப் பயன்படுத்தியே உலாவிகள் இணைய தலங்களைக் கண்டறிகின்றன. http;//www.Google.com  என்பது சீரான வள இடங்காட்டிகளுள் ஒன்று ஆகும். HTML - Hyper Text Markup Language என்பதன் சுருக்கம் ஆகும். மீயுரைக் குறிப்புமொழி இணையத்தில் ஓரிடத்திலிருந்து வேறொர் இடத்திற்குத் தாவிச் செல்ல குறிப்புகள் எழுத வேண்டும். இந்தக் குறிப்புகள் எழுதும் மொழியே மீயுரைக் குறிப்பு மொழி ஆகும். ஆவணத்தில் இரு பகுதிகள் உண்டு. அவை   தலை உடல்   தலைப் பகுதியில் ஆவணத்தின் தலைப்பும் உடல் பகுதியில் ஆவணமும் இருக்கும். 1991 மே மாதம் இந்த வையக விரிவு வலை அறிமுகமானது. காலாகாலத்திற்கு சேமிக்க முடிவதால் இப்பொழுது வலையே கதி என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. இணைய முகவரியும் இணையச் செயல்பாடும் ஒவ்வொரு தொலைபேசி இணைப்பிற்கும் ஓர் எண் இருப்பதுபோல இணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஓர் அடையாள எண் உண்டு. இந்த எண்ணில் நான்கு பகுதிகள் இருக்கும். சான்றுக்கு 456-12-25-78 என்பது ஒரு முகவர் கணிப்பொறியின் அடையாள எண் ஆகும். இந்த அடையாள எண்களை நினைவில் வைத்திருப்பது கடினம். எண்ணிற்குப் பதிலாக எழுத்திலான பெயரைப் பயன்படுத்துகிறோம். நமக்குத் தேவையான முகவரியை உள்ளிட்டால் தேடும்பொறி அந்தக்கணிப்பொறியைக் கண்டுபிடித்து நம் கணிப்பொறித் திரையில் காட்டும். இதற்கு யாகு, கூகிள், அல்டாவிஸ்டா எனப்பல தேடும் பொறிகள் உள்ளன. இணையச் செயல்பாடு இணைய இணைப்பைப் பெறத் தேவையான சில கருவிகள் உள்ளன.  அவை கணிப்பொறி Computer தொலைபேசி Tele communication மாற்றி Modem தொடர்புமென்பொருள் Communication Software இணையச் சேவை வழங்குபவர் Internet Service Provide   இது போன்ற கருவிகளின் மூலம் இணைய வசதிகள் பெற முடிகின்றன. தொலைபேசி வழியே இணையத்தைப் பயன்படுத்துவதில் தொடர்பு மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. இப்பொழுது ஒளியிழைத்தடங்கள் வழியே இணைய இணைப்பை எளிதிலும் விரைவாகவும் பெறமுடிகிறது. கணிப்பொறியில் இணைய சேவை பெறுவதற்கு முன்பே இணையம் செயல்படுவதற்கானப் மென்பொருள்களை பொருத்தி இருக்க வேண்டும். Landline net தொலை நிகரவசதியாகவும், Modem மாற்றி போன்ற முறையிலும் இணைய சேவை கணிப்பொறியில் பெறமுடியும். இணையகுறியீடுகள் இணைய குறியீடு என்பது ஒவ்வொரு நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாட்டிற்கும், கல்வி, பல்கலைக்கழகம், இராணுவம் போன்ற பல நிறுவனங்களின் விரிவான பெயர்களைதான் இப்பொழுது இணையத்தில் சுருக்கமாக வடிவமைத்து குறிப்பிட்டுள்ளனர். அவை   கல்வி edu பல்கலைக்கழகம் univ அரசுசாராநிறுவனம் org இராணுவம் mail வலைப்பராமரிப்பு net அரசாங்கம் gor தமிழ்நாடு tn இந்தியா in சிங்கப்பூர் sg கனடா ca இங்கிலாந்து uk   ஒருவருக்கு எழுதப்படுகின்ற கடிதங்களில் சரியான முகவரி இருந்தால் அக்கடிதம் உரியவருக்கு உரியநேரத்தில் சென்று கிடைக்கும். முகவரி சரியாக இல்லை என்றால் அக்கடிதம் உரியவருக்குச் சென்று சேர்வதில் கால தாமதம் ஏற்படும். பலநேரங்களில் அது உரியவருக்குக் கிடைக்காமலேயே போய்விடும். கடிதத்தில் முகவரியே இல்லையென்றால் அக்கடிதம் யாருக்குமே சென்றுசேராது.   இணையதள முகவரி சரியாக இருந்தால் அத்தளத்தைச் சரியாகச் சென்றடையலாம். முகவரி சரியாக இல்லையென்றால் உரிய இணைய தளத்தை உரிய நேரத்தில் சென்றடைவது கடினம். முகவரியே இல்லையென்றால் இணைய தளத்தை அடையவே முடியாது. ஒவ்வொரு இணையதளமும் எளிதில் அடையும் வகையில் ஒவ்வொரு இணையதளம் முகவரியைக் கொண்டு விளங்குகின்றன. நாம் எளிதில் மனதில் பதியவைத்து கொள்ளும் வகையில் முகவரிகள் அமைந்திருந்தாலும் கணினிக்கு முகவரிகள் தெரியாது. முகவரிகளைக் கணினி எண்களைக் கொண்டே அடையாளம் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக 212.58.240.32 என்ற எண் ஒரு முகவரியின் இணையதளத்தைக் குறிக்கிறது. இதனை IP முகவரி என்று கூறுவதுண்டு.  Internet Protocol  என்பதன் சுருக்கமே IP ஆகும். இணையத்தில் தகவல் தேடும்வசதிகள் விரிந்து பரந்த இந்த உலகத்தில் ஒருவருக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப்பிடித்தல் என்பது எளிதன்று. ஆராய்ச்சி தொடர்பாக ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு  நூலை தேடினால் அந்நூல் அங்கு இருக்கலாம், இல்லாமல் போகலாம்,இருந்து யாராவது எடுத்துப் போயிருக்கலாம் இருந்தும் கூட நம் பார்வைக்கும் வைத்தும் கிடைக்காமல் போகலாம். இணையம் என்பது அவ்வாறு அல்ல தேடியநேரத்தில் தேடியதைக் கண்முன்னே கொண்டுவந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதனைக் கொண்டு வந்து தருவதோடு மட்டுமன்றி அதனோடு தொடர்புடைய மேலும் பலதகவல்களை அள்ளித் தந்து நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கின்றன. ஆய்வுப்பணியில் ஈடுபடுவோருக்கு இணையம் மிகச் சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது. வேண்டிய வேண்டியவாறு மட்டுமன்றி கூடுதலாகவும் அதேவேளையில் தனியொரு மனிதனோ? அல்லது ஒரு குழுவினரோ? தேடிக்கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்தகாலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூடமிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம். சிறப்புமிக்க தேடுதல் வசதிகளைப் பலநிறுவனங்கள் இணையப் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. தேடுபொறிகள் அலெக்ஸா Alexa கூகிள் Google யாகு Yahoo ஸ்டார்வர் Starware தமிழ்தேடல் W3 tamil Search மொசிலாஃபையர்பாக்ஸ் Mozilla Firefox எம்.எஸ்.என் Msn அல்டாவிஸ்டா Alta vista பிங்கு bing ஆஸ்க்.காம் Ask.com   இவ்வாறு தேடுப்பொறிகளில் வேண்டிய செய்திகளைச்சில நொடிப்பொழுதில் இருந்த இடத்தில் இருந்தவாறே எளிதில் பெறமுடியம். தேடுப் பெறியினால் விளையும் சில நன்மைகள் இருக்கின்றன. அவை கால விரயத்தினைத் தவிர்க்கலாம் செலவுகுறைவு தகவல்களை விரைந்து பெறலாம். கூடுதல் தகவல்களையும் பெறலாம் தமிழ்மொழி வழியாகவும் தேடலாம். இணையத்தில் கலந்துரையாடல் இணையவழிக் கலந்துரையாடல் இணையவழி அளவளாவுதல் இணையவழி பொழுது போக்குதல் என்று கூறுவர். பொழுதுப்போக்கிற்காக நண்பர்கள் ஒன்றுகூடி பல தகவல்களை பற்றி பொழுதுபோக்காகப் பேசிமகிழ்வது ஆகும். இதில் மகிழ்ச்சியும் பொழுதுப்போக்குமே முதன்மை நோக்கமாக இருக்கும். இணைய வழிக்கலந்துரையாடல் என்பது ஏதேனும் ஒருபொருள் பற்றி ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணையம் வழிக்கூடிப்பேசுவது ஆகும். இக்கலந்துரையாடலுக்கு இ - குழு (e - Group) என்று குறிப்பிடுகின்றனர். இக்குழுவில் நண்பார்கள் ஓய்வான நேரங்களில் அமர்ந்துகொண்டு கணினியிலோ அலைப்பேசியிலோ நேருக்குநேர் முகம்பார்த்து பேசுவதும் தகவல்கள் பரிமாறுவதும் போன்ற உணர்வையும் மகிழ்ச்சியையும் இம் முறையின் வழியாகப் பெற இயலும் என்பர். பலநிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றனர். அவ்வகையில் www.chatting.com என்ற இணையதளம் குறிப்பிடத்தக்கது.   இணையத்தின் பயன்கள் இணைய உலகம் உண்மையிலேயே விந்தையானது ஒருமனிதனுக்கு ஓரளவு நேரமும் இணையத்தில் உலாவுவதற்குப் புரிதலும் இருந்துவிட்டால் உலகையே அவன் தன் கைகளுக்குள் கொண்டு வந்துவிடலாம். இணையம் விரிந்து பரந்துகிடக்கும் இந்த உலகையே நம் வீட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்தது. “இறந்ததுகாத்தல்எதிரதுபோற்றல்”  - (தொ.பொ.மரபு) 1610    இணையத்தின்வழிபுதியனபுகுந்து, அறிவுப்பெருக்கி, சிந்தனை செழிக்கச் செய்கிறது. இதன் மூலம் தகவல்களைப் பெறலாம், அளிக்கலாம், வாங்கலாம், கல்விபயிலலாம், பயிற்றுவிக்கலாம், எவரும் - எங்கிருந்தும் - எந்தத் தகவல்களையும் 24 மணிநேரமும் நாடு, இனம், மொழி, என்ற எத்தகைய வேறுபாடுகளும் இன்றிப்பெறும் ஊடகமாக இணையம் விளங்குகிறது. இதன்மூலம் தொலைவில் இருப்பவர்களைக் கண்காணிக்க முடியும். இவற்றின் வழிசாதனங்களையும் தகவல்களையும், கருத்துக்களையும் பகிரமுடியும்.   இணையத்தில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை எந்தச் செய்தியையும் பெறமுடியும். இணைய தளத்தை உள்ள நண்பனாகவும் எவ்வளவுநேரம் உறவாடினாலும் சலிப்பு ஏற்படாமல் உற்சாகம் குறையாத உணர்விலும் தகவல்களை அளிக்கும் வகையில் இணையம் திகழ்கிறது. பார்வைநூல்கள்   திருக்குறள் உணர்வுரை - இரா. கணகசுப்பரத்தினம் தமிழில் இணைய இதழ்கள் - அண்ணாகண்ணன் தொல்காப்பியம் - தமிழண்ணல்   இணையமும் தமிழும் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய முந்து மொழி எனபோற்றப்படும் தமிழ்மொழியானது ஓலைச்சுவடி காலம் தொடங்கி பல்வேறு விதமான காலகட்டங்களைக் கடந்து இணையம் வரைவளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞானயுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ்மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்து விட்டது. காலந்தோறும் மரபுவழிச் சாதனங்களால் பேச்சுவழக்கில் செய்தி பரிமாற்றம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு இசைச் சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுபட்டு புதிய தொழில் நுட்பங்களாகிய தகவல் தொடா்புவளா்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல்தொடர்புச் சாதனங்கள், மின்வழிச்சாதனங்கள், மின்னணுச்சாதனங்கள், அச்சுவழிச்சாதனங்கள், மின்இதழ்கள் போன்றவை மேம்படுத்திவருகின்றன. புதுப்புதுக் கோணங்களில் தகவல் தொடா்பினை மின்னணு சாதனங்களான ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்களைக் குறிப்பிடுகின்றனா். களப்பணியைப் பொறுத்தவரை தொழில் நுட்பக்கருவிகள் தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கியபங்கு வகிக்கிறது.   இணையம் இணையம் இன்று உலகமுழுவதிலும் பலகோடிமக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கண்டுப்பிடிப்பு என்றுகூறலாம். மிகபழைய தகவல்களையும், இன்று புதிதாகத் தோன்றக்கூடிய பல புதியதகவல்களையும் பெற இணையம் உதவிவருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களை பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், என கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. தமிழில் முதல் இணையதளம் தமிழை இணையதளத்தில் கொண்டு சோ்க்கின்ற முயற்சியில் முதலிடத்தில் இருப்பவா்கள் சிங்கப்பூர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆவார். தமிழ் இணையதளத்தின் தந்தை என்று போற்றப்படுபவா் சிங்கப்பூர் பேராசிரியா் நா.கோவிந்தசாமி ஆவார். இவா் ஒரு முறை சீனாவிற்குச் சென்ற பொழுது அவரது நண்பரிடம் தமிழின் பெருமைகளை எடுத்துக்கூறியுள்ளார். இதனைக்கேட்டு வியந்த அவரதுநண்பா் “எங்களின் சீன மொழியைப் போலப்பெருமை வாய்ந்த மொழி உங்களின் தமிழ்மொழி. ஆகவே எங்கள்மொழியைப் போலவே உங்கள்மொழியும் இணையத்தில் ஏற்றலாம்”என்று கூறினார். அதன் விளைவாகத் தமிழை இணையத்தில் ஏற்றும் முயற்சியில் நா.கோவிந்தசாமி ஈடுபட்டார். “1995 அக்டோபாரில் சிங்கப்பூர் அதிபா் திரு.ஓங்டாங்சாங் தொடங்கி வைத்த Journey Words home and nation anthology of singapore 1984 - 1995) என்கிற நான்கு தேசியமொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில் தான் முதன்முதலில் தமிழ்இணையம் பதிவேற்றம் செய்யப்பட்டது.” இதைச்சாதித்த Internet Research and Development Unit குழுவில் கோவிந்தசாமியும் அவரோடு இணைந்து பணியாற்றிய டாக்டர் டான் டின்வி.லியோஸ் மற்றும் கோக்யாங் ஆகிய இரு வல்லுநர்களும் முதல் தமிழ்ப் பக்கத்தை வலையேற்றினார். இவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளது. தமிழில் இணையவளர்ச்சி தமிழ் வளர்ச்சிக்குக் கணினி இணையத் தொழில் நுட்பம் பெரிதும்பயன்படுகிறது. இணையம் வந்தபிறகு தான் தமிழ்த் தகவல்கள் கடல் கடந்து நாடுகளுக்கிடையே உடனுக்குடன் பரவின. எழுத்துருச்சிக்கலும், தட்டச்சுப் பலகைச்சிக்கலும் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ்மென் பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன. தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்தசிக்கல் ஒரளவுதீர்ந்த நிலையிலும் எழுத்துருச்சிக்கல் இருந்து வந்தது. பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குறி (Unicode) நுட்பத்தில் தமிழ்த்தட்டச்சுக்கு வழிபிறந்தது. அச்சு இதழ்கள்போல் தமிழ்மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளை உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும் பங்காற்றுகின்றன. செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்ற செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத முன்வருகின்றனர். வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமின்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பலவும் பல்வேறு வடிவங்களில் தமிழ்வழியில் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் தமிழ்ப் படைப்புகளுக்கும் அச்சுவழி கிடைக்கும் தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே படிக்ககிடைக்கும். தற்பொழுது அந்நிலை மாறி புதுப்புது எழுத்தாளர்களின் படைப்புக்கள் இணையத்தில் குவிந்துகிடக்கின்றது. இது வாசகர் வட்டத்தைப் பெரியதாக விரிவுபடுத்துகின்றது. இணையத்தில் அச்சுவடிவ அகர முதலிகள் போலமின் அகர முதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி க்ரியா அகராதி கதிரைவேள்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ் சர்ந்த பதிவுகள் பல பதிவேற்றிப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய பதிவுகள் பல உள்ளன. தற்பொழுது உள்ள பதிவுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அளவில் குறைவாகவே உள்ளன. தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மற்றும் உரையாடல் செய்ய இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். இணையம் சார்ந்த பலகலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல் மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவுவலைப்பு, சமுகவலைத்தளம் இணையக்குழு, விசைப்பலகை, திறன்பேசி, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டிமுதலான சொற்கள் பயன்பாட்டு நோக்கில் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன.   தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்க பலமாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. “உத்தமம்”என்ற அமைப்பு உலகெங்கும் பரவிவாழும் தொழில் நுட்ப அறிஞர்களால் தமிழ்க்கணினி இணையத் தொழில் நுட்பத்திற்கென்று உருவாக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது. “மதுரைத்திட்டம்”என்னும் தமிழ் தளம் தமிழின் அரியநூல்கள் 353 எண்ணிக்கையிலான தம் வலைப்பூபக்கத்தில் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பலதமிழ் இணையதளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன. இத்திட்டத்தில் தமிழ்மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரியநூல் கள் மற்றும் ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழரின் மரபுச் செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது. உலகெங்கும் தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித்தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. அவை தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, என்னும் பெயர் கொண்டதிரட்டிகள் தமிழில் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ்ச் சொற்களை அகரவரிசையில் தரும்வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பிய வண்ணம் எழுத்துகளை மாற்றித்தரும் எழுத்து மாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய உயிர்பெற்றுள்ளது. தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலகஅளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக வளரும். தமிழ் இணையமாநாடுகள் உலகில் எந்த ஓர் அமைப்பு அல்லது நிறுவனமாக இருந்தாலும் அது தோன்றுவதற்கு முன்பு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மாநாடுகள் கருத்தரங்குகள் மிகமுக்கியப் பங்கினை வகிக்கின்றன. தமிழ் இணையதளங்கள் அதிகமாகத் தோன்றியகாலக் கட்டத்தில் அதன்வளர்ச்சிப் பணியை எட்டுவதற்கும் பல கருத்தரங்குகளும் மாநாடுகளும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்பட்டன. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்திவருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 14 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. அம்மாநாட்டில் முழுக்க முழுக்க தமிழ் மென்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் கருத்துரைகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை நடத்தி தீர்வு காண்பது மாநாடுகளின் நோக்கம் மற்றும் உறுதிமொழியே இருந்தது. உலகம் முழுவதும் பலகோடி மக்களின் பயன்பாட்டு தேவைகளைப்பூர்த்தி செய்யும் ஒருகருவி இணையம் என்று கூறலாம். இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்து வெளிநாடுகளுக்கு உடனுக்குடன் பரப்பமுடிந்தது. தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்க பலமாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தி தமிழ் இணைய மேம்பாட்டிற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழ் செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன கட்டற்ற செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத முன்வந்துள்ளனர். பார்வைநூல்கள் இணையமும் இனிய தமிழும் - துரையரசன் தமிழ்க்கணினி - இணையப்பயன்பாடுகள் - துரை. மணிகண்டன்   மின்னூல் மின்னணுபுத்தகங்கள் அல்லது மின்னூல்கள் இன்றைய தொழில்நுட்ப உலகில் மிகவும் புகழ்பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக பதிப்பிக்கப்டும், புத்தகங்கள், கட்டுரைகள், அனைத்தும் மின்னூல்களாக காணப்படுகின்றன. மின்னூல் என்பது நூல் ஒன்றினுடைய மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பாகும். இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில்அச்சிட்டு கட்டுமானம் செய்து தயாரிக்கப்படுகின்றன. அப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம்பெறச் செய்து அதை இணையவழியில் படிக்கும்படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்துவைத்து தேவைப்படும்போது படிக்கும் நிலையிலும் மின்நூல் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறாக வளர்ந்த மின்னூல் இன்று உலக மொழிகள் அனைத்திலும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு செயல்படுகின்றன. குறிப்பாகத் தமிழ்மொழியில் இன்று பரவலாக மின்னூல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தனி ஆட்களும், சில தனியார் புத்தக நிறுவனங்களும், பலர் குழுவாகச் சேர்ந்து மின்னூல்களை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றார்கள். மின்புத்தகங்கள் நாம் இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள் தாளில் அச்சிட்டு கட்டுமானம் செய்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைக் கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் அல்லது திறன்பேசியில் வெளியிடுவதே மின்புத்தகம் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பதிவிறக்கம் செய்து குறுந்தட்டு வடிவில் சேமித்துவைப்பதையும் மின்புத்தகங்களாக கருதப்படுகின்றன. மின்னூல்கள் பல்வேறு அமைப்பில் வெளியிடப்படுகின்றன. அவை பி.டி.எஃப், இணையத்தில் வெளியீடு, புதிய அனைத்துலகத் தரமான இ-பப் மற்றும் முபி, அமைப்புகளில் காணப்படுகின்றன. மின்னூல் அமைப்பு பி.டி.எஃப் இணையஅமைப்பு இ.பப் முபி இவை நான்கு அமைப்புகளும் கணினி, இணையம் மற்றும் கையடக்க கருவிகளிலும் இயக்கப்படக் கூடிய அமைப்புகள் ஆகும் பி.டி.எஃப், அமைப்பில் உள்ள மின்னூலை வாசிப்பதற்கு பி.டி.எஃப் ரீடர் எனும் வகையிலான வாசிப்பு செயலிகள் தேவையாகிறது. இணைய அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு உலாவி மற்றும் இபப் அமைப்பில் மின்னூலை வாசிப்பதற்கு இபப்ரீடர் என்னும் வாசிப்புச் செயலிகள் தேவையாகின்றன.       பி.டி.எஃப் அமைப்பு தாளில் அச்சிட்டு வெளியிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒருநூலை அச்சுக்கருவியில் அச்சிடுவதற்குப் பதிலாக மின்வடிவில் சேமிப்பதே பி.டி.எஃப் அமைப்பாகும். ஊடகத்தில் மாற்றம் உண்டே தவிர நூல்வடிவமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அட்டைப்படம், உள்ளடக்கம், பக்க எண்கள், பின்னூட்டம் முதலிய நூற்கூறுகள் அனைத்தும் அச்சுவடிவ நூலில் எவ்வாறு பதிக்கப் படுகின்றனவோ அவ்வாறு பி.டி.எஃப் நூலிலும் பதிக்கப்படுகின்றன. விரலைக் கொண்டு தாளில் அச்சிடப்பட்டப் பக்கங்களைப் புரட்டுவதற்குப் பதிலாக சுட்டியைக் கொண்டு திரையில் பக்கங்களைப் புரட்டுகின்றனர். பி.டி.எஃப் வாசிப்புக் கருவியில் தோன்றும் பக்கத்தைப் பெரிதாகவோ சிறிதாகவோ, காணலாம். ஆனால் பக்கத்தின் அமைப்பு அவ்வாறே இருக்கும். எழுத்துக்களைப் பெரிதாக்கலாம் அல்லது சிரிதாக்கலாம். அதற்கேற்றார் போல்படங்களின் அளவும் பக்கத்தின் அளவும் மாற்றப்படும். ஆனால் பக்கத்தின் தோற்றம் மாறாது. ஒருபக்கத்தில் பத்துவரிகளும், இருபடங்களும், இருந்தால் எத்தனை அளவு மாற்றம் செய்தாலும் அதேபக்கத்தில் தோன்றும் அடுத்தப்பக்கத்தில் உள்ள வரிகள் இந்தப்பக்கத்தில் வராது. அது போல அந்தப்பக்கத்தில் உள்ளவரிகள் அடுத்தப்பக்கத்திற்குப் போகாது. பி.டி.எஃப் மின்னூல்களை உருவாக்குவது மிகவும் எளிதாகும். அச்சிடுவதற்கான நூலை வடிவமைக்கும் அதேசெயலில் இருந்து பி.டி.எஃப் மின்னூல்களைச் சேமிக்கலாம். மைக்ரோசாப்ட், அடோபி இன்டிசைன், முதலிய செயலிகள் பொருத்தமானவை. கோப்புகளை பி.டி.எஃப், ஆக சேமிப்பதற்கு பி.டி.எஃப் ரைடர் என்னும் செயலி தேவை. இவ்வகைசெயலிகள் இலவசமாக கிடைக்கின்றன. பி.டி.எஃப் அமைப்பில் சேமிக்கப்பட்ட மின்னூலில் ஒருசில வசதிகளை மட்டுமே சேர்க்கலாம் அடோபி அக்ரோபட் போன்ற செயலிகளைக் கொண்டு உள்ளடக்கப் பக்கத்தில் உள்ளதலைப்புகளை நூலில் உள்ளபக்கங்களோடு இணைக்கலாம். இதுபோன்று சிறுசிறு முன்னேற்றங்களைத் தவிர பி.டி.எஃப் மின்னூல்களில் வேறு எந்த புதுமையையும் செய்யமுடியாது. இணைய  அமைப்பு இணைய அமைப்பில் உருவாக்கப்படும் மின்னூல் மீயுரை குறியீட்டு மொழியில் வடிவமைக்கப்பட்ட நூலாகும். ஓர் இணைய தள உருவாக்கத்திற்குப் பயன்படும் அதேதொழில் நுட்பங்களைக் கொண்டே இந்த வகை மின்னூல்களும் உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் தமிழ் மின்னூல்களைப் பதிவேற்றும் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டன. மதுரைத்திட்டம், நூலகம்திட்டம், சென்னை நூலகம் திட்டம், முதலியவை நூற்றுக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்தில் பதிப்பித்து வருகின்றன. கட்டற்றக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஒரு பெரிய மின்னூல் களஞ்சியமாகக் கருதலாம். இணையத் தொழில் நுட்பம் என்பதால் எந்தவிதக் கணினிகளிலும் இந்தமின்னூல்களை வாசிக்கலாம். ஒருங்குறி எழுத்துரு தரத்திலான தமிழ் எழுத்துரு மற்றும் உலாவி இருந்தாலே போதும், விண்டோஸ், லினக்ஸ், கணினிகளில் இந்த இரண்டும் உள்ளன. தமிழ் மின்னூல்களைப் படிக்கும் வாய்ப்பு இந்தக் கணினிகளில் இயல்பாகவே உள்ளது. சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவாஸ்க்ரிப்ட், ஆகிய கணினிமொழிகளின் துணைக்கொண்டு நூலோடு வாசகர்கள் ஊடாடுவதற்கான வசதிகளைச் சேர்க்கலாம். தாளில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் புரட்டுவதைப் போன்ற உணர்வு, படங்களையும், எழுத்துவரிகளையும், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்துதல், அருஞ்சொற்களைத் தேர்வுசெய்து அவற்றிக்கான பொருளை இன்னோரு கட்டத்தில்காணுதல், குறிப்பிட்ட சொற்கள் வரும்பக்கங்களைத் தேடுதல் முதலிய பலவசதிகளை இணைய அமைப்பிலான மின்னூல்களில் சேர்க்கலாம். இணைய அமைப்பிலான மின்னூல்களில் பல புதுமைகளைச் செய்வதற்காண வாய்ப்பு இருந்தாலும் சிலகுறைகள் உள்ளன. பி.டி.எஃப் நூலில் எல்லா பக்கங்களும் ஒரேகோப்பில் அடங்குவது போல் இணைய அமைப்பிலான நூலில் உள்ளபக்கங்கள் அடங்குவதில்லை. இந்தநூலில் பயன்படுத்தப்படும் படங்கள் தனித்தனியே வெவ்வேறு கோப்புகளில் சேமிக்கப்படுகின்றன. நகர்படங்கள் ஒலி பதிவுகள் அனைத்தும் தனித்தனி கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். இணைய தொடர்பு இல்லாத போது இந்தநூலை வாசிப்பதாக இருந்தால் இந்தநூலுக்குத் தேவைப்படும் அனைத்துக் கோப்புகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இணைய அமைப்பில் இதுபோன்று குறைகளைத் தீர்ப்பதற்காகவும் மின்னூலுக்கென்றே சிலசிறப்பு அம்சங்களைச் சேர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இபப் எனும் புதியமின்னூல் தரம் ஆகும். இபப் அமைப்பு இபப் என்பது நவீன மின்னூல்களை வெளியீடு வதற்காக idpe எனப்படும் அனைத்துலக மின்பதிப்புக் குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஓர்இலவச கட்டற்ற திறந்த வெளிமின்தரம் என்று குறிப்பிடுகின்றனர். இணைய அமைப்பில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி மின்னூலுக்கென்றே சிலபுதிய வசதிகளைச் சேர்த்து ஒரேகோப்பில் பதிக்கும் வாய்ப்பை இந்த இபப் அமைப்பு அமைந்துள்ளது. மின்னூல்களை கணினிகளில் மட்டும் இன்றி கையடக்க கருவிகளிலும் வாசிக்கும் வாய்ப்பை இபப் ஏற்படுத்தியுள்ளது. மின்னூல்களை வாசிப்பதற்காகவே சில கருவிகள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. முபி  அமைப்பு முபிஅமைப்பானது இபப் போன்றதே ஆகும். ஆனால் திறந்தநிலைக் கோப்பு அல்லாமல் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் கருவியில் மட்டும் படிக்க முடியும் இதனை நாம் முபி அமைப்பு என்கிறோம். மேற்குறிப்பிட்ட எல்லா அமைப்புகளிலும் தமிழ் மின்னூல்களைத் தயாரிக்கலாம். வின்டோஸ், மெகிண்டஷ், லினக்ஸ், போன்ற கணினிகளில் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் இயல்பாக இருப்பதால் அனைத்து கணினிகளிலும் இந்தநூல்களைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லா கணினிகளிலும் அதே எழுத்துரு அமைந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. எல்லா கணினிகளிலும் நூலை படிக்கும் வாய்ப்பு மட்டும் இருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பில் உள்ள எழுத்துருவை கொண்டு கோப்புகள் தோன்றும்.     மின்னூலை உருவாக்கும் முறை நாம் வெளியிட விரும்பும் ஆழ்ந்த உட்பொதிந்த கருத்துக்கள் அடங்கிய பொருட் கூறுகளை அல்லது பகுதிகளைக் கணினி தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்து கொள்ள வேண்டும். தட்டச்சு செய்து கொண்ட பகுதிகளை ஒரு கோப்பாகச் சேமித்துவைக்க வேண்டும். நாம் தட்டச்சு செய்து கொண்ட கோப்பு எந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தித் தயார் செய்தோமோ அந்த மென்பொருளின் மூலம் இணையத்தில் பயன்படுத்தும் வகையில் Html - Asp கோப்புகளாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும் இரண்டு வகை கோப்புகளாகவே வடிவமைக்கப் பட்டுவருகின்றன. அவை Html - Asp முதலில்   குறிப்பிட்ட வகைகோப்பு நாம் அவ்வாறு தயார் செய்து ஏற்றுமதி செய்ய முடியும். நாம்தயார் செய்து ஏற்றுமதி செய்த கோப்புகள் இணையத்தின் சேமிப்புகிடங்கில் சென்று தேங்கிகிடைக்கும். பிறகுநாம் அந்தக் கோப்பை பயன்படுத்த முயற்சிக்கும் போது சேமிப்புக்கிடங்கில் உள்ள அந்தக்குறிப்பிட்ட கோப்பு செயல்படும் பக்கங்களாக மாறி கண்முன்னே தோன்றும். ஒவ்வொருநாளும் ஏற்றுமதி செய்யப்படும் கோப்புகள் இணைய சேமிப்புக்கிடங்கில் ஆவணமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு வெளியிடப்படும் மின்புத்தகங்களை இணையத்தின் உதவியோடு மென்தட்டுகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தமுடியும். இவ்வாறு இணைய சேமிப்புக் கிடங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட இணைப்பக்கத்திற்கு ஒதுக்கிய இடத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒருகுறிப்பிட்ட தொகை செலுத்தி புதிப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் நாம் வெளியிட்ட மின்புத்தகங்கள் காலாவதியாகிவிடும். கிரியேடிவ் காமன்ஸ் உரிமம் மூலம் உள்ளடக்கத்தைக் காணுதல் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் தமிழில் பல வலைப்பதிவுகளும், தளங்களும் உள்ளன. நாம் அங்கிருந்து உள்ளடக்கத்தைப் பெற மற்றும் மின்புத்தகங்களும் அவர்கள் புத்தகங்களில் அதே உரிமம் மூலம் குறிப்பிட்டு உருவாக்க முடியும். பல எழுத்தாளர்களும், பல வலைப்பினர்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் மூலமாக தங்களுடைய வலைப்பதிவில் வெளியிடுவார்கள். Press book.com என்ற வலையதளத்தில் ஒருகணக்கை உருவாக்க. Press book.com என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மின்னூலை உருவாக்கமுடியும். epub, html, pdf, போன்ற முறையில் மின்னூல்கள் அமைகின்றன. Press book.com என்ற வலைதளதில் ஒரு கணக்கை உருவாக்கி, இக்கணக்கில் நமக்குத் தேவையான மின்னூல்களையும், புகைப்படங்களையும், மற்றும் ஒலி, ஒளி, ஊடகங்களையும் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். புதிதாக ஒரு மின்புத்தகத்தை உருவாக்கும்பொழுது எண் அட்டவணையை பயன்படுத்தி அவ்வாறு உருவாக்கிய புத்தகத்தின் வலை முகவரி மற்றும் புத்தகத்தின் தலைப்பு குறிப்பிட்டு பிறகு அதனை நாம் வெளியிடும் முறை தனியுரிமையாகவும் பொதுவாகவும் வெளியிடலாம். புத்தகத்தின்  வடிவமைப்பு அட்டைப்படம் முக்கியபகுதி அட்டைபின்பகுதி   அட்டைப்படம் Front Matter  அட்டைப்படம் என்பது ஒரு புத்தகத்தின் முதல் பகுதியாகவும் மற்றும் நூல்விவரம், தலைப்பு, முகவுரை, ஆகியவை குறிப்பிடுவது அட்டைப்படமாகும்.   முக்கியப்பகுதி Main body  ஒரு புத்தகத்தின் பொருளடக்கத்தையே முக்கியப் பகுதியாக குறிப்பிடுகின்றோம். ஒரு புத்தகத்தை உருவாக்கியப்பிறகு ஏற்றுமதி சேர்க்கை மற்றும் ஏற்றுமதி தலைப்புக்காட்டும் சேர்க்கை என ஒவ்வொரு இயலுக்கும் அல்லது கட்டுரைகளுக்கும் இம்முறை பயன்படுத்திய பிறகு வெளியிடலாம். புத்தகதகவல்  Book information  ஒரு புத்தகத்தின் முழுவிவரத்தையும் குறிப்பிடுவது புத்தகதகவல் ஆகும். தலைப்பு, குறுகியதலைப்பு, துணைத்தலைப்பு, குறிப்பிட்டப்பிறகு அப்புத்தகத்தின் ஆசிரியர் பெயர், ஆசிரியரின் முழு முகவரியும், வெளியிடப்படும் இடம், மொழி, வருடம் ஆகியவை அனைத்தும் பதிவு செய்யவேண்டும். கருப்பொருள்  Themes  கருப்பொருள் என்பது வரியின் மற்றும் ஒருபத்தியின் இடைவெளிவிட்டு அமைப்பது கருப்பொருள் ஆகும். ஏற்றுமதி  Export  ஏற்றுமதி என்பது நாம் உருவாக்கிய ஒரு மின்புத்தகத்தை வடிவமைக்கும் அல்லது அமைப்புகள் ஆகும். pdf, epub, mobi, hpub, html, word, press, xml போன்ற வடிவங்களில் மின்புத்தகத்தை ஏற்றுமதி செய்யலாம். Press book.com என்ற வலைத்தளத்தில் உருவாக்கிய உங்கள் கணக்கில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி மின்புத்தகத்தை உருவாக்கமுடியும். அக்கருவிகள், கட்டுப்பாட்டுஅறை, மேம்படுத்தல், உரை, புத்தகத்தகவல், தோற்றம், ஏற்றுமதி, விற்பனை, ஊடகம், பயனர்கள் மற்றும் சுருக்கப்பட்டியல் ஆகியவை ஆகும்.   அட்டையின்  பின்பகுதி Back Matter  அட்டையின் பின்பகுதி என்பது அப்புத்தகத்தின் பதிப்புரிமை பற்றிய தகவல்களும், ஆசிரியர் பற்றிய தகவல்களும், கவிதைகளும், படங்களும், நூல்களும், விருதுகளும், அட்டவணைகளும், மற்றும் இதுபோன்ற பலகருத்துகளை வெளியிடுவது அட்டையின் பின்பகுதி ஆகும். மின்னூலை உருவாக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் இணையப்பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தமிழ் மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒவ்வொரு இணையதளமும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருக்கள் கொண்டு அமைந்துள்ளது. எனவே நாம் வெளியிடும் இணையதளத்தில் உள்ள எழுத்துருக்களைக் கொண்டே நமது நூல் உள்ளடக்கங்களைக் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இல்லையேல் நமது நூற்பகுதிகள் இணையப்பக்கத்தில் இருந்து தாறுமாறாக மாறிவிடும். ஆங்கில மொழியில் இந்தச்சிக்கல் இல்லை. எந்தவகை ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு மின்நூல் தயாரித்தாலும் அவை இணைப்பக்கங்களாக ஏற்றுமதி செய்யும்போது தெளிவாகத் தெரிகிறது.     சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் ஆங்கில மொழியில் அமைந்த விசைப் பலகைகள் ஒரேமாதிரியான அமைப்பைக் கொண்டவை ஆகும். ஒவ்வொருவகை ஆங்கில எழுத்துருக்களும் மற்றவகை எழுத்துருக்களும் இணைந்துகொள்ளும் வகையில் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றையொன்று துணைசெய்வதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியின் எழுத்துருக்கள் பலவிதமான விசைப் பலகைகள் கொண்டு வடிவமைத்துள்ளதால் தமிழில் மின்னூல்கள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன. தீர்வு தமிழ் மொழியின் எழுத்துருக்களின் சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஒருங்குறி (Unicode, NHM Writer) என்ற எழுத்துருக்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் அச்சிக்கலில் இருந்து விடுபட்டனர். மின்னூல்  வரலாறு மின்னூல்  முதன்முதலாக ஆக்ஸ்போர்டு ஆங்கில விளக்க உரையுடன் இலக்கணப்படி அச்சுவடிவிலான நூலாக வெளிவந்திருக்கிறது. “முதல் மின்புத்தகம் குறியீட்டு 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கி ராபர்டோஸ் வீடிஷ் தயாரித்த தாமஸ் அக்வினாஸ் படைப்புகளைப் பெரிதும் உரை விளக்கம் மின்னணுகுறியீட்டாக இருக்கின்றன” ஆங்கிலத்தில் முதன் முதலாக மின்நூலை வெளியிட்ட வர்தாமஸ் அக்யூனஸ், ராபட்பூசா, பாப்ரோன் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் ஆவார். 1930 ல் மின்னூல்களை அடுத்தவர்கள் படிக்கின்ற வகையில் படத்துடன் கூடிய ஒளி நகர்வுடன் வெளியிட்டுள்ளனர். இதற்கு மாற்றாக டவ்ஏங்கல் பர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் 1960 ல் ncs ஆய்வுத்திட்டத்தில் நூல்களை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 1992 ல் சோனி நிறுவனம் டேட்டாடிஸ்க் மென் என்பதை அறிமுகப்படுத்தியது. இது வன்பொருளில் சேமிக்கும் வசதியைப்பெற்றது. மின்புத்தகங்களை   வாசிக்க   உதவும்கருவிகள் தமிழில் மின்புத்தகங்களை வாசிப்பதற்கான கணினி தொழில் நுட்ப வல்லூனர்கள் மற்றும் பல அம்சங்கள் கொண்ட பெரியநிறுவனங்களாலும் பல கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அக்கருவிகளைப் பயன்படுத்தி மின்னூலை வாசிக்கலாம். மின்னூலை வாசிப்பதற்கென்று வன்பொருளும், மென்பொருளும், உருவாக்கப்பட்டுள்ளன. அவ் வன்பொருள்களிலும், மென்பொருள்களிலும் மின்னூலை வாசிக்கும் போது பக்கத்தைப் பெரிதாகவும் சிறியதாகவும் மாற்ற முடியும். நாம்விட்ட இடத்தில் இருந்து தொடங்கவும் முடியும் இதுபோன்று பல முறைகளை கொண்டு உள்ளகருவிகளாகவும்,  மென்பொருளாகவும், உள்ளன. “மின்னூல் என்பது நூல்களின் மென் வடிவம் மட்டுமில்லை, அதனை எளிதில் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும், காகிதமில்லை மின்வழியாகும்”கணினியிலும் அனைத்து இயக்குதலக் கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கும் முறையுள்ளது. மின்னூலைப் படிப்பதற்கென்று கையில்வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு பல கருவிகள் வளர்ந்துள்ளது. அவை ! வன்பொருளாகவும், மென்பொருளாகவும், உள்ளன. வன்பொருள்கள் Kindle Nook   Sony kobo Android I phone Computer   மென்பொருள் Google play books News Reader Reader pdf Reader Speed Reader Books Reader Readuim - Chorme e - Reader FB - Reader   Iso  கருவிகள் - I Books for ipad (e-pub), kindle for ipad (mobi), Google play books. Android  கருவிகள் - epub for Android,  Fb Reader for Android,  Google  play books, Google Chrome குரோம் உலாவி - Readium.org போன்ற பல கோப்புகளைப் படிக்கலாம். Mozilla Firefox  பயர்பாக்சு உலாவி - epubread.comதரும்நீட்சியில் epub கோப்புகளைப்படிக்கலாம். FBreader, Calibreமூலம்Windows, Linux முதலிய பல்வேறு இயங்கு தளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும். இக்கருவிகளில் மின்னூலை நிறுவி விலையில்லாக் கருவிகள் மூலம் வின்டோஸ், ஐபேட், ஐபோன், ஆன்ராய்டு, பிளாக்பெரி, என பலகருவிகளில் நிறுவிப் படிக்கலாம்.   மின்னூல்களின்  பயன்பாடுகள் அதிகப்பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப்பக்கங்களை இணைக்க முடியாது. அதிகப்பொருட் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின்நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடலாம். மின்நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது. உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப்பார்த்துப் பயன்படுத்த முடியும். தேவையான மின்னூல்களை மின்வணிகம் வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்களை அச்சுப்பிரதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின்புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மின்புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்டகாலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின்புத்தகங்களின் ஆயுள்காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியவை ஆகும். வெளியிடப்பட்ட ஒருபுத்தகத்தின் கருத்துக்கள் ஒருமாநிலமோ, அல்லது ஒருநாடோ மட்டும்தான் சென்றடையும். மின்னூலாக பதிப்புச்செய்யும் போது உலகளாவிய நிலையில் பரவி எல்லோரும் படித்து இன்புறும் அளவிற்கு மின்னூல்கள் பயன்படுகின்றன. பார்வைநூல்கள் http;//www.muthalvan.in http;//ta.wikipedia.org/s/ma7 http;//tech.neechalkaran.com     மின்நூலகம்   21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவுசெய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகுவேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், உள்ளிட்ட நூல்களைக் கணினியில் சேமித்துவைக்கும் வேலை அரசாலும், அரசுசார்புடைய அமைப்புகளாலும், தனியார் பலரின் ஆர்வத்தாலும் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் பெரும்பங்காற்றியுள்ளது. சென்னை பல்கலைக்கழகமும் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைத் தொடங்கி வருகின்றனர். கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ்நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முதல் பணியாகக் கருதப்படுகிறது. இவர்தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெயர்வந்தது. நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆரம்பித்தனர். இதுவே நூலகதிட்டம் என்று குறிப்பிடுகின்றார். தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம் தேவநேயப்பாவாணர் நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதிமகால் நூலகம், தமிழ் பல்கலைக்கழக நூலகம், கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி நூலகம், போன்ற புகழ்மிக்கதும் பழமையானதுமான நூலகங்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது. மேற்கூறிய பணிகளில் சிலநூல்களை முழுவதுமாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சிலநூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்து காணப்படுகின்றன. இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின்நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றன.   மின்நூலகங்கள்   எண்ணிம நூலகம் (Digital Library) தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம் (Tamil Virtual University E - Library) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Resarch Library) சென்னை மின்நூலகம் (Chinnai Library) நூலகம்.நெட் (Noolaham.net) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - (CIIL)   மதுரைத்திட்டம்,  மின்பதிப்புத்திட்டம் உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களும் இலவசமாக பெறவசதி செய்யப் பெற்றுள்ளன. ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள்தான் கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துகாட்டு ஆகும். உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்து கொண்டு பின்வரும் சந்ததியினருக்குக் கொண்டுச் செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும். மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி, வியபார நோக்கமின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும். 1998 ஆம் ஆண்டு தமிழர் பொங்கல் திருநாள் அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. உலகில் வெவ்வேறுநாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒன்று கூடி இத்திட்டத்தை நடத்திவருகின்றனர். மதுரைத்திட்டம் உலகில் பலநாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் கணினியைக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்ட பிழைதிருத்திமின் பதிப்புகளாக தயாரிக்கும் ஒருகூட்டு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களை மின்வழிபாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்துகொள்வதில் பங்குபெறச் செயகின்றனர். மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்பகாலத்தில் இணைமதி, மயிலை, தமிழ் எழுத்துக்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால்  1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம்வழி தமிழ் தகவல் தொழில் நுட்ப பரிமாற்றதிற்கான இணையம் வழிதீர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதரவடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிட்டு வருகின்றது. 2003 ஆம் ஆண்டில் இருந்து பல்மொழி ஒருங்குக்குறியீடு முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். தமிழ் இலக்கியங்களின் வரலாறு மிகபழமையானது. முதற்சங்ககால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லா விதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தொன்று தொட்டு சங்ககால நூல்கள் முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரே ஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்கள் காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது ஆகும். காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். உலகமின்னூலகம் உலகமின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒருபன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப்புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலாசார உள்ளடக்கங்கள் அளவிலும், வகையிலும், அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகரித்தல் அதன் மூலம் பல் வேறுநாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்படங்கள் அரிய நூல்கள் இசைக்கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்கள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது. உலக மின்னூலகம் துவங்கப்பட்டபோது அரபி, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, போர்ச்சுகிசு, ரஷ்யன், ஆகிய மொழிகளில் கிடைத்த 1170 உருப்படிகளைக் கொண்டிருந்தது. வரலாறு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான யுனெஸ்கோ தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு.எச்.பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார். “ஜூன் 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள்கருத்தரங்கில் அழைப்பின்பேரில் சென்று உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்.”5 அப்போது நிறுவனங்கள் நூலகங்கள் அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதியவடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத்தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார். அரசு தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில் 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் உதவியாக இருந்தது. பணிக்குழுக்கள் பில்லிங்டன் தொலை நோக்கை நிறைவேற்ற ஒரு செயற்திட்டத்தைக் காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முதுநிலை ஆலோசகர் முனைவர் ஜான்வான் ஔடென்ரேன்  2006  ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார். உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவை தொழில் நுட்ப கட்டமைப்பு தேர்வு செய்தல் நிர்வகித்தல் நிதியளித்தல் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைப்பெற்ற உலகமின்னூலக வளர்ச்சிகுறித்து மாநாட்டில் இக்குறிக்கோள் வடிவமைக்கப்பட்டது. நான்கு திட்டப்பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 2007 ஆம் ஆண்டு முதற்பகுதியில் ஒன்று கூடி மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்து கொண்டது. ஒவ்வொரு நாடுகளில் இருந்து பணிக் குழுவினருக்கு உதவி செய்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது. காட்சிப்படுத்தல் உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப் படுத்துதல்கள் சேர்க்கப்பட்டன. அவைகள் செஞ்யின்கதை 11 ஆம் நூற்றாண்டு ஜப்பான்கதை உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம் குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் குறிப்புகள் அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த அரபு மொழிநூல்கள். எட்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆப்பிரிக்கா ஒவியமான ரத்தம்சிந்தும்மான். அமெரிக்கா சென்று முதன் முறையாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டு சீ முல்லர் வரைப்படம். மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம் ருசியகுருவால் அலுசியன். மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி. லுமியர்ச கோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம் இது போன்று பல்வேறு நூல்களை உலகமின்னூல்கள் துவங்கப்பட்ட போது காட்சிப்படுத்தலின் போது சேர்க்ப்பட்டுள்ளன. தமிழ் இணையப்பல்கலைக்கழக நூலகம் (Tamil Virtual University E - Library) உலகம்தழுவி வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள்,  தமிழ்பயில விரும்பும் மாணவர்கள் முதலியோர் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம் ஒன்றை அமைந்துள்ளது. தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 250 க்கும் மேற்பட்ட ஏறக்குறைய 1,00,000 பக்கங்களுக்கு மேல் இம் மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாகப் படித்தப்பயன் பெறலாம். ஓர்நூலை ஒரேநேரத்தில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் படித்தப்பயன் பெறலாம். ஒருவர் வழக்கமான நூலகத்திற்குச் சென்று தமக்குத் தேவையான நூல்களைத் தேடிப்பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீங்குகின்றன. “அவசரமான உலகத்தின் அவசரம் கருதிகாலம் பொன்னானது என்ற பொன் மொழியை மனத்தில் கொண்டு படிப்பவர்களின் நேரவிரியத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நூலகம் அமைக்கப்படுகின்றது. ”அரியவசதிகள்கொண்ட இம்மின் நூலகத்தை விரும்புகின்ற அனைவரும் தற்பொழுது கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மின்நூலகமானது இலக்கண, இலக்கிய நூல்கள் உரோமன் வரிவடிவத் தமிழ்நூல்கள், அகராதிகள், கலைச்சொல், தொகுப்புகள், ஒளிக்காட்சித் தொகுப்புகள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக நூலகத்தில் நூல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் ஆனால், இம்மின்நூலகத்தில் தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், தமிழர்களின் இறை உணர்வைப்  புலப்படுத்துகின்ற சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழர்களின் சமயப்பொறைக்கு எடுத்துக்காட்டாக இம்மின்நூலகத்தில் இசுலாமிய மற்றும் கிறித்துவ ஆலயங்களின் ஒலி, ஒளிக்காட்சிகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உள்ளடக்க  மின்னூல்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் இலக்கணநூல்கள், சங்கஇலக்கியம், பதினெண்கீழ்கணக்கு, காப்பியங்கள், சமயஇலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு, நெறிநூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்இலக்கியங்கள் உரைநடை, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன. இலக்கண நூல்கள் தொல்காப்பியம் புறப்பொருள் வெண்பாமாலை யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை தண்டியலங்காரம் நன்னூல் நம்பியகப்பொருள் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கம் தமிழ்நெறி விளக்கம் சிதம்பரப்பாட்டியல் நவநீதப்பாட்டியல் வீரசோழியம் தமிழ்நூல் முத்துவீரியம் சுவாமிநாதம் நேமிநாதம் அறு வகை இலக்கணம், அகப்பொருள் விளக்கம் இவை அனைத்து இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.   இலக்கிய நூல்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகத்தில் 52 இலக்கியநூல்கள் உரையுடன் இடம்பெற்றுள்ளன. சங்கஇலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் பெருங்கதை கம்பராமாயணம் வில்லிபாரதம் அரிச்சந்திரபுராணம் காஞ்சிப்புராணம் சமய இலக்கியங்கள் சமய இலக்கியநூல்கள் சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாமியம் என்ற வரிசையில் அமைந்துள்ளன. சைவம் பன்னிருதிருமுறைகள் திருவிளையாடற்புராணம் கந்தபுராணம் கல்லாடம் மெய்கண்டசாத்திரங்கள் திருமுறைத்தலங்கள் வைணவம் - நாலாயிரதிவ்ய பிரபந்தம் 108  வைணவ திவ்யதேசஸ் தலவரலாறு கிறுத்துவம் - தேம்பாவணி இரட்சணியயாத்திரிகம் திருஅவதாரம் இயேசுகாவியம் இரட்சணியமனோகரம் இசுலாம் - சீறாப்புராணம் நெஞ்சில்நிறைந்த நபிமணி நாயகம்எங்கள்தாயகம் யூசுப்ஜீலைகா நாயகம்ஒருகாவியம் சிற்றிலக்கியங்கள் கலம்பகம் - கச்சிக்கலம்பகம் உலா - மூவருலா தூது - அழகர்விடுதூது - தமிழ்விடுதூது கோவை - தஞ்சைவாணன் கோவை பிள்ளைத்தமிழ் சேக்கிழார்ப்பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் பரணி இரணியவதைப்பரணி - கலிங்கத்துப்பரணி அந்தாதி - அபிராமிஅந்தாதி - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி சதகம் தண்டலையார்சதகம் - அறப்பளீசுரசதகம் - குமரேசசதகம் - கொங்குமண்டலசதகங்கள் வெண்பா - நளவெண்பா குறவஞ்சி - திருக்குற்றாலக்குறவஞ்சி - தியாகேசர்குறவஞ்சி பிரபந்தம் - அஷ்டபிரபந்தம் ஆற்றுப்படை புலவராற்றுப்படை திரட்டுநூல்கள் குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு 12 நூல்களும், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு 24 நூல்களும், இராமலிங்க அடிகளின் திருவருட்பா, தாயுமானவரின் தனிப்பாடல்கள் உள்ளிட்ட 38  நூல்கள் உரையுடன் அமைக்கப்பட்டுள்ளன. நெறிநூல்கள் மனிதர்களை நெறிப்படுத்தும் நோக்கில் நெறிநூல்கள் உருவாக்கியுள்ளார். அவ்வகைநூல்கள் ஆத்திசூடி கொன்றைவேந்தன் மூதுரை நல்வழி வெற்றிவேற்கை உலகநீதி நீதிநெறிவிளக்கம் அறநெறிச்காரம் நீதிநூல் சித்தர்இலக்கியங்கள் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்  கவிதை பாரதியார் பாரதிதாசன் வேதநாயகம்பிள்ளையின்பெண்மதிமாலை கவிஞர்முடியரசனின்பூங்கொடி தமிழ்ஒளிக்கவிதை இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் உரைநடை சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, என்ற முறையில் நூல்களை அமைத்துள்ளது. சிறுகதை - பாரதியார் கதைகள் புதினம் அகல்விளக்கு (மு.வ) - சமுதாயவீதி (நா.பார்த்தசாரதி) - வேங்கையின் மைந்தன் (அகிலன்) நாடகம் - மனோண்மணீயம் கட்டுரை - புத்தர்அருளியதம்மபதம் திறனாய்வு - அறமும்அரசியலும் (மு.வ) - இலக்கிய ஆராய்ச்சி (மு.வ.) - தமிழர்வளர்த்த அழகுக்கலைகள் (மயிலை சீனி. வேங்கடசாமி) - பதினெண் கீழ்கணக்கும் தமிழர்வாழ்வும் (சாமி.சிதம்பரனார்) - பாரதியார்கட்டுரைகள் - பாவாணர் படைப்புகள் (30 நூல்கள்)   வரலாறு மொழிவரலாறு, இலக்கியவரலாறு, வாழ்க்கைவரலாறு, நாட்டுவரலாறு, நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், எனபல இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன. மொழிவரலாறு தமிழ்மொழி வரலாறு (தொ.பொ.மீ) இலக்கிய வரலாறு சமணமும் தமிழும் (மயிலை சீனி  வேங்கடசாமி) தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.) பௌத்தமும் தமிழும் (மயிலை சீனி. வேங்கடசாமி) விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (மா.பொ.சி) வாழ்க்கை வரலாறு   என்சரித்திரம் (உ.வே.சா) நாட்டுவரலாறு குடியாட்சி (அப்பாதுரை) தமிழகம் (கா.அப்பாதுரை) தமிழ் இந்தியா (ந.சி.கந்தையாபிள்ளை) தொண்டு (கா.அப்பாதுரை) நாட்டுப்புற இலக்கியங்கள் தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை) மலையருவி (கி.வா.ஜகநாதன்) முத்துப்பட்டன் கதைப்பாடல் (நா.வானமாமலை) சிறுவர் இலக்கியங்கள் வாண்டுமாமா படைப்புகள் (கதை கதையாம் காரணமாம்) உரோமன் வரிவடிவ நூல்கள் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோமன் வரிவடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அகராதிகள் தமிழ் இணைய பல்க்கலைக்கழக மின்நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றிச் சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் - தமிழ்அகரமுதல் ஆகியநான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகரவரிசை முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும், அச்சுவடிவ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும்வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலைச்சொற்கள் சமுதாயவியல், கலைமானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நுட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில்நுட்பவியல், மனைஇயல், உயிரியத் தொழில்நுட்பவியல், வேளான்மைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த அளவு கடந்த கலைச் சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது. சுவடிக்காட்சியகம் ஓலைச்சுவடிகள் உள்ளதமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச்சுவடிகளை ஒளிப்படநகல் எடுத்துப் பாதுகாத்து வருகிறது. ஓலைச்சுவடிகள் மட்டுமன்றிசில அரியகாகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்பதோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன. பண்பாட்டுக் காட்சியகம் தமிழர்களின் பண்பாட்டைவெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்று பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக்காட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருத்தலங்கள் - 14 சமணத்தலங்கள் - 101 சைவத்தலங்கள் - 93 வைணவத்தலங்கள் - 9 இசுலாமியத்தலங்கள் - 13 கிறித்துவத்தலங்கள் திருவிழாக்கள் - 7 தேர்திருவிழாக்கள் - 8 பல்வேறுவிழாக்கள் கலைகள் - 16 வகையானகலைகள் வரலாற்றுச்சின்னங்கள் 3 சின்னங்கள் விளையாட்டுகள் - 5 வகையானவிளையாட்டுகள்   தமிழ்மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்களை அனைத்தும் மின்னூலாக மாற்றி வருகின்றனர் .மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர். அந் நூலகத்தின் மூலமாக பலமின்னூல்களை வெளியிட்டுவருகின்றனர். இனிவரும் காலங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும் முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.   பார்வைநூல்கள் http;//ta.wikipedia.org/s/w97 http;//ta.wikipedia.org/s/94p இணையமும் இனிய தமிழும் - க.துரையரசன்   நினைவாற்றலும் - நினைவகமும் நினைவாற்றல் என்பது ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்ததால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை சேமித்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சி குறிப்பிடுகின்றன. ஆனால் அத்தனையும் நினைவில் நிறுத்துவது கடினம் என்கின்றனர்.   நினைவு நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறு மூளை, முகுளம், போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பெரும்பங்கே நினைவாற்றலின் சேமிப்பு வங்கியாக விளங்குகிறது. நினைவாற்றல் என்பது ஒருவர் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வாயிலாகப் பார்த்து, படித்து, கேட்டு, நுகர்ந்து, உணர்ந்து, சுவைத்து, அறிந்து அனுபவங்கள் பலவற்றையும் மனதில் பதியவைத்து வேண்டிய போது அதை நினைவில் கொண்டுவரும் ஆற்றல் ஆகும். அனுபவங்கள் மூளையில் இலேசான பதிவை உண்டாக்குவதும், ஆழமான பதிவை உண்டாக்குவதும் அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சி காட்டும்  ஆர்வம் மனநிலை சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொருத்து இருக்கிறது. நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல் நினைவிலகுதல், மீட்டமைத்தல் மற்றும் மீட்டறிதல் என்ற நான்கு நிலைகளாகும். மீட்டழைத்தல் (Recall )  கற்றறிந்த ஒன்றை நினைவில் நிறுத்திவைக்க மூளையில் பதிந்துள்ளதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுதான் மீட்டழைத்தலாகும். பல மணிநேரம் படித்ததை சில நிமிடங்களில் மிட்டழைத்து மணக்கண்முன் காணமுடியும். மீட்டறிதல் ( Recognition)  மூளையில் பதிந்திருப்பதை மீட்டழைத்து நன்கு யூகிப்பது இதுதான், நேற்று பார்த்தது இதுதான், முந்தியநாள் வந்தவர் இவர்தான் என்று இப்படி தீர்மானமாக உணர்வதைத்தான் மீட்டறிதல் என்கிறோம். நினைவாற்றலின் வகை குறுகிய கால நினைவாற்றல் நீண்டகால நினைவாற்றல் குறுகிய கால நினைவாற்றல் நம் மூளையில் அத்துனை தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்தும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இவ்வகை நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல் என்கின்றனர். நீண்ட கால நினைவாற்றல் நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சில நேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும். மூளை பல செய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள்      வெளிக் கொணரபடாமல் போனால் கோடிக் கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. குழந்தைப் பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பதும், கேட்பதும் அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை மூன்று வயதிற்கு மேல் தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன. இவ்வகை நினைவாற்றலானது ஒரு மனிதனின் மூளையில் பதிவு செய்யப்படும் நினைவுகளை நினைவாற்றல் என்று குறிப்பிடுகின்றேன். நினைவகம் நினைவகம் என்பது ஒருமனிதனுக்கு மகிழ்ச்சியான தகவல் முதல் பார்ப்பதும், கேட்பதும் என பல கோணங்களில் ஏற்படக்கூடிய நினைவுகளை நினைவாற்றல் என்கின்றனர். அதேபோல் பல தகவல்களை கணினியில் சேமிப்பதற்கு நினைவகம் என்ற ஒன்று தேவையாகிறது. நினைவகம் என்பது நினைவகத்தின் அளவுக்கேற்ப பல தகவல்களை சேமித்து வைக்கப் பயன்படுவது ஆகும். சார்பிலாத் தெரிவு நினைவகம் கணினி நினைவக வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன் சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெறதக்கவகைகளில் அமையும். சார்பில்லாத் தெரிவு என்பது தரவுகளிள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகள் தெரியப்படுத்தலாம். சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் மூலமே தரவுகள் வாசிக்கப்படும்.  இதனால் இவற்றில் வாசிப்பு நோக்கத்தைவிட தரவுள்ள இடத்தை அடைவு நேரமே அதிகமாகும். RAM  என்னும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும். நிரந்திர நினைவகம் ROM போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்று வகைப்படுத்தப்படும். சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே. சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் முதலாவது சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட (Magnetic Core Memory ) காந்த ஒள்ளக நினைவகம் ஆகும். இதற்கு பின் 1960 ஆம் ஆண்டு மற்றும் முன் 1970 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்பட்ட அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்த உள்ளக நினைவகம் உருவாக்கத்திற்கு முன்னர் கணினிகளில் நினைவக செயற்பாடுகளுக்கு அஞ்சல் தந்து (Relay ) அல்லது வெற்றிட குழாய் (Vacuum tube) பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப கணினிகள் சுற்றுக்களில் அல்லது முக்கிய நினைவக செயல்பாடுகளை தாமதம் வரிகளை பயன்படுத்தப்படுகிறது. மீயொலி வரிகளை மட்டுமே எழுதப்பட்ட வரிசையில் தரவு இனப்பெருக்கம் முடியும். டிரம் உடல் நினைவகம் குறைந்த செலவில் வேகம் மேம்படுத்த டிரம் உடல் அமைப்பை அறிவு விரிவடைந்து (Latches) வெற்றிட குழாய் (Triodes) கட்டப்பட்டுள்ளது. பின்னர் தனித்தியங்கும் (Transistors) வெளியே போன்ற சீரற்ற அணுகல் பதிவு வங்கிகள் மற்றும் பதிவேடுகளை வேகமாக நினைவுகள் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பதிவேடுகளை ஒப்பீட்டளவில் பெரிய அதிகார பசி மற்றும் தரவு பெரிய அளவு பயன்படுத்த மிகவும் விலையுயர்ந்த போன்ற நினைவகம் ஆயிரம் பொதுவாக ஒரு சில நூறு அல்லது சில பிட்கள் வழங்க முடியும். நினைவகம் முதல் நடைமுறை வடிவம் 1947 இல் தோன்றியது. வில்லியம்ஸ் குழாய் தொடங்கும் இது ஒரு எதிர் முனை கதிர் குழாய் முகத்தில் மின்னியல் மின்னூட்டம் புள்ளிகள் தரவு சேமிக்கப்படும் (CRT) யின் எலக்ட்ரான் என்பதால் நினைவகம் சீரற்ற அணுகல் இருந்தது. வில்லியம்ஸ் குழாய் திறன் ஆயிரம் என்ற பிட்கள் ஒரு சில நூறு இருந்தது. இதனால் அது வேகமாக, மிக சிறிய அதிக சக்தி திறன் தனிப்பட்ட வெற்றிட குழாய் கண்டதே பயன்படுத்திவிட இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. வில்லியம்ஸ் குழாய் முதல் மின்னணு சேமிக்கப்படும் நினைவகம் திட்டம் முதல் வெற்றிகரமாக 21 ஜீன் 1948 அன்று ஒரு திட்டத்தை மான்செஸ்டர் சிறுநிறுவனங்களுக்கான சோதனை இயந்திரம் (SSEM) கணினி நடைமுறைப்படுத்தப்பட்டு நடுத்தர வழங்கப்படுகிறது. 1968 ல் ராபர்ட் எச் டினார்டு சீரற்ற அணுகல் நினைவக கண்டுபிடித்தார் ஒவ்வொரு நினைவகம் பிட் ஒரு ஒற்றை டிரான்சிஸ்டர் 4 அல்லது 6 டிரான்ஸ்சிஸ்டர் தாழ்ப்பாளை அன்று அனுமதி பதிலாக பெரிதும்  மாறும் செலவில் நினைவக அடர்த்தி அதிகரிக்கும். நினைவகம் இரண்டு வகை நிலையான நேரடி அணுகல் நினைவகம் மாறும் நேரடி அணுகல் நினைவகம் நிலையான அணுகல் நிலையான நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்த வகை நினைவகங்களை தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். ஆனால் இவ்வகை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அதிவேகமாக செயல்படுகின்றன. மாறும் அணுகல் மாறும் நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளைத் தயாரிக்க குறைந்த பொருட் செலவு ஆகும். தற்போதைய நவீன கணினிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரு நினைவகங்களிளும் ஆற்றல் இல்லாத போது தகவல்களை சேமித்துவைக்க முடியாது. ஆற்றல் இல்லாத போது மீட்டமைக்கப்படும் மாறாக  ( ROM ) தகவல்களை நிரந்தரமாக பதிவு செய்கிறது. கணினியின் நினைவகம் தற்காலிக  நினைவகம் DRAM SDRAM Upcoming Z-RAM TTRAM Historical Williams tube Delay sine Memory நிரந்தர நினைவகம் ROM PROM EAROM EPROM EEPROM Flash Memory Upcoming FE RAM MRAM CBRAM PRAM RRAM Racetrack Memory NRAM Historical Drum Memory Magnetic Core Memory Plated wire Memory Bubble Memory Twist or Memory கணினி நினைவகம் Computer Memory     Primary Memory Secondary Memory பிரதான நினைவகம் துணை நினைவகம்   Bipolar Magnetic  Bubble Magnetic tapes Mos Floppy Disk RAM Opticall  ROM DVD PROM - EPROM - EAPROM CD Magnetic Opticall  Floppy Disk Floppy - 3.5 (A) Floppy  - 5.25 (B) நினைவகத்தின் கணக்கீடுகள் 8Bit - 1Byte 1024Byte - 1KB  Kilo Byte 1024KB - 1MB Mega Byte 1024MB - 1GB Giga Byte 1024GB - 1TB Tara Byte 1024TB - 1PB Peta Byte 1024PB - 1EB Exa Byte 1024EB - 1ZB Zeta Byte Floppy - 1.44 MB CD - 700 MB DVD - 4.0 , 8.5 GB     நினைவாற்றல் என்பது ஒரு மனிதன் தன் மூளையில் பல்லாயிரம் கணக்கான பதிவுகளை சேமித்து வைத்துக் கொண்டு தனக்குத் தேவையான நேரங்களில் நினைவுப்படுத்தி அதனை பயன்படுத்திக்கொள்கிறான். அதுவே ஒரு சில காலங்களில் பதிவான தகவல்களை இழக்க நேரிடலாம். அதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இந்த வகை சிக்கல் ஏற்படலாம்.   நினைவகம் என்பது கணினி, செல்பேசி, கையடக்க கருவி என பல மின்னனு கருவிகளில் பயன்படுத்தி தகவல்களை சேமித்துக்கொள்ள பயன்படுவதாகும். நினைவகத்திற்கு வரையறு கொண்டு சேமிக்கவேண்டிய சூழல் இருக்கின்றன. ஆனால் மனிதனின் நினைவாற்றல் அவ்வாறு இல்லை. அவனுக்கு தேவையான நேரங்களில் எத்துணைய தகவல்களையும் சேமிக்கும் ஆற்றல் பெற்றவன். ஆனால் நினைவகத்திற்கு 1 GB. 2 GB, 4GB, 8GB, 16 GB. 32GB, 64GB என எண்ணற்ற அளவுகளை கொண்டு உள்ளதால் இவ்வகை அளவுக்கு ஏற்ற தகவல்களைப் பதிவு செய்யமுடியும்.   மனிதனுக்கு ஒரு சில விபரிதங்களால் நினைவாற்றலை இழப்பது போல் நினைவகமும் இழக்கின்றன. வைரஸ் என்கின்ற ஒன்று தகவல்களை மறைக்கவும் அழிக்கவும் செய்து விடுகிறது.   குறிப்புகள் : இணையம் க.பிரகாஷ் - இணையத்தில் தமிழ் மின்னூல்கள் - ஆய்வு     அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை அறம் ‘அறு’ என்ற வினைச் சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். அச்சொல்லுக்கு அறுத்துச்சொல், வழியை உண்டாக்கு, எருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்றும் குறிப்பிடுகின்றனர். பின்னர் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு. நீதி இலக்கியம் நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும் கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாமை நிலவியாதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.   “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்   பால்கடுங் கோவை பழமொழி மாமூலம் ……………………………………………………………………………………………………………………….. கைந்நிலைய வாய் கீழ்க் கணக்கு   நீதி இலக்கியங்களில் குறிப்பிடும் இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரகோவை, நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார், திருக்குறள் ஆகிய பதினொரு நூல்களிலும் கல்வியும், ஒழுக்கமும் பற்றிய செய்திகள் மிகுதியாக காணப்படுகின்றன. கல்வி பொருள் மனிதன் தம்முடைய வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் மரபுகளையும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுகிறான். உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ அடிப்படைக் காரணியாக விளக்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு பொருள் கல்லுதல் என்பதனை கல் என்னும் அடிச்சொல்லிருந்து கலப்பை என்ற பெயரும், கல்வி என்ற பெயரும் வந்தன. நிலத்தைக் கிளவுவதற்குக் கலப்பை பயன்படுவது போல கல்வி கல்லுதல் என்பது மனத்தைக் கிளறித் திருத்திப் பயன்படுத்துவதாகும். கற்கும் கல்விக்கு பல பொருள் : அறிவு, கற்றல், நூல், வித்தை, பயிற்சி, உறுதி, ஊதியம், ஏதி, காரணம், கலை, கேள்வி, கால்பு, தேற்சி, விஞ்சை என்று கௌரா தமிழ் அகராதி விளக்கம் அளிக்கிறது.   நாலடியார் கூறும் கல்விச் சிந்தனை “ குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்  ……………………………………………………………………………………………………………………………… ……………………………………………………………….. நடுவ நிலைமையால் கல்வி அழகே அழகு.”   நல்ல மணம் வீசும் கூந்தலுடைய அழகும், மேனி ஜொலி ஜொலிக்க உடுத்திய ஆடை அழகும், அள்ளிப்பூ அழகு செய்த ஒப்பனையுடைய மஞ்சள் நிறத்தழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது. உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும். “கல்வியில கரையில கற்பவர் நாள்சில  மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதன் ………………………………………………………………………………………………………………………….. பாலுண் குருசின் தெரிந்து” – (நால 1) கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகு அளவு, கல்விக்குக் கரையும் இல்லை, கற்றுத் தெரிந்து கொள்வதற்கு ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது. அவ்வளவு நிறைந்து இந்த மிகக் குறைந்த வாழ்நாளில் இடையிடையே மெல்ல மெல்ல வந்து தாக்கும் நோய்கள் ஒருபுறம், மீதம் இருக்கும் நாட்களில் வாழ்க்கையைப் பயனுடையதாகத் தேர்ந்து தெளிந்த நல்ல நூல்களைக் கற்றிட வேண்டும். பாலும், நீரும் கலந்திருக்கும் பாத்திரத்தில் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல கற்றுத் தேர்ந்து கொள்ள வேண்டும். “………………………….. யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்  நல்லறிவு நாளுந் தலைப்படுவர் ……………………………………………. ……………………………………………………………………….. சேர்தலாற் புத்தோடு” படிப்புக்கு வசதியில்லாததால் படிப்பில்லாதவர்கள் என்றாலும் படித்தறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால் அவர்களுக்கு அந்தப் பெரியோர் சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சம் நல்ல அறிவு கிடைக்கப் பெறுவார்கள். கடிகையில் கல்வி “கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்  ……………………………………………………………………………………………………… ……………. உயர்ந்த எலகம் புகும்”. ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமை குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான் அவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வான் அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான். “ ……………………………………………………………………………. ஒருவற்குக்  கற்றலின் வாய்த்த பிற இல்லை என்றுள்ளும் …………………………………………………………………………………………………………………. …………………………………………………………………………… இல்”. - 32   செல்வத்தைப் போல ஒருவறுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போலத் துணையாவது, பிறிதில்லை, வறுமையைப் போலத் துன்பம் தரக்கூடியது வேறு எதுவுமில்லை கொடுப்பதைப் போலத் திட்பமானது வேறு இல்லை. “………………………………………………………… காதலர் கண்ணோடார்  ………………………………………………………………………………………………………………………………... உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புரையும் ……………………………………… புல்லறிவினார்”. – 58 கற்றவரோடு விரும்பி வாழ்பவர் கற்றவரேயாவர். கண்ணோட்டம் இல்லாதவர் இடம் செய்பவரை ஒப்பர். எவற்றையும் மறைக்காமல் உண்மையை உள்ளபடியே கூறாதவர் பகைவரே ஆவார் சிற்றறிவினையுடையவர் யாம்பும் புற்றுக்கு ஒப்பாவர். “ கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்  ……………………………………………………………………………………………………………….. நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும் ………………………………………………………….. பகை”. கொடுந்துன்பங்கள் வருதலால் எப்பொழுதும் பிறர் பொருளைக் கவராதிருக்க வேண்டும். தகுதியுடைய நல்ல ஒழுக்கச் செயல்களை நீக்காதிருக்க வேண்டும். சிற்றினத்தரோடு சேராதிருத்தல் வேண்டும் எவரிடத்தும் பகைமை கொள்ளாதிருத்தல் வேண்டும். திரிகடுகம் கூறும் கல்வி விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும் வகையில் கல்வி பற்றி சில சிந்தனைகள் சிதறுக்கின்றது. “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்  …………………………………………………………………………………………………………………………………… நன்மை பயத்தல் இல”. – 10 கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும் பருத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் ஆகியனைத்தும் மாறாகத் தீமைகளையே உண்டாக்கும். “நுண்மொழி நோக்கில் பொருள் கொளலும் நூற்கேலா  ………………………………………………………………………………………………………………………………………………………… கற்றறிந்தார் புண்ட கடன்”. – 32 நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும் நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும் நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். சொற்போக்குக்கு ஏற்ப பொருள் கொள்ளல் பயனற்ற சொற்கள் கூறாதிருத்தல் நல்ல நூற்கருத்துக்களை விரும்புவர்க்கு கற்பித்தல் ஆகிய மூன்றும் கற்றறிந்தார் கடமைகள் ஆகும் என்பது கருத்தாகும். சிறுபஞ்சமூலம் கூறும் கல்வி “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்  …………………………………………………………………………………………… துன்ப மிலேம் பண்டுயாமே வனப்புடையேம் - 20 அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பு. முதுமை வருவதற்கு முன்னே பொருள் தேடிவைத்துக் கொள்ளாதவர்கள் அறிவிலார் ஆவார்கள். முன்பு பொருளுடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம். அப்பொழுது யாமே அழகுடையவராக இருந்தோம் என்று கூறிக்கொள்கின்றவர் இருகால் எருதுகளுக்கு நிகராவர்கள். “……………………………………………………………… எல்லாம் யாதொன்றும்  ………………………………………………………………………………………………………………………………….. குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்” – 31 எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை. “ சத்தமெய்ற் ஞானம் தருக்கம் சமயமே  …………………………………………………………………………………… அத்தகத்து” – 86 வழக்காகிய இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடு பேனைப் பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான். ஆசாரம் கூறும் கல்வி “தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்  முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க ………………………… ……………………………………………………………………………………………………………… கெடும்”. ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல் யாகம் செய்தல் தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது. விளங்குமாறு பாதுகாத்துச் செய்க. மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் தனக்குப் பயன்படாமல் போகும். ஏலாதி கூறும் கல்வி “ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம் பேணொடு எண்ணும் எழுத்திவை ………… ………………………………………………………............................................. வேட்டெழுத வாழ்வார் விரிந்து. இப்பிறப்பில் அறிஞர்கள் தனது வரலாற்றை விரும்பி எழுத வாழ்வு பெருகி வாழ்கின்றவர்கள் விருப்பத்தோடும் நற்குண நற்செயல்களோடும் எண்ணும் எழுத்துமாகிய கல்வியை ஆசிரியர்களிடத்தில் பாடம் கேட்டும் ஏட்டில் எழுதியும் படித்தும் வாழ்கின்ற தலைசிறந்த மாணாக்கர்களுக்கு முன்பிறப்பில் உணவொடு எடையும் எழுத்தாணியும், புத்தகச் சுவடியும் கொடுத்து உதவினார்களே ஆவர். ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு ஊண், உடை முதலியவற்றைக் கொடுத்துதவுகின்றவர்கள் பெற்று விளங்குவார்கள். முதுமொழிக்காஞ்சியில் கல்வி “கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று”.   – சிறந்த பத்து அரிய உண்மைகளைக் கற்றலை விட கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்றார் வழி நிற்பவர்க்குக் கற்றலின் பயன் எளிதில் கைகூடுமாகலின் வழிபடுதல் சிறந்ததாயிற்று என்க. கற்றது உடைமை “கற்றது உடைமை காட்சியின் அறிய”.   – அறிவுப் பத்து கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர். கற்றது கல்வி “நேராமல் கற்றது கல்வி யன்று”.   – அல்ல பத்து கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆதலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும்   திருக்குறளில் கல்வி “கற்க கசடறக் கற்பவை கற்றபின் – 391  கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். “ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவள்”  - 398  ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் குறிப்பிடும் பதினொரு அற நூல்களும் ஒரு மனிதனுக்கு நோய்தீர்க்கும் மருந்தாகவும், தூங்கி கொண்டிருப்பவனை எழுப்பும் வகையிலும், சோர்ந்திருப்பவனை சுறு சுறுப்படையவும், விழுந்தவனை எழுந்து நிற்க வைக்கும் அளவிற்கும், விருந்தினருக்கு விருந்தோம்பலாகவும் இவ்வகை இலக்கியங்கள் சுவைத்தால் பயின்றால்) தெவிட்டாத கருத்துகளாகும். நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள், பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஏலாதி, இனியவை நாற்பது, முதுமொழி காஞ்சி என இவ்வகை அற இலக்கியங்களில் மனிதனுக்கு ஒழுக்கத்தை மட்டும் கற்றுகொடுக்காமல் கல்வி என்ற பெயரில் மனித மனதை வழுப்பபடுத்துகிறது. கல்வி என்பது  “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்ற நாலடியாரில் குறிப்பிடுவது போல கல்விக்கு கரையும் மில்லை கற்று தெரிந்து கொள்ளுவதற்கு ஆயிரம் ஜென்மங்கள் கிடைத்தாலும் நிறைவேறாது என்பர். பார்வை பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 1 – வித்துவான் துரை. இராசாராம் பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – வித்துவான் துரை. இராசாராம் நாலடியார் நற்சிந்தனைகள் – கே.எம். நாச்சிமுத்து கௌரா தமிழ் அகராதி தமிழ் இலக்கிய வரலாறு – பேராசிரியர் மது.ச.விமலானந்தம்       நீதி இலக்கியத்தில் கூறும் அறக்கொள்கைகள் நீதி இலக்கியம் என்பது சங்க மருவிய கால இலக்கியம் என்றும் சங்க காலத்திற்கு பின்னா், தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி. 3- ஆம் நூற்றாண்டு முதல் 6- ஆம் நூற்றாண்டுவரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் இருந்தன. சங்க காலத்திற்குப் பின்னா் தமிழகத்தில் களப்பிரா்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றா வண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரா் காலம் தமிழில் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்திலும் சங்க காலத்திலும் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின் தள்ளப்பட்டு அறம், நீதியும் பெரிது போற்றப்பட்டன. பிற்காலத்தினா் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ் வரிசை நூல்கள் என்றும் பிரித்தனா். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மேல்வரிசை - மேற்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், கீழ் வரிசை கீழ்க்கணக்கு நூல்களாக பிரித்தனா். குறைந்த அடிகளையுடைய பாடல்களுக்கு கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களுக்கு மேற்கணக்கு நூல்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் அவற்றின் எண்ணிக்கையும் பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும். அவை ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிப்பாட்டு, வஞ்சிப்பா, ஆகிய பாக்களை கொண்ட பாடலாக மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவையே ஆகும். “நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்  பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு”   என்ற - நூல்களைப் பயிற்று இருந்தால் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். சமுதாய அமைப்பு, அரசியல் முறை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டையும், அறநூல்களில் எடுத்துரைக்கின்றன.  இது மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வை குணப்படுத்தும் அளவிற்கு தன் கருத்துக்களை மருந்து போல் எடுத்து விளக்குவது அற நூலாகும். அற இலக்கியங்களாகிய திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்களில் மருந்தும், மருந்து போன்ற கருத்துகளை கொண்ட விளக்குகின்றன. சமணம் பௌத்த சமயங்களின் வரவால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றிய பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் அற நூல்களாக அமைந்தன. அந்நூல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடிகளில் ஒவ்வொரு அறக்கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்கருத்துகள் பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை என கொள்கைகள் கொண்டு இவ்விலக்கியங்கள் மருந்தாகவும், உடல் நோயையும், உள்ள நோயையும், நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதுவதுண்டு.   திருக்குறளில் மருந்து பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு, வாதம் பிணிகள் வரும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறள் மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவா் மருத்துவம் பற்றிய பத்து குறட்பாக்களைக் கூறியுள்ளார். “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது   அற்றது போற்றி உணின்” - (குறள் - 942) தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்த வேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்று தேவையில்லை என்பது வள்ளுவம் கூறுவது ஆகும்.   “பசித்துப் புசி” - என்பது சான்றோர் வாக்கு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜுரணத்துக்கு வழிவகுக்கும். அஜுரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது. “ஒருவேளை உண்பான் யோக்கி  இருவேளை உண்பான் போகி முப்போதும் உண்பான் ரோகி எப்போதும் உண்பான் துரோகி” -  (நக்கீரர்) ஒருவன் அளவுக்கு மீறினாலும், தன்னை தானே அழித்துக் கொள்கிறான் என்பதே கருத்து.   “அற்றால் வறிந்து உண்க அஃதுடம்பு  பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு” - (குறள் - 943) அற்றால் அளவறிந்து உண்க. முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அளவு அறிந்து அளவிற்றாக உண்க. உடம்பு பெற்றாள் நெடிது உய்க்கும் ஆறு அஃது இறப்பவும் பலவாய பிற யாக்கைகைளின் பிழைத்துப் பிறர்க்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றாள் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். ( இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்பாறது ஈது ஒற்றுமையாகலின் உடம்பு பெற்றான் என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச் செய்து கொள்ளலாம் ஆகலின், நெடிது உய்க்குமாறு என்றும் கூறினார். “ இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்  கழிபேர் இரையான்கண் நோய்” - (குறள் - 946) குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். திரிகடுகத்தில் அறம் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்கணக்கு நுல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களைப் பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாகும். இம் மூன்றும் நோய் நீக்கி உடல் நலம் பேனும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள் பாடல்கள் தோறும், மூன்று, ஐந்து ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன. “உலகில் கடுகும் உடலின் நோய் மாற்றும்  அல(கு)இல் அகநோய் அகற்றும் - நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்  மருவுநல் லாதன் மருந்து”   சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருள்களைக் கொண்டதே திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திவாகரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகம் என்னும் அரிய மருந்து ஒருவர் உடல் நோயைப் போக்கும். அது போல் இந்நூலில் வரும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையாகி நோயைப் போக்கம். “பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து  தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் - ஊழினால் ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இம்மூவா் நட்கப் படா அதவா்” -  (பாடல் - 15) பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர் வாழ்கின்ற அழிவற்றவனும், முறைமை மாறி ஒருவன் தாழ்ந்த இடத்து தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும் ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் ஆவார்கள். “ஒருதலையான் வந்துறுஉ மூப்பும் புணர்ந்தார்க்  இருதலையம் இன்னாப் பிரிவும் - உருவினை உள்ளுருக்குத் தின்னும் பெரும்மணியம் இம்மூன்றும் கன்வரின் அஞ்சப் படும்” - (பாடல் - 18) உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும், நட்பினைர்க்கு இரண்டிடத்தும் பெருந்துன்பத்தைச் செய்கின்ற பிரிவும் உடம்பைக் கரைச் செய்து வருத்துகின்ற தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள் வரைவிட அஞ்சக் கூடியவராவா்.   சிறுபஞ்ச மூலம் கூறும் அறம் ஐந்து சிறு வேர்களுடைய பெயர்களைக் கொண்டு சிறு வழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறு மல்லி வேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்து வேர்களைக் கொண்டதுதான் சிறுபஞ்சமூலம் ஆகும்.   வேர்களால் தயாரிக்கப்படும் இச்சிறு பஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலத்தைப் போற்றுவது போல அதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் ஐந்தைந்து கருத்துக்களும் மனித வாழ்க்கைக் குப்பெரிதும் பயன்படுவனவாக உள்ளது. அவர்களின் அறியாமையாகிய நோயைப் போக்கக் கூடிய வகையில் சிறு பஞ்சமூலம் குறிப்பிடும் பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் அனைத்தும் வெண்பாக்களைக் கொண்டுள்ளது.   “ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால் களவொ(டு)  ஒத்த இவையல வோர் நாலிட்(டு) - ஒத்த சிறுபஞ்ச மூலம் சிறந்து” - (பாடல் - 02)   கொலை, பொய், புலால், களவோடொத்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமை, புலால் மறுத்தல், உண்மைப் பேசுதல், கள்ளாமை, என்று சொல்லப்பட்ட நாலோடு ஒழுக்கத்தையும் சேர்த்து இவ்வைந்தும் அகப்பட மிகுதியான பஞ்சத்தைத் தீர்க்கும் மழைபோல அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற சிறு பஞ்சமூலம் என்னும் இந்நூலை சிறப்பாக கூறுகிறார்.   “கல்லாதன் தான்காணும் நுட்பமும் காதிரண்டு  இல்லாதாள் ஏக்கழுத்தும் செய்தலும் - இல்லாதன ஒல்லாப் பொருளில்லார்க்க ஈந்தளியான் என்றானும் நல்லவா்கள் கேட்பின் நகை” - (பாடல் - 5) - கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும் - இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும் - பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும் - தான் வறிய வரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும் - அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பிர். “தொண்டான் வழியாழுதல் பெண்மகன் தந்தைக்கத்  தண்டான் வழியொழுகல் தன் இறையது வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு கோல்வழி வாழ்தல் குணம்” - (பாடல் - 15) - தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல் - மகன், தந்தையின் சொல்லைத் தட்டாத வனாய் அவன் சொல்படி நடத்தல் - போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் அவர்களா வெற்றி தன்மன்னனோடு வாழ்தல், - குடிமக்கள் அரசனது கோல் வழியே வாழ்த்தும் அவரவர்க்குரிய குணங்களாம்.   ஏலாதி கூறும் அறம் ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்கள் குறிப்பிட்ட அளவோடு சோ்க்கப்பட்ட ஒரு வகைச் சூரணமே ஏலாதியாகும். இச்சூர்ணம் உடலுக்கு வலிமையும், பொலிவையும், தெம்பையும் தரவல்லது. இது போல் இப்பாடலில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆறு ஆறு கருத்துகளைக் குறித்து மாக்களுடைய அறியாமை நோக்கி அறிவுடையோராக மாற்றுவதாகும். சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளான கொலை, களவு, பொய், காமம், கள் என்னும் இவற்றை நீக்க வேண்டியதன் இன்றியாமையை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற உயா்ந்த கருத்துக்களையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகின்றது. “கருந்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்    பெருஞ்சிரங்கு போர்வயிற்றுத் தீயார்க்கு – அஞ்சிரமம்  ஆற்றயூன் ஒத்(து) அவை தீா்த்தார் அரசராய்ப்  போற்றியூண் உன்பார் புரந்து” – (57) - கொடிய சிரங்கு நோயும் - வெள்ளைத் தொழு நோயும் - கல்லடைப்பு நோயும் - வாத நோயும் - வருந்துகின்ற பெருந்சிரங்கு நோய் பெரிய வயிற்றுத் தீ நோய் – ஆகிய நோய்களுடையவர் பெரும் துன்பத்தை, அடைகின்றனர். அவர்களுக்கு உணவைக்கொடுத்து அந் நோய்களை நீக்கியவா்கள் மன்னவர்கள் யாவராலும் போற்றப்படும். “பொய்தீர் புலவா் பொருள்புரிற் தாராய்ந்த   மைதீா் உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர் சுடரிற்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று) இடரின்(று) இனிதுயிலும் இன்று” – (66) - பொய்ம்மை நீங்கிய சான்றோர்கள் - விரும்பி ஆராய்ந்த மெய்ப் பொருளாகிய குற்றமற்ற வீடுபேற்றின் மாட்சியைச் சொல்லுமிடத்து. - அங்கு இருளை நீக்கும் - ஞாயிறு இல்லை - உரையில்லை - நிலை மாறுதல் இல்லை - தளர்ச்சி இல்லை - துன்பமில்லை - இனிய துயிலுமில்லை   வீடு பேற்றில் பகலிரவு முதலானவை இல்லை என்பதாம் இப்பாடல் கருத்து.   ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவதற்கு எந்த அளவிற்கு மருந்து முக்கியமோ அது போல் ஒரு மனிதன் வாழ்வதற்கு சில கொள்கைகளை, கடைப்பிடிக்க வேண்டும். ( சுக்கு, மிளகு, திப்பிலி, சிறு வழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறு மல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வோ், ஏலம், இலவங்கம், சிறு நாவற்ப்பூ, இவ்வகையான மருத்துவப் பொருட்களை அளவின்றி அருந்தினால் உடல் சரியான நிலையில் இருக்கும்.   பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊண் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை, இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை இது  போன்ற கொள்கைகளை சிறந்து கடைபிடித்து வாழ்ந்தால் நோயில் இருந்து வலி குணமடைவது போல், உள்ளம் (மன) நோய் நீங்கி இயல்பான நிலையில் வாழ்க்கையை கடைப்பிடித்து நடைமுறையில் வழி வகுக்கலாம்.   பார்வை   திருக்குறள் – பரிலேழகர் உரை www.nakkheeran.in  பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – துரை. இராசாராம்         இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு பழந்தமிழ் நூல்களில் சிறப்பிடம் பெற்றநூலாக திருகக்குறள் விளங்குகின்றது. அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாகவிளங்கும் திருக்குறள் மனிதவாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், தர்மம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி நுவலுகின்றது. பழந்தமிழ் நூல்களிலும் நான்கு பெரும் பகுப்புகள் கொண்டுள்ளன. - - எட்டுத்தொகைபத்துப்பாட்டு, பதினெண்மேல்கணக்கு - பதினெண்கீழ்கணக்கு - ஐம்பெருங்காப்பியங்கள் - ஐஞ்சிறுங்காப்பியங்கள் அவற்றில் பதினெண் கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால் என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.. அறம், பொருள், இன்பம், ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் முப்பால் எனப்பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் இயல் என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது, ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைத் தன்னுள் அடக்கியது.   பாவகை திருக்குறள் அனைத்துமே குறள்வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களாலாகிய அக்காலத்திய முதல்நூலும் ஒரேநூலும் திருக்குறள் ஆகும். குறள் வெண்பாக்களால் ஆனமையால் குறள்என்றும் திருக்குறள் என்றும் இதுபெயர்பெற்றது.   பாயிரம் பாயிரம் என்னும் பகுதியுடன் முதலில் அறத்துப்பாலில் அறம், பொருள், இன்பம், தொடங்கி இன்பத்துப்பால் முற்றுப்பெறுகிறது. குறளின் பகுப்பும் அமைப்பும், “அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி  பகவன்முதற்றேஉலகு” என்று “அகரம்” முதல்தொடங்கி அறம், பொருள், இன்பம் என்று எல்லா கருத்துகளையும் உள்ளடக்கியிருக்கின்றனர். “ஊடுதல்காமத்திற்கின்பம்அதற்கின்பம் கூடிமுயங்கப்பெறின்” என்று தமிழ்மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பலபெயர்களால் அழைப்பர். முப்பால் உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, திருவள்ளுவமாலை என்ற பெயர்களும் அதற்குரியவை ஆகும். தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு, அதற்கு துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். “மனத்துக் கண்மாசிலன் ஆதலே அனைத்து அறம்” அறத்தால் வருவதே இன்பம் ஆகும். அறவழியில் நின்று பொருள்ஈட்டி அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழவேண்டும். அறக்கருத்து இறைவன்மனிதனுக்குச்சொன்னதுகீதை  மனிதன்இறைவனுக்குச்சொன்னதுதிருவாசகம் மனிதன்மனிதனுக்குச்சொன்னதுதிருக்குறள்   அறக்கருத்துகள் பற்றிய அறிஞர்கள் கருத்து பழங்காலத்தில் அறிஞர்கள் இலக்கியங்களை அறங்களின் அடிப்படையிலேயே மதிப்பிட்டார்கள். தமிழில் தொல்காப்பியர் அறங்களை வலியுறுத்தினார். கிரேக்கத்தில் பிளேட்டோ மற்றும் ஆங்கிலத்தில் கவிஞரும் விமர்சகருமான மாத்யூ அர்னால்டு, இது பற்றி வலியுறுத்தி இலக்கியத்தில் அறநெறி பற்றி குறிப்பிடுகிறார்கள். இலக்கியத்தை வாழ்க்கையின் விமர்சனம் என்று ஆய்வில் பால் எல்மர்மோர், இர்விங்பாப்பிட் மற்றும் இவரை தொடர்ந்து நார்மன் பாஸ்டர், எச்.எச்.கிளார்க், ஜிஆர்.எலியட் போன்றோர் இலக்கியம் வாழ்க்கைக்கான அறம் என்று கூற. அவர்கள் காலத்திற்குப்பின் வந்த நவீனத்துவம் கோட்பாட்டு ஆய்வாளர்கள் பழையமரபுகள் இவர் மறுத்தலித்தனர். அறம் பற்றிய வினா? அறக்கோட்பாடு மதம்சார்ந்தவைய? என்ற வினா எழுகிறது. பொதுவாக மனிதனுக்கு இயல்பான அறஉணர்வு இருக்கும் –இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கியமும் அறங்களும் இலக்கிய உலகில் அறநெறிக் கோட்பாடுகள் சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுகின்றன. குறிஞ்சி, முல்லை, முதலாகிய ஐந்திணை என்று மட்டும் சொல்லி நிறுத்தாமல் அதற்கு ஒரு நீண்ட அடை மொழியை தொல்காப்பியர், “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு  அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்” (தொல்.பொருள் களவு -89) என்று குறிப்பிடுகின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்பது உலகின் கண்நுகரும் காதல் இன்பமும், உலகவாழ்க்கையின் பொருள்  என அமையுமாறு அறநிலை ஒழுக்கத்தின் பால் நிகழ்தலைக் குறித்தலாம். இதுகளவொழுக்கத்தின் சிறப்புநிலை என்க. அன்பொடு புணர்ந்த ஐந்திணையாகிய ஒழுகலாறுகள் அன்பின் வயத்தால் நிகழ்த்தல் என்பதாகும். “அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்  மறத்திற்கும் அஃதே துணை” – (குறள் – 76) அறத்திற்கு மட்டுமே அன்புதுணையாகும். என்பர். அறியாதார் ஆனால் மறத்திற்கும் அதுவே துணையாகும். சங்கஇலக்கியங்களில் அன்றையகாலத்து அறநெறிக்கருத்துகள் அதிகமாக இருக்கும் நிலையில் குறிப்பாக அகஇலக்கியங்களுக்கும் புற இலக்கியங்களுக்கும் அறநெறிகள் அடிப்படை வாழ்க்கை நெறியைக் குறிப்பிட்டுயிருக்கின்றனர். காப்பியத்திலும் அறம்பற்றியகருத்து உண்டு. “அரசியல் பிழைத் தோர்க்கு அறங் கூற்றாகும்  உரைசால் பத்தினியை உயர்ந் தோர்ஏத்தும் ஊழ்வினை உறுத்து வந்துஊட்டும்” – (சிலப்பதிகாரம்) இக்கால இலக்கியமான மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார்சரித்திரம் என்னும் நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆண், சிறந்தபெண், சிறந்தகுடும்பம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மரபுவழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. இவை திருக்குறளில் குறிப்பிடுவது போல அறகொள்கைகளையும் அறநெறிக்கோட்பாட்டின் மூலமாக வெளிப்படுகின்றது.   தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் பெரும்பாலானவை அறம் பேசுபவையாகவே அமைந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடைதல், நூற்பயன் என்று இலக்கணம் பேசுகின்றது. தன்னெஞ்சறிவது பொய்யறக .மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று திருக்குறள் சமயம் சாராத அறத்தைக் கூறுகிறது. இல்லறம் கூறும் அறவியல் இல்- அறம் இல்வாழ்வின்கண் நின்று மனதால் தூய்மைப்பட அறம் செய்து ஒழுகிவாழ்தல். அவ்வாறு வாழுமிடத்துத் தம்மைச் சார்ந்தோருக்கும், சாராதோருக்கும் யாவர்க்கும் உதவிசெய்து வாழவேண்டும், இல்வாழ்வை. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது” – (குறள் – 45) திருமணவாழ்க்கை ஒருவரை ஒருவர்புரிந்து கொண்டு அன்பாகவும் ஒற்றுமையாகவும் உண்மையாகவும் அமைந்துவிட்டால் அதுவே சிறந்த பயன்னுள்ள பண்புகளையுடைய வாழ்க்கையாக இருக்கும்.     அறம் அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல்லிடங்களில் பயின்று வந்துள்ளது. அறம் என்ற சொல்லுக்கு கையறம்கருமம், நீர்மை, நூற்பயனில் நான்கினொன்று, மனம் வாக்குகாயம் நற்சிந்தனை, நற்செயல், நற்சொல் பெரியோரின் இயல்பினொன்று எனத் தமிழ் மொழி அகராதியும், தனிமனிதனின் வாழ்வும், பொதுவாழ்வும், சீராக இயங்கத் தனிமனிதன் அரசு போன்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகள் அல்லது கடமைகள் என்று கூரியாவின் தற்காலத் தமிழ்மொழியகராதியும் பொருள் சுட்டிச்செல்கின்றது. இதனூடாக அறமாவது மனத்தெளிவு பெற்ற அல்லது மனத்தூய்மை பெற்ற தனிமனிதனின் ஒழுக்கத்தின் அடிப்படையிலான வாழ்வின் இன்றியமையா நெறிமுறை என்பதுபுலனாகிறது. வள்ளுவர்காட்டும் இல்லறங்கள் தனிமனித வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இல்லறமாகும். இல்லறத்தின் வழியாகத்தான் இன்பந்துய்க்க முடியும். பொருளின்பமானாலும் சரி, வீடுபேற்றின்பமானாலும் சரி இல்லறமேவாழ்வின் முதல்படி அறத்தான்வருவதே இன்பம் “அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்  புறத்த புகழும் இல” – (குறள் -39) ஒருவன்செய்யும் அறத்தால் கிடைக்கும் இன்பமே மிகுந்த பெருமைக்குரியதாகும். மற்ற எல்லா செயல்களுக்காகவும் கிடைக்கும் புகழ் இன்ப முடையதாக இருந்தாலும் அது சிறந்தபுகழாகது.   மனைமாட்சி குடும்பத்திற்கு தேவையான நல்லகுணங்கள் இல்லாத மனைவியை பெற்றயாருக்கும் மற்ற வழிகளில் கிடைக்கும் சிறப்பான புகழ் பெருமையாகவும் பயன்யில்லாமல் போய்விடும். “மனைமாட்சி இல்லாள் கண்இல்லாயின் வாழ்க்கை  எனை மாட்சித்தாயினும் இல்”. – (குறள் – 52) மக்களுக்கு மங்கலகரமான மகிழ்ச்சியை அளிப்பது குடும்பவாழ்க்கை. அதில் தங்களுக்கான வருங்கால சந்ததிகளை உருவாக்கும் மக்கட்பேறு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். “மங்கலம்என்பமனைமாட்சிமற்றதன்  நன்கலம்நன்மக்கட்பேறு” –(குறள் – 60)   அன்பே அறம் நம் உடலின் புறத்தே காணப்படும் கண், காது, கை, கால் ஆகிய எல்லாம் நமக்கும் செய்யும் உதவிகளைவிட நம் இதயத்தில் நிலைத்து நிற்கும் அன்பின் வெளிப்பாடு நமக்கு அதிகப்பயனை கொடுக்கிறது. “புறத்துறுப்புஎல்லாம்எவன்செய்யும்யாக்கை  அகத்துறுப்புஅன்பிலவார்க்கு” – ( குறள் – 79)   அடக்கம் உடைமை நம்முடைய வாழக்கையில் நாம்கடைப்பிடிக்கும் உயர்வான பணிவுநம் இறப்பிற்கு பின்நிலைத்து நிற்கும். ஆனால் அடங்காத முரண்பாடான வாழ்க்கை மீளமுடியாத இருட்டில் அடைத்துவிடும். நல்லொழுக்கம், தீயொழுக்கம் நம்முடைய நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை நம்முடைய துன்பமான நேரத்திலும்பலர் வழியவந்து உதவிசெய்வர். அது நன்றியுடையதாக இருக்கும். ஆனால் தீயொழுக்கம் எப்பொழுதும் நமக்கு துன்பங்களையும் அழிவையும்தரும். “நன்றிக்குவித்தாகும்நல்லொழுக்கம்தீயொழுக்கம்  என்றும்இடும்பைதரும்” – ( குறள் – 138)   வாழ்தலின் சாதல் ஒருவனை அவன் முகத்திற்கு நேராக புகழ்ந்துபேசி அவர்சென்ற பிறகு மட்டமாகபேசும் இயல்புடையவர் அவ்வாறுபேசி உயர்வாழ் வதைவிட செத்துவிட்டால் மற்றவர்களுக்கு நல்லது செய்தபுண்ணியமாவதுகிடைக்கும். “புறம்கூறிப்பொய்த்துஉயர்வாழ்தலின்சாதல்  அறம்கூறும்ஆக்கம்தரும்.” (குறள் -183)   தோன்றின் புகழோடு “தோன்றின்புகழோடுதோன்றுகஅஃதிலர்  தோன்றலின் தோன்றாமைநன்று” – (குறள் – 236)   எந்தவொரு இடத்திருக்குச் செல்வதாக இருந்தாலும் அங்குநமக்கு பெருமை உண்டாகும்படி நடந்து கொள்வதாக இருந்தால் செல்லவேண்டும். அப்படி முடியவில்லை என்றால் நாம் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது.       பார்வைநூல் திருக்குறள் புதிய உரை - பூம்புகார் பதிப்பகம்   கலையும்கலைக்கோட்பாடுகளும் – ஜான்சாமுவேல்  தொல்காப்பியம்பொருளதிகாரம் – சாரதாபதிப்பகம்  https://ta.wikipedia.org/s/3izf                                              திருக்குறளில்  வாழ்வியல்  கூறுகள் திருக்குறள் நீதிநூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ஈம்நூற்றாண்டிளுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு அறநூலாகும்.  வள்ளுவத்தின் \பொண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைக் கடந்த மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது. வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இனி வரும் தலைமுறையினருக்கும்பொருந்தும் படியாக மனிதனுக்கு வாழச்சொல்லிக் கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல்  வாழ்க்கையின் மகத்துவத்தை விளக்குகிறது. வள்ளுவம் இலக்கியம் என்னும் நிலையில் நின்று விடாமல் மனித வாழ்க்கையின் அறநெறி சாராம்சத்தையும் பதிவு செய்கின்றது. ”இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான்கும்  முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட் குள்ள அரிதென்றவை வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்”.- (நரிவெரூஉத்தலையார்)   இன்பம் பொருள் வீடு என்னும் இந்நான்கும் மன் பதைகட்கம் முன்பு அறிய சொன்ன முது மொழி நூல் உள்ள அரிது என்று இன்பம் முதலிய இந்நாற்பொருள் இயல்புகளையும் மக்கட் பரப்புக்கு அக்காலத்தில் அறியும் வண்ணம் சொல்லப்பட்ட பழமொழி வேதமானது ஓதி உணரப்படுதற்கு அரிது என்று, வள்ளுவர் அவை உலகம் கொள்ள குறள் மொழிந்தார். மனித வாழ்க்கை தலைசிறந்த அறமாக விளங்கும் அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறியவைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் நன்கு வழிக் காட்டுகிறது. அன்பு, பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித மாண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை உயர்த்தும் கோட்பாடாக வள்ளுவம் நல்லறங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது. அதில் ஆன்மீக அறம்  ஈதல் அறம் காதல் அறம்   ஆன்மீக அறம்   “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  பகவன் முதற்றே உலகு” - (குறள் - 1)   கடவுளை அறிவு, ஆற்றல் அப்பாற்பட்ட நிலை என்னும் கருதுகோள் நிலையில் வைத்து மனித பெருமைக்கும், சமுதாய அமைதிக்கும் வள்ளவர் குறள் வழிக் குரல் கொடுத்துள்ளார்.“உலகு“ என நினைவூட்டி உலகளாவிய நோக்கத்தை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளும் மனிதனுக்கு அவனது மனமாற்றத்திற்கு வள்ளுவம் ஒரு புதிய ஆன்மீக அறத்தை தந்துள்ளது.   வள்ளுவம் கடவுளை நம்புகிறது. ஆனால் அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள், கோட்டைகள் இல்லை ஆனால் அது பேரறிவு, வாய்மையான அறிவு, குணங்களின் திருவுரு, இன்பத்தின் திருவுரு, அன்பின் திருவுரு, அறத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது. ஈதல் அறம் “ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல    ஊதியம் இல்லை உயிர்க்கு” மனிதப் பண்பை உணர்த்தும்  ஒரு நெறி ஈதல் அறமாகும். ஈகை என்பது பிறருக்குக் கொடுத்து மகிழும் மனம்.அவ்வாறு கொடுத்துதவும் போது மனிதன் பக்குவம் அடைந்தவனாகிவிடுகிறான். போட்டியும், பொறாமையும் அடுத்தவர் பொருளைக் கவரும் எண்ணமும் மனிதனை மிருக நிலைக்குக் கொண்டு செல்லும் ஈகைக் குணம் ஒன்றே மனிதனை மாண்புடையவனாக்கும். வள்ளவர் ஈகை குணமே உயிரின் ஊதியம் என்பர்.கொடுத்துப் புகழடையும் வாழ்க்கையே பயனுடைய வாழ்க்கை என்பதைக் குறள் உணர்த்துகிறது. காதல்  அறம் காமத்துப்பால் அறவழிப்பட்ட காதலுறவுகளை எடுத்துரைத்துள்ளது. காதலையும், ஆண் - பெண் உறவுகளையும் வள்ளுவர் நெறிப்படுத்தியுள்ளார். காமத்துப்பாலில் காதல், காதலர்  உறவுநிலை ஆகியவற்றை இனிமை பயக்கப் பாடி அன்பெனும் நெறிக்குள்  மனங்களின் சங்க மருததிற்குள், மாசுபடாத வாழ்வியல் படி நிலையை வடித்துதந்துள்ளார். களவையும் கற்பையும் வகைப்படுத்தி மனிதம் அடையும் வாழ்க்கை நெறியை வள்ளுவா் தந்துள்ளார். இல்வாழ்க்கை “பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை  வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் - 44)   பழி அஞ்சிப் பார்த்து ஊண் உடைத்தாயின் ஈயாத கஞ்சன் என்று பிறா் பழித்ததற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புதலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டுலை இயல்பாகக் கொண்டிருப்பின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் அவனது மரபுவழி ஒருபோதும் ஆறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம். அன்பும்  அறனும் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது” (குறள் - 45) இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத் துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்தப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும். கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும், அறம் பயனும் இல்வாழ்க்கை உரித்தே ஆகும்.     இல்லவள்  மாணாக்  கடை ”இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்”   - (குறள் -53) இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது?  அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? அடக்க முடைமையின்  சிறப்பு “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்  தேரினும் அஃதே துணை” - (குறள் - 132) ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும் பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். ஒரு மனிதன் தன் வாழ்வில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதையம், எப்படியெல்லாம் வாழகூடாது என்பதையும் வாழ்க்கை நெறிமுறைகளையும், வாழ்வியல் கூறுகளையும் வழுவாகவும், செழுமையாகவும், படைத்துள்ளார்  திருவள்ளுவா். பார்வை நூல்கள் திருக்குறள் - வள்ளுவர் கண்ட தத்துவம் - தெ.பொ.மீ. திருக்குறள் - தமிழ் மரபுரை - ஞா.தேவநேயப் பாவணார் மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் - ப.மருதநாயகம் புதிய நோக்கில் திருக்குறள் பாயிரம் - எஸ்.முத்துகிருஷ்ணன்     சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது சங்க இலக்கியம் என்பது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். 473 புலவர்களால் 2381 பாடல்களைப் பாடப்பட்டுள்ளது. இப்புலவர்கள் பலதரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும; உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளையும் மற்றும் பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் அறியவைக்கின்றன. சங்க இலக்கிய கூறுகள் மற்றும் பண்புகள் அகம், புறம், ஐவகை, நிலப்புலன்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகளை எடுத்து விளக்குவதும், சங்க இலக்கியப் பாட்டுகளில் காணப்படும் பழைய மரபுகள் பல உண்டு. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும், வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் பகுத்தப் பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும். அகப்பாட்டுகளில் கற்பனை தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச்செயல்களும், கொடைப்பண்பும் குடிமக்களுள் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும், அகப்பாட்டுக்கள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.   சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலராகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மழையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவுப்பொருள்களுக்காக வேட்டை உளவு மீன் பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு, அறிவு, அழகு, வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களில் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழி கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்த காதல் வாழ்க்கையே மையப் பொருளாக கொண்டிருந்தனர். சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் நாட்டு பாடல்களில் பாடப்பட்டன. மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் இயற்கை அழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலிய வகைகளும் வாழ்வுக்காக அமைந்தவை. ஆகையால், காதல் வாழ்வே அந்தப் பாடல்களில் உரிப்பொருள் என்று போற்றப்ப்ட்ட்து. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம், விலங்கு, பறவை, தொழில் முதலிவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்கு பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதல் பொருள்கள் எனப்பட்டன. தினந்தோறும் இயற்கை பொருள்களும் தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால் எழுத்துக்கு நிலம் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கியம் இருந்த காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணை பாடலாக அமைந்தன. அவற்றின் மரபுகளை ஒட்டி புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுவதும் கிடைக்க வழியில்லை. ஒரு காதல் நிகழ்ச்சியை கற்பனை செய்து பாடும் போது இவ்வாறு அதற்கு உரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப்பொருள்களும் அமைத்துப்பாடும் மரபு நெடுங்காலமாக இருந்து வந்தது. ஊர் ஊராக மக்கள் எழுதாமலே பாடி வந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்தப் பாடல்கலேயே அந்த மரபு இருந்து வந்தமையால் புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் .கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணக்குவதைப் பாடல் விரும்பினால் புலவர் அதற்கு ஏற்ற வயம் சார்ந்த மரபு நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருள்களையும் அமைத்துப் பாட வேண்டி இருந்தது. மழையியோ காட்டையோ அமைத்துப் பாடுவதற்கு அந்த மரபு இடம்தரவில்லை. நாட்டு மக்களின் எழுத இலக்கியமாகிய நாட்டுப்பாடங்களே அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேறுன்றி இருந்தப்படியால் எழுதும் இலக்கியத்தைப் படைத்ததைப் புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால், அக்காலத்து அகப்பாட்டு இயற்கை வர்ணனை மிகுந்து விளங்கக் காண்கிறோம். இயற்கை பாடுவதாகவே அமைந்த பாட்டுகள் போல சில தோன்றும். மனிதரின் காதலை பாடுதலே அந்தப் பாட்டுகளே முதன்மையான நோக்கம். அந்தக் காதல் கற்பனைக்குப் பின்னனியாகவும் குடிமக்களுள் சிறந்தவர்களின் துணையாகவும் அமைக்கிறது.   ஐந்திணையில் காதல் குறிப்பு குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை என அன்பின் ஐந்திணை ஆகும். சங்க இலக்கியப் பாட்டுகளில் காணப்படும் பழைய மரபுகள் பல உண்டு. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும், வீரம் என்றும் கொடை புகழ் முதலிய வாழ்க்கைத்துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும். அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச் செயல்களும் கொடைப்பண்பும் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும் ஆகவே பெரும்பாலும் அகப்பாட்டுகள் கற்பனையாகவும் புறப்பாட்டுகள் உள்ளது குறிஞ்சித்திணையில் ஒரு தலைவனும் ஒரு தலைவியும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் கண்டு இயல்பாகவே அன்பு கொண்டு மனம் கலந்து உறவு கொள்வது குறிஞ்சித்திணையாகும். முல்லைத்திணையில் அன்பால் நெருங்கியப் பிணைந்த தலைவனும், தலைவியும் பிரிந்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை அப்பிரிவைத் தாங்கிக்கொண்டிருந்தல் முல்லைத் திணையாகும். பிரிவு பல காரணங்களால் உண்டாகும். மருத்திணையில் இல்லற வாழ்வில் தலைவன் பல காரணங்களால் வெளியிடங்களில் அடிக்கடி தங்கிவந்ததால் தலைவி கோபமுற்று ஊடல் கொள்வது மருத்த்திணையாகும். நெய்தல்திணையில் ஏதோ ஒரு காரணத்தால் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்திற்குள் வரமுடியாது கால தாமதம் ஆவதால் தலைவிக்கு ஏற்படும் வருத்ததைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணையாகும். பாலைத்திணையில் மணந்துக்கொள்ளும் பொருட்டுத் தலைவன் முயன்று பொருள் தேடவோ மேலும் கல்வி கற்கவோ அரச கட்டளையால் தூது செல்லவோ பிரியும் பிரிவு பாலைத்திணையாகும். களவு களவு என்பது ஒத்த பருவம், உருவம் முதலியவற்றுள்ள ஒருவனும், ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம் தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத்தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வது ஆகும். கற்பு கற்பு என்பது களவொழுக்கம் ஒழுகிக் காதலன்பு முதிர்ந்து மணந்து கொண்ட காதலர் ஒரு மனப்பட்டு இல்லறம் நடத்துதல் ஆகும். இல்லறம் தலைவனும் தலைவியும் கொடுக்கும் முறைமையையுடைய பெற்றோர் உடன்பட்டுக் கொடுப்ப மணந்செய்து கொண்டு நடத்தும் இல்லற வாழ்க்கையே கற்பு வாழ்க்கை, இல்லறமே கற்பு ஆகும். இக்கற்பு வாழ்க்கை, களவொழுக்கம் முற்றி விளைந்த விளைவு. களவொழுக்கத்தின் கனி கற்பு அஃதாவது அன்பின் வெற்றி ஆகும். தலைவனும் தலைவியும் எதிர்பட்டுக் கொண்ட காதலன்பு கெடாமல் இருவரும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துதலும் தலைவன் பிரிந்தால் தலைவி அன்பு வழுவாமல் ஆற்றியிருந்து வெற்றி பெறுதலும் உடைமையின் இது கற்பு எனப்படும். “மறை வெளிப்படுதல் கற்பு” கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் மணங்கலந்த அன்பின் பயனே கற்பு வாழ்க்கை. இன்பம் இன்பம் என்பது அகப்பொருளின்றி கூறு. ஆண், பெண் என்னும் இருபாலின்கண் நிகழ்வது, மக்களேயன்றி மற்ற விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் ஆண், பெண் என்னும் கூறுபாட்டால் பொருந்தி நிகழ்வது எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்காப்பியம் குறிப்பு. ஆண் பெண் புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் உருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கையாதலால், அதைத் தடை செய்வதும், இழித்துக் கூறுவதும், அகப்பொருளின் உண்மையை இயற்கையாற்றலை – இன்றியமையாப் பயன்பாட்டை அறியாக் குறையேயாகும். வாழ்க்கை நலத்திற்குக் காரணமான அகவொழுக்கமென்னும் பேரின்பத்தினைத் தகாத வழியில் செலுத்தியும் தவறான பொருள் கொண்டும் சிற்றின்பம் என இழிவுபடுத்தி விட்டனர். மக்கள் விலக்கத்தக்க பொருள்களில் உன்றாகச் செய்து விட்டனர். இது சமயச் சார்பில் நேர்ந்த தவறு. உலகுயிர்த் தோற்றமே ஆண் பெண் இருகூறாய் அமைந்திருக்க அவற்றின் கூட்டுறவே உலகுயிர்த் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்திருக்க அஃது எவ்வாறு சிற்றின்பமாகும். உயிர்கள் அடையும் இன்பங்களில் பேரின்பம் அதுவே வள்ளுவர் வகுத்தது. “ கண்ணால் கண்டும், காதல் கேட்டும், வாயால் உண்டும், மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டியும்” இன்புறும் ஐவகையான இன்பமும் பெண்ணிடத்தேயுள்ளன”. இவளோடு கூடி வாழும் இன்பத்தை விட உலகில் மிகுதியான இன்பம் வேறு எதுவும்மில்லை. காதலின் பெருமை இருவேறு உருவினரான ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி “ இருதலைப் புள்ளின் ஓராயிராம்” என்னும் நிலையை உண்டாக்கி ஒருவர்க்கு உண்டான நலக்கேடு இருவர்க்கு ஒத்த பங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது காதல். இருவரையும் முக்காலோட்ட விளையாட்டினர் நிலையில் வைப்பது இருபாலிடத்தும் தோன்றி ஒன்றுப்பட்ட அன்பை வளர்ப்பது. காதலன் ஒருவன் தன் காதலியிடம் எனது தாயும் நினது தாயம் ஒருவருக்கொருவர் எம் முறையினராவர். என் தந்தையும் நின் தந்தையம் ஒருவருக்கொருவர் என்ன முறையையுடைய சுற்றத்தினர் ஒரு முறையம் இல்லையே! அவ்வாறிருக்கவும், நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிந்தோம்? முன்பின் அறியாதவர் நாம் அவ்வாறிருந்தும் நம் அன்புடைய நெஞ்சங்கள் பயிர் செய்வதற்குத் தகுதியாக உழுது பண்படுத்தப்பட்ட செம்பாட்டு நிலத்தில் பெய்த மழை நீர் போலக் கலந்துவிட்டனவே என்னே காதலின் பெருமை இன்னார் என்று அறியாத இருவர் நான் நீ என்னும் வேறுபாடின்றி ஒருமைப்பட்டு என்னவென்பது குறுந்தொகை காதலின் பெருமையை நன்கு விளக்குகிறது. நெஞ்சம் கலந்தன “யாயும் ஞாயிம் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானம் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே: - (குறுந் – 40)   காளைப் பருவத்தையம் கண்ணிப் பருவத்தையம் அடையுமுன் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை திடிரென ஒருநாள் எதிர்ப்பட்டு அன்புகொள்ளச் செய்யம் பெருமையுடையது காதல். காதல் மனம் ஒருவனும் ஒருத்தியும் காதற் கலப்புற்று வரும்போது சிலர் தம் தோழர்களிடம் தமது கருத்தை வெளியிடுவர். சிலர் தம் காதலியிடம் நெருங்கிப் பழகும் பெண்களிடம் தெரிவிப்பர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. சில பெண்கள் தம் தோழியரின் குறிப்பு வேறுப்பாட்டை காதற் குறிப்பைக் குறிப்பால் உணர்ந்து அவளது பெற்றோரிடம் கூறுவர். சில பெண்கள் தம் தோழியரிடம் தாங்கொண்ட காதலைக் குறிப்பால் உணர்த்துவர். சிலர் தம் பாட்டியரிடம் கூறுவர். அப்பாட்டியர் பெற்றோரிடம் கூறுவர். பெற்றோர் மனமுவந்து  அக்காதலர்கே மணமுடிப்பர். காதலர்களின் காதற் கலப்பு பெரும்பாலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெறும். அவர்களது காதலைப் பெற்றோரே அறிந்து மணம் முடிப்பது முண்டு. காதலர்களின் தோழரும் தோழியரும் அவர்தம் பெற்றோர்க்கு மணம் முடிப்பது உண்டு. சங்க இலக்கியத்தில் கற்பு பற்றிய சில சொற்கள்   மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, மறுவது கற்பு, நிலைஇய கற்பு, மனைமான; கற்பு, அடங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி கற்பு, அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன. களவிலும் – கற்பிலும் - புணர்ச்சி “கண்தர வந்த காம ஒள்எரி  என்புஉற நலியினும் அவரொடு பேணிச் சென்று, நாம்முயங்கற்கு அருங் காட்சியமே……..(குறுந் -305) கண்தர வந்த காமம் என்றது அவனைக் கண்ட போதே அவன்பால் விருப்புடையார் ஆயினதைக் குறித்தாம் அதனை ஒள்எரி என்றது, சுடரிட்டுப் பலரும் காண நிகழ்வது அங்ஙனமன்றி எவரும் காணாவிடத்து நிகழும் தோழிப் போர் என்பாள். குப்பைக் கோழிப்போர் என்றனள். களைவார் இலர் என்றது, தோழி நீதான் அதனைப் போக்காயோ, எனக் குறிப்பாள் தோழியை வேண்டியதாம். உள்ளப் புணர்ச்சி ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? ஒத்த தலைவனும் தலைவியும் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது அஃது ஒரு பிறவி யொப்பா பல்பிறவி யொப்பா? “இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியாரன் கணவனை யானா சியர்நின் னெஞ்சுநேர் பவேள – (குறுந் – 49) இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியார் நின் நெஞ்சு நேர்பவளே என்பதைக் கவனிக்க வேண்டும். நின்னால் மாண்புற்ற போதும் இம்மைக்கண்ணும் அவர் நின் மனைவியர் ஆகார். நீயும் அவர்குரிய கணவன் ஆக மாட்டாய் மறுமையின்கண் தொடர்ந்து பெறும் நட்புக் கற்புடையாட்டியாகிய எனக்கன்றி அவர்க்கு வாயாது என்று கூறித் தலைவனிடத்தே தான் கொண்ட உழுவலன்பை உணர்த்துகின்றன. கற்பு – திருமணமாகக் முடியுங்கால் களவுநெறி, நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும். கற்பென்ணும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவு நெறி ஒருதலையாக நடக்க வேண்டுமோ எனின் இல்லை. சமுதாயமும் நல்லொழுக்கம் என உடன்பாடு அளிக்கும். களவின் முடிபு கற்பு என்பது அகத்திணை வலியறுத்தும;. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்பக் காரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும். “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்  கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்  கொடைக்குரி மரபினோர் கொடுப்பப்கொள் வதுவே” ( - தொல் – 1087 ) தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர். திருமணம் என்னும் கட்டுப்பாட்டு என்னும் யாண்டும் இன்றியமையாதது. மாறாதது மணச்சடங்குகள், தேய்ந்தோறும், இனந்தோறும், வேறுபடுவன காலந்தோறும் கூடுவன, குறைவன மயங்குவன ஆதலின் வாழ்வியலறிநர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் காரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார். “ பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய   மென்முலை முற்றம் கடவா தோரென நற்றென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி   - ( அகம் - 279) நண்பினர் பிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்களிப்பையும் உள்ளுரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர். அவர் யாரெனின் பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத்தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள். “ இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்   வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்   பொருளே காதலர் காதல் ..” ( - அகம் -53) காதலர் காதல் மாறிவிட்டது எனவும் அதற்குக் காரணம் ஈகைப்பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடு காவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவு வகைகள் பல இவற்றினும் பொருள் வயிற் பிரிவே பார்த்தது எல்லார்க்கும் உரியது களவிற்கும் கற்பிற்கும் பொதுவானது. தலைவன் தலைவி களவு கற்பு வாழ்வியல் பற்றிய எடுத்து இயம்புகின்றன.   பார்வை நூல்கள் தமிழ்க் காதல் – வ.சுப. மாணிக்கனார் குறுந்தொகை – புலியூர்க்கேசிகன் அகநானுறு – புலியூர்க்கேசிகன் தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் – செந்துறையான் தமிழ் இலக்கிய வரலாறு   – மது.ச. விமலானந்தம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் – க. பிரகாஷ்   குறுந்தொகையும் - குறிஞ்சியும் கடல் கோள்களால் அழிவுற்றன போக எஞ்சியவற்றைப் பாண்டிய, சேர அவையங்களில் புலவா்களைக் கூட்டித் திட்டமிட்டு பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைத் தொகுத்துத் தந்தவையாகும். அவை! பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே இன்றைய தமிழ் இலக்கியம் - பண்பாடு நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாகும். குறுந்தொகையென்னும் நூலை பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதில் நான்கடிச் சிற்றெல்லை முதல் எட்டடிப் பேரெல்லை வரை அமைந்த நானூறு பாடல்கள் அடங்கியுள்ளன. இத்தொகைப்பாடல்கள் அடியளவால் குறுகிய இப்பாடல்களில் முதல், கருப்பொருளைவிட உரிப்பொருட்கே சிறப்பிடம் பெற்றுள்ளது. குறுந்தொகையில் - தலைவன் - தலைவி   ஊழ்வயத்தாலே ஒன்றுபடும் தலைவன் தலைவியரது வாழ்விலே ஏற்படுகின்ற பல அவைமிகுந்த கட்டங்கள் - இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பாங்கியற் கூட்டம், பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறியிடையீடு, வரைவுகடாதல், வரைபொருட் பிரிதல், அறத்தொடு நிற்றல், பொருள்வயிற் பிரிதல், பிரிவிடைத் தலைவனும், தலைவியும் ஒருவரையொருவா் நினைத்து புலம்பலும், ஏங்கலும், பிரிந்தவர் ஒன்றுபடுதல், பரத்தையரை நாடித் தலைமகன் பிரிதல், அவன் பழையபடி தலைவியோடு வந்து கூடுதல் என்னும் இவை போன்ற பலவாகும். இவர்களிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சிகளை யெல்லாம் நயம்பட அமைந்துக் காட்டுகின்றன இக் குறுந்தொகைச் செய்யுட்கள். தமிழில் தொன்மையுடையது சங்க இலக்கியமே என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை, தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்பா் அவை!  - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பவனாகும். இவற்றிற்கு ஏற்ப புறத்திணையும் ஏழு வகையாக குறிப்பிடுகிறார். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும். இதில் தொல்காப்பியா் அகத்திற்கே முதன்மை தந்து புறத்தைச் சார்புபடுத்தி விளக்குகிறார். அக்காலத்தில் திணைப்பாடல்கள் வட்டாரப் பாடல்களாகத் திணைதோறும் வழங்கிவந்தன. நிலமே அதன் அடிப்படைப் பாகுபாட்டிற்கு காரணமாகும். “அவற்றுள்  நடுவண் ஐந்திணை நடுண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே” - (948) எனவும் மாயோன்மேய காடுரை உலகமும் சேயோன்மேய மைவரை உலகமும் வேந்தன்மேய தீம்புனல் உலகமும் வருணன்மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்…….(951) என கூறப்படும் தொல்காப்பிய நூற்பாக்களால் நிலவழியாக வளா்ந்த திணைப் பாங்கினை உணரலாம். நிலம், பொழுது, கருப்பொருள்களை வைத்தே முதற்கண் ஒரு பாடல் இனை திணையென உணரப்படுகிறது. முதல், கரு, உரி என அமைத்துப் புனைவது அகும். முதல் என்பது நிலமும், பொழுதுமாகும். பொழுது என்பது சிறு பொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். கருப்பொருள்கள் என்பது அவ்வகை நிலபாகுபாட்டை குறிக்கும். ஐவகை நிலத்தினர் குறிஞ்சி நிலத்தவரே அளவளாவி இன்புறுவரென்பதும் முல்லைநில மகளிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்ப ரென்பதும் மருதநில மகளிரே தலைவருடன் ஊடிப்பிணங்கி இருப்பரென்பதும், நெய்தல் நிலை மகளிரே இரங்குவரென்பதும் பாலை நில மகளிரே பிரிவை நினைந்து புலம்புவரென்பதுமான ஒரு வரையறை உலக வாழ்வில் இல்லாதிருப்பினும், புலவா்கள் யாத்தமைக்க செய்யுட்களிலே இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இவற்றை நாடக வழக்கெனவும், நாடகப் புலவன் தானமைக்க நினைக்கும் காட்சிக்கேற்பக் களத்தைப் புனைந்தமைத்துக் காட்டுமாறு போலவே, புலவர்களும் காட்சி செல்கின்றனா். சிறுபான்மை உலகியலையும் பெருபான்மை புனைந்துரைகளையும் கொண்டு விளக்குவனவே இச்செயுட்கள் அமைந்துள்ளன. திணை திணை என்பது ஒழுக்கம் என்று பொருள் படும். ஐந்திணை என்பது ஐவகையான ஒழுக்கங்கள், இவை ஐந்தும் இல்வாழ் மக்கள் கடைப்பிடித்து ஒழுக்க முறையே ஆகும். குறிஞ்சி               நிலம் பொழுது             மலையும் மலை         சார்ந்த பகுதி சிறும்            பெரும்  கூதிர்,யாமம், முன்பனி, பின்பனி     கருப்பொருள்  புலி, யானை, கிளி உரிப்பொருள்  மயில், வேங்கை,       புணர்தல் புணர்தலும் நிமித்தமும் சந்தன மரம், காந்தள்      ( திருமணத்திற்கு முந்திய குறவர், வேட்டையாடல் களவு வாழ்க்கை)   தொகையும் குறிஞ்சியும் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ….” - (படல் -  2) இயைற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழி, தலைமகனை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதன் பொருட்டு மெய் தொட்டுப் பயிற்றல முதலியின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி தனது அன்புத் தோன்றும் நலம் பாராட்டியது.   இறையனர் என்பது இங்கு சிவபெருமானைத் குறிக்கும் இப்பாடல் சிவபெருமான் ஒரு புலவராய்த் தோனிறி, தருமி என்னும் அந்தணன் பொருட்டுப் பாடப்பட்டது.   மணமுடைய தேனை ஆராய்ந்து உண்டு வாழும் அழகிய சிறகுகளையுடைய தும்பியே முற்பிறப்பில் பயின்றது இப்பிறப்பின் உரியதாகிய நட்பினையுடைய மயில் போன்ற சாயலினையம் வரிசையாய்ச் செறிந்துள்ள நறுமணம் போன்றதொரு ஒப்பற்ற மணம் நீ அறிந்த மலர்களில் உள்ளனவோ பல மலா்கள் தோறும் சென்று அவற்றின் மணத்தை அறிந்துள்ள நீ எனக்கின்பமான ஒன்றைத் கூறாது நீ துய்த்து அருந்த மணமுடைய மலா் ஒன்று இருக்குமாயின் கூறுவாயாக.   தலைமகன் மொழிந்தது. “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல்……( பாடல் - 3) தலைமகன் சிறைப் புறமாக அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்த இப்பாடல் ஆகும். கரிய கொம்பினையுடைய குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு மிகுதியான தேனைத் தொடுக்கும் மலைப் பக்கத்தையுடைய நாட்டைச் சேர்ந்தவனோடு உண்டாகிய அரிய நட்பானது, சொல்லப் புதின் நிலத்தைக் காட்டிலும் அகலத்தால் பெரியது. நினைத்துப் பார்த்ததால் வானைத்தை காட்டிலும் உயா்வில் உயர்ந்தது. உள்ளே புகுந்து எல்லை காணப்புகின் கடலைக் காட்டிலும் ஆழத்தால் அரிய அளவினது.   பெருந்தேன் இழைக்கும் குறிஞ்சி நிலத் தலைவனின் நட்பு தலைவன் பிரிந்திருத்தலால் பயனில்லாதது கழிவது குறித்து தோழி இயற்பழித்த வழி, தலைமகன் அதனை மறுத்து தலைமகனின் நட்பின் சிறப்பை உயர்த்திக் கூறினாள் என நிலத்தினும், வானினும், நீரினும் உயர்வு சிறப்பும்மைகள் பெற்றவன் ஆவான்.   தலைமகன் தோழிக்கச் சொல்லியது. “யாரும் இல்லைத் தானே களவன் தானவன் பொய்ப்பின் யான் எவன் செய்தோ”(பாடல்-25 வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைமகன் வரைந்து சொன்னது களவினை நீட்டித்த இடத்து ஆற்றாத தலைகள் தோழி உணா்வார் எவருமிலர். அவன் கூறிய சூளுரையை அவன் பொருய்ப்பின் யான் என் செய்வேன் அவன் மணந்த அன்று ஆரலைப் பார்க்கும் குருகு இருந்தது எனக் கூறுதல்.   தலைமகளிடம் அவன் கலந்த நாளில் வேறு எவருமில்லை தலைவன் தானே நிகழ்ச்சி நடந்த இடத்துச் சான்றாவான் அவன் தான் கூறிய அச்சூளுரையிலிருந்து பொய்ப்பின் நான் என்ன செய்வேன்? அவன் மணந்த அன்று இணையினது தாமரைப் போன்ற சிறிய பசுமையான கால்களையுடைய இடையறாது ஒழுகும் நீரின்கண் நீந்தும் ஆரால் மினை உணவாகக் கொள்ளுவதற்குக் காத்திருக்கும்.   சங்க இலக்கிய நூல்களின் ஒன்றாகவும், பதினெண் மேல்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகை நூலானது சிறந்த நூலாகவும், குறுகிய நூலாகவும் தலைவன், தலைவி பற்றி செய்திகளை எடுத்து இயம்பக்கூடியவையாக திகழ்கின்றன. இப்பாடல்கள் நிலம், பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், தலைமகள் காதல், வரைவு, களவாடுதல், இயற்கைப் புணா்ச்சி போன்ற செய்திகளை எடுத்து விளக்குவதாக குறுந்தொகை அமைகின்றன.   பார்வை நூல்கள் குறுந்தொகை - புலவா் துரை இராசாராம்  குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு -மனோண்மணி  சண்முகதாஸ்  புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - தமிழண்ணல்  தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம் - இலக்கிய வித்தகர்  செந்துரையான்  குறுந்தொகை மூலமும் உரையும் - புலியூர்கேசிகன்    நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம் ஒவ்வொரு மனித சமூதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனை சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்”1 கூறுவார்.( ETHNO MEDICINE, FOLK MEDICINE, POPULER MEDICINE, POPULER HELTH CULTURE, ETHNOIATRY, ETHNOATRICS) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது. அறிவியல் நாகாரிக இயந்திர வளா்ச்சி மருத்துவமுறை வழக்கில் உள்ளது எனக் குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற மருத்துவ முறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றி சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடு சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப் நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவை!   வீட்டு வைத்தியம் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் புழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டு பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர் பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும். பரம்பரை வைத்தியம் தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும். இயற்கை வைத்தியம் ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இதை இயற்கை மருத்துவம் ஆகும். மூலிகை வைத்தியம் மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.   கை வைத்தியம் நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டு தடவி பார்த்து அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்றும் சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம் பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்கு கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கிய பங்காக அமைகிறது. பச்சிலை வைத்தியம் செடி வகையை சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாக பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்  வந்தது. எ.கா. அம்மை : வேப்ப இலை மீது படுக்க செய்தல் காது வலி : சுரைக்காய் இலைச் சாறை கசக்கி காதில் விடுதல் முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்   இராஜ வைத்தியம் மன்னா;கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16  வது வயதில் நியமிக்கப்பட்டார், என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்தக் கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவ முறை இராஜ வைத்தியமாகும். இரகசிய மருத்துவம் நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில் முறையில் செய்து வரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும் பாட்டி வைத்தியம் “உணவே மருந்து என்பது அனுபவ மொழி” சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள், ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாக கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன் பாடுகளைப் பொரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள். உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்து தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இந்தப் பழக்கம்வழக்கமானது. எனவே பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம். ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தி சிறு குழந்தைகளில் இருந்து பொரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வருவதுண்டு. இது மட்டுமல்லாமல் கிராம மக்களிடையே நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவதும் உண்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது           (பழிக்காது) என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களை வேறு யாவறும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தை பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவு கடந்து இருந்தாலும் சில மலை வாழ் மக்களிடமும் மற்றும் கிராம மக்களிடமும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தை கைவிடுவதில்லை. பார்வை நூல்கள்  நாட்டுப்புற இயல் ஆய்வு - சத்திவேல்.சு  நாட்டு மருத்தவம் - சந்திரன்.ந       போயர் இனமக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள் தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் வட்டத்தைச் சார்ந்த சந்தப்பட்டிஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகியபகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் போயர் இனமக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் பிறஇனமக்களின் வழிபாட்டு முறைகளுடனும், சடங்குகளுடனும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. சந்தப்பட்டி கிராமப்பகுதிகளில் வசிக்கும் போயர் இனமக்கள் வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று கூலித்தொழில், கட்டிடம்கட்டுதல், கல்கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்துவரும் இவார்கள் விழாக்காலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருகின்றார்கள். இக்கிராமத்தில் இவ்வினத்தைச் சார்ந்த நூற்று இருபது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூரின் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. இவ்வூரில் அங்காளிபங்காளிக்கு ஒரு கோயில் என்ற முறையில் இரண்டு பொரிய கோயில்களும் அதனை பெருதெய்வமாகவும் ஊருக்கு பொதுவாக இரண்டு சிறுகோயில்களும் இதனை சிறுதெய்வமாகவும் மேலும் ஒரு மாரியம்மன் கோயிலும் அதனை பெருதெய்வமாகவும் வழிப்படுகிறார்கள்.. கோயில்கள் சின்னம்மாள்கோயில் வீரமத்திகோயில் மாரியம்மன்கோயில் பிள்ளைமுனிகோயில் பத்தரகாளியம்மன்கோயில்   பூசாரியின்பெயர்கள் சாமிக்கண்ணு, சம்பத் இவர்கள் இரண்டுபேரும் கோயில்பூசை செய்யும்பூசாரிகள். மற்ற பூஜைகளுக்கென தனிபூசாரிகள் இருக்கின்றனர். அவர்கள் சத்திபூசாரி, கரகபூசாரி, கத்திபூசாரி, பேய் ஓட்டும்பூசாரி, (கருப்பு ஓட்டும்பூசாரி) இளையபூசாரி எனப் பிரிவகளாக இருக்கின்றனர். பூஜை   கோயில் பூஜைகள், விரதபூஜைகள், கொலுவைத்தல், சனிபூஜைகள், விருந்தினர் பூஜைகள் என பலவகையான பூஜைகள் நடைபெறு வதுண்டு. சாமிபெயர்கள் வீரமத்தியம்மாள் ( வரம் வாங்கும்சாமி) சின்னம்மாள் ( வரம் வாங்கும்சாமி) மாரியம்மாள்  ( ஊர் பொதுசாமி) காளியம்மாள் ( ரத்த பலி வாங்கும்சாமி )   பிள்ளைமுனியம்மாள் ( ரத்த பலி வாங்கும்சாமி )   கோயில்அமைப்பும்  -  இருப்பிடமும் கட்டிடஅமைப்பு - மண் சுவற்றிலும், சிமென்ட்டிலும் மரத்தடியில் - புளியம்மரத்தடியிலும் வேப்பமரத்தடியிலும்   ஊர்மந்தை   ஏரி கரையின் இடையில் தெய்வ இருப்பிடம் மூன்று பெருந் தெய்வங்களும் இரண்டு சிறு தெய்வங்களும் கிழக்கு பார்த்தபடியே அமர்ந்துள்ளனர். பெருந் தெய்வங்களுடைய சுவர் அமைப்புகள் கற்களால் கட்டப்பட்டவையாகும். சாமியைவைத்திருக்கும் இடத்திற்கு கற்பகிரகம் (கற்பகிடங்கு) மூலஸ்தானம், கருவறை, மற்றும் பூஜையறை என்றும் குறிப்பிடுவதுண்டு. பூஜையறைக்கு முன்பாக இருக்கும் அறைக்கு தாழ்வாரம் என்றும் வாகனறை என்றும் குறிப்பிடுகின்றனர். கோயில்சிலை, தெய்வங்களின் வாகனங்கள், சாட்டைகள், சூலாயுதங்கள் போன்ற அனைத்துக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன. கொலுவைத்தல் பொதுவாக வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் கொலுவைப்பது வழக்கமாக உள்ளது. மக்கள் புதியதாக பொன் பொருள் வாங்குவதாக இருந்தாலும், வெளியூருக்குச் செல்வதாக இருந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும் பேய்பிடித்து இருந்தாலும் பூஜையில் இருக்கும் பூசாரியிடம் தங்கள் தேவைகளை குறிப்பிடுகின்றனர். பூசாரிகாளியம்மன், சின்னம்மாள் ஆகிய இரண்டு சாமிகளுக்கு இடையில் நாணயத்தை வைத்து மோளமும் மணியும் அடித்துவரம் கேட்பார். சின்னம்மாள் சாமியின் வலதுபுறத்தில் வைத்திருந்த நாணயம் கீழே விழுந்தால் நற்சகுணம் என்றும் இடதுபக்கத்தில் விழுந்தால் சகுணத்தடை என்றும் தெரிவிப்பது உன்டு. விழாக்காலங்கள் போயர் இனமக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மற்றும் ஆடி ஆகிய நான்கு மாதங்களில் திருவிழாக்களை நடத்தி முடித்துவிடுவார்கள். இக்களப் பகுதியை சார்ந்தவர்கள் ஆனிமாதத்தில் திருவிழாவை நடத்தும் வழக்கம் உள்ளது. இக்கிராமங்களிலுள்ள இருபிரிவினருக்கிடையே சண்டை, இளம் பெண்கள் பூப்பெய்துதல் மற்றும் இறப்பு ஏற்பட்டுவிட்டால் திருவிழாவை நடத்த இயலாததாகிறது. இதனால் திருவிழா நாட்களில் தொடர்ந்து நடக்கவேண்டிய காரியங்களை மட்டும் பார்ப்பது உண்டு. கோயிலுக்கு சார்ந்தவர்கள் மட்டுமே ( கங்கனம் கட்டியவர் ) இறப்புச் சடங்கைத் தவிர்த்துவிடுவார்கள். மற்றம் அவர்களின்  உறவினர்கள்  என்றால் கங்கனம் அகற்றிவிடவார். திருவிழா வழிபடும் முறை சந்தப்பட்டி கிராமத்தில் ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. திருவிழா நடத்துவதற்கு முன்பு ஊர்சாட்டும் வழக்கமும் உள்ளது. ஏழுநாட்கள் அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊர்சாட்டுகின்றது. ஊர்சாட்டியபிறகு, அவ்வூரின் ( இன ) மக்கள் வெளியூருக்குச் செல்லவோ அல்லது அசைவம் உண்ணவோ கூடாது. விழா திங்கக்கிழமை தொடங்கி வெள்ளிக் கிழமைவரை நடைபெறும். திங்கக்கிழமை திருவிழாவின் முதல்நாள் அன்று காலை நகரத்துக்குச் சென்று சாமிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஊர் எல்லையில் எல்லோரும் ஒன்று கூடி மேளத் தாளங்களோடு ஊர்சன்னதிக்கு வந்துசேர்வதுன்டு. அன்று இரவு பெருந்தெய்வச் சிலைகளை எல்லாம் டிராக்டர் வண்டியில் பலகையை வைத்து ஒன்றுக்குப்பின் ஒன்றாக அலங்கார கோலத்தில் வைத்தபிறகு (மகமேரி) தேரை வடிவமைத்து ஊர்மந்தையில் தேரை நிறுத்திவைத்துவிட்டு ஊர்மக்கள் அனைவரும் சாமிக்குபூஜை செய்து வணங்கியப்பிறகு தேர் உலா செல்லும். தேருக்கு முன்பு கரகாட்டத்தை நிகழ்த்தி வருவதுன்டு. இத்தேர்விழா விடியும் வரை நடத்தப்படும். இரண்டாம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து 11.00 மணியளவில் பொங்கல்வைக்க வேண்டும் என்று ஊர்சாட்டுவது வழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவரவர்களுடை பொங்கல் பானையை அடையாளப் படுத்திவைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விடுவார்கள். மதியம் இரண்டு மணியளவில் ஊர்கோடியில் இருக்கும் எல்லைப் பகுதியில் வேண்டுதல் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடிசாமிக்கு முன்பாக நின்று வழிபடுவார். பிறகு பம்பைக்காரரை வைத்து ஒலி எழுப்பி அருள்வந்த பிறகு அலகு குத்துவார்கள். அலகு குத்தியப்பிறகு கோயில்களுக்குச் சென்று அலகினை எடுத்து விடுவார்கள். நான்கு மணியளவில் விளக்கு மாவுஎடுத்துக் கொண்டு ஊர்மந்தையில் ஒன்று கூடி கோலாட்டத்துடன், சாமிகளைத்தூக்கிக் கொண்டு மந்தைக்குவந்து சேர்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்குபூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடுதிரும்பி விடுவார்கள்;. நான்குமணியளவில் பூஜைசெய்து ஆடு, கோழிகள் மேல் தீர்த்தம் தெளித்து விட்டப்பிறகு தலை ஆட்டிவிட்டால்“கத்திப்”பூசாரியால் ஆடு, கோழிகள் வெட்டப்படும். ( கத்திப் பூசாரியினர் பரம்பரை பரம்பரையாகவே இந்தபூஜையை செய்து வருகின்றனர்) திருவிழாவின் மூன்றாவது நாள் புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோழிக்காரனை வைத்து 11.00 மணியளவில் பொங்கல்; வைக்க வேண்டும் என்று ஊர்சாட்டு வதுவழக்கம். காலையில் பொங்கல் வைத்து முடித்தவுடன் அவர்களுடைய பொங்கல் பானையை அடையாளப்படுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். மூன்று மணியளவில் விளக்குமாவு எடுத்துக்கொண்டு ஊர்மந்தையில் ஒன்றுகூடி கோலட்டத்துடன், சாமிகளைதூக்கிக் கொண்டு மந்தைக்கு வந்துசேர்வாகள். பிறகு தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்து முடித்தவுடன் பெண்கள் வீடு திரும்பிவிடுவார்கள். நான்கு மணியளவில் பூஜைசெய்து ஆடு, கோழிகள்மீது தீர்த்தம் தெளித்துவிட்டப் பிறகு அவைதலை ஆட்டி விட்டால் கத்திப்பூசாரியால் அவ்வாடு, கோழிகள் வெட்டப்படும். ஐந்து மணியளவில் பிள்ளைமுனி கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து பூஜை செய்து முடித்தவுடன் கோழி வெட்டிதீர்த்தம் தெளிக்கின்றனர் அதன்பிறகு அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார். திருவிழாவின் நான்காம் நாள் வியாழக்கிழமை அன்று சாமிகளை ஊர்வலமாக கொண்டுவந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பூஜைபோட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. அப்போது யார் வீட்டிலாவது பேய்பிடித்தவர்கள் இருந்தாலோ, செய்வினை செய்து இருந்தாலோ கண்டுபிடித்து விடுவர். மேலும் இறந்தவர்களுக்குப் படையல்போட்டு ( கடலை, வெல்லம், தேங்காய், மிட்டாய், வாழைப்பழம்) பூசை செய்து வழிப்பட்டு கண்ணீர்விட்டு அழுது வருவதும் உண்டு. ஐந்தாவது நாளன்று வெள்ளிக் கிழமை சாமி ஊர்வலம் வந்து எல்லோர்வீட்டிற்கும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் கொடுத்து விட்டுமாலை நேரத்தில் சாமியை வாகனத்திலிருந்து தனியே எடுத்துவைத்துவிட்டு உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மஞ்சள் நீராடுவது வழக்கம். திருவிழாவின் இப்பகுதி போட்டியோடு தொடங்கப்படுகிறது. அண்ணன், தம்பி (பங்காளி) எல்லாம் ஒருபக்கத்திலும், மாமன், மைத்துணன் எல்லாம் ஒருபக்கத்திலும் சேர்ந்து இடையில் ஒரு கயிறுகட்டி வண்ணம் கலந்த நீரைவீணாக்காமல் ஒட்டு மொத்தமாக வைத்துக் கொண்டு இரு அணிகளில் தலா ஒரு வரைபிடித்து பாத்திரங்களில் வைத்திருக்கும் நீரை அவர்மீது ஊற்றி விளையாடுவார்கள். பேய் ஓட்டும் முறை   ஆறாவது நாளும் ஏழாவது நாளும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) மாலை நேரத்தில் பேய்பிடித்தவர்களை சாமி எடுத்து அழைத்து வந்து மந்தையில் உட்காரவைத்து பேய் ஓட்டுவது வழக்கம். பூசாரிக்கு அல்லது கருப்பு ஓட்டும் பூசாரிக்கு அருள்வந்த உடன் சாட்டையை வாங்கி பேய் பிடித்தவர்களை அடிப்பதுண்டு அந்த அடியில் ஒரு சில பேய்கள் ஓடிப் போய்விடும். அப்படி போகவில்லை என்றால் சூலாயுதம் கொண்டு கருப்பு ஓட்டுபவர் சக்கரவடிவில் ஒருவட்டத்தை வரைந்து பேய்பிடித்தவர்களைச் அச்சக்கரத்தின் உள்ளே உட்காரவைத்து அருள் அழைத்து பேய்பிடித்த நபரிடம் வினாக்களை எழுப்புவதுன்டு. அவர்களிடம் வினாக்களை கேட்கும் போது படிக்காதவர்கள் கூடு பல மொழிகளில் பேசுவதும் உன்டு.  (யார்? எதற்காக பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? இவரை விட்டுவிலகு?) ஒரு சில பேய்கள்தான் அடைய நினைப்பதை கூறும். அதுபோலவே நாங்கள் செய்துவிடுகிறோம். அவரை விட்டு நீங்கிபோ என்று வாக்களித்த பிறகு, வட்டத்தில் எத்துனை சக்கரங்கள் இருக்கிறதோ அத்துனைச் சக்கரங்களுக்கும் எலுமிச்சைப்பழமும், தேங்காய், பத்தி, கோழி அல்லது ஆடுகளை வைத்தபிறகு கருப்பு ஓட்டுபவர் அந்த ஆட்டையும் கோழியையும் உயிருடன் பிடித்து இரத்தத்தை உறிஞ்சி விழுங்குவதோடு பேய்பிடித்தவரிடம் இருந்து மூன்று தலை முடியை எடுத்து குடுக்கச்சொல்லி அம்முடியை (மூன்று) முடிச்சுகள் போட்டு ஊர்எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் ஆணி அடித்துவிட்டு திரும்பி பார்க்காமல் வீடுவந்து சேர்ந்திடுவார்கள். போயர் இன மக்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருவிழா கொண்டாடுகிறார்கள். அவர்கள் அத்திருவிழாவினை ஐந்துநாட்கள் கொண்டாடுகிறார்கள். பொங்கல்வைத்தல், விளக்குமாவு எடுத்தல், ஆடு, கோழிகள் வெட்டுதல், மஞ்சள் நீராட்டுதல் என வரிசையாக இக்கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். திருவிழா முடிந்தப்பிறகு பேய் ஓட்டி ஊர் எல்லைகளுக்கு பூஜை செய்து ஒவ்வொருதிசைக்கும் ஒரு ஆடு என்ற கணக்கில் நான்கு திசைக்கும் நான்கு ஆடுகள் வெட்டியபிறகே வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுவதுன்டு. ஊரில் அனைத்து நிகழ்ச்சிளும் முடிந்த பிறகுசாமிச் சிலைகளை இப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த தீர்த்தமலைக்கும், அனுமந்தீர்த்தத்துக்கும் கொண்டு சென்று கழுவியபிறகே ஊருக்குள் கொண்டுவருவர். சாமிசிலைகள் ஊருக்கு வந்த அடுத்தநாள் வீடுகளைச் சுத்தம் செய்து அத்தீர்த்தத்தைத் தெளித்துவிட்டால் வீடுகளும், ஊரும் சுத்தமாகிவிடும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. போயர் இனமக்கள் வருடம் வருடம் திருவிழா நடத்துவது உண்டு. இம்மக்களிடம் இரண்டு பிரிவினர் இருப்பதால் ( மாமன் மைத்துணன் ஒருபிரிவு, அண்ணன் தம்பிமார் ஒருபிரிவு (பங்காளி) சில நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதுன்டு இதன் அடிப்படையாக வைத்து திருவிழாவை நடத்தக் கூடாது என்று ஒரு பிரிவினர் தெரிவித்தால் அவ்வருடம் திருவிழாநடத்த முடியாமல் போய்விடும். மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திருவிழாவை சிறப்பாக நடத்து முடியும். ஒருவருடம் திருவிழாநடத்தவில்லை என்றால் மூன்று வருடங்களுக்கு நடத்த முடியாமல் போய்விடும் நான்காம் வருடம்தமான் திருவிழாவை நடத்த முடியும் அந்த வருடம் நடத்த முடியாமல் போனால் ஐந்தாம் வருடமும் நடத்த முடியாது. பின் ஆறாம் வருடம் மட்டுமே தான் திருவிழா நடத்தமுடியும். போயர் இன மக்கள் இத்திருவிழாவை சிறப்பாகவும், எந்த சடங்குகளும் மாறுபாடு இல்லாமல் நடத்திவருகின்றனர்.       தகவலாளர்விவர குறிப்பு   க.கந்தசாமி வயது - 45, சந்தப்பட்டி க.லத்தா வயது - 40, சந்தப்பட்டி க.தாயம்மாள் வயது - 63, சந்தப்பட்டி க.குருசாமி வயது - 72, சந்தப்பட்டி     போயரின மக்களின் நாட்டுப்புற விளையாட்டுக் கலைகள் தருமபுரி மாவட்டத்திற்கு  உட்பட்ட அரூர் வட்டத்தைச் சேர்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்குமொழி பேசும் போயர் இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், பிற இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், வேறுப்பட்டுக் காணப்படுகிறது. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் ஒரு சிலர் வெளியூருக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம் கட்டுதல், கல் கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள்   விழாகாலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருவதுண்டு. இங்கு படிக்கும் சில குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமே உள்ளுரில் இருக்கின்றனர்.  மற்றவர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால், தைப் பொங்கல், புரட்டாசி தேர் திருவிழா,  ஊர் திருவிழா, தீபாவளி, ஆடிப் பண்டிகை, போன்ற விழாகாலங்களில் ஊருக்கு  வருகின்றார்கள். அவ்வாறு விழாகாலங்களில் வரும் குழந்தைகள் ஒரு சில  விளையாட்டுகளைத்  தொடர்ந்து விளையாடுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு  எற்றவாறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மழை காலம், வெயில்காலம், போன்ற காலங்களில் விளையாட்டை ஆடுவதுண்டு. அவ்விளையாட்டுக்கள், குரங்காட்டம், மரம் மரம், அஞ்சாங்கள், அச்சுக்கல், கோலி, செம்பா, இது போன்ற விளையாட்டுக்கள் ஆடி வருகின்றனர். இவ்வகை விளையாட்டில் ஒரு சில விளையாட்டுவகைகளை காண்போம்.   குரங்கு ஆட்டம்  குரங்காட்டம் என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு தாவுவது  குரங்காட்டம் என்கின்றனர். இவ்வாட்டத்தை தொடங்குவதற்கு முன்பு எத்தனை நபர்கள் ஆட இருக்கின்றார்களோ அத்தனைப் பேரும் “ஒப்புக்கைச் சப்பா” ( சாபூத்ரி ) போட்டு அவுட்டாகும் ஒரு நபரை தேர்ந்தெடுப்பது  உண்டு. இதில் மூன்றுப் பேர் அல்லது ஐந்துப் பேர் ஒப்புக்கைச் சப்பா போடும்போது இருவர் உடைய கரங்கள் கருப்பாகவும், ஒருவருடைய கைகள் வெள்ளையாக இருந்தால், வெள்ளையாக இருக்கும் ஒரு நபர் தகுதியானவர் என்று குறிப்பிடுகின்றனர். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும்  விளையாட  இருக்கும் மரங்களில் ஏறிவிடுவார்கள். தோற்றவராக இருக்கும் ஒரு நபர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்கவைத்து அவர்கள் விளையாடும் மரங்களின் அருகில் ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தில் இருந்து இரண்டடி நீளம் கொண்ட குச்சியினை வீசுவார். பிறகு வீசிய குச்சியினை பிடித்துவிட்டால், வீசும் இந்த நபர் அவுட்டாகிவிடுவார். அவுட்டான அந்த நபர் வீசிய குச்சியினை எடுத்து கொண்டு வந்து அந்த வட்டத்தில் வைத்துவிட்டு மரத்தில் இருக்கும் நபர்களை தொட வேண்டும். அப்படி தொட வரும்போது மரத்தில் இருக்கும் நபர்கள் அருகில் இருக்கும் மரங்களுக்கு தாவுவதுண்டு. ஒரு சிலர் கீழே இறங்கி அந்தக் குச்சியினை தொடுகின்றனர். தொட்டவுடன் மீண்டும் அந்தக் குச்சியினை வீசிவிட்டு மரம் ஏறிவீடுவார். இப்படி இவ்விளையாட்டு தொடர்ந்து கொண்டே வரும். மரம் மரம் ஆட்டம்  மரம் மரம் விளையாட்டு என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்தைப் பிடிப்பது மரம் மரம் விளையாட்டு என்கின்றனர். இவ்விளையாட்டை இருபாலர் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். விளையாட இருக்கும் நபர்கள் அனைவரும் “ஒப்புக்கைச் சப்பா” ( சாபுத்ரி) போட்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தேர்ந்தெடுக்காத நபரை அவுட்டாக அறிவிக்கப்படுகின்றனர். பிறகு அவர்களுக்குப் பிடித்த  ஒரு மரத்தில் முதலில் விளையாட தொடங்குவார்கள். மரத்தை பிடித்துள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வினாவை எழுப்புவது உண்டு. “ மரம் மரம் எந்த மரம்”   மரம் மரம் அசோக மரம்” – என்று குறிப்பிடுவதுண்டு. அங்கு விளையாட இருக்கும் இடத்தில் எத்தனை மரங்கள் இருக்கின்றனவோ அத்தனை மரங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுவது உண்டு. அப்படி சுட்டிக்காட்டும் மரங்களை ஓடிச் சென்று பிடிக்கவேண்டும். அப்படி பிடிக்க ஒடும் போது தொட்டுவிட்டால் அவுட்டாகி விடுகின்றனர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும். கோலி ஆட்டம்  கோலி விளையாட்டுக்களில் சில வகைகள் உண்டு. அவை! பேந்தா  அஞ்சல் அறுவல்  கொத்தாட்டம்  என போன்ற வகைகளும் உண்டு.   பேந்தா இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் விளையாட இருக்கும் நபர்கள் இரண்டு அணிகளாகப் பிரித்து, செவ்வக வடிவில் ஒரு பேந்தாவை வரைந்து அதை இரண்டாகப் பிரித்து, அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்த பிறகு, அனைவரும் அக்கோட்டில் நின்று பேந்தாவை நோக்கி கோலியை உருட்டவேண்டும். பிறகு அந்தக் கோலிகள் யாருடைய கோலி பேந்தாவுக்குப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்த அணியினர் விளையாட தொடங்குகின்றனர். எதிரணியினர் பேந்தாவில் கோலிகளை வைக்க வேண்டும். பின்னர் பேந்தாவில் உள்ள கோலிகளை நோக்கி கோலிகளை உருட்டிவிடுவார்கள். உருட்டிய கோலிகள் பேந்தாவில் உள்ள எதாவதொரு  கோலியை அடித்துவிட்டால் அது முதல் ஆள் அடி என்றும் இரண்டாவதாக உருட்டும் நபருடைய கோலி அடித்துவிட்டால் இரண்டாவது ஆள் அடி என்று குறிப்பிடுவது உண்டு. முதல் ஆள் அடிக்கும் கோலியின் நபர் மட்டுமே முதலில் அடிக்க வேண்டும். இரண்டாவதாக ஆள் அடித்த கோலியின் நபர் இரண்டாவதாகவே அடிக்க வேண்டும். இப்படி அடிப்பதற்குப் பதிலாக மாற்றி அடித்துவிட்டால்  அந்த அணி அவுட்டாகிவிடும். இப்படி அடித்த கோலிகளையும், மற்ற கோலிகளையும் அந்த நபர்களுக்குப் பிரித்துவிடுவது உண்டு. பரித்து விட்ட கோலியின் நபர்களே அந்த கோலியினை அடிக்க வேண்டும். இப்படி அடித்து, ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்துள்ளன. அக்கோட்டில் கோலிகளை நிற்காமல் அடிக்க வேண்டும். அப்படி அடித்துவிட்டால் அவுட்டாகிவிடுகின்றனர். நிற்காமல் அக்கோட்டை தாண்டி அடித்து அவுட்டாகும் வரை ஆடி கொண்டே இருப்பார். இப்படி ஆடும் பொழுது அந்த அணியில் யாருமே அடிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். பிறகு எதிராக ஆடிய அணியினர் அக்கோலிகளை தனது மணிக்கட்டியாலும், முழங்கையாலும் பேந்தாவை நோக்கி தள்ள (தோக்க) வேண்டும்.  இப்படி தள்ளும் போது வெற்றி பெற்ற அணியினர் பேந்தாவில் இருந்து அக்கோலிகளை மீண்டும் அடிப்பார். அடிக்கும்போது தடுத்துவிட்டால், “தடுத்தா எட்டடி எண்ணிப்பார்த்தா பதினாறு அடி” என்று சொல்லி அடிப்பது உண்டு. இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.     அஞ்சல் அறுவல்  அஞ்சல் அறுவல் என்பது கோலி ஆட்டத்தில் ஒரு வகை விளையாட்டு. இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். இவ்விளையாட்டிற்கு முதலில் ஒரு கோலி அளவிற்குக் குழியைப் பறித்து அக்குழியில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கோடு வரைந்து அந்தக் குழியை நோக்கி உருட்ட வேண்டும். அப்படி உருட்டும் கோலி குழியில் விழுந்துட்டால் தொண்ணூறு ( தொம்பன்) என்றும் மற்றவர் கோலிகள் குழியில் விழுகாமல் இருந்தால் குழியை நோக்கி உருட்டவேண்டும். அப்படி உருட்டினால் ஐம்பது ( அஞ்சல்) என்று குறிப்பிடுகின்றனர். இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்  தெலுங்கு - தமிழ்  அஞ்சல் - 50 அறுவல் - 60   எழுவல் - 70 எட்டன் - 80 தொம்பன் - 90 தெசிங் - 100   இப்படி ஒவ்வொருவரும் கோலியை உருட்டியப் பிறகு குழிக்கு அருகில் இருக்கும் நபரே முதலில் அடிக்க வேண்டும். ஒருவருடைய கோலி இன்னொருவர் அடித்தால் பத்து என்ற கணக்கில் அடிக்க வேண்டும். குழியில் உருட்டி விட்டு அடித்தால் அஞ்சல் அறுவல் என்று அடிக்க வேண்டும். இப்படி தெசிங்கை வெற்றி பெற்றவர் பழம் ஆகிவிடுவார். இப்படி எல்லோரும் ஆடியப் பிறகு தோல்வியடைந்த நபர் அக்குழியில் இருந்து முன்று அடி தன் கால்களால் அளந்து கோலியை வைக்க வேண்டும். வெற்றி பெற்றவர் அனைவரும் கோலியை உருட்டி அக்கோலியினை அடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். யாருமே அடிக்கவிட்டால் தோல்வியடைந்த நபர் கோலியை எடுத்துக் கொண்டு குழியை நோக்கி ஓடி வர வேண்டும். கொத்தாட்டம் இதுவும் கோலி விளையாட்டின் ஒரு வகை விளையாட்டுதான். இவ்விளையாட்டை எத்தனை பேர்வேண்டுமானாலும் விளையாடலாம். இவ்விளையாட்டை யாராவது ஒருவர் விளையாட தொடங்கலாம். முதலில் மூன்று கோலிகளும், சுவர் வோரத்தில் ஒரு கோடு வரைந்து அதனுள் கோலி அளவிற்கு மூன்று குழிகள் பறிக்க வேண்டும். ஆட இருக்கும் நபர், அல்லது அனைவரும் சேர்ந்து ஓர் குறிப்பிட்ட தொலைவை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட ஆரம்பிப்பார்கள். ஆட இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கோலிகள் மட்டும் உருட்டி விடுவார். பின்னர் கீழே, மேலே (எதரா, மேழு - தெலுங்கு) என்ற குறிப்பிட்டப் பிறகு மற்றொரு கோலியால் எதிராக ஆட இருப்பவர் குறிப்பிட்ட கோலியை அடிக்கவேண்டும். அவர் குறிப்பிட்ட கோலியை தவிர மற்ற கோலியை அடித்துவிட்டால் ( பச்சா ) அவுட்டாகிவிடுவார். அதேப் போல் அக்குழியில் விழுந்து விட்டால் ஒரு புள்ளி என்றும் அதை அடித்துவிட்டால் இரண்டு புள்ளி என்றும் குறிப்பிடுவதுண்டு. இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்  தெலுங்கு - தமிழ்  எதற் - கீழே  மேழு - மேலே  இஷ்டம் - விருப்பம்  பச்சா - இரண்டு கோலியும் அடித்தல்    கோட்டிப் புல்  கோட்டிப் புல் ஆட்டம் என்பது நமக்குத் தேவையான அளவிற்கு (அல்லது) ஒன்றரை அடி அளவிற்கு நீண்ட குச்சியினையும், ( கோட்டியினை) அறையடி அளவிற்க்கு சிறு குச்சியினையம் ( புல்லினையும்) செய்த பின்னரே ஆடத் தொடங்குவர். இவ்வகை கோட்டிப்புல்லை எந்த வகை மரங்களிலும் செய்துக்கொள்ளலாம். எத்தனை பேர்வேண்டுமானாலும் ஆடலாம். எத்தனை நபர் இருக்கின்றனர் என்று பார்த்தப் பிறகு சம்மாக இரண்டு அணிகளாகப் பிரிக்கின்றனர். இந்த அணியில் முதலில் ஆடத் தொடங்க இருப்பவர் புல் அளவிற்க்கு குழியைப் பறித்துவிட்டு அந்தக் குழியின் முன்னாடி வைத்து  தள்ளவேண்டும் (தோக்க). அப்படி தள்ளும் போது எதிரணியினர் பிடித்துவிட்டால் புல்லை தள்ளியவர் தோற்றுவிடுவர். அப்படி பிடிக்கவில்லை என்றால் அந்தப் புல்லினை கொண்டு அக்கோட்டியின் மீது வீச வேண்டும் . அப்படி வீசும் போது அப்புல் கோட்டி மீது விழுந்துவிட்டால் அவுட். விழுகவில்லை என்றால் அப்புல்லை மூன்று முறை அடிக்க வேண்டும். முதல் முறை அடிக்கவில்லை என்றால் அவுட். முதல் முறை அடித்துவிட்டு இரண்டாவது முறை அடிக்கவில்லை என்றால் எதிரணியினர் தலை மீது அப்புல்லினை வைத்து சுத்தி கீழே போட வேண்டும் அதற்குப் பிறகு அடிக்கவேண்டும். அப்படி முதல் முறையாக அடிக்கும் போது அந்தப் புல்லை எத்தனை தடவை அடிக்கின்றாரோ, அதுவே முதலில் ஏத்துக்கப்படும். ( கோட்டியால் புல்லை இரண்டு, மூன்று, நான்கு முறை தொட்டு அடித்தல் ) இப்படி மூன்று முறை அடித்ததில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அங்கிருந்து  தோராயமாக இருபது, ஐம்பது என்று எண்ணிக்கையில் குறிப்பிடுவது உண்டு.. கோட்டிப் புல்லை மூன்று முறை அடிக்கும் போது அளக்கும் முறை  மூன்று முறை அடிக்க வேண்டும் முதலில் அடித்தால்  - கோட்டி  இரண்டு முறை அடித்தால் - புல்  மூன்று முறை அடித்தால் - தீக்குச்சி  நான்கு முறை அடித்தால் - கண் முடி  ஐந்து முறை அடித்தால் - நெல்  ஆறு முறை அடித்தால் - ராகி  ஏழு முறை அடித்தால் - மண்  இப்படி ஒவ்வொரு முறை அடிக்கும் போது, ஒரே முறை தொடர்ச்சியாக அடித்தால் இந்த வகையில் அளக்க வேண்டும். இப்படி இரண்டு அணிகளில்  யார் புள்ளி அதிகமாக எடுக்கின்றனரோ அவர் வெற்றி என்று குறிப்பிடுகின்றனர். வெற்றி பெற்ற அணியினர் விளையாடிய இடத்தில் இருந்து எத்தைனை பேர் ஆடினரோ அத்தனை பேரும் மூன்று முறை கோட்டியால் புல்லை அடித்து விடுவார். தோல்வியுற்றவர் அடிக்கும் போது அப்புல்லை பிடித்துவிட்டால் அல்லது பிடிக்காமல் இருந்தால்  இறுதியாக எந்த இடத்தில் புல் இருக்கிறதோ, அங்கிருந்து அப்புல்லை கையில் எடுத்துக் கொண்டு மூச்சி விடாமல் பாட்டு பாடிக் கொண்டே விளையாடிய இடத்திற்க்கு வந்து சேரவேண்டும். அப்படி மூச்சி விட்டால் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அப்புல்லை ஒரு அடி அடித்துவிடுவார். அங்கு இருந்து வேரொருவர் எடுத்துக் கொண்டு வருவார். வந்தப் பிறகு தோல்வியடைந்தவர் மீண்டும் ஆட தொடங்குவார்கள். இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்  தெலுங்கு - தமிழ்  தோக்கு - தள்ளு  சினுக்கு - தொடர்ச்சி  குடுகு - ஓடு  கொளுசு - அளத்தல்    சாணாங்கோல் சாணாங்கோல் என்பது நம் உயரத்திற்கு ஒரு குச்சியினை  (கோல) எடுத்து கல் மீது வைத்து ஆடுவது சாணாங்கோல் என்கின்றனர். இவ்விளையாட்டை எத்தனைப்பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்டு ஆவட்டான நபரை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட தொடங்குவார்கள். இதில் கடைசியாக யார் விளையாட வருகின்றார்களோ அவர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றனர். பின்னர் விளையாட தொடங்குகின்றனர். விளையாட இருக்கும் அனைவரும் எந்த குச்சியினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  பிறகு இரண்டு கைகளால் அக்குச்சியினை தூக்கிவைக்க வேண்டும். தூக்கிவைத்தப் பிறகு யாராவது ஒரு நபர் அக்குச்சியினை தனது குச்சியால் தூக்கி எரிந்து விட்டு பின்னர் அவருடைய குச்சியினை  கல் மீது வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார்.  இப்படி அக்குச்சியினை நகர்த்தி கொண்டு இருப்பார். நகர்த்தும் போது கல் மீது வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர். [] ஆபியம் மணியாபியம் ஆபியம் மணியாபியம் என்பது ஆண்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். இவ்விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்ட பிறகு அவுட் ஆன ஒருவரை குணியவைத்து ஒவ்வொருவரும் அவரை தொடாமல் தாண்டவேண்டும். தாண்டும் போது ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே தாண்டுவதுண்டு. அப்பாட்டு!  “ ஆபியம் மணி ஆபியம் ரெட்டைக் கொக்கு லட்சத்திர மண்ணல்ளி ஒத்தக் காலா, இரட்டைகாலா  லடி லடி குண்டியில் அடி”   ஆபியம், மணி ஆபியம், இரட்டைக் கொக்கு, இவை மூன்றும் பாடும்போது ஒரே மாதிரியாகவே இருக்கும். லட்சத்திர மண்ணல்ளி என்று சொல்லி தாண்டும்போது மண்ணை அள்ள வேண்டம். அள்ளாவிட்டால் தாண்டியவர் அவுட்டாகிவிடுவார். ஒத்தக் கால் அடி, இரட்டை கால் அடி என்று சொல்லி தாண்டும் போது, ஒரு கால் உதைக்கச் சொன்னால் ஒரு காலிலும், இரட்டை கால் உதைக்கச் சொன்னால் இரட்டைக் காலிலும் உதைக்க வேண்டும். லடி லடி குண்டியிலடி என்று சொல்லி தாண்டும் போது குணிந்து இருக்கும் அவரது குண்டியில் உதைத்துவிட்டு தாண்ட வேண்டும். அவர் குறிப்பிட்டதை செய்யவில்லை என்றால் அவுட்டாகி விடுகின்றர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர். [] நொண்டி நொண்டி விளையாட்டு என்பது ஆண், பெண் இருபாலரும் ஒருகாலை மடங்கி கொண்டே ஆடும் ஆட்டத்திற்கு நொண்டி என்கின்றனர். இவ்விளையாட்டை இரண்டு பேர், அல்லது  நான்கு பேர் ( இரண்டு அணியாக ) பிரித்து ஆடுவதுண்டு. இரண்டு அணியில் ஒரு அணி விளையாடத் தொடங்கும் போது, முதலில் ஒரு கோடு (பட்டை) வரைந்து அதை நான்காகப் பிரித்து விடுகின்றனர். பின்னர் ஆட இருக்கும் ஒருவர் விளையாட வைத்திருக்கும் கல்லை (சில்லி) - யை எல்லை கோடு தாண்ட வீச வேண்டும். வீசிய பிறகு ஒவ்வொரு பாகத்திலும் கோட்டை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு அந்தக் கல்லை மிதிக்கவேண்டும். அப்படி மிதிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். இக்கல்லை வீசும் போது   ஒவ்வொரு தடவையும் ஒன்று குறிப்பிடுவதுண்டு. அவை! தெலுங்கு - தமிழ்  விசரா - வீசுதல்  ஒன்னா - ஒன்று  ரெண்டா - இரண்டு  மூனா - மூன்று  நாலா - நான்கு  வெள்ளையா - உள்ளங்கை  கருப்பா - கையின் மேல்புறம்  காலா - கால்  தலையா - தலை    முதலில் கல்லைக் (சில்லி) கொண்டு பட்டையின் எல்லைக்கு வீசி விட்டு அதை மிதிப்பது வீசுதல் (விசரா) என்கின்றனர். ஒன்னா என்பது வீசுதல் முடிந்தப் பிறகு முதல் பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு ஒன்று (ஒன்னா) என்கின்றனர். ரெண்டா என்பது ஒன்னா முடிந்தப் பிறகு இரண்டாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு இரண்டாம் என்கின்றனர். மூனா என்பது ரெண்டா முடிந்தப்பிறகு மூன்றாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு மூன்றாம் என்கின்றனர். நாலா என்பது மூனா முடிந்தப் பிறகு நான்காவது பட்டையில் கருவியைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு நான்காம் என்கின்றனர். வெள்ளையா என்பது நான்கு பட்டைகளில் கல்லைப் (சில்லி) போட்டு மிதித்தப் பிறகு வலது உள்ளங்கையில் கல்லை (சில்லி) வைத்து கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்தப் பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். கருப்பா என்பது வெள்ளையா போல் வலது கையின் மேல்புறத்தில் அந்த கல்லை (சில்லி) வைத்துக் கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்தப் பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். காலா என்பது பெருவிரல் இடையில் அந்தக் கல்லை (சில்லி) வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்தப் பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். தலையா என்பது இவை அனைத்தும் முடிந்தப் பிறகு தலையில் வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்த கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் செய்தால் நான்கு பட்டையில் ஒரு பட்டை பழம் பெறமுடியும். பழம் பெற்றப் பிறகு எதிரணியினர் அப்பழத்தை மிதிக்காமல் தாண்டுதல் வேண்டும். இது போல் ஒவ்வொரு முறையும் விளையாடிக் கொண்டு வந்தப் பிறகு எல்லாப் பட்டையம் பழம் பெறுவது இவ்விளையாட்டின் நோக்கமாகும். இப்படி ஒவ்வொரு விளையாட்டும் வித்தியாசமாகவும், வேறுபாடுன்றியும், புதுமையாகவும் விளையாடிக் கொண்டு இருந்த இம்மக்களிடையே ஒருசில விளையாட்டுகள் மட்டுமே விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். போயர் இன மக்களின் நாட்டுப்புற விளையாட்டு வகைகள் அதிக அளவிற்கு இருந்தது. இவ்வகை விளையாட்டுகள் விளையாடியதால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க பயனுள்ளதாக இருந்த்து. இனி வரும் காலக்கட்டத்திற்கு இவ்வகை விளையாட்டுக்கள் இருக்கும் என்பதற்கு சாத்திய கூறு இல்லை. இவர்கள் விளையாடிய விளையாட்டுக்கள் இன்றை காலகட்டத்தில் விதிகள் மாறபட்டு வருகிறது. இக்கால கட்டத்தில் விளையாட்டுகளை விளையாடுவதற்க இயற்கைச் சூழல் இருந்த்து. இன்றைய நாகரிக வளர்ச்சியின் காரணமாக இவ்வகை விளையாட்டுக் கலைகள் மறைந்து கொண்டு இருக்கின்றது. இனி வரும் எதிர்கால சந்த்தினருக்க இவ்விளையாட்டுக் கலைகள் எடுத்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.          [] []   [] []   [] []   [] []       [] []   []                 தகவலாளர் த.கொடியரசன் - 15 த.சந்தோஷ் - 12 க.சின்னதுரை - 21   க.குமரேசன் - 23 வே.லோகநாதன் - 22 க.சதிஷ் - 24 []