[] [பயத்தோடு வாழப் பழகிக் கொள்] பயத்தோடு வாழப் பழகிக் கொள் பயத்தோடு வாழப் பழகிக் கொள் ஜோதிஜி திருப்பூர் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - பயத்தோடு வாழப் பழகிக் கொள் - என்னுரை - இணையப் பயணம் - 1. இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? - 2. அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்? - 3. ஆசை மரம் - 4. இனிய நினைவுகள் - 5. ஈக்கள் மொய்க்கும் உலகம் - 6. உண்டு உறங்கி விடு. செரித்துவிடும் - 7. ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும் - 8. கற்றுக் கொண்டால் தப்பில்லை - 9. நாலும் புரிந்த நாய் வயசு - 10. ஐந்தில் கற்றதும் பெற்றதும் - 11. அங்கீகாரமும் அவஸ்த்தைகளும் - 12. பாவம் அப்பாக்கள் - 13. இதுவும் கடந்து போகும் - 14. வலைபதிவுகள் வரப்பிரசாதம் - 15. காதோடு பேசலாம் வாங்க - 16. இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு - 17. தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம் - 18. நீயும் பொம்மை நானும் பொம்மை - 19. தண்ணீரில் விளையாடிய நாடுடா இது - 20. மாற்றத்திற்கு ஆசைப்படு - 21. இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை - 22. தர்மபுரி - வன்முறையும் வன்மமும் - 23. சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை - 24. பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் - 25. மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள் - 26. அரசியல் அதிகாரம் -- பயத்தை உருவாக்கு - 27. சமச்சீர் கல்வி வரமா சாபமா - 28. ஊரெல்லாம் பெட்ரோல் வாசம் - 29. கூடங்குளம் -- உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் - 30. கச்சத்தீவு - உண்மைகளும் எதார்த்தமும் - 31. 500 - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 பயத்தோடு வாழப் பழகிக் கொள் [Cover Image]   பயத்தோடு வாழப் பழகிக் கொள் உருவாக்கம்: ஜோதிஜி திருப்பூர் மின்னஞ்சல் – powerjothig@yahoo.com வகை – கட்டுரை வெளியீடு: http://FreeTamilEbooks.com எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com @jayendran மின்னூலாக்குக. மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். 2 என்னுரை [] தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/ என்ற பெயரில் வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன ் . கடந்த நான்கு ஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/ என்ற பெயரில் எழுதி வருகின்றேன் . அனுபவம் , செய்திகள் , கட்டுரை , சமூகம் , பயணக்கட்டுரை , ஆன்மீகம் , நெடுங்கதை , தமிழ்நாட்டு அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் , ஈழம் சார ்ந்த வரலாறு , தமிழர் வரலாறு , குழந்தைகள் குறித்த தொடர் நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி வந்துள்ளேன் . 2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது . 4 தமிழ் மீடியா வெளியிட்டார்கள் . அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நக ரம் . திருப்பூர் வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு . இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன் வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள் . அடுத்து கல்வி குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வர காத்துக் கொண்டிருக்கின்றது . அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடர் வாரந்தோறும் (2014) வெள ்ளிக்கிழமை அன்று திருப்பூர் தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது . இதுவும் புத்தமாக மாற வாய்ப்புண்டு . கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை 682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம் வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின் எண்ணிக்கை 10 லட்சம் . கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறை யில் பணியாற்றிவருகின்றேன் . மனைவி பெயர் மாதவி . இளங்கலை வணிகவியல் பட்டதாரி . எனக்கு தோழியாக , என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாக இருக்கின்றார் . எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி , துர்க்கா தேவி , கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி . முறைய ே ஆறாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள் . குழந்தைகள் மூவருக்கும் என் எழுத்து , இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது , நான் எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிக நன்றாகவே தெரியும் . மூவரும் என்னை எழுத்தாளன் என்று என ்னை ஒப்புக்கொள்ளவில்லை . காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதே அவர்களுக்குண்டான பிரச்சனை . மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றி இங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுது போக்குகளில் ஒன்று . அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்க ளாக மாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன் . எப்போது போல என் மனைவி அவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக் கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதே எங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது . நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை , இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் . இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும் . சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள ் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும் . நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம் . எத்தனை சமூகம ் சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம் . இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம் . உணர்ந்து படியுங்கள் . உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை மறக்காமல் எனக்குத் தெரியப்ப டுத்துங்கள் . நட்புடன் ஜோதிஜி திருப்பூர் . 09.12.2014 JOTHI GANESAN E Mail – texlords@gmail.com 3 இணையப் பயணம்   [] 2013 ஆம் ஆண்டு . நவம்பர் மாதம் என்று தான் நினைகின்றேன் . துல்லியமாக அந்த நாள் என் நினைவில் இல்லை . அதுவொரு ஞாயிற்றுக் கிழமை . மனைவியும் குழந்தைகளும் மதிய தூக்கத்தை நிம்மதியாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் . எப்போதும் போல என் இணையப் பயணம் தொடங்கியது . நான் திருப்பூரில் பணிபுரியும் சூழலில் என்னால் முழுமையாக எழுத முடிவதும் , அதிக நேரம் இணையத்திற்கு ஒதுக்க முடிவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே . ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் எழுதப்பட்டது தான் என் அனைத்து வலைபதிவு கட்டுரைகளும் என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை தானே ? காரணம் தேவியர்கள் தூங்கிய பின்பு தான் கணினி என் கைக்கு வரும் . அப்போது தான் சீனிவாசன் உருவாக்கி இருந்த மின் நூல் தளம் குறித்து அவர் அறிமுகப்படுத்தி எழுதிய வாசகங்கள் என் கண்களுக்கு தென்பட்டது . தமிழ் மொழி குறித்து , அதன் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கான சிந்தனைகளை எங்கு படித்தாலும் எவர் எழுதி இருந்தாலும் அதனை என் முகநூலில் , கூகுள் ப்ளஸ்ல் பகிர்ந்து விடுவதுண்டு . யாரோ ஒருவரின் கண்களுக்கு தென்படும் எங்கிருந்து உதவிக்கரம் கிடைக்கும் என்றே நம்மால் யூகிக்க முடியாது அல்லவா ? அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் அவர் அலைபேசி எண் கொடுத்து இருந்தார் . தினந்தோறும் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான பேர்களை கையாளுவதால் புதிய நபர்களுடன் உரையாடுவது என்பது எனக்கு எப்போது இயல்பான காரியம் . உள்ளூர் எண் என்பதால் பேசிவிடலாம் என்பதற்காக அவரை அழைத்தேன் . ஆச்சரியம் என்னவென்றால் சீனிவாசனின் சென்னை அலுவலகம் வாயிலாக அப்போது அவர் இருந்த அமெரிக்காவிற்கு அந்த அழைப்பு சென்றது நான் பேசிய சில நிமிடங்களில் நீண்ட நாள் பழகியவர் போல அவர் பேசிய பேச்சுக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தது . அப்போது அவர் உருவாக்கியிருந்த மின் நூல் தளம் என்பது அவருக்கு பாதி நம்பிக்கையை தான் கொடுத்து இருந்தது . அவர் பேச்சில் சற்று சோர்வு தெரிந்தது . அவரின் குடும்ப பின்புலத்தையும் விசாரித்த பின்பு நிச்சயம் இவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்று என் மனதில் தோன்றியது . உற்சாகத்துடன் அவர் செயல்பாடுகளை பாராட்டினேன் . என் வார்த்தைகள் அவருக்கு இனம் புரியாத உற்சாகத்தை தந்து இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர் உரையாடலின் வாயிலாக புரிந்து கொண்டேன் . ‘ நான் உங்கள் பின்னால் இருப்பேன்’ என்று உறுதியளித்தேன் . எனக்கு கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் எதுவும தெரியாது . அதில் ஆர்வமும் இல்லை . ஒரு மணி நேரத்தில் ஆயிரம் வார்த்தைகள் என்றாலும் அசராமல் குழந்தைகள் தொந்தரவை பொறுத்துக் கொண்டு மனதில் ஓடும் வேகமான யோசனைகளை டைப்படிக்க மட்டும் தான் தெரியும் . அதன்படி என் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே சீனிவாசனுக்கு அளித்த வாக்குறுதியின்படி என் முதல் மின் நூலை தயாரித்துக் கொடுத்தேன் . “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” டிசம்பர் 19 2013 அன்று வெளியிடப்பட்டது. ஒரு காரியம் தொடங்கி முடியும் வரைக்கும் அது என்னைப் பொறுத்தவரையிலும் முதல் பிரசவ சமாச்சாரம் தான் . ஒவ்வொரு காரியத்தையும் முழு அர்ப்பணிப்புடன் தொடங்குவேன் . ஒவ்வொரு நாளும் புதிய நாளாகத் கருதுவேன் . அதையே தொடர்வேன் . சீனிவாசன் என் விருப்பத்தை சரியாக நிறைவேற்றினார் . என் முதல் மின் நூலுக்கு நான் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்து . வலைபதிவு மூலம் எனக்கு நெருக்கமான தொடர்பில் இருந்த பலருக்கும் மின் நூல் தளத்தை தெரியப்படுத்துவதில் என்னால் முடிந்த அளவுக்கு செயல்படுத்தி காண்பித்தேன் . நான் சீனிவாசனிடம் கொடுத்த வாக்குறுதியின் படி என் தேவியர் இல்லம் வலைபதிவில் வெளியான கட்டுரைகளை தொகுத்து அடுத்தடுத்து நான்கு மின் நூல்களை அளித்தேன் . எல்லா நூல்களுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைத்து . இது போதும் என்று நிறுத்தி விட்டேன் . ஆனால் தொடர்ந்து மின் நூல் தளத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஒவ்வொரு மின் நூல்களையும் ஒரு வாசகனாக கவனித்துக் கொண்டே வந்தேன் . வெகுஜன எழுத்தாளர்கள் என்கிற ரீதியில் மின் நூல்தளத்திற்கு ஆதரவு தருகின்றோம் என்கிற வகையில் உள்ளே வந்தவர்களின் உண்மையான முகத்தையும் கவனித்துக் கொண்டே தான் வந்தேன் . தளம் தொடங்கி ஒரு வருடம் முழுமையாக முடிந்து அந்த வெற்றியைக் கொண்டாடியவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்ததோடு சமீபத்தில் வெளியான இதில் பங்கெடுத்த இளையர் குழுவினர் பட்டியலைப் பார்த்த போது எனக்கு ஆச்சரியம் அதிகமானது . இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கணினி சார்ந்த துறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் . மென்பொருள் துறையில் வேலை நெருக்கடி இருந்த போதிலும் அடிப்படையில் ஒருவித சுகவாசிகளாக மாறிவிடும் பலரையும் பார்த்த காரணத்தினால் இந்த தள ஆக்கத்திற்காக உழைத்த அத்தனை பேர்களின் முழு விபரத்தையும் படித்து முடித்த போது ஆச்சரியமாக இருந்தது . இத்தனை பேர்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றார்களா ? என்று எண்ணம் என்னுள் உருவானது . இவர்களின் கடந்த ஒரு வருட உழைப்பிற்கு நம்மால் முடிந்த ஒரு உதவியைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது . சீனிவாசனிடம் பேசினேன் . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கும் பல ஆயிரம் தமிழர்களைப் போல இதில் பட்டியலிட்டுள்ள ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் ஒத்துழைப்போடு தங்கள் நெருக்கடியான பணிச்சூழலுக்கிடையே தங்களால் முடிந்த பணியைச் செய்து உள்ளார்கள் . இதில் உள்ள அத்தனை பேர்களுக்கும் குடும்ப கடமைகள் உள்ளது . பொருளாதார சவால்கள் உள்ளது . கடுமையான பணிச்சூழலில் தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் . ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் . தாங்கள் வாழும் போது ஏதாவது ஒன்றை தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஒழுங்காக செய்து கொடுத்து விட்டு நகர்ந்து விட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர் . அவரவருக்கு தெரிந்த வகையில் ஏதோவொரு வகையில் தங்கள் சமூகப் பணியை சிறப்பாகவே செய்து உள்ளனர் . ஒருவர் உருவாக்கப்பட்ட படைப்பு என்பது காகித வடிவில் இருந்தால் கூட காலம் மறந்து விட வாய்ப்புள்ளது . ஆனால் இணையம் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்தாலும் யாரோ ஒருவரின் படைப்பு மற்றொருவர் பார்வையில் படத்தான் போகின்றது . தமிழ் மொழி அழிந்து விடப் போகின்றது போன்ற கூக்குரல்களைத் தாண்டியும் வணிக ரீதியான சாத்தியக் கூறுகள் இந்த மொழியை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றது . இந்தக் குழுவினர் உழைப்பில் வெளி வந்துள்ள அத்தனை மின் நூல்களும் இந்தத் தளம் வாயிலாக யாரோ ஒருவர் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகின்றது . இன்னும் நாலைந்து தலைமுறைகள் கழித்து ஒரு இளைஞர் ஒரு மின் நூல் புத்தகத்தை தரவிறக்கம் செய்து வாசிக்கும் போது இந்தக் குழுவில் உள்ளவர்களின் முகமோ முகவரியோ தெரியாத போதும் கூட வாசித்த பின்பு அவர்கள் அடைந்த ஆத்மதிருப்தி இவர்களின் வாரிசுகளுக்கு ஆசிர்வாதமாக வந்து சேரப் போகின்றது என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன் . இந்த மின்நூல் தளத்தை உருவாக்கியவர் , உருவாக்க காரணமாக இருந்தவர் , ஆக்கப் பூர்வமான செயல்பாட்டின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் , குழு உருவாக காரணமாக இருந்தவர் , குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தவர் , தள மேம்பாட்டிற்காக தொடர்ந்து தங்கள் உழைப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் என்று அத்தனை உள்ளங்களும் எனது ஐந்தாவது மின் நூலான பயத்தோடு வாழ பழகிக் கொள் என்ற இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன் . என் மின் நூலை வாசிக்க வந்த உங்களுக்கு இளையர் பட்டாளத்தை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் அடைகின்றேன் . நன்றி . [] [] http://freetamilebooks.com/ முதல் ஆண்டில் மகத்தான சாதனை செய்துள்ள இளையர் கூட்டம் . 1. பிரியா இவர் IIT Mumbai ல் பணிபுரிகிறார் . priya பங்களிப்பு– மின்னூலாக்கம் மின்னஞ்சல் – priyacst@gmail.com 2. இராஜேஸ்வரி raji ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர் . முன்னாள் கல்லூரி ஆசிரியர் . பங்களிப்பு– மின்னூலாக்கம் மின்னஞ்சல் – sraji.me@gmail.com 3. து . நித்யா சென்னை Cognizant நிறுவனத்தில் பணிபுரியும் கணிணி வல்லுனர் . nithya பங்களிப்பு – மின்னூலாக்கம் , தமிழில் கணிணி நூல் எழுதுதல் மின்னஞ்சல் – nithyadurai87@gmail.com 4. சிவமுருகன் பெருமாள் sivamurugan அமெரிக்க வாழ் கணிணி நிபுணர் பங் களிப்பு – மின்னூலாக்கம் மின்னஞ்சல் – sivamurugan.perumal@gmail.com 5. கிஷோர் சிங்கப்பூர் வாழ் iOS நிபணர் பங்களிப்பு – FreeTamilEbooks க்கு iOS மென்பொருள் உருவாக்கம் மின்னஞ்சல் – ukisho@gmail.com ஜெயேந்திரன் சுப்பிரமணியம் Jayendran சொந்த ஊர் ஈரோடு மாவட்டதில் உள்ள வெள்ளோட்டாம்பரப்பு . சோனா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் மென்பொருள் சேவை நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூனேயில் பணியாற்றிவருகிறார் . பொழுதுபோக்கு திரைப்படங்கள் பார்ப்பது , பாடல்கள் கேட்பது , தொழில்நுட்பம் பற்றி இணையத்தில் உலாவுதல் , புத்தகங்கள் ( ஆங்கிலம் மற்றும் தமிழ் புதினங்கள் ) படிப்பது . தற்பொழுது freetamilebooks.com இல் பங்களிக்கிறார் . பங்களிப்பு – மின ்னூலாக்கம் மின்னஞ்சல் – vsr.jayendran@gmail.com ப்ரியமுடன் வசந்த் vasanth அரபு நாட்டில் வசிக்கும் வரை கலைஞர் பங்களிப்பு– அட்டைப்படம் உருவாக்கம் மின்னஞ்சல் – vasanth1717@gmail.com ஜெகதீஸ்வரன் ஜெகதீஸ்வரன் , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் பிறந்தவர் . தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார் . இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் கதை , கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் . விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எம் . ஜி . ஆரின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை , பேட்வுமன் , பேட்கேர்ள் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர் . சோழர் , பொன்னியின் செல்வன் , பேட்மேன் என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர் , விகடன் குழும இதழ்களின் அட்டைப் படங்களையும் , பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார் . https://ta.wikipedia.org/s/2c3w பங்களிப்பு– அட்டைப்படம் உருவாக்கம் மின்னஞ்சல் – sagotharan.jagadeeswaran@gmail.com லெனின் குருசாமி lenin காரைக்குடியில் வாழும் வரைகலைஞர் . M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார் . பங்களிப்பு– அட்டைப்படம் உருவாக்கம் மின்னஞ்சல் – guruleninn@gmail.com மு . சிவலிங்கம் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப எழுத்தாளர் . இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம் , தமிழ் இலக்கியம் , தொழிலாளர் சட்டம் , மனிதவள மேம்பாடு மேலாண்மை , கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் . இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார் . பல ஆண்டுகளாக கணிணி துறை நூல்களை தமிழில் எழுதி , பலரும் கணிணி துறையில் நுழைய ஆசிரியராக இருப்பவர் . https://ta.wikipedia.org/s/2k9o பங்களிப்பு– பல்வேறு எழுத்துருக்களில் வரும் மின்னூல்களை ஒருங்குறியாக்கம் செய்தல் மின்னஞ்சல் – musivalingam@gmail.com 11. மனோஜ் குமார் manoj கோவையில் உள்ள வரை கலைஞர் பங்களிப்பு– அட்டைப்படம் உருவாக்கம் மின்னஞ்சல் – socrates1857@gmail.com 12. கலீல் ஜாகீர் விழுப்புரத்தைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் . ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்குபவர் khaleel பங்களிப்பு– ஆன்டிராய்டு செயலி உருவாக்கம் மின்னஞ்சல் – jskcse4@gmail.com 13. அ . இரவிசங்கர ் புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர் . ravi பங்களிப்பு – freetamilebooks.com வலைத்தள மேலாண்மை , திட்ட ஒருங்கிணைப்பு , பரப்புரை . மின்னஞ்சல் – ravidreams@gmail.com 14. த . சீனிவாசன் சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் . shrini பங்களிப்பு – மின்னூலாக்கம் , மின்னூல் வெளியீடு , பரப்புரை மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com [] [] நன்றி பயத்தோடு வாழ பழகிக் கொள் அட்டைப்படம் உருவாக்கியவர் [] திரு . மனோஜ் குமார் . Manoj penworks மின் நூலில் பயன்படுத்தியுள்ள ( சில ) படங்கள் [] https://www.facebook.com/oochappan இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் 1. ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர் . http://freetamilebooks.com/ebooks/ezham-vandhargal-vendrargal/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26 , 924 வெளியிட்ட தினம் 19.12.2013 2. வெள்ளை அடிமைகள் இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர் http://freetamilebooks.com/ebooks/white-slaves/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458 வெளியிட்ட தினம் 29.01.2014 3. தமிழர் தேசம் தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி , நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர் . http://freetamilebooks.com/ebooks/tamilar-desam/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7631 வெளியிட்ட தினம் 28.02.2014 4. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர் . மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன் . முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன் . http://freetamilebooks.com/ebooks/konjam-soru-konjam-varalaru/ தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928 வெயிட்ட தினம் 27.03.2014 [] [] [pressbooks.com] 1 இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புதுவயல் என்ற ஊர் . எனது பிறப்பும் கல்லூரி படிப்பு வரைக்கும் வளர்ந்ததும் அங்கே தான் . புதுவயலைச் சுற்றிலும் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு புதுவயல் தான் தலைநகரம் . ஊரின் எல்லைப்புறத்தில் எங்கள் வீடு உள்ளது . வீட்டுக்கருகே இருந்த சரஸ்வதி வித்தியாசாலை பள்ளிக்கூடத்தில் தான் எட்டாவது வரைக்கும் படித்தேன் . மற்றொரு பள்ளிக்கூடமான இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன் . கல்லூரிப்படிப்பு காரைக்குடி அழகப்பச் செட்டியார் கலைக்கல்லூரியில் பயின்றேன் . [] நான்காம் வகுப்பு வரைக்கும் எப்படி படித்தேன் ? எப்படி வளர்ந்தேன் என்று இன்று என்னால் யோசிக்க முடியவில்லை . ஆனால் ஐந்தாம் வகுப்பு முதல் நடந்த சில சம்பவங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது . முதல் நான்கு வகுப்புகளும் தரையிலேயே அமர வைத்துவிட்டு ஐந்தாம் வகுப்பு நுழைந்தவர்களைத் திடீர் என்று பெஞ்சில் அமர வைத்தால் எப்படி இருக்கும் ? பைக்கட்டுகளை ( பாடப்புத்தகங்கள் ) வைத்துக் கொள்ள அறை போன்ற அமைப்பு எங்கள் மேஜையில் இருந்தது . “இது தான் ஐந்தாம் வகுப்பு. இனி இங்கே தான் நீங்கள் வர வேண்டும்” என்று வகுப்பாசிரியர் சொன்னதும் நான் முதல் ஆளாக ஓடி வந்து முதல் வரிசையில் உள்ள முதல் பெஞ்ச் இடம் பிடித்ததோடு என்னுடன் படித்த மற்ற இருவரான கோவிந்த ராஜனுக்கும், அனந்த ராமனுக்கும் இடம் பிடித்த மகிழ்ச்சியை இன்றும் கூட என்னால் உணர முடிகின்றது. நாங்கள் மூவரும் வித்தியாசமான கூட்டணி . முதல் மூன்று ரேங்க் எடுக்கும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம் . எங்கள் கூட்டணியை எந்தச் சக்தியால் பிரித்து விட முடியும் ? எங்கள் வீட்டில் இருந்து அடுத்தச் சந்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது . காலை ஒன்பது மணிக்கு பள்ளி தொடங்கும் போது வெளியே கட்டி வைத்துள்ள இரும்பு கம்பியைத் தட்டி ஓசை எழுப்புவார்கள் . அந்த மணி சப்தம் எங்கள் வீட்டுக்கு கேட்கும் . மணி அடித்ததும் தான் நாங்கள் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் . நாங்கள் என்றால் நான் , தம்பி , அக்காக்கள் என அத்தனை பேர்களும் ஒன்றாக கிளம்புவோம் . [] என்னையும் சேர்த்து என்னுடன் கூடப்பிறந்தவர்கள் 13 பேர்கள் . ஒரு சகோதரி சிறுவயதிலேயே இறந்து விட்டார் . மீதி 12 பேர்கள் . பெரிய குடும்பம் . வசதிகளுக்கு பஞ்சமில்லை . நடுத்தரவர்க்கத்தின் அடுத்த கட்ட மேம்பட்ட நிலை . வயல் , வீடு , சொந்தத் தொழில் என்று பணப்புழக்கத்திற்கு பஞ்சமில்லை . அதே போல தாத்தா மற்றும் பாட்டியின் உத்தரவின்படி வருடம் தோறும் குழந்தை பெறுவதை அப்பா மட்டுமல்ல எங்களுடன் கூட்டுக்குடித்தனமாய் இருந்த சித்தப்பாக்களும் தங்கள் கடமையாக வைத்திருந்தார்கள் . இது தவிர வீட்டில் பணிபுரியும் வேலை ஆட்களையும் சேர்த்தால் ஒவ்வொரு பொழுக்கும் நாற்பது பேருக்கும் சமைக்கும் அளவுக்கு வீடே எப்போதும் கல்யாண வீடு போல இருக்கும் . தினந்தோறும் பள்ளியின் முன்னால் உள்ள மகிழம்பூ மரத்தடித்தடியில் புளியங்கொட்டை வைத்து ஆடும் ஆட்டம் களைகட்டி விடும் . என்றைக்கோ ஒரு நாள் அம்மாவிற்கு தெரியாமல் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்னால் சென்று பை நிறைய “சம்பாரித்து ” வந்து விடுவதுண்டு . நான் போட்டுள்ள கிழிந்த டவுசரின் உள்ளே இருக்கும் பையில் விளையாடி ஜெயித்த புளியங்கொட்டை நிரம்பி வழியும் . பிரசவ வயிறு போல் தனியாகத் தெரியும் . என் உடன் படித்த சகோதரி உதவிக்கு வருவார் . வீட்டுக்கு வந்து அப்பாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருக்க அவருக்கு ” லஞ்சம்” கைமாறி எனது பெருத்த டவுசர் பை சிறிதாக மாறிவிடும் . [] எங்கள் பள்ளிக்கு சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து தான் பெரும்பான்மையான மாணவர்கள் வருவார்கள் . அவர்கள் அத்தனை பேர்களும் ஏதோ ஒரு வகையில் கதாநாயகனாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள் . எல்லாம் தெரிந்தது போல் பேசும் அவர்களின் பேச்சுக்களும் , அவர்கள் நேற்று பார்த்த திரைப்படத்தின் சாகசமும் குறித்து என்னால் கேட்கத் தான் முடியும் . திரை அரங்கத்திற்குச் சென்று படம் பார்ப்பது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . அப்பாவின் கண்டிப்பு அப்படிப்பட்டது . எங்கள் வீட்டில் இருந்து நான்கு சந்துகள் தாண்டி டூரிங் டாக்சி இருந்தது . அதன் பெயர் ஜெய செல்வாம்பிகை . கருவேல மரங்கள் நிறைந்த இடத்தை அழித்து டெண்ட் கொட்டாய் போன்ற வடிவத்தை உருவாக்கியிருந்தார்கள் . படம் தொடங்குவதற்கு முன் , படம் ஆரம்பிக்கப் போகின்றது என்பதற்கு அறிகுறியாக சில தனிப்பட்ட பாடல்கள் வைத்திருப்பார்கள் . மாலை வேலையில் ஒலிக்கும் அந்த மாதிரியான பாடல்களை இன்று கேட்கும் போது ஊர் ஞாபகம் எனக்கு வந்து விடும் . சீர்காழி கோவிந்த ராஜன் , டிஎம்ஸ் ன் பக்தி பாடல்களை மட்டும் தான் நான் மட்டுமல்ல என் சகோதர , சகோதரிகளும் கேட்க முடியும் . படம் பார்ப்பது என்பது எங்கள் அப்பாவைப் பொறுத்த வரையிலும் தடை செய்யப்பட்ட ஒன்று . ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்கும் முன் வீட்டில் உள்ள அத்தனை பேர்களையும் பள்ளிச்சீருடைக்கு துணி எடுப்பதற்காக ஊரில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் செல்வார் . காவல்துறை அணிவகுப்பு போலவே நடக்கும் . மொத்த கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு ஊரில் கடைத் தெருவின் வழியே பிரேமா ஸ்டோர் என்ற கடைக்கு அழைத்துச் செல்வார் . அங்கே யாரும் எதுவும் பேசக் கூடாது . அமைதியாய் வரிசையாய் நிற்க வேண்டும் . ஒவ்வொருவரின் அளவு பார்த்து துணிக்கடையில் பணிபுரிபவர் டர் டர் என்று நீல நிற கனமான துணியை கிழித்து எடுத்து ஒவ்வொன்றையும் அவரவர் பெயர் சொல்லி தனியாக எடுத்து வைப்பார் . [] இந்த நிறம் தான் பள்ளியின் உடை . எடுக்கப்படும் கனமான பள்ளிச் சீருடை துணியென்பது சாக்கு போல இருக்கும் . வீட்டில் இருந்து நாங்கள் செல்வதற்கு முன்பே தம்பி அங்கே அனுப்பி வைக்கப்படுவான் . அந்தத் துணிக்கடையில் தகவல் சொல்லி விடுவான் . பிறகென்ன அந்தச் சின்னப் பிரேமா ஸ்டோர் எங்கள் வீட்டு உறுப்பினர்களின் மொத்த கொள்ளவும் தாங்க வேண்டுமே ? பிரேமா ஸ்டோர் கடையின் முன்னால் உள்ள தையல்காரரிடம் அடுத்து அளவு கொடுக்க வரிசையாக நிற்க வேண்டும் . “ செல்வி” தையல்காரரிடம் அளவு காட்ட அட்டென்ஷன் பொஸிஷனில் ஒவ்வொருத்தராக வந்து நிற்க வேண்டும் . அப்பா ஒவ்வொருவரையும் வரிசையாக அழைப்பார் . அவர் அழைத்த நபர் மட்டும் தையல்காரரிடம் போய் நின்று அளவு கொடுக்க வேண்டும் . சகோதரிகளுக்கு பாவாடை என்றாலும் அதே தான் . எங்களுக்கு டவுசர் என்றாலும் அதே தான் . துவைக்கும் போது தான் அம்மா கதறுவார் ” ஏண்டா தூங்கும் போது மூத்திரம் வந்தால் எந்திரிச்சு தொலைக்க வேண்டியது தானே ? பொணம் மாதிரி கணக்குது” என்பார் . என்ன செய்வது பயத்திற்குத் தெரியுமா ? மூத்திரம் என்பதும் மலம் என்பதும் . எதைக் கேட்டாலும் குற்றம் . எங்கு நின்றாலும் குற்றம் என்ற போது வளர்ந்து வாலிபனாக வந்த போதும் கூட அப்பா அனைவரையும் பயத்தில் தான் வைத்திருந்தார் . எங்களுக்கு பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டும் தான் தலையாயக் கடமை . சகோதரிகள் படிப்பில் மணியாய் இருந்தார்கள் . இது தவிர படிக்காத எங்களை அப்பாவிடம் காட்டிக் கொடுப்பதிலும் கில்லாடியாய் இருந்தார்கள் . அப்பா இரவு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் அவர் முன்னால் போய் நிற்க வேண்டும் . ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வருவார் . வருகை பதிவேடு முடிக்க ட்ரம்ஸ் சிவமணி கச்சேரி நடக்கும் . அப்பா அடிக்க ஓங்கும் போது அடுத்த அறையில் உள்ள நெல் கொட்டி வைக்க பயன்படுத்தும் குதிருக்குள் போய் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிந்து கொள்வோம் . ஆனால் அப்பா துழாவிக் கொண்டு வந்து விடுவார் . அவர் காலால் துலாவி அதற்கு மேல் கையில் வைத்துள்ள குச்சியால் இனம் கண்டு பதுங்கு குழிக்குள் இருக்கும் எங்களை வெளியே இழுத்து விடுவார் . தீர்ப்பு உடனே வாசிக்கப்படும் . எங்களின் எந்த அழுகையும் வெளியே கேட்காது . எதற்கும் எவர் ஆதரவு கரம் கிடைக்காது . காரணம் அப்பாவின் முன்கோபம் அப்படிப்பட்டது . எங்களின் படிப்பு முக்கியம் என்றால் அதைவிட முக்கியம் தினசரி எங்களுக்கு அப்பாவால் வழங்கப்படும் வேலைகள் . அதனை முடித்தே ஆக வேண்டும் . எங்களுக்கு பள்ளி ஆண்டு விடுமுறை என்றால் வீட்டு வேலைகள் பார்க்கப்பட வேண்டும் என்று அர்த்தம் . எங்கள் கடைக்குச் செல்ல வேண்டும் ஒட்டடை கம்புகளுடன் சென்று கடையின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் சுத்தப்படுத்த வேண்டும் . கடைக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உள்ள தேவையற்ற செடிகளை வெட்டி சுத்தப்படுத்த வேண்டும் . எங்கள் வீட்டில் ஒரு மிதிவண்டி உண்டு . ஆனால் நாங்கள் எடுத்து அதனை ஓட்ட அனுமதி கிடைக்காது . வீட்டுக்கும் கடைக்கும் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் நடந்தே தான் செல்ல வேண்டும் . எங்களுக்கு கிடைக்காத சைக்கிளை சபித்துக் கொண்டே நடந்து வருவோம் . எங்கள் வயல் மணியாரம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தது . எங்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் நடந்து தான் செல்ல வேண்டும் . வயலுக்குச் சென்று நாற்று நட்டவர்களின் கணக்கு வாங்கி வரவேண்டும் . அப்பா வாங்கியுள்ள கடன்கார்களுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய வட்டிப் பணத்தைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும் . அம்மா தினந்தோறும் சமையலறையில் அல்லாடிக்கொண்டுப்பார் . விறகடுப்பு தான் . திருவண்ணாமலை தீபம் போல அடுப்பு எறிந்து கொண்டே இருக்கும் . அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளின் அழுகுரல்களை அரவணைத்து அழுகையை நிறுத்துவது அக்காக்கள் மட்டுமே . சகோதரிகளின் சின்னச்சின்ன ஆசைகள் சிறகடித்து பறக்குமே தவிர அது தீர்க்கப்படாத ஒன்றாகவே இருக்கும் . ஓவ்வொரு வாரமும் சந்தைகக்கு வருகின்ற கிளிப் , டேப் , பவுடர் டப்பா போன்ற சமாச்சாரங்கள் மாட்டி கையில் தூக்கி வருகின்ற அந்த வயதான பெரியவர் தான் அவர்களின் கதாநாயகன் . சகோதரிகளுக்கு வீட்டு வாசல்படியைத் தாண்ட அனுமதியில்லை . ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிவிட்டு திரும்பியதும் எங்களுக்கு வழங்கப்படும் காபிக்கு நாங்கள் வைத்த பெயர் வங்காள விரிகுடா . அரை லிட்டர் பாலில் மூன்று லிட்டர் தண்ணீர் . சற்று தூக்கலான கருப்பட்டி . இன்னும் கொஞ்சம் ஊற்றுமா என்று கேட்கும் தம்பி தான் அன்றைய வில்லன் . என்னுடன் படித்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் ஒவ்வொரு விதமான பட்டப்பெயர்கள் . ஒருவன் பெயர் பலாப்பழம் . காரணம் அவன் அப்பா சந்தையில் பலாப்பழக்கடை வைத்திருந்தார் . பலாப்பழக்கடை ரவி கையில் வைத்துள்ள சின்னக்கத்தியை காட்டியே எங்களை மிரட்டியே காரியம் சாதிப்பான் . “என் ஜாதிக்காரன் என்ன செய்வான் தெரியுமில்ல?” என்ற பன்னீர் செல்வம் எழுதாத வீட்டுப்பாடத்தை என்னை வைத்து எழுதி வாங்கி விடுவான். இலங்கையில் இருந்து அகதியாய் உள்ளே வந்த நண்பனின் பெயர் சிதம்பரம். அவன் பேசும் அரசியல் பேச்சுகளும் கேட்பதற்கு சுவராசியமாய் இருக்கும். அவர்கள் சொல்லும் திரைப்படச்சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும் போது என் பையில் இருக்கும் பத்துப்பைசா அவன் கைகளுக்கு போய்விடும் . ஆனால் இத்தனையும் மீறி எங்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரு கனவுக் கன்னி பள்ளியில் இருந்தார் . எங்கள் மேஜைக்கு அருகே அன்புக்கரசி பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் . எனக்கு புரிந்தால் தானே ? எனக்கு அவளின் பார்வை புரிந்த போது என்னுடைய இரண்டாவது ரேங்க் அவளிடம் சென்றுருந்தது . என்னுடன் கூடப் பிறந்தவர்கள் வருடந்தோறும் அடுத்தடுத்து பள்ளிக்கு வந்த காரணத்தினால் எப்போதும் என் வகுப்பாசிரியர் என்னிடம் நக்கலாக கேட்ட கேள்வி இன்றும் என் நினைவில் உள்ளது . ”வருடந்தோறும் ஒவ்வொரு ஆளா வர்றீங்க? இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? . ( ஜுலை 14 2009) 2 அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்? [] “அப்பாவாக இருந்து பார்? அப்போது உன் அப்பாவின் உண்மையான நிறைகுறைகள் உனக்குப் புரியவாய்ப்பு கிடைக்கும்” என்று என் நண்பன் அறிவுரை சொல்வான். அவன் சொல்லும் போது அதன் வீர்யம் புரியவில்லை. இன்று மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் போது தான் என் அப்பா பெற்ற வலியும் வேதனைகளையும் என்னால் உணர முடிகின்றது. இன்று கூட்டுக் குடித்தன வாழ்க்கை என்பது சிதைந்து போய் விட்டது . ஆனால் நான் கல்லூரி வரைக்கும் முதல் பத்தொன்பது வருடங்கள் கூட்டுக் குடித்தன வாழ்க்கையில் தான் வாழ்ந்தேன் . வளர்ந்தேன் . வீட்டை விட்டு வெளியே வந்து சமூகத்தைப் பார்த்த போது உலகத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் புதிய பிறவி கண்ட குழந்தை போல் மலங்க மலங்க விழிக்கத்தான் முடிந்தது . கல்லூரி படிப்பு , தட்டெழுத்து , சுருக்கெழுத்து , இன்னும் பலவற்றை கற்று வைத்து இருந்த வித்தைகள் ஏதும் என்னை கை தூக்கி விடவில்லை . முக்கியமாக மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களில் சராசரிக்கும் கீழே இருந்த காரணத்தால் ஒவ்வொரு இடத்திலும் அதிக அடி வாங்க வேண்டியதாக இருந்தது . மனிதர்களின் தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியவில்லை . அவர்கள் செயல்படுத்தும் சமார்த்திய செயல்பாடுகளை கற்றுக் கொள்ள முடியவில்லை . வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறினேன் . வெளிப்படையாக பேசும் பழக்கமும் , இயல்பாக இருந்த முன் கோபமும் ஒவ்வொரு சமயத்திலும் என்னை கீழே இழுத்து விட்டுக்கொண்டேயிருந்தது . மாற்றவும் முடியவில்லை . என்னை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலையில் வாழவும் அதிர்ஷடம் நெருங்கி வரவே இல்லை . அப்போது தொடங்கியது தான் என் அப்பாவின் மேலே உள்ளே வெறுப்பு ? அப்பா ? இந்தச் சொல்லின் அர்த்தம் , மகத்துவம் போன்றவற்றை முழுமையாக உணரத் தொடங்கியது முப்பத்தி மூன்று வயதில் தான் . அப்போது தான் எங்கள் முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள் . அவர்கள் வளரும் போது என் வாழ்க்கை மாறியது . வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கியது . காரணம் , ஊரில் வாழ்ந்த முதல் பத்தொன்பது வருட வாழ்க்கையில் வீட்டில் வாய் திறக்கும் இரண்டே தருணங்கள் , ஒன்று பாடங்கள் படிக்கும் போது , மற்றொன்று சாப்பிடும் போது . வீட்டில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் என்ன சண்டை ? எப்போது ? எதனால் வருகின்றது ? என்பதைத் தடுக்க அப்பா போட்ட சட்டத்தினால் வீட்டுக்குள் அமைதியாகவே வெளியுலகம் தெரியாமலேயே வளர்க்கப்பட்டோம் . சின்னச்சின்ன பறிமாறல்கள் , உரசல்கள் இருந்தாலும் எட்டப்ப சகோதரிகள் , இரவு கடையை மூடிவிட்டு அப்பா வந்ததும் மறக்காமல் சொல்லிவிட்டுத்தான் படுக்கவே செல்வார்கள் . வாங்கிய குட்டுகளும் , வரும் கண்ணீர்க்கும் அங்கு ஆறுதல் தேட முடியாது . காரணம் இரவு பத்து மணி என்பது வீட்டில் இரண்டாவது ஜாமம் . அம்மா என்பவள் வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம் . அனைத்து வீட்டு வேலைகளையும் மறுக்காமல் அலுக்காமல் செய்து முடிக்க வேண்டிய வேலைக்காரி , சின்னம்மாக்களின் அவவ்போது தந்திரங்களைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் நடு இரவில் திடும் திடும் என்று அப்பா கொடுக்கும் அடி , உதைகளை வாங்கிக்கொண்டு அப்போது பிறந்து இருக்கும் தம்பியோ தங்கையையோ அழவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் இருந்தார் . மனித உணர்வுகள் என்பதை என்னவென்றே அறியாத ஜீவன் . அப்பா தூங்க வந்த பிறகு குண்டூசி சத்தம் கூட வீட்டுக்குள் கேட்கக்கூடாது . அவர் குறட்டை மட்டும் எதிரொலி போல வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும் . எத்தனை மணிக்கு அம்மா தூங்குவார் ? என்று தெரியாது . ஆனால் அவர் மாட்டுத் தொழுவத்தில் பால் கறந்து கொண்டுருக்கும் போது காலை ஐந்து மணிக்குள் இருக்கும் . கிராமம் போல இருந்த எங்கள் ஊர் நான் கல்லூரி படிப்பு படித்து முடிப்பதற்குள் சிறிய நகரமாக மாறியது . சில அரிசி ஆலைகள் இருந்த ஊரில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் உருவானது . ஆட்களின் முகமும் அவரவர்களின் வசதிகளும் ஊதிப் பெருக்கத் தொடங்கியது . அப்பாவால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை . காலப் போக்கில் உருவான கருத்து வேறுபாடுகள் சித்தப்பாக்களின் குடும்பம் தனியாக பிரிந்து சென்றது . சொத்துக்கள் பிரிக்கப்பட்டது . நாங்கள் அத்தனை பேர்களும் கல்லூரி படிப்பு முடித்ததும் வெவ்வேறு திசைக்கு பயணமானோம் . எங்கள் குடும்பத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எந்த சிபாரிசும் இன்று அவரவர் திறமையில் அரசுப் பணியில் சேர்ந்தனர் . வெவ்வேறு துறைகள் . நான் மட்டும் விதிவிலக்காக மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் திருப்பூர் வந்து சேர்ந்தேன் . அதன் பிறகே என் உண்மையான வாழ்க்கை தொடங்கியது . இந்தச் சமூகத்தை , மனிதர்களை முதன் முறையாக உற்று நோக்க ஆரம்பித்தேன் . அப்பா என்னில் உருவாக்கி வைத்துருந்த பிம்பங்களை , வார்ப்புகளை உடைக்கும் பணியும் தொடங்கியது . திருப்பூர் வந்து பத்தாண்டுகள் கழிந்த பிறகு என் திருமணம் நிகழ்ந்தது . ( ஜுலை 3 2009, வலைபதிவில் எழுதப்பட்ட முதல் பதிவு ) 3 ஆசை மரம் [] ” இவனை நம்மால் அடக்கமுடியாது ” என்று குடும்பத்தினர் ஓதுங்கியிருந்த போது தான் அக்கா மூலமாக மாமனார் என்ற தெய்வரூபம் என்னைத் தேடி நான் தங்கியிருந்த திருப்பூர் வீட்டுக்கு வந்தார் . என்னுடைய கொள்கைகள் , நோக்கங்கள் அத்தனையும் புரிந்து கொண்டு மற்றொரு அப்பாவாக மாறினார் . என் திருமணமும் திரைப்படக் காட்சிகளைப் போலவே நடந்து முடிந்தது . முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது . ஏன் எதற்கு அழுகை ? எப்போது இவர்களுக்குப் பசிக்கும் ? ஒருவருக்குக் கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்குக் கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது . இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்தச் சின்ன உருவங்கள் என்னுடைய அத்தனை மாயப் பிம்பங்களையும் கலைத்துப் போட்டது . சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது . காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர் . முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர் . மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்துக் கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது . அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டுருந்தனர் . தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்கப் பேரூந்தில் பயணித்துக் கண் எரிச்சலோடு அந்த அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன் . அரைக் குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி ……. “வாடா…….. எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?” காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம் . அப்பா உடனே ஒத்து ஊதுவார் . உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள் . ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள் . காரணம் மறுபடியும் பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும் . அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன் . இன்று இருக்க எண்ணம் இருக்கிறது . இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது . காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம் . ஊரின் எல்லைக்குள் நுழையும் போதே அந்தப் பாலம் தென்படும் . பாலத்தைத் தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன் . பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்தப் பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிந்து கொள்ள முடிகின்றது . . அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர் . சுற்றிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட கிராமத்திற்குக் கடைத்தெரு உள்ள ஒரு ஊர் . அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது . உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன் ,. ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு . சட்டைக்குள் கைவிட்டு எடுக்கக் காத்திருககும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும் . ஓடித்திரிந்த தெருக்கள் , உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம் , நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க , பழகிய எவரையும் இன்று காணவில்லை . நடந்து சென்று கொண்டிருக்கின்றேன் . கடைத் தெருவில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் . எதிரே குளம் . சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள் . ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு . மீன்கடை , இறைச்சிக்கடை . தொட்டு தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை , பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம் . ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது . இதனையும் தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில் . சிறிய கோவிலைத்தாண்டி குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன் . கோவில் . பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளில் இரைச்சல் . இருட்டுக்குள் நடந்து வந்தால் சுத்தம் செய்யாத முடை நாற்றம் . உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம் . அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம் . புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன் . குழந்தைகளுக்குக் கிடைத்த சுதந்திரத்தில் ஓ …… வென்ற இரைச்சல் அந்தக் கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது . கூட்டம் இல்லாமல் , வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தைச் சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய்ப் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள் . மழை வரும் போல் இருக்கிறது . மண் வாசனை நாசியை நெருடுகிறது . கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்தப் பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன் . பக்கத்தில் உள்ள அத்தனை கிராமங்களும் குடிநீர் எடுக்கக் கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது . படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர் . பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று கஞ்சி ஊத்தாத மருகளை அண்டிக் கொண்டு அடங்கி வாழ்ந்து கொண்டுருப்ப்தை கண்ணீருடன் பேசினார் . குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குச் சமாளித்துக் கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன் . [] தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டு சிருங்காரமாய் நிற்கிறது . தடவிப் பார்த்துக் கொண்டுருக்கின்றேன் . டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும் , போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது . வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது . நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது . வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும் , வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையைத் தடவிப் பார்க்கின்றேன் . தொடர்ச்சியாகக் குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது . பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது . மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது . ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தைக் கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள் . மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஓட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய்த் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூடப் போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது . இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்காடுகள் குடியிருப்புக்கு அளந்து கொண்டு இருக்கின்றார்கள் . அருகே ரயில் நிலையம் . மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காகச் சில பேர்கள் காத்துக் கொண்டுருக்கிறார்கள் . பழகிய சில பெரியவர்களின் வாயில் இருந்து அளவான புன்னகை .. ஆனால் பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ் . எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம் . இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்த கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம் . மாதவன் , கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது . அவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிக்குள் நுழைய் எங்கள் தடமும் மாறிவிட்டது . ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாகக் கால்கள் வைத்து வேலி தாண்டிய வெள்ளாடு போல் வந்தால் அருகே உள்ள பூங்காவிற்குள் நுழையலாம் . பழைய தகரங்களைக் கோர்த்து உள்ள நடுநாயக நடைமேடைகளும் , எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு . குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தைத் தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன் . கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம் இருக்கின்றதா என்று ஆசையுடன் பார்த்தேன் . தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது . என் பெயர் மட்டும் மெலிதாகத் தெரிந்தது . அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருந்தார்கள் . . ( செப்டம்பர் 28 2010) 4 இனிய நினைவுகள் [] பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை . மரங்களும் அருகே தெரிந்த பொட்டல் காடுகளும் உள்ள இடங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு வேறொரு உலகத்தைப் பார்த்தது போல் இருந்துருக்கலாம் . வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளைப் படபடக்க வைத்தது . பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று கொண்டு எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது . பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்கக் குழந்தைகளைப் பிரித்து வண்டிக்குள் அடைத்து கிளம்பினேன் . நாங்கள் பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு . நடுநாயகமாகக் குளம் அருகே ஆலமரம் . எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை . ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்தச் சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு . பிள்ளையார் சிலைக்குப் பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறையப் பேர்கள் இங்கே இருப்பார்கள் . ஊரில் ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும் .. நடுவீதி , நடராஜபுரம் , கீழப் பெருமாள் கோவில் , மேலப்பெருமாள் கோவில் , யெமு வீதி இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கும் . ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம் . அடுத்தத் தெருவுக்குப் பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவு . மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்குத் தொடக்கமாக இருக்கும் . முழுவீட்டையும் சந்தின் வழியே நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும் . குழந்தைகள் அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள் . பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள் . அப்போது என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணு வீடு . என்னுடைய பள்ளித் தோழி . அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ ? என்று தோன்றக் கூடும் . எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு . ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போதே மாவு அரைக்கும் எந்திரம் போல அவள் மட்டும் கமுக்கமாகத் தின்று கொண்டுருப்பாள் . . வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாகப் பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார் . மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டியுடன் சத்துணவு பணியாளராக வாழ்க்கையைக் குழந்தைகளுக்காகக் கடத்திக் கொண்டுருக்கிறார் .. வள்ளிக்கண்ணுவுக்கு படிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார் . கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாகத் துப்பியது , அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்ட வாளத்தில் ஏறத் தொடங்கியது . வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் மற்றொரு குடும்பத்துடன் இருக்க , இங்கே காத்திருந்த வள்ளிக்கண்ணுவின் அம்மா கண்கலங்கிக் கொண்டே போய்ச் சேர்ந்துவிடப் பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது . ஜாதி , சமூகம் , இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம் என்ற வஸ்து . பங்களாளி சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டுருக்கிறது . சொத்தில் சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து நண்டு சிண்டுகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார் . கைநிறைய காசு இருந்தால் அவர் நம்மவர் . இல்லாவிட்டால் யார் அவர் ? இது தான் இன்றைய சமூக மொழி . அம்மா இல்லாத குறை போக்க அதிகச் செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கணணுக்கு வெகுளித்தனம் அதிகம் . ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போது “ டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா ?” என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும் ?. சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான் .. முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை . நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம் . கண்டணூர் , கோட்டையூர் , காரைக்குடி , தேவகோட்டை ,, ஆர் , எஸ் , மங்கலம் , திருவாடனை , பிள்ளையார்பட்டி ,, கல்லல் , திருப்பத்தூர் , கோனாபட்டு , கண்டரமாணிக்கம் கீழச்சீவல்பட்டி கீழப்பூங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர் , கோட்டையூர் என்று எண்ணிக்கைகளுக்குள் அடக்கி விடலாம் . அரசாங்க ஊழியர்களுக்குத் தண்டனைப்பகுதி என்று சொல்லப்பட்ட பிரிக்கப் படாத இராமநாதபுர மாவட்டத்தில் தான் பிறந்தேன் . பசும்பொன் என்று மாறி இன்று சிவகங்கை மாவட்டம் என்று வந்து நின்றுள்ளது . பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை . செட்டிநாடு எப்படி உருவானது ? சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்தச் சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது . காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர் . இன்று பொதுப் பெயராக மொத்தமாகச் செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை , சிவகங்கை , இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் . வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும் . வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உழுத்துப் போன சமாச்சாரங்கள் இங்குத் தேவையில்லை . மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும் . ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்று உண்டு . தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவான சாதிகள் கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாகச் சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டுருந்தது . மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்தச் செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும் . இதில் உள்ள பல கிளைநதிகளை முதன் முதலாகத் திருப்பூருக்குள் வந்த போது தான் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது . ஏறக்குறைய 60 நகரத்தார் கிராமங்கள் . 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலை பெற்று உருவான சமூக மக்கள் . ஒவ்வொரு விதமான பாரம்பரியம் . சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்தச் சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும் . அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மைத் திகைப்படைய வைக்கும் . பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம் , இது எந்த அளவிற்கு இருந்தது தெரியுமா ? ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று . அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது . உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்குப் பயன்படுத்திய நாடு இலங்கை . தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்குக் கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம் . இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றது . தேக்கு மர கதவுகளும் , பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது . 150 ஆண்டுகள் கடந்ததும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை . முட்டைச் சாற்றைக் குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய்க் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எதையோ தேடி எங்கேயோ வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் . வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் . வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் அவர் உருவாக்கிய கல்லூரிகள் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும் . சமூகக் காவல்ர்களை நினைத்துக் கொண்டுருந்த போது எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்குச் சண்முகம் வந்து கொண்டுருந்தான் . பள்ளித் தோழன் . பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன் . இப்போது பார்த்துக் கொண்டுருக்கும் வேலை கிராமத்து டாக்டர் . ( செப்டம்பர் 28 2010) 5 ஈக்கள் மொய்க்கும் உலகம் []   குடும்பத்தின் கூட்டுக் குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது . வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்துருந்தார்கள் . அந்தப் பெரிய கடைத் தெருவில் குறிப்பாகப் பேரூந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்குப் பல விதங்களில் உதவியாய் இருந்தது . . நாங்கள் சென்ற புதிய வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டெழுத்துப் பயிலகம் . இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை .. சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும் . அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வருகிற போகிற மக்களை அளவெடுப்பதோடு ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தினறு திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு . பேரூந்து நிலையம் . அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்துருக்கும் எங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் . பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது . பெயர் தான் பேரூந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடம் . ஒரே ஒரு தகர டப்பா கூரை . அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாகக் கொடுத்த இடம் . யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேரூந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும் ., இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறிப் பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாகத் திருப்பிக் கொண்டு தனியார் பேரூந்துகள் நகர்ந்துவிடும் . இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள் . கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையைக் கடத்திக் கொண்டுருப்பார்கள் . டவுன் பஸ் வரும் போதே ஓட்டிக் கொண்டு வரும் ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார் . அதற்குள் அங்குக் கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள் . உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற் முயற்சிக்க ஓரே களேபரமாக இருக்கும் . பேரூந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டுருப்பார்கள் . பார்க்க சுவராஸ்யமாக இருக்கும் , அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்தப் பேரூந்துக்களை விட்டால் வேறு வழியில்லை . ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை நடக்கும் . தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு வில்லுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள் . இந்தப் பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடம் . ஒரு ஓரமாக இருந்த மைதானத்தில் அவசரமாகக் கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று உருவாக்கியிருந்தார்கள் . [] அன்று தான் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களும் ஒன்றாக வந்து கூடுவார்கள் . அன்று மட்டும் இந்தப் பேரூந்தில் எள் போட்டால் எண்ணெய் போல் வழிந்து ஓடும் போலிருக்கும் . தொத்தித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு வயிறு பெருத்த கர்ப்பிணி போல் அந்த டவுன் பஸ் நகரும் போது பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த காலம் அது . நடத்துனரை விட்டு நகர்ந்த பேரூந்தில் கூரையில் அமர்ந்து இருந்த மக்கள் பின்னால் உள்ள ஏணிப்படி கம்பிகள் வழியாகக் கை கொடுத்து காப்பாற்றி அழைத்த சம்பவங்களும் உண்டு . [] எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டுருந்த சரஸ்வதி வித்யா சாலை படிப்பு முடிவுக்கு வந்து அந்தப் பள்ளியும் பெண்கள் உயர்நிலை பள்ளியாக மாறிப் போனது . எட்டாம் வகுப்பு முடிவுக்கு வந்த போது பள்ளி ஆண்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பேச்சைக் கேட்டதும் அவர் மேடை யில் பேசியது ஒன்றும் புரியாமல் இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார் ? என்று யோசித்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது . ஊரில் இருந்த இரண்டு பள்ளிகளுமே தனியாருக்குச் சொந்தமானது தான் . வீட்டில் எவருக்கும் படிப்புக்கென்று பெரிதான செலவுகள் ஏதும் செய்ததாக நினைவில்லை . பெரும்பாலும் பள்ளியில் படித்த அனைவருமே நடுத்தர வர்க்கம் என்பதோடு பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள் . கிராமத்து மாணவர்கள் சைக்கிளில் வர முடியாதவர்கள் டவுன் பஸ்ஸில் தான் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள் . எவரும் எந்தத் தவறும் செய்து விட்டு தப்ப முடியாது . ஒவ்வொருவரின் குடும்பப் பின்புலமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றாகவே தெரியும் . “ நாளைக்கு உன் அப்பாவை கூட்டிக்கொண்டு வா ” என்றாலே அழுகையுடன் மூத்திரம் பொத்துக் கொண்டு வந்து டவுசரை நனைத்து விடும் . அதற்குத் தனியாக ரெண்டு அடியும் ஒரு வாளி தண்ணீரும் சுமந்து வர வேண்டும் . நாங்கள் புதிதாக வந்து வீட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய தோட்டமும் மிகப் பெரிய சிமெண்ட் தளமும் இருந்தது . புதிய வீட்டில் எந்த மரங்களுமே இல்லை . ஒரே ஒரு முருங்கை மரம் மட்டும் விற்று விட்டுச் சென்றவர்கள் வைத்துருந்தார்கள் . பழைய வீட்டில் இருந்த கொய்யா மா மரங்கள் எதுவும் இல்லை . புதிய வீட்டில் கொடுக்காப் புளி மரம் கூட இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லும் போது டவுசர் பையில் கொண்டு போகும் எந்தச் சமாச்சரத்தையும் கொண்டு போக முடியவில்லை . பள்ளியில் பண்ட மாற்று முறையாகப் பரிமாறிக் கொள்ளும் பென்சில் வியாபாரத்தைக்கூட நிறுத்த வேண்டியதாகி விட்டது . ஆனால் மற்றொரு வகையில் எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்தது . இங்குக் கூட்டாளிக் கூட்டம் அதிகமானது . என் லொட லொட பேச்சை கேட்பதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் . அப்போது எங்கள் கூட்டத்திற்குள் இறுதியில் வந்தவன் பெயர் சண்முகச் சுந்தரம் . அவன் அப்பா பக்கத்து கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டுருந்தார் .. [] புதிய வீட்டுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு அலுவலகம் ., சனி ஞாயிறு ஒரு காக்கா குருவி கூட உள்ளே வராது . இரண்டு நாட்களும் பெரும்பாலும் பள்ளி விடுமுறையாகத் தான் இருக்கும் . உட்கார , அரட்டை அடிக்க , அத்தனை அக்கிரமும் செய்யத் தோதான மறைவு இடங்கள் உண்டு . புகைப்பவர்களும் , அடிப்பவர்களும் வந்து போய்க் கொண்டுருப்பார்கள் . ஆனால் அவர்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு வேடிக்கை மக்கள் . கூட்டாளி கூட்டத்தில் இருக்கும் எவனுக்கும் எந்தத் தைரியமும் இருக்காது . உயரமும் , சதைகளும் இருக்கும் குண்டு மக்கள் கூடச் சோப்ளாங்கியாய் தான் இருப்பபார்கள் . அவனவன் வாயாலே ஊதிக்கொண்டு ஊத்திக் கொண்டு படம் காட்டுவதோடு சரி . நாள் முழுக்கத் திருப்தியாய் அளந்து விட்டுக் கொண்டு அன்று பத்திரிக்கையில் வந்த நடிகையைப் பேச்சு மூலமே கற்பழிக்க ஆரம்பித்து விடுவார்கள் . ஆனால் சண்முகம் கூட்டத்திற்குள் வந்தால் பேசவே மாட்டான் . காரணம் அவனின் தம்பியும் உள்ளே இருக்கச் சற்று நேரம் இருந்து விட்டு வெளியேறி விடுவான் . போகும் போது எப்போதும் போலத் தம்பியைப் பார்த்து ” சீக்கிரம் வீட்டுக்கு வாடா ” ன்னு கத்தலாகச் சொல்லிவிட்டு சென்று விடுவான் . எங்களைப் பார்த்துவிட்டு வெளியே போகும் போது அவன் வயிறு உப்பலாகவே இருக்கும் . தொடக்கத்தில் எனக்குப் புரியாததை மாதவன் ஒரு நாள் சொன்ன போது தான் புரிந்தது . யார் யார் இங்குக் கூடியிருக்கிறார்கள் ? என்று பார்த்து விட்டு அவன் மெதுவாக நகர்ந்து பக்கத்தில் உள்ள புளிமர தோப்புக்குள் சென்று விடுவான் . பெரிய தூர் பகுதியாகப் பார்த்து உள்ளே மறைவு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான் . மறுபடியும் நான்கு புறமும் பார்த்துவிட்டு வயிற்றுப் பகுதியில் ஒளித்து வைத்த பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்குவான் . ஒரு நாள் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்த போது மண்டையில் ஏறாத ஆங்கிலப்பாடத்துடன் பெரிய சண்டையே போட்டுக் கொண்டு யார் யாரையோ திட்டிக் கொண்டு நெஞ்சில் குத்திக் கொண்டு போராடிக் கொண்டுருந்தான் . அவன் படிப்பதை யாரும் கவனித்து விடக்கூடாது . கவனித்தவர்களும் படிக்கத் தொடங்கிவிட்டால் அவன் மதிப்பெண்கள் வாங்க முடியாது . ஆனால் ஒரு நாள் மொத்த கூட்டத்தையும் மாதவன் கலைத்துப் பூனை போல் நகர்ந்து அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்த புளிய மர தூர் பகுதியை காட்டி விட்டு ஒதுங்கி விட்டான் . அப்போது தான் மொத்த கூட்டமும் சேர்ந்து அவனுக்குப் புதிய பெயர் வைத்தார்கள் . கிறுக்குச் சண்முகத்தின் சுருக்கமாகக் கீனா சானா . கடைசிவரைக்கும் அவனை வெறுப்பேத்த இப்படித்தான் அனைவருமே அழைத்தார்கள் . [] எங்கள் கூட்டத்தைக் கண்டு மேல்நிலைப்பள்ளிக்குப் பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள முந்திரித் தோப்புக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டான் . அதற்குப் பிறகு அவனைத் தொடர முடியவில்லை . ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர அத்தனையிலும் தேர்ச்சியில்லை என்ற போது அவன் அப்பா அடித்த அடியில் எங்கள் கூட்டத்தில் வந்து முதன் முறையாக மனம் விட்டுப் பேசினான் . அன்று கடைசியாகப் பார்த்த அவன் இப்போது எதிரே வந்து கொண்டுருந்தான் . சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தவன் என்னை அடையாளம் கண்டு மெதுவாகச் சிரித்தான் . அவன் அருகே வந்தவர் அவன் மனைவியாக இருக்க வேண்டும் . எலும்பும் தோலுமாய்க் கன்னம் ஓட்டி ஒரு மாதிரியாகப் புடவையை உடம்பில் சுற்றியிருந்தார் . சைக்கிளில் முன்னாலும் பின்னாலும் மூன்று குழந்தைகள் உட்கார்ந்து இருக்கத் தள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான் அவர்கள் முகத்தைப் பார்க்கும் போதும் உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது . சிரித்துக் கொண்டே பேசிய போது ” குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை . நான் டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டுருக்கின்றேன் . பிறகு பேசலாம் ” என்று நகர்ந்து விட்டான் . அது வரைக்கும் அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்பதும் தெரியாமல் இருந்தது , ஆனால் அம்மாவிடம் இரவு வந்து பேசிய போது தான் முழுமையாகப் புரிந்தது . தொடக்கத்தில் ஊரில் சுப்பையா டாக்டர் என்ற பெயரில் பிரபல்ய டாக்டர் ஒருவர் இருந்தார் .. மருத்துவப் படிப்பு எதும் படிக்காமல் யாரிடமோ ஒரு வருடம் இருந்து குப்பை கொட்டிவிட்டு மிகத் தைரியமாய் ஆர்எம்பி என்ற படிப்பை போட்டுக்கொண்டு டாக்டர் சுப்பையா என்று தொழிலை தொடங்கி விட்டார் . எங்கள் ஊரில் இருந்த ஒரு அரசாங்க மருத்துவமனை அதில் பணிபுரிந்த எம்பிபிஎஸ் டாக்டர் தனியாக வைத்திருந்த கிளினிக்கை விட இவரிடம் தான் சுற்றியுள்ள அத்தனை கிராமத்து மக்கள் குவிந்து கொண்டுருந்தார்கள் . உள்ளூர் கிளினிக் போலவே சுப்பையா டாக்டர் பக்கத்து கிராமங்களுக்கும் தான் வைத்து இருந்த ஸ்கூட்டர் மூலம் நடமாடும் கிளினிக் மூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டுருந்தார் . ஐந்து அல்லது பத்து ரூபாய் மட்டுமே வாங்குவார் . கடன் சொல்பவர்களும் உண்டு . காளை மாடு கன்று போடாத பிரச்சனைகளையும் கொண்டு வருபவர்களுக்கும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நகர்த்தி விடுவார் .. ” ஏஞ்சாமி எங்கையில காசு இல்லை ” என்று கூடச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிடுவார்கள் . அவருக்கு நன்றாகவே தெரியும் . இது காந்தி கணக்கு என்று . பெரிதாகக் கோபப்படாமல் செல்லமாகத் திட்டி விட்டு காத்துக் கொண்டுருக்கும் அடுத்தவரை உள்ளே வரச் சொல்லுவார் . வருகின்ற 90 சதவிகித கூட்டத்திற்குக் கட்டாயம் ஊசி போட்டு விடுவார் . ரெடிமேடு மாத்திரைகள் தயாராக இருக்கும் . பேச்சில் தேனும் பாலும் கலந்து அடித்து வருபவர்களைத் தைரியப்படுத்துவார் . சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு . ஆனால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை அவரின் வேலைப்பளூவே காவு கொண்டுவிட்டது . அவரிடம் பணிபுரிந்த நம்ம கிறுக்குச் சண்முகம் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக மருத்துவச் சேவையைச் செய்து கொண்டுருக்கின்றான் . மூன்றே வகையான மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் . அதுவும் காசு கொடுத்து வாங்க மாட்டானாம் . அவன் தம்பி பணிபுரியும் மெடிக்கல் கடையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவான் . உடல்வலி , காய்ச்சல் , சளி . அவ்வளவுதான் . சுப்பையா டாக்டர் போல் இனிமையாகப் பேசுவானா என்பது தெரியவில்லை .? ஆனால் பராவாயில்லை . இப்போது பிழைத்துக் கொள்வான் போலிருக்கு . காரணம் நல்ல டாக்டராகப் பார்த்துக் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு செல்கிறானே ………………. என்னைக் கடந்து சென்ற போது அவனின் குரல் மனைவியை நோக்கி பாயந்தது . என்னை யாரென்று கேட்டுருப்பாரோ ? ” புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு ” என்று கத்திக் கொண்டுருந்தான் . அவனின் சொல்ல விரும்பாத ஆதங்கத்தை வந்து மொய்த்த ஈக்கள் தான் எனக்கு அடையாளம் காட்டியது . ( செப்டம்பர் 29 2010) 6 உண்டு உறங்கி விடு. செரித்துவிடும் []   அவர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர் . தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு .. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத ஒரு ஆபூர்வ நபர் . குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னைச் சேர்த்துருந்தார் . என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்குக் காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது . வேறொரு காரணமும் உண்டு ., செட்டிநாட்டு சமையல் . அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டுருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே . நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் . அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தைப் போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்தச் சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன் . சிறிய ஓட்டு வீடு . உள்ளே பத்துப் பேர்கள் தான் அமர முடியும் . அடுத்த வரிசை வருவதற்குள் காத்துருப்பவர்கள் ஓடிப் போய்த் தான் இடம் பிடிக்க வேண்டும் . நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களைப் பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டுருக்கிறது . அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தைப் பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது . ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பறிமாறிக் கொண்டுருப்பார்கள் . ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும் . நான் பார்த்தவரைக்கும அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார் . வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவி கொண்டுருப்பார்கள் . அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எறிந்துகொண்டுருக்கும் . நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்துப் புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தது திகைத்துப் போய் விட்டேன் . அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்து இல்லை . “ மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம் ” என்று விளாச ஆரம்பித்து விட்டார் . அந்தக் குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது . முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்க மனமில்லாமல் துண்டுகளைக் கொண்டாடிக் கொண்டுருந்தார் . ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் “ கொளம்பு ” என்பதைக் கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டுருந்தார் . காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தைச் சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூடக் கொடுக்க வைத்து விடும் . அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு . ஒன்று சுத்தம் செய்தல் . மற்றொன்று மசாலா சேர்மான அளவு . மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனைச் சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது . தேவையில்லாத கழிவுகளைக் கழித்து விட வேண்டும் . வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று . விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும் . நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போலச் சுத்தம் செய்தா படைத்துக் கொண்டுருக்கிறார்கள் ? மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள் . கெட்டது , நொந்து போனது , கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டுருக்கும் . அலசி , கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும் . எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் . மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாகப் பார்த்துக் கொண்டுருக்க வேண்டும் . மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும் . கொதிக்கத் தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும் . கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும் . நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும் . சுவை கூடி வரும் போது முடிவுக்குக் கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டுச் சடுதியாக முடியும் . இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும் . . வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ , அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே என்று திட்ட வைத்து விடும் . திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும் . செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும் . ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது . பணத்தாசை அந்த அளவிற்குக் கேவலமாக மாற்றி வைத்து இருக்கும் . அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள் . ” கவுச்சி வாடை வந்து விடக்கூடாது ” என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள் . அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டுருப்பார் . ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார் . ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள் .. கறிக்கொளம்பு , எலும்புக்கொள ம்பு , இரத்தப் பொறியல் , இது போகத் தெரக்கி எடுத்த கறிக்கூட்டு . எப்போதுமே வெங்காயப் பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஒரு ஓரத்தில் கிடக்கும் . மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டுத் தண்ணீர் போட்டு துடைத்து விட்டுக் காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள் . நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளைத் தின்று கடித்துக் கொண்டுருப்பார்கள் . இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள் . வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டுருக்கும் . நான் அசைவத்தை விட்டொழித்துப் பத்து வருடங்கள் ஆகிவிட்டது . வீட்டில் இயல்பாகவே அந்தப் பழக்கம் இல்லை . குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டுக் கட்டுவார்கள் . தாத்தா முதல அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள் . வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள் . நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன் . முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்தப் பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது . செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும் . மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாகக் குடல் அறுந்து விழுந்து போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது . குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்தத் தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க . திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாகத் தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன் . முதல் பலி இந்த உயிர்ப்பலி . ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது . ஒன்று விடத்தையா விலாஸ் . இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும் . அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது . பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள் . பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்துப் படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போலச் சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்துருந்த போது தான் ராஜு வந்தான் . எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டுருந்தவன் . நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன் . எப்படியாவது விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கித் தருவாயா ? அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம் . உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது .. தலைக்கறி , குடல்கறி , மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள் . புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாகக் கொத்திக் கொண்டுருப்பார் . கடையைக் கடந்து செல்லும் பெண்களைப் பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும் . அவரைப் பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு . அவர் ஸ்டைலாகப் பேசிக் கொண்டே செய்யும் கொத்துப் புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும் ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது . பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும் . அங்குக் கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்களாளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே . அப்பா , அனைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும் . காரணம் வேறொன்றுமில்லை . மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டுருப்பார்கள் . அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்துத் தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பது . காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஓட்டி வைத்து இருப்பார்கள் . எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டுக் கடைக்காரர்களே வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் . வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசையாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம் . எந்த வேலையிருந்தாலும் குறிப்பட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும் . எந்தப் பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு . நண்பர்கள் இடையில் எவராது தேடிவந்தால் சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும் . நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான் . இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாகப் பார்த்தது இலலை . உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள் . உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு . ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி , மீமிசல் , கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் குவிந்து கொண்டுருக்கும் . வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும் . முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை . ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்துப் பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை , கெண்டை , கௌங்கை , போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை . ஈரமான துணியைத் தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும் . கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்துருப்பார்கள் . நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளைத் தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும் . அம்பானி மார்க்கெட்டிங் போலக் கிராம மக்களின் தந்திரம் அது . கெளுத்தி , திருக்கை , தொடங்கிப் பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுததம் செய்து கொண்டுருப்பார் . பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது . பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும் . அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று . காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார் . விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம் . சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன் . ” அப்பா ……. சாப்பிடவுடன் தூங்கினால் நல்லது இல்லை . கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும் . எங்க மிஸ் சொல்லியிருக்காங்க ” . என்ன பதில் என்னால் சொல்லமுடியும் ? ( செப்டம்பர் 29 2010) 7 ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும் 1994 ஆம் ஆண்டு திருப்பூர் வாழ்க்கையில் திருமணத்திற்க முன் நான் தங்கியிருந்த அறைக்குச் சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார் . மூன்று பேர்கள் மட்டுமே தங்கும் அறை . அவர் சென்னை என்றதும் நானும் என் அறையில் இருந்த கேரளாக்காரர் விஜயனும் அவருடன் ஒட்டாமல் ஒதுங்கியே தான் இருந்தோம் . நாங்கள் இருவரும் ஆறு மணிக்கே எழுந்து அடிப்படை வேலைகளை முடித்து விட்டு 7 மணிக்கு எங்கள் அறைக்கு மட்டும் வரும் செய்திதாள்களைப் படிக்கத் தொடங்கி இருப்போம் . எட்டு மணிக்கு அலுவலகத்திற்குக் கிளம்பி விடுவோம் . ஆனால் எங்கள் அறைக்கு வந்திருந்த புதிய நண்பர் எட்டு மணி ஆன போதிலும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டார் . நாங்கள் காலை எழுந்தவுடன் எங்கள் படுக்கையைச் சுருட்டி வைப்பது முதல் உள்ளே உள்ள மற்ற அத்தனை பொருட்களையும் வீடு போலச் சுத்தமாக வைத்திருப்போம் . அங்குள்ள முக்கால் வாசி அறைகள் திறந்தே இருக்காது . ஆனால் எங்கள் அறையில் காலை முதல் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் . நாங்கள் அப்போது இருந்த TKW விடுதியின் முதலாளி எங்கள் அறையைச் சுட்டிக்காட்டி மற்ற அறையில் உள்ளவர்களைத் திட்டி பேசியிருப்பதைப் பார்த்து இருக்கின்றோம் . ஆனால் புதிததாக வந்தவரின் காலை வாழ்க்கை 9 மணிக்குத் தான் துவங்கும் . அவரது அலுவலகம் காலை பத்து மணிக்குத்தான் தொடங்கும் . அப்போது தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்த சலோரா நிறுவனத்தின் ஃபேக்ஸ் கருவியின் சர்வீஸ் இஞ்சினியராகப் பதவி உயர்வு பெற்றுத் திருப்பூரில் தொடங்கி இருந்த அலுவலகத்திற்கு வந்திருந்தார் . எங்கள் இருவரின் நடவடிக்கைகளுக்குத் தலைகீழாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தார் . நல்ல சாப்பாட்டு ராமனும் கூட . அறையை ரொம்பச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் எங்கள் இருவரின் நோக்கங்களுக்கு மிகுந்த சவால்களைத் தந்து கொண்டிருந்தார் . முதல் மூன்று மாதங்கள் நிறையச் சண்டைகள் வந்தது . ஆனால் நான்காம் மாதம் முதல் நான் அவருடன் சேர்ந்து விட்டேன் . எங்கள் இருவரையும் ஒரு விசயம் ஒன்று சேர்த்தது . அது தான் சாப்பாட்டுச் சமாச்சாரங்கள் .. அவர் பணி முடிந்து அறைக்குத் திரும்பும் இரவு வேலையில் ஒவ்வொரு கைவண்டி கடையாகச் சென்று வாங்கிக் தின்று கொண்டே வருவதை எனக்கும் அறிமுகம் செய்து வைக்க அடுத்த ஒரு மாதத்தில் என்னுடன் ரொம்பவே நெருங்கி விட்டார் . என்னுடன் தொடக்கம் முதல் இருந்த விஜயனுக்கு ரொம்பவே ஆச்சரியம் . ‘ யாருடனும் அத்தனை சீக்கிரம் ஒட்ட மாட்டானே ‘ என்று அங்கலாய்ப்புடன் புலம்பிக் கொண்டே அவரும் எங்கள் தீனிக் கூட்டத்தில் சேர்ந்து விட்டார் . தினந்தோறும் வண்டிக் கடையில் விற்கும் பொறித்த மீன்களுக்கு மூவரும் நிரந்தர வாடிக்கையாளராக மாறிப் போனோம் . சென்னையில் இருந்த வந்த நண்பர் தான் திடீரென்று என்னிடம் கேட்டார் . “ நாளை முதல் கம்ப்யூட்டர் கிளாஸ்க்குப் போகப் போகின்றேன் . நீங்களும் வாங்க ” என்று என்னையும் அழைத்தார் . காலை வேலையில் அவர் வைத்திருந்த ஸ்வேகா வாகனத்தில் அழைத்துச் செல்லும் பழக்கத்தை உருவாக்கினார் . இயல்பான கட்டணம் என்பதோடு வாரத்தில் மூன்று நாட்கள் என்பதால் எனக்கு எளிதாக இருந்தது . அப்போது திருப்பூருக்குள் கம்ப்யூட்டர் சென்டர் என்பது அரிதாகவே இருந்தது . அங்கே நிறையப் பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள் . எங்கள் இருவரையும் தவறாமல் அங்கே செல்ல வைக்க இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது . தொடக்கத்தில் மைரோசாப்ட் வேர்ட் , எக்செல் என்று தொடங்கினார்கள் . ஒரு மாதத்திற்குள் FOX PRO என்று தொடங்க ஆர்வத்துடன் தான் கற்றுக் கொண்டோம் . ஆனால் நான் பணிபுரிந்து கொண்டிருந்த உற்பத்தித் துறைக்கு இது தேவையில்லாமல் இருந்தது . நாள்பட இது வெறுமனே எழுத்து வடிவமாகவே இருக்கப் புதிய சவால்கள் ஏதும் இல்லாது போக என் ஆர்வம் குறையத் தொடங்கியது . நான் பின்வாங்கி நின்று விட்டேன் . நண்பரும் சில வாரங்களில் நின்று விட்டார் . அந்தச் சில மாதங்களில் நான் பார்த்த படித்த கணினி சம்மந்தபட்ட விசயங்கள் எனக்கு மீண்டும் அறிமுகமான ஆண்டு 2002. 2002 ஆம் ஆண்டு . எனக்கு அலுவலக ரீதியான கணினி என்பது அறிமுகமானது . மின் அஞ்சல் , வலைதளம் போன்ற அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகமாகி புதிய உலகத்தைப் பார்க்க வழி செய்தது . எல்லாமே அலுவலகம் சார்ந்த விடயங்கள் . வெளிநாட்டுத் தொடர்புகள் . ஏற்றுமதியின் அலுவலக ரீதியான சூட்சமங்கள் . தொடர்பு வட்டங்கள் விரிவிடைந்து கொண்டே சென்றது . தொழிலுக்குத் தேவைப்படும் ஆங்கில அறிவு வளரத் தொடங்கியது . மிகக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு சற்று தெளிவான நிலைக்கு உயர்ந்திருந்தேன் . 2004 ஆம் ஆண்டு . சொந்தமான இரண்டு சக்கர வாகனம் கைக்கு வந்த பிறகு தான் சொந்த கணினி ஆசை உருவானது . நாம் எப்படியும் சொந்தமாக ஒரு கணினியை வாங்கி விட வேண்டும் என்று நண்பர் நாகராஜிடம் சொன்ன போது அவர் பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடினார் . காரணம் கையில் ஆயிரம் ரூபாய் கூடச் சேமிப்பில் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது 50 000 ரூபாய்க்கு மேல் உள்ள கணினி சார்ந்த திட்டங்களைச் சொன்ன போது அலறி அறிவுரையை வழங்கி விட்டு சென்று விட்டார் . ஆனால் என்னுடைய ஆசைகள் வெறித்தனமாக உள்ளே இருந்தது . இது குறித்த என் துரத்தல்கள் பலரையும் சென்று பார்க்க வைத்தது . யாரிடம் பேசினாலும் கடைசியாக இந்தக் கணினி குறித்த விசயங்களைப் பற்றிக் கேட்க பழகிக் கொண்டிருக்கும் பலரும் ஓடத் துவங்கினார்கள் . காரணம் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை என்பதை விட அவரவரும் மாதச் சம்பளத்திற்குள் தான் போராடிக் கொண்டிருந்தார்கள் . ஆனால் என் ஆசை நின்றபாடில்லை . நண்பர் நாகராஜ் வேறொரு நண்பரின் வேலைக்காகக் கொங்கு நகரில் இருந்த கனரா வங்கிக்குச் சென்ற போது அங்கிருந்த மேலாளர் அறிமுகமானார் . அவரின் சொந்த ஊர் நாகர்கோவில் என்று தெரிய நானும் நாகர்கோவில் தான் என்று நாகராஜ்ம் அறிமுகம் செய்து கொள்ள இருவரும் நெருங்கி விட்டனர் . அப்போது தான் அவர் நாகர்கோவிலில் இருந்து திருப்பூருக்கு மாற்றலாகி வந்திருந்தார் . அடுத்த இரண்டு மாதத்திற்குள் நண்பர் நாகராஜ் உடன் வங்கி மேலாளர் ரொம்பவே நெருங்கி விட்டார் . காரணம் அவருக்கு வீடு பிடித்துக் கொடுத்தது முதல் பல சொந்த வேலைகளைச் செய்து கொடுத்து நாகராஜ் நன்றாகவே காக்கா பிடித்துருந்தார் . இது தான் சமயமென்று நண்பர் அவருக்குத் தேவைப்பட்டுக் கொண்டிருந்த ‘ பர்சனல் லோன் ‘ ஏதாவது கிடைக்குமா ? என்று கேட்க அவரும் பச்சைக்கொடி காட்ட அப்போது தான் என் சம்மந்தபட்ட விசயங்களை அவருக்குச் சொல்லி அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்தார் . அடுத்த ஒரு மாதத்திற்குள் மூத்த அண்ணன் அரசு அலுவலராக இருக்க அவர் கையெழுத்து போட்டு வங்கிக் கடன் கிடைக்கக் கனவில் வைத்திருந்த கணினி ஆசைகளுக்கு உயிர் வரத் தொடங்கியது . அப்போது சிறிய அளவில் கணினி தொழிலில் இருந்த நண்பர் விஜய் அறிமுகமாக அவர் மூலம் மற்றொருவர் அறிமுகம் ஆனார் . வங்கி கேட்ட கொட்டேஷன் போன்ற சமாச்சாரங்களை அவர்கள் பார்த்துக் கொள்ள எல்லாமே இலகுவாக நடந்தது . அப்போது தான் அவர்களிடம் சொல்லி வைத்தேன் . விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்களும் வரும்படி உள்ள வசதியான விசைப்பலகை வேண்டும் என்று கேட்டிருந்தேன் . அதுவரையிலும் அவர்களிடம் கேட்ட எவரும் இது போன்று கேட்டதில்லை என்றனர் . தமிழ் எழுத்துக்களும் சேர்ந்து உள்ள விசைப்பலகையோடு என் இசை விருப்பங்கள் சார்ந்த துணைக் கருவிகளோடு மொத்தமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்த போது மொத்த வங்கிக் கடன் வட்டியோடு ஒன்னேகால் லட்சம் என்று தீட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியிருந்தனர் . ஏறக்குறைய மூன்று வருட தவணை என்று ஒலையைக் கொடுத்து கையெழுத்து வாங்கியிருந்தார்கள் . இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு தொலைபேசி அழைப்பு வீட்டுக்குக் கொண்டு வர இணைய இணைப்புக் கிடைத்தது . அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தால் சொந்த தொழில் ஆசைகளை நள்ளிரவு வரை விடாமல் பல திசைகளிலும் விரட்டி முயற்சித்துக் கொண்டேயிருந்தேன் . அப்போது தான் சொந்த மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன் . அப்போது இருந்த VSNL.NET என்ற பெயரில் எனக்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்து இருந்தனர் . அதன் பிறகே SIFY.COM அறிமுகமாக அதில் தான் முதன் முதலாக என் பெயரில் தனியாக மின் அஞ்சல் முகவரியைத் தொடங்கினேன் . தொடர்ந்து YAHOO, HOTMAIL என்று பல விதமான மின் அஞ்சல் முகவரியோடு 2007 ஆம் ஆண்டு வரைக்கும் இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் தனிப்பட்ட முன்னேற்றம் எதுவும் கிடைத்தபாடில்லை . ஆனால் அண்டார்ட்டிக்கா தவிர உலகில் உள்ள அத்தனை தேசங்களிலும் உள்ள அத்தனை விசயங்களையும் தேடிப்பார்த்த காலமது . மாதச் சம்பளத்தோடு கடன் வாங்கியும் தொலைப் பேசி இலாகாவிடம் மாதம் மாதம் போய்க் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன் . அப்போது இப்போது போலப் பலவிதமான கட்டண சலுகைகள் எதுவும் இல்லை . 2007 ஆம் ஆண்டு . அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குத் தொழில் ரீதியான ஒரு நண்பர் வந்திருந்தார் . அவர் அலுவலகத் தொடர்பு சார்ந்த ஒரு மின் அஞ்சலை அனுப்பிய போது அதில் ஜிமெயில் என்று போட்டிருக்க அப்போது தான் அது குறித்து அவரிடம் கேட்ட போது ஜிமெயில் குறித்தும் அதன் வசதிகளைப் பற்றியும் என்னிடமும் சொன்னார் . அப்பொழுதே அவர் மூலம் நான் உருவாக்கி வைத்திருந்த என் தொழில் நிறுவனப் பெயரில் ஒரு மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன் . ஆனால் கடந்து போன வருடங்களில் தமிழ் குறித்து நான் வைத்திருந்த மென்பொருள் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் தோன்றியவற்றை அடித்துச் சேமித்து வைத்திருப்பேனே தவிர இணையத் தளங்களில் தமிழ் மொழியும் உண்டு என்பதை 2009 ஆம் மே மாதம் தான் தெரிய வந்தது . அது வரைக்கும் நான் பயன்படுத்திக் கொண்டிருந்த பல்வேறு அத்தனை மின் அஞ்சல் முகவரிக்கு பல நாட்டின் இறக்குமதியாளர் குறித்து விபரங்கள் , அந்த நாடு குறித்த அறிமுகம் என்று ஆங்கிலம் சார்ந்த தகவல்கள் தான் வந்து கொண்டிருந்தது . 2009 மே மாதம் இந்த மாத மத்திம பகுதியில் வேர்ட்ப்ரஸ் தளம் ஏதோவொரு தேடலில் வந்து எட்டிப் பார்க்க , கண்களில் தென்பட்ட தமிழ் தளத்தை ஆச்சரியமாக உள்ளே சென்று பார்த்த பிறகு தான் இந்தத் தமிழ் இணையம் அறிமுகமானது . அடுத்த மூன்று வாரங்களில் தடவித் தடவி என்னுடைய பெயரில் ஒரு வேர்ட்ப்ரஸ் தளத்தை உருவாக்கிப் பார்த்த போது அது தோல்வியில் முடிந்தது . மீண்டும் என் தொழில் நிறுவன பெயரில் முயற்சித்து ஜுலை மத்திம பகுதியில் ஒரு தளத்தை உருவாக்க முடிந்தது . வெற்றிகரமாக ஜுலை 2009 3 அன்று எழுதிய விசயங்களை வெளியிட்டு வைத்தேன் . . இன்று என்னுடைய ஜிமெயிலுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான மின் அஞ்சல் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது . அத்தனையும் தமிழ் சார்ந்த , பதிவுகள் சார்ந்த விசயங்கள் மட்டுமே . இன்று ஹாட் மெயில் முடிந்து போய் அதுவும் வேறு பெயரில் மாறிவிட்டது . சிஃபி பக்கம் சென்று வருடக்கணக்காகி விட்டது . அதன் தன்மைகளையும் பல முறைகள் மாற்றி விட்டனர் . தொடக்கம் முதல் இன்று வரையிலும் யாகூ தான் எனக்குப் பல வகையிலும் எல்லா நிலையிலும் உதவியாக இருக்கிறது . ட்விட்டர் , முகநூல் அறிமுகமான போது அதற்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரி வேண்டும் என்று AOL மின் அஞ்சல் முகவரியை உருவாக்க அதில் இன்று வரையிலும் படிக்காத மின் அஞ்சல்கள் என்கிற வகையில் 2000 க்கு மேலே உள்ளது . மொக்கை , மொன்னை , அற்புதம் , அழகு , சிந்தனை , ஆச்சரியம் என்று கலந்து கட்டி இந்த இணையம் என்னைக் கொண்டு செலுத்திக் கொண்டேயிருக்கிறது . யார் யாரோ வந்தார்கள் . யார் யாரோ பிரிந்தும் சென்றார்கள் . புதுப்புது நண்பர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள் . முடிவில்லா சுழல் போல இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது . இந்தப் பாதை எங்கே செல்லும் ? என்று தெரியவில்லை . ஆனால் சுவாரசியமாக இருக்கிறது .. ஆனால் இது வரையிலும் என்ன கற்றுக் கொண்டேன் என்பதும் தெரியவில்லை . INFORMATION IS WEALTH என்கிறார்கள் . இன்று தேர்ந்தெடுப்பதில் தான் சவால்கள் அதிகமாக உள்ளது . அறை குறை அறிவு பெற்றவன் கூட இணையத்தில் எழுத முடிகின்றது . இன்று அனைத்தையும் அறிந்தவன் போல எளிதில் வெளிக்காட்டிக் கொள்ள முடிகின்றது . எவர் எவரோ சொன்னதை வைத்துக் கொஞ்சம் வெட்டி ஒட்டி இன்று வரை எழுத்து என்ற பெயரில் ஜல்லியடிக்க முடிகின்றது . நான் இப்படித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன் . யாரோ எழுதி வைத்தார்கள் . யாரோ சொன்னார்கள் . ஆனால் நான் சொல்வதாக எழுத முடிகின்றது . ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் இருக்கவே இருக்கு நம்ம கூகுள் ஆண்டவர் . கருணை மிகுந்தவர் . கண்டதையும் கற்றுத் தர தயாராக இருப்பவர் . மத மாச்சரியம் அற்றவர் . சாதிப் பாகுபாடுகள் கூட இவரிடம் இல்லை . மந்திரங்கள் எதுவும் தேவையில்லை . ஆர்வமிருப்பவர்களை என்றும் ஆதரிப்பவர் . “ தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ” என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டேயிருப்பவர் . நான் கற்றுக் கொண்டே கடந்து வந்த பாதையின் நீளத்தையும் அகலத்தையும் இந்த நான்காம் ஆண்டின் முடிவில் எழுதி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதையும் இங்கே எழுதி வைக்கத் தோன்றியது . ஐந்து வயதில் முதல் வகுப்புச் சென்ற காலம் போய் இன்று ஐந்து வயதில் பாலர் பள்ளி மூன்றாண்டுகளைக் கடந்து வர வேண்டியதான இன்றைய கல்விச்சூழல் முழுமையாக மாறியுள்ளது . ப்ரிகேஜி , எல்கேஜி , யூகேஜி என்று நான் படித்த மூன்றாண்டு பட்டப்படிப்பு போலவே படித்து முடித்து இன்றுள்ள குழந்தைகள் முதல் வகுப்புக்கு வந்து சேர்கின்றார்கள் . இன்று நானும் முதல் வகுப்புக்கு இடம் பெயரப் போகின்றேன் . தவழ்ந்து , நடக்க , பேசப் பழகிய குழந்தைகளின் வாழ்க்கை முதல் வகுப்பு முதல் முக்கியமானது . வாழ்க்கையின் முதல்படியாக இருப்பதால் இனி வரும் காலங்களைச் சற்று நிதானத்துடன் பொறுப்புடன் குறிப்பிட்ட திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன் . எந்த இடத்திலும் வளைந்து கொடுக்காமல் அப்பா சொல்லாமல் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்ற நேர்மையைத் துணை கொண்டு திருப்பூரில் இது வரையிலும் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எழுதக் கற்றுக் கொண்ட பிறகு கற்றதையும் பெற்றதையும் பதிவுகளாக மாற்ற முடிந்துள்ளது . என்னை நானே வளைத்துப் பார்த்துக் கொள்ள இந்தப் பதிவுலகம் உதவியுள்ளது . நான் கடந்து வந்த வழித்தடங்களில் பார்த்த மேடு பள்ளங்களைப் பதிவுகளாக மாற்ற முடிந்ததுள்ளது . இரண்டு நாளைக்கு முன் சந்தித்த திண்டுக்கல் தனபாலன் மாமனார் “ உங்கள் டாலர் நகரம் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்து விட்டேன் . தினந்தோறும் நான் சோர்ந்து போகும் போது மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கின்றேன் . உங்களின் பல சிந்தனைகள் எனக்குள் புதிய பல தாக்கத்தை உருவாக்குகின்றது . உங்களின் “ ஆங்கிலக் கல்வியும் அரை லூசு பெற்றோரும் ” என்ற கட்டுரையை அடிப்படையாக வைத்து எங்கள் சமூக மக்கள் நடத்தும் பள்ளியில் உரையாற்றிப் பெரிய அளவில் கைதட்டலைப் பெற்றேன் ” என்ற போது அவரின் 70 வயது அனுபவங்கள் முன் கூச்சத்துடன் தடுமாறினேன் . இந்திய அளவில் ஒரு அமைப்பிற்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொன்ன வார்த்தைகள் என் தகுதிக்கு மீறியதாகவே இருந்தது . நான் எழுதிய விசயங்கள் மற்றவர்களுக்கு உதவியதோ இல்லையோ என்னைப் பல விதங்களிலும் மெருகேற்றியுள்ளது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் . எழுத்தில் இது வரையிலும் வளைக்க முடியாத பல விசயங்களை இனி முயற்சித்துப் பார்க்க வேண்டும் . கற்றுக் கொள்வதற்கு வயதில்லை . மீண்டும் கற்றுக் கொள்ளத் தொடங்கப் போகின்றேன் . ( ஜுன் 3 2013) 8 கற்றுக் கொண்டால் தப்பில்லை [] எனக்குத் தமிழ் இணையம் அறிமுகமான நேரத்தில் திரட்டிகள் எதுவும் அறிமுகமாக வில்லை . அது குறித்த தேடலும் என்னிடமில்லை . அது குறித்துத் தெரிந்தால் தானே தேட முடியும் ? வேர்ட்ப்ரஸ் அறிமுகமானதும் , எழுதியதை மாட்டி வைக்க / வெளியிட கற்றுக் கொண்ட போது அதுவே எனக்கு அப்போது இருந்த மனோநிலையில் போதுமானதாக இருந்தது . தொடக்கத்தில் தினந்தோறும் எழுதி வெளியிட்டுக் கொண்டிருந்தேன் . எழுதுவதென்பது மற்றவர்களைப் போல மிகக் கடினமாக எனக்கில்லை . 20 வருடங்களுக்குப் பின் தமிழிலில் டைப்புவதும் எளிதாகவே இருந்தது . முழுக்க முழுக்கத் திருப்பூர் குறித்த வாழ்க்கை அனுபவங்கள் . வேர்ட்ப்ரஸ் ல் எழுதி மாட்டிய பின்பு அடுத்தடுத்து ஒவ்வொருவராக வந்த போதிலும் இவர்களுக்கு எப்படி இந்தத் தளம் தெரிகின்றது என்பதே எனது ஆராய்ச்சியாக இருந்தது . ஒரு மாதத்திற்குள் மனதில் இருந்த கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களில் பெரும்பாலான சம்பவங்களை எழுதி முடித்து இருந்தேன் . நம்மைப் போல ஏராளமான பேர்கள் இதே போல் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே இரண்டு மாதத்திற்குப் பின்பே தெரிய வந்தது . அந்தச் சமயத்தில் எனக்கு அறிமுகமானவர் இதைப் படித்துப் பாருங்க என்று உண்மைத்தமிழன் பதிவின் இணைப்பை கொடுத்தார் . 1992 ல் வாசிப்பதை நிறுத்திய நான் 2009 ல் தான் மீண்டும் வாசிப்பு பக்கமே வர முடிந்தது . இடைப்பட்ட வருடங்களில் வாசித்த வாரப் பத்திரிக்கைகளும் , தினசரிகளும் சொற்பமே . இடையில் திருப்பூரில் உள்ள நூலகம் மூலம் புத்தகம் எடுத்து வந்து படிக்க முற்பட்ட போது அதுவும் தோல்வியில் தான் முடிந்தது . முதல் இருபது வருடங்கள் வெறுமனே பாடப்புத்தகங்கள் , அத்துடன் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் என்பதோடு சமூகம் குறித்த எந்த அறிவும் இல்லாமல் புத்தக அறிவைக் கொண்டு தான் இந்தச் சமூகத்தின் உள்ளே வர முடிந்தது . அடுத்து வந்த 18 ஆண்டுகள் வாசிக்க நேரம் என்பதே இல்லாமல் முழுமையாக மக்களோடு மக்களாகப் பழகும் சூழ்நிலை அமைந்தது . இரண்டும் வெவ்வேறு துருவங்கள் . புது இடம் , புதிய மனிதர்கள் . 12 கிலோ மீட்டரில் இருந்த காரைக்குடிக்கு கல்லூரி சமயத்தில் தான் வர முடிந்த எனக்கு மாவட்டங்கள் , மாநிலங்கள் தாண்டிய பயணம் என்பது இறுதியில் பல நாடுகள் வரைக்கும் சென்றாக வேண்டிய சூழ்நிலையை அடுத்தடுத்து என்னை நகர்த்திக் கொண்டிருந்தது . மொழி , கலாச்சாரம் , பழக்க வழக்கம் அப்படியே மாறிப் போயிருந்தது . ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் , ஊருக்கு திரும்பவும் முடியாமல் திரும்பத் திரும்பக் காலுக்குள் சிக்கிய பந்து போலத் தடுமாறிய காலமது . பெண்கள் மட்டுமல்ல . ஆண்கள் கூட வீட்டை விட்டுத் தாண்டாமல் வளர்ந்து வெளியே வரும் போது ஏறக்குறைய ஒரு பெண்ணின் நிலையில் தான் தொடக்க வாழ்க்கை அமையப் பெறுகின்றது . வாழ்ந்த ஊர் நினைவுகள் முழுமையாக மனதில் இருந்து மறையவே மூன்றாண்டுகள் தேவைப்பட்டது . காரைக்குடி மொழியை மாற்றிக் கொள்ள ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டது . தொழில் ரீதியாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுதல் , போட்டியில் இருந்த தப்பித்துக் கொள்ள , முந்திவர , கற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறை தந்திரங்கள் என்றும் படிப்படியாக அறிமுகமான பின்பே வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு வந்தது . ஊர் மறந்தது . பணம் குறித்த தேடலே வாழ்வின் தேவையாக மாறிப் போனது . பட்ட பின்பே ஞானம் அல்லது அனுபவமே ஆசிரியர் என்பார்களே அது தான் இது . திருமணம் , மனைவி , குழந்தைகள் , உயர்பதவி , சொந்த தொழில் , வெற்றி , தோல்வி , என்று மாறி மாறி காட்சிகள் நகர்ந்து கொண்டே செல்ல ஓய்வு நேரமும் உணர வேண்டிய நேரமும் கிடைக்க எதிர்பாராத சூழ்நிலையில் இந்தத் தமிழ் இணையம் அறிமுகமானது . அப்போது தான் வாசிப்பதற்கான நேரமும் முழுமையாகக் கிடைத்தது . . வாசிக்க வேண்டிய தேவைகள் என்னைப் படிப்படியாக நகர்த்தியது . மீண்டும் விருப்பமான பலவற்றையும் வாசிக்க நேரம் கிடைத்தது . இணையம் மூலம் அதிர்ஷ்டவாய்ப்பாக நல்ல நண்பர்கள் முதல் இரண்டு மாதங்களில் இருந்தே கிடைக்கத் தொடங்கினார்கள் . இன்று மிக நெருக்கமான நிலையில் நூற்றுக்கணக்கான பங்காளிங்க என்னோடு தொடர்பில் இருக்கின்றார்கள் . அவர்கள் மூலம் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிவதும் , பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அமைந்ததும் ஜென்ம புண்ணியம் போலத் தான் என்று ஒவ்வொரு சமயமும் மனதில் நினைத்துக் கொள்வதுண்டு . காரணம் முதல் நாள் படித்த எதுவும் அடுத்த நாள் மனதில் நிற்பதில்லை . தொடர்ந்து வரும் நாளில் உருவாகும் மன அழுத்தத்தில் அத்தனையும் மறந்து புதிய வாழ்க்கையின் பரிணாமங்களை ஒவ்வொரு முறையும் அறிமுகம் செய்து விடுகின்றது . கண்ட அனுபவங்களே என் எழுத்தாக மாற்றி விட எழுதுவதற்கு இயல்பானதாக அமைந்து விடுகின்றது . அதிகமாகச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் , தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருப்பவர்கள் , ஐந்து இலக்கம் முதல் ஆறு இலக்கம் முதல் சம்பளமாக வாங்கிக் கொண்டிருப்பவர்கள் , மாத சம்பளத்தைப் பத்து நாளைக்குள் செலவழித்து விட்டு அட்வான்ஸ் எழுதி வந்து கேபினுக்கு வெளியே நிற்பவர்கள் , மாதம் முழுக்க வேலை செய்தும் 9000 ரூபாயை தாண்ட முடியாதவர்கள் எப்படி உழைத்தாலும் 5000 ரூபாய்க்கு மேலே பார்த்திராதவர்கள் என்று அத்தனை தரப்போடும் தினந்தோறும் உறவாட வேண்டிய வினோத கலவையோடு அமைந்த வாழ்க்கையில் கற்றுக் கொள்ள நிறையச் சந்தர்ப்பங்கள் இயல்பாகவே அமைந்துள்ளது . அதுவே எழுத நிறைய எழுத்துக்களைத் தந்து கொண்டேயிருக்கின்றது . வாழ்ந்து கொண்டிருப்பவனின் அனுபவங்கள் வாசிப்பவனுக்குப் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை . அங்கே தான் நம்ப முடியாதவற்றை எழுதுகின்றாய் . உன் உலகம் குறுகிய வட்டத்திற்குள் உள்ளது என்பது வரைக்குமான உரையாடலை நீட்டித்துக்கொண்டே செல்கின்றது . எனக்கு முதன் முதலாக வாசிக்கக் கிடைத்த உண்மைத்தமிழன் எழுத்தென்பது வலைபதிவின் தினந்தந்தி போன்றது . வலைபதிவுக்குள் முதன் முதலாக உள்ளே வருபவர்கள் முதல் நன்றாக அறிமுகமாகி பிற்பாடு எழுத கற்றுக் கொண்டவர்கள் வரைக்கும் எவருக்கும் ஏதோவொரு வகையில் சுவராசியத்தைத் தரக்கூடியவர் இன்னமும் உண்மைத்தமிழன் பதிவுகளில் உள்ள ஆர்வம் எனக்குக் குறைந்தபாடியில்லை . நான் தொடக்கத்தில் எழுதத் தொடங்கிய போது தீர்க்கமான கொள்கைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் மனதில் தோன்றிய அனைத்தையும் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன் . ஆனால் எழுத்து நடை , பிழைகள் , குறிப்பாக இலக்கணப் பிழைகள் என்று ஒவ்வொன்றாகப் பலரின் விமர்சனத்தின் மூலம் என்னைத் தாக்கத் தொடங்கியது . நிகழ்காலம் , இறந்த காலம் , எதிர்காலம் மூன்றையும் குழப்பி அடித்துக் குழிப்பணியாரம் கணக்காகச் சுட்டு வைக்கப் பலரின் அறிவுரைகள் என்னைப் பதம் பார்க்கத் தொடங்கியது . ஆகா ஒரு ஸ்பீட் ப்ரேக் தேவை போல என்று அடுத்தக் கட்டத்திற்கு நகர முடிந்தது . எழுதிக் கொண்டிருந்த சொந்த விசயங்களை நிறுத்தி விட்டுப் புத்தகங்களைப் படித்து அதில் உள்ள விசயங்களை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது கியர் மாற்றத் தேவையில்லாத நிலையில் பறக்கத் தொடங்கியது . அங்கும் பிரச்சனை வேறு விதமாக உருவாகத் தொடங்கியது . கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இன்னும் பல புத்தகங்களைத் தேடிப்பிடித்து ஓடத் துவங்க ஓட்டம் இன்னும் வேகமாக மாறியது . ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும் ? என்று அன்றாட நிகழ்வுகளை என் பார்வையில் எழுதத் தொடங்கிய போது தான் எழுத்துக் கொஞ்சம் கைவசமாகி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது . அதுவே குழந்தைகள் குறித்த அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது தான் படிப்பவர்களின் ரசனைக்கும் எழுதுபவனின் ரசனைக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு தரும் சுகத்தையும் உணர முடிந்தது . மூன்று படிகளைத் தாண்டி வந்த போது சமூகம் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுத வேண்டும் என்று தோன்றியது . அலட்சியமான போக்கு , அவசர கதி இல்லாமல் என்னாலும் பல கட்டுரைகளை எழுத முடிந்ததுள்ளது . ஆனால் கருத்து விவாதங்கள் , மோதல்கள் என்று இன்று வரையிலும் நான்கு பக்கத்தில் இருந்தும் ஏவுகணைகள் போலத் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றது . இறுதியாக உனக்கு அரசியலும் தெரியாது , வரலாறும் தெரியப்போவதில்லை என்பது வரைக்கும் மகுடங்கள் வாங்கியாகி விட்டது . சாதி , மதம் , அரசியல் பற்றி எழுதினால் எளிதில் ஒரு முத்திரை குத்தி முச்சந்திக்குள் நிறுத்தி கும்மத் தொடங்கி விடுகின்றார்கள் . உடன்பிறப்புகள் அத்தனை பேர்களும் இன்று வரைக்கும் ஜெ ஆதரவாளன் இவன் என்று வம்புக்கு இழுக்கச் சும்மா ஒரு கடிதம் வரைக்கும் கொண்டு போய் நிறுத்தியது . ஆனால் நாங்கள் கொடுத்த முத்திரை தான் உன் முகத்திரை என்று ஒரு பக்கம் வாறத் தொடங்கி வரும் வாந்தி பேதிகளைக் கண்டு கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எழுதினாலும் குத்துக்கள் ஏதோவொரு பக்கத்தில் இருந்து இன்றும் வந்து கொண்டேதான் இருக்கின்றது . குத்து வாங்கிய களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் எந்திரித்து எழுதத் தொடங்க இவனைத் திருத்த முடியாது என்று ஒதுங்கி விடுகின்றார்கள் . ஆனால் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள் . குறிப்பாக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் குறித்து எழுதியதற்குப் பிறகு வந்த எதிர்வினைகள் மிக அதிகம் . குழலி என் மனதில் உள்ளதை மிகத் தெளிவாக எழுதியிருந்தார் . மதம் பற்றி எழுதிய போது கோவி கண்ணன் சொல்லிய வார்த்தை பெரிய அங்கீகாரமாக எனக்குத் தெரிந்தது . ஜோதிஜி நல்ல பதிவு , மற்றவங்களுக்குப் பிடிக்குமா , தன்னைப் பற்றி என்ன நினைப்பாங்க என்கிற எண்ணங்களைக் கடந்து இதை எழுதி இருக்கிங்க , பாராட்டுகள் , பதிவுலகத்தில் இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்பு . மொத்தத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத முடியும் . ஆனால் அதற்கான உழைப்பு தேவை என்பதை எனக்கு உணர வைத்துள்ளது . வாழ்க்கையில் , அலுவலகத்தில் , தொழிலில் நடந்த அதே படிப்படியான வளர்ச்சி . திடீரென்று எதுவும் என் வாழ்வில் நடந்ததில்லை . இடைவிடாத முயற்சியும் தனிப்பட்ட ஆர்வமான துரத்தலும் தான் இன்றைய வாழ்வில் பலநிலைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது . என்னுடைய தளத்தில் ஒருவர் விமர்சனம் மூலம் கேட்டிருந்தது இன்றும் நினைவில் உள்ளது . நீங்க முழு நேர வலைபதிவராக இருப்பீங்க என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் என்றார் . காரணம் இங்கே 70 சதவிகித மக்கள் அலுவலகச் சூழ்நிலையில் தான் வலையில் மேய்கின்றார்கள் . வந்த வேகத்தில் பொருத்தமான தலைப்பு என்று பார்க்காமல் , பரபரப்பான தலைப்பிற்குள் நுழைந்து விட்டு நகர்பவர்கள் தான் அதிகம் . ஆசைப்பட்டுத் தமக்கென்று ஒரு வலைபதிவை தொடங்குபவர்கள் தொடர்ந்து எழுத முடியாத நிலைக்குப் போய் விடுகின்றார்கள் . இறுதியில் அனானி ரூபத்தில் பேயாய் அலையத் தொடங்குகின்றார்கள் . வாசிப்பதில் உள்ள ருசியைப் படித்த பின்பு அனுபவிக்கும் போது தான் தெரியும் . எழுத்து என்பது எழுதி எழுதி முன்னேறும் போது தான் புரியும் . வீட்டில் இருந்தபடியே படிப்பவர்கள் , எழுதுபவர்கள் மிக மிகச் சொற்பமே . அப்பா எப்போதும் தினமணி மட்டும் தான் வாங்குவார் . தொடக்கத்தில் எரிச்சலாக இருந்தாலும் மேல்நிலைப்பள்ளி வந்த சமயத்தில் அதில் தொடர்ச்சியாக வரும் சிறப்புக்கட்டுரைகளைக் கடையில் இருக்கும் அந்த மதிய நேரத்தில் வாசித்துக் கொண்டு இருப்பதுண்டு . புரிந்ததோ இல்லையோ வாசிப்பு என்பதனை ஒரு கடமையாக வைத்திருந்த காலமது . நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வாசித்துள்ளேன் . இன்று கட்டுரைகள் சார்ந்த வாசிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றேன் . ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட விசயத்தை வாசித்து முடிக்கும் போது “ அட நமக்கு இத்தனை நாளும் இது குறித்துத் தெரியலையே ” என்ற அங்கலாய்ப்பும் வந்து விட அடுத்தத் தேடல் தொடங்க காரணமாக அமைந்து விடுகின்றது . எழுதி அனுபவமில்லாதவர்கள் எது குறித்து வேண்டுமானாலும் எழுதலாம் . எதைப் பற்றி எழுத வருகின்றதோ அதிலிருந்தே எழுதத் தொடங்கலாம் . ஆனால் படிப்படியான மாறுதல் தேவைப்படும் களத்தில் இந்த எழுத்துக்களம் முக்கியமானது . நாம் எப்படி ஒன்றைப் பார்க்கின்றோம் . அதுவும் மற்றவர்களிடமிருந்து எப்படி அதனை வேறுபடுத்தி எழுத்தில் காட்ட முயற்சிக்கின்றோம் என்பதில் தான் முக்கியத்துவம் உள்ளது . அந்த முக்கியத்துவம் தேவையில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை . எழுதும் சுகம் என்பதும் அது மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பிடிக்கும் என்பதும் எவராலும் அனுமானிக்க முடியாத ஒன்று . நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம் . ஆனால் அது சீந்துவாரற்று கிடக்கும் . சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு இருக்கும் . காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று . எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும் . பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும் . கவலைப்படத் தேவையில்லை . எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்தச் சூட்சமத்தை உணர முடிகின்றது . வலைதளத்தில் எழுதுபவர்கள் தொடக்கத்தில் தங்களது அனுபவங்களை எழுதினால் போதும் என்று தான் நான் சந்தித்த நபர்களிடம் சொல்லியுள்ளேன் . காரணம் அது தான் எளிதானது . படிப்படியாக வளர்த்துக் கொண்டு மற்ற விசயங்களைப் பற்றி எழுதலாம் . நம்முடைய அனுபவங்கள் குறித்து எழுதும் போது நம்முடைய எழுத்துப் பலம் தெரிய வரும் . கோர்வையாய் கோலம் போடும் தன்மை புரியும் . வாசித்துக் கொண்டிருப்பவனை நகர விடாது இழுத்துச் செல்ல வேண்டிய சூட்சமத்தை உணர வைப்பதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள முடியும் . வாசிப்பவனை நம் எழுத்திலிருந்து நகர விடாது “ நான் உங்க கட்டுரையை ஓரே மூச்சில் படித்து முடித்தேன் ” என்று சொல்ல வைக்க வேண்டிய அவசியம் புரியத் தொடங்கும் . ஆனால் சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி எழுதத் தொடங்கும் போது தான் நம்முடைய எழுத்துத் தகுதிகள் குறித்து நமக்கே புரிய வரும் . நாம் எழுத்துக் கலையில் வளர்ந்துள்ளோமா ? என்பதன் சவால் இங்கிருந்து தான் தொடங்குகின்றது . “ கரணம் தப்பினால் மரணம் “ என்கிற நிலையே இங்கே தான் தொடங்குகின்றது . அதுவும் களத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்ற விசயம் என்றால் சொல்லவே தேவையில்லை . உளறி வைக்க முடியாது . உண்டு இல்லையென்று படுத்தி எடுத்து விடுவார்கள் . ஒரு வேளை நாம் தவறு செய்திருந்தாலும் அடுத்த முறை திருத்திக் கொள்ள வாய்ப்பாகவும் அமைந்து விடும் . அதுவே நம்மை வளர்க்க ஒரு காரணியாகவும் அமைந்து விடுகின்றது . இப்படித்தான் நானும் வளர்ந்துள்ளேன் . இன்று பத்திரிக்கையின் படிக்கும் ஒரு சிறிய துணுக்குச் செய்திகளை வைத்துக் கொண்டு தினசரி வாழ்க்கையில் பார்த்த மற்றொரு நிகழ்வோடு கோர்த்துச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் . அப்பா வாங்கிய தினமணி கொடுத்த தாக்கம் எனக்கு அரிச்சுவடியாக இருந்துருக்குமோ என்று இப்போது நினைத்துப் பார்க்கின்றேன் . அதன் நீட்சியே நான் இந்தத் தளத்தில் எழுதும் சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கியக் காரணமாகக்கூட இருக்கக்கூடும் . ஆனால் இன்று குறிப்பிட்ட தனி இதழ்களைத் தவிர்த்து ஆழமான கட்டுரைகள் எந்த வெகுஜன பத்திரிக்கைகளிலும் வருவதில்லை . ஒரு திரைப்படம் வந்தவுடன் மாங்கு மாங்கென்று அதற்கு விமர்சனம் எழுதும் நம் வலையுலக மக்கள் ஒரு அரசாங்கத்தின் புதிய திட்டத்தைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை . காரணம் கேட்டால் அது போன்று எழுதினால் எவரும் வந்து படிக்க மாட்டார்கள் என்ற மாயப் போதையில் தான் பலரும் இருக்கின்றார்கள் . நிச்சயம் அப்படி வலையுலகம் இல்லை என்பது நான் கண்ட உண்மை . அற்புதமான வரவேற்பு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது . அது படித்தவுடன் மறந்து போகும் அளவிற்குத்தான் உள்ளது . படிப்பவனுக்கு ஒரு சுகம் தேவை என்பதற்காக வெறுமனே மசாலா வாடையை வைத்து ஒப்பேற்றி விடவும் முடியாது . அடுத்தமுறை பெயரை பார்க்கும் போது மனதிற்குள் புன்னகைத்து விடுவார்கள் . பல எழுத்தாளர்கள் முதல் வலையுலக மக்கள் வரைக்கும் காலப் போக்கில் காணாமல் போனது இந்த வகையில் தான் . நம்முடைய கவனம் கருத்தில் இருப்பதைப் போல அதைப் படிப்பவனுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் கவனம் வைத்திருக்க வேண்டும் . என் அனுபவத்தில் விமர்சனம் எதுவும் கொடுக்காமல் ஆழ்ந்து படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள் . ஈழம் தொடர்பாகத் திருமாவேலன் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் முத்தானவை . எவரையும் படிக்க வைக்கும் நடை அதே சமயத்தில் உண்மைகளை முடிந்தவரைக்கும் அருகே சென்றும் பார்க்கும் துணிச்சலும் உள்ளவர் . என் எழுத்துப் பாதையில் இவரின் தாக்கமும் உண்டு . நானும் பல சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி உள்ளேன் . இது என் எழுத்துலக வளர்ச்சி என்பதாக எடுத்துக் கொள்வதுண்டு . மற்றவர்களின் பாராட்டுக்களை விட எழுத்துலகில் நமக்கே நம் எழுத்தின் மீது ஒரு மரியாதை வர வேண்டும் . இன்று வரையிலும் என் பழைய பல கட்டுரைகளைப் படித்து விட்டு மின் அஞ்சல் வாயிலாகப் பாராட்டுச் சொல்பவர்கள் அநேகம் பேர்கள் உள்ளனர் . மாற்றத்திற்கு ஆசைப்படு ………………… ( மே 20 2013) 9 நாலும் புரிந்த நாய் வயசு [] ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும் . சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும் . வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும் . மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும் . ஏறக்குறைய கடலை கரையோராம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு . ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும் . வானம் , கடல் , அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும் . நாம் சம்பாரிக்க என்ன வழி ? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும் . . அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை ஒரு அலை இழுத்துச் செல்லும் . மிச்சம் மீதியிருந்த ஆர்வத்தை மற்றொரு அலை அலைகழிக்கும் . கொஞ்ச கொஞ்சமாக நம்முடைய குழந்தைதனம் மாறியிருப்பதை அப்போது தான் உணரத் தொடங்குவோம் . ஆனாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும் . அந்த அலை மட்டும் இடைவிடாமல் நம்மைத் தாக்கிக் கொண்டேயிருக்கும் . . இந்தச் சமயத்தில் தான் கணக்கில்லா கணக்கு அலை நம்மை இழுத்துச் செல்லும் . அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும் . அந்தப் பாலபடங்களே நம்மை வழிநடத்தும் . கலையார்வம் , கலாரசனை அத்தனையும் அகன்று “ இனி நம் தலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் ” என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு கிடைக்கின்றது . மூச்சு வாங்கி , மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும் . பல சமயம் தள்ளு காற்று இழுத்துக்கொண்டு செல்ல பயணம் சுகமாகவே இருக்கும் . எதிர்காற்றில் பயணம் தொடங்கும் போது உள்ளூற இருக்கும் சக்தியின் ரூபமே நமக்குப் புரிபடத் தொடங்கும் . படகில் குழந்தைகளும் வந்தமர “ பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் ” என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது . ரசனையான விசயங்களும் , ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாகச் சென்ற பிறகே கணக்குள் இப்போது துடுப்பாக மாறுகின்றது . வலிகளே வாழ்க்கையாக மாறும் . நாற்பது வயதை கடந்தவர்களும் , கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருப்பார்கள் . நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும் . பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும் . “ விதி வலியது ” என்ற அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும் . செக்கு மாட்டுத்தனமாக மாறியிருப்போம் . ஆனாலும் நாற்பது வயதை கடந்து சாதித்தவர்களும் இங்கே அதிகம் . சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம் . எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம் . விரும்பியபடி வாழ்கின்றேன் என்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் இந்த வலையுலகம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது . மண்டைச்சூடு நிறைய உள்ளவர்களால் மட்டும் வலையில் ஏதோவொன்றை எழுத முடிகின்றது .. இங்கே ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள் . எது சரி ? எது தவறு ? என்று இன்னமும் எவராலும் அறுதியிட்டு கூறமுடிவதில்லை . பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும் , மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும் , குழந்தைகளை உயிராக நேசித்தாலும் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது . இதுவே தான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கின்றது . வாய்ப்புக் கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது . தங்கள் ரசனைகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்பவர்கள் சுகவாசியாகவும் மாறிவிடுகின்றனர் .. காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரைச் செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது . பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தைக் காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை . உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை . நாற்பது வயதில் தன் விருப்பங்களை விடத் தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்குச் சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது . இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது . அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் வேலையத்த வெட்டி வேலை என்று அடையாளம் காட்டப்படுகின்றது . இது இந்திய சூழல் மட்டுமல்ல . வளரும் நாடுகளில் போராடித்தான் தங்கள் இடத்தை வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கை என்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல . பிழைத்திருப்பதற்கு மட்டுமே .. இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை . மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம் . இந்தச் சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வாழ்கின்றோம் . இந்தியாவில் வேலைகேத்தத படிப்பில்லை . படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை . இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடு போல மாறி விடுகின்றோம் . அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்கு என்னவிதமான திருப்தி கிடைத்தது ? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது “ நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம் ” என்பதே . நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம் . நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது . இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது . எத்தனை பேசினாலும் ஒவ்வொருவரும் “ பொருள்வாதி ” களாகவே வாழ்கின்றோம் . அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம் . நம் விருப்பங்கள் , மனைவி ,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது . இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம் . ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் . ஏக்கத்தைச் சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து “ ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் ” என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது . மனிதர்களின் நாற்பது வயதை நாய் வயது என்கிறார்கள் . கவ்வியிருப்பது எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம் . கவலைகள் நம்மை அழைத்துச் செல்கின்றது . அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது . அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள் . அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் . இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு . மனிதனுக்கு ரசனை எந்த அளவுக்கு முக்கியமோ அதை அனுபவிக்க ஆரோக்கியம் அதை விட முக்கியம் . ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம் . லாபமோ ? நட்டமோ ? தேவையோ ? தேவையில்லையோ நானும் எனது தடங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வலைபதிவில் எழுதி வந்துள்ளேன் . இதற்கு என்ன தேவை ? என்ற நினைப்பு இல்லாமலேயே கற்றதையும் பெற்றதையும் கணக்கில்லாமல் எழுதியுள்ளேன் . இந்தப் பயணத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரும் என்னை நகர்த்தி அழைத்து வந்துள்ளார்கள் . சொல்ல முடியாத அன்பை ஏதோவொரு வழியில் எனக்குக் காட்டியிருக்கின்றார்கள் . “ பொறுத்தாள்வார் இவன் எழுத்தை படிப்பார் “ என்று புலம்பியிருக்கின்றார்கள் . என்னை வழி நடத்தி கற்றுத் தந்தும் இருக்கின்றார்கள் . வலைபதிவுகளில் எழுபவனுக்குத் திரட்டிகள் பாலமாக இருந்தாலும் மகுடம் சூட்டிய பலரும் காலப்போக்கில் காணாமல் போய் விடுகின்றார்கள் . நன்றாக எழுதத் தெரிந்தவர்களும் அவரவர் சூழல் காரணமாக எழுதுவதை நிறுத்திவிடவும் செய்கின்றார்கள் . ஆனால் “ இவன் கொஞ்சம் ஒழுங்காக எழுதுகின்றான் . படித்துப் பாருங்கள் ” என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பவர்களும் , இவன் எழுத்தை நாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பி தனது தளத்தில் இணைத்து வைத்திருப்பவர்கள் மூலமே இங்குப் பலருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது . இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது . ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம் . அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு . அதில் நானும் ஒருவனாக இன்று வரையிலும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் நண்பர்களே . நான் எழுதத் தொடங்கிய முதல் வாரம் முதல் இன்று வரையிலும் விமர்சனத்தின் வாயிலாகத் தொடர்ந்து என்னைத் தொடரும் ஒரு நட்பு துளசிதளம் . ஆதரித்த , ஆதரிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள் . மாற்ற முடியாத துயரங்கள் , தொடர்ந்து வரும் போதும் , ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும் , தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும் , அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும் , ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது . எழுத்தும் வாசிப்பு கலையும் நம்மை நமக்கே உணர்த்தும் . பல சமயம் நம் ஆயுளையும் அதிகப்படுத்தும் ( ஜுலை 3 2013) 10 ஐந்தில் கற்றதும் பெற்றதும் [] நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது செயல்படாத நிலையில் வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது . நாம் சுகமாய் இருக்கின்றோம் அல்லது சோகத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எதுவும் இங்கே மாறிவிடப்போவதில்லை . இங்கே ஒவ்வொன்றின் முடிவும் நொடிப் பொழுது மட்டுமே . அடுத்தடுத்து அதன் போக்கிலேயே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது . இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு வெறுமனே செய்தி மட்டுமே . என்னை , என் குடும்பத்தைத் தாக்காத வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து போக வேண்டிய , மறுநாள் பத்திரிக்கையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகவே உள்ளது . ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் . இதனால் தான் இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக மாறாமல் துணுக்கு செய்தியாகவே மாறி விடுகின்றது . பச்சாதாபத்திற்கோ , பரிதாபப்படுவதற்கோ எவருக்கும் நேரம் இருப்பதில்லை . எதிர்பார்ப்பதில் பலன் ஒன்றுமில்லை . ஏமாற்றங்களை , சோகங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தால் தான் இங்கே உயிர்ப்புடன் வாழ முடியும் . நம் தேடல் மட்டுமே நம்மை இயக்குகின்றது . தேடிச் சென்றால் மட்டுமே துன்பம் விலகுகின்றது . எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றது . நம் ஆசைகளின் எல்லைகளையும் , நமது தகுதியையும் இணைத்துப் பார்க்கும் போது மட்டுமே நம் வாழ்க்கையில் அமைதி உருவாகின்றது . ஐந்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான தமிழ் இணையத்தின் ஆழமும் அகலத்தையும் குறித்து அப்போது எனக்கு அதிகம் யோசிக்கத் தெரியவில்லை . நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தது போலவே இருந்தது . ஆனால் இன்று ? பலரும் என்னைக் கவனித்துள்ளனர் . சிலரை என் எழுத்து மூலம் திருப்திப் படுத்தி உள்ளேன் . வாசித்த அந்தப் பத்து நிமிடத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துள்ளேன் . என் குடும்பத்தை நினைத்துள்ளேன் . ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை நினைத்து ஏங்கியுள்ளேன் என்று உரையாடலில் , விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர் . வியப்பாகவே உள்ளது . உலகம் முழுக்கப் பரந்து விரிந்துள்ள இணையத்தில் யாரோ ஒருவர் ஏதோவொரு இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் தன் கருத்து என்று ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றார்கள் . நாம் விழித்திருந்தாலும் , கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை . நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது . எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும் , எதையாவது எழுதி மற்றவர்கள் நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட வேண்டும் என்பவர்களுக்கும் மத்தியில் தான் தமிழ் இணையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது . முறைப்படி பயன்படுத்த தெரியாதவர்கள் படும் அவஸ்த்தைகளும் , இதுவே தான் வாழ்க்கை என்பதைத் தப்பாக உணர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளவர்கள் தான் அளவோடு பயன்படுத்தி வளமோடு இருப்பவர்கள் . இந்த இடைப்பட்ட நபராகவே இதில் இருந்து வருகின்றேன் . பெரும் பொறுப்புகளில் இருந்து கொண்டு நம் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு அது நிறைவேறாத பட்சத்தில் சமூகத்தின் மீது , வாழும் வாழ்க்கையின் மீது , நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை . கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான தோல்விகள் அது தந்த வலிகள் . ஏராளமான ஏமாற்றங்கள் அதனோடு சேர்ந்து வந்த அவமானங்கள் என்று எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன் . சிறிது சிறிது என்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளேன் . என் நடை , உடை , பாவனை , பேசும் விதம் , உடல் மொழி என்று எல்லாவிதங்களிலும் கவனம் செலுத்தியுள்ளேன் . முடிந்தவரையிலும் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லுகின்ற விமர்சனங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளேன் . அடுத்தடுத்த நிலையை அடைய போராடியிருக்கின்றேன் . அடைந்தும் உள்ளேன் . ஆனால் ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டுச் செய்துள்ளேன் . வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும் , அது வெற்றியோ தோல்வியோ ரசனையோடு பார்க்க , வாழப் பழகியுள்ளேன் . ஆற்ற முடியாத காயங்களோடு வாழ்பவர்களையும் , உழைக்க முடியாதவர்கள் காட்டக்கூடிய பொறாமையையும் , அடக்க முடியாத இச்சைகளுடன் இருப்பவர்களையும் , என்ன தான் நெருக்கமாகப் பழகினாலும் கட்சி , மதம் , சாதி ரீதியான கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தோடு பார்ப்பவர்களையும் அமைதியாகக் கவனிக்கும் மனத்துணிவை பெற்றுள்ளேன் . இதனை எழுத வந்த பிறகே நான் அதிகம் பெற்றுள்ளேன் . இதன் காரணமாகவே இந்த எழுத்துலகப் பயணத்தை அதிகம் நேசிக்கின்றேன் . கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதனை எதிர்பார்க்காமல் நான் பார்க்கும் சமூகத்தை என் மொழியில் எழுதி வைத்து விட வேண்டும் என்பதைத் தீரா வெறி போலத் தீர்க்க வேண்டிய கடமை எனக் கருதி கடந்த ஐந்து வருடமாக எழுதி வந்துள்ளேன் . இணையத்தில் செய்து கொண்டிருக்கின்ற “ மார்க்கெட்டிங் யூக்தி “ களின் மேல் கவனம் செலுத்தாமல் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து இந்த எழுத்துலகப் பயணத்திற்காக ஒவ்வொரு நாளின் இரவிலும் தூக்கத்தைத் துறந்து இஷ்டப்பட்டு உழைத்துள்ளேன் . இணையம் தான் எனக்கு எழுதக் கற்றுத் தந்தது . இணையத்தில் அறிமுகமானவர்களே வழிகாட்டியாய் இருந்தார்கள் . வழி நடத்தினார்கள் . விமர்சித்தவர்கள் கற்றுத்தந்த பாடத்தின் மூலம் அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளேன் . ( ஜுலை 3 2014) 11 அங்கீகாரமும் அவஸ்த்தைகளும் [] மறதியென்பது மனிதனின் வரம் . பலசமயம் ஒருவன் பைத்தியமாக மாறாமல் இருக்க இந்த மறதியே உதவுகின்றது . இதைப்போலத் தன்னைச் சார்ந்த பலவற்றை மறைத்துக் கொள்வதன் மூலம் சில சமயம் வளர்ச்சியும் பல சமயம் அவமானங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது . இந்த இரண்டுக்குள் தான் ஒவ்வொருவரின் அந்தரங்கமும் உள்ளது . ஆனால் வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்பத்தால் இனி எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் தேவையில்லை என்று சமூகம் சார்ந்த சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் மாற்றிக் கொண்டே வருகின்றது . ஒரு குடும்பம் சார்ந்த அத்தனை அந்தரங்களும் இன்று சமூக வலைதளங்களில் விருப்பத்துடன் பகிரப்படுகின்றது . பிற்நத நாள் , இறந்த நாள் என்று தொடங்கிக் கணவன் மனைவி அந்தரங்கள் வரைக்கும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு எழுத்தாக வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது . அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனோநிலையோடும் காத்திருக்கின்றார்கள் . திருப்பூரில் கடந்த இருபது வருடங்களில் ஒவ்வொரு ஐந்து வருடங்களையும் நான் முக்கியமாகக் கருதுவதுண்டு . காரணம் ஒரு ஐந்து வருடத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி , வீழ்ச்சி என்பதைச் சற்று நிதானமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் . தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள் , அழிந்து போனவர்கள் , அழிக்கப்பட்டவர்கள் , அசாத்தியமான உயரத்தை எட்டியவர்கள் என்று ஏராளமான ஆச்சரியத்தைக் கடந்த இருபது வருடத்தில் பார்த்துள்ளேன் . இதற்குப் பின்னால் எண்ணிக்கையில் அடக்க முடியாத ஒரு சமூகக்கூட்டம் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஏராளமான அனுபவங்களை உணர்ந்துள்ளேன் . ஊருக்குச் செல்லும் போது தாத்தா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதுண்டு . அந்த இடம் தற்பொழுது வேறொருவர் கைக்குப் போய்விட்டது . கேட்பாரற்று வேலிக்கருவைச் செடிகள் மண்டி சுற்றிலும் வேலி போட்டு இடம் என்றொரு பெயரில் வைத்துள்ளனர் . பல முறை முள்கம்பிகளை ஒதுக்கி உள்ளே சென்று அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது தாத்தாவுடன் பேசிய தினங்கள் , பள்ளிக்கூட ஞாபகங்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வரும் . அது போலத்தான் வேர்ட்ப்ரஸ் ல் முதன் முதலாக எழுதிய தினமும் , அன்றைய தினத்தின் மனநிலை , அப்போது என் வாழ்க்கை இருந்து சூழ்நிலை என்று ஒவ்வொன்றும் இப்போது என் நினைவுக்கு வந்து போகின்றது . 2009 ஜுன் மாதம் இறுதியில் தமிழ் இணையம் அறிமுகமானதும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் எழுதத் தொடங்கியதும் எனத் தொடங்கிய என் எழுத்துப் பயணத்தின் வயது ஐந்து . இணையம் தொடர்பு இல்லாமல் எழுத்தாளர்களாக முப்பது வருடங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் , இணையத்தில் பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் என ஏராளமானோர் இங்கே இருந்தாலும் மொத்தமாக இது சார்ந்த அனுபவங்களை எவரும் இங்கே எழுதவில்லை என்றே நினைக்கின்றேன் . தாங்கள் பார்த்த படங்கள் , பயணித்த ஊர்கள் , சந்தித்த மனிதர்கள் என்று அனுபவங்களைப் பகிர்பவர்கள் தாங்கள் வாழும் சமூகம் குறித்த பார்வையை எழுத எல்லோருக்கும் ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது . அதிலும் குறிப்பாகத் தங்களின் இணையம் சார்ந்த அனுபவங்களை ஒவ்வொரும் கடந்து போகவே விரும்புகின்றனர் . அவரவருக்கு அந்தச் சமயத்தில் தோன்றியதை அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து விடுவதும் , அலுப்பு வந்த போது அல்லது எழுத முடியாத சூழ்நிலை உருவாகும் போது அது ஒரு கனாக்காலம் என்று மனதிற்குள் வைத்துக் கொண்டு மருகிக் கொள்வதுமான உணர்வு தான் இங்கே பலருக்கும் இருக்கின்றது . ஏன் எழுதுகின்றாய் ? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றது ? என்ற கேள்வியும் எனக்கு அதிக ஆச்சரியம் அளித்தது இல்லை . ஆனால் நான் படித்தால் எனக்கு என்ன நன்மை ? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு . நுட்பமான உணர்வுகள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விட்டது . ரசிப்பின் தன்மையும் ரசனைகளின் அளவுகோலும் மாறிவிட்டது . நம் ஆசைகள் நம்மை வழிநடத்துக்கின்றது . இறுதியில் ஆசைகளே நம்மை ஆளவும் செய்கின்றது . எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம் . ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக ? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும் . 1947 க்குப் பிறகு தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகள் , திரைப்படப் பிரபல்யங்கள் , எழுத்தாளர்களில் இன்று எத்தனை பேர்களின் பெயர்களை நம்மால் நினைவு வைத்திருக்க முடிகின்றது . ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து மறைந்தவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தனை வேலைகளைச் செய்து இருப்பார்கள் . ஏன் காணாமல் போனார்கள் ? காலம் என்பது ஒரு சல்லடை . பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும் , மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது . என்னை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா ? என் எழுத்தை அடுத்தத் தலைமுறைகள் படிப்பார்களா ? என்று யோசிப்பதை விட அதற்கான வழிமுறைகளை உருவாக்கி விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவதே உத்தமம் . காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம் . காலம் காலமாக அறியாமையுடன் வாழ்ந்தவர்கள் தான் வாழ்க்கை முழுக்கக் குறைவான வசதிகளுடன் வாழ்ந்த போதிலும் அமைதியாய் வாழ்ந்து மடிந்துள்ளனர் . அறிவுடன் போராடி மல்லுக்கட்டிய அத்தனை பேர்களும் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு , ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு உதவியிருக்கின்றனரே தவிரத் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இழந்து , அங்கீகாரத்தை எதிர்பார்த்து , வாழும் போது கிடைக்காமல் , மற்றவர்களால் புறக்கணிப்பட்டு மறைந்தும் போயுள்ளனர் . அங்கீகாரத்தின் தேவையை நாம் தான் உணர்ந்து வைத்திருக்க வேண்டும் . அமைதியான கவனிப்பு , பரவலான கவனிப்பு , ஆர்ப்பட்டமான கவனிப்பு என்ற இந்த மூன்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கடமையை அமைதியாகச் செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விட முடியும் தானே ? ( ஜுலை 2 2014) 12 பாவம் அப்பாக்கள் வாசித்து முடிக்க முடியாத பெரிய புத்தகத்தைப் போல , வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத எழுத்து நடையைப் போலத்தான் அப்பாக்கள் இருக்கின்றார்கள் . கிராமத்து , நகர்புறங்களில் வாழும் அப்பாக்கள் என்று வகையாகப் பிரிக்கலாமே தவிரக் காலம் காலமாக அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உண்டான ‘ சீனப்பெருஞ்சுவர் ‘ இன்று வரையிலும் உடைந்த பாடில்லை . சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள் . விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள் . நான் எழுதத் தொடங்கிய போது அப்பாவைப்பற்றித்தான் எழுதினேன் . அது சரியா ? தவறா ? என்று கூடத் தெரியாமல் அவரால் உருவாக்கப்பட்ட தாக்கத்தை எழுத்தாக மாற்றி என் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன் . எழுதி முடித்த போது நம்பிக்கை வந்தது . எழுதுவற்கு நமக்கு விசயம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானது . தொடர்ந்து எழுத முடிந்தது . உள்ளுற இருக்கும் ஓராயிரம் அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தது . நம்மால் முடியுமா ? என்பதன் தொடர்ச்சி தான் தவறாக வந்து விடுமோ ? என்ற எண்ணம் . நம் தைரியமே முதல் அடியை எடுத்து வைக்க உதவும் . உள்ளுற உழன்று கொண்டிருக்கும் வரையிலும் எந்தக் கருத்துக்களும் சிந்தனைகளாக மாறாது . நம் திறமைகளும் வெளியே வருவதில்லை . நமக்கு இப்படி ஒரு திறமை உண்டா ? என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் நம் அன்றாட நெருக்கடிகள் பலரையும் அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது . நாம் உணரவே வாய்ப்பில்லாத திறமைகளை நாம் வாழ்க்கையில் உருவாகும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் காட்டிக் கொடுத்து விடும் . நம்மால் இது முடியுமா ? என்ற யோசனை மாறி நாம் இத்தனை நாளும் உணராமல் இருந்துள்ளோமே ? என்று வெட்கபட வைக்கும் அப்படித்தான் இந்த எழுத்துப் பயணம் உருவானது . முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை . எல்லோருமே ஏதோவொருவகையில் அரைகுறையாகத் தான் இருக்கின்றோம் . ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை . அவரவர் சாதனைகளின் அளவுகோல் வேறானதாக இருக்குமே தவிர அதுவும் ஒரு சாதனை தான் என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே . வாழ்வில் சாதித்தவர்களிடம் உள்ள சல்லித்தனமான புத்திகளும் , வாழ்க்கை முழுக்கச் சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் தரமாக வாழ்க்கை நடத்துபவர்களும் என நம்மைச்சுற்றியுள்ள கூட்டுக்கலவை மனிதர்கள் மூலமே நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடிகின்றது . நாம் அதனை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம் ? எப்படி உள்வாங்கியுள்ளோம் ? என்பதில் தான் நம் வளர்ச்சியும் அடங்கியுள்ளது . ஒரு தனி மனிதனின் குணாதிசியங்களில் பெற்றோர்களின் அறிவுரையும் ஆலோசனைகளும் கால் பங்கு தான் ஆதிக்கம் செலுத்துகின்றது . ஒருவன் வளரும் சூழ்நிலை தான் அவனை உருவாக்குகின்றது . காலம் அவனை உருவமாக்கின்றது . தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும் ? என்று எந்தப் பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா ? எந்த ஊரில் வாழ்ந்தாலும் , குழந்தைகளுக்குக் காலம் காலமாகப் புராண இதிகாசங்களையும் , நன்னெறி நூல்களில் உள்ள உபதேச கருத்துக்களையும் தானே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கின்றார்கள் . நாகரிகம் வளர்ந்துள்ளது என்று நம்பப்படும் இந்தக் காலத்தில் வக்கிர மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தானே உள்ளது . இங்குத் தான் புரிதலில் , உணர்தலில் உள்ள தவறுகளும் சேர்ந்து கூட்டுக்கலவையாகி மனித எண்ணங்களாக மாறிவிடுகின்றது . இங்கே எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை . எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் . ஆனாலும் எந்த மாறுதல்களும் உடனடியாக உருவாகவில்லையே ? மேம்போக்கான எழுத்தை தவமாக நினைத்து எழுதுபவர்கள் எல்லாச் சமயங்களிலும் கொண்டாட்ட மனோநிலையை உருவாக்குபவர்களாக இருக்கின்றார்கள் . அதையே கடைசி வரையிலும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் வாழ்வதே சரியான வாழ்க்கை என்று கருதிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள் . அதுவே மொத்த சமூகத்தின் எண்ணமாக மாறும் போது புகையால் , குப்பையால் சூழப்பட்ட எண்ணமாக மாறிவிடுகின்றது . எழுதுவது எப்படி ? என்று யோசிப்பவர்களும் , தொடர்ந்து எழுதுவது எப்படி ? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது . வாழ்ந்த வாழ்க்கை , பெற்ற அவமானங்கள் , கற்ற பாடங்கள் , கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து “ பொன்னியின் செல்வன் ” கதை போல நமக்குக் கிடைக்கும் . ஆனால் நாம் முகமூடி அணிந்து கொண்டு புது அவதாரம் எடுக்கவே விரும்புகின்றோம் . புரட்சியாளராக , புதுமை விரும்பியாக நிஜவாழ்க்கையில் சாதிக்க முடியாதவற்றை எழுத்து வழியே அடைய விரும்புகின்றோம் . உள்ளே இருக்கும் மனப்பிறழ்வை இறக்கி வைத்து இறுதியில் அவற்றை ரசித்துப் பழகிடவும் மாறிவிடுகின்றோம் . ( ஜுலை 01 2014) 13 இதுவும் கடந்து போகும் [] நான் வாழ்ந்த சமூக வாழ்க்கை முழுவதும் கரடுமுரடாகத் தான் இருந்து இருக்கிறது . இன்று வரையிலும் சமதளப் பயணம் அமைந்ததே இல்லை . எதிர்பார்த்ததும் இல்லை . குடும்பத்தினர்க்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை . முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த குஞ்சு போல் வெளி உலகத்தை அளந்து பார்த்து விடவேண்டுமென்று அலைந்து திரிந்து பெற்ற சுய அனுபவங்கள் . எட்ட முடியுமா ? என்ற யோசிக்கும் போது கிடைத்த மேடுகளும் , நம்முடைய திட்டமிடுதல் தவறாகப் போய்விடாது என்று எண்ணிக்கொள்ளும் சமயங்களில் இயல்பாகவே பள்ளமும் என்றும் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுள்ளது , வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உருவான மாற்றங்கள் இன்று வரையிலும் ஏதோ ஒரு உருவத்தை உருவமாக்கிக்கொண்டே இருக்கிறது . இரண்டுபடிகள் கூடத் தொடர்ந்து ஏற அனுமதித்ததே இல்லை . ஒவ்வொரு சமயத்திலும் ஒரு படிக்கான வாய்ப்புகள் தான் இன்றைய வசதிகளை உருவாக்கி தந்துள்ளது . திருப்பூர் ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதிக்கான பணி மற்றும் சொந்த ஏற்றுமதி நிறுவன தொழில் வாழ்க்கைக்கான ஏற்றத்தாழ்வில் கற்றுக்கொண்டது அத்தனையும் என்னைச் சார்ந்த சின்ன வட்டத்திற்குள் முடிந்து போனது . ஆனால் 2009 மே மாதம் இறுதியில் எந்த நோக்கமும் இல்லாமல் அல்லது தெரியாமல் இந்த வலை உலகத்திற்குள் நுழைந்து ஜுன் 3 தட்டுத்தடுமாறி வலையின் தொழில் நுட்பத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தெரியாமலே “சித்தம் போக்கு சிவன் போக்கு ” என்னைப் பற்றி யோசிக்க உருவானது இந்த எழுத்துப் பயணம் . எழுதத் தொடங்கி இன்று முழுமையாக முதல் வருடம் நிறைவுக்கு வருகிறது . மனதளவில் , சொந்த வாழ்க்கை அளவிற்கு நெருங்கியவர்கள் அத்தனை பேர்களும் , கடமையாக மிகத் தூரத்தில் இருந்து உரையாடி என்னை உற்சாகப்படுத்தியவர்கள் , தொடக்கம் முதல் ஒவ்வொரு சமயத்திலும் உள்ளே வந்து என்னை எனக்கே புரியவைத்தவர்கள் , என்று நீண்ட பட்டியல் உண்டு . நடை , பாவனை , நோக்கம் , விருப்பம் எதுவும் தெரியாமல் , மனதில் தோன்றியவற்றை எழுத கிடைத்த முதல் விமர்சனம் போல் என்னுள் தொடங்கி , திருப்பூரைத் தொடர்ந்து நாடு தாண்டி ஈழம் வரைக்கும் தொடர முடிந்தது . வாசிப்பு அனுபவமும் வாழ்ந்த வாழ்க்கைப் பாடங்களும் எழுத அதிக உதவியாய் இருந்ததைப் போலவே ஒவ்வொரு தரமான விமர்சனங்களும் ஒழுங்கான பாதையை உருவாக்க காரணமாக இருந்தது . மீள் பதிவு என்று இம்சிக்காமல் நீள் பதிவு என்ற அவஸ்த்தையை மாற்றிக்கொள்ள முடிந்தது . எத்தனை புத்திசாலித்தனம் காட்டினாலும் படிப்பவர்களுக்குப் புரிய வேண்டும் . மொத்தத்தில் எளிமை நடை வேண்டும் . அதை உணர எனக்கு 40 தலைப்புகள் தேவைப்பட்டது . தவறுகள் அதிகமாகச் செய்யும் போது தரமான பாதைகள் இயல்பாகவே தோன்றும் . உணர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமை . உணர்த்தியவர்களுக்கு நன்றி . ஓட்டுக்கள் , விமர்சனம் , படிப்பவர்கள் , வருகையாளர்கள் , உள்வாங்கிக் கொண்டவர்களின் தாக்கம் , தரவரிசைப் பட்டியல் என்று எல்லாவகையிலும் வாழ்வில் முதல் முறையாக நூறு சதவிகிதம் அதிக மனநிறைவு அளித்த விசயம் கடந்த பத்து மாத எழுத்துக்கள் . வாழ்வில் உருவாகும் ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையும் நம்மிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து விடுகிறது . நாமே உணராமல் வாழ்ந்து கொண்டுருந்த போதிலும் ?? பள்ளிப் பருவம் முதல் படித்த எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் , பார்த்த பலரின் வாழ்க்கையில் வழி தவறிய பாதைகள் உருவாக்கியவைகள் என்று பார்த்து வந்தவனுக்கு எத்தனை சிந்தனைகளை உருவாக்கியதோ அதே போல் இரண்டு தளத்திலும் இதுவரையிலும் எழுதிய எதுவும் வீணாகிப் போய்விடவில்லை , படிப்பவர்கள் “வெறுக்கக்கூடிய” வகையிலும் எதையும் எழுதிவிடவில்லை . இன்று வரையிலும் பழைய தலைப்புகள் வரைக்கும் எப்படியே தேடி கண்டுபிடித்து உள்ளே வந்து கொண்டுருப்பவர்களுக்கும் , தொடர்ந்து தங்கள் விமர்சனம் மூலம் ஊக்கமளித்த உள்ளங்களுக்கும் நன்றி . 2002 முதல் ஏற்றுமதி நிறுவன பணிக்கான சமயத்திலும் , வீட்டில் இருந்த கணிணி மூலம் கண்ட வலை உலகம் என்பது முழுக்க முழுக்க ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான தொழிலுக்காகவே இருந்தது . இப்படி ஒரு மாய உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதே 2007 இறுதி யில் மட்டுமே . ஆனால் அன்று வலைதளத்தில் வேறு எதையோ அவசரமாய்த் தேடிய போது கண்ணில் தெரிந்த தமிழ் மணம் குறித்து முழுமையாகத் தெரியாமல் எப்போது போல அந்நியச் செலவாணி வாழ்க்கை உள்ளே இழுத்து வைத்து இருந்தது . தமிழ் வலை உலக வாசிப்பு என்பது தனியாக ஏற்றுமதி தொழிலில் கால் ஊன்றிய பிறகு அமெரிக்காவின் வீழ்ச்சி படிப்படியாக ஒவ்வொரு தொழிலையும் தாக்க , இறுதியில் கரணம் தப்பிய நேரமான 2009 மே மாதம் . தொடர்ந்து ஓடி வந்து கொண்டுந்த பண வாழ்க்கை மாறி கிடைத்த ஓய்வும் மனம் சார்ந்த வாழ்க்கையும் அறிமுகமானது . எழுதவும் முடியும் என்று உள்மனம் சொன்னது . என்னுடைய எழுத்துக்கள் மற்றவர்களுக்கு என்ன தாக்கத்தை உருவாக்கியதோ ? ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தனை சகிப்புத்தன்மையை வளர்த்து நிதான போக்கை உருவாக்கி இருக்கிறது . ஆழ்ந்த யோசனைகளும் , விவேகமும் சேர்ந்து இன்று முழுமையான அமைதியான மனிதனாக மாற்றியுள்ளது . எழுதுவதற்கு முன்பு இருந்த வாசிப்பு அனுபவமும் , எழுதத் தொடங்கிய பிறகு உண்டான வாசிப்பும் மொத்தமும் வெவ்வேறாக இருக்கிறது . புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்களுக்கும் , பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும் , இந்தத் தமிழ் வலை உலகமென்பது வரம் . ஆனால் புத்தகங்களை மட்டும் வாசிக்க விருப்புவர்களும் இது ஒரு இம்சை . காரணம் வெகு நேரம் படிக்க முடியாத அவஸ்த்தை . தினசரி , வார , மாத இதழ்கள் கிடைக்கும் இடங்களில் வாழ்க்கை அமைந்தவர்களுக்கு இந்த வலை உலகத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்காது . ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் இந்த வலையின் வீச்சு என்பது வெகுஜன ஊடகங்கள் எட்டிப் பார்க்க முடியாத காடு மலை கடல் தாண்டி பயணிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அதி உன்னதமான ஊடகம் இது . உணர்ந்து எழுதுபவர்கள் “பாக்யவான்கள்” முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் எழுதத் தொடங்கிய போது ஈழம் குறித்துத் தெரிந்தது எல்லாமே வெகுஜன ஊடகத்தின் பரபரப்புச் செய்திகள் மூலம் மட்டுமே . இதற்குள் நாம் நுழைந்து எழுதுவோம் என்று பெரிய ஆசைகள் இல்லாதவனுக்கு இயல்பாக அந்த வாய்ப்பு உருவானது . நான் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயங்கள் மற்றவர்களுக்கும் தேவையாய் இருக்கலாம் என்று தொடர்ந்த ஈழம் தொடர்பான விசயங்கள் முழுமையற்றதாக இருந்தாலும் சம காலத்தில் வந்த புத்தகங்களும் சொல்லாத பல விசயங்களைக் குறிப்புகள் போல உணர்த்த முடிந்தது . பல விதங்களிலும் புத்தக ஒத்துழைப்புக்கு தானாகவே வீடு தேடி வந்து உதவிய திரு . இராஜராஜன் ( வ னம் ) திரு . தோழர் அவர்களுக்கும் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் . தொடக்கத்தில் நண்பர்கள் சுட்டிக்காட்டிய கவனமான பாதையில் கண் வைத்து இருந்த காரணத்தால் பரபரப்பு இல்லாத அமைதியாகத் தொடர முடிந்தது . குறிப்பிட்ட சமயத்தில் படிப்பவர்களில் 30 சதவிகித புலம் பெயர்ந்தவர்களின் வருகையும் கிடைத்த ஆதரவுகளும் என்றும் மனதில் நிற்கக்கூடியது . நம்பிக்கை தான் வாழ்க்கை . அதை மட்டுமே நம்பி எழுதியவனுக்கு நாரசாரமான விமர்சனங்கள் இல்லாமல் பலரும் உரையாடிய போது உருவாக்கிய தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது . பிரபாகரன் என்ற ஆளுமையை மட்டும் மையப் பொருளாக வைத்துப் பரபரப்புப் படபடப்பு என்கிற ரீதியில் விற்றுத் தீர்த்த புத்தகங்கள் போல் அல்லாமல் ஈழம் என்பதன் மூலம் எங்கிருந்து தொடங்கியது ? இன்று வரையிலும் வலை உலகத் தொழில் நுட்பம் குறித்தும் இதன் சென்றடையும் வீச்சும் அதிகம் தெரியாதவனுக்கு அநேகம் பேர்கள் உதவியதைப் போலவே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த எழுத்தின் மூலம் மட்டும் அறிமுகமானவர்கள் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்கள் . புத்தகம் என்பது வணிகம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் முடிந்து போனதாக நினைத்துக்கொண்டுருக்கும் ஈழம் தொடர்பான விசயங்கள் அத்தனையும் கேலிக்கும் கேள்விக்கும் உரியதாய் மாறியுள்ளது ? என்னுடைய எழுத்துக்களை ஆதரித்துத் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டுருப்பவர்களுக்கும் , விமர்சனம் மற்றும் தங்களுடைய எழுத்துக்களுடன் இணைத்துக்கொண்டு கடத்திய கருத்துரையாளர்களுக்கும் எந்த வார்த்தையில் இங்கு எழுதிவைத்தாலும் நன்றியை தீர்க்க முடியாது . இடுகை உலக எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் வந்தவனுக்கு வழிமொழிந்த வாழ்த்துரைத்தவர்களுக்கும் நன்றி . ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயம் இறந்து விடத் தான் போகின்றோம் . நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு சமூகத்திற்கான பங்களிப்பு என்பதான ஏதோ ஒன்றை அவரவருக்குத் தெரிந்து வரையில் , முடிந்த வரையிலும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . இடுகைக்காக நீங்கள் உழைத்து உழைப்பு ஊருக்கு பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் வாரிசுகளுக்கு ஒரு காலத்தில் பயன்படக்கூடும் . தலைமுறை இடைவெளியினால் விலகிப் போன விசயங்கள் உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்கள் மூலம் நீங்கள் இல்லாத போதும் கூடப் புரியவைக்கக்கூடும் . ஒவ்வொரு எழுத்தாளர்களின் தாக்கமும் என்னை வளர்த்தது . இன்று வரையிலும் எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையையும் அவர்கள் தான் அர்த்தப்படுத்திக் கொண்டுருக்கிறார்கள் . ( ஜுன் 3 2010) 14 வலைபதிவுகள் வரப்பிரசாதம் [] என்னுடைய உண்மையான பிறந்த நாளே எனக்கு 20 வயதில் தான் தெரிந்தது . அப்போது தீவிர ஜோதிட ஆராய்ச்சியில் முழு நேரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்த நண்பன் கலந்தர் ( மத எதிர்ப்புகளையும் மீறி ) உந்துதல் காரணமாக நான் பிறந்த அரசு மருத்துமனையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன் . நான் பிறந்த நாளை கொண்டாடியதும் இல்லை . பிறந்த நாள் வரும் தினத்தன்று அது நினைவில் இருப்பதும் இல்லை . குழந்தைகள் எனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அவர்களின் பிறந்த நாளை நாங்கள் மறந்து விடுவோம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதத்திற்கு முன்பாக இன்னும் இத்தனை மாதங்கள் இருக்கிறது ? என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள் . அன்று அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சியாகவும் இருந்து விடுகின்றது . வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தைத் திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள் . வேர்ட்ப்ரஸ் ல் எழுதும் போது சிவகுமார் , சேரன் , கமல்ஹாசன் குறித்து எழுதியுள்ளேன் . குறிப்பாகத் திரைப்படங்களைப் பற்றி நான் இதுவரையிலும் எழுதியதில்லை . வினவு தள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக முதல் முறையாகத் திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்து எழுதிய கட்டுரை அப்போதையைச் சூழ்நிலையில் சொல்ல வேண்டிய எதிர்மறை நேர்மறை நியாங்களைக் கோர்வையாக்கியதில் நீண்டதாகவே இருந்தது . தோழர்களும் அப்படியே வெளியிட்டு இருந்தார்கள் . அப்போது உயர்பதவியில் உள்ள கனடாவில் இருந்த நண்பர் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார் . ஆனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்பு கொள்ளவில்லை . ஆனால் சாயப்பட்டறை கட்டுரையை விட மராத்தான் நீளத்திற்கு அமைந்த நான் வேட்பாளர் ஒரு டைரிக்குறிப்புகள் என்ற கட்டுரையை அவர் படித்தவுடன் அந்த இரவு வேளையில் கனடாவிலிருந்து அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசினார் . அப்போது அவர் பலவிசயங்களைப் பற்றிப் பேசினாலும் இன்று உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று என் இரவு நேர கடமைகளை ஒதுக்கிவைத்து விட்டேன் என்று சொன்ன போது அந்தக் கட்டுரை எந்த அளவுக்கு அவருக்குத் தாக்கத்தை உருவாக்கியது என்பதை உணர்ந்து கொண்டேன் . உங்கள் எழுத்து நடையும் , சொல்ல வந்த விசயத்திற்குரிய சரியான புரிதலையும் உருவாக்கும்பட்சத்தில் அது எந்த அளவுக்குப் பெரிதாக இருந்தாலும் நிச்சயம் அது பரவலான பாராட்டுரைக்குக் கொண்டு செலுத்தும் . நீங்கள் விமர்சனங்கள் , ஓட்டு , பரஸ்பரம் மார்பில் சந்தணத்தைப் பூசிக் கொண்டிருந்தால் வாழ்க்கை முழுக்கப் பூசிக் கொண்டேயிருக்க வேண்டியது தான் . சுயமோகம் , சுயவிளம்பரம் , அதிகச் சுயபுராணம் எதுவுமின்றி இந்த வலைபதிவுகளை முடிந்தவரைக்கும் செய்திகளைக் கடத்தும் ஊடகமாகத் தான் கருதுகின்றேன் . வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும் . பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூடச் செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க , படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள் . என் வீட்டு தோட்டத்தின் வெளியே திரிந்த சிட்டுக்குருவி ஒன்று ஒவ்வொரு நாளும் அறைக்குள் வர பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பல முறை கவனித்துள்ளேன் . கண்ணாடி ஜன்னலை முட்டி முட்டி முயற்சிப்பதைப் போலத் தான் இந்த எழுத்துப் பயணம் எனக்குப் பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு விசயத்தையும் தொட ஆரம்பிக்க , அதைப் பற்றிய தேடல் தொடங்க அவற்றைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு தான் சரித்திர அறிவும் , அதிக அளவில் சமூக அறிவும் எனக்குக் கிடைக்கப் பெற்றது . பொருள் தேடுவதும் , கிடைத்த பொருளை காப்பாற்றுவதுமே இப்போதைய சமூகத்தில் முக்கியமாக இருக்கிறது . அதனை வைத்தே இங்கே ஒவ்வொரு மனிதர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கின்றது . மனிதர்கள் அத்தனை பேர்களுமே சந்தைச் சரக்காக இருக்கும் சூழ்நிலையில் எனக்குள் உருவாகும் மன அழுத்தத்தைப் போக்க இந்த எழுத்துப் பயிற்சி பலவற்றையும் எனக்குக் கற்றுத் தந்துகொண்டு இருக்கிறது .. இந்த வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் . ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன் . தொலை தூரத்தில் இருந்து திடீர் என்று அழைத்துப் பேசியவர்களும் , தொடர்பில் வரும் நண்பர்கள் பேசும் உரையாடலின் மூலமே மட்டுமே பலரும் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது . ஈழம் பற்றி நான் அதிகமாக எழுதக் காரணம் அதைப்பற்றித் தான் இரண்டு வருடங்களில் நிறையப் படித்துள்ளேன் . மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று பெயர் வருவதால் எனது ஆசான் மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் தான் தேவியர் இல்லத்துக் குழந்தைகள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்று ஒரு முறை குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்களின் நோட்டில் எழுதிக் கொடுத்து வாழ்த்துரைத்தார் . அதையே வலைதளத்திற்குப் பெயராகவும் வைத்துள்ளேன் . வேறெதும் சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை . இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கையில் இப்போது இந்த மடிக்கணினி விளையாட்டுப் பொருளாக மாறி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் . (07.03.2011) 15 காதோடு பேசலாம் வாங்க “ போராடுவோம் … போராடுவோம் . இறுதி வரை போராடுவோம் .” தெருமுனைகளில் , அடுத்தச் சந்தில் , அரசு அலுவக வாசலில் என்று இந்த வார்த்தைகளை ஏதோவொரு இடத்தில் கேட்டு நகர்ந்து வந்து இருப்போம் . இன்று வரைக்கும் போராட்டத்தின் வீச்சு குறையவில்லை . ஆனால் வடிவங்கள் தான் மாறியுள்ளது . போராட அழைப்பவர்களின் நோக்கமும் மாறியுள்ளது . சாலையில் போக்குவரத்து கூட்ட நெரிசலில் நாம் முந்திக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது பக்கவாட்டில் கூட்டமாக நின்று கொண்டு சப்தம் போட்டு உரக்க தங்கள் கோரிக்கைகளைக் கத்திக் கொண்டு இருப்பவர்களைக் கவனித்துருக்கிறீர்களா ? நடந்து சென்று கொண்டுருக்கும் உங்கள் கையில் எவரோ கொண்டு வந்து திணிக்கும் கோரிக்கைகள் அடங்கிய அந்தத் தாளை வாசித்துப் பார்த்து இருக்கிறீர்களா ? கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்து உண்டியல் ஏந்தி வந்தவர்கள் உங்கள் முகத்திற்கு முன்னால் ஜில்ஜில் என்று குலுக்கி உங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றியிருக்கும் ? அவர்களை நிதானமாக ஏறிட்டு பார்த்து இருக்கிறீர்களா ? “ இவனுகளுக்கு வேற பொழப்பே இல்லப்பா . ஆ … ஊன்னா தெருவுக்கு வந்து நம்மள வதைக்கிறானுங்கப்பா ….” அலுத்துக் கொண்டே எரிச்சலை துப்புவோம் . குடிதண்ணீர் இருபது நாளாக வரவில்லை . எங்களுக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று கேட்ட கோரிக்கைகள் தீர்வு வராமல் போகத் தெருவுக்குப் பெண்கள் பானையுடன் வந்து நிற்கும் போது அரசு நிர்வாகம் வேகமாகச் செயலில் இறங்கும் . சாலை போக்குவரத்து பாதிக்க , போராடிக் கொண்டுருக்கும் அந்தப் பெண்கள் கூட்டத்தை அவசரமாய்ப் பயணிக்கும் பெண்கள் திட்டுவதைப் பார்க்கின்றோம் . எந்தப் பிரசச்னையும் நம்மைத் தாக்காத வரைக்கும் அது பிரச்சனை அல்ல . அடுத்தச் சந்தில் தீப்பிடித்து எரிந்தால் அது அடுத்த நாள் செய்தி தாளில் வரப்போகின்ற செய்தி . நம் வீட்டில் நடந்தால் அதுவொரு கண்ணீர் காவியம் . போராட்த்தின் வடிவம் இன்று இணையம் வரைக்கும் பலவிதங்களிலும் மாறியுள்ளது . தெருவுக்கு வந்து போராடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது . அவரவர் சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கே இங்கே நேரம் இருப்பதில்லை . பொது நலம் என்பது இன்று அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தை மட்டுமே . அதுவே செயலாக்கம் பெறும் போது சுயநலமாகத்தான் போய்விடுகின்றது . இன்றைய சமூகத்தின் போராட்டங்கள் என்பது செய்திதாள்களுக்குத் தேவைப்படும் அன்றாடச் செய்திகளில் ஒன்று . அதற்குப் பின்னால் உள்ள அவலத்தையும் , அதில் பங்கெடுத்தவர்களின் அவஸ்த்தைகளும் நமக்கு முக்கியமல்ல . காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதற்கும் நேரம் இருப்பதில்லை . கடந்து சென்றுவிடவே விரும்புகின்றோம் . ஒவ்வொரு நாளும் யாரோ எவரோ எதற்காகவோ தெருவில் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள் . விலைவாசி உயர்வு , சம்பள பிரச்சனை , நீதி கேட்டு , அதிகாரப்பூர்வமற்ற மின் வெட்டுக்காக உண்ணாவிரதம் என்று தெருமுனையில் , பேரூந்து நிலையத்தில் இந்தப் போராட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது . “ சரியானமுறையில் சிகிச்சை அளித்திருந்தால் என் பிள்ளை இறந்து போயிருக்காது . நான் பிணத்தை வாங்க மாட்டேன் ” என்று ஒப்பாறி வைத்து அழும் பெண்ணின் முகத்தைத் தொலைக்காட்சியில் நெருக்கமாய்ப் பார்க்கும் போது உள்ளே ஒரு கழிவிரக்கம் உருவாகும் . சிலசமயம் நம் கண்ணில் ஒரு முத்து போலக் கண்ணீர் கோர்த்து விடும் என்ற சூழ்நிலையில் ரிமோட் ல் கைவைக்கத் தாண்டிச் சென்று விடுகின்றோம் . ஆனால் ரிமோட்டில் பட்டனைத் தட்டி அடுத்தச் சேனலில் நடிகை பேசும் கொஞ்சு தமிழ் நமக்கு ரசிக்கக்கூடியதாய் மாறிவிடும் . மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் பலவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம் . பந்தல் அமைத்து நிழலில் நின்று போராடுபவர்கள் தொடங்கித் தெருவில் அடக்கு முறையை எதிர்த்து சாலை மறியல் என்பது வரைக்கும் என் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஏராளமான காரணங்கள் . ஆயுதமேந்தி போராட முடியாது . அடக்குமுறையில் ஒடுக்கப்பட்டு விடும் . நக்ஸலைட் , தீவிரவாதிகள் , பிரிவினைவாதிகள் என்று பெயர் சூட்டி வாழ்க்கை மொத்தத்தையும் இழக்க நேரிடும் . ஒவ்வொரு முறையும் அஹிம்சை மட்டும் தான் இன்றைய போராட்டத்திற்கு அளவு கோலாக இருக்கிறது . போராடலாம் . ஜனநாயகத்தில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது . ஆனால் நீ இப்படித்தான் உன் போராட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு மாதிரியை ஆளும் சமூகம் உருவாக்கியுள்ளது . ஆனால் தீர்வு ஏதும் கிடைத்ததா ? என்றால் அது மௌனசாட்சியாகவே இருக்கிறது . நமக்கு எந்தக் காரணங்களும் தேவையில்லை . ஆதரிக்க நேரமும் இருப்பதில்லை . ஆனால் எப்போதும் எல்லாவற்றையும் விமர்சிக்க மட்டுமே விரும்புகின்றோம் . பொதுப்புத்தி என்பது எளிதாக இருப்பதால் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை . பத்து பேர்களும் ஒன்றாக யோசிக்கும் போது புதிதாக எதையும் யோசிக்கத் தேவையில்லை . மாற்றிப் பேசினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவனாக மாறிவிடுவீர்கள் . பொதுஜனம் என்பதற்கான வரையறை என்பதே இதிலிருந்து தான் தொடங்குகின்றது . நான் உழைத்தேன் . உழைக்கத் தயாராக இருக்கின்றேன் . நான் நிச்சயம் ஜெயித்து வந்து விடுவேன் என்ற ஒற்றை நம்பிக்கை தான் ஏதோவொரு இலக்கை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே செல்கின்றது . நமது இலக்கைத் தவிர வேறு எதுவுமே நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை . விலைவாசி உயர்வா ? விரும்பிய வசதியான இடத்தை அடைந்து விட்டால் இந்தப் பிரச்சனை நமக்கு உருவாகாது . வேலையில்லா திண்டாட்டத்தைத் தவிர்க்க நன்றாகப் படி . வெளிநாடு சென்று விடு . உன் வாழ்க்கையை நீ நினைத்த மாதிரி அமைத்துக் கொண்டு விடலாம் . சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும் நம்மை உருவாக்குகின்றது . வாழவே தகுதியில்லை . இந்தியாவிற்குள் வரவே மனசில்லை . எப்படி இந்த நெரிசலில் வாழ முடியும் என்ற காரணங்கள் தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவர்களுக்கும் , அங்கிருந்து வர விரும்பாதவர்களும் சொல்லும் முக்கியக் காரணமாக இருக்கிறது . ஆனால் இந்த நெரிசலுக்குள் நாமும் உழன்று தான் உருவானோம் என்பதை எளிதாக மறந்து விடுகின்றோம் . வசதிகள் வரும் வரைக்கும் போராடத் தோன்றுகின்றது . ஆனால் விரும்பிய வசதியகள் வந்ததும் உடம்பும் மனசும் அசதியாகி விடுகின்றது . பலவற்றை மறக்கவே விரும்புகின்றோம் . மறதி தான் மிகச் சிறந்த வரப்பிரசாதம் . எது தேவையோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டால் மீதி அத்தனையும் அவசியமற்றதாக மாறி விடுகின்றது . ஒவ்வொரு போராட்டக்காரர்களும் களத்தில் நின்று போராடிக் கொண்டுருப்பது அவர்களுக்கான உரிமைகள் என்பதோடு அது மறைமுகமாக மொத்த சமூகத்தையும் சார்ந்தது . போரடிக் கொண்டுருப்பவர்களுக்கு ஏதோவொரு காரணங்கள் இருக்கலாம் . ஆனால் பாதிப்பு என்பது மொத்த சமூகத்திற்கும் தான் என்பதை எளிதாக மறந்து போய்விடுகின்றோம் . மூடப்பட்ட மில்லில் நம் குடும்பத்தில் எவரோ ஒருவர் பணிபுரிந்தவராக இருக்கலாம் . திடீரென்று வாழ்க்கை சூறாவளியில் சிக்கியிருக்கக்கூடும் . பாதிப்புகள் இன்று வரையிலும் மனதில் நிற்கும் . அப்போதும் யாரோ பலர் நீதி கேட்டு போராடியிருக்கக்கூடும் . காயம்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் கூட அடுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க விரும்புவதில்லை . விலைவாசி உயர்வுக்கு எதிர்த்து போராடக்கூடியவர்களுக்கு அவர்கள் வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களுக்கு மட்டும் தான் போராடுகிறார்களா ? ஒரு நிறுவனம் காரணம் இல்லாமல் இழுத்து மூடப்படும் போது அதைக் கேட்டு தெருவுக்கு வந்து நின்று போராடுபவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை . அதுவே நாடு தழுவிய பிரச்சனையாக மாறும் போது அதன் முகமே வேறு விதமாக மாறி விடுகின்றது . போராட எவருக்கும் துணிவில்லை என்பதை விட எவருக்கும் போராட்வே தோன்றவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம் . அரசாங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும் ? ஆள் , அம்பு , சேனை , படை , பட்டாளங்கள் , நெருக்குதல் என்று எல்லாத் திசைகளிலும் வந்து சேரும் நிலைகுலைந்து போகும் மனிதர்களைப் பார்த்து பார்த்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றோம் . இது தான் ஆள்பவர்களுக்கும் , அரசை இயக்கிக் கொண்டுருப்பவர்களுக்கும் வசதியாகப் போய்விடுகின்றது . பயமுறுத்து , பயத்தில் வைத்திரு . இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்றைய இந்தியாவின் ஜனநாயகத்தைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது . ஆனாலும் இதற்கு அப்பாலும் பல காரணங்கள் இருக்கிறது . நம்மால் வாழ முடிந்த அளவுக்கு நமக்கு வசதிகள் கிடைக்கும் போது வாழ்க்கை என்பது அழகாகத்தான் இருக்கிறது . வசதிகளை விட வாழ்க்கையை வாழவே முடியாதவர்களின் அவலங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் முகம் திருப்பிக் கொள்ளவே விரும்புகின்றோம் . அடுத்த இலக்கு என்று ஒன்று நம் மனதில் இருக்கும் . அதை நோக்கி நகர்ந்து கொண்டுருப்போம் . குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் வசதிகளைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டுருப்போம் . திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது அதிசயமாக சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்த்துத் தெருவில் இறங்கி தங்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள் . குளுகுளு வசதியில் இருந்தவர்களால் நெருப்பு வெயில் புதிதாக இருக்கப் புழுக்கத்தில் தவித்தார்கள் . நம் காவல் துறைக்குச் சொல்லித் தரவும் வேண்டுமா ? உள்ளே பிடித்துப் போட்டால் வெளியே வர மாதக்கணக்கு ஆகும் என்று கொளுத்தி போட்ட வெடியில் மொத்த போராட்டமும் புஸ்வானம் ஆகிப்போனது . இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு எத்தனையோ லட்ச மக்கள் போராடினார்கள் . தலைவர்கள் பெயர்களைத் தவிர வேறு எவரின் பெயரும் நமக்கு இன்று வரையிலும் தெரியாது . உண்மையான அடக்கு முறையின் அர்த்தத்தைப் பிரிட்டிஷார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் . ஆனால் அந்தப் போராட்டத்தின் வலிமையைக் குறைக்க முடியவில்லை . போராடியவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை . காரணம் உள்ளே எறிந்து கொண்டுருந்த கனல் . கங்காக மாறி நெருப்பாகக் கொளுந்து விட்டு எறிந்து ஊர் முழுக்கப் பரவி நாடு முழுக்கப் பரவியது . காரணம் அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது தேவையாய் இருந்தது . இப்போது நமக்கான தேவைகள் மாறியுள்ளது . சக்திக்கும் புத்திக்கும் உள்ள சண்டையில் பல சமயங்களில் நாம் சமாதானமாகி நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொண்டு விடுகின்றோம் . ஆனால் வாங்கிய சுதந்திரத்தின் வசதியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு விதமாக அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம் . ஆனால் வசதியுள்ளர்வகள் தொலைக்காட்சியில் ரசனையை வளர்த்துக் கொண்டுருக்க மீதி உள்ளவர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு உழைத்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆவலாய் ஓடிக் கொண்டுருக்கிறார்கள் . இன்று நாம் வாழும் வாழ்க்கை , அடைந்த வசதிகள் ஒவ்வொன்றும் யாரோ , எவரோ , ஏதோவொரு இடத்தில் உருவாக்கிய போராட்டத்தினால் வந்தது தான் என்பதை எளிதாக மறந்து அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம் . (29.10.2012) 16 இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு மானியங்கள் இல்லாவிட்டால் நம் நாடு சிறப்பாக வந்து விடும் . இது இயல்பாகவே இந்தியாவில் படித்தவர்கள் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தைகள் . ஆனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தன் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு மானியங்கள் மூலம் அவர்களைக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை . உலகளாவிய பொருளாதாரம் என்ற வார்த்தை இந்தியாவிற்குள் வந்த பிறகு உலகில் உள்ள பன்னாடு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது ஒரு அற்புதமான சந்தையாக மாறியுள்ளது . தவறில்லை . தரமான பெருட்கள் கிடைக்கும் . போட்டிகள் அதிகமாகும் . உள்ளே பழமைவாத சிந்தனைகளில் ஊறிக் கொண்டுருப்பவர்கள் மாறியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகும் . படித்தவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை . ஆனால் வருகின்ற ஒவ்வொரு நிறுவனங்களும் புறவாசல் வழியாகவே வருகின்றது . எந்த ஒப்பந்தங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை . அது குறித்து எவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்டால் கூட ஆயுட்காலம் முடிவதற்குள் முழுமையான விபரங்கள் கிடைத்தால் ஆச்சரியமே . அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்குத் தேவை என்பது எத்தனை முக்கியமோ அதே போல் உள்ளே இருக்கும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் இருப்பதும் முக்கியம் தானே .? ஓராயிரம் உள்நாட்டு தொழிலை அழித்து ஒரு பன்னாட்டு நிறுவனம் வளர்க்க நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த அளவுக்கு ஆர்வம் இருக்கக் காரணம் என்னவாக இருக்க முடியும் ? தேசப்பற்று என்று நீங்கள் சொன்னால் உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம் . வேறுவிதமான கற்பிதம் செய்து கொண்டால் அது உங்கள் சிந்தனையின் தவறாகவே இருக்கும் . உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்க . இந்தியாவில் உள்ள பகாசுர நிறுவனங்களின் முழுமையான செயல்பாடுகளும் நமக்குத் தெரிய சில காலம் பிடிக்கும் . தெரிய வரும் போது எதிர்க்க முடியாது . எதிர்ப்பை அடக்க அத்தனை அரசு எந்திரங்களும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் . இது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் உண்மை . தற்போது இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருக்கும் ப . சிதம்பரம் அற்புதமான அறிவாளித்தனமான மற்றொரு திட்டத்தையும் அறிவித்துள்ளார் . பொதுத்துறை நிறுவன பங்குகளைத் தனியாருக்கு விற்று இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தப் போவதாகச் சொல்லியுள்ளார் . அந்தப் பொதுத்துறை நிறுவனம் லாபகரமாக இருந்தாலும் கூட அது குறித்துக் கவலைப்படப் போவதில்லை . மொத்தத்தில் தாங்கள் நினைத்தபடி , தாங்கள் விரும்பிய ஆட்களுக்கத் தற்போது லாபம் ஈட்டிக் கொண்டுருக்கும் நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தாரை வார்த்து விடுவது . பிறகென்ன ? மெதுமெதுவாக அந்த நிறுவனமே தனியார்களின் கைக்கு வந்துவிடும் . ஆனால் தொடங்கும் போது மெதுவாகத் தான் தொடங்குவார்கள் . இதைப் போன்ற ஒரு திட்டம் தான் தற்போது ஒன்று உருவாகிக் கொண்டுருக்கிறது . இங்குப் பேசவிருக்கும் மொத்த திட்டத்தையும் பார்க்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமா ? இல்லை அருகில் உள்ள நாடா ? என்று யோசிக்க வைத்துவிடும் போல . அந்த அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகளுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது . தற்போது ஆண்டுக் கொண்டுருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் , காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் தங்கள் நல்ல செயல்களைத் திட்டமிட்டுச் செய்து கொண்டு வருகிறார்கள் . முதல் முறையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கொள்கையின் மேல் களங்கம் கற்பித்து நீதிமன்றத்தை நாடுவது இது தான் முதல் முறையாக இருக்கக்கூடும் . டெல்லிக்கு தேவையில்லாத மின்சாரத்தைக் கூடத் தமிழ்நாட்டுக்கு தர மனமில்லாத அளவுக்கக் காங்கிரஸ் அரசாங்கம் புத்திசாலிகளால் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது . முடிந்தவரைக்கும் மின்சாரம் முதல் ரயில்வே திட்டங்கள் முதல் அத்தனை விசயங்களிலும் தற்போதைய மத்திய அரசாங்கம் புகுந்து விளையாடிக் கொண்டுருக்கிறது . படத்தை நன்றாகப் பார்த்துவிட்டு மேலே படிக்கத் தொடங்கலாம் . [] இந்திய அரசின் நிறுவனமான கெயில் Gas Authority of India Limited’s (GAIL) ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளது . அதாவது கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரைக்கும் பைப்லைன் மூலமாக எரிவாயு ( கேஸ் ) எடுத்துச் செல்லும் திட்டம் . liquefied natural gas (LNG) இந்தத் திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய் மூலம் நாள்தோறும் 16 MMSCMD (million metric standard cubic metre கொண்டு செல்ல முடியும் . 871 கிலோ மீட்டருக்கு கோவை , திருப்பூர் , நாமக்கல் , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக விவசாய நிலங்கள் , தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கியாஸ் பைப்லைன் கொண்டு செல்லப்படுகிறது . இதற்காகக் கெயில் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நில அனுபவ உரிமையை எடுத்துக் கொள்ளுவதுடன் நிலத்தில் மதிப்பீட்டில் பத்துச் சதவீதத்தை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கும் . பைப் லைன் பதிக்க எடுக்கப்படும் நிலத்தின் இரண்டு பக்கங்களிலும் தலா 10 மீட்டருக்கு இடம் தேவை . ப ைப்புகள் 5 அடி ஆழத்திற்குப் பதிக்கப்படுகின்றன . பைப்பில் விட்டம் 2 அடி ஆகும் . பைப் லைன் அமைக்கப்படும் பகுதியின் மீது பயிரிடுவது , வீடுகள் கட்டுவது , மரம் நடுவது , ஆழ்குழாய் கிணறு தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது . ஆழமாக வேரோடும் பயிர்களைக் கியாஸ் பைப் லைன் செல்லும் பகுதிகளில் பயிரிடக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும் . மேலும் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும் கியாஸ் பைப் லைன் சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுமாம் . கியாஸ் பைப் லைன் அமைக்க உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்ட மசோதா படி பைப் லைன் அமைக்க நிலத்தை ஒப்படைக்கும் விவசாயிகளே கியாஸ் பைப் லைன் களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டுமாம் . பொறுப்பற்ற தன்மையா ? இல்லை எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்கள் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ என்பது தெரியவில்லை . மூக்கைத் தொட தலையைச் சுற்றி கையைக் கொண்டு வருவது போல இதன் திட்ட வரைபடங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றது . பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் அந்த அளவுக்கு நொந்து போய் உள்ளார்கள் . இந்தப் பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாயக் கட்டுப்பாடு வரும் . அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது ; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம் ; உழுதல் கூடாது ; மரம் , வீடு , ரோடு கூடாது . அந்தப் பைப்லைனுக்குப் பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு ! எப்படி நியாயம் ?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் ! இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310 கிமீ ; கேரளா , மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ . ஆனால் வரைபடத்தைப் பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும் . அந்தப் பாதையைவிடத் தமிழகப் பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம் . இந்தத் திட்டத்தில் மூன்று மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது . விற்பனையின் மூலம் வருவாய் கேரளாவுக்கு , எரிவாயு சென்றடையும் மாநிலம் கர்நாடகா . ஆனால் இந்தக் குழாய்கள் பதிக்கப்படுவது பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பகுதிகளில் . குறிப்பாகத் திருப்பூர் சார்ந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குத் தான் அதிக அளவு பாதிப்பு உருவாக்கும் . 310 கி . மீ . தூரத்துக்குக் கொண்டு செல்லப்படும் இந்தப் பைப் லைன்கள் , கோவை , திருப்பூர் , ஈரோடு , நாமக்கல் , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 126 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக அமைக்கப்படுகிறது . கோவை மாவட்டத்தில் 15 கிராமங்களு ம் , திருப்பூர் மாவட்டத்தில் 22 கிராமங்களும் , ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்களும் , நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்களும் , சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களும் , தர்மபுரி மாவட்டத்தில் 27 கிராமங்களும் , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களிலும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன . இந்தக் கிராமங்களில் விவசாயிகள் தென்னை , பனை , மரங்களை வளர்க்க முடியாது , பணப்பயிர்களைச் சாகுபடி செய்ய முடியாது , வீடு , கட்டிடம் கட்ட முடியாது , கனரக வாகனங்களை இயக்க முடியாது . இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார உரிமை பறிபோகும் ஆபத்து எழுந்துள்ளது . விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுவதற்குப் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . திருப்பூரிலும் கடந்த 5 மாதங்களாக விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது . காங்கயம தாலுகாவில் கத்தாங்கன்ணி , அவிநாசி தாலுகா சர்க்கார் கத்தாங்கன்னி , ஊத்துக்குளி , பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும நிலை ஏற்பட்டுள்ளது . விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக இப்பகுதியில் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . நிலங்களைத் துண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது . தற்போது எரிவாயு குழாய் அமைக்கும் பணி காரணமாக ஒரு ஏக்கர் , 2 ஏக்கர் நிலங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகி , விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . குழாய்ப் பதிக்கப்பட்ட நிலத்தில் 60 அடிக்கு எந்தப் பணிகளையும் செய்யக் கூடாது என நிபந்தனை உள்ளது . இத்திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதரம் கடுமையாகப் பாதிக்கப்படும் . எனவே நெடுஞ்சாலை ஓரம் , ரயில பாதை ஓரம் அல்லது ஆற்றங்கரை ஓரத்தில் இந்தக் குழாய்களைக் கொண்டு செல்ல வேண்டும் . அமெரிக்கா போன்ற நாடுகளில் நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன . இதனால் இந்தத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் . வீடு , கிணறு , ஆழ்குழாய் கிணறு ஆகியவையும் பாதிப்படைகிறது , இதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது . விவசாயிகள நலன் குறித்து எண்ணிப்பார்க்காமல் , குழாய் அமைக்கும் பணியைத் தொடர்ந்தால் , பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர் . கூடங்குளம் போல இது விஸ்பரூபம் எடுக்குமா ? இல்லை பிணந்தின்னி கழுகுகள் போலக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு நம்முடைய அரசியல் சேகவர்கள் அமைதி காப்பார்களா ? என்று தெரியவில்லை . . இதைப் போலவே மற்றொரு திட்டமும் உருவாகிக் கொண்டுருக்கிறது . சென்னை தூத்துக்குடி இடையே நிலத்திற்கு அடியில் பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணி நடைபெற உள்ளது . மதுரை , திருவண்ணாமலை , சென்னை , திருச்சி , விழுப்புரம் , நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்தத் திட்டம் சுமார் 640 கி . மீ ., தூரம் அமைக்கப்படுகிறது . இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது . இதற்காகச் செயற்கைக்கோள் மூலம் பைப்லைன் செல்லும் திட்டம் வகுக்கப்ட்டது . இந்த திட்டம் செயல்படுத்தும் போது , பைப்லைன் செல்லும் பகுதியில் 100 அடி தூரத்திற்குக் கட்டுமானப்பணிகள் , போர்வெல் பணிகள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படும் / இந்தத் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரியாஜிஸ்டிக் இன்பர்ஸ்டிரக்சர் லிமிடட் நிறுவனம் செய்து வருகிறது . தற்போது மத்திய அரசாங்கம் வெற்றிக் கரமாக நிறைவேற்றியுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் என்பது பல்லாயிரக்கணக்கான நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் இடியாக விழுந்துள்ளது . ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வருடத்திற்கு 8 கேஸ் சிலிண்டர் தேவைப்படும் . வருடந்தோறும் ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் மானிய விலையிலும் அதற்கு மேல் தேவைப்படுவ்தை மானியம் இல்லாத விலையிலும் வாங்கிக் கொள்ள வேண்டும் . தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் ( மானிய விலையில் ) ரூபாய் 400. மானியம் இல்லாமல் வாங்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகும் . இதில் மற்றொரு கொடுமையும் உண்டு . நாம் எப்போது இந்தக் கேஸ் சிலிண்டர் வாங்குகின்றோமோ அப்போது சந்தை நிலவரப்படி விலை ஏற்ற இறக்கம் இருக்கும் . ஒரு பக்கம் அரசாங்க பொதுத்துறை நிறுவனம் மூலமும் அம்பானி நிறுவனங்கள் மூலம் இந்த எரிவாயு குழாய் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து விட்டால் வீடுகளுக்குத் தனியார் மூலமாகத் தேவைப்படும் எரிவாயு எளிதாக வழங்கப்பட்டு விடலாம் . பன்னாட்டு நிறுவனங்களின் வளத்திற்காக விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் அத்தனை பேர்களும் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது கேலிக்குறியாகவே இருக்கின்றது . இதனால் தான் இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுலாலியா தண்ணீரை விற்பனை செய்யும் போது தான் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கவனம் உருவாகும் என்று போகிற போக்கில் தத்துவங்களை உதிர்த்துவிட்டுச் செல்கின்றார் . (30.12.2012) 17 தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று திரும்பும் போது ஏராளமான மாற்றங்கள் என்னுள் உருவாகிவிடுகின்றது . திருப்பூரில் இருந்து காரைக்குடிக்குச் செல்ல மூன்று வழிகளைத் தேர்ந்தெடுக்க முடியும் . திருச்சி , மதுரை , திண்டுக்கல் என்று இந்த மூன்று பெருநகரங்களின் ஏதோவொன்றின் வழியாகத்தான் சென்று திரும்ப முடியும் . ஏறக்குறைய ஆறு மாவட்டங்கள் வழியே பயணித்துத் திரும்பி வரும் போது தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளின் வளர்ச்சியை , மாற்றங்களை உணர வாய்ப்பாக இருக்கின்றது . இதற்கு மேலாக வருடந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் ஊர்ப்பக்கம் உள்ள செய்திகளையும் உள்வாங்க முடிகின்றது . எப்போதும் கரூர் தாண்டி பயணிக்கும் போது சற்று நேரத்தில் காவிரி ஆற்றின் குளிர்ச்சி நம்மைத் தழுவத் தொடங்கும் . குளித்தலையை நெருங்குவதற்குள் குளிர் நம் உடம்பை ஊடுருவும் . ஆனால் இந்தப் பக்கம் வறண்டு போய்க்கிடக்கும் நிலங்களில் கண்களுக்கு எட்டிய வரையிலும் எந்த இடத்திலும் தண்ணீர் என்பதே காணவில்லை . குளிர்ச்சியான பசுமை என்பது மாறிப்போய் வறண்ட பாலைவனம் போலவே உள்ளது . வாழையும் , தென்னையும் சேர்ந்து நம்மை வரவேற்கும் காட்சி முற்றிலும் மாறிவிட்டது . வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பச்சை கலந்த நீரை பார்க்க முடியவில்லை . இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் நன்றாக உணரமுடிகின்றது . காவிரிச் சண்டையும் ஓயவில்லை . காவிரித்தாயும் கடிதம் எழுதி களைத்து போய் விட்டார் . வாய்ச்சவடால்களும் , வெட்டி அல்டாப்புகளுமாகச் சேர்ந்து இன்று தமிழ்நாட்டின் முக்கால்பகுதி நிலங்களை முழுமையான சுடுகாடாக மாற்றிக்காட்டியதில் நம் அரசியல் தறுதலைகள் வெற்றியடைந்துள்ளார்கள் என்றே கூற வேண்டும் . ஒவ்வொரு முறையும் இந்தப் பாதையில் செல்லும் போது நூற்றுக் கணக்கான லாரிகள் தான் நம்மை வரவேற்கும் . சாலையிலிருந்து பார்க்கும் போதே மணல் லாரிகளின் வரிசைகள் கண்களுக்கு எட்டிய வரையிலும் வரிசை கட்டி நிற்கும் . சுரண்டிப் போட்ட தரையினால் இலகுவாக வளர்ந்தவர்களின் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை உணர்ந்து கொண்டே வெறுமையான மனதோடு பயணித்துக் கொண்டிருந்தேன் . ஆனால் இந்த முறை லாரிகளைக் கூடக் காணவில்லை . மணல் இருந்தால் தானே அள்ளுவதற்கு . மழை பெய்தால் கூடத் தண்ணீர் எங்கே நிற்கும் ? கழிவு நீராகத்தான் பயணிக்கும் . எவருக்கும் அக்கறையில்லை . அது குறித்து யோசிக்கக்கூட இங்கே எவருக்கும் நேரமும் இல்லை . கடந்து போகும் பாதையில் பார்த்துக் கொண்டே வரும் ஒவ்வொரு நகருக்கும் வெவ்வேறு இலக்கணம் இருக்கின்றது . அந்தப் பகுதியின் வாழ்க்கை முறை , பேச்சு என்று எல்லாவிதங்களிலும் வினோத கலவையோடு இருந்தாலும் மாறி வரும் நாகரிக உலகில் எல்லோருக்கும் ஒரு பொதுவான அம்சம் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்து வைப்பதாகத் தெரிகின்றது . பணம் சம்பாரிப்பதற்கான தேவையும் , அது குறித்த பேச்சும் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றது . பெருநகரங்களைத் தாண்டியதும் தெரியும் பொட்டல்காடுகளின் விஸ்தீரணம் மலைப்பை உருவாக்கினாலும் எந்த விஞ்ஞான மாற்றமும் இந்த நிலத்தைப் பயன்படுத்த முடியாமல் வைத்துள்ளதே என்று யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது . எப்பொழுதே படித்த இஸ்ரேல் சொட்டு நீர் பாசனம் முதல் தண்ணீர் தேவைப்படாத விவசாய வழிமுறைகள் என்று எத்தனையோ எழுத்தின் வழியே படித்திருந்த போதிலும் எந்த மாற்றமும் தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதர்களிடம் இன்னமும் வந்து சேரவில்லையே என்ற ஆதங்கம் மனதில் வந்து போய்க் கொண்டேயிருந்தது . குறுகிய வட்டத்திற்குள் தான் இங்கே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . எண்ணங்கள் விரிவடையவில்லை . நாம் வாய்ப்புகளைத் தேடிப்போவதும் இல்லை . தேடி வந்தாலும் ஆதரிப்பவரும் எவரும் இல்லை . எப்போதும் ஒரு பயமும் , அவநம்பிக்கையும் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டே இருப்பதால் நெருஞ்சி முள் கணக்காக ஏதோவொன்று ஒவ்வொருவர் எண்ணங்களிலும் குத்திக் கொண்டேயிருக்கின்றது . நகர்ப்புற மனிதர்களிடத்தில் உரையாடல் கலை அற்றுப் போனாலும் சிறு நகரங்களில் இருந்து பயணிக்கும் மனிதர்கள் இன்னமும் பேசத்தான் விரும்புகின்றார்கள் . அவர்கள் அறிந்ததைத் தைரியமாகக் கூச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றார்கள் . நாம் தான் புத்திசாலித்தனத்தை வைத்தே மற்றவர்களை எடைபோட கற்றுக் கொண்டிருக்கின்றோம் . புத்திசாலித்தனம் என்ற பெயரில் குறுகிய மனப்பான்மையை வளர்க்க விரும்புகின்றோம் . குறுக்குப் புத்தியை ஆதரிக்கின்றோம் . அது போன்று இல்லாதவர்கள் இங்கே லட்சக்கணக்கில் இங்கே அமைதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் இங்கே முக்கால்வாசி கிராமத்து வாசிகளின் வாழ்க்கை இதயத்தை வைத்து தான் இயங்கிக் கொண்டிருப்பதால் மனிதாபிமானம் இன்னமும் மறைந்து விடாமல் தான் இருக்கின்றது . உறவுகள் என்ற வார்த்தை இன்னமும் இருக்கின்றது . ஆனால் அது உருக்குலைந்து போவதற்கான காரணங்கள் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது . அண்ணன் தம்பிகள் , அக்கா தங்கைகள் என்று தொடங்கி மற்ற அத்தனை உறவுகளிடத்தில் பணம் என்ற பிசாசு ஆழமாக ஊடுருவிக் கொண்டேயிருப்பதால் ஒவ்வொரு நிலையிலும் அச்சமும் ஆயாசமும் கலந்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது . உறவுகள் என்பது சின்னச் சின்னச் சங்கிலி என்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு முனையிலும் இந்தப் பணம் சார்ந்த எண்ணங்கள் தினந்தோறும் ஆசைகளை வளர்த்துக் கொண்டேயிருக்கின்றது . இதுவே எண்ணங்களை மெதுமெதுவாகத் துருப்பிடிக்க வைத்து பலரின் தூக்கத்தையும் தொலைத்துக் கொண்டேயிருக்கின்றது . ஆனால் ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் . எத்தனை குறைபாடுகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் பயணங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக எளிதான விசயம் என்பதாக மாறியுள்ளது . கடந்த நாலைந்து வருடத்திற்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் அழகான தேசிய நெடுஞ்சாலைகள் இங்கே ஒவ்வொரு பகுதிகளையும் இணைத்துக் கொண்டேயிருக்கின்றது . நாம் பயணிக்கும் போது பெருநகரங்களுக்குள் வரத் தேவையில்லை . உங்கள் வாகனங்கள் உங்களின் பயணத்தை இலகுவாக மாற்றிச் சென்றடையும் தூரத்தை எளிதாக்கி விடும் . அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் இந்தத் தேசிய நெடுஞ்சாலைகள் லட்சக்கணக்கான மரங்களைக் காவு கொடுத்து நமக்கு இந்த வசதிகளைத் தந்துள்ளது . கடந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்த , படித்த ஒவ்வொரு பத்திரிக்கையின் முக்கியமான விளம்பரமாக இருந்த தனியார் கல்விக்கூடங்கள் தான் செல்லும் பாதையில் இருமருங்கிலும் உள்ளது . நகர்ப்பகுதிகளைத் தாண்டியதும் கண்ணுக்கு எட்டிய வரையிலும் பொட்டல்காடுகளாகக் காட்சியளிக்கின்றது . ஆனால் திடீரென்று ஒரு கல்விக்கூடம் கண்ணுக்குத் தெரிய ஒரு சிறிய நகர் அதனைச் சுற்றிலும் இருக்கின்றது . மீண்டும் பொட்டல்காடுகள் . விலை நிலத்தில் முளைக்கும் மாணவர்கள் வளர்க்கும் அறிவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றார்கள் . நான் சந்தித்த ஆசிரியர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் . இந்த முறை நாமக்கல்லில் நடந்து முடிந்த பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு குறித்துப் புலம்பித் தீர்த்து விட்டார் . நாமக்கல்லில் உள்ள தனியார் கல்விக்கூடங்கள் குறித்து ஏராளமான செய்திகளைப் படித்துப் படித்து எவருக்கும் புத்தி வந்தபாடில்லை . காரணம் மதிப்பெண்கள் என்பது இங்கே ரொம்பவே முக்கியம் . எத்தனை காரணங்கள் அறிவுரைகள் சொன்ன போதிலும் மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையின் அச்சாரமாக இருப்பதால் ஒவ்வொருவரும் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக் கொண்டு விடுகின்றார்கள் . 2013 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கிய போது நாமக்கல் பள்ளிகளில் நம்முடைய கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் திடீரென்று சோதனைகள் நடத்தி பல பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களை அதிரடியாக வேறு பக்கம் தூக்கியடித்தார்கள் . இது பலமுறை தொடர்ந்து நடந்த போதிலும் தனியார் பள்ளிகள் தான் இறுதியில் ஜெயித்தன . தமக்கு ஒத்து வருகின்ற ஆசிரியர்களை வரவழைத்துத் தேர்வு நடக்கும் மையங்களைக் காபி விற்கும் மையங்களாக மாற்றினார்களாம் . நேர்மையான அதிகாரிகள் மேலும் கெடுபிடியாக்க அதிலும் ஒரு சிறப்பான உத்தியை கடைபிடித்தார்களாம் . அறிவியல் பாடங்களில் உள்ள ஒரு (ONE MARK QUESTIONS) மதிப்பெண் வினாத்தாளை தேர்வு மையத்தில் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் தங்கள் கைபேசி வழியாகப் படம் பிடித்து அது குறிப்பிட்ட அலைபேசிக்கு செல்ல அவர்கள் அதற்கான பதிலை மீண்டும் அதே அலைபேசி வழியாக அனுப்ப ஏறக்குறைய அந்தக் குறிப்பிட்ட மதிப்பெண்கள் வாங்க கடுமையாகப் பாடுபட்டனராம் . காரணம் இங்கே கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது மிக முக்கியம் என்பதால் தேர்வு எழுதிய ஒவ்வொரு கட்டையும் கரிகட்டையாக இருந்த போதிலும் இறுதியில் வென்றவர்களாக மாறினார்களாம் . சட்டமன்றத்தில் பாலபாரதி அவர்கள் கூட இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாகப் பேசிப் பார்த்தார் . இங்கே பணம் பெரிதா ? கொள்கை பெரிதா ? என்று பார்த்தால் இறுதியில் எல்லா இடங்களிலும் பணம் தான் ஜெயிக்கின்றது . இந்த முறை எந்த மாணவனைக் கேட்டாலும் 90 சதவிகிதம் என்பதை மிகச் சர்வசாதாரணமாகச் சொல்ல நம் தமிழ்நாடு அறிவுடையவர்களின் தேசமாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து நாம் ரொம்பவே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும் . ஆனால் நம்முடைய கல்வி அமைச்சர் இந்த முறை தேர்ச்சி சதவிகிதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று மறைமுகக் கட்டளை கொடுத்ததை வைத்து அதன் வழியே வினாத்தாளை திருத்திய ஆசிரியர்களை இங்கே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது . அரசாங்க பள்ளிகள் அதளபாதாளத்திற்குச் சென்று விட வருடந்தோறும் புதுப்புது கல்வித்தந்தைகள் இங்கே வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள் . (05.06.2013) 18 நீயும் பொம்மை நானும் பொம்மை [] ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள் , நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய்க் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள் , ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்புப் பத்திரிக்கைகளுக்குத் தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாகத் தேவைப்டுகின்றது , பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் , தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு , முடியும் போது பரபரப்புச் செய்திகள் , நம்பியவ்ர்களுக்கு ? ஒன்றை மறக்க மற்றொன்று , அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாகத் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது , தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்கச் சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள் , இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது , இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது , வாங்கிவிட்டீர்களா ? என்று கத்தி நமது செவிப்பறையைக் கிழித்துச் செவிடர்களாய் மாற்றிக் கொண்டுருக்கிறார்கள் , வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது , கடினமான விசயத்தைக் கொடுத்தால் பக்கத்தை நகர்த்திச் சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்குச் சந்தனம் பூசிக் கொண்டுருக்கிறார்கள் . அவளின் காண முடியாத மார்பை கனவுகளில் தேடிக் கொண்டுருக்கின்றோம் , நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது , திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காகக் கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும் , கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்குக் கலைக்கு வேலையில்லை . சதைக்குத் தான் வேலை . ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளைக் கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாகப் புரியும் , கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளைச் சுருட்டி சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தைத் திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள் . நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டுருக்கும் பி . ஆர் , பி , நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டுருக்கிறது , இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது , தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்தக் கனிம வள துறை தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் , சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும் , ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டுருக்கிறது , அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாக இருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா ? இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டுருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா ? ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டுருப்பாரா ? அமைச்சராக வந்தாலே போதும் ? கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலிதனத்தின் வெளிப்படாக மாறிவிடுகின்றது , இன்று சூறாவளியாகச் செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றிக் கலைஞருக்குத் தெரியாதா ? இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டுருக்கும் ஜெ , வுக்குத்தான் தெரியாத விசயமா ? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்தக் கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும் , நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்குக் கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ ? இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும் , ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படிக் கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்குத் தெரியாமலா போயிருக்கும் , ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது , உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது , அதிலும் இந்தியாவில் இந்தப் பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது , திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி , ஆடுக்களைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள் . அது அமைச்சராக இருக்கலாம் , ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டுருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம் , மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலை படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது , காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது , அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை , அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது , காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான் , ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போலப் படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர் , மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது , காரணம் படிப்பவர்களும் , பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது , நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாகச் சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும் , நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நாலு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம புண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது , நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும் , மீதி நாட்கள் எரிச்சலிலுமாய்க் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே , நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டுருக்கிறது , நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாகத் தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாகக் கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை , ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை , அவர்கள் முன்னால் நாம் கௌரவமாகத் தெரிய வேண்டாமா ? என்று யோசித்து யோசித்துக் கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய்க் கடனாளியாக மாறி இங்குப் பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது , தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன் , அவனைச் சரிக்கட்ட நினைப்பவன் கருப்புப் பணத்தைக் கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன் , பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாகப் பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும் , அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும் , அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும் , பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது , இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்கப் பொம்மையாய் காட்சிகளைக் கண்டு நகர்ந்து விடுவது உத்தமம் , (27.08.2012) 19 தண்ணீரில் விளையாடிய நாடுடா இது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் தான் நான் பார்த்த காட்சிகள் ஆச்சரியமளித்தது . தண்ணீர் பாட்டிலை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருந்தது . பேரூந்தோ அல்லது ரயிலோ பெருநகரங்களைத் தாண்டும் போதே ஒவ்வொரு விசயத்திலும் சில மாறுதல்களைக் கூர்மையாகக் கவனிக்கும் போது புரிந்து கொள்ள முடியும் . இந்தப் பக்கம் உள்ள மக்கள் வீட்டில் இருந்து தங்களுக்குத் தேவையான தண்ணீரை எடுத்து வந்து விடுகின்றனர் . நான் பார்த்த எவர் கையிலும் ‘ பிராண்ட் ‘ பொறித்த தண்ணீர் பாட்டில் இல்லை . நகர்புறங்களில் வாழும் மனிதர்களிடத்தில் , இரண்டு கைகளைப் போல வேறு இரண்டு சமாச்சாரமும் கட்டாயம் இருக்கிறது . ஒரு கையில் கைப்பேசி மற்றொரு கையில் தண்ணீர் பாட்டில் . ஓட்டாமல் பிறந்த இரட்டையர்கள் போலவே இவையிரண்டும் தற்போதைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக இருக்கிறது . கொறிக்க … சுவைக்க … என்பது போலப் பேச … குடிக்க … என்பது தான் தற்போதைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது . . சிறு நகரங்களில் பெப்ஸி , கோக் என்பதும் இன்னும் அதிக அளவு ஊடுருவ இல்லை . மனிதர்களின் மனோபாவம் என்பது மாறிக் கொண்டுருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் செலவழிக்கும் பணத்தைக் கணக்கு பார்த்து தான் செலவழிக்கிறார்கள் . அவசரம் , அவசியம் , அத்யாவஸ்யம் போன்ற வித்யாசங்களை உணர்ந்தே வாழ்கிறார்கள் . மற்ற மாநிலங்களில் எப்படியோ ? தமிழ்நாட்டில் தண்ணீர் என்பது இன்று லாபம் கொழிக்கும் வியாபாரம் . சென்னையில் மட்டும் ஒரு நடுத்தர வர்க்கம் வாழ்வதற்காக மாதம் தோறும் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் தொகை 3,500 ரூபாய் . காரணம் குடும்பமே விலைக்கு வாங்கித் தான் தங்கள் குடிதண்ணீர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் . சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான் பார்த்த கடையில் இரண்டே இரண்டு சமாச்சாரங்கள் தான் அதிக அளவு இருந்தது . அதுவே தான் அந்த ஒரு மணி நேரம் முழுக்க அதிக அளவு விற்பனையும் ஆனது . சிப்ஸ் வகைகள் மற்றும் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள் . அதுவொன்று இதுவொன்று என்று அள்ளிக் கொண்டு செல்கிறார்கள் . வினோதமான காலசக்கரத்தில் நாம் பயணித்துக் கொண்டுருக்கின்றோம் . . எது தேவையோ அது முக்கியத்துவம் இல்லாமல் தெருவுக்கு வந்து கிடக்கிறது . எது வாழ்க்கைக்குத் தேவையில்லையோ அதுக்குத் தான் விளம்பரங்கள் மூலம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது . ஆசைகளுக்கு மேலும் மெருகேற்றப்படுகின்றது . அவசியமான விசயங்கள் விவாத பொருளாக மாற்றப்படுகின்றது . தங்கம் விலையைச் செய்திக்குப் பின்னே சொல்லும் ஊடகம் அரிசி விலையைப் பேசுகின்றதா ? நாம் உண்ணும் உணவுக்கு முக்கியத் தேவை அரிசி . ஆனால் அது இன்று விலையில்லா அரிசி என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகின்றது . அதன் அருமையை உணராமல் கோழிக்குப் பயன்படுத்த போய்க் கொண்டுருக்கிறது . தக்காளிக்கு விலையில்லை என்று மயானத்தில் போய்க் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள் . ஆனால் திடீரென்று இதே தாக்காளி ஜிவ்வென்று பறக்கும் . ரசம் வைப்பதை மற்நது விடுவோம் . அப்போதைக்கு உண்டான பிரச்சனை . அடுத்தப் பிரச்சனையை நோக்கி நகர்ந்து போய்விடுவதால் எதுவும் எளிதில் நம்மைப் பாதிப்பதில்லை . சென்னையில் நண்பருடன் பேசிக்கொண்டுருந்தேன் . அவர் தந்தைக்கு இதய நோய் பிரச்சனை . வயதான காலத்தில் பெரிய அளவுக்குச் சிகிச்சை வேண்டாம் என்று மருத்துவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா ? ரேசன் அரசியைச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் . வினோதமாக இருக்கிறதா ? உண்மைதான் . நாம் வாங்கும் அரசியில் உள்ள அத்தனை சத்துக்களையும் பாலீஷ் செய்து பளபளப்பு என்பதற்காக அரைத்து ரகம் என்ற பெயரில் விற்கிறார்கள் . கடைசியில் எந்தச் சத்தும் இல்லாத சக்கையைத்தான் அரிசி என்ற பெயரில் உண்ணுகின்றோம் . மருத்துவர் சொன்னபடி நண்பரின் தந்தை மட்டுமல்ல குடும்பமே இன்று ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுகிறார்களாம் . இதயப் பிரச்சனையில் உள்ள தந்தையும் நலமாகத்தான் இருக்கிறார் . ஆனால் தற்போதைய நமது வாழ்க்கையின் முக்கிய நோக்கமே சுவை தான் . அதுவும் பளபளப்பாக இருக்க வேண்டும் . ஒவ்வொரு பொருளிலும் விதவிதமான சுவைகளைத்தவிர நமக்கு வேறெதும் முக்கியமில்லை . வந்து கொண்டுருக்கும் அத்தனை விளம்பரங்களையும் உற்றுக் கவனித்துப் பாருங்கள் . இரண்டு விசயங்களை முன்னிறுத்துவார்கள் . கிருமியில்லா வாழ்க்கை . சுத்தமான வாழ்க்கை . இது அவர்கள் பாணியில் ஆரோக்கிய வாழ்க்கை . இந்தச் சோப்பை ,, பற்பசையை , வாயக் கொப்புளிக்க வாங்குங்க என்று சொன்னால் கூடப் பரவாயில்லை . வாங்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா ? என்று பயங்காட்ட கிராபிக்ஸ் கிருமிகளைக் காட்டுவார்கள் . வாயில் கொஞ்சமாவது கிருமியிருக்க வேண்டும் . வயிற்றில் சிறிய அளவிலாவது குறிப்பிட்ட புழுக்கள் இருக்க வேண்டும் . உடம்பில் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாகத் துடைத்துக் கழுவி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்குப் பெயர் உடம்பல்ல . வேறு பெயரைத் தான் சூட்ட வேண்டும் . ஊரில் உறவினர் வீட்டில் குழாய் நீரைத்தான் அப்படியே பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள் . பயத்தோடு கேட்டேன் . சுருக்கமாகச் சொன்னார்கள் . “ பயம் தான்டா எல்லா நோய்க்கும் காரணம் .” உண்மைதான் . பயம் , கோபம் , பொறாமை , சுயகௌரவம் , தற்பெருமை இந்தப் பஞ்சபாணடவர்களைப் பற்றித் தெரியுமா ? இதய நோய் எந்த ஏழைக்கும் வருவதில்லை . மன அழுத்தம் அடித்தட்டு மக்களுக்கு வருவதில்லை , விளிம்பு நிலை மனிதர்கள் பொறாமை படுவதில்லை . அன்றாடங்காச்சிகளுக்குச் சுய கௌரவம் பற்றித் தெரிவதில்லை . பணம் குறைவாகத்தான் இருக்கும் . ஆனால் மனம் முழுக்க எப்போதுமே மகிழ்ச்சியாகத் தான் இருக்கும் . தெருவில் வாழ்ந்து தெருவிலே புரண்டு கிடக்கும் எந்தக் குழந்தைக்கும் ஏன் பெரிய நோய்கள் தாக்குவதில்லை . காரணம் எதிர்ப்பு சக்தி உள்ளூற வலுவாக இருப்பதால் எப்போதும் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை . நாம் தான் அத்தனை எதிர்ப்பு சக்திகளையும் சுத்தமாகத் துடைத்து வா … வா .. என்று அத்தனை நோய்களையும் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறத்தானே செய்கின்றோம் . தென்னக ரயில்வே ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு வைத்திருக்கும் விலை 8.50. விற்க வேண்டிய விலையின் அளவு 12 ரூபாய் . ஆனால் இது எப்படி மாறுகின்றது தெரியுமா ? அவசரம் இல்லாமல் நிதானமாக வந்து கேட்டால் 12 ரூபாய் . சற்று அவசரமாய் வந்து கேட்கும் போது 15 ரூபாய் . ரயில் நடைமேடையில் இருந்து நகரப்போகின்றது என்கிற நிலையில் போய்க் கேட்கும் போது 20 ரூபாய் . நம் அவசரம் தான் கடைக்காரருக்கு முக்கியம் . நமக்கோ குறிப்பிட்ட அந்தப் பிராண்ட் மட்டும் தான் முக்கியம் . விலையென்பது ஒரு பொருட்டே அல்ல . உள்ளேயிருக்கும் தண்ணீருக்குப் பெயர் மினரல் வாட்டர் . ஆனால் உண்மையிலேயே வைக்க வேண்டிய பெயர் மைனஸ் வாட்டர் என்று தான் வர வேண்டும் . நாம் சாப்பிடும் அரிசி மற்றும் தண்ணீரைப் பற்றி எப்பொழுதாவது யோசித்து இருக்கீங்களா ? அம்மாவிடம் இனிமேலாவது சாப்பாத்தி சாப்பிடு என்றால் கொலவெறியோடு என்னைப் பார்க்கிறார் . “ ஒரு வாய் கஞ்சி போதும்டா .. உன்னோட சாப்பாத்திய நீயும் உன்னோட பிள்ளைகளும் தின்னுங்க ” என்பார் , அம்மாவுக்கு அறிவுரை சொல்லும் எனக்குச் சாதம் இல்லாவிட்டால் கோபம் தலைக்கேறுகிறது . குழந்தைகள் விதவித ருசிகளை விரும்பினாலும் சாதம் என்பது சாகாவரம் போலத்தான் அவர்களுக்கும் இருக்கிறது . இன்று உருப்படியான அரிசியின் விலை 40 ரூபாய் . இதுவே ஒரு வருடம் பழையது . 6 மாதம் பழையது என்ற பெயரில் தான் சந்தைக்கு வருகின்றது . ஆனால் மாதம் மாதம் விலையேறிக் கொண்டுருக்கின்றேதே என்று வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள் . இரண்டு மாதம் தொடர்ந்து அந்த மூட்டையைப் பிரித்து வெயிலில் காய் வைக்காமல் இருந்தால் கெட்டுப் போன அரிசியின் நிறமும் தரமும் மாறியிருக்கும் . காரணம் அந்த லட்சணத்தில் தான் இன்றைய அரிசி இருக்கிறது . உரத்தை கொட்டி கொட்டி நமக்கான ஆரோக்கியத்தை இன்றைய விவசாயம் தந்து கொண்டுருக்கிறது . இந்த அரிசி தான் பாலீஷ் செய்து செய்து பளபளப்பாக உங்கள் கண்களைப் பறித்து இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கேட்டு வாங்கித் தின்னத் தோன்றுகின்றது . அரிசியில் இருக்கும் மொத்த சத்துக்களையும் அரைத்து மில்காரர்கள் தவிடாக மாற்றி விட்டுக் கடைசியாக அரிசி என்ற பெயரில் ஒரு உருவத்தைக் கொடுக்க நாமும் மாட்டைப்போல விதி வந்தால் சாகலாம் என்று தின்று முடிக்கின்றோம் . வெற்றிகரமாக மன்மோகன் சிங் விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு மானியம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் அளிக்க ஒப்புதல் அளித்து உள்ளார் . உரத்தின் விலை ஏறி விடும் . ஆனால் விவசாயிகள் பாதிக்கபடக்கூடாதாம் . ஆகவே மானியம் என்பதை விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கி விடுகிறார்களாம் . அதாவது நீ உரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது மறைமுகக் கட்டளை . பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனையில்லை . காரணம் அந்த நிலத்தில் எதுவும் முளைக்காது . ஏற்கனவே மலடாக இருக்கும் நிலத்தில் ஏதேவொரு உரத்தை கொட்டினால் மட்டும் தான் பயிரின் பச்சை என்பதையே பார்க்க முடியும் . இந்தியாவின் இயற்கை விவசாயத்தை வளர்த்தால் என்னவாகும் . பன்னாட்டு எஜமான்கள் மன் மோகனை பின்னி பெடல் எடுத்து விடுவார்கள் . அவரவர் பாடு அவரவருக்கு . இப்படித்தான் இப்போதுள்ள மினரல் வாட்டர் கதையும் . ஆயுர்வேத மருத்துவத்தில் பழைய கஞ்சியை நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள் . மணிக்கணக்கான வைத்து சாப்பிடுவ்து முதல் சில நாட்கள் வைத்து சாப்பிடும் கஞ்சி வரைக்கும் அதன் மருத்துவக் குணத்தைப் பிரித்துள்ளார்கள் . அவர்கள் சொன்னது இப்போதுள்ள அரிசியின் அடிப்படையில் அல்ல . கடற்கரையில் விற்கப்படும் சுண்டக்கஞ்சி என்பது கூட இன்னும் கூடுதலாகச் சில நாட்கள் வைத்திருந்தால் அதுவே விஷம் . இதைப் போலத்தான் நாம் அருந்தும் தண்ணீரும் . மருந்துகளுக்கெல்லாம் தாத்தா ஒன்று உண்டு என்றால் அது தண்ணீர் மட்டும் தான் . தண்ணீரில் இல்லாத மருத்துவக் குணமே இல்லை . மனித உடம்புக்கு நீரே ஆதாரம் . மினரல் என்று சொல்லக்கூடிய அத்தனை தாது பொருட்களும் ஒரு சேர இருப்பது இந்தத் தண்ணீர் ஒன்றில் மட்டும் தான் . ஆனால் நாம் வாங்கும் தண்ணீரில் உள்ள அத்தனை சத்துக்களையும் சுத்தம் என்ற பெயரில் எடுத்து விட்டு தான் அதைப் பாட்டிலில் அடைத்துத் தருகிறார்கள் . தண்ணீரின் எந்தக் குணமும் இருக்காது . குடித்தால் தாகம் கூட அடங்குவதில்லை . இந்தத் தண்ணீருக்குத் தான் தமிழ்நாடு தற்போது பாடுபட்டுக் கொண்டுருப்பதைப் பார்க்கும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது . நன்றாக வாசிக்கவும் . வருத்தமாக இல்லை . காரணம் நாம் செய்த செய்து கொண்டுருக்கும் விளைவுகளைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம் . தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வியாதிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை எதிரியாகப் பாவித்து முடிந்தவரைக்கும் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டுருக்கிறார்கள் . ஆனால் இந்த இரண்டு மாநிலங்களையும் பார்த்து தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் . அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒற்றுமையைப் போல இங்குள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம் . நம்மவர்கள் சாவு வீட்டில் கூடக் காசு பார்ப்பவர்கள் . மாயனத்தில் ஊழல் செய்து காசு பார்க்கும் நம் அரசியல்வாதிகளிடம் நீங்கள் எது சொன்னாலும் எடுபடாது .. எஸ் . எம் . கிருஷ்ணா அமைச்சராக இருந்து கொண்டு அவர் மாநிலத்திற்குச் சாதகமாக இப்படிச் சொல்லிட்டாரே ? என்று அங்கலாய்த்துக் கொள்கின்றோம் . அப்படி அவர் சொல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்குள் அவர் அடி எடுத்து வைக்க முடியாது . காரணம் எதிர் கருத்து பேசி விட்டு உள்ளே நுழைய முடியாது . இடி போல விழும் ஒவ்வொரு அடியும் . அவர்கள் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்காகக் கூத்துக் கட்டி ஆடிக் கொண்டுருக்கிறார்கள் என்றாலும் நாம் காவேரி நீரை எப்படிப் பாதுகாக்கின்றோம் தெரியுமா ? காவேரி தலைக்காவிரியில் உருவாகின்றது என்பது அணைவருக்கும் தெரிந்ததே . ஆனால் கர்நாடக அரசாங்கம் இந்தக் காவேரி நீர் வரும் பாதையில் எந்தத் தொழிற்சாலைகளையும் செயல்பட அனுமதிக்கவே இல்லை . ஏறக்குறைய ஓகேனக்கல் வரைக்க்கும் இப்படித்தான் . இந்தப் பகுதியில் ஓடி வரும் காவேரி நீரை பன்னீர் என்று சொல்லலாம் . நீரில் பார்த்தால் நம் முகம் தெரியும் . ஆனால் தமிழ்நாட்டுக்குள் வந்து விட்டால் இந்தக் காவேரியை நம்மவர்கள் கற்பழித்துக் கதற அடிக்கின்றார்கள் . இந்த வார்த்தை எழுத வருத்தபடவில்லை . காரணம் ஈரோடு பக்கம் வருவ்தற்குள் இந்தத் தண்ணீர்படும் பாடு இருக்கிறதே ? உன்னால நான் கெட்டேன் . என்னால நீ கெட்டாய் என்று திருப்பூரும் ஈரோடும் போட்டிக் போட்டுக் கொண்டு வாழ முடியாத நகரமாக மாறிக் கொண்டுருக்கிறது . சுற்றியுள்ள அத்தனை பகுதிகளுக்கும் இந்த விஷம் பரவி கொண்டுருக்கின்றது . காவேரி வரும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம் , நஞ்சன் கோடு , திருமுக்கூடல் நரசிபுரம் போன்ற சிறு நகரங்களாக இருக்கட்டும் , அல்லது பாதைகளில் உள்ள மற்ற சிறு ஊர்களாக இருக்கட்டும் . எந்தக் கழிவையும் இந்தத் தண்ணீரில் திறந்து விட முடியாது . கர்நாடக மாநிலத்தின் சட்டம் தன் கடமையைச் செய்து விடும் . ஆனால் திருப்பூருக்குள் இருக்கும் கொடுமையும் , மழை பெய்து விட்டால் சாயப்பட்டறை முதலாளிகள் கொண்டாடும் சந்தோஷத்தையும் காண கண்கள் கோடி வேண்டும் . அடித்துக் கொண்டு வரும் வெள்ளத்தில் அத்தனை சாய நீரையும் திறந்து விட்டு விடலாம் அல்லவா ? அது தான் இங்கே நடந்து கொண்டுருக்கிறது . இதைப் போலத்தான் தமிழ்நாடு முழுக்க உள்ள ஆற்றின் நிலவரம் இருக்கிறது . கழிவுகளைக் கொட்ட , கழிவுகளைக் கொண்டு போய்ச் சேர்க்க என்று மாறி மாறி ஒவ்வொரு ஆற்றின் சுகாதாரத்தையும் நாம் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்டுருக்கின்றோம் . . நான் எங்கள் கிராமத்தில் பார்த்த கண்மாயில் நீர் இல்லை . வறண்டு போய்க் கட்டாந்தரை போல இருக்கிறது . சும்மா இருப்பார்களா ? அருகே ப்ளாட் போட முயற்சித்துக் கொண்டுருக்கிறார்கள் . முடிந்த வரை களி மண் தாண்டி கட்டாந்தரை வரைக்கும் மண் எடுத்து விற்பனை கண ஜோராக நடந்து கொண்டுருக்கிறது . விவசாய நிலங்களை ப்ளாட் போட்டு விற்பதில் மற்ற மாநிலங்களைத் தமிழ்நாடு தான் முதன்மையாக இருக்கும் போல . காவேரி நீர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் நில நீர் ஆதாரத்தை எப்படி வைத்துள்ளார்கள் தெரியுமா ? மணல் மாஃபியா என்பது என்று பல்லாயிரக்கணக்கான கோடிகளைத் தந்து கொண்டுருக்கும் காமதேனு பசுவாக உள்ளது . இதன் காரணமாகத்தான் காவேரி உள்ளே வந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வறண்டு போய்விடுகின்றது . வறண்டு போன நிலங்களைத் தாண்டி இந்தக் காவேரி உள்ளே வருவதற்குள் படாதபாடு பட்டுத்தான் வருகின்றது . நாமும் அடிப்படை ஆதாரங்களைக் காக்க விரும்புவதில்லை . அது குறித்துக் கவலைப்பட நமக்கு நேரமும் இருப்பதில்லை . காசு கொடுத்தால் தண்ணீர் வரும் போது ஆறென்ன குளமென்ன காவேரியென்ன ? காவேரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள் வரும் போதே ரூபம் மாறத் தொடங்குகின்றது . கேரளா எல்லையில் உள்ள கோழிப்பண்ணைகள் கொட்டும் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கலக்கப்படுகின்றது . ஆனால் வளர்க்கப்படும் கோழிகளும் முட்டைகளும் கேரளாவுக்குச் செல்கின்றது . இதனைத் தொடர்ந்து மால்கோ , கெம்ப்ளாஸ்ட் , போன்ற தொழிற்சாலைகளைத் தொடர்ந்து அனல் மின்நிலையம் வரைக்கும் அத்தனை நிறுவனங்களில் இருந்து வெளியாகும் கழிவை சுமந்து வருவது தான் இந்தக் காவேரி தான் . நாசிக் , சூரத் போன்ற ஊர்கள் கூடப் பின்னுக்குப் போய்விட்டது . நம்ம மேட்டூர் தான் இந்தியாவில் மாசடைந்த நகரில் முதலிடத்தில் இருக்கிறது . சுற்றுப்புற பாதுகாப்புக்கு விருது வாங்கிய காகித ஆலையின் அத்தனை கழிவுகளும் இந்த ஆற்றில் தான் கொட்டப்படுகின்றது . திருப்பூரில் உள்ள சாய்ப்பட்டறை முதலைகள் உருவாக்கிய பல சாயப்பட்டறைகள் அத்தனையும் காவேரி வழித்தடத்தில் தான் இருக்கிறது . அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கக் காசு . நாம் எதையும் யோசிக்காமல் இருக்கத் தொலைக்காட்சி . கோவில்களை விடக் கழிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்ன போது பொங்கித் தீர்க்கும் நமக்கு என்ன அருகதை இருக்கிறது ? கோவில்களைக் கூட நாம் சுத்தமாகவா வைத்திருக்கின்றோம் .? நம்முடைய உண்மையான வாழ்க்கை என்பதை அமைச்சர் உணர்ந்து தான் பேசியுள்ளார் . நாம் தான் நாம் வாழும் அத்தனை இடங்களையும் கழிப்பறையாகத்தானே வைத்துள்ளோம் . பாவத்தைச் செய்து கொண்டே பாவத்தைக் கரைக்க ஒவ்வொரு கோவிலுக்கும் படையெடுக்கின்றோம் . கோவிலுக்குள் உள்ளே இருக்கும் ஆண்டவனும் அமைதியாகச் சிரித்தபடியே நம்மைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார் .. வீதி முதல் ஆறு வரைக்கும் அத்தனையையும் நாம் கழிவு கொட்டத்தானே பயன்படுத்துகின்றோம் . கழிப்பறையில் வாழ விரும்பும் நாம் கையில் பாட்டிலை சுமந்து தானே ஆக வேண்டும் . இதை விட மகிழ்ச்சி வேண்டுமா ? (11.10.2012) 20 மாற்றத்திற்கு ஆசைப்படு அனபான வாக்காள பெருமக்களே “ நான் என் குடும்ப வாழ்க்கையை ஒழுக்கத்துடன வாழ்ந்து கொண்டிருப்பவன் . கட்டிய மனைவிக்கும் , பெற்ற குழந்தைகளுக்கும் நல்ல கணவனாக , தகப்பனாக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருப்பவன் . நியாயமான முறையில் தொழில் செய்து அரசாங்கத்திற்குக் கட்ட வேண்டிய வரிகளை முறைப்படி செலுத்தி என் வாழ்க்கையை நேர்மையான முறையில் நடத்திக் கொண்டிருப்பவன் . என் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரம் தன்னிறைவு பெற்றுள்ளது . எங்கள் தேவைகளும் ஆசைகளும் மிகக் குறைவு . எங்கள் சந்தில் வாழும் மக்களுக்கு இத்தனை நாளும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருந்தேன் . பழகிய மக்கள் வற்புறுத்தலின் காரணமாக இப்போது இந்தத் தொகுதிக்கு எந்தக் கட்சியும் சாராத வேட்பாளராக உங்கள் வாக்குகளைக் கேட்டு வந்துள்ளேன் . உங்களுக்குப் பொய்யான வாக்குறுதிகள் எதுவும் தரும் எண்ணமில்லை . உங்களுக்கு இலவசங்கள் கொடுத்து உங்களைச் சோம்பேறியாக்கும் எண்ணம் அறவேயில்லை . கவர்ச்சி அலைக்காக மக்களைத் திரட்ட வேண்டும் என்பதற்காகத் தகுதியில்லாத எந்த நபரையும் இப்போது என்னுடன் அழைத்து வரவில்லை . முழுக்க முழுக்க உங்கள் சிந்தனையில் உருவாக வேண்டிய மாற்றங்களையும் , அவ்வாறு மாற்றங்கள் உருவானால் நமக்குக் கிடைக்கும் லாபங்களையும் விவரிப்பதே என் எண்ணம் . உங்கள் சந்தேகம் எதுவாகயிருந்தால் என்னுடன் தயக்கம் இல்லாமல் உரையாடலாம் . என் தனிப்பட்ட வாழ்க்கை முதல் இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் செய்ய நினைத்திருக்கும் அத்தனை செயல்பாடுகளையும் குறித்து நீங்கள் கேள்வி கேட்கலாம் ” குழப்பாக இருக்கிறதா ? இது போன்று ஒரு வேட்பாளர் பேசிக் கொண்டு உங்கள் முன்னால் வந்தால் நம் மனதில் என்ன தோன்றும் . பிழைக்கத் தெரியாதவன் ? உலகத்தைப் புரிந்து கொள்ளாதவன் ? உச்சி வெயில் சூட்டில் மூளை குழம்பி விட்டதோ ? இது போன்ற அவசர கேள்விகள் இன்றைய சூழ்நிலையில் நம் மனதில் உருவாவது இயல்பே . மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே .. இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட . இத்தனை ஏற்றத்தாழ்வுகள் , மொழிகள் , மதங்கள் , ஜாதிப்பிரிவுகள் , குழப்பங் கள் , போராட்டங்கள் , கொலை , கொள்ளை , கற்பழிப்புகள் , லஞ்சம் , ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்தப் புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும் . பரம ஏழை , ஏழை , அன்றாடம் உழைத்தால் தான் வாழ வேண்டிய வர்க்கம் , நடுத்தரவர்க்கம் , சற்று வருமானம் உள்ள நடுத்தரவர்க்கம் , பணக்காரன் , லாப நட்டத்தால் பாதிப்படையாத பணக்காரர்கள் , ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பணம் படைத்தவர்கள் என்று ஏராளமான சமூக முரண்பாடுகள் உள்ள இந்தியாவில் நாட்டின் நிலம் முதல் நடக்கும் ஊழல் வரைக்கும் எல்லாமே பெரிது . ஆயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் இறந்தால் கூட ஜனத்தொகையின் அடிப்படையில் நமக்கு ஒரு செய்தியாகத் தான் இருந்து தொலைக்கின்றது . இன்று நாம் காணும் இலவசங்கள் மலிந்த தேர்தல் அறிக்கைகள் எரிச்சலை உருவாக்குவதை விடப் பொது மக்களுக்கு அடிக்கடி தேர்தல் வரக்கூடாதா ? என்ற ஏக்கத்தைத் தான் அதிகபடுத்துகின்றது . காரணம் நாம் எதிர்பார்ப்பதும் அதுவே தான் . தற்போது எந்த இடத்தில் எவரைச் சந்தித்தாலும் எந்தக் கட்சியின் சார்பாக எவர் நிற்கின்றார்கள் என்று கேட்டு முடித்ததும் அவரின் செல்வாக்கு , பணபலம் , ஜாதி ரீதியான பலம் போன்றவற்றை அலசத் தொடங்கி விடுகிறார்கள் . பேச்சின் முடிவில் எந்தந்த கட்சிகள் தங்கள் பகுதிக்கு வரும் போது என்னென்ன தருவார்கள் என்பதைப் பற்றி ஆருடம் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள் . குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை மனதில் கொண்டு தங்களுக்குள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள் . முடிந்தவரையிலும் அத்தனை கட்சியிலும் என்னன்ன வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டு என்பதை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள் . ஏன் இத்தனை மாற்றங்கள் ? ஏற்கனவே தேர்ந்தெடுத்தவர் தொகுதிக்காக என்ன செய்தார் ? தாலியை அடகு வைத்து கெஞ்சிக் கொண்டு வந்து நின்றாரே ? இப்போது இவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாரே ? எப்படிச் சம்பாரித்தார் ? இவர் எப்படிச் சட்டத்தில் மாட்டாமல் இருக்கிறார் ? தரங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் இப்படி வெட்கம் இல்லாமல் வந்து நிற்கின்றானே ? இவனைச் சுற்றிலும் எப்போதும் ஒரு வெட்டிக்கும்பல் சுற்றிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து முதல் காலி செய்வது வரைக்கும் செய்து கொண்டு இருந்தார்களே ? ஐயோ , இவர்களைத் தேர்ந்தெடுந்தால் அடுத்த ஐந்தாண்டும் நமக்கு அதோகதிதான் . யாராவது இப்படி யோசித்துள்ளார்களா ? இல்லை எதிரே வந்து நிற்கும் போது அந்த வேட்பாளரிடம் கேட்கும் தைரியம் தான் வருமா ? வராது ? ஏன் ? காரணம் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற இயல்பான குணாதிசியம் மெதுமெதுவாகப் பரவி கொண்டிருக்கிறது . பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூகக் கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் பணம் வைத்திருப்பவன் பரம யோக்கியனாகவும் , இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவனாகவும் ஆகிவிட்டான் . ஒரு நடுத்தர வர்க்கம் பார்வையில் இந்தியாவில் வாழ எந்தப் பிரச்சனையும் இல்லை . எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம் . இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானலும் சுதந்திரமாகப் போகலாம் . நம் கையில் காசு இருந்தால் எந்தத் தொழில் வேண்டுமானலும் தொடங்கலாம் உருவாக்கலாம் வளர்க்கலாம் . மொத்தத்தில் நாம் விரும்பும்படி வாழலாம் . விரைவாக முன்னேற எதை வேண்டுமானாலும் வளைக்கலாம் . கணக்கற்ற பணம் இருந்தால் சட்டத்தின் சந்து பொந்துக்களை உடைக்கலாம் . ஒட்டலாம் . பார்க்க தொலைக்காட்சி உண்டு . அழுது தீர்க்க நெடுந்தொடர் உண்டு . யோசிக்காமல் இருக்க நகைச்சுவை காட்சி உண்டு . இதுவும் வேண்டாம் என்றால் திகட்ட திகட்ட திரைப்படக் காட்சிகளை மட்டுமே கண்டு களிக்க 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் சேனலும் உண்டு . அவன் சரியில்லை என்று இவனும் , இவன் கொள்ளைக்காரன் என்று அவனுமாய் லாவணி பாடும் செய்தி தொகுப்புரைகளும் உண்டு . பல சமயத்தில் இது குறித்தே பேசப்படும் பரப்புரைகளும் உண்டு . இது எதுவுமே வேண்டாம் என்றால் நிம்மதியான டாஸ்மார்க் உண்டு . ஆறுமாதங்களில் இருபது ரூபாய் கூடக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலை எதுவும் நினைவுக்கு வராது . அச்சமூட்டும் விலைவாசி உயர்வு அத்தனையும் மறந்து போயாச்சு . அடித்த கொள்ளையின் எண்களைக் கூட எண்ணத் தெரியாமல் திகைத்த திகைப்பு கூட மாறிவிட்டது . எல்லாவற்றையும் விடச் சொக்கலால் பீடிக்கு லாட்டரி அடித்தவன் சொகுசாய் காரில் வலம் வருவதைப் பற்றி யோசிக்கக் கூட நினைப்பு வரவில்லை . காரணம் இலவசத்தை எதிர்பார்த்து எதார்த்த வாழ்க்கையை விட்டு விட்டு எவன் வருவான் ? எதைத் தருவான் என்று யோசிப்பு மட்டுமே இந்தத் தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு வாக்காளர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதால் . வீடு தேடி வந்து தருபவனைக் கெடுப்பவர்களை அடிக்க ஓங்கும் கைகள் என்றுமே ஒன்று சேராது . காரணம் அவ்வாறு சேரக்கூடாது என்பதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு ஆற்றில் ஓடும் நீரை அம்மா நீ கொஞ்சம் குடி . அய்யா நீ கொஞ்சம் குடி என்று மாற்றி மாற்றிப் பழக்கப்படுத்தியாகி விட்டது . நமக்கு வேறென்ன வேண்டும் ? எது தான் இங்கு இல்லை ? எல்லாமே உண்டு . மொத்தத்தில் எந்தச் சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க , தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான் . யோசித்தால் தான் மண்டையிடி . ஆழ் மனதில் உருவாகியுள்ள அழுக்குகளைச் சுரண்டிப் பார்க்க விருப்பமில்லாமல் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்களைப் போலவே இது தான் சரி என்று வழிநடத்தும் தலைவர்களும் நமக்கு அமைந்திருப்பதால் நம் ஜனநாயகத்திற்கு என்றுமே அழிவில்லை . காரணம் நம் ஆசைகள் அதிகம் . அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு . நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது . தகுதியானவர்கள் நமக்குத் தலைவர்களாக வர வேண்டும் என்று ? (21.03.2011) 21 இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை [] இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த ஏவுகணை கூட ஒரு நாட்டின் குறிப்பிட்ட இலக்கை மட்டும் தான் தாக்கும் . ஆனால் மதம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த நாட்டையும் பற்றியெறிய வைக்க முடியும் . மனிதர்களால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் அணைவருக்கும் பொதுப்படையான வளர்ச்சியைத் தந்தது . ஆனால் இடையே உருவாக்கப்பட்ட மதங்களோ இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுருக்கிறது . ஆனால் இந்திய நாடு மட்டும் இந்த விசயத்திலும் வித்தியாசமானது . மதம் என்ற சொல்லுக்குண்டான வலுவை விடச் சாதி என்ற சொல்லுக்குத் தான் இங்கு வலிமை அதிகம் . சாதி என்ற இந்த ஒரு வார்த்தையின் மூலம் மட்டுமே இன்றைய இந்தியாவையே நிலைகுலைய வைக்கமுடியும் . இந்தியாவை ஆண்டுக் கொண்டுருந்த ஆங்கிலேர்களுக்குக் கடைசி வரைக்கும் ஆட்சி புரிய உதவி புரிந்ததும் இங்கிருந்த சாதி தான் . பிரிக்கப்பட்டு இருந்தார்கள் . கடைசி வரைக்கும் பிரிந்தே இருந்தார்கள் . இன்று வரையிலும் பிரிந்து தான் இருக்கிறார்கள் . சுதந்திரம் வாங்கிய போது காந்தி சொன்ன மைனாரிட்டிகளின் உரிமையும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது . சாதியைப் பற்றிப் பேசுபவர்கள் அடுத்து ஆரம்பிப்பது இந்த மைனாரிட்டிகளின் உரிமை என்பதை இந்திய அரசியல்வாதிகளால் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது . ஆனால் இவற்றையெல்லாம் மற்றொரு பொக்ரான் அணுகுண்டு ஒன்று உண்டு . அது இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றிப் பேசுதல் மற்றும் சாதிவாரியான இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுதல் . இந்த ஒதுக்கீடுகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பற்றி முரண்பாடாகப் பேசினால் போதும் . நாடே பற்றியெறியத் தொடங்கும் . பேசியவரின் தலை இருக்காது . அந்த அரசியல் கட்சியே இல்லாமலேயே கூடப் போய்விடும் . சாதிகள் இல்லையாடி பாப்பா என்று சொன்னவர் பாப்பாவுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைவர்கள் மறந்து விட்டார்கள் . சாதி இன்றும் ஆலமரமாக ஏராளமான விழுதுகளுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறது . இன்று அரசியல் என்ற உரம் போட்டு வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள் . இன்றைய இந்திய அரசியலுக்குச் சாதி தான் உயிர் நாடி . இந்தச் சாதி தான் பதவியைத் தருகின்றது . தந்த பதவியை எடுக்க உதவுகின்றது . தரமுடியாத பதவியைத் தந்தே ஆக வேண்டும் நிர்ப்பந்தம் மூலம் பெற முடிகின்றது . இதன் காரணமாகவே சாதிவாரியான ஒதுக்கீடுகளைத் தாண்டி உள் ஒதுக்கீடு என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம் . இந்திய தலைவர்களில் இந்தப் பொக்ரான் அணுகுண்டின் மேல் ஏறி நின்று பார்த்தவர் முன்னாள் பிரதமர் விபி . சிங் . ‘ மண்டல் கமிஷன் ‘ என்ற ஆயுதம் பூமராங் போலவே அவரை உண்டு இல்லையென்று மாற்றிக் கடைசியில் அவரையே நிலைகுலையவும் வைத்துவிட்டது . இதன் காரணமாகவே எந்த அரசியல் கட்சிகளும் முடிந்தவரையிலும் இந்த ஒதுக்கீடு விசயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள விரும்புவதில்லை . முடிந்தவரைக்கும் எறியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைத் தான் எல்லாக் கட்சிகளும் இன்று வரைக்கும் செய்து கொண்டுருக்கிறார்கள் . [] ஆனால் உருவாக்கப்பட்ட சாதி வாரியான ஒதுக்கீடுகள் இப்போதைய நிலைமையில் உண்மையான நபர்களுக்குத் தான் செல்கின்றதா ? மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் உரியவர்களுக்குப் பயன்படுகின்றதா ? அப்துல்கலாம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ஆனது அவரின் தனிப்பட்ட திறமைகளுக்காக அல்ல . அந்தச் சமயத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தேவைப்பட்ட ‘ மைனாரிட்டிகளின் காவலன் ‘ என்ற பட்டத்திற்காகவே முன்னிறுத்தப்பட்டார் . எந்த நாட்டிலும் இந்த மைனாரிட்டிகளைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை . காரணம் தேர்தல் சமயத்தில் இவர்களின் ஓட்டு தான் முக்கியப் பங்காற்றுகின்றது . ஆனால் அடுத்த முறை காட்சி மாறியது . மைனாரிட்டி என்ற வார்த்தை மாறி பெண்ணுரிமை என்று வர பிரதிபா பாட்டீலுக்கு அடித்தது யோகம் . இந்தியாவில் உள்ள பதவிகளுக்குத் தகுதி என்பது முக்கியமல்ல . சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது . அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானிக்கு இந்திய நாடு கொடுத்த கௌரவம் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் . பிரதிபாவுக்கு என்ன தகுதியிருந்தது ? அவரின் தகுதியைத் தான் அணைவரும் பார்த்து விட்டார்களே ? ஜனாதிபதி மாளிகையில் சுவற்றில் அடித்த சுண்ணாம்புகளைத் தவிர அத்தனையும் பதவி காலம் முடிந்ததும் வெட்கப்டாமல் தனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார் . பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொன்னவர்கள் தான் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய சதவிகிதத்தைக் கொடுக்கவும் மறுக்கின்றார்கள் . காலங்கள் மாறும் போது காட்சியும் மாறுகின்றது . ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளைப் புதுப்பித்துக் கொள்கின்றது . முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பம்பாயில் கலவரம் நடந்து கொண்டுருந்த போது அவரால் அமைதியாகவே இருக்க முடிந்தது . அத்வானி கரசேவையின் மூலம் இந்தியாவை மத அச்சுறுதலுக்கு உரிய நாடாக மாற்றிய போதும் கூட அமைதியாகவே இருக்க முடிந்தது . ஆனால் ஆண்டது காங்கிரஸ் . செய்தது பாரதிய ஜனதா கட்சி . காங்கிரஸ் அமைதியாகத்தான் இருந்தது . இதுவே பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் அதன் முகமே வேறு விதமாக இருக்கும் . எதைத் தொட்டாலும் அதற்கு மதச் சாயம் பூசப்படும் . இன்று வரையிலும் அப்படித்தான் பேசப்படுகின்றது . குஜராத் வரைக்கும் . இங்கு என்ன பிரச்சனை ? என்று எவரும் பார்க்க விரும்புவதில்லை . அது யாரால் என்பது தான் முக்கியமாகப் படுகின்றது . அதை எப்படித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற யோசனை தான் முன் வைக்கப்படுகின்றது . ஆனால் எந்தப் பிரச்சனை என்றாலும் அதை முழுமையாகத் தீர்க்கப்படுவதை எவரும் விரும்புவதிலலை . பாரதிய ஜனதா கூட நாங்கள் முழுமையான இந்துத்துவா கட்சி என்று சொல்வதில்லை . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டிகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று தான் தொடங்குகிறார்கள் . காரணம் பயம் . இந்தியா ஒரு மதச் சுதந்திர நாடு என்று சொல்லியே மங்கிய ஒளியில் காட்டும் உருவம் போலவே பலதும் தெரிகின்றது . யாரும் வெளிச்சத்தில் நின்று உரக்க பேச முடியாத நிலைமைக்கு வந்துள்ளது . இது தான் இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பம்பர் பரிசாக இருக்கின்றது . இந்த மைனாரிட்டிகளுக்கு உரிமை என்ற நோக்கத்தில் தான் பல சட்டதிட்டங்கள் வளைந்து கொடுத்துக் கொண்டுருக்கிறது . இன்றைய கல்வியானது அநேக மைனாரிட்டி நிறுவன பெயரைத் தாங்கிக் கொண்டு வியாபாரமாக மாறிவிட்டது . காரணம் மைனாரிட்டி நிறுவனங்கள் என்றாலே அரசாங்கத்தின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது . அதுவே மெஜாரிட்டி என்னும் போது தனியாக இருக்கின்றது . சாதாரண மனிதர்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனைகளையும் மைனாரிட்டி நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை . அதையும் மீறி முறைப்படி சட்டம் தன் கடமையைச் செய்யும் பட்சத்தில் அதற்கு வேறொரு மூலாம் பூசப்பட்டு நோக்கமே வேறொரு திசையில் கொண்டு போகப்படும் . இதற்குப் பயந்தே பாதி அதிகாரிகள் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள் . இதே மைனாரிட்டி சார்பாகத் தொடங்கும் நிறுவனங்களில் எத்தனை சதவிகிதம் மைனாரிட்டி சமூக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்க்கை தருகிறார்கள் . பட்டியலிட்டு பார்த்தால் அவரவர் பணச் சம்பாத்தியத்திற்கு மட்டும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டுருப்பது புரியும் . சாதியோ , மதமோ எதுவானாலும் அரசியல் தலைவர்களுக்குக் காசே தான் கடவுளடா ? இதன் தொடர்சசியாகத் தான் இன்று மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை என்ற நோக்கத்தில் ஒரு சட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது . உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருக்க , இந்தப் பஞ்சாயத்தில் இனி நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை என்று இந்திய அரசு தனது அரசியல் சாசன சட்டத்தையே மாற்றப் போகின்றது . அதாவது ஒதுக்கீடு மூலம் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அரசுபணியில் இன்று எளிதாக நுழைந்து விட முடிகின்றது . வாழ்க்கையில் மற்றவர்களைப் போல அவர்களும் சரிசமமாக உயர வேண்டும் என்று ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது . கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் அத்தனை துறைகளிலும் இந்த இன மக்களுக்காகப் பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்து கொண்டுருக்கிறது . ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை . இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இவர்களின் பதவி உயர்வு ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்படுகின்றது எனற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது . உத்திரப்பிரதேச நவீன புரட்சித்தலைவி மாயாவதிக்கு இதுவொரு ஆயுதமாகவும் கனவாகவும் இருந்தது . இன்றைய சூழ்நிலையில் அவரது கட்சி தலைகுப்புற கிடந்தாலும் அவரே அங்குள்ள மொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகராக இருப்பதாகப் பரப்பப்படுகின்றது . ஆனால் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருந்த போது இந்த இன மக்களுக்கு இவர் உருப்படியாக என்ன செய்தார் தெரியுமா ? உத்திர பிரதேசத்தில் அவர் ஊரெங்கும் உருவாக்கிய அவர் கட்சியின் சின்னமான யானை சிலைகளைத் தான் காட்ட முடியும் . அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில கட்சிகளும் , சாதி ரீதியான கட்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களின் காவலன் என்ற பட்டத்தைப் பெற முடிந்தவரைக்கும் முயற்சி எடுத்து வந்தது . இன்று அரசியல் சாசன திட்ட மாறுதல் வரைக்கும் வந்து நின்றுள்ளது . தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அந்தத் துறையில் உச்சகட்ட பதவி உயர்வு வரைக்கும் வரும் அளவுக்கு உண்டான அங்கீகாரத்திற்கு அனுமதி கொடுத்து நிறைவேற்றி உள்ளது . அதாவது குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் போது அவருக்குண்டான பணி சார்ந்த திறமைகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை . அவர் இன்ன சாதி என்ற நோக்கம் ஒன்றே அவருக்குப் பதவி உயர்வை தந்து விடும் . இது தான் இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன் . அண்ணல் அம்பேத்கார் தொடங்கி வைத்த பயணம் இது . தலித் மக்களின் தலைவர் என்று கொண்டாடப்படும் இந்தத் தலைவர் பெற்ற கல்வியறிவு என்பது அன்றைய காலகட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத சாதனை . கல்வியறிவு பெற்று இருந்த போதிலும் கூடத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாடுபட்ட விதம் தான் குறிப்பிடத்தக்கது . அடக்குமுறை , ஒடுக்குமுறை , அவமானங்கள் அத்தனையும் தாண்டி வந்த சாதித்த சாதனைகளின் விளைவுகளைத் தான் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் சுகவாசியாக அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள் . ஆனால் தங்களின் உண்மையான விடுதலையென்பது கல்வியின் மூலம் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது . இந்தியா சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாகக் கடந்து வந்து விட்டோம் . இந்த 66 ஆண்டுகளில் ஒவ்வொரு 20 ஆண்டுகளாகக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்த இன மக்களில் மூன்று தலைமுறையாகக் கல்லூரி வரைக்கும் வந்தவர்கள் மிகக் குறைவே . குடும்பச் சூழ்நிலை , பொருளாதாரக் காரணங்கள் என்று எத்தனை அடுக்கிப் பார்த்தாலும் தங்கள் வாழ்க்கையை அரசாங்கம் கொடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மேலே வந்து இருக்க வேண்டும் . இன்றைய உண்மையான நிலை என்ன ? ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் வளர்ச்சி பெற்று பெரிய தொழில் அதிபராக இருக்கிறார் . மற்றொருவர் கல்வியின் மூலம் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கிறார் . ஒருவர் இதே அரசாங்கத்தில் கடைநிலை ஊழியராக இருக்கிறார் . இது அரசாங்கம் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலே வந்தவர்கள் . நிச்சயம் இவர்களின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு தனது தலைமுறைகளின் வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு போக முடியும் . இதைப் போலவே கூலி வேலை செய்து கொண்டுருப்பவர்களும் , அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் எனத் தனியான வாழ்க்கை முறையில் வேறொரு கூட்டமும் வாழ்ந்து கொண்டுருக்கிறது . இவர்களுக்கு இரண்டு பிரச்சனைகள் . பொருளாதார வாழ்க்கையும் சுகமாக இருக்காது . தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களைத் தாண்டியும எதுவும் செய்து விட முடியாது . பெரும்பாலான கிராமங்களின் இன்று வரையிலும் இது தான் நடந்து கொண்டுருக்கிறது . இவர்களின் தலைமுறையும் வேறுவழியே தெரியாமல் இதே பாதையில் தான் வாழ்ந்தாக வேண்டும் . இது தவிர இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் நடுத்தர வர்க்கம் . மேலே சொன்ன மூன்று கூட்டத்திற்கும் இந்த இட ஒதுக்கீடு ஒரே மாதிரியான பார்வையில் தான் வைக்கப்படுகின்றது . அதிகாரியின் மகன் பெற்ற ஒதுக்கீட்டின் காரணமாக வசதியற்ற குடும்பத்தில் உள்ளவனுக்கு எதுவும் போய்ச் சேர்வதில்லை . இது தவிர ஒரு குடும்பத்தில் ஐந்து பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றது . இட ஒதுக்கீடு மூலம் பெற்ற வாழ்க்கைத் தரம் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது . சாதி என்பதே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தப்படுகின்றது . பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த எவருக்கும் மனம் இருப்பதில்லை . மொத்தத்தில் முறைப்படியான பங்கீடுகள் இல்லை . சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேரவும் இல்லை . மீண்டும் மீண்டும் அதே சுழல் . அதே வாழ்க்கை . அதே கொடுமை . வர்க்கப்போராட்டத்தின் அரிச்சுவடியான “ வசதியானவர்கள் விட்டுத் தருவதில்லை . வாய்ப்பு கிடைக்காதவன் அடித்துப் பிடுங்குவதும் தவறில்லை ” என்கிற நிலைக்குத் தான் இப்போதுள்ள இட ஒதுக்கீடு அழைத்துச் சென்று கொண்டுருக்கிறது . பள்ளியில் சலுகை , பள்ளி முடித்த போது கல்லூரியில் சேர சலுகை . கல்லூரி முடித்த போது அரசு பணியில் சேர சலுகை . பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வில் சலுகை . இப்போது கூடுதலாகக் குறிப்பிட்ட துறையில் உச்சத்தைத் தொடும் அளவுக்குப் பணித்திறமைகளுக்கு அப்பாற்பட்டுத் தனிச் சலுகை . இன்றும் சாதீய கொடுமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை . அதைப் போல அரசாங்கம் கொடுத்த சலுகைகளைப் பயன்படுத்தி மேலே வந்தவர்கள் அத்தனை பேர்களும் அவர்கள் அடைந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் தருகிறார்களா ? குறைந்தபட்சம் தங்களது இன மக்களுக்காகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அடுத்தவர் மேலேற உதவுகின்றார்களா என்பது தான் இன்று வரையிலும் கேள்விக்குறியாக இருக்கிறது . இன்றும் பார்பனீயம் என்ற வார்த்தை இந்தியாவில் விடாது துரத்தும் கருப்பாக இருப்பதைப் போலவே உயர்படிப்பில் காட்டும் பாரபட்சம் என்பதில் தொடங்கி உள்ளூர் கிராமங்களில் தேர்ந்தெடுத்த தலித் பஞ்சாயத்துத் தலைவர்களைப் பணியாற்ற விடாமல் தடுப்பது வரைக்கும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது . உண்மையான காரணங்கள் எத்தனை இருந்தாலும் இதில் உளவியல் காரணமும் இருக்கின்றது . 3000 வருடங்களாக இந்தியாவில் நடந்து வந்த கொடுமை இது . இன்று வரையிலும் மனிதர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை . ஆண்டாண்டு காலமாகத் தங்களைப் பார்த்து வணங்கிய கூட்டம் இன்று வசதியாகத் தங்களை மாற்றிக் கொள்ளும் போது உருவான ஆதிக்கதீ உள்ளுற கொளுந்து விட்டு எறிந்து கொண்டு தான் இருக்கிறது . நாடாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் இன்று பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது . பணம் இருந்து விட்டால் பதவி வந்து விடுகின்றது . பதவி வந்து விட்டால் பழையவை மறக்கப்படுகின்றது . கடந்து வந்த பாதையை மறக்கும் போது தனக்குப் பின்னால் கண்ணீர் வடித்துக் கொண்டுருப்பவர்கள் எவரும் கணகளுக்குத் தெரிவதில்லை . சரி , உதவிகள் தான் செய்யவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து மேலே வந்தவர்களின் வாழ்க்கையோ முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது . படித்து மேலே வருபவர்கள் எவரும் நான் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதே இல்லை . முடிந்தவரைக்கும் தன் இடத்தை , தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தான் விரும்புகிறார்கள் . படித்தவர்கள் , படித்துக் கொண்டுருப்பவர்கள் , பணியில் சேர்ந்தவர்கள் , வாழ்வில் உயர்ந்தவர்கள் என்று தெரிந்த வட்டத்தில உள்ளவர்களைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் அவர்களின் உறவினர்களுக்குக் கூட உதவி செய்யாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் . மற்ற காரணங்களை விட இது தான் முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் இருக்க முக்கியக் காரணமாக இருக்கின்றது . சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல . தான் உணர்வது . தான் உணர்ந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது தான் அதுவொரு உருவமாக மாற்றப்படுகின்றது . உணரும் போது தான் உண்மையான சுதந்திரத்தின் அருமை தெரியும் . உணரவும் தெரியாமல் ஒதுங்கவும் முடியாமல் இன்றைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சி வினோத கலவையாக இருக்கிறது . ஒரு சிலையை உடைத்து விட்டார்கள் என்று எழுச்சியோடு கூடும் கூட்டம் தங்கள் இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தேவை என்பதற்காக அதிக எழுச்சியோடு போராட்டம் செய்வது குறைவாகத்தான் இருக்கின்றது . எங்கள் பக்கம் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை என்று கதறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் , தகுதி பார்த்துத் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை . வலியோடு அதிகம் வாழ்பவர்கள் தாங்கள் செய்யும் சிறிய தவற்றின் வலிமை அடுத்தப் பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படுகின்றது . தகுதியான தலைவர்கள் உருவாகாமல் போனதற்கு இதுவே முக்கியக் காரணமாக இருந்து விடுகின்றது . இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த மக்களை வெறும் உணர்ச்சிக்கூட்டமாகவே வைத்திருக்க முடிகின்றது . இன்று வரையிலும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க இடங்கள் பெரும்பாலான சதவிகிதம் வருடந்தோறும் நிரப்பப்படாமல் தான் இருக்கின்றது . காரணம் கல்வியில் அக்கறையின்மை . தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு எவர் வந்தாலும் ஏற்றுக் கொண்டு கண்மூடித் தனமாக ஆதரவு அளிப்பது என்பது வரைக்கும் போய்க் கொண்டே இருப்பதால் தன்னலமற்ற ஒரு தலைவர் கூட இந்த இன மக்களுக்கு அமையவே இல்லை என்பது தான் உண்மை . முறையான தகுதியுள்ளவர்களுக்கும் இதன் காரணமாகவே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது . [] தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பொதுப்பபடையாகச் சொல்கின்றோமே தவிர அதற்குள் இருக்கும் அத்தனை பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சேராமல தனித்தனி தீவுகளாகத் தான் இருக்கிறார்கள் . அதற்குள்ளும் நான் பெரியவன் . நீ எனக்கும் கீழே என்ற ஆதிக்க உணர்வு தான் இன்னமும் இருக்கிறது . பார்ப்னீயத்தைக் கேலி செய்து கொண்டே தங்களையும் ஒரு பார்ப்னீய பாதையில் தான் கொண்டு போய்க் கொண்டுருக்கிறார்கள் . இந்திய அளவில் , தமிழக அளவில் அத்தனை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களும் இன்று வரையிலும் தேவதூதர்களாகத்தான் இருக்கிறார்கள் . கலவரம் உருவாவதற்கும் காரணமாக இருப்பவர்கள் அத்தனை பேர்களும் கலவரம் அடங்கி உயிர்பலியை வேடிக்கைப் பார்க்கத்தான் வருகிறார்கள் . அதுவரையிலும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் . பள்ளிக்கூடப் பாடங்களில் முதல் பக்கத்தில் நாம் பார்த்த படித்த வரிகள் மிக முக்கியமானது . தீண்டாமை பாவச் செயல் . தீண்டாமை ஒரு பெங்குற்றம் . தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் . ஆனால் இப்போது நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு . தெளிவற்ற ஒதுக்கீடு பாவச் செயல் , தேவையற்ற ஒதுக்கீடு ஒரு பெருங்குற்றம் . தகுதியானவர்களை ஒதுக்குவது மனிதத்தன்மையற்ற செயல் . (05.09.2012) 22 தர்மபுரி - வன்முறையும் வன்மமும் [] நீங்கள் யார் பக்கம் ? இன்று நாடுகள் முதல் வீடுகள் வரைக்கும் கேட்கும் கேள்வியிது ? யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது . பலசமயம் இது தான் எதார்த்தம் என்பதாகச் சமாதானபடுத்திக் கொண்டே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது . ஆனால் சாதி குறித்து யாரிடமாவது கேட்டுப் பாருங்க . நேரிடையான பதில் வராது . அவர்களின் உண்மையான முகமே அப்போது தான் நமக்கு வெளியே தெரியும் . ஒரு மனிதனின் உண்மையான ரூபம் எப்போது தெரியும் ? அவன் வேலையில் சேரும் போது தொடங்கும் . அவன் திருமண வாழ்க்கை தொடங்கும் போது உறுதிப்படும் . குழந்தைகள் வளரும் போது மெருகேறும் . குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு முயற்சிகள் தொடங்கும் போது தான் அவனில் உள்ள அத்தனை மிருகங்களும் வெளியே தெரியும் . ஆனால் நடந்து முடிந்த தர்மபுரி சாதிக்கலவரத்தில் பெண்களும் கூடப் பங்கெடுத்து முடிந்தவரைக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று சுருட்டியிருப்பதைப் பார்க்கும் போது தான் ஆதிக்கம் என்பதையும் தாண்டி அருவெறுப்பு என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது . கடந்து வந்த தமிழர்களின் வரலாற்றில் இந்தச் சாதி என்ற ஒற்றை வார்த்தையினால் மட்டும் உருவான கலவரங்களும் , வாழ்க்கை இழந்தவர்கள் , இறந்து போனவர்கள் , நிர்கதியாக்கப்பட்டு மூலைக்குத் தள்ளப்பட்டவர்களின் பட்டியலின் நீளம் அதிகம் . [] குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான சிறிய பெரிய கலவரங்கள் தோன்றினாலும் பத்து வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் அல்லது உருவாக்கப்படும் இந்தச் சாதி ரீதியான கலவரங்கள் அடக்குறையின் உச்சம் என்பதை விட ஆதிககம் செலுத்த முடியாதவர்களின் வன்மத்தின் வடிகாலாகத்தான் இருக்கின்றது . மலத்தைக் கரைத்து ஒரு மனிதனின் வாயில் ஊற்றி கொக்கத்தரிவர்களின் ஆழ்மனம் குறித்த பார்வையை நாம் எந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியும் .? பெற்ற மகள் என்றும் பாராமல் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காகவே கொல்லத்துடிக்கும் அந்த மகாபாவியை எப்படி அழைப்பீர்கள் ? உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையிலும் மனம் என்பது ஒரு பொக்கிஷம் . ஆனால் கட்டுத்தளைகளை உடைத்து வெளியே திரியும் போது அதுவொரு புதைபொருள் . உங்களால் முழுமையாக உங்கள் மனத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போனால் சாகும் வரையிலும் மனித வடிவில் மிருகத் தன்மையோடு வாழ வேண்டியிருக்கும் . ஆதிக்கம் செலுத்த விரும்புவர்களும் , வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுமென இங்கே பலரும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . சமூகத்தின் முக்கியச் சீரழிவுக்கு இவர்களே முக்கியக் காரணமாக இருக்கிறார்கள் . பட்டங்கள் , பதவிகள் , கௌரவம் என்று எத்தனை விதமாக வெளியே தெரிந்தாலும் சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள் . அவர்கள் வாயிலில் வடியும் ரத்தக்கறை சுவைத்தும் அடங்காதவர்களாகத்தான் சமூகத்தில் இருக்கிறார்கள் . தொடக்கத்தில் உருவான தீண்டாமை என்பதன் முழு அர்த்தமும் இப்போது முற்றிலும் மாறிப் போயுள்ளது . மாறியுள்ளதே தவிர உள்ளே உள்ள வன்மம் மட்டும் குறைந்தபாடில்லை . ஒதுக்கப்பட்டவர்கள் , ஒதுங்கி வாழ வேண்டியவர்கள் என்று அழைக்கப்பட்ட அத்தனை பேர்களின் சமூக வாழ்க்கையின் தன்மையும் இன்று மாறித்தான் வந்துள்ளது . இது பெற்ற உரிமைகளினால் அல்ல . மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலை . இதனோடு விரைவாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களினால் மட்டுமே இதன் எல்லைகள் உடைபட்டுக் கொண்டே போகின்றது . எந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் சாதி பார்ப்பதில்லை . அந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு உள்ளே அந்த எண்ணம் இருந்தாலும் எளிதில் உடைத்துவிட முடிகின்றது . திறமை முக்கியம் . அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் அதைவிட முக்கியம் . [] பொருத்திக் கொண்டால் பொறுமைசாலியாக வாழ்ந்தால் வாழ்க்கையின் அடுத்தபடிக்கு எளிதாக நகர்ந்துவிடலாம் . உண்மையான முழுமையான மாற்றங்கள் இன்னமும் எட்டப்படாத நிலையிலும் கூடப் பலருக்கும் உருவாகிக் கொண்டிருக்கும் மாறுதல்களை ஏற்றுக் கொள்ள மனமில்லை என்பதும் உண்மையே . இவன் இந்தச் சாதியில் பிறந்தவன் . இவன் இப்படித்தான் இந்த வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்ற எல்லைக்கோடு உடைபடத் தொடங்கிய போதே பலரின் வெறுப்பு அணையாத நெருப்பு போலவே உள்ளேயே புகையத் தொடங்கியது . சாதி என்ற வார்ததை என்பது அடித்தளமாகவும் பொறாமை என்பது அதன் மேல் இருக்கும் கொடூர பகுதியாகவும் மாறத் தொடங்கியது . தொடக்கத்தில் உருவான அடிமை முறைகள் உருவானதற்கு முக்கியக் காரணம் தீண்டாமை அல்ல . அடிமைகளை வைத்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள என்பதற்காக மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் . பொன்னாசை , மண் ஆசை பொருள் ஆசை வளர வளர ஒவ்வொருவரின் முகமும் பல்வேறு விதங்களில் வெளிப்படத் தொடங்கியது . அன்று அடிமை . இன்று சாதி . அன்று உரிமை என்ற வார்த்தையே இல்லை . இன்று இருக்கிறது . ஆனால் அதை எதிர்பார்க்கக்கூடாது . மொத்தத்தில் குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட சமூகம் தன்னை மறந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் . இது தான் இதற்குள் இருக்கும் முழுமையாக அர்த்தம் . பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் . பலதரப்பட்ட மனிதர்களுக்குச் சேரியில் வாழும் மனிதர்கள் . சேரிகள் உடைபட்டு சேதி என்ன தெரியுமா ? என்று கேள்விகள் வரும்போது தான் கலவரமாக வெடிக்கின்றது . இது தான் நாம் பெற்ற வளர்ச்சிகளினால் கிடைத்த வித்தியாசம் . மாறிவரும் நகரமயமாக்கல் வாழ்வின் சூத்திரத்தை முடிந்தவரைக்கும் உடைத்துக் கொண்டே வந்தாலும் மாறவே மாட்டேன் என்பவர்கள் இன்று வரையிலும் பெரும்பான்மையாக இருப்பதால் உருவாக்கும் ஆத்திரம் மட்டுப்படுவதே இல்லை . அதில் ஒரு காட்சி தான் சமீபத்தில் நாம் கண்ட தர்மபுரி கலவங்கள் . ஒவ்வொருவரும் சாதியினால் பிரிக்கப்பட்டு வாழ்ந்தாலும் பொருளாதார முன்னேற்றங்கள் சாதியினால் வருவதல்ல . உழைப்பும் சேரும் போது தான் உருவாவது . இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது . [] நம் முன் கை கட்டி நிற்க வேண்டியவர்கள் இப்படி வளர்ந்து விட்டார்களே என்ற ஆதங்கம் எரிச்சலாக மாறி , பொறுமையுடன் கூட வன்மமாக உருவாகி சமயத்திற்காகக் காத்திருக்க வைத்திருக்கின்றது . தேடித்தேடி ஒவ்வொரு முறையும் இந்த மக்களின் வாழ்க்கை சூறைகாற்றில் சிக்கியதாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது . பொருளாதாரப் பார்வையில் நாம் பார்க்கும் ஏழைகள் பணக்காரன் என்ற இந்த இரு பிரிவைப் போல மற்றொரு பிரிவும் இயல்பாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது . சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் , செலுத்த முடியாதவர்கள் . இந்த இரண்டு கோட்டுக்குள் தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டியிருக்கிறது . சாதி என்பது ஒரு முலாம் போலப் பூசப்பட்டு அதற்கு வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டுக் கொண்டே வரப்படுகின்றது . பாதிப்பு என்பது ஒரு பக்கம் மட்டும் உருவாவதல்ல . கலப்புத் திருமணங்கள் இது போன்ற கலவரத்திற்குக் காரணம் என்று சொன்னாலும் சமூகச் சீர்கேட்டையும் இவர்கள் உருவாக்குகிறார்கள என்றொரு மறு பக்க காரணமும் நாம் ஆழமாக உள்வாங்க வேண்டும் . மிரட்டியே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் , மிரட்டித்தான் பார் பார்க்கலாம் என்ற சொல்லும் இந்த இரு பிரிவு மக்களும் முடிந்தவரைக்கும் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் . உண்மையான காரணங்கள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் இருப்பது மொத்தத்தில் பொருளாதாரம் சார்ந்தது தான் என்று நமக்குத் தெரிந்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை . நன்றாகச் சமூகத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள் . பொருளாதார ரீதியாக வளர்ந்த மனிதர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துவது சாதி அல்ல . பணம் தான் பிரதானமாக இருக்கிறது . இந்தப் பணம் தான் கடைசி வரையிலும் அனைத்தையும் தீர்மானிக்கின்றது . சாதிகள் குறித்து நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள் . ஒரு இழுவையோடு தான் பதில் வரும் . படித்தவர் , பண்பாளர் , நாலும் தெரிந்தவர் , மதங்களைக் கடந்தவர் , இறை மறுப்பு கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று எத்தனை வட்டங்களை உடைத்து வாழ்ந்தாலும் உள்ளூர ஏதோவொரு முலையில் இந்தச் சாதி குறித்த எண்ணங்கள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றது . சிலருக்கு ரணமாக , சிலருக்குக் காயமாக . பலருக்கும் சீழ் பிடித்த புண்ணாக இருக்கிறது . ஆற்றவும் தெரியாமல் அகற்றவும் முடியாமல் அவஸ்த்தையோடு தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . [] இங்கே ஒவ்வொரும் விரும்பியே தான் இந்தச் சாதி வளர்ந்தது , வளர்கின்றது . வளர்ந்து கொண்டே இருக்கவும் போகின்றது . உண்மையான காரணங்களை நீங்கள் உரத்து பேச முடியாது . காரணம் நீங்கள் ஓரங்கப்பட்டப்படுவீர்கள் அல்லது ஒழிக்கப்படுவீர்கள் . சமீபத்தில் தர்மபுரியில் நடந்த கலவரமென்பது நம்மைப் பொறுத்தவரையிலும் ஒரு நிகழ்வு . இன்னும் சில மாதங்கள் கழிந்தால் ஆமா .. அந்தக் காதல் திருமணத் தம்பதிங்க தானே … என்று அடுத்தச் செய்திக்கு தாண்டிவிடுவோம் . தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்த ஒவ்வொரு சாதி ரீதியான கலவரங்களும் இப்படித்தான் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது . இந்தக் கலவரத்தினால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்குச் சிறிது காலம் தான் பிடிக்கும் . ஆனால் உருவாக்கப்பட்ட மிரட்டல் தான் இங்கே முக்கியமாகப் பேசப்பட வேண்டும் என்று தோன்றுகின்றது . சாதிகள் குறித்துப் பேசும் போது இங்கு ஒவ்வொருவரும் உருவான வரலாற்றை , உருவாக்கியவர்களை மட்டும் தான் பேச விரும்புகிறார்கள் . ஆனால் எவரெல்லாம் விரும்பி கடைபிடிக்கின்றார்கள் என்பதைப் பற்றி மறந்தும் கூடப் பேசுவதில்லை . இன்று வரையிலும் நீ இப்படித்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு வருபவர்கள் யார் ? இந்தச் சாதியைப் பற்றிப் பேசுபவர்கள் தவறாமல் குறிப்பிடும் ஒரு வார்த்தை தான் பிராமணியம் . ஆனால் இந்தச் சாதி வேரை மரமாக்கி விழுதுகள் விடுமளவிற்கு வளர்த்தது யார் ? இன்று காய் கனியாகப் பூத்துக் குலுங்குவதையும் , கவனமாகத் தண்ணீர் ஊற்றி பாதுகாத்துக் கொண்டிருப்பதும் யார் ? வர்ணாசிரம்ம தத்துவங்கள் இந்தக் கொடுமைகள் உருவாக்கியது என்று சொல்பவர்களின் குடும்பத்தில் பார்த்தால் அந்தத் தத்துவம் சொன்ன பூஜை புனஸ்காரங்கள் என்று கனஜோராக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது தெரியும் . நமக்குக் கிடைத்த வழிகாட்டிகள் அத்தனை பேர்களின் குடும்பப் பெண்கள் பின்பற்றும் இறையியல் தத்துவங்களைத் தடுக்க முடியாமல் சமூகத்தைத் திருத்த நினைக்கும் சமூகப் போராளிகளைத் தான் நாம் பெற்றுள்ளோம் . அவர்களின் வார்த்தைகளை நம்பித் தான் இன்று பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்க்கை அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றது . அறிவுரைகள் என்பது காலம் காலமாக அடுத்தவர்களுக்கு மட்டும் தானே ? சாயங்கள் உதிர மூன்று துருவங்களை அலசி காயப்போட வேண்டும் . ஆன்மீகம் , அரசியல் , மாற்றம் வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும் சமூகப் போராளிகள் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகம் சம்மந்தபட்ட மடங்கள் அனைத்தும் பழமைவாத ஆன்மீகவாதிகளிடம் சிக்கி தானும் வாழத் தெரியாமல் மடங்கள் உருவாக்கிய கொள்கையைப் பின்பற்ற வழியும் தெரியாமல் அறக்கட்டளை என்ற பெயரில் தான் நடந்து கொண்டு இருக்கிறது . ஒவ்வொரு மடங்களும் என்ன செய்தது ? என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் கடைசியில் அது அசிங்க கதைகளின் உச்சகட்டமாகத்தான் இருக்கிறது . மதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரிவினைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை . அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்த அக்கறையில்லை . பணம் படைத்தவர்களின் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டிய ஒரு கிட்டங்கியாகத்தான் தற்போதைய அனைத்து மடங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு மடத்திற்கும் ஒவ்வொரு கொள்கை . தின்று கொழுத்து ஏப்பத்தோடு வாழ்ந்து கொண்டுருக்கும் இவர்களின் வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மறைக்கப்பட்ட ஒன்று அல்லது மறந்து போன ஒன்று . மக்களிடையே பிரிவினைகள் நாளுக்கு நாள் வளர வளர இது போன்ற மடங்கள் இன்று வரையிலும் வலுவிழந்து கொண்டிருப்பது கண்கூடு . ஆனால் அந்த மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை . பிரிவினைகள் வளரத்தானே செய்யும் . வளர வளரத்தான் இவர்களின் வாழ்க்கையும் வசதியாக இருக்கும் . . எல்லா மக்களும் மடத்திற்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பெயர் சந்தைக்கூடமாக மாறிவிடும் என்பது இவர்களின் அசைக்கமுடியாத எண்ணமாக இருப்பதால் இன்று வரையிலும் சமயத்தில் உள்ள அத்தனை மடங்களிலும் போடப்படுகின்ற சாம்பிராணி புகையில் பார்ப்பதைப் போல ஒவ்வொன்றும் மங்கலாகத் தெரிகின்றது . எல்லாமதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது . இன்று இதன் மூலம் ஆதாயம் தேடுபவர்கள் முதல் இதனை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் வரைக்கும் ஓங்கி முழங்கும் எந்தக் கொள்கைக்குப் பின்னாலும் ஆத்ம ரீதியான புரிதல் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா ? அரசியல் மூலம் வகுக்கப்பட்ட கொள்கையில் மூலம் கிடைக்க வேண்டிய உரிமைகளும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை . கிடைத்தாலும் வெறுமனே கண்துடைப்பாக இருப்பதால் உண்மையான நீதி கிடைப்பதற்குள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பரலோகம் செல்வது தான் நடந்து கொண்டிருக்கிறது . அரசியல் என்ற போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் பகடைக்காய் போலவே இந்த இன மக்கள் நடத்தப்படுகிறார்கள் . உரிமைகளைப் பற்றிப் பேசக்கூடாது . புரிந்து கொள்ளக்கூடாது என்பதாகத்தான் ஒவ்வொரு முறையும் கவனமாகக் காய் நகர்த்தப்படுகின்றது . அதற்குள் அடுத்த ஆட்சி வந்து விடும் . மறுபடியும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும் . ஆனால் ராஜ்ஜியத்தை ஆள வந்தவர்கள் வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டுவதோடு அவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள் . ஆனால் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட சமூகப் போராளிகள் , சாதி சங்கங்கள் , சாதி தலைவர்கள் என்று வருகின்ற , உருவாகின்ற அத்தனை பேர்களும் காலப் போக்கில் அரசியல் என்ற பள்ளத்தில் விழ வேண்டியவர்களாகத்தான் அவர்களின் பயணம் முடிகின்றது . இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மறுக்கப்பட்ட பல உரிமைகள் குறித்து இப்போது பேசவாவது முடிகின்றது . ஆனால் அந்த உரிமைகள் மறுக்கப்படும் போது குறிப்பிட்ட சிலரிடம் தான் இந்த இன மக்கள் தங்களை அடகு வைக்க வேண்டியிருக்கிறது . அவர்களும் தங்களின் சுய லாப அரசியல் வளர்ச்சியை மனதில் கொண்டே ஒவ்வொரு முறையும் பந்தாடி இந்த மக்களைப் பாதாள குழியில் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள் . பொருள் செய்யப் பழகு என்றார்கள் . ஒருவனின் பொருளாதாரம் என்பது அது வெறுமனே பொருள் சார்ந்த விசயம் மட்டுமல்ல . உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்ககூடியது . உரிமைகளை உங்கள் அருகே வரவழைப்பது . கண் அசைவில் காரியம் செய்ய முடியும் என்று உணர வைப்பது . எல்லைகளைத் தகர்த்து எறிய வைப்பது . ஆனால் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி என்பது அது கல்வியோடு சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையாக இருக்கும் பட்சத்தில் தான் நீடித்து நிற்க முடிகின்றது . தற்போதைய சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு சட்டங்களின் மூலம் எவரும் எந்த இடத்தையும் அடைய முடியும் . வழியெங்கும் முள் பாதைகளால் இருந்த வாழ்க்கை இன்று மாறியுள்ளது . இன்னமும் புறக்கணிப்பு என்பது பல இடங்களில் இருந்த போதிலும் அது எத்தனை நாளைக்கு இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி . ஒருவன் முறைப்படியான பெற்ற கல்வி என்பது எந்த அளவுக்குத் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்தும் என்பதற்கு அண்ணல் அம்பேத்கார் தான் மிகச் சிறந்த உதாரணம் . தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் அணியும் ஆடைகளைக் குறியீடாக மாற்றியவர்கள் இரண்டு பேர்கள் . ஒருவர் மகாத்மா காந்தி . அடித்தட்டு மக்களும் நானும் சமம் என்பதைப் போலக் கடைசிக் காலம் வரைக்கும் அவர் உடுத்திய உடைகள் மூலம் இந்தச் சமூகத்திற்குக் குறியீடாக விளங்கினார் . நாங்களும் கோட் சூட் போட்டு கணவான் போல வாழ முடியும் என்பதை உணர்த்திக் காட்டினார் அண்ணல் அம்பேத்கார் . கடைசி வரைக்கும் அவர் பட்டபாடுகள் அதிகம் என்றாலும் இன்று இந்த இன மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் அவர் தொடங்கி வைத்த பயணத்தில் கிடைத்த பலனே ஆகும் . நாம் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேச விரும்புகின்றோம் . ஆனால் அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி மறந்தும் கூடப் பேச விரும்புவதில்லை . மூன்று தலைமுறைக்கு முன்னால் நாடார் இன மக்கள் இன்று அடைந்துள்ள உரிமைகள் என்பது அவர்கள் பெற்ற கல்வி கொடுத்த பொருளாதார வளர்ச்சியே ஆகும் . கேரளாவில் ஈழவா என்ற இனத்தை எப்படி நசுக்கி ஒதுக்கி வைத்திருந்தார்கள் என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் . ஆனால் நாராயணகுரு உருவாக்கிய கல்விக்கூடங்கள் , மறுமலர்ச்சிப் பாதைகள் இன்றைய வளர்ச்சியின் அச்சாரமாக இருக்கிறது . உண்மையான அக்கறையான தலைவர்கள் தோன்றாதவரைக்கும் இங்கே எதுவும் மாறப்போவதில்லை . காரணம் முறைப்படியான வளர்ச்சி என்பது கல்வி தொடங்கி வைப்பது . அதன் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சியே நிலைப்படுத்தும் . மொத்த ஒற்றுமையே உலகத்தைக் கவனிக்க வைக்கும் . இன்று ஒடுக்கப்பட்டவர்கள் , தாழ்த்தப்பட்டவர்களின் , பழங்குடியினர் , சீர்மரபினர்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கும் மேலே . அதை விட முக்கியம் நான் உன்னை விட மேலானவன் என்ற தத்துவம் இதற்குள்ளும் இருக்கிறது . ஆயிரத்தெட்டு பார்வைக்ள் அசிங்கமான பிரிவினைகள் . இலக்கே இல்லாத பயண்த்தின் பாதையாகத்தான் தெரிகின்றது . ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து மேலேறி வந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புவதில்லை . முடிந்தவரைக்கும் ஒதுங்கிவிடவே விரும்புகின்றார்கள் . உருப்படியானவர்கள் ஒதுக்கி நிற்க ஒழுக்கமற்றவர்கள் தான் தலைவர்களாக உருவெடுக்கின்றார்கள் . இவர்கள் மூலம் உருவாக்கப்டும் ஒவ்வொரு விசயங்களும் இறுதியில் சண்டை சச்சரவுகளில் தான் முடிகின்றது . அவனை நிறுத்த சொல் . நானும் நிறுத்துகின்றேன் என்றே மேலும் மேலும் வன்மம் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது . கடைசியாகப் பாதிக்கப்படுவதும் அப்பாவிகளே . ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனதில் உள்ள பிடிமானம் என்பது தங்களை விட்டு சென்று கொண்டிருக்கின்றதே என்பதன் வெளிப்பாடு தான் வன்மம் . இந்த வன்மத்தை அடைகாத்து அடைகாத்து அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டே வருகின்றார்கள் . 2000 வருடங்கள் கொடுக்க விரும்பாமல் வைத்திருந்த உரிமைகளை 66 வருடங்களுக்குள் பெற்று விடுவது எளிதான காரியமா ? இன்றைய போராட்டங்களின் பலன்கள் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்காமல் போகலாம் . ஆனால் இன்று சிந்தக்கூடிய ரத்தமும் உழைப்பும் அடுத்தத் தலைமுறைக்கு உதவ வேண்டுமானால் உண்மையான கல்வியின் மூலம் பொருள் செய்யப் பழகு . பொருள் இல்லையேல் இவ்வுலகம் உங்களுக்கு இல்லை . முன்னேற வேண்டும் என்பதும் எப்படியாவது தம்மை இந்தச் சமூகத்தின் பார்வையில் ஒரு கௌரவ மனிதனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆளாய் பறந்து கொண்டேயிருக்கிறார்கள் . நேருக்கு நேர் நின்று போராடுவதை விட்டு பெரிய நாடுகள் கூட வெளியே வந்து விட்டது . பொருளாதாரத்தில் கை வை என்ற நோக்கத்தில் தான் இன்று ஒவ்வொரு உரிமைகளும் பேசப்படுகின்றது . நாம் புழுதியில் வாழுவே விரும்புகின்றோம் என்னும் போது அவர்கள் நம்மைப் புரட்டி விளையாடவே விரும்புவார்கள் . கல்வி என்பது கேள்வி கேட்க உதவும் . ஆனால் எதையும் இவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் கல்வியைத் தவிர மற்றவற்றைப் பற்றி இங்கே அனைவரும் பேசுகின்றார்கள் . முட்டுக்கட்டைகள் தான் இங்கே பலருக்கும் படிக்கல்லாக மாறுகின்றது . நாம் நம்மைச் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமும் கூட . (27.11.2012) 23 சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை களம் 1 அவன் என் சொந்த ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு ஒன்பதாம் வகுப்பு எங்கள் ஊரில் உள்ள மேல் நிலைப் பள்ளியில் வந்து சேர்ந்தான் . அவன் அப்பா அம்மா இருவருமே அரசு ஊழியர்கள் . இது தவிர அவர்களுக்கு நிலங்கள் தோட்டங்கள் என்று அபரிமதமான பணம் இருந்தது . ஏறக்குறைய சமூக அந்தஸ்த்தில் இருவரும் ஒரே நிலையில் இருந்தோம் . பள்ளிக்கூடப் பழக்கம் என்றபோதிலும் குறுகிய காலத்தில் மிக நெருக்கமாகப் பழகி என்னைத் தேடுபவர்கள் அவன் வீட்டிலும் , அவனைத் தேடுபவர்கள் என் வீட்டிலும் வந்து பார்க்கும் அளவிற்கு ஈருடல் ஓருயிராகப் பழகினோம் . பத்தாம் வகுப்பில் நான் பெற்ற மதிப்பெண்கள் 65 சதவிகிதம் . அவன் பெற்றது 66 சதவிகிதம் . அருகே உள்ள அழகப்பா தொழில் நுட்ப கல்லூரியில் எங்கள் செட்டில் என்னுடன் 15 பேர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள் . அப்போது பாலிடெக்னிக் என்றால் மிக உயர்ந்த கௌரவம் சார்ந்த படிப்பு . ஆனால் எங்களுடன் படித்த முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவனுக்கு மட்டும் அங்கே இடம் கிடைத்தது . அவன் பெற்ற மதிப்பெண்கள் 440. எனக்கு நிலமை புரிந்து விட்டது . டக்கென்று அதே பள்ளியில் பதினோராம் வகுப்பில் நுழைந்து இயல்புக்கு வந்து விட்டேன் . ஆனால் இவனைக் காணவில்லை . நானும் மறந்து விட்டேன் . எப்போதும் போல மாலை வேளையில் எங்கள் வீட்டுக்கருகே உள்ள பாலத்தில் கூட்டாளிகளோடு உட்கார்ந்திருந்த போது காக்கி பேண்ட் காக்கி சட்டை , புதுச் சைக்கிள் , சைக்கிளின் உள்ளே பல கருவிகள் என்று வைத்து சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவன் நாங்கள் உட்கார்ந்திருந்த பாலத்தின் மேல் ஒற்றைக் காலை வைத்து ஒரு வில்லன் சிரிப்பு சிரிக்க எனக்கு வியப்பாக இருந்தது . எனக்குப் புரிந்து விட்டது . இவனுக்கும் பாலிடெக்னிக்கில் சீட் கிடைத்து விட்டது என்று தெரிந்து கொண்டு வாழ்த்து சொன்னேன் . அவன் மட்டுமல்ல . அவனது தம்பிக்கும் அடுத்த வருடம் அதே கல்லூரியில் சீட் கிடைக்க என் மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது . எனக்கு வேறுவிதமாக அப்போது யோசிக்கத் தெரியவில்லை . எப்படியோ திறமையின் அடிப்படையில் கிடைத்து இருக்கும் போல என்று மனதில் வைத்திருந்தேன் . இதே போல அவர்கள் குடும்பத்தில் அவனது தங்கையும் தொடர்ந்து வந்த வருடத்தில் +2 முடித்து விட்டுப் பி . ஈ சீட்டு கிடைத்துப் படித்துக் கொண்டு இருந்தார் . இவர்களது தந்தை மிக மிகக் கண்டிப்பானவர் . நான் முதல் முதலாக அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது எங்கள் குடும்பத்தை நன்றாகத் தெரிந்த காரணத்தால் தான் வீட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் செல்ல அனுமதி கிடைத்தது . குறிப்பிட்ட சிலர் மட்டும் வீட்டுக்கு வர முடியும் . பெரும்பாலும் எப்போதும் போல அருகே இருந்த புளிய்ந்தோப்பில் தான் மற்ற அத்தனை பேர்களும் கூடுவோம் . காரணம் அவன் அப்பா டக்கென்று எவராக இருந்தாலும் கை நீட்டி விடும் பழக்கம் உள்ளவர் . அத்துடன் கொஞ்சம் கூடச் சங்கடப்படாமல் மூஞ்சிக்கே நேராக நாகரிகமின்றி எதை வேண்டுமானாலும் பேசி விடுவார் . அவனது தங்கையைப் பி ஈ படிக்கும் கல்லூரி விடுதியிலேயே சேர்த்து இருந்தார்கள் . வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது . நான் கல்லூரி முடித்து ஊரை விட்டு வெளியே வந்து விட்டேன் . ஊருக்குச் செல்லும் போது அவனைப் பார்க்கச் சென்ற போதிலும் படித்த படிப்பை அவனும் அவன் தம்பியும் முழுமையாக முடிக்க முடியாமல் வெளியே வந்து சொந்த தொழில் தான் செய்து கொண்டிருந்தார்கள் . காரணம் மனப்பாடம் செய்து பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள் கல்லூரியில் எடுபடவில்லை . இன்று வரைக்கும் பாக்கி உள்ள பாடங்களை அவர்களால் முடிக்கவில்லை . இது நமக்கு முக்கியமல்ல . அவனது தங்ககையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் எனக்குப் பல உண்மைகளைப் பின்னால் புரியவைத்தது . கல்லூரியில் படித்த தங்கை அங்கே உடன் படித்த ஒருவரை காதல் செய்து கொண்டிருக்கும் விசயங்கள் வீட்டுக்கு வந்து சேர வீடே கொந்தளித்துக் கொண்டிருந்தது . காரணம் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் . இது அரசல் புரசலாக எங்கள் வீட்டுக்கு தகவல் வர என்னிடம் கேட்டார்கள் . எனக்கு ஒன்றும் புரியவில்லை . அன்று பெரிதான சிந்தனைகளோ சமூக வேறுபாடுகள் குறித்த சிந்தனைகளோ அன்று யோசிக்கத் தெரியவில்லை . ஆனால் நண்பன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒருவிதமான அசாதாரணமான சூழ்நிலை அங்கே நிலவுவதைப் பலமுறை கவனித்து இருக்கின்றேன் . திருப்பூரில் இருந்து ஊருக்குச் சென்றால் கட்டாயம் அவன் வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தை உடைய எனக்கு ஒவ்வொரு முறையும் அவன் வீட்டுக்கு சென்றவுடன் என்னை வேகமாக அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள புளியந்தோப்பிற்கு அழைத்து வந்து விடுவான் . எனக்குப் புரியவில்லை . எப்போதும் அவன் அப்பா அம்மா என்னுடன் நன்றாகப் பேசுவார்கள் . அவர்கள் என்னைத் தவிர்ப்பதும் கண்கூடாகத் தெரிந்தது . ஒரு நாள் உண்மை வெளியே வந்தது . நான் சென்ற போதெல்லாம் அங்கே ஒரு அறையில் அவன் தங்கையை அடைத்து வைத்திருந்தது எனக்குப் பின்னாளில் தான் தெரிந்தது . அடித்துத் துவைத்திருந்தார்கள் . குடும்பத்தினரால் தங்கையின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை . கடைசியாகத் தப்புச் செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி சொல்லிவிட்டுப் பரிட்சை மட்டும் எழுதிவிட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் பரிட்சை எழுதாமல் இருவரும் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் . அந்தப் பையனின் அப்பா தாசில்தார் பணியில் இருந்த காரணத்தால் இவர்களால் அதற்கு மேல் ஒன்று செய்ய முடியவில்லை . தலை முழுகி விட்டோம் என்று அறிவித்து விட்டார்கள் . அதிகமான சொத்துக்கள் இருப்பதால் தங்கை மூலம் பின்னால் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் அது சார்ந்த பல நடவடிக்கைகளையும் செய்தார்கள் . குறிப்பாக என் நண்பனின் தம்பி அந்த விசயத்தில் அதி தீவிரமாகச் செயல்பட்டான் . அவசரமாகக் குடும்பத்தில் என் நண்பனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது . வசதியான குடும்பம் , வந்த பெண்களும் அரசுப்பணியில் இருப்பவர்கள் . . காலப்போக்கில் என் நண்பன் மட்டும் தன் தங்கையோடு மெதுவாக வீட்டுக்குத் தெரியாமல் தொடர்பை உருவாக்கி வைத்திருந்தான் . அதுவும் வீட்டுக்குத் தெரியவர தம்பி மூலம் ஏராளமான பிரச்சனைகள் . நண்பன் வீட்டில் உள்ளவர்களின் தன்மைகளை மாற்ற முடியாமல் பட்டும் படாமல் இன்றும் தங்கையோடு தொடர்பில் இருக்கின்றான் . இன்று நண்பனின் தங்கையும் , அவர் காதலித்த நபரும் முழுமையாகப் படித்து முடித்து நல்ல உயர்ந்த நிலையில் உள்ள பதவியில் இருக்கின்றார்கள் . அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று அரசாங்கத்தில் சான்றிதழ் வாங்கி அவர்களும் இன்று மருத்துவத் துறையிலும் , கட்டிட வடிவமைப்பாளர் துறையிலும் கலக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் . இன்று வரையிலும் நண்பனின் தங்கைக்குக் குடும்பதோடு தொடர்பே இல்லாமல் போய்விட்டது . ஆனால் எப்படியாவது தொடர்பை உருவாக்கிக் கொண்டு விடலாம் என்று நண்பனின் தங்கையும் ஏதோவொரு வகையில் போராடிக் கொண்டு இருக்கின்றார் . இதில் என்ன சிறப்பு என்று உங்களுக்குத் தோன்ற வேண்டுமே ? தனது சாதீயத்தை இன்று வரைக்கும் உயர்த்திப் பிடிக்கும் அவன் அப்பா தனது மூன்று குழந்தைகளுக்கும் தொடக்கத்தில் செய்த ஒரு காரியம் தான் முக்கியமானது . ஒவ்வொரு சாதியிலும் பல பிரிவுகள் உண்டு . அதிலும் நுணுக்கங்கள் வரையறை உணடு . ஒரு சின்ன உதாரணம் மூலம் இதை விளக்குகின்றேன் . நாயக்கர் , நாயுடு என்றால் நமக்குத் தெரியும் . ஆனால் இதற்குள்ளும் பல பிரிவுகள் உண்டு . ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தீவுகள் . இதே போல ஒவ்வொரு சாதியிலும் குலம் , கோத்திரம் என்கிறார்கள் . நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றால் பொதுவாகச் செட்டியார் என்ற ஒரு பிரிவில் வந்து விடுகின்றது . ஆனால் எந்தச் சாமியை நீங்க கும்புடுறீங்க என்ற கிளைநதிகள் பிரிகின்றது . இது போகச் செட்டியார் என்றால் அதிலும் பல செட்டியார்கள் உள்ளன . இதை இங்கே குறிப்பிடக் காரணம் நண்பனின் அப்பா செய்த காரியம் நாயக்கர் என்ற வார்த்தை முன்னால் காட்டு என்று சேர்த்து காட்டு நாயக்கராக மாற்றி விட அது எஸ்டி என்ற பிரிவுக்குச் சென்று விட அரசாங்கத்தின் கதவு அகல திறந்து விடுகின்றது . இப்படிச் செய்து தான் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மூவரையும் கல்லூரியில் சேர்த்து இருக்கின்றார் . . ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்துத் தான் இதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் என் காதுக்கு வந்தது . இது குறித்து அவன் சொன்னதும் இல்லை . நானும் கேட்டுக் கொண்டதும் இல்லை . களம் 2 அவனும் என் நெருங்கிய நண்பன் தான் . ஒன்பது , பத்தாம் வகுப்பில் முதல் பெஞ்சில் உள்ள நான்கு பேர்களில் இவனும் என்னுடன் தான் இருந்தான் . இவனும் அருகே உள்ள கிராமத்தில் இருந்து தான் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தான் . அப்பா கோவில் குருக்கள் வேலையில் இருந்தார் . கிராமத்துக் கோவில் என்பதால் வருமானம் மிக மிகக் குறைவு . அவன் உடைகள் , நடவடிக்கை என்று அத்தனையிலும் அவனின் ஏழ்மை நன்றாகவே தெரியும் . ஆனால் எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான் . முற்பட்ட வகுப்பில் இருந்தாலும் எங்களுக்கு அத்தனை கெட்ட காரியங்களையும் கற்று தந்தவன் . ஆனால் வாய்ச் சொல்லில் மட்டும் தான் வீரன் . எந்தத் தவறான பழக்கம் பக்கமும் செல்ல மாட்டான் . படிப்பில் சுமார் ரகம் தான் . குடும்பச் சூழ்நிலையின் காரணமாகப் பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் குடும்பத்தின் வறுமையைப் போக்க அவன் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ஐடிஐ யில் போய்ச் சேர்ந்தான் . பிட்டர் துறையில் படிப்பதாகச் சொன்னான் . பல காலம் அவனைப் பார்க்க முடியவில்லை . இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடியில் உள்ள செக்காலை பகுதியில் ஒரு பேக்கரி கடையின் உள்ளே செல்ல காரை ஓரமாக நிறுத்திவிட்டு குழந்தைகளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது ஒருவர் வந்து என்னை அடையாளம் தெரிகின்றதா ? என்று என்னிடம் கேட்க குழப்பத்துடன் தெரியவில்லையே என்றேன் . பெயர் சொல்லி நான் தான்டா ? என்றான் . திகைத்துப் போய்விட்டேன் . சமவயது உள்ளவன் ஏறக்குறைய அறுபது வயது தோற்றத்தை பெற்று இருந்தான் . அருகில் இருந்த பேரூந்து நிறுத்தத்தில் அவனது குடும்பமும் இருந்தது . அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு உள்ளே மொத்தமாகச் சென்று அவனுடன் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது இப்போதும் மனதில் பாரமாக உள்ளது . நண்பன் ஆள் நோஞ்சானாக இருப்பானே தவிர வேலைகளுக்கு அஞ்சும் ஆளில்லை . ஐடிஐ யில் பிட்டர் முடித்து விட்டு முறைப்படி ஒரு வருடம் பயிற்சி எல்லாம் எடுத்து விட்டு நிறுவனங்களில் வேலை கேட்டுச் செல்லும் போது அவனை ஒவ்வொரு வித்யாசமான பிரச்சனைகளும் தாக்கி தடுமாற வைத்துள்ளது . ஏம்பா நீயெல்லாம் இந்த வேலைக்கு வர்றே ? உங்களுங்க இதுக்கெல்லாம் லாயிக்கு பட மாட்டாங்கப்பா ? என்று ஒவ்வொருவரும் அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளனர் . அவனது பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழில் உள்ள சாதிப் பெயர் காட்டிக் கொடுக்க அதைக் காட்டாமல் அனுபவ அடிப்படையில் கொஞ்சம் சில இடங்களில் வேலை பார்த்துள்ளான் . இவனும் விடாமல் பல கையில் முயற்சித்துக் கொண்டிருக்க , வேலை தொடங்க உள்ளே நுழைந்தால் சட்டையைக் கழட்டி விட்டு வேறு சட்டை போட தொடங்கும் போது இவன் உடம்பில் இருந்த பூணூல் பார்த்து அங்கேயிருப்பவர்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவார்கள் . கடைசியாக இவனை ஒதுக்கத் தொடங்க ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும் உருவாகக் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் ஊரில் உள்ள கோவில் வேலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளான் . திருமணம் ஆகி குழந்தைகள் வர மேலும் பொருளாதாரச் சிக்கல்கள் விரிவடையத் திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கைகள் என்று அழுத்தம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது . இடையே தொடர்ச்சியாக அப்பா , அம்மா இருவருமே இறந்து விட நான்கு பக்க கணைகளும் ஒரே சமயத்தில் தாக்குவதைப் போலத் திக்குமுக்காடத்தில் மாட்டிக் கொண்டான் . இப்போது அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை இறப்பவர்களுக்குக் காரியம் செய்யும் வேலைகள் . “ சுற்றியுள்ள கிராமத்தில் யாராவது இறந்தால் தான் எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் ” என்று அவன் சொன்ன போது திருப்பூர் திரும்பும் வரைக்கும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது . களம் 3 வீட்டில் குழந்தைகள் தூங்கும் போது தான் அவர்களது உரையாடல் தொடங்கும் . மூவரில் ஒருவர் படுத்தவுடன் தூங்கி விடுவார் . இருவர் சரியான வாயடிகள் . அதிலும் ஒருவருக்குப் பேச்சு முடிவதற்குள் கை நீண்டு விடும் . உள்ளே அலறல் சப்தம் கேட்பதை நான் கண்டு கொள்ளாமல் கணினியில் என் வேலையில் கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டுருப்பேன் . உள்ளே சமையறையில் இரவின் இறுதி வேலையில் இருக்கும் மனைவி ஓடிவர கப்சிப் பென்று அமைதி நிலவும் . அதுவும் கொஞ்ச நேரம் தான் . மறுபடியும் சமாதானம் ஆகி அவர்களின் உரையாடல் மீண்டும் தொடங்கும் . நான் கவனித்துக் கொண்டே இருப்பேன் . தலையிடுவது இல்லை . எப்போதும் போல அன்று இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள் கிறிஸ்துவ , இஸ்லாமிய மதங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள் . அப்போது நான் பார்த்துக் கொண்டிருந்த என் வேலையை நிறுத்தி விட்டு அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன் . திடீரென்று இருவரும் வந்து ஒரே சமயத்தில் என்னிடம் ஒற்றுமையாக வந்து நின்றார்கள் . அல்லா என்றால் யாருப்பா ? என்று ஒருவர் கேட்க அதுவும் சாமி தான் என்றேன் . அப்புறம் எதுக்கு ஏசு என்று மற்றொருவர் கேட்க அதுவும் இன்னோரு சாமி தான் என்றேன் . அப்ப நாம் இந்து மதத்திலே ஏன் இத்தனை சாமிகள் ? என்று விடாமல் இருவரும் ஒரே சமயத்தில் கேட்க அவங்க அவங்களுக்கு எந்த உருவம் பிடிக்குதோ அதை வைத்துக் கொண்டு கும்பிடுகின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாக அடித்து விட்டேன் . அப்புறம் எதுக்கு நம்ம மனசு தான் முதல் சாமின்னு நீங்க சொல்றீங்க ? என்று மேற்கொண்டு அவர்கள் கேள்வி எழுப்ப இருந்தவர்கள் அம்மாவைப் பார்த்ததும் உள்ளே சென்று விட்டார்கள் . கடந்த இரண்டு வருடங்களாகத்தான் மூவருக்கும் மதங்கள் குறித்து அதன் வித்தியாயசங்கள் குறித்துப் புரியத் தொடங்கியுள்ளது . இருபது வயதுக்கு மேல் எனக்கு உருவான புரிதல்கள் இவர்களுக்குப் பத்து வயதில் தொடங்கியுள்ளது . வகுப்பறையில் மாற்று மதத் தோழியர்கள் அவர்களது பண்டிகை தினத்தன்று கொண்டு வரும் திண்பண்டங்கள் , அவர்களுடன் உரையாடும் விதம் போன்றவைகள் இந்த மத வேறுபாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றது . நல்லவேளையாக இவர்கள் படிக்கும் பள்ளியில் இது போன்ற மத மாச்சரியங்கள் உள்ள வேறுபாடுகளை ஊக்குவிப்பதில்லை என்ற போதிலும் ஏதோவொரு வகையில் இவர்களின் அனுபவங்கள் இவர்களுக்குள் இருக்கும் மதம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது . இந்த நிமிடம் வரைக்கும் இவர்களுக்குச் சாதி என்ற சொல் அறிமுகம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல் . கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று இவர்களது டைரியில் எழுதி எழுதி அனுப்பிய போதிலும் நான் இன்று வரையிலும் கொண்டு போய்க் கொடுக்கவில்லை . வகுப்பாசிரியர் நேரிடையாக வரவழைத்தும் என்னைக் கேட்டார் . “ என்ன சார் , யார் யாரோ வந்து கொடுத்துட்டு போயிட்டாங்க . உங்களுக்கென்ன சார் ?” என்று வரையிலும் நைச்சியமாகப் பேசிய போதும் கூட இதுவரையிலும் கொடுக்க வில்லை . அவர் யார் யாரோ என்று கேட்டதற்குப் பின் சில தேவையற்ற சமாச்சாரங்கள் உள்ளது . அது அவரது பார்வையில் உள்ள வித்தியாசங்கள் . எங்கள் குடும்பப் பின்புலம் பற்றி வகுப்பாசிரியருக்கு தெரியும் என்பதால் கூடுதல் உரிமையுடன் பேசிய போதும் பள்ளி மாறும் போது தானே தேவைப்படும் . அது வரையிலும் பொறுத்திருங்க என்று சிரித்துச் சமாளித்து வந்து விடுவேன் . வீட்டில் கத்திப் பார்த்துக் காரியம் ஆகவில்லை என்ற நிலையில் இப்போது கத்துவதைக் குறைத்து கெஞ்சத் தொடங்கியுள்ளார் . “ ஏதாவது பிரச்சனையின்னு வந்தா நான் தான் பொறுப்பு . கவலைப்படாதே ” என்று சொன்னதற்குப் பிறகு இப்போது அந்த விசயமாக என்னை நச்சரிப்பதில்லை . எத்தனை காலம் இப்படித் தள்ளிப் போட முடியும் ? என்பது பெரிய கேள்விக்குறி என்ற போதிலும் எனக்குள்ளும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்கின்றது . முதல்வன் படத்தில் வருவதைப் போல யாரோ ஒரு புண்ணியவான் நான்கு என்று பிரித்து வைத்து இந்தச் சாதிப் பெயர்கள் வெளியே தெரியாமல் உருவாக்க வருவானா என்ற நடைமுறையில் சாத்தியப்படாத பல கனவுகளை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் . எப்போதும் என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் விதித்துள்ள சின்னச் சின்னக் கோடுகளைத் தாண்டுவதையும் , அழிப்பதையும் என் வழக்கமாக வைத்துள்ளேன் . சில எல்லைகளை முடிந்த வரைக்கும் மீறிப் பார்ப்பதுமுண்டு . . இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை . ஆன்மீகம் என்பதை உண்மையாகவே மிக அழகாக நெருங்கிப் பார்த்த காலமும் உண்டு . அதை விட்டு விலகி நிற்கும் காலத்திற்குள்ளும் வந்துள்ளேன் . எது குறித்தும் விமர்சிப்பதில்லை . ஒவ்வொன்றும் அவரவர் மனம் சார்ந்த , அனுபவங்கள் சார்ந்த படிப்பினைகள் என்பதில் கவனமாக இருக்கின்றேன் . ஆனால் என் முன் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றேன் . அது என் கருத்தாகத்தான் இருக்கும் . மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை . பத்தாயிரம் புத்தகங்கள் தராத விசயங்கள் நாம் வாழ்வில் நடக்கும் ஒரு சிறிய அனுபவம் தந்து விடும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன் . எந்த நிலையிலும் சலனமற்ற மனோநிலை தான் தேவை என்பதை அடிப்படை கருத்தாக வைத்துள்ளேன் . இது சாத்தியப்படுமா ? என்றால் முயற்சித்துப் பார்க்கலாமே ? என்பேன் . எனது திருப்பூர் நிறுவன அனுபவங்களில் இங்குள்ள எந்த நிறுவனமும் இஸ்லாமியர்களை ஏற்றுக் கொள்வதில்லை . அப்படியே இருந்த போதிலும் அடிமட்ட வேலைகளில் மிக மிகக் குறைவான சதவிகிதத்தில் தான் இருக்கின்றார்கள் . என்னால் பொறுக்க முடியாமல் ஒரு முறை ஒரு முதலாளியிடம் முறையிட்ட போது “ அவர்கள் வேறு நாம் வேறு ” என்று பொதுவாக முடித்து வைத்து விட்டார் . விளம்பரங்கள் கொடுத்து நேரமுகத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரும் போதே இந்த வடிகட்டல் கண்களுக்குத் தெரியாமல் நடத்தப்படுகின்றது என்பதும் உண்மை . கிறிஸ்துவச் சமூகத்தில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவுக்குப் பிரச்சனைகள் இல்லாத போதும் இன்றும் நதி மூலம் ரீஷி மூலம் ஆராய்வ்தில் கவனமாக இருக்கின்றார்கள் . பெரிய பதவிகளில் தனது சமூகம் சார்ந்தவர்கள் , உறவுகளை வைத்துக் கொள்வதில் தான் அனைவரும் கவனமாக இருக்கின்றார்கள் . ஆனால் இந்த இரண்டு சமூகம் மொத்தமாகப் பார்க்கும் போது ஒதுங்கித்தான் இருக்கின்றது . சமூக நீரோட்டத்தில் அதிக அளவு ஒன்றிணைய முடியவில்லை . ஆனால் தொழிலாளர் வர்க்கத்தில் இந்தப் பாகுபாடு இல்லை . மற்ற இடங்களில் எப்படியோ ? இங்கு நிச்சயம் அந்த வேறுபாடுகள் இல்லை . மைனாரிட்டி சமூகத்திற்கு எத்தனையோ நலத்திட்டங்கள் இருந்த போதிலும் அது குறிப்பிட்ட சிலரின் பைகளுக்குத்தான் இன்று வரை சென்று கொண்டு இருக்கின்றது . இட ஒதுக்கீடு மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் மேலே வந்து கொண்டு இருப்பது தெரியவில்லையா என்று கேட்டால் அதுவும் முறையற்ற வழியில் பலன் அடைபவர்களைத்தான் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கின்றது . இங்கே எதுவும் பேசமுடியாது . பேசவும் கூடாது . பாதிக்கப்பட்டவர்களும் , பாதிக்கப்பட்டுக் கொண்டிருப் பவர்களும் பரஸ்பரம் அவநம்பிக்கைகளைச் சுமந்தபடியே தான் இருக்கின்றார்கள் . வெளியே காட்ட முடியாத வன்மத்தை துப்ப முடியாமல் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் . பல இடங்களில் மௌன சாட்சியாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் . ஆனால் எந்த நிலையில் எனக்கு இந்தச் சாதீயம் இதுவரையிலும் தீண்டியதில்லை . ஆனால் தீண்டி பாதிக்கப்படுவர்களுக்கு அலுவலக ரீதியாக என் எல்லை வரைக்கும் சென்று உதவி கொண்டு தான் இருக்கின்றேன் . “ பெரியார் தான் என் உண்மையான கடவுள் ” என்று சொல்கின்ற உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களை , பிரபல்யங்களை இப்போது உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள் . அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் திவ்யமாகச் சாமி கும்பிட்டுக் கொண்டுருப்பார்கள் . காரணம் கேட்டால் அது அவர்களது தனிப்பட்ட உரிமை . இது என் தனிப்பட்ட கொள்கை என்பார்கள் . வீட்டையே திருத்த முடியாதவன் ஏன் நாட்டைப் பற்றி மதத்தைப் பற்றிச் சாதியைப் பற்றிப் பேச வேண்டும் ? எழுத வேண்டும் ? போன பதிவில் எழுதிய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இந்த நிமிடம் வெளியே வந்து விட்டார் . எப்போதும் போல அவர் “ என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்று தான் செயல்படப் போகின்றார் . இதே பா . ம . கா வை கலைஞர் , ஜெயலலிதா என்று மாறி மாறி தான் வளர்த்தார்கள் . அப்போது எல்லோருக்கும் இருந்த வாய் என்ற உறுப்புப் பின்னால் போய்க் கிடந்தது . மதவாத கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட பா . ஜ . க . கட்சியை இங்குள்ள அத்தனை கட்சிகளும் ஆதரித்ததோடு அமைச்சரவையிலும் இடம் பிடித்துப் பல புதிய தத்துவங்கள் சொன்னார்கள் . அவர்கள் தான் இன்று நரேந்திர மோடியை வேறுவிதமாகச் சொல்கின்றார்கள் . கொலை செய்தவனை விடக் கொலைக்கு உடந்தையாக இருந்தவனையும் நமது இ . பி . கோ சட்டம் கடுமையான பார்வையில் தான் பார்க்கின்றது . ஆனால் நாம் அனைத்தையும் மறந்து விடத் தயாராக இருப்பதால் கட்சிகளின் கொள்கை என்பது தேர்தல் அறிக்கைக்காக மட்டுமே என்கிற ரீதியில் மாற்றம் பெற்றுள்ளது . ஆதிக்கச் சாதியினர் இனச் சுத்திகரிப்புச் செய்வது போல இந்த அளவுக்கு அக்கிரமம் செய்யலாமா ? என்று கேள்வி வரும் போது மற்றொரு கேள்வி உங்களுக்கு வர வேண்டுமே ? ஏன் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கலாமே ? ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் , சீர்மரபினர் என்று சமூகத்தால் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட அத்தனை பேர்களை ஒன்று திரட்டி “ பாருங்கப்பா இனிமேலாவது நாம அத்தனை பேர்களும் ஒற்றுமையாக இருந்த சமூக நீதியைப் பெற வேண்டும் ” என்று சொல்ல வேண்டாமா ? செய்ய முடியுமா ? இல்லை இரண்டு பக்கமும் இவர்களைச் செய்யத்தான் விடுவார்களா ? இருவரின் தலையும் அவர்கள் உடம்பில் இருக்காது . அங்கேயும் பிரச்சனை . அதற்குள்ளும் ஆயிரெத்தெட்டுப் பிரிவினைகள் . ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்கு ஆகாது . எனக்குக் கீழே தான் நீ என்று மாற்றி மாற்றி உள்ளூற பொங்கும் வன்மத்தின் வெளிப்பாடு இங்கே மட்டுமல்ல . ஒவ்வொரு சாதிக்குள்ளும் , அதன் கிளைப்பிரிவுக்குள்ளும் பரந்து பட்டு நிற்கின்றது . இது இன்று நேற்றல்ல . பூட்டனுக்குப் பூட்டடென்னல்லாம் உழன்று போய்ப் போராட முடியாமல் மண்ணோடு மண்ணாகிப் போனவர்களைச் சரித்திரங்களைச் சுமந்து தான் இந்தப் பூமி இன்றும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது . உங்களை ஏதோவொரு வகையில் இந்தச் சாதீயம் தாக்கத்தான் செய்யும் . அவரவர் தங்கை அக்காக்களை ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் திரும்ணம் செய்து கொடுப்போம் என்று அவரவர் குடும்பத்தில் போய்ச் சொல்லிப் பாருங்கள் ? என்ன நடக்கும் .? முதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருப்பவர்களே பணபலம் பார்க்காமல் மன பலம் பார்த்துத் திருமணங்கள் நடந்தாலே மாற்றத்தின் முதல் படியில் காலடி வைத்தது போலவே இருக்குமே ? ஆனாலும் இங்கே ஏதோவொரு வகையில் மாறுதல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது . மன உறுதி உள்ளவர்கள் எங்கேயோ ஒரு பக்கம் தங்களால் முடிந்த அளவுக்கு உடைத்துக் கொண்டே இருக்கின்றார்கள் . ஆனால் அது சிறுபுள்ளி . அதுவும் கரும்புள்ளியாகத்தான் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மாறிவிடுகின்றது . காரணம் இங்கே தனி மனிதனுக்குச் சமூகம் தரும் அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது . முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மிகத் தைரியமாகக் கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டு இன்றும் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் தடுமாறும் எத்தனையோ நபர்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் . மாற்று மதங்களைச் சமப்படுத்தி வாழ்வில் ஜெயித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இன்றும் பலரும் என் பார்வையில் இருக்கத்தான் செய்கின்றார்கள் . ஆனால் அது வேறொரு பிரச்சனைகளையும் உருவாக்கத்தான் செய்கின்றது . என் மதத்தில் தான் பெண் ( அ ) மாப்பிள்ளை பார்க்க வேண்டும் போன்றதொரு வித்தியாசமான பிரச்சனைகளைத் தலையெடுக்கின்றது . அப்படியென்றால் இந்த அளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ளதே ? இன்னுமா மாறவில்லை என்று கேள்வி வர வேண்டுமே ? ஆமாம் உடைகளில் , உணவுகளில் , அன்றாடப் பழக்கவழக்கங்களில் போலித்தனமான நாகரிகம் வளர்ந்துள்ளது . மனதளவில் எந்த எந்த மாறுதலும் இல்லை . முன்பு கல்யாண புரோக்கர் ஊருக்கு ஊர் அலைந்து ஆட்கள் பிடித்து வந்து கொண்டு இருந்தார் . இன்று அந்த வேலையை மேட்ரிமோனியல் என்ற பெயரில் பத்திரிக்கையும் , கணினி வழியேயும் நாகரிக உலகம் முன்னேறியுள்ளது . அ . மார்க்ஸ் தனது முகநூலில் தனக்கு வீடு மறுப்பதற்கான காரணத்தை எழுதியிருந்தார் . அவர் அளவுக்குச் சமூக மாறுதலுக்கு அக்கறையோடு எழுதிய கட்டுரைகளைப் படிக்கப் பதிவுலகம் தாங்குமா ? என்று தெரியவில்லை . அவரின் நிலையே இப்படி இருக்கும் போது உங்களால் என்னால் என்ன செய்ய முடியும் ? என்று நம்புகின்றீர்கள் . எல்லோருக்கும் ஆசைகள் உடம்பு முழுக்க இருக்கிறது . சாதி இல்லாத சமூகம் உருவாக வேண்டும் . இந்தச் சாதீயம் அழிய வேண்டும் . மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்று . ஆனால் இது அத்தனையும் நமக்கான ஆசைகள் . இதற்கான முதல் படியில் நாம் கால் வைக்க விரும்புவதில்லை என்பது தான் உண்மை . காரணம் மாற்றங்கள் என்பது வெளியே நடக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றோம் . நாம் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும் . நம் குடும்பத்தில் இருந்து தான் அந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று கனவில் கூட நினைப்பது இல்லை . காரணம் இப்போது மாற்றங்கள் என்பது நொடிப்பொழுதில் தான் நடந்து கொண்டு இருக்கின்றது . நேற்று என்ன நடந்தது என்பது பற்றி யோசிப்பதற்குள் அதற்குப் பின்னால் பத்து மாற்றங்கள் நம்மை அடித்துக் கொண்டு சென்று விடுகின்றது . நம்மைப் புறந்தள்ளி விடுவார்களோ ? காலத்தோடு ஒட்டி ஒழுகாதவன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சமும் , தன் இருப்பு குறித்த பயமும் ஒவ்வொருக்குள்ளும் நெருஞ்சி முள் போலக் குத்திக் கொண்டே இருக்கின்றது . இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே நாமும் வெட்கம் இல்லாமல் எதை எதையோ நோக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கின்றோம் . அடிமைத்தனம் ஆதிக்க மனப்பான்மையை வளர்த்தது . ஆதிக்கம் தொடங்கிய போது தன் சுயநலம் மேலோங்கி நின்றது . சுயநலம் பெருகப் பெருக சக மனிதனை கேவலப் பொருளாகப் பார்க்க நாகரிகம் என்ற வார்த்தை நமக்குப் பலவற்றையும் கற்றுக் கொடுத்தது . ஆனால் இந்தப் படிப்படியான வளர்ச்சியில் ஒவ்வொரு இடத்திலும் வன்மத்தோடு கலந்த பொறாமைகள் நம்மோடு தொடந்து கொண்டேயிருப்பதால் மனிதன் என்ற போர்வையில் நாட்டில் வாழும் மிருகம் போலத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் . இதுவே தான் ஒரே சாதி ஆனால் பொருளாதார ரீதியாகச் சம அந்தஸ்த்து என்கிற அளவில் மாற்றம் பெற்றுள்ளது . பணபலத்தில் சமமாக இல்லாதவன் ஒரே சாதியாக இருந்த போதிலும் கூட அவனும் தள்ளி நிற்க வேண்டியது தான் . சமூகத்தில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நடக்கும் மாற்றங்களை வந்து போகும் தலைவர்கள் உருவாக்குவதில்லை . நாம் மனதில் உள்ளே வைத்திருப்பதை , விரும்புவதைச் செய்து காட்டும் காரியவாதிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள் . (12/5/2013) [] 24 பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் []       ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உள்ளது . பல்வேறு பிரிவுகளில் (H.R.DEPARTMENT) மனிதவளத்துறையும் ஒன்று . கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் இந்தப் பிரிவுக்கு இங்கே முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது . காரணம் தற்போது திருப்பூருக்குள் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் பொழுதே அவர்கள் எதிர்பார்க்கின்ற ஆவணங்கள் , சான்றிதழ்கள் இருக்கின்றதா ? என்று கேட்டு உறுதிப் படுத்திய பிறகே அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையைத் தொடங்குகின்றார்கள் . தற்போதைய போட்டி மிகுந்த சூழ்நிலையில் ஒரு நிறுவன முதலாளி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களின் கவனத்தை இதன் மேல் வைத்து செயல்பட வேண்டியதாக உள்ளது . ஒவ்வொரு நிறுவனமும் பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கும் சான்றிதழ்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் சட்ட திட்டத்திற்கென்று தங்களின் நிறுவன செயல்பாடுகளை மாற்ற வேண்டியதாக உள்ளது . குறிப்பாகத் தொழிலாளர்களின் நலவாழ்வுக்கெனப் பல்வேறு விதமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகின்றது . இது சார்ந்த விசயங்களைத் தனியாகப் பார்ப்போம் . நாம் பார்க்கப் போவது மாறி வரும் சமூகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் எப்படித் தொழில் சமூகம் படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் பற்றிப் பார்க்கலாம் . மனிதவளத் துறையில் தொழிலாளர்களின் வைப்பு நிதி , சேமநல நிதி என்ற இரண்டு பிரிவுகள் மிக முக்கியமானது . இவை இரண்டும் தொழிலாளர் நலச்சட்டத்தில் மிக முக்கியமான அங்கமாக இருப்பதால் பத்து நபர்களுக்கு மேல் வைத்து வேலை வாங்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதைக் கடைபிடித்தே ஆக வேண்டும் . ஆனால் இது இந்திய அரசின் மற்றும் தமிழ்நாட்டின் தொழிலாளர் நலச் சட்டதிட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களைப் பயன்படுத்திப் பெரும்பாலும் எவரும் சரியான விதத்தில் பின்பற்றுவதில்லை . தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையை முழுமையாகக் காட்டுவதும் இல்லை . ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சான்றிதழ்களில் இதுவும் ஒரு அங்கமாக இருப்பதால் தற்போது மேலே சொன்ன இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக உள்ளது . தங்களிடம் பணிபுரிகின்ற தொழிலாளர்களில் குறைந்த எண்ணிக்கையாவது காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் . ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுதே அவர்களைப் பற்றிய சுயகுறிப்புகள் முதல் அவர்கள் சார்ந்த பல்வேறு ஆவணங்களைப் பரிசோதித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கோப்புகள் உருவாக்கப்படுகின்றது . இது இவர்களின் ஜாதகம் போல . இதற்கென்று ஒவ்வொரு நிறுவனத்திலும் மனிதவளத்துறை மேலாளர் இருப்பார் . அவரின் கீழ் இந்தத் துறை செயல்படுகின்றது . இது சார்ந்த முக்கிய முடிவுகள் மற்றும் தேவைப்படும் கையெழுத்துக்கென நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் பார்வைக்கு வரும் . ஒவ்வொரு நாளும் இந்தத் துறை சார்ந்த கோப்புகள் என் பார்வைக்கு வரும் போது என்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இதில் அதிகக் கவனம் செலுத்துவதுண்டு . காரணம் பல்வேறு முகங்கள் உள்ள புகைப்படங்கள் , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து குடியேறியவர்கள் , குறிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் உள்ள புகைப்படங்கள் என்று ரசிக்க யோசிக்க நிறைய வாய்ப்புள்ளது . எனது கையெழுத்துக்காக வரும் கோப்புகளைக் கவனிக்கும் போது தமிழ்நாட்டின் மனிதர்களின் சமூக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போய்விட்டது என்பதை யோசிக்க முடிகின்றது . பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மையான இருப்பிடம் குறித்து அறிய , அவர்களின் கல்வித்தகுதி , வயது என்று பலதரப்பட்ட விசயங்களை உறுதிப்படுத்த ஏராளமான உண்மையான ஆவணங்கள் ஒவ்வொரு கோப்பிலும் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு தொழிலாளர் குறித்த கோப்பு என்பது ஒரு குறும்படம் பார்க்கும் நிலையை எனக்கு உருவாக்குகின்றது . பள்ளிச் சான்றிதழ் இருப்பதால் அவர்களின் சாதி குறித்துத் தெரிந்து கொள்ள முடிகின்றது . அவர்களின் குடும்பப் புகைப்படத்தைப் பார்க்கும் குறிப்பிட்ட தொழிலாளரின் அப்பா அம்மா போன்றவர்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது . ஏறக்குறைய ஒவ்வொரு கோப்புகளும் குறிப்பிட்ட நபரின் மொத்த அந்தரங்கத்தையும் விலாவரியாக எடுத்துரைக்கின்றது . குறிப்பிட்ட சாதியில் பிறந்திருப்பார் . அவரால் மறைத்துக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவரின் நடை உடை மாற்றங்கள் போன்ற பலவற்றையும் வலிய திணித்துக் கொண்டு புதிய அவதாரமாக உருவாகியிருப்பார் . உடன் பழகும் பலரிடமும் நான் இந்தச் சாதி என்று சொல்லிக் கொண்டிருப்பார் . பல்வேறு ஊரிலிருந்த வந்திருப்பவர்களிடத்தில் இது போன்ற ஆராய்ச்சிகள் உள்ளூற இருந்தாலும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவரவர் வேலையைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் . ஏறக்குறைய இதுவும் ஒரு வகையில் குறிப்பிட்ட நபருக்கு விடுதலை போலவே இருக்கும் . தொழிலாளர்கள் தங்கும் வீடுகளில் என்ன சாதி ? என்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் இன்று அதுவும் மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மெதுமெதுவாக மாறிக் கொண்டே தான் வருகின்றது . மேலும் குறிப்பிட்ட குடியிருப்புகள் என்கிற ரீதியில் இருப்பதால் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட மக்களுக்குத் தனித்தனி ராஜாங்கம் போலவே உள்ளது . இன்னமும் நிறைய மாற வேண்டும் . ஆனால் அலுவலக ரீதியாக வேலை செய்பவர்கள் சற்று வசதியான வீடுகளைத் தேடும் போது தான் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கின்றது . நேரிடையாகத் தாக்குகின்றது . வீடு கேட்கும் பொழுதே உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுடன் நிச்சயம் இந்தச் சாதி குறித்த வார்த்தைகளும் வந்து விடுகின்றது . நான் இந்தச் சாதி என்று சொன்னாலும் உறுதிப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாள்பவர்களையும் பார்த்திருக்கின்றேன் . “ நாங்க வீடு தருகின்றோம் . ஆனால் உள்ளூருக்குள் உங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்க ” என்று சொல்லி விடப் பெரும்பாலும் பலருக்கும் பிரச்சனை இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது . இது போன்ற நல்லதும் கெட்டதுமான பலவற்றையும் நான் அமைதியாக மனதிற்குள் வைத்துக் கொள்வதுண்டு . எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த மனிதவளத்துறையில் பணிபுரியும் அறுபது வயதைக் கடந்தவர் ஒவ்வொரு முறையும் கோப்புகளை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவார் . பல்வேறு துறைகளைக் கவனிக்கும் நான் குறிப்பிட்ட அந்தத் துறையை மட்டும் கவனிக்கும் அவரிடம் பலதரப்பட்ட விசயங்களைப் பற்றி உரையாடுவதுண்டு . காரணம் பல்வேறு நிறுவனங்களில் அவர் பணியாற்றி வந்த பாதையில் அவர் பார்த்த பலதரப்பட்ட விசயங்களைக் கேட்கும் பொழுது நமக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும் . சென்ற வாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது எப்போதும் போலப் பலவிதமான குற்றச்சாட்டுகள் தான் முன்னால் வந்து விழுந்தது . அதில் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்குபவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தான் முதன்மையாக இருந்தது . ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உண்டு . அலுவலகம் , உற்பத்திக்கூடங்கள் அது சார்ந்த துணைப்பிரிவுகள் என்று ஏராளமாக இருக்கும் . காலை எட்டுமணிக்குள் கூட்டிப் பெருக்கி முடித்து இருக்க வேண்டும் . இதன் காரணமாகக் காலை ஆறு மணிக்கே இந்தத் தொழிலாளர்கள் வர வேண்டும் . “ சார் அவங்களை எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள் . அப்படிக் கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள் ” என்றார் . “ ஏன் வேறு நபர்களைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே ?” என்றேன் . “ இல்லை சார் . ஆட்கள் கிடைப்பதில்லை ” என்றார் . பெரும்பாலும் இது போன்ற வேலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் . இதற்கென்று புதிதான ஆட்கள் வருவதில்லை . விரும்புவதில்லை என்பது தான் இங்கே முக்கியம் . இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களின் குழந்தைகள் நிச்சயம் படித்து மேலே வந்து விட முடிந்தவர்கள் பெருநகரங்களுக்குச் சென்று விடுகின்றார்கள் . அவர்கள் வாழ்க்கையின் திசை மாறி விடும் . கல்லூரி வரைக்கும் சென்று ஒழுங்காகப் படித்தவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திறகுள் பலதரப்பட்ட அலுவலகம் ரீதியான வேலையில் தங்களைப் பொருத்திக் கொண்டு விடுகின்றார்கள் . பள்ளி இறுதி வரைக்கும் படித்தவர்கள் முதல் படிப்பை பாதியில் விட்டவர்கள் வரைக்கும் திருப்பூரைப் பொருத்தவரையில் டைலர் வேலை முதல் ஏற்றுமதி துறையில் உள்ள பலதரப்பட்ட வேலைகளைக் குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொண்டு அவர்களும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றார்கள் . யோசித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன் . “ அப்ப இது போன்ற வேலைகளுக்கு எதிர்காலத்தில் யார் இருப்பார்கள் ?” என்றேன் . “ நவீனங்கள் புதிய மாறுதல்களை உருவாக்கும் . இப்போது சிறிய அளவில் உள்ள வாக்குவம் கீளீனர் போன்ற சமாச்சாரங்கள் காலப்போக்கில் பெரிய ஹால் போன்ற அமைப்புகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் நிலைக்கு வரலாம் ” என்றார் . “ அப்படிப்பார்த்தாலும் அதிலும் மனித உழைப்பு சில இடங்களில் தேவைப்படுமே ” என்றேன் . “ அது போன்ற இடங்களில் பொருளாதார ரீதியாகப் போட்டி போட முடியாதவர்கள் இது போன்ற வேலையைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் ” என்றார் . “ புரியவில்லை ” என்றேன் . “ தற்போது ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான போட்டிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது . தகுதிகள் ஒரு பக்கம் என்றால் சம்பளம் குறைவாகக் கேட்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக் கின்றார்கள் . இதுவே காலப்போக்கில் போட்டிகள் அதிகமாகும் போது பலராலும் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும் . பாதிப் பேர்கள் சம்பளம் கட்டவில்லை என்று ஒதுங்கி வேறு பக்கம் மாறுவார்கள் . வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பார்கள் . புதிய துறைகள் வளரும் . சில துறைகள் அழியும் . பல துறைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் . அது போன்ற சூழ்நிலையில் பலரும் கிடைத்த வரைக்கும் லாபம் என்பதாகக் கிடைத்த வேலையில் சேருவார்கள் ” என்றார் “ அப்போது கௌரவம் சார்ந்த தொழில் அப்படி இல்லாத தொழில் என்கிற மாயபிம்பம் உடைபடும் . வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாகும் ” என்று பேசிக் கொண்டே சென்றார் . அவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் . நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதியில் பிறந்த அவரின் ஒரு மகள் திருமணம் செய்திருப்பது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையனை . அவர் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இல்லை . ஆனால் அவர் எதனால் இந்த முடிவு எடுத்தார் என்று சொன்ன போது தான் ஆச்சரியமாக இருந்தது . “ பையன் நல்லவனாக இருந்தான் . பெண்ணுடன் அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடமாக ஒன்றாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றான் . எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை . அவனது பெற்றோர்கள் ஊரில் இருக்கின்றார்கள் . எங்களுடன் இங்கே கூட்டுக்குடித்தனத்தில் இருக்க அவனுக்கும் விருப்பமாகவே உள்ளதால் பாதிச் செலவு குறையும் . என் மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்கின்றார் . இருவரும் ஒரே வண்டியில் சென்று விட முடிகின்றது . என்றார் . இது குறித்த பிரச்சனைகள் உங்கள் பக்கம் உருவாகுமே ? என்றேன் . “ உருவாகியது தான் . அதற்காக என்ன செய்ய முடியும் . மகள் வாழ்க்கை முக்கியமா ? கௌரவம் முக்கியமா ? என்றால் எனக்கு மகள் வாழ்க்கை தான் முக்கியமாகத் தெரிகின்றது . நான் ஊரை விட்டே வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது . இனி அங்கே போய் வாழும் எண்ணமும் எனக்கில்லை . நான் எதற்குப் பயப்பட வேண்டும் ” என்றார் . அவர் அடித்தட்டு மக்கள் குறித்தும் அவர்களின் வேலைகளைக் குறித்தும் பேசப்பேச பல விசயங்களை அதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது . கடந்த ஒரு மாதத்தில் பார்த்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் வந்து போனது . நண்பர் திருமணத்திற்கு அழைத்திருந்தார் . திருமணத்திற்கு முந்தைய நாள் என்னைப் பார்க்க வேண்டும் சொல்லியிருந்த காரணத்தால் குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு வந்து விடுங்கள் என்றார் . அன்று தான் முதன் முதலாக இந்த அழகு நிலையம் என்ற பியூட்டி பார்லர் என்ற கடையின் விபரங்களை முழுமையாகப் பார்த்தேன் . திருப்பூரில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான அழகு நிலையங்கள் இருந்த போதிலும் இப்போது வணிக ரீதியாகப் பெரிய நிறுவனமாகவே மாறிக் கொண்டு வருகின்றது . ஒவ்வொரு நிறுவனமும் அதன் வளர்ச்சியைப் பொறுத்து பல்வேறு இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது . இதுவே தமிழ்நாடு அளவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது சார்பாளர்கள் என்கிற நிலையில் ப்ராஞ்சைஸ் என்று பல்வேறு இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . நண்பர் இருந்த அழகு நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் நாம் 20 வருடங்களுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ ? என்றே யோசிக்க வைத்தது . ஆண்களுக்குப் பெண்களுக்கு என்று தனித்தனியாக அறைகள் . அது சார்ந்த பல்வேறு வசதிகள் . தொடக்கத்தில் வரவேற்பறை . அங்கே மாட்டி வைக்கப்பட்ட அழகு நிலையத்தின் செயல்பாடுகள் , விலைப்பட்டியல் போன்றவற்றைப் படித்த போது “ என்னடா ஒரு மயித்த செரைக்கிறதுக்கு இம்பூட்டு ஆர்ப்பட்டமா ?” என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் . ஊரில் கண்மாய்க் கரையில் , மரத்தடியில் நடந்த முகச் சவரமும் , முடிவெட்டலும் சிறிய கடைகளாக மாறியது . வெறுமனே மரச்சேரில் தொடங்கிய பயணம் சுழலும் இருக்கைக்கு மாறியது . தண்ணீரை கைகளால் தடவியது மாறி பாட்டிலில் உள்ள பீச்சி மூலம் பீச்சியடித்துச் சாரல் மழையில் நனைய வைத்தார்கள் . இருபது வருடத்திற்குள் இன்று அழகு நிலையமாக மாறி இன்று “ கம்ப்ளீட் பேஸ் பிளிச்சீங் ” 500 ரூபாய் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் . ஆனால் வியாபாரம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது . சென்ற வாரத்தில் இது போன்ற ஒரு அழகு நிலையத்தை இங்கே திறந்து வைத்தவர் ஒரு அமைச்சர் . அத்துடன் மேயர் போன்ற படைபட்டாளங்கள் போன்ற அதிகாரவர்க்கத்தினர் கலந்து கொண்டனர் . இந்த மாற்றம் கடந்த 20 வருடத்திற்குள் நடந்துள்ளது . இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த அழகு நிலையம் நடத்துபவர்கள் எவரும் நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் அல்ல . நான் முடிவெட்டும் கடையில் பணிபுரிபவர்கள் வரைக்கும் சோதித்துப் பார்த்து விட்டேன் . பலதரப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் தான் தற்போது இந்தத் தொழிலில் இருக்கின்றார்கள் . நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் இந்தத் தொழிலில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர் . ஒரு தலைமுறைக்குப் பிறகு கல்வி ரீதியாக வளர்ந்துள்ளார்கள் . அல்லது வேறு துறையைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் . இது இந்தச் சாதியில் மட்டுமல்ல . அடித்தட்டு மக்கள் என்று சமூகம் ஒதுக்கி வைத்த அத்தனையும் இன்று மாறியுள்ளது . காரணம் நகரமயமாக்கல் , ஒவ்வொரும் தங்கள் பிழைப்பைத் தேடி உருவான இடப் பெயர்ச்சி தான் இன்று இதைச் சாத்தியமாக்கியுள்ளது . ஊரில் சலவை செய்து கொடுப்பவர்களை நாம் எந்த நிலையில் வைத்திருந்தோம் ? நாம் எப்படி அவர்களைப் பார்த்தோம் என்பது இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும் . ஆனால் இந்தத் துறை எப்படி வளர்த்துள்ளது தெரியுமா ? நகர்புறங்களில் ட்ரை கிளீனர்ஸ் என்பது இன்று வளர்ந்த லாபம் கொழிக்கும் தொழிலாக உள்ளது . எவரும் ஆற்றில் போய்த் துவைப்பதில்லை . ஆற்றில் தண்ணீரே இல்லை என்பது வேறு விசயம் . சலவைக்கல்லில் கூடத் துவைப்பதில்லை . இன்று துணி துவைக்கும் எந்திரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது . பெரிய அளவுக்கு முதலீடு போட தைரியம் இருப்பவர்கள் வைத்திருக்கும் உலர வைக்கும் எந்திரங்களின் விலையைக் கேட்டதும் தலைசுற்றுகின்றது . இந்தத் துறையின் முகமே மாறியுள்ளது . கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நகர்புறங்களில் இன்று துணி துவைக்க நேரம் இருப்பதில்லை . வீட்டில் துணி துவைக்கும் எந்திரங்கள் இருந்த போதிலும் பலரும் இது போன்ற ட்ரை கிளினர்ஸ் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதால் லாபம் கொழிக்கும் தொழிலாகத்தான் உள்ளது . இது எனக்கு ஆச்சரியமாக இல்லை . ஏற்றுமதி நிறுவனங்களில் அயரன் என்றொரு பிரிவு உண்டு . அதாவது ஆடைகள் வெட்டி தைத்து பரிசோதித்து வந்த பிறகு கடைசியாக அதை அயரன் செய்து அதன் பிறகே பாலிபேக்கில் போட்டுப் பெட்டியில் போட்டு லாரியில் ஏற்றுவார்கள் . இந்த அயரன் துறையில் பணிபுரிபவர்களைக் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துக கொண்டிருக்கின்றேன் . 15 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் போல இந்தச் சாதியில் பிறந்த பலரும் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள் . பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள் . ஆனால் தற்போது முதுகலை பட்டப்படிப்புப் படித்தவர்கள் வரைக்கும் இந்தத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள் . சென்ற மாதத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவரை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் . ஆள் எடுப்பாக இருந்தார் . அலுவலக ரீதியாக வேலைகளில் மட்டுமே செயல்படக்கூடியவர் என்பதை அவர் செய்து கொண்டிருந்த சொதப்பல் வேலையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது . காரணம் பீஸ் ரேட்டில் ஆடைகளைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள் . இவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பாட்டு நேரத்தில் வெளியே வந்தவரை தனியாக அழைத்துப் பேசிய போது தான் பல உண்மைகள் புரிந்தது . முதுகலை பட்டப்படிப்போடு வேறு சில படிப்புகளையும் முடித்தவரால் திருப்பூரில் உள்ள அலுவலக நடைமுறைகளில் ஜெயிக்க முடியவில்லை . உயர் வகுப்பில் பிறந்தவருக்கு இந்தப் பீஸ் ரேட் சமாச்சாரம் பிடித்த காரணத்தால் கற்றுக் கொள்வதன் பொருட்டுத் தனது தொழில் வாழ்க்கை பயணத்தை இந்தத் துறையில் தொடங்கியுள்ளார் . இன்று 90 சதவிகித இளைஞர்கள் தான் இந்த அயரன் துறையில் இருக்கின்றார்கள் . பள்ளி இறுதி வகுப்புப் படித்தவர்கள் முதல் பலதரப்பட்ட பட்டங்கள் வாங்கியவர்கள் வரைக்கும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள் . இன்றைய மாறிய சமூகத்தில் குறிப்பிட்ட தொழில் குறித்த எண்ணம் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்த விசயங்கள் மட்டுமே பேசு பொருளாக இருப்பதால் முதலீடு போட தயாராக இருப்பவனுக்கு எல்லாமே ஒரே தொழிலாகத்தான் உள்ளது . இன்றும் சாதி ரீதியான கொடுமைகள் இருக்கின்றதா என்றால் இருக்கத்தான் செய்கின்றது . அது மாறுமா ? மறையுமா என்றால் நிச்சயம் என் பார்வையில் மாறும் மறையும் என்றே தோன்றுகின்றது . இதற்கெனப் போராளிகள் தேவையில்லை . பொருளாதாரமே மாற்றிவிடும் . (09.06.2013) 25 மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள் []   ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுதல் என்பது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை . அது அவரவர் மகிழ்ச்சி அல்லது விருப்பம் என்பதாக எடுத்துக் கொள்ள முடிகின்றது . ஆனால் வேறொரு மதத்திற்கு மாற்றும் போது என்னவெல்லாம் சொல்லி மாற்றுகின்றார்கள் என்பது தான் கொடுமையாகக் கொடூரமாகத் தெரிகின்றது . தீவிரவாதத்திற்கு மூளைச்சலவை செய்து உருவாக்குகிறார்கள் என்பதைப் போலத் தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுருக்கின்றது . இங்கே தற்போது நடந்து கொண்டுருக்கும் மதமாற்றங்கள் ஒரு முடிவில்லா குழப்பத்திற்கே கொண்டு சென்று விடுமோ ? என்று தோன்றுகின்றது . இன்று அதிக அளவில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டுருக்கிறார்கள் . கடைசிப் புகலிடம் என்பதாக மக்களும் நம்புகிறார்கள் . ஒவ்வொரு நகர்புறத்திலும் நடந்து கொண்டுருந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இன்று புறநகர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டது . காரணம் உருவாகும் பிரச்சனைகள் அதிக அளவில் இருப்பதால் ஆட்சியாளர்களும் இந்தக் கூத்துக்களைக் கண்டு கொள்ள விரும்புவதில்லை . மதத்தைத் தொட்டால் மட்டுமல்ல பேசினாலே ஷாக் அடிக்கும் விசயமல்லவா ? அதற்கு மேலும் கேட்டாலும் இருக்கவே இருக்கு தனிநபர் சுதந்திரம் என்று வாயை அடைத்து விடுவார்கள் . ஆனால் மதம் மாறும் பெரும்பான்மையோர் அததனை பேர்களும் பொருளாதார ரீதியில் விளிம்புநிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள் . இவர்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் , வழங்கப்படும் உதவிகள் தான் இந்த மதமாற்றத்தை விரைவு படுத்துகின்றது . தங்களின் அத்தனை பிரச்சனைகளும் கர்த்தர் காத்தருள்வார் என்று செல்பவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுகின்றதா ? இந்து மதத்தில் இருக்கும் சாதீயத்தால் நாங்கள் மதம் மாறுகின்றோம் என்று கடநத இரண்டு நூற்றாண்டுகளாக இஸ்லாம் , கிறிஸ்துவம் வளர்ந்தது . ஒரு ஊரே மாறும் போது அதன் தாக்கம் என்பது வேறு . ஒரு தனிப்பட்ட மனிதர்கள் அதுவும் வாழ்வில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாறும் போது உருவாகும் பிரச்சனைகள் என்பது வேறு . சுற்றிலும் உள்ள உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டு , எதிர்ப்புகளை மீறி காதலித்துக் கரை சேர முடியாதவர்களைப் போலப் பலரின் வாழ்க்கையும் அல்லாடிப் போய்விடுகின்றது . திருப்பூர் , கோவை , மாவட்டங்க்ளில் கடந்த நாலைந்து வருடங்களாக இருந்த இது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகம் இல்லை . காரணம் மதமாற்றிகளின் முக்கியக் குறிக்கோளான பொருளாதாரம் சார்ந்த பங்களிப்புகள் இங்கே அந்த அளவுக்குச் செல்லுபடியாவதில்லை . கிடைத்த வரை லாபம் என்பதாக மாற்றியவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டுருக்கிறார்கள் . சேர்ந்தவர்களிடம் வசூலிக்கும் தொகையை வைத்துக் கொண்டு இப்போது வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள் . வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ஒருபக்கம் . வசூலிக்கும் நிதி மறுபக்கம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் . இதற்கு மேலும் வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த மதத்தில் கிடைக்கும் அங்கீகாரம் என்பது கடைசியில் அரசியல் தரகராக மாறும் அளவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது . அப்படிச் சென்றவர்கள் தான் இன்றைய மதமார்களும் , குருமார்களும் , சாமியார்களும் . திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் உள்ள தனிநபர்கள் தொடங்கிய ஒரு சிறிய ஜெபகூடம் இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி செலவு செய்து கட்டும் அளவுக்குப் பிரம்மாண்ட அளவுக்கு வளர்ந்துள்ளது . சுற்றியுள்ள பொட்டல்காடுகளை மிகக் குறைந்த அளவுக்கு வாங்கி , கிறிஸ்வ மதத்திற்கு மாறுபவர்களுக்கு ஐந்து செண்ட் நிலம் இலவசம் என்ற கொள்கை இன்று அந்தப் பகுதி முழுவதையும் கிறிஸ்துவப் பூமியாக மாற உதவியுள்ளது . வந்து குவிந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு நிதியென்பது உள்ளூரில் வெறியை உருவாக்க காரணமாக அமைந்து விடுகின்றது . மொத்தத்தில் மனிதர்களைத் தன்னிலை மறக்கும் அளவுக்கு விபரீத பாதையில் கொண்டு போய்க் கொண்டுருக்கின்றது . நாங்கள் மதவெறியர்கள் அல்ல என்று நாடகமாடும் அரசியல்வியாதிகளின் உதவியோடு ஒவ்வொரு ஊரிலும் இன்று மத ஓநாய்கள் வளர்ந்து கொண்டுருக்கின்றது . [] உள் மன ஆதங்கம் , ஆதரவற்ற நிலைமை , எதிர்பார்த்த விசயங்கள் நடக்காத போது உண்டான வெறுமை என்று ஒவ்வொன்றாக ஆழ்மனதில் பதிந்து அன்றாட வாழ்க்கையில் சபலத்துடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தான் அதிக அளவுக்கு மதம் மாறுகின்றார்கள் . நம்பிய சாமிகள் என்னைக் காக்க வரவில்லை . நம்பிக்கையளித்து எங்களை வாழ்விக்க வந்தவர்கள் தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதே இன்று மதம் மாறிக் கொண்டுருக்கும் அத்தனை பேர்களின் வாக்குமூலமாக இருக்கிறது . இதில் உண்மைகள் இருந்தாலும் மதம் மாறினாலும் அதில் உள்ள உள்பிரிவுகளும் , ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை . எங்களை ஒதுக்கினார்கள் என்று சொல்லியவர்கள் அத்தனை பேர்களும் வேறொரு ரூபத்தில் ஒதுக்கப்பட்ட வர்களாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் . இந்து மதத்தில் உள்ள சாதிகளை ஒழித்து விட்டால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என்பவர்களிடம் மற்ற மதத்தில் உள்ள பிரிவுகளை எப்படிப் போக்குவது என்றால் பதில் இருக்காது . காரணம் இங்கே மதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை . தன்னிலை உணர விரும்பாத கூட்டம் தான் இப்போது அதிகமாகிக் கொண்டுருக்கிறது . அரசியலுக்கும் , மதத்திற்கும் முக்கியத் தேவையே சுயநினைவு இருக்கக்கூடாது . சுயமாக யோசித்தால் கேள்விகள் வரும் . கேள்வி என்றால் அதற்குப் பதில் ஒன்று தேவையாய் இருக்கும் . பொய் , உண்மை என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும் . தொடக்கம் முதலே இதை நம்பு . இதை மட்டுமே நம்பு என்று சொல்லிக் கொடுத்து விடுவதால் எவராலும் மாற்றுப் பாதையை யோசிக்கக்கூட முடிவதில்லை . மதங்கள் காட்டிய பாதைகள் அப்படியே தான் இருக்கிறது . இடையில் வந்தவர்கள் உருவாக்கிய கொள்கைகள் தான் இன்று உலகத்தை வழிநடத்திக் கொண்டுருக்கிறது . மதங்கள் இருக்கின்ற வரைக்கும் பிரச்சனைகளுக்குப் பஞ்சம் இருக்காது . இதுவொரு மாற்று ஏற்பாடு . ஒன்றை மறக்க மற்றொன்று . அதை மறக்க இன்னோன்று . குறிப்பாக மைனாரிட்டி ஓட்டு வாங்க நினைக்கும் ஒவ்வொரு அரசியல்வியாதிகளுக்கும் சந்தோஷமாகவே இருக்கும் . மதத்திற்கு ஒரு தலைவன் . அதில் உள்ள உட்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தலைவர்கள் . இறுதியாக மோதவிட்டு அழகு பார்க்கும் போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம் . இன்று இந்தியா முழுக்க இந்த மதக் கலவரத்தின் தொடக்கங்கள் அங்கங்கே தோன்றிக் கொண்டேயிருக்கிறது . பாதிக்கப்படுவது தனி நபர்கள் மட்டுமே . உறவுகளை இழந்து , தனது அடையாளங்களை மறந்து , தன் மொழியை வெறுத்து இறுதியில் எது தனது பாதை என்பதை உணராமல் யாருடைய ஆதாயத்திற்காக நாம் இறந்தோம் என்பதை அறியாமலே இறந்து போனாலும் இந்த மதம் உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரைக்கும் அழியப் போவதில்லை . மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தவர் கூட இது போன்ற கூட்டத்திற்கு ஊர் ஊராகச் செல்லத் துவங்கும் போது கற்ற கல்விக்கும் மனிதனின் உணர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது . மனிதர்களின் வக்கிரமான உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவதற்கு இங்கே சிலர் இருக்கிறார்கள் . ஆனால் தூண்டில் புழுவாகவே பலரும் மாறிக் கொண்டுருக்கிறார்கள் . ஓட்டுக்காக உங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வருபவர்களை நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள் . அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் உங்களின் சுய உரிமைகளை இழந்ததானால் வந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும் . (31.08.2013) 26 அரசியல் அதிகாரம் -- பயத்தை உருவாக்கு []   டாக்டர் எம் . எஸ் . உதயமூர்த்தி . இப்போதுள்ள அரசியல் சூழலில் இவரை எத்தனை பேர்களுக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை . ‘ மக்கள் சக்தி இயக்கம் ‘ என்றொரு அமைப்பை உருவாக்கி இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர் . நதி நீர் இணைப்பு குறித்து ஆய்வரங்கம் கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தியதோடு அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆர் . வெங்கட்ராமனிடம் அறிக்கையைக் கொண்டு போய்ச் சேர்த்தவர் . கல்லூரி சமயத்தில் இவருடன் செயல்பட்ட அனுபவத்தில் பலமுறை பேசியுள்ளேன் . இவர் நடத்திய பல கூட்டங்களில் கலந்துள்ளேன் . அப்போது அவர் கூறிய வாசகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது . இவர் கொண்டு போய்ச் சேர்த்த அந்த அறிக்கையை வாங்கிய ஆர் . வெங்கட்ராமன் சொன்ன வாசகம் இது . ‘ ஏன் உங்கள் நல்ல வாழ்க்கையைக் கெடுத்துவிட்டு ஏன் இங்கே வந்தீங்க ?’ நாம் இந்தியர்கள் . இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பது சொல்வதற்கு எத்தனை எளிதாக இருக்கிறதோ ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் தான் எத்தனை வேறுபாடு . கர்நாடகாவில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜாபர் ஷெரிப் , முன்னாள் பிரதமர் தேவகௌடா முதல் இன்றைய மம்தா பானர்ஜி வரைக்கும் ஏன் தங்களுடைய மாநில நலனில் மட்டும் அக்கறை கொண்டு அத்தனை திட்டங்களையும் தங்கள் பக்கமே திருப்பிக் கொள்கிறார்கள் . ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு மொழிப் பிரச்சனை என்பதை விட டெல்லிக்குச் சென்றதும் ந்யூரான்களில் என்ன மாறுதல்கள் உருவாகுமோ தெரியவில்லை . ஒவ்வொருவரும் நல்ல இந்தியக்குடிமகனாக மாறிவிடுவது அதிசியமான உண்மை . முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப . சிதம்பரம் சொன்னது முற்றிலும் உண்மை . ‘ குஜராத்தில் இருந்து வந்து இறங்கும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்று விட முனைப்பு காட்டுவதைப் போலத் தமிழ்நாட்டில் இருந்து எவரும் எதையும் வந்து கேட்பதில்லை ‘. காரணம் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணாதிசியத்தை நாம் அணைவரும் அறிந்ததே . இது ஜெயலலிதா மட்டும் உருவாக்கிய பாதை அல்ல . இங்குள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் . மாநில நலன் என்பதை விடத் தம் மக்கள் நலன் அதைவிட மிக முக்கியம் . அதனை விடத் தங்களுக்கான லாபம் மொத்தத்தில் முக்கியம் . இல்லாவிட்டால் 63 சீட்டை கொடுத்து விட்டு நாயன்மார்கள் கதையைக் கலைஞர் பேசிக்கொண்டு இருக்கமாட்டார் . இப்படித்தான் கடந்து போய்க் கடந்து போய் இன்று வல்லரசு என்ற பெயரைக் கேட்டாலே வாந்தி பேதி போவது போல அலர்ஜியாக உள்ளது . மற்ற மாநிலங்களிலும் அடிதடி , ஊழல ் , கவிழ்ப்பு என்று எத்தனையோ சமாச்சாரங்கள் இருந்தாலும் டெல்லிக்கு படையெடுக்கும் சமயத்தில் மட்டும் நான் மலையாளி , நான் கர்நாடகம் , நான் பெங்காலி என்று வரிசை கட்டி நின்று விடுகிறார்கள் . ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அந்த அற்புத காட்சியைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ ? காரணம் தகுதியானவர்களை நாம் தேர்ந்தெடுக்க விரும்பாததே முக்கியக் காரணம் . படிக்காதவர்களிடத்தில் கூட ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்த சின்னங்கள் தான் அவரவர் சிந்தனைகளில் மேலோங்கியிருக்கிறது . தனி நபர்கள் அவர்கள் செயல்பாடுகள் குறித்து எந்தப் பொது நல அக்கறையும் வந்து விடுவதில்லை . என் வாக்கு ஜெயிப்பவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக இன்று ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனின் கனவுகளும் எட்ட முடியாத உயரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது . திருப்பூர் புத்தகக் கணகாட்சிக்கு வந்திருந்த எழுத்தாளர் , சிந்தனையாளர் ஞாநி அவர்களிடம் குறுகிய நேரம் இது குறித்துத் தான் சில கேள்விகளைக் கேட்டேன் . அவர் 1975 முதல் பத்திரிக்கை துறையில் இருப்பதாகச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது . எத்தனை தலைவர்களைச் சந்தித்து இருப்பார் ? எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கக்கூடும் ? மறுநாள் இறுதியாக விடைபெறும் போது சொன்ன வாசகம் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது . ‘ நான் எழுதும் கட்டுரைகள் கூடப் படித்துவிட்டு நகர்ந்து விடக்கூடிய வகையில் உள்ளதாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் ‘ என்றார் . நாம் பள்ளி கல்லூரிப் பாடங்களைத் தவிர்த்து , மற்ற புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய காலக் கட்டம் முதல் இன்று வரைக்கும் வாசிக்கும் பல எழுத்துக்களை எழுத்தாளர்களை நினைவுக்குக் கொண்டு வருவோம் . எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்தச் சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள் ? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்தச் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை . ஒழுங்காகப் படித்தவர்கள் உருப்படியான வேலைக்குச் சென்று விடுகிறார்கள் . அவன் வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் அப்பொழுதே முழுமையாகத் தீர்மானிக்கப்பட்டது போல் ஆகிவிடுகின்றது . அறைகுறையாகப் படித்தவர்கள் , முழுமையாகத் தங்கள் திறமைகளை வெளிக் கொணராதவர்கள் அங்கங்கே கிடைத்ததைத் தொத்திக் கொண்டுமாய் வாழ்க்கை ஓட்டத்தில் நகர்ந்து கொண்டு தனக்கான வாழ்க்கை எல்லையை இயல்பாக வகுத்துக் கொள்கிறார்கள் . தக்காளி விலை ஏறி விட்டாதா ? ரசம் வேண்டாம் . பெட்ரோல் விலை ஏறப் போகின்றதா ? இந்த வாரம் பத்து லிட்டர் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வோம் . போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து . மிச்சமும் சொச்சமும் ஏக்கத்தையும் வெறுப்பையும் சுமந்து கொண்டு அமைதியற்ற வாழ்க்கையைப் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் இந்த மூன்று பிரிவுக்குள்ளும் அடங்காமல் எது குறித்தும் அஞ்சாமல் இந்த அரசியலை கர்மசிரத்தையாகக் கற்று தேறி வருபவர்கள் தான் நம்மை ஆட்சி புரியும் மக்கள் சேகவர்கள் . படிப்பு , ஒழுக்கம் , முதல் வேறெந்த தகுதிகளும் தேவையில்லை . எந்த நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் களமிறங்க தைரியம் இருந்தால் போதுமானது . நிச்சயம் நகரம் ஒன்றியமாக மாறி இறுதியில் அமைச்சராக வந்துவிட வாய்ப்புண்டு . அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கிறது . ஆனால் படித்து முடித்து விட்டு வெளியே எவரும் தான் வாழும் சமூகத்திற்குத் தேவையான எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை விட அதற்குத் தயாராகவும் இல்லை என்பதே நிதர்சனம் . டாக்டர் எம் . எஸ் . உதயமூர்த்தியின் முயற்சியைப் போலவே இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பாக விஜய் ஆனந்த போட்டியிடுகிறார் . இந்தக் கட்சியின் சார்பாகப் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இளங்கோ பாலசுப்ரமணியம் ( கிணத்துக்கடவு ) பி . தண்டபாணி ( சிங்காநல்லூர் ) கே . துரைராஜ் ( கோவை வடக்கு ) வி . விஸ்வநாதன் ( கவுண்டம்பாளையம் ) கண்ணம்மாள் ஜெகதீசன் ( தொண்டாமுத்தூர் ) தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள் . விஜய் ஆனந்த் ‘ 5 வது தூண் ‘ என்ற ‘ ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ‘ தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் . அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் மென்பொருள் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு வரை நடத்திக் கொண்டு வந்தவர் . இவர் வாஷிங்டன் தமிழ் சங்க தலைவராகவும் (2007) செயல்பட்டுக் கொண்டிருந்தவர் . ஐ . நா . சபையின் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கு பேச்சாளராகவும் உள்ளவர் . இவருடைய நோக்கம் 2016 ஆம் ஆண்டு அமையப் போகும் அரசு படித்தவர்களால் உருவாக்கப்பட வேண்டிய அரசாக இருக்க வேண்டும் என்று அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர் . கோவைக்குள் இருப்பவர்களுக்கோ , புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை நண்பர்களுக்கு இவரைப் பற்றித் தெரியக்கூடும் ? படித்தவர்கள் , பண்பாளர்கள் அத்தனை பேர்களும் வெளியே இருந்து பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு இன்றைய அரசியல் . நமக்கான களத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புவதில்லை என்பது எத்தனை உண்மையோ அந்தக் களம் உருவாவதற்குண்டான எந்த வாய்ப்புகளையும் நாம் தான் கெடுக்கவும் விரும்புகின்றோம் . கடந்த பத்து நாளில் இந்த அரசியல் உள் அரங்கு விளையாட்டுகளை நேரிடையாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது . ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் அத்தனை செயல்பாடுகளையும் அங்குலம் அங்குலமாக நேரிடையாகக் களமிறங்கி ரசித்த எனக்கு இந்த அரசியல் பாலபாடங்களில் உள்ள ஆரம்ப அரிச்சுவடியோ பயம் என்ற சொல்லில் தான் உருவாக்கப் படுகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது . ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்திற்கும் உண்டான இருப்பு சார்ந்த விசயங்களுக்காக எத்தனையோ கொள்கைகளை விட்டுக் கொடுத்து வெளியே நிற்கவேண்டியாய் இருக்கிறது . முதலீட்டுக்ளை முடக்கியவர்களுக்குத் தங்கள் சொத்துக்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவசர அவஸ்யங்கள் . படித்தவர்களுக்குத் தங்களுக்குண்டான எந்தத் தேவைகளும் இந்த அரசியல் தந்து விடப் போவதில்லை என்ற கருத்து ஆழப் பதிந்து போய்விட்டது . அன்றாடங்காய்ச்சிகளுக்கு இது குறித்து எப்போதும் என்றும் அக்கறையிருப்பதில்லை . மீதி யார் ? விழிப்புணர்ச்சி என்பது நமக்கு விரும்பத்தாக ஒன்றாக இருப்பதால் ஊழல் என்பது இன்று இந்திய ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறியுள்ளது . எத்தனை கேவலங்களை ஒருவர் செய்து இருக்கிறாரோ அவர் தான் இருப்பதில் சிறப்பு என்ற தகுதியும் எளிதில் வந்து விடுகின்றது . வேறென்ன வேண்டும் . கேட்பவர்கள் தயாராக இருக்கச் சொல்பவர்களுக்குப் புராண கதைகளுக்காகப் பஞ்சம் .. நமக்கு வசதியாக எத்தனையோ வார்த்தைகளும் வாசகங்களும் நமக்குள் வைத்திருப்போம் . நம்மால் ஒன்றும் செய்யமுடியாது ? வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் ? இயல்பை தாண்டிப் போனால் வரும் விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது ? நம் செயல்பாடுகளால் நம்முடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அமைதியிழந்து விடும் . மொத்தத்தில் பயம் . எங்குத் திரும்பினாலும் பயத்தைத் தவிர வேறொன்றுமில்லை . இந்தப் பயமே இன்றைய அரசியலில் பிரதான பங்கு வகிக்கின்றது . இந்தப் பயத்தை வைத்துக் கொண்டு தான் அத்தனை பேர்களும் மேலே வந்து விடுகிறார்கள் . அவர்களால் பயத்தை உருவாக்க முடியும் . வீட்டுக்குள் வந்து மிரட்ட முடியும் . வீட்டுக்குள் வெளியே நின்று கத்த முடியும் . நடுத்தரவர்க்கத்தினர்களுக்குண்டான மிகப் பெரிய பலவீனமே இதில் இருந்து தான் தொடங்குகின்றது . தனக்குத் தேவையான சகிப்புத்தன்மையோடு வாழும் வாழ்க்கையைச் சமாதானப்படுத்திக் கொண்டு வாழவும் தொடங்கிவிடுகிறார்கள் . அரசியல் என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் வர வேண்டிய இடத்தில் இருந்து பதவியை வைத்து சம்பாரிக்க விரும்புவர்களின் இடமாக மாறியுள்ளது . எந்தக் காலத்திலும் மாளிகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஓட்டுப் போட வருவதில்லை . படித்தவர்களில் கூடக் குறைவான சதவிகிதம் தான் வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள் . மீதி இருப்பவர்கள் யார் ? அன்றாடங்காய்ச்சிகளும் , அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருப்பவர்களும் தானே ? எதைத் தருவாய் ? எப்போது தருவாய் ? என்று அவர்கள் கேட்பதில் என்ன தவறு ? ஓட்டை வாங்க ஆட்கள் தயாராக இருக்கும் போது வாங்கத்தானே செய்வார்கள் . ஒவ்வொரு தேர்தலில் வாக்களிக்காதவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற சட்டம் வரும்பட்சத்தில் இந்த மாளிகைவாசிகள் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் . நாங்கள் ஓட்டளித்தால் மட்டும் திருட வந்தவர்கள் திருப்பியா தரப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தைப் போக்க என்ன செய்யலாம் ? சார்பாளர்களாகத் தேர்ந்தெடுத்தவர்கள் செயல்படாத பட்சத்தில் அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படியிருக்கும் ? உங்கள் ஓட்டு என்பது உங்கள் உரிமை . நாம் உணர்ந்து போடப்போகும் நபர்கள் மூலம் தான் நம்மை நாமே பெருமை படுத்திக் கொள்ளமுடியும் (26.03.2011) 27 சமச்சீர் கல்வி வரமா சாபமா []   முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது . தற்போது நீக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஒரு விவாத அலையை உருவாக்கியுள்ளது . சென்ற கலைஞர் ஆட்சியில் உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டிய சமச்சீர் கல்வி அதோகதியாக மாறியுள்ளது . சென்ற வருடம் நீதிமன்றத்தில் தோற்றுப் போய்த் திரும்பிய தனியார் பள்ளிகள் காட்டில் இப்போது சரியான அடைமழை . அரசியல் காழ்புணர்ச்சியால் தற்போதைய அரசு இந்த நல்ல திட்டமான சமச்சீர் கல்வியை நீக்கியது தவறு என்று சொல்ல வேண்டிய நடுத்தரவர்க்க மக்களின் குரல் ஒன்றும் மேலெழுந்தாகத் தெரியவில்லை . எங்கள் பிள்ளைகளில் மாற்றுச் சான்றிதழ்களை எங்களைக் கேட்காமல் துரித அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் என்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நடவடிக்கை குறித்துப் பெற்றோர்கள் புலம்புகின்றார்களே தவிர அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணமில்லை . காரணம் பெற்றோர்களின் மனோபாவம் ஒன்றே ஒன்று தான் . என் பிள்ளையின் கல்வியென்பது நாளை வருமானத்திற்கான இன்றைய முதலீடு . இவர்களின் கணக்கைப் போலவே தனியார் பள்ளிக்கூடங்களும் முடிந்தவரைக்கும் மூதலீட்டை வட்டியோடு உடனடியாக எடுத்துக் கொண்டிருக்கிறது . [] உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று கொடிநாட்டி வந்த இந்தச் சமச்சீர் கல்வி பிரச்சனை நிச்சயம் இந்த அரசுக்கு முதல் ஆப்பாகத்தான் இருக்கப் போகின்றது . ஆனால் இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் நடுத்தரவர்க்க , கிராமப்புற பெற்றோர்கள் மத்தியில் எந்த அலையும் உருவாகவில்லை . காரணம் என்ன ? கிராமப்புற மாணவன் படிக்கும் கல்வியும் நகர்புறத்தில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டத்தின் படி படிக்கும் போது இருவருக்குண்டான இடைவெளி இருக்காது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சமச்சீர் கல்வியைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு நம் மக்களின் கல்வி அறிவு குறித்த தற்போதைய மனோபாவத்தைப் பார்த்து விடலாம் . என் பார்வையில் கடந்த ஓராண்டாகப் பார்த்து வந்த நிகழ்வுகள் இது . திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர் , ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கியக் கல்விக்கோயிலாக உள்ளது . பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய்த் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு . காரணம் ஒழுக்கத்தைத் தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம் . ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் கண்ணியவானாக வளர்ந்து வந்து நிற்பார்களாம் . இது போல வளர்ந்து நிற்பவர்கள் பெரும்பாலும் அப்பா வளர்த்த நிறுவனத்தை வளர்க்கின்றார்களோ இல்லையோ நடிகைகளுக்கு ப்ளாங் செக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் அசமந்த மக்குப் பிள்ளையாகவே இருந்து தொலைந்து விடுகிறார்கள் . மூன்று தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கும் தகப்பன்மார்கள் எப்படியோ இவர்களைச் சகித்துக் கொண்டு பிள்ளைகள் படித்த கல்விக் கோயில்கள் கற்றுக் கொடுக்காத நல்லொழுக்கங்களைத் தங்களைச் சொத்துக்களை இழந்து கற்றுக்கொடுக்கும் அபாக்யவான்களா இருக்கிறார்கள் . பிள்ளைகள் கரைத்துக் கொண்டிருக்கும் சொத்துக்களை ஆஞ்சியோகிராம அல்லது பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . இந்தக் கண்ணியவான்கள் படித்த கல்விகோயில்கள் வாங்கிய பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரைக்கும் உள்ளது . தான் வளர்த்து வைத்துள்ள நிறுவனத்தில் ஒரு சாதாரணப் பட்டதாரியாக வந்து உட்கார வைக்க வேண்டும் என்று நினைக்கும் தகப்பன் மகனின் கல்விக்கென்று செலவழித்த தொகை குறைந்தபட்சம் 20 லட்சம் . காரணம் பெரும்பாலான உயர்தர வர்க்க மக்கள் படிக்கும் கல்விக்கூடங்கள் கல்விக்குக் கொடுக்கும் மரியாதை மாணவனின் ஒழுக்கத்திற்குக் கொடுப்பதில்லை . விதிவிலக்குகளைத் தவிர்த்து . அட ுத்து ? சென்ற கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்த நண்பரை அவரின் அச்சகத்தில் சந்தித்தேன் . மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்துப் பலங்கொண்ட வரைக்கும் கைகுலுக்கினார் . ” நீங்க சொன்ன நண்பர் பள்ளித் தாளாளரிடமிருந்து போராடி ஒரு சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டார் ” என்றார் . காரணம் வேறொன்றுமில்லை . காங்கேயம் சாலையில் இருந்த ஒரு பள்ளியில் அவர் குழந்தையை ப்ரிகேஜியில் சேர்த்து விட்ட மகிழ்ச்சி . அந்தப் பள்ளிக்கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . அவர் கட்டிய கட்டணம் அதிகமில்லை . நன்கொடையோடு ஒரு வருட கட்டணம் 40.000. குழந்தை படிப்பது ப்ரிகேஜி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் . “ சர்வதேச தரத்தில் இருக்கிறது . என் குழந்தையை அங்கே தான் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் ” என்று முந்தைய ஆண்டில் இருந்து அந்தப் பள்ளி குறித்த நினைவாகவே இருந்தவர் . நீச்சல் குளம் முதல் வகுப்பறை ஏசி வரைக்கு இருக்கிறது என்ற மகிழ்ச்சி வேறு . நண்பர் மிகுந்த வசதி படைத்தவர் அல்ல . நடுத்தரவர்க்கத்திற்குச் சற்று மேம்பட்ட வாழ்க்கை . ஆனால் இப்போதுள்ள திருப்பூர் வாழ்க்கையில் அவர் குழந்தைக்குக் கட்ட வேண்டிய கட்டணத்திற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் . ஆனால் அவர் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை . வேறு பள்ளியில் சேர்க்கும் எண்ணமுமில்லை . நண்பரின் குழந்தை பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது உத்தேசமாகப் பத்து லட்சமாவது செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும் . மற்றொருவர் ? அவர் உடன் பணிபுரிந்த நண்பர் . இங்குப் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தவர் . ஒரு வருடமாய் அடித்த சுனாமியில் பதவியிழந்து , சிறிய நிறுவனங்களில் சேர முடியாமலும் , தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமலும் கடைசியாகச் சிறிய தொழிலை தொடங்கி அதிலும் இழந்து அதோகதியாக இருப்பவரின் ஒரே பையன் படித்த பள்ளிக்கூடமென்பது பணப்பிசாசு கூட்டம் . அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் . சென்ற வருடங்களில் இவருடன் பேசும் போது நீங்க தப்பு பண்ணிட்டீங்க ? என் பையனோட பேசிப் பாருங்க . அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்தைப் பார்க்கும் போது நான் படுற கஷ்டமெல்லாம் பெரிசா தெரியலை என்றார் . இன்று அவர் பையன் நாக்கு இருக்கும் வாய் சாப்பிடுவது ஒரு ரூபாய் அரிசி . இறுதியாக ? வீட்டுக்கு அருகே பெரிய குடியிருப்பு உண்டு . அங்குள்ளவர்கள் பெரும்பாலும் தொழிலாளவர்க்கத் தோழர்கள் . வாரம் முழுக்க வேலையிருந்தால் தான் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் பாட்டம் . இரவு முழுக்க டாஸ்மாக் கொடுக்கும் சந்தோஷம் . குழந்தைகளை அருகே இருக்கும் ஆங்கில வழி கல்விகூடத்தில் தான் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் . இதில் பாதிப்பேர்கள் ஊரை காலி செய்து போய்விட்டார்கள் . மீதியிருப்பவர்கள் பணம் கட்ட முடியாத காரணத்தால் இந்த வருடம் சற்றுத் தொலைவில் உள்ள அரசாங்கப்பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்கள் . சம்ச்சீர் கல்விக்கும் மேலே உள்ள சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா ? மாறிவரும் சமூகச் சிந்தனையில் இப்போது கல்வி என்பது அறிவுக்குரிய விசயம் அல்ல . அது குடும்பக் கௌரவத்திற்குரிய விசயமாகவே மாறியுள்ளது . என் குழந்தை எப்படிப் படிக்கிறான் ? என்பதை விட எந்தப் பள்ளியில் படிக்கிறான் என்பது தான் இப்போது பெற்றோர்களிடம் இருக்கும் முக்கியப் பேசு பொருளாக உள்ளது . முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வியென்பது பெரும்பாலான பெற்றோர்களிடம் ஒரு விதமான எதிர்மறை சிந்தனைகளைத்தான் உருவாக்கியது . பெரும்பாலான பெற்றோர்கள் அரசாங்கம் கல்விக் கொள்கையில் தலையிடக்கூடாது என்கிறார்கள் . அதிலும் சமீப காலமாகப் புற்றீசல் போலவே முளைத்து , கல்வியை வியாபாரக்கும் கொழுந்துகள் கொடுக்கும் உத்திரவாதமென்பது இப்போது வேறு விதமாக உள்ளது . எங்கள் பள்ளியில் அரசாங்க பாடத்திட்டம் அல்ல . சர்வதேச தரத்திற்கு இணையாகப் போட்டி போடக்கூடிய வகையில் உள்ள பாடத்திட்டம் என்பதாகப் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து மொத்த முட்டாளாக மாற்றி இருக்கும் போது அரசாங்கம் உருவாக்கிய சமச்சீர் கல்வி என்ன தாக்கத்தை உருவாக்க முடியும் ? இப்போது காசு வாங்கிக் கொண்டும் கமுக்கமாகக் குத்தி தள்ளிய மக்கள் விபரமாகவும் பேசத் தொடங்கி விட்டனர் . சமச்சீர் கல்வி கொண்டு வந்த கலைஞர் குழந்தைகள் எங்கே படித்தார்கள் . ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்திக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் ( பள்ளிக்கூடத்தின் பெயர் சன் ஷைன் என்னவொரு தமிழ்பற்று ?) எந்தப் பாடத்திட்டத்தின் படி நடத்துகிறார்கள் என்று வக்கணையாகக் கேள்வி வேறு கேட்கிறார்கள் . ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இப்போது தங்கள் குழந்தைகள் குறித்து அவரவர் மனதில் உள்ளது ஒன்றே ஒன்று தான் . என் குழந்தை நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும் . இந்த ஆங்கில மோகமென்பது ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கத் தனியார் கல்விக்கூடங்களும் முடிந்தவரைக்கும் லாபம் என்பதாகக் கல்லாகட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் . இப்போது மெட்ரிக் சிலபஸ் என்பதிலிருந்து சிபிஎஸ்சி வரைக்கும் வந்து நின்று அடுத்தக் கட்டண கொள்ளையை வேறு தொடங்கியிருக்கிறார்கள் . இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது எல்லாவற்றுக்கும் ஒன்றே தான் . இந்தப் பாடத்திட்டத்திற்கு இத்தனை என்று எங்குமில்லை ? ஆனால் இதற்காக மொத்தமாகத் தனியார் கல்விகூடங்களை மட்டும் குறை சொல்ல முடியாது . தற்போது மாநில அளவில் முதன்மை இடங்களில் வந்து கொண்டிருக்கும் மாணவர்களும் , நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் சமீப காலமாக அரசாங்க பள்ளிக்கூடங்களும் அதிக அளவில் இருக்கத் தான் செய்கின்றது . ஆனால் மாநில அரசாங்கம் கல்வி குறித்து உண்மையான அக்கறை கொள்ளாத பட்சத்தில் தான் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கின்றது . தனியார் கல்விக்கூடங்கள் செய்வதோடு அதற்குண்டான கட்டணங்களையும் இரண்டு மடங்காக வசூலிக்கும் போது தான் பிரச்சனையின் தொடக்கமே உருவாகின்றது . அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை இந்தப் பாழுங்கிணற்றில் மறைமுகமாகக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறது . சென்ற ஆட்சியில் செம்மொழி மாநாடு என்று அதிகாரபூர்வமாக 380 கோடிகளைக் கொண்டு போய்க் கொட்டினார்கள் . இப்போது சமச்சீர் கல்வியை மாற்றுவதால் 200 கோடி நட்டம் என்று தொடர்ந்து காட்டுக் கத்தலாய் ஊடகத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்கள் . அந்தச் செம்மொழி மாநாட்டினால் யாருக்கு என்ன லாபம் வந்தது ? மாநாடு முடிந்த அடுத்த நாள் முதல் ஒரு தமிழ்ப்புரட்சி நடந்து மக்கள் என் மொழி என் இனம் என்று பேசியிருப்பார்களோ ? செம்மொழி மாநாடு குறித்து , தன்னைப் பற்றி அவசரமாய்ப் பாடப் புத்தகத்தில் கொண்டு வந்த பதவியை இழந்த கலைஞர் அரசின் கல்வித் துறையின் சாதனைகளைச் சிலவற்றைப் பார்த்துவிடலாம் . இப்போதும் தமிழகத்தில் சுமார் 1500 அரசாங்கப் பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே செயல்படுகின்றது . இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் 80 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களை நம்பியே படித்து வருகின்றனர் . தொடக்கக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரைக்குமான வகுப்புகளுக்குரிய 60 000 ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது . இது போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சுமார் 10 000 காலியிடங்கள் உள்ளது . இதையெல்லாம் விட மற்றொரு கொடுமையும் உண்டு . ஏறக்குறைய 17 000 ஆசிரியர்களின் முக்கியப் பணியென்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் , பஞ்சாயத்து யூனியன் வேலைகள் என்று வருட்ந்தோறும் வேறு வேலை செய்ய வேண்டும் . கர்மவீரர் காமராஜர் காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களின் சதவிகிதமென்பது இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக இருந்தது . இதுவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி தற்போது 49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற ரீதியில் வந்துள்ளது . பள்ளிக்கூடங்களில் தான் இந்தக் குளறுபடியென்றால் கல்லூரியிலும் இதே நிலைமைதான் . தமிழகத்தில் 62 கலைக்கல்லூரிகள் உள்ளது . இதில் ஷிப்டு முறையில் செயல்படும் சுயநிதிக்கல்லூரிகளும் உள்ளது . இவை அனைத்திலும் நிரப்பப்படாமல் இருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை 3000. பேராசிரியர்கள் இல்லாமலேயே நமது மாணாக்கர்கள் அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500 ஆகும் . ஏன் தனியாரைத் தேடி பெற்றோர்கள் செல்கிறார்கள் என்பதை இந்தக் கணக்குகள் நமக்கு உணர்த்தும் . கல்விப்பானையே ஓட்டையாக இருக்கும் போது அதில் உள்ள தண்ணீர் குறித்து யாருக்கு அக்கறை ? முடிந்தவரைக்கும் கல்விக்கட்டணம் என்கிற ரீதியில் தனியார் பள்ளிகள் சுருட்ட , நாங்கள் உழைத்து சுடுகாடு போனாலும் போவோமே தவிர எங்க பிள்ளைங்க இங்கீலிஷ் படித்தே ஆகனும் என்கிற ரீதியில் இருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் சமச்சீர் கல்வி என்பது சமாதிக்குரிய சங்கதிதான் . எந்த அரசாங்கமும் இப்போதுள்ள தனியார் கல்விக்கூடங்களை அடக்கத் தேவையில்லை . அவர்களின் கட்டணக் கொள்ளையைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை . இந்தச் சமச்சீர் கல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பது குறித்தும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை . தெரிந்தே சவக்குழியில் போய் விழுபவர்களைக் காப்பாற்றுவதை விட வேறு சிலவற்றைத் தற்போதைய அரசாங்கம் உடனடியாகச் செய்தாலே போதுமானது . இப்போது சமச்சீர் கல்வியை விட வேறு சில முக்கியக் கடமைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கிறது . இப்போதுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்களைத் தெளிவான முறையில் , சரியான ஆசிரியர்கள் கொண்டு , முறையான வசதிகள் செய்து கொடுத்தாலே போதுமானது . இப்போதும் கூடப் பல பெற்றோர்களும் அரசாங்கப் பள்ளியில் இடம் கிடைக்காதா ? என்கிற ரீதியில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்க்ள் . முறையான கட்டிட வசதிகள் இல்லாமல் ஆட்டு மந்தைகளைப் போல மாணவர்களை அடைத்து எத்தனை நாளைக்குத் தான் அரசாங்க பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் அறிவுக்கண் திறக்கும் பணியில் ஈடுபட முடியும் ?. காரணம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு நன்றாகவே தெரியும் . பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும் . (27.05.2011) 28 ஊரெல்லாம் பெட்ரோல் வாசம் []   ” நாட்டின் நலனை கருத்தில் கொண்டே பெட்ரோல் விலையை உயர்த்தினோம் . இனிமேலும் உயராது என்று என்னால் உறுதியளிக்க முடியாது . இது குறித்து எவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை . ” கடந்த வருடம் நவம்பர் மாத முதல் வாரத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 1.80 என்று உயர்த்திய போது எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னைச் சந்திக்க வந்திருந்த மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த எம்பிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது வார்த்தைகள் இது . முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர் . சோனியா பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர் . என்று பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருந்த கவலையை அந்த நிமிடத்தில் தவிடுபொடியாக்கிவிட்டார் . மன்மோகன் சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதை . இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவாகும் என்று இவர் பிரதமராக வந்தமர்ந்த போது சொன்னவர்களின் வாயில் ஒரு லிட்டர் பெட்ரோலைத்தான் ஊற்ற வேண்டும் . வளமான எதிர்கால இந்தியா என்ற கனவை ஒவ்வொரு இந்தியனும் மனதில் மட்டுமே சுமந்திருக்க வேண்டும் என்பதைத் தான் சொல்லாமல் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வந்தமர்ந்து செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார் கடந்த 2004- ம் ஆண்டுக் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது , பெட்ரோல் விலை ரூ . 37.84 ஆக இருந்தது . இந்த மாதத்தில் உயர்ந்துள்ள விலை வரைக்கும் நீங்களே ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள் . 100 சதவிகிதத்திற்கு அதிகமாகவே உயர்ந்துள்ளது . ஏழு வருடங்களுக்குள் ஏனிந்த விலை உயர்வு ? இவருக்கு ஒரு படி மேலே போய் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் மந்திரி பிரணாப் முகர்ஜி அந்தச் சமயத்தில் மேற்கு வங்காள பெர்காம் வந்திருந்த போது நிருபர்களிடம் பொங்கியே தீர்த்துவிட்டார் . ” இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு . அரசாங்கத்திற்குச் சம்மந்தம் இல்லாத விசயம் ” என்றார் . அவர் கூற்றுப்படி இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே இருப்பது போலவும் அது மத்திய அரசாங்கத்திற்குக் கட்டுபடாத தேவதூதன் போலவும் சுட்டிக்காட்டினார் . அதென்ன இந்தப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்தத் தன்னாட்சி அதிகாரம் ? ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுக்கும் இந்தப் பெட்ரோல் விலை விவகாரம் பெரிய மண்டையடி சமாச்சாரமாக இருந்து கொண்டிருக்கிறது . ஒரு பக்கம் கச்சா எண்ணெய் நிலையில்லாத விலை என்று சடுகுடு ஆட்டம் காட்ட மற்றொரு பக்கம் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அழிச்சாட்டியம் செய்ய என்ன தான் செய்ய முடியும் . விலையை உயர்த்த வேண்டுமென்றால் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் . ஆனால் தேர்தல் சமயமென்றால் எப்படா வாய்ப்பு கிடைக்கும் ? என்று எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி தயாராகக் காத்திருப்பார்கள் . அதுதான் ஆளை விட்டால் போதுமென்று “ தன்னாட்சி அதிகாரம் ” என்ற மந்திர வார்த்தைக்குள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழியைக் காட்டி விட்டு ஒதுங்கி விட்டார்கள் . நிதிமந்திரி சொன்னதும் ஒரு வகையில் உண்மை தான் . எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிய விலையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கிறது . ஆனால் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 2010 ஜுன் மாதம் முதல் தன்னாட்சி அதிகாரத்தைக் கொடுத்ததும் இவர்களே தான் . . இதற்குப் பிறகு எட்டு முறை விலையேற்றம் நடந்துள்ளது . கிரிட் பாரிக் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங் அரசாங்கம் இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கொள்கை முடிவுக்காக அரசாங்கத்தைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று பச்சைக் கொடி காட்ட பெட்ரோல் விலை ஒரு பக்கம் சர் சர் என்று உயர விலைவாசிகளும் விண்ணில் பறக்கத் தொடங்கியது . ஆனால் இந்தப் புத்திசாலிகள் ஒன்றை மறந்து விட்டார்கள் . நாட்டில் எண்ணெய் மற்றும் எரிபொருளின் விலைவாசி உயர்வென்பது அதற்கான விலை உயர்வு மட்டுமல்ல . சராசரி மக்களின் அத்தனை அடிப்படை பொருட்களின் விலைவாசிகளையும் பதம் பார்க்கும் என்பதை எளிதாக மறந்து போய்விட்டார்கள் . சாதாரணமாகச் சர்வதேச ச்ந்தையின் செயல்பாடுகளைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாளைக்கு ஒரு முறை விலையைத் தீர்மானம் செய்கிறார்கள் . இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மூலமே நமக்குத் தேவைப்படும் டாலர் கிடைக்கின்றது . இந்த டாலர்கள் நம் கைவசம் இருந்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் நம் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நிற்க முடியும் . காரணம் நமக்குத் தேவைப்படும் 74 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் . இதற்கு அமெரிக்கா டாலர் இருந்தால் மற்ற நாடுகளில் இருந்த கச்சா எண்ணெய் வாங்க முடியும் . மீதியுள்ள 26 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டில் கிடைக்கின்றது . இந்த உள்நாட்டு தயாரிப்பும் தனியார்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் குரூப் நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது . இவர்களும் இந்தியா முழுக்கப் பெட்ரோல் நிலையங்களைக் கடை விரித்தார்கள் . இந்த இடத்தில் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் ஒன்று உண்டு . நிதி ஆதாரத்தைப் பெருக்கப் பெட்ரோல் மூலம் கிடைக்கும் வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கும் நமது அரசாங்கம் இந்தத் தனியார்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளோ , வரிகளோ இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும் . காரணம் அவர்கள் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் முதலாளிகள் . ஆனாலும் அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலையோடு போட்டி போட முடியாமல் குறிப்பட்ட காலகட்டத்திற்குள் முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டு கடையை மூடத் தொடங்கி விட்டார்கள் . இவர்கள் கொடுத்த நெருக்கடியே இனி அரசாங்கம் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கக் கூடாது என்பது . தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டமென்றால் நம்முடைய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது ? இந்தியாவில் முக்கியமான மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளது . இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் , இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் . இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்குத் தேவைப்படும் எரிபொருள் தேவைகளைக் கவனித்துக் கொள்கின்றது . இந்தப் பெட்ரோல் விலையேற்றம் என்பதற்குப் பின்னால் கச்சா எண்ணெய் , பேரல் , சர்வதேச சந்தை , இந்திய ரூபாய்க்கான டாலர் மதிப்பு , வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் என்று வெகுஜனத்திற்குத் தெரியாத பல விசயங்கள் உண்டு . அத்தனையும் டாலர் அரசியல் . ஆனால் இவர்கள் சொல்லாத பல விசயங்கள் இதற்குப் பின்னால் உண்டு . உலக மேஸ்திரி அமெரிக்கா எப்படிப் பெட்ரோல் வளமுள்ள நாடுகளைக் குறிவைத்து நடத்தப்படும் கேவலமான அரசியலைவிட இந்தியாவில் பெட்ரோல் விலையேற்ற அரசியல் மகா மட்டமானது . . நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அப்படியே கிடைத்து விடுவதில்லை . கச்சா எண்ணெய்க்காக , எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது , அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம் . அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது . அல்லது நேரிடையாக இந்தக் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றோம் . அதன் பிறகே சுத்திகரிப்பு பணி தொடங்குகின்றது . அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு , பெட்ரோல் , நாப்தா , கெரசின் , விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல் , டீசல் வகைகள் , ஆயில் வகைகள் , தார் , மெழுகுகள் எனப் பிரித்து எடுக்கப்படுகின்றன . இது ஒவ்வொன்றுக்கும் உண்டான விலையை வைத்து மதிப்பு கூட்டப் படுகின்றதா ? இல்லை மொத்தமாகவே சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விலை என்று பெயரில் கண்க்கு காட்டுகிறார்களா என்பதும் புரியாத மர்மமே ? எதிர்க்கட்சி , எதிரிக்கட்சி எவரும் இது குறித்து அக்கறைப்படுவதில்லை . மம்தாபானர்ஜி கூட அந்தச் சமயத்தில் ஆதரவை விலக்கிக் கொள்கின்றோம் என்ற ஆயுதம் எடுத்து அடுத்த நாளே அடக்கி வாசிக்க அந்த நாடகமும் முடிவுக்கு வந்தது . இறுதியாக 2011 நவம்பர் 15 அன்று ரூபாய் 2.22 லிட்டருக்குக் குறைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்குத் தேன் தடவியது போலவே இருந்தது . இன்றும் இதே தான் நடந்தது என்பதை நினைவில் கொண்டு வரவும் . ஏறக்குறைய ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் மாநில மத்திய அரசாங்கங்கள் சேர்ந்து வசூலிக்கும் வரி மட்டும் 50 சதவிகிதம் . அதாவது பாதிக்கு பாதி . ஆமாம் இவ்வளவு வரியும் எங்கே போகின்றது . ஒரு சின்ன விசயத்தைப் பார்த்தாலே உங்களுக்கே உண்மை நிலவரம் புரியும் . தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள வரவு செலவு கணக்கு இது . இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் 2006 முதல் 2007 வரை வரி கழித்தது போகப் பெற்ற லாபம் 7,499 கோடி . இதுவே 2009 முதல் 2010 ல் பெற்ற ஆண்டு வருமானம் 10,220 கோடி . இதைப் போலவே இந்துஸ்தான் பெட்ரோலியம் பெற்ற ஆண்டு வருமானம் 2010 முதல் 2011 வரையில் 10,254 கோடியாகும் . பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இதே ஆண்டில் பெற்ற லாபம் 1,546 கோடி ரூபாய் . ஆனால் நம்முடைய நிதி அமைச்சர் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்கிறார் . எண்ணெய் நிறுவனங்கள் மற்றொரு பக்கம் சொல்லிக் கொண்டிருப்பது என்ன தெரியுமா ? நிலையில்லாத கச்சா எண்ணெய் விலையின் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 6,61 ம் , ரேசனில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு ரூபாய் 24,63 ம் , வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 270 நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் . உள்நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கே இத்தனை லாபமென்றால் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களில் உள்ள லாப நட்ட கணக்கு என்ன சொல்கின்றது ? பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர் . அதே காலக்கட்டத்தில் ஜி -7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது . அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி -7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம் . கடந்த 2008 ஆம் ஆண்டுக் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 105 டாலராக இருந்தது . அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 49. இதுவே 2009 ஆம் ஆண்டு விற்ற கச்சா எண்ணெய்யின் விலை 69 டாலருக்கு வந்த போதும் எண்ணெய் நிறுவனங்கள் விலையைக் குறைத்தபாடில்லை . இதுவே இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 72 என்கிற ரீதியில் வந்து நின்றுள்ளது . இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய மாற்றமில்லை . ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்த பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசாங்கம் டீசல் விலையை மட்டும் உயர்த்தவிடுவதில்லை . காரணம் உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதால் . ஒவ்வொரு முறையும் டீசல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது . ஆனால் இந்தத் தள்ளிப் போடலின் பலன் , அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ 180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன . அதாவது டீஸல் , கெரோஸின் , சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன . ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது . இப்போது நம் நினைவில் வர வேண்டியது இரண்டு விசயங்கள் . எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றன . ஆனால் இறுதியில் நட்டம் என்கிறார்கள் . இது தவிர மானியமாக வழங்கப்படும் எரிவாயு , மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் மத்திய அரசாங்கம் மானியத் தொகையை வழங்கி விடுகின்றது . ஆனாலும் இறுதியில் நட்டம் என்கிறார்கள் என்றால் இந்தப் பெட்ரோல் அரசியல் உங்களுக்குப் புரிகின்றதா ? எண்ணெய் நிறுவனங்களின் ஆடம்பரச் செலவுகளை யாரும் எந்தக் கேள்விகளும் கேட்டு விட முடியாது . இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் என்பது சொர்ககத்தில் இருப்பதற்குச் சமமானது . உதாரணத்திற்கு , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் (1976- ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டர் ) தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய் . அப்படியென்றால் மேற்பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தைக் கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம் . இது வெறும் சம்பளம் மட்டுமே . இதைத்தவிர அவர்களுக்கென்று வழங்கப்படும் மற்ற வசதிகள் தனியானது . ஆனால் நட்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு முறையம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது . எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு . இது தவிர எண்ணெய் நிறுவனங்கள் தேவையில்லாமல் செய்து வரும் விளம்பரங்கள் என்று அத்தனையும் சாதாரணக் குடிமகன் தலையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது . இதைப்போலவே 50 சதவிகிதம் வரியாக மாநில மத்திய அரசாங்கத்தினரால் வசூலிக்கப்படுவதும் இலவசமாக மாறிவிடுகின்றது . மாநில அரசாங்கம் தங்களின் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் தன் பாட்டுக்கு இலவசம் என்ற பெயரில் வரிப்பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் . மாநில அரசாங்கங்கள் வாரி வழங்கும் இலவசங்கள் ஒருபுறம் என்றால் மத்திய அரசாங்கம் வசூலிக்காத வராக்கடன்களின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு நீண்டுகொண்டே போகின்றது . மலைத்து விடாதீர்கள் . கடந்த 2011 ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 36 வங்கிகள் கொடுத்த வராக்கடன்களின் தொகை 14 லட்சத்து 273 கோடி . இதை ஒவ்வொரு வருட கணக்காகக் கொண்டு வந்தால் நமக்குத் தலைசுற்றி விடாதா ? அதைத்தான் மன்மோகன் சிங் தெளிவாகச் சொல்லியுள்ளார் . இவ்வளவு பெரிய இந்தியாவை ஆட்சி செய்ய வரிகள் அவசியம் தேவை என்கிறார் . [] விஜய் மல்லையா குடி கும்மாளம் என்று ஆட்டம் போட்டுக் கொண்டு சாராயத் தொழில் அதிபர் என்ற போர்வையில் இருந்தாலும் அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மத்திய அரசாங்கம் எந்த அளவுக்குக் கதறி அவரைக் காப்பாற்ற முன் வந்தது என்பதைப் பத்திரிக்கையில் படித்து இருப்பீர்கள் தானே ? ஏற்கனவே பிரணாப் முகர்ஜி “ தொழில் அதிபர்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை ” என்று வேறு சொல்லியிருக்கிறார் . நம்முடைய ஆண்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல் காத்துக் கொண்டிருக்கிறது ? கவலையை விடுங்க . நடைபயிற்சியும் மிதிவண்டியும் நம் உடல் நலத்துக்கு நல்லது . ஏறிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையை நினைத்துக் கொண்டே உங்கள் வாழ்க்கையைச் சற்று மாற்றிக் கொள்ளுங்களேன் . (16.06.2012) 29 கூடங்குளம் -- உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் எதிர்க்காதே என்று தொடங்கினார்கள் . ஆனால் இப்போது தொடக்கத்திலேயே சொல்லியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சனை வந்துருக்காதே என்கிறார்கள் . இறுதியாக அணு உலை மூலம் மின்சாரம் அவசியம் தேவை . தமிழ்நாடு மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுருக்கிறது என்று அறிவுரையை வழங்கி முடிக்கின்றார்கள் . கூடவே 14,000 கோடி முதலீடு வீணாகப் போய்விடக்கூடாது . எதிரே வந்து நிற்காதே என்கிறார்கள் . அணு உலைக்கு மக்களின் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாக 500 கோடி செலவில் ஊரை உல்லாசபுரியாக மாற்றுவோம் என்று சப்பைக்கட்டிகள் சர்க்கரையில் தேன் தடவி நாக்கில் வைக்கிறார்கள் . தொடக்கம் முதல் எதிர்த்த அத்தனை நிகழ்வுகளும் பத்திரிக்கைகளுக்குத் துணுக்குச் செய்திகளாகவே போய்விட இன்றைய இடிந்தகரை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கவர் ஸ்டோரியாக எழுத முடிகின்றது . அணு உலை பூதத்தை அமைதியாக வேலை வாங்கி விடுவோம் என்று அரசு அளிக்கும் நம்பிக்கைகளை இடிந்தகரை குழந்தைகள் கூட நம்பத் தயாராக இல்லை . அரசு நிர்வாக லட்சணத்தைப் புரிந்து கொண்டே விடாப்பிடியாகப் போராட்டக்காரர்கள் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் . ஒரு வருடத்தினைக் கடந்தும் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை . கடைசியாகப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தேசத் துரோகி என்ற வார்த்தையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் . [] நீங்கள் அணு உலையை ஆதரிக்காவிட்டால் தேசத் துரோகிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம் . கட்சிகளில் மட்டும் எழுத்துக்களை மாற்றி வைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஒவ்வொரு ஊடகமும் இறுதியாக இப்படித்தான் முடிக்கின்றார்கள் . 400 நாட்களைத் தொடப்போகும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்திற்கு தேசிய அளவில் பெரிதான ஆதரவில்லை . இந்தியா என்பது ஒரே நாடு என்பதில் இருந்து மாறி வெகு நாளாகி விட்டது . அரசியல்வாதிகளின் ஒற்றுமை என்பது ஊழல்களில் சிக்கியவர்களைப் பரஸ்பரம் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே இருக்கிறது . மற்றபடி அரசியல் கண்க்குகளின் அடிப்படையில் அந்தந்த மாநில பிரச்சனைகள் அவரவர் பக்கம் என்பதாகத்தான் தற்போதைய இந்தியா ஒளிர்கின்றது . போபால் விஷவாயு சம்பவம் இந்தியா முழுக்க எதிரொலித்து இருந்தால் இன்று இந்தியாவில் எந்த விஷவாயு ஆலைகளும் செயல்பட்டுக் கொண்டுருக்க முடியாதே ? தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியின் வாழ்வாதாரம் என்பதோடு பல தலைமுறைகள் சார்ந்த பிரச்சனை என்பதைக் கூட எவரும் யோசிக்கத் தயாராய் இல்லை . தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டுருக்கும் மின்வெட்டு தான் முக்கியப் பிரச்சனை . மின்வெட்டிலிருந்து காக்க வந்த ரட்சகராக இந்த அணு உலை பார்க்கப்படுவதால் ஒரு மாநிலத்திற்காக ஒரு ஊரை காவு கொடுக்கலாம் என்ற தத்துவம் தூசி தட்டப்பட்டுப் பலரின் கண்களை மறைந்து இருக்கிறது . [] இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வெட்டில் இருந்து தப்பிக்க இதைத்தவிர வேறென்ன வழி ? காரணம் மாற்று வழியைச் சிந்திக்கத் தெரியாதவர்களைத் தலைவர்களாகப் பெற்ற நாம் காலம் முழுக்க மக்கு மக்களாகத் தான் தான் இருக்க முடியும் . இதன் காரணமாகவே மக்கி போக முடியாத , பாதுகாக்க முடியாத அணுஉலை கழிவுகளைப் பற்றி அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளத் தயாராய் இல்லை . இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த அணுமின்சாரம் அவசியம் தேவை என்பவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் . தற்போதைய இந்திய மின்சாரத் தேவையை 71 சதவிகிதம் அனல் மின்சாரம் மூலமும் , 21 சதவிகிதம் புனல் மின்சாரம் மூலமும் நிறைவேற்றப்படுகின்றது . மரபு சார்ந்த நிலையில் தான் இன்றைய பெரும்பாலான மின்சாரத் தேவை பூர்த்திச் செய்யப்படுகின்றது . இன்று ஐரோப்பிய நாடுகள் அணைத்தும் சூரிய ஒளியை பயன்படுத்தி முடிந்தவரைக்கும் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது இந்தியா மட்டும் ஏன் இந்த அளவுக்கு இந்த அணுமின்சாரத்தில் ஆர்வமாக இருக்கிறது . அணு உலையை வாங்கும் இடம் முதல் அதைப் பொருத்தும் இடம் வரைக்கும் ஊழல் கூட்டணி மக்களின் சாம்ராஜ்யமாக இருப்பதால் இந்தச் சர்வதேச லாபிக்கு முன்னால் சாதாரண மக்களின் குரல்கள் எடுபடுவதில்லை . இதற்கு மேலும் பல அணுகுண்டு ரகசியங்களும் இதற்குள் உண்டு . அது தேச பாதுகாப்பு என்பதிற்குள் கொண்டு போய் நிறுத்தி கேள்வியே கேட்க முடியாமல் மாற்றி விடுவார்கள் . மற்ற மாநிலங்களைத் தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகம் . மேம்படுத்த வாய்ப்புகளும் அதிகம் . ஆனால் காற்றாலை மின்சாரத்தை ஆதரிக்கத் தெரியாத அரசு தனது பயம் காட்டும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இது போன்ற அணுஉலையைச் செயல்படுத்த விரும்புகின்றது . கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக்கூடாது என்று சொல்பவர்களை நோக்கி வீசப்படும் கேள்விகளைப் போல ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் கேள்விகள் அர்த்தமற்றுச் சிரிக்கின்றது . 1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது . இந்த அணுசக்தி துறை தன்னாட்சி பெற்றது . நேரிடையாகப் பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும் . நீதிமன்றங்கள் கேட்கும் கேள்விகள் கூடப் பல சமயம் நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப்படும் . ஒரு வல்லரசு நாடு உலகத்திடம் சொல்ல சில தகுதிகள் உண்டு . மக்களுக்கான நல்லரசு என்பதை விட வல்லரசு நாட்டில் பாதுகாப்புக்காக அணுகுண்டுகள் இருக்கிறதா என்பதை வைத்து தான் அந்த வல்லரசு பேட்டைக்குள் நுழைய முடியும் . இந்த அணுக்களைப் பிளந்து தான் இங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது . அணு உலையில் யுரேனிய அணுக்களைப் பிளக்கப்படும் 3500 முதல் 4000 டிகிரி செல்சியஸ் வரைக்கும் சக்தியாக மாறி அணுகுண்டாக வெடிக்கின்றது . இந்த அணுப் பிளப்பின் போது நியூட்ரான்களை நுழைவித்து வெப்பசக்தியை கட்டுப்படுத்தப்படுகின்றது . இந்த வெப்பசக்தி மூலம் உருவாகும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது . 2032 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசாங்கம் அணுஉலைகள் மூலம் 63,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கத் திட்டம் தீட்டியுள்ளது . 1987 ஆம் ஆண்டுக்குள் 25,000 மெகாவாட , 2000 ஆம் ஆண்டுக்குள் 45,000 மெகாவாட் என்று திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கி விட்டு இன்று வரையிலும் சாதித்த சாதனை 3310 மெகாவாட் மட்டுமே . இந்தக் கணக்கெல்லாம் அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியுமோ ? தெரியாதோ ? இந்தத் துறையில் முதலீடாகப் போடப்படும் தொகையை மரபுசார்ந்த மின்சாரத் தேவையில் போட்டுருந்தால் இந்நேரம் இந்தியா மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு மிச்சத்தை விற்று லாபம் பார்த்திருக்க முடியும் . இன்று ஊழல்களின் தொகை மில்லியனைத் தாண்டி பில்லியன்களிடம் வந்து விட்டதால் மரபு தன்மைகளை விட்டு வெளியே வந்து விட்டார்கள் நம் தலைவர்கள் . கூடங்குளம் அணுஉலை என்பது இப்போதைக்கு தேசிய சொத்து . தமிழ்நாட்டில் இருந்தாலும் மாநில அரசாங்கத்திற்கு ஓர் அளவுக்கு மேல் எந்தச் செயலையும் செய்துவிட முடியாது . காரணம் நெய்வேலி திட்டம் தொடங்கும் போதும் இப்படித்தான் பலவிதமான உறுதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது . ஆனால் இன்று நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது . நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெளிசந்தையில் விற்க தமிழ்நாடு ஒரு அடித்தளம் . அவ்வளவுதான் . அதற்குள் இந்த அணு உலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆயிரம் மெகாவாட் தமிழ்நாட்டுக்கு என்று கட்டியம் கூறி மக்களை நம்பவைத்துக் கொண்டுருக்கிறார்கள் . ஒரு வேளை இந்த அணுஉலை செயல்படும் பட்சத்தில் , ஒழுங்காகச் செயல்படும் பட்சத்தில் முழுமையான உற்பத்தி திறன் வரவே குறைந்தது இரண்டு வருடமாகும் . அதற்குள் தமிழ்நாட்டின் மின்வெட்டும் இன்னும் பல மடங்கு அதிகமாக எகிறிவிடும் . தமிழ்நாட்டின் தற்போதைய பற்றாக்குறை 3000 மெகாவாட் . கூடங்குளத்தில் செயல்படுத்த நினைக்கும் ஆறு உலையும் முழுமையாக ஓடினால் கூடப் பூர்த்திச் செய்துவிட முடியாது . அப்போதைக்கு இங்குள்ளவர்கள் வாட் என்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டு விட முடியாது . காரணம் நாம் அணைவரும் இந்தியர்கள் . வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்பவர்கள் . பகிர்ந்துண்டு பல்யுர் ஓம்புதல் போன்ற வார்த்தைகள் பதிலாக வரும் . [] அணுஉலை பிரச்சனை தொடங்கியதிலிருந்தே தேசபக்தி காற்றில் பறந்து வந்து தாக்குகின்றது . ஊடகங்கள் அறிவுரையைக் கட்டுரையாக எழுதி களைத்துப் போயிருக்கிறார்கள் . அச்சமற்று இருக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என்கிறார்கள் . பாதி அளவுக்குக் கூட முடியாத போது ஏனிந்த அவசரம் என்றால் அறிஞர்கள் சொல்லி விட்டார்கள் . அமைதியாய் இரு என்கிறார்கள் . இத்தனை கோடிகளைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு நிறுத்தினால் தகுமா ? என்கிறார்கள் . அணுஉலை ஓடாத நாட்களைச் சுட்டிக்காட்டி நட்டக்கணக்கில் நம்மை யோசிக்க வைக்கிறார்கள் . இறுதியாக உச்ச நீதிமன்றமே உத்தரவு கொடுத்தாகி விட்டது . இதற்கு மேலும் தாமதப்படுத்தலாமா என்கிறார்களா . அணு உலை செயல்பாட்டின் மூலம் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை விட மற்றொரு பெரிய பிரச்சனை அணுஉலை கழிவுகள் . புளூடோனியம் 239 தனது கதிர்வீச்சு தன்மையைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலஅளவு சுமாராக 24,000 வருடங்கள் . அயோடின் 129 தனது கதிர்வீச்சை பாதியாகக் குறைத்துக் கொள்ளும் கால அளவு 17 மில்லியன் வருடங்கள் . ஒரு அணுமின் நிலையம் வருடம் முழுக்க ஓடினால் 20 மெட்ரிக் டன் அணுக்கழிவுகளை உருவாக்கும் . இவற்றிக்கு மாற்று ஏற்பாடு இதுவரையிலும் கண்டுபிடிக்க வில்லை என்பதால் பாதுகாத்து தான் ஆக வேண்டும் . இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகின்றது . மற்றொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு அணுஉலை அதிகபட்சமாக 45 வருடங்கள் தான் செயல்படுத்த முடியும் . அதற்குப்பிறகு மூடி வைத்துவிட வேண்டும் . மிகப் பெரிய அளவில் காங்கீரிட் தொட்டி கட்டி அதைப் பூமிக்கடியில் புதைத்து வைத்து விட வேண்டும் . பூதம் போல் காவல் காக்க வேண்டும் . கரணம் தப்பினால் மரணம் . இதற்குப் பிறகு குறிப்பிட்ட பகுதியை மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாற்றப்பட்டு விடும் . ஒவ்வொரு 45 வருடங்களுக்கு ஒரு முறை அணுஉலையை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் . கிடைக்கப் போகும் 300 மெகாவாட் மின்சாரத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைமுறைகளைப் பழி கொடுத்து நாம் சுகவாசியாக வாழ நினைக்கின்றோம் . இறுதியாக இந்திய இறையாண்மையைக் கொண்டு வந்து அணைவரையும் ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி வேடிக்கை காட்டுகிறார்கள் . ஆனால் வன்முறையின்றி எந்தவித அசம்பாவிதமும் இன்றி , வருடங்களைத்தாண்டி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை ஊழல்வாதிகள் கண்டு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது போராட்டக்காரர்களின் தவறே ? பொசுக்கென்று கோபப்படும் மீனவ சமுதாயத்தை ஒன்றினைத்து சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த உதயகுமார் இவர்களின் பார்வையில் காசு வாங்கிக் கொண்டு கள்ளத்தனம் செய்கின்றவர் தான் . இதற்கு மேலும் உதயகுமாருக்கு பல பட்டங்கள் . ஓடிவிட்டார் . தப்பிவிட்டார் . மதத்திற்குப் பின்னால் நின்று கொண்டு பயங்காட்டுகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விமர்சனங்கள் . பிரியாணி கொடுத்துக் கூட்டம் கூட்டி பழக்கப்படுத்தியவர்களிடம் வேறெந்த விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும் . வசதிகளற்று வாழும் ஒரு சமூக மக்களின் அவலங்களைக் கிண்டலாகச் சித்தரிக்கின்றார்கள் . அவர்களின் அச்சத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது தேவையற்ற பயம் என்பதற்குள் முடித்து விடுகிறார்கள் . கேள்விகள் தொடர்ந்து எழ , இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவன் என்பதில் தொடங்கி மிரட்டுகிறார்கள் . அகிம்சை போராட்டம் இன்று ஹிம்சையின் பக்கம் மெதுவாகத் திரும்பத் தொடங்கியுள்ளது . மகாதமா காந்தியின் அகிம்சை போராட்டத்தை இன்று வரையிலும் சிலாகித்துப் பேசுபவர்கள் உதயகுமார் நடத்திக் கொண்டுருக்கும் அகிம்சை போராட்டத்தினை ஆதரிக்கத் தயாராக இல்லை . காரணம் காந்தி எதிர்கொண்டது வெள்ளையர்களை . உதயகுமார் எதிர்கொள்வதே கொள்ளையர்களை . இதுவே தமிழ்நாட்டு மீனவ சமுதாயம் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு முழுக்க இந்தப் பிரச்சனை பரவும் போது வாழ்வாதாரப் பிரச்சனை மதப்பிரச்சனையாக மாறிவிடும் அபாயமுண்டு . மதக்கலவரமாக மாற்றிவிடத்தான் மாதா கோவிலை மாசுபடுத்தியவர்கள் விரும்புகிறார்கள் போலும் . (17.09.2012) 30 கச்சத்தீவு - உண்மைகளும் எதார்த்தமும் தமிழ்நாட்டில் உள்ள சில பிரச்சனைகளுக்கு மட்டும் எப்போதும் உயிர்ப்பு இருந்து கொண்டேயிருக்கும் . இந்தக் காரணமே இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அல்வா போலவே இனிக்கின்றது . தற்போது இந்திய அரசியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் இறப்பிற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளை வைத்து அரசியல் நடந்து கொண்டு இருக்கின்றது . இப்போது தான் இந்த விசயங்களைக் கேள்விப்படுவது போலத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைக் குறித்தும் எப்போதும் போலக் குரல் எழுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது . [] கச்சத்தீவு பிரச்சனை என்பது தற்போது இந்திய பாரளுமன்றம் வரைக்கும் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது . ஆனால் இதுவரைக்கும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழ்நாட்டு மீன்வர்களைப் பற்றி , அவர்களின் இழந்து போன வாழ்வாரதாரங்களைப் பற்றி எவர் கண்டு கொண்டனர் ? தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் உண்டா ? மற்ற தொழிலை விட மீனவ தொழிலில் ஒவ்வொருவருக்கும் கடவுள் பக்தி அதிகம் , வெவ்வேறு மதமாக இருக்கலாம் , ஆனால் கடவுள் நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குச் செல்கிறார்கள் , ஆனால் கடந்த பல வருடங்களாகவே கரையில் வந்து சேர்வதென்னவோ அவர்களின் காயம் பட்ட உடம்பும் , உயிர் இல்லாத உடம்பும் தான் , உயிர் பயம் என்றால் உண்மையிலேயே நேரிடையாக நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மீனவர்கள் மட்டுமே , இலங்கை கடற்படையினரால் அவமானப்படுத்தப்பட்ட , சித்ரவதை செய்யப்பட்ட , பயமுறுத்தப்பட்ட என்று அவரவர் பட்ட அவமானங்களை அவஸ்த்தைகளைத் தமிழ்நாட்டு கடற்கரையோர மீனவர்களிடம் கேட்டுப் பார்த்தால் வீட்டுக்கு ஒருவராவது இருப்பர் . ஆனால் இதற்கெல்லாம் தீர்வு எப்போது கிடைக்கும் என்று கேட்டால் வானத்தை நோக்கி தான் கையைக் காட்டுவர் பல தீர்ப்புகள் காலமாற்றத்தில் திருத்தக்கூடியதாக இருக்கின்றது , ஆனால் இந்த மீனவர்களின் பிரச்சனைகளுக்குண்டான தீர்ப்புகளை எந்தத் தேவன் தரப்போகின்றார் ? இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப் பிடிக்கப்பட்டனர் என்ற செய்திகள் முதல் சித்ரவதைகளை அனுபவித்துக் கரை திரும்பிய மீனவர்களின் பேட்டி வரைக்கும் இன்று சாதாரணச் செய்தியாக மாறிவிட்டது , . மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு ஏதோவொரு பிரச்சனை என்றால் அதில் ஏதோவொரு விசயம் மட்டும் தான் பேசும் பொருளாக இருக்கும் , ஆனால் இலங்கை என்பதால் அதிலும் தமிழ்நாடு என்பதால் இனம் , மொழி என்பதாக மாறிவிடுகின்றது , தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் அத்தனையும் பின்னுக்குப் போய்விடுகின்றது , தங்கள் நாட்டு எல்லைக்குள் வருபவர்களை விரட்டுவது , மிரட்டுவது என்பதெல்லாம் கடந்து ஈவு இரக்கமின்றிச் சித்ரவதை செய்து அழகு பார்ப்பது இலங்கைக்குக் கைவந்த கலையாக இருப்பதால் தமிழ்நாட்டு அரசியல்களமும் அவ்வப்போது இந்தப் பிரச்சனையை முன்னிட்டு சூடாகவே கொதித்துக் கொண்டிருக்கிறது , இலங்கையில் நடந்த போர் முடிவுக்கு வந்த பின்னால் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வில் தேனும் , பாலும் ஓடும் என்பதும் பொய்தது விட்டது , இந்தியா கொடுத்த நிதி உதவியைக் கூடச் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கை இழந்தவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுத்தபாடில்லை , இலங்கைக்குள் வாழ்ந்தாலும் தமிழர்கள் என்பவர்கள் இன்றுவரையிலும் அகதியாகத்தான் இருக்கின்றார்கள் , இலங்கையில் வாழும் தமிழர்கள் சார்ந்த அத்தனை விசயங்களுக்குப் பினனாலும் அதிகமான துயரக்கதைகளே இன்று வரை வந்து கொண்டேயிருக்கிறது , தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழமென்பது கடந்த 30 ஆண்டுகளாக விளம்பரத்தை தேடி தரக்கூடிய செய்தி . இங்குள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக அறிக்கைகள் , பேட்டி , தீர்மானங்கள் என்று மாறி மாறி லாவணி கச்சேரியாக மாற்றி இது விக்ரமாதித்தன் சொல்ல முடியாத விடையாகத் தான் ஈழத்தீவின் பிரச்சனையும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையும் இருக்கிறது , முடிவே தெரியாமல் இன்று வரையிலும் இறக்கும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது , , ஆனால் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசுபவர்கள் அத்தனை பேர்களும் கடைசியில் ஒரு புள்ளியில் வந்து தான் நிற்கிறார்கள் , “கச்சதீவை இந்தியா கைப்பற்ற வேண்டும்” என்கிறார்கள்., கச்சத்தீவு என்பது இவர்கள் சொல்வது போல என்ன இடுப்பில் கட்டியிருக்கும் கச்சைதுணியா ? நினைத்த போது மாற்றிக் கொள்ள முடியுமா ? இந்தியா நினைத்தால் கச்சத்தீவை மீண்டும் எடுத்துக் கொள்ளத்தான் முடியுமா ? ஏன் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டி மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டு பாராமுகமாக இருக்கிறது என்று பார்த்தால் மீனவர்களின் வலைகளை விட இது மிகவும் சிக்கலாகவே இருக்கிறது , தெளிவற்ற இந்திய அரசாங்க்த்தின் வெளியுறவுக் கொள்கை , தமிழர்களின் பிரச்சனைகளில் ஆர்வமற்ற அதிகாரவர்க்கத்தினர் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம் என்பதே எதார்த்தம் , அதில் இனி எந்தக் காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் , [] காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விடக் கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு , இது தான் உண்மை , கச்சத்தீவு இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 10,5 மைல் தொலைவிலும் , இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது , இந்தத் தீவின் மொத்த பரப்பளவே 285,2 ஏக்கர் மட்டுமே , தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு மட்டும் தான் சென்று கொண்டுருந்தனர் , இது தவிர வருடந்தோறும் மார்ச் மாதம் நடக்கும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்குச் செல்வார்கள் , தற்போது இந்தக் கொண்டாட்டங்களைக் கூட வேண்டா வெறுப்பாகவே இலங்கை அனுமதிக்கின்றது , இந்தியாவிற்கு அருகே நகம் அளவிற்கு இருக்கும் இலங்கையின் ஒவ்வொரு காலகட்ட ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக இன்று இந்தியாவிற்குத் தீராத வலியை தந்து கொண்டுருக்கும் நகச்சுத்தியாக மாறி ரொம்பக் காலமாகி விட்டது , ஆபத்துக்களுடன் மட்டுமே உயிர்வாழ்பவன் மீனவன் , ஆனால் பாய்ந்து வரும் சுழலை , சூறாவளியை தாண்டி வருபவன் ஆனால் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரிடம் மட்டும் சரியாக மாட்டிக்கொள்ளும் மர்மத்தை தான் இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை , எல்லை தாண்டிச்சென்று ஏராளமான மீன்களை அள்ளிவர என்று நினைத்துக் கொண்டு செல்பவர்களில் முக்கால்வாசி பேர்கள் உயிர்தப்பியதே போதும் என்று தான் எல்லாவற்றையும் இழந்து விட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் கரைக்குத் திரும்பிக் கொண்டு இருககிறார்க்ள் , ஒவ்வொரு நாட்டுக்கும் தீர்மானித்த கடல் எல்லைகள் உண்டு , தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல , எந்த நாட்டு மீனவர்களும் இந்த எல்லைக் கட்டுபாடுகளைக் கண்டு கொள்வதில்லை , காரணம் மீன்கள் எங்கே அதிகமாகக் கிடைக்கின்றதோ படகும் அங்கே தானே செல்லும் , உலகமெங்கும் இதே நடைமுறையில் மீனவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டுருக்கிறது , இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிகளுக்குள்ளும் , இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதிகளுக்குள்ளும் , வங்கதேசத்து மீனவர்கள் மியன்மர் பகுதிகளுக்குள்ளும் , ஜப்பான் , தைவான் மீன்வர் ஆசிய கடற்பரப்பு முழுவதும் சென்று பிடிப்பதும் வாடிக்கையாக இருந்தாலும் மற்ற நாடுகளை விட இலங்கைக்கும் இந்தியாவிற்குள்ளும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனை தான் தினந்தோறும் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு இருக்கின்றது , இலங்கை , இந்திய மீனவர்களின் களமென்பது இரண்டு நாடுகளுக்குமிடையே இருக்கும் பாக் நீரிணையே ஆகும் , இது தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டிணம் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடற்கரைப்பகுதிகளும் , இதைப் போல இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் , மன்னார் மாவட்டங்களில் உள்ள கடற்பரப்புக்கும் இடையே உள்ள பகுதியாக இருக்கிறது , மீனவளம் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளுக்குள் நடக்கும் முட்டல் மோதல் தான் கடைசியில் சுட்டுக்கொல்லப்படுவது வரைக்கும் செல்கின்றது , அதுவே அரசியலாக மாற்றப்பட்டு ஆவேச அறிக்கைகள் தினந்தோறும் வர காரணமாக இருக்கிறது , கடைசியில் எப்போதும் போல அடுத்த மீனவர் சாகும் வரைக்கும் அமைதியாகி விடுகின்றது , ஆனால் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முடிவாக எப்போதும் மத்திய அரசாங்கம் மறக்காமல் ஒரு வாசகத்தை நமக்கு நினைவு படுத்தும் , மீனவர்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லக்கூடாது , ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் தான் கடல் எல்லைகளைக் கடந்து செல்கின்றார்களா ? இலங்கை மீனவர்கள் அரபிக்கடலுக்குள் நுழைந்து கேரள கடற் பகுதி , லட்சத்தீவு , மினிகாய் தீவுகள் போன்ற இடங்களிலும் மீன்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் , இலங்கை மீனவர்களைப் பொறுத்தவரையிலும் முக்கிய இலக்காகச் சூரை மீன் இருக்கிறது , அது இந்திய கடற்கரைப் பகுதிகளில் தான் அதிகம் கிடைக்கிறது , இதைப் போலவே இந்திய மீனவர்களின் குறியான இறால் மீன் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே தான் அதிக அளவு கிடைக்கின்றது , வெளிநாட்டின் ஏற்றுமதி தேவைக்கு இந்த இறால் லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டுதல் என்பதைக் கபடி கோடு போலத் தாண்ட வைக்கின்றது , இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கையெப்பம் இடப்பட்ட 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தான் ( சிறீமாவோ இந்திரா காந்தி ஓப்பந்தம் ) தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையில் அவலத்தை அறிமுகப்படுத்தியது , 1973 ஆம் ஆண்டு இலங்கையுடன் உறவை மேம்படுத்த இந்திரா காந்தி நல்லெண்ண பயனமாக இலங்கைக்குச் சென்றார் , இரு நாட்டுக்கும் நெருடலாக இருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க இந்திரா காந்தி தன்னிச்சையாக முடிவெடுக்கத் தேவைப்படும் அதிகாரியாகப் பார்த்து இந்த ஒப்பந்தங்களுக்கு ஒரு லாபி உருவாக்கப்பட (1974 ஜுன் 28) ஒரு சுபயோக சுப தினத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது , இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தி சிறீ மாவோ பண்டார நாயகாவின் நட்புக்காக என்பது ஒரு பக்கமும் , என்னுடைய அரசியல் எதிர்காலம் உங்கள் கைகளில் என்று இந்திராவை நோக்கி சிறீமாவோ விடுத்தக் கெஞ்சலினால் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் , கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழில் செய்து வந்த மீனவர்களுக்கு அரசாங்கத்தால் போடப்பட்ட சட்டதிட்டங்களைக் கண்டு கொள்ளத் தயாராக இல்லை , இதற்கிடையே இந்த மீன் தொழில் காலப்போக்கில் நவீனங்களும் வந்து சேர்ந்து போட்டி போட தங்களது அடிப்படை வாழ்வாதாரமே தமிழ்நாட்டு மீனவர்களுக்குக் கேள்விக்குறியாக மாறத் தொடங்கியது , எந்திர விசைப்படகுகளுக்கு இணையாகக் கட்டுமரத்தை , நாட்டுப் படகை , வல்லத்தைத் துணையாகக் கொண்டு போராடிக் கொண்டுருப்பவர்கள் என்ன செய்ய முடியும் ? மீன் வளம் குறைந்த பாக் நீரிணைக்குள் இன்று இரு நாட்டு மீனவர்களுக்கும் இரத்தச் சகதியாக மாறும் இடமாக மாறியுள்ளது , கூடவே இலங்கைக்குத் திடீர் கூட்டாளியாக வந்து சேர்ந்துள்ள சீனாவை திருப்திபடுத்த வேண்டிய அவசர அவசிய நிலையிலும் இலங்கை இருப்பதால் கச்சத்தீவு என்பது திருகோணமலை தளத்தைப் போல முக்கியக் கேந்திரமாக இருக்கின்றது , இந்தியாவின் கடற்கரைபகுதியின் மொத்த அளவு 8,118 கீ , மீ , ஏறக்குறைய இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்களுடன் தொழிலாளர்களுமாய் இந்தத் தொழிலில் இருக்கின்றனர் , இதைப் போலவே இலங்கையில் 6 லட்சம் மீனவர்கள் இந்தத் தொழிலை நம்பித்தான் இருக்கின்றனர் , தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில் பாக் வளைகுடாவும் , வங்காள விரிகுடாவும் , தென் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவும் , தென்மேற்கில் இந்தியப் பெருங்கடலும் அரபுக் கடலும் எல்லையாக இருக்கின்றது , அகில இந்திய அளவில் மீன் சார்ந்த தொழிலில் கேரளாவே முதல் இடத்தில் இருக்கிறது , கேரளா , குஜராத்தை தொடர்ந்து தமிழகம் மூன்றாவது இடத்தில் அதாவது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தில் 13.25 சதவிகிதத்தை (2008 ல் எடுத்த கணக்குப்படி ) பெற்றுள்ளது , 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் அந்நிய செலவாணியை மனதில் கொண்டு கடல் உற்பத்தி ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தையை (MARINE PRODUCTS EXPORT DEVELOPMENT AUTHORITY MPEDA) உருவாக்கியது , 1990 களில் தான் விலை அதிகமான கற்கள் ( கிரானைட் ), ஆய்த்த ஆடைகள் , மற்ற ஜவுளிப் பொருட்கள் பெற்று தந்த அந்நியச் செலவாணிக்கு இணையாக இந்த மீன்கள் சார்ந்த ஏற்றுமதியும் இந்திய அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரத் தொடங்கியது , அதிலும் இறால் மட்டும் 87 சதவிகிதமாக இருக்க , அரசாங்கத்தின் கொள்கையிலும் மாற்றம் வரத் தொடங்கியது , இதன் காரணமாகச் சராசரி மீனவர்களின் வாழ்க்கையிலும் அதிகப் பிரச்சனைகள் வரத் தொடங்கியது மீன் பிடித்தல் தொழிலில் நவீனங்களைப் புகுத்தினால் அதிகமான லாபத்தை இந்தத் தொழில் மூலம் பெற முடியும் என்று மத்திய அரசாங்கம் முடிவு செய்தது , இந்தக் கொள்கைகளை உருவாக்கியவர்களுக்கு மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது , எப்போதும் போல மீனவர்களுக்கென்று நலத்திட்டங்கள் என்கிற ரீதியில் அடுத்த அடிக்கு நகர்ந்து விட்டார்கள் , மோட்டார்கள் பொருத்தப்பட்ட படகுகள் , ஆழ்கடலுக்குச் சென்று பிடித்த வர உதவும் நவீன ரகப் படகுகள் என்று இந்தத் தொழிலின் முகமே மாறத் தொடங்கியது , கூடவே அந்நிய மூதலீடுகள் மூலம் கூட்டாளிகள் பலரும் இங்கே வரத் தொடங்கினர் , கழுத்துவலியுடன் திருகு வலியும் சேர்ந்தது , மீனவர்களின் போராட்டங்க்ளின் காரணமாக உருவாக்கப்பட்ட முராரி குழு முடிந்த வரை போராடிப் பார்த்தது , இறுதியாக வேறுவழியின்று 1996 ஆம் ஆண்டுக் கொடுக்கப்பட்ட புதிய உரிமங்கள் அத்தனையும் 1997 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ரத்து செய்தது , இந்தத் தொழிலில் உள்ள லாபங்களைப் பார்த்து மீனவ சாதிகளைத் தவிர மற்ற பணம் படைத்த அத்தனை பேர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்குக் கொழுத்த வேட்டையாக அமைந்து விட் புதுப்புது நவீனங்கள் உடனடியாக வரத்தொடங்கியது . முதன் முதலாகக் கேரளாவில் நார்வே நாட்டின் மூலம் அறிமுகமானது தான் பாட்டம் ட்ராலிங் (Bottom Trawling). என்பது , அதாவது மடிவலையை உபயோகித்து மீன் பிடிப்பது , இதன் மூலம் இறால் ஏராளமான அளவில் கிடைத்ததால் இது மற்ற மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவியது , வல்லங்களில் பிடிக்கும் மீனவர்களுக்கும் இது போன்ற ட்ராலிங் மூலம் பிடிப்பவர்களுக்கும் உருவான மோதல் நாளுக்கு நாள் அதிகமானது , ட்ராலிங் மூலம் மீன்கள் மட்டும் பிடிக்கப்படுவதில்லை , குஞ்சு குழுவான் வரைக்கும் அத்தனையும் துடைத்து எடுத்தாற்போல மொத்த மீன் வளத்தையே மாற்றி விடுவதால் முந்திக் கொண்டவர்கள் சடுதியாக மேலேறே தொடங்கினார்கள் , பாரம்பரிய மீனவர்களின் வருத்தமே இது தான் , இதன் காரணமாகவே குறிப்பிட்ட இடங்களில் மீன்கள் அதிக அளவு கிடைக்காமல் போக எல்லைகளைக் கடந்தால் தான் மீன்கள் கிடைக்கும் என்ற நிலையும் உருவானது , அரசாங்க ரீதியில் எத்தனை ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உருவான போதிலும் ஏன் இந்த மீனவர்களின் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வராமல் சுழல் போல் சுழன்றடிக்கின்றது ? 1991 ஆம் ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியேற்றிய போது கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் , இது கலைஞர் விடுத்த அறை கூவல் , அதாவது பழைய மொந்தையில் புதிய கள் , தொடர்ந்த ஒவ்வொரு கட்சிகளும் மனம் போன போக்கில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் , ஆனால் எதார்த்தம் என்பது வேறு , இலங்கையுடன் இந்தியா செய்து கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தங்களைப் போல அருகே உள்ள மியன்மர் , இந்தோனேசியா , மாலத்தீவுகள் , தாய்லாந்து , பல நாடுகளுடன் பல சர்வதேச ஒப்பந்தங்கள் போட்டுள்ளன , தனி ஈழம் கேட்க ஆதரவளித்தால் இந்தியா முதலில் காஷ்மீர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அவர்களுக்குண்டான சுதந்திரத்தை கொடுக்கட்டும் என்பது போன்ற குண்டக்க மண்டக்கக் கோரிக்கையை இலங்கை ஐ , நா சபையில் எழுப்புவதைப் போல இந்தக் கச்சத்தீவு ஒப்பந்த பிரச்சனை இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும் , முடிந்து போன ஒப்பந்தத்தை முடக்கவும் முடியாது , உயிர்ப்பிக்கவும் முடியாது , இது தான் உண்மை , ஆனால் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையை இந்தியா நினைத்தால் உருவாக்க முடியும் , இந்த விசயத்தில் ஏற்கனவே ஒரு முன் உதாரணம் உண்டு , தீன்பிகா என்ற இடம் குறித்து 1974 மே 16 ல் இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் ஒரு ஒப்பந்தம் உருவானது , இதன் முழுவிபரத்தை நாம் இங்கே பார்ப்பதை விட இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா வங்க தேசத்திற்கு நீண்ட காலக் குத்தகையின் அடிப்படையில் விட்ட காரணத்தால் பேருபரி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது , இதைப் போலவே இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்சனை இல்லாத திட்டங்களை உருவாக்க முடியும் , குறிப்பிட்ட எல்லைகளை வகுக்க முடியும் , குறிப்பிட்ட காலகட்டத்தினை இரு நாட்டு மீனவர்களுக்கும் அளித்து அந்தந்த காலகட்டத்தினை அவரவர் மீன்பிடிக்க உதவ முடியும் , அடையாள அட்டையை உருவாக்கி இரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாட்டினனை இரு நாடுகளும் சேர்ந்து கச்சத்தீவில் உருவாக்க முடியும் , ஆனால் இது இந்தியாவின் வெளியுறவு சம்மந்தப்பட்ட பிரச்சனை , தமிழ்நாட்டு அரசாங்கம் வெறுமனே வேடிக்கை தான் பார்க்க முடியும் , இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களிடம் நீங்கள் எதுவும் சொல்ல முடியாது , தமிழர்களின் பிரச்சனையை அறியாத வேறு மாநில அதிகாரியிடம் நீங்கள் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும் , இங்கிருந்து சொல்வதைக் கேட்கும் அளவுக்கு அவர்களுக்குப் பொறுமையும் இல்லை , இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்குத் தேவைப்படும் வணிகரீதியான சந்தைகள் தான் முக்கியம் , இலங்கையில் நடந்து முடிந்த போர் முடிவுக்கு வந்த காலம் தொட்டு இந்தியா இலங்கையில் போடும் முதலீடும் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது , இந்திய வணிகம் முக்கியமா ? தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியமா ? இதையெல்லாம் விடப் பிரச்சனைகளை முறைப்படி தெரிவித்து இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட எவருக்கும் இங்கே அக்கறையும் இல்லை என்பது தான் நிதர்சனம் , காரணம் தமிழநாட்டில் அரசியல் செய்ய வேண்டியவர்களுக்கு இந்த மீனவர்களின் பிரச்சனை என்பது அள்ள அள்ள குறையாத அமுதசுரபி , மீனவர்களுக்குப் பிரச்சனை இல்லாமல் போனால் ஈழத்தை நோக்கி தேர்தல் சமயங்களில் மட்டும் எப்படி அறைகூல் விடுத்து அரசியல் நடத்த முடியும் ? (09.03.2013) 31 500 []   வணக்கம் நண்பர்களே இது என்னுடைய 500 வது பதிவு . எனக்கு இந்த வலையுலகம் வேர்ட்ப்ரஸ் மூலம் அறிமுகம் ஆன நாள் மே மாதம் 2009 2002 முதல் என் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை தொழில் வாழ்க்கையில் இணையம் என்பது தினந்தோறும் 12 மணி நேரத்திற்கும் மேலாக என் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து இருந்த போதிலும் 2009 ஆம் ஆண்டுத் தான் தமிழ் இணையம் என்பது எனக்கு அறிமுகம் ஆனது . என்னுடைய முதல் பதிவு வேர்ட்ப்ரஸ் ல் ஜுலை 3 2009 அன்று எழுதி வெளியிட்டேன் . நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கினங்க அவர் உருவாக்கித் தந்த இந்த ப்ளாக்கர் என்ற தளத்தின் மூலம் செப்டம்பர் 26 2009 முதல் எழுதி வருகின்றேன் . பதிவின் நீளம் , அகலம் , உயரம் , எழுத்துப்பிழைகள் , வாக்கியப் பிழைகள் , புரியாத தன்மை , விவரிக்கும் பாங்கு என்று தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு இன்று இந்த நிலை வரைக்கும் உயர்ந்து வந்துள்ளேன் . திருப்பூரில் எனக்கு முன்னால் எழுதியவர்கள் அநேகம் பேர்கள் . பலருக்கும் தொழில் வாழ்க்கையின் காரணமாகப் படிப்படியாகத் தங்களைச் சுருக்கிக் கொண்டார்கள் . இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் பதிவுகளாக மாற்றிக் கொண்டே வருகின்றேன் . என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர் . ஒவ்வொரு நாட்டிலும் , ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர் . அனைத்து கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள் . ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர் . பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு கொள்ளவும் முடிந்துள்ளது . பிரபல எழுத்தாளர்கள் , பதி ப்பக மக்கள் , பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது . ஒவ்வொரு அனுபவமும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பாடங்களைக் கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது . ஒவ்வொரு நிலையிலும் எண்ணம் போல வாழ்வு என்பதனையும் , தீதும் நன்றும் பிறர் தர வரா என்ற முதுமொழியையும் மனதில் வைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டு இருக்கின்றேன் . நான் கடந்து வந்த இந்த நான்கு வருடத்தில் என் தளத்தைத் தவிர்த்து வினவு தளம் , சிறகு தளம் , தமிழ்ப் பேப்பர் போன்ற தளங்களில் என் கட்டுரைகள் வந்துள்ளது . வெகுஜன பத்திரிக்கையான புதிய தலைமுறையில் எனது சாய்ப்பட்டறை குறித்து மூடு என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக ( கவர் ஸ்டோரி ) வந்துள்ளது . ஆழம் பத்திரிக்கையில் இதுவரையிலும் மூன்று கட்டுரைகள் வெளியாகி உள்ளது . அதிக அளவு 4 தமிழ் மீடியா குழுமத்தில் எனது கட்டுரைகள் வெளியாகி உள்ளது . வலைச்சரத்தில் இதுவரையிலும் இரண்டு முறை சீனா அவர்கள் என்னை வலைச்சரம் ஆசிரியர் பணியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்ததோடு முழுமையான சுதந்திரத்தையும் அளித்து ஊக்கப்படுத்தினார் . சிலருக்கு ஊக்கத்தையும் பலருக்கு தாக்கத்தையும் இதன் மூலம் ஏற்படுத்த முடிந்தது . நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கைச் சூழலில் இந்த எழுத்து வாழ்க்கையில் முனைப்பாகச் செயல்பட வாய்ப்பில்லாத காரணத்தால் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுத வாய்ப்பில்லாது நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன் . கூகுள் தளத்தின் வாயிலாக நேரிடையாகத் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது . ஒவ்வொரு சமயத்திலும் கூகுள் தேடுதல் சேவையின் வாயிலாகக் குறி சொற்கள் மூலம் தேடிக் கொண்டுருக்கும் பலருக்கும் எனது தளம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது . ஒரு வட்டத்திற்குள் இல்லாத எனது சிந்தனைகள் பல விதங்களில் என் எழுத்துலகப் பயணத்திற்கு உரமாக உள்ளது . இன்று வரையிலும் பழைய பதிவுகளைப் படித்து விட்டுக் கடிதம் எழுதுபவர்களும் , என்னைச் சந்திக்கும் தருணத்தில் மகிழ்ச்சியுடன் அதனைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவர்களும் அதிகம் . இந்தத் தளத்தை நாற்பது வயதை தொட இருப்பவர்களும் , கடந்தவர்களும் என்று தொடங்கி 70 வயது வரைக்கும் இருக்கும் பலரின் விருப்பமான தளமாக உள்ளது . நான் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையை அதிக அளவு ரசிக்கவும் , அன்றாட வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுள்ளேன் . இந்த வலையுலகப் பயணத்தில் எழுத்துப் பயணத்தோடு சில உருப்படியான களப்பணிகளையும் செய்ய முடிந்துள்ளது . புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வு நூலகமான ஞானாலயாவை தமிழ் இணையத்தில் அதிக அளவுக்குக் கொண்டு சேர்த்துள்ளேன் . திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குறித்து அதன் நிதி ஆதாரங்களைக் கண்டு நண்பர்களிடத்தில் பகிர்ந்து சிறிய அளவு நிதி ஆதாரங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளேன் . இந்தப் பள்ளியின் வளர்ச்சியில் தேவைப்படும் நிதிக்காகப் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன் . வலைதளத்தில் எழுதத் தொடங்கிய போது குழப்பமான சிந்தனைகளை அதிகம் பெற்றிருந்த போது தேவியர்கள் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள் . இன்று நான்காம் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புகக்கு செல்ல தேவியர்கள் கல்வியில் முதல் தரத்திலும் , தமிழ் வாசிப்பு எழுத்துப் பயிற்சியில் முதன்மை தரத்திலும் இருக்கின்றார்கள் . மனைவியின் ஆதரவு எப்போதும் போல இயல்பாக இருப்பதால் இந்த வாழ்க்கையை ரசனைக்குரியதாகத் தினந்தோறும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது . ஒவ்வொரு பிரபல்ய எழுத்தாளர்களும் வாசகர் கடிதம் என்று ஒன்றை வெளியிட்டு அதற்கு அவர்களும் பதில் அளித்துருப்பதை நீங்கள் படித்து இருக்கக்கூடும் . அது குறித்த முரண்பட்ட தகவல்கள் நிறைய உண்டு . எனக்கும் வலைபதிவில் விமர்சனம் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் வழியே தங்கள் அன்பை , ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்கள் அநேகம் பேர்கள் . அவர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது உண்டு . கடந்த மார்ச் 23 ந் தேதி அன்று வந்த ஒரு நண்பரின் கடிதத்தைப் பெயர் தவிர்த்து அவர் எழுதிய மொழியிலேயே இங்கு வெளியிடுகின்றேன் . இதுவும் ஒரு வகையில் அங்கீகாரம் தான் . மொழி பெயர்ப்புச் செய்யாமல் வெளியிட காரணம் நண்பர் ஒருவர் மூச்சுக்கு மூச்சுத் தமிழ் என்று ஏன் புலம்புகின்றீர் என்றார் . அவருக்கு இதை டெடிகேட் செய்கின்றேன் . போதுமா நண்பா ? ஆதரவளித்த ஆதரவளிக்கும் அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே எழுதி வைக்கின்றேன் . ( 26.03.2013) [] Dear Jothi Ganesan, Well and wish the same. You may be surprised to receive this e-mail after a long interval. Due to my personal health problems I discontinued posting my writings in the web and stayed away from the web for some time. Very recently I had the chance to read some of your article on Eelam Tamil issue. Those articles forced me to write this e-mail. Dear Jothigy your investigative journalism have exposed many influential people to the web readers. You have touched very sensitive nerves of the higher ups. Exposing their design and their manipulations to amesh wealth and fame have angered many of them. Due to this I fear for your safety and well being. Anything can happen to anyone in India. Please show some restraint in exposing those elements. I have personal bitter experience in this type of matter in SriLanka. That is why I am requesting you to be cautious. Your personal safety is very important to your family. Particularly to your wife and children. I hope that you can understand my fear as a co writer in the web. I have preserved many of your article in a separate external hard disc. So far no one has written with facts and proof in their articles. I am proud of you. I am living in Toronto, Canada. After serving in the Royal Bank of Canada I am retired now. I have only one daughter who is married and settled here. I am enjoying my retired life by visiting distance land in the globe. If I come to India I wish to meet you. Please be cautious and alert. My best wishes and blessings to your wife and children. My best wishes and blessing for all your future endeavor. Take care. [] நேரம் ஒதுக்கி முழுமையாக வாசித்த உங்களுக்கு என் நன்றி . நட்புடன் ஜோதிஜி திருப்பூர் . மின் அஞ்சல் முகவரி texlords@gmail.com 1 மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !