[] []   நம்ம ஊரு கோவை   பாசு baskarswaminath@yahoo.co.in    வெளியிடு – FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com        பொருளடக்கம் என்னுரை 6  கோவை 7  1.மருதமலை 8  2.பேரூர் 10  3.ஈஷா 11  4.கோவை குற்றாலம் 12  5.வ.உ.சி.உயிரியல் பூங்கா 13  6.சிறுவாணி அணை 14  7.நொய்யல் ஆறு 15  8.அத்திக்கடவு அணை 16  9.விமான நிலையம் 17  10.இரயில் நிலையம் 19  11.பேருந்து நிலையங்கள் 20  12.மத்திய சிறைச்சாலை 22  13.கல்வி நிறுவனங்கள் 23  14.மருத்துவமனைகள் 25  15.Mall (பேரங்காடி) 27  1.புரூக் பியீல்டு(Brook Field Mall) 27  II.பன் ரிபப்ளிக் (Fun Republic Mall) 28  III.புரோஸோன் ( Prozone) 30  16.கேளிக்கை பூங்கா ( Theme park) 31   I.மஹாராஜா  31  II.கோவை கொண்டாட்டம் 32  33  III.பிளாக் தண்டர் 33  17.தொழிற்சாலைகள் (Companies) 34  I.நீரேற்றி (Pump) 34  II.வால்வு (Valves) 36  III.வார்படசாலை (Foundries) 37  IV.பெரிய நிறுவனங்கள் 38  V.மென்பொருள் (Software companies) 39  18.பஞ்சாலைகள் (Cotton Mills) 40  19.சென்ரல் ஸ்டுடியோ 42  20.பட்சிராஜா ஸ்டுடியோ 43  21.சிறுதுளி 44  22.ஓசை 45  23.சாந்தி சமூக சேவைகள் 47  24.சி.ஆர்.ஐ ட்ரஸ்ட் (CRI PUMP) 49  25.எல்&டி (L&T) 50  26.ஶ்ரீ அண்ணபூர்ணா உணவகம் 51  27.ஶ்ரீ கிருஷ்ணா ஸவீட்ஸ் 52  28.அருங்காட்சியங்கள் ( Museum) 53  29.ஜி.டி.நாயுடு (1893-1974) 54  30.நட்சத்திர விடுதிகள்(Star Hotels) 56  தானுந்து விளையாட்டு (Formula1 Car Race) 58  கோவை பங்கு சந்தை (CSX) 60  கோவை சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகள் 61  இதெனது கோவையின் இறுதிப்பதிவு 62  கோவையைச் சுற்றி 64  தென்திருப்பதி 64  பண்ணாரி அம்மன் 65  பவானிசாகர் அணை 66  கொடிவேரி அணை 67  ஆழியாறு அணை 68  குரங்கு நீர்வீழ்ச்சி (Monkey Falls) 69  காரமடை அரங்கநாதர் 70  பரளிக்காடு 71  கோவையை சுற்றி மேலும் 72  நீலகிரி மலை -உதகமண்டலம் (ஊட்டி) 72  கொடைக்கானல் 73  பழநி மலை - (தண்டாயுதபாணி சுவாமி) 75  திருமூர்த்தி அருவி 76  ஆனைக்கட்டி (அட்டப்பாடி) 77  ஆனை மலை (வால்பாறை) 78  மூணார் 79  இறுதிப் பதிவு 80  FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி 82  கணியம் அறக்கட்டளை 89  தொலை நோக்கு – Vision 89  பணி இலக்கு  – Mission 89  தற்போதைய செயல்கள் 89  கட்டற்ற மென்பொருட்கள் 90  அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள் 90  வெளிப்படைத்தன்மை 91  நன்கொடை 92             என்னுரை வணக்கம்.  இது அறிவிற்கான தளமுமில்லை நான் கற்றுத்தெளியவுமில்லை, கண்டதையும் கேட்டதையும்  படித்ததையும் வெறும் பொழுதுபோக்காய் பாசுகோவை (Basucovai)என்ற முகநூலில் (FB)கோவையைப் பற்றி  கோவையின் சிறப்புக்களை அறியாதர்கள் அறிந்துகொள்ள  நான் பகிர்ந்த பதிவுகளை ஒரு சிறிய தொகுப்பாக்கியுள்ளேன். இது கோவை மக்களுக்கு சலிப்பாயிருக்கலாம் மற்றவர்களுக்கு பயன்படுமே என்றுதான் இத்தொகுப்பு. எனதறியாமையினால் வரும்  குறைகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி என்னை மேம்படுத்த செய்வீர் எனற நம்பிக்கையுடன் தோழன் பாசுகரன். சு baskarswaminath@yahoo.co.in  95666 00920.     கோவை   மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை. மிதமான தட்பவெப்ப நிலையும் எவ்வளவு வெய்யிலிலும் வியிர்க்காத சீதோஷ்ண நிலையும் கொண்ட ஊர். பழங்குடியினர் கோசலர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், கோவன் என்ற அரசன் ஆண்டதாலும் கோவன்புதூர் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மறுவி கோயம்புத்தூர் என்று மாறியதாக ஒரு வரலாறாம் புவியியலாம்..   35 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகர் தொழில் வளர்ச்சியிலும், கல்வி, மருத்துவ  நிறுவனங்களின் வளர்ச்சியில் மேம்பட்ட நிலையிலும், நூற்பாலைகள், வார்பட தொழிற்சாலைகள், நெசவு, செயற்கை ஆபரணங்கள், கிரைண்டர்கள், கணணி தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் மொத்த பம்ப் தேவையின் உற்பத்தியில் பாதி கோவையிலிருந்துதான் ஏற்றுமதியாகி தமுழ்நாட்டின்  2 வது பெரிய முன்னணி நகரமாய் விளங்குகிறது.                                                          1.மருதமலை                                              (12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்)   முருகா! எப்படியோ சின்னப்பதேவரின் மூலம் உனது கோயிலை புரணமைத்துவிட்டாய். 2700 அடி உயரம் கொண்ட மேற்குமலை தொடர்ச்சியில் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மருதமலை. மலையில் அதிகமாய் மருதமரம் நிறைந்திருந்ததால் அப்படி பெயர் வந்திருக்ககூடும் என தகவல். அதனருகில் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்ததாக கூறும் ஒரு குகையும் உள்ளது.( தான்தோன்றி விநாயகர் கோயில்). இது காந்திபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. கோவை சிறப்புக்களில் இதுவுமொன்று. வழிபாட்டு நேரம்:  காலை 5.30-1.0 மாலை 2.0 - 8.30 தொடர்புக்கு: 0422-2422490.    []   2.பேரூர்                                          (9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ) கரிகால் சோழன் காலத்தில்  நொய்யல் ஆற்றுப் படுக்கையில் ஆதம விதிப்படி கட்டப்பட்டது இந்த பட்டீஸ்வரர் ஆலயம். தேரும் யானையும் கொண்ட கோயிலும்கூட. நொய்யல் நதிக்கரையோரம்  அமைந்துள்ளதால் இங்கு  இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. கோவையின் சிறப்புக்களில் இதுவுமொன்று. இது காந்திபுரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.  வழிபாட்டு நேரம் : காலை: 6.0 - 1.0 மாலை: 4.0 - 9.0 தொடர்புக்கு: 0422-22607991                  []   3.ஈஷா மேற்குத் தொடர்ச்சி  மலைத்தொடரின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் 1992 ல் 150 ஏக்கர் பரப்பளவில் திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களினால் தொடங்கப்பட்டது ஈஷா யோகா மையம். யோகா விரும்பிகளுக்கும், கோவை மக்களுக்கும் இது ஒரு சுற்றுலா தளமாய் விளங்குகிறது. சமீபத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து சிறப்பித்தார். இது காந்திபுரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. கோவை சிறப்புக்களில் இதுவுமொன்று. தொடர்புக்கு: 083000 83111                                                                                                                              []   4.கோவை குற்றாலம்                                       மேற்கு மலைத்தொடர்ச்சியில் சிறுவாணி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அருவிதான் கோவை குற்றாலம். ஒருகாலத்தில் தண்ணீர் அதிகமாய் வந்ததாம்  இப்பொழுது நீர்வரவு மிகவும் குறைவுதான்.1 கி.மீ நடந்துதான் அருவியை அடையமுடியும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு பிரச்சனையில்லை மற்றவர்களுக்குதான் நடக்க சற்று சிரமம்.  இது காந்திபுரத்திலிருந்து 37 கி.மீ தொலைவில் உள்ளது.         பார்வை நேரம்: காலை 10.00 - 3.0 மணிவரை                                                           தொடர்புக்கு: 095785 90927                          []   5.வ.உ.சி.உயிரியல் பூங்கா   1965ல் 4.5 ஏக்கர் பரப்பளவில் காந்திபுரத்தில்  வ.உ.சிதம்பரனார் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது. பெரியவர்களுக்காக நடக்க நடைபாதை வசதி, சிறுவர்களுக்காக விளையாட்டு  தொடர்வண்டியும், வண்ண மீன்களின் காட்சியகமும் உள்ளது. நடுத்தர மக்களுக்கு பொழுதுபோக்கே இந்த பூங்காதான். இது காந்திபுரத்திலிருந்து 2.0 கி.மீ தொலைவிலுள்ளது.   பார்வை நேரம் திங்-வெள்ளி= மாலை 4.0 -7.30                                                                                                      சனி-ஞாயிறு= காலை10.30 -7.30 செவ்வாய் - விடுமுறை. தொடர்புக்கு: 0422-2303613                      []       6.சிறுவாணி அணை கேராளாவில் பாலக்காட்டு மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளயத்திற்கு  மேற்கே பவானியுடன் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் 187 அடி உயரத்திற்கு  ஓர் அணை 1927ல் தொடங்கி 1931 ஆம் ஆண்டின் முடிவில் கட்டி அந்த அணையிலிருந்து நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது கிழக்கு பக்கம் கொட்டுவந்து கோவை நகருக்கு குடிநீர் விநயோகம் செய்யப்பட்டது இரத்தினசபாபதி (R.S.புரம்) அவர்களின் முயற்சியால். உலகின் இரண்டாவது சுவை மிகுந்த நீர் என்ற பெருமை (இலங்கையை அடுத்து) இதற்கு உண்டு. இது காந்திபுரத்திலிருந்து 54 கி.மீ தொலைவில் உள்ளது. கோவையின் சிறப்புக்களில் இதுவுமொன்று.                                                                                                                                                  []   7.நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி கோவை பேரூர் வழியாய் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வழியாக காங்கேயத்தை அடுத்து நொய்யல் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கின்றதால் நொய்யல் ஆறு என பெயர் பெற்றது. இந்த ஆறு கோவையை கடக்கும்போது அதைச்சுற்றி சிறிதும் பெரியதுமாய்யுள்ள 18 குளங்களை நிறைத்தபின் திருப்பூரை அடைகிறது.                                                                                                                                       1.சிங்காநல்லூர் குளம் 2.வாலாங்குளம் 3.கிருஷ்ணாம்பதி குளம் 4.முத்தண்ணன் குளம் 5.உக்கடம் பெரியகுளம் 6.செல்வ சிந்தாமணி குளம் 7.குறிச்சி குளம் மற்றும் இன்ன பிற....                                                                                                                               []       8.அத்திக்கடவு அணை கோவையிலிருந்து மாஞ்சூர் செல்லும் வழியில் இருக்கிறது அத்திக்கடவு வனம். அங்கிருந்து உற்பத்தியாகி வரும் நீரை வெள்ளியங்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு அணையை கட்டி நீரை சேமித்து பிறகு கோவைக்கு குடிநீர் விநயோகம் செய்கின்றனர். அந்த அணைதான் பில்லூர் அணை. இது 100 அடி நீர்மட்டம் கொண்டது. சிறுவாணியும், அத்திக்கடவும்தான் கோவை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கின்றது. இது காந்திபுரத்திலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது.                                                                                                                          []     9.விமான நிலையம் 1932 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் பாட்டியாலா மன்னர் காசிமகாராஜா அலகாபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தை ஓட்டி வந்தார். பிறகு 1940 ஆம் ஆண்டுதான் கோவைக்கு விமானம் விடப்பட்டது. தினமும் கிட்டத்தட்ட கோவைக்கு 40 விமானங்கள் வந்து போகின்றன. இது 1995ல் பன்னாட்டு விமான சேவையாய் மாறி 2012ல் சர்வதேச விமான நிலையமாய் உயர்வு பெற்றது. இது காந்திபுரத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், சூலூர் விமானப்படை விமான நிலையம் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது. தொடர்புக்கு: 0422-2591905      []     []       10.இரயில் நிலையம் இந்தியாவில் 1853 ஆம் ஆண்டுதான் ஆங்கிலேயரால் முதன்முதலில்  மும்பையிலிருந்து தானேவிற்கு முதல் ரயில் விடப்பட்டாலும் 1898 ஆம் ஆண்டுதான் கோவைக்கு ரயில் வந்தது. தினமும் சிறிதும் பெரியதுமாய் 50 ரயில்கள் வந்து போகின்றன(சரக்கு ரயில்கள் தவிர்த்து). தமிழகத்தில் வருவாயிலும் பரப்பளவிலும் இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது. இதைத்தவிர 7 புறநகர் ரயில்நிலையங்களும் உள்ளது. தொடர்புக்கு: 139                                                                                                   []   11.பேருந்து நிலையங்கள் கோவையில் மாநகர பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையங்கள் என 7 நிலையங்கள் உள்ளது. 1. நகர பேருந்து நிலையம் 2. மத்திய பேருந்து நிலையம் 3. திருவள்ளுவர் பே.நிலையம் 4. சிங்காநல்லூர் பே.நிலையம் 5. உக்கடம் பேருந்து நிலையம்  6. சாய்பாபா காலனி பேருந்து நிலையம் 7. ஆம்னி பேருந்து நிலையம். வட்டார போக்குவரத்து எண்கள் TN37   -   தெற்கு TN38   -   வடக்கு TN66   -   மத்திமம் TN99   -   மேற்கு.    []   12.மத்திய சிறைச்சாலை 1872 ஆம்ஆண்டு 167.7 ஏக்கரில் கட்டப்பட்டது இந்த சிறைக்கூடம். 2000 கைதிகள் தங்குமளவு  கொண்ட து. 1908 ஆம் ஆண்டிலிருந்து 1910 ஆம் ஆண்டுவரை வ.உ.சிதம்பரனார் இந்த சிறையில்தான் செக்கிழுத்தார் .ஆகவேதான் இந்த சிறைக்கு சிறப்பு. இது காந்திபுரத்தில் அமைந்துள்ளது.                       []     13.கல்வி நிறுவனங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்ற லாபகரமான தொழில் (கன்னி ராசிக்காரர்களைத் தவிர). கோவையிலுள்ள புகழ்பெற்ற ஒரு சில கல்லூரிகள்  1. பாரதியார் பல்கலைக்கழகம் 2. அவிநாசிலிங்கம் ப.கழகம் 3. அமிர்தா பல்கலைக்கழகம் 4. காருண்யா பல்கலைக்கழகம் 5. கிருஷ்ணா பல்கலைக்கழகம் 6. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். 7. கற்பகம் பல்கலைக்கழகம். 8. ஜி்.சி.டி 9. சி.ஐ.டி 10. பி.எஸ்.ஜி 11. குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி.  இதைத் தவிர  26 - தொழில்நுட்ப கல்லூரிகள் 30 - கலைக்கல்லூரிகள் 35 - பள்ளிகள் 3.  - மருத்துவ கல்லூரிகள் 1.  - சட்டக்கல்லூரி 7.  - ஆராய்ச்சி கழகங்கள் என மேலும் சில கோவையில் உள்ளன.     []       14.மருத்துவமனைகள் கோவையில் சிறிதும் பெரிதுமாய் 50 மருத்துவமனைகள் உள்ளன.  வார ஆங்கில நாளேடான வீக் வாரப் பத்திரிகை இந்தியா முழுவதும் எடுத்த ஆய்வில் மருத்துவமனயின் தரத்தை வரிசைப்படுத்தியுள்ளனர். கோவையில் அவை   1. குப்புசாமி நாயுடு (GKNM). 2. கோவை மெடிகல் சென்டர் (KMCH). 3. பி.எஸ்.ஜி (PSG). 4. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை (SRKH). 5.கோவை மெடிகல் கல்லூரி மருத்துவமனை (CMC). 6. கங்கா மருத்துவமனை(GANGA). 7. கே.ஜி மருத்துவமனை (KG). 8. வயிற்றுப்புண் சம்பந்தமான மருத்துவமனைகள்.( Gastroenterology medical centre & Hospitals). 9. ஸ்ரீ அபராமி மருத்துவமனை (SAH). 10. கொங்குநாடு மருத்துவமனை (KNH). இதைத்தவிர மேலும் நிறைய மருத்துவமனைகள் கண், காது, மூக்கு, தொண்டை என.....      []       15.Mall (பேரங்காடி)     கோவையில்  இளைஞர்கள் இளைஞிகளின் பொழுதுபோக்கே இந்த மால்கள்தான். கட்டணமின்றி நாள்முழுவதும் சுற்றி வரலாம்  எதையும் வாங்காமலேயே.    1.புரூக் பியீல்டு(Brook Field Mall)   கோவையில் முதன்முதலில் 2009 ஆம்  ஆண்டு புரூக்பாண்ட் சாலையில் 5 அடுக்குகளுடன் 6  திரையரங்களுடனும் 150 கடைகளுடனும் ஆரம்பிக்கப்பட்டது இந்த மால்.  இது காந்திபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 092810 00550.                                                                                                                                                                                      []                                                          II.பன் ரிபப்ளிக் (Fun Republic Mall)   2012 ஆம் ஆண்டு 3.5 ஏக்கர் பரப்பளவில் 6 அடுக்குகளுடன் 5 திரையரங்களுடனும் 80 கடைகளுடனும் அவிநாசி சாலையிலுள்ள  பீளமேட்டில் ஆரம்பிக்கப்பட்டது இந்த மால். இது காந்திபுரத்திலிருந்து 6.7 கி.மீ தொலைவில் உள்ளது.  தொடர்புக்கு: 090477 66205                                                                                                           []                []   III.புரோஸோன் ( Prozone)   2017 ஆம் ஆண்டு 12 ஏக்கரில் 9 திரையரங்களுடனும் 140  கடைகளுடனும் சக்தி சாலையிலுள்ள சிவானந்தபுரத்தில் ஆரம்பிக்கபட்டது இந்த மால்.  இது காந்திபுரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 0422 – 6628111        []   16.கேளிக்கை பூங்கா ( Theme park)    I.மஹாராஜா    கோவை அவிநாசி சாலையிலுள்ள நீலாம்பூரில் 2006 ஆம் ஆண்டு 15 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டது இந்த பொழுதுபோக்கு பூங்கா. இந்தப் பூங்காவில் தண்ணீர் நடனம், மோதுகார்கள், அலை குளம்,  என பல விளையாட்டுகள் அமைந்துள்ளது. 2 திரையரங்கங்களும், சிறிய கோல்ப் (Golf) பயிற்சி மைதானமும், உணவகமும்  அடங்கியது.  இது காந்திபுரத்திலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. பார்வை நேரம்:காலை10.30-6.30.   கட்டணம்: பெரியவர்களுக்கு – Rs.600/- சிறியவர்களுக்கு.  – Rs.500/- தொடர்புக்கு: 0422  - 6504128.                                                                                              []   II.கோவை கொண்டாட்டம்   கோவை சிறுவாணி சாலையிலுள்ள பேரூரில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த பொழுதுபோக்கு பூங்கா. இந்தப் பூங்காவில் தண்ணீர் நடனம், மோதுகார்கள், அலை குளம், மலை ஏற்றம் என பல விளையாட்டுகள் அடங்கியது. இங்கு தங்குவதற்கு சொகுசு விடுதிகளும் (Resort) உண்டு். இது காந்திபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. பார்வை நேரம்:காலை10.30-5.30.                                                                                                                                  கட்டணம்:  பெரியவர்களுக்கு – Rs.500/- சிறுவர்களுக்கு.    – Rs.450/- தொடர்புக்கு: 0422 - 2606852,53.                                                                                      []           III.பிளாக் தண்டர்   கோவை மேட்டுப்பாளையம் அடுத்து ஊட்டி சாலையில் 75 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரியதாய்  ஆரம்பிக்கப்பட்டது இந்த பொழுது போக்கு பூங்கா. இந்தப் பூங்காவில் தண்ணீர் நடனம், மோதுகார்கள், அலை குளம், மலை ஏற்றம் என 49 விளையாட்டுகள் அமைந்துள்ளது.  இங்கு தங்குவதற்கு சொகுசு விடுதிகளும் (Resort), உணவகமும் உண்டு. இது காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. பார்வை நேரம்: காலை 9.30-7.30   கட்டணம்:  பெரியவர்களுக்கு – Rs.690/- சிறுவர்களுக்கு.     – Rs.590/- தொடர்புக்கு: 04254 - 226632,40                                                                                                             []   17.தொழிற்சாலைகள் (Companies)   கோவை தொழில்துறையில் சென்னையை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. 25000 தொழிற்சாலைகள் சிறிதும் பெரியதுமாய் அமைந்துள்ளது கோவையில். மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (கொடிசியா) பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறுதொழிலதிபர்களுக்கு பன்னாட்டு வணிகம் நடத்த உதவுகிறது. கோவையில் பஞ்சாலைகள், மோட்டார், வால்வ், வார்பட கம்பெனிகள், உருக்காலைகள், மென்பொருள், லேத் பட்டறைகள் என ஏராளமான தொழிற்சாலைகள். அவற்றில் சில....   I.நீரேற்றி (Pump)   1. டெக்ஸ்மோ (Texmo) 2. அக்குவாசப் (Aquasub) 3. சி.ஆர்.ஐ (CRI) 4. டெக்கான் (Deccan) 5. கே.எஸ்.பி (KSB) 6. ஷார்ப் (sharp) 7. சுகுணா ( Suguna) 8. மகேந்திரா (Mahendra) 9. எக்கி (Ekki) 10. பெஸ்ட் (Best)               []   II.வால்வு (Valves)   1. L &T 2. Ampo 3. Cameron 4. Dresser 5. Circor 6. Orbinox 7. schuf 8. Flowserve   9. Virgo 10. Valvitalia                                                                                                    11. Velan.....                                                                                           []   III.வார்படசாலை (Foundries)   1. Ammarun 2. Autoshell 3. PSG                                                                           4. Eltex 5. RSM 6. Bradken 7. Alegendran Steels 8. Sri Ranganathar Industries 9. Flow Links Systems 10. Koso 11. P.K.Steels 12. K.U.Industries             []          IV.பெரிய நிறுவனங்கள்   1. Pricol                                                               2. LMW 3. LGB 4. ELGI 5. Kiroskar brothers 6. T Stands & Co ltd 7. Roots Horn 8. Sharp Tools 9. Jayam Automotive 10.Shanthi Gears 11. ACC Madukarai 12. SeForge Ltd                                                          []     V.மென்பொருள்  (Software companies)                                                         1. Cognizant (CTS) 2. Bosch 3. Wipro 4. HCL 5. Dell 6. TCS 7. Payoda 8. Ford 9. NTT Data           []   18.பஞ்சாலைகள் (Cotton Mills)   இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து பலகோடி குடும்பங்கள் வாழ்வாதாரமாக இருப்பது ஜவுளித்துறைதான். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பருத்தி விளையும் பகுதிகளை துல்லியமாக  3 நகரங்களை தேர்வு செய்து அதற்காக இரயில் பாதைகளையும் அமைத்தனர். அப்படி தோன்றியதுதான் ஏ,பி,சி. அகமதாபாத், பம்பாய், கோயம்பத்தூர். 1988 ல் கோவையில் முதன்முதலாய் சர்.இராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்டேன்ஸ் மில். அதைப்  பிறகுதான் ஜி.குப்புசாமி நாயுடு தானும் ஒரு பஞ்சாலையை தொடங்கியதுதான் லட்சுமி மில் 1906ல். 1930 வரை 8 மில்கள்தான் தோன்றின.   1. லட்சுமி மில்                                                                                                                       2. காளீஸ்வரர் மில் 3. ரங்க விலாஸ் மில் 4. ராதாகிருஷ்ணா மில் என.....   மேலும் பைக்காரா திட்டத்திற்கு முன்புவரை நீராவி சக்தியினால் இயங்கிய மில்கள் பிறகு மின்சாரம் மலிவாய் கிடைக்க எண்ணற்ற மில்கள் தோன்றியது. இதனால் கோவை  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆனது.           []   19.சென்ரல் ஸ்டுடியோ     கோவை திருச்சி  சாலையில் 6 கி.மீ தொலைவில் கோவை தொழிலதிபர்களின் முயற்சியால் உருவானதுதான் கோவை சென்ரல் ஸ்டுடியோ. இதை உருவாக்கியதில் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. ஒலிப்பதிவுக் கூடம், படத்தொகுப்பு நிலையம்,  5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன ரக கேமரா என நவீன வசதிகளுடன் அமைத்தனர். அந்நாளைய புகழ்பெற்ற இயக்குனர்களான ஏ.எஸ்.ஏ.சாமி, ஸ்ரீராமலு, கிருஷ்ணன்-பஞ்சு, சாண்டோ எம் சின்னப்பா தேவர் அனைவருக்கும் என்ட்ரி கொடுத்தது இந்த ஸ்ட்டுடியோதான்.  பின்னர் 1956 ல் ஸ்ரீராமலு நாயுடு தனியாக பிரிந்து சென்றுவிட நிலையில் பின்னர் குத்தகைக்கு எடுத்த ஜூபிடர் பிக்சர் நிறுவனமும் குத்தகை முடிந்து சென்னை சென்றுவிட்டடதால் ஸ்டுடியோ மூடுவிழா கண்டது....                                                                                                                                                []   20.பட்சிராஜா ஸ்டுடியோ   1946 ல் சென்ரல் ஸ்டுடியோவை உருவாக்கியவர்களில் ஒருவரான ஸ்ரீராமலு நாயுடு அதிலிருந்து விலகி புலியகுளம் பகுதியில் பட்சிராஜா ஸ்டுடியோவை உருவாக்கினார். கருணாநிதியின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்' இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், சிங்களம் என 6 மொழிகளில் ஒரே நேரத்தில்  இங்கு தயாரிக்கப்பட்டது. அந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த 5 பிரபலமான ஸ்டியோக்களில் 2 கோவையில்தான் இருந்தது. அப்போது கோவை இன்னொரு கோடம்பாக்கமாக இருந்தது . இங்கு எடுக்கப்பட்ட அரிதாஸ் மூன்று தீபாவளிகள் கண்டது. பின்னர் நடத்த முடியாமல் அதுவும் தற்சமயம் விக்னேஷ் மகால் என கல்யாண மண்டபமாக உருமாறியது.                 []   21.சிறுதுளி   கோவையின் நீர் வளத்தைக் காக்க உருவான அமைப்புதான் 'சிறுதுளி'. இதன் முதன்மை நிர்வாகி வனிதா மோகன், இவரது பிரிக்கால் கம்பெனி கோவையின் பிரதான அடையாளமும்கூட. கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றுப்படுகையில்  கோவை மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என அனைவரின் உதவியுடன் கோவையில் நொய்யல் ஆற்றுப் படுகையில் உள்ள குளங்களைச் சீரமைத்து, நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் விதமாக குளம், குட்டைகளைத் தூர் வாருதல், தடுப்பணை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு உக்கடம், வாலாங்குளம், குறிச்சி, புதுக்குளம், கொளரம்பதி, கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டிக்குட்டை ஆகிய குளங்களும் தூர் வாரப்பட்டன. தூர் வாரும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தக் குளங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. உக்கடம் பெரியகுளம் சிறுதுளியின் முயற்ச்சிக்கு ஒரு சான்று. இது காந்திபுரத்திலிருந்து 5.8 கி.மீ தொலைவில் உள்ளது.   தொடர்புக்கு: 0422 2318222         []   22.ஓசை   காடுகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் அமைப்புதான் “ஓசை”. கடந்ந 13 ஆண்டுகளாக கானுயிர் பாதுகாப்புப் பணிகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு மரங்களை பாதுகாக்கவும், காடுகள், காட்டு உயிர்கள், நதிகள் போன்றவை பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காடுகளுக்கே அழைத்துச் சென்று பாடம் எடுத்து வருகிறார் ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன்.   தொடர்புக்கு: 94430 22655                                                                                   []   23.சாந்தி சமூக சேவைகள்   கோவை சாந்தி கியர்ஸ் திரு. பழநிசாமி அவர்கள் தன் மனைவியின் நினைவாக கோவை சிங்கநல்லூரில் “சாந்தி சோஷியல் சர்விஸ்” என்ற பொதுநல அமைப்பை மக்களுக்காக தொடங்கி, மக்கள் பயனடையும் வகையில் அவர்  செய்யும் நற்காரியங்கள் சில   1. தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு எவ்வளவு பெட்ரோல் (அ ) டீசல் விலை ஏற்றம் இருப்பினும் முற்றும் முழுதாக அவை தீரும்வரை பழைய விலையேதான்)   2. 24 மணிநேரமும் செயல்படும் மருந்தகம். (இதன் சிறப்பு 20% தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது)   3. MRI, CT Scan, ECG மற்றும்  X-Ray அனைத்தும் பாதி விலையுடன்கூடிய ஆய்வகம்.   4. சாந்தி கேண்டீன் தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களிலும் Rs.20/- விலையில் தரமான உணவு வழங்கி மகிழ்விக்கிறார்.   இது காந்திபுரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 0422 - 422 2205500, 8489933163           []     24.சி.ஆர்.ஐ ட்ரஸ்ட் (CRI PUMP)                                   கோவையில் தொழில்துறையின்  அடையாளங்களுள் ஒன்றான சி.ஆர்.ஐ(CRI) மக்கள் சேவைக்காக டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி பலவேறு நலதிட்டங்களை செய்துவருகிறது. கோவை சரவணம்பட்டியில் 15000 சதுரடியில் மெடிகல் சென்டர் ஒன்றை அமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வாரத்தில் ஏழு நாட்களிலும் குறைந்த கட்டணத்தில் மருத்துவத்தை அளிக்கிறது. 24 மணி நேரமும் இயங்கும் மருந்து கடை, காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை இயங்கும் (இரண்டாவது மாடியில்)பிஸியோதெரபி ரேடியாலஜி என ஆய்வகங்கள்(Lab) என பல வசதிகளைக் கொண்டுள்ளது. ஏற்கனவே சரவணம்பட்டியில் அரசு பள்ளியை புதுப்பித்ததும், நவீனமயமான சுடுகாடு மோசக்கிருஷா(முடிவில்லா பயணம்)என்ற பெயரில் உருவாக்கி CSR ன் (Corporate Social Responsibility)திட்டத்தை தனது கம்பெனி தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் பயன்படும் வகையில் செய்துவருவது மிகவும் சிறப்பு. தொடர்புக்கு: 0422 - 7110000.                                                                                           []   25.எல்&டி (L&T)    கோவையில் மிகப் பெரிய நிறுவனமான எல்&டி(L&T) மக்கள் சேவைக்காக CSR திட்டத்தின்கீழ் 2012 ல் ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையில் ஹெல்த் சென்டர் (Health Center)ஒன்றை ஆரம்பித்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணிவரை  தனது கம்பெனி தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படும் விதமாய் இலவசமாக மருத்துவம் அளிக்கிறது. இது காந்திபுரத்திலிருந்து 14.5 கி.மீ தொலைவில் உள்ளது.  தொடர்புக்கு: 0422 298 9909                                                                                 []   26.ஶ்ரீ அண்ணபூர்ணா உணவகம்     1968 ல் திரு.தாமோதர நாயுடு ஆர்.எஸ்.புரத்தில் முதன்முதலாய் ஒரு சைவ உணவகத்துடன்கூடிய விடுதியை தொடங்கினார். இன்று 16 உணவகங்களாக வளர்ச்சி பெற்று கோவையின் அடையாளமாக விளங்குகிறது. தரமான உணவு, சிற்றுண்டி,காபி, ஸ்வீட் என அனைத்தும் சுத்தமான முறையில் தயாரிப்பது இதன் சிறப்பு. இதைத்தவிர சமையல் உபகரணங்கள் உற்பத்தி, கட்டுமானங்கள் , உடனடி உணவுக் கலவை(Instant Food Mix), குளிர்பானங்கள் உற்பத்தி என பல தொழிகளில் ஈடுபட்டு சிறப்புடன் விளங்குகிறது. தொடர்புக்கு: 0422 - 4522333                []   27.ஶ்ரீ கிருஷ்ணா ஸவீட்ஸ்   1948 ஆம் ஆண்டு N.K.மகாதேவ ஐயர் முதன்முதலாய் ஒரு உணவகத்தை தொடங்கினார். பிறகு சுத்தமான நெய்யாலான இனிப்புகளை அறிமுகம் செய்து 1972ல் ஆர்.எஸ்.புரத்தில் இனிப்பிற்காக தனியாக கடை ஒன்றை துவக்கினார். பின்னர் படிப்படியாய் தமிழகத்தில் பல  கிளைகளும் அரபுநாடுகளிலும்(UAE) கிளையை துவக்கி இன்று 800 தொழிலாளர்களுக்கும் மேல் பணிபுரிகின்றனர். இன்று மைசூர்பா என்றாலே கிருஷ்ணா ஸ்வீட்ஸ்தான் என்ற அளவிற்கு வளர்ந்து மகாதேவ ஐயர் பிறந்த தினத்தை மைசூர்பா தினமாய் கொண்டாடி அன்றுமட்டும் தள்ளுபடி விலையில் வழங்குகிறது இந்த நிறுவனம். இது கோவையின் அடையாளமாய் விளங்குகிறது. தொடர்புக்கு: 0422 – 2545520,40,80                                                                                            []   28.அருங்காட்சியங்கள் ( Museum)   கோவையில் உள்ள அருங்காட்சியகங்கள் ஒரு சில 1. Forest college Museum(1902) - ஆர்.எஸ்.புரம் 2. Gallery and Textile Museum - அவிநாசி சாலை 3. GD Naidu Museum - அவிநாசி சாலை 4. Government Museum- வ.உ.சி பூங்கா 5. Police Museum- இரயில் நிலையம் 6. Regional Science Centre and Science Museum - கொடிசியா சாலை 7. Kasthuri Sreenivasan Art Gallery & Textile Museum (Culture Centre) மேலும் பல.               []   29.ஜி.டி.நாயுடு (1893-1974)   திரு.கோபால்சாமி  துரைசாமி நாயுடு கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தவர்.  இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த  மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் (UMS)என்ற நிறுவனத்தை துவக்கினார்.     1936ஆம் ஆண்டு ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டன. இந்திய அரசாங்கம் கடைசிவரை கண்டுகொள்ளவேயில்லை இந்தியாவின் எடிசன் என அறியப்பட்ட இவரை.           []       30.நட்சத்திர விடுதிகள்(Star Hotels)   கோவையில் தொழில்துறை வளர்ச்சியின் காரணமாய் எண்ணற்ற விடுதிகளும் உணவகங்களும் நாளுக்குநாள் அதிகரிக்க அதில் 5 ,4 மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் சில...   1. Le Meridian-நீலம்பூர் 2. Vivanta (Taj)-ரேஸ் கோர்ஸ் 3. The Residency Towers-பா.நா.பாளையம்                                                                                                       4. Raddission Blu-பீளமேடு 5. ITC Hotel- ரேஸ்கோர்ஸ் 6. Alankar Grande-காந்திபுரம்  7. CAG Pride-காந்திபுரம்  8. Holiday Residency-சரவணம்பட்டி 9. Jenny Club-கொடிசியா 10. City Tower-காந்திபுரம் 11. Aloft-சிங்காநல்லூர்  12. Fab Hotel Royal Castle-காந்திபுரம் 13. Heritage Inn-ராம்நகர் 14. Part Plaza-திருச்சி சாலை 15. Vijay Elanza-பீளமேடு 16. Orbis-ஹோப் காலேஜ் 17. Poppy’s-சாய்பாபா காலனி 18. Park In-இரயில் நிலையம் 19. Gokuldam Park-நீலாம்பூர் 20. Kiskol-வடகோவை 21. Vibe GRT-அவிநாசி சாலை []   தானுந்து விளையாட்டு (Formula1 Car Race)   கோவையில் செட்டிப்பாளையத்தில் 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் திரு.கரிவரதன் (LMW)அவர்களின் நினைவாக LGB நிறுவனத்தினரால்  துவங்கப்பட்டதுதான் இந்த கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே (Kari Motors Speedway). 2.1 கி.மீ நீளமும் 14 வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் ன்ர்ந்த பந்தயச்சாலையும் 3கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. ஃபார்முலா1 பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நரன் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். இது காந்திபுரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 0422 - 2655767                    []       கோவை பங்கு சந்தை (CSX) கோவை பங்கு சந்தை அலுவலகம் திருச்சி சாலையிலுள்ள ராமநாதபுரத்தில் உள்ளது.  பங்குச் சந்தை என்பது  பங்குகளின் ஒழுங்கமைக்கப்பட்ட பரிமாற்றம் (கொள்முதல் மற்றும் விற்பனை செய்தல்) ஒரு சந்தையாகும். உள்ளன. தேசிய பங்கு சந்தை என்எஸ்இ (NSI)  பாம்பே பங்குச் சந்தை பிஎஸ்இ (BSI) ஆகியவை இந்தியாவில் செயல்படும் இரண்டு தேசிய பரிவர்த்தனைகள் ஆகும். கோயம்புத்தூர் பங்கு பரிவர்த்தனை லிமிடெட் சிஎஸ்எக்ஸ் (CSX) இது KG பாலகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்டது. இப்போது இது 50 நிர்வாகக் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பரிவர்த்தனைக்கு ஸ்கிரீன் அடிப்படையிலான வர்த்தகம் (SBT) அமைப்பு 1996 ம் ஆண்டு செயற்பாடுகளை ஆரம்பித்தது. இந்த அமைப்பு ஒரு நாளைக்கு 25,000 வர்த்தகர்கள் மற்றும் 400 உறுப்பினர்களைக் கையாளும் வகையில் அமைந்துள்ளது. இது காந்திபுரத்திலிருந்து 6.5 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 0422 – 5395938                                                                                    []   கோவை சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகள் தமிழ் நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு 44 தொகுதிகள்(தனி) சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கெனவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கோவையிலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் இவை   1.கவுண்டம்பாளயம் 2.பேரூர் 3.கோவை கிழக்கு 4.கோவை மேற்கு 5.சிங்காநல்லூர் 6.சூலூர் 7.கிணத்துக்கடவு 8.பொள்ளாச்சி 9.வால்பாறை (தனி) 10.மேட்டுப்பாளையம்   1. பாராளுமன்ற தொகுதி         []   இதெனது கோவையின் இறுதிப்பதிவு   பல்வேறு பணிச்சுமை காரணமாயும் நேரபோதாமையாலும் கோவையிலுள்ள  பழைமை வாய்ந்த சில இடங்கள் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு கடக்கின்றேன்.   1. விக்டோரியா டவுன்ஹால் - 1892 2. சி.எஸ்.ஐ (CSI)இம்மானுவேல் சர்ச் முதல் தேவாலயம்(1830) 3. வ.உ.சி ஸ்டேடியம் ( VOC) 4. அத்தர் ஜமாத் மசூதி.(1860-1904) 5. ஸ்டேன்ஸ் பள்ளி - 1962                                                                                                                                      6. பி எஸ் ஜி சர்வஜன பள்ளி - 1924 7. மணிக்கூண்டு 8. சூலூர் விமானபடை தளம் - 1940 9. மதுக்கரை ராணுவ மையம் 10. 1900 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலேயே முதன்முதலாய் சாமிக்கண்ணு வின்சென்ட் கட்டிய வெரைட்டி ஹால் திரையரங்கம் 11. கவுசிகா நதி (Kowsika river) 12. கோவை அவிநாசி சாலையில் மைக்கேல் ஆர்தர் ஹோப் அவர்களால் கட்டப்பட்ட அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி. 13. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் - இருகூர் 14. கோவை உணவு பாதுகாப்பகம்(FCI) 15. புளியகுளம் விநாயகர் கோயில் (20'அடி விநாயகர்) மேலும் பல...       []   கோவையைச் சுற்றி   தென்திருப்பதி     கோவை மாவட்டம் சிறுமுகை அருகே அமைந்துள்ளது தென்திருப்பதி . இக்கோயில் கோவையைச்சேர்ந்த கண்ணபிரான் மில்ஸ் (கே.ஜி.மில்ஸ் ) நிறுவனத்தினரால் மக்களின் பங்களிப்பு ஏதுமின்றி தனிப்பட்ட முறையில் கட்டப்பட்டதாகும்.கோயில் பராமரிப்பு, பூஜைகள், அன்னதானம் அனைத்தும் இந்நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. ஆகையால் இங்கு மக்களின் விதிமீறல்கள் எதுவும் இன்றி அமைதியாகவும்,சுத்தமாகவும் காட்சியளிக்கிறது.கோயிலின் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்கள், மரங்கள், முறையாக பராமரிக்கப்படுகிறது. இங்குள்ள பூக்களை கொண்டு பெருமாளுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஏறக்குறைய 45 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானத்தை அடைய 33 படிகள் அமைத்து சிறப்பாய் நிர்வகிக்கின்றனர். இது அன்னூர் மேட்டுபாளையம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்திபுரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.  தொடர்புக்கு: 077083 81194                                                                           []   பண்ணாரி அம்மன்   இக்கோவில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு ஆண்டுதோறும்  பங்குனி மாதம்  குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா நடைபெறும். இதையொட்டி ஈரோடு, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, கோவை ஆகிய பல்வேறு மாவட்டத்திலிருந்தும் மற்றும் கர்நாடகா மாநிலத்திருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.   தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் லட்சக்கணக்கானோர் தீ மிதிக்கும் ஒரே கோயில் பண்ணாரி அம்மன் கோவில் எனபது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி பக்தர்கள் தங்களுடைய காலநடைகளையும் குண்டம் இறக்கி நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது காந்திபுரத்திலிருந்து  71 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 04295 243 289          []     பவானிசாகர் அணை   மேற்குமலைத் தொடர்ச்சியில் உற்பத்தியாகி சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீத்தேக்கம் என்று பெயரானது. இவ்வணை 1955 ல் நிறைவடைந்து பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 130 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது. இது புளியம்பட்டி பண்ணாரி சாலையில் உள்ளது. இது காந்திபுரத்திலிருந்து 71 கி.மீ தொலைவில் உள்ளது                                                                                                    []   கொடிவேரி அணை   கொடிவேரி அணைக்கட்டு (Kodiveri Dam) பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். கொடி வேரி அணைக்கட்டு 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்டப்பட்டதால் அப்பெயர் மருவி கொடிவேரி என்று பெயர் வந்திருக்க கூடும் என தகவல். இது காந்திபுரத்திலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ளது.                  []           ஆழியாறு அணை   1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே வால்பாறையின் அடிவாரத்தில் கட்டப்பட்டது இந்த அணை. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. மூன்றுபுறமும் மலைகள் சூழ்ந்த சூழலும்,  படகு சவாரி செல்ல வசதியும் உண்டு. இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம், முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது காந்திபுரத்திலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ளது.                           []                    குரங்கு நீர்வீழ்ச்சி (Monkey Falls)   இது ஆழியாறு அணையின் அருகாமையில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி ஓன்று உண்டு. பெரியளவில் நீர் வரவு இல்லையெனினும் சிறுவர்களுக்கு குளிக்க உகந்த இடம். இது காந்திபுரத்திலிருந்து 73 கி.மீ தொலைவில் உள்ளது.                                                                                                                             []                                                         காரமடை அரங்கநாதர்   அரங்கநாத சாமி கோவில் கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது. காரமடை தேர் இழுத்தல் விழா ஒருவார காலம் சிறப்புடன் நடைபெறும். இது காந்திபுரத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது.  வழிபாட்டு நேரம்: காலை 5.30 - 1.0 மாலை 4.0 - 9.0 தொடர்புக்கு: 04254 272318              []                        பரளிக்காடு   கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது பரளிக்காடு.காரமடை வனத்துறையினரால் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது .சனி, ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எல்லா நாளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணம் செய்தால் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. இருசக்கர வாகனம், மற்றும் காரில் செல்லலாம். பரிசல் பயணம், மதிய உணவு, ட்ரெக்கிங், மூலிகை குளியல் என அனைத்துக்கும் சேர்த்து பெரியவர்களுக்கு 500 ரூபாயும், 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு 400 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது. பயணத்துக்கு ஒரு வாரம் முன்னரே வன அலுவலரிடம் முன் பதிவு செய்ய வேண்டும்.   இது காந்திபுரத்திலிருந்து   கி.மீ தொலைவில் உள்ளது.  தொடர்புக்கு: 09470 51011                  []     கோவையை சுற்றி மேலும்   நீலகிரி மலை -உதகமண்டலம் (ஊட்டி)                                                                          தோடர்மொழியில் ஒத்தக்கல்மந்து என்பது மறுவி உதகமண்டலமானது. 88430 மக்கள் தொகையுடன்  இது கடல்மட்டத்திலிருந்து 7350’ அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1819ல் கோவையின் ஆளுநராக இருந்த ஜான் சலீவன் ஆங்கிலேயருக்கு குளுமையான இடமெனக் கருதி முதன்முதலில் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் வந்து பங்களா அமைத்து குடியேறினார். அவரது இல்லம் இன்றும் நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. அவர்பெயரால்  கோவையிலுள்ள ஒரு வீதிக்கு சலீவன் தெரு (John sullivan St) என பெயருண்டு. இங்குள்ள மலை இரயில் பயணிக்கும் 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 16 சுரங்கங்களையும் 250 பாலங்களையும் 5 மணி நேரத்தில்  கடக்கிறது. இது கோவையிலிருந்து 86 கி.மீ தொலைவிலுள்ளது. காண வேண்டிய இடங்களில் சில   1. பொட்டானிகல் பூங்கா 2. ஏரி (படகு சவாரி) 3. தொட்ட பெட்டா சிகரம் 4. மலை இரயில் 5. எமரால்டு ஏரி 6. கோத்தகிரி 7. குன்னூர் சிம்ஸ் பூங்கா என...                                     []   கொடைக்கானல்   1845 ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்ற ஆங்கியேயர் அரசு பணியிலிருந்த ஆங்கிலேயருக்கு வசிக்க ஏற்ற குளுமையான இடம் என கருதி பங்களாக்களை அமைத்து குடியேறி   குதிரையிலேயே சவாரி செய்து வந்தனர். பின்னர் 1914 ல் தான் முழுமையான சாலைகள் அமைத்தனர். 33000 மக்கள் தொகையுடன்  இது கடல்மட்டத்திலிருந்து 7000’ அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது கோவையிலிருந்து 173 கி.மீ தொலைவிலுள்ளது. காண வேண்டிய இடங்களில் சில   1. ஏரி (படகு இல்லம்)                                                                                                                 2. கோக்கர்ஸ் வாக் 3. குணா குகை 4. குறிஞ்சி ஆண்டவர் கோயில் 5. செட்டியார் பூங்கா என...              --- ---     --- --- []                                      பழநி மலை  - (தண்டாயுதபாணி சுவாமி) இது அறுபடை வீடுகளிலொன்று. பழனம் என்ற சொல் மறுவி பழநியானது. (பழனம் என்பது நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என பொருள்) பலர் முருகன் ஞானப்பழம் கிடைக்காமல் ஏமாந்த கதையும் கூறுவர். இது கடல்மட்டத்திலிருந்து  1500' அடி உயரத்திலுள்ளது. இதன் சிறப்பு இங்குள்ள முருகனது சிலை போகர்  எனும் சித்தரால் நவபாஷானம் கொண்டு உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் அகத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வில்வம்,பஸ்பம் கொடுத்து குணப்படுத்தினார். போகர் நவபாஷானம் கொடுத்து குணப்படுத்தினார். நவபாஷானம் மிகுந்த வீரியமிக்கதால் உயிர்பலி ஏற்படவே அதன்மேல் சந்தணத்தை பூசி குளிரச்செய்து சிறு சிறு வில்லைகளாக கொடுக்கலானார். மலைக்கு செல்ல  நடப்பதைத் தவிர்த்து 2 வழித்தடங்கள் இழுவை ஊர்தி(winch) மற்றும் கம்பிவட ஊர்தி(Rope Car) என. இது கோவையிலிருந்து 111 கி.மீ தொலைவிலுள்ளது.  தொடர்புக்கு: 04545-241417    []               திருமூர்த்தி அருவி இவ்வருவி மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையிலிருந்து  உற்பத்தியாகின்றது. இந்த அருவியில் இருந்து வரும் நீரானது திருமூர்த்தி அணையில் தேக்கப்பட்டு பின் பயன்படுத்தப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் ஆலயமும் மும்மூர்த்திளான பிரம்மா,விஷ்ணு,சிவன் சிலைகள் ஒருசேர அமைந்ததால் திருமூர்த்தி என பெயர் வந்ததாகவும் வரலாறு. இது கோவையிலிருந்து 79 கி.மீ தொலைவிலுள்ளது.                                                                                                                                             []                                              ஆனைக்கட்டி  (அட்டப்பாடி)                                                                          கோவையின் மேற்கே தமிழக கேரள எல்லையில் எல்லையிலுள்ள ஒரு மலைப் பிரதேசம் ஆனைக்கட்டி. ஓய்வெடுப்பதற்கு ஏற்ற  நிறைய சொகுசு விடுதிகள் (Resort) உள்ளன. இங்கு அமைந்துள்ள ஆதிவாசி பரம்பரை மருத்துவ நிலையத்துக்கு இருளர்கள், குறும்பர்கள், முதுவர்கள், மலசர்கள் என வெவ்வேறு ஆதிவாசி இனக்குழுக்களைச் சேர்ந்த பரம்பரை வைத்தியர்களை அழைத்துவந்து பயிற்சி கொடுக்கிறார்கள். இது கோவையிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ளது.                                                                                                                                          []         ஆனை மலை (வால்பாறை)                                                                       ஆனை மலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரவியுள்ள மலைத்தொடர். இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 17208 மக்கள் தொகையுடன் கடல்மட்டத்திலிருந்து 8842’ அடி உயரத்தில் அமைந்துள்ளது. பல ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகின்றன. ஆழியாறு, சின்னாறு, பாம்பாறு, பரம்பிக்குளம் ஆறு என. ஆழியாறு அணை, அமராவதி அணை, சோலையாறு அணை, நீராறு அணை, பரம்பிக்குளம் அணை ஆகிய அணைகளும் உள்ளன. இது கோவையிலிருந்து 114 கி.மீ தொலைவிலுள்ளது.காண வேண்டிய இடங்களில் சில                                                                                                                                  1. குரங்கு அருவி 2. பாலாஜி கோயில் 3. புலிகள் காப்பகம் 4. டாப் ஸ்லிப் யானை சவாரி என...               []   மூணார் மூணார் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடுகின்றதால் மூன்றாறு என்பது மூணாறானது. இது 38400 மக்கள் தொகையுடன்  கடல்மட்டத்திலிருந்து  5500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது கோவையிலிருந்து 158 கி.மீ தொலைவிலுள்ளது. காண வேண்டிய இடங்களில் சில   1. ராஜ மலை 2. ஆனைமுடி மலைமுடி 3. ரோஸ் கார்டன்                                                                                                                                                                   4. மாட்டுப்பட்டி அணை 5. குறிஞ்சி மலர்க் காடு 6. வரையாடுகள் என....               []   இறுதிப் பதிவு   இதுநாள்வரை கோவையைப் பற்றியும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலா தலங்களையும் நான் அறிந்த சேகரித்த தகவல்களை சுருக்கி பகிர காரணம் முகநூலில் (FB) ஐந்து வரிகளுக்கு மிகையானாலே படிக்க பொறுமையின்றி கடந்துவிடுவோம் என உணர்ந்த்தனால் . இது ஒருசிலருக்கேனும் பயனாயிருப்பின் சந்தோசமே. இதுவரையில் படித்தும் படிக்காமலும் லைக் கொடுத்த அனைத்துள்ளங்களுக்கும் நன்றி.                                                                                                                                                                                                                                                                             FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/  Supported by  - Free Software Foundation TamilNadu, www.fsftn.org   - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/         கணியம் அறக்கட்டளை   [] rect224   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com   - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com     கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech   - எழுத்துணரி – Optical Character Recognition   - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி   - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle   - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள்   - மின்னூல்கள் உருவாக்கும் கருவி   - உரை ஒலி மாற்றி – இணைய செயலி   - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி   - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி   - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி   - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்     அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்   - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்   - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல்   - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல்   - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல்   - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல்   - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)     மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.  கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606101010050279 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618