[] 1. Cover 2. Table of contents தனிமையின் காதலி தனிமையின் காதலி   கி. பிரேமா மோனி   premamoni7@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thanimaiyin_kadhali மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation வணக்கம் நான்…. என் முதல் அடையாளம்… கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் பகிர்ந்த அனைவர்க்கும் நன்றிகள். என்றோ எப்படியோ தோன்றிய எண்ணங்கள் இன்று எழுத்துரு பெற்று உங்கள் கரங்களில்…. என் எழுத்துக்களை பதிப்பித்தமைக்கு முதல் நன்றி அண்ணா… தங்கள் கருத்துக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும். premamoni7@gmail.com வாழ்த்துரை கவிஞர் கண்ணன்சேகர் ஆசிரியர், கவியரசு, கவிச்சூரியன் மின்னிதழ்கள், இராணிப்பேட்டை மாவட்டம் 9894976159, kannansekarp@gmail.com திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாயினி பிரேமாமோனி அவர்கள் நமது கவிச்சூரியன் மின்னிதழ் மூலம் எனக்கு அறிமுகமானார். அவரின் துளிப்பா கவிதைகள் மிக நேர்த்தியாக கருத்துக்களை தாங்கி நறுக்கென மின்னலாய் மிளிரும். மூன்றடிகளில் முத்தாய்ப்பாய் எப்போதுமே சொல்ல வந்த கருத்தை சிறப்பாக சொல்லி விடுவார். அவர் மேலும் புதுக்கவிதையை மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார். அந்த அனுபவத்தில் இப்போதும் “தனிமையின் காதலி” கவிதை மின்னூலை படைத்திருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம் அவரின் கவிதை எழுதும் ஆர்வம் மேலும் செழுமை பெற்றுள்ளதை உணரமுடிகின்றது. நடுத்தர குடும்பத்தலைவியாக இருந்துக் கொண்டு வேறு துறைகளில் கவனம் செலுத்துவது சற்று சிரமம் என்றாலும், பலர் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிதாயினி மோனிகாவின் கவிதைகள் எழுதி தன்னை நிலைநிறுத்தி வருவது பாராட்டுக்குரியது. “தனிமையின் காதலி” என்ற இந்த மின்னூலில் “விருப்பம்” என்ற தலைப்பில் எழுதிய கவிதையில், விரும்புகிறேன்… உன்னுடன் வாழ்ந்த நாட்களை நினைக்க……. உன்னைப் பிரிந்த நாட்களை மறக்க…. என்ற கவிதை வரிகளில் சோர்ந்து போன ஒரு இதயத்தின் குமுறலை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அடுத்து ஒரு கவிதையில் பொய் நான் உன்னுடன் பழகியதும் உணர்ந்த முதல் பொய், ”காதலுக்கு கண் இல்லை "…. எனக்கு காதலை உணர்த்தியதே உன் கண்கள் தான்… ராமாயணத்தில் மாடியில் இருந்து சீதா பிராட்டி கீழே இராமனைப் பார்க்கும் போது அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினாள்.. என கம்பர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றது. கண்களால் பரவும் காதலை கவிதை வரிகளால் அழகுப்படுத்தியுள்ளார். தேடல் என்னில் என்னைத் தேடிய எனக்குப் புரியவில்லை… நான் என்னைத் தொலைத்தது உன்னில் என்பது… இந்த கவிதையில் இரு இதயங்களில் தேடல் என்பது ஒரு இனிமையான அனுபவந்தான். இந்த வரிகளில் இவர் அதை கரும்புச்சாராக பிழிந்து தருவது பாராட்டுக்குரியது. அடுத்து ஒரு கவிதையில்… துறவு நீ வாழ்ந்த மனதில் யாருக்கும் இடமில்லை என்று நினைத்தேன்…. எனக்கேத் தெரியாமல் குடிகொண்டது துறவு… தோல்வி என்றால் துறவு என்பதை சொன்னாலும் தொடர்ந்து போராடி பெறுவதே வெற்றிக்கனியை பெறமுடியும் அல்லவா..? குழப்பம் நான் விரும்புகிறேன் சொர்க்கத்தை… நான் வெறுக்கிறேன் நரகத்தை ….. இவ்விரண்டையும் அளித்த உன்னை…? தெரியாமல் (புரியாமல்) கொள்கிறேன் குழப்பத்தை ….. பழகிய உறவை நினைக்கும் போது வேறு ஒரு சிந்தனையைக் கொண்டு தெளிவற்ற நிலையால் மனதை சுழலச்செய்வதால் ஏற்படும் நிலையை குழப்பமாக நீடிப்பது மேலூம் குழம்பியே கிடக்கும் என்பதை குறிப்பிடுகிறார். இது போல் கருத்துக்களை புதுக்கவிதை மூலம் குறிப்பிட்டுள்ளார். இவரின் கவிதைப்பயணம் மேலும் சிறக்க வாழ்த்துவோம். கவிஞர் கண்ணன்சேகர், திமிரி ‘Kavisooriyan’ Haikoo idhazh, cell:9894976159. மனம் உன்னைப் பார்க்கக்கூடாது என நினைத்துக் கொண்டே தேடுகிறேன் உனை… சிரிக்கக் கூடாது எனநினைத்துக் கொண்டே சிரிக்கிறேன் உனைக் கண்டதும்…. பேசிய பிறகு பேசலாம் என நினைத்தும் கொண்டேப் பேசுகிறேன் உனக்கு முன்பு, உனைப் பேச விடாமல்… உன்மீது கொண்ட அக்கறையை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே உனை வினவுகிறேன் அக்கறையுடன்….. உன்னை மறக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே நினைக்கிறேன் உனை மட்டும்…. உன்னைவிட்டு விலக வேண்டும் என நினைத்துக் கொண்டே நெருங்குகிறேன் உன்னிடம்… உன் அன்பு தேவையில்லை என நினைத்துக் கொண்டே தவிக்கிறேன் உன் அன்புக்காக…… என் வழித்துணையாய் கூட - நீ தேவையில்லை என நினைத்துக் கொண்டே காத்திருக்கிறேன் என் வாழ்க்கைத் துணையாய் வருவாயா என்று….. மனம் , முற்றிலும் மாறுபடுகிறது எண்ணத்திடம் ……. மாறுபட்டும் ஒன்றிணைந்து செயல்படுகிறது உனக்காக…. தனிமையின் காதலி நீ இல்லா உலகில் வாழ்ந்ததால் தானோ உன் தோழி ஆனேன் தனிமையின் காதயாக…. தனிமை என் காதலன் உன்னருகே என்னை உணரும் நான் - நீ இல்லா நொடிகளில் உணர்கிறேன் தனிமை என் காதலன் என்பதை… காத்திருப்பு உன்னைப் பார்க்க ஏங்கும் விழிகள் , உன்னுடன் பேச நினைக்கும் உதடுகள், உன் விரல் பிடித்து நடக்க துடிக்கும் விரல்கள், இவைகளைக் கடந்து உன் காதலை மட்டும் சுமந்து வாழும் என் இதயம் என்றும் உனக்காகக் காத்திருக்கும் கல்லறையிலும்…….. விருப்பம் விரும்புகிறேன்….. உன்னுடன் வாழ்ந்த நாட்களை நினைக்க…. உன்னைப் பிரிந்த நாட்களை மறக்க…. தெரியவில்லை உன்னைக் கண்ட பொழுது என்னை மறந்த என் இதயத்திற்கு இன்று ஏனோ உன்னை மறக்கத் தெரியவில்லை…. உன்னை சுமந்து மகிழ்ந்த இதயத்திற்கு அன்றுத் தெரியவில்லை… இன்று வகளை சுமக்கத்தான் அன்று உன்னை சுமந்ததென்று… உன்னால், உன் அன்பால் என்னை மறக்கத் தெரிந்த எனக்கு உன்னை ஏனோ மறக்கத் தெரியவில்லை …. பொய் நான் உன்னுடன் பழகியதும் உணர்ந்த முதல் பொய், “காதலுக்கு கண் இல்லை”…. எனக்கு காதலை உணர்த்தியதே உன் கண்கள் தான்… நினைவுகள் உன் நினைவுகள் மகிழ்ச்சியை அளித்தன… நீ என்னுடன் இருந்தபொழுது….. உன் நினைவுகள் வேதனையை அளிக்கின்றன…. நீ என்னுடன் இல்லாத பொழுது…… . உன் நினைவுகள் எண்ணி சிரித்தேன்… உன்னுடன், நான் இருந்த நாட்கள்… உன் நினைவுகள் எண்ணி அழுகிறேன்…. உன்னுடன் , அவன் இருந்த நாட்கள்…. உன்னைப் பிரிந்த வயை மறக்க உன்னுடன் இருந்த நொடிகளை நினைத்துக் கொள்கிறேன்….. பிரிவுகள் கூட சுகம் தான் நினைவுகள் உள்ள வரை….. விருப்பமில்லை எனக்கு விருப்பமில்லை …. என்னை நேசிக்கும் உனக்கு - என் மனதைத்தர…. என் மனதிலுள்ள உன்னை உனக்கேத்தர எனக்கு விருப்பமில்லை …… தேடல் என்னில் என்னைத் தேடிய எனக்குப் புரியவில்லை… நான் என்னைத் தொலைத்தது உன்னில் என்பது… தோல்வி உன்னை மறக்க நினைத்தேன்… உன்னை மறக்க நினைத்த ஒவ்வொரு நொடியும் , என்னை மறந்து உன்னையே நினைத்துத் தோற்கிறேன்….. கவிதை மனதின் வார்த்தைகளை சுமந்து வரும் வரிகள் அல்ல…. மனதின் வலிகளை சுமந்து வரும் கண்ணீர்த்துளிகள்…. துறவு நீ வாழ்ந்த மனதில் யாருக்கும் இடமில்லை என்று நினைத்தேன்…. எனக்கேத் தெரியாமல் குடிகொண்டது துறவு… தவிப்பு உன்னுடன் வாழத்துடிக்கும் இதயத்திற்கு என்ன சொல்லிப் புரியவைப்பேன்? நீ வாழ்வதே- என் இதயத்தில் தான் என்று….. தனிமை சுற்றங்களுக்கு இடையிருந்தும் யாருமில்லாத் தனிமை உணர்கிறேன்….. உன் அருகில் இல்லாததால்….. சுமை நீ என் அருகிருக்கும் சுகத்தைவிட உன் உதடுகள் தரும் மௌனத்தின் சுமையேப் பெரிது……. ஆயுள் நான் உன்னுடன் வாழ்ந்த நாட்களைவிட உன்நினைவுகளுடன் வாழ்ந்த நாட்களுக்கே ஆயுள் அதிகம்… மறதி உன்னைப் பற்றி சிந்தித்த ஒவ்வொரு நொடியும் என்னை மறந்தேன்… நானே என்னை மறந்ததால் தான் நீயும் என்னை மறந்தாயா? மறதி இறைவன் கொடுத்த வரம் உன்னை நினைத்து - நான் என்னை மறந்தபொழுது வரம் சாபமானது - நீ என்னை மறந்தபொழுது…. ஏமாற்றம் உன்னுடன் வாழும் சுகமான நாட்களை விரும்பிய எனக்கு உன் நினைவுகளுடன் வாழும் சோகமான நாட்களைக் கொடுத்துவிட்டாயே? உன்னை அறியாமல் என்னிடம் அளித்தாய் உன் உள்ளத்தை … ஆனால் எனக்கேத் தெரியாமல் திரும்பம் பெற்றுக் கொண்டாயே? யாருக்கும் தெரியாமல் என்னிடம் நெருங்கியது எனக்கேத் தெரியாமல் என்னை விட்டு விலகத் தானா? தென்றலான உன்னுடன் பயணம் செய்ய விரும்பி வந்தேன் மரமாகிய உறவுகளை விட்டு…. புயலாக மாறி குப்பையில் எறிந்து விட்டாய் என் காதலை…. உனக்குத் கொடுக்க விரும்பி வாங்கிய பொருட்கள் உனக்குத் தெரியாமல் என்னிடம் இருந்தது போலவே என்னிடம் இருந்து விட்டது என் மனமும்.. தனிமையில் வாடிய எனக்கு - நீ துணையாய் வந்தது மீண்டும் தனிமையில் முழ்கடிக்கத்தானா? ஒரு நொடி உன் கைகோர்த்து உலகை சுற்ற விரும்பவில்லை. உன் விரல் பிடித்து நிற்கும் ஒரு நொடி போதும்….. உன் விரல் பிடித்து நடக்கும் நேரம் - நான் இவ்வுலகை மறக்கும் நேரம்……… பிரிவு காதலுடன் வாழும் பொழுது உயிரற்ற பொருளையும் உயிராய் நினைத்தவள், உயிருடன் இருந்துகொண்டே உயிரற்று வாழ்கிறாள்…. காதலைப் பிரிந்த பொழுது…. கனவுகள் நிறைந்த கண்கள், கவலைகள் நிறைந்த கண்களாக….. மாற்றம் தந்தது உன் பிரிவு… எத்தனை காலம் தவமிருந்தாய் என்னைப் பெற்றெடுக்க…. உன் தவத்தின் பலன் நீ இல்லா இந்நரகத்தில் என் வாழ்க்கை ……. பிரிவுகள் தருவது வலியை மட்டுமல்ல வாழ்க்கையும் தான்…. வலியை மறைத்துப் புறப்படு வாழ்வை நோக்கி…. குழப்பம் நான் விரும்புகிறேன் சொர்க்கத்தை… நான் வெறுக்கிறேன் நரகத்தை ….. இவ்விரண்டையும் அளித்த உன்னை…? தெரியாமல் (புரியாமல்) கொள்கிறேன் குழப்பத்தை ….. இன்று நான் அனுபவிக்கும் துன்பங்களின் காரணம் விதியின் கோரப்பார்வையா? உன் காதல் பார்வையா? குழப்பத்துடன் நான்….. புன்னகை நான் என்னை மறந்து யோசிக்கும் பலவற்றை மறந்தேன் - உன் புன்னகை கண்டதும்…… நினைத்திருந்தேன் கண்ணீரை விட மிகப் பெரிய ஆயுதம் இல்லையென்று…… அக்கண்ணீரை நொடியில் மறையச் செய்யும் - உன் புன்னகைக் காணும் வரை……. மின்னல் கார்மேகத்தினிடையே தோன்றும் மின்னல்… என்னவளின் கூந்தலில் வெள்ளை ரோஜா….. மின்னலாக நீ தோன்றியது சிறிது நேரமே…… என் மனதில் ஏற்படுத்திய தாக்கமோ ஆயுள் வரை….. சருகு வீசும் தென்றலுக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில் நான் , காற்றோடு செல்லும் சருகானேன் - நீ காற்றாக மாறியதால்…. கார்மேகம் உன்னைக் காண மேகத்தைத் தூதனுப்பினேன்…… உனைக் கண்ட மேகம் என்னிடம் கேட்டது…. கார்மேகத்தையும் தூதனுப்பியது ஏன்? கார்மேகமல்ல என்னவளின் கருங்கூந்தல்…… இசைவு என் விருப்பங்களை உன்னிடம் கூறிய நொடியில் உணர்ந்தேன்…. நீ என்னிடம் கூற வந்ததும் இதை தான் என்று…. காதல் ஒவ்வொரு நொடியிலும் சிறு சிறு அனுபவங்கள்…. முழு அனுபவமும் ஒரே நொடியில் காதல்…. என் காதலை உன்னிடம் வெளிப்படுத்த தேடினேன் - வார்தைகளை….. வார்த்தை கிடைத்தும் கூற முடியவில்லை குரல் இழந்த என்னால்…. நான் கூற வந்த வார்த்தையை கூறிவிட்டாய் - உன் விழிகளால்… இணைந்தது காதல் தொடங்கியது வாழ்க்கை வார்தைகளால் அல்ல உள்ளத்தால்….. புனையா ஓவியம் காலப்போக்கில் அழியும் ஓவியங்களுக்கிடையில் என்றும் அழியா ஓவியமாய் என் மனதில் - நீ என் புனையா ஓவியமே! நினைவுப் பரிசாய் நீ கொடுத்த ஓவியத்தை விட என் நினைவில் நின்றவள் நீயே - என் புனையா ஓவியமே…. வழி உனக்குப் புரியாத என் மனம் புரிந்தது உயிரற்ற மரத்திற்கு… காற்றில் அசைவதாய் என் சுவாசம் உனைத் தீண்ட வழி செய்கிறது….. கனவு உனை அதிகம் கண்டதில்லை நேரில் ….. அதனால் தான் இடைவெளியின்றி காண்கிறேன் கனவில்….. உனைக் கண்ட நொடி முதல் உறக்கம் தொலைத்தேன்… உறக்கம் தொலைத்தும் கனவில் மூழ்கினேன்….. கனவில் மூழ்கியும் கற்பனையில் வாழ்கிறேன்…. கற்பனையில் வாழ்ந்தும் கல்லறை சேர்ந்தேன்…. கனவு நனவாகாததால்… அழகு ரசிக்கிறேன்… உன் முக அழகை அல்ல அக அழகை ….. கவனக்குறைவு பிரம்மனின் கவனக்குறைவு….. இந்திரலோகத்தில் இருக்க வேண்டிய உன்னை - என் இதயலோகத்திற்கு அனுப்பிவிட்டான்.. ஆசை உன் விரல் பிடித்து நடக்க ஆசை…… என் ஆசையை மாற்றிக் கொண்டேன் மலர் போன்ற - மென் விரல் கண்டதும்…. நான் பிடிப்பதால் மலருக்கு வலிக்குமோ என்று… சிலந்தி வந்தேன் நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில்….. வலை என்பதறியாமல்…. என்னை சிக்கவைத்து சென்றுவிட்டாய்….. உன் அடுத்த இரையைத் தேடி…. தூது செல்லும் இடமெல்லாம் உனையேக் காண்கிறேன்…. கண்டும் பேச முடியாமல் தவிக்கிறேன்…. தவிப்பை அறியத் தூதுவிடுகிறேன் தென்றலை…… அறிந்தால் மாற்று தென்றலை மழையாக தடம் நீ தடம் பதித்த இடத்தில் நானும் பதித்தேன்… தடத்தை அல்ல என் மனதை….. சமைத்துவிடு மீனுக்காக நீ வீசிய வலையில் சிக்கிக் கொண்டன மீனும், என் மனமும்…. என்னையும் சமைத்து விடு உன் அன்பால்… உன் கண்களால் தீமுட்டி விழியசைவில் மனதைக் கடைந்து சமைத்து விட்டாய் என்னை …. ஆழம் நீராக நான் மீனாக நீ…. எனக்குள் நீ உனக்காக நான் …. என்னைப் பிரிந்து மண்ணை அடைந்ததும் மடிந்து விடுகிறாயே இதுதான் காதலின் ஆழமா? நம்பிக்கை உயிருக்கு உயிரான - நீ பிரிந்த போதும் பிரிய மறுக்கின்றது உயிர்……. . என்றாவது - நீ வருவாய் என்ற நம்பிக்கையில்… பாலைவனம் உன் பாதம்பட்ட நொடியில் மலர் சோலையாய் மாறிய பாலைவனம் என் மனம்… உயிர் உனைக் கண்டதும் நினைத்தேன் - நீ எனக்கான உறவென்று… உன்னை அறிந்ததும் உண்மை அறிந்தேன்… நீ உறவல்ல உயிரென்று…. நினைவுச் சின்னம் அன்று என்னை மனிதனாக மாற்றி உலகிற்கு அடையாளம் செய்தாய்….. இன்று அந்த அடையாளத்தை மாற்றினாய் நினைவுச் சின்னமாக… என்னை ஏமாற்றி ….. மழை மின்னல் மின்னியது அவளைக் கண்ட நொடி…. தென்றல் வருடியது அவள் தாவணித் தீண்டிய நொடி…. இடி இடித்தது அவளின் கோப வார்த்தை … மழை வந்தது ஆனால், சற்று தாமதமாக - அவள் என் காதலை ஏற்றதும் ஆனந்தக் கண்ணீராக….. பார்வை உன்னைப் பல வருடங்கள் பார்த்து விட்டேன் மனைவியாக… இன்றும் தோன்றுகிறது உன்னை முதல் முறைப் பார்ப்பதாய்…. காதல் பற்றிய வினாக்களுக்கு விடை கிடைத்தது-உன் ஒற்றைப் பார்வை….. திருமணம் காதலில் விழுந்த என்னை - உன் ஒரு விரலால் தாங்கிப்பிடித்தாய் மணமேடையில்….. துணை வழித்துணையாய் வந்த நீயே - என்றும் என்னோடு வரவேண்டும் வழித்துணையாய் அல்ல வாழ்க்கைத் துணையாய்… காதல் தோல்வி காதல் வானில் எண்ணச் சிறகடித்து சுற்றித் திரிந்த பறவையாய் அவள்… காதல் வானமல்ல, மேகமென்று உணர்ந்ததும் சிறகிழந்தப் பறவையாய்…. வாழ்க்கை எங்கே எப்படித் தொடங்குகிறது என யோசிக்கத் தொடங்கியதும் முடிந்து விடுகிறது ….. கல்வெட்டு கடந்து வந்த நாட்களில் சில நொடிகள் மட்டும் யாரும் செதுக்காத கல்வெட்டுகளாய் இதயத்தில்…. வாட்டம் வாட்டத்துடன் அவள் சூடிய மலர் அவள் சூடியதால் அல்ல… ஒரு நாளுடன் அவளைப் பிரிந்ததால்….. கண்ணீர் நான் உன்மீது கொண்ட அன்பைக் கூற முடியவில்லை வார்த்தைகளால்…. கூறிவிட்டேன் கண்ணீரால்… தென்றல் இதழ் விரிக்கத் தயங்கிய மொட்டாக நான்… மலராக மாற்றியது உன் காதல் தென்றலாக மாறி…… தேடல் காணும் இடமெல்லாம் நீயே தெரிந்தும் தேடுகிறேன் உண்மையான உன்னை…. நேசம் நான் நேசித்த அனைத்தும் என் மனதைப் புரியாதவைகளே… அன்று பொம்மை இன்று நீ… பிடிக்கவில்லை உன் முகம் உன் நிறம் உன் தோற்றம் இருந்தும் நேசிக்கிறேன் உன் மனதால் ….. வகிடு உன் கூந்தல் காட்டில் தொலைந்த எனக்கு வழிகாட்டுகிறது நீ எடுத்த வகிடு ….. உன் கூந்தல் வகிடு காட்டும் பாதை கண்டு மறந்தேன் - நான் செல்ல வேண்டிய பாதையை…. நிலவு நகர்வதாய் பாசாங்கு செய்து நகராமல் ஏமாற்றுகிறது….. உன்னைப்போல் என்னை விட்டு…. மேகம் வெள்ளி நீரோடை காண்கிறேன்… புவியில் அல்ல வான்வெளியில்… வலை உன் விழிகள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டேன் காப்பாற்ற -நீ வரவில்லையெனில் பரவாயில்லை உன் மனதை அனுப்ப மறந்து விடாதே… துணிவு எனக்காக உன் உயிரையும் கொடுக்கத் துணிந்த உனக்கு என்னால் ஏதும் கொடுக்க முடியவில்லை காதலைத் தவிர…… முதல் பூ ஆயிரம் மலர்களுக்கிடையிலும் தனியே தெரிகிறது நீ அளித்த முதல் பூ…….. மலர் சூடுவது ஆனந்தம் என்றறிந்தேன் நீ அளித்த மலர் சூடும் பொழுது…… நீ கொடுத்த மலர் வெளிப்படுத்தியது - உன் காதல் மட்டுமல்ல நாம் மலரும் வாசமும் போல் என்பதையும் தான்….. மலர் சூடுவதன் மகிழ்ச்சி அறிந்தேன் - நீ சூட்டி விடும் பொழுது… மாற்றம் நான் உனைப் பிரியும் போதெல்லாம் இனம் புரியா மாற்றம் எனை உன்னுடன் இணைக்கிறது மாற்றம் தந்தது நீ… நான் என்னை மறந்து உன்னையே நினைத்து உயிர்வாழும்படி என்னுள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் பெயர்தான் காதலா? கயல் என் கண்களில் சிக்காமல் நழுவுவதால் தான் உன் பெயர் கயலா? உன் கயல் விழி கொண்டு கனல் வீசி காயப்படுத்துகிறாய் என்னை ….. கனல் வீசும் கயல் காதல் கொண்டு பேசுவது எப்போது? மௌன மொழி உன்னை ஊமை என்றுரைப்பவர் பார்வையற்றவர் உன் விழி பேசுவதைப் பார்க்காததால்… எனக்கு காதலை உணர்த்தியதும் பிரிவை உணர்த்துவதும் உன் மௌனம் தான் …… மரணம் சிப்பிக்குள் முத்து உனக்குள் நான்… எனக்காக நீ உன்னால் நான்… பிரிவின் முடிவு மரணம்… கண்கள் என் காதலை உன்னிடம் உரைக்கத் தூதுவனைத் தேடினேன் கண்கள் இருப்பதை மறந்து…. என் இதழ்கள் உன்னிடம் பேச துடிக்கின்றன விழிகள் பேசுவதை மறந்து…. கண்கள் உள்ள காரணம் உலகை ரசிக்க மட்டுமல்ல உன்னை ரசிக்கவும் தான்…. உன்னை ரசித்த கண்கள் என்னை அறியாமலே உனக்கு உணர்த்தியது என் காதலை…. விழிகளில் தொடங்கியப் பேச்சுவார்த்தை முடிகிறது திருமணத்தில் …. பேச வார்த்தைகள் இல்லையென உதடுகளால் கூறிக்கொண்டே - பல கோடி வார்த்தைகள் பேசிவிட்டாய் கண்களால்…. உன் உதடு பேசும் ஆயிரம் வார்த்தைகளில் புரியவில்லை உன் உள்ளம்… ஓசையின்றிப் பேசி புரியவைத்தன உன் விழிகள். ஏன்? இறைவா! உறவுகளைப் படைத்த நீ அவர்களுள் உணர்வுகளைப் படைக்க மறந்தது ஏன்? உணர்வுகள் அற்று வாழும் பல உறவுகள் அன்றி உணர்வுகள் கொண்டு வாழும் ஒரு நண்பனைப் படைக்க மறந்தது ஏன்? உறவுகளின் பிரிவை மறக்கும் சக்தியை அளிக்க மறந்தது ஏன்? உறவுகளின் பிரிவை மறக்க தினந்தினம் புதிய உறவுகளை நாடிச் செல்லும் நாடோடியாக எனைப் படைத்தது ஏன்? வலி உன் தேவைக்குப் பயன்படுத்தினாய் என்னை … கோபம் வரவில்லை வலிக்கிறது… நட்பு எனக் கூறியதனால்…… கவிதை வாசிக்க மட்டும் தெரிந்த நான் எழுதுகிறேன் உன்னால்… நீ கொடுத்த வலிகள் இங்கே வரிகளாக…. குழல் பெண்ணே - நீ குழல் வாசிப்பதைக் கேட்டு அனைவரும் மகிழ்கின்றனர் என்னைத் தவிர…… நான் குழலாக இல்லாததால் … நீ வாசிப்பதைப் பார்த்துப் பலரும் ரசிக்கின்றனர் நான் மட்டும் மகிழ்கிறேன்… அக்குழல் உன் இதழ்களை முத்தமிடுவதைப் பார்க்கக் கூடாதென இறைவன் - என் கண்கள் பறித்ததால்… உன் அருகில் உன் அருகில் கனா காண்கிறேன் கண் மூடாமல்… உன்னையும் காண்கிறேன் என் கனவு நனவாகுமா??? எனும் வினாவுடன்… மெளனம் செய்தும் விடை அளித்தாய் என் கண்ணீர் துடைத்து ….. உன் கனவை நனவாக்க மானிட பிறவி எடுத்தவன் நான் என்று கூறி… கணியம் அறக்கட்டளை [] தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழலை உருவாக்குதல். பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். எமது பணிகள் - கணியம் மின்னிதழ் - kaniyam.com - கணிப்பொறி சார்ந்த கட்டுரைகள், காணொளிகள், மின்னூல்களை இங்கு வெளியிடுகிறோம். - கட்டற்ற தமிழ் நூல்கள் - FreeTamilEbooks.com - இங்கு யாவரும் எங்கும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில், தமிழ் மின்னூல்களை இலவசமாக, அனைத்துக் கருவிகளிலும் படிக்கும் வகையில் epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவங்களில் வெளியிடுகிறோம். - தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல். மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். https://github.com/KaniyamFoundation/Organization/issues இந்த இணைப்பில் செயல்களையும், https://github.com/KaniyamFoundation/Organization/wiki இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account