[] 1. Cover 2. Table of contents சோழ நாட்டின் ஊர்-பெயர் சோழ நாட்டின் ஊர்-பெயர்   கபிலன் வேதரெத்தினம்   kabilanvedharethinam96@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA-NC கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - கபிலன் வேதரெத்தினம் - kabilanvedharethinam96@gmail.com   மின்னூலாக்கம் - ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/chola_naattin_oor_peyar மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மின்னூலாக்கம்: ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Ebook Creation: Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc ஊரும் வரலாறும் தி.வேதரெத்தினம். எம்.ஏ,பி.எட்,டி.எச்.ஏ,டி.என்.எஸ்,டி.அஸ்ட்ரோ தமிழகம் பெரும் பழமைவாய்ந்தது. மூவேந்தர்கள் எனப் போற்றப்பட்ட சேர, சோழ,பாண்டர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்ட பகுதியாகும். இன்று டெல்டா என்றழைக்கப்படும் கீழ்பகுதி சோழநாடாகவும், மேல்நாடு சேரர் பகுதியாகவும் தற்பொழுது சேரளம் எனும்நாடு கேரளமாகவும்இருக்கிறது.தென்பகுதி பாண்டியநாடு எனும் பெயரில் திகழ்கிறது. தமிழகம் நானிலம் எனப் போற்றப்படுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலப்பகுதியாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலமென்றும், வயலும் வயல் சார்ந்த பகுதியை மருத நிலமென்றும், கடலும் கடல் சார்ந்த பகுதியை மருத நிலமென்றும், பண்டையத்தமிழர்பெயரிட்டுள்ளனர். தமிழக எல்லையை ஈராயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த (பனம்பாரனார்) எனும் புலவர். “வடவேங்கடம்தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும்நல்லுலகத்து” என்று தமிழ் நிலத்தின் எல்லையை வரையறை செய்துள்ளார். வடக்கே திருவேங்கட மலை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் தீர்மானித்துள்ளார். தமிழ் இலக்கியங்கள் ஐவகை நிலங்களை குறிப்பிடுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன அவை. குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை நிலம் உருவானது என்பர். தமிழகத்தில் பாலை நிலமில்லை. குறிஞ்சி நிலம் குறிஞ்சி நிலம் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியை குறிப்பதாக உள்ளது. மேலும் தென்பகுதியில் அமைந்திருந்த பாண்டிய நாட்டிலும் மலைகள் காணப்படுகிறது. வடக்கே வடவேங்கடம் என்றழைக்கப்பட்ட வேங்கடமலை தற்பொழுது திருப்பதி என்றழைக்கப்படுகிறது. தென்பகுதியில் ஆனைமலை, பசுமலை, சிறுமலையும் அமைந்துள்ளது.சென்னைக்கு அருகே பரங்கியர் எனும் போர்ச்சுகீசியர் குடியிருப்பு அமைந்திருந்ததால் பரங்கிமலை எனபெயர் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஓங்கி உயர்ந்ததை மலை என்றும், உயரம் குறைவாக காணப்படுவதை குன்று என்றும், குன்றிலும் குறைவான பகுதியை பாறை, கல் என்றும் பெயர்பெறும். முல்லைநிலம் காடு நிறைந்த பகுதியை முல்லை நிலமென அழைப்பர். பழந்தமிழ் நாட்டில் காடுகள் மிகுந்திருந்தன. கரிகாலன் காலத்தில் காடுகளை திருத்தி நாடாக்கினான். அழிந்த காடுகளின் பெயரில் பல ஊர்பெயர்களை காணலாம். நாகைப் பகுதியில் திருமறைக்காடு (வேதாரண்யம்), புஷ்பவனம், இடும்பவனம், வடபகுதியில் (சிதம்பரம்) தில்லைவனம், தென்பகுதியில்மதுரைகடம்பவனம், திருநெல்வேலியில் வேணுவனம் என்பவற்றை சமயவரலாற்றின் மூலம் அறியலாம். காடு எனும் பெயரில் பல ஊர்கள் அமையப் பெற்றுள்ளன. கோடியக்காடு, தலைக்காடு, சேவியக்காடு, ஆற்காடு, ஆலங்காடு, திருவாலங்காடு, தலைச்சன்காடு, பழவேற்காடு, ஏற்காடுஎனும்பெயரில்விளங்குகின்றன மருத நிலம் வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகும், நஞ்சையும், புஞ்சையும், நிலவளமும், நீர்வளமும் உடைய இப்பகுதியில் ஆற்று நீர்ப்பாசனம் நஞ்சை நிலமாகவும், ஏரி நீர்ப்பாசனம் புஞ்சை நிலமாகவும் அமைந்துள்ளது. காலம் காலமாக வேளாண்மைத் தொழில் நடைபெற்று வருகிறது. காவேரியாற்று பாசனப் பகுதியாகதிகழ்கிறது. நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகும். சோழர் காலத்தில் காவிரிப்புகும்பட்டினம் (பூம்புகார்) மிகப் பெரும் துறைமுகப்பட்டினமாகவும், தலைநகராகவும்விளங்கிற்று. ஏற்றுமதி, இறக்குமதி, வணிகமும், மீன்பிடித்தொழிலும், சிறப்புடன் நடைபெற்று வருகிறது இன்றுவரை. பாலைநிலம் பாலை நிலம் குறிஞ்சி (மலைகள்), முல்லை(காடுகள்) இயற்கையின் சீற்றங்களால் சிதைந்து பாலை நிலம் உருவாயிற்று என்பர். தமிழ் இலக்கியங்கள் ஐவகை நிலங்கள் பற்றி பேசுகிறது. தமிழகத்தில் பாலை நிலமில்லை என முன்பே கூறியிருந்தேன். பட்டினம், பாக்கம், பேட்டை, சேரி என்கிற பெயரில் வழங்கப்படுகிறது. அவற்றின் ஊர் பெயர் பற்றி அறிவோம். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டியபகுதி. ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் வாழ்ந்த இந்த மண்ணின் பூர்வக்குடிகளான நாகர்கள் என்ற பெயரின் எச்சமாக நாகர்கோவில் முதல் நாகபுரி (நாக்பூர்), நாகலாந்து வரை பல ஊர் பெயர்கள் அமையப் பெற்றுள்ளன. அதில் இரண்டு தான் நாகப்பட்டினமும், நாகூரும். நாகர்கள் தான் திராவிடர்கள் என சட்டமேதை அண்ணல் அம்பேத்கரே குறிப்பிடுகிறார். எனவே நாகர்கள் வாழ்ந்த பகுதியே நாகப்பட்டினமாகவும் நாகூராகவும் இருந்துள்ளது. பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய பகுதியையே குறிக்கும். சேரி மக்கள் அனைவரும் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதியே சேரி எனப்படுகிறது. தற்பொழுது சேரி எனும் பெயர் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் வாழும் பகுதியையே குறிக்கிறது. பட்டினச்சேரி என்பது பரதவர் (மீனவர்) வாழும் பகுதியாக அமைந்துள்ளது பார்ப்பனச்சேரி பார்ப்பன சமூகம் சேர்ந்து வாழ்ந்த ஊராக திகழ்ந்திருக்கிறது. தற்பொழுது இப்பெயர் ர’கரம் ல’கரமாக மருவி பால்ப்பண்ணைச்சேரி என்றழைக்கப்படுகிறது. குறிப்பாக இவ்வூருக்கு அருகிலுள்ள நாகப்பட்டினத்தின் சுடுகாட்டை பார்ப்பான் சுடுகாடு என்று அழைப்பதே வழக்கம். பேட்டை கடற்கரை சார்ந்த பகுதி, தஞ்சையை ஆண்ட சோழமன்னர்களின் ஆட்சியின் கீழ் பல சிற்றரசர்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் கொங்குராயன், சேதிராயன், மழவராயன், பல்லவராயன், சாமந்தராயன் ஆகியோர் சோழ நாட்டின் பல பகுதிகளை கண்காணித்து வந்ததாக அறியப்படுகிறது. அதனடிப்படையில் சாமந்தராயன் பேட்டை. தற்பொழுது சாமந்தான் பேட்டை என்றழைக்கப்படுகிறது. அந்தணப்பேட்டை “அந்தணர் என்போர் அறவோர்” என்று இலக்கியங்கள் கூறுகின்றன. மேலும் பல்வேறு தொழில் கலைஞர்கள், வணிகர்கள் வாழ்ந்த பகுதி அந்தணப்பேட்டை ஆயிற்று. முத்துப்பேட்டை முத்து வணிகம் நடைபெற்ற சந்தைப் பகுதியாய் விளங்கியிருந்ததால் முத்துப்பேட்டை ஆயிற்று. பட்டி, பாடி பட்டி எனும் சொல்லே பாடி என்றும் அழைக்கப்படுகிறது. பட்டி என்பது பிறர் வேளாண்மை நிலங்களில் மேய்ந்திடும் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடமாக அமைந்துள்ளது. தன்னிலப்பாடி தனக்கு தாமே பட்டிகள் அமைத்து வாழ்ந்தமையால் தன்நிலப்பாடி என்று பெயர் வந்து தற்பொழுது தன்னிலப்பாடி என அழைக்கப்படுகிறது. தரங்கம்பாடி அலைகள் (தரங்கம்) பாடும்பகுதி (அலைகள் மோதும் பகுதி) தரங்கம்பாடி என அழைக்கப்படுகிறது. சடங்கன்பாடி என்ற பெயரே தரங்கம்பாடி என்றானதாகவும் கூறப்படுகிறது. சடங்கன் என்பது கோவில் குருக்களின் ஒரு பிரிவினர். காடம்பாடி கா என்றால் சோலை என்று பொருள் உண்டு. சோலைகள் மிகுந்த பகுதி காடம்பாடியாகும். இன்றும் பசுமை செறிந்த மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அக்கரைப்பேட்டை மீனவர்கள் வாழும் பகுதியை பேட்டை என்றும் அழைப்பர், கடுவையாற்றின் வலது கரையில் அதாவது அக்கரையில் அமைந்திருப்பதால் அக்கரைப்பேட்டை என்றழைக்கப்படுகிறது. கீச்சான்குப்பம் பரதவர்கள் வாழும்பகுதி. கீச்சான் என்பது கடலில் காணப்படும் ஓர் அறிய வகை மீன் மற்றும் கடற்பறவையின் ஒலி “கீச் கீச்” என்றிருப்பதாலும் கீச்சான்குப்பம் என்ற பெயர் வந்துள்ளது. கல்லாறு (கல்லார்) கல்லாற்றின் கரையில் அமைந்துள்ள சின்னஞ்சிறு ஊர் கல்லாறு, கல்லார் என்றும் அழைக்கப்படுகிறது வெளிப்பாளையம் பாளையக்காரர்கள் என்பது வீரர்களை குறிக்கும் சொல்லாகவும் உள்ளது. சோழர்கள் ஆட்சி காலத்தில் வீரர்களின் முகாமாக அமைந்த பகுதி வெளிப்பாளையம். நம்பியார்நகர் அதிபத்த நாயனார் அவதரித்த ஊர். நம்பி என்றால் தலைவன். பரதவ இன மக்கள் இறைவனுக்கு நிகராக கருதியதால் தலைவனானார். தமிழில் இவ்வூருக்கு நுளைப்பாடி என்ற பெயரும் உள்ளது. நுளை-பரதவர் பொய்கைநல்லூர் பொய்கை என்றால் குளம். குளங்கள் நிறைந்தஊர். நல்லூர் என்பது நன்மை பயக்கும் ஊர். இங்கு பழம் பெரும் சிவாலயமும், கோரக்க சித்தரின் (சமாதி) மடமும்உள்ளது. இவ்வூர் நிர்வாகவசதிக்காகவடக்கு, தெற்கு என இரண்டு பிரிவாக உள்ளது. கோரக்கரும் போகரும் சேர்ந்தே பழனி ஆண்டவரை நிர்மாணித்தனர் என்பது வரலாறு. வேளாங்கண்ணி இவ்வூரிலுள்ள பழமைமிகு சிவாலயத்தின் சிவன் இரஜகிரீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள அம்பாளின் பெயர் நெடுவேள்கண்ணி. இவ் இறைவியின் பெயர் மருவியே வேளாங்கண்ணி என்றானது. மேலும் ஒரு செவிவழிச் செய்தி, சோழப் பேரரசின் படைத் தளபதிகளாக இருந்த வேளார்கள் இவ்வூரில் (நிலம்) வைத்திருந்ததாகவும், அதனால் வேளான்காணி மருவி வேளாங்கண்ணி என்றானதாகவும் கூறப்படுகிறது. செருதூர் செரு என்றால் குளம் என்ற பொருளுண்டு. பாசன வசதிக்காகவும், பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்து வந்துள்ளதால் செருதூர் எனப் பெயர் பெற்றுள்ளது பிரதாபராமபுரம் இராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் இலங்கையை நோக்கி பயணித்த சீர்மிகு மற்றும் புகழ்மிகு இராமன் முகாமிட்டு ஓய்வு கொண்ட ஊர் பிரதாபராமபுரம் என வழங்கப்படுகிறது. மேலும் இவ்வூரைப் பற்றி செவிவழி செய்தியும் உள்ளது. ஔவையார் ஒரு பூவைத்தேடி இங்கு வந்ததாகவும் அதனால் இவ்வூருக்கு “பூவைத்தேடி” என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ராமர் பூவை போன்ற சீதையை தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது. பரவை பரதவர்கள் தங்கள் மீன்களை சந்தைப் படுத்தும் இடமாக இருப்பதாலும், மேலும் பரவை என்றால் கடற்கரையை ஒட்டியப் பகுதி என்ற பொருளும் உண்டு. காமேஸ்வரம் இவ்வூரில் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் காமக்கடவுளான மன்மதனை எரித்த இடம் என்பதாலும், மேலும் காமேஸ்வரர் காமதேனீஸ்வரர் சகஸ்ர நாமம் பாடல் அகத்திய முனிவரால் பாடப்பெற்ற தலமாகவும் இருப்பதால் காமேஸ்வரம் என்றழைக்கப்படுகிறது. விழுந்தமாவடி அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமாய் காட்சியளிக்கும் ஊர், இவ்வூரின் மாமரம் நிறைந்த இடத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்து கொண்டிருக்கையில் மாங்காய் ஒன்று மரத்திலிருந்து விழுந்து முனுவரின் தவம் களைய நேரிட்டதாம். முனிவரின் கோபப் பார்வையில் சபித்ததாகவும், அந்நிலையில் கீழே விழுந்த மாங்காய் மீண்டும் மரக்கிளையில் ஒட்டிக் கொண்டதாகவும் செவிவழிச் செய்தி உள்ளது. விழுந்தெழுந்தமாவடு என்பது இன்று “விழுந்தமாவடி” ஆகியுள்ளது. புதுப்பள்ளி பௌத்த, சமண மதங்களின் ஆதிக்கம் நிறைந்த நிலையில் பல்வேறு இடங்களில் மடம் (பள்ளி) எழுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில் புதிதாய் ஒரு மடம் (பள்ளி) அமைக்கப்பட்டிருக்கிறது. அந்நிகழ்வின்படி இவ்வூர் புதுப்பள்ளி என அழைக்கப்படுகிறது. வேட்டைக்காரனிருப்பு கடற்கரையோரம் அமைந்துள்ள ஊர்கள் வனம் போல், மரங்கள் அடர்ந்த பகுதியாக இன்று வரை உள்ளது. இக்காடுகளில் முகாமிட்டு பறவைகளையும், விலங்குகளையும் வேடுவர்கள் வேட்டையாடி வந்துள்ளனர். வேட்டைக்காரர்கள் இருப்பு எனும் ஊர் வேட்டைக்காரனிருப்பு என்று மாறியுள்ளது. கோவில்பத்து பற்று என்பது நஞ்சை (நன்செய்நிலமாக) இருந்துள்ளது. இந்நிலங்கள் திருக்கோவிலுக்கு நிவந்தமாக (தானமாக) விடப்பட்டிருக்கிறது. அதனால் கோவில்பற்று எனும் ஊர் தற்காலத்தில் கோவில்பத்து என வழங்கப்படுகிறது. வானவன்மாதேவி சோழர் காலத்தில் தனக்கு கிடைத்த விருது மூலமாகவும், தன் குடும்பத்தை சார்ந்தவர்களின் பெயரில் சோழர் ஆட்சி காலத்தில் பல ஊர்கள் உருவாக்கப்பட்டள்ளன. அதனடிப்படையில் இராஜராஜ சோழனின் மனைவியும் முதலாம் இராஜேந்திர சோழனின் தாயுமாகிய “வானவன்மாதேவி” பெயரில் அமைந்துள்ளது இவ்வூர். செம்பியன்மாதேவி இவ்வூரும் சோழ அரசிகளுக்கு வழங்கப்பெறும் செம்பியன்மாதேவி என்ற அடைமொழியாலேயே வழங்கப்படுகிறது. சிவஞான கண்டராதித்தனின் பட்டத்து அரசி. இவர் சிற்றரசராக இருந்த மழவராயர் வம்சத்தை சார்ந்தவர். சிறந்த சிவபக்தை. இவருக்கு பெரிய பிராட்டி, செம்பியன்மாதேவி, மகாதேவியார் என்ற பிறப்பெயர்களும் உண்டு. இவரால் அமைக்கப் பெற்ற பழம்பெரும் சிவாலயம் இவ்வூரில் உள்ளது. எனவே இவ்வூர் செம்பியன் மாதேவி என அழைக்கப்படுகிறது. செம்பியன் – சோழன் நாலுவேதபதி நான்கு வேதங்களான ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் ஓதப்பட்ட இடம் நாலு வேத பதி என்றழைக்கப்படுகிறது கள்ளிமேடு கள்ளிச் செடிகள் நிறைந்த மேடான பகுதி கள்ளிமேடு ஆகும். தாமரைப்புலம் நிலம், நீர் நிலைகளில் தாமரை மலர்கள் மிகுதியாக காணப்பட்டதாலும், மேலும் தா+மரை தாவுகின்ற மான் கூட்டம் இருந்ததாலும் தாமரைப்புலம் என்று பெயர் பெற்றது. புலம்-நிலம் வெள்ளப்பள்ளம் ஏரிப் போன்ற நீர்பிடிப்பு பகுதிகள் காணப்படுகின்றன. பயிர்களுக்கு பாசனம் செய்திட பள்ளங்களில் நீர் சேமித்து வைக்கப் பட்டிருந்திருக்கிறது. இதனால் இவ்வூர் வெள்ளப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது. புஷ்பவனம் இவ்வூர் இன்று மேசோலை வனமாய் காட்சியளிக்கிறது. பூக்களின் காடுகள் நிறைந்த ஊராக திகழ்கிறது. இங்குள்ள இறைவனின் திருப்பெயரும் புஷ்பவனநாதர் என்றே அழைக்கப்படுகிறது. செம்போடை இவ்வூரின் கால்வாயில் செம்மண்ணால் சிவப்பு நிற நீரோட்டம் அமைந்துள்ளது. இதை ஓடை என்றும் அழைத்து வந்துள்ளனர். தற்பொழுது மிகப்பெரும் ஆறாய் காட்சியளிக்கிறது. செந்நீர் இவ்வூர் ஓடையில் ஓடியதால் செம்போடை என பெயர் பெற்றது. தோப்புத்துறை தோப்பும், தொரவும் (கேணி) அமையப் பெற்ற ஊராக இருந்ததால் தோப்புத்துறை என ஆயிற்று. தொரவு என்பது கேணியை குறிக்கும் சொல். கிணற்று பாசனம் மூலம் தோப்புகளுக்கு பாசனம் செய்யப்பட்டு வந்துள்ளது என அறிய முடிகிறது. வேதாரண்யம் பழந்தமிழ் பெயர் திருமறைக்காடு. வேதம் என்பது முறையை குறிக்கும் சொல், ஆரண்யம் என்பது காட்டை குறிக்கும் சொல். திருமறைக் காடே தற்பொழுது வேதாரண்யம் என அழைக்கப்படுகிறது. மூவரால் தேவாரம் பாடப்பெற்ற ஊர். திருஞானசம்பந்தர் இந்த ஊரை வேதவனம் எனக் குறிப்பிடுகிறார். நான்மறைகளும் ஈசனை வழிபாடு செய்ய ஒலிக்கப்பட்ட இடம் திருமறைக்காடு என்பர். “சதுரம் மறை தான் துதி செய்து வணங்கும் மதுரம் பொழில் சூழ் மறைக்காடு” -தேவாரம் அகஸ்தியம்பள்ளி பள்ளி என்பது மடத்தையும், கோயிலையும் குறிக்கும் சொல். இங்கு கோயிலைக் குறிக்கிறது. இவ்வூரில் அகத்திய முனிவர் ஈசனை வழிபட்டு பேறு பெற்ற இடம் என்பர். அதற்கு சான்றாக அகத்திய முனிவரது சிலை இவ்வூர் கோயிலில் அமைந்துள்ளது. இது தேவாரம் பாடப் பெற்ற தலமாகும். கோடியக்காடு கோடு என்ற சொல்லுக்கு வளைதல் என்ற பொருள் உண்டு. கிழக்கு நோக்கிய வங்கக் கடல் தெந்திசையாக வளைவதாக அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. மேலும் இன்றளவும் காடுகள் நிறைந்த ஊராகத் திகழ்கிறது. இராமன் இலங்கையை இவ்வூரின் மண் முகட்டில் நின்று பார்ப்பதாகவும் ஒரு கதை உண்டு. இதற்கு சான்றாக இராமனின் பாதம் (இராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக) இங்கும் அமைந்துள்ளது. மக்களால் வணங்கவும் படுகிறது கோடியக்கரை கோடியக்கரையில் வங்கக்கடல் வளைகிற பகுதியாக உள்ளது. தமிழகத்தின் கிழக்கு திசையின் கடைக் கோடியாக உள்ளதால் கோடியக்க்கரை என பெயர் பெற்றதும். சோழர் காலத்தில் நிறுவப்பட்ட கலங்கரை விளக்கம், பழமை வாய்ந்த குழகர் கோவில் அமைந்தது சிறப்பு வாய்ந்துள்ளது. இங்கு ஒரு வன விலங்குகள் சரணாலயமும் உள்ளது. தேத்தாக்குடி தேற்றா என்பது ஒரு வகை மரம். இதன் விதையை இழைத்து கலங்கிய தண்ணீரில் கலந்தால் தண்ணீர் தெளிந்த நீராகி விடும். தேற்றான் மரங்கள் நிறைந்த பகுதியில் குடிகள் இருந்ததால் தேற்றான்குடி என்பது காலப்போக்கில் தேத்தாக்குடி என்றானது. மடப்புரம் மடம் என்றால் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ள பகுதி என்று பொருள் புலம் புலம் என்பது நிலத்தை குறிக்கும் சொல்லாக உள்ளது. கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம், செட்டிப்புலம், அருந்தவம்புலம், ஓரடியம்புலம் என்ற பெயரில் ஊர்கள் அமைந்துள்ளன. கருப்பம்புலம், ஆயக்காரன்புலம் ஊர்களில் ஓடைகள் காணப்படுகிறது. இவற்றை பிலம் என்றழைக்கின்றனர். இதுவே புலமானது என கூறுவாரும் உளர். கருப்பம்புலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கைக்கோளர்(நெசவாளர்) குடிகள் இருந்ததாகவும் கைக்கோளர் புலம் தான் தற்பொழுது கருப்பம்புலம் என்று மாறியது என்று கூறுவாரும் உண்டு. ஆயக்காரன்புலம் என்பது ஆயர்கள் (இடையர்கள்) ஒவ்வொரு ஆண்டும் புன்செய் நிலங்களில் கிடை அமைத்து வந்ததால் அவர்களின் பெயரில் ஆயக்காரன்புலம் உருவாகிற்று என்பர். செட்டிப்புலம் வணிகம் செய்யக் கூடிய மக்கள் அதிகமாக இருந்துள்ளனர். குறிப்பாக செட்டியார்கள் (வணிகர்கள்) ஓரடியம்புலம் என்பது ஓர் அடி அம்பலம் என்று திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள ஈசன் ஓர் அடியை வைத்து நடனம் ஆடியதால் ஓரடியம்புலம் எனும் ஊராயிற்று. அருந்தவம்புலம் என்பது அகத்திய முனிவர் தவம் செய்து வந்ததால் இவ்வூருக்கும் அரும்தவம்புலம் எனப் பெயர் வந்து காலப்போக்கில் அருந்தவம்புலம் என்றானது. குரவம் என்பது வாசனை மரம் என்ற பொருள் தருவது. ஒரு வகை வாசனை நிறைந்த மரங்கள் மிகுந்திருந்ததால் இவ்வூருக்கு குரவப்புலம் என பெயர் வந்தது. புத்தூர் தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பல இடங்களிலும் புத்தூர் எனப் பெயர் காணப்படுகிறது. புத்தூர் என்பதற்கு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஊர் என்று பொருள். மஞ்சக்கொல்லை மஞ்ஞை என்ற சொல் மயிலை குறிக்கும். காடும் தோட்டமும் அமைந்த ஊராக இருந்ததால் மயில்கள் தங்கும் இடமாக இருந்திருக்கிறது. இதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. பொரவாச்சேரி கோச்செங்க சோழன் காலத்தில் சிக்கல் சிவாலயம் மற்றும் திருமால் ஆலயமும் ஒருங்கே எழுப்பப்பட்டதாக சான்றுஉள்ளது. அக்கோவிலை எழுப்புவதற்கான (தளவாட பொருட்கள்) வைக்கப்பட்டிருந்த இடத்தின் பெயர் பொருள் வைத்த சேரி. தற்காலத்தில் இதுவே பொரவாச்சேரி என்றானது. சிக்கல் மேலே கூறியவாறு இங்கே கோச்செங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. அங்கே வசிஸ்ட முனிவர் வருகிறார். கோவில் வளாகத்தில் அமைந்துள்ள குளம் முழுவதும் காமதேனு பசுவால் பொழியப்பட்டு அக்குளம் பாலாக நிறைந்திருக்கிறது. அந்தப்பால் திரிந்து தயிரும் வெண்ணெயுமாய் திரண்டிருக்கிறது. அந்த வெண்ணெயை தன் கையால் உருட்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்கிறார். பிறகு சிவலிங்கத்தை எடுத்து வழிபாடு செய்ய முயற்சிக்கும் வேளையில் எடுக்க இயலாத நிலையில் வெண்ணெய் சிவலிங்கம் சிக்கிக் கொண்டது. எனவே இவ்வூர் சிக்கல் எனபெயர் பெற்றதாக இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது. கீழ்வேளூர் கேடிலியப்பர் பெயரில் சிவலாயம் அமைந்துள்ளது. கேடிலியப்பரே பின்னாளில் கீழ்வேளூர் என்றானது. மங்கலம் நாகப்பட்டினம் பகுதியில் பல ஊர்களில் மங்கலம் எனும் அடை மொழியோடு பல ஊர்கள் அமைந்துள்ளது. குறிப்பாக தேமங்கலம், சங்கமங்கலம், ஆனைமங்கலம், சிங்கமங்கலம், பட்டமங்கலம், அடியக்கமங்கலம் என்பன போன்றவை. சோழர்காலத்தில் சிவாலயங்கள் பொழிவோடு திகழ வழிபாட்டுக்கு தேவையான பொருள் கிடைக்க இவ்வூர்களின் நிலங்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்வூர்கள் மங்கலம் என்ற சுபச் சொல்லோடு வழங்கப்படுகிறது. தேவூர் தேவாரம் பாடல் பெற்ற தலம். இங்குள்ள இறைவனின் பெயர் தேவபுரிஸ்வரர் அவ்விறைவன் பெயரால் வழங்கப்பட்ட ஊர் நாளடைவில் தேவூர் என்றானது. குடி மணக்குடி, ஆலங்குடி, அணைக்குடி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, எட்டுக்குடி இவை போன்ற பல ஊர்கள் குடி என்ற பெயரை தாங்கியுள்ளன. தாழ்வான மண் பகுதியில் வாழ்ந்த குடிகள் இருந்த ஊர் மணக்குடி. ஆலமரங்கள் நிறைந்த ஊர் ஆலங்குடி. கிள்ளி என்பது சோழ அரசர்களின் பட்டம் (கிள்ளி வளவன்). அந்தப் பட்டத்தில் பெயரால் கிள்ளுக்குடி என்ற ஊர் உருவாயிற்று. அணைகள் அமைத்து நீர் வழிப்பாதையை ஒழுங்குப்படுத்தும் ஊராக இருந்திருக்கிறது அணைக்குடி. சாட்டியக்குடியில் சத்யதாட்சி என்கிற இறைவியின் பெயரில் ஆலயம் அமைந்துள்ளது. சத்யதாட்சி இங்கு குடிக் கொண்டிருப்பதால் சத்யதாட்சி குடி நாளடைவில் சாட்டியக்குடி ஆனது. எட்டுக்குடி என்பது எட்டு வணிகக் குடும்பங்கள் இருந்ததாலும் இப்பெயர் அமைந்ததாக கூறுவர். மேலும் காக்கா என்கிற சிற்பி மயில் மேல் முருகன் அமர்ந்திருப்பது போல் சிலை வடித்துள்ளான். மேற்கூறிய சிக்கல் என்ற ஊரில் சிங்கார வேலரை சிலையாக்கி இருந்தான். இந்தச் சிலையின் அழகைப் பார்த்த முத்தரச சோழன் என்ற மன்னன் இனி இது போன்று வேறொரு சிலை செய்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கட்டை விரலை துண்டிக்க ஆணையிட்டான். விரல் துண்டிக்கவும் பட்டது. மேலும் எட்டுக்குடியில் அமைந்த சுப்ரமணிய சாமி சிலையை பார்த்த முத்தரச சோழ மன்னன் அந்த சிலையை தொடும் போது மயில் உயிர் பெற்று பறந்துள்ளது. அதை “எட்டிப்பிடி” “எட்டிப்பிடி” என்று கூறியுள்ளான். இதுவே பின்னாளில் எட்டுக்குடியானது என தல வரலாறு கூறுகிறது. மேலும் எட்டி மரங்கள் அதிகமாக இருந்ததாலும் இந்த பெயர் வந்திருக்கலாம் என கூறுவோரும் உண்டு. சிக்கல் சிங்காரவேலரைப் போல் எட்டுக்குடி சுப்ரமணிய சாமி சிலையை வடிவமைத்ததால் மீண்டும் ஒருக்கட்டை விரல் வெட்டப்படுகிறது. மேலும் இது போன்ற அழகான சிலையை அவன் வடிவமைக்கக்கூடாது என எண்ணி அவன் கண்களையும் குருடாக்கிவிடுகிறான். குருடான அந்த சிற்பி திருவாருக்கு அருகில் உள்ள மோகனபுரம் என்கிற ஊரில் இரண்டு கைகளிலும் கட்டை விரல்கள் இல்லாத நிலையிலும், கண் பறி போன நிலையிலும் அங்கு ஒரு முருகன் சிலையை வடிவமைக்கிறான். அப்போது இறைவன் முருக பெருமானாக காட்சியளித்து அவன் பக்தியையும் திறமையையும் ஆசீர்வதிக்கிறார். அதனால் அவன் இழந்த கட்டை விரல் ஒட்டிக் கொண்டதாகவும், குருடான கண் மீண்டும் பார்வை பெற்றதாகவும் கூறப்படுகிறது. மோகனபுரம் என்ற ஊர் என்கண் என்று வழங்கப்படுகிறது. செட்டிச்சேரி மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி சேரி என்று முன்பே குறிப்பிட்டேன். இவ்வூரில் வைசிய வணிகர்கள் (செட்டியார்கள்) பெரு நிலக்கிழாராக வாழ்ந்து வந்தமையால் இவ்வூர் செட்டிச்சேரி ஆயிற்று. குறிச்சி குறிஞ்சி நிலப்பகுதியை தான் குறிச்சி என்று அழைப்பர். அல்லது குறவர் இனமக்கள் வாழும் இடமும் குறிச்சி எனப்படும். இவ்வூரில் மலையும் இல்லை குறவர் இனமக்களும் இல்லை. ஆனால் குறிச்சி எனபெயர் திகழ்கிறது. “குறிச்சி புக்க மான்போல” எனும் சங்கத் தமிழ் பாட்டு உண்டு. அதனடிப்படையில் குறிச்சி என்கிற காடுகள் நிறைந்த பகுதி என்றும் பொருளுண்டு. எனவே இப்பெயர் குறிச்சி எனப்பெயர் பெற்றுள்ளது. வடுகச்சேரி வடுகர்கள் எனப்படும் தெலுங்கர்கள் நாயக்கர்கள் காலத்தில் இங்கு வந்து குடியேறினர். வடுகர்சேரி என்பது தற்பொழுது வடுகச்சேரி என அழைக்கப்படுகிறது. பாலக்குறிச்சி குறிச்சி என்பதை முன்னமே காடுகள் நிறைந்த பகுதியென அறிந்தோம். குறுங்காடு அமையப்பெற்ற ஊராக இன்றும் திகழ்வதால் இவ்வூர் பாலக்குறிச்சி ஆயிற்று பால – குறு ஓட்டதட்டை ஒட்டதட்டை என்பது மூங்கில் காடுகள் நிறைந்த பகுதி என்று பொருள். இங்கு விழையும் மூங்கில்களில் துளையிட்டு (ஓட்டை) குழல்கள் செய்யப் பயன்பட்டதால் ஒட்டதட்டை என்பது ஓட்டதட்டை என்றானது. தட்டை-மூங்கில் மகிழி மகிழமரம் நிறைந்த ஊராக இருந்துள்ளது. மகிழி என்பது மணி முடியையும் குறிக்கும். இவ்வூரிலுள்ள திருமால் மணிமுடி சூட்டியிருப்பதால் மகிழி எனப் பெயர் பெற்றுள்ளது. பெரியதும்பூர்-சின்னதும்பூர் நான் பிறந்த பெரியதும்பூரும், அண்டை சிற்றூரான சின்னதும்பூரும் இருபிரிவுகளாக அமையப் பெற்றுள்ளது. பண்டாரகன், தம்பிரான் சைவ சமயத்தை வளர்த்த துறவிகள். இன்றும் ஆதினங்களில் மடாதிபதிகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை பண்டார சன்னிதி என்பர். அதனடிப்படையில் பார்க்கும் போது பெரியதும்பூர் சிவன்கோவில் அருகில் பண்டாரகன் குளம் என்று ஒன்று உள்ளது. மேலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் சின்னதும்பூரில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான சோழர் காலத்து கோவில். இவ்வூர்களில் இரு சமய துறவிகள் பெரியதம்பிரான் என்றும், சின்னத் தம்பிரான் என்றும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பெயரிலேயே பெரியதும்பூர், சின்னதும்பூர் ஊர் பெயர்கள் அமைந்துள்ளது. கிராமத்துமேடு உயர்ந்த மேடான நிலபரப்பில் அமைந்துள்ளது இவ்வூர். இன்றளவும் பாசன வசதி கடினமாக உள்ளது. மேட்டுப் பகுதியில் அமைந்த ஊராதலால் இவ்வூருக்கு கிராமத்துமேடு என்று பெயராயிற்று. ஆலமழை ஆல மரங்கள் நிறைந்த ஊராக இருந்திருக்கிறது. சிற்றூர்களில் மழையின் கடவுளாக வழங்கப்படும் மாரியம்மன் வழிபாடு இன்றும் இவ்வூரில் நடைமுறையில் உள்ளது. இதுவே இவ்வூர் பெயர் வரக் காரணம். மழை-மாரி சோழவித்யாபுரம் சோழ மன்னர்கள் காலத்தில் நாகையில் கடற்படைத்தளம் இருந்தது. நாகைக்கு தெற்கே பதினைந்து கல் தொலைவில் சோழர் படை வித்தை (பயிற்சி) பெற்ற ஊர் சோழவித்யாபுரம் எனப் பெயர் பெற்றது. வடமொழியில் வித்யாலயம் என்றால் கல்விக் கூடத்தை குறிக்குமென்பது குறிப்பிடத்தக்கது. நீடூர் செம்பியன் மாதேவிக்கு வடபுறம் ஒரு கல் தொலைவில் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. நீடு எனும் சொல்லுக்கு நண்டு எனும் பொருளுண்டு. இங்குள்ள ஈசனை நண்டு வணங்கியதாக ஒரு கதை உண்டு. இதுவே நீடூர் என பெயர் வரக் காரணமாயிற்று. புலவனூர் சோழர்கள் காலத்தில் புலவர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். அதனப்படையில் இவ்வூர் ஒரு புலவனுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மோகனூர் இங்குள்ள இறைவியின் பெயர் மோகனாம்பாள். இறைவியின் பெயரால் இவ்வூர் வழங்கப்படுகிறது. பிடாகை காரப்பிடாகை,மேலப்பிடாகை, கீழப்பிடாகை எனும் பெயர்களில் ஊர்கள் உள்ளன. பிடாகை என்றால் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலம் என்று பொருள். மேலும் பிடாகை என்பது பவுத்த சமய சொல். முற்காலத்தில் இங்குபவுத்தர்கள் அதிகளவில் வாழ்ந்திருக்க வேண்டும். சிந்தாமணி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இப்பெயர் பெற்ற ஊர்கள் அமைந்துள்ளன. குலோத்துங்கச் சோழனின் பட்டத்து அரசியான தீனசிந்தாமணி பெயரில் அமையப் பெற்ற ஊராகவும் இது உள்ளது. மேலும் விசய மாதேவியார் தன் மகனை முதன் முதலில் பெயரிட்டு அழைத்த பெயர் சிந்தாமணி என்று வழக்கில் உள்ளது. திருப்பூண்டி பூண்டி என்றால் ஊர் என்றும், தோட்டம் என்றும், கடற்கரையை ஒட்டிய பகுதி என்றும் பொருள் உண்டு. இங்கு பழம்பெரும் சிவாலயம் உள்ளதால் “திரு” என்ற அடைமொழியோடு வழங்கப்படுகிறது. கீராந்தி கீ என்பது கிளியை குறிக்கும் சொல். கிளிகள் தங்குமிடமாக இருந்ததால் கீராந்தி என்றாயிற்று. மேலும் கிரந்தம் என்பது பவுத்த சமயத்தோடு தொடர்புடைய சொல். சான்றாக இவ்வூரில் பத்தாம் நூற்றாண்டைய புத்தர்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கிரந்தமே கீராந்தி எனவும் ஆகியிருக்கக்கூடும். தலையாமழை ஊரின் தலைப் பகுதியில் மழையின் கடவுளாக சிற்றூர்களில் வழங்கப்படுகிற மழைமுத்து மாரியம்மன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. எனவே இவ்வூர் தலையாமழை எனப் பெயர் பெற்றது. தலைஞாயிறு இவ்வூர் கல்வெட்டுகளில் மதுராந்தக சதுர்வேதிமங்கலம் என்றும், ஆதி பாஸ்கர சேஸ்திரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சித்திரை திங்கள் முதல் நாள் சிவன் தலையில் சூரிய ஒளி விழுந்ததால் தலைஞாயிறு என பெயர் பெற்றது என்றும், சோழநாட்டை ஆண்ட மராத்திய மன்னனின் மனைவி பெயர் “தலஞார்” பெயரில் தலைஞாயிறு எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆய்மூர் ஆய்மூர், சித்தாய்மூர், திருவாய்மூர் என்ற பெயரில் ஊர்கள் வழங்கப்படுகின்றன. ஆய் என்பவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஆனால் இவ்வூர் இவன் பெயரில் வழங்கப்படவில்லை. ஆய் என்றால் தாய் என்று பொருள் (ஆயா). பெண் தெய்வ வழிபாட்டால் ஆய்மூர் எனப் பெயர்பெற்றது. சிற்றேமமுடைய மகாதேவர் ஆலயம் இங்குள்ளதால் சிற்றேமமுடையார் எனும் ஊர் சித்தாய்மூர் ஆனது. திருவாய்மூர் என்பது அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் மூவராலும் தேவாரம் பாடப் பெற்றதலம் என்பதால் இவ்வூர் பெற்றது. திருமறைக் காட்டில்(வேதாரண்யம்) மேற்காணும் மூவரும் தேவாரம் பாடிய நிலையில் அவர்களுக்கு இறைவன் திருவாய்மூருக்கு வாருங்கள் உங்களுக்கு காட்சியளிக்கிறேன் எனக் கூறியுள்ளார். அதன்படி தியாகராஜ சுவாமியாக எழுந்தருளி காட்சியளித்துள்ளார். இத்திருக்கோவில் சப்தவிடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இறைவன் மூவருக்கும் திருவாய் மொழிந்தது உண்மையாகி விட்டதால் இவ்வூர் திருவாய்மூர் எனப் பெயர் பெற்றது. கோடியவிநாயகநல்லூர் நல்லூர் என்றால் இறைவனிருக்குமிடம். கோடிகர் என்றால் நெசவாளர் என்றும் கூத்தர் என்றும் பொருள். மேற்கண்ட இரு சமூகத்தினராலும் வழிபடப்பட்ட கடவுளாக இவ்வூர் விநாயகர் விளங்குவதால் இப்பெயர் பெற்றுள்ளது. மாராச்சேரி முன்னமே சேரி என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தோம். மாரன் என்பது மன்மதனைக் குறிக்கும். மன்மத கடவுள் வழிபாடு இவ்வூரில் சிறப்புற்றிருந்ததால் இப்பெயர் பெற்றது. வடவூர் இவ்வூர் வடபாதி, தென்பாதி என இருப் பகுதியாக உள்ளது. இங்கு வட வேங்கடத்தான் எனும் பெருமாள் கோவில் உள்ளது. எனவே இவ்வூர் வடவூர் எனப் பெயர் பெற்றுள்ளது. கோட்டகம் நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் கோட்டகம் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. கோட்டகம் என்பது ஏரியைக் குறிக்கும். அல்லது நீரை சேமித்து வைக்கும் பகுதிகளை குறிக்கும். வல்லப விநாயகக் கோட்டகம் வல்லப விநாயகரின் பெயரில் வழங்கப்படுகிறது. இதனை வல்லாங்கோட்டம் என்றும் பேச்சு வழக்கில் கூறுவர். சடையன் என்றால் சிவனைக் குறிக்கும் சொல். சிவன் பெயரால் சடையன் கோட்டகம் என்ற ஊரும் உள்ளது. முப்பதிகக் கோட்டகம் என்பது மூன்று பதிகங்கள் பாடப்பட்டதால் இப்பெயர் பெற்றது. திருக்குவளை பண்டையத் தமிழ் கல்வெட்டுகளில் திருக்கோளிலியூர் என்றுள்ளது. ஒன்பது கோள்களின் தோஷமும் நிவர்த்தி பெறும் ஆலயமாக உள்ளது. படைப்புத் தொழிலுக்காக பிரம்மன் சந்தனநதியில் வெண்மணல் எடுத்து சிவலிங்கம் செய்து பிரதிஷ்டை செய்து வழிப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிவலிங்கத்தின் மீது குவளை சாற்றி வழிபடுவதால் (மண் லிங்கம் கரையாமல் இருக்க) திருக்குவளை எனப் பெயர் பெற்றது. மேலும் இவ்வாலயத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் தேவாரம் பாடப் பட்டத் தலம். திருமருகல் மருகல் என்பது வாழையை குறிக்கும் சொல். வாழைத் தோட்டம் நிறைந்த ஊராக இருந்துள்ளது. இந்த வாழைத் தோட்டத்தில் செட்டிப்பிள்ளை என்பவனை நச்சு அரவம் தீண்டிவிட்டது. இச்செய்தி அறிந்து ஞானசம்பந்தர் பதினொறு பதிகங்கள் பாடி உயிர்த்தெழச் செய்தார் எனக் கூறப்படுகிறது. இங்குள்ள ஆலயத்தின் பெயர் இரத்தின புரிஸ்வரர் ஆலயம். அப்பர், சம்பந்தரால் பாடப்பட்டத் தலம். இதுக் கோச்செங்கச் சோழனால்க் கட்டப்பட்டது. தஞ்சாவூர் பழம் தமிழகத்தில் தஞ்சாவூர் என்பது தண்செய்ஆவூர் என வழங்கிவந்துள்ளது. தண்செய் என்றால் குளிர்ந்த வயல்கள் என்று பொருள். கூத்தாநல்லூர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் பெரியக் கூத்தன், சின்னக்கூத்தன் எனும் இரண்டு நிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்த ஊர். கூத்தனூர் என்ற சிற்றூர் இன்று கூத்தாநல்லூர் என்று வழங்கப்படுகிறது. குருக்கத்தி குருக்கத்தி என்பது ஒரு வகை மலர்ச்செடியை குறிப்பதாகவும், மாதவி எனும் கொடி மலரைக் குறிக்கும் பொருளாகவும் உள்ளது. மேற்கண்ட மலர் செடிகளாலேயே இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்க வேண்டும். பட்டுக்கோட்டை பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்பே பட்டுக்கோட்டை எனும் பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில் இவ்வூரில் பட்டு மழவராயர் எனும் கள்ளர் குழுத்தலைவன் இங்கு வாழ்ந்ததாகவும் அவரால் கோட்டைக் கட்டப்பட்டதாகவும் தஞ்சை அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இதுவே பட்டுக்கோட்டை எனப் பெயர் வரக் காரணமாகும். தண்டலை தண்மை+தலை =தண்டலை மருத நிலபரப்பில் நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள மலர்ச்சோலையை தண்டலை என்றே விழிப்பர் வலங்கைமான் சீதையின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது அம்மான் அங்கு வலப்புறமாக ஓடியதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்ததாக இவ்வூர் தல வரலாறு கூறுகிறது. கடாரங்கொண்டான் இன்று மியான்மர் (பர்மா) என்று அழைக்கப்படும் நாடு பழங்காலத்தில் காழகம் என்றும் கடாரம் என்றும் பெயர் பெற்றிருந்தது. இராசேந்திர சோழன் தன் கப்பற்படை கொண்டு கடாரத்தை வெற்றிக் கொண்டான். அதனால் கடாரங் கொண்டான் எனும் விருது பெற்றான். இவ்விருதின் பெயரில் திருவாரூக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவில் ஓர் ஊரை நிறுவினான். திருக்காரவாசல் இவ்வூரில் கார்கில் எனும் ஒரு வகைமரம் இருந்துள்ளது. இங்குள்ள ஈசனின் பெயர் கண்ணாயிர பெருமான். அதனால் திரு எனும் அடைமொழியோடு கார்கில் என்பது காரல் என மருவி திருக்காரவாசல் எனும் ஊராயிற்று கொரடாச்சேரி கொல்லர்கள் சேர்ந்து வாழும் பகுதி கொற்சேரி. இது இன்று கொரடாச்சேரி என மருவியுள்ளது. திருக்கடையூர் இராதாந்திரகற்பத்திலே திருமால் முதலியோர் அமிர்தத்தை குடத்தில் இட்டு புனிதமாகிய இத்தலத்தில் உண்ணும் பொருட்டு வைத்தனர். அதுவே அமிர்தலிங்கமாக உருப்பெற்று ஊன்றிக் கொண்டது. அதனால் இவ்வூர் “கடவூர்”, “கடபுரி” என அழைக்கப்பட்டது. இங்குள்ள இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேஸ்வரர். இவ்வூர் திருக்கடவூர் என வழங்கப்பட்டு தற்பொழுது திருக்கடையூர் ஆயிற்று. திருவாரூர் அருவூர் ஆரூர் என ஆயிற்று. அரு என்பது அரனாகிய சிவனை குறிக்கும். “தேவரொதுங்க திருத்தொண்டர் மிடையுஞ் செல்வத் திருவாரூர்” என சேக்கிழார் பெருமான் இந்நகரின் சிறப்பைப் பாடியுள்ளார். திருத் தொண்டத்தொகை தோன்றிய ஊர் இது. திருமால் பூசித்த செல்வத் தியாகராயர் எழுந்தருளியிருப்பதால் இவ்வூர் திருவாரூர் ஆயிற்று. திருச்செங்காட்டங்குடி விநாயக பெருமான் இமயவரம்பன் மற்றும் முனிவர்கட்கும் பல இடர் தந்த கஜமுகாசுரனை மாய்த்த போது அவன் உடலிலிருந்து வெளிப்பட்டந் குருதியால் அக்காடு சிவப்பு நிறமானது. கணபதி சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து பூசித்தார். அங்கு மக்கள் வழிபாடு செய்தனர். அதனால் இவ்வூர் திருச்செங்காட்டங்குடி எனப் பெயர் பெற்றது. சீர்காழி பிரம்ம தேவர் பூசித்த படியால் பிரம்மபுரம் என இவ்வூர் பெயர் பெற்றிருந்தது. இந்திரன் மூங்கில் வடிவமாக காட்சியளித்ததால் இவ்வூருக்கு வேனுவனம் என மற்றொரு பெயரும் இருந்தது. இப்படி இவ்வூருக்கு பன்னிரெண்டு பெயர்கள் இருந்தன. இங்குள்ள இறைவனின் பெயர் காழியப்பர் ஆகும். அதன் பெயர் தொட்டு இவ்வூர் சீர்காழி என்று இன்று வழங்கப்படுகிறது. உறையூர் திருச்சிக்கு அருகில் அமைந்திருந்த இந்த நகரம் உறந்தை, கோழியூர் முதலிய பெயர்களை கொண்டிருந்தது. சோழர்கள் தமக்கு உறைவிட ஊராகக் கொண்டிருந்ததால் உறையூர் ஆயிற்று. அங்கொரு சமயம் கோழி யானையை துரத்தி வென்றதால் கோழியூர் எனும் பெயரும் பெற்றது. குடவாசல் இவ்வூர் திருக்குடவாயில் என்றும், இங்குள்ள கோவில் குடவாயிற் கோட்டம் என்றும் அழைக்கப்பட்டது. ஊழிகாலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்து விடக்கூடாது என்பதற்கான ஈசன் ஒரு குடத்தில் அனைத்து உயிர்களையும், அமிர்தத்தையும் வைத்து அந்த குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்ததாக கூறும் புராணக்கதையின் அடிப்படையில் இவ்வூர் இப்பெயர் பெற்றது. கும்பகோணம் மேற்கண்ட புராணக் கதையின்படி அந்த பாதுகாக்கப்பட்ட அமிர்தக்கலசம்(குடம்) தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்ததாகவும் முதல் பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும், நடுப்பாகம் கலயநல்லூர் (சாக்கோட்டை) எனவும் முகப்புப்பகுதியே குடவாயிலாகி இன்று குடவாசலானது என்பர். இருக்கை இலுப்பை மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்திருக்கிறது. இலுப்பை இருப்பையாகி நாளடைவில் இருக்கை ஆகியுள்ளது. காக்கழனி கா என்றால் சோலை என்று முன்பே பார்த்தோம். கழனி என்பது வயலைக் குறிக்கும். சோலையும் வயலும் நிறைந்த ஊர் காக்கழனி ஆயிற்று. மகராஜபுரம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இதே பெயருள்ள ஊர்கள் அமைந்துள்ளன. நாகைமாவட்டம், வேதாரண்ய வட்டத்திலும் இப்படி ஓர் ஊர் உள்ளது. அரசர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்பது இதன் பொருள். துளசாபுரம்-துளசியபுரம் இவ்வூர்களில் திருத்துழாய்ச்செடி எனும் துளசிச் செடிகள் அதிகமாகக் காணப்பட்டதால் துளசாபுரம், துளசியாபுரம் எனப்பெயர் பெற்றது. காரைக்கால் காரைக்கால் முன்பு காரைக்காடு அல்லது காரைவனம் என்றழைக்கப்பட்டது. காரைக்கால் கடற்கரையை ஒட்டி காரைச்செடிகள் காடு போல மண்டியிருந்ததால் காரைக்காடு என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் காரைக்கால் என்றானது. மயிலாடுதுறை பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதால் இப்பகுதி மயிலாடுதுறை எனப்பெயர் பெற்றது. மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப்பாடல் பெற்றத்தலம், காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலம். இவ்வூரின் புராண பெயர்கள், சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை ஆகும். தருமபுரம் மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ள ஊர்இது. இங்கு தருமபுர ஆதீன மடாலயம் அமைந்துள்ளது. தருமன்-என்பது எமனைக் குறிக்கும். மார்க்கண்டேயனை எமன் உயிரைப் பிடிக்க வந்த நிலையில் திருக்கடையூர் ஈசனை தழுவி கொள்கிறான். அப்போது ஈசன் எமனை காலால் எட்டி உதைத்ததாகவும் எமன் வந்து விழுந்த இடம் எமபுரமானது என்றும் அதுவே தற்பொழுது தருமபுரம் என அழைக்கப்படுகிறது என இவ்வூர் கோவில் தல வரலாறு கூறுகிறது. மன்னம்பந்தல் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சரபோஜி இங்கு பந்தல் அமைத்து தங்கியிருந்தமையால் மன்னம்பந்தல் என்றாகி மன்னம்பந்தல் என்றானது. திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டியின் பழையபெயர் வில்வாரண்யம் ஷேத்திரம் ஆகும். துறை என்பது வழியைக் குறிக்கும். மருந்தீசுவரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. வில்வ ஆரண்ய ஷேத்திரத்துக்கு நுழைவாயிலாக இருந்ததால் திரு என்ற அடைமொழி பெற்று திருத்துறைப்பூண்டி எனும் ஊராயிற்று. (பூண்டி என்பதன் பொருளை முன்பே பார்த்து விட்டோம்) நீடாமங்கலம் சங்ககாலத்தில் இவ்வூர் நீடூர் எனும் பெயரில் வழங்கியிருக்கிறது. அக்காலத்தில் மிழலை நாட்டின் தலைநகர் எவ்வி எனும் வள்ளலால் ஆளப்பட்டு வந்தது. நீராடும் மங்கலமே நீடாமங்கலம் என்போரும் உளர். வல்லம் வல்+மண் வலிமையான மண்பகுதி என பொருள் பொதிந்த வல்மண் எனும் சொல்லே வல்லம் ஆனது. அதிராம்பட்டினம் சுந்தரரின் ஏழாம் திருமுறையில் 31வது பதிகத்தில் ஆறாவது பாடலில் “திங்கருர் திருவாதிரையான் பட்டினம் ஊர்” எனும் வரிகள் அமைந்துள்ளன. முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர நாளில் ஈசனிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான் உலா வரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. அதேநேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். மேலும் இவ்வூர் அதிவீரராமபாண்டியபுரமாக இருந்து அதிராம்பட்டினமாக திரிந்தது எனக் கூறுவோரும் உளர். ஆழியூர் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள ஊர். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடற்கரையை ஒட்டியிருந்ததால் ஆழியூர் ஆயிற்று பொன்னிரை இறைவன் அன்றாடம் செட்டிப் பெண்ணிற்கு பொன் நிறுத்து தந்த இடம் பொன்+நிறை பொன்னிரை ஆனது FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.