[] சில நினைவுகளின் முகவரிகள்       அனங்கன் sukumarmay1962@gmail.com           மின்னூல் வெளியீடு www.freetamilebooks.com           மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:   அனங்கன் sukumarmay1962@gmail.com           உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   என்னைப் பற்றி….   இயற்பெயர் - க.சுகுமார்.   புனைப்பெயர் - அனங்கன்.   [அனங்கனென்றால் உருவம் இல்லாதவன் எனப் பொருள். இது சிவனையும் மன்மதனையும் குறிக்கும்.]   பிறந்தது. படித்தது காரைக்குடி. தமிழுக்கான ஆர்வம் தானாய் வந்தது. சாதிக்க நினைப்பது இதுவரையில் எதுவுமில்லை.   சொல்ல நினைப்பது…… ஏற்கனவே நிறையப்பேர் சொல்லியாகிவிட்டது.   தமிழைப் பற்றிய பட்டறிவு தமிழானாய்ப் பிறந்தது மட்டுமே.   இன உணர்வு….. அனைவரும் ஒன்றென நினைப்பது.   இலக்கு வாழ்ந்ததற்கு அடையாளமாய்க் கவிதைகளை  விட்டுச்செல்வது.   நன்றி கூற நினைப்பது தாய், தந்தை. நண்பர்கள், சொல்லிக் கொடுத்த ஆசான்கள் என்னை வழி நடத்திச் செல்லும் அனைவருக்கும்.   நன்றி.வணக்கம்   பொருளடக்கம்…. எதற்கு எழுதுகிறேன்? என் அன்னை இருளை மனதில் வைத்து..... இறைவனைத் தேடாதே. முகங்களைத் தேடி.... விழுவதா...எழுவதா மனப்பெயர்ச்சி... வெற்றிடத்தில் பூஜ்ஜியங்கள்...... விலங்குகளுக்குக் கடவுளில்லை..... எதைக் கொண்டு ஈடுசெய்ய பண்டிதர்களுக்குப் பாமரனின் கவிதை சூரியனை எரிக்கிறேன். மனிதனென்ற புத்தகம் மக்களாட்சித் தத்துவம்.... வாயுள்ள ஊமை நீ.... என்னைத் தேடுகிறேன்..... விலை எவ்வளவு.... கூழாங்கற்கள் மந்தைகளின் மனுதர்மம்.... கொம்பு முளைத்த குதிரைகள்..... கோவிந்தா....கோவிந்தா புத்தாண்டே வருக....! யாருக்கும் வெட்கமில்லை........ இனி எல்லாம்...... எங்கே! என் தலைவன்? ஒரு கழுதையின் பிரகடனம்..... மீண்டும் நீ வரவேண்டும் அஃறிணைக்கு இல்லை ஆசைகள்..... நிறம் மாறும் நிறங்கள்... வள்ளுவத்தை தினம் சொல்லுவோமே....... சாம்பலில் பூக்கமாட்டேன்..... உயர்வதில் இல்லை உயர்வு..... பசி............(1) பசி..............[2] பசி..........[3] பசி.........[4] மாற்று வேண்டும்.... மாற்றமும் வேண்டும். குடியரசு தினக் கேள்விகள்....... எங்களைப் பற்றி உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   எதற்கு எழுதுகிறேன்?   தனி ஒருவன் இங்கு நாட்டைத் திருத்தவா கவிதை எழுதுகிறேன்......?! கடந்து போகும் வாழ்க்கைப் பிழையினைக் காட்சிப்படுத்துகிறேன்...... நீதிப் பிழம்பினை எனக்குள் சுமந்து பொய்மையை எரிக்கின்றேன்........ நானே பொய்யென உணரும் தருணம் இறந்து பிறக்கின்றேன்....... என் சாம்பல் பரவும் புறவெளியெங்கும் என்னைப் பதிக்கின்றேன்.......... ஒரு நீர்த்துளி என்மேல் விழும் நேரமே வாழ்வை ரசிக்கின்றேன்.......... அனைத்து முரண்களும் கொண்ட வாழ்வில் எதை சரி செய்ய நினைக்கின்றேன்...........?! முரண்படுதலே வாழ்வின் விதியென தீர்ப்பை முடிக்கின்றேன்!   அனங்கன்.     என் அன்னை   அம்மா! உன் அன்பிற்கு ஈடு சொல்ல இப்பாரினில் ஏதுமில்லை… பைந்தமிழ் என்னை வளர்ப்பதனால்: இருதாய்க்கு நானொரு பிள்ளை. தங்கக் குடத்திற்குள்ளே – நான் தவறி விழுந்த நீர்த்திவலை… என்னைக் கருவில் கலைக்காமல் இருந்தாயே! உன் பாதத்தில் கோடி முல்லை. வங்கக் கடலோரம் சிலைவடிக்க வக்கு எனக்கில்லை… அம்மா! வாக்கில் உன்னை வைத்துப் பாடுவேன் நான் உன் செல்லப்பிள்ளை. தமிழ்த்தாயால் என் தாயைப் பாடும் பெருமைக்கு ஏது எல்லை. நிம்மதி கொண்டுறங்க… தாயே! உன் மடிபோல் வேறு இல்லை.     இருளை மனதில் வைத்து..... இறைவனைத் தேடாதே.   ஔியில் உள்ள கடவுள் மொழியிலும் இருக்கிறார். எல்லாச் சடங்குகளும் சட்டங்களும் மனிதன் மேம்படத்தான். கடவுளின் அருகில் செல்லத்தான் அத்தனை வழிமுறைகளும்.. நீ கடவுளில்லை. கடவுளுக்கு அனைத்தையும் ஏற்கும் பக்குவமுண்டு காழ்ப்புணர்ச்சியோடு கடவுளைத்தேடாதே. நின்றுகொண்டு மலம் கழிப்பது உன் வசதியென்றால் உன் இருப்பிடத்தில் செய். பொதுவெளியில் ஒரு நாகரிகம் இருக்கிறது. சகிப்புத்தன்மையைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கிறது. வெற்றுமந்திரங்களில் இல்லை மகிமை அது அன்பில் இருக்கிறது. முதலில் மனிதனாய் இருக்க முயற்சிசெய் பிறகு கடவுளைத் தேடலாம்.     முகங்களைத் தேடி....   முகங்களைத் தேடி அலைகின்றேன் நான் சொந்த முகமின்றி... நிழல்களைத் தூரத்தி வாழும் உலகில் எப்படி வாழ்வேன் பொய்யின்றி.... கனவுகள் விற்கும் கடைத்தெருவில் கொள்முதல் செய்யப் போனேன் முதலின்றி..... எல்லோரும் அதனையே செய்வதால் திரும்பி வந்தேன் வேறு வழியின்றி. பொய்களை விற்று பொய்களை வாங்கி யாருக்கு லாபம். எல்லாம் முடிந்து அடங்கிடும் போது வந்திடும் ஞானம். வாழ்ந்திடும் போது நேசம் மறப்பது காலத்தின் சாபம். உனக்குப் பிறகும் உன்னை நினைக்க அன்பாய் வாழ்ந்திடு நாளும்.     விழுவதா...எழுவதா   தீக்குளித்தல் உனக்குப் பூச்சொரிதலா... தீமையை எரிக்காமல நீ எரிவதா... ஆசைக்குக் கடன்பட்டுக் கலங்கி நிற்பதா... உன் தலைமுறையைக் கந்துவட்டிக்காய் கருவருப்பதா..... வாழ்வதற்காய்ப் பெற்ற பணம் உன் வாழ்வழிப்பதா.... தர்மம் மீறி வாழ்பவனுக்கு நீ உழைப்பதா... ஊரை அடித்து பெற்ற பணத்தில் உலை கொதிப்பதா... ஊமைகள் நாடகத்தில் ஒலி அமைப்பதா.. அறநூல்கள் பல இருந்தும் அறம் மறப்பதா... தமிழா உன் பண்பைத் தீச்சுடர் எரிப்பதா... முறை தவறிச் சேர்ந்த பணம் வட்டியாய் உயிர் பறிப்பதா... அரசாங்க அதிகாரம் கொடுமைக்கு துணை நிற்பதா.... உள்ளதைக் கொண்டு வாழ ஏழைக்குச் சொல்லிக் கொடுப்பதா.... இருப்பதை இருப்பவனுக்கு அள்ளிக் கொடுப்பதா... பலகோடிக் கடனுக்கு நாட்டை சிலருக்கு எழுதிக் கொடுப்பதா... சில ஆயிரம் கடனுக்குப் பலரை எரிய விடுவதா.... பொறுத்தது போதுமென்று பொங்கியெழுவதா.... பூமி நாளை பிளக்குமென்று பொறுத்து நிற்பதா....?     மனப்பெயர்ச்சி...   எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று தேடி அலைகிறான் மனிதன். ஆசையை ஒழித்தால் அமைதி கிடைக்குமென்று சொல்லி மறைந்தான் புத்தன். உனக்குள் கடவுள் உள்ளேயிருக்கிறார் தேடிப்பாரென்றான் சித்தன். அனைத்தும் அறிந்தும் அமைதியில்லாமல் வாழ்வைக் கழிக்கிறான் பணப்பித்தன். கிரக, ராசியென்று தெளிந்த அறிவின்றி தேடி அலைந்தால் பயனில்லை. ஆரியன் செய்த மாயக் கதைகளால் வீழ்ந்த தமிழன் மீளவில்லை. இராகு கேதென்றும் சனிப் பெயர்ச்சியென்றும் நடைமுறை வாழ்வில் தொல்லை. கற்ற கல்வி பகுத்தறியும் திறனை இன்று யாருக்கும வழங்கிட வில்லை. தன்னை நம்பி வாழும் மனிதனை நாளும் கோளும் நலிவுறச் செய்வதில்லை. வருவதை ஏற்று வாழ்ந்து பார்ப்போரை காலம் கைவிட்டதில்லை.   வெற்றிடத்தில் பூஜ்ஜியங்கள்......   சிற்பிகள் கையில் பெருநோயென்றால் சிலைகள் எப்படி கலையாகும்.... ஆசான் மனம் கோணலென்றால் கேள்விகள் எப்படி பதிலாகும்.... விலைபொருள் என்று ஆன பின்னே நேர்மைக்கு எப்படி இடமாகும்.... வழி நடத்த தெரியாத முடவனிடம் போகும் பாதை எப்படித் தெளிவாகும்..... கற்பிப்பவர் ஒழுங்கு இல்லையென்றால் நாளையத் தலைமுறையே பிழையாகும்.... மூன்றாம் இடத்தில் உள்ளதெல்லாம் முட்டாள் இனத்தில் முதலாகும்...... ஒவ்வொரு இழப்பிற்குப் பின்னாலும் மனிதமென்பது பிணமாகும்.... கருணை நேசம் என்பதெல்லாம் காலம் கடந்த சொல்லாகும்..... எழுத்தறிவித்த இறைவனெல்லாம் சாத்தானுக்கு மகனாகும்..... வாழவழி சொல்லாத கல்விக்கு வகுப்பறை எப்படி இடமாகும்..... குருவின் குரூர எண்ணத்தில் இளம் பிஞ்சுகளே பலியாகும்....... கடவுளுக்கு முதல் இடத்தில் இனி வெற்றிடங்களே உருவாகும்.     விலங்குகளுக்குக் கடவுளில்லை..... இறைவா! உனக்கான தீபமெல்லாம் ஒழுங்காக எரிகிறது. உனக்கு விழா கண்டு எந்நாளும் சுபமாகக் கழிகிறது. ஆதி அந்தமில்லா இன்பத்தில் உன் வாழ்க்கை ஔிர்கிறது. மனிதன் பற்று வைத்த பாவத்தில் வாழ்க்கை பெருங்கடலாய் நீள்கிறது. இழப்பின் துயரத்தை எல்லா உயிர்களுக்கும் கொடுத்தவன் நீ. உணரும் அனுபவத்தை மனிதனுக்காய் தந்தவன் நீ. ஆயினும் இங்கே-- தன்னுயிர் தந்து தாய்மையொன்று நிற்கிறது. இழப்பின் பெருவலியில் இன்னொரு உயிர் அழுகிறது. ஐந்தறிவு உயிர்களெல்லாம் உன்னிடம் வேண்டுதலை வைப்பதில்லை. நாளெல்லாம் பிராத்தனையால் உனைத் துரத்தி வருவதில்லை. வியாபாரக் கணக்கோடு காணிக்கைகள் தருவதில்லை. விதித்த விதி இதுதான் என்ற புரிந்த அறிவு -- நமக்கில்லை.     எதைக் கொண்டு ஈடுசெய்ய   வாழ்வில் கரை சேரத்தான் கடலோடு போனான் கரை சேரவில்லையே.... உனக்கும் சேர்த்துத்தான் அவன் உணவு தேடினான் அவளைக் காணவில்லையே..... வளர்ந்த பாரதம் சூளுரை ஆயிரம் உடலைக் காணவில்லையே...... பலிகள் கொடுத்துத்தான் விடிவைத் தேடும் அவலம் இன்னும் மாறவில்லையே..... அரசு என்பது மக்களுக்காகத்தான் கடலோடி வாழவில்லையே.... வளர்ச்சி ஆயிரம் கண்டபின்னும் உயிர்ப்பலி போகவில்லையே..... அஞ்சலி செலுத்தி ஆறுதல் சொன்னாலும் இழப்பின்வலி தீரவில்லையே.... கொட்டிக்கொடுத்தாலும் உறவின் இழப்பிற்கு ஈடுயில்லையே.     பண்டிதர்களுக்குப் பாமரனின் கவிதை இலக்கணக் கொம்பென்பது எல்லோருக்கும் முளைப்பதில்லை. இலக்கணக் கொம்பிருப்போரும் பிறரை முட்டாமல் விடுவதில்லை. தாய்மடி கன்று முட்டும் செய்கை போல்தான் இக்குற்றம் கடிதல். தமிழுக்கு மேன்மையென்றால் அதைத் தாங்குதல் வளர்ச்சிதானே. கோவில் என்றால் என்ன... கோயிலெனச் சொன்னாலென்ன.... உள்ளிருப்பது சாமியென்று அனைவரும் உணர்ந்தது தானே. மொழி என்பது என்ன.....? உணர்வைக் கடத்தும் கடத்தி. மொழிதலில் பிழையிருந்தாலும் மழலையின் வாய்மொழிப் பிழையோ..? ஏற்பது தாய்மை நெஞ்சென்றால் தமிழ்வளர்ச்சிக்குத் தடையேதும் உண்டோ? என் பாட்டன் கோவணம் அணிந்தான் என் ஆடையில் எத்தனை மாற்றம்! மாற்றமென்பது இயல்புதானே-- மற்ற வளர்ச்சியை ஏற்பதுபோலே.     சூரியனை எரிக்கிறேன்.   கனவுகளைக் கட்டி இழுக்கிறேன். கானல் நீரில் மிதக்கிறேன். காகிதக்கப்பலில் துடுப்பின்றி வாழ்வைக் கடக்கிறேன்.   திசைகளைப் பிரிக்கிறேன் பிரித்ததை இணைக்கிறேன் பிரியமற்ற மனிதரோடு வாழும் நாளை ரசிக்கிறேன்.   மனக்கதவை திறக்கிறேன் இருளை வெளியே இரைக்கிறேன் வெளிச்சப்புள்ளி சிறிதென்றாலும் சூரியனை எரிக்கிறேன்.   சிறகுகளை விரிக்கிறேன் எல்லையற்று பறக்கிறேன் நீர்க்குமிழி நானென்றாலும் வான்உச்சியைத்தான் நினைக்கிறேன்.     மனிதனென்ற புத்தகம் மனிதனென்ற புத்தகம் வாழுகின்ற தத்துவம் அவரவர் பார்வையில் ஆளுக்கொரு பொருள்தரும்.   பொருளில்லாப் புத்தகம் பொருளைத் தூரத்தும் அனுதினம் அறிவுள்ள புத்தகம் யாரும் அறியாமல் முடங்கிடும்.   பக்கங்கள் மாறும அது படைப்பவனின் நியாயம் தம்மை படிப்பவரைத் தேடும் புத்தகங்கள் பாவம்.   தலைப்பில்லாப் புத்தகம் இங்கு பலகோடி ஆயிரம் அவை குப்பைகளாய் ப்போவதற்கு வாழும் சூழ்நிலையே காரணம்.   புத்தகங்கள் ஒன்றாய்க் கலக்கும் வாழ்க்கையெனும் நூலகம் சில கைபடாமல் போவது காலம் செய்த தாமதம்.   மனிதர்களைப் படிக்கின்ற புத்தகங்கள் அவசியம் அது எல்லோருக்கும் கிடைக்காது வரும் யுகங்களுக்கு ஒருதரம்.   மக்களாட்சித் தத்துவம்.... மக்களாட்சி தத்துவமாய் இனி தேர்தலைச் சொல்லாதே... உனக்கு நீயே வைககும் கொள்ளிதான் விரலை நீட்டிவிட்டு வருந்தாதே.... நமக்காகவா இத்தனை கூச்சலும் பொய்மையில் மயங்கிப் போகாதே... இந்தப் போர்வெறி வேறெதிலும் இல்லையேன் கேள்விகேட்கத் தயங்காதே.... திருடர்கள் கையில் நாட்டின் திறவுகோல் விதிமேல் பழியைப் போடாதே.... இந்தத் திருடரில் யார் உத்தமர் கேள்விக்கு விடையே கிடையாதே... கழுவக்..கழுவக் கையில் கரைகள்தான் தண்ணீரே அழுக்கெனச் சொல்லாதே... தண்ணீர் உயரம் கமலமென்றாலும் தனிமனிதனை துதிக்காதே... என்ன தீர்வுதான் இந்த தேசம் வாழ்ந்திட வீண்மயக்கம் கொள்ளாதே... உந்தன்விரல நுனி மாற்றத்தின் முகவரி பயன்படுத்த தயங்காதே... ஒவ்வொரு இளைஞனும் ஒன்றிணைந்தால் மாற்றம் பிறக்கும் இப்போதே.     வாயுள்ள ஊமை நீ....   நீதியென்றால் என்னவென்று கேட்காதே நீயும்... அந்த குருட்டுப் பூனையைக் குற்றம் சொன்னால் உந்தன் மீது பாயும்.... இருப்பவனுக்குச் சட்டமென்பது வாலைக்குலைத்துப் போகும்.... நீ நம்பி இறங்கினால் தாங்காது அது அளவிடாத தூரம்.... மக்களுக்காக சட்டமென்பது வல்லோர் வகுத்த வாதம்..... வாய்தா வாங்கி வாழ்ந்துபார்க்கலாம் காசிருந்தால் போதும்...... பசுவுக்கும் நீதி வழங்கிய பாரத புண்ணிய தேசம்..... பாவிகளைப் பாதுகாக்கவே இன்று கருப்பு அங்கிகள் பேசும்..... அறம் வெல்லும் என்பதெல்லாம் மரபு சார்ந்த வாதம்..... அதனை நம்பி வாழ்வதுதான் ஏழைக்கு வாய்த்த சோகம்.     என்னைத் தேடுகிறேன்.....   மான்வாழும் காட்டில்தான் புலிவாழுமென்பது புரியாத புதிரல்ல. மென்மையோடு வன்மையை சேர்பபதுதான் இயற்கையென்றால் யாரைப் போய் குற்றம் சொல்ல. துன்பமெனும் பெருநதியில் கால் நனைக்காத உயிரில்லை விதிவிலக்கு யாருமல்ல. விதி வகுத்த நேர்கோட்டை வளைப்பதற்கு நாணல்ல கடத்துகிறோம் நாளை மெல்ல. ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையென்பது போர்க்களந்தான் ஆயுதம் ஒன்று போல் ஆனதல்ல. அனைத்தையும் அடைந்துவிட்டேன் ஆசைகளே இல்லையென்று சொல்வது பாவமல்ல. அதைச் சொல்லுகின்ற மனிதரைத்தான் வாழ்க்கையெங்கும் தேடுகிறேன் என்னை மறந்தது என் குற்றமல்ல.     விலை எவ்வளவு....   சோற்றுக்கு அழுபனிடம் சோசலிசம் பேசினால் தோன்றிடுமா புரட்சி.....   பணத்திற்குத் தன்னை விற்றவன் தன்மானம் பேசுவது இகழ்ச்சி....   இனி வெற்றியென கொண்டாட்டங்கள் நடக்கும் வீழ்ந்தது இனஉணர்ச்சி....   ஆளுக்கு இவ்வளவு கூலிக்குப் பேசி விலை போனது மக்களாட்சி.     கூழாங்கற்கள் பிம்பம்   நிலவில் குதித்த தவளை நீருக்கடியில்.   சலனம்   இறந்த நாயை எட்டிப் பார்த்தது சாலைநீரில் விழுந்த நிலா.   சன்னல்   துண்டிக்கப்பட்ட வானத்தை தைக்கிறது நூலாம்படை.   இரவு   சுற்றிமொய்க்கும் விண்மீன் எறும்புகள் தொடவில்லை நிலவு அப்பத்தை.   சிலந்திவலை   எச்சில்மாளிகையில் எல்லாத்திசையும் கதவுகள்தான்.   நெகிழி   தூக்கிச்சென்ற காற்று துணைக்கு வரவில்லை.   கடவுள்   ஆயுதம் தூக்கியதால் அருளுக்கு கை இறங்கவில்லை.   முட்டை   குச்சிமாளிகையில் உடையும் பளிங்குக்கல்.   தெருக்கூத்து   இரந்துண்கிறது இறவாக்கலை.   பிறைநிலா   உடைந்த வளையல் ஒட்டிநிற்கும் கரித்துணியில்.     விதை   வானத்தின் முகம் பார்க்க மண்ணில் புதைகிறது.   நம்பிக்கை   ஆணிகள் அப்படியே இருக்கிறது இயேசுவை சுமந்தபடி.       மந்தைகளின் மனுதர்மம்....   அறம் தோற்றதென்றும் நீதி தோற்றதென்றும் அவர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறத்தின் காவலர்களை அனைவரும் அறிந்ததுதான். வயிறு காயும் போது அறெமென்பது ஆண்டவனே வந்து சொன்னாலும் அது அர்த்தமற்றதுதான். சில ஆயிரம் பார்ப்பதற்கு பல மாதமாகும் எங்களுக்கு காசு வந்து கதவைத் தட்டினால் காதை மூடிக்கொள்வதா? மாறா தொன்றை எது மாற்றி விடப் போகிறது? சாக்கடையில் எவ்வளவு சந்தனம் கலந்தாலும் அது மணக்கப் போவதில்லை. சந்தனத்தை சாக்கடையாக்குவதை விட சந்தர்ப்பத்தைச் சாதகமாக்குவதே ஏழைகளின் அறம். கடவுள்கள் வாழ்ந்த காலத்திலும் அறம் தோற்றுத்தான் மீண்டிருக்கிறது. அதன் நிழல் இருட்டில் கலந்த பிறகு நீங்கள் எதை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?     கொம்பு முளைத்த குதிரைகள்..... மனக் குதிரை மண் தின்னும் மண் அதிர விண் செல்லும் ஆசைக் கொம்பு அதற்குண்டு குத்திக் கிழிக்கும் ரணங்கள் ஆறாது அச்சுறுத்தும்.... அடங்காது ஞானியர் அடக்கியதாய் புராணம் சொல்லும் நம்ப வேண்டாம் பின் கால்கள் இடிபட மனக் குதிரை பயணம்செய்யாப் பாதையில்லை மனிதெனென்றால் மனக்குதிரை மண்தின்னும். சந்தர்ப்பச் சாக்கடையில் தவறி விழும் தெளிந்தாலும் தெளியாது மேய்கின்ற நிலத்திற்கு அளவில்லை மேய்ப்பவனை மேய்கின்ற பொய்ப் பிசாசு. நிறம் மாறும் குணம் மாறும் குதிரை முகம் காட்டா புறம்காட்டும் பொய்முகம் பலவுண்டு குதிரை பொய்யில்லை. தன்வலிமை தானுணர்ந்து மனக்குதிரையை வெல்பவன் மனிதனில்லை தேவனவன் கொம்பு முளைத்த குதிரை வளர்க்கும் குரங்குகள் நாம் மனிதனே ஆகவில்லை தேவனாவது எப்போது....?   கோவிந்தா....கோவிந்தா எங்கும் பரம்பொருளாய் இருக்கின்ற போதுனக்கும் எல்லாமே நடக்கின்றது.   உனக்கு அள்ளிக் கொடுக்கின்ற பக்தர்களுக்கு மட்டுந்தான் உன் அருள்மழை பொழிகின்றது...   காலம் காலமாய்ப் பொருளில்லாத கூட்டம் உழைப்பைத்தான் கடவுளாக நினைக்கின்றது...   அது குடிக்கின்ற கஞ்சியிலும் மண் அள்ளிப் போடத்தான் மக்களாட்சி நடக்கின்றது.....   நாளெல்லாம் திருநாளாய் நீ பூரித்து நின்றாலும் ஏழைக்கு உனைக் காணவா முடிகின்றது.   எத்தனை அவதாரம் நீயெடுத்து வந்தாலும் அவனுக்குத் துயரோடு விடிகின்றது.....   இருக்கின்ற கூட்டமெல்லாம் சொர்க்கவாசல் காண உன் இருப்பிடம் மொய்க்கின்றது....   இல்லாத கூட்டம் சோற்றுக்கு வழி தேடி பிறர் வாசல் நிற்கின்றது.     புத்தாண்டே வருக....! புத்தாண்டு நமக்கிங்கு ஆங்கிலமா...தமிழ்நலமா...? தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதிங்கு தையா..சித்திரையா...? பாரடா நாம் மறத்தமிழர்… கூவித் தொண்டைதான் வலிக்கிறது... பழம்பெருமை பேசித்தான் நிகழ்காலம் நகர்கிறது..... நாளைக்கு நீ விட்டுச் செல்ல உன் செயல் என்ன இருக்கிறது.... கேள்விக்கு விடையின்றி வாழ்க்கை விடுகதையாய் முடிகிறது.. எந்த நாள் வந்தாலும் ஏழைக்கு மாற்றமென்ன இருக்கிறது.. நமக்குக் குடிப்பதற்கும் - ஊன் கடிப்பதற்கும் விடுமுறையாய் வருகிறது.... இந்தநாளும் இன்னொரு நாள்போல் ஏழைக்கிங்கே விடிகிறது.     யாருக்கும் வெட்கமில்லை........ இயேசுவின் வருகையாவது நடந்து விடும் போலிருக்கிறது இவருடைய வருகைதான் அதனிலும் மேலாய் இருக்கிறது. அத்தனை அறங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்ன தமிழினம் தன்மானமற்று நிழல்களின் கால்களில் விழுந்தெழுகிறது தன் தலைவனைத் தேடி. நல்லதொரு தலைவனின்றி இருக்கிறது தமிழ்நாடு அறநூல்கள் எந்த அறியாமையையும் விரட்டவில்லை பகுத்தறிவுப் பாசறைகள் இருள் மூடியே கிடக்கிறது. தன் திரைப்படம் வெளியாகும் போது மட்டும் தன் ரசிகனை உரசிப் பார்க்கத் தோன்றுகிறது தன் வளர்ச்சிக்காக. இனி தமிழெனச் சொல்ல கொஞ்சம் வெட்கப்படத்தான் வேண்டும். காலில் விழும் கலாச்சாரப் பெருமையை தமிழனுக்கு விட மனமில்லை போலும். பழம்பெருமை பேசியே பெருமை கொள்ளும் தமிழன் நடைமுறை வாழ்வியலில் எப்போது சுயமரியாதை கொள்ளப் போகிறான். நாளையத் தலைமுறைக்காவது அவன் கொஞ்சம் தன்மானத்தை விட்டு வைக்கட்டும்.   இனி எல்லாம்...... அற்புதம் நிகழ்ந்துவிட்டது தேவனுக்கு முன்னால் தேவதூதனின் வருகை நடந்துவிட்டது. இனியென்ன தமிழெனுக்கு எங்கும் வளமையே நிலவப்போகிறது ஏழைகள் என்ற சொல் இனி தமிழ்நாட்டில் இல்லை. அனைருக்கும் ஆன்மீக அருட்பிரசாதம் அருள் மழையாய் கொட்டப்போகிறது. தமிழனின் தலைவிதி இதுதான் என்றால் யார் மாற்றி எழுதமுடியும். திரையரங்குகள் இனி கோவிலாக்கப்படும் தீர்வுகள் அனைத்துக்கும் இனி தனினிய்ய்....வழி. அந்த ஒற்றையடிப் பாதையில் நீங்கள் பயணிக்கவில்லையானால்... உங்களை அந்த ஆண்டவனே காப்பாற்ற முடியாது.. கொள்கைஇருக்கிறது...ஆனால் என்னவென்று பிடிபடாமல் இமயமலை குகைக்குள் இருக்கிறது. ஆண்டவன் அருள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு விளங்கும். அனைத்து சாக்கடைகளும் இனி ஒன்றாய்க் கலக்கும். தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம் நல்லவை தவிர. அடபோங்கப்பா....... எங்கே! என் தலைவன்? தமிழகத்தின் தலைவனே! நீ இன்னும் பிறக்கவில்லையா? ... .பிறந்து எங்கோ இருந்தபோதும் முன்மொழிவார் இல்லையா.... இளமை ஏந்தும் இளைஞரில் எவரும் தலைவன் இல்லையா? திரைமுகத்தைத் தவிர உனக்குப் புதுமுகம் தேவையில்லையா? பொழுதானால் போராட்டம் மனம் சோம்பவில்லையா? ....... சோதனைக்கு ஒரு களமாய் தமிழகத்தில் தினம் தொல்லையா? ....... உன் இளமைக்கு எதிர்காலம் இங்கு அரசியலில் இல்லையா? நீயில்லாமல்விடியாது மாற்றத்தை விரும்பவில்லையா? தன்னிகரில்லாத் தலைவன் ஒருவன் இருந்தான் நம்பவில்லையா? காமராசன் என்ற பெயரெடுத்த புனிதன் படித்தபிள்ளையா? படிப்பின் உச்சம் தொட்ட உனக்கு அச்சம் மடமை இல்லையா? .மேய்ப்பரின்றி வாடும் எமக்குப் பாரம் சுமக்க யாரும் இல்லையா?     ஒரு கழுதையின் பிரகடனம்..... அருமைமிகு தமிழக வாக்காள பெருங்குடி மக்களே! அரசியலில் காசுயிருந்தால் ஒரு கழுதை கூட வெல்லலாமென இத்தனை நாள் எம்மைப் பெருமைப்படுத்தி வந்தீர்கள்.... மகிழ்ச்சி. வெற்றிடத்தை நிரப்ப யார் யாரோவெல்லாம் வருவது இதுவரை நீங்கள் எனக்கு வழங்கிவந்த பெருமைக்கு இழுக்குத்தான்..... என்ன செய்ய நான் மானயிழப்புக்கேட்டு மனு செய்ய முடியாதே..... ஆயினும்----- எல்லா இழிவையும் சுமக்கும் உங்களையெல்லாம் பார்க்கும்போது எம்மிலும் நீவிர் மேலென ஆனந்தக் கண்ணீர் வருகிறது. எம்மினம் போல் குணத்தில் நீங்களும் இருப்பதால்..... பொறுத்திருக்கிறேன்.... எம்மையும் நீங்கள் ஒருநாள் முதல்வராக்கி மகிழ்வீர்களென்று. அதற்கான தகுதி----- நானும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் அது போதாதா..? என்பொருட்டு யாரேனும் முதலீடு செய்தால்---- உங்களை துணைமுதல்வராக்குகிறேன் அப்புறமென்ன....   மீண்டும் நீ வரவேண்டும்   உன்கருப்புச்சட்டை இருக்கிறது... கைத்தடியும் இருக்கிறது... பகுத்தறியும் பண்புமட்டும் உன்தாடிபோல் நரைக்கிறது.   எல்லாக்கட்சி சுவரொட்டிகளிலும் நீ சடங்குபோல் ஒட்டப்படுகிறாய்.   கருப்புவர்ணத்தை காவி மறைப்பதை உன் அடியவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.   ஆரிய வீரியம் இங்கு சிவப்பாகிக் கொண்டிருக்கிறது.   சாமியார்களின் கைகளில்தான் சட்டங்கள் இருக்கிறது.   சாதிக்கட்சிகள் ஓட்டுக்காய் சந்தர்ப்பவாத கட்சிகளாய் கூவிக்கொண்டு இருக்கின்றன.   கடவுளை மறுப்பவர்களும் கடவுளாய் கொண்டாடப்படும் முரண் இங்கு நடக்கிறது.   பெண்விடுதலை ஆடைவரை வந்திருக்கிறது.     தொண்டர்கள் எப்போதும் துட்டுக்காய் அலைகிறார்கள்.   ஏழ்மை இன்னும் அவரவர் அடுப்படியிலதான் வசிக்கிறது.   இப்போதுதான் நீ தேவைப்படுகிறாய்.   தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றாய் கொஞசம் வலிக்கத்தான செய்கிறது.   முன்தோன்றிய மூத்தகுடிகள் என்று ஆறுதல் படுத்திக்கொள்கிறோம்.   வாய்ப்பிருந்தால் வந்துபோ... உன்போல் பலர் தேவை இன்று.     அஃறிணைக்கு இல்லை ஆசைகள்.....   குற்ற உணர்வில் தவிக்கும் மானிடர் போலே பிறவுயிர்கள் தவிப்பதில்லை.....   மரணம் எந்நொடி அதற்கென்றாலும் வாழும் வாழ்க்கையை சபிப்பதில்லை....   எவ்வுணர்வுயென்றாலும் உள்ளொன்று வைத்து புறத்தில் ஒரு முகமில்லை....   படைத்தவனிடம் காணிக்கை வைத்து வேண்டுதலால் அவனை வதைப்பதில்லை...   வாழும் வாழ்க்கையை அதன் போக்கிலே போகட்டுமென தன்போக்கிலே அவை வாழும்.....   ஏதோ ஒன்றிற்கு ஏங்கியே இந்த மானிடர் மடமையில் இறந்து பிறக்குது எந்நாளும்.     நிறம் மாறும் நிறங்கள்... மனிதன் இங்கு தெய்வமாவது வாழும் மகத்துவத்தால்.... தெய்வமிங்கு நேரில் வந்தது அவரவர் கவித் திறத்தால்.   உணரும் உன்னதம் உள்ளவர்க்கே தெய்வம் உள்ளத்தில் காட்சி தரும்.... நேரில் காட்சி என்பதெல்லாம் மனச்சித்திரம் வகுத்த நிறம்.   பகுத்தறிவுப் பகலவன் மறைந்த பின்னே உரத்த சிந்தனைகள் இங்கு உதிக்கவில்லை.   அவர் கைத்தடிகளால் இம்மண்ணில் ஒரு மாற்றமும் நடக்கவில்லை. கறுப்பு பழுப்பாவது ஒரு சித்தாந்த தோல்வி நிலை.   நிறங்களின் இயல்பு நிலை இது நிறம் மாறும் நேரமில்லை. அடிப்படை தெரியா உண்மைக்கு படைப்பவன் பலியில்லை.   காவிகள் வன்மமெங்கும் இரத்தச் சிவப்பாவது சரியில்லை ஆண்டவன் பெயரை வைத்து அறம் மீறுதல் தெய்வ வழியில்லை.   அன்பைச்சொல்ல வந்த மதங்களில் பிழையில்லை... கருத்துச்சுதந்திரம் இல்லாமல் கடவுளைத் தேடினால் அது மதமில்லை. வள்ளுவத்தை தினம் சொல்லுவோமே....... .{.....இசைப்பாடல்.......} என்ன நடக்குது நாட்டுல நான் சொல்லுறேன் வள்ளுவன் பாட்டுல..... சொல்ல நினைச்ச கருத்தையெல்லாம் சொல்லிமுடிச்சான் குறளில.... முப்பாலை ஆத்தி..ஆத்தி.. சூடு இன்னும் தணியல.... அறத்தைப் போட்டு வறுத்து எடுத்து நூலைப் போட்டோர் கணக்கில்ல.... உலகம் முழுதும் புரட்டிப் பார்த்தும் இது போல அமையல.... மொழிக்குக் கிடைச்ச பெருமை எதுவும் மனசத் திருத்த வழியில்ல.... அறத்தையெல்லாம் ஏழுசீருக்குள்ள சொல்லி முடிச்சான் நறுக்குல... குறளில் சொன்ன அறத்தினால மனுசப்பயல திருத்த முடியல..... வள்ளுவன் சொன்ன வழியிருந்தும் வாழ்க்கை போகுது இருளில.... வெளிச்சத்தை மூடிவச்சு முடிவெடுக்கத் தெரியல.... சிலைசெதுக்க உளிபோதும் சிலருக்கேன் புரியல.... தேவையில்லாத் தத்துவத்தை தேடுறான் பொது வெளியில..... வள்ளுவன் குறள்தானே அறமாகும் உலகில.... தினமும் ஒன்னை படிச்சுப்பாரு வாழ்க்கை போகும் தெளிவில.   சாம்பலில் பூக்கமாட்டேன்..... முகத்திரை கிழிந்து முகமிழந்து போனேன்... பாடு பொருளில்லாமல் பரம்பொருளாய் ஆனேன்.....   தேடுவெளி எங்கும் தெருப்புழுதியாகி.... ஆமைபோல என்னை உள் இழுத்துக்கொண்டேன்....   சித்தாந்தம் மனிதரிடை சிலுவையாக நாளும்.... பெருமையாக தூக்கிப்பிடிக்க பேதையாக நின்றேன்....   பெருமை மிக்க மனிதரெல்லாம் சுயம் இழக்கக் கண்டேன்.... துருப்பிடித்த போர்வாளுக்குத் தங்கப்பிடி எதற்கு நொந்தேன்....   வெந்து தணிந்த காடுபோல எனக்குள் நான் தணிந்தேன்.... அகத்திரையைக் கிழித்து நானும் சாம்பலை புறவெளியில் எறிந்தேன்.     உயர்வதில் இல்லை உயர்வு..... வெற்றிடத்தில் எதுவும் நிரம்பலாம் என்ற கொள்கையில் உள்ளது தமிழகம்....   கொள்கையற்ற கூட்டத்தின் பேராசையில் ஆணைகள் பிறப்பது சுயநலம்.....   மக்களுக்காக மக்களாட்சி என்பது இன்று சொல்அடுக்கில் வந்த கேவலம்.....   நாளும் ஒரு அறிவிப்பால் நமைச்சுற்றி நடக்குது தினம் போர்க்களம்.....   ஆட்சியை காக்க மந்தைகளுக்காக லகரத்தில் உயர்ந்தது சம்பளம்....   மாற்றமில்லாத தினவாழ்வில் பேருந்து கட்டணம் பெரும் அவலம்....   மக்கள் உயர வாய்ப்பில்லாமல் போனது இன்றைய காலத்தின் நிலவரம்....   விரலில் பட்ட மைத்துளியாலே விடாமல் துரத்துதே பெரும் துயரம்.   பசி............(1)   உலகை ஆளும் உயிர்ச்சொல் நீயே! உன்னை வணங்குகின்றேன். உனக்காகச் சிலை வடிக்க விண்கல்லைத் தேடுகின்றேன்.   படைத்தல் காத்தல் அழித்தல் எல்லாம் உன்னால் நடக்கிறது. உனக்கொரு கோவில் கட்டினால் என்ன எந்த சாமி தடுக்கிறது.?   இயங்கும் இயக்கம் உன்னால்தானே சரியாய் நடக்கிறது அடிமுடி அறியாச் சிவம் போலே உன் செயல் எங்கும் எடுப்பாயிருக்கிறது.   ஒவ்வொரு உயிரும் உலகில் வாழ நீயே உயிர்த்துடிப்பாய் இருக்கின்றாய் நீயில்லாமல் எதுவுமில்லை அறிந்தும் அறியாமல் இருக்கின்றாய்.   பசியென்று ஒன்று இல்லாவிட்டால் மனிதன் ஏன் உழைக்கின்றான்? ஒரு சாண் வயிற்றை நிரப்பத்தானே தினம் நாயாய் அலைகின்றான்.   உழைப்புமட்டும் இல்லாவிட்டால் உலகில் விடிவேது மாற்றமெதுவும் இல்லாமல் வெறும் மண்ணாய்ச் சுழலுமது.   பசி..............[2]   அறிவைத் தேடும் உணர்வைக்கூட உலகம் பசியென்று அழைக்கிறது...   வயிற்றில் பசியோடு எந்த உயிர்தான் அறவழி நடக்கிறது...   உயிர் உருவாகும் உடலின் பசி கூட வயிறு நிறைந்தால் நினைக்கிறது....   உடலின் பசியை வெல்லும் வலிமை உயிர்ப்பசிக்கு இருக்கிறது....   உடல் பசிக்காக உடலை விற்கும் வணிகம் வயிற்றுப் பசியால் நடக்கிறது....   வயிற்றுக்கு உணவு சரியாய் கிடைத்தால் பெண்மை ஏன் மானமிழக்கிறது....   பசியென்ற சிறு சொல்தானே உயிர்களைப் படுத்தி எடுக்கிறது.....     பசியோடு கொஞ்சம் வயிறு இரைந்தால் எல்லாம் பஞ்சாய்ப் பறக்கிறது...     குற்றங்களுக்கெல்லாம் உலகில் முதலாய் பசிதான் இருக்கிறது....   பசியில்லாத உலகம் இருந்தால் நினைத்தால் வியப்பாயிருக்கிறது......   எல்லா உயிரும் இயங்கும் இயக்கம் பசியே உன்னால் நடக்கிறது.....   உனக்கொரு கோவில் கட்டினால் என்ன? எந்த சாமி தடுக்கிறது?     பசி..........[3] அருந் தபசியென்றும் அருந்தப் பசியென்றும் அறியா உலகமிது....   தன்பசியை மட்டுமே முன்னிலைப்படுத்தி அறம் மீறி வாழும் அது.....   எச்சில் இலையில் மிஞ்சும் உணவு அளவின்றி மண்ணில் புதைகிறது.....   இரவு உணவு இல்லா நிலையில் நவீன பாரதம் பாதி உறங்கச் செல்கிறது.....   தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பமுடியாது அதற்கும் விலையொன்று இருக்கிறது...   தவறி வந்து மண்ணில் பிறந்த பாவத்திற்கு எத்தனை குரல்கள் தினம்..தினம் அழுகிறது.     பசி.........[4] வாழும் சூழலில் வாழ்க்கை இருந்தால் அது என்றும் இனிக்கிறது. மனம்போல் வாழ்க்கை எல்லோருக்குமா இந்த மண்ணில் வாய்க்கிறது. சாக்கடை நீரும் பசியைத் தணிக்கும் அவலம் நாட்டில் நடக்கிறது. உணவிற்காக விலங்கோடு போட்டிக்கு நிற்கும் சோகம் வாழ்வை சபிக்கிறது. குப்பை கூளம் ஏழைகள் உணவுக்கூடம் என்னதான் நடக்கிறது. கேள்விகளோடு கவிதை வடிக்க மட்டுமே என்னால் முடிகிறது.     மாற்று வேண்டும்.... மாற்றமும் வேண்டும்.   மக்களுக்கான பேருந்து... அதனால் மக்கள் வரும் இழப்பை பெற வேண்டும்.   மக்களுக்கான மதுக்கடை லாபம் யாருக்குத் தரவேண்டும்.   கட்டிய துணியையும் உருவிடும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும்.   ஓட்டு போட்ட பாவத்திற்கு மாற்று கோவணத் துணி வேண்டும்.     குடியரசு தினக் கேள்விகள்....... காந்திதேசமா..இல்லை காவிதேசமா....? மதச்சார்பு என்பது கவிழும் காகித ஓடமா....?   தேசிய நீரோட்டம் திசை மாறி ஓடுமா...? சுதந்திரம் பெற்றும் இன்னொரு விடுதலைப் போராட்டமா....?   ஒருங்கிணைந்த பாரதமென்பது வெளித்தோற்ற வேடமா....? மாநிலம் வளர்ச்சி காண்பது மத்திய அரசு விதித்த சாபமா...?   வளரும் நாட்டிலே இத்தனை பேதமா....? வேற்றுமையில் ஒற்றுமை நூல் அறுந்த பட்டமா...?   வளர்ச்சி என்பது பணம் படைத்தவருக்கு மட்டுமா...? ஏழைகளில் வியர்வையில் தேசிய வளர்ச்சி எட்டுமா....?   கடன்தள்ளுபடி பண முதலைகளுக்கு மட்டுமா....? ஏழை விவசாயி சாவது நாட்டுக்கு நட்டமா...?   கையில் வைத்த மை அழிவின் சின்னமா....? சர்வதிகார இருளிலே குடியரசு விடியுமா....? எங்களைப் பற்றி     மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:   மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர்.   ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:   ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம்.   தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:   தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை.   ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள்.   சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை.   எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது.   சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?   சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.   நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம்.   அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம்.   எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.   தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?   கூடாது.   ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும்.   அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும்.   அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது.   வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும்.   பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம்.   FreeTamilEbooks.com   இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும்.   PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT   இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம்.   அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம்.   இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?   நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும்.   அவ்வளவுதான்!   மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:   1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல்   விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.   இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?   யாருமில்லை.   இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.   மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும்.   இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?   ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம்.   அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது.   தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.   நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?   உள்ளது.   பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன.   1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net   எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?   இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும்.   <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.   இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்   உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.   எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.   இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம்.   http://creativecommons.org/licenses/   நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.   e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி.   மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள்.   முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள்.   கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.   ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?   அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?   ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.   தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.   எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?   நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம்.   1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/   2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்   http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.   மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –     இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook   A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/ எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.   https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum   நன்றி !