[] [சிந்தனைப் புகார்] சிந்தனைப் புகார் ராஜ் கே.ராஜேந்திரன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். This book was produced using PressBooks.com. Contents - சிந்தனைப் புகார் - முகவுரை - 1. 1. சிந்தனை நமஸ்காரம் - 2. 2. சிந்தனை சுபச்சாரம் - 3. 3. சிந்தனை சம்சாரம் - 4. 4. சிந்தனை கீதாச்சாரம் - 5. 5. சிந்தனை விபச்சாரம் - 6. 6. சிந்தனை மின்சாரம் - 7. 7. சிந்தனை நடைச்சாரம் - 8. 8. சிந்தனை கடைச்சாரம் - FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 சிந்தனைப் புகார் [sinthanai-pugar] சிந்தனை சிகிச்சை என்ற தலைப்பில் தமிழ்த்தோட்டம் (wwww.tamilthottam.in) இணையதளத்தில் வெளிவந்த கட்டுரரைகள். ஆசிரியர் – ராஜ் கே.ராஜேந்திரன் rajendran.kmu@gmail.com மின்னூலாக்கம் – ராஜ் கே.ராஜேந்திரன் மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com   உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்சு . எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   2 முகவுரை  அன்புடையீர் !  வணக்கம். சிந்தனைப் புகார் என்ற இந்த மின்னூல் வழியாக உங்களோடு சிந்தனை பகிர்வதில் நான் மகிழ்கிறேன்.  மற்றவர் மகிழ்வை என் மகிழ்வாக எண்ணுபவன் நான். ஆகவே தயக்கம் இல்லாமல் இம்மின்னூலை படிக்கலாம்.  அதற்கு இரு பார்வை கொண்டு அழைக்கிறேன். இந்நூல் சிந்தனை சிகிச்சை என்ற தலைப்பில் தமிழ்த்தோட்டம் (wwww.tamilthottam.in) இணையதளத்தில் வெளிவந்தவைகள். இந்நூலை சுற்றுசூழலாகிய அன்னை, சுற்றத்தாராகிய நீங்கள், இறைவன், என்னை பெற்ற தந்தை குழந்தை சாமி, என் அன்புக்குரிய மனைவி ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். இதை வெளியிட காரணமான தமிழ்த்தோட்ட அன்பர்கள், மதிப்பிற்குரிய யூஜின் புரூஸ், கவியருவி ம. ரமேஷ், கலை நிலா, Free Tamil e-books இணையதாரர்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். நான் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் பணிப்புரிகிறேன். இந்நூலின் நோக்கம் சமுதாய கண்ணாடியாக இது உருவாக வேண்டும். இந்நூலின் கருத்துகளை நான் சர்வாதிகாரமாக பயன்படுத்த விரும்பவில்லை.  குறைகளை கவனியுங்கள்.  தங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.   நன்றியுடன் ராஜ்-கே ராஜேந்திரன் rajendran.kmu@gmail.com [pressbooks.com] 1 1. சிந்தனை நமஸ்காரம் மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும் . மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும் . மருத்துவத்திற்குநோயாளி , எதிரிஅல்ல , நோய்தான்எதிரி .   நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல ,   துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள் .   அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட ,   அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை. திறமையை காட்ட   இயலுமா ?   திறமையை   காட்டுங்கள்நன்மைக்கு   உதவி                தன்னிடமென்று உள்ள திறமைகளை , உழைப்புக்கு பயன்படுத்தாத ஊதாரி , சோம்பேறி இவர்கள் எல்லாம் மெத்தன வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறார்கள் .              இதனால் எல்லாம் , நம் சம்பாதிக்கும் சுமை அதிகமாகிறது .   சமுதாயத்திற்கு ஏதாவது , ஒரு வழியலக்கூட உதவாமல் , பிச்சை கேட்கிறவர்களுக்குக்கூட உதவுகிறார்கள் .            செய்கிறவனையே செய்ய சொல்றதா என்பார்கள் .              வேலை செய்து , குறைந்த சம்பளம் வாங்குகிறவர்களுக்கு , ரொம்ப முடியாதபட்சத்தில் , அவர்கள் உதவி கேட்டா உதவி செய்கிறோமா ?               உழைக்காதவர்களை எல்லாம் , விட்டுவிடுகிறார்கள் .                 குறைந்த சம்பளம் வாங்குகிறவர்கள் , உழைக்கமாட்டேன் என்று சொல்கிறார்களா ?  உழைப்பே உயர்வு அல்லவா ? இவ்வுயர்வை பிடித்திருப்பவர்கள் , இக்கட்டான பரிதாப நிலையில் உதவி செய்ய கணக்கு பார்க்கனுமா ?              பிச்சை கேட்கவும் , அடுத்தவர்களை அடிச்சி , புடிச்சி ஊதாரிதனமாகவும் , சோம்பேறியாகவும் மெத்தன வாழ்க்கை வாழ ஏய்ப்பவர்களுக்கு இவ்வுலகத்தில் வாய்ப்பு கிடைக்கிறது .                 வெள்ளம்போல நம் அரும் முயற்சி பாழாகிறது . ஒரு சொம்பு தண்ணீர் , உழைப்பவருக்கு கொடுக்க , முன்ன பின்ன பார்க்கணுமா ?                ஜாதி வித்தியாசம் பார்க்கிறோம் , உழைப்புல சம்பள வித்தியாசம் எப்படி பார்க்கக்கூடாது என்றால்   கவலைக்கிடமான நிலையில் , உள்ள உழைப்பவர்களுக்கு   சாக்கு , போக்கு சொல்லி ஆறுதல் அளிக்க தடையாய் இருக்கக்கூடாது .   உழைக்கிறவர்கள் , காட்டும் உழைப்பு , தியாகமாக இருக்க வேண்டும் .  அந்த தியாகம் , முதலில் அவர்களுக்கு , திறனை கொடுக்க அமைய வேண்டும் .  சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் அல்லவா ?  பிறகு சிறு குழந்தை முதல் , சிறுவர் , சிறுமியர் , வயோதிகர் , நோயாளிகள் இவர்களுக்கு இந்த உழைப்பின் தியாகம் உழைப்பவர்களால் பயன்ப்படுத்தப்பட வேண்டும் .   ஆனால் , ஊதாரிக்கும் , சோம்பேறிக்கும் , உழைப்பவர்களால் கொடுக்கப்படும் உழைப்பின் தியாகம் பயன்ப்படுத்தப்படக்கூடாது .   ஆனால் இவர்களுக்கு , வந்த வாழ்வுக்கூட , குறைந்த சம்பளம் வாங்குகிற உழைப்பாளிகளின் அடிப்படை , பூர்த்தியாகவில்லை என்றால் என்ன செய்வது ? சும்மா கொடுத்த மாட்டை பல்லு பார்த்த கதையா ?   சேரி , பரிதாபமா இருக்கு அப்படின்னு ஒருத்தருக்கு சும்மா ( இனாமா ) மாட்டை கொடுத்தா இது இளமையாய் இல்லை என்று மாட்டின் பல்லை கவனித்து சண்டைக்கு வந்த நிலைமையை பாருங்க . கொடுத்த மாடு இளங்கன்றை ஈனாதா ?     இதுபோலத்தான் உழைக்கிறவனையே ஒரு நேரத்திலாவது அனுசரிக்காம     குறைத்து மதிப்பிட்டு கொண்டே   இருந்தால் எப்படி ?          பிச்சைக்காரர் ஒன்றுமே செய்ய முடியாதா ?   அவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி அதன் வளர்ச்சிக்கு உதவி இருப்பாறா ?  அல்லது சிறிது கழிவை எருவாக்கியிருப்பாறா ?   இந்த நன்மையெல்லாம் தெரிந்து கொள்ளும் பிச்சையை அந்த பிச்சைக்காரருக்கு அளித்திருக்கிறோமா ? தன் வருமானத்தின் ஒரு சிரிதளதாவது பிச்சைக்காரர் சுற்றுச்சூழல் நன்மைக்கு விரதமிருந்து அந்த வருமானத்தை செலவழித்திருப்பாறா ?    எங்க நமக்கே அந்த விழிப்புணர்வு இல்ல அப்பறம் எப்படி ? இறைவன் திருமேனி என்றும் , இறைவனின் சரீரமாகிய சபையின் அங்கத்தினர் என்றும் மனிதரும் பங்குபெறும் அன்பு திருமேனி ஆற்றும் தொண்டுகள் அல்லது அன்பு சரீரமாகிய சபையின் அங்கமான தொண்டுகள் என்பது கூட்டு சக்தியின் ஒருங்கிணைப்புக்கு எப்படி பொருந்துகிறது .  இறைவன் அன்பாகவே இருக்கிறார் .     சுபத்தின் சாரம் சுபச்சாரம்   ஆரோக்கியத்தின் சாரம் – நல்ல உணவு , நல்ல உடை , நல்ல உறக்கம் , நல்ல உழைப்பு , நல்ல எண்ணம் , நல்ல செயல்கள் போன்றவைகளின் சுபம்   தாய்கள் மற்றும் தந்தைகள்   குடும்ப கட்டுப்பாடு வேண்டும் . நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று நடைமுறைப்படுத்த அரசாங்கம் மக்களிடம் விரும்புகிறது .   மக்கள் எள்ளுனா எண்ணையா நிற்கிறது போல் அரசின் விருப்பத்திற்கு அதிக ஈடுபாடோடு மக்கள் இருப்பார்களா ? என்ன ? ஒருவர் நான்கு கணவரோ , நான்கு மனைவியோ என்று ஒன்றுக்கு மேற்ப்பட்டவரோடு   வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு ஒரு வாரிசோ , இரண்டு வாரிசோ என்று   பெற்றுக்கொண்டு மக்கள் நெருக்கதை குறைக்க வழி கண்டார்களானால் அது   விபச்சாரமா ? சுபச்சாரமா ?   ஒருத்தருக்கு ஒருத்தர் என்று ஒரு கணவனோ , ஒரு மனைவியோ உள்ளவர்கள் 10 , 16   என்று மக்கள் நெருக்கத்திற்கு காரணமாக வாரிசு பெற்றுக்கொண்டால்   அது விபச்சாரமா ? சுபச்சாரமா ? நல்ல குணங்களின் திருமணம் – அன்பே இறைவன் , அன்பே சிவன் , ஏக இறைவன் அன்பானவர் .   இத்தகைய அன்பு திருமணத்திற்கு . ஆண் பெண்கள் வேண்டும் .   இறைவனுக்கு பல மனைவி ஆம் .   பரிசுத்த மணவாளனுக்கு பல மணவாட்டி .   கடுமையான குணமான கோபம் என்ற   ஆணுக்கு பல மனைவியாக இரக்கம் என்ற மண பெண்ணும் , தயவு என்ற மண பெண்ணும் ,   நீடிய பொறுமை என்ற மண பெண்ணும் என்று பல நற்குணங்களாகிய பல பெண்கள் கோபம்   என்ற ஆணுக்கு நல்ல அற துணைவிகளான பல மனைவிகள் உண்டு . தவறு நிகழுமானால் அதை சரி செய்ய அக்கறை , இரக்கம் போன்ற நற்குணங்களுடன் கூடிய பொறுப்புள்ள நல்ல   கோபம் சேர்ந்து சரியானதை நிகழுத்தும்படி செயல்படும் . அந்த கோபம் தணிந்து   அமைதியையும் , சமாதானத்தியும் , மகிழ்ச்சியையும் பெருகச்செய்யும் .   ஒழுங்கு குன்றிய சமுதாயத்தை   ஒழுங்கு படுத்த பொறுப்பும் , இரக்கமும் , கவனிப்போடு கூடிய நல்ல   கோபம்கொண்டவர்களாக சிவன் , முருகன் , முகமது நபி , இயேசு , அம்பேத்கார் ,   காந்தி , புத்தர் , சீனிவாச ராமனுஜன் , தாமஸ் ஆல்வாய் எடிசன் , அகத்தியர் போன்ற பலர் பங்களித்தனர் .   சொத்து வாரிசு , அரசியல் வாரிசு ,   இசை வாரிசு , ஆன்மீக வாரிசு என்பதன் பின்னணி என்ன ? இந்த வாரிசுகள் யாருக்கு பிறந்தவர்கள் ? எப்படி பிறந்தவர்கள் ? எப்படி வாரிசு .   இறைவனை தாய் , தந்தை , மகன் , மகள் , தாத்தா , சகோதரன் , சகோதரி , மனைவி , கணவன் என்றால் எப்படி   கொச்சைப்படுத்தப்படுகிறது ? வாரிசு என்றால் எந்தவகையில் உறவு ?   நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நாட்டுக்கு நீ என்ன செய்தாய் ? என்றார்   ஒரு மேதை . பிறருக்கு என்ன செய்தாய் ? அதை எனக்கே செய்தீர்கள் ? பிற   மதங்கள் எனக்கு என்ன நன்மை செய்தது என்பதைவிட பிற மதங்களுக்கு நீ எந்த   நன்மை செய்தாய் ?   இறைவனே உமது நாமத்தால் என்னென்ன   செய்தோம் என்கிறாயே ? உனது நாமம் நிலுவையில் உள்ளதா ? உனது நாமமான உன்   முயற்சி , உன் செயல்பாடு பிறருக்கு செய்வதில் நிலுவையில் உள்ளதா ?   அப்படியென்றால் நீ லாபம் அடைந்தாயா ? இல்லை உன் இறைவன் லாபம் அடைந்தாரா ?   பிறர் லாபம் அடைந்தனரா ?   நீ லாபம் அடையவில்லை எனில் உனக்கு உன் இறைவனும் , பிறரும் கடன் பட்டு உள்ளனர் ? அவர்கள் உனக்கு லாபம் தரவேண்டியுள்ளது .   குழந்தையானது நன்கு பேசுவதற்கு கடனாளியாக உள்ளது . ஆனால் புரிந்து கொள்வதில் லாபம் அடையும் பொழுது பேசுகிறது .   நீ இன்னும் கடனாளியா ? எபொழுது லாபம் அடைவாய் . நீ இன்னும் அன்புக்கு கடனாளியா ? எப்பொழுது அன்பு லாபம் அடையும் . எதுவரை குழந்தையாய் இருப்பாய் பேசப்படாமல் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை   சுமந்தார் என்றும் , முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும்   உள்ளதே . தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர் . விஞ்ஞானிகள் நல்ல   கண்டுபிடிப்பை சுமந்தனர் . இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை   என்னவென்றால் .   மனதிற்கென்று அன்பின்   பாடுகள்   தான் . அவற்றில்   சில   என்னன்னா .   இடர் ( பாடு ),   செயல் ( பாடு ),   உடன் ( பாடு )   தீமைஎன்பது   இடர்பாடு ,   நல்ல   செயல்பாடுஎன்பது   தீமையின்   மரணம் .   உடன்பாடு   என்பது   தீமை   நன்மையாக   உயிர்பெறுதல்   உதாரணத்திக்கு   கழிவு   என்பது   இடர்பாடு ,   எருவாகுதல்     நல்லசெயல்பாடு   தாவரம்   செழிபடைதல்உடன்பாடு   தரவு தரவு என்பது அடிப்படை தகவல்கள் தருவது தரவு   பார்ப்பதில் வேதனையான தரவுகள் பொறுமையால் நன்மை கைகூட வேண்டிய நேரத்திற்குள் அவசரபடுத்தி பொறுமையை தடுக்கும் தொந்(தரவு).   சுறுசுறுப்பால் நன்மை   கைகூட வேண்டிய நேரத்திற்குள் தாமதப்படுத்தி சோம்பலை கொடுக்கும்   தொந்(தரவு). தரவு பார்ப்பதில் மகிழ்ச்சியான தரவுகள் நன்மையை அதிகரிக்க தீமையை குறைப்பதற்கு அதிகமாய் செலவிடும் நல்ல ஊதாரிதனத்தின் ஆ(தரவு). நன்மைக்கு சீரமைக்க தேவையான விவேகத்தை செலவிடாத கெட்ட ஊதாரி தொந்(தரவி)ன் ஆ(தரவு).   தோஷம்   நமக்கு   தோஷம் நீங்க வேண்டும். ஜல(தோஷம்)   அடிக்கடி வருவது நின்றால்தான் நிம்மதி நம்மிடையே கெட்ட பழக்க(தோஷம்) அறவே அகன்றால்தான் நல்ல நிம்மதியான நல்ல வாழ்வு உண்டு. ராமர் – கர்ணன்   ராமர் குறிபார்த்து அம்பு எய்து எதிர்ப்பை வீழ்த்துவதில் வல்லவர்.   அதுபோல் நாம் தீமையின் கேள்விகுறிபார்த்து அன்பை எய்து தீமையின் எதிர்ப்பை வீழ்த்தும் வல்லமை பதிலை பெறவேண்டும்.   இது ராமரின் மன போராட்ட அம்பு எய்தும் வல்லமையாகும்.   இரும்பு கத்தியை அம்பாக எய்துவதுபோல்.   கரும்பு புத்தியை அன்பாக எய்தவேண்டும்.   அரச வாழ்கை வாழ்ந்த ராமன். காட்டிலே வாழ்வதையும் மனதிலே எதிர்கொண்டவர்.   நற்குணத்தின்   அம்பை   காட்டிலே   வாழ்வதற்கு   எய்தியவர். கர்ணன்   மனித உடல் இறந்ததற்கு மதிப்பு மரியாதை செலுத்துவார்கள்.   ஆனால் உயிருடன் மனிதன் இருக்கும்பொழுதே மனித உடல் நன்மை செய்யும் மதிப்பை பெற்றிருந்தால் இறப்பதில் எந்த கடனும் இல்லை. ஆனால் கர்ணனை வெல்ல அவன் உடல் இறக்கவேண்டும். நன்மை செய்வதுதான் அந்த வெற்றி.   கர்ணன்   உடல் இறப்பதற்கு அவர் அதற்கான மதிப்பை கொடுக்க வேண்டும் அதற்கு   தர்மமும் ,   புண்ணியமும் ,   அன்பும் கடன் நிலுவையில் அவருக்கு இருந்ததை ,   பிறருக்கு கொடுக்க வேண்டி இருந்தது.   ஆகவே இவ் உலகில் பிறந்த நாம் அனைவரும் ,   மனித உடலின் இறப்பிற்கான சாதனை   என்னவென்றால் ,   தர்மம் ,   புண்ணியம் ,   அன்பு போன்ற நன்மைகளுக்கு உண்டான பங்கை   செலுத்தியிருந்தால் ,   மனித உடல் இறப்பின் மதிப்பை பெற்று உடல் பிறந்த   நோக்கம் வெற்றிபெறுகிறது.   உடலின் இரத்தம் வேலை செய்ய சக்தி அளிக்கிறது. மனதின் இரத்தம் அன்பு செய்ய   சக்தி அளிக்கிறது.   இது கர்ணன் இறந்து அவரின் அன்பு இரத்தம் மற்றவரிடத்தில்   வாழும் சக்திபெறுவதைபோல். நம் இறப்பு அன்பின் சக்தியை பிறருக்கு   தந்திடவேண்டும். அறிந்த   நற்பண்பை வெளிப்படுத்தவேண்டும். கர்ணன் அந்த நற்பண்பை (உயிர் தரும்   இரத்தமாக) பிறருக்கு தந்ததால். அவர் இறப்பு வெற்றிபெற்றது.   அறிந்த நற்பண்பை வெளிப்படுத்தவேண்டும்.   அறியாத நற்பண்பை அறிந்திடவேண்டும். படம்   ராமர் வில்லை வளைத்து அம்பை எய்துவார். ராமர் சொல்லை அழைத்தும் அன்பை எய்துவார். ஆமாம் நீங்கள் படம் பார்த்தீர்களா.   இப்பத்தான் படம் பார்ப்பது எளிதாக இருக்கிறதே. என்ன சொல்றீங்க ,   ஆமாம் கலப்(படம்) பார்ப்பது எங்கும் எளிதாக இருக்கிறது. தீங்குக்காக கலக்காதீங்க , நல்லதற்காக கலந்திடுவோம்   ,   கலக்கலா இருப்போம்.   பாத்திரம் விலக்குவது ஆண்களுக்கு எப்படி   நல்ல கதாப்(பாத்திரம்) விளக்குவது ஆண்களுக்கு வேண்டாமா   ராமனாக செயல்படுங்கள்   சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தை ஆராய்ந்து கண்டறிந்தார். இந்த ராமனை போல் மனித நல்வாழ்வு   விஞ்ஞானத்தை ஆராயிந்து சந்தோசத்தை கண்டறிவோம்.   தெனாலிராமன் வன்முறை கொண்டு கருத்தை புரியவைக்காமல் புத்தி தந்திரத்தை கொண்டு கருத்தை புரியவைக்கும் புரட்சி செய்தார். இந்த ராமனைப்போல புத்தி தந்திராத்தால் எளிமையாக வாழ்க்கை சோதனைகள் மக்கள் எதிர்கொள்ள எளிமை புத்தி விருப்ப புரட்சி செய்வோம்.   அரச   குமாரரான ராமன் காட்டில்   16   ஆண்டுகள் எளிமை வாழ்கை வாழ்ந்தார். ஒரு உயர்   பதவி அல்லது அதிகாரத்தில் இருந்தவர் இச்சோதனையை எதிர்கொண்டு ஈகோவை   வென்றார்.தற்காலத்தில் மக்கள் குடும்பங்களுக்கிடையே   ஈகோ பற்றிக்கொண்டு   நிம்மதி இல்லாமல் இருகின்றனர். ஆணின் கண்ணில் தெரியும் திருமண எதிர்ப்பார்ப்பு –   மண பெண்ணின் கண் , முக்கு , உடல் அமைப்பு போன்றவை .   இறைவனின் மன கண்ணில் தெரியும் திருமண எதிர்ப்பார்ப்பு –   மன பெண்ணின் கல்வி , வீரம் , செல்வம் போன்றவை .   கல்விக்கு சரஸ்வதி என்றும் , செல்வத்திற்கு லெட்சுமி , வீரத்திற்கு பார்வதி என்றும் ஏன் சொல்லப்படுகிறது ? முட்டாள் இறைவன் அழைக்கிறார் . ஆம் ஞானமாய் நடவாமையிலே முட்டாளாய் இருக்கிற இறைவன்அழைக்கிறார்   மேகம் மரங்களின் மனதை மகிழ்ச்சியால் நனைக்க மழையாய் இறங்க உத்தரவு கேட்கிறது அதற்கு மரங்கள் மேகத்தை பொறு என்றும்   மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமமாக என்னிடம் பகிர வில்லை .   ஆம் . மரங்கலாகிய என்னையும் சமமாக கருதவில்லையே   மேகமே , நீ இறங்க வழியை தர வலி உணரட்டும் மனிதர்கள் . நலனை கொள்முதல் ஆண்டாக இருக்கட்டும் , கொல் முதல் ஆண்டு வேண்டாம் .   எத்தனை வெள்ளி விழா ஆண்டு , பொன் விழா ஆண்டு , வள்ளுவன் ஆண்டு , காலாண்டு , அரையாண்டு கணக்கு எப்படி ?     மனதில்   வரைந்தேன்   பிள்ளையாரை     மனதில்   வரைந்தேன்   பிள்ளையாரை என்   மனதில்   வளர்ந்திடு   வளர்ந்திடு   எல்லையில்லா   இறைவா   எனக்கு   பிள்ளையானால்   என்   தொல்லைகளோ   நீங்கிவிடும்   (   புத்தியுள்ள   இரக்கத்தை   பெற்றெடுத்தால் ,   பெற்றெடுத்த   இரக்கம்   நமக்கு   பிள்ளையாகவும் , நல்லவைகளுக்கு   நாம்   பெற்றோராகவும்   இருப்போம் .   இரக்கமாக     உள்ளவர்   இறைவன் ,   நாம்அவரையே   பெற்றெடுக்கிறோம்   )   வேப்பில்லையும்   பலனளிக்கும்   நல்ல   தென்னம்   பிள்ளையும்   பலனளிக்கும் தெய்வபிள்ளையே   நீர்   என்னை   மணக்கச்   செய்யும்   நல்லவனாக   மணக்கச்   செய்யும்   (   உள்ளத்தின்   திருமணம் – சுகா ( தார )   மனம்   ) பொன்னாங்கண்ணியும்   பலனளிக்கும்   கரிசலாங்கண்ணியும்   பலனளிக்கும் சுத்த   கன்னியை   மணக்கச்   செய்ய   தாய்   போன்ற   கன்னியை   நீ   தேடினாய்   ஆற்றவும்   தேற்றவும்   சொந்தம்   கொள்ள   ஆற்றும்   கரையில்   நீ   அமர்ந்தாய்   அன்பான ( தாய் )   உள்ளதை   என்னில்   கண்டு   இந்த   சாயலின்   கன்னி   என்னையென்று   மணந்திடுவாய்   என்னில்   கலந்திடுவாய்   (   அன்பான ( தாய் ),   பண்புள்ள ( தாய் ),   அருமையுள்ள ( தாய் ),   பொறுமையுள்ள ( தாய் ),    ஒழுங்குள்ள ( தாய் ) போன்றவைகள்   உள்ளத்தில்   அமைந்தால்   பிறருக்கு     பலனளிக்கும் .) எலிகள்   சுற்றி   சுற்றி   விளையாடும்   என்   எளிமை   உன்னைச்   சுற்றி   விளைந்திடும்   (   நல்லவைகளை   கல்லாமை   இல்லாமை   என்பது   எளிமை ,   நல்லவைகளை     கற்றவர்கள்   ஒரு   மனதாகசேர்ந்திருப்பது   இனிமையான   எளிமை )   கொலுக்கட்டை   போல்   பிறருக்கு   வீக்கம்   என்றால்   அதன்   தேக்கம்   அறிந்து   சரி   செய்வோம்   கற்களால்   வீடு   கட்டினாலும்   நல்   சொற்களால்   என்   உள்ளம்   உயிராகும்   தோப்பு   கரணம்   தொப்பையின்   குப்பை   குறையும்   நல்   தோப்புக்கு   காரணம்   நானுமறிந்து   சுற்றுபுறத்தாருக்கு   நல்   உணவை   பயிருடுவேன்   பயிரிட்டு   தந்திடுவேன்   ( உள்ளத்தின் உணவுகளான   நல்ல   புத்தியுள்ள   பண்பு   என்ற   உணவு ,   நல்ல   புத்தியுள்ள   சுகாதாரம்    என்றஉணவு ) அருகம்புல்   நல்   மருந்தாகும்   உயிரை   அறுக்கும்   புல்லும்   வேண்டாமே   புல்   (Full) போதையை   உதறிடும்   மனமருந்து   எனக்கு   போதும் .   (   கெட்ட   ஆணவம் ,   கெட்ட   பொறாமை ,   கெட்ட   வைராக்கியம் ,   கெட்ட   கோபம்     போன்ற   போதைகள் )   இறைவனுக்கு   தோடு   உண்டு   தெய்வபிள்ளையான   எனக்கு   தோடு   உண்டு   நல்லவைகளை   கேட்ப ( தோடு ) –   தீமைகளை   மறுப்ப ( தோடு )   விருப்பத் ( தோடு )   அன்பை   பெறுதல்   நலமளிக்கும்   நல்ல   இதமளிக்கும் .       தேன் மது நமது முகமது   தேன் சிந்தித்தேன் முகமது வாழ்க்கை தேன் நினைத்தேன் முகமது வார்த்தை தேன் செய்தேன் முகமது விருப்பம் தேன் மகிழ்ந்தேன் முகமது அன்பு   அன்பு   கரங்கள்   நேசமாட்சி பண்பு   கரங்கள்   பாசமாட்சி   தாங்கும்   அன்பு   ஏங்கும்   பண்பு உணர்வில்   கலந்தாட்சி   அன்பேதான் நிம்மதி   நல் வாழ்க்கைக்கு   சம்மதி   –   அன்பு அம்மான்னு   சொன்னாலும்   அப்பான்னு சொன்னாலும்   அழுகையை நிறுத்துவார்   சலுகைக்கு குறையில்லை   லாசர் போல்   இறந்தாலும்   நல்லதை துறந்தாலும்   சொட்டு சொட்டு   இரத்தத்தால்   கண்ணீர் விட்டு   திருத்துவார்   –   அன்பு எந்தன்   இயேசு பிரியமே   சுத்தமான   அன்பே   சாக்கடையின்   நாற்றமா   மலர்களின் தோட்டமா   நாற்றத்தை மாற்றோவோம்   தூய்மையை   நுகருவோம்   தீமையின் தோற்றமா   ஊறுவது அசிங்கமா   நெருங்கி சென்று   நெருக்கத்தை   கொடுப்போம்   சுத்திகரிப்பை   செய்வோம்   சுத்தமாக   மாற்றுவோம்   –   அன்பு ராஜ   ராஜா   ராஜ   ராஜா   இயேசு   ராஜா மலரச்செய்வேன்   மணக்கச்   செய்வோம் சொந்தமாய்   அழைத்திட   என்னையும்   தருகின்றேன்   ( தந்துவிட்டேன் ) ஒப்பந்தம்   செய்திடுவோம்   ( செய்து   விட்டோம் ) ஏற்றுகொண்ட   ஆண்டவரே   –  ராஜ   இயேசுனு   அழைத்திட   இறை ( இரை ) யே   நீர்   பேசுமையா என்னை   மீட்க இறை ( இரை ) வேணும் நலம்பெற   பேசுமையா   – ராஜ ராஜானு   அழைத்திட   அபிசேகம்   செய்யுமய்யா பாவம்   வெல்ல   அபிசேகியும் ராஜாவா   நானாக   ராஜாதி   ராஜா   நீரே   – ராஜ   அப்பானு   அழைத்திட   தந்தையாக   தாருமையா உயிரும் ,   உயிர்ப்பும்   தாரும் நித்தம்   வாழ   உயிர்பேச்சு சத்தம்   கேளா   விபத்துக்கு   இரத்தமாக   உயிர்ப்பு   தாரும்   – ராஜ   அம்மானு   அழைத்திட   தாயாக   சுமந்திடய்யா என்   பாவம்   சுமந்துவிடும்   வளர்த்திடும்   ஞானப்பாலில் வருவேனே   நற்பெயரில்   – ராஜ   மகனேனு   அழைத்திட உம்   அன்பை   பெற்றெடுப்பேன் விருப்பத்தை   சம்பாதிப்பேன் ஊரெங்கும்   மலரச்செய்வேன்   – ராஜ   மணவாளன்   என்றிட   பரிசுத்தம்   மணக்கச்   செய்வேன் பரிசுத்தம்   நானாவேன்   பரிசுத்தர்   நீரன்றோ உலகெங்கும்   மணக்கவேண்டும்   – ராஜ   ஆசாரியனாக்கிட   நீர்   ஆசாரியாயிருந்து   திருச்சட்டங்களை   கோர்த்து   வேதங்களை   தந்தீர்   – ராஜ   குணவாளனாக்கிட   மனச்சத்தங்களை   கேட்டு   குணசுத்தங்களைச்   செய்தீர்   உம்   சத்தங்கள்   அடங்கிய   நூல்கள்   வேண்டும்   – ராஜ   சிவன் – பார்வதி   பணிவிடை குணத்தை அசட்டைபண்ணும் ஆளுமை திறன் மட்டும் இருந்தால் ஆணவம்   பிடித்தவர் ஆவார். உள்ளத்தால் ஆணவம் பிடித்தவர் ஆணாகவோ ,   பெண்ணாகவோ   இருக்கலாம். ஆளுமை குணத்தில் அசட்டையாக இருந்து பணிவிடை குணம் மட்டும் இருந்தால் மலடு   ஆவார். கருவுக்கு காரணம் ஆகாததைபோல எந்த ஒரு செயலையும் சரிவர செய்ய   இயலாது.   உள்ளத்தால் இந்த மலடின் குணம் ஆணாகவோ ,   பெண்ணாகவோ இருக்கலாம்.   நல்ல ஆளுமை திறனும் ,   நல்ல பணிவிடையும் ஆன நற்பண்புகள் ஒரு மனமாக ஒன்று   சேரும்போழுதுதான் இருவருக்கும் மகிழ்ச்சியான நல்ல செயல் நடைபெறும். ஒரு செயலை செய்ய தெரிந்த ஆளுமையும் அதை செயல்படுதிடும் பணிவிடையும் ஒன்று   சேரும்போழுதுதான் அச்செயலை செய்யமுடியும். ஆளுமை ஒரு காரியத்துக்கு உயிர்   அணு   போன்றது.   பணிவிடை ஒரு காரியத்துக்கு உயிரை தாங்கக் கூடிய கருமுட்டை போன்றது. இவை உறவு பெறும்பொழுது காரியம் பெற்றடுக்கப்படுகிறது. இறைவன் தமது சாயலாக மனிதனை உருவாக்கினார்.   அம்மனிதனை ஆணும் ,   பெண்ணுமாக   ஒரு குடும்பமாக உருவாக்கிய இறைச்சாயல் என்பது ஆண்மை ,   பெண்மை ஓர் அன்பு உடல்   காட்சியாக தோற்றமளிக்கும் சிவன் பார்வதி சேர்ந்தே தோற்றமளிக்கும் காட்சி விளக்குகிறது. உள்ளத்தில் நல்ல புத்தியுள்ள இரக்கத்தின் ஆளுமைத்திறனும் ,   நல்ல புத்தியுள்ள   இரக்கத்தின் பணிவிடைதிறனுக்கும் உறவு பாலமாக மற்றவரோடு உறவு   சேர்ந்தால்   சிவன் பார்வதி அன்பு காட்சியைபோல் அன்பு தனித்திராமல்   சேர்ந்திருக்கும்.   மலட்டு அன்பும் ,   ஆணவ அன்பும் வேண்டாம்.   பூரண அன்பின் செயலால் எதிர்கால சந்ததிகள் பிறப்பிலும் ,   உள்ளத்தின் செயலிலும் நல்ல ஆரோக்கியமுள்ள சந்ததிக்கு வழிவகுப்போம்.   தற்பொழுது குறைவோடு இருந்தால் நாமும் பூரண அன்பிக்காக மாற்று திறன் வழிகளை   எடுத்துகொள்வோம். யாத்திரை நல்ல கோப கருணையின் பாதையில் யாத்திரை செய்வோம் .   நடராஜனின் நடவடிக்கையில் நடங்கள் அது   கருணையின் பாதை அப்பாதையில் யாத்திரை செய்தால் அது நல்ல பாதை யாத்திரை . ஆறுமுகம் , திரித்துவம்   ஒரு சதுரத்திற்கு எத்தனை பக்கங்கள் , சதுரம் , கன சதுரம் ஒரு இறைவனுக்கு எத்தனை பக்கங்கள் ஆம் முருகன் , இயேசு , அல்லா ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கங்கள் ஆன ஒவ்வொரு முகமும் அளவில் ஒன்றாக இருக்கணும் . ஒரு இறைவனுக்கு ஒவ்வொரு பக்கங்கள் ஆன ஒவ்வொரு முகமும் நிலைப்பதில் ஒன்றாக இருக்கணும் .   அன்பு என்ற குணத்தில் தந்தையாகிய இறைவன் , தாயாகிய இறைவன் , நண்பனாகிய இறைவன் , சகோதரத்துவ இறைவன் , ஆசிரியரான   இறைவன் , குருவாகிய இறைவன் . அன்பே இறைவன் .   ஒரு கட்சிக்கு எத்தனை ஓட்டுக்கள் பெரும்பான்மையான வாக்களர்களின் ஆதரவு ஒரு பிரதமர்   ஒரு அன்புக்கு எத்தனை ஓட்டுக்கள்   பெரும்பான்மையான நல்ல குணங்களின் ஆதரவு ஒரு இறைவன் அது   தந்தையாகிய இறைவன் , தாயாகிய இறைவன் , நண்பனாகிய இறைவன் , சகோதரத்துவ இறைவன் , ஆசிரியரான இறைவன் , குருவாகிய இறைவன்   போன்றோர் .   கணக்கு பெருக்கலில் 1 x   1 x   1 x   1   x   1 x1   = 1   என்பதை எப்படி விளங்குகிறதோ அதுபோல் ஒரே இறைவன்   இரக்கம் பழிக்கு பழி செய்யும் இருவரில் யாரோ ஒருவருக்கு தன்னுடைய நிலையான கருத்து பலியாக்கப்படுகிறது .   ஆனால் இரக்கத்தில் பரஸ்பரம் ஏற்பட்டு தங்கள் நிலையான இரு கருத்துக்களும்   இடம் , பொருள் , ஏவல் அறிந்து உயிரூட்டப்படுகின்றன . யாராவது ஒருவர் இரக்கம் செய்தாலும் போதும் .   மதம் ஏன் ?   சோம்பல் ஏன் ? மதங்கள் பல இருப்பதனால்தான் கடவுளுக்கான பல கேள்விகள் பிறக்கின்றன   கேள்விகள் பல இருப்பதனால்தான்   கடவுளுக்கான ஞானத்தை அறியும் வழிகளை அறிந்து உலக அஞ்ஞானத்தை வென்று நீண்ட சந்தோசத்தை பெறுவோமோ. எல்லா மதங்களும் நிறைவானவையே,   அதில் குறைவு என்று நம்முடைய குறைவால் மதிப்பிடுவது   அதன் நிறைவுக்கான பணி நம்மிடம் விடப்பட்டுள்ளதா?   தர்மம் இந்து தர்மத்தில்   கற்பூரம்   காட்டபடுவது   என்பதோ   பேச்சிலும் ,   செய்கையிலும் ,   நடக்கையிலும்   கற்பின்   பூரணத்தை   காட்டவேண்டும் என உணர்த்தும் அடையாளம்.   இந்து தர்மத்தில்   தெய்வத்திற்கு   நல்லெண்ணெய்   விளக்கு   ஏற்றப்பட   வேண்டும் என்பதோ   தெய்வத்திடம்   நல்லெண்ணமுள்ள   விளக்கங்களை   ஏற்று   அதன்படி செயல்பட   வேண்டும் . இந்து தர்மத்தில்   பூநூல்   அணிவது   என்பதோ   மனதில்   பூக்கும்   வேதநூலான   பூநூலை   மற்றவர்   அறியும்படி   அணிய   வேண்டும் .   கிறிஸ்துவத்தில் இரண்டு   விதமான   கேளுங்களும் ,   தட்டுங்களும் ,   தேடுங்களும்   இருக்கின்றன   நீங்கள்அறிவீர்களா   நன்மை   சொல்வதை   செவி   கொடுத்து   கேளுங்கள் .   தீமையிலிருந்து   விடுவிக்கும்   வழியை   வாய் திறந்து   கேளுங்கள் .   உள்ளே   புகுந்திடும்படி   நன்மை   கதவை   தட்டுங்கள்   திறக்கப்படும் .   வெளியில்   வரும்படிதீமை   கதவிலிருந்து   தட்டுங்கள்   திறக்கப்படும் .   நன்மை   செய்ய   உள்ளே   நுழைய   வழி   தேடுங்கள்   கிடைக்கும் . தீமையிலிருந்து   வெளியே   வர   வழி   தேடுங்கள்   வழி கிடைக்கும் . இஸ்லாத்தில்   நோன்பில்   ஏழைகளுக்கு   உதவுவது   என்பது   தமது   சொத்தான   நல்ல   நீதி ,   புத்தியுள்ள   இரக்கம் , நல்ல   அன்பு   போன்றவை   இல்லாத   அல்லது   குறைந்த   ஏழைகளுக்கு   வழங்கி   சந்தோசமடைவார்கள் .   நல்ல நீதி , புத்தியுள்ள இரக்கம் ,   நல்ல அன்பு போன்றவைகளுக்காக தங்கள்   பொருள் ,   பணம் போன்றவற்றை முதலீடு செய்வார்கள்.   இலவசமான ஈகையாக.   சிலர் பொருள் ,   பண வசதியுடன் இருப்பார்கள் ஆனால் ,   தங்கள் நல்ல நீதியிலும் ,   புத்தியுள்ள இரக்கதிலும் ,   நல்ல அன்பிலும் ,   நல்ல தணியும் கோபத்திலும்   ஏழைகளாக   இருப்பார்கள்.   ஊதாரியாய் ,   ஊனனாய் பிச்சை பெறுபவருக்கு பணமும் ,   திருந்துவதற்கான நல்ல கல்வி ,   புத்திமதி ,   மாற்று திறன் வழிகளுக்காக தம்   அறிவு ,   ஞானம் ,   பணம் ,   பொருள் தேவை.   ஏழைகளுக்கு பணத்தை மட்டும் தந்தால்   போதாது அதை நல்வழியில் பயன்படுத்துவதற்கான நல்ல அறிவு வேண்டும்.   நல் அறிவை வழங்காவிட்டால் நாம் பண வீக்க காரணத்திற்கான குற்றவாளி.   பலசாலியான ஒருவரிடம் நமக்கு உதவி தேவைப்பட்டால் அவர் நம்மீது கோபம்   காட்டுவது நல்லதா ,   இரக்கம் காட்டுவது நல்லதா.   இரண்டுமே வேண்டும். நாம்   கவனமாக அவ் உதவியை பெறுவதற்கு பொறுப்புள்ள புத்தியுள்ள அவர் கோபமும் ,   நம்இயலாமையை சரிகட்டும் அவர் இரக்கமும் தேவை.   பழிக்கு ,   பழி செய்தால் நிம்மதி   கெட்டுவிடும்.   உலகம் பாதுகாப்பின் நம்பகம் கெட்டுவிடும்.   பழிக்கு ,   பழி   எளிதில் நடந்து விடாமல் இருபதற்காகத்தான் கட்டுபடுத்த காவல் துறையும் ,   சட்டங்களும் உள்ளன.   மன சாட்சியும் உள்ளது. நாட்டை காப்பாற்ற இராணுவம்   இருப்பதுபோல். பெரும்பான்மையின் நன்மைக்கு தகுந்தால் போல்தான் பழிக்கு ,   பழி இருக்காலாம   இரக்கமாக   அதற்கு அறிவை பயன்படுத்துவது நல்லது.     எறும்பு   எறும்புக்கு வெளி அலங்கார ஆடை இல்லை ஆனால் நாம் ஆடை அணிந்தும் நமுக்குள்   எத்தனை கற்பழிப்பு வழக்குகள் ,   கள்ள காதலர் கொலை வழக்குகள் அன்பு குணத்தில் இந்த பிரச்சனையை   எந்த கட்டுப்பாட்டில் எறும்புகள் ஒழுங்குபடுத்துகின்றன ? நம் உடல் ஆடையின்றியிருந்தால் பிறர் நம்மை அவமானமாக கருதுவார்கள் என்கிறோமே .   உள்ளத்தில் தீங்கை வைத்துக்கொண்டு அதை செயலாக வெளிப்படுத்தினால் நல்லதை பிறருக்கு நிர்வாணமாக காட்டுகிறோமே அது அவமானமாக இல்லையா ?   ஆடு ,   மாடு ,   கோழி ,   மீன் போன்றவை பெருகுவதற்கு என்ன செய்கிறோம்.   இவைகள் இறைச்சிக்காகவும் ,   பல நன்மைக்காகவும் இதன் தேவையை நம்பியிருக்கிறோம்.   இவைகள் பல ஆண் இனத்தோடும் ,   பல பெண் இனத்தோடும் இணைந்து இனப்பெருக்கம் செய்து பலுகுகின்றன.   இவைகள் ஆண் ,   பெண் இன விருத்திக்கு ஒன்றுக்கு ,   ஒன்று என்ற விகித்தத்திலா உள்ளன. அவ்வாறு இல்லையே அதற்காக இவைகள் விபச்சாரம் செய்கின்றன என்று சொல்ல முடியுமா ?   அப்படி சொல்லி அவைகளால் பலன் நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிட முடியுமா ?   நாம் ஆறு அறிவு என்றும் ,   மிருகத்தைப்போல் நாம் அப்படி நடந்துகொண்டால் விபச்சாரம் என்று எப்படி சொல்கிறோம்.   ஆனால் நமக்கில்லாத மோப்பம் போன்ற சில நுட்பமான உணர்வு சக்திகொண்ட ,   நாமாகவே அறிவை குறைத்து தீர்ப்பிடுகின்ற விலங்கு ,   மீனை தேவைக்காக நம்பியிருப்பது ஏன் ?   மனிதரில் ஒரு ஆணுக்கோ ,   பெண்ணுக்கோ ஒன்றன் பின் ,   ஒன்றாக கணவனோ ,   மனைவியோ இறந்தால் அதை சரிகட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் கணவனனாகவோ ,   மனைவியாகவோ இருக்கலாம். ஆனால் கால கட்டாயத்தில் ஒருவருக்கு பல மனைவியோ ,   கணவனோ இருந்தால் தவறா ?   இறந்ததனால் பல கணவன் ,   மனைவி இருப்பதும் ,   உயிரோடு இருப்பதால் பல கணவன் ,   மனைவி இருப்பதில் எப்படி நல்லது ,   கெட்டது என்று பிரிப்பது. மனிதன் உலக நியதிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.   ஆகவே இப்பொழுது உள்ள மக்கள் பெருக்கத்திற்கே இயற்கை பாதுகாப்பை ஒழுங்கு படுத்தமுடியாமல் சீர்குலைத்து இருக்கவேண்டியுள்ளது.   தம் வாழ்வாதார தேவையை சீர்குலைத்தே பயன்படுத்துகிறோம். விரலுகேற்ற வீக்கம்போல் ,   நாம் ஒருத்தருக்கு ஒருவர் என்று ஆண் ,   பெண் திருமணம் செய்துகொண்டால் புரிந்துகொள்வதிலும் ,   மிகச் சிறப்பாக தங்கள் தேவையை பெற்றுகொள்ளவும் முடியும்.   ஆனால் இந்த ஒருத்தருக்கு ஒருவர் என்று நிலையிலே பெரிய ,   பெரிய பிரச்சனைகளும் நடைமுறை காலத்தில் வருகின்றன.   ஒன்றுக்கு ஒன்று ,   ஒன்றுக்கு இரண்டு ,   ஒன்றுக்கு ஆயிரம் ,   பலருக்கு பல என்று ஆண் ,   பெண் இல்லற துணைகள் பெருகிக்கொண்டே போனால் சில பகிர்வில் சிறப்பும் ,   சில நோக்கில் சிக்கலும் உள்ளது.   தசரதனுக்கு ஆயிரம் மனைவியாம் ,   சாலமனுக்கு   பல துணைவியாம் ,   ஆபிரகாமுக்கு இரண்டு இல்லற துணைவியாம் சிக்கல் இதுவல்ல. நடைமுறையில் ஒன்றுக்கு ஒன்று இல்லற துணைகள் மிக நல்லது என்றால்.   பல இல்லற துணைகள் இருப்பது குறைவான நல்லது. அவ்வளுவுதான்.   நாம் திடீர் என்று அதிகமாக பெருகினால் நம் தேவையை சமாளிப்பது கடினம் ,   ஒரு நல்ல பகிர்வு கணக்கிற்காக ஒருத்தருக்கு ,   ஒரு இல்லற துணை. அவ்வளவுதான்.   சிக்கல் என்னவேன்றால் ,   எத்தனை நல் அன்பை விபச்சாரம் செய்தோம் ,   எத்தனை நல் கோபத்தை விபச்சாரம் செய்தோம் ,   எத்தனை நல் இரக்கத்தை விபச்சாரம் செய்தோம் ,   எத்தனை நல் அறிவை , நல் கல்வியை ,   நல் அனுதாபத்தை ,   நல் வேண்டுகோளை சுற்று சூழலுக்கும் ,   பிற மனிதர்களுக்கும் விபச்சாரம் செய்கிறோம். இதனில் கவனத்தை கொண்டு விபச்சாரம் செய்யாமல் நன்மையை பெருக்குவோம்.   சுபச்சாரம்   சாரம் என்பது மையக்கருத்து என்ற பொருளை குறிக்கும் அர்த்தம் ஆகும்.   இதைச்   சார்ந்துள்ள   சில சொற்கள் அபச்சாரம் ,   விபச்சாரம் ,   கீதாச்சாரம்,   மின்சாரம் ,   சம்சாரம்.   அபத்தத்தை   குறிக்கும் சாரம்   அபச்சாரம்.   பகவத் கீதையின் சாரம்   கீதாச்சாரம்.   விபத்தின் சாரத்தை குறிக்கும் கருத்துதான் விபச்சாரம் .   பொருளாசை என்ற விபச்சாரம் என்றால் தீமையின் பொருள்பட ஆகும் ஆசையின்   விபச்சாரம்.   ஆகவே விபச்சாரம்செய்யாதிருக்க வேண்டும்.   வாழ்க்கை   போக்குவரத்தில் விபத்து.   போகும் நோக்கத்தில்   விபத்து.   மக்களின்நெருக்கம்   ( அதாவது   துன்பம்) விபச்சாரங்களின் பெருக்கம்.   மனித   உறவில் இரண்டு   வகையான   விபச்சாரங்களை   தவிர்ப்பது   நல்லது .   ஒன்று   உடல்   உறவில் ,   மற்றொன்று மனதின்   உறவில் .   மனதின்   உறவுகளான   நல்   அன்பு ,   நல்   பண்பு ,   நல்   கல்வி , நல் ஆரோக்கியம்   போன்றவைகள் .   இவற்றில் தகாது   உறவு   விபச்சாரம் .   இயற்கை சுற்று   சூழலளுக்கான   ஒழுங்கை   பராமரிக்காமல்   இருக்கும்   தகாத   உறவும்   விபச்சாரம்தான் . பாதுகாப்பின் அதிகரிப்பு எதிர்ப்பு சக்தியின் அதிகரிப்பு.   விபத்துக்களை   தவிர்க்க.   வாழ்வு பயணத்தின் துன்ப   இரைச்சல்களை கேட்டு நில் ,   கவனி ,   செல்   விபத்தை தடுப்பதற்கான உதவி குழுமங்களையும்   ஏற்படுத்தி கொள்வோம்.   விபச்சாரங்கள் சிலவற்றின் கருத்தை அறிவோம். வறட்சியின் சாரம்   –   பசுமைக்கு   விபத்து   துர்நாற்றத்தின் சாரம்   –  சுத்தத்தில்   விபத்து   பொறுப்பற்ற பேச்சின்   சாரம்   –   பொறுப்பில் விபத்து சண்டையின் சாரம்   –  சமாதானத்தில் விபத்து   கூக்குரலின் சாரம்   – அரவணைப்பில்   விபத்து அசிங்கத்தின் சாரம்   – மேன்மையில் விபத்து   திருட்டுத்தனத்தின் சாரம்   – அக்கரையில் விபத்து விபச்சாரியின் சாரம்   – ஒப்படைப்பில் விபத்து வேசியின் சாரம்   – பிரவேசியில்   விபத்து தீமை தூண்டுகோலின் சாரம்   –   நல்ல அடக்கத்தில்   விபத்து வேண்டுகோலின் சாரம்   –   தேவையில் விபத்து   பணவீக்கத்தின் சாரம்   –   நற்குணத்தில் விபத்து   இம்சையின் சாரம்   –   அகிம்சையில்   விபத்து ஆணவத்தின் சாரம்   –   பணிவிடையில் விபத்து சுயநலத்தின் சாரம்   –   பொதுநலத்தில் விபத்து   பாமரரின் சாரம்   –   படித்தவர்களுக்குள்   விபத்து   வேலையின்மையின் சாரம்   –   அனுபவ பகிர்வில் விபத்து தண்டனையின் சாரம்   – விடுதலையளிப்பதில்   விபத்து நோயின்   சாரம்   ஆரோக்கியத்தில்   விபத்து . இந்த விபச்சாரங்கள் சுபச்சாரங்களானால் சுகச்சாரங்கள் உண்டு .     தாய் நாடு –  தேச தந்தை   மனிதர்   குலத்திற்கு   தாய் ,   தந்தைஎன்று   இறைவனை   குறிப்பதை பல   கணவனோ , பல   மனைவியோ   உண்டா   இறைவனுக்கு ,   என்ற   குழப்பம் . பல   சக்திகளின்      ஒருங்கிணைப்பில் இறைவன்   இருக்கிறார் .   ஒரு   பெரிய   காந்தம் .   பல   காந்தங்கலாக உடைந்தாலும் . உடைந்த   ஒவ்வொரு   காந்த   துகளும் தனித்த   காந்த   மாக   விளங்கும் .   உடைந்த   காந்தங்கள் ஒன்று   சேர்ந்தாலும்   ஒரே   காந்தமாக இருக்கும் .   இறை   சக்தியின் பல   துணைகளை   பல   துணைவியர் அல்லது   பல   துணையாளர் .   இறைசக்தியின்   ஒருமித்து சொல்வதே   அன்பு . அன்பே   சிவம் , அன்பே   தேவன் , அன்பே   இறைவன் . நாம் பிறக்கும்பொழுது நிர்வாணியாய் பிறக்கிறோம். ஞானம், புத்தி போன்றவை பிறக்க காரணமாக இறைவனும், மனிதர்களும் உள்ளனர். இறைவனுக்கு முதலிடம் கொடுத்து ஞானம், புத்தி இவைகளுக்கு இறைவனை முதல் தந்தையாகவும், மற்ற கணவன்மார்கள், மனைவிமார்கள் இவர்களின் இணைப்பில் பிறந்தவர்களுக்கு காரணமானவர்களை இரண்டாம் பெற்றோர் ஆவர். இவ் உலகில் ஞானதந்தை, தேச தந்தை என்று சொல்லிகொள்வதும் உண்டு. மனதிற்கு இரத்தமாக இருப்பவைகள் எண்ணங்கள். எழுத்துகளில் உயிர் இருப்பதை உயிரெழுத்து, மெய் எழுத்து என்று அறிவதைப்போல், மனதின் உயிர் இரத்தமாக, அறிவுக்கு உயிர் இரத்தமாக நல் உணர்வுகள் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். உடல்    உயிரோடு இருக்கும்பொழுதே மனசு செத்துவிட்டது என்று ஏன் சொல்கிறோம். மனம் உயிரடைவதற்கு என்ன வேண்டும். கம்ப்யூட்டர் மொழிகளில் parent property , child property என்பதை புரிந்து கொள்கிறோம். கம்ப்யூட்டரின் தந்தை, பகுத்தறிவின் தந்தை என்று சொல்லபடுவதை எப்படி விளங்கிகொள்கிறோமோ அதுபோல் பரலோக தந்தை. பரலோக தந்தை   நல்ல குணங்களுக்கு தந்தை என்றும் சொல்லலாம். ஐந்து முறை தொழுவது போல் , நம் உடல், உயிர் பஞ்சபூதங்களும், உலக பஞ்சபூதங்களும் ஆன ஐந்தின் ஒழுங்கு   முறைக்கு தொழுவோம். இஸ்லாத்தின் அன்னை, பராசக்தி அன்னையை யை ஏன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய் நாடு, தாய் மொழி, தாயகம், பூமித்தாய், என்று பொதுவாக கூறப்படுவதன்   காரணம் என்ன?   ஆறுதல் எந்த ஒரு கேள்வியையும் கோபம் என்ற குணத்திற்கு ஒப்பிட்டால் அதற்கு பதிலாக அமைவதை ஆறுதல் தரும் இரக்கத்திற்கு ஒப்பிடலாம். கொலை செய்வாள் பத்ரகாளி யாரை கொலை   செய்வாள் ,   பக்தர்களில் தீய சோம்பேறியை ,   தீய ஊதாரியை ,   தீயபொறாமைக்காரரை ,   தீய வஞ்சனை செய்வோரை ,   தீய இரக்கமுள்ளவரை   போன்றோரை கொலை   செய்யமாட்டாள் ,   அவர்களிடம் உள்ளதீய சோம்பல் ,   தீய ஊதாரித்தனம் ,   தீய பொறாமை ,   தீய வஞ்சனை ,   தீய இரக்கம் போன்ற   குணங்களையேகொலை   செய்வாள். பக்தர்களுக்கு பத்ரகாளி அருள்தானே செய்யமுடியும். ஆண்டியானவரான பழநியப்பன் அருள்   செய்வார்   அவர் பக்தர்களிடம் உள்ள தீய சோம்பலை ,   தீய ஊதாரித்தனத்தை   ,   தீய பொறாமையை ,   தீய வஞ்சனையை ,   தீய இரக்கத்தை ,   தீய கோபத்தை ,   தீய ஒழுங்கின்மையை ஆண்டியாக்கி அருள்   செய்வார். அந்த   பழநியப்பன்   நமக்குள் நல் அன்பை ,   நல்ல சிந்தனைகள் ,   நல்ல பகுத்தறிவு செயல்கள் ,   நல்ல பொறுமை ,   நல்ல பாசம் போன்ற கனிகளான பழங்களை விளையச்செய்யும் அருள்   செய்வார். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும். என்ற திருக்குறள் வழியாக தெரிந்துக்கொள்வது, தெய்வத்தால் ஆகாது என்றால் தெய்வத்தாலேயே முடியாது என்று அர்த்தம் அல்ல? தெய்வம் நமக்கு தேவையான அனுபவ சூழல்கள் தந்துவிட்டார். இனி அவர் செய்யவேண்டிய வேலை இல்லை. நாம் முயற்சித்து செயல்படவேண்டியாதே பாக்கி (பெண்டிங் pending ) இனி அவரால் ஆகாது என்பதுதான். தெய்வத்தால் ஆகாது என்ற அர்த்தமாக இருக்கலாம். சுமை சுமப்போரே என்னிடம் வாருங்கள். என் நுகம் இனிது ?   சுமை இனிது ?   நான்   உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிரேன் என்று இயேசு சொல்லிவிட்டு இயேசு சிலுவை   பாடுகளை பட்டரே ?   இந்த சுமையும் ,   நுகமும் ஏசுவுக்கு இனிதா ?   இத்தகைய   பாடுகளோ ,   இதைவிட அதிக பாடுகளோ நமக்கு வருமானால் நம்முடைய நிலை என்ன ?   அத்தகைய சுமைக்கும் ,   நுகத்திற்கும் நமக்கு இனிதாவது எப்படி ?   நாம் வலியை தாங்கிக்கொள்வதில் திறமையை வளர்க்கனுமா ?   வலி ஏற்படும் காரணங்களை குறைத்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்வதில்   திறமையை வளர்க்கனுமா ?   எத்தகைய வலியை வென்று நீடித்த சந்தோசத்தை பெறுவோம் ?   வேண்டிய நீடிய பொறுமையான வலியை ஆளுவோம் ? நன்மை செய்ய முடியும் என்ற திறமைக்கு எல்லை இவ்வளவு குறைவுதானா ?   அல்லது   இவ்வளவு   திறமைஅதிகம்தானா ?   தீமை செய்ய மாட்டேன் என்ற திறமைக்கு எல்லை இவ்வளவு குறைவுதானா ?   அல்லது   இவ்வளவு   திறமைஅதிகம்தானா ? இயேசு பாடுபட்டார் சிலுவையில் அறையப்பட்டார்.   இந்த வேதனைகளைவிட அவர் பரிதவித்த வேதனை என்னவென்று அறிவீர்களா.   பிதாவே இவர்களை மன்னியும் ,   ஏனனில்   இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாதிருக்கிறார்கள் என்று தம்மை சிலுவையில் அறைய   காரணமாக இருந்த நற்செயல் அறியாதவர்களின் நிலைகண்டு கலங்கினார்.   இயேசு ,   சரீரத்தையல்ல ஆத்துமா கொல்லப்படாமல் இருக்க   கவனமாக இருங்கள் என்று சொல்வதை தமது செயாலால் வாழ்ந்துகாட்டினார்.   தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும். என்ற திருக்குறள் வழியாக தெரிந்துக்கொள்வது, தெய்வத்தால் ஆகாது என்றால் தெய்வத்தாலேயே முடியாது என்று அர்த்தம் அல்ல? தெய்வம் நமக்கு தேவையான அனுபவ சூழல்கள் தந்துவிட்டார். இனி அவர் செய்யவேண்டிய வேலை இல்லை. நாம் முயற்சித்து செயல்படவேண்டியாதே பாக்கி (பெண்டிங் pending ) இனி அவரால் ஆகாது என்பதுதான். தெய்வத்தால் ஆகாது என்ற அர்த்தமாக இருக்கலாம். நாம் செய்யவேண்டிய முயற்சி தெய்வத்தால்  ஆகாது. அவர் நமக்கு காட்டும் தெய்வத்தின் முயற்சி ஆகிவிட்டதானால். மருத்துவர்   குடும்பத்தில் சண்டை, மற்றவர்களிடத்தில் சண்டை ஏற்படுகிறதே? ஆரோக்கியத்திற்கும், நோய்க்கும் சண்டைவரும் நோயை வென்றதும் நல்ல நிலைமை என்கிறோம் . உடலுக்கு கேடாக   ஜலதோஷம் ,   இருமல் ,   தலைவலி ,   ஜுரம் ,   சர்க்கரைநோய் ,   பிரஷர் ,   குஷ்டம் போன்ற   வியாதிகள்   வருகிறதே   அதைபோலத்தான்   மனதிற்கும்   ஒழுக்கக்கேடு   வருகிறது .   உடல்   கேட்டிற்குவரும்   நோயை   நலமாக   சரிப்பண்ணும்   தீர்வுகளைபோல்   குடும்பத்தில்   சண்டை ,   மற்றவர்களிடத்தில்   சண்டைபோன்ற   மன   அறிவின்மை     நோயை   நலமாக   சரிப்பண்ணும்   தீர்வுகள்   உண்டு .   எதிரி மனிதர்   அல்ல ,   அவர்கள்   கெட்ட   குணங்களே   எதிரி   அதை   நல்ல   குணமாக   சரிப்பண்ணும் மருத்துவபங்கை நாம்கொடுக்கும்பொழுது   நல்ல   தீர்வை   பெறலாம் .   நீண்டநாள் ஒருவருக்கு   கெட்ட   குணம்   இருந்து கொண்டே இருக்குமானால்   அது   நீண்ட நாள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதுபோல் நாம் நடந்து கொள்ள வேண்டிய குணம்.   மனதில் ஒழுக்கக்கேடு நோய்வரும்போழுது மறைமுகமாகவோ, நேரிடையாகவோ மற்றவருக்கும், அவருக்கும் நிம்மதி இழப்பு வருகிறது. ஞானமின்மை, புத்தியின்மை, நல் அறிவின்மை, கெட்ட அன்பு, கெட்ட சந்தோசம், கெட்ட   சிந்தனை, கெட்ட செயல்பாடு, கெட்ட சமாதானம், கெட்ட நீடியபொறுமை, கெட்ட தயவு, துர்குணம், கெட்ட நம்பிக்கை, கெட்ட பொறுப்பற்ற கோபம், கெட்ட சாந்தம், கெட்ட   இச்சையடக்கம், கெட்ட வீண் புகழ்ச்சி, கெட்ட இரககம், கெட்ட சோம்பல், கெட்ட ஊதாரி போன்ற பல பொல்லாத இருதய சிந்தனை, இருதய செயல்பாடு நோய்கள் உள்ளன. இந்த மன   ஒழுக்கக்கேட்டு   நோய்களுக்கு   மருத்துவ   பங்களிப்பு ,   மருத்துவ   வளர்ச்சி,     ஆபரேஷன்,   பலவித டெஸ்டுகள்   இன்னும்   தீர்வுகாணாதவைகளுக்கும்   தீர்வுகாணுவோம்   மனித   நிம்மதி ,   சாந்தம் ஜெயம்பெறுவோம் .   கொலை   சிவன் , பார்வதி , முருகன் போன்றோர் மக்களுக்கு தீமை செய்த தீயவர்களை கொன்றார்கள் என்றும் , கொலை செய்வது பாவம் என்று வேதம் சொல்கிறதா ? சைவம் , அசைவம் என்ற பிரிவினையா ?   சிலுவையில் தம்மை கொலை செய்யாதபடிக்கு இயேசு ஏன் தப்பித்துக் கொள்ளவில்லை ?   முகமது நபி தன்னை கொல்லவந்தவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளவில்லையா ?   தன் புத்திமதிகளை எற்றுக்கொள்கிற பாவிகள் இனி பாவம் செய்வதில்லை என்று இயேசு கற்பித்திருக்கிறாரா ?   இயேசுவாகிய தம்மை கொலை செய்வதால் பாவத்திற்குள்ளாகும் பாவிகளுக்கு இயேசு தம்முடைய புத்திமதியால் வெற்றிபெறவில்லையா ?   ஏன் தன்னை கொலை செய்வதனால் பாவிகள் ஆகும்படி அப்படியொரு சந்தர்ப்பத்தை   கொடுத்ததுபோல் இருக்கிறதா ? இல்லையே பிதாவே இவர்களை மன்னியும் என்றல்லவா   வெளிப்படுத்தினாரா ? நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் எதிரியை கொன்றால் வீரம் . நாட்டு மக்களுள்   யாரேனும் தன்னுடைய நலனுக்காக மற்றவரை கொன்றால் கொலை அது குற்றமா ? ராணுவ வீரர் கொன்றால் வீரம் . திருடன் கொன்றால் கொலையா ?   இயேசுவின் புத்திமதி இன்னும்   வாழ்ந்துக்கொண்டிருகிறதா ? அவரின் பெரும்பான்மையான நற்குணம் கொலை   செய்யப்படவில்லையா ? சிலுவையில்தானே கொலை ? தீமை விழுங்கப்பட்டுள்ளதே   ராணுவ வீரர்   பெரும்பான்மையானவரின் நன்மைக்காக அவர் செய்த சரியான கொலை வீரம் .   சமுதாயத்திற்கு தீமை செய்யும் திருட்டை ஊக்கப்படுத்துவது தவறு அதனால்   செய்யப்படும் திருடன் செய்யும் கொலை குற்றம் .   முன்னுரிமையை பொறுத்து   குற்றங்கள் கணிக்கப்படுகின்றன . உடல் , உயிர் , ஆத்மா , தனி ஆள் , பிறர் ,   பொதுமக்கள் என்று நலன் கருதி பிரத்தியோகமானதிற்கு தகுந்தால் போல்   கவனிக்கப்படுகின்றன . இப்படி வரிசைப்படுத்தி பெரும்பான்மையான நன்மைக்கு   முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .   சரியான இடம் , பொருள் , ஏவல் அமையும்படி செயல்கள் அமைய அதன் போராட்டதிற்கான சண்டையில் வெற்றிபெறுவது நியாயமே .   அசைவமான மருந்துகளை அறியாமலே சைவ விரும்பியோர் தன் நலன் கருதி எடுத்துக்கொள்ளவில்லையா ? அசைவம் என்கிறோமே அதில் உயிர் சத்துக்களை உணவாக்கிகொள்கிறோமா ? விஷத்தை எடுத்துக்கொள்கிறோமா ?   உடலால் இறந்தாலும் , உயிர்ப்புக்கு அதிகாரி இறைவன் , காலத்தால் நீதிக்காக அனைத்தும் ரிமோட் கன்ட்ரோல் போல் கவனிக்கப்படுமே ?     இரக்கம்   திருடன் திருட்டுக்காக ஒருவரை கொலை செய்தால் அது குற்றமா ? அதற்கு தண்டனை உண்டா ? திருடன் திருடாமல் இருப்பதற்கான சமூக காரணங்களை யார் கொலை செய்தார்கள் ? அவருக்கு தண்டனை உண்டா ? திருடனுக்கு கிடைப்பது கிடைத்துவிட்டால் ஏன் திருடுகிறார் ? நல்ல அன்பு திருடனாக மாறுவதற்கு உதவி செய்யாதே ? ஏன் அந்த நல்ல அன்பு திருடனாக மாறியவருக்கு கிடைக்கவில்லை ? திருட்டு , சுற்றுச்சூழல் கேடு   போன்ற குற்றங்கள் மலிந்து கிடைக்காதிருக்க அதன் விழிப்புணர்வை கொலை செய்தது யார் ? ஏன் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன ? தீவிரவாதத்திற்காக எப்படி மனிதர்கள் மூளைச்சலவையும் , பயிற்சியும் கொடுக்கப்பட்டு தீவரவாதத்திற்கு ஒன்றிணைக்கப்படுகிறார்கள் . திறமையுடன் , தைரியமாக இராணுவம் செயல்பட எப்படி இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது ?   வளர்ந்த நாடுகள் ,   வளர்ச்சியடைந்த நாடுகள் என்று வளர்ச்சி , வளர்ச்சி என்கிறோமே ஒழுக்கம் ஏன்   வளர்ச்சிபெற தடை இருக்கிறது ? திருட்டு , சுற்றுச்சூழல் கேடு போன்ற   குற்றங்கள் தடைபட நல்லொழுக்க பயிற்சி ,   மூளைச்சலவை ஏன் இல்லை இதிலே வளர்ச்சியடைந்த , வளர்ச்சியடைகிற நாடு எங்கே ? குடும்பக்கட்டுப்பாட்டுக்கு இரத்த உறவு வாரிசு ஒன்று போதும் என்ற முடிவுக்கு வர முக்கிய காரணம் என்ன ? வாழ்வாதாரங்கள் போதுமான அளவு திருப்தியாக அமைவதில் ஒருமனபடும் வாரிசுகள்   ஏன் இல்லை ? பல மனம் புண்படும் வாரிசுகள் வேண்டாமல் இருப்பதற்கு ஒரு   முயற்சி தான்   குடும்பக்கட்டுப்பாட்டுக்கு இரத்த உறவு வாரிசு ஒன்று போதும் என்ற முடிவுக்கு வர முக்கிய காரணம் . பதுக்கலாகா ஒருவர் எத்தனை வீடுகளை வசதி வாரிசுகளாக வைத்துகொண்டு நல்ல பகிர்வுக்கான சிக்கலை ஏற்படுத்துகின்றனர் .   குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஒரு வாரிசு , சமையல் கேஸ் போன்றவைகளை பதுக்கி கொள்வதில் எத்தனை வாரிசுகள் ?   சிவன் , பார்வதி , முருகன் , முகமது நபி , இயேசு அனைவரின் செயல்களும் நல்ல செயல்களே நாம் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே .   நல் அன்பை , நல் இரக்கத்தை , நல் கோபத்தை , நல் ஆறுதலை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை .   பால்   அபிஷேகம் திருக்குறளின்   அறத்துப்பால் ,   பொருட்பால் ,   இன்பத்துப்பால்   இதன்   அறங்களின்   பாலில் அபிஷேக   அருள்நடைபெற்றால்   இதன்   நன்மைகளை   உள்ளத்தில்   அருந்தலாம் .   இரத்தத்திலிருந்தும் பால்   உருவாகிறது .   நாம்   நன்மை பெறுகிறோம் .   அந்த   பாலை   அருந்துவதாலும் நமக்கு   இரத்தம்   உருவாகிறது .   நன்மை   செய்யும்   பசுவும்நமக்கு   பால்   தருகிறது .   இறைவனின்   அன்பு   குணத்தின் இரத்தத்திலிருந்து அன்பின்   பால்   உருவாகிறது .   இந்த   பாலைஉள்ளத்தில்   அருந்துவதால்      இறைவனுடைய ஞானத்தின்   இரத்தம்   நம்   உள்ளத்தில்   உருவாகிறது .   இதனால்   நாம்   நல்ல செயல்புரிகிறோம் .   உள்ளத்தின்   பாவங்கள்   சாகின்றன .   எண்ணித்துணிக கருமம்   துணிந்தபின்   எண்ணுவம்   என்பது   இழுக்கு ,   வருமுன்   காப்போம் ,    முயற்சியுடையார்   இகழ்ச்சியடையார்   என்பதிலிருந்து   நாம்   புரிந்துகொள்வது என்னவென்றால்   வருமுன்   காப்போம்   என்பதை   முதல்   நிறுத்தி   நாம் புரிகின்ற   செயலில்   குற்றம்   வரக்கூடாது .   குற்றம்   வராமல்   செயல்புரியவேண்டும் . இதற்கான   முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் .   ஒவ்வொன்றையும் அளந்திட   ஒவ்வொரு   கருவியுண்டு   அதைக்கொண்டு   திட்டமிடல்   வேண்டும் .   நல்ல மகிழ்ச்சிக்கு   செயல்புரிவோம் .   விழி ,   எழு , வெற்றிகிட்டவே   செயல்படலாம் .   நடந்தது நன்றாகவே   நடந்தது ,   நடக்கிறது   நன்றாகவே   நடக்கிறது ,   நடக்க   இருப்பது   நன்றாகவே நடக்கும் .   இதில்   துன்பமோ ,   இன்பமோ   இரண்டில்   ஒன்று   நன்றாகவே   நடந்தது ,     அல்லது   நடக்கிறது , அல்லது   நடக்க   இருக்கும் .   ஒன்று   நன்கு உணர்ந்தது   செயல்படுகிறது .   மற்றொன்று   நன்கு உணரவைக்க செயல்படுகிறது.   இன்பத்துள்   இன்பம்   விழையாதான்   துன்பத்துள்   துன்பம்   உறுதல்   இலன் .   என்றும்   இடுக்கண்   வருங்கால்நகுக ,   இடுக்கமான   வாசல்   வழியே   வருந்தி   நுழைய   புறப்படுங்கள் .   என்றும்   சொல்லப்படுகிறது .   இன்பம்   என்ற   ஒன்று   நிகழ   துன்பம்   என்ற   ஒன்று   நிகழ்ந்திருக்கும்   அப்பொழுதுதான்   இன்பம்   என்றஒன்றை தனித்து   பிரிக்கமுடியும் .   இந்த   துன்பம்   யாருக்கேனும்   நிகழ்ந்திருக்கலாம் .   நமக்கு நல்லதாக அமைய ,   நமக்கு வேண்டாததாக ,   வேறு யாருக்கேனும் அத்துன்பம்   பொறுப்பாக இருந்திருக்கலாம்.   அல்லது அத்துன்பத்தை நாமே   அனுபவித்திருக்கலாம்.   நமது இன்ப ,   துன்பத்தின் செயல்பாடு மனித உறவின்   சங்கிலி அல்லது வலை பின்னலின் செயல் பரிமாற்றத்தை பொறுத்தது.   உதாரணத்திற்கு   ஒருவர்   இறந்தால்   அவரின்   தயவை   சார்ந்திருப்பவருக்கு   துன்பம் .   இந்த   இறப்பினால் தேவை   வாய்ப்பு   வலி   குறைக்கப்படுவதால்   அதன்   இன்பத்தை   சிலர்   பெறமுடியும் .   இன்பத்துள்   இன்பம்   விழையாதான்   துன்பத்துள்   துன்பம்   உறுதல்   இலன் .   என்பதில்    இன்பம் நிகழ்ந்ததற்குள்   மறைந்திருக்கும்   துன்பத்தின்   செயல்பாட்டை   அறியாதவர்கள் .     துன்பம்   நிகழ்ந்ததற்குள்மறைந்திருக்கும்   இன்பத்தின்   செயல்பாட்டை     வெளிக்கொணரும்   வழி   அறியாதவர்களாவார்.   இவர்கள் இன்பம் ,   துன்பத்தை பகுத்து அறியமுடியாததில் குழந்தைகள்.   வா   இடுக்கனான   துன்பமா   உன்னை   நன்மையாக   மாற்றும்   வழி   அறிவேன்   என்று     நகுகவானமகிழ்ச்சியால்   இடுக்கனான   துன்பத்தை   எதிர்கொள்வர் .   மகிழ்ச்சிக்கனாதை   சென்றடைய ,   இடுக்கமானதிலிருந்து விடுவிக்கும்   வாசல்   வழியே   புறப்படவேண்டியிருக்கிறது .   துன்பத்தின்   வலி   வெல்லும்பொழுது   இன்பத்தின்   வழி   திறக்கிறது .   நல்ல   தேரை   இழுக்க   வடம்   நல்ல   முறையிலும்   போதுமானவர்கள்   சக்தியும்   தேவை   அதுபோல்   நல்லஒழுங்கு செயல்பட   போதுமானவர்கள்   ஒருமனபாட்டுடன்   செயல்படவேண்டும் .     சுதந்திரத்தைஉணருகிறோம் இதன்   பின்னியில்   எத்தனை   செயல்கள் .   நரகம் நரகம்   =   நரகல்   +   அகம்   என்பது   நரகலான   அகத்தை   சீர்திருத்தும்   இடமா ?   நரகல்   என்பது அருவருப்பை   குறிக்குமா ? என்னென்ன   அருவருப்பு   உள்ளது ?   தீமை ,   பாவம் , குற்றம் ,   துன்பம்   இவைகள் அருவருப்பானவையா ? ஒரு   நீதி   இருக்குனா ?   அநீதி   என்ற   ஒன்ற   நிகழ   தேவைப்பட்டுருக்குமே .     அப்படியென்றால்   நீதியைபுரிந்து   கொள்ளும்   அளவிற்கு   அநீதியின்   மதிப்பு   எப்படிப்பட்டது ?   எல்லாம்   மாயை .   ஒன்று   மற்றொண்டாக   மாறும்   நிலையிருக்கும்பொழுது   மாயைதானே .   தீமை   என்பது அருவருப்பு   என்கிறோமே .   குப்பை   என்ற ஒன்று   இருப்பதனால்   அதை   அப்படியே   விட்டுவிடுவது   முறையல்ல ?   குப்பையை     பயன்படுத்தமுடியாதா ?   அதிலிருந்தும்   நன்மை பெறமுடியாதா ?   நரகம்   என்பது   பயன்படுத்தத்தானே ?   அன்பே   சிவன்   என்றும் ,   ஏக   இறைவன்   அன்பாக   இருக்கிறார்   என்றும்   ,   அன்பே     தேவன் ,   தீமைக்கு   தீமைசெய்யாதே ,   தீமையை   நன்மையாக   வெல்லு ,   இரக்கமாக    இரு   என்று   சொல்வதெல்லாம்நடவடிக்கைக்கு   தகுந்தால்   போலா ?   ஒவ்வொரு   இடத்திலும்   ஒவ்வொரு   சட்டமா ?   நரகத்திற்கு   என்னசட்டம் ? அன்பு ,   இரக்கம்   மாறாமல் இருக்காதா ?   நரகத்தில்   அன்பு , இரக்கம்   பயன்படுத்துவது   கிடையாதா ?   அப்படியென்றால்   கோபமும் , தண்டனையும்   உயர்ந்ததா ?   சீர்திருத்தம்   வெற்றி பெறவில்லையா ?   தண்டனை   வெற்றிபெற்றதா ?   பாவம்   நன்மையாக மாற்றம்   பெறவில்லையா ?   அப்படியென்றால்   பாவம் தொடர்ந்து   வெற்றிபெறுமா ?   தவறான   கண்ணோட்டத்தில் ,   பாவம்   செய்தவர்களுக்கு   தீமை   செய்துபாவத்தையே   சம்பாதிப்பதா ?   நெருப்பு ,   அக்னி   நரகத்தில்   இருக்கும்   என்கிறார்களே ?   நெருப்பு   சமைக்க ,     நன்மைக்காக   பயன்படுத்துவோமா ?   தீமைக்காகவா ?   ஒரு   ஆற்றல்   இன்னொரு   ஆற்றலாக   மாறுகிறது ?   வெப்ப   ஆற்றல்   இயக்க     ஆற்றலாகவோ , மின்   ஆற்றலாகவோ   மாற்றம்   பெற்று   நன்மைக்கு   பயன்படுத்தவில்லையா ?     நரகத்தின்   பாவ   வெப்பஆற்றலும்   நன்மையாகாதா ?   நரகத்தை   வைத்து   எத்தனை   சம்பாத்தியம்   நடக்கிறது ?   அதன்   நிலை   என்ன ?   மகிழ்ச்சி   நரகத்தில்   சென்றால்   வேதனை   பெருகுமா ?   ஆம்   பிளஸ் (+)  ல்   வேதனை   தொடங்கி   மைனஸ்   (-)   ல்   பெருகும் அதாவது   மகிழ்ச்சிக்கு   இட்டுசெல்லவே .   நரகத்தில்   அவியாத   அக்னி .   அன்பு   எந்த   அக்னியிலும் அவியாது .   அன்பு   மாறாதது .   அன்பு   தீமை ,   நன்மையாகும்படி   சகிக்கும் .   அன்பு   நரகலோகத்தை   மட்டும்   அல்ல     எல்லா   உலகத்தையும்வெல்லும் .   கண்டிப்பு கணவன் ,   மனைவி   அன்பில் ஊடல்   வரும் .   வாய்   வார்த்தை சண்டை   வரும்   பிறகு   கூடிக்கொள்வார்கள் .   ஆனால்   ஒரு   பெண்ணிடம்   வற்புறுத்தல்   என்றபலாத்காரத்தில்   உறவு   கொள்ள   முயல்வது   அல்லது   ஈடுபடுவது   குற்றம்   என்கிறோமே .   கடவுள்   தண்டிப்பார்   என்று   மட்டும்   சொல்லி   பயமுறுத்தி   பலாத்காரமாய்   கடவுள்   நம்மோடு   தொடர்புகொள்வது   எப்படி ?   அது   நாம்   அவரிடம்   காட்டும்   பக்த   உறவுக்கு   வழிவகுக்குமா ? கடவுள்   கணவன் ,   மனைவி   ஊடலைபோல் .   நம்மோடு   நல்ல   அன்புக்கு   இனிய   கண்டிப்புடன்   நம்மை   அரவணைத்து   நம்   ஒப்புதல் ,   ஒப்புரவோடுநம்மீது அக்கறைக்கொள்ளமாட்டாரா   நாம்   தவறும்   பொழுதும் !   கண்டிப்பு-   1 நல்ல வாழ்க்கைக்காக பெற்றோர் சிலர் ,   தன் மகளுக்கு வற்புறுத்தி திருமணம்   செய்து வைக்கிறார்கள்.   அது பிற்காலத்தில் அவர்கள் மகளே தனக்கு பெற்றோர்   நல்ல வாழ்கையைதான் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்று அறியும்படியான   நிகழ்வுகளும் உண்டு.   அப்பொழுது பெற்றோருக்கும் ,   மகளுக்கும் நல்ல ஒப்புதல்ஏற்படுகிறது. அதுபோல் ,   கடவுளும் ,   நம்   நன்மைக்காக சில நேரங்களில் நம்மை மனசாட்சி மூலம் பேசுகிறார்.   நாம்இறுதிநிலையில் தவறக்கூடாது என்பதற்காக வற்புறுத்தி கண்டித்து   உணர்த்துகிறார்.   இவ்வாறு உணர்த்துதல் மூலம் பேசுகிறார்.இவ்வாறு கடவுள்   நம்மை கண்டிக்கும் முன்னோ ,   பின்னோ நல்ல ஒப்பரவு ஏற்படுத்திக்கொள்கிறார் .   கடவுள் நம்மை கண்டிப்பது ,   நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்பதை முன்க்கூட்டியே   அறிந்ததுதான் செயல்படுகிறார்.   இவ்வாறாக நல்ல மகிழ்ச்சிக்கான அன்பிற்குநம்மோடு உறவாடுகிறார்   மன்னிப்பு   மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை   “ மன்னிப்பு” என்பார்கள்.   ஆம் ,   மன்னிப்பின்   வகைகளில்   1.   அவமன்னிப்பு ,   2.  நேச மன்னிப்பு   என்பதில்   அந்த விரும்பாத மன்னிப்பு “அவமன்னிப்பு” ஆகும். மன்னிப்பு கோருவோறும் ,   மன்னிப்பு அளிப்போருக்கும் இடையில் நல்ல உடன்படிக்கை   ஏற்பட்டு நல்லது ஏற்படுவதில் முன்னேற்றம் இருக்கவேண்டும்.   உடன்படிக்கை மீறப்படும்பொழுது அது அவமாக்கும் என்ற அவமன்னிப்பு ஏற்படுகிறது ,   அது மாற்றம் பெற்று நேசமன்னிப்பாக வேண்டும்.   வீரிய   கலப்பினம் அறிவியல்   கல்வியில்   வீரிய   கலப்பின   சேர்க்கை   தாவரங்கள் ,   விலங்கினங்களுக்கு   மட்டும்தானா ? சமூக   அறிவியலில்   வீரிய   கலப்பின   சேர்க்கையினால்   மனிதர்களும்   நன்மைகள்     பெறக்கூடாதா ? அறிவியல்   அறிவுறுத்துவதுபோல்   சொந்த   இரத்த   உறவில்   திருமணம்   நல்லதல்ல   என்கிறதே   ஏன் ? சாதி   தீண்டாமையை   ஒழிக்க ,   ஏழை   –   பணக்கார   நிலை   தீண்டாமையை   ஒழிக்க ,     படித்த – படிக்காத   நிலைதீண்டாமையை   ஒழிக்க ,   மத   தீண்டாமையை   ஒழிக்க ,   நாடு – கலாச்சார   தீண்டாமையை   ஒழிக்க   சமூகஅறிவியல்   வீரிய   கலப்பின   சேர்க்கை   திருமணம்   செய்து   நன்மைகள்   பெற   வழிக்காணக்கூடாதா ? சொந்த   இரத்த   உறவு   இல்லாத   ஏதோ   ஒன்றில்   வீரிய   தன்மை   பெற்றிருப்பவர்   திருமணம்   செய்யலாமே .   அது   ஜாதியிலோ ,   வசதியிலோ ,   படிப்பிலோ ,   தங்கள்   மத   அறிவிலோ ,   நாட்டு   கலாச்சாரத்திலோ ,   அழகிலோ , மொழி   ஆற்றலிலோ ,   நடனத்திலோ ,   இசையிலோ ,   பேச்சு   திறமையிலோ ,   சமூக   நல   ஆர்வத்திலோ , ஆரோக்கியத்திலோ ,   உடல்   உழைப்பிலோ ,   மூளை   உழைப்பிலோ   போன்ற   பல   திறன்களில்   ஏதோஒன்றில்   வீரிய   தன்மையில்   செழித்திருந்தாலும்   சமத்துவ   பொருத்தம்   பார்த்து   வேறுப்பட்டவர்களோடுதிருமணம்   செய்து   நன்மைக்கென்று   ஒன்றுபடக்கூடாதா ?   திருமணம்   செய்துக்கொள்ளாத   மற்றவர்களுடன்   சகோதரத்துவத்தில்   பொருந்திக்கொள்ளக்கூடாதா ?   களவும்   கற்று   மற கற்பழிப்பை எப்படி கற்று மறப்பது ?   களவு   கற்பதற்கு   ஒரு   பள்ளிக்கூடம்   வேண்டும் . களவு   கற்றதை   மறப்பதற்கு   களவின்   உயிர்   நீங்க   வேண்டும் .   ஒவ்வொன்றையும்   அளக்க   கருவிகள்   உண்டு .   நிலத்தை   அளவிட , பாலை   அளவிட ,   உடையை   அளவிட , தானியங்களை   அளவிட ,   கம்ப்யூட்டரின்   நினைவகத்தை   அளவிட ,   மரங்களின்     ஆயுளை அளவிட   மீட்டர் ,   லிட்டர் ,   கிராம் , இரண்டடிமானம் ,   தசம   எண்   போன்றவைகள்   உள்ளன .   களவு ,   கற்பழிப்பு   போன்ற   பல   குற்றங்களின்   வலியை   கற்கும்   பள்ளிக்கூடமாக     எண்ணங்களில்   அளந்துபயிலலாம் .   நம்   செய்கையால் இந்த   குற்றங்களை   செய்யாமல்   இருக்கவேண்டும் .   இதற்காண   எண்ணங்களோடு போராடி   எண்ணங்கள்   செய்கையாக   மாறாமலும் ,   எண்ணம்   உயிர்   பெறாமலும் ,     நல்ல   செய்கையால்வெற்றிபெறச்   செய்தால் ,   எண்ணத்தில்   உயிர்   பெற்றது   செய்கையில்   உயிர்   நீங்குவதால்   அதுசெய்கையில்   மறக்கப்படுகிறது . உடலால்   வலி   உணர்ந்தால்தான்   செய்கையில்   செய்யாமலிருக்க   முடியுமென்றால்   நாம்   இன்னும்பக்குவப்படவில்லை .   நாம்   நல்ல உணர்வு   இல்லாதவர் .   நம்மை   கட்டுப்படுத்த   காவல்   அதிகாரி ,   கோர்ட் ,   சமுதாயம் போன்றோர்   எப்பொழுதும்   கண்காணிக்க   வேண்டுமோ ,   உணர்வுபடக்கூடாதா     செயலில் . கடவுள்   பூவின்   வாசனையைவிட   மென்மையும்   கொண்டவர் .   அதுபோல்   நம்      எண்ணத்திலேயேகுற்றத்தின்   வலியை   அளந்து   புரிந்துக்கொண்டு   நல்ல      செய்கைகளை   செய்வோம் .   இப்படியும்   நடக்கிறது ,   நம்   வலியை யாரோ   ஒருவர்   சுமக்கின்றனர் .   அல்லது   யாரோ ஒருவர்   சுமத்துகின்றனர் . மின்சாரத்தின்   கண்டுபிடிப்பால்   கண்டுபிடித்த   யாரோ   ஒருவரின்   மூலமாக   பல     துன்பங்கள்   நீங்கியது . இத்துன்பத்தை   நம்   அனைவருக்காகவும்   ஒருவர்   கண்டுபிடிப்பால்   தன்   எண்ணத்தில்   சுமக்க   வளர்ச்சிபெற்றார் .   நமக்கு   துன்பத்தை   சுமத்த     வெடிகுண்டை   வெடிக்கச்செய்து   பலி   செய்வதால்   ஒருவர்   தீயஎண்ணமே   செயலால்   வளர்ச்சி   பெறுகிறது .   கடவுளும்   நம்மை   சுமக்கிறார் ,   நம்மீதும்   சுமத்துகிறார்   அது   என்ன ?   நாம்   நலம்     பெறவே   இறைவன் .   நாம்   சுவாசித்து   சக்தியை   பெறுவது   போல் .   குற்றங்களை   செயலால் அல்ல   எண்ணத்தால்   உள்ளிழுத்து   சுத்திகரிப்பு   சக்தியால்   செயலில்   எண்ணத்தை     நன்மை   புரியவைக்கவேண்டும் .   நல்லெண்ணமாக .   வாரண்டி   –   கேரண்டி   நாம்   பயன்படுத்த   போகும்   பொருள்களுக்கு   வாரண்டி ,   கேரண்டி   என்ற   உத்தரவாதம்   இருக்கா ?   என்றுகவனப்படுத்தி   எச்சரிகை   பார்த்து   நீண்ட   நாள்   நன்கு   பயன்படுத்த     முயற்சிக்கிறோம் . பயன்படுத்த   போகும்   பொருள்களுக்கே   இந்த   நிலை   என்றால் ,   பயன்படுத்தும்     நமக்கு   எந்த   நிலை ? நாம்   உயிரோடு   இருக்கும்   நாட்களில் ,   நாம் நோய் ,   நொடியை   எதிர்த்து   ஆரோக்கியத்துடன்   இருக்கிறோமா ?   இந்த   ஆரோக்கியத்தின்   வாரண்டி ,   கேரண்டி   என்ற   உத்தரவாதம்   நமக்கு   எப்படி ?   உள்ளத்திலே   ஆரோக்கிய   அன்பின்   வாரண்டி ,   கேரண்டி   என்ற   உத்தரவாதம்   நமக்கு   எப்படி ?   இதற்காக   நம்முடைய   எச்சரிப்பு   கவனம்   செயல்பாடு   எப்படி ? வாகனங்களில்   எரிபொருள்   சக்தியானது   எந்தவகையில்   மைலேஜ்   கொடுக்கிறது     என்று பார்க்கிறோமே ? நம்   செயல்   வெளிப்பாடு   உழைப்புக்கும் ,   அறிவுக்கும் ,   ஞானத்திற்கும் ,   அன்பை     தருவதற்கும் , இரக்கத்திற்கும் ,   பொறுப்புள்ள   கோபத்திற்கும்   நல்லதிற்கென்று   எத்தகைய     மைலேஜ்   கொடுக்கிறது .   மதிப்பு நாம்   பயன்படுத்தும்   பொருள்களே   மதிப்பானதாக   இருக்க வேண்டும்   என்றால் ,   நாம்   மதிப்புள்ள   நல்ல   வாழ்க்கை   தேட வேண்டாமா ?   எந்த   மதிப்பை உயர்த்த   வேண்டும் .   எந்த விதத்தில்   நாம்   கெட்டிக்காரராய்   இருக்கவேண்டும் ? உணவு   நமக்கு   அடிமையாக   இருக்க   வேண்டும் ?   நாம் உணவுக்கு   அடிமையாய்   இருக்கவேண்டும் .   உணவு   இல்லையேல்   நாம்   உயிர்   வாழ்வது   சிரமம் .   ஆகவே   உணவை நம்பி   இருப்பதால்   நாம்   உணவுக்கு   அடிமை .   சரியான   உணவை   சரிவர   வரையறுத்து   எந்தமுறையில்   நாம் சாப்பிட   வேண்டும்   என்ற   அதிகாரம்   நமக்கு   உண்டு .   ஆகவே அந்த   வகையில்   உணவை   அடிமைப்படுத்தி   நாம்   அதிகாரம் கொண்டு   பயன்படுத்த   வேண்டும் .   அடிமை ,   அதிகாரம்   இரண்டும்   உள்ள   சுதந்திரமான அடிமையாய்   இருந்து   சரிவர   வரையறுக்காமல் செயல்பட்டால்   நல்ல   மாற்றத்திற்கான   மாற்று   வழிகளை கொண்டு   சரிபடுத்தும்   அடுத்த   முயற்சியால்   நல்ல வாழ்க்கைக்கு   வெற்றிபெறலாமா ? உடலுக்கு ,   உள்ளத்திற்கு ,   பிறரின் நன்மைக்கு , சுற்றுச்சூழல்   நன்மைக்கு   என்னென்ன   சரியான   உணவு ? சுவாச   காற்று ,   அன்பு   போன்ற நல்ல   உணவு   உள்ளன .   கலியுக பஞ்ச(ம்) பாண்டவர்   விடை அளிக்க தடை கடை நிலையில் சிலர்   105  வாலிபரில் வாழ்க்கை பகிர 101  கன்னிகளின் இருப்பு   இப்படி ஒரு சூழல்   பஞ்சம் வந்தது   ஒவ்வொரு 100   வாலிபர் ஒவ்வொரு 100   கன்னி என்று   மண உறவு உரிமை   ஒன்றுக்கு ஒன்று என்று முந்தியது   பஞ்சம் – பஞ்ச பாண்டவர் கொஞ்ச ஒரே கன்னி   நெஞ்சம் நிமிர்ந்த மீதி   5   பேர்   உணவு பரிமாற ஒரு கை உறவு பரிமாற ஒரு மங்(கை) ஐந்து விரல்களால்   ஆம்   ஒரு பாஞ்சாலிக்கு ஐந்து பாண்டவர்   பஞ்ச பூதம் நீர் ,   நிலம் ,   நெருப்பு ,   காற்று ,   ஆகாயம் ஒழுங்கின் தன்மை பஞ்சத்திற்கு   ஒழுங்கின்மையை செப்பனிட உடைத்திடுவோம் தடையின் பாரத்தை   அடைத்திடுவோம் கடைநிலை துவாரம் வரை அது எந்த ஒசோனோ ,   அன்பில் பாமரனோ நல்ல முழுமை நிலை மீட்பு விடையாக.   பஞ்ச பாண்டவர் ஐவருக்கும்   ஒரே கன்னியின் ஆதரவு பஞ்சபூதம் 5   க்கும்   ஒரே கண்ணியத்தின் ஆதரவு   அது   மனிதர் அனைவரும் ஒரு மனதாய் ஒழுங்கின் கண்ணியத்திற்கு தந்த ஆதரவு   நம்   முன்னோர்   பல   நூறு   தலைமுறை   சோதித்ததைவிட இக்கலியுக   தலைமுறை   சோதித்ததே   அதிகம்   சாதிக்கபோவதும்   அதிகம்   –   ஐந்தின்   ஒழுங்குக்கு   சத்தத்தின்   அமைதி படித்து   பார்க்கும்   சத்தம்   ஒயனும் அதின்   நல்ல   வழிக்கான   படைப்பை   பார்க்கும்   சத்தம்   கேட்கனும்   இறைவனை   தரிசிக்கும்   சத்தம்   ஒயனும் அதின்   நல்ல   அறவாழ்வின்   படைப்பை   பார்க்கும்   சத்தம்   கேட்கனும்   ஜெபிக்கும்   சத்தம்   ஒயனும் அதின்   நல்ல   குணப்படுத்தும்   படைப்பை   பார்க்கும்   சத்தம்   கேட்கனும்   தொழுகை   சத்தம்   ஒயனும் அதின்   நல்ல   தகுதிக்கான   படைப்பை   பார்க்கும்   சத்தம்   கேட்கனும் அமைதியின்   சத்தம் படித்து   பார்க்கும்   சத்தம்   கேட்கனும்   அதின்   நல்ல   வழிக்கான   படைப்பை   பார்க்கும்   சத்தம்   ஒயனும்   இறைவனை   தரிசிக்கும்   சத்தம்   கேட்கனும் அதின்   நல்ல   அறவாழ்வின்   படைப்பை   பார்க்கும்   சத்தம்   ஒயனும்   ஜெபிக்கும்   சத்தம்   கேட்கனும் அதின்   நல்ல   குணப்படுத்தும்   படைப்பை   பார்க்கும்   சத்தம்   ஒயனும் தொழுகை   சத்தம்   கேட்கனும்   அதின்   நல்ல   தகுதிக்கான   படைப்பை   பார்க்கும்   சத்தம்   ஒயனும் அமைதி ,   சத்தம்   என்ற   இரண்டும்   தேறனும் இல்லை   இரண்டும்   ஒன்றையொன்று   புழுங்கி   சீறிடும்   ஓய்வு   வேலை   நிலுவையில்   இருக்கும்பொழுது   ஓய்வு   எடுக்க   மனம்   வருமா ? ஓய்வு   எடுத்துக்கொண்டே   இருந்தால்   வேலை   பளு   உயரும்   என்ற   பதட்டம்     வராதோ ? வேலை   செய்தோம்   ஓய்வு   எடுத்தோம் ,   ஓய்வு   எடுத்தோம்   வேலை   செய்தோம்   என்ற   நல்ல   முடிவுவேண்டாமோ ? வேலை   மட்டும்   செய்தால்   போதுமா   நல்லது ,   கெட்டது   அறியும்   ஞானம்   வேண்டுமே ? நல்லது ,   கெட்டது   என்ற   ஞானம்   மட்டும்   அறிந்தால்   போதுமா   அதை   செயல்படுத்தும்   வேலை   பணிவேண்டாமா ?   இறைவனை   அறிவது   நல்லது ,   கெட்டது   அறிந்து   ஞானத்தோடு   செயல்படுவது   என்று   ஆகுமே ?   இரவு   நேர   ஓய்வு   எடுக்க ,   எல்லா   நாட்டினருக்கும்   ஒரே   நேரத்திலா   இரவு   இருக்கிறது   ? பகல்   நேர   வேலை   செய்ய ,   எல்லா   நாட்டினருக்கும்   ஒரே   நேரத்திலா   பகல்   இருக்கிறது ?   நல்ல   சுழற்சிக்கு   நல்ல   சூழல்   அமைந்தால்   நல்ல   ஓட்டம்   அமையும் .     கிரகம்   புரியாமல்   இருக்கும்   வரை   விக்கிரகம்   அது   வெளிபடுத்தும்   சத்தியத்தை   அறிந்துவிட்டால்   சத்தியாக்கிரகம்   இதில்   வணங்குதல்   என்பது   சத்தியாக்கிரகத்தின்   அறிவுறுத்தல்களை   ஏற்று   பணிவது   ஆகும் .   இதில்   வணங்குதல்   என்பது   இதுவரை   என்னவென்று   அறிகிறோம்   இறைவனின்   வார்த்தையான   மனசாட்சி   நம்மிடம்   நன்கு   பேசும்   பயிற்சி   பெற்று   இருக்கவேண்டும் இதில்   செய்யக்கூடாது   என்று   அறிவுறுத்துவதை   ஏற்று   பணிகிறோமா ?   செய்   என்று   அறிவுறுத்துவதை   ஏற்று   பணிகிறோமா ? இல்லை   எல்லாவற்றுக்கும்   தலையாட்டுகிறோமா ? எப்படி   தலை   வணங்குகிறோம் ? தவறு   அல்லது   பாவம்   என்பது   செய்   என்று   அறிவுறுத்துவதை   செய்யாமல்   விட்டுவிடுவது   செய்யாதே   என்று   அறிவுறுத்துவதை   செய்வது இந்த   மீறுதல்கள்தான் கெட்ட   சோம்பேறி   எதை   செய்யமாட்டார் ?   கெட்ட   ஊதாரி   எதை   செய்வார்   ? இந்த   இரண்டில்   ஏதாவது   ஒன்றில்   இருந்தாலும்   அது   தீமை   நோக்கிய   பயணம்   சிலைகளும் ,   வரைபடங்களும்   ,   எழுத்துகளும் ,   சைகைகளும்   கருத்தை   வெளிப்படுத்தும்   கருவிகள்   மாற்று   திறனாளிகள்   ( செவிடர் ,   குருடர் ) கற்பதற்கு   பிரத்தியோக   கருத்தை   வெளிப்படுத்தும்   கருவிகள்   உண்டு . இந்த   வெளிப்படுத்தும்   கருவிகளை   புரியாமல்   இருக்கும்   வரை   அக்கருவி   விக்கிரகம்   வெளிப்படுத்தும்   பயிற்சியின்   கருவிகளால்   சத்தியத்தை   அறியும்   சத்தியாகிரகத்தின்   அறிவுறுத்தல்களை   வணங்கி   தெய்வமாக   ஏற்கலாமே ? நன்மை ,   தீமையை   மனசாட்சிக்கு   பயிற்சி   அளிக்காத   கருவிகளான   விக்கிரக   நிலையின்   அறியாத   நிலைக்கு   நாம்   விலகியிருக்க   வேண்டும் .   விக்கிரகத்தை   விட்டு   விலகி   சத்தியாகிரகத்தை   ஏற்றுக்கொள்வோம் . 2 2. சிந்தனை சுபச்சாரம் கல் தெய்வம் நல் – தெய்வம் , கல் – தெய்வம் தெய்வம் என்றால் தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் சிலைகளின் விக்கிரகம், வரைபடங்களின் விக்கிரகம், எழுத்துக்களின் விக்கிரகம், மாற்றுத்திறனாளிகளுக்கான (குருடர், செவிடர்) விக்கிரகம் இவைகள் புரியாதவரை உணர்வற்ற கல் நெஞ்ச இருதயத்தின் விக்கிரகம் மனதில் இருக்குமே. இவ்விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து சத்தியாக்கிரகங்களாக உணரலாம். பிரதிஷ்டம் – பிரதி + இஷ்டம் விக்கிரகத்தின் (பிரதி) சத்தியாக்கிரகத்திற்கான கருத்து பிரதிபலிக்கும் (இஷ்டம்) நடைபெறும்பொழுது சிலைகளின் சத்தியாக்கிரகம், வரைபடங்களின் சத்தியாக்கிரகம், எழுத்துக்களின் சத்தியாக்கிரகம், மாற்றுதிறனாளிகளுக்கான (குருடர், செவிடர்) சத்தியாக்கிரகம் இவைகளால் புரிந்த சத்தியம் உணர்வுள்ள நல் நெஞ்ச இருதயத்தின் சத்தியாகிரகம் மனதிற்கு வேண்டும். இச்சத்தியாகிரகத்தினால் நன்மை உண்டு. பல வெளிப்படுத்தும் கருவி நூல்கள் மனத்திற்குரிய மொழியாக புரிய வேண்டும். இப்படி அமைவது குருடர், செவிடர் மாற்று திறனாளிகளுக்கும் வேதமாக கற்கப்படுகிறது. இந்த வேதம் யாரால் எழுதப்பட்டது? இது யாருடைய வேதம்? எந்த வேதம் முழுமையான வேதம்? மாற்றுத்திறனாளிகள் நிலைக்கு எவ்வகையில் உதவும்? எந்த வேதத்தின் மொழி இறை வேதத்தின் மொழி? கூடுவோம். கூடினால் விடை உண்டு. இது நம் ஆன்மீக வளர்ச்சியில் வானங்களே இறைவனை துதியிங்கள் மலைகளே துதியுங்கள் மலை சிறு பாறைகளாக உடையட்டும் பாறைகள் சத்திய கருத்தின் வடிவங்கள் ஆகட்டும் (சிலைகள்) நாம் பயிற்சியால் புரிந்து பாறைகள் நம்மால் துதி பாடபடட்டும். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்கள் யார்? குற்றவாளிகளை விட குற்றத்திற்கு தூண்டியவர்கள் யார்? புண்ணியம் தேடுபவர்களும், பாவத்திற்காக புண்ணிய தீர்த்தம், பாவ நிவர்த்திக்காக திருவிருந்தில் பங்குகொள்பவர்களும் பரிகாரம் தேடுபவர்களும் யாராக இருப்பார்? அவர்கள் பாவம் செய்தோம் என்றும், தவறு செய்தோம் என்றும் கோவில்களிலும், சர்சுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஒத்துக்கொண்ட குற்றவாளிகளா? குற்றத்திற்கு தூண்டியவர்களா? இன்னும் ஆலயங்களுக்கு செல்வது நிற்கபடாமல் குற்றம் தொடர்கிறதா? பரிகாரத்திற்காக சரியான உயிரான வழி அறியாதவர்களா? தானே மனமுவந்து தன் குற்றங்களை ஒத்துக்கொண்டு நீதிமன்றங்களின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்களா? இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்களா? இந்திய அரசிடம் சிறைப்பட்டவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திப்போம்! சிறை கோவில்களிலும், சர்ச்களிலும், பள்ளிவாசல்களிலும் சிறைப்பட்டவர்கள் யார்? இவர்களுக்கும், இந்தியாவின் சிறைச்சாலைகளில் சிறைபட்டவர்களுக்கும் என்ன வித்தியாசம்? வேலியே பயிரை மேய்ந்தாள் என்ன ஆவது? என்ற வழக்கச் சொல்லிக்கும் இந்தியாவில் உள்ள இறை பக்தர்களுக்கும் அவர்கள் காக்கவேண்டிய நீதிக்கும் எத்தகைய பங்கு இருக்கிறது? என்பதற்கும் என்ன வித்தியாசம்? போலி சாமியார்களால் சிக்கிக்கொண்ட வழிப்பாட்டு தல சிறை கைதிகள் கள்ளபோதகர்கள், கள்ள மத நடத்துனர்கள் இவர்களால் சிக்கிகொண்ட வழிப்பாட்டு தல சிறை கைதிகள் இருக்கிறார்களா? தூரம் தூரம், தூரமாக இருக்கும் வழிப்பாட்டு தலங்களை நோக்கி செல்கிறோமே நலத்திற்கான விடையளிக்க தூரமாய் இருக்கும் பிளாஸ்டிக் உபயோகத்தை நோக்கி செல்கிறோமா? இந்த சுற்றுச்சூழல் நன்மைக்கென்று நாம் அறிவை எந்தவகையில் முதலீடு செய்கிறோம்? இந்த தூரங்களை கடந்து நன்மைதனை தரிசனம் செய்வோம். கன்னம் சாமி கும்பிடும் பொழுது இரண்டு கையால் இரண்டு கன்னத்திலும் போட்டுக்கொள்ளும் அடையாளம் எதைக்குறிக்கிறது? நல்லது, கெட்டது இரண்டு விதத்தையும் புரிந்து தெளிவடைய வேண்டும் என்பதற்காகவா? ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பது? உள்ளத்தின் மனிதன் – மனம், எந்த கன்னங்களையும், கையின் அறைகின்ற எந்த நிலையையும் எந்த அடையாளத்தை காட்டும் ஒருவர் ஒரு கன்னத்தில் வெறுப்பின் அறையை நமக்கு ஏற்படுத்திவிட்டால் மறு கன்னத்தில் அவரால் விருப்பின் நிறை ஏற்பட வேண்டுமா? ஒரு கன்னம் தீய உடன்படிக்(கை)யின் அறைக்கு பயன்படுத்துமானால் மறுக்கன்னம் நல்ல உடன்படிக்(கை)யின் நிறைக்கு பயனாக வேண்டுமா? ஒரு கன்னம் தீய நம்பிக்(கை)யின் அறைக்கு பயன்படுத்துமானால் மறுக்கன்னம் நல்ல நம்பிக்(கை)யின் நிறைக்கு பயனாக வேண்டுமா? ஒரு கன்னத்தில் அறையின் சத்தம் மறுக்கன்னத்தில் சமாதான நிறையின் முத்தம்? இந்த நன்மை விருப்பின் நிறை உடனே நிகழ்வதோ, சந்தர்ப்ப கால நிலையின் முயற்சி மற்றும் தெய்வ விருப்பத்தை பொறுத்ததாகுமா? வஞ்சக காட்டிகொடுக்கும் முத்தம் வேண்டாம்? அன்பை நாட்டிகொடுக்கும் முத்தம் வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆற்று வெள்ளம் , கிணற்று தண்ணீரை கொண்டு போகுமா? வளர்ச்சி, வளர்ச்சி என்று மூளை உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்வியால் மனதிற்கான entertainment வேணாமா? entertainment – ஐ ஏந்தும் சுவரான உடல் ஆரோக்கியம் வேண்டாமா? சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அல்லவா? நல்லா ஏட்டு கல்விய படிச்சிருக்கேன் ஆனால் வேலை செய்ய மனசு வரமாடேங்கிறது உடல் ஒத்துழைக்க மாட்டுதே? இது தேவையா? வளர்ச்சி என்பதில் சுற்றுச்சூழலை காப்பாற்ற எந்த வளர்ச்சியுள்ளது? எதிர் காலத்திற்காக savings , policy க்கு எந்த துறையை மட்டும் கவனிக்கிறோம். நல்ல உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என இருக்கிறதே? இவைகள் யாருக்காக? ஐந்திலேயே மூளை உழைப்பு கல்வி மட்டும் இருந்தால் 50 தில் உடல் உழைப்பு கல்வி, மன மகிழ்ச்சி கல்வி உள்ள ஆரோக்கிய கல்வி பயில முடியுமா? நிம்மதிக்கான அஸ்திவாரம் ஐந்திலே அமைந்தால் தானே ஐம்பதில் பலன்கள் மிகுந்து இருக்கும். இந்த அஸ்திவாரத்தை 50 தில் அமைப்பதும் கடினம் அதன் பலனின் காலமும் குறைவு அல்லவா? ஆற்று வெள்ளம் , கிணற்று தண்ணீரை கொண்டு போகுமா? நம்மால் முடிந்ததற்கு மேல் நம் பிற்கால சந்ததி கவனிக்காதா? முடிந்த அளவு திறமையை நாம் வளர்க்கணும் தேவைக் கேட்ப இதுதான் முடிந்தது என்று நம் பிற்கால சந்ததிக்கு நம் அலட்சியத்தை நிம்மதிற்கான அஸ்திவாரங்களுக்கு பங்கு வேண்டுமோ? இதுதான் என் மூதாதையர் சேர்த்துவைத்த சொத்து என்று எதை சொல்வார்கள்? பிற்கால சந்ததி சாதியால் சாதி சாதி, சாதி என்று சோதி சாதிப்பதற்கு பறை சாதி நல்லதை பறைசாற்றுவதற்கு பூநூல் அணியும் சாதி வேத நூல் பூப்பதற்கு சாதி பிறந்தது செய்யும் தொழிலை வைத்து நல்ல பறையானாக பறைசாற்றுங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று பூத்திடுங்கள் சாதனை நூலுக்கென்று அணைத்திடுவோம் சாதி பேதத்தை இணைத்திடுவோம் இதில் தெய்வத்தை தரிசிப்போம் சாதியின் புண்ணிய தலங்களை சூதாட்டம் கிரிக்கெட் சூதாட்டம், சீட்டுக்கட்டு சூதாட்டம், தாய கட்டை சூதாட்டம், லாட்டரி சீட்டு என்று சூதாட்டம் உழைப்பை முக்கியப்படுத்தாத வரைக்கும் தீமையே. மகாபாரதத்தில் சூதாட்டதினால், எவ்வளவு துன்பங்களுக்கு காரணம் இருந்தது. மக்கள் கடவுளை வணங்குவது சூதாட்டமாக இருக்கக்கூடாது அல்லவா? படித்தவர்கள் இவ்வளவு பேர், படிக்காதவர்கள் இவ்வளவு பேர், தொழில் தெரிந்தவர்கள் இத்தனை பேர், இதைவைத்து, திட்டங்கள் முறைபடுத்தி, இயற்றப்படும் பொழுது, நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாம் எத்தனை பேர், ஞானத்தோடு செயல்பட்டு, திட்டங்கள் தீட்டுகிறோம். நாம் கடவுளிடம் வேண்டிக்கொண்டு, வேண்டுதலை என்ற பெயரில், காணிக்கை செய்வது இருக்கிறது. இந்த காணிக்கைகள் எவ்வகையில் நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திட்டங்கள் சரியில்லாது போனால் இந்த வேண்டுதலை ஒரு சூதாட்டம் ஆகும். வேண்டுதலை ஒரு நிகழ்தகவு போலவும், லாட்டரி சீட்டு போலவும் இருக்கக்கூடாது. வேண்டுதலையில் சிலருக்கு நன்மைகள் கிடைக்கும், சிலருக்கு நன்மை கிடைக்காது இதைவைத்து நாம் செய்கின்ற செயல் சரியானது என்று சொல்ல முடியாது. சூதாட்டம் இருக்கும் வரைக்கும் தவறை உறுதிபடுத்தாமல் இருக்கிறோம். இதனால் நன்மைக்கான மாற்றுவழியை தேர்ந்தெடுக்கமாட்டோம். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று சொல்லப்படுவதன் காரணம். எந்த ஒரு செயலும் நம் முற்கால சந்ததி, பிற்கால சந்ததி, நடப்பு உலக வாழ்க்கை இவைகளை கணக்கிட்டு இறைவனால் அனுமதிக்கப்படுகிறது. ஒன்று இறைவன் இஷ்டப்பட்டு அனுமதிக்கிறார். அல்லது இறைவனை கஷ்டப்படுத்தி நாம் செய்ய அனுமதிக்கப்படுகிறோம். நல்லது செய்கிறதை ஏற்றுகொள்ளவதும் அல்லது சுமை சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று நம் சுமையை ஏற்றுக்கொள்வதும் அந்த இறைவன்தான். நமக்கு கிடைக்கவேண்டும். கிடைக்காமல் இருப்பதுவும் ஒருவேளை நன்மைக்காக கூட இருக்கலாம். நாம் செய்கின்ற எந்த செயலிலும் ஏற்படுகின்ற எந்த பலனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்ப்பார்க்கின்ற பலன் கிடைக்கவவிட்டால் கவலைக்கு இடம் கொடுப்பது ஆகிவிடும். பலனை எதிர்பாராதே. எதிர்பாராத பலனை நாம் எதிர்ப்பார்ப்பது நம் அடுத்த முயற்சி அதற்கான பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அதை அனுபவித்து ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஞானத்தின் வளர்ச்சி கேட்ப நடந்து கொள்ளவேண்டும். போலிச்சாமியார் 100 % போலிச்சாமியார் அல்ல, நல்ல சாமியார் 100 % நல்லவரல்ல, எல்லாம் கற்றுக் கொள்வதற்கு இறைவனால் அனுமதிக்கப்படுகிறது. நல்லது என்று எப்படி உறுதிப்படுத்துகிறோம் கெட்டது என்ன என்று தீர்மானிக்கப்படும்பொழுது, கெட்டதை தீர்மானிக்க, போலித்தன்மைகள் இருப்பது, நல்லதாக இருக்கிறது. தங்கமும், செப்பும் கலந்தால்தான் ஆபரணங்கள். தங்கம் மிகுந்து இருக்கவேண்டும். அதுதான் மதிப்பு. அதுபோல் உலகில் நல்லதன்மை மிகுந்து இருக்கவேண்டும். நல்லதை தீர்மானிக்க, நல்லதின் நிஜத்தன்மையை, கெட்டதாக ருசிப்பார்ப்பது கெட்டதாக இருக்கிறது. இரக்கம் யாருக்கு தேவைப்படும். முடியாமல் தோல்வியுறுபவர்களுக்கு. நாம் எத்தனை காலம் முடியாமல் இருப்பது, மற்றும் வெற்றிபெறாமல் இருப்பது. நம் முயற்சி இரக்கத்தை நோக்கி இருப்பதா? எதிர்ப்பை வெல்லும் எதிர்ப்பு சக்தியை பெறும் நோக்கில் இருப்பதா? இறைவனிடம் உண்மையாக இருந்தால் ஞானத்தை பெற்று எதிர்ப்பு சக்தியினால் வெல்லலாமே. எதிர்ப்பு சக்தியின் அம்பினால்தான் ராமர் வெற்றிபெற்றார் அன்றோ? நாம் இறைவனிடம் வேண்டுவது இரக்கத்தன்மையே என்றால் நம் இயலாத தன்மையினால் இன்னும் வெற்றிபெற முடியவில்லை. நாம் இன்னும் வாழ்க்கை யுத்தத்தை வெற்றியோடு செயல்படுத்தவில்லை. வாழ்க்கை பயணத்தை நடத்தும் வாலிப பருவம் அடையவில்லை. சிறு குழந்தை பெற்றோர் பாதுகாப்பில் இருப்பது போல இரக்கத்தின் பாதுகாப்பில்தான் இருக்கிறோம். உலகம் ஒரு ஒழுங்கின்தன்மையினால்தான் இயங்குகிறது. ஆனால் அது பலியாகி வற்புறுத்தலோடு இயங்க வேண்டுமா? நாமே மனமுவந்து ஒழுங்கின்தன்மைக்கு உதவ வேண்டுமா? நாம் இதற்காக எந்தவகையில் இந்த வலிமையை பெறுவது. இந்த வலிமையின் சக்தியை பெரும்பான்மையினர் பெற்று இருந்தால் எளிமையும், இனிமையுமான ஒழுங்கு அமையுமே. சூதின் ஆட்டம் கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே. நாம் எதிர்ப்பார்ப்பது வேறு, இறைவன் எதிர்ப்பார்ப்பது வேறு. ஆகவே பலனை எதிர் பார்க்காதே. நாம் நினைப்பது ஒன்று, தெய்வம் நினைப்பது ஒன்று இறைவன் நம்மை -உன் வழிகள் என் வழிகள் அல்ல என்கிறார். இறைவனே நீவிட்ட வழி என்று இறைவனை சரண் அடைந்து நாம் கடமையை செய்தால் சூதின் ஆட்டம் இல்லை. அந்த கடமை வேறு ஒன்றுமில்லை நல்லதை நிதானித்து அதற்கான நம் பங்களிப்பு. நல்லது யாருடையது ? அது இறைவனுடையது அது எல்லாவற்றிக்கும் நல்லது. இதனை சரண் அடைந்தால் இறைவனை சரணடைந்ததாகும். அனுபவித்துதான் நல்லது, கெட்டதை உணர்கிறோம். குழந்தை எடுத்த எடுப்பிலயே நன்கு பேசுவதில்லை. ஆகவே எடுத்த எடுப்பிலயே நம் வழி இறைவன் வழியாகாது, பலனும் எதிர்பாராததுதான் ஆனால் இறைவன் எதிர்பார்க்கும், பலனுக்குள் நாம் இருப்பது, நல்லதாக அமையும், நாமும் இறைவனும் ஒன்று படுகிறோம். குழந்தையின் பேச்சி – ஒரு காலத்தில் போலி தன்மை என்பது வாலிப பருவத்தில் சிறப்பு தன்மை பேச்சாக, நல்ல பயிற்சியினால் அமையும்பொழுது செயலின் ஒவ்வொரு நிலையிலும் நம் போலித்தன்மை மாற்றம் பெற்று ஒவ்வொரு நிலையிலும் எப்பொழுது சிறப்பு பெரும். இதில் போலிச்சாமியார், கள்ள போதகர், கள்ள மத நடத்துனர்? மை கொண்டு எழுதும் பேனா தீ(மை) கொண்டு எழுதும் பேனா நன்(மை) கொண்டு எழுதும் பேனா பொறு(மை) கொண்டு எழுதும் பேனா பொறா(மை) கொண்டு எழுதும் பேனா கய(மை) கொண்டு எழுதும் பேனா அறியா(மை) கொண்டு எழுதும் பேனா கல்லா(மை) கொண்டு எழுதும் பேனா இம்மைகள் கொண்டு எழுதி இமைத்ததில் இமை பொழுது கைவிட்ட இறைவனே உருக்கமான இரக்கங்களால் அணைத்துகொண்டீரே சொர்க்கவாசல் திறப்பதற்கு இமைக்கின்ற பொழுது விழி திறக்கிறது பிறகு மூடுகிறது விழி திறக்க வேண்டியது அறிவுக்காக அறியாமையின் விழி மூடவேண்டும் தேவைக்கேட்ப விழி திறக்கும் பொழுது சில வேலைகள் நடக்கணும் நன்மைக்காக விழி மூடும்பொழுது சில அனிச்சை செயல்கள் நடக்கணும் தீமையின் ஓய்வுக்காக இறைவன் இமை பொழுது கைவிட்டது இதற்காகத்தான் அப்பா, அம்மா என்று இறைவனை நாம் சொந்தம் பாராட்டி அழைக்கும் தெளிவினால் இறைவனின் உருக்கமான இரக்கத்தின் வெற்றியால் நம்மை அணைத்து கொள்வதற்குத்தான் என் வாழ்கையில் தூய்(மை) தீராமல் இருகிறதா தூய்மையானவன் என்று என் பெயர் என் உள்ளத்திற்கும், சுற்றத்திற்கும் எழுதப்பட என் வாழ்கையில் தீ(மை) தீர்ந்திட வேண்டும் எழுதி முடிவு பெற அம்முடிவு நன்(மை) யின் பெயர் தொடர்ந்திட வேண்டும் எழுதி தீராத ஊற்றாய் அனாதை அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி போன்ற உறவு முறை ஒருவர் கூட இல்லாதவர்கள் அல்லது இவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களை அனாதைகள் என்கின்றனர். நல்ல வாழ்க்கைக்கு வேண்டிய அறிவு, திறமை, அன்பு, ஆரோக்கியம் போன்ற வாழ்வு ஆதார உறவு முறை ஒன்று கூட இல்லாதவர்கள் மனதளவில் குறை வாழ்வு அனாதைகள் ஆவார்கள். உயிருள்ள தெய்வத்தை நாம் வணங்கிட வேண்டும். ஆம் பயிற்சி பெற்ற மனதான மனச்சாட்சியினால் பேசும் உயிருள்ள தெய்வத்தின் அறிவுறுத்தலுக்கு நாம் வணங்கிட வேண்டும். அவ்வறிவுருத்தல் கண்டுகொள்ளமுடியாத வரை அவை விக்கிரகம் ஆகும். நல்ல வாழ்க்கைக்கு தேவையான பகுத்தறிவில் உயிரூட்டம் பெறாதா எழுத்துக்கள், சிலைகள், வரைபடங்கள், மொழிகள் உணவு, உடைமை, உறைவிடம் ஆகியவைகள் விக்கிரகம் ஆகும். ஆகவே இவைகளால் பகுத்தறிவில் உயிரூட்டம் பெற்று வாழ்வை உணர்ந்து வாழ்ந்தால்தான் உயிருள்ள தெய்வத்தை உணர்ந்து வாழ்கிறோம். விக்கிரகத்தை சத்தியாகிரகமாக மாற்றம் பெற்று இருக்கிறோம். உணவு நமக்காக அது உண்ணாது. பசித்தால் நாம் தான் உணவு என்று அறிந்து உண்ணவேண்டும். பசிக்கு உடைமையோ, உறைவிடமோ உதவாது. உணவுதான் உதவும். உறைவிடத்திற்கு உணவு உதவாது. எதற்கு எது ஏற்குமோ அதுதான் ஏற்புடையதாகும். விக்கிரகம் பார்க்காது, கேட்காது, பேசாது. ஆனால் விக்கிரகத்தின் மூலம் விளக்கங்களை பார்த்தும், கேட்டும், பேசியும், பயன்பாட்டுக்கு உட்படுத்தியும் பகுத்தறிந்து அறிந்த தெய்வத்தை உணர்கிறோம். அறியாத தெய்வத்தை வணங்குவது விக்கிரக நிலையில் இருக்கிறது. உலகில் பயன்பாட்டுக்கு உதவாத பொருள் ஒன்றும் இல்லை. நல்லதிற்கான பயன்பாட்டுக்கு ஏற்புடையும் விதத்தில் பயன்படுத்தவேண்டும். இறைவன் எல்லாவற்றையும் படைத்து அது எல்லாம் நல்லது எனக்கண்டார். பெற்றோரை பிள்ளைகள் என்று அறிந்தும். பிள்ளைகள் பெற்றோர் என்று அறிந்தும் உறவை பரிமாறுவதில் உறவு உயிர் பெறுகிறது. கடவுள் பிள்ளைகள் என்று அறிந்தும் பிள்ளைகள் கடவுள் என்று அறிந்தும் உறவை பரிமாறுவது பக்தி உயிர் பெறுகிறது. புத்தி சுபாவத்தில் மனநிலை குறைபாடு வேண்டாம். இது யாரோ, அது யாரோ என்று புரியாத வாழ்வறியும் தன்மை உறவு முறையில் வேண்டாம். பகுத்தறிவு பகுத்தறிவை இறைவன் விரும்புவாரா? விரும்பமாட்டாரா? உங்களுக்கு பகுத்தறிவின் விருப்பம் எப்படி? வெற்றி தீமையை நன்மையால் வெல். விக்கிரக தீமையை நன்மையால்தான் வெல்லனும். விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து சத்தியாகிரகமாக பயன் பெறனும். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏட்டு சுரைக்காய் பற்றிய படிப்பறிவும் வேண்டும். பட்ட அறிவும் வேண்டும். பயன் பெற்ற அறிவும் வேண்டும். முருகன், இயேசு, முகமது நபி ஆகியோரின் பெயர்களில் ஆன்றோர்களும், சான்றோர்களும், துன்மார்க்கர்களும் உலகில் வாழ்ந்ததும் உண்டு. இதில் யாரை உணர்ந்து பின்பற்றினோமோ அதற்குரிய பலன் உண்டு. முருகன், இயேசு, முகமது நபி இவர்களில் இறைதன்மை உணர்ந்து பின்பற்றினால் அதற்குரிய உறவு உண்டு. விக்கிரகத்தில் எதை உணர்ந்தோம். அதன் உறவு உண்டு. சத்தியாகிரகமாக என்றால் அதன் சத்தியத்தை உணர்கிறோம். வீடுக்கட்டும் கல்லாக விக்கிரகம் பயன் பட்டால் அதன் பலன். திருடுவதற்கும், கொலை செய்வதற்கும் விக்கிரகம் பயன்பட்டால் அதன் பலன். இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பிக்கும்பொழுது ஜோதி தெரிகிறதா என்று சொல்லி ஜோதி தெரிந்தது நான் ஜோதி தரிசனம் கண்டேன். என்று சாமியை தரிசித்ததாகசொல்வார்கள். வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத குருடருக்கு ஜோதி காண்பதில் இந்த பாக்கியம் கிடையாதா? மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஜோதியை என்ன வென்று அறிந்துகொள்வார்கள்? உண்மையில் இறைவனின் ஜோதியை அறிந்துகொள்ளுமிடம் மனதுதான். மரத்தால் செய்து பெயிண்ட் அடிக்கப்பட்டு நிஜத்திற்கும், காட்சி பொருளுக்கும் வித்தியாசம் தெரியாத மாங்கனி சுவைத்து பயன் பெறுவது எப்படி இயலாதோ?அதைபோல் இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்து ஜோதி என்று கண்ணால் மட்டும் அறிந்து மனம் பயன் அறியவேண்டியதை விட்டுவிட்டால் முழு ஜோதியை நாம் கண்டுகொள்ளவில்லை. உடல் கண்மட்டுமே ஜோதியை கண்டு களிகூர்ந்தது. நாம் இறைவனின் சாயலை உருவமெடுத்து காண்பித்த ஜோதியை அறியும் கருவி நம் மனதில் பயன்பெற்றால். இந்த மனதின் பயனை, வெளிச்சத்தில் பொருள்களை காணமுடியாத குருடருக்கு, மனதிலே மாற்று கருவி மூலம் அறியவைத்தால், அவர் குருடர் அல்ல, இறைவனை மனதிலே கண்டுகொண்ட மனபார்வை கொண்ட மனக்கண் மற்றும் இறை அறிவு கண் உடையவர். மனவளர்ச்சி குன்றியவருக்கோ நாம் அவருக்கு வாரிசு நியமனம் ஆக இருந்து அவர் நிலையில் நாம் செயல்படுகிறோம். மனிதருக்கு சேவை செய்வது இறைவனுக்கு சேவை செய்வதாகும். மனக்கோவில் கொண்ட மாணிக்க வாசக இறை உணர்வுகள் நமக்குள் பிறக்கட்டுமே. மனிதருக்கு சேவை இறைவனுக்கு சேவை எழுத்துக்கள் மொழியின் எழுத்துக்கள் நல்லதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது. கெட்டதை சொல்லும் வார்த்தைகளுக்கும் பயன்படுகிறது. இதில் விக்கிரகம் எதை சொல்கிறது. விக்கிரகம் எதை சொல்கிறது அக்காலங்களில் சித்திர வடிவங்கள் கருத்து பரிமாற்றத்திற்கான வடிவ மொழியாக பயன்படுத்த தொடங்கப்பட்டன. சித்திரவடிவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டன. இச்சிலைகள் விக்கிரகங்கள் எனப்பட்டன. தற்பொழுது எழுத்து வடிவங்கள் கருத்து பரிமாற்றத்திற்கான எழுத்து மொழியாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இயந்திரத்தின் இயக்க பரிமாற்றத்தின் கருவியாக கணிணிமொழி பயன்படுகிறது. விக்கிரகங்கள், எழுத்துக்கள் இவைகளின் உண்மை படிவங்கள் என்பது நம் உணர்வுகளின் பதிவுகள். கணிணி மொழியின் உண்மை படிவம் இயந்திர இயக்கங்களின் பதிவுகள். ஆகவே விக்கிரகம் என்றால் தெய்வத்தன்மையின் பதிவுகளை மட்டும் குறிப்பது ஆகாது. அதுவும் எழுத்துகளை போல பல உணர்வுகளின் பதிவுகள். இப்பதிவுகள் கெடுக்கப்பட்ட இறைதன்மையை குறிக்கவும் பயன்படுகின்றன. மீட்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட இறைதன்மையை குறிக்கவும் பயன்படுகின்றன. எப்படி இயந்திரம் கெட்டு போன பதிவும், பழுது நீக்கப்பட்ட பதிவும், இயக்கம் பெறும் பதிவும் அறிந்துகொள்வது போல். எந்த பதிவு தன்மையும் நமக்கு உணர்த்தப்படும்பொழுதுதான் உணர்த்த படுகிறவர்களுக்கு அது உயிர் பெறுகிறது. இந்த சத்திய தன்மையின் கிரகம் அதற்கென்று உயிர் பெற்றதற்குரிய சத்தியாகிரகம். உணர்வு பெறாதவர்களுக்கு விக்கிரகமான இயல்பு நிலையிலே உள்ளது. ஒற்றைப்படை சுபகாரியங்களுக்கு பங்குகொள்ளும் எண்ணிக்கைகள் ஒற்றைபடையில் இருக்க வேண்டும் என்பார்கள். ஒற்றுமை படையின் அடையாளம் ஒற்றைப்படையாக குறிக்கப்படுகிறது. எதிலும் ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றிக்கு வழி எளிது. பலம், அறிவின் சேர்ப்பில் ஒன்றுபட்ட ஒற்றுமை கொண்ட படை வீரர்கள் எதிரிக்கு சவாலாக இருப்பார்கள். அதுபோல் சுபகாரியங்களுக்கு தடையாக இருப்பவைகளை மேற்கொள்ள ஒற்றுமைப்படைபோல் சூழ்வதனால் சுபகாரியம் சிறப்புக்கு காரணமாக அமையும். இந்த அடையாளத்தின் நிமித்தம் ஒற்றைப்படை அனுசரிக்கப்படுகிறது. கோவிலையும், சாமியையும் சுற்றிசுற்றி வருவதன் அடையாளம் நம் சுற்றுபுறச்சூழலையும், சுற்றத்தாரையும் பராமரிப்பின் கவனிப்பில் சீர்ப்படுத்த நம் பங்கின் ஆதரவு இருக்கவேண்டும் என்பதற்காக ஏழை தன் கஷ்டத்தை இறைவனிடத்தில் வைக்கிறார். இறைவனின் கஷ்டத்தை போக்க ஏழைக்கு உதவுவதால் ஏழையும், இறைவனும் நம்மேல் இஷ்டப்படுகின்றனர். ஆகவே இறைவனை இஷ்டப்படுத்த மனிதர்களை நேசிக்கனும். சாமி சிலைக்கும், கோவிலுக்கும் எத்தகைய மதிப்பு உள்ளது. இறைத்தன்மையை மனதில் உணர்வதுதான் மதிப்பு. மனதில் உணரப்பட்ட இறைத்தன்மையை திருடரும் திருட முடியாது. பூகம்பமும் அழிக்க முடியாது. ஏனெனில் மதிப்பு அதிகம். சாமி சிலை, கோவில் இவைகளின் மதிப்பை காப்பாற்றி கொள்ள தேவையில்லை என்பதால்தான் அதை திருடரும் திருட முடிகிறது, பூகம்பத்தாலும் அழிக்கமுடிகிறது. ஒரு விதைக்குள்ளே பல விதைகள் உள்ளடங்கியுள்ளது. அதுபோல் இறைத்தன்மையை உணர்த்த சாமி சிலையும், கோவிலும் அழிந்தாலும் அவைகள் பிறவி எடுத்துக்கொண்டே இருக்கமுடிகிறது. மனதிலே பிறவி கடல் நீந்துவார், நீந்தாதார் இறைவனடி சேராதவர். வளர்ச்சி வளர்ச்சி, வளர்ந்த நாடு என்று முக்கியப்படுத்துவது எதை? வளர்ச்சிக்கு சுறுசுறுப்பான இயக்கமும் தேவை. இத்தகைய சுறுசுறுப்பு தேவை என்பதற்காக சாவை, என்ன தாமதமா சாவரது சுறுசுறுப்பா சாவ்ரது இல்ல என்று என்று செயல்படுவது எத்தகையது? எது சுறுசுறுப்பாக செயல்படுத்தனும், எதை தாமதப்படுத்தனும் நல்ல வாழ்க்கைக்கு சுற்றுசூழல் கேட்டுக்கும், சுற்றத்தார் துன்பத்திற்கும் சாவின் துரிதத்திற்கும் என்ன சம்பந்தம்? பொருத்தம் திருமணத்திற்காக பொருத்தங்கள் பார்க்கும் பொழுது போதுமான முக்கியபொருத்தங்களை கவனத்தில் கொண்டு திருமண ஏற்பாடுகள் செய்வர். தற்போதைய வளர்ச்சிகேட்ப உடல் ஆரோக்கியத்திற்கான பொருத்தம் மருத்தவம் அறிவுறுத்தும் பொருத்தம் சுற்றுசூழலின் நன்மைக்கான பொருத்தம் போக்குவரத்தின் நன்மைக்கான பொருத்தும் சமூக நன்மைக்கான பொருத்தம் உலக நலனுக்கான பொருத்தம், இப்பொருத்தங்களை பார்த்து படிப்பில் சேர்ப்பதற்கும், சுபகாரியங்களுக்கும் திருமண ஏற்பாடுகளுக்கும் உறைவிடத்திற்கும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகளை செய்யலாமா ? நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் அதே நேரத்தில் நமக்கு தேவையான முக்கிய பொருத்தங்களை பார்க்கலாமே. மழை காலங்களில் வேலை நாளை விடுமுறை நாளாக அனுசரிக்கும்போழுது அவ்விடுமுறை நாளை இன்னொரு நாளின் order என்று வேலை நாளாக அனுசரிப்பது போல் முக்கிய முகூர்த்த நாளில், விரத நாளில் முக்கிய வன்முறை சிக்கல் இருந்தாலோ, பகிர்ந்தளிப்பு சிக்கல் இருந்தாலோ (தானிய பஞ்சம், காய்கறி தட்டுப்பாடு போன்ற) வேறு ஒரு நாளில் அனுசரிக்கலாமே மின்சார பங்கீட்டில் பற்றாக்குறை ஏற்படும்பொழுது ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு நேரத்தில் மின்சாரம் வழங்குவது போல் தேவைகளை விசேஷ நாளுக்கு கணக்கிடலாமே நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தா சாவு வருகிறது. பொருத்தங்கள் பார்க்காத திருமணங்கள் இல்லையா? ஏதாவது நன்மைக்கு எதையாவது இழக்கத்தான் வேண்டும் என்றால் அதற்கும் சம்மதிக்கிறோம் அல்லவா? துணிந்து போராடுகிறோம் அல்லவா? எச்சரிப்புக்காகவும், ஒருங்கிணைந்த நம்முடைய முயற்சிக்காகவும் கணக்கீட்டுகாக பொருத்தங்கள் பார்க்கலாமே? நம்முடைய முயற்சிக்கும் மேல் தெய்வம் விட்ட வழி. உயிர் கொடுப்பான் தோழன் சிநேகிதனுக்காக ஜீவனை கொடுக்கிறதை காட்டிலும் என்றே அன்பு ஆரம்பமாகிறது. இவ்வுலகில் நம் உயிர் என்ன ஊற்றாகவா இருக்கிறது? உயிர் கொடுக்க வேண்டும் என்றால் சாக வேண்டும் என்றா அர்த்தம். உயிரான மதிப்பு என்று எதை சொல்கிறோம். நல்லவனாக வாழ்வதை நல்லவனாக வாழ்வளிப்பதற்கானவைகளை நண்பனுக்கு கொடுப்பது உயிரான செயல் உயிரை கொடுப்பதான உயிரானவைகளை நண்பனுக்கு கொடுப்பது அது பசியின் பொழுது உயிர் சத்தான உணவிற்கு வழி ஏற்படுத்தி தருவது ஆனால் போதைக்கி அடிமையாக்கி உதவுவது உயிரான செயல் அல்ல அது நண்பனுக்கு கொஞ்சகொஞ்சமாக சாவை கொடுப்பது. உயிரை கொடுப்பது என்றால் நல்லவை உயிர் வாழ உதவுவது ஒரு நண்பனுக்கு உயிரை கொடுப்பதில் உயிராக மதிக்கக்கூடியவைகள் சில விளையாட்டின் ஆர்வத்திற்கு உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது ஆரோக்கிய வாழ்விற்கு உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது நல்ல மகிழ்ச்சிற்கு உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது நல்ல அறிவிற்கு உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது இரத்த தானம், கண் தானம், அன்னதானம், சமாதானம் போன்ற உயிராக விளங்கக்கூடியவைகளை கொடுப்பது எதிரி நாடுகளிடமிருந்து நம்மை காப்பாற்றுவதில் தன் உயிரை துறப்பது என்பது தியாகம். வேண்டுமென்றே உயிரை விடுவது வேறு நல்லதிற்காக எதற்கும் துணிந்து உயிர் போவது வேறு. குடிக்கார இரு நண்பரில் ஒருவர் இறந்தால் நண்பனுக்காக உயிரை கொடுத்ததாகுமா? உயிர் கொடுப்பன் தோழன் – II நண்பன் செத்துட்டார், அவருக்காக உயிரை கொடுக்க போகிறாயா? என்ன ஒட்டு வேலையா? உயிரை என்ன ஒட்டபோறியா? எது ஒட்டுமோ அதுதான் ஓட்டும் எப்படி ஓட்டனுமோ அப்படிதான் ஓட்டனும். குடிகார நண்பர் இருவரில் ஒருவர் இறந்தால் அவரின் இறப்பு வாழ்கின்ற அந்த நண்பனுக்கு புத்தியின் உயிரை கொடுக்கட்டுமே அதன் அடையாளம் அவர் இறப்பா இறந்தவரே உயிர் கொடுத்துவிட்டாரா அவரை பார்த்து திருந்தும் புத்தி வார்த்தை கெட்ட வார்த்தையான அசிங்கமான, கொச்சையான வார்த்தையை பேசக்கூடாது என்பார்கள். உன் வாயிலிருந்து கெட்டவார்த்தை புறப்பட வேண்டாம் என்பார்கள். கெட்டவார்த்தைகள் கெடுதலை, கேடானதை சொல்வது. உதவி செய்ய முடியும் நிலையில் இருந்தும் (திராணியிருந்தும்) மனதிலே உதவி செய்வதை மறுக்கும் ஆலோசனை வார்த்தைகள் மனதில் உண்டாகும் கெட்டவார்த்தைகள். இதன் வெளிப்பாடாக நான் உனக்கு உதவ முடியாது என்பதும் ஒரு கொச்சையான, அசிங்கமான வார்த்தைதான். நாம் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தால் (திராணி இல்லாதிருந்தும்) உதவி செய்ய முடியும் நிலைக்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். (திராணியை வளர்த்துக்கொள்ளவேண்டும். உதவி செய்ய ஏதொ ஒருவகையில் முடிக்கிற பங்களிப்பு வேண்டும். வேலை நிறுத்த போராட்டம். மக்கள் தொகை பெருகுவது போல் பூமியின் நிலப்பரப்பு நீண்டு, அகன்று பெருகுகிறதா? பூமியின் எத்தகைய வளங்கள் பெருகுகிறது? கையிருப்பை கவனத்தில் கொள்ளாமல் நாம் மட்டும் பெருகினால் பூமியின் நன்மைகளை நிம்மதியாக, சமாதானமாக அனுபவிக்க முடியுமா? மக்கள் தொகை சீராக இருப்பதற்கு பிள்ளை பெற்றுக்கொள்ளும் வேலை நிறுத்தம் கவனத்தில் கொண்டால் என்ன? அல்லது மாற்று வழியாக வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான வழி இருக்கிறதா? கனவு, கனவு என்று ஒவ்வருவருக்கும் விதவிதமாக பல வான ஊர்தி, விதவிதமாக பல வீடுகள், விதவிதமாக பல கார்கள் என்று வசதி அவதியாக ஆசைப்பட்டு இதற்கான வாரிசு வழி தேடுவது ஆபத்தில் இல்லாமல் இருக்குமா?இதற்கான வேலை நிறுத்த போராட்டம் நல்லதா? நன்மை தரும் தாவர வனங்களின் சீரான பெருக்கத்திற்கு ஆவல் கொள்கிறோமா? இலவசம் இலவசம் என்பது சும்மா கொடுப்பது என்று மட்டும் அர்த்தம் அல்ல. சும்மா கொடுப்பது என்ற வார்த்தை இருக்கும்பொழுது இலவசம் என்ற வார்த்தை எப்படி வேறுபடுகிறது. இலவசம் = இலகு + வசம் இலகுவிதமாக வசம் ஆக வேண்டும். இலகு என்பது எளிதாக என்றும் பொருள்கொள்ளலாம். வசம் என்பது ஒப்படைப்பது என்றும் பொருள் கொள்ளலாம். பெரிய கல்லை நகர்த்த இலகு எந்திரமாக நெம்புகோலை வைத்து நகர்த்தலாம். அதுபோல் உதவி பெறுகிறவரும், உதவி செய்கிறவரும் இலகான பலனை அடையவேண்டும். உதவி செய்ய போய் , உபத்திரம் அடையக்கூடாது. அரசு இலவசம் என்று அறிவிக்கிறது. ஆனால் இலவசம் என்பது மீன் கேட்பவருக்கு மீன் பிடிக்கவும் கற்றுதந்தால் நம்மை எதிர்பாராமல் அவருக்கு வேண்டிய மீனை பிடித்துக்கொள்வார் அதுபோல். விளக்கை துண்டிவிட்டு எரிய செய்வது போல் இலவசம் அமைவது நன்மைக்கு தூண்டுதலாக செப்பனிடுதல், புதுப்பித்தல், ஊக்குவித்தல் என்று இருக்கலாம். ஒருப்பக்கம் இலவசம் இன்னொருபக்கம் இலவச பொருளை விற்று மது அருந்துவதற்கு வாய்ப்பு. ஆகவே விழிப்புணர்வுக்கு தேவையான இலவசம் வேண்டும் நம் ஒவ்வொருவரும் பிறப்பையும், இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவருக்கே உள்ளதா? இந்த காரணத்தின் படைப்பாளர்களில் மூலக்காரணர் ஒருவர்தான் இறைவனா? இறைவனிடத்தில் பிரிவினையா? மதங்களிடத்தில் பிரிவினையா? பிரிவினைக்கு யார் காரணம்? பிரிவினை நல்லதா? கெட்டதா? எந்தவகையில் நல்லது? எந்தவகையில் கெட்டது? சிவன், இயேசு,அல்லாஹ் போன்ற இவர்களில் யாரு உங்களை கேட்டது நீ என்னைத்தான் வணங்க வேண்டும் என்று சொல்லி ? சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் நல்ல அன்பை விரும்புவார்களா? நம்மிடத்தில் நல்லஅன்பு இருந்தால் இவர்கள் நம்மை விரும்புவார்களா? வணங்குபவர்கள் நல்ல அன்பாக இருக்கிறார்களா? நாம் நல்ல அன்பில் இருக்கும்பொழுது தனுக்குத்தான் இந்த நல்ல அன்பாக உள்ளவர் பக்தனாக இருக்க வேண்டும் என்று சொல்லி நம்மை தெரிந்துகொள்வதில் சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு நம்மை தெரிந்துகொள்ளட்டுமே? மனிதர்களின் வழி நல்ல அன்பு. இறைவனுடைய வழியும் நல்ல அன்பு. நாம் அன்பாக இருந்தால்சிவன், இயேசு, அல்லாஹ் போன்ற இவர்கள் நம்மை அங்கீக்கரிக்கட்டுமே. நாம் எப்படி குழப்பிவிடப்படுகிறோம் யார் இறைவன் என்பதிலா? இறைவன் நம்மை அங்கீகரிப்பதில்லா? பலி, இரக்கம், ஆராதனை, வழிபாடு, துவா, பிரார்த்தனை இவைகள் எப்படி அன்புக்குஅங்கீகரிக்கப்பட்டது. தூயவர்கள் நம் ஒவ்வொருவருடைய நிலையின் கணக்கும், உலக நிலையின் கணக்கையும் அறிந்த மனிதர் யார்? நம்மை கணக்கிட்டு அறிந்து உலக நிலையை நடத்தி கொண்டிருப்பவர் அந்த எல்லாம் வல்ல இறைவன். விஞ்ஞானம் சொல்கிறது ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக மாற்றம் பெறலாம். எந்த ஒரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. நம்மை வரைந்திருப்பவர் இறைவன். நாம் இறைவனையே சார்ந்திருப்போம். நாம் ஏற்கெனவே இருக்கிறோம். நம் ஆரம்ப நிலை முடிவு நிலை தெரியாது. மனிதனாக இப்பொழுது விழித்திருக்கிறோம். ஏனனில் விஞ்ஞானம் சொல்லும் ஆற்றலின் தத்துவத்தை கவனியுங்கள். நிலைத்த காந்தத்தின் காந்ததன்மையின் முடிவு ஆரம்பம் எப்படி கணக்கிடபடுகிறது.கழிவு மண்ணில் மக்கி எருவாக மாறி தாவரம் வளர உதவுகிறது. கடல் நீர் வெப்பத்தினால் ஆவியாக மேகமாக மாறி,மேகம் குளிர்ந்து மழையாக பெறுகிறது. மனிதர்கள் இறக்கும்பொழுது. மண்ணால் ஆன உடல் மக்கி வேறு ஆற்றலாக மாறுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிர் உணர்வு என்ற ஆவி இறைவோனோடு சேர்ந்து மழை நீர் போன்று தூய நீரை போல மனிதர்கள் தூய நிலை அடைந்து இறைவனோடு மகிழ்ந்திருப்பார்கள். மனிதர்கள் கொஞ்சம் தீயவர்கள் ஆக கூட இருப்பார்கள். அத்தீயதன்மை இறைவனால் அனுமதிக்கப்பட்டு இருப்பதே. நன்மை என்ற ஒன்றை அறியவும், செயல்படுத்தவும் அத்தீயதன்மை வேலை வாங்க படுகிறது . வலி ஏற்படும்பொழுதுதான் ஒழுங்கு நிலையில் பிரச்சனை என்று அறிய முடியும். நன்மை செய்யவும். தீமை நல்லதே. நல்லதாக மாற்றம் பெற்று நன்மை உயிர் பெற்றுடிடவே. அந்த நன்மை உயிர் பெற்றிட சிலரும், இயற்கையுமே. தீமை உயிர் பெற தள்ளப்படும் நிலைக்கு சிலரும், இயற்கையும் உள்ளன. கடல் நீர் மாசு கலந்த உப்பு சுவையுடையது. அந்நீர் மழைநீராக மாறும்பொழுது. தூய்மை பெறுகிறது. நல்லது செய்ய வாய்ப்பாக தீமை உள்ளது. அனைவரும் தூயவர்களே இறுதியில். ஆவி மாற்றம் பெரும் அதிசயத்தை பாப்போம் காணாமல் போன காணாமல் போனது என்றால் என்ன அர்த்தம்? இறந்தவர் காணாமல் போய்விடுவாரா? இறந்த ஒவ்வொரு உறுப்பும் மாற்றம் பெறுகிறது. நம்முடைய உயிர் என்ன மாற்றம் பெறுகிறது? நம் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால் காணாமல் போனது என்று அர்த்தமா? ஒவ்வொன்றும் எங்கோ இருக்கிறது? எதுவும் காணாமல் போகவில்லை? எங்கோ இருப்பதை கண்டறிய அதற்குரிய பார்வை கருவி உள்ளது நாம் அறியவில்லை? தில்லுமுல்லு பண்ணி ஒருவரை கொலை செய்தால் அல்லது துரோகம் செய்தால் இறந்தவருக்கு செய்யவேண்டிய கடன் நிலுவையில்தான் உள்ளது? ஏதோ ஒருவகையில் அந்த கடனை அடைக்கவேண்டும் எச்சரிக்கையாக இருப்போம் மதங்களில் குறிப்பிடப்படுவதுதான் இறைவார்த்தையா? இறைவார்த்தைக்கு உதாரணமாக இத்தகைய நோய்க்கு பேரசிடமால் சாப்பிடுங்க என்று அறிவுரை சொல்லி அதன்படி சாப்பிட்டு குணமானால் இவ்வார்த்தை இறைவார்தையா? அல்லது இத்தகைய நோய்க்கு மருந்தான இறைவார்த்தை மதங்களில் இல்லையா? எங்கே இறைவார்த்தை உள்ளது. இறைவார்த்தை என்றால் என்ன? உதாரணத்திற்கு பேரசிடமால் என்ற மருந்தை யார் சொந்தம் கொண்டாடுவது? எந்த மூல பொருளும் இல்லாமல் யார் உருவாக்கியது? பிசாசு, சத்ரு, சாத்தான்,மனிதர்கள் போன்றவர்களுடையாதா? இறைவார்த்தை, இறைத்தன்மை போன்றவைகளை வெளிப்படுத்துங்களேன். மதங்களில் இறைவார்த்தைக்கு பேரசிடமால் போன்று புதிய கண்டுப்பிடிப்பு இல்லையா? உதாரணத்திற்கு பேரசிடமால் சாப்பிட்டு வேறு தொந்தரவு வந்தால் யாருடையது என்று சொல்வீர்கள்? திருக்குறள் பிசாசின் உள்நோக்கமா? இறைவனின் உள்நோக்கமா? உலகனைத்தின் மீதும் இறைத்தன்மை கலந்திருக்கும் என்று எண்ணி இறைத்தன்மை கருத்துக்காக பேரசிடமால் என்ற மருந்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டேன். நற்பயனை – நல்ல இறைத்தன்மைக்கும், தீயபயனை – தீய இறைத்தன்மை (பிசாசு, சத்ரு, பேய், சாத்தான், அரக்கன்) என்றும் வேறுபடுத்தி பிரித்து பார்த்து என்ன என்று ஞானத்தை, அஞ்ஞானத்தை கண்டு நம் தெளிவினால் நம்மையே நாம் உணர்ந்து சுயாதீன புத்திக்கு விளக்கம் ஏற்று உரிமையாகிறோ ம் என்பதன் உண்மையை நாம் பகிர்வோம். ஆம். எண்ணமே வாழ்க்கை. எண்ணங்களில் நாம் ஆட்சி செய்யவேண்டும். தீய எண்ணமும் உண்டு. நல்ல எண்ணமும் உண்டு. 3 3. சிந்தனை சம்சாரம் இறைதன்மை உலகனைத்திலும் இறைதன்மை உணரவேண்டும். எழுதியிருக்கிற வேதங்களை மட்டும் இறைவார்த்தை என்று சொல்லி இறைத்தன்மையை பிரித்து பார்த்து மற்றவைகளை ஒதுக்கிவிடலாமா? மற்றவைகளை அசட்டை பண்ணலாமா? ஒரே சீரான கவனிப்பு அனைத்திலும் வேண்டும். குப்பையிலிருந்தும், புழுதியிலிருந்தும் எளியதை எடுத்து உயர்த்த வேண்டும் அல்லவா? பயன்படும்இடத்தை பொறுத்து ஒவ்வொன்றும் முக்கியமானவையே. இறைத்தன்மை தெய்வீக மூலிகை, தெய்வீக மருந்து என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆங்கில மருந்துக்கும் தெய்வீக தன்மைக்கும் சம்பந்தம் உண்டா? இறையரசை நாம் எதுவரை அங்கீகரித்திருக்கிறோம். தெய்வீக தன்மை எதுவரை பரவி உள்ளது. நாம் காண்பவை, காணாதவை, வார்த்தை, செயல்கள் இவற்றில் இறையரசின் அதிகாரம் எதுவரை பரவி உள்ளது. இதை உணர்ந்து நம்முடைய ஈடுபாட்டின் எல்லையை விரித்து விரிந்த இறையரசின் குடிமக்களாய் இருப்போம். வேதங்களை விரிவுப்படுத்துவோம் எல்லாம் இறைவன் (சிவன்) மயம். கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். தலைமை கட்டுப்பாடு விமான கட்டுபாட்டு அறையிலிருந்து விமானத்தை கட்டுபடுத்தலாம். விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்துஎதை கட்டுப்பட தொடர்புப்படுத்திறுகிறோமோ அதுவரை கட்டுபடுத்தலாம். இறைவன் நமக்கு அனுமதித்ததில் நாம் இறைவனின் சுதந்திரவாளி. உலக படைப்புக்கு ஒருவகை காரணத்தின் கட்டுபடுத்தும் பொறுப்பு இறைவனிடம் உள்ளது. உலக படைப்பில் எதுவரை நம் சுதந்திர ஆதரவை இறைவன் நமக்கு விரிவுபடுத்த வேண்டும். அந்த அதிகாரம் கொடுப்பதில் நம்முடைய ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் இறைவனிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம் இதை பொறுத்துதான் இறைவனின் ஆட்சி அதிகாரத்தில் நம்பங்கு விரிவுபடுத்தபடவோ, குறைக்கப்படவோ அமைகிறது. ஆகவே அனைத்தின் மீதும் விழிப்படைவோம். தீய இறைவனின் (அரக்கன்) அடிமைத்தனம் நமக்கு எதற்கு. அடிமைத்தனமான கவலை நமக்கு எதற்கு. இறை ஆட்சி பகிர்வை விரிவுப்படுத்தி நாம் பெற்றிட ஞானத்தில் விரிவுபடுவோம். எதிரி எதிரியை வென்றிடு. பகைவனை நேசி என்பதற்கு அன்பு என்ன சொல்கிறது? • அறிவுக்கும், அறியாமைக்கும் பகை உண்டு அறியாமையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு • பொறுப்பிற்கும், பொறுபற்ற போக்கிற்கும் பகை உண்டு பொறுபற்ற போக்கை மாற்றி சரியாக்கிடஇப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு • சமாதானத்திற்கும், சண்டைக்கும் பகை உண்டு சண்டையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்டபகைவனுக்கு உன் நேசத்தை கொடு • அரவணைப்பிற்கும், கூக்குரலிற்கும் பகை உண்டு கூக்குரலை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்டபகைவனுக்கு உன் நேசத்தை கொடு • மேன்மைக்கும், அசிங்கத்திக்கும் பகை உண்டு அசிங்கத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • பிறர்மேல் அக்கறைக்கும், திருட்டுதனத்திற்கும் பகை உண்டு திருட்டுதனத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு • நல்ல அடக்கத்திற்கும், தீமை தூண்டுகோலிற்கும் பகை உண்டு தீமை தூண்டுகோலை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • அகிம்சைக்கும், இம்சைக்கும் பகை உண்டு இம்சையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு • ஆளுமைக்கும், ஆணவத்திக்கும் பகை உண்டு ஆணவத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • பொதுநலத்திற்கும், சுயநலத்திற்கும் பகை உண்டு சுயநலத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்டபகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • படித்தவர்களுக்கும், பாமரருக்கும் பகை உண்டு பாமரத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்டபகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • அனுபவபகிர்வுக்கும், வேலையின்மைக்கும் பகை உண்டு வேலையின்மையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • விடுதலைக்கும், தண்டனைக்கும் பகை உண்டு தண்டனையை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • தூய்மைக்கும், நர்ற்றத்திக்கும் பகை உண்டு நர்ற்றத்தை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. • பசுமைக்கும், வறட்சிக்கும் பகை உண்டு வறட்சியை மாற்றி சரியாக்கிட இப்படிப்பட்ட பகைவனுக்கு உன் நேசத்தை கொடு. தீமை எதிரியை வென்று நன்மையை விதைத்து பயன் பெறுவோம். இறைதன்மை இறைத்தன்மை என்பது உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது என்றால். இறைத்தன்மை உணர்ச்சிகள் எண்ணங்களாகவும், எண்ணங்கள் செய்கையாகவும் வெளிப்படும்பொழுது. அது பஞ்சாமிர்தம், திருநீரு, பிரசாதம் எடுத்துக்கொள்வது, சாம்பிராணி காட்டுவது, அப்பம், திராட்சை ரசம் எடுத்துகொள்வது, நோன்பு கஞ்சி எடுத்துக்கொள்வது என்றெல்லாம் பக்தி ஈடுபாடாக இருக்கிறதா? ஆபத்திலிருந்து விடுபட புத்திமதி கூறுவதிலும், விபத்தில் அடிபட்டவர் குணமாக மருந்து இடுவதிலும் உள்ள புத்திமதியையும், மருந்தும் இறைத்தன்மைதானே இத்தகைய எண்ண வெளிப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாமா? இதுவும் ஒரு சேவை பிரசாதம் தானே. இறைவனுக்கு சேவை என்பது மனிதனுக்கு சேவை என்பதே. ஆபத்து ஆபத்து வருவதற்கு முன் புத்திமதி கூறி ஆபத்திலிருந்து தப்பிக்க செய்திருக்கலாமா ஆபத்தின் போது புத்திமதி கூறி தப்பிக்க செய்திருக்கலாமா மறுபடியும் அதே ஆபத்து வருவதற்குமுன் புத்திமதி கூறி தப்பிக்க செய்திருக்கலாமா புத்திமதியில் கோபம் என்ற உணர்ச்சி, இரக்கம் என்ற உணர்ச்சி, பரிவு என்ற உணர்ச்சி இருக்கலாமா உணர்வுகளை சீர்மைப்படுத்த அறிவிக்கும் தொகுப்பு புத்திமதியா. கோபத்தை காட்டுவது பகை என்றால் பெற்ற குழந்தையின் மீது கோபத்தோடு கூடிய இரக்கம் காட்டுவது குழந்தை தவறு செய்வதை தவிர்ப்பதற்காக கோபம் கொண்டு இரண்டு அடி அடித்துவிட்டு இரக்கம் கொண்டு சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்துவது அறிந்ததற்கும், அறியாததற்க்கும் உள்ள பகையில் அட முட்டாளே என்று கோபப்படுவது மட்டும் இருப்பது. அவர் அறியாமையை போக்கி பகை வெல்லும் இரக்கம் காட்டுவது அன்பு உணர்வுகள், ஆசை உணர்வுகள், புத்திமதி உணர்வுகள், இரக்க உணர்வுகள், படித்த உணர்வுகள்,உழைத்த உணர்வுகள், அறிந்த உணர்வுகள், அறியாத உணர்வுகள், கோப உணர்வுகள், பாச உணர்வுகள், பகை உணர்வுகள், நேச உணர்வுகள், தேசிய உணர்வுகள், இசை உணர்வுகள், பசியாறிய உணர்வுகள், குணமான உணர்வுகள் பகை நல்ல அறிவிற்கும், கெட்ட அறிவிற்கும் பகை உண்டு. நல்ல கோபத்திற்கும், கெட்ட கோபத்திற்கும் பகை உண்டு. நல்ல இரக்கத்திற்கும், கெட்ட இரக்கத்திற்கும் பகை உண்டு. குறைந்தபட்சம் சிறிதளவாவது எது மேலோங்கி நிற்கிறதோ அது ஆட்சி செய்கிறது. நாம் இறப்பின் காரணியோடு எதிர்த்து போராடிகொண்டே இருக்கிறோம். குறைந்தபட்சமாவதுமேலோங்கி வெற்றி பெறுவதை உயிரோடு உடல் இருப்பதாக அர்த்தமா. முழுவதும் உயிர் தோற்றால் உடல் இறப்பு என்று அர்த்தமா பிரிவு இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். மனிதர்கள் இனபெருக்கத்திற்கு அதற்கென்று ஆண், பெண் உறவு வேண்டும். பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதற்கு பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமையை நன்மையாக நிவர்த்தி பண்ணும் செயல் முறை தேவை. இத்தகைய செயல்முறை ஜோடியை சேர்த்துவிட்டால்பிளாஸ்டிக் உபயோகம் பெருகுவதில் எந்த தடையும் இல்லை. ஒவ்வொரு தீமையையும் நீக்கி நன்மை பெருகுவதற்கு ஜோடிகள் உண்டு. அதை கண்டறிந்து ஜோடிகளை சேர்த்து விடுவோம். நன்மை பெருகும்படி இத்தகைய ஜோடியை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். இறைவேதத்தில் ஜோடி இராமல் இராது. தேங்காய் நேர்த்திக்கடன் பதம் பார்ப்பதில் அனுபவமுள்ளவர்கள் தேங்காயை தட்டி பார்ப்பார்கள் தட்டிப்பார்த்து அதை நேர்த்திக்கடன் செய்வார்கள் தட்டும்பொழுது அது இளநீரா இளங்காயா காயா முற்றிய காயா உள்ளியா என்பதை சத்தத்தை வைத்து அறியலாம். தேங்காயின் தன்மை நேர்த்தியாக உள்ளதா? இதுபோல் சோதனையாக வரும் நெருக்கடியை அணுகுமுறை கொண்டு பதம் பார்த்து நல்லவைகளை கண்டு அதன்படி நடந்து மனதிலே நேர்த்திக்கடன் செலுத்துவோம். மனது நேர்த்தியாக இருக்கட்டும் மனித நேயத்திற்கென்று பலி விபத்தில் பலி வெள்ளத்தில் பலி ……… இறைவனுக்கு பலி திருப்பலி …. விபத்தில் பலி – ஒருவகை பரிதாபம் மனதிலிருந்து பரிதாபம் நீங்க – இறைவனுக்கு பலி இறைவனுக்கு மிருகஜீவனை பலி செலுத்துவதும் உண்டு. ஆம். கட்டுபடுத்தமுடியாத மிருக குணம் பலியாகனும் கட்டுப்படும் தெய்வீக குணம் உயிர் பெறனும். தீய குணங்களை மிருக குணம் என்று சொல்வது வழக்கம் நல்ல குணங்களோ தெய்வீக குணம். விபத்தில் கவனமின்மை என்ற பலியால் கவன நிலை பரிதாபம் அடைகிறது மனிதனுக்கு மற்றவருக்கோ விழிப்பணர்வு பாடம் சொல்லப்படுகிறது. இறைவனுக்கான திருப்பலியால் மிருக (தீய) குணம் பலியாகி தெய்வீக குணம் உயிர் பெறுவதற்கு இறைவனுக்கு மிருக ஜீவன் பலி செலுத்துவது மிருக(தீய) குணம் பலியாக வேண்டியதை பாடமாக சொல்லப்படுகிறது. ஆகவே நம் மனதிற்கும், இறைவனுக்கும் ஒரு திருப்பலி வழிபாடு அமையட்டுமே. ஜீவாதார உயிர்ப்புக்கான பலிக்கு ஒப்புக்கொடுப்போம் நம் மனதை இறைவனிடம். இரத்த உறவு நமக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு தாய், தந்தையரை சொல்லலாம். மனம் என்ற உள் மனிதனுக்கு இரத்தவகை உறவாக உதாரணத்திற்கு இறைவனை சொல்லலாம். நல்ல அறிவு, ஞானம், புத்தி, இரக்கம், வீரம் போன்ற குணங்களுக்கான இரத்தம் மனதிற்கு இறைவன் மூலமாகவும் தரப்படுகிறது. நாம் இறைவனின் பிள்ளையாக உறவு கொண்டாட இறைவனின் இரத்த உறவு உள்ளது. இறைவனின் இரத்த உறவு நல்ல குணங்களுக்கான இரத்தம். இந்த இரத்தம் நம் உள் மனிதனை நல்லவனனாக உயிர் பெறச் செய்கிறது. இறைவனின் இரத்தம் ஜெயம். இந்த நல்ல குணங்களுக்கான இரத்தம் ஜெயத்தை தரும். நாம் உண்ணும் உணவு இரத்தமாகிறது. இரத்தம் உழைப்பின் வியர்வையாக மாறுகிறது. ஆகவே இரத்தத்தில் உயிர் இருக்கிறது . உயிர் நம்மை நடத்துகிறது அதுபோல் உள் மனிதனின் நல்ல குணத்தின் இரத்தத்திற்கு செவி உணவும் ஒரு உதாரணம். நல் உணர்வுகளின் உணவு உள் மனிதனின் நல்ல குணத்திற்கான இரத்தமாக மாறுகிறது. இந்த இரத்தம்நல்ல மனித தன்மையின் உயிரோட்டத்திற்கு பயன்படுகிறது. இரத்தம் உழைப்பின் வியர்வையாக சிந்தப்படுவது போல். இறைவனின் இரத்தம் நம்முடைய ஞானத்தின்வியர்வையாக சிந்தப்படுகிறது. அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இரத்த உறவு இரத்த உறவு என்று தாய், தந்தையரை சொன்னாலும். இந்த இரத்தம் தொடர்ந்து உற்பத்தியாக உணவு வேண்டும். உணவு இறைவனால் உண்டாக்கப்பட்டது. ஆகவே இறைவன் உணவாக இருக்கிறார். வயிற்று பசிக்கும் இறைவன் உணவாக இருக்கிறார். ஒவ்வொன்றையும் அறிந்துக்கொள்வதன் மூலம் ஞானபசிக்கும் உணவாக இருக்கிறார். தாவர உணவும், அறிவு உணவும் இரத்தமாக மாற்றம் பெற்று உடலுக்கும், மனதிற்கும் உயிராக இருக்கிறது. தீங்கு உயிரோடு இருப்பதற்கும், நன்மை உயிரோடு இருப்பதற்கும் அதற்கென்று உணவு வேண்டும். உலகில் தீமை நன்மையை விழுங்க பார்க்கும், நன்மை தீமையை விழுங்க பார்க்கும். உலகுக்கும், நமக்கும் இந்த போராட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.அதற்கென்று அறிகுறிகளும், பசியும், தாகமும், வாசனைகளும் உள்ளன உணவும் உள்ளன. எல்லாம் எதற்காக உலகம் ஒரு ஒழுங்குக்குள் இருப்பதற்கு தீமையும், நன்மையையும் ஒன்றை ஒன்றை ஈர்ப்பதும், விலக்குவதும் நிகழ்ந்து ஒரு சுழற்சியின் சூழல் உருவாகிறது. இந்நிகழ்ச்சியில் ஓங்குவதும், ஏந்தி தாங்குவதும் உண்டு. நீ சரியா இருக்க வேண்டும் என்று தீமையையும், நீ சரியாக இருக்க வேண்டும் என்று நன்மையையும் ஒன்றை ஒன்று எச்சரித்து போராடி சண்டையிடுகின்றன. பலி செலுத்தும் பொழுது இரத்தம் சிந்தப்படுகிறதே எந்த பலி நல்லது இரத்ததானம் செய்கிறோமே – உயிருள்ள பலி. ஈர்த்தல் தீமையை விலக்குவது நன்மைக்கு சரியாக இருக்கும். நன்மையை விலக்குவது தீமைக்கு சரியாக இருக்கும். இப்படி ஒரு ஈர்ப்பு உண்டு கல்வி வணக்கம். கல்விக்கு சரஸ்வதியா? ஆனால் கல்விக்கு உரிமை உறவு கொண்டாடுபவர்கள் லட்சுமி மற்றும் பார்வதியும் சேர்ந்து மூவரும்தான் செவிச்செல்வம் செல்வத்திற்கு லட்சுமி என்றால் செவிச்செல்வம் என்பது கல்வி செல்வம் ஆகுமே வீர வசனம் வீரத்திற்கு பார்வதி என்றால் வீர வசனம் என்பது கல்வியிலே வீரம் ஆகுமே ஆகவே சிறந்த கல்விக்கு செல்வமும் உண்டு வீரமும் உண்டு. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி சேர்ந்த மூவரின் உரிமை தெய்வத்தன்மை கல்விக்கு உண்டு. விட்டு கொடுத்தல் என்பது எப்போது செயல்படும் பிரச்சனை இருக்கும்பொழுதுதான் பிரச்சனை இல்லாத இடத்தில் விட்டுக்கொடுத்தல் தேவைபடாதது. ஆகவே கணவன், மனைவி சண்டை மற்றும் பிற சண்டைகளுக்கு விட்டுகொடுத்து சமாதான உறவு பாராட்டுவோம். கடவுளிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது மனிதனிடம் நல்ல பெயர் வாங்குவதை பொறுத்து. நல்ல பெயரை கடவுளிடம் வாங்க முக்கியத்துவ உரிமை எங்கு காட்ட வேண்டும் என்றால் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் நல்ல பெயர் வாங்கவேண்டும். எது நிஜம்? நிலையற்ற வாழ்க்கையில் வாழ்க்கை பாதுக்காப்புக்காக பணத்தை ஈட்டுகிறோம். பணத்தை ஈட்டுவதற்காக வேலை செய்கிறோம். அதற்க்கு அடிக்கடி லீவு போடக்கூடாது. வேலையில் கவனம் வேண்டும். அதிகாரிகளிடத்தில் நல்ல பெயர் வாங்கணும். சம்பளம் வாங்க முதலாளியை அல்லது அதிகாரியை திருப்திபடுத்தும்படி வேலை செய்யணும் என்றுஇந்த நிலையற்ற வாழ்க்கைக்காக நம்மை ஈடுப்படுத்துகிறோம். என்னதான் மனித ஆளுகை அதிகாரங்களுக்கு பயந்துஅந்த அதிகாரங்களை உடையவர்களைதிருப்திப்படுத்தினாலும் பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் என்று இவைகளிடம்இருந்து மனித ஆளுகை அதிகாரம் நம்மை காப்பாற்ற உத்தரவாதம் இல்லை. பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் போன்றவைகளால் நம் உடைமைக்கும் உடலின் உயிருக்குத்தான்சேதம். ஆனால் மனதிற்கு சேதம் இருக்க வேண்டாம். மனதிற்கு மரணம் இல்லாதநிலைத்த அற வாழ்வுவேண்டுமே. இந்த அறவாழ்விற்கு தேவையான் புண்ணியத்திற்காக எந்தவகையில் இறைவனை திருப்திப்படுத்தி ஈடுபடுகிறோம். அடிக்கடி அறம் செய்வதற்கு லீவு போடாம, கவனத்தோடுஈடுப்பட்டு புண்ணியம் செய்துஇறைவனிடத்தில் அருள் வாழ்வுசம்பளம் பெறவேண்டுமே.நல்ல சம்பாத்தியம் வேண்டுமே. பாதுகாப்பான அற வாழ்வுக்கு அதிகாரியான இறைவனை புண்ணியத்தினால் எப்படி திருப்திப்படுத்த ஈடுபடுகிறோம். மனித ஆளுகை அதிகாரவாழ்க்கை பயணத்தில் இறைவனின் அறத்தை வெற்றிபெறச் செய்யவேண்டாமா? மனித ஆளுகை அதிகாரத்தில் குறைகள் இருக்கும் இக்குறைகளை இறைவனின் விருப்ப அதிகாரம்போல் சரி செய்ய வேண்டுமே. மனித ஆளுகையில் குறைகளாக விளங்கும் மனதிற்கான பூகம்பம், மனதிற்கான வெள்ளம், மனதிற்கானவிபத்து, மனதிற்கான நோய் இவைகளிலிருந்து விடுபடவேண்டும். இதற்க்கு புண்ணியம் சேர்ப்போம். பாலியல் பலாத்காரம், வஞ்சித்தல், கொலை , மது அடிமை, சூது, சூழ்ச்சி, பணத்தாசை போன்றவைகள்மனதிற்கான பூகம்பமாகவோ, மனதிற்கான வெள்ளமாகவோ, மனதிற்கான விபத்தாகவோ, மனதிற்கான நோயாகவோ இருக்கின்றன. இத்தகு பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய், போர்போன்றவை கடைசிகால சம்பவமா! மனதின் மரணமாக பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் போன்றவைகளால் ஜனத்தொகை குறைகிறது. மனதிற்கான பூகம்பம், வெள்ளம், விபத்து, நோய் போன்றவைகளில் பாதிக்கப்படாமல் இருப்பவர்கள்அதிகமானால் தீயவர்களின் ஜனத்தொகை குறைகிறது. வைக்கோல் போர் நீ நிறுத்து, நான் நிறுத்துகிறேன் என்று நிறுத்தி வைப்பதில் போர் நடக்கிறது என்றால் அது என்ன? தவறு செய்பவர்களுள், முதலில் தப்பு செய்வதை நீங்க நிறுத்தி (வை)ங்க பிறகு நான் தப்பு செய்வதை நிறுத்தி (வை)க்கிறேன் என்று பொறாமை கோலால் போர் நடக்கும் வை-கோல் போரில் அவரவர் பொறுமை இல்லாததன் அளவில் போட்டி நடக்கிறது. முதலாளி தொழிலாளிக்கிடையில் என்ன போர் நடக்கிறது? முதலாளி தொழிலாளிகளுக்குள் மனித நேயம் இருக்கிறதா? முதலாளி தொழிலாளர் நலனுக்காக முதலாளியே தொழிலாளர் நலச்சங்கம் ஏற்படுத்தி தொழிலாளருக்கு நன்மை செய்கின்றனரா? மேலும் தொழிலாளிகள் முதலாளிக்கு நலச்சங்கம் ஏற்படுத்தி முதலாளி நலனுக்கு எவ்வகையில் உதவுகிறார்கள்? மனிதநேயமதி வளராதவரை இறைவனின் கெடுபிடி விதி தர்மசங்கட நிலையில் விதிக்கப்படுகிறது. இனியாவது மனிதநேய மதி வளரட்டும். உலகில் அனைவரும் நான் பணக்காரராகனும், நான் முதலாளியாகனும், நான் பிரதமராகனும், நான் டாக்டராகனும் என்று தன விருப்பம் நிறைவேற இறைவனை வேண்டினால் ஒழுங்குபடுத்தும் வேலையை செய்ய தொழிலாளர்கள் வேணாமா? ஆகவே தர்மசங்கட நிலையில் உலக ஒழுங்கிற்கு இறைவனின் கெடுபிடி விதி முதலாளி, தொழிலாளி என்ற இரு நிலையை ஏற்படுத்துகிறது. ஆகவே ஏழை, பணக்காரர், டாக்டர், விவசாயி என்ற அவரவர் நிலையில் மனநிறைவு பெற்று விதியை மதியால் வென்று வாழ்வில் உயரவேண்டும். மனிதநேயமதி வளர்ந்தால் இறைவனின் கெடுபிடி விதி தளர்வுபடும். ஏழையை மட்டமாகவோ, பணக்காரரை மட்டமாகவோ நினைக்கும் நிலைமாறி மனிதநேயத்தால் நன்மை சேரவேண்டும். பணக்காரர் பொதுநலனுக்காக வசதிகளை பேருக்கும் பெரிய contractor ஆகவும் ஏழைகள் பணிவிடை செய்யும் சிறிய contractor என்றும் கருதி துன்பத்தை, இன்பத்தை பகிர்ந்து கொள்ளலாமே. அதற்கு தரமான பணக்காரர்களும், தரமான ஏழைகளும் வேண்டும். contract களை மாற்றிக்கொண்டு தரத்திற்காக அனுபவம் பெறலாம். ஏழைகள், பணக்காரர்களில் ஒவ்வொருவரும் செயல்படவேண்டிய இடத்தை பொறுத்து மிக முக்கியத்துவும் பெறுகின்றனர். ஆனால் இறைவன் முன் அனைவரும் சமம். பணக்காரர் என்பவர் உலகில் உள்ள அனைவரும் பணக்காரர்களே. துறைகளுக்கேற்ப ஏழைகள் என்பவர் உலகில் உள்ள அனைவரும் ஏழைகளே. துறைகளுக்கேற்ப பணக்கார நிர்வாக share ஏழைகளுக்கும் வேண்டும். பணக்கார வசதி ஏழைகளுக்கு களஞ்சியமாக. ஏழைகளின் பணிவிடை நிர்வாக share பணக்காரருக்கும் வேண்டும். ஏழைகள் முடியாமல் இருந்தால் அவர்களுக்கு பணக்காரர் பணிவிடை புரிவதனால் அனைவரும் பணிவிடை செய்யும் ஏழைகள் ஆவர். தேவைக்கதிகமாக ஆசிரிய பயிற்சி அளித்து எவ்வளவு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தேவைக்கதிகமாக தரமான விவசாயிகளை உருவாக்குகிறோமா நல்ல உணவு உற்பத்திக்கு, சுதந்திரம் அளித்திருக்கும் இறைவன் ஊரடங்கு உத்தரவு போல் விதியை நிர்ணயித்து கட்டுப்படுத்துகிறார். நாம் வளர்த்துக்கொள்ளும் மனிதநேயமதிபடி நடந்துகொண்டால் ஊரடங்கு உத்தரவு போல் உள்ள விதியை இறைவன் தளர்த்தி விடுவார் நாமும் நம் மதியால் இறை பரிந்துறை சுய ஆளுமை கொண்டு பயன் பெறலாம். நல்லோர் ஒருவருக்காக எல்லாருக்கும் பெய்யும் மழை என்பார்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறப்பதிலே என்பார்கள். அந்த குழந்தைகளை கருத்தில் கொண்டு பெய்யும் மழை போல் நம் தப்புக்கு இறைவன் கடுமையான தண்டனையை கொடுக்காமல் பல தண்டனைகளுக்கு விலக்கு அளித்துள்ளார். கடுமையான தண்டனையை விலக்கி பொறுமை காக்கும் இறைவன் பணம் எனக்கு மட்டுந்தான் என்று பணக்காரர் கருதாமலும். நேர்த்தி எனக்கு வேண்டாம் என்று ஏழைகள் கருதாமல், ஏழைகளும், பணக்காரரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு துன்பத்தையும், இன்பத்தையும் பகிர்ந்துக்கொள்வோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் – நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இதில் உண்பது என்பது கலோரி உணவாகவும் இருக்கலாம், செவி உணவாகவும் இருக்கலாம், சமூகத்திற்கான நல்ல நீதி வேண்டும் என்ற உணவாக இருக்கலாம். உலகில் சொத்தில் சமபங்கு என்பது என்ன? (பகுத்துண்டு) குழந்தைகள் 2 இட்லி போதும் என்பார்கள், பெரியவர் 8 இட்லி போதும் என்பார், நோயாளி கஞ்சி போதும் என்பார் எப்படி சம பங்கு. இரக்கத்தை மையமாக வைத்து தேவைகளை கருத்தில் கொண்டு பகிர்ந்திடுவோம். கம்யூனிஸ்ட் போல் பகிர்வதா? முடி இருக்கிறத வச்சிதான் அள்ளிமுடிய முடியும் என்பார்கள். பணக்காரர்களிடம் இருப்பதும் நமது என்று அள்ளிமுடியக்கூடாதா? பணக்காரர்கள் அனைவருக்கும் உதவும் வசதி களஞ்சியங்களாக இருக்கட்டுமே? தரமான பொருட்கள் விலை அதிகமாக இருக்கிறது. மலிவு விலையில் உள்ளவைகள் use and throw வாக உள்ளது. மக்கள் மலிவு விலையில் உள்ளவைகளை வாங்கி குப்பை சேர்க்கின்றனர். குப்பைகளை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை கெடுக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால் அதனை அதிகமாக பயன்ப்படுத்துகின்றனர். தவறாக பயன்ப்படுத்துவதால் வரும் ஆபத்தை உணர்வதில்லை, பாதுகாப்பை ஏற்ப்படுத்தி கொள்வதும் இல்லை. தரமில்லாத பணக்காரர்கள் மலிவாக போனாலோ, தரமில்லாத ஏழைகள் மலிவாகி போனாலோ அதனால் ஆபத்தல்லவோ? எல்லையில் பதட்டம் என்றாலோ, ஊரில் பிரச்னை வரும் என்றாலோ ஊரடங்கு உத்தரவால் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. சுதந்திர நாட்டில் நாம் குடிமக்கள், யாரோ சிலரின் தீவரவாத பயங்கரத்திற்க்காக பிரச்சனை செய்யாதவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அடங்கி கிடக்க வேண்டி இருக்கிறது. எல்லாரும் மேற்பார்வை செய்யும் பணக்காரராக விரும்பினால் பணிவிடை செய்யும் ஏழைகள் வேணாமா? எல்லாரும் பணிவிடை செய்யும் ஏழைகள் ஆனால் மேற்பார்வை செய்யும் பணக்காரர்கள் வேணாமா? தரமான விவசாசாயி குறைவால் சுகாதார உணவு உற்பத்தி இல்லை. தரமான ஏழை, தரமான மெக்கானிக், தரமான கொத்தனார், தரமான எடுபிடி ஆள், தரமான பணக்காரர், தரமான விஞ்ஞானி, தரமான பிரதமர், தரமான ஆசிரியர், தரமான டாக்டர், தரமான வக்கீல், தரமான சாமியார், தரமான கல்வி, தரமான உணவு, தரமான விவசாயி என்று எல்லாவற்றின் தரத்திற்காகவும் பணத்தை முதலீடு செய்து, உழைப்பு பங்களித்து அனைவரும் நலம் பெறுவோம். கம்யூனிஸ்ட் பகிர்வு வேண்டாம் என்றால், மன்னர் ஆட்சி வேண்டாம் என்றால், விரலுக்கேத்த வீக்கம், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. பணக்காரருக்கு உள்ள வசதிகள் பஞ்சகாலத்தில் ஏழைகள் மற்றும் அனைவருக்கும் உதவும் களஞ்சியமாக இருக்க வேண்டும். அது உணவு பஞ்சமோ, உயிர் காக்கும் மருந்து பஞ்சமோ, வாழ்க்கை கல்வி பஞ்சமோ, உழைப்பு பஞ்சமோ, நீதி பஞ்சமோ எதுவாக இருந்தாலும் பஞ்சம் போக்கும் அனைத்துவகை மக்களின் களஞ்சியத்திலிருந்து பயன் பெறுவோம். ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டுமே உள்ளவர் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியுமா? அதிகமாக வழங்கினால் அதிக புண்ணியமா? ஒன்று செய்யலாம் ஒரு லட்சத்தை பயனுக்காக விதைத்து பல லட்சமாக அறுவடை செய்து பயன் பெறலாமே. வயிற்று பசிக்கு கலோரி உணவு அன்னதானம். நீதி பசிக்கு வாழ்க்கை கல்வி உணவு அன்னதானம். உலகில் அனைவரும் பணக்காரராக முடியுமா? அனைவருக்கும் சொந்தமாக ஹெலிகாப்டர் அப்படி இருந்தால் வசதி படைத்த பணக்காரரா? அப்படி என்றால் கோடிக்கணக்கான ஹெலிகாப்டர் ஐ உலகில் பயன்படுத்துவது சாத்தியமாகுமா? அப்படி என்றால் உலகில் அனைவரும் பணக்காரராகினால் சிரமமா? இல்லையா? எல்லோரும் ஏழையானால் சிரமமா? இல்லையா? முடி இருக்கிறதை வைத்துதான் அள்ளி முடிய முடியும் என்றால் நம் நிம்மதிக்கு எந்த வழியை தேடுவோம் அனைவருக்கும் வணக்கம் பயம் பணக்காரருக்கு ஏழையை கண்டால் பயம் வேண்டும். ஏழைக்கு பணக்காரரை கண்டால் பயம் வேண்டும். அந்த பயம் எந்தளவுக்கு? இறைவன் நம்மை உள்ளத்தில் வரைந்திருப்பது – விதி அவரவர் உலகை அறியும் சுவைக்கு ஏற்ப இழுக்கப்பட்டு செயல்படுவது – மதி ஞானம் எப்படி ஆரம்பிக்கப்படுகிறது? நல்லது செய்யாமல் விடக்கூடாது என்று பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் கெட்டதை செய்து விடக்கூடாது என்று பயப்படுதலும் ஞானத்தின் ஆரம்பம் நாம் திகைத்தும் பயந்து விடக்கூடாது தைரியம் வேண்டும். வீரமும் வேண்டும், ஈரமும் வேண்டும். தாய் ஒரு தேர்ந்த அறுவைசிகிச்சை மருத்துவர். பிரியமான மகனுக்கு விபத்து நடந்து விட்டது. மகனை காப்பாற்ற அம்மகனுக்கு ஆப்பரேஷன் செய்யவேண்டிய கட்டாயம் தாய்க்கு ஏற்படுகிறது. அத்தாய் துயரப்பட்டு அழுது கொண்டே இருந்தால் மட்டும் என்னாவது? – இதுவா இரக்கம் என்ற ஈரம். ஏதோ ஒரு கேஸ் எது நடந்தாலும் நடக்கட்டும் என்று பொறுப்பில்லாமல் துணிவுகொண்டு ஆப்பரேஷன் செய்யலாமா? -இதுவா தைரியம் என்ற வீரம். ஒவ்வொரு step -ம் கவனமுடன் சரியாக ஆப்பரேஷன் செய்ய பொறுப்பான பயம் கலந்த துணிவுவேண்டும். இந்த பொறுப்பான பயம் கலந்த துணிவு ஒவ்வொரு நற்செயல் செய்வதற்கும் வேண்டும். மூட்டபூச்சிக்கு பயந்து வீட்டையா கொளுத்த வேண்டும். அதிகமான பயம் இருந்தால் வாகனத்தை இயக்க தொடக்கூட மாட்டோம். பயமே இல்லாமால் கண்மூடித்தனமாக ஓட்டினால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமில்லையா? ஆகவே ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி, படித்தவர் – பாமரர் போன்ற ஒருவர்க்கொருவரிடையேயான உறவில் வீர-ஈரம் போதுமானதாக இருக்கவேண்டும். ஊதாரிக்கு பணத்தை மட்டும் கொடுத்துகொண்டே இருந்தால் என்ன ஆகும். அவருக்கு எந்தவகையில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று அறிந்திருக்கவேண்டாமா? சோம்பேறியை எந்த நிலையிலிருந்து மாற்றி வேலை கொடுக்கவேண்டும் என்றுஅறிந்திருக்கவேண்டாமா? ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும் என்பார்கள்? மாசுவை ஆற்றில் கலந்தாலும் எந்தளவுக்கு போட்டால் பெரிய பாதிப்பில்லை என்று அறியவேண்டும். அதுபோல் சோம்பேறி, ஊதாரியிடம் நடந்து கொள்ளவேண்டும் அல்லவா? ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, மருத்துவர்-நோயாளி, படித்தவர் – பாமரர் போன்ற ஒருவர்க்கொருவரிடையேயான உறவில் நல்லது செய்யாமல் விடக்கூடாது என்றும் கெட்டதை செய்து விடக்கூடாது என்றும் பயத்தில் ஆரம்பித்த துன்பம் தைரியமான மகிழ்ச்சியில் தொடரவேண்டும் ஞானமாக. சமூக மனிதன் ஒரு முழு மனிதன் எப்படி இருக்க வேண்டும்? 2 கண், 1 மூக்கு, ஒரு வாய், இரண்டு கை, இரண்டு கால், ஒரு இருதயம், நல்ல மூளை திறன் இப்படி இருக்கலாம். கண் இல்லாமல் இருந்தாலோ, காது செவிடாக இருந்தாலோ ஊனம் என்கிறோம். 4 கண்கள் இருந்தாலோ, 4 காதுகள் இருந்தாலோ அசௌகரியம். ஆம் ஓர் உடலால் ஒட்டி பிறந்த இரட்டையர். அது போல், உலக சமுதாய மனிதனின் உடல் துறையில் போதுமான ஏழை, பணக்காரர், முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி போன்ற உறுப்புகள் இருக்கவேண்டும். போதுமான உலக இயக்க உறுப்புகள் இல்லை என்றால் ஊன சமுதாயம். தேவையில்லாத உலக இயக்க உறுப்புகள் இருந்தால் அதிகமாக இருந்தால் அசௌகரியம். தான் இருக்கும் முதலாளி துறை அதிகமாக இருந்தால் அத்துறையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு எந்த தொழிலாளி துறை குறைவாக இருக்கிறதோ அதில் சேர்ந்து பயன் தரவேண்டும். அரச குடும்பத்தில் ராஜ போகமாக வாழ்ந்து விட்டு காட்டில் 16 ஆண்டுகள் வாழ்ந்த ராமனை போல் ஒரு புதிய அனுபவத்தை பெற்று ஞானமாய் இருக்க வேண்டும் அல்லவா? இந்த உலகத்தில் பிறந்ததன் நோக்கம். ஞானத்தை அறிவதே. சுற்று சூழல் பாதுகாப்பு துறை போதுமானதாக இருக்கிறதா? 100 எஜமானன் 1 வேலைக்காரன் என்றோ, 100 வேலைக்காரன் 1 எஜமானன் என்றோ இருக்கலாமா? போதுமான வேலைக்காரன் போதுமான எஜமானன் என்றோ இருக்கலாம் அல்லவா? நலன் உலக நலனில் எத்தகைய பங்களிப்பு? ஏழைகள் என்றால் ஒரு தெருவில் 20 வீடுகள் அமைகின்றன. பணக்காரர் என்றால் ஒரு தெருவில் 2 வீடுகள் அமைகின்றன. சுகர் பேசென்ட் மருத்துவத்திற்குநோயாளி, எதிரிஅல்ல, நோய்தான்எதிரி. அது போல் நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள். சிலர் நம்மை துன்புறுத்தும் நிலை அவர் சாகும் வரை இருக்கும். அவர் குணத்தை மாற்ற முடியாது. சுகர் பேசென்ட் என்றால் தொடர்ந்து மருந்து சாப்பிடனும் ஆகாரம் கண்ட்ரோல் வேண்டும் உடல்பயிட்சி வேண்டும். அதுபோல் சிலர் நம்மை தொடர்ந்து துன்புறுத்தும் நிலைக்கு தொடர்ந்து மருந்து கொடுப்பதுபோல் கவனமுடன் நடந்து நாம் கவலையடையாமல் இருக்கவேண்டும். ஏழையாகவோ, பணக்காரராகவோ, முதலாளியாகோவோ, தொழிலாளியாகவோ யாராகவோ நாம் இருந்தாலும் அதிலே திருப்தி கொள்ள வேண்டும், மன நிறைவு கொள்ளவேண்டும். ஏனனில் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையில் இருப்பதே கூட நல்லதாக இருக்கலாம். உலகுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும் என்று தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் குறிப்பிடுவது போல் அமையட்டுமே முயற்சியும், வாய்ப்பையும் பயன்படுத்தி உலக நிலைக்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டிய சூழல் அமைந்தால் நாம் மற்ற நிலைக்கு மாறாமல் இருந்தால் அது நல்லதாக இருக்காது. அவசரப்பட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நாம் இருக்கவேண்டிய சூழலை தற்கொலை செய்து கொள்ளக்கொடாது. மாற்றம் வேண்டின் மாற்றம் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மை நிர்வாகம் பண்ணுகிறோம். உங்கள் நிர்வாகத்தில் கண், காது, வாய், கை, கால் போன்றவைகளை வேலைக்கு அமர்த்தியிருக்கிரீர்கள். இந்த வேலைக்காரர்கள் நன்கு வேலை செய்கிறார்களா? கண், காது போன்றவற்றில் சிலரின் வேலை மட்டும் ஒழுங்காக நடக்கிறதா? மற்றவர்களுக்கு சரியான வேலை கொடுக்கவில்லையா? அல்லது அவர்களின்வேலையை சரியாக கவனிக்கவில்லையா? ஆகவே அவர்களின் வெட்டி வேலைக்காகவோ, ஏமாற்று வேலைக்காகவோ ஊதியம் கொடுத்து நிர்வாகம் நஷ்டப்படவேண்டுமா? உடலும், மனமும் நலமுடன் இருக்கவேண்டாமா. அந்த நிர்வாகத்திற்கு ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாய் உள்ளன.சுழற்சி அடிப்படையில் சில நேரத்தில் கண்ணோ, காதோ, நிர்வாகியாய் இருக்கலாம் அவர்களின் ஆலோசனைக்கு கலந்து ஒரு முடிவு எடுக்கவேண்டாமா. கால் ஏதோ ஒரு காரணத்தால் அடிப்பட்டு வலி கொடுத்ததானால் அதன் கோரிக்கை என்னவென்று அறிந்து அதுசம்பந்தபட்ட துறைக்கு வேலையை சமாளிக்கும் விதத்தில் யார் யாருக்கு வேலையில்லா விடுப்புஅல்லது வேலைச் சலுகை, நீண்ட விடுமுறை போன்றவைகளை தந்து எல்லாரையும் அனுசரித்து நல்ல முறையில் நிர்வாகத்தை நிர்வகிக்கவேண்டும். அவசர, அவசிய நேரத்தில் சில வேலைக்கார கண், காது போன்ற உடல் உறுப்புகளுக்கு வேலை பளுவை அதிகரிக்கும் பொழுது அவர்களுக்கு உற்சாக போனஸ் போன்றவைகளை வழங்கி மற்ற துறைகள் பாதிப்பானால் சலுகைகள்வழங்கவேண்டும். மனம் நல்லமுறையிலும், போதிய சுவாச உணவு, அறிவு உணவு , தன்னம்பிக்கை உணவு, நல்லொழுக்க உணவு, மனமகிழ்ச்சி உணவு,சாமர்த்திய உணவு, கலோரி உணவு போன்றவைகள் கிடைக்கவேண்டும். அப்பொழுதுதான் இதய துடிப்பு வேலைக்காரர் நன்கு வேலை செய்வார், வயிறு நிர்வாகிநல்லமுறையில் இருப்பார் உடலும், மனமும் நல்ல முறையில் இருக்கும். வாழ்க்கை பகிர்வு நம்மிடம் உள்ள ரூ 50000 பணத்தை பண கஷ்டம் உள்ளவர்களுக்கு உதவிடலாம் என்று நினைக்கிறோம். அதற்கு ரூ 50000 பணத்தை 50000 பேருக்கு பகிர்ந்து கொடுக்கிறோம் என்றால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுக்க முடியும். சமமாக பிரித்தால் ஒவ்வொருவருக்கும் ரூ 1 தான் கிடைக்கும். இந்த ஒரு ரூபாய் அவர்களுக்கு உரிய பண கஷ்டம் நீங்குவதில் பெரும் பயன் இருக்காது. 50000 பேருக்கு ஒவ்வொரு ரூபாய் மதிப்பு வீதம் வலி நீங்கும் மருத்துவ ஆலோசனையை நோட்டீஸ் ஆக விநியோகம் செய்தால் கூட வலி ஏற்பட்ட 50000 பேருக்கும் வேண்டுமானால் உதவியாக இருக்கும். ஆனால் ரூ 10000 உடனடி அவசிய தேவையாக பண கஷ்டம் உள்ள 50000 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தால் பண கஷ்டம் நீங்குவதில் பெரும் பயன் இல்லை. 5 பேருக்கு ரூ 10000 வீதம் ரூ 50000த்தை வேண்டுமானால் பகிர்ந்திடலாம். நல்ல கோடைக்காலத்தில் திடீரெண்டு 1 நிமிடம் மட்டும் மழை பெய்தால் ஏதாவது நன்மை கிடைக்குமா? அந்த மழை சூட்டை கிளப்பிவிடும். பாதிப்புகளும் உண்டு. வெள்ளம் அளவுக்கு மழை பெய்தாலும் ஒரு விதத்தில் தொல்லைதான். நல்ல பலன் பெறவேண்டிய தானிய தேவைக்கு என்ன செய்யலாம் விதைத்து அறுவடை முடியும் வரை நல்ல பராமரிப்பு அவசியம். விதையை விதைப்பது நீண்டாகால இடைவெளியில் காலம் கடந்து தண்ணீர், உரம் இடுவது – ஏதாவது பலன் கிடைக்குமா? நிர்பந்த பிச்சைக்காரருக்கோ, நிர்பந்த பண உதவி தேடுவோருக்கு தேவையான உதவியை போதுமானவர் சரியான காலத்தில் கிடைக்க வழி செய்ய வேண்டும். நாம் மதிப்பிடுவதெல்லாம் எப்படி இருக்கிறது? இவ்வளவு உழைப்பு இருந்தால் ரூ 500 கொடுக்கலாம் என்கிறோம். ரூ 1 கோடி வைத்திருப்பவர் எவ்வளவு உழைப்பால் பெற்றிருக்க முடியும். ஒருவர் தன் உயிரையே காப்பாற்றி விட்டார் என்று ஒரு பெரும் தொகையை உதவி செய்தவருக்கு அளித்திருக்கலாம். ஆனால் வேறு ஒருவர் தன் உயிரை காப்பாற்றியதற்க்காக உதவி செய்தவருக்கு தேங்க்ஸ் மட்டும் சொல்லியிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நடவடிக்கையில் ஒருவருக்கொருவர் அந்நியராகவோ அல்லது சொந்தகாரராகவோ இருந்திருக்கலாம் ஆகவே இந்த உதவியை எப்படி மதிப்பிடுகிறோம். சொத்து தகராறில் பங்காளிக்கு சொத்தை விட்டு கொடுத்து சமாதானம் அடைபவரும் உண்டு. சமமாக கேட்பவரும் உண்டு. அதிகமாக கேட்டு போராடுபவரும் உண்டு. ஆகவே நாம் மதிப்பிடுவது மனதை பொருத்துதான். ஆகவே உலக நடவடிக்கைகள் சரியான விலை என்று நடவடிக்கைகளை நிர்ணயிப்பது சரியா? நம் பகிந்து கொடுத்து வாழ வேண்டும் என்கிறோம். ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்குரிய மதிப்பாக எப்படி பகிர்ந்து கொள்வது. பிறர் மனைவியிடம் எந்த முறையில் நாம் எதை பகிர்ந்து கொள்ளலாம். தேர்வின்போது ஆசிரியர், மாணவர் பகிர்வு எப்படி இருக்கவேண்டும். இறந்தவரிடம் எந்த நடவடிக்கை நிலுவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். தன் மகனின் தேவைக்கு இலவச பகிர்வா? தன் பெற்றோர், நண்பர் தேவைக்கு இலவச பகிர்வா? அப்படியென்றால் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உழைப்பின் வலியை எப்படி சரியாக விலை மதிப்பிட்டு செயல்படுத்துவது tally யாக இருக்கும். மருத்துவரிடம் நம்முடைய சுகமின்மையை எடுத்து சொல்லும்பொழுது அவர் நம்மை கலந்து ஆலோசித்து, பரிசோதித்து சிகிச்சை தந்து பலனளிப்பார். ஆனால் நாம் விபத்தில் சிக்கி சுய நினைவு இல்லாத போது மருத்துவர் நம்மை கலந்து ஆலோசிக்க இயலாது அவர் நல்ல அணுகுமுறையில் தகுந்த சிகிச்சை அளிக்கும்பொழுது பலன் கிடைக்கும். அதுபோல நம்மிடம் உதவி கேட்கும் பலரில் சிலருக்கு மட்டுமாவது அதிக அக்கறை கொண்டு இன்னதென்று அறியாமல் அவர் கோரும் உதவியை பரிசீலனை செய்து எது தகுமோ அதையே தந்து உதவிடலாம். நோயாளி எதை வேண்டுமானாலும் கேட்பார். ஆனால் மருத்துவர் எது தகும் என்கிறாரோ அதையே நோயாளி கைகொண்டால் நலம். அதுபோல் நம்மிடம் உதவி கோரும் சிலருக்காவது நடவடிக்கையை பொறுத்து உதவிடலாம். நாம் சக்திக்கு மீறி உழைக்க வேண்டுமென்றால் பிறர் உதவி, உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை உதவிக்கு வைத்துக்கொள்வது போல் பலர் உதவி கேட்கும் பொழுது தேவையானோர் ஒன்றுகூடி திட்டமிட்டு உதவிடலாம். சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்ய இரக்கப்பட மாட்டார்கள். விசாரித்தல் கடன் இருக்கு என்பார்கள். இந்தியாவே கடன் வாங்குகிறது. நாம் எம்மாத்திரம்? நம்மிடம் கடன் இருந்தாலும் மற்ற சிலரின் அவசியத்திற்காக இன்னும் கொஞ்சம் கடனை நாம் சேர்த்து கொண்டால் என்ன? பிறர் தேவையை தன்னுடைய தேவையாகவோ, தன் உற்றார் தேவையாக கருதினால். பிறருக்கு கடன் பட்டது தன் கடன்தான் என்று சமாதானம் அடையலாம். ஓரளவுக்கு கடன் பட்டதை முடிந்தவரை கடனை அடைப்போம். நாம் இறந்ததும் இறைவன் நம்மை ஏன் கடனை திரும்ப செலுத்தாமல் இறந்தாய். நீ சாக வேண்டாம் கடனை அடைத்து விட்டு சாகலாம் என்பாரோ. ஒரு கிராமத்தில் வங்கி இருந்தது. அந்த வங்கியில் பலர் கடன் வாங்கியிருந்தார்கள். சிலர் சேமித்தும் வைத்திருந்தார்கள். பூகம்பமோ, வெள்ளத்தாலோ அந்த கிராமம் அழிந்தது. கடன், deposit என்ன ஆனது மாற்று வழியை நாடலையா? மற்றவர்களுக்கு உதவி என்றால் ஏன் சாக்கு போக்கு பயம்? வாழ்க்கை பகிர்வு -1 பந்த், முழு அடைப்பு போன்றவை முழுமையாக வெற்றி பெறுகிறதா? சில கோரிக்கைகளுக்காக ஏழைகள் மட்டும் பணக்காரர்களுக்கு எதிராக முழு பந்த் நடத்தினால் எப்படியிருக்கும்? அல்லது சில நிறுவனங்களில் சம்பளத்துடன் கூடிய நீண்ட நாள் விடுமுறையை அந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அனுமதிக்கின்றனர். பணக்காரர்களை போன்று ஏழைகளும் மிக முக்கியமானவர்கள். அதுபோன்று ஏழைகளுக்கும் இவ்வாறு விடுமுறை அளித்தால் எப்படி இருக்கும். ஏழைகளுக்கு போதிய உணவும், போதிய மன மகிழ்ச்சிக்கென்றும், உடல் ஆரோக்கியத்திக்கென்றும் விளையாடுவதற்கு ஏற்பாடும், போதிய ஓய்வுக்கு ஏற்பாடும் செய்து விட்டு உணவு உற்பத்திற்க்கும், வசதி ஏற்பாடுகளுக்கும் வேண்டிய போதிய உழைப்புக்கோ அவர்களுக்கு விடுமுறையும் தந்தால் எப்படியிருக்கும்? பணக்காரர்களை உணவு உற்பத்திற்க்கும், வசதி ஏற்பாடுகளுக்கும் வேண்டிய போதிய உழைப்புக்கு நிர்ப்பந்தம் செய்தால் எப்படியிருக்கும்? அல்லது பணக்காரர்களுக்கு இப்படி விடுமுறை அளித்தால் எப்படியிருக்கும். பணக்காரர்கள் எந்த வேலையையும் செய்யாமல் வேலைகளுக்கு விடுமுறையும். நல்லா பசிக்கென்று மாத்திரை போட்டு விதவிதமாக சாப்பிடுவதற்கும், மாத்திரை போட்டு நன்கு தூங்குவதற்கும் ஏழைகளால் ஏற்பாடு செய்யப்பட்டால் பணக்காரர்கள் எப்படி? விலை உயர்ந்த உயிருடன் அதிக நாள் வாழ்க்கையை தக்க வைப்பவர் யார்? ஏழையா, பணக்காரரா? அப்படியென்றால் விலை உயர்ந்தவர் யார்? குடிக்கிற தண்ணீர் மதிப்பு அதிகமா? தங்கம் மதிப்பு அதிகமா? குடிக்கிற தண்ணீரும், தங்கமும் அது தேவைப்படும் அவசிய நேரத்தை பொறுத்து இரண்டும் விலை மதிப்பு உடையது. குடிக்கிற தண்ணீர் போல தாகத்தை நீக்குபவர்கள் ஏழைகள் தங்கத்தை போல ஜொலிப்பவர்கள் பணக்காரர்கள் இந்த இரண்டின் அவசியத்தை பாருங்கள் குடிக்கிற தண்ணீரை தங்கத்தை போல் நாம் மதிப்பிடுவதில்லை நாம் என்ன கிரைண்டர், மிக்சியா மின்சாரம் கொடுத்து switch போட்டால் அறைக்கனும் சுவிட்ச் ஆப் பண்ணினால் நிற்கணுமா? சாப்பிடுவதும், தூங்குவதும் தான் வாழ்க்கையா? நல்ல கல்வியால் உலகத்தை அறியவும், ஆராயவும், புத்தி, ஞானத்தோடு செயல்படவும், மன மகிழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் நன்கு சாப்பிடவும், நன்கு ஓய்வு எடுப்பதும், வேலை செய்வதும் சேர்ந்து தானே வாழ்க்கை. ஏழைகளுக்கும், பணக்கரர்களுக்கும் மேற்கண்டவற்றில் எதுவெல்லாம் கிடைக்கிறது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எதுமட்டும் கிடைக்கிறது மிக்சி, கிரைண்டரை போல் இயந்திரமான இயந்திர வாழ்க்கை. தானம் வாழும் வரை இரத்த தானம் வாழ்ந்தபின் கண் தானம் வயிற்று பசிக்கு அன்னதானம் காம பசிக்கு நிதானம் வெள்ளத்தை கட்டுப்படுத்தி இரு கரையும் உயர்த்தப்பட்ட ஆறுகள், கால்வாய்கள் மூலம் பாசனம் செய்தால் விவசாய பசுமைக்கு நல்லது. அதுபோல காம பசியை கட்டுப்படுத்த உயர்ந்த இரு அக்கறைகள் வேண்டும். ஒன்று சமுதாய ஒழுங்கிற்கும், மற்றொன்று தன்னுடைய ஒழுங்கிற்கும் கேடு இல்லாமல் நிதானமாய் காம பசி ஆற்றவேண்டும். வாழ்க்கை பசுமைக்கு நெருக்கடி பணம் தேவைப்படாதவர் யாரும் உண்டா? தனக்கு தேவை இருக்கும்பொழுது அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டுமானால் யோசிக்கதானே செய்வார்கள். அப்படியே உதவி செய்தாலும் அள்ளி கொடுத்திடுவார்களா கணக்கு பார்த்துதானே கொடுப்பார்கள். தன்னுடையவர்கள் என்றால் அள்ளி கொடுத்துவிடுவார்கள் அதிலே விதி விலக்கு. யாருக்கு எதை கொடுத்தாலும் ஒரு நெருக்கடியில்தான் உதவலாம் என்பது நலமா இருக்குமா? இப்பொழுதுதான் போலி நெருக்கடிகளை உருவாக்குகிறார்களே எதை நம்பி உதவுவது. உதவி செய்வது உபத்திரவமாகிவிட்டால். யாருக்கோ எதோ உண்ணக்கொடுத்து அது சிக்கலாகி விடுவதுபோல நாம் செய்கிற உதவி ஆபத்தானதாகிவிட்டால். அல்லது காசோட அருமை தெரியுமா? உதவி செய்வதால். கிரிக்கெட்டில் batsman க்கு 4, 6 என்று அதிகமா ரன் அடிக்கிறமாதிரியா பந்து எளிதாக போடுவது? அதிலே batsman திறமைக்கான அனுபவத்தை அறிய முடியுமா? அவருக்கு திறமை வளருமா? அல்லது batsman கேட்ச் பிடித்தோ, bold ஆகவோ தான் எளிதாக அவுட் ஆகுவதற்க்கும் fielder களுக்கு வழிவிட்டால் fielder களுக்கு எப்படி அனுபவ திறமை வளரும் இது போன்ற ஆட்டத்தை யாரேனும் பார்க்க ரசிப்பார்களா? ராமாயணம் போன்ற போர்களங்களில் எதிரி நிராயுதபாணியாக இருந்தால் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி போரிட அவகாசம் கொடுப்பது என்பது போர் விதியாக இருப்பதுபோல் நாம் மற்றவைகளுக்கு உதவுவது அந்த உதவிக்கு ஏற்புடையதா என்று உதவுவருக்கும் உதவி பெறுபவருக்கும் உடன்பாடு ஏற்படவேண்டும் இரண்டு பேரும் ஆடுவதற்கு தயாரா? அவகாசமும் தயார்நிலையும் ஆகட்டும். சில உதவிகளுக்கு உதவது தவிர்க்க முடியாத அவசியமாக இருக்கும் அவைகளுக்கு விதிவிலக்கு உண்டு trial பந்து போடுவது போல சம்பாதிப்பது அவ்வளுவு எளிமையாகவா இருக்கு – உதவி செய்ய பணத்தோட அருமை சிலர் மோசடியில் சம்பாதிக்கிறார்கள் போலி நெருக்கடியை போல விதி விலக்காரர்கள் பசி, ருசி, மருந்து என்ன வாழ போறோம். எல்லாத்தையும் ஏற்று கண்டு வாழ்க்கையை அனுபவிப்போம். பயன்படுத்தாத கத்தி துரு பிடிக்கும். கவனம் வேண்டும். அலட்சியமும் வேண்டும். கவனம் என்றால் என்ன? அலட்சியம் என்றால் என்ன? அனுபவிக்கமுடியாத போது? வாய்ப்பு பெறுங்கள். வாய்ப்பு கொடுங்கள் வாழ்க்கைக்கு சோதனை மரணம் என்னை சந்திப்பதில்லை மற்றவருக்காக நான்தான் மரணத்தை சந்தித்தால் மரணம் உண்டு என்ற மகாபாரத பீஷ்மர் அம்பு படுக்கை இருப்பது போல துன்பத்தை பீஷ்மர் அம்பு படுக்கைபோல் அனுபவிப்பவர்கள் தன் நெருக்கடியை சொல்லமாட்டார்கள் மற்றவர்களால் தன் துன்பம் நீங்க வழி உண்டு என்று வழியை அறியாதவர்கள் பலர் உண்டு. தனுக்கு வந்திருப்பது துன்பம் என்றே அறியாமல் அதை அனுபவித்து கொண்டிருக்கும் அப்பாவியை நினைத்து பார்ப்போம். ஏழையின் நெருக்கடியை பணக்காரர்கள் அறிவது எளிதா? பணக்காரரின் நெருக்கடியை ஏழைகள் அறிவார்களா? மன திருப்பத்தை எப்பொழுது உணர முடியும். பிறர் அகால இறப்பையையும், இழப்பையும் பாருங்கள் என்ன சோதனை? எல்லாருக்கும் இழப்பை அறிந்தால்தான் அது என்ன வென்று அறிவோம் என்று கடின உணர்வு கொள்ளதிருப்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அறிந்து நெருக்கங்களை தவிர்ப்போம். மனம் நொந்தவர்கள். மனம் நோகுதல் என்றால் என்ன என்று அறிவார்கள்? அவர்களை விசாரிப்போம்? எதையும் சோதித்தறிந்து ஏற்றுகொள்வோம். பலிகாடாக வேண்டாம். பலிகொடுக்க வேண்டாம்? Practical live ஆக வரும் நெருக்கடியை எதிர்கொள்வதும். நெருக்கடியை மனதில் புரிந்து கொள்வதற்கும் யுக்திகள் இருக்கின்றன. துன்பப்படுகிறவர்களை கண்டு நாம் எச்சரிக்கை அடையனும். ஆறுதலை பகிர்ந்திடனும். புத்தி சுயாதீனம் இல்லாதவர் நான் பிரச்சனையை சமாளித்தேன் என்பாரோ. எதுவென்றே அவர் புரியாமல் இருக்கிறார் என்றுதான் நாம் சொல்வோம். வேலைக்காரர்களிடம் அதை சரியா செய்யிங்க, இதை சரியா செய்யிங்க என்று நாம் உத்தரவு போடும்பொழுது சிலர் ஏன் இப்படி கேட்கிறீங்க என்று சொன்னால், நாம் நம்மை கேட்பவரிடம் சும்மாகவா சொல்கிறேன், காசுல கொடுக்கிறேன் என்று சொல்வோம். அதுபோல பிரச்சனை நமக்கு வந்தாலும் நாம் நிராயுதபாணி இல்லை, நல்ல கை இருக்கு, நல்ல கால் இருக்கு, நல்ல அறிவு இருக்கு, துணிச்சல் இன்னும் என்னனென்னமோ இருக்கு பிரச்சனையை சமாளிக்க முடியாது. நம்மிடம் ஒன்னும் இல்லாம சும்மாகவா இருக்கிறோம். வரட்டும் எதுவந்தாலும் பார்த்துக்குவோம். எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு. தீர்வு இல்லை என்று அறிவதும் ஒரு தீர்வுதான். மனதிலே சமாதானம் அடைந்து. மனம் தளராதிருப்போம். காத்திருப்பு பாடத்தை திரும்ப, திரும்ப படித்து விளங்கிக்கொண்டு தேர்விற்காக பயிற்சி செய்கிறோம். திரும்ப, திரும்ப படித்திருந்தால்தான் தேர்வில் படித்ததை ஞாபகத்திற்கு கொண்டுவருவது எளிதாக இருக்கும். மலை ஏற, தீயணைக்க, கடலில் மீன் பிடிக்க, சைக்கிள் ஓட்ட, விமானம் ஓட்ட, நாட்டு எல்லையை பாதுகாக்க, சட்னி, துவையல் தயார் செய்ய, கிரிக்கெட், டென்னிஸ் போட்டியில் பங்குபெற, விண்வெளி ஆராய பயிற்சி மேற்கொள்வதில் கவனத்தின் எச்சரிக்கை நிலை வேறுபடுகிறது. இந்த ஒவ்வொரு பயிற்சி நடவடிக்கையிலும் ஆபத்து, பொறுப்பு, யதார்த்தம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுபோல மனதிலே தீமை செய்யாமலிருக்க தேவையான நல்ல வைராக்கிய பயிற்சி வேண்டும். நல்லது செய்வதற்கு பயிற்சி வேண்டுவதுபோல தீமையை வெறுக்க பயிற்சி வேண்டும். சிறிய தவறுகள், பெரிய தவறுகள், முக்கிய தவறுகள் இருக்கின்றன. சிலர் உடனே திருந்துவார். அவர் திருந்தியது தவறை பொறுத்தது. சட்னி, துவையல் செய்ய எளிதாக கற்றுகொண்டதை போல. அனுபவத்தால் சட்னி, துவையல் ருசி மாறுபடும். அதுபோல் தவறை தவிர்ப்பதில் நல்ல அனுபவமும், தவறு செய்யக்கூடாது என்ற நல்ல வைராக்கியதிற்க்கும் பயிற்சி அனுபவம் அமைகிறது. ஆயிரம் பேருக்கு நல்ல விதமாக விருந்து சமைக்கும் மாஸ்டருக்கு பயிற்சியும், அனுபவமும் அதிகம். நன்கு தவறில் பழகிவிட்ட ஒருவர் திருந்துவதற்கும் நல்ல பயிற்சி, அனுபவமும் தேவைப்படுகிறது. அவர் உடனே திருந்தவில்லை என்று நாம் அவரிடம் அதிக வெறுப்பை கொட்டாமல் அக்கறைகொண்டு அவர் திருந்த காத்திருக்கலாமா? போதை அடிமையில் ஊறிய குடிகாரர் உடனே குடியை விட வேண்டுமென்றால் சில உபாதைகள் வரும். அந்த குடிகாரர் உடனே விட வேண்டியது உண்டுதான். அவர் முதலில் விட வேண்டியது என்ன? அதை ஆராய வேண்டும். அதுபோல் தீமை செய்கிறவர்கள் முதலில் விட வேண்டியது என்ன? சூழலை ஆராய வேண்டும். வேகமாக போகும் வாகனத்தில் திடீர் பிரேக் என்றால் கொஞ்சம் கவனம். தவறு செய்கிறவர்கள் எதை எதை வெறுக்கவேண்டும். எதில் ஆர்வத்தை கொண்டு வரவேண்டும் என்பதை கவனித்து பயிற்சியினால் அனுபவத்தால் தவறை வெல்வதில் வெற்றி காணலாம். பட்டால்தான் புத்திவரும் அது மனதிலே படவேண்டும். பிறர் பிறருக்கு உதவுங்கள், மற்றவருக்கு உதவுங்கள் என்கிறோமே? அவர் யார்? தங்கள் தந்தையும் பிறர் தான், தாயும் பிறர் தான், மகனும் பிறர்தான், மனைவியும் பிறர்தான், அண்ணனும் பிறர்தான் என்பது அந்தந்த நிகழ்வுக்குரிய Dictionaryயில். ஆனால் குடும்பம் என்ற dictionary யில் அனைவரும் தங்கள் உறவினர்கள் தங்களுக்கு உரியவர்கள். பிறர் அல்ல சொல்லப்படுவதன் group ஐ பொறுத்து தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோரும் அவர்களின் பிள்ளைகளும் பள்ளிக்கு வந்திருக்கின்றனர், அப்பொழுது பள்ளி ஆசிரியர் படிக்கும் பிள்ளைகளை தவிர மற்றவர்கள் வெளியில் காத்திருங்கள் என்கிறார்? அப்பொழுது பெற்றோர், தங்கள் பிள்ளைகள் என்ற குடும்ப உறவு சொந்தத்தில் பெற்றோர் மற்றவர் என்று பிரிப்பது தங்கள் மாணவர் என்ற group -ல் பெற்றோர் மற்றவர் என்றாகின்றனர் அல்லவா அதைப்போல நன்மை செய்வதில் மற்றவர் யார் என கண்டு தங்களை போன்று நன்மை செய்கிறவர்களாக சேர்த்துக்கொள்வதில் நாம் அவர்களோடு அன்பை பரிமாற வேண்டும். அந்த மற்றவர் நம் மனைவியாகவோ இருக்கலாம். நாம் நல்ல பொறுமைசாலியாக இருக்கிறோம். ஆனால் அடிக்கடி கெட்ட கோபக்காரராகவோ, சண்டை போடுவோராகவோ நம் தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ இருந்தால் பொறுமை சாலி என்ற குரூப் ஐ பொறுத்து தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ மற்றவர் என்றாகி நம் குணத்திற்கும், அவர்கள் குணத்திற்கும் பிரிவு ஏற்பட்டு தங்களுடையவர்கள் ஆக இல்லமால் மற்றவர் ஆகின்றனர் ஆனால் தந்தையோ, மனைவியோ, பிள்ளையோ, நண்பரோ அவர்களிடம் சகஜமாக பேசுவோம், பழகுவோம் ஆனால் நமக்கும் தந்தைக்குமோ, மனைவிக்குமோ, பிள்ளைக்குமோ, நண்பருக்குமோ உள்ளுக்குள் பகையாக இருப்பது ஒத்து போகாத குணம்தான். அறியாத ஊரில் ஒருவரை காண்கிறோம். எந்த உதவி அவருக்கு உகந்தது என்று அறியாமல் அவருக்கு பண உதவி செய்கிறோம் ஆனால் அவர் ஒரு தீவரவாதியாக இருந்தால் என்ன செய்வது? நம் உதவியானது அவர் ஒரு பெரிய தீங்கு செய்வதற்கு காரணமாக அமைந்து விட்டால். அதுபோல் அந்நியர் தாகம் என்று சொன்னால் ஏதோ நம்மை போன்ற மனிதர் என்று தண்ணி கொடுக்கலாம். நம் சொந்த அண்ணன், தந்தை, மனைவி, குழந்தைகள், நண்பர் இவர்களை நெடுங்காலமாக புரிந்து கொள்வதே சிரமமாகிறது. நம் வேலை உண்டு என்று மட்டும் இருப்பதால். ஒரு அந்நியரை ஒரு நிமிடத்தில் புரிந்துகொண்டு எந்த உதவியை செய்வது. ஒரு நிமிடத்தில் எந்த உதவி தகுந்தது மற்றவருக்கு என்று நன்கு புரிந்திருந்தால் அதை செய்வதில் தாமதம் வேண்டாம். விபத்தா? என்றா கூட இருக்கலாம். பாவிகள், பரியாசக்காரர், துன்மார்க்கர் இவர்களின் தீய குணங்களை போன்று நடவாமலும், நில்லாமலும் அவர்களை சீர்படுத்தக்கூடிய செயல்களில் நிற்கவும், நடக்கவும் செய்து அவர்களோடு அன்பு உறவில் செயல்பட வேண்டும். அன்பான உலக குடும்பமே……….. சைவம் – எனக்குள் எழும் சந்தேகங்கள் சைவமாக உள்ளவர்கள் உண்பது உயிர் சத்துள்ளவைகளையா? அசைவமாக உள்ளவர்கள் உண்பது விஷத்தையா? மொபைல் உபயோகத்தால் சில பறவை இனங்கள் அழிகின்றன என்கிறார்கள் இந்த அழிவுக்கு காரணம் சைவத்துக்கு தொடர்புடையதா? அசைவத்திற்கு தொடர்புடையதா? இரத்தத்தை அதின் உயிரோடு புசிக்கக்கூடாதா? இனபெருக்கத்திற்கு கூட வழியில்லாமல் அந்த இனத்தின் உயிரையே அழிப்பதா? போதமான அளவில் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகமானவைகளை குறைப்பதற்கு பயனான வழி காண்பதா? சிலவற்றைமட்டும் இறைச்சி உணவுக்காக உண்ணும்பொழுது முற்றிலுமாக அந்த இனத்தின் இரத்த தொடர் உறவை அழித்து புசிக்கவில்லையே? இது நியாயமா? மாணவர்களுக்கு கற்று தர உயிராக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் என்ற தொழிலின் உயிரையே நிறுத்தினால் என்னவாகும். படித்த ஆசிரியர்கள் அதிகமானால் அவர்களை எப்படி கட்டுப்படுத்துகிறோம். அனைவருக்கும் வேலை கொடுக்க முடிகிறதா? வகை, வகையான தாவர இனங்கள், பிராணிகள் இருக்கின்றன. ஒருவகையான இனத்தையே அழிப்பதா? அல்லது ஒவ்வொரு வகை இனத்தையும் போதுமான அளவில் ஜீவியத்தோடு பராமரிப்பது நல்லதா? அதற்காக கொல்வதோ, அழிப்பதோ நல்லதா? காடுகளை பெருக்குவது நல்லதா? காட்டில் வாழும் பயங்கர மிருகங்கள் மிகுந்திருந்ததால் நமக்கு ஆபத்து என்று அவைகளை வேட்டையாடுவது நல்லதா? கொல்லாமல் நாம் விட்டுகொடுத்து சாவது நல்லதா? மனித இனபெருக்கத்தை குறைத்துக்கொண்டு மற்ற இனங்களை வாழவைப்போம் என்று பிரச்சனை கொடுக்காமல் பாலைவனத்தில் இருப்பது நல்லதா? நம்மை சோகத்திற்கு உணர்த்துவது, பிராணிகளை இறைச்சி உணவுக்காக கொல்லும்பொழுது அவைகள் ஏற்படுத்தும் சத்தமா? அவைகள் எதை உணர்த்துகின்றன? நம்மை சோகத்திற்கு உணர்த்துவது, நாம் வீடுகட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட, நமக்கு வேண்டிய வேறுவகை தாவரங்களை பயிரிடுவதற்கு ஆக்கிரமிக்க ஏற்கனவே இருந்த தாவரங்களை அழிக்கும்போழுது அந்த தாவரங்கள் பசுமையோடு இருக்கிறதா வதங்கி காணப்படுகிறதா? அவைகள் எதை உணர்த்துகின்றன? பிராணிகள், தாவரங்களை மருந்துக்காகவும், உணவிற்காகவும், வசதிக்காகவும் எந்தந்த அளவிற்கு ஆதரித்தும், அழித்தும் பராமரிக்கிறோம். சைவம், அசைவம் எந்தந்த அளவிற்கு இருப்பது நல்லது? எந்தந்த அளவிற்கு இருப்பது கெட்டது? மனிதன் எலிகளை அழிக்காமல் இருப்பதற்கும், கரப்பான் பூச்சியை அழிக்காமல் இருப்பதற்கும், கொசுக்களை அழிக்காமல் இருப்பதற்கும், நாய், பூனைகளை அழிக்காமல் இருப்பதற்கும் ப்ளூ கிராஸ்உண்டா? இவைகளை சிந்திப்பதற்கு மட்டும். பால் கொடுக்கும் பசுவையும் அதன் கன்றையும் பிரிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காக கொன்றால் அது தர்மமா? பசுவையும் அதன் கன்றையும் ஆதரிப்பதுதானே நல்லது? எலிக்குஞ்சு, கொசு முட்டை, தற்போது பிறந்த கரப்பான் பூச்சிகள் இவைகளை ஆதரிப்பது நல்லதா? நாம் கொல்லக்கூடாது என்று கட்டுபடுத்த கேள்வி கேட்பது ப்ளூ கிராஸ் என்றால்? பூகம்பத்தாலும், வெள்ளத்தாலும், வெயிலாலும் மனிதர்களை கொல்லும் பூமியையும், வானத்தையும் கேள்வி கேட்பது யாரு? பூமியும், வானமும் சைவமா? அசைவமா? மனிதர்களை கொல்கிறதே பூகம்பம் மற்றும் வெள்ளத்தால் கொன்றால் பாவம் தின்றால் போச்சி பெட்ரோலியம், நிலக்கரி நமக்கு உதவியும் செய்கிறது? பெட்ரோலியம், நிலக்கரி எப்படி உண்டானது? பூகம்பம், வெள்ளம் – பெட்ரோலியம், நிலக்கரி உண்டாவதற்கு எந்தவகையில் வகையில் உதவுகிறது? சிந்தனை ஏழைகள் ஒரு தெருவில் 100 வீடு அமைவதற்கும் பணக்காரர் அதே மாதிரியான நிலப்பரப்பளவில் உள்ள தெருவில் 20 வீடு அமைவதற்கும் உள்ள பங்களிப்புகள் என்னவாக இருக்கும் இருவருக்கும் உள்ள கட்டட கலையின் வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பு என்ன? குடிசைகள் தேவையில்லையா ? குறைந்த செலவில் அவசர காலத்தில் அகதிகளை தங்க வைப்பதற்கு, இந்த சூழலில் மாட மாளிகைகள் அமைக்க வேண்டும் என்றால் என்ன சிக்கல்கள்? தற்காலிக இருப்பிடத்திற்கு எது நல்லது? பூகம்ப சூழலில் எதுமாதிரியான வீடு பாதுகாப்பானது? வெள்ளத்தினால், தீயினால் வரும் ஆபத்துகள் எந்தெந்த வீடுகள் கட்டப்பட்டால் பெரும் பாதிப்பை தவிர்க்கலாம்? இட நெருக்கடியை சமாளிப்பதற்கு, சுகாதாரத்திற்கு எது மாதிரி வீடுகள் வேண்டும்? இடத்தை தேர்வு செய்வதில் கவனம் வேண்டுமா? இல்லையா? பல மாதிரி வீடுகளில் பல மாதிரி நன்மைகளும், தீமைகளும் இருக்கலாம்? தற்கால மக்கள் விரும்பும் இலட்சியத்திருக்குறிய வீடுகள் எந்த வகையில் அமைய வேண்டுமா? எல்லாருக்கும் ஒரே லட்சியத்தில் வீடுகளை தேர்ந்தெடுத்தால் என்ன சிக்கல்கள் எல்லாரும் பெரியளவில் படிக்க வேண்டும் என்றால் முடிகிறதா? பெற்றோர்கள் குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என்று ஏன் கவலைப்பட வேண்டும். எதில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயலலாம். நம்முடைய தீர்மானத்தையே திணிக்கிறோமே counselling இல் இதுதான் கிடைத்தது என்று அமைதிபடாமல் இறைவன் தரவில்லை என்று முறு முறுக்க வேண்டாமே வாய்ப்பை உருவாக்குவதுபோல், ஆர்வத்தை உருவாக்க எந்தவகையில் கடினம் எல்லாருக்கும் ஒரே பெயர் என்றால் கூப்பிடுவதில், அடையாளம் காண்பதில் என்ன சிக்கல்? தங்கத்தின் விலை இறங்குகிறது என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம் தங்கத்தின் விலை ஏறுகிறது என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம் சம்பளம் அதிகமென்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம் வேலை பளு குறைவு என்றால் அதற்கென்று லாபமடைய ஒரு கூட்டம் நஷ்டம் கிடக்குது அனாதையாக? சுற்றுசூழலை கெடுப்பதுபோல் நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை போர் புகைகிறது என்றால்? வாழ்க்கையில் பலசாலிக்கும், பலம் குன்றியவருக்கும் ஒருவகை போர் நடக்கிறது அல்லவா? திட்டமிடல், counselling உலகத்தின் அனைத்து துறைகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு தொடர்புகள் ஸ்திரபடுத்தலாமா? பலப்படுத்தலாமா? புனரமைப்பிற்கு, மறு வாழ்விற்கு எளிதில் சக்தி கிடைக்கிறதா? அரிதாக கிடைக்குமானால் நம்முடைய சக்தி, சக்திதானா? சிக்கல்களில் விழுகிறோமா? சிக்கல்களை உருவாக்கிக்கொள்கிறோமா? கவனங்களை கவனிப்போமா? அறிவு- அரிவாள் அறிவினை சுட்டி தீமையை வம்பு செய்து உணர்த்துவதை விட, அரிவாளால் வெட்டி தீமையை தெம்பு தந்து உணர்த்துவது சிறந்ததா? இது எந்த மாதிரி சூழலில் தீய அறிவு உண்டா? அரிவாள் காய்கறி வெட்ட பயன்படுவது இல்லையா? மரங்களை சுத்தம் செய்ய பயன்படுவது இல்லையா? வேறு எவைகளுக்கு அறிவும், அரிவாளும் பயன்படுகிறது? வேறு எவைகளுக்கு தீமை? வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கென்று அதிகமாக உணவை தயார் செய்தால்? திருமணதிற்கு வரும் உறவினருக்கென்று குறைவாக உணவை தயார் செய்தால் உணவு நல்லது? எப்பொழுது அது தீயது? அளவுக்கு அதிகமாக உண்பது நல்லதா? உணவுதான் நல்லது என்கிறோமே. உணவுதான் நல்லது ? நமக்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்தால் அதற்கு உணவே தீயது என்போமா? திருடுவது எப்பொழுது நல்லது? எப்பொழுது கெட்டது? 4 4. சிந்தனை கீதாச்சாரம் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் என்பவைகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? வேலை இல்லாத பட்டதாரிகள் அதிகமாக இருக்கிறார்கள்? இப்படியிருந்தால் சாப்பிடனும், செலவு பண்ணனும் என்றால் வேலை இல்லாத பட்டதாரிகள் என்ன செய்வார்கள்? படிப்புக்குள்ள வேலை இல்லை என்றாலும் இருக்கிற வேலையை செய்யமுடியுமா? அயல் நாடுகளில் உரிய வேலையில்லாமல் வேறு கடின வேலை கிடைத்தால் என்ன செய்வது? நுட்பமாக செய்வதற்கு பழக்கம் இருக்கா? நுட்பத்திற்கு உடலை வருத்தி உழைப்பதும் ஒரு அனுபவம். பட்டதாரிகள் உடலை வருத்தி நுட்பமாக வேலை செய்வதற்கும் ஐந்தில் வளையாதது முப்பதில் வளைவதற்கு என்ன செய்வது? பகுதி நேர வேலையும், படிப்பும் சேர்ந்து (வி)வளைவதற்கு எப்படி திட்டமிடுவது? திட்டமிடுவது செயல்பட்டால் உள்ள நன்மை, தீமை என்னென்ன? ஆம் டூ-இன்-ஒன், த்ரீ-இன்-ஒன் வசதி “சிறுவயதினரை இங்கு வேலைக்கு அமர்த்துவதில்லை” என்று தெரிவிப்பதை பார்த்திருக்கிறோம். “சிறுவயதினரை இங்கு அதிக படிப்புக்கு அமர்த்துவதில்லை” என்று ஐந்தில் வளைய வேண்டிய வேலையின் முக்கியத்துவம் தெரிவிக்கவேண்டிய நெருக்கடி சூழல் வருமா? நாம் கைக்கொள்ள வேண்டிய தொழிலையும், படிப்பையும் balance ஆக பராமரிப்பது நல்லதா? இந்த எண்ணம் செயலாகுமா? எண்ணமே செயல், செயலே எண்ணம். படிப்பை சார்ந்தது முக்கியமாக மூளைக்கு வேலை தொழில் சார்ந்தது முக்கியமாக உடம்புக்கு வேலை சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இரண்டின் ஆதரவு எப்படி? கையில இரண்டு தொழில் இருந்ததுனா ஒன்று இல்லை என்றாலும் இன்னொன்று கைகொடுக்குமா? ஞானப்பழம் உணவில் திருப்தி எப்பொழுது? பசிக்க வேண்டும் புசிக்க வேண்டும். பிள்ளையார் ஞான பழத்திற்காக சிவனையும், பார்வதியையும் சுற்றிவந்து பெற்றுக்கொண்டார்? தாய், தந்தையரை சுற்றிவந்தது உலகத்தை சுற்றிவந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்படியாக இருக்குமோ? உலகம் எப்படிப்பட்டது? தாய்மை பண்பும், தந்தை பண்பும் இருப்பது தான் உலகமா? தாய்மையாக பெண்மை பசிக்குது, தந்தையாக ஆண்மை பசிக்குது பெண்மையை ஆண்மை புசிக்குது, ஆண்மையை பெண்மை புசிக்குது அது குழந்தையாக உருவாகி திருப்தி ஆகிறது. இந்த பண்புதான் உலக ஆதாரம் என்று பிள்ளையார் அறிந்திருந்தாரோ? துவக்கத்தையும், முடிவையும் சுற்றி அறிந்த இந்த அடிப்படை அறிவின் காரணத்தை துவக்கி, முடித்த சுற்றினால் அவர் வெற்றி கண்டாரா? இந்த முதல் சுற்றிலே… ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் அல்லது தானியங்களுக்கும், மண், மலை, நீர், நெருப்பு போன்றவைகளுக்கு இயக்கங்கள் வேறு, வேறு அறிவு பசி, வயிற்று பசி, காம பசி போன்ற பசிகள் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் வரலாம் இது அதற்கு மேல் பசி, அது இதற்கு மேல் பசி என்று எந்த பசி புசிக்கப்படுகிறதோ அதனால் ஒரு திருப்தி உருவாகிறது. தானிய விதையின் பசி, விதைத்து பலன் பெற வேண்டி பல தானியங்களாக பெருகும் திருப்தி பசியானால் பல தானியங்களாக இருக்கலாம் ஏற்று புசித்ததால் (சூழல்கள்) அல்லது அந்த தானியம் மனிதனுக்கு உணவாக வேண்டிய பசியாக இருந்தால் உண்பவருக்கும் பசி ஏற்புடையதானால் திருப்தியாகி சக்தி நடைபெறுகிறது. அறிவை கொடுக்க பசி, அறிவை எடுக்க பசி கலோரி உணவை கொடுக்க பசி, கலோரி உணவை எடுக்க பசி, இனபெருக்க காரணம் கொடுக்க பசி, இனபெருக்க காரணம் எடுக்க பசி அலியாக மாற எடுத்த பசி, அலியாக மாற்ற கொடுத்த பசி மழையாக மாற எடுத்த பசி, மழையா மாற்ற கொடுத்த பசி பிளஸ் +, மைனஸ் – காந்தத்தின் வட துருவம், தென் துருவம் எந்த வகையில் பசிகள், புசிக்க படுகிறதோ அந்த வகையில் திருப்தி, அதிருப்தி அல்லது நடு நிலைமை துவக்கம் இல்லாததற்கும், முடிவு இல்லாததற்கும் ஒரு துவக்கமும், முடிவும் இருக்கிறது? முருகன் உலகை சுற்றியது எப்படி? பிள்ளையார் உலகின் ஆர்வத்தை சுற்றினாரா? முருகன் உலகை ஆர்வத்தில் சுற்றினாரா? பிள்ளையார் எண்ணத்தில் சுற்றினாரா? முருகன் செயலில் சுற்றினாரா? தாய், தந்தையர் property கழிவை அதுவாக மக்கும் வரை அது கிருமிகளை கக்கும் நமக்கு நோய் வந்து சிக்கும் வாசனை புகையிலையும் (பான்பராக்) உண்டு பரிமள தைலமும் உண்டு எதை எப்படியாக நன்மை படுத்தலாம். சுவைக்காக சாப்பிட்டுவிட்டோம், அதை உழைப்பாக சுவைக்கவில்லை என்றால் அதன் பிரயோஜனம் என்ன? வியாபாரம் ஏன்? உலகில் பேரம் பேசப்படும் பாரம், வியாபித்திருக்கும் வாழ்விற்கான நடவடிக்கைகளின் வியாபாரம். இது மனிதர்களுக்கிடையே உணவு, உடை, உறைவிடம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. உடலுக்கென்று உணவு, உடை, உறைவிடமும், மனதிற்கு கல்வி, மகிழ்ச்சி போன்றவைகளுக்கான உணவு, உடை, உறைவிடமும் பணம், குணம் போன்றவற்றால் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த வியாபாரம் பலகட்ட சுற்றில் பேரம் நிகழ்ந்தால் என்ன? நெல்லுக்கு பாய்கிற தண்ணி புல்லுக்கும் பாய்கிறதே நெல் அரிசியாக கையில் கிடைப்பதற்கு முன்பு புல்லு வேண்டாம், தானியத்தை உதறி எடுத்தவுடன் பதறும், பதரும் வேண்டாம், உமி வேண்டாம் என்கிறோம், ஆனால் இவைகள் ஆடு, மாடு பிராணிகளுக்கு தீனியாகவும், இவைகளால் நமக்கு எண்ணையாகவும், பாலாகவும், எருவாகவும், சுவாசமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறதே மி.சி.ம, மி.பெ.வ என்று கணக்கில் மிகச் சிறிய பொதுமடங்கு, மிக பெரிய பொது வகுத்தி என்று நாலைந்து எண்களை எடுத்துக்கொண்டு காரணிகளையும், எப்படி வகுப்பது, எந்த மடங்கில் அடங்கும் என்று இறுதிவரை பார்ப்பது போல். நாம் பலனடைந்தால் என்ன? மதிப்பிற்குரிய தமிழ் தோட்டம் யூஜின் அவர்கள் குறிப்பிடுவது போல் நான், நீ, நாம் இணைந்தால் உலகம் நம் கையில் – மகிழ்ச்சி நம் பையில் அது திட்டங்களை வகுத்து மகிழ்ச்சியை பெருக்க. பணம், குணம் பரிமாறப்படும் தனக்கும், பிறருக்கும், உலகத்திற்கும் உயிர் உள்ள நாள் வரை என்று எடுத்துக்கொண்டு லாபத்திற்கும், நஷ்டத்திற்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மி.சி.ம, மி.பெ.வ என்று கணக்கிட்டு நல்ல பணத்திற்கும், நல்ல குணத்திற்கும் பங்களிப்போம், பகுத்துண்போம். இந்த பண, குண பரிமாற்ற கணக்கு வியாபாரம் நடைபெறும் அந்த நேரத்திற்கு மட்டும் அன்று. அது ஒன்றோடு ஒன்று பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. வாழ்வின் இறுதி கட்ட பேரம் வரை. மி.சி.ம, மி.பெ.வ கணக்கிடுவது போல கவனிப்போம். காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம். உணவு அது வயிற்று பசிக்கோ, அறிவோ பசிக்கோ ஜகத்தில் உள்ள நல் உணர்வு அடையாத கல் உணர்வோ, அறியாமை உணர்வோ இவைகளை மாற்றும் அழிவை கொண்டு வருவோம் ஜகத்திற்கு அடிப்படைக்கு முக்கியத்துவம். ஒரு சதுர அடி நிலத்தை வாங்கவா? நிலைமையை தாங்கி ஒவ்வொரு அடியாக முன்னேறவா? நலமானதிற்கு சிந்தனை பயிற்சி நீ நடப்பதை காண என் கண்ணின் கவனம் ஏன் நடக்கிறது? உன் திருமண ஊர்வலம் நின்று விட்டதா? நின்று விட்ட என் கண்ணின் கவனமா? ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளே நிறுத்தாதே திருமண ஊர்வலத்தை திரும்ப திரும்ப நினைப்பதில் வலம் வருமே ஊர்வலம். ஓடுகிற கவலையை நிறுத்த முடியுமா? சந்தோஷ கவனமாய் ஓடி விளையாடு கவலை அணைந்து அணைந்து போகும் போதைக்கு அடிமையானவர்கள் கவலையை எப்படி நிறுத்துகிறார்கள்? ருசியின் பாதையை சரி செய்தால் கவலைக்கு இன்னொரு கவலை அகப்படாது ஆம் குடிபோதையை விட்டு மீள. முள்ளை முள்ளால் எடு என்பதற்கும் வன்முறைக்கு வன்முறையா? பதிலடி அழிவை செய்ய வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதை மீண்டும் உருவாக்க வாய்ப்பில்லாததால் எவ்வளவு கவனம்? வன்முறையான தீவரவாததிற்கு – பாதுகாப்பான தீவிர பாதுகாவலரிடம் பதிலடி இருக்கலாமா? எல்லோரும் வன்முறைக்கு, வன்முறையை பதிலடியாக எடுக்கலாமா? வன்முறைக்கு வன்முறை எவ்வளவு ஆபத்தானது? வன்முறை எவ்வகையில் ஆபத்து என்று அறியாமையில் குழந்தைகளாக இருப்பவருக்கும் அதைச்செய்ய வழிக்காட்டலாமா? அதற்காக வன்முறை பரவாயில்லையா? முள்ளை முள்ளால் எடுக்கும்பொழுது எவ்வளவு கவனம்? ஒரு முள் குத்தியது மற்றொரு முள் வலி நீக்கி இதயம் இதயம் சுருங்கி விரியும் பணியும், மேலாண்மையும் போல் அன்பின் பணி மற்றும் மேலாண்மையில் நீளம், அகலம், உயரம், ஆழம் என்ன? சுருங்கி விரிவடையும் சீரான இயக்கத்திற்கு அன்பின் அளவுகள் என்ன? நவீன மருத்துவம் மாற்று இருதயம் பொருத்துகிறதே ‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று ‘கொள்’ எனக்கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் ‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று; இருதலை கொள்ளி எறும்பு போல் ஈ என இரத்தல் அல்லது ஈயேன் என்றல் இதற்கு நல்ல முடிவு எப்படி எடுப்பது கொள் எனக்கொடுத்தல் அல்லது கொள்ளேன் என்றல் இதற்கு நல்ல முடிவு எப்படி எடுப்பது உலகம் தன்னொருவனை மட்டும் சார்ந்தது அல்ல தனக்கும், உலகிற்கும் அடுக்கடுக்காய் அடுக்கும் பரிமாற்றம் தொடர வேண்டும். கேட்பது இழிவா? கேட்டால் தராமல் இருப்பது இழிவா? எது அதிக இழிவு? அல்லது குறைந்த இழிவு? கொடுப்பது உயர்ந்ததா? வேண்டாம் என்பது உயர்ந்ததா? எது அதிக உயர்வு? அல்லது குறைந்த உயர்வு? கேட்க, கேட்க தடையின்றி கொடுத்தால் ஒரு நிலையில் கொடுப்பது தடைபடுமே அல்லது உழைப்பின் வலி அதிகரித்து உழைப்பின் உயிர் நின்றால் என்னாவது? தன்னுடையதை தராமலே இருந்தால் சோம்பி மதிப்பிழந்திடுமே கேட்பதும், கொடுப்பதும் தனக்கு மட்டும் எளிதாய் இருந்தால் சீரான விலை அறிய முடியாது அனைவருக்கும் எளிமையான நிலையை கணிக்க வேண்டும். ஒருவர் பிறப்பை இன்னொருவர் எடுத்துச் செல்கிறார். இன்னொருவர் எடுத்துச் செல்வதற்கு ஒருவர் இறக்கிறார். வேறொருவர் எடுத்துச் செல்ல அந்த இன்னொருவர் இறக்கிறார். அந்த இன்னொருவர் பிறப்பை வேறொருவர் எடுத்துச் செல்கிறார். கொடுத்தல், வாங்கல் சீரான நிலையில் இருபதற்கு ஏற்ப சுருங்கி, விரியனும் தொடரும் பரிமாற்றத்திற்கு. வீண் விரையத்தை கணித்து தேவையும், நுகர்வும் சீராக இருக்க வேண்டும். அதில் போலித்தன்மை குறைந்து உண்மை அறியனும். தன்னுடையதை தருவதும் அல்லது பிறருடையதை பெறுவதும் என்பதற்கு தான் இறப்பதே மேல் என்று எடைபோடுவோரும் உண்டு. மாற்று இருதயம் மற்றும் ஹார்ட் அட்டாக் கவனம் கொள்வோம். உலக மன நிலைகளை சீராக்குவோம். போலித்தன்மையை சீராக்குவதுதான் இலட்சியம். இதயம் – 2 ஈகையில் கொடுத்தலும், பெறுதலும் ஒரு தலை காதலை போல் வேண்டாமே. பயனாளர் தன்னொருவனாக மட்டும் வேண்டாம். சோம்பேறியும், ஊதாரியும் தான் ஒருவர் பயன் பெறுகின்றனர். உலகத்திலேயும் சுமையை கூட்டுகின்றனர். சோம்பேறி உழைப்பை கொடுப்பானா? ஊதாரி நன்மையாக செலவழிப்பானா? சமாதான பரிமாற்றம் நடந்தால் கொடுப்பவரும், பெறுபவரும் பயன் பெறுவர். இருவருக்கும் பரிமாற்றம் நடைபெறுவதால் இழிவோ, உயர்வோ இல்லை. நிலுவை இல்லை அக்கௌன்ட் tally ஓகே. (‘ஈ’ என ……., ‘கொள்’ என ….) சோம்பேறி, ஊதாரியை போல் ஒரு தலை அல்ல. உதவி என்பது சோம்பேறி, ஊதாரி போன்றோருக்கு வேண்டும் அது பாதிக்கும் வெள்ள பெருக்காய் அல்ல பாசனம் தரும் எல்லை நிலையாய் மாற்றம் வெல்ல இதயம் சுருங்கி விரிவதை போல் கொடுப்பது, வாங்குவது என்பது கொடுக்கத்தான் விரிவடைந்தது குறைந்து. வாங்கத்தான் குறைந்தது விரிவடைய நிரப்பி இந்த நிகழ்வு தொடர்ச்சியாக. தற்காலிக பசிக்கு மீனும் வேண்டும். நம் தூண்டுகோலால் மீன் பிடிக்க கற்றுக்கொள்ளனும் தொடரும் பசி ஆற. (மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று தாருங்கள்) தென்னை தென்னை விடும் பாளை எல்லாம் காய்க்கிறதா? உதிர்ந்து விடுகிறதே சில பூக்கள் தேங்கனியாய் அல்லாமல் நல்லோர் நாடும் திரட்டும் ஆதரவில் நடுநிலை மானிடர் கெடுவதன் உதிர்வில் தீங்கனியாய் சிலர் இத்தகு தீயோர் பூமியில் புதையவே ஆனரே நல்லோர் விண்ணோராக தீயோர் நல்லோருக்கு எருவாகவே புதைய திறப்பு விழா அமர்க்களம் அமர்க்களமாய் மூடு விழா வேண்டாமா? தீய எல்லையிலிருந்து திரும்ப இத்தகு மூடு விழாவிற்கு கலந்துக்கொள்ளும் சிறப்பாளர்கள் பெருகட்டும் அரணாய் இருக்க அறம் மனையில் குடியிருப்போம் மூடு விழாவிற்கு முடிவெடுப்பதனால் தியாக உதிரங்கள் தானமாய் ஆனது வெற்றி மகிழ்வின் நிதானத்திற்கு மத நல்லிணக்கம் எம்மதமும் சம்மதம் என்றும் மத நல்லிணக்கம் என்றும் சொல்கிறோமே நடைமுறையில் இது சாத்தியமா? ஒரு மதம் இதை செய்யனும் என்றும், இன்னொரு மதம் செய் என்றதை செய்யாதே என்றும் சொன்னால் எதை செய்வது எம்மதமும் எப்படி சம்மதமாகும் மத நல்லிணக்கம் எப்படி? எப்படி சம்மதிப்பது? ஒரு மதம் சொல்லும், செய் என்று சொல்லிருப்பதை செய்வதற்கு ஒரு காலை எடுத்து வைக்கலாம் என்றால் செய்யாதே என்று மற்றொரு மதம் சொல்லிருப்பதற்கு காலை எடுத்து வைக்கக்கூடாதே என்ன செய்வது மதச்சண்டையில் மனிதர்களை வெட்டுவதும், குத்துவதும், சுடுவதும் வேண்டாம். மதத்தில் உள்ள கருத்துக்களோடு சண்டை போடுங்கள் எண்ணத்தில் சண்டை போட்டு செய்கையில் சமரசம் ஆகலாமே உற்பத்தி செய்வது நல்லது தான். ஆனால் எப்பொழுது தீமை? தேவைக்கதிகமாக உணவு உற்பத்தி செய்தால் அது சேமிக்க முடியாதபட்சத்தில் தீமை வளருகிறது தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்தால் மக்கள் தொகை குறைவுக்கு கட்டுப்படுத்தவில்லை என்ற தீமை உருவாகிறது இரண்டிலும் மாற்றுவழி கண்டு நன்மை பெறுகிறோம் அல்லது தீமையை அனுபவிக்கிறோம். ஆகவே ஒரு மதம் சொல்வதை செய்வோம் அது தீமை என்றால் அனுபவிப்போம். இன்னொரு மதம் சொல்வதை செய்யாமலிருப்போம் அது நன்மை என்றால் அனுபவிப்போம். ஆனால் இரண்டுக்கும் அடிமையாக வேண்டாம், சுதந்திரமாய் இருப்போம். பட்டினி கிடந்து சாகவேண்டிய சூழல் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனமகிழ்வை விட்டுவிடாமல் மனபலத்தை வளர்த்துக்கொள்வோம். துன்பத்தின் பளு தூக்கிய சாம்பியன் சூழ்ச்சியாய் செய்கையில் மத சண்டைபோட்டு எண்ணத்தில் சமரசம் ஆவதால் உள்ள மத நல்லிணக்கமும், எம்மதமும் சம்மதமும் எப்படி? ஒற்றுமை மனதில் இருக்கிறதா? வேற்றுமை மதத்தில் இருக்கிறதே சோம்பல் ஒரு ஊமையே தேம்பல் ஒரு கவலையே சுதந்திரம் வேண்டும் எது சுதந்திரம்? பிச்சல் பிடுங்கள் இல்லாமல் எல்லாவற்றிலும் விடுதலை மதத்தில் பிச்சல் பிடுங்கள் சாதியில் பிச்சல் பிடுங்கள் இனத்தில் பிச்சல் பிடுங்கள் தேசங்களுக்கிடையே பிச்சல் பிடுங்கள் குடும்பங்களுக்குள் பிச்சல் பிடுங்கள் எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரம் கிடைக்க போராட்டம் அந்நிய ஆதிக்கத்தை நீக்கிய காந்தி கண்ணிய மதியை ஆக்கினால் விடுதலையின் சாந்தி அந்த கண்ணிய மதி இறக்குமதி, ஏற்றுமதி புத்திமதி, அமைதி நிம்மதி, நிறைமதி இவற்றில் அந்நிய மதி வேண்டாம் நம்மிடையே சுயமாய் சிந்திக்கும் சுதந்திரம் இல்லையா? மதத்திற்குள் சாதி, இன வேறுபாடு இன, சாதியிலும் ஏழை, பணக்காரர் பாமரன், படித்தோர் வேறுபாடு அவரவர் சொந்த மதம் என்ன சாதித்தது? எதில் பிரத்தியோகம் இருக்கிறது? திறமையை பாருங்கள் அந்தந்த மதத்திற்குள்ளே வேறுபாடுகள் (சாதி, இன, அன்பு …..) மதங்களில் துவக்கம் பிரிவினையா? வேறுபட்ட மதங்கள் என்றால் பிரிவினையே! வேற்றுமையில் தேற்றுமையுடன் ஒற்றுமை. போராடுவோம். நாடு எனக்கு என்ன செய்தது என்பதா? நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதா? எல்லா மதத்தினரும் ஒரு மணி நேரமோ, ஒரு மாத காலமோ இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் பெட்ரோல் விலை, டீசல் விலை குறையனும், பணம் வீக்கம் மாறனும், ரூபாய் மதிப்பு உயரனும் என்று அரசியல் தலைவர்களை விமர்சிப்பதால் மாறுமா? இறைவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருக்கு இதில் அக்கறை இல்லையா? இறைவனாலேயே முடியவில்லை என்றால் அரசியல் தலைவர்களை குறைசொல்வதால் என்ன பயன்? நம்முடைய வாழ்வியலுக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் இல்லையா? நமக்கு பிரச்சனைகள் இருப்பது நமக்கு நல்லது என்று விட்டுவிட்டாறா? ஏமாற்றாத மனிதர் நம்மிடத்தில் யாரேனும் உண்டா? அரசியல் தலைவர்களிடம் ஒழுங்கு இல்லை, நம்மிடம் மட்டும் ஒழுங்கு இருக்கிறதா? இறைவன் நம்மை மெட்சிகொள்கிற அளவுக்கு என்ன செய்கிறோம் நமக்கு பிரச்சனைகளை இறைவன் தீர்த்து வைக்க ரூபாய் மதிப்பு உயர ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரம் என்ன? பிரார்த்தனை என்ன? இயற்கை புரட்சியின் ஊமை விழிகள் பல கட்டுப்பாடுகளின் திட்டங்களால் இதுவரை காடுகள், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவுப்படுத்தப்பட்டன இந்நிலை மாறுகிறது. கொஞ்ச, கொஞ்சமாக தேவையை கருத்தில் கொண்டு நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் வன காடுகளாக்கப்படுகின்றன. நல்ல மழைக்காகவும், நல்ல சுவாச உணவுக்காகவும் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக என்றும் நம் நலனுக்காக இந்த மாதத்தில் இரண்டு நகர்கள், ஐந்து நகரங்கள், ஒரு மாநகரம் ஆகியவைகளில் மக்கள் நெருக்க ஆக்கிரமப்பு இல்லாமல் இப்பகுதி முழுவதுமாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு காடுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் மேலும் ஒரு நகரம் நம் தேவைக்கான காகிதங்கள் தயாரிப்புக்காக மரங்கள் நடப்பட்டு காடுகள் பயன்படுத்தப்படும் என்றும் இரண்டு தேயிலை தோட்டங்கள், பல ஏக்கர் தானிய நிலங்கள் எதிர்காலத்தில் மரங்கள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டு நம் பயனுக்காக போதுமான அளவில் பயன்படுத்தப்படும் என்றும் மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற செய்திகள் நாளிதழ்களில் வருகிறதா? மனிதனும், இயற்கை வளங்களும் பயன்பட எந்த விகிதத்தில் இருக்கின்றன என்று கணக்கிட்டு நம் திட்டங்களை தீட்டி செயல்படுவோம். தேவையை கருத்தில் கொண்டு புதிதாக வேற்று கிரகங்களில் நாம் குடியேறும் வரை பெருகக்கூடாதவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்போம் உழைப்பு ஏழைகள் இனி உழைக்க வேண்டாம், இலவசமாக அத்தியாவசிய பொருள்கள் அரசால் வழங்கப்படும் என்றால் ஏழைகள் பொங்கி எழுகிறார்களா? என்னவென்று கேட்கிறீர்களா? நாங்கள் அத்தியாவசிய பொருள்களை பெற உண்மையாக அதற்கென்று உழைக்க வேண்டியதை, அரசே உழைக்குமா? வலி யாருக்கு தெரியனும்? வருமான வரி அரசுக்கு கட்டும் மக்கள், தாங்கள் அதிகமாக சம்பாதித்திருப்பார்கள் அதற்காக கடினமாய் உழைத்து களைத்திருப்பார்கள் வரியை பெற்ற அரசு இம்மக்களுக்கு ஆறுதலான திட்டங்களை தீட்டுவார்களா? உழைப்பை குறைக்கத்தான் இயந்திரங்கள் வந்து விட்டதே, இன்னும் மக்கள் முக்கியமாக அறிய வேண்டியதுதான் என்ன? பூர்வீகம் புதிய நகர்கள், நகரங்கள், மாநகரங்கள் விரிவாக்கம் தற்காலத்தில் அதிகரிக்கின்றனவே நகர்கள், நகரங்கள், மாநகரங்களால் அழிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் ஒடுக்கப்படும் மரங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மரங்களின் பூர்வீகம் அல்லது தாயகம் திரும்ப கிடைக்குமா? மரங்களுக்கான காடுகளின் எல்லைகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது, எல்லை மீறிய பயங்கரவாதம் தொடர்வதும் அப்பாவி மரங்களுக்கு படுகொலைகள் நிகழ்வதும் தொடர்கிறது. போராட்டம் முதலாளிதான் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தியிருக்கிறாரா? தொழிலாளிகள் மலிவாக கிடைக்கும்வரை முதலாளிதான் தன் விருப்பத்திற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம் முதலாளிகள் மலிவாக கிடைத்தால் தொழிலாளிதான் முதலாளியை அமர்த்திக்கொள்வார். ரூபாயின் மதிப்பு உயரவேண்டும் என்கிறோமே அதைபோல் தொழிலாளியின் மதிப்பு உயரவேண்டும் என்று போராடுகிறோமா? இதில் முதலாளியோ, தொழிலாளியோ தங்களை தற்பெருமை கொள்வதில் என்ன பெரிதாக தோன்றுகிறது? யார் பக்கம் காற்று வீசுது? சினிமா வேண்டாமா நம் எண்ணங்களை தடை செய்யமுடியுமா? உடலுக்குள் உள்ள தேவையில்லாததை அகற்றவேண்டும் அல்லது உடலுக்குள் தேவையானதை புகுத்த வேண்டும் என்ற மருத்துவர் பரிசிலித்தால் அதை செய்வதில் சம்மதிக்கும்பொழுது உடலை கிழிக்க வேண்டியிருந்தால் அதைதானே செய்ய முடியும். எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவியாக வார்த்தைகள், வரை படங்கள் இருப்பதுபோல எண்ணங்களின் உள்ளே இருக்கும் நல்லது, கெட்டது போன்ற கற்பனைகளை நம் நலனுக்கும் பயனளிக்கும் விதத்தில் காட்சிகளாக சினிமா இருக்கலாமே நெருப்பு என்றால் சுட்டாவிடும். எண்ணங்களின் உள்ளேயிருக்கும் கனவுகளை எப்படி அறிந்துக்கொள்வது? மனித உணர்வுகளுக்கு பயனளிக்கும் விதத்தில் சினிமா இருப்பதை சம்மதிக்கலாமே. களவும் கற்று மற கனவு உலக கல்வி என்று சினிமாவை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது நாம் செய்கையில் மறக்க வேண்டிய மறுப்பு தீய செயல்களை மறப்போம். (களவும் கற்று மற) உலகை உருவாக்கிய இறைவன் சினிமா உருவாக ஏன் சம்மதித்தார்? புவி வாழ்க்கையில் இரண்டு, மூன்று மரணம், இரண்டு, மூன்று உயிர்ப்பு என்றெல்லாம் நடக்கவேண்டும் என்று நாம் விரும்புவதை மட்டும் ஏன் இறைவன் தடை செய்தார். எந்த நேரத்தில், எதை அனுமதிக்கலாம் என்று நம்மை கலந்துக்கொண்டு திட்டம் தீட்டியவர் இறைவன் தானே. வெட்கம் இதில் என்ன சொல்றதில் வெட்கம் இருக்கிறது. என்னமோ செயலில் நாம் சரி செய்வது போல. இதுமாதிரி எல்லாம் நடந்து கொண்டு இறைவன் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? மேட்டூரில் பாசனத்திற்கு பயன்படும் வகையில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறதை செய்திகள் சொல்கிறது. தமிழ் நாட்டு மனிதர்களின் பத்தாயிரம் கன அடி யூரின் அவ்வவ்போது வெளியேறி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. சுகாதாரமாய் மாற்றிக்கொள்ள நம்மால் முடியாதா? என்ன வளர்ச்சி, ஒழுக்கம் இல்லாத பண்பாடு. யூரின் ஒரு பக்கம், மலம் ஒரு பக்கம், குப்பை எரிப்பு ஒருபக்கம், மண்ணை போட்டு புதைக்க முடியாதவர் நாயை சாக அடிச்சி ரோட்ல போடுறது ஒரு பக்கம். நம் மறுபக்கம் எப்படி இருக்கும்? மறுப்பதற்கு நிறைவு மனித இனபெருக்க மூலக்கூறுகளின் தகாத சேர்க்கையால் அலிகள் பிறக்க காரணமா? இந்த பாதிப்பில்லாமல் மனித இனம் உருவாக விஞ்ஞானம் என்ன கூறுகிறது? அலிகளாக பிறந்தது மட்டுமே குறை. இவர்கள் குணமோ சமூகத்திற்கு நன்மை பயக்குது என்றால் இவர்கள் இறைவனின் வாரிசுகள். ஒப்புதல் பெறாத பாலியல் தொந்தரவாளர்கள், திருடர்கள், இரக்கமில்லாதவர்கள், லஞ்ச விரும்பியோர் போன்ற குணம் கெட்டவர்களை என்ன செய்வது? தகாத குணமுள்ள மூலக்கூறுகளின் சேர்க்கையால் தீய குணங்களை பிறப்பிக்கும் இவர்களும் ஒருவகையில் அலிகளே? இந்தவகை அலிகள் சமூகத்தை சீரழிப்பவர்கள்? இந்த பாதிப்பில்லாமல் மனித குணம் உருவாக மெய்ஞானம் என்ன கூறுகிறது? நன்மையை நாம் வெல்லும் பொருட்டு தகுந்த பரிகாரம் செலுத்தி இவர்களையும் இறை அரசில் சேர்த்துக்கொள்வோ இது அல்ல வேற நம்மில் சிலர் கற்பழிக்காதவர் யார்? தனக்குரியவரை யாரேனும் கற்பழித்தால் மிக கொடுமையா? இதுவும் ஒருவகை கற்பழிப்புதான் சுத்தத்தை பலாத்காரம் பண்ணி அசுத்தமாக்குவதுதான் உள்ளத்திலும், வெளியிலும் யார் இவன் ஏதோ ஒன்றுக்கு ஏதோ ஒன்றை முடிச்சி போட்டே சொல்கிறானே என்கிறீர்களா? அதோ பாரியா இதுதான் யா கற்பழிப்பு இவன தான் முட்டிக்கு முட்டி தட்டி தூக்குல மாட்டனும் என்று நடைமுறை கற்பழிப்பை சொல்கிறோமே ஐம்பூதங்களை பலாத்காரம் பண்ணி சின்னா, பின்னாமாக்குகிறோமே இதுவும் ஒரு வகை கற்பழிப்புதானே. இது ஒன்னும் அவ்வளவு பெருசு இல்ல என்கிறதா? கற்பழித்ததையே மாற்றி மணம் பரப்பி வாழ்ந்துகாட்டினால் என்ன? நடைமுறையில் சொல்லப்படும் கற்பழிப்பை ஆதரித்தால் சுமூகமான குடும்பங்களாய் வாழும் வாழ்க்கையை மூட வேண்டியதுதான். ஆனால் இந்த வகை கற்பழிப்பை ஆதரித்தால் புவி உலகையே சீக்கிரம் மூட வேண்டியதுதான். அந்த கற்பழிப்புக்கு முட்டிக்கு, முட்டி தட்டி கடுமையாக தண்டித்து பயத்தை வரவழைத்து இக்குற்றங்களை குறைக்க பார்க்கிறோமே. நல்ல மழைக்கும், வெப்பமயமதால் இல்லாத குளிர்ச்சிக்கும், செழிப்புக்கும், சுமூகமான வாழ்க்கை பகிர்வுக்கும் கேடுவிழைவிக்கும் இந்தவகை பலாத்கார கற்பழிப்பை குறைக்க எந்தவகையில் சொல்லி திருத்துவது. அடிப்பதா? திட்டுவதா? நெருப்பால் சுடுவதா? கடுமையாய் விமர்சிப்பதா? இந்த குற்றமெல்லாம் அருவருப்பு இல்ல, ஆனா இந்த குற்றத்தை செய்தால் அருவருப்பான நோய் வரும் எங்க, உங்களையே கேட்டுபாருங்க, நல்லபடியா நடந்தா யாரேனும் சிலர் கேட்க போறாங்களா? நல்லதற்குதானே சொல்கிறார்கள். மிக, மிக தயவு செய்து நல்லதற்கான முயற்சியில் கூடி செயல்படுவோம். குறை இல்லாத மனிதர் இல்லை. குறையை சொன்னால் அதற்கு எதிர்ப்பாய் இல்லாமல் நாமும் நலம் பெறுவோமே என்று அந்த மகிழ்ச்சிக்காய் ஏங்குவோம். செயல்படுவோம். எவ்வளவு அசௌகரியங்கள், எவ்வளவு நோய்கள், எவ்வளவு அசுத்தங்கள், எவ்வளவு வறட்சி – இந்தவகை கற்பழிப்பு வேண்டாமே சுகாதாரமாய் வாழ்வது என்றால் பெரும் சுமையாய் இருக்கிறதா? பாருங்கள் ஒழுக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கை 25 வயதுவரை படிப்பு – கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர் என்பதற்கு எவ்வளுவு பேர் 50 வயதிற்கு மேல் ஓய்வு- கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர் என்பதற்கு எவ்வளுவு பேர் இயந்திரங்களால் எவ்வளவு பேர் வேலைகள் குறைக்கப்படுகின்றன. அவ்வளவு சம்பாத்தியமும் தின்ன மட்டுந்தான். 26 வயது முதல் பல பிஸ்னஸ், மேற்படிப்பு – கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர் என்பதற்கு எவ்வளுவு பேர் டிவி அடிமைகள், மது அடிமைகள், உல்லாச அடிமைகள், தீனி வளர்ச்சிகள் – கண்டிப்பாய் இயற்கை ஒழுங்கை கவனிக்காதவர் என்பதற்கு எவ்வளுவு பேர் ஒழுங்குபடுத்துவது என்றால் நேரம் கிடைக்க வில்லை, அதை சொன்னாலே கசுப்பு, கீழ்த்தரம் என்ற தவறான மதிப்பீடு. இதை ஆராய்ந்தால் நஷ்டம். ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான் போருக்கு தயாராகணும். பரிகாரத்தை வைத்துக்கொண்டுதான் அடுத்து முயற்சி, விஞ்ஞான வளர்ச்சி எல்லாம். எல்லாம் வேண்டியது தான் கொஞ்சம் சுவரையும் பாருங்கள் தொடர்ந்து சித்திரம் எழுத. வருமுன் காப்போம் சரியா? தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள். மன்னிக்கனும். நாம் யாவரும் இறைவனின் பிள்ளைகள்தான். விபச்சாரம், கற்பழிப்பு என்றெல்லாம் வினவப்பட்டதோ? நாம் எல்லாரும் நல்லவர்கள்தான். நம்மிடம் தங்கியுள்ள தீமையை விரட்டுவோம். எறும்பு நம்மை போல் சிரிக்குமா? எலி நம்மைப்போல் அழுவுமா? குதிரை நம்மைப்போல் சமைக்குமா? யானை நம்மைபோல் விமானம் ஓட்டுமா? நம்முடைய குணங்கள் இத்தகு ஜீவராசிகளிடம் இல்லை? நம்முடைய பண்புகள் இப்படி இருக்கின்றன ஆகவேதான் கண்ணுக்கு புலப்படாதா அல்லது புலப்படும் இத்தகு விபச்சாரம், கற்பழிப்பு. இவைகள் தீய இயற்கையினால் இந்த ஆளுகைக்கு உட்பட்டுவிட்டோம். இதோ நல்ல இயற்கை நம்மை அழைக்கிறது. மீண்டும் இறைன்வனின் பிள்ளைகள் ஆக? நாம் கறிக்காக ஹார்மோனை மாற்றி பயன்படுத்தும் பிராய்லர் கோழிபோல தீய இயற்கையினால் நாம் பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறோம். நல்ல இயற்கை நம்மை அழைக்கிறது. விழிப்புணர்வு அடைந்து செயல்படுவோம். நல்ல இறைவனின் பிள்ளைகளாக. நாம் கெட்டவர்கள் அல்ல. நம் குணங்களில் கெட்டவைகள் அகப்பட்டால்தான் அது தீய இயற்கையினால் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் காட்டுவாசிகள் அணு ஆயுத பயங்கரங்களின் அச்சுறுத்தங்களாக உள்ளனரா? அணு ஆயுத பயிற்சி நாம் கொடுக்காதவரை. இத்தகு காட்டுவாசிகளிடம் பிரதமரின் குழந்தையை கொடுத்து வளர்த்தால் அக்குழந்தை எவ்வகையில் வளரும். குழந்தை எதை பயின்றதோ அதை செய்கிறது. அறிவிப்பு இக்கருத்துக்கள் துர்நாற்றத்தை வெறுக்கிற வயதினருக்கு மட்டும். சீழ் வடிகிற புண்ணை கண்டு அதன் அருவருப்பை கண்டு முகம் கோணாமல் சுத்தம் செய்து குணப்படுத்தும் மருத்துவர் மட்டுமே நோயாளிக்கு உபத்திரம் செய்யாமல் உதவுகிற நட்பு உள்ளவர். நீ எதை சாப்பிடுகிற என்று கோபப்பட்டு கேட்பவர்கள் உண்டு. நம்மில் சிலர் ஒருவகையான பிறர் மலத்தை சாப்பிடுவதும், யூரினை அருந்துவதும் உண்டு. (சுவாச உணவாய்) அது அதல்ல வேற மூக்கு, சுவாச உணவை உட்கொள்கிறது. மலத்தையும், யூரினையும் சுவாச உணவாக உட்கொள்ளாதவர்கள் சிலர் உள்ளனர். இதற்கு பிரதமரும், முதலமைச்சரும் கூட விதிவிலக்காய் இருப்பார்களா? நச்சு உணவை நறுமண உணவாக மாற்றி சுவாச உணவை எடுத்துக்கொள்வோம். இதில் சிலர் இயந்திர மல, ஜலத்தையும் உட்கொள்கிறோமா? தொழிற் சாலைகளால். நல்லவர்களே தீமை என்றால் என்னவென்று ஆழ்ந்து கற்றுக்கொண்டிருப்பவர்களே வணக்கம். பல ஊடகங்கள் வழியாக அறிந்து கொண்டிருக்கிறோம். நாம் நல்லவர்கள். ஆனால் எத்தகைய நல்லவர்கள் என்று நாம் எடுக்கும் அடுத்த முயற்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். தீமை எத்தகையது என்று எடைப்போட்டு அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இமாஜினேசன் பண்ணியும் அறிந்துக்கொள்கிறோம். அதன் கொடுமையை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம். கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள். நாம் முழுமையாக தீமைக்கு வழிவிட்டு இருந்தால் அதன் வெற்றி உறுதியாகி இருக்கும். ஆனால் நாம் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் தீமை நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது. புலி பதுங்குவது பாய்வதற்குத்தான். இப்பொழுது தீமையின் கை ஓங்கி இருந்தாலும் நம்மை அது அச்சப்படுவதன் மூலம் இன்னும் நன்மைதான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் எப்படியும் நல்லவர்களாக மாற்றம் பெற்றுதான் கொண்டிருப்போம் தொடர்ந்து. நாம் இக்கட்டான சூழலால் நாம் உண்பது எல்லாம் விஷம்தான். விஷத்தை உண்டு அதை முறியடிப்பதற்கான மருந்துகளை அறிந்துக்கொண்டு தீமையை சோதித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் பலம் பெற்று தீமையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நாம் நன்மையினால் நாம் முடிசூட்டிக்கொண்டு தொடர்ந்து அரசாளப்போகிறோம். தீமைக்கும் நாம் இரக்கம் காட்டுவதுதான் நம் பலம். தீமை நம்மை எச்சரிப்பதற்க்குத்தான் இருக்கிறது. நாம் மிகவும் தீமைக்கு இரக்கம் காட்டுவதால் நாம் அதிகம் வளைந்துக்கொடுக்கப்பட்டு வேதனை அனுபவித்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த அளவிற்கு தீமைக்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நம் இரக்கத்தை அளந்துக்கொண்டிருக்கிறோம். தீமையும். நன்மையையும் balance ஆக இருக்க வேண்டும். அல்லவா? ஒவ்வொரு தீமையையும் எந்த அளவிற்கு வெற்றியாக விழுங்க வேண்டும் என்று நன்மையை ஆராய்ந்து பயன்படுத்துகிறோம். தீமையும், எந்த அளவிற்கு நன்மை இருக்கு வேண்டும் என்று எச்சரித்து வழிகளை (வலி) தந்து நமக்கு இரக்கம் பாராட்டுகின்றது. சுத்த தங்கம் வலுவுள்ள ஆபரணமாக மாறாது. தங்கமும், செப்பும் போதுமான அளவில் கலந்து வலுவுள்ள ஜொலி, ஜொலிக்கும் ஆபரணம் ஆவது போல. தீமை நன்மை balance ஆக பராமரிக்கப்பட கொசு, ஈ, புழு, கருகின மரங்கள், தீய மழை இவைகள் நமக்கு எதிரிகளா? இல்லையே? அவைகளால் நாம் நமக்கு எங்கே நன்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று வெளிப்படுத்துகிறது. நாம் நன்மையையும், தீமையும் கண்டு ஞானம் வளர்க்க எப்படி இருக்க வேண்டும் என்று சாட்சிகளாக சிலரும், எப்படி இருக்கக்கூடாது, என்ன செய்யக்கூடாது என்று சொல்ல சாட்சிகளாக சிலரும் அமைகின்றனர். எடுத்துகாட்டிகளாக விபத்து, கற்பழிப்பு, வக்கீல், போலீஸ், மருத்துவம் என்று எல்லா துறையும் தூங்காமல் செயல்பட்டு கொண்டு கட்டி காக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த தலை முறைக்கு நன்மை, தீமை பாடங்கள் வேண்டாமா? குழந்தை அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும். வக்கீலிடமும், மருத்துவரிடமும் எதையும் மறைக்கக்கூடாது. நாயே நன்றியோடு இருக்கும்பொழுது நமது இயற்கைக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும். அதற்கு செய்யப்படும் இழிவுகளை எப்படி புரிந்துக்கொள்வது? பிரதமர், முதல்வரை இழிவுப்படுத்துகின்றனரே பிரதமர், முதல்வரை விட தேவையை பொறுத்து முக்கியப்படும் இயற்கையை இழிவுப்படுத்துவது எவ்வளவு அருவருப்பானது? அன்பு எதையும் சகிக்கும். இழிவு என்பது இல்லாத குறையை, குறையாக மதிப்பிடுவதும். இருக்கிற குறையை, நிறையாக மதிப்பிடுவதும் ஆகும். எவ்வளவு தவறு இருந்தாலும் அதை சரி என்பதும். எவ்வளவு சரியாக இருந்தாலும் அது தவறு என்பதும். இழிவு எனலாமா? விரதம் இறைவனுக்கு படைத்து விட்டு நாம் விரதம் இருக்கலாமா? உயிரினும் மேலான அனைத்து வாழ்க்கை ஒழுங்கின் பராமரிப்புக்கு நமக்கு ஏன் நேரம் இல்லை. வித, விதமான அழகிய நிலப்பகுதியை மனது உட்கொள்ள வேண்டும். வித, விதமான அழகிய வீடுகளை மனது உட்கொள்ள வேண்டும். வித, விதமான உணவை உட்கொள்ள வேண்டும் வித, விதமான உடையை மனது உட்கொள்ள வேண்டும் பலவிதமான பயணங்களை மனது உட்கொள்ள வேண்டும் வித, விதமான தொலை தொடர்பு சாதனங்களை மனது உட்கொள்ள வேண்டும். இப்படி பலவிதமான துறைகள் வளர்ச்சி அடைவதால்? நமது ஆரோக்கிய சராசரி வயது குறைந்து இருக்கும் இக்காலத்தில் இவைகளை பராமரிப்பதே பெரும் பாடாக இருக்கும்பொழுது உயிரினும் மேலான அனைத்து வாழ்க்கை ஒழுங்கின் பராமரிப்புக்கு நமக்கு ஏன் நேரம் இல்லை. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள் நீர் நிலை உள்ள கடல் வேண்டும் என்று ஆசைப்பட்டு அக்கடலை பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடியுமா? கடல் போன்று அதிகரித்திருக்கும் பலவித துறைகளை மனது உட்கொள்ள வேண்டும் என்று நம் பாக்கெட்டில் அதை திணிப்பதை எப்படி தவிர்க்கலாம். ஆகவே மனது உட்கொள்வதில் விரதம் இருப்போம். நாம் அனைவரும் ஒருமனதாய் அத்தியாவசியமனதை மட்டும் பயன்படுத்த அவைகளை மட்டும் விருத்தி செய்வோம். நம் பல்வேறுப்பட்ட வளர்ச்சி எப்பொழுதாவாது பயன்படுத்துவோம். ஆனால் அதை எப்பொழுது நிர்பந்தம் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் திரும்ப பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதன் மூலாதாரத்தை பத்திரப்படுத்திக்கொள்வோம். (தலையீற்றை) இதை இறைவனுக்கு (இறைவன் சார்பாக) அர்ப்பணிக்க படைப்போம். நமக்கு அவசியமாய் வேண்டும்பொழுது விரதத்தை முடித்துக்கொண்டு மனது உட்கொள்ளட்டும். நாம் மனதார தவறு செய்யவில்லை. தவறு எங்கிருக்கு? பிடிங்க. இரண்டு வகை அரிசி, இரண்டு வகை மொபைல், இரண்டு வகை உடை மற்ற வகைகள் மாடலிங்காக என்று அருங்காட்சியமாகட்டும் விற்பனைக்கள்ளாததாய் எவ்வளவு வகைகள் கடல் போல (அகல கால் வைக்காதீங்க) நேரம் இல்லையா? ஒரே வருடத்தில் மூன்று, நான்கு (முறை) போகம் தானியங்களை விளையச் செய்கிறோமே? குறுகிய காலத்தில் காய்கறிகள், பழங்கள் விளையச் செய்கிறோமே? அதிகமாக பராமரிப்பு நேரம் ஒதுக்கப்படாமல் அதனால் அதிக நேரம் கிடைக்கிறது. கிடைக்கும் இந்த நேரமும் பற்றாக்குறை ஏற்படும் வகையில் சுக, போகங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் நன்மைக்கு பராமரிக்க நேரம் இல்லையே ஏன்? அத்தியாவசியமான உணவு பொருள்களை விளைவிக்க இப்படி சிக்கல்கள் இருந்தால் தற்போதைய மோகமான ஏட்டு சுரைக்காய் படிப்பு, விசமத்தனமான சுக, போகங்களை அனுபவிக்க நேரம் கிடைக்குமா? ஆம். அத்தியாவசியமான உணவு பொருள்களை பயன்படுத்த அதை விளைவிக்கும் நிலைக்கே நேரம் பற்றாக்குறையானால் என்ன செய்யமுடியும். விளை பொருள்களை விளைவிக்க பல வருடங்களானால் என்ன செய்வீர்கள். ஓய்வுக்கு கூட நேரம் பற்றாக்குறையாக கடுமையாக உழைத்துத்தான் உணவை உண்ண முடியும் என்றால் அதற்கு சம்மதித்துதானே காலத்தை கழிக்க வேண்டும் வாழ வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள். இங்க சோற்றுக்கே லாட்டரி அடிக்குது என்பார்களே? ஆம் அத்தகைய சூழல் இல்லையே என்று எப்பொழுதும் நிம்மதியான நன்மைக்கு உதவும் சுற்றுச்சூழல் நன்மைக்கு பராமரிக்க நம்மை ஈடுபடுத்துவோம். தட்டுப்பாடு – விலை உயர்வு நற்செயல்களின் தட்டுப்பாட்டால் நல்ல மழை, நல்ல காற்று, நல்ல உணவு கிடுகிடு விலை உயர்வு. விலை உயர்வை குறைக்க மிகச்சிலரே முயல்கின்றனர். உழுகிறவனுக்கே நிலம் சொந்தம். என்கின்றனரே இவர்கள் ஒருவகை உயர்ந்த மனிதநேய கோடீஸ்வரர்கள். சொந்தமா வீடு அமைந்தால் ஒரு கௌரவம் என்பது போல் சுற்றம் ஒழுங்கை சொந்தம் கொண்டால் சிறந்த கௌரவம். இவர்களுக்கே உலகமும் சொந்தம். இவர்களை நம்பிதான் எவருமே. தப்பில்லை நாம் யாரை தவறா சொல்வது? சாப்பிடும் நீர், உணவு விஷத்தன்மை. சுவாசிக்கும் காற்று விஷத்தன்மை, அனுபவிக்கும் உறைவிடம், உடை விஷத்தன்மை, விஷமத்தனமானவர்களின் வழிக்காட்டல். துறு, துறு னு இருக்கும் குழந்தையை சும்மா இருக்கச்சொன்னாள் இருக்குமா? நம்மை தவறுகளில் துறு, துறு னு இருக்கும் நிலைக்கு கொண்டு செல்வது எது? பலவிதமான குறைவுகளால் நாம் குறு, குறுக வைக்கும் தவறுகளை செய்கிறோமா? மது மது நாட்டுக்கும், வீட்டிற்க்கும் கேடு என்று அரசு அறிவிக்கிறதே நாட்டிற்கு கேடாய் இருந்தால், அரசு கேடு என்று அறிந்தே மது பானங்களை தயாரிக்கிறதா? அவற்றை விற்பனை செய்கிறதா? என்ன கன்ட்ரோல் இல்லாத அரசாங்கம்? மதுவை அரசு முதலில் நிறுத்த வேண்டுமா? குடிமக்கள் அருந்துவதை நிறுத்த வேண்டுமா? மதுவினால் யார் யாருக்கோ பயன் இருக்கிறது அதை சொல்லுங்களேன் மதுவினால் நாட்டிற்கு வருமானம் என்றும் அந்த வருமானம்தான் பெரிதாக தோன்றுவதென்றால் நாட்டிற்கு கேடு என்பதை எப்படி வினவுவது. இந்த மதுவினால் மருத்துவத்துறை வருமானத்திற்கும் கேடு இல்லையா? மது உற்பத்திற்கும், விற்பனைக்கும் ஆகும் வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளருக்கும் கேடு இல்லையா? மது கேடு என்று சொல்லி எப்படி ஊர்ஜிதமானது? விலைமதிப்பு மிக்க மனித பிறப்பு எப்படி விளையாடப்படுகிறது? கவலை ஏன்? நல்லது என்று சொல்கிறதில் எவ்வளவு கெட்டது இருக்கிறது என்று ஆராய்வோம். கெட்டது என்று சொல்கிறதில் எவ்வளவு நல்லது இருக்கிறது என்று ஆராய்வோம். சமயத்திற்கு தகுந்தால் போல் பயன்படுத்துவோம். துன்பத்தை ஆராயாமல் விட்டால் திடீர் என்று துன்பம் தாக்கும்பொழுது நாம் நிலை குலைந்து விடுவோம். இன்பத்தை ஆராயாமல் விட்டால் திடீர் என்று இன்பம் வரும்பொழுது நாம் எவ்வளவு தூரம் இன்பத்தை தவறவிட்டு இருக்கிறோம் என்று சமாளிக்க தெரியவில்லையே என்று புலப்படும். காலத்தை பிரோஜனப்படுத்துவோம். வேற்று கிரகம் கொடுக்கப்பட்ட பூமியை சிதைத்து வருகிறோம். இப்புவி வாழ்வில் ஒழுங்கான வரவு, செலவு இல்லை. வேற்று கிரகத்தில் குடியேறுவது என்றால் அதையும் கெடுக்கவா? இப்புவி வாழ்வில் வாழவேண்டிய முறையை முதலில் தேர்ச்சி பெறுவோம். வைகுண்டம், பரலோகம், விண்ணுலகம் இவைகளுக்கு செல்ல நுழைவு தேர்வு உண்டா? நமக்கு பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? தகுதி தேர்வு உண்டா? பெரிசுப்படுத்தாதீங்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் என்ன நியதியை சொல்கிறார். இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையதாகிறது. அப்படியென்றால் ராம ஜென்மபூமி, கிருஸ்துவ ஜென்மபூமி, இஸ்லாமிய ஜென்மபூமி, ராமர் பாலம் இவைகள் ஒருகாலத்தில் இருந்தது இப்பொழுது வேறு நிலையடையாதா? இதற்கு ஏன் வழக்கு? எதை கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு இதற்கு வழக்கு என்றால் ஆம் இதற்கும் வழக்கு உண்டா? தற்போதைய சட்டப்படி ஸ்ரீ ராமரின் தந்தை தசரதனுக்கு ஒருமனைவிதானே இருக்கவேண்டும். அப்படியில்லையே என்று அக்கால தசரதனுக்கு தற்பொழுது வழக்கு தொடரமுடியுமா? (விவாகரத்து பெறாமல் பல மனைவி) ஏன் இப்பொழுது ஜென்மபூமி வழக்கு? இந்தியா, சீனா,பாகிஸ்தான் எல்லை பிரச்சனை? ஒருகாலத்திற்கு முன்பு இந்துமதம் இல்லை, கிறிஸ்தவமதம் இல்லை, இஸ்லாமிய மதம் இல்லை, ஜப்பானீஸ், சைனீஸ் என்று இவர்களுக்கு யார் பூமியின் எல்லையை பிரித்துகொடுத்தனர். பூமியின் எல்லைகளை ஆதிபெற்றோரின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டால் என்ன? (நாம் யார்) ஆதி பெற்றோரின் ஜென்மபூமி என்று? அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை எல்லைபிரச்சனை. ஏன் உலகப்போரால் அப்பொழுது பழிவாங்குதல் இப்பொழுதுவரை பிரச்சனை உண்டா? இறந்தவர்கள் வாதாடுகிறார்களா? எல்லை பிரச்சனயை போல நாம் இத்தகைய நியதி என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரணுமா? பெரும்தீனி, போஜன பிரியன் பாரதி காலத்தில் 30 கோடி இந்தியர். இன்று 100 கோடி இந்தியர். பிரச்சனை என்னவென்றால் நம் ஆதிக்க வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் கருப்புக்கொடி காட்டுகிறது. தற்காலத்தை ஒப்பிடும்பொழுது பாரதி காலத்தில் மக்களும் குறைவு, எண்ணங்களை உட்கொண்டதும் குறைவு. தற்காலத்தில் போஜன பிரியனாய் உட்கொள்ளும் பெரும் தீனியை பார்ப்போமா? விதவிதமான அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், கடலை, பட்டாணி, எள்ளுருண்டை, உளுந்து, புளி, தக்காளி, கத்திரிக்காய், முட்டை கோசு, பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், பழங்கள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற பல உணவிற்கான எண்ணங்களை உட்கொள்கிறோம். விதவிதமான செருப்பு, வாட்ச், மோதிரம், செயின், கொலுசு போன்ற ஆபரணங்கள், சட்டை, பேன்ட், சுடிதார், பட்டுபுடவை, வித, விதமான உள்ளாடைகள், குடை போன்ற வெளி தோற்ற ஆசை எண்ணங்களை உட்கொள்கிறோம். முக பவுடர், குளியல் சோப்பு, துணி சோப்பு, சர்ப், பினாயில், துடைப்பம், மாப் போன்ற தேவை எண்ணங்களை உட்கொள்கிறோம். சமையல் பாத்திரங்கள், குக்கர், ஸ்டவ், அயன் பாக்ஸ், பேன், மிக்சி, கிரைண்டர், வாசிங் மிசின், ஏசி, பாய், தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, பிரிட்ஜ், டைல்ஸ் வீடு, மொசைக் வீடு, கூரை வீடு, ஊட்டு வீடு, மின் விளக்கு, லைட் சார்ஜெர், ரேடியோ, டிவி, மொபைல், கார், சைக்கிள், பைக்கு, கிரிக்கெட், டென்னிஸ், வாலி பால், பாஸ்கட் பால், பலவித விளையாட்டு பொருள்கள், ஸ்கூல், காலேஜ், ஸ்டேடியம், மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன்கள், கோர்ட், பலவித புத்தகங்கள், பாடல்கள், ஆடல்கள், பேருந்துகள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், பலவித ரயில்கள், ஆம்புலன்ஸ், ஜெராக்ஸ், லேசர்கள், இரத்த டெஸ்ட்கள், பலவித உடல் டெஸ்டுகள், பலவித மருந்து பொருள்கள், கப்பல்கள், பலவித மரச்சாமான்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஐந்து அடுக்கு, மூன்றடுக்கு இருப்பிடங்கள், பலவித கெமிகல்கள், போர்செட்டுகள், வாட்டர் பாட்டில்கள், கூல் ட்ரிங்ஸ்கள், இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்கள், நிலக்கரி, அனல், அணு மின் நிலையங்கள், கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், கம்ப்யூட்டர், லேப்டாப், பயிர் உரங்கள், பூச்சி மருந்துகள், கொசு ஒழிப்பான்கள், பெட்ரோல், டீசல், ஐஸ்க்ரீம்கள், ஹோட்டல்கள், ஜிம் போன்ற தேவையின் எண்ணங்களை உட்கொள்கிறோம். இவ்வளவு தேவையின் எண்ணங்களை உட்கொள்வதால் நாம் பெருந்தீனியான போஜனபிரியன் தானே. இவைகள் எல்லாம் ஒரு வளர்ச்சிதான். அக்காலத்தில் மக்களும் குறைவு. இது போன்ற எண்ணங்களை உட்கொண்டதும் குறைவு. அப்போதைய கை, கால் கொண்ட மனிதன் தான் இப்பொழுது உள்ள மனிதனும். அக்கால மனிதன் சம்பாத்தியத்திற்கு எவ்வளவு குறைவான எண்ணங்களை உட்கொண்டான். இப்பொழுது உள்ள குறைந்த பலம் கொண்ட மனிதன் சம்பாத்தியத்திற்கு எவ்வளவு எண்ணங்களை உட்கொள்கிறோம். இப்பொழுது எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறையாய் இருக்கிறது மற்றவர்களிடம் சந்தோசமாய் பேச நேரமில்லை. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த நேரமில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, நம் பெருந்தீனியை பாருங்கள். நாம் பெருந்தீனியாய் இருப்பதை சுற்றுச்சூழல் நமக்கு கருப்புக்கொடி காட்டுவதை பார்த்தால் அறிந்து கொள்ளலாமே. வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் நம் வளர்ச்சி நிதானமாய் இருக்க வேண்டும். ஒழுங்குபடுத்தும் வேலையையும் செய்யவேண்டும். அடுப்பில் வைக்கப்பட்ட பதார்த்தத்தின் கொதிப்பை நிறுத்த எரிகிறதை இழுத்தால் கொதிகிறது நிற்கும் என்பார்கள். நாம் எந்தளவிற்கு விவேகமாய் செயல்பட்டு இழப்புகளை குறைத்து மகிழ்ச்சி பெறுவோம். காக்கை, குருவி வாழ்க்கையை பாருங்கள். நாம் பயத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவது ஏன்? குடும்பக்கட்டுப்பாடு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற முறையில் இருப்பது குடும்பக்கட்டுப்பாடு என்று அரசு அறிவுறுத்தி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அனைவருக்கும் போதிய அத்தியாவசிய வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் குடும்பக்கட்டுப்பாடு என்று சொல்லலாமா? ஆனால் ஒருபெற்றோருக்கு இரண்டு மகன்கள். அவர்களுக்கு ஒரு மகனின் அத்தியாவசிய தேவையை சமாளிப்பதற்குத்தான் வசதி உள்ளது. இவ்வசதியை நெருக்கடியாய் இரண்டு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலை, ஒருவகையான, பிள்ளைக்கான குடும்பக்கட்டுபாடு அல்ல, வசதி தேவைக்கான குடும்பக் கட்டுப்பாடு. இன்னொருபெற்றோருக்கு, குழந்தை வாரிசு இல்லை. ஆனால் இவர்களுக்கு பத்து பேரின் அத்தியாவசிய தேவையை, பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு வசதி. இந்த நிலை, ஒருவகையான வசதிக்கான, குடும்பக்கட்டுப்பாடு அல்ல. மக்கள் நெருக்கடியை குறைக்கும் குடும்ப கட்டுப்பாடு. இந்த இரு பெற்றோரும் எப்படி நன்மையை பகிர்ந்து கொள்ளலாம். முதல் நிலை, வசதி குறைவான மகன்களை கொண்ட குடும்பம், நல்ல பொறாமை (இரக்கம்) கொண்டு, பிள்ளை இல்லாத குடும்பத்தினருக்கு, தன் மகன்கள் அவர்களுக்கு, மகனைப்போல் இருந்து அன்பு, பாசம் காட்டலாம். இரண்டாம் நிலை, வசதி வைத்துகொண்டு பிள்ளை இல்லாத குடும்பம், நல்ல பொறாமை கொண்டு (இரக்கம்), வசதியில் குறைவான, மகன்களை கொண்ட குடும்பத்தினருக்கு, தன் வசதியை கொடுத்து நன்மை பாராட்டலாம் கடை தேங்காய் கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது என்று சொல்லப்படுவதை ஆராய்வோமா. கடையில காசு கொடுத்து தேங்காய் வாங்காமல் பிள்ளையாருக்கு கடையில் இனமாக வந்த தேங்காயை வாங்கி உடைப்பது பெரிய விசயமா? இதனால் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியதில் நம்முடைய மதிப்புமிக்க பங்கு என்ன? எல்லாமே கடவுளுடையது. இதில் கடவுளுடயதை எடுத்து அவருக்கே ஜோடனை பண்ணுவதால் நம்முடைய மதிப்பு மிக்க பங்கு என்ன? நம் காசை தேங்காய்க்காக கடையில் கொடுத்து, எடுத்து வலி உள்ள பிள்ளையாருக்கு உடைக்கலாமே. பிள்ளையாரை வேண்டி நிற்போருக்கான வலி, பிள்ளையாருக்கு ஏற்படும் வலி. ஆகவே இவர்களுக்கு கொடுத்து உதவுவது பிள்ளையாரை மதிப்பது ஆகும். ஏனெனில் இவர்கள் பிள்ளையாரின் பிரதிநிதிகள். வலி நீங்கியது. கழிவை இயற்கையாகவே மக்கி பயன்பெற சூழல்கள் உள்ளன. இந்த சூழல்கள் சிரமப்பட்டு அப்படி நடப்பது. நம் பங்காகவே கழிவை மண்ணைபோட்டு மூடி இந்த வினையை சிரமமில்லாமல் செய்து பயன் பெறலாம். வினை தீர்க்கும் பிள்ளையாரின் அருளால். இயல்பாகவே நம் இறைவனின் பிள்ளைகளுக்கு இறைவன் துணை உண்டு. ஆனால் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட அறிவு, உழைப்பு, அன்பு போன்றவைகளை நாம் ஒருவரை ஒருவர் சிரமத்தை குறைத்து பகிர்ந்து கொண்டு நாம் உருவாக்கப்பட்ட பயனை பெறுவதுதான். நம்முடைய பங்கு என்ற ஒன்று வேண்டாமா. சிலையாக அல்ல. சிலையாக நிற்கும் நம்மை உயிரூட்டும் நிலைதான் இறைவன். பக்தர்களின் குறை கேட்கும் இறைவனை, சிலையாக நிறுத்தியிருக்கும் இறைவனின் பிள்ளைகளாகிய நாம் ஒருவருவருக்கொருவர் அன்பு பாராட்டுவதன் மூலம் சிலையாக நிறுத்தப்பட்ட அவரே நம் உள்ளத்தில் இறைவனாக உயிர் பெறுகிறார் வலி நாம் ஆரோக்கியமாக இல்லை என்று எப்படி தெரிந்துக்கொள்ளலாம்? வலி, தொந்தரவுகள், அசௌகரியங்கள், அருவருப்புகள் இவைகளின் மூலம் நாம் ஆரோக்கியமாக இல்லை என்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த அறிகுறிகள் நமக்கு விழிப்புணர்வை காட்டுகிறது. அடுத்தவர் வாய கட்டி, வயற்றில் அடிச்சி பிழைக்கணுமா? அரசு மது அடிமைகளை வைத்து பிழைக்கிறது? கொடுமையை பொறுத்து, பொறுத்தும், பொறுமையை இழக்கும் அளவுக்கும் இயற்கையை சீண்டி நாம் பிழைக்கணுமா? அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவமாட்டார்கள். அனுபவம் என்பதும் வலி உணர்த்தும் ஒருவகை அடிகள்தான். தீவரவாதிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்கும் அடிகள் தான். சாட்சிக்காரனிடம் தொங்குவதை விட சண்டைக்காரணிடமே சரணடையலாம். இயற்கையை நன்கு பராமரிப்பதற்காக மனிதர்களை இறைவன் வலி கொண்டு சோதித்தால் அனைவரும் இறைவனை எதிரியாக பார்க்கலாம். நாமாகவே செயற்கையாக பாதுகாப்பான முறையில் வலியை உணர்த்தி பொறுப்பை உணர்ந்து நம் சுற்றுசூழலையும், நம் சமூகத்தை பேணி காப்போம். விழிப்புணர்வுகளால். வேல், அம்பு குத்திக்கொள்வது, விரதம் இருப்பது, உண்ணாவிரதம் நோன்பு, உபவாசம், தோப்புக்கரணம், இருப்பதன் காரணம் என்ன? பள்ளி குழந்தை பருவத்தில் அடிப்பது தேவையில்லை என்றால். எப்பொழுது அடி தேவைப்படும். நல்ல வயதுக்காரர்கள் தப்பு செய்யாமலிருப்பதற்காகவாவது வேண்டாமா? பணத்தை வைத்தும், விலைவாசி உயர்வை வைத்தும் வலி உணர முடிகிறதா? வலியை கொண்டு வரும் விழிப்புணர்வை வரவேற்று விழித்தெழுவோம். பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான். பிரம்பை கையாடுகிறவன் தன் மகனை ஏற்கனவே தண்டிக்கிறான். (தவறு செய்யக்கூடாதற்காக ஏற்கனவே நல்ல முறையில் தண்டிக்கப்பட்டுவிட்டது. ) குழந்தை நன்கு நடப்பதற்கு முன் கீழே விழுவது உண்டு. சைக்கிள் நன்கு ஓட்டுவதற்கு முன் கீழே விழுவது உண்டு. இயற்கையை, மனித சமுதாயத்தை ஆரோக்கிய நல்வழிக்காக (வருமுன் காக்க) வலி உணரும் உக்திகளை வரவேற்போம் பலி ஏன்? ஏன் அக்காலத்திலிருந்து இறைவனுக்கு பலி செலுத்தப்படுகிறது? ஒரு மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கென்று சிலவற்றை இழக்கவேண்டும். இந்த இழப்பைத்தான் பலி என காணப்பட்டு இறைவனுக்கு செலுத்தப்பட்டது. இறைவனிடத்தில் நமக்கு வேண்டிய மாற்றத்திற்கு வேண்டி உகந்த பலியை செலுத்துவது நல்லது. இக்காலத்தில் செய்யக்கூடாது என்று சொல்லும் சிலவற்றை ஒருகாலத்தில் செய்வது தவறாக காணப்படாது. ஏனெனில் அக்காலம் என்னவென்றே அதை அறியாத காலமாக இருக்கலாம். ஒன்றை செய்யக்கூடாது என்று சொல்லும் ஒன்றை நன்கு அறிந்து புரிந்த பிறகுதான் எப்பொழுது அதை செய்யலாம், எப்பொழுது அதை செய்யக்கூடாது என்று தீர்மானிக்கலாம். தற்பொழுது இயற்கையை இவ்வாறு பராமரித்தால் நமக்கும் இயற்கைக்கும் நல்லது என்றால் இயற்கை பராமரிப்புக்கு இடையூராக இருக்கும் சிலருக்கு மட்டும் நன்மையாக இருப்பதை இழந்துதான் ஆகவேண்டும். ஆகவே என்ன இவர் இந்த மனிதருக்கு உதவி செய்யவில்லை. இவரால் எனக்கு எவ்வளவு நஷ்டம் என்றால் இந்த வலியை பொறுத்துக்கொண்டு மாற்றத்திற்கு இடம் கொடுத்தால் தான் அனைத்திற்கும் ஏற்படும் பெரும்பான்மையான நன்மையை அனுபவிக்கலாம். ஆகவே பெரும்பான்மையான நன்மைக்காக சிலவற்றை இழக்கும் உகந்த பலிக்கு ஒத்துழைப்போம். பலி நல்லது. வலியை எடை போடுவோம் பெரும்பான்மையான நன்மைக்கென்று வலியை குறைப்பதற்கு ஈடுபடுவோம். உதாரணத்திற்கு, வீட்டை ஒட்டி இடையுறாக வளரும் மரக்கன்றை, பிளேடால் வெட்டிவிடும் எளிதான சூழலை, மரக்கன்று மரமாக வளர்ந்து வீட்டிற்கும் நெருக்கடியாய் இருப்பதை, கடினமாய் கோடாரியால் மரத்தை வெட்டி அகற்றும் சூழல் உகந்த பலியா? (வன்முறை அளவுக்கு வேண்டாம்) முயற்சி பிடிப்பட்ட தீவரவாதியிடமிருந்து உண்மையை எப்படி வரவழைப்பது. அறிவுரைகளைச் சொல்லி, அல்லது கொஞ்சி, கெஞ்சி பேசி உண்மையை வரவழைக்க முடியுமா? பாதுகாப்பான முறையில் அடித்தும், உணவு கொடுத்தும் உண்மையை சொல்லுகிற அளவுக்கு நெருக்கடி கொடுத்து யூகமாய் உண்மையை வரவழைப்பார்கள். யூகமில்லாமல் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அதற்கு பதில் சொல்லவில்லை என்று தீவரவாதியை துன்புறுத்துவதால் பயன் என்ன? நாம் கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பதைவிட உண்மையை சொல்லிவிடுவது எளிதென்றால் தீவரவாதி உண்மையை சொல்லிவிடுவார். நாமே உலகுக்கு எவ்வளவோ பயனளிக்கலாம் ஆனால் அதற்கு நாம் அலச்சியமாக இருக்கிறோம் என்பதை மனதில் உணர்ந்தால் (நம்மையே கெஞ்சினாலும், கொஞ்சினாலும் நல்ல உணர்வு வரவில்லையென்றால்) நமக்கு நாமே பாதுகாப்பான முறையில் நெருக்கடியை கொடுத்துக் கொண்டு நம் அலச்சியத்தை வென்று நமக்கு, நாமே கொடுக்கும் நெருக்கடியை சமாளிப்பதை விட உலகுக்கு பயனானதை செய்துவிடுவது எளிது என்று அப்பயனை செய்திடலாமே அத்தகைய நெருக்கடியினால், இது திருத்தம் கொள்வோர் தம்மிடமிருந்து விரிந்து உலகின் மீது காட்டும் அன்பு. பயனானதை செய்வதைவிட நமக்கு, நாமே கொடுக்கும் நெருக்கடியை சமாளித்திடலாம் என்றால் எவ்வளவு பயனை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அப்பயனை செய்திடலாம். இது தம்மிடமிருந்து துவங்கும் அன்பு இது உலகிற்கென்று விரியவேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமா? பாடத்தில் படிக்கும் ஏட்டுச்சுரைக்காயை உணவிற்கு பயன்படுத்த முடியாது அல்லவா? அறிவுரை என்பது காதில் கேட்பதாய் மட்டும் இருந்தால் அது ஒரு ஏட்டுச்சுரைக்காய் போன்ற உயிரற்ற அறிவுரை. வலியை உணர்த்தும் வலியால் ஆன அறிவும், வலியை போக்கும் சுகமாக்கும் அறிவும் உயிர் உள்ள அறிவுரைகள். ஆகவே வலிக்கான அறிவுரைகளால் நல் வழியை அறிவோம். அரிவாளால் வெட்டி, நல்லதை, வம்பு செய்து உணர்த்துவது, சிறந்த அல்ல. அரிவாளால் வெட்டிக்கொள்ளும்பொழுது இழப்பு ஏற்படுகிறது. எனவே இதில் இறந்தது நல் அறிவு. வாழ்வது தீய அறிவு. உயிரான வலியின் அறிவினை சுட்டி, நல்லதை தெம்பு தந்து உணர்த்துவது திறமை. இதில் இறந்தது தீய அறிவு. வாழ்வது நல் அறிவு. நல்லவரும் உழைக்கிறார், தீவரவாதியும் உழைக்கிறார். இதில் யாருடைய உழைப்பு உயிரானது. உழைப்பு நல்லது என்பதற்காக உழைத்துக் கொண்டே இருக்க முடியுமா? அதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்பதற்காகத்தான் வலி ஏற்படுகிறது. இந்த வலி சிறந்ததுதானே. இந்த வலியை களைப்பு என்கிறோம். பசியும் ஒரு வலிதான். உணவை குறிப்பிட்ட அளவு உண்ண வேண்டும் என்பதற்காகவும், உணவை தொடர்ந்து ஒரு எல்லைக்கு மேல் உண்ணக்கூடாது என்பதற்காகவும் தொந்தரவு தரப்படுகிறது. இந்த தொந்தரவும் ஒருவகை வலிதான். தீமை வலியை, வெல்லும், நல்ல வலியை ஆதரிப்போம். நல்ல வலி பாதுகாப்பானது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நல்ல வலியை ஆதரிப்போம். மற்றவர்களுக்கு உதவ வேண்டுமானால். அவ்வுதவியை செய்ய நம் மனதில் வலி ஏற்பட்டு. உதவுவதன் மூலம் வலி நீங்கனும். நன்மை செய்வதற்கான மனதில் வலி ஏற்பட வழிகளை எப்படி பெறுவோம். நமக்கு நாமே திட்டம்தான். மனதை அடக்குகிறவர் நகரத்தை ஆட்சி செய்கிறவனிலும் பெரியவர். ஒரு நடிகைக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் அந்நடிகை தற்கொலை செய்து கொண்டால். இவ்வளவு ரசிகர்களால் பெரிதாக என்னப்பட்டவள் தன் மனதை அடக்கமுடியவில்லையே. மனதிற்கு நல்ல வலி கொடுத்தால் மனதை அடக்கிவிடலாம். நல்ல வலி ஆபத்திலிருந்து தப்புவிக்க ஆபத்தை உணர்த்தும். மனம் கட்டுப்படும். 5 5. சிந்தனை விபச்சாரம் வலிக்கொண்டு விழி அமைப்போம். குதிரைக்கு கடிவாளம் அமைத்து கட்டுப்படுத்தி சரியான திசையை நோக்கி ஒட்டிச்செல்வது போல மனதிற்கு கடிவாளம் போல வலி அமைத்து மனதை அடக்கி நற்பயனை செய்வோம். இரக்கம் இரக்கம் மென்மை, மிக மென்மை, என்று ஆரம்பித்து நல்ல வன்முறை இரக்கம் வரை கொண்டு சென்று நன்மையை சம்பாதிக்கலாம். சட்டத்தில், சிறு வயதினர் தவறு செய்வதற்கும், நல்ல வாலிப வயதுக்காரர் தவறு செய்வதற்கும் கொடுக்கப்படும் தண்டனை கூடுதலாகவும், குறைவாகவும் அமைந்து வித்தியாசப்படும். சிறுவயதினருக்கு இரக்கம் கூடுதலாகவும், வாலிப வயதினருக்கு இரக்கம் குறைவாகவும் இருக்கும். கூடுதலான இரக்கத்தை மென்மையான இரக்கம் எனலாம். மிகக்குறைவான இரக்கத்தை நல்ல வன்முறை இரக்கம் எனலாம். உலகில் உள்ள அனைவருக்கும் இரக்கம் தேவைப்படும். மனிதர்கள் தவறுவதும் பிறகு தம்மை சரி செய்துக்கொள்வதும் தவிர்க்கமுடியாதது. பிறருக்கு இரக்கம் காட்டவேண்டும் என்றால் அந்த இரக்கம் எந்தளவு இருக்க வேண்டும் என்று நல்லமுறையில் நிர்ணயம் செய்யவேண்டும். இரக்கம் காட்டினால் அந்த உதவியின் மதிப்பு அறியாமல் இரக்கத்தை மற்றவர் தவறாக பயன்படுத்தலாம். பெட்ரோலின் விலையை உயர்த்தினால் அதன் அருமை புரிகிறது, மதிப்பை உணருகிறோம். பெட்ரோலின் விலையை நன்கு குறைத்தால் அதன் அருமையும் புரிவதில்லை, மதிப்பையும் உணரமாட்டோம். விலையை நிர்ணயிப்பதில் தேவைக்கு அதிகமாக இரக்கம் காட்டினால் பணவீக்கம் ஏற்படும். மனிதரிடையே நடவடிக்கையின் பரிமாற்றத்திற்கு இரக்கத்தை சிரிதளவாவுது தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரக்கம், வன்முறை இரக்கமாக கூட இருக்கலாம். நம்மிடம் திறமையை வெளிக்கொணர்வதற்கு இரக்கத்தை குறைப்பதை பொருத்துதான் அமைவதற்கு வாய்ப்பு உண்டு. அப்பொழுதுதான் நாம், கடினமாய் முயன்று திறமையை காட்டலாம். நம்மிடம் உள்ள சரக்கு என்ன என்றும் அறியலாம். வரும் இழப்பை இரக்கத்தை வேறுப்படுத்துவதை பொறுத்து சமாளிக்கலாம். தேர்வு எழுதும் மாணவருக்கு எப்பொழுது இரக்கம் காட்டப்படலாம். இரக்கம் கொண்டு தேர்வை நாம் எழுதினால் மாணவரின் திறமை எப்படிபுரியும். கற்றுத்தருவதற்கு ஒரு இரக்கம். தேர்வுக்கு இரக்கம் காட்டுவதில் மல்லுக்கட்ட வேண்டுமா? இதுபோன்றுதான் அன்பு, சாந்தம், சந்தோசம், பொறுமை, நற்குணங்கள் போன்றவற்றவற்றிற்கு வன்முறை அன்பு, வன்முறை சாந்தம், வன்முறை சந்தோசம், வன்முறை பொறுமை, வன்முறை நற்குணம் என்று நல்லவனனாக்க, திறமையை கொண்டுவரும் அளவிற்கு நல்ல குணத்தில் நல்ல முறையில் வன்முறையை கலக்கலாமா? நல்ல ஆபரணத்திற்கு செப்பில் தங்கம் கலப்பதுபோல், வன்மையில் எந்த நிலையில் நல்ல குணத்தை கலந்தால் மினு, மினுப்பும் உறுதியும் (நீதியின் பிரகாசம்) இருக்கும் என்று ஞானத்திற்கு தீர்மானிப்போம். வன்முறை, வலி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து நம் பணிகளை செய்ய அலாரத்தை உபயோகப்படுத்துகிறோம். நம் தூக்கத்தின் போக்கை நிறுத்த அலாரத்தின் மூலம் தொந்தரவை நாம் ஏற்படுத்திக்கொள்கிறோம். இத்தகையதாக நம்மை தொந்தரவு செய்து நம்முடைய இலக்கையடைய எழுப்புதலாக நல்ல வன்முறை, நல்ல வலி அமையலாம். சமையலறை என்று உணராமல் சூடான பாத்திரத்தை தொடுவதும். டெஸ்ட்டர் கொண்டு அறியாமல் மின் சாதனத்தை தொடுவதும் எதை உணர்த்துகிறது. இயந்திரத்தின் வித்தியாசமான சத்தம் எதைக் குறிக்கிறது. வலியுள்ள எச்சரிப்பு சத்தம் எது? வலியுள்ள வெளிச்சத்தின் ஒளி எது? (உதாரணத்திற்கு வெல்டிங், கிரகங்களின் போது) எப்படி ஆபத்தை தவிர்க்கலாம் கடிவாளங்களை போல மென்மை, வன்முறை முடி அகற்றி மொட்டை அடிப்பதற்கு பயன்படுத்தும் கருவியும், இரும்பையே அறுப்பதற்கும் பயன்படும் கருவிகளின் வலிமை வெவ்வேறு – சிறியதிலிருந்து பெரியது வரை. முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வைரத்தால் அறு. மென்மையும் தேவைப்படும், நல்ல வன்முறையும் தேவைப்படும். மென்மையான இரக்கம், நல்ல வன்முறையான இரக்கம் (சமாதானத்தை தீர்மானித்து மறைந்து போக ஏற்பட்ட கோபம்) இடம், பொருள், ஏவலை பொறுத்து பயன்படுகிறது. மாத்திரை போதுமென்றால் மாத்திரை, ஆபரேஷன் வேண்டுமென்றால் ஆபரேஷன். சிறிய சுமை சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். பெருவெள்ளமாக சுமைகள் இருந்தால் பாரம் சிறு, சிறு சுமைகளாக பகிர்ந்து சுமந்தால் பெருவெள்ள சுமை கரைந்து விடும் அது சிறு துளியை சுமையை சுமப்பது போல எளிதாக அதாவது சிறுதுளி, சிறுதுளி சேர்ந்து பெருவெள்ளம் ஆக பெருகுவது போல பெருவெள்ளம் சிறு, சிறு துளிகளாக பிரித்தால் சிறுதுளியாக கரையும் சிறிதாக தற்பொழுது புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டு இருக்கா? இல்லையா? கோவிலுக்கு தீபம் ஏற்றுவதும், மெழுகுவர்த்தி, சூடம் ஏற்றுவதும் ஒவ்வொரு வீட்டிலும் லைட், பேன், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் வாகனங்கள் உபயோக படுத்துவதும், சமைப்பதும், குப்பையை எரிப்பதும், மரங்களை வெட்டுவதும் தொழிற்சாலைகளினாலும், மின் சாதனைகளை பயன்படுத்துவதாலும் வெப்பம் உருவாகுமா இல்லையா? முடிந்தவரை வெப்பம் உருவாக காரணமாக உள்ளவற்றை குறைத்து கொண்டால் என்ன? நான் சொல்வது தவறான கருத்தா? என்ன அப்படி என்ன உயிர் போகிற காரணமா வெப்பம் உருவாக காரணமான செயல்கள் வெப்பம் பெருவெள்ளம் போல உருவாவதை சிறு, சிறு காரணமாக வெப்பம் உருவாகும் விதத்தை தவிர்த்தால் என்ன? பிரச்சனையை சிறிதாக்க நாம் செய்வதே தவறான செயல் தீபங்களை இறைவனுக்கு ஏற்றுவதால் வெப்பம் குறையுமா? நாம் நன்றாக இறைவனுக்கு தீபம் காட்டிவிட்டோம் என்று இறைவன் மெச்சி கொண்டதால் வெப்பம் பெருகுவதால் ஏற்படும் தொந்தரவுகள் நமக்கு குறையுமா? சுமையை யார் சுமப்பது இறைவனா? நாமா? அக்காலத்தில் நெருப்பைக் கண்டரிந்தது புதிது நெருப்பின் உபயோகத்தை அறிய வேண்டிய சூழல் மற்றும் நெருப்பினால் வரும் வெப்பத்தை தாங்கக்கூடிய அளவுக்கு சூழல் அமைந்திருந்தது அதனால் இறைவனுக்கு தீபம் காட்டுவது தவறானதாக இல்லை இடம், பொருள், ஏவல் என்று எதற்கு சொன்னார்கள் இறைவனுக்கு தானியங்களை ஊறவைத்து பச்சையாக படைத்து உண்பது (முளைக்கட்டி) அல்லது மரக்கன்று நடுவது என்று நேர்த்தி கடன் செய்தால் என்ன? போதுமான வெப்பத்திற்கு மட்டும் இடம் கொடுத்து, நல்ல மழைக்கும் மற்றும் பசுமை புரட்சி செய்தால் என்ன? பசுமை பெருகும் குளிர்ந்த தீபங்களை இறைவனுக்கு சமர்பிக்கலாமே? அறிவு அடி பலகோடி செலவில் ராக்கெட் மூலம் விண்கலங்களை விண்வெளியில் அனுப்புகிறோம். அப்படி அனுப்பும்பொழுது சிலசமயங்களில் சரியாக சென்றடையாமல் தோல்வி ஏற்படுகிறது. இதனால் பலகோடி இழப்பு ஏற்படுகிறது. ஆகா ராக்கெட் செலுத்துகிறேன் என்று சொல்லி பலகோடி இழப்பு ஏற்பட்டதே இந்த பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்திருக்கலாமே என்று சொல்லி தவறு நடந்து விட்டதாக கருதலாமா? மனிதன் அறிவு, அன்பு போன்ற அனுபவத்தை தெரிந்து கொள்வதற்காக செலவு ஆவது தவறல்ல மனிதனை பக்குவப்படுத்த ஏற்பட்ட லாபமாக அடையவேண்டிய மூலதனம். புவி வெப்பமயமாதலை குறைப்பதற்கு செய்யவேண்டிய வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் அறியாமையின் காலத்தில் இருக்கும் நமக்கு வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தவறாகுமா? தீயை அறிவதற்காக தீங்கு எனப்படும் வெப்பமயமாதலுக்கு காரணாமாக இருப்பது தவறு என்று சொல்வதிற்கில்லை. ஆகவே தீபம் இறைவனுக்கு ஏற்றுவதும் தவறல்ல அது யாருக்கு அறியாமையின் காலத்தில் இருப்பவருக்கு தீபம் பற்றி அறியும் வரை. உலகத்தில் உள்ள மனிதர்கள் பலகாலங்களில் இருப்பார்கள். அது இருளான காலம், அறியாமையின் காலம், எதிர்ப்பின் காலம், கவலையின் காலம், மகிழ்ச்சியின் காலம், தோல்வியின் காலம், நம்பிக்கையின் காலம், மூட நம்பிக்கையின் காலம், வெற்றியின் காலம், அனுபவத்தின் காலம் என்று. வரலாற்றில் பலகாலங்கள் இருப்பது போல். பிறப்பதற்கு முன் இருளான காலம் ஒவ்வொரு வயதிலும் உலகத்தில் உள்ள ஒவ்வொன்றில் சிலவற்றில் பலகாலங்களை கடக்கின்றனர். குழந்தை நிர்வாணமாய் பிறக்கிறது. இது ஆதி காலத்தைப்போல் அறியாமையின் காலம். உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்பார்கள். குழந்தை நடப்பதற்கு நடைவண்டி வாங்கி கொடுப்பது போல். நன்கு நடக்கும் வளர்ந்தவருக்கு நடைவண்டி வாங்குவது நஷ்டம் ஆகுமா. குழந்தை சிறிது வளர்ச்சியடைந்ததும் நெருப்பை அறிய வேண்டிய சூழல் வருகிறது. அதற்கு அச்சூழல் ஒரு தீபாவளி. வளர்ந்த நாம் செய்ய வேண்டியதென்ன. குளிர்ச்சிதரும் தீபாவளியாக மரங்கள் வளர்ப்பது. வெப்பமயமாதலை குறைக்கும் வழிக்காண்பது. சில அத்தியாவசிய செலவுகளை சரிக்கட்டும் நோக்கில் வளர்ந்தவர்கள் நன்மையை சம்பாதிக்கவேண்டும். நாம் ராக்கெட்டும் விடனும். ஏழைகளையும் பார்க்கணும் அறிவு, அன்பு போன்றவை சிறப்படைய. அத்தியாவசிய செலவு வருமே என்று அதை ஈடுக்கட்டும் நன்மையை சம்பாதிக்கணும். பிறந்த குழந்தை கவலையின் காலத்தை அறியுமா? எத்தனை பணக்காரர் ஏழையின் துன்பக்காலத்தை அறிவார்? இசையை படைப்பதில் எத்தனை வளர்ந்தவர்கள் குழந்தைகளாக இருப்பர். அறிவு அடி (சொல்லால் அடிப்பது – பேசியே கொல்வது) இது எப்படி? மக்களை கொடுமைப்படுத்திய அசுரர்களை இறைவன் கொன்றுபோட்டார் என்று இந்து தர்மத்தில் சொல்லப்படுகிறதே. இயேசு தீயவர்களை தீமை செய்ததற்காக அடித்திருக்கிறாரா? கொன்று போட்டிருக்கிறாரா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லிருப்பவர் தீயவர்களை என்ன செய்திருப்பார். இடம், பொருள், ஏவல் எப்படி பயன்படுகிறது. இயேசு தீமை செய்கிறவர்களின் மனதை அடித்தார், அம்மனதை கொன்றுபோட்டு நன்மை செய்யும்படி மனதை உயிர் பெற செய்தார் நல் வார்த்தையின் மூலம். ஆகவே ஏசுவும் அடித்திருக்கிறார், கொன்று இருக்கிறார் தீயவர்களை. இதற்காக அவர் பயன்படுத்திய ஆயுதம் நல் வார்த்தை. நல்வார்த்தை கொண்டு அடித்தார், கொன்று போட்டார் பிரம்போ, கத்தியோ அல்ல. இயேசு தண்டித்தது மனதை அது தீய மனதை நல்மனதாகும்படி ஆசிரியர் மாணவர்களை எப்படி தண்டிப்பார்கள் என்றால் மாணவர்கள் நன்கு தேர்வு எழுதவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைப்பார்கள். மதிப்பெண்ணை குறைப்பதன் மூலம் தண்டிப்பார்கள். மனிதன் டூ இன் ஒன் மனமும், உடலும் ஒன்று சேர்ந்தவன். மனதை தண்டித்தால் உடலும் கவலைபடுகிறது. உடலை தண்டித்தால் மனதும் கவலைப்படுகிறது. இடது விழியில் தூசு விழுந்தால், வலது விழியும் சேர்ந்து கலங்கி விடுகிறது. இந்து தர்மத்தில் தீயவர்களை அடித்ததும், கொன்றதும் ஒரு நன்மைக்குத்தான். இயேசு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்றதும் நன்மைக்குத்தான். குழந்தை செய்யும் ஒரு தவறினால் குழந்தைக்கோ, நமக்கோ பெரிய இழப்பு ஏற்படும் என்று வளர்ந்தவர்கள் அறிந்தால் அத்தவறு செய்யாமல் தடுத்து நிறுத்தவேண்டும். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு புத்தி மதி சொல்லி தடுத்து நிறுத்த முடியுமா? பாதுகாப்பாய் அடித்து குழந்தையின் செயலை தடுத்து நிறுத்துவது நல்லதுதானே? குழந்தை வார்த்தையை தற்பொழுதுதான் கற்றுக்கொண்டிருக்கிறது. புத்திமதி என்கிறோமே. அவ்வார்த்தையை கூட இப்பொழுதுதான் சொல்ல முயல்கிறது. அதற்குள் அதன் அர்த்தத்தை அறியுமா? ஆகவே அவசர நடவடிக்கையாக, ஆபத்தை தவிர்க்க, குழந்தைக்கு அந்த அடி. புத்திமதியினால் குழந்தை செய்வதை தடுக்க, குழந்தை இன்னும் பக்குவப்படவில்லை. வாழ்க்கையில் பக்குவப்பட்டவர்கள், நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால் நம் மறுக்கன்னத்தையும் அவரை அறைய சொல்லி காட்டினால் ஏன், எதற்கு என்று சிந்தித்து ஒரு முடிவு எடுப்பார்கள். ஆகவே இடம், பொருள், ஏவல் அறிந்து மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் இராணுவ வீரர் ஆக இருந்து எதிரியை கொல்ல வேண்டிய சூழல் இருந்தால் கொன்று பெரும் ஆபத்தை தடுக்கவேண்டும். இறைவனும் தக்க சூழலில் அசுரர்களிடம் அப்படி நடந்து இருப்பார். நம் குழந்தை தவறு செய்தால் கொன்று விட வேண்டாம் பக்குவமாய் நல்லமுறையில் குழந்தையிடம் நடந்துகொள்வோம். அறிவு அடி மௌனம் சாதிப்பதும், சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட வழிவகுக்கலாம். ஒருவர், நம்மை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவரிடம், நம் மறுக்கன்னத்தை காட்டும்பொழுது, அறைந்த அவர், அக்கன்னத்தில் சமாதான முத்தம் கொடுக்கும் அளவுக்கு, அவர் மனதில் இடம் பிடிக்கவேண்டும். அவர், நம் உடல் அவயத்தின் கன்னத்தில் அறைந்தார், நாம் அவரின் மனதில் தோன்றிய மனதின் அவயத்தின் தவறான எண்ணத்தை அறைந்திட வேண்டும் அவர் தன் தவற்றுக்காக வருந்தி சமாதானத்தால் அன்பு பாராட்ட வேண்டும். தவறு செய்வதை தண்டித்து திருத்தும் இரு வழிகளில், தண்டனையை உடலுக்கோ அல்லது மனதிற்கோ உட்படுத்தி திருத்த (விழிப்படைய) உணர்த்துவோமே நம்மை (உடலும் + மனமும்). அப்படி பயன்படுத்தும் பொழுது எது பொருத்தமானது என்று பார்க்கவேண்டும். அலங்காரம் அலங்காரம் பண்ணிக்கொள்வதன் அர்த்தம் என்ன? சாப்பாடை சமைத்து வைத்து விட்டு அதை பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமா? சாப்பிட வேண்டாமா? தெய்வத்தின் தேரை அலங்காரம் பண்ணி கோவிலில் பூட்டிவைத்து கொண்டு இருந்தால் போதுமா? தரிசிக்க வேண்டாமா? அணிவரிசை, அணிகலன்கள் போன்ற ஏற்பாடுகள் அலங்காரத்திற்கா? அலங்காரம் பார்ப்பதற்கு மட்டும் பயன்பட்டால் அது வீண். புறத்தோற்ற அலங்காரத்தின் மூலம் மனதின் அழகை வெளிப்படுத்தி அலங்காரமான மனமாய் நம்மை பார்க்கணும். அலங்காரம் நவீனமாய் வளர்ச்சி பெறனும். அலங்கார அடையாளங்களாக திருமணம் ஆன பெண்கள் குங்கும பொட்டு, தாலி கயிறு போன்றவற்றால் காணப்படுவார்கள். விதவைகள் சிலவற்றை அணியமாட்டார்கள். பட்டை, நாமம் போடுபவர்கள், நீண்ட அங்கி அணிபவர்கள், போலீஸ்க் காரார்கள், வக்கீல்கள், மருத்துவர்கள் போன்ற நிலைகளில் மனிதர்கள் தங்களை அடையாளங்கள் காட்டிக்கொள்கிறார்கள். தங்க நகைகளின் அலங்காரம் பண்ணியிருப்பவர்கள் தனக்கோ, பிறருக்கோ பண உதவி தேவைப்பட்டால் தம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் நகையை ஈடுவைத்து உதவி செய்துகொண்டால். சாப்பாடை பார்த்ததும் மட்டும் அல்ல அதை சாப்பிட்ட திருப்தி போல் அலங்காரங்கள் பயன்பட வேண்டும். விசேசங்களை ஏற்பாடு செய்து நம்முடைய நிறை, குறைகளை அலங்காரம் செய்து கலந்துகொண்டு நம் துன்பத்தையும், இன்பத்தையும் பகிர்ந்து சுமைகளை சுகமானதாய் மாற்றிக்கொள்வோம். இரத்ததானம், கண்தானம், அன்னதானம், நிலப் பிரச்சனைகள், சட்ட பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், அத்தியாவசிய தேவைகள், பக்தி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், போன்றவைகளுக்காக தன்னுடைய பங்கை சுகமானதாய் மாற்றும் செய்கையால் அலங்காரம் பண்ணி அடையாளம் காட்டி மனதை அலங்கரிப்போம். நம் அலங்காரமான அன்பு, அறிவு, செல்வம், உழைப்பு, கல்வி, திறமை, சொத்து, துன்பம், துயரம், நோய், ஏமாற்றம், சோம்பல் போன்றவற்றை நன்மையாக சரிப்படுத்தி சிறப்பு அலங்காரத்தை பெறுவோம். வெறும் வெட்டி அலங்காரம் வேண்டாம். அலங்காரம் மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவை வித, வித மாடல்களில் வருகின்றன. அதுபோல் நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதை மையமாக வைத்து நிறை, குறைகளை அலங்காரம் செய்து வெளிப்படுத்தி கொண்டால் என்ன? ஒவ்வொரு மனிதரிடமும் சில பிளஸ் பாயின்டும் இருக்கும், மைனஸ் பாயின்டும் இருக்கும். நம் திறமைகளின் மிகை, குறைகளை நல்ல முறையில் பரிமாறிக்கொண்டு சிறப்படைய அலங்காரங்களின் மூலம் வெளிப்படுத்திக்கொள்வோம். நமக்கு நோயோ, ஏதோ பிரச்சனையோ புதிதாக சந்திக்கிறோம். அப்பிரச்சனைபோல் யாரவது நெடுங்காலமாக சந்தித்து பிரச்சனையை எதிர்கொண்டு தீர்வுக்கண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கொண்டால் பிரச்சனையை சமாளிப்பது எளிதாக இருக்குமே. அப்படியாக அடையாளங்களை அலங்காரமாக செய்து விசேசங்களில் அணிவகுக்கலாமே. நம்முடைய மிகைக்காக பெருமை மட்டும் வேண்டாம் நமக்கு குறையும் உண்டு என்பதை நினைத்துப்பார்ப்போம். குறையை கண்டு நம்மை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டாம். நம்முடைய இழிவை நம் மனித சகோதரர்கள் துடைத்து விடுவார் உயர்வு பெற. உதாரணத்திற்கு, அலங்காரம் செய்து அன்பை பரிமாறும் விசேச ஏற்பாடு செய்வதற்கு. சித்திரா பௌர்ணமி போல் அவரவருக்கு வேண்டிய ஆகாரம், மற்றும் பிறர் உதவிக்கான பணம், சமுதாயத்திற்கு நம்முடைய பங்கின் தயாரிப்புக்கான document file அதை குறிப்பாக உணர்த்தும் badge , சரிப்பண்ண வேண்டிய நம்முடைய இயலாமை மற்றும் பிற பங்களிப்பு இவைகளால் அலங்கரித்து பங்கு கொண்டு நல்ல மாற்றம் ஏற்பட்டு மகிழ்வோம். நிறை, குறைகளை பரிமாறி அமைதியும், சாந்தமும் பெறுவோம். சமையல் பக்குவம் எது நல்லது? உழைப்பு, பிரார்த்தனை, உணவு, உறக்கம், சண்டை, அன்பு, அறிவு, இரக்கம், கோபம், கோயில் திருவிழா, அன்ன தானம், சோம்பல், துஷ்டத்தனம் போன்றவைகளில் எது நல்லது? நல்லது என்று சொல்லப்படும் உழைப்போ, பிரார்த்தனையோ ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இப்பொழுதிலிருந்து ஆரம்பித்து சாப்பிடாமல், தூங்காமல், ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து 40 நாட்கள் அல்லது இப்பிறவி முழுவதும் உழைத்து கொண்டோ அல்லது பிரார்த்தனை செய்துக்கொண்டோ இருந்தால் நல்லதா? அதுதான் உழைப்போ, பிரார்த்தனையோ நல்லது என்று சொல்லப்பட்டு விட்டதே? அல்லது இப்பொழுதிலிருந்து ஆரம்பித்து சாப்பிட்டுக்கொண்டே அல்லது தூங்கிக் கொண்டே அல்லது ஓய்வு எடுத்துக்கொண்டே தொடர்ந்து 40 நாட்கள் அல்லது இப்பிறவி முழுவதும் உழைக்காமலோ,பிரார்த்தனை செய்யாமலோ இருந்தால் நல்லதா? அதுதான் சாப்பிடுவதும், தூங்குவதும், ஓய்வு எடுப்பதும் நல்லது என்று சொல்லப்பட்டு விட்டதே? அல்லது ஒரு பாட்டில் முழுவதும் விஷம் குடித்தால் தீயது என்றால் ஒரு துளி கொடுத்து அதை குடிப்பது மட்டும் மருந்து என்று சொல்லப்படுவது ஏன்? எருவு எப்படி உருவாகிறது? தீயது என்று சொல்லப்படும் கழிவிலிருந்து தானே? ஆகவே ஒவ்வொரு ஆற்றலும் எந்த நிலை வரை நல்லதாகவும், கெட்டதாகவும் அமைகிறது. இதில் நல்லது, தீயது என்று வரையறுக்கப்படும் உள்ள சிக்கலை ஆராய்ந்து பக்குவப்பட்டு நாம் செயல்பட நம் அறிவு, ஆற்றலை ஞானத்திற்கென்று பயன்ப்படுத்துவோம். 2 பேருக்கோ, மூன்று பேருக்கோ, அல்லது 1000 பேருக்கோ சமைக்கும்பொழுது எப்படி உணவின் அளவையும் மற்றும் உணவில் உப்பு, புளிப்பு, காரம் போன்றவை சேர்த்துக் கொள்கிறோமோ அதைபோல் உலக நடவடிக்கைகளை அறிந்து நன்மை தீமையை சமாளிக்க பக்குவப்படுவோம். தற்பொழுதைய சமயத்தில் மனிதர்களுக்கு உதவுவது நல்லதா? உதவினால் கெடுதல். மனிதர்களுக்கு உதவினால், மனிதர்களுக்கு மட்டும் நல்லது ஏற்படுவதால், மனிதர்களின் ஆதிக்கம் பெருகும். அந்த ஆதிக்கம் பாதுகாப்பு இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தல் ஆகும். தற்பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே. அப்படியானால் மனிதர்களுக்கு உதவ வேண்டாமா? தற்போதைய சூழலில் மனிதர்களுக்கு உதவ வேண்டுமானால் பெரிய அளவில் இயற்கை மற்றும் உயிரின சமூக சுற்றுச்சூழல் நன்மைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மும்முரமாக அதற்கான சீரமைப்பை ஏற்படுத்தினால் மனிதர்கள் பாதுக்காப்போடு தங்களை நிலைநிறுத்திக்கொள்ளலாம். அப்படியானால் மட்டும் மனிதர்களுக்கு உதவலாம். சகிப்பு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மகன், மகள், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றவர்கள் நம் சொந்த இரத்த உறவினர். இவர்கள் உடல் அளவில் சொந்த இரத்த உறவினர். இவர்களிடம் நாம் நம்பிக்கை வைத்து,வேண்டுமானால் சகித்துக்கொண்டு, உதவி செய்து கொள்கிறோம், இரத்த உறவு அல்லாத மற்றவர்களை காட்டிலும் நம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு நன்மை செய்கிறோம். ஒருவருக்கொருவர் துன்பம் வரும்பொழுது தாங்கிக்கொண்டு ஆறுதலாய் உறவு கொள்கிறோம். உலகமே நல்ல அறிவாள் உறவாடினால் என்ன? அறிவு என்ற குடும்பத்தில் ஒருவரைஒருவர் புரிந்துக்கொண்டு நல்ல அறிவாள் உறவாடி அன்பு செய்தால் என்ன? அறிவு என்பது உலகம் என்ற குடும்பத்திற்கு சொந்தமானது. நாம் பிறக்கும்பொழுது நிர்வாணியாய் பிறக்கிறோம். பகுத்தறிவு தந்தை என்கிறோமே, தேசத்தந்தை என்கிறோமே, தாய் தேசம் என்கிறோமே அதுபோல் நாம் அறிவிலே உறவாடும்போழுது, அந்த அறிவு உறவினால் உலகில் உள்ளவர்களும் நமக்கு அறிவின்பால் அண்ணனாகவும், தம்பியாகவும், சகோதரியாகவும், தாய், தந்தையாராகவும் இருக்கும் இந்த அறிவின் உறவை கவனத்தில் கொண்டு ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டாமல், எதையும் சகித்துக்கொண்டு அன்பு பாராட்டுவோம். கடையில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அது ஊதாரியாய் இருந்தாலும், சோம்பேறியாய் இருந்தாலும், உழைப்பவனாக இருந்தாலும் வரி செலுத்துகிறோம். அந்த வரியை எல்லாருடைய நன்மைக்காகவும் திட்டமிட்டு செலவிடுவோம் நல்ல அறிவினால் அதற்காக அதிக அக்கறை உரிமை எடுத்துக்கொள்வோம். பிச்சை போடும்பொழுது கூட, அவர் எத்தகைய பிச்சைக்காரர் என்று பார்த்து, பார்த்து ஏதோ பேருக்கு பிசகி, பிசகி பிச்சை போடுகிறோமே. கடையில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மொத்தமாக பார்த்தால் எவ்வளவோ வரி செலுத்துகிறோமே அந்த பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வேண்டாமா? எங்கே நம் அக்கறையான உரிமை. எத்தகைய கணக்கு பார்க்கிறோம். சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அரசாள்வோம் வரியை நல்ல முறையில் சிறக்கச் செய்வோம். தேர்வு யார் பிச்சைக்காரர் என்று அங்கீகரித்து தேர்வு செய்து உதவி செய்வதில் கவனம் செலுத்துகிற நாம் நாட்டை ஆள்பவர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறோமா? நம்முடைய பணத்தை இருவரிடமும் (பிச்சைக்காரர் மற்றும் நாட்டை ஆள்பவர் ) கொடுக்கிறோமே யாரிடம், போனா போயிட்டு போகட்டும் என்று விடுவது – நாம் இழிந்தவர் அல்ல என்ற நம் திறமை எங்கே அலங்காரம் ஏன் உள்ளுக்குள்ளே புழுங்கி தவிக்கிறீர்கள், கவலையை விடுங்கள் வாயுள்ள புள்ள பொளச்சிக்கும் (வாயை விரிவாய் திற), அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். தன்னுடைய பிரச்சனைகளுக்கு பிறரால் தீர்வு உண்டானால், அதை அவர்களுக்கு, தெளிவாய் வெளிப்படுத்தி தீர்வுக் காண ஒப்பந்தம் ஆனால், தீர்வுக்கான வெற்றி நிச்சயம். தெளிவாய் வெளிப்படுத்தும் இத்தகைய அலங்காரம் தேவை. பசிக்கிற குழந்தைக்கு அலங்காரம் அதன் அழுகை. மணப்பெண்ணை வெளி உலகம், பார்த்த உடனே அறிந்துகொள்ள, மணப்பெண்ணுக்கு வெளி அலங்காரமும். மாப்பிள்ளை, மணபெண்ணின், உள்ளத்தை பார்த்த உடனே அறிந்துகொள்ள, மணபெண்ணின் செயலின் அலங்காரமும் தேவை. வாயை விரிவாய் திற, நன்மையினால் நிரப்புவேன் என்பார்கள். வாயை விரிவாய் திறந்தவுடன் வாயில் விறகுக்கட்டை வைப்பதற்கல்ல தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட, மற்றவர், தெளி-வாய் (விரிவாய்) அறியும்படியான செயலை திறக்கும் அலங்காரம் நமக்கு தேவை. பேச்சாற்றல் கூட ஒரு நல்ல அலங்கரிப்புக்குள்ள உதாரணம். ஊமை எதை வெளிபடுத்துகிறாரோ அதைதான் அவர் அலங்கரிக்கிறார். தங்கள் பிரச்சனையை மற்றவரிடம் வெளிபடுத்தாமல் இருந்தால், யார் அறிவார்? இத்தகைய சூழலில் தனக்கு யாரும் உதவவில்லை என்றால் அது அர்த்தமில்லாதது. நல்ல வியாபாரத்தை எங்கே விரிப்பது ஆள் இல்லாத ரகசிய அறையிலா? எதை வெளிப்படுத்த வேண்டுமோ? அதை வெளிப்படுத்த தயங்க வேண்டாம். உதவி நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், சொல்லும் வார்த்தை என்ன வென்றால், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான். நம்முடைய சொந்த வேலையை சமாளிப்பதற்கு, தானே செய்ய முடியாமல் இருப்பதால் சம்பளத்திற்கு ஆள் அமர்த்திக்கொள்கிறோம். நம் நிலைமையே இப்படி இருக்கும்பொழுது அடுத்தவருக்கு தான்தான் உதவி செய்ய வேண்டும் என்றால் அது முடிகிற காரியமா? நம்மை விட அடுத்தவரை அதிகமாக நேசிப்பவர்கள் தன் தேவையை குறைத்துக்கொண்டு அடுத்தவருக்கு உதவுவர். உதாரணத்திற்கு தன் தாயோ, தந்தையோ, மனைவியோ, மகனோ, மகளோ என்றால் தன் வலியை பொறுத்துக்கொண்டு உதவுவார்கள். தான் மற்றவருக்கு உதவப்போகிறேன் என்பதற்காக மற்றவரைவிட 4 கை, 4 கால் என்று உதவி செய்யும்படி அதிகமாக தன்னுடன் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது மற்றவருக்கு உதவக்கூடாது என்று 1 கை, 1 காலாக அகற்றப்பட்டு மற்றவர் கோரும் உதவியை புறக்கணிக்கும்படியாக அமைந்த்துள்ளதா? இன்றோடு உலகம் முடியபோகிறது, இனி எந்த எதிர்காலத்திற்காகவும் எதையும் நாம் சேர்த்து வைக்க வேண்டாம், என்றால், மிகுதியாக உள்ள, தன்னுடைய அனைத்து ஆற்றலையும், இன்று பொழுது தொடங்கிய நேரத்திலிருந்து, குறைவுபட்டு இருக்கும் மற்றவருக்கு கொடுப்பதில் எந்த கெடுபிடியும் தேவையாக கருதமாட்டோமே. ஆகவே மற்றவருக்கு கொடுப்பது அல்லது மற்றவரிடமிருந்து வாங்குவது என்றால் ஏதோ சிக்கல் உள்ளதுதானே. இந்த சிக்கல் தான் எதிரி, ஆக மொத்தத்தில் மனிதர்கள் எல்லாருமே நல்லவர்கள்தான் சிக்கலை அவிழ்க்கும்போழுது தெரியுமே. அறிவையும், ஞானத்தையும் கூப்பிட்டு வரவழைப்போம் இதற்கு. ஆக, நாம் பிறந்ததற்கு ஏதோ நோக்கம் இருக்கோ? இதையும் பாருங்கள் ஒவ்வொரு பொழுதும் சிலர் பிறப்பார்கள், சிலர் இறப்பார்கள், இதுபோன்ற சமாச்சாரம் உலகில் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்வரைக்கும் தன்னை கவனிக்க வேண்டியிருக்கிறது. தன்னை கவனிக்கவே அலுப்புப்படுகிறோம். இந்த நிலையில் எதையும் தனக்கென்று எதிர்பாராமல், மற்றவருக்கு உதவவேண்டும் என்றால் முடிகிற காரியமா? தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தால் ஒருவேளை அப்படி உதவலாம், அது தன் குடும்பத்தினருக்கென்று சிலர் செய்வதுபோல சரி, இதையும் பாருங்கள். தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தால் நல்லதா? அப்படி நல்லது என்று கருதி, உலகத்தில் உள்ள அனைவருமே தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யமுடியுமா? நீங்க இப்பொழுது தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யனும் என்று போட்டியை ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மற்றவர் என்று குறிப்பிடும் நபரும், தன்னை விட உங்களை அதிகமாக அன்பு செய்யனும் என்று போட்டிப்போட்டால் என்ன ஆகும்? யாரேனும் ஒருவர் தோல்வியுற்றால்தான், மற்றொருவர், தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்தார் என்பது செயல்படும். இல்லையென்றால் ஒரு முடிவும் தெரியாமல் இருவரும் போட்டி போடவேண்டியதுதான். தோல்வியுற்றவருக்கு தண்டனை, பாவம், நரகம் இவைகள் சொந்தம் என்று எப்படி கருதமுடியும்? தன்னைவிட மற்றவரை அதிகமாக அன்பு செய்யவேண்டும் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது. வலியை அதிகமாக சுமப்பவர்தான், மற்றவரைவிட அவர் அதிகமாக அன்பு செய்தார் என்பதா? அல்லது வலியை குறைவாக சுமப்பவர்தான் மற்றவரைவிட அவர் அதிகமாக அன்பு செய்தார் என்பதா? வலியை அதிகமாக சுமப்பது ஒரு நல்ல திறமை என்று சில வேளைகளில் கருத முடிகிறது? வலியை குறைவாக சுமப்பது ஒரு நல்ல திறமை என்று சில வேளைகளில் கருத முடிகிறது? வெயிட் சாம்பியனுக்கு பளு சுமையை அதிகமாக சுமப்பது வெற்றி என்றால் அறிவினால் இயந்திரத்தின் மூலம் வேலை சுமையை குறைத்து அதிக உற்பத்தி என்ற வெற்றியா? தாங்கும் வயதில் ஏதேனும் அடிபட்டால் சரியாவது எளிது. வயோதிக வயதில் ஏதேனும் அடிபட்டால் சரியாவது கடினம். குழந்தைக்கும், வயோதியருக்கும் உள்ள பளு எப்படியிருந்தால் நல்லது. வாலிபருக்கு உள்ள பளு எப்படியிருந்தால் நல்லது. வாலிபனே, நீ நினை காலத்தை. அபாயம் உலகில் உள்ள அனைவரும் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி கொடுக்கனும், மற்றவருக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடாது அதுதான் நல்லது என்றால் எத்தனைநாள் கையிருப்பு இருக்கும், இத்தகைய செயல் எத்தனை நாள் நீடிக்கும் ஒரு ஒரு வருஷம். உலகில் உள்ள அனைவரும் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பாராமல் மற்றவரிடமிருந்து கஷ்டமில்லாமல் உதவி பெறனும் அதுதான் நல்லது என்றால் இத்தகைய செயல் எத்தனை நாள் நீடிக்கும் ஒரு ஒரு வருஷம். உலகில் உள்ள எல்லாம் ஒருவரிடமே இருக்காது. ஆகவே உதவி கொடுப்பதாகிலும், உதவி பெறுவதாகிலும் உள்ள அபாயத்தை உணர்ந்து, செழுமையான சமுதாயத்திற்கு உதவி கொடுப்பதும், பெறுவதும் என்ற இரண்டையும் கவனித்து சம வாய்ப்பு கொடுப்போம். இந்த இரண்டு செயலும் சோம்பலாகவும் வேண்டாம், ஊதாரியாகவும் வேண்டாம். இரண்டின் சுறுசுறுப்புக்கும் உயிர் கொடுப்போம். வாலிபனே நீ நினை காலத்தை நல்ல உடல் வளர்ச்சியடைந்த வாலிப பருவம், திருமணத்திற்கும், சம்பாதிப்பதிப்பதற்கும் ஏற்றது. வாலிபம் என்பது ஒரு தகுதி என்று வைத்துக் கொள்வேமேயானால் குழந்தைக்கு வாலிபம் என்பது கற்பது வயோதிகருக்கு வாலிபம் என்பது தான் சேமித்த பொருளும், அறிவும் குழந்தையும், வயோதிகரும் உதவி பெறுவதிலும், கொடுப்பதிலும் வாலிபரிடம், சில செயலுக்கு சார்ந்திருக்கணும் அது வாலிபத்தை அடையும் வரைக்கும் அல்லது வாலிபத்திலிருந்து விடுபடும் வரைக்கும். வாலிபன் உதவி பெறுவதிலும், கொடுப்பதிலும் சில செயலுக்கு சார்ந்திருக்கணும் அது குழந்தை வளரும் வரை அல்லது முதுமை இறக்கும் வரை. வாலிபத்தில் மிகச்சிறியவனனான குழந்தையே, நீங்கள் வாலிபத்திற்கு அருகில் இருக்கிறாய். வாலிபத்தில் மிகப்பெரியவனான வயோதிகரே , நீங்கள் வாலிபத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறீர்? கொடுப்பதிலும், பெறுவதிலும் குழந்தையும், வாலிபனும், வயோதிகரும் அருகருகே சேர்ந்து அமர்ந்து உண்டு மகிழ்வோம். இந்த நடவடிக்கையை உலகில் உள்ள அனைத்து நடவடிக்கைக்கும் உடலின்பாலும், உள்ளத்தின்பாலும் குழந்தை, வாலிபன், வயோதிகம் என்ற துறைகளை ஏற்படுத்துவோம். உதவி கொடுப்பதற்கு மட்டும் ஆதரவு இருந்தால் அந்த சிந்தனைக்குத்தான் அறிவு வளரும் உதவி பெறுவதற்கு மட்டும் ஆதரவு இருந்தால் அந்த சிந்தனைக்குத்தான் அறிவு வளரும் இத்தகைய இல்லாத செயலின்பால் அந்த நிலையில் அனாதைகள் என்று ஒதுக்கபடுவர்கள் உருவாக்கப்படுவார்கள். கொடுங்கள் நாம, நல்ல நேரம் கெட்ட நேரம், பார்த்து எப்பொழுது செயலை ஆரம்பித்து செயல்படலாம் என்று தீர்மானிக்கிறோம். இறைவன் நல்ல நேரம் பார்த்து உலகத்தை தொற்றுவித்தாரா? தற்போதைய காலத்தை சிலர் நல்ல காலம் என்றும், வேறு சிலர் கொடிய காலம் என்கின்றனரே. நமக்குத்தான் இந்த கால நேரம் பார்ப்பதெல்லாமா? கடவுள் வெற்றிபெறுகிறார் அவரின் செயல் நல்லதுதான். கொடுப்பது என்ற ஒன்று இருந்தால் வாங்குவது என்ற ஒன்று இருக்கும். அதுபோல கொடுப்பது மட்டும் இருக்கலாம் வாங்குவது இல்லாமல். அல்லது வாங்குவது மட்டும் இருக்கலாம் கொடுப்பது இல்லாமல். ஒருவர் கொடுக்கிறார் என்றால் அதில் தீயது வாங்கப்பட்டால் நல்லது வாங்கப்படவில்லை. அல்லது நல்லது வாங்கப்பட்டால் தீயது வாங்கப்படவில்லை. ஆகவே கொடுப்பதில் எது வாங்குவதில்லை, எது வாங்கபடுகிறது என்று யோசனை செய்வோம். வாங்குவதில் எது கொடுக்கப்படவில்லை, எது கொடுக்கப்படுகிறது என்று யோசனை செய்வோம். ஒருவர் மருந்து கேட்கிறார் ஆனால் அவருக்கு தவறுதலாகவோ, வேண்டுமென்றோ விஷத்தை கொடுத்தால் அவர் எதை வாங்குகிறார். அவர் கேட்டது கொடுக்கப்பட்டதா? 50 கிலோ இரும்பு எடை கல்லை 5 வயது சிறுவன் தரும்படி கையேந்தி கேட்கிறார் என்றால் எடை கல்லை சிறுவன் தாங்கி கையில் வாங்கி கொள்வானா? குழந்தையின் சார்பாக ஒரு பிரதிநிதி இருந்து குழந்தைக்காக உதவலாம். ஆகவே கொடுக்கப்படுவதெல்லாம் சரியான நிலையில் வாங்கப்படுகிறதா? வாங்கப்படுவதேல்லாம் சரியாய் கொடுக்கப்பட்டதா? தீயதாய் சென்று கொண்டிருந்தால் அதை திசை திருப்பி நன்மைக்கு அழைத்து செல்ல வேண்டும். நன்மை காலாவதி அடைந்தால் நன்மை கட்டப்பட்டது புதுப்பிக்கப்படனும் உடல் கண், காது, மூக்கு, வாய், கை, கால், மூளை, நரம்பு, ரத்தம், இருதயம், நுரையீரல், முடி, நகம் போன்ற உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன, இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. உடல் உறுப்புகள் அனைத்தும் துன்பத்தை வெல்வதற்கு நல்ல முறையில் இணைந்து பணியாற்றும் பொழுது மனது மகிழ்கிறது. ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர், வாலிபர், வயோதிகர் ஆகிய அனைவரும் நம் உடல் உறுப்புகளை போன்றே உலகத்தின் பால் உடல் உறுப்புகளாய் உள்ளனர். ஆகவே உலக சரீரமான உலக உடலின் அங்கத்தினர்களாகிய நாம் துன்பத்தை வென்று நல்ல முறையில் இணைந்து பணியாற்றும்பொழுது நாம் மகிழ்வோம். குடிபோதை மகிழ்ச்சியாய் இருக்கும், அதற்கு அடிமையாய் இருந்தால் காலம் செல்ல, செல்ல உடல் உறுப்புகளின் திறன் குறைந்து விரைவில் இறப்பு ஏற்படும். ஆகவே, ஆரோக்கியமான நிம்மதி அறியாமையை சிறப்பாக வைத்து உலகம் மகிழ்வோடு இருந்தால் காலம் செல்ல, செல்ல உலக உடல் உறுப்புகளின் திறன் குறைந்து விரைவில் உலகம் நாசமாகும். ஏழை, பணக்காரர் சண்டை ஓய்ந்து சமாதானம் ஆகணும் அதற்காக எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரராய் இருக்க வேண்டும் என்று சொல்லி அரசியல்வாதிகள் திட்டம் தீட்டுவது எப்படி உள்ளது? ஆரோக்கியமான நிம்மதி ஒவ்வொருவருக்கும் அமைய தேவைப்படும் காரணங்கள் வேறுபடும். இந்த காரணங்களுக்கு பதில் தந்தால் அனைவரும் நிம்மதியாய் இருப்பார்கள். நிம்மதி என்று சொல்லிக்கொண்டு கேட்பவர்கள் ஆயிரம் கேட்பார்கள் நாம் தான் சரியான வழியை காண்பிக்க வேண்டும். வேறுபட்ட கசுப்புகள் நீங்கி நிம்மதி ஏற்பட்டால் அதுதான் சமாதானம். சமாதானம் என்றால் ஒருத்தருக்கு கிடைப்பது போன்றே மற்றவருக்கும் கிடைக்கவேண்டும் என்று மல்லுகட்டுவது ஏன்? இலவச டிவி கொடுத்தார்கள். ஒருவர் டிவி பார்த்தே தேர்வில் தோல்வியடைந்து கெட்டுபோனார், மற்றொருவர் டிவி பார்த்து வாழ்க்கை அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டார். இன்னொருத்தர் தண்ணி அடிக்க டிவியை விற்றுவிட்டார். ஒருத்தர் டிவியை ஏற்கனவே வைத்திருப்பவர். ஆகவே ஒருத்தருக்கு மட்டுமே ஆரோக்கியமான நிம்மதி கிடைத்தது. உடலுக்கு எல்லாமே கண்ணாய், கையாய் அமைந்தால் எப்படி? காது, மூக்கு, வாய், கை, கால் வேண்டாமா? உலக உடல் அங்கத்தினரில் எல்லாருமே பணக்காரராய் செயல்படுவது நல்லதா? அல்லது எல்லாருமே ஏழையாய் செயல்படுவது நல்லதா? அன்பை பரிமாற இரண்டு அங்கங்களின் செயல்பாடும் இணைய வேண்டும். தேவைக்கேட்ப ஒருவர் மூளையாக செயல்படும்பொழுது இன்னொருவர் பணியாற்றவேண்டும். மூளையாக செயல்பட்டவர் பணியாற்றினால், பணியாற்றியவர் மூளையாக செயல்படவேண்டும். ஒரே வழி அது ஆரோக்கிய நிம்மதி. உடல் நம்மில் சிலர் சொல்வது என்னவென்றால், எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்பர். மக்கள் வறுமையில் இருந்தால் தான் அதற்காக உழைப்பார்கள். எல்லாம் இந்த ஜான் வயிற்றுக்குத்தான் என்ற வயிற்று பசிக்கான உணவு தேவை அதை வறுமை தேவை என்ற அலகால் ஏழைகளுக்கு அமைந்துள்ளது. பணக்காரர்களுக்கும் வயிற்று பசி உள்ளது. ஆனால் பசிக்கேற்ற உணவிற்கான செல்வம் இருப்பில் உள்ளது. இந்த இருப்பு குறையாமல் இருக்க பணக்காரர்கள் ஏழைகளை நம்பி உள்ளனர். ஏழைகள் பணக்காரரை நம்பி உள்ளனர். அது பணக்காரரின் இருப்பிலிருந்து தம் வறுமையை போக்குவதக்கு உணவிற்கான செல்வத்தை பெற்றுக்கொள்ள உழைக்கின்றனர். ஒரு தகப்பன் குழந்தைக்கு வேண்டிய தேவைகளை எதிர்கொள்ள சம்பாதிப்பதை போலவும் அதே தகப்பன் குழந்தையாய் இருக்கும்பொழுது அவர் தகப்பன் தேவைகளை சந்தித்து கொடுத்தது போல ஏழையும், பணக்காரரும் பண பரிமாற்றத்தில் எதிர்கொள்கின்றனர். ஆகவே ஏழை அல்லது பணக்காரர் என்று நிலைகளை அகற்ற முடியாது. வாழையடி, வாழை என்ற தகப்பன், பிள்ளை என்ற நிலைகள் பண பரிமாற்றத்தில் மாறி, மாறி அமைவதை தடுக்க முடியாது. தடுத்தால் யார் உழைப்பது? நிறுவனம் என்றால் அதற்கு முதலாளி, தொழிலாளி அமைகிறதே. அரசியல் திட்டங்கள் எதை ஒழிக்கபோகின்றனர் ஏழை நிலை அல்லது பணக்காரர் நிலை அப்படியென்றால் நிறுவனம் இல்லை. மூளையின் கட்டுப்பாடும், உறுப்புகளின் பணியும் பிரிக்க முடியாது. அவரவர் இருப்பில் நிம்மதி. ஏழைகள், பணக்காரர் நிலையில் -இந்த போஸ்டிங் நிரம்பினா அந்த போஸ்டிங் அந்த போஸ்டிங் நிரம்பினா இந்த போஸ்டிங் பசிகள் பல உள்ளன அதில் அறிவில் பசி. ஆம் அறிவில் ஏழை, அறிவில் வசதியானவர். (அறிவு) மாணவர், ஆசிரியர் சுழற்சியும் தகப்பன் குழந்தை சுழற்சியும் உடல் ஆரோக்கியமும் ஒரு செல்வம்தான். பணவசதியில் ஏழையான உடல் ஆரோக்கிய செல்வம் உடைய வசதிக்காரர் ஆரோக்கியத்தை கொடுத்து பண வசதியை பெறுகின்றனர். இவர் பண வசதியில் வறுமை. பணவசதியில் பணக்காரர் ஆன நிர்வகிக்கும் வசதிக்காரர் பணத்தை கொடுத்து நிர்வாக பணிகளை பெறுகின்றனர். இவர், பணிகளில் வறுமை. பணத்தில் வசதி உடையவர். இதில் அரசியல்வாதிகள் எந்த வறுமையை ஒழிக்க போகின்றனர். ஒரு வங்கி அமைய வேண்டும் என்றால் இவ்வளவு இருப்பு அந்த வங்கி வைத்து இருக்க வேண்டும் மக்கள் பணத்தின் பாதுகாப்புக்காக. அதுபோல்தான் பணக்காரரின் வசதி இருப்பும் தேவையாக உள்ளது. ஏழைகள் என்றால் அதற்கு உடல் ஆரோக்கிய வசதி இருப்பும் இருக்க வேண்டியுள்ளது. உடல் எல்லா மதங்களும் ஏழைகளுக்கு உதவுங்கள் என்றும் நன்மை செய்யுங்கள் என்றும் ஏன் சொல்லுகின்றன. இதிலிருந்து என்ன தோன்றுகிறது உலகம் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள், தீமையும் நடக்கும் அதனால்தான் ஏழைகளுக்கு உதவுங்கள் நன்மை செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு வரைதான் ஏழைகள் இருப்பார்கள், தீமையும் நடக்கும் என்றால் எல்லா மதங்களும் 2014 ஆம் ஆண்டு வரை ஏழைகளுக்கு உதவுங்கள் நன்மை செய்யுங்கள் என்று அறிவித்திருப்பார்களே ஆகவே நிம்மதியை தேடுவோம். மனுஷன் செத்து செத்து பிழைக்க வேண்டியதாக உள்ளது என்பார்கள். நிம்மதியும் போயிட்டு, போயிட்டு வந்து, வந்துதான் இருக்கும். உலகத்தில் போராட்டாம் இருக்கத்தான் செய்யும். நம் வளர்ச்சியின் எந்த நிலையிலும் எல்லாவற்றிக்கும் தயாராகத்தான் நாம் திட்டம் தீட்டி வாழவேண்டும் நல்லதொரு போராட்டத்திற்கு. ஜோதிடம் பாருங்கள் ஆனால் ஜோதிடர் TNPSC exam , IAS examக்கான answer போல எல்லா தகவலும், கணக்கு டவுட், இங்கிலீஷ் டவுட், Landan , USA என்று அங்கிருக்கும் உங்கள் பெயர், ஊர் பெயர் நீங்கள் அறிவிக்காமல் முன் கூட்டியே சொல்வது, ஸ்கேன் பார்க்காமல் எந்த இடத்தில் உடலுக்குள் பாதிப்பு என்று உலகத்தையே கணித்து பார்த்து சொல்லும் ஜோசியர், போதகர், ஓதுபவர் என்றால் பரவாயில்லை. அப்படிப்பட்டவர், பணம் கொடுங்கள், இதெல்லாம் செய்யுங்கள் தோஷம் போகும், கஷ்டம் போகும் என்றால் செயல்படுங்கள். உடல் எல்லாவற்றிகும் பணம்தான் வேண்டும் என்று வறுமைக்கு நிதி ஒதுக்கி முறையாக செயல்படுத்தாது ஏன்? பணம் தானாக எழுந்து நடந்து உதவி செய்யுமா? பணம் சாப்பாடாகுமா? ஏழைகள் எதுவும் செய்யாமல் அவர்களை பணத்தால் பாதுகாத்து பெட்டியில் வைக்கும் பொருள் அல்ல. அவர்கள் கை, கால், அறிவு போன்றவற்றை பூட்டி வைத்துக்கொள்ள வேண்டுமா? நம்மால் பணத்தை முறைபடுத்தி நல்வழிக்கு பயணம் செய்து இலக்கை சென்றடைய வேண்டும். ஆரோக்கியம் தான் செல்வம் என்று சொல்கிறார்களே. 1. உடல் ஆரோக்கியத்திற்கும், 2. மன ஆரோக்கியத்திற்கும் வழியில்லையென்றால் அது ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட ஒருவகை வறுமையல்லவா? ஏழை, பணக்காரர் அனைவருக்கும் இரண்டு ஆரோக்கியமும் வேண்டும். இரண்டு ஆரோக்கியத்திற்கும் தேவையான மருத்துவ வசதி ஏழை, பணக்காரர்களுக்கு எளிதில் கிடைக்கும் வழி காண வேண்டும். பணக்காரர்கள் நச்சும், ரசாயானமும், கெமிக்கலும் ஆன உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் பணத்தை முதலீடு செய்கின்றனர். ஏழைகள் பணக்காரர்களின் இப்படிப்பட்ட முதலீட்டுக்கு பணி செய்கின்றனர். இது அறிவார்ந்த செயலா? மன அறிவு ஆரோக்கியமும், உடல் அறிவு ஆரோக்கியமும் இல்லாத செயல்பாட்டின் வறுமையை ஒழிக்கவேண்டும். நச்சும், ரசாயானமும், கெமிக்கலும், பிறரை கெடுத்தலும் ஆன தீமையானவைகளோடு விளையாடி அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அதை விளையாட்டோடு வைத்துகொண்டு வாழ்வின் அருமையை தீமையின் சூழ்ச்சிக்கு விற்கவேண்டாம். ஒரு ஒரு கோடி மதிப்புள்ள செக்கை ஆறு மாத குழந்தையிடம் கொடுப்பது சிறந்தது அல்ல. ஒரு கோடி மதிப்பானதை ஏழைக்கு கொடுத்தாலும் ஒரு கோடியின் சிறப்புக்கு கொடுக்காத பணக்காரர் நல்ல பணக்காரர் அல்ல. ஒரு கோடி என்றாலும் அதன் சிறப்புக்கு உழைக்காத ஏழையும் நல்ல ஏழையல்ல. ஆரோக்கியத்தால், தெருகோடியில் உள்ள சிறப்பற்றவனை சிறப்புள்ளவராக்குவோம். நிம்மதி காக்காய் உட்கார பனை பழம் விழுந்தது போல என்பார்கள். இரண்டு, மூன்று நாள் சென்றாலும் பனை பழம் எப்படி இருந்தாலும் விழத்தான் போகிறது. ஆனால் காக்காய் உட்கார்ந்ததால், பனை பழம் இயல்பாய் விழும் காலத்திற்கு இரண்டு, மூன்று நாளைக்கு முன்பாகவே விழுந்துவிடும். இறைவன் என்னோடு பேசினார், என்னோடு பேசினார் என்றால் இறைவன் நேராக தோன்றி பேசுவதாக அல்ல. மனசாட்சி சொன்னதுபடி என்கிறோமே அதைத்தான் இறைவன் பேசுகிற வழி. எதையும் ஆராயும்பொழுது தெரிந்துகொள்வது மனதில். அப்படி உணர்ந்ததை இறைவன் மனதில் நமக்கு உணர்த்தியது ஆகும். நாமும் எதையோ உணர்ந்துகொள்கிறோம் இவைகள் நடப்பது மனதில். எதற்கும் நாம் இறைவனை சார்ந்திருப்போம். இறைவனும் நம்மை சார்ந்திருக்கட்டும். எதற்கெடுத்தாலும் இறைவன் சொல்லட்டும், அவர் செய்யட்டும் என்றிந்தால் நமக்கு அறிவு, கை, கால், கண் போன்றவைகள் எதற்கு. அதை பயன்படுத்த வேண்டாமா? நமக்கும் சில சுதந்திரம் வேண்டும். ஆகவே நாம் செயல்படுவதற்கு இறைவன் நம்மை சார்ந்திருக்கட்டும். வெறும் வாய்வார்த்தை சுலோகம், மந்திரம், ஜெபம், தொழுகையால் எல்லாம் நடந்திடுமா இறைவன் செய்யட்டும் என்று. நாம் எதை, எப்பொழுது செய்தாலும் அது சரியானதா? தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதே? ஆகவே நாம் செயல்படுவதை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் இறைவன் கையில்தான் உள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தையே அறிந்து, கணித்து, திட்டுமிட்டு, கட்டுப்படுத்தும் உரிமை நம் ஒருவரிடம் இல்லை. இந்த நேரத்தில் இது நடக்க வேண்டாம் என்று இறைவன் நினைத்திருப்பார், ஆனால் நம் பிடிவாதத்தை பார்த்து சரி நடக்கட்டும் இதை வேறுவிதத்தில் ஈடுக்கட்டுவோம் என்று அனுமதித்து விட்டுவிடுவார். இவ்வாறு இறைவன் நம்மை சார்ந்திருப்பார். சில நேரத்தில் நம்மால் காரியம் கைக்கூடும் நிலையில் இருக்கும். ஆனால் கடைசியில் அது நடக்காது போய் விடும். இவ்வாறு இறைவன் நமக்கு அனுமதி கொடுத்தும், அனுமதி மறுத்தும் அனுபவங்களை தருகிறார். ஆகவே இறைவனை நாம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு கட்டுப்பாடும் வேண்டியிருக்கிறது. நாமும் இறைவனுக்கு அனுமதி கொடுத்தும், அனுமதி மறுத்தும் பிரியமாகவோ, பிரியமில்லாமலாகவோ செயல்படுகிறோம். இதைச் செய், இதைச் செய்யாதே என்றால் நாம் என்ன இயந்திரமா? ஏன், எதற்கு என்று அறிய வேண்டாமா? சுதந்திரம் வேண்டும். கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தால் தானே எப்படி சுதந்திரத்தைப் பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாட்டை அரசாளலாம். கட்டுப்பாடும் வேண்டும். எந்த நேரத்தில் எது நடக்கும் என்று நமக்கு ஓரளவுதான் யூகிக்கலாம் இறைவன் எதை திட்டமிட்டுருந்தாரோ அதுதான் நடக்கும். இறைவன் திட்டமிடலுக்கு மதிப்பு கொடுப்பதும் நாம் தான். பனை மரம் இருக்கும் வழியாய் போகிறவர் பலர். ஆனால் அந்த பனை பழம் யாருக்கு கிடைக்கவேண்டும் என்று இருக்கிறதோ அவருக்குத்தான். காக்காய் உட்கார பனை பழம் விழுந்தது போல நாம் கணிப்பது ஒன்று, இறைவன் கணிப்பது ஒன்று இருவரும் சேர்ந்ததுதான் உலகம். பனை பழம் எப்ப விழும் என்று நாம் காத்திருக்கிறோம். இப்ப விழட்டும் என்று இறைவன் அனுமதிக்கிறார். காத்திருக்காமலே பனை பழம் விழவும் செய்யும். இறைவனை தேடாதவருக்கும் கிடைக்கிறது. இறைவனை தேடுவோருக்கும் கிடைக்கிறது. ஏழை, இப்படி இருப்பது நமக்கு போதும் என்பதும் ஒரு நிம்மதிதான். ஏழை, செல்வந்தனாக வேண்டி செயல்பட்டு வெற்றி பெறுவதும் ஒரு நிம்மதி தான். செல்வந்தர், எல்லாவற்றையும் ஏழைக்கு கொடுத்து, தாம் ஏழையாய் இருப்பதை நிம்மதி என்று இருக்கலாம். ஏழையை வெறுப்பதில் நிம்மதி காட்டும் செல்வந்தரும் உண்டு. மறு மணம் கடவுள் என்ன கட் அண்ட் ரைட்டா இருக்கிறாரா? பிறந்த எந்த மனிதனும் இறக்கணும். ஒரு stage க்கு மேல போய்ட்டா கை வலிக்கும், கால் வலிக்கும், கண் வலிக்கும் இல்ல ஒடையும் அல்லது செயலிழக்கும் என்றெல்லாம் கடவுள் நிர்ணயம் பண்ணியிருப்பதை பார்த்திருக்கிறோம். இளம் வயதிலே கணவனை இழந்தாலோ, மனைவியை இழந்தாலோ, சாமியாரானாலோ, பாதர் , சிஸ்டர் ஆனாலோ ஆண்கள் ஆண்மையை இழந்துவிடுவார்களா, பெண்கள் பெண்மையை இழந்துவிடுவார்களா? விந்து உற்பத்தியாகாதா? மாதவிடாயாகாதா? பிறகு ஏன் இயல்பாக மணந்து கொள்ளாமல் இருக்கிறோம்? சரியான காரணம் என்ன? மணந்து கொள்ளாமல் மாற்று வழியை மட்டும் ஆதரிப்பது ஏன்? இப்படி அமைவதில் சரியானது, தவறானது என்று திட்டவட்டமாய் ஒன்றை அறிவிக்க முடியுமா? மாற்று வழி பெருசு? இயல்பான வழி பெருசு இல்லையா? இப்படிப்பட்ட உடன்கட்டை ஏறுதல் ஏன்? அர்த்தம் எங்கே? நீங்கள் யாரிடம் அன்பாக இருப்பீர்கள் என்று ஒருவர் கேட்டால், அதற்கு எல்லாரிடமும் என்று சொல்பவரின் பதில் நமக்கு திருப்தியடையாமல் ரொம்ப, ரொம்ப அதிகமா யாரிடம் அன்பாக இருப்பீர்கள் என்று கேட்க்கும்பொழுது சிலர் இறைவன் என்றும் சிலர் மனைவி என்றும் சிலர் கணவன் என்றும் சிலர் குழந்தை என்றும் சிலர் அம்மா என்றும் சிலர் அப்பா என்றும் சிலர் குரு என்றும் சிலர் தம்மை வெறுப்பவர் என்றும் வேறு சிலர் நண்பனை என்றும் ஒவ்வொருவரும் ஒருவரை சொல்வார்கள். இறைவனிடம் உங்களுக்கு ரொம்ப, ரொம்ப அதிகமா யாரை பிடிக்கும் என்று கேட்க பதில் எப்படிப்பட்டதாய் இருக்கும். யாரையாவது ஒருவரை மட்டும் ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்றால் மற்றவரை வேறுபடுத்தி பார்க்கிறார் என்று சொல்ல மாட்டோமா? என் மனைவி என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு நான், என்னை, இறைவனை, தாய், தந்தையரை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட மனைவியாகிய உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். என் தாய் என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு நான், என்னை, இறைவனை, மனைவியை, தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட தாயாகிய உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். என் எதிரி என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு நான், என்னை, இறைவனை, மனைவியை, தாய், தந்தையை, குழந்தை, நண்பர்கள் அனைவரையும் விட எதிரியாகிய உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். இறைவன் என்னிடம் எல்லாரையும்விட உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு நான், என்னை, மனைவியை, தாய், தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட இறைவனாகிய உங்களைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். நான் என்னிடம் எல்லாரையும்விட எனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு நான், இறைவனை, மனைவியை, தாய், தந்தையை, குழந்தை, நண்பர்கள், எதிரிகள் அனைவரையும் விட என்னைத்தான் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் என்று சொல்வேன். இப்படித்தான், என்னிடம், கேட்பவர் யாராகினும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எல்லாரையும் விட உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும் என்றே சொல்ல தோன்றுகிறது தற்கால அகராதியில் அர்த்தம் இல்லையா? அன்பின் அகராதியில் இதற்கு அர்த்தம் இருக்கும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று கிரகணங்களில் கிரகணம் விடும் வரை உள்ள பயணம் போல நம்மிடம் கேட்பவரிடம் ரொம்ப, ரொம்ப எனக்கு உங்களைத்தான் பிடிக்கும் என்ற stage வருவதால் ஒவ்வொருவரும் நம்மிடம் கேட்பதற்கு இப்படிப்பட்ட பதில் அர்த்தம் உள்ளதாய் உள்ளது. அன்பின் பல காரணங்களில் அந்த, அந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரின் பங்கிற்காகவும் ஒவ்வொருவரும் எல்லாரையையும் விட ரொம்ப, ரொம்ப பிடித்தவர் என்ற பரிசினை பெறுகின்றனர் இறைவனும் கூட. உலகத்தை முதலில் யார் சுற்றிவருவார்களோ அவர்களுக்கு ஞானப்பழம் என்று சொன்ன பொழுது பிள்ளையார் வெற்றிபெற்றார். முருகனும் வெற்றிபெற்றார் அது மயில் வாகனம் கொண்டு, மயில் வாகனம் கொண்டு என்று பார்த்ததில் முருகன் வெற்றிபெற்றார். பிள்ளையார் வேறு விதத்தில் வெற்றிபெற்றார். எக்காரியத்தையும் ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையாரை முதல் நிறுத்தி மற்ற சாமிகள் தொடரப்படுகிறது. பிள்ளைக்கு குழந்தைபருவ முதல்வயது, படிக்கும் முதல் வகுப்பு, கல்லூரியில் முதல் வருடம், வேலை அனுபவத்தில் முதல் வருடம், கல்யாண முதல் வருடம், கல்யாணம் ஆகி முதல் பத்தாவது வருடம், கல்யாணம் ஆகி முதல் மூன்றாவது இடம் இப்படி எல்லாவற்றையும் முதல் என்றால் எல்லாவற்றையும் பிள்ளையார்தான் முதல் என்று சொல்லி இடம் பிடிப்பாரா? பிள்ளையாரின் சொந்தங்கள் இடம்பிடித்தன. முதல் எழுத்து, இரண்டாம் முதல் எழுத்து என்று பல எழுத்துகள் கூடி வார்த்தை, வாக்கியம் அர்த்தம் பெறுவது போல் நம் அனைவரும் கிரகணங்களை போல் தாண்டி ஒவ்வொருவரின் செயலின் சந்தர்ப்பவம் பெறுகிறது. மூலைக்கு தலைகல்லில் ஒவ்வொரும் மூலைகளுக்கும் முதல் கற்களாய் அடுக்குவது முக்கியத்துவம் பெற்றால்தான் அழகிய கட்டிடம். கடவுள் இருக்கிறார் என்றால் அதற்கு ஆதாரம் கேட்பவர்கள். கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் கொடுக்க முடியுமா? கட்டிடம் எழும்புகிற நிலையான வளரும் மூலைக்கு அடுக்கப்படும் ஒவ்வொரு கற்களும் கட்டிடம் முழுமை பெற முக்கியத்துவம் பெறுகிறது. அதுபோல் நாம் ஒவ்வொருவரும். ஒரு இடத்தை பொருளின் அர்த்தத்திற்கு ஏற்ப பார்வையால் கண்களை கொண்டு சுற்றி வலம் வரலாம். கால்களால் நடந்து சுற்றி வலம் வரலாம். மகிழ்ச்சியை மனதால் சுற்றி வலம் வரலாம். மயிலை கொண்டு சுற்றி வலம் வருவது ஒருவிதம் உலகை சுற்றி வந்த முருகன் உலகம் என்று குறிப்பிடும்பொழுது சினிமா உலகம், தமிழ் உலகம், கம்ப்யூட்டர் உலகம், விஞ்ஞான உலகம் என்றெல்லாம் இருக்கிறது. இப்படிப்பட்ட உலகங்களில் எப்படிப்பட்ட உலகை முருகன் சுற்றினார். அவர் எடுத்துக்கொண்ட வாகனத்தைபோல நாமும் வாகனத்தில் அமர்ந்து உலகங்களை சுற்றுவோம். கடல் நீர் உவர்ப்பானது ஆனால் இந்த கடல் உலகில் வாழும் மீன்களை பாருங்கள். உவர்ப்பான நீரின் வாழ்விலிருந்த வந்த மீன் இறைச்சியின் உலகில், சுவையை சுற்றிவந்த பயணத்தை பார்த்தால் உவர்ப்பாக இருப்பதில்லை. நாம் தேவையான உவர்ப்பை சேர்த்துக்கொள்ளலாம். அதுபோல சுகர் கம்ப்ளைன்ட் உலகில் நாமும் இதன் பாதிப்பிலிருந்து விலகி ஆரோக்கிய பயணத்தால் சுற்றுவோம். அதற்கு வாகனங்களாக நடைபயணம், மருந்துகள் எடுத்துகொள்வோம். சுனாமி, வெள்ளம், நெருப்பு, கவலை போன்ற அச்சுறுத்த உலகில் அதன் பாதிப்பிலிருந்து விலகி பாதுகாப்பு பயணத்தை சுற்றுவோம். அதற்கு வாகனங்களாக சென்சார், சோதனை கருவிகள், கவன பார்வை, மன ஆறுதல் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம். சுற்றுச்சூழல் வெப்ப தீயில் விடப்பட்டாலும் அது நம்மை அவிக்காத அக்னியாக அது மாற இறை சக்தியின் உலகை சார்ந்த்திருப்போம். சுற்றுச்சூழலை காப்போம். Revised பள்ளி பாடங்கள் புதிய பரிமாணம் என்று revise பண்ணுவது போல பரிகாரம் செய்ய அறிவுறுத்தும் ஜாதகங்களுக்கும், கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசனங்களுக்கும் கால நடைமுறைகேட்ப்ப பரிகாரங்களை புதிய பரிமாணமாக revise பண்ணக்கூடாதா? குடும்பமாக இருப்பவர்கள் சேவை செய்வது என்றால் சில சிக்கல்கள் என்று நினைத்து குடும்பமாக வாழாது சேவை செய்யும் சாமியார்களும், பாதர்களும் அரசியலில் ஈடுபட கூடாதா? சாக்கடையை நெருங்கி நல்ல முறையில் ஒழுங்குபடுத்தாமல் போனால் யார் சாக்கடையில் கல்லெறிந்தாலும் தெரிக்காதா? அரசியல் ஒரு சாக்கடையா? திறமை உள்ளவர்களே செயல்படுங்கள் பூங்காற்றுக்கு Revised ஜாதகத்திற்கு பரிகாரம் சொல்பவர்கள், நடைமுறை காலத்திற்கேட்ப revised பண்ணி தோஷங்களை நீக்க சொன்னால் என்ன? ஜாதகத்திற்கு தட்சணை வாங்கும்பொழுது காலணா, அரையணா என்று அந்த காலத்தில் வாங்கியது போல் வாங்குவார்களா, காலத்திற்கேட்ப மாற்றிகொண்டால் என்ன? சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பாருங்கள். குடும்பமாக வாழாத சாமியார்கள், பாதர்கள் அரசியல் என்ற சாக்கடைக்கு வரக்கூடாதென்றால் ரௌடிகள் அரசியலுக்கு வந்தால் பரவாயில்லையா? அதுதான் நல்லது என்றால் ரௌடிகளே புனித மதத்தை கவனிக்கட்டுமே அரசியலை கவனிக்கும் திறமையுள்ள இவர்களே இதையும் கவனிக்கட்டும். சாமியார், பாதர்களே மதங்கள் புனிதமாகலாம். அரசியல் புனிதமாகக் கூடாதா? Revised மதங்களை கட்டி ஆளும் சாமியார்களுக்கும், பாதர்களுக்கும் பதிலாக மதங்களை ரௌடிகள் ஆள வந்தால் ஒத்துக்கொள்வீர்களா? அப்படியெல்லாம் விடக்கூடாது என்று ஆதங்கப்படும் நீங்கள் அரசியலுக்கு மட்டும் ரௌடிகள் ஆளலாம் என்று விட்டுக்கொடுப்பது ஏன்? மருத்துவர் யாருக்கு வேண்டும் அது நோயாளிக்கு தான் அல்லவா Revised மருத்துவர் யாருக்கு வேண்டும்? அது நோயாளிக்குத்தான் அல்லவா? அசிங்கமான அரசாங்கம் யாருக்கு வேண்டும்? அது ரவுடிகளுக்கு அல்லவா? துயரப்படும் மக்கள் யாருக்கு வேண்டும்? சேவையின் பசிக்கான உணவுக்கு அதிகாரம் எடுத்து கொள்வது யார்? அரசுக்கு வரி என்ற பெயரில் கொடுத்த தட்சணை அல்லது தசம பாக விரிசலில் யாருக்கு துரோக மாகி அவர் மடிய வேண்டும். இது பெரிய விஷய மில்லையா? சாமிக்கு தட்சணை என்பது மட்டும் நேர்மையாக இருக்க வேண்டுமா? தட்சணை சாமியின் பெயரில் சாமிக்கு, தட்சணை, அர்ச்சனை, காணிக்கை, வருமானத்தின் பத்தில் ஒரு பாகம் என்று செலுத்துகிறோம். சாமியின் பெயரில் சாமிக்கென்று வருமானத்திலிருந்து செலுத்துவது போல, சாமியின் பெயரில் சாமியிடமிருந்து வருமானத்தை பெறுவதும் வேண்டும். சிலர் கடனைத்தான் வருமானமாக வைத்திருப்பர். இத்தகையவர்களுக்கு சாமியின் பெயரில் சாமியிடமிருந்து கடனை போக்கும் வருமானம் கிடைக்க வேண்டும். கடனை போக்கும் வருமானத்தின் பத்தில் ஒரு பாகமோ, தட்சனையின் பலனோ பெற வேண்டும். பூகம்பம், மாரடைப்பு போன்றவற்றால் சொத்தை, உறவை இழந்து வருமானத்தின் வழி மூடப்பட்ட கடனை வருமானமாக உள்ளவர்கள் கடனை காணிக்கையாக செலுத்தும்பொழுது கடன் தீர்ந்து சுபிச்சமாக இருக்க வேண்டும். கடன் வருமானத்தை போக்குவது அத்தியாவசிய தேவையாகும். அது யாதெனில், சுபிச்ச வருமானத்தை பெருக்கும் மூலதனங்கள் கிடைக்க வேண்டும். அதற்க்கு First Aid (முதலுதவி), உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்றவற்றிற்கான வழி தர வேண்டும். உதாரணத்திற்கு புத்தி, உணவு, உடை, உறைவிட, வேலை திறன் சம்பாத்திய ஆரோக்கியம். உதாரணத்திற்கு பொன்னும், பொருளும் கொடுப்பது மட்டும் தேவை இல்லை, முடவன் சுபிச்ச வருமான பெற வேண்டும். முடவனுக்கு கால் சரியில்லாமல் அது மட்டும்தான் சோம்பலாக இருக்கு நாம் அதை கவனித்து மற்ற ஆரோக்கியத்தை தடை செய்து அவருக்காக பிச்சை என்ற பெயரில் செலவு செய்தால். முடவனுக்குள்ள கண் திறனையும், வாய் திறனையும், கை திறனையும், அறிவு திறனையும் சோம்பேறியாக்கும் அளவுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. மற்ற திறன்களை நாமே முடமாக முடவனாக்கி கெடுக்க வேண்டாம். ஆரோக்கிய திறனால், ஆரோக்கிய வருமானத்திற்கு வழி செய்யவேண்டும். ஆரோக்கியம்தான் செல்வம். Health is wealth . சரியாக செலுத்துவதும், சரியாக பெறுவதும் நடந்தால்தான் நன்மை நடந்ததாகும். தட்சணை, அர்ச்சனை, காணிக்கை, வருமானத்தின் பத்தில் ஒருபாகம் என்ற நிகழ்வுகள் முழுமையடைய வேண்டும். அதற்க்கு செலுத்துவதும், பெறுவதும் சரியாக சேர வேண்டும் சீட்டு போடலாமா? (எனக்கொரு யோசனை) இது ஒருவிதமான நகை கடை சீட்டு போல ஆனால் வித்தியாசமான புன்னகைக்கான சீட்டு. ரூ 1க்கு 5காசு வட்டி அல்ல ரூ10வந்த வருமானத்தில், 1ரூபாய் நிதான தானம். பணம் தேவைப்படாதவர் ஒருவருமில்லை எந்த தேவையை பரிமாறனும் என்றாலும் பணம் என்ற அலகால் பெறுவதோ கொடுப்பதோ அமைகிறது. நாம் பணத்தை பிறருக்கு கொடுத்தால் அவர் வேண்டியதை அவரே வாங்கிக்கொள்வார். ஆனால் நன்மையானதை அவர் வாங்கிக்கொள்ள அவருக்கு தெளிவு வேண்டும். திருடனைப்போல ஒரு வருகை ஆம். கெட்ட திருடர்கள் தங்களுடைய தேவைக்காக பிறரை கொள்ளையடிக்கிறார்கள் வன்முறையாக. நல்ல திருடர்களாக தன்னைத்தான் கொள்ளையடித்து, மற்றவர்கள் தேவைக்கு நாம் நம்முடையதை கொடுத்து உதவலாமே? இன்முறையாக. 12 வருடத்திற்கு ஒரு மகா மகம். 1 வருடத்திற்கு 12 மாதங்கள் இந்த 12 மாதத்தையும் நாம் ஆட்சி செய்வோம். நம் மாத வருமானத்தில் 10 சதவீதம் மற்றவர்களுக்கும், பொது நலத்திற்கும் தொண்டாக ஆண்டுக்கு நன்மை செய்வோம், மாதந்தோறும். அந்த 10 சதவீதத்தில், ஒரு பாதி, பொதுவாக உள்ள கோயிலுக்கும் மறு பாதி, மனித இதயங்களின் கோயிலுக்கும் காணிக்கை செய்யலாம். பொதுவாக உள்ள கோயிலின் வருமானம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், விபத்து, நோய் இப்படி கண்ணுக்கு எதிரே நடக்கும் இழப்புக்கு தொண்டு செய்ய காணிக்கை செய்தல். நடமாடும் மனித இதய கோயிலுக்கு செலுத்தும் வருமானம், அது நம் சுற்றத்தார் நல்ல வாழ்க்கை அனுபவத்தை பெறுவதற்கு அவரவர் மனதில் நடக்கும் கவலையை மாற்றும் தொண்டுக்கான காணிக்கை செய்தல். மனக்கோவில் கொண்ட மாணிக்க வாசகர் ஆகவே இறைவன் வாழ்வதற்கு இதயம் ஒரு இடம். மனதின் இதயமே ஆலயம். இக்காலத்தில் பணம், பொருள் தேவைப்பட்டால் வெறுப்பு போட்டி போடுகிறது. கடன் அன்பை முறிக்கும் என்பர். பணம் தேவைப்படுபவர் அல்லது பொருள் தேவைப்படுபவர் இனாமாக கிடைக்குமா என்றே எதிர்ப்பார்ப்பார். பணம் கொடுப்பவர் அல்லது பொருள் கொடுப்பவர் வட்டி கொடுத்து சரியாக முதலை அடைப்பீரா, பொருள் என்றால் அதற்கு விலை கொடுத்து வாங்குவீரா, என்றே எதிர்ப்பார்ப்பார். இனாமாக கொடுப்பதோ, வாங்குவதோ என்றால் மனது இடம் கொடுக்காமல் ஒருவருக்கொருவர் வெறுப்பை செலுத்திகொள்வர். ஆகவே பிளாஸ்டிக் உபயோகத்திற்கு நல்ல தீர்வு காணுதல் அல்லது நலிந்தவருக்கு உதவுதல் போன்ற ஒழுங்கை காக்கவேண்டிய இழப்புகளுக்கு புத்துயிர் அளிக்க வரவேற்புகள் வறட்சியாக உள்ளது. இக்காலத்தில் மற்றவர்களுக்கு இனாமாக கொடுக்கக்கூடாது என்பதற்கு ஆலோசனை தேவைப்படுவதில்லை. உதவக்கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்கி வைத்திருப்பார். நாம், நம் பணத்தேவையை நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் குடும்ப வாரிசுகளுக்கு என்று ஒரு தொடராக நீள்கிறது. நம்முடைய பிள்ளை பிறகு பேரப்பிள்ளை பிறகு அதனுடைய பேரப்பிள்ளை என்றே நீள்வதால் நமக்கு மட்டும்தான் பணம் வேண்டும் என்பதே நீள்கிறது. கெட்ட திருடனால் அல்லது சுரண்டல் காரரால், ஏமாற்றுக்காரரால் அல்லது இயற்கை சீற்றத்தால் பெரிய இழப்புகள் வரும் அதற்கெல்லாம் நாம் நம்மை சமாதான படுத்திக்கொள்கிறோம். ஆனால், பிச்சைக்காருக்கு ஒரு ரூபாய் கொடுப்பதே அதிகம் என்று நினைக்கிறோம். இதற்கு மேல் நமக்கு அத்தியாவசியமான சுற்றுச்சூழலை காக்க வேண்டுமானால் இன்னும் வெறுப்பு. இதற்கு செலவு செய்வதென்றால் அதைத்தான் இழப்பு என்கிறோம், நம்மை மீறி செலவானால், போனால் போகட்டும் என்போம், ஒழுங்கு பராமரிப்புக்கு உதவுவதை போனால் போகட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாதா? லேட்டாக அல்லது சரியாக வேலை செய்யாத கத்துக்குட்டிக்கும், நன்கு வேலை செய்கிற அல்லது சீக்கிரம் வேலைக்கு வருகிறவர்களுக்கு சம்பளங்கள் வேறுபடலாம். ஆனால் இத்தகைய இரண்டு பேருக்கும் வாழ்க்கையில் இழப்பு என்று வரும்பொழுது வேறுபடுத்தி பார்க்காமல் முடிந்த உதவியை பாரபட்சமில்லாமல் முதலாளி உதவ வேண்டும். அதுதான் அன்பு. அன்பிலே வேற்றுமையை நுழைக்காதீர்கள். நல்லது செய்ய போக தீமை நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் உதவுவது என்றால் நல்லதாக இருக்கலாம் அல்லது கெட்டதாக இருக்கலாம். உதவாது இருப்பது சிலருக்கு நல்லதாக இருக்கலாம். அல்லது கெட்டதாக இருக்கலாம். எது நல்லது, எது கெட்டது என்று எல்லாம் அறிந்த இறைவனுக்குத்தான் தெரியும். நம் நினைவில் நல்லது என்று நினைத்து போராடுவதும், கெட்டது என்று போராடுவதும் வாழ்கையில் ஞானத்தை அறிய அனுபவங்கள் அப்படி அமைந்துள்ளது புதியவைகளை அறிய, பிறருக்கு இனாமாக கொடுக்கக்கூடாது என்பதில் அனுபவங்களை பெற்று இருக்கிறோம். ஆகவே இனாமாக கொடுப்பதற்கான அனுபவங்களையும் பெறுவோம். நாம் குறிப்பிட்ட தெரிந்தவர்களை சீட்டு குலுக்கி குழுக்கள் முறையில் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவோம். அதில் எதிரியும் இருக்கலாம், நண்பனும் இருக்கலாம், நம் கருத்தில் நல்லவனாகவும் இருக்கலாம், கெட்டவனாகவும் இருக்கலாம் சிலரை தெரிந்துகொண்டு சிறப்பாக பாதுகாப்பாக உதவுவோம். மனிதன் எப்படிப்பட்டவன் என்று நாம் தீர்ப்பளிக்க முடியாது. அறிவுக்கு எட்டும் வரை ஒரு உதவியும், எட்டாத வகையில் (இறைவனுக்கு எட்டும்) ஒரு உதவியும் செய்வோம். நம் கள்ளம் கபடமில்லா செய்கையால் திருந்துபவர்களும் உண்டு. ஊதாரி திருந்துவதற்கு தந்தையின் சொத்து இழக்கப்பட்டது. தனக்கு இன்னது தேவை என்று வெளிப்படையாக சொல்பவர்களும் உண்டு, சொல்லமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு. தமிழ் அறியாத அமெரிக்கரிடம் தம் தேவைக்கு உதவியை கேட்க தெரியாதவருக்கு புலம்பல்தான் வாழ்க்கையா? அன்பின் கண்காணிப்பாளர்கள் எங்கே? வெளிப்படியாக சொல்பவர்கள் நம் உதவியை தவறாகவோ பயன்படுத்தலாம். சொல்லமுடியாமல் தவிப்பவர்களுக்கு நம் உதவியால் சமுதாயத்திற்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கலாம். பிறருக்கு உதவவேண்டும் என்பதில் வறட்சியாக இருக்கும் இக்காலத்தில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணங்களுக்கு ஊக்கமளிப்போம். நம் உதவியை பெற்றவருக்கு, உதவ வேண்டும் என்ற எண்ணம் வளர்க்கப்பட்டு, அவர், நம் உறவினர் அல்லது யாரோ விபத்தில் சிக்கியிருக்கும்போழுது காசு என்று பாராமல் முதலுதவியாக உதவட்டுமே இத்தகைய திட்டத்தால். நாம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற திட்டத்தில், இத்தனை ஆண்டுகள் என்று, மனதில் பதிவு செய்திருந்தால், மற்றவர் இனாமாக கொடுத்தால், நாம் இத்தனை ஆண்டுக்கு, உதவ வேண்டும் என்ற திட்டத்தில், விரதமாக பதிந்திருக்கிறேன் என்று அவரிடமிருந்து விடுவித்துகொண்டால் தான், நாம் உதவி செய்தற்கு பலன். கொடுத்ததே இனாமாக திரும்ப கிடைத்தால் நாம் பிரத்தியோகமாக ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் ஒரு வியாபாரமா? மற்றவர்களுக்கு கொஞ்சம் உதவ வேண்டுமானால் யோசிக்கிறோமே நம் குடும்பத்தில் புதியதாக ஒரு குழந்தை பிறந்தால் செலவாகுமே அதுபோல் ஒரு கூடுதல் செலவாக மற்றவர்களுக்கு உதவுவதை எடுத்துக்க கூடாதா? பிறந்த குழந்தை கொஞ்ச நாளில் இறந்தால், ஆகா செலவு இல்லை, லாபம் என்று சிரித்து மகிழ்வோமா? தர்மம் தலை காக்கும் என்பர். குழந்தை நல்ல படியாக வளர்ந்தால் ஏற்ற காலத்தில் நமக்கு உறுதுணையாக இருக்காதா? மற்றவர்களுக்கு உதவி செய்தால் உடனே நமக்கு பலன் கிடைக்க வேண்டும், இது ஒரு செலவு என்றும் யோசிப்பது ஏன்? உதவி என்ற விதை வளரட்டும், பெருகட்டும். கனி தரட்டும் உதவி செய்கிறவர்கள் கொஞ்சம் பெரிய குழுவாக சேர்ந்து கொண்டு, ஒரு சின்ன குழுவுக்கு சீட்டு குலுக்கி போட்டு திருப்திகரமாய் உதவலாமே. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை குழுவை கலைத்து புதிய குழுவுக்கு பரிசிலிக்கலாமே. நாம் நடுத்தர பெரியகுழுவாக இருந்தால் நமது கொடுக்கும் சுமையும் கொஞ்சம் குறையும். சின்ன குழுவாக இருந்தால் பணம் குறைவாக வசூலாகும். பெரிய குழுவாக இருந்தால் அதிக நபர்களை கவர் பண்ண முடியாது. விலை நிர்ணயம், உழைப்பு, ஊதியம் இவைகளை வழங்குவது மற்றும் பெறுவதில் போட்டி இருக்கலாம். இவைகள் இனாமமாக இல்லாமல் இருந்தால்தான் திறமைகள் வெளிப்படும். புதியவைகளை, புதிய உக்திகளை அறிவதில் வாய்ப்பு உருவாகும். தரம் உள்ளதையும், தரம் இல்லாததையும் பகுத்து அறிய முடியும். ஆனால், இவைகளில் மனித நேயம் அமையும்பொழுது வேற்றுமைகள் அகற்றப்பட்டு அனைவரும் இறைவன் முன் சமம் என்பது முழுமையடையும். அதற்கு எதிர்பாராத இழப்புகள், ஒழுங்கு பராமரிப்பு போன்றவைகளை அறிந்து அதற்கு நாம் சம்பாதித்த வருமானம் இதுபோன்ற சீட்டு திட்டங்களால் தொண்டு செய்ய வேண்டும். ஏமாற்றப்படுகிறது என்று அறிந்து மனம் விரக்தி யடைவதை கேள்விப்படுகிறோம். பகுத்து உண்பதற்கு திடீரென்று உதவி வருகிறது என்றால் எவ்வளுவு மனம் மகிழ்ச்சியடையும். ஆட்சி மாற்றங்கள் நல்லவர், கெட்டவர் என்று பாரபட்சமில்லாமல் தமது சூரிய உதயத்தை நல்லவர், கெட்டவர்களுக்கு வைத்திருக்கும் இறைவனை போல நாமும் அன்பை கவனிப்போம். கொஞ்சம் சுதந்திரமா, கொஞ்சம் கட்டுப்பாடா செயல்படுவோம். படிக்கனும், வேலை செய்யனும், கொஞ்சம் மன மகிழ்ச்சிக்காக விளையாடனும் எப்பொழுதும் சீரியசா இருக்கக்கூடாது இயந்திர வாழ்க்கை போல. கணிதத்தை மனப்பாடம் பண்ணி படித்தால், புதிய தீர்வுக்கு நம்மால் பதிலளிக்க முடியாது. ஆராய்ந்து, அறிந்தால்தான் நம்முடைய அறிவு பயன்படுத்த முடியும். ஆராய்ந்து கொண்டே இருந்தால் கால நிபந்தனைகளில் செயல்படுவது சிக்கலாகும், மனப்பாடமும் வேண்டும். ஜாதகம் பார்த்தே செயல்களை செய்தோம் என்றால் நல்லதும், இருக்கு கெடுதலும் இருக்கு. 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைவது போல, 5 ஆண்டுக்கு ஜாதகம் பார்ப்பது, 5 ஆண்டுக்கு ஜாதகம் பார்க்காமல் எதையும் எதிர்க்கொள்வது. பசிக்கும்பொழுது பணத்தை கொடுத்து உணவை பெற்று பசியாற்றிக்கொள்வது செலவா? அது முதலீடா? உணவை சாப்பிட்டது பயன்படும்படி உழைப்பால் சாம்பாதித்தால் நாம் சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்தது முதலீடு. உணவை சாப்பிட்டது பயன்படுத்தாதபடி சோம்பேறியாக இருந்தால் அது செலவு? உழைப்பவர் உழைத்துக்கொண்டே இருப்பாரா? ஏதாவது உடம்புக்கு வரதா? மது அருந்தும் குடியை நிறுத்துவதற்கெல்லாம் வழி கண்டறிந்திருக்கிறோம். சோம்பேறி மாற முடியாதா? ஆகவே செலவை முதலீடாக மாற்ற முடியும். அதற்கு வழி காணுவோம். நாம் இனாமாக உதவுவது செலவாக அமைவது போல் இருக்கலாம், முதலீடாக அமைவது போல் இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் தனிநபராக நாம் இனாமாக கொடுப்பது வறட்சியாக உள்ளது. உதவக்கூடாது என்ற எண்ணம்தான் அதிகமாக உள்ளது. பணக்காரர் மேல, மேல பணக்காரரா போவதும், ஏழைகள் மேல, மேல ஏழையாக போவதும் சரியா? ஆகவே 5 வருடம் இனாமாக உதவுவோம், 5 வருடம் உதவ வேண்டாம் என்று இரண்டிலும் நம் அனுபவத்தை பெறுவோம். பணக்காரர் ஒரு 5 வருடத்திற்கு கொஞ்ச ஏழையாக செயல்பட்டால் என்ன? கொஞ்சம் ஏழையாக போகும் அளவிற்கு செல்வத்தை ஆரோக்கிய சமுதாயத்திற்காக செலவிட்டால் என்ன? அடுத்த 5 ஆண்டுக்கு பழைய தீர்மானமோ அல்லது வேறு தீர்மானமோ எடுத்துக்கொண்டால் என்ன? நாம் இறந்ததும் இறைவன் என்னய்யா நீ மேல, மேல பணக்காரரா போகாமல் இறந்து விட்டாயே உன் இறப்பு செல்லாது என்பாரோ பிறகு ஏன் மேல, மேல பணக்காரராக ஆக வேண்டும் என்று முடிவெடுப்பது ஏன்? ஏழை நீர், என்ன மேல, மேல ஏழையாக தான் இருக்கனுமா? உதவி கேட்டே இருக்கனுமா முன்னேற வழி இருக்குமே? ஏழையே நீர், 5 வருடத்திற்கு கொஞ்சம் பணக்காரராக முன்னேறு, அடுத்த 5 வருடத்திற்கு உன்னைவிட ஏழையாக இருப்பவருக்கு உதவு. பணக்காரர் எல்லாம் முழு ஏழையாக மாறுவது கொஞ்சம் கடினம். ஏழைகள் எல்லாம் முழு பணக்காரர் ஆவது கொஞ்சம் கடினம். ஆற்றலுக்கு தகுந்தவாறு, ஒவ்வொருவரும் கொஞ்சம் சுமைகளை அதிகப்படுத்துவோம், கொஞ்சம் மகிழ்ச்சிக்கானதை குறைத்து சமூக இடர்பாடுகளை நிவர்த்தி செய்து balance பண்ணுவோம். 5 வருடம் என்று குறிப்பிடுவது ஒரு உத்தேச கணக்கிற்காக. மனதிலும், உடலிலும், அறிவிலும், ஆரோக்கிய சமுதாயத்தை பராமரிப்போம். ஓட்ட பந்தயத்தில் அனைவரும் First prize வாங்க முடியாது? எல்லாரும் பணக்காரர் ஆவதும் முடியாது, எல்லாரும் ஏழையானாலும் தாங்காது? நான் 5 ஆவது prize , நான் கடைசி prize . நான் 5 ஆவதாக வருவதில் First என்று மகிழ்ச்சியடைவதும். நான் கடைசியாக வருவதில் First என்று மகிழ்ச்சியடைவதும் மனதிற்கு நாம் நிகழ்த்துவது ஏன் கடினமாக உள்ளது? இப்படி முடியாமல் போகும் இதுவும் ஒருவிதமான மன நோய்தான். ஒரே செயலை ஒருவர் கடினம் என்பார், ஒருவர் எளிமை என்பார்? எல்லாத்திற்கும் மனதுதான் காரணம். கடினம் என்ற காரணம், எளிமை என்றவருக்கு நிகழும்படி அவர் ஆற்றல்கள் விபத்தானால் என்ன ஆவது? எளிமைக்கான காரணம், கடினம் என்றவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லையா? ஆகவே இக்காலத்தில் உள்ள மன நோய்களை போக்கி ஆரோக்கிய சமுதாயத்திற்கு ஈடுபடுவோம். நான் First – எனக்கு சுமை குறைவு, சுமையை குறைப்பதற்கான வழி கண்டேன், என்னோடு மகிழுங்கள். நான்தான் சுமக்கனுமா, நான் கடைசியா – வலியை கண்டு மிரளாமல் வலிமையை பெருக்கினேன், என்னோடு மகிழுங்கள் உங்களுக்காக சுமக்கிறேன். நேயம் எல்லாருக்கும் நல்லது செய்யுங்க, நமக்குள் மத நல்லிணக்கம் வேண்டும், மனித நேயம் பெருகனும், தாகமாயிருக்கிற எதிரிக்கும் பானம் கொடு என்றெல்லாம் கேள்விப்படுகிறோமே. நாமே, இப்படி இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்பொழுது, வெவ்வேறு மதங்களின் தெய்வங்களும் தங்களுக்குள் நல்லது செய்கிறார்களா, தெய்வ நல்லிணக்கம் இருக்கிறதா?, தெய்வ நேயம் பெருகியிருக்கா? நல்ல குணங்கள் மனிதர்களுக்குள் இல்லையா? தெய்வங்களுக்குள் இல்லையா? ஏன் நமக்குள் இத்தனை வேறுபாடுகள்? எதிலே நாம் ஒன்றுபடனும்? யார் ஒன்றுபடனும்? பொருளில்தான் குற்றம் இருக்கக்கூடாது – நக்கீரன் கடவுளானவர் தான், இறந்தோருக்கு கடவுளாக இராமல், முக்தியடைந்தோருக்கு கடவுள். முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லா போன்ற பெயர்களில் குற்றம் இருக்கிறதா? இப்பெயர்களால் மனிதர்களும் தங்களை அழைத்துக்கொள்ளவில்லையா? இப்பெயர்களின் கடவுள் தன்மையின் பொருளில் குற்றம் இருக்கக்கூடாது? எது? எப்படியோ? நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்ற இரு கடவுள்களில் யாரோ ஒருவரை வணங்குபவர்களில் ஒருவர் நல்ல குணங்களில் ஓங்கி இருந்தால் – இவர் முக்திக்கு நல்ல கடவுள் கடவுளாவார். ஒருவரிடம் நல்ல குணங்கள் இறந்து விட்டால் – இவருக்கு நல்ல கடவுள் கடவுளாக இரார், கெட்ட கடவுள் கடவுளாக இருப்பார். தெய்வத்தின் பெயர்களில் வெவ்வேறாகவும் கடவுள் தன்மையில் நல்ல குணங்களும் உள்ள நல்ல கடவுள், தன் பக்தனக்கு நல்லவன் என்ற முக்தியை அருளினால் முருகன் கடவுள் , பிள்ளையார் கடவுள், சிவன் கடவுள், காமாட்சி கடவுள், இயேசு கடவுள், அல்லா கடவுள் என்று நல்ல கடவுள் என்று அவருக்கு வணக்கத்திற்குரியவர். ஒரு மனிதனையே, அப்பா என்றும், மகன் என்றும், தாத்தா என்றும், பேரன் என்றும், கணவன் என்றும், நண்பன் என்றும், ஆசிரியர் என்றும், கலெக்டர், போலீஸ், மாணவன் என்றும் அழைக்கபடுவது போல கடவுள் முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லா என்று பல நிலைகளில் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். முருகனை வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா, பிள்ளையாரை வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா, சிவன், காமாட்சி, இயேசு, அல்லா போன்ற பெயர்களில் உள்ள தெய்வத்தை வணங்குபவர்களில் நல்லவர்கள் இல்லையா? இத்தகைய முக்தியடைந்த நல்ல குணசாலிகளுக்கு (ஜீவனுள்ளோருக்கு) நல்ல கடவுள் கடவுளாக இருக்கிறார். கெட்ட கடவுளின் பிள்ளைகளான பாவிகளை, நல்ல கடவுள் நல்லவனாக முக்தியடையும்படி மீட்டு எடுக்கிறார் தன் மெஜாரிட்டி பலத்திற்கு. கிறிஸ்துவுக்கு அந்தி கிறிஸ்து இருப்பது போல், நல்ல கடவுள் தன்மை, கெட்ட கடவுள் தன்மை என்று இரு வேறு சக்திகள் வெவ்வேறு பெயர்களில் உள்ள தெய்வங்களுக்கு அமைந்து இருக்கலாம். கடவுளானவர், யாராவது, கடவுளின் நல்ல குணங்களின் தன்மையில் அவதூறு போன்ற ஏதோ ஒன்றை கூட்டினால் அவரோடு அதை கூட்டுவார், நல்ல தன்மை ஏதாவது ஒன்றை யாராவது எடுத்துவிட்டால் அவரோடு அந்த பங்கை எடுத்துவிடுவார். இப்படி நல்ல குணங்களில் முருகன், பிள்ளையார், சிவன், காமாட்சி, இயேசு, அல்லாவுக்கு, யாராவது, தீமை தன்மையை கூட்டியோ, நல்ல தன்மையை எடுத்தோ இருந்தால் அது அவருக்கு கூட்டப்படும் அல்லது பங்கு எடுக்கப்படும். புடமிட்டு (பகுத்தறிந்து) – மனதில் சோதித்தறிந்து வணங்குவோம் வீரியம் ஒரே ஒரு மாத்திரைக்கு இருக்கும் வீரியம் போல, பசிக்கு ஒரு தட்டு சாப்பாட்டுக்கு, பதிலாக ஒரே ஒரு சோறு பசி போக்கும் வீரியமாக, இருக்குமா? ஒரே நேரத்தில் ஒரு எல்லைக்கு மேல சாப்பிட்டால், நல்லதா? குறிப்பிட்ட வலிக்கு மேல இறப்புத்தான் முற்றுபுள்ளி. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உப்பின் சாரமும், இனிப்போ, புளிப்போ, துவர்ப்போ சேர்க்க, சேர்க்க அதிகரித்து கொண்டே இருக்குமா? குறைந்த தண்ணீரில் உப்பு கரிக்கும் அளவுக்கு உப்பு இடப்பட்டும் மூட்டை அளவுக்கு உப்பு சேர்ப்பதை அதிகரித்தாலும் சேர்ப்புகேட்ப்ப மடங்குகளில் உப்பு கரிப்பும் பெருகுமா? உலகிலேயே முதல் பெரிய கோடீஸ்வரரால், தன்னுடைய அத்தியாவசிய தேவை பூர்த்தியடையாமல் பசியினால் தற்கொலைக்கு போகும் அளவுக்கு உள்ள ஏழையின், நிலையை மாற்ற முடிகிறதா? மழை நல்லது ஆனால் மழையின் வெள்ளத்தால் வருவது துன்பம் தானே அதுபோல் நம்பர் 1 கோடீஸ்வரர் இருப்பதால் பகிர்ந்து வாழ்வதற்கு பிரோஜனம் இல்லை? வீடு கட்ட உதவியாளாய் வேலை செய்ய விருப்பம் கொள்ளும் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு வெவ்வேறு இடங்களில் ஆயிரம் வீடுகளில் ஒரு ஒரு செங்கல்லை எடுத்துக்கொடுத்து வேலை செய்தால் அவ்வேலைக்கு அந்நாளைக்கு நல்ல கூலி கிடைக்குமா? ஒரு கோடி ரூபாயை ஒரு, ஒரு பைசாவாக பலருக்கு கொடுத்தால் அந்த உதவி வீரியம் பெறுமா? ஏழைக்கு என்று ஒரு வீரியம் வேண்டும், பணக்காரருக்கு என்று ஒரு வீரியம் வேண்டும். ஒரு ஏழைக்கு, தமக்கும் தன் குடும்பத்திற்கும் அத்தியாவசிய தேவையை கவனிக்கும் அளவுக்கு சம்பாத்தியம் வேண்டும் என்று தான் ஏழை ஆரம்பிக்கப்படனும், இந்த வீரியத்திற்கு குறைவாக ஒரு ஏழை இருப்பது அவரை உலகம் தான் கொல்கிறது. அடுத்து இரண்டு பேருக்கோ, ஐந்து பேருக்கோ, ஒரு தெருவுக்கோ, இரண்டு தெருவுக்கோ, ஒரு ஊராட்சி, ஒரு நகரம், ஒரு எம்.பி தொகுதி அந்த அளவுக்கு அந்த, அந்த நிலைகளில் ஏற்படும் அத்தியாவசிய தேவையை கவனிக்கும் அளவுக்கு சம்பாதிக்கும் பணக் காரர்கள் வேண்டும். இந்த நிலைக்கு மேல் பணக்காரர்கள் இருப்பது, ஒரு நிலைக்கு மேல் உப்புகரிப்பு அதிகமாகமாகாதது போல பிரயோஜனமில்லை. பணம் ஒரு கடன் சீட்டு, அதன் மதிப்புக்கு பொருள் கொடுக்கப்படனும். பணம் ஒரு வருமான சீட்டு, அதன் மதிப்புக்கு பொருள் வாங்கப்படனும். உணவை விளைவிக்காமல், முடங்கிஇருக்கிற கோடீஸ்வரர் பணம், உணவாகுமா? உணவையும், சேமிப்பையும், ஒழுங்கையும் ஓட்ட நிலையிலே இருக்க வேண்டும். நம் சம்பாத்தியத்தின் வீரியம் சோம்பியும் இருக்கக்கூடாது, மழுங்கியும் போகாதவகையில் அவ்வப்போது முடுக்கி விடப்படவேண்டும். உலகின் நம்பர் 1,2 என்று பெரிய கோடீஸ்வரர் வேண்டாம். பல எம்.பிக்கள் ஒரு பிரதமரை தேர்ந்தெடுத்து தலைமையை உருவாக்குவதுபோல பெரிய அளவில், நம் தலையாய பிரச்சனை அல்லது முன்னேற்றதிற்கு குறிப்பிட்ட வீரிய நிலை பணக்காரர்கள் (எம்.பி தொகுதி) ஒன்று சேர்ந்து தலையாய பிரச்சனையை தீர்ப்பதோ, தலையாய முன்னேற்றத்திற்கோ செயல்பட வேண்டும். ஒவ்வொரு நிலையில் வீரியத்தை பராமரித்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தெய்வத்திற்கு ஆயிரம் சுலோகம் சொல்வது ஒரு வீரியம் என்றால், தினமும் நூறு அல்லது போதுமான தோப்புக்கரணம் செய்தால் கடவுளை உடல் ஆரோக்கியத்தால் வணங்கும் வீரியம் செயல்படுகிறது. நடராஜரை போல் நடனத்தால் தெய்வத்தை வணங்குவோம். தலையால் தரையை தொடுவதும், முழங்கால் இடுவதும், கை தட்டுவதும் இந்த நிலைகள் தவிர மற்ற அவையவங்களை வணங்க பயன்படுத்துவது பேய்களுக்கு உரியதா? முழு மனதோடு, முழு உடல் ஆரோக்கியத்தோடு இறைவனை வணங்குவோம். வீரியம் LIC போன்ற இன்சுரன்சில் சிறிய குழந்தைக்கு பாலிசி போட்டால் அதிக பெனிபிட்டும், வயதானவர்கள் பாலிசி போட்டால் குறைந்த பெனிபிட்டும் அமலாக்குவது ஏன்? வரவை வைத்து (பிரிமியம்) தீர்மானிக்கப்படுகிறதே பலகோடி ரூபாய்க்கு சொந்தக்கார பணக்காரர்கள் தங்கள் சொத்தை அனுபவிப்பதற்கு, தங்கள் நெருங்கிய சில சொந்தக்காரர்களுக்கு சில காலங்களுக்கு அந்த சொத்து மதிப்பை சில உழைப்பாளிகளுக்கு உழைப்பாக மாற்ற வேண்டும் என்று கொடுக்கப்பட்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைப்பது போதுமானதாக இருக்காது அது ஒரு நாளைக்கு 48 மணி நேரம் உழைப்பு தேவைப்படும். இன்னும் இந்த திட்டத்தை பல வழிகளில் சுருக்கினோம் என்றால் ஒரு நாளைக்கு 240 மணி நேரமும் போதுமானதாக இருக்காது இது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாது இந்த எல்லைகளில் வீரியத்தை நுழைப்பது ஏன்? ஓஹோ வென்று பெரிய பணக்கார தன்மையில் உதவி வேண்டாம், normal ஆன வழிகளில் பணக்காரர்களும், normal ஆன பயன் பெறுபவர் அளவில், normal ஆன காலத்தில் (எதிர் காலத்திற்கும்) உழைப்பாக, பொருள் கொள்முதலாக பணத்தை பங்கிடலாமே. மனிதனின் சராசரி உழைப்பு வாழ்வை கண்டுகொள்ள வேண்டும். வரவை வைத்து (பிரிமியம்) தீர்மானிக்கப்படுவது போல உழைப்பின் வரவை வைத்தும், கனிம, கரிம நிலையை பொருத்தும் பணக்காரர்கள் சொத்து சேர்க்கலாமே. பண சீட்டை உழைப்புக்கும், கொள்முதலுக்கும் அனுமதிக்கலாமே. எதிர்காலத்தை சரிக்கட்ட சேமிக்க வில்லை, எதிர்காலத்திற்கு பிரச்சனையை சேமிப்பு என்ற பெயரில் தேக்கிவைக்கலாமா? ஒன்றும் இல்லாததும் உடைப்படலாம். கொஞ்ச நேரம் பேரம் பேசி லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கிறார், புரோக்கர் மாடு மாதிரி 12 மணி நேரம் உழைத்து 500 ரூபாய் சம்பாதிக்கிறார், வறியவர் அப்படியென்றால் எங்கோ பிரச்சனை தானே. இப்படியோ, அப்படியோ சம்பாதிக்கட்டும், இதை பகிரும் பொழுது சரியாக ஒத்து போவோமே பிரச்சனை போகும் அளவுக்கு. உதாரணத்திற்கு, நோயின் போது கண்டுகொள்ளலாமே, மகிழ்ச்சி பெறும் அளவுக்கு. வீரியம் மருந்துக்கு expired date, தயாரித்த உணவுக்கு expired date, மனிதன் பூமி, சூரியன் இவைகளுக்கும் expired date இருக்கும் பொழுது பணக்காரர் சேர்க்கும் பணம் சேர்ப்பின் அளவுக்கும் expired இருக்க வேண்டுமே. ஒரு stage க்கு மேல் தனிப்பட்ட நபரின் பணம் சேர்ப்பின் அளவுக்கும், ஏழைகளுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவை இல்லாமையின் இருப்புக்கும் expiration ஐ கண்டறிந்து தக்க வாழ்வு நிலையை தக்க வைத்துக்கொள்வோம். ஒரு stage க்கு மேல் ஏழையாய் இருப்பதை பரிதாபம் என்பது போல் ஒரு stage க்கு மேல் பணக்காரராய் இருப்பது அபாயம் அல்லவா? தனிப்பட்ட(சர்வாதிகாரம்) பரிதாப, அபாயத்தை மாற்றி கூடி செயல்படுவோம். (ஜனநாயகம்) பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதும், பூக்களால் அர்ச்சனை செய்வதும் கவனித்து பாருங்கள். தோப்புக்கரணத்தில் வலது கை இடது காதுக்கும், இடது கை வலது காதுக்கும் மாற்றி பிடிக்கும் நிலையை போல் அவ்வப்போது மாற்றம் தேவைப்பட்டால் மாற்றம் செய்ய வேண்டும். இடம், பொருள் அறிந்து ஏவல் வேண்டும் என்ற நீதி சொல் இக்காலத்திற்கு நடைமுறையில் இருக்கிறதா? இல்லை, இக்கூற்று தவறு என்றால் இடம், பொருள் அறிந்து ஏவல் வேண்டாம் என்று பிரச்சாரம் பண்ணலாமே? குருக்கள், ஜோதிடர் சொல்லும் பரிகாரங்கள் இன்னும் அந்த காலத்தில் சொன்னது போலவே இப்பொழுதும் செய்ய வலியுறுத்த படுவது ஏன்? (இக்காலத்தில் தீபம் ஏற்றுவது) வெப்பமயமாதலை அதிகரிப்பததான ஒரு வழியல்லவா? இடம், பொருள் அறிந்து ஏவல். (நறுமணத்திற்காக பூக்களை அர்ச்சனைக்கு எடுத்துகொள்வது போல) உலக துர்நாற்றத்தை எதிர்த்து நறுமணத்திற்கான(தூய காற்று) வழிகளால் வெல்லலாமே? இடம், பொருள் அறிந்து ஏவல். ஒரு சட்டம் pass ஆக வேண்டும் என்றால் சட்ட மன்றத்திலோ, நாடாளும் மன்றத்திலோ தீர்மானம் வெற்றி பெற வேண்டும். குருக்கள், ஜோதிடர்களால் தற்போதைய மாற்றத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் தீர்மானமாக pass ஆகாததால் இன்னும் பழைய நிலைக்கும் தன் இரக்கத்தை பொருட்டு இறைவன் செவி சாய்க்கிறார். நாலு பேர் மரக்கன்றை நட்டால். ஏழு பேர் மரத்தை வெட்டுகிறார். ஓட்டை பையில் பணம் சேருமா ? எல்லாரும் ஒன்று பட்டு தீர்மானங்களை pass பண்ணி செயல் படுத்துவோம். நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம் பலத்தை விட எதிரியின் பலத்தை குறைக்கலாம். அல்லது எதிரியின் பலத்தை விட நம் பலத்தை அதிகரிக்கனும். நல்ல சுற்றுச்சூழலுக்கும், நல்ல சுற்றத்தாருக்கும் நன்மையின் பலத்தை பெருக்குவோம், தீமையின் வீரியத்தை குறைப்போம். (ஏழை) பரிதாபமா? (பணக்காரர்) வயிறு நிரம்பி இன்னும் என்ன? நிம்மதிக்கான முயற்சிக்கு அதிக சிரமமும் வேண்டாம்? மிகவும் எளிமையும் வேண்டாம். நல்லதொரு போராட்டம். வாய்ப்பை உருவாக்கி நல்ல சூழலை அமைப்போம். முனிவரும், பயில்வானும் ஏழை வறுமையினால் அல்சர் வந்த நோயாளி போல அல்லாமல் முனிவரைபோல் மகிழ்ச்சியாய் இருக்கனும். முனிவர் பணக்காரரை போல் பண வசதி இல்லை ஆனால் மன மகிழ்ச்சியில் சிறப்பாய் இருக்கிறார். இதுபோல் ஏழையின் வறுமை பயம் நீக்கப்பட்டு குறைந்த வசதியிலும் மகிழ்ச்சியாய் இருக்கனும் முனிவரை போல். வயிறு நிரம்பி தொப்பையாய் இருப்பவர் உழைப்பை பயன்படுத்தமாட்டார். பணக்காரர் நல்வழிக்கு பயன் படுத்தாத சொத்தும் தொப்பைகாரர் ஒவ்வொரு நோயாய் வரவழைத்து கொள்வது போல் பாவத்தை வரவழைத்து கொள்வார். தொப்பைக்காரரைவிட அதிகமாய் வயிறை நிரப்பும் பயில்வான் பளு தூக்கும் பயில்வானாய் இருப்பது போல ஏழைகளுக்கு வரும் எதிர்பாராத சுமைகளை பணக்காரர் தம் உதவியால் தூக்கி விட வேண்டும். அதிகமாய் சாப்பிடுவது தவறா? அதிகமாய் சாப்பிடுவது மட்டும் இருந்தால் தொப்பை, தொல்லை அதிகமாய் சாப்பிட்டு அதை சக்தியாய் மாற்றினால் பயில்வான். பளுவை தூக்குவதுபோல், பணக்காரர் செல்வம், ஏழைகளை தூக்கி விட வேண்டும். பணக்காரர்களே, ஏழைகளே வெயிட்ட காட்டுங்க 6 6. சிந்தனை மின்சாரம் யார் கேட்பது குடிசையை கொளுத்தக்கூடாது, நகைக்கடையை கொளுத்தக்கூடாது, நியூயார்க் இரட்டை கோபுரத்தை கொளுத்தக்கூடாது என்று சொல்லி, வல்லரசுகளும் கொளுத்தியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறதே இறைவனுக்கு விசுவாசமாய் இருக்கும், சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றுச்சூழல் நல் உணர்வுகளை கொளுத்துவது ஏன்? கேட்பதற்க்கு ஆள் இல்லையா? இந்த சுற்றுச்சூழல் இறை பக்தர் இஸ்தலம் காக்கப்பட வேண்டாமா? ஒரு முக்கியமான தலைவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்துவதற்க்காக தொண்டர்கள் சென்றனர். அந்த தொண்டர்கள் ரயிலில் பயணம் செய்தனர். நிறைய பேர் ரயில் பெட்டியின் மேலே அமர்ந்து பயணம் செய்தனர். ரயில் பெட்டியின் இருக்கைகள் எல்லாம் பயணிகளால் நிறைந்திருந்ததால் மேலே அமர்ந்து பயணித்தனர். ரயிலானது மலை குகைகளின் வழியாக போனது. ரயில் பெட்டியின் மேல் அமர்ந்து பயணம் செய்தவர்கள் கவனித்து பயணம் செய்ய வேண்டிய சூழல் வந்தது. குகைகளின் வழியாக செல்லும்பொழுது தலை குனிந்து சென்றால்தான் ரயில் பெட்டியின் மேல் அமர்ந்து சென்றவர்கள் பாதுகாப்பாய் செல்ல முடியும். குகை வரும்பொழுது தலை குனிந்து விட்டனர். குகையின் உள் ரயில் சென்று கொண்டிருக்கும்பொழுது. சிலர் குகை முடிந்து விட்டது என்று தவறுதலாக சொன்ன உடன் பலர் தலையை நிமிர்த்தினார். தலையை நிமிர்த்திய மேலே அமர்ந்து பயணித்தவர்கள் தலை அடிப்பட்டு பலர் இறந்தனர். சுற்றுச்சூழலை காக்க செயல்படும் அன்பர்கள். ஒரு பெரும்பான்மை விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும். தக்க தருணங்களில் போராடி வெற்றிபெற வேண்டும். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற செயலுக்கு தேவையானவைகளை தயார்படுத்தி செயல் பட வேண்டும். Ready take one , two , three என்று சொல்லி போராட்டத்தை ஆரம்பித்து செயல்பட்டு வெற்றியடைய வேண்டும். one , two , three சொல்லும்பொழுது எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். சமையலுக்கு வேண்டியவைகளை தயாராக வைத்திராமல் சமைக்க முடியாது. தவறாக ready சொன்னதால்தான் ரயிலில் பயணித்தவர்கள் இறந்தனர். நாம் பிரச்சனைய அமர்த்த நினைத்தோம். ஆனால் அறியாதவர்கள் பிரச்சனையை கொளுத்தி தீமையை உண்டாக்குவர். ஆகவே நாம் செய்வதெல்லாம் வீணாகிவிடும். ஆகவே நல்ல விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும். நாம் செயல்படுத்தாமல் சும்மா இருந்தாக்கூட இன்னும் கொஞ்சம் நிம்மதி இருந்திருக்கும். சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்த நிலைக்கு தள்ளப்பட வேண்டாம். விழிகளில் வலி காட்டி வழி திறப்போம். உனக்கெல்லாம் எதுக்குடா புள்ள, புள்ளைய கண்டிச்சி ஒழுங்கா நல்ல முறையில் வளர்க்க தெரியல. என்பர். நாம விதைக்காமலே இருந்திருக்கலாம். எவ்வளவு மரக்கன்றுகள் கருகி போனதே. மழையில்லாமல், வெயில் கொளுத்துவதற்கு காரணமானவர்களின் காரணங்களை அகற்றுவோம். நல்ல சூழலை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடுவது போன்ற செயல்களால் சுற்றுச்சூழலை காப்போம். வாயும், வயிறுமா இருக்கும் கர்ப்பிணிகளுக்கு நல்லதெல்லாம் வாங்கி போடணும், சந்தோசமா வச்சிருக்கணும் என்று சொல்கிறோமே நல்ல சூழலை பெற்று கொடுக்க போகும் வனங்களுக்கு நல்லதை வாங்கி போடாமல் இருக்கலாமா விழிப்புணர்வையும் கொடுக்காத சுற்றுச்சூழல் காப்பவர்களே. உலகெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? இட ஒதுக்கீடு வாழ்க்கை தரம் உயர, தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பிற்படுத்தபட்டோருக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு இடஒதுக்கீடு என்றெல்லாம் இருக்கிறதே, உலக வாழ்வு மேம்பட இயற்கை அன்னைக்கு (சுற்றுச்சூழல்) இட ஒதுக்கீடு உண்டா? இந்த ஒதுக்கீடுக்கு போராடுவது யார்? இது உங்கள் சொத்து நாம் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாம் நம்முடையதல்ல. இந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறது. ஆம். எல்லா சொத்துக்களிலும் இயற்கை அன்னையின் பிள்ளைகலான பஞ்ச பூதங்கள் நீர், நெருப்பு, காற்று போன்றவற்றின் மனப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பத்திரம் வேண்டும். இந்த பத்திரம் நல்ல மன சாட்சிக்கு சம்பந்தப்பட்டது. அப்பொழுதுதான் இச்சொத்துகள் அதிகாரப்பூர்வமாய் நமக்கு உரியது. இயற்கை ராணிக்கு, நாம் செலுத்த வேண்டிய மன சாட்சிக்குரிய tax எங்கே? இயற்கை வளங்களை auditing செய்து பொது வாழ்க்கைக்கு நல்ல மகிழ்ச்சிக்குறிய லாபம் கிடைத்திருக்கிறதா? இது உங்கள் சொத்து என்று அரசு பேருந்தை வைத்து படமாக்கப்பட்ட சினிமா படத்தில் நடிகர் வடிவேல் ஜோக் பார்த்திருப்போம். இதில் ஜோக்காக அடித்து கொள்வர். ஆனால் இயற்கை அன்னைக்குரிய சொத்தை நாம் பிற மனிதர்களிடம் இது உங்கள் சொத்து என்று செல்லாத பத்திரத்தை மற்றவர்களிடம் காண்பித்து இது யாருடைய சொத்து என்று ஒருவருக்கொருவர் மற்றவர்களிடம் காண்பிக்கிறீர்கள். ஒருவர்க்கொருவர் ஏமாற்றி ஜோக்குக்காக அல்ல உண்மையாகவே மனதிலே சண்டை போட்டு தாங்களும் ஏமாறுகின்றனர், புண்ணியம் செய்வதில். விரக்தி ஏன்? மனிதன் ஐம்பூதங்களால் ஆனவன். ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் வேறு வகை ஆற்றலாக மாறலாம் என்பது விஞ்ஞானம் கண்டறிந்த உண்மை. இறப்புக்கு பிறகு ஒன்றுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கா? ஒன்றுமில்லை அல்லது செயலற்ற தன்மை என்பதற்கு அர்த்தம் கண்டறியப்பட்டு உள்ளதா? இறப்புக்கு பிறகு ஒன்றுமில்லை என்றால் ஆற்றலை பற்றிய தத்துவம் என்ன? ஜீரோ என்றால் அது மற்ற எண்களோடு இருக்கும்பொழுது? கல் ஒரு செயலற்ற தன்மையா? நாம் நகர்த்தினால் மட்டும் நகர்கிறது என்கிறோமே? கல்லுக்குள் என்ன நடைபெறுகிறது. கல் மண்ணாகும்பொழுது அல்லது மணலாகும்பொழுது அதில் தாவரங்கள் விளைகிறதே. இறப்பிற்கு பிறகு ஒன்றுமில்லை என்று நாமே தீர்மானம் எடுப்பது சரியா? நிரூபிக்க முடியுமா? உயிர்த்தெழுதலை நம்புவோரும் பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தவறான முடிவெடுப்பது ஏன்? ஐயோ, நான் ஏழையாக பிறந்து விட்டேன், ஐயோ அழகான மனைவி இல்லை, அழகான கணவர் இல்ல, ஒரு மனைவிதான் இருக்கு, எனக்குனு சொந்த வீடு கட்ட முடியல? நான் நிறையா படிக்கல, வேலை வேலை என்றே இருக்கு entertainment இல்ல, என் மகன், என் தம்பி, என் கணவர் விபத்தில் இறந்து விட்டார், விபத்தில் என் கால், கை இழந்து விட்டது, பூகம்பத்தில் பலரை இழந்தேன் என்று பல நெருக்கடிகளை சொல்லி விரக்தி அடைவது ஏன்? இவைகள் எல்லாம் இறந்ததற்கு பிறகு ஒன்று மில்லை, நாம் துன்பத்தை மட்டும் அனுபவிக்கிறோம் என்று சொன்னால். இதற்கு இறைவன் பொறுப்பாகட்டும் என்று சொல்பவர்கள் இறைவனை தேட வேண்டியது இல்லை. இறைவன் நல்ல அருமையான நன்மைகளை நமக்கு தர வல்லவர். ஒன்றுமில்லாதவற்றில் உன்னத உலகை படைத்தவர் நம்மை உலகுக்கு தந்து விட்டு, நம்மை இழந்து தவிப்பவர் அல்ல. அவர் தம்முடைய நன்மைகளில் சேர்த்துக்கொள்பவர். இரு காரணங்களில், நமக்கு கொடுக்கப்பட்டதால் மற்ற பிறப்புக்கு ஒரு காரணமான நாமே இழப்புக்குகாக வருந்தும் பொழுது, ஆதி காரணர் வருந்த மாட்டாரா என்ன? ஆதி காரணர் இறைவன், வருந்த மாட்டார். நம்மை இப்புவி வாழ்வின் இறப்பினால் நம்மை இழக்கவில்லை. நாம் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். அவர் நம்மை கைவிடுவதில்லை. நாம் உலக துவக்கத்திலிருந்தே இறைவனோடுதான் இருக்கிறோம். தற்பொழுது, நாம் புவி வாழ்வுக்கு விழித்திருக்கிறோம். நாம் எப்பொழுதும் அவரோடுதான் இருக்கிறோம். நான் என்று உணர்ந்தது எவ்வளவு காலத்தில், நாம் கோமா stage அடையும்பொழுது நான் எங்கே? எண்ணெய் உள்ள விளக்கு திரி பற்ற வைக்கும்பொழுது எரிகிறது. எண்ணெய் குறைவில்லாது இருக்கும் பொழுது எரிந்து கொண்டே இருக்கும். நாம் பிறப்பு என்ற பெயரில் தூண்டி விடப்பட்டோம். ஒரு stage க்கு பிறகு, நம் உயிரை நீட்டி, தடைபடாமல் நமக்கு, மகிழ்ச்சி எண்ணையை செழிப்பாக பார்த்து கொள்பவர் இறைவன். நிலத்தில் வேர் ஊன்ற வேண்டும் என்பதற்காக சிறிது நேரம் தண்ணீர் இல்லாமல் காயும் நெற்பயிர் போல, நம் புவி வாழ்வு இறப்பு, இழப்பு உள்ளது. இழப்புகள் நமக்கு ஞானத்தை அறிவதற்கான வரவேற்புகள். புவியின் செழுமை, வறட்சி அளவுகள் என்ன, அதற்கு நம் விருப்ப அளவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்து இந்த புவி வாழ்க்கை ஒரு கை பார்ப்போம். வேகம், வேகம் என்று ஏன் பதட்டம். மந்தம், மந்தம் என்று ஏன் அலுப்பு. ஐம்பூதங்களால் ஆனா நாம் உடலை மண் அரிக்கிறது. நிலம் நம்மை எடுத்துக்கொள்கிறது. மற்ற நான்கு பூதங்களின் செயலை நாம் அறிவோமா? விரக்தி ஏன்? வாழ்க்கை ஒரே தரம் என்று கருதி கிடைக்காததற்கெல்லாம் விரக்தி அடைவது ஏன்? புவி வாழ்க்கை ஒரு தரமாக இருக்கெலாம், நாம் வேறு ஆற்றலாக உயிர் பெறுவோமே. நம் அப்பா, அம்மாவே நமக்கு சொத்து சேர்த்து வைப்பார்கள், நம் பிறப்புக்கு ஆதி காரணராகிய இறைவனாகிய தந்தை நமக்கு என்று சொத்து சேர்த்து வைத்திருக்க மாட்டாரா? இறைவன் வாடகை தாய் அல்ல. உரிமை அவருக்குத்தான் அதிகம். தாயாகிய இறைவன் நம்மை மறப்பதில்லை, தாய் கூட மறக்கலாம். யார் என் தாய் என்று நாம் சரியாக புரிந்துக்கொள்வோம். இந்த ஈழத்தின் இன படுகொலையை பாருங்கள் இன வேறுபாடுகொண்டு ஈழத்தில் தமிழ் இனத்தை ஒடுக்கி, அழிக்கும் செயலை பலரும் கண்டிக்கின்றனர். மனித நேயமற்ற செயல் என்கிறோம். இவர்களை யார் கண்டிப்பது இந்த இனங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா? ஆம். பல மூலிகை இனங்கள், பல தாவர இனங்கள் ஒடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றனவே. தாவர நேயமற்ற செயல் அல்லவா? பல ஏக்கரில் நகர்கள் உருவாக்கலாம். நான் ஒரு வேலி நெல்லை பயிரிட்டு இருக்கிறேன். ஒரு வேலி கோதுமை, பருத்தி, கம்பு, சோளம், என்றெல்லாம் பயிரிட்டு இருக்கிறேன் என்கிறோமே. 100 குழியாவது மூலிகை பயிரிட்டு இருக்கிறேன் என்கிறோமா? ஏன் மூலிகை இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை. இந்த இன வேறுபாடு ஏன்? ஆங்கில மருந்துகளால் மூலிகைகளுக்கான வரவேற்பும் குறைந்து விட்டது. நல்ல ஆரோக்கியமான காற்றுக்கு மூலிகைகள் பெரிதும் உதவாதா? சாக்கடைகள், கரும்புகை, தொழிற்சாலை புகை பெருகும் அளவிற்கு அதை நல்வழிக்கு காற்றை மாசுபடுவதை தடுத்து கட்டுபடுத்தும் நிலைக்கு மூலிகை இனங்கள் உதவுவதற்கு பெருகுகின்றனவா? இனத்தை ஒடுக்கும் தமிழ் இன படுகொலையை போல மூலிகை இன படுகொலையை என்னமோ, யாருக்கோ சொல்கிறேனா? நமக்கு சம்பந்தம் இல்லையா? ஒரு காலத்தில் எவ்வளவு வகை வகையான மூலிகை இனங்கள் இருந்தன. இப்பொழுது நமது ஆதிக்கம் மிகுதியால் மூலிகை இனங்கள் ஒடுக்கப்பட்டுள்ளனவே. இப்படி ஒடுக்கப்படுவதால் மூலிகை இனங்களுக்கு மட்டுமா பாதிப்பு? இரக்கமா? கை, கால் ஊனம் ஆனால் கேவலமா? பிறப்பால் ஊனம் இல்லாமல் பிறந்தும், ஒரு அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட அதற்கு பைக், ஆட்டோ என்று தேடுவது ஏன்? இவர்கள் தங்களை ஆரோக்கியமாக நிர்வாகம் பண்ணாததால் நடப்பது அலுப்பாகிவிட்டது. இப்படி அலுப்பாகி விட்டதால் இவர்களுக்கு இது இடையில் வந்த ஊனம்தான். இத்தகைய ஊனம் தான் கேவலம். பிறப்பால் ஊனம் ஆனவர்கள் மாற்று திறனாளிகளாய் மாறிக்கொண்டிருக்க, அலச்சியத்தால் தங்களை கெடுத்து ஊனம் ஆனவர்கள் ஒட்டு திறனாளிகளாய் மாறியது கேவலம் அல்லவா? ஒட்டுண்ணிகளை போன்று, அட்டை பூச்சி திறனாளிகளாய் சோம்பலை உறிஞ்சி உலகத்தை கெடுக்கின்றனர். விளையாட்டு சீரியசான விளையாட்டு போலத்தான் இவ்வுலக வாழ்க்கை. இறைவன், நல்லவன் தீயவன் என்று ஒவ்வொருவரையும் கணித்து அவர்களுக்கு தண்டனையோ, பரிசோ கொடுப்பதில்லை. ஒருவர் நல்லவராகவோ, கெட்டவராகவோ ஆவதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. ஆகவே நல்லவன், கெட்டவன் என்று தான் ஒருவன் மட்டும் காரணம் என்று பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்தை வென்றது என்று சொல்வோமானால், இந்தியாவில் உள்ள எல்லாரும் இங்கிலாந்தில் உள்ள எல்லாரும் விளையாண்டு போட்டியிடவில்லை. இந்தியாவின் சார்பாக சில பெரும், இங்கிலாந்தின் சார்பில் சில பெரும் பங்குகொண்டு வெற்றி பெறுவதையோ, தோல்வியுருவதையோ அந்ததந்த தேசத்திற்கு குறிப்பிடுவதை போல நன்மை, தீமை உலகத்தில் வெற்றியோ, தோல்வியோ பெறாமல் டிராவில் முடிந்தால் இவ்வுலகம் நல்லதையும், கெட்டதையும் கற்று தேர்ந்ததற்கு பரிசு உண்டு. நல்லதை செய்வது ஒரு ஞானம் என்றால். கெட்டதை செய்வதையும் ஒரு ஞானம் இந்த ஞானம் கெட்டதற்கு உரியது. நல்லவர்களும் இறைவனின் விருந்தையும், மருந்தையும் பெறுகின்றனர். கெட்டவர்களும் இறைவனின் மருந்தையும், விருந்தையும் பெறுகின்றனர். நல்லவர்கள், நன்மை விருந்தை பெறுகின்றனர். தீமையை தடுப்பதற்கு மருந்தை உட்கொள்வது போல நன்மையை செய்தும் தீமையை கவனித்தும் தீமை அறிவு பெறுகின்றனர். இவர்கள் நன்மையை செய்யும் அறிவு, தீமையை கவனிக்கும் அறிவு. தீயவர்கள், தீமை விருந்தை பெறுகின்றனர். நன்மையை தடுப்பதற்கு மருந்தை உட்கொள்வது போல தீமையை செய்தும் நன்மையை கவனித்தும் நன்மை அறிவை பெறுகின்றனர். இவர்கள் தீமையை செய்யும் அறிவு, நன்மையை கவனிக்கும் அறிவு. நான் அவனை சரியாய் கவனித்தேன் என்பார்கள். இந்த கவனித்தேன் என்பது, உண்டா? இல்லையா? – அவனா? நானா? என்று கவனிப்பது. நல்லதா? கெட்டதா? தீமை நன்மையை கற்று தருகிறது. இதில் ஏதோ ஒன்றை செய்கிறோம். நன்மை தீமையை கற்று தருகிறது. இதில் ஏதோ ஒன்றை செய்கிறோம். இருளின் வலிமை குறைந்தாலோ, ஒளியின் வலிமை மிகுந்தாலோ ஒரு பொழுது (பகல்) ஒளியின் வலிமை குறைந்தாலோ, இருளின் வலிமை மிகுந்தாலோ ஒரு பொழுது (இரவு) இரண்டு பொழுதும் சேர்ந்து ஒரு நாள். ஒரு ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் அது நன்மை, தீமை. ஒரு பக்கம் மட்டும் உள்ள நாணயம் இருப்பதில்லை என்பதை கவனிப்போம். விளையாட்டு விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது என்றால், அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. இந்தியா தோல்வியுற்றால். அது இந்தியர் ஒவ்வொருவருக்கும் கிடைத்த தோல்வி. இதில் இந்தியர் அனைவரும் விளையாட்டில் பங்கு பெறவில்லை. இந்தியரின் சார்பில் சிலர் பங்கேற்றனர். அண்டை நாட்டை இந்தியா எச்சரித்தது என்று சொன்னால், நமது நாட்டின் சார்பில் பிரதமரோ, முக்கிய அதிகாரியோ சொல்லியிருப்பார். அதுபோல் உலகம் கலாச்சாரத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கெட்டு விட்டது என்றால். அதற்கு உலகில் உள்ள ஒவ்வொருவரும் காரணம். ஏனெனில் உலகம் ஒரு டீம். இது ஒரு டீம் வொர்க். டீம் (என் ஜனமே) தனிப்பட்ட நபர் தானாக எதையும் தெரிந்துக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் சமூகத்தோடு இணைக்கப்பட்டவர்கள். யார் உதவியும் இல்லாமல் குகையில் அடைக்கப்பட்டு வாழ்ந்த ஒருவர், குகையிலிருந்து வெளியில் வந்து இவ்வுலகத்தில் தீமையை செய்து உலகத்தில் மாற்றம் கொடுக்கவில்லை மற்றும் உலகத்தை கெடுக்கவில்லை. பிறக்கும்பொழுதே எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டு பிறக்கவில்லை. ரிசல்ட்தான் முக்கியம். இப்பொழுது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கிறது. கலாச்சாரம் நன்றாக இருக்கிறது என்றால் அது நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. இப்பொழுது ரிசல்ட் எப்படி? உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நல்லவரா? ரிசல்ட்ட பாருங்க. நாம் தவறு செய்துவிட்டு கடவுளிடம் மன்னிப்பு வாங்கிவிட்டால் நம் தவறு தள்ளுபடி ஆகிவிடுகிறது. உலகில் உள்ள அனைவரும் பிறர் தவறை மன்னித்துவிட்டால் அனைவரின் தவறும் தள்ளுபடி ஆகிவிடுகிறது. இந்த நிலையில் அனைவரும் நல்லவர் ஆகிவிடுகிறோம். தவறு செய்வதில் அதிகபட்சம் பலரை கொல்வதுதான் பெரிய தவறு என்றால். அப்படி கொன்றவரைக்கூட மன்னித்து விட்டால் எப்படி? இயற்கையே நம்மை கொல்கிறது. இடி, வெள்ளம், பூகம்பம், சுனாமி, தீ என்று, அதற்கு இயற்கையை என்ன செய்கிறோம்?. மன்னிக்க வேண்டும் என்று நினைத்தால் மன்னித்துவிடலாம். குற்றங்களை கட்டுப்படுத்தவும் நம்மால் முடியாதா என்ன? மதிப்பு 1000 ரூபாய் பணம் கேட்டால், அதற்கு 1000 ரூபாய் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி மதிப்பில்லாத விதத்தில் கொடுப்பது சரியில்லாதது அல்லவா?. மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டு கொடுத்தால்தானே சரி. அதுபோல் மன்னிப்பு பெறுவதும் கொடுப்பதும் மதிப்புடையதாய் இருக்க வேண்டும் அல்லவா? எதை ஒன்றை விதைத்தாலும் அது விளைந்து நன்கு பலன் தர வேண்டும் அல்லவா? மன்னிப்பும் அதுபோல் பலன் தரவேண்டும். மன்னிப்பிற்கு, மன்னிப்பு கோருவோரும், மன்னிப்பு கொடுப்பவரும் என்ற இரு தரப்பாருக்கும் ஏற்புடையதன்படி வேண்டிய பரிகாராம் செய்யப்பட்டு மன்னிப்பை மதிப்புடையதாக செய்யவேண்டும். வெறும் வார்த்தை மன்னிப்பு வேண்டாம். உயிருள்ள மன்னிப்பு வேண்டும். உதவி தின கூலிகளுக்கு உழைத்து பலனை கொடுத்தால் அவருக்கு சம்பளம் கொடுக்கிறோம். உழைத்தவர் உடல் நிலை சரியில்லாமல் போனால். அவர் தன்னை குணப்படுத்தி விட்டு எப்பொழுதும் போல சம்பாதிக்க வேண்டும். அவர் தன்னை குணப்படுத்த ஆன செலவை, எப்பொழுதும் போல சம்பாதித்தால் ஆகும் சம்பளத்தால், எப்படி செலவிலிருந்து விடுபடும் வருமானம் கொண்டு ஈடுக்கட்டுவார். அதற்காக அவருக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்க முடியுமா? அப்படி கொடுத்தால் நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா? மற்றவர்கள் எங்களுக்கு மட்டும் என்ன குறைவான சம்பளம் என்று கேட்கமாட்டார்களா? நாம் அனைவரும் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிப்போம். சம்பாதிப்பதில் மற்றவரை விட அதிக லாபம் அடைந்தவர்கள். தவிர்க்க முடியாத செலவுகளால் மாட்டி தவிக்கும் சிலரை தேர்ந்தெடுத்து, சீட்டு குலுக்கி போட்டு அவருக்கு உதவி செய்வோம். செலவில் மாட்டி தவிக்கும் மற்றவர்களுக்கோ மாற்றுவழி கிடைக்கும். எல்லாருக்கும் மாற்று வழி கிடைக்கும் என்று நாம் நழுவிட வேண்டாம். சம்பாதிக்கும்போது மட்டும் மற்றவர்களுக்கும் லாபம் கிடைக்கட்டும் என்று நழுவிவிடுகிறோமா? எல்லாருக்கும் ஒரே மாதிரி திறமை இருக்காது, ஒரே மாதிரி சூழல்களும் அமையாது. ஆனால் விலை நிர்ணயம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அதிக லாபம் ஈட்டிருக்கிறோம். அந்த அதிக லாபம் கிடைக்காத வழிக்கு அதிக திறன் படைத்த திறமைசாலிகள் உருவாகி நம்மை நஷ்டப்படுத்தினால் நாம் என்ன செய்வது? கள்ள பணத்தை மறுபடியும் மூலதனம் செய்து அதை விருத்தி செய்யாமால், சீட்டு குலுக்கிபோட்டு முடியாதவர்களுக்கு உதவி செய்து பணவீக்கத்தை குறைப்போம். பணவீக்கத்தை எப்படி சரிசெய்வது? நஷ்டங்களோடு நம் லாபத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம். தங்கள் பெயர் சீட்டில் விழாதவர்களுக்கு, பண வீக்கம் சரியாகும்போழுது தங்கள் கடன் பிரச்சனையும் சரியாக சான்ஸ் உண்டு. சமன் செய்யும் வாய்ப்ப்பு நல்ல சூழல் அல்லாதவர்களோ, சிறப்பு திறமை இல்லாதவர்களோ நல்ல சூழல் உள்ள, சிறப்பு திறமையுள்ள வேறு சிலருக்கு நல்ல லாபம் அடைய வாய்ப்பு அளிக்கின்றனர். அது போல் நொடிந்துபோனவரின் மீட்புக்கும் வாய்ப்பு தரலாம் அல்லவா? நல்ல சூழல் அல்லாதவர்கள் வாய்ப்பு தரும்பொழுது. நல்ல சூழல் உள்ளவர்கள் வாய்ப்பு தரலாம் அல்லவா? லாபம் கண்ட நல்ல சூழல் உள்ளவர்களோ, சிறப்பு திறமை உள்ளவர்களோ நொடிந்து போனவர்களில் சிலரின் மீட்புக்கும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதவலாம் அல்லவா? நல்ல லாபம் அடைந்தவர்கள் வெளிப்பட அடையாளங்கள் தெரியும். மீட்கப்பட வேண்டியவர்கள் வெளிப்பட குலுக்கல் முறையில்தான் நம்மால் யூகிக்கமுடியும். தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம். தூங்குகிறவர்போல் பாசாங்கு செய்கிறவர்களை எழுப்பமுடியாது என்பார்கள். வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்பார்கள். அதுபோல் நொடிந்து போனவர்களை கண்டுக்கொள்வதும் கடினம். அதனால் நொடிந்து போனவர்கள் என்று சொல்பவர்களை ஓரளவு யூகித்து விட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடையாளம் காணலாம். கத்திரிக்கா முற்றினால் சந்தைக்கு வராதா என்பார்கள். அது போல் நல்ல லாபம் காணுவோரை அடையாளம் காணலாம். உதவி செய்கிறோம். நொடிந்து போனவர்கள் யார் என்று கேட்டால் எல்லாருமே ஓடிவருவார்கள். சில வசதி உள்ளவர்களிடம் income tax பிடிக்க வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஓடி ஒளியவும் வாய்ப்பு உண்டு. ஊக்கம் எல்லா நொடிந்து போனவர்களுக்கும் உதுவுவோமானால், நொடிந்து போனவர்கள் எல்லாரும் நமக்கு உதுவுவார்கள் என்று கருதி முயலமாட்டார்கள். ஆண்டவன் அப்பறம் ஏன் அறிவு, கண்ணு, காது, கை, கால்களை கொடுக்கணும் அதை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வேணாமா? ஒருத்தருக்குக்கூட உதவவில்லை என்றால் எல்லாருக்கும் ஒரு அதிருப்தி ஏற்படும் மனம் தளர்ந்து போவார்கள். எனவே சிலருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதுவுவோமானால் மற்றவர்களும் நாமும் முயற்சியும் செய்வோம் உதவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று முயலுவர். நமக்கும் ஆண்டவன் கண்ணை திறப்பான் உதவி கிடைக்கும் வரை முயற்சி செய்வோமே என்றிருப்பர். ஆகவே சிலருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உதவுவது நொடிந்தவர் அனைவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இப்படி உதுவுவதை ஒரு ஊக்கமாய் கருதுவர். நமக்கு நடக்கணும் என்று இருந்தால் அது நடக்கும் என்று நிம்மதிக்காக காத்திருப்பார். மனம் தளர மாட்டார்கள். செல்வந்தர்கள் எல்லாரும் உதவுவார்கள் என்று கருத்து இருக்குமானால், நொடிந்தவர்கள் மற்ற முயற்சி செய்யாமல் செல்வந்தர்களிடம் உதவி கேட்பார்கள். மந்திரத்தால் மாங்காய் கிடைக்கும் என்பதைப்போல தகுந்த முயற்சியில்லாத அவ்வுதவியையே நம்பியிருப்பர். எந்த செல்வந்தரும் உதவமாட்டார்கள் என்றால் நொடிந்தவர்கள் திருப்திகரமாய் செல்வந்தருக்கு பணி செய்யமாட்டார்கள். பணி செய்வதில் கூட குறைய செல்வந்தரிடம் நடந்துகொள்ளமாட்டார்கள். cut and right ஆக இருப்பார்கள். இதனால் எதிர்பாராமல் நடக்கக்கூடாத ஆபத்துக்கள் வரலாம். ஆகவே இரக்கத்தை, அமிர்தமே ஆனாலும் அளவுக்கு அதிகமானால் நஞ்சு என்பதை போல இரக்கத்தை அதிகமாய் பயன்படுத்தாமலும், எதற்கெல்லாம் கஞ்சத்தனமாய் இருக்கனும் என்று தெரியாதா என்று இரக்கதிலும் கஞ்சத்தனம் இல்லாமல் இரக்கத்தை அதிகமாகவும் இல்லாமல், கஞ்சதனமாகவும் இல்லாமல் நிதானமாய் இரக்கப்பட வேண்டும். வெற்றி கிடைக்கும் வரை முயல, முயற்சியை முடுக்கி விடவேண்டும் என்ற அளவிற்கே, உதவி செல்வந்தர்கள் செய்ய வேண்டும். உதவி கேட்பவர்கள் முயற்சியை முடுக்கி விடும் அளவிற்கே உதவி அமைய நொடிந்தவர்கள் கேட்கவேண்டும் மகாமகம் வாழ்க்கையை நன்கு வாழ கற்றுக்கொண்டவர்கள், தண்ணி அடிக்கலாம், பான்பராக் போடலாம், கஞ்சா அடிக்கலாம், ஏன் சாவுக்கு ஏதுவான யாதொன்றை குடித்தாலும் அவர்களை ஒன்றும் பண்ணாது. எப்படி என்கிறீர்களா? இப்படி தேர்ந்தவர்கள் எதை செய்தாலும் எச்சரிக்கையாய் செய்வார்கள். 12 வருடத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான முறையில் தண்ணி அடிப்பது, 5, 6 வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பான முறையில் பான்பராக் போடுவது, கஞ்சா அடிப்பது இருந்தால் என்ன ஆகும். 100 ml குடித்தால் விஷமாக இருந்தால் அதற்கு 1 ml குடித்து மருந்தாக்கி கொள்ளலாம். முளச்சி மூணு இல விடல அவர்களுக்கெல்லாம் எதற்கு விஷம் அருந்துவது, தண்ணி அடிப்பது போன்றவைகளெல்லாம். வாழ்க்கையை நன்கு வாழ கற்றுக்கொண்ட தேர்ந்தவர்களை கவனியுங்கள். இவர்களை போல நீங்களும் செய்யுங்கள் குற்றம் ஒன்றும் ஆகாது. எங்க அப்பா, அம்மா, நண்பர்கள் செய்வது சரியல்ல. அக்காவோ, தம்பியோ, அண்ணன்னோ அவர்களுக்கு மட்டும் என்னைவிட அதிகமாக உதவி செய்கிறார்கள் என்கிறீர்களா? ஏங்கா, உங்க அக்கா, தம்பி போன்றவர்களின் மேல் உங்களுக்கு பாசம் இருக்கா இல்லையா? பாசம் இருக்கு. உங்களுக்கு பாசம் இருந்தால் உங்க அப்பா, அம்மா, நண்பர்கள், உங்கள் அக்கா, தம்பி போன்றவர்களுக்கு, உதவி செய்யட்டும் என்னை விடுங்க, நான் பார்த்து கொள்கிறேன் என்று அல்லவா சொல்லவேண்டும். ஏனென்றால் நான் பாசமாயிருக்கிறேன். பாசத்தை சொல்லாதீங்க. பாசத்தை வெளிப்படுத்தி காட்டுங்க. உங்கள் அம்மா, அப்பா, நண்பர்கள் அவர்களுக்கு உதவியது பாசமா? எனக்குரிய பங்கையும் அவர்களுக்கு உதவுங்கள் என்று தான் விட்டு கொடுப்பது பாசமாகுமே? அதற்கேட்ப தன்னை தயார்படுத்தி இருங்கள். புகையாதீங்க. எங்க நான், முதல்ல கேட்டேன் கொடுக்கல, என்னை விட அவர்கள் பெரியவங்களாகிவிட்டாங்களா? முதல என்னை மதிச்சாங்களா என்றெல்லாம் பாசம் கேட்குமா? உங்களை சிறப்பாக்கி விட்டால். பாசம் என்பது இழிவானதற்குத்தான் பொருந்துமா? பிறகு ஏன், தன்னை உயர்த்திக்காட்ட வேண்டும் என்று துடிப்பது ஏன்? தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக, அவர்களை இழிவாக்க துடிப்பது ஏன்? எது உயர்த்தி காட்டப்பட வேண்டும்? உண்மை பேசக்கூடாது – பொய் பேசலாம் ஒருவர் தண்ணி அடித்துவிட்டு சாக்கடையின் நீர் போக்குவரத்தை சரி செய்யும் வேலை செய்கிறார். ஒருவர் பழரசம் சாப்பிட்டு அதன் குப்பைகளை சாக்கடையின் நீர் போக்குவரத்திற்கு இடையூராக கொட்டுகிறார். இந்த இருவரின் செயலை கவனியுங்கள். தண்ணி அடிப்பது கெடுதலா, பழரசம் சாப்பிடுவது நல்லதா சாக்கடையை தூர் எடுப்பது நல்லதா? சாக்கடையை மோசமாக்குவது நல்லதா? இந்த செயல்களை நல்ல ஜோடி சேர்த்து நன்மையை மீட்கலாமே அப்படியென்றால் இவைகளுக்கு தொடர்பு இருக்கா? பொய்யை சொல்லி தீவரவாதியிடமிருந்து மந்திரியை காப்பாற்றியது. உண்மையை சொல்லி அப்பாவி சிறுவர்கள் இருக்கும் இடத்தை காண்பித்து அவர்களை கடத்த உதவியது. ஆட்களை பார்த்து பொய்யையோ, உண்மையையோ சொல்ல வேண்டும். உண்மையையும், பொய்யையும் யாரிடம் சொல்வது suitable ஆக இருக்கும் என்று கவனித்து செயல்பட்டு அதற்குரிய மதிப்பை இழக்காமல் இருப்போம். வைராக்கியம் நாம் எப்பொழுதும் உண்மையாய் இருக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரா? இக்கட்டான சூழ்நிலையில், மனதளவில் பொய்யை சொல்லாமல் உதட்டளவில் பொய்யை சொல்லிவிட்டு நான் அதுபோல் சொல்ல வரவில்லை என்று வாயால் சொல்லாமல் மனதிற்குள் சொல்லி கொண்டு சாதூரியமாய் பெரிய தீங்கிலிருந்து விடுபட காக்கும் வழியை பிடித்துக்கொள்ள வேண்டும். இது போல் இக்கட்டான சூழ்நிலைகளில் சொல்லிலும், செயலிலும், கடமையிலும் உண்மையாய் இருக்க வேண்டும். ஏனெனில் சாதுவான உலகம் மட்டும் அல்ல மிக தந்திரமும், சூழ்ச்சியும் கூட உள்ள உலகம் இது. தந்திரமும், சூழ்ச்சியும் உள்ளவர்கள் பொய்யை மட்டும் சொல்லமாட்டார்கள் அவர்களுக்கு சொந்தம் அல்லாத உண்மையையும் கலந்து நம்மை ஏமாற்றுபவர்கள். அவர்கள் உதட்டளவில் உண்மையை காட்டி மனதளவில் பொய்யாய் நடப்பவர்கள். அவர்கள் நம் உண்மையை கொள்ளையடித்தார்கள். நமது உரிமையான உண்மைக்காக நாம் சொந்தமாக்கிக்கொள்ளாத பொய்யை காட்டி உண்மையை மனதளவில் வைத்து போராடினால் தவறல்ல. வீணான வைராக்கியமும் உண்டு, நல்ல வைராக்கியமும் உண்டு. இவர்களை விட்டு விட்டீர்களே முயற்சி உடையார் இகழ்ச்சி உடையார் முயன்றால் தோல்வி நிச்சயம் விடாமுயற்சி தோல்வி கிட்டியே தீரும் இவர்கள் யார் திருட முயற்சி கற்பழிக்க முயற்சி கொலை , கொள்ளையடிக்க முயற்சி இப்படி முயல்பவர்கள் நற்குணங்களில் இகழ்ச்சியும், தோல்வியும் அடைவது நிச்சயம். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் சரியாக ஆலோசிக்காமல் அறிவிக்கப்பட்டத் திட்டமா? தவறானத் திட்டமா? இத்திட்டத்தில் இன்னும் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த வேண்டுமா? நிறுத்த வேண்டுமா? கொஞ்சம் தளர்த்த வேண்டுமா? உலகம் முழுவதும் மனிதன் உண்பதிற்கென்று அரிசிதான் விளைவிக்க முடிகிறது, வேறெதுவும் விளைவிக்க முடியாத சூழ்நிலை வந்தால் என்ன என்ன பிரச்சனைகள் வரும். இது எப்படி இருக்கிறது என்றால் எங்கு பார்த்தாலும் மனிதனின் ஆடம்பர உணவு, உடை, வசதிகள் போன்றவைகளின் ஆதிக்கம்தான் விளைவிக்கிறார்கள். கழிவை அருமையானவைகளாக மாறும்படி விளைவிக்க முடியாமல் அருவருப்புகள் பெருகும் சூழலை கண்டால் வெறும் அரிசி மட்டும்தான் விளைவிக்க முடிகிறது என்ற உதாரணத்தைபோல் அல்லவா இருக்கிறது? சரியான சோத்து பண்டாரம் என்று எதற்கு சொல்கிறார்கள். புகார் நாம் மற்றவர்களை, அவதூறாக கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசினால், அவர்கள், நம் மீது கோபப்பட்டு சண்டை போடுவார்கள் அல்லது போலீசில் complaint பண்ணுவார்கள் அல்லவா? அது போல், கெட்ட வாசனைகளை (துர்நாற்றத்தை) பரப்பும்படி, கழிவுகளை சுத்தம் பண்ணாமல் விட்டால், நம்மீது கோபப்பட்டு சண்டை போடுபவர்கள், complaint பண்ணுபவர்கள், யாரேனும் உண்டா? சரியானபடி சண்டை போடுபவர்கள் இருந்தால், நம் ஊரில் இவ்வளவு அசுத்தங்களின் தேக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு, வழி பிறந்திருக்குமே? கெட்ட வார்த்தைக்கு உள்ள ரோசம், கெட்ட வாடைக்கு இல்லையா? பெரிய பெரிய தலைவர்கள், அதிகாரிகள், சாதாரணமானவர்கள் இவர்களுக்கும் எப்படி? வித்தியாசம் என்ன? அரசுக்கு மதுபானம் (டாஸ்மாக்) மூலமும் வருவாய் வருகிறது – இது நல்லதா அதிகாரிகளுக்கு இலஞ்சம் மூலமும் வருவாய் வருகிறது – இது நல்லதா இலஞ்சத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கனுமாம். டாஸ்மாக் வருமானம் தடைப்பட கூடாதாம். அரசு, வேலை செய்யும் சிறந்த அதிகாரிகளுக்கு, பதக்கங்களும், பரிசுகளையும் கொடுக்கிறது – இது இலஞ்சம் ஆகாதா? வேலையை சிறப்பாக முடித்து கொடுத்தால்தானே இலஞ்சம் கொடுக்கிறார்கள். நாமலா நெனைச்சிக்கிட்டா தவறு, நாமலா நியாயப்படுத்துவது? என்னப்பா இது லஞ்சம்-பரிசு வித்தியாசம் ஒரே மாதிரியான செயல்தான் ஆனால் கற்பழிப்பு, தாம்பத்திய உறவு இவற்றில் வித்தியாசம் கற்பழிப்பு – நல்ல உடன்படிக்கை இல்லாத உடன்பாடு தாம்பத்திய உறவு – நல்ல உடன்படிக்கையான் உடன்பாடு ஆனால் செயல் மாதிரி ஒன்றுதான் கற்பழிப்பு ஆனா பிறகுக்கூட நல்ல உடன்பாடு ஏற்படலாமா? தாம்பத்திய உறவுக்கு பிறகு உடன்படிக்கையில் கற்பழிப்புக்கு வழிவகுக்குமா? விவாகரத்து மாற்றம் லஞ்சம் பிறகு பரிசு பரிசு பிறகு லஞ்சம் நல்ல உடன்படிக்கை எப்பொழுதும் மீறப்படாமல் இருக்கனுமா? கெட்ட உடன்பாடு நல்ல உடன்படிக்கைக்கு உறவை இட்டுச்செல்லுமா? அன்னதானம் பூமியில் எங்கெங்கோ விளைகிற, உணவுகளை விலை கொடுத்து வாங்கி, அதை நன்கு சமைத்து உணவு பரிமாறி, உணவு சாப்பிட்ட இலையை எடுத்து போடும் வரைக்கும், அக்கறைக்காட்டி கோயில் மற்றும் சமூக சிறப்பு நிகழ்ச்சியாக, அன்னதானம் மக்களுக்கு செய்கிறோம். நமக்கு நன்மை செய்யும் இயற்கைக்கும் அன்னதானம் செய்யக்கூடாதா? இயற்கை கழிவுகளை எருவாக உண்டு சக்தியாக மாற்றினால்தான் நமக்கு நல்லது பூமியில் எங்கெங்கோ கிடக்கிற, கழிவுகளை, இயற்கை தானாகவே சக்தியாக மாற்றிக் கொள்வது, சிரமம். ஆகவே. இந்த முடியாத நிலைமையை. கருத்தில் கொண்டு. சக்தியாக மாற்றி. நமக்கு நன்மைபயக்கும்படி, இயற்க்கை ஏற்கும் அளவுக்கு, தேவையானவைகளை கூட்டி சேர்த்து சமைத்து, திருப்தி ஏற்படும் அளவுக்கு அக்கறைக்காட்டி இப்படிப்பட்ட அன்னதானம் இயற்கைக்கு போடலாமே? இப்படியெல்லாம் இயற்கையை நாம் கவனித்தால் அது சம்பாதித்து போடுவது நமக்குத்தான். இந்த தர்மம் தலைகாக்கும், நம்மை தழைக்க வைக்கும் அதில் சந்தேகமே இல்லை திறமை பிரதமரை தேர்ந்தெடுக்க அவர் திறமையானவரா? உங்கள் school டீச்சர் திறமையானவரா? நமக்கு சிக்கிச்சை அளிக்கும் doctor திறமையானவரா? தனக்கு வாதாடும் வக்கீல் திறமையானவரா? என்று திறமையானவரை தேர்ந்தெடுக்கும் நாம் மற்றவருக்கு உதவி செய்யும் நடவடிக்கையில், நமக்கு திறமை இருக்கா மற்றவரிடம் உதவி கேட்கும் நடவடிக்கையில், நமக்கு திறமை இருக்கா? போனா போகட்டும் என்று கருத வேண்டாம், போன போகட்டும் என்று, நெல், நமக்காக, தானாக விதைத்துகொண்டு, ஒரு பயிர், ஒரு மூட்டை விளைந்து, நமக்கு தருமா? உதவிக்கு, செய்ய திராணியிருக்கும்பொழுது செய்யாமலிராதே, நள்ளிரவில், வலி ஏற்பட்டு, திடீரென்று செய்யவேண்டிய ஆபரேஷன்-க்கு Rs 5000 குறைவுப்பட்டு இருந்தது . கையில் பணம் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர், எவ்வளவு பணம் வேண்டும் என்று ஆபரேஷன் செய்யவேண்டியவருக்காக, கேட்கிறார். ஆனால், அவர்களோ, நாளைக்கு பிளாட்டு வாங்க கொடுக்கவேண்டிய அட்வான்ஸ் Rs 5000 த்தையும் சேர்த்து மறைமுகமாக Rs 10000 கேட்கிறார். உதவி செய்யும், பக்கத்து வீடுக்காரரிரடம், Rs 4000 இரு வாரத்திற்கான வீட்டு செலவிற்கும், Rs 6500 நகை ஏலத்தை தவிர்க்க, கட்டவேண்டிய பணமும்தான், உள்ளது. ஆனால், உடல் நிலை சரியில்லாதவருக்கு, கொடுப்பதைவிட, தன் நகை, ஏலமாவது பெரிதல்லவென்று, Rs 10000த்தை, கொடுத்து விடுகிறார். மீதியிருந்த Rs 500 ஐ இரண்டு நாட்களுக்கு, பார்த்துக்கொண்டு, பிறகு, பெரட்டிக்கொள்ளலாம், என்றுருக்கிறார். கடன் வாங்கியவர் Rs 10000 மட்டுமே, இருநாள் கழித்து கொடுக்கிறார். இதில் கொஞ்சம் நன்மையிலும், தேவையில்லாத நஷ்டம், Rs 10000 உதவி செய்தவருக்கு ஏற்படுகிறது, நகை ஏலம் போனதால். ஆகவே, உதவி செய்ய நினைப்பவர், உதவி கேட்பவருக்கு எவ்வளுவு பணம் போதும், எவ்வளவு தூரம் அவர் சமாளிப்பார், என்று கணித்து கொடுக்கணும், கையில் கொஞ்சம், பணம் கைவசம் இருந்தால், வேறு, இக்காட்டான சூழலுக்கு, பிறருக்கும், தனக்கும் உதவுமே அல்லவா, இவ்வாறு செய்ய திராணியிருக்கும் பொழுது, அப்படியே செய்யலாம் என்பதை, செய்யாமலிருக்காதீங்க. உதவி கேட்க, நினைப்பவர், உதவி கொடுப்பவருக்கு, அதிக சங்கடம் கொடுக்காமலும், ஒரே நபருக்கு, சுமையை கொடுக்காமல், இரண்டு, மூன்று பேரை, அணுகி, அவர்களிடம் சேகரித்து, சுமை பகிர்ந்துக்கொண்டு, இந்த சிறு உதவியே, பெரிது, மீதியை, நம் திறனால் சமாளித்துக்கொள்ளலாம், என்று தன் திராணிகேற்று, உதவி பெறுவதை செய்யாமலிருக்காதீங்க. கொஞ்ச நேரம் வேலை செய்கிறோம், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறோம். அதுபோல் உதவி பெறுவதிலும், உதவி செய்வதிலும் யதார்த்தமாய் எப்பொழுதும் இராமால், அவ்வப்பொழுது, இது போல் திறமைக்கென்று, கொஞ்சம் கெடுபிடியாகவும், இருப்போம். உலகம் போற போக்கை, கண்டு, கெடுபிடியை அதிகப்படுத்த வேண்டிய, சூழல் இருந்தால், அவ்வாறே செய்வோம். வற்றாத நீரூற்று போல், எல்லாம் செழிக்கும் உலகத்திற்கு, நாம் சென்றால், அங்கு, அந்த சூழலுக்கு, ஏற்ற நடவடிக்கையை எடுப்போமா? நாம் விழித்து இப்படிப்பட்டவைகளை பார்க்கிறோமே? விழித்திரு, நன்மை போரிடு. சோம்பலும், ஊதாரியுமான தீமையான திறமைக்கு எப்படிப்பட்ட திறமையான பரிதாபம் வேண்டும். திறமை உதவி கேட்பவர், மற்றவருக்கு, சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த உதவி கிடைத்தால், போதும், நாம் சமாளித்துக்கொள்ளலாம், என்று குறைவாக கேட்பதில், திறமைக்காட்ட வேண்டும். எந்த அரசு, சலுகைகளை அதிகம் தருகிறதோ, அது நல்ல அரசு. இன்னும் சலுகைகளையே, சார்ந்திருக்கிறோம். என்றால், நம் திறமை வளரவில்லை, என்பதா? இல்லை, ஏமாற்றி, சுகபோக போதைக்கு, அடிமையா? அரசு, இலவசம் அறிவிப்பதில், தங்களுடைய பங்களிப்பில், அரசுக்கு, எந்தவகையில் உதவுகிறோம். இந்த உதவி, போதும், நாங்கள் முன்னேறி விட்டோம். முன்னேறியவர்கள் இப்படி சொல்வது உண்டா? வரிகளை ஒழுங்காக செலுத்துவதோடு, முன்னேற்றமாய், அரசுக்கு நிதி உதவியெல்லாம் செய்கிறோமா? எங்கே? அரசு, நிர்ணயிக்கிற வரிகளை கட்டாமல், அல்லவா ஏமாற்ற, நினைக்கிறோம். மற்றவருக்கு, உதவி செய்வதிலும், மற்றவரிடமிருந்து உதவி பெறுவதிலும், தாராளம் காட்டும் சூழலும் உண்டு. அனாதை சிறுவருக்கு, ஒரு பெரும் செல்வந்தர், சில நடவடிக்கையில் தாராளமாய் கல்வி பயில உதவலாம், தாராளமாய் நல்ல ஆரோக்கியத்திற்கு உதவலாம். சிறப்பு தேர்வுக்கும், பயிற்சிக்கும் திறமை வெளிப்படுவதற்காக கெடுபிடி காட்டலாம். health is wealth உலகிற்கு நன்மை கிடைக்கும் ஆராய்ச்சிக்கு, தாராளமாய் அரசிடமோ, மற்றவரிடமோ உதவி கேட்கலாம். ஆராய்ச்சின் போது குறைந்த செலவில் செய்து முடிக்கும் உக்திக்கு வழி தேடலாம். தாராளமாய் உதவி செய்யவோ, உதவி பெறவோ செழிப்பின் செயல்பாட்டை கருத்தில்கொண்டு சில நடவடிக்கைக்குச் செய்யலாம். கெடுபிடியும் – தாராளமும், தாராளமாய் விருந்து வைக்க, கெடுபிடியாய் சம்பாதித்து, செல்வத்தை சேமித்த்திருக்கனும். அல்லது தாராளமாய் விருந்து வைத்துவிட்டு கெடுபிடியாய் சம்பாதித்து கடனை அடைக்கலாம். கெடுபிடி, தாராளத்தை பயன்படுத்தி, நாம் பல விருந்துகளை கலந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விருந்து, ஆரோக்கிய வாழ்க்கைக்கான விருந்து, கல்வி கற்கும் விருந்து, விளையாட்டு விருந்து, சிந்திக்கும் விருந்து, பக்தி விருந்து, ஆராய்ச்சி விருந்து, உலகை அனுபவிக்கும் விருந்து, மன மகிழ்ச்சி விருந்து, வாதாடும் விருந்து, சிகிச்சையளிக்கும் விருந்து, உலகை வெறுக்கும் விருந்து (தீமையை) இது போன்ற நல்ல விருந்துகள். இசை விருந்து, நடன விருந்து, நகைச்சுவை விருந்து என்றெல்லாம் இருக்கும்பொழுது மேற்கண்ட விருந்துகள் இருக்கக்கூடாதா? துன்பம் பிறர் துன்பத்தை, தனது துன்பமாக, கருதி, பிறருக்கு உதவவேண்டும் என்பர். தண்ணியடிக்கிறவர், மதுபான பாட்டிலை, திறக்க முடியாமல், வேதனைபடுகிறார், என்றால், என்ன செய்வது? சிலது, நல்லது செய்கிறத்திற்கும், துன்பம் வரும். சிலது, கெட்டது செய்கிறத்திற்கும் துன்பம் வரும். இப்பொழுது, பிறர் துன்பத்தை தனது துன்பமாக கருதி பிறருக்கு உதவ வேண்டும் என்றால் என்ன செய்வது? இடம், பொருள், ஏவல் அறிந்து உதவவேண்டும். கெட்டவருக்கு அவசர நடவடிக்கையாக (அவசர சிகிச்சை போன்று) அவருடைய விருப்பத்திற்கு துணை சென்றோ, துணை போகமலோ சூழலை நன்மைக்கு ஏதுவாக மாற்றி முடிவை நல்லதாக அமைக்க வேண்டும். தன்னை, நேசிப்பது போல, பிறரை நேசிக்காதே – ஒருவேளை அயோக்கியராக இருந்தால். தன்னைப்போல, பிறரும் அயோக்கியராக மாற்ற நினைக்கும், நேசம் வேண்டாம். தன்னை நேசிப்பது போல, பிறரை எவ்வகையில் நேசிப்பது? தான், நல்லவனாக இருந்து, மற்றவருக்கு, நல்லது செய்ய, நினைக்க வேண்டும். தன்னை நேசிப்பது போல பிறரை நேசி என்ற அன்புள்ள வார்த்தையை, தான் நேசித்தது போல, பிறரும், இந்த நேசமுள்ள வார்த்தையை, நேசிப்பதற்கு, உதவவேண்டும். தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பர். மற்றவரை, நேசிக்க உதவுவதற்காக, முதலில், நாம் உடல் ஆரோக்கியத்திலும், நல்ல மனதிலும், அறிவிலும், ஆற்றலிலும் தயாராக வேண்டும். மற்றவருக்கு உதவும் அளவுக்கு தன்னை தயார்படுத்தி அதற்கு தன்னை நேசிக்க வேண்டும். தனக்கு முதலிடமும், பிறரை நேசிப்பதற்கு இரண்டாம் இடமும் என்று அன்பில் வேற்றுமை இல்லை. தன்னை நேசிப்பது பிறருக்கு, பிறரை நேசிப்பது தனக்கு. ஒற்றுமையான அன்பு. நாம் எண்ணுவது சரியா? நம் தேவையை, பெறுவதற்கு, மூர்க்க கோபம் அடைவது, சரியா? கெஞ்சி கேட்பது, சரியா? கடவுள் பிரச்சனைகளை செய்யும் அரக்கர்களையும், பிசாசுகளையும் மூர்க்க கோபம் கொண்டுதான் அடக்க வேண்டுமா? கெஞ்சி கேட்டுக்கொள்ளக்கூடாதா? கெஞ்சி கேட்பது, தவறு என்றால், நாம், கெஞ்சி கேட்பதை, கொலை குற்றம் போல, கருதியும், மூர்க்கத்தனமாய் அடித்து, உதைப்பது, கெஞ்சி கேட்பதை போல, சாதாரணமாய், குற்றம் இல்லாததை போல, கருத வேண்டியது தானே? கடவுள் கெஞ்சி கேட்பது அசிங்கம் நாம் மட்டும் கெஞ்சி கேட்பது சரியா? கடவுளுக்கு கொதித்து எழும், நியாயம் ஏற்றது, நாம் அடித்து, உதைத்து கொதித்து எழுவது தவறா? கொதித்து எழுவது பிசாசும், அரக்கர்களுமா? கடவுளுமா? பிறகு ஏன் கடவுள் இரக்கத்தை நம்மிடம் விரும்ப வேண்டும்? சிறு சேமிப்பு பிளேடால, கட் பண்ணி, எறிய வேண்டியது, கோடாரியால, வெட்டி எறியவேண்டிய, சூழலாகனுமா? விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்கு, செடியை அகற்றுவது போல, விதிகள் இருந்தால், அதை அகற்றிவிட்டு, மீறுதல்களை நிகழ்த்துவது சுலபம். மீறுதல்களை, நிகழ்த்துவது, கோடாரியால வெட்டி, அகற்றுவதுபோல, கடினமான விதியாக்கிவிட்டால், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும், அல்லவா? ஒரு ஆட்சி வந்தால், மதுபானத்தை ஆதரிப்பது. வேறு ஆட்சி வந்தால், மதுபானத்தை தடை பண்ணுவது. 50 வருடத்திருக்கு, மதுபானத்தை ஆதரித்தால், அரசுக்கு வருமானம், குடிமக்களிடம், கொடுமைகள் அதிகரிப்பு. 50 வருடத்திற்கு, மதுபானத்தை, தடை பண்ணினால், கள்ளச்சாராயத்திற்கும், நல்ல வழி. கொடுமைகளும் உண்டு. இதுபோல சூழல்தான், 5 வருட ஆட்சி மாற்றங்களில், மதுபானத்தை கொண்டுவருவதும், தடைபண்ணுவதும் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாமல் போகிறது. சாக் ட்ரீட்மென்ட் வேணும். 4 மாதத்திற்கு, ஒருமுறை 10 நாட்கள், குறிப்பிட்ட பகுதிகள் வாரியாக, மதுபானத்தை தடை பண்ணுவது. 10 நாட்களுக்கு, கள்ளச்சாராயம் ஆரம்பித்து, செயல்படுத்துவது, கடினம். கட்டாயம், மதுபானம் வேண்டும் என்றால், வெகு தூரத்தில் மதுபானம், தடை பண்ணாத பகுதிகளுக்கு, சென்றுதான் பெறமுடியும். இது கோடாரியால், வெட்டி அகற்றுவது, போல் கடினம். கொஞ்ச நாளைக்கு பிறகு 10 நாளை ஈடுக்கட்டி, மதுபான விலை உயர்த்துவது. 15 நாளைக்கு, பெட்ரோல் விலையை, நல்ல விலைக்கு, உயர்த்த வேண்டும். பிறகு, தற்பொழுது உள்ள, விலையைபோல் குறைக்கவேண்டும். அந்த 15 நாளைக்கு, வேண்டிய வருமானத்திற்கு, வழி, கடன் வாங்கலாம், எதையாவது விற்கலாம், சமாளித்துக் கொள்ளலாம். கோர்ட் வேலைநாளாக இருந்தால், கெட்ட செல்வாக்கு உள்ளவர்கள், ஜெயிலில் ஒரு நாள்கூட இல்லாமல், தான் செய்த குற்றத்திற்கும், சுக போகம், அனுபவிப்பார்கள். ஆகவே கோர்ட் விடுமுறை நாள், வரும் நாட்களாய் பார்த்து, சிறு பொழுதாவது காவல்துறை தண்டிப்பது போல், மக்களுக்கு வலி கொடுத்து நல்ல வழி அமைப்போம். ஒவ்வொரு வருடத்திக்கும், காவேரி பிரச்சனையா, அதிரடியாக, லாட்டரி சீட்டு குலுக்கி போடுவது போல், public கா சீட்டு குலுக்கி போட்டு, எதுவருதோ, அதை ஆதரிப்பது, போல் செய்யலாமே. அரசுக்கு நெருக்கடி வராமல் – நான் இந்த மக்களுக்கு ஆதரவா, அந்த மக்களுக்கு ஆதரவா என்ற பிரச்சனை வராது. இலவசக்கல்வி, கல்வி வங்கிக்கடன் எல்லாம் பெற்று சம்பாதிக்கும் நிலையில், மாணவர்கள், அரசுக்கு செய்யவேண்டுமானால், முன்ன, பின்ன பார்க்கிறார்கள். நம்ப கெடு, பிடி செய்து, சொத்து சேர்க்கலாம், அரசு, சொத்து சேர்க்க கெடு, பிடி செய்தால், கூடாதா? அரசு நல்ல வழிக்கு சொத்து சேர்க்க நாம் விரும்புகிறோமா? இப்படி செயல்படுத்துவதிலும் சில சிரமங்கள், கஷ்டங்கள் வரும். எந்த நிகழ்வு என்றாலும் 100 சதவீதம் நன்மை கிடைப்பது அரிது. சுத்த தங்கம் ஒரு விதத்தில் நல்லது அல்ல அல்லவா? சுத்த தங்கத்தை ஒரு முறை வேண்டும் என்றால் பார்த்துகொள். நடைமுறைக்கு மாற்றம் தேவைப்படும். புகுந்த வீடு நம்முடைய வாழ்க்கையை, கடவுளிடம், குத்தகைக்கு பெற்றுள்ளோம். நாம், குத்தகைதாரர் கடவுளுக்கு, குத்தகை, படியளக்க வேண்டியிருக்கிறது. அதனால், நமக்கு, கிடைத்திருப்பதெல்லாம் வரையறுக்கப்பட்டதாய், இருக்கிறது. நாம் பெறுகிற உணவு, உடை, உரைவிடத்திற்க்காக பயன்படுத்தப்படும், அறிவின் படியை, கடவுள் கவனித்து, முடிவில்லா வாழ்விற்கு, இன்னும் பல நல்ல திட்டங்களை, நமக்கு நிர்ணயிக்கிறார். நமக்கு, தாய், தந்தைதான் சொத்து சேர்த்து வைப்பார்களா, நமக்கு அருமையான, சொத்துக்களை, இறைவன் வைத்திருக்கிறார் அது, நம்மிடம் காட்டும் பிரியம், எவ்வளவு எல்லையற்றது, என்று நாம் காணத்தானே, போகிறோம். பெற்றோர், நம் பிறப்புக்கு காரணம், இறைவனோ அதற்கு ஆதி காரணம். ஆகவே அதிக பிரியம் உண்டு. ஏழை, நோய் போன்றவையெல்லாம், நிரந்தரம் அல்ல. நம் இறைவன், வானத்தை போல, நமக்கு விரிவான, நல் வாழ்வை தருவார். பொல்லாத நோய்களா, பொல்லாத பிரச்சனைகளா, இவைகள் எல்லாம் எவ்வளவு காலத்திற்கு, நாம் இவ்வுலக வாழ்க்கையில், இறந்த பிறகும், நம்மோடு வாழ போகிறதா. கொஞ்ச நாள் இந்த பிரச்சனைகள் நம்மோடு இருக்கிறது. ஆகவே, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க சாக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி செய்தால் முடிவில்லா வாழ்விலும் விவரம் குறைந்த நிலையிலிருந்து நாம் வளரவேண்டி வரும். காலத்தை பிரோஜன படுத்திக்கொள்வோமா? திடீர், திடீர் என்று, சடென் பிரேக், போட வேண்டுமா. மேடு, பள்ளங்களில், தண்ணீர் இயல்பாக ஓடி, நிற்பது போல. இவ்வுலக வாழ்க்கையை கண்டு நொந்து போகவேண்டாம். அதை கடந்து நிற்போம் சமாதான போர் நல்லது செய்வதிலும், இன்பமும், துன்பமும் இருக்கு. கெட்டது செய்வதிலும், இன்பமும், துன்பமும் இருக்கு. கெட்டது செய்தால், நாம் அதை தடுப்பதற்கு, போராடுகிறோம். கெட்டது நடப்பதற்கு, சிரமத்தை கொடுப்பதால், அது நடக்காமல் தடுக்கப்படுகிறது. நமக்கு போராட்டம், பாடுகள், துன்பங்கள், ஓய்வு, உற்சாகம், மகிழ்ச்சி இருப்பதுபோல், தீமை நடப்பதற்கும் போராட்டம், பாடுகள், துன்பங்கள், ஓய்வு, உற்சாகம், மகிழ்ச்சி இருக்கும். தீமை செய்யும், அட நம்ப பிசாசுக்கும், கண்ணீர், துன்பம், தொந்தரவு, மகிழ்ச்சி உண்டு. அதையும் நினைச்சி பாருங்கள். தற்பொழுது, பூமியில் நன்மையின், ஆயுள் குறைவது அதிகரிக்கிறது. தீமையின், ஆயுள் நீள்வது, அதிகரித்திருக்கிறது. வருத்தப்பட வேண்டியது யாரு? வருத்தப்படுகிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள் என்று நன்மையின் குரலும் அழைக்கிறது, தீமையின் குரலும் வருத்தப்படுகிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள், என்றும் அழைக்கிறது. விஞ்ஞானம் என்ன கூறுகிறது. ஒவ்வொரு விசைக்கும், சமமான எதிர் விசை, ஒன்று உண்டு என்கிறது. ஆகவே பிசாசுக்கும் கஷ்டம், நல்லது, கெட்டது, சந்தோசம் இருக்கிறது, இதை சார்ந்த, தீமை செய்வோருக்கும், உண்டு. நன்மை செய்வோருக்கும், அந்த சமமான எதிர் விசை, ஒன்று உண்டு. உணவு சக்தியளிப்பது, குறைந்து, கழிவாகிறது, இந்த தீமை, கழிவு உணவு, உரமாகி, தீமை இறந்து, மீண்டும், நல் விதை சேர்ந்து, புத்துயிர் பெற்று, வளர்ந்து உணவாகிறது. கழிவு உணவோ தீமைக்கு. நமக்கு, தேவை நிதானம். அந்த, நிதானத்தில் normal வேண்டும். நமக்கு, எப்பொழுதும் ரொம்ப சந்தோசமே, வேண்டும் என்று கனவு காண, வேண்டாம். தீமை செய்வோருக்கும், நன்மை செய்வோருக்கும் ஞானம் வளர்க்கப்பட்டு, குறைவு ஏற்பட்டால் லேசான வலி, உணர்த்தப்பட்டு, அந்த வலியிலே குறைவு அகற்றப்பட வேண்டும். நிறைவு என்பது தேனி தேனிலேயே, விழுந்து, சாவது போல் அல்லாமல், லேசான சந்தோசமே, உணர்ந்து, அடுத்த களைப்பு ஆற வேண்டும். ஓடினாலும், களைப்படையார் என்பவர். களைப்பு மிகுதிக்கு சென்று, களைப்புக்கு அழுத்தத்தையும், அர்த்தத்தையும் கொடுக்கமால், தன் களைப்பில், தன்னோடு ஒட்டிவரும் மகிழ்ச்சியால் தழுவப்படுவது தொடரப்படும், போராட்டம், தொடர வேண்டும். இப்பொழுது, சுற்றுச்சூழல் சீர்கேட்டை, பாருங்கள் தீமை செய்யும் சில தேனி, மிகுந்த தேனிலே விழுந்து சந்தோசம் முறியபோகிறது. வாருங்கள் – தீமை செய்வோரும், நன்மை செய்வோரும் சமநிலை நிதானம் பெறுவோம். உடன்பாடு உடைய உடன்படிக்கை. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை ஒன்று உண்டு. அதற்கு இதை கவனியுங்கள்-லேசான வலி – லேசான சந்தோசம். துயரத்தின் அதிர்ச்சியால் இறப்பு. சந்தோஷ அதிர்ச்சியால் இறப்பு. அப்படியென்றால் normal நிதானம். திருமண அழைப்பிதழ் திருமண அழைப்பிதழ்களில் பக்கம், பக்கமா திருமணமான மாமன், மச்சான் பெயர்களை போடுவதற்கு பதிலாக உறவினர்களிலும், நட்பு ரீதியிலும் 18 வயதினருக்கு, மேல் உள்ள திருமணத்தை எதிர் நோக்கியிருக்கிற ஆண்கள், பெண்களை திருமணம் மற்றும் மங்கள சடங்கு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் குறிப்பிடலாமே. திருமணத்தை எதிர்பார்த்திருக்கும் செல்விகள், செல்வங்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வயது, படிப்பு, வேலை, சிறப்புகளை பத்திரிக்கைகளில் குறிப்பிடலாமே. நமக்கு அழைப்பிதல் வைப்பவர் நம்மை அறிந்தவராகத்தான் பெரும்பாலும் இருப்பர். அழைப்பிதல் வைப்பவரின் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் நாம் அறிந்திருக்கமாட்டோம். அழைப்பிதல் வைத்தவரின் வழி நாம் அறியாத சொந்தக்காரர்களை அறிந்து நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வரங்களை அமைக்கலாமே. மேலும் பத்திரிக்கைகளை நல்ல தகவல் தொடர்பாக பயன்படுத்தினால் என்ன. அவர்கள் பகுதியில் உள்ள சிறப்புகளை அறிந்து நாம் business அல்லது சமூக நலன்கள் திருமணங்கள் இவைகளை அமைப்பதில் பத்திரிக்கைகளை பயன்படுத்தலாமே. இன்னொரு வாய்ப்பு, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம், நாம் சமீப வருடமாக, சேகரித்து வைத்திருக்கும் இதுபோல் குறிப்பிட்டிருக்கும் எல்லா பத்திரிக்கைகளையும் கவனிக்க செய்து, விருந்தினர் வரங்களை, நன்மைகளை தேர்தெடுக்கும் நல்ல தீர்மானம் எடுக்க ஒரு எளிய வழி பிறக்குமே. விரதம் கடவுளிடம் எது, எதற்காக எப்படி விரதம் இருக்கலாம்? பொதுவாக, விரதம் என்று சொன்னால், உணவு உண்ணாமல், சிறிது வேளைக்கு இருப்பார்கள். தவிர்த்து விடுவதில் விரதம், என்று இருப்பது போல். சேர்த்து கொள்வதில் சேர்ப்பிதம், என்று இருக்கா? தவிர்த்து விடும்பொழுது, வேறு செயலுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறது. சேர்த்துக்கொள்ளும்பொழுது, வேறு செயல் தவிர்க்கப்படுகிறது. எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்பார்கள். உலக நிகழ்வுகளில் மாற்றத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு ஆகவே, விரதம் என்றால் உணவை நிறுத்துகிறோம். வயிற்றுக்கு சிறிது உணவை நிப்பாட்டும் பொழுது சில நன்மைகள் இருப்பது போல் உணவை ஆதரித்து சேர்ப்பிதம் செய்யும்பொழுது சில நன்மைகள் இருக்குமே? ஒருவர், படிப்பு வயதிலிருந்து சாகும் வரை, கல்வியை கற்பதில் மட்டும், இருந்தால் பிரோயஜனம் உண்டா? கொஞ்சம் கல்விக் கற்ப்பதை பட்டினி போட்டு (விரதம்) கற்றதை மற்றவருக்கு சொல்லிக்கொடுத்தோ, நடைமுறை உலக செயல்களுக்கு பயன்படுத்தி (சேர்ப்பிதம்) சேர்த்துக்கொண்டால் தானே, நல்லது. எல்லாரும் டீச்சருக்கு படிச்சிட்டோ, டாக்டருக்கு படிச்சிட்டோ, வக்கீலுக்கு படிச்சிட்டு வேலைக்கு பட்டினி (விரதம்) போட்டால் பிரோயஜனம் உண்டா? சிலர் கடவுளிடம், சில வேண்டுதல், நடைபெறுவதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை, இவைகளை உண்ணமாட்டேன், சில செயலை செய்யமாட்டேன், என்று பொருத்தனை செய்வர். எல்லாரும், ஏதோ ஒரு காய்கறியை, உண்ண மாட்டேன் (விரதம்) என்று கடவுளிடம் பொருத்தனை செய்தால், அந்த காய்கறி உலகில் வாழ்வதற்கு, ஆதரவு இல்லாமல் அழிந்துவிட வாய்ப்பு உண்டே. (இரத்தத்தை அதின் உயிரோடே புசிக்கக்கூடாது என்றதன் பொருளான, இரத்த உறவான இன விருத்தியை அழிக்காதே) விரதம் இருப்பதுபோல், கடவுளிடம் (சேர்ப்பிதம்) செய்து, பொருத்தனை செய்யலாமே? அரிதாக கிடைக்கும் பழங்களை, வாங்கி பயன்படுத்துவதை ஆதரிப்பது. (சேர்ப்பிதம்) உலகில் அரிதான கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி இவைகளை நல்வழியில் பயன்படுத்தும் பொருத்தனை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். (சேர்ப்பிதம்) நோயாளியின் விரதம், ஆரோக்கியத்தின் சேர்ப்பிதம். ஆரோக்கியத்தின் விரதம், நோயின் சேர்ப்பிதம். நோயின் சேர்ப்பிதம், ஆரோக்கியத்தின் விரதம். ஆரோக்கியத்தின் சேர்ப்பிதம், நோயின் விரதம். விளங்காத சிலைகள் தமிழ் மட்டுமே தெரிந்தவரிடம், Please Love others என்றால், அவர் ஒன்றும் புரியாமல், சிலை மாதிரி நிற்பார். Please Love others என்பதன் அர்த்தம், உயிர் பெரும்படி, இந்த புரியாத சிலை நிலையை, அகற்றவேண்டும். அறிவில் உணராத, இந்த சிலை நிலையை, உடைத்து மூடத்தனத்தை, அகற்ற வேண்டும். கணவன், மனைவிக்குள்ளார சண்டை, அதற்காக வீட்டில் இருந்த இரண்டு சிலையை, உடைத்தார்கள். சண்டை தீரலா, மீதியிருந்த 3 சிலையையும் உடைத்து பார்த்தார்கள், சண்டை தீரல. தவறு எங்கே நிகழ்ந்தது என்றால், சண்டை வந்தால், நம்மிடம் உள்ள சிலையை எல்லாம், உடைத்திடனும், என்று ஒரு பெரியவர், சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது, மனதில் இருக்கும், உயிரில்லாமல் சிலை போல் உள்ள, விட்டுகொடுக்கும் மனப்பான்மை இன்மை, என்ற சிலையை அகற்றவேண்டும், என்று சொன்னதை, புரிந்துக்கொள்ளாமல் சண்டை வந்தால், சிலையை உடைத்திடனும், என்று புரிந்துக்கொண்டு அவ்வாறு, அந்த தம்பதியினர் செய்தும், சண்டை தீரவில்லை. சோற்றை என்ன செய்யலாம், சாப்பிடலாம். பசிக்கலனா சாப்பிடமாட்டோம். கல்லை சாப்பிடுவோமா? வித்தியாசம் தெரியிதுல, அப்ப எந்த சிலையை அகற்றினால், பிரச்சனை தீரும். கல்லை சாப்பிடலாம், ஆம் உப்புக்கல்லை குழம்பில் கலந்து சாப்பிடலாம். சொல்லி முடிக்கிறத்துக்குள்ள, அவசரபட்டா எப்படி? அரை கிணறு தாண்டுனா, எப்படி? பிரியாணி செய்றத, முழுசா கற்றுக்கொடுக்கிறதற்குள்ள, பிரயாணி செஞ்சி, சரியா வரலானா, எப்படி? கலியாணம் நடந்து, அடுத்த நாளே, பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா? அப்பாக்கிட்ட, மீனை கேட்டா, கல்லையா கொடுப்பாரு? எந்த சிலை ….. மாமிச சிந்தை இறப்பு. அறிவின் சிந்தனையோ ஜீவன். மூளை உள்ள அறிவுதான் controller ,நாம் அறிவோடு பேசிக்கொள்ளாமல், மூளை இல்லாமல் காலும், காலும், கையும், கையும் பேசிக்கொள்ளுமா. மூளை உள்ள தலையும், உடம்பும் தனி, தனியாக இருந்தால் முண்டம். ஒப்பிட்டு பார்க்க இருவகை சிலையும் இருக்கிறது. மனதிற்கு சிலை என்றால் எப்படி புரியும். கடவுள் மண்ணால் மட்டும், மனிதனை உருவாக்கப்பட்டால், அது மண் மனிதன் அல்லது மண் சிலை, அதற்கு உயிர் தந்ததும், மனிதனாக முழுமை பெற்றான். உயிரை தூக்கி, எறிந்ததும் மண்ணாகிறான். உயிரை தூக்கி எறிந்தது காணும் சிலைகள். அதை அறிவில் கண்டுக்கொண்டது மனம். மனம் உயிர் பெறவில்லை, என்றால் சிலை, என்பதை கூட அறியமுடியாது. ஆகவே சிலைகளின், வெளிப்பாட்டை கற்றுக்கொள்ளாமல், மனம் அதற்குரிய அறிவில், உயிர் பெரும் கருவியாக சிலை இருக்காது. அறிவு கனவில், சிலையை மோதி உடைக்க வாருங்கள். சிலை போல எழுத்தும், அர்த்த வெளிப்பாட்டு கருவி. அறிவிற்கு உயிரூட்டும் கருவிகள் என்னென்ன? மனதில் சிலை நிலையில் உள்ள இரக்கம், அறிவு, தயவு, அன்பு, நீடிய பொறுமை இவைகளுக்கு உயிரூட்டி, இறைவன் மண்ணால் செய்து உயிரூட்டி மனிதனாக்கியது போல. உள்ளத்தின் மனிதனை உயிராக்கி இரக்கம், அன்பு வளர்ந்து இறைபணி செய்வோம். விளங்காத சிலைகள் நல் வார்த்தைகளைய் தொகுக்கும்பொழுது, எடுத்த எடுப்பிலேயே, சுத்த நல்ல சொற்கள் கிடைத்ததா? நல் வார்த்தை, சொற்களை உருவாக்கும்பொழுது, ஏழு தரம் புடமிடப்பட்டது ஏன்? ஏழு தரம் புடமிடப்பட்டது என்றால், புடமிடும்போழுது, வடிக்கப்பட்ட எத்தனையோ சொற்கள், சரியில்லை என்று, அகற்றப்பட்டிருக்க வேண்டுமே. சொற்கள் அடங்கிய, கருத்தை தெரிவிற்கும், கருவிகளான எழுத்துக்கள், புடமிடப்படும் பொழுது, வேண்டாத எழுத்துக்கள் அகற்றப்பட்டது போல, நன்மை கருத்தை தெரிவிக்கும், கருவிகளான சிலைகளும், புடமிடப்புடும் சூழல் எழும் பொழுது, வேண்டாத சிலைகள், அகற்றப்பட வேண்டுமே. கழிவறையில் ஆண்கள், பெண்கள் என்று எழுதியிருக்கும்பொழுது ஆண், பெண் படமும் வரையப்பட்டிருப்பது ஏன்? மனுக்களில், போட்டோவும், கையெழுத்தும் தேவைப்படுவது ஏன்? அதுபோல் எழுத்துக்களும், சிலைகளும் (வரைபடம்) எழுத்துக்கள் அடங்கிய கெட்ட வார்த்தைகள் இல்லையா? கெட்ட வார்த்தைகள் வேண்டுமா? வேண்டாமா? மனுக்களில் மனுதாரர் போட்டோவுக்கு பதிலாக, வேறு போட்டோ தவறாக ஒட்டியிருந்தால் அதை அகற்றப்பட வேண்டுமே. அதுபோல், தவறான கருத்தை தெரிவிக்கும் சிலைகள் அகற்றப்பட வேண்டும் அல்லவா? அதுபோல்தான் வரலாற்றில் நடந்திருக்கனும், தேவைப்பட்டால் இனி நடத்திடனும். உருவங்கள் இல்லாத ஆலயங்கள், கை வேலையில் தானே கட்டப்பட்டது. கைவேலை மட்டும் இறைவன் ஆலயத்திற்கு என்றால், கைவேலை இறைவன் விரும்ப மாட்டாரா? கைவேலையில் ஆரம்பிக்கப்பட்டது பகுத்தறிவு வேலையில் முடிக்கப்பட வேண்டுமே? கருச்சிதைவு என்பது ஒரு குறைவு. நிறைவு கிடைக்கும்படி கனிதர இறைவன் விரும்புகிறார? மாணவர்கள் புத்தகத்தை வாங்கி படிக்காமல் பெட்டிக்குள் வைத்திருந்தால் என்ன சொல்வார்கள். சரியான சாம்பிராணியா நீனு. சாம்பிராணி போடுரத்துக்கா வாங்கின என்பார்கள். தானியங்கள், பழங்கள், காய்கறிகள் எல்லாம் விளைந்து பயன்ப்படுத்த மனிதர் இல்லாமல், மண்ணிலே விழுந்து, அழிவதால் பயன் என்ன? கைவேலை வரை பயணம் ஆகி, நின்றுவிட்ட நிலையில், வணங்கப் படுவதால் பலன் ஒன்றும் இல்லை அதன் வெளிப்பாடு, மனதில் உள்ள உள்ளத்தின் மனிதனுக்கு, பயன்பட்டு, மற்றவர்களுக்கு பலன் பகிரப்படும்பொழுது, நல்லது. என்றே இறைவன் விருப்பமாக இருக்குமோ. வெளிப்புறமும் உண்டு, உட்புறமும் உண்டு. ஒரு புறம் மட்டும் அமைவது, பலன் அல்ல. நல்வார்த்தை வெளிப்பாட்டு கருவிகள் (எழுத்தும், சிலையும்) பயன்படுத்தப்பட வேண்டும். யாருக்கும் தெரியாமல் காட்டுல கோயில் இருப்பதால் ஒன்றும் இல்லாத பிரோஜனத்தை போல வானத்திலும், பூமியிலும் உண்டு பண்ண வேண்டாம். தொழிநுட்ப வளர்ச்சி இப்பெல்லாம் technology வளர்ந்திடுச்சி- அந்த காலத்தில் எல்லாம் பிரச்சனை என்றால் வெட்டுவது, குத்துவது, அடிப்பது, உதைப்பது, உடைப்பது, எரிப்பது என்றெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு, இருந்தது. இப்ப technology வளர்ந்ததற்கு அப்பறமும், பிரச்சனையை தீர்ப்பதற்கு, இந்த மாதிரி செயல்கள் வேண்டாம். மன அறிவு technology வளர்ந்த இப்பொழுது, மனதில் எழும்பும் பிரச்சனைக்குரிய அறிவின்மை காரணிகளை, மனதிலிருந்து அகற்றிவிட்டாலே போதுமே. பிரச்சனையை கொண்டுவரும், மனதில் எழும்பும் சந்தேகங்கள், அறிவு நோய்கள், மூடத்தனங்கள் இவைகளை வெட்டிபோட்டாலே போதுமே. மனதில் தெளிவின்மை இறந்து, நல்வழிக்கு பிரச்சனையை தீர்ப்பதற்கான தெளிவு பிறந்து, வளர்ந்தாலே போதுமே. என்ன பேசிக்கிட்டே இருக்கும்பொழுது மேல கைவைக்கிறாயா. சும்மா செல்லம்மாதான்பா வச்சேன். இந்த விடை தான் கிடைக்கனும். சரியா? தவறா? சுற்றுச்சூழலை அசிங்கப்படுத்துறதுனா எங்கள் கடவுளுக்கு ரொம்பபிடிக்கும்? இத்தகைய கடவுளை வணங்குபவர் யார்? ஏதோ LIC கடனோ, கடன் இல்லாமலோ வீடு கட்டியாச்சி? 15, 20 வருடத்தில கடனும், வட்டியும் கட்டுவது முடிஞ்சிருச்சி? வாடகைக்கு விட்டு வருடா, வருடம் வாடகை பணத்தை மட்டும் அதிகப்படுத்துவது ஏன்? வாடகைக்கு விட்டு நீங்கள் செலவு பண்ணின தொகையெல்லாம் திரும்ப கிடைச்சிடுச்சி? இன்னுமா வாடகையை ஏத்திகிடனும், கொஞ்சம் வாடகையை வருட வருடம் குறைச்சி ஒரு நிலையான குறைந்தபட்ச வாடகையை வாங்கினா என்ன? கொஞ்சம் இரக்கத்தின்படி கொஞ்சம் லாபம்? இதுமாதிரி எல்லாம் இருக்கும்பொழுது இதுதானா அன்பு? LIC கடன் சீக்கிரமா முடியனும்? மற்றவர் செலுத்தும் வரவு வேகமா வளரனுமா? (நிபந்தனைக்கு உட்பட்டது) உங்க வீட்டுக்கு வாடகையை செலுத்துகிறவர்கள் உங்களையும் ஒரு LIC போல நினைச்சி அவ்வாடகையை செலுத்துவதா நினைக்கமாட்டீர்களா, அவ்வளவு வருடம் கட்டியும் benefit – நல்ல கம்பெனியில வேலைய temporary யாக நியமித்து பின்பு permanent பண்ணுவார்கள் ஆனால் வாடகைக்கு இருப்பவர்கள் எல்லாம் எப்பொழுதும் temporary appointment போலத்தான். போக, போக கொஞ்சம் வாடகையாவது குறைக்கலாம் அல்லவா? ஆனா LIC இடம் நீங்கள் கடன் வாங்கி, permanent ஆ வீட்டுக்கு சொந்தக்காரர். ரியல் எஸ்டேட்க்காரர்கள் 10 பிளாட்டு நல்ல விலைக்கு போன ஒரு பிளாட்டின் விலையை கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா? இதுமாதிரி திட்டங்கள் எல்லாம் எப்பொழுது செயல்படுத்தனும், தேவையின் competition குறையனும் (குடும்ப கட்டுப்பாடு போல) , சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்பு வரக்கூடாது. தற்போதைய சூழலில், ஏழைகள் பணக்காரர் ஆகக்கூடாது, இருக்கிற பணக்காரர்கள் பலர் ஏழையாக கொஞ்சம் குறைக்கப்படனும், இந்த நிலையில் கொஞ்சம் ஏழைகள் கொஞ்சம் பணக்காரராக உயரலாம். (புதிய பணக்காரர் பெருகுவதற்கு நெருக்கடியாகும் பட்சத்தில்) கார் பிசினஸ்ல பணக்காரர், ரியல் எஸ்டேட்ல பணக்காரர் என்றெல்லாம் இருப்பது போல, தற்போதைய ஏழைகள் எந்தெந்த நிலையில் பணக்காரர் போல ஆகலாம் என்றால் படிப்பில், மன அறிவில், அழிந்து போகும் நிலையில் உள்ள மரங்களை, மூலிகைகளை நல்ல நிலையில் பெருக்குவதில், குப்பைகளை நன்மையாக மாற்றுவதில், புதிய, புதிய கண்டுபிடிப்புகளில், ஆரோக்கியம் பராமரிப்பதில். பணக்காரர் பணக்காரர் என்றால் சொந்த வீடு, கார், பங்களா, ப்ரிட்ஜ், வாசிங் மெசின், டிவி, தங்க நகைகள், செல்லு, ஷோபா இப்படி அடிக்கி கொண்டு போவது என்றா புரிஞ்சிக்கணும், தற்பொழுது தட்டுபாடாய் உள்ள, சொந்தமாய் நிறைய மரங்கள், மூலிகை செடிகள், குப்பைகளை நல்ல நிலைக்கு மாற்றுவது, மனிதர்களிடம் அன்பாய் இருப்பது, இவைகளை வைத்திருப்பவர்கள் நல்ல பணக்காரர்கள். தற்போதைய நிலையில், இவைகள்தான் அதிக மதிப்புடையது. நல்ல விஷயம் தெரியாதவர்கள்தான் இது மதிப்பு குறைவானவை என்று முனு, முனுப்பார்கள். கார், பங்களா எல்லாம் விளையாட்டு அறிவுக்கு. (விளையாட்டு நல்லது, விளையாடுவதற்கு அதற்கென்று தகுதிகள் பெறவேண்டாமா?) 7 7. சிந்தனை நடைச்சாரம் Advanced Technology உலகத்தில் உள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அவர்கள், என்னையா ஒரே போரா இருக்கு. எனக்கு இந்த புதுவிதமான மாத்திரையை சாப்பிட வேண்டும்போல ஆசையா இருக்கு? சும்மா எப்படி சாப்பிடுவது, அதுக்கு நோய் வேண்டுமே கண்டுபிடித்த மாத்திரைக்கு வாழ்வு கொடுக்கனுமே அதற்காக, ஏற்ற வியாதியை அல்லது பாதிப்பை எனக்கு ஏற்படுத்தி தாங்க doctor , என்று சொல்லும் அளவிற்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுமா? அப்படி சவால் விடும் அளவிற்கு டெக்னாலஜி வளருமா? கனவு காணுங்கள். ஏங்க நீங்க வேர, மாத்திரை, சிகிச்சை போன்றவை எல்லாம் நல்ல லாபம் அடையவேண்டும் என்பதற்காக சீக்கிரம் குணப்படுத்தாம, குணப்படுத்த முடியாதுனும் சொல்லாம இழுபொறி செய்து, இழுத்தடிப்பது ஏன்? service எங்க இருக்கு, பிசினஸ் பண்ண வேண்டியவர்கள் எல்லாம், doctor ஆக மாறி, கொள்ளை லாபத்திற்காக நோயை ஊதி பெரிதுபடுத்தலாமா? இப்படியெல்லாம் பண்ணும்பொழுது எனக்கு நோய் வேண்டும் doctor என்று சவால் விட ஆரோக்கியசாலிகள் வருவார்களா? டாக்டர் கிட்ட விருந்துக்கா போறாங்க? உலகம் முழுவதும் ஒரே cooling ஆக இருக்கனும், A /C வைக்கனும் என்ற ஆசை மாறிபோய் warm ஆக இருக்க புரட்சி வருமா? சூரியனை கொஞ்சம் கிட்ட வர சொல்லுங்கப்பா வெப்பம் பத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்த கனவு நிஜமாகுமா? ஆதிமனிதன், தனக்கு எற்படுத்திக்கொடுத்த துணைவியினால்தான், இந்த பாவம் செய்யும்படி நேர்ந்தது என்று சாக்கு போக்கு சொல்ல ஆரம்பித்தபிறகுதான், தப்பிக்கும் வழிகளை தேட ஆரம்பித்திருக்கிறது இந்த உலகம், தவறை தான் பொறுப்பேற்றுக் கொள்ள முன் வரவில்லை, இந்த தவறுக்கு கடவுள் மேல பாரத்தை மறைமுகமாக வைத்த ஆதிமனிதன் போல தீர்வு வழிகளின் தேடல் வளர்ந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது தான் உருவாக்கிய மனிதன் பண்பட்டு கடவுளும், மனிதனும் பாரத்தை பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சி நெருக்கிவிட்டதால் பாரம் பஞ்சை சுமப்பது போல் மாறிவிடும். சுமை என்ற பெயர் பளுவாக தூக்கப்பட்டு, பளு தூக்கிய பலசாலியான பயில்வான்கள் ஆவார்களா இறைவனும், மனிதரும். மனிதன் தன் பங்கிற்கு சுமையை பகிர்ந்த நிலையில் தான் தெரிந்தது தன்னால் உண்டான தவறை தெளிவாக ஏற்றுக்கொண்டு விடுதலையடைந்தான் என்று. (ஞான அமர்வு பாரம்) உலகம் தோற்ற முதல் பல கட்டங்களாக கட்டுகள் அவிழ்க்கப்பட்டு விடுதலை வளரும் காலம் முன்னேறுகிறது. பயன்பட்டோர்களின் எண்ணிக்கை வித்தியாசபடலாம், தீர்வுகள் தோன்றிவிட்டனவே, எதிர்காலத்தில் இத்தீர்வுகள் அனைவரின் மீதும் அமரும். இறைவனே, நீர் எனக்கு துணையாக கொடுத்த கை, கால், கண், அறிவு போன்றவைகள் மூலம் பாவம் வந்தது-(பண்படாத நிலையில்). துணையை தெரிந்து, புரிந்து வாழ்க்கை நடத்தும்பொழுது எனக்கு துணையாக கிடைத்த கை, கால், கண், அறிவு இதன் மூலம் பாவம் நீங்கி சுகமானேன்-(பண்பட்ட நிலையில்) இடம், பொருள், ஏவல் இவைகளை பொறுத்து எதிர்ப்பவர் எதிரி அல்ல, எதிர்க்கும் காரணிகளே எதிரிகள். எதிர்க்கும் காரணிகள் எதிரி அல்ல. எதிர்ப்பவர்தான் எதிரி. ஏன்? ஆம். சுதந்திரமும், கட்டுப்பாடும் சேர்ந்தே இருப்பதால். இறைவனுக்கு பயப்படுதலே நன்மைக்கு ஆரம்பம். பயப்படாதே நான் உன் இறைவன். பயப்படனுமா? பயப்படக் கூடாதா? குரூப் தம்பதியர் ஒருவர் நான்கு மனைவியை திருமணம் செய்யக்கூடாதா? ஆனால், ஒருவருக்கு ஒவ்வொரு மனைவியும், சிறிது காலம் வாழ்ந்து விட்டு, இறந்தனர். அப்படி இறந்தவர்கள் மூன்று பேர். தற்பொழுது இருக்கும் நான்காவது மனைவி, உயிருடன் இருக்கிறார். இத்தகைய நிலையில், ஒருவருக்கு நான்கு மனைவி அமைவது, தவறல்ல என்று அதை நீதி என்கலாமா? (இறப்பு அல்லது விவாகரத்து) அப்படியென்றால், ஒருவருக்கு நான்கு மனைவி வேண்டும் என்றால், மூவர் பலியாக வேண்டுமா? ஒருவருக்கு ஒருத்தர் என்பதால் தான், ஒரு துணை அமைந்தாலும் இளமையாய், அழகாய், படிப்பிலும், சம்பாத்தியத்திலும், அந்தஸ்த்தையும் பார்த்து, நிறைய நிபந்தனைகள் நிறைவேறப்பட்டால், அவர்களை திருமணம் செய்து கொள்வது, தற்பொழுது வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற நடைமுறை வளர்த்துவிடுகின்றனர், மேலும் இதுபோன்றதை, ஆதரிப்பதையும் கௌரவம் என்று பலரை பலியாக்குகின்றனர். ஆம். கொஞ்சம் அழகில் குறைந்த, கொஞ்சம் குள்ளமாக உள்ள, கொஞ்சம் குண்டாக உள்ள, கொஞ்சம் படிப்பு ஏறாத, கொஞ்சம் வசதி குறைந்த, கொஞ்ச வரதட்சணை மட்டுமே கொடுக்க முடிந்த, படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காத, ஜாதகம் பொருந்தாத போன்ற எவ்வளவோ ஆண்கள், பெண்கள் திருமணம் ஆகாமல் பலியாக்கப்படுகின்றனறே. வயது அதிகமாகி குழந்தைகள் பிறக்காமல், திருமணம் தள்ளி போனதால், ஏதோ சரியில்லாத யாரோ ஒருவரை திருமணம் பண்ணி கஷ்டப்படும் சூழ்நிலை வருவது ஏன்? ஒருவருக்கு மூன்று மனைவிகள் இறந்து போனால்தான் நான்காவதை திருமணம் பண்ணி நான்கு மனைவி அமைந்தவர் என்று பெயர் பெறலாமா? சில தகுதிகள் இறந்துபோன நான்கு பேர் ஒருவருக்கு மனைவியாக வாழக்கூடாதா? தகுதிகள் குறைந்த, உயிருள்ள நிலையில் நான்கு மனைவி அமைந்தால் தவறா? திருமண வாழ்க்கைக்கா எவ்வளவோ கண்ணீர்கள் நடைமுறையில் பெருகி வருகிறதே? குழந்தைபிறப்பு – பாரம்பரிய ஜீன்கள் குழந்தைக்கு வருகிறது, அக்காலத்தில் 40, 50 வயது வரை குழந்தைகள் பிறக்கும், அப்பொழுது மனப்பக்குவம் அடைந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளாக கடைசி தம்பி, தங்கைகள் இருப்பார்கள். அதனால் சமூகத்தில் உடல்பக்குவம் மட்டுமே பெற்ற நிலையில் குழந்தைகளை பெற்ற பெற்றோராகவும், மனபக்குவம் சேர்ந்த நிலையில் குழந்தைகளை பெற்ற பெற்றோராகவும் இருந்ததால் குழந்தை பிறப்பு விதைகள் வீரியமாய் உடல், மனம் பக்குவம் கலக்கப்பட்டு சமுதாயம் உருவெடுத்தது தற்பொழுது அதற்கு பாதிப்புகள் பெருகிவருகிறது. உடல் பக்குவம் மட்டுமே பெற்ற பெற்றோர்களின் குழந்தைகள்தான் பெருகி வருகிறது. சுக பிரசவங்கள் குறைந்து வருகிறது, பல சிக்கல்கள் ஆதலால் ஒன்றி, ரெண்டோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மனப்பக்குவமும், உடல்பக்குவமும் அடைந்த வயோதிக பெற்றோர்களின் குழந்தைகள் பிறப்புகள் குறைந்து வருகிறது. இளம் வயது ஆண், பெண் 1-set , வயோதிக ஆண், பெண் 1-set ஆக நான்கு பேர்கள் கலந்த தம்பதியர்கள் முறைப்படி திருமணம் ஒப்பந்தம் ஏற்பட்டு group தம்பதியர்களாக சேர்ந்து ஒன்டிகட்டையா கஷ்டபடாம சுமையை ஒருத்தருக்கு நான்கு பேராக சுமந்தால் எளிதல்லவா? அதற்காக group ரொம்ப பெரிதானால் பிரச்சனைகள் கூடலாம்? இரண்டு தம்பதிக்கு, நான்கு தம்பதி என்றால் கொஞ்சம் பிரச்சனைகள் கூடலாம், இது சமாளிக்கும் அளவுதான் ரொம்ப பெரிதல்ல, அதே நேரத்தில் கூடி வாழ்வதால் கோடி நன்மையாக சௌகரியங்களும் அதிகம். இத்தகைய நான்கு பேர் கொண்ட தம்பதியரில் உடல்பக்குவம், மனபக்குவம் குறைகள் அகற்றபடுகின்றன, இதில் சில தகுதிகள் குறைந்தவர்களை இணைத்துக்கொள்வதால் பெரிய பாதிப்பல்ல, இவை நிறைவாக்கப்படுகின்றன. மனித பாரம்பரியத்தில் உடல்பக்குவமும், மனப்பக்குவமும் கலக்கப்பட்டு மீண்டும் சந்ததி தொடருமே. வாருங்கள் பள்ளங்கள், மேடுகள் நிறைவு செய்வோம், கருடுமுரடை சமமாக்குவோம். காரணங்களின் சந்தான இறப்பு ஓரின சேர்க்கை திருமணத்தை எல்லாம் ஆதரிக்கிறீங்க, என்னைய நீங்க (நாலு பேர் சிறப்பு தம்பதி) பாஞ்சாலி – பாண்டவர் application நடைமுறைக்கு? நான்கு பேர் சேர்ந்த ஒரே திருமண பந்தத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் / நன்கு பாராட்டுபவர்கள் வள்ளி, தெய்வயானை துணைகளை மணந்த முருகன் இறைவனை கடுமையாக விமர்சிப்பார்களா? / நன்கு பாராட்டுவார்களா? பாஞ்சாலி-பாண்டவர்கள் சேர்ந்த ஒரே திருமண பந்தத்தை கடுமையாக விமர்சிபார்களா?/ நன்கு பாராட்டுவார்களா? ஆபிரஹாம், முகமதுவை கடுமையாக விமர்சிப்பார்களா? / நன்கு பாராட்டுவார்களா? நான்கு பேர் சேர்ந்த, ஒரே தம்பதிகளான, திருமண பந்தத்தில் உள்ள, ஒரு ஆணுக்கு, ஒரு இளவயது மனைவியும், ஒரு முதிர் வயது மனைவியும் அமைகின்றனர். ஒரு பெண்ணுக்கு, ஒரு இளவயது கணவரும், ஒரு முதிர் வயது கணவரும் அமைகின்றனர். இதனால், விதவை நிலைக்கான காரணிகள் குறைக்கபடுகிறது. கார், லாரி போன்றவைகளுக்கு டயர் ஸ்டெப்னி இருப்பது போல், ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது நல்லதாய் கருதுவது போல், ஒருத்தருக்கு இரு வாழ்க்கை, துணை அமைந்தால் என்ன? இப்பொழுதெல்லாம், பெற்ற பிள்ளைகள் வயோதிக பெற்றோரை கவனிப்பது குறைந்து வருகிறது. கணவன், மனைவி பந்தம் எவ்வளவு நெருக்கமானது, வயோதிக காலத்தில் ஒரு இளவயது மனைவியின் உதவியிருக்குமே, கிளை கணவர் இருப்பாரே. (தடுமாறும் நிலையில் சிறுநீர், மலம் கழிக்க உதவும் அந்நியோநியம்) வயோதிகரின் புத்திமதிகள், அனுபவங்கள் இளையர்களுக்கு உதவுமே. குரூப் தம்பதியர் – II Business ல உள்ள ஒரு நன்மை, திருமண அமைப்பிலும் apply ஆகுமா? ஆம். ஒருவரிடம் உள்ள, நாலு business நல்லா லாபமா போனா? ஒரு business loss ல போனா பாதிப்பு தெரியாது, சேவை செய்து மற்றவற்றால் லாபம் இருக்கும்பொழுது கொஞ்சம் செல்வம் இழந்தாலும் அது வேறு விதத்தில் நன்மை, இதை திருமண அமைப்பில் சிந்திக்கலாமா? லாபத்தை எல்லாம் ஒருத்தவன் தலைல கட்டுறது, நஷ்டத்தை எல்லாம் ஒருத்தவன் தலையில கட்டுறது, ஆம் திருமண வாழ்க்கையிலும். இதற்கு ஒரே வழியை நம்பியிருப்பது தான் காரணமா? ஆம் ஒருத்தருக்கு ஒருத்தி திருமணம். தெய்வ நிலையில் இருந்த முருகன் தெய்வ நிலையில் தெய்வானையை மணந்தார், ஒரு தாழ்த்தப்பட்ட குலமகளான (குறத்தி) வள்ளியை மணந்தார். தெய்வமே குறத்தியை மணந்திருக்கும் பொழுது, உயர் ஜாதி, பணக்காரர் எத்தனை தாழ்த்தப்பட்டோரை, ஏழைகளை மணந்து சமுதாயம் செழிப்பாக உள்ளது? உலகத்தில் பிறந்த குறைவுள்ளோரும் நல் வாழ்க்கை வாழ உரிமையிருக்கிறது, அவர்கள் அடிமைகள் அல்ல, உயர்ந்த வாழ்கைக்காக செழிப்புள்ளோரை கவர்ந்து செல்ல உரிமையிருக்கு. ஒருத்தர் நல்லவனாக இருக்கிறார், அவர் நல்லா sales ஆகனும் என்றால் யார் வேண்டும். குறைகள் மாறவேண்டி திருத்துபவர்களுக்கு குறை உள்ளவர்கள் வேண்டும் (அயோக்கியங்கள் மாறவேண்டி திருத்துபவர்களுக்கு அயோக்கியர்கள் வேண்டும்) அதுபோல் குறையுள்ள மணமக்கள் எல்லாம் பிச்சை பெறவேண்டாம், விருந்து பெறவேண்டும். இல்லையென்றால் பாலுணர்வு சக்தியும், உள்ளத்தின் சக்தியும் sales ஆகவில்லை. யாரும் பெருமைப்பட வேண்டாம். உலகில் உள்ள அனைவரும் அயோக்கியர்கள், என்ன ஒவ்வொருவரிடமும் அயோக்கியதன்மை மெஜாரிடியாகவோ, மைனரிடியாகவோ அமைந்திருக்கும். எழிப்பிவிட வேண்டிய நல்ல குணமும் மெஜாரிடியாகவோ, மைனரிடியாகவோ அமைந்திருக்கும். குரூப் தம்பதியர் யோசனையை வெறுப்பவர்கள் முதலில் ஒரு அருவருப்பான பெண்ணை திருமணமாக்கி கொண்டவர்களா அல்லது ஊனமான பெண்ணை திருமணமாக்கி கொண்டவர்களா அல்லது பிச்சைக்காரரை திருமணமாக்கி கொண்டவர்களா அப்படியிருந்தால் இந்த விவாதத்தை பேச அருகதை இருக்கு. யார் இவர்கள் உலக இயல்பின் குறைகள், பள்ளங்கள், சவால்கள் இவைகளை நமக்கு சிரமம் இல்லாமல் வெளிச்சம் போட்டு காண்பித்தவர்கள். கற்பனையில் காட்டியவர்கள் அல்ல, உடலை கிழித்து ரத்தத்தை பார் என்று காண்பிப்பது போல் அறிவின்மையை, சோம்பலை, நோய்களை, ஊதாரித்தனம் போன்ற குறைவை காண்பிக்க ஒரு ஜென்மம் எடுத்தவர்கள், இவர்களை ஒதுக்கி தள்ளுவது ஏன்? இந்த குரூப் தம்பதியர் யோசனை வேண்டாம் என்பவர்கள், திருமணபந்தமே வேண்டாம் அப்படியிருப்பது ரொம்ப, ரொம்ப கற்புகரசியாகவும், கற்புகரசராகவும் இருப்பதாகும். இதனால் எல்லாரும் நூற்றுக்கு, நூறு திடம் உள்ளவர்கள் ஆவார்கள் என்று சுவர் இல்லாமல் சித்திரம் வரைவதா? கணக்கில 0,1,2,3 என்று தொடர்கிறது. இதில் ஒருத்தருக்கு, ஒருத்தி என்று 1 இருந்தால் சிறந்த கற்புக்கரசி, கற்புகரசன், 0 என்று வாழ்க்கை துணை ஒன்றும் இல்லாமல் இருந்தால் ரொம்ப, ரொம்ப கற்புகரசன், கற்புகரசியா? இந்த கற்புகரசன், கற்புக்கரசி light அ காண்பித்தா நிறைய விடியல்கள் வருமா? 1000, கோடி என்று வாழ்க்கை துணை இருந்தால் உலகம் எல்லாம் நாற்றமும், அருவருப்பான வாழ்க்கை முறையா? உலகில் கோடிக்கணக்கான ஆண்களுக்கு இரண்டே, ரெண்டு பெண்கள் இருக்கட்டும் இருந்தால் என்ன வேகம் உங்க வேகம் திருமண பந்தத்திற்கு? குரூப் தம்பதியருக்கான கற்பு சூத்திரம் வகுப்போமே 25 வயதில் ஆண்,23 வயதில் பெண் இவர்களுக்கு முதன்மை திருமணம் நடைபெறலாம். திருமணம் ஆகி 40 வயது ஆண், 38 வயது பெண் ஆன இவர்களுக்கு புதிதாக 25 வயது ஆண், 23 வயது பெண் ஆனவர்களுக்கு முதன்மை திருமணமும் 40,38 வயது தம்பதிகள் அவர்களோடு கலந்து கிளை திருமணம் அமைந்திட வேண்டும். புதிதாக முதன்மை திருமணம் அடைந்தவர்கள் ஏற்கனவே முதன்மை திருமணம் நடந்து 40 வயது ஆணாகவும், 38 வயது பெண்ணாகவும் இருப்பவர்களுக்கு கிளை கணவனாக 38வயது பெண்ணுக்கு, கிளை மனைவியாக 40 வயது ஆணுக்கும் இளஞ்சோடிகள் இருக்கலாம். 60 வயது ஆணுக்கும், 58 வயது பெண்ணுக்கும் வயதாகும் பொழுது இளைய முதன்மை ஜோடிகளுக்கு (40, 38 வயது ) கிளை திருமணம் அமையலாமே. இதில் மூன்று stage , நான்கு stage தம்பதிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிளை ஜோடிகள் மட்டுமே சொந்தமாக கொண்டு எல்லாவற்றுக்கும் சேர்த்து 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையை குறைக்கலாம், இடை,இடையே 1 அல்லது 2 குறைபாடு உள்ள ஆண், பெண்களை இந்த குரூப் தம்பதியர் நிலையில் சேர்த்து கொண்டு குறை உள்ளோருக்கும் வாழ்வழிக்கலாம். நமக்கு திருமண நிலையில் உள்ள மகன், மகளை மற்ற குடும்பங்களுக்கு கொடுத்துவிடலாம் குரூப் தம்பதியர் – III எல்லாம் நல்லாருக்கு, இந்த ரிப்பன் மேட்சாகவில்லை, இந்த வளையல் கலர் அடிக்கிறாமதிரி இருக்கு, இது மாதிரி வாட்ச்ச கட்டாத, வழுக்கை தான் குறை, ஒரு interview பதில் சரியில்லாதனால வேலை கிடைக்கல, அழகு ஆனா கொஞ்சம் குண்டு இப்படிதான் reject ஆகி நமக்குரிய வாய்ப்பு இகழப்ப்படும்படி reject ஆனதா? ஆதரிக்க ஆளில்லையா? ஒருத்தருக்கு, ஒருத்தி என்ற தம்பதி முறையில் ஒன்று, ரெண்டு குறைகளால் எவ்வளவோ வாய்ப்புகள் இழக்கப்பட்டதே, மற்ற நல்ல விஷயங்கள் பயன்படுத்த முடியாமல் ஒழிக்கப்பட்டதே. நல்ல பொறுமை, நல்ல விட்டுகொடுக்கும் மனப்பான்மை, நல்ல அனுபவங்கள், சமையலில் திறமை, நல்ல அறிவு, நல்ல உழைப்பு இவைகள் புதைக்கபடலாமா? ஒருத்தருக்கு பக்கத்திலே இருந்து உதவி செய்யனுமுனா அவர்கள் பிட்சை போல் ஒருநாள் மட்டும் அங்கீகரிக்கப்படாமல் வீட்டிலே ஏற்றுகொள்ளபட்டு நம் குடும்ப்பத்தோடே இருக்க, இந்த சின்ன குரூப் தம்பதியில் ஒரு துணையாளராக நம் வீட்டு ராணியாகவோ, ராஜாவாகவோ அமைக்கலாமே. பூமியில் தாதுக்களை பிரித்து எடுக்க, தேவை இல்லாததை மற்றும் கசடுகளை நீக்கி விட்டு நாம் பயன்படுத்துகிறோம். ஒரு தாதுவை தனித்து பெற, மற்ற தாது சேர்ந்து இருக்கும் பொழுது அது கசடாக கருதப்படுகிறது, ஆனால் ஒவ்வொன்றும் தேவைப்படும்போழுது அது மதிக்கபடுகிறது தேவைப்படாதது கசடாக கருதப்படுகிறது, வாருங்கள் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் மதிப்போம். ஆண் குழந்தை இல்லையென்றால், இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வோம் அதாவது ஆண் குழந்தையாக இருக்காதா? என்று குடும்பக்கட்டுப்பாடு தேவைப்படும் காலத்தில் குழந்தைப்பெற்று கொள்வதை அதிகப்படுத்துகிறோம். குரூப் தம்பதியர் நிலையில் ஆண் குழந்தை இல்லையென்றாலும் முதன்மை, கிளை தம்பதிகளால் ஆண் வர்க்கமே இல்லை, பெண் வர்க்கமே இல்லை என்ற குறைவு அகற்றப்படுகிறது. அது அவர்களே குடும்பத்தில் இளவயது கிளை தம்பதியர் ஆண் வர்க்க, பெண் வர்க்க உறுப்பினர்களாக இருப்பதால், அந்த குறைவை கண்டுக்கொள்ள வேண்டியது இல்லை, ஏதோ ஒரு குழந்தை இருந்தாலும் நாமே சமாதானம் படுத்திக்கொள்ளலாம். குரூப் தம்பதியர் திட்டத்தை தவறு என்று பூதாகரமாக நினைத்து அகற்ற நினைப்பவர்கள், பாம்பே, சென்னை போன்ற பெரிய நகரங்களின் விபச்சார நிலையங்களை அகற்ற முடியுமா? குரூப் தம்பதியர் திட்டத்தை முறைப்படுத்துவோமே. நீங்கதான் டென்ஷன் ஆகிறீர்கள், ஏன் சாப்பாட்டுக்கு தகுந்த உழைப்பை குடுக்காமல் இதயம், ஜீரண மற்றும் உள் உறுப்புகளை டென்ஷன் ஆக்கி சாப்பாட்டு பிரியராக மட்டும் இருக்கீறீர்கள். மொழிகளில் உள்ள எழுத்துகள் யார் பக்கம் சாயும், அவைகளில் நல்ல எழுத்துக்கள், கெட்ட எழுத்துகள் என்றில்லை. நாம் தான் அவ்வெழுத்துக்களை கொண்டு நல்ல கண்டிப்பாய் உணர்த்தும் வார்த்தையாகவோ, கெட்டதை தூண்டிவிடும் வார்த்தையாகவோ வாக்கியங்களாக சேர்த்து வடிவமைக்கிறோம். எழுத்துகள் கூடி நிக்கும் நிலையை பொறுத்து அப்படி அமைகிறது. அதுபோல இந்த குரூப் தம்பதியர் திட்டத்தை நல்ல திட்டமாகவோ, கெட்ட திட்டமாகவோ பயன்படுத்துவது நம் பொறுப்பில் இருக்கிறது. நம் business நல்லபடியாக அமைய எவ்வளவோ புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுகிறோம், அதில பிராடு இருந்தாக்கூட அது ஒன்னுமில்லை இதுதான் business என்கிறோம். இதுவே இப்படியென்றால், மிக உயர்ந்த மனித நேயமாகிய, மனித வாழ்க்கை முறை, குறை உள்ளோருக்கு, நம் உதவிகளை சிறப்பு புத்திசாலிதனமாய் அமைய புத்தியை தீட்டுகிறோமா, குரூப் தம்பதியர் என்பது ஒரு பெரிய தவறா? விஞ்ஞானம் சொல்லும் சொந்த இரத்தத்திற்குள் திருமண பந்தம் வேண்டாம், குறைகளை காண்பித்து விவாகரத்து வாங்குகிறோம், வேலை வாய்ப்பு , பேருந்துகளில் முடியாதவர்களுக்கு சீட்டு, கல்விக்கு என்று பலதுறைகளில் தாழ்ந்த சாதி, மாற்று திறனாளிகள் இதற்கெல்லாம் குறை உள்ளோருக்கு சலுகைகள் கொடுக்கிறோம். ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட சலுகைகள்? குறைகளை கண்டு வாழ்க்கைக்கு விவாகரத்து வழங்கபடுவது போல, எதிர்காலத்தில் சமுதாயத்திலும் வேலை போன்ற சலுகைகளுக்கு விவாகரத்து வழங்குவீர்களோ, பாதிக்கபட்டவங்களுக்குதான் நிழலின் அருமை வெயிலில் தெரியுமா? அருமையான வாழ்க்கை துணை அமையாமலிருக்கும் பொழுதுதான் தன் குறையை கண்டு, கண்டு வாழ்க்கை முழுவதும் அழுது, வருந்த வேண்டுமா? துன்பத்தின் கெட்ட அருமை தன்னுடைய குறையினால் தெரிந்தால் ஈடு செய்யப்பட வேண்டாமா? குறையுள்ளோருக்கு எவ்வளுவு காலம் பெற்றோர்கள் கூட வருவார்கள். வயதான காலத்தில் பெற்றோருக்கே உதவி தேடும்பொழுது தன் குறையுள்ள பிள்ளைகளுக்கு என்ன செய்ய முடியும். வேலைகளில் சலுகை கொடுப்பவர்கள், குரூப் தம்பதியர் என்று திட்டத்தை நடைமுறைபடுத்தி சலுகை கொடுக்கலாமே. வேலை சலுகையினால் கிடைக்கும் சம்பளம், அவர்கள் வேதனையை தீர்த்திடுமா? ஒரு ஜானுக்குத்தான் இந்த பொழப்பு என்கிறோம். சம்பளம் கிடைத்து பிரோஜனம், கிடைக்கும் சம்பளத்தை தனக்கு வேலையாள் எல்லாம் வைத்து கொண்டால் அந்த அந்நியோனியம், பாசம் கிடைக்குமா? வாழ்க்கையில் முக்கியமான நல்ல துணை கிடைக்க அவர்களுக்கு சலுகைகள் காண்பிக்கப்பட்டு வாழ்க்கை துணைவர்களாக ஏற்றுக்கொள்கிறோமா? எந்த சலுகை முக்கியம். நாம், ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற ஒரே வழியை வைத்திருபதால்தான் குறை உள்ளவர்களை reject பண்ணுகிறோம். நீ செத்தாலும், சாவு, குறை உள்ளவர்களுக்கு நல்ல வாழ்கைக் கூடாது என்று முடிவெடுப்பது ஏன்? நம் அன்பு பெரியது அதற்கு தேவைப்பட்டால் உயிரைக்கூட மற்றவர்களுக்காக கொடுக்கலாம் என்று முன்வரும்பொழுது, அதைவிட சற்று சிறிதோ வாழ்க்கையில் முக்கிய பங்கிற்கு துணைவர்களாக (கணவன், மனைவி) அமைத்துக்கொள்வது. அதற்கென்று ஒரு ஒழுங்கை உருவாக்கக்கூடாதா? குரூப் தம்பதியர் திட்டத்தை போல. குரூப் தம்பதியர் …… சிலர் உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து விட்டார்கள். ஆனால் குறை உள்ள ஏழை, மாற்றுதிறனாளிகள் உள்ளே நுழையவே அனுமதி இல்லை. அப்படியிருப்பதால் முதல் நிலையிலேயே reject ஆகிவிட்டார்கள், அப்புறம் எப்படி வாழ்க்கையில் நுழைந்து விவாகரத்து ஆனார்கள் என்ற பேச்சு எப்படி வரும். மனைவிகள் வேண்டும் என்றால் ஒன்று இறப்பு, அல்லது விவாகரத்து ஆக வேண்டுமா? குறையில்லாத மனிதர் உண்டா? மற்றவர்தான் குறை, தான் குறையில்லை என்று தீர்ப்பிட்டு விவாகரத்து வழங்கப்படுவது ஏன்? ஒடுக்கப்படுவோர்கள் பிறரிடம் மனம் விட்டு அழக்கூட தெரியாமால் புழுங்கி, புழுங்கி சாகிறார்கள். இவர்கள் அழுகை நாம் உணரும்படி கேட்காததால், இதெல்லாம் நமக்கு பிரச்சனையாக தெரியாமல் சத்தம் கேட்காதபடி விழுங்கி சமாதானம் பெற்றதாய் நினைக்கிறோம். நோயாளிக்கு இன்னொரு நோயாளி எப்படி குணப்படுத்துவார் மருத்துவரின் தலைமையில் சிகிச்சை வேண்டுமே. மாணவனுக்கு இன்னொரு மாணவன் சந்தேகத்தை நீக்கி தெளிவுப்படுத்த முடியுமா? குரு தேவைப்பட மாட்டாரா? குறையுள்ளோரை மணக்க இன்னொரு குறையுள்ளோர் சேர்ந்தால் நிலை என்ன? குருடனுக்கு இன்னொரு குருடன் எப்படி வழிகாட்டுவார்? பிரச்சனைய தீர்க்க கொஞ்சம் பிரச்சனையை குறைத்தால் கூட பரவாயில்லை எனலாம். இன்னும் அதிகப்படுத்துவது ஏன்? அடிமேல் அடி, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது இவற்றை tour ஆக பார்த்து மகிழ ஏற்பாடுகளா? குறையில்லாத மனிதேரே இல்லைதான். எந்த நிலையில் குறை என்று சொல்வதற்கு தேர்ச்சி பெறுகிறது என்று பார்த்து அவற்றை சரிசெய்ய வழிகளை ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கியத்துவம் கொடுப்பதை பொறுத்து செயல்களில் உடலை விட உயிர் சிறக்க வேண்டியிருக்கலாம், உயிரை விட ஒழுக்கம் சிறக்க வேண்டியிருக்கலாம், தாம்பத்தியத்தில் ஆடையை விட ஈடுபாடு சிறக்க வேண்டியிருக்கலாம், குளிரின்போது ஆடை அணிவது சிறக்க வேண்டியிருக்கலாம். குரூப் தம்பதியர் திட்டத்தில் நாம் நினைக்கும் கற்பை விட அன்பு சிறக்கபட்டு கற்பு 40 சதவீதம் என்றால் அன்பு 60 சதவீதம் இருக்கும்படி பார்த்துகொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பது போல் அனைவரின் நன்மைக்கு ஈடுபடுவோம். பணம் உள்ளவர்கள், இன்னும் சொத்து வேணும், கார் வேணும், செல்வம் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் பொழுது. ஏழைகள், மாற்றுதிரனாளிகள் நல்ல வாழ்க்கை துணை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டமாட்டார்களா? நாம் அவர்களை ஒடுக்கி மேலும், மேலும் நம் கை ஒங்க நினைப்பது ஏன்? converted – மதம் சிலர் christian லிருந்து Hindu க்கு கன்வெர்ட் ஆகிறோம். சிலர் hindu லிருந்து முஸ்லிம் க்கு கன்வெர்ட் ஆகிறோம் சிலர் புத்த மதத்திலிருந்து christian க்கு கன்வெர்ட் ஆகிறோம். சிலர் வேறு மதத்திலிருந்து புத்த மதத்திற்கு கன்வெர்ட் ஆகிறோம். இப்படியெல்லாம் போட்டிகள். இப்படி பேட்டிகள் கொடுக்கும் நாம் அன்பை பகிர்ந்துக்கொள்கிறோமா? அன்பு எதையும் சகிக்கும் தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு conversion , ஆங்கிலத்திருந்து ஹிந்தி மொழி conversion செய்துக்கொள்கிறோம். வீடியோ file to audio file conversion , word to pdf , pdf to word conversion என்று வசதிகளை தேடிக்கொள்கிறோம். ஒரு முக்கியமான உதவி, சிலரை பார்க்க பேச தோனுகிறது, சிலரை பார்க்க பேச அசட்டை பண்ணுகிறது. ஒரு வேலைக்காரன் மேனேஜரை பார்த்து டே இதை செய்யுடா? என்றோ, ஒரு அம்மா மகனிடம் டே தண்ணிக்கொண்டு வாடா என்றோ சொன்னால் ஒன்றை ஈசியாகவும் , ஒன்றை வெறுப்புடனும் எடுத்துக்கொள்வது ஏன்? தண்ணிக்கொண்டு வாடா என்று சொல்லப்பட்ட மகன் வேறு யாருமில்லை இதை செய்யுடா என்று வேலைக்காரனால் சொல்லப்பட்ட அந்த மேனேஜர் தான். ஒரு ஐந்து, ஆறு தலைமுறைக்கு முன்னர் வேலைக்காரர் , மேனேஜர் முன்னோர்கள் சம்பந்திகள் ஏன் நாம் ஒரு உதவி கோருவதை தனக்கு நெருங்கிய அம்மா, அண்ணன் சொன்னதாக convert செய்து உதவி செய்தால் என்ன? அந்த உதவி கோரியது பார்க்க, பேச பிடிக்காத மதிப்பு குறைந்த ஆளாக இருக்கலாம். ஏன் நாம் ஒரு உதவி கோருவதை தான் பார்த்து, பேச பிடித்த நெருங்கிய அப்பா, மனைவி சொன்னதை, மதிப்புக்குறைவாக கருதுவோரை வெறுப்பதை போல செய்யாமல் வெறுக்கும்படி convert செய்து மறுதலித்தால் என்ன? பார்த்து, பேச பிடித்த நெருங்க்கிய அப்பா, மனைவி செய்ய சொன்னது ஒரு சமுதாயத்திற்கு பெரிய தீங்கை ஏற்படுத்தும் கோரிக்கையாக இருக்கும்பொழுது? convert பண்ணுவதில் மனிதநேய technology வளர்ப்போமே. ஆற்றில் தண்ணீர் வருமா? ஆற்றிலே ஒரு காலு, சேற்றிலே ஒரு காலு இப்படி இருந்தா, எதுல மாட்டிக்குவோம் ஆற்றிலே எந்த அளவுக்கு, தண்ணீர் வருகிறதோ உழவனுக்கு வேண்டிய வயலுக்கான சேறு, ஆற்றிலிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ந்து நிரப்புவதை பொறுத்து, அமையும். சேறு அமைவதும், அமையாததும், ஆற்றில் வரும் தண்ணீர், கால் உயரத்தை விட போதுமான அளவு அதிகமாக, வேண்டும். குதிகால் உயரம் கூட, தண்ணீர் வரவில்லையென்றால், ஒரு திட்டம் உதவும். கொஞ்சம் வறண்டு இருந்தால் ஊற்று, உதவும். நிலத்தடி நீர் நிலைகளை பாருங்கள். ஆறு ஓடும் உயரமும், வயல் இருக்கும் உயரமும் எந்தளவிற்கு ஏறி இறங்குகிறது. சமுதாயத்திற்கு சந்தோசம் அமைவது மனித உள்ளங்களின் ஏற்ற, இறக்கங்களின் பாடுதான். மூழ்கி எதிர்த்து நீந்தனுமே. எங்கும் பல ஒரே வழிகள் தானா? நகர்களில் உள்ள வீடுகளை கண்டறிய வழி கேட்கிறோம். அந்த சரியான வழியை கண்டறிய எங்கெங்கு விசாரிக்கிறோம். வயிற்று வலியின் வழியை கண்டறிய எவ்வளவு முயற்சி எடுக்கிறோம். நம்முடைய கண், காது, மூக்கு, நாக்கு, கை, கால், தலை, இடுப்பு, பாதம், அணியும் உடை, அணியும் செருப்பு, நடையின் பல முக கோணங்கள், ஸ்டைல், உணவு, உள்ளத்தின் உணர்வுகள், பேச்சு, எதிர் பேச்சு, விட்டு கொடுக்கும் பேச்சு (விட்டு கொடுக்கிறோமோ இல்லையோ ஆனால் அப்படி ஒரு ஸ்டைல்), வித விதமான வேலைகள், படிப்பு (பார்த்து, கேட்டு), மனப்பாடம் செய்தல், பாடல், கதை சொல்லுதல், கதை கேட்டல் (ஆம் என்றும், ஏன் என்றும், ம் என்றும் பழகுதல்) , மற்றவரிடம் சண்டை போடுதல், மற்றவரிடம் சமாதானமாய் பேசுதல், கிள்ளுதல், இதமாய் தடவி கொடுத்தல், உணவு பழக்கம், உறங்கும் பழக்கம், கண் விழிப்பு, பாலுணர்ச்சி மேம்பாடு, மருந்துகள், குளியல், காற்றில் பழகுதல், வெப்பத்தில் பழகுதல், ஓய்வு, உறைவிடம், பயணங்கள், குறு குறுப்பு, பயம் இப்படி பலவித கோணங்களில் வழிகளை விசாரித்து கண்டறிந்து இளைப்பாறினால் வயிற்று வலி என்று மட்டும் அல்ல எல்லா வலிகளையும் ஒரு வழிக்கு கொண்டு வரலாம். மருத்துவ சிகிச்சையை வேண்டும் என்றால் விழ போகும் நிலையில் இருந்த பணம் பழத்தை காக்கை உட்கார பணம் பழம் விழுந்ததா எடுத்துக்கொள்ளலாமே, ஏன் அதற்கும் ஆபரேஷன்…. ஆம். தொப்பை ஒரு சரியான வயிற்று வலி, கண் ஒடுங்கி சரியான ஒடுக்க நஷ்டம். ஏயான் , ஏமா தண்ணீ அடிக்கிறவர் லாம் இதுதான் சொர்க்கம் என்று நினைக்கும்பொழுது நல்ல பழக்க வழக்கங்களில் மெஜாரிடி யாக இருந்தா அந்த குடி சொர்க்கத்தை விட சிறந்து இருக்காதா? வாழும் கலை பயிற்சி வாழ்க வளமுடன். குரூப் தம்பதியர் பகவான் ராமருக்கு ஒரு மனைவிதான். பகவான் ராமரின் தந்தைக்கு சொல்லும்படியாக 3 மனைவிகள். என்ன பெருமை பகவான் ராமரின் முன்னோர்கள் எல்லாம் ஒரு மனைவிக்காரரா? ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தவர் இயேசு ராஜா . பல தலைமுறைக்கு முன்னாள் உள்ள இயேசுவின் தாத்தாவான ஆபிரஹாமுக்கு 2 மனைவிகள். என்ன பெருமை இயேசு ராஜாவின் முன்னோர்கள் எல்லாம் கன்னியரா? கன்னி, ஒரு மனைவி, இரு மனைவி என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? கடவுள் சைவமா? அசைவமா? எதை ஆதரிக்கிறார்? சைவம்தான் ஏற்புடையது என்றால் சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இறைச்சியை உணவாக அளித்திருப்பது ஏன்? அறிவில்லாமலா அனுமதித்திருப்பார். அசைவமாகிய சிங்கத்தையும் அதில் அமர்ந்திருந்து அதில் காட்சியளிபது ஏன்? அசைவம்தான் ஏற்புடையது என்றால் ஆடு போன்ற விலங்குகளுக்கு புல்லை உணவாக அளித்திருப்பது ஏன்? அறிவில்லாமலா அனுமதித்திருப்பார். சைவமான பசுவை (கோமாதா) அதில் சாய்ந்திருந்து அதில் காட்சி அளிப்பது ஏன்? மீன் கழிவையும் உண்கிறது, கடல் பாசியையும் உண்கிறது. மீனை போல நாமும் கழிவை உண்டு உயிர் சத்துக்களை உண்டால் என்ன? கழிவை சுவாச உணவாக உண்டால் என்ன? கழிவை நறுமணமாக மாற்றி நல்ல சுவாசத்திற்கு உணவாக்கிடுவோம். (சுற்றுச்சூழல் மாசுபாட்டை அகற்றி சரி செய்ய ஒரு கை பார்த்திடுவோமே) கண்ணுக்கு கண்-பல்லுக்கு பல். ஒருத்தருக்கு ஒரு கண் போனால் அடுத்தவருக்கும் ஒருக்கண் போகனும் என்றோ, ஒருத்தருக்கு ஒரு பல் போனால் அடுத்தவருக்கும் ஒரு பல் போகனும் என்றோ அர்த்தம் அல்ல. ஒருவர் மற்றவர் கண்ணை பாதிக்கச் செய்தால் மற்றவர் கண்ணும் பாதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அப்படி பாதிக்கச்செய்து விட்டால் பாதிப்படைந்தவர் கண் சரியாகி விடுமா? தவறை உணர்ந்து இரண்டு பேரும் நல்ல முறையான ஒப்புரவாகி எந்தளவுக்கு நன்மை கிடைக்க வேண்டுமோ அதற்கு முயன்றால்தானே நல்லது. கண் போன அவருக்கு தான் அவருக்கு செய்த தவறை உணர்ந்து இவர் கண்ணாக இருந்து உதவ வேண்டும் அதைத்தான் கண்ணுக்கு கண். ஆம். தன்னால் மற்றவர் கண் பார்வை இழக்கும் அளவுக்கு தான் தவறு செய்திருந்தால், கண் பார்வை இழந்த அவருக்கு, கண் இல்லாமல் செய்ய முடியாத பணிகளை, தான் எவ்வகையில் உதவ முடியுமோ தன் கண் பார்வையை கொண்டு அவருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து உதவ வேண்டும். இவ்வுதவி எத்தனை சதவிகிதம் வேண்டும் ஆனாலும் இருக்கலாம், ஆனால் உதவாமல் இருக்காதே. பல் எல்லாம் தன்னால் மற்றவருக்கு விழச்செய்து விட்டால், தான் உணவை அவருக்கு மென்று குடுக்கலாம் அல்லது மசித்தோ, திரவ ஆகாரமாகவோ அவருக்கு தந்து உதவலாம். விட்டு கொடுக்குறத விட்டு கொடுக்கனும் ஆபத்துக்கு உதவலாம். ஆனா, உதவுரதே ஆபத்தாகக் கூடாது. சில கையேந்துபவர்களும், பிச்சை கேட்பவர்களும் இப்படித்தான். செய்து முடிகிற நிலையில் தம்மை தவிர்க்கும் நிலையில் உதவி கேட்பதையே ஒரு குணமாக கொண்டிருக்கக்கூடாது. இதனால் முயல மாட்டோம் பிறகு ஏன் நமக்கு அறிவு, கை, கால் எல்லாம். விட்டு விட்டு கொடுக்கனும், விட்டு விட்டு கொடுக்கனும் என்றால் பிரச்சனை வந்தால்தானே விட்டு கொடுக்கனும். விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து, விட்டு கொடுக்கிறதே பிரச்சனையை தந்துட்டா. ஆகவே விட்டு கொடுப்பதை, விட்டு கொடுப்போமே விட்டுகொடுப்பது அவசியமில்லாத அளவுக்கு நிறுத்த. எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வு இருக்கும் அன்பர்களே. இன்னொரு முறையா ஆண்டவர் இந்த பூமியை உருவாக்க போகிறார். இல்ல, இன்னும் இந்த மனிதனுக்கு நோய் நொடி, கவலை, ஏமாற்றம் போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்க சில மூலிகைகளை இப்பூமியில் படைக்க தவறிட்டேன் , சில கனிம, கரிம, உயிரின, உணவு, வேதி பொருள்கள் படைக்க தவறிட்டேன் என்றா என்று தம் படைப்பில் தவறு நேர்ந்து விட்டது என்று உடனடியாக step எடுக்க இறைவன் தயாராகிறாரா? இதுவரை படைத்தவைகளுக்கு போராட்டத்திற்கான நல்ல தீர்வுகளையும் உருவாக்கி வைத்து விட்டு அடுத்த காரியத்தில் ஈடுபட மாட்டாரா? நாம் மட்டும் எதிர்காலத்திற்கு இன்சூரன்ஸ்க்கு மேல இன்சூரன்ஸ் வருமுன் காப்போம். ம் safety . முதலில் நம்மை உணர்வோம். பிறகு என்ன? வலியும் வழியும் (மனித உறுப்புகள்) கற்பித்தலால் மாணவருக்கு தலைவலியா? தலையாய வழியா? (தலை) கற்பித்தலால் பாடத்தை முடித்ததன் வலியா? முடிந்ததன் வழியா? (முடி) சந்தேகத்தை தயங்குதலால் வலியா? மனதில் தங்குதலின் வழியா? (மனம்) பாடத்தை கவனிக்காததால் வலியா? கவனத்தின் வழியா? (கவனம்) படிப்பு அமைவது போட்டியின் வலியா? போற்றுதலின் வழியா? (பொறாமை, பொறுமை) கற்பித்தல் அவசரத்தின் வலியா? சுவாரசத்தின் வழியா? (சுவாசம்) கற்பித்தல் அமைவது படிப்பின் வலியா? பயின்றதன் வழியா? (அனுபவம்) கற்பித்தல் அமைவது வாதத்தின் வலியா? வார்த்தலின் வழியா? (கீழ்படிதல்) பாடம் தேங்குதலால் வலியா? மனதில் ஏங்குதலின் வழியா? (குப்பை) சந்தேகம் துண்டிப்பின் வலியா? சந்தேகம் துடைப்பின் வழியா? (அக்கறை) விளக்கங்களை நீட்டுதலின் வலியா? விளக்கங்களை காட்டுதலின் வழியா? (முகம்) புரியாமை இருக்கிறதன் வலியா? புரியாமை இறுத்தலின் வழியா? புரியாமை உருத்துதன் வலியா? புரிவதை உறுத்தும் வழியா? (நெரடல்) புரியாமை தப்புவதன் வலியா? தப்பியதன் வழியா? (பிழைப்பு) விளக்கங்கள் மறந்ததன் வலியா? மறவாததன் வழியா? (மூளை) வகுப்பில் ஒழுக்கங்கள் நெரிக்கட்டலின் வலியா? நெறிக்காட்டுதலின் வழியா? (தொடை) ஆசிரியர் மாணவரிடையே இடைவெளியா? இடைவேளையா? (அந்நியோனியம்) ஆசிரியர் மாணவர் உறவு வலுத்ததா? வழுவாததா? (நெருக்கம்) பயில்வதில் தேக்கத்தின் வலியா? ஆக்கத்தின் வலியா? விளக்கங்கள் சொல்லாததன் வலியா? சொல்லின் வழியா? சிந்தனைகள் தப்புவதன் வலியா? தற்காப்பின் வழியா? ராணுவ வீரம் அண்டை நாடுகள், நம் நாட்டின் எல்லையை மீறி, நம் இறையாண்மையை கெடாதபடி பாதுகாக்க, மக்கள் ஆதரவுடன் அரசும், ராணுவ வீரர்களும் செயல்படுகிறார்கள். அதுபோல் நம்மை அண்டி வரும் நோய்கள், நம் ஆரோக்கிய எல்லையை மீறி, நம் ஆரோக்கியத்தை கெடாதபடிக்கு பாதுகாக்க, இயற்கையின் ஆதரவுடன் மனதும், உடலும் ஆரோக்கிய வீரர்களாக செயல்பட்டு இறைவனுடன் உறவு கொள்ள ஆற்றலை பெறவேண்டும். செக்ஸ் ஒரு புனிதமானது என்கிறார்கள், அதை முரண்பாடாய் பயன்படுத்தும்பொழுது அந்த புனிதம் கெட்டுவிடுகிறது. கற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை தர வேண்டும் என்கிறோம். இந்த குற்றம் செக்ஸ்ஐ முரட்டுதனமாய் பயனபடுத்தியதாய் இருக்கிறது. சாமியார்கள், துறவிகள் என்று சொல்லி, புனிதத்துவமான செக்ஸ்ஐ முறைப்படி பயன்படுத்தாமல் இருக்கிறார்களே, இவர்களை ஏன் அனைவரும் மெச்சி கொள்கிறார்கள். நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளாத வகையில் கற்பழிப்பு போல மாற்றான குற்றம் அல்லவா? இதை குற்றம் என்று சொல்லுவதா? குற்றமில்லாத உயர்வானது என்று சொல்லுவதா? உயர்வானது என்றால் மக்கள் எல்லாம் குற்றவாளிகளா, சாமியார், துறவிகள் போல உயர்வடையவில்லை என்று? வச்சா குடுமி, சரைச்சா மொட்டையா? normal ஆக இருக்கலாமே. தீர்க்க சுமங்கலியாய் இருக்கனும் என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தராமல் ஒரு துணையோடு மட்டும் அமர்த்தலாமா? இறைவன் நமக்கு ஏன் இரண்டு கண், இரண்டு கால், இரண்டு கை மட்டும் கொடுத்திருக்கிறார். தான் கைப்பட, நேரிடையாக பலருக்கு தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல நூறு கண், பல நூறு கால், பல நூறு கை போன்றவைகளை தன் விருப்பத்திற்காக மனிதன் தான் ஒருவருக்கு மட்டும் இறைவன் தருவாரா? அறிவைக்கொண்டு நாம் பலரோடு சேர்ந்து பலருடைய கண், பலருடைய கைகளாக பல நூறு கண், பல நூறு கைகளாக சேர்ந்து செயல்படுகிறோம். முக்கியமான செக்ஸ் உறுப்பு ஒன்றுதான் உள்ளது பலருடன் செக்ஸ் வேண்டுமென்று சொல்லியா இறைவன் நமக்கு முக்கியமான செக்ஸ் உறுப்பு பலவற்றை இறைவன் அனுமதித்திருக்கிறாரா? கற்பைக்கொண்டு நாம் தற்கால சூழலுக்கு ஏற்ப பல குருப் தம்பதியர்களாக உதவி செய்துக்கொள்வதிலும், ஆபத்தை விளைவிக்கும் வசதிகளை குறைத்துக்கொள்ள வேண்டி சுற்றுச்சூழலை காக்கும் விதத்தில் குழந்தைகளை பெற்றுக்கொண்டால் என்ன? நான்கு பேருக்கு ஒரு குழந்தை. மக்கள் பெருக வேண்டும் என்று சூழல் வரும்பொழுது எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயம் செய்து பெருக்கிக்கொள்ளலாமே. அல்லது சுற்றுச்சூழலை கெடுக்கும் வசதிகளை குறைத்து ஒடுங்கி வாழ்வோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நல்லது என்றால், குரூப் தம்பதியர் நல்லதல்ல என்று எவ்வகையால் சொல்ல முடியும். அதிலும் நன்மைகள் இருக்கிறது நல்ல திட்டமிட்டால். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுரை தூங்கி கொண்டிருக்கிறதா? இக்காலம், அக்காலம் போன்று மாறாமல் இருக்கிறதா? பெரிய குரூப் தம்பதியர் திட்டம் தற்பொழுது வேண்டாத நிலைதான்? ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதுதான் நல்லது, திருமண நாட்டம் இல்லாத துறவி என்று இருப்பதுதான் நல்லது, குரூப் தம்பதியர் என்று இருப்பதுதான் நல்லது, பெரிய குரூப் தம்பதியர் என்று இருப்பதுதான் நல்லது என்று கருதுவது அவரவர் சுதந்திரம். ஒருவர் சுதந்திரமும், மற்றவர் சுதந்திரமும் சங்கமிக்க வேண்டும். அது சுற்றமும், சுற்றுச்சூழலும் நன்முறையில் காக்கப்படுவதில்தான் இருக்கிறது. சுகர் விளக்கு, கற்பூரம், மெழுகுவர்த்தி என்றெல்லாம் எரியவிடுகிறோம் சாமிக்கு, அதுபோல் நாம் உண்ணும் உணவை நல்ல கலோரி சக்தியாக எரிந்தால் தானே நல்லது. அப்படி எரியும்பொழுது அது சந்தோஷ உழைப்புக்கு (மனம்+உடல்) பயன்பட்டால் நாம் பிறந்ததன் அர்த்தம் புரியும் அல்லவா. நாம் சந்தோசமாகவே இருக்கக்கூடாது என்று இறைவன் விரும்புவாரா? பிறகு ஏன் நாம் கடவுளிடம், இது எனக்கு நடைபெற்றால் இந்த கடினமுள்ளதை இறைவனுக்கு செய்வதாக அர்ப்பணிப்பேண் என்று கஷ்டப்பட்டு பொருத்தனை செய்துக்கொள்வது ஏன்? சரக்கு என்று சொல்லி, தண்ணி அடிப்பவர்கள், சந்தோசம் என்று அவர்களே தண்ணி அடிப்பதை எண்ணும்பொழுது, இறைவன் தண்ணி அடிப்பதை எந்த அளவுக்கு தடை பண்ணுகிறார். இப்படியெல்லாம் தண்ணி அடிப்பவர்களே அதை சந்தோசம் என்று நினைக்கும்பொழுது, நாம் இறைவனுக்காக நல்லப்பழக்கவழக்கங்களுடன் இருக்கும்பொழுது சந்தோசம் தருவதை தடைப்பண்ணுவாரோ. நாம் இறைவனுக்காக எதைத்செய்தாலும் சந்தோசத்துடனே செய்யும்படி நம்மை தயார் செய்வது இறைவனே. இதை எப்படி உணரலாம் என்றால் நாம் கடவுளிடம் எவ்வளவுக்கு எவ்வளுவு உண்மையாக இருக்கிறோம் என்பதை பொறுத்துதான். முடியல என்றால் முடியவில்லை என்று open ஆக இறைவனிடம் சொல்லனும். கெட்டவன் என்றால், நான் இவ்வளவுக்கு கெட்டவன் என்னை மாற்றும் என்று தன் மனதில் பட்டதை, மனதில் பேசும் இறைவனிடம் open ஆக சொல்லனும். கடினம் என்று ஒன்றும் இல்லை. கடினத்தை நிறுத்துப்பார்த்து அதை சமாளிக்கும் தகுதியை வளர்த்துவிட்டால். கடினம் என்று சொல்வது இல்லைதானே. கடினத்தை உச்சரிக்கும் நிலை அது எளிமையை செயல்படுத்தும் தகுதி குறைவுபடுவதை பொறுத்துதான் அமையும். இறைவன் நம் குறைவை நிறைவாக்குவார். அறிவில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். சாமிக்கு, தீபங்களை எரிய வைப்பதெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம் நாம் உண்ணும் உணவை நல்ல சக்தியாக எரிய வைக்க தெரிந்திருக்கிறோமா. நம்ம முதுகில முதல்ல என்ன இருக்கு என்று பார்க்காமல் விடுவதென்ன? எண்ணம்போல் தீர்வு (எண்ணம்போல் வாழ்க) பசியுடன் இருக்கும்பொழுது, நமக்கு விருப்பமான உணவு கிடைத்தால் என்ன செய்வோம். கையில் எடுத்து ஒரு கை அளவு சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் சாப்பிட நினைக்கும்பொழுது 1. TV நியூஸ்ல ஒருவர் தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி வருகிறது இப்பொழுது உடனே சாப்பிடுவதை நிறுத்துவோமா? 2. உயிருக்கு உயிரான அம்மாவோ, துணைவரோ, மகனோ, மகளோ, நண்பனோ, தலைவரோ தன் வாயிலிட்ட உணவு தொண்டையில் இருக்கும்பொழுது மேற்குறிப்பட்ட அன்பர்களில் யாரோ ஒருவர் இறந்துவிட்டால் உணவை விழுங்கிடுவோமா? 3. விருந்து உண்ணும்பொழுது விருந்தளிப்பவர் நம்மை அவமானப்படுத்தும்படி பேசிவிட்டால் நாம் உடனவே வாயிலிருந்த உணவை துப்பிவிட்டு கோபப்படுவோமா? இப்படி நாம் சாப்பாட்டை நிறுத்துவதோ, உடனே நிறுத்துவதோ, தொடர்வதோ அமைவதற்கு சம்பவ காரணிகளின் முக்கியத்துவ நிலைமையை பொறுத்து இருக்கிறது. எப்படிப்பட்ட முக்கியத்துவம் என்று நிர்ணயிப்பது நாம் எண்ணுவதில் இருக்கிறது. இந்த சம்பவங்களே நிகழாமல் ஒரு பயிற்சியை மேற்க்கொள்வதுபோல எண்ணத்தால் மட்டும் நிகழ்வதாக கருதி நாம் சாப்பாட்டை நிறுத்துவதோ, உடனே நிறுத்துவதோ, தொடர்வதோ முடியாதா? ஏனெனில் நம் அடிமைத்தனங்களான மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது, கெட்ட வார்ததைகளை பேசுவது, கெட்ட கோபம், அபகரிப்பது, திருடுவது, மற்றவரை கொடுமைப்படுத்துவது, கெட்ட செயல்கள் இவைகளை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பல கடினமான தண்டனைகள் நமக்கு நிகழ்ந்தால்தான் நாம் நிறுத்துவோமா? இச்சம்பவங்கள் நிகழாமலே, எண்ணங்களால் நாம் பயிற்சி மேற்கொண்டு தீயச்செயல்களை உதறினால் என்ன? நமக்கு நெருங்கியவர்களுக்கோ, நமக்கோ, பூகம்பம், வெள்ளம் பாதிப்பு தினந்தோறும் நடந்தால்தான் பரிதாபப்படவேண்டிய உணர்வு வருமா? இல்லை இந்த நிகழ்வுகள் ஒருக்கட்டதில் போரடிக்குமா? ஒரு திருந்த வேண்டிய நல் உணர்வு வரவேண்டுமானால் வாழவும் முடியாம, சாகவும் முடியாம கொடுமைகள் நடந்தால்தான் திருந்துவோமா? சில உதாரணங்களை கண்டு அதை தியானமாய் ஆய்ந்து, அறிந்து நம் தீய குணங்களின் கட்டுகளை உடைக்கக்கூடாதா? அறிவை எந்தளவுக்கு நாம் முடக்கி வைத்திருப்போம். தன்னை அறியாமலே அதிகமாக உண்ணுவதற்கு எந்தச்சூழல் தேவைப்பட்டது. தான் கிறிஸ்தவ நாடு, தான் முஸ்லிம் நாடு, தான் புத்த நாடு, தான் இந்து என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்க வில்லை என்று அழிவுதரும் பேராயுதங்களோடு ஒருவரை, ஒருவர் கொண்டு பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆசைப்படுவது ஏன்? இந்த நாடுகளின் மதங்கள் எத்தகைய வளர்ச்சியடைந்துள்ளன, அன்பை கையாளவில்லையே, தான் நாடு இந்த மத நாடு என்று சொல்லி என்ன பெருமை. எல்லை பிரச்சனைக்காக விட்டுக்கொடுக்கும் நோக்கில் போட்டிபோட்டுக்கொண்டு, அவரவர் நாட்டு பிரதமரோ, அதிபரோ, ராணுவதளபதிகளோ, ராணுவவீரர்களோ, மக்களோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ மற்ற நாடு தவறை உணரவேண்டும் என்று சொல்லி நான் இக்கருத்தை வலியுறுத்தி இரண்டு நாள் உண்ணாவிரதம் இருக்கிறேன், மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அமைதி போராட்டம், பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையில் தனது மதத்தில் உள்ள அருமையான அன்பை வெளிப்படுத்த போட்டிபோடுகிறார்களா? அன்பை சொல்லாதவைகள் வல்லரசு அல்ல, வளர்ந்த நாடு அல்ல, வளர்ச்சியடைகிற நாடு அல்ல. அன்பில்லாதவன் மனிதனே இல்லை, பெருமைக்கொள்ளும் நாடுகளில் மனிதர்கள் இருக்கிறார்களா, பச்சிளம் குழந்தைகளாக இருக்கிறார்களா? மனிதன் என்பதற்கு அன்பில் ஒரு மெச்சூரிட்டி வயது வேண்டும் குழந்தை நிலை அகன்று. அது ஆண்டுகளின் வளர்ச்சியல்ல. அன்பில் ஆண்டு (ஆட்சி) கொள்ளும் வளர்ச்சியில். உடல் வளர்ச்சியில் அல்ல, மன வளர்ச்சியில் வம்பில் வீரம் வேண்டாம், அன்பில் வீரம் வேண்டும். அன்பில் வல்லரசு நாடாக வேண்டும். பெற்றோர்கள் மட்டும் பிள்ளைக்கு சொத்து சேர்த்துவைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு சொத்து சேர்க்கும் விதமாக தானும் சொத்து தந்து அன்பை பரிமாறக்கூடாதா? பெற்றோருக்கு சொத்து கொடுக்கும் விதத்தில் பெற்றோரின் தேவைக்கு ஏற்ப, தான் சம்பாதிப்பதில் இருந்து தினந்தோறுமோ, வரவாரமாகவோ, மாதந்தோறுமோ அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சம்பாதித்ததை தந்து step எடுக்கக்கூடாதா? புதிய தலைமுறை வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வாங்க, உட்காருங்க, சாப்பிடுங்க என்று சொல்லும் காலம் மாற்றம் பெற்று நவீன காலத்திற்கு செல்லப்போகிறது வாங்க, ஏன் செல்லம் இல்ல, உட்காராதீங்க, ஒன்னும் சாப்பிட கேட்காதீங்க என்று , ஹால்ல நடந்துகொண்டே சொல்ல வேண்டியது சொல்லிட்டு மௌனமாய் நடந்து நடந்து அமைதிப்படுவோம். விருந்தாளி வந்திட்டதால டிவியை அணைத்துவிட்டு அமைதிக்காப்போம். இன்றைய சிறப்பாக, ஒருவேளை உணவை தவிர்த்து விருந்தாளியோடு விரதம் இருப்போம். ஏனனில், இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பான்மை மனிதர்கள், ஒரே பிஸி, டென்ஷன், எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அதிகமாக உட்கார்ந்தே இருப்பது பைக், ஆட்டோ, கார், பிளைட் என்று travel அதற்குத்தான் ஒரு ரிலாக்ஸ், உறவுக்காரங்கள் வீட்லயாவது, விருந்தாளியாக சென்று, அவங்க இவங்கள பார்க்கணும், இவங்க அவங்கள பாக்கணும் நான் உங்களுக்காகவாது நல்லா வாழனும் உங்கள அப்பப்ப பார்க்கணும் என்று இவங்க அவங்கள சொல்லனும், அவங்க இவங்கள சொல்லனும் அதற்க்குத்தான் இப்படி ஒரு வாக்கிங், கொஞ்சம் உணவு சாப்பிடாத டயட் நிலை, ஒலி மாசுபடாத அமைதி நிலை இப்ப எது கெடைக்கல சாப்பிட, வெளுத்துகட்ட, பரபரப்பு பரபரப்பை மாற்றி பரவச அமைதிக்கு நவீன கால விருந்தோம்பலுக்கு , நம்ப வீட்ல, மனசோட சொன்ன பேச்சி கேட்க மாட்டோம். பிரியத்தை இழக்காத உறவு, அந்த முகத்தை பார்க்கும்பொழுது விருந்தாளியாய் உடல், உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு மரியாதையை கண்டு சொந்தகாரர் வீட்டில் இப்படி உரிமையாய் ஆரோகியத்தின் முயற்சிக்கு ஒருவருக்கொருவர் நடந்துக்கொள்வோம். விருந்தோம்பலில் ஆரோக்கியத்தை ஆதரிப்பதா, தெரிந்தும் முகதாட்சனை பார்த்து நடந்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கியத்தை கெடுப்பதா? விரும்புகிறது 1008 இருக்கும், டாக்டர் அட்வைஸ் என்ன? விருந்தோம்பலில் அப்படி நடந்துகொள்ளலாமே? உண்மையான டாக்டரின் அட்வைஸ் எப்படி தெரியுமா இருக்கும்? உன் ஆரோக்கியத்தை கெடுக்கும் சொந்தக்காரர் உறவு வேண்டாம். உண்மையான அன்புள்ள சொந்தக்காரர் உபசரிப்பு எப்படி இருக்கும் என்றால் ஏற்புடைய உட்கார வேண்டாம் நடப்போம், நொறுக்கி கெடுக்கும் உணவில்லாத விரதம், இரைச்சல் இல்லாத அமைதி இன்னும் என்னன்னெவோ மனதிற்கும், உடலுக்கும் வேண்டிய நல்லவைகளை கொடுக்க வேண்டும். என்னன்னெவோ ஐந்தாண்டு திட்டங்கள் அரசு கொண்டுவருகிறது, போதும் என்கிற திருப்தியான மனது அமைய ஐந்தாண்டு திட்டங்கள் கொண்டுவர அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தவில்லையே. நான் ஏழை, இழிவென கருதும் ஒரு கவலை, நானா பணக்காரன், இரக்கமில்லா பெருமை – மனது உண்மையான சாந்தம் அடையாதா? இதற்கு பெரிய திட்டங்கள் எங்கே? விருந்தாளிகளுக்கு எது அளிப்பது மரியாதை? பாசாங்கு ஏன்? நீங்க நல்லா இருக்கனும். இது தேவையா? நீங்க நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன். இக்காலத்திற்கு இப்படி வாழ்த்துவது சரியா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு? அமிர்தம் நல்லது தானே பிறகு ஏன் நஞ்சு? மக்கள் பெருக்கம் நல்லதா? சரி இருந்துட்டு போகட்டும். அரிதாக கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களை ஏக போகமாக தாறுமாறாய் பயன்படுத்துவது ஏன்? மக்கள் பெருகிட்டோம். அதுபோல் நாம் பயன்படுத்துவதும் பொறுப்பாய் பயன்படுத்துவோமே? இத சரிபண்ணாம? நீ நல்லா இருக்கனும். எப்படி நல்லா இருக்க முடியும்? சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிபண்ணுவது எவ்வளு சுமையாக இருக்கு? வாய் மட்டும் கிழியுது நீ நல்லா இருக்கனும் என்று? செயல ஒன்னும் காணும்? வீட்ல பயன்படுத்த உதவிய பேப்பர், சாப்பிட உதவிய வாழை இலை, நமக்கு உதவிய பழங்கள், தீனிகள் பெருகிவிட்டால் அதை வைத்துகொண்டே இருப்போமா? வீசி கடாசுறோம். அப்புறம் தாறுமாறாய் கஷ்டத்தை கொடுக்க வாய்ப்புள்ள பெருகிப்போன மக்களால் குப்பை பெருக்கத்தை உண்டு பண்ணுகிற மனிதர்களை வாழ்த்தி நஷ்ட ப்படுத்தாம வீசி கடாச வேண்டியது தானே? அமிர்தம் எப்பொழுது நஞ்சானது? நாம் கடாச வேண்டியது யாரை? அதற்காக கொஞ்சம் பெயரை சாக அடிக்கச்சொல்லல? நல்லாத்தான் வாழனும் நம்ம? ஒழுக்கம் வேணும்? ஒழுங்கு வேணும்? இப்ப இருக்குற நெருக்கத்தை சமாளிச்சிகிட்டே? ஆபத்துகளை சமாளித்து வருமுன் காத்து நல்லா இருப்போமே. தட்டு நல்லது, டம்ளர் நல்லது, குக்கர் நல்லது, ச்வீட், பழங்கள் நல்லது என்று ஒன்றை எடுத்துகொண்டு அதை மட்டும் வீடு நிறைய வைத்தால் நல்லதா? அமிர்தம் நஞ்சு? நிறைய வேற்று கிரகங்கள் குடியிருக்க நல்லது? அந்த வாய்ப்பு இருக்கு கிடைச்சிடுச்சி, குப்பை பெருக வழி கொடுக்குவோம். மனிதர்கள் பெருகுவோம். ஏன் குப்பை குப்பையாகத்தான் இருக்கணுமா? சீர் வேண்டாமா? good bye . 16 பெற்றும் பெறு வாழ்வு வாழனம். பிள்ளைகுட்டியா? செல்வங்களா? சீர் அழிப்பதா அழுகையை மாற்றும் தீபாவளி நாம் தீபாவளி கொண்டாடினால் அதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒருவகையில் ஒழுங்குபடுத்துவதில் ஒரு காரணியாக இருப்பது தாவரங்கள். நிலைமை மோசமானால், தாவரங்கள் நம்மை கைவிடும் அப்பொழுது, நம்முடைய தவறால் மனிதர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொள்வார்கள். ஆம் இது புவி வெப்பமயமாவதால். இது மனிதர்களின் தீக்குளிப்பா. மனிதர்களின் கெட்ட தீபாவளியா. அப்பொழுது தாவரங்களும் அழும். நாம் தெரிந்தே சிரிக்கிறோமா? தீபாவளியென்று. தீபாவளியை பாதுகாப்பாய் மாற்றிட பரிகாரம் உண்டு. அப்பொழுது தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாய் இருக்கும். நமக்கும், தாவரத்திற்கும் வெது, வெதுப்பு சூழலில் மகிழ்ச்சி. அப்பொழுது தீபாவளி வெற்றிபெற்றது. கடல் நீர் உவர்ப்பு ஆனால் அது மழை நீராகும் வேலையில் இனிமை என்று சொல்வது போல் தீபாவளியை மகிழ்ச்சியாக்குவோம். கடல் நீரும், மழை நீரும் தேவைப்படும் நேரத்திற்கு தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். அதுபோல நல்ல தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை அல்ல, பலமுறை வருவதற்கு ஏற்ப சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டும் தீபாவளிக்கு பட்டாசு சுடுவோம். மனிதனே பட்டாசாக சுடபட்டால் தீபாவளிபோல், காரணம் புவி வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் குறைவு படாமல் உயர்ந்துக்கொண்டே இருப்பதை பார்த்தால், இப்படிப்பட்ட தீபாவளி ஒரு நாள் தீபாவளியாக அல்ல, கஷ்டமான கொண்டாட்டமாகவே ஒவ்வொரு பொழுதும் இருக்கிறது. நல்ல தீபாவளி தொடரவேண்டும் என்றே விரும்போவோம். நமக்கும் ஒரு – சிக்கிட்டான் யா புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம். தனக்கு நல்லது செய்யில, பிறருக்கு நல்லது செயில்ல என்றால் அதற்கு என்ன அர்த்தம். அவரும் சிக்கிட்டார் யா. என்ன நல்லது செய்யாதபடிக்கு அவரும் கொலை, கற்பழிப்பு, ஏமாற்று, திருட்டு, வஞ்சகம், பொய், பிடிவாதம், ஊதாரித்தனம், அலட்சியம், பெருமை, ஒழுக்கமின்மை போன்ற குற்றங்களில் ஏதோ சிலவற்றை செய்யும்படிக்கான காரணங்களில் சிக்கிட்டார் யா. நல்ல செயல்களை செய்யும்படிக்கு அவரையும் கலந்துகொள்ளும் காரணங்களில் ஏன் சிக்கவைக்கல அதில் தக்கவைக்கல புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபம்படுகிறோம். தீமை செய்யும் காரணங்களில் சிக்குபவர்களை பார்த்து கோபப்பட்டு பயங்கரமாய் தண்டிக்க நினைப்பது ஏன்? நமக்கும் ஒரு – சிக்கிட்டான் யா புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம். தனக்கு நல்லது செய்யில, பிறருக்கு நல்லது செயில்ல என்றால் அதற்கு என்ன அர்த்தம். அவரும் சிக்கிட்டார் யா. என்ன நல்லது செய்யாதபடிக்கு அவரும் கொலை, கற்பழிப்பு, ஏமாற்று, திருட்டு, வஞ்சகம், பொய், பிடிவாதம், ஊதாரித்தனம், அலட்சியம், பெருமை, ஒழுக்கமின்மை போன்ற குற்றங்களில் ஏதோ சிலவற்றை செய்யும்படிக்கான காரணங்களில் சிக்கிட்டார் யா. நல்ல செயல்களை செய்யும்படிக்கு அவரையும் கலந்துகொள்ளும் காரணங்களில் ஏன் சிக்கவைக்கல அதில் தக்கவைக்கல புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபம்படுகிறோம். தீமை செய்யும் காரணங்களில் சிக்குபவர்களை பார்த்து கோபப்பட்டு பயங்கரமாய் தண்டிக்க நினைப்பது ஏன்? காப்பாற்றுங்கள் புயல்ல சிக்கிட்டார், விபத்துல சிக்கிட்டார், வெள்ளத்தில சிக்கிட்டார் இதெல்லாம் பார்த்து பரிதாபப்பட்டு சிக்கிகொண்டவரை மாயிந்து போகாமல் இருக்க காப்பாற்ற நினைக்கிறோம். தனி படையும் இருக்கிறது. நன்மை செய்யமுடியாதபடிக்கு தீமை செய்யும் காரணங்களில் சிக்கிக்கொண்டவர்களை கவனிக்க வேண்டாமா? இவர்கள் நன்மை செய்யவேண்டிய குணங்களில் உயிர் பெறாதபடிக்கு மாய்த்துக்கொள்ளப் போகிறார்களே. தீமை செய்யும் காரணம் நன்மையைத்தானே பாதிக்கிறது. பாதிக்கப்பட்டதால் எவ்வளவு இழப்பு. நமக்கு சொந்தமாக இருக்கவேண்டியது நன்மையின் குணம். சாக வேண்டியது தீமையின் குணம். ஆனால் தீமையின் குணம் சொந்தாமாகவும். நன்மையின் குணம் செத்துக்கொண்டிருப்பது நமக்கு இழப்பதுதானே. இளவயது திருமணம் முன்னெடி எல்லாம், இளவயது திருமணங்கள், ஆதரவு பெற்று இருந்தன. பலர் போராடி, இளவயது திருமணம் தடை செய்யும் சட்டம் நிறைவேற பெற்றது. விதைக்க ஒருகாலம், அறுக்க ஒரு காலம் உண்டு. தற்காலத்தில் இளவயதிலேயே பான் பராக், மதுபான குடி, சிகரெட் பிடிப்பது உள்ளதே. இப்படி செய்வது எந்தகாலத்தில் செய்வது நல்லது. இதுவும், ஒரு இளவயது திருமணம் போல், சிறுவயதில் கடைப்பிடிபதால் கெடுதலா? அப்படியென்றால் ஒரு அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கடைப்பிடித்தால், சாவை அழைக்கும் வாலிப வயதல்லவா. நல்ல வாலிப வயதில் திருமணம் நடைபெறுவதை ஆதரிக்கிறோம். சாவின் வாலிப வயது? ஒரு குழந்தை பிறப்பை ஆதரித்து வரவேற்பதுபோல். இறப்பையும் ஆதரித்து வரவேற்கும் பழக்கமாக இருக்கக்கூடாதா? இந்த பான்பராக், பீடி, சிகரெட், மது பழக்கங்கள். எப்படிப்பட்ட வயதிற்கு இது நல்லபழக்கமா? இதனால் என்ன, என்ன நன்மைகள், என்ன, என்ன, தீமைகள். ஜான் சறுக்கி முழம் போனால் என்ன. வருகிற சாவை தடுத்து நிறுத்த முடியாது. வயோதிக காலத்தில் சிரமங்கள் நீடிக்கவேண்டுமா? பிறக்கும் எல்லாரும் ஒரு காலத்திற்கு சாவது நிச்சயம். அந்த சாவு நல்லபடியாக இருந்தால் என்ன? வயதிற்கான பழக்கம் இல்லாததால் ஆரோக்கியம் கெடுகிறது. சாவிற்கான ஆரோக்கியதிற்கேற்ற கெட்டபழக்கங்கள் என்று கருதபடுபவை சாவிற்கான நல்ல பழக்கங்கள் என்று கருதலாமே. வயோதிகருக்கு நல்ல மருந்தும் கொடுத்து, நல்லது கெட்டதையும் வாங்கி போட்டால் என்ன? கட்டுப்பாடு என்ன? இனிமேலா சிறுவயது வாலிபம் திரும்பும். தென்னை மரம் தேங்காய்கள் காய்க்க அதை சுத்தம் பண்ணுவது ஏன்? பழுத்த மட்டைகளை வெட்டி, பன்னாடையெல்லம் எடுத்து. விளைந்த நெல் மணிகள், நெற்பயிர் மடிஞ்சி போகிறவரைக்கும் காத்திருப்பார்களா? அதற்கு ஒரு stage இல்ல கிட்ட பார்வை, எட்ட பார்வை என்னால, பிறருக்கு உதவ முடியுமா? ரோட்டோர வறியவனக்கு, ஒரு மாதத்திற்கு ஆகும் செலவு ரூ. 2000 என்றால், நான் ரூ. 10000 சம்பாதிக்கிறேனே, ஏன் உதவ முடியாது? இது அந்த வறியவனை கிட்ட பார்த்த கிட்ட பார்வையா? ஏன்? எனக்கே எனக்கு உதவ முடியுமா? ஊருக்கு உதவுறது இருக்கட்டும். நான் கோபப்படும்பொழுது அதை கன்ட்ரோல் பண்ண இது என் கிட்ட பார்த்த close angle நமக்குள் வளர்ந்து விட்டதை பார்க்க வேண்டியது மற்றும் வளர வேண்டியது, எது? அந்த எட்ட பார்வையோ. எட்டி பார்த்தது (எட்டப்பார்வை) தொழில் அதிபர், நாட்டின் அதிபர், பூசாரி, விஞ்ஞானி, அரசியல் மோசடி பணக்காரர் இன்னும். தவிர்க்க வேண்டியது? தவிக்க வேண்டியது? அணைக்க வேண்டிய தீயை? அரவணைக்க வேண்டிய தாயை? சமைக்க எரிக்க தீயை? சமத்து நல்ல தீது? எந்த பார்வை குறைவு ஏற்பட்டாலும் அது குறைபாடுதான்? ஏற்புடைய காலத்திற்கு கண் தானம் ரெடியா? குறைவு என்ன ஆச்சி எந்த பவர் கிளாஸ் (கண்ணாடி) ரெடியா? மூக்கறுப்பு – Nose cut மழை காலம் என்றாலே ஒரே சளி, ஜுரம் சின்ன குழந்தைகளுக்கு மூக்கு சளி – சரியான நோஸ் கட் செய்ததது பெரியவங்க என்கபாத்தாலும் கேவலங்கள், அருவருப்புக்கள், நாய் அடிச்சி மூட்டையா போடுறது இன்னும் என்னவோ எப்ப போட்டதுன்னு தெரியிலா, ஊறி பொங்கி எழுகிறது மழையில, இத மூக்கு பிடிக்க சுவாசத்தை, சாப்பிடுவது முக்கியமா கொழந்தைன்க, டாக்டர் சொன்னாங்கள, வலிக்காம சிரப் சளிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, எதுங்க டாக்டர் சொல்றாரே. சிரபு, ஊசியில்லாம அவர காப்பாத்திக்க முடிஞ்சதா. இத சொல்ற என்ன என்ன தண்ணியில தூக்கி போட்டாலும், கட்டு மசத்த மிதப்பெய்ன். டீ குடிச்சா சூடா இருக்கனும், இட்லி நா சூடா வைங்க இப்படி சொல்லி, தப்பு செஞ்ச என்ன தூக்கி மிதியிங்க நான் மேல் முறையீடு எல்லாம் செய்ய மாட்டேங்க சூடா சாப்பிடுகிற மாதிரி, சூடா தண்டனையா எத்துகிரங்க எதிர்த்து கேட்ட என்னை சினிமாவிலிருந்து ஒதுக்கி ,ஏன் வைத்து புலப்பை நாசமான, குளிரும். மனசாட்சி மனசாட்ச்சி மன்னா கட்டி. மண்ணில் ஒரு ரோஜா இந்த விஷயம் – பிடிச்சது பிடிச்ச துன்னு சொல்லி ஒன்னும் அனுப்ப வேணாம். இத பிடிக்கல – ஞாயத்த கேளுங்க நு சொல்லி யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேணாம் போங்க. அட போங்கையா. மோகம் – லவ் பாசம் கண்ண மறைச்சிடுச்சி இன்குறாங்க பதவி கண்ண மறைச்சிடுச்சி இன்குறாங்க கற்பழிச்சிட்டான் என்று மட்டும் சொன்னால் மோகம் கண்ண மறைச்சிடுச்சி, அதாங்க பெண்ணை கற்பழிச்சிட்டான் காதலி காதலன் அல்லாத புருசன கொன்னுபுட்டா கௌரவம் கண்ண மறச்சிடுச்சி, பெருமை கண்ண மறச்சி குவிக்கிற சொத்து படிப்பு கண்ண மறச்சி, படிக்காதவன இந்த வாட்டு வாட்டுற வழக்கு மோகம் என்னும் தீயில், வெந்து வெந்து போகும். காப்பாய் தேவி. ஆ ஆ ஆ சிரிப்புக்கு, அந்த நடிகை வேணும். திருமணத்திற்கு, சூப்பர் ஸ்டார கல்யாணம் பண்ண முடியாத, எச்ச எச்சச்ச வா சிரிக்க வைக்கிற பொண்ணு கருப்பு, பெயிண்டடிச்சி சிகப்பா இருக்கிறா – இவ சிகப்புல ஊழல் – திருமணத்திற்கு இவ வேணாம். குடும்பத்தை மகிழ்ச்சியாய் அர்த்தத்தை கொடுக்கக்கூடிய பெண்ணல்லவா. ரகசியம் வாய் விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும். பொம்பள சிரிச்சா புகையில விரிச்சா போச்சி பொன்னே (கோல்ட்) உனக்கென்ன ஆச்சி. இந்த சிகப்பு- முழு பூசணிக்காயை, சோத்தில மறைகிற மாதிரி நடிச்சி, நிஜ வாழ்கையில மகிழ்ச்சியை பெயிண்டடிச்சி, டென்ஷன் கொடுத்து – மகிழ்ச்சியை பறிக்கிற ஊழல் தெரியாம போச்சே. இதெல்லாம் என்ன மோகங்கள் – அன்பு மேகங்களே வாருங்கள். தீக்குளிக்கிறத வேடிக்கை பார்த்ததாறு, கட்டிபிடிச்சி தானும் எரிஞ்சது யாரு. குளிர் காய்ந்ததாறு, சாக்கை கொண்டு போத்தி பாதுகாப்பை அணைத்து காப்பாற்றியது யாரு. மோகம் என்ற தீயில் யாரு. பதவி மோகம், பாச மோகம் – பிள்ளைகளை, மக்களை சரியாக கண்டிச்சி வளர்க்காதது, இன்னும் என்ன என்ன மோகன்களோ. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய், அன்பே, அன்பே. என்னை (பலவித மோகங்களை கண்டால்) என்ன என்னவோ ஆகிறாய் முன்பே. அன்பே. ஊறுகாய் இருக்கு. சாப்பாடு இருக்கு, மோகம் கண்ணால் தொட மட்டும் போதுமே. அபாய கரண்ட்- ஐ, டெஸ்ட் பண்ணி, பாதுகாப்பாய் பயன்படுத்தி என்ஜாய் பண்ணுவோம். அதற்காக, பாதுகாப்பையே டெஸ்ட் – டெஸ்ட் பண்ணி அபாயம் ஆக வேண்டாம். ஒடம்பு வலி , சரி தண்ணி அடிச்சிட்டு தூங்கு சைட்டு டிசீஸ் தேவையா? பதவி சைட்டு தப்பு, ரையிட்ட ஆன்சைட்டிலே கண்டுபுடிச்சி குட் night , டாட்டா காம்பிக்கலாமே. தங்கங்களா. திருக்குறள் மனப்பாடம் பண்ண எத்தன தடவ படிச்சோம் கணக்கா மனபாடம் பண்ணுனா புட்டுக்குமே. யோசி. ஓகோ, தப்ப தெரிஞ்ச்சிக்க, குறைகள மனபாடம் பண்ணுணீங்களா. அதுக்குள்ள கையும், களவுமா புடிச்சாசாய். தப்புன்னு பதியனும். அதிலிருந்து மீள கணக்கு பண்ணி தப்பிக்கனும். மறுபடியும் சொல்றன் தங்கங்களா மனப்பாட கணக்கு புட்டுக்கும். எதற்கு first aid (முதலுதவி), அப்புறம் பொறுமையான ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் பிறருக்கு best aid- இது எப்படி indirect ஸ்பீச் நிறைய பேருக்கு தெரியில இங்கிலீஷ் இல்ல மனித நேயத்தில யாரோ ஒருவருக்கு யாரோ ஹெல்ப் பண்ணி அந்த உதவி பெறப்பட்ட யாரோ ஒரு ஹீரோ வாகி யாரோ வான நமக்கு ஹெல்ப் பண்ணினார். 8 8. சிந்தனை கடைச்சாரம் Child specialist (சைல்ட் ஸ்பெசல்லிஸ்ட்) சுட சுட, டீ குடிச்சா, நல்லா இருக்கும் சுட சுட, போண்டா சாப்பிட்டா, நல்ல இருக்கும் சுட, சுட மேல் முறையீடு செஞ்சா நல்லா இருக்குமே. நியாயத்திற்கு, மக்களின் சௌகரியத்திற்கு தம்மேல் ஏற்பட்ட கலங்கம் அல்ல கலங்கி நிற்கும் மக்களுக்கு சுட, சுட மேல்முறையீடு எப்படி, என்னை உதையிங்க குழந்தைகங்க அப்பா, அம்மாவை உதைத்து தான் விளையாடும். குறையில்லாதவர் யாரேனும் உண்டா? புத்தரை ஒரு அம்மா கேட்டாங்களான் – இறந்து தன் மகனை எழுப்ப அவரு சொன்னாரான், சாவு இல்லாத வீட்டிலே இருந்து, ஏதோ ஒன்றை கொண்டு வர சொன்னாரான். சாத்தியாமா? ஏதோ, கண்ண மறைக்கிறத போல, மக்களுக்குக்காக நிர்வாக திறமை கொண்டவரை, எவ்வளு நாள் மறைப்பது. மூட்டை பூச்சிக்காக ஊட்டை கொளுதல்லாம். புது வீடு, புது கிரகம். மாளிகை கட்ட, அப்பப்ப கூரை வீடு. தென்றல் காற்றுக்கு. எதிரி – எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்னர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் சமூக அன்னையின் வளர்ப்பினிலே என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும். கெட்ட என் சமூகம் உனக்கு முன்பாக கெட்டதை சொல்லும். இது யாருடையது. நல்ல என் சமூகம் உனக்கு முன்பாக நல்லதை சொல்லும். இது யாருடையது. டாக்டருக்கு பேசன்ட் எதிரியா? பேசன்ட்டிடம் உள்ள நோய் எதிரியா? கடவுளுக்கு நாம் எதிரியா? நம்மிடம் உள்ள தீய குணங்கள் எதிரியா? நமக்கு கடவுள் எதிரியா? கடவுளிடம் உள்ள நல்ல திட்டங்களுக்கு எதிரியா? பாகிஸ்தானுக்கு நாம் எதிரியா? யாரிடம் உள்ள அறியாமை எதிரி? இந்தியாவுக்கு இலங்கை எதிரியா? யாரிடம் உள்ள அறியாமை எதிரி? ரஷ்யாவுக்கு அமெரிக்கா எதிரியா? யாரிடம் உள்ள அறியாமை எதிரி? அறியாமைக்கு நாம் எதிரியா? அறியாமையை நிர்வகிக்கும் நாம் எதிரியா? நான், நீ, கடவுள் மூவர் உள்ள சமூகம் அமைவதில் எது அமைவது பெரு மதிப்பு அடையவேண்டும். குறைவை யார் தலையில் கட்டுவது? உலகில் அமைதியும், சாந்தமும் மேம்படவேண்டும். First பர்சன், second பர்சன், third பர்சன் இட ஒதுக்கீடு எப்படி? சாந்தத்திற்கும், அமைதிற்கும். முஸ்லீமுக்கு நாம் எதிரியா? கிறிஸ்துவர்களுக்கு நாம் எதிரியா? இந்துகளுக்கு நாம் எதிரியா? சிங்களத்திற்கு நாம் எதிரியா? தமிழர்களுக்கு நாம் எதிரியா? கர்நாடகத்திற்கு நாம் எதிரியா? பாமரனுக்கு நாம் எதிரியா? அறிவாளிக்கு நாம் நண்பன் வாழும் வாழ்க்கையில், நமக்கு யார் தடையா இருக்கிறார்களோ, அவர்களே, நாம் எதிரியாய் எண்ணுகிறோம். ஆம். எதிரியை நண்பனாக்கினால். நெருப்பு சுடும், கிட்ட போகாதனு சொல்லி குழந்தைக்கு சொல்கிறோம். அதன் பிடிவாத வாழ்க்கையினால், தனக்கு தடை என்று சொல்லி, சொல்லுகிற நம்மை எதிரியாக நினைக்கலாம். முரண்டு பிடித்து நெருப்பிடம் போகலாம். சொல்வதை எச்சரித்து விட்டு, குழந்தைக்கு பாதுகாப்பால் நாம் கவனிக்கலாமே. குழந்தையின் நம்மை எதிரியாக கருதும் எதிர்ப்பை, நண்பனான நிலையில் தோழமையின் நம் கவனிப்போடு. நண்பனை எதிரியாக்கினால். தான் கேள்விப்பட்டது வரை அது ஆபத்து, நண்பன் சொல்கிறார் என்று எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியுமா? நண்பன், தான் அதை செய்தால் நல்லது என்று கருதி, தவறு என்று அறியாமல், நம்மிடம் சொல்லலாம். ஆனால், அது கெடுதல் என்று, நாம் உறுதியாக கருதும்பொழுது, நண்பன் கூறுவதை எதிர்க்கத்தான் வேண்டும். அறியாமை தான் எதிரி. அந்த அறியாமையை நிர்வகிப்பவர் எதிரி. நிர்வாகமோ சரி பண்ண வேண்டியது. எல்லாரும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். எதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லைக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு லிட்டர் அளவு குடித்தால் விஷம் அதில், ஒரு துளி விஷம் என்னத்தை செய்து விடப்போகிறது. விஷத்தையே குடித்துவிட்டாச்சி (1 லிட்டரையும்) அதற்கும் treatment இருக்கு அதற்கும் ஒரு அளவு. எதை செய்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்று சொல்லி, சொல்லி பயமா, அந்த நஞ்சை உண்ட தேவர்கள் காப்பாற்றபடவில்லையா? எல்லாரும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்ன, இதை உனக்கு செய்யமுடியாது என்ற உதவியை செய்து, பேராபத்திலிருந்து காப்பாற்றலாமே. எதிரி டாக்டருக்கு பேசன்ட் எதிரியா? பேசன்டிடம் உள்ள நோய் எதிரியா? அதுபோல் நம்மை துன்பப்படுத்துபவர் எதிரியா? துன்பப்படுத்தும் காரணங்கள் எதிரியா? அதுபோல் நமக்கு அறியாமை எதிரியா? அறியாமையை நிர்வகிக்கும் நாம் எதிரியா? முதலில் நான் யார் என்று அறிந்தால்தான்? நிர்வகிப்பவர் யார் என்று அறிய முடியும். சிலர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். “சொல் புத்தியும் இல்ல. சுய புத்தியும் இல்ல” என்பார்கள். “அவனுக்கு பொண்டாட்டி ஒதுரா?” “அவனோட சேருகிறவரைக்கும் அவன் உருப்படமாட்டான்”. “பூனைக்கு யார் மணி கட்டுவது?” இது தான், செய்வது தான் சரி, என்று இருப்பவர்கள். ஆகவே உண்மையான “எதிரி” எதுவென்று அறிந்து தெளிவான சிந்தனையுடன் சிறந்த முயற்சிகள் எடுத்து நம் அறியாமையை போக்கிக்கொள்வதே சிறந்தது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு proof கேட்பவர்களே கடவுள் இல்லை என்பதற்கு எங்கே சரியான proof முருகன், சிவன், இயேசு, முகமது நபி, புத்தர் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு சரியான proof இறைவனின் பிள்ளை என்பதில் நாம் சரியாக இருந்தால், நமக்கு கடவுளாக இருப்பதில் யார் தகுதியோ அவர்கள் இருக்கட்டுமே அது முருகனோ, சிவனோ, இயேசுவோ, முகமது நபியோ, புத்தரோ இருக்கட்டும். கடவுளாக இருப்பதில் யார் இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். நமக்கென்ன நாம் கடவுளின் பிள்ளையாக இருந்துட்டு போவோமே, வீணாகவா போக போவுது. நாடு என்ன செய்ததது என்கிறாயே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய். என்பார்கள் அதுபோல், நமக்கு கடவுள் யாராகவாவது இருக்கட்டும். நாம் கடவுளின் பிள்ளையாக இருப்போம். விபத்து விபத்தை தவிர்க்க 10 மீட்டர் இடைவெளி தேவை. என்று சில வாகனங்களில் போட்டிருக்கிறது. ஏன் விபத்தை தவிர்க்க இரண்டு, மூன்று கிலோ மீட்டர் இருக்கக்கூடாதா? bye pass வழியா போகலாமே ஆம் bye pass இரண்டு, மூன்று கிலோ மீட்டரில் இருந்தா? city குள்ளே ஒரே traffic ஆகவே வேற்று பாதையில் செல்லலாமே. வேற்றுபாதை ஒரு இரண்டு, மூன்று கிலோ மீட்டர் சுத்தலாக இருக்கலாம். கட்டாய சூழல் இல்லாமல் இருந்தால், நாமும் traffic உள்ள வழியாக செல்லாமல் கொஞ்சம் traffic ஆவதை குறைக்கலாமே. சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா. ஏன்? ஒரு ஜான் அளவு கேப்பில விபத்தை தவிர்க்க முடியாதா? 10 மீட்டர் தான் தேவையா? பசுமையான, நல்ல காற்றோட்டம் உள்ள பாதையில் செல்ல, அச்சூழல் சுவாசத்திற்கும் நம் உள் உடல் உறுப்புகளுக்கும் மிக அருகில் இருந்தால் மனசுக்கும், நமக்கும் நல்ல சுவாச உணவு அருகில் இருக்குமே. (சிறிய இடைவெளி – சின்ன கேப்) இப்படி காற்றோட்டமும், பசுமையும் உள்ள பகுதி விழியாக செல்வதால் சுவாச கோளாறு மற்றும் சில உபாதைகளின் விபத்தை தவிர்க்க ஒரு சிறிய வாய்ப்பாக கூட இருக்கலாமே. ஒரு விபத்தை தவிர்க்க நினைத்தால், வேறு விதத்தில் விபத்துக்கூட தலை தூக்கலாம். எதிலும் கவனம் அது துணிவு, கனிவு. சரியா? உதவி உதவியை யாருக்கு செய்வது? நம் அண்ணன், அக்காள், தங்கை, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி,அத்தை, மாமா,மகன், மகள், மருமகன்,மருமகள், தோழன், தோழி என்று பார்த்துத்தான் உதவி செய்ய வேண்டுமா? அதாவது, நம் சொந்தக்காரர்களை பார்த்து, அவர்களுக்கு, உதவி செய்வதை விட, உதவி, யாருக்கு சொந்தமாக வேண்டும் என்று பார்த்து உதவி செய்வதே சிறப்பு. ஒரு தகுதி வேண்டாம், ஒரு தராதரம் வேண்டாம் என்பார்கள் திருமண துணை தேடுபவர்கள், தனக்கு அமைய இருக்கும், வாழ்க்கை துணையை குறித்து. அதுபோல், உதவிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், யாருக்கு உதவி செய்வது, உதவி என்ற செயலுக்கு நெருக்கும் சொந்தம் என்று பார்க்கவேண்டும். அது, சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் இருப்பவர்களை விட. தன் பிள்ளைக்கு, படிப்பு என்றால் சரியாக வரமாட்டுது, விளையாட்டு புத்தியாகவே இருக்கிறது. கிரிக்கெட் நன்றாக விளையாடுகிறார் அதில் ஆர்வம் இருக்கு, இப்படி ஒன்று தன் பரம எதிரியின் பிள்ளை, படிப்பில் நல்ல டேலென்ட், ஆனால் அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் வாய்ப்பு அமைவது மிக கடுமையாக இருப்பதை நம் கண்கூடாக பார்க்கிறோம் என்றால், இப்படி மற்றொன்று. முதல் ஒன்றில், தன் பிள்ளை தனக்கு சொந்தம் என்று, படிப்பை திணிக்கலாமா? உதவியாக? மற்றொன்றில், தன் எதிரியின் பிள்ளைக்கு படிப்பை கெடுக்கும் வகையில் கெட்ட உதவியை செய்யலாமா (சொந்தம் அல்லாததால் உதவி மறுப்பு) முதல் ஒன்றில், உதவி என்ற செயலுக்கு சொந்தமாக அமைத்து கொடுப்பது என்னவேன்றால், தன் பிள்ளை கிரிக்கெட்டில் திறமை வளர்க்கும் வகையில் உதவுவது. மற்றொன்றில், தன் எதிரியின் பிள்ளையையாவது சொந்தம் கொள்ளும் வகையில், அப்பிள்ளைக்கு நல்ல முறையில் படிப்புக்கு தீனி போடும் வகையில் உதவி சென்ற செயலுக்கு சொந்தத்தை அமைத்து. உதவி என்ற செயலை சிறப்புற செய்யலாமே. ஆடு பகை, அதன் குட்டி உறவா என்பார்கள் உதவி என்ற செயலை பொறுத்து. முதல் ஒன்றில், ஆட்டின் பகை என்பது தனக்கு வராத வகையில் துன்புறுத்தும் படிப்புக்கு பெரிய அளவில் தன் பிள்ளைக்கு உதவுவதை விட பகைத்து (நல்லது என்பதால், கொஞ்சம் படிப்பை மட்டும் வற்புறுத்தி கொடுத்து விட்டு) , கிரிக்கெட்டில் ஆர்வம் வளர்க்கும் வகையில் தன் பிள்ளைக்கு போதுமான அளவில் உதவவேண்டும். குட்டியான உறவாக. குட்டியை வளர்க்கும் விதத்தில் தன் பிள்ளையிடம் கண்ட கிரிக்கெட் மீதான குட்டியான ஆர்வத்தை பெருக்கவேண்டும் ஆடு பகை, குட்டி உறவு. மற்றொன்றில், ஆடு பகை என்பது தன் பிள்ளைக்கு கூட உதவிட முடியாத நெருக்கடி பரம எதிரிக்கு, குட்டி உறவு என்பது எதிரியின் பிள்ளைக்கு தன்னால் முடிகிற படிப்பின் ஆர்வத்திற்கு கொடுக்கும் உதவி. பிரதமாரா இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும் நல்ல குணத்தில் தன்னிறைவு பெறாமல் இருப்பதுதான் பகை. மற்றொன்றில், பரம எதிரிக்கோ, தன் பிள்ளைக்கோ, யாருக்கோ பிறருக்கு உதவுவதற்கு தன்னிறைவு இல்லையே. பரம எதிரிக்கு. ஆம். உலகில் பிறந்த ஒரு பிள்ளையின் படிப்பு ஆர்வத்திற்கோ, விளையாட்டு ஆர்வத்திற்கோ தன்னை பெற்ற உலகம் இருக்கு தன் திறமையை கரை சேர்க்க என்றுதான் பிறக்கும் ஒவ்வொரும் குழந்தையும் வெறும் கையோடு (வெறுமெனே – நிர்வாணமாய்) பிறக்கிறது. சுற்றுச்சூழலை கெடுக்கிறோமே, நம் எதிர்கால சந்ததிற்கு உறவா, பகையா? ஆடு உறவு, குட்டி பகை. மனித வாழ்க்கையில், பல நல்ல குணங்களில் கொஞ்சம் தன்னிடம் இருந்தாலும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சில நல்ல குணத்திலாவது தன்னிறைவு வேண்டும். கல்லாதது உலக அளவாக இருந்தாலும், கையளவாவது கற்றிருக்க வேண்டும். உதவி – உதவி கொடுக்கும் செயலுக்கும், உதவி பெறும் செயலுக்கும் சொந்தம் என்பது நல்ல உறவுள்ள உதவி – குட்டி உறவு – ( சொந்தத்தின் தொடர்பு -உறவு) உதவி- உதவி கொடுப்பதை மறுக்கும் செயலோ, உதவி பெறுவதை மறுக்கும் செயலோ அமைந்தால் பகை அது உற்வு இல்லாததான பிரிவு – ஆடு பகை. (சொந்தத்தின் தொடர்பு – பகை) தீபாவளி தீபாவளியில் பட்டாசு, வெடிகளை கொளுத்துகிறோம். ஆனால் அப்படி கொண்டாடும்பொழுது பட்டாசோ, வெடியோ தன் மீது காயத்தை ஏற்படுத்தாமல் பாதுகாப்பாய் பயன்படுத்துகிறோம். பற்றவைத்து விட்டு குறிப்பிட்ட அளவிற்கு நகர்ந்து பாதுகாப்பாய் இருக்கிறோம். அதுபோல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நல்லதா, கெட்டதா என்று ஆய்ந்து, அறிந்து நல்ல நன்மைக்கு அச்சுறுத்தலை கவனித்து பாதுகாப்பாய் செயல்படுவோமே. நம் அன்றாட செயலில் அதை செய்வதா? செய்யவேண்டாமா என்பது எப்படி பட்டாசு, வெடி ஒரு அச்சுறுத்தல், அதன் வெளிபாட்டை கவனித்து, பயன்படுத்துவது பாதுகாப்பு, மகிழ்ச்சி, அறிவு. அதுபோல் நம் அன்றாட செயலை கவனம் கொண்டு செயல்படலாமே. இச்செயலை செய்ய வேண்டாம் என்றால் எப்படி தன வீட்டில் தந்தையோ, பாட்டியோ போன்ற நெருங்கிய உறவில் இறந்து விட்டால் இந்த வருடம் தீபாவளி இல்லை என்கிறோமே அதுபோல் அந்த செயலை செய்யவேண்டாமே. மேடு-பள்ளம் ஆட்டி படைக்கனும் என்று ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தொழிலாளருக்கு போதிய (தாங்கள் நினைப்பது போல் அதிகமா) சம்பளம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பவர்களே. public ஆட்டி படைத்தால் என்ன? இந்த நிறுவனத்தில் students சேர்க்கக்கூடாது, என்று முடிவெடுத்தால் என்ன ஆகும். அல்லது இந்த தொழிச்சாலையின் முக்கிய செயல்படும் அஸ்த்திவாரத்தை, முடக்குவோம். அப்படி நடக்காது என்பதால் என்னவேண்டுமானாலும் செய்யலாமா? நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் என்பார்கள். public அதுபோல் செய்யமாட்டார்கள் என்ற பயமின்மையை நினைவிலாவது பயமான எண்ணமாக கொண்டாவது (முரட்டுத்தனம் செய்யமாட்டேன் என்றாலும்) எண்ணத்தில் பயம்கொண்டு செய்தால் அது நல்லது என்பது பிற்காலத்தில் தெரியும். நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். யாரு சாகிறார்களோ இல்லையோ கடவுள் சாகவில்லை. அவர் செத்திருந்தால் எல்லாம் சூனியம் ஆகிவிடும். நாம், ஆட்டி படைப்பதை செய்வது, உயிரோடு இருக்கும் நூறுவருடங்கள் எடுத்துக்கிறீங்களா எடுத்துக்குங்க. சாகாம முரட்டுத்தனம் பண்ற கடவுள் நம்மல விட்டுடுவாறா? நீங்க மட்டும் அதிகாரம் எடுத்துகிறது பத்தலன்னு உங்க பிள்ளையும் அதிகாரம் எடுத்துக்கணும். பேர பிள்ளையும் அதிகாரம் எடுத்துக்கனும் என்று வளர்த்து , உங்க சந்ததி, எல்லாரும், அதிகபட்சம் உயிரோடு இருக்கும் உங்கள் ஒவ்வொரு 100 வருடத்தில் ஆட்டிபடைக்கலாமா? ஐந்து நிமிடம் வேதனை வந்தாலே, அந்த வேதனையை தாங்க முடியில, பேசாம செத்திடலாமா என்று நினைக்கிற உங்களுக்கு. நீங்கள் செத்தபிறகு, முரட்டுத்தனமான அதிகாரம் படைத்த கடவுள். எத்தனை 1000 வருடங்கள் தொடர்ந்து வேதனையை கொடுக்கணும் என்று எதிர்பார்க்கிறீங்க. ஐந்து நிமிடத்து வேதனையை பொறுக்காத, உங்களோடைய ஆட்டிபடைத்தலுக்கு. இப்படி சொல்றது நடக்குதோ, நடக்கலையோ சிந்தனைக்காகவாவது எடுத்துகொண்டு, அன்பிலே நான் அறிவு கெட்டவன் அல்ல என்று நல்லதே நினை, நல்லதே நடக்கும் என்று அனைவரின் நன்மைக்காக செயலில் காட்டுவோம். காலேஜில் கேலிவதை என்ற ராக்கிங்கை (ragging ) ஒடுக்க முயற்சி செய்பவர்களே. சட்டதிட்டங்களை கொண்டு. காலகாலமாக ஏழை, தான் ஏழையாக இருக்கக்கூடாது என்று நினைப்பதும். பணக்காரர் தான் ஏழைக்கு, கொடுக்கா மாட்டேன் என்று நினைக்கும் சமூக கேலிவதைக்கு அதை ஒடுக்க என்ன முயற்சி இருக்கு. ஏழையாக இருப்பது தவறல்ல. குளிக்கிறதற்கு பட்டுபுடவை, நகை நட்டா போட்டுக்க முடியும். குளிப்பதற்கு ஏற்ற உடை (குறைந்த அளவில்) இருக்கும். அப்படி போடும் உடை பிரமாண்டமாக இருக்காது. அதுபோல ஏழை பிரமாண்ட வசதி தனக்கு இல்லை என்று வருத்தப்பட வேண்டாம். குளிருக்கு பிரமாண்டமான இதமான ஆடையான மிகுந்த ஆடை உடுத்துவது போல, பணக்காரனாக இருப்பது தவறல்ல. என் ரத்தத்தின் ரத்தமே, என் உடன் பிறப்புகளே என்று மனிதர்கள் அனைவரும் தங்களுக்குள் அழைத்துக்கொள்வதும். சகோதர, சகோதரிகளே என்கிறார், சுவாமி விவேகானந்தர். அதே போல நாம் பாசமுள்ள, நேசமுள்ள, அன்புள்ள உடன் பிறப்புகளாக இருந்து பகிர்ந்து சந்தோஷமாக வாழ்வோம். தான் பணக்காரரான தன் பிள்ளைத்தான் பணக்காரனாக வாரிசு பெறனும், என்றில்லாமல், தன் பிள்ளையை ஏழைக்கு தகுதி பெறவும். ஏழையான பிள்ளை உங்கள் பணக்கார வாரிசை பெறவும். தன் பேரப்பிள்ளை ஒரு பணக்கார வாரிசை பெற்றுக்கொள்ளவும் மாறி, மாறி ஏழை, பணக்கார திறமை, பகிர்வை பெற வழிவகை செய்தால் என்ன. மேடு பள்ளம் சமமாகனும். ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்புகளே என்றெல்லாம்.சொல்லும் நாம். யாரோ வேண்டுமானால் ஏழையாக இருக்கட்டும். பணக்காரரான தாம், தன் பிள்ளை ஏழையாக இருக்ககூடாது என்பது ஏன்? அப்படி என்றால், வேறுபடுத்தி காட்டும் நாம். நமக்குள் சொல்லிக்கொள்ளும் ரத்தத்தின் ரத்தமே, உடன் பிறப்புகளே, சகோதர சகோதரிகளே. என்றெல்லாம் எதற்கு. ஒவ்வொரு தலைமுறையாக அனைவருக்கும் மாறி, மாறி ஏழை, பணக்கார நிலையை மாற்றி திறமைகொண்டு உண்மையிலே அனைவரும் ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய் இருப்போம். நாம் உயிரோடு இருக்கும் வரை நல்லதே நினைத்தால், இறைவன் நல்லதே நடத்தி வைப்பார் அன்பான இறைவன் நாம் மரித்த பிறகும் நம் அடுத்த நிலையில். Limit ல limit இல்லாதத எதிர்பார்க்கலாமா? பூமியின் வளங்களை நம்பியிருக்கிறோம்.limit ல. பூமி நாலைந்து குட்டிகளை போட்டு சந்ததியை பரப்பினா பரவாயில்ல. தேவையான வளங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒன்று பகிர்ந்து கொள்ளும் ஜனத்தொகையை குறைத்து (குடும்ப கட்டுப்பாடு) பகிர்ந்து கொள்வோம். அல்லது. பகிர்ந்துக்கொள்ளும் இயற்கை பரிசினை பெருக்குவோம். அல்லது அனைவரும் ஏழையாய் இருந்து குறைவாய் பகிர்வோம். இந்த நிலையில் ஏழையாய் இருப்பது நல்லது. தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம் ஏழையும் அதுபோலவே. 10,000 பேர் டீச்சருக்கு வாய்ப்பிருந்தா, 5 லட்சம் பேர்டீச்சருக்கு படிச்சிருக்குறாங்க. பெருந்தீனியாக இருந்து இயற்கை வளங்களை ஒடுக்குவது போல சிக்கனம் சிக்கனம் என்று ஏழைகளை ஒடுக்குகிறார்கள். மேடு – பள்ளம் – நல்லா கடலை போடுறான் இருக்கிற கடலையான விதை எல்லாம் வறுத்து சாப்பிடாத. ஒன்னையாவது வைப்பா. ஒரு விதைய பலிகொடுத்தா தான். மீண்டும் கடலை சாப்பிடலாம். ஒரு விதைய விதைக்கும்போழுது, நிறைய கனிக்கொடுக்கும் என்பதை அறியவில்லையா? விதைக்க, இருக்கிற விதையும் சாப்பிட்டா? பணக்காரர் இன்னொரு பணக்காரருக்கு எடுபிடி வேலையால செய்வாரா? ஏழை எவ்வளவு முக்கியம். ஏழை இன்னொரு ஏழைக்கு வேலை வாய்ப்பு தருவாரா? பணக்காரர் எவ்வளவு முக்கியம். மக்களாட்சி கொண்டுவந்தவங்க, பணக்காரர் தன்மையா பண்க்கரரே ஆட்சி செய்யணுமா? ஏழை தன்மைய ஏழையே ஆட்சி செய்யணுமா? பேரறிஞர் அண்ணா, ஏழையின் சிரிப்பிலே இறைவனை காண்போம் என்றார். எத்தனை பணக்காரர் கண்டிருக்கிறார்கள். ஏழையின் சிரிப்பிலே இறைவன பார்க்கிறோமோ இல்லையோ. ஏழையின் அழுகையில இறைவன் என்ன செய்கிறார். அந்த ஏழையா தன் தெய்வமா, அந்த இறைவனே நினைப்பது கூட , இறைவனுக்கு பெரிய விசயமே. என்ன ஏழை ஒவ்வொருவருக்கும், அதிகபட்சம் சாகிறவரைக்கும் (100 வருடம்) ஏழை அதன் பிறகு, இறைவன், தான் கடவுளா நினைத்த ஏழைக்கு, என்ன பூஜை செய்யணுமோ அவ்வளவு செய்தாலும் திருப்திய இன்னும் வளர்க்கணும் என்றே நினைப்பார். அந்த பூஜை என்னனென சாப்பிடனும் என்ன சந்தோசம் எல்லாம் தருவார். மேடு – பள்ளம் என்ன கஷ்டம். ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானா வளரும். பழமொழி பணக்கார வாரிசு, ஏழை வாரிசு – மனசு கஷ்டமா இருக்கு. சரி மானசீக பணக்கார வாரிசு, ஏழை வாரிசு டேலன்ட கொண்டு வருவோம். இல்லாத டேய்லேண்டுக்கு திட்டம் தீட்டி கொண்டு வருவோம். மேடு-பள்ளம் மேடு பள்ளம் எப்படி சமமாகும் மேட்டை விரித்து தானியத்த காயவைத்து விதையாக உருவாக்கவோ, பருப்பாக பயன்படுத்தவோ. பள்ளத்தில் விதை பலனின் சோர்ந்த தழைகளை புதைத்து அதன் உறங்கும் விதைகளை எழுப்பி இந்த சுழற்சியில் உயிரினங்களான நாம் அனைவரும் பலதலைமுறை பசித்து, புசித்து சமநோக்காய் சமன் செய்யும் மேடு, பள்ளம் மூடி, திறந்து சமமானதே. இந்த உயர்ந்த நோக்கின் கன்மலையில் பள்ளமும் சூழ்ந்து சந்தோஷ சறுக்கு மரம் விளையாட்டை கட்டுவோமே. முடியாதவருக்கு உதவுங்கள் என்றால் முடியாதவனாக மாறுகிறதற்கு உதவலாமா? இது ஒன்று, முடியாதபடி மாறுகிறதற்கு உதவுங்கள் என்றால் முடியும்படி உதவலாமா? இது இரண்டு நன்மை, தீமை. இப்படி இருக்கும் இரண்டு தண்டவாளங்களையும் இரயில் வண்டிபோல் இணைத்து பயணம் செய்வோம். ground லேர்ந்து தண்ணீரை tank ல ஏற்றி பயன்படுத்தி கீழ இறக்குவது தொடர்வது இல்லையா உலகத்தின் வேகம் (மெசின் லைப்) எல்லாத்திற்கும் சீக்கிரம், சீக்கிரம் சரி டெஇல்லி தூன்கிரத்திர்க்கு நைட் ல சிலீப் வந்து நைட் பத்து மணிக்கு படுத்து காலை பத்து மணி அல்ல. நைட் பத்து மணிக்கு படுத்து அதே நைட் 10 மணி பத்து நானோ செகண்ட்ல தூங்கி எழுந்ததா எவ்வளவு படு சீக்கிரம் நானோ டெக்னாலஜி இந்தியாவின் கவனம் சுகர் – வக்கனையா வக்கணையா சாப்பிடலாமா? சுகர் இருக்கே? வா கணையத்த பாதிக்காம சாப்பிடலாமே. இது ஒரு வக்கனை வக்கனையா சாப்பிடலாம். வக்கனையா காட்டலாம். அது செயலில் உடல் ஆரோக்கியம் என்று kaattalaam. யூரின் போகும்பொழுது காட்டனும். bus standil என்னென்னமோ சொல்லியாட்சி. கற்பு கற்பு ஒன்னாங் கிளாஸ் பிள்ளைங்க கூட மிஸ் சுண்டு விரலை காண்பித்து 1-க்கு எது எதற்கோ லேடீஸ் அண்ட் gentle மேன். அல்லது ஒரு சைகை. ப்ளீஸ் 1 விரல் காட்டிட்டு அடிங்க மத்தவங்க திரும்பிக்குவாங்க -பெரியவங்களா ரொம்ப romba ரொம்ப romba ரொம்ப romba ரொம்ப romba urgent urgent urgent நா. அடிச்சிடுங்க 1-குக்கு பரிகாரம் இருக்கா? கற்பு கற்பு – சுத்தம் சுத்தம் governmeent எத கவனிக்கும். கற்பு -க்கு – சுத்தத்திற்கு சத்தியம், கோர்ட்டு வாக்கு கொடுங்க அந்த வாக்கை அழிக்காதீர்கள் இப்ப மனசாட்சிக்கு vaakaliyungal நீ ஒட்டு போட்டு , நீங்க தோக்கிறீங்க கற்பு – சுத்தத்தை காட்டமா. வாக்களர் government நாம தோற்கிறோம் – வாக்கள ரின் கிடையாது – ரின் சோப்பு – சோப்பு போடாத – இல்ல போடு cover rent ஐயோ cover mental – ஐயோ – அரசாங்கம் government – வாக்களர் government வாக்கள ரின் கிடையாது என்ன வழி, பயணம் சிறப்பாய் அமைய குடிக்க தண்ணீர் எடுத்துக்கிறோம். ஒபென்ல போனா பினாயில் – இது மாதிரி எதோ. கட்டண கழிவறை. ரொம்ப ரொம்ப கற்ப நேசிக்கிறான் பாசம் காட்டுரெய்ன். அம்மாவுக்கு மட்டுந்தான்- வேண்டாம். அப்ப bustand ஒபென்ல யூரின் காட்டுவது. சின்னபிள்ளையா – வாயில விரல் sirikkriom வடிவேல் tank ஒடஞ்சி பைக்ல, யூரின் போகும்பொழுது, பைக்ல – சினிமாவுல. அது மாதிரி போனா கூட கற்ப்புத்தாங்க….. bus standla ரொம்ப urgent யூரின் போன வேலைக்கு போகணும். டிரெஸ்ஸ கலுட்டாம போயிடலாமே – வடிவேல் – கேவல சிரிப்பு அல்ல. அவன் veetla இடுஞ்சி போயிடனும். paalaa போகணும். மனசு இடுஞ்சி நொருங்க வேணாம் – கற்ப்புக்காக சுத்ததிற்காக நொறுக்கு தீனி போல tastaa இறை பாலனை போல – இப்படிக்கு balakumaran – கந்தை அகற்றும் kumaran கந்த kumaaraa – குழந்தை பாலை நிப்பாட்டும் வயது. சாகிற வரைக்கும் பால் தெளி தான். thelintha கற்ப்புக்கு. அவன் veetla இடுஞ்சி போயிடனும். paalaa போகணும். ஆண் – பெண் பஸ்ல – இடி இடிச்சி மழைதான் காதல் – நல்ல காதல் – கேட்ட காதல் அவன் veetla இடுஞ்சி போயிடனும். paalaa போகணும். பாலுக்கு எட்டனும் – அரிச்சந்திரன் – கை ஏந்தணும் அறி – சந்திரன் – சந்திரன் என்றால் பால் நிலா சோறு. உண்மைக்கு – அறிச்சந்திரன் glu கொடுப்போம். குழுக்கள் விழாது சந்திரனுக்கு ஏறுவோம். பால் வடியும் முகம் – குழந்தை போல் 1-க்கு குரல் என்ன சொல்கிறது திரு – காமத்து பால். எங்கள் கணபதி பெருமை நமக்கு தலைக்கனமாக இருக்கக்கூடாது. தலையாய கணத்திற்குரியதாக இருக்கலாமே. ஒவ்வொருவரையும் கணப்படத்தலாமே, மனித நேயத்துடன். பலகீனமானவர்களை மேலே கொண்டுவரும் கணத்திற்குரியவர்களாக கணப்படுத்தும்படி கணத்தின் அதி-பதிகளாக (கண பதி தாயாக சேயாக) கணப்படுத்த வேண்டும். அதாவது மதிப்பு அளிக்க வேண்டும். அதுவே கணப்படுத்துவதாகும். கேவலத்தை சகிக்க நினைக்கணும். எத்தகையதாக என்றால் கேவலமே கேவலப்படும்படி. விளைவு நன்மையாக. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு ஒரு கன்னத்தில் செல்ல, செல்லாமாக மென்மையாக அறைந்தால் மறுபடி மறுபடி காட்ட மாட்டமா மறு மறு கன்னத்திலும் இதம் கூட. மனித சிறு, சிறு குழந்தைகளே வாருங்கள். தவறு மனித இயல்பு அதை இயல்பு போல் சரி செய்யும் திறம் கொள்வோம். அன்னை தெரசா குஷ்ட ரோகத்தை முகம் சுழிப்பது நிறுத்தும் நோக்கில் தன் கையால் தொட்டு குணப்படுத்தும் வழிக்கண்டதில் இத்தகைய மனித நேயத்தை மதங்கள் கண்டதா? குஷ்ட ரோகம் போன்ற உலக அருவருப்புகளை நெருங்கி குணமாக்கும் தைரியம் கொண்ட தைரியசாலிகள் மட்டுமே அன்னை தெரசாவை பொற்ற நினைப்பது தகும். அன்னை தெரசாவுக்கு நல்ல பெருமை சேர்க்க குஷ்ட ரோகம் கொண்ட மத சார்பற்ற பல மதத்தினர் அவர் அழைப்புக்கு முதலில் இடம் கொடுத்திருக்கணும். கருணை கொண்டதில் வள்ளலாரும் ஒருவர். செக்ஸ் ஒரு விதை கனி தர வேண்டும் ஆனால், அந்த விதை மண்ணில் விதைக்கப்பட வேண்டும். அதற்கு தண்ணீர், சூரிய ஒளி, காற்று போன்றவைகள் தேவைப்படும். அந்த விதை வளர்ந்து கனி தர தேவையானவைகள் வேண்டும் அல்லவா. செக்ஸ் என்றால் மட்டும் அது திடீரென்று அந்த உணர்வு ஏதோ ஒரு பதினெட்டு வயதில் நமக்குள் புகுந்து வருமா? கருவிலிருந்தே, விதைக்கு எப்படி மண், நீர், சூரிய ஒளி , காற்று போன்றவை அவ்வவ்போது தேவைபடுவது போல செக்ஸ் என்ற உணர்வு பிறக்கும்பொழுதே தோன்றி அது வளர்கிறது. அந்த செக்ஸ் உணர்வு பாதுகாப்பாய் தோன்றி வளர்ந்து மிகுந்த கனி கொடுக்கும் விதத்தில் பெரியவர்கள் போற்றி பாது காக்க வேண்டும். ஒரு கனி தரும் விதை கொஞ்சம் வளர்ந்து அழிந்தோ, அல்லது காய்ந்தோ போகக்கூடாது அல்லவா? அது போல், செக்ஸ் உணர்வு பிஞ்சு பருவத்திலே தாறுமாறாய் ஆக வேண்டாம். பாதுகாப்பாய் செக்ஸ் ஐ வளர்க்கவேண்டும். திருமணத்திற்கு பிறகு, விவாகரத்தினாலோ, கணவரோ, மனைவியோ இறப்பினாலோ, சம்பாதிக்க தூர தேசம் சென்றாலோ, நாம் சாவகாசமாக இறப்பதற்கு முன்பே செக்ஸ் உணர்வு பொங்கி எழும் நேரத்தில், துணை இல்லாத ஒரே காரணத்திற்காக செக்ஸ் உணர்வு முடங்கி அதுவும் அந்த செக்ஸ் உணர்வும் இறந்து விடுமா? பொங்கி எழும் செக்ஸ் உணர்வு முறைப்படி அனுபவிப்பது என்பது தவிர்க்க முடியாதது என்பது 1 நிமிடம் பொறுக்கலாமா? அல்லது 30, 40 வருடம் என்று தொடர்ந்து பலமணி நேரங்கள் நினைவினாலோ அல்லது பல விதத்தில் பொறுக்கலாமா? அப்படி என்ன மனித பிறப்பில் உள்ள சட்ட சிக்கல் ஒரு நல்ல படியாக செக்ஸ் உணர்வை தடுப்பது. மனித வாழ்வு வாழ்வதே கொஞ்ச காலாம் ஒரு அறுபது, எழுபது ஆண்டு. ஒரு மாமரம் நன்கு வளர்ந்து கனிகளை தரவில்லை என்றால் என்னென்ன சொல்கிறோம். ஒரு நல்ல மனிதன் செக்ஸ் உணர்ச்சிகளை முறைப்படி பயன்படுத்த வில்லையென்றால் என்ன அர்த்தம். அவன் நன்கு வளர்ந்த கனிதராத மாமரம் போன்றவரா? செக்ஸ் உணர்வுகளை முறைப்படி கட்டுபடுத்தியும் நன்மைபயக்கலாமே. செழிப்பாய் நன்கு வளர்ந்த மாமரம், ஒரு மாங்கனியும் தன் வாழ்நாளில் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஏன் அந்த மாமரம் பயன்பட வில்லையா? அந்த மாமரத்தின் இலைகள் நச்சு காற்றை சரிபண்ண உதவவில்லையா? மழை பெய்ய காரணாமாக வில்லையா? அதன் தழைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாக வில்லையா? அந்த மாம்பலகை பயன்பட வில்லையா? அந்த கனி மட்டும் (நடைமுறை செக்ஸ் கனி) தராத மாமரம் போல், முறைப்படி செக்ஸ் உணர்வை கட்டுபடுத்தி வாழ்பவர்களும் நன்மை செய்யலாமே. பலகணிகளை திறந்து இடம் கொள்ளாமட்டும் ஆசீர் உண்டே. பல புத்திகளை அணிந்து, பாவம் இல்லாததற்கு இடம் கொள்ளாமட்டும் வாழ்வதற்கான ஆசீர் உண்டு. துன்பத்திற்கு இடம் கொடுக்கா மட்டும் ஆசீர் உண்டு. காட்டு கத்து எங்க காட்டு சுற்றுச்சூழலின் நலத்தை பாதுகாக்கனும், சுற்றுச்சூழலின் நலத்தை பாதுகாக்கனும்னு காட்டு கத்து கத்துறோமே. உங்க காதுல விழலியா ? சொல்றவன் மனசனா? இல்லை? இல்லை? ஏம்பா போப்பா சொல்றவன் உன் வீட்டு வேலைக்காரனா? எதுக்கு இவ்வளவு நாம் கோபப்பட வேண்டும் என்றால், தங்கங்களா? கோபீச்சிகாதீங்க சுற்றுச்சூழலை கெடுத்தால் நமக்கு சௌகரிய குறைச்சல். துன்பம் . எல்லாம். ஒருத்தர வேலை வாங்கனும்னாலோ அல்லது ஒருத்தரு சொல்ற வேலைய கேட்கனும்னாலோ நமக்கு கோபம் வருதே? நாம் தின்னுபுட்டு போடுற ஆட்டத்திற்கு மற்றும் ஒன்னுக்கு, இரண்டுக்குக்கு, கழிவு, நாற்ற புகை எரிச்சளுக்கல்லாம் இவ்வளவும் செஞ்சுட்டு நாம் ஒன்னும் கண்டுக்கக்கூடாது? இயற்கையே வேலைப்பார்த்து சீர் செஞ்சி சரி செஞ்சிக்கனுமா? நாம பண்ணுகிற கூத்துக்கு, நாம ஆனா, வேலை செய்யக்கூடாதான் . நமக்கு மனசாட்சி இல்ல? வேலை செய்யனும்னு சொல்லிட்டா ஆயிரத்தெட்டு கணக்கு பார்த்திட்டு முகம் சுளிக்கிற நாம? எப்படி நல்லது செய்யற இயற்கையையே வேலை வாங்கணும். கூட கொஞ்சம் நாம இயற்க்கை சீருக்கு ஹெல்ப் பண்ணினா கொறஞ்ச போய்டுவோம். கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும், நமக்கு நோய் வந்து சிக்கும். கருமிகளா……. கிரிமிகளால தொல்ல படுறது யாரோ எவரோவா? நம்ம அக்கா, தங்கச்சி அண்ணன், தம்பி , தாய் , தந்தைக்கு வராதா செத்த்தவன உயிரோடு எழுப்ப முடியுமா? நம்மால? அதுபோல், அழிவை திருப்பி சரிப்பண்ண முடியாத நாம் மடப்பயலா இருந்துகிட்டு மனிதனையே சுட்டு பொசுக்குவது ஏன்? சுட நினைக்கும் பிரதமரோ, முதல்வரோ, விஞ்ஞானி யோ நம்ம கூட பொறந்த அண்ணனோ, தம்பியோ, தாயோ என்றால்? வேற நியாயம் கற்பிபோமா? உலகில் அனைவரும் நாம் தாய் அல்லது கடவுளின் மக்கள். நமக்கு பொறக்கும் குழந்தை பிரதமரோ, முதல்வரோ, விஞ்ஞானி யோ ஆகனும் என்று நினைத்து விட்டு? அம்மதிப்பு பெரும் அக்குழந்தையை சுட்டு கொள்ளும் வழிகளையும் உலகில் நாம் வளர்க்கணும்? உரிமையை அறிவாய் பெரும் வழி தெரியாதா? ஏன்? காட்டு மிராண்டித்தனம். Degree படித்தவர்களுக்கு ஓய்வு சாதாரணமா கெட்டதும் செய்யலாமேனு சொன்னா? அதை power full ஆன சிறப்பான நல்லதாகவே மாத்திடுவோம். Relational Degrees 1. Assertive degree (சாதாரண) 2. Comparative degree 3. Superlative degree (சிறந்த) ஒரு விஷயத்தை சாதாரணமாக நாம் எடுத்துகொண்டால் அது நல்லது என்றால் அந்த விஷயம் மோசமான விசயமாக நமக்கு வரும் பட்சத்தில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் யுக்திகளை கொண்டு அந்த விஷயத்தை சாதரணமாக்கி நிம்மதியடையலாமே. அதாவது கெட்ட superlative degree யில் மோசமானதாக அந்த விஷயம் நமக்கு வரும் பட்சத்தில் அறிவை கொண்டு அதை நல்ல சாதாரண (நல்ல Assertive degree ) நிம்மதி விசயமாகமாற்றினால் கவலை போய்விடும். இப்படிப்பட்ட degree களை வாழ்க்கையில் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் ஓய்வு பெரும். Degree படித்தவர்களுக்கு ஓய்வு. கோபம், வேகம் வந்தால் சிலர் திட்டி கொள்வார்கள். ஆண் குறி, பெண் குறி களை கொண்டு கொச்சைப்படுத்தி கொள்வார்கள். ஆண் குறி, பெண் குறி அர்த்தங்களை அழுத்தமான கெட்ட superlative degree யில்சொன்னால் கோபம் வரும். சாதாரண degree யில் மொழி பெயர்கள் ஆண் குறி, பெண் குறி அதற்கு science name (அதாவது science degree ) இப்படி எல்லாம் ஏற்ற தாழ்வுகளை கண்டு சகித்து நல்லவைகளை கிரகித்து அதில் சந்தோசம் காண்போம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நீ இருக்கிறாயா? இல்லையா? நீ இல்லை என்று சொல்ல முடியுமா? கடவுளுக்கு பயப்படுவதை தவிர வேறு வழி இல்லை. நீ ஓடி, ஒளிய, மறைய ஒரு உலகம் வைத்திருக்கிறாயா? உன்னால் உருவாக்க முடியுமா? எங்கே தப்பிப்பாய் நீ செத்துப்போனாலும் நீ போட்ட குப்பை, எரிச்ச பொருள ஒழுங்கா சரிபண்ணாதா வரைக்கும், செத்துபோன உன்ன எழுப்பி அதற்கு சரியான பதில் கிடைக்காதவரைக்கும் சும்மா உடுவாரா? அவர் ஏதோ பாசம் வேற நமக்கு வைத்து தொலைத்துவிட்டார்? ஆனா கண்டிப்பானவர். மறைந்து , இறந்து போன காலத்தை rewind பண்ணால் கடவுளால் முடியாதா? இவ்வளவு வல்லமையாய் உலகத்தை படைத்து முக்கால் வாசி இயற்கையே சுத்திகரிக்கும் வழிகளை எற்படுத்தினவர் முழுவதையும் சரி பண்ணும் வல்லமை கடவுளிடம் குறைவா? நம்மிடம் எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் உண்மை, பிசினஸ் நோக்கத்தோடு இல்லாம கொஞ்சம் அக்கறையோடு இயற்கையோடு சேர்ந்து சுற்றுச்சூழலை சரிசெய்வது. எவ்வளவோ சந்தோசத்தை, ஆயுளை நமக்கு இறைவன் வைத்திருப்பதை நாம் அறியவில்லையோ, இந்த அன்பை டாகுமென்ட் டா காண்பித்ததான் அன்பை காட்ட ஆரம்பிக்கனுமா? வாழ்க்கையில் எவ்வளவு இனிமையா தின்னுரிப்போம். நன்றி விசுவாசம். தொடர்கிறேன் அருமையானவரே. 25 வயது வரைக்கும் செக்சில் தியரிட்டிகல் அறிவு மட்டுமே இருப்பது நலமாக இருக்கலாம். இந்த வயதிற்குள், வயதிற்கு தகுந்ததுபோல் செக்ஸ்- ஐ மனப்பாடம் செய்து மனதில் அனுபவித்து self answer பண்ணி செக்ஸ்-ஐ தீர்த்துக்கொள்ளலாம். மரம் செடிகள் அந்த, அந்த வயதிற்கு, வந்ததிற்கு பிறகுத்தான் பூத்து காய்க்கும், அதுவரை வளரும். அதுபோல் செக்ஸ் practicalaa ஆரம்பிக்க திருமணதிற்கு பிறகு செக்ஸ் life partner ஆன தம்பதிகள் அல்லது ஜோடி யான பிறகு பயன்படுத்தலாம். படித்து விட்டு வேலைக்கு சென்று சம்பாதிப்போல் தாவரங்கள் பூத்து காய்க்கும் பருவம் வரை பொறுத்திருந்து இருக்கின்றன. அதுபோல் நாம் செக்ஸ் practicala பூத்து காய்ப்பது போல் செக்ஸ்-ஐ சம்பாதிக்கும் வேலை வந்த பிறகு சம்பாதிக்கலாம். அதுவரை தியரிடிகலா படிப்பை மட்டும் கவனம் செலுத்துவதுபோல் செக்ஸ் படிப்பிலும் மனதில் கவனம் செலுத்தலாம். சைட் அடிங்க பட விளக்க கல்வியை புரிந்துகொள்வது போல் செக்ஸ் கலர்புல் படங்களாக பார்த்து மனசோடு வாய்விட்டு வாயார, மனதார முழு அவயவங்கள் மற்றும் feeling உடன் பய படபடப்பு இல்லாமல் உற்சாகமாய் வலு மென்மையாய் அந்தரங்கத்தில் அனுபவித்து self answer பண்ணலாமே. எல்லாமே ஒரு லிமிட் தான். அடிக்கடி exam இல்லாம இருப்பது போல் exam டெஸ்ட் 1 மணி நேரம் இருப்பது போல் நாள் தோறுமோ, இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறையோ வயதிற்கு தகுந்தால் போல் ஆண்களுக்கு 5 நிமிடம், பெண்களுக்கு 1/2 மணி நேரம் தியரிடிகல் போல் வாயால் எதிர்பாலர் அழகை மனதில் அனுபவித்து அந்தரங்கமாக self answer போல் படிப்பு கால பிராடிகாலாக செக்ஸ் தீர்த்து உடலிலும், மனதிலும் மார்க் நல்ல ஸ்கோர் பண்ணலாமே. சம்பாத்திய கால பிராக்டிகல் என்பது திருமணத்திற்கு பிறகு. ஓவர் உணர்ச்சிகளை அடக்கனும், பாதுகாப்பாக தீர்க்கணும். அனுபவிக்கனும். இப்படி இருப்பது நலமாக இருக்குமா? சிந்தித்து பயன் பெறுவோம். செக்ஸ் ஒரு விதை கனி தர வேண்டும் ஆனால், அந்த விதை மண்ணில் விதைக்கப்பட வேண்டும். அதற்கு தண்ணீர், சூரிய ஒளி, காற்று போன்றவைகள் தேவைப்படும். அந்த விதை வளர்ந்து கனி தர தேவையானவைகள் வேண்டும் அல்லவா. செக்ஸ் என்றால் மட்டும் அது திடீரென்று அந்த உணர்வு ஏதோ ஒரு பதினெட்டு வயதில் நமக்குள் புகுந்து வருமா? கருவிலிருந்தே, விதைக்கு எப்படி மண், நீர், சூரிய ஒளி , காற்று போன்றவை அவ்வவ்போது தேவைபடுவது போல செக்ஸ் என்ற உணர்வு பிறக்கும்பொழுதே தோன்றி அது வளர்கிறது. அந்த செக்ஸ் உணர்வு பாதுகாப்பாய் தோன்றி வளர்ந்து மிகுந்த கனி கொடுக்கும் விதத்தில் பெரியவர்கள் போற்றி பாது காக்க வேண்டும். ஒரு கனி தரும் விதை கொஞ்சம் வளர்ந்து அழிந்தோ, அல்லது காய்ந்தோ போகக்கூடாது அல்லவா? அது போல், செக்ஸ் உணர்வு பிஞ்சு பருவத்திலே தாறுமாறாய் ஆக வேண்டாம். பாதுகாப்பாய் செக்ஸ் ஐ வளர்க்கவேண்டும். திருமணத்திற்கு பிறகு, விவாகரத்தினாலோ, கணவரோ, மனைவியோ இறப்பினாலோ, சம்பாதிக்க தூர தேசம் சென்றாலோ, நாம் சாவகாசமாக இறப்பதற்கு முன்பே செக்ஸ் உணர்வு பொங்கி எழும் நேரத்தில், துணை இல்லாத ஒரே காரணத்திற்காக செக்ஸ் உணர்வு முடங்கி அதுவும் அந்த செக்ஸ் உணர்வும் இறந்து விடுமா? பொங்கி எழும் செக்ஸ் உணர்வு முறைப்படி அனுபவிப்பது என்பது தவிர்க்க முடியாதது என்பது 1 நிமிடம் பொறுக்கலாமா? அல்லது 30, 40 வருடம் என்று தொடர்ந்து பலமணி நேரங்கள் நினைவினாலோ அல்லது பல விதத்தில் பொறுக்கலாமா? அப்படி என்ன மனித பிறப்பில் உள்ள சட்ட சிக்கல் ஒரு நல்ல படியாக செக்ஸ் உணர்வை தடுப்பது. மனித வாழ்வு வாழ்வதே கொஞ்ச காலாம் ஒரு அறுபது, எழுபது ஆண்டு. ஒரு மாமரம் நன்கு வளர்ந்து கனிகளை தரவில்லை என்றால் என்னென்ன சொல்கிறோம். ஒரு நல்ல மனிதன் செக்ஸ் உணர்ச்சிகளை முறைப்படி பயன்படுத்த வில்லையென்றால் என்ன அர்த்தம். அவன் நன்கு வளர்ந்த கனிதராத மாமரம் போன்றவரா? செக்ஸ் உணர்வுகளை முறைப்படி கட்டுபடுத்தியும் நன்மைபயக்கலாமே. செழிப்பாய் நன்கு வளர்ந்த மாமரம், ஒரு மாங்கனியும் தன் வாழ்நாளில் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஏன் அந்த மாமரம் பயன்பட வில்லையா? அந்த மாமரத்தின் இலைகள் நச்சு காற்றை சரிபண்ண உதவவில்லையா? மழை பெய்ய காரணாமாக வில்லையா? அதன் தழைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாக வில்லையா? அந்த மாம்பலகை பயன்பட வில்லையா? அந்த கனி மட்டும் (நடைமுறை செக்ஸ் கனி) தராத மாமரம் போல், முறைப்படி செக்ஸ் உணர்வை கட்டுபடுத்தி வாழ்பவர்களும் நன்மை செய்யலாமே. பலகணிகளை திறந்து இடம் கொள்ளாமட்டும் ஆசீர் உண்டே. பல புத்திகளை அணிந்து, பாவம் இல்லாததற்கு இடம் கொள்ளாமட்டும் வாழ்வதற்கான ஆசீர் உண்டு. துன்பத்திற்கு இடம் கொடுக்கா மட்டும் ஆசீர் உண்டு. communication மீடியா அதிகமானதால செக்ஸ் விசயத்தில் கூட அதன் போக்கை கட்டுக்குள் வர உள்ள சிரமத்தை சரி செய்வோம். எல்லாம் வெளிப்படையாக இருக்கும்பொழுது இலைமறை காய் போல் செக்ஸ்-ஐ நிறுத்த முடியவில்லையே. சின்ன குழந்தைகளை நீ டாக்டர் ஆகணும் என்று சொல்லி விட்டு 5 வயதிலே டாக்டர் course ஐ திணிக்கலாமா? குழந்தைக்கு பால் மட்டுந்தான் உணவு, வயதிற்கு தகுந்தால் போல் கறி பிரியாணி, வயதானால் கஞ்சி காதல் பாடல்களையும், காதல் காட்சிகளையும், ஓவர் dose போல் குழந்தைகளின் கவனம் செல்லும்படி நாம் நடந்துக்கொள்ளலாமா? பெரியவங்க நமக்கு பிடிச்சிருக்குன்னு காதல் காட்சியில் MBBS பட்ட அளவுக்கு பெரும் பெறும் வளர்ச்சிபட்ட நாம். சின்ன குழந்தைய, உடல் பிரச்சனை ஆபரேஷன் செய்ய சொல்லலாமா? அந்த அளவுக்கு காதல் காட்சியில் MBBS ஆகிவிட்டதா குழந்தை. குழந்தைக்கு, நீ டாக்டர் ஆகணும் அதுபோன்று சொல்லும் அளவிற்குத்தான் செக்ஸ் காதல் அறிவை தரனும். சூசகமாக சின்ன குழந்தைகள் தங்கமான மனசு. அது மனச இரும்பாக்கி துரு பிடிக்க வைக்கலாமா? துரு, துருனு குழந்தைகள் எதில் இருக்க வேண்டும். தங்க மனசு. பீரோவ திறந்து வைத்து திருடு போகும் அளவிற்கு தங்க, வைர நகைகளை வைப்பீர்களா? தங்க மனசான குழந்தைகள் அறிய வேண்டியதை காண்பித்து, பூட்ட வேண்டியது பூட்டுங்க. பிறகு வெவ்வேறு சூழல்களில் நாம் அணிய வேண்டிய விலை உயர்ந்த நகைகளை நழுவ விட்டுடாதிருபோம். பொழுதனைக்கும் குழந்தைகளுக்கு காதல் கன்றாவியாக மாறும் காட்சிகளை நாம் கண்டு களிப்பதை குழந்தைகளுக்கு திணித்து, நமக்கும் ஒரு limit தாம்பா காதல் காட்சி பார்ப்பது. நமக்கே இப்படினா? செக்ஸ் அறிவிற்காக எப்படிப்பட்ட செக்ஸ் கலர்புல்லுக்கு யாருடையா செக்ஸ் படத்தை அறிவிற்காக பயன்படுத்துவது வம்புக்கு இழுக்கல நம் மனைவி, கணவன், மகள்,மகன், அப்பா,அம்மா படங்களை செக்ஸ் படங்களாக காட்டலாமா? மீடியாக்களில் அதுபோல் காட்டுவேன் பயமுறுத்துவதும், பிளாக் மெயில் பண்ணுவதும் இருக்கே? நாட்டின் பத்துகாப்புக்கு ராணுவ வீரர்கள் தேவை படுவதுபோல் இளையவர்களுக்கு செக்ஸ் அறிவு பசிக்காக, ஒன்லி பிக்சர் மட்டும் அனுமதிக்க, கல்யாணம் ஆகாதவர் தங்கள் செக்ஸ் படங்களை காண்பிக்கலாமா? இதற்காக ராணுவ வீரர்களை போல் பாலியல் பாதுகாப்புக்காக தங்கள் சுய செக்ஸ் படங்களை வெளியிட வாழ்நாள் பூரா கல்யாணம் ஆகாமல் தியாகம் செய்வார்களா? சாமியார் போல் ரிஸ்க் வேறு யோசனை இருந்தாலும் பிரச்னையை தீருங்கள். மர்ம உறுப்பில் வலி,கேன்சர், ஆபரேஷன் என்றால் specialist எதிர்பாலர் டாக்டர் அதை பார்த்து கவனித்து தானே சரிசெய்ய முடியும். தங்கள் வலி பொறுக்காமல் தானே டாக்டரிடம் தங்கள் செக்ஸ் உறுப்பை காண்பிக்கிறீர்கள். அது தவறு இல்லையா? இளசுகளின் செக்ஸ் அறிவு வலியை பாருங்கள். அதற்க்கு செக்ஸ் அறிவு பட வழிகாட்டலாமா? எல்லாருடைய முகத்தையும் செக்ஸ் அறிவிற்காக காட்டாதீர்கள். நாம் என்ன மிருகமா? மிருக நிலை வரக்கூடாது. பிரச்சனை வரக்கூடாது எல்லாரையும் முக சுளிக்க வைக்காதீர்கள் . அருவருக்க வைக்காதீர்கள். விசமிகலே, செக்ஸ்-ஐ காண்பித்து விருப்பம் இல்லாதவர் படங்களை முகங்களை காட்ட நினைப்பவர்களே. தில்லிருந்தால் அருவருக்கும் சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதற்க்கு தங்களை பயன்படுத்த அதற்க்கு அனைவரின் முகங்களும் சுளிக்காமல், சரி செய்தோம் என்று புன்முறுவல் வரும்படி செய் திடுங்கள். அப்படி செயலில் எல்லாரும் முகமும் காட்ட தில்லிருக்கா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . பாலை தயிராக்க ஒரு துளி உறை மோர் போதும். blood டெஸ்ட் சாம்பிள் தானே கொடுப்போம் . எல்லா blood கொடுத்து அதை சாம்பிள் எங்கலாமா ? செக்ஸ் அறிவு கல்விக்கு சிலரின் தியாக படங்கள். இந்த பதம் , சாம்பிள் போதாதா? செக்ஸ் புனிதமானது. அப்படி என்றால் குழந்தை பிறப்பு புனிதம் இல்லாத அசிங்கமா? அசிங்கத்தை பிள்ளையாக பெற்றால்? எல்லாவற்றையும் மூடிட்டு, பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் உலகத்தை இழுத்து மூடுவோம். மூடினால் புனிதம். என்னப்பா நாம் ….. தெம்புக்கு இழுக்கிறேன் – வம்புக்கு இழுக்குல என் ஆலோசனைகளில் மாற்றங்கள் தேவைப்படின் செய்து நன்மை பெறலாமே. சர்வாதிகார தீர்ப்பை நான் சொல்ல வில்லை. ஒரு தீர்வை கொண்டு வருவோம். copy right , License , authority என்றெல்லாம் எததற்கோ இருப்பது போல் அங்கீகாரம் பெற்ற செக்ஸ் படத்தை, செக்ஸ் விளக்க அறிவிற்கு இளசுகளின் செக்ஸ் அறியாமை வியாதியை போக்க முறைப்படுத்தலாமே. மனமுவந்து வரும் ஆண், பெண் தங்கள் செக்ஸ் படங்களை வெளியிட அங்கீகாரம், copy right போன்று பெறலாமே. கள்ள நோட்டை வைத்திருப்பதை தண்டித்து அதன் ஆக்கத்தை தடுப்பது போல் அங்கீகாரம் இல்லாத செக்ஸ் படத்தை ஒன்று கிழித்து விடவேண்டும் file ஐ delete பண்ண வேண்டும். பிடிபட்டால் அப்படத்தை வைத்திருபோரும், அங்கீகாரம் இல்லமால் தன்னை படமாக காட்டுபோரின் மீது நடவடிக்கை எடுக்கலாமே. இதற்காக சில செக்ஸ் பட முகவர்களை மட்டுமே அனுமதிக்கலாமே. tension ஒருவர் குறையை எடுத்துரைப்பது எப்படி சொல்வோம். tension ஆகி சொல்வோம். குறைபடுத்தபடுபவரும் tension ஆகி கேட்பார். குறையை ஜாலியாக சொல்லலாமா? அந்த அளவிற்கு உணர்த்தப்போடுவோமா? நிறை என்றால் சொல்லும்பொழுதும், கேட்கும் பொழுதும். சந்தோசம் தான். குறையை எப்பத்தான் அறிவது. வெள்ளம் , வெள்ளம் வருது மழை வெள்ளம். கரும்பு வெள்ளம். பாராட்டுகள் பெருமைகளை எல்லாம் பெற்றுவிற்றோம். பெறக்கூடாத கெட்ட பாராட்டை யார்தான் சொல்வது. குறையிலும், நிறையிலும் கெட்ட குறை, நல்ல குறை, கெட்ட நிறை, நல்ல நிறை என்று உண்டு. தண்ணி அடிப்பது கெட்ட நிறை. மகிழ்ச்சி தரும் கெட்ட சுபாவம் யாவும் கெட்ட நிறை. நல்லதை செய்து முழு மனிதனும் நிம்மதியடைவது நல்ல நிறை. இழந்த நல்லதை பெறுவதற்காக வரும் துன்பம் நல்ல குறை. இது நல்லதிற்கு அழைத்து செல்லும். கெட்ட சந்தோசத்தை பெற முடியாதபடிக்கு வரும் இக்கட்டான சூழ்நிலையான துன்பம் கெட்ட குறை. நிறையை எடுத்து அதை பாராட்டி கொள்வது மகிழ்ச்சியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைக்கு கெட்ட நிறையை எடுத்துக்கொள்வதால் சந்தோசத்தை அளித்தாலும். அது side effect ஆகி பெரிய துன்பத்திற்கு சென்றிடும். நல்லவைகள் சொல்வதாலும், செய்வதாலும் பயன்படுத்துவதாலும் side effect இல்லாத தீர்வுள்ள மகிழ்ச்சியளிக்கும். செக்ஸ் பகுதியாக red light ஏரியா பாம்பே போன்ற நகரங்களில் இருப்பது போல . செக்ஸ் கல்வி பகுதியாக, செக்ஸ் படிப்பு அறிவிற்கு மட்டும் registered செக்ஸ் முகங்களை பயன்படுத்தலாம். மற்ற தாய் மக்களை செக்ஸ் முகங்களாக ஈடு படுத்த வேண்டாமே. registered அல்லாத முகங்கள் அந்த நலனுக்கென்று eligibility test முடிக்காதவர்கள். வேறு ஒழுங்கு குடும்பஸ்தர்கள். படிப்பறிவிற்கென்ற Registered செக்ஸ் கொடையாளர் குறைந்த இடங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பந்தம் அல்லாதவர்களை எளிதில் அடியாளம் கண்டு பாலியல் பிளாக் மெயில் களை தடுக்கலாமே. நாம் அசையாத கல் அல்ல, உணர்வுள்ளவர்கள். உயிர் உள்ளவரை உணர்வு இருக்கத்தான் செய்யும். நமக்கு வரும் வெள்ள நீரை நாம் ஒருவரே குடித்து அடக்க முடியுமா? கட்டுக்குள் திசை திருப்பி வெள்ள நீரை பாசன நீருக்கு பயன்படுத்தி வேளாண்மை செய்து பயன் பெறுவது போல நாம் கல் அல்ல, வெள்ளம் போல வரும் நம் உணர்வுகளை கட்டுக்குள் திசைதிருப்பி (மேட்டூர் அணை, கல்லணை ) நன்மை செய்யும் ஆளுமையை பணி விடை செய்யலாமே? சந்தோசமாக கல் சிரங்கு எங்கே வரும். கல் போன்ற உணர்வு இருந்தால் அது சிரங்கு. அந்த கல் போன்ற சிரங்குக்கு இன்னொரு கல்லால் ஒத்தடம் கொடுக்கலாமே. என்ன கல் தெய்வம், சொல் தெய்வம். எந்த இடத்தில் கல் இருக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கல் இருந்தால்தான் சிறப்பு. மாறினால் குணத்திலே பிடித்த் பிடிவாதம் கொண்ட குரங்கா ? சிரங்கா? கல்லும் உணவுதான்? சொல்லும் உணவுதான்? உப்பு கல்லு ஒரு உணவு? சொல் என்ற நல வார்த்தை(யானவர்) ஒரு உணவு. அதாவது செவி உணவு. தெய்வீக கல் அதற்கு பயன்படுத்தபடுவது சிலை. தெய்வீக சொல் இதற்கு பயன்படுத்தப்படுவது எழுத்து. கல்லும் சாமிதான், சொல்லும் சாமிதான் நமக்கு பயன்படும் நிலையில். நம்மை ஈடுபடுத்தும் நிலையில். கோயிலில் டிரஸ் போட்ட சிலையும் இருக்கு டிரஸ் போடாத சிலையும் இருக்கு. ஆடையின்றி இருந்தேன், தலைச்சீராவை, கச்சை (ஒவ்வொன்றாய் அணிந்து) குழந்தை பிறக்கும்பொழுது எதை அணிந்துள்ளது. கழுட்ட முடியாத டிரஸ் குழந்தை கர்ணனைபோல் போட்டிருந்தால் குழந்தை அழுகுதா, சிரிக்குதா, என்ன குழந்தை, பெண் குழந்தையா? எத்தனை விரல், ஊனமா? ஆராய்கிறோமே. ஆராய்வோம் இறைவனை. குண்டி (காக்க) கழுவ எத, எத திறக்கிறோம். (அப்பகுதி டிரஸ் இல்ல.) பிறபகுதி டிரஸ் உண்டு. உண்டி (பக்கா) சாப்பிட எத, எத திறக்கிறோம். (அப்பகுதி முடல) உணவு உட்செல்வது போகாதபடி மூடியிருந்தால், பாதிப்பில்லை. இடம், பொருள், ஏவல், பயன்படும் நிலை கொண்டு இறைவன் படைத்தது நலன் அடைகிறது. தேவனை – வேதனை ( உற்று கவனியுங்கள், இரண்டு எழுத்து கோர்வை வடிவங்களிலும் எடுத்துகொள்ளபட்டது ஒரே மாதிரிதான்? வடிவம் (எழுத்து கோர்வை நிலை) மாறியிருப்பதால் அர்த்தங்கள் மாறுகிறது) அர்த்தம் உள்ள வாழ்க்கை வாழ்வோம். உண்ட தேவைஇல்லாதவை வெளியேற ஆசன வாய் பகுதி ஒரு exit . பாதுகாப்பாய் மருந்து உட்செல்ல ஆசன வாய் பகுதிற்க்கருகில் மருந்து ஊசி. Entrance . செக்ஸ் ஒன்றுதான் – அது நல்ல காதல் ஆவதும், கெட்ட காதல் ஆவதும் காமம் இடம், தடம் மாறும்பொழுது . தேவனை – வேதனை வடிவங்கள் போன்றுதான். ஏன் வார்த்தைக்குறிய ஸ்பெல்லிங்கை வாயலையும், சொல்றோம், எழுதியும் சொல்கிறோம், இறைவனும் வெவ்வேறு வடிவங்கள் பெறுகிறாரா? கல், சொல், நம்மை நெறிப்படுத்த இறைவன் பேய், அரக்கர்களை பயன்படுத்தி திட்டமிடலாம். நாம் செக்ஸ்-ஐ முறைப்படுத்த திட்டமிடக்கூடாதா? குழந்தையின்மை போன்றவைகளுக்கு டாக்டரிடம் அந்தரங்கங்களை தெரிவிக்காமல் மருந்து கொடுக்க முடியுமா? அப்ப இளசுகளின் செக்ஸ் அறிவின்மை வியாதி? ஏன் எங்கும் ஒரே டென்ஷன், டென்ஷன் என்று சொல்லப்படுகிறது? நாம் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும் குறையை பற்றியிருகிறோம். குறையை வெளிப்படுத்த ஒரு முறை அது சிரிப்பல்ல? serious -அதனால்தான் ஏதோ ஒரு விதத்தில் உடலிலோ, உள்ளத்திலோ, எண்ணத்திலோ, சீரியஸ் தரும் டென்ஷன் குடியிருக்கிறது. ரிசல்ட்-ஐ கவனித்து நாம் யாருக்கு வாக்களித்திருக்கிறோம் என்று பார்த்தால் – சுற்றுச்சூழல் கேடு, சுற்றத்தார் கேடு – எங்கும் குறை. நிறையை பற்றினால் சந்தோஷம் என்ற விடை. டென்ஷன் எப்போ happy ஜங்ஷன் கடமை செய் பலனை எதிர்பாராதே பகவான் சொன்னது. கடமையை செய் பலனை எதிர்பாராதே. இந்த அறிவுரையையும் எதிர்பார்க்கலாமா? எதிர்பார்க்கக்கூடாதா? அறிவுரை ஏற்பது என்ற கடமையை எதிர்பார்க்கலாமா? கூடாதா? தவறு என்ற கெட்ட கடமையை செய்தால் தண்டனை உண்டு என்று எதிர்பார்க்காமல் இருந்தால் என்னன்ன நடக்கும்? Accounts -ல பற்றுனு ஒன்று இருந்தால் வரவு என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதாவது credit – debit give respect and take respect . give respect மட்டுமோ அல்லது take respect மட்டுமோ மறைக்கபட்டால் – எத்தனை காலத்திற்கு. கடமை என்ற செயலில் எப்படி எதிர்ப்பார்க்காமல் எப்படி இருப்பது? எதிர்ப்பார்க்கக்கூடாது என்று ஒன்று இருக்கும்பொழுது. எதிர்ப்பார்ப்பது எப்படி தவிர்ப்பது? credit – debit எப்படி எதிர்ப்பார்க்கக்கூடாது என்பதை தான் நாம் அறியவேண்டும். அதைத்தான் பகவான் சொல்கிறாரோ? தலைவலிக்கென்று மருந்து எடுத்துகொண்டு விட்டு, தலைவலி போகாது என்று எதிர்மறையாய் எதிர்ப்பார்ப்பது வீண் தானே. அதைத்தான் செய்யக்கூடாதோ? நெல்லை விதைத்துவிட்டு, புல்லாக வளர்ந்துவிட்டால் என்று தேவை இல்லாத பயமா? நடப்பது சரியாக செய்தால் சரியாக நடக்கும் தேவையில்லாத பயம் ஏன்? வருமுன் காப்போம் என்று எதிர்ப்பார்த்து அதற்குரிய செயலை செய்தால் தவறா? savings , policy , ஆரோக்கியம் எல்லாம் ஒரு லிமிட். கடமையை செய் அதற்கில்லாமல் உள்ள பலன் நடப்பதை எதிர்ப்பார்க்காதே. கடன் கொடுத்தால், கடமையை கொடுத்தேன் என்று யதார்த்தையும் வைத்துக்கொள்ளலாமே. எதிர்ப்பார்ப்பில், ஏமாற்றங்கள் வரும்பொழுது ஏமாற்றத்தை தாங்கும் சக்தியும் இருக்கும் என்றால் எதிர்பாருங்களேன். உடலிலும், மனதிலும் தைரியம் இல்லாதவர்கள் எதை எதிர்ப்பார்ப்பது? எதை எதிர்பார்க்கனும். எதை எதிர்ப்பார்க்கக்கூடாது? தேவையில்லாத பயமும் உண்டு, நல்ல நம்பிக்கையும் உண்டு? சரியான வேண்டுதல், அர்ச்சனை, ஜெபம் இல்லாமல் வானத்திலிருந்து கொட்டும் என்று எதிர்ப்பார்க்கலாமா? தவறோ, சரியோ நம் முயற்சிக்கு பலன் உண்டு? முயற்சியை விடாமல் வளர்ப்பதற்கு பகாவானிடத்தில் மன்னிப்பும் உண்டு. மன்னிப்பு உண்டு என்பதற்காக தவறு செய்வதை தொழிலாக்கலாமா? மன்னிப்பு ஒரு பக்கபலம். பக்கபலம் கிடைத்தவுடன் மன்னிப்பு தேவைப்படாது அந்தளவிற்கு முயற்சியை வெற்றியாக்கலாமே. மன்னிப்பை மிகுந்த இலவச நோக்கத்தோடு கிடைப்பதற்கும். ஓரளவு தண்டனையான (நியாய கட்டணத்துடன் ) விலையுயர்ந்த மன்னிப்பாய் கிடைப்பதற்கும் வித்தியாசம் உண்டா? தீர்வு சிக்கல் ஓட்டபந்தயத்தில் மற்றும் போட்டிகளில் முதல் நிலை வருவதும், கடை நிலை வருவதும் தவிர்க்கமுடியாதது. ஏழை, பணக்காரர் போன்ற நிலைகள், கற்பழிப்பு, கொலை , கற்பு , இரக்கம் போன்ற நிலைகள் தவிர்க்க முடியாதது. அதற்காக ஒழுங்கு படுத்துவதும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஒரு ஏழைக்கு வாழ் நாள் முழுவதும் தேவையானதை கொடுத்துவிட்டால் செல்வம் போன்றவைகள். அவர் உழைக்கும் நிலையில் எப்பொழுதும் திருப்தி இருக்குமா? எப்பொழுதும் உழைக்கும் நிலை தேவைப்படுமா? பூரண நிலை கிடைத்துவிட்டால் பிறகு எதற்கு இந்த உலகில் வாழனும். தம்மை பயன்படுத்தணும். அறிவு,கண்ணு, காது இவைகள் எதற்கு பயன்படுத்த தானே. ஆகவே களைகளும் உண்டு, விளை பயிரும் உண்டு. களையும் பயன்படுகிறது. தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதற்காக தவறுகள் நடப்பதற்கு முழு சந்தர்பர்த்தை கொடுக்க கூடாது அல்லவா? இரண்டு எக்ஸ்ட்ரீம் . ஒன்று குறை , மற்றொன்று நிறை. பாவம் , புண்ணியம். கடவுள் , அரக்கர் மற்றும் பேய் நம்மிடம் பிறக்கும்பொழுது நிறை, குறை. உடல் நிர்வாணி என்ற கொஞ்ச குறை , உடல் உறுப்புகள் இருப்பது கொஞ்ச பூரணம் மற்றும் கொஞ்ச அறிவு இவைகளை வைத்து தொடங்கும் ஓட்டம் நிறை மற்றும் பூரணத்தை அடைய. அதற்கு வேண்டிய சக்திகளை உணவு, பராமரிப்பு போன்றவைகளை ஆதி காரணர் இறைவன் மூலமாக பெறுகிறோம். வெல்ல வேண்டிய குறைகளை அரக்கர் மற்றும் பேயிடும் இருந்து பெறுகிறோம். அதாவது ஆக்க சக்தி , அழிவு சக்தி. செக்ஸ் கல்வி கொடுக்கலாம். அதற்காக செக்ஸ் பிரச்சனையை தீர்ப்பதற்கு யாருடன் எந்நிலையிலும் தீர்வு கிடைக்கவேண்டும் என்று சொல்லி செக்ஸ் அனுபவ ஒழுங்கு கிடைக்காத அளவிற்கு செய்ய வேண்டாமே. அதாவுது ஏழைக்கு அவர் வாழ்நாள் பூரா தேடுதல் இல்லாத திணிப்பு வேண்டாமே. செக்ஸ் அது போல் ஒரு ஏழைக்கு வாழ் நாள் முழுவதும் தேவையானதை கொடுத்துவிட்டால் செல்வம் போன்றவைகள். அவர் உழைக்கும் நிலையில் எப்பொழுதும் திருப்தி இருக்குமா? எப்பொழுதும் உழைக்கும் நிலை தேவைப்படுமா? பூரண நிலை கிடைத்துவிட்டால் பிறகு எதற்கு இந்த உலகில் வாழனும். தம்மை பயன்படுத்தணும். அறிவு,கண்ணு, காது இவைகள் எதற்கு பயன்படுத்த தானே. குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தடை பண்ணுவதுபோல் செக்ஸ் அனுபவத்திற்கும் தடை வேண்டும். ஆனாலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது இருக்கத்தானே செய்கிறது. செக்ஸ் தவறும் நடக்கிறது. பம்பாய் ரெட் லைட் ஏரியா எங்கும் அமல்படுத்துவது எவ்வளவு பிரச்சனையோ அதை சிந்திப்போம். 100% ஒழுக்கம் உள்ள நிலையும். 100% ஒழுக்கமற்ற நிலையும் இருப்பதில். 90% ஒழுக்க மற்ற நிலை வந்தாலும் 100% ஒழுங்கு நிலையை கடைப்பிடித்து, தான் ஒழுக்கம் உள்ளவன் என்பதை அடைந்து வெல்ல வேண்டும். இதில் ஒழுங்கு நிலை மெஜாரிட்டி கூட்டுவது தவறல்லவே. ஊதாரி அதிக வேலை பார்க்கிறவர்களை என்ன சொல்லலாம்? சோம்பேறி. ஆம் அவர்களும் சோம்பேறி தான். எப்படி என்றால். அதிக வேலை பளுவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்களையும் வேலை வாங்க முடியாதவர். இத்தகு வேலையை செய்ய முடியாதவருமான மாற்று அதிக வேலை செய்கிறவர் இந்த விசயத்தில் செய்யமுடியாத அந்த வேலைக்காக அவர் சோம்பேறி தானே. வேலை balance ஆக இருக்கனும். இத்தகு சோம்பேறியாக இருப்பதால்தான் பல பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒரு உழைப்பாளி உலகில் இருந்தாலே உலகம் சந்தோசப்படும். ஆம் உலகில் எங்கும் சோம்பேறிதான். வெவ்வேறு விசயத்தில் மாட்டிகொண்டு சோம்பேறியாகி உலக ஸ்த்தம்பிக்க போகும் போக்கில். ஒரு பாவி மனம் திருந்தினாலும் பரலோகத்தில் மிகுந்த சந்தோசமாம்? என்பது எவ்வளவு உண்மை. பரலோகத்திலே சந்தோசம் என்றால். இங்கு வேதனையா? இருக்கும். அப்படி என்ன சந்தோசம் ஒரு பாவியின் நிமித்தம். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம். ஒரு லிட்டர் நல்ல பாலில் ஒரு துளி கொடிய விஷம் கலந்தாலும் பால் முழுவதும் நஞ்சுதான். அப்படியென்றால் ஒரு உழைப்பாளி, ஒரு நீதிமான் இருக்கிறாரா? காரணத்தை மாற்று உலகில் உள்ளவரையா வம்புக்கு இழுக்க முடியும். உலகில் உள்ள நாம் அனைவரும் ஒரு குடும்பம். உடலில் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டாலும். கோமா stage இல்ல. கண் கலங்கணும். எல்லாரும் கோமாவில் இருக்கிறோமா? சரீரமாகிய உலக அவை என்ன சொல்கிறது? ஒற்றுமை. ஒரு சோம்பேறி இருந்தாலும் உழைப்பில் வேற்றுமைதான். அதிகமா மாற்று வேலையை மட்டும் செஞ்சிட்டு சோம்பேறி என்ற விடையில் நாம் இருக்க. கஷ்டம் வந்தா சாமி உனக்கு கண்ணு இல்லையா? இங்க மத்திசம் ஆகிட்டா, அங்க ஏன் கடவுளிடம் முறை. ஊதாரி. கொஞ்சமா செலவு பண்ணினாலும் ஊதாரிதான். சாமி உங்களுக்கு நன்றி. எனக்கு அத கொடுத்திட்ட, இத கொடுத்திட்ட அதிகமா? அப்பரன் ஏன் ? அவன் கொடுக்கல, கிடைக்கலன ஒருத்தன் அழுகிறான்? ஒன்னு எல்லாரும் நன்றி சொன்னா சொல்லுங்க. குறைய மறச்சி வச்சிக்கிட்டு சாமி, கண்ணு இல்லையா? ஒருவாசகத்துக்கு உருகாதார் திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கு உருகார் என்பார் மாணிக்கவாசகத்தின் திருவாசகத்திற்கு. திருவாசகம் என்று மட்டும் அல்ல, ஏன் கேநயன் ஒருவன் வாசகத்திற்கு உருகாதார் நல்லவன் சொன்னாலும் உணரமாட்டார்கள். திருவாசகம் – திருவாசகம் என்பது நல்ல வாசகம் அல்லது நல்ல வார்த்தை எங்கபார்த்தாலும் நல்ல வார்த்தை என்ற திருவாசகம் மலிவாக கிடைக்கிறது. அது இந்து மதத்திலும், கிருஸ்த்தவ மதத்திலும், இஸ்லாம் மதத்திலும், புத்த மதத்திலும், சைன மதத்திலும், சமண மதத்திலும், ஏன் ஒவ்வொரு கெட்ட மனிதனிலும் இருக்கிறது. யாருமே முழு கெட்ட மனிதர்கள் அல்ல. மிக கொஞ்சமாகவாவது நல்ல குணம் இருக்கும். அந்த நல்ல குணம் வளராமல் காய்ந்து விடுவதுதான் பிரச்சனை. தன் நல்ல குணத்தை பிய்த்து கண்ணா பின்னா ஆக்குவதுதான் கொடுமை என்கிறோம். எது கிடைக்கலனாலும் சரி, எந்த தப்பு செஞ்சாலும் சரி அதற்கு ரொம்ப கெஞ்சி சொல்லவும் வேணான், ரொம்ப கோபப்பட்டு சொல்லவும் வேணான் முகம் வாடியிருந்தாலோ, முகம் இறுக்கமாக இருந்தாலோ அவர்கள் பிரச்சனையை அறிந்து ஆறுதல் நாம் பெறக்கூடாதா? சின்ன சிம்டம் அத உணரலானா? பெரிய வழியையும் கால போட்டு மிதிப்போம். சின்ன சிம்டம் அதாவது ஒருவாசகம் அல்லது ஒரு நல்லவார்த்தையை உணரவில்லை என்றால். எதுவும் என்ன ஆகும். கொள்ளையடிச்சி மட்டமா திருடுனாலும், கொடூரமா பிறந்து ஒரு நிமிடமே ஆன சின்ன சிசுவையோ, இருந்து போன பாட்டியையோ, பாட்டனையோ கற்பழிச்சாலோ, கொலை செய்தாலோ உள்ள தீமை செய்யும் கொடூரம் மற்றும் ஒரு ரூபாய் ஏமாற்றினாலும், தீவிர வாதிகளின் ஆதங்கங்கள் போன்றவை எவ்வளவு விசுவரூபம் எடுத்தாலும் நாம் நினைக்கும் எத்தகைய தண்டைனை கொடுத்தாலும் அவர்கள் ஆவலான விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. ஒன்னு தூக்கு அல்லது சுட்டு தள்ளு, தூங்க விடாம அடி, இல்லனா பெரிய fine . ஒவ்வருவரிடம் எல்லாரிடமும் உள்ள சின்ன வீக்னஷ அல்லது சின்ன சந்தோசத்தை வைத்து அன்பு பாராட்டி எத்தகைய தவறையும் திருத்தலாமே. பணம், பணம், தப்பு செஞ்சா fine கட்னா போதும், government வருமானம், வக்கீலுக்கு வருமானம், பாதிக்கப்பட்டவனுக்கு வருமானம். மானம் கெட்ட பணம் என்ற பிணத்தின் வருமானம் கிடைச்சா போதும் அல்லது மிருகம் மாதிரி நடந்து கொள்வது. இதனால எந்த நாட்ல மனிதநேயம் ஓங்கி நிக்குது. இந்தபாரு தப்பு செஞ்சா மெதுவா ஆணின் விதை பையை (கொட்டையை) கிள்ளலாம், உடலில் கிச்சி கிச்சி மூட்டுவேன், நல்ல பரிசளிப்பேன், பிரியாணி தருவேன். பெண்ணை, முஸ்லிம் பருதா மாதிரி எங்க போனாலும் துணியால் மூடிக்கொண்டு போக சொல்லலாம். அழகை கெடுக்கும் விதமாக safety யா பெண்ணின் முகத்தில் வழிதெரியாத படி ஆசிடால சின்ன கீறல் அது கொஞ்சம் அழகை கெடுக்கும் படி செய்யலாம். கொடுமையான தவறை தடுப்பதற்கு அப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கனும். ஒவ்வொரின் உரிமையை முழுமையாக பறிக்காமல் கொஞ்சம் இழக்க வைத்து உலகின் ஒவ்வொரின் உரிமை வெகுவாக பாதிப்பதை தடுக்க இதுபோல் முயற்சி எடுக்கலாமே. கொஞ்சம் வைர நகை பரிசளித்து, அல்லது நல்ல பிரியாணி தந்து. இப்படியும் முயற்சி எடுக்கலாமே. இதற்காக உலகம் முழுவதும் இரு வலியினால் ஒன்று சின்ன மகிழ்ச்சி வலி, அல்லது சின்ன துன்ப வழி எந்த dose பொருந்தும் என்பதை கையாளலாம். அதற்கு வலி சுவிசேசம் அல்லது கற்பித்தல் வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கிள்ளு, கிச்சு, கிச்சு, கரப்பான் பூச்சி இதை வைத்தே தவறு செய்வதை தடுக்கனும். கொள்ளையடிச்சிட்டான், கற்பழிச்சிட்டன், பயங்கர குண்டு வெடிப்பு, கொலை பண்ணிட்டான் தண்டனை சொல்லுங்க இவங்களுக்கு. தூக்கு தண்டனை மனசில இருக்கும் முடிஞ்சா அவனை நெருப்பில வாட்டனும் என்று மனசில நினைப்பது இப்படி தவறு செய்பவரை தண்டிக்க நினைப்பவர்கள், ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்றால். அவர்கள் தவறை அப்படி கொடுமை படுத்தினால்தான் திருந்துவார்களாம். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு அதுபோல் தண்டனை கிடைக்காததால் அவர்கள் தவறும் மாறாமல் இருக்கிறது. நல்ல சொற்கள் (திருவாசகம் எங்கும் மலிவு) அதல குற்றம் சுமத்துகிறவர்கள் உணரவில்லை. அதனால் மற்றவர்களை மட்டும் இப்படி கொடுமை படுத்தினால் திருந்துவார்கள். இவர்கள் சின்ன கிள்ளுக்கோ, கிச்சி கிச்சி க்கோ தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள். இவர்களால்தான் சுற்று சூழல் கேடு மிகுந்திருக்கு. கொள்ளை நோயும் மிகுந்திருக்கு. உலகம் எங்கும் ஒவ்வொரு, ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு கிச்சு, கிச்சு கிச்சு , கிள்ளு இதல தண்டனை கொடுத்து தவறுகளை தடுப்போம். பெரிய தவறுக்கும் கிச்சு, கிச்சு கிள்ளு, கரப்பான் பூச்சி இதை கொண்டு தடுப்போம். அந்தளவுக்கு கிச்சு, கிச்சு , கிள்ளு போன்ற gentle தண்டை கொடுப்பதையே பெரிய தண்டனையாக கருதும் உணர்வர்வை சுவிசேசம் கற்பித்தல் செய்வோம். இனி திருவாசகம் உருகும், நன்மை பெருகும். உப்பு கூட இல்லாம வெறும் கஞ்சி சாதத்தின் ருசி சூப்பரா இருக்கும். நீங்க எந்தளவுக்கு தீமையின் taste நாக்குக்கும் வாக்குக்கும், அடங்காமல் இருக்கு. ஒரு வாசகத்துக்கு உருகுவார் ஏதோ ஒரு மிருகம், முதன் முதலில் எதை அடித்து தின்பதில் ருசி கொள்கிறதோ அதைத்தான் விரும்புமா? ஒருவேளை மனிதனை அடித்து தின்று விட்டால் அப்படி திண்பதையே பழக்கபடுத்தும் வெறி கொள்ளுமாம். ஆகவே நல்லவனாக உருக கற்றுகொண்டால் திருவாசகம் தனக்கு மனதில் உருகும். கள்ளப்பணம், கற்பழிப்பு, கொலை இவைகளை ருசிகண்டவர்கள் ரத்த வெறி மிருக நிலையிலிருந்து ரத்த தான அருமை நிலைக்கு மாறனும். செக்ஸ்-ஐ பயன்படுத்தும் நிலைபோல் குற்றங்கள் உள்ளது. சிலர் செக்ஸ் பூவை விட மென்மையாய் இருக்கும். அன்னை தெரசா, வள்ளலார், தியாகிகள் போன்று, பிறர் நலத்திற்கு, இவர்கள், அவர்களின் நல்ல வாழ்வில் தங்களை சந்தோஷ படுத்திக்கொள்வர் . சூழ்நிலை காரணமாக தம்பி, அக்கா , காதலர்கள் இவர்களுக்காக தாங்கள் முன்னின்று திருமணம் நடத்தி தன்னை இழந்து தான் பிரமச்சாரிய நிலைக்கு தள்ளபட்டாலும் அதை சந்தோசமாக கருதுபவர்கள் இந்த மிக, மிக மேன்மை செக்ஸ் ஆளர்கள். ஆகவே செக்ஸ் நுகர்வுக்கு திருமணம் வயது வரும் வரை கவனமுடன் இருக்க வேண்டும். திருமணதிற்கு பிறகு பாச பந்தமுடன் இணையோடு நல்ல ஈடுபாடோடு தொடர வேண்டும். திருமணதிற்கு முன் தங்கள் ருசி பெண்ணோ, ஆணோ அவர்கள், தங்கள் எதிர்பாலரின் குதி காலின் அழகு மட்டும் அல்லது தலை முடி அழகை மட்டும் பார்ப்பதில் அதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இன்னும் குரல், பணி , அறிவு, அன்பு இவைகளை கண்டு ருசி கொள்ளுங்கள். இதற்கு மேல் செல்ல , செல்ல ஆபத்து என்பதால் தங்களையே தண்டிக்க மறக்காதீர்கள். உங்கள் தண்டனை முற்றுபுள்ளி வைக்கவேண்டும். ஆபத்துக்கு அழைத்தால் உங்களுக்கு நீங்களே கொடுக்கும் தண்டனை சரியில்லை. மிக ஏழை கஞ்சி கிடைப்பதையே பெரிதாக நினைப்பர். அதுபோல் ஒரு செக்ஸ் வரையறை நமக்கு வேண்டும். ஏதோ ஒரு மிருகம், முதன் முதலில் எதை அடித்து தின்பதில் ருசி கொள்கிறதோ அதைத்தான் விரும்புமா? ஒருவேளை மனிதனை அடித்து தின்று விட்டால் அப்படி திண்பதையே பழக்கபடுத்தும் வெறி கொள்ளுமாம். ஆகவே சமூகத்தில் வைதெரிச்சல், ரத்த வெறி அந்த நிலை எந்த காரணத்தைக்கொண்டும் செக்ஸ் ருசி, பண ருசி, கோப ருசி போன்றவை தீய நிலைக்கு போகக்கூடாது. அந்த மிருகம் ருசி கொள்வது போல். ஒரு வாசகத்துக்கு உருகுவார் . செக்ஸ் பட்டினி வேண்டாம். ஆனால் அதன் காலம் வரை விரதம் வேண்டும். நிழலும் உண்டு. கனியும் உண்டு. நிழலும் குளிர்ச்சி. கனியும் குளிர்ச்சி. நிழல் தரும் மரத்தினை பயன்படுத்தி. வெயிலில் நிழலின் குளிர்ச்சியை கருவில் இருக்கும் குழந்தையோ, வியதிக்காரரோ, நோயாளியோ, பிரதமரோ, கன்னியோ, வாலிபரோ, விதவையோ யார் வேண்டும் ஆனாலும் பெற்றுக்கொள்வதில் பெரிய ஆபத்தில்லை நன்மைதான். ஆனாலும். அந்த நிழலை தந்த மரத்தின் கனியும் குளிர்ச்சியாக இருந்தால். அதை உண்பதில் மேற்சொன்ன அத்தனை பேருக்கும் ஏற்புடையதா என்றால் அது கேள்விக்குறி . ஆனால் சிலருக்கு உண்பதற்கான பதில். தென்னை , இளநீர் – நிழலும் கனியும். அதுபோல்தான் செக்ஸ்-ஐ பயன்படுத்துவதிலும். செக்ஸ்-இன் நிழல், நினைவுகளில் வாழ்வதும் உண்டு. கனி வேண்டும் என்றால் அதற்கு நம்மை தயார் படுத்த வேண்டும். வைத்தியனே நீயே உனக்கு வைத்தியம் செய். டாக்டர் பார்த்தா- குண்டு, அவருக்கும் சளி, தம் அடிப்பது, தண்ணி அடிப்பது. அவர் தனுக்கு உடனடி தீர்வு தந்தே பழகிவிட்டது. நிரந்தர தீர்வு வில்லை. அப்பறம் என்ன நமக்கும் அதே டோஸ்தான். பிறகு, பிறகு கெடுதல் தரும், பவர் உள்ள மருந்து. இதைபோல் செக்ஸ்-பசிக்கும் வெறித்தனம். 1 FreeTamilEbooks.com - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது ? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email : freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/ 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !