[] 1. Cover 2. Table of contents க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - 4 க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - 4   க.அயோத்திதாஸப் பண்டிதர்     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - தமிழ்த்தேசியன் திரு.இங்கர்சால், நார்வே - ingersol.selvaraj@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/iyothee_dass_thoughts_4 மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com மெய்ப்புப் பார்ப்பு : வள்ளுவர் வள்ளலார் வட்டம் அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: தமிழ்த்தேசியன் திரு.இங்கர்சால், நார்வேன் - ingersol.selvaraj@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Proof Reader : Valluvar Vallalar Vattam Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: Ingersol, Norway - ingersol.selvaraj@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் தொகுதி நான்கு இந்திரர் தேச சரித்திரம் ஒடுக்கப்பட்ட மக்கள் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாறு […] மின்னாக்கம் தமிழ்த்தேசியன் திரு.இங்கர்சால், நார்வே வள்ளுவர் வள்ளலார் வட்டம் ஏன் இந்த வரலாற்றை வெளியிடுகிறோம்? அயோத்திதாஸப் பண்டிதரின் சிந்தனைகள் வரிசையில் நான்காவதாக இந்திரர்தேச சரித்திரம் என்னும் முக்கியமான இந்த நூலை வெளிக்கொண்டு வருகிறோம். இது இந்திய வரலாறு பற்றிய நூலாகும். பண்டிதர் இந்த நூலைத் தாம் இயற்றியதன் காரணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆரிய மிலேச்சர்கள் ‘’தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதி பேதங்களுக்கும், பொய் மத பேதங்களுக்கும் உட்படாதவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பலவகையாலும் பரவச்செய்து வந்தது மன்றி, அன்னிய தேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறிவர்களுக்கும் இழிவாக போதித்து" விட்டனர். இப்படிச் செய்துவிட்டு “டிப்பிரஸ் கிளாசை” சீர்திருத்தப் போகின்றோமென்னும் படாடம்ப மடித்துக் கொள்கின்றனர். இத்தியாதி பொறாமெச் செயல்கள் யாவும் பௌத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்கவிடாமற்செய்த வஞ்சினக் கூற்றாதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ் இந்திரர்தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம்’ என அயோத்திதாஸர் குறிப்பிடுகின்றார். வரலாறு எழுதப்படுகின்ற முறைகள் பற்றியும், அவற்றிலுள்ள முரண்கள் குறித்தும் இப்போதைய சிந்தனை யாளர்கள் குறிப்பிடு கின்றனர். இந்திய வரலாறு எழுதப் பட்டதில் காலனியாட்சியாளர்களின் நோக்கங்கள் கறைகளாகப் படிந்திருப்பதை அவர்கள் கண்டு பிடித்துக் கூறுகின்றனர். அவ்வப்போது வரும் ஆட்சியாளர்கள் தமது நலன்களுக் கேற்றபடி வரலாற்றை மாற்றி எழுதிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். தற்போதுள்ள ஆட்சியாளர்கள், அகழ்வாராய்ச்சிகள் புலப்படுத்திய பருண்மையான சான்றுகளை நிராகரித்துவிட்டு கற்பனைக் கதைகளாம் புராணங்களை வரலாற்று ஆதாரங்களாக்க முயல்வதையும், தம் விருப்பு வெறுப்புக்கேற்ப வரலாற்றுப் பாடங்களைத் திரித்து எழுதுவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய போக்கு ஆரியமிலேச்சர்கள் வழிவழியாய் கைக்கொண்டு வரும் வஞ்சகச் செயல்களுக்குச் சான்று பகர்கிறது. “அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர்களையும், அவரவர்கள் ஆண்டு வந்த தேசங்களையும் குறிப்பிட்டிருக்கின் றார்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் குறைந்து சாதிபேத மதபேதத்தினால் வஞ்சினம், பொறாமெ நிறைந்து நாளுக்கு நாள் தேசம் பாழடைந்து வருவதற்குக் காரணமாய சரித்திரம் ஏதுண்டோ அவைகளை மட்டிலும் இவ்விடம் வரைந்துள்ளோம்” என்று அயோத்திதாஸர் தம் நோக்கத்தைத் தெளிவு படுத்திகின்றார். இக்கூற்று வரலாறு எழுதுவதில் உள்ள பல் வேறுபட்ட போக்குகளை எடுத்துக்காட்டுவது மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் நோக்கிலிருந்து எழுதப்பட்ட வரலாறு இதுவென்றும் காட்டுகிறது. இன்று சபால்டர்ன் ஆய்வுகள் (Subaltern studies) என்று அடையாளப்படுத்தப்படும் சிந்தனைகள் முன்வைக்கின்ற வரலாறெழுது முறை குறித்த கூறுகளை அயோத்திதாஸரின் இந்த ஆய்விலே நாம் காண்கிறோம். இந்த விதத்தில் தமிழில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையிலிருந்து வராற்றை அணுகி எழுதப்பட்ட முதல் சபால்டர்ன் வரலாறு (Subaltern History) இதுவேயென்றும் கூறலாம். அயோத்திதாஸரின் இந்த வரலாற்றாய்வு வெறும் கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டதல்ல. இந்நூலின் தொடர்ச்சியாக வைத்து, அண்ணல் அம்பேத்கரின் பார்ப்பனீ யத்தின் வெற்றி என்ற நூலைப்படித்தால் பண்டிதரின் அறிவுத்திறன் நமக்கு புலப்படும். இந்திய வரலாறு தொகுக்கப்பட்ட வழிமுறைகளில் தனக்கு திருப்தி ஏற்படவில்லையெனக் குறிப்பிடும் அம்பேத்கர், தனது அதிருப்திக்கான காரணத்தையும் கூறுகின்றார்.’’ இந்தியாவை முஸ்லீம்கள் ஆக்கிரமித்தது குறித்து அளவுக்கதிகமான முக்கியத் துவம் தரப்படுகிறது. அலையலையான முஸ்லீம் படையெடுப்பு ஒரு பனிப்பாறை போல வந்து மக்களை ஆட்கொண்டு, ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்தது பற்றி கத்தைக் கத்தையாக எழுதப்பட்டிருக்கிறது. முஸ்லீம் படையெடுப்புதான் இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரே அம்சம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும் கூட முஸ்லீம் படையெடுப்பு மட்டுமே ஆய்வுக் குரிய ஒரே படையெடுப்பல்ல. அதற்கிணையாக மற்ற படையெடுப்புகளும் இருக்கின்றன. முஸ்லீம் படையெடுப் புகளால் இந்து இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டதென்றால், அதேபோல் பார்ப்பன படையெடுப்பாளர்களால் பௌத்த இந்தியா படையெடுக்கப்பட்டது… இந்து இந்தியாவின் மீதான முஸ்லீம் படையெடுப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு எவ்வளவு அக்கறைக்குள்ளாகிறதோ அதே அளவிற்கு பெளத்த இந்தியாவின் மீதான பார்ப்பனீய படையெடுப்புகளும் ஆயவுக்கு உரியவைகளே…… முஸ்லீம்கள் இந்து மதத்தை வேருடன் பிடுங்கி எறியவில்லை. மக்களின் ஆன்மீக வாழ்க்கையை வழிநடத்தி வந்த கொள்கைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்கவில்லை. ஆனால் பௌத்தம் பரப்பி வந்த ஆன்மீக வாழ்வின் கொள்கைகள் மீதும், அவற்றை வாழ்க்கை முறையாக பின்பற்றி வந்த மக்களின் மீதும் பார்ப்பனீய ஆக்கிரமிப் பாளர்கள் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்’ என்ற அம்பேத்கரின் கூற்று அயோத்திதாஸரின் அணுகு முறையோடு முற்றிலும் பொருந்தி வருவதைக் காணலாம். முஸ்லீம் ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்திய வரலாறு என்பது பார்ப்பனீயத்திற்கும், பெளத்தத்திற்கும் இடையிலான ஜீவ மரணப் போராட்டத்தின் வரலாறு ஆகும். இந்த உண்மை யை ஏற்றுக்கொள்ளாத எவராலும் உண்மையான இந்திய வரலாற்றை எழுத முடியாது என அம்பேத்கர் கூறுவதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். இந்த ஜீவ மரணப் போராட்டத்தில் சதியால், வஞ்சகத்தால் வென்ற பார்ப்பனர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தீமைகளை ஏழுபிரிவுகளாகக் குறிக்கின்றார் அம்பேத்கர் 1. ஆள்வதும், அரசக் கொலையும் பார்ப்பனீய உரிமை யென்பதை நிலைநிறுத்தியது. 2. பார்ப்பனர்களை சிறப்புரிமை கொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. 3. வர்ணத்தை சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதலையும், வெறுப்புணர்வையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும், பெண்களையும், இழிந்த நிலைக்குத்தள்ளியது. 6. படி நிலைகொண்ட சமத்துவமற்ற (Graded inequality) அமைப்பை உருவாக்கியது. 7. மரபு ரீதியாக நெகிழ்ச்சி கொண்டதாயிருந்த சமூக அமைப்பை சட்டபூர்வமானதாகவும், இறுகியதாகவும் மாற்றியது. அம்பேத்கரின் இந்த முடிவுகளைத்தான் அயோத்திதாஸரின் ஆய்வும் நிறுவுகின்றது. பெரிய புராணத்தின் வழி அறியப்படும் நந்தனின் சரித்திரத்தை அயோத்திதாஸர் வேறுவிதமாக சித்திரித்துக் காட்டுகிறார். நந்தன் ஒரு மன்னனென்றும், பௌத்த நெறிகளைப் பரப்பிவாழ்ந்த அவனைப் பார்ப்பனர்கள் வஞ்சகமாகக் கற்சிதம்பத்தில் வீழ்த்திக் கொலை செய்தார்களெ னவும் அயோத்திதாஸர் எடுத்துரைக்கின்றார். இது தற்காலத்திய ஆய்வாளர்கள் கவனம் கொள்ளத்தக்கதாகும். பெளத்தமார்க்கத்தை ஏற்றதில் மட்டுமின்றி வரலாற்றை அணுகும் விதத்திலும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார் அயோத்திதாஸப் பண்டிதர். அம்பேத்கருக்குக் கிடைத்த அறிவுலக அறிமுகமோ அயல்நாட்டுத் தொடர்புகளோ, வாய்ப்புகளோ கிடைக்காத நிலையிலும்கூட அயோத்திதாஸர் இந்த அளவுக்கு வரலாற்றைப் பற்றிய அறிவும் அதை எழுதும் திறனும் பெற்றிருந்தது நம்மை வியக்க வைக்கிறது. இன்று தாழ்த்தப்பட்ட மக்களாய் ஒடுக்கிவைக்கப் பட்டுள்ள மக்கள் கொண்டிருக்கும் செறிந்த அறிவுப் பாரம் பர்யத்துக்கான சிறந்த சான்றாக விளங்குகிறார் அயோத்தி தாஸர். இத்தனை காலமும் வெளிச்சத்துக்கு வராமல் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டிருந்த அயோத்திதாஸரின் சிந்தனைகளைத் தமிழுலகுக்கு மீட்டுத்தரும் பணியினை மேற்கொண்டுள்ள தலித் சாகித்ய அகாடமியின் இந்த வெளியீடு பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுமென்பது உறுதி. எங்களுக்குக் கிடைத்தது மூல நூலின் இரண்டாவது பதிப்பு ஆகும். முதல் பதிப்பு வெளியான ஆண்டு விவரம் தெரிய வில்லை. இரண்டாம் பதிப்பின் மூலத்தில் உள்ளது போன்றே பத்தி பிரிக்கப்பட்டு, எழுத்துக்களும் அதில் உள்ளபடிக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் பண்டிதரின் தமிழன் வார இதழில் புத்தகம் - இலக்கம் 19இல் தொடங்கி, புத்தகம் 5 இலக்கம் 23 வரையில் தொடராக வெளியாகியுள்ளது. தொடருக்கும், நூலாக வந்ததிற்குமிடையே பத்தி பிரிப்பதிலும், சில சொற்களிலும் வேறுபாடுகள் உள்ளன. இந்த நூலின் மூலப்படியைத் தமது நூலகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தாருக்கும் (French Institute of Pondicherry) அதில் பணியாற்றும் திரு. கண்ண ன். எம் அவர்களுக்கும், மெய்ப்புத்திருத்தியதில் உதவிய குமு. ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இந்த விளைச்சலின் பலன் வெகுமக்களுக்கு உரித்தாகட்டும். -தலித் சாகித்ய அகாடமி டிசம்பர் 1999 சென்னை - 73 இந்திரர் தேச சரித்திரம் இரண்டாம் பதிப்பு இந்திரர் தேச சரித்திரம் இந்திர மென்னு மொழி ஐந்திரமென்னு மொழியின் திரிபாம். அதாவது, மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று (ஐ-இ) யாகத் திரிந்து இந்திரரென வழங்கி அவரது சங்கத்தோர் நிலைத்த விடங்களுக்கு இந்திர வியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடுங்காலத்திற்கு இந்திரவிழாநாள், இந்திர விழாக்கோலென்றும், இந்திரவிழாக் கொண்டாடுங் காலங்களி லெல்லாம் மழைப்பெய்வதின் அனுபவங்கண்டு மழைக்கு முன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனு சென்றும், அவரை யெக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள் பூர்வ மித்தேசத்தை பரதகண்டமென்று வழங்கியது முண்டு. காரணமோவென்னில், ஆதியிலித்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடி வந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறவரத்தை யோதியது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதி வேதமாம் முத நூலுக்கு "வரதன் பயந்த முதநூலென்றும், அவரைக் கொண்டாடிய வித்தேசத்திற்கு வடபரதம் தென்பரத மென்றும் கொண்டாடி வந்தார்கள். இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் விசேஷமாகக் கொண்டாடாமல் இந்திரரென்னும், பெயரினா லேலே விழாக்களையும், வியாரங்களையும், விசேஷமாகக் கொண்டாடி வந்தபடியால் இத்தேச மக்களை இந்தியர்க ளென்றும், இத்தேசத்தை இந்திய தேசமென்றும் வழங்கி வந்தார்கள். அது கொண்டு வடயிந்தியமென்றும், தென்னிந்திய மென்றும் பிரபலப் பெயருண்டாயிற்று. அருங்கலைச் செப்பு இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோ பாரம்ப முந்தி துறந்தான் முநி. மணிமேகலை இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் றந்த நூற்பிடகம் மாத்திகாயமதென் சூளாமணி மாற்றவர் மண்டில மதனுளூழியா லேற்றிழி புடையன விரண்டு கண்டமாந் தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது பாற்றரும் புகழினாய் பரதகண்டமே. சூளாமணி வேறு கந்துமாமணித்திரள் கடைந்த செம்பொனீள்சுவர் சந்துபோழ்ந்தியற்றிய தகடு வேய்ந்து வெண்பொனால் இந்திரன் றிருக்க குரிமெயோடு மிவ்வழி வந்திருந்தவண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. இந்திரதேயத்தின் ஆதிபாஷையாகும். மகிடபாஷை யென்னும் பாலியை வரிவடி வமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதி வைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி யென்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமா யிருந்தபடியால் சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்ட மாதவன் சகடபாஷை யாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தழிழையும் வரிவடிவாக வியற்றி ஜினனென்னும் தனது பெயர் பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறத்தை வரைந்து சகல மக்கள் மனதிலும் பதியச்செய்தது மன்றி இன்னு மவ் வரிவடிவ பாஷையைத்தான் நிலைநாட்டி வரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்திய தன்மமானது மேலுமேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி யிவர்களுக்கு சகடபாஷையை யும், அகஸ்தியருக்கு திராவிட பாஷையையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வடபுரத்திலும், அகஸ்தியரை தென்புரத்திலும், திருமூலரை மேற்புரத்திலும், சட்ட முனிவரை கீழ்புரத்திலும் அநுப்பித் தானும் அந்தந்த யிடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை யூன்றச் செய்து மெய்யறமாம் புத்ததன்மத்தையும் பரவச்செய்தார். வீரசோழியப் பதிப்புரை சிவஞான யோகியார் இருமொழிக்குங் கண்ணுதலார் முதல் குரவ ரியல் வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பும் இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிங் கிருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ கொல்லாற்று திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய் வடமொழியை பாணினிக்கு வகுத்தருளியதற் கிணையாத் தொடர்புடையத்தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த குடமுநிக்கு வற்புருத்தார் கொல்லாற்றுபாகர். முன்கலை திவாகரம் வடநூற்காசன் றென்றமிழ்க் கவிஞன் கவியரங்கேற்று முபயக்கவி புலவன் செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த னறிவுகரியாக தெரிசொற்றிவாகரத்து முதலாவது தெய்வப்பெயர் தொகுதி. வீரசோழியம் பாயிரம் ஆயுங்குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட் டேயும் புவனிக் கியம்பியதண்டமிழீங்குரைக்க நீயுமுளையோவெனிற் கருடன் சென்ற நீள்விசும்பி லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே தொல்காப்பியம் மயங்கா மரபினெழுத்து முறைகாட்டி மங்குநீர் வரைப்பினைந்திரர். சிலப்பதிகாரம் கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த தண்டமிழாசான் சாத்தானிஃதுரைக்கு பதஞ்சலியார் ஞானம் வசனசக்தி கபிலாதி மாமுனிவர் மகிதான ஜனகாதியும் வாமரோம முனிநந்தி தேவன் வபாஷையோதினர்கள் வண்மெயே மேருலாவுவட வீதிதோருமுயர் வேதஞான ஜனகாதியர் மேலைவீதிதிரு மூலவர்க்கமிக வேயிருந்து விளையாடினார் பாருங்கீழ்திசையிலையர் சட்டமுனி பானுமா மலையிலாகினார் பன்னு தென்றிசையிலேயிருந்து தமிழ் பாஷையோதினன் அகத்தியன் அவற்றை விடாமுயற்சியில் அனுசரித்து வந்த சங்கத்தோர் கள் தென்னிந்திர தேசம் வடயிந்திர தேசமெங்கும் உள்ள சங்கத்தோர்களுக்கு சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து அவ்விரு பாஷை களில் திரிபேத வாக்கியங்களாம் திரிபீட வாக்கியங்களையும், அதன் உப நிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து உலகமநுக்கள் கல்விகற்று அறிவின் விருத்தி பெருவதற்காகக் கலைநூற்களை மக்கள் ரோகங்களைப் போக்கும் ஓடதிகளின் குணாகுணங்களை யறிந்து பரிகரிப்பதற்கு சரக் சூசரகமாம் வைத்திய நூற்களை வரைந்தும், மக்கள் கால மாறுதல்களையும் அதன் குணாகுணங்களையு மறிந்து பூமிகளை சீர்திருத்திப் பலனடைவதற்கு அந்தந்த சோதிகளின் நிலையங்களை யறிந்துக்கொள்ளுவதற்காக சோதிட நூற்களை வரைந்தும் வைத்தது மன்றி மக்கள் பூமிகளின் குணாகுணங்களை யறிந்து ஆகார சீர்திருத்தங்களையும், தேக போஷணைகளையுங் கண்டறிந்து சுகம்பெருவதற்கு காற்கரைகளைச் சார்ந்த நிலங்களை நெய்த நிலமென்றும், நாடுகளைச் சார்ந்த நிலங்களை மருத நிலமென்றும், காடுகளைச் சார்ந்த நிலங்களை முல்லை நிலமென்றும், மலைகளைச் சார்ந்த நிலங்களை குறிஞ்சி நிலமென்றும், படு நிலங்களை பாலைநிலங்களென்றும் வகுத்து அந்தந்த நிலங்களில் விளையக்கூடியப் பொருட்கள் இன்னின்ன வைகளென்றும், அப்பொருட்கள் இன்னின்னவைகளுக்கு வுபயோகமுள்ளதென்றும் விளக்கி ஐந்து வகை பூமிகளின் பலன்களை யடைவோர் ஒருவருக்கொருவர் அவரவர் பூமிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி சூத்திரங்களையும், அதற்குரியக் கருவி சூத்திரங்களையும் கண்டு பிடித்து தங்கட் கைகளையும் கால்களையும் ஓரியந்திர சூத்திரம் போற் கொண்டு தொழில் புரிவோர்களுக்கு வடமொழியில் சூத்திரர் சூஸ்திரரென் றழைக்கப் பெற்றார்கள். இத்தகைய பூமிகளை யுழுது பண்படுத்தி தானிய விருத்தி செய்து சருவ சீவர்கள் புசிப்பிக்கும், வேள்வியின் விருத்திக்கும் ஆதார பூதமாக விளங்கினோர்கள் தென்மொழியில் வெளாளர்களென்றும் பூவாளர்களென்றும் அழைக்கப் பெற்றார்கள். இவர்களுள் காடுகளைச் சார்ந்த முல்லை நிலவாசிகள் தங்களால் வளர்க்கப்பட்ட ஆடு மாடுகளினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மோரிவைகளைக் கொண்டு போய் மருதநிலவாசிகளிடம் கொடுத்து தானியம் பெற்றுக்கொள்ளு கிறதும், மருதநிலத்தோர் தங்கள் தானியங்களை கொண்டு போய் முல்லை நிலத்தாருக்குக் கொடுத்து நெய், தயிர், பால் பெற்றுக் கொள்ளுகிறதுமாகிய ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்றுக்கொள்ளுவோருக்கு வடமொழியில் வைசியரென் பராதலின் பசுவின் பலனை யீவோர் கௌ வைசிய ரென்றும், பூமியின் பலனை யீவோர் பூவைசியரென்றும் நாணயப் பொருட் களாம் தனத்தைக் கொடுத்து முன்னிரு பொருள் கொண்டு விற்போர் தனவைசியரென்றும் வடமொழியி லழைக்கப் பெற்றார்கள். இவர்களுள் எண்ணெய், வெண்ணெய், பசுநெய் விற்போர் எண்ணெய் வாணியரென்றும், கோலமாம் தானியங்களை விற்போர் கோலவாணியரென்றும், சீலைகளாம் வஸ்திரங்களை விற்போர் சீலைவாணியரென்றும், நகரமாம் கோட்டைக்குள் பலசரக்குகளைக் கொண்டு வந்து மிக்க செட்டாக விற்பனைச்செய்வோர் நாட்டுக்கோட்டை செட்டிக ளென்றும், தேசத்தின் ஆயத்துறையில் உட்கார்ந்து சொட்டாக சுங்கம் வசூல் செய்வோர் தேச ஆயச்செட்டிகளென்றும் தென்மொழியி லழைக்கப்பெற்றார்கள். தேசத்துக் குடிகளுக்கோ ரிடுக்கும் வராமலும், ஆடு மாடுகளாம் சீவராசிகளுக்கோர் துன்பம் வராமலும் சத்துருக்களாகத் தோன்றும் மிருகாதிகளையும், எதிரி மக்களையும் வெல்லும்படியான வல்லபமும், புஜபல பராக்கிரமமுமாகிய க்ஷத்திரிய மிகுத்தோனை வடமொழியில் க்ஷத்திரிய னென்றும், எதிரிகளாம் துஷ்டர்களையும், துஷ்ட மிருகங்களையும் சம்மாரஞ் செய்யக்கூடிய வல்லபனை தென்மொழியில் அரன் அரயன் அரசனென்றும் அழைக்கப்பெற்றார்கள். மகடபாஷையாகும் பாலியில் சமணர்களென்றும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்தில் சிரமணரென்றும் அழைக்கப் பெற்று புத்த சங்கங்களாம் சாது சங்கங்களிலுள்ளவர்கள் தங்க ளிடைவிடா சாதன முயற்சியால் சித்திப்பெற்று காலமென்னும் மரணவுபாதையை ஜெயித்து யமகாதகரான போது வடமொழியில் பிராமணனென்றழைக்கப் பெற்றார்கள். சகடபாஷையில் சிரமணநிலை கடத்தவர்களையே பிராமணர்களென்றும், மகட பாஷையில் சமண நிலை கடந்தவர்களையே அறஹத்துக்களென்றுங் கூறப்படும். சாது சங்கத்திலிருந்து சாதன முதிர்ந்து தண்மெயாம் சாந்தம் நிறைந்து சருவ வுயிர்களையுந் தன்னுயிர்போற் கார்த்து சீவகாருண்ய வன்பில் நிலைத்தவர்களை திராவிட பாஷையாகும் தமிழ்மொழியில் அந்தணர்களென் றழைக்கப்பெற்றார்கள். ஈதன்றி புத்த சங்கங்களாம் சாது சங்கங்களில் சேர்ந்துள்ளவர்கள் தங்கடங்கள் ஞானசாதன மிகுதியால் கட்புலனும் அதனிலையும், செவிபுலனும் அதனிலையும், நாவின் புலனும் அதனிலையும், நாசியின் புலனும், அதனிலையும், உடற்புலனும் அதனிலையுமாகும் புலன் தென்பட்டோர்களை திராவிடமாம் தமிழ்மொழியில் தென்புலத்தோரென்றும் அழைக்கப்பெற்றார்கள். முன் கூறியுள்ள மூன்றுவகை வைசியருள் பூவைசியருக்கு மறுபெயர் உழவர், மேழியர், உழவாளர், வேளாளரென்றும்; கோ வைசியருக்கு மறுபெயர் கோவலர் ; கோவர்த்தனர், இப்பரென்றும், தன் வைசியருக்கு மறுபெயர் வணிகர், நாய்க்கர், பரதரென்றும்; உப்பு விற்போருக்குப் பெயர் உவணரென்றும்; கல்வியிற் றேறினோர்க்குப் பெயர் கலைஞர், கலைவல்லோ ரென்றும்; சகல கலை தெரிந் தோதவல்லோர்க்குப் பெயர் மூத்தோர், மேதையர், கற்றவர், அவை விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞரென்றும்; தேக லட்சணமறிந்து வியாதிகளை நீக்குவோர்க்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள் வேதியர், மாமாத்திரரென்றும்; மண்ணினாற் பாத்திரம் வனைவோர்க்குப் பெயர் குலாலர், குயவர், கும்பக்காரர், வேட்கோவர். சுக்கிரி, மடப்பகைவரென்றும், கரும் பொன்னாகும் இரும்பை யாள்வோருக்குப் பெயர் கன்னாளர். கருமார், கொல்லர், மருவரென்றும், மரங்களை யறுத்து வேலை செய்வோருக்குப் பெயர், மரவினையாளர், மயன், தபதி தச்சனென்றும்; பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற் கொல்லர், தட்டார், சொர்னவாளர் அக்கரசாலையரென்றும்; கல்லிலும் மண்ணினுமனையுண்டு செய்வோர்க்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசாரியரென்றும்; வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் அதாவது தூசி நீக்கி தோய்த்துக் கொடுப் போருக்குப் பெயர் தூசர், ஈரங்கோலியர், வண்ணாரென்றும்; கிழிந்த ஆடைகளைச் செட்டைகளைத் தைத்துக் கொடுப் போர்க்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்; உயிர்வதையாகியக் கொலை புரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும், மாடு பூட்டிச் செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கர் நந்திகளென்றும் ; கள் விற்போர்க்கு பெயர் சவுண்டிகர் துவசர், பிழியர், பிடியரென்றும்; கடற்கரை வாசிகளுக்குப் பெயர் கரையார், பட்டினவர், மீன் வாணியரென்றும், கடற்கரை வாசப் புருஷர்களுக்குப் பெயர் பரதவர், நுளையர், பஃறியர், மிதிலர், சாலர், கடலர், கழியரென்றும்; இஸ்திரீகளுக்குப் பெயர் பறத்தி, நுளத்தி, அளத்தி, கடற்பிணா வென்றும்; மருதநிலவாசப் புருஷர்களின் பெயர் சளமர், தொழுவர், வள்ளர் கம்பளர், உழவர், விளைஞரென்றும்; இஸ்திரீகளின் பெயர் கடைச்சியர், ஆட்டுக்காலாட்டியரென்றும்; பாலை நிலவாசப் புருஷர்களின் பெயர் எயினர், புள்ளூவர், மறவர், இறுக்கரென்றும்; இஸ்திரீகளின் பெயர் எயிற்றியர், பேதையர், மறத்தியரென்றும்; முல்லைநிலவாசப் புருஷர்களின் பெயர் முல்லையர், அண்டர் ஆன்வல்லவர், குவர், பாலர், கோவலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையரென்றும், இஸ்திரீகளின் பெயர் தொறுவி பொதுவி, ஆய்ச்சி, குடச்சி, இடைச்சியென்றும்; குறிஞ்சி நிலவாசப் புருஷர்களின் பெயர், குறவர், கானவர், மள்ளர். குன்றவர், புனவர், இறவுனரென்றும், இஸ்திரீகளின் பெயர் குறத்தியர். கொடிக்கியரென்றும்; மதகரி யாள்வோர்க்குப் பெயர் யானைப்பாகர், ஆதோணரென்றும், அரண்மனைக் காப்போர்க்குப் பெயர் மெய்க்காப்பாளர், காவலர், கஞ்சுகி யென்றும்; மரக்கலமோட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகானென்றும், இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்; தோல்களைப் பதனிடுவோர்க்குப் பெயர் இயவர், தோற்கருவியாளரென்றும் நரம்பு முதலியவைகளைக் கொளுத்தித் தோற்பறைக்கொட்டி துளைக்குழ லூதுவோர்க்குப் பெயர் குயிலுவரென்றும்; ஓர் சங்கதியை மற்றவர்க் கறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்; இஸ்திரீபோகத் தழுந்தினோர்க்குப் பெயர் பல்லவர், படிறர். இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்; மனம் வருந்த வருந்துவோர்க்குப் பெயர் அறுந்துதர், வேதனை செய்வோரென்றும் ; பொறாமெ யுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சிகரென்றும்; பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோ ரென்றும்; அன்னியர் பொருளை யபகரித்து சீவிப்போர்க்குப் பெயர் கரவடர், சோரர், தேனர். பட்டிகர், புறையோர். கள்ளரென்றும்; கொடையாளர்க்குப் பெயர் புரவலர் யீகையாளர், வேளாளர். ஈசர், தியாகி, வேள்வியாளர், உபகாரரென்றும்; தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர் அகிஞ்சர், பேதையர், இல்லார், வறியர் ஆதுலர், ஏழை, உறுகணாளர், மிடியரென்றும்; மாணாக்கர்க்குப் பெயர் கற்போரென்றும்; ஆசாரியர்க்குப் பெயர் ஆசான் தேசிகர், உ பாத்தியாயர், பணிக்கரென்றும்; அரசர் முதல் வணிகர், வேளாளர்வரை முக்குலத்தோர்க்குங் கருமக் கிரியைகளை நடத்துவோருக்குப் பெயர் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், கருமத்தலைவரென்றும், விவேகமிகுத்தோர்க்குப் பெயர் விவேகி, அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலக மேதாவியரென்றும்; அவிவேகி களாம் அறிவில்லார்க்குப் பெயர் பொறியிலார், கயவர், நீசர், புள்ளுவர், புல்லர், தீயோர், சிறிய சிந்தையார், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவரென்றும்; இவ்வகையாய் பஞ்ச பூமிகளின் விளைபேதத்திற்கும், பொருள் பேதத்திற்குத் தக்கப் பெயர்களையும், மனுக்களின் குணபேதங்களுக்கும், தொழில் பேதங்களுக்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்து புத்ததன்மத்தில் நிலைத்து ஒற்றுமெயுற்ற சுகவாழ்க்கையில் நிலைக்கச் செய்தார்கள். வட யிந்தியமென்னும் ஆசியா மத்திய கண்டமுதல் தென்னிந்திய கடைகோடி வரை எங்கும் புத்த சங்கங்களையே நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து புத்த தன்ம அரசர்கள் யாவரையும் நீதிவழுவா நெறியிலும் அன்பின் மிகுத்தச் செயலிலும் நிலைத்து ஓரரசருடன் மற்றோர் அரசன் வீணே முனைந்து தீராப்பகையை வளர்த்துக் கொள்ளாமல் ஒருவர்க் கொருவர் சமாதானமும் சாந்தமும் நிலைக்கும்படியாக அவரவர்கள் அரண்மனை முகப்பில் வெள்ளைக் கொடியும், பிடிப்பது வெள்ளைக்குடையும், ஏறுவது வெள்ளைக்குதிரையும், வெள்ளை யானையும், அணிவது வெண்பிறைமுடியும், வெள்ளையங்கியும், வீசுவது வெண்சாமரையுமாக வகுத்து எக்காலும் ஆனந்தச் செயலில் வீற்றிருக்கச் செய்தது மன்றி புத்ததன் மத்தைச் சாராத வரசர்கள் எதிர்ப்பார்களாயின் அவர்களுடனும் வீணே யெதிர்த்துப் போர்புரியாமல் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயத்தைக்கையாடி அரசுபுரியும் வழிகளையும் வகுத்து வைத்தார்கள். இத்தகைய புத்ததன்ம வரசர்களுக்குள் விம்பாசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன், நந்தன் முதலிய வரசர்கள் தங்கடங்க ளரசை நீதி நெறியில் நடத்தியது மன்றி சத்திய தன்மங்களையும் பரவச் செய்து வந்தார்கள். சித்தார்த்தி சக்ரவர்த்தியாம் புத்தபிரானுக்கு முன்பு மண்முகவாகு, குலவாகு, இட்சுவாகு, வீரவாகு, கலிவாகென்னும் நவச்சக்கிரவர்த்திகள் கபிலை நகருக்கும், மகத நாட்டிற்கும் தலைத்தார் வேந்தர்களா யிருந்திருப்பினும் புத்த பிரான் பரிநிருவாணத்தின் நெடுங்காலத்திற்குப் பின்னர் தோன்றிய அசோக சக்கிரவர்த்தியே முக்கிய முயற்சியுடையவராயிருந்து சத்திய தன்ம சங்கங்களை இந்திரதேச மெங்கணும், மேலுமேலும் பரவச்செய்தது மன்றி சகடபாஷையாம் சமஸ்கிருமதிலும், திராவிட பாஷையாம் தமிழிலும் புத்த தன்ம திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங் களையும் வரைந்து கணிதங்களையும் வரிவடிவாக்கி யெங்கும் பரவச்செய்தார். இவ்வசோக சக்கிரவர்த்தியின் காலத்திலேயே தென்னிந்திய தேயம் தெளிவடைந்ததாகும். அவரது யேவலால் வேலூரில் வினயலங்கார வியாரமும் அதுவரையில் நிருமித்துள்ள நேர்பாதையையும் இஸ்தம்பங்களில் வரைந்துள்ள லிபிகளையும் நாளதுவரையிற் காணலாம். இச்சக்கிரவர்த்திகு அசோக னென்னும் பெயர்வாய்த்த காரணம் யாதெனில் கல்லாலடியிற் வீற்றக் கங்கையாதாரன் இராகத்துவேஷ மோகமாம் சோகத்தை அம்மரத்தடியில் வீற்று நீக்கியபடியால் அம்மரத்திற்கு அசோக விருட்ச மென்னுமோர் பெயரை யளித்திருந்தார்கள். அது கொண்டே சக்கிரவர்த்திக்கு அசோகனென்னும் பெயரை யளிக்கப்பட்டது. அப்பெயருக்குத் தக்கவாறே சகல சோகங்களையும் வெல்லத்தக்க சத்திய தன்மத்தை இந்திர தேசமெங்கும் பரவச்செய்து தனது அசோகனென்னும் பெயரையும் கீர்த்தியையும் என்றுமழியாது நிலைநாட்டி விட்டார். இவற்றுள் நவகண்டங்களென்னுங் கீழ்விதேகம், மேல் விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திம கண்ட மென்னும் ஒன்பது பிரிவில் வட பரதகண்டத்திற்கு கானிஷ்கா சக்கிரவர்த்தியார் ஏகசக்கிராதிபதியாகவும், தென்பரத கண்டமாகிய தென்பாண்டி, குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ் நாடெனும் பதின்மூன்று தமிழ்நாட்டுள் வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவழிக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு இந்தச் சதுரமத்தியில் ஐன்பத்தாறு காதம் பாண்டியன் அரசாட்சியும், கோட்டைக்கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு இந்தச் சதுர மத்தியில் இருபத்தி நாலுகாதம் சோழனரசாட்சியும், கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, தென்காசிக்கு மேற்கு, பழனிக்குத் தெற்கு, கடற்கரைக்கு வடக்கு இந்தச் சதுரமத்தியில் எண்பது காதம் சேரன் அரசாட்சியுமாக விளங்கியதில் இம்மூவரசர்களும் மதுரைபுரம், காஞ்சிபுரம், திரிசிரபுரம், மாவலிபுரம், சிதம்புரம் முதலிய விடங்களெங்கும் புத்த வியாரங்களைக் கட்டிவைத்து சமண முநிவர்களை நிறப்பி சகடபாஷையாம் சமஸ்கிருத பாஷையை மிக்கப் பரவச்செய்யாமல் திராவிட பாஷையாம் தமிழ் பாஷையிலேயே அனந்தங் கலைநூற்களை வகுக்கச்செய்து தென்னாடெங்கு மமைந்துள்ள அறப்பள்ளிகளாம் வியாரங்களுள் சிறுவர்களுக்குக் கலாசாலைகளையமைத்து சமண முநிவர்களால் இலக்கிய நூல், இலக்கண நூல், கணித நூல், வைத்திய நூல், யாவற்றையுந் தெள்ளறக் கற்பித்து வந்தார்கள். இவைகளுள் அரசர்களால் அன்பு பாராட்ட வேண்டியவர்களும், அரசர்களுக்கோர் ஆபத்து வராமல் காக்கத் தக்க வன்புடைய சுற்றத்தோரை ஐந்து வகையாக வகுத்திருந்தார்கள். அதாவது, சத்திய சங்கத்துச் சமண முநிவர்களில் தண்மெய்ப்பெற்ற அந்தணர்கள் 1. வருங்காலம் போங் காலங்களை விளக்கி கருமக்கிரியைகளை நடாத்திவரும் நிமித்தகர்கள். 2. அறுசுவை பதார்த்தங்களை பாகாசாஸ்திரக் குறைவின்றிச் செய்து அன்புடன் அளித்துப் புசிப்பூட்டி வரும் மடைத்தொழிலாளரென்னும் சுயம்பாகிகள். 3. தேக லட்சணங்களையும் வியாதிகளின் உற்பவங்களையும், ஓடதிகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து பரிகறிக்கும் மாமாத்திரராம் வைத்தியரர்கள். 4. அரசரது சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கம் போற் கருதியவரது நட்பை நாடி நிற்கும் சுற்றத்தார். 5. காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து மதிகூறும் மந்திரவாதிகளாம் அமாத்தியர். 6.கணிதவழிகளை யாராய்ந்து வேள்விக்குறுதி கூறும் புரோகிதர். 7. சருவ சேனைகளுக்கும் சேநாபதியர். 8. அரசர்களுக்கு இல்லறப்பற்றின் கேடுகளையும், துறவறப்பற்றின் சுகங்களையும் விளக்கக்கூடிய தவற்றொழிற்றூதர். 9. வேள்வி யாகங்களுக்கு மதியூகிகளாகும் சித்தர்களாம் சாரணர்கள். 10. நெருங்கியக் குடும்பத்தோர். 11. மேலா லோசனைக்குரிய கமவிதிக்காரர். 19. ஆடையாபரண அலங்கிரத சுற்றத்தாராகும் கனக சுற்றம். 13. அரண்மனை வாயல் காக்கும் கடைக்காப்பாளர். 14. தனது நகரத்தில் வாழும் விவேகக் குடிகளாம். நகரமாக்கள். 15. வீரர்களுக்கு அதிபதியாகும் படைத்தலைவர். 16. எதிரிகளுக்கு அஞ்சாத வீரர்களாம் மறவர்கள். 17. யானை பாகரும் சுத்த வீரருமான யானை வீரர். 18. இத்தியாதி அரச அங்கத்தினர் சூழ வாழும் வாழ்க்கையே அரசர்கட் கினியதென்று வகுத்து அரசவாட்சிகளை நிலைக்கச் செய்தார்கள். அரச வங்கத்தினரது வல்லபத்தாலும் சமண முநிவர் களின் சாதுரியத்தாலும், மகடபாஷை, சகடபாஷை, திராவிட பாஷை அங்க பாஷை, வங்க பாஷை, கலிங்கபாஷை, கௌசிகபாஷை, சிந்து பாஷை, சோனகபாஷை, சிங்கள பாஷை, கோசலபாஷை, மாரடபாஷை, கொங்கணபாஷை, துளுவ பாஷை, சாவக பாஷை, சீன பாஷை, காம்போஜ பாஷை, அருணபாஷை, பப்பிரபாஷை, முதலிய வரிவடிவங்களை யியற்றியும் விருத்தி செய்து வந்தவற்றுள் நவகண்டங்களுள் எங்ஙணும் புத்ததன்மமாம் சத்திய தன்மமே பரவி சிறுவர் முதல் பெரியோர் வரை வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமென்னும் நீதிநெறி வழுவா நிலையில் நின்று ஒற்றுமெயும், அன்பும் பாராட்டி சுகசீவ வாழ்க்கையில் நிலைத்திருந்தார்கள். இத்தகைய வொழுக்க விருத்திக்குக் காரணமோ வென்னில் ஒவ்வொரு சிறுவர்களையும் அறப்பள்ளிகளாம் சங்கத்திற்கு விடியர்கால மனுப்பி சமண முநிவர்கள் பால் கலைநூற்களைக் கற்று அறிவின் விருத்தி பெற்றும் நீதி நூற்களைக் கற்று ஒழுக்க நெறியில் நின்றும் ஐந்து வயது முதல் பதினாறு வயதளவும் பள்ளிகளுக்குச் செல்லுவதும், சமண முநிவர்களை வணங்கி கல்வி கற்பதும் இல்லம் செல்லுவதும், தாய் தந்தையரை வணங்கி யினிதிருப்பதுமாகியச் செயலன்றி துர்சனர் சாவகாசமும் பேராசையுள்ளோர் பிறர் சிநேகமும் வஞ்சினத்தோர் சேர்க்கை வழிபாடுகளுமாகிய கேட்டு ர வினராகும் கலப்பின் மெயே காரணமாகும். இத்தகைய நல்லொழுக்கக் காரணகாரிய விருத்தியி லிருந்தும் பகவனால் போதித்துள்ள சத்திய தருமமாம் மெய்யறத்தின் ஆதியும் அந்தமுங் கண்டடைவோர் கோடியில் ஒருவரேயன்றி சகலருந் தெரிந்துக்கொள்ளக்கூடாத பேரறிவின்படித்தறத்தினின்றது. அதுகண்டு சமணமுநிவர்களிற் சிலர் தங்கடங்கள் வசதிக்கும், தங்கடங்க ளறிவின் விருத்திக்கும், தங்கடங்கள் சாதனத்திற்கும், தங்கடங்கள் காலத்திற்குத் தக்கவாறு புத்தபிரான் தன்மபோதத்திற்கு மாறுபாடின்றி காலத்திற்குத் தக்க யேதுக்களை மாறுபாடு செய்து அவரவர்கள் மாறு படுத்தியக் காலத்தையே சமயமெனக் குறிப்பிட்டு பிரகஸ்பதி கால மாறுதலை பெளத்த சமயமென்றும், கினன் கால மாறுதலை உலோகயித சமய மென்றும், கபிலன் காலமாறுதலை சாங்கயசமயமென்றும், அங்கபாதன் காலமாறுதலை நொய்யாயிக சமயமென்றும் கணாதன் காலமாறுதலை வைசேஷிக சமயமென்றும், சைமினியின் காலமாறுதலை மீமகாம்ஸ சமயமென்றும் மாறுபடுத்தி தங்கள் தங்கள் யேதுக்களுக்குத் தக்கவாறு நிகட்சிவில் விடுத்து ஆறு பெயரால் மாறுபடுத்திய அறுவகைக் காலக்குறிப்புகளை அறுசமயங்களென வழங்கி வந்தார்கள். புத்தபிரான் பரிநிருமாணமடைந்த நெடுங்காலத்திற்குப் பின்னர் சீவகாருண்யமும் அன்புமிகுத்து போதிக்குந் திடமுள்ள சமணமுநிவர்களிற் சிலர் தாங்கள் பெறுஞ் சுகத்தை யேனைய மக்களும் பெற்று சுகமடைய வேண்டு மென்னும் கருணையால் வெளிதோன்றி வருவதுண்டு, அவ்வகைத் தோன்றியவர்களின் காலக்குறிப்பையும் அவரவர்கள் முக்கியமாக வைப்புறுத்திக் கூறிய வாக்கையும், அநுசரித்து அந்நன்னோர் காலக்குறிப்பை அந்நோர் சமயமென வகுத்து வந்தார்கள். இவற்றுள் பௌத்த சமயம் யாதெனில் பிரகஸ்பதி முநிவர் வெளிதோன்றி சகலருக்கும் சத்தியதன்மத்தை விளக்கி வருங்கால் நாம் புத்தரது சமயதன் மத்தை யநுசரிப்பவர்களாயினும் நமக்குள்ளப் பொய், வஞ்சினம், சூது, பொறாமெய், நம்மெய் விட்டகலா திருக்கின்றபடியால் நம்மெ நாம் புத்த சமயத்தோரென்றும், புத்தர்களென்றும் கூறுதற் கியலாதவர்களா யிருக்கின்றோம். ஆதலின் நம்மெய் நாம், பௌத்த சமயத்தோரென்றும், பௌத்தர்களென்றுங் கூறி சத்திய தன்மத்தில் நடந்து துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் வழிகளை போதித்த காலத்தையும், அவரது பிரதான மொழியையுங் கொண்டு பிரகஸ்பதி முநிவர் காலமாறாது பெளத்த சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். சின முநிவரது காலக்குறிப்பைக்காட்டும் உலோகயித சமயமாவது யாதெனில் சினமுநிவர் வெளிதோன்றி தனது அன்பின் மிகுதியால் சகல மக்களுக்கும் சத்திய தன்மத்தை விளக்கிவருங் காலத்தில் சக்கிரவர்த்தித் திருமகனாயிருந்தும் உலோக யிதமாம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை முதலிய யின் பங்களாம் இதங்களைத் தவிர்த்து அவலோகித ரென்னும் பெயர்பெற்ற அறவாழியானது தன்மத்தைப் போதிப்பவர்களாகிய நாம் மண்ணாசைப், பெண்ணாசைப் பொன்னாசை, மூன்றிலொன்றையேனும் விடாச்சிந்தையை யுடையவர்களாயிருந்தும் நம்மெய் நாம் அவலோக யித சமயத்தோரென்றும், அவலோகித கூட்டத்தோரென்றும் சொல்லப்போமோ, ஒருக்காலும் சொல்லலாகாது. ஆதலின் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்றும் நம்மெய் விட் டகலும்வரையில் உலோகயித சமயத்தோர்களென வழங்கி சத்தியதன் மத்தினின்று ஆசாபாசக் கயிறுகளை யறுத்து அவலோகிதராகவேண்டும். அதுவரையிலும் நாம் உலோகயித சமயத்தோரென்றே வழங்க வேண்டுமெனக் கூறி மூவாசைகளை யறுக்கத்தக்க வழிகளைப் போதித்தக் காலக் குறிப்பை மாறாது சினமுநிவர் உலோகாயித சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். கபிலமுநிவரது காலக்குறிப்பைக் காட்டும் சாங்கிய சமயமாவது யாதெனில்; கபில முநிவர் வெளிதோன்றி பகவனது சத்திய தன்மங்களை விளக்கி வருங்கால் புத்த சங்கத்தோர் சாங்கியங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிலை பிரழ்ந்திருப்பதை யுணர்ந்து சங்கத்தோர் சாங்கியங்களாகும் படுக்கை நிலையும், எழுந்திருக்குங் காலமும், மணற்கொண்டு தேகத்தைக் கழுவுஞ் செயலும், புசிப்பின் காலமும், பதார்த்த வகையும், ஆசன பீடமும், வாசிப்பின் னேரமும், போதிக்குங்காலமும், சாதன வொழுங்கும் ஒரே வகையி லிருக்க வேண்டுமென்று போதித்து ஒவ்வோர் சாங்கியத்தையும் ஒரே வழியில் நடாத்தும்படியாகப் போதித்தக் காலக்குறிப்பு மாறாது கபில முநிவரது சாங்கிய சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். அங்கபாத முநிவர் காலக்குறிப்பைக் காட்டும் நொய்யாயிகம் அல்லது நையாயிக சமயமாவது யாதெனில்: நொய்யாம் அணுத்திரளாயிருந்த காலத்தாலும் இகமாம் பூமி யழிந்ததில்லையாகும். அணுத்திரள் யாவுந் திரண்டு அண்டம் போன்ற பூமியாகி அழியாதிருக்கின்றதென்பதும் அவ்வழியா நிலைகண்டு பூமிக்கு நிலமென்னும் பெயரளித்துள் ளதும் ஆகிய இகத்தில் வாழ்வோர்களாகிய நாமும் நையாது நித்திய நிலைப் பெறுதற்காக யில்லந் துறப்பதே சிறப்பென்று கூறி இகத்தில் நையாயிதத்தை விளக்கியது கண்டு அங்கபாத முநிவர் காலக்குறிப்பு மாறாது நையாயிக சமயமென்று கொண்டாடி வந்தார்கள். கணாத முநிவர் காலத்தில் தோன்றிய வைசேஷக சமயமாவது யாதெனில், ’கணாத முநிவர் கருணைகூர்ந்து சகலருக்கும் சங்க அறன் சத்திய போதத்தை விளக்கிவருங்கால் இல்லறதன்மமும், துறவற தன்மமும் வையகத்தில் விசேஷமுற்றிருப்பினும் பொதுவாக சேஷித்துள்ளது சத்தியதன்மமேயாதலின் உலகமாக்கள் ஒவ்வொருவரும் வையகத்திற் கெடாது சேஷித்துள்ள சாத்தியதன் மத்தில் நடந்து சதானந்தத்தைப் பெற வேண்டுமென்று கூறிவந்த கணாத முநிவரின் காலக் குறிப்பு மாறாது வைசேடிக சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். சைமினி முநிவர் காலத்தில் தோன்றிய மீமாம்ஸ சமயமாவது யாதெனில்; சைமினிமுனிவர் உலக மக்கள் மீது கருணைகூர்ந்து சாத்திய தன்மத்தை விளக்கி வருங்கால் சிறந்த பிறப்பும், சிறந்த ஞானமும், சிறந்த வன்பும், சிறந்த சாந்தமும், சிறந்த செயலும், சிறந்த வுருவும், சிறந்த வாக்கும், சிறந்த போதனையு மமர்ந்த மகா அம்ஸ வுருவாம் புத்தபிரானுக்கு மீ, மேற்பட்டவர்கள் உலகத்தில் ஒருவருமில்லையாதலின் அவரது சத்தியதன்ம போதத்தில் ஒன்றைக் கூட்டவாவது குறைக்க வாவது கூடாதென்று அறவாழியான் மீ, மகா அம்சத்தை விளக்கிய சைமினி முநிவர் காலக்குறிப்பு மாறாது பகவன் மீமாம்ஸ சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். இத்தகைய ஆறு சமண முநிவர்களால் அறுவகை சமய பேதங்களுண்டாயினும் அறுசமயங்களுக்கும் ஆதார தன்மகாயமாம் புத்தரும், அவரது தனமமும், அவரது சங்க முமட்டும் பேதப்படாது அறுசமயத்தோர்க்கும் உபாசகர்கள் உண்டியளித்து வுதவி புரிந்து வந்தார்கள். இவ்வாறு சமய விவரங்களை அருங்கலைச்செப்பு அறு சமயப்பத்திலும், பெருந்திரட்டிலும் தெளிவாகக்காணலாம். இத்தகைய பெளத்த சங்கத்தோர்களாலும், பெளத்ததன்ம அரசர்களாலும், மற்றும் உபாசகர்களாலும் சீவராசிகளின் விருத்திகளையும், மநுமக்களின் சுகங்களையும் மேலாகக் கருதி சிறுபிள்ளைகளின் கல்வி விருத்திக்கு அறப்பள்ளிகளில் கூடங்களையும், பிணியாளர்களை சுகப்படுத்துவதற்கு வைத்திய சாலைகளையும், ஒரு சங்கத்தைவிட்டு மறு சங்கத்திற்குச் செல்லும் சமணமுநிவர்களுக்கும், சகல யேழைகளுக்கும் அன்னதன்ம சாலைகளையும், திக்கற்ற வனாதை குழந்தைகளுக்கு அமுத தன்ம சாலைகளையும் வகுத்து ஒருவருக்கு வோராபத்து நேருங்கால் மற்றவர்கள் கூடி அவ்வாபத்தை நீக்குதலும், ஒருவருக்கோர் துன்பமுண்டாயின் மற்றவர்கள் கூடி அத்துன்பத்தை நீக்குதலுமாகியச் செயலால் சகல பாஷை மக்களும் பாஷை பேதமாயினும் தன்மத்தில் பேதமின்றி தன்னைப்போல் பிறரையும் நேசித்து ஒற்றுமெய் மிகுதியாலும், அன்பின் பெருக்கத்தாலும், திராவிட ராஜன் மகளை சிங்களராஜன் விவாகம் புரிவதும், சிங்களராஜன் மகளை வங்காளராஜன் விவாகம் புரிவதும், வங்காளராஜன் மகளை மராஷ்டகராஜன் விவாகம் புரிவதுமாகிய வொற்றுமெய் நயத்தைக் காணுங் குடிகளும் அரசர்களெவ்வழியோ குடிகளு மவ்வழியெனக் கொண்டாடு தேச சிறப்பும், குடிகளின் சிறப்பும், கல்வியில் இலக்கிய நூற்களின் சிறப்பும், இலக்கண நூற்களின் சிறப்பும், கலை நூற்களின் சிறப்பும், வைத்திய நூற்களின் சிறப்பும், சோதிட நூற்களின் சிறப்பும் எங்கும் பிரகாசிக்கத்தக்க நிலையி லிருந்ததுடன் சகல பாஷைக் குடிகளும் வித்தியா விருத்தியிலும் விவசாய விருத்தியிலும், அறிவின் விருத்தியிலுமிருந்து சுகவாழ்க்கைப் பெற்றிருந்தார்கள். இத்தேசத்தோர் யாவருக்கும் புத்த தன்ம நல்லொழுக்கங் களாம் வித்தை, புத்தியீகை, சன்மார்க்கங்கள் நிறைந்து வருங்காலத்தில் வித்தைக்கு சத்துரு விசனம் தாரித்திர மென்பது போல் இத்தேசத்தின் சாத்தியதன்மத்திற்கே சத்துருவாக அசத்தியார்களாம் மிலைச்சர் மிலேச்சரென்னும் வோர் சாதியார் வந்து தோன்றினார்கள். அவர்கள் வந்த காலவரையோ புத்தபிரான் பரிநி ருவாணத்திற்கு ஆயிரத்தி யெழுநூறு வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய பெளத்த மன்னர்களாம் சீவகன், மணி வண்ணனிவர்கள் காலமேயாகும். அவர்களுடைய சுயதேசம் புருசீக தேசமென்றும், அவர்கள் வந்து குடியேறிய விடம் சிந்தூரல் நதிக்கரை யோரமென்று அஸ்வகோஷா அவர்களெழுதியுள்ள நாராதிய புராண சங்கைத்தெளிவிலும், குமானிடர் தேசத்தில் மண்ணை துளைத்து அதனுள் வாசஞ்செய் திருந்தார்களென்று தோலா மொழிதேவ ரியற்றிய சூளாமணியிலும் வரைந்திருக்கின் றார்கள். இவர்களது நாணமற்ற வொழுக்கத்தையும், கொறூரச் செயலையும், மிலேச்ச குணத்தையுமுணர்ந்த சேந்தன் றிவாகரதேவர், தனது முன்கலை நூலிலும், மண்டல புருடன் றனது பின்கலை நூலினும் மிலைச்சரென்றும், மிலேச்ச ரென்றும், ஆரியரென்று மிவர்களை யழைத்திருக்கின்றார்கள். இத்தகையா யழைக்கப்பெற்ற மிலேச்சர்கள் செய்தொழில் யாதுமின்றி இத்தேசத்தோரிடம் பிச்சையிரந்துண்பதே அவர்களது முதற்கிருத்தியமாயிருந்தது. அவ்வகை யிரந்துண்ணுங்கால் இத்தேசக் குடிகள் பல பாஷைக்காரர் களாயிருப்பினும் சத்தியத்தில் ஒற்றுமெயுற்று வாழ்தலையும், அவர்களன்பின் பெருக்கத்தையும், மகடபாஷையில் அறஹத் தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற புத்தசங்கத் தலைவர்களை அரசர் வணிகர், வேளாளரென்ற முத்தொழி லாளர்கள் கண்டவுடன் அவர்களடி பணிந்து வேண வுதவி புரிந்து வருவதையுங் கண்ணுற்றுவந்த மிலேச்சர்கள் சத்தியாசங்க நூற்களுக் குறுதிபாஷையாகும் வடமொழியையும் தென்மொழியையும் கற்றுக்கொள்ள வாரம்பித்தார்கள். பாஷைகளைக் கற்றுக்கொண்டபோதிலும் சமணமுநிவர் களின் சாதனங்கள் விளங்காமலும், அச்செயலிற் பழகாமலும் அவர்களது நடையுடை பாவனைகளையும் மகடபாஷை, சகடபாஷை… திராவிட பாஷைகளில் அவர்கள் எதேது மொழிகின்றார்களோ அம்மொழிகளைக் கற்றுக்கொண்டும் தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பிச்சை யிரந்துண்டு சிந்தூரல் நதியின் கரையோரம் போய் தங்கிக்கொள்ளுவது மாகியச் செயலி லிருக்குங்கால் இத்தேசக் குடிகளின் பார்வைக்கு அவர்களுடையப் பெண்கள் கால்செட்டை யணிந்துக்கொண்டும், புருஷர் பெரும் வஸ்திரமும் செட்டையு மணிந்து நீண்டவுருவும் வெண்மெ நிறமு முள்ளவர்களாய்த் தோற்றுங்கால், நீங்கள் யாவரென்று கேட்க யாங்கள் நதியின் அக்கரையோரத்தார், அக்கரையோரத்தாரென விடை பகர்ந்துக்கொண்டே வந்தவர்கள், கல்வியற்றப் பெருங்குடிகளை யடுத்து மகட பாஷையில் யாங்களே பிராமணர்களென்றும், திராவிட பாஷையில் யாங்களே அந்தணர்களென்றுங் கூறி தங்களுக்கே சகல தானங்களும் கொடுக்கும்படி வேதம் கூறுகிறதென்று மொழிந்து பயத்துடன் பிச்சையிரந் துண்டவர் கள் சில சகடபாஷை சுலோகங்களைச் சொல்லிக்கொண்டு அதிகாரத்துடன் பிச்சையிரக்க வாரம்பித்துக் கொண்டார்கள். இவர்க ளித்தேசத்தோர்களிலும் மிக்க வெண்மெய் நிறமுடையவர்களா யிருந்து கமண முநிவர்களைப் போன்ற பொன்னிற வாடையுடுத்திய வேஷமானது கல்வியற்றக் குடிகளின் கண்களைக் கவர்ந்துக் கொண்டதன்றி இவர்களே சங்கத்து அறஹத்துக்களென்றும் பயந்து சகல பொருட்களும் கொடுக்க வாரம்பித்துக் கொண்டார்கள். இவ்வேஷப் பிராமணர்களோ சங்கத்தோ ரருகிலும் நன்கு வாசித்துள்ள உபாசகர்கள் வீடுகளுக்குஞ் செல்லாமல் கல்வியற்றக் குடிகள் வாசஞ்செய்யும் குக்கிறாமங்களுக்கே சென்று தங்களதிகாரப் பிச்சையா லிரந்துண்டு சீவித்து வந்தார்கள். இத்தகைய வேஷத்தால் பெருங்குடிகளை தங்கள் வயப்படுத்திக்கொண்டது மன்றி புத்த தன்மத்தின் ஞானமும், அதனந்தரார்த்தங்களு மறியா சிற்சில வாசகர்களையும் தங்கள் பிராமண வேஷத்தி லடக்கிக்கொண்டார்கள். புத்தசங்கத்தி லடங்கியுள்ள புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குனிகளென்றும், சகட பாஷையில் புருஷர்களை பாப்பார்களென்றும், இஸ்திரீகளை பாப்பினிகளென்றும் வழங்கி வந்தார்கள். பாலியில் “பாப்போ” ’’பாப்பா" “பாப்பு” வெனுமொழி தண்மெயாம் சாந்தகுண மமைந்தோரென்பதாம், பாப்பு, பாப்பா, பாப்பாரென்னும் பெயர் வேறு நோக்காது தன்னை நோக்குஞ் சாதனத்தால் தண்மெய்ப் பெற்றவர்களாதலின் பெளத்த சங்கத்தைச் சேர்ந்து சித்தி பெற்ற புருஷர்கள் பார்ப்பார்களென்றும் பெளத்த சங்கத்தைச் சேர்ந்து சித்திபெற்ற இஸ்திரீகள் பாப்பினிகளென்றும் அழைக்கப் பெற்றார்கள். சாது சங்கஞ் சேர்ந்து புருஷர்கள் வேறு இஸ்திரீகள் வேறாகத் தங்கி இராகத்துவேஷ மோகங்களா லுண்டாம் சகலப் பற்றுக்களையுமறுத்து தண்மெளாம் சாந்த நிலைப்பெற்று பாப்பான், பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப் பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் சுகித்திருப்பதுடன் பொருளாசை மிகுதியுற்று சகல பற்று முள்ளவர்கள் வைத்துக்கொண்டு கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களைப் பாப்பார், பாப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை யிரந்துண்டு நூதனமாக யித்தேசத்திற் குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கடங்கட் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சொல்ல வாரம்பித்துக்கொண்டார்கள். பெளத்ததன்ம மகடபாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்றப் பெயர் கோடி மனிதருள் ஒரு மனிதனுக்கு வாய்ப்பதரிது. ஏனெனில் புத்தருக்குரிய வாய்மெயும் புத்தருக்குரிய சாந்தமும், புத்தருக்குரிய அன்பும், புத்தருக்குரிய பற்றற் றச்செயலும், புத்தருக்குரிய யீகையும் சருவ சீவர்கள் மீதும் பதிந்திருந்த புத்தரது கருணையும், தனக்கு சிலர் தீங்கு செய்யினுந்தானவர்களுக்குத் தீங்கு செய்யாது சுகமளித்த புத்தரதுச் செயலும் எக்காலும் யீகையே குடி கொண்டுள்ள புத்தரது குணமும் யாரிடத்தில் தோன்றுகிறதோ அவர்களையே பிராமணர்களென் றழைத்து வந்தார்கள். அது கொண்டே புத்தபிரானை திருத்தக்கதேவர் தானியற்றியுள்ள சீவகசிந்தா மணியில் “ஆதிகாலத் தந்தணன் காதன்” என வரைந்திருக் கின்றார். காக்கைபாடியனாரும் தா மியற்றியுள்ள பாடியத்துள் ’’ஆதிகாலத் தந்தணன் அறவோ" னென்றும் வரைந்திருக் கின்றார். அத்தகையப் பற்றற்றச் செயலும் பரிபூரண நிலையும் அமைந்தவர்களையே அறஹத்தென்றும், பிராமணரென்றும் அந்தணரென்றும், பார்ப்பாரென்றும் சொல்லத்தகுமே யன்றி சகல பற்றுக்களும் நிறைந்துள்ள குடும்பிகளுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம். இத்தகைய பொருந்தா சிறந்த பெயரை மிலேச்சர்களாம் ஆரியர்கள் வைத்துக்கொண்டு பௌத்த தன்மமும் அதன் செயலுமறியாப் பெருங்குடிகளையும் மற்றும் சிற்றரசர்களையும் வஞ்சித்து பொருபரித்துண்டுடுத்தி வருங்கால்; இவர்கள் புருசீகநாட்டி லிருந்து நமது தேசம் வந்து குடியேறியவர்களென்று அஸ்வகோஷா நந்தனென்னும் அரசனுக்கு விளக்கியிருக்கின்றார். அதாவது நந்த நந்தனா இந்த வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரல்ல. இவர்கள் புருசீக தேசத்தார்கள் அப்புருசீக தேசத்திற்கும், உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்கு திக்கில் 27-நாள் பிரயாணத் திலிருக்கின்றது. அவ்விடத்திற் சென்று இவர்களுடைய தேக நிறத்தையும், இவர்களுடைய முகக் குறிகளையும், அவர்களுடைய முகக்குறிகளையும் ; இவர்களுடைய புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், இவர்களுடைய பெண்களின் நடை யுடைச் செயல்களையும், அவர்களுடையப் பெண்களின் நடையுடைச் செயல்களையும், இவர்கள் அக்கினியை அவியாமற் கார்த்துவரும் செயல்களையும், அவர்கள் அக்கினியை அவியாமற் றொழுது வரும் செயல்களையும்; இவர்களுடையப் பெண்களுக்கு சூதகங்கண்டவுடன் 7 நாள் புறம்பே வைத்துவிடும் செயல் களையும், அவர்களுடைய பெண்களை சூதககாலங்களில் நீக்கிவைக்கும் செயல்களையும் உமது கண்களால் காண்பீராயின் இவர்களது மாறுவேஷந் தெள்ளற விளங்குமென்று கூறியவுடன் நந்தன் கொலு மண்டபத்தில் வந்திருந்த வேஷபிராமணர் யாவரும் வெளியேறி நந்தனை தங்கள் தேசம் போய்ப் பார்க்காவண்ணம் சிதம்பச்சிலையமைத்து அரசனைக் கொன்றுவிட்டதாக அஸ்வகோஷா அவர்கள் எழுதியுள்ளதற் காதரவாக நந்தனென்னு மரசனை பிராமணர்கள் கொன்றுவிட்டதாக ரெவரெண்டு ரேனியஸ் என்பவர் தான் எழுதியுள்ள இந்து தேச சரித்திரத்திலு மெழுதியிருக்கின்றார். இவ்வகையாக மிலேச்சர்கள் தங்கள் மிலைச்ச செயல்களுக்கும், வஞ்சகத்திற்கும், மாறுவேஷத்திற்கும் பயந்து தாங்கள் கேட்பதை யாரார் கொடுத்து வருகின்றார்களோ அவர்கள் யாவரையுந் தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் மாறுவேஷத்தைக் கண்டித்தும், தங்கள் பொய்மொழிகளையும், பொய்ப் போதனைகளையும், நம்பாது மற்றவர்களையும் நம்பவிடாது விலக்கிவந்த விவேகிகளைக் கொன்றும், சத்திய சங்கங்களை அழிக்கத்தக்க வுபாயங்களைச் செய்தும், அவர்கள் முன்னிலையிற் கிடைக்கும் தன்மநூற்கள் யாவையும் பாழ்படுத்தியும் வந்தார்கள். இவற்றுள் பெளத்ததன்ம ஞான சாரமானது கோடி மக்களில் ஒருவருக்கு இருவருக்கு விளங்கக்கூடியதும் மற்ற வஞ்ஞான மிகுத்தோர்க்கு விளங்காததுமாயதால் பொருளா சையும் வஞ்சினமுமிகுத்த மிலேச்சர்களின் செயலை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பலராகி விட்டார்கள். புருசீக தேசத்தாரின் பொய்யாகிய வஞ்சக வார்த்தைகளை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பெருங்கூட்ட மாகிவிட்டபடியால் ஆதியில் பயந்து இத்தேசத்தில் பிச்சையிரந் துண்ட மிலேச்சர்கள் பௌத்த சங்கத்திற் சித்திபெற்ற பிராமணர்களென வேஷமிட்டுக்கொண்டு இரண்டாவது அதிகாரத்துடன் பிச்சை யிரந்துண்ண வாரம்பித்துக் கொண்டார்கள். மூன்றாவது பெளத்த சங்கங்களை யேற்படுத்தி அவைக ளழியாதிருந்து சங்கத்தோரை போஷித்து வருவதற்கு அரசர்களாலும், குடிகளாலும் வேண வுதவி புரிந்து வருவது போல தங்கள் வேஷபிராமணக் கூட்டங்களும் ஒவ்வோரிடங்களிற் றங்கி சுகமாக சீவிப்பதற்கு ஓர் கைம்பெண்ணை வஞ்சித்து தங்களுக்கென்று கட்டிக்கொண்ட விவரத்தை அஸ்வகோஷா நன்கு விளக்கியிருக்கின்றார். அதாவது இம்மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தார் புருசீக தேசத்தோரென் றறிந்துக்கொள்ளுவதற்காக யிவர்களித் தேசத்தில் கட்டியுள்ள ஓர் கட்டிடத்தின் சாயலையும், புருசீக தேசத்தின் கட்டிடங்களின் சாயலையுங் கண்டறிந்துக் கொள்ளும்படியாகப் போதித்துள்ள விடத்தில் புன்னாட்டிற்கு வடக்கே சகல சம்பத்தும் நிறைந்த மீனாட்சி யென்னும் ஓர் கைம்பெண்ணிருந்ததாகவும், அவளிடம் இவ்வேஷபிராமணர்க ளணுகி நாங்கள்தான் பிராமணர்களெனச் சில சகடபாஷா சுலோகங்களைச் சொல்லி அம்மா நீங்களிறந்து போனால் உங்கள் பெயராலும் ஓர் பெரிய கட்டிடங்கட்டி பிராமணர்களுக்கு முப்பொழு தன்னமிட்டு உங்கள் பெயர் என்று மழியாதிருக்கச் செய்கின்றோம். உங்கள் பூமிகளையும் சொத்துக்களையும் அக்கட்டிடத்தின் பெயரால் கற்களில் வரைந்து வைத்து விடுங்கோளென்று வஞ்சித்தெழுதி அவள் மரணமடைந்தவுடன் மீனாட்சி யென்னுங் கைம்பெண்ணினுடைய சகல சொத்துக் களையும் வேஷ பிராமணர்கள் பற்றிக் கொண்டு தங்கள் கூட்டத்தோருடன் சுகம் பெற வாரம்பித்துக் கொண்டார்களாம். பிச்சை யிரந்துண்பதுடன் இஃது மிக்க மேலாய சுகமென்றறிந்து மற்றுமுள்ளக் கல்வியற்றப் பெருங் குடிகளிடமும், காமியமுற்ற சிற்றரசர்களிடமுஞ் சென்று அவரவர்கள் சொத்துக்களைக் கொண்டும் மேற்கூறிய வகை போன்றக் கட்டிடங்களை கட்டி சீவித்து வந்தவர்கள் தாங்களடுத் துள்ள சிற்றரசர்களைக் கொண்டு புத்த சங்கத்தோர்களையும் அப்புறப்படுத்தி அவைகளையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு அவைகளாலும் சுகப்புசிப்பைத் தேடிக்கொண்டார்கள். இவ்வகையாகத் தங்களைத் தாங்களே பிராமணர் பிராமணரெனக்கூறி பெருங்குடிகளை வஞ்சித்து பொய்யைச் சொல்லி சீவித்து வந்த போதிலும் பெளத்த சங்க யதார்த்த பிராமணர்களின் செயலும், அவர்கட் செயல்களின் ஞானவாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் ஞானார்த்தங்களும் வேஷப்பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் இவர்களின் முற்றுந் தெரியாக் கல்வியற்றக் குடிகள் பொய்க்குருக்களை யடுத்து பெளத்த சங்க ஞானகுருக்கள் உபநயனஞ் செய்வதாகக் கூறி அவுற்பிரசாத மளிப்பார்கள். விரதம் நியமித்த லென்று அவுற்பிரசாத மளிப்பார்கள். நோன்பியற்றுதலென்று கூறி அவுற் பிரசாத மளிப்பார்கள். யாகமியற்றலென்று கூறி அவுற்பிரசாத மளிப்பார்கள். ஆதிகன்மஞ் செய்தலென்று அன்னதானஞ் செய்வார்கள். பிறவியறுக்கும் சாதனாரம்பத்தில் அன்னதான மளிப்பார்கள். இந்திரவிழா காலங்களிலன்னதான மளிப்பார்கள் இவைகளொன்றையுந் தாங்கள் செய்வதைக் காணோம். அவ்வகைச் செய்யாதக் காரணங்க ளென்னை யென்று கேட்பார்களாயின் பெளத்ததன்ம ஞான ரகசியங்க ளறியா அஞ்ஞானிகளா யிருந்தபோதிலும் மித்திரபேதத் தந்திரங்களினால் அதன் பொருளும் செயலும் தெரிந்தவர்கள் போல் நடித்து கல்வியற்றவர்களை வஞ்சித்து அந்தந்த வாக்கியங்களைக் கொண்டே பொருள்பரித்து சீவிக்கும் வழிகளைத் தேடிக்கொண்டார்கள். எவ்வகையா லென்னில், பௌத்த சங்கத்திலுள்ள சமண முநிவர்களுக்கு சிரமணர்களில் சித்திப்பெற்ற பிராமணர்கள் அஞ்ஞான விழியாம் ஊனக்கண் பார்வையை யகற்றி மெய்ஞ்ஞான விழியாம் ஞானக்கண் பார்வையில் நிலைக்கச் செய்வார்கள். அதாவது, ஊனக்கண்ணற்று ஞானக்கண் பெற்றபடியால் அவர்களை உபநயனம் பெற்றவர்களென்று கூறி பேரானந்த வுபநயனம் பெற்ற பெரியோர்களென்று சகலரு மறிந்து அவர்கள் சுகசாதனங்களுக்கு வுதவி புரிந்து வருவதற் காக மதாணி பூநூலென்னும் முப்பிரிநூற் கயிற்றினை யவர் மார்பி லணைந்து அவ்விடம் வந்துள்ள சகல மக்களுக்கும் பூநூலணைந்துள்ளவரை சுட்டிக்காட்டி இவர் உபநயனம் பெற்ற பெரியோன் இவரது உள்விழி சாதனத்திற்கு யாதாமொரு குறைவு நேரிடாமல் வேண்டியவைகளைக் கொடுத்துக் காக்க வேண்டுமென்று கூறி வந்துள்ளவர்கள் யாவருக்கும் அவுற்பிரசாதங் கொடுப்பது வழக்கமாகும். சமண முநிவர்களில் உபநயனம் பெற்றோர் உலகத்தை நோக்கும் ஊனக்கண் பார்வையை யகற்றி "உள்விழிப் பார்வையாம் ஞானக்கண் பார்வையில் நிலைத்து ஐம்புல பீடமுணர்ந்து அடங்கவேண்டியவர்க ளாதலின் மடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லாமல் ஞான சாதனங்களை செவ்வைப்படுத்திக் கொள்ளுவதற்காக உபாசகர்கள் அவர்களுக்கு வேண்டிய புசிப்பும் சாதனத்திற்குரிய பீடங்களும் கண்ணோக்கமிட்டளித்து வருவதற்காக உபநயனம் பெற்றோர் மார்பில் முப்புரி பூணு நூலை அடையாளமாக அணிந்து வைத்தார்கள். சமணமுனிவர் கூட்டங்களில் முப்புரி நூலணிந்துள்ளவர் களை உபாசகர்கள் கண்டவுடன் அவர்களருகிற் சென்று வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு உடனுக்குடன் கொடுத்து வருவது வழக்கமாகும். உபநயனமாம் உதவிவிழி பெற்றோர் உள்விழி பார்வை யாம் ஞான சாதனத்தை யாதொரு கவலையுமின்றி சாதித்து கடைத்தேறுதற்கு யீதோர் சுகவழியாகும். இத்தகைய பேரானந்த ஞானச்செயலின் ரகசியார்த்தம் விவேகமிகுந்த விசாரணைப் புருஷர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் விளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்கமாட்டாது. விளங்கா கூட்டத்தோர் பெருகிவிட்டபடியால் வேஷப் பிராமணர்களை யடுத்து அவிற் பிரசாதங் கேட்க வாரம்பிக் குங்கால் வேஷப்பிராமணர்கள் உபநயனமென்னும் வார்த்தை யின் பொருளும், அதன் செயலும் தெரியாதவர்களாயிருந்த போதினும் அவ் வார்த்தையைக் கொண்டே பேதை மக்களை யேமாற்றி நான் பிராமணனானதால் என் பிள்ளைக்கு உபநயனஞ் செய்து என்னைப்போல் பூநூலணியப் பொருளுதவி செய்யுங்கோளென்று பொருள் பரித்துப் புசிப்பதற்கு இதையுமோர் வழியாகச் செய்துகொண்டார்கள். கல்வியற்றக் குடிகளோ வேஷப்பிராமணர்களைத் தடுத்து உபநயன மென்பதின் பொருளென்ன, முப்புரி நூலணிவதின் காரணமென்ன, அதற்காக நேரிடும் செலவென்ன, அவ்வகைச் செலவு தொகையைத் தங்களுக்குக் கொடுப்பதினால் எங்களுக்குப் பயனென்ன வென்று கேட்காமலே பொருளுதவிச்செய்ய வாரம்பித்துக் கொண்டார்கள். இவ் வுபநயனமென்னும் மொழியே வேஷப்பிராமணர்களின் தந்திர சீவனத்திற்கு நான்காம் யேதுவாகிவிட்டது. பௌத்த வுபாசகர்களின் விரதமாவது யாதெனில், சத்தியசங்க வியாரங்களுக்குச் சென்று புருஷர்கள் பஞ்ச சீலங் கார்ப்பதுடன் மனம் போன வழிப் போகவிடாமற் கார்ப்பது விரதம், இஸ்திரீகள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் தங்களது கற்புக்கோர் பின்னமும், வராமற் கார்ப்பது விரதம், மைந்தர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் கலை நூற்களைக் கற்று அறிவை விருத்தி செய்து தேகத்தைக் கார்ப்பது விரதம். இவ்விரதத்தை சதா சிந்தனையிற் கார்ப்பதற்கு அமாவாசி, பௌர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்தும் தாங்களணிந்துள்ள பட்டாபரணம், வெள்ளியாபரணம், தங்கவாபரணம் யாவையுங் கழட்டி வீட்டில் வைத்துவிட்டு துய்ய வஸ்திரங்களை யணிந்து மடங்களுக்குச் சென்று யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக் களை வணங்கி புருஷர்கள் பஞ்சசீலம் பெற்று மனதைக் கார்ப்பதும், இஸ்திரீகள் பஞ்சசீலம் பெற்று கற்பைக்காப்பதும், பிள்ளைகள் பஞ்சசீலம் பெற்று தேகத்தைக் கார்ப்பதுமாகிய விரதத்திலிருந்து அன்று முழுவதும் ஒரே வேளை அன்னம் புசித்து அவரவர்களில்லஞ்சேர்வ தியல்பாம். இத்தகைய விரதசாதனங்களுந் தக்க விவேகக் குடும்பத்தோர்க்கு விளங்குமேயன்றி அவிவேக குடும்பத் தோர்க்கு அதன் செயலும், பயனும் விளங்கவே விளங்காவாம். விளங்காக் குடும்பங்கள் பெருகி வேஷப்பிராமணர்களை யடுத்துக்கொண்டபடியால் வேஷப்பிராமணர்களை விரத மென்னையென்று கேட்குங்கால் கார்ப்பது விரதமென்னும் சாராம்ஸமே யறியாதவர்களாயிருந்தும் வேஷப்பிராமணர்கள் தங்களுடைய தந்திரோபாயத்தால் மிக்க தெரிந்தவர்களைப் போல் கல்வியற்றக் குடிகளை மயக்கி பலவகைப் பொய் தேவதாப் பெயர்களைச் சொல்லி சோமவார விரதம், மங்கள வார விரதம், சனிவார விரதம், சுக்கிரவார விரதமெனும் உபவாசங்களை யநுஷ்டித்து எங்களுக்கு தானஞ்செய்து வருவீர்களாயின் சகல சம்பத்தும் பெருகி சுகசீவிகளாக வாழ்வீர்களென்று கூறி பொருள்பரித்து சீவிப்பதற்கு விரதமொழியே ஐந்தாவ தேதுவாகிவிட்டது. பெளத்த வுபாசகர்கள் செய்துவந்த நோன்பென்னும் செயல் யாதெனில், பஞ்சசீல தன்மத்தில் அகிம்ஸா தன்மமே விசேஷ தன்மமாதலின் ஒருயிரைக் கொல்லவும்படாது, அதன் மாமிஷத்தைப் புசிக்கவும் படாதென்னும் முதன்னோன்மெ யடைய வேண்டி சங்கத்துள்ள அறஹத்துக்களை வணங்கி பஞ்சசீலத்தில் கொன்று தின்னாமெ யென்னும் முதல் நோன்மெ யளிக்க வேண்டுமெனக் கேட்பது வழக்கமாகும். அவ்வகை வினாவிய மொழியை ஞானாசிரியர்க் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடையவராய் உபாசகனது வலது புஜத்தில் இனியொருகால் சீவர்களைக் கொல்லுவதுமில்லை, புசிப்பது மில்லையென்னுங் கங்கணங்கட்டி வந்துள்ள உபாசகர்கள் யாவருக்கும் அவுற்பிரசாத மீயந்து குருவினது ஆசீர் பெற்றில்லஞ் சேர்ந்து நோன்பென்பதுக் கொன்று தின்னாமை யென்னுங் குறியை புஜத்திற்கண்டு நோன்பின் னெறியினின் றார்கள். யீதோர் அகிம் ஸாதன்ம அறநெறியாகும். இத்தகைய வகிம்சா தன்மத்தின் சிறப்பும் அதன் பலனும் அதற்குறித்தாய பஞ்ச நோன்பென்னு மொழியின் பொருளு மறியாத பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை யடுத்து நோன்பின் விஷயங்களை வினவுங்கால் மிலேச்சராம் ஆரியக் கூட்டத்தோர்க்கு அம்மொழியின் பொருள் விளங்காதிருப்பினும் பெளத்த சங்கத்தோருள் கேசரி, பைரவி, சாம்பவி என்னும் மூன்று ஞான முத்திரைகள் வழங்கி வருவதுண்டு. அப்பெயரை மூலமாகக் கொண்டு கேதாரி யென்னும் பூதாரி அம்மனிருக் கின்றாள். அவளை சிந்தித்து வீடுகடோருங் கயிறுகளை வைத்து பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் வைப்பீர்களாயின் அக்கயிறுக்கு மந்திர வுச்சாடனம் செய்து கொடுப்போம். அதை நீங்கள் கட்டிக்கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெற்று சுகம் பெறுவீர்களென்று கூறி பொருள் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு நோன்பென்னும் மொழியே ஆறாவ தேதுவாகிவிட்டது. பௌத்தர்களின் யாக வகைகள் யாதெனில்:- மகட பாஷையாம் பாலியில் யாகமென்றும், சகடபாஷையாம் வட மொழியில் வேள்வியென்றும், திராவிட பாஷையாம், தென் மொழியில் புடமென்றும் வழங்கிவரும் வார்த்தைகளில் பதிநெட்டுவகை யாகங்களைச் செய்துவந்தார்கள். அதாவது குண்டமென்னுங் குழிவெட்டி அக்கினி வளர்த்தி மருந்துகளின் புடமிடுவதும், ஈட்டி, வாகுவல்லய மிவைகளுக்குத் துவையலேற்றுவதும், அவைகளா லுண்டாம் மூர்ச்சைகளைத் தெளிவித்தலும், வானம் வருஷிக்கச் செய்தலும், அதிக மழையை அகற்றுவித்தலும், ஓடதிகளைக் குடோரித்தலும், உறுக்குதலும், செந்தூரித்தலும், பஸ்பித்தலும், அரசர்களுக்கு தாமரைப்புட்ப சுன்னம் முடித்தலும் தேகபல வோடதிக ளமைத்தலும், நரருக்கு சுகபுகையூட்டி நீதிநெறிகளைப் புகட்டி மக்கள் கதிபெறச் செய்தலும் மக்களுக்கு சுகபுகையூட்டி ஞான நெறி புகட்டி பிரமகதி பெறச் செய்தலுமாகிய சோதிட்டோம யாகம், அக்கினிட்டோமயாகம், மத்தியாகினிட் டோமயாகம், வாசபேயயாகம், மத்திராத்திரயாகம், சேமயாகம், காடகயாகம், சாதுரமாகியாகம், சாவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாமயாகம், மயேந்திர யாகம், மங்கிக்கஷே யாகம், இராசசுக யாகம், அச்சுவதே யாகம், விச்சுவதித்து யாகம், நரமித யாகம், பிரமமித யாகம் என்பவைகளேயாம். இவற்றினுள் முக்கியமாக சருவ மக்களுக்கும், அவுற்பிரசாத மளித்துவரும் நான்கு யாகங்கள் யாதெனில் : ஈட்டி யாகம், எச்சயாகம், ஓமயாகம், கிருதயாக மென்பவை களேயாம். யீட்டியாகமாவது மிருகங்கள் மீதும் மக்கள் மீதும் பட்டவுடன் மூர்ச்சையுண்டாகச் செய்தல், எச்சயாக மென்பது அம்மூர்ச்சையைத் தெளிவிக்கச் செய்தல், கிருதயாக மென்பது ஆயுதம்பட்ட காயங்கள் ஆறாதிருக்குமாயின் அவற்றை ஆறச் செய்தல், ஓமயாகமென்பது மழையில்லாத காலத்தில் வருவிக்கச் செய்தல் இவற்றை இந்திரயாகமென்றுங் கூறப்படும். இந்நான்கு யாகங்களும் சகல குடிகளுக்கும் அவுற்பிரசாத மீய்ந்து செய்யும் யாகமாதலின் இதனந்தரார்த்தமறியா பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை யடுத்து சங்கத்து பிராமணர்கள் யாககுண்டம் வெட்டி திரைகட்டி, அவுற்பிரசாத மளிப்பார்கள். நீங்களேன் அவ்வகைச் செய்வதில்லையென்று கேட்ட போது யாகமென்னும் பெயர்களையும், அதன் செயல்களையும் வேஷபிராமணர்க ளறியாதவர்களாயிருந்த போதினும் சற்று நிதானித்து திறைட்டி யக்கினி வளர்த்தலில் ஓர் புசிப்பைத் தேடிக்கொண்டார்கள். அதாவது தங்களுடைய புருசீக தேசத்தில் ஆட்டின் மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் தினேதினே புசித்து வளர்ந்தவர்கள் இந்திரர் தேசம் வந்து யாசகசீவனஞ்செய்து வருங்கால் தங்கள் பிராமண சேஷத்திற்காக மாமிஷப்புசிப்புக் கேதுவில்லாமல் சருகு காய் கிழங்கு பட்சணத்தை ருசித்து திருப்த்தியில்லா திருந்தவர்கள் திறை கட்டி யாகஞ்செய்த லென்றவுடன் அம்மொழியையே பீடமாகக் கொண்டு கல்வியற்றப் பெருங்குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வரவழைத்து யாங்கள் ஓர் பெரும் யாகஞ் செய்யப்போகின்ருேம் அந்த யாகத்தின் சாம்பலைக் கொண்டு போய் உங்கள் வீடுகளிற் கட்டிவைத்துக் கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெருகி வாழ்வதுடன் உங்களுக்கு யாதொரு வியாதியு மணுகமாட்டாது அதற்காய யாககுண்ட செலவு தொகை யித்தனைப்பொன் பணமும், கொழுத்தப் பசுக்கள் கொழுத்த குதிரைகளைக் கொண்டுவருவதுடன் அவுல், கடலை, தேங்காய்ப்பழ முதலியதுங் கொண்டு வருவீர்களாயின் தேவர்களுக்கு சீவர்களை ஆவாகனஞ் செய்வதுடன் அவுற் பிரசாதமுங் கொடுக்கவேண்டு மென்று கூறிய போது பேதை மக்கள் வேஷப்பிராமணர்கள் வார்த்தைகளை மெய்யென நம்பி வேண பணவுதவியும், பசுக்களையும், குதிரைகளையும், அவுற்கடலை தேங்காய் பழம் முதலியவைகளையும், கொண்டு வந்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு யாக குண்டத்தை சுற்றி திறைகட்டிவிட்டு மிலேச்சர்களாம் ஆரிய கூட்டங்கள் மட்டிலும் உள்ளுக்கிருந்து மாடுகளையும், குதிரைகளையும், சுட்டுத்தின் பதுடன் அவுற்கடலை முதலியவைகளையும் வேறொருவருக்குங் கொடாது தாங்களே பாகித்துக்கொண்டு மாடுகள் குதிரைகளைச் சுட்டச் சாம்பல்களை வாறி பேதை மக்கள் கைகளில் கொடுத்துவிட்டு அவரவர்களிருப்பிடஞ் செல்லுங்கால் கல்வியற்ற குடிகள் அவுற்பிரசாதங் கேட்பார்களாயின் அவுற்பிரசாதம் தேவர்களுக்கே யன்றி ஏனையோருக்குக் கொடுக்கப்படாதென்று கூறி தங்கள் சுகத்தைப் பார்த்துக் கொள்ளுவதில் பிரியமான மாமிஷங்களைச் சுட்டுத்தின்பதற்காக யாகமென்னு மொழியே ஏழாவ தேதுவாகிவிட்டது. அவுற் பிரசாதத்தைக் கேட்ட குடிகள் யேதுங் கிடையாது கைநிறம்ப மாமிஷஞ் சுட்டச் சாம்பலைப்பெற் றேகுவதையே ஓர் பலனெனக் கருதி பலவகையாலும் விசாரணை யற்றுப் பாழடைந்தார்கள். கோவிலென்பதின் விவரம், கோ-இல் கோவில் என்பது அரசன் வாழ் மனையின் பெயர். அதாவது சித்தார்த்தி சக்கிரவர்த்தி திருமகன் கோவிந்தமென்னும் துறவு பூண்டதும் துறவினது விந்தையால் அரசன் விந்தமென்னும் மலையில் வீற்றிருக்க கோவிந்தம் கோவிந்தமென்றும் அழைக்கப் பெற்ற மொழிகள் யாவும் அரசனே துறவு பூண்டு பெற்ற நான்கு வாய்மெயின் மகத்துவமே பேரானந்த நித்திய சுகத்தி லிருத்தியதை காட்சியாய் கண்டவர்களும், அனுபவத்திலுணர்ந்த வர்களும் மகத நாட்டில் சித்தார்த்தி சிறுவருக்கமைத்திருந்த இராஜகிரகத்தை தெரிசிக்கப் போவோர் யாவரும் கோவில் கோவிலென வழங்கிய வாதாரங்கொண்டு சித்தார்த்தர் புத்த நிலை யடைந்து அவர் பரிநிருவாண மடைந்த பின்னரும் அவரைப்போன்ற வுருவங்களை ஸ்தாபித்துள்ள வியாரங்கள் யாவற்றையும் கோவிலென வழங்கிவந்த மொழி மாறாது நாளதுவரையில் வழங்கி வருகின்றார்கள். சித்தார்த்தி அரசரது மனையை அவர் மற்ற மக்களுடன் உலாவிக்கொண் டிருக்குங்காலும் கோவிலென வழங்கியவர் கள் அவர் பேரானந்தமாம் பரிநிருவாணமுற்றும் அவரைப் போன்ற வுரூக்க ளமைத்துள்ள வியாரங்களையும் கோவி லென்றே யழைத்து வந்ததுடன் பெளத்த காவியங்களிலும் நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு, கோவிற் சிறப்பென்றும், நாட்டு வருணனை, நகர வருணனை, கோவில் வருணனையென்றும் பாயிரங்களுள் விளக்கியிருக்கின்றார்கள். பௌத்த வரசர்களும், பௌத்த வுபாசகர்களும் வியாரமென்னும் மடங்களைக் கட்டு வித்து மகத நாட்டிற்கும், கபிலை நகருக்கும் அரசரான சித்தார்த்தர் போதனா வுருவம் போலும், ஞானசாதன வுருவம் போலும் பரிநிருவாணத்திற்குப் பின்னரமைந்த யோகசயன வுருவம் போலு மமைத்து சுத்த சாதுக்களாம் சமணமுநிவர்களை வீற்றிருக்கச் செய்து அவர்களது கலை நூல் விருத்திகளுக்கும், ஞானசாதன விருத்திகளுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பகவன் போதித்தவண்ணம் சாதித்துக் கடைத்தேறுமாறு வேண பொன்னுதவியும் பொருளுதவியுஞ் செய்துவந்தார்கள். இவ்வகையாக வோர் சமணமுநிவரை சாது சங்கத்திற் சேர்த்து அவர் முத்தநிலை பெறும்வரை வேண வுதவி புரிந்து வருவோர் புருஷர்களாயின் அவர்களை ஞானத் தந்தையர்களென்றும், இஸ்திரீகளாயின் அவர்களை ஞானத் தாயார்களென்றும் வழங்கி வந்தார்கள். அங்ஙனம் மடங்களாங் கோவில்களிற் றங்கி ஞான சாதனஞ் செய்யும் சமண முநிவர்களுக்கு ஞான தந்தை, ஞானத்தாயென்போர் ஏன் உதவி புரிய வேண்டு மென்பீரேல், ஞான சாதகர்களுக்கு யாதொரு குறைவுங் கவலையுமின்றி உதவி புரிவதால் அவர்களெடுக்கும் ஞானசாதன முயற்சிக்கு யாதோ ரிடுக்கமுமின்றி யீடேற்ற மடைவார்கள். அத்தகைய யீடேற்றமாம் விவேக விருத்திப் பெற்றோர் ஒருவ ரத்தேசத்தி லுளரேல் அத்தேசத்திலுள்ள சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெருவார்கள் அவர்களது ஞான சாதனத்தால் இராகத்துவேஷ மோகங்களை யகற்றி தண்மெயாம் சாந்தநிலை பெற்று அந்தணர்க ளானபடியால் அவர்கள் பார்வை பெற்றோரும், அவர்களை தெரிசித்து வொடுக்கம் பெற்றோரும் துக்க நிவர்த்திக் கேதுவாய் பலன்களைப் பெறுகுவதுடன் நீதிநூல், ஞானநூல், கணித நூல், வைத்திய நூல், இலக்கிய நூல், இலக்கண நூல்களையும் ஏற்படுத்தி மக்கள் சீர்திருத்தத்திற்காய நன்மார்க்கங் களை யூட்டி வருகின்றபடியால் தேசத்தில் ஞானசாதனர்கள் பெருகி அவர்களால் மக்கள் சீர்திருத்த மடைதல் வேண்டு மென்னும், அன்பின் மிகுதியால் அவர்களுக்கு வேண்டிய வுதவி புரிந்து வருவது வழக்கமாயிருந்தது. இத்தகையக் கோவில்களென்னும் வியாரங்கள் கட்டியுள்ள விஷயங்களும் அவ்வியாரங்களில் அரசர் உருவங்களை அமைத்துள்ள விவரங்களும் அதனுள் சமண முநிவர்களை சேர்த்து வேண வுதவி புரிந்துவரும் விவரங்களும் கல்வியற்றப் பெருங் குடிகளுக்கும் வேஷப்பிராமணர்களுக்கும் விளங்காதிருந்தபோதினும் புத்தபிரானுக்குரிய ஞானசாதன செயலுக்குத் தக்கவாரளித்துள்ள ஆயிர நாமங்களில் ஒவ்வொன்றை தாங்களு மெடுத்துக் கொண்டு அப்பெயரால் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிக்கொண்டு அப்பெயர்களுள்ள சிலைகளையும் அதனுள்ளமைத்து அப்பெயர்களையும் அதன் செயல்களையும் கிலதையொட்டியப் பொய்க்கதைகளையும் அதினந்தரார்த்த மறியாமலே வரைந்து வைத்துக்கொண்டு வியாபாரக் கடைகளைப் போல் கோவில்களினுள் வேஷப் பிராமண மதக்கடைகளைப் பரப்பி சீவிப்பதற்கு யெட்டாவ தேதுவாகிவிட்டது. பெளத்த தன்மங்களை யெங்கும் பரவச்செய்துவரும் திராவிடர்களில் விவேகமிகுத்தோர் மிலேச்சர்களாம் ஆரியர்களின் பொய் வேஷங்களையும், நாணமற்ற ஒழுக்கங் களையும், பல சீவன்களை நெருப்பிலிட்டு சுட்டுத்தின்னுங் காருண்யமற்ற செயல்களையுங் கண்டு மனஞ்சகியாது மிலேச்சக் கூட்டங்களை காணு மிடங்களிலெல்லாம் அடித்துத்துரத்தி இவர்களது வஞ்சகக் கூற்றையும் பொய் வேஷங்களையுங் குடிகளுக்கு விளங்க பறைந்து வருவதுடன் தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளுக்குள் வருவார்களாயின் தங்கடங்கள் சீலங்களும், நல்லொழுக்கங்களுங் கெட்டுப்போமென்று வீதிக்குள் நுழைந்தவுடன் அடித்துத்துரத்தி சாணத்தைக் கரைத்து அவர்கள் வந்த வழியில் தெளித்துக்கொண்டு போய் சாணச் சட்டியையும் அவர்கள் மீதி லுடைத்து வருவது வழக்க மாயிருந்தது. சுரணையற்ற சீவனமும், நாணமற்ற குணமும், ஒழுக்கமற்ற செயல்களுமுள்ளதுடன் கருணையற்றச் செயலால் பசுக்களையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு அதன் புலாலைத் தின்று மதுவென்னும் சுராபானத்தை யருந்துங் கூட்டத்தோரின் நீச்சச்செயல்களை நாளுக்குநாள் கண்டு வந்த, திராவிட பௌத்தர்கள் அவர்களை மிலேச்சர்கள் ஆரியர்களென்று கூறி தங்களது சீலம் நிறைந்த ஆச்சிரமங்களிலும், தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளிலும் வரவிடாமலடித்துத் துரத்திக் கொண்டே வந்தார்கள். இவ்வகையாகத் துரத்துண்டு வந்த மிலேச்சராம் வேஷப்பிராமணர்கள் இன்னுஞ் சிலநாள் திராவிட பௌத்தர்களால் துரத்துண் டிருப்பார்களாயின் ஆரியர்களின் கூட்ட முழுவதும் தங்கள் சுயதேசம் போய் சேர்ந்திருப்பார்கள். அக்கா லித்தேசத்திற் பரவிநின்ற ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதி யென்னும் நான்கு பாஷைகளை சாதித்து வந்தவர்களுட் சிலர், கல்வியும் ஞானமு மற்றவர்களாய் ஆரியர்களின் வேஷப்பிராமணத்தையும், அதனாலவர்கள் சுகமாக சீவித்துவருஞ் செயல்களையும் நாளுக்கு நாள் கண்டு இவர்களு மத்தகைய பிராமண வேஷத்தை யாரம்பித்துக் கொண்டார்கள். சுதேசபாஷைக் குடிகள் பிராமண வேஷமிட்டுக் குடிகளை வஞ்சித்து சோம்பேறி சீவனஞ் செய்ய வாரம்பித்துக் கொண்டதினால் மேலும் மேலும் கல்வியற்றக் குடிகள் அவர்கள் வார்த்தைகளை நம்புவதற்கும், அவர்கள் கேட்டுக்கொள்ளும் வண்ணம் நடந்துக்கொள்ளுவதற்கும் ஆரம்பித்தபோது வேஷப்பிராமணர்களின் கூட்டங்கள் நாளுக்குநாள் பெருகிவரவும் அவர்கட் சொற்படி நடக்குங் கல்வியற்றக் குடிகளின் கூட்டம் அதனினும் பெருகவும் நேர்ந்து யதார்த்த பிராமண பெளத்த சங்கங்களை யழிக்கவும், பௌத்த சாஸ்திரங்களையும், பௌத்த மடங்களையும், பெளத்த வுபாசகர்கள் யாவரையும் நிலைகுலையச் செய்யவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். மிலேச்சர்களாம் ஆரியர்களின் பிராமணவேஷம் பெருகுவதற்கும் அவர்களது மிலேச்சம் நீங்கி கனமடைவதற்கும் இத்தேசத்தோர்களின் பிராமணவேஷமே மிக்க வநுகூலமாகி விட்டது. அதனால் திராவிட பெளத்த வுபாசகர்கள் ஆரியர்களைக் காணுமிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திக்கொண்டே வரும் வழக்கங்களுக்கு சிற்சில தடைகளுண்டாகி தாங்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் மட்டிலும் வரவிடாமல் துரத்தி சாணந்துளிர்த்து வந்தார்கள். பழைய வேஷம் வேஷப் பிராமணர்களுடன் புதிய வேஷப்பிராமணர்களும் மேலுமேலும் பெருகுவதினால் ஒருவருக்கொருவர் புசிப்பற்றும், ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கல் வாங்கலற்றும், ஒருவரைக் கண்டால் ஒருவர் முறுமுறுத்துக் கொண்டு போவதே வழக்கமா யிருந்ததன்றி நீங்களெவ்வகையால் பிராமணர்களானீர்களென்னும் வினா வெழுவுமென்றெண்ணி அந்தந்த பாஷைக்கார, வேஷப்பிராம ணர்கள் அவரவர்களுக்குள்ளடங்கி கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப் பொருள் பரித்துண்ணும் சோம்பேறி சீவனத்தை விருத்திக்குக் கொண்டுவந்து விட்டார்கள். மிலேச்சர்கள், பெளத்த சங்கத்திலுள்ள அறஹத்துக்களாம் யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு சோம்பேறி சீவனஞ்செய்ய வாரம்பித்துக்கொண்டதும் அவர்களின் சுகசீவனங்கண்ட ஆந்திரர்களும், கன்னடர்களும், மராஷ்டகர் களும், திராவிடர்களும் தங்கடங்கட் பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களென வேஷமிட்டு கல்வியும் விசாரணையுமற்றப் பெருங் குடிகளையும், ஞானமற்ற அரசர்களையும் வஞ்சித்து சீவிக்க வாரம்பித்த செய்கையால் ஆந்திரசாதி யரசன், கன்னடசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், சிங்களசாதி யரசன் மகன் திராவிடசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், வங்காளசாதி யரசன் மகன் சீனசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், அரசனெவ்வழியோ குடிகளு மவ்வழியெனும் ஒற்றுமெயும் அன்பும் பாராட்டி அபேதமுற்று வாழ்ந்து வந்த இந்திர தேசத் தாருக்கு பேதமுண்டாகி ஒருவருக்கொருவர் பொசிப்பிலும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுவினையிலும் பிரிவினைக ளுண்டாகி வித்தியர் கேடுகளும், விவசாயக் கேடுகளும் பெருகி தேசமும் தேசத்தோர்களுங் கெடுதற்கு இவர்களது பிராமண வேஷமே அடிப்படையாயிற்று. மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆந்திர வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதும், ஆந்திர வேஷப் பிராமணர்கள் கன்னட வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறது மாகியப் பொறாமெயால் உள்ளத்தில் வஞ்சினத்தை விளைவித்துக் கொள்ளுவதேயன்றி நீங்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டீர்கள், அவர்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகி விட்டார்களென்னுங் கேள்விகளில்லாமல் அரசன் கெட்டா லென்ன குடிகள் கெட்டாலென்ன வித்தைகள் கெட்டாலென்ன விவசாயங் கெட்டாலென்ன தங்கடங்கள் பெண்டு பிள்ளை களுடன் பிராமண வேஷத்தோர் பிழைத்துக்கொண்டால் போதுமென்னும் சுயப்பிரயோசனத்தைக் கருதி சகலரையுங் கெடுக்க வாரம்பித்துக்கொண்டார்கள். புத்தரது தன் மத்தின் சிறப்பையும், அவரது அளவுபடாஞானத்தின் களிப்பையும் அனுபவத்திற் கண்டு ணர்ந்த சமண முநிவர்கள் ஞானத்தின் செயல்களுக்கும், வித்துவத்தின் செயலுக்கும், தொழில்களின் செயல்களுக்கும் தக்கவாறு வடமொழியிலும், தென்மொழியிலும் சிறந்த பெயர்களை யளித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், செயலுக் குந்தக்க மேறை மரியாதையுடன் உலகமக்க ளொழுகும் ஒழுக்கங்களை வகுத்துவைத்திருந்தார்கள். அத்தகைய சிறப்புப்பெயர்கள் தோன்றுவதற்கு ஆதார பூதமாக விளங்கியவர் புத்தபிரானேயாதலின் அவரது தன்மச்செயலுக்கும் குணத்திற்கு மளித்துள்ள ஆயிர நாமங்களில் பிரம்மமென்னும் பெயரையும், பிதாமகன் பிதாவிதாதா வென்னும் பெயரையும் நிலைப்படக்கொண்டு மற்றும் பெயர் களையும் சிறப்பிக்கலானார்கள். சித்தார்த்தருக்கு பிரம்மமென்னும் பெயரை யளித்தக் காரணம் யாதெனில், அஃதோர் சாந்தத்தின் பூர்த்தியடைந்த பெயராகும். அதாவது, பூமியை யொருவன் கொத்தி பலவகைத் துன்பப்படுத்தி பழுக அழுகக் கலக்கி பண்ணையாக்கினும் அப்பூமி நற்பல னளிக்குமே யன்றி தன்னை துன்பஞ் செய்தார்களே யென்று துற்பலனளிக்காவாம். அதுபோல் ஒரு மனிதனை மற்றொரு மனிதன் வைது துன்பப் படுத்தி பலவகையானக் கெடுதிகளைச் செய்யினும் அஃதொன் றையுங் கருதாது அவனுக்கு, நற்பலனளித்து தன்னைத் துன்புறச்செய்தோனுக்கு மேலுமேலும் இன்புறச்செய்து காக்குங் குண நிலைக்கு பிரம்மமென்னும் பெயரை யளித்துள்ளார்கள். அதையே, உண்மெயில் தண்மெநிலையுற்ற சுயஞ்சோதியென்றுங் கூறப்படும் மகடபாஷையில் பிம்பமென்றும், சகடபாஷையில் பிரம்மமென்றும் சுயஞ்சோதி யென்றும் திராவிட பாஷையில் உள்ளொளியென்றும் சித்தார்த்தரது குணநிலையை சிறப்பித்திருந்தார்கள். பிதாமகன், பிதாவிதாதாவென்னும் பெயரோவென்னில், சுத்தோதய சக்கிரவர்த்திக்கு மகனாகப் பிறந்து தனது தந்தைக் கே குருவாக விளங்கி ஞான வுபதேசஞ் செய்துள்ளபடியால் பிதாவுக்கு மகனும் பிதாவுக்கு தாதாவுமென்றழைத்துள்ளார்கள். பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா வென்றும், உலக சீர்திருத்த ஆதிபகவனென்றும், ஆதிதேவ னென்றும், ஆதி கடவுளென்றும், ஆதி முநிவனென்றும், ஆதி பிரம்மமென்றும் அழைக்கப்பெற்ற புத்தபிரானை மற்றும் வீணை நான்முக விளிப்பாலும், நான்கு சிறந்த வாய்மெயாலும் நான்முக பிரமமென்றும் அழைத்துவந்தார்கள். உலகத்தின் ஆதி சீர்திருத்த வுலகநாதனாக விளங்கி சருவ கலைகளுக்கும் நாயகனாகி என்று மழியா பேரானந்த ஞானத்தை விளக்கி முத்தி பேருக்கு முதல்வனான பிரமனின் நான்குவாய்மெ யுணர்ந்து தண்மெயடைந்து பிரம்ம மணமுண்டான போது அவனது ஞான வல்லபத்தை சிறப்பிப்பதற்காய் புத்தபிரானாம் பிரம்மனின் முகத்திற் பிறந்தவனென சிறப்பித்துக்கூறி சங்கத்தோர்களுக்கு அதிபதிகளாக்கிவைத்தார்கள். பகவனது தன்மநெறி கடவாது சித்தி பெற்றவர்களை பகவன் முகத்திற் பிறந்தவர்களென அவரது அளவுபடா சிறப்பைக் கொண்டே பிரம்மமண மடைந்தோரை சிறப்பித்து மகட பாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணனென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும், தென்புலத்தோ ரென்றும் சிறப்பித்துக் கொண்டாடி வந்தார்கள். ஞானிகளாம் பிராமணர்களின் சீர்திருத்தத்தால் உலக மக்கள் சுகம் பெற்று வாழ்ந்த போதிலும் மக்களது யிடுக்கங்களைக் கார்த்து ரட்சிக்கும் நீதியும், வல்லமெயும் புஜபல பராக்கிரமமு மமைந்த க்ஷாத்திரியவான் ஒருவ னிருக்கவேண்டிய தவசிய மாதலின் அவனும் புத்தபிரானாம் பிரம்மன நீதி நெறி தவராது குடிகளை யாண்டு ரட்சித்து வருவானாயின் பிரம்மனது க்ஷாத்திரியமிகுந்த புஜத்திற் பிறந்தவனாகக் கொண்டாடும்படி சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறப்புற்றோனை மகம் பாஷையில் அரயனென்றும், சடக பாஷையில் க்ஷாத்திரிய னென்றும், திராவிட பாஷையில் மன்னவனென்றும் சிறப்பித்து வந்தார்கள். மன்னன் மக்களை நீதிவழுவா தாண்டு வந்தபோதினும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை பெற்று வியாபாரம் நடத்துவோர் பிரம்மனாம் பகவனது தன்மநெறி கடவாது துடையானது ஒன்று மாறி மற்றொன்று நடப்பது போல் தராசு நிரை பிரழாது துரோக சிந்தனையற்று ஒன்றைக் கொடுத்து ஒன்றை மாறி வியாபாரம் நடத்தி தானும் லாபம் பெருவதுடன் குடிகளுக்கும் பலப்பொருள் உதவுவோர்களை பகவனின் நீதிநெறியின் சிறப்பை முன்னிட்டு தராசு நிரை பிரழா வியாபாரியை பிரம்மனின் துடையிற் பிறந்தவனென சிறப்பித்துக் கூறி அவர்களை மகடபாஷையில் வைசியரென்றும், சகடபாஷையில் வியாபாரிகளென்றும், திராவிட பாஷையில் வாணிபரென்றும் சிறப்பித்து வந்தார்கள். மநுமக்களுக்கு வாணிபர் பல பொருள் உதவி புரிந்து வரினும் அப்பொருட்களை விளைவித்தும், சீர்படுத்தியும், பூமியைப் பண்படுத்தியும் தங்கள் பாதத்தையும், கைகளையுமோர் சூஸ்திரக் கருவியெனக்கொண்டு இயந்திரங்களை நிருமித்து உலகோபகாரமாகப் பல பொருட்களை யுண்டு செய்தும், தானியங்களை விளைவித்தும், பகவனாம் பிரம்மனது தன்மநெறி பிரழாது யீகையினின்று சருவ வுயிர்களுக்கும் உணவளித்து காப்போர்களை பிரம்மனது சிறப்பு மாறாது அவரது பாதத்திற் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறுவதுமன்றி மகட பாஷையில் சூஸ்த்திரரென்றும், சகடபாஷையில் சூத்திரரென்றும், திராவிட பாஷையில் வேளாளர் யீகையாளரென்றும் சிறப்பித்து வந்தார்கள். உலகமாக்கள் ஒவ்வோர் தொழில்களையும் அறநெறிவாய் மெயினின்று நடாத்துங் குறிப்பிற் குறுதியாக அறவாழியானாம் பிரம்மனின் முகத்தில் பிராமணனாம் அந்தணன் பிறந்தா னென்றும், அவரது புஜத்தில் க்ஷாத்திரியனாம் அரயன் பிறந்தா னென்றும், அவரது துடையில் வைசியனாம், வணிகன் பிறந்தா னென்றும், அவரது பாதத்தில் சூஸ்த்திரனாம் வேளாளன் பிறந்தானென்றும் சிறப்பித்துக்கூறி அவரவர்கள் தொழில்கள் யாவையும் அறவாழியானை சிந்தித்து அறநெறியினின்று நடாத்தும் வழியாக வகுத்திருந்தார்கள். அத்தகைய அறநெறித் தொழிலில் பிராமணர்களாம் அந்தணர்களுக்கு அறுவகைத் தொழிலை வகுத்து வைத்தார்கள். அவ்வகை யாதெனில் நிற்கினும் நடக்கினும் படுக்கினும் கலை நூற்களை வாசித்து தங்களெண்ணத்தையும், செயலையும் நீதிவழுவா நெறியிலும், வாய்மெயிலும், நிலைக்கச் செய்து நற்சாதனமாம் இடைவிடா ஓதலிலாம வாசித்தலில் நிற்ப தொன்று. தான் புரியும் நற்சாதனங்களாம் நீதிநெறி வழுவாச் செயல்களை உலக மக்களுக்கு ஓதி வைத்தாலும், பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசையாம். அவாக்களை முற்று மொழித் தலாம் வேட்டுதலும், அவ்வகை பேரவாக்களினா லுண்டாங் கேடுகளைக் குடிகளுக்கு விளக்கி வேட்பித்தலும், ஏழை மக்களுக்கு தானமீயந்து ஆதரித்தலும், உபாசகர்களாலீயும் தானங்களை தானேற்றுக்கொள்ளுதலுமாகிய அறுவகைத் தொழில்களைக் குறைவற நடாத்தி வரவேண்டியதே அந்தணர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். க்ஷாத்திரியர்களாம் அரசர்களது தொழிலாவது யாதெனில், அந்தணர்களாம் மகாஞானிகளா லோதிவைத்துள்ள நீதி நூற்களை யோதியுணர்தல், தனக்குள்ளெழுங் காம வெகுளிகளை யடக்கிக்கொண்டு வருதல், குடிகளாலுண்டாங் குற்றங்குறைகளை நிவர்த்தித்தல், தனது தேசத்திற்கும் குடி களுக்கும் யாதொரு குறைவும் நேரிடாது பாரந்தாங்கி யீதல் நிலையினிற்றல், படைகளுக்காய வித்தைகளையும், புஜபல பராக்கிரம க்ஷாத்திரிய சாதனங்களைக் கற்றல், பலதேச யாத்திரைச் சென்று புற தேசங்களின் சீர்திருத்தங்கண்டு தன் தேசத்தை சீர்திருத்தும் விஜயஞ்செய்தல் ஆகிய வறுதொழிலும் அரசர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். வைசியர்களாம் வாணிபர்களின் அறுவகைத் தொழில்கள் யாதெனில், மகாஞானிகளா லோதிவைத்துள்ள நீதி நெறியில் நிலைத்துக் கலை நூல்களை வாசித்துணர்தல், வாசித்த வண்ண மடங்கி காம வெகுளி மயக்கங்களினின்று விடுபடுதல், புலன் தென்பட்டோராம் தென்புலத்தோரென்னும் அந்தணர் களுக்கும், ஏழைகளுக்கும் யீதல், பசுக்கள் விருத்தியடையத்தக்க வழிகளைத் தேடுதல், உழவுக்கு வேண முதலுந் தானியமு மளித்துக் காத்தல், ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை மாறும் வியாபாரத்தை விருத்திச்செய்தல் ஆகிய வறு தொழிலும் வணிகர் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். சூஸ்த்திரர்களென்னும் வேளாளர்கட் தொழில்கள் யாதெனில், பூமியை உழுது பண்படுத்தி தானியங்களாம் பலவளம் பெருகச்செய்தல், பசுக்களுக்கு சேதம் வராது காத்தல், வியாபாரத்திற்கான தானியவிருத்தி யுதவல், பட்டு பருத்தி முதலியவற்றை விருத்தி செய்து ஆடைகளாங்காருகவினை செய்தல், தோற்கருவி துளைக்கருவி முதலிய சூஸ்திரங்களியற்றி குயிலுவத்தொழிற் செய்தல், தாய் வயிற்றினின்று பிறக்கும் பிறப்பொன்றும், ஞானசாதனம் முதிர்ந்து நிருவாணம் பெற்று பரிநிருவாணமாம் தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகிய இருபிறப்பாளராம் அந்தணர் களுக்கு வேண்டிய யேவல் புரிதல் ஆகிய வறுதொழிலும் வேளாளர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். இத்தகைய நீதிநெறிவழுவா அறுதொழில்களினை நடாத்துவோர் தேசத்தில் பொன்பொருள், விளைவு, பற்பல தானிய விளைவு, கொலைபாதகச் செயலற்று வாழ்தல், களவு முதலிய வஞ்சகமற்ற வாழ்க்கை, கொள்ளை நோ யுபத்திரவமற்ற சுகம், ஆற்றலும் அமைதியுமாகிய வானந்தத்தில் வாழ்வார் களென்று அறுவகை நன்னாட்ட மதியையும் வகுத்துள்ளார்கள். நீதிவழுவா புத்தராம் பிரம்மனிநின்று தோன்றியவர் களெனக் கூறுவோர் செய்யுந் தொழிற்பெயர்கள் யாவும் நன்மார்க்கத்தில் நடந்து நன்முயற்சியிலிருந்து நல்லூக்கம் நிலைத்து நன்மெய்க் கடைபிடித்து சகல மனுக்களும் சுகச் சீர்பெற்று நித்தியானந்த வாழ்க்கை யடைவதற்காக வகுத்திருந்தார்கள். அத்தகையப் பேரானந்த ஞானத்தின் கருத்தும் நித்தியானந்த வாழ்க்கையின் செயலும், தொழில்களுக்காய சீர்திருத்த சிறப்பின் பெயரும் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்க்கு விளங்காதிருப்பினும் வேஷப்பிராமணர்களால் ஒற்றுமெய்க்கெட்டு பிரிவினைகளுண்டாய கேடுகள் போதாது தொழில்களுக்கென்று சமணமுநிவர்களால் வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் சாதிப் பெயர்களாக மாற்றி அதிற்றங்களை சகல சாதிகளுக்கும் மேலாய உயர்ந்த சாதிகளென வகுத்துக்கொண்டு தங்களது பொய்ப் போதகங் களுக்கும், மாறு வேஷங்களுக்கு முட்படாது பராயர்களாக விலகி இவர்களது பொய்ப் பிராமண வேஷங்களையும், பொய்க் குரு போதங்களையும் குடிகளுக்குப் பறைந்து வந்த விவேகமிகுந்த மேன்மக்களாம் பௌத்த வுபாசகர்களை சகல சாதிகளுக்கும் தாழ்ந்த சாதி பராயரென்றும் பறையரென்றுங் கூறி பலவகையாலுங் கெடுக்கத்தக்க யேதுக்களைச் செய்துக் கொண்டார்கள். ஒவ்வொருவர் தொழில்களையும் நீதி வழுவாமல் நடத்துவதற்கு புத்த பிரானாம் பிரம்மனின் உருவையே பீடமாக்கி அவரது முகத்திலும், புஜத்தினும், துடையிலும், பாதத்திலும் பிறந்தவர்களென சிறப்பித்துக் கூறி அவரவர்கள் தொழில் களையும் நீதிவழுவா சிறப்புடன் நடத்துவதற்கும், குடிகள் சுகம்பெற்ற வாழ்க்கை யடைவதற்கும் வகுத்திருந்த தொழிற் பெயர்களை வேஷப்பிராமணர்கள் தங்களது சுயப்பிரயோ சனத்தைக் கருதி தங்கள் வேஷத்தை சிறப்பித்து அதிகாரம் பிச்சை யேற் றுண்பதற்காகக் கல்வியற்றக் குடிகளிடம் நீதி வழிகளில் நடப்பதற்காக வகுத்திருந்தத் தொழிற்பெயரை அநீதவழியாம் சாதிப்பெயரென மாற்றி அதிற்றங்கள் பிரம்மாவின் முகத்திற் பிறந்த உயர்ந்த சாதியென்று வகுத்துக்கொண்டு பிள்ளை பெண்டுகளுடன் சோம்பேறி சீவனத்தைப் பெருக்கிக்கொண்டார்கள் ஆரியர்களாம் மிலேச்சர்க ளெடுத்துக்கொண்ட பிராமண வேஷங்களைப்போல் ஆந்திராசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதிகளென வகுக்கப்பட்டிருந்த இத்தேசத்திய சோம்பேறிகளிற் சிலரும் பிராமணவேஷ மெடுத்துக் கொண்டபடியால் பெளத்த போதகர்களின் போதனையால் கேட்டிருந்த பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடையாம் சிறப்பு மொழிகளை மெய்யாகவே வோர் பிரம்மா முகத்திற் பிறந்தவர்களென்னும் கட்டுக்கதையை போதித்துக் கல்வியற்றக் குடிகளிடம் சகல வேஷப் பிராமணர்களும் சிறப்பைத் தேடிக் கொண்டார்கள். பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடை மொழியையும் சிறப்புப் பெயரையு மறியாக் கல்வியற்றக் குடிகளு மவற்றை நம்பி வேஷப்பிராமணர்களையே மிக்க சிறப்பிக்கவும் அவர்களுக்கே தான மீயயவு மாரம்பித்துக் கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களையே மிக்க நம்பவும் அவர்களது போதனைகளுக் குப்படவும் பூர்வ பௌத்த தன்மத்தையும், யதார்த்த பிராமணர்களையும் மறந்து அவர்களுக் கெதிரிகளாகவும் சீலங்களை மறக்கவும், நேரிட்டக் காரணங்கள் யாதெனில், பௌத்த வுபாசகர்களுக்குள் ஒரு மனைவியின்றி மறு மனைவியை சேர்க்கப்படாதென்றும், தன் மனைவியையன்றி அன்னியர் மனைவியை இச்சிக்கப்படாதென்றும் சீலநிலையை வகுத்திருந்தார்கள் அத்தகைய சீலத்திற்கு எதிரிடையாக வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தேவதைகளுக்கு இரண்டு பெண்சாதிகளை யுண்டு செய்துள்ளதுமன்றி பெண்ணிச்சை யற்று பிராமண நிலை யடைய வேண்டிய செயல்களை யகற்றி இரண்டு பெண்சாதி மூன்று பெண்சாதியுள்ள பிராமணர்கள் தோன்றிவிட்டபடியால் உபாசகர்களும் தங்க ளிச்சையைப் போல் எத்தனைப் பெண்சாதிகள் வைத்துக்கொண்டாலும் குற்றமில்லை யென்னும் போதனையும், காமவிச்சைக்கேற்ற வழிகளுக்குமோ ரேதுவாயிற்று. பெளத்த தன்ம உபாசகர்கள் மதுவென்னும் லாகிரி வஸ்துக்களை யருந்தாமலும், மாமிஷமென்னும் புலாலைப் புசியாமலும் மிக்க சீலமாய் புத்ததன் மத்தைத் தழுவிவந்தார்கள். வேஷப் பிராமணர்களோ மாடுகளையும், குதிரைகளையும் சுட்டு அதன் புலாலைப் புசிப்பவர்களாகவும், மதுவென்னும் சுராபான மருந்துபவர்களாகவு மிருப்பதைக் கண்டு வருங் கல்வியற்றக் குடிகள் தங்களிச்சையைப்போல் சுராபானம் அருந்தவும், புலால் புசிக்கவுமாகிய வழிகளுக்குமோ ரேதுவாயிற்று. பௌத்த உபாசகர்கள் பொய்யாகிய வார்த்தைகளைப் பேசாமலும், பொய் சொல்லுவோர் வார்த்தைகளை நம்பாமலும் யாவரிடத்தும் மெய்யைப் பேசவேண்டுமென்னும் சீலமாம் சத்தியதன் மத்தில் நிலைத்திருந்தார்கள். வேஷப் பிராமணர்கள் உலக ஆசாபாச பந்தத்திலும், பேராசையிலும் வஞ்சினத்திலும், ஒழுக்கமற்ற நடையிலும், நாணமற்றச் செயலிலுமிருந்துக்கொண்டு தங்களை பிராமணர் பிராமண ரெனத் தாங்களே சொல்லித்திரிவது முதற்பொய்; ஓர் பிரம்மாவின் முகத்தினின்றே பிறந்தவர்களென்று கூறித்திரிவது இரண்டாவது பொய்; தங்கள் தேவதைகளைக் காண்பதற்கும், தெய்வகதி பெருவதற்கும் தங்களைக் கொண்டே மற்றவர்கள் பெறவேண்டுமென்பது மூன்றாவது பொய்; இந்த சாமி அவர்களுக்கு மோட்சங்கொடுத்தார் அந்தசாமி இவர்களுக்கு மோட்சங்கொடுத்தார் இந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனார், அந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனார், அந்தசாமி வானலோகத்தினின்று பூலோகத்திற்கு வந்தாரென்பது நான்காவது பொய்; இத்தகைய தேவதைகளையே பெரும் பொய்க்கதைகளாகக் கேட்டுத்திரியும் கல்வியற்றக் குடிகளுக்கு உலக வாழ்க்கையிற் பொய்ச்சொல் லுவதால் யாது கெடு மென்னு மச்சமற்று பொய்யை மெய்யைப் போற் பேசவுமோரேதுவாயிற்று. பெளத்த வுபாசகர்கள் கொல்லா விரதத்தை சிரம்பூண்டு அகிம்சாதன்மத்தில் நிலைத்து சீவப்பிராணிகளைத் துக்கத்திற் காளாக்காமலும், துன்பஞ் செய்யாமலும் ஆதரித்து வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ பசுக்களையும், குதிரைகளையுங் கொன்றுத் தின்பதுடன் தங்கள் சாமிகளில் இந்த சாமி அவன் தலையை வாங்கிவிட்டார் அந்தசாமி இவன் தலையை வாங்கி விட்டாரென்னுங் கொலைத்தொழிலை ஓர் வகைக் கொண்டாட்டத் தொழிலாக நடாத்திவந்த விஷயம் கல்வியற்றக் குடிகளுக்கு இச்சையுடன் கொன்றுத் தின்னவும், அஞ்சாதக் கொலைச் செய்யவுமோ ரேதுவாயிற்று. பெளத்ததன்ம நீதியில் ஒடுக்கமாக நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் வேஷப்பிராமண வநீதியில் விசாலமாக நடக்கும் வழிகள் யேற்பட்டு அஞ்சாது பொய் சொல்லவும், அஞ்சாது மதுவருந்தவும், அஞ்சாது கொலை செய்யவும், அஞ்சாது புலால் புசிக்கவுமாய யேதுக்க ளுண்டாகிவிட்ட படியால் கல்வியற்றக் குடிகள் யாவரும் பௌத்த தன்மயிடுக்கமாகிய வழியில் நடவாது வேஷ பிராமணர்களின் விசால வழியில் நடக்க வாரம்பித்துக்கொண்டார்கள். அவற்றை யுணர்ந்த வேஷப்பிராமணர்களும் இன்னுமவர்களை மயக்கித் தங்கள் போதனைக்குள்ளாக்கி தங்கள் வேஷப்பிராமணச் செய்கைகளையே மெய்யென்று நம்பி உதவி புரிவதற்கும், தங்கள் மனம் போனப் போக்கின் விசால வழியில் நடந்து வித்தையையும், புத்தியையும், யீகையையும், சன்மார்க்கத் தையும் கெடுக்கத்தக்க காமியக் கதைகளையும், பொய்ச்சாமிப் போதனைகளையு மூட்டி விருத்தி கெடச் செய்தது மன்றி கிஞ்சித்துக் கல்வி கற்றுக்கொண்டால் தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் உணர்ந்துக்கொள்ளுவார் களென்றறிந்து பூர்வக்குடிகளைக் கல்விகற்க விடாமலும், நாகரீகம் பெறவிடாமலும், இருக்கத்தக்க யேதுக்களையே செய்துக் கொண்டு தங்கடங்கள் வேஷப்பிராமணர் செயல்களை மேலுமேலும் விருத்தி யடையச் செய்வதற்காய் பௌத்த தன்மத்தைச் சார்ந்தப் பெயர்களையும், பௌத்த தன்மத்தைச் சார்ந்த சரித்திரங்களையுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு அவைகளில் சிலதைக்கூட்டியும், குறைத்தும், அழித்தும், பழித்தும் தங்கட் பொய்ப் போதகங்களை நம்பத்தக்க யேதுக்களைத் தேடிக்கொண்டார்கள். அத்தகைய யேதுக்கள் யாதெனில் :- புத்தபிரானை சங்கஹறரென்றும் சங்கத்தருமரென்றும், சங்கமித்தரென்றும் கொண்டாடி வந்தார்கள், அவற்றுள் சங்கறர் உலக யெண்ணருஞ் சக்கரவாள மெங்கணும் தனது சத்திய சங்கத்தை நாட்டி அறத்தை யூட்டி வந்தது கொண்டு அவரை ஜகத்திற்கே குருவென்றும், உலக ரட்சகனென்றும், சங்கஹற ஆச்சாரி யரென்றும் வழங்கி வந்ததுடன் அவர் பரிநிருவாணமடைந்த மார்கழி மாதக் கடை நாள் காலத்தை “சங்கஹறர் அந்திய புண்ணியகால” மென்றும் சங்கரர் அந்திய பண்டிகை யென்றும் வழங்கி வந்தார்கள். இவ்வகையாக வழங்கி வந்த சங்கறரென்னும் பெயர் மட்டி லுங் கல்வியற்றக் குடிகளுக்குத் தெரியுமேயன்றி அப்பெயர் தோன்றிய காரணங்களும் சரித்திர பூர்வங்களுந் தெரியமாட்டாது. அவர்களுக்கு குருவாகத் தோன்றிய வேஷப்பிராமணர்கள் சங்கறரென்னும் பெயரையே வோராதாரமாகக் கொண்டு சங்கரவிஜய மென்னுமோர்க் கற்பனாக் கதையை யேற்படுத்திக்கொண்டார்கள். அதாவது வேஷப்பிராமணர்கள் தோன்றி நீதிநெறி யொழுக்கங்களும் சத்திய தன்மங்களு மழிந்து அநீதியும் அசத்தியமும் பெருகி வருவது பிரத்தியட்ச வநுபவமாயிருக்க பௌத்தர்களால் நீதிநெறி தவரி அசத்தியம் பெருகுகிற தென்றும் அதற்காக சிவன் சங்கராச்சாரியாகவும் குமாரக்கடவுள் பட்டபாதராகவும், விஷ்ணுவும் ஆதிசேடனும் சங்கரிடணர் பதஞ்சலியாகவும், பிரமதேவன் மாணாக்கனாகவும், அவதரித்து பௌத்தர்களை யழித்துவிட்டதாக வியாசர் சொன்னாரென் றெழுதி வைத்துக் கொண்டு தங்களுக்குள் ஒவ்வொருவரை ஜகத்குரு சங்கராச்சாரி பரம்பரையோரெனப் பல்லக்கிலேற்றி பணஞ்சம்பாதிக்கும் எளிதான வழியைத் தேடிக்கொண்டார்கள். சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்களின் தேசநிறம் அதிக வெளுப்பின்றியும், அதிகக் கருப்பின்றியும் மேகநிறம் போன்றதா யிருந்தது கொண்டு மேகவருணனென்றும், கருப்பனென்றும், நீலகண்டனென்றும் வழங்கி வந்தது மன்றி அன்பே வோருருவாகத் தோன்றினாரென்று அவரை சிவனென்றும் சிவகதி நாயகனென்றும் வழங்கி வந்தார்கள். புத்தபிரான் பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தை தகனஞ் செய்தபின்னர் அச்சாம்பலை புத்த சங்கத்தோர்களும் பெளத்த வரசர்களும், பௌத்த வுபாசகர்களும் எடுத்து வைத்துக் கொண்டு அவற்றிற்கு மகாபூதி யென்னும் பெயரளித்து அதிகாலையிலெழுந்து குருவை சிந்தித்து நீதி வழுவா நடையில் நடப்பதற்காகத் தங்கடங்கள் நெற்றிகளில் புத்த, தன்ம, சங்கமென மூன்று கோடு களிழுத்துப் பூசி வந்ததுடன் அவரது எக சடையை யுங் கத்திரித்து வெள்ளி கூடுகளிலும், பொன் கூடுகளிலும் அடக்கி வைத்து லய அங்கமென்றும், அங்கலயமென்றும், இலங்கமென்றுங் கூறி தங்கள் கழுத்துகளிலுங் கட்டிக் கொண்டார்கள். சித்தார்த்தரை தகனஞ் செய்த மகாபூதியென் னுஞ் சாம்பல் முகிந்து விட்ட போது அவ்வழக்கம் மாறாது நெற்றியிலிடுவதற்கு எங்குங் கிடைக்கக்கூடிய சாணச்சாம்பலை விபூதியென்று வழங்கிவந்தவற்றை சில பெளத்த வுபாசகர்கள் எங்குங் கிடைக்கக்கூடிய சாம்பலை நெற்றியி லணைவதும் பல பௌத்த வுபாசகர்கள் மகாபூதி யென்னும் சாம்பல் தீர்ந்து விட்டவுடன் நெற்றியில் ஒன்றும் பூசாமலும் நிறுத்திவிட்டார்கள். இவற்றைக் கண்ணுற்றுவந்த வேஷப்பிராமணரு ளொருவர் நீலகண்ட சிவாச்சாரியென்று தோன்றி சிவனென் னும் ஓர் தெய்வமுண்டென்றும், அவருக்கு மடியிலோர் மனைவியும், சிரசிலோர் மனைவியும் உண்டென்றும் என்றுந் துடை மீதிருக்கப்பட்ட மனைவிக்கு யானைமுகப் பிள்ளையொன் றும், ஆறுமுகப் பிள்ளையொன்றும் தனது வியர்வையினா லுண்டு செய்த வீரபத்திரனென்னும் பிள்ளையொன்றும் உண்டெனுங் கதைகளை வகுத்துக் கொண்டு காலத்தைக் குறிப்பதற்கு சமயங்களென்று வகுத்துள்ள மொழியையும் தன்னையறிந்தடங்குவதற்கு சைவமென்று வகுத்த மொழியையும் எடுத்துக்கொண்டு சிவனைத் தொழுவோர்கள் யாவரும் சைவ சமயத்தோரென வகுத்து நூதன சமயமொன்றையுண்டு செய்து அதனாதரவால் சில சோம்பேறி சீவனங்களையுண்டு செய்துக் கொண்டார்கள். அது எத்தகைய சீவனங்களென்னில் : இந்திரர்தேச முழுவதும் இந்திரராம் சித்தார்த்தரது உருவம் போன்ற யோகசயன நிருவாண சிலைகளும், யோக சாதன சிலைகளும், போதனாரூப சிலைகளுஞ்செய்து அந்தந்த மடங்களில் ஸ்தாபித்து வைத்துக்கொண்டு தங்கடங்கள் தாய் தந்தையர் இறந்துவிட்ட பின் அவர்களது அன்பு மாறாது அவர்களது இறந்த நாளைக் கொண்டாடி வந்தது போல் சத்திய சங்க சமணமுநிவர்களும், உபாசகர்களும் மற்றும் பௌத்த குடிகளும் புத்தபிரான் பிறந்த நாளையும், அவராசை துறந்த நாளையும் அசோக மரத்தடியில் சோகமற்று நிருவாணமுற்ற நாளையும், காசி கங்கக்கரையில் சுயம் பிரகாசப் பரிநிருவாணம் பெற்ற நாளையும் மிக்க வன்புடனும் ஆனந்தத்துடனுங் கொண்டாடி அவரது போதனா வுருவங்களை நோக்குங்கால் நீதி போதனைகளை சிந்தித்தும், அவரது யோகசாதன உருவங்களை நோக்குங்கால் தங்கடங்கள் யோக சாதனங்களில் நிலைத்தும், நீதிநெறி ஒழுக்கங்களில் சுகித்திருந்தார்களன்றி அவரது வுருவச்சிலைகளை நோக்கி எங்களுக்கு தனங்கொடுக்க வேண்டும், தானியங் கொடுக்க வேண்டும், சந்ததி கொடுக்க வேண்டும், பிணிகளை நீக்க வேண்டும், மோட்சமளிக்க வேண்டுமென சிந்தித்து அச்சிலைகளுக்குப் பூசை நெய்வேத்தியஞ் செய்யமாட்டார்கள். காரணமோவென்னில், புத்த தன்மத்தின்படி தனம் வேண்டியவர்கள் வித்தையையும், புத்தியையும் பெருக்கி தங்களது விடாமுயற்சியால் தனம் சேகரிக்க வேண்டுமேயன்றி யெந்த தேவனுந் தனங்கொடுக்க மாட்டார். தானியம் வேண்டுவோர் விடாமுயற்சியால் பூமியைப் பண்படுத்தி நீர்வள வழிகளைத் தேடி பயிர்களைப் பாது கார்த்து கதிருகளை யோங்கச்செய்து தானியத்தைப் பெறவேண்டுமேயன்றி யெந்த தேவனுந் தானியங் கொடுக்கமாட்டார். சந்ததி வேண்டுவோர் புருஷர்களுக்குள்ள சுக்கில தோஷங்களையும், இஸ்திரீகளுக்குள்ள சுரோணித தோஷங்களையும் நீக்கிக்கொண்டால் சந்ததியுண்டா மேயன்றி யெந்த தேவனும் சந்ததி கொடுக்கமாட்டார். தங்களுக்குத் தோன்றும் பூர்வ கன்ம வியாதியாயினுந் தங்களாலேயே தாங்கள் தேடிக்கொண்ட வியாதியாயினும் அவற்றின் செயல்களையுந் தோற்றங்களையு முணர்ந்து தங்களுக்குள் ஒடுங்கித் தாங்களே யப்பிணிகளை ஓடதிகளால் நீக்கிக்கொள்ள வேண்டுமேயன்றி யெந்த தேவனும் பிணிகளை நீக்கமாட்டார். துக்கமென்னும் நரகத்தை யொழித்து சுகமென்னும் மோட்சமடைய வேண்டியவர்கள் தங்களுக்குள்ள இராகத்துவேஷ மோகமென்னும் காம வெகுளி மயக்கங்களை யொழித்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை யென்னு முப்பற்றுக்களை யறுத்து சாந்தம், அன்பு, யீகை யென்னும் பற்றற்றான் பற்றுக்களில் நிலைத்தவர்களுக்கே மோட்ச சுகமாம் நித்திய வாழ்க்கைக் கிடைக்குமேயன்றி யெந்த தேவனும் மோட்சங்கொடுக்கமாட்டார். இஃது பௌத்த தர்மப் பிரியர்கள் ஒவ்வொரு வருள்ளத்தும் நிறைந்துள்ள தன்மமாதலின் வேஷப்பிராமணர்கள் நூதனமாக வெவ்வேறு சிலைகளமைத் துள்ள சிவாலயங்களில் பூர்வக்குடி களை வந்து பூசை நெய்வேத்தியம் செய்யும்படியாகவும், தொழும் படியாகவும் போதிக்குங்கால் எக்காலு மவ்வகை பூசை நெய்வேத்தியஞ் செய்யாதவர்களாதலின் திகைத்து நிற்பதும், வேஷப் பிராமணர்கள் கூறிய வண்ணம் தேங்காய் பழம் தட்சணைக் கொண்டுவரா திருப்பதுமாகியக் குடிகளின் குணானுபவங்களை யறிந்த வாரியர்கள் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சிவாலயங்களுள் பூர்வகாலத்தில் புண்டரீக பூரியென்றும், தற்காலம் பூரியென்றும் வழங்கும்படியான வியாரத்துள் தங்கியிருந்த சமண முநிவர்களை தங்கள் வலைக்குட்பட்ட சிற்றரசர்களைக் கொண்டு விலக்கிவிட்டு, அவற்றுள் தங்களுக்குப் பிரியமான சிலைகளை யடித்து கூடமத்தியிலமைத்து அதனடியிற் காந்தக்கற்களைப் புதைத்து இரும்பு தகடுகளினால் தட்டுகள் செய்து குடிகளை தேங்காயுங் கனிவர்க்கங்களுந் தட்சணை தாம்பூல புட்பமும் கொண்டு வரச்செய்து தாங்கள் செய்து வைத்துள்ள இரும்புத்தட்டில் வைத்து குடிகளின் கைகளிற் கொடுத்து நீங்களித்தேவனை நோக்கி வேண்டிய வற்றைக் கேளுங்கள். உங்கள் மீது அத்தேவனுக்குப் பிரியமாயின் நீங்கள் கொண்டுவந்துள்ள பூசை திரவியங்களை உடனே யிழுத்துக் கொள்ளுவார். உங்கள் மீது பிரியமில்லா விடின் இழுத்துக் கொள்ளமாட்டாரென்று வேஷப் பிராமணர்கள் கூறவும் அவற்றைக் கேட்டுக்கொண்ட குடிகள் இரும்புத்தட்டில் வைத்துள்ள தேங்காய்ப்பழ முதலியவைகளை யெடுத்து காந்தம் புதைத்து வைத்துள்ள சிலாரூபங்களின் அருகிற் செல்லுவதற்கு முன் காந்தக்கல் இரும்புத் தட்டுகளை யிழுத்துக் கொள்ளும் போது கல்வியற்றப் பேதைக்குடிகள் பயந்து வேஷப்பிராமணர்கள் வாக்கை தெய்வ வாக்கென் றெண்ணி பூர்வ சத்தியச் செயல்களை மறந்து அசத்தியச் செயல்களிலாழ்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு சுட்டுத்தின்னும் படு பாவிகளின் சேர்க்கையால் கொலைத்தொழிலைக் கூசாமற் செய்யவும், அகிம்சாதன்மத்தை மறக்கவு மாரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் வரைந்து வைத்துக்கொண்டுள்ள கட்டுக்கதைகளில் அவர்களுடைய ரிஷிகள் திருடுவதற்குப் போம் போது நாய் குலைக்குமானால் அதன் நாவைக் கட்டுவதற்கு மந்திரஞ் செய்வதாகக் குறிப்பிட்டு வழங்கி வந்தவர்களாதலால் அவர்களையடுத்த இத்தேசக் குடி களுங் கூசாமல் திருட வாரம்பித்துக்கொண்டார்கள். அவர்களேற்படுத்திக்கொண்டுள்ள தேவதாக் கதைகளில் தேவர்களே அன்னியர் தாரங்களை ஆனந்தமாக யிச்சித்தக் கதைகளை எழுதிவைத்துக்கொண் டுள்ளவர்க ளாதலின் அவர்களை யடுத்த இத்தேசத்தோரும் அன்னியர் தாரமென்னும் அச்சமின்றி துற்செய்கையிற் பிரவேசிக்க வாரம் பித்துக்கொண்டார்கள். பொய்யைச்சொல்லியே வஞ்சிப்பதும் பொருள் பரிப்பதுமாகிய சோம்பேறி சீவனத்தையே மேலாகக் கருதி செய்து வந்தவர்களாதலின் அவர்களை யடுத்த வித்தேசக் குடிகளும் தங்களுக்குள்ளிருந்த வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் யாவையு மறந்து வஞ்சினத்தாலும், சூதினாலும், பொய்யாலும், கஷ்டப்படா சோம்பலாலும் பொருளை சம்பாதித்து சீவிக்கும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் சுறாபானமென்னும் மயக்க வஸ்துவை யருந்தி மாமிஷங்களைச் சுட்டுத்தின்று பௌத்தர்களால் மிலேச்ச ரென்னும் பெயரும் பெற்றவர்களாதலின் அவர்களையடுத்த வித்தேசக் குடிகளும் மது மாமிஷமருந்தி மதோன்மத்தராகும் வழிகளுக் குள்ளாகிவிட்டார்கள். ஆரியர்களின் பிராமண வேஷங்கண்டு இத்தேசத்து ஆந்திரர்கள் பிராமண வேஷங் கொள்ளவும் ஆந்திரர்களைக்கண்டு மராஷ்ட்டகர்கள் பிராமண வேஷங்கொள்ளவும், மராஷ்ட்டகர்களைக்கண்டு கன்னடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும், கன்னடர்களைக் கண்டு திராவிடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும் ஆகிய மாறுபாடுகளால் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும் கொள்ளல் கொடுக்கலற்றும் உண்பினம் உடுப்பின மற்றும் ஒருவரைக் கண்டால் ஒருவர் சீரும் வேஷப்பிராமணப் பிரிவினை விரோதங்கள் போதாது தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி வித்தியா விரோதங் களாலும், விவசாய விரோதங்களினாலும் ஒன்றுக் கொன்று சேராததினாலும், ஒருவர் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காததினாலும் பலவகைப் பிரிவினைகளும் ஒற்றுமெய்க் கேடுகளு முண்டாகி பெளத்த சங்கங்க ளழியவும், பௌத்த தன்மங்கள் மாறுபடவும், பெளத்த தன்மத்தை சிரமேற்கொண்டு நீதிநெறி வொழுக்கத்தினின்ற மேன் மக்கள் இழிந்த சாதியோர்களென்று தாழ்த்தப்படவும், நாணமற்ற வாழ்க்கை யிலும், ஒழுக்கமற்றச் செயலிலும், காருண்யமற்ற புசிப்பிலும், பேராசைமிக்க விருப்பிலு மிகுத்த மிலேச்சக் கீழ்மக்கள் உயர்ந்த சாதிகளென் றேற்படவு மாகிவிட்டபடியால் இந்திரரது தேச சிறப்புங்குன்றி ஒற்றுமெய்க்கெட்டு வித்தைகளும் பாழடைந்து வருங்கால் இத்தேசக் குடிகள் இன்னுங் கெட்டுப் பாழடை வதற்கும் வேஷப்பிராமணர்கள் விருத்தி பெருவதற்கும் கல்லுகளைக் கடவுளெனத் தொழுது கற்ற வித்தைகள் யாவையு மறந்து கற்சிலைகளே தங்களுக்கு மோட்சங்கொடுக்கும் கற்சிலைகளே தங்களுக்கு சீவனங்கொடுக்கும் கற்சிலைகளே தங்கள் பிணிகளைப் போக்குமென்னும் அவிவேக நம்பிக்கை யில் நிலைத்து இன்னும் அவிவேகிகளாவதற்கு மற்றுமோர் தந்திரஞ் செய்ததாக அஸ்வகோஷரே வரைந்திருக்கின்றார். அவை யாவெனில், சோணாட்டி லோர் சிலாலயங்கட்டி குழவிபோற் கல்லிலடித்து மத்தியாந்தனமிட்டு கட்டிட மேற்பரப்பில் தொளாந்திரங்கட்டி அதனுள் நீர் வார்த்தால் குழவி போன்ற கல்லிலுள்ள ரந்திரத்தின் வழியாக வெளி தோன்றும்படி செய்து இனிப்பும், வாசனையும், பொருந்திய ரசங்கூட்டி தொளாந்திரத்தில் வார்த்து குடிகளை நோக்கி இதோ பாருங்கள். சுவாமியின் சிரசினின்று அமுதம் வடிகின்றது. அவற்றைப் புசிப்பீர்களாயின் உங்கள் தேகத்தில் வியாதியற்று வாழ்வதுடன் சகல வசிகரமுண்டாகி எங்கு சென்றாலும் சுகம்பெற்று வாழ்வீர்கள். நீங்கள் கேட்டயாவுங் கிட்டும் சுருக்கத்தில் மோட்சமும் பெறுவீர்களென்று கூறியவுடன் கல்வியற்றக் குடிகளுக்கு தளத்தின் மீதே தொளாந்திரத்தினின்று இனிய நீர் வரு முபாயந்தெரியாது அவ்வுருசியாய நீரை யருந்தினோர் யாவரும் அதன் இனிப்பான ருசியைக் கண்டும் அவை யெக்காலும் வடிந்துக்கொண்டே யிருக்கும் ஆட்சரியத்தைக் கொண்டும் அங்குள்ளக் குடிகள் யாவரும் மயங்கி கற்சிலைகளில் யாவோ சிரேஷ்டமுள்ள தென்று கருதி மேலும் மேலுங் கல்லை பூசிக்கவும், விழுந்து விழுந்து தொழுவதற் காரம்பிக்கவுமாகிய அசத்திய செயலும், மூட பக்தியும் பெருகி தாங்களே கற்சிலைகளை யுண்டு செய்தது மல்லாமல் தாங்களே அதை மெய்க்கடவுளென்றும் நம்பி தொழுவதற்கும் ஆரம்பித்துக்கொண்டார்கள் ஆரியர்களோ காமியமுற்ற சிற்றரசர்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்தி செய்து கொண்டது போல் நந்தனென்னும் அரசனையும் வஞ்சிக்க அவன் தேசத்தை நாடி, புருஷர்கள் பூணு நூலும் காவியுமுள்ள பிராமணவேஷ மணிந்தும், இஸ்திரீகள் தாங்கள் சுயதேசத்தில் கால்செட்டை யணிந்தவர்கள் இத்தேசத்தில் வந்து குடியேறி இத்தேசத்துப் பெண்கள் கட்டும் பிடவைகளைப்போல் கட்டிக்கொண்ட போதினும் அதைக் காற்செட்டைக்குப் பதிலாக கீழ்ப்பாச் சிட்டுக் கட்டிக்கொண்டு பெண்களுடன் செல்லுங்கால் தங்களில் ஓர் மூப்பனைப் பல்லக்கிலேற்றிக்கொண்டு புன நாட்டிற்குக் கிழக்கே வாதவூரென்னும், தேசத்தை யரசாண்டு வந்த நந்தனென்னும் அரசனிடம் வந்து சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி ஆசிகூறினார்கள். அவர்களம் மொழிகளைக் கேட்டவுடன் யேதோ யிவர்கள் விவேகமிகுத்தப் பெரியோர்களா யிருக்க வேண்டு மென்றெண்ணி திவ்யாசனமளித்து வேண வுபசரிப்பு செய்து வருங்கால் சமண முநிவர்களும் உபாசகர்களு மறிந்து அரசனிடஞ் சென்று இராஜேந்திரா தற்காலந் தங்களிடம் வந்திருக்கும் பிராமண வேஷதாரிகளை யதார்த்த அறஹத்துக்க ளென்றாயினும் சமண முநிவர்க ளென்றாயினும் தென்புலத்தா ரென்றாயினும் கருத வேண்டாம். சில காலங்களுக்கு முன்னிவர்கள் சிந்தூரல் நதிக்கரை யோரமாக வந்துக் குடியேறி இத்தேசத்தோரிடம் யாசக சீவனஞ் செய்துக்கொண்டே இத்தேச சகடபாஷையாம் சமஸ்கிருதங் கற்றுக்கொண்டு பூர்வக்குடிகள், அந்தணர், தென்புலத்தார், சமணமுநிவரென்று வழங்கப் பெற்றுப் பெரியோர்களைக்கண்டவுடன் பய பக்தியுடன் ஆசனமளித்து வேண வுதவி புரிந்து வருவதை யாசகஞ் செய்துக்கொண்டே நாளுக்கு நாள் பார்த்து வந்தவர்கள் சமணமுநிவர்களுடையவும், அந்தணர்களுடையவும், செயல்கள் யாதென்றறியா திருப்பினும் அவர்களைப் போல் வேஷமிட்டு தங்கள் சீவனத்திற்காய சுலோகங்களை யேற்படுத்திக்கொண்டு பிள்ளை பெண்சாதிகளின் சுகத்தை யநுபவித்துக்கொண்டே தங்களை அந்தணர்களென்றும், தென்புலத்தோரென்றும் பொய்யைச் சொல்லிக் கல்வியற்றக் குடிகளையும், காமிய முற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து தந்திர சீவனஞ்செய்து வருகின்றார்கள். தாங்களுமிவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீரென்று சொன்னவுடன் அரசன் திடுக்கிட்டு மிக்க ஆட்சரியமுடையவனாகி பெண் மாய்கையிற் சிக்காதிருந்தவனாதலின் அவர்களை யோராச்சரிய வுருவகமாகக் கொள்ளாமல் அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டு மென்னும் அவாவுடையவனாகி புருசீகர்களின் அருகிற் சென்று யதார்த்த வந்தணர்களைக் கண்டவுடன் கைகூப்பி சரணாகதி கேட்பது போல் வணங்கினான். அரசன் கைகூப்பி சரணாகதி கேட்பதின் ரகசியார்த்தமறியா வேஷப்பிராமணர்கள் தங்கள் கூட்டத்தோர்களுட னெழுந்து ஒருகரந் தூக்கி யாசீர்வதித்தார்கள். புலன் தென்பட்டோராகும் தென்புலத்தார் போல பெண்சாதி பிள்ளைகளுடன் யாவரும் ஒரு கரந்தூக்கியதைக் கண்டவரசன் சற்று நிதானித்துத் தாங்கள் யார், யாது காரணமாக இவ்விடம் வந்தீர்களென்று வினவ நாங்கள் பிராமணர்கள் தங்களுடையப் பெயருங் கீர்த்தியு மித்தேசத்தி லென்றும் விளங்கும்படி செய்வித்ததற்கு வந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட வரசன் அவர்களை நோக்கி வந்துள்ள நீங்களெல்லோரும் பிராமணர்களா அன்றேல் தனிமெயாக பல்லக்கில் உட்கார்ந்திருக்கின்றாரே அவர்மட்டிலும் பிராமண ராவென்று வினவினான். அவற்றிற்கு மாறுத்திரமாகப் புருசீகர் கள் நாங்களெல்லவரும் பிராமணர்களே யென்று கூறினார்கள். நீங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சகல சுகபோகங் களையும் அனுபவித்துக்கொண்டு எல்லவரும் பிராமணர்க ளென்றால் உங்கள் வார்த்தைகளை யெவ்வகையால் நம்புகிறது. இதனந்தரார்த்தங்களை யேதேனும் சாஸ்திரங்கள் விளக்குகின் றதா வென்று கேட்க பூர்வத்தில் எங்களைப்பற்றி ஓர் பெரியவர் சில ரிஷிகளுக்கு மனுதன்ம சாஸ்திரமென்னு மோர் இஸ்மிருதி சொல்லி வைத்திருக்கின்றார். அதில் உலக வுற்பத்தியைப்பற்றி பிரமத்தினிடமிருந்து தங்க வடிவமான வோர் முட்டையுதித்து இரண்டு பாகமாகி மேற்பிரிவு வானமாகவும், கீழ்ப்பிரிவு பூமியாகவும் தோன்றி அதை யாளுதற்கு பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணனும், புஜத்திலிருந்து க்ஷத்திரியனும் துடையிலிருந்து வைசியனும் பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்தார்களென்று குறிப்பிட்டிருக்கின்றவைகளில் முகத்திற் பிறந்த பிராமணர்களாகிய நாங்களே சிறந்தவர்களென்று கூறியதை அரசன் கேட்டு இதனந்தரார்த்தத்தைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று மடாதிபர்களாம் சமண முநிவர் களைத் தருவித்து புருசீகர்கள் சொல்லிவந்த சகல காரியங்களையுங் கூறி அவைகளின் அந்தரார்த்தத்தை வினவிய போது மடாதிபர்கள் சந்தோஷ மடைந்து இராஜேந்திரா மற்றுமுள்ள தேசத்தரசர்களும் இத்தகைய விசாரணைப் புரிந்திருப்பார் களாயின் புருசீகர்களின் பிராமணவேஷம் சகல குடிகளுக்குந் தெள்ளற விளங்கிவிடுவதுமன்றி இம்மிலேச்சர்களுந் தங்கள் சுயதேசம் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அத்தகைய விசாரணை யின்றி அவர்களது ஆரியக் கூத்திற்கு மெச்சி அவர்கள் போதனைக்கு வுட்பட்டபடியால் வேஷப்பிராமண மதிகரித்து யதார்த்த பிராமண மொடுங்கிக்கொண்டே வருகின்றது. ஆதலின் தாங்கள் கிருபை கூர்ந்து பெரும் சபைக்கூட்டி இவ்வாரியக் கூத்தர்களையும் மடாதிபதிகளாம் சமண முநிவர்களையுந் தருவித்து விசாரணைப் புரிந்து யாதார்த்த பிராமணத்தை நிலை நாட்ட வேண்டுமென்றார்கள். அவ்வாக்கை யானந்தமாகக் கொண்டவரசன் பௌத்த சங்காதிபர்களையும் புருசீகர்களையும் சபா மண்டபத்திற்கு வந்து சேரவேண்டுமென வாக்கியாபித்தான். நந்தனென்னும் அரசன் உத்திரவின்படி வாதவூர் கொலு மண்டபத்திற்கு சங்காதிபர்களும், புருசீகர்களும் வந்து கூடினார்கள். அரசனும் விசாரணை புருஷ சபாபதி யாக வீற்றிருந்தான். அக்கால் பேத வாக்கியங்களை கண்டுணர்ந்த சாம்பவனாரென்னும் பெரியவ ரொருவரையுங் கூட்டி வந்து சபையில் நிறுத்தினார்கள். அப்பெரியோனைக் கண்டப் புருசீகர்கள் யாவரும் ஏகோபித்தெழுந்து நந்தனை நோக்கி அரசே, இச்சபையிலிதோ வந்திருப்பவர்கள் பறையர்கள் சுடுகாட்டிற் குடியிருந்து கொண்டு பிணங்களுக்குக் குழிகள் வெட்டி சீவனஞ் செய்து வருவதுமல்லாமல் செத்த மாடுகளையு மெடுத்துப் போய் புசிப்பவர்கள். இவர்களை சபையில் சேர்க்கவுங்கூடாது தீண்டவு மாகாதெனப் புருசீகர்கள் யாவருங் கூச்சலிட்டபோது அரசன் கையமர்த்தி புருசீகர்களை நோக்கி இத்தேசத்துப் பூர்வ மடாதிபர்களும் சங்கத்தவர்களும் கொல்லாவிரதம் சிரம்பூண்டவர்களு மாகியப் பெரியோர்களை நீங்கள் யாவரும் ஒன்றுகூடி கேவலமாகப் பேசுவதை நோக்கில் சிலர் சடைமுடி வளர்த்தும் சிலர் மொட்டையடித்துங் கருத்த தேகிகளாய் சாதனத்தால் சாம்பல் பூர்த்துள்ள படியால் அவர்களை யிழிவாகப் பேசித் தூற்றுவதுடன் செத்தமாட்டைப் புசிப்பவர்களென்றுங் கூறும் உங்கள் மொழிகளைக் கொண்டே நீங்கள் உயிருள்ள மாடுகளை வதைத்துத்தின்பவர்களாக விளங்குகின்றது. இத்தகைய விஷயங்களைப்பற்றி யெமக்கோர் சங்கையுங் கிடையா குழிவெட்டு வோனா யிருப்பினும், அரசனா யிருப்பினும், ஏழையாயிருப்பினும், கனவானாயிருப்பினும் பேதமின்றி சமரசமாக விச்சபையில் வீற்று எமக்குள்ள சங்கையை நிவர்த்தித்தல் வேண்டும். அவை யாதெனில், பெண்சாதிப் பிள்ளைகளுடன் பெருங் கூட்டத்தோராகிய நீங்கள் யாவரும் பிராமணர்களா, பெண்சாதி பிள்ளைகளுடன் சுகபோகங்களை யநுபவித்துக்கொண்டு பொருளிச்சையில் மிகுத்தவர்களை பிராமணர்களென்று கூறப்போமோ, உலக பாச பந்தத்தில் அழுந்தியுள்ளவர்களுக்கும் பிராமணர்க ளென்போருக்கும் உள்ள பேதமென்னை, எச்செயலால் நீங்கள் உயர்ந்தவர்களானீர்கள் இவற்றை தெளிவாக விளக்க வேண்டு மென்று கூறினான். அவற்றை வினவியப் புருசீகருள் சேஷனென்பவ னெழுந்து சாம்பவனாரை நோக்கி நீவிரெந்தவூர் எக்குலத்தா ரென்றான். அதற்கு சாம்பவனார் மாறுத்திரமாக வந்தவூர் கருவூர், சொந்த குலம் சுக்கிலமென்றார். இத னந்தரார்த்தம வேஷப்பிராமண சேஷனென்பவனுக்கு விளங்காமல் சுடலையில் குழிவெட்டித் தொழிலும், சாங்கையன் குலமுமல்லவா வென்றான். அதற்கு சாம்பவனார் நான் குழிவெட்டியானல்ல ஞானவெட்டியான். சாங்கைய குலத்தானல்ல சாக்கைய குலத்தானென்றார். சாக்கை யர் குலத்தாரென்றால் அவர்களுற்பத்தி யெவ்வகை யென்றான். கலிவாகு சக்கிரவர்த்தியால் ஒலிவடிவாக வகுத்துள்ள கணிதங்களை ஆதிபகவனருளால் வரிவடிவாக வியற்றி வருங்கால போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சோதிடர் களை வள்ளுவரென்றும், சாக்கையரென்றும், நிமித்தகரென்றும் வகுத்துள்ளவர்களின் வம்மிஷ வரிசையோனென்றர். அக்கால் அரசன் சேஷனென்பவனை நோக்கி ஐயா மடாதிபதிகளைத் தாங்கள் சாங்கைய குலத்தவர்களல்லவா வென்றீர்களே அதன் காரணமென்ன அவற்றை விளக்கு வீராக வென்றான். சேஷனென்பவ னெழுந்து ஒரு சமஸ்கிருத சுலோகத் தைச்சொல்லி, கலைக்கோட்டார் மான் வயிற்றிலும், கௌசிகர் காசி ராஜனுக்கும், ஜம்புகர் நரியின் வயிற்றிலும், கௌதமர் பசுவின் வயிற்றிலும், வால்மீகர் வேடச்சி வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்மடகதி வயிற்றிலும் வசிட்டர் தாசியின் வயிற்றிலும், நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும், கௌண்டன்னியர் முண்டச்சி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும், மாண்டௌவியர் தவளை வயிற்றிலும், சாங்கையர் பறைச்சி வயிற்றிலும், கார்க்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும் பிறந்தவர்க ளென்பதாக மனுஸ்மிருதி கூறுகிறபடியால் இவர்களை பறைச்சி வயிற்றிற் பிறந்த சாங்கிய குலமல்லவா வென்று கேட்டேனென்றான். உடனே அச்சபையிலிருந்த நத்தனாரென்பவ ரெழுந்து இராஜேந்திரா இந்த புருசீக தேசத்தார் சோழபதியில் பிராமணவேஷ மணிந்து குடிகளை யேமாற்றிக் கொண்டு வருவதை மடாதிபர்களு மவர்களைச் சார்ந்த உபாசகர் களு மறிந்து இவர்களை யடித்துத் துரத்து வதுமல்லாமல் இவர்க ளணைந்துள்ள பிராமண வேஷ விவரங்களையும் பறைந்து வந்த தினால் தங்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மடாதிகளைக் காணும் போது தங்களது பொய் வேஷங்களைக் குடிகளுக்குப் பறைகிறவர்களென்றும், தங்கள் பொய்ப் போதனைகளுக்குள் சேராதப் பராயர்களென்றும், பகர்ந்து வந்தவர்கள் மடாதிபர்களைத் தங்கள் முன்னிலையிற் கண்டவுடன் பறையரென்றும், வெட்டி யாரென்றும் இழிவுபடுத்த வாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது இவர்களது பிராமண வேஷங்களையும், தந்திர வுபாயங்களையும், குடிகளுக்குப் பறைபவர்கள் பறைபவர் களெனக் கொடுந்தமிழில் பறைந்துகொண்டே திரிந்தார்கள். இரண்டாவது பறைவோர், பறையோரென வழங்கி வந்தார்கள். மூன்றாவது பறையர்கள் யறையர்களென்று சொல்லித் திரிந்ததுடன் மடாதிபர்களையும், சாக்கையர்களையும் பறையர்க ளென்று இழிவுபடக்கூறும்படித்தங்களை சுவாமி சுவாமியெனத் தொழுதும் திரியும் அறிவிலிக் குடிகளுக்குங் கற்பித்து இழிவுப்படுத்தி வந்தார்கள். அவற்றைக் கேள்வியுற்ற மடாதிபர்கள் மிலேச்சர்களாம் ஆரியர்களை கர்வபங்கஞ் செய்யுமாறு ‘பறையனாவதேதடா பறைச்சியாவதேதடா இறைச்சி தோலெலும்பிலே யிலக்க மிட்டிருக்குதோ’ என்னும் வேண்டியப் பாடல்களைப் பாடி மிலேச்சர்களுடன் சம்மந்தப்பட்டுள்ள கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற வரசர்களுக்கும் விளங்கும்படி செய்து வருங்காலத்தில் பௌத்தர்கள் யாவருக்கும் இப்பறையர் களென்னும் பெயரை யளித்து பாழ்படச் செய்துவிட்டு ஆரியர்களது பிராமண வேஷத்தையும், அவர்களது பொய்மதக் கோஷத்தையும் பெருக்கிக்கொள்ளுவதற்காகத் தங்களையடுத்தக் குடிகளை யடுத்துப் பறைப்பாம்பு பாப்பாரப் பாம்பென்றும், பறைமயினா பாப்பார மயினாவென்றும், பறைப் பருந்து பாப்பாரப் பருந்தென்றும் சீவர்களுக்கில்லாப் பெயர்களை வழங்கச் செய்ததுமன்றி நாய்களிற் பறை நாய்ப் பறை நாயென மட்டிலும் வழங்கச்செய்து பறை நாயென்பதற்கு யெதிர் மொழியாய் பாப்பாரநாயென வழங்கினால் தங்களுக்குத் தாழ்ச்சி யுண்டாமெனக் கருதி பறை நாயென்னும் மொழியை மட்டிலும் வழங்கச்செய்து வருகின்றார்கள். யீதன்றி பெளத்த வரசர்களும், பெளத்த குடிகளும் சேர்ந்து வாசஞ்செய்து வருமிடங்களுக்கு சேரி, சேரி என வழங்கிவருவ தியல்பாம். அம்மொழியையே ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வாசஞ்செய்யு மிடங்களுக்கும் பறைச்சேரி யென்னும் பெயரைக் கொடுத்து தங்களைச் சார்ந்தவர்களால் வழங்கச் செய்துவிட்டுத் தாங்கள் சிந்தூரல் ஆற்றின் அக்கரையோரமாக வந்து மண்ணைத் துளைத்துக் குடியிருந்துக் கொண்டு இவ்விடம் வந்து பிச்சை யிரந்துண்ணுங்கால் தங்களை நீவிர் யாவரென்று கேட்போருக்கு அக்கரையோரத்தார், அக்கரை யோரத்தாரென வழங்கிவந்த மொழியையே ஆதாரமாகக் கொண்டு இப்போ திவர்க ளிங்குவந்து வாசஞ் செய்யுமிடங்களுக்கு அக்கரை யோரத்தாரென்னு மொழியை மாற்றிவிட்டு அக்கிர ஆரத்தார் அக்கிர ஆரத்தாரென வழங்கி வருகின்றார்கள். இத்தியாதி மாறுபாடுகளில் இப்பறையர்களென்னும் பெயர் சத்துருக்களாகியத் தங்களால் கொடுத்ததல்ல. பூர்வத்திலிருந்தே வழங்கி வந்ததைப்போல் ஓர் சமஸ்கிருத சுலோகமொன்றை யேற்படுத்தி வைத்துக்கொண்டு சமயம் நேர்ந்த யிடங்களில் அதை சொல்லிக்கொண்டே திரிகின்றார்கள். அவற்றை தாங்களே சீர்தூக்கி விசாரிக்க வேண்டியதென்று சொல்லிவிட்டு சேஷனென்பவனை நோக்கி ஐயா தாங்கள் சொல்லிவந்த சுலோகத்தின்படி மக்களாகும் மனிதருற்பவம மானின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும் உற்பவிப் பதுண்டோ, அத்தகைய வுற்பவங்கள் தற்கால மேதேனு முண்டா, எங்கேனுங் கண்டுள்ளாராவென் றுசாவியபோது யேதொன்றும் பேசாமல் மௌனத்தி லிருந்துவிட்டான். உடனே நத்தனார் அரசனை நோக்கி ஐயனே இவர்கள் கூறியுள்ள சுலோகத்தின் கற்பனை யெவ்வாரென்னில் ஜம்புக னென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை நரியின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கௌதமனென்னும் பெயருள்ள வோர் மனித னிருப்பானாயின் அவனை பசுவின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கார்கேய னென்னும் பெயருள்ள வோர்மனித னிருப்பானாயின் அவனை கழுதை வயிற்றிற் பிறந்தவனென்றும், மாண்டவ்யனென்னும் பெயருள்ளவன் ஒருவனிருப்பானாயின் அவனை தவளை வயிற்றிற் பிறந்தவ னென்றுங் கற்பித்துக் கூறியக் கட்டுக்கதை சுலோகத்துள் சாங்கயமென்னு மொழு அறுசமயங்களி லொன்றாதலின் அவர்களையும் பௌத்தர்களென்றறிந்து இவர்கள் கொடுத் துள்ளப் பெயரை மாறுபடுத்தி சாங்கயர் பறைச்சி வயிற்றிற் பிறந்தவரென்னும் மொழியையும் அதனுட் புகட்டி பறையனென்னும் பெயரைப் பரவச்செய்து வருகின்றார்கள். இவ்வாரியர்கள் தற்காலங் கூறிய வடமொழி சுலோகம் முற்றும் பொய்யேயாம். அதாவது மண்முகவாகு சக்கிரவர்த் திக்கும் மாயாதேவிக்கும் பிறந்தவர் கௌதமரென்றும், சௌஸ்தாவென்னு மாயனுக்கும், கோசலை யென்னும் இராக்கினிக்கும் பிறந்தவர் மச்சமுனியாரென்றும், பாடுகி யென்னுங் குடும்பிக்கும், சித்தலி யென்னு மாதுக்கும் பிறந்தவர் அகஸ்தியரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக்கக் கழுதை வயிற்றிலும், நாய் வயிற்றிலும், தவளை வயிற்றிலும் மனிதர்கள் பிறந்தாரென்னில் யார் நம்புவார்களென்று நகைத்தபோது அரசன் கையமர்த்தி சேஷனென்பவனை நோக்கி ஐயா இருஷிகளின் உற்பவங்களைக் கூறினீர்களே அவர்களுடைய சரித்திரங்களிலும் சிலதைச் சொல்லவேண்டுமென்று கேட்டான். புருசீகர்களாம் மிலேச்சர்களெழுந்து பிறந்த போதே இருஷிகளென்னும் பெயர் கொடுக்கத் தகுமா பிறந்து வளர்ந்து ஞான முதிர்ந்தபோது கொடுக்கத்தகுமாவென்பதை யுணராம லுளர வாரம்பித்த சங்கதிகள் யாவும் அரயன் மனதிற்கு ஒவ்வாதபடியால் நந்தனாரை நோக்கி இவைகளுக்குத் தாங்க ளென்ன சொல்லுகின்றீரென்றான். உடனே நத்தனா ரெழுந்து இராஜேந்திரா ஞானமின்ன தென்றும், ஞானிகளின்னாரென்றும், யோகமின்னதென்றும், யோகிகளின்னாரென்றும், குடும்ப மின்னதென்றும், குடும்பிக் ளின்னாரென்றும், இருடிச்சா மின்னதென்றும், இருஷீஸ்வர் ரின்னாரென்றும், முனைச்சர மின்னதென்றும் முநீச்சுர ரின்னாரென்றும், பிரம்மமண மின்னதென்றும், பிராமணா ளின்னாரென்றும், மகத்தவ மின்னதென்றும், மகாத்மாக்க ளின்னாரென்றும், பார்ப்பவை யின்னதென்றும், பார்ப்போர்க ளின்னாரென்றும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. அதற்காய சாஸ்திரங்களை வாசித்தவர்களுமன்று. அத்தகைய சாதனங்களிற் பழகினவர்களுமன்று. தந்திரோபாயமாக யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு பிராமணர் பிராமணரென தங்களுக்குத்தாங்களே சொல்லிக்கொண்டு வரும்படியான வார்த்தையும் அதற்குத் தக்க நடிப்பும் தங்கள் சீவன யேதுக்களுக்குத் தக்க வடமொழி சுலோகங்களையு மேற்படுத்திக்கொண்டு கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து பிச்சை யேற்றுண்பது மன்றி இருஷிகளி னுற்பத்தியை யெவ்வாறு வரைந்துகொண்டன ரென்னில் பூர்வ மெய்ஞ் ஞானிகளாகும் கௌதமர், கலைக்கோட்டார், மச்சமுணி, கார்க்கேயர், சௌனகர் முதலியவர்களின் பெயர்களைக் கொண்டே கௌதமர் பசுவின் வயிற்றிலும், கலைக்கோட்டார் மான் வயிற்றிலும் பிறந்தார்க ளென்னும் வடமொழி சுலோகங்களை வகுத்துக்கொண்டு மக்கள் சந்ததியில் புருடவகுப்பை முதற்கூறுவ தொழித்து பெண்களை முதற்கூறி வண்ணாத்தி வயிற்றிலும், வேடச்சி வயிற்றிலும், பறைச்சி வயிற்றிலும் பிறந்தார்களென் றேற்படுத்திக்கொண்டு வண்ணாத்தியென்னும் பெயரும், வேடச்சியென்னும் பெயரும் பூர்வத்திலிருந்து வழங்கி வருவது போல இப்பறையன் பறைச்சி யென்னு மொழியும் பூர்வ முதல் வழங்கி வருகிறதென்று ரூபித்து பௌத்த சங்கத்தோர்களையும், உபாசகர்களையு மிழிவுபடக்கூறி விவேகமிகுத்த மேன்மக்களைக் கீழ்மக்களாகவும், நாணா வொழுக்கினராகி பிச்சையேற்றுண்ணு மிலேச்சக் கீழ் மக்களாந் தங்களை உயர்த்தி தங்களது பிராமண வேஷத்தை மெய்ப்படுத்திக் கொள்ளுவதற்கே யிந்தசுலோகத்தை யேற்படுத்தி வைத்திருக்கின்றார்களென்று கூறியவுடன் அரசன் - திடுக்கிட்டு சேஷனென்பவனை நோக்கி ஐயா தாம்கூறிய “ஸம்ஸ்சம்பூதோ” வென்னும் வடமொழிக்கு தென்மொழியில் ’’பறைச்சி " யென்னும் பொருள் எவ்வகையாற் பெற்றிருக்கின் றது. அவற்றை விவரிக்க வேண்டுமென்று வினவினான். அவற்றை வினவிய புருசீகர்கள் மூலைக்கொருவராக வெழுந்து பலவாறு வுளருங்கால் சங்காதிபர் சாம்பவனாரெழுந்து நந்தனை நோக்கி அரசே, தன்னை ஆய்ந்தறியா அறிவிலிகளும், நிலையற்றவர்களும், வேத மொழியின் விவரமறியாதவர்களும், சீலமற்றவர்களும், நாணா வொழுக்கினர் களுமாகிய மிலேச்சர்கள் எம்மெய் நோக்கிப் பறையனென்றும், வெட்டுவோனென்றும் இழிந்தோனென்றுங் கூறிய விடும்பு மொழிகள் அவர்களது பொறாமெயாலும் பாகுத்தறிவற்றப் பாங்கினாலுங் கூறினார்களன்றி வேறன்று. சுக்கில சுரோணிதத்தா லுதித்த ஒவ்வோர் மனிதனும் தனக்குறைவால் குழி வெட்டவும், தனமிகுதியால் பல்லக் கேறவும், தனமும் பலமு மிகுத்தால் அரயனாகவும், தனமும் விவேகமு மிகுத்தால் ஞானியாகவும் விளங்குவான். அங்ஙனமின்றி பிச்சையேற்று நாணமறத் திரிவோனைப் பெரியோனென்றும், நாணமும் ஒழுக்கமும் உழைப்பு மிகுத்தோனைத் தாழ்ந்தவனென்றும் கூறும்படியான அவிவேகச் செயலால் பஞ்சஸ்கந்தங்களின் பாகுபாடுகளும், பஞ்ச விந்திரியக் கூறுகளும், திரிகரண சுத்தங்களும், முக்குணத்தின் ஒழிவுகளும், சகல மனுக்களுக்கும் பொருந்தவிருக்குமேயன்றி ஒருவருக்கொருவர் மாறுபட விளங்காது. இவற்றுள் ஒவ்வொரு மனிதனும் தனது துஷ்டச்செயலால் துட்டனென்றும், நற்செயலால் நல்லோனென்றும் அதாவது தீச்செயலால் தீயனென்றும், நற்செயலால் நியாயனென்றும் அழைக்கப்படுவான். தீயச்செயலுள்ளவர்களை நியாயரணு கார்கள். நியாயச்செயலுள்ளோருக்குத் தீய ரஞ்சுவார்கள். இது நீதி நூற்களின் போதனையும் சம்மதமுமாகும். அங்ஙனமின்றி நீதியும், நெறியும், வாய்மெயுமிகுத்தப் பெரியோர்களை தீயரென்றும் நீதியற்றும், நெறியற்றும், வாய்மெயற்றும் பொருளாசை மிகுதியால் நாண வொழுக்கினராயுள்ள மிலேச்சர்களை நாயரென்றுங் கூறித்திரியும் மாறுபாடுகளை விளக்கிவந்தும் அரசனுக்கு அவைகள் சரிவர விளங்காததினால் நத்தனாரை நோக்கி ஐயா இச்சபையில் தத்துவோற்பத்தி யோக்சாதனம், பஞ்சகல்ப முதலியவைகளை நான் தெரிந்து கொண்ட போதினும் வடமொழியில் பிராமணனென்று சொல்லும்படியான வார்த்தையி னுற்பவமும் அக்கூட்டத் தோரின் செயலும் எமக்கு விளங்காததினால் அவற்றை விளக்க வேண்டுமென்று வேண்டினான். உடனே நத்தனா ரெழுந்து இராஜேந்திரா அவைகள் யாவும் வடமொழியிற் றெளிவாக வரைந்துவைத் திருக்கின்றார்கள். யாங்களியாவரும் தென்மொழியிற் பழகிவிட்டபடியால் வடமொழியிலுள்ள பிராமண னென்னு மொழிக்குத் தென் மொழியில் அந்தணனென்று வகுத்திருக்கின்றார்கள். அவ்வந்த ணனென்னும் மொழியின் பெயரோவென்னில் காமக்குரோத லோபமற்று சாந்தம் நிறைந்து தண்மெயுண்டாகி சருவ சீவர்கள் மீதும் கருணைகொண்டு காக்கும் அறமிகுத் தோர்களையே அந்தணர்களென்று வகுத்திருக்கின்றார்கள். அத்தகைய குணசாதனன் கோடியில் ஒருவன் தோன்றுவதே மிக்கவரிதம். இதுவே தென்புலத்தாராம் அந்தணர்களின் செயலென்னப்படும். ஆனால் வடமொழியிலுள்ள பிராமண னென்னும் பெயர் பெண்டு பிள்ளைகளென்னும் பெரும் பற்றற்று இருபிறப்பாளர்களாகி மறுபிறப்பற்று பிரம்மணம் வீசும் பெரியோர்களுக்கே பிராமணர்களென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஜீவகாருண்யமற்று சகல பற்றுக்களும் பெற்று அன்பென்பதற்று தீரா வஞ்ஞானமுற்று வஞ்சகம் வெளிவீசும் பஞ்சைகள் யாவரையும் பிராமணர்களென்று சொல்லுவதற்காகாது. இவர்களோ பெண்டு பிள்ளைகளுடன் பிராமண வேஷமிட்டு பேதை மக்களை வஞ்சித்து பொருள் பரித்துத் தின்று வருகின்றார்கள். இவர்களது. கூட்டு ரவையும் இவர்களித் தேசத்திற் குடியேறிய காரணங்களையும், வங்கரால் முறியடிப்பட்டு சிந்தூரல் நதிக் கரை யோரமாக வந்துக் குடியேறி குமானிடர் தேசம் வந்தடைந்து யாசக சீவனத்தால் ஆரியக்கூத்தாடி பிச்சையேற் றுண்டு பிராமணவேஷ மடைந்த வரலாறுகளையுந் தெள்ளறத் தெளிந்துக்கொள்ள வேண்டுமாயின் பாண்டி மடத்தின் பூர்வ மடாதிபதிகளில் அஸ்வகோஷ ரென்பவரும், வஜ்ஜிர சூதரென்பவரும் பொதியைச்சாரலி லிருக்கின்றார்கள். அவர்கள் ளுக்குப் பல்லக்கையும் வேவுகர்களையு மனுப்பி வரவழைத்து இப்புருசீக தேசத்தோராம் ஆரியர்களின் பூர்வங்களை விசாரிப்பீர்களாயின் சருவ சங்கதிகளும் தெரிந்துக் கொள்ளுவீர்களென்று கூறியவுடன் அரசன் சந்தோஷித்து வேவுகர்களுக்கு வேண்டிய பொருளளித்து பல்லக் கெடுத்து போய் பொதியைச் சாரலிலுள்ள பெரியோர்களை யழைத்து வரும்படி வோலைச்சுருளளித்தான். வேவுகர்கள் ஓலைச்சுருளையும், பல்லக்கையு மெடுத்து பொதியைச்சாரலைச்சார்ந்து உத்தர மடத்தின் முகப்பில் வீற்றிருந்த பெரியோனாம் அஸ்வகோஷரைக் கண்டு வணங்கித் தாங்கள் கொண்டு சென்ற வோலைச்சுருளை அவரிடங் கொடுத்தார்கள். அச்சுருளை வாங்கி வாசித்த அஸ்வகோஷ ரெழுந்து அவ்விடமுள்ள தனது மாணாக்கர்களுக்குப் போதிக்க வேண்டிய போதனைகளை பூட்டி விட்டு பல்லக்கிலேறி நந்தனது சபாமண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அதனை யுணர்ந்த வரசனும் அமைச்சர்களுமெதிர்நோக்கி வந்து அஸ்வகோஷரை வணங்கி அரசாசனமீய்ந்து ஆயாசஞ் தீரச்செய்து சங்கதி யாவற்றையும் விளக்கி மறுநாட் காலையில் புருசீகர்களாம் ஆரியர்கள் யாவரையும் சபாமண்டபத்திற்கு வரும்படி யாக்கியாபித்தான். அரசன் உத்திரவின்படி மறு நாட் காலையில் ஆரியர்கள் யாவரும் வந்து கூடினார்கள். அஸ்வகோஷரும் சபாநாயக மேற்றுக்கொண்டார். அக்கால் நந்தனெழுந்து ஆரியர்களை நோக்கி ஐயா பெரியோர்களே, தாங்களும் தங்களுடன் வந்த பெண்களும் பிள்ளைகளுமாகிய தாங்கள் யாவரும் பிராமணர் களா. உங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர் வந்த காரணமென்னை, நீங்களெத்தேசத்தோர், இவ்விடம் வந்த காலமெவை, அவற்றை அனுபவக் காட்சி யுட்பட விளக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டேன். அதனைக் கேட்டிருந்த புருசீகர்கள் தங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர் வந்த காரணமறியாது பலருங்கூடி வடமொழியை சரிவரப் பேசத்தெரியாமலும், தென்மொழியை சரிவரப் பேசத்தெரியாமலும் உளருவதைக் கண்ட அஸ்வகோஷர் கையமர்த்தி ஆரியர்களே தாங்க ளிவ்விடம் எப்போது வந்து சேர்ந்தீர்கள். நீங்களெடுத்துக் கொண்ட பிராமண வேஷத்தால் சீவனம் சரிகட்டி வருகின்றதா வென்றார். அதற்கு யாதொரு மாறுத்திரமுஞ் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டார்கள். அவர்களின் மௌனத்தைக்கண். அஸ்வகோஷர் நந்தனை நோக்கி அரசே, இவர்களெடுத்துள்ள பிராமண வேஷமானது ஞான நூற்களைக் கற்று நன்குணர்ந்த மேன்மக்களுக்கு விளங்குமேயன்றி ஞானமின்னது அஞ்ஞானமின்னதென்று விளங்காதவர்கள் இவர்களது வேஷத்தைக் கண்டறிவது மிக்க வறிதேயாகும். காரணமோவென்னில் உலக வாசாபாசப் பற்றுக்களில் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையென்னும் மூவாசை களற்று தமோகுணம், ரசோகுண மிரண்டும் நசிந்து தண்மெயுண்டாகி சருவ சீவர்களுக்கும் உபகாரியாய் பிரமமணம் வீசியபோது பிராமணனென சகலருங் கொண்டாடுவதுடன் அரசர்கள் முதல் பெரியோர்வரை அவருக்கு வந்தன வழிபாடுகள் செய்து அவரது வேணச் செயலுக்குரியப் பொருளு முதவிசெய்து வருவது வழக்கமாகும். அவரது தெரிசனமாயினும், பரிசனமாயினு முண்டாயவுடன் சகலவுபாதைகளும் நீங்கும்படியான சிறந்த செயலாம் பிரமமணத்தால் பிராமணரென்றும் பெயர் தோன்றியதுமன்றி, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகியப் பரிநிருவாண இருவகைப் பிறப்பினைக்கொண்டு இரு பிறப்பாளரென்றும் அழைக்கப்பெற்றார்கள். உலகத்தில் தோன்றியுள்ள சகல சீவர்களும் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்வகைத் துக்கத்தில் வாதைப்படுவது பிரத்தியட்ச வனுபவமாதலின் அத்தகைய நான்குவகைத் துக்கத்தினின்று விடு பட்டு சதா விழிப்பிலும் நித்தியானந்தத்திலு மிருப்பவர்களாதலின் பாசபந்தத்திற் கட்டுபட்டுள்ள மனுக்கள் யாவரும் அவர்களை மகடபாஷையில் அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் பிராமணர் களென்றும், திராவிட பாஷையில் அந்தணர்களென்று மழைத்து அவர்களது அழியா சிறப்பால் அடி பணிந்தும் வந்தார்கள். இதோ வும்தெதிரில் பெருங்கூட்டமாகப் பெண்டு பிள்ளைகளுடன் வந்து நின்றுகொண்டு தங்கள் யாவரையும் பிராமணர்களென்று பொய்யைச்சொல்லி புலம்பித்திரியு மிக்கூட்டத்தோர் யாவரும் புருசீக தேசத்தோர்களாகும். சில நாட்களுக்கு முன்பு வங்கருக்கும், புருசீகருக்கும் பெரும் போருண்டான போது வங்கரால் புருசீகர் முறியடிப்பட்டு சிந்தூரல் நதிக்கரையோரமாம் குமானிட தேசஞ் சார்ந்து கரையோர மண்ணைத்துளைத்து அவைகளிற் குடியிருந்து கொண்டு இக்கரைக்கு வந்து ஆந்தரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு வகுப்பார்களிடம் யாசகம் செய்துக்கொண்டுபோய் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தார்கள். இத்தேசத்தோருள் பெரும்பாலும் வருணத்தில் கருப்பும், மானிறமும் பெற்றவர்களாதலின் புருசீகர்களின் மிக்க வெளுப்புள்ள தேகத்தைக் கண்டவுடன் ஆட்சரியமாகப் பிச்சையளிப்பதுடன் பெண்டு பிள்ளைகளுடன் மாறி மாறி ஒருகாலைத் தூக்கியாடும் ஆரியக் கூத்திற்கும் ஆனந்தித்து அல்லவரும் பிச்சையளித்து ஆதரித்து வந்தார்கள். இத்தகைய வாரியக்கூத்தாடி பிச்சையேற்பினும் காரியத்தின் மீது கண்ணுடையவர்களாய், தங்களுடைய தேசத்தில் பேசிவரும் துளுவபாஷையைப் பேசுவதைவிட்டு சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாந் தமிழினையும் பேச வாரம்பித்துக்கொண்டவுடன் அப்பாஷைகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டு வடமொழியின் சுலோகங்களைப் பொருளறி யாமற் சொல்லித் தங்கள் பிராமண வேஷத்தைப் பெருக்கிக் கொண்டே வருவதுடன் காமியமுற்ற சிற்றரசரை வசப்படுத்திக்கொண்டு அவர்களது பூமியில் அவ்வரசர்க ளுயிருடன் இருப்பினும் இறப்பினும் அவர்கள் பெயரால் ஒவ்வோர் கட்டிடங்களைக் கட்டி கற்களினால் அவர்களைப் போன்ற சிலைகளைச் செய்து அவர்கள் குடும்பத்தோரை வந்து தொழும்படிச் செய்வதுடன் யேனையோரையுந் தொழும்படிச் செய்து பிச்சையேற்றுப் பொருள் பரிப்பதுடன் தொழுஉம் தட்சணையாலும் பொருள் சம்பாதித்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றும்படி யாரம்பித்துக் கொண்டார்கள். இத்தேசக் குடிகளின் மயக்கத்திற்கும் ஏமாறுதற்குங் காரணம் யாதெனில், சகடபாஷையாம் வடமொழியை சகல குடிகளுங் கற்று பேசுதற்கேலாது வியாரங்களிலுள்ள சமண முநிவர்களும் பிராமண சிரேஷ்டர்களு மட்டும் பேசவும் வாசிக்கவு மிருந்தார்கள். மற்றயக்குடிகள் யாவரும் கற்பதற்கும், பேசுதற்கும் எளிதாயுள்ள திராவிட பாஷையாம் தமிழிடையே சாதித்து வந்தார்கள். அத்தகைய சாதனையில் இவ்வேஷப் பிராமணர்கள் கற்றுக்கொண்டுளரும் வடபாஷையின் சப்த பேதமும், பொருள் பேதமு மறியாது குடிகள் மோசம் போயது மன்றி சிற்றரசர்களு மிவர்களது மாய்கைக் குட்பட்டு மயங்கி வருகின்றார்கள். இத்தகைய மாய்கையிற்றாமு முட்பட்டிருப் பீராயின் பூர்வ மெய்ஞ்ஞானச் செயல்களும் அதன் சாதனங்களு மழிந்து அஞ்ஞானமே மேலுமேலும் பெருகுமென்பதற்கு கையமில்லை. தங்களைப்போன்ற விசாரணையும் காமிய மற்ற வரசர்களுமா யில்லாதபடியால் நாணமும் ஒழுக்கமுமற்ற மிலேச்சர்களின் மாய்கையினுக் குட்பட்டு மயங்கி தங்களையும் தங்கள் தேசக் குடிகளையும் கெடுத்துக்கொண்டதன்றி பெளத்த மடங்களுக்கும், பௌத்த மடாதிபர்களுக்கும் இடைஞ்சல்களைத் தேடி வைத்துவிட்டார்கள். அத்தகைய விடஞ்சல்களால் எம்மெய்ப்போன்ற விசாரிணைப் புருஷர்கள் யாவரும் தங்கடங்கள் வியாரங்களையும், அதனத னாதாரங்களையும் விட்டகன்று பலதேச சஞ்சாரிகளாகவும் போய்விட்டபடியால் ஆரியர்களாம் அஞ்ஞானிகளின் செல்வாக்கதிகரித்துக் கொண்டே வருகின்றது. யதார்த்த பிராமணர்கள் குறைந்து வேஷப்பிராமணர்கள் பெருகி வருவதுடன் யாதார்த்த வியாரங்களாம் அறப்பள்ளிகளின் சிறப்புகளுங் குன்றி இறந்த வரசர்களைப்போல் சிலாவுருவஞ் செய்து வைத்துள்ள யிடங்களும், சிலையாலயம், சிலாலயமென வழங்கி வந்தவர்கள். அம்மொழியை மாற்றி சிலாலயம் சிவாலயமென வழங்கி வருகின்றார்கள். ஆண்குறியும் பெண்குறியுமே சிருஷ்டிகளுக் காதார மெனக்கூறி கற்களினா லக்குறிகள் செய்தமைத்து சிலைலிங்கம் சிலாலிங்கமென வழங்கி அம்மொழியையே சிவாலிங்கமென மாற்றி சிறப்பித்து மக்களுக்குக் காமியம் பெருகிக் கெடும் வழிகளை யுண்டு செய்து வருகின்றார்கள். ஆரியர் தங்கள் புருசீக தேசபாஷையை மறந்து சகட பாஷையாம் வடமொழியைப் பேசுவதற்கு ஆரம்பித்துக் கொண்டபடியால் பௌத்த வியாரங்களில் தங்கியுள்ள வெதார்த்த பிராமணர்களால் வழங்கிவரும் வடமொழியென் றெண்ணி தங்களுக்குள்ளெழுஞ் சந்தேகங்களைத் தாங்க ளெடுத்துள்ள வேஷப்பிராமணர்களை வினவுவதால் அவர் களுக்கு உலக விவகார மொழிகளே தெள்ளற விளங்காதவர் களாதலின் வடமொழியுள் ஞானவிளக்க மொழிகளை கண்டுரைக்க யேலாது மிக்கத்தெரிந்தவர்கள் போல் ஏழை மக்களுக்கு மாறுபட பொருளற்ற மொழிகளைப் புகட்டி பொய்யை மெய்யெனக்கூறி பொருள்பரித்துத் தின்று வருகின்றார்கள். அவை யாதெனில். அறவாழி யந்தணனாம் புத்தபிரானால் ஆதியில் போதித்துள்ள “செளப்பாபஸ்ஸ அகரணங், குஸலஸ வுபசம்பதா, சசித்தபரியோதபனங், யேதங் புத்தான சாசன” மெனு முப்பீட வாக்கியத்தை மகடபாஷையில் முச்சுருதி மொழியென்றும், முப்பேத மொழியென்றும், முவ்வேத மொழியென்றும், மூவரு மொழியென்றும் வழங்கி வந்தது மன்றி திரிபீட வாக்கியமென்றும், திரிபேத வாக்கியமென்றும், திரிசுருதி வாக்கியமென்றும், திரிமந்திர வாக்கியமென்றும் வழங்கி வந்த மும்மொழியும், தன்மகாய ரூபகாயங்களை விளக்கி நித்திய சுகத்திற் காளாக்கு மொழிகளாதலின் அவற்றை பிரதம திரிகாய மந்திரமென்றும், வாக்கு சுத்தம், மனோசுத்தம், தேகசுத்த மிவற்றை துதிய திரிகாய மந்திரமென்றும் வழங்கி வந்தவற்றுள் இவ்விரு திரிகாய மந்திரங்களையும் பொதுவாக காயத்திரி மந்திரமென வழங்கி வந்தார்கள். அதாவது எடுத்த தேகம் சீர்குலைந்து மரண துக்கத்திற்காளாகி மாளா பிறவியிற் சுழலாது மும் மந்திரங்களாம் மேலாய வாலோசனையில் நிலைத்து பாபஞ் செய்யாமலும், நன்மெய் கடைபிடித்தும், இதயத்தை சுத்திசெய்தும், மாளாபிறவியின் துக்கத்தை யொழித்து நித்திய சுகம் பெரும் பேரானந்த வாலோசனையாதலின் அம்மும் மந்திரங்களையும் திரிகாய மந்திரமென்றும் காயத்திரி மந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் மந்திரமென்பது ஆலோசனை யென்றும், மந்திரியென்பது ஆலோசிப் பவனென்றுங் கூறப்படும். இதனந்தரார்த்தமும், காயத்திரி யென்பதி னந்தரார்த்தமும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. இத்தகைய வேஷப்பிராமணர்களிடம் உபாசகர்கள் சென்று காயத்திரி மந்திர மருள வேண்டு மென்னுங்கால் வியாரங்களிலுள்ள யதார்த்த பிராமணர்கள் போதிக்கும் திரிகாய வாலோசனைகள் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் அவற்றைக் காட்டிக்கொள்ளாது அவைகளை மிக்கத் தெரிந்தவர்கள் போல் நடித்து காயத்திரி மந்திரம் மிக்க மேலாயது அவற்றைச் சகலருக்கும் போதிக்கப்படாது எங்களையொத்த வாயிரம் பிராமணர்களுக்கு பொருளுதவி செய்து தொண்டு புரிவோர் களுக்கே போதிக்கப்படு மெனப் பொய்யைச்சொல்லி பொருள் பரித்து வடமொழி சுலோகங்களில் ஒவ்வோர் வார்த்தையை யேதேனுங் கற்பித்து அதையே சொல்லிக் கொண்டிருங்கள். இம்மந்திரத்தை மார்பளவு நீரினின்று சொல்லி வருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்துப் பெருகி சுகமாக வாழ்வீர்களென்று உறுதிபெறக் கூறி ஆசைக்கருத்துகளை யகற்றி மெய்ஞ்ஞானமடையும் வழிகளைக் கெடுத்து ஆசையைப் பெருக்கி அல்லலடையும் அஞ்ஞான வழிகளில் விடுத்து மநுமக்களின் சுருசுருப்பையுஞ் செயல்களையு மழித்து சோம்பலடையச் செய்வதுடன் அவர்களது விவேக விருத்திகளையுங் கெடுத்து வருகின்றார்கள். விருத்தியின் கோட்டிற்கு ஆதாரங்கள் யாதெனில் தங்களையே யதார்த்த பிராமணர்களென்று நம்பி மோசத்திலாழ்ந்துள்ள அரசர்களையும், வணிக தொழிலாளர் களையும், வேளாளத் தொழிலாளர்களையும் கல்வியைக் கற்கவிடாது அவனவன் தொழிற்களை அவனவனே செய்துவர வேண்டு மென்னுங் கட்டுப்பாடுகளை வகுத்து இவர்களை யடுத்துள்ள வரசர்களைக் கொண்டே சட்டதிட்டப்படுத்தி கல்வியின் விருத்தியையும், தொழில் விருத்தியையும் பாழ்படுத்தி வருகின்றார்கள். அவற்றிற்குக் காரணமோவென்னில் கல்வியில் விருத்தி யடைவார்களாயின் தங்களது பிராமண வேஷமும் பொய்க்குருச் செயலும், பொய்ப் போதகங்களு முணர்ந்து மறுத்துக்கேழ்க்க முயலுவார்கள். வித்தைகளில் விருத்தி பெருவார்களாயின் தங்களை மதிக்கமாட்டார்கள், தங்கள் பொய்ப் போதனைகளுக்கும் அடங்கமாட்டார்களென்பதேயாம். இவர்களது வயிற்றுப் பிழைப்பிற்காக வித்தேசத்து சிறந்த மடங்களையும், சிறந்த ஞானங்களையும், சிறந்த கல்விகளையும், சிறந்த வித்தைகளையும், சிறந்த நூற்களையுமழித்து தங்களது வேஷப்பிராமணத்தை விருத்தி செய்து வருவதுடன், அரசே இந்திர வியாரங்களாகும் அறப்பள்ளிகளில் தங்கியுள்ள அந்தணர்கள் மார்பிலணைந்திருக்கும் முப்புரிநூல் அதாவது மதாணி பூநூல் மேலாய வந்தரங்க ஞானத்தை யடக்கியுள்ளது. அதனை அணிந்துக்கொள்ள செய்வித்ததும், அணிந்து கொள்ளும் பலனும் இந்த வேஷப்பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது. அதன் அந்தரங்க விளக்கமாகும் உபநயனமென்னும் பெயரும் அதனது பொருளும் இவர்களுக்கு விளங்கவே மாட்டாது. அதன் பேரானந்த ஞானரகசியம் யாதெனில் சத்திய சங்கத்துள் சேர்ந்துள்ள சமண முநிவர்கள் திரிகாய மந்திரமாம் காயத்திரி மந்திரத்துள் நிலைத்து கொல்லா விரதம், குடியா விரதம், பிறர்தார நயவா விரதம், பிறர் பொருளையிச்சியா விரதம், பொய்சொல்லா விரதமாகிய பஞ்சசீலத்தில் லயித்து பற்றறுத்த செயலுங் குணங் குறிகளும் ஞானாசிரியர்களாகும் அறஹத்துக் களுக்குத் தெரிந்தவுடன் அம்மாணாக்கனை வியாரத்தைவிட்டு நிலைபேராது செய்து வெளியிற் பார்க்கும் ஊனக்கண் பார்வையை நீக்கி தனக்குள் பார்க்கும் ஞானக்கண் பார்வையை யளிப்பார்கள். இவற்றையே உள்விழியென்றும், உதவிவிழி யென்றும், உபநயனமென்றுங் கூறப்படும். உலகப் பொருளை நோக்குவது ஊன்ன நயமும், உண்மெய்யை நோக்குவது உபநயனமுமாம். உபநயனம் பெற்ற மாணாக்கர்கள் முன் போல் பிச்சா பாத்திரமேந்தி லெளிபோகாமலும், மற்றும் உலக விவகாரங் களிற் பிரவேசியாமலும் தங்கள் உள்விழிப் பார்வையிலிருக்க வேண்டியவர்களாதலின் அத்தேச வரசர்களையும், உபாசகர் களையும் வரவழைத்து இம்மாணாக்கன் சமணமுநிவருள் சித்தி பெறவேண்டிய உபநயனம் பெற்றுக்கொண்டபடியால் கடைத்தேறுமளவும் இவனுக்கு வேண்டிய பொருளுதவியும் புசிப்புதவியு மளித்துவர வேண்டியதென்றும் உபநயனம் பெற்றோன் அதாவது உள்விழி கண்டோனென்றும் அடையாளத்தை மற்றவர்களறிந்து வுதவி புரிந்து வருவதற்காக மதாணி பூநூலென்னும் வேண முப்புரிநூலை மாணாக்கன் வலது புஜத்திற்கும் இடது இடுப்பிற்கும் சுற்றி நிற்கும்படி யணைந்து விடுவார்கள் அந்நூலணைந்துள்ளோரைக் கண்ட வுடன் சகலரும் வணங்கி வேணப் பொருளளிப்பது வழக்கமாகும். முப்புரி நூலை அவ்வகை யணையும் அந்தரார்த்தம் யாதெனில் குழந்தையானது தாயின் வயிற்றில் கட்டுப்பட்டிருக் குங்கால் மூச்சோடிக்கொண்டிருக்கும் ரந்தினமானது உந்தியாகிய கொப்புழுக்கும் இடது புறவுள் விலாவிற்கும் சுற்றி வலமுதுகிலேறி பிடரி வழியிற் சென்று நாசி முனை வழி வந்து மார்பிலிரங்கி வுந்தியிற் கலந்திருக்கும் வழியைத் திறந்து மூச்சு வுள்ளுக்குள்ளடங்கி உண்மெய் யுணரவேண்டிய ததுவாதலின் அதனிருப்பையும் உபநயன விழிப்பையுங் கண்டறிவதற்கும் திரி மந்திரமாம் மூவருமொழியை சிந்திப்பதற்கும் முப்புரிநூலை மார்பிலணைந்து வைத்திருக்கின்றார்கள். முப்புரிநூ லணையும் விவரமும், அதன் ஞானார்த்தங்களும் இவ்வேஷ பிராமணர்களுக்குந் தெரியாது கல்வியற்றக் குடிகளுக்குத் தெரியாது. அதன் ஞானக்கருத்து தெரியாதிருப் பினும் சமண முநிவர்களுக்கு உபநயன மளிக்குங்கால் சகல குடிகளையுந் தருவித்து உபநயனம் பெற்றோரை சுட்டிக்காட்டி வேண வுதவி செய்யும்படிக் கேட்டுக்கொண்டவுடன் அவுற்பிரசாதமளித்து ஆனந்தமுடன் அனுப்புவ துமட்டிலும் அவர்களுக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்தவர்கள் இந்த வேஷப்பிராமணர்களை யடுத்து வணங்கி வியாரங்களிலுள்ள பிராமணர்கள் உபநயன மளிக்குங்கால் அவுற்பிரசாத மளித்து சகலரையும் ஆனந்திக்கச் செய்வார்கள். அவ்வகையாக நீங்கள் செய்யாத காரணமென்ன வென்று வினவியவுடன் அதனந்த ரார்த்தம் இவர்களுக்குத் தெரியாதிருப்பினும் கல்வியற்றக் குடிகளிடந் தங்களுக்குத் தெரிந்த வைபோ லபிநயித்து தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனஞ் செய்விக்கப்போகின்றோம். அவற்றிற்குத் தேங்காய், பழம், அவுல்கடலை கொண்டு வருவதுடன் பணவுதவியுஞ் செய்ய வேண்டுமென்று பெற்று தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் புசித்துத் தங்கள் பிள்ளைகளும் அத்தகைய நூலை யணிந்து வருகின்றார்கள். ஏழைக்குடிகள் அவுற்பிரசாதங் கொடுக்க வில்லையேயென்று கேட்டால் தேவர்களுக்களிக்கும் அவுற் பிரசாதத்தை உங்களுக் களிக்கலா காதென் றேய்த்து பணம் பரித்து வருவது மல்லாமல் அவுற் பிரசாதங் கொடாது தாங்களே தின்று கொழுத்துலாவுவதற்கு உபநயனமென்னும் மொழியும் சீவனத்திற்கு ஓர் வழியைக் கொடுத்துவிட்டது. புல்லினின்று புழுக்களும்; புழுக்களினின்று விட்டிலும் மாறி இருபிறப்படைவது போல் சமணமுநிவர்கள் உபநயனமாம் ஞானக்கண் பெற்று உண்மெ யுணர்ந்து புளியம்பழம் போலும், ஓடு போலும், உடல் வேறு உண்மெய் ஒளிவேறாகப் பரி நிருவாண மடைவதை ஓர் பிறப்பாகவும், தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பை யோர் பிறப்பாகவுங் கொண்டு அவர்களை இருபிறப்பாளரென சமணமுநிவர்கள் கொண்டாடித் துதித்து வந்தார்கள். அதனது சிறந்த காட்சியோவெனில் மனிதன் தாய் வயிற்றுநின்று பிறந்து வளர்ந்து பல பற்றுக்களால் தீயச்செயலை வளர்த்து தீயச்செயலில் நிலைத்து விடு வானாயின் தீராப் பிறவியிற் சுழன்று மாறிமாறி துக்கத்தை யநுபவித்து வருப வனாவான். மனிதன் தாய் வயிற்று நின்று பிறந்து வளர்ந்து பாச பந்த பற்றுக்களற்று நியாயச்செயலை வளர்த்து நியாயச்செயலாம் நன்மெய்க் கடைபிடிப்பானாயின் பற்றற்ற பலனால் புளியம் பழம் போலும் ஓடு போலும் அந்தரங்கம் வேறு பயிரங்கம் வேறாக நிருவாணமடைவான். அத்தகைய நிருவாணம் மடைந்தோன் தேகத்தினின்று சுயம்பிரகாசமாக மாற்றிப் பிறக்க வெண்ணுவானாயின் தன்மகாய வொளி வுருவாய்ப் பரிநிருவாண மடைவான். அன்று முதல் மாறிமாறி பிறக்கும் பிறப்பின் துக்கமற்று சதா விழிப்பில் நித்தியானந்த சுயம்பு வாய் அகண்டத் துலாவுவான்; இத்தகையாய்த் தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப் பொன்றும், ரூபகாயத்தினின்று தன்மகாய வொளியுருவாய் மாற்றிப்பிறந்த பிறப்பொன்றும் ஆகிய விருபிறப்ப டைந்தவர்களையே சமண முநிவர்களும் உபாசகர்களுந் துதித்துக் கொண்டாடுவ தியல்பாதலின் அதின் அந்தரங்கப் பிறப்பும் பயிரங்கப் பிறப்பும் இவ்வேஷப் பிராமணர்களுக்கு இன்னது இனியதென்றே விளங்கமாட்டாது. அவ்வகை விளங்காதிருப் பினும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர் களுக்குந் தங்களை இருபிறப்பார்களென்று கூறி இப்பிறவி யென்னு மொழியையும் ஓராதரவாகக் கொண்டு பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். அதாவது, அறஹத்துக்கள் வகுத்துள்ள பிறவியின் ரகசியம் யாதெனில் ; ரூபகாயத்தின்படி ஓர் மனிதன் தன்னை மறந்து தூங்குவதாவதே இறப்பு. தூங்கி விழிப்பதே பிறப்பு. தன் மகாயத்தின்படி ஒன்றை யெண்ணுவதே பிறப்பு, எண்ணி மறப்பதே இறப்பு இவ்விரண்டின் செயலே கர்ம்மத்துக்கீடாய பற்றினால் பிறப்புண்டாகி சமுத்திரத்தின் அலையானது தோன்றி தோன்றி கெடுவதுபோல கன்மத்தின் செயலே பற்றி மாளா பிறவியில் தோன்றி தோன்றி சுழல்காற்றி லகப்பட்ட சொத்தை போல் சுற்றி சுற்றி மாளாதுக்கத்திற் சுழன்று திரிகிறதென்றும் பாசபந்தப் பற்றானது பெருங்கடலுக் கொப்பாயதென்றும் பாசபந்தக் கடலுள் ஆழ்ந்திருக்கு மளவும் பிறவியின் பெருந்துக்கமானது விடாது தொடர்ந்தே நிற்குமென்றும்; அவ்வாசாபாச கன்மபந்தப் பற்றுக்களை பற்றாது அறுத்து விடுதலே நிருவாணமென்றும், அந்நிருவாணமே பிறவியற்ற முத்திப்பேறென்றும், அம்முத்திப்பேறே சதானந்த தன் மகாய மென்றும், அதுவே இரவு பகலற்ற வொளியென்றும் தங்கடங்க ளனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்த வரைந்து வைத்துள்ளார்கள். அத்தகைய பிறவியினாலுண்டாந் துக்கமும் அப்பிறவியை அறுத்தலினா லுண்டாம் சுகமும் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்கவே மாட்டாது. அவ்வகை விளங்காவிடினும் கல்வியற்றக் குடிகள் இவர்களை யடுத்து பிறவியை அறுக்கவேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்றார்களே அதன் வழி யெவ்வகை யென்று கேட்பார்களாயின் உன் தந்தை இறந்த திதியை அறிந்து வைத்துக்கொண்டு அத்திதி வருங்காலங்களிலெல்லாம் எங்களையொத்த பிராமணர்களுக்கு அரிசி பருப்பு, ஐங்காயம், நெய், வேஷ்ட்டி, புடவை, குடை பாதரட்சை தட்சணை, தாம்பூலங்கொடுத்து வருவீர்களானால் இறந்த உன் தந்தையே வந்து பிண்டப்பிரசாதம் பெற்றுப் போவான். இவ்வகையாக சிலகாலம் பெற்றுப் போவானாயின் திரவிய சம்மந்தனாகப் பிறப்பான். இது போல் புருஷன் இறந்து போவானாயின் பெண்சாதியானவள் வேறு விவாகஞ் செய்துக் கொள்ளாமல் புருஷன் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை வருஷந்தோரும் எங்களையொத்த பிராமணர்களுக்கு தானமளித்து வருவாளாயின் அவள் புருஷன் மோட்சத்தை யடைவான். அப்பெண்ணானவள் விருத்தாப்பிய மடைந்து விடு வாளாயின் மிகுந்துள்ள சொத்துக்கள் யாவையும் எங்களுத்திரவினால் கட்டிவைத்துள்ள சிலாலயத்தின் பெயரால் சிலாசாசனஞ் செய்துவைத்து விடு வாளாயின் அவளிறந்த பின் மறுபிறவியுண்டாகி தன் புருஷனுடன் சேர்ந்துவிடுவாளென்றும் எங்களையொத்த பிராமணர்களுக்கே பூமி கொடுத்து பிராமணர்களுக்கே தானியமளித்து பிராமணர்களுக்கே பொருளீயந்து வருகிறவன் மறுபிறவியில் பூமிசெல்வத்தையும், தானியமளிப்பவன் தானிய சம்பத்தையும், பொருளளிப்பவன் தனசம்மந்தனாகப் பிறப்பான். எங்கள் வாக்கையே தெய்வவாக்காகவும், எங்களையே தெய்வ மாகத் தொழுது எக்காலமும் எங்கள் பெண்டு பிள்ளைகளுக்கு தானமளித்து வருவீர்களாயின் பிறவியின் துக்கமற்று முத்திப் பெறுவீர்கள். எனப் பிறவியின் பேதாபேதங்களும் அவரவர்கள் கன்மத்திற்குத் தக்கவாறு நிகழும். பிறவியினது தோற்றங்களு மிவ்வேஷப் பிராமணர்களுக்கு விளங்காவிடினும் பிறவி யென்னும் வார்த்தையைக் கொண்டே கல்வியற்றக் குடிகளை வஞ்சித்தும் பயமுறுத்தியும் பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள். இத்தகையப் பொய்க்குருக்களின் செயலால் நாளுக்கு நாள் விவேக விருத்தியற்று அவிவேக மிகுத்துக் குடிகள் சீரழிந்து வரவும் வேஷப்பிராமணர்கள் விருத்தியுற்றோங்கவு முள்ளதன்றி வீடுகடோருங் கூழாங்கற்களைக் கும்பிட்டுக் கெடும் யேதுக் களையுஞ் செய்துவிட்டார்கள். அதாவது வேஷப்பிராமணர்களை அடுத்த வரசர்கள் மடிந்தபோது அவர்களைப் போன்ற கற்சிலைகளமைத்து அவர்களைத் தொழுது வரும் சிலாலயங்களை யமைத்து வருவது போதாமல் வீடுகடோருங் கூழாங்கற்களைத் தொழும் வகையை யெவ்வகையாய்ச் செய்துவிட்டார்களென்னில்; வியாரங்களில் தங்கியுள்ள அறஹத்துக்களை நாடிச்சென்ற வுபாசகர்கள் அவர்களை வணங்கியவுடன் திராவிட பாஷையில் “அறிவு பெருகுக” வென்றும், மகடபாஷையில் “சாலக்கிரம்” மென்றும் ஆசீர்வதிப்ப தியல்பாம். சாலக்கிரமமென்னு மொழியின் பொருள் யாதெனனில் எக்காலும் நீதி வழுவா நெறியில் நில்லுங்கோளென்பதேயாம். இம்மொழியை யதார்த்த பிராமணர்களிடங் கேட்டிருந்தக் கல்வியற்றக் குடிகள் இவ்வேஷப்பிராமணர்களை யடுத்து சாலக்கிரமங் கூறுவீர்களே இதை யேன் கூறுகிறதில்லையென்று கேட்பார்களாயின் அம்மொழியின் சப்தமும் அதன் பொருளும் அறியாதவர்களா யிருப்பினும் மிக்க வறிந்தவர் போல் அபிநயத்து வந்தவர்கள் ஆற்றங்கரைக்குச் சென்று அவ்விடந்தேய்ந்து பளப்பளப்புற்று சிவந்த கோடுகள் பரந்துள்ள சிறிய குழாங்கற்களை யெடுத்து வந்து மிக்க பதனமாக புஷ்ப்பத்திற் சுருட்டி கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் மடுத்து இதோ பார்த்தீர்களா இதற்குதான் சாலக்கிரமமென்று கூறுவது. இதனை வீடுகளில் வைத்து பூசிப்பீர்களானால் நீங்களெண்ணும் பொருட் களெல்லாம் உங்களுக்குக் கிடைப்பதுடன் கோறியவண்ணம் முடியும். சுகசம்பத்தாக வாழ்வீர்கள். இதற்கு மதிப்பு சொல்ல ஒருவராலு மியலாது. எவ்வளவு திரவியத்தைக் கொட்டிணுங் கிட்டாது. சாலக்கிராமங்களில் இது விசேஷித்த சாலக்கிரமமெனக் கூறி பொருள்பரித்து தின்பதற்கு சாலக்கிரமமென்னும் வாழ்த்தல் மொழியும் சீவனத்திற்கோர் வழியாகிவிட்டது. கிறாமங்கடோரும் சிலாலயங்களை வைத்து பூசிப்பது போதாது வீடுகடோருங் குழாங்கற்களை வைத்துப் பூசிக்கும் ஏதுக்களை செய்துவிட்டு வீடுகடோருஞ் சென்று பொருள் பரிக்குமோ ரேதுவையும் உண்டு செய்துக் கொண்டார்கள். ’’சாலக்கிரமம் " எக்காலுங் கிரமமான வாழ்க்கைப் பெற்றிருங் கோளென்னும் வாழ்த்தல் மொழி கூழாங்கல்லாகி விட்டதென்ற வுடன் சபா மண்டபத்திலிருந்த புருசீகர்கள் யாவரும் திடுக்கிட்டெழுந்து போய்விட்டார்கள். அஸ்வகோஷா நந்தனென்னும் அரசனை நோக்கி அரசே இந்த வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்கள் தங்கள் பத்து பேர் சீவனத்திற்காக நூறு குடிகளழிந்தாலும் அவர்கள் ளுக்கு சீவகாருண்யங் கிடையாது தங்கள் பத்து பெயர் சீவனத் திற்கு பத்தாயிரம் பொன் விலைப்பெற்ற வியாரங்களழிந்தாலும் அவர்களுக்கு தாட்சண்யங் கிடையாது. தங்கள் பத்து பேர் சீவனத்திற்காக பதினையாயிரம் பொன் விலைப்பெற்ற சாஸ்திரங்க ளழியினும் அவர்களுக்கு ஞானமிராது. இத்தகைய ஞான மற்றவர்களும், நாணமற்றவர்களும், ஒழுக்கமற்றவர்களுமாகிய விக்கூட்டத்தோரென்று சொல்லுங் கால் வெளியிற் சென்ற புருசீகர்கள் யாவரும் வந்து சபையி லுட்கார்ந்தார்கள். அஸ்வகோஷா அவர்களை சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டிற்கு வடமேற்கே புருசீக நாடென்னு மொன்றுண்டு. அவ்விடத்தியப் பெண்கள் சூதக்காலங்களில் ஏழுநாள்வரை வெளியிற்கிடப்பார்கள். துடையினின்று கால் தெரியாது செட்டையணைந்திருப்பார்கள். புருஷர்களும் சிரசில் நீண்ட குல்லா சாற்றி பெரும் வேட்டி சுற்றிக் கொள்ளுவார்கள். அக்கினியை தெய்வமாகத் தொழுவார்கள். அக்கூட்டத்தோர்களே யிவர்களாயினும் அப்பெண்கள் இவ்விடம் கால் செட்டை யணையாமல் இவ்விடத்திய சேலையைக் கொண்டே கீழ்ப்பாட்சிக் கட்டிக்கொள்ளு கின்றார்கள். அவ்விடம் அக்கினியைத் தொழுதபோதினும் இவ்விடம் அக்கினிகுண்டத்தைக் கையுடன் கொண்டு வந்திருக்கின்றார்கள். அக்கினியைத் தொழுதுவருஞ் செயலால் சீவகாருண்ய மற்று உயிறுடன் ஆடு மாடு குதிரை முதலியவைகளை அக்கினியிலிட்டுச் சுட்டுத்தின்பதுடன் புருஷனற்ற விதவைகளையும் அவ்வக்கினியிற் போட்டுக் கொன்று வருகின்றார்கள். காரணங் கேட்போமாயின் அவள் விதவையாகிவிட்ட படியால் அக்கினியாய தேவனிடம் ஒப்படைத்து விட்டோமென்று கூறுவதுடன் அக்கினி யவியாதிருக்குமாறு சகல சுகதுக்க காரியாதிகளிலும் அக்கினியை வளர்த்துக் கொண்டே வருகின்றார்களென்று சொல்லி வரும்போது அரசன் திடுக்கிட்டெழுந்து அஸ்வகோஷரை வணங்கி யோகேந்திரா இவர்கள் நம்முடைய தேசத்தாரன்று புருசீக தேசத்தோரென்பதும் சிலாலயங்களென்பதை சிவாலயங்க ளென்றதும் புலாலை யந்தரங்கத்தில் புசித்தலும், இஸ்திரீகளை அக்கினிக் கிரையாக்குதலுமாகியச் செயல்களை விளக்க வேண்டு மென்று வணங்கினான். அவற்றை வினவிய அஸ்வகோஷரசனை நோக்கி, நந்தா எனக்கு காலதாமத மானாலு மாகட்டும் நீர் கேட்குஞ் சங்கைகளை நிவர்த்திச் செய்ய வேண்டியது முக்கியக் கடனாதலின் தெரிவிக்கின்றோ மென்று கூறி இப்பிராமண வேஷதாரிகள் நம்முடைய தேசத்தாரன்று புருசீக நாட்டாரென் றறிந்துகொள்ள வேண்டுமாயின் உம்முடைய ஆசனத்திற்கும் வடமேற்குத் திக்கிலுள்ள புருசீக நாட்டிற்கும் இருபத்தியேழுநாட் பிரயாணமிருக்கின்றது. அவ்விடஞ்சென்று இவர்களுடைய தேக நிறங்களையும்; அவர்களுடைய தேக நிறங்களையும் இவர்களுடைய குணக்குறிகளையும் அவர்களுடைய குணக் குறிகளையும், இவர்களது சுராபான புலால் பேருண்டிகளையும், அவர்களது சுராபான புலாலின் பேருண்டிகளையும்; இவர்களுடையப் பெண்களின் நாணமற்றச் செயலையும், தந்திரோபாயங்களையும், அவ்விடமுள்ளப் பெண்களின் நாணமற்றச் செயலையும் அவர்களின் தந்திரோபாயங்களையும்; இவர்கள் தங்களவர்களை மட்டும் பாதுகாத்துவருஞ் செயலையும், அவ்விடமுள்ளவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டிலும் உபகாரஞ் செய்துக்கொண்டு யேனையோர்களைக் கருணையின்றி விரட்டுங் கூற்றையும் ; இவர்களுடையப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது, பெயரிட்டழைக்கும் சப்தங்களையும், அவ்விடத்தியப் பெண்கள் தங்கள் கணவர்களை மதியாது பெயரிட்டழைக்கும் உல்லாசங்களையும்; இவர்களுடைய பெண்கள் சூது சூதகங் கண்டது முதல் ஏழுநாள் வரை வெளியிற் கிடப்பதும், அவ்விடத்தியப் பெண்கள் சூதகங்கண்ட யேழுநாள் வெளியிற் கிடப்பதும், அந்தரங்கத்தில் இவர்கள் அக்கினியை வளர்த்துவருந் தந்திரங்களையும் அவ்விடத்தோர் அக்கினியைத் தொழுதுவருஞ் செயல்களையும் உமது கண்களால் நோக்கு வீராயின் இவர்கள் யாவரும் நம்முடைய தேசத்தோரன்று புறதேசத்தோரென்பது தெள்ளற விளங்கும். யீதன்றி நம்முடைய தேசக் கட்டிடப் போக்குகளையும், அவர்களது தேசக் கட்டிடச் சாயல்களையுங் கண்டறிய வேண்டுமாயின் புன்னாட்டிற்கு வடகிழக்கே இவர்களே கூடியோர் கட்டிடங் கட்டி வருகின்றார்கள். இதன் சாயலையும், அவ்விடத்திய கட்டிடத்தின் சாயலையுங் காண்பீராயின் இக்கட்டிடச்சாயலே அக்கட்டிடச் சாயலென்றும், இவர்களே அவர்களென்பதும், அவர்களே இவர்களென்பதும் தெள்ளற விளங்கிப் போவதுடன் இத்தேசப் பூர்வ பௌத்தர்களுக்கும் இவ்வேஷப் பிராமணர்களுக்கு முள்ளத் தீராப்பகையினாலும் இவர்களைப் புறநாட்டாரென்றே துணிந்து கூறல் வேண்டுமென சொல்லிவருங்கால் அரசனெழுந்து அஸ்வகோஷாவை வணங்கி அறஹத்தோ இத்தேசப் பெளத்தர்களுக்கும் இப் புருசீகர்களுக்கும் தீராப்பகை யுண்டாயக் காரணமென்னை மத்தியிலெவரும் அவற்றை நீக்காதச் செயலென்னை அவைகளை விளக்கி யார் கொள்ள வேண்டுமென்றடி பணிந்தான். அவற்றை வினவிய அஸ்வகோஷா வானந்தமுற்று பகை யுண்டாய வதன் காரணகாரியங்களை சுருக்கத்தில் விளக்க வாரம்பித்தார். அரசே சகல உற்பத்திக்குக் காரணமும், சகலதோற்றத் திற்கு மூலமும், சகல மறைவுக்கு ஆதாரமுமாக ஏதுக்களுக்குத் தக்க நிகழ்ச்சிகளேயாம், அத்தகைய நிகழ்ச்சியில் வானம் பெய்து பூமியிற் புற்பூண்டுகள் தோன்றி, புற்பூண்டு களினின்று புழுக்கீடாதிகள் தோன்றி புழுக்கீடாதிகளினின்று ஊர்வனத் தவழ்வன தோன்றி ஊர்வனத்தவழ்வனத்தினின்று வானர விலங்காதிகள் தோன்றி பிறகு விலங்குகளினின்று நரர் மக்கள் தோன்றி, நரர் மக்களின்று புலன் தென்பட்ட தென்புலத்தார் தேவர் தோன்றி உலக சீர்திருத்தங்களைச் செய்து வருதலில் ஒவ்வொரு சீவராசிகளும் நாளுக்கு நாள் மேலுக்கு மேல் உயர்ந்து கொண்டே வருவதை யறியாது அவைகளைத் துன்பஞ் செய்வோரும் கொலைச்செய்தும் வருவதாயின் அவைகளின் மேன் நோக்கசுகங்களற்று மாளா துக்கத்தில் சுழல்வதன்றி அவைகளைத் துன்பஞ் செய்வோரும், கொலைச்செய்வோரும் மாளாப் பிறவியிற் சுழன்று தீராக்கவலையி லாழ்வரென்று பகவான் போதித்துள்ள படியால் அம்மொழிகளை சிரமேற் கொண்டு பௌத்த உபாசகர்கள் முன்னிலையில் இவ்வேஷப் பிராமணர்கள் ஆடுகளையும், மாடுகளையும் உயிருடன் நெருப்பில் கொன்றுத் தின்னுங் கொறூரச் செயல்களைக்கண்டு இவர்களை மிலைச்சரென்றும், புலால் புசிக்கும் புலையரென்றுங் கூறி பெளத்த வுபாசகர்கள் சேர்ந்து வாழும் பகுதிக்குள் இவர்களை வரவிடாது சாணச்சட்டியையுடைத்து அடித்துத் துரத்துவது ஓர் விரோதமாகும். இரண்டாவது விரோதமோவென்னில், பௌத்த உபாசகர்கள் பகவனது போதனையின்படி இராகத்து வேஷ மோகங்களை மீறவிடாது மிதாகாரம் புசித்து மாமிஷ பட்சணங்களை விலக்கியும், மதியை மயக்கும் சுராபானங்களை அகற்றியும் சுத்த சீலத்திலிருப்பவர்களாதலின் அவர்களது மத்தியில் இவ்வேஷப்பிராமணர்களாம் புருசீகர்கள் சுராபான மருந்தி மாமிஷங்களைப் புசித்து சுத்த சீலமற்று நாணா வொழுக்கத்திலிருப்பது மன்றி சிற்றரசர்களையும் கனவான்களையும் அடுத்து இஸ்திரீகளும் புருஷர்களும் நாணமின்றி ஒரு காலைத்தூக்கி மறுகாலைத் தாழ்த்துவதும், மறுகாலைத் தூக்கி மற்றொரு காலைத் தாழ்த்தி கைகொட்டி யாடுவதுமாகிய ஆரியக் கூத்தென்னு மோர் கூத்தாடி அவர்களை வசப்படுத்திக்கொள்வதுடன் தங்கள் வேஷப்பிராமணக் காரியத்திலுங் கருத்தாயிருப்பதைக் காணும் பௌத்த வுபாசகர்களுக்கு மனஞ்சகியாது இவ்வாரியக் கூத்தர்களாகிய மிலேச்சர்கள் இன்னுமித்தேசத்துள் பெருகிவிடு வார்களாயின் சுராபானமும் மாமிஷ பட்சணமும் பெருகி இத்தேச சுத்தசீலர்கள் யாவரும் அசுத்த சீலமுற்று நாணா வொழுக் கினராகி நாளுக்கு நாள் அறிவு குன்றி நாசமடைவார்களே யென்னுமோர் கருணையால் இவர்களைக் கண்டயிடங்களி லெல்லாம் அடித்துத் துரத்துவதே வேர் சாதனமாக வைத்துக் கொண்டார்கள். மூன்றாவது விரோதமோவென்னில், அறப்பள்ளிகளிற்றங் கியிருக்கும் சமண முநிவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் சாதனங்களில் இராகத் துவேஷ மோகங்களை யகற்றி சாந்தம், யீகை, அன்பு இவைகளைப் பெருக்கி தங்கள் ஆவியும், மனமும் லயப்படும் நிலைக்கு ஆலயமென வழங்கி வந்தார்கள். அம்மொழியின் உச்சரிப்பும், அதனந்தரார்த்தமும் இவ்வேஷ பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது. ஆலயமென உபாசகர்களால் வழங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தங்களால் கற்சிலைகளடித்துத் தொழுது வருமிடத்திற்குச் சிலையாலயமென்றும், சிலாலயமென்றும் வழங்கி அம்மொழியையே தற்காலம் சிவாலயமென வழங்கி அவற்றிற்குத் தேங்காய், அவுல், கடலை, வாழைப்பழம், தட்சணை, தாம்பூல முதலியவைகளைக் கொண்டு வரச்செய்து சிலைகள் முன்னிலையில் வைத்துத் தொழுதுக் கொள்ளுவீர்களாயின் நீங்கள் கோறியவைகள் யாவுங் கிட்டும். கண்டுள்ள வியாதிகளும் நீங்கும். புத்திரசம்பத்துண்டாவதுடன் தானிய சம்பத்தும் தனசம்பத்தும் பெருகி பிறவியின் துக்கங்களற்று சுகம் பெருவீர்களென்னும் பொய்யைச் சொல்லி பொருள்பரித்தும் அச்சிலைகளையே மெய்ப்பொருளென்று நம்புதற்கு காந்தங் களைப் புதைத்து இரும்புத் தட்டுகளை யிழுக்கச் செய்து தொளாந்தரங்கட்டி இனிப்புள்ள ரசங்களை வடியச்செய்து அதுவே தேவாமிர்தமென்றுங் கூறி வஞ்சித்ததினால் கல்வியற்றக் குடிகளும், காமியமுற்ற அரசர்களும் வேஷப்பிராமணர்களாம் பொய்க்குருக்களின் போதகங்களை மெய்க்குருக்கள் போதகங் களென்றெண்ணி தங்களுடைய கைத்தொழில் விருத்திகளையும், பூமியின் தானியங்களையும், கலை நூல் விருத்திகளையும், ஞான நூல் விருத்தியும், நீதிநூல் விருத்திகளையும் மறந்து கல்லைத் தொழுதுகைத் தொழில் விருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் தானியவிருத்தி பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் கலைநூல் விருத்திப்பெறலாமென்றும், கல்லை தொழுதால் ஞான நூல் விருத்திப்பெறலாமென்றும், கல்லைத் தொழுதால் நீதிநெறி நூலில் விருத்திப்பெறலாமென்றுங் கருதி தங்களது சுயமுயற்சிகளை விடுத்து சோம்பேறிகளாகி சகல சுகங்களுங் கற்சிலைகளால் கிடைக்குமென்றெண்ணி கற்சிலை களையும், மண் சிைைல, மரச்சிலைகளையுமே தெய்வமாக கொண் டாடி அஞ்ஞானத்தி லாழ்ந்து முழு மூகைகளாகுவதை பெளத்த வுபாசகர்கள் கண்டு மனஞ்சகியாது சகல குடிகளுக்கும் தெய்வ மென்னும் மொழியின் சிறப்பினையும் அதன் செயலையும் நன்கு விளக்கிவருவதுமன்றி கற்களையும், மரச்சிலைகளையுமே தெய்வமெனக்கருதி நாளும் கேட்டை விளைத்து நாசமடையும் விவரங்களையும் கூறி வந்தார்கள். அதாவது ஒவ்வோர் மனுக்களும் தங்கடங்களறிவுக்குத் தக்கவாறு வேளாளத்தொழிலிலும், வாணிபத்திலும், அரசாத் தொழிலிலும், அந்தணத் தொழிலிலு முயலாமல் கற்சிலைகளிடத்தும், மரச்சிலைகளிடத்துஞ் சென்று வணங்கி தங்கள் செல்வக்குறைகளை நீக்க வேண்டுமென தேகவுபத்திர வங்களைப் போக்க வேண்டு மென்றும், கற் சிலைகளிடத்தில் முறையிட்டு தீர்த்துக்கொள்ள வேண்டுமென்னுங் கருத்தால் தங்கள் சுய முயற்சிகளையும், கைத்தொழில்களையும் விடுத்து கற்சிலைகள் தங்கள் துக்கங்களைப் போக்கி விடுமென்றெண்ணி அதனிடஞ் சென்று விழுந்து விழுந்து தொழுது வரும் வழக்கம் பெருகி வருகிறபடியால் கவலையென் னுங் குப்பை மேலுமேலுஞ் சேர்ந்து துக்கவிருத்தி அதிகரிப்பதினால் அறிவு மயங்கி சுயமுயற்சிகள் யாவுங் கெட்டு தாங்கள் செய்துள்ள தீவினைகளை நீக்குவதற்கு கற்சிலைகள் ஆதர வாயிருக்கின்றதென் றெண்ணி தினேதினே தீவினைக் குள்ளாகிப் பாழடைவார்களென்னும் பரிதாபத்தால் சிலையைக் காட்டி சீவனஞ் செய்து வரும் பொய்க்குருக்களையும் அவர்கள் போதனைக்குட்பட்டு பாழடைந்து வரும் பேதை மக்களையுங் கண்டித்துவரும் விரோதத்திற்கோ ரேதுவாயிற்று. காமியமுற்ற சிற்றரசர்கள் முன்னிலையிலும் மற்றுங் கல்வியற்றக்குடிகள் முன்னிலையிலும் ஆரியக்கூத்தாடி காரியத்தின் பேரிற் கண்ணோக்க முடையவர்களாயுமுள்ள மிலேச்சர்களின் வெண்தேகமும் நாகரீகவுடையும் சகடபாஷா சுலோகங்களும் இத்தேசத்தோரை மயக்கி அவர்கள் சீவனோ பாயத்திற்காகப் பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள் பரிக்கும் வழிகள் யாவையும் இத்தேசக் குடிகள் மெய்யென நம்பி மோசம் போய்விட்டார்கள். அவர்களுள் பெளத்த தன்ம போதகங்களும் அவைகளின் செயல்களும் வியாரங்களில் தங்கியுள்ள ஞான குருக்களாம் சமண முநிவர்களுக்கும், கன்மகுருக்களாம் சாக்கையர்களுக்கும் விளங்குமேயன்றி வேறொருவருக்கும் அதனந்தரார்த்தம் விளங்கவே மாட்டாது. அவ்வகை விளங்காக்குடிகள் யாவரும் இம்மிலேச்சர் களின் பொய்ப்போதகங்களுக் குட்பட்டு வருகின்றார்கள். மற்றும் இவ்வாரியக்கூத்தரின் பொய்ப் போதகங்களையும் இம்மிலேச்சர்களின் பொய்ப் போதகங்களையும் இம்மிலேச்சர் களின் நாணா வொழுக்கங்களையும் விளக்கி அறிவுறுத்தி வந்த பெளத்த சங்கத்தோர்களுக்கும் வேஷப் பிராமணர்களாம் பொய்க்குருக்களுக்கும் மாளா விரோதம் பெருகி புருசீகர்களைக் காணு மிடங்களிலெல்லாம் பௌத்தர்க ளடித்துத் துரத்தவும், பெளத்தர்களைக் கண்டவுடன் வோடுவதும் வழக்கமாயிருந்தது. பெளத்தர்கள் புருசீகர்களை அடித்துத் துரத்துவதும் அவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய் போதகங்களையும் விளக்கும்படியானவர்களாயிருக்கின்றார்களன்றி புருசீகர்களைக் கெடுக்காமலும் மற்றுந் துன்பப்படுத்தாமலும் புத்திப்புக்கட்டி வருகின்றார்கள். ஆரியர்களாம் மிலேச்சர்களோ, வென்னில் தங்கள் வசப்பட்டுள்ள சிற்றரசர்களைக்கொண்டு சமண முனிவர் களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் கழுவிலுங் கற்காணங் களிலு மிட்டு வதைக்கத்தக்க யேதுக்களைத் தேடி அறப் பள்ளிகளை விட்டகற்றியும் தன்ம நூற்களைக் கொளுத்தியும் சத்திய சங்கத்தையும், சத்திய தன்மத்தையும் பாழ்படுத்தி வந்ததன்றி இத்தேயத்தோர் வழங்கிவந்த தொழிற்பெயற்களில் சிலதை சாதிப்பெயர்களாக மாற்றி அதிற்றங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென வேற்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குட்பாடாது பராயர்களாயிருந்தவர்களும் தங்கள் பொய்க்குருக்கள் வேஷங்களையும் தங்கள் பொய்ப் போதகங் களையுங் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர் களுக்கும் பறைந்துவந்து பெளத்த விவேகிகளைத் தாழ்ந்த சாதி பராயரென வழங்கி, பௌத்தர்களைக் கண்டவுடன் அவர்களது அடிக்கும் உதைக்கும் பயந்தோடும் புருசீகர்களை அவர்களைச் சார்ந்தக் குடிகள் யேன் ஓடுகின்றீர்களென்று கேட்பார்களா யின் அடிக்கு பயந்தோடுவதைச் சொல்லாமல் அவர்கள் தாழ்ந்த சாதி பறையர்கள் அவர்கள் எங்களைத் தீண்டலாகாது நாங்களவர்களைத் தீண்டலாகா தென்னும் பெரும் பொய்யைச் சொல்லி, பௌத்தர்களைப் பாழ்படுத்தி அவர்களது சத்திய தன்மங்களையும் மாறுபடுத்திக்கொண்டு வருகின்றார்கள். அதாவது புத்தம் ஆதியிற் போதிக்கப்பட்ட திரிபீடங்களாம் முதநூலுக்கு வழிநூற்களும் சார்பு நூற்களுமியற்றினவர்கள் பிரிதிவு, அப்பு, தேயு, வாயு வென்னும் நான்கு பூதங்களே முக்கியமானவைக ளென்றும், வெளியவை நான்கு பூதங்களுந் தோற்றுதற்கிட மென்றும், அப்பூதங்களுக்கு வடமொழியில் பிரிதிவு - பிரம மென்றும், தென்மொழியில் நிலம், மண், இரணியகருப்ப மென்றும், வடமொழியில் அப்பு மால் நாராயண மென்றும், தென்மொழியில் நீரென்றும், வடமொழியில் ருத் திரமென்றும், தென்மொழியில் ரவி, தீயென்றும், வடமொழியில் வாயு மயேசமென்றும் தென் மொழியில் காற்று மாயுலவியென்றும், வடமொழியில் ஆகாயம் சதாசிவமென்றும், தென்மொழியில் வெளி மன்றுளென்றும், பெயர் கொடுத்துள்ள துமன்றி தோன்றும் பொருட்களின் தோற்றத்திற்கு எக்காலு முள்ளது பூமியாதலின் அவற்றுள் தாழ்ந்திருக்கும் நிலையை கீழ் அக்கு, கிழக்கென்றும் உயர்ந்து நிற்கும் நிலையை மேல் அக்கு, மேர்க்கென்றும், கண்ணுக்கு யெட்டியவரையிற் போய் பார்க்கக்கூடிய நிலையை தென் அக்கு, தெர்க்கென்றும் கண்ணுக்கெட்டியவரைப் போய்ப் பார்க்கக்கூடாத பூமியை வூடா அக்கு வடக்கென்று நான்கு திக்குகளை வகுத்தது மன்றி நீராகிய ஜலத்திற்கு நெகிழ்வு குளிர்ச்சி, வெண்ணிறமாகிய முக்குணங்களும், நெருப்பாகிய அக்கினிக்கு சுடுகை, சிவப்பு, புடைப்பாகிய முக்குணங்களும், வாயுவாகிய காற்றுக்கு மோதல், வூதலாகிய விரு குணங்களும் வெளியாகிய ஆகாயத்திற்கு சருவசீவப் பிராணிகளின் சுவாசத்திற்குள்ள வூட்டல், தேட்டலாகிய விருகுணங்களும், என்றும் நிலையாயுள்ள நிலத்திற்கு யாதொரு குணமுமின்றி சருவத் தோற்றங்களுக்கும் ஆதரவாயிருந்து மோன நிலை கொண்டிருக்கின்றபடியால் பிரம்ம இரணிய கருப்பமென்றும் நீராகிய ஜலமானது பூமியின் கீழும் ஆகாயத்திலும் மத்தியிலும் கருப்பையைப்போல் சூழ்ந்து வட்டமிட்டிருக்கின்றபடியால் மால் நாராயணமென்றும், நெருப்பாகிய அக்கினியானது முகத்தணுகிப் பார்க்கக்கூடாத சுவாலையைப் பெற்றிருக்கிறபடியால் ருத்திரம் அனலவ மென்றும், வாயுவாகியக் காற்றானது சகல பிராணிகளின் சுவா சாதாரமா யிருக்கின்றபடியால் மயேஸ்வரம், துருத்தி யென்றும், வெளியாகிய விசுமபானது சகல பூதங்களையும் நிறப்பி விளிப்பதற்கு இடங்கொண்டிருக்கின்றபடியால் சதாசிவம் பெருவெளியென்றும் அதனதன் குணத்திற்கும் செயலுக்கும் நிறத்திற்குத் தக்கப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். பெளத்த மடங்களிற் றங்கியிருந்த சமண முநிவர்களால் பூதங்களுக்கு இத்தகையப் பலப்பெயர்களைக் கொடுத் திருந்தது மன்றி நிலம், நீர், நெருப்பு, காற்று விசும்பு, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவும் பூமியிற் றோன்றியுள்ள சீவராசிகளிடத்து யாதொரு பலனையுங் கருதாது தாங்களே சகல பலன்களையும் கொடுத்து வருகின்றபடியால் அப்பூதங்கள் யாவற்றையும் தெய்வப்பெயரில் சேர்த்து வரைந்து வைத்துள்ளதுமன்றி வழங்கியும் வருகின்றார்கள். இத்தகையக் காரணக் காரியப் பெயர்களின் விவரங்கள் இப்புருசீகர்களாகும் வேஷப்பிராமணர்களுக்குத் தெரியாதிருப் பினும் மிக்கத் தெரிந்தவர்கள் போல் அபிநயித்து பூதங்களுக் கென்று வைத்துள்ள தேவர்களென்னும் பெயர்களில், நெருப்புக்கு வைத்துள்ள ருத்திரமென்னும் பெயரை ருத்திர னென்னும் ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு ருத்திரியென்னும் ஓர் பெண்சாதியும், நீருக்கு வைத்துள்ள நாராயணமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு சிவணியென்னும் பெண்சாதியும், மண்ணுக்குக் கொடுத்துள்ள பிரமமென்னும் பெயரை ஓர் ஆணுருவாக்கி அவனுக்கு பிரம்மணியென்னும் பெண்சாதியு மேற்படுத்தி கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் போதித்து இத்தேவர்களை வணங்கி வருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்து புத்திர சம்பத்து பெற்று வாழ்வீர்களென மயக்கி சிலாவணக்கங் களைப் பெருக்கிக்கொண்டே வரவும் அவற்றைக் காணும் பௌத்த வுபாசகர்களுக்கு மனஞ்சகியாது மிலேச்சராம் ஆரியர்களை அடித்துத் துரத்தவுமுள்ளச் செய்கைகளே இருவகுப்பாரையும் பெரும் விரோதத்துக்காளாக்கி வருகின்றது. ஆரியராகிய மிலேச்சர்கள் பிராமணவேஷமணிந்து பௌத்தர்களுக்குள்ள யதார்த்த பிராமணர்களது மகத்துவங் களைக் கெடுக்கவும், அதன் சாதன சிறப்புகளை அழிக்கவும், அவர்களது தன்மசாஸ்திரங்களைக் கொளுத்தி தங்களது அதன்ம சாஸ்திரங்களைப் போதிக்கவும் பௌத்தர்களால் வகுத்திருந்த தொழிற்பெயர்கள் யாவையும் சாதி மேற்சாதியென்று மாற்றியும், பெளத்தர்களின் ஞானச்செயல்கள் யாவையும் அஞ்ஞானச் செயல்களாக்கியும் ஒற்றுமெயுற்று வாழ்ந்துவருங் குடிகளை சாதி பொய்யாகிய கட்டுப்பாடுகளினால் ஒற்றுமெய்க் கெடச் செய்தும், வித்தையிலும், புத்தியிலும் யீகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து சதாவுழைப்பிலும், நிதா சுறுசுறுப் பிலும் மிகுந்தக் குடிகளை கல்லுகளையுங் கட்டைகளையும் தெய்வமெனத் தொழுது கடைச் சோம்பேறிகளாவ தைக் கண்ணுற்றுவரும் பௌத்தன்ம விவேகிகள் புருசீக தேசத்தோர் பொய்வேஷங்களினாலும், பொய்ப் பேதங்களினாலும் இந்திர தேசக் குடிகள் சீரழிவதையும் இன்னும் மேலுமேலும் சீரழிந்து வருவதையுங் கண்டு மனஞ்சகியாது இம்மிலேச்சர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே பெளத்ததர்மக் கூட்டத்துள் விவேகமிகுத்தவர்களின் செயலாயிருக்கின்றது. இவ்வாரியரென்னு மிலேச்சர்களோ தங்களை வுயர்ந்த சாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப் போதகங்களுக் குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குப் பராயரானவர்களும், எதிரடையானவர் களும், பொய் வேஷங்களை சகலருக்கும் பறைகிற வர்களுமான பெளத்த தன்ம விவேகிகளைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை யடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலை யெடுக்க விடாமல் நசிக்கத்தக்கயேதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய் பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங் களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுபெறச் செய்து வருகின்றவர்கள் உம்மெயும் உமது அரசாட்சியையும், உமது தேசக் குடிகளையுந் தங்களது பொய் வேஷங்களால் வசப்படுத்திக்கொண்டு பெளத்த தன்மங்களை யழிப்பதுடன் பௌத்தர்களையுந் தாழ்ந்த சாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் பாழ்படுத்துவதற்கு வந்திருக்கின்றார்கள். நீவீ ரிவர்களது பொய் வேஷங்களுக்கும், பொய்ப் போதகங்களுக்கும் உட்படாது விசாரணையி லேற்பட்டது போல் மற்றய வித்தேச வரசர்களும் விசாரிணையால் தெளிந்திருப் பார்களாயின் நெடுங்காலங்களுக்கு முன்பே இப்பிராமண வேஷத்தை விடுத்து தங்கள் சுயதேசத்திற் போய் சேர்ந்திருப் பார்கள். தங்களைப் போன்ற வித்தகைய விசாரணை யிராது மற்றுமுள்ள வரசர்கள் இப்புருசீகரது ஆரியக்கூத்திற்கும் பிராமண வேஷத்திற்கும் உட்பட்டு அவர்களது போதனைகளை நம்பி மோசம் போனபடியால் பல தேசங்களிலுமுள்ள பௌத்த தன்மங்களு மழிந்து பௌத்தர்களுந் தாழ்ந்த சாதிப் பறையர் களென நிலைகுலைந்து வருகின்றார்கள். தாங்கள் இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் நம்பாது அவர்களையும் விரோதித்துக் கொள்ளாது யாசகமாகக் கேழ்க்கும் பொருட்களை யேதேனு மீயந்து உமது தேசத்தை விட்டு அப்புறப்படுத்தும்படியான யேதுவைத் தேட வேண்டியது. அங்ஙனமின்றி விஷப்பூச்சுகளை அடி மடியிற் கட்டி வைத்திருப்பதுபோல் இம்மிலேச்சர்களை உமது நாட்டிற் குடிக் கொள்ளவைத்து விடுவீராயின் அவர்கள் பொய்யைச்சொல்லி வஞ்சிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் நீர் பொருளளித்து போஷித்து வருவீராயின் தக்களையுந் தங்க ளரசையும் மிக்கக் கொண்டாடி பொருள் சம்பாதிக்கு மேதுவில் நிற்பார்கள். கைப் பொருளளிக்காமலும் அவர்களை மதியாம லும் அவர்கள் வார்த்தைகளை நம்பாமலும் இருந்துவிடுவீராயின் எவ்விதத் தந்திரத்தினாலும் உமதரசைப் பாழ்படுத்தி உம்மெயுங் கெடுத்து ஊரைவிட்டோட்டும் வழியைத் தேடி விடுவார்கள். இவ்வகையாகவே சிற்சில வரசர்களைக் கொன்றும் பெளத்ததன்மப் பள்ளிகளில் சிலதை யழித்தும், சில பள்ளிகளை மாறுபடுத்தியும் அவ்விடமிருந்த சமண முநிவர்களையு மகல வைத்து பொருள் வரவுள்ள யிடங்களில் தாங்கள் நிலைத்தும் பொருள் வரவில்லாப் பள்ளிகளை நாசப்படுத்தியும் வந்திருக்கின் றார்களென மிலேச்சர்களின் பொய் வேஷங்களையும், வஞ்சகக் கூத்துகளையும், கருணையற்ற செயல்களையும், நாணமற்ற வுலாவலையும் நந்தனுக்கு விளக்கிக் காட்டி விட்டு அஸ்வ கோஷா பெளத்த பீட பொதிகையைச் சேர்ந்தவுடன் நந்தன் தனது வேவுகர்களைத் தருவித்து சிந்தூரல் நதியின் குறிப்பும், புருசீக நாட்டின் எல்லையும் எவ்விடம் இருக்கின்றதென்றும், எவ்வழியேகில் சுருக்கமாகக் கண்டு பிடிக்கலாமென்றும் தெரிந்துவரும்படி ஆக்கியாபித்ததின் பேரில் வேவுகர்கள் சென்றிருப்பதை மிலேச்சர்களாம் ஆரியர்களறிந்து ஒ, ஓ, எது நம்முடைய தேசத்திற்குச் சென்று இவ்விடமுள்ளவர்களால் நமது மித்திர பேதங்களையறிந்து இவ்விடமுள்ள சிற்றரசர்க ளெல்லோருக்கும் தெரிவித்துவிடுவார்களானால் நம்முடைய பிராமண வேஷத்திற்கு பங்கமுண்டாமென்றெண்ணி, நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரக்காதவழியிலுள்ள வோர்க் காட்டில் மண்மேட்டை தகர்த்து அதன் மத்தியில் கற்றூண்கள் அமைத்துப் பழையக் கட்டிடம் உள்ளது போற்பரப்பி மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டி விட்டு வொன்று மறியாதவர்கள் போல் அரசனிடம் ஓடி வந்து அரசே நாங்க ஏதோ இத்தேசத்தில் பிராமணவேஷ மணிந்து சிலாலயங்களைக் கட்டி குடிகளுக்குப் பொய்யைச் சொல்லி பொருள் பரித்துத் தின்பதாய் ஓர் பெரியவர் சொல்லிக்கொண்டு வந்த வார்த்தைகளைத் தாங்க ளெவ்வளவும் நம்பவேண்டாமென்று கோருகிறோம். காரணம் யாதென்பீரேல் தங்களரண்மனைக்கு மேர்க்கே வோர்க் காட்டிலுள்ள மண்மேட்டை வெட்டி வீடு கட்டுவதற்காக மண்ணெடுக்கும்போது அதனுள் சிலக் கற்றளங்கள் தோற்றப் பட்டன. அதை முற்றிலும் பரித்து சோதிக்குமளவில் பழயக்கட்டிடங்களும் அதனுட் கற்சிலைகளுமமைக்கப்பெற்றிருப் பதை யறிந்த யாங்க ளதிசயமுற்று தங்களுக்குத் தெரிவிக்க வந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட வரசன் திடுக்கிட்டு நம்முடைய தேசத்துள்ளும் சிலாலயங்க ளிருக்கின்றதாவென்று ஆச்சரியமுடையவனாய் வேவுகர்களை யழைத்து பரிக்கு சேணமிட்டு வரச்செய்து அதன் மீதேறி புருசீகர்களையு மழைத்துக்கொண்டு காட்டிலுள்ள மண் மேட்டை யணுகி கல்லுகள் விழுந்து கிடக்கும் இடத்தி லிரங்கி சற்று நிதானித்து அரசனாகையாற் றுணிகரமுண்டாகி யருகிற் சென்று சூத்திரப்பாவையிற் கால்களை வைத்தவுடன் திடீலென்று கல்லுக்குக்கல் மோதவும், நந்தனது தலைக் கீழாகவும், கால்மேலாகவு நசிய சிதம்பித்துக் கொன்றுவிட்டது. உடனே வஞ்சநெஞ்ச மிலேச்சர்களாகிய வாரியர்கள் ஊருக்கு சென்று குடிகளெல்லோரையுங் கூவி பார்த்தீர்களா நந்தன் எவ்வளவு பக்தியுடை யவனா யிருந்தான் சுவாமி அவன் மீது மிக்கப் பிரீதியுடை யவராகி விழுங்கிவிட்டார். பாதங்கள் மட்டிலும் தெரிகிறதென்று காண்பித்தவுடன் ஒவ்வொருவரும் பயந்து தூர விலகி நிற்குங்கால் அறப்பள்ளிகளாம் மடங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்களும், மற்று முள்ளோரும் அவ்விடம் வோடிவந்து பார்த்து ஆ! ஆ! இம் மிலேச்சர்களாகிய வாரியர் சிதம்பக்கல்லை நாட்டி நந்தனைக் கொன்றுவிட்டார்களென் றறிந்து துக்கிக்குங்கால், புருசீகர்கள் நந்தனை சுவாமி விழுங்கிவிட்டார் விழுங்கிவிட்டாரென்று கொண்டாடி குதிப்பதை யறிந்த வுபாசகர்களுக்குக் கோபமீண்டு பல வாரடித்து சிலரைக் கொன்றது போக மீதமுள்ளோர் தங்களு டையப் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் மெய்யென நம்பி மோசம் போயுள்ள தஞ்சை வாணோவென்னு மரசனையணுகி அவனிடம் பெரும் பொய்யைச் சொல்ல வாரம்பித்துக் கொண்டார்கள். அவை யாதெனில், அரசே யாங்கள் சில காலத்திற்கு முன்பு தங்களுடைய நாட்டிற்கு வடகிழக்கே அரசாண்டு வந்த நந்தனென்னு மரசனை யடுத்து அவருடைய பூமியிலுள்ள ஓர் மண்மேட்டை வெட்டும் போது பழய ஆலயமொன்று காணப்பட்டது. அவற்றை முற்றிலுஞ் சோதித்து அரசனிடஞ்சென்று தெரிவித்ததினால் அவரும் மிகுந்த ஆவலுடன் வந்து ஆலயத்துள் நுழைந்து சுவாமி தெரிசனஞ் செய்து ஆனந்தமாக நிற்குங்கால் சுவாமிக்கு அவர் மீது வன்புண்டாகி நாங்களெல் லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரை யெடுத்து விழுங்கிவிட்டார். அச்சங்கதிகளைக் குடிகளுக்குத் தெரிவித்ததின் பேரில் அவர்களும் ஆனந்தமாக வந்து சுவாமியை தியானித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் பறையர்களென்னுந் தாழ்ந்த சாதி கூட்டத்தோர் நந்தனுடைய தேசத்தை அபகரித்துக்கொள்ள வேண்டு மென்னு மாசையால் அரசனை யடுத்திருந்த பிராமணர்களாகிய எங்களை அடித்துத் துரத்திக்கொண்டு வருகின்றார்கள். காரண மியாதெனில், அத்தேசம் நீர்வளம் நிலவளம் நிறைந்த விசேஷித்த நஞ்சை பூமிகளுள்ளதும், சுவாமி ஆவாகனஞ் செய்து கொண்ட நந்தனுக்கு வேறு சந்ததிகளில்லாததுமே காரண மாகும். அதுகண்டு இந்த பறையர்களெல்லோரும் ஒன்றுகூடி தங்களை மடாதிபர் களென்று சொல்லிக்கொண்டு குடிகளை யேமாற்றி அரசன் மனைவியைக் கைப்பற்றிக்கொள்ளும்படி யாரம்பித்து விட்டார்கள். ஆதலின் தாங்கள் தாமதமில்லாம லெழுந்து சேனைகளுடன் வந்து பறையர்களின் கூட்டத்தை அவ்விடம் விட்டுத் துரத்தி, தேசத்தைக் கைப்பற்றிக்கெள்ளுங்கோளென்று கூறியதை அரசன் கேட்டு நீர்வளம் நிறைந்த பூமியை அபகரிக்க வேண்டு மென்னு மாசையால் படை வீரர்களிற் சிலரை யழைத்துக் கொண்டு புருசீகருடன் சென்று நந்தன ரண் மனையைக் கைப்பற்றி முற்றுகையிட்டு தன் இளவல் இலட்சுமணரௌவிடம் ஒப்புவித்து ஆளுகை செலுத்தி வரும்படிச்செய்து தனது தேசத்திற்குப் போய்விட்டான். மிலேச்சர்களாம் ஆரியர்கள் பிராமணவேஷ மணிந்து கொண்டபோது மராஷ்டகர்களுக்குள்ளும், பிராமண வேஷ மணிந்துக் கொண்டவர்க ளிருக்கின்றபடியால் அப்பாஷைக் குரிய இலட்சுமணரெள அரசுபுரிகிறதை யறிந்து அவர்கள் வந்துவிடுவார்களாயின் நமக்கு யாதோ ரதிகாரமும் இல்லாமற் போய்விடு மென்றெண்ணி தம்மைச்சார்ந்த புருசீகர்கள் யாவரையு மிவ்விடந் தருவித்துக்கொண்டு நந்தனைச் சிதம்பித்த விடத்தை ஆலயமெனக்கட்டி அதனைச் சுற்றிலுங் குடியிருக்கத் தக்க வீடுகளைக் கட்டிக்கொண்டு அதன் புறம்பிலுள்ள பூமிகளைப் பண்படுத்திக் கோவிலைச் சார்ந்ததென்று ஏற்படுத்திக்கொண்டு தங்கள் பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் விளங்கப் போதித்து அடித்துத் துரத்தி வரும் பௌத்தர்களின் பயமில்லாமல் வாழலாம். அங்ஙனமிராது அஜாக்ரதையி லிருந்துவிடுவோமாயின் நம்முடைய வேஷத்தை சகலரு மறிந்துக்கொள்ளுவார்களென்று ஒருவருக்கொருவர் கலந்து தங்கள் சுற்றத்தோர்களில் பெருங் கூட்டத்தோர்களை அவ்விடம் வருவித்துக்கொண்டு இல சுமண ரௌவென்னும் அரசனால் தங்களுக்கு வேண்டியயில்லங்களைக் கட்டிக்கொண்டது மன்றி வேண்டிய பூமிகளையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கைசுகத்தி லிருந்தார்கள். அக்காலத்திற் றங்கள் பூமிகளை சீர்திருத்தி பயிர் செய்வதற்கு அரசனைச்சார்ந்த மாராஷ்டக பாஷைக்குடிகளைச் சேர்த்துக் கொண்டால் தங்களுக்கடங்கியேவல் செய்யமாட்டார் களென்று கருதி திராவிட பாஷையில் கல்வியற்றவர்களும், சீலமற்றவர்களுமாய் இல்லமின்றி காடே சஞ்சாரிகளாக மலையடிவாரங்களில் திரிந்திருக்கும் சிலக் குடிகளைக் கொண்டு வந்து தங்கள் பண்ணை வேலையி லமர்த்தி வேண்டிய யேவலை வாங்கிக்கொள்ளுவது மன்றி மற்றுமோர் பேரிழிவை யும் சுமத்திவிட்டார்கள். அவை யாதெனில், மராஷ்டக்குடிகள் உங்களை யாரென்று கேட்பார்களாகில் நாங்கள் பறையர்கள் பறையர்களென்று துணிந்து கூறுங்கள். அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமென்று கூறிய மிலேச்சர்களின் வார்த்தையை கல்வியற்றக் குடிகள் பேரிழி வென் றறியாமலும் இழிபெயரென் றுணராமலும் மராஷ்டக் குடிகள் நீங்கள் யாவரென்றுக் கேட்குங்கால் பறையர் பறையரென்றே பறைய வாரம்பித்துக்கொண்டார்கள். அதன் காரண மியாதெனில், பௌத்தர்களுக்குள் விவேகிகளும், வருங்கால போங்காலங்களை யறிந்துக் கொள்ளக்கூடிய மந்திரவாதிகளானோர் மிலேச்சர்களாம் ஆரியர்களை அடித்துத் துரத்தி பௌத்தக்குடிகள் யாவருக்கு மிவர்கள் வேஷ விவரங்களைப் பறைவதினால் பறையரென்றும் தாழ்ந்த சாதி யென்றுங் கூறி இழிவுபடுத்தி வருவதை அவர்க ளொப்புக்கொள்ளாதுக் கண்டித்தும் வருகிறபடியால் அப்பறைய னென்னும் பெயரைப் பட்சிகளைக் கொண்டும் கொடிய மிருகங்களைக் கொண்டும் பரவச்செய்வதுடன் மக்கள் வாக்காலும் பரவச் செய்ய வேண்டு மென்னுங் கெட்ட யெண்ணத்தினால் கல்வியற் றவர்களும், தங்க யில்லமற்றவர்களும் செல்வமற்றவர்களுமாகி காடே சஞ்சாரமும் மலையே சஞ்சாரமுமாயுள்ள யேழைக் குடிகளைக் கொண்டு தங்களுக்கு தாங்களே பறையர்களெனப் பறையும் வழியைத் தேடிக் கொண்டார்கள். அதற் குதவியாக பௌத்தர்களால் தங்களது ஞான சாதனங்களில் தங்களுக்குள் காண்பான் காட்சியென்றும் ஆண்டான் அடிமையென்றும் சாதித்து வந்த மொழிகளின் அந்தரார்த்தம் இம்மிலேச்சர்களுக்குத் தெரியாதிருப்பினும் அம்மொழி களையே பேராதரவாகக் கொண்டு தங்களை ஆண்டைக ளென்றும் தங்கள் பண்ணை வேலைச் செய்யும் ஏழைக்குடிகளை அடிமைகளென்றும் வகுத்துக்கொண்டது மன்றி வழங்குதலிலும் ஆரம்பித்துக்கொண்டதுடன், இவர்களைக் கொண்டே சமண முநிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அத்தேசத்தை விட்டு துரத்தும்படி யாரம்பித்துக் கொண்டார்கள். மிலேச்சர்களாகிய ஆரியர்க ளவ்வகைப் போதிக்கினும் திராவிடபாஷை யேழைக்குடிகள் பூர்வ பக்திக்கொண்டு சமண முனிவர்கள் பால் நெருங்காமலும், அவர்களைத் துரத்தாமலும் தூரவே விலகி நின்றுவிட்டார்கள். அவற்றைக்கண்ட புருசீகர்கள் ஓஓ! இவர்கள் சுயபாஷைக் குடிகளாதலால் பூர்வ பயங்கரத்தை மனதில் வைத்து நெருங்காம லிருக்கின்றார்களென்றறிந்து திராவிடக் குடிகளை சமண முனிவர்கள்பா லேவவிடாது மராஷ்டகக் குடிகளில் கல்வியற்ற காலாட்சேனையாரை யடுத்து இத்தேசத்தில் மஞ்சட் காவி துணியை யணிந்து கையிலோ டேந்தி பிச்சையிரந் துண்ணுங் கருத்த தேகிகள் களவு செய்வதில் மிக்க சாமார்த்திய முடையவர்கள் அவர்களை மட்டிலு மித்தேசத்தில் தங்கியிருக்கும் படி செய்துக்கொள்ளுவீராயின் உங்கள் காவல்காப்பில் விழித்துக்கொண்டிருப்பதுமல்லாமல் அரசனது கோபத்திற்கும் உள்ளாகிவிடுவீர்கள் ஆதலா லவர்களை இத்தேசத்தில் நிலைக்கவிடா தோட்டி விடு வீர்களாயின் சுகம் பெறுவீர்கள். அவ்வகை துரத்தாமல் விட்டு விடுவீர்களாயின் நீங்களே துன்பப்படுவீர்க ளென்று கூறிய மொழியை மராஷ்டர்கள் மெய்யென்று நம்பி சமண முனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பலவகைத் துன்பப்படுத்தி அறப்பள்ளிகளை விட் டகற்றியது மன்றி மற்றும் வருத்துப்போக்கிலுள்ள சமண முனிவர்களையு மவ்வழிப் போகவிடாமல் தடுத்துப் பாழ்படுத்தி வந்தார்கள். விவேகமிகுந்த வரசர்களின் ஆதரவில்லாமல் சமண முனிவர்களும் விவேகமிகுத்த வுபாசகர்களும் பறையர் பறையரென நிலைகுலைந்து பல தேசங்களுக்குச் சென்று சோதிடம், வைத்தியம், விவசாய முதலியவற்றால் சீவித்து அக்கஷ்டத்திலும் உலக வுபகாரிகளாகவே விளங்கினார்கள். மிலேச்சர்களோ நந்தனை சிதம்பித்துக் கொன்றவிடத் தைச்சுற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொண்டு அவற்றிற்குப் புறம் பேயுள்ள பூமிகளைப் பண்படுத்தி தங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துவருங்கால் மராஷ்டக பாஷையில் பிராமண வேஷ மணிந்துள்ளவர்க ளறிந்து தங்களது சுய பாஷைக்குரிய வரசனாகிய இலட்சுமணரௌவை யடுக்க வேண்டுமென் றெண்ணி வொவ்வொருவராக வந்து சேருவதற் காரம்பித்துக் கொண்டார்கள். அவர்களைக் கண்ட முதல் வேஷப்பிராமணர்களாகிய புருசீகர்களுக்கு அச்சமுண்டாகி ஓ! ஓ! எது நம்முடைய வீடுகளுக்கும், பூமிகளுக்கும் மோசம் நேரிடும் போலிருக் கின்றது. மராஷ்டக்குடிகளோ நம்மெய்ப்போன்ற பிராமண வேஷ மணிந்திருக்கின்றார்கள். அவர்களுடைய கூட்டமும் அவர்களைச் சார்ந்தவர்களும் இவ்விடம் பெருகி விடுவார்க ளாயின் அவர்களது வாக்கையே அரசன் நம்புவானன்றி நம்முடைய வார்த்தையை நம்பமாட்டான். ஆதலால் தேசத்தை விட்டு அவனை அகற்றிவிட வேண்டுமென்று வாலோசித் திருக்குங்கால் வேங்கடத்திலிருந்து மலையனூரானென்னும் ஓர் பெருத்த வியாபாரி தனது கூட்டத்தில் காசிகுப்பி, வளையல், கீரைமணி, சந்தனப்பேழை, தந்த மோதிரம், ஆணிக்கோர்வை, பச்சை முதலியப் பொருட்களைக் கொண்டு வந்து அரசனிடம் இரட்டித்தப்பொருள் சம்பாதிக்கலா மென்னு மாசையால் அவ்விடமுள்ள வோர் சோலையில் வந்து தங்கியிருந்தான். அவற்றை யறிந்த பூருசீகர்கள் அவ்விடஞ்சென்று அவர்களுடைய தேககாத்திரத்தையும், பாஷைமாறுதலையு மறிந்து, இத்தேசத்தில் ஆந்திரபாஷையை ஓர் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு ஆந்திரசாதியோரென்றும், கன்னட பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைக் கண்டு கன்னடசாதியோ ரென்றும், மராஷ்டக பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனைகண்டு மராஷ்டக சாதியோ ரென்றும், திராவிட பாஷையை வோர்க் கூட்டத்தோர் சாதிக்கும் சாதனை கண்டு திராவிட சாதியோரென்றும் வழங்கி வந்த வற்றுள் மலையனூரான் கூட்டத்தோர் சாதிக்கும் பாஷையானது இம்மிலேச்சர்களுக்கு விளங்காது விழிக்குங்கால் மலையனூரான் திராவிட பாஷையில் பேசும்படியாரம்பித்தான். அவற்றை யறிந் தானந்தமுற்று அவனைத் தனித்தழைத்துப்போய் நீங்களெல்ல வரும் ஒரு பெருங்கூட்டமாக யிவ்விடம் வந்ததை ஆலோசிக்கு மளவில் உங்களுக்கு நல்லகாலம் பிறந்ததென் றெண்ணத்தகும். அவை யாதென்பீரேல், இத்தேசத்தரசனை சுவாமி யாவாகனஞ் செய்துக்கொண்டவுடன் சொற்பக் குடியான வனைக் கொண்டு வந்து அரசாளும்படி வைத்திருக்கின்றோம் அவனாலிதை யாளக்கூடிய சக்தி யில்லாதபடியால் உங்கள் வியாபார மூட்டைக ளெல்லாவற்றையும் சிலரிடம் வொப்படைத்து விட்டு மற்றவர்களெல்லோரும் யுத்தமுகத்தராய் நின்று ஒவ்வொருவர் கையில் கோலுங் குண்டாந்தடியு மேந்தி நாளையுதய மூன்றே முக்கால் நாழிகைக்கு மேல் ஒரே கூட்டமாக வந்து அரசன் மனையில் நுழைந்துவிடுவீர் களானால் உங்களுடன் அவனை யெதிர்க்காமல் படி வோட்டி விடுகின் றோம். நீங்களோ தேசத்தைக் கைப்பற்றிக்கொண்டு உங்கள் வியாபாரங்களைச் செவ்வனே நடத்திக்கொள்ளுவதுடன் அரசாங்க வதிகாரச்செயல்கள் யாவற்றையும் எங்களுத்திரவின் படி நடத்தி வருவீர்களானால் நீங்களெல்லோரும் சுகசீவிகளாக வாழ்வீர்களென்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் மலையனூரானுக்கானந்தம் பிறந்து அரசனிடம் வியாபாரத்தாய பொருள் சம்பாதிக்க வேண்டு மென்று வந்த நமக்கு அரசாட்சியும், அரண்மனையுங் கிடைப்பதோர் வியாபார யோகமென்றெண்ணி தாங்கள் கூறியபடி நாளை யுதயத்தில் நாங்கள் வருகின்றோமென்று கூறி யனுப்பிவிட்டார்கள். புருசீகர்கள் யாவரும் சோலையை விட்டகன்று அரண் மனைச்சேர்ந்து அரசனை யணுகி அரசே நமது மனைக்கு வட மேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெருத்தக் கூட்டமாக சில வன்னிய தேசத்தோர் வந்திரங்கி யிருக்கின்றார்கள். அவர்களுடைய நோக்கம் ஒரு வகையில் வியாபாரக் கிருத்தியாக வும் மறுவகையில் யுத்தசன்னதராகவும் காண்பதையறிந்து யாங்கள் அவர்களை நெருங்கி அந்தரங்கச் செயலறிந்து வந்திருக்கின்றோம். அதாவது யுத்தத்தில் வல்ல தேகிகளும் யுக்த்தியில் பேரறிவாளரும், பக்த்தியில் பரம தியானிகளுமா யிருக்கின் றபடியால் நீங்களவர்களை எதிர்த்துப் போர்புரிவதை நிறுத்தித் தங்கள் அரண்மனை முகவாயலில் தங்கப்பாத்திரத்தில் நீரும் தங்க வட்டிலில் புஷ்பமும் துளசியுங் கொண்டு போய் வைத்துவிட்டு சூரியன் மறைந்தவுடன் குடும்பத்தோரையும் காலாட்படைகள் யாவரையு மழைத்துக்கொண்டு தங்கள் தமயனிடம் போயிருப்பீரானால் நாளை யுதயமவர்கள் யுத்தத்திற்கு வந்து அரண்மனை முகவாயலிலுள்ள புஷ்பம், துளசி நீரிவற்றைக் கண்டவுட னடங்கித் தங்கள் சுயதேசந் திரும்பிப் போய்விடு வார்கள். உடனே தாங்கள் வந்து தேசத்தை யாண்டு கொள்ளலா மென்று கூறிய வஞ்சகர்களின் மித்திர பேத வார்த்தைகளை அரசன் மெய்யென நம்பி தங்கப் பாத்திரங்களில் புட்பமும் நீருங் கொண்டு வைத்துவிட்டு குடும்பத்தோர் யாவரையு மழைத்துக் கொண்டு காலாட்படையினாதரவால் வாணோரௌவினரண் மணையைச் சேர்ந்துவிட்டான். மலையனூரானென்னும் வியாபாரியோ உதய மெழுந்து தன் கூட்டத்தோர் யாவரையும் யுத்தத்திற்குச் செல்லுவது போல் திட்டப்படுத்திக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்ற போது தங்களை யெதிர்ப்போர் ஒருவருமில்லையென்னு மானந்தத்தால் மனையைக் கைப்பற்றிக்கொண்டார்கள். புருசீகர் முன்பிருந்த வரசனின் சொத்துக்கள் யாவையும் அபகரித்துக்கொண்டதுடன் வாயற்படியில் வைத்துள்ள தங்கப்பாத்திரங்களையு மெடுத்துக்கொண்டு தங்களில் லங்களில் சேர்த்துக்கொண்டதுடன் மலையனூரானை ஒர் பிண்டமாகப் பிடித்துவைத்துவிட்டு இராஜாங்க சகல காரியாதிகளையுந் தாங்களே நடாத்திவந்தார்கள். இத்தியாதி சங்கதிகளையுங் கண்ணுற்ற மராஷ்டக வேஷப்பிராமணர்கள் தங்களுக் கேதேனுங் கெடுதி உண்டாகு மென்றெண்ணி அவர்களும் விலகிவிட்டார்கள். நடாத்திட்டு இலையனுாண்டு தங் மராஷ்டக வரசனும், மராஷ்டகக் குடிகளும், மராஷ்டகக் காலாட்படைகளும், மராஷ்டக வேஷ பிராமணர்களும் அவ்விடம் விட்டகன்றவுடன் மிலேச்சர்களாம் ஆரிய வேஷப் பிராமணர்களுக்கு ஆனந்தம் பிறந்து பௌத்தர்களால் அவரவர்கள் தொழில்களுக்குத் தக்கவாறு சகட பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூஸ்திரனென்றும் திராவிட பாஷையில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வகுத்திருந்த தொழிற்பெயர்களை கீழ்ச்சாதி, மேற்சாதியென வழங்கச்செய்து தங்களை சகலருக்கும் உயர்ந்த சாதி பிராமணர் களென சொல்லிக்கொண்டு அறப்பள்ளிகளையும், விவேக மிகுத்த சமணமுநிவர்களையும் அழித்துப் பாழ்படுத்தத்தக்க யேதுக்களைச் செய்துவந்ததுமன்றி அறப்பள்ளிகளில் சமண முநிவர்களால் பெரும்பாலும் வந்த சகடபாஷையின் சப்தம் நாளுக்குநாள் குறைந்து திராவிடபாஷை விருத்தியாகிவிட்ட படியால் கன்னடம், மராஷ்டக முதலிய பாஷையில் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனென்னும் சாதிப் பெயர்களை வகுப்பதற்கு யேதுவில்லாமல் மராஷ்டக பாஷையிலுள்ள சில வல்ல மெயுற்றோரை க்ஷத்திரியராகவும், மிலேச்சர்களாகிய தங்களை பிராமணர்களாகவு மேற்படுத்திக்கொண்டு திராவிட பாஷையில் மருத நிலமாகும் பள்ளியப்பதிகளை யாண்டு வந்த சிற்றரசர்கள் சமணமுநிவர்ககையேற்று இவ்வேஷப் பிராமணர்களை அடித்துத் துரத்தி பௌத்த தன்மத்தை நிலை நிறுத்தி வந்தபடியால் அவர்களையும் அவர்களுடைய அரசாங்கங்களையும் நாடுகளையும் பாழாக்கி அவர்களையும் பள்ளிகள் பள்ளிகளெனக்கூறிப் பலவகையாலும் பாழ்படுத்திவிட்டார்கள். சகடபாஷையில் வைசியன், சூஸ்திரனென்றும், திராவிட பாஷையில் வணிகன் வேளாளனென்றும் வகுத்திருந்தத் தொழிற்பெயர்களுக்கு சாதிகளேற்படுத்த வழி யில்லாததால் திராவிட பாஷையிலுள்ளப் பெருந் தொகையினரை வேளாளரென்று சொல்லி வரும்படிக் கற்பித்து விட்டு தானியங்களை மரக்கால்களில் நியாயமாக வளந்து வாணிபஞ் செய்வோர்களுக்கு நியாயளக்கர், நியாயக்கர், நாய்க்கரென்று வழங்கிவந்த வியாபாரிகளுக்குள்ள பெயரை மலையனூரா னென வந்து நந்த னரண்மனையைக் கைப்பற்றிக்கொண்ட பப்பிர பாஷைக்காரனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தங்கடங்கட் பெயர்களினீற்றால் நாய்க்கர், நாய்க்கரென்னுந் தொடர்மொழிகளை திருமலை நாயக்கன், குருமலை நாயக்க னென சேர்த்து வழங்கச்செய்து வியாபாரத்தொழிலில் ஒரு பொருளைக் கொடுத்து மறுபொருளை இரட்டித்து வாங்குகிறவர் களுக்கு ரெட்டி களென்றும், பலசரக்குகளை சிதராது செட்டு செய்து காப்போர்களை செட்டிகளென்றும் வழங்கிவந்த தொழிற்பெயர்களை முத்துரெட்டி, முத்துச் செட்டி யென்னும் சாதிகளாக்கியும், புருசீகவேஷப் பிராமணர்களாகியத் தாங்கள், குண்டாச்சாரி, பீட்மாச்சாரி திம்மாச்சாரி, யென்றும் திராவிடர்களுக்குள் வேஷமணிந்துக்கொண்டவர்கள் குண்டையர், புட்டையர், திம்மையரென்றும், மராஷ்டக பாவையில் பிராமண வேஷ மணிந்துக் கொண்டவர்கள் குண்டரௌ, புட்டோரௌ, திம்மாரௌ வென்றும், கன்னட பாஷையில் பிராமணவேஷ மணிந்து கொண்டவர்கள் குண்டப்பா, பட்டப்பா, திம்மப்பாவென்றும் வழங்கு மேதுக்களைச் செய்துக்கொண்டார்கள். இத்தகையத் தொடர்களை சகல பாஷைக்காரருள் பெருந்தொகையினர் சேர்த்துக்கொள்ளாது வழங்கியது கண்டு சிற்றரசர்களைக் கொண்டு வொவ்வோர் தொடர் மொழிகளை சேர்த்துவரும்படி பயமுறுத்தியது மன்றி கல்வியைக் கற்கவிடா மலும், சமணமுநிவர்களிருப்பிடங்களுக்குச் செல்விடாமலுமே மிக்கத் துன்பப்படுத்தி வந்தார்கள். வட யிந்திரதேச வங்கபாஷைக்காரருள் அறப்பள்ளி களில் தங்கியிருந்த சமண முநிவர்கள் ஓதல், ஓதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றலென்னும் அறுவகைத் தொழிற்களை யாதொரு குறைவுமின்றி சரிவர நடாத்தி வந்தபடியால் அரயனும் உபாசகர்களும் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சிறப்பைக்கண்டு பாலி மொழியிற் சண்ணாளர் சண்ணாளரென சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறந்த கூட்டத்தோர் மத்தியில் மிலேச்ச வேஷப்பிராமணர்கள் சென்று தங்கட் பொய் வேஷங்களையும், பொய்ப் போதங்களையும் மெய்போல் விளக்கியும் அவர்கள் நம்பாது உபாசகர்களைக் கொண்டு வேஷப்பிரமணர்களை யணுகவிடாது துரத்தி வந்ததினால் அங்குள்ள கல்வியற்ற குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் நாளுக்கு நாள் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்யை மெய்யென நம்புதற்காய வேதுக்களைக் செய்துக்கொண்டு முநிவருள் சண் ஆளராக விளங்கினோரைக் கண்டவுடன் ஓடுவதும், ஒளிவதும் வேஷப்பிராமணர்களது வேலையாயிருந்தது. அவற்றைக் காணுந் தங்களைச் சார்ந்த கல்வியற்றக் குடிகள் வேஷப் பிராமணர்களை நோக்கி அறப்பள்ளியிலுள்ள சமண முநிவர்களாம் சண் ஆளர்களைக் கண்டவுடன் ஓடி வொளிக் கின்றீர்களே அதன் காரணம் யாதென்று கேட்பார்களாயின் அறுவகைத் தொழிலை சரிவர நடாத்தும் சண் ஆளரென்னும் சிறந்த பெயரை சண்டாளர் சண்டாளரென்னும் இழிபெயரென மாற்றி அவர்கள் மிக்க தாழ்ந்த வகுப்போர் அவர்களை நெருங்கப்படாது, தீண்டப்படாதென்று கூறி தாங்கள் வழங்கிக்கொண்டே நாடோடிகளாகத் திரிந்தது மன்றி தங்களைச் சார்ந்தவர்கள் நாவிலும் சண் ஆளரை சண்டாளர் சண்டாளரென விழிவுபடக் கூறி முநிவர்களின் சிறப்பைக் கெடுத்துக்கொண்டே வருவது மன்றி அவர்களது அறப்பள்ளிகளிலுந் தீயிட்டு நீதி நூற்களையும், ஞான நூற்களையும் பாழ்படுத்தி அவர்களது சீரையும் சிறப்பையுங் கெடுத்துக்கொண்டே வருகின்றார்கள். யீதன்றி வடமேற்கு தேயத்தில் திராவிட பாஷையை கொடுந்தமிழென்றும், செந்தமிழென்றும் வழங்கியவற்றுள் கொடுந்தமிழ் வழங்கும் மலையாளு வாசிகள் முதனூல் ஆராய்ச்சியில் மிக்க சிறந்தவர்களும், அகிம்சாதன்மத்தில் பசுவினது பாலைக்கறப்பினும் அதனது கன்றினை வதைத்ததற் கொப்பு மென் றெண்ணி பால், நெய் முதலியதைக் கருதாது தெங்குபால், தெங்கு நெய்யையே புசிப்பிக்கும் மேற்பூச்சுக்கும் உபயோகித்துக்கொண்டு கொல்லா விரதத்திலும், சத்திய சீலத்திலும், அன்பின் ஒழுக்கத்திலுமே நிலைத்திருந்தார்கள். அத்தகைய மேன்மக்கள் மத்தியில் ஆரியர்களாம் வேஷப்பிராமணர்கள் சென்று பேதை மக்களை வஞ்சித்து கல்வியற்றக் குடிகளை யடுத்து தாங்களே யதார்த்த பிராமணர் களென்றும், தங்களுடைய சொற்களுக்குக் குடிகள் மீறி நடக்கப்படாதென்றும் பயமுறுத்தி பிராமணனென்னும் பெயர் வாய்த்தோன் செய்யத்தகாத வக்கிரமச்செயல்கள் யாவையுஞ் செய்து உத்தம ஸ்திரீகளை விபச்சாரிகளாக்கி அவர்களது நல்லொழுக்கங்கள் யாவையுங் கெடுத்து வருவதை மலையாள வாசிகளாம் கொடுந்தமிழ் விவேகிகளறிந்து சாத்தியதன்மத்தைக் கெடுக்கும் அசத்தியர்களாம் மிலேச்ச வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தி தங்கள் தேயத்தை விட்டு அப்புறப்படுத்தும் யேதுவையே பெரிதென்றெண்ணி அவர்களைத் தலைக்காட்ட விடாது துரத்தி சத்தியதன் மத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். வேஷப் பிராமணர்களாய மிலேச்சர்களோ ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின் மீது கண்ணென்னும் நோக்க மாறாது தாங்களனுபவித்து வந்த சுகபுசிப்பும், சுகபோகமும் அவ்விடம் விட்டேகவிடாது சுழண்டு கொண்டே திரிந்து அத்தேய சிற்றரசர்களையும் பேரரசர்களையும் தங்களது வயப்படுத்திக் கொள்ளத்தக்க முயற்சியிலிருந்து அரயர்கள் வயப்பட்டவுடன் தங்களை யடித்துத் துறத்தி தங்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப்போத கோஷங்களையும் பலருக்கும் பறைந்து பதிவிட்டகலச்செய்துவந்தப் பேரறிவாளராம் பௌத்த வுபாசகர்களைத் தீயர்களென்றும் மிலேச்ச வஞ்சநெஞ்ச மிகுத்தக் கொடும் பாபிகளாகியத் தங்களை நியாயரென்று மேற்படுத்திக் கொண்டு அரசர்களது மதியை மயக்கி தீய சாதியோரென்றும், நியாய சாதியோரென்றும் இரு பிரிவினைகளை யுண்டு செய்து தங்களை யடித்துத் துரத்தி தங்கள் துற்சிரித்தியங்களை சகலருக்கும் விளக்கிவந்த மேன்மக்களாம் விவேக மிகுந்தோரை தீய சாதிகளென வகுத்து அவர்களை தேசத்துள் வரவிடாமலும் குடிகளிடம் நெருங்கி பேசவிடாமலும் குடிகளைக் கண்டவுடன் தூர விலகி ஓடி விடும்படியான சட்டதிட்டங்களை வகுத்துவிட்டு மிலேச்சர்களாகிய தங்களை நியாயநம்பிகள், நியாயனார், நியாய பிராமணர்களென்றும் கொடுந்தமிழ் விவேகமிகுந்த மேன்மக்க களை தீயசாதிகளென வகுத்து தேசத்துள் நுழைய யேதுக்களை செய்து வருகின்றார்கள். இத்தகைய வஞ்சனெஞ்ச மிகுத்த மிலேச்சர் தங்களை யாரடிக்கினும் தங்களை யார் வையினும் அவைகள் யாவையுங் கருதாது சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும், தங்கள் வயப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலேயே ஊக்கமுடையவர் களாக யிருந்து இத்தேச விவேகமிகுந்தவர்களைத் தாழ்ந்த சாதிகளென்றும் மிலேச்சர் களாகியத் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த சாதிகளென்றும் ஏற்படுத்திக் கொண்டு தங்கள் சுயப்பிர யோசனத்தையே மேலெனக் கருதிச் செய்துவருஞ் செயல்களைக் கண்டு வரும் தேயத்திய மராட்ஷடக வேஷப்பிராமணர்களும் ஆந்திரவேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும் திராவிட வேஷப் பிராமணர்களும் தங்கள் சோம்பலைப் பெருக்கிக் கொண்டு வஞ்சினத்தாலும் சூதினாலும் பொய்யாலும் சீவிக்கத்தக்க ஏதுக்களில் நின்றுவிட்டபடியால் பெளத்த தன்மத்தை சார்ந்த யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக்களுக்கும், சங்கங்களிற் சேர்ந்துள்ள சமண முனிவர்களுக்கும் பெளத்தக் குடும்பிகளுள் விவேகமிகுத்திருந்த உபாசகர்களுக்கும் பலவகை யிடுக்கங்களுண்டாகி சத்தியதன்ம சாதனங்களும், சாத்தியதன்ம போதகங்களும், சத்தியதன்ம நூற்களுமழிந்து பாழுற்று அசத்திய சாதனங்களும், அசத்திய போதங்களும் அசத்திய நூற்களுந் தோன்றுதற் கேதுவாயதன்றி இவ்வேஷப் பிராமணர்களுள் மாறுதல்களையும் வேஷப்பிராமணர்களின் பொய்ப் போதங்களையும், வேஷப் பிராமணரது நாணமற்றச் செயல்களையுங் கண்டறிந்து குடிகளுக்குப் பறைந்துவரும் புத்தபிரான் சதுரகிரி யென்னும் ஓர் மலையில் குடிகளை வருவித்து அன்பைப்பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் பிரசங்கித்து வருங்கால் சகல சீவர்களின் உள்ளங்களும் உறுகி சத்தியதன் மத்தில் லயித்தது. பகவன் பாதப்படி யழுந்தியிருந்தக் கல்லும் உறுகி அவரது கமலபாதம் அழுத்தியதாக சரித்திரம். அக்காலத் தில் உச்சி பொழுதேறி சூரியனது வெப்பத்தால் சீவர்விடா யதிகரித்து மலையில் நீரின்றி சீவர்கள் படுங் கஷ்டத்தை யுணர்ந்த பகவன் தனது ஏக சடையை வுதரி நீட்டியவுடன் கங்கையாம் புனல் புரண் டோடி சனங்களின் தாகவிடாயைத் தீர்த்துவிடும்படிச் செய்து அரித்துவார நுழைந்து பகவனது சடாபார கங்கைநதியென்னும் பெயரும் பெற்று கங்கைக்காதார னென்றும் அவரை யழைத்துவந்தார்கள். சிவாச்சாரிக்கு கங்காதரனென்னும் பெயர் மட்டுந் தெரியுமேயன்றி அதன் சரித்திரங்களறியாராதலின் தாங்களேற் படுத்திக்கொண்ட சிவனது சிரச்சடையில் கங்கையென்னும் ஓர் பெண்ணை வைத்துக்கொண்டிருக்கின்றாரென்றும், தனது துடையின் மீது ஓர் பெண்ணை உட்காரவைத்திருக்கின்றா ரென்றும் சர்பங்கள் புத்தபிரான் தாளிலும் தோளிலும் ஏறி விளையாடிக்கொண்டிருந்தவன் பின் பெருக்க சரித்திர மறியாது தங்களது சிவன் சர்பங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்தா ரென்றும், பௌத்த வுபாசகர்களும், சாக்கை யர்களும் சித்தார்த் தரது மாபூதியென்னும் சாம்பலை புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்று பிரிவாக நெற்றியில் பூசுவதுடன் அவரை தகனஞ் செய்த மிகுதியாய சந்தனக்கட்டைகளில் ஒவ்வொன்றைக் கொண்டு போ யிழைத்து பொட்டிட்டு அறவாழியானை சிந்தித்து வந்த அன்பினிலையை சிவாச்சாரியா ரறியாராயினும் வெறுமனே கிடைக்கும் சாணச் சாம்பலை விபரீதப்பொருளெனப் பகட்டி தங்களை யடுத்தவர்களைப் பூசிக்கச் செய்வதுடன் அதற்கோர் தீட்சையுண்டு, அதை நீங்கள் பெற்றுக்கொண்டபோதுதான் விபூதி அணியலாகும். மற்றப்படி யணிவது பெருந் தோஷ மெனக் கூறி அதற்காயப் பொருள் பரித்து கொண்டு நெற்றியி லிடும் சாம்பலுக்கு நேர்ந்த கதைகளெல்லாங் கற்பித்து வந்ததுன் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் உலகவிவகாரங்களற்று தன்னையறியுங்காலமே காலமென கூறு மொழிக்கு பாலிபாஷையாம் மகடபாஷையில் சைவசமயமே சமயமென சிறப்பித்துக் கூறுமொழியின் அந்தரார்த்தத்தை சிவாச்சாரியறியாது தங்களை சிறப்பித்து சுகசீவனஞ் செய்து கொள்ளுமாறு சிவமதத்தோ ரென்பதுடன் தங்களை சைவ சமயத் தோர் சைவ சமயத்தோரென்றுங் கூறற்குத் தலைப்பட்டார். பௌத்தர்களுக்குள் புத்தரை யென்று மழியா பதுமநிதி யென்றும், அவரது தன்மத்தை யென்று மழியா தன்மநிதி யென்றும், அவரது சங்கத்தை யென்று மழியா சங்கநிதியென்றும் வழங்கிவந்து அவைகளெக்காலும் தங்கள் சிந்தையில் நிலைப் பதற்காக அரசமரக்கரையில் சிறு மணிகள் செய்து துவார மிட்டுக் கயிற்றில் கோர்த்து வைத்துக்கொண்டு வொழிந்த நேரங்களில் புத்த, தன்ம, சங்கமென உருட்டி வருவது வழக்கமாகும். அம்மணிக்கு தன்மகாயத்தை சிந்திக்கும் மணியென்றும், உருதிரட்டு மணியென்றும் உருதிரட்டுங் கட்டையென்றும் வழங்கி வந்தார்கள். சிவாச்சாரியாரோ, அம்மணிக்கு மாறுதலாக பேரிலந்தைக் கொட்டைகளைக் கொண்டு வந்து உருதிரட்டு மணியென்னும் பெயரை மாற்றி உருதிராட்ச மணியென வழுங்கும்படிச் செய்து கொண்டார். பௌத்தர்கள் மணியைக்கொண்டு உருபோட்டு சிந்திப்பதற்கோர் உபாயஞ் செய்துக்கொண்டிருக்க அதன் கருத்தறியா சிவாச்சாரியார் உரு திரட்டுங் கொட்டையாலேயே தங்களுக்குந் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அனந்த சுகங்களுண்டெனக் கூறி சிலாரூபங்களாலும், கொட்டை களாலும், சாணச்சாம்பலாலும் மக்களுக்கு சுகமுண்டென்னும் சோம்பலையும், மதி மயக்கையும் உண்டு செய்துவிட்டார். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் செயல்களைக் கண்டு வரும் திராவிட வேஷப்பிராமணர்கள் பௌத்தர்களால் வழங்கிவரும் தேக தத்துவப் போதங்களைக் கேட்டி ருந்தவர் களாதலின் அதே பாகமாக சிலாலயங்களைக் கட்ட வாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது ஒவ்வோர் மனுக்களின் தேகத்துள்ளும் அடிவயிற்றிற்குங் கீழும், மூலத்திற்கும் உள்ளது மண்ணினது பாகமென்றும், தொப்புழில் உள்ளது நீர்பாகமென்றும், மார்பிலுள்ளது அக்கினி பாகமென்றும், கழுத்திலுள்ளது காற்றின் பாகமென்றும், நெற்றியிலுள்ளது ஆகாயபாக மென்றும் வகுத்து தங்கடங்கள் மனதைப் புறம்பே செல்லவிடாது தேக தத்துவ வாராய்ச்சியில் நிலைத்திருந்த சமண முநிவர்களின் கருத்தை யொட்டி தங்கள் சிலாலயங் கட்டுங்கால் அதனுள் நுழையும் வாயற்படியில் ஓர் சதுரக்கல்லெழுப்பி அதன் மீது கோசமும், பீஜமும் யானையின் தலையுந் துதிக்கை போலும் கற்களிற் செய்து இதுவே மனிதனின் மூல ஆதார பீடமென்றும், இதுவே பிள்ளையீவோர் பீடமென்றும், தேகத்தைக் கெடுத்துப் பாழடையச் செய்வதற்கு இதுவே விக்கின பீடமென்றும் முதற்பீடங் கட்டி விட்டு; அதற்குமேல் இதுவே மண்ணினது பீடமென்றும், இதுவே உற்பத்திகளுக்கும் ஆதார பீடமென்றும் அடிவயிற்றின் சுய அதிட்டான பீடமென்றும் சதுரமாய் இரண்டாவது பீடங் கட்டிவிட்டு; அதற்குமேல் இதுவே நீரின் பீட மென்றும், இதுவே தேகமெங்கும் பரவிக் குளிர்ச்செய்யும் பீடமென்றும் தொப்பிழ் வழியே அன்னாகாரஞ் செல்லும் மணி பூரக பீடமென்றும் பிறைபோன்ற மூன்றாவது பீடங் கட்டிவிட்டு ; அதற்குமேல் இதுவே அக்கினியின் பீடமென்றும், தேகமெங்கும் அனலீயந்து காக்கும் பீடமென்றும், மார்பின் பாகவிசுத்தி பீடமென்றும் முக்கோணமாக நான்காவது பீடங் கட்டி விட்டு; அதற்குமேல் இதுவே காற்றின் பீடமென்றும், தேகத்தின் சகல வோட்டங்களையும் பரவச் செய்யும் பீடமென்றும், அனாத பீடமென்றும் கழுத்தில் அறுகோணமாய் ஐந்தாவது பீடங் கட்டிடங் கட்டிவிட்டு, அதற்குமேல் இதுவே ஆகாய பீடமென்றும், சகலமுந் தன்னுளறியும் பீடமென்றும் சகலத்தையும் தனதாக்கினைக்கு நடத்தும் ஆக்கினை பீடமென்றும் வட்டமாக ஆறாவது பீடங்கட்டி சுற்று மதில்கள் யெழுப்பிவிட்டு சகல மனுக்களையுந் தருவித்து இதுதான் மனிதனுக்குள்ள ஆறாதாரபீடமென்றும், அறுமுகக் கோணமென்றும் இதனை வந்து யிடைவிடாது சிந்திப்பவர்கள் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்க்கையைப் பெறுவார்களென்றுங் கூறிய மொழிகளைக் கல்வியற்றக் குடிகளும் கல்வியற்ற சிற்றரசர்களும் மெய்யென நம்பி ஒவ்வோர் பீடங்களுக்கும் தட்சணை தாம்பூலங் கொண்டு வந்து செலுத்தி தொழுகையை ஆரம்பித்ததின் பேரில் சகல பெருங் கூட்டத்தோர் திராவிட வேஷபிராமணர்களின் சிவாலயங்களுக்குப் போகும்படி யாரம்பித்துக்கொண்டார்கள். அதனால் ஆரிய வேஷப்பிராமணர்கள் பொருள் வரவு குன்றி கஷ்டமுண்டாயதால் அவர்கள் கூட்டத்தோர் யாவரும் ஒன்று கூடி நாம் ஒரேயிடங்களில் சிலாலயங்களைக் கட்டி சீவிப்பதால் கஷ்டமேயுண்டாகும். ஊர்வூராக சுற்றி பொருள் சம்பாதித்து வந்து வோரிடந்தங்கி சுகம் அனுபவிக்க வேண்டுமென்னும் ஓர் ஆலோசினையை முடிவு செய்துச் கொண்டு பௌத்தர்களுக்குள் புத்தபிரானுக்குரியர் பெயர் களில் எப்பெயரை முக்கியங் கொண்டாடுகின்றார்கள் அவரை எவ்வகையாக முக்கியம் சிந்திக்கின்றார்களென் றாலோசித்து சுருக்கத் தெரிந்துகொண்டார்கள். அதாவது புத்தபிரான் சருவ சங்கங்களுக்கும் அறத்தைப் போதித்து வந்தபடியால் அவரை சங்க அறரென்றும் சங்க தருமரென்றும், சங்க மித்திரரென்றும் வழங்கி வந்தது மன்றி அவர் எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விரித்து வந்தபடியால் ஜகத்குரு வென்றும் ஜகன்னென்றுங் கொண்டாடி வந்தார்கள். இதனைத் தெரிந்து கொண்ட ஆரிய வேஷப் பிராமணர்கள் தங்களுக்குள் நல்ல ரூபமுடையவனா கவும், ஆந்திரம், கன்னடா, மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு பாஷைகளிற் சிலது பேசக்கூடியவனாகவும், கோகரணங் கஜகரணங் கற்றவனாகவும் உள்ள ஒருவனைத் தெரிந்து கொண்டு அவனுக்கு வேஷ்ட்டி அங்கவஸ்திரம் முதலாயதும் பாட்டினால் தரித்து காசிமாலை, முத்துமாலை முதலிய தணிந்து தலையில் நீண்ட குல்லா சாற்றி, ஓர் வினோதமான பல்லக்கிலேற்றி சில யானைகளின் பேரிலும் ஒட்டகங்களின் பேரிலும் தங்கள் புசிப்புகளுக்கு வேண்டிய தானியங்களை யேற்றிக்கொண்டு தங்கள் சுயசாதியோர்களே பல்லக்கைத் தூக்கிச் செல்லவும், தங்கள் சுயசாதியோர்களே சூழ்ந்து செல்லவுமாகப் பல யிடங்களுக்குச் சென்று ஜகத்குரு வந்துவிட்டார். சங்க அறர் வந்துவிட்டார், சங்கற ஆச்சாரி வந்துவிட்டார், கிராமங்க ளோரும் தட்சணை தாம்பூலங்கள் வரவேண்டும், யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் வரவேண்டுமென்று சொல்லி ஆர்பரிக்குங்கால் அவர்களது பெருங் கூட்டத்தையும் பகரு மொழிகளையும் கேட்டப் பூர்வ பெளத்தக் குடிகளிற் சிலர் ஜகநாதனென்பதும், ஜகத்குருவென்பதும், சங்கறரென்பதும், சங்கதருமரென்பதும் நமது புத்தபிரான் பெயராதலின் அவர்தான் வந்திருப்பாரென்றெண்ணி பேராநந்தங்கொண்டு வேணதட்சணை தாம்பூலங்களை யளிப்போரும் யானை ஒட்டகங் களுக்கு தீவனங்களளிப்போரும் வந்திருக்குங் கூட்டத்தோரைக் காப்போருமாக வுதவிபுரிய வாரம்பித்துக் கொண்டார்கள். விவேகமிகுத்த சிலக் குடிகளோ இவர்களை வேஷப்பிராமணப் பொய்க்குருக்களென்றறிந்து துரத்திய போதிலும் அவிவேகி களின் கூட்ட மிகுத்திருக்கு மிடங்களில் விவேகிகளின் போதமேற்காமல் அவர்களைத் தங்களுக்கு விரோதிகளென்று கூறி அருகில் நெருங்கவிடாமற் செய்து கொண்டு தங்களது பொய்க்குரு வேஷத்தை மெய்க்குரு போல் நடித்து தேசங்களை சுற்றி வருங்கால் விவேக மிகுத்த பௌத்தக் கூட்டத்தோர்களால் யானை ஒட்டக முதலியவைகளைப் பரிகொடுத்து பல்லக்கு முடையுண்டு பொய்க்குருவு மடியுண்டு வோடியபோதினும் ஜகத்குருவென்று பொய்யைச் சொல்லி பல்லக்கிலேற்றித் திரிவதால் மிக்கப் பொருள் சேகரிப்பதற்கு வழியும் சுகசீவனமுமா யிருக்கின்றபடியால் மறுபடியும் பல்லக்கு, ஒட்டகம், யானை முதலியவைகளை சேகரித்துக்கொண்டு தென்னாடெங் குஞ் சுற்றி பொருள்பரிக்கு மேதுவில் நின்றுவிட்டார்கள். ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் படாடம்பப் பொய்க்குரு வேஷத்தால் திராவிட வேஷப்பிராமணர்கள் செய்துவரும் சிலாலய வரவு குன்றி கஷ்டம் நேரிட்டபடியால் தங்களாசிரியனாகும் சிவாச்சாரியின் பெயரை நீலகண்ட சிவாச்சாரியென நீட்டி இவர்தான் ஜகத்குரு இவர் தான் சிவாச்சாரி இவரால் போதித்துக் கட்டியுள்ள அறுகோண பீடமே முக்கியம் அவ்விடங் கொண்டுவந்து தட்சணை தாம்பூல மீவதே விசேஷமெனக் கூற வாரம்பித்துக்கொண்டது மன்றி சங்கறராகிய ஜகத்குரு வடக்கே மகத நாட்டின் சக்கிரவர்த்தித் திருமகனாகப் பிறந்து சகலப் பற்றுக்களையுந் துறந்து நிருவாண முற்று நித்திய சுகம் பெற்றதுடன் தானடைந்த சுகத்தை உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் பெற்று துக்கத்தை நீக்கிக் கொள்ளுவதற்காகத் தரணியெங்கும் சாது சங்கங்களை நாட்டி மெய்யறத்தை யூட்டி மத்திய பாதையில் விடுத்து விட்டு பரி நிருவாணமடைந்து அவரது தேகத்தையும் தகனஞ்செய்து நெடுங் காலமாகி விட்டது. அவரது சங்கறனென்னும் பெயரையும் ஜகத்குருவென்னும் பெயரையும் இவர்கள் சொல்லிக்கொண்டு பொருள் பரித்து வருகின்றார்கள். இவர்களது பொய்க்குரு வேஷத்தை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் நீலகண்ட சிவாச்சாரியின் கொள்கைகளையும் அவரது சிலாலயங்களையும் பூசிப்பதே விசேஷமெனக் கூறிவந்தார்கள். திராவிட வேஷப்பிராமணர்களது கூற்றை யறிந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் சங்கங்களுக்கு அறத்தைப் போதிக்காது ஜனசமுகத்தில் பொருள் பரிப்பவர்களா யிருக்கின்றபடியாலும், சாதியில் பெரிய சாதி யென்னும் பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் இருக்குமிடங்களை விட்டு வெளி தேசங்களுக்குப் போகாமலிருக்கின்றபடியாலும் தங்களை சங்கறரல்லவென்றும் ஜகத்திற்கே குருவல்லவென்றும் பெரும் பொய்யர்களென்றும் சொல்லி வருகின்றார்களென் றறிந்து கொண்டு தங்களது பொய்யாய ஜகத்குருவை பல்லக்கிலேற்றி செல்லுங்கால் பெருங் கூட்டங்களும் கனவான்களும் நிறைந்துள்ள விடங்களிலிரக்கி மரத்தடியில் உட்காரவைத்து யானையைப் போல காதையாட்டுங் கஜகரண வித்தையையும், பசுவைப் போல தேகமெங்குந் துடிப்பெழச்செய்யும் கோகரண வித்தையையுஞ் செய்யவிட்டு மக்களை மதிமயக்கி திகைக்கச் செய்து பொருள்பரிப்பது மன்றி அவர் யாரெனில் சிவனே சங்கராச்சாரியாக வந்து பிறந்திருக்கின்றார் இவரையே நீங்கள் சிவனென்றெண்ணியும் இவரையே ஜகத்குருவென்று பாவித்தும் தட்சணை தாம்பூல மளிப்பீர்களாயின் சகல சம்பத்தும் பெற்று உலகத்தில் வாழ்வது டன் உங்கள் மரணத்திற்குப் பின் சிவனுடன் கலந்துக்கொள்ளு வீர்கள். மற்றப்படி உருதிரட்டும் உத்திராட்சக்கொட்டை யென்னும் பேரிலந்தன் விதையாலும் சாணச் சாம்பலாலும், அறுகோணத்திற்குச் செலுத்தும் தட்சணையாலும், யாதொரு பலனையும் அடைய மாட்டீர்களென சொல்லிக்கொண்டே அங்கங்கு சென்று பொருள்பரிக்க வாரம்பித்துக் கொண்டார்கள். சிலபேரிவர்களை யடுத்து அவர்கள் அறுகோணத்தில் சிவனை அர்ச்சிக்கின்றோமென்கிறார்கள். தாங்களோ சிவனே சங்கராச்சாரியாக வந்ததாகக் கூறுகின்றீர்கள். உங்களிருவருக் குள்ளும் பேதமுண்டாயக் காரணம் யாதென வினவுவார் களாயின் எங்களுக்குள் சிவனே சங்கறராக வந்துள்ளபடியால் நாங்கள் வேதத்திற்கு மேற்பட்ட வேதாந்திகள் எனக்கூறி திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிவைத்துள்ள சிலாலயங் களைக் கண்டித்தும் சிலாலயப் பீடங்களைத் தொழுவதில் யாதொரு பயனுமில்லை யென்று கூறியும் அவர்கள் சீவனத்தைக் கெடுத்து வருவதுமன்றி தங்கள் ஜகத்குருவேஷத்தை இன்னும் படாடம்பப்படுத்தி யானை யலங்கிரதம், குதிரை யலங்கிரதம், பல்லக்கலங்கிரதம், குருவலங்கிரத முதலிய சிறப்பால் பேதமெயமைந்த சிற்றரசர்களையும் குடிகளையு மயக்கி ஜகத்குரு வந்தார் சங்கறர் வந்தார் பாதகாணிக்கைக் கொண்டு வாருங் கோளெனப் பொருள்பரித்து பாதையுள்ள தேசங்களை சுற்றிக்கொண்டு முதுகாஞ்சியை யரசாண்டு வந்த இரண்ய காசியபனிடம் வந்து சேர்ந்தார்கள். இரண்ய காசியபனின் ஆளுகைக் குட்பட்டக் குடிகள் யாவரும் இந்திர விழாக் கொண்டாடுவதில் விசேஷ சிரத்தையுடையவர்களும் அத்தேசமெங்கும் சங்கங்களும் நிறைந்து அறமும் பரவியிருந்தது கொண்டு குரு விசுவாசத்தி லயித்திருந்தவர்களு மாதலின் ஜகத்குரு வந்தார், சங்கறர் வந்தாரென்றவுடன் ஜனகோஷத்தின் படாடம்பத்திற்கு பயந்தும் தங்கள் மெய்குருவின் மீதுள்ள அன்பின் பெருக்கத்தால் பொய்க்குருவின் வேஷத்தை மெய்க்குருவென நம்பி வேண தட்சணைகளும் யானை குதிரை முதலியவைகளுக்கு தீவனங்களு மளித்து அதி சிறப்பு செய்துவந்தார்கள். ஜகத் குரு வந்துள்ளாரென்று கேழ்வியுற்ற வரசன் அவர்களை தனதரண்மனைக்கு அழைத்து வரும்படி யாக்யாபித்தான். அம்மொழியைக் கேட்ட ஆரிய வேஷப்பிராமணர்களுக்கு மிக்க வானந்தம் பிறந்து பல்லக்கின் கோஷத்துடன் ஜகத்குரு வருகின்றார் சங்கறர் வருகின்றாரென்னுங் கூச்சலுடன் அரயன் சமுகஞ் சேர்ந்தார்கள். இவர்கள் படாடம்பத்தைக் கண்ட வரயன் புன்னகைக்கொண்டு அவர்களுக்கு கைகூப்பி சரணாகதி கேளாது நீவிர் யார் காணும் எங்கு வந்தீர்களென்றான். இரண்யகாசியபன் தங்களைக் கண்டு வணங்காமலும் ஆசனத்தைவிட்டெழாமலும் யார் எங்கு வந்தீர்களென்ற மொழி நாராசங் காச்சி விட்டது போலிருந்தும் காரியத்தின் பேரிற் கண்ணுடையவர்களாதலின் சிவனே சங்கறராகத் தோன்றி யிருக்கின்றார் அவரை தெரிசிக்கும்படி தங்களிடம் அழைத்து வந்துள்ளோமென்றார்கள். அவற்றை வினவிய இரண்யகாசியபன் இவ்வேஷப் பிராமணர்களின் மித்திர பேதங்களையும், இவர்களது துற்செயல்களையும் முன்பே யறிந்துள்ளவனாதலின் பல்லக்கில் உட்கார்ந்திருப்பவரை நோக்கி ஐயா சிவனென்றால் அவர் யார் அவர் சங்கறராக யெவ்விதமாகப் பிறந்தார் அதை விளக்க வேண்டுமென்று கேட்டான். சிவனென்னும் பெயரும் அத னந்தரார்த்தமும் சங்கற ரென்னும் பெயரும் அதன் தோற்ற காரணமு மறியாதவர்களா தலின் ஏதொரு மாறுத்திரமுங் கூறாது குருதட்சணையுண்டா வில்லையாவென் றார்பரித்தார்கள். அதனை வினவிய அரசன் நந்தனென்னு மரசனை கற்சிதம்பத்தால் சிதம்பித்துக் கொன்றவர் களும், புரூரவனை மண்குழிவெட்டி மாய்த்தவர்களுமாகியக் கூட்டத்தோர் நீங்களல்லோ வென்றான். அம்மொழியைக் கேட்ட குருவேஷக்கூட்டத்தோர் பின்னுக்கே பல்லக்கைத் திருப்பிக்கொண்டு மாளவ பதிக்குப் போய் சேர்ந்தவர்கள் நீங்கலாக மற்றுமுள்ள சிலர் முதுகாஞ்சியில் தங்கி எவ்வித மாயினும் அரசனை மாய்த்து சுகசீவனந் தேடிக்கொள்ள வேண்டு மென்னும் பேராசையால் பிச்சையேற்று தின்றுக் கொண்டே அரண்மனையிலுள்ளவர்களை வசப்படுத்திக் கொண்டு அரசபுத்திரன் பிரபவகாதனை நேசிக்கவும் தங்கள் சொற்படி கேட்கவுமான சில தந்திரோபாயங்களைச் செய்து கொண்டு அப்பா நீர் அறப்பள்ளிக்குச் செல்லும் போதும், அரண்மனையி லிருக்கும்போதும் நாராயண நம நாராயண நம வென்று சொல்லிக்கொண்டே யிருப்பாயாயின் உன் தகப்பனும் மற்றுமுள்ளோரும் அஃதென்னையென்று கேட்பார்கள். அவர்தான் எங்களுடைய தேவன், அவர்தான் எல்லோரையுங் கார்ப்பவ ரென்று கூறுவையாயின் அரசனும் மற்றுமுள்ளோரும் சந்தோஷப்பட்டு உன்னை மெச்சிக் கொள்ளுவார்களென உற்சாகப்படுத்தி விட்டார்கள். பிரபவகாதனும் யாதொன்றுமறியா சிறியனாதலின் அம்மொழியை மெய்யென நம்பி அரண்மனையில் விளையாடும் வேளையிலும், அறப்பள்ளியில் கல்வி கற்கும் வேளையிலும், சயனிக்கும் வேளையிலும், நாராயணா நமா நாராயணா நமா வென்னு மொழியையே வோர் விளையாட்டாக வுச்சரித்திருந்தான். அம்மொழியை அறப்பள்ளியில் வசிக்கும் சமண முநிவர்களறிந்து பிரபவகாதனை அருகிலழைத்து அப்பா நீரென்ன சொல்லுகிறீ ரென்றார்கள். அவன் யாதொன்றும் வேறு மறுமொழி கூருது நாராயண நம, நாராயண நமவென சொல்லிக்கொண்டே ஓடி விட்டான். அறியா சிறுவனும் அரசபுத்திரனு மாதலின் அவனை ஒன்றுங் கவனிக்காமல் மகடபாஷையில் (நாரோவா) நாரோயண்யோ வென்னு மொழிக்கு நீர் என்னும் பொருளுள்ளபடியால் நீரே நமவென்று சிறுவன் கூறுமொழி யாதும் விளங்கவில்லை. அதையே ஓர் விளையாட்டாக சொல்லித் திரிகின்றான். கேட்கினும் மறுமொழி கூறுவதைக் காணோம். அம்மொழி விளையாட்டே அவன் சட்ட மெழுதுவதையும், பாட்டோலையையுங் கெடுத்து வருகின்றது. அரசன் கேப்பாராயின் ஆயாசமடைவார். ஓலைச்சுருள் விடுக்கவேண்டுமென்று பேசிக்கொண்டார்கள். இச்சங்கதிகள் யாவையுமறிந்த வாரிய வேஷப்பிரா மணர்கள் பிரபவகாதனை யழைத்து உம்மெ யாவர் கேட்கினும் பதில் கூற வேண்டாம் அரசன் கேழ்ப்பாரேயானால் நாராயணன் தான் சகலரையுங் காப்பவர் ஆதலால் நாராயண நமவென்று சொல்லுகிறேனெனத் திடம்படக் கூறுவீராயின், உமது தந்தையும் மற்றுமுள்ளோரும் ஆனந்திப்பதுடன் உமது விவேகத்தைப் பற்றியும் மிக்கக் கொண்டாடுவார்கள். அங்ஙனமவர்கள் ஆனந்தங்கொள்ளாது சீற்றமுடையவர் களாகி நாராயணனென்றாலென்ன, அவனெங்கிருக்கின்றான், அவனெத்தேசத்தான், என்னிறத்தான், என்னபாடையானென விசாரிப்பார்களாயின் அவற்றை மாலை அந்தி நேரத்திற் காண்பிக்கின்றேன் தந்தையாகிய நீவிர் தவிர மற்றவர் யாரு மிங்கிருக்கப்படாதென்று தெரிவித்து அவ்விடம் நடந்த வர்த்தமானங்களை யெங்களுக்கு மறிவித்து விடுவீராயின் நாராயணனை கொலு மண்டபத்திலுள்ள ஓர் தூணினின்று வரச்செய்து தமக்கும் தமது தந்தைக்கும் தரிசனங்கொடுக்கச் செய்கின்றோம். தாங்கள் யாதொன்றுக்கும் பயப்படாது நாராயணன் எங்கிருக்கின்றானெனக் கேட்குங்கால் இதோ தூணிலுமிருக்கின்றான் துரும்பிலுமிருக்கின்றானெனப் பெருங்கூச்சலிடு வீராயின் உடனே நாராயணன் தரிசன மீவாரென்று சொல்லி பிரபவகாதனை யனுப்பிவிட்டு அந்திபொழுதாகி ஆள்முகம் ஒருவருக்கொருவர் தெரியாது மறைவுண்டாம் நேரங்கண்டு வேவுகர்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு யாருமறியாது அரண்மனைக்குள் பிரவேசித்துத் தூண்களின் மறைவில் மறைந்திருந்தான். பொழுதஸ்தமிக்குங்கால் புத்திரன் பள்ளியிலிருந்து வந்தவுடன் சமண முநிவர் அளித்திருந்த ஓர் ஓலைச்சுருளை தந்தையிடங்கொடுத்து நாராயண நமவென்றான். அம்மொழியைக் கேட்டு ஒலைச்சுருளைக் கண்ட வரயனுக்கு ஓர்வகை ஆயாசமுங் கோபமும் பிறந்து அடா பிரபவகாதா, நமது வம்மிஷவரிசையில் தாய் தந்தையரை தெய்வமெனக் கொண்டாடும் பால் பருவத்தில் இரண்யகசிபநமாவென்று சொல்ல வேண்டியதிருக்க ஜலத்தை நோக்கி நாராயண நமவென்று கூறுவதை யோசிக்கில் பிரபவ மேற்படி புரட்டாசி மாதம் பிற்பூரணை பிற்பகலில் பிறந்தவன் பிதாவிற்கே சத்துருவாவானென்னுங் கணிதப்படி உனது பிறவியின் காலதோஷம் தந்தையை மறந்து தண்ணீரை சிந்திக்குங் காலமாச்சு போலுமென்று துக்கித்து உங்கள் நாராயணன் எங்கிருக்கின்றானென்றான். அதைக் கேட்ட பிரபவகாதன் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பானென்று பெருங் கூச்சலிட்டான். அக்கால் தூணில் மறைந்து சிம்மத்தோலை தலையிற் போர்த்திருந்த வாரிய வேஷப்பிராமணன் திடீரென வெழுந்து நிராயுதபாணியாயிருந்த வரசனை தன் கைவல்லியத் தால் வயிற்றைக் கிழித்துக் கொன்றுவிட்டு வெளி ஓடிவிட்டான் பெரும் அரவங்கேட்ட அரச அங்கத்தவர்கள் யாவரும் ஓடி வந்து பார்க்குங்கால் அரசன் பிரேதமாகக் கிடக்கவும் அருகிநிற்கு மைந்தன் யாதொன்றும் தோன்றாமல் திகைக்கவுங் கண்டவர்கள் அரசனைக் கொன்றவர்கள் யாரென்று கேழ்க்குங்கால் மனிதரூபமாக ஓர் சிம்மம் வந்து கொன்றுவிட்ட தென்று கண்டவர்கள் கூச்சலிட்டலற பிரபவகாதனு மவ்வகை சொல்ல வாரம்பித்தான். அவற்றைக் கேட்ட விவேகிகள் மனிதனைப்போன்ற சிம்மமும் உலகத்தி லுண்டோவென விசாரித்ததுடன் பிரபவகாதனையும் சரிவர விசாரிக்க வாரம்பித்தார்கள். பிதாயிறந்தபின் ஆரிய வேஷப்பிராமணர்களால் நடந்து வந்த சங்கதிகள் யாவற்றையும் சொல்லும்படி யாரம்பித்ததின் பேரில் மந்திரிப் பிரதானிகளுக்கும், சமண முநிவர்களுக்கும் சந்தேகந்தோன்றி அவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையுந் தருவித்து வஞ்சினத்தால் அரசனைக் கொன்றவர்கள் யாரென விசாரித்தார்கள். அவற்றை வினவிய ஆரியர்கள் தாங்களும் அரசனது மரணத்திற்காகத் துக்கிப்பது போல் மிக்கத் துக்கித்து நாங்களிவ் விடம் வந்தபோது சில பெரியோர்கள் நாராயணனும், நாரசிம்மனும் ஒன்றேயென்று சிந்தித்துக்கொண்டது மன்றி எங்களையும் சிந்திக்கும்படி செய்துவிட்டுப் போனார்கள். அவ்வகையில் யாங்கள் சிந்தித்திருக்கும் போது அரசபுத்திரனும் அவ்விடம் வருவதுண்டு. யாங்களு மவற்றை சொல்லும்படி செய்வதுண்டு. அரசனுக்கு ஏதோ குலதெய்வ தோஷத்தால் இத்தகைய மரணம் நேரிட்டிருக்குமேயன்றி மற்றொருவராலும் நேர்ந்திருக்க மாட்டாதென்று கூறியவுடன் சமணமுநிவர்கள் பகவனது சகஸ்திர நாமங்களை யாராய்ந்து அசோதரையாம் மலையரசன் புத்திரி பகவனை நாரசிம்மமென்றழைத்த ஓர் பெயருண்டு. ஆயினும் அகிம்சா தன்மத்தை போதித்த அறவாழியான் இத்தகையச்செயலைச் செய்வரோ ஒருக்காலுஞ் செய்யமாட்டார். இவைகள், யாவும் ஆரிய வேஷப்பிராமணர் களின் மித்திரபேதமே யென்று முடிவு செய்தார்கள். அத்தகைய முடிவிற்குப் பகரமாய் வேவுகரில் ஒருவனோடி வந்து சமணமுநிவரை வணங்கி தேவரீர் இதோ நிற்குங் கூட்டத்தோரிலொருவன் மாலையில் வந்து அரசனிடம் போகவேண்டுமென்று கேட்டான். நான் வெளியிற் போகும் சமயமானபடியால் போகலாமென்று சொல்லிவிட்டுப் போகும் போது அவன் அக்குளில் யேதோ ஓர் மூட்டையுள்ளதைக் கண்டேன். அது யாதென்றறியேன். ஆயினும் அவனை மட்டும் எனக்குத் தெரியுமென்றான். சமணமுநிவர் மந்திரிக்குத் தெரிவித்து மந்திரியும் வேவுகர்களை விடுத்து அவனைப் பிடிப்பதற்கு முன் ஊரைவிட்டோடிப்போய்விட்டான். அதன் பின்னர் அரசாங் கத்தவர் யாவரு மொன்றுகூடி நூதனமாயிவ்விடங் குடியேறியுள்ளக் கூட்டத்தோரை துரத்திவிடவேண்டு மென்றாலோசித்து ஆரிய வேஷப்பிராமணர்கள் யாவரையு மத்தேசத்தைவிட்டு துறத்திவிட்டார்கள். இவர்களும் ஒவ்வோர் சிறுமலைகளைக் கடந்து சிற்றூர்களை யடையவதும், அடர்ந்த காடுகளைக் கடந்து மறுதேசங்களைச் சேர்வதுமாகிய கஷ்டங்கள் அதிகமாயிருக்கினும் வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள்பரித்து தின்றுவந்த சுகங்களானது அந்தந்த தேசங்களை விட்டகல்வதற்கு மனமிராது அங்கங்குள்ள விவேகமிகுத்தக் கூட்டத்தோர்களை அழிக்கவும் துன்பப்படுத்தவுமானச் செயலையே முன் கொண்டு தங்களை வேஷப்பிராமணர் களென்று தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பறைகிறவர்க ளெவர்களோ அவர்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென்று கூறவும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசித்து தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச் செய்து வருவதே அவர்க ளேதுவாயிருந்தது. மாளவதேசத்திற் சேர்ந்த ஆரிய வேஷப்பிராமணர்கள் சோகென்னும் மன்னனை யடுத்து அவனது காமியவிச்சைக் குடன்பாடாகி சகல போதனைக்குள்ளும் வயப்படுத்திக் கொண்டார்கள். அதனையுணர்ந்த சங்கத்து சமண முநிவர்களும், விவேகமிகுத்தவர்களும் அரசனையடுத்து யாதுமதி கூறினும் விளங்காது வேஷப்பிராமணர்களின் பொய்ப் போதங்களையே மெய்யென நம்பி மதோன்மத்தனா யிருந்துவிட்டான். சமணமுநிவர்களைப் பாழ்படுத்துவதற்கு இதுவே நல்ல சமயமென்றுன்னி வேஷப்பிராமணர்கள் யாவரு மொன்று கூடி யாலோசித்து அரசனுடைய முத்துமாலையைக் கொண்டு போய் அறப்பள்ளியில் வீற்றிருக்கும் சமணமுநிவர் களது வோலைச்சுருட் பேழையில் ஒளித்துவைத்துவிட்டு முத்து மாலையைத் தேடுங்கால் வேஷப்பிராமணர் அரசனை யணுகி ஐயா தங்களது தேசத்தில் சங்கத்தோர் முநிவர்கள் என சொல்லிக்கொண்டு திரிகின்றார்களே அவர்களையே மிக்கக் கள்ளர்களென்று சொல்லுகின்றார்கள். அனந்தம் பெயர்கள் வாக்கினாலும் கேழ்விப்பட்டோம். ஆதலின் தாங்களவர்கள் வாசஞ்செய்யு மிடத்தை சோதிப்பீர்களாயின் யாதார்த்தம் வெளிப்படுமென்று வேவுகர்களை விடுக்கத்தக்க யேதுவைத் தேடி விட்டார்கள். வேவுகர்களும் வேஷப் பிராமணர்களின் போதனைக்குட் பட்டு நூற்றிச்சில்லரை சமண முநிவர்கள் வீற்றிருந்த வித்தியோதன வறப்பள்ளியில் நுழைந்து ஓலைச்சுருளுங் காயாசமும் வைத்துள்ளப் பேழைகளை சோதிக்குங்கால் அரயனது முத்து மாலை யகப்பட்டது. வஞ்சகமற்ற சமண முநிவர்களோ திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்களுள் விவேகமிகுத்தவர்களோ இஃது வேஷப்பிராமணாள் சத்துருத்துவச் செயலென் றறிந்து கொண்டார்கள். வேவுகர்களோ மன்னனது முத்துமாலைக் கிடைத்தவுடன் அக்கா லவ்விடமிருந்த அறுபத்தேழு சமண முநிவர்களையும் சிறைச்சாலையி லடைத்துவிட்டு முத்துமாலையைக் கொண்டு போய் மன்னனிடங் காண்பித்து சங்கதியை தெரிவித்தார்கள். மன்னனும் தனது செங்கோல் நிலைதவறி காமியத்தி லாழ்ந்துயிருந்தவனாதலின் யாதொன்றையுந் தேற விசாரியாது கள்ளர்களைக் கழுவிலேற்றுவிடுங்கோளென்றாக் கியாபித்தான், இவற்றை யறிந்த வேஷப்பிராமணர்கள் பழயக் கழுவேற்றிகளை யநுப்புதாயின் பயந்து அவர்களை யோட்டி விடுவார்கள் முநிவர்களென்றறியா. மூழைகள் சிலருக்கவ் வேலையைக் கொடுத்தால் அஞ்சாமல் முடித்துவிடுவார் களென்னு மெண்ணத்தால் தங்களை மெய்ப்பிராமணர்க ளென்றெண்ணி மயங்கியுள்ள அவிவேகிகளைக் கொண்டு சமணமுநிவர்களை கழுவிலேற்றும்படி செய்துவிட்டார்கள். அவர்களுள் எழுவர் சித்து நிலைக்கு வந்துள்ளவர்களாதலின் அவர் கண்களுக்குத் தோன்றாது மறைந்துவிட்டார்கள். சமணமுநிவர்களில் எழுவர் மறைந்து போய்விட்டதை கண்ட வேவுகார்கள் அரசனிடந் தெரிவிக்காது வேஷப் பிராமணர்களிடஞ் சென்று நடந்த வர்த்தமானங்களைக் கூறி யாது செய்வோமென்று திகைத்து நின்றார்கள். இதன்மத்தியில் புத்ததன்மக் குடிகளுக்கும், உபாசகர்களுக் கும் சமணமுநிவர்களைக் கழுவிலேற்றிய சங்கதிகள் தெரிந்து இவைகள் யாவும் வேஷப்பிராமணர்களால் நடந்த பாவங்களென்றறிந்து வேஷப்பிராமணர்க ளெங்கெங்கிருக் கின்றார்களோ அவர்களை யடித்துத் துறத்துங்கால் அரசனிடஞ்சென்று அபயமிட அரசனும் படைகளை யழைத்து குடிகளை யடக்கும்படி யாரம்பித்தான். படைகளுக்கும் சமண முநிவர்களைச் செய்துள்ள பாபச்செயல் தெரிந்து அவர்களது கைகளிலுள்ளக் குண்டாந்தடிகளாலும், அம்புகளாலும் வேஷப்பிராமணர் களையே வதைத்து ஊரைவுட்டும்படிச் செய்துவிட்டார்கள். அரசன் ஆழ்ந்து விசாரிக்காது சமண முநிவர்களைச் செய்தப் பாவச்செயல்களைப் பின்னிட்டுணர்ந்து ஆற்றலற்ற உன்மத்தநிலையையடைந்தான். இவ்வகையாக வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்கள் சென்ற யிடங்களில் தங்களது பொய்வேஷங்களையும் போதகங்களையும் சொல்லிக்கொண்டே பிச்சையேற்றுண் ணுங்கால் அவர்கள் வார்த்தைகளை நம்பியக்குடிகள் யாவரையும் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்கள் சீவனங்களை விருத்தி செய்துக்கொள்ளுவதும், தங்களுக்கு யெதிரடையா யிருந்து தங்கள் பொய்வேஷங்களையும் பொய் போதகங்களையுங் குடிகளுக்குப் பறைகின்றவர்களை தங்களுக்குத் தாழ்ந்த சாதியோ ரென்று கூறி அவர்களைப் பாழ்படுத்தும் யேதுவிலேயே யிருப்ப தியல்பாம். இவ்வாறு செய்துக்கொண்டே வேஷப்பிராமணர்கள் கங்கைக்கரை யென்னும் வடகாசியை யடைந்தபோது அவ்விடமுள்ளக் குடிகள் யாவரும் புத்தபிரானை கங்கை ஆதாரனென்றுங் காசிநாதனென்றும் காசி விசுவேசனென்றுங் கொண்டாடி வருவதுடன் பகவன் ஆதிகங்கத்தை யவ்விடம் நாட்டி ஆதிவேதமாம் முதநூலையும் அதனு பொருளாம் உபநிடதங்களையும் மறைவற விளக்கிய சிறப்பும் அதேயிடத்தில் பரிநிருவாணமுற்ற சிறப்பும், வடகாசியில் விசேஷமுற்றிருந்த படியால் இந்திரதேசவாசிகளாம் சகல மக்களும் அவ்விடஞ் சென்று கங்கையில் மூழ்கி காசிநாதனறப்பள்ளியடைந்து சங்கஞ்சார்ந்து தவநிலை பெறுவதும் சென்ற சிலர் அவ்விடந்தங்கி ஆனத்து விசாரிணைப் புரிந்துவருவதுமாகியக் கூட்டங்களின் வரவே மிகுந்திருந்தது. இவைகள் யாவயுங் கண்ணுற்ற வேஷப்பிராமணர்கள் யாவருக்கும் ஓர்வகைப் பேராசை யுண்டாகி இத்தேசத்தரசனை நமது வயப்படுத்திக்கொண்டால் நம்மவர் ஆயிரங்குடிகள் சுகமாக வாழலாம். இதுவிசேஷ வரவுள்ள நாடாயிருக்கின்றது இங்கு சிலநாள் தங்கி அரசனது குணாகுணங்களையும் அவனது இன்பச்செயல்களையும் ஆழ்ந்தறிந்து நெறுங்கவேண்டு மென்னுங் கருத்தால் காசி வியாரத்தையும், அரண்மனையையும் சுற்றி சுற்றி தங்களது யாசக சீவனத்தை செய்துக்கொண்டு வந்தார்கள். அக்காலக்காசியம்பதியை ஆண்டுவந்த அரசனின் பெயர் காசிபச்சக்கிரவர்த்தி யெனப்படும். அவனது குணா குணங்களோவென்னில் பெண்களை தனது சகோதரிகள் போலும் புருஷர்களை சகோதிரர்கள் போலும் பாவித்து குடிகளுக்கு தன்மம் போதிப்பதையே ஓர் தொழிலாகக் கொண்டு யாவரையும் நன்மார்க்கத்தில் நடத்தி தனது செங்கோலை சிறப்பிக்கச் செய்துவந்தான். அதனால் தேசக்குடிகள் அரசன் மீதன்பும், அரசனுக்குக் குடிகள் மீதன்பும் பொருந்தி வாழ்ந்துவந்தார்கள். அதனா லிவ்வாரிய வேஷப்பிராமணர்களின் தந்திரங் களும், மித்திரபேதங்களும் செல்லாது எவ்வித வுபாயத்தேனும் அரசனைக் கொன்றுவிட்டு தேசத்திற் குடிக்கொள்ள வேண்டுமென்னு மெண்ணத்தால் காலம் பார்த்திருந்தார்கள். அக்கால் காசியச் சக்கிரவர்த்தி மைந்தனில்லாக்குறையால் மந்திரிகளையும் நிமித்தகர்களையுந் தருவித்து தனக்கு நாற்பது வயது கடந்தும் புத்திரனில்லாக் காரணந் தெரியவில்லை அவற்றைக் கண்டாராயவேண்டுமென்று தனது சாதக ஓலையை நீட்டினான். நிமித்தகர்களாகுங் காலக்கணிதர்கள் சாதகவோனை யைக் கண்ணுற்று அரசருக்கு நான்காவது சனிதிசை நடப்பும், மாரகாதிபுத்தியும் நடப்பதால் திடுக்கிட்டு அரசனுக்கு யாதொன்றுங் கூறாது இதன் கணிதங்களை நன்றாராய்ந்து நாளை பகர்வோமெனக் கூறி அவரவர்களில்லஞ்சேர்ந்து மாலைவில் மந்திரிப் பிரதானிகளுடன் கலந்து அரசனது மிருத்துவின் காலத்தை ஆலோசித்தார்கள். ஒவ்வொருவருங்கூடி யாலோசித்து காலகணிதத்தில் மிருத்தியு பட்சத்திற் குட்பட்டிருப்பதினால் அவற்றை யவருக் கெப்படி சொல்லுவு தென் றச்சமுற்றிருக்குங்கால் பிரதம மந்திரி நிமித்தத்தை நோக்கி பெரியோய் இச்சங்கதிகள் யாவையும் அரசனுக்கு அறிவிக்காமலிருக்கப்படாது அரசனுந் தனது மரணத்திற் கஞ்சமாட்டார் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்து அரசுக்கு வேண்டிய அதிபதியாளையும் நியமித்துவிட்டு அறஹத்துக்களை யடுத்து மறுமெயின் சுகத்திற்கு வழி தேடிக்கொள்ளுவார். இச்சங்கதியை நாம் அடக்கலாகாது உடனே சொல்ல வேண்டுமென்று முடிவு செய்து உதயமெழுந்து அரசனிடஞ் சென்று தாங்க ளாராய்ந்துள்ள கணிதத்தை விவரித்தார்கள். அரசனும் புன்னகைக் கொண்டு நிமித்தகர்களே, சென்ற சுக்கிரவாரமிரவு ஐயன் அறப்பள்ளியில் யானுரங்குங்கால் என தரியதந்தை சொற்பனத்தில் வந்து காசிபாவென்னு மோர் சத்தமிட்டு மிலேச்சர்களாகிய சத்துருக்கள் உன்னைக் கொல்லுதற்கு வட்டமிட்டிருக்கின்றார்கள் விழித்திரு விழித்திரு மென்று கூறி மறைந்துவிட்டார். யானும் விழித்து வெளிவந்து ஆகாயவிரிவை நோக்குங்கால் நட்சேத்திரச் சுழலால் ஐந்தாவது ஜாமம் விளங்கிற்று. அக்கால சொற்பனம் மறைவின்றி யதார்த்தமாதலின் தங்களை தருவித்து ஜாதகவோலையைத் தந்தேன் தாங்களும் எனது மிருத்தியுவின் கணிதத்தைக்கண்டீர். ஆனந்தமே ஆயினும் எனது பட்டத்திற்கு தம்பி காங்கேயனை நியமிக்க உத்தேசித்திருக்கின்றேன் அவன் காலகணித மெப்படியோ அதையும் ஆராயுங்கோளென்று சொல்லி அவனது வோலையையுமீயந்தான். அதைக் கண்ணுற்ற நிமித்தகர் அவனது கலலோரையின் சுகத்தைக்கண்டு பட்டமளிக்கலாமென்று கூறினார்கள். உடனே அரசனுந் தனதரசவங்கத்தோர்களுக் கறிக்கையிட்டு காங்கேயனுக் கரசையளித்துவிட்டான். அதனை யறிந்த வேஷப்பிராமணர்கள் யாசகத்திற்கு வந்து நின்றார்கள், இவர்களைக் கண் வரசனுக்கு சந்தேகந் தோன்றி இவர்கள் யார், இவர்கள் தேசமெது நன்றாய் வுழைத்துப் பாடு பட்டு சீவிக்கக்கூடியவர்களாயிருந்தும் நாணமில்லாது பிச்சையேற்றுண்ணுங் காரணம் யாதென விசாரித்தான். அரசனது மொழியைக் கேட்ட வேஷப்பிராமணர்கள் தங்களை பிராமணர்களென்று கூறினால் அரசன் நம்பமாட்டான் அன்னிய தேசத்திலிருந்து வந்துவிட்டோம் சீவனமில்லாததால் யாசகத்திற்கு வந்தோமென்று கூறினார்கள். அவ்வகைக்கூறியும் அரசன் அவர்களது மொழியை நம்பாது இவர்கள் தான் மிலேச்சர்களாகிய சத்துருக்களாயிருக்க வேண்டுமென்றெண்ணி வேவுகர்களை யழைத்து அவர்கள் யாவரையுந் தனது தேசத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி ஆக்கியாபித்துவிட்டான். அவற்றை யுணர்ந்த வேஷப்பிராமணர்கள் யாவரும் ஊரைவிட்டகன்றும் ஆசை வெழ்க்கமறியாது கல்வியற்றக் குடிகளிடஞ் சென்று தங்களை பிராமணர்கள் பிராமணர் களெனக் கூறி வஞ்சித்துப் பொருள் பரித்துவந்தார்கள். அக்கால் காசியச் சக்கிரவர்த்தியும் கபாதிக்கக் கள்ளவியாதியால் மரணமடைந்தான் அதனைக் கேள்வியுற்ற வேஷபிராமணர் களுக்கு மிக்க வானந்தமுண்டாகி முன்போல் நகருள் நுழைந்து தங்கள் யாசக சீவனத்தை செய்துக்கொண்டே காங்கேயச் சக்கிரவர்த்தி தங்கள் போதனைக்கு எப்போது வயப்படுவா னென்னும் உத்தேசத்திலேயே காலங்கழித்து வந்தார்கள். தென்காசியைச் சேர்ந்து வாழ்ந்த ஆரிய வேஷப் பிராமணர்களும், மராஷ்டக வேஷப்பிராமணர்களும், கன்னட வேஷப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர் களும் ஒருவருக்கொருவர் கண்டு உட்சின மெழுவிய போதினும் வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் ஒருவர்வீட்டி லொருவர் புசிப்பெடுக்காமலும், ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் முறுமுறுத்துக்கொண்டே தங்கள் வேஷப் பிராமணத்தை விருத்திச்செய்துவந்ததுடன் தாங்கள் யேற்படுத்திவரும் சிலாலயங்களிலும் வெவ்வேறு தேவர்களை சிருட்டி செய்துக்கொண்டு அதற்குத் தக்கப் பொய்ப் புராணங்களையும் வரைந்து பேதை மக்களுக்குப் போதித்து பொருள்பரிக்க வாரம் பித்துக்கொண்டார்கள். எவ்வகையாலென்னில் இவ்விந்திரதேச மெங்கணுமுள்ள யிந்திரக் குடிகள் யாவரும் இந்திரராம் புத்தபிரானையே ஆதியங்கடவுளாகசித்தித்து அறநெறியில் நின்றொழுகுங்கால் அறப்பள்ளிகளிலுள்ள சமணமுநிவர்கள் வரிவடிவ கல்வி யாரம்பம் செய்யுங்காலங்களிலும், வித்தை யாரம்பம் செய்யுங்காலங்களிலும் இலக்கிய நூல் இலக்கண நூல் ஞான நூல் நீதிநூல் முதலியவைகளை எழுதுங் காலங்களிலும் விநாயகராம் புத்தபிரானைக் காப்புக்கு முன்னெடுத்து துதிக்குங் கடவுளாக சிந்தித்து விந்தியாரம்பஞ்செய்வ தியல்பாம். புத்தபிரானுக்கு விநாயகரென்னும் பெயர் தோன்றிய காரணமோவென்னில் ஒவ்வோர் சங்கங்களுக்கு சபாநாய கராகவும் கணநாயகராகவு மிருக்கும்வரையிலவரை சபாநாயகரென்றும், கணநாயகரென்றும் வழங்கிவந்தவர்கள் உலகெங்கும் நாட்டிய சாத்தியசங்கங்கள் யாவற்றிற்கும் அவரே நாயகராக விளங்கியது கொண்டு புத்தபிரானை விநாயகர் விநாயகரென வித்தியாரம்ப காலங்களிலெல்லாம் விசேஷ மாகக் கொண்டாடி வந்தார்கள். அக்கா லிவ்வேஷப்பிராமணர்கள் தோன்றி யதார்த்த பிராமணர்களும் சங்கங்களும் நிலைகுலைந்து வருங்காலத்தில் கல்வியற்ற குடிகள் ஆரிய வேஷப்பிராமணர்களை யடுத்து விநாயகரை போஷித்து அவிற்பிரசாதங் கொடுக்காமலிருக்கின் றீர்களே காரணமென்னையென்று கேட்க வாரம்பித்தபோது விநாயகரென்னும் பெயரும் அப்பெயரின் உற்பவமும் அப்பெயர் யாவர்க்குரியவை யென்றும் அறியாத வேஷப் பிராமணர்கள் திகைத்து அவரவர்கள் மனம் போன்றவாறு ஒவ்வோர்கட்டுக்கதைகளை யுண்டு செய்து கல்வியற்றவர்களை யேய்த்துவிட்டார்கள். அதாவது கல்வியற்றக் குடிகள் ஆரிய வேஷப் பிராமணர்களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் ஓர் காட்டில் ஆண்யானையும் பெண் யானையும் மறுவுங்கால் சிவனும் உமையவளுங் கண்டு தாங்களு மறுவ யானைமுகக் குழந்தையொன்று பிறந்து சகல மக்களுக்கும் அட்சரவித்தை பயிற்றுவித்த படியால் அவரைதான் வித்தைக்கு முதலாக சிந்திக்க வேண்டுமென்று அவர்கள் தொடுக்குங் காரியா திகளுக்கெல்லாம் அவுல் கடலை தட்சணை தாம்பூலங் கொண்டுவருமேதுவைத் தேடிக் கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் திராவிட வேஷப்பிராமணர் களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்கள் யாதுகூறி பொருள் பரிக்க வாரம்பித்துக்கொண்டார்க ளென்னில் பார்வதி கருப்பந்தரிந்திக்குங்கால் சிவனுக்கு விரோதியாய வோரசுரன் கருப்பையில் காற்று வடிவாக நுழைந்து குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டதாகவும் அதற்கு மாறுபட ஓர் யானையின் தலையை வைத்து உயிர்பித்ததாகவும் கூறி சகலவாரம்பங்களிலும் அவ்விநாயகரை சிந்திக்க அவுல்கடலை தேங்காய் தட்சணை தாம்பூலங் கொண்டு வரவேண்டிய சீவனாதாரத்தைத் தேடிக்கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் ஆந்திர வேஷப்பிராமணர் களையடுத்து விநாயகரை விசாரிக்குங்கால் அவர்களும் விநாயகப் பெருமானின் விசேஷ மறியாதவர்களாதலின் தங்களுடைய சிவனென்னுங் கடவுள் தக்கனென்னும் அசுரனின் யாகத்தை யழிப்பதற்கு தனது முதற்பிள்ளையை அனுப்பியதாகவும், அப்பிள்ளையின் சிரம யுத்தத்தில் வெட்டுண்டு காணாது போனதாகவும் அவருக்குப்பின் சென்ற இரண்டாவது பிள்ளை சுப்பிரமணியர் சென்று விழுந்து கிடந்த ஓர் யானையின் சிரசைவைத்து வுயிர்பித்ததாகவுங் கூறி அதை பூசிக்கவும் தட்சணை தாம்பூலம் பெறவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். மற்றுஞ் சில கல்வியற்றக் குடிகள் கன்னட வேஷப் பிராமணர்களை யடுத்து விநாயகரை சிந்திக்கும் விஷயங் கேழ்க்குங்கால் பார்வதி நீர்விளையாடிக்கொண்டிருக்கும் போது தன் தேகவழுக்கைத் திரட்டி ஓர் குழந்தையை வுண்டு செய்து வாயல் காக்கும்படி செய்ததாகவும், சிவன் வந்தபோது அவருக்கு வழிவிடாதபடியால் அக்குழந்தையை வெட்டி விட்டு வுள் நுழைந்த போது பார்வதிக்குத் தெரிந்து துக்கித்ததாகவும் சிவன் வெளிவந்து சிறுவன் சிரசைத் தேடியுங் காணாததால் அங்குள்ள ஓர் யானையின் சிரசைக் கொய்து அப்பிள்ளையின் உடலிற் சேர்த்து உயிர்ப்பித்ததாகவும் அப்பிள்ளையே விநாயகரென்றும், அதையே சகல வித்தையாரம் பங்களிலும் தொழவேண்டுமென்றுங்கூறி பொருள் பரிக்கும் வழியைத் தேடி அக்கற்பனைகளை ஓலைச்சுருட்களிலுமெழுதி மெய்க்கதைக ளென்று ரூபிக்கும் புராணங்களையும் வரைந்துக்கொண்டார்கள். விநாயகரை சிந்திப்பதற்கு யானையின் முகத்தையே ஒவ்வோராதரவாகக்கொண்டு கற்பனாகதைகளுண்டு செய்துக் கொண்டக் காரணங்கள் யாதென்பீரேல்; மகத நாட்டுச் சக்கிரவர்த்தி யென விளங்கிய மண்முகவாகின் மனைவி கருப்பமடைவதற்கு முன்பு தனது சொர்ப்பனத்தில் சுயம்பிரகாசமாய் ஓர் வெள்ளையானையின் குட்டி வயிற்றுள் நுழைந்தது போற் கண்டு விழித்தவுடன் பத்தாவை யணுகி தனது சொர்ப்பனத்தில் கண்ட விஷயங்களை வெளியிட்டவுடன் மண்முகவாகு அசித்த சாக்கையரென்னும் பெரியோனை வரவழைத்து சொர்ப்பனத்தை வெளியிட்டான். அசித்த சாக்கையரும் சற்றாலோசித்து உமக்கு யானையினுறத்தைப் போன்ற ஓர் ஆண்குழந்தை பிறக்கும் அதற்குள்ள சுத்த ஞானத்தாலும், சுத்த போதத்தாலும் சுத்தச் செயலினாலும் உம்மெய்க் காண்போர் சுத்தயிதயனென்றும், சுத்தயிதயன்பெற்ற சுப்பிரதீபனென்றுங் கொண்டாடு வார்களென்று கூறிப்போய்விட்டார். அதன்பின் சித்தார்த்தி சக்கிரவர்த்தியார் பிறந்து வளர்ந்து சுத்தஞானமுற்று சுயக்கியான போதகராயபோது தன்னை சுராபான மயக்கத்தால் உபத்திரவஞ்செய்த ஓர் யானையை உபத்திரவமில்லாமல் ஒருகரத்தா லேந்தி யெறிந்தவற்றைக் கண்ணாரக் கண்டோர் யானையுறத்தோன் யானையுறத் தோனெனக் கொண்டாடி வந்தவற்றிற்குப் பகரமாக திராவிட வேஷப்பிராமணர்கள் கட்டிய சிலாலயத்துள் அறுபீடங்களை வகுத்து முதற்பீடமே விக்கின பீடமென்று கூறி கோசத்தையும் பீஜத்தையுமடித்து பீடத்தில் வைத்து சிந்தித்தவற்றுள் யானையின் துதிக்கை போலும், முகம் போலும் பிரிந்திருந்தபடியால் யானைமுக விக்கினவிநாயகனெனக் கொண்டாடி வந்தார்கள். அதை யநுசரித்தே கற்பனா கதைகளை யுண்டு செய்த வேஷப்பிராமணர்கள் அவரவர்கள் மனம் போனவாறு கல்வியற்றக்குடிகளை வஞ்சித்துப் பொருள் பரிப்பதற்காய யானைமுக விநாயகனை யுண்டு செய்துக்கொண்டார்கள். யீதன்றி தென்காசிக்குமேல் கார்வேட்டி நகரை யரசாண்டு வந்த பௌத்ததன்ம வரசனொருவனிருந்தான். அவனது மனைவி பூம்பாவையென்னு மோரிராக்கினியு மிருந்தாள். மயிலை புத்தவியார பிச்சையாண்டி வேஷ உற்சாகங்காண வேண்டி வந்து பாம்புகடித்திறக்கவும் சாக்கையர் துக்கங்கொண்டாடி தகனஞ் செய்யப்பட்ட வளுமவளேயாம். அவளது கணவனாகிய மணிவண்ணனென்னு மரசனோ மிக்கவதிரூபமும வல்லமெப்புருடனுமா விருந்ததுடன் ஓர் திடகாத்திரமுள்ள மனிதனுக்கு இரக்கை சூஸ்திரம் ஒன்று செய்து அவன் மீதேறி ஆகாயத்திலுலாவவும், கீழிரங்கவும், அம்பேந்தி யுத்தகளங்களுக்குப் போகவும், சத்துருக்களை ஜெயிக்கவுமாம் கருடவாகனனென்னும் பெயரும் பெற்றிருந்தான். அக்காலத்தில் கார்வெட்டி நகரத்திற்கு வடமேற்கேயுள்ள மலையடிவாரக் குகையில் ஓர் பெரும் மலைசர்ப்ப மிருந்து கொண்டு அருகிற் செல்லும் ஆடு மாடுகளையும் மக்களையும் தனது வலுத்த சுவாசத்தா லிழித்து புசித்துக் கொண்டே வாழ்ந்திருந்தது. இவற்றைக் கண்ணுற்றுவரும் அத்தேச மக்கள் யீதோர் காளிசர்ப்பமென பயந்து அவற்றிற்கு ஆடு மாடுகளைக் கொண்டு போய் விடுத்து மக்களைத் தொடாமலிருக்கப் பூசித்து வருவது வழக்கமாகும். அவ்வகைப் பூசித்தும் அதன் துற்குணம் மாறாது ஆடு மாடுகளைப்போல் மக்களையும் புசித்து வந்தபடியால் அத்திக்கு நோக்கி ஆடு மாடுகளை மேய்ப்பதும் மக்கள் நடப்பதுமில்லாமற் போய்விட்டது. அதனை யுணர்ந்த மணிவண்ணன் சூஸ்திரகருடனை வரவழைத்து அம்பிராதூணியுடன் அதன் மீதேறி மலைசர்ப்பம் வீற்றிருக்குங் குகையை நாடி சென்றபோது அக்காளி சர்ப்பமும் வெளிகிளம்பிற்று. உடனே மேனின்று பாணப்பிரயோகஞ் செய்தபோது சர்ப்பங் குகையினின்று வெளிதோன்றி ஓர் சிறுங்குன் றுருளுவது போலுருண்டெழும்பியது. உடனே மணிவண்ணன் சுத்த வீரனாதலின் சர்ப்பத்தின் மீது பாய்ந்து உடைவாளையுருவி அதன் சிரத்தைப் பிளந்து அதன் மீது நின்றான். காளிசர்ப்பங் கொல்லப்பட்ட சங்கதியைக் கேழ்விப்பட்ட அத்தேசத்தோர்கள் யாவரும் ஓடி வந்து அரசனைக் கொண்டாடி ஆனந்தக்கூத்தாடினார்கள். அவ்வழியே செல்லுவதற்கு பயந்து வேறுவழி சென்றிருந்தவர்களும், ஆடு மாடுகளை விடுவதற்கு பயந்திருந் தவர்களும் அன்றே ஆனந்தமாக செல்ல வாரம்பித்துக் கொண்டார்கள். மணிவண்ணன் வீரத்தில் வல்லமெயுள்ளவனாயிருந்தும் யேழைகளுக் கீவதில் வரையாது கொடுக்கும் வள்ளலாகவும் மிருந்தான். ஜலக்கிரீடையில் எண்ணாயிரம் முல்லை நில ஸ்திரீகளைக் கொண்டு போய் நீர்விளையாடுவதுடன் அவர்களை யறியாது வஸ்திரங்களைக் கொண்டு போய் புன்னை மரத்திற் கட்டி விட்டு கெஞ்சி விளையாடச் செய்வதுமாய லீலா வினோதனாகவு மிருந்தான். மணிவண்ணன் கொண்டல்வண்ணல், கருடவாகனென வழங்கப் பெற்றவன். கிரீடை வல்லபத்தால் கிரீட்டினன் கிரீட்டினனென்று மறு பெயரையும் பெற்று சிலநாள் சுகித்திருந்தான். அவனது யீகையின் குணத்தையும் அன்பின் பெருக்கத்தையுங் கண்ட குடிகள் யாவரும் அவனை மணிவண்ண தெய்வமென்றுங், கொண்டல்வண்ண தெய்வமென்றும், கருடவாகன தெய்வமென்றும், கிரீட்டின தெய்வமென்றுங் கொண்டாடி வருங்கால் மணிவண்ணனும் மற்றுமுள்ளோரும் அறப்பள்ளியடைந்து ஆனந்த விசாரிணையிலாழ்ந்துவிட்டார்கள். அவர்களறஹத்து நிலையடைந்த முன்னூறு வருடங்களுக்குப்பின் அதே கார்வெட்டி முல்லை நிலத்தில் வந்து சேர்ந்த ஆரிய வேஷப்பிராமணர்களுள் வியாசாச்சாரியென் னப்பட்டவன் தங்களுக்கென்று சில பூமிகளைக் கைப்பற்றி முல்லை நிலத்தோர் வைத்துள்ளப் பாடி யென்னும் பெயரைப் போல் அப்பூமிக்கு வியாசர்பாடி யென்னும் பெயரைக் கொடுத்து சகலராலும் வழங்கச்செய்து அவ்விடமே யாசக சீவனஞ் செய்து வருங்கால் அத்தேச பெளத்தர்கள் மணிவண்ண னென்னுங் கிரீட்டினனைக் கொண்டாடி வருவதைக் கண்டு கிரீட்டினனென்னும் பெயரை கிருட்டன் கிருஷ்ணனென மாற்றி வேறோர் கற்பனையை யுண்டு செய்து அக்கிருஷ்ணனும் கருடன் மீதேறினான். அக்கிருஷ்ணனும் ஓர் சர்ப்பத்தைக் கொன்றான். அக்கிருஷ்ணனும் பன்னீராயிரம் ஸ்திரீகளுடன் லீலை புரிந்து அவர்கள் ஆடைகளை புன்னை மரத்திற் கட்டினா னென வரைந்து அத்தேசப் பூர்வசரித்திரம் போற் காட்டி மேலுமேலுங் கற்பனாகதைகளை வரைந்து தங்களை சிறப்பித்துக்கொண்டார்கள். எவ்வகையா லென்னில் - பெளத்தருக்குள் கர்ணராஜன் சரித்திரமொன்று எழுதி வைத்திருந்தார்கள். கர்ணராஜனது யீகையின் மகத்துவத்தையும் அதன்பின் பங்காளிகளுக்குள் பாக வழக்கு நேரிட்டு ஒருவருக் கொருவர் அஸ்திநாதபுறமென்னும் குருவின் க்ஷேத்திரத்தில் கலகமிட்டுத் தாங்கள் மடிந்தது மன்றி தங்களையடுத்த வரசர்களையும் அவர்களது சந்ததியோர்களையுங் கூட்டி மடித்து விட்டார்கள். அக்கதையை பெளத்த வுபாசகர்கள் குடிகளுக்குப் போதித்து யீகையில் கர்ணராஜனைப்போலிருக்க வேண்டிய தான நிலையை விளக்கி வந்தது மன்றி பேராசையால் பெருந்துக்கம் நேரிடுமென்பதை விளக்குவதற்காக பூமியின் பாகவாசையால் சகோதிரர்களுக்குள் நேரிட்ட கலகத்தையும் அதனால் சகலரும் மடிந்த கோரத்தையும் விளக்கி லோப குணத்தை நீக்கி யீகையைப் பெருக்கும் படியான வழியில் நிலைக்கச் செய்து வந்தார்கள். அதே கதையை யிவ்வியாசாச்சாரி பீடமாகக் கொண்டும், பகவன் சைன பர்வதத்தில் எழுதிவைத்திருந்த தசபாரமிதை யென்னும் தச சீலத்தைப் பெயராகக் கொண்டும் இக்கதை வினாயகனால் மலையிலெழுதியிருந்த பாரதமென்றுங் கூறி கர்ணராஜன் சரித்திரத்தையும் அவனது பிறப்பு வளர்ப்பையும் இயற்கைக்கு விரோதமாக கூட்டியுங் குறைத்தும் எழுதி அக்கதைக்கு ஆதார புருஷன். கிருஷ்ணனென்று வரைந்து கார்வெட்டி நகர்கிரீட்டினன் கதையைக் கால்மாடு தலைமாடாக மாற்றிவிட்டான். கார்வெட்டி நகர் வரசனின் சரித்திரத்தை நன்குணர்ந் துள்ள பௌத்தர்கள் மீதேது புதிய சரித்திரமாகக் காணப் படுகின்றது. பூர்வசரித்திரத்திற்கும் இதற்கும் மாறுபடுகின்ற தேயென்று கூறுவார்களாயின் வியாசாச்சாரி யவர்களுக்கு யாது மாறுத்திரங் கூறிவந்தானென்னில் அவரைப்போன்றே யிவரோர் அவதாரமாக வந்தவர் அவரைப்போன்ற அவதாரமாக வந்தபடியால் சில சரித்திரங்கள் மாறுபட்டிருப் பினும் சிலது பொருந்தியே யிருக்குமென்று விவேகிகளுக்கு விடையளித்து விட்டு கல்வியற்றக் குடிகளுக்குங் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பெளத்தமார்க்க மணிவண்ணன், பெளத்தமார்க்க கருடவாகனன், பெளத்தமார்க்கக் கிரீட்டின னெக் கூறி முல்லைநில வாசிகளாம் இடையர்கள் யாவரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பால், தயிர், மோர், நெய் முதலியவைகளை இலவசமாகப் பெற்று சீவிக்கவாரம்பித்துக் கொண்டார்கள். இதன் காரணமோ வென்னில், ஆரிய வேஷப் பிராமணர்கள் இத்தேசம் வந்து குடியேறிய பின்னர் பௌத்தர்கள் முன்னிலையில் மிருகாதிகளின் புலாலைப் புசிப்பதற்கு பயந்து கொண்டு மாடுகளையுங் குதிரைகளையும் நெருப்பிலிட்டு யாகம் யாகமெனச் சுட்டுத்தின்று கொண்டே வந்தபடியால் இவர்களைக்காணும் பௌத்தர்கள் யாவரும் புலால் புசிக்கும் மிலேச்சர் மிலேச்சரெனக்கூறி துறத்திக்கொண்டே யிருந்தபடியால் சகலருங்காண புலால் புசிப்பதைவிடுத்து மறைவில் புசித்துக்கொண்டு முல்லை நிலவாசிகளுக்குக் கிரீட்டினன் கதையை மிக்க வர்ணனையாகக் கூறி இக்கிரீட்டி னன் உங்கட்குலத்தில் அவதாரப்புருஷனாகத் தோன்றி பூமிபாரந் தீர்த்தவர் இக்கதையோ மிக்கப் புண்ணியகதை இதனை மிக்க பயபக்தியுடன் கேட்பவர்கள் யாரோ அவர்கள் யாவரும் மேலாய பதவியை அடைவீர்களென்றுகூறி முல்லை நிலை வாசிகள் யாவரையும் அக்கதையைப் புண்ணியக் கதையென்று கேட்கும்படிச் செய்து பொருள் பரிப்பதுடன் பால் தயிர் நெய் முதலியவற்றையும் இலவசமாகப் பெற்று சுகிக்கவாரம்பித்து கர்ணராஜன் கதையில் எங்கெங்கு கிரீட்டினன் கதையை சிறப்பிக்கவேண்டுமோ அங்கங்கு மிக்க சிறப்பித்து அவரோர் அநாதார புருஷன் அவரோ பூமிபாரந் தீர்த்தவர் முல்லை நிலகோபிகா ஸ்திரீகளுடன் விளையாடினவர் இவரே மகாதேவன் இவரது சரித்திரத்தை கேட்போர் யாவரும் புண்ணிய பலனை யடைவீர்களென்று முல்லை நிலமெங்கணு படை மிக்கதையைப் பரவச்செய்து தென்காசி மக்களை மருட்டிவிட்டது மன்றி வடகாசிக்குச்சென்று கர்ணராஜன் கதையைக் கொண்டு சீவிக்குமிடத்தில் அவர்களு மக்கதையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்காய் புத்தரே கிருஷ்ணன், கிருஷ்ணனே புத்தர், கிருஷ்ண அவதாரமாக வந்தவர். அவரது கதையைக் கேட்போர் புண்ணியப்பலனைப் பெருவரென்று கூறி கல்லினால் நெருப்பிற் தீய்ந்த முகமும் தீய்ந்த காலுங் கையும் போலடித்து ஓர் விக்கினவுருவொன்று செய்து ஓர் நூதனக்கட்டிடத்தில் வைத்து இவர்தானக்கிரீட்டிணன் இவரை நெருப்பிட்டுச் சுட்டும் இத்தேகம் அழியாமலிருந்த இவர்தான் ஜகநாதன் விட்டோ வெண்ணுங் கல்லுருக்கொண்டுள்ளபடியால் இவரே விட்டுணு இவரே விஷ்ணு அவதார புருஷனாக வந்தவரென மருட்டி வஞ்சித்து சரித்திரந் தெரிந்த பௌத்தர்களையும் சமண முனிவர்களையும் மயக்குதற் கியலாவிடினுங் கல்வியற்றக் குடிகளை வயப்படுத்திக் கொண்டார்கள். அத்தகைய வனுபவப்பட்டுள்ள போதினும் காசியரசனும் ஒன்பதினாயிரம் சமண முநிவர்களும் வயப்படாமல் பிராமணர்களை விரட்டித் துரத்தவும் அவர்களது பொய் வேஷங்களைப் பகருவதுமாயிருந்தார்கள். தென்காசிக்கு வடமேற்குதிக்கில் குடியேறியிருந்த ஆரியவேஷ பிராமணர்களுள் இராமாநுடாச்சாரியென்பவன் வடகாசியி லமைத்துள்ள விட்டுணுவென்னுங்கற்சிலை தெய்வாதாரத்தைக் கொண்டு புத்தரது சரித்திரத்தை யநுசரித்த ஒர் கூட்டத்தை யேற்படுத்தி அதனால் சீவிக்க வாரம் பித்துக்கொண்டான். அவை யாதெனில், புத்தபிரான் கமலபாதம் இரத்திதீவகற்பாரையில் பதிந்துள்ளதை சந்தனத் தாலும் மெழுகினாலும் பதித்து வந்து சங்கங்களில் வைத்து பூசிப்பதுடன் புத்தரது சத்திய சங்கத்தையும் புத்தரது தன்மச் சக்கரத்தையும் சிந்தித்து நீதி வழுவா நிலையில் நின்றெழுகும் பௌத்தர்களது செயலினை யறிந்து வந்த இராமா நுடாச்சாரி புத்தபிரான் பாதப்படியை விட்டுணு பாதப்படியென மாற்றி தாமரை புட்பத்திலிருப்பது போல் வரைந்து சிந்தாவிளக் கென்னும் அம்மணின் சோதியை மத்தியில் வரைந்து சாத்திய சங்கத்தை சங்கு போல் வரைந்து தன் மச்சக்கரத்தை சக்கரம் மறுமெயிற் றொடருமென்பது முன்னோர்கள் போதமாயிருக்க இக்கற்சிலைகளைத் தொழலால் பிணிநீங்குமென்றும், இக்கற்சிலைகளைத் தொழலால் சம்பத்துண்டாமென்றும் இக்கற் சிலைகளைத் தொழலால் புத்திரபாக்கிய முண்டாமென்றும் இக்கற்சிலைகளைத் தொழலால் முத்தி பேருண்டாமென்றுங் கூறுவதும் அவ்வகைக்கூறியே பொருள் பரிப்பது மாயச் செயல்களையும் போதகங்களையும் நோக்குங்கால் அச்செயல்கள் யாவும் தங்களுக்காய சுயப்பிரயோசனச் செயல்களாகக் காணப்படுகிறதன்றி எங்களுக்காயப் பிரயோசனம் ஒன்றையும் காணோமேயென்று கேட்கவாரம்பித்துக்கொண்டார்கள். அக்கேள்விகளை யுணர்ந்த வேஷப்பிராம்மணர்கள் சற்று நிதானித்து பகவனாம் புத்தபிரானால் போதித்துள்ள தன்மங்களில் உங்களுக்குள்ள துற்கன்மங்கள் நற்கன் மங்கள் யாவையும் நன்காராய்ந்து உங்களுக்குள் நீங்களே துற்கன்மங்களை யகற்றி நற்கன்மங்களை பெருக்கி உங்களுக்குள்ள உண்மெயில் அன்பை வளர்த்துங்கள். அத்தகைய வுண்மெய் யுணர்ச்சியில் உங்களுக் குள்ள இராகத் துவேஷ மோகங்களை நீங்களே யகற்றி உங்களுக்குள்ள பேரின்ப சுகத்தை நீங்களே யநுபவிப்பீர் களென்னும் வாக்கியத்தைக் கொண்டு தன்மபாத மென்னும் இருசீரடி பெளத்த போதங்களையே வோராதாரமாகக் கொண்டும் புத்தரது பெயரையே பீடமாகக் கொண்டும் பகவத்கீதை யென்னும் ஓர் நூலை வரையவாரம்பித்துக் கொண்டார்கள். அதாவது, பன்னீராயிரம் கோபிகா ஸ்திரீகளின் லீலா வினோதனும், அர்ச்சுனனுக்கு சுபுத்திரை, பவழவல்லி, அல்லி யரசானி முதலிய ஸ்திரீகளைக்கூட்டி வைத்தவரு மாகிய பாரத கதா புருஷன் கிருஷ்ணனுக்கு புத்தருக்குரிய பகவனென்னும் பெயரைக்கொடுத்து அப்பகவனாற் போதித்த பகவத்கீதையென வகுத்து பூர்வ சத்தியதன்மத்தில் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் தன்னை போஷிக்க வேண்டும் தன்னை யாராய வேண்டும், தன்னை சிந்திக்க வேண்டு மென்னுந் தன்மங்களை என்னை போஷிக்க வேண்டும், என்னை யாராய வேண்டும், என்னை சிந்திக்க வேண்டு மெனக் கிருஷ்ணன் கூறியது போல் ஆரம்பித்து சிலைகளைத் தொழுது முத்தி பேறுபெற விருப்பற் இத்தகைய துன்மார்க்கர்கள் பரவி சன்மார்க்க சங்கங்களும் நிலைகுலைந்ததன்றி அறப்பள்ளிகளில் சிறுவர்களுக்குப் போதித்துவந்த கல்விசாலைகளு மழிந்து கைத்தொழில் விருத்தியுமொழிந்து நூதனசாதிபேதச் செயல் களால் ஒற்றுமெக்கேடே மிகுந்து சமய போராட்டத்தால் சாமிசண்டைகளே மலிந்து வருங்கால் மகமதிய துரைத்தனம் வந்து தொன்றிவிட்டது. இந்திரர்தேய வடபாகத்தில் வந்து குடி யேறிய மகமதிய வரசர்களுக்குள்ளும், புருசீகதேச வேஷப்பிராமணர்களே பிரவேசித்து அவர்களுக்கு வேண யேவல்புரிந்தும் இத்தேசத் தின் போக்குவருத்துகளை யுரைத்தும் தங்களுக்குரிய சிற்றரசர் களை நேசிக்கச்செய்தும் தங்களுக்கு யெதிரிகளாயுள்ள பெளத்தவரசர்களையும் விவேகமிகுத்தக் குடிகளையும் பெருஞ் சங்கங்களாயிருந்த சமண முனிவர்களின் கூட்டங்களையும் அழிக்கத்தக்க யேதுக்களைத் தேடி விட்டார்கள். அதாவது சமணமுனிவர்களின் கூட்டத்தோர்கள் யாவரும் ஒரே மஞ்சள்வருண ஆடைகளைக் கட்டிக்கொண்டு சிர மொட்டையாயிருந்தபடியால் மகமதியர்களுக்கு யீதோர் படைவகுப்பென்று கூறி அவர்களுக்குக் கோபத்தை மூட்டி வைத்துக் கொல்லும் வழியைச் செய்து அந்தந்த வரப்பள்ளி களில் தாங்கள் நுழைந்து சிலைகளையே தெய்வமெனத் தொழுவழியாம் மதக்கடைகளைப் பரப்பிப் பொருள் பரித்து சீவிக்கும் வழிகளை யுண்டு செய்து வருங்கால் சண்டாளர் களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும், தாழ்த்தப் பட்டுள்ள விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் முயன்று கல்லுகளையும் கட்டைகளையும் தெய்வமென்று தொழுவது அஞ்ஞானமென்றும் அத்தகையத் தொழிகையால் கல்லைத் தொழுஉங் கர்ம்மமே கனகன்மமாக முடியுமென்றும் அதனால் கல்வியின் விருத்தியும் கைத்தொழில் விருத்தியுங் குன்றிப் போமென்றும் இம்மையில் ஒருக்கல்லைவைத்துப் பூசித்து சீர்கெடுவோன் மறுமெயில் பத்துக்கல்லை வைத்துப் பதமழிவா னென்றும் போதித்து வருவனவற்லைக் கேட்டுணர்ந்த சில விவேகிகள் வேஷப்பிராமணர்களை யடுத்து எக்கருமத்தை யிம்மெயிற் செய்துவிடுகின்றானோ அக்கருமமே யவனை வாட்டஞ்சாட்டமுடைய வொருவனுக்கு நீண்டகுல்லா சாற்றி இவரே ஜகத்குரு, இவரே சங்கறாச் சாரியெனக்கூறி வேண பொருள் பரித்துத் தின்றவர்கள் அக்கதாபுருஷசங்கராச்சாரி ஒருவன் பிறந்து வளர்ந்து ஆன்மபோதத்தை வரைந்துள்ளா னென்னும் ஒர் காரணமற்ற கற்பனாகதையை வரைந்துக் கொண்டு கற்சிலைகளே சுகச்சீரளிக்கும், கற்சிலைகளே மோட்டமளிக்குமென நம்பாதவர்கள் இவ்வான்ம போதத்தை நம்பி ஜகத்குரு பரம்பரையோருக்கும் பொருளளித்து வரவேண்டு மென்னும் தங்கள் போதத்தை நிலைக்கச் செய்து கொண்டார்கள். இவற்றுள் நீலகண்ட சிவாச்சாரி கற்சிலைகளையே சிவமெனத் தொழவேண்டு மென் றோர்வகையும் இராமா னுடாச்சாரி ஸ்ரீபாதத்தையும் சங்குசக்கிரத்தையுமே விட்டுணு வெனத் தொழவேண்டுமென மற்றோர்வகையும், ஆளில்லா சங்கராச்சாரியின் ஆத்மபோதம் ஓர் வகையும் உள்ளக் கிரீட்டினன் சரித்திர மற்று அவதாரப் புருஷக் கிருஷ்ணன் பகவத்கீதை ஓர் வகையுமாகப் பாவி புத்தபிரான் சத்தியதன்மம் மாறுபட்டுக்கொண்டேவந்துவிட்டது சத்தியதன்மம் மாறுபட்டு நிலைகுலையவும் அசத்திய தன்மம் பரவி நிலைநிற்கவுமாயக் காரணம் யாதெனில் பெளத்த தன்மம் கன்மத்தையேபீடமாகக்கொண்டதாதலின் தன்னை மற்றொருவன் பொய்யைச்சொல்லி வஞ்சிக்கா திருக்கப் பிரியமுள்ளவன் மற்றொருவனைப் பொய்யைச் சொல்லி வஞ்சிக்கா திருக்கவேண்டியது. தன்தேகத்தை மற்றொருவன் வருத்தி துன்பஞ் செய்யாதிருக்க வெண்ணுகிறவன் அன்னியப் பிராணிகளைத் தான் துன்பஞ்செய்யாமலிருக்கவேண்டியது. தன் தாரத்தை அன்னியரிச்சிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் தாரத்தை தானிச்சிக்கா திருக்க வேண்டியது. தன்பொருளை அன்னியர் அபகரிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் பொருளை தானபகரிக்காதிருத்தல் வேண்டும். எக்காலும் ஜாக்கிரத்திலும் நிதானத்திலுமிருக்கப் பிரிய முடையவன் மதியை மயக்கும் மதுவை யருந்தலாகாதென்று கூறி பெளத்தர் யாவரையும் நீதிநெறி யொழுக்கமாம் நெறுக்க பாதையில் நடந்து சுகவாழ்க்கையிலிருக்கும் படி போதித்து வந்தார்கள். வேஷப்பிராமணர்களோ வென்னில், தாங்களேற் படுத்திக் கொண்ட தெய்வங்களுக்கு இரண்டு பெண் சாதியென்றும், மூன்று பெண்சாதியென்றும் தங்கள் தெய்வங்களே அன்னியர் தாரங்களை யிச்சித்ததென்றும் பொய்க் குருக்களாகிய தாங்களே உயிருடன் மாடுகளைச் சுட்டு த்தின் றவர்களும் உயிருடன் குதிரைகளை சுட்டுத்தின்றவர்களும் மயக்கத்தை யுண்டு செய்து மதியைக் கெடுக்கும் சுராபானங்களை யருந்துகிறவர்களும் அன்னியர் பொருளை திருடித் தின்றவர்களுமாயக் கூட்டத்தோர் நாளுக்குநாள் பெருகி விட்டபடியால். புத்ததன் மத்தின் கடினமாய நீதி மார்க்க வொடுக்க வழிகளுக்கு பயந்து தேச சீர்கேட்டிற்கும், மக்கள் சுகக்கேட்டிற் குமாய அநீதியாம் பெருவழியில் பிரவேசிக்க வாரம்பித்துக் கொண்டார்கள். அதனால் புத்ததன்மம் நாளுக்குநாள் குறையவும், அபுத்ததன்மமாகியப் பொய்ச்சமயங்களும், பொய்ச்சாமிகளும், பொய்போதகங்களும் பெருகி பொய்யிற்குப் பொய் முட்டுக் கொடுத்து பொய்ப் புராணங்களை வரைந்து பேதை மக்களாம் கல்வியற்றக் குடிகளை மயக்கி தங்களை தேவர்களுக் கொப்பானவர்களென்றும் மற்றவர்கள் மநுமக்களே யென்றும் அம்மனுக்களில் தங்கள் பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் பொய்மதக் கடைகளையுங் குடிகளுக்கு விளக்கி விவரித்து வந்த விவேகமிகுத்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளெனக் கூறியுந் தங்களையொத்த வேஷப் பிராமணர்கள் யாவரையும் உயர்ந்த சாதிகளெனக் கூறியும் தங்கடங்கள் மித்திரபோதங்களினாலும் மகமதிய துரைத்தனத்தா ருதவியைக் கொண்டும் பௌத்தர்களின் அறப்பள்ளிகளையும் சமணமுநிவர்களையும் சீர்கெடுத்து நிலைகுலையச்செய்து விட்டது மன்றி வேஷப்பிராமணர்களுக்கு யெதிரடையாயிருந்த விவேகமிகுத்த பௌத்தக்குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதி களென வகுத்து நிலை கெடச்செய்யும்படி யாரம்பித்து பலவகையிடுக்கங்களாலும் பலவகைத் துன்பங்களாலும் நசித்து விவேகமிகுத்த மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்தி பலவகையாலும் இம்சித்து வதைத்து வருங்கால் இவர்கள் செய்துவந்த பூர்வ புண்ணிய வசத்தால் மேல் நாட்டு ஐரோப்பிய விவேகக்கூட்டத்தோர் வந்து தோன்றினார்கள். அவ்வகை வந்து தோன்றியவர்களுக்குள் சிலர் வியாபார விசாரிணையிலும், இராஜீய விசாரிணையிலு மிருந்த போதிலும் சிலர் வடகாசியில் வழங்கிவந்த வேதம் வேதமென்னு மொழியிலேயே வூக்கமுடையவர்களாகி அதன் ஆராய்ச்சியிலி ருந்தார்கள். காரணமோவென்னில் புத்தபிரான் ஆதிசங்கத்தை நாட்டியதுங்காசி, சமணமுநிவர்களை நிறப்பியதுங்காசி, ஆதி வேதமொழிகளாம் திரிபீடவாக்கியங்களை பரவச் செய்ததுங் காசி, அம்மூவருமொழிகளாம் பேதவாக்கியத்தின் அந்தரார்த்த உபநிடதங்களை விளக்கியதுங் காசி, அவர் பரிநிருவாண முற்றதுங் காசியாதலின் அங்குள்ள மக்களும் கங்கைபாதாரனாம் காசி நாதன் வியாரத்தை தரிசிக்கவரு மக்களும் திரிபேத வாக்கியங்களையே சிரமேற்கொண்டேந்து மொழியைக் கேட்கும் ஐரோப்பிய விவேகிகள் வேதமென்பதென்ன வஃதெங்குளது அதன் பொருளென்னையென விசாரிக்க வாரம்பித்துக்கொண்டார்கள். அக்காலத்திலும் பௌத்ததன்ம விவேகிக ளோருவரும் ஐரோப்பியர்களிடம் நெருங்காது வேஷப்பிராமணர்களே முன் சென்று வேணசங்கதிகளைக் கூறவும் தேசசங்கதிகளை விளக்கவுமுடையவர்களாயிருந்ததுடன் மகமதியர்கள் வந்து குடியேறிய போதே அவர்களது உதவி கொண்டுந் தங்கள் கெட்ட யெண்ணங்களினால் காசியிலுள்ளப் பெருங் கட்டிடங்கள் யாவையுந் தகர்த்து புத்தரைப்போன்ற சிலைகள் யாவையும் அப்புறப்படுத்தியும் மண்களிற் புதைத்தும் தங்களெண்ணம் போற் செய்துக்கொண்ட விக்கிரகங்களை வைத்துக்கொண்டும் தாங்களே இத்தேசத்துப் பூர்வக்குடிகள் போலபிநயித்து பௌத்தர்களை யவர்களிடம் பேசவிடாமலும் நெருங்கவிடாமலும் செய்து கொண்டிருந்த காலத்தில் இந்திரரை சிந்திக்கும் இந்திரதேசக் குடிகளை இந்தியரென்று வழங்கிவந்தப் பெயரை மாற்றி மகமதியர்களால் “இந்து லோகா” வென வழங்கி நாளுக்குநாள் இந்து இந்துவென வழங்கி கொண்டே வந்துவிட்டார்கள். அவ்வழக்க மொழியைக் கேட்டு வந்த ஐரோப்பியர்களும் வேஷப்பிராமணர்களை இந்துவென் றழைத்து உங்கள் இந்து வேதமென்பதென்னை அதன் கருத் தென்னையென வினவ வாரம்பித்தபோது வேதமென்னு மொழியை அறியாதவர்களும் அதனந்தரார்த்தந் தெரியாதவர் களுமாதலின் சிலகால் திகைத்தே னின்றார்கள். காரணமோவென்னில், புத்தசங்கங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்கள் புத்த பிரானால் ஆதியில் போதித்த அருமொழி களாம் சௌபபாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபசம் பதா, சசித்தபரியோதபனம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், சீர்திருத்த ஆதி பீடவாக்கியமாயிருந்தபடியால் திரிபிடக வாக்கியங்களென்றும், ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமா யிருந்தபடியால் திரிசுருதிவாக்கியங்களென்றும், திரிபேதவாக்கியங்களின் உபநிட்சையார்த்தங்களை விளக்கும் தெளிபொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்க ளென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் பண்டி யென்பதை வண்டி யென்றும், பரதனென்பதை வரதனென்றும், பைராக்கி யென்பதை வைராக்கியென்றும், பாணமென்பதை வாணமென்றும் பாலவயதென்பதை வாலவயதென்றும் வழங்கிவருவதுபோல் திரிபேத வாக்கியங்களென்பதை திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடு பேறாம் ஒரு மொழியையுஞ் சேர்த்து நான்கு பேதவாக்கியங்களென்றும் நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கிவந்தார்கள். இதன் பேரானந்த வந்தரார்த்தமும், ஞானரகசியார்த்தமும் ; இருக்கு, யசுர் சாமம், அதர்வண மென்னும் பாகைப்பொருளின் பகுப்பும், இவ்வேஷப் பிராமணர்களறியாது தங்கடங்கள் மனம் போனவாறு அக்கினியைத் தெய்வமெனத் தொழும் புருசீகர்களின் சரிதை களிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் பௌத்தர்களாம் இந்தியர்களின் சரித்திரங்களிற் சிலதைக் கூட்டியுங் குறைத்தும் இருக்கு. யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்கு பேதமொழிகளை நான்கு வாக்கியங்களென் றுணராமலும், அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறைபொருளா யுள்ளது கண்டு ஒவ்வொருமொழியின் உட்பொருளை தெள்ளற விளக்குமாறு வேதமொழிகளின் உபநிட்சயார்த்தமென்னும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை யறியாமலும் வேதமென்னு மொழியை பெரியக் கட்டு புத்தகமென் றெண்ணி முதல் வேதத்திலுள்ளது புத்தகங்கள் பத்தென்றும், காண்டங்கள் இருபதென்றும், வாக்கியங்கள் ஆறாயிரத்திப் பதினைந்தென்றும், அநுவாகங்கள் நூத்தியெட்டென்றும் சூக்கதங்கள் எழுநூற்றி யறுபதுக்கு மேற்பட்ட தென்றும், பிரபாதங்கொண்டது நார்ப்பதென்றும் முதல் வேதமென்பதுள் வரைந்துள்ளது போலவே மற்ற மூன்று வேத மென்பதையும் பெருங்கட்டுகளாக வரைந்துவிட்டார்கள். இவ்வகை வரைந்துள்ள வேதங்களை கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தாரென்றும் பிரம்மா முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் ஓர்புறங் காணலாம். சிற்சில வரசர்களே வேதங்களெழுதினார்களென்பதை மற்றோர் புறங் காணலாம். பிரஜாபதியாலும், சந்திரனாலும் அக்கினியாலும் வேதங்க ளெழுதப்பட்ட தென்பதை இன்னோர் புறத்திற் காணலாம். அதர்வணன் பிள்ளை யெழுதினான் தேவர்களெல்லோரு மெழுதினார்களென்பதை வேறோர் புறத்திற் காணலாம். இவ்வகை மாறுதலாக யின்னார்தான் அப்பெருங்கட்டாகிய வேதத்தை யெழுதியவர்களென்பது புலப்படாமலி ருப்பதற்குக் காரணம் அவரவர்கள் மனம் போனவாறு பலரும் எழுதி பல துரைகளிடம் வேதம் வேதமென வரைந்துக்கொண்டு போய்க் கொடுத்துள்ளதாதலின் அவர்கள் வேதத்தின் ஆக்கியோன் யின்னானேயென்று ரூபிக்கப்பாங்கில்லாமல் போய்விட்டது. இவ்வேதத்தின் ஆக்கியோன் யில்லாதபடியால் தான் அசுரன் திருடி கொண்டு போய் சமுத்திரத்தில் ஒளித்து வைத்த வேதத்தை யின்னொரு கடவுள் அதிகப்பிரயாசையுடன் மச்சாவதாரமெடுத்து சமுத்திரத்திற் சென்று கொண்டு வந்திருக்கின்றார். ஆக்கியோன் வொருவரிருந்திருப்பாராயின் உடனுக்குடன் வேறொரு வேதக்கட்டை யெழுதிக்கொடுத்து விட்டிருப்பார். மட்சாவதாரம் வேண்டியிருக்காது. அசுரனுடன் போர்புரியும் அவசரமுமிராது. அவ்வேதத்துள் எழுதிவைத்துள்ள சங்கதி யாவும் அக்னியையே தெய்வமாகத் தொழுவுங் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்ததன்மத்தைச் சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை யென்றுங் கிடையாது. அவ்வேதத்துள் புத்ததன் மத சரித்திரங்களிலுள்ள பெயர்களும் ஞானங்களுமடங்கியிருந்த போதினும் அதனதன் பொருட்களையும் செயல்களையுமுணராமலே வரைந்து வைத்து விட்டார்கள். இவ்வேதத்துக் குரியவர்கள் யித்தேசத்தவர்களாயிராது அன்னிய தேசத்தினின்று யிவ்விடம் வந்து குடியேறி தங்கடங்கள் சுயப்பிரயோசனத்திற்காய்ப் புத்ததன்ம அறஹத்துக்களைப்போல் பிராமணவேஷ மணிந்துக் கல்வியற்றக் குடிகளை வஞ்சித்து வந்த போதினும் புத்ததன் மத்தைச் சார்ந்த சிரமணர்கள் செயல்யாது, பிராமணர்கள் செயல் யாது, சிரமணர்கள் மகத்துவமென்னை, பிராமணர்கள் மகத்துவமென்னையென் றுணராமலே வேஷத்தைப் பெருக்கி பொருள் சேகரிக்கும் நோக்கத்திலேயே யிருந்தார்கள். சமணமுநிவர்களுக்குள் உபநயனமென்பது ஞானக்கண் உள்விழி திறத்தலென்னுங் குறிப்பிட்டு ஞானத்தானம் பெற்றோன் ஞானக்கண் பெற்ற வனென்னு மடையாளத்திற்காக மதாணிப்பூணு நூலென்னும் முப்பிரிநூலை மார்பிலணிந்து வந்தார்கள். இவ்வேதத்திர்குரிய வேஷப்பிராமணர்களோ வதனந்தரார்த்த மறியாது என் பெரியபிள்ளைக்கு உபநயனஞ் செய்ய போகின் றேன் பொருள் வேண்டும், சிறிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப் போகின்றேன் பொருள் வேண்டுமென்னும் சுயப்பிரயோச னத்தையே நாடி நின்றார்கள். சமணமுநிவர்கள் புத்ததன்மசங்கமென்னும் மும்மணிகளை மனோவாக்கு காயமென்னும் மும்மெயில் வணங்கி அவற்றை திரிகாய மந்திரமென்றும், காயத்திரி மந்திரமென்றும், வழங்கிவந்தார்கள். அதனந்தரார்த்தந் தெரியா திவ்வேஷப் பிராமணர்கள் விசேஷமான காயத்திரி மந்திரஞ் செய்யப் போகின் றோம் காயத்திரி மந்திரஞ் செய்யப் போகின்றோ மென்னும் இரண்டொரு வடமொழி சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே பொருள் சம்பாதிக்கும் மேதுவில் நின்றுவிட்டார்கள். அறஹத்துக்கள் சமணமுநிவர்களாகியத் தங்கள் மாணாக்கர்களை சாலக்கிரமம் சாலக்கிரமமென வாசீரளிப்பது கண்டு அதனந்தரார்த்த மறியா இவ்வேஷப் பிராமணர்கள் சமுத்திர வோரங்களில் உருண்டு கிடக்கும் சிறியக் கூழாங்கற்களில் சிவப்பு நிறக்கோடுகளுள்ளதை யெடுத்துவந்து கல்வியற்றக் குடிகளிடம் இதுதான் சாலக்கிராமம் இதைப் பூசிப்பவர்கள் மேலான பாக்கியம் பெருவார்களென வஞ்சித்து அதனாலும் பொருள் சம்பாதித்து வந்தார்கள். இவைபோன்றே சமணமுநிவர்களுள் பேதமென்னு மொழியை வேதமென வழங்கி வந்ததும், திரிபேத வாக்கிய மென்னுமொழியை மூன்றுவகையான மொழியென்பதையும் வரிவடி வட்சரமில்லாத காலத்தில் இவ்வருமொழி மூன்றினையும் ஒருவரோதவும் மற்றொருவர் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்த படியால் திரிசுருதிவாக்கியங்களென்றும், மும்மொழியும் பொருள் மயங்கினின்ற படியால் மும்மறை மொழிகளென்றும் வழங்கிவந்ததுடன் அதன்சாதன சித்தியால் வீடு பேறு கண்டவுடன் வீடுபேறென்னு மொழியையும் ஓர் வாக்கியமாக்கி சதுர்பேதவாக்கியமென்றும், நான்கு சுருதி வாக்கியமென்றும், நான்கு மறைபொருளென்றும் வழங்கி வந்தரகசியார்த்தத்தை இவ்வேஷப்பிராமணர்க ளறியாதும், பேதமொழிகளென்பதே வேதவாக்கியங்களென வழங்கி வருவனவற்றை நான்கு பேதமொழிகளென்றும், நான்கு வகையாய் வாக்கியங்க ளென்றும் உணராது பெரிய பெரியக்கட்டு புத்தகமென்றெண் ணியும் இப்பேதமொழிகள் மூன்றும் வரிவடி வட்சரமில்லாத காலத்தில் புத்தபிரானால் ஓதவும் மற்றவர்கள் தங்கடங்கட் செவிகளாற் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்தது கொண்டு வரையாக் கேள்வி யென்றும் திரிசுருதி வாக்கியங்க ளென்றும் சொல்லவுங் கேட்கவுமாயிருந்த மொழிகளை உணராது பத்தாயிரஞ் சுலோகம், பன்னீராயிரஞ் சுலோகம், எட்டு புத்தகம் பத்து புத்தகமென வரைந்துள்ள கதைகள் யாவையும் ஒருவன் மனதிற் பதியவைத்துக் கொண்டு மற்றவனுக்கு போதிக்கவும், மற்றவனவற்றை தனது செவிகளாற் கேட்டு சிந்தனையில் வைக்கவுங் கூடுமோ வென்றறியாதும் பெரியக் கட்டு புத்தகத்தை சுருதியென்றுங்கூறி தங்களறியாமெயால் மற்றவர்களையு மயக்கி ஜோராஸ்டிரரால் வரைந்துள்ள ஜின்ட்டவஸ்த்தாவிலிருந்த சரித்திரங்களிற் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும் புத்ததன்மங்களிலிருந்த சரித்திரங்களிலும், பெயர்களிலும், ஞானங்களிலும் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும் நாலைந்து பேர் தங்கடங்கள் மனம்போனவாறு எழுதிக்கொண்டு போய் கனந்தங்கிய துரை மக்களிடங் கொடுத்து இவைகள் தான் வேதவாக்கியம் இவைகள் தான் சுருதி வாக்கியமெனக் கொடுத்து அதனாலும் பொருள் சம்பாதிக்க வாரம்பித்துக்கொண்டார்கள். இத்தியாதி விஷயங்களையும் ஆரிய வேஷப் பிராமணர்களே வரைந்து காலத்திற்குக் காலங் கடந்துவந்த துரை மக்களுக்கு எழுதிக்கொண்டு போய் கொடுத்திருந்த போதினும் அவ்வேதத்தை சிக்கருத்து சீர்திருத்தியவர் வியாசரேயெனத் தங்கள் மரபினர் பெயரையே சிறப்பித் தெழுதிக்கொண்டார்கள். காரணமோவென்னில் தங்களுக் கெதிரியாக வேஷமிட்டுள்ள மராஷ்டக வேஷப்பிராமணர் களேனும், திராவிட வேஷப்பிராமணர்களேனும், கன்னட வேஷப்பிராமணர்களேனும் தங்களுடையதென வலுபெறச் செய்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் வேதத்தை சிக்கறுத்தவரும் வியாசர், புராணங்களை யெழுதியவரும், வியாசர், பாரதக்கதையை வரைந்தவரும் வியாசர், சங்காரச் சாரிக்கு குருவாகவந்தவரும் வியாசரென வரைந்து வைத்துக் கொண்டு தங்கள் சுயகாரிய விருத்திகளைச் செய்து வந்த போதிலும் மற்றுமுள்ள வேஷப்பிராமணர்கள் தங்கங்டங் களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் புசிப்பு முதலியவைக ளற்றிருப்பினும் சுயகாரிய சீவனங்களுள் ஆரிய வேஷப் பிராமணர்களை யடுத்தே நடத்திக்கொண்டார்கள். சமணமுநிவர்களால் மநுமக்களுள் அவர்கள் தொழில் களுக்குத் தக்கவாறும், செயல்களுக்குத் தக்கவாறும், குணங்களுக்குத் தக்கவாறுங் கொடுத்திருந்தப் பெயர்களை ஒற்று மெய்க்கேடாம் அறிவிலிப்பிரிவினை களுண்டு செய்து அதிற்றங்களை உயர்ந்த சாதிப் பிராமணர்களென வகுத்துக் கொண்டு தங்களுக்கு யெதிரிகளாக விருந்து தங்கள் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் சகலக்குடிகளுக்கும் பறைந்து, அடித்துத்துரத்தி ’சாணந்துளிர்க்கச் செய்துவந்த பெளத்த வுபாசகர்களாம் மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று மிழிவுகூறி சொல்லிவந்த சங்கதிகளை மகமதிய வரசர்களுங்குடி களுங் கேட்டுங்கேளாது போலிருந்த காலத்தில் சில பெண்மக்களுடன் மகமதியர்கள் புருஷகலப்பால் புத்திரவிருத்தி யுண்டானபோது மகமதிய புருஷநிறை யொன்றும், இப்பெண் மக்கள் நிறை அரையுமாகக்கூட்டி அப்பிள்ளையை தமிழில் ஒன்றரை சாதிக்குப்பிறந்த பிள்ளையென்றும், துலுக்கில் “தேடென்றும்” வழங்கிவந்தப் பெயர் தங்களை அவமதிக்கின்றதென்றெண்ணி தாங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் “தேடென்றால்” பறையர்களைக் குறிக்கும் பெயரென்று கூறி அவற்றாலு மிழிவடையச்செய்துவந்தார்கள். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் வந்து தோன்றியகாலத்தில் மகமதியர்களைப்போல் சும்மாவிராது நீங்கள் பிராமணர்க ளென்றால் எவ்வகையால் உயர்ந்து போனீர்கள் சண்டாளர்க ளென்றால் அவர்கள் எவ்வகையால் தாழ்ந்து போனார்களென்று கேழ்க்கும்படி ஆரம்பித்துக்கொண்டதினாலும் இத்தேசப் பூர்வக்குடிகளில் கம்மாளரென்போர் வேஷப்பிராமணர்களுக் கெதிரடையாகத் தோன்றி இவர்களை ஜோதி சங்கமர்களுக்கு சமதையானவர்களென்றும், எங்களது சுப அசுப காரியங்களுக்கு இவர்கள் குருக்களல்லவென்றுங் கண்டிக்க ஏற்பட்டதினாலும் தங்களை சிறப்பித்துக்கொள்ளத்தக்க ஓர் புத்தகத்தை யெழுத வாரம்பித்துக்கொண்டார்கள். அப்புத்தகத்தையுந் தங்களிஷ்டம் போல் வரைந்துக் கொண்டால் இத்தேசத்தோரங்கீகரிக்க மாட்டார்களென் றெண்ணி அறப்பள்ளிகளிற் றங்கியிருந்த சமணமுநிவர்கள் தாபர சாஸ்திரங்களும், வானசாஸ்திரங்களும், பூமிசாஸ் திரங்களும், அஸுவ சாஸ்திரங்களும், இரிடப சாஸ்திரங்களும் வரைந்து வைத்தகாலத்தில் மநுமக்களுக்கென்று நீதிசாஸ் திரங்களும், ஞான சாஸ்திரங்களும், பொதுவாய உலகநீதி சாஸ்திரங்களையும் வரைந்து வைத்திருந்தார்கள். அதனுடன் வேதமொழி நான்கிற்குந் தெளிபொருள் விளக்க முப்பத்திரண்டு உபநிடதங்களுக்கும் சார்பாய் அறஹத்துக்களின் சரித்திரங் களாம் பதிநெட்டு ஸ்மிருதிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள். இவற்றுள் சுருதியென்னுமொழி பாலிபாஷைக்கு வரி வடிவ அட்சரமிராது வொலிவடிவாக பேசிவந்தகாலத்தில் மூவருமொழியாம் திரிபேதவாக்கியங்களை ஒருவரோதவும், மற்றவர் செவிகளிற் கேழ்க்கவுமா யிருந்தது கொண்டு திரி சுருதி வாக்கியங்களென்றும் வரையாக் கேள்விகளென்றும், வழங்கி வந்தார்கள். அதன்பின்னர் புத்தபிரான் பாலியாம் மகடபஷையையே மூலமாகக்கொண்டு, சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாந் தென்மொழியையும் வரிவடிவாட்சரங்களாக யேற்படுத்தியபோதும் சுருதிகளா யிருந்த பேதவாக்கியங்களை செவியாற் கேட்கவும், மனதாற சிந்திக்கவும், அறிவாறத்தெளிவு முண்டாகி சாந்த ரூபிகளாய் பிறப்புப் பிணி மூப்புச்சாக்காடை ஜெயித்த அறஹத்துக்களின் சரித்திரங்களையும் அவரவர்கள் சாதனங்களையும் ஆசியர் போதனங்களையும் விளக்கி ஓர் சரித்திரம் எழுதியுள்ள நூற்களுக்கு இஸ்மிருதிக ளென்றும் வகுத்திருந்தார்கள். இவற்றுள் அன்ன மீவது வோர் தன்மமும், ஆடையீவ தோர் தன்மமுமாயிருப்பினும் மக்களுக்கு நீதியையும் நெறியையு மோதி துன்மார்க்கங்களை யொழித்து நன்மார்க்கங்களில் நடக்கும் போதனைகளை யூட்டி துக்க நிவர்த்திச் செய்து சுகம் பெறச் செய்யுந்தன்மம் மேலாய தன்மமாயிருக்கின்றபடியால் அத்தகைய போதனைகளைப் போதிப்பவர் பெயரையும் அவற்றைக் கேட்டு நடப்பவர் பெயரையுங் கண்டு தெளிவுற யெழுதியுள்ள நூலுக்கு இஸ்மிருதியென்றும் தன்மநூலென்று மெழுதியிருந்தார்கள். அதாவது, வாசிட்டம், பிரகற்பதி, கார்த்திகேயம், திசாகரம், மங்குலீயம், மனு, அத்திரி, விண்டு, இயமம், ஆபத்தம்பம், இரேவிதம், சுரலைவம், கோசமம், பராசரம், வியாசரம், துவத்தராங்கம், சுரலைவம், கவுத்துவம், கிராவம் என்பவைக ளேயாம். இவைகளுள் வசிட்டரென்னும் மகாஞானி இராம னென்னு மரசனுக்கு புத்தரதுவாய்மெகளையும் அவரது சாதனங்களையும் மற்றும் பரிநிருவாணமுற்ற அரசர்களின் சரித்திரங்களையும் அவர்களது சாதனங்களையும் விளக்கிக் கூறியுள்ள நூலுக்கு வசிட்ட ஸ்மிருதியென்றும், வசிட்ட தன்ம நூலென்றுங் கூறப்படும். பிரகற்பதி யென்னும் மகாஞானி சந்திரவாணனென்னு மரயனுக்குப் போதித்த நீதிநெறி யொழுக்கங்களையும் ஞானசாதனங்களையும் வரைந்துள்ள நூலுக்கு பிரகற்பதி ஸ்மிருதியென்றும், பிரகற்பதி தன்ம நூலென்றுங் கூறப்படும். கார்த்திகேயராம் முருகக்கடவுள், கமலபீடனாம் மணிவண்ணனுக்குப் போதித்த நீதிநெறி யொழுக்க சாதனங்களையும் அதனதன் பலன்களையும் விளக்கி காட்டிய நூலுக்கு கார்த்திகேய ஸ்மிருதியென்றும், கார்த்திகேயர் தன்ம சாஸ்திரமென்றும் கூறப்படும். மனுவென்னு மகாஞானியார், பிரஜா நற்சேர்க்கை நற்பழக்கம், நற்கேழ்வி முதலியச் செயல் விருத்தியால் தேவர்களெனக் கொண்டாடப் பெற்று பரிநிருவாண முற்று வானவர்க்கரசனாம் நற்சேத்திர புத்தேளுலகும் பெறுவார்களென்பதும் சாத்தியம். இத்தகைய வரியச்செயல்களை யடக்கியுள்ளதும் ஞானா சிரியர்களால் நன்மாணாக்கர்களுக்குப் போதித்து ஞானநிலைப் பெறச்செய்வது மாய இஸ்மிருதிகளாம் தன்ம நூற்களின் மகத்துவங்களை யுணராது மநுமக்களின் ஒற்றுமெய்க்குக் கேடாய வருணாசிரமங்களை சொல்லும்படி ஓர்ரிஷியைக் கேட்டதாகவும் அவர் வருணாசிரம தன்மங்களோதியதாகவும் வரைந்து வைத்துள்ளார்கள். உலகத்தில் தோன்றும் பொருட்களும், அழியும் பொருட்களும் பிரத்தியட்ச காட்சியாயிருக்க வருணாசிரம தோற்றத்தை மட்டிலும் ஒருவன் கேழ்க்கவும், மற்றவன் சொல்லவு மேற்பட்டது மிக்க விந்தையேயாம், யீதன்றி தன்மமென்னு மொழியானது சீவராசிகளீராக மநுமக்கள் வரை பொதுவாயுள்ள தேயாம். அத்தகைய தன்மமெனுமொழியின் சிறந்த கருத்தினை யறியாது அவர்களெழுதி வைத்துக்கொண்ட மநுதன்மத்தைப் பாருங்கள். ஓர் சூத்திரனென வகுக்கப்பட்ட மனிதன் பிராமணனென வகுத்துக்கொள்ள மனிதனின் ஆசன பீடத்திலுட்காருவானாயின் அச்சூத்திரனுக்கு இடுப்பில் சூடு போட்டேனும் அவனது ஆசனத்தில் சிறிதறுத்தேனும் ஊரைவிட்டு துறத்திவிட வேண்டியது இதுவுமோர்மநுதன்மம். ஓர் சூத்திரனென் போன் பிராமணனென்போனைப் பார்த்துக்காரியுமிழந்தால் அவன் இரண்டு வுதடுகளையும் அறுத்துவிடவேண்டியது. சிறுநீரை யூற்றி பங்கஞ்செய்தால் அவனது ஆண்குறியை அறுத்தெரிந்துவிட வேண்டியது. மலத்தையெரிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தை சேதிக்க வேண்டியது. இதுவுமோர் மநுதன்மம். பிராமணனென் போன் பிரம்மாவின் முகத்திற் பிறந்தது யதார்த்தமாயின் பாதத்திற் பிறந்த சூத்திரன் காரியுமிழவும், சிறுநீரை யூற்றவும், மலத்தை மீதெரியவுமாய அலட்சிய முண்டாமோ. இவர்களால் சூத்திரரென வகுத்துள்ள மக்களது மனத்தாங்கலானும் இவர்கள் யதார்த்த பிராமணர்களல்ல வென்னும் அலட்சியத்தினாலும் மேற்கூறியச் செயல்கள் நிறைவேறவும் அதற்கென்றே இவர்களது அதன்ம சட்டந் தோன்றவும் வழியாயிற்று. பிராமணனென்னும் வகுப்போரை மிக்க சிறந்தவர்கள் ளென்றும், தன்னை சூத்திரனென்றுந் தெரிந்து கொண்டவன் பிராமணனென்போன் தலைமயிரையும், தாடி மயிரையும், ஆண்குறியையும் பிடித்திழுப்பனோ. இத்தகைய சட்ட முந்தோன்றுமோ இல்லை இச்சட்டந்தோன்றுங்கால் பிராமணனென்னும் உயர்வும், சூத்திரனென்னுந் தாழ்வும் ) இல்லையென்பதே சான்று. சூத்திரன் துவிஜாதிகளின் மனைவிகளைப் புணர்ந்தால் அவன் கோசபீஜம் இரண்டையும் அறுத்துவிட வேண்டியது. பிராமண னென் போன் எந்த ஜாதியோரிடம் புணர்ந்தாலும் ஒன்றுஞ் செய்யப்படாது இதுவுமோர் மநுதன்மம். பிராமணனென் போன் கொலைக் குற்றஞ் செய்தால் அவனது தலையின் மயிரை சிரைத்துவிடுவதே அவனுக்கு மரணதண்டனையாகும். மற்ற சாதியோர் கொலைக்குற்றஞ் செய்தால் அவர்களது சிரமுண்டனமே கொலை தண்டனையாக்கும் ஓர் மநுதன்மம். இம்மனுதன்ம சாஸ்திரமானது பௌத்தர்களின் பதிநெட்டு தன்ம சாஸ்திரங்களுக்கும் நேர் விரோதமானதும், இத்தேசத்து மக்கள் யாவருடைய சம்மதத்திற்கும் உட்படாததும், நீதிநூல் யாவற்றிற்கும் எதிரிடையானதும், தங்களது பிராமண வேஷத்திற்கே வுரித்தானதுமாகத்தங்களது மனம் போனவாறு வரைந்து வைத்துக் கொண்டபடியால் அதிற்கூறியுள்ள அநுலோ மசாதி, பிரிதிலோமசாதி, அந்தராள சாதி, பாகியசாதியானோர் ஒருவருந்தோன்றாமல் அன்னூலிற் கூறியிராத முதலியார் சாதி, நாயுடு சாதி, செட்டியார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோற்றிவிட்டார்கள். இவ்வகைத் தோற்றியவர்களுக்கும் ஓர் நூலாதாரங் கிடையாது. இவற்றைத் தடுத்துக் கேட்பதற்கும் வருணாசிரமம் வகுத்துக் கொண்டவர்களுக்கு வழிகிடையாது. வருணாசிரமம் வகுத்துள்ள மநுதன்மநூலோர் நாலுசாதிகளுக்கு மேற்பட்ட சாதி கிடையாதென்று வரைந்திருக்க இப்போது தோன்றியுள்ள ஐந்தாவது சாதிகளுக்கு ஆதாரமே கிடையாது. பிராமணன் பஞ்சிநூலும், க்ஷத்திரியன் ஜணப்பநூலும் வைசியன் கம்பிளி நூலும், பூணுநூலாகத் தரித்துக்கொள்ள வேண்டுமென தங்கள் தன்மசாஸ்திரத்தில் வரைந்து வைத்திருக்கின்றார்கள். அதை யொருவருஞ் சட்டைச் செய்யாது பிராமணனென் போன் பஞ்சு நூலணிந்துக் கொள்ளுவது போல க்ஷத்திரியனென் போனும் பஞ்சுநூலை யணைந்துக் கொள்ளுகிறான். வைசியனென்னும் எண்ணெய் வாணியனும் பஞ்சு நூலணைந்துக் கொள்ளு கின்றான். அவர்களைத் தடுத்தாள்வதற்கு இம்மநுதன்மசாஸ் திரத்திற்கும் அதிகாரங் கிடையாது. அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரங்கிடையாது. இந்த வருணாசிரமதன்ம சாஸ்திரத்தில் பிராமணனென் போனுக்குத் தொடர்மொழி சர்ம வென்றும், க்ஷத்திரிய னென்பவனுக்குத் தொடர்மொழி வர்ம வென்றும், வைசியனுக்குத் தொடர்மொழி பூதியென்றும், சூத்திரனுக்குத் தொடர்மொழி தாசென்றும் வைத்துக் கொள்ள வேண்டு மென்னும் நிபந்தனையை யேற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அதாவது முத்துசாமி யென்னும் பிராமண னென்போனாயின் அவன் முத்துசாமி சர்ம வென்றும், முத்துசாமி யென்னும் க்ஷத்திரியனாயின் அவன் முத்துசாமி வர்ம வென்றும், முத்துசாமி யென்னும் வைசியனாயின் அவன் முத்துசாமி பூதியென்றும், முத்துசாமி யென்னும் சூத்திரனாயின் அவன் முத்துசாமி தாசென்றும் தங்கடங்கட் பெயர்களினீற்றில் வருணாசிரமத் திற்குத் தக்கத் தொடர்மொழிகளை சேர்த்து வர வேண்டு மென்னும் நிபந்தனைகளை வரைந்து வைத்துக்கொண்டிருக் கின்றார்கள். அவ்வகை யெழுதியுள்ள சட்ட திட்டங்களை ஒருவருஞ் சட்டைசெய்யாது தங்கடங்கள் மனம்போனவாறு ஐயரென்றும், அய்யங்காரென்றும், பட்டரென்றும், ராவென்றும், சிங் கென்றும், நாயுடென்றும் முதலியென்றும், ரெட்டி யென்றும், செட்டி யென்றும், வெவ்வேறு தொடர்மொழிகளை சேர்த்துக் கொண்டார்கள். இத்தகையப் பெயர்களை சேர்த்துக் கொண்டதற்கு இவர்களுக்கோ ராதாரமுங் கிடையாது. நான்கு வருணாசிரமத்திற்கும் நாங்கள் வைத்துள்ள பெயர்களை வையாது நீங்கள் வெவ்வேறு பெயர்களை வைக்கலாமோ வென்று கேட்பதற்கு அம்மனுதன் மசாஸ்திரத்திற்கும் அதன் தலைவர் களுக்கும் அதிகாரங் கிடையாது. கொழுத்தப் பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு யெதேஷ் டமாகத் தின்பதற்கு பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக்கின்றாரென்று இம்மநுநூலி லெழுதி வைத்துக் கொண்டவர்கள் பௌத்தர்களது தேசத்தில் பசுவைக் கொல்லும் எக்கியத்தொழிலை மறந்தே விட்டுவிட்டார் இவர்களெழுதியுள்ள படி பிரம்மாவானவர் எக்கியத்திற் கென்றே பசுக்களை சிருஷ்டித்துள்ளது யெதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப் பார்களோ. பிரம்மசிருட்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்ட போதினும் கொன்றுத் தின்னா மெயாகும் பௌத்தர்களது மத்தியில் அந்நோர் பிரமத்தின் கருத்தும் அடியோடழிந்து போய்விட்டது. பல பாஷை யோருள்ளும் பல தேசத்தோருள்ளும் பல மதத்தோருள்ளும் வேஷப்பிராமணர்கள் தோன்றிவிட்ட படியால் அவரவர்கள் மனம்போ லெழுதிக்கொண்ட வேதங்களும், மனம் போலெழுதிக்கொண்ட வேதாந்தங்களும் மனம் போலெழுதிக்கொண்ட புராணங்களும், மனம் போலெ ழுதிக் கொண்ட தன்மங்களும், மனம் போலெழுதிக்கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவ ரொவ்வாது மாறுபட்டுள்ள படியால் ஒருவகுப்பா ரெழுதிக்கொண்ட கட்டளைகள் மறுவகுப்பாருக் கொவ்வாமலும், ஒருவகுப்பார் தெய்வம் மறுவகுப்பாருக் கொவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறு படுவதுடன் நூதனமாக யேற்படுத்திக்கொண்ட மநுதன்ம சாஸ்திரத்தையும் மற்றவர்க ளேற்றுக்கொள்ளாதும், சாதி தொடர்மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாதும், ஜணப்பனார் பூணு நூல், ஆட்டு மயிரின் பூணு நூற்களைத் தரித்துக் கொள்ளாதும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை யேற்றுக் கொள்ளாதும் நீக்கிவிட்ட போதினும் மநுதன்ம நூல் மநூதன்ம நூலென்னும் பெயரினை மட்டிலும் வழங்கிவருகின்றார்கள். தன் மதத்திற்குரிய வெதார்த்த நூலாயின் இத்தேசத் தோரொவ்வொருவருங் கைசோரவிடுவார்களோ, ஒருக்காலும் விடமாட்டார்கள். புத்ததன்மத்தை யநுசரித்துக் கால மெல்லாம் நீதிமார்க்கமாம் ஒற்றுமெயிலும், அன்பிலுமிருந் தோர்களை அதன்மத்தில் நடக்கும்படி யேவுவதாயின் அதன் மத்துள் சம்பந்தப் பட்டவர்களே சம்மந்திப்பார்களன்றி யேனைய தன்மப்பிரியார்கள் ஒருக்காலு மேற்காரென்பது திண்ணம். அவ்வகை யேற்கா விஷயத்தை யெவ்வகையா லறிந்து கொள்ள வேண்டு மென்னில் வடமொழியாம் சகடபாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார். சூத்திரன் யார், பறையன் யார். தென்மொழியாம் திராவிட பாஷையால் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கொடுந்தமிழாம் மலையாளுபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன்யார், வைசியர் யார், சூத்திரன் யார், பறையன்யார். மராஷ்டக பாஷையில் பிராமணன்யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கன்னடபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தெலுங்கு பாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். வங்காள பாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யாரென்னும் ஆளகப்படாது திகைப்பதே போதுஞ் சான்றாம். மலையாளமென்னுங் கொடுந்தமிழ் நாட்டோரை வஞ்சித்து அவர்கள் மத்தியிலிருந்து கொண்டு வருணாசிரம தன்ம சாஸ்திர மெழுதும்படி யாரம்பித்த படியால் அங்கு வழங்கும் வர்ம, சர்ம, பூதி என்னுந் தொடர்மொழிகள் மற்றெங்கும் வழங்குவதற் கேதுவின்றி அவரவர்கள் மனம் போனவாறு வெவ்வேறு தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொண்டு தங்கடங்கள் மனம் போல் பெரியசாதிக ளென்னும் பெயர்களை மநுதன்ம சாஸ்திரத்திற் கொவ்வாமலே வைத்துவருகின்றார்கள். அவைகள் யாவும் சாதித்தலைவர்களுக் கவசியமில்லை. சாதித்தலைவர்களது போதனைப்படி தங்கள் சாதிக்கட்டுக் குளடங்கி இந்துக்களேன் போர்க் குட்பட்ட எந்தசாமிகளைத் தொழுதுக் கொண்டாலுஞ்சரி, எச்சாதித்தொடர்மொழி களைச் சேர்த்துக் கொண்டாலுஞ்சரி, தங்களுக்கு மட்டிலு மடங்கி தங்களை பிரம்மா முகத்திலிருந்து வந்தவர்களென் றொடிங்கி, தங்களையே பிரம்ம சாமியென் றுவணங்கி, அமாவாசை தட்சணை, கிரஹண தட்சணை, நோம்பு தட்சணை, உபநயன தட்சணை, பூசாரி தட்சணை, புண்ணியதான தட்சணை, சங்கராந்தி தட்சணை, சாவுதோஷ தட்சணை, பிள்ளை பிறந்த தட்சணை முதலியவைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும் மற்றப்படி அந்த சாதி இந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்றால் அநுலோமம் பார்க்க வேண்டியதில்லை. இந்த சாதி அந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்றால் பிரிதிலோமம் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் வரைந்துக் கொண்டுள்ள மநுதன்ம சாஸ்திரத்தில் மட்டிலுங் காணலாமேயன்றி அநுபவத்தில் ஒன்றுங் கிடையவே கிடையா. அதன் காரணமோவென்னில் அவரவர்கள் மனம் போல் சாஸ்திரங்க ளெழுதிக்கொள்ளுவதும், அவரவர்கள் மனம் போல் சாதிப்பெய ரேற்படுத்திக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம் போல் சாதித்தொடர் மொழிகளை சேர்த்துக்கொள்ளுவது மாய செயலை யுடையவர்களாதலின் சாஸ்திரத்திற் கொற்ற அநுபவமும், அனுபவத்திற் கொற்ற சாஸ்திரங்களும் அவர்களிடங் கிடையாவாம். இவற்றிற்குப் பகரமாய் “யாரடா விட்டது மானியமென நான்தான் விட்டுக்கொண்டேன்” என்னும் பழமொழிக்கொக்க அவனவன் மனம்போனவாறு ஒவ்வோர் சாதிப்பெயர்களை வைத்துக் கொண்டபடியால் அப்பெயரை அவனே சொன்னால் தான் வெளியோருக்குத் தெரியும், அதைக் கண்டே இத்தேசத்தோருக்குள் நீவிரென்னசாதி யென்று வினவுவதும் அதற்கவன் வைத்துக் கொண்ட சாதிப்பெயரைப் பகருவதும் வழக்கமாம். அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை அவனவன் சொன்னாலே தெரியுமன்றி சொல்லாதபோது தெரியாது. வீதியில் மாடு போகிறது, குதிரை போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, மனிதர்கள் போகின்றார்களென்று கூறலாம். மற்றப்படி அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை அவனவனைக் கேட்டே தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவனவன் பிரியத்திற்கும் மநுதன்ம சாஸ்திரத்திற்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையா. புருசீக தேசத்தினின்று வந்து குடியேறிய ஆரியர்களும், இத்தேசத்திலிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிட, வங்காள, காம்போஜர்களும், பெளத்ததன்ம அந்தணர்களைப் போல் பிராமண வேஷமணிந்து அவ்வேஷங்களுக்கு ஆதரவான வேதங்களையும், புராணங்களையும், ஸ்மிருதிகளையும், அதிற் கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் ஆசாரங்களையும், சிலாலயப் பூசைகளையும், அவரவர்கள் மனம் போ லேற்படுத்திக் கொண்டு மதக்கடை பரப்பி சீவிக்குங்கால் இவர்களது பொய் வேதங்களையும், பொய்க்குருவுப தேசங்களையும், சமண முநிவர்களாகும் பாம்பாட்டி சித்தர் முதலியோர் கண்டித்தும் இவர்களது பொய்ச்சாதி வேஷங்களையும் பொய்லிங்க பூசைகளையும் சிலாலிங்கத் தொழுகைகளையும், சமணமுநிவர் களாம் சிவவாக்கியர், பட்டினத்தார், தாயுமானவர், சாம்பவனார், கடுவெளி சித்தர், அகப்பே சித்தர், இடைகாட்டு சித்தர், குதும்பை சித்தர், மற்றுமுள்ள மகாஞானிகளாலுங் கண்டித்து அனந்த நூற்க ளெழுதியது மன்றி பௌத்த தாயகர்களாம் விவேகிகளால் வேஷப்பிராமணர்களைக் காணுமிடங்களி லெல்லாம் தங்கவிடாமலடித்துத்துரத்தவும் பௌத்தர்கள் வாசஞ்செய்யும் சேரிகளுக்குள்ளும் கிறாமங்களுக்குள்ளும் வந்து நுழைந்துவிடுவார்களானால் கிறாமத்திற்கும் சேரிக்கும் யேதேனும் தீங்குண்டாமென்று பயந்து அவர்களை யடித்துத் துரத்தி அவர்கள் நடந்த வழியே சாணத்தைக் கரைத்து துளிர்த்துக்கொண்டே போய் சாணச்சட்டியை அவர்கள் மீதே யுடைத்துவருவதுமாகிய வழக்கத்திலிருந்தார்கள். ஆரியர்கள் மாடுகளையும் குதிரைகளையுங் உயிருடன் சுட்டுத்தின்னக்கண்ட பௌத்தர்கள் அவர்களை மிலேச்ச ரென்றும் புலால் புசிக்கும் புலையரென்றும் இழிவுகூறி யகற்றி வந்தச் செயல்களானது கன்னட வேஷப்பிராமணர்களுக்கும் மராஷ்டக வேஷப்பிராமணர்களுக்கும் திராவிட வேஷ பிராமணர்களுக்கும் மனத்தாங்க லுண்டாகி பௌத்தர்களுக் கெதிரிடையாய் பெருங்கூட்ட விரோதிகள் பெருகிவிட்டார்கள். அத்தகையப் பெருக்கத்தால் வேஷப் பிராமணர்கள் யாவரும் தாங்களே சகலருக்குங் பெரியசாதி ளென்றேற்படுத்திக் கொண்டு தங்களது பொய் வேஷத்தையும் பொய் வேதங் களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ச் சாதிகளையும், பொய்ப் புராணங்களையும் சகலருக்கும் விளங்கப் பறைந்து வந்தவர்களும் அவர்கள் கட்டுக்குள் அடங்காத பராயர்களுமாக விளங்கிய மேலோர்களாம் பௌத்தர்களை சகலருக்குந் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் வகுத்து தங்களை யடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், கல்வியற்ற பெருங்குடிகளுக்கும் போதித்து இழிவடையச் செய்து வந்தது மன்றி பௌத்தர்கள் ளெங்கேனும் சுகத்திலிருப்பார்களாயின் தங்களுடைய நாணமற்ற வொழுக்கங்களையும், மிலேச்சச் செயல்களையும், பிராமண வேஷங்களையும் சகலருக்கும் பறைந்து தங்கள் கௌரதையை கெடுத்துவிடுவார்களென்னும் பயத்தால் பெளத்தர்கள் யாவரையும் யெவ்வகையால் கெடுத்து எவ்வகையால் நாசஞ்செய்து எவ்வகையாற் பாழ்படுத்தலா மோவென்னுங் கெடு யெண்ணத்தையே குடி கொள்ள வைத்துக்கொண்டார்கள். காரணமோவென்னில் பௌத்தர்கள் சுகச்சீருடனிருப் பார்களாயின் பௌத்தர்களது வேதவாக்கியங்களையும் பௌத்தர்களது வேதாந்தங்களாம் உபநிஷத்துக்களையும் அறஹத்துக்களாம் பிராமணர்களது செயல்களையும் விளக்கிக் கொண்டே வருவார்கள். அதனால் தங்களது பொய்ப்பிராமண வேஷங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய் போத வேதங்களும், பொய் வேதாந்த கீதங்களும் பரக்க விளங்கிப் போமென்னும் பயத்தால் மேன்மக்களாம் பௌத்தர்களை கீழ்மக்களாம் பறையர்களெனத் தாழ்த்தி நிலைகுலைக்கும் நோக்கத்திலேயே விருந்துவிட்டார்கள். எத்தகைய நிலைகுலைவென்னில் மடங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்களை அவ்விடங்களிலிருந்தோட்டுவதும், அந்தந்த மடங்களிற் சிறுவர்கள் வாசிப்புக்கென்று ஏற்படுத்தியிருந்த பள்ளிக்கூடங்களைக் கலைத்தும், தங்களது போதனைக்குட்பட்ட வரசர்களை விடுத்தும், தங்களது பொய்ப் போதனைகளுக்கு மயங்கா விவேக வரசர்களை மித்திர பேதங்களாற் கொன்றும் தேசங்களை விட்டோட்டியும் புத்ததன்மங்களை மாறுபடுத்திக் கொண்டு வந்தது மன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்ம குருக்களாகவிருந்து தன் மகன் மக் கிரியைகளை நடாத்தி வந்த சாக்கையர், வள்ளுவர் நிமித்தகர்களென் போர்களை வள்ளுவப் பறையர்களெனத் தாழ்த்தி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலா ளருக்கும் செய்துவந்தக் கன்மக்கிரியைகளை செய்யவிடாதகற்றி வேஷப் பிராமணர்களே அக்கிரியைகளை நடாத்துவதற் காரம்பித்துக் கொண்டதுமன்றி கல்வியற்ற வரசர்களிடத்தும், வணிகர்களிடத்தும், வேளாளர்களிடத்தும், வள்ளுவர்களைப் பறையர்களென்றுகூறி யிழிவுபடுத்தியது மன்றி அருகில் நெறுங்கவிடாமலுஞ் செய்து அவர்களது தன் மகன் மக்கிரியைகளைத் தாங்களே யநுபவித்துக் கொண்டது மன்றி அவர்களை எங்குந் தலையெடுக்கவிடாமல் செய்து மற்றும் யாது விஷயத்திலும் சீவிக்கவிடாது தாழ்த்தி நிலைகுலையச் செய்து தளருக்குள் பிரவேசிக்கவிடாமலும், சுத்தநீர்களைமொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திர மெடுக்கவிடா மலும், அம்பட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும் மற்றுங் கனவான்களாயுள்ளக் குடிகள் வாசஞ்செய்யும் வீதிகளிற் போகவிடாமலும், அவர்களிடம் நெருங்கிப் பேசவிடாமலும் தடுத்துப் பலவகையாலும் பெளத்த குருக்களையும் பௌத்த வுபாசகர்களையுமே கொல்லத்தக்க யேதுக்களைத் தேடிக்கொண்டு தங்கள் பொய் வேதங்களையும், பொய்வேதாந் தங்களையும் பொய்ப் புராணங்களையும், பொய் ஸ்மிருதிகளையும் சிலாலயங்களாம் பொய் மதக்கடைகளையும் பரப்பி பொய்க் குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் யாவரும் மெய்க்குருக்கள் போல் நடித்து கல்வியற்ற குடிகளையுங் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு பெளத்ததன்மத்தில் பிரழாது சுத்தசீலத்திலிருப்பவர்கள் யாரையுந் தாழ்ந்த சாதிக ளென்று கூறி எவ்வெவ்வகையில் எவ்வெவ்வரிடத்தும் தாழ்ச்சிபெறக்கூறி நசிக்கக்கூடுமோ அவர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு பௌத்த சிகாமணிகளாம் மேன்மக்கள் யாவரையுங் கீழ்மக்களெனத் தாழ்த்தி எங்கும் எவ்விதத்திலும் எச்சீவனங்களிலும் நெருங்கவிடாமல் துரத்தி நசித்துக்கொண்டே வந்தார்கள். பெளத்த தரயக மேன்மக்களோ வென்னில் சாதி பேதங் களாலுண்டாங் கேடுகளை விளக்கியவைகளைக் கண்டித்தும், மத்பேதங்களையும் அதன் கேடுகளையும் விளக்கி அவைகளைக் கண்டித்தும் வேண்டியப் பாடல்களைப் பாடி நீதிமார்க்கங்களைப் பறைந்திருக்கின்றார்கள். ஆரிய மிலேச்சர்களோ கொண்டிருப்பது பிராமண வேஷம், போர்த்திருப்பது பொறாமெய்ப்போர்வை, உள்ளத் துரைந்திருப்பதோ வஞ்சினக்கூற்று, நாவுரையோ நஞ்சுண்டவாள், குடி கெடுப்பே குணசிந்தை யுள்ளவர்களா தலின் பெளத்த சிகாமணிகளின் நீதிபோதங்களைத் தங்கட் செவிகளிற்கேளாது தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதியே தங்களுக்கும் பொய் மத பேதங்களுக்கும் உட்படாத வர்கள் யாரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பல்வகையாலும் பரவச் செய்து வந்ததுமன்றி அன்னிய தேசங்களிலிருந்து இவ்விடம் வந்து, குடியேறியவர்களுக்கும் இழிவாக போதித்து அவர்களாலுந்தாழ்ச்சியடையச் செய்தும் இப்பறையனென்னும் பெயரைப் பட்சிகளுக்கும், மிருகங்களுக்குங் கொடுத்துப் பரவச்செய்து இப்பறையனென்னும் பெயரை அரிச்சந்திர னென்னும் பொய்க்கதையிலும், நந்தன் சரித்திரமென்னும் பொய்க்கதையிலும், கபிலர் அகவலென்னும் பொய்க் கதையிலும் பரவச்செய்து கல்வியற்ற சாதிபேதமுள்ளோர் சகலர் நாவிலும் இழிவு பெற வழங்கவைத்துவிட்டார்கள். இவ்விழி பெயரால் பள்ளிக்கூட சிறுவர்களும் நாணமடைவதையறிந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத் தார் பஞ்சமர்களென்றேனும் அவர்கள் பெயரை மாற்றி விடலாமென்று பள்ளிக்கூடங்களெங்கணு மாற்றிவிட்டார்கள். அதையறிந்த சாதி பேத வஞ்சகர்கள் வீதிகளிலடித்துள்ள முநிசபில் போர்டுகள் யாவற்றிலும் முன்பவற்றிலில்லாத பறைச்சேரி வீதி பறைச்சேரி வீதியெனப் பலகைகளில் வரைந்து அப்பெயர் மாறாதிருக்கும் வழியைச் செய்திருக்கின்றார்கள். பறையர்களென்னும் பெயரை அதிற்பறவச்செய்ததும் போதாது டீப்பிரஸ்கிளாசை சீர்திருத்தப் போகின்றோ மென்னும் படாடம்ப மடித்துக் கூட்டங்கூடுவதில் டிப்பிரஸ் கிளாஸ்யாரென்றால் பறையர்களென்போரும் சக்கிலிகளு மென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தியாதி பொறாமெச் செயல்கள் யாவும் பௌத்தர்களைத் தாழ்த்தித் தலையெடுக்க விடாமற் செய்த வஞ்சினக்கூற்றாதலால் அவற்றை சகல நீதிமான்களுக்கும் விளக்கி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கி யாதரிப்பதற்கே இவ்விந்திரர்தேச சரித்திரத்தை வெளியிட்டுள்ளோம். அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர் களையும், அவரவர்கள் ஆண்டு வந்த தேசங்களையும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங் குறைந்து சாதிபேத மதபேதத்தால் வஞ்சினம் பொறாமெ நிறைந்து நாளுக்குநாள் தேசம் பாழடைந்து வருவதற்குக் காரணமாய சரித்திரம் யேதுண்டோ அவைகளை மட்டிலு மிவ்விடம் வரைந்துள்ளோம். வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்த மேன்மக்கள் கீழ்மக்களாகத் தாழ்ந்த குறைவே இந்திரர் தேசத்தின் சிறப்புங் குன்றி சீர்கெடுவதற் கேதுவாகிவிட்டது. யதார்த்தத்தில் தேசத்தையும் தேசமக்களையும் சீர்திருத்த முயலுங் கருணைதங்கிய பெரியோர்கள் இச்சரித்திரத்தையும் ஆய்ந்து சீர்திருத்தும்படி வேண்டுகிறோம். முற்றிற்று FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.