[] [கிளிப்பேச்சு] கிளிப்பேச்சு கிளிமூக்கு அரக்கன் கிளிப்பேச்சு Copyright © 2014 by Creative Commons Attribution- Commercial-NoDerivatives 4.0 International License.. This book was produced using PressBooks.com. Contents - நூல் அறிமுக உரை - ம. சிங்காரவேலர் - 1. திமிறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் - 2. வேட்டியும் தமிழர்களும் - 3. வடஹிந்தியர்களின் சிம்மசொப்பனம் என் டி ஆர் - கட்டுரை - 4. 2009 ஏப்ரல் உண்ணாவிரதம் - நடந்தது என்ன? - 5. கிளிமூக்கு அரக்கனே, கலைஞர் - இளையராஜா ஒப்பிடுக? - 6. மறுமலர்ச்சி - 7. அம்மா இட்லிக்கடையும் 2ஜி இழப்பும் - 8. மோடிக்கு ஆதரவு - இது ஒரு 2014 தேர்தல் பரப்புரை சிறுகதை - 9. ஆபாசமில்லா ஒருப்பக்க செக்ஸ் கதை - 10. இந்தியக் குடியரசில் தமிழ்த் தேசியத் தலைமை - 11. ஜோ-டி-குரூசு என்னும் இந்துத்வா எழுத்தாளர் ? - 12. ஆம் ஆத்மி வகையறா கட்சிகள் - 13. சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி - 14. இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள் - 15. மூன்று விதமான தமிழக அரசியல்வாதிகள் - 16. சாகித் ஆஸ்மியும் அண்ணன் பேரறிவாளனும் மற்றும் சில இயக்குநர்களும்  - 17. தமிழ் நாஜிக்கள் - கவிதை - 18. தமிழ்த் தேசியம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? - 19. சீமானின் நாம் தமிழர் - 20. மிருகங்களும் ஆணுறையும் - சிறுகதை - 21. பிரேசில் - ஜெர்மனி 2014 - உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் - 22. வேற்று கிரகவாசிகள் (ஏலியன்கள்) பூமிக்கு வருவார்களா?  - 23. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய ஊடகங்களும் சிலோனும் - 24. சீமான் கட்சியினரின் வன்மம் - 25. கூடங்குளம் சுப. உதயகுமார் - 26. தமிழ்நாஜிக்கள் - பரிணாம வளர்ச்சி - 27. ராஜபக்ஷாஷ்டமி - 18-05-2159 விக்கியில் இருக்கும் கட்டுரை - 28. வரலாற்றைப் படித்தல் - 29. பஞ்சமர்களுக்கு இடங்கிடைக்க மாட்டாது - 30. பிரபாகரன் - 31. விருமாண்டி என்ற ஒருத்தமிழ்ப்படம் - 32. தமிழ்த்தேசியப்பிரியன் 1 நூல் அறிமுக உரை [kilifinal] ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன் https://www.facebook.com/kilimookku பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.   அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன் கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். முதல் நூல் 2014ஆம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குறித்த விக்கிப்பிடியா அறிமுகக் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது   உரிமை – Creative Commons Attribution- Commercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ம. சிங்காரவேலர் http://ta.wikipedia.org/s/fuj கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும்தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படுகிறார். சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் . தொழில்  சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907-ம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார். பொதுவுடைமைச் சித்தாந்தம் 1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது. கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில்சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார். சமூகப் பணிகள் இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்) உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார். 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார். தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார். பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[7] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது. ஈடுபட்ட போராட்டங்கள் சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம்ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் “இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!” என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927-ல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார். சிறப்பு ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, “வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!” என்று கூறியுள்ளார். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார் அரசு விழா இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன் படிபெப்ரவரி 18, 2011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றை குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தபட்டன. படைப்புகள் ம. சிங்காரவேலர் படைப்புகளின் பின்வருவன அடங்கும்: கடவுளும் பிரபஞ்சமும் நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி மனிதனும் பிரபஞ்சமும் மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும் கல்மழை உண்டாகும் விதம் விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும் பிரபஞ்சப் பிரச்சினைகள் விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள் விஞ்ஞானத்தின் அவசியம் பேய், பிசாசு தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள் மனோ ஆலய உலகங்கள் பிரகிருத ஞானம் ஜோதிட ஆபாசம் பகுத்தறிவென்றால் என்ன? பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை பிரபஞ்சமும் நாமும் உலகம் சுழன்று கொண்டே போகிறது பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை [pressbooks.com] 1  திமிறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் இமயவரம்பன் என பதிற்றுப்பத்து பாடல்களை வாசிக்கும்பொழுதும் சரி, கலிங்கம் வென்றான் என கலிங்கத்துப்பரணியை பாடத்திற்காகப் படிக்கும் போதும் சரி, இவை எல்லாம் தமிழர்களின் அதீத கற்பனை என்றிருந்த எண்ணம் சுனாமிக்குப்பின்னர் சங்கப் பாடல்களில் மிகைபுனைவுகளுக்கு இணையாக வரலாறும் ஒளிந்து இருக்கலாம் என்ற கருதுகோளாக மாறியது. ஆழத்தோண்டாமல் அகலத் தோண்டுதலாகவே இந்திய அகழ்வாராய்ச்சிகள் இருப்பதால் கருதுகோளிற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் கிடைக்காமலே போகலாம். ஆனால் ஆண்டாண்டு காலங்களாய் இவற்றிற்கான ஆதாரங்கள் சமூக அரசியல் தளங்களில் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. என் குருநாதர் வினையூக்கி தனது பேஸ்புக் முகப்பில் இவ்வாறு எழுதியிருந்தார். “அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் வடக்கை அலறவைப்பது ஒன்றே ஒன்று … தமிழ்” இந்தியம், சைவம், வைணவம் , காந்தியம், சமூகநீதி என அனைத்தையும் தாண்டி வடக்கத்தியர்கள் தமிழர்கள் நலன் சார்ந்த விசயம் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு வடக்கு என்ற சந்திப்பில் ஒன்று சேர்கின்றனர். இந்த வன்மம் , வெறுப்பா , பயமா , எரிச்சலா எனத் தெரியவில்லை. ஒருவேளை தெற்கின் கையோங்கியிருந்த காலங்களில் வடக்கில் அன்றைய ‘ஆளும் சமூகத்தின் மீது’ அமெரிக்கத்தனமாக தமிழர்கள் நடந்து கொண்டிருப்பனரோ என்ற எண்ணம் வராமாலுமில்லை. சிங்களவர்களைக் அடக்கி ஒடுக்கி வைத்திருந்த சென்ற நூற்றாண்டு ஈழத்தமிழர்கள், இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருவது இயல்பு. வரலாற்றுக் காயத்தின் வன்மம், வாய்வழிக்கதைகள் வழி மட்டுமல்லாது ஜீன்களின் வழியாகவும் கடத்தபட்டிருக்குமோ!! தமிழர் சாராத பிரச்சினைகளின் ஆங்கில ஊடக விவாதங்களைப்பாருங்கள். கொஞ்சம் முன்னபின்னே இருந்தாலும் ஓரளவிற்கு நியாயமான வழிநடத்தலுடன் மட்டுறுத்தலுடன் விவாத ஒழுங்கு இருக்கும். ஆனால் காவிரி நதி நீர்ப்பிரச்சினையாகட்டும், முல்லைப்பெரியாறு ஆகட்டும், ஈழப்பிரச்சினையாகட்டும் , கூடங்குளமாகட்டும் நடுவரே கையில் ஒன்றிற்கு இரண்டாய் கைத்தடிகளுடன் தமிழருக்காகப் பேசுபவரை முதல் வார்த்தையில் இருந்து திட்டித்தீர்ப்பார். அட ஆக்கப்பூர்வ விசயங்களை விடுங்கள், பொழுதுபோக்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். வடக்கத்தியர்களுக்கான மற்றொரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸை கரித்துக் கொட்டுவதன் நோக்கம் அதன் தளம் தமிழ்நாடு, நிர்வாகிகள் தமிழர்கள். வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டு இன்று சிறப்பாக செயற்படுகின்றன, நல்லவிசயம்தான். ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான முழுமுதற்காரணம் அன்று வங்கிகள் முழுக்க முழுக்க தென்னிந்தியர் கைவசம் , அதில் பாதி தமிழர்கள் வசம்இருந்தன. உலகக்கோப்பை போட்டிகளுக்குப்பின்னர் வரும் கிரிக்கெட் தொடர்களை , மக்கள் நினைவில் கொள்வதில்லை. கலவிக்குப்பின்னரான அயற்சியை ஒத்த மனநிலையில் ரசிகர்கள் இருப்பார்கள். அதைப்போல விடுதலைக்குப்பின்னர் தெற்கத்தியர் சுதந்திர மோகத்தில் இருந்த காலத்தில் , அவர்கள் ஹிந்’தீ’யாய் வேலைபார்த்து, பொருளாதாரக்குடுமியை பிடுங்கி தன் வசம் வைத்துக்கொண்டது அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்கள் தெற்கில், குறிப்பாக தமிழகத்தில் அடிமட்டம் வரைக் கொண்டு செல்லப்பட்டதைப்போல வடக்கில் இருந்ததில்லை. அங்கு குடும்பக்கட்டுப்பாடு உறை என்றால் வாயால் ஊதி காற்றில் பறக்கவிடப்படும் பலூன் என்ற அளவில்தான் தெரிந்து இருந்தது. இத்தனையையும் மீறி தமிழர்கள் தமிழர்களாக இருப்பதன் காரணம் அவர்களின் திமிர்த்தனமும் திமிறும்தனமும் தான். சோற்றாலடித்தப் பிண்டமான தமிழன் கால்வயிறு அரைவயிறு கிடைக்கும்வரை பிரச்சினை தராமல் இருந்துகொண்டு, கடைசிக் கோவணத்தை உருவ வரும் வரை யார்வந்து அடித்தாலும் ஆண்டாலும் கருமம் கமலஹாசன் ரகளை ரஜினிகாந்த் என அமைதியாய் இருப்பான். எலியை விரட்டிக் கொண்டே போங்கள் , ஓரிடத்தில் போய் தன் பற்களைக் கோரமாகக் காட்டி எதிர்த்து நிற்கும். அத்தகைய சூழல்கள் வந்தால் மட்டும் தமிழர்களுக்கு கும்பகர்ணத்தூக்கம் போகும். இந்தித்திணிப்பு என்ற அரசாங்க உத்தரவு வந்தபொழுது எலிகள் புலிகள் ஆகின. எலிகள் புலிகளானால் மட்டுமே செவிமடுக்கப்படும். தமிழ் காகபட்டர்கள் , அனுமன்களாவர். விடுதலைக்கு முன்னரான திணிப்பின் சூத்திரதாரியான ராஜாஜி, இரண்டாம் திணிப்பின்போது தமிழர்களுடன் நின்றது வரலாற்று சுவாரசியம். குல்லுகபட்டர் , காகபட்டராய் அண்ணாதுரையுடன் இணைந்தார். இந்தித் திணிப்பைப் பார்த்து ‘எனக்கே பிரிவினை எண்ணம் வந்துவிட்டது’ என்று திருச்சி திமுக மாநாட்டில் ராஜாஜி பேசினார். பெரியார் , அண்ணாவினால் தமிழ் எலிகள் புலிகளாய் மாறிய சென்னை மாநிலம் பற்றி எரிய பாகிஸ்தானையே நடுநடுங்கச் செய்த ,லால்பகதூர் சாஸ்திர் இறங்கி வந்தார். நேரடி இந்தித்திணிப்பு நிறுத்தப்பட்டது. அன்றைய காங்கிரஸ்காரர்கள் புத்திசாலிகள். விடாக்கொண்டனாய் மொழிக்கொள்கையைத் திணித்து இருந்தால் உடனடி வெற்றி இந்தியத்திற்கு கிடைத்து இருந்தாலும் , சுயாட்சி தனித்தமிழகம் என்ற எண்ணங்கள் அடுத்தத் தலைமுறைக்கு வீரியமாய் கடத்தப்பட்டிருக்கும். பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்தியா சிப்பாய்கலகத்தின் காலங்களில் இருந்த இந்தியத் துணைக்கண்டமாக மாறியிருந்து இருக்கும். விட்டுக்கொடுத்தல் பின்னர் மெல்ல நஞ்சைக் கலக்கல் என்ற இந்திய இயந்திரத்தின் ஆதி ‘மனு’ அறிவு, காங்கிறஸைத் தோற்கடித்து, மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என்ற கண்மூடித்தனமான இராமபக்தியில் மங்கிவிட்டதோ என்று தோன்றுகின்றது. பெருந்தன்மையைக் காட்டி இந்தியத்தை , தொலைக்காட்சித்தொடராய் அடுத்தத் தவணைக்கு நீட்டிப்பதை விட்டுவிட்டு எழுவருக்கு எதிராக அரசாங்கம் தடை வாங்கியிருப்பது உண்மையில் வடக்கத்தியர்களைக் காட்டிலும் தமிழர்களுக்குத்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கவேண்டும். மாலிக்காபூரை மதுரைக்குக் கொண்டு வந்த காலம் தொட்டு, எழும் தீப்பொறிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அணைந்துப்போய்க்கொண்டிருக்கையில், வென்றாலும் தோற்றாலும் கிடைத்திருக்கும் எழுவர் விடுதலை என்பது ஓர் அட்டகாசமான துருப்புச்சீட்டு. இந்தியத்திற்கு திட்டித்தீர்த்தவுடன் இருக்கும் எரிச்சலுக்குப்பின்னர் பயம் வரும். பயம் காரணமாக கடைசி நேரத்தில் காகபட்டர்களினால், இந்தியம் இறங்கிவருதலை மனமுவந்து ஏற்றுக்கொண்டு மீண்டும் எலிகள் ஆகிவிடாமல் அடுத்தத் தலைமுறைக்கு வரலாற்றைக் கடத்துங்கள். யார் கண்டது, ஆழத்தோண்டி இமயவரம்பனை மீட்டு எடுக்கலாம். குரலை உயர்த்துங்கள். மண்ணும் மனிதமும் இருப்பதால் தமிழகத்தின் மீதான பன்னாட்டு அரசுகளின் விருப்பம் அதீதமானது. ஆக மூட்டைப்பூச்சியை நசுக்குவதைப்போல காஷ்மீரத்தை நசுக்குவதைப்போல தமிழகத்தை நசுக்க முடியாது. பத்து பேர் சேர்ந்தால் கும்பல். நூறு பேரானால் கூட்டம். நூறாயிரம் ஆனால் எழுச்சி. கோடியானால் அது மறுமலர்ச்சி. தமிழ்க்கும்பல் என்று கேலி செய்த, அந்தக்கால ராஜாஜி போன்ற தமிழ் காகபட்டர்கள் வரப்போகும் தமிழ் மறுமலர்ச்சியில் துண்டு போட, ஏற்கனவே தமிழ் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள் இப்பொழுது பேசட்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மையாகப்போகும் அடுத்தத் தலைமுறையில் நமக்கான காக்காசூத்திரர்களை நாம் உருவாக்கிவிடலாம். 2 வேட்டியும் தமிழர்களும் கேள்வி :- தமிழர்களின் பாரம்பரிய உடை யான வேட்டிக் கட்டி இருந்ததால் ஒரு நீதிபதியையும் சில வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியசன் மன்றத்தில் உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து?  பதில் :- வேட்டி , தமிழர்களின் பாரம்பரிய உடையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு மன்றங்களும் தங்களுக்கு என்று சில விதிமுறைகள் வைத்து இருக்கின்றன. உடைக் கட்டுப்பாடுகளைப்பொறுத்தவரை , சென்னையில்இருக்கும் நிறைய மனமகிழ் / விளையாட்டு மன்றங்கள் விதிமுறைகளில் கடுமையாகவே இருக்கின்றன. இவ்வுடைக் கட்டுப்பாடு, பள்ளி மாணவர்களுக்கான யுனிபார்ம் மாதிரி, அல்லது கல்லூரிகளில் இருக்கும் உடை விதிமுறைகள் போன்றது.தனிப்பட்ட நிகழ்வோ , மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்வோ அம்மன்றங்களுக்கு செல்லும் பொழுது அவ்விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் , அல்லது உடை பற்றிய வேண்டுகோள் விடப்படும்பொழுது அதை மதிக்க வேண்டும். திரையரங்கம், வர்த்தக வளாகம் போன்ற பொது இடங்கள் அல்ல தனியார் மனமகிழ் / விளையாட்டு மன்றங்கள். அழைப்பின் பேரில் செல்லும்பொழுது அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் அல்லது அழைப்பை மறுத்துவிட வேண்டும். வேடிக்கைப் பார்க்க வருபவர்களோ விருந்தினர்களாக வருபவர்களோ ,அம்மன்றத்தின் உடைக்கட்டுப்பாடு மேற்கத்திய பாணி உடையில் வரவேண்டும் என்பது கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. சிதம்பரத்தில் எப்படி தனியாருக்கான கோவிலின் நடைமுறைகளில் நாம் கேள்வி கேட்க முடியாது என்று நினைப்பவர்கள் இதற்கு மட்டும் பாரம்பரியத்தைக் கொண்டு பொங்கும் ‘பஜகோவிந்த ‘ இரட்டை நிலைப்பாடு வியப்பாக இருக்கின்றது. இது நள்ளிரவு குடி கொண்டாட்ட மன்றங்களுக்கும் பொருந்தும். அந்த நடனவிடுதிகள் ‘ஷு’ போட்டிருக்கவேண்டும் என்று சொன்னால் அதைக் கடைப்பிடிக்கவேண்டும். ஒரு இயல்பான விதிமுறையைக் கடைபிடிக்க முடியவில்லை எனில் , குடித்துவிட்டு உள்ளே கும்மாளம் போடும்பொழுது பெண்களிடம் எல்லை மீற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும், பதவி, சாதி, இனம், மொழி, என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் கண்டிப்புடன் அந்த கிரிக்கெட் கிளப் நடந்து கொண்டிருக்கின்றது. அதற்காகவே பாராட்டப்படவேண்டும். வேட்டிக்காக பொங்குபவர்கள், பன்னாட்டு நிறுவனத்தின் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு செல்லும்பொழுது வேட்டி கட்டி செல்பவர்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில் வேட்டியை விட, மேற்கத்திய மேல் சட்டை, கால் ஆடைகள் தான் தமிழனுக்கு சமத்துவத்தைக் கொண்டுவந்தன. வேட்டிக்காக வருத்தப்படும் கனவான்கள் கன்னியாகுமரி தொடங்கி மலையாளக் கரையோர கோவில்களுக்குப்போனால் ஆண்கள் சட்டையைக் கழட்டிவிட்டு செல்லவேண்டும் என்றிருப்பதைக் கேட்டுவிட்டு இதையும் கேட்டால் சிறப்பாக இருக்கும். 3 வடஹிந்தியர்களின் சிம்மசொப்பனம் என் டி ஆர் - கட்டுரை தேர்தல் முடிவுகளில் பாஜக வென்ற இடங்களுக்கு காவி நிறத்தையும் ஏனைய இடங்களுக்கு கருப்பு நிறத்தையும் கொடுத்து இந்திய வரைபடத்தை ஒரு பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. உண்மைதான் காவி வடக்கிற்கும் கருப்பு தெற்கிற்கும் ஆன நிறங்கள். ‘மனவாடு’ வைகோ கருப்புத்துண்டு அணிந்த காவி என்றால், மறைந்த ‘தேவுடு’ என்டிஆர் காவி அணிந்த கருப்பு ஆள். உண்மையில் இந்திய தேசியக் கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தலைவர்களில் முதன்மையானவர் என்டிஆர். இந்திரா அனுதாப அலையில் , தமிழகம் உட்பட நாடே மூழ்க , எதிர்நீச்சல் அடித்து 30 உறுப்பினர்களுடன் பாராளுமன்றம் ஏறியவர் என் டி ஆர். நேரு,இந்திரா பிரதமர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அரசு இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த நிலை மாறி, அதிகாரிகளின் ஆலோசனைகளை தன் கருத்தாக ஒப்பிக்கும் தலைவர்களாக மத்தியில் ராஜிவும் மாநிலத்தில் எம் ஜி ஆரும் இருந்தனர். 37 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்த ஆர் எஸ் எஸ்ஸின் கைப்பாவை ஆகினார் ‘விளையாட்டுப்பிள்ளை’ ராஜிவ். ராஜிவையே கைக்குள் கொண்டுவந்தவர்களால், ஏன் மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் கொண்டு வரமுடியவில்லை என நீங்கள் நினைப்பது கேட்கின்றது, மன்மோகன் உண்மையில் ஆர் எஸ் எஸ் துஷ்பிரயோகங்களை அறிந்ததனால் அதை அதிகார மையத்தில் இருந்து தூரத்தள்ளி வைத்தவர், சோனியாவும் இந்திராவைப்போல ஆர் எஸ் எஸ் ஆளுமையை கடுமையாக எதிர்த்தவர். காங்கிரஸ்காரர்கள் பெருமைப்பேசும் பஞ்சாயத்துராஜ் திட்டம் உண்மையில் ஆர் எஸ் எஸ் திட்டம். என் டி ஆரின் இமாலய வளர்ச்சியைக் கண்டதும், அதுவும் எதிர்க்கட்சி வரிசையில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சகல கவுரவங்களுடன் அமர்ந்ததும் பயம் வந்துவிட்டது. மாநில அரசின் செல்வாக்கை குறைக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் உதித்ததுதான் பஞ்சாயத்துராஜ் திட்டம். இந்திய அளவில் 1. மத்திய ஆட்சி 2. மாநில ஆட்சி, 3. உள்ளாட்சி என ஆட்சிமுறைகளை வகைப்படுத்தலாம். உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக உதவுவதன் மூலம், மாநில அரசின் செல்வாக்கைக் குறைக்கலாம் என்பதுதான் இத்திட்டத்தின் சொல்லப்படாத சாராம்சம். பஞ்சாயத்துராஜை கடுமையாக எதிர்த்தவர்கள் என்டிஆரும் கலைஞரும். பஞ்சாயத்து ராஜ் மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைக்கும் என்ற புள்ளியில் இருவரும் இணைந்தனர். அதுவே விபிசிங் தலைமையில் தேசியமுன்னணியை உருவாக்க வைத்தது. இன்றும் ஆந்திர மருத்துவக்கல்லூரிகளில் எல்லா இடங்களும் ஆந்திர ஆட்களுக்கே. தமிழகத்தில் 50% இடங்கள் அனைத்திந்திய அளவில் கொடுக்கப்படுகின்றன. தமிழர்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பிற்கு இருக்கும் சுமார் 1500 இடங்களில் 750 இடங்களை நடுவன் அரசிற்கு அளித்து வருகிறோம் . மாநில அரசிற்கு வெறும் 750 இடங்கள் மட்டுமே. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஒரு பட்ட மேற்படிப்பு இடம் ஒரு கோடி என்று இருக்கிறது . அப்படி என்றால் தமிழனின் வரிப்பணத்தில் யார் யாரோ படிக்க இப்படி ஒரு அனைந்திந்திய கோட்டா தேவையா?. இதை அன்று ஆந்திராவில் கடுமையாக எதிர்த்தவர் என்.டி.ஆர். . தமிழ்நாட்டில்இன்றளவும் நாம் இடங்களை நடுவன் அரசிற்கு அளித்து வருகிறோம்ஆந்திர மருத்துவ கல்லூரிகள் அனைத்து இடங்களையும் ஆந்திர மாணவர்களுக்கு அளிக்கிறார்கள் தெலுங்கான பிரச்சினையில் , தெலுங்கு பேசும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாவிடில் எங்களுக்கென்று தனி தேசம் அமைத்துக் கொள்கின்றோம் என தெலுகுதேச எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் அறைகூவல் விட்டனர். வடக்கு தெற்கு சுயமரியாதை விசயங்களில், உண்மையில் நம்மவர்களைவிட தெலுங்கு ஆட்கள் ஒரு படி அதிகமே. மம்தாவும் பிஜுவும் ஜெ.வும் அசைக்கமுடியாத மாநிலத் தலைவர்களாக உருவாகி இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவைவிட , இம்மூன்று மாநிலங்களைப் பின்னுக்குத்தள்ள, இவர்களின் ஆளுமையைக் குறைக்க ஆர் எஸ் எஸ் முழுவீச்சில் களம் இறங்கும். ஏற்கனவே ஐபி, ரா, திட்டக்கமிஷன் வரை ஆர் எஸ் எஸ் ஆட்கள் தலைமைஏற்க தயாராகிவிட்டனர். வழக்கத்தைவிட ஜெ. இந்தமுறை நம் தமிழ் எம்பிகளுக்கு அதிக உரிமையைக் கொடுத்து நம் நலன்களை நாடாளுமன்றத்தில் பேசவைக்க வேண்டும். ஜெ. தமிழக் தென்னிந்திய நலன்களை முன்னிறுத்தும் ஆளுமையாக ஆர் எஸ் எஸ் ஹிந்தியர்களின் சிம்மசொப்பனமாக விளங்கவேண்டும். 4 2009 ஏப்ரல் உண்ணாவிரதம் - நடந்தது என்ன? ஏப்ரல் 2009ல் புதுகுடியிருப்பு யுத்தத்தில் புலிகளின் படைதளபதி தீபன், ரூபன், நாகேஷ், பிரபாகரனின் பாதுகாவலர் கடாபி, மாலதி அணி தலைவி விதுஷ, துர்கா, கமலினி என்று அனைவரும் இறந்த பிறகுபொட்டு அம்மன் “இனிமேல் செய்ய ஒன்றும் இல்லை” என்று வானொலியில் தெரிவித்த பிறகு போர் நிறுத்தம் வேண்டி கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார்ஒரே நாளில் இலங்கையே இறங்கி வந்து போர் நிறுத்தம் அறிவித்த பின் அதன் பிறகு போர் ஏன் நடந்தது? அதன் பிறகு மக்கள் ஏன் இறந்தார்கள்? மீண்டும் யார் போரை துவங்கியது? “வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாங்கள் வெற்றி பெறக்கூடாது என்று இவர் போர் நிறுத்தம் கோருகிறார், நாங்கள் புது வியூகங்களுடன் வருவோம்” என்று நடேசன் மூலம் மேரி கால்வினிடம் பேசி மீண்டும் போரை துவக்கியது யார் ?? ராஜபக்சேவா ? மன்மோகன் சிங்கா ? ஒபாமாவா ? விளாடிமிர் புடினா ? அல்லது பிரபாகரனா ? வரலாற்றை சரி பார்க்கவும். ஒரு வெற்றி பெற்ற உண்ணாவிரதத்தை, இலங்கை போர் நிறுத்தம் என்று அறிவிக்க காரணமான உண்ணாவிரதத்தை பலனற்றதாக ஆக்கி அந்த போர் நிறுத்தத்தை மீறியது யார் என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள். *** திமுகவும் கலைஞரும் அவர்களால் இயன்றவற்றை செய்தார்கள் புலிகள் செல்லும் வழி தவறு என்று கூற முடியும், கூறினார்கள் அவர்கள் ஆற்றின் நடுவில் விழப்போகிறார்கள் என்று கூற முடியும், கூறினார்கள் .சொல்வதை மீறி விழுந்து விட்டால் கயிற்றை வீச முடியும், வீசினார்கள்.அவர்களுடன் வந்து இவர்களும் மூழ்க முடியாது, மூழ்க வில்லைஅவ்வளவு தான். 5 கிளிமூக்கு அரக்கனே, கலைஞர் - இளையராஜா ஒப்பிடுக? அவர் இசைத்தமிழ் இவர் இயற்றமிழ் என்று சொன்னால் தமிழ்நாஜிக்களும் எம்ஜிஆர் ரசிகர்களும் கோவித்துக் கொண்டு கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள் என்பதால் கலைஞர் , இளையராஜா இவர்களின் நேர்மறையில் ஒளிந்திருக்கும் எதிர்மறையான விசயம் ஒன்றை சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். கலைஞரின் மேல் இருக்கும் அபிமானத்தால் இசைராஜா ஒருநாள் முன்னமே தனது பிறந்தநாளைக் கொண்டாடுவார். சாதனைகள் பல செய்திருந்தாலும் ஒரே விதமான தவறை இருவருமே செய்தனர். கலைஞர், எம் ஜி ஆருக்கு நிகராக ஒருவரை உருவாக்க , அவசரப்பட்டு தனது மகன் மு.க முத்துவை நடிகராக்கி தொழில்வாழ்க்கையை காய் கனியும் முன் பழுக்கவைக்க முயற்சித்து மு.க முத்துவின் தலையில் பனங்காயை வைத்துவிட்டார். இளையராஜா, ஏ.ஆர். ரகுமானைப் பார்த்து அவருக்கு நிகராக ஒருவரை உருவாக்க, கார்த்திக் ராஜாவை காலம் கனியும் முன்னரே இசையமைப்பாளர் ஆக்கி அவரின் தொழில்வாழ்க்கையை ஓய்த்துவிட்டார். Karthik Raja could have given a tough competetion to ARR,but he was prematurely thrown into the ring by IR;same way MK Muthu was prematurely thrown to combat MGR. இப்படி தமிழ்ச்சினிமாவின் மிகச்சிறந்த கலைஞர்களாக வந்திருக்கக் கூடிய கார்த்திக் ராஜா, மு.க முத்து இருவரும், அபிமன்யுகள் ஆகினர். 6 மறுமலர்ச்சி புலி எதிர்ப்பு, தமிழ்நாஜி எதிர்ப்பு, சாதிவெறி எதிர்ப்பு இந்த மூன்று தமிழ்த் தொன்ம பஜனைக் கோஷ்டிகளும் எதிர்க்கும் சமூக அக்கறை திராவிட ஆதரவு , கலைஞர் அபிமானம் , பஜகோவிந்தங்களை மயிலிறகால் செல்லமாய் அடிக்கும் அடி இவற்றைத் திரும்பத் திரும்ப எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது எழுதுங்களேன் என்று ரசிகர்களில் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். கும்பலில் கோவிந்தா இல்லாமல் ரசிகரின் கடிதத்தில் அக்கறை இருந்ததால் பதில் சொல்ல முடிவு செய்தேன். மக்களுக்கு மறதி அதிகம். அதுவும் தமிழ் மக்களுக்கு மிக மிக அதிகம். அதனால் ஒரு விசயத்தை, நகைச்சுவையாகவும் , அழுத்தமாகவும், வருத்தமாகவும், கோபமாகவும் , சுய எள்ளலாகவும் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும். எந்தவிதத்திலாவது மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். எல்லோரும் எளிதில் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொள்பவர்கள் இல்லையே ஒரு நல்ல ஆசிரியரின் முக்கிய நோக்கம், நன்றாகப் படிக்கும் மாணவனை முதல் மதிப்பெண் எடுக்கவைப்பது மட்டுமல்ல. கடைசி மாணவனையும், முதல் தர மாணவனாக மாற்றுவதுதான். அதில்தான் ஆசிரியரின் பணி பூரணத்துவம் பெருகின்றது. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் மாணவனுக்குப் புரிந்துவிட்டதனால், பாடத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தப் பாடத்திற்குப் போக முடியாது. கடைசி மாணவனுக்கும் புரிந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளுதல் ஆசிரியரின் கடமை.அதற்கு ஒரே வழி, கோவில்களில் மந்திரங்கள் சொல்லிக் கொடுப்பார்களே, அதைப்போல, முதலில் முதல் வரி, பின்னர் இரண்டாம் வரி. அதை முதல் வரியுடன் சேர்த்துப் படித்தல். இப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களில் பலர் முதல் மாணவனாக இருக்கலாம், அதற்காக, கடைசி மாணவன் படிப்பதைத் தடுக்கக் கூடாது. அக்கறையுள்ள மாணவனாக இருப்பீர்களானால் , என்னுடன் சேர்ந்து புரியாதவர்களுக்கு விளங்க வைக்கவேண்டும். உடனே கேட்காதீர்கள். ‘அடேய் கிளிமூக்கா, நீ என்ன ஆசானா என்று?” ஆம் என்று திமிராகப் பதில் சொல்ல முடிந்தாலும், இங்கு பேராசிரியர்களும் பேராசான்களும் இருப்பதால் அப்படி எல்லாம் கொழுப்பான பதில் சொல்ல மாட்டேன். நானும் மாணவன்தான். என்ன நான் 12 ஆம் வகுப்பு மாணவன் என்றால் நான் சொல்லிக்கொடுப்பது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். துரு ஏறி, இப்பொழுது கூர்மையடைத் தொடங்கியிருக்கும் இளைய சமுதாயத்தின் மனதில், இனவெறி / சாதி வெறி / மதவெறி என்ற கறைகள் ஏறும்பொழுது மீண்டும் மீண்டும் கூர் தீட்டுவதில் தவறில்லை. சரி, நீங்கள் கிளாஸ் கட் அடித்து விட்டு 11.30 காட்சி போகிறவர் என்றால், உங்களுக்கானப் பதிவுகளைப் போடும் துணுக்கு எழுத்தாளர்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றனர். அங்கு வாசித்துக் கொள்ளலாம். இருந்தபோதிலும் உங்களைக் குஷிப்படுத்த ஒரு ஷகீலா கேள்வி. தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்த ஒரு திரைப்படத்தில் விவேக்கிற்கு இணையாக ஷகிலா வருவார்? அது எந்தப்படம். படத்தின் பெயர்தான் என் நோக்கமும்.!!! 7 அம்மா இட்லிக்கடையும் 2ஜி இழப்பும் விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு போகும் வழியில் ஒரு சிற்றுண்டிக் கடையில், அருகில் இட்லி சாப்பிட்டுக்கொண்டு இருந்த பெரியவர் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். பெரியவர்:- தம்பி, இந்த எலக்‌ஷன்ல யாரு வருவா? நான் :- தெரிலண்ணே, 2ஜி ஊழல் அது இதுன்னு சொல்றாங்க, யாருக்கு வோட்டுப்போடுறதுன்னே தெரில பெரியவர்:- 2ஜி எல்லாம் ஊழல் இல்லை தம்பி. அது ஒரு இழப்பு. நான்:- எப்படிண்ணே சொல்றீங்க? பெரியவர்:- ஒரு இட்லி, ஸ்டார் ஹோட்டல்ல, 100 ரூவான்னு வச்சிக்கோங்க, இந்தக்கடைல எவ்வளவு 4 ரூவா. நம்மள மாதிரி சாதாரண ஆட்கள் சாப்பிடுறதுக்கு இந்த விலை வசதியா இருக்கு நான்:- ஆமாண்ணே, அதுக்கும் 2ஜிக்கும் என்ன சம்பந்தம்? பெரியவர்:- 100 ரூவாக்கு விக்க வேண்டிய இட்லியை 4 ரூவாக்கு வித்து, 96 ரூவா நஷ்டம் பண்ணிட்டாருன்னு இந்தக் கடைக்காரர் மேல கேசு கொடுக்க முடியுமா… சொல்ல முடியாது இந்த இட்லிக் கடைக்காரர் டி எம் கே வா இருந்தா கொடுக்கலாம். அட இதை விடுங்க தம்பி, அம்மா உணவகத்தில அரசாங்கப்பணத்திலதான் ஒரு ரூவா இட்லி போடுறாங்க, 99 ரூவா இழப்புன்னு சொல்ல முடியுமா … இதே கணக்குதான் 2 ஜிக்கும் ஊழல் இழப்புன்னு சொல்றது எல்லாம். நான் :- அப்புறம் எப்படி அண்ணே, ஆசியாலயே அவங்கதான் பெரிய பணக்காரங்க ஆனாங்க? (நக்கலாய் சிரித்தேன்) பெரியவர் :- 90களில் சாட்டிலைட் சானல் ஆரம்பிச்சு, நல்லா நடத்தினா, 25 வருஷத்தில நீயும் நானும் கூட பெரும் கோடீஷ்வரனா இருப்போம் தம்பி நான் :- அண்ணே, என்ன இருந்தாலும் 2009ல துரோகம் பண்ணிட்டாங்களே, மறக்க முடியலையேண்ணே பெரியவர்:- ஒரு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் , எப்படி ஒரு முதலமைச்சரை மீறி எதுவும் செய்ய முடியாதோ, அது மாதிரிதான் முதலமைச்சர்களும் மத்திய அரசை மீறி எதுவும் செய்ய முடியாது தம்பி. நான் :- சரியண்ணே, ஒரு வேளை டி எம் கே, ஜாஸ்தி சீட் ஜெயிச்சுச்சுன்னா, பிஜேபியோட போயிடும்னு சொல்றாங்களே , கொள்கை எல்லாம் காத்தோட போயிடுமேண்ணே. பெரியவர் :- டி எம் கே வோட கொள்கைகளில் சுயாட்சியும் ஒன்னு தம்பி, மத்தியில ஆட்சில தாங்கிப்பிடிப்பது, சுயாட்சிக்கான எலிமென்ட்ஸ்ல ஒன்னு. பிஜேபி மாதிரி நெருப்புக்கு, திமுக மாதிரியான தண்ணீர் தான் தம்பி வேண்டும். அதுதான் இந்தியாவுக்கு நல்லது. நான்கு இட்லிகள் சாப்பிட்டதற்கு 16 ரூபாய்கள். இட்லிக்கடைக்காரரிடம் 20 ரூபாய்த்தாளைக் கொடுத்தேன். மீதம் ஐந்து ரூபாய் கொடுத்தார் கடைக்காரர். ஒரு ரூபாய் எனக்கு லாபம். கடையை விட்டு போகும் முன்னர், இன்னும் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்னிடம் “தம்பி , மறக்காமல் உதயசூரியனுக்கு வோட்டுப்போட்டுடுங்க” என்று கலைஞர் மாதிரி சொன்னார். அலைப்பேசியை எடுத்தேன், திருச்சியில் இருக்கும் நண்பனை அழைத்தேன். பத்தாண்டுகளுக்கு முன்னர், தொலைபேசிக் கடைகளில் வரிசையாக நின்று வெளியூர் அழைப்புகளுக்குத்தான் எவ்வளவு செலவாகும் என யோசிக்கையில் அழைப்பு எடுக்கப்பட்டது. “நண்பா, இந்ததடவையும் உதயசூரியனுக்கு வோட்டுப்போட்டுடலாமா?” “தெரியலையே கிளிமூக்கு, 2ஜி ஊழல் அது இதுன்னு சொல்றாங்க, யாருக்கு வோட்டுப்போடுறதுன்னே தெரில” பெரியவர் எனக்கு சொன்ன விளக்கங்களை நண்பனிடம் சொல்ல ஆரம்பித்தேன். 8 மோடிக்கு ஆதரவு - இது ஒரு 2014 தேர்தல் பரப்புரை சிறுகதை வெங்கட்ராகவ பஜகோவிந்தம், தனது விலை உயர்ந்த காரை தனது அலுவலகத்திலேயே நிறுத்திவிட்டு , தான் பேசப்போகும் கல்லூரிக்கு ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தார். பஜகோவிந்தம், வளர்ந்து வரும் ஓர் அரசியல் விமர்சகர் மற்றும் வியாபாரகாந்தம். அறிவாளியும் கூட. மென்மையான அணுகுமுறையால் நிறைய நண்பர்களையும் சம்பாதித்து வைத்திருப்பவர். அவரிடம் ஒரு பிரச்சினை என்னவெனில் மோடி பிரதமர் ஆகவேண்டும் என அவர் விரும்புவது. பஜகோவிந்தங்களுக்கு மோடிக்களைப்பிடிப்பது தவறில்லையே என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஆர் எஸ் எஸ் அறிவு மையத்தின் அங்கம் எனச் சொல்லிக் கேட்பதில் தவறில்லை. நடுநிலைப் போர்வையுடன் கேட்கும்பொழுதுதான் பிரச்சினை. பஜகோவிந்தம் ஓர் ஆட்டோவை நெருங்கினார். “சார், யஜூர் வேதாந்த காலேஜுக்குப் போகனும்” “போயிடலாம் சார்” முகக்களையைப் பார்த்து, அரசாங்க அதிகாரியாக இருக்கக் கூடும் என ஆட்டோடிரைவர் முன்னெச்செரிக்கையாக ஆட்டோ மீட்டரைப்போட்டுவிட்டார். பஜகோவிந்தம் எளிய மனிதர்களுடன் இயல்பாகப் பழகுபவர் என்பதாலும் தேர்தல் சீசன் என்பதாலும் “சார், அப்புறம் இந்த எலக்‌ஷன்ல வோட்டுப்போடுவிங்களா? ” இக்கேள்வியைக் கேட்டார். “கண்டிப்பா சார்” “யாருக்கு வோட்டுப்போடப்போறதா ஐடியா” “மோடின்னு ஒருத்தரு, குஜராத்தை இன்டியாலேயே ஃபர்ஸ்ட் ஸ்டேட்டா மாத்தியிருக்காராம் சார், அவர் பிரதமரா வந்தா வல்லரசு ஆயிடும்னு தினமலர்ல வேற சொல்லியிருக்காங்க, அவருக்குத்தான் என்னோட வோட்டு, என் குடும்பத்தோட வோட்டு” பஜகோவிந்தம் தனது கையடக்கக் கணினியில் எளியமனிதர்கள் – ஆட்டோ டிரைவர் – மோதி ஆதரவு எனக் குறித்துக் கொண்டார். ஏப்ரல் வெயில் வாட்டியதால், கல்லூரிக்கு முன்னமே ஆட்டோவை ஒர் இளநீர் கடைக்கு முன்னர் நிறுத்தச்சொன்னார். ஆட்டோ மீட்டருக்கான காசைக் கொடுத்துவிட்டு, மிச்சத்தை ஆட்டோ டிரைவரை வைத்துக் கொள்ளச் சொன்னார். “அம்மா, இரண்டு இளநீ வெட்டுங்க” “சார், எனக்கு வேண்டாம், இது என் பெரிம்மா கடைதான், சவாரி முடிச்சிட்டு நானே வந்து குடிச்சிக்கிறேன், நீங்க சாப்பிடுங்க சார்” எனச் சொல்லிவிட்டு, ஆட்டோவை பின்பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார் ஆட்டோடிரைவர். “அம்மா, யாருக்கு வோட்டுப்போடப் போறீங்க” “மோடின்னு ஒருத்தரு வந்திருக்காரம்ல, பாகிஸ்தானை எல்லாம் ஜெயிப்பாருன்னு , போன தடவை, இந்த காலேஜுக்கு வந்த ஒரு பெரிய அய்யா சொன்னாரு, அதனால இந்தத் தடவை என் வோட்டு மோடிக்குத்தான்” டிப்ஸாக காசைக் கொடுத்துவிட்டு, இளநீர் கடையம்மா – மோடி ஆதரவு எனக்குறித்துக் கொண்டார். நடந்தே வந்த, பஜகோவிந்தத்தின் எளிமையை, சங்கராச்சாரியர்கள் பெரியவர், இளையவர், சிறியவர் படங்கள் நிறைந்த மேடையில் கல்லூரி முதல்வர் வெகுவாகப் புகழ்ந்தார். தனது பேச்சில், பஜகோவிந்தம் ” மாணவர்களுக்கு அரசியல் அறிவு முக்கியம் எனச்சொல்லிவிட்டு, அடுத்தப் பிரதமர் யார் எனக்கேட்டார்” ஒட்டுமொத்த அரங்கமே மோடி என்று அதிர்ந்தது. கல்லூரி நிர்வாகிகள் புளகாங்கிதமடைந்தார்கள். பஜகோவிந்தம் அலுவலகம் திரும்பியவுடன், மோடியை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆட்டோ டிரைவர், இளநீர் கடை அம்மா போன்ற எளிய மனிதர்கள் என்ற நடுநிலை கட்டுரையை எழுத ஆரம்பித்தார். அதே நேரத்தில், ஆட்டோவின் பின்பக்கம் உதயசூரியன் சின்னம் பொறித்த ஆட்டோடிரைவர் , “பெரிம்மா, காலைல, அந்த அய்யரு எலக்‌ஷன்ல யாருக்கு வோட்டுன்னு கேட்டாரு, மோடின்னு சொன்னேன். குஷியாய் இருபது ரூபா எக்ஸ்ட்ரா குடுத்துட்டாரு” “ஆமான்டா, ராமசாமி, என்னையும் கேட்டுச்சு, அய்யரு காலேஜுக்கு வரவங்களுக்கு என்ன பதில் சொன்னா புடிக்கும்னு எனக்குத் தெரியாதா, நானும் மோடின்னு சொன்னபிறகு எனக்கும் 20 ரூவா எக்ஸ்ட்ரா கொடுத்துச்சு… ஆனால் என் வோட்டு எப்பொவுமே எம்ஜிஆருக்குத்தான்” யஜூர் வேதாந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள், தங்களது மடிக்கணினியில் காவி பயங்கரவாதியின் வாக்குமூலம் என்றப்புத்தகத்தை தரவிறக்கி ரகசியமாக வாசித்துக் கொண்டிருந்தனர். 9 ஆபாசமில்லா ஒருப்பக்க செக்ஸ் கதை ‘என்னங்க , இன்றைக்கும் மானேஜர் அசிங்கமாப் பேசுறான்’ பொறிந்து கொண்டே கீர்த்தனா வீட்டிற்குள் நுழைந்தாள். அவளுடைய மானேஜர் திருவேங்கடத்திற்கு கீர்த்தனா மேல் நீண்ட நாட்களாகவே ஒரு கண். கீர்த்தனா அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்களில் , மனேஜரின் சில்மிஷங்களைப் பற்றி நான்காவது தடவையாக என்னிடம் சொல்லுகின்றாள். இந்த மாதிரியான பிரச்சினைகளை வீட்டிற்குக் கொண்டு வரும்பொழுது, குடும்பப் பெண்களை வசைபாடுவதை விட, நேரிடையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் அலுவலகத்திற்கு சென்றேன். “வாங்கோ வாங்கோ’ என வரவேற்ற அடுத்த நொடி திருவேங்கடத்தின் மூக்கில் குத்தினேன். மனிதர்களுக்கு உச்சக்கட்ட கோபத்த ஊட்ட வேண்டும் என்றால் மூக்கில் குத்தவேண்டும். அதிகபட்சவலியைத் தரவேண்டும் எனில் அடிவயிற்றில் ஓர் உதை விட வேண்டும். உதையும் விட்டேன். கீர்த்தனா தடுக்கவில்லை என்பதால் தொட்ர்ந்து அடித்துக் கொண்டே இருந்தேன். மற்ற ஊழியர்கள் ஓடி வர, நான் விலக்கப்பட்டு திருவேங்கடத்திற்கு முதலுதவி செய்யப்பட்டது. இதற்கிடையில் திருவேங்கடத்தின் அடிப்பொடிகள் யாரோ போலிஸிற்கு தகவல் அனுப்ப அந்தப்பகுதி இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். இந்த இன்ஸ்பெக்டரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். அதனால்தான் அலுவலகத்திற்கு வந்து அடிக்கவேண்டும் என்ற திட்டத்தையேப்போட்டேன். இன்ஸ்பெக்டர் வந்தார். நான் இன்னாருடைய கணவன் , இந்த அலுவலகம் இல்லை என திருவேங்கடத்தின் அடிப்பொடிகள் சொல்ல, இன்ஸ்பெக்டர் என்னிடம் திரும்பி ‘ என்ன சார் பிரச்சினை, என் இப்படி மிருகத்தனமா பிஹேவ் பண்றீங்க’ ‘படுக்கக் கூப்பிடுறான் சார்’ ‘சார், பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பிச்சா , இப்படித்தான் பிரச்சினை எல்லாம் வரும். உங்க வைஃப் கிட்ட பிரச்சினை செஞ்சாருன்னா, வேலைக்கு அனுப்பாமல் பீரோல பூட்டி வச்சுக்கனும் சார்’ மூக்கில் ரத்தம் வடிந்தாலும், திருவேங்கடத்தின் முகத்தில் சிரிப்பு. திருவேங்கடத்தை முறைத்துவிட்டு ‘இல்லை இன்ஸ்பெக்டர், இவன் என் மனைவியைப் படுக்கக் கூப்பிடவில்லை, அவளைக் கூப்பிட்டு இருந்தால், அவளே இவனை நறுக்கி இருப்பாள், பிரச்சினை இவன் என்னைப் படுக்கக் கூப்பிடுகின்றான், என்னை இவன் கெஸ்ட் ஹவுஸிற்கு வரச்சொல்லி, தினமும் என் மனைவியிடம் தகவல் சொல்லி அனுப்புகின்றான்’ மிடுக்கான இன்ஸ்பெக்டரின் உடல் நளினம் சட்டென மாறியது. திருவேங்கடத்தைப் பார்த்தார். ‘மிஸ்டர், நீங்க போலிஸ் ஸ்டேஷன் வரை வந்துட்டுப்போங்க ‘ என அவர் திருவேங்கடத்தை போலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டார். வண்டியில் அமர்ந்த படி “ஓரினச்சேர்க்கை எல்லாம் உணர்வு ரீதியான விசயம், அவர்களைப்புரிந்து கொள்ள நம் சமுதாயம் தயாராகவில்லை” என்ற அறிவுரைக்குப்பின்னர் என்னை வன்முறையில் இறங்கவேண்டாம் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். திருவேங்கடத்தின் கண்களில் தெரிந்த பயம் கீர்த்தனாவின் கண்களில் மகிழ்ச்சியாய் பிரதிபலித்தது. 10 இந்தியக் குடியரசில் தமிழ்த் தேசியத் தலைமை சமூக ஊடகங்களில் ஒரு சர்வே எடுத்தால், நாளையே தமிழகம் துண்டாகி தமிழ்த் தேசியம் அமைந்து விடுமோ என நினைக்கப்படும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் தலைகளாகத் தான் தென்படுகின்றன. நியோ-தமிழ்த்தேசியம், திராவிடம், எதிர்-திராவிடம் , ஏன் சில இந்து ராச்சிய விரும்பிகளும் கூட வட இந்தியாவின் சுதந்திர /குடியரசு தினத்தன்று கூக்குரலிடுகிறார்கள், துக்கம் அனுஷ்டிக்கிறார்கள், குமுறுகிறார்கள்! ஆனால்இந்தியக் குடியரசில் தமிழ்த்தேசியம் பெற்றுத் தர வலுவான தலைமை இருக்கின்றதா என்று பார்த்து விடுவோமே ஒருகாலத்தில் மத்திய அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த திமுக தேசியச் சகதியில் உழலத்துவங்கி, அறிவாலயத்திலேயே தேசியக் கொடியேற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அதிகாரம் செய்த சோகம் என்றாலும் திமுக தமிழ்தேசியத்தை அண்ணா காலத்திலேயே கைவிட்டுவிட்டது என்பது நமக்கு நினைவில் நிற்பதால் அவ்வளவாக உறுத்தவில்லை. ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாக அண்ணா சொன்னாரே? அந்த காரணங்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டது என திமுக நினைக்கிறதா? கருணாநிதிக்கே வெளிச்சம்!! தேசிய நீரோட்டத்தில் நீக்கமற கலந்து விட்ட பின்னர், சிற்றாறு , சிற்றோடை என்ன, சிறுவாய்க்கால் கூட பிரித்துத் தர அனுமதிக்க மாட்டார்கள். திமுக அனுதாபிகள் தமிழ்த் தேசியவாதிகள் ஆக இருக்கலாம், ஆனால் திமுக தலைமை இந்திய ஆளுமையை ஏற்றுக்கொண்டு ஆண்டுகள் பல ஆகின்றன. “இதைச் செய்தால் ரத்த ஆறு ஓடும். அதைச் செய்தால் இந்தியா உடையும்” என்று லியாகத் அலிகான் வசனத்தையெல்லாம் அரசியல் அறிக்கையாக வைப்பாரே தமிழ்தேசியவாதி வைகோ, அவர் எங்கே? 1991ல் இருந்து என்னன்னமோ இந்தியா செய்திருக்கிறது. ஆனால் ரத்த ஆறு அல்ல, வெந்நீர் கூட ஓடவில்லையே. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல தன் வாழ்நாள் சாதனையான சேதுசமுத்திரமே ‘மொக்கை’ திட்டம் என அறிவிக்கும் அளவிற்கு வைகோவிற்கு பாஜகவுடனும், பாஜகவின் தமிழகப் பதிப்பான அதிமுகவுடனும் குலவும் ஆசை வந்துவிட்டதுதான் காலம் செய்த சோகம். நாளை மோடி ஈழத்தைப் பற்றி வெளிப்படையாக ஒரு எதிர்மறையான கருத்தை வெளியிட்டுவிட்டால், உடனே வைகோ “ஆமா. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது.” எனச் சொல்வாரா என ஈழத்தமிழர்களே கேட்கிறார்கள். சந்தேகமே வேண்டாம் . கண்டிப்பாகச் சொல்வார் வைகோ. ஏனெனில் அவர்தான் வைகோ. ஆக வைகோ என்ற மாயப் போராளியும் தேசியத்தில் அடகு! ஆனால் திமுக போல் வெளிப்படையாக இல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட ஏமாற்று அடகு! டாக்டர் ராமதாஸ் , திருமாவளவன் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக தமிழ்த் தேசியம் பேசிய பொழுது நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தெரிந்தார்கள். இப்பொழுது தத்தமது சமுதாய முன்னேற்ற முன்னெடுப்புகளில் மும்முரமாக இருப்பதால் தமிழ்த்தேசியத்தைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து இருக்கின்றார்கள். ஆக இவர்களுக்கு விதிவிலக்கு கொடுத்து விடுவோம். இயக்குநர் சீமான், கருணாநிதி வைகோ மறந்த தமிழ்த்தேசிய எண்ணங்களை ,உணச்சிவசப்படக் கூடிய இன்றைய இளைஞர்களின் மனதில் பதித்தவர். ஆனால் கட்சி ஆரம்பித்த இந்த ஆண்டுகளில் எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே நின்று கொண்டு இருக்கின்றார். சீமானின் தொண்டர்கள் மூன்று வகைப்படுவர் கலைஞர் வைகோ மேல் நியாயமான கோபம் ஆதங்கம் கொண்ட தீர்க்கமான திராவிட இயக்க ஆட்கள், இவர்கள் கட்சியில் சிறுபான்மை தான். இரண்டாம் வகை ஆட்கள் ‘தமிழ்’ ‘ஈழம்’ , ‘புலி’ என்று சொன்னாலே உணர்ச்சி வசப்பட்டு ஒன்பது பக்கத்திற்கு எழுதிப் பேசித் தீர்க்கும் , எள் என்றால் ‘எரி’ எண்ணெய்யில் கூட வேகத் துணியும் உணர்ச்சிமயமானவர்கள். பெரும்பான்மையான முன்றாம் வகை ஆட்கள் வருங்கால ஜாதிக்கட்சித் தலைவர்கள். ஆக இலங்கையில் அரசியல் கட்சி நடத்தும் தமிழர்கள் இந்தியாவில் தனித் தமிழகம் வாங்கிவிடுவோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய காமடியோ அதே போன்ற காமடிதான் இந்தியாவிலே இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ‘ஓட்டரசியல் கட்சி’ நடத்தும் நாம் தமிழர் கட்சியை தமிழ்தேசியகட்சி எனச் சொல்வதும்! நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் , தமிழகத்தின் ‘டக்ளஸ்’ அண்ணனாக சீமான் மாறிவிடுவாரோ என நினைக்கத் தோன்றுகின்றது. பல வகையான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதைப் போலவே , சில உதிரி தமிழ்க்கட்சிகள் அங்கிங்கு எனாதபடி எங்கும் எனஅத்தனை லெட்டர் பேடுகளில் இருக்கின்றன. இவைகள் ஐபிஎல் அணிகளைப் போல தங்களுக்குள் மோதிக் கொண்டாலும், தங்களுக்கும் இலங்கையில் உருவாகும் ஐபில் அணிகளுக்கும் சேர்த்து ‘ரா’ ங்கான ஒரே பாஸ் தான் என்பதை மறந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள். பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்கள் நேரடியாக நியமிக்கப் பட்டார்கள். இந்தியக் குடியரசில் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல்வர் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் அவ்வளவே வித்தியாசம். ஆக, அப்படி இப்படி எழுதி கடைசியில் நினைவுக்கு வருவது ஒரே ஆளுமைதான். இறந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆனாலும் இன்றும் சிலருக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பெரியார் தான் அந்த ஆளுமை பெரியாருக்குத்தான் எத்தனை போராட்டக் களங்கள்? பார்ப்பனீய எதிர்ப்புக்கும் அவர்தான். பெண்ணியத்திற்கும் அவர்தான். மொழிப்போருக்கும் அவர்தான். மத்திய அரசு எதிர்ப்புக்கும் அவர்தான். ஆத்திகர்களின் உரிமைக்கான கோவில் நுழைவுப்போராட்டத்திற்கும் அவர்தான். திராவிட தேசியமாக இருந்து பின்னர் கன்னட, தெலுங்க, மலையாளிகளின் தேசிய வெறியை, மொழிவெறியைக் கண்டு அதை தமிழ்தேசியமாக சுருக்கிக் கொண்டு இலக்கை நிர்ணயித்ததற்கும் பெரியார் தான். மொத்தத்தில் எல்லாவற்றுக்குமே பெரியார் தான். காமராசர் காலத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரத்தையெல்லாம் இணைத்து பெரிய மாகாணமாக ஆக்க முயற்சித்த மத்திய அரசின் கொள்கையை ஏற்கக் கூடாது என்றும், அதனால் தமிழர்களின் உரிமை கெடும் என்றும் காமராசருக்கு அறிவுறுத்தியவர் பெரியார்தான். 94 வயதில் சாகும் வரை மூத்திரச் சட்டியை சுமந்துகொண்டு திரிந்து தான் முடிவு செய்த எல்லாவற்றுமாக போராடிய பெரியாரை எதுவுமே செய்யாத இளைஞர்கள் சொல்கிறார்கள் “பெரியார் இதைச் செய்யவில்லை” “பெரியார் அதைச் செய்யவில்லை”என்று. ஒரு ஆயுளில் ஒரு மனிதன் என்ன செய்யமுடியுமோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகச் செய்துவிட்டார் பெரியார். ஆனால் உண்மைதான். இன்னும் ஒரு 20வருடம் பெரியார் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழ்தேசியத்தையும் வாங்கிக்கொடுத்திருப்பார். தமிழகத்தில் தோன்றிய ஒரே ஒரு உருப்படியான தமிழ்தேசியவாதி பெரியார் மட்டுந்தான். சரி. இனி யார் தான் தமிழ்த் தேசியத் தலைமை. ஒன்றுமே ஆகாமல், போலிகள் எல்லாம் வயோதிகத்தால் செத்தொழிந்தபின் யாராவது எங்காவது பிறந்து வளர்ந்து இருப்பார் . ஆணோ பெண்ணோ அவர் , பெரியாரை மனதில் வரித்து, வாக்கு அரசியலை ஒதுக்கி தமிழ் இயக்கமாக மாற்றவேண்டும் . தமிழர்களிடம் ஓட்டு கேட்கக் கூடாது உயிரையும் கேட்க கூடாது மாறாக ஆளுமையைக் கேட்கவேண்டும் .. அறிவைக் கேட்கவேண்டும் .. ஊடறுத்து காரியங்களை சாதிக்கும் வல்லமையைக் கேட்கவேண்டும் . யூதர்களுக்கு கிடைத்ததைப் போல அன்று அப்போது கிடைக்கும் தமிழ்த்தேசியம். அதுவரை ஜெய் ஹிந்த். 11 ஜோ-டி-குரூசு என்னும் இந்துத்வா எழுத்தாளர் ? ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் இருக்கிறார். அவர் முதலில் “தி” என்ற பயிற்சியாளரிடம் 10 மாதம் பயிற்சி பெறுகிறார். பங்கு பெறும் ஆட்டங்களில் எல்லாம் நாலும் ஆறுமாக, சதமும், இரட்டை சதமுமாக அடிக்கிறார். பத்து மாதங்கள் கழித்து பயிற்சியாளர் மாறி விடுகிறார். “ஆ” என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது அந்த மட்டையாளர் ஆறு, நான்கு எல்லாம் அடிக்க முடியாமல், முட்டையும், 1 ஒட்டமுமாக ஒரு ஆட்டத்தில் 10 ஓட்டங்களை கூட அடிக்க திணறுகிறார். இப்படியாக 8 மாதங்கள் போய் விடுகிறது. அதன் பிறகு “கி” என்ற பயிற்சியாளர் வருகிறார். இப்பொழுது மட்டையாளர் படிப்படியாக முன்னேறுகிறார். 20, 30 என்று அடித்தவர், இரு மாதங்கள் கழித்து மெதுவாக 50 வரை அடித்துள்ளார். ஆனால் சதம் அடிக்கவில்லை. இப்பொழுது சிறந்த பயிற்சியாளர் யார் ? மோசமான பயிற்சியாளர் யார் ? -oOo- இந்த கேள்விகளை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். சிறிது வரலாறு படித்து விட்டும் மீண்டும் இதற்கு வருவோம். -oOo- தமிழகத்தை பொருத்த வரை பல ஆண்ட பரம்பரைகள் உள்ளனர். ஏறத்தாழ அனைத்து சாதியினருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அரசாண்டு உள்ளனர். பிற நேரங்களில் அவர்கள் நிலை அடிமையாக இருந்துள்ளது. இதில் நெய்தல் நில கடல்சார் சமூக மக்களின் சரித்திரத்தை சுருக்கமாக பார்க்கலாம். இவர்களும் ஒரு காலத்தில் அரசாண்டவர்கள் தான் சங்க கால பாண்டிய மன்னர்கள் நெய்தல் நில கடல் சார் சமூகத்தை சேர்ந்தவர்களே. அவர்களின் தலை நகரங்கள் கடலின் ஓரம் இருந்ததாலேயே அவை கடற்கோள்களினால் அழிய நேரிட்டது. சங்க காலத்திலும், அதன் பிறகு களப்பிறர் காலம் வரையிலும் நெய்தல் நில கடல் சார் சமுகத்தினர் பல வேலைகளை செய்து வந்தனர். சிலர் கலங்களை கட்டுபவர்களாக இருந்துள்ளனர் – Ship builders . சிலர் அந்த கலங்களை ஓட்டுபவர்களாகவும் – பாய்மரத்தை பயன்படுத்துபவர்கள் – sailors மற்றும் வானை பார்த்து வழி காட்டுபவர்கள் navigators. சிலர் அந்த கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்களாகவும் businessmen. சிலர் அந்த கலங்களில் சென்று போர் புரிபவர்களாகவும் navy சிலர்சிறு படகுகளில் சென்று மீன் பிடிப்பவர்களாகவும் fishermen. சிலர் முத்து குளிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் pearl divers. களப்பிறர் காலம் வரை மிகவும் சிறப்பாக இருந்த இந்த நெய்தல் நில மக்களுக்கு அதன் பிறகு சோழர் காலத்தில் வந்த, தமிழர்களின் வாழ்வை சீரழித்த, தமிழர்களின் கல்வியை தடுத்த, அவர்களின் ஒற்றுமையை கெடுத்த ஆரிய மதங்களால் இறக்கம் வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் பல சமூகங்களை போலவே இந்த சமூகமும் அடிமை சமூகமாகவே இருந்தது. பிராமணர் தவிர மற்ற சமுகத்தினரை பலவாராக பிரிந்து, பிராமணர் தவிர மற்ற சமுகத்தினர்களின் ஒற்றுமையை குலைத்து, பிராமணர்களை மட்டும் முன்னிருத்தும் ஆரியம் நெய்தல் நில கடல் சார் சமூகத்தையும் பிரித்தது. கலங்களை கட்டுபவர்களில் பலர் இசுலாம் மதத்தை தழுவி மரைக்காயர் ஆகிவிட்டனர். அந்த கலங்களில் சென்று வியாபாரம் செய்பவர்கள் செட்டியார்களாக மாறி விட்டனர் (கோவலன் செட்டியார் தான், அதாவது கடல் சார் சமூகத்தை சேர்ந்தவன் தான், அந்த காலத்தில் வந்த கடல்கோளினால் புகார் அழிந்தது. அதில் தப்பி பிழைத்த செட்டியார்கள் பயந்து கடலிருந்து உட்புறமாக வந்து சிவகங்கையில் தங்கினார்கள். ஆனால் நீரைப்பார்த்த பயம் மட்டும் போகவில்லை. செட்டி நாடு வந்தாலும், வீடுகளை 5 அல்லது 6 அடி உயரமாகவே கட்டினார்கள் ! இன்றளவும் செட்டிநாட்டில் வீடுகள் உயரமாக இருப்பதன் காரணம் அவர்களுக்கு புகாரில் ஏற்பட்ட கடற்கோள் பாதிப்பினால் வந்த பயமே). அந்த கலங்களில் சென்று போர் புரிபவர்களாக இருந்தவர்களில் சிலர் பிற மருதம் மற்றும் பாலை நில போர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அதில் குதிரை வீரர்கள் இராவுத்தர் ஆயினர். இன்றளவும், கடற்கரையோர இசுலாமிய சமூக மக்களும், மீன்பிடி தொழில் செய்பவர்களும், சில இடங்களில் மாமன், மச்சான் உறவு முறை கொண்டாடுவதன் பின்ணனி இது தான். பிற சமூகத்தினர் கல்வி கற்ற தடை செய்த ஆரியம் நெய்தல் நில கடல் சார் சமூகத்தினரின் அறிய வானியல் அறிவையும், அவர்களின் பிற நுட்பங்களையும் பறித்து கொண்டது, பலனற்றதாக்கி விட்டது கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை வெறும் பாய்மரம் மற்றும் விண்மீன்களின் துனை கொண்டு ஆப்பிரிக்காவை சுற்றி உரோமபுரிக்கும், யவனத்திற்கும் சென்று வாணிபம் செய்த ஒரு சமூகத்தின் அறிவும், திறமையும் ஆரியத்தால் அழிந்தன . . .எத்தனை ஏகலைவர்களின் கட்டை விரல்கள் பறிக்கப்பட்டிருக்கும் என்பதற்கு கணக்கு கிடையாது ஆரியம் அவரக்ளுக்கு கல்வியை முற்றிலும் மறுத்தது மிகுந்த செல்ல செழிப்பாக இருந்த நெய்தல் நில மக்களை அடிமையாக்கி ஏழையாக்கி, அவர்களிடமிருந்த கப்பல கட்டும் தொழில், பாய்மரம் செலுத்துதல், வழி காட்டுதல், வியாபாரம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பிரித்து அவர்களை கல்வி அறிவு அற்றவர்களாக ஆக்கி அவர்களை மீன் பிடிக்க மற்றும் முத்து குளிக்க மட்டும் அடிமையாக ஆக்கியது சோழர் காலத்தில் தமிழகத்திற்குள் வந்த ஆரியமே. இதே போல் மருத நில மக்களும் பாதிக்கப்பட்டனர். கல்வியிலும் தத்துவத்திலும் தரை வழி வாணிபத்திலும் பள்ளிக்கூடங்களை நடத்துவதிலும் சிறந்து விளங்கிய சமணர்களில் பலரை கழுவில் ஏற்றி, பிறரை சாணார் என்று சொல்லி அந்த சமூக பெண்கள் மேல் சட்டை அணிய தடை விதித்தது அவர்களை பனை ஏற மட்டுமே சுருக்கியதும் ஆரியமே. இது போல் தமிழகத்தின் என்ற தொல் சமூகத்தின் வரலாற்றை எடுத்து பார்த்தாலும் அவர்களின் வாழ்வை சீரழித்தது ஆரியம் என்று அறிந்து கொள்ளலாம். — பத்தாம் நூற்றாண்டிலிருந்து மீன்பிடிப்பவர்களாகவும், முத்து குளிப்பவர்களாகவும் (மீனவர்கள், பரவர், பரதவர், முக்குவர்) மட்டுமே மாறி விட்ட நெய்தல் நில மக்களும் பனைஏறுபவர்களாகவே மாற்றப்பட்டு, பெண்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய தடை விதிக்கப்பட்ட (நாடார், சானார்) மருத நில மக்களும் அடுத்த பல நூற்றாண்டுகளாக அடிமை நிலையிலேயே இருக்க வேண்டி வந்தது. அவர்களுக்கு விமோசனம் ஐரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க வந்த போர்சுகிசீயர்களாலும், ஆங்கிலேயர்களாலுமே வந்தது. அவர்கள் வந்த பிறகே இந்த சமூகங்கள் மீண்டும் கல்வி பெற முடிந்தது. போர்த்துகீசியர் கொண்டு வந்த கத்தோலிக்க மதத்திலும், ஆங்கிலேயர் கொண்டு வந்த கிருத்தவ மதத்திலும் யார் வேண்டுமானாலும் சாமியார் , குருக்கள், ஆயர் ஆகலாம் அனைவரும் தேவாலயத்தின் உள்ளே சென்று கும்பிடலாம். தேவாலயத்தின் உள்ளே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் அனைவரும் நற்கருனை வாங்கலாம். போன்ற சடங்குகள் மற்றும் சம்பிராதாயங்கள் பல நூற்றாண்டு அடிமைப்பட்டிருந்த சமூகங்களுக்கு விடிவெள்ளியாய் திகழ்ந்தன. போர்த்துகீசியர் வருகையால் நெய்தல் நில மக்கள் தங்களின் கப்பல் சார் பணிகளை மீண்டும் பெற்றனர் (அதில் சிலர் மேசைக்காரர்கள் என்று ஆனது தனி கதை) திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் அளவிற்கு ஆங்கிலேயர் வருகையால் கல்விக்கூடங்கள் பெறுகின்றன.சென்னை மாகாண ஆளூனரின் நேரடி தலையீட்டினால் உயர் சாதி பெண்களுக்கு மட்டுமே மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. இது தான் சுருக்கமான வரலாறு அதாவது திராவிட ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்த சமூகங்கள் எல்லாம் ஆரிய ஆட்சியில் அடிமையாக, கல்வி மறுக்கப்பட்டும், பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டும், பல வாராக பிரிக்கப்பட்டு, அவர்களின் பல தொழில்கள் பறிக்கப்படு சீரழிந்து கொண்டிருந்த போது ஐரோப்பியர்கள் கொண்டு வந்த கிருத்த மதத்தினால் கல்வி பெற்று ஆடை அணிய உரிமை பெற்று தொழில் செய்ய உரிமை பெற்று சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்கள் -oOo- இப்பொழுது மீண்டும் நாம் முதலில் பார்த்த கிரிக்கெட் கேள்விகளுக்கு வருவோம் சிறந்த பயிற்சியாளர் யார் ? பயிற்சியாளர் “தி” மோசமான பயிற்சியாளர் யார் ? பயிற்சியாளர் “ஆ” சரிதானே இப்பொழுது ஒருவர் கிரிக்கெட் குறித்து கட்டுரை எழுதுகிறார். அவர் என்ன மோசடி செய்கிறார் என்றால் “தி” என்ற ஒரு பயிற்சியாளர் இருந்ததை முற்றிலும் இருட்டடிப்பு செய்து விடுகிறார். முதலில் பெற்ற சதங்களுக்கு காரணம் “ஆ” என்று திரித்து பொய் கூறுகிறார் (அதாவது “தி”யின் சாதனைகளை மறைத்து) இடையில் பெற்ற 0 ஓட்டங்களுக்கு காரணம் “கி” என்று திரித்து அடுத்த பொய் கூறுகிறார் (அதாவது “ஆ” செய்த மோசடி வேலைகளை மறைத்து) இப்பொழுது இந்த கட்டுரையாளர் “ஆ”வின் ஆதரவாளர் “தி”யின் மற்றும் “கி”யின் எதிர்ப்பாளர் என்று கண்டு கொள்ள முடிகிறதல்லவா! -oOo- இப்பொழுது நெய்தல் நிலத்திற்கு மீண்டும் வரலாம் நெய்தல் குறித்த கதை எழுதும் ஒருவர் களப்பிரார் காலம் வரை அந்த சமூகம் இருந்த உயர்வுகளை கூறி, ஆனால் களப்பிரார் என்பதை மறைத்து, அந்த உயர்வுகளுக்கு காரணம் இந்து மதம் என்று பொய் கூறி இந்து மதத்தினால் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறாலம் அந்த பாதிப்புகளுக்கு எல்லாம் காரணம் கிருத்தவம் என்ற அடுத்த பொய் கூறுகிறார் அதாவது களப்பிரார்களின் சாதனைகளை மறுக்கிறார் களப்பிரார்களின் சாதனைகளை எல்லாம் இந்து மதத்தின் சாதனைகளாக பொய் கூறுகிறார் ஆரியத்தின் துரோகங்களை மறைக்கிறார் அந்த துரோகங்களை, அந்த மக்கல் விரோத செயல்களை எல்லாம் செய்தது கிருத்தவம் என்று பொய் கூறுகிறார் கிருத்தவத்தின் சாதனைகளை மறைக்கிறார் இப்படி பட்டவரை இந்துத்துவ எழுத்தாளர் என்று கூறினால் அதில் என்ன பிழை ?அவர் சாகித்திய அகாடமி விருது வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன!! 12 ஆம் ஆத்மி வகையறா கட்சிகள் மார்க்கெட் போன சினிமா இயக்குநர்கள் , ஃபாரின் ரிடர்ன்கள் , தொழிலதிபர்கள் , ஆண்ட பரம்பரையினர் , பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் சும்மா இருக்கமுடியாமல் இருக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகள், பி எம் டபிள்யு கார் வைத்திருக்கும் சோசியல் சர்விஸ்காரர்கள் ஆகியோர் என யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்க இந்திய ஒன்றியத்தில் இடம் உண்டு. அதை கேலி செய்வது கூட தவறான ஒன்று என்றாலும் அவர்களின் கட்சி மக்கள் நலன் கட்சியா இல்லையா என்பதை கவனிக்க வேண்டும் என்று சொல்லுவது தவறாகாது. உண்மையில் சமூக அக்கறை சமுத்துவக் கட்சியா, இல்லை பாசிச கட்சிகளின் நீட்சி அல்லது அவற்றின் வேறு வடிவமா என்பதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் முன் வைத்தால் அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும். 1. சமூக நீதி இட ஒதுக்கீட்டிற்கான , அவர்களின் நிலைப்பாடு என்ன ? 2. மாநில சுயாட்சி மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கான மொழிக் கொள்கை என்ன ? முன்னோடி திட்டங்களான சேது சமுத்திரம் , கூடங்குளம் ஆகினவற்றைப் பற்றியும் கருத்து கேட்கலாம். இவை எல்லாம் ஒட்டு மொத்த இந்தியாவிற்கானது அல்ல என்பதனால் தவிர்த்து விடலாம். மேற்சொன்ன இரண்டு கேள்விகள் , அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல , தனி நபர்களின் பாசிச / சர்வாதிகார அரசியல் சார்பைக் கண்டு கொள்ளவும் இக்கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். மிடில் கிளாஸ் மாதவன்களின் உலகமான டெல்லியில் ஊழலுக்கு எதிரானதாக சொல்லிக் கொள்ளும் மெழுகுவர்த்தி கட்சி ஒன்று வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆம் ஆத்மியின் ஆரம்பமும் முடிவும் டெல்லியாக மட்டும் இருப்பது 70 சதவீத பாமர இந்தியர்களுக்கு நல்லதாக இருக்குமோ என நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆம் ஆத்மி போன்ற கட்சிகளைப் பார்க்கையில் , கிரிக்கெட் ஆட்டத்தை புத்தகத்தில் மட்டும் படித்து விட்டு , நேரடியாக சிட்னி மைதானத்தில் விளையாட வேண்டும் என்பவர்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஏற்றத்தாழ்வுகளின் இடியாப்பச் சிக்கலான இந்திய சமூகவெளியில், அடித்தட்டு மக்களை ஓட்டரசியலின் பொம்மைகள் எனவும் சாமிக்கு காணிக்கை செலுத்தும் நாட்டில் ஊழல் மட்டுமே பிரச்சினைகளுக்கு ஊற்று எனவும் நினைக்கும் கேண்டில் லைட் டின்னர் கட்சிகள் மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானவர்களாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியாது. ஒரு வேளை இவர்கள் முழுமுதற் அதிகாரத்திற்கு வந்தால் , படித்தவர்கள் , உயர்சாதி மக்கள் இவர்கள் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள் என அறிவித்தாலும் அறிவித்து விடுவார்கள். இதனால் தான் என்னவோ மெத்தப் படித்த மேதாவிகள் , ஐ ஏ எஸ் அதிகாரிகள் போன்றவர்கள் ,மேல்சபை உறுப்பினர்கள் ஆகாமல் , கட்சி ஆரம்பிக்கும் பொழுது பயமாகவே இருக்கின்றது. சாதிக் கட்சிகள் எப்படி லெட்டர் பேட் அளவில் இருப்பது நல்லதோ அதே போல முன்னாள் அதிகாரிகளின் கட்சிகளும் இருப்பது நல்லது. 13 சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி எம் ஜி ஆர் – சிவாஜி , ரஜினி – கமல் , அஜீத் – விஜய் , தனுஷ் – சிம்பு என வணிக நலன்களுக்காக வும் ரசிக மனோபாவ சுவாரசியத்திற்காகவும் கட்டமைக்கப்படும் போட்டிகளில் சமீபத்திய வரவாக இருப்பது விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன். இதில் தனுஷ் – சிம்பு இருவருமே குடும்பக் குதிரைகளில் ஏறி வலம் வந்தவர்கள் . அஜீத் – விஜய் இவர்களில் விஜய்க்கு தந்தை என்ற பின்புலம் இருந்ததால் இவர்கள் இருவரையும் சம காலத்தவர்களாக இருந்தாலும் ஒரே அளவீட்டில் ஒப்பிட முடியாது. ( விக்ரம் என்ற நடிகரை இந்த போட்டி ஒப்பீடு ஆட்டத்தில் இருந்து விலக்கக் காரணம், அவர் கிரிக்கெட் ஆட்டக்காரர் ராபின் சிங் போன்றவர். எந்தத் தலைமுறையிலும் சேர முடியாமல் இக்கட்டான வயது வரிசையில் இருப்பவர்) ஒருவர் நடிப்பு மற்றொருவர் மாஸ் என வைத்துக் கொண்டு வகைப்படுத்தினால். தனித்திறமைகளால் எந்தவித பின்புலமும் இல்லாமல் சக போட்டியாளர்களாய் வெள்ளித்திரையில் வெற்றிபெற்றவர்களின் வரிசையில் எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் என்பது சரியாகப் பொருந்துகின்றது. சிவகார்த்திகேயனைப் பொருத்தமட்டில் , அவர் இயல்பில் எப்படி இருக்கின்றாரோ, தொலைக்காட்சி மேடையில் எப்படி இருக்கின்றாரோ அப்படியே திரையில் வந்து நின்றாலே போதும், புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை, ஆனாலும் ரசிக்கபாடுவார். இந்த ஸ்கிரின் பிரசன்ஸ் எம் ஜி ஆர் , ரஜினி இருவருக்கும் ஆனது. படையப்பா , பாட்ஷாவும் வெவ்வேறு ஆட்களாக இருந்தாலும் ரசிகர்களுக்கு அது ரஜினிகாந்த். சந்தானத்திடம் எப்படி கவுண்டமணியின் தாக்கம் இருக்கின்றதோ, அவ்வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினியின் தாக்கம் இருக்கும். ரஜினியின் ரீமேக் படங்களுக்கு தனுஷை விட சிவகார்த்திகேயன் நன்றாகப் பொருந்துவார். விஜய்சேதுபதியை எடுத்துக் கொண்டால் , தன் இயல்பிற்கு மாறான காதாபாத்திரங்களை திரையில் உள்வாங்கி வரும் பொழுது, அங்கு விஜய்சேதுபதி என்ற மனிதன் மறக்கடிக்கபடுகின்றார். குணா என்பவனும் நல்லசிவம் என்பவரும் வெவ்வேறு ஆட்கள், கமலஹாசன் தெரியமாட்டார்.. இங்கு தான் ‘நடிப்பு’ என்ற விஷயம் வருகின்றது. இந்த ஒரு புள்ளியில் விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயனை முந்துகின்றார். ஆக சிவாஜி, கமலஹாசன் இடத்தை நிரப்பப் போவது விஜய் சேதுபதி என்பது என் கணிப்பு. Then, எம் ஜி ஆர் , ரஜினி வரிசைக்கு சிவகார்த்திகேயன். சிவக்குமார் / ஜெய்சங்கர் / ரவிச்சந்திரன் ஆகியோரை ரஜினி – கமல் முந்தி சென்றதைப்போல , சமகால , முந்தைய தலைமுறை நடிகர்களை விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் வகை முந்திச் செல்லும். 14 இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள்   சிலப்பள்ளிகளில் நூற்றுக்கு எழுபது மதிப்பெண்கள் எடுப்பவன் தான் முதல் மாணவனாக இருப்பான். அவனுக்கு அடுத்தபடியாக எடுத்தவன் மதிப்பெண்களைப் பார்த்தால் வெறும் 25 அல்லது முப்பது இருக்கும். பள்ளியின் நிலைமை , மாணவனின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , முதல் மாணவனை , வேறு பள்ளியில் 95 சதவீதம் எடுக்கும் மாணவனுடன் ஒப்பிட்டு , அடி அடி என அடித்தால் என்ன செய்வது… செல்வராகவனும் அந்த எழுபது சதவீத முதல் மதிப்பெண் மாணவனைப் போன்றவர்தான். தமிழ்த் திரைப்பட சூழல், அதன் வர்த்தகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு , இரண்டாம் உலகம் படத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மவர்களுக்கு பிரச்சினையே, மனைவியிடம் முன்னாள் காதலியைத் தேடுவது, ரோகித் சர்மாவிடம் டெண்டுல்கரைப் பார்ப்பது, ஆங்கிலப் படத்தை தமிழில் தேடுவது என்பதுதான். முதல் உலகின் வணிகப்படங்களின் தரத்தை, மூன்றாம் உலகத்தின் திரைப்படத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. சிலப் படங்களை ஆற அமர உட்கார்ந்து ரசித்துப் பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரப் படம் , இருபது நிமிடம் போல் கடக்க வேண்டும் என நினைப்பவர்களால் , இரண்டாம் உலகத்தை ரசிக்க முடியாது என்பதல்ல, அவர்களுக்கு அத்தனை நேரம் மற்றும் பொறுமை இருக்காது. இழுவை, புரியவில்லை என கமர்சியல் விமர்சகர்களால் கிழிக்கப்பட்ட அன்பே சிவம் , மும்பை எக்ஸ்பிரஸ் போன்று காலம் கடந்து நிற்கும் சிலப் படங்களின் வரிசையில் இரண்டாம் உலகம் சேரும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான பொழுது , சோழர்களைக் காட்டுமிராண்டிகளாக காட்டுவதா என கொதித்து எழுந்த தமிழ்த் தேசியவாதிகள் , இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நமக்கு வீரர்களாக தெரிந்த , சோழர்கள் காட்டுமிராண்டிகளா என்பதை அக்கால மலேசியத் தீபகற்ப மக்களைக் கேட்டால் தான் தெரியும். சோழர்களை மிகைப்படுத்தல் இன்றி , புனைவில் காட்டியமைக்காகவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எனக்குப் பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவனைப் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் உலகம் பிடிக்கும். இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் என்பதை வழமைப்போல மென்-இந்துத்வா ‘பதிப்பக இணையதளம்’ ஒன்று ஆரிய கிண்டல் அடித்து இருந்ததைப் படித்தது தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தூண்டு கோலாக இருந்தது. சிலப் படங்களை யார் எதிர்க்கின்றார்கள் என்பதை வைத்துதான் பார்க்க வேண்டும். பின்னிப்பிணைந்து இருக்கும் இரண்டு உலகங்கள். இரண்டிலும் ஆரியா அனுஷ்கா . ஓர் உலகின் காதல் தோல்வி எப்படி மற்றொரு உலகத்தில் மாற்றம் கொண்டு வருகின்றது என்பதுதான் கதையின் அடி நாதம். செல்வராகவனின் முந்தையப் படங்களை விட , இந்தப்படத்தில் மென்மை அதிகம். படம் நெடுக விரவிக் கிடக்கும் நகைமுரண்கள் இரண்டாம் உலகத்தை சுவாரசியம் ஆக்குகின்றது. பெண் தெய்வத்தை வழிபடும் சமூகத்தில், பெண் அடிமைத்தனம். இவ்வுலகில் மட்டுமல்ல, இரண்டாம் உலகிலும் கடவுளைக் காப்பாற்றுபவன் மனிதன், அவனுக்கு வீரமும் ஈரமும் ஊட்டுவது காதல் மட்டுமே .. அதுவே மனித நாகரிகத்தின் மையப்புள்ளி “அந்தக் கடவுளைத் தவிர அத்தனைபேரையும் கொல்லுங்கடா” – நாத்திகம் ஆத்திகம் என எப்படி பார்த்தாலும் இந்த வசனம் ஆழ்ந்த பொருள் தரும் வசனம். இரு வேறு துருவ ஆளுமைகளாக ஆரியா அனுஷ்கா கதாபாத்திரங்கள். இரண்டாம் உலகம் எனக் காட்டப்படும் ஜார்ஜியா , உண்மையில் சமகால வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளில் ஒன்று. ( மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் முதல் உலகம், பழைய சோவியத் தலைமையிலான பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலகம், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மூன்றாம் உலகம் ) ஆடல் பாடல் கவர்ச்சிக்கு வில்லத்தனத்திற்கு மட்டும் வெளிநாட்டு நடிகர்களைப் பயன்படுத்தும் இந்தியத் திரைப்படங்களில் , விதிவிலக்காக பெரும்பகுதியான படத்தில் , வெளிநாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் அனேகமாக இரண்டாம் உலகமாகத்தான் இருக்கும். ஒரு சிலத் தமிழ்த் தேசிய இயக்குநர்கள் போல தனித் தமிழ் வசனங்கள் ஆனா திரைப்படம் எனத் தம்ப்பட்டம் அடிக்காமல், இயல்பான தமிழ் வசனங்களால் பெரும்பாலும் இரண்டாம் உலகம் நிரம்பி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. கலகமான விசயங்களை கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தாமல் , நாத்திகமோ , உறவுச் சிக்கல்களோ போறப் போக்கில் சொல்லிவிட்டுப் போவதனால் தான் செல்வராகவன் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றார். ஓர் ஊரில் மிகப்பெரிய ஓவியன் இருந்தான். அவனது ஓவியங்கள் அகில உலகப் பிரபலம். மில்லியன் பவுண்ட் கணக்கில் அவனது ஓவியங்கள் விலை போகும். ஆளுமைகளின் வீட்டில் எல்லாம் அவனது ஓவியம் தான் வரவேற்கும். ஆனால் அவனது அம்மாவின் வீட்டில், ஓவியன் பதின்மங்களில் வரைந்த ஓவியம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். அவனது அம்மா வீட்டில் , ஏன் ஒவியனது சமகால ஓவியம் மாட்டப்படமால் , ஒப்பீட்டளவில் சுமாராக உள்ள ஓவியனது ஆரம்ப கால ஓவியம் இருக்கின்றது என அனைவருக்கும் வியப்பு. அவனது அம்மாவின் பதில், ” இன்றைய மதிப்பில்லா ஓவியங்களின் ஆரம்ப விதை , அந்த ஓவியமே .. அது பாராட்டப்பட்டதனாலேயே இன்றைக்கு இவ்வளவு ஓவியங்கள் கிடைத்துள்ளன. என்னளவில் எனது மகனது சிறந்த ஓவியம் அவனது இந்த பழைய ஓவியமே ” செல்வராகவனும் ஓர் ஓவியனே … ஓவியனின் அம்மாவைப்போல இன்று தோள் தட்டிப் பாராட்டுவோம். ஆளுமையும் வயதும் திமிரும் இந்த ஓவியனுக்கு இருக்கின்றன, இவை அனைத்தும் தொடக்கமே !! குழந்தைகளை மட்டுமல்ல, திரைப்படங்களையும் ‘சமமற்ற’ வைகளுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ் டப்பிங்கில் ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, ஐ எம் டி பி யில் குறிப்புகள் படித்து விட்டு, விக்கிப்பிடியாவில் இருந்து மொழிப் பெயர்த்து விட்டு உலக சினிமா பேசுபவர்களைப் புறந்தள்ளி விட்டு , இரண்டாம் உலகத்தைப் பாருங்கள். எனக்குப் பிடித்து இருந்ததைப் போல உங்களுக்கும் பிடித்து இருக்கும். ஒரு வேளை பிடிக்காவிடினும் கவலைப் படாதீர்கள். சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்கும். வாழ்க்கையில் நிறைய விசயங்கள் ஒத்திப் போடப்பட்டே ரசிக்கப்படுகின்றன. 15 மூன்று விதமான தமிழக அரசியல்வாதிகள் 1) கருணாநிதி: உண்மையான தமிழ்ப்பற்றால், ஆற்றலால் அரசியலுக்கு வந்தும்; ஏராளமாக சாதித்தும்; தமிழக உட்கட்டமைப்பிலே 90% செய்தும்; மக்கள் நலப் பணிகளில் கவனமாக இருந்தும்; இந்திய முதல்வர்களிலேயே இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாத தைரியமும், திராணியும் நிறைந்த ஒரே முதல்வராக இருந்தும்; தமிழின் வளர்ச்சிக்காக கலைச்சொல் பேரகராதி உள்ளிட்ட ஏராளமான நன்மைகளைச் செய்தும்; ராஜீவ் காந்தி படுகொலையால் ராஜீவ் குடும்பத்திற்கு நிகராக பாதிக்கப்பட்டும்; # தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்து அமைதி காத்தவர்; குடும்பத்தினரின் ‘over exposure’ஆல் அவப்பெயர் உண்டாக்கிக் கொண்டவர்; ரவுடித்தனம் செய்யும் ஏராளமான பவர் செண்டர்கள் உருவாகுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர். இதனால் அவப்பெயர் எடுத்தவர். 2) ஜெயலலிதா: கடைசி நேரத்தில் ரயிலேறி அரசியலுக்கு வந்தும்; தமிழுக்காக ஒரு துரும்பையும் நகர்த்தாமல் இருந்தும்; திமுக செய்ததையெல்லாம் ’format’ செய்து அழிப்பதற்காகவே ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சிக்கு வந்தும்; தமிழக உட்கட்டமைப்பு வளர்ச்சிக்களை ஐந்தாண்டுக்கு ஒருமுறை ‘halt’ செய்தும்; 365நாட்களில் 360 நாட்கள் ஓய்வெடுத்தும்; தினமும் முந்நூறு திட்டங்களை அறிவித்து அதில் ஒன்றைக் கூட துவங்காவிட்டாலும்; விடுதலைப் புலிகளின் தடைக்கு முதுகெலும்பாய் இருந்து போராடி வென்றாலும்; போரில் மக்கள் சாகத்தானே செய்வார்கள் எனச் சொன்னாலும்; கருணாநிதி அனுப்பிய அதே கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பினாலும்; பல கோடி ரூபாய்க்கு பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தாலும்; # ஒரே அறிக்கையில் ஈழத்தாயாய் மாறியவர்; தமிழ்தேசியவாதிகளுக்கு வேலு நாச்சியாராய் காட்சி அளித்தவர்; 7கோடிப்பேரில் 700பேர் சாப்பிடும் வண்ணம் ஓட்டல் நடத்தினாலும் அன்னலட்சுமியாய் மாறியவர்; குடிமக்களின் உரிமையான சுத்தமான குடிதண்ணீரை விற்றாலும் புகழப்படுபவர்; மினி பஸ்ஸை ஸ்மால் ஆக்கினாலும் ஆங்கில அறிவுக்காக போற்றப்படுபவர்; மூச்சு விட்டால் கூட ”ஜெயலலிதா மூச்சுவிட்டு அதிரடி” என தலைப்புச் செய்தியில் இடம் பெறுகிறவர். தமிழர்களுக்காக போராடுகிறார் என வைகோவால் பாராட்டப்பட்டவர். நிர்வாகத் திறமை மிக்கவர் என விளம்பர லஞ்சம் வாங்கிய ஏடுகள் போற்றுகிறவர். 3) வைகோ, சீமான், நெடுமாறன் வகையறா: எதுவுமே செய்யாவிட்டாலும்; தமிழர்களை கோமாளிகளாக சித்தரித்தாலும்; மத்திய அரசை திட்டுவதன் மூலம் மட்டுமே ஈழத்தை பெற முடியும் என நம்பினாலும்; ”போராட்டம் எதுக்கு? ஆட்சிக்கு வந்தால் ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம்” என அறிவுபூர்வமாக பேட்டி அளித்தாலும்; மத்திய அரசு பிரச்சினை இல்லை. பிரச்சினை அங்கே இருக்கும் கேரள அதிகார லாபி எனத் தெரிந்தும் வாய்மூடி இருந்தாலும்; ஊரே ராஜபக்சேவை கண்டித்த போது அவருடன் இலங்கையில் ராமர் கோவில் கட்டுவதைப் பற்றி பேச்சு நடத்திய சுஷ்மா ஸ்வராஜும், ராஜபக்சேவின் புரோக்கரான சுனாசாமியும் இருக்கும் பாஜகதான் தமிழர்களின் விடிவெள்ளி எனப் பேசித் திரிந்தாலும்; எத்தனை முறை ஏமாந்தாலும் “இன்னொரு வாட்டி ஏமாத்துங்களேன்.. ப்ளீஸ்” என ஜெவிடம் கெஞ்சினாலும்; #இவர்கள் தான் தமிழ்ப் போராளிகள்! 16 சாகித் ஆஸ்மியும் அண்ணன் பேரறிவாளனும் மற்றும் சில இயக்குநர்களும்  சாகித் ஆஸ்மி – இந்தப் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா … பிஞ்சு வயதில் தடா சட்டத்தில் தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நிரபாராதி என விடுதலை செய்யப்பட்டவர். பின்னர் வழக்கறிஞர் படிப்பு முடித்து , அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு இருந்த அப்பாவிகளைக் காப்பாற்றும் வழக்கறிஞராக தனது கடமையை செய்து கொண்டு இருந்தவரை ஒரு நாள் சுட்டுக் கொன்றனர் அந்த சமயத்தில் மும்பை துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஒருவருக்காக வாதாடியதுதான் காரணம் என பரவலாக சொல்லப்பட்டது . அவர் வாதாடிய தீவிரவாதி , நிரபராதி என பின்னர் விடுவிக்கப்பட்டார். மகத்தான பீனிக்ஸ் மனிதர் சாகித் ஆஸ்மியைப் பற்றி ஓர் இந்தித் திரைப்படம் வந்து இருக்கின்றது. மிகை உணர்ச்சிகள் இன்றி , ஆவணப்படமாக இல்லாமல் இயல்பான நேர்த்தியான ஒருபடமாக வெளிவந்து பாராட்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கின்றது.இந்தப் படத்தை தயாரித்தவர் அடையாளத்தின் வேர்களை நோக்கித் திரும்பச் செல்ல வைத்த பாலா, அமீர் சுல்தான், சசிக்குமார் ஆகியோருக்கு நன்றி எனப் போட்டு திரைப்படம் இயக்கிய அனுராக் காஷ்யப். இயக்கம் அன்சல் மேத்தா. சாகித் ஆஸ்மியைப் பற்றி படித்துக் கொண்டு இருக்கும் பொழுது , அண்ணன் பேரறிவாளன் நினைவுதான் வந்தது. அண்ணன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் சாகித்தைப் போலத் தான் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பார் துணைக் கேள்வியாக , தாக்கரேக்களும் மோடிக்களும் தொகாடியாக்களும் இருக்கும் வடக்கில் தைரியமாக சாகித் ஆஸ்மியைப் பற்றி படம் எடுக்க முடிகின்றது. தணிக்கையை மீறி வெளியேவும் வருகின்றது. நம்மவர்களால் ஏன் முடியவில்லை. அண்ணன் பேரறிவாளனைப் பற்றி முழு நீளத் திரைப்படம் ஒன்றை , திராவிடத்தால் வீழ்ந்த நம்மை, மீட்டு எடுக்கப்போகும் இயக்குநர் சீமான் அவர்கள் ஏன் எடுக்கக் கூடாது?. குறைந்தது ஐந்து ஆண்டுகளில் பெற முடிகின்ற அரசியல் கட்சி அங்கீகாரத்தை மூன்றே ஆண்டுகளில் பெறும் அளவிற்கு மத்தியில் என்றும் ஆளும் “எந்திரத்துடன்” ( கவனிக்க அரசாங்கம் அல்ல ) நெருக்கமாக இருக்கும் இயக்குநரால் நிச்சயமாக தணிக்கைக் குழுவை சமாளித்து படத்தை வெளிக் கொணர முடியும். ஒருவேளை இயக்குநர் சீமான் அவர்கள் , அரசியலில் இருப்பதால், நேரமின்மை காரணமாக இருந்தால் , இன்னொருவரை முன் மொழியலாம். ஆனால் அவர் மரபு ரீதியான மருத்துவத்தின் மகிமையைப் பற்றி ஆவணப்படம் எடுப்பதில் இருப்பதால் அவரைக் கேட்டுக்கொள்ள முடியாது. தமிழ்த்தேசிய இயக்குனர்கள் நினைத்தால், உயர்ந்த தரத்துடன் ஓர் அற்புதமான படத்தை அண்ணன் பேரறிவாளன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க முடியும். என்னைப் போல சிலருக்கு திண்ணைப் பேச்சு.. அவர்களுக்கு மேடைப் பேச்சு…. பேச்சில் ஆரம்பித்து பேச்சில் முடிவதுதான் தமிழ் போராட்ட உணர்வு போல. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்ற கூற்று எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, கலகக் குரல்களை கலை வடிவத்தில் உரத்துச் சொல்வதில் தெற்கு என்றைக்குமே கட்டெறும்புதான் என பொருந்துகின்றது. 17 தமிழ் நாஜிக்கள் - கவிதை சாதிப் பெருமை பேசினார்கள் பொறுத்துக் கொண்டோம்!! … மதப்பெருமை பேசினார்கள் பொறுத்துக் கொண்டோம் !! … பாசிசம் பேசினார்கள் பொறுத்துக் கொண்டோம் !! … இப்பொழுது மருத்துவம் பேச வந்து இருக்கின்றார்கள்  கவனமாக இருங்கள் தமிழ்த்தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் … நாளை நாம் எதுவுமே பேசக் கூடாது என்றும் சொல்வார்கள் எச்சரிக்கை!! எச்சரிக்கை!!  18 தமிழ்த் தேசியம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? தமிழ்த்தேசிய வகைகள் அவருவருக்குரிய இலாப நட்ட கணக்குகளின் படி ஏகப்பட்ட வகைப்படும். அவற்றில் முக்கியமானவைகள் கீழே 1. ஈழத்தமிழர்கள் தங்களுக்காக ஈழத்திற்காக பேசிய போராடிய, பேசிக்கொண்டு போராடிக் கொண்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் 2. தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தவர்களுக்காக பேச்சில் மட்டும் பேசும் தமிழ்த்தேசியம் 2. 1 ரா’மய்யாவிற்காகவும் ராஜ’ய்யாவிற்காகவும் ஆடுபவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் 2.2 அமைதிப்படைக் காலங்களுக்கு முன்பிருந்தே பேசிபேசி குரல் அறுந்து போன தமிழ்த்தேசியம் 3. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காக உறைந்த நினைவலைகளில் இருந்து அவ்வப்பொழுது துள்ளி எழுந்து வரும் தமிழ்த் தேசியம் . திராவிடத்திலோ சென்னை சூப்பர் கிங்ஸிலோ அடித்துச் செல்லப்படும் . 4. ஈழத்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காக பேசும் தமிழ்த் தேசியம் (இதுவரை காணப்படவில்லை. எதிர்காலத்திலும் இருக்குமா என்பது தெரியவில்லை ) இவைகளைத் தவிர ஆண்ட பரம்பரைத் தமிழ்த்தேசியம் , சித்தமருத்துவ தமிழ்த்தேசியம், சினிமா வியாபார தமிழ்த்தேசியம் , புத்தகவிற்பனை தமிழ்த்தேசியம் , பேஸ்புக் தமிழ்த்தேசியம் என்பவைகளும் உண்டு. எண் 1 ஐத் தவிர மற்ற அனைத்தும் காசு பணம் துட்டு என்பதற்குள் அடங்கிவிடும். 19 சீமானின் நாம் தமிழர் 1) ‘நாம் தமிழர் கட்சி’ சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து “தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்” என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத ‘வெகுஜன மக்கள்’, ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள்!!! இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டார்கள். இப்படியான ஒரு ‘மோசமான’ ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது. 2) தங்களின் தொடர் ‘கூடு விட்டு கூடு தாவும்’ அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்! 2) தங்களின் தொடர் ‘கூடு விட்டு கூடு தாவும்’ அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்! 3) அதுமட்டுமா? 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த ‘புதிய ஈழ ஆதரவு’ அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது!! செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது!! அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது! பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு! இதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது! இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் “நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்” என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான். 4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது? சீமானிடம் இருந்த நேர்மை! நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக முழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் ‘சமரசங்கள்’ தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார்! அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ‘காங்கிரஸ் அழிப்பு’ என்ற பெயரில் ஜெவுக்கு ஆதரவளித்ததை சீமானின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த பெரும்பான்மையான நடுநிலை மக்கள் விரும்பவில்லை. அவர் கூட்டம் கொஞ்சம் ஏமாந்து கலைந்தது இங்கேதான். வைகோ செய்த அதே தவறை ஒருமுறை சீமான் செய்துவிட்டார். தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டுமானால் இரு பெரிய கட்சிகளையும் ஒருங்கே எதிர்த்து ஒரே நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்ற அரசியல் தத்துவத்தின்படி நடந்தாலேயொழிய சீமானால் தன் கூட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இல்லையென்றால் இன்னொரு வைகோவாக கூட ஆக வாய்ப்புண்டு! கவனமாக இருக்கவேண்டும். 5) முக்கியமாக தமிழுணர்வு! திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு ‘குட்டி’ 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம். 6) “வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ” என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களின் சமூக வாழ்வியலுக்கு இது நல்லதுதான். ஆனால் இந்த பிற மொழி ஆதிக்க எதிர்ப்பிற்கும், பிற மொழியினர் எதிர்ப்பு என்ற இனவெறிக்கும் நூலிழை அளவே வித்தியாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நாம் தமிழர்கள் செயல்பட்டால் வெகுஜன மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கமாக நாம் தமிழர் கட்சியினரைக் கொண்டாடுவார்கள். 7) ஜெ அரசு தமிழுக்கெதிரான பல நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. நூலக ஒழிப்பு, ஆராய்ச்சிக்கூட ஒழிப்பு, டி.என்.பி.எஸ்சியில் தமிழின் முக்கியத்துவம் ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளை ஒருபக்க ஈழ ஆதரவு முகமுடி அணிந்துகொண்டு செய்து வருகிறது. தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை வேறு எந்த கட்சியினரையும் விட நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்து முழுமூச்சாகப் போராடித் தீர்த்தால் பிரிந்துக்கிடக்கும் தமிழுணர்வாளர்கள் ஏகபோகமாக நாம் தமிழர் கட்சியினரின் மேல் நம்பிக்கை கொள்வார்கள். 8) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. கள்ளராக, பறையராக, சாணாராக, தேவராக, படையாட்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் ‘நாம் தமிழர்’ என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது. எனினும் சாதியினால் தமிழர்களைக் கணக்கெடுக்கும் கலாச்சாரம் ஆபத்தில் தான் முடியும். மொழியால் பார்ப்பனர்கள் தமிழர்கள், அருந்ததியர்கள் தெலுங்கர்கள் என்ற இக்கட்டான விசயங்களையெல்லாம் கணக்கில் கொண்டு ‘நாம் தமிழர் கட்சி’ கவனத்தில் கொள்ளவேண்டும். 9)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும்தான். ஆனால் வரலாற்றுப் பெருமைகளில் நிகழ்கால இழிவுகளை மறந்துவிடக் கூடாது. அவற்றைக் களைய ஆவண செய்யவேண்டும். அதே நேரம் வரலாற்றுப் பெருமை என்ற பெயரில் கற்பனைவளம் மிகுந்த கட்டுக்கதைகளையும் ஆதாரமின்றி எடுத்துவைத்தல் உலகோர் மத்தியில் தமிழர்க்கு இழிவையே தேடித்தரும். 10) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். அதே நேரம் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கு எதிராக ‘சண்டை’யிடுவதில் இருக்கும் ஆர்வம் நடப்பு தமிழக அவலங்களுக்கெதிராக இல்லை என்பது வருத்தமான உண்மை. அதே நேரம் துரோகிகளை களைக்க எதிரிகளோடு கைக்கோர்க்கிறேன் என்ற மகா அவலமான, சுய’கொள்ளி’ செயலும் ஊக்குவிக்கப்படுகிறது. சு.சாமி போல், சோ போல் இணையத்தில் உலவும் ஏராளமான எதிரிகள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்கும் அடிதடியை ஊக்குவித்து குளிர்காய்ந்துகொள்கிறார்கள். இதை நடக்கவிடாமல் கண்காணித்துக்கொள்வதே தமிழர் நலனுக்கும், இயக்க நலனுக்கும் நல்லது. 20 மிருகங்களும் ஆணுறையும் - சிறுகதை திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. மூன்று மாதங்களில் இருந்தே வருகிறவன் போகிறவனெல்லாம், “எதும் விசேசமா? எதும் விசேசமா?” எனத் தவறாமல் கேட்கிறான். இப்படிக் கேட்கும் பல உறவினர்களை இதற்கு முன்பு வாழ்க்கையிலேயே ஒருமுறையோ இருமுறையோ தான் பார்த்திருப்பான் கதிர். நமது வாழ்நாளில் சில உறவினர்கள் இருப்பார்கள். அதுவரை யாரென்றே தெரியாது, ஆனால் பாட்டி தாத்தா சாவுக்கு வந்து இதுவரைக்கும் பாட்டி தாத்தாவை அக்கறையாய் கவனித்து வந்தவர்கள் அவர்கள்தான் என்பதைப்போல சீன் போடுவார்கள். பிறகு காணாமல் போய் அடுத்த நல்லது கெட்டதில்தான் வருவார்கள். அதற்கும் பிறகு எங்காவது ஒரு நாள் நம்மைச் சந்தித்தால் குழந்தையைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ, வேலையைப் பற்றியோ கேட்பார்கள். “ஏன்? எங்க குழந்தைக்கு உங்க சொத்தையெல்லாம் எழுதித்தரலாம்னு இருக்கீங்களா?”,  என நேரடியாகக் கேட்டு விடலாம் என கதிருக்கு பலமுறை தோன்றும். ஆனால் உண்மைகளைக் கூட, நியாயமான கேள்விகளைக் கூட offensiveஆக எடுத்துக்கொள்ளும் நாட்டில் வாழ்கிறோம் என்பதால் அமைதியாக வந்துவிடுவான். தனக்கு குழந்தை பிறப்பதில் இவர்களுக்கு எல்லாம் என்ன அவ்வளவு ஆர்வம் என கதிர் பலமுறை யோசித்திருக்கிறான். வேலைக்குப் போவதற்கு முன்பு அவனிடம், “என்னப்பா படிச்சுமுடிச்சும் வேலைக்கு போகாம இருக்கியே!!?”எனக் கேட்டார்கள். வேலைக்குப் போனபின்பு அவனிடம் , “என்னப்பா வேலைக்கு போயிட்ட! நல்லா சம்பாரிக்கிற! எப்ப கல்யாணம்?” என்றார்கள்! திருமணம் செய்வதற்கு சம்பாரிப்பது ஒன்றுதான் தகுதியா? சம்பாரித்தால் அடுத்து திருமணம், திருமணமென்றால் அடுத்து குழந்தை. இப்படி ‘ஹீட்’டுக்கு வரும் பெட்டை நாயை குட்டி போட வைப்பதற்காக மேட்டிங் செய்ய அழைத்துச் செல்லும் ஓனரைப் போலத்தான் இந்தியாவில் பெற்றோர்களும், நாய்களைப் போலத்தான் இளைஞர்களும் வாழ்கிறார்களோ என கதிருக்கு அடிக்கடித் தோன்றும். ஒரு சராசரி இந்தியக் குடிமகன் தன் வாழ்வின் முக்கியமான விசயங்களான படிப்பு, வேலை, திருமணம் ஆகிவற்றை பெரும்பாலும் சமூகத்தாரின் இதுபோன்ற கேள்விகளுக்குப் பயந்தே பெரும்பாலும் அவசர அவசரமாக முடிவு செய்துகொள்கிறான். இங்கு ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கூட திருமணம் நடந்து விடுகிறது. சமூகத்தின் நச்சரிப்புக்குப் பயந்து அவர்களும் வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள். ராமநாதன் கதிரின் நெருங்கிய நண்பன், கல்லூரி காலத்திலேயே அவன் ஒரினச்சேர்க்கையாளன் என்பதும் அவனுக்கும் ஒரு சக தோழனுக்கும் காதல்-படுக்கை உறவு இருந்ததும் கதிருக்குத் தெரியும்! அவனது திருமணம் சென்ற ஆண்டு நடந்ததில் கதிருக்கு பயங்கர அதிர்ச்சி. “ஏன்டா மச்சி ஒத்துக்கிட்ட? அந்த பொண்ணு பாவமில்லையாடா?”, என கதிர் கேட்டதற்கு, “என்னை என்னடா செய்யச் சொல்ற? நான் gayனு சொன்னா எங்க அப்பா தூக்குல தொங்கிருவாருடா. எனக்கு வேற வழியே தெரியல” என்றான் ராமநாதன்!  அன்றிலிருந்து கதிர், ராமனாதனுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். பிறகு ராமனாதனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்டில் விவாகரத்து ஆகிவிட்டது. குழந்தை பெறுவது முழுக்க முழுக்க அந்த தம்பதிகளின் விருப்பமில்லையா? நாளை குழந்தையை சரியாக வளர்ப்பதற்காக நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கப்போவது அந்த தம்பதிகள்தானே என்ற புரிதலோ எண்ணமோ இந்த சமூகத்தில் எவருக்கும் இல்லாதது கதிருக்கு வியப்பாக இருந்தது. பல உலக நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி சதவிகிதம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நம் நாட்டிலோ அசுர வளர்ச்சியில் முன்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும் நம் மக்கள் குழந்தை பிறப்பில் இவ்வளவு வெறித்தனமாக அலைகிறார்களே என அவ்வப்போது கதிர் வியந்துகொள்வதுண்டு! பக்கத்து வீட்டுக் கிழவி நேற்று கதிரின் அம்மாவை அழைத்து பேசிக்கொண்டிருந்தாள். “ஏம்மா கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகுதே. உங்க மருமகளை டாக்டர்ட போகச் சொல்லக் கூடாதா?” என்று இலவச அட்வைஸ் கொடுத்தாள்.  கதிருக்கு ஆச்சரியம்! ஒரு தம்பதி இருக்கிறார்கள். அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது தெரிந்ததும் அக்கம்பக்கத்துப் பெண்களெல்லாம் எப்படி உடனடியாக பெண்ணை குறை சொல்கிறார்கள்! ஏன் அந்தக் கணவனுக்கு உடல்ரீதியான பிரச்சினை இருக்கவே இருக்காதா என்றும் யோசித்தான்! அதேநேரம் ஆண்களில் சிலர் இதை தனிப்பட்ட வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள் என்பதையும் விரைவிலேயே கற்றுக்கொண்டான் கதிர். கதிரின் வீட்டருகே 38 வயதில் ஒருவன் வசிக்கிறான். பிறந்ததில் இருந்தே அவன் உருப்படியாக எதுவும் செய்திருக்கிறானா என்றால் ஒன்றுகூட இல்லை. அவனது அம்மா பலமுறை கதிரிடம் தன் தறுதலைப் பிள்ளையை நினைத்து அழுதிருக்கிறார். 38வயதாகியும் தன் அம்மாவின் பென்சனில் உண்டு வாழும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவன் அவன். ஆரம்பத்தில் இருந்தே கதிருக்கும் அவனுக்கு ஆகாது என்றாலும் சமீபத்தில் நடந்த ஒரு சிறிய வாய்த் தகராறில் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் கதிருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை வரவழைத்தது. “கல்யாணமாகி ரெண்டு வருசமாகியும் புள்ள இல்லாத ஆண்மையில்லாத பொட்டப் பய நீ. நீயெல்லாம் என்னைய எதிர்த்துப் பேசுறியா?” என கதிரைப் பார்த்து பலர் முன்னிலையில் கேட்டுவிட்டான். கதிருக்கு சிரிப்புதான் வந்தது. அவனுக்கு 38வயதாகிறது. ஒரு பெண்ணை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ வக்கில்லாதவன். அவ்வளவு ஏன்? நான்கு எருமை வயதாகியும் இன்னமும் தன் வயதான தாய்க்கு பாரமாக அவளின் பென்சனில் உட்கார்ந்து திங்கும் ஐந்தறிவு ஜந்துவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவன் கதிரைப் பார்த்து ஆண்மை இல்லாதவனே, பொட்டையே அவனே இவனே எனச் சொல்வது கதிருக்கு உண்மையிலேயே ஆச்சரியமூட்டியது. ஆண்மைக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? குழந்தை பெறுவது ஒன்றுதான் ஆண்மையா? அப்போது குழந்தையைப் பெற்று ரோட்டில் விடும் இந்தியத் தகப்பன்கள் எல்லாருமே ஆண்மையின் சின்னங்களா? என்றெல்லாம் கேள்விகள் குடைந்தாலும், குழந்தை என்னும் ஒரு தம்பதியின் தனிப்பட்ட விசயத்தை இந்த சமூகத்தில் யார் யாரெல்லாம் எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என எண்ணுகையில் கதிர் மிகுந்த வியப்படைந்தான். பள்ளிக்கே போகாதவனெல்லாம் இங்கே பிரபல வைத்தியாராக வலம்வந்து கொண்டிருப்பதும் இதனால் தான் என்பதும் கதிருக்குப் புரிந்தது. இப்படியெல்லாம் வளைத்து, வளைத்து ஒருவனை குழந்தை பெற வற்புறுத்தினால் சீனப்போரின் போது 30கோடி மட்டுமே இருந்த இந்திய ஜனத்தொகை ஏன் கிடுகிடுவென 100கோடி ஆகாது என கதிர் எண்ணிக்கொண்டான். உண்மையில் சொல்லவேண்டுமானால் கதிரும், அவன் மனைவியும் குழந்தையின் மேல் அலாதிப்பிரியம் கொண்டவர்கள். சில உத்தியோக நிமித்தக் காரியங்களுக்காக, லட்சியங்களுக்காக 4 அல்லது 5 வருடங்களில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார்கள். ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள சமூகம் அவர்களை விடுவதாய் இல்லை. கதிரின் பக்கத்து வீடு, அலுவலகப் பெருசுகள், கதிர் மனைவியின் அண்டை வீட்டார், உறவினர், என அனைவருமே அவர்களின் ஜென்ம சாபல்யமே கதிர் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவைப்பதுதான் என்பதைப்போல குழந்தையைப் பற்றி கேள்வி கேட்பதிலேயே குறியாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாது அப்பல்லோ மருத்துவமனை முதல் 11மணி மூலிகை வைத்தியர் வரை ரெஃபரன்ஸ் தந்தார்கள்! திருமணமாகி இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளாத கதிரின் வயதையொத்த அலுவலக நண்பர்கள் இரண்டு பேருடன் இதுபற்றி பேச்சு எழுந்தபோது அவர்களும் இதேபோல் இந்திய சமூகத்தின் ஸ்டீரியோடைப் கேள்விகளால் ‘கொடூரமாக’ பாதிக்கப்பட்டிருப்பதை பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் கதிரைப் போலவே அந்த இருவரும் கூட இதுபோன்ற கேள்விகளை வெகு சீரியசாக எடுத்துக்கொண்டு வருந்தவில்லை. இப்படி இருக்கிறார்களே என திகைக்கவே செய்தார்கள்!   எனினும் இப்படிக் கேள்வி கேட்பவர்களையெல்லாம் அழைத்து அசிங்கப்படுத்தவும், இனி யாரிடமும் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாதபடி செய்யவும் மூவரும் ஒரு திட்டமிட்டார்கள்.  இதனால் ஒட்டுமொத்தமாக உறவே பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். அதன்படி மூவரும், அடுத்தவருக்குக் குழந்தை பிறப்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே பூமியில் அவதாரம் எடுத்த அவர்களின் உறவினர்களையும், அண்டை வீட்டாரையும் ஒரு get togetherக்கு அழைத்தார்கள். திட்டமிட்டபடி அனைவரும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் கதிர் பேசத் தொடங்கினான். “நீங்கள் அனைவருமே எங்களுக்கு குழந்தை பிறக்காததைப் பற்றி மிகுந்த வருத்தத்தில் உள்ளவர்கள் எனத் தெரியும். அதனால் தான் ஒரு உண்மையைச் சொல்வதற்காக உங்களை எல்லாம் அழைத்திருக்கிறோம்.” என்றான் கூட்டத்தில் சிறிய சலசலப்பு. “நாங்கள் உங்கள் அறிவுரைப்படி நீங்கள் ரெஃபர் செய்த டாக்டர்களிடம் எல்லாம் எங்களை பரிசோதித்துக் கொண்டோம். அனைவரும் எங்களுக்கு குழந்தை பிறக்காது என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்” என வருத்தமாக அறிவித்தான். கூட்டத்தில் அனைவரின் முகத்திலும் கேள்விக்குறி. “ஆம். காண்டம் உபயோகப்படுத்துகிறவர்களுக்கு குழந்தை பிறக்காது என அனைத்து டாக்டர்களுமே கைவிரித்துவிட்டார்கள்” என்றான். இப்போது கூட்டத்தில் ஆச்சரியமும், சிலரின் முகத்தில் கோபமும் இருந்தது. மேலும், “அது மட்டுமல்லாது சில டாக்டர்கள் எங்களை வாழ்த்திவிட்டு இன்னொரு விசயமும் சொன்னார்கள். இந்தியாவில் காண்டம் உபயோகிக்கும் பழக்கமோ, பிள்ளை பெறுதல் பற்றிய சுயகருத்தோ இல்லாததால்தான் கிருமிக்கும், மனிதனுக்கும் யார் அதிகமாக, விரைவாகப் பெருகுவது என்ற போட்டி ஏற்பட்டு கிருமி போல மனிதன் எண்ணிக்கையில் பெருகியிருக்கிறான்”, என்று சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்த்தான். கூட்டம் ஓரிரு நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு கலைந்துசெல்லத் தொடங்கியது.   21 பிரேசில் - ஜெர்மனி 2014 - உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் கிரிக்கெட் ரசிகன் ஆன எனக்கு கால்பந்து ஆட்டத்தின் நுணுக்கங்கள் தெரியாது என்பதால் ஆட்டத்தைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது. ஆனால் ஆட்டத்தில் என்னைக் கவர்ந்த விஷயம் , 7 கோல்களை அடித்து இருந்தாலும், பிரேசில் கடைசியாக ஒரு கோல் அடித்த பொழுது, ஜெர்மன் அணியினர் காட்டியக் கோபம். அக்கோபத்தைப் பார்த்தீர்களா? நாம் 7 அடித்துவிட்டோமே. ஒன்றுதானே போனால் போகட்டும் என்று அலட்சியமாக இல்லை.  2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாதவகையில் 37 இடங்களில் வென்றாலும் தோற்ற இரண்டு இடங்களின் பொறுப்பாளர்களிடம் ஜெ. காட்டிய கடுமை நினைவுக்கு வந்தது. இந்த சுபாவத்தைத் தான் பிரேசில் – ஜெர்மனி 2014 – உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இருந்து நானும் என் ரசிகர்களும் கற்றுக்கொள்ள விரும்புவது. 22 வேற்று கிரகவாசிகள் (ஏலியன்கள்) பூமிக்கு வருவார்களா?  எனக்கும் இந்தகேள்வி இருந்தது. ஆனால் பின்வரும் குட்டிக்கதையை நான் எழுதிய பின்னர் , கண்டிப்பாக பூமிக்கு வரமாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன். —– நாகரிகம் முழுமையடைந்த தொலைதூர உட்டோப்பியா கிரகத்தில் , குழந்தை ஒன்று தனது அம்மாவிடம் கேட்டது. “அம்மா , நினைத்த நேரத்தில் இப்பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி இருக்கும்பொழுது பூமிக்கு மட்டும் செல்ல ஏன் அனுமதியில்லை ?” “அங்கு சென்றால் நாம் நோய்வாய்ப்படுவோம், அந்த நோய் நம்மை அழித்துவிடும்” “நோய்த் தடுப்பு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நமக்கு எப்படி நோய் வரும்? ” “பூமியில் மனிதனை மனிதன் , நிறத்தால், இனத்தால், பணத்தால், மொழியால் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நோய் வேருன்றி இருக்கின்றது, அது ஒரு தொற்றுவியாதி , அந்த மனநோய் வந்தால் நமக்குள்ளும் பிரிவினை வந்து நாமும் பூமி மனிதர்களைப் போல ஆகிவிடுவோம் ” “இனி பூமிக்கு போவதைப் பற்றி நினைக்கவே மாட்டேன் அம்மா” என்று குழந்தை அம்மாவைக் கட்டிக்கொண்டது. —- 23 தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய ஊடகங்களும் சிலோனும் கேள்வி :- கிளிமூக்கு அரக்கனே, ‘ஈராக்கில்’ இருந்து இந்திய செவிலியர்கள் மீட்கப்பட்டனர் என எழுதும் இந்திய ஊடகங்கள் , இலங்கையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும்போழுது மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று எழுதுகின்றனவே? பதில் :- ஊடகங்களும் மத்தியில் ஆள்வோரும் ‘தமிழ்நாட்டை தனி நாடாகப் பார்க்கின்றனரோ என்னவோ என , உங்கள் புஜம் துடிக்க ‘தமிழ்த்தேசியத் துணுக்கை’ எழுதி கைத்தட்டு வாங்கலாம். இருந்தாலும் உண்மைக்கு நெருக்கம் என்று விசயங்கள் இருக்கின்றனவே, அவற்றைப் பற்றி சொல்லத்தானே வேண்டும். நமது இந்திய ‘அறிவு அம்ச அதிகாரிகள்’ இலங்கையை எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கின்றனர். உங்களுக்கேத் தெரியும் இந்திய ‘அறிவு அம்சத்தின்’ வெளிப்பாடுதான் ஊடகங்களும். அதன்படி, பாகிஸ்தான் – வெளிநாடு ; வங்காளதேசம் – வெளிநாடு ஈராக் – வெளிநாடு ; இலங்கை – இந்தியாவின் ஒரு மாநிலம் கேரள, ஆந்திர , கர்நாடகா மாநிலத்தில் தமிழ்நாட்டு வியாபாரிகளுக்குப் பிரச்சினை என்றால் ஆந்திராவில் , இந்திய வியாபாரிகளுக்கு பிரச்சினை என்றா எழுதுவார்கள். ஆந்திராவில் தமிழ்நாட்டு வியாபாரிகளுக்குப் பிரச்சினை என்றுதானே எழுதுவார்கள். எப்படி காவிரி நீர்ப்பிரச்சினையில் தனது மாநிலமான கர்னாடகாவிற்கு ஆதரவாக தனது இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு நடந்து கொள்கின்றதோ , அதைப்போல தனது இலங்கை மாநிலத்திற்கு ஆதரவாக வழக்கம் போல, தனது மற்றொரு மாநிலமான தமிழ்நாட்டிற்கு எதிராக நடந்து கொள்கின்றது . கச்சத்தீவு கூட அந்த அடிப்படையில் தான் விட்டுக்கொடுக்கப்படுகின்றது ஆக தமிழ்நாடு – இலங்கை மீனவர் பிரச்சினை ஊடகங்களை இந்திய அரசைப்பொருத்த வரை தனது இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினை. தமிழ்நாட்டு மீனவர்கள் என்று எழுதுவது சரிதான். நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் , ஆப்கானிஸ்தானில் ஒரு தமிழ்ப்பாதிரியார் மாட்டிக்கொண்டபொழுது, இந்தியர் என்றுதான் வடக்கு ஊடகங்கள் குறிப்பிட்டன. மத்தியக் கிழக்கு நாடுகளில் தமிழர்களுக்குப் பிரச்சினை என்றாலும் இந்தியர்கள் என்றுதாம் குறிப்பிடும். தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதற்கு நாம் வருத்தப்படுவதைக் காட்டிலும், ‘சிலோன்’ ஆக்கிரமிப்பு இலங்கை அரசாங்கம்தான் கவலைப்பட வேண்டும். தெற்கில் இருக்கும் வடக்கிந்திய மாநிலம்தான் இலங்கை, என் குருநாதர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘சிலோன்’. பிரச்சினைக்கு இருக்கும் தீர்வுகளில் சிறந்தது , இலங்கையை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைப்பது. அதன் முன்னோட்ட ,இந்திய அறிவு அம்ச கொள்கையின் வெளிப்பாடுதான் இது. 24 சீமான் கட்சியினரின் வன்மம் கேள்வி :- சீமான் இணையப் படையினர் திமுகவினரையே குறி வைத்து ஆபாச தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவதன் நோக்கம் என்ன கிளிமூக்கு அரக்கனே? பதில் :- மேலோட்டமாக பார்த்தால் , திமுகவையும் கலைஞரையும் திட்டுவதையும் போல இருக்கும், உண்மையில் கவனித்தால், சீமானின் இணைய சமூக நோய்ப்படையினர் தமது அரிப்பை தீர்க்க சொ’ரி’ந்து கொள்ள தேர்ந்தெடுக்கும் திமுக ஆட்கள் பெரும்பாலும் இளம் வயது ஆட்களாக இருப்பார்கள். இந்த இளம் திமுகவினரின் சிறப்பம்சம் என்னவென்றால் தனது உழைப்பாலும் அறிவாலும் கடினமான சூழல்களைத் தாண்டி எதிர்நீச்சல் அடித்து வென்றவர்கள். ஒருவர் மாவட்ட செயலாளர் என்ற குறுங்கால இலக்கை நோக்கி நடைபோடுகின்றார் என்றால் இன்னொருவர் சின்னக்குத்தூசியாகின்றார் , இன்னொருவர் கொங்குநாடு போற்றும் பிரதிநிதி ஆகின்றார். இப்படி, ஒவ்வொருவரும் வெற்றிநடை போட, இவர்களின் வெற்றியின் மேல் இருக்கும் பொறாமை கலந்த கழிவிரக்கம் காரணமாக தனிப்பட்ட தாக்குதல்களை சீமானின் சமூக நோய்ப் படையினர் நடத்துகின்றனர். இதற்கு வரலாற்று பின்னணி ஒன்று உள்ளது. 2008 – 2011 காலக்கட்டம் உலகப் பொருளாதார நெருக்கடியினால் வேலை வாய்ப்பின்மை , வேலை இருந்தாலும் அதில் உறுதியற்ற தன்மை என்று வெளிநாட்டிற்கு படிக்க சென்ற தமிழ்நாட்டு மாணவர்கள் / திரவியம் தேடச்சென்றவர்கள் அனைவருக்கும் நெருக்கடியானக் காலக்கட்டம். அந்த சூழலில்தான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேஸ்புக் தமிழர்களுக்கு மத்தியில் தலையெடுக்க ஆரம்பித்தது. தனிமை / காதல்/குடும்பப் பிரச்சினைகள் / பொருளாதார சிரமங்கள் / படிப்பின் சுமையைத் தாங்க முடியாமை ஆகியன திணித்த ‘நேரத்தை’வெளிநாட்டிற்குப் படிக்க சென்ற , வேலைக்கு சென்ற தமிழ் இளைஞர்களை அதிவேக இணையத்தில் கடலையில் இருந்து சினிமா – டிராமா உட்பட கிளுகிளுப்பு வரை அனைத்து காரணங்களுக்காகவும் ஒதுங்க வைத்தன. இப்படியான சூழலில்தான் ஈழத்தில் கடைசி இனவழிப்புப் போர் ஆரம்பமானது. தத்தமது துயரத்தை விட , பெரிய துயரம் ஒன்றை பார்க்கையில் கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் பொருட்களைப் போல அத்துயரத்தில் இயல்பாகவே ஒன்றானார்கள். அதில் பெரும்பாலானோர் சீமானின் மேடை நாடகத்தில் அவர்களை அறியாமல் அங்கத்தினர் ஆனார்கள். மண்ணெண்ணெய் மபொசி காலத்தில் இருந்து மேடை நாடகங்களை ‘ரா’மய்யாக்கள் இயக்கிய கதைகளை , கற்று கேட்டு வளர்ந்த இளந்தலைமுறை திமுகவினர் மட்டும் ‘பிரியாணியாகிடாதிங்கடா” என்று மேடைக்கு சென்ற ஆடுகளிடம் கதறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கலைஞர் இணையத்தில் இல்லை. ஸ்டாலின் இல்லை. இன்றிருக்கும் திமுக முக்கியஸ்தர்கள் யாருமே இல்லை. சமூக அக்கறையின் காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்த் ‘துச்சாதனர்களுடன்’ வாள் சுற்றிக்கொண்டிருந்த திமுக இளைஞர்கள் தங்களது படிப்பின் வியாபரத்தின் வேலையின் மேலான கவனத்தை ஒரு பொழுதும் சிதறவிடவில்லை. தமிழ்ப்பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக என்ன கூத்தாடினாலும் காரியத்தில் கவனமாய் இருப்பவர்கள் திமுகவினர். தனது சம வயது திமுகவினர் வாழ்க்கையில் தொடர்ந்து திருமணம் , வேலைவாய்ப்பு , வியாபாரம் என்று முன்னேற தங்களால் மட்டும் தங்கள் தனி வாழ்க்கையில் தொடர்ந்து செய்த தவறுகளில் இருந்து மீளமுடியாத சீமானின் பொம்மலாட்ட பொம்மைகள் , வெறுப்பையே தங்களது இயல்பாக மாற்றிக்கொண்டனர். அந்த இயல்பே கலைஞரைத்திட்டுவதும் கலைஞரின் அபிமானிகளை ஆபாசமாக அர்ச்சிப்பதும் எனத் தொடர்ந்து மனம் குழம்பிய நிலைக்கு அவர்களை இட்டு சென்றுவிட்டது. இக்குழம்பிய மனநிலைதான் , படிக்கின்ற மாணவர்களை, ஒரு சில படிக்க விரும்பாத மாணவர்களைக்கொண்டு சென்ற ஆண்டு குழப்பியது. வாழ்க்கையில் எல்லோருக்கும் துயரமான சூழல் வரும், அதில் இருந்து மீள்வதே போராட்டம். மீள முயற்சிக்காமல் பொறாமை கொண்டு வன்மத்தை வளர்த்துக் கொண்டே இருந்தால் கடைசி வரை நேற்று ஆர்குட், இன்று பேஸ்புக் ,நாளை வேறு ஏதோ ஒன்றில் , நெடுமாறன்களும் தமிழருவிகளும் புலம்பிக்கொண்டேஇருப்பதைப் போல இருக்கவேண்டியதுதான். தங்களது மனக்குழப்பத்தைப் புரிந்து கொண்ட புத்திசாலி ஆடுகள், சீமான் நாடகத்தின் வசூல் ராஜாக்களையும் கண்டுகொண்டன. ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்பொழுது பிரியாணியாவதிலிருந்து தப்பிக்கும் என்பதன்படி சமீப காலமாக நிறைய ஆடுகளும் ‘படை’ மேடையில் இருந்து தப்பித்து சொந்த வாழ்க்கையில் படிப்பில் வேலை, வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. நீங்கள் சீமானின் மேடையை வேடிக்கைப் பார்ப்பவராக இருந்தால் கூட கவனம் தேவை. எதிர்மறை, புலம்பல்கள், கழிவிரக்கம், பொறாமை, பொய்வரலாறு, வன்மம் கொண்டு உங்களது உற்சாகத்தை வாழ்க்கையின் கொண்டாட்டத்தை உங்களிடம் இருந்து விரட்டிவிடுவார்கள். பத்து ருத்ரன்கள் வந்தால் கூட உங்களை மனக்குழப்பத்தில் இருந்து மீட்க முடியாது. 25 கூடங்குளம் சுப. உதயகுமார் ஏகாதிபத்தியங்களும் முதலாளித்துவமும் தாங்கள் நினைப்பதை செய்ய விரும்பும் பொழுது தங்களுக்கு சாதகமான “எதிரிகளையும்” சேர்த்தே உருவாக்கும். அதாவது தங்களுக்கு எதிராக வேறு யாரும் கிளம்பிவிடக்கூடாது என ‘மங்காத்தா’ ஸ்டைல் கலைஞர் – எம் ஜி. ஆர் பாணி நீ உள்ளே – நான் வெளியே விளையாட்டுகள் ஆரம்பமாகும். இந்த விளையாட்டு , அரசாங்கமாகிய நான் விரும்பும் வரை, நீ விரும்புகின்ற வழிகளில் எல்லாம் விளையாடிக் கொள்ளலாம் என்ற வகையில் இருக்கும். அப்படியான ஒரு திருவிளையாடல்தான்  சில ஆண்டுகள் கூடங்குளத்தில் நடைபெற்றன . ஆட்டம் முடிந்ததும் ஓட்டம் என்று சொல்லக்கூடாது, படித்தவருக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும். ஆட்டம் முடிந்ததும் பாட்டம் வேறோர் ஊரில் ஆரம்பம் என , 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  உதயகுமார் கன்னியாகுமரியில் டெபாசிட்டைத் திரும்பக் கொடுத்துவிட்டு மதுரை வழியாக தேனியில் களமிறங்கி இருக்கின்றார். எல்லாம் நல்லபடியாக முடியும் வரையில் தேனியில் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு நியூட்ரினோ எதிர்ப்பு ஒருங்கிணைப்பு ஆட்டங்கள் இருக்கும். ஆக இனி கூடங்குளம் உதயகுமார், “நியூட்ரினோ” உதயகுமார் என அன்பாக அழைக்கப்படுவார். கடைசியாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கிலும் கலந்து கொண்டதாகத் தெரிகின்றது. மீத்தேன் உதயகுமாரா? நியூட்ரினோ உதயகுமாரா என்பதை ரா’மய்யாக்கள் தீர்மானிப்பார்கள்.  26 தமிழ்நாஜிக்கள் - பரிணாம வளர்ச்சி 2010 – தமிழ்நாஜிக்கள் :- ஏய் தமிழக அரசே , ஏய் இந்திய அரசே என் தொப்புள் கொடி உறவுகள் அழியக் காரணம் நீங்கள்தான் இனப்படுகொலைக்கு நீதி எங்கே? (2011 ஜெ: – அங்கே என்ன சத்தம்?) 2012 – தமிழ்நாஜிக்கள் :- ஏய் இந்திய அரசே என் தொப்புள் கொடி உறவுகள் அழிய நீதான் காரணம் ? போர்க்குற்றங்களுக்கு நீதி எங்கே? (2014 மே 17, மோடி :- பசங்களா அங்க என்ன சத்தம்?) 2014 – மே 18, தமிழ்நாஜிக்கள் :- ஏய் அமெரிக்க அரசே என் தொப்புள்கொடி உறவுகள் அழிவதற்கு நீதான் காரணம்? மனித உரிமை மீறலுக்கு நீதி எங்கே? 27 ராஜபக்ஷாஷ்டமி - 18-05-2159 விக்கியில் இருக்கும் கட்டுரை ராஜபக்ஷாஷ்டமி என்பது மூன்று நாள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும். இப்பண்டிகை வைகாசி மாதத்தில் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.. கிரெகொரியின் நாட்காட்டி படி மே மாதம் மத்தியிலிருந்து ஜூன் மாத மத்தியம் வரையான நாட்களில் ராஜபக்ஷாஷ்டமி வருகிறது. திருமாலின் ராஜபக்ஷ அவதாரத்தில் பிரபாகரசுரன் உட்பட பல அசுரர்களுக்கு மோட்ச வரம் அளித்த தினத்தினை, அவர்களின் இறுதி ஆசைப்படி ராஜபக்ஷாஷ்டமி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், பௌத்தர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் பக்ஷாஷ்டமியை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். இந்துக்கள் ராஜபக்ஷாஷ்டமி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். புராணக் கதைகளின் படி, ஒரு தீவில் அசுரர்கள் வசித்து வந்தனர். பிறகு தேவர்கள் அங்கு குடிபெயர்ந்தனர். பரங்கியர்கள் சென்ற பிறகு தேவர்களின் கையில் அதிகாரம் சென்றது. அவர்கள் அசுரர்களிடமிருந்து நிலங்களையும், பொருட்களையும் தந்திராமாக அபகரித்தனர். இன்னிலையில் அசுரர் குலத்தில் தோன்றியவர் தான் பிரபாகரசுரர். அவர் அசுரர் படையை திரட்டி தேவர்களிடமிருந்து நிலங்களை மீட்க ஆரம்பித்தார். இதனால் தேவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி மகாவிஷ்னுவிடம் முறையிட்டனர். பிரபாகரசுரரின் அநீதிகளை நிறுத்த வேண்டி, பகவான் பக்ஷாவதாரம் எடுத்து பூமியில் அவதரித்தார். அவ்வாறு ராஜபக்ஷாவதரம் எடுத்த பகவான், அசுரர்களை அளிக்க வேண்டி பல கடவுள்களிடம் வேண்டி பலவகை ஆயுதங்களையும் பெற்றார். இவ்வாறு அனைவரின் உதவியுடன் போர் தொடுத்த ராஜபக்ஷபகவான் போரில் பிரபாகரசுரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது படைத்தளபதிகளுக்கும் அத்துடன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அசுரர்களுக்கும் மோட்ச வரம் அருளினார். அவ்வாறு பகவானிடம் மோட்சவரம் பெற்ற அசுரர்கள் , தாங்கள் இவ்வாறு மோட்சபேறு பெற்ற தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க ராஜபக்ஷாஷ்டமி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது. கொண்டாடும் முறை ராஜபக்ஷாஷ்டமி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ராஜபக்ஷாஷ்டமி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். ராஜபக்ஷாஷ்டமி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். ராஜபக்ஷாஷ்டமி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. ராஜபக்ஷாஷ்டமி நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை பக்ஷாஷ்டமி பெரும்பாலான தொலைக்காட்சிகளிலும் ராஜபக்ஷாஷ்டமி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அசுரர்கள் நடத்தும் தொலைகாட்சிகளில் மட்டும், அசுரர்களை கொன்ற நாளை பண்டிகையாக கொண்டாடுவதை ஏற்காமல் விடுமுறை சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது ராஜபக்ஷாஷ்டமி பண்டிகைக்கு பெரும்பாலான தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தும் கூட அசுரர் குல திமுக தலைவர் வாழ்த்து தெரிவிக்காதது அவரது இந்து விரோத போக்கையே காட்டுகிறது என்று தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 20-05-2159 தினத்தந்தி செய்தி ராஜபக்ஷாஷ்டமி பண்டிகையையொட்டி கடந்த மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.30000 கோடியைத் தாண்டியது. சென்னையில் கடும் கெடுபிடி காரணமாக விற்பனை குறைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் 16,896 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் உள்ளன. இவற்றில் சாதாரண நாட்களைவிட ராஜபக்ஷாஷ்டமி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அதுபோல், இந்த ராஜபக்‌ஷாஷ்டமியின் போதும் மது விற்பனை அதிகரித்துள்ளது. – 28 வரலாற்றைப் படித்தல் கேள்வி :- ஆ ஊ என்றால் வரலாறைப் படி என்கிறீர்களே , படிக்காமலா வந்திருக்கோம். நீங்க எப்படி வரலாறை படிச்சீங்கன்னு சொல்லுங்க , தெரிஞ்சுக்கிறோம் கிளிமூக்கு? பதில் :- கோபம் வேண்டாம். நானும் நீங்கள் படித்த வரலாற்றைத்தான் படித்தேன். என்ன, வரலாற்றில் இருண்டகாலம் / பொற்காலம் என குறிப்பிடப்படும் பகுதிகளை “யாருக்கானது அந்த இருண்டகாலம் / பொற்காலம்” என்ற கேள்வியை வைத்து படித்தேன் . நீங்களும் இப்படி கேள்விகளுடன் படித்தால் உண்மையான பொற்காலங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பதும் 95% சமுதாயத்திற்கான இருண்டகாலம் எப்படி பொற்காலமானது என்பதும் புரியும். அரக்கர்களின் பார்வையில் இருந்து புராணங்களையும் படித்தேன். நீங்களும் கூட அப்படி படித்தால், புராணங்கள் கூட ஒருவகையான வரலாற்று ஆவணம் என்பது உங்களுக்கும் புரியும். 29 பஞ்சமர்களுக்கு இடங்கிடைக்க மாட்டாது மஹா கணம் பொருந்திய தமிழர்களே, உடனடியாக 50000 ஆண்டுகள் பின் சென்று லெமூரியக் கண்டத்தை தேடுவதையும், 1500 ஆண்டுகள் எப்படி சோழப்பரம்பரை ஆண்டதை எண்ணிக்கொண்டு மக்களோடு மக்களாக தோளோடு தோள் உரசிக்கொண்டு ஆயிரத்தில் ஒருவனாக சிஎஸ்கே மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பதையும் தற்காலிமாக நிறுத்திவிட்டு, இந்த நாடக விளம்பரத்தைப் பாருங்கள்.  [panjamar]     “பஞ்சமர்களுக்கு இடங்கிடைக்க மாட்டாது” , “பெண்களுக்கு 4ம் வகுப்பு தரை டிக்கெட் மட்டும் கொடுக்கப்படும்” ஆகியனவற்றைத் தவிர்த்துவிட்டுப் படியுங்கள். இந்த விளம்பரம் தொன்மத் தமிழர்களையும் நாஜித்தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இவர்களைப் பின் தொடர்பவர்களின் சமுதாயத்தில் இவ்வகையான விளம்பரங்கள் , யார்கண்டது சில ஆண்டுகளில் மீண்டும் அச்சடிக்கப்படலாம். 30 பிரபாகரன் எம்ஜிஆருக்குப்பின்னர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் திமுகத் தலைமையுடன் நெருங்குகின்றார். பிரபாகரன் எழுதிய நீண்ட உணர்ச்சிப்பூர்வக் கடிதம் முரசொலியில் பிரசுரிக்கப்படுகின்றது. இரண்டு நெருப்புகள் ஒன்று சேர்கின்றனவே என்ற எச்சரிக்கை மணி உடனடியாக மவுன்ட்ரோடு மஹாவிஷ்ணுக்களால் அடிக்கப்படுகின்றது. எம்ஜிஆர் – பிரபாகரன் கூட்டு போன்றதல்ல இது. கலைஞர் – பிரபாகரன் கூட்டானால் அதோகதிதான் என்ற செய்தி அந்த மணியோசையில் இருந்தது. ஆம், எம்ஜிஆர் விடுதலைப்புலிகளை ஆதரித்தாலும், ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளை முழுமையாக கைவிட்டார். வடநாட்டு ஆங்கில வார இதழ் எழுதியிருந்த கட்டுரை எம்ஜிஆரின் மத்திய அரசுடன் ஆன உடன்போக்கு கொள்கையை வெளிச்சம் போட்டு காட்டியது. (விடுதலைப்புலிகள் வெளியிட்ட சாத்தானின் படைகள் நூலில் இந்தக் கட்டுரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது) . எச்சரிக்கை மணியைக் கேட்ட ‘ரா’மய்யா அவதாரம் எடுக்க கலைஞருக்குத் தெரியாமல் ரகசியமாக வை.கோபால்சாமி ஈழத்திற்கு தோணி எடுக்கின்றார். நட்புக்கரங்களுக்கிடையில் இடைத்தரகர் வந்தால் என்னவாகும். ‘ரா’மய்யாவிற்குத் தேவை இருவரும் சேரக்கூடாது அவ்வளவே. இடைத்தரகர்கள் இடைத்தரகர்களாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டனர். இடைத்தரகர்கள் சீனியர்களாகும்பொழுது, புதியத் தரகர்கள் வந்தார்கள். தமிழ் நாஜிக்கள் உருவானார்கள். உணர்வுப்பூர்வமான திமுக – ஈழக்களப்போராளிகள் இடைவெளி கடைசி வரை பேணப்பட்டது. இதைப்புரிந்து கொண்டால் தமிழக – ஈழ இணைப்பு ‘ரா’மர் பாலத்தைக் கண்டுபிடிக்கலாம். இருபகுதியினரும் அறிவாற்றல் மிக்கவர்கள் ஆகுங்கள். உலகெங்கும் இருக்கும் குஜராத்திகள், நாடே இல்லாமல், எல்லாப்பகுதிகளையும் ஆதிக்கம் செலுத்தவில்லையா … அறிவும் வளமும் ஒன்று சேர்ந்தால் நாட்டை ஆள்பவர்களை ஆளலாம். 31 விருமாண்டி என்ற ஒருத்தமிழ்ப்படம் விருமாண்டி என்ற ஒருத்தமிழ்ப்படம் , தற்கால தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு , குறிப்பாக தமிழ் சமூக ஊடகச் சூழலுக்கு சரியான உருவகமாக இருக்கும்.தனக்கு ஆதாயம் வேண்டி, தன் இனக்குழுவில் இருக்கும் விருமாண்டியைத் தூண்டிவிடும் கொத்தாளன். வேறொரு இனக்குழுவைச் சேர்ந்த நல்லம்மன் எல்லோரையும் அனுசரித்து, விருமாண்டியை நல்ல நிலைக்குக் கொண்டு வர விரும்புவன். [virumandi] உணர்ச்சி வசப்படுதலை மட்டுமே அடிப்படை உணர்வாக வைத்திருக்கும் விருமாண்டி. இதன் இடையில் எல்லோரையும் பயன்படுத்திக்கொள்ளும் பேய்க்காமன்.சமூகஊடகச் சூழலில், தமிழ் நாஜிக்களை நான் கொத்தாளன்களாகப் பார்க்கின்றேன். திராவிடம் பேசுபவர்களை எல்லாம் தெலுங்கர்கள் வந்தேறிகள் என இவர்கள் பேசுவதிலிருந்து , கொத்தாளனின் ஒப்புமைகளை தமிழ் நாஜிக்களிடம் நீங்களேக் கண்டுகொள்ளலாம். திராவிட இயக்கங்களின் முன்னோடிகள் தமிழர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்லம்மன்கள் இல்லை எனில் இன்று கொத்தாளன்களும் இல்லை. விருமாண்டிகளும் இல்லை. ஆக , எனது உருவகங்கள் வந்தேறிகள் எனத் தமிழ் நாஜிக்களால் புலம்பப்படும் திராவிட இயக்கங்கள் – நல்லம்மன் தமிழ் நாஜிக்கள் – கொத்தாளன் அப்பாவித் தமிழ்நாட்டு இளைஞர்கள் – விருமாண்டி திரையில் விருமாண்டி செய்த தவறை செய்யாதீர்கள். சரி, பேய்க்காமன் யாரென்று கேட்கின்றீர்களா? தமிழுக்குத் தமிழாகவும் சமஸ்கிருதத்திற்கு சமஸ்கிருதமாகவும் கம்யூனிசத்திற்கு கம்யூனிசமாகவும் ஆம் ஆத்மிக்கு ஆம் ஆத்மியாகவும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஆட்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்   32 தமிழ்த்தேசியப்பிரியன் கேள்வி :- அன்புடன் கிளிமூக்கு அரக்கனுக்கு, நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழ்த்தேசியத்தையும் , அதை முன்னெடுத்துப் பேசும் தமிழ்த்தேசியவாதிகளையும் கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள். நீங்கள் நினைப்பது போல நான், களமாடும் சீமான் கட்சியோ அல்லது ஈழத்து வைகோ கட்சியோ அல்ல. ஈழத்தில் ஒரு நாடு மலரும் என்று 80 கள் முதற்கொண்டு கனவு கண்டு வரும் ஒரு தமிழ்த்தேசியப்பிரியன். நீங்கள் ஏன் , தமிழ்த்தேசிய கேலி கிண்டல்களைக் குறைத்துக் கொள்ளக்கூடாது. ? பதில் :- நானும் உங்களைப்போல, ஒரு நாடல்ல, இருநாடுகள் தமிழுக்காக வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் தமிழ்த்தேசியவாதிதான். ஆனால் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்ட தமிழ்த்தேசியவாதி. பிரபாகரன் உயிர்த்து எழுந்து வருவார், எல்லோரையும் இரட்சித்து மீட்பார் என்ற பைபிள் கதைகளை சொல்லிக்கொண்டுத்திரியும் வியாபாரிகளைத்தான் நான் கேலி செய்கின்றேன். பொதுவாக சமூக ஊடகங்களில் களமாடுவோம் குளமாடுவோம் என்பவர்கள் வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு அதோ பறக்கின்றது பார் இரண்டு வெள்ளை காகங்கள் என்ற வகையினராக இருக்கின்றார்கள். இவர்கள் உள்ளூர் சுப்பிரமணிய ஸ்வாமிகளை மிஞ்சியவர்கள். ஈழத்தைத் தமிழ்நாட்டில் இருந்து வெல்ல முடியாது. அதேப்போல, ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகிவிட்ட தமிழ்நாட்டையும் இந்திய யூனியனில் இருந்து , எடுத்தோம் கவிழ்த்தோம் என வெண்ணெய் வெட்டி கத்திக் கொண்டு வெட்டி எடுக்க முடியாது. தற்பொழுது இருக்கும் சூழலில், இவை இரண்டையும் வென்றெடுக்க தமிழர்களுக்கான தாரக மந்திரம் இரண்டே இரண்டு.தான். 1. பிச்சைப்புகினும் கற்கை நன்றே. 2. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. சமகாலத் தமிழ் இளைஞர்கள் , தமிழ்த்தேசியம் என மூளைச்சலவை செய்யப்படுவதைக்காட்டிலும், இருக்கும் சமநீதி கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு படித்து மேலுக்கு வரவேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகின்றேன். சமூகநீதி இடஒதுக்கீடு உரிமைகளை சக நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். தமிழ்ப்புலமையுட,ன், ஆங்கிலப்புலமையையும் முடிந்தால் வேறு ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். முன்னுக்கு வரும் சூத்திரத்தமிழர்களில் ஒரு சிலராவது புலம்பெயர்ந்து அம்பானி அளவுக்கு பெரும் பணக்காரனாய் மாறும்பொழுதும் , படித்த பிற தமிழர்கள் காற்றுப்புகா இடத்திலும் நுழையும் நுண்மான் நுழை புலம் பெற்றவர்களாக வலுப்பெறும்பொழுது செக்கஸ்லோவேகியாவில் இருந்து இருநாடுகள் பிரிந்ததைப்போல, ரத்தவெள்ளத்தில் மிதந்த யூகோஸ்லாவியாவில், ஸ்லோவேனியா மட்டும் கத்தியின்றி இரத்தமின்றி பிரிந்ததைப்போல , தமிழுக்கு இரு நாடுகள் அமையும். Free Tamil Ebooks - எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு:     ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்     தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல்     சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.     email : freetamilebooksteam@gmail.com     Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks     Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?     Shrinivasan tshrinivasan@gmail.com     Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org     Arun arun@fsftn.org      இரவி Supported by     Free Software Foundation TamilNadu, www.fsftn.org     Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/