[] [கிளிப்பேச்சு – தொகுதி 3] கிளிப்பேச்சு – தொகுதி 3 கிளிப்பேச்சு – தொகுதி 3 கிளிமூக்கு அரக்கன் கிளிமூக்கு அரக்கன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work. காப்புரிமை தகவல்: நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப் படுகிறது. இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது. This book was produced using PressBooks.com. உள்ளடக்கம் - கிளிப்பேச்சு – தொகுதி 3 - காமராசர் - 1. கேள்வி :- கலைஞர் இலக்கியவாதியா ? - 2. இந்திராவும் கலைஞரும் - 3. திமுக - FAQ - 4. கோட்சே சிலைகள் - 5. சாதிச்சான்றிதழ் - 6. எச். ராஜாவும் பெரியாரும் - 7. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 8. இந்திஎதிர்ப்பும் தமிழ் எழுத்துருவும் - 9. ஆர்எஸ்எஸ் - 10. மோடியும் பட்டுப்புடவைகளும் - 11. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 12. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 13. பெருமாள் முருகன் - FAQ - ஏன் ? எதற்கு ? எப்படி ?  - 14. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 15. இராஜபக்சே தோல்வி - 16. ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் மாமா பிஸ்கோத்து - 17. பேராசான் ஸ்வாமி - 18. ஆர் எஸ் எஸ் - தமிழ் - பெண்கள் - 19. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 20. ஏலம் - சிறுகதை  - 21. ரஜினி என்ற மாயப்பிம்பம் - 22. தோனியும் கலைஞரும் - 23. எம்ஜிஆர் - 24. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 25. ஜெயமோகன் - பத்ரி - 26. திராவிட சுவிசேஷம் - 27. தமிழ் நாஜிக்கள் - 28. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 29. விவசாயம் - சற்றே நீண்ட குறிப்பு  - 30. The Rise of Tamil Nazism and its dangerous impacts - 31. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 32. தீபாவளி வாழ்த்துகள் - ஏன்?  - 33. தமிழகத்தில் பிஜேபி ஆட்சி - 34. பெரியார் தனது சாதிப்பெயரை விட்டதும், அன்றே 44 சதவீத இட ஒதுக்கீடும் - 35. பூந்தி பிள்ளையார் கூட்டம் - 36. சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் - 37. நுண்ணரசியல் - 38. காங்கிரஸ் / பிஜேபி - 39. திமுகவும் ஈழமும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ - DMK and Tamil Eezham) - 40. ஆடே திருடுபோகலிங்கய்யா - ஓரங்க நாடகம் - 41. வன்முறையின் வகைகள் - 42. கற்றுக்கொள்ளவேண்டிய விவாத/பரப்புரை அம்சங்கள் - 43. இராமனுசர் - கலைஞர் - விமர்சனம் ஏன்? - 44. கலைஞருக்கு RIP போட ஆசைப்படும் ஈழ விபீஷணர்கள் - ஈழமாயைக் கட்டுரை - 45. திமுக ஆதரவு ஏன்? - 46. சிலகேள்விகள் சிலபதில்கள் - 47. IT 66A சட்டம் நீக்கம் - 48. இணையத்தின் குழு அரசியல் - 49. மக்கள் முதல்வரை விமர்சிக்காததேன்? - 50. சிங்களத்தமிழர் - இந்தித்தமிழர் - 51. பேஸ்புக் பிரபலம் - 52. எம் ஜி ஆரும் புராணமும் - 53. கிளிமூக்கு விளைவு - கட்டுரை - 54. முப்பாட்டன் முகமது நபி - சிறு குறிப்பு - 55. கொழும்புத்தமிழர்கள் - Free Tamil Ebooks – எங்களைப் பற்றி - உங்கள் படைப்புகளை வெளியிடலாமே 1 கிளிப்பேச்சு – தொகுதி 3 [Cover-2015-02-Feb] ஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன் https://www.facebook.com/kilimookku பெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். அட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன் கிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல் கிளிப்பேச்சு தொகுதி மூன்றாக  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படுகிறது. இம்மின்னூலின் அட்டையை அலங்கரிப்பவர் காமராசர். கர்ம வீரரைப்பற்றிய விக்கிப்பீடியா குறிப்பும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.   உரிமை – Creative Commons Attribution- Commercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார். ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார் 1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது) குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி. ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. காங்கிரசு ஆளுமையாக இருந்தாலும் திராவிட இயக்கத்தலைவர்கள் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் மனதிற்கினியவராகத் திகழ்ந்தார் கருப்பு காந்தி காமராசர். காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்: பாரத மிகு மின் நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL) இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF) நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை மேட்டூர் காகிதத் தொழிற்சாலை குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை. காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது. காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது[5]. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். தகவல் கோர்ப்பு விக்கிப்பீடியா [pressbooks.com] 1 பதில் :- ஆம் நிச்சயமாக. ஆனால் கலைஞர் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காத மாம்பலம் டைம்ஸ் மயிலாப்பூர் ஆட்களை புரவலர்களாகக் கொண்ட எழுத்தாளர்கள் கலைஞரை மறுக்கவேண்டிய கட்டாயத்தினால் , கலைஞரின் படைப்புகளை நிராகரிக்க முயன்று தோற்றுப்போவார்கள். நான் இலக்கியத்திற்கு வைத்திருக்கும் வரையறை “எந்த ஒரு படைப்பாளியின் படைப்பு அந்நாட்டின் அடித்தட்டு மக்களை போய் சேர்ந்து அடித்தட்டு மக்களுக்கான சமூக வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ அதுவே இலக்கியமாகும்”. 1952 அக்டோபர் 17தீபாவளி அன்று மதுரையில் ஒரு திரையரங்குகளில் மனிதர்கள் மிருகங்களை போல் ஒரு குறுகிய வாசற்படியில் முண்டியடித்து ஒரு திரைப்படத்தை பார்க்க ஓடினார்கள்,தமிழகத்தின் பகுத்தறிவு முகத்தை உலகுக்கு எடுத்துகாட்டிய, தன் பேனாமுனையில் சுழற்றிய கலைஞரின் வசனத்தில் வெளிவந்த பராசக்தி எனும் பெரும் படைப்பு.2015திலும் மறக்கமுடியாத வசனங்கள் இன்றும் உச்சரிக்கப்படுகிறன. இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் உழன்று மணிப்பிரவாளத்தில் வடமொழியா கன்னடமா மலையாளமா என்று தமிழ்க்கற்றுத் தேர்ந்தவர்களுக்குக் கூட புரியாமல் பேசவும் எழுதவும் பட்டுக்கொண்டிருந்த தமிழை தமிழாக எழுதியவர்கள் பேசியவர்கள் பேரரக்கர்கள் அண்ணாவும் கலைஞரும். வேதவிற்பன்னர்களின் உரைநடையிலே எழுதப்பட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தின் பண்பாடு இப்படித்தான் என்று கட்டமைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பேரரக்கர்கள் அண்ணா கலைஞர் போன்றோரின் எழுத்துக்கள் தமிழ்சமூகத்தில் பெரும் இடிமுழக்கத்தோடு ஒலித்தன . ஒட்டுமொத்த சமூகத்தையும் புரட்டிப்போட்ட இந்த எழுத்துக்கள் இன்றும் தொடர்கின்றன என்பது கலைஞரின் இலக்கிய வளத்துக்கு சான்றாகும் .நல்ல தமிழை எழுதவும் படிக்கவும் நெஞ்சுக்கு நீதி,ரோமாபுரி பாண்டியன் ஆகியவற்றை வாசித்தவர் அறிவர். குறைந்த பட்சம் அவரின் அறிக்கைகளைப் படியுங்கள், இலக்கியச்சுவை ,தகவல், மக்களின் மனதை தன் வசப்படுத்தும் வசியம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளலாம். தமிழை மீண்டும் தமிழர்களிடம் இயல், இசை , இலக்கியமாக கொண்டு வந்து சேர்த்தவர்களில் முன்னோடி கலைஞர். முன்பொருமுறை கலைஞரே நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கின்றார். கேள்வி : கலைஞருக்கும் நவீன இலக்கியத்திற்கும் தொடர்பு கிடையாது என உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே ?இதற்கு உங்கள் பதில் என்ன? கலைஞர் பதில் : ஸ்டீரிட் கார்னர்ல கீதாவைப் பார்த்தவுடனே ராமுவுக்கு பாடி முழுவதும் ஜிவ்வென்று ஒரு பீலிங், ஹலோ ராமு என்று ஹாண்ட் பேக்கை சுழற்றியபடி கீதா ரன்னிங் ரேஸ் அவளது புளு கண்கள், அதுக்கு மேட்சாக நைலான் சாரி, அதுக்கு மேட்சாக ஜாக்கெட், அப்படியே ராமு ஒரு ஸ்டண்ட் ஹீரோ மாதிரி காரில் பேக் சீட்டில் போட்டான். அய்யா, இது தான் நவீன இலக்கியமென்றால், அதனுடன் எனக்குத் தொடர்பு கிடையாது என்பது உண்மை தான். 2 இந்திராவும் கலைஞரும் நாம் தமிழர் என்ற வீரத்தமிழர் முன்னனி புனைவுப் பெயர்களுக்கெல்லாம் முன்னோடியான ஆர் எஸ் எஸ் ஸ்லீப்பர் செல் கணக்கில் ஒருவர் அத்வானி புகைப்படத்துடன் விஜய் யாதவ் என்ற பெயரில் (அனேகமாக மாம்பலம் டைம்ஸ் படிக்கும் கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடும் என்று நினைக்கின்றேன்) பேரரக்கன் கலைஞரைத் தாக்கி பின்வருமாறு  பேஸ்புக்கில் ஒரு கேள்வி கேட்டிருந்தார். சக அரக்கர்களின் கேள்விகளைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் ஆனால் தேவாதிதேவ இந்திரர்களுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்தானே. இல்லை எனில் சாபமிட்டுவிடுவார்கள். விஜய்யின் ஆபாசக் குறிப்புகளை மட்டும் நீக்கிவிட்டு அவர் கேட்டிருந்த கேள்வி கீழே. “ஜெயிலில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தாலும் வெளியே வந்ததும் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கொஞ்சமும் கூச்சமுமில்லாமல் குனிந்து வீராணம் வழக்கு வராமல் பார்த்துக்கொண்ட ராஜ தந்திரம் உங்களுக்கு உண்டா? இருந்திருந்தால் தன் ஆதரவில் இருந்த வாஜ்பாய் அரசின் போதே வழக்கை ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியாதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று நீதியரசர் சர்காரியார் சொல்லிவிட்டாரே அந்த பெரியவர் வாக்கு பொய்த்து போய் விட கூடாதே என்பதற்காக விஞ்ஞானத்திலேயே ஊழல் செய்து 1.76 லட்சம் கோடி சம்பாதித்து காட்டிய சாமர்த்தியம் யாருக்காவது வருமா?” என்னுடைய பதில். எமர்ஜென்சியில் கலைஞர் கைது செய்யப்படவில்லை என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து வைத்திருக்காமல் நீங்கள் கேள்வி கேட்பதனால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான முகாந்திரத்தின் மேல் ஐயப்பாடு எழாமல் இல்லை. எமர்ஜென்சிக்குப்பின்னர் இந்தியா முழுவதும் கடும் தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்த இந்திரா நாடி வந்து ஆதரவைக் கேட்டது கலைஞரிடம். இந்திரா காந்தியால் , கலைஞர் மேல் குற்றஞ்சாட்டப்பட்டவை எல்லாம் உண்மை எனில், இடைக்காலத்தில் மொராஜி , சரன்சிங் அரசாங்கத்தில் இருந்த எம்ஜிஆர் மேலும் கிடுக்கிப்பிடி போட்டு நிருபித்திருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக எம்ஜிஆரே ,கலைஞர் ஊழல் செய்தார் என்பதற்கு தன்னிடம் ஆதாரமில்லை என்று சாட்சியளித்தார். ஆக கலைஞருக்கு என்றுமே தான் செய்த தவறுகளுக்காக இந்திரா தேவையாக இருந்ததில்லை. இந்திராவிற்குத்தான் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள கலைஞர் தேவைப்பட்டார். ஆர் எஸ் எஸ் சின் மறைமுக அரசாக மாறிப்போக இருந்த ஜனதா அரசிற்கு மாற்றாக இந்திராவே இருந்தார் என்பதால் அரசியல் மாண்பின்படி, கலைஞர் , இந்திரா காந்தி தனது கட்சியுடன் கூட்டுச் சேர சம்மதித்தார். கலைஞர் எம்ஜிஆரை அத்தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார். இந்தச் செய்திகள் எல்லாம் தெரிய வேண்டுமெனில், சவுக்கு, விஜயபாரதம் , தினமலர் மட்டும் படிக்கக் கூடாது விஜய் அவர்களே. வரலாற்றுப்புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் வாசிக்க வேண்டும். அடுத்தது, கலைஞர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்தார் என்பது. உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றேன். நீங்கள் கலைஞரைத் திட்டினாலும் நல்லவர் என்பதை யாம் அறிவோம். இது எடுத்துக்காட்டு மட்டுமே. திடிரென உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு. நீங்கள் ஒரு பெண்ணை அல்லது ஓர் ஆணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டீர்கள் என்று உங்கள் எதிரிகள் உங்களின் மேல் அபாண்டமாக பழி போடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லவர் தூயவர் என்பதால் நீதிமன்றம் போகின்றீர்கள். உங்களைக் கடும் பிராயத்தனம் பட்டும் நிருபிக்கின்றீர்கள். இருந்த பொழுதும், உங்களின் எதிரிகள். உங்களின் மேல் பழி போட ஏதுமில்லாத பொழுது, நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் , அதனால்தான் சாட்சிகள் , தடயங்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் கெட்டவர் என்பதாகிவிடுமா. அல்லது ஊரில் நடக்கும் 1.7 லட்சம் கோடி பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் நீங்கள் தான் காரணம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ?பொதுவாக வேதவிற்பன்னர்களின் மனு நீதி கமிஷன்கள் , குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றால் வேதகால விஞ்ஞானப்படி ஊழல் செய்தார்கள் என்பார்கள். நெருப்பில் தள்ளிவிட்டுவிட்டு ஜோதியில் ஐக்கியம் என்பார்கள். நீங்கள் உண்மையிலேயே யாதவாக இருந்தால் முலாயம் யாதவ், லாலு யாதவ் போல சமூகநீதிக்காக கலைஞருடன் இணையுங்கள். ஸ்லீப்பர் செல் என்றால், தொடர்ந்து எனக்கு தூண்டில் புழுவாக இருங்கள். உங்களை வைத்து நான் பதில் சொல்லி பெருங்கூட்டத்தை எனக்காக்கிக் கொள்கின்றேன் 3 திமுக - FAQ A Antony Xavier என்ற எனது ரசிகர்,”அன்புள்ள அரக்கரே,,,நல்லது..ஆனா சில கேள்விக்கும் பதில் சொல்லணுமே,,” என்று ஆரம்பித்து கேட்டக்கேள்விகளுக்கு நான் அளித்த பதில். தொடர்வது அவரது கேள்விகளும் எனது பதில்களும். கேள்வி: கருணாநிதிக்கும் இந்த 2g க்கும் தொடர்பு இருக்கா இல்லயா? பதில்: இல்லை. கேள்வி: அவருக்கும் அவரோட துணைவியாரோட பொண்ணுக்கும் தொடர்பு இருக்கா இல்லயா? பதில்: இருக்கிறது. கேள்வி: அவருக்கும் கலாநிதி..தயாநிதி சன்டிவிக்கும் தொடர்பு இருக்கா இல்லயா? பதில்: கலைஞருக்கும் அவரது பேரன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கலைஞருக்கும் சன்டிவிக்கும் தொடர்பில்லை. கலாநிதிக்கும் அவரது தம்பி தயாநிதிக்கும் தொடர்பிருக்கிறது. சன்டிவிக்கும் தயாநிதிக்கும் தொடர்பில்லை. உங்கள் சொத்தில் உங்கள் தம்பிக்கு தொடர்பு உள்ளது என எவனாவது கிளப்பிவிட்டால் கடுப்பாகி, கொந்தளிப்பீர்கள் அல்லவா? அதே விதி கலாநிதி-தயாநிதிக்கும் பொருந்தும். கேள்வி: கலைஞருக்கும் கலைஞர் டிவிக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லயா? பதில்: இல்லை. அதிமுகவில் அண்ணா பெயர் வருகிறது என்பதற்காக அண்ணாவுக்கும், அண்ணா திமுகவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்லமுடியுமா? கேள்வி: திருவாரூர்லேருந்து மூளை மற்றும் மஞ்சப்பையோட வந்தப்ப இவ்வளவு சொத்து சேர்ப்போம்னு அவருக்கு தெரியுமா தெரியாதா? பதில்: அவருக்கு கண்டிப்பாக தெரியும். என் பழைய குருநாதரின் நண்பர் ஸ்டாம்பு சித்தர் டான் அசோக் அரக்கன் இப்போதுதான் சினிமாவில் வசனம் எழுதவே ஆரம்பித்திருக்கிறார். அதற்குள், அவர் எவ்வளவு சொத்து சேர்க்கப்போகிறார் என என்னிடம் உறுதியாக-தெளிவாக பட்டியலிடுகிறார். அப்படி இருக்கும் போது , திமுக ஆட்சிக்கு வருவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னமே பெரும் கதை / வசனகர்த்தா என்று பேரும் புகழும் பெற்ற மூளாதி- மூளைக்காரரான பேரரக்கன் கலைஞருக்கு சொத்து சேர்ப்பதில் மட்டுமல்ல, எங்கெங்கு சொத்து வாங்கப் போகிறோம், முதல்வர் ஆனபின் என்னென்ன நலப்பணிகளை நிறைவேற்றுவோம் என்பதும் கூட கிளம்பி வரும்போதே தெரிந்திருக்கும். கேள்வி: தமிழ்..தமிழர்..திராவிடர்……….இந்த மூனெழுத்து மூலமா இன்னும் எவ்வளவு சொத்து சேக்க முடியும்னு யாருக்காச்சும் தெரியுமா? பதில்: தெரியாது. ஆனால் சீமான், நெடுமாறன் போன்றவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். கேட்டுப்பாருங்கள். ஆனால் வெட்டியாக அதை ஆராய்ந்து கொண்டிருப்பதை விட கலைஞர் அரசு உருவாக்கியிருக்கும் தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொத்தை வாங்கிவிடுங்கள். உலகிலேயே அதிக கலைச்சொற்கள் உடைய மொழியாக தமிழை ஆக்கிய ஆராய்ச்சிக் களஞ்சியமான அது, கலைஞர் தமிழுக்குச் சேர்த்த பெருஞ்சொத்து. கேள்வி: இந்த இலங்கைகாரங்க தலைவர இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்கன்றது அவருக்கு தெரியுமா? பதில்: ஜெயவர்தனே, ராஜபக்சே போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. சென்ற வருடம் கூட கலைஞரின் உருவபொம்மையை கொலும்புவில் எரித்தார்கள். ஈழத்தந்தை செல்வா, தமிழ்ச்செல்வன், ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரன் போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். கலைஞர் பல சூழல்களில் ஈழ அணியின் தமிழ்நாட்டு கேப்டனாகவும் களத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு இந்திய அணியை எதிர்த்தும், அதன் அமைதிப்படையை எதிர்த்தும் விளையாடியிருக்கிறார். அதனால் முதல்வர் பதவியையும் இழந்திருக்கிறார். ஆனால் 1991 தேர்தலில் தமிழக மக்கள் இலங்கைக்காரர்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்! ஆக, கலைஞரை இலங்கைக்காரர்கள் ஆட்டத்தில் சேர்க்கிறார்களா, இல்லையா என்பது கேள்வியே அல்ல. நீங்கள் யாரை இலங்கைக்காரர்களாக பார்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி! கேள்வி: இன்னும் ஒரு 10 தலைமுறைக்காவது கருணாநிதின்னு பேர்கூட அவங்க வைக்க கூசுவாங்கன்னு தெரியுமா? பதில்: சென்ற மாதம் ஈழத்தமிழர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு கலைஞர் கருணாநிதி என பெயர் சூட்டியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது முதல் குழந்தையின் பெயர் பிரபாகரன். என்னது? நான் பொய் சொல்கிறேனா? உங்கள் கேள்வியை நீங்கள் உண்மை என நிரூபியுங்கள். நான் என் பதிலை உண்மை என நிரூபிக்கிறேன். கேள்வி: ஜெயலலிதாவகூட நம்பலாம் ஆனா கருணாவ நம்பவே கூடாதுன்னு நம்பிக்கிட்டு இருக்கறவங்களப்பத்தி தெரியுமா? பதில்: தெரியும். தன்னுடனே இருந்து தனக்கே இறுதியில் திரோகம் இழைத்த ‘கருணா’வை நம்பக்கூடாது என பிராபகரன் கூட கடைசியில் தான் உணர்ந்தார். ஆனால் அவர் கூட புலிகளுக்கு தீவிரவாதிப் பட்டம் வாங்கிக் கொடுத்த ஜெயலலிதாவை நம்பியதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லையே! ஒருவேளை நீங்கள் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களை சொல்கிறீர்களோ? கேள்வி: நம்மளையும் இந்த திமுக கொடிய தூக்கிப் புடிச்சிருக்கிறதாலேயே நாலு பேரு மனுசனா மதிப்பான்……….அப்படின்னு நெனச்சிக்கிட்டு இருக்குற என்னயப்போல இருக்குற நாலு பேத்தயும் பத்தி தெரியுமா? பதில்: நன்றாகவே தெரியும். திமுக கொடி மட்டுமல்ல. திராவிடர் கழக கொடி, மதிமுக கொடி, பெதிக கொடி, த.பெ.வி.க கொடி, அவ்வளவு ஏன், அதிமுக கொடி என கருப்பு சிவப்பு கொடி எதை தூக்கிப் பிடித்தாலும் மனுசனாக மதிக்கப்படுவீர்கள். அதைவிட பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், வி.பி.சிங்கும் போராடிப் பெற்றுக்கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி படித்தால் மனுசனாக மதிக்கப்பட மட்டுமல்ல போற்றவே படுவீர்கள். 4 கோட்சே சிலைகள் கேள்வி :- கோட்சே சிலைகள், வழிபாட்டுத்தளங்களை அமைக்கப்போவதாக பாஜகவின் இந்த ஆட்சியில் கிளம்பியிருக்கின்றனரே அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன அரக்கனே ? பதில் :- காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் அக்கட்சியின் தலைவர்களாக இருந்த காந்தி, காமராஜர், நேரு , இந்திரா , ராஜீவ், சிலைகள் திறக்கப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது திராவிட ஆளுமைகளான பெரியார், அண்ணா சிலைகள் திறக்கப்படும். அதைப்போல இன்றைய பாஜகவின் அன்றைய சித்தாந்த சிற்பி கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க பாஜகவின் ஆட்சியில் முயற்சி எடுக்கப்படுவது எனக்கு ஓர் இயல்பான செயலாகத்தான் படுகின்றது. கோட்சே, சாவார்க்கர், கோல்வால்கர் போன்றவர்களுக்கு பாஜக ஆட்சியில் சிலைவைக்கப்படவில்லை என்றால் தான் வியப்பு. 5 சாதிச்சான்றிதழ் கேள்வி:- சாதிச்சான்றிதழ் தேவையா ? பதில் :-  நிச்சயமாகத் தேவை. சாதிச் சான்றிதழை நீக்கினால் சாதியை ஒழித்து விடலாம் என்ற ஒரு சூழ்ச்சியான பரப்புரையை வேதவிற்பன்னர்களுக்கு இணையாக 3000 ஆண்டுகளான அடிமைகளான நம்மாட்களும் முன்னெடுக்கின்றனர். தன்பேஸ்புக்பக்கத்தை தானே அழித்துக் கொண்டு முராரி பாடிய கோட்டோவியர் (கார்ட்டுனிஸ்ட்) கூட ஓர் உதாரணம். 3000 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தவர்கள், முதல் தலைமுறையாக இப்பொழுதுதான் முன்னேறிவருகின்றனர். சாதிச்சான்றிதழ்கள் பெறாதீர்கள் வகையான நச்சு பரப்புரை மூலம் சற்று முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி அரசியல் சட்டத்துக்குப் புறம்பாக தங்களைத் தாங்களே creamy layerஆக மாற்றிக் கொள்ள நிர்ப்பந்திப்பதுதான். இதன் மூலம் வருங்காலத்தில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறைவது மட்டுமே ஒரே விளைவு. அது யாருக்குச் சாதகம் என்று எல்லாருக்கும் தெரியும். 3000 ஆண்டுகள் அடிமைகள், விக்கிரமன் படங்களில் வருவதைப் போல ஒரே பாடலில் முன்னேறுவது மாதிரி எல்லாம், ஒரே தலைமுறையில் முன்னேற முடியாது. கடைசி ஒடுக்கப்பட்டவன் இருக்கும் வரை இடஒதுக்கீடு சமூகநீதி வேண்டும். அதற்கு அடிப்படை அடையாளச்சீட்டு சாதிச்சான்றிதழ். நீங்கள் பெற்ற உரிமைகளை உங்கள் குழந்தைகளுக்கும் பெற்றுக்கொடுக்க தவறாது சாதிச்சான்றிதழ் பெறுவீர். உங்களில் அதிகம் பேர், இந்தியன் என்று உணர மாட்டீர்கள், ஆனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பீர். காரணம் அது தேவை. உங்களில் பலர் இடதுசாரி அபிப்பிராயம் கொண்டிருப்பீர். ஆனாலும் முதலாளித்துவ வடிவங்களான பேஸ்புக், பன்னாட்டு நிறுவன வேலை என்று இருப்பீர்கள். அதைப்போலத்தான், உங்களுக்கு சாதிய வேறுபாடுகளில் நம்பிக்கை இல்லாதிருப்பினும் சாதிச்சான்றிதழ் பெற்றுக்கொள்வது. சாதீய வேறுபாடுகள் ஒழியவேண்டுமானால், சமூகத்தில் பொருளாதார / அறிவுப்பூர்வ ஏற்றத்தாழ்வுகள் குறையவேண்டும். அதற்கு தேவை படிப்பு, வேலை. அந்தபடிப்பிற்கும் வேலைக்கும் அடிப்படை சமூகநீதி. அச்சமூகநீதிக்கு நமக்குக் கிடைத்த பாஸ்போர்ட் சாதிச்சான்றிதழ். 6 எச். ராஜாவும் பெரியாரும் கேள்வி :-  பாரதிய ஜனதா கட்சியின் எச். ராஜா மீண்டும் பெரியாரை ஆபாசமாகப் பேசியிருக்கின்றாரே ? பதில்:- வாழ்க்கையில் சிலரை நீங்கள் சந்தித்திருக்கலாம். ஓரளவிற்கு திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் போட்டி, முன்னேற்றம் என்றுவந்துவிட்டால் , தனது தாழ்வு மனப்பான்மையால் எதிர்மறைத் தன்மையில் தங்களது வேகத்தைக் காட்டுவார்கள். பெரும்பாலும் எதிர்மறைத் தன்மையிலேயே இருப்பதால், வெற்றிகள் இவர்களை அண்டவே அண்டாது. தாழ்வு மனப்பான்மையால் எதிா்மறை என்னம் மேலோங்கும் தம்மை மற்றவர்கள் மிஞ்சு விடுவார்களோ என்ற பயத்தில் உளற ஆரம்பித்து விடுவார்கள். தனது இயலாமையை மறைக்க, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கூட போட்டு உடைப்பார்கள். கிட்டத்தட்ட எச்.ராஜாவின் நிலைமையும் அதுதான். பாஜகவின் முதல்வர் வேட்பாளாராக நிர்மலா மேடத்தை முடிவு செய்துவிட்டார்கள். ஒரு வேளை நிர்மலா மேடம் முதல்வர் வேட்பாளராக விரும்பவில்லை என்றால், தமிழிசை மேடம் இருக்கிறார்கள். இன்றைக்கு அதிரடியாக ஜெயந்தி நடராஜன் மேடம் வேறு காங்கிரஸில் இருந்து விலகிவிட்டார்கள். ஜெயந்தி மேடம், அனேகமாக மக்கள் பிரதமர் அமித்ஷா தலைமையில் பாஜகவில் ஐக்கியமாகலாம் என்று உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியாகும் பட்சத்தில் ஜெயந்தி நடராஜன் மேடம், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இருப்பார். இப்படி முப்பெருந்தேவிகளால் தனது கட்சியிலேயே எச்.ராஜாவிற்கு முக்கியத்துவம் தடாலடியாக குறைந்துவருவதால் , எப்படியாவது மக்கள் பிரதமர் அமித்ஷாவின் கருணைப்பார்வை படவேண்டும் என்று எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று பெரியாரின் காலடியிலேயே அவர் இருப்பதாக நான் நினைக்கின்றேன். நான் ஏற்கனவே சொல்லியபடி எச்.ராஜா போன்றவர்கள் திட்டினால்தான், தமிழ்நாட்டில் இருக்கும் சோற்றாலடித்த பிண்டங்களுக்கு பெரியாரின் அருமை புரியும். 7 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- மோடி அரசு, இந்தியாவை இந்துக்களுக்கான நாடு என்று மாற்ற திட்டமிடுகின்றதே, அப்படியான ஒரு சூழல் வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? பதில் :- கண்டிப்பாக மாட்டேன். அப்படியான ஒரு சூழல் வந்தால், இந்தியா பார்ப்பனர்களுக்கான நாடு என்று அறிவிக்கும்படி பாரதப்பிரதமர் மோடியையும் மக்கள் பிரதமர் அமித்ஷாவையும் கேட்டுக்கொள்வேன். கேள்வி:- பாரதப் பிரதமர் மோடி, தனது பெயரை தனது உடையில் பொறித்துக் கொண்டதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? பதில் :- ஒரு நாட்டின் தலைவர் இப்படி செய்வது இது முதன் முறையல்ல. பொதுவாக சைனா, தைவான், ஐரோப்பா ஒன்றிய நாடுகளின் வளர்ச்சியை குஜராத்தின் வளர்ச்சியாக போட்டோஷாப் செய்பவர்கள், இந்த முறை அப்படி செய்யமால், நேரடியாகவே , முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக் செய்ததை ஈயடிச்சான் காப்பியாக்கி, மோடிக்கும் கோட் சூட் தயார் செய்துவிட்டார்கள். மோடி இப்படி செய்ததை பலரும் விமர்சனம் செய்தாலும் , இந்த விசயத்தில் மோடியை என்னால் விமர்சிக்கமுடியாது. அமெரிக்காவினால் விசா நிராகரிக்கப்பட்டவர் , அமெரிக்க ஜனாதிபதியின் முன்னால் தனது பெயரை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துகொள்ள நினைத்தது ஒன்றும் தவறில்லை. தன்முனைப்பை ஆதரிக்கும் நான், இவ்விசயத்தில் மோடியின் பக்கமே. அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடியை பார்த்தோமானால் , அவருடைய தன் முனைப்பே மிகவும் பிற்படுத்தப்பட்ட சூழலில் இருந்து இவ்வளவு தூரம் அவரை உயர்த்தியிருக்கின்றது. ஒருவேளை தன் அமைச்சர்களுக்கெல்லாம் தனது பெயர் பொறித்த கோட் சூட் மாட்டிவிட்டியிருந்தால் தவறு, ஆனால் மோடி அப்படி செய்யவில்லையே, தனது ஆடையில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டுள்ளார். இதைவிட அதிகப்படியான செய்கைகளை துருக்மெனிஸ்தானின் முன்னாள் அதிபர் ஒருவரும், தமிழ்நாட்டின் மக்கள் முதல்வரும் செய்திருக்கின்றனர். மோடியை விரும்பாவிட்டாலும் அற்பமான விசயங்களுக்கு அவரை விமர்சிக்கத் தேவையில்லை. கேள்வி:- குடியரசு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தியாவின் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்சினை ஊழலா ? பதில்:- இந்தியாவின் பிரச்சினைகளை வரிசைப்படுத்தினால் , ஊழல் கடைசிக்கும் கடைசியாக வந்து நிற்கும். மதவாதம், சாதிப்பெருமை மற்றும் மொழிகளின் மேலான அடக்குமுறை இவையே இந்தியாவின் தலையாய பிரச்சினைகள். 8 இந்திஎதிர்ப்பும் தமிழ் எழுத்துருவும் ஒவ்வொரு குடியரசு தினமும் , திராவிட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட எண்ணங்களையும் அதன் வெற்றியையும் , அதனால் தமிழகத்திற்கு கிடைத்த மொழி ரீதியிலான சிறப்பு அந்தஸ்தையும் நினைவலைகளில் மீட்டெடுக்கும். இந்த குடியரசு தினத்தன்று , மொழி ரீதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன். பொதுவாக தோழிகளிடம் பழகுவது கிடையாது. பழக விரும்பும் தோழிகளிடமிருந்து விலகுவதும் கிடையாது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தோழியிடம், “நான் தமிழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றேன், வாசிக்கின்றாயா” என்று கேட்டேன்.  “ஹேய் எனக்கு டமில் படிக்கத் தெரியாதுப்பா” என்றாள். உங்களுக்கேத் தெரியும் நான் புத்திசாலி என்று. எனது தமிழ் எழுத்துருக்களில் இருந்த கட்டுரையை , அப்படியே லத்தீன் எழுத்துருக்களுக்கு மாற்றி வாசிக்கச் சொன்னேன். “சூப்பர், இங்லீஷ் லெட்டர்ஸ்ல டமில் டைப் பண்ணி கொடுத்தா சூப்பரா படிப்பேன்” என்றாள் தோழி. கட்டுரையை வாசித்து முடித்து பாராட்டியும் சென்றாள். விசயத்திற்கு வருகின்றேன். தமிழ்ப்பேசத் தெரிந்த மக்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையில், தமிழ் எழுத்துருக்களின் வடிவத்தை வாசிக்கத் தெரியவில்லை என்பதே. லிங்குசாமியை கிண்டலடித்து, டி.ராஜேந்தரை கிண்டலடித்து , இன்னபிற ஆட்களை கிண்டலடித்து வரும் போட்டோ டூன்கள், மெம்களை கவனியுங்கள், ஜெயமோகன் விரும்பியதைப் போல தமிழை லத்தீன் எழுத்துருக்களில் எழுதியிருப்பார்கள். அதை வாசித்து மக்கள் கொண்டாடவும் செய்கின்றனர். ஆக தமிழ்ப்படிக்கத் தெரியாது என்பதில்லை. உயிர் 12 + மெய் + 18 + உயிர்மெய் 216 + ஆய்தம் 1 = 247 எழுத்துருக்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள இயலாத சோம்பேறித்தனம் மட்டுமே. தமிழின் பெருமை, தமிழில் பேசுவதைப் போல அப்படியே எழுத முடியும். 247 எழுத்துருக்களை வெறும் ஒரே வாரத்தில் கற்றுக்கொள்ள முடியும். இனிவரும் காலங்களில், எழுத வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் கணினி எனும்பொழுது, தட்டச்சும் பொனடிக் முறையில் எளிது. ஆர்மீனியா என்ற ஒரு தேசம் உண்டு. ரோமானிய , துருக்கிய படையெடுப்பு, ரஷிய படையெடுப்பு, சோவியத் கீழான ஆளுமை. போர்க்கொடுமைகள், இன்வழிப்பு, மொழியழிப்பு எல்லாம் கடந்து, தங்களது பழமையான எழுத்துருவை இன்னும் பாதுகாத்து வருகின்றனர். மலையாள உழைக்கும் வர்க்கம், தமிழ்நாட்டில் வேலைக்கு வருகையில், மலையாள எழுத்துருவைக் காட்டிலும் வேறுபட்ட தமிழ் எழுத்துருவை கற்று, தினத்தந்தி பேப்பர் படிக்கும் அளவில் ஒரு சில மாதங்களில் தயாராகிவிடுவார்கள். பெரும்படிப்பு படிக்காத உழைக்கும் வர்க்கமே, தமிழ் எழுத்துருக்களைக் கற்றுக்கொள்கையில், மெத்தப்படித்த , ஆங்கிலம் அறிந்த , தமிழ்ப்பேசத் தெரிந்த தமிழர்களுக்கு வெறும் 247 எழுத்துருக்களை , அதில் அடிப்படை 30 மட்டுமே, கற்றுக்கொள்ள முடியாதா என்ன? மொழிப்போர்த் தியாகிகளுக்கு இதுவே நாம் செய்யும் மிகப்பெரும் அஞ்சலியாக இருக்க முடியும். தமிழை தமிழால் எழுதுவோம். தமிழை தமிழில் வாசிப்போம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் தேநீர் உரையாடல்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். 9 ஆர்எஸ்எஸ் கேள்வி :- அடேய் கிளிமூக்கா, ஆ ஊ என்றால், குருமூர்த்தி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், கிழக்கு பத்ரி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், முக்குத் தெரு பிள்ளையார் கோவில் ஐயர் ஒரு ஆர்எஸ்எஸ் ஆள் என்று அடிச்சுவிடுறியே அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்பதற்கு உன்னிடம் அவர்களின் அடையாள அட்டை ஆதாரமிருக்கின்றதா ? பதில் :- தமிழ்நாட்டில் கலகக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்புப் புகலிடம் பெரியார் திடலும் பெரியாரிய கடல் திராவிடர் கழகமும்தான். ஒரு சில மாதங்களுக்கு முன்னர், பழைய குருநாதர் மூலம், திராவிடர் கழகத்தில் எனது இந்தப் புனைப்பெயரில் உறுப்பினராக திராவிடர் கழக மேலிடத்தை அணுகினேன். உறுப்பினராக வேண்டும் என்றால் உண்மையான பெயர் விபரங்களுடன் மட்டும்தான் சேர முடியும், பேக்கு ஐடி, வழிப்போக்கு பெயர் என்பதெல்லாம் கூடாது என்று மூக்கில் குத்திவிட்டார்கள். தேசவிரோத இயக்கம் என்று வேதவிற்பன்னர்களால் ஏசப்படும் திகவில் கூட சட்டப்படி மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகின்றது. ஆனால் தேசபக்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் பதிவு , உறுபினர் ஆவணம் என்று எதுவுமே கிடையாது . திராவிட இயக்கங்களைப் போன்று , ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்பைக் கொண்டதல்ல. அவ்வமைப்பிற்கு சட்டவிதிமுறைகளோ , உள்ளமைப்பு தேர்தல் முறைகளோ கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் நேரடி ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட அடையாளம் கிடையாது. ஆர்எஸ்எஸ் உளவியல் ரீதியாக உறுப்பினர்களை சேர்க்கும் அமைப்பு. மேலும் “பார்ப்பனிய தேசிய” ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் அரசாங்க அதிகாரிகளாக இருப்பதால் . அவர்களால் நேரிடையாக வேறோர் அமைப்பில் , அதுவும் அன்று காந்தியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர முடியாது. நேரடி உறுப்பினர் பதிவு முறை இல்லாததால், “காரியம்” முடிந்தவுடன், காரியகர்த்தாக்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கழட்டிவிட்டுவிடலாம். சட்டரீதியிலும் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிசிலப்பல காரணங்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்துவதில்லை. வெளிப்படையாகவோ , ரகசியமாகவோ ஒருவர் ஷாகாவில் பங்கேற்றாலோ அல்லது ஆர்எஸ்எஸ் கருத்தியல்களை பதிப்பித்தோ எழுதியோ , அதை முன்னிறுத்தி பின்புலத்தில் இயங்கினாலோ அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று தாராளமாக சொல்லலாம். அது எல்லாம் இருக்கட்டும், ஆர்எஸ்எஸ் ஆள் , என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது , ஆர்எஸ்எஸ் என்ன அவ்வளவு பயங்கரவாத அமைப்பா என்ன… 10 மோடியும் பட்டுப்புடவைகளும் கேள்வி:- அமெரிக்க குடியரசுத் தலைவரின் இல்லத்தரசிக்கு 100 பனராஸ் பட்டுப் புடவைகளை இந்திய நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்கள் பரிசளிக்கப் போகின்றாரமே? பதில்:- அது என்ன வட நாட்டு பனாரஸ் பட்டு மட்டும், அந்த நூறில் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் 10 , தர்மாவரம் பட்டுப்புடவைகள் 15 என்று வைத்துக் கொடுத்தால்தான் என்ன என்று துணுக்கு எழுத்தாளர்கள் போல துடுக்காய் எழுதலாம் என்றுதான் நினைத்தேன் அறிவார்ந்த சபையில், நக்கலடித்தாலும் தகவல்ப்பூர்வமாக அடிக்க வேண்டும் என்று கொஞ்சம் தேடியதில், வெளி நாட்டு அரசாங்கங்களிடம் இருந்து அமெரிக்க குடியரசுத்தலைவர்/குடும்பம் பரிசுபொருள் பெற அந்நாட்டின் காங்கிறஸின் அனுமதியைப் பெற வேண்டும். இருந்த போதிலும் 180 டாலர் மதிப்பிலான பொருட்களை தம் வசம் வைத்துக் கொள்ளலாம்.  இதை எல்லாவற்றையும் விட, அன்பளிப்பாக வந்த, தோலில் படும் எந்த ஒரு பொருளும் எவ்வளவு முக்கியமானவரிடமிருந்து வந்திருந்தாலும் அனுமதிக்கப்படாது. பட்டுப்புடவை தோலில் படும்தானே. ஒரு பட்டுப்புடவை ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கோடி ரூபாய். ஆக , எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க முதல் பெண்மணியால் பயன்படுத்தப்படாத ஒரு விசயத்தை எதற்கு செலவு செய்து கொடுப்பானேன். டிப்ளொமெடிக் பிரச்சினை, சட்டப்பிரச்சினை, அமெரிக்க அதிபரின் விமானம் வரை கூட பட்டுப்புடவைகள் போகுமா என்ற பாதுகாப்பு பிரச்சினை என்று ஏகப்பட்டது இருக்க, எதற்கு பட்டுப்புடவை விளம்பரம். 1. குஜராத் டெக்ஸ்டைல் பிராண்டுகளுக்கு விளம்பரம். 2. பட்டுப்புடவைகள் கொடுக்கப்பட்டதாக கணக்கு எழுதிக்கொள்ளலாம். இதைப் போன்ற சம்பவங்களை தடுக்கத்தான், மைனாரிட்டிகளுக்கான திமுக ஆட்சியின் பொழுது, புத்தகங்கள் மட்டுமே பரிசாக எடுத்துக்கொள்ளலாம் என்று கலைஞரால் உத்தாவு பிறப்பிக்கப்பட்டது. என்னைக் கேட்டால், ஆர் எஸ் எஸ் பதிப்பகங்கள் ஏதேனும் ஒன்று அச்சடித்து வைத்திருக்கும் மகாபாரதம், ராமாயனம், விமான சாஸ்திரம் பகவத் கீதை ஆகியவற்றின் மலிவு விலைப் பதிப்புகளைப் பரிசளித்துவிடலாம். ஒபாமா நாசா நூலகத்திற்கு பரிசளித்து அவர்களை மேலும் அறிவாளியாக்கலாம். 11 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- சமூக ஊடகங்கள் இல்லை என்றால் என்னவாகியிருக்கும் ? பதில் :- சமூக ஊடகங்கள் இல்லை என்றால் , தமிழ்ச்சூழலில் இத்தனை இலக்கிய எழுத்தாளர்கள், அவர்களுள் இத்தனை கோஷ்டிகள், அத்தனை கோஷ்டிகளின் பூசல்கள், கொலைவெறித்தாக்குதல் கிசுகிசுக்கள் போன்றவை 99.99% பாமர மக்களுக்கு தெரியாமலே போயிருந்திருக்கும். கேள்வி :- சாமியார்களின் ‘தில்லாலங்கடித்தனம்’ ஏன் அடிக்கடி வெளிப்பட்டுவிடுகின்றது ? பதில் :- ‘தான் கடவுள்’ என்று முட்டாள்களை நம்பவைப்பதில் பிரச்சினை இல்லை. மாறாக ‘தான் கடவுள்’ என்று தானே நம்ப ஆரம்பிக்கும் நொடியில் சாமியார்களின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. கேள்வி :- பார்ப்பனிய இந்து மதத்தின் சிறப்பு என்ன ? பதில் :- ஏனைய மதங்களில் போய் , நான் ஒரு கடவுளைக் கும்பிடுகின்றேன், சரியா தவறா என்று கேட்டால் , ‘நீ கும்பிடுவது கடவுளே இல்லை’ என்று நிராகரிப்பார்கள். பார்ப்பனிய இந்து மதத்தில், ‘உன் கடவுளும் என் கடவுளும் அண்ணன் தம்பி, நடுவில் வந்த இருண்ட காலத்தில் அதற்கான ஆதாரங்கள் அழிந்துவிட்டன’ என்று பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று உங்கள் கோவிலில் குடியேறிவிடுவார்கள். இவ்வளவு ஏன், இந்து மதத்துடன் ஸ்நான பிராப்தி கூட இல்லாத, ஆபிரகாமிய மதங்களின் இறைத் தூதர்கள் இயேசு , முகம்மது நபி பற்றி கூட ‘பவிஷ்ய புராணத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு சாரார் கிளம்பியிருக்கின்றனர். இன்னும் நூறாண்டுகளில் நான் கூட ஏதாவது ஆழ்வார் நாயன்மாராக சேர்க்கப்படலாம். கிளிமூக்காழ்வார் பெயர் நல்லாயிருக்கின்றதல்லவா ?   12 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- தமிழர்கள் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் பின் தங்கியிருக்கின்றனரா ? பதில் :- யார் சொன்னது, அப்படி எல்லாம் இல்லை. ஆஸ்கார் ரவிச்சந்திரன் , கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு தியேட்டர் தியேட்டராக தமிழ்நாட்டிலும் ஒவர்சீஸிலும் சுற்றிக் கொண்டிருக்க, ‘ஐ’ படத்தின் அதிகாரப்பூர்வமற்ற பிரதி இணையத்தில் மறுநாளே வந்தது. எப்படி என்று நோண்டினால் , அது தெலுங்குப் பிரதி. தெலுங்குப் பிரதியில் , அட்டகாசமாக ‘ஐ’ தமிழ் வடிவத்தின் ஒலிசேர்க்கையை கோர்த்திருக்கின்றனர் பைரைசி ஆட்கள். இணைய பைரைசியில் ‘ஐ’ படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரேயொரு பிரச்சினைதான், தெலுங்கு வடிவத்தில் பவர்ஸ்டார் காமெடி கிடையாது. ( தெலுங்கில் பவர்ஸ்டார் என்று சொல்லி காமெடி வைத்தால் அங்கு தியேட்டரை கொளுத்தி விடுவார்கள். அங்கு பவர்ஸ்டார் என்றால் சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண். ) இப்பொழுது சொல்லுங்கள் தமிழர்கள் தொழில் நுட்பத்தில் குறைந்தவர்களா. சினிமா என்றால் சி++ கூட கற்றுக்கொள்வான் தமிழன். கேள்வி :- ஜல்லிக்கட்டு பற்றி தங்கள் கருத்து ? பதில் :- நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும். அதில், பொம்மை காளையை அடக்குவதாக ஒரு விளையாட்டு இருக்கும். அதை இன்னும் மெருகேற்றி , சுவாரசியம் சேர்த்து, மக்கள் விரும்பும் விளையாட்டாக பரவலாக மாற்ற முடியும். பாரம்பரியத்திற்கு பாரம்பரியமும் ஆயிற்று. பாதுகாப்பிற்கு பாதுகாப்பும் ஆயிற்று. சாதி வேறுபாடின்றி எல்லோரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏறு தழுவலை எதிர்க்கும் பார்ப்பனர்கள் கூட விளையாட வருவார்கள். மேனகா காந்தியும் கோவித்துக் கொள்ள மாட்டார்.   13 பெருமாள் முருகன் - FAQ - ஏன் ? எதற்கு ? எப்படி ?  பெருமாள் முருகன் யார் ? – அவர் ஒரு சக எழுத்தாளர் அவர் எழுதிய எந்த நூல் குறித்து சர்ச்சை ? அவர் 2010ல் எழுதிய மாதொருபாகன் என்ற நூல் குறித்து சர்ச்சை. அது என்ன கதை ? திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஒரு தம்பதியினரின் (காளி, பொன்னா) கதை. இது நிஜ கதையா ? இல்லை. கற்பனை கதை. காளி மற்றும் அவன் மனைவி பொன்னா இருவரும் கற்பனை கதாபாத்திரங்களே பிறகு என்ன பிரச்சனை ? பிரச்சனை காளி மற்றும் பொன்னா பாத்திரங்களில் அல்ல. அந்த நூலின் முன்னுரையில் நூலின் ஆசிரியர் திருச்செங்கோட்டில் ஒரு பழக்கம் நிலவியதாக கூறுகிறார். அவர் ஆய்வில் அது குறித்து தெரியவந்ததாக கூறுகிறார். என்ன பழக்கம் ? அதாவது திருச்செங்கோட்டில் திருவிழா நடக்கும் போது ஒரு நாளில் (அதாவது நாளின் இரவில்) குழந்தை இல்லாத பெண்கள் தனியாக (அதாவது குடும்பத்தினருடன் அல்லாமல்) வந்து, ஏதாவது ஒரு ஆணுடன் (முன் பின் அறிமுகமில்லாதவராக கூட இருக்கலாம்) உடலுறவு வைத்துக்கொண்டு (அதிலும் பலர் திறந்த வெளியில் உடலுறவு வைத்துக்கொண்டு) அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வார்களாம். இது போல் பிறக்கும் குழந்தைகளை சாமி கொடுத்த குழந்தை என்பார்களாம். இப்படி ஒரு பழக்கம் இருந்ததா ? இல்லை. இப்படி ஒரு பழக்கம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. திருவிழாக்களின் போது அந்த உற்சாகத்தை பயன்படுத்தி ஒரு சிலர் சிறு சில்மிஷங்களில் ஈடுபடுவது நடந்துள்ளது. இது தவிர பாலியல் தொழில் தனியாக நடந்துள்ளது. அதை விடுத்து திருவிழாவிற்கு வரும் பெண்ணை எந்த ஆண் வேண்டுமானாலும் “கூப்பிடலாம்” என்பது அபத்தம் என்றால், குழந்தை இல்லாத பெண்கள், திருச்செங்கோடு திருவிழாவிற்கு சென்று முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் உறவு வைத்து குழந்தை பெற்றார்கள் என்பது அபத்தத்தின் உச்சம். குழந்தை வரம் வேண்டி கோவில் குளம் என்று செல்லும் அனைத்து பெண்களையும் ஒரு சேர அவமானப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இது புதினம் தானே, புனைவு தானே ? ஆமாம் இது புதினம் தான். இது புனைவு தான். ஆங்கில மொழிப்பெயர்ப்பில் புனைவு என்று  தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுவிட்டு, மூல தமிழ் நாவலில், ஏதோ வரலாற்று ஆய்வு நூல் போல் தனது புனைவை முன்னிறுத்தியிருக்கின்றார். முன்னுரையில் ஆசிரியர் இப்படி ஒரு பழக்கம் இருந்ததாக கூறியுள்ளது தானே பிரச்சனை.   [11]           [22]   இந்த நூலின் முன்னுரை மதத்தையோ, கோவிலையோ அசிங்கப்படுத்தவில்லை. கோயிலுக்கு செல்லும் அனைத்து பெண்களையும் அசிங்கப்படுத்துகிறது. 2010ல் எழுதிய நூலிற்கு 2014ல் ஏன் எதிர்ப்பு ? இது தான் முக்கிய விஷயம் எதிர்ப்பு நூலுக்கு அல்ல. எதிர்ப்பு பெருமாள் முருகனுக்கு அதற்கு மாதொருபாகன் ஒரு காரணம். அவ்வளவு தான் பெருமாள் முருகனை யார் எதிர்க்கிறார்கள் ? 2014ல் சாதி சங்கங்கள் எதிர்க்கிறார்கள் பெருமாள் முருகனை சாதி சங்கங்கள் 2014ல் ஏன் எதிர்க்கிறார்கள் ? பல காரணங்கள்அவர் சாதிய கொடுமைகளுக்கு எதிராக எழுதுகிறார். சாதியும் நானும் என்று 32 கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய நூலான பூக்குழியை தருமபுரி இளவரனுக்கு அர்ப்பணித்துள்ளார். அதை கண்ட பிறகு கொங்கு மண்டல சாதி சங்கங்கள் பெருமாள் முருகனுக்கு – அதாவது சாதிய எதிர்க்கும் பெருமாள்முருகனுக்கு – எதிராக திரண்டன. இந்த காரணத்தை நேரடியாக சொல்லாமல், 2010ல் அவர் எழுதிய நூலில் உள்ள பிரச்சனையை சொல்கிறார்கள். சாதி சங்கங்கள் எதிர்க்கின்றன என்றால் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் எங்கு உள்ளே வந்தது ? சாதி சங்கங்களின் பின் புலத்தில் இருப்பது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். சாதிய கட்டுமானத்தை இறுக பிடிப்பது தானே அவர்களின் நோக்கம். சாதியை ஆதரிப்பவர்களை அவர்கள் ஆதரிப்பார்கள். சாதிய எதிர்க்கும் பெருமாள் முருகன் போன்றவர்களை அவர்கள் எதிர்ப்பார்கள். ஆனால் நேரடியாக காரணத்தை கூற மாட்டார்கள். அவ்வளவு தான். மாதொருபாகன் நாவலில் பாலியல் வசனங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே? ஆமாம். இது போல் பல இலக்கியவாதிகளின் நூல்களும் பாலியல், முறைகேடான உறவு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றதே ? ஒழுங்காக, சுவாரசியமாக எழுத முடிந்தவர்கள் இது போல் எழுதுவதில்லை. அமரர் கல்கியை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது எழுத்துக்கள் இன்று படித்தால் கூட சுவரசியமாக உள்ளன. அவர் இது போல் மலிவு நுட்பங்களை கையாண்டதில்லை. கலைஞரை எடுத்துக்கொள்ளுங்கள். இது வரை லட்சக்கணக்கான பக்கங்களை எழுதியுள்ளார். அவரும் இது போல் செய்வதில்லை.ஆயிரக்கணக்கான நாவல்களை எழுதியுள்ள ராஜேஷ்குமாரும் இப்படி செய்வதில்லை.ஆனால் தங்கள் எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாத சிலர் தான் அப்படி எழுதினால் சில பிரதிகள் விற்கும் என்று இப்படி செய்கிறார்கள். எதிர்ப்பு மாதொருபாகனுக்கு அல்ல, பெருமாள் முருகனுக்கு என்று எப்படி நம்புவது? இதே செய்தியை ஜெமோ ஒரு நூலில் எழுதியுள்ளார்.இதை விட மோசமாக தனது ஊர் குறித்து ஜோ டி குருஸ் எழுதியுள்ளார்.அவர்களை எல்லாம் இந்த பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ். அடியாள் கும்பல் எதிர்க்கவில்லை. ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு எழுத்தாளர்கள். சாதியை ஆதரித்து எழுதுபவர்கள். எனவே அவர்களை இவர்கள் எதிர்ப்பதில்லை. இதை விட பல மடங்கு மோசமான அவர்களின் நூல்களை எரிப்பதில்லை. ஆனால் சாதியத்திற்கு எதிரான செயல்பாட்டில் இயங்கும் பெருமாள் முருகனை இவர்கள் எதிர்க்கிறார்கள் நாம் என்ன செய்ய வேண்டும்? மாதொருபாகனை ஆதரிக்க கூடாது. பெருமாள் முருகனை ஆதரிக்க வேண்டும் 14 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- சுபாஷ் சந்திரபோசை , சோவியத் தலைவர் ஸ்டாலின் தான் படுகொலை செய்தார் என்று உங்கள் பேராசான் ஸ்வாமி சொல்கின்றாரே ? பதில் :- பேராசான் ஸ்வாமி சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ,ஸ்டாலின் இறந்த 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகும் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா அவர்கள், சந்திரபோசை சந்தித்ததாகவும் உயிரோடு இருப்பதாகவும் சொன்னது எல்லாம் பொய்யா ? பேராசான் ஸ்வாமியின் நோக்கம், ரஷிய சர்வாதிகாரியை எதிர்ப்பதா, அல்லது உள்ளூர் ஆண்ட பரம்பரையினரை நைச்சியமாக வம்புக்கு இழுப்பதா. தெரியவில்லை. ஸ்வாமியை, தேவர் சமூக விழாக்களுக்கு அழைத்த நடிகர் கருணாஸ் போன்ற பெருந்தமிழர்கள்தான் கவனிக்கவேண்டும். கேள்வி: திராவிடத் தமிழர்கள் தங்கள் சாதிப்பெயரை உபயோகிக்க கூசுகிறார்கள். சாதியை வைத்து பிழைப்பு, அரசியல் நடத்தும் ஆட்கள் மட்டுமே சாதிப்பெயரை பயன்படுத்துகிறார்கள். பொது இடங்களில் சாதிப்புகழ் பேசும் ஆட்களைக் கூட அருவெறுப்பாக பார்க்கும் பழக்கம் தான் தமிழகத்தில் பொதுவாகவே நிலவுகிறது. ஆனால் பார்ப்பனர்கள் கூச்சமின்றி தங்கள் சாதிப்பெயரை பெயரோடு இணைத்துக் கொள்கிறார்கள். தமிழ் ப்ராமின்ஸ், proud tamil brahmins போன்ற பெயர்களில் அந்த சமூகத்தின் சாமானிய மக்களே கூட பல குழுக்களை நடத்தி தங்கள் சாதிப்பெருமைகளை பறைசாற்றிக் கொள்கிறார்கள். அலுவலகங்களில் கூட தாங்கள் யார் என்பதை காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இப்படி? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன கிளிமூக்கு அரக்கன்?  பதில்: பார்ப்பனர்கள் வடிவமைத்த வர்ணாசிரம அடுக்கில் பார்ப்பனர்கள் தங்களை முதல் இடத்தில் நிறுத்திக் கொண்டார்கள் என்பதால் அதை தக்கவைக்க தங்கள் சாதிப்பெயரையும் அவர்கள் விடாது பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் சாதி வெறி பிடித்த ஒரு சமூகம் இருக்கிறது என்றால் அது தமிழ் பேசும் பார்ப்பன சமூகம் தான். அவ்வளவு ஏன் சென்னையில் பல நிறுவனங்களின் கேண்டீன்களில் அசைவம் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது 4% மக்களுக்காக 96% மக்களின் உணவு தடை செய்யும் அளவிற்கு அந்த சமூகத்தின் சாமானியர்களுக்கு கூட சாதிவெறி அத்துமீறி இருக்கிறது. அவர்கள் வீடுகளை வாடகைக்கு விடும் கதையும் இதே போன்றதுதான். இந்த கலாச்சாரத்தை தான் காப்பாற்றவேண்டும் என பத்ரி போன்றவர்கள் கூக்குரலிடுகிறார்கள். எங்கே ஐயர், சாமி போன்ற தங்களின் அடையாளங்கள் மறைந்துவிடுமோ என்ற பயத்தில் தான் பத்ரி போன்றவர்கள் பதறுகிறார்கள். ‘அவங்களாம் இப்ப மாறிட்டாங்கப்பா,’ என இருண்ட உலகில் இருந்துகொண்டிருக்கும் திராவிடர்களுக்கு இந்த உண்மைகளை நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். நீங்களும் சொல்லுங்கள். முடிந்தவரை சாதி வெறியர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். ஆனால் சாதி வெறியர்களை EXPOSE செய்ய தயங்காதீர்கள். அவர்களை தூற்றாதீர்கள். ஆனால் கிண்டலும், கேலியும் மட்டும் செய்துகொண்டே இருங்கள். ஏனெனில் இந்த உலகில் கிண்டல், கேலி செய்ய தகுந்த ஒருவிஷயம் இருக்கிறது என்றால் அது சாதிவெறி தான். கேள்வி :- அரக்கரே, அவ்வப்பொழுது நல்ல கருத்துக்கள் எழுதினாலும் சந்தடிசாக்கில் திமுக சொம்புகள் போல, திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எழுதுகின்றீர்களே ஏன் ? பதில் :- திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதும் நல்ல கருத்துதானே. அது ஒருப்பக்கம் இருக்கட்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் அங்கொன்று இங்கொன்றுமாக தவறிழைப்பார்கள். அதைப் பிடித்துக் கொண்டு அவர்களை நான் விமர்சிக்க முடியும். திமுகவினரும் புள்ளி விபரங்களுடனும் தரவுகளுடனும் வந்து மல்லுக் கட்டி அரசின் நியாயத்தை நிருபிப்பார்கள். எனக்கும் சுவாரசியமாக இருக்கும். வாசக ரசிகர்களுக்கும் இந்தப் பக்கம் தகவல் களஞ்சியமாகும். மக்கள் முதல்வர் ஆட்சியில் இருக்கும் பொழுது, புள்ளி விபரம் என்றால் என்ன என்பது முதல்வருக்கும் அமைச்சர்களுக்குமே தெரியாது எனும்பொழுது இதில் எங்கு தொண்டர்களுக்கு தெரியப்போகின்றது . இணையத்தில் இருக்கும் முக்கால் வாசி அதிமுக தொண்டர்கள், பாஜகவின் பஜனை பாடுபவர்களாகவோ அல்லது போலித்தமிழ்த்தேசியம் பேசுபவர்களாகவோ இருந்துவிடுகின்றனர். எஞ்சியிருக்கும் அதிமுகவினர் கலைஞரை ‘நம்பியார்’ என்று நம்புகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால், புத்திசாலிகளுடன் சண்டை போடலாம் என்ற சுயநலத்தால் , திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எழுதுவது உங்களுக்கு சொம்படிப்பது போல தெரிகின்றது. கேள்வி :- நல்ல கருத்துக்களை எழுதுவது எளிதா ? துவேஷ கருத்துக்களை எழுதுவது எளிதா ? பதில் :- துவேஷக் கருத்துக்களை நற்கருத்துகள் போல எழுதுவது எளிது. கேள்வி :- நீங்கள் நகைச்சுவைப் பிரியர் என்பது தெரியும். நீங்கள் ரசிக்காத நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றனரா ? பதில் :- நடிகர் விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சிகளை மீள்பார்வை செய்யும் பொழுது, சிரிப்பே வராத பழைய ஒய். ஜி. மகேந்திரனின் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பதைப் போல இருக்கும். கேள்வி :- மக்களிடையே அறியப்படாத சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்களை ,தொடர்ந்து நீங்கள் நக்கல் அடிப்பது அவர்களுக்கு மேலும் பிரபலத்தைக் கொண்டு வந்து கொடுக்குமே ? பதில் :- சமூக ஊடகங்களில் ஒரு கட்டத்தில் பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் ஆகியோர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டனர். முகப்புப் படங்கள், நக்கல், கேலிகள் , கிண்டல்கள் என்று சமூக ஊடகங்கள் அதகளப்பட்டன. அந்த அதகளத்தினால் பவர் ஸ்டாரோ சாம் ஆண்டர்சனோ , ரஜினி , கமல் , விஜய், அஜீத் போன்றவர்களுக்கு போட்டியாக வந்துவிட்டனரா என்ன ? கேள்வி :- ஐயா ஒரு பிராது. அலட்டல் மன்னன் டான் அசோக் பக்கத்தில் ஒரு சிலர் உங்களை ரா’மய்யா என்கிறார்களே? உண்மையா ? பதில் :- பார்த்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். முன்பு பேராசான் ஸ்வாமியின் ஆள் என்றார்கள். இன்று ரா’மய்யாவா நடக்கட்டும் நடக்கட்டும். திருமுருகன் காந்தியையோ , உதயகுமாரையோ சீமானையோ , வினவு மருதய்யரையோ, ஐயன்மீர் நீங்கள் ரா’மய்யாவின் ஊழியர்களா என்று கேட்டால், அது உண்மையாக இருந்தாலும் அவர்கள் கோபப் படுவார்கள். உங்கள் குடும்பம், கலைஞரின் குடும்பம், பெரியாரின் பூர்விகம் கூட அவமதிக்கப்படும். ஆனால் என்னிடம் நீங்கள் வீம்பாக பொய்யாக கேட்டாலும் நான் கோபப் படமாட்டேன். “சென்ரல் கவர்ன்மெண்ட் ஜாப் ஜி ” என்று வீம்புக்கு உங்களையே என்னால் வெறுப்பேற்ற முடியும். எந்த ஓர் உளவு அமைப்புமே வெறும் கெட்டது மட்டுமே செய்பவை அல்ல. சமுதாயத்தில் சமநிலையை நிலைநிறுத்தவும் அவை தொடர்ந்து செயற்படும். இந்தியாவில் வெளிநாட்டு சேவைகளுக்காக RAW வும் உள்னாட்டு சேவைகளுக்காக IB உம் செயற்படுகின்றன.  முன்பொருமுறை நான் சொன்னதைப்போல தமிழ்நாடு மத்திய அரசின் பார்வையில் எப்பொழுதுமே வெளிநாடுதான் , அதனால் இங்கு ரா’ மய்யாவின் ஆட்டமே இருக்கும். உலகத்தில் எங்கு எது நடந்தாலும் இஸ்ரேலின் மொசாத் செய்திருக்கக் கூடும் என்று ஒரு தகவல் பரவும். மொசாத் செய்யாவிட்டாலும் கூட அவர்கள் அமைதியாக இருப்பார்கள்.மறுக்கமாட்டார்கள். மறுக்காதிருப்பதிலும் ஒரு ‘கெத்து’ இருக்கின்றது. அதைப்போல என்னை ரா’ மய்யா என்பவர்களுக்கு மறுப்பு சொல்லப்போவதில்லை. கேள்வி :- சாமியார்கள் – இறைத்தூதர்கள் – கடவுள்கள் ஒப்பிடுக ? பதில் :- அடிக்கடி தோன்றினால் சாமியார். ஆயிரம் ஆண்டுகளுக்கொரு முறை தோன்றினால் இறைத்தூதர். தோன்றவே இல்லை என்றால் கடவுள்.   15 இராஜபக்சே தோல்வி ஆயிரம் குறைகள் இருந்தாலும் வாக்கரசியல் மக்களாட்சியே இருப்பதில் சிறந்தது என்பதை உணர்ந்த ஈழ, வெள்ளவத்த, மலையகத் தமிழர்களுக்கு வாழ்த்துகள். பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றாலும், நடக்கும் பாதங்கள் குறையும். குறைந்த பட்சம், வல்லரசுகளுக்கு, இலங்கையில் சிறுபான்மையினர் ராஜபக்சேவின் கடும் வெறுப்பில் இருக்கின்றனர் என்பது தெரியவரும். இனியாவது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் பங்குனி 17, நாம் நாஜிக்கள், தமிழ் வரலாற்று அவியல் மையம் போன்ற துக்கிரி ஈழ நடிப்பு மையங்களுக்கு காசு எல்லாம் செலவளிக்காமல் , சிங்கள துக்கிரி அரசியல்வாதிகளுக்கு ஸ்பான்ஸர் செய்யுங்கள். பெரும்பான்மையை உடைத்தால் சிறுபான்மையினர் தொடர்ந்து நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கலாம். எடுத்துக் காட்டு வேண்டுமென்றால், இந்தியாவில் சிறுபான்மை பார்ப்பனர்கள் எப்படி பெரும்பான்மை சூத்திரர்களை தங்களுக்கு விசுவாசமாக வைத்திருக்கின்றனர் என்பதைக் கற்றறிந்து கொள்ளுங்கள். நேரடி அதிகாரத்தைவிட மறைமுக அதிகாரம் அதிக ருசி கொண்டது. அதை அறிவோம்.  கேள்வி :- ராஜபக்சே தோல்வியினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை ?பதில் :- ராஜபக்சேவின் இருப்பினால் தமிழகத்தின் ஈழ உதிரிக்கட்சிகள் காசு பணம் துட்டு மணி மணி என்று கொழுத்துப் போய் இருந்தனர். மோடி ஆதரவு பெற்று திருப்பதியில் வழிபட்ட, ராஜபக்சேவிற்கு தோல்வி என்று அவருக்கு தண்டனைக் காலம் ஆரம்பித்துவிட்டது. ஈழத் தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் சாட்சிக் காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்கள். 80% ராஜபகசே வை நிராகரித்த வாக்குகள்., தமிழகத்திலிருந்து கூச்சலிட்ட தேர்தல் புறக்கணிப்பையும் நிராகரித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களுக்கு வெள்ளவைத்த தமிழர்களுக்கு சீமானோ திருமுருகனோ இன்னபிற ஆண்ட பரம்பரை ஈழ ஆதரவாளர்களோ ஒரு பொருட்டல்ல காட்டப்பட்டுவிட்டது. (மன்மதன் அம்பு படத்தில் வருபவரைப் போன்ற சினிமா விரும்பி ஈழத்தமிழர்கள் விதிவிலக்குகள் இருக்கலாம் ) இனி ஹவாலா காசு வருவது நிற்கும்பொழுது , உள்ளூரில் தான் உண்டியல் குலுக்க வேண்டும். தமிழகத்தின் சக சமூக ஊடக பிரபலங்கள் சீமான், திருமுருகன் காந்தி போன்றோர் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். யோசித்துப் பாருங்கள், சீமானும் திருமுருகன் காந்தியும் மக்கள் பிரதமர், மக்கள் முதல்வர் ஆட்சி அக்கிரமங்களை எதிர்த்துப் பேசுகையில் எப்படியான மாற்றம் நிகழும் என்று. இந்த வகையில் ராஜபக்சேவின் தோல்வி தமிழகத்திற்கு நல்லதே. கேள்வி :- ராஜபக்சே தோல்வி எதைக் காட்டுகின்றது ? பதில் :- திருப்பதி சென்று வழிபட்டால் பதவி பறிபோகும் என்பதைக் காட்டுகின்றது. 16 “7000 வருடங்களுக்கு முன்னர் வேத கால இந்தியர்கள் விமானம் கண்டுபிடித்திருந்தார்கள்”. இந்த வரியில் இரண்டு செய்திகள் உள்ளன. 1. வேத கால இந்தியர்கள் விமானம் கண்டுபிடித்திருந்தார்கள்  2. 7000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வேத காலம் இருந்தது இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வேத கால இந்தியர்கள் விமானம் கண்டுபிடித்திருந்தார்கள் என்ற முதல் செய்தியை நம்பாதவர்கள் கூட 7000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வேத காலம் இருந்தது என்பதை நம்பி விடும் மிகப்பெரியஆபத்து உள்ளது  வேதகால கணிதம், வேதகால விமானம் என்று வேதவிற்பனையாளர்கள் விடும் அனைத்து புருடாக்களிலும், 5000,7000,9000 என்று இஷ்டத்திற்கு சொல்வதை நம் சாம்பார் தலையர்கள் அப்படியே நம்புகிறார்கள். (ஆனால் எனக்கு என்னமோ ஆயிரம், இரண்டாயிரம் , மூவாயிரம் என்றாலே பாண்டியராஜனின் பிம்பிளிக்கி பிளாப்பி மாமா பிஸ்கோத்து நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். https://www.youtube.com/watch?v=1ZXXoCpW_OM ) கி.மு .800 ஆம் ஆண்டு கைபர் வழியாக வந்த இந்த புரட்டு ஆசாமிகள் என்னவோ 7000 ஆண்டுகளாக தாங்கள் இந்தியாவில் இருப்பதாக மக்களை நம்ப வைத்துக்கொண்டிருப்பது மிகவும் ஆபத்தான விஷயம். விமானம் குறித்த புரட்டுகளை அம்பலப்படுத்தும் சக அரக்கர்கள், அதை விட இவர்கள் கூறும் இந்த மாமா பிஸ்கோத்து ஆண்டுகள் கணக்குக் குறித்த புரட்டுகளையும் அம்பலப்படுத்த வேண்டும் என்பது அரக்கனின் வேண்டுகோள். என்ன செய்வீர்களா செய்வீர்களா. கேள்வி :- இந்து ஞான மரபு என்றால் என்ன ? பதில் :- பார்ப்பனர் , அதன் பின்னர் ஷத்திரியர் அதற்கடுத்து வைசியர் நான்காவதாக சூத்திரர் ஐந்தாவதாக தீண்டப்படா பஞ்சமர். இந்த அடுக்குதான் இந்து ஞான மரபு. துவைதம் ,அத்வைதம் , சங்கரர், ஆதி சங்கரர், ஜெய்சங்கர், ஜெயேந்திரர் என்று எங்கு சுற்றினாலும் இந்து ஞான மரபின் மையக்கருத்து நான் உன்னை மிதிக்கிறேன். நீ ஒருவனை மிதிக்கலாம் என்று இங்குதான் வந்து நிற்கும் . யாரெல்லாம் இந்து ஞான மரபைப் போற்றுகின்றார்களோ அவர்களனைவரும் இந்த ஐந்தடுக்கைத் தூக்கிபிடிப்பவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் அதுவே மேன்மையான ஞான மரபு. கேள்வி :- மேற்கத்திய ஞானமரபுக்கும் இந்திய ஞான மரபுக்கும் உள்ள வேறுபாடு என்ன சார் ? பதில் :- அங்கே மேற்குலகில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் மனிதர்களாக இருந்தவர்களே என்று ஆய்ந்தறிவார்கள். இங்கே மனிதர்களை எல்லாம் புனிதர்களாக்கி முப்பத்து முக்கோடிக்கடவுள்கள் ஆக்குவார்கள். கேள்வி :- யுவன் சங்கர் ராஜா மீண்டும் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி காவிகள் விமர்சிக்கின்றனரே ? பதில் :- தர்மேந்திரா என்ற இந்தி நடிகர், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ய இந்து திருமணச்சட்டம் தடுத்ததால் , தான் விரும்பிய நடிகை ஹேமமாலினி ஐயங்காரை திருமணம் செய்து கொள்ள, இருவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டனர். இப்படியான சட்டத்தை – மதத்தை தங்களுக்காக வளைத்த சிறப்பான முன்னுதாரணம் இருக்கையில் யுவன் சங்கர் ராஜா செய்தது ஒன்றுமே இல்லை. தான் திருமணம் செய்தவர்களை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்த பின்னரே யுவன் சங்கர் இந்த திருமணம் செய்திருக்கின்றார். யுவன் ஐயராகவோ ஐயங்கராகவோ இருந்திருந்தால் காவிகள் எதுவும் சொல்லமாட்டார்கள். ஒடுக்கப்பட்ட தலித்தாக இருப்பதனாலும் , இந்தியாவில் ஒடுக்கப்படுகின்ற இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதாலும் காவிகளுக்கு அவலாக கிடைத்திருக்கின்றார்.   17 பேராசான் ஸ்வாமி கேள்வி :- இந்த புத்தாண்டிலாவது நீங்கள் ஏன் உங்கள் பேராசான் ஸ்வாமியை விமர்சிப்பதில்லை என்பதை சொல்லுங்களேன் ? பதில் :- பேராசான் ஸ்வாமி சகுனியைப் போன்றவர். எதிர்மறை சாமர்த்தியத்திற்காக சொல்லவில்லை. இந்திய தேசிய புத்தகமான மகாபாரதத்தில் சகுனி உண்மையில் கௌரவர்களை அழிக்க வேண்டும் என்றே அவர்களுடன் இருந்தார். அதைப் போல பேராசான் ஸ்வாமி யாருடன் எல்லாம் சேர்கின்றாரோ அவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள். ஸ்வாமி சேருமிடம் பாழாகும். மொராஜி தேசாய் – சரண் சிங் காலத்திலிருந்து நிலைமை இப்படித்தான். நிறைய மக்களுக்குத் தெரிந்திருக்காது. பிந்தரன்வாலே யுடன் சேர்ந்தார், பிந்தரன் வாலே படுகொலை செய்யப்பட்டார். 80 களின் தமிழ ஈழ ஆதரவு போராட்டங்களில் திமுக முன்னெடுத்த டெசோ கூட்டங்களில் அங்கம் வகித்தவர். ஒரு துளித் தயிர் போதாதா… டெசோ திரிந்துப்போனது. பின்னர் சந்திரசேகருடன் சேர்ந்தார். இந்தியாவே அடகு வைக்கப்பட்டது. சண்டை போட்ட மக்கள் முதல்வருடன் ‘மேன்மக்கள் மேன்மக்களே’ என்ற வர்ணாசிரமத் தர்மப்படி சேர்ந்தார். மத்திய அரசின் குடுமியைத் தனது வசம் வைத்திருந்த ஜெ. வைத் தூண்டிவிட்டு ஜெ.வின் அதிகாரப் பலத்தை சீர்குலைத்தார். ஒருவேளை மக்கள் முதல்வர் அன்று வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்காமல் இருந்திருந்தால் ஜெ. அசைக்க முடியாத தேசியத் தலைவராகியிருப்பார். இப்பொழுது ஸ்வாமி ஆர் எஸ் எஸ் – பிஜேபி உடன் சேர்ந்திருக்கின்றார். ஸ்வாமியின் ராசிப்படி ,ஸ்வாமியின் இருப்பு ஆர் எஸ் எஸ் – பிஜேபிக்கு நல்லதல்ல. அவர்களுக்கு கெடுதியான விசயங்கள் ஒட்டுமொத்த இந்திய ஒற்றுமைக்குத்தானெ நன்மை. ஆக ஸ்வாமி பிஜேபியின் அந்திமக் காலம் வரை அவர்களுடன் இருப்பது நமக்கு நல்லது. இந்த தொலைநோக்கு நன்மைகளின் காரணமாகத்தான் பேராசான் ஸ்வாமியை எதுவும் சொல்வதில்லை. 18 ஆர் எஸ் எஸ் - தமிழ் - பெண்கள் கேள்வி :- விந்திய மலைகளைக் கடந்து தமிழ் பரவ முயற்சிக்கும் ஆர் எஸ் எஸ்ஸின் முன்னெடுப்புகளை நீங்கள் விமர்சிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ? பதில் :- உங்கள் கூற்றுபடியே ஆர் எஸ் எஸ் தமிழ் வளர்க்கும் முயற்சிகளை ஆதரித்தால் என்னவாகும் என்பதற்கு இரண்டு சாம்பிள்கள். 1. கிழக்கு பதிப்பகம் போன்ற ஆர் எஸ் எஸ் மையங்கள், கிரந்த எழுத்துக்களும் தமிழே என்று இலக்கண நூற்களை எழுதி , முதுகைக் காட்டும் நடிகைகளின் கவர்ச்சி அட்டைப்படங்கள் போட்டு தமிழை மணிப்பிரவாளத் தமிழாக மாற்றுவார்கள்.   2. அதன் பின்னர் ஆர் எஸ் எஸின் தமிழ்க்காவியத்தலைவன் ஜெயமோகன் லத்தீன் எழுத்துருக்களைக் கொண்டு தமிழை எழுதுவதுதான் சிறப்பு என்று பரிந்துரைப்பார். காவி அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். தமிழ் எழுத்துருக்களில் இருந்து லத்தீன் எழுத்துருக்களுக்கு எழுத்து மாற்றம் செய்யப்படும் பொழுது வரலாறும் மாற்றம் செய்யப்படும்.  இவை எல்லாம் கற்பனை என்று என்னை குற்றம் சாட்டும் முன்னர், பெரியகோவில் மட்டும் கட்டி, வேத விற்பன்னர்களை மட்டும் வளர்த்த ராஜராஜன் காலத்தில் தமிழ் மாறிய வரலாறை அறிந்து கொள்ளுங்கள்.   கேள்வி :- சமூக நீதி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசினாலும் கூட காவிக்குழுமங்களின் பெண் அரசியல்வாதிகளை பெண் சிந்தனையாளர்களை நீங்கள் ஏன் விமர்சிப்பதில்லை ? பதில் :- 1. இந்தியச் சூழலில் பெண்கள் , அரசியலில் இப்பொழுதுதான் வெளியெ வருகின்றனர். காகங்களையே பார்த்திராது காலங்காலமாய் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் , வெளியில் வந்தவுடன் புறாக்களைப் பார்த்து வெள்ளை நிற காகங்கள் பறக்கின்றன என்று சொன்னால் பகடி செய்வது நியாயமில்லை. 2. சமூக நீதிக்கு எதிராக பேசும் பெண்களை எதிர்த்துப் பேசும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களை சிக்க வைக்க ‘எனி எல்ப் ஷாலினி’ கோஷ்டிகள் எப்பொழுதும் உலவிக் கொண்டிருக்கும். நாமே வலிய போய் ஆப்பில் ஏன் அமருவானேன். 3. பொது வாழ்க்கைக்கு குறிப்பாக அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்கு வரும் இளம் நடுத்தர பெண்களுக்கு தேவைப்படும் விளம்பரம் நான்கைந்து ஆண்களைப் போட்டு அடித்தால்தான் கிடைக்கும். நானே இப்பொழுதுதான் வளர்ந்துவருகின்றேன். நான் ஏதாவது சொல்லப்போக, அதைத் திரித்து தயிராக்கி நெய்யாக்கி எதற்கு நைய்யப் புடைக்கப்பட வேண்டும். இன்றைக்கு எனக்கு கைத்தட்டும் நீங்கள் அவர்களுக்கும் கைத்தட்டுவீர்கள். 4. ஆண்களுக்கு 40 வயதில் கிடைக்கும் அரசியல் முதிர்ச்சி , பெண்களுக்கு 55 – 60 வயதில்தான் கிடைக்கும். பெரும்பாலும் பெண்களுக்கு 55 – 60 வயதிற்கு பின்னர் அரசியலில் நிலைத்தன்மை இருக்கும், அப்பொழுது ஆண் பெண் இருவரும் சமமே. அதனால்தான் ஜெ. வை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்பொழுது விமர்சிக்கவும் செய்கின்றேன்.  இந்த நான்கு விதிகளை எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பதால் பெண் சிந்தனையாளர்களின் குறிப்பாக காவி எண்ணங்களை பிரதிபலிக்கும் பெண் சிந்தனையாளர்களின் கருத்துகள் முட்டாள்த்தனமாய் இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டேன். நீங்களும் கண்டுகொள்ளாதீர்கள். பிற்சேர்க்கை :- அப்படியும் காவிக் குழுமங்களின் பெண்களின் முட்டாள்த்தனமான கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நம் அரசியல் சார்ந்த பெண்களை தலைக்கனம் இல்லாமல் சமூக அறிவுடன் பதிலடி கொடுக்க தயாராக்குங்கள். 19 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- கேரளா ‘கேசரி’ ஆர்எஸ்எஸ் கட்டுரை ஒன்றில், கோட்சே, காந்தியை சுட்டதற்குப் பதிலாக நேருவை சுட்டிருக்கலாம் என்று எழுதப்பட்டிருக்கின்றதே ? பதில் :- வாழ்வதைப் பற்றி அவர்கள் என்றுதான் பேசப் போகின்றார்களோ! கேள்வி :- ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்து என்னதான் எதிர்பார்க்கின்றார்கள் ? பதில் :- தமிழ்ச்சினிமா மட்டுமே கேள்வி :- தமிழ்நாட்டில் கம்யூனிசத்தை மீட்பது எப்படி ? பதில் :- பொதுவுடைமை தத்துவங்களின் மேம்பட்ட வடிவம் தான் திராவிட அரசியல் கொள்கை. மனிதன் மீண்டும் குரங்காக வேண்டியதில்லை. கேள்வி :- பச்சோந்தியா நீர் ? பதில் :- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கின்றது. நான் பச்சோந்தி இல்லை, ஆனால் நீர். பாயும் இடத்தின் குணத்தை எடுத்துக் கொள்ளும் நீர். நீரும் நீரைப் போல இரு 20 ஏலம் - சிறுகதை  தொந்தியை தடவியவாறு சோகமாக அமர்ந்திருந்த வங்கி ஊழியரின் பக்கத்தில் இன்னொரு வயசான தாத்தா..சில இளைஞர்கள் ..ஒரு ஸ்கூல் பையன்..ஏழு வயது பெண்.. மற்றும் விவரிக்க இயலாத, நமது கதையில் இடம்பெறாத பெருங்கூட்டம் அவர்களின் பின்னும் முன்னும்… குழுமியிருந்த இடம் ரயில்வே டிக்கெட் கவுண்டர்… பெரியவர்கள் அவர்கள் கையில் இருந்த மஞ்சள் சீட்டை நொடிக்கொருதரம் பார்த்துக்கொண்டார்கள்.. மேலே இருந்த நியான் திரையில் தங்கள் எண் வரவேண்டுமே !! அந்த எண் வந்தால் மட்டும் போதாது என்பது தான் இன்னொரு கொடுமை… “கலி முத்திடுத்து..ரயில் டிக்கெட்டு ஏலம் தான் எடுக்கனும்னா என்ன கொடுமை ஓய் ? ஏலம் எடுக்க உள்ள போறதுக்கு தனி குலுக்கல். அதுக்கு பிறகு அங்க இவாள்ளாம் கேக்குற ஏலத்த விட அதிகம் கேக்கனுமே ? ” – என்றார் வங்கி ஊழியர். “இதுக்கு ப்ளைட்லயே போயிடலாம்..மாமி..” “I was expecting too much from Modi you know ! பின்னால் இருந்து சம்பந்தம் இல்லாத ஒரு குரல்…” 217.. நியான் விளக்குகள் ஒளிர்ந்தது… “டூ ஹண்டரட் ஸெவண்டீன் யாருப்பா ? ” எல்.ஈ.டி திரையில் எக்ஸ்ப்ரஸ் ரயில்களின் நேர அட்டவணைக்கு கீழே ஸ்க்ரோலர் வர ஆரம்பித்தது. முதலில் ஹிந்தியிலும், பிறகு தமிழிலும்.. “ஏலத்துக்கான குலுக்கலில் கலந்துகொள்ள எண் அழைக்கப்பட்டவர்கள் உடனே உங்கள் அனுமதி சீட்டை காட்டி அலுவலகத்துக்கு வரவில்லை எனில் அடுத்தவர் அழைக்கப்படுவார். மன்னிக்கவும்”.. 217… அழைப்பாளர் பொறுமை இழந்திருந்தார்… இரண்டு வினாடிகள்… 218.. தாத்தா முகத்தில் ப்ரகாஸம்..வந்துட்டேன்.. “இதோ வந்துட்டேன்…மகள் பிரசவத்துக்கு போகனும் டெல்லிக்கு…நானே ஒரு பென்ஷனர்….” நமது காதில் கேட்காத ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு காவலரிடம் அவரது மஞ்சள் காகிதத்தை கொடுத்து அலுவலக அறையில் நுழைந்தார். உள்ளே கசகசத்த புழுக்கத்தில் அவருக்கு ஏலம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ? அரசியல்வாதிகளும், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அதிக விலை கொடுத்து ஏலம் எடுப்பதால் இப்போதெல்லாம் பொதுமக்களுக்கு ரயில் டிக்கெட்டே கிடைப்பதில்லை. அரசின் CAG என்ற துறையினர் ரயில்வே பயண சீட்டுகளை ஏலம் விட்டால் அதிக லாபம் வரும் என்றும், இதுவரை ஏலம் விடாத காரணத்தால் 2,49,00,999 கோடி இழப்பு என்றும் சுட்டிக்காட்டியதன் பலன் – யார் கோர்ட் கேஸ் – என்று அலைவது – ரயில்வே மந்திரி அனைத்து பயண சீட்டுகளையும் ஏலம் விட உத்தரவிட்டார். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் இருந்த பயண சீட்டுகள் இப்போது ஏல முறையில் மட்டும் கிடைக்கின்றது. பொதுமக்களுக்கு இழப்பு தான். ஆனால் அமைச்சருக்கு அவர் பதவி தப்பியது. கட்சிக்கு அவப்பெயரில்லை. அது தானே முக்கியம் இன்றைய அரசியலில். 21 ரஜினி என்ற மாயப்பிம்பம் கேள்வி : கிளிமூக்கு அரக்கரே, அரசியலில் ரஜினி என்ற பிரச்சாரம் எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது கிளிமூக்கு அரக்கன் : அதுவொரு நெடிய வரலாறு பார்ப்பனியத்திற்கு எதிராக, மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இருக்கும் திமுகவை எம்.ஜி.ஆரை வைத்து ஒழித்து கட்டியாகிவிட்டது என்று பஜகோவிந்தங்கள் நினைத்துக்கொண்டிருந்த போது, 1989 திமுக ஆட்சிக்கு வந்தது. திமுகவின் ஊழலற்ற ஆட்சியை பஜகோவிந்தங்கள் மறுபடி கலைத்து அதிமுகவை வெற்றி பெறவைத்து ஜெயலலிதாவினை முதல்வராக்கினார்கள். அது மட்டும் போதாது. 30 சதவித திமுக ஓட்டுக்கள் இரண்டாக பிரிந்தால், ஒவ்வொரு தொகுதியிலும் 15 சதம் இருந்தால் திமுகவினால் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது என்று நினைத்தார்கள். வாக்கரை வைத்து திமுகவை உடைத்தார்கள். மேலும் பலவீனமாக்க முயன்றார்கள். திமுகவினை ஒழித்து கட்டி விட்டு அரசியல் அனுபவம் இல்லாத ஜெயலலிதாவை தங்கள் விருப்பப்படி இயக்கலாம் என்பதே அவர்களின் நினைப்பு மற்றும் எதிர்ப்பார்ப்பு. ஆனால் நடந்ததோ வேறு அதிமுக என்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதரவுடன் இயங்கிய ஒரு கட்சி கட்சியின் தலைமை தவிர கட்சியில் 99.99 சத உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினரே இதனால் பஜகோவிந்தங்களினால் நடுநிலை முக்காடு போட்டு திமுகவிற்கு எதிராக, அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிந்ததே தவிர, கட்சியை கைப்பற்ற முடியவில்லை இந்த நிலையில் தான் ஜெயலலிதா ஒரு மிகப்பெரிய சாதனை செய்தார். மக்கள் நலன் சார்ந்த ஒரு செயலை செய்தார் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பலன் பெரும் 69 சத இடப்பங்கீட்டு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தார் பஜகோவிந்தங்கள் எதை வேண்டுமானாலும் பொருத்துக்கொள்வார்கள். அவர்களின் அதிகாரம் பறிபோவதை மட்டும் அவர்களால் பொருத்துக்கொள்ளவே முடியாது. இன்றளவும் அவர்களின் முதல் எதிரி வி.பி.சிங் இரண்டாவது எதிரி கலைஞர் என்று இருப்பதற்கு காரணம் இந்த இரு தலைவர்களும் இடப்பங்கீட்டினை நடைமுறைப்படுத்தியது தான் வேலை வாய்ப்பில் இடப்பங்கீட்டினை நடைமுறை படுத்திய வி.பி.சிங் ஆட்சியை கலைத்து, இடப்பங்கீட்டினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி ஒரு தலைமுறையை அடிமை வாழ்வில் இருந்து அதிகாரி வாழ்விற்கு மாற்றிய (Blue Collar to White Collar Generation) கலைஞர் ஆட்சியை கலைத்து விட்டு அவர்களால் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா 69 சதம் இடப்பங்கீட்டை சட்டவடிவாக்கினால் பஜகோவிந்தகளுக்கு எவ்வளவு கோபம் வரும் பயங்கர கோபம் வந்தது கோபத்திற்கு தூபம் போட்ட மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் வாதாட சென்ற வக்கீல் விஜயன் ”வழுக்கி விழுந்து அவரது காலை முறித்துக்கொண்டது தான்”. அவ்வளவு தான் பஜகோவிந்தங்கள் பொங்கி எழுந்தார்கள் ஒரே நாளில் மொத்தமாக ஜெயலலிதாவிற்கு எதிராக திரும்பினார்கள் சுப்பிரமணியன் சாமியும் ஜெயலலிதாவிற்கு எதிராக மாறினார். ஜெயலலிதா பல கார்களுடன் பவனி வருவதை “அவர் ஐயங்கார் அல்ல, ஆயிரங்கார்” என்று சோ நக்கலடித்தார். அவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அப்படித்தான் இருந்தார். ஆனால் 69 %சத சட்டத்திற்கு பிறகு தான் சோ எதிரியானார். சமூக நீதி காத்த வீராங்கனை என்று வீரமணியால் புகழாரம் சூட்டப்பட்ட ஜெயலலிதா, அதே காரணத்தால் தான் அவ்வளவு நாளும் அவருக்கு ஆதரவளித்து வந்த மக்களுக்கு வேண்டாத நபரானர் 1991-96 காலக்கட்டத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்தன. சந்திரலேகா மேல் ஆசிட் தவறி விழுந்தது. மகாமக குளத்தில் சிலர் தவறி விழுந்தார்கள். அப்படி பட்ட பிரச்சனைகளில் கூட கள்ள மௌனம் காத்த பஜகோவிந்தங்களும், பஜகோவிந்த ஊடகங்களும், இந்துவும், இந்தியன் எக்ஸ்பிரசும், தினமலரும், தினமணியும், விகடனும், கல்கியும், சாவியும் ஒரே நாளில் தங்களின் ஊடக பலத்தை மொத்தமும் பிரயோகித்து ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள் – கட் அவுட் கலாச்சாரம் என்றார்கள். இடப்பங்கீட்டிற்கு ஆதரவாக கட்சியில் இருந்தவர்களை மன்னார்குடி மாபியா என்றார்கள். சோ ஏன் 1996 திமுக-த.மா.கா கூட்டணியை ஏற்படுத்தினார் என்று இன்று இணையத்தில் இயங்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது 69 இடப்பங்கீட்டிற்கு ஆதரவான ஜெயலலிதாவின் செயல்பாட்டால் தான் சோ அதிமுக தோற்க வேண்டும் என்று செயல்பட்டார் இது தான் முக்கிய விஷயம் இப்பொழுது தான், இந்த நேரத்தில் தான் மக்களிடம் அதிமுகவிற்கு எதிராக மனநிலை வரத்துவங்கியது அதிமுகவினை எதிர்க்கும் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது என்றால் என்ன செய்யலாம் என்று பஜகோவிந்தங்கள் சிந்தித்தனர் ஜெவையும் எதிர்க்க வேண்டும் திமுகவையும் ஆதரிக்க கூடாது என்ன செய்யலாம் கொண்டு வா ரஜினியை அதிமுக மேல் இருக்கும் வெறுப்பு ஓட்டுக்கள் திமுக பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக பஜகோவிந்தகளினால் 1991-96 காலக்கட்டத்தில் ஒருவாக்கப்பட்ட மிகைபிம்பம் தான் அரசியல்வாதி ரஜினி [[ அதே போல் அதிமுக மேல் இருக்கும் வெறுப்பு ஓட்டுக்கள் திமுக பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக பஜகோவிந்தகளினால் 2001-06 காலக்கட்டத்தில் ஒருவாக்கப்பட்ட மிகைபிம்பம் தான் அரசியல்வாதி விஜயகாந்த் அதிமுகவின் ஓட்டுக்களை அதே விஜயகாந்த பெறுகிறார் என்று அறிந்த கொண்டபிறகு இந்த பஜகோவிந்தங்கள் மற்றும் பஜகோவிந்த ஊடகங்கள் அவரை கேலி செய்து தூக்கி போட்டு மிதித்ததை நினைவில் கொள்ளுங்கள் ]] கண்டக்டரை பாலச்சந்தர் துணை நடிகராக்கினார் துணை நடிகரை பாரதிராஜா பரட்டை என்ற வில்லனாக ஆக்கினார் வில்லனை, கலைப்புலி தானு, கதாநாயகனாக்கினார் கதாநாயகனை எஸ்.பி.முத்துராமன் சூப்பர் ஸ்டாராக்கினார் அப்படி பட்ட திரையுலக சூப்பர் ஸ்டாரை பஜகோவிந்தங்கள் நிஜவுலகில் கோமாளியாக்கிய நிகழ்வு அப்பொழுது தான் நடந்தது அரசியல் ஆர்வம் இல்லாத ரஜினியும் முதலில் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதன் மூலம் தனது படங்களுக்கு சிறந்த வரவேற்பு இருப்பதை அவர் அறிந்து கொண்ட பிறகு அவரும் ஆட்டத்தில் இறங்கினார் தனது படங்களில் இதற்கு ஏற்ற வசனங்கள், பாடல்களை வைத்தார். அதன் மூலம் தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டார் கேள்வி : கிளிமூக்கு அரக்கரே, ரஜினி ஏன் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இதை தொடர்ந்து வருகிறார் கிளிமூக்கு அரக்கன் : ரஜினிக்கு இதனால் லாபம் தானே. அவரது படங்களுக்கு விளம்பரம். அவருக்கு வருமானம். அதனால் அவர் தொடர்கிறார் கேள்வி : கிளிமூக்கு அரக்கரே, ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் இன்று ரஜினியை ஆதரிக்கும் இந்த பஜகோவிந்தங்கள் அவரை ஆதரிப்பார்களா, அல்லது எதிர்ப்பார்களா ? கிளிமூக்கு அரக்கன் : ரஜினி அரசியலுக்கு வந்து தமிழ், மாநில சுயாட்சி, இடப்பங்கீடு என்று செயல்பட்டால் எதிர்ப்பார்கள். ரஜினி அரசியலுக்கு வந்து இந்தி, இந்துத்துவம், இந்திய தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட்டால் ஆதரிப்பார்க 22 தோனியும் கலைஞரும் கேள்வி :- அடேய் கிளிமூக்கா, தோனி ரிடையர்டு ஆனதுக்கு இவ்வளவு நக்கலடிக்கிற , உன் தலைவனை ரிடையர்டு ஆகச் சொல்லவேண்டியதுதானே ? பதில் :- நீங்கள் கலைஞரைத் திட்டுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அரசியலோ கிரிக்கெட்டோ இருப்பவர்களை விட நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அணிகளாலும் மக்களாலும் தொடர்ந்து விரும்பப்படுவர். உங்களுக்கு கிரிக்கெட் பற்றி அவ்வளவாக ஞானமில்லாமல் இருப்பது தவறில்லை. நீங்கள் என்னதான் தோனிக்காகப் பரிந்து பேசுவதைப் போலத் தெரிந்தாலும் காவிக்கொண்டை காட்டிக் கொடுத்துவிடுகின்றது. சூத்திரர்கள் காவிகளாக மாறிவிட்டால் எல்லாவற்றிலும் ஞானம் போய்விடும் போல. சிவநாரயன் சந்திரபால் என்ற மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் 40 ஐத் தாண்டியும் இன்னும் ஆடிக் கொண்டிருக்கின்றார். வெள்ளைக் காரன் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து கரிபீயன் நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்கப் போன சூத்திர பஞ்சமர் கூட்டத்தின் சந்ததி. அவர் மகன் உள்னாட்டு ஆணியில் சந்திரபாலுடன் ஆடி வருகின்றார். இன்னும் ஓராண்டில் தந்தையும் மகனும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைப் போல, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலும் , வேண்டாம் வேண்டாம் நான் ஏதாவது எழுதப் போக , திமுக சொம்பு என்று திட்டுவீர்கள். எதற்கு வம்பு, நானும் நடுநிலையாக வாழ்க மக்கள் முதல்வர், வாழ்க அமித்ஷா, வாழ்க ராஜபக்சே என்று சீமானின் தந்தி பாணியில் இருந்துவிடுகின்றேன். கேள்வி :- கிரிக்கெட் வீரர் தோனி , கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றுவிட்டாரே? பதில் :- டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து மட்டுமே ஒய்வு பெற்றிருக்கின்றார். பணம் கொழிக்கும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஒய்வுபெறவில்லை. அடுத்த ஏழு எட்டு மாதங்களுக்கு இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகள் எதுவும் கிடையாது. உலகக் கோப்பை பின்பு ஐபிஎல் ஆட்டங்கள், ஒருவேளை தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், 2015 ஆண்டு இறுதியில் வரும் டெஸ்ட் ஆட்டங்களில் பணிச்சுமை காரணமாக பங்கெடுத்து இருக்கமாட்டார். ஏற்கனவே 33 வயது, , 2016 யில் 35 ஆகிவிடும். அதன் பின்னர் ஒய்வு பெற்றால் என்ன பெறாவிட்டால் என்ன… அதனால்தான் இப்பொழுது ஒய்வு பெற்று , (தமிழகத்தில் ஆயிரெத்தெட்டு பிரச்சினைகள் இருக்கும்பொழுது இன்னும் எழவு பாட ராஜபக்சேவை அழைத்து தந்தி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்களின் தகிடுத்தத்தங்கள் போல ) இந்திய அணியின் படு சுமார் ஆட்டத்தையும் அதனால் கிடைத்திருக்கும் தோல்வியையும் ஒரே ஷாட்டில் மறக்கடிக்கவைத்துவிட்டார் தோனி. நேற்றுவரை தோனியை வைது கொண்டிருந்தவர்கள் இன்று ஆஹா ஓஹோ என்று புகழ்கின்றார்கள். மடை மாற்றுவதில் தமிழ் ஊடகங்களை வென்றுவிட்டார் தோனி. ஆயிரம் இருந்தாலும் தோனியும் தமிழ் ஊடகங்களும் அவாள் வளர்ப்பல்லவா … அப்படித்தான்.   23 எம்ஜிஆர் கால்பந்து ஆட்டத்தில் ஒரு அணி வெற்றி பெற பல அம்சங்கள் வேண்டும் கோல் கீப்பரும் தடுப்பாட்டக்காரர்களும் (Defenders) நன்றாக இருக்க வேண்டும் அவர்களிடமிருந்து பந்தை கடத்துபவரும் நன்றாக ஆட வேண்டும். . . .பந்தை கடத்தினால் போதுமா, அதை Strikers கொண்டு சென்று இலக்கை (Goal) அடைய வேண்டும் சமூக நீதி என்ற இலக்கை அடைய தமிழகத்தில் 20ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்டத்தில் பெரியார் தடுப்பாட்டம் ஆடினார். அவரை தாண்டி எந்த கொம்பனாலும் செல்ல முடியவில்லை மாடு பிடித்தவன் கையில் ஏடு பிடிக்க வைத்த காமராசரும், அண்ணாவும் அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்தார்கள் அப்படி ஏடு பிடித்தவர்க்களுக்கு ஆசிரியர் பணியும், எழுத்தர் பணியும் கலைஞர் வழங்கினார் முதல் தலைமுறை படித்து விட்ட பின் வந்த அவர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி கற்க வேண்டுமே அந்த இறுதி இலக்கை அடைய தொழிற்கல்வியில் சேர நேர்காணல் என்று தோளில் தடவி பார்த்து மதிப்பெண் போடும் (இன்று கூட கிரிக்கெட் அணியில் சேர தேர்வு செய்யும் முறை) நடைமுறையை மாற்றியவர் புரட்சித்தலைவர் தான். அது மட்டுமல்ல அனைவருக்கும் உணவு கிடைக்க மிக சிறப்பான பொது வினியூகத்திட்டத்தையும் புரட்சித்தலைவர் செயல்படுத்தினார் . இன்று 2014ல் நமது சமவயதினர் தண்டகாரண்யத்தில் தூப்பாக்கி தூக்கிக்கொண்டு இருக்கும் போது நீங்களும் நானும் பொட்டி தட்டிக்கொண்டு, முகநூலில் எழுதிக்கொண்டு இருப்பதில் இவர்களின் பங்கு இன்றியமையாதது, மகத்தானது — கேள்வி 1 (Thambirajan Ganesan ) :- அரக்கனே, மூக்காம்பிகை பக்தரல்லவா MGR. பதில் 1 :- ஆம். திருச்செந்தூர் முருகனின் பக்தரும் கூட கேள்வி 2 (அபு ரய்யான்) :- குலக்கல்வியை ஒழித்த பெரியார்… கல்வி கண் திறந்த …பெருந்தலைவர் காமராஜர்… பேரறிஞர் அண்ணா… கலைஞர் கருணாநிதி… இவர்களையெல்லாம் முந்திவிட்டு இந்த மகா நடிகன்  எம்ஜிஆர் எப்படி மகான் ஆனார் அரக்கரே…???? பதில் 2 :- அவர்களை எல்லாம் முந்தவில்லை. இவர்கள் அனைவரின் பங்கை விடவும் எம்.ஜி.ஆர் அவர்களின் பங்கு குறைவுதான். அவர் செய்த சில நல்ல விஷயங்களை குறிப்பிட்டோம் கேள்வி 3 (கொக்கரக்கோ சௌம்யன்) :- தொழிற்கல்விக்கு நம்மவர்கள் செல்வதற்கு மிகப் பெரும் தடையாக இருந்தது எண்ட்ரன்ஸ். அதை எம் ஜி ஆர் காலம் வரை பார்ப்பனர்களின் அறிவுரைப்படி கட்டாயமாக அமல்படுத்தினார். திமுக அதை நீக்க எவ்வளவோ போராட்டங்களை முன்னெடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழிற்கல்விக்கான எண்ட்ரன்ஸ் எக்ஸாமை நீக்குவோம் என்று கலைஞர் அறிவித்தார். பதில் 3 :- இதற்கு சற்று விரிவாக பதில் தருகிறேன் அரசு கல்லூரிகளில் தொழிற்கல்வி (மருத்துவம், பொறியியல்) சேர்வதற்கு மூன்று பல வகை நடைமுறைகள் 1. பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் மட்டும் 2. பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் ம்ற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டும் 3. நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டும் 4. நேர்காணல் – இது தான் ஜீவா படத்தில் காட்டுவது போல் தோளை தடவி பார்த்து மதிப்பெண் போடும் முறை இதில் பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் மட்டும் என்ற முறை தான் ஏழைகளுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிறந்தது என்பதில் கொக்கரக்கோ சௌம்யன் அரக்கன் கூறுவது சரிதான். அது தான் கிளிமூக்கு அரக்கனின் கருத்தும் கூட அதே போல் மதிப்பெண்கள் மட்டும் பார்க்கும் முறையா, நுழைவுத்தேர்வா என்றால் மதிப்பெண்கள் மட்டும் பார்க்கும் முறைதான் ஏழைகளுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிறந்தது அதே போல் நேர்காணலா நுழைவுத்தேர்வா என்றால் நுழைவுத்தேர்வு முறைதான் ஏழைகளுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிறந்தது ஆனால் இதில் மிகவும் மோசமான நடைமுறை – அதாவது ஏழைகளுக்கு மோசமான, கிராமப்புற மக்களுக்கு மோசமான, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மோசமான – என்னவென்றால் அது நேர்காணல் தான். (ஆனால் இந்த நேர்காணல் பஜகோவிந்தகளுக்கு நல்ல நடைமுறை) இங்கு நாம் புரிந்த கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன வென்றால் நுழைவுத்தேர்வு என்பது பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் மட்டும் பார்க்கும் முறையை விட மோசமான முறை. ஆனால் நுழைவுத்தேர்வு என்பது நேர்காணலை விட நல்ல முறை எம்.ஜி.ஆர் அவர்கள் நேர்காணலில் இருந்து நுழைவுத்தேர்விற்கு மாற்றினார். அதாவது மிக மோசமான நடைமுறையில் இருந்து சுமாரான ஒரு நடைமுறைக்கு மாற்றினாரே தவிர மதிப்பெண்கள் மட்டும் பார்க்கும் நல்லமுறையில் இருந்து சுமாரான நுழைவுத்தேர்வு முறைக்கு மாற்றவில்லை எம் ஜி ஆர் காலம் வரை பார்ப்பனர்களின் அறிவுரைப்படி கட்டாயமாக அமல்படுத்தினார் என்பது தவறு. காரணம் அவர் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்திய போது அதை பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். காரணம் அதை விட அவர்களுக்கு வசதியாக இருந்த நேர்காணல் முறையை அல்லவா எம்.ஜி.ஆர் மாற்றினார். நுழைவுத்தேர்வை எதிர்ப்பது சரிதான் ஆனால் நுழைவுத்தேர்விற்கு மாற்றாக பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்கள் மட்டும் என்ற முறை முன்வைக்கப்படவேண்டுமே தவிர நேர்காணல் என்ற முறை முன்வைக்கப்படக்கூடாது கேள்வி 4 :- அப்படி என்றால் எம்.ஜி.ஆர் பார்ப்பனர்களின் அறிவுரைப்படி எதையும் செய்யவில்லையா பதில் 4 :- இல்லை. பல விஷயங்களை அவர் பார்ப்பனர்களின் அறிவுரைப்படி செய்தார் கேள்வி 5 :- எம்.ஜி.ஆர் பார்ப்பனர்களின் அறிவுரைப்படி எதையும் செய்தவை என்ன ? பதில் 5 :- நிறைய விஷயங்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கிருமி லேயர் (தேர்தலில் தோற்ற பிறகு இதை நீக்கினார்) புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தது அப்புறம், முக்கியமாக, தனிக்கட்சி ஆரம்பித்தது ‪#‎கடைசி‬ பதில் புரியவில்லை என்றால் கேளுங்கள் ‪#‎முதல்‬ பதில் புரியவில்லை என்றால் கேட்காதீர்கள். 24 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- பார்ப்பனியம் பேசும் பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்கின்றீர்களே? சாதியம் பேசும் இடை சாதியினரையோ கடை சாதியினரையோ நீங்களும் உங்கள் முரட்டுக் கிழவன் பெரியாரின் கூட்டமும் ஏன் விமர்சிப்பதில்லை ? பதில் :- சாதியம் பேசும் வன்னியரோ தேவரோ கவுண்டரோ , வீர வன்னிய ஷத்ரியன் , முக்குலத்து சிங்கம், கொங்கு நாட்டு கவுண்டன், பாண்டிய மள்ளர் பரம்பரை என்று வெளிப்படையாகவே பேசுவார்கள். வெளிப்படையாக இருப்பதால் அவர்களை எளிதாக இனம் கண்டுகொள்ள முடிந்து நிராகரிக்கவோ திருத்தவோ முடியும். பார்ப்பனியம் பேசும் பார்ப்பனர்கள் நடுநிலை அடையாளங்களுடன் வந்து சூட்சுமமாக இந்து தர்மங்களைத் தாங்கிப் பிடிப்பதைப் போல பார்ப்பனியம் பேசிவிட்டு போய்விடுவார்கள். சங்கராச்சாரியார் போல நேரிடையாக மனுதர்மம் வர்ணாசிரமம் பேசிவிட்டுப் போனால் பிரச்சினையே இல்லை.But , நாட்டுக்கொரு நல்லவனைப் போல நடித்துவிட்டு நைச்சியமாக ‘சாதி வன்கொடுமை சட்டம்’ பார்ப்பனர்களுக்கும் தரவேண்டும் என்று பேசுவார்கள் பாருங்கள். அதுதான் விஷமமே. கேள்வி :- நாம் தமிழர் கட்சி தி.நகர் வரை சென்று ஏழுமலையானிடம் ராஜபக்சே வரக்கூடாது என்று முறையிட்டதை ஏன் உங்கள் அரக்கர் கூட்டம் கேலி செய்தது ? பதில் :- முதலில் தியாகராயர் நகர் என்று முழுமையாக சொல்லுங்கள். தியாகராயர் நகரை, தி. நகர் என்று சுருக்கியவர்கள் ம.பூர் காரர்களும் தி.கேணி காரர்களும், காரணம் உங்களுக்கேத் தெரியும். விசயத்திற்கு வருவோம். நான் இவ்விசயத்தில் சீமானை கேலி செய்ய மாட்டேன். ராஜபக்சேவை எதிர்ப்பது என்பது ஓர் அடையாளப் போராட்டம் அதை திருப்பதியில் செய்தால் என்ன, தியாகராயர் நகரில் செய்தால் என்ன ? அந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் மத்திய அரசாங்கத்தை எதிர்க்க, போஸ்ட் ஆபிஸ் முன்னே கோஷம் போடுவார்கள். அதைப்போலத்தான் சீமானும் செய்திருக்கின்றார், தவறில்லை. எஞ்சி இருக்கும் நூறு நூற்றம்பது பால்மனம் மாறாத மீசையரும்பாத சிறுவர்களை அழைத்துக் கொண்டு வடுக ‘போயேறி’ தேசத்திற்கு சென்று எதற்கு மனவாடுகளிடம் அடிவாங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ராஜபக்சே பிலிப்பைன்ஸ் போனார், தாய்லாந்து போனார் என்பதைப் போல ஆந்திரப்பிரதேசம் போனார் மத்தியப்பிரதேசம் போனார் என்று நினைக்கவேண்டும். இவையெல்லாம் உணர்வுப்பூர்வமாக நமக்கு வெளிநாடுகள்தானே. கேள்வி :- சீமான் திரும்பவும் திமுகவை வேரோடு அழிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறாரே? பதில் :- முன்பு 2009-2010 களில் அவர் இதேப்போல் கதறிய வீடியோக்களைப் பார்க்கையில் ஒருவேளை செய்துவிடுவாரோ என்ற பயமிருந்தது. இப்போழுதேல்லாம் அவர் புலம்பும் பொழுது சின்னத்தம்பி படத்தில் வரும் ‘எனக்குக் கல்யாணம் எனக்குக் கல்யாணம்’ காட்சித்தான் நினைவுக்கு வருகின்றது. கேள்வி :- அரக்கனே, உங்களிடம் உங்களுக்கே பிடித்தவை எவை எவை ? பதில் :- சுய எள்ளலும் சுயத்தம்பட்டமும். கேள்வி :- மோடி அரசு உத்தேசித்திருக்கும் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தால் என்னவாகும் ? பதில் :- மேற்கத்திய நாடுகளில் இருந்தபடி , விரதம் இருந்து ‘மோடி’ வரவேண்டும் என்று நினைத்த விராட் ‘ஹிந்துக்கள்’ மந்தை மந்தையாக வேறு மதங்களுக்கு மாறி அகதி ஸ்டேடஸ் வாங்கி பின்னர் அந்த அந்த நாட்டு குடிமக்கள் ஆகிவிடுவார்கள். கேள்வி :- அரக்கரே, கமல், ரஜினி ஒப்பிடுக கிளிமூக்கு அரக்கன் : இருபது வருடங்களுக்கு பிறகு மக்களுக்கு புரியக்கூடிய படங்களை தந்தால் அது கமல். உதாரணம் : ராஜபார்வை, குணா, ஆளவந்தான், அன்பே சிவம் வருடங்களுக்கு முன்னர் உள்ள அளவிற்கு, அதாவது 1980களில் எடுக்கப்பட்ட படங்களை போல் 2014ல் எடுத்தால் அது ரஜினி. கேள்வி :- ‘லிங்கா’ படத்தை எந்த காழ்ப்புணர்வுமின்றி விமர்சனம் செய்யுங்களேன் ? பதில் :- மின்சாரமில்லை. இல்லாத மின்சாரத்திற்கு ஷாக் அடிக்கும் கட்டணம். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய ‘ஷாக்கிற்கே’ ஷாக் கொடுத்த நரசிம்மா எதுவும் பேசுவதில்லை. மக்கள் முதல்வர், ஐபிஎஸ் முதல்வர், ஐஏஸ் முதல்வர், சாஸ்திரிபவன் முதல்வர் , பன்னீர் செல்வம் என்று பல முதல்வர்கள், யாரிடம் முறையிடுவது என்றும் தெரியவில்லை. மந்திரிகளிடம் போனால் மனைவிகளைக் கேட்கின்றார்கள். கேட்க வேண்டிய ஊடகங்களும் பஜனை கோஷ்டிகளாகமாறிவிட்டன. விலைவாசியை விடுங்கள். தாய் மொழியைப் பேசக்கூடாது, பிடித்த சாமியைக் கும்பிடக்கூடாது என்று சட்டங்கள் வேறு வரப்போகின்றன. தலைக்கு மேலே வெள்ளம் போய், இப்படி மக்கள் மூச்சுவிடக் கூட முடியாத அளவில் நெருக்குதலில் இருக்கும்பொழுது இருக்கும் ஒரே ஆறுதல் சினிமா. ஆறுதலில் மிகப்பெரிய ஆறுதல் ரஜினி சினிமா. மக்கள் துயரங்களில் இருந்து கொஞ்ச நேரமாவது விடுதலை பெற ரஜினி சினிமா லிங்கா பார்க்கலாம் . கேள்வி :- பார்ப்பனிய அடக்குமுறைகளை முன்னெடுக்கும் பார்ப்பனர்களை ஆதரிக்கும் சூத்திரர் / பஞ்சமர் பற்றி ? பதில் :- பாஷா படத்து விஜயகுமார் தான் நினைவுக்கு வருகின்றது.     25 ஜெயமோகன் - பத்ரி ஆர் எஸ் எஸ் கிழக்கு பதிப்பக அதிபரும் “தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக” அதிகம் விமர்சிக்கப்பட்ட, இன்னும் தட்டச்சு செய்யப்படுவை வேறெங்கோ சேமிக்கப்படுகின்றனவோ என்ற அந்த ஐயப்பாடு தீராத தமிழ்த்தட்டச்சு மென்பொருளை இலவசமாக தருபவருமான பத்ரி சேஷாத்ரி தான் தமிழ்ப்பார்ப்பனர் என்பதை ஆவணப்பூர்வமாக வெளிப்படுத்தி, என்னைப் போன்ற அரக்கர்கள் இதுநாள் வரை விமர்சித்தது எல்லாம் உண்மை என்று நிருபித்துவிட்டார். விஷயம் புரியாதவர்கள், அவர் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையை படித்துப்பாருங்கள். சூத்திரர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை கொடுமைப்படுத்துகின்றனராம் என்பதை நீட்டி முழக்கி எழுதியிருக்கின்றார். நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் … ராஜா வேஷம் கலைஞ்சிப்போச்சு டும் டும். ஐ யாம் ஹேப்பி …. கேள்வி :- பத்ரி சேஷாத்ரியின் ‘பார்ப்பனர்களை தமிழர்கள்’ கொடுமைப் படுத்துகின்றனர் என்ற பொருளிலான விஷமக் கட்டுரை பார்ப்பனர்களின் மேலான வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா ? பதில் :- வெறுப்புணர்வு இல்லை. பார்ப்பனரல்லாதவர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கின்றது. கேள்வி :- ஜெயமோகனின் பத்ரி ஆதரவு கட்டுரையை வாசித்தீர்களா ? பதில் :- ஒப்பிட்டு நோக்குகையில் பத்ரியின் கட்டுரையிலேயே பார்ப்பன ஆதரவு குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ஜெயமோகன் பின்னி பெடலெடுத்திருக்கின்றார். இதுதான் வாய்ப்பு என்று இம்சை அரசன் வடிவேலுவைப் புகழ்ந்துபாடும் ஓணாண்டி புலவராய் கலக்கி விட்டார் ஜெயமோகன். அடுத்த 10,000 பக்க புத்தகத்தை மோகன் பகவத் தலைமையில் அமித்ஷா நிச்சயம் வெளியிடுவார். ஜெயமோகன் அரசாங்க வேலையில் இருந்தபொழுது (இப்பொழுதும் ஆர் எஸ் எஸ் அரசாங்க ஊழியராகத்தானெ இருக்கின்றார்) பல பார்ப்பன அதிகாரிகளை மற்றவர்கள் கொடுமைப்படுத்தியதைப் பார்த்து மனம் குமுறியிருக்கின்றாராம். ‘நீர் எப்படி டிரான்ஸ்பர் வாங்கிடுவீர் பார்த்துருவோம் வோய் ” என்று இடைசாதி தலித் குமாஸ்தாக்களை மிரட்டிய பார்ப்பன அதிகாரிகளை நான் கண்கூடாகப் பார்த்திருக்கின்றேன். ஒடுக்கப்பட்டோர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் வாங்க, பார்ப்பன மானேஜர்களிடம் எப்படி கெஞ்ச வேண்டும் என்பதை தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் ஜெயமோகன். இன்றைய ஐடி இளைஞர்களைக் கேட்டால் சொல்வார்கள், தாங்கள் எப்படி ஆன் சைட் வாய்ப்புகளிலும் இன்க்ரிமெண்டுகளிலும் எப்படி வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்று கதை கதையாய் சொல்வார்கள். தலித்துகள் வீட்டுக்கு வந்தால் கன்வீனியன்ஸ் என்ற பெயரில் பேப்பர் பிளேட்டுகளில் சாப்பிடத் தரும் பார்ப்பன அதிகாரிகளை நானறிவேன். ‘சைவமாக இருந்தாலும்’ தோளைத் தொடாமல் சென்னையில் வீடு கிடைக்காது என்பதை சினிமாக்காரர் ஜெயமோகன் அறிய வாய்ப்பில்லை. ஐஐடியில் பார்ப்பன பேராசிரியர்கள் தலித் , இடைசாதி மாணவர்களை எப்படி நோகடிப்பார்கள் என்பதை, ஐஐடியில் புரஜெக்ட் அசிஸ்டெண்டுகளாக இருந்தபடி வினவில் தீர்க்கமாக எழுதும் மகஇக தோழர்களைக் கேட்டுப்பாருங்கள் மிஸ்டர் ஜெயமோகன். வன்முறை என்பது ரத்தத்தில் தோய்த்து மட்டும் எடுபதல்ல, சொற்களிலும் இயலாமையில் கொண்டு போய் நிறுத்துவதிலும் discrimination by rules, make rules to discriminate, கல்வி நிலையங்களில் emotional isolation என்ற தந்திரங்களிலும் செய்யலாம். முதலில் ‘பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே’ சூத்திர ஞான மரபின் உவமையை உண்மையாக்குவதைப் போல தனது கருத்துக்களுக்கு தன்னிடமிருந்தே ரெபரன்ஸ் கொடுப்பதை நிறுத்துங்கள். இந்தக் கட்டுரையில் ஒன்றிற்கு மட்டும் ஜெயமோகனைப் பாராட்ட வேண்டும் ‘ பிராய்டியன் ஸ்லிப் ‘ ஆக, ஜெயமோகன் தான் எப்படி பார்ப்பனவீட்டுப் பெண்களை பார்க்கின்றார் , பார்க்க நினைக்கின்றார் என்பதையும் மனம் விட்டு சொல்லியிருக்கின்றார். நிஜத்தில் ஜெயமோகனின் கற்பனை சல்லாப உலகத்தில் இருப்பதைப் போல கிடையாது. உண்மையில் எனக்குத்தெரிந்த அரக்கர்கள் எல்லாம் பார்ப்பனப் பெண்களை மட்டுமல்ல, எல்லா சாதிப் பெண்களையும் கண்ணியமாகத்தான் நடத்துகின்றனர். பார்ப்பனர்களை யாரும் விரட்டவும் இல்லை. விரட்டவும் முடியாது. அவர்களாகவே அதிகார மையங்களை நோக்கி நகர்ந்தார்கள் , நகர்கின்றார்கள், நகர்வார்கள் கடவுள் / மன்னர் சார்ந்த பொருளாதாரம், . வேளாண் பொருளாதாரம் , கனரக தொழிற்சார்ந்த பொருளாதாரம் , y2k வில் ஆரம்பித்த மென்பொருள் சார்ந்த பொருளாதாரம் ,ஆகியன உச்சத்தில் இருந்தபொழுது உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் அவர்களே. ஜெயமோகனின் பிரச்சினையே தனது நாவல்களில் எழுத வேண்டிய கற்பனைகளை எல்லாம் நிகழ்கால வரலாறாக நிறுவ முயல்கின்றார். ராணி காமிக்ஸ் நாவல்களில் செவ்விந்தியர்களை வில்லனாக காட்டுவார்கள். ராணி காமிக்ஸ் நாவல் நன்றாகத்தான் இருக்கும் அதற்காக, நாம் வெள்ளைக்கார ஐரோப்பியர்கள் உன்னதமானவர்கள் என்று நம்பிவிட மாட்டோம் தானே . அதைப்போலத்தான் ஜெயமோகனின் நிகழ்கால புனைவுகளும். வார்த்தைகளுக்காக வாசிபோம். அதில் இருக்கும் வன்மங்களை அறிந்து அவர் சொல்லும் 99% பொய்யுரைகளை குப்பையில் போட்டுவிடுவோம். உலகமொழிகளில் தமிழில் மட்டுமே பொய்யாக எழுதினாலும் உண்மையைப் போன்றே இருக்கும். அதனால்தான் ஜெயமோகன் போன்றவர்கள் இன்னும் தமிழுலகில் கண்ணுக்குத் தெரிகின்றனர். மிஸ்டர் ஜெயமோகன் , கண்டிருக்கின்றேன் பார்த்திருக்கின்றேன், கேட்டிருக்கின்றேன் , கிறேன் , கின்றேன் , ஆநின்றேன் என்றெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராத அரசியலுக்காக சிரமப்படாதீர்கள். உங்களுக்கு எளிதாக தோதாக இருக்கும் சமஸ்கிருதத்தில் இருக்கும் கோடிக்கணக்கான புனைவு வரலாறுகளை தமிழுக்கு டப்பிங் செய்யுங்கள். தேனாண்டாள் பிலிம்ஸிற்கு இணையாக உங்களால் ஜெயிக்க முடியும். விளம்பரத்திற்காக இளையராஜாவை அழையுங்கள். கமலஹாசனை அழையுங்கள். அவர்களுக்காக உங்களுக்குக் கூட்டம் கூடும். 26 திராவிட சுவிசேஷம் கலைஞர் சம்பந்தப்பட்ட எந்த விசயத்திலும் ஒரு பொது நன்மை இருக்கும். கலைஞரின் நீண்ட கால நண்பரும், இரண்டாவது முறையாக உலகின் ஒரே ஒரு தமிழ் அரசாங்கத்தின் முதலமைச்சராக இருப்பவருமான திரு. பன்னீர் செல்வம், சட்டமன்றத்தில் சக்கர நாற்காலிகள் சென்றுவருவதற்கான வசதிகளை, கலைஞர் உள்ளே வந்து மன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசக் கூடாது என்பதற்காக வீம்பாக அடிப்படை உரிமையை மறுத்து இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த பிரச்சினையினால் ஒரு நன்மை விளைந்திருக்கின்றது. அந்த நன்மை என்னவெனில் , சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எதுவுமே கிடையாது , சட்டமன்றத்தில் மட்டுமல்ல , இந்திய நாடாளுமன்றத்திலும் கூட கிடையாது என்பது சாமானிய மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது. தேசிய அளவில் விவாதிக்கப்படுகின்றது.  முந்தைய திமுக அரசாங்கம் என்ன செய்தது, அவர்கள் காலத்தில் வசதிகள் செய்து தந்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் தான் அனைத்து வசதிகளையும் கொண்டு நவீன சட்டமன்ற வளாகத்தைக் கட்டினார்களே. பொது – அரசாங்க கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் சட்டப்படி உறுதி செய்ப்பட்டுள்ளனவா என்பதை மறு ஆய்வு செய்ய கலைஞரின் பிரச்சினை மக்களை , அக்கறையாளர்களை தூண்டியிருக்கின்றது என்பது ஒரு சிறப்பான விசயமே. கலைஞர் மக்கள் மன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசினாலும் மக்களுக்கு நன்மை, அவர் மக்கள் மன்றத்திற்கு வெளியே தனது பிரச்சினைகளைப் பேசினாலும் மக்களுக்கே நன்மை. கேள்வி :- அறிஞர் அண்ணா உயிரோடு இருந்திருந்து நீண்ட காலம் ஆண்டிருந்தால் என்னவாகியிருக்கும் ? பதில் :- பெரும் நன்மைக்காக பெரியாரிடம் இருந்து அண்ணா வெளியேறியதைப் போல, கலைஞரை பெரும் நன்மைக்காக அண்ணாவே தனது விருப்பத்துடன் வெளியேற்றி புதுக் கட்சி தொடங்க வைத்திருப்பார். அண்ணா, சாதாரண ப்பட்டவரல்ல, ஆரியம் பயின்றவர், நிச்சயம் செய்திருப்பார் ஆள்வதும் நாமே, எதிர்ப்பதும் நாமே. என்று திராவிட ஆட்சியின் பொற்காலமாக தமிழகம் புற்று நோய்களின்றி வளமாக இருந்திருக்கும். . கேள்வி :- இந்திய அணியில் தமிழக அணியினர் இடம்பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கின்றதே, தமிழர்கள் என்பதால் ஒதுக்கப்படுகின்றனரா? பதில் :- முதலில் தமிழக அணியில் சூத்திரத் தமிழர்களுக்கு இடம் கிடைக்கட்டும், அதன் பின்னர் பரம்பரை பரம்பரையாக தமிழ்நாடு அணியில் ஆடும் ராகவன்களும் ரகோத்தமன்களும் இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கும் காரணங்களை விவாதிப்போம். ஒரு ராகவனோ ரகோத்தமனோ இந்திய அணியில் இடம்பெறுவதை விட  தோணி, பதான், சேவக் போன்றவர்கள் இடம்பெறுவதையே நான் விரும்புகின்றேன். கேள்வி :- ஹிந்துக்களின் தூய பாஷை என்று தமிழைப் போற்றும் , திருக்குறளை ஹிந்துக்களின் புனித நூல் என்று பெருமைப்படுத்தும் தருண் விஜயை திராவிட இயக்கத்தவர்கள் எதிர்ப்பதேன்? பதில் :- தேவ பாஷையாகி, பாடையில் போய் மியுசியத்தில் இருந்து அழிவதை விட, காவிகளின் அடி வயிற்றைக் கலக்கும் கலங்கலான மொழியாக இருந்தாலும் சாமானியர்களின் சமூக நீதி மொழியாக நூற்றாண்டுகளாய் தொடர்வதே தமிழுக்குச் சிறப்பு. 27 தமிழ் நாஜிக்கள் கேள்வி :- பெரும்பாலான தமிழிணையப் பயன்பாட்டாளார்கள் , ‘நாம் தமிழர்’ கட்சியினரை இணையப்புரட்சியாளர்கள் என்று ஏன் கருதுகின்றனர்? பதில் :- நவம்பர் மாதத்தில், தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் , மாவீரர் நாள் ஆகியன நினைவுகூரப்பட்டன. குறை சொல்லக் கூடாது, தங்களின் கூட்டணித் தலைமையான அதிமுகவின் அரசாங்கம் பிரபாகரன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தடை செய்திருந்தாலும் , ‘நாம் தமிழர்’ கட்சியினரும் தங்களால் இயன்ற அளவு சுவரொட்டிகள் அடித்து , இருப்பதிலேயே சிறிய திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து மேற்சொன்ன நாட்களை நினைவு கூர்ந்தனர். நாம் தமிழர் கட்சியின் நெம்பர் 2, அதிமுகவை டெல்டா மாவட்டங்களில் வெற்றி பெறச்செய்த டெல்டா புலி அண்ணன் மணி செந்தில் கூட தனது கட்சியினருடன் கும்பகோணம் தெருக்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.  நிற்க. நாம் தமிழர் – கும்பகோணம் , நாம் தமிழர் – சென்னை , நாம் தமிழர் – பாம்பே தாராவி , , நாம் தமிழர் – நீடாமங்கலம் (வடக்கு ), நாம் தமிழர் – நீடாமங்கலம் (தெற்கு) , நாம் தமிழர் – அத்திப்பட்டி (அஜீத் ரசிகர் மன்றம் சார்பாக ) இப்படி மாவட்டத்திற்கு ஒன்று, வட்டத்திற்கு ஒன்று , தெருவிற்கு ஒன்று, சந்திற்கு ஒன்று , குட்டிச்சுவருக்கொன்று என, நாம் தமிழரின் பேஸ்புக் பக்கங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒவ்வொன்றிலும் 250 – 10,000 நபர்கள் வரை சாதித் தமிழ்த்தேசியம் பேசுபவர்களையும் பார்த்திருப்பீர்கள். போலி முகவரிகளை சேர்த்தால் அது லட்சக்கணக்கை எட்டும். தமிழ் இணையமே நாம் தமிழர்களால் இயங்குவதைப் போன்ற பிரமையில் கூட சிக்கியிருப்பீர்கள். நிற்க. இப்பொழுது முதற்பத்தியில் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படப் பகிர்வுகளைத்தேடிப் பாருங்கள். வெடி வெடிக்கும் இனிப்பு படங்களில் பால் வடியும் சிறுவர்களுடன் நாம் தமிழர் பிரதிநிதிகள் இருப்பார்கள். சிறிய மண்டபங்களின் கூட்டங்கள் பாதி கூட நிறைந்திருக்காது. ஆக, இணையத்தில் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் கோடிக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் களப்பணிகளுக்குக் கூப்பிட்டால் ‘இன்விசிபிள்’ அல்லது டி ஆக்டிவேட் ஆகிவிடுவார்கள் என்பதால். 9 ஆம் கிளாஸ் பெயில் மாணவர்களைக் கொண்டுதான் களப்பணி நடத்த வேண்டிய நிலை டெல்டாப்புலி அண்ணன் மணி செந்தில் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பது வருத்தமே. இக்காரணத்தினால் நாம் தமிழர் கட்சியினரை இணையப் புரட்சியாளர்கள் என்று சமூக அக்கறை தமிழ் மக்கள் அழைக்கின்றனர்,. ‘ரா’ மய்யாக்களின் மற்றொரு தமிழ்க் கிளையான மே 17 இவ்விசயத்தில் வித்தியாசப்படுகின்றனர். ஒரேப்பக்கம் ஒரே அக்கவுண்ட் நெம்பர். மணிரத்னம் படங்களில் வரும் மென்சோகக் காட்சிகளைப் போல, ஈழத்து சோகம் காட்டி, மக்களுக்கு போராட்ட உணர்வு என்ற அசூயை ஏற்படுத்தாமல் , செல்பி எடுத்துக் கொள்ளும் பிக்னிக் போல, கடற்கரை , ரிசார்ட் போன்ற இடங்களில் கூட்டங்கள் சேர்ப்பதால் மே 17 , நாம் தமிழர் கட்சியினரை முந்துகின்றதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக அடுத்த மாதம், மத்திய அரசாங்கத்தின் மே 17 ற்கான ஊக்கத் தொகை அதிகரிக்கப்படலாம் என்றும் நினைக்கின்றேன்.   கேள்வி :- குஷ்புவை ஆபாசமாக விமர்சிக்கும் தமிழ் நாஜிக்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? பதில் :- குஷ்புவின் கணவர் இயக்கிய ‘கலகலப்பு’ படம் பார்த்திருக்கின்றீர்களா? அப்படத்தின் இறுதிக் காட்சியில் ஒத்திகை சண்டைகள் மட்டுமே பயின்ற , ‘நிஜ சண்டை தெரியாத’ சந்தானம் & கோ , கழுத்து ஒருப்பக்கமாக திரும்பியிருக்கும் இளவரசுவை அடி அடி என அடிப்பார்கள். குஷ்புவை ஆபாசமாக விமர்சிக்கும் , நம் தமிழர்களுக்கு எதிரிகளான நாம் தமிழர் காளான் அமைப்பினர் எனக்கு கலகலப்பு சந்தானம் & கோ வையே நினைவுப்படுத்தினாலும் குஷ்பு கலகலப்பு இளவரசல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவிட்டர் சைபர் வழக்கு ஒன்றில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர். அடுத்தவருக்கே அப்படி என்றால் , தனக்கென்று வரும்பொழுது எப்படி கடுமையாக இருப்பார் என்று நினைத்துப் பாருங்கள். ஆக ஆபாசமாக எழுதுபவர்களின் புரைபல்கள் குறிக்கப்படுகின்றன. ஸ்க்ரீன் ஷாட் முதல் கொண்டு அனைத்து விபரங்களும் எடுக்கப்படுகின்றன.  அண்டார்டிகா, அட்லாண்டிஸ், பண்டோரா ஆகிய புலம் பெயர்ந்த கண்டங்கள் கிரகங்களில் இருந்து எழுதுபவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்குப் பிரச்சினை என்றாலும் ஈழத் தமிழர்களின் டெக் அவே ரெஸ்டாரண்டுகளில் தட்டுக் கழுவியாவது பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் தஞ்சாவூர் நாகப்பட்டினம், கும்பகோணம் இப்படி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஈழத்தமிழ் மூளைச்சலவையில் மயங்கி குஷ்புவை ஆபாசமாக எழுதும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். சாம்பிளுக்கு நான்கைந்து பேரை உள்ளேத் தூக்கி வைக்க நேர்ந்தால் நீங்கள் சிக்கிக்கொள்ளாதீர்கள். 28 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டிக்க வேண்டும் என்றும், அவ்வியக்கம் பயங்கரவாத இயக்கம் தான் என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணா வாதாடியிருக்கிறாரே? பதில்: அவர் அதை மட்டுமா சொல்லியிருக்கிறார். 2012 மே14 முதல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டுவரும் அமைப்புகள், குழுக்கள் மீது வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் ஏன் பங்குனி17, நாம் நாஜிக்கள் எல்லாம் இதை எதிர்த்து போராடவில்லை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களுக்கு நாம் நாஜி மற்றும் பங்குனி17 அமைப்பினர்களைப் பற்றி சரிவரத் தெரிந்திருந்தால் இந்த கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். ஒருவேளை பிரபாகரன் உயிரோடு இருந்து, அவர் அதிமுகவை எதிர்த்து ஏதாவது பேசியிருந்தால் வேண்டுமானால் இந்த அமைப்புகள் அவரை எதிர்த்து போராடியிருப்பார்களேயொழிய, அவர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதி என யார் சொன்னாலும் (கலைஞரைத் தவிர) இவர்கள் போராட மாட்டார்கள். கேள்வி :- இந்தியாவில் நடைபெறும் தொடர் முத்தப் போராட்டங்களைப் பற்றிய தங்களின் கருத்தென்ன? பதில் :- சமூகம் தயாராகாதவரை இவ்வகைப் போராட்டாங்கள் ‘ஷாக் வேல்யுவிற்கானவை’ என்பது என் கருத்து. முத்தங்கள் பரிமாறிக்கொள்ளும் ஜோடிகளை வேடிக்கைப் பார்ப்பவர்களைப் பாருங்களேன், காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேயத் தயாராவதைப் போல பார்ப்பார்கள். வெளிநாடுகளில் பொதுவில் முத்தமிட்டுக் கொள்ளும் தம்பதியினரை வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள், பார்த்தாலும் தான் தனது காதலியையோ காதலனையோ முத்தமிட்டதை நினைத்தபடி மெல்லிய புன்னகையுடன் பார்வையை வேறுப்பக்கம் திருப்பிவிடுவார்கள்.  இம்முத்தப் போராட்டங்களினால் பலான பலான தளங்களில் தேசி கிஸ்ஸிங் என்ற ஒரு இழை பிரபலமடையும் அவ்வளவே. மசூதியில் பன்றிக்கறி எறிந்தார்கள் என்று கோவிலின் மேல் பசுக்கறியை எறிவது எவ்வளவு அபத்தமோ ஆபத்தோ அத்தகைய அபத்தமானது மாரல் போலிசிங்கை எதிர்க்கின்ற இப்போராட்டம். ஏற்கனவே பாலியல் வறட்சியில் இருக்கும் இந்நாட்டில் இத்தகைய விஷயங்கள் பாலியல் வேட்கையைத்தான் அதிகரிக்கும். கேள்வி :- ரஜினிகாந்த் ‘எம்ஜிஆர்’ ஆவாரா ? பதில் :- ரஜினிகாந்த் தான் ‘ராஜ்குமாராக’ மட்டும் இருக்கவே விரும்புவார். கேள்வி :- இஸ்ரேல் – இலங்கை ஒப்பிடுக ? பதில் :- அமெரிக்காவின் இலங்கை –> இஸ்ரேல்; இந்தியாவின் இஸ்ரேல் –> இலங்கை. கேள்வி :- வேத விற்பன்னர்கள், நரேந்திர மோடி இந்தியாவின் புதிய இரும்பு மனிதர் என்று படேலுடன் ஒப்பிடுகின்றார்களே ? பதில் :- வல்லபாய் , பல நூறு சமஸ்தானங்களை சாம பேத தான தண்ட முறையில் இந்தியாவுடன் இணைத்த வல்லவர். அந்த அளவிற்கு செய்யாவிட்டாலும் குறைந்த பட்சம் இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் காட்டிவிட்டால் புதிய இரும்பு மனிதர் என்ன , இந்தியாவின் ஒரே டைட்டானியம் மனிதர் என்று கூட மோடியைப் போற்றுவேன். கேள்வி :- அரக்கரே, பெரியார் ஒரு சர்வாதிகாரி என்று மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணுக்கள் எகத்தாளமாக எழுதியிருகின்றனரே ? பதில் :- ஆங்கிலப்பத்திரிக்கை நடத்திவிட்டு, திடீர் குபீர் தமிழ் உணர்வாளர்களைப் போல தமிழ்ப்பத்திரிகை ஆரம்பித்திருப்பதால் மஹாவிஷ்ணுக்களுக்கு , “சர்வ மக்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார்” . என்று எழுத சரியான தமிழ்த்தெரியாமல் சர்வாதிகாரி என்று எழுதிவிட்டனர் போலும். இந்துத்தமிழின் காலச்சுவட்டில் நாவுக்கரசர்கள் இப்படி எழுதுவது சகஜம்தானே. நாம் என்ன செய்யவேண்டும். “குலக்கல்வித்திட்டம் நிர்வாக ரீதியிலானது, சட்டத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. சங்கரர்களும் இராமனுஜர்களும் கலந்தாலோசித்தா தத்தமத்து தத்துவங்களைச் சொன்னார்கள் ” என்று எதேச்சாதிகாரத்துடன் பேசிய ராஜாஜியின் சர்வாதிகாரத்தனத்தை கட்டுரையாக யாராவது பகுத்தறிவுச்சித்தர்களை வைத்து எழுதிவிடுவோம்.   29 விவசாயம் - சற்றே நீண்ட குறிப்பு  முன்னுரை :- விஜய் படம் பார்த்து நெகிழ்ந்து விவசாயம் பார்க்கப் போகின்றவர்கள், செல்ப் அட்டெஸ்டட் இயற்கை விஞ்ஞானிகள் , திருமுருகன் காந்திக்கு மாதம் தவறாமல் டொனேஷன் அனுப்புபவர்கள் , கூடங்குளம் – நியூட்ரினோ இன்ன பிற நாட்டு நல விசயங்களை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் , பண்ணை வீட்டு கொண்டாட்டங்களுக்காக வயல்வெளிகள் வைத்திருக்கும் அமெரிக்கன் ரிடர்ன் விவசாயிகள் இக்குறிப்பைப் படித்தால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். ஆகையால் தயவு செய்து தவிர்த்துவிடவும். காலத்தே தொழில் செய்ய வேண்டும் , தமிழ்ச்சமுதாய வளர்ச்சி பலம் வாய்ந்த தொழிற்சாலை சார்ந்த பொருளாதாரத்தில்தான் இருக்கின்றது என்று நம்புபவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். இக்கட்டுரை வெறும் appetizer மட்டுமே. இது அபத்தமா சாத்தியமா என்பதை உங்கள் தேடுதலில் கண்டுபிடியுங்கள். பின்புலம் :- சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கேள்வி பின்னூட்டமாக வந்திருந்தது. “கிளிமூக்கு அரக்கரே, காவிரியிலும் தண்ணீர் பருவம் தோறும் வருவதில்லை. தண்ணீர் பெற முயற்சிக்கும் முன்னாள் திமுக அரசாங்கத்தின் கடும் உழைப்புக்கு உச்ச நீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்தாலும் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து காவிரியையும் காவிரித்தாயையும் பிடித்து வைத்துக் கொண்டு இந்திய தேசியத்திற்கே (?!!) சவால் விடுகிறது. நாம் என்னதான் செய்வது? ” இதற்கான பதிலை சொல்வதற்கு தயாரான நிலையில் தான் கத்தி படம் வெளிவந்தது. தமிழ் நாஜிக்கள் ஆசிட் அடிப்பார்களா , பெட்ரோல் பாம் போட்டுவிடுவார்களா என்று பயந்து கொண்டே கத்தி படத்தைப் பார்த்து விமர்சனக் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். “நீர்வரத்து கிடையாது. பயிர் செய்தால் லாபம் என்பதே கிடையாது. இருந்தாலும் வறண்டு போன பூமியில் விவசாயத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று சொல்லும் இயற்கை அவியல் விஞ்ஞானி அல்ல நான். தொழிற்மயமாக்கம், பெரும் ஆலைகள் கட்டுதல் ஆகியனவற்றிற்கு நான் ஆதரவு. அப்புறம் சோற்றுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்பீர்கள். தொழில்நுட்பம், உடை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதைப் போல உணவு வகைகளையும் இறக்குமதி செய்து கொள்வோம். எலிக்கறி சாப்பிட்டு ஏழை தமிழ் நாட்டு விவசாயி ஏன் சிரமப்பட்டு உங்களுக்கு சோறு போடவேண்டும். வருவாயைப் பெருக்கி ஆப்பிரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் நமக்கு தேவையான விவசாய நிலங்களை கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைத்து வாங்கிப் போட்டுக் கொள்வோம். காடுகளை அழித்து விவாசாயம் பழகிய மாற்றத்தைப் போல இதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்” . ஏசி ரூமில் farmville விளையாடுபவர்களால் கடுமையான கண்டனத்திற்கு ஆளானேன். இதனிடையில் எனது ரசிகர் பத்ரி சேஷாத்ரி “சிறு விவசாயிகளின் பிரச்னையே subsistence farming. அவர்களின் மிகச் சிறிய விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானம் அவர்கள் உயிர் வாழப் போதுமானதல்ல. அவர்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதுதான் நல்லது” இப்படியான கருத்தை வேறு தெரிவித்து இருந்தார். வேதவிற்பன்னர்கள் சமயங்களில் தொலை நோக்குப் பார்வை கருத்துகளையும் சொல்வார்கள். மேலே சொன்னதன் நீட்சியாக எனது கருத்தை தொடர்ந்து படியுங்கள். ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில் என்றால் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல, சில பல நூறாண்டுகளுக்கு முன்னரே காடு வெட்டிப்போட்டு கடிய நிலம் திருத்தி வேளாண் குடிகளாய் நம் டெல்டா மண்ணை விவசாய பூமியாய் ஆக்கினோம். நாம் கல்லணை கட்டி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன . மறவாதீர். அன்றைக்கு பொருளாதாரம் என்பது விவசாயத்தின் மூலம் மட்டுமே. ஆகையால் பொருளாதார தன்னிறைவு பெற்ற பூமியாய் இந்த மண் பத்தாது என்று இலங்கை,பர்மா, மலேசியா, இந்தோனோஷியா என்று கடல் கடந்து படையெடுத்துச் சென்றோம், வென்றோம். உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் வழக்கமான உதாரணம் ஒன்று சொல்கிறேன். காசு இருக்கும் இடத்தில்தான் வேத விற்பன்னர்களும் இருப்பார்கள். சோழ மண்டலமாம் காவேரி டெல்டா மாவட்டங்களில் அக்ரஹாரங்கள் அதிகம் இருந்த காரணம் இப்போது புரிகிறதா? இப்போது எதற்கு சம்மந்தம் இல்லாமல் இந்தச் செய்தி என்று உங்கள் மனதில் தோன்றலாம்? சம்மந்தம் இருக்கின்றது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் செய்த பொருளாதார வலிமையுள்ள செயலை கடந்த சிலப்பல பத்தாண்டுகளாக இப்போதுதான் கர்நாடகம் செய்யத் துவங்கியுள்ளது. ஏன் நமக்கு காவேரியில் முறையாக தண்ணீர் வருவதில்லை? அங்கு தண்ணீர் இல்லையா? நிச்சயம் போதுமான அளவிற்கு இருக்கிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தனது பாசனப்பரப்பை அதாவது விளையும் பூமியை அதாவது காடு மண்டிக் கிடந்த இடங்களை கர்நாடகம் மூன்று நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்யும்போது கர்நாடகத்தின் விளைச்சல் அளவு பல பல மடங்கு அதிகரித்துவிட்டது. இது போதாதென்று மேலும் சில அணைகளைக் கட்ட திட்டமிட்டு வருகின்றது. உச்ச நீதிமன்றம் அதைத் தடுத்தாலும் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டுக்கு தீர்ப்புக்கு என்ன மரியாதை குடுத்ததோ அதைத்தான் குடுக்கும். இந்திய தேசியத்தை மதிக்க கர்நாடகா என்ன தமிழ்நாடா? சரி, இனி என்னதான் நாம் செய்ய முடியும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயம் மூலம் பொருளாதாரத்தை வலிமையாக்கிய பரம்பரை நாம்!! இப்போதும் அதுதான் வலிமை என்று நினைத்தால் நம்மைவிட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. இப்போது பொருளாதாரவலிமை தொழிற்துறை நோக்கி நகர்ந்துவிட்டது. எனவே இனியும் விவசாய பூமி, என் பாட்டன் உழுத நிலம் என்று மூக்கு சளி சிந்தி சென்டிமென்ட் பார்க்காமல் அவைகளை சைனா போல் பெரும் பெரும் தொழிற்சாலை பூமிகள் துவங்க திட்டமிடுவோம். அடேய் கிராதக கிளிமூக்கா, குடிக்க நீருக்கு என்ன செய்வது என்று திட்டுவது எனக்கு கேட்கின்றது. பொறுமை பொறுமை. முறையாக மழை நீரைச் சேமித்து அவ்வப்போது வரும் காவிரி நீரை முறையாக தேக்கினாலே போதும்.. தமிழக மக்களின் குடிநீர் மற்றும் இன்ன பிற தண்ணீர் பிரச்சனையை தீர்த்துவிடலாம். சரி , சோற்றுக்கு என்ன செய்வது? தனது பாசனப்பரப்பை அதிகரித்ததன் மூலம் கர்நாடகம் தன் மக்களின் தேவைக்கும் போக பல மடங்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யத் துவங்கிவிட்டது. அவர்களுக்கு தேவையானவற்றை நாம் உற்பத்தி செய்வோம். நீருக்கு பதிலாக நாம் அவர்களிடம் இருந்து நேரடியாக உணவைப் பெருவோம். சென்னை தனி நாடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். சென்னையில் விவசாயம் கிடையாது. இருந்தும் அனைத்தும் கிடைக்கின்றது. தேவை, தேவையை நிவர்த்தி செய்ய பொருளாதாரம் இருந்தால் எதையும் இறக்குமதி செய்யலாம். விவசாய பூமி நம் தாயைப் போன்றது , தாயைக் குத்தி குதறி இன்னபிற வன்முறை வாசகங்களைப் போட்டு வசனம் பேசலாம். ஆனால் காற்று வீசும் திசையில் ஓடத்தை செலுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்று உணர்ந்தவர்கள் வசனங்களுக்கு மயங்க மாட்டார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு என் நிலங்களை விற்றுவிற்று என்னை பரதேசம் போகச் சொல்கின்றாயா பிரகஸ்பதி ? உங்கள் நிலங்களை தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கும் பொழுது உங்களுக்கு சாதகமான அம்சங்களை பேச்சு வார்த்தையில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மக்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்யுங்கள். விலை போகாத வழக்கறிஞர்களை வைத்து உங்கள் இழப்பீடுகளை சரியான அளவில் பெற்று தொழிற் வளர்ச்சிக்கு உதவுங்கள். நாளையே , அற்புதமான தனிமம் உங்கள் டெல்டாவில் கிடைத்தால், யார் கண்டது கத்தியின்றி ரத்தமின்றி தமிழர்களுக்கான நாடு கிடைக்கலாம். தொழில் வளர்சியடைந்த குடியரசானால் அடுத்த நிலை எதிர்கால தமிழகம் வல்லரசுதான். வாய்ப்புகள் கதவைத் தட்டும்பொழுது ஏற்றுக் கொள்வதே சமுதாயத்திற்கு நல்லது. சமகால அவல உதாரணம் கூடங்குளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஆண்டுகள் பாரின் தமிழ் டூரிஸ்டுகளுக்கு பிக்னிக் ஸ்பாட்டாக இருந்தது , உதயகுமார் கேம்ப் நியுட்ரிநோவிற்கு தேனிப்பக்கம் ஒதுங்க , மக்கள் அனாதையாக கிடைக்கின்றனர். அரசாங்கம் அப்பாவிகளிடம் மேலும் கடுமையாக நடந்து கொள்ளப்போகின்றது. விவசாயம் தான் வேண்டும் என்று சிதம்பர நடனம் ஆடினால் , நிலங்களை நாட்டுடைமையாக்கிவிட்டு விவசாயிகளை அரசு ஊழியர்கள் ஆக்கிவிடலாம் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வைப்போம். 30 The Rise of Tamil Nazism and its dangerous impacts Tamil Nadu has been always a garden of peace. When the west and north and east of India burned during partition, the southern tip of the nation was a place of serenity and tranquility. When there were riots all over India following demolition of Babri Masjid, it was business as usual in Tamil Nadu. British Intelligence agencies considered Chennai as the safest place for their team to play a test match following Nov 2008 Mumbai Attack In Republic of India Tamil Nadu has been the safest Garden of Peace. Only exception was the decade of 80s, when Tamil insurgents in Northern Sri Lanka got into murky in-fighting. Tamil rebels who had taken guns against the oppressive Sinhala / Buddhist regime, kept Madras as their strategic capital with the support of Indian intelligence agencies. With unprecedented cases of extortions, day light gun fighting in the streets, drugs , smuggling Tamil Nadu was on the verge of becoming Kashmir of the South. After the tragedy of Rajiv Gandhi assassination by LTTE, there was a total crackdown on Pro Tamil Eelam supporters, not even intellectual sympathizers were spared. Tamil militants had lost the sympathy of Indian Tamils and hard line supporter DMK had burnt their fingers heavily and extended their support only on moral grounds. Early 90s, was the crucial time not only for Tamil Nadu, but also for India and the whole of India. Multi National companies entered India, Software industry boomed, unemployment had become underemployment. Dravidian parties’ constant support and implementations of social justice started to pay the dividend. In the last two decades, taking a deserved advantage of affirmative action (Reservations) younger generation of Tamil Nadu realized the value of education in line with old Tamil adages, PichaiPuginum Karkai Nandre. (To obtain education, even begging is allowed) and Thiraikadal Odiyum thiraviyam thedu (Sail to the shores for earning wealth). Progressive Dravidian Governments continuously ensured the ambitions of the people of Tamil Nadu are realized. After 9/11, an organization that involved in Suicide Missions was considered as a terrorist organization, no matter how noble their demand was. Thus, in Sri Lanka, due to political and strategical blunders, LTTE found itself isolated. When Srilankan regime headed by Rajapakse wanted to have a crackdown on LTTE, the world nations reacted only in two ways. Few were indifferent and many actually supported the Srilankan government and LTTE supply chain of arm procurements were stifled in few places and severed in few places The LTTE High Command again blundered. Instead of laying down their arms and chosing the path of democracy, they continued to fire and even used their “airforce” to attack. Since no country supported them they could not get any weapons. And Since they did not have any weapons to protect them, they used innocent Tamils as Human Shields. Finding Innocent Civilians around the military high command is a dicey choice for any democratic nation. But for the military regime of Rajapakse, there was only one goal-to eliminate LTTE and they were not worried about one lakh innocent civilians, children, women and aged who would die. LTTE and LTTE sympathizers can give hundred reasons why they chose arms. But the military fascist regime of Rajapakse gives only one reason for killing more than a lakh tamils – The only reason that LTTE is a terrorist organization which kills others with suicide mission (like Bin Laden of Al Qeida) Usually after the disaster, people become calm and self assess and discuss the reconciliation, what should be done along with seeking justice. But in this case, after the violent war storm settled, poisonous weeds started growing up in Tamil Nadu. Numerous letter pad parties, fringe fanatic movements, caste based parties popped up in the name of Tamil, Tamil culture and Tamils revival and their self proclaimed motives are a separate nation of Tamils in the main land India and one in Sri Lanka. India and Srilanka got independence at similar times. In both countries, Tamils were minorities. In both Tamil Nadu and Eelam, there was a separatist movement early on. But Tamil Nadu had a visionary in the form of Arignar Anna, who realized that it is better to lead a peaceful and prosperous life by aligning with India and concentrate on Food Security, Education, Health, Social Reforms, Infrastructure and Industries rather than waste all time and energy on fighting. Anna’s strategy was simple. Instead of Tamil Nadu fighting with India and both suffering, let Tamil Nadu and India join together and fight hunger, malnutrition, illiteracy, ill health and poverty. The result of Anna’s decision is for everyone to see. Successive Dravidian governments implemented PDS (the best in India) and eradicated hunger and malnutrition, implemented Free Education with Free Noon meal scheme (the best in India) and eradicated illiteracy, invested in health and created totally free health care system (best among all states), created around 2 lakh engineering seats with which the state got maximal benefit of the IT Boom of 1990s and then went on to make Chennai the Detroit of India and one of the states that determine the Prime Minister of India. Tamil Nadu is the miniscule version of India’s reputed plurality. Take any Indian ethnicity, they will be present in Tamil Nadu, be it Jains, Saurashtras, Maratis, Telugus, Malayalees, Kannadigas, Bengalis , Biharis etc. Tamil Nadu’s diversity is as good as India’s diversity. There is no clear boundary for ‘Indianness’ in the subcontinent. Likewise, there is no boundary for ‘Tamil-feel’ in South India. Once you become part in Tamil society you become a Tamil whoever you may be, as it is in America. Thus Tamil land mass has been known for welcoming everyone. Unfortunately in the recent times that fabric is being tried to be torn. Fringe Tamil fanatic movements like, Naam Tamilar (We are Tamils), May 17 had started their verbal attacks on linguistic minorities in Tamil Nadu. Naam Tamilar thugs even attacked Sinhala tourists and Malayalees. Funded by some anti social and many ignorant elements among Tamil Diaspora, Tamil fringe movements had started their propaganda that Indian Government and Tamil Nadu Government are the main reasons for the defeat of LTTE and conveniently hiding the facts of LTTE’s human shield and LTTE’s denial of taking the truce offer given by Republic of India. Generally Tamils are emotionally driven and when it comes to their language they are always on the edge to cross the politically correct line. Misguided by the propaganda, students went on indefinite strike last year in the name of seeking justice for Sri Lankan Tamil genocide. Unwittingly young generations who were not born in the 80s era, started embracing militant ideologies and hatred towards other races and languages. Prabhakaran had been seen as a star like Rajinikanth and Jayalalitha, M.Karunanidhi, Annadurai, K.Kamaraj, E.V.Ramasamy are seen as antagonists. Riding on past ‘invented’ histories, emotionally pumped up Tamil youths let the darkness to hide their vision and started to forget the importance of education and the social justice brought by the so called antagonists mentioned in the previous paragraph. In the 1960s, Dravidian movement leaders with their constructive writings and speeches they drove the youth towards education and empowerment. But these potential Tamil Nazi leaders, Seeman, Thirumurugan Gandhi, with their cunning speeches and writings are fueling to drive the Tamil youths to take violent paths. After the World War I, German Nazis exploited sympathy of the Germany’s defeat in the war, weak government, constant funding, propaganda. Like German Nazis, Tamil fanatics are exploiting the incumbent government’s softness, mobilizing constant funding from Tamil Diaspora, Social media propaganda. If this continues, majority of the Tamil population could become Tamil Nazis and when these misguided youth take up arms, Tamil Nadu may turn into another Eelam and Indian Government will be forced to do in Tamil Nadu what Srilankan Government did in Eelam. Once you become a Nazi, you are always; it is not easy to come out of the hatred, vengeance, revenge anti social thoughts. It would not be easier to curb terrorism in Tamil Nadu as they did it in Punjab or in Jammu. Problematic Tamil Nadu would lead to situation like Yugoslavia. Given the geo-political strategic importance of Tamil Nadu, easily foreign elements could become part of promoting these Tamil Nazi parties which may lead to a civil war. Government of India, should realize these threats and start removing the Tamil Nazi weeds and should give concerned ears to Tamils in Tamil Nadu. The Tamil Diaspora abroad should sit for a moment compare the strategies adopted by Dravidian Governments and the strategies adopted by Tigers and compare the results of both and then stop funding these anti-social, anti-democratic fringe elements. Cancer is not so dangerous if it is diagnosed at the earliest stage. Healthy Tamil society is good for Indian fabric. Vibrant Indian fabric is the best model for the world to follow. 31 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- திமுக 2016 இல் உறுதியாக வெற்றி பெற உங்க ஸ்டைலில் ஏதேனும் அட்வைஸ் சொல்லுங்க கிளிமூக்கு அரக்கன் ? பதில் :- கலைஞர் இதை யோசித்திருப்பார். இருந்தாலும் நானும் சொல்லி வைக்கின்றேன். ‘ திமுக அறுதிப் பெரும்பான்மை’ பெற்றாலும், கூட்டணி அரசு அமைப்போம் என்று ஓர் அறிக்கை விட்டால் போதும்.’ வலுவான கூட்டணிக்கு அடித்தளம் அமைந்துவிடும். கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ஓசியில் மங்களம் பாடாமல் கடும் உழைப்பைக் கொடுப்பார்கள். முன்னுதாரணம் – மத்தியில் மோடிஅரசு பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி அரசைத்தான் அமைத்திருக்கின்றது. கேள்வி :- திமுக அனுதாபியாக இருப்பதன் சிறப்பம்சம் என்ன ? பதில் :- திமுகவையும் விமர்சிக்க முடியும். கத்தி –  திரைப்படம் – கேள்வி பதில்கள் கேள்வி :- ‘கத்தி’ திரைப்படத்தில் 2ஜியில் கொள்ளையடித்தவர்கள் என்று வசனம் வருகின்றதாமே ? பதில் :- ரிசர்வேஷனையே (இடஒதுக்கீடு ) கரப்ஷனுடன் (ஊழல் ) ஒப்பிட்டு 7 ஆம் அறிவில் வசனம் வைத்தவராச்சே, முருகதாஸ். கேள்வி :- நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு முக்கியமான வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் நிரபாராதி என நிருபிக்கும் போராட்டத்தில் இருக்கையில் இப்படி ஒரு வசனத்தை வைப்பது நீதி மன்ற அவமதிப்பு அல்லவா ? திமுகவினர் இதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது ? பதில் :- செய்ய வேண்டியதில்லை. செய்யமாட்டார்கள். திமுகவினர் பெருந்தன்மையானவர்கள். நீதிமன்றத்தில் 2ஜி இழப்பு , ஊதிப் பெருக்கப்பட்டது என்று நிரூபனம் ஆகும் நிலையில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டார்கள். விஜயும் முருகதாசும் இரட்டை நிலைப்பாட்டை அப்பட்டமாக காட்டிக் கொள்ளும்பொழுது மக்களின் முடிவிற்கே விட்டுவிடலாம். மக்கள் நீதிமன்றங்களை விட புத்திசாலிகள். கேள்வி :- இந்த படத்தின் மூலம் விஜயின் அரசியல் வாழ்விற்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டதா ? பதில் :- அரசியலுக்கு கூத்தாடிகள் வரக்கூடாது என்று நியூட்ரினோ புகழ் சுப. உதயகுமார் புலம்புவதைப் போல புலம்பமாட்டேன் . மக்களாட்சி அமைப்பில் யார் வேண்டுமானாலும் வரலாம். எம்.ஜி. ஆர் ஆகின்றார்களா , கே. பாக்யராஜ் – பிரேம் நசீர் ஆகின்றார்களா என்பதை காலம் தான் பதில் சொல்லும். எம்.ஜி.ஆர் காலம் போல, தங்களது சுயரூபத்தை மறைக்க முடியாது என்பதால் சினிமாவை சினிமாவாக பார்க்க மக்கள் பழகிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். நிஜ நடிகர்களை தம்மிடம் வைத்திருந்தாலும் திரை நடிகர்களைத் தேடும் பாஜக வின் ஆசி ‘ஜோசப்’ விஜய் அவர்களுக்குக் கிடைத்தால் , நடிகர்களின் இரட்டை நிலைப்பாடுகளை மறந்து, வியாபாரிகள் வியாபாரிகளுக்கு மட்டுமே உதவுவார்கள் என்பதை மறந்து ,தமிழ் மக்கள் காமராஜர் ஆண்டால் என்ன, ராஜாஜி ஆண்டால் என்ன என்ற மனநிலைக்குப் போனால் யார் கண்டது 15-20 ஆண்டுகளில் விஜயும் விஜயன் ஆகலாம். கேள்வி :- கத்தி படத்தின் கதையம்சம் உங்களுக்குப் பிடித்திருந்ததா ? பதில் :- outdated subject . நீர்வரத்து கிடையாது. பயிர் செய்தால் லாபம் என்பதே கிடையாது. இருந்தாலும் வறண்டு போன பூமியில் விவசாயத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று சொல்லும் இயற்கை அவியல் விஞ்ஞானி அல்ல நான். தொழிற்மயமாக்கம், பெரும் ஆலைகள் கட்டுதல் ஆகியனவற்றிற்கு நான் ஆதரவு. அப்புறம் சோற்றுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்பீர்கள். தொழில்நுட்பம், உடை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதைப் போல உணவு வகைகளையும் இறக்குமதி செய்து கொள்வோம். எலிக்கறி சாப்பிட்டு ஏழை தமிழ் நாட்டு விவசாயி ஏன் சிரமப்பட்டு உங்களுக்கு சோறு போடவேண்டும். வருவாயைப் பெருக்கி ஆப்பிரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் நமக்கு தேவையான விவசாய நிலங்களை கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைத்து வாங்கிப் போட்டுக் கொள்வோம். காடுகளை அழித்து விவாசாயம் பழகிய மாற்றத்தைப் போல இதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். கேள்வி :- கத்தி படம் பார்க்கலாமா ? பதில் :- பொழுதுபோக்கு சித்திரமாக பார்க்கலாம். மற்றபடி அறிவுரைகள் அறவுரைகள் எல்லாவற்றையும் சீமான் , திருமுருகன் காந்தி ஆட்கள் பேஸ்புக்கில் எழுதுவதை எப்படி இடக்கையால் தள்ள்விடுவீர்களோ அப்படி தள்ளிவிடுங்கள் 32 தீபாவளி வாழ்த்துகள் - ஏன்?  திராவிடர் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பிக்காமல் , திராவிட என்று அனைவரும் inclusive நோக்கத்துடன் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. அதை ஒட்டியே , திமுக ஆலமரத்தில் இருந்து உதிர்ந்த விழுதுகளான அனைத்து திராவிட இயக்கங்களும் inclusive இயல்புடன் இயங்குகின்றன. அத்தகைய திராவிட முன்னேற்ற பாரம்பரியத்தில் சமூகவியல் பயின்ற நான் சமூகங்கள் கொண்டாடும் மாச்சரியமற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது சரியானதே என்று அவ்வப்பொழுது வாழ்த்துவது உண்டு. ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்னியே தீபாவளிக்கு எங்கே வாழ்த்து என்று கேட்க எனது ரசிகர்கள் விருமாண்டி வாரிசும் பாசா சாமிநாதனும் சந்துருவும் காத்துக் கொண்டிருப்பார்கள்.  சிறு குழந்தையில் இருந்து பெரியவர் வரை கொண்டாட்ட மனோபாவத்தைக் கொண்டு வரும் பண்டிகைகள் மதநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எனக்கு பிடித்தமானதே. தீபாவளி யும் அத்தகையதே. பிள்ளையார் சதுர்த்தியைப் போல அடுத்தவரை வெறுப்பேற்ற நடக்கும் அரசியல் பண்டிகையல்ல தீபாவளி. தீபாவளி குடும்பங்களின் பண்டிகை. மற்ற மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை , தமிழகத்தில் தீபாவளியை சமூக நல்லிணக்க பண்டிகையாகத்தான் பார்க்கின்றேன். தீபாவளி இனிப்புகளுக்காகவே காத்திருக்கும் மாற்று மத அண்டை அயலாருடன் வளர்ந்தவர்களுக்குத் தெரியும். பஷீருடன் பீட்டருடன் வெடிக்காத வெடிகளைக் குவித்து கொளுத்தி விளையாடியவர்களுக்குத் தெரியும். கத்தோலிக்க பள்ளிகளில் தீபாவளி மறுநாள் வண்ண உடைகள் அனுமதிக்கப்பட்டு புத்தாடையை அணிந்து கொண்டாடியவர்களுக்குத் தெரியும். எனவே வரலாறு புவியியல் சமூகவியல் தாண்டி குடும்பம் குழந்தைகளுடன் , மாற்று மதத்தவர்களுடன் இணக்கமாகவும் வாழ்ந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுபவராக இருந்தால் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அரக்கனை வீழ்த்திய நாளை எப்படி கொண்டாடுவது என்று பொறுமும் சக அரக்கனாக இருந்தால் அரக்கர் வீழ்ந்த காரணங்களை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்ய பாடுபடுவோம். எல்லோரையும் போராளிகள் ஆக்க வேண்டியதில்லை. 22/7 சதவீதம் போராளிகளாக இருந்தாலே போதும் அற்புதமான சமூக வட்டம் உருவாகும்.   33 தமிழகத்தில் பிஜேபி ஆட்சி கேள்வி: மோடியின் தமிழக பரப்புரையாளர் பத்ரி ஷேசாத்ரி சொல்வதைப் போல தமிழகத்தில் பிஜேபி ஆட்சியைப் பிடித்துவிடுமோ? பதில்: ”சே..சே.. பெரியார் மண்ணில் பிஜேபி எப்படி ஆட்சியைப் பிடிக்கும்? இந்துத்துவா எண்ணமெல்லாம் தமிழக மக்களின் மனதில் வராது. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,” என்றெல்லாம் காலாட்டிக்கொண்டே மொட்டையாக சொல்ல நான் சாதாரண அரக்கன் இல்லை, கிளிமூக்கு அரக்கன்! எனவே சில விஷயங்களை விரிவாக சொல்லிவிடுகிறேன். 1) முயன்றால் ஆப்பிள் மரத்தில் ஆரஞ்சை காய்க்க வைக்க முடியும் எனும்போது முயன்றால் தமிழகத்தில் பாஜக மட்டுமல்ல, தமிழ்நாஜிக்கட்சி கூட ஆட்சிக்கு வரலாம். 2) பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என சொல்வது பாஜகவின் மேல் உள்ள நம்பிக்கையில் இல்லை. திமுக, அதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கலையும், மோடியின் செல்வாக்கையும் மனதில் வைத்தே அப்படிச் சொல்கிறார்கள். 3) மோடி என்பவர் காமராசர் போல, அண்ணா போல நேரடியான மக்கள் செல்வாக்கினால் உயர்ந்தவர் அல்ல. ஊடக செல்வாக்கால மக்கள் மனதில் உயர்ந்தவர். அதாவது விளம்பரம் பார்த்துப் பார்த்து மக்கள் மோடி என்ற பொருளை வாங்கியிருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு ”நீங்கள் இந்தப் படத்தை பார்க்கவில்லை என்றால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்,” என்பதுபோல விளம்பரம் செய்வார்களே, அதைப்போல ”மோடிக்கு ஓட்டுப்போடவில்லை என்றால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்,” என விளம்பரப்படுத்தப்பட்டவர் தான் மோடி. அந்த விளம்பரம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வேலை செய்தது. மக்களும், ‘இந்தப் பொருளை சாப்பிட்டால் இந்தியா அமெரிக்கா போல ஆகிவிடும்’ என்ற நம்பிக்கையில் மோடியை வாங்கியிருக்கிறார்கள். 4) வந்த நாளில் இருந்து சமஸ்கிருத பெயர்களை சூட்டும் நியூமராலஜி நிபுணர் வேலை, ஊர் ஊராகச் சென்று பகவத் கீதையை பரிசளிக்கும் இஸ்கான் க்ரூப் வேலையைத் தவிர வேறு எதையும் மோடி உருப்படியாக செய்யவில்லை. பற்றாக்குறைக்கு அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏகத்துக்கும் ஏற்றி விற்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறார்கள். காங்கிரஸின் திட்டங்களை எல்லாம் வாயில் நுழையாத வேறு வேறு பெயர்களில் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆக மக்களுக்கு பொருள் மேல் ஏற்கனவே எரிச்சல் இந்நேரம் உருவாக ஆரம்பித்திருக்கும். 5) பாப் மார்லி பாடல் ஒன்றில், ‘சிலரை சில காலத்துக்கு ஏமாற்ற முடியும். பலரை பல காலத்துக்கு ஏமாற்ற முடியாது,’ என்ற வாசகம் வரும். அதைப் போல செயல்பாடுகளில் சாதிக்க முடியாத மோடி கோஷ்டியால் மக்களை பல காலத்துக்கு ஏமாற்ற முடியாது. அதிகபட்சமாக பத்தாண்டுகளில் மக்கள் யாராக இருந்தாலும் வெறுத்துவிடுவார்கள். அதிலும் மோடியின் விளம்பர செல்வாக்கு காணாமல் போக பத்தாண்டுகளே அதிகம். 6) ஆக இப்படி ஒரு செல்வாக்கை நம்பி பாஜக ஆட்சிக்கு வரும் எனச் சொல்வதெல்லாம் பாப்பா கதை. 7) எல்லா சாம்ராஜ்யங்களிலும் அடுத்த தலைவர்-அரசருக்கான தேவை ஏற்படும்போது ஏற்படும் குழப்பங்கள் திமுகவில் நிலவினாலும், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தான் என்ற கருத்து ஏகபோகமாக ஏற்கப்பட்டிருக்கிறது. 80 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் நடைபோடும் கலைஞர் மீது மக்களுக்கு இருக்கும் சலிப்பு ஸ்டாலின் மீது கிடையாது. எனவே எப்படிப் பார்த்தாலும் திமுக பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகும் கொள்கை பிடிப்புள்ள இளம் தலைவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். 8) ஜெயலலிதா அரசியலில் இருந்து இன்னும் முற்றாக விலகிவிட்ட சூழல் இல்லை.. அவர் சிறையில் இருக்கிறார். முதல்வராக முடியாவிட்டாலும் அவர் தான் அதிமுக என்னும் மாபெரும் கட்சியின் தலைவியாக நீடிக்கப்போகிறார். அதனால் எப்படியும் குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு அவர் ஆதிக்கத்தை தமிழகத்தில் காணாமல் போகச் செய்ய முடியாது. அவருக்கடுத்து அதிமுக களைந்து சிதறும் என்பதெல்லாம் அதீத கற்பனை. இப்படித்தான் எம்.ஜி.ஆர் இறந்தபோதும் சொன்னார்கள் என்பதை நினைவில் கொள்க. 9) ஏற்கனவே தமிழக பாஜகவில் கோஷ்டிப்பூசல் ஆரம்பித்துவிட்டது. தன் சாதியைச் சேர்ந்தவருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதவி வாங்கி கொடுத்துவிட்டார் என காவிக்காரர்கள் வெளிப்படையாகவே முனகத் துவங்கிவிட்டார்கள். 10) எனவே எப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது கஷ்டமான காரியம் மட்டுமல்ல முடியாத காரியம்! 34 பெரியார் தனது சாதிப்பெயரை விட்டதும், அன்றே 44 சதவீத இட ஒதுக்கீடும் [333] 35 பூந்தி பிள்ளையார் கூட்டம் கேள்வி :- திருமுருகன் காந்தி , சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட அழைப்பு விடுத்திருக்கின்றாரே ? நீங்கள் போவீர்களா? பதில் :- அசாரூதின் – சலீம் மாலிக் காலங்களில் நடந்த ஷார்ஜா ‘பிக்சிங்’ கிரிக்கெட் ஆட்டங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. இத்தனை காலம் சுப்பிரமணியன் சுவாமியின் இனவெறி தெரியாமல், ஜெ. விற்கு தண்டனை விதித்த பின்னர்தான் திருமால், மாபலிக்கு காட்சிதருவதைப் போல தெரிகின்றதோ என்று யாராவது ‘சுயராஜ்யா’ வில் எழுதாமல் இருந்தால் சரி. நீங்கள் போவது என்றால் போகலாம். ஆனால் , திருமுருகன் காந்தியின் டீம் , உங்களை அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர் மாதிரி ஏதாவது ஒன்றில் கையெழுத்து போட சொன்னாலோ , உங்களது மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் கொடுக்கச் சொன்னாலோ கொடுக்காதீர்கள். நீங்கள் வில்லங்கம் பிடித்த ஆளாக இருந்தால், பக்கத்து வீட்டுக்காரன் எண் அல்லது முன்னாள் காதலிகளின் முகவரிகளைக் கொடுத்துவிடவும். அந்த காலத்தில் உண்டியல் கம்யூனிஸ்ட் யூனியன் லீடர்கள் , எவரெல்லாம் தொழிலாளர் ஒற்றுமைக்காக உறுதியாக இருக்கின்றாரோ அவரை எல்லாம் , வெளியே கோஷம் போட்டுவிட்டு , உள்ளே போய் முதலாளிகளிடம் போட்டுக் கொடுப்பனர். அதை நினைவில் வைத்துக்கொள்ளவும். கேள்வி :- ஐயா, கிளிமூக்கு அரக்கனே, உமது திருமுருகன் கூட்டத்திற்கு போவாதீங்க என்ற பதிவை , தமிழ்த்தேசிய அரசவையில தப்பா பேசிட்டானுங்க? உம்ம பதிவுல குற்றமாம் ? இதுதான் பதிவு. “அண்ணாத்துரைன்னு ஒருத்தர் இருந்தாருல்ல அதான் திமுகவோட … அதே அண்ணாத்தொர தான் அவரு அமெரிக்க அடிவருடி.. சிஐஏ-வோக கையாளுன்னு முன்னாடி ஒரு கத உண்டு. கருணாநிதி குடும்பத்துக்கும் சென்னை அமெரிக்க தூதரகத்துக்கும் இருக்குற உறவு பத்தி விக்கிலீக்ஸ் கேபிள்கள் புட்டு புட்டு வச்சிச்சு.. தனித் தமிழ்நாடுன்னு சொல்லிட்டு இந்திய வருடியா மாறுன திமுககாரய்ங்க எல்லாம்… காட்டிக்கொடுப்பு ரா-ன்னு பேசுறது தான் காமெடியா இருக்கு. இந்த காமெடிகள நேரடியா வந்து சொல்ல வக்கில்ல அப்புறம் சுப்பிரமணிய சாமி வீட்ட முற்றுகையிட்டா திமுக-வுக்கு ஏன் பின்னாடி அரிக்குதுன்னு வேற தெரியல, வேற டீலிங்கோ ஆஸ்திரியா ஸ்டாம்பு இத்தாலி ஸ்டாம்புன்னு பிலிம் காமிச்சுட்டே இருக்குறவனுகளுக்கு திமுகவோட கோவணத்த அவுக்கும் போது கொஞ்சம் டெர்ராதானே இருக்கும்…”  பதில் :- சட்டியில் இருப்பதால், பழைய குருநாதர் + ஸ்டாம்பு சித்தர் க்ரூப் பிலிம் காட்டுகின்றவர்கள் என்பதுதான் ஊருக்கே தெரியுமே. அதில் ஒன்றும் பொருட்பிழை இல்லை. I too do not like them, they are arrogant fellows. பொருட்பிழை தகவல் பிழை எதுவென்றால் விக்கிலீக்ஸ் தந்திக் குறிப்புகள் 1970 களுக்குப் பின்னர் கிஸ்சிங்கர் காலத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதில் அண்ணாதுரை பற்றிய குறிப்புகள் எதுவும் கிடையாது. வேண்டும் என்றால் கலைஞர் , நெருக்கடி காலங்களில் எப்படி இந்திய இறையாண்மையை எதிர்த்தார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆக , முட்டுச்சந்தியில் என்னைத்திட்டியவருக்கு விக்கிலீக்ஸ் என்றால் உண்மையில் எதுவென்று தெரியுமா எனத்தெரியவில்லை. மேலும் அண்ணா திமுகவிற்காக, சுப்பிரமணியன் சுவாமியை எதிர்க்க கிளம்பும் பங்குனி 17 கரகாட்ட கோஷ்டிக்கு , அதிமுகவே அண்ணாதுரையின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டது என்பது தெரியுமா எனத் தெரியவில்லை. படிக்கின்ற மாணவர்களை இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி காட்டிக் கொடுப்பவர்களை தடுக்க, திமுக அனுதாபியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மனிதாபிமானம் இருந்தால் போதும். உங்கள் பிள்ளைகளை, காதலன் காதலிகளை, கணவர்களை தமிழ் நாஜிக்களிடம் இருந்து காப்பது உங்களது கடமை. சுப்பிரமணியம் சுவாமி ஒன்றும் கலைஞர் இல்லை, கறுப்புக் கொடி காட்டினால் முரசொலியில் முராரி பாட. மலையையும் வேரோடு பிடுங்கி எறியும் சுவாமிடா !! சுவாமியை மிஞ்ச சுவாமியாகுங்கள். — பூந்தி பிள்ளையார் கூட்டம் – சிறுகதை “அண்ணே , மெட்ராஸ் படம் நல்லாருக்குன்னு சொல்றாங்க , அம்மாவை காசு கொடுக்க சொல்லுண்ணே பார்த்துட்டு வந்துடுறேன்” “அதெல்லாம் கலீஜ்,அழுக்குப் பசங்களுக்கான படம், இன்னக்கி டீவில தேவர் மகன் படம் போடுறான் பார்த்துட்டு தூங்கு ” எனது இளைய சகோதரனை அதட்டி அவனுடனான பேஸ்புக் அரட்டையை முடித்துவிட்டு , பூந்தி பிள்ளையாரை ஸ்கைப்பில் அழைத்தேன். பூந்தி பிள்ளையார் , தமிழகத்தின் மிகப்பெரிய தமிழ்த்தேசியவாதி. பங்குனி 17 யின் தலைவர், பொருளாளர். பூந்தி ஸ்டேடஸ் போட்டால் தட்சினாமூர்த்தி கதறுவார். டாக்டர் சாமி சரணம் ஹாவர்டுக்கு பாடம் எடுக்க போய்விடுவார். அவ்வளவு டெர்ரர். மாத சந்தா கொடுக்கவில்லை எனில் இன்னும் டெர்ரர் ஆகிவிடுவார் பூந்தி பிள்ளையார். “என்ன தோழர் , கனடாவில் இருந்து இந்த மாதம் சந்தா வரவில்லையே” பூந்தியின் குரலில் மென்மையான கடுமை தெரிந்தது. “வழக்கமாக நன்கொடை கொடுக்கும் தமிழ்த்தோழர்கள் இன்னும் பணம் தரவில்லை தோழர்” உண்மையில் போதுமான அளவு கொடுத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் பூந்திக்கே கொடுத்துவிட்டால் கனடாவில் நான் எப்படி வீடு வாங்குவது. என் பங்கிற்கு மேலே வந்தால்தான் பூந்திக்கு அனுப்புவேன். பூந்திக்கு இதெல்லாம் தெரியாது. கதையை வாசிக்கும் நீங்கள் சொல்லிவிடாதீர்கள். “தோழர், சீக்கிரம் பணம் அனுப்பிவிடுங்கள், பின்னர், நாளை அதிரடியாக டாக்டர் சாமி சரணத்தை எதிர்த்து அவர் வீட்டின் முன்னால் கூச்சல் போடப்போகின்றோம் , அருமையான கட்டுரை ஒன்றை எழுதித்த்தாருங்கள் இளைஞர்கள் , மாணவர்கள் உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறி தமிழ்த்தெரிக்க வேண்டும்” “அப்படியே ஆகட்டும் தோழர் ” என்று ஸ்கைப்பைத் துண்டித்துவிட்டு டாக்டர் சாமி சரணத்திற்கு ஸ்நான பிராப்தி சம்பந்தம் இல்லை என்றாலும் “தண்ட கருமாந்திர தட்சிணாமூர்த்தியே ” என்று ஆரம்பித்து புஜகஜம் துடிக்க கட்டுரையை முடித்து அனுப்பிவைத்தேன். இளைஞர்கள் என் கட்டுரையை வாசித்தால் உடனே ஆயுதம் தாங்கி தமிழை எதிர்ப்பவர்களைத் தீர்த்து கட்டிவிடுவார்கள், அவ்வளவு ஆக்ரோஷம் இருந்தது. எழுதிமுடித்து வாசித்த எனக்கே ஒரு போராளி எபெக்ட் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மறுநாள் , எனது இளைய சகோதரன் , பேஸ்புக் அரட்டையில் வந்தான். “அண்ணே , உங்க பிரண்டு பூந்தி சார் சாமி சரணம் வீட்டுக்கு முன்னாடி புரடெஸ்ட் பண்ணப்போறாருல்ல, நானும் போறேன்” “அதுக்கு எல்லாம் எதுக்கு போற , அம்மா கிட்ட காசு வாங்கிட்டு ஈவ்னிங் மெட்ராஸ் படத்துக்குப்போ , அந்த பூந்தி கூட்டத்துக்கு எல்லாம் போனேன்னு தெரிஞ்சுச்சு தொலைச்சுடுவேன் ஜாக்கிரத ” 36 சிலக்கேள்விகள் சிலப்பதில்கள் கேள்வி :- Illuminati – Freemasons பற்றி ஏதாவது சொல்லுங்களேன் ? பதில் :- மார்க் ஜூகர்பெர்க்கும் நரேந்திர மோடியும் சந்தித்திருக்கும் இந்தத் தருணத்தில் Illuminati – Freemasons பற்றிய கேள்வி பொருத்தமானதுதான். ஆனால் Illuminati – Freemasons பற்றி பேசினால் பழைய குருநாதர் கோபித்துக் கொள்வார். இருந்தும் அவரின் தடையை மீறி, சில தகவல் மட்டும் சொல்கின்றேன், தமிழகத்தில் சேலத்தில் நிர்மாணிக்கப்பட்ட FreeMasons Lodge யில் ராஜாஜி முதலில் உறுப்பினராகவும் பின்னர் தலைமை கட்டுமானராகவும் உயர்ந்தார். FreeMasons உருவாக்க ஆசைப்படும் New World Order யில் , வர்ணாசிரமும் சிறப்பாக பொருந்தும் என்பதால் இராஜாஜி அனேகமாக இந்த அமைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பார். இன்றைக்கும் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டின் அத்திம்பேர் நாடான அமெரிக்காவிலும் இருக்கும் தமிழ்ப்பேசும் பெரும்பாலான ஆடிட்டர்கள் , டாக்டர்கள் ‘இலவசக்கொத்தனார்கள்’ தான். கேள்வி :- கலைஞர் , சர்க்காரியா கருணாநிதி , 2 ஜி கருணா என்று எல்லாம் ஊடகங்களால் ஏசப்படும் நிலையில், தண்டனை பெற்ற கைதியாக இருக்கும் ஜெயலலிதாவை , குற்றவாளி என்று சொல்வதில் ஊடகங்களுக்கு ஏன் தயக்கம் ? பார்ப்பன பாசமா ? பதில் :- அப்படி ஒன்றும் சொல்ல இயலாது. ‘உடன்பிறப்பே உனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும்’ என்று கடிதம் எழுதி விளக்க ஜெ. ஒன்றும் கலைஞர் அல்லவே. மனுதர்ம மகிமையில் மீண்டு(ம்) வந்துவிட்டால் ஜெ. பெங்களூர் ஓடினாலும் நேபாளம் ஓடினாலும் துரத்தி வந்தல்லவா பிடிப்பார். மனுதர்மத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஊடகங்கள் , எப்படியும் ஜெ. விடுதலை செய்யப்பட்டுவிடுவார் என்று நம்பிக்கை வைத்திருப்பதால் இரவு 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போக மாட்டார்கள்.   கேள்வி : கிளிமூக்கு அரக்கரே, மலாலா மற்றும் கைலாஷ் சத்யார்தி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபெல் பரிசு குறித்து ஏதாவது விசேஷம் உண்டா ? பதில் :- இது நிச்சயம் மிகவும் முக்கியமான நிகழ்வு. குழந்தைகள் படிக்க வேண்டும் என்று போராடுபவர்களுக்கு வழங்கப்படும் விருது கண்டிப்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கேள்வி : – இந்தியர்களில் பலருக்கும் மலாலாவை தெரிந்திருக்கிறது. ஆனால் கைலாஷ் சத்யார்தியை தெரியவில்லை !. கிளிமூக்கு அரக்கரே, மலாலாவின் போராட்டத்தை பெரிது படுத்திய ஊடகங்கள் அதே நோக்கத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்ட கைலாஷ் சத்யார்தியை இது நாள் வரை இருட்டடிப்பு செய்தது ஏன் ? பதில் :- மலாலா, இசுலாமிய தாலிபான்களை எதிர்த்து போராடுபவர். இசுலாமியர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், மத்திய கிழக்கு யூதர்களாக இருந்தாலும், பர்மாவை சேர்ந்த புத்தர்களாக இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது நமது பஜகோவிந்த ஊடகங்களின் வழக்கமான போக்கு. ஆனால் கைலாஷ் சத்யார்தி யாரை எதிர்த்து போராடுகிறார் என்று பார்த்தால், அவர் இசுலாமியர்களை எதிர்க்கவில்லையே? படிக்க முடியாத , பாமர ஒடுக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அல்லவா போராடுகிறார். இருந்த 12000 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மூடி குழந்தைகளை படிக்க விடாமல் செய்த, அப்படியே மீதி இருக்கும் 6000 பள்ளிகளிலும் கூட படிப்பு நேரத்தை பாதியாக ஆக்கி, மீதி நேரம் அவர்களை குழந்தை தொழிலாளிகளாக மாற்றும் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த பஜ கோவிந்தங்களை அல்லவா கைலாஷ் சத்யார்தி பல ஆண்டுகளாக எதிர்த்து வருகிறார். அவரை எப்படி நமது பஜகோவிந்த ஊடகங்கள் ஆதரிப்பார்கள் . குலக்கல்வி திட்டம் என்பது குழந்தைத்தொழிலாளி திட்டம் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. குலக்கல்வி வேறு, குழந்தைத்தொழிலாளி வேறு என்பது உங்கள் கருத்து என்றால், நீங்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்று பொருள். கேள்வி :- அடேய் ‘சொம்பு ‘ கிளிமூக்கு அரக்கா, உனக்கு தில்லு இருந்தால் திமுகவை விமர்சிடா பார்க்கலாம் ? பதில் :- எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி என்பதற்கு முழு உதாரணம் திமுக. பாரம்பரியமாக திராவிடத்தை எதிர்க்கும் அறிவாளிகள் சோ, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் கூட இதனை ஒப்புக்கொள்வார்கள். ‘மக்களின்’ எதிர்க்கட்சியாக திமுக சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கையில் திமுகவை விமர்சிப்பதற்கு முகாந்திரம் எதுவுமில்லை. 2016 யில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் , 100 நாட்கள் கெடு விதித்து, அதன் பின்னர் நான் திமுகவின் தவறுகளை விமர்சிக்கையில் , சொம்பு கிளிமூக்கு அல்ல, முட்ட வந்திருக்கும் கொம்பு கிளிமூக்கு என்று பாராட்டுவீர்கள்.   கேள்வி :- சமூக / அரசியல் கட்டுரைகளை சிரமமில்லாமல் வாசிப்பது எப்படி கிளிமூக்கு அரக்கரே ? பதில் :- பெயரில் என்ன இருக்கின்றது என்று சிலர் சொல்வார்கள். ஊடகங்களைப் பொறுத்தவரை பெயரில்தான் எல்லாமும் இருக்கின்றது. கட்டுரைகளை யார் எழுதியிருக்கின்றார் என்று பாருங்கள், சேஷாத்ரி , வைத்தியநாதன், கோபாலன் வகையறா பெயருடன் கட்டுரையாசிரியர்கள் இருந்தால் கட்டுரையையே வாசிக்க வேண்டியதில்லை. அப்படியும் வாசிக்க வேண்டியிருந்தால் எழுத்தை மட்டும் பயிற்சிக்காக வாசியுங்கள், அவர்கள் சொல்லவரும் ‘சமூக-அரசியல்’ கருத்தை தூக்கித் தூரப் போட்டுவிடுங்கள். மூளைச்சலவை, மன உளைச்சலில் இருந்து தப்பிக்கலாம்.   கேள்வி :- பஸ் எரிப்பு , எதிர்க்கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்குதல் , அன்னதானத்துடன் ஆரம்பிக்கும் உண்ணாவிரதம் போன்ற சட்டத்திற்கும் தார்மிகத்திற்கும் உட்பட்ட போராட்டங்களை அதிமுகவினர் நடத்துவதனால் ஜெ. விடுதலை அடைந்துவிடுவாரா ? பதில் :- தெரியவில்லை. உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி , மக்கள் முதல்வர் ஜெ. விடுதலை செய்யப்படவில்லை எனில் , தமிழ் நாடு தனிநாடு கோரும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனேகமாக இதற்காவது மத்திய அரசு பயந்து கொண்டு மனமிறங்கலாம்.   கேள்வி : கிளிமூக்கு அரக்கரே, இமான், ஜி.வி.பிரகாஷ் என்று பல இளந்தலைமுறை இசையமைப்பாளர்கள் தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் அளித்தாலும் கூட ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவர்கள் பேசப்படுவதை விட ஓரிரு படங்களிலேயே அநிருத்தும், சந்தோஷ் நாராயணனும் அதிகம் கவனம் பெற்றுள்ளார்களே, இது எப்படி கிளிமூக்கு அரக்கன் : இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்     37 நுண்ணரசியல் கேள்வி : நுண்ணரசியல் என்றால் என்ன ? பதில் : மெட்ராஸ், ஜீவா ஆகிய படங்கள் குறித்து ஒரு பத்தி புகழ்ந்தும் 4 பத்தி எதிர்மறையாகவும் குறை கூறி எழுதப்படும் பஜகோவிந்தங்கள் மற்றும் பஜகோவிந்த அடிவருடிகளின் ”விமர்சன” முகநூல் பதிவுகள் கேள்வி : அவர்கள் ஏன் அப்படி எழுதுகிறார்கள் ? பதில் : தலித்களுக்கு ஆதரவாக ஒரிரு வசனம் இருந்தால் கூட அந்த படம் வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணம் தான் பார்ப்பனியத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்க்கும் படங்கள், இயக்குனர்களின் சிறு தவறுகளும் பெரிதாக்கப்படும் பார்ப்பனியத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கும் படங்கள், இயக்குனர்களின் பெருந்தவறுகளும் மறைக்கப்பட்டு அதில் இருக்கும் சில நல்ல கூறுகள் பெரிதாக்கப்படும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஆதரவாக இருந்தால் தங்களுக்கு வேண்டப்பட்ட பந்து வீச்சாளர்களும், தங்களுக்கு வேண்டப்படாத மட்டையாளர்களும் இறக்கப்படுவார்கள். ஆடுகளம் மட்டையடிக்கு ஆதரவாக இருந்தால் தங்களுக்கு வேண்டப்பட்ட மட்டையாளர்களும், தங்களுக்கு வேண்டப்படாத பந்து வீச்சாளர்களும் இறக்கப்படுவார்கள். இதன்மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் ஆவரேஜ் அதிகரிக்கும் ! அவர்கள் திறமையுள்ளவர்களாக காட்டப்படுவார்கள். பிற சமூக வீரர்களின் ஆவரேஜ் குறையும், அவர்களுக்கு திறமை இல்லை என்று கூற வசதியாக இருக்கும் கேள்வி : இது என்ன புது கதை பதில் : புதுக்கதை எல்லாம் இல்லை. பல தசாப்தங்களாக நடக்கும் பழங்கதைதான் 1980களின் வந்த பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், எஸ்.பி.முத்துராமன் போன்ற இயக்குனர்களின் படங்களை மட்டந்தட்டி, மணிரத்னம் போன்ற பார்ப்பனர்களும், பாலா போல் பார்ப்பனியத்தை நேரடியாகவும், ஷங்கர், முருகதாஸ் போல் பார்ப்பனியத்தை மறைமுகமாகவும் தூக்கி நிறுத்து இயக்குனர்களும் அறிவுஜீவியாக காட்டப்பட்டது இதே நுண்ணரசியல் மூலம் தான் சின்னகவுண்டர், நாட்டாமை, எஜமான், தேவர்மகன் போல் கிராமங்களின் நிலபிரபுத்துவ, சாதிகட்டமைப்பை இறுகவைக்கும் படங்களும் ரோஜா, ஜெய்ஹிந்த போல் தேசபக்தியை நவதுவாரங்களிலும் திரிக்கும் படங்களும் வலுக்கட்டாயமாக வெற்றி பெற வைக்கப்பட்டதும், அந்த படங்களில் கூறப்படுவது தான் சிறந்த வாழ்க்கை முறை என்று நமது மக்கள் நம்பியதும் தான் சோகம் ! கேள்வி : சும்மா சொல்லாதீர்கள் அரக்கரே, நம் மக்கள் முட்டாள்களா பதில் : வாலிபால், அமலாபால், லோக்பால் என்று சில மாதங்கள் முன்புவரை கூவிய (கூவ வைக்கப்பட்ட) அதே மக்கள், இன்று ஊழல் செய்து சொத்த சேர்ப்பது தவறா என்று கேட்கிறார்களே, இவர்கள் புத்திசாலிகளா அல்லது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடங்கள் மூலம் நம் மக்களை மூளை சலவை செய்யும் பஜகோவிந்தங்கள் புத்திசாலிகளா ? 38 காங்கிரஸ் / பிஜேபி கேள்வி :- அதிமுகவின் இடத்தை தாங்கள் தான் நிரப்பப் போகின்றோம் என்று பாஜகவும் காங்கிரசும் சொல்கின்றனரே? அது சாத்தியமா ? பதில் :- தமிழ்நாட்டில் முன்னூற்று முப்பத்தி சொச்ச தமிழ்நாஜிக்களே தாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று நம்பும்பொழுது காங்கிரசும் பாஜகவும் ஆசைப்படுவது வாக்கரசியல் மக்களாட்சியில் இயல்பான ஒன்றே. ஆனால் சாத்தியப்படுமா என்று ஆராய்ந்தால் இல்லை என்பதே விடையாக கிடைக்கின்றது. அதன் காரணங்கள், 1. தமிழ்நாட்டை பொறுத்தவரை , கட்சி உள்கட்டமைப்பில் , காங்கிரஸ் பண்ணையார்களின் கட்சி என்றால் பாஜக பஜகோவிந்தங்களின் கட்சி. இருவகையினரும் களப்பணி என்றால் என்ன என்று கேட்பவர்கள். சாமானிய மனிதர்களுக்கு நெருக்கமாக இருக்கும் பர்சனாலிட்டி பேச்சு ஈர்ப்பு உடையவர்கள் இரு கட்சியிலும் குறைவு. தொலைக்காட்சியில் வரவில்லை என்றால் இருகட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கின்றனரா என்று கேள்வி கேட்கப்படும் நிலைமைதான் இருக்கின்றது.  2. காமராஜர் காலத்திற்கு பின்னர், தமிழ்நாட்டு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கான முடிவுகள் சென்னையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புவர்கள் தமிழர்கள். காங்கிரஸ் / பாஜக இருவரில் யார் வந்தாலும் டெல்லியின் கைப்பாவையாக தமிழகத்தின் முதல்வர் , இன்னொரு கவர்னராகத்தான் இருப்பார். அதை மக்கள் உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாட்டுக்கே உரிய கட்சிகளை மட்டும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கின்றார்கள். 3. உள்ளுக்குள் புகைந்தாலும் தலைவர்களின் முன் கட்டுப்பாட்டுடன் இருக்கும் திராவிடக்கட்சிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்களைப் போல அல்லாமல் , கோஷ்டித் தகராறை வெளிப்படையாக காட்டாமல் இந்த இருகட்சிகளினாலும் அரசியல் செய்ய முடியாது. 4. அவ்வப்பொழுது புகைந்தாலும், இங்கு இந்து – முஸ்லிம் சண்டைகள் வராததற்கு காரணம் , வட இந்தியாவில் மொகலாயர் காலத்தில் இருந்து இஸ்லாமியர்கள் இருப்பதைப் போல, , தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தனித் தீவுகளாக வாழ்வதில்லை. தத்துவங்கள்தாம் அரபு இறக்குமதி, முப்பாட்டனார் காலத்தில் முஸ்லிமாக மாறியவன் தான் இங்கிருக்கின்றான் என்பதை ரத்தத்தின் ரத்தமான முனியாண்டியும் கந்தசாமியும் தெரிந்து வைத்திருப்பதால் பாஜக வின் பகல் வேஷங்கள் எடுபடாது. 5. இருவருமே ‘இந்தி’ , வட இந்திய விழுமியங்களைத் தங்கள் மேல் திணித்துவிடுவார்கள் என்ற பயம் முன்பை விட தமிழர்களிடையே அதிகமாக உள்ளது. மோடி வந்தாலும் கூட்டம் சேர்ந்தாலும் ராகுல் , ராஜீவ் வேஷத்தில் வந்தாலும் ‘சலே ஜாவ் ‘ என்று சொல்லிவிட்டுப் போகின்றவர்கள் தமிழர்கள். தெலுங்குப்படங்களில் இரண்டு காமெடி டிராக்குகள் இருப்பது தற்போதைய டிரெண்டு , அதுமாதிரி தமிழ்நாட்டிற்கு இரண்டு என்பதுதான் உண்மை. தமிழ்நாஜிக்கள் சமூக ஊடகங்களில் மட்டும் எப்படி அரசியல் செய்கின்றனரோ, அதைப்போல காங்கிரசும் பாஜகவும் தொலைக்காட்சியில் மட்டும் அரசியல் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். 39 திமுகவும் ஈழமும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ - DMK and Tamil Eezham) திமுகவும் ஈழமும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ – DMK and Tamil Eezham) கேள்வி :- ஐநா மன்றத்தில் ராஜபக்சே உரையாடப்போவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 25 ஆம் நாள் திமுக முன்னெடுக்கும் கருப்புக் கொடி போராட்டம் ஈழ விசயத்தில் திமுக மீண்டும் வடிக்கும் நீலிக்கண்ணீரா? பதில் :- தமிழக அரசியலில் ஈழ விசயத்தில் நீலிக்கண்ணீர் வடிக்காத ஒரே கட்சி திமுக மட்டுமே. ஈழத் தமிழர்கள் என்று சொல்லக் கூடாது, ஈழமும் கிடையாது ஈழத்தமிழர்களும் கிடையாது இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லவேண்டும் என்று சொல்லியவரை ஈழத்தாய் என்று பட்டாபிஷேகம் செய்யும் போஸ்ட் மாடர்னிச ஈழத்து அரசியலில், இலங்கையை தொன்று தொட்டு ‘ஈழம்’ என்று குறிப்பிட்டே தொடர்ந்து இலங்கைத் தமிழர் செய்திகளை வழங்கிய ஒரே பத்திரிக்கை முரசொலி என்பது உங்களுக்குத் தெரியுமா ? விடுதலைப் புலிகள் , பிரபாகரன் தீவிரவாதிகள் இந்தியத்தேசியத் துரோகிகள் என்று தமிழகத்தில் , ராஜீவ் கொலைக்கு பின்னர் நம்பப்பட்ட நிலையில், தொடர்ந்து புலிகளின் செய்திகளை , ஜெ. வின் 1991 – 1996 ஆட்சியின் பொழுது கூட தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தது திமுகவின் முரசொலி பத்திரிகை மட்டுமே கேள்வி :- ஈழம் சம்பந்தபட்ட விசயங்களில் திமுக சறுக்கியதே இல்லையா ? பதில் :- ஆம். திமுக தலைமை சறுக்கியிருக்கின்றது. சறுக்கிய இரண்டு முறையும் செய்யாத தவறுக்கு பிராயச்சித்தமாக ஆட்சியையும் இழந்தது வீண் பழியையும் சுமந்தது. ஐ.கே. குஜ்ரால் காலத்தில் திமுக கூட்டணியில் இருந்ததனால் மத்திய ஆட்சிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. (http://www.rediff.com/news/dec/03cho.htm) கேள்வி :- இரண்டிற்குமே திமுக மட்டுமே பொறுப்பாக முடியுமா ? பதில் :- இல்லை. முதல் முறை இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக் கொண்டவர்களின் தவறுகள் மறக்கப்பட்டன. ப.சிதம்பரம் பேட்டியை பார்க்கும் வரையில் நான் கூட திமுகவின் மேல் 2009 நடவடிக்கைகளுக்காக கோபமாகத்தான் இருந்தேன். நார்வே வெள்ளை அறிக்கை, போரின் கடைசி நிமிடங்களில் அங்கிருந்தவர்களின் நேரடி வாக்குமுலம் இவற்றை எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் உயரதிகாரியின் உதவியுடன் அலசி ஆராய்ந்து பார்த்த பின்னர்தான் , திமுகவை கழுவில் ஏற்றும் அளவிற்கு திமுக கொலைபாதகம் எதுவும் செய்யவில்லை எனப்புரிந்தது. கேள்வி :- 2009 ஆம் ஆண்டு திமுக என்னதான் செய்திருக்க முடியும் ? பதில் :- இராஜினாமா செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் மாநிலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும். திமுக ஆட்சியில் எகிறிய போலித் தமிழ்த்தேசிய வியாதிகள், கவர்னர் ஆட்சியில் மூச்சுக்கூட விடமுடியாமல் முடக்கப்பட்டிருப்பார்கள். இன்றைக்கு தமிழ் நாஜி என்ற ஓர் அடையாளமே இருந்திருக்காது. ஒரு வகையில் இன்று தமிழ் நாஜிக்களை வளரவிட்டதற்கு கலைஞர் ராஜினாமா செய்யாததே காரணம். கலைஞரை எதிர்ப்பது கழுதை என்றாலும் குதிரையாக்கப்படும். கேள்வி :- நீங்கள் என்ன சொன்னாலும் திமுக தலைமையை மன்னிக்க முடியவில்லை ? பதில் :- 2009 – 2011 யில் இப்படி தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள் , சமூக ஊடகங்களில் மீண்டும் திமுக பூனைக்குட்டியை வெளியேவிட்டு , கழகம் திரும்பியதை பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் ஏன் திமுக தலைமையை மன்னித்தார்கள் என்று தெரியும். ஈழ விசயத்தில் , திமுக தலைமையை கூட குறை சொல்லமுடியும். ( வேண்டா மாமியார் வகையில் ), ஆனால் திமுக தொண்டர்களின் ஈழ ஆதரவை , ஈழத்து உணர்வை என்றுமே குறைசொல்ல முடியாது. 1991 யில் உண்மையான வன்முறையையும் 2009 முதல் வார்த்தை வன்முறையையும் சகித்துக் கொண்டவர்கள் திமுக தொண்டர்கள். எனக்கு திமுகவை பிடிக்க காரணமே அதன் தலைமையைவிட அதன் தொண்டர்கள்தாம். கேள்வி :- தனி ஈழமே தீர்வு என்று போராடிய புலிகள் கருத்திற்கு மாறாக ஒருங்கிணைந்த இலங்கையில் அதிக அதிகாரப்பகிர்வு என்று திமுக குறிப்பிடுகின்றதே ? அது தவறல்லவா ? பதில் :- புலிகள் = ஈழம் என்பதல்ல. மேலும் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் , ஆண்டன் பாலசிங்கமே , 1994 ஆம் ஆண்டு அதிக அதிகாரங்களைக் கொடுத்தால் தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டு ஒருங்கிணைந்த இலங்கையில் இருக்க தயார் என்று பேட்டி கொடுத்திருக்கின்றார். தரவு – http://murasoli.in:8080/…/19…/mu-19940923/19940923003001.pdf கேள்வி :- சரி, ஈழத்திற்காக திமுக என்ன செய்தது ? பதில் :- ஈழத்திற்காக திமுக என்ன செய்தது என்பதை எழுதினால் நெஞ்சுக்கு நீதியின் தொகுதிகளை விட அதிகமாக வரும். 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரால் நடக்கவிருந்த இனப்படுகொலையைத் தடுத்து, அமைதிப்படையை திரும்ப வரவழைத்தது திமுக ஈழத்திற்காக செய்த மிகப்பெரிய விஷயம். படுபாதகங்களை செய்த அமைதிப்படையை வரவேற்க போகாமல் , இந்திய இறையாண்மையையே அதிரச்செய்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். உங்கள் கேள்விகளில் இருந்து நீங்கள் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசியல் கற்று கொள்பவர் எனத்தெரிகின்றது. நேரமிருந்தால் நீங்கள் ஒன்று செய்யலாம். முரசொலியின் பழைய நாளிதழ்களைப் பார்க்கும் தேடுபொறிக்கு செல்லுங்கள். http://murasoli.in:8080/murasoli/home.jsp ஈழம் , இலங்கை, பிரபாகரன் இந்த சொற்களைக் கொண்டு பழைய செய்திகளைத் தேடுங்கள். எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் தமிழர்களைத் தட்டி எழுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட செய்ததில் திமுகவின் பங்கு திமுக தொண்டர்களின் பங்கு தெரியும். கேள்வி :- திமுகவை எதிரியாக பார்க்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் , செப்டம்பர் 25 ஆம் நாள் கறுப்புக் கோடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று அறிவித்து இருக்கின்றார்களே ? பதில் :- தமிழ்ச்சகோதர யுத்தத்தில் அதுவும் ஒரு பகுதி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்று பிரபாகரன் அதிமுகவின் எம்ஜிஆரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுகவின் முன்னெடுப்புகளில் இருந்து விலகினார். இன்று தமிழ்த்தேசியவாதிகளும் அதிமுகவின் அம்மையாரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுகவை எதிர்க்கின்றனர். அவர்கள் எதிர்ப்பதும் நல்லதற்கே, பொதுமக்களுக்கு அடையாளம் காண உதவும். கேள்வி :- நான் ஏன் திமுகவின் கறுப்புக் கொடி போராட்டத்தில் பங்கு பெற வேண்டும் ? பதில் :- உங்களுக்கு திமுக தலைமையை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்தியாகட்டும் , சேது சமுத்திரத்திட்டமாகட்டும் , இடஒதுக்கீடு ஆகட்டும் திமுக என்ன செய்கின்றது என்பதைத்தான் ஒட்டு மொத்த இந்தியாவும் பார்க்கின்றது ஊடகங்களும் ஏசியோ பேசியோ திமுகவின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றன.. ஏனைய தமிழ் உணர்வு கட்சிகளை fanatic fringe parties என்று ஒதுக்கிவிடுகின்றனர். ஏறத்தாழ 50 லட்சம் திமுகவினர் வீடுகளில் எதிர்ப்புக் கொடி ஏற்றப்படுகின்ற நிலையில் , ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களில் ஈழத்து பிரச்சினையை ஒருமித்த குரலில் எடுத்து செல்வது தமிழர்களின் கடமை. கட்சி சார்பற்ற தமிழ் உணர்வாளராக நீங்கள் இருந்தால், குறைந்த பட்சம் ஒரு கறுப்புப் பட்டையை கையில் அணிந்து கொள்ளுங்கள். திமுக போராட்டம் என்று சொல்ல வேண்டாம் , இராஜபக்சே எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லுங்கள். கலைஞரை பிடிக்காது அதனால் செய்ய முடியாது என்று சீமான் அணியினரைப் போல நினைத்தால், தமிழ்த்தேசியம் என்பது கலைஞர் எதிர்ப்பில் கரைந்து போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம். 40 ஆடே திருடுபோகலிங்கய்யா - ஓரங்க நாடகம் நாட்டாமை டமாரசாமி, மம்மி வக்கீல் பாகேசுவரபாவ்பாஜி , பஞ்சாயத்து போர்டு வக்கீல் லவானிடங், மற்றும் க.பண்பழகன், துப்ரமணியன் காமி. இடம் : நாட்டாமை ஆலமரம் நாட்டாமை : லவானி , ஆதாரம் எங்க ? லவானி: அய்யா, இப்படி மொட்டையா கேட்டீங்கன்னா எப்படி ? எதுக்கு ஆதாரம் ? நாட்டாமை : ( கூட இருக்கும் சொம்பைப் பார்த்து ) – இது என்னா கேசு ? சொம்பு: சொத்து குவிப்பு வழங்குங்க.. நாட்டாமை : யார் சொத்து குவிச்சா ? ஆதாரம் என்ன ? சொம்பு: எங்கிட்ட எதுக்கு அய்யா கேக்குறீங்க ? அல்லி ராஜிய வக்கீல் கூத்கோள்றிதாரு பாருங்க அவர கேளுங்க.. நாட்டாமை : லவானி, ஆதாரம் என்ன ? லவானி: அய்யா அதான் கீழ் பஞ்சாயத்துல பன்ஹா எல்லா ஆதாரத்தையும் பொரட்டி பொரட்டி பாத்து தானே தீர்ப்பு எழுதினாரு ? நாட்டாமை : என்ன தீர்ப்பு ? லவானி : சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புங்கய்யா.. (வெளியில் இருந்து சத்தமாக ஒரு குரல்..) சத்யராஜ் சண்டே : சொத்து வழக்கு, சொத்து வழக்கு… மம்மி வக்கீல் : டேய் நீ மூடு. நாங்க பாத்துக்கறோம்.. நட்டாமை : யார் அவன் ? அவங்கிட்ட ஏதோ மேட்டர் இருக்கு…இல்லி பண்றி, கூத்கோள்றி.. சத்யராஜ் சண்டே கெத்தாக மம்மிவக்கீலை ஒரு லுக் விட்டுக்கொண்டே உள்ளே வந்து பஞ்சாயத்து தரைவிரிப்பில் ஓரமாக உட்கார்கிறார்.. மம்மி வக்கீல் : பக்கி பய எம்பி பதவிய இவன் தட்டிக்கிட்டு போயிடுவான் போல… நாட்டாமை : லவானி, நீ சொல்லு…எந்த எந்த ஊர்ல சொத்து இருக்கு ? லவானி : சென்னையிலயும், ஐதராபாத்லயும் இருக்குங்கயா.. நாட்டாமை: மும்பையிலயும் டெல்லியிலயும் இருக்கா ? லவானி: தெரியலைங்கய்யா…. நாட்டாமை : யார் விசாரணை அதிகாரி ? மும்பையிலயும் டெல்லியிலயும் சொத்து இருக்கா இல்லையா ? லவானி: இல்லங்கய்யா அதை பத்தி எந்த தகவலும் இல்லை.. நாட்டாமை : அப்ப அரைகுறையா விசாரிச்சு இருக்கீங்க. ஆதாரம் இல்லை..அப்படித்தானே ? லவானி: ஆமாம் அய்யா ஆதாரம் இல்ல… மம்மி வக்கீல் : அப்புறம் என்ன அய்யா, அவரே ஆதாரம் இல்லைன்னு சொல்லிட்டாரு. அக்யூட்டல் கொடுங்க, மம்மி மறுபடி பதவி ஏற்கனும்.. லவானி: டேய் சாவடிக்காதடா…மும்பையிலயும் டெல்லியிலயும் சொத்துக்கு ஆதாரம் இல்லைன்னு தானே சொன்னேன் ? சென்னையில இருக்கு, ஆந்திராவுல இருக்கு… நாட்டாமை : சென்னையில என்ன ஆதாரம் இருக்கு, சொல்லு லவானி சொல்லு… லவானி: அய்யா அது ஜட்ஜ்மெண்ட்ல இருக்கே அய்யா ? நாட்டாமை : ஜட்மெண்ட்ல இருக்கிறது இருக்கட்டும்…நீ சொல்லு.. லவானி மேல் மந்திரித்த எலுமிச்சை பழத்தை ஒருவர் பார்வையாளர் பக்கத்திலிருந்து தூக்கி எறிகிறார்.. லவானி: டேய் என்னாங்கடா இது ? நாட்டாமை இதை பார்த்துக்கிட்டு தான இருக்கீங்க ? எலுமிச்சம்பழத்த தூக்கி போடுறானுங்க.. நாட்டாமை : டவாலி அந்த எலுமிச்சம்பழத்த எல்லாம் பொறுக்கிட்டு போய் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாங்க… பஞ்சாயத்து கலைகிறது…லஞ்சுக்கு அப்புறம் மீதி வழக்க நடத்தலாம்…லவானி, ஆதாரத்த எடுத்துக்கிட்டு வாங்க.. …லஞ்சுக்கு பிறகு…. நாட்டாமை : பெருதாவூர் பங்களா எவ்ளோ காசு ? லவானி : அய்யா நிறைய காசுங்கயா…அதுல டைல்ஸ் எல்லாம் இட்டாலியன் மார்பிள்ஸ்… மம்மி வக்கீல் : அய்யா இட்டாலியன் மார்பிள்னு ஏமாத்தி வித்துட்டானுங்க அய்யா…அது இட்டாலியன் மார்பிளே இல்லை….இங்க துடியலூர்ல பாலீஷ் போட்டதுங்க… நாட்டாமை : அப்ப மதிப்பீடு சரியில்லை.. லவானி: அய்யா ஏற்கனவே அவுங்களுக்கு 20 பர்செண்ட் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கோம்… நாட்டாமை : என்னடா காமெடி பண்றீங்களா ? ஏன் 20 பர்செண்ட் ? பிக் பஸார்ல 50 பர்செண்ட் கொடுக்கும்போது ஆலமரபஞ்சாயத்துல மட்டும் கொடுக்க கூடாதா ? ஒரு அம்பது அறுபவது பர்செண்ட் போட்டு கொடு… லவானி : அய்யா ஏற்கனவே மதிப்பீடு முடிஞ்சு தீர்ப்பும் கொடுத்தாச்சு…இதுக்கப்புறம் எப்புடி டிஸ்கவுண்ட் கொடுக்கிறது ? நாட்டாமை: செல்லாது செல்லாது…போய் மறுபடி மதிப்பீடு செஞ்சுட்டு வாங்க… லவானி: அய்யா ஐ.ஆர்.சி.டி.சில டிக்கெட்டே கெடைக்கமாட்டேங்குது…நான் போவமாட்டேன்… நாட்டாமை : அட உன்னை இல்லை..தமிழ் நாடு மந்தையில இருந்து யாரையாவது அங்க இருந்தே மறுபடி மதிப்பீடு பண்ணி போன்ல சொல்ல சொல்லு, நான் டிஸ்கவுண்ட் தரேன்.. க.பண்பழகன் : அய்யா இந்த வழக்கிலயிருந்து லவானியை நீக்கனும்…எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் லவானி: கேஸே முடியப்போவுது, இப்ப வந்து நீக்கனும்னு…வயசானாலே அறிவு மங்கிரும் போல.. துப்ரமணியன் காமி. : யோவ், என்னையா சொன்ன ? உன் மேல இண்டர்போல்ல கேஸ் கொடுத்து இட்டாலி பஞ்சாயத்துலல தண்டனை வாங்கி கொடுப்பேன்… மம்மி வக்கீல் : சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போது காமெடி பண்றதுக்குன்னே சில பேரு கெளம்பி வருவானுங்க… க.பண்பழகன் : புர்ர்ர்ர்ர்ர்…(சிரிப்பு)…யோவ் துப்ரமணி, உன்னையத்தான் சொல்றான்…அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்… துப்ரமணியன் காமி. : மிஸ்டர் பண்பழகன், உன்னைய பத்தி விக்கிலீக்ஸ்ல வர வைக்கிறேன்…அப்புறம் தெரியும் நான் யாருன்னு… நாட்டாமை : டேய் இங்க நான் நாட்டாமையா நீ நாட்டாமையா? கம்முனு இருக்கனும்…ஆவணங்களை பார்வையிடுகிறார்…..டேய் என்னாடா இது ? மம்மி சுசிக்கிட்ட ஒன்னரை கோடி கடன் வாங்கி இருக்காங்க ? அவங்க எப்படிடா சொத்து குவிக்க முடியும் ? மம்மி வக்கீல் : வாய் விட்டு சத்தமாக பாட ஆரம்பிக்கிறார்…தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ஆ ஆ ஆ… லவானி: அய்யா, அந்த கடனை கொடுக்க களவரசிக்கிட்ட ரெண்டு கோடி வாங்கி இருக்காங்க… நாட்டாமை: அட அப்புறம் ? லவானி: களவரசி அந்த கடனை கொடுக்க மம்மிக்கிட்ட மூனு கோடி கடன் வாங்கி இருக்காங்க ? நாட்டாமை : அடப்பாவமே ? அப்புறம் ? பாவம்யா…ஆனாலும் மம்மிக்கு எவ்ளோ இளகின மனசு ? லவானி : அய்யா, அந்த மூனு கோடிக்கு கணக்கில்லைங்க… நாட்டாமை: யோவ், இங்க எல்லாரும் கடன் தானே வாங்கி இருக்காங்க ? கடனாளிங்க எப்படிய்யா சொத்து குவிக்க முடியும் ? லவானி : ஆமங்கய்யா … இல் இல் இல்லீங்கய்யா… நாட்டாமை : ஆதாரம் கொடு… லவானி : நான் எழுத்து மூலமா கொடுக்கிறேங்க… நாட்டாமை : அஷ்டே ! ஆயித்து… இப்பவே ஒக்காந்து எழுது… லவானி : பேனா கொண்டுவரலைங்க… நாட்டாமை: வாட் ஈஸ் திஸ் ஸ்டுப்பிட் ஆப் த நான்ஸென்ஸ் ஆப் த இடியட்ஸ்…ஒரு பேனா இல்லையா ? யார்ட்டயாவது கடன் வாங்கி எழுதுய்யா… லவானி : கடன் வாங்குற பழக்கம் எனக்கு கிடையாது… மம்மியின் வக்கீல் : ராகம் எடுத்து பாடுகிறார்…தெய்வமே…தெய்வமே…நன்றி சொல்வேன்…தெய்வமே…. நாட்டாமை : யோவ், இது என்ன பஞ்சயாத்தா இல்லை நாடக மேடையா ? (இடையிடையே க.பண்பழகன் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்னு சொல்லிட்டே இருக்கார். துப்ரமணியன் காமி டிவிட்டரில் தாஜ்மகால் சிவன்கோவில்னு கேப்புல விட்டாய் டிவிட்டடிக்கிறார் ) மம்மியின் வக்கீல் : அய்யா பதில் வாதம் வைக்க சொன்னீங்களே ? அது தான் பதில் வாதம்… நாட்டாமை : போங்கடாங்….நீயாவது ஆதாரம் கொடு… மம்மியின் வக்கீல்: ஆதாரத்துக்கே ஆதாரம் கொடுத்தா சேதாரத்துக்கே சேதாரமாயிரும் பரவால்லயா ? சத்யராஜ் சண்டே எழுந்து ஐயா, 99% தமிழ்நட்டு சனம் மம்மி பாவம்னு வோட்டுப்போட்டிருக்காங்க எங்க தொந்தி டீவில ஆதாரமிருக்குன்னு எழுகிறார். (டீவியில் வாக்குகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கே அவார்டுன்னு கோமான் பஞ்சாயத்து மர கிளையில் தொங்கியபடி கத்துகிறார். ஒறவுகளே, பஜய் டீவி நம்மை ஏமாற்றியது. வந்தேறி கொருனாநிதி ஒழிக, கிளைக்கு கிளை தாவி கத்துகிறார்) துப்ரமணியன் காமி. : அய்யா உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை…நீங்களே பார்த்து இவாளுக்கெல்லாம் அவா அவா கோத்திரம் பார்த்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்… மம்மியின் வக்கீல் : வெளிய வா வெச்சுக்கறேன்..உன்னை.. க.பண்பழகன் : அய்யா. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் நாட்டாமை : யோவ், கம்னு குந்தினிரு. பிச்சுப்புடுவேன் பிச்சு… மம்மியின் வக்கீல் : பிக்காஸ் ஐயம் ஹப்பி Because I’m happy Clap along if you feel like a room without a roof.. நாட்டாமை : டேய்ய்ய்…சொம்பு பார்த்த்… நான் சரியாத்தான் பேசுறேனா ? சொம்பு: ஆமாம்ங்கயா… லவானி: அய்யா வொய்ப் ஆபீஸ்ல இருந்து வந்துருவா நான் கெளம்பனும்… நாட்டாமை : நாளைக்கு பஞ்சாயத்து ஆரம்பிக்கும்போது ஆதாரத்தோட வரல…எல்லாரையும் கத்தியால குத்திருவேன்… எல்லாரும் ஜெர்க் ஆகி நிற்கிறார்கள்…சொம்பு கையில் வைத்திருக்கும் சொம்பால் தன் மண்டையிலேயே அடித்துக்கொள்கிறார்… அதுவரை எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்னு சொல்லிக்கொண்டிருந்த க.பண்பழகன் நடக்கும் ஆரியக்கூத்தைப்பார்த்துவிட்டு ஆடே திருடுபோகலிங்கய்யா என்று சொல்ல ஆரம்பித்தார். திரை இறங்கியது நாடகம் முடிந்தது. பொறுப்புத்துறப்பு – உங்களுக்கு கற்பனை வளமிருந்தால் இந்த ஓரங்க நாடகத்தை நாட்டு நடப்புகளுடன் சேர்த்து வாசிக்கலாம். 41 வன்முறையின் வகைகள் இரண்டுவகையான வன்முறைகள் இருக்கின்றன. ஆதிக்கசாதிகள் குடிசையைக் கொளுத்துதல், சிலைகளை உடைத்தல் என்பது ஒருவகையான வன்முறை. இரண்டாம் வகை வன்முறை உளவியல் வன்முறை. எதிராளியைத் தன்னைத்தானே ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் கொண்டு செல்லுதல். எதிராளிக்கு நல்லது செய்பவர்களை கருத்தியல் ரீதியாக வன்முறை செய்து அவர்களை பயங்கொண்டு ஓடச்செய்து எதிராளிகளை தனிமைபடுத்துவது. முதல்வகை வன்முறையில் ஆதிக்கசாதித்தலைவர்களிடம் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் அந்த கோபம் களையப்பட்டும் அமைதியைத் திரும்பக் கொண்டுவரலாம். ஆனால் பார்ப்பனர்கள் உளவியல் வன்முறையைக் கையில் எடுப்பவர்கள்.உளவியல் வன்முறைக்கு ஆதாரங்கள் தருவது சிரமம். வரிகளுக்கிடையில் உள்ள இடைவெளியின் பொருளைப் புரிந்து கொண்டால் மட்டுமே வன்முறை தெரியும். எடுத்துக்காட்டிற்கு, முழுமையான சந்திரமுகியாக மாறிவிட்ட சமூக ஆர்வலர் பத்ரி சேஷாத்ரி , அதிமுகவைப்பற்றி பேச திமுகவிற்கு அருகதையில்லை என்று கருத்தியல் வன்முறை செய்வார். வேறுசில வேதவிற்பன்னர்கள் திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பார்கள். இவர்களது நோக்கம் அதிமுகவைக் காப்பாற்றி, திமுகவை கீழிறக்கி பாழ்ப்படுத்துவது. திமுக கிடக்கட்டும். சமீபத்தில் வைணவப் பிராமணப்பெரியவர் இராமனுசரைப்பற்றி எழுத சூத்திரன் கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்பது கூட உளவியல் வன்முறைதான். தந்தி பாண்டே , சூத்திரத் தலைவர்களிடம் ஒவ்வொரு முறையும் கொடுப்பது இந்த உளவியல் வன்முறையைத்தான். உளவியல் வன்முறையைத் தன் வசம் வைத்திருப்பவர்களால், எந்த நேரத்திலும் நேரடியான வன்முறையைத் தூண்டிவிடமுடியும். வாஞ்சிநாதய்யர், கோட்சே, ராஜீவ்கோஸ்வாமி , சங்கராமன் வரை ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உண்டு. ஒருவன் என்னையடித்தான் நான் அவனைத்திருப்பியடித்தேன் என்பதைவிட, ஒருவன் என்னை அடித்தான், நான் திருப்பியடிக்கவில்லை , அடிவாங்கிக்கொண்டேன், ஆனால் அவன் காலம் முழுவதும் அழுதுகொண்டிருக்கும்படியான காரியங்களைச் செய்தேன். இவ்வகையான உளவியல் கூறுகளையும் கற்றுக்கொள்ளுங்கள். இப்படியான பார்ப்பனர்களின் உளவியல் வன்முறையை முடக்கினாலே, ஆதிக்கசாதிகளின் வன்முறைகள் தானாகவே அடங்கிவிடும். After all ஆதிக்கசாதிகள் பார்ப்பனியத்தின் அடியாட்கள். 42 கற்றுக்கொள்ளவேண்டிய விவாத/பரப்புரை அம்சங்கள் 1. வன்திரிப்புவாதம் – ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் , கருத்தியலுடன் ஒத்துப்போகாத ஒருவரை உளவியல்சார் குறைபாடுகள் கொண்டவர் என்று நிறுவச்செய்து அவரது வாதங்களை புறந்தள்ளிவிடும் செயல். உதாரணமாக நமது அர்னாப் கோசுவாமி செய்வது. பேசிக்கொண்டிருக்கும்போதே உச்ச குரலில் ” Never ever ever ever ever ever talk to me like that. You are hallucinating. You are not in your minds. You must be on drugs” என்று அடிக்கடி சொல்லி பேசும் ஆள் ஒரு மனநிலை பிழன்றவரோ என ஏனையோரை எண்ண வைக்கும் தந்திரச் செயல். மற்றுமோர் உதாரணம் : திராவிட தலைவர்கள் நல்லெண்ண அடிப்படையில் பார்ப்பனர்களை நலம் விசாரித்தாலும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஏனையோரை நம்பவைக்கும் செயல். ஆங்கிலத்தில் Bulverism என்பார்கள். Psychogenetic Fallacy – inferring why an argument is being used, associating it to some psychological reason, then assuming it is invalid as a result. It is wrong to assume that if the origin of an idea comes from a biased mind, then the idea itself must also be a falsehood. 2.ஒரு பொய்யான விஷயத்தை ஆதரிக்கும் ஒருவர், நிஜமான விஷயத்தை ஆதரித்தாலும்/ பேசினாலும் அது பொய்யாகவே இருக்கும் என்று வாதிடும் செயல். உதாரணம் : எனக்கு பின் லேடன் பற்றிய எல்லா தகவல்களும் அத்துப்படி என்று பேராசான் ஸ்வாமி சொல்வது பொய் என்று தெரிவதால், ஜெயா பற்றி அவர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தவறாகவே இருக்கும் என்று வாதிடுவது. ஆங்கிலத்தில் Chronological snobbery – where a thesis is deemed incorrect because it was commonly held when something else, clearly false, was also commonly held. 3. விவாதங்களில் சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு பிரச்னையை உள் நுழைப்பது. கலைஞர் ராமானுசரைப்பற்றி எழுதுகிறார் என்றால் , என்றால், திரிபுரசுந்தரர்களாக ” அங்கே ஆயிரம் ஆயிரம் மக்கள் சாகும்போது எங்கே போனார் ??? ” என்று பேசுவது. ஏன் நில கையகப் படுத்தும் மசோதாவை ஆதரிப்பு நிலை எடுத்தீர்கள் ? என்று கேட்டால் ” க்ளோபல் வார்மிங் தோழர்.அதை தடுக்க வேண்டாமா?. அதனால் தான் பனிப்பாறைகள் உருகுகின்றன. எல் நினோ, லா நினா செயல்பாடுகள் கெடுகிறது.அதைத் தடுக்கவே நிலகையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தோம் ” என்று பேசுவது. ஆங்கிலத்தில் Fallacy of relative privation – dismissing an argument due to the existence of more important, but unrelated, problems in the world. 4. விவாதங்களில் இழிவுபடுத்தும் தொனியில் பேசி, ஒருவர் கூற விழைவதைத் தடுப்பது. “நீயெல்லாம் பேச வந்துட்ட பாரு…”” நீ சுட வந்தியா ?? இல்ல ….. ” “சொல்டாரு சேக்ஸ்பியரு …..” என்று எகத்தாளமாக பேசி எதிராளியின் வாதத்தை , சீர்குலைப்பது . சமூகஆர்வலர் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் வரும் நாகபுரி காகபட்டர்களிடம் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் Judgmental language – insulting or pejorative language to influence the recipient’s judgment. 5. “செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் ” என்று ஒருவரது பிறப்பை வைத்து அவரது தர்க்கத்தை அணுகுவது, நம்புவது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” , “அவரே சொல்லிட்டார்பா” என்று கிழக்கு சாமிகளின் குதர்க்கக் குறிப்புகளை மேற்கோள் காட்டுவது. ஆங்கிலத்தில் Genetic fallacy – where a conclusion is suggested based solely on something or someone’s origin rather than its current meaning or context. இந்த அம்சங்களை சூத்திரர்கள் நீங்கள் அறிந்துவைத்துக்கொள்ளவிட்டால் காலம் முழுவதும் பல்லாக்குத்துக்கிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அறிந்து வைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், லாவகமாக பயன்படுத்திக்கொள்ளும் நேரங்களில் பயன்படுத்துங்கள். இடுப்புக்குக் கீழே அடிக்கச்சொல்லித்தான் கிருஷ்ணரின் பாண்டவர்கள் வென்றனர். போர் என்றுவந்தபிறகு அவர்களுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கும் மரபுகள் நமக்கு மட்டும் எதற்கு இந்த யுகத்திலாவது வெல்பவர்களாக இருப்போம், என்ன அரக்கர்களே நான் சொல்வது சரிதானே. 43 இராமனுசர் - கலைஞர் - விமர்சனம் ஏன்? பார்ப்பன பதட்டம் அப்படித்தான் இருக்கும். கோவில் கூடாதென்பதில்லை, கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்று எழுதிய கலகக்காரர் கலைஞர் , மந்திரங்களைக் காதில் வாங்கினால் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுவோம் என்பதை மனுதர்மமாக்கிய கோவில் கொடியவர்களை எதிர்த்து , கோபுரத்தின் மேல் ஏறி மந்திரம் சொன்ன கலகக்காரர் இராமனுசர். டியான்மென் சதுக்கத்தில், பீரங்கிக்கு முன்னர் தனியாளாக நின்ற அந்த சீனாக்காரனின் தைரியத்தைவிட பன்மடங்கு மகத்துவம் வாய்ந்தது இராமனுசரின் கலகங்கள். ஒரு கலகக்காரரைப்பற்றி இன்னொரு கலகக்காரர் எழுதுவது இயல்பானதே. நான் காரல் மார்க்சை பற்றியும் பெரியாரைப்பற்றியும் எழுதுவதற்கு ஒப்பாகும். ஆதலால், நாகபுரி காகபட்டர்கள் கலைஞரை விமர்சனம் செய்வதை பாராட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். யார் கண்டது, அடுத்த திமுக ஆட்சியில் இன்று பொங்கி எழும் வைணவ ஆளுமைகளையே வைத்து புத்தகத்தை வெளியிட்டாலும் வெளியிடுவார் கலகக்கார கலைஞர். ஆட்சியிலிருந்தால் , வேதவிற்பன்னர்களுக்கு திமுகவும் இனிப்புதான். 44 கலைஞருக்கு RIP போட ஆசைப்படும் ஈழ விபீஷணர்கள் - ஈழமாயைக் கட்டுரை பேஸ்புக்கில் சிங்கப்பூர் லீக்வான் – கலைஞர் சந்திப்புப்படத்தை , கலைஞர் தளத்தில் வருவதற்கு முன்னரே நான் தேடிக்கண்டுபிடித்து போட்டிருந்தேன் , உங்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் ஒரு சிலர் கலைஞரை சீண்டினாலும் படத்தின் அழகியலைப் பலரும் ரசித்திருந்தனர். எல்லாம் நல்லபடியாக போகுது என்று, எனது உயரதிகாரி எனக்குக் கொடுத்திருந்த மற்றொரு சோஷியல் மீடியா அஜென்டாவிற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கையில் , “லீக்வான்க்யூவிற்கு RIP, தலீவரே, உனக்கு நாங்க எப்போ RIP போடுறது, காத்திருக்கிறோம், சீக்கிரம் நடக்கட்டும்” என்று ஒரு கமென்ட். இயற்பெயருடன் வந்திருப்பவர் யார் என்று பார்த்தால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழர். பெரிய பிரபலமாக இருப்பார் போல. அவரின் பக்கம் முழுவதும் கருமாதி சாப்பாடு விரும்பியைப்போல கலைஞருக்கு ஆபாச அர்ச்சனை. கருமாதி சாப்பாடு விரும்பிகள் நூற்றுக்கணக்கிற்கு மேல் கைத்தட்டி கரகோசம் எழுப்பியிருந்தனர். சரி, நமது சீமான், திருமுருகன் காந்தி வகையறாக்களுக்கு படியளப்பவராக இருக்கும் என்று “மன்னித்து” தொடர்ந்து வாசித்தால், “சங்கா, நீ எங்கள் மங்கா விளக்கு” என்ற பாராட்டுப்பத்திரம் காணக்கிடைத்தது. இதில் திமுக சார்பாக எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தமிழர்களுக்கு கலைஞருக்கு இணையாக ஆபாச அர்ச்சனை. அடுத்த சிலபதிவுகளில் மாவீரன் பிரபாகரன் பெருமைப் பற்றி ஒரு சில வாசகங்கள். நல்லவேளை சங்கா இலங்கை கிரிக்கெட்டின் பிரபாகரன் என்று எழுதவில்லை. அதுவரை தமிழ்ப்பிழைத்தது. தரகர்கள் கலைஞரைத் திட்டுவது இயல்பானதே. அவர்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. என் கவலையெல்லாம் நான் அடிக்கடி சொல்வதைப்போல, நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் தமிழ்நாட்டு இளைஞர்களைப்பற்றிதான். மதுரை தெற்குவாசலில் சிறிய அளவில் பூக்கடை வைத்திருக்கும் அண்ணன் ஒருவரை எனக்குத் தெரியும். இலங்கை மணிப்பிரவாளத்தமிழ் எங்கேயாவது கேட்டுவிட்டால் போதும் ஓடிப்போய் உதவப்போவார். மணிப்பிரவாளத்தமிழர்கள் கடைக்கு வந்தால் காசு வாங்காமல் பூ கொடுப்பார். “அண்ணே, அவியிங்க எல்லாம் பணக்காரனுவ, காசு வாங்கிக்கன்ன” என்று சொன்னாலும். தேசியத்தலைவர் மண்ணிலிருந்து வருபவர்கள், இது தலைவருக்கு செய்யும் மரியாதை என்று கண் சிவக்க பேசுவார். இப்படியொரு நாள் கடைக்கு வந்த மணிப்பிரவாளத்தமிழர்களிடம் “ஈழத்தில் நிலைமை எப்படி” என்று கேட்கப்போக அவர்கள் “எங்கட நாடு சீறிலங்கா, நாங்க எப்போதும் சுகமாத்தானிருக்கோம்” என்று மூக்குடைத்துவிட்டனர். கடந்த பொங்கலிற்கு மதுரை சென்றபொழுது இதைச்சொல்லி வருந்தியிருந்தார். நாம் தமிழர் தலைமையை எனக்கு அறவே பிடிக்காது என்றாலும் அந்த அமைப்பின் தொண்டர்களை எனக்குப்பிடிக்கும். மளிகைக்கடை, பிரவுசிங் சென்டர், உர வியாபாரம் இப்படி நடுத்தர வருமானத் தொழில்கள் செய்துகொண்டே தங்களால் ஆனதை ஈழ உணர்விற்குத் தரத்தயாரக இருப்பவர்கள். அவர்களின் அன்பைப் பகடைக்காயாக்கி ஒருசில ஈழத்தமிழர்கள், பிழைப்புக்காக பயணம் போவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் டெல்டா மாவட்ட இளைஞர்களை கனடா கூட்டிச்செல்வதாகவும் அவுஸ்திரேலியாவிற்கு கூட்டிச்செல்வதாகவும் அங்கு வேலைவாங்கித் தருவதாகவும் காசு வாங்கி ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். வேறு சில மணிப்பிரவாளத்தமிழர் இந்தியாவில் இருந்து பொருள் வாங்கி அனுப்புங்கள் பணம் தாரோம் என்று சொல்ல, அதை நம்பி கந்து வட்டிக்கு கடன் வாங்கி பொருள் வாங்கி அனுப்பி, பொருளுக்கான பணம் அனுப்பப்படமாலேயே ஏமாந்தோர் பலர். இது இன்று நேற்று நடப்பதல்ல, புலிகளின் காலந்தொட்டே நடக்கிறது. கடலோர மாவட்ட திமுக அனுதாபிகளின் தமிழ்ப்பாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பெட்ரோல் வாங்கி, கடலோர தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு உரிய காசு கொடுக்காமல் ஏமாற்ற , புலிகளே தமிழ்நாடு போலிசிற்கு தகவல் கொடுத்த சம்பவங்களுமுண்டு. கஷ்டப்பட்டு மருந்து மாத்திரைகள் எடுத்துவருகின்றோம், உரிய பணத்தைக் கொடுங்கள் என்று கேட்ட உதவும் தமிழ் மீனவர்களை புலிகள் போட்டுத்தள்ளிய சம்பவங்களும் உண்டு. திமுக அரசாங்கம் கண்டும் காணாமலும் இருந்து மத்திய அரசிடம் குட்டு வாங்கிய நிகழ்வுகள் நடந்தன. திமுகவும் திராவிட அனுதாபிகளும் இல்லை என்றால் 1987 யிலேயே இனப்படுகொலை நடந்திருக்கும். தன்னாலனதை விட அளவுக்கு மீறியே உதவிகள் செய்த தமிழ்நாட்டுத்தமிழர்களை , கலைஞரை , சுபவீயை கரித்துக்கொட்டிக்கொண்டிருப்பது நல்லதற்கல்ல. திமுகவை கலைஞரை ஏச பொய்ப்பிரச்சாரம்தான் நீங்கள் செய்ய முடியும். ஆனால் ஈழத்தமிழர்களைப்பற்றி ஒரு சில உண்மைகளை எழுதினாலே போதும். ஈழமாயை தானாகவே விலக ஆரம்பிக்கும். ராஜரத்னம் முதல் இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நபர் வரை ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. ஈழமாயையை உடைக்கவேண்டுமென்றால் முள்ளை முள்ளால் எடுக திமுக அனுதாபிகள் ஆரம்பிக்கவேண்டும். அடிக்கட்டும் வாங்கிக்கொள்கிறோம் என்று மாசோகிஸ்டுகளாக இருக்காதீர்கள். ஈழமாயையை விலக்க உப்புசப்பில்லாத கிரிக்கெட் விசயமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கெதிராக எல்லாவிதத்திலும் அரசியல் செய்யப்படும்பொழுது அதில் பாதியையாவது திருப்பிக்கொடுங்கள். மோசமானவர்களிடம் திரும்ப மோசமாக நடந்து கொள்வது தவறில்லை. கலைஞரைப்போன்று எல்லாம் தெரிந்தும் பெருந்தன்மையாக இருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும். பழைய திமுககாரர்கள் நேரம் வாய்க்கும்பொழுதெல்லாம் ஈழமாயை பற்றி எழுத ஆரம்பிக்கவேண்டும். எழுதநேரமில்லை என்றால், எனக்கு அனுப்புங்கள். நான் பதிவு செய்கின்றேன். ஈழமாயை யினால் திமுக கட்சியின் மேல் அனாவசியமாக வீசப்படும் களங்கத்தை துடைக்க மட்டுமல்லாது தமிழ்நாட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதில் இருந்தும் காப்பாற்றலாம். கலைஞருக்கு RIP போட ஆசைப்பட்ட , அவுஸ்திரேலியா “சங்கா” தமிழரை என்ன செய்தேன் தெரியுமா. அவரின் விபரங்களை உயரதிகாரியிடம் கொடுத்துவிட்டேன். இந்தியாவில் ஐடி66ஏ எடுக்கப்பட்டுவிட்டதால் , அனேகமாக உயரதிகாரி அதை குடிவரவு அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பார். 45 திமுக ஆதரவு ஏன்? திமுக ஆதரவாளன் என்பதைவிட திராவிடக்கருத்தியல் ஆதரவாளன் என்று சொல்வது சரி. அன்றிலிருந்து இன்றுவரை திமுக அதிகளவிலான திராவிடக்கருத்தியல்களை சட்டமாக்கி நடைமுறையாக்கியதால் திமுகவே என் முதன்மைத்தேர்வாக இருக்கிறது. ஒருவேளை நாளையே , தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அன்று சந்திரபாபு ஆந்திராவில் கலகம் செய்ததைப்போல களமிறங்கி கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி திராவிட அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் பன்னீர் – தமிழகத்தின் ஆனந்தக் கண்ணீர் என்று கட்டுரை எழுதுவேன். நிற்க. நான் மட்டும் திமுக தீவிர ஆதரவாளன் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்த ஒரு கோடி மக்களும் திமுக அனுதாபிகளே. அவர்களிடம் போய்கேட்டால் என்னைவிட எவ்வளவு தீவிர திமுக ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்தியிலும் மாநிலத்திலும் ஊடகங்களிலும் திமுகவிற்கு எதிராக செய்யப்படும் தொடர் பொய்ப்பிரச்சாரத்தையும் மீறி அவ்வளவு வாக்குகளை திமுக பெற்றிருக்கின்றது. உலகின் பல நாடுகளின் மக்கள் தொகையை விட இது அதிகம். ஆரியமாயைப்பற்றி விழிப்புணர்வு பரவலாக வந்துவிட்டதால் ஈழமாயை என்று புதுப்போர்வை வந்திருக்கிறது. ஈழமாயை, 2ஜிமாயை இவைகளினால், சமூக ஊடகங்களில் திமுகவிற்கு எதிராக எழுதுவதே சரியானது என்ற நடுநிலைமாயை உருவாகியிருக்கிறது. இதுமாதிரியான மாயைகளிலிருந்து மக்களை மீட்க என்னைப்போன்ற மாயாவிகள் இரும்புக்கைகளினால் புனிதங்களை உடைத்து எழுத ஆரம்பித்தது காலத்தின் கட்டாயம். நான் ஒரு நல்ல இமிடேட்டர். பழையகுருநாதர் மாதிரியும் எழுதமுடியும். பத்ரி சேஷாத்ரி மாதிரியும் எழுத முடியும். அப்துல்லாவைப்போலவும் எழுதமுடியும் அரவிந்தன்நீலகண்டனைப்போலவும் எழுதமுடியும். இவர்களையெல்லாம் காப்பியடிப்பதைவிட, நான் காப்பியடிப்பது பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஸ்டைல்களை. அவர்களின் பத்தி எழுத்துக்களை நான் ரீமேக் செய்கின்றேன் அவ்வளவே. 40,50,60 களில் எழுதப்பட்ட திராவிட இயக்கப்புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பியுங்கள். மாயையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் என்ன கையப்பிடிச்சி இழுத்தியா என்று திரும்பத்திரும்ப கேட்பதற்கெல்லாம் பதில்கள் கிடைக்கும். தமிழ் இணையக்களத்தில் கிடைக்கும் உப்புமா இணையத்தளங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களால் அல்லது வேதவிற்பன்னர்களால் நடத்தப்படுகின்றது. சமஸ்கிருதத்தமிழால் ஈழத்தமிழ் இணையத்தளங்களைக் கண்டுபிடித்து ஈழமாயைக்கு மருந்து தேடலாம். சமஸ்கிருத நலன்களுக்கான வேதவிற்பன்னர் இணையத்தளங்களில் நற்றமிழில் அனுஷ்கா இடுப்பு முதல் அஸ்வின் சொடுக்குவரை எழுதப்படுவதால் நடுவில் வைக்கும் அவர்களின் நுட்பமான பொய்ப்பிரச்சாரம் எழுதில் எடுபட்டுவிடும். எதிர்ப்பிரசாரம் புயல்வேகத்தில் நடக்கும்பொழுது , ஊட்டிப்படகு சவாரி செய்து கொண்டிருக்கக்கூடாது. எத்தனை இணையத்தளங்கள். சமூக ஊடகத்தளங்கள் நடுநிலை என்ற போர்வையில் திமுகவினரால் நடத்தப்படுகின்றது என்று பார்த்தால் ஒன்றுமில்லை. சினிமா, காப்பி, காரம் என்று மயிலாப்பூர் கபே டைப்பில் ஆரம்பித்து அப்போ அப்போ பிரச்சாரம் செய்யும் டெக்னிக்கும் சாமானியர்களைச் சென்றடைய உதவும். கிடைத்த ஒரு கோடியை இரண்டு கோடியாக மாற்ற, கோடியில் ஒருவராக நீங்களும் நடமாடும் ஊடகமாக மாறுங்கள். 46 சிலகேள்விகள் சிலபதில்கள் கேள்வி :- முப்பாட்டன் முருகன் ஆதித்தமிழரென்றால் அவர் அரக்கனாகத்தானே அடையாளப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். எப்படி கிளி, அவர் கடவுளானார் ? பதில் :- தெய்வானையை திருமணம் செய்தார். கடவுளானார். சமகாலத்தில் கூட ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உண்டு. உதாரணங்களைச் சொன்னால் எனக்கு நானே போட்டுக்கொண்டிருக்கும் கருத்துத்தடைக் கட்டுப்பாட்டிற்கு பங்கம் வந்துவிடும். நீங்களே ஆய்ந்தறிந்து கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். கேள்வி :- அறிஞர் அண்ணாவைப் புகழ்ந்து ஒரு வரி சொல்லுங்களேன் ? பதில்:- பிணக்குவியலின் மேல் ராஜாங்கம் அமைய ஆசைப்படாமல் மனக்குவியலின் மேல் அரசாங்கத்தை அமைத்தவர் அறிஞர் அண்ணா. கேள்வி:- “ஈழமாயை” என்று கிடைத்த கிரிக்கெட் சந்தர்பத்தைப் பயன்படுத்தி திமுக அனுதாபிகள் பலர் அரசியல் செய்வதாகவும் போராளிகள் இரண்டுபட்டால் துரோகிகளுக்குக் கொண்டாட்டம் என்றும் விமர்சனங்கள் எழுகின்றனவே ? பதில் :- இந்த விமர்சனத்தை வைப்பவர்கள் ஊர் இரண்டுபட்டால் “தரகர்களுக்கும்” கொண்டாட்டம் என்ற பழமொழியை உண்மையாக்குபவர்கள். ஈழத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று மேடைக்கு மேடை முழங்குவது அரசியல் கிடையாதாம். ஆனால் திமுகவிற்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வதை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அரசியலாம். வாக்கரசியலில் பரப்புரை எதிர்ப்பரப்புரை எல்லாம் இயல்பானதே. மக்களாட்சியின் மகத்துவம் தெரியாத மடஜென்மங்கள் அப்படி சொல்லியிருக்கலாம். ஈழமாயையிலிருந்து விடுபட உங்களாலானதை செய்யுங்கள், திமுகவிற்கு வாக்களிப்பவராக இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. கேள்வி :- அரக்கரே, உங்கள் பேஸ்பக்கத்தில் சமீபகாலமாக பெண்கள் (பெண் முகப்புக் கணக்குகள்) கூட கமெண்ட் போடுகின்றனரே? பதில்:- ஆம். அதை நானே எதிர்பார்க்கவில்லை. யூடியூப் ராடன் சானல் பக்கத்தில், இவ்வளவு நேரமாகியும் வாணி ராணி ஏன் தரவேற்றப்படவில்லை என்று பா.ராகவனை கேட்பவர்களும் , முள்ளிவாய்க்காலுக்குப்பிறகு இந்தியா எங்களுக்களித்த மிகப்பெரிய துரோகம் விஜய் டிவியில் குழந்தைப்பாடகி ஜெசிக்காவிற்கு இரண்டாம் இடம் கொடுத்தது என்று பொங்குபவர்களும் தொலைகாட்சி பொழுதுப்போக்கிலிருந்து விடுபட்டு கருத்துக்களம் வருகிறார்கள் என்றால் மகிழத்தானே வேண்டும். ஒருசிலர் கலைஞரைத்திட்டினாலும் மழலைகள் பேசுவதை ரசிக்கவேண்டுமென்று எக்ஸ்றா சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன். கேள்வி:- இந்த கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்? (2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் கேட்கப்பட்டது) பதில்:- எனக்கு சீனிவாசன் என்று ஒரு தமிழ் வாத்தியார் பாடம் எடுத்தார். காலாண்டுத்தேர்வில் எனக்கு முதல் மதிப்பெண் கொடுத்தால் அரையாண்டு தேர்வில் வேறொருவனுக்குக் கொடுப்பார். பிறிதொரு தேர்வில் எனக்குக் கொடுப்பார். ஐயா, நன்றாகத்தானே எழுதியிருக்கின்றேன், ஏன் மதிப்பெண் கொடுக்கவில்லை என்றால், சென்றமுறை நீ வாங்கினாய், இந்த முறை அவன் வாங்கிவிட்டுப்போகட்டுமே என்று சொல்லும் ஒரு சோஷலிஷ்ட் தமிழ்வாத்தியாராக இருந்தார். என்ன கேட்டீங்க, கிரிக்கெட் பத்தியா, யார் வெல்வார் என்று தெரியவில்லை. கேள்வி :- ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு நல்லப்பகடியான பட்டப்பெயர் ஒன்றைச்சொல்லுங்களேன்? பதில்:- நாகபுரி காகபட்டர்கள் 47 IT 66A சட்டம் நீக்கம் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. வேதவிற்பன்னர்களிலிருந்து கலைஞர் இணையத்தள நிர்வாகிகள் , இன்றைய ஹாட் டாப்பிக்கான ஈழமாயை வரை நான் விழிப்புணர்வு ஏற்படுத்தாத விசயங்களே இல்லை. எந்தவொரு நல்ல அரசாங்கத்திற்கும் என்னைப்போன்ற ஆட்கள் தேவை. அதனால் எனக்கு பிரச்சினைகள் வந்திருக்காது. கட்டுப்படுத்தப்படாத கருத்து சுதந்திரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. சிக்னல் போட்டால் நிற்கவேண்டும் என்பதை விட , சிக்னலை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நிலையிருப்பதனால்தான் மேற்கத்தியநாடுகளில் கூட ஒழுங்காக இருக்கின்றனர். பெயரளவிற்காவது சட்டங்கள் இருக்கவேண்டும். கருத்துத்தடைக்கட்டுப்பாடுகளை முழுமையாக ஒரு நாட்டின் நீதிமன்றமும் அந்த நாட்டின் வலதுசாரி இனவாத அரசாங்கமும் நீக்குகின்றதென்றால் எங்கோ பொறிவைக்கப்படுகின்றது என்று புத்திமான்கள் உசாராகவேண்டும். சட்டம் போய்விட்டதென மானாவாரியாக எழுதலாம் என்று எழுத ஆரம்பிக்காதீர்கள். ஆளும் வர்க்கம் விரும்பாததை எழுதுபவர்களை மிரட்ட இந்த சட்டமில்லை என்றால் என்ன, கற்பழிப்பு வழக்கு முதல் கஞ்சா வழக்கு வரை நினைத்த மாத்திரத்தில் வகைவகையாய் வழக்குப்போடமுடியும். எம்ஜிஆர் ஆட்சியில் திமுக சார்பான சினிமாத் தயாரிப்பாளரை கைது செய்ய, வீட்டில் பர்மிட் இல்லாமல் குடித்தார் என்று பிடித்தார்களாம். (எம்ஜிஆர் ஆட்சியில் கொழுத்த ப் பணக்காரர்கள் பர்மிட் வாங்கி குடிக்கலாம். உடல் உழைப்பு அயற்சிப்போக்க உழைப்பாளிகளுக்கு கள்ளச்சாராயம்தான் ). மக்கள் முதல்வர் ஆட்சியைப்பற்றி சொல்லவேத்தேவையில்லை. கருத்தாகப்பேசினார் கைது செய்யப்பட்டார் என்பது சிறப்பா, கஞ்சா கடத்தினார், கற்பழிப்புகள் செய்தார் என்று தந்தியில் தண்டோரா போடப்படுவது சிறப்பா. வலையைப்போட்டு உடனே எடுத்தால் குறைவான மீன்களே சிக்கும். வலையைப்போட்டு காத்திருந்தால் ஒட்டு மொத்த மீன்களை அள்ளலாம். இந்த சட்ட நீக்கம் கூட அப்படியானதாக இருக்கும் என்று எனது நாகபுரி அனுபவங்கள் சொல்லுகின்றன. ஆதனால் முன்பைவிட பொறுப்பாக எழுதுங்கள். நீங்கள் வசைபாடுபவர்கள் படித்தாலும் மென்மையான புன்முறுவல் பூக்கவேண்டும். பெரிய அளவிலான எடுத்துக்காட்டு கலைஞரின் கட்டுரைகள், அறிக்கைகள். சிறிய அளவிலான எடுத்துக்காட்டு எனது கட்டுரைகள் மற்றும் பத்திகள். சமீபத்தில் குழு அரசியலுக்காக ஒரு டபுள் ஏஜெண்டிடம் உரையாடியபோது எனது கட்டுரைகள் வேதவிற்பன்னர்கள் மத்தியிலும் விரும்பி வாசிக்கப்படுகின்றது என்றறிந்தேன். சட்டமில்லாத பொழுது நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு எழுதவேண்டும். சட்டத்தை காகபட்டர்கள் நீக்கிவிட்டதனால் இன்னும் எச்சரிக்கை உணர்வுடன் வார்த்தைகளுக்கு வாட் டாக்ஸ் போட்டு கவனமாக எழுதப்போகின்றேன். நீங்கள் ? !! 48 இணையத்தின் குழு அரசியல் ஒருவர் அடிக்கவேண்டும். இன்னொருவர் அடிபட்டவர்களை அரவணைக்க வேண்டும். குழுவின் மற்றவர்கள் அடிபட்டவர்களுக்கும் அடிகொடுத்தவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யவேண்டும். இந்த நுட்பம் இணையத்திற்கு மட்டுமல்ல, பொதுவாழ்க்கைக்கும் சமயங்களில் குடும்ப உறவுகளுக்கும் பொருந்தும். குழு அரசியலை இப்படி செய்தால் வெற்றிகரமாக இருக்கும். 49 மக்கள் முதல்வரை விமர்சிக்காததேன்? கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. நம்மிடம் ஏகப்பட்ட நிறைகள் இருக்கும்பொழுது, அதைப் பேச மறந்து , மக்கள் முதல்வர் தவறுகளை சொல்லி சொல்லி எதற்காக எதிர் மறை அரசியல் செய்யவேண்டும். அடுத்தவர் தவறுகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால், நம் தவறுகள் நமக்குத்தெரியாது. நமது நல்லவைகளும் அடுத்தவர்களுக்குத் தெரியாது. தொட்டனைத்தூறும் மணற்கேணியாய் எடுக்க எடுக்க வரும் திமுகவின் சாதனைகளை எழுதித் தீர்ப்போம், பின்னர் மக்கள் முதல்வரின் அதிமுகவை சீண்டுவோம். மேலும், பலமான அதிமுக பலமான தமிழகம். திமுகவிற்கு சரியாக அளவெடுத்துத் தைத்த பலமான , பார்ப்பன தலைமை என்றாலும் இன்னமும் அக்மார்க் சூத்திரர்களின் கட்சி அதிமுக. இவை எல்லாவற்றையும் விட சகோதரயுத்தம் நடத்த நான் ஈழப்பிரச்சாரகரில்லையே. நான் மக்கள் முதல்வரைப்பற்றி மட்டுமல்ல, பாமகவின் தவறுகளைக் கூடப்பேசுவதில்லைதான். திமுகவிற்குப்பின்னர் தமிழகத்தில் தைரியமாக நேர்மையாக தமிழ்த்தேசியம் பேசியக்கட்சி பாமக. தமிழ்த்தேசியம் பேசும் இப்பொழுது இருப்பவைகளிலும் சிறந்தது பாமகவே. 50 சிங்களத்தமிழர் - இந்தித்தமிழர் சிங்கள ஆளுமையை தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும் இலங்கைத்தமிழர்களே சிங்களத்தமிழர்கள் . இதில் தவறொன்றுமில்லை. நான் இந்தி மொழி வேண்டும், இந்தி அடக்குமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு ஷாருக்கானிற்காக பக்கத்தில் இருப்பவனை சீண்டினால் இந்தித்தமிழன் என்று தாராளமாக சொல்லலாம். 51 பேஸ்புக் பிரபலம் கேள்வி :- அரக்கனே, நான் ஒரு பேஸ்புக் பிரபலம். எனது ஃபேக் ஐடி என்னைவிட பெரிய பிரபலம். ஆனால் எனக்கொரு பிரச்சினை. எனது ஃபேக் ஐடியை நினைத்து எனக்கே பொறாமையாக இருக்கிறது. எனது ஃபேக் ஐடியில் நான் எழுதும்பொழுது இருக்கும் வேகம், எழுத்தின் வீச்சு , எனது உண்மையான பெயரில் எழுதும்பொழுது இருப்பதில்லை. காரணம் என்னவாக இருக்கும்? பதில்:- உங்கள் உண்மையான பெயரில் நீங்கள் இந்த உலகத்திற்குக் காட்டிக் கொண்டிருப்பது போலியான முகம். உங்களது ஃபேக் ஐடிதான் உங்கள் நிஜ முகம். உங்கள் உண்மையான முகம் என நீங்கள் நினைப்பது உண்மையில் உங்களது முகமூடி. போலியை விட உண்மைக்கு வீச்சு அதிகம். உண்மையாக உளப்பூர்வமாக எழுதும்பொழுது எழுத்து சிறப்பாகவே இருக்கும். அதனால்தான் உங்கள் பேக் ஐடியில் நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள். எனவே இனி ஃபேக் ஐடியை நினைத்து பொறாமை படுவதை நிறுத்திவிட்டு, உங்கள் உண்மையான ஐடியை நினைத்து பரிதாபப்டுங்கள். ஏனெனில் உங்கள் ஃபேக் ஐடிதான் நீங்கள். உங்களின் உண்மையான ஐடி வேறு யாரோ! 52 எம் ஜி ஆரும் புராணமும் கேள்வி :- அரக்கனே, இவ்வளவு கட்டுக்கதைகளைக் கொண்டிருக்கும் புராணங்களை அந்தக்காலத்தில் மக்கள் எப்படி நம்பினார்கள் ? பதில்:- எம்ஜிஆரின் சினிமா பராக்கிரமங்களை உண்மை என்று நம்பி மக்கள் வாக்கு அளித்து அவரை வெற்றி பெறச்செய்யவில்லையா. அதைப்போலத்தான். 53 கிளிமூக்கு விளைவு - கட்டுரை மேலை நாட்டுக் கதைகளில் டிராகுலா என்ற பேய்க்கு அதீத முக்கியத்துவம் உண்டு. கோரைப் பற்களை உடையதாகக் கருதப்படும் அந்த டிராகுலா கடித்து வைத்தால் போதும். அதே போன்று கடிபட்டவரும் பேயாகி விடுவார்கள். அதுபோல் கிளிமூக்கு அரக்கனான என்னை ஆதரிப்பவர்கள், தூஷணம் செய்பவர்கள் , சும்மா வேடிக்கைப் பார்ப்பவர்கள் என அனைவரும் , வெறுமனே நான் யார் என்று கண்டறிய துப்பு மட்டும் துலக்காமல் இன்னொரு கிளிமூக்கு அரக்கனாக வேண்டும் என்பதே கிளிமூக்கு அரக்கனின் குறிக்கோள். “தாது மணல்” ஊழல் காசில் தத்துவம் பேசும் சீமானின் முப்பாட்டனின் பெயருடையவரும் எனது பேராசானுமான சுப்பிரமணியன் ஸ்வாமிக்கு மிகவும் பிடித்த காப்பியமான ராமாயணத்திலிருந்துகூட ஒரு உதாரணம் சொல்லலாம். வாலி என்ற வானரஅரசன் தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதியானது தன்னை வந்தடைய வேண்டும் என்றோர் வரம் வாங்கி வந்திருப்பான்.இந்த வரத்தின் காரணமாகவே அனேகரை வென்று கூற்றவருக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தான். அவனது இந்த விசேஷ ( அண்ணனின் அன்புத் தம்பிகள் “விசேட ” என்று போட்டுப் படிக்கவும் ) பலத்தின் காரணமாகவே மாபெரும் அவதாரம் என்று கருதப்பட்ட ஸ்ரீராமன் கூட பதுங்கித் தாக்கவேண்டிய நிபந்தத்திற்குத் தள்ளப்பட்டான். கிளிமூக்கும் வாலிக்கு ஒப்பே. ஒரேயொரு வேறுபாடு , இந்த வாலியை எதிர்க்கும் ஆட்களுக்கும் பாதி பலத்தைத் தந்து விவாதம் செய்யவோ, இன்னும் அதிகமான தாக்கத்துடன் அறிவார்ந்த தர்க்கம் செய்யவும் தூண்டும் வாலி.சம்பளம் தந்து பேச வைப்பவர்கள் மத்தியில் கிளிமூக்கு சமபலம் தந்து பேச வைப்பவர். கிளிமூக்கு அரக்கன் ஒரு பராக்கிரம, வீர தீர சூர… ஒன்றுமில்லை தற்போதெல்லாம் அதிகமாக காவிய NFDC படங்களுக்குத் தமிழில் வசனம் எழுதுவதால் (உடனே நீ தான் “மச்சான் சிங்கமா ” என்று கேட்காதீர்கள்) இப்படி “பில்ட் அப் ” கொடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. “வேலை கிடைச்சிடுச்சி ” என்று ஒரு தமிழ்ப்படம் இருக்கிறது. அதில் உச்சக்காட்சியில் வில்லன்கள் ஊர்மக்களை ஓட்டுப்போடவிடாமல் தடுத்து வைத்திருப்பார்கள். யாராவது ஓட்டுப்போட வந்தால் அவருக்கு வெட்டுக்குத்து உண்டு என்று எச்சரித்திருப்பார்கள். ஊர்மக்கள் ஒவ்வொருவரும் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் அவையம் காக்கும் போது , ஒரு குடுகுடு கிழவர் மட்டும் தைரியமாக ஓட்டுப்போட போவார். இவனெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆகிவிடப் போகிறது என்றெண்ணி வில்லன்கள் அந்த கிழவரை ஓட்டுப்போட விட்டுவிடுவார்கள். வாக்களித்துவிட்டு வந்தவுடன் அந்த கிழவர் ” அட பயந்தாங்கோலி பசங்களா , நான் தாண்டா மொத ஒட்டு போட்டேன். நீங்க எல்லாம் வாழ்ந்து என்னத்த ???? ” என்று ஏகடியம் பேசுவார். ஒரு முதியவரே ஓட்டுபோட்டுடார், நாம எல்லாம் ஒட்டு போடாட்டி கேவலம் என்று ஒவ்வொருவரும் தமது சுயகவுரவத்தை நிரூபிக்க வாக்களிக்க வருவார்கள். மாற்றம் நிகழும். அந்த கிழவன் தான் கிளிமூக்கு அரக்கன். அவன் ஒரு நோஞ்சான், வலுவற்றவன். ஆதரவற்றவன். ஏழைப்பட்டவன் . ஆனால் அவனால் ஒரு வினையைத் தூண்டுவிக்கும் கருவியாக இருக்க முடியும். ஒரு தேர்ந்த விதூஷகனின் அங்கதம் போல் பேசாப்பொருளை நையாண்டியாக பேசிவிட்டு பின் எல்லோரையும் அதைப்பற்றி பேச வைக்கும் ஒரு எளிய கோமாளி தான் கிளிமூக்கன். வீரா படத்தில் ரஜினிகாந்த் பாடுப்போட்டியில் பாடலைப் பாடி முடித்துவிடுவார். பாராட்டுவதா, நிராகரிப்பதா என்று குழுமியிருப்போர் குழம்பிய வேளையில் ஒரு சிறுமி எழுந்து ரஜினியின் பாட்டைப் பாடி அவருக்கு மக்களிடம் கைத்தட்டல் வாங்கவைக்கும் ஒரு உந்துசக்தியாக இருப்பாள். அந்த சிறுமியைப் போன்றவன்தான் கிளிமூக்கு அரக்கன். Nuclear Fission என்ற அணுச்சிதைவு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். (தெரியாவிட்டால் நியுக்ளியர் ஸ்டார் உதயகுமாரிடமோ , இளம் நியுக்ளியர் கம் நியுட்ரினோ ஸ்டார் திருமுருகன் காந்தியிடமோ கேளுங்கள் ) ஒவ்வொரு சிதைவுறும் அணு வெளியிடும் சிதைவுப் பொருள் இன்னொரு அணுச்சிதைவை தூண்டுவிக்கும்.அதிலிருந்து பெருத்த சக்தி வெளிப்படும்.இதுவரை இருந்து திராவிட , தமிழ்தேசிய அரக்கர் கூட்ட செயல்பாடு இதுதான். ஒருவர் இன்னொருவரை தூண்டுவிப்பார்கள்.அது அப்படியே ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வாக பயணிக்கும். ஆனால் Nuclear Fusion என்ற வினையும் ஒன்று உண்டு. தனித்தனி அணுக்கள் ஒன்றாக சேரும்வேளையில் பெரும்சக்தி வெளிப்படும். சூரியனை இயக்கம் சக்தி போல.(இங்கே சூரியன் என்பது நிஜ சூரியன் ) பெரும்சக்தி கூட்டாகும். அத்தகைய ஒரு கூட்டுச்சக்தி தான் இப்பொழுது அரக்கர்களுக்குத் தேவை.அப்படியொரு வினையூக்கியாக இருப்பவன்தான் கிளிமூக்கன் அரக்கன். Collective Intelligence என்றொரு சொற்பதம் ஆங்கிலத்தில் இருக்கிறது. கூட்டறிவு.அது தான் கிளிமூக்கன் விழைவது. எந்தத் துறையாக இருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் அரக்கர் கூட்டமாக சேர்ந்து , கற்பித்து , மாற்றம் ஏற்படுத்துவது தான் அது. அதேபோல் நாளை கிளிமூக்கின் தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும் கிளிமூக்கனை விஞ்சிய கூர்மூக்கன் ஆகவேண்டும். பாதரசம் தன்னுடன் சேரும் சிறுதுளி பாதர்சங்களைச் சேர்த்து குழுமுவதும்போல், சிற்றலை எல்லாம் சேர்ந்து சுனாமிப் பேரலையாக விரிவதுபோல் சீருடன், செம்மையான சிந்தனை உள்ள ஒவ்வொரு அரக்கனையும் ஒன்றிணைப்பதே கிளிமூக்கின் வேலை.ஆகவே கிளிமூக்கை ஆதரிக்கும் எதிர்க்கும் எவரும் நாளை சமூகத்தில் அதிகமானத் தாக்கம் ஏற்படுத்தும் இன்னொரு அரக்கனாக வரவேண்டும். வருவார்கள். ( கிளிமூக்கை ஆதரிக்கும், எதிர்க்கும் ஆட்களை எல்லாம் கூர்ந்து அவதானித்தால் அவர்கள் கில்லாடிகள் என்று உங்களுக்குப் புலப்படும் ). இது தான் கிளிமூக்கின் வேலை. இது தான் கிளிமூக்கின் விளைவு. தன்னை எதிர்த்தவரை தன்னுடைய தோழர் ஆக்கிய கலைஞர் , தன்னை ஆபாசமாகப் பேசிய ஒருவரை தனக்கு கூழைக் கும்பிடு போடவைத்த மக்கள் முதல்வர் , தீவிரமாக எந்த சமூகத்தை எதிர்த்தாரோ அந்த சமூகத்தின் பிரதிநிதியை தனது உற்ற நண்பராக வைத்திருந்த பெரியார் , எல்லோர் முதுகிலும் சவாரி செய்த வேதவிற்பன்னர் முதுகிலேயே சவாரி செய்த அறிஞர் அண்ணா எந்த ஆட்சி வந்தாலும் ஆள்வோனுக் கஞ்சேல் என்று ஆளுமை செலுத்தி ஆட்டிப்படைக்கும் பேராசான் சுப்பிரமணியன் சுவாமி , அறிவுசார் அரக்கனாக வலம்வரும் அய்யா சுபவீ , என ஒவ்வொரு ஆளிடமிருந்தும் ஒவ்வொரு தனித்துவ ஆக்ரோஷ அறிவை கலந்துகட்டி நிற்கும் அரக்கர்கள் தான் நாளைய தேவை. கிளிமூக்கின் விளைவு அதை நோக்கியே செல்லும். 54 முப்பாட்டன் முகமது நபி - சிறு குறிப்பு நீங்கள், தமிழ்நாட்டு பக்திமான் இந்துவாக இருந்தால்கூட, நான் வைத்திருக்கும் இந்தத்தலைப்பு உங்களுக்கு நிச்சயம் எரிச்சலூட்டும். எனக்கே இப்படி ஒரு தலைப்பு வைப்பது அசூயையாகத்தான் இருந்தது. அதுதான் தமிழர்களின் அடிப்படை மனப்பாங்கு. இருந்தாலும் கசப்பு மருந்து கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்கப்படவேண்டும். சில ரசிகர்கள், நீங்கள் ஏன், துடுக்குத்தனமாய்ப் பேசும் இஸ்லாமியர்களைக் கண்டிப்பதில்லை. பெண்ணியத்திற்கு எதிராகப்பேசும் இஸ்லாமியர்களைக் கண்டிப்பதில்லை. காவிக்கயவர்களைப் போல, உலகின் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் குர்ரானில் இருக்கின்றது என்று அளந்துவிடும் இஸ்லாமியர்களைக் கண்டிப்பதில்லை? என வரிசையாக கேள்விக்கணைகள் தொடுத்திருக்கின்றனர். ஒரு பஜகோவிந்தரசிகர் ஒரு படி மேலேப்போய், “அடேய் நீ துலுக்கன்தானே, அதான் இந்து மதத்தை மட்டும் நொட்டைசொல்ற” என்று திட்டிவிட்டுப்போனார். அவருக்கெல்லாம் கருத்து சுதந்திரம் கொடுக்கவேண்டுமா என்று உடனடியாத் தடை செய்துவிட்டேன். நான் சமூகவிரோதமாகப்பேசும் இஸ்லாமியர்களைக் கண்டுகொள்ளாததன் முதன் காரணம், ஏற்கனவே சமுதாயம் அவர்களின் மேல் சந்தேகப்பார்வையை விதைத்துள்ளது. “எழுதுடா எல்லா கேசையும் இவன் மேல” என்று அவர்களின் மேல் கலைஞரின் மேல் எழுதுவதைக்காட்டிலும் அதைவிட அதிகமாக குற்றப்பத்திரிக்கைகளை வைத்துள்ளனர் நமது தேசப்பற்றாளார்கள். நானும் இஸ்லாமியர்களைப் பகடி செய்து எழுதி, அதை காவிகள் பரப்பி நல்லவனாய் இருக்கும் இஸ்லாமியனையும் வகாபி பிரியாணி ஆடாக மாற்றிவிடக்கூடாது என்றுதான் பெரும்பாலும் அமைதிக்காப்பது. முருகன் என் முப்பாட்டன் என்று கூறிய சீமானை முருகப்பக்தர்கள் கூட கழுவிலேற்றி தோரணம் கட்டித் தொங்கவிட்டதைப் பார்த்திருப்பீர்கள். முகமது நபியின் கொள்ளுப்பேரன் நான் என்று சொல்லி, நபிகள் ஈசாவைப்போல சிலுவையில் தன்னை அறைந்து கொண்ட ஹுசைனியை சாமானிய இஸ்லாமியன் தொடங்கி சவுதி அரேபியா காசில் கொழுத்து அலையும் வகாபி அமைப்புகள் வரை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லை. சவுதி அரேபியா காசு , காதலர் தினத்தில் அப்பாவி இளைஞர்களை அடிக்க , அடியாள் சேர்க்க அல்லது பிரியாணி செய்துதாருங்கள் என்று கேட்ட கமலஹாசனை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்காக எதிர்க்க லாபி செய்வதுதான் போலும். ஹுசைனியை முகமது நபியின் எள்ளுப்பேரன் என்று பகடியம் செய்பவர்களைக் கூட, இஸ்லாமியர்கள் வந்து அப்படி சொல்லாதீர்கள், ஹுசைனி ஒரு கிறுக்கன் என்று கூறி தப்பித்துவிடுகிறார்கள். தான் சார்ந்த சமுதாய முன்னேற்றம் என்பது தனது சமுதாயத்தில் இருக்கும் களைகளைப் பற்றிப்பேசுவதிலும் அவற்றைக் களைவதிலும்தான் இருக்கின்றது. கசப்பான உண்மை என்னவென்றால், சக அரக்கன் “முப்பாட்டன் முருகன்” இணையத்தளத்தில் வெகுஜோராக கைத்தட்டுபவர்களில் பலர் இஸ்லாமியர்கள். கைத்தட்டகூடாது என்பதல்ல, முப்பாட்டன் முகமது நபி என்றாலும் கைத்தட்டவேண்டும் அல்லது அதுவும் சரி இதுவும் சரி என்று விலகிப்போய்விடவேண்டும். யாருக்கு வாக்களிக்கவேண்டும் வாக்களிக்கக்கூடாது என்றெல்லாம் சர்வாதிகரத்தனமாக உத்தரவிடும் இமாம்கள் , இட்லி சரியாக வேகவில்லை என்றால் கூட பத்வா போடும் மதக்குருமார்கள் இருக்கும் தமிழ்நாட்டில் வகாபி இயக்கங்கள் ஹுசைனியைக் கண்டிக்க முயற்சிக்கவே இல்லை. ஒருவேளை, மக்கள் முதல்வர் மேலான பயமாகக் கூட இருக்கலாம். ஹுசைனியைக் கண்டிப்பது மக்கள் முதல்வரைக் கண்டிப்பது போல. நீங்கள் துரத்தியடித்த கமலஹாசன் , பட்டிமன்றம் நடத்தி சமாதானம் ஆரியக்கூத்தாடிவிடுவார். ஆனால் பாருங்கள், என்னைப்போன்ற போகிறவன் வருகிறவன் எல்லாம் உங்களுக்குக் கடைசியில் அறிவுரைக் கொடுக்கும் நிலைமைக்கு நீங்கள் ஆளாகிவிடுவீர்கள். முப்பாட்டன் முகமது நபி என்று மட்டும் ஹுசைனி சொல்லவில்லை. வானூர்தியைக் கடத்த நினைத்தேன். கலைஞர், பேராசான் ஸ்வாமியைக் கொல்ல நினைத்தேன் என்றுவேறுப் பேசியிருக்கின்றார். இதைக் காரணம் காட்டி, ஹுசைனியிடம் அடியாட்களாக வேலைப்பார்க்கும் இஸ்லாமியர்களை, அவரிடம் கராத்தே கற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாகக் கட்டம் கட்ட வாய்ப்புள்ளது. இந்த சிறுகுறிப்பு, இஸ்லாமியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. எபப்டி தமிழ்நாட்டு இளைஞர்கள் காவி கயவாளித்தனத்திலும் கள்ளத்தமிழ்த்தேசியத்திலும் வீழ்ந்து நாசமாகபோவதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அதைவிட அதிகமாக வஹாபி பிரியாணி ஆடுகளாக இஸ்லாமிய இளைஞர்கள் மாற அதிகம் வாய்ப்புண்டு என்ற விழிப்புணர்வை உருவாக்க எழுதப்பட்டது. கண்டிக்கவேண்டியதைக் கண்டிக்காமல் , ஆட்டுவிப்பவர்கள் சொன்னார்கள் என்று விசுவரூபம், காதலர் தினம் , மகளிர் அடக்கு முறை என்று மட்டும் நீங்கள் கிளம்பினால், உங்களைத் தமிழ்நாட்டுத் தாலிபான்கள். ஐஎஸ்ஐஎஸ் என்றுதான் உங்களின் இஸ்லாமியர்களே நினைக்கக்கூடும். பின் குறிப்பு :- இந்தக்கட்டுரையை இஸ்லாமியர்கள் என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் என்றும், வஹாபி என்ற இடத்தில், அமெரிக்க அல்லேலூயா அமைப்புகள். ஐரோப்பிய மிஷனரிகள் என்றும், ஹுசைனிக்குப்பதிலாக உமாசங்கர் என்றும் மாற்றிக்கொண்டு, முப்பாட்டன் இயேசு கிறிஸ்து என்று தலைப்பு வைத்தும் வாசிக்கலாம். பிற்சேர்க்கை :- ஒரு கோமாளிக்கு இவ்வளவு விளம்பரம் கொடுக்க வேண்டுமா ? இது விளம்பரமல்ல விழிப்புணர்வு. ஏற்கனவே ஹுசைனி , பன்னீர் செல்வத்தைவிட மக்கள் முதல்வரின் அபிமானத்தைப் பெற்றுவிட்டார். திமுகவில், தலைமையின் அபிமானத்தைப்பெற்றால் கலைஞரின் மனதில் இடம் கொடுக்கும். ஆனால் அதிமுகவில் அப்படியல்ல. வருகின்ற 2016 தேர்தலில், ஒருவேளை ஒருவேளை தமிழகத்து சோற்றாலடித்தப்பிண்டங்கள் மீண்டும் மக்கள் முதல்வரையேத் தேர்ந்தெடுத்துவிட்டனர் என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த ஹுசைனி எம்.எல்.ஏவாகி யார் கண்டது சிறுபான்மைநலத்துறை அமைச்சராகிவிடுவார். கோமாளிகள் தான் என்றுமே ஆபத்தானவர்கள். அது சீமானாக இருக்கட்டும், ஹுசைனியாக இருக்கட்டும். குறைந்தபட்சம், இஸ்லாமிய சகோதரர்கள் எதிர்த்தார்களென்றால், அது மக்கள் முதல்வர் கவனத்திற்குச்செல்லும். சிறுபான்மையினர் வாக்குகள் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்திருக்கும் அவர் இது போன்ற கோமாளிப்பேச்சுகளை அங்கீகரிக்கமாட்டார். நாளை ஹுசைனி சிறுபான்மைத்துறை அமைச்சராவதைத் தடுக்கவேண்டுமெனில், இஸ்லாமியர் எதிர்ப்பைப் பதிவு செய்துதான் ஆகவேண்டும். எனது குறிப்பை அங்கீகரித்து இருக்கும் ஆட்களைக் கவனியுங்கள், அவர்கள் யாரும் காவி-யவாதிகள் அல்ல. சமத்துவம் பேசும் திராவிட கருத்தியல் கொண்டவர்கள்.தாலிபானியவாதிகளுக்குப் பரிந்துப்பேசியவர்கள் தங்களது இறைத்தூதரை கீழிறக்கிப்பேசுவதை ஏற்றுக்கொள்கின்றார்களே என்று சாமானியமனிதன் கேள்வி கேட்கத்தான் செய்வான். அதன் எதிரொலிப்புதான் இந்தப்பதிவு. நிற்க. இன்று முகமது நபி எனது பாட்டன் என்று சொல்லும் ஹுசைனியைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் இஸ்லாமியர்கள், நாளை ஐரோப்பிய அமெரிக்க கார்டுனிஸ்டுகள் முகமது நபியைப் படம் வரைந்தால் அதுவும் பைத்தியக்காரர்களின் செயல் என்று ஒதுங்கிப்போகவேண்டும் செய்வார்களா ? மாட்டார்கள்தானே. அட அவ்வளவு ஏன், “முப்பாட்டன் முகமது நபி” என்று ஏதாவது ஆர்எஸ்எஸ் கொடுக்கு, சுருளிராஜன் படம் வைத்து, ஒருப்பக்கம் ஆரம்பித்தால் அமைதியாக இருப்பீர்களா. பாவம் பைத்தியக்காரன் வேலைவெட்டியில்லாதவன் என்று விட்டுப்போய்விடுவீர்களா. உங்களில் ஒருவர் எழுதியிருக்கவேண்டும். காவி என்றாலும் வ-காபி என்றாலும் என்னைப்போல் ஒரு திராவிட அரக்கன்தான் எழுதவேண்டியிருக்கின்றது. 55 கொழும்புத்தமிழர்கள் கொழும்புத்தமிழர்களுக்கு இருக்கும் லொள்ளு அப்பப்பா, தமிழுக்குத் தம்படி பிரயோசனமில்லை என்றாலும் சமஸ்கிருதத்தமிழில் வாய் கிழியப்பேசுவார்கள். நம்மூர் மே 17 மாதிரி இலங்கையின் செல்ஃபி புள்ளைங்க கொழும்பு பாய்ஸ். விஜய் ரசிகர்களான கொழும்புத்தமிழர்கள் கத்தி படம் பார்த்ததில் இருந்து வெள்ளவத்தையில் தண்ணீர் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு திருமணம் ஆகும் வரை, “ஜெய் ஆகாஷ்” என்று ஒரு நடிகரின் ரசிகர்களாக இருந்தவர்கள். வடபழனி சிக்னலுக்கு முன்னர் அவரின் ரசிகர் மன்றப் பலகையைப்பார்க்கலாம் . (ஜெய் ஆகாஷை நான் குறிப்பாக ஏன் சொல்கின்றேன் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்). IndiaGlitz கத்தியை கிண்டலடித்து சுத்தி என்ற குறும்படம் எடுத்திருக்கின்றது. அதைப்பார்த்துவிட்டு என்ன போராட்டம் செய்யப்போகின்றார்களோ, பாவம் கொழும்பு சிங்களவர்களும் முஸ்லீம்களும். சிம்புத்தேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பார்த்திருக்கிறீர்களா , அதில் குகையில் செல்வத்தை எடுக்க கேள்விகள் கேட்கப்படும். அதில் ஒன்று “தமிழன் தாக்கப்பட்டால் உள்ளூர்த் தமிழன் என்ன செய்வான்” அதில் பகடியனா நான்கைந்து பதில்கள் இருக்கும். அவை என்னவென்று மறந்துவிட்டது. (ரசிகர்கள் கமென்டில் சொல்லவும்) அந்தக்கேள்வி தமிழ்நாட்டுக்கானது என்று நாம் குற்ற உணர்ச்சியில் இருந்திருப்போம். நம்மைவிட குற்ற உணர்ச்சிப்பட வேண்டியது கொழும்புத் தமிழர்களும் வெள்ளவத்த பெடியன்களுமே. இனப்படுகொலை நடக்கையில் கூச்சமேயில்லாமல் சிங்களவர்களுடன் தோள் கொடுத்து ஏதோ கிரிக்கெட் தொடர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அல்லது விஜய் அஜீத் படத்திற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு கிராமத்தில் இருந்து சென்னக்கு வேலைக்கு வருகின்றீர்கள் என்றால் முதல் ஒருவாரத்திற்குப்பின்னர் எல்லாம் சரியாகிவிடும். பார்ப்பனத்தோழர்கள் கூட உண்மையான நட்புடன் கிடைப்பார்கள். ஆனால் கொழும்பு அலுவலகங்களில் நிறுவனங்களில் ஒரு மலையகத் தமிழன் வேலைக்குப்போனால் அவ்வளவுதான். அவனை ராகிங் செய்யாத குறையாக நம்மூர் சாதி வன்கொடுமைகள் அளவுக்கு மலையகத்தமிழர்களை நடத்துவார்கள். காட்டிக்கொடுத்த சிலக் கொழும்புத் தமிழர்களால் புலிகளின் கொழும்பின் மீதான தாக்குதல்கள் தோல்வியடைந்தன என்று எனது உயரதிகாரி அடிக்கடி சொல்வார். அப்பாவி ஈழத்தமிழர்களை ஐரோப்பா கூட்டிச்செல்கின்றேன் என்று துபாய் கஜா மாதிரி கொச்சினில் இறக்கிவிட்டுச்செல்லும் நிஜமான தமிழ் ஏஜென்டுகளும் உண்டு. ஒருமுறை கொழும்பில் இருந்தபொழுது, ராணுவம் வன்னிக்குப் போயிருக்கக் கூடாது வெள்ளவத்தவேயில் புகுந்து அடித்திருக்கவேண்டும் என்று காட்டமாக மலையகத்தமிழர் ஒருவர் பேசினார். நானே அரண்டுவிட்டேன். கொழும்புதமிழரசியல் புரிந்தது என்றால், ஹிண்டு ராமை தெய்வம் என்று சொல்வீர்கள். பழைய குருநாதர் சொன்னபடி கொழும்புத் தமிழர்கள் கொழுப்புத்தமிழர்கள். 1 Free Tamil Ebooks – எங்களைப் பற்றி மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1.ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2.தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3.சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. 2 உங்கள் படைப்புகளை வெளியிடலாமே உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/ 3. மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks நன்றி !