[] [] [] [] []   ஆசிரியர்:  பொன் குலேந்திரன்  kulendiren2509@gmail.com    அட்டைப்படம்  பிரசன்னா   udpmprasanna@gmail.com      மின்னூலாக்கம் - தனசேகர் tkdhanasekar@gmail.com    மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com  உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.                                    காலம்  (அறிவியற் சிறுகதைத் தொகுப்பு)  பொருளடக்கம் கதை 1 - காலம் 12  கதை 2 - விண்கல் 41  கதை 3 - விநோதன் 56  கதை 4 - வைரஸ் (Virus) 78   கதை 5 - சக்தி மாற்றம் 91  கதை 6 - மெனன் குவின் 104  கதை 7 - அல்செய்மார் ஆராய்ச்சி 121  கதை 8 - மலடி 139  கதை 9 - பரம இரகசியம் 164  கதை 10 - அறிவின் ஆராச்சி 189  கதை 11 - விளைச்சல் 211  கதை 12 - நுண்ணறிவு – IQ 227   கதை 13 - மனஇறுக்கம் ( Autism) 243  கதை 14 - தோட்டா 265  கதை 15 - கிரகவாசி வருகை 274  கதை 16 - அமரத்துவம் ( Immortality) 292  ஆசிரியர் பேனாவில் இருந்து...   அன்பின் வாசகர்களே,   நான் எதையும்; புதுமையாக எழுத விரும்புபவன். ஏற்கனவே விசித்திர உறவு> அழகு> முகங்கள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், “விடிவு இல்லம்”; என்ற நாவலையும் வெளியிட்டுள்ளேன். நான் ஒரு பௌதிகவியல் ;பட்டதாரியும்> தொலை தொடர்பு பொறியியலாளரும். இந்த "காலம்" (Time) என்ற சிறுகதைத் தொகுப்பு 16 அறிவியல் கதைகளை உள்ளடக்கியது. அறிவியல் கதைகளைப் புனைவதுக்கு ஆழமான  கற்பனைதேவை. அறிவியலில் ஈடுபாடு இருக்கவேண்டும்   வாண்வெளியில் தினமும் இடம்பெறும் சம்பவங்கள் வியப்புக்குறியது. புதுப் புது கண்டுபிடிப்புகள்.'பிரபஞ்சம் தோன்றியது 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹொகின்ஸ் (Prof Stephen Hawkins). பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் பெரும் வெடிப்பினால் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. என்பது விஞ்ஞானிகள் கணிப்பு. நேரம் பிரபஞ்சத்தின் தோற்தின் போது ஆரம்பித்தது. நேரம் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் முடிவடையும் என்கிறார்கள் பௌதிக விஞ்ஞானிகள். இதெல்லாம் ஒரு கணிப்பே. எப்போது என்பது நிட்சயமாக சொல்லமுடியாது. பெரும் வெடிப்பினால் சூரிய குடும்பம் தொன்றியது என்பது ஆராச்சியாளர்கள் கருத்து. அந்த குடும்பத்தில் பூமி ஒரு அங்கம். அது எவ்வளவுக்கு உண்மை என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. ஆனால் பல கிரகங்களையும் மில்கிவே (Milky Way)  எனப்படும் பால் வழியையும் காலப்போக்கில் கண்டுவருகிறார்கள். பெரும் வெடிப்பின் போதும் வால்நடசத்திரத்தில் இருந்தும் தோன்றியவை தான் விண்கற்கள் என்ற இத்தொகுதியின் இரண்டாவது ;கதை.  முதலாவது கதையான காலதத்தின தலைப்பை இச்சிறுகதை தொகுப்புக்கு வைத்துளளேன். உங்களுக்கு காலம் கிடைத்தால் வாசியுஙகள் சிநதியுங்கள். முடிநதால் கருத்து தெரிவியுங்கள். வாண்வெளியில் சூரிய> சந்திர கிரகணங்கள் > வால்நட்சத்திரங்கள், கரும் துளை, எரி கல் மழை> இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடக்கிறது. எங்கள் பூமியும் இச் சம்பவங்களின் பாதிப்புக்கு உற்பட்டது.   இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை. இப்படியும் நடக்கலாம் என கற்பனை செய்து எழுதப்பட்டவை. காலம் சென்ற ஆர்தர் சி கிளார்க் பிரபல அறிவியல் கதைகள் பல எழுதியவர். செய்மதி வானில் மிதக்க முன்பே 1945ஆம் ஆண்டில் தன் விஞ்ஞான நாவலொன்றில் அதைபற்றி எழுதியிருந்தார். ஒருவேலை விஸ்வாமித்திர மகாரிஷி உருவாக்கிய திரிசங்குவின் சொர்க்கம் என்ற கதையை அவர் வாசித்திருப்பாரோ என்னவோ.   அயின்ஸ்டைனின் சார்புக்கு கொள்கைகளை (Theory of Relativity) மையமாக வைத்து> காலம் > சக்தி மாற்றம் என்ற கதைகள் எழுதப்பட்டது. வெளிக்கிரகங்களோடு தொடர்பை வைத்து விநோதன் என்ற கதை உருவாகிற்று. மலடி விந்து மாற்றத்தைக் கருவாகக் கொண்டது ரெசனன்ஸ் (Resonance_)  எனப்படும் ஒத்த அதிர்வை  மூலமாக வைத்து எழுதப்பட்ட கதை    பரமரகசியம். தீரக்க முடியாத வியாதி அல்செய்மார். இது பெரும்பாலும் முதியோர பாதிக்கிறது. இதுவே அல்செய்மார் ஆராச்சி என்ற கதையின்  கரு. டீஎன்ஏ (DNA)  எனப்படும்; மரபணு பரிசோதனை, குற்றவியலில் முக்கிய இடம் வகிக்கிறது. தீர்க்க முடியாத பல நோய்கள் மரபணுவோடு தொடர்பு உள்ளவை. இதுவே நுண்ணறிவு என்ற கதையின் கரு. மனிதர்களைப்போல் ஏன் பொம்மைகளும்> மிருகங்களும்> பறவைகளும் உறவாட முடியாது? இதை கருவாகக் கொண்ட கதைகள் தான் மெனன்குவின்னும்> அறிவின் ஆராய்ச்சியும். நீங்கள் ஒரு பசுமை விரும்பியா? விவசாயியா? அவசியம் விளைச்சல் என்ற கதையை வாசிக்க வேண்டும்.  மனஇறுக்க வியாதி (Autism)  இப்போது சிறுவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின்  பத்து வயது மகனுக்கு இந்நோய் இருப்பதாக கேள்வி இதை வைத்து ஒரு கதை இக் கதைக் கொத்துக்குள் அடங்கும். தோட்டா என்ற கதை அரசின் தரப்படுத்தல் என்ற கல்வி சட்டத்தால் பாதிக்கப்பட்ட இரு புத்திசாலி மாணவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய கதை தோட்டா. கிரகவாசி வருகை என்ற கதை சிகரத்தை யாரும் தொடாத கைலாயமலையை கருவாகக் கொண்டு எழுதப்பட்டது. கடைசிக் கதையான அமர்த்துவம்  ஆயள் நீடிப்பைக் கருவாகக் கொண்டு, வித்தியாசமான சிந்தனையோடு எழுதப்பட்டது   நான் கதைகளின் கருக்களைச் சொல்லி விட்டேன். கதைகளை வாசியுங்கள்> இரசியுங்கள். சிந்தியுங்கள்> விமர்சியுங்கள்.    பொன் குலேந்திரன் –  மிசிசாகா, ஒன்றாரியோ  கனடா  கதை 1   -   காலம்   []               எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என்  மருமகள் வத்சலா  ஒரு டாக்டர்;. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தோடும் தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் சம்மதித்துதானே ஆகவேண்டும். அவர்களுக்கு  அகஸ்த்தியன் தம்பதிகளுக்கு அபிமன்யூ என்ற மகன் பிறந்தான்.  அபி படிப்பில் வெகு கெட்டிக்காரன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே வருவான்.   பங்களூரில் வசிக்கும் அகஸ்த்தியன் குடும்பம் அடிக்கடி லீவில் சென்னை வருவார்கள். அகஸ்த்தியனுக்கு தான் எப்போதாவது ஒரு நாள் விண்வெளிப் பயணியாக வேண்டும் என்ற கனவு பல காலமாக இருந்து வருகிறது.   “நான் நினைப்பது நடக்குமா அப்பா”? என்று என்னை அடிக்கடி கேட்பான்.  “அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம்  கேட்டு விடுவோமே” என்று அவனுக்குச் சொன்னேன்.  “அப்பா அது நல்ல ஐடியா தான். நாடி சாஸ்திரத்தைப்பற்றி கேள்விபட்டிருக்கிறன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அப்பா” என்றான். மூன்று நாள் லீவில் தனது வருங்காலத்தைப் பற்றி அறியும் திட்டத்தோடு அவன் மட்டுமே சென்னைக்கு வந்தான்  .   அவனை அழைத்துக்கோண்டு வைதீஸ்வரன் கோவில் இருக்கும் ஊருக்கு நாமிருவரும் மட்டுமே போனோம். ஏன் மனைவிக்கு பூர்ணிமா உடம்பு சரியில்லாததால் எங்களோடு வரவில்லை.  இக்கோவில் உள்ள ஊர் சென்னையில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்திலும், சீரகாழிக்கு அருகே 7 கிமீ தூரத்திலும் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான கோவிலது. .  நாடி சாஸ்திரக்கார்கள் பலர் வாழும்;   ஊர்.  அனேகர் தமது சென்ற காலம் , நிகழ் காலம், வருங்காலத்தைப் பற்றி அறிய  இங்கு செல்வதுண்டு. அவர்கள் நாடி சாஸ்திரம் சொல்வதற்கு பாவிக்கப்படுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வட்ட எழுத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இது வேதகாலத்தில் சித்தர்களால் எழுதப்பட்டது என்பது பலர் நம்பிக்கை. இந்த சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது. நாடிச்சென்று சாஸ்திரம் கேட்பதால் நாடிசாஸ்திரம் என்ற பெயர் வந்தது என்பர் சிலர். சாஸ்திரம் கேட்பவர் ஆண் ஆகில் வலது கையின் பெருவிரலின் ரேகையும்,; பெண்ணாகில்;; இடது கையின் பெரு விரல் ரேகையும் பிரதி எடுத்து, ஓலைச்சுவடிகளைத் தேடியபின் பல கேள்விகளை சாஸ்திரம் கேட்க வருபவர்களிடம் கேட்டு,  ஆம் அல்லது இல்லை என்று அவர்கள் சொல்லும் பதில்கள் மூலம் தாம் சாஸ்திரம் சொல்லப் போவது சரியானவருக்கா என உறுதி செய்த பின்னர் சாஸ்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.   அவ்வூரில் நாடி சாஸ்திரம் பார்த்துவிட்டு நானும் மகன் அகஸ்தியனும் வீடு திரும்பும் வழியில் அவன் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லவேண்டி இருந்தது.   “அப்பா, நாடிசாஸ்திரக்காரர், உங்கள் பெயர் சந்திரசேகரன் , அம்மா பெயர் பூர்ணிமா, என் பெயர், என் மனைவி பெயர் எல்லாம் சரியாகச் கொன்னார். உங்களுக்கு நான் ஒருவன்தான் பிள்ளை என்றும், நான் காதலித்து க்டித்த பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் சொன்னார் .  நான் பிரபல வான்வெளி பயனியாவேன் என்றும் என் மகன் வைத்தியத் துஙையில் சேர்ஜனாவான் என்றும்   என் மனைவி அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவாள்  என்றார். என் குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றி அவரி சொன்னது நடக்குமா என்பது எனக்குச் சந்தேகம். டாக்;டர் தொழில் செய்யும் என் மனைவி வத்சலா எப்படியப்பா அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக முடியும்? எனது மகள் சேர்ஜனாவன் என்று சாத்திரத்தில் சொன்னபடி நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது தான் நான் எதிர்பார்பதும். நாடி சாஸ்திரம்  சொன்னவர் பெயர் என்னப்பா”?   “அவர் பெயர் சிவசங்கர். அவர் எனக்குத் தெரிந்தவர்களுக்கு  சொன்னது நடந்திருக்கிறது.; பிரானசில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  தீர்க்கத்தரிசி மைக்கல் நொஸ்டடெமஸ் என்பவர் பற்றி கேள்விபட்டிருப்பியே. அவரை போல் என்று சொல்”   “நாடி சாஸ்திரம் சொல்லும் போது அவர் கையில் இருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து வாசித்தாரே. அச்சுவடிகள்  என்ன அவரின்  டைம் மெசினா? கடந்த காலத்துக்கும,; நிகழ்காலத்துக்கும், நிகழப்போகும் காலத்துக்கு கையில் இருக்கும் ஏட்டைபார்த்து சொல்லுகிறாரே அதெப்படி?   “அகஸ்தியா காலத்தில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றிய சார்புக் கொள்கையினை  பௌதிக விஞ்ஞானி அல்பேர்ட் அயன்ஸ்டைன் எற்கனவே சமன்பாடுகள் மூலம் விளக்கியிருக்கிறார். ஒளியின் வேகமானது ஒரு செக்கண்டுக்கு சுமார் மூன்று இலட்சம கிமீ.  இதுவே  நாமறிந்த ஆகிய கூடிய வேகம். ஓளி, ஒரு வருடத்தில் செல்லும் தூரத்தை  ஒளி வருடம் என்று வான்வெளியாளர்கள் அழைப்பார்கள். அந்த தூரத்தை ஆங்கிலத்தில் லைட் இயர் (Light Year) என்பார்கள்;.”   என்  மகன் பௌதிகத்திலும் விண்வெளித்துறையிலும் அதிக ஆர்வம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். சந்திரனில் முதல் கால் அடி எடுத்து வைத்த ஆரம்ஸ்டோரங் என்பவரைப் பற்றி  வாசித்து அறிந்த பின், பைலட்டாக வேலை செய்யும் தானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவான்.  வானியல் பற்றிய பல நூல்கள் அவன் கேட்டு, நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனுக்குப் பௌதிகத்துறையில் பேராசிரியரான நான் வாண்வெளிப் பயணம் பற்றி விளக்கம் கொடுத்தேன்.   “அகஸ்தியா நீ விண்வெளி வீரனாக வர வேண்டுமானால் விண்வெளியில் தூரத்தை கணிப்து எப்படி என்று முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும்”, நான் சொன்னேன்.   “அப்பா, நீங்கள் பொளதிகத் துறை பேராசிரியராச்சே. வாண்வெளியில் பூமிக்கும் கிரகங்களுக்கும் இடையிலான தூரத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்.”.   “கஸ்தியா விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொண்டபடி ஒளியின் வேகம் தான், நாமறிநத வேகங்களில் ஆகக்கூடிய வேகம். ஓளி செகன்டுக்கு சுமார் 300,000 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரத்தை கணிப்பதென்றால் 300,000 கிமீ  தூரத்தை ஒரு வருடத்தில் உள்ள செகன்டுகளை 300,000 கீமீ ஆல் பெருக்கினால் சுமார் 9.5 டிரிலியம் கிமீ தூரம் வரும்.. இத’ தூரத்தை ஒரு ஒளி ஆண்டு தூரம் என்றார்கள் பல வாண்வெளி ஆராச்சியாளர்கள்.”   “அடெயப்பா நினைத்து பார்க்க முடியாத அவ்வளவு தூரமா அப்பா”?   “ஆமாம் பூமியில் இருந்து சூரியனதும் ,நட்சத்திரங்களினதும் கிரகங்களினதும் தூரத்தை ஒளி வருடத்திலும் அல்லது வானியல் அலகு எனும் அஸ்டிரோனோமிக்கல் யுளிட்டிலும் (Astronaumical Unit) சொல்லுவார்கள். ஒரு வானியல் அலகு   பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரம் கிட்டத்தட்ட 150 மில்லியன் கிமீ. அதாவது  ஓளி சூரியனில் இருந்து பூமியை வந்து சேர கிட்டத்தட்ட  8.3 நிமிடங்கள் எடுக்கும். இத்தூரத்தை ஒரு வானியல் அலகுவாகக் கருதுகிறார்கள். ஒரு ஒளி வருடத்தையும் வானியல் அலகை இணைக்கும் ஒரு ஒளி வருடமானது 63241 வானியியல் அலகுக்கு சமனாகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு போகும் தூரம் சுமார் 29 வானியல் அலகாகும். இவ்வலகை 63241ஆல் பெருக்கினால் ஒளி ஆண்டு தூரம் வரும்.   “முடிவில்லா தூரம் என்று சொல்லுங்கள். இகனால் தான் இந்து மதத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வானியல் தூர கணிப்பைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன் அப்பா”   “சரியாகச் சொன்னாய். அகஸ்தியா இன்னொன்றை தெரிந்து வைத்துக்கொள். நேரமானது வேகத்தாலும் , ஈரப்பு விசையாலும் பாதிப்படையும். வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, நேர மாற்றம் அதிகரித்து கொண்டே போகும். இதை விண்வெளி வீரர்கள் அவதானித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் மட்டுமே நேர மாற்றத்தை அவதானிக்க முடியும் என்பதில்லை. ஈரப்புச் சக்தி அதிகம் உள்ள பிளக் ஹோல் (Black Hole)  என்ற கரும் துளைக்கு அருகே சென்றால் அதன ஈரப்பு விசை நேரத்தை  பாதிக்கும்.”   “அப்பா நான் நாடிசாஸ்திரத்தில் சொன்னபடி விண்வெளி பயணியாக வந்தால் நான் யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பேன்”   “என்ன சாதனை படைப்பாய் அகஸ்தியா”?   “பூமிக்கு அருகே உள்ள கருந்துளைக்கு பயணத்தை மேற் கொண்டு காலத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்து அது உண்மையா என்று அறிய விரும்புகிறேன்”.   “நல்ல சிந்திக் முடியாத இலட்சியம் தான், ஆனால் அகஸ்தியா நீ நினைப்பது சாத்தியமாகுமா என்பது எனக்கு சந்தேகம். வெகு தூரத்தில் உள்ள கருந்துளையை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்தால் மாத்திரமே கருந்துளையை அடைய முடியும். அதற்குள் போனால் அதன் ஈரப்பு விசையில் இருந்து தப்பமுடியாது என்பதை நீ அறிந்து கொள்.”   “தெரியும் அப்பா. நான் பங்களுரில் உள்ள  இந்திய விண்வெளி ஆராச்சி நிலையத்துக்கு நான் விண்வெளி வீரனாகும்  விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பிக்கப் போறன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ரொக்ட் விண்வெளிக்கு அனுப்பும் தும்பா என்ற இடத்தில் பயிற்சி கிடைக்கும். அதுசரி அப்பா நீங்கள் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை பேராசிரியராயிற்றே கருந்துளை பற்றி மேலும் சொல்லமுடியுமா”   “கருந்துளை (Black Hole) என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஈரப்புச் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' (Quarsar) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கருந்துளையை சீனாவில்; உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் கண்டு பிடித்துள்ளனர். கருந்துளைகளை  அதன நிறையை வைத்து நான்கு வகையாக வகுத்துள்ளனர். நான்காம் வகையைச் சேர்ந்த சூரியனை விட பல கோடி அதிகமான நிறையுள்ள கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி (Chile) நாடும் உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நட்சத்திர இறப்பினால் தோன்றும் கருந்துளை; சூரியனின் நிறையிலும் சுமார்  மடங்கு கூடியது. சூரியனிலும் பார்க்க பல மில்லியன் நிறை கூடிய கருந்துளைகள் உயர் வகுப்பை சேர்ந்தவை . சூப்பர் நோவாவில் (Super Nova)  உள்ள நட்சத்திரஙகள் இறநதபோது தோன்றிய கருந்துளை இதில் ஏ616 மொன் (Mon) என்று பெயரிடப்பட்ட கருந்துளை பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இகருந்துளை சூரியனின் நிறையை விட 9 முதல் 13 வரை கூடுதலான நிறை உள்ளது என கணித்துள்ளார்கள்;. இதற்கு அடுத்த அருகே உள்ள கருந்துளை 6000 ஒளி ஆண்டுகள் துராத்தில் உள்ளது. இது சூரியனை விட  15 மடங்கு நிறை கொண்டது.   “கேட்பதற்கு எவ்வளவு சுவர்சியமாக இருக்கிறது அப்பா. இதைபற்றி மேலும் வாசித்தறிய விருப்பப்படுகிறேன். நான் விண்வெளி வீரனாகும் சந்தரப்பம் கிடைத்தால் இதைப்பற்றி அறிந்து வைத்;திருப்பது நல்லதல்லவா. ஒருவேளை என்னை இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் நேர்காணலுக்கு அழைத்து கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கவேண்டாமா”?   “வீட்டுக்குப் போனதும் எனக்கு நினைவு படுத்து, கிப்ஸ் தோர்ன் (Kips Thorn) எழுதிய “கருந்துளையும் நேர பாதிப்பும்” (Black Hole Time Impact) என்ற  நூலொன்று எனது லைப்பிரரியில் இருக்கிறது. அதைத் தருகிறேன், அந்நூலை வாசி. அப்போது பிரபஞ்சத்தைப் பற்றி அறிவாய்”, நான் அகஸ்தியனுக்குச் சொன்னேன்.   அகஸ்தியனும் நானும் வீடு திரும்பியதும், இரவு உணவு சாப்பிட்டபின்  பின், நித்திரைக்குப் போக முன், அந்நூலை மறக்காமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டான்;. தூங்கமுன் நூல் முழுவதையும் வாசித்துவிட்டு அதை தன் நெஞ்சில் வைத்தபடியே அதன் நினைவாகவே தூங்கிவிட்டான்.  ஆகஸ்தியன் எதிர்பார்த்தபடியே ஏ616 மொன் என்ற கருந்துளை நோக்கி பயணிக்க இருக்கும் 3 பேரைக் கொண்ட  விண்வெளி வீரர்களில் அகஸ்தியனும் ஒருவனாக தேர்ந்து எடுகக்ப்பட்டான். மற்ற இருவரும்; வடநாட்டவர்கள். மூவரில் குழுவுக்கு பூனாவைச் சேர்ந்த பாரத் என்பவர் கப்டனாக இருந்தார்;. மற்ற வீரரின் பெயர் கல்கத்தாவை சேர்ந்த சௌதிரி.; கருந்துளையைபற்றிய அகஸ்தியனின் அறிவைக் கண்டு பயணிகள் குழுவின் தெரிவுக்காக நேர்காணல் கண்டவர்கள் வியந்தார்கள்.   அவன் விரும்பியபடி  அவனது விண்வெளிப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி காலை 9 மணிக்கு கேரளாவில் உள்ள பாம்பா (Pampa) விண்வெளி ரொக்கட்டுகள் பயணிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பமானது என்பதை ரொக்கட்டில் உள்ள கடிகாரம் காட்டியது. அகஸ்தியன் பயணம் செய்த ரொக்கட்டின் பெயர் “சட்டேர்ன்” (SATURN)). கருந்துளை நோக்கிய பயணமாவதாலோ என்னவோ சனியை குறிக்கும் சட்டேர்ன் பெயர் ரொக்கட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. பெற்றோர்,; மனைவி வத்சலா, மகன் அபிமின்யூ ஆகியொரிடமிருந்து உயிரை பணயம் வைத்து> அகஸ்தியன் விடைபெற்றான். அப்போது நான் ரிட்டையராக ஆறுமாதங்களே இருந்தன.   ஓளியின் வேகத்தின் தொன்னூற்றி எட்டு வகிதத்தில் ரொக்கட் பயணம் செய்தால் சில வருட பயணத்தின் பின் பல கிரங்களைத் தாண்டி கருந்துளையை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது.  பயணத்துக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது என்பதை மீட்டர் காட்டியது,  குழுவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. குழுவின் கப்டன் பாரத்; பல தடவை வாண்வெளியில் பணம் செய்த அனுபவசாலி. குழுவில் இரண்டாவது பயணி சௌத்ரி, ஒரு பிரமச்சாரி. அவரும் இரு தடவை வாண்வெளியில் பயணம் செய்தவர். அகஸ்தியனுக்கு இப்பயணம் புது அனுபவம். பயிற்சியின் போது ரொக்கட்டில் உள்ள கருவிகளை இயக்குவதையும், மீட்டர்களை வாசிப்பதை பற்றி கற்றுக்  கொடுத்திருந்தார்கள். உண்பதற்கு சத்தள்ள மாத்திரைகள் உற்கொள்ளவேண்டியிருந்தது. ஈரப்பு சக்தியில நடக்கக்  கூடிய வித்தில் ஆடைகள் அணிந்திருந்தான். அதறகான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தூரம் ரொக்கட்; பயணித்துள்ளது என்பதை  ஒளி ஆண்டு; அலகுவில் மீட்டர் காட்டியது. ரொக்கட் பயணிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் விகிதத்தில் காட்டியது. வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது நேர மாற்றம் பெரிதாகிக் கொண்டு போகும் என்று தன் தந்தை சொன்னது அகஸ்தியன் ஞாபகத்துக்கு வந்தது.  அதுவமல்லாமல் கருந்துளையை வெகு சீக்கிரம் போயடையலாம் எனப் பாரத் சொன்னார்   கருந்துளைக்குள் போனால் வெளியேறமுடியாது என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை செய்து பயணிகளை அனுப்பியிருந்தது. 2900 ஒளி ஆண்டு தூரத்துக்கு பயணம் செய்து கருந்துளைக்கு அன்மையில் ரொக்கட்டை நிறுத்தி கருந்துளையை அவதானித்து குறிப்புகள் எடுத்து திரும்பவேண்டும் என்பது குழுவுக்கு ஆராய்ச்சி நிலையம் இட்ட கட்டளை. அதனபடி சட்டெர்ன் ரொக்கட்;  கருந்துiளையில் இருந்து 10 ஒளி ஆண்டு தூரத்தோடு பயணத்தை தொடராமல் நிறுத்தியது.    தங்கள் குழுவுக்கு ஐஎஸ்ஆர்ஓ (ISRO) என்ற இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் இட்ட வேலையை  சரிவர செய்து முடித்து, திரும்பவும் பூமிக்கு குழு திரும்பிய போது ரொக்கட்டில் உள்ள கடிகாரம் ஜனவரி 20 திகதி 2015 ஆண்டு எனக் காட்டியது. ரொக்கட்டில் இருந்த கடிகாரம் காட்யபடி  கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கருந்துளைக்குப் போய் வர எடுத்தது என்பதை நினைத்து பார்க்கும் போது தாம் எவரும் கிடைக்காத சாதனையைப் படைத்துவிட்டோம் என குழு நினைத்தது. பூமியை ரொக்கட் வந்தடைந்த போது பாம்பாவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ பரிபாலன நிலையத்தில் இருந்த கடிகாரம் 2038 ஆண்டு ஜுன் மாதம்  20 ஆம் தேதியைக் காட்டியது.    “பூமியின் நேரத்தின்படி நான் என்ன 23 வருடங்கள் இளமையாகிவிட்டேனா? அப்போ நாஙகள் புறப்படும் போது இருந்தவர்கள் இப்போது விண்வெளி ஆராச்சி நிலையத்தில்  வேலை செய்யமாட்டார்களே”, என்றார் குழுவின் கப்டன் பாரத்.   23 வருடங்கள் இளமையாகி வீடு திரும்பிய அகஸ்தியனுக்கு இன்னொரு அதிரச்சி காத்திருந்தது, ரொக்கட் இறங்கிய நிலையத்துக்கு தன்னை வரவேற்க மனைவி வத்சலா ஒரு பெரிய கூட்டத்தோடு, பல பொலீஸ் அதிகாரிகள் புடைசூழ வந்திருந்தாள். அவளோடு அபிமன்யு தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் வந்திருந்தான். அகஸ்தியனின் கண்கள் அவனது பெற்றோரைத் தேடிற்று. அபிமன்யுவிலும் வத்சலாவிலும்; பல  மாற்றங்கள்;. வத்தசலாவின் முகத்தில் வயதின் முதுமை தெரிந்தது. தலை மயிர் நரைத்தவிட்டது.   “அப்பாவும் அம்மாவும் எங்கே” ? பதட்டத்தோடு அகஸ்தியன் மனைவி வத்சலாவைக் கேட்டான்.   “அவர்கள் இறந்து 15 வருடங்களாகிவிட்டது” வத்சலா சொன்ன பதில் அவனை அதிர வைத்தது.   “அது சரி வத்சலா டாக்டரான உனக்கேன் இவ்வளவு பொலீஸ பாதுகாப்பும் கூட்டமும் ”?   “நான் இப்போ டாக்டராக வேலை செய்வதில்லை . நான் இப்போ மாநில கல்வி அமைச்சர், இவர்கள் என் மக்கள் திராவிட தமிழர் கழக கட்சித் தொண்டர்கள்.” வத்சலாவிடம் இருந்து பதில் வந்தது.   குழப்பம் அடைந்த  அகஸ்தியன் அபிமன்யுவைப் பார்த்தான்.   “ அப்பா நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். என்னை யார் என்று அடையாளம் தெரிகிறதா? நான் தான் உங்கள் மகன் அபிமன்யூ. இது என் மனைவி அகிலா. இவ ஒரு கிட்னி கொன்சல்டன் டாக்டர். அவளுக்கு பக்கத்தில் நிற்பது என் மகன் சேகரனும், மகள் பூர்ணிமாவும். உங்கள் அப்பா அம்மா நினைவாக அவர்கள் பெயரை என் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன். நானும் அகிலாவும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.”   “அபி நீ இப்ப என்னவாக வேலை செய்கிறாய்”? அகஸ்தியன் மகனைக் கேட்டான்.   “நான் ஒரு ஹார்ட் சேர்ஜன் அப்பா. “அவனிடம் இருந்து பதில் வந்தது   “உங்கள் அனுமதி பெறாமல் உங்களை வரவெற்க நாங்கள் வந்ததுக்கு மன்னிக்கவும்” வதசலா சொன்னாள்.   ஐயோ கடவுளே நாடி சாஸ்திரக்காரன் சொன்னது போல நடந்துவிட்டதா? காலம் அவ்வளவு கெதியிலை கடந்து விட்டது” தன்னையும அறியாமலே புலம்பினான் அகஸ்தியன்.   அவன் புலம்பல் குரல் கேட்டு நானும் மனைவியும் அவன் அறைக்குள் போனோம்.   “தம்பி அகஸ்தியா ஏன் புலம்புகிறாய்? எதாவது கெட்ட கனவு கண்டாயா”?, நான் அவனின் உடலை உசுப்பியபடி கேட்டேன்.   “அகஸ்தியா இப்டித்தான் வெகு நேரம் உன் வீட்டில் தூங்குவாயோ?. காலை பத்து மணியாகிவிட்டது. இதோ சூடான காப்பி கொண்டுவந்திருக்கிறன். குடித்துவிட்டு முதலிலை வத்சலாவுக்கு போன் செய். வத்சலா வைத்தியசாலையில் இருந்து உன்னைக் கேட்டு போன் செய்தவள். எப்போ நீ பிளைட்டில் பங்களுர் திரும்புகிறாய் என்று கேட்டாள்”, பூர்ணிமா மகனுக்கு செய்தி சொன்னாள்.   “என்ன அதஸ்தியா நான் தந்த கருந்துளை நூல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டாய் போலத் தெரிகிறது. கருந்துளை பற்றி கனவு ஏதும் கண்டாயா” நான் சிரித்தபடி அவனைக் கேட்டேன்.   அவன் திரு திரு என்று முழித்தான். நடப்பது யாவும் அவனுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை அவன் முகம்; காட்டிற்று, அவனுக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் இரவு பல மணி நேரம் வாசித்த என் “கருந்துளையும் நேர பாதிப்பும்”  என்ற நூல் அவனைப்பார்த்து கண்சிமிட்டியது.    (யாவும் கற்பனையே)          கதை 2   -   விண்கல்   []                 பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன்  அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராச்சி செய்து முனைவர் பட்டம்  பெற்றவர்.  வானியற் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை விஞ்ஞானி என்ற சஞ்சிகைக்கு எழுதிவருபவர். வாண் சாஸ்திர வல்லுனர்கள் பலரின் வரலாறு பற்றி அறிந்து வைத்திருந்தார். அவ்வல்லுனர்களில் அவரை முக்கியமாக கவர்ந்தவர்கள் அல்பேர்ட் அயின்ஸ்டைனும், ஸ்டீபன் ஹோகின்சுமேயாகும். உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனின் நினைவாகத் தன் மகனுக்கு அல்பேரட் எனப் பெயர் சூட்டினார் ராஜன்.  அல்பேர்ட்  தன்னைப்போலவே வான்யியற்பியலில் படித்து பட்டம் பெற்று  உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனைப் போன்று விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதே அவர் ஆசை. மகனை ஊக்குவிப்பதற்காக 500 டொலர்கள் கொடுத்து வானில் நடக்கும் காட்சிகளைத் தெளிவாகப் பார்கக்;கூடிய திறமை வாய்ந்த ஓரியன்  டெலெஸ்கோப் ஒன்றை பிறந்த நாள் பரிசாக மகனுக்கு புரொபசர் ராஜன் வாங்கிக் கொடுத்தார். அல்பேர்ட் வான்யியற்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தான். வானில் நடக்கும் விசித்திரங்களைப் பற்றி அறிவது அவனது பொழுது போக்கு. ஆத்தர் சி கிளார்க் (Arthur C Clerk)  , அசிமோவ்  (Asimov). ஏச் ஜி வெல்ஸ் (H G Wells) ;போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அறிவியல் நாவல்ளை வாசித்து தானும் அவர்களைப் போன்று அறிவியல் கதைகள் எழுதும் எழுத்தாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆவல்;.   தினமும் தனது ஓரியன் டெலஸ்கோப்பினூடாக வானத்தைப் பார்த்து ஆராச்சி செய்தபடியே அல்பேபர்ட் தினமும் இருப்பான். டெலஸ்கோப் இல்லாமல் நேரடியாகப் பார்க்க முடியாத பல கிரகங்களை அவனால் பார்க்கக்கூடியதாக இருந்தது,  ஓரியன் டெலஸ்கோப்பின் முக்கிய கண்ணாடியின் விட்டம் பெரிதாக இருப்பதால் வானில் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன.  சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் வியாழன். அதன் மேகப் பட்டைகளையும் கலியியோ கண்டுபிடித்த  நான்கு பெரிய சந்திரன்களையும் அல்பர்ட்டால் பார்க்கமுடிந்தது. பூமியை விட விட்டத்தில் பதினொரு  மடங்கு பெரிதான வியாழன் கிரகத்தில் பெரிய விண்கற்கள் அடிக்கடி  தாக்குதலை கண்டு அதிசயத்தான். 67 சந்திரன்களை கொண்ட வியாழனானது எல்லா சந்திரன்களையும் தன் டெலஸ்கோப்பில் அல்பர்ட்டால் பார்க்க முடியவில்லை என்பது கவலை.  சனி கிரகத்த சுற்றி உள்ள  வளையங்கள் அத்குப் பெருமையைத் தேடி கொடுத்தது. வியாழனுக்கு அடுத்தாக அதிக எண்ணிக்கை உள்ள சந்திரன்களை இக்கிரகம் கொண்டது. பூமியைப் போல் எல்லாக் கிரகங்களுக்கும் சந்திரன்கள் உண்டு என்பதையும் வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு 14 சந்திரன்களும்? யுரேனசுக்கு 27 சந்திரன்களும் இருப்பதை அறிந்தாலும் அச்சந்திரன்களை தன் டெலஸ்கோப்பினூடாகப் பார்க்கக் கூடியதாக இல்லை என்பது அவனுக்குப் பெரும் ஏமாற்றம்,   வின்கற்கள் கிரகங்களை தாக்குவது கண்கொளாக் காட்சியாக இருந்தது. தன் தந்தைiயிடம் தான் டெலஸ்கோப்பினூடாக கண்ட காட்சியின் சந்தேகத்தைக் கேட்டான்.   “அப்பா, விண்ற்கள் எரி மழை போல் பொலிகின்றனவே அது ஏன். அவை எங்கிருந்து தோன்றியுள்ளன?”.   “வளிமண்டலத்தினூடாக வேகத்துடன் வின்கற்கல் பயணம் செய்வதினால் உராய்வு ஏற்பட்டு, வெப்ப நிலை அதிகரித்து, எரியத் தொடங்குகிறது அதனால் விண்கல்லை எரிகல் என்றும் அழைப்பாரகள். கிரகங்கள் எப்படி பெரும் வெடிப்பின் போது தோன்றினவோ அதே போன்று தோன்றியவைதான் அவை. அதனுடைய பருமனை வைத்து பெரிதாயின் விண்கோள் (Asteroids) எனவும் . சிறுதாயின்  விண்கல்   (Metyeriods); எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் விண்கற்கள் சிறுது என்பதால் பூமியை வந்து தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.”   “தாக்கினால் என்ன நடக்கும் அப்பா”?   “பலர் விண்கல்   தாக்குதலினால் பூமி அழிந்துவிடும் என்;று பீதியை அடிக்கடி உருவாக்குறார்கள். விண்கல்   பூமியை வந்து தாக்கும் வாயப்பு கல்லின் பருமன் கூடும் போது, குறைந்து கொண்டு போகும்.. உதாரணத்துக்கு 4 மீட்டர் விட்டம் உள்ள விண்கற்கள்  அடிக்கடி பூமியைத் தாக்கக் கூடியவை. 100 கிமீ விட்டம் உள்ள விண்கல்   சுமார்; 5000 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பூமியைத் தாக்கும். 1000 கி.மீ விட்டம் உள்ள விண்கல்   கிட்டத்தட்ட 450இ000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தான் தாக்கும் என ஆராச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.   “பெரிய விண்கல்   வந்து பூமியைத் தாக்கினால் பாதிப்பு பெரிதாக இருக்குமே அப்பா”?   “ஆமாம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசோர்ஸ் என்ற மாபெரும் உயரினம் திடீரேன ஒரு நாள் மறைவதற்கு விண்கல்   தாக்குதலே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்ல பல நாடுகளில் திடீரேன  தோன்றிய பள்ளங்கள் இப்பள்ளங்களில் 300 கி.மீ நீளமுள்ள மிகப்பெரிய பள்ளம் தென்ஆபிக்காவின் ப்ரீ ஸ்டேட் (Free State) மாகாணத்தில் உள்ளது. இப் பள்ளம் விண்கல்   தாக்குதலினால ஏற்பட்டது. இது போன்றே உலகில் இரண்டாவது பெரிய பள்ளம,; கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சட்பெரி நகரத்தில் விண்கல்   தாக்குதலால் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியது . 1908 இல் சைபீரிய பாலைவனத்தில் தோன்றிய பள்ளம் சுமார் 10 கிமீ விட்டம் உள்ள விண்கல்  லின் தாக்குதலினால் தோன்றியிருக்கலாம் என்பது ஆராச்சியாளர்கள் கணிப்பு”   “அப்போ அப்பா பூமியை தாக்கும் விண்கல்   மக்கள் வாழும் நிலப்பகுதியைத் தாக்காமல் கடலில் வந்து விழுந்தால் என்ன நடக்கும்”?   “2004ஆம் ஆண்டு டிசம்பரில் கடலுக்குக் கீழ் நடந்த பூகம்பத்தால் தோன்றிய சுனாமி போல் பல அடிகள் உரமான பேரைலகள் தோன்றி கரையொரப் பகுதிகளையும், தீவுகளையும் அழித்துவிடும். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பம் மட்டும் தான் சுனாமியை ஏற்படுத்தும் என்பதில்லை. ஜாவா, சுமத்திர தீவுகளுக்கு இடையேயுள்ள கரகோட்டா என்ற எரிமலை 1883 ஆம் ஆண்டில் வெடித்ததாலும், பங்களா தேசத்தையும்  தனுஷ்கோடியை தாக்கிய புயலாலும் பேரலைகள் தோன்றலாம் அல்பர்ட்”.   “கேட்கப் பயங்கரமாக இருக்கிறது அப்பா”   “ஆங்கிலத்தில் டீப் இம்பக்ட (Deep Impact) என்ற ஆழமான தாக்கம் என்ற பெயரில் பிரபல அறிவியற் படங்களை தயாரித்த ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் (Stephen Spillberg) படத்தின் வீடியோ கஸட் எனது லைப்ரரியில் இருக்கிறது. நீ அதை அவசியம்; போட்டுப் பார் அப்போது விண்கல்   தாக்குதலால் ஏற்படும் அழிவைப் பார்ப்பாய்.   “நன்றி அப்பா. அவசியம் பார்க்கிறேன்”  . அல்பர்ட் தந்தையோடு கதைத்த பின் விண்கல்   பூமியைத் தாக்கினால் என்ன விளைவு பற்றிய ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் டீப் இம்பக்ட் படத்தின் வீடியோ கஸட்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான்.  டீப் இம்பெக்ட் படத்தை பார்த்து முடித்துவிட்டு பல வித சிந்தனைகளோடு தன் கட்டிலுக்கு அல்பேர்ட் நித்திரைக்குப் போன போது அவன் மனதில் அடிக்கடி தோன்றியது டெலஸ்கோப்பில் தான் அவதானித்த ஒரு பெரும் விண்கல்லின் தோற்றம். அக்கல் பூமியை நோக்கி வருவதாக அவனது கணிப்புக்கு பட்டது. முதலில் அது ஒரு வால்நடசத்திரமாக இருக்குமோ என நினைத்த அவன,; பின் அதன் தோறத்தையும் செல்லும் பாதையையும் கணித்து நிட்சமாக அது பெரிய விண்கல்லாகத் தான் இருக்கும் என்பது அவன் முடிவு. அதற்குப் தன் கற்பனையில் “அல்பா: என பெயர் வைத்தான். டீப் இம்பெக்ட் படத்தின் கதைப் படி முதலில் விண்கல்லை தனது டெலஸ்கோப்பில் கண்டது ஒரு வாண்சாஸ்திரி.   நான் கண்ட அல்பா விண்கல்லைப் பற்றி அப்பாவிடம் நான் சொல்லவில்லையே. சொல்லி யிருந்தால் நான் பார்த்த விண்கல் பூமியைத் தாக்கும் சாத்தியக்கூறு இருக்குதா என்று கணித்துச் சொல்லியருப்பார். அமெரிக்காவில் நிட்சயம் நாசா (NASA)  விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை அவதானித்திருப்பார்கள். கட்டாயம் நாசா தக்க நடவடிக்கை எடுக்கும்.  என்ற நம்பிக்கையோடு அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவன் கனவில் டீப் இம்பக்ட் படத்தில் வந்த காட்சிகள் அடிக்கடி வந்து போயிற்று. அடேயப்பா என்ன கற்பனை திறமைவாயந்த டைரக்டர் ஸ்பில்பேரக்;. இடி (ET) என்ற வெளிக்கிரகவாசி பற்றிய பிரபல்யமான படத்தை உருவாக்கியவர் ஆயிற்றே. அது போல் அவரது ஜெரசிக் பார்க் டயனோசோரஸ் பற்றிய படம். எவ்வளவு தத்ரூபமான படம்.; அப்பா சொன்ன மாதிரி அந்த ஜவராசிகள் திடிரென அழிந்ததற்கு விண்கல்   தாக்குதலா காரணம்? நம்பமுடியவில்லையே. இதுபோன்ற கனவுகளைக் கண்டவாரே அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான்.  காலை ஒன்பது மணியாகியும் அல்பேர்ட் தூக்கத்தைவிட்டு எழும்பவில்லை.  “அல்பேர்ட் கெதியலை எழும்பிப் போய் டிவி நியூசைப் பார்” என்று மகனைத் தட்டி எழுப்பினார் பேராசிரியர் ராஜன்.  “என்னப்பா அப்படி முக்கியமான நியூஸ் போகுது”?  “நேற்று நாங்கள் இருவரும் பேசிய விசயத்தோடு சம்பந்தமுள்ள நியூஸ்தான்” பேராசிரியர் பதில் சொன்னார்.  தன் கட்டிலுக்கு முன்னால் இருந்த டிவையை ரிமோட் கொண்டுரோல் மூலம் இயக்கி நியூஸ் சனலை அல்பேர்ட் பார்த்தான்.  “200 மீ விட்டமுள்ள விண்கல்   பூமியை ஜ. எம்.டி (GMT) நேரம் இரண்டு மணிக்கு வட துருவத்தை தாக்கியுள்ளது. நல்ல வேலை தாக்கிய பகுதியில் பனி மலைகளைத் தவிர மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இந்த தாக்குதல் பூமியின் வடதுருவத்தில் இருந்து கிரீன்லாண்ட் தீவு இருக்கும் திசையில் 200 கீ மீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. விண்கல்   தாக்குதலின் போது வெப்பசக்தியால் பல பனி மலைகள் பாதிக்கப்பட்டு உருகத் தொட்ங்கிவிட்டன. இதனால் கடல் மட்டம் உயரலாம் என நாசா கருதுகிறது. ஆகவே வடதுருவத்துக்கு அருகே உள்ள நாடுகளான கனடா, கிரீன்லாண்ட். ருஷ்யா, நோர்வே ஆகிய நாடுகளின்; வடக்கு கரையோரப் பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உற்படலாம்” எனச் செய்தி வாசித்தவர் சொன்னார்.  “அப்பா நான் டெலஸ்கோப்பில் கண்ட அல்பா விண்கல்   பூமியை நான் நினைத்த மாதிரி தாக்கிவிட்டது. உங்களுக் நான் கண்ட அல்பாவைப் பற்றி சொல்லாதாதற்கு மன்னிக்கவும்.  கடவுள் புண்ணியத்தில் அது தாக்கிய பகுதி ஆர்டிக் பகுதியான வட துருவம்”, என்றான் அல்பேர்ட்.    (யாவும் கற்பனையே)  கதை 3   -   விநோதன்   []                லஷ்மி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச்  சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை.. எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி; பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பின் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னாhன் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை அவளுக்கு வைத்தார்கள். அவள் பிறந்த காலமோ என்னவோ, லஷ்மியின் தகப்பனார் வக்கீல் சதாசிவம் ஐயர் என்றுமில்லாத வாறு பல கேஸ்களில் ஜெயிககத் தொடங்கினார். பிரபல கிரிமினல் லோயர் என்ற பெயரைப் பெற்றார். பணமும் புகழும் அவரைத்தேடி வந்தது.   தமிழ் நாட்டில் பெரிய வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் அமெரிக்கா போய் படிப்பது போல் தனது மகளும் அங்குசென்று படித்து கணனித் துறையில் டாக்டர் பட்டம் பெறவேண்டும்; என ஐயர் ஆசைப்படார். அதற்கு வசதியும் அவரிடம் இருந்தது. அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு போகமுன் இந்தியாவில் பல வருடங்கள் படிக்கும் போது அக்கிரகாரச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவளுக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், இந்து மதக் கிரிகைகள் எதிலும் நம்பிக்கையில்லை. அவள் வேலை செய்த அதே பொளதிகத் துறையில் வான்இயற்பியலரான ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.   ஜெயனின் பெற்றோர்கள் லஷ்மியின் பெற்றோர்களைப் போல் பழமையில் ஊறியவர்கள்.  தீவிரப்  போக்குள்ள கத்தோலிக்கர்கள். தவறாது சர்ச்சுக்குப் போய் வருபவர்கள். ஆனால் ஜெயன் ஒரு முற்போக்கு வாதி. அவனுக்கு எம்மதமும் சம்மதமே. ஞாயிற்றுக் கிழமையில் அவன் தேவாலயத்துக்குப் போவது கிடையாது. பாதிரியார் தன்னை வந்து சந்திக்கும் படி பல தடவை  செய்தி அனுப்பியும் அவன் அதை கணக்கில் எடுத்ததில்லை. அவனுக்கு விண்வெளி ஆராய்ச்சி தான் முக்கியம். ஜெயனின் சிந்தனைகள் முழுவுதும் வெளி உலகம்பற்றித் தான். “அஸ்டிரோ பிசிக்ஸ்” எனப்படும் வானஇயற்பியலில் கலாநிதி பட்டம் பெற்று, வானில் வேறு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டு பிடித்து, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுடன் தொடர்பு கொள்வது தான் அவனது முழு கவனமும். அவர்கள் பூமியில் வாழ்பவர்களை விட எவ்விதத்தில் முன்னேறியவர்கள், அவர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை எப்படியானது என்பதை அறியும் வினோதமான ஆராய்ச்சியில் தான் அவன் ஈடுபட்டிருந்தான். பலருக்கு அவன் செய்வது பைத்தியக்காரத் தனமாகப்பட்டது.  அவனின் புதுமையான ஆராய்ச்சிக்கு கணனித்துறையில் பட்டம் பெற்ற லஷ்மி பேருதவியாக இருந்தாள். பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி சாலையிலிருந்து விலை உயர்ந்த உபகரணஙகளைப் பாவித்து, விண் வெளியிலிருந்து சேகரித்த ஏராளமான மின் சமிக்ஜைகளைப் பகுத்தாய்ந்து அதனை மொழி பெயர்க்கும் ஒரு அல்லொகரிதம் எனப்படும் கணிவியல் செய்முறைப்பாட்டைக் கண்டுபிடிப்பதில் அவள் தன் முழு திறமையையும் சக்தியையும் பாவித்தாள். அந்த சமிக்ஜைகளின் இரகிசியத்தை  உடைத்துவிட்டால் அதுவே உலகில் யாராலும் சாதிக்க முடியாத ஒரு வெற்றி!   ஜெயனும் லஷ்மியும் பல்கலைக்கழக படிப்பின் போது சந்தித்து, வெகு விரைவில் “ஜெயலஷ்மி” எனப் பலரால் கிண்டலாக அழைக்கும் அளவுக்கு ஒன்றிணைந்தனர். இருவரும் விஞ்ஞானத்திற்கு அடிமையாகி ஆராச்சியே கதியெனக் கிடந்தனர். கியூரி தம்பதிகள் போல் ஜெயலஷ்மி தம்பதிகளும் தங்களின் விஞ்ஞான கண்டுபிடிப்;பால் சரித்திரம் படைத்து விடுவார்களோ என மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு இரு விஞ்ஞானிகளினதும் வாழ்க்கை அமைந்திருந்தது.    பெற்றோர்களின் சம்மதமின்றி இருவரும் ரெஜிஸ்டர் திருமணம் தீடிரென செய்து கொண்டனர். அவர்களுக்குத் தெரியும் தம் பெற்றோரின் தீவிர மதப் போக்கு தங்களை ஒன்று சேர விடாதென்று. அதனால் அவர்கள் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகி தனிக் குடித்தனம் போக காரணமாயிருந்தது. அதை அவர்கள் இருவரும் விரும்பினார்கள். இரண்டு அறைகள் உள்ள அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் ஒரு அறையை படுக்கை அறையாகவும் மற்றதை தங்களது ஆராய்ச்சிக் கூடமும் நூலகமாகவும் பாவித்தனர். அவர்கள் இருவரினதும் உழைப்பின் பெரும் பகுதி விஞ்ஞான நூல்களுக்கும் உபகரணங்களுக்குமே செலவு செய்யப்பட்டது. உணவின்மீதும் நல்ல ஆடைகள் மேலும் அவர்கள் அவ்வளவுக்கு அக்கறை காட்டவில்லை. ஜெயன் தலைமயிரையும் ஹிப்பியைப் போல் வளர்த்து. தாடியும் வைத்திருந்தான். சவரம் செய்வதற்கோ அல்லது முடி வெட்டுவதில் செலவு செய்யும் நேரத்தை தனது ஆராச்சியில் செலவு செய்யலாம் என்பது தான் அவன் கொள்கை. அவனைப் போன்று லஷ்மிக்கு மற்றைய பெண்களைப் போல் அலங்காரம் செய்வதிலும், உடைகளிலும், நகைகளிலும் அதிக ஆசையிருக்கவில்லை.   விண்வெளியில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஆராயும் புரொகிராம் ஒன்றை எழுதுவதற்கு கொம்பியூட்டர் முன்  இருந்துவிட்டால் அவளுக்கு நேரம் போவது தெரியாது. கொம்பியூட்டருடன் தன்னையறியாமலே அடிக்கடி பேசிக் கொள்வாள். ஜெயனும் அவளும் கோப்பியைக் குடித்தவாறே சாப்பிடாமல் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தியவாறு எவ்வளவு நேரமும் இருக்கக் கூடியவர்கள். ஆராச்சி நடக்கும் அறைக்குள் போனால் சுவரில் உள்ள வெள்ளை நிறப்பலகையில் எவருக்கும் விளங்காத கணிதச் சமன்பாடுகளையும் அல்பா, பீட்டா, காமா, தீட்டா போன்ற கிரேக்க எழுத்துக்களையும் தான் காணலாம். அதன் அர்த்தங்களும் அதற்கு பி;ன்னால் புதைந்துள்ள இரகசியங்களும் அவர்களுக்கு மட்டுமே புரியும். அவர்களின் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கிறுக்கல்களுடன் நிலத்தில் பரவிக் கிடக்கும்.    திருமணமாகி ஆறு மாதத்துக்குள் லஷ்மி கருவுற்றது அவர்கள் எதிர்பாராத ஒன்றென்றே சொல்லலாம். “ஆராய்ச்சியில் இருந்து உங்கள் இருவருக்கும் அவசியம் ஓய்வு தேவை” எனப் பௌதிக பேராசிரியர் டேவிட்டின் அன்புக்கட்டளையின் பேரில் ஒரு கிழமை தேனிலவுக்கு போய் வந்ததின் விளைவே அது.  பேராசிரியர் டேவிட் இருவருக்கும் தந்தையைப் போன்றவர். அவர்கள் மேல அளவற்ற அன்பு வைத்திருந்தார். திருமணமாகி மனைவியை இழந்த அவருக்கு பிள்ளைகள் இல்லாத குறையை ஜெயனும், லக்ஷ்மியும் தீர்த்து வைத்தார்கள். ஜெயலக்ஷ்மி தம்பதிகளுக்கு தங்களுக்கு குழந்தை கிடைக்கப் போவது என்பதைப்பற்றி சந்தோஷப்பட நேரம் இருக்கவில்லை. அவர்களின் பெற்றோர்களுக்கு கூட தங்களுக்கு பேரனோ பேத்தியோ கிடைக்கப் போகிறது என்ற செய்தி தெரியாது.   ஸ்கான் செய்து பார்த்தபோது தங்களுக்கு பிறக்கப்;போவது ஆண் குழந்தை என டாக்டர் சொல்லித்தான் அவர்களுக்கு தெரியவந்தது. தங்களுக்குப் பிறக்கப்; போகும் குழந்தைக்கு “விநோதன்”; என்ற பெயர் வைக்க ஜெயலஷ்மி தம்பதிகள் தீர்மானித்தார்கள். தாங்கள் செய்யும் வினோதமான ஆராய்ச்சிக்கு அந்தப் பெயர் பொருத்தமாயிருக்கும் என்று அவர்கள் நினைத்ததே அப்பெயர் அவர்கள் எண்ணத்தில் உருவாகக் காரணமாகும்.   கருவில் ஜந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே வினோதன் தாய்க்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். கருப்பையில் அவனது அசைவுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகமாக இருந்தது. லஷ்மி புரொக்கிராம் எழுதும் போது ஏதாவது தவறுகள் விட்டால் அவள் வயிற்றில் வினோதன் சிறு உதை கொடுப்பதை அவளால் பல தடவை உணர முடிந்தது. “ஏய் அம்மா. நீ பிழை விட்டுவிட்டாய். அதைத் திருத்து” என்பது போல் அவன் செயல் இருந்தது. சில சமயம் புரொக்கிராம் சரியான முறையில் பிழைகள் இன்றி அவள் எழுதும் போது அவனின் அசைவில் அமைதி இருக்கும். அவளுக்கு குழந்தையின் போக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஜெயனுக்கு அதைப் பற்றி சொன்னால் நீ மொனிட்டருக்கு முன் அதிக நேரம் இருக்கிறாய், அதில் இருந்து வரும் கதிர் வீச்சு குழந்தையை பாதிக்கிறதாக்கும் என விஞ்ஞான ரீதியாக பதில் அளிப்பான். ஓரு நாள் அவள் வழமை போல் கம்பீயூட்டரில்; புரொகிராம் ஒன்றை எழுதும் போது கொம்பியூட்டருடன் பேசிக் கொண்டிருக்கும் போது. தனக்குள்  யாரோ கதைப்பது போன்ற ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. தான் பேசுவதை விட்டு அதை உற்றுக் கேட்டாள். அது அவளுக்கு உண்மையெனப் பட்டது. ஜெயனைக் கூப்பிட்டு தனது வயிற்றில் குழந்தை இருக்கும் பகுதியில் காதை வைத்து கேட்கும் படி சொன்னாள் அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் தன் காதை அவள் வயிற்றில் வைத்து கேட்ட போது அவனால் நம்பமுடியவில்லை. யாரோ முணு முணப்பது போலிருந்தது. ஆனால் அதைப் பற்றி லக்ஷ்மிக்கு சொல்லி அவளைப் பயப்படுத்த அவன் விரும்பவில்லை. “ என்ன சத்தம் கேட்கிறதா?” என்று அவள் கேட்டாள். “அதொன்றுமில்லை. எல்லாம் உன் பிரமை” என்று மழுப்பிவிட்டுப் போய்விட்டான் ஜயன்.   வினோதன் பிறந்தபோது அவனின் தோற்றம் வினோதமாயிருந்தது. டாக்டர்கள் கூட ஆச்சரியப்பட்டனர். குழந்தையின் விழிகள் பெரிதாகவும், நெற்றி அகலமாகவும்., காதுகள் கூர்மையாகவும், தலையில் மயிர் குறைவாகவும் இருந்தது. கைகளும் கால்களும் குட்டையாக இருந்தன. குழந்தையின் முகத்தில் பிறந்த குழந்தைக்கேற்ற தோற்றமிருக்கவில்லை. பிறந்து சில மணி நேரம் குழந்தை அழவே இல்லை. முதிர்ச்சியான தோற்றம் தெரிந்தது. வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு தேக நலத்தில் ஒரு வித குறைவுமில்லை ஆனால் மூளை மாத்திரம் வெகுவாக வளாச்சியடைந்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது என்றார்கள். பிறந்து இரண்டாம் நாள் குழந்தையை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது அவரின் ஸ்டெதஸ் கோப்பை தன் ஒரு கையால் பற்றியபடி அவரைப்பார்த்து குழந்தை சிரித்தது.. அவருக்கு  குழந்தையின் செயலை நம்பமுடியவில்லை. அது அதிசயமாக இருந்தது. பல டாக்டர்கள் சேர்ந்து கலந்தாலோசித்து குழந்தையின் மூளையை ஸ்கான் செய்து பார்த்தனர். மூளையில் வயதிலும் பார்க்க கூடிய வளர்ச்சி இருப்பதைக்கண்டு காரணம்  தெரியாது திகைத்தனர். மற்றும்படி குழந்தைக்கு ஒரு வித குறையுமில்லை. கண்பார்வையிலும் , காது கேட்பதிலும் அங்க அசைவிலும் ஒரு விதமான குறையுமிருக்கவில்லை. குழந்தை அழுவது மிகக் குறைவாகவே இருந்தது. குழந்தையில் ஏதாவது குறையிருக்கிறதோ என்று ஜெயனும் லஷ்மியும் கவலைப்பட்டனர். எல்லா டெஸ்டுகளும் செய்து ர்pப்போர்ட் வந்துவிட்டது. குழந்தையில் ஒரு வித குறையுமில்லை. இருதயத் துடிப்பும் நன்றாகவே உள்ளது ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை என வைத்தியர்கள் ஜெயனுக்கும் லக்ஷ்மிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.   விநோதன் ஆறு மாதத்திலேயே நடக்கத் தொடங்கியது பெயருக்கு ஏற்ப அவர்களுக்கு குழந்தையின் நடவடிக்கை வினோதமாக இருந்தது. அவன் பேசுவது அவர்களுக்கு விளங்குவது கஷ்டமாயிருந்தது. தங்களுக்கு குழந்தை எதையோ சொல்ல விரும்புகிறான் என்பதும் மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. வெற்றுப் பேப்பரில் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்குப் புரியாத விதத்தில் கிறுக்கி சில உருவங்களை வரைந்    திருந்தான். அவன் எழுதும் போது விசித்திரமாக இருந்தது. விஞ்ஞான புத்தகங்ஙகளை அவன் கையல் கொடுத்தால் அது போதும் அவனுக்கு. அமைதியாகிவிடுலான். புக்கங்களை ஏதோ வாசிப்பது போல புரட்டிப்பார்ப்பான். இரு கைகளையும் ஒரே நேரம் பாவித்தான்.  அழுவதை நிறுத்திவிட்டான்.   தங்களுக்கு ஏதோ ஒரு அபூர்வக் குழந்தைதான் பிறந்திருக்கிறது என அவர்கள் யோசித்தார்கள். லஷ்மி கொம்பியூட்டருக்கு முன் இருந்து வேலை செய்யம் போது தானும். அவள் மடியில் ஏறி இருக்க வேண்டும் என அடம் பிடிப்பான். மொனிட்டரை கண்வெட்டாமல் பார்த்தபடி இருப்பான். அடிக்கடி அதைப் பார்த்து சிரித்து, ஒரு விரலால் மொனிட்டரைக் காட்டி எதையோ தாக்குச் சொல்லுவான். ஆனால் லக்மிக்கு அவன் என்ன சொல்லுகிறான் என்பது புரிவதில்லை. ஜெயனுக்கும் குழந்தை புரியாத புதிராயிருந்தது. பேராசிரியர் டேவிட்டைக் கண்டதும்; அவன் தாவிப் போவான். அவர் விநோதன் கையில் சாக்கிலேட்டைக் கொடுத்தால் அதை அவருக்கு ஊட்டி கைதட்டிச் சிரிப்பான்.  “உங்களுக்கு கடவுள் தந்த  குழந்தை வினோதன். இந்த சிறுவயதிலேயே இவன் மூளை அபாரமாக வேலை செய்கிறது. வருங்காலத்தில் ஐயின்ஸ்டைனைப் போல் பிரபல்யமான விஞ்ஞானியாக வந்தாலும் வருவான்” என்பார்.   ஆராய்சியில் கிடைத்த சமிக்ஜைகளை பகுப்பாய்ந்து, மறைந்து கிடக்கும் இரகசியத்தை அறிய லக்ஷ்மி எழுதிய புரொகிராமில் எதோ ஒரு பிழையிருந்தது. அந்தத் தவறை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்துப் போய்விட்டாள். ஜயந்தனை குழந்தையைக் கவனிக்கும் படி கூறிவிட்டு சற்று நேரம் தூங்கப் போனாள். அன்றைய இரவு உணவை ஜயந்தன் சமையல் அறையில் தயார் செய்து கொண்டிருந்தான். குழந்தை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தது. சிறது நேரத்துக்குப் பின் விளையாட்டை நிறுத்திவிட்டு கொம்பியூட்டரைக்காட்டி தகப்பனுக்கு புரியாத பாஷையில் எதையோ சொல்லிற்று. சமையலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜயந்தனுக்கு குழந்தை சொன்னது கேட்கவில்லை. அவன் தொடர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தான். விநோதன் நடந்து சென்று கொம்பியூட்டருக்கு முன் இருந்த கதிரையில ஏறி அமர்ந்து எதுவித பதட்டமுமின்றி கொம்பியூட்டரை இயங்கவைத்தான். லஷ்மி அரை குறையாக விட்ட புரொகிராமை எடுத்து அதில் மாற்றஙகளைச் செய்யத் தொடங்கினான். அவன் “கீ போர்டை” பாவித்தவிதம் ஏதோ முன்பு அதில் பல வருடங்கள் தேர்ச்சி பெற்றவன் மாதிரி இருந்தது.   ஜயந்தன் சமையல் முடிந்து ஹாலுக்கு வந்த போது அவன் கண்ட காட்சியைப் பாhத்து அவனுக்கு கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது.   “டேய் விநோதா. கொம்பியூட்டரிலை என்ன செய்கிறாய் ? அம்மா கஷ்டப் பட்டு எழுதிய புராகிராமோடை விளையாடுகிறாயா? என்று உரத்த குரலில் சத்தம் போட்டு குழந்தையை அடிக்க நெருங்கினாhன்.   குழந்தை மொனிட்டிரில உள்ள செய்தியைக் தன் விரலால் சுட்டிக்காட்டி கைகதைட்டி சிரித்தது. அதை பார்த்து ஜயந்தன் அசந்து போனாhன்.   “லஷ்மி லஷ்மி. இங்கை கெதியிலை ஓடி வா. இங்கை வந்து உன் கொம்பியூட்டரைப் பார். உன் புரொகிராம் சரியாக வேலை செய்கிறது. நாங்கள் வின்வெளி இரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் “ என்று சந்தோஷத்தில் சத்தம் போட்டான்.   ஜயந்தனின் குரல் கேட்டு லஷ்மி படுக்கையறையிலிருந்து பதறிக் அடித்துக் கொண்டு ஹாலுக்குள் வந்தாள். விநோதன் தன் பாஷையில் தாயுக்கு தான் செய்ததை காட்டி கைதட்டி சிரித்தான். எதோ அவன் தனது பாஷையில் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை.   லஷ்மியின் கண்கலால் மொனிட்டரில் உள்ள செய்தியை நம்ப முடியவில்லை. பல மாத காலமாக சரியான விடையைத் தர முடியாது தவித்த தனது புரோகிராம் இப்போது சமிக்கைளை பகுப்பாய்ந்து வின்வெளியில் இருந்து வந்த செய்தியை எம்மொழியில் மொழிபெயர்த்து தந்துவிட்டது. என்னால் செய்யமுடியாததை இந்த குழநதை செய்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டாள்.”   “ உங்கள் ஆராச்சிக்கு உதவ ஒருவனை உலகுக்கு அனுப்பியுள்ளோம்;. கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில மாதங்களில் அவன் உதவியுடன் எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றது செய்தி.   அப்போ விநோதன் அவர்கள் அனுப்பிய உதவியாளனா?. அதனால் தானா இவன் ஒரு விசித்திரமான குழந்தையாக இயங்குகிறான?. ஜெயந்தனும் லஷ்மியும் ஒரே விதமாக சிந்தித்தனர்.   இருவரும் வினோதனை அப்படியே தூக்கி வாரி அணைத்து முத்தமிட்டார்கள்.  விநோதனின் வினோதமான புன்சிரிப்பில் அவாகள் கட்டுண்டனர்.        கதை 4   -   வைரஸ் (Virus)   []                                        மார்க்கண்டனும் (மாரக்), ஜெயதேவியும (தேவி); ஆகிய இருவரும் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில் பட்டம் பெற்றவர்கள். படிக்கும் போது இருவருக்குமிடையே பலத்த போட்டி. அதுவே அவர்களுக்கிடையே, காதலுக்கு வித்திட்டு,  திருமணத்தில் முடிந்தது. வைத்திய துறை நிறுவனம் ஒன்றில் இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில் மார்க் புரோகிறாமராக வேலை செய்யத்தொடங்கினான். தேவி, பல்கலைகழகம் ஒன்றில் லெக்சரராக வேலை செய்தாள். திருமணமாகி இரு வருடத்தில் தம்பதிகளுக்கு  இந்திரன் என்ற இந்திரஜித் பிறந்தான்   இந்திரன் பத்துவயதாக இருக்கும்போதே  புரோகிறாம் எழுதுவதில் ஆர்வம் காட்டினானன். அதற்கு முக்கிய காரணம் அவனது பெற்றோர்கள். பெற்றறொர்கள் புரோகிறாம் எழுதுவதைக் கண்வெட்டாமல் இந்திரன் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடைய நச்சரிபு தாஙகாலம் அவனக்கு புரோகிறாம் எழுதும் மொழிகளை சொல்லிக கொடுத்தார்கள். பல கேள்விகளை கேட்டு தன் சந்தேகததை நிவர்த்தி செய்வான். விiவில் மொழிகளை அவன் கற்றதை அவர்களால் நம்பமுடியவிலலை. தங்களைப்போல கணனித் துறையில் இந்திரன் படித்து பிரபலயமாக வேண்டும் என்பது அவனது பெற்றறொரின் ஆசை. அவர்களின்  விருப்பத்தினபடி இந்திரன் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில்; படித்து, முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றான்..   தன்னோடு ஒன்றாகப் படித்த நணபர்களான நந்தனும், தேவனும் அதிக சம்பளத்தில் பல சலுகைகளோடு அமெரிக்காவில் உள்ள பிரபல்யமான கணனி நிறுவனம் ஒன்றில் வெலை கிடைத்து இருவருடங்களுக்கு முன் சென்றது இந்திரனின் வாழக்;கையில் தனிமையைக் கொடுத்தது. தானும்; அமெரிக்கா போய் வேலை செய்து பிரபல்யமாக வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் படிப்படியாக வளரத்தொடங்கியது. தங்களின் ஒரே மகன் தங்களை பிரிந்து, பிறந்த நாட்டை விட்டு அமெரிக்கா போக நினைப்பது மார்க்கிற்கும், தேவிக்கும் விருப்பமில்லை.   “இந்திரா நீ கல்வி பயின்றது நீ பிறந்த நாட்டில். அதை மறக்காதே. உன் திறமையை; காலம் சென்ற விஞ்ஞானி அப்துல் கலாமைப் போல் நாட்டுக்கு உபயோகி. ” என்று அடிக்கடி மார்க் மகனுக்கு சொல்லுவார்.   இந்திரனுக்கு தான் எதையும் புதுமையாகச் செய்யவேண்டும், எவர்களாலும் தீரத்து வைக்க முடியாத பிரச்சளைக்கு திர்வு காண வேண்டும், அதன் மூலம் பலரின் கவனத்தை பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அவன்  ஒரு நிதி முதலீடடு செய்யும் நிறுவனம் ஒன்றில் கணனி பகுதியில் வேலை கிடைத்து போன போது, அந்த நிறுவனம்  வளருவதற்கு புது புது ப்ரோக்ராம்கள் அவசியம் என்பதை அறிந்தான். முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தமது பங்கு விபரததையும், பங்கு விலையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆன்லைன்னில தகவல் தளத்தில் பார்த்து, தேர்ந்தெடுந்த நிறுவனங்களின பங்குகளில் முதலீடு செய்ய வீpரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தான். பலர் அதனால் பணக்காரர்களானார்கள்.   இந்தரனின் வேலைத்திறமையை அறிந்த அவனது மனேஜர் சுரேஷ் பல வருடஙகளாக  அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர். நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பங்குகள் பற்றிய தகவல்களுக்கு, தகவற் தளத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்திரன் பல தடவை சுரேசுக்கு எடுத்துச் சொன்னான்.  அதற்கான புரொகிராமை உருவாக்குவது அவசியம் என்று அவன் சொல்லியும் அதிக செலவாகும் என்பதாலும் அந்த புரோகிராமை உருவாக்க கொம்பியூட்டர் செக்கியூரிட்டி துறையில் அனுபவம் வாயந்த ஒருவர் தேவை என்று மனேஜர் சொன்ன பதில் இந்திரனை திருப்தி படுத்தவில்லை.   வாடிக்கையாளர்களின் முதலீட்டு தகவல்களின் பாதுகாப்பு பற்றிய தனது அக்கறையை தனது பெற்றோரிடம் கலந்து பெசினான். ஆதற்கு அவர்கள் “இந்திரா உனது அக்கறையை எழுத்து மூலம் உன மனேஜருக்கு அறிவித்துவிடு. ஆதைபற்றி அவர் முடிவு எடுக்கட்டும. உனக்கு உன் திறமையைக் வெளிக்காட்ட நிட்சயம் சந்தர்ப்பம் வரும்.” என்றார்கள்.   ஒரு நாள் நிறுவனத்தின் துணைத்தலைவர் உடனடியாக தன்னை வந்து இந்திரனை சந்திக்கும் படி சொன்னார் என்றார் மனேஜர் சுரேஷ்.   இந்திரனும் மனேஜரும்; துணைத்தலைவரைப் போய் சந்தித்த போது அவர் சொன்னதை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.   “ தலைவருக்கும,; எனக்கும் கவலையைக் கொடுக்கும் சில முறைப்பாடுகள் எமது நிறுவனத்தின்  வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது. தங்களது முதலீட்டு தகவலகளை யாரோ ஒருவர் களவாடுகிறார் போல் தெரிகிறது. அதோடு முன்பு மாதிரி சரியான தகவல்களை ஒன் லைனில பெறமுடியாமல் இருக்கிறது என்பது தான் அவர்களின் முறைப்பாடு. நானும் உடனே ஒன்லைனில எனது பங்குகளின விபரத்தை தேடியபோது பிழையான தகவல் கிடைத்தது. நான் நினைக்கிறேன் யாரொ ஒருவர் எங்கள் கொம்பியுட்டரின பாதுகாப்பை மீறி வைரசை புகுத்தியிருக்கிறார்கள்.  இதற்கு எதாவது உடனடியாக செய்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் நிறுவனம் வெகுவாக பாதிப்படையும்” கவலையொடு துணைத்தலைவர் சொன்னார். சுரேஷ், தணைத்தலைவர் சொன்னதைக் கேட்டவுடன் இந்திரனைப் பாரத்தார்.   “சேர் நான் இது எப்போதாவது ஒரு நாள் நடக்கும் என எதிர்பார்த்தனான். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை  பாதுகாப்பதற்க வேண்டிய புரோகிறாமை நான் நேற்று எழுதிமுடித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்த பார்த்தால் தகவந் தளத்துக்குள் புகுந்த வைரஸை அழித்துவிடலாம். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாயளர்களின் தகவலகளுக்கு எது வித பாதிப்பும்; ஏற்படாது” என்றான் இந்திரன்.   “அப்படியா? உடனடியாக நேரம் தாழ்த்தாது நீர் எழுதிய வைரஸை அழிக்கும்  புரொகிறாமமை  டெஸ்ட் செய்யும். அதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயம் எங்கள் மூவருக்குள் மட்டுமே இருக்கட்டும். பலருக்கு எமது கொம்பியூட்டர் அமைப்பின்  தகவற் தளத்துக்குள் வைரஸ் புகுந்துவிட்டது என்று தெரிந்தால் எமது நிறுவனத்தின பெயர் கெட்டு விடும். வாடிக்கையாளர்கள் பதட்டப்படுவார்கள். நான் தலைவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என அறிவிக்கிறேன்; “என்றார் துணைத்தலைவர்.   இவர்களின் சந்திப்பு நடந்து சில மணிநெரத்தில் தான் ஏற்கனவே எழுதிய வைரஸை அழித்து தகவல் தளததைப் பாதுகாக்கும் புரொகிறாமை கொம்பியூட்டரில் அப்லோட் எனப்படும் பதிவேற்றத்தை இந்திரன் செய்தான். தனது புராகிறாம் சரியாக வேலை செய்கிறதா என்று அறிய அதன் விளைவை டெஸ்ட் செய்தான்.   இந்திரனின் மனேஜர் சுரேசால்  நம்பமுடியவில்லை. வைரஸ் அழிபட்டு விட்டது என்று மொனிட்டரில் பதில் வந்தது.   “இந்திரா நீ உண்மையில் வெகு கெட்டிக்காரன். இந்த நிறுவனம் உனக்கு பதவி உயர்வு கொடுத்து சமபளத்தையும், சலுகைகளையும் கூட்டும் என்பது நிட்சயம்” என்றார் சுரேஷ்.  “நன்றி சேர். இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு நான் உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்றான் இந்திரன். அவள் சொல்லி வாய் மூட முன் அவனது மொபைல் போன் அடித்தது.   போனில் பதிவாகி இருந்த நம்பரைக் கண்டவுடன் வீட்டில் இருந்து தனக்கு கோல் வந்திருக்கிறது என்பதை இந்திரன் அறிந்தான்.   “யார் அம்மாவா பேசுகிறது’? இந்திரன் கேட்டான்   “ஓம் அம்மா தான். இந்திரா நீ உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு புறப்பட்டு வர முடியுமா? அப்பா  தீவிர சிகிச்சை பிரிவில் அட்ம்மிட் ஆகியிருக்கிறார். அவர் நிலமை மோசமாயிருக்கிறது என்கிறார்கள் டாகடர்கள். அவரை  ஒருகு வைரஸ் தொற்று நோய்; பாதித்திருக்கலாம்” தேவியின் குரல் தளும்பியது   இந்திரனுக்கு தன வெற்றியை அடுத்து ஒரு கவலைப்படும் செயதி வந்ததை நம்ப முடியவில்லை.   இந்திரனின முகத்தில் ஏற்பட்டதிடீர் சோகத்தைக் கண்ட சுரேஷ், “ என்ன இந்திரன் எதாவது பிரச்சனையா”? என்று கேட்டார்.   “ஓம் சேர். நான் உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு போகவேணும். அப்பாவுக்கு ஏதோ வைரஸ் இன்ஸ்பெக்சனாம்”.   “என்ன வைரஸா. என்ன சொல்லுகிறீர் ” சுரேஷ் பதட்டத்தோடு கேட்டார்   “ஆமாம் சேர் நான் இங்கை வைரஸை கொம்பியூட்டரிலை அழித்துவிட்டேன். டாக்டர்கள் உதவியோடு  அப்பாவின் உடலில் உள்ள வைரஸ் இன்ஸ்பெக்சனை அழிக்க வேண்டும். கடவுள் தான துணைபுரிய வேண்டும்.;” என்றான் இந்திரன்.   “எப்படி அவருக்கு இன்ஸ்பெசன் வந்தது இநதிரன்”?;.   “அப்பா வேலை செய்வது   இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில். அங்கிருந்துதான் வைரஸ் தொற்றியிருக்க வேண்டும் என நினைககிறேன்;”, என்றான் இந்திரன்.   “நீர் உடனே ஹொஸ்பிடலுக்குப் போய் அப்பாவின் நிலமையைப் பாரும். நான் நடந்ததை துணைத் தலைவருக்குச் சொல்லுகிறன்” என்றார் சுரேஷ்   கதை 5   -   சக்தி மாற்றம்   []                                 விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல். அழிந்தாலும் ஆன்மா அழியாது. ஊடலானது இறப்பின் போது செயல் இழந்துவிடுகிறது. ஆனால் ஆன்மா என்ற சக்தியானது, சக்தி மாற்றத்தினால் மறுபிறவி மூலம் வேறு புது உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்தத் தத்துவத்தை  கருவாகக் கொண்டே அவரது ஆராச்சியிருந்தது.   மறு பிறவியின் போது எந்த உடலுக்குள் இறந்தவரின் சக்தி புகுகிறது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். இது ஒரு பிறவியில் செய்த கர்மாக்களைப் பொறுத்தது என்கிறது இந்து மதம். ஏன் அதை மனிதனால் தீர்மானிக்முடியாது என்ற கேள்வி விஸ்வாவின் மதைக் குடைந்து கொண்டிருந்தது.   சித்தர்களின் தெய்வீகமான சக்தியைப் பற்றி பல நூல்களை வாசித்து  அறிந்தார் விஸ்வா. இவருடைய ஆராச்சியினால், மனதில் புதைத்திருக்கும் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியவர் அவரது பாட்டனாரும் ஆன்மீகவாதியுமான  முருகானந்தா சுவாமிகள் என்பதை விஸ்வா அறிவார். முருகானந்தா சுவாமி அவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடமுன் பல்ககைலைகழகத்தில் விஞ்ஞானத்; துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். சுவாமி விபுலானந்தரின் பரம இரசிகர். அதற்கு காரணம் விபுலானந்தரும் ஒரு விஞ்ஞான பட்டதாரியாகி ஆசிரியராக கடமையாற்றி,  ஆன்மீகத்தில் ஈடுபட்டவர். இசைக் கருவி யாழைப் பற்றி ஆராச்சி செய்து, கட்டுரைகள் எழுதியவர்.    விஸ்வா, தனது பாட்டனார் குலசேகரப்பட்டனத்தில் நடத்தி வரும் ஆச்சிரமத்துக்குச் சென்று அவரோடு உரையாடி, தன் ஆராச்சி தொடர்பான  சந்தேகங்களை நிவர்த்தி செய்யத்  தீர்மானித்தார்.  குலசேகரபட்டணத்தில் இருந்து திருச்செந்தூருக்குப் போகும் பாதையில், கடற்கரை ஓரமாக, அரைமமைல் தூரத்தில், அமைதியான சூழலில், ஞான பீட ஆச்சிரமம் அமைந்துள்ளது. ஆச்சரமத்துக்கு முன்னால் ஒரு சடைத்த வேப்ப மரம். மரத்தின் கீழ் உள்ள மணலில் அமர்ந்தபடியே ஸ்வாமி முருகானந்தாவும் விஸ்வாவும் உரையாடிக்கொண்டிருந்தனர். ஸ்வாமி தன் உரையாடலின் போது 64 சித்தர்களை பற்றியும் அவர்களில் பலர் தமிழ்நாட்டில் வாழந்ததாகவும் குறிப்பிட்டார்.   “ சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் என்ன வித்தியாசம் ஸ்வாமி. இருவரும்; நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தவரகள். ஆனால் அவர்கள் வாழந்தது வௌ;வேறு காலத்தில்தானே”?, விஸ்வா கேட்டார்.   “சித்தர்களின் பேசும் மொழி தமிழ், ஆனால் ரிஷிகள் சமஸ்கிருதத்தை தம் மொழியாக பாவித்தனர். அவர்கள் மன்னர்களின் அலோசகர்களாக கடமையாற்றியவர்கள். எல்லா சித்தர்களும் ரிஷிகளாவார்கள். ஆனால் எல்லா ரிஷிகளும் சித்தர்கள் அல்ல. சித்தர்கள் அனுஷ்டித்த யோகா முறையானது ரிஷிகளினது யோகா முறையிலும் இருந்து வேறுபட்டது. ரிஷகளின் மருத்துவம் வடக்கில் உள்ள மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் சித்தர்களின் மருத்துவம் தெற்கில் உள்ள மூலிகைகளைக் கொண்டது”, ஸ்வாமி சொன்னார்.   “ ஸ்வாமி, நான் வாசித்து அறிந்தமட்டில் சித்தர்களின் சக்தியானது நேரத்தையும், வெளியையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது, திண்மத்தை மாற்றக் கூடிய சக்தி அவர்களுக்கு இருந்தது. நேரத்தையும், வெளியையும் அவர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றூல் அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டில் அயின்ஸ்டீனின் நேரம், வெளி தொடர்பான சார்புக் கொள்கை பல நூற்றூண்டுகளுக்கு முன் கூட்டியே தெரியும் என நினைக்கிறேன்”, விஸ்வா சித்தர்களின் செயல்களைப் பொளதீகத்தோடு தொடர்பு படுத்திச் சொன்னார்.   “விஸ்வா நீர் சொல்வது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். மேற்கத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே பண்டைய விஞ்ஞான தத்துவங்களை தங்கள் கண்டு;பிடிப்புகளுக்குப் பாவித்துள்ளார்கள்”.   “சுவாமி, சித்தர்களின் விஞ்ஞான சக்தியை பற்றி மேலும் விபரமாக எனக்குச் சொல்லமுடியுமா? எனது சக்;தி மாற்றம் பற்றிய ஆராச்சிக்கும் சித்தர்களின் சக்திக்கும் தொடர்பு இருப்பதினால் இதை பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்”, விஸ்வா சொன்னார்.   “ அவர்கள் ஒரு உடலை அணுவளவு சிறிதாகவும, மிகப் பெரிய பருமன் உள்ளதாகவும் மாற்றியவர்கள். உடலின் பருமன் நிறை குறைந்ததாகவும், ஆவியாக மாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள். அவர்கள் தம் உடலை வேறு உடலாக மாற்றக் கூடியவர்கள்”.   “சித்தர்களின் இச்செயல் பௌதீகத்தில் சக்தி மாற்ற தத்துவத்தைக் குறிக்கிறது என்பது என் கருத்து. சக்தியானது பல வடிவங்களில் அமைந்துள்ளது. உதாரணத்துக்கு வெப்பச்சகதி, ஒலிச்சக்தி, ஒளிச்சக்தி, இயந்திரவியல் சக்தி, இரசாயனச் சக்தி, அணுச் சக்தி, இயக்கச்சக்தி, நிலைச் சக்தி என்பவற்றை குறிப்பிடலாம். இதைப் பின்னனியாக வைத்தே சக்தி, திண்மம், ஒளியின் வேகம் ஆகியவையோடு இணைந்த அயின்சடியினின் பிரபல்யமான சமன்பாடு  E=mc 2 கண்டுபிடிக்கப்பட்டது. இதன் படி ஒவ்வொரு பொருளோடு தொடர்புள்ள சக்தியுண்டு. சக்தியில் மாற்றம் ஏற்படும் போது திடப்பொருள் மாறுகிறது. ஓவ்வொரு பொளுக்கும் சக்தியோடு இணைந்த இயற்கையான அலை அதிர்வுண்டு. இவ்வதிர்வுகள் ஒத்துப்போனால் இரு மனங்கள் ஒத்துப்போவதைக் குறிக்கும் என்பது என் விளக்கம் ஸ்வாமி”, விஸ்வா சொன்னார்.   “ அது சரி விஸ்வா என்ன காரணத்தைக் கொண்டு சக்திமாற்றத்தை வைத்து பரிசோதனை செய்ய இருக்கிறீர். ஸ்வாமி கேட்டார்.   “ இறக்க  முன்னரே தனக்கு விரும்பிய உடலுக்குள் சக்தி மாற்;றத்தினால் மறு பிறவி எடுக்கக்கூடிய பரசோதனையை செய்து கொண்டிருக்கிறேன் ஸ்வாமி;.”   “ விஸ்வா, ஒன்று மட்டும் சொல்லுகிறேன். இயற்கைக்கு எதிராக எதையும் செய்யமுயற்சிக்காதே. உமது முயற்சி வெற்றி பெறட்டும்“ என ஸ்வாமி வாழ்த்தினார்.  தனது பரிசோதனை சாலையில் இறந்த பூனை ஒன்றையும்  உயிருள்ள சுண்டெலியையும் வைத்து சக்திமாற்றப் பரிசோதனையை விஸ்வா செய்து கொண்டிருந்தார். இருதயத் துடிப்பின அதிர்வினால் உருவாகும் சக்தியானது இறந்தவுடன் நின்று விடும். அது நடக்க முன்பே அச்சக்தியை ஒரு கருவிக்குள் கவர்ந்து பாதுகாப்பது முக்கியச் செயலாக இருந்தது. உயிருள்ள சுண்டெலியின் இருதயத் துடிப்பினால் உருவாகும் சக்தியை கருவிக்குள் மாற்றியவுடன் பச்சை நிறச் சிக்னல் தோன்றும். எலியின் இருதையத் துடிப்பினது சக்தியானது கருவிக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும். கருவியில் உள்ள மொனிட்டரில் இருதயத்தின் அதிர்வலைகள்  தெரியத் தொடங்கும். சுண்டெலியின் உடல், செயற்பாட்டை இழந்து விடுகிறது. கருவி சுண்டெலியின் இருதையமாக இயங்குகிறது. அரைமணி நேரத்துக்குள் கருவிக்குள் உள்ள எலியின் உயிர் சக்தியை இறந்த பூனையின் உடலுக்குள் மாற்றியாகவேண்;டும். இல்லையேல் சக்தி விரையமாகிவிடும். தாமதிக்காது பூனையின் இருதயத்துக்குள் கருவியில் இருந்து தொடர்பை ஏற்படுத்தி சுண்டெலியின் சக்தியை இறந்த பூனையின் உலுக்குள் செலுத்தினார். நடக்கப்போகும் விளைவை யோசித்தபடி பூனையின் உடலை அவதானித்துக் கொண்டிருந்தார். இறந்த பூனையின் உடல்  மெதுவாக அசையத் தொடங்கியது. எதிரிகளான இரு ஜீவன்களின் உயிர்கள் தம் உயிர்களை பரிமாறிக் கொண்டன. சக்தி மாற்றத்துக்குத் துணைபோன கருவியில் தெரிந்த சிக்னல் படிப்படியாக குறைந்து மறைந்தது. சுண்டெலியின் சக்தி பூனைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதை அது காட்டியது. விஸ்வாவால் தன் பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியடைந்து விட்டது என்பதை அறிந்ததும், தான் காண்பது நிஜமா என்பதை அறிவதற்கு, தன் உடலை விஸ்வா கிள்ளிப் பார்த்தார்.   இறந்த பூனை உயிர்பெற்றுவிட்டது, ஆனால் அதன் குரலிலும, குணத்திலும் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி விஸ்வாவின் மனதில் தோன்றியது. பாத்திரத்தில் தயாராக வைத்திருந்த பாலை உயிர் பெற்ற பூனைக்கருகே நீட்டினார். என்ன அதிசயம் மியாவ் மியாவ் என்று நன்றி தெரிவித்தபடி பாலைப் பூனை குடித்தது. குடித்து முடிந்தவுடன் பக்கத்தில் உயிரில்லாமல் இருந்த சுண்டெலியைக் கண்டு, அதைத் தன் வாயால் கவ்வியது. விஸ்வாவாவினால் பூனையின் போக்கை நம்பமுடியவில்லை. பூனை பூனைதான. மறு பிறவி எடுத்தாலும் அதன் பிறவிக் குணம் மாறவில்லை என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். இந்தப் பாரிசோதனை மனிதனுக்கு போருந்துமா என்பது விஸ்வாவின் சிந்தனையில் தோன்றியது ஒரு கேள்விக்குறி.   “ இயற்கைக்கு எதிராக எதையும் செய்ய முயற்சிக்காதே” என்று ஸ்வாமி சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.    கதை 6   -   மெனன் குவின்    []                                                        மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். மோகன் பெண் பிள்ளைகள் விளையாடுவதைப் போல் பொம்மைகளோடு விiளாயாடுவதைக் கண்டு பலர் அவனைக் கேலி செய்தார்கள். பெற்றோருக்கு மோகன் ஒரே மகன் என்றபடியால் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். ஆதனால் அவன் எப்படி விளையாடினாலும் அவர்களுக்கு அதைப்பற்றி; கவலை இல்லை. அவன் கேட்டதை  வாங்கிக் கொடுத்தார்கள். மோகன் படிப்பில் கவனம். தான படித்து  மென் பொருள் பொறியியலாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. அமெரிக்காவில் மைக்கிரோ சொப்;ட் ஸ்தாபனத்தில் மென் பொருள் பொறியியலாளனாக அதிக சம்பளத்தில் வேலை செய்யும் தாய் மாமனே  இதற்குக் காரணம்.   பொம்மைகளுக்கு ஆடை அணிவித்து விளையாடும் பழக்கம் அவன் வளர்ந்தும் பெரியவனானாலும் அவனை விட்டு அப்பழக்கம் போகவில்லை.   அவனின் பொழுதுபோக்கு விண்டோ சொப்பிங் எனப்படும் கடைகளில் உள்ள சாளரத்தினூடாக விளம்பரத்துக்கு காட்சியாக வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து இரசிப்பது.  ஓரு சேலைக் கடையில், அழகிய மெனன்குவின் என்று அழைக்கப்படும் பெண் உருவப் படிவத்துக்கு தினமும்  காஞ்சிபுரம், தர்மபுரம் சில்க், திருபுவனம், சின்னாலம்பட்டு, பெனாரிஸ், மணிபுரி சேலைகளை தினத்துக்குத்; தினம் மாற்றி அணிவித்து சாரளத்தினூடாக வாடிக்iகாயளர்களின் பார்வையைக் கவர்ந்தார் “வள்ளி எம்போரியம்” என்ற பிரபல சேலைக் கடையின் சொந்தக்காரர் பழனிச்சாமி செட்டியார். அவரது வணிக யுக்தியால் அவரின் சேலை வியாபாரம் ஓகோ என்று நடந்தது.   சாரளத்தினூடக பெண் மெனன்குவின் உருவத்தைப் பார்த்து ரசித்த சில வாடிக்கையாளர்கள் அப்பொம்மை அணிந்திருக்கும் சேலை போன்று ஒன்று இருந்தால் தாருங்கள் என்று கடைக்குள் போய் கேட்பார்கள். அநத அளவுக்கு அந்தப் வாய் பேசாத  பெண் உருவப்படிவம் மக்களை கவர்ந்துவிட்டது.   பல கடைகளின் சாரளத்தினூடாக பெண் படிவங்களைப் பார்த்து இரசித்துபடி நடந்து கொண்டிருந்த மோகனுக்கு ஒரு பெண்  மெனன்குவின்  உருவப்படிவம் மிகவும் பிடித்துக் கொண்டது. தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டு அவன் மனதில் பதிந்த உருவத்தை அப்படியே அது  ஒத்து இருந்ததே அதற்கு காரணம். ஆனால் ஒரு வித்தியாசம். அந்த மெனன்குவின்னின் தலையில் மல்லிகைப் இருக்கவில்லை. கழுத்தில் நகை இருக்கவில்லை. அது கண்சிமிட்டவில்லை. பேசவில்லை. அதைப்பற்றி மோகன் கவலைப்படவில்லை. அவனுக்கு உடலின் தோற்றமும், அழகிய முகமும், நிண்ட கணகள் , துடி இடை, மெல்லிய விரல்கள் அதெல்லாம் அவன் கணட தன வருங்கால மனைவியைப் போலவே இருந்தது.   தினமும் மோகன் அக்கடைக்குப் போய் சாளரத்தினூடாக அப் பெண் படிவத்தை உற்று பார்த்து இரசித்தபடி பல நிமிடங்கள் நிற்பான். அதோடு பேசுவதாக நினைத்து தன் வாயுக்குள் முணமுணுப்பான். அது பேசாது. அதே நிலையில் அது அசையாது நின்றது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தன் முணுமுணுப்பை அவன் நிறுத்துவதாக இல்லை.   மோகனின் விசித்திரமான நடத்தையைக் கடைவாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி கவனித்து விட்டான்.   “என்ன இவன் ஒருவன், தினமும் வந்து அந்தப் பொம்மையைப் பார்க்கிறான். தன் வாயுக்குள் ஏதோ முணுமுணுக்கிறான். ஒருவேலை பைத்தியக்காரனாக இருக்குமோ?, அல்லது கடையைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறானோ என்று நினைத்தான்; செக்கியூரிட்டி. ஒரு நாள் மோகன் அப்பெண் உருவப்படிவத்தைப் பார்த்து இரசித்த படி நின்றபோது செக்கியூரிட்டி அவன் முதுகில் தட்டி, “ ஏய் உன்னைத்தான். ஏன் அப்படி தினமும் வந்து இந்தப் பொம்மையைப் விறைத்து பார்த்தபடி பல நிமிடங்கள்  நிற்கிறாய். வாயுக்குள் முணுமுணுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வேறு வேலை உனக்கு இல்லையா? அது ஒரு வெறும் பொம்மை. உன்னோடு பேசாது. அசையாது “ என்றான் செக்கியூரிட்டி.   “அது பரவாயில்லை. என் மனதில் நான் கற்பனையில் கண்ட என் வருங்கால மனைவியின் தோற்றத்தைப் போல் இருக்கிறது. அது தான் அதன் அழகைப் பார்த்து  இரசிக்கிறேன்” என்றான் மோகன்.    அவன் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு “ அத வெறும் பொம்மை அப்பா. அதோ பார் உன்னைப் பார்த்து கண் சிமிட்டக்கூட இல்லை“,  என்றான் செக்கியூரிட்டி..   “ஏன் அதனால் பேசவோ கண் சிமிட்டவோ முடியாது? “   “நீ என்ன சொல்லுகிறாய். பொம்மை எப்படி பேசும்”? அதிசயத்தோடு செக்கியூரிட்டி  கேட்டான்.   “நான் ஒரு மென்பொருள் பொறியியளாளன். ஆதனால் தான் சொல்லுகிறன். இந்த பெண்ணைப் பேசவும் கண்சிமிட்டவும் வைக்க என்னால் முடியும்” என்றான்.   “நீ என்ன விசர் கதை சொல்லுகிறாய்;? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை” செக்கியூரிட்டி மூளை குளம்பி மோகனைக் கேட்டான்.   “உனக்கு விளங்கும்படி சொல்லப்போனால் நான் ஒரு கொம்பியூட்டர் சொபட்வெயர்  என்ஜினியர். ஒரு கணனி ஆராச்சி ஆய்வகத்தில்  வேலை செய்கிறேன். புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு புரோகிறாம் எழுதுவது என் தொழில். தற்போது குரல் கேட்டு பதில் சொல்லும்  கருவிகளைப் பற்றி ஆராச்சி செய்கிறேன். இதை ஸ்பீச் ரெகக்னிஷன் செயல் முறை என்பார்கள்.”   “அப்படி என்றால் என்ன”?   “உதாரணத்துக்கு நீ ஒரு கடிதம் எழுதும் போது முதலில் என்ன செய்கிறாய்”?   “கடிதத்தை கொம்பியூட்டர் கீபோர்ட்டை பாவித்து டைப் செய்கிறேன்”.   “உனக்கு டைப் அடிக்கத் தெரியாவிட்டால் என்ன செய்வாய்?”   “கொம்பியூட்டரைப் பாவிக்காமல் பேனாவைப் பாவித்து பேப்பர் ஒன்றை எடுத்து; கடிதத்தை எழுதுவேன்”.   “உனக்கு எழுதவும் தெரியாவிட்டால் என்;ன செய்வாய்.”?  செக்கியூரிட்டி; விழித்தான்.   “உன் பிரச்சனையைத் தீர்க்க வழி உண்டு”.   “என்ன வழி”.   “அது தான்  பேசும் குரலை எழுத்தாக மாற்றும் செயற்பாடு. அதாவது நீ எதை சொல்ல விரும்புகிறாயோ அதை உன் வாயால் சொன்னால், அது குரலை எழுத்தாக மாற்றி உன் கடிதத்தை தாயார் செய்யும். சிலர் தங்களது செக்கரட்டரிக்கு கடிதத்தை டிக்டேட் செய்வார்கள். அதை அவள் சுருக்கெழுத்து மூலமாகவோ அல்லது நெரடியாகவோ டைப்செய்வாள். நான் சொன்ன செயல் முறையைப் பாவித்தால் செக்கரட்டரி தேவையில்லை” என்றான் மோகன்.   “நீ சொல்வது இது சாத்தியமா?”   “ஏன் சாத்தியமில்லை. இப்பொது இதை செய்கிறார்களே என்பது உனக்குத் தெரியாதா.”   “இல்லை, எனக்குத் தெரியாதே”   “நான சொல்லவந்தது அதை விட ஒரு படி மேல். அதாவது நான் பேசினால் கொம்பியூட்டர் எழுத்தாக மாற்றாமல் குரலாக மாற்றும். உதாரணத்துக்கு உன் பெயர் என்ன என்று கேட்டால்இ என் பெயர் மல்லிகா என்று பதில் தரும். உன் வயது என்ன என்று கேட்டால் அதற்கு என் வயது பதினாறு என்று பதில் அளிக்கும். நீ உடுத்திருக்கும் சேலை எந்த ரகம் என்று கேட்டால், காஞ்சிபுரம் சில்க் என்று பதில் சொல்லும். விலை என்ன என்று கேட்டால் ஐயாயிரம் ரூபாய் என்று பதில் சொல்லும்.”   “அதுக்கு எப்படி விலை தெரியும்?” செக்கியூரிட்டி கேட்டான்.   “இது தெரியாதா உனக்கு. ஏற்கனவே சீலைக்கு ஏற்ற விலையை கடை சொந்தக்காரன் கொம்பியூட்டரில் பதிவு செய்திருப்பான். செய்யச் சொன்னதைச் செய்வது தான் கொம்பியூட்டரின் வேலை. அதைச் செயற் படுத்த வைப்பது புரோகிராமர். கொம்பியூட்டருக்கு  சுயமாக சிந்திகத் தெரியாது” என்றான் மோகன்.   “நீ சரியான புத்திசாலி. சரி வா உன்னை இந்தக கடை முதலாளி பழனிச்சாமி செட்டியாரிடம் அழைத்துச் செல்கிறேன். அவருக்கு நீ எனக்குச் சொன்னதைச் சொல்லி விளங்கப்படுத்து. அவருக்கு உன் திட்டம் பிடித்திருந்தால்  நிட்சயம்  ஏற்றுக்கொள்வார். ஆதன் பிறகு உன் கனவுக் கன்னியைப் பேசவைக்கலாம்.” என்றான் சிரித்தபடி செக்கியூரிட்டி.  செக்கியூரிட்டியோடு போய் மோகன் வள்ளி எம்போரியம் முதலாளி பழனிச்சாமி செட்டியாரைச் சந்தித்தான். செக்கியூரிட்டி நடந்த கதை முழுவதையும் முதலாளிக்கு எடுத்தச் சொன்னான். அவர் சற்று நேரம் வாயில் விரல் வைத்து யோசித்தார். மோகன் கொடுத்த பஸ்னஸ் கார்டை வாங்கிப் பார்த்தார்.   “தம்பி உன்னால் நீ சொல்வதுபோல் செய்து காட்ட முடியுமா? உண்மையில் நீ இதைச் செய்ய முடியுமென்றால் இது ஒரு புதுமையான வணிக யுக்தியாக அமையும். நான் எப்பவும் புதுமையை விரும்புகிறவன்” என்றார் செட்டியார்.   “ஐயா உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையாகவே ஒரு பெண்ணைஇ அந்தப் பெண் மெனன்குவின் இருக்கும் இடத்தில், சாரளத்தில் கண்காட்சியாக பல மணி நேரம் சற்றும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்க வைக்க நினைத்தால் அதுக்கு பலர் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி சம்மதித்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கவேண்டிவரும்;. மெனன்குவின் சொல்லப் போகும் சேலையின்; விலையை நீங்களே தீர்மானித்து மெனன்குவின்  அணியும் சேலைக்கு ஏற்ப பதிவு செய்யலாம். அதோடு சேலை பற்றிய விபரங்களையும் பதவி செய்யலாம்;. வாடிக்கையாளர்கள் அனேகமாக என்ன கேள்விகள் கேட்பார்கள் என்பது உங்களுக்கத் தெரியும் தானே. அதற்கேற்ற பதில்களை தயாரிப்போம். கடுமையான கேள்விக்கு பொருத்தமான பதில் பதிவு செய்திருக்காவிட்டால் மெனன்குவின் “மன்னிக்கவும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று சொல்லிவிடும்”. மெனன்குவின் பேசும் போது கண்களை சிமிட்டவும், உதட்டையும், கைகளையும் அசைக்கவும் செய்யலாம். பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே ஒரு பெண் பேசுவது போல இருக்கும்;”  மோகன் விளக்கம் கொடுத்தான்.   “சரி மோகன் இதை செயல் படுத்திக்காட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்ற நினைக்கிறீர்” செட்டியார் கேட்டார்.   “உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் ஒருமாதத்துக்குள் செயற்படுத்திக் காட்டு;வேன். ஆனால் ஒன்று…”   “ ஆனால் என்ன மோகன்? முன் பணம் ஏதும்; உமக்குத் தேவையா?”   “ பணம் தேவையில்லை ஐயா.  ஆனால்  நகல் உரிமை எனபபடும் கொப்பிரைட’ எனது”.   “அது நியாயமானதே. எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே பணம் தருவேன்” என்றரர் செட்டியார்.   நாட்கள் சென்றன. அன்று மோகன் தான் உருவாக்கிய பேசும் மெனன்குவின் எப்படி செயலாற்றுகிறது என்பதைப் பார்க்க செட்டியாரின்  “வள்ளி எம்போரியம்” கடைக்கு போயிருந்தான். அவ் மெனன்குவனின் பாதத்தில் “ நான் ஒரு பேசும் மடந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து அவனுக்கு மனதுக்குள் சந்தோஷம். சாளரத்தில் உள்ள பேசும் மெனன்குவின்னின் இனிமையான குரலைக் கேட்க ஒரே கூட்டம்.   “இனி நான் தினமும் வந்து அதோடு பேசப்போகிறேன். என் காதலியின் குரலை தொடர்ந்து கேட்டு எக்கு அலுப்பு தட்டிவிட்டது” என்றான் பேசும் மெனன்குவினை பாரத்து இரசித்த ஒரு இளைஞன் ஒருவன்;.   மோகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மோகனைக் கண்ட செக்கியூரிட்டி உடனே அவனிடம் வந்து, அவன் முதுகில் தட்டி, “நீ சாதித்து விட்டாய் தம்பி” என்றான்.  கதை 7   -   அல்செய்மார்  ஆராய்ச்சி   []                                                    கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்பிக்கை.  மனிதனுக்கு வயது ஏறும் போது நோய்களும் எங்கிருந்தோ வந்து உடம்பில் உறவாடத் தொடங்கும். இது இயற்கை. இருதய நோய், சிறு நீரக வியாதி, நீரிழிவு, அல்செய்மார், டிமென்சியா, எலும்புப்புரை, பார்கின்சன் , எபிலெப்சி என்ற கால்-கை வலிப்பு போன்ற நோய்கள் பல தோன்றுவது சர்வசாதாரணம். ஓவ்வொரு மரணத்துக்கும் ஒரு காரணம் தேவை.  டாக்டர் சோமசுந்தரத்தின் தந்தையரான டாக்டர் சுப்பிரமணியத்தின் ஆரம்பக்கல்வி யாழ்ப்பாணத்தில் உள்ள பரியோவான் கல்லூரியில். அதன் பி;ன்னர் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவகல்லாரியில் அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.  யாழ்ப்பணத்திற்கு அருகேயுள்ள கரம்பன் என்ற ஊரைச் சேர்ந்தவர் சோமரின்  தாய் மாமன் மாணிக்கம, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பிரபல்யமான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரி. செல்வத்துக்கு குறைவில்லை. தன் படிப்புக்கு பண உதவி செய்தார் என்பதற்காக  அவர் மகள் பாக்கியத்தை கொழுத்த சீதனத்தோடு டாக்டர சுப்பிரமணியம். மணந்தார். பாக்கியத்தோடு; சிறுவயது முதற்கொண்டே ஒன்றாகப் பழகியதினால் அவளை திருமணம் செய்ய அவர் சம்மதித்தார் என்றே சொல்லலாம்.  டாக்டர் சுப்பிரமணியம் தன் ஒரே மகன் சோமசுந்தரத்தைத் தான் படித்த பரியோவான் கல்லூரியில் படிப்பித்தார். தன்னைப் போல் ஒரு மருத்துவராகி மருத்துவத் துறையில் பல ஆராச்சிகள் மூலம் கண்டு பிடிப்புகள் செய்து மருத்துவத் துறையில் பிரபல்யமாகி தன் மகன் பெயர்வாஙக வேண்டும் என்பது டாக்டர் சுப்பிரமணியம் கண்ட கனவு. அதையே பாக்கியமும் எதிர்பார்த்தாள். தன் ஒரே மகன் மேல் அவளுக்கு அளப்;பரிய பாசம். சகோதரங்கள் இல்லாத அவளுக்கு மகன் தான் எல்லாம். சுந்தரத்தி;ற்கு தந்தையை விட தாய் மேல் நம்பிக்கையும், அன்பும், நெருக்கமும்; அதிகம். தனது பிரச்சனைளுக்கு அவளிடம் ஆலோசனை கேட்பான்.  டாக்டர் பட்டம் பெற்று சில ஆண்டுகள்; கொழும்பு பெரிய  வைத்தியசாலையில் வேலை பார்த்த பின்னர் கொழும்புக்கு அருகே உள்ள அங்கோடை மனநோய் வைத்தியசாலையில் வேலை பார்த்து, மன நோய்களுக்கு சிகிசசை செய்த அனுபவம் பெற்று  பின்னர் மேற்படிப்புக்காக லண்டன்; சென்றவர் சுந்தரம்;. அங்குதான் மனநோயினை பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராச்சிசெய்யும் போது வேதியலில் ஆராச்சியாளரான பயொ கெமிஸ்ட்  சில்வியா என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைச் அறிமுகம் கிடைத்தது.   இருவருடைய தொழில்களும்; மருத்துவம் சம்பந்தப்பட்டபடியால் அவர்களுக்கிடையேலான சிந்தனைகள் ஒரே அலை நீளத்தில்; இருந்தன. அவர்களின் உரையாடல்களும் ஒத்துப்போயிற்று. கருத்துக்கள் ஒன்றானால் இனத்துக்கும் , நிறத்துக்கும், மதத்துக்கும்  இடமில்லை என்பார்கள். முடிவு, இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்டனர்.   டாக்டர் சுந்தரத்தின் தாய் பாக்கியம் மகன் டாகடரான ஒரு வுருடத்தக்குள் கணவனை இழந்தவள். சுந்தரம் படித்து டாக்டராவதற்கு அவளும் ஒரு முக்கிய காரணம். பாக்கியம் திருமணமான புதுதில் ஞாபக சக்தி மிக்கவள். சோல்லும் ஒரு ஓரு விஷயத்தையம் விரைவில் மறக்கமாட்டாள். கணவன் டாகடர் சுப்பிரமணியத்தாரின் நோயாளிகளை பற்றிய முழு விபரங்களையும் நினைவில் வைத்திரு;தாள். அதோடு மட்டுமல்ல செஸ் விiயாட்டை தன் மகன் சுந்தரத்தக்கு சொல்லிக் கொடுத்ததும் அவளே. அதோடுமட்டுமல்ல  ஜோதிடத்தை தன் பெரியப்பாவின் உதவியோடு கற்றதினால் பல கலியாணப்; பொருத்தங்களைப் பார்த்து திருமணங்களை பணம் வாங்காது செய்து வைத்தவள். இவ்வளவு நல்லது செய்தும் பாவம் பாக்கியம், இறுதி காலத்தில் அல்செயமார் என்ற மறதி வியாதியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டாள். இவ்வியாதியானது ஒரு கணனியின் சிபியூ என்ற மையச் நெயலாக்கப்ப பகுதி செயற்;படாமல் போவதைப் போன்றது.   சுந்;தரம் -சில்வாவியா திருமணம் செய்தபோது பாக்கியத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாத மன நிலை. அவளுக்கு இருந்த அல்செய்மார் வியாதி காரணத்தால் கொழும்பில் உள்ள “அமைதி” என்ற முதியோர் கவனிப்பு இல்லமொன்றில் ஒரு நேர்சின் மேற்பார்வைக்குக்கீழ்; இருக்க சுந்தரம் தான் மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜுக்கு போகமுன் ஒழுங்குகள் செய்திருந்தார். அதற்குத் தேவையான செலவையும் அவரே கவனித்துக் கொண்டார்.   சுந்தரத்தின் தாய் பாக்கியத்துக்க கணவனின் மறைவுக்கு பின் எழுபது வயதிலிருந்து டிமென்சியாவாக ஆரம்பித்து  படிப்படியாக வளர்ந்து காலப்போக்கில் முற்றி அல்செய்மார் வியாதியாக மாறியது.  தான் எதைச் செய்கிறோம் என்று தெரியாது அளவுக்கு மறதி வியாதியால் இறுதி காலத்தில் வாழ்ந்தாள். வயது வந்தவர்களுக்கு அனேகருக்கு தள்ளாத வயதில் அரளை வந்து விடும். பலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடந்தவை மறந்துவிடும். அவர்களுக்கே தெரியாது தாம் எதைப் பேசுகிறோம், செய்கிறோம் என்று.  அவர்களது மூலைக்கும் நாவுக்கும் தொடர்பிருக்காது. அதனால் பேச்சு தடுமாறும். காரணமில்லாமல் பாக்கியம் பேசுவது பலருக்குப் புரியாது. எதையோ அர்த்தமில்லாது பேசுவாள். ஒரு காலத்தில் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அவள் இவ்வியாதி வந்தபின்; புத்தகங்களையும் பேப்பர்களையும் கிழிப்பாள். இறுதி காலத்தில் தாயை பீடித்தது  மூலை சம்பந்தப்பட்ட “அல்செய்மார்” நோய் என்று டாக்டர் சோமசுந்தரதுக்கு அறிநது கொள்ள வெகுகாலம் எடுக்கவில்லை. தன்  தாயைப் போல் அல்செய்மார் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை அங்கோடை மனநோய் வைத்தியசாலையில் சந்தித்த அனுபவம் அவருக்கு இருந்தது.   பாக்கியம்  தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மறந்தாள். தன் பெற்றோரினதும், கணவனது பெயர்களையும். தான் யார் என்பதையம், முற்றாக மறநது விட்டாள். எப்போதும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அலட்டிக் கொண்டே இருப்பாள். கிட்டத்துச் சொந்தக்காரர்களை கூட அடையாளம் காணமாட்டாள். அவள் என்ன சொல்லுகிறாள் என்று எவருக்கும் விளங்காது. மேசையில் எவருடைய  பொருட்கள் இருந்தாலும் தன் அறைக்குள் எடுத்துக்கொண்டு போய்விடுவாள்.  ஒரு நாள் “அம்மா உங்கள் பெரியம்மா வந்திருக்கிறா பேசப்போறியளே ?” என்று மகன் சுந்தரம் கெட்டதுக்கு “ நான் ஏற்கனவே பேசிவிட்டேன். திரும்பவும் பேசத் தேவையியில்லை” என்றாள் பாக்கியம். அவள் சொன்னது தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து கதைத்;ததை  நினைத்தே . தான் கதைப்பதை பார்த்து வேறு ஒருத்தி தன்னோடு கதைப்பதாக நினைப்பாள். அவ்வளவுக்கு புத்தி தடுமாற்ற நிலை. எதைச் சொன்னாலும் கேட்கமாட்டாள், காரணம் மற்றவர்கள் சொல்வதுவளுக்கு புரியாததே. தான் சொல்வது தான் சரி என்ற பிடிவாதக் குணம். அவள் மேல் பலருக்கு அனுதாபம். அவளோடு பேசாமல் இருப்பதுதான்  நல்லது என்று அவளை ஒதுக்கி வைத்தார்கள். மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் பாக்கியம். . இறுதிகாலத்தில் தாயின் நிலை டாக்டர் சுந்தரத்தை வெகுவாக பாதித்துவிட்டது. அங்கோடை வைத்திய சாலையில் தான் சந்தித்த மன நோயாளிகள்தான் அவரது நினைவுக்கு வந்தார்கள்.  தற்போது அல்செயமார் வியாதிக்கு தற்காலிகமாக நோய் வளர விடாமல் தடுக்கும் மருந்துகள் இருந்தாலும் முற்றாக நோயினை நீக்க மருந்து இல்லை என்பதையும் அறிந்தார் சுந்தரம். தொற்று நோய்கள் அல்செய்மார் வியாதியின் வளர்ச்சியை துரிதப்படு;த்தலாம் என்பது அவர் ஆராச்சிக் கட்டுரைகள் மூலம் வாசித்தறிந்தார். டிமென்சியா வந்த ஆரம்பக்கட்டத்தில் தாயுக்கு வந்த பொக்களிப்பான் என்ற சின்னம்மையும, மீசில்ஸ் என்ற  தட்டம்மையும்  அவளின் உடலை வெகுவாகப் பாதித்தனால் அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த டிமென்சியாவானது  அல்செய்மார் வியாதியாக மாறியிருக்கலாம் என அவர்; நினைத்தது சரி என்பதை தனது ஆராச்சியின் போது அவர் அறிந்த உண்மை. சின்னம்மை நோய்; முதியோருககு வந்து அவர்கள் சரிவர கவனிக்கப்படாவிட்டால் அவர்களது  மூலையை அந்நோய்  பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார்.  தாயின் மரணம்; டாக்டர் சுந்தரத்தின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அல்செய்மார் நோயுக்கு முடிவு காண புது மாற்று வைத்திய முறையை கண்டு படிக்க வேண்டும்  என்று தீரமானித்தார். இனியாவது அந்நோயினால் வயது வந்த  காலத்தில் பலர் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாhர். அந்த நோயைப்பற்றி பிற நாட்டு மூலை நோயியல் டாக்டரர்களின் ஆராச்சிக்கட்டுரைகள் பலதை வாசித்தார். அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்  என்ற ஆர்வம் அதிகமாயிற்று. அவர் அதிர்ஷடமோ எனவோ ஸ்டெம் செல் (ளுவநஅ ஊநடட) எனப்படும்  முதல்நிலை உயிரணு பற்றி ஆராச்சி செய்ய ஸ்கொலர்சிப்பி;பில் கொம்பிரிடஜ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதையே அவரது தந்தை டாகடர் சுப்பரமணயத்தினதம்; தாய் பாக்கியத்தினதும் விருப்பம் கூட.  அவருடை ஆராச்சிக்கு பயொ கெமிஸ்ட் ஆராச்சியில் ஈடுபட்ட சில்வியா பெரும் உதவியாக இருந்தாள.;   . மூலையில் ஏற்படும்; பிலேக்ஸ் என்ற தட்டை வீக்கங்கள் அல்செய்மார் வியாதிக்குக் காரணமாகலாம் என்றும், அனால் அல்செய்மார் ஒரு தொற்றுவியாதியல்ல என்பதையும்  நியூரோன் (நேரசயழளெ)இ என்ற நரம்பணுக்கோளோடும். முதல் நிலை உயரணுக்களோடும் சம்பந்தப்பட்டது என்பதையும் அவரால் அறிய முடிந்தது. புதிய நரம்பணுக்களை பாதிக்கப்பட்ட நரம்பணுக்களுக்கு முதல்நிலை உயரணு சிகிச்சை மூலம் புதுப்பித்தால் அல்செய்மார் வியாதிக்கு தீர்வு காணலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதற்கு அல்செய்மார் வியாதியால் இறந்த ஒருவரின் மூலையை தன் ஆராச்சி;;க்குப் பாவித்தார்.   ஆராச்சியின் போது அல்செய்மார் நோய் உள்ள பதினைந்து நோயார்களுக்கு அவர்கள் குடுமடபத்தின் அனுமதியோடு புது முதல்நிலை உயரணுக்களை அவர்கள் மூலையில் மாற்றம் செய்து அதன் விளைவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம்.  “சில்வியா எனது ஆராச்சி வெற்றியடையும் என்று நினைகிறாயா?” மனைவி சில்வியாவை ஒரு நாள்; சுந்தரம் கேட்டார்.  “எனக்கு உங்கள் ஆராச்சி நிட்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உண்டு. பொசிட்டிவ்வாக இருங்கள். உங்கள் தாயைக் குணம் படுத்தி அவர் உயிகை; காப்பாற்ற உங்களால் முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்படாதீர்கள். இனியாவது பலரை அல்செயமார் வியாதியின் பாதிப்பில் இருந்து காப்பாற்றமுடியும் என்பதை எதிர்பாருங்கள்.” என்றாள் சில்வியா  அவர் ஸ்டெம் செல் மாற்று மருத்துவம் செய்த பதினைந்து நோயளிகளை ஆறுமாதங்களாக அவதானித்து வந்ததில் அவர்கள் எல்லோருக்கும் மறதி நோய் படிப்படியாக குறையத் தொடங்கியது. அவர் எதிர்பார்த்த விளைவைக் கொடுத்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாங்கள் யார் என்று அடையாளம் காணக்கூடியதாக அவர்கள் இருப்பதைக் கண்டாhர். தனது ஆராச்சியானது வெற்றயடைவதறகான அறிகுறிகள் டாகடர் சுந்தரத்துக்கும்; அவர் மனைவி சில்வியாவுக்கும் தெரிந்தது.  காலப்போக்கில அமெரிக்காவில,; நியூயோர்க் நகரில் நடந்த மருத்துவர்கள் மகாநாட்டில் அல்செய்மார் வியாதியை முற்றாக நீக்குவதற்கான தனது ஆராச்சியின் முடிவை வெளிட்டார். தனது  ஸ்டெம் செல்மாற்று சிகிச்சையால்;, தான் பரிசோதித்த பதினைந்து நோயாளிகளும் நூற்றுக்கு நூறு விகிதம் பயன் அடைந்தார்கள் என்ற புள்ளிவிபரத்தையும் சொன்னார.; ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கு இருந்த வியாதியில் ஏற்பட்ட மாற்றத்தை மகாநாட்டுக்கு வந்திருந்தோருக்கு விளக்கினார். சுகம் பெற்றவர்களை மகாநாட்டில் அறிமுகப்படுத்தி அவர்களோடு  பேச வைத்து அவர்களுக்கு இருந்த வியாதியின் முன்னேற்றத்தைக் காட்டினார்  பல நாட்டு ஊடகங்களில் அச்செய்திக்கு கொட்டை எழுத்துகளில் முக்கியத்துவம் கொடுத்தது “ அல்செய்மார் நோயை இல்;லாமல் செய்ய புது சிகிச்சை  கண்டு பிடிப்பு” என்ற தலையங்கத்தோடு சுநதரத்தின பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்தது. சுந்தரம் மனதுக்குள் தன்தாய் பாக்கியத்துக்கும் தந்தைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்;.      கதை 8   -   மலடி   []                                                    அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால் உணரமுடிந்தது. அன்று பின்னேரம் டாக்டரிடம் போய் வந்தபின் இருவரும் அதிகம் பேசவில்லை. இரவு உணவு  கூட அவ்களுக்கு வெறுப்பாகயிருந்தது.  ஆனால் அவர்கள் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. மௌனமாக இரவு சாப்பாட்டை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு நேரத்தோடு வந்து படுத்தார்கள். வழமையில் தேவன் தான் பொறியிலில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் யூனிவர்சிட்டியில் நடந்ததை கதை கதையாய் சொல்லுவான். அதே போல் அபிராமியும் தான் தற்காலிகமாக வேலை செய்யும் ஒக்ஸ்பேர்ட ஸ்டீரீட்  கடையொன்றில அன்று சந்தித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வாள். ஆனால் அன்று மட்டும் இருவரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் அந்த மெடிக்கல் ரிப்போர்ட் தான் காரணம். என்ன முடிவை நாங்கள்  டாக்டருக்கு சொல்வது.? அவர்கள் எதிர் பார்க்காதவாறு பரிசோதனைக்குப் பின் வந்த ரிப்போர்ட் அமைந்திருந்து. ஊர் நினைத்தது ஒன்று ஆனால் உண்மை வேறு.  அபிராமிக்கு திருமணமாகும் போது வயது இருபத்தி இரண்டு. பல்கலைக் கழகத்தில் கணக்கியலில் சிறப்புச் சித்தி பெற்று, படிப்பு முடித்து அடுத்த சில மாதங்களில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவள் திருமணத்துக்க இணங்க வேண்டி இருந்தது. அவள் மேலும் படிப்பைத் தொடர்ந்து எம்.எஸ்சி செய்ய போட்டிருந்த திட்டமெல்லாம் நினைவேறாமல் போய்விட்டது. காரணம் அவளின் அப்பாவுக்கு இன்னும் அதிக காலம் தான் உயிரோடை இருக்கமாட்டேன் என்ற பயம் தான் .பிடித்துக் கொண்டது. “தனக்கு மாரகத் திசை தொடங்கி விட்டதாம். தான் சாக முன் ஒரு பேரப் பிள்ளையையாவது பார்த்தாக வேண்டும” என்று அவர் காரணம் காட்டினார். அம்மாவுக்கு அபிராமி அவ்வளவு இளமையில் திருமணம் முடிப்பது விருப்பமில்லை. ஆனால் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடந்தது.   தேவன் அவளின் தகப்பனுக்கு தூரத்துச் சொந்தம். மின் பொறியலாளராக கொழும்பில் வேலைபார்த்தவன். அவனுக்கும் அபிராமிக்கும் வயது வித்தியாசம் அவ்வளவுக்கு இல்லை. ஆக மூன்று வயது தான் வித்தியாசம். அபிராமி பெற்றோருக்கு ஒரே மகள். ஓவசியராக இருந்து நிறையச் சம்பாதித்தவர் அபிராமியின் தந்தை தம்பிராசா. ஓவசியர் தம்பிராசா சேர்த்த சொத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடு, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் ஒரு பெரிய வீடு அவர் பேயரில் இருந்தது. அதில் கொழும்பு வீட்டை அபிராமிக்கு சீதனமாக கொடுத்ததார். தனக்குப் பிறகு தன் சொத்தெல்லாம் அபிராமிக்கு என்றும் அவளுக்கப் பிறகு அவள் பிள்ளைகளுக்கும் என்று அவர் எழுதி வைத்த உயில் எழுதி வைத்தார்;. ஆனால் அவர் எதிர்பாhத்த மாதிரி நடக்கவில்லை. அபிராமி கலியாணமாகி பத்து வருஷமாகியும் பிள்ளை பாக்கியம் அவளுக்கு கிடைக்கவில்லை. அந்தக் கவலை அவளை வாட்டியது. ஊரில் அதை வக்கனையாக பலர் பேசினார்கள். மலடி என்ற பட்டம் அவளை தேடிவந்து ஒட்டிக் கொண்டது. தகப்பன் ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்தார். அது பிள்ளையிளை காட்டிப் போட்டுது என்று மறைமுகமாக சிலர் கதைத்தனர். கலியாண வீடு, சாமித்திய சடங்கு, சுமங்கலி பூஜை போன்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் போகாமல் அவள் ஒதுங்கி நின்றாள்.   அவள் சாதகத்தின்படி அவளுக்கு உதயத்து செவ்வாய், அதானல் மணவாழக்கையில்; குறையிருக்கும் என்று சாஸ்திரி சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. திருமணத்துக்கு முன் செவ்வாய் கிரகத்துக்கு சாந்தி கூட அவள் பெற்றோர்கள் செய்தார்கள். “அப்ப  ஏன் அப்பா தெரிந்திருந்தும் தான் சேர்த்த சொத்தை அனுபவிக்க ஒரு வாரிசு வேண்டும் என்ற தானே அவசரப்பட்டு கலியாணம் எனக்கு செய்து வைத்தார்”. அபிராமி தாயிடம் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வாள். தேவன் தன் மனைவிமேல் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருந்தான். அவள் மனது நோக எதுவும் பேசமாட்டான். அதனால் அவள் இரண்டாம் திருமணம் அவனை செய்யச் சொன்ன போது கோபத்தில் இரண்டு நாள் அவன் அவளோடு பேசிவில்லை. “அபிராமி நான் பத்து வருஷம் உன்னோடு கூடிவாழ்நது போட்டு எப்படி நான் இனி இன்னொருத்தியோடு வாழ முடியும்?. ஒரு குழந்தைக்காக நான் மறுதிருமணம் செய்யவேண்டு மென்றால் ஒரு சமயம் எனக்கு இரண்டாம் தாரமாக வருபவளுக்கும் பிரச்சனையிருந்து குழந்தை கிடைக்காமல் போய் விட்டால்?. தேவன் முற்றறக மறு திருமணம் செய்ய மறத்துவிட்டான். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்க கூட அபிராமியின் பெற்றோர் அவ்வளவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.  மேல் படிப்புக்கான முன்று வருடப் புலமைப் பரிசு பெற்று தேவன் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு போன போது  அவன், கூடவே அபிராமியையும் அழைத்துச் சென்றான். ஊர் வாயில் இருந்து தப்புவதற்கு அது நல்ல சந்தர்ப்பமாகப் அவனுக்குப் பட்டது. அதுவுமன்றி மனைவியைப் பிரிந்து அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தேச மாற்றமாவது ஒரு நல்லதை செய்யட்டும் என்ற ஒரு நம்பிக்கை அவர்கள் இருவருக்கும்.   லண்டன் வந்து சிலமாதங்களில், அவனோடு கொழும்பு றோயல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பன் சந்திரனை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு ஏற்பட்டது. கல்லூரி காலத்தில் சந்திரனும் தேவனும் இணைபிரியாத நண்பர்கள். சந்திரனும் தேவனும் ஒரே வருடம் பல்கலைககழகத்துக்குள் நுலைந்தவர்கள். சந்திரன் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றான். தேவன் சிவில் என்ஜினியரானாhன். படிக்கும் காலத்தில் பம்பலபிட்டி லோரிஸ் வீதியிள் உள்ள ஒரு அறையொன்றில் இருவரும் தங்கிப் படித்தனர். பல்கலைக்கழகப்படிப்புக்குப் பின் அவர்கள் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரன் தன்னோடு படித்த ஒரு தமிழ் பெண் டாக்டரை காதலித்து மணமுடித்து லண்டன் சென்று விட்டதாக கேள்விப்பட்டான். சந்திரனும் அவன் பெற்றோருக்க ஒரே பிள்ளை.   சந்திரனைச் சந்தித்த போது தேவனுக்க ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சந்திரனின் மணவாழக்கை சில வருடங்களே நீடித்தது எனறும்  அவனுக்கும் தன்னைப் போல் குழந்தைகள் இல்லை என்று  அவன் சொன்னபோது தேவனால் நம்ப முடியவில்லை.. என்ன நடந்தது என்று கேட்டபோது லண்டன் வந்தபின் தானும் மனைவியும் ஒரு கார் விபத்துக்கு உள்ளானதாகவும் அதில் கற்பமாகயிருந்த தன் மனைவி இறந்ததாகவும் சொல்லி சந்திரன் அழுதான். அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று தேவனுக்கு தெரியும் . சந்திரன் மனைவி வசந்தியை கொழும்பில் படிக்கும்  பல தடவை சந்தித்திருக்கிறான். படித்தகாலத்தில், தினமும் பம்பலபிட்டி பிள்ளையார்  கோயிலில் சந்திரனோடு அவளைக் காணலாம். நல்ல மனம் உள்ள சந்திரனுக்கு வாழ்க்கையில் இப்படியும் ஒரு துயரமா என்று தேவனும் அபிராமியும் கவலைப்பட்டார்கள்.   சந்திரன் லண்டனில் ஒரு கைனகோலஜிஸ்ட்டாக வேலை செய்தான். அவனது கைராசி என்னவோ அவனிடம் வந்த கேஸ்கள் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தை வேறு தாய் வேறாக சென்றாதாக கேள்விப்பட்டான். பிள்ளைகள் இல்லாதவர்களின் பிரச்சனைகளை கூட அவன் தீர்த்து வைத்தாக அவன் நண்பர்கள் கூறியதைக் கேட்டு மனதுக்குள் தன் பிரச்சனையையும் அவனோட பேசி ஒரு தீர்வு காணலாமா என அபிராமியுடன் கலந்து பேசினான் தேவன்;. இறுதியில் சந்திரனின் மருத்துவ உதவியை அவர்கள் நாடினார்கள்.   “உனக்கு இந்த உதவியை நான் செய்யாவிட்டால் எங்களுக்கு இடையே உள்ள நட்புக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனக்கு தான் குழந்தைச் செல்வம் இல்லாவிட்டாலும் உனக்காவது கிடைக்க வழியிருக்கா என்று பார்ப்போம்”  என்றான் சந்திரன்.   மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தேவனும் அபிராமியும் முடிவை எதிர்பார்த்து நின்றனர்.  வந்த மெடிக்கல் ரிப்போர்ட் சந்திரனை திகைக்க வைத்தது. அதை தேவனுக்கும் அபிராமிக்கும் எடுத்துச் சொல்ல அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது .   ரிப்போர்டின் படி அபிராமியின் கருப்பைபையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சந்திரனின் விந்துக்கள் குழந்தையை உருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. சிறு வயதில் அவனுக்கு வந்த ஏதோ ஒரு கடுமையான வருத்தம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்; என்று சந்திரன் விளக்கம் கொடுத்த போது, தேவன் மனைவியின் கையைப் படித்து ஓ வென்று அழுதுவிட்டான். அபிராமி கலங்கவில்லை.  சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு “எதற்காக இப்ப நீங்கள் அழுகுறீர்கள். எமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்” என்றாள் வார்த்தைகள் தழும்ப அபிராமி.   “ஊர் உனக்கு மலடி என்று பட்டம் சூட்டிற்று. உண்மையில் நான் தான் மலடன். எமது சமுதாயம் எந்தக் குறையிருந்தாலும் முதலில் அந்தப் பழியை பெண்மேல் தான் போடும். என்னை மன்னித்து விடு. திருமணத்துக்கு முன் இதைப்பற்றி தெரிந்திருந்தால் நான் திருமணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன். உன் வாழ்க்கையை பாழடித்திருக்க மாட்டேன்” என்று அபிராமியின் கையைப் பிடித்து அழுதான். அபிராமி பேசாமல் அமைதியாக “என்ன விசர் கதை கதைக்கிறியள். எது நடக்க வேண்டும் அது நல்லதாகவே நடக்கத்தான் செய்யும். மனம் வருந்தி பயன் இலலை இனி நடக்கப் போவதைப் பார்ப்போம். கீதையில் சொன்ன தத்துவும் பேசினாள் அபிராமி.  சற்று நேரம் சிந்தித்து விட்டு “டாக்டர் இதுக்கு தீர்வு இல்லையா?” என்றாள்; மனத் தைரியத்துடன அபிராமி;.   “ ஏன் இல்லை. இந்த நவீன விஞ்ஞான உலகில் இல்லாத தீர்வுகளா” என்றான் டாக்டர் சந்திரன் அமைதியாக.  அந்தப் பதிலை தேவனும் அபிராமியும் டாக்டர் சந்திரனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.   “என்ன சந்திரன் சொல்லுகிறீர்கள?;. எங்களுக்குப் குழந்தை கிடைக்க வழியுண்டா?” தேவன் கேட்டான்.   “ஆம் உண்டு. ஆனால் படித்த நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்குள்ளும் கலந்தாலொசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இது உங்கள் இருவருக்கும் எனக்குமிடையேலான இரகசியமக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு செயற்கை முறையில் கருப்பையுக்குள் விந்துவை செலுத்தி குழந்தை பெறவைக்கும் முறையை விபரமாக விளக்கினார் சந்திரன்.  தேவனும் அபிராமியும் அதைக் கேட்டதும் வாயடைத்து போய் இருந்தார்கள்.   “என்ன பேசாமல் மொளனமாகயிருக்கிறீர்கள். பத்து வருஷமாக உங்களுக்கு குழந்தையில்லை. இப்போ ஒரு வழி இருக்கிறது. அதுவும் நீங்கள் லண்டனில் இருப்பதால் இதை என்னால் நீஙகள் சம்மதித்தால் திருப்திகரமாக நிறைவேற்றி வைக்க முடியும். இருவரும் கலந்து ஆலோசித்து பதில் சொல்லுங்கள் “ என்றாhர் சந்திரன்.   “யார் விந்தை என் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்துவீர்கள்” என்ற கேள்வியை எழுப்பினாள் அபிராமி.;  “நிட்சயமக அது உங்கள் கணவனுடையதாக இருக்கமுடியாது. ஏன் என்றால் அது சக்தியிழந்த விந்துக்கள். அதற்கு ஒரு விந்து வங்கியில் இருந்து உங்கள் இனத்துக்கும் நிறத்துக்கு பொருத்தமான தொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கு சில விதிமுறைகளும் பரிசோதகைளும்; உண்டு. அந்த விந்துக்கு உரிமையாளர் யார் என்பது பரம இரகசியமாக வைக்கப்படும். உங்களுக்குத தெரியவராது. அதனால் பிறகாலத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக் கூடாது. அதுவும் நோய் இல்லாத ஒருவரிடம் பெற்ற விந்துவாக இருக்கும். ஏன் என்றால்  பிறக்கும் குழந்தை அழகான ஆரோக்கியமான, உங்களைப் போல் நிறமுள்ள குழந்தையாக இருக்க வேண்டுமல்லாவா. அதுவும் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தையாக இருக்கவேண்டும். சுவிகாரம் எடுப்பதிலும் பார்க்க இது ஒரு படி மேல். ஏன் என்றால் அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழநதையல்லவா. அக்குழநதையின் இரத்தத்தில அபிராமியின் மரபுணுவும் கலந்திருக்கும். அதைதானே நீங்களும் விரும்புவீர்கள் என்ன?” என்றார் சிரித்தபடி சந்திரன்.   தேவன் அபிராமியின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் எதுவித உணர்வுகளும் தெரியவில்லை. கண்கள் கலங்கியது.   “எனக்குத் தெரியும் இது உங்களால் உடனடியாக எடுக்க முடியாத முடிவென்று. நீங்கள் இருவரும் அவசரப்படாது ஆழ்ந்து சிந்தித்து பேசி முடிவு எடுத்து விட்டு உஙகள் இருவருக்கும் சம்மதம் இருந்தால் என்னை வந்து சந்தியுங்கள். பின் மற்றவையை நான் கவனிக்கிறேன்’” என்றாhர் டாக்;டர் சந்திரன்.  கட்டிலின் நேர் எதிரான சுவரில் தொங்கிய  படத்தில் சிரித்தபடி பெரும் விரலை சூப்பயிபடி இருந்த அழகிய  குழந்தையைப் பார்த்து பெருமூச்சு விட்டார்கள் தேவனும் அபிராமியும். இது போல இருக்குமா டாக்டர் சொன்ன குழந்தை? இரவு இரவாக தேவனும் அபிராமியும் ஒரு முடிவுக்கு வர முடியாது தவித்தது அந்த படத்தில் இருந்த குழந்தைக்கு தான் தெரியும். நடப்பது நடக்கட்டும். எனக்கும் அவருக்கும் தேவை என்மேல் உள்ள மலடி என்ற பட்டத்தை போக்க ஒரு குழந்தை, என்று அபிராமி மனதில் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் கண்களைத் துடைத்து கொண்டு   ”அத்தான் நாளைக்கு டாக்டர் சந்திரனுக்கு டெலிபோன் செய்து நாங்கள் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள்” எனறாள் அபிராமி மனத் தைரியத்துடன்.   “அதைத்தான் அபிராமி நானும் தீர்மானித்தனான். நான் நினைக்க நீ சொல்லிப்போட்டாய்” என்றான் தேவன் அமைதியாக.   படத்தில் இருந்த குழந்தை அவளைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு. அவளுக்கு தன் வயிற்றில் அதே போல் குழந்தை ஒன்று ஊர்வது போன்ற உணர்வு. தான் தாயாகப் போகிறேன் என்ற பெருமை முகத்தில் பிரதிபலித்தது. இனி சமூகம் தன்னை மலடி என்று ஒதுக்கிவைக்க மாட்டாது. சடங்குகளில் எனக்கு ஒரு இடமுண்டு.  ஒரு வருடத்துக்குள் அபிராமி ஒரு அழகிய ஆண் குழந்தைக்குத் தாயானள். தங்களை பார்க்க வந்த சந்திரனுக்கு நன்றி தெரிவி;க்கும் முகமாக தங்கள் இரு கைகளை கூப்பி தேவனும் அபிராமியும் வணங்கினர்.   “இதென்ன பழக்கம் தேவன்;. என் கடமையைத் தான் நான் செய்தனான். நீ என் நண்பன். அதை மறந்துவிடாதே. நீ எனனை கும்பிடவுது எனக்கு மனதுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. “ என்று கூறியபடி அவனது இரு கரங்களையும்; பற்றி கீழே தாழ்த்தினாhர் சந்திரன  “டாக்டர் இவர் படிப்பு இன்னும் நான்கு மாதங்களில முடியப் போகிறது. அதற்குப் பிறகு நாங்கள் ஊருக்குத் திரும்ப இருக்கிறோம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தங்களுக்கு பேரப்பிள்ளை கிடைத்ததையிட்டு பெரிய மகிழ்ச்சி. கோல் எடுத்து பேசிச்சினம். “ என்றாள் அபிராமி.  “அவர்களுக்கு ஏதாவது சொன்னீர்களா?” என்றார் சந்திரன்.  “உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மீறுவோமா?” என்றார் தேவன்.  “நல்லது. நானும் மாற்றலாகி கிலாஸ்கோவுக்கு போகிறேன். இனி உங்களைச் சந்திப்பேனோ தெரியாது. அதனால் உங்கள் குழந்தைக்கு என் சிறிய பரிசு கொடுக்க விரும்புகிறேன்.” என்று ஒரு கடித உறையை அபிராமியிடம் சந்திரன் கொடுத்தார்.  “என்ன டாக்டர் இது?.. நாங்கள் அல்லவா உங்களுக்கு பரிசு தரவேண்டும் “ என்றாள் அபிராமி.  “சந்திரன் நீர் செய்த இந்த பெரிய உதவி போதாது என்று இதுவுமா?” தேவன்; உணர்ச்சி வசப்பட்டு நடுங்கும் தன்; கரங்களினால் சந்திரனின் கைளைப் பிடித்தான்.  சந்திரன் பதில் பேசாது குழந்தையை தேவனிடம் இருந்து வாங்கினான். குழந்தையின் மிருதுவான கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு தன் கண்கணில் வந்த கண்ணீரைத் அவர்கள் காணாத வாறு துடைத்துக் கொண்டு  “சரி நான் வாறன் எனக்கு வேலையிருக்கு” என்று பதிலை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். அவர் நடந்த விதம் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. டாக்டர் சந்திரன் அறையைவிட்டு வெளியே போய் சில நேரத்துக்குப் பின் தேவன் கடித உறையை அபிராமியிடம் வாங்கிப் பிரித்தான். அதனுள் சிறு கடிதமும் ஒரு பத்திரம் இருந்தது. கடிதத்தில் இருந்ததை தேவன் வாசித்தான்  அன்பின் நண்பன் தேவனுக்கும் சகோதரி அபிராமிக்கும்.  இதோடு என் பெயரில் என் இறந்து போன பெற்றோர் எழுதி  சொத்துக்கைளை எல்லாம் உங்கள் குழந்தையின் பெயரில் எழுதி வைத்திருக்கிறென். இனி எனக்கு சொத்துக்கள் தேவையில்லை. நான் மறுமணம் செய்து கொள்ளப் போவதில்லை. என் வாழ்வில் எனக்கென ஒரு வசந்திதான். இது உங்கள் மகனுக்கு என் பரிசு. ஒரே ஒரு வேண்டு கோள். என் மனைவி விபத்தில் இறக்கும் போது அவள் ஆறுமாதம் கற்பம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவள் வணங்கும் முருகன் பெயரான “அழகன்” என்ற பெயர் வைக்க இருந்தோம். ஆனால் அது எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அதனால் அழகான உங்கள் மகனுக்காவது அந்தப் பெயரை வைப்பீர்கள் எனத் தாழ்மையுடன் செய்து கேட்டுக்கொள்கிறேன். அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்கள்?  இப்படிக்கு  சந்திரன்   கடிதத்தினதும் உயிலினதும் அர்த்தங்களை அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இப்படியும் ஒரு மனிதனா என்றது அவர்கள் இருவரினதும் உள்ளங்கள்.  கதை 9   -   பரம இரகசியம்   “என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.”   “முடியாது.. அது பரமசிவத்தின் பரம இரகசியம்.”   “உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியமா?. உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து விட்டால் பிறகு அந்த இரகசியம் ஒருத்தருக்கும் பயன் இல்லாமல் மறைந்து போகும்”   “உண்மைதான். ஆனால் நான் கண்டுபிடித்த விஷயத்தை வேறு யாரும் கொப்பியடித்தால் அல்லது பிழையாகப் பாவித்தால்…..”   “சந்திரா. அதுக்குத் தான் கொப்பிரைட்டும் பேட்டெண்டும் (Copy Rightt Patent) இருக்கே. நீ யோசிக்காதே. நான் உன்னோடு பல காலம் பழகினவன் அல்லவா. நானும் உன்னைப் போல் தொழில் நுட்பப் பட்டதாரிதான். நீ கைக்குள் வைத்திருப்பதை எனக்கு காட்டினால் நான் எதாவது ஆலோசனை சொல்லலாம் அல்லவா?” அவனை நான் விடவில்லை.  அவனுக்குத் தெரியும் எனது பிடிவாதக் குணம்.  “சரி வா அந்த பெஞ்சில் முதலில் போய் இருப்போம்” என்று என்னை அழைத்துக் கொண்டு போனான் பரமசிவம். அருகில் உள்ள மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில்; இருவரும் போய் அமர்ந்தோம்.  பரமசிவம்; கிறுக்குத் தனமானப் போக்குள்ளவன். ஆனால் கிறுக்கன் அல்ல. அதிமேதாவி என்றும் சொல்லலாம். சில சமயம் தான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே சிந்தித்த படி நடப்பான். ஒரு சமயம் ஷேர்ட்டின் பொத்தானை தலைகீழாக மாட்டிக்கொண்டு, ஒரு காலில் செருப்பும்; மறு காலில் சப்பாத்துடனும் என்னோடு புறப்பட ஆயத்தமானான். தலை கூட வாரவில்லை. அவனைப் பார்க்க எனக்கு சிரிப்பு வந்தது.  “என்னடா சந்திரா இதென்ன புது பெஷன்” என்றேன் அவன் முதுகில் தட்டிய படி. அப்போது தான் சுயநிலைக்கு அவன் வந்தான். சில சமயங்களில் வானத்தையும், மரங்களையும் பார்த்தபடி சிந்தனையோடு இருப்பான். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அவன் நிலையறிந்து அவனுக்குப் பெண்கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை. பிரமச்சாரியாகவே வாழ்ந்தான். பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. பெற்றோர் விட்டுச்சென்ற பெரிய வீட்டில் தனிமையாக ஒரு பெரிய அறையில் வாழ்ந்தான். அந்த வீட்டின் பெரும் பகுதியை எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்துக்கு வாடகைகக்கு விட்டிருந்தான். அந்த வருமானம் அவனுக்கு போதுமானது.  எலக்ரோனிக் என்ஜினியராக முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றும் ஒரு ஸ்தாபனத்திலும் அவனால் நிரந்தரமாக வேலை செய்யமுடியவில்லை. அவனது ஒற்றைப் போக்கு பலருக்கு சரிப்பட்டு வரவில்லை. மற்றவர்களுடன் அவன் தொடர்பு கொள்வதும் அரிது. தலை வாரமாட்டான். உடைகளில் கூட கவனம் கிடையாது. படிக்கும் போது பௌதிகத்திலும் கணிதத்திலும் எனக்குப் போட்டி அவன்தான். சில சமயம் நான் கோட்டை விட்ட கணக்கைக கூட அவன் சிரமப்படமால் செய்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் இருந்தே அவன் என் நண்பன். சக மாணவர்கள் அவனோடு பழகத் தயங்கினர் என்னைத் தவிர.  அவன் அறை தான் அவன் உலகம். ஆந்த nhதிய அறையை படுக்கையறையாகவும் தனது ரேடியோ பரிசோதனைக் கூடமாகவும் பாவித்தான். வானொலிகளில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து திருத்திக் கொடுப்பதில் கெட்டிக்காரன். அதற்கு கூலி கேட்க மாட்டான். கொடுத்தால் வாங்குவான். கிடைத்த உதிரிப்பாகங்களை வைத்து ஒரு புதுமையான சக்திவாய்ந்த வானொலி ஒன்றை உருவாக்கியிருந்தான். அதைப் பார்த்து நான் வியந்தேன். அதன்மூலம் உலகில் பலருடன் தொடர்பு கொண்டு பேசினான். “என்னடா சந்திரா உனது திறமையை இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிந்திருந்தால் உன்னை கடத்திக் கொண்டு போய்விடுவார்கள் என்றேன். அவன் மௌனமாகச் சிரிப்பான்.  ஒரு நாள் அவன் உருவாக்கிய  வானொலியில் ஏதோ இருவர் புரியாத பாசையில் பேசவதைக் கேட்டேன். பின்னணியில் துப்பாக்கிச் சூடும் குண்டுகள் விழும் சத்தமும் கேட்டது. என்னடா சிவா யார் பேசுகிறார்கள் எனக்கு அவர்கள் பேசும் பாஷை விளங்கவில்லை என்றேன். “உது அரேபிய மொழி” என்றான் சிவம். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. உனக்கு எப்படி அது அரேபிய மொழி என்று தெரியும் என்று கேட்டேன். அவன் சிரித்தான். அதோ பார் என்று புத்தகங்கள் உள்ள அலுமாரியைக் காட்டினான்; அதில் சில அரேபிய மொழி புத்கங்கள் இருந்தன. என்னால் நம்பமுடியவில்லை.  “சிவா எனக்கு ஏன் நீ இதை  இவ்வளவு காலமும் சொல்லவில்லை?”.  “அது தான் பரமரகசியம்” என்றான் கண்ணைச்சிமிட்டியபடி.   “உனது மொழி பெயர்ப்பின் படி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கும் சொல்லன் என்றேன்.”  “போரில் தாக்குதலைப் எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாளை ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை தாக்கப் போகிறார்களாம். அதற்கான நடவடிக்கைகள் பற்றி குறி மொழி மூலம் பேசுகிறார்கள்”  “எந்த இடமிது…”  “அனேகமாக ஆப்கானிஸ்தானாக இருக்கலாம். அவர்கள் பேச்சில் இருந்து கண்டுபிடித்தேன் என்றான்.  “ ஐயோ கடவுளே, அப்போ அல்குவைதா பயங்கரவாதிகளின் சம்பாஷணையை ஒற்று கேட்கிறாயா? என்ன வேலையடா சிவா நீ செய்கிறாய். சரியான ஆபத்தான காரியமாச்சேயடா?” என்றேன் பதட்டத்துடன்.  “யார் பயங்கரவாதி. இதெல்லாம் தமது சுயநலத்திற்காக கொடுக்கப் பட்டப் பெயர். உரிமைக்காக போராடுபவர்கள் கூட பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டப்படுகிறார்கள்.” சந்திரன் அமைதியாக பதில அளித்தான்.  “சிவா நீ சரியான ஒற்றுக் கேட்பவனாய் இருக்கிறாய். இதை பொலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து. கவனமாயிரு.” நான அவனை எச்சிhத்தேன்  “அதனால் தான் பரம இரகசியம் என்றேன். உனக்கும் எனக்கும் மட்டுமே இந்த வானொலியின் மகிமை தெரியும். நீ எனக்கு சகோதரனைப் போல” என்றான் அவன். அவன் பேச்சில் நம்பிக்கை தொனித்தது.  சிவாவின் செயல் எனக்கு ஆபத்தாகப்பட்டது. நெருப்போடு விளையாடுவது போன்ற உணர்வு எனக்கு. அவன் பள்ளிக் கூடக் காலம் முதல்கொண்டே புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டவன். மக்களின் உரிமைகள் ஒதுக்கப் படுவதை முற்றாக வெறுப்பவன். உலக அரசியலில் அவனுக்கு நல்ல அறிவு இருந்தது. எந்த எந்த நாடுகளில் மக்கள் ஒடுக்கப்பட்டு புரட்சியாளர்கள் இயக்கம் தோன்றியது போன்ற விபரங்கள் அனைத்தையும் அவன் அறிந்து வைத்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அரேபிய மொழியை அவன் எதற்காக கற்றான் என்பது எனக்கு புதிராயிருந்தது. அதுவும் தொழில் நுட்பத் துறையில் ஈடுபாடுள்ளவன் பிற மொழியைக் கற்க வேண்டிய காரணம் என்ன?. என் சந்தேகத்துக்கு முழுமையான விடையை சந்தர்ப்பம் வரும் போது அவனிடமிருந்து பெற்றாக வேண்டும் என்றது என் மனம். அந்த நிலையில் அவன் “பரமரகசியம்” என்று சொல்லிக் கொண்டு ஒரு பொருளை வைத்திருக்கிறான் என்று தெரிந்த  போது அதைப்பற்றி அறிய நான் ஆவல் கொண்டதில் தவறு ஒன்றும் இருந்ததாக எனக்குப் படவில்லை. அதுவும் ஒரு வித ஒற்று வேலை பார்க்கும் கருவியோ? என்று யோசித்தேன்  “சந்திரர். நீ பௌதிகத்தில் ஒத்த அதிர்வெண்ணைப் பற்றி படித்திருப்பாயே. அது ஞாபகம் இருக்கிறதா உனக்கு” என்ற பீடிகையுடன்; ஆரம்பித்தான் சிவா  “ஏன் இல்லை. பொளதிக ஆசிரியர் ஒத்த அதிர்வெண்ணை விளங்கபபடுத்து அமெரிக்காவில காற்று வீசியதால  “ரெசனன்சால்’” முறிந்த கதை சொன்னார். அதற்கும் உன் கையில் வைத்திருப்பதற்கும் என்ன சம்பந்தம்”  “சம்பந்தம் இருக்கு. ஒருவர் நினைப்பதை அறியக் கூடிய வல்லமை படைத்தது நான் கண்டுபிடித்த இந்தக் கருவி”  “என்ன விசர் கதை சொல்லுகிறாய். நீ என்ன ஞானி என்ற நினைப்போ?”  “அப்படித்தான் என்று சொல்லேன். இப்போது இக்கருவியி;ன் மகிமையை உனக்கு காட்டப் போகிறேன் பார்கிறாயா” என்றான் சிவம், கையில் இருந்த கறுப்புப் பொருள் ஒன்றை விரித்து எனக்குக் காட்டியபடி. அதைச்செய்யுமுன் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றம் பார்த்தான். அவன் காட்டிய கருவியைப் பார்த்தேன். கைக்குள் அடங்கும் விதத்தில் இருந்தது. மூன்று பொத்தான்கள் தெரிந்தன. அதை வாங்கி பரிசோதிக்க எனக்குப் பயமாயிருந்தது. ஒரு வேளை அவன் சொல்வதில் உண்மையிருக்குமோ.  “என்ன யோசிக்கிறாய். உன்னில் தான் நான் முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்ப்போகிறேன்.”  “ என்னிலா?”  “ஆமாம் அப்போ தான் உனக்கு நம்பிக்கை வரும். இன்னும் சில வினாடிகளில் என்ன நினைக்கிறாய் என்று சொல்லட்டுமா? என்று ஒரு பொத்தனை அழுத்தி தனது தலையுடன் கருவியை வைத்தான். சில நேரத்தில்.  “ஏய் நீ இப்ப உன் மனைவி வீட்டுக்கு வந்திருப்பாளா?. என்ன இரவு சாப்பாட்டுக்கு சமைக்கப் போகிறாள். இந்த விசரன் என் நேரத்தை வீணாக்கிறான் என்று நினைக்கிறாய் அப்படித்தானே” என்றான் சிரித்தபடி.  எனக்கு அவன் சொன்னது ஆச்சரியமாய் இருந்தது. நான் நினைத்ததும் அதுவேதான். நான் வாயடைத்துப் போனேன்.  “என்ன பேசாமல் இருக்கிறாய். நான் சொன்னது சரியா?” என்றான் சந்திரன்.  “ஓம். நீ சொன்னதைத் தான் நினைத்தேன். அது எப்படி உன்னால் முடிந்தது”  கொஞ்சம் பொறு விளக்குகிறேன். அதோ நாலைந்து பேர் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்களே பார்த்தாயா?  “தெரிகிறது. அவர்களை  என்ன செய்யப்போகிறாய்?”,  “அவர்களில் ஒருவனை பரிசோதனைக்கு உட்படுத்தப் போகிறேன். வழுக்கை விழுந்த தலையுடன் போகிறவன் முன்னுக்கு போகிறவனை பிட்பொக்கட் அடிக்கப் போகிறான்”; என்றான் சந்திரன்.  “என்ன சொல்கிறாய். அதை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?” என்று நான் சொல்லுமுன் சிவா சொன்ன மாதிரி நடந்து விட்டது.  அந்த சம்பவம் என்னை திகைக்க வைத்துவிட்டது. “ஐயோ பாவம் பணத்தைப் பறிகொடுத்தவனைக் காப்பாற்று” என்றேன்;.  “கொஞ்சம் பொறு அவனைக் காப்பாற்றத் தேவையில்லை. அவன் மாபியா குழுவைச் சேர்ந்தவன். அந்தக் காசை அவன் சம்பாதித்தது தீய வழியில். அவனது கையில் உள்ள சூட்கேசுக்குள் போதை மருந்து இருக்கிறது. அதை விற்று பணமாக்கும் எண்ணத்துடன் போகிறான்” என்றான் பரமசிவம. அவன் குறிப்பிட்ட மனிதன் கையில் ஒரு சூட்கேஸ இருந்தது. அவன் சொன்னது போல் சூட்கேஸ் எதிராக வந்த ஒருவனிடம் கைமாறியது. அவன் பதிலுக்கு சூடகேஸ் வைத்திருந்தவன் கையில் ஒரு பார்சலை திணித்தான். ஒரு வேளை பணமாக இருக்குமோ?  “உடனே பொலீசுக்கு போன் செய்யப் போகிறேன் நான்” என்றேன்;.  “அதைச் செய்யாதே பிறகு நாங்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்வோம்” என்றான் சிவா.  “எனக்கு அங்கிருக்கப் பயம் பிடித்துவிட்டது. “ சிவா நீ ஒரு ஜீனியஸ். உந்தக் கருவியின் செயற்பாட்டை பொலீஸ் அறிந்தால் உனக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் கவனமாக நட” என்றேன்.  “உன் உபதேசத்துக்கு நன்றி. இங்கு நடந்தது உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். என்ன?” என்றான்.  “அது சரி இன்னும் விளக்கத்தை சொல்லவில்லையே நீ”.  “மிகவும் இலகுவானது. ஒவ்வொருத்தருக்கும் இயல்பான அதிர்வெண் உண்டு. அவர்களின் மூளையில் இருந்து வெளிவரும் எண்ண அலைகளி;ன்  அதிர்வெண்ணுடன் ஒத்த அதிர்வெண்ணை இக்கருவிமூலம் சுருதி சேர்த்தால் அவர்கள் மனதில் உள்ளதை அறியலாம். இதைத்தான் முறனாலத்தில் ஞானிகளும் பாவித்தனர். இது உனக்கு புதுமையாக இருக்கலாம். நடக்கக் கூடியதா என்றும் நீ யோசிக்கலாம். நடத்திக் காட்டிவிட்டேனே” என்றான் பரமசிவம்.  “சரி சரி வா போவோம். எனக்கு பசி வயிற்றைக் கிண்டுகிறது என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. பயமும் ஒரு காரணம். போகிற வழியில் சிவத்தை அவன் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றேன். வீட்டுக்குள் நான் நுளைந்தது தான் தாமதம்  “என்ன இவ்வளவு நேரம். எங்கே போயிருந்தியள்” என்றாள் என் மனைவி.  “ஒன்றுமில்லை சிவத்தை சந்தித்தனான். அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் எனக்கு நேரம் போனது தெரியவில்லை. “  “அந்த விசரனோடை உங்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கு. உங்களையும் பயித்தியமாக்கி விடுவான்” என்றாள் கோபத்துடன் என் மனைவி. அவளுக்கு சந்திரனைப் பிடியாது.  “அப்படி சொல்லாதே. அவன் உனக்கு கிறுக்கனாக தோன்றலாம். ஆனால் அவனிலை விஷயம் இருக்குது” என்றேன் நான்  “சரி சரி. கெதியிலை வாருங்கோ கால் முகம் கழுவிப்போட்டு சாப்பிட “ என்று கட்டளையிட்டு விட்டு மேசைக்கு சாப்பாடு எடுக்கப் போய்விட்டாள்.  சாப்பாடு முடிந்து நான் படுக்கைக்குப்போக இரவு பத்துமணியாகிவிட்டது. என்னை சந்திரனைப்பற்றிய சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தது. எவ்வளவு அதிமேதாவி அவன். அந்தக் கருவியை வைத்து எவ்வளவுக்கு பணக்காரன் ஆகலாம். ஏன் அவன் உருவாக்கிய வானொலி கூட விசித்திரமானது. அனால் அவன் போக்கு தான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது…ஒரு வேளை பயங்கரவாதிகளுடன் அவனுக்குத் தொடர்பு இருக்குமோ? சீ அப்படியிருக்காது.. என் மனதை தேற்றிக்கொண்டேன். அவனை  நினைத்தபடி தூங்கிவிட்டேன்.  விடியற் காலை, போலீஸ் சைரன் ஒலி என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. நேரத்தை பார்த்தேன். காலை ஏழு மணி. ஏதோ விபத்தாக்கும் அது தான் பொலீஸ் சைரன் கேட்கிறது என்று மனதுக்குள் நினைத்படி மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். வீட்டின் முன் கதவில் யாரோ தட்டிக் கேட்டது. அரைத்தூக்கத்தோடு எழும்பிப் போய் திறந்தேன். வாசலில் இரு போலீஸ்காரர் நின்றார்கள்.   “மிஸ்டர் சந்திரன் என்பவர் நீர்தானா?” என்று கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்து கேட்டார்கள்.   “ஆம் நான் தான் சந்திரன் என்றேன் பதட்டப் படாமல்”   “தயவு செய்து எங்களுடன் ஜீப்பில் வரமுடியுமா?” என்றார்கள்.   “நான் எதற்காக வரவேண்டும் ?.ஏதும் பிரச்சனையா?” என்றேன் பதட்டத்துடன்.   “ஆமாம் உமது நண்பர் பரமசிவம் விஷயமாக” என்றார்கள்.   “பரமசிவமா. அவனுக்கு என்ன?. நேற்று தான் அவனைச் சந்தித்தனான.;”   “வாரும் கெதியிலை. ஜீப்பிலை விஷயத்தை சொல்லுறம்” என்றான் அவர்களில் ஒருவன்.   “கொஞ்சம் பொறுங்கள் உடுப்பை மாற்றிக் கொண்டு வாறன்” என்று உள்ளே போனேன். மனைவிக்கு விளக்கம் சொல்ல எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லாம் வந்து சொல்லுகிறேன் என்று சுருக்கமாய் அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி பொலீசாருடன் போனேன். போகும் வழியில் தான் சந்திரனின் வீடு அன்று அதிகாலை மூன்று மணிக்கு தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும், பரமசிவத்தின பிரேதம் எரிந்து கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்குச் சொன்னார்கள். “   எனக்கு அவர்கள்  சொன்ன செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது.  “அட கடவுளே!  என்ன சிவம் இறந்துவிட்டானா? வீட்டுக்கு யார் தீ வைத்தது?” என்று என்னையறியாமலே கத்தினேனன்.   “அது தான் தெரியவில்லை “ என்றார் ஜீப்பில் இருந்த ஒரு போலீஸ்காரர்.   எரிந்த சந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஜீப் போய் நின்றது. நல்ல காலம் பக்கத்தில் வேறு வீடகள் இல்லை. அங்கு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே நின்றது. மூன்று வான்களில் பொலிசார், தீயணைக்கும் படை , ஒரு அம்புலன்ஸ் வேறு நின்றன.   “ வீட்டில் இருந்த குடும்பத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். “   “அவர்கள் லீவில் போய்விட்டார்கள். நல்ல காலம் தப்பினார்கள் அவர்கள்” என்றார் ஒரு பொலிசார்.   எரிந்த சந்திரனின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவனின் மூடிய பிரேதத்தை அம்புலன்சில் ஏற்றிவிட்டதாக அறிந்தேன். அவன் எனக்கு காட்டிய அதிசயக் கருவியை என் கண்கள் தேடின. காணவில்லை. அவன் உருவாக்கிய வானொலியையும் காணவில்லை. என் மனதில் பலத்த சந்தேகம் உருவாகியது. இது நிட்சயமாக திட்டமிட்டு செய்த கொலை தான். யாரோ கொலையை மறைக்க வீட்டோடு பரமசிவத்துக்கு தீவைத்திருக்கிறார்கள். ஒருவேளை சந்திரனின் பரமரகசியம் கொலை செய்தவர்களுக்கு தெரிய வந்துவிட்டதோ?. பதிலைத் தேடி என் மனம் பரதவித்தது.    கதை 10   -   அறிவின் ஆராச்சி   []                                                     என் மகன் மிருகசீரீட நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவனுக்கு வே, வோ, கா, கீ என்ற முதல் ஏழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைக்கும்படி குடும்ப சாத்திரியார் சொன்ன படியால் யோசிதது; என்ன பெயர் வைப்பது என்று யோசித்து மூளையை உடைத்துக் கொண்டேன். நான் காஞ்சியில் பிறந்த அறிஞர் அண்ணாவின் அபிமானி. அதனால் காஞ்சி, அறிவு என்ற இருவார்த்தைகளையும் இணைத்து “காஞ்சியறிவு” என்று புதுமையாக வைத்தால் என்ன என்று என் மனைவி கயல்விழியைக் கேட்டேன.   “நீண; பெயராக இல்லையா அத்தான். வீட்டில் சுருக்கமாக என்ன வென்று நாங்கள் அவனைக் கூப்பிடுவது” என்னைக் கேட்டாள் கயல்.   “உன் முழுப்பெயர் கயல்விழி அல்லவா. ஆனால் எல்லோரும் உன்னை கயல் என்று தான கூப்பிடுவார்கள். அதே போல்…”   “ அதே போல்.. “   “அறிவு என்று சுருக்கமாக வீட்டில் கூப்பிட்டால் என்ன?”   “நல்ல பெயராகத் தான் இருக்கிறது. “அறிவு” என்று வீட்டில் கூப்பிட்டால் அவன் அறிவின் சின்னமாக இருக்கட்டும்” என்று என் யோசனைக்கு சம்மதித்தாள் கயல்.    பிறந்து மூன்று மாதத்துக்குள்ளேயே அவனுக்கு என் நண்பன் வாஙகிக் கொடுத்த வெள்ளை நிற நாய் பொம்மையை அறிவுக்கு வெகுவாகப் பிடிததுக் கொண்டது. அது ஒரு புதுமையான, அழகான பொம்மை. அழுத்தினால் குரைக்கும்;. பொம்மை நாய் குரைக்கும் போது அழுவதை நிறுத்திவிட்டு கெக்கட்டம் விட்டு கைதட்டிச் அறிவு சிரிப்பான். தூங்கும் போது பொம்மையை அணைத்தபடியே தூங்குவான்.   அறிவுக்கு ஒரு வயதான போது பிறந்த நாளுக்கு  ஒரு வெள்ளை நிற பொமரேனியன்; நாய் குட்டியொன்றை வெட்டனரி சேர்ஜனாக இருக்கும் கயலின் அண்ணன் பரிசாக வாங்கிக் கொடுத்தார்;. அறிவுக்கு மாமன கொடுத்த பொமரேனியன்;; நாய் குட்டி உருவத்தில் சிறிதானாலும் அடர்த்தியான  மயிரகள் நிறைந்த வெளளை நிற ஆணகுட்டி;. 16 வருடங்கள மட்டில வாழக்கூடியவை.  இனிமையான மற்றும் நட்பு தனதையுள்ளு புத்திசாலியான நாய். அனேகமாக மடியில வைத்திருக்கும் நாய். என்பர்.   இசைமேல் ப்ரியம் உள்ள என் மனைவி கயலின் விருப்பப்படி “மெலடி” என்ற பெயரை அந்நாய் குட்டிக்கு வைத்தோம்.  சிறுவயது முதற்கொண்டே அறிவுக்கு மிருகங்கள், பறவைகள் மீது தனிப் பற்று. பிறந்த நடசத்திரமோ என்னவோ தெரியாது. படிப்பில் பெயருக்கு ஏற்ற கெட்டிக்காரனும் கூட.. பொருட்கள் எதையாவது கொடுத்தால் அதை ஆராச்சி செய்யும் பழக்கம் இருந்தது. எதையாவது கண்டு படிக்க வேண்டும்; என்து அவன் ஆவல். டோம் அன் ஜெரி, வுடி வுட்பெக்கர, மிக்கி மௌஸ், டொனலட் டக், பம்பி போன்ற மிருக , பறவைகள் கதாப்பாத்திரஙகளாக பேசி நடிக்கும் பிரபல்யமான கார்டுன்களை அடிக்கடி விரும்பிப் பார்த்து, சிரித்து அறிவு இரசிப்பான். அதவுமல்லாமல் எங்கள் வீட்டுத்; தோட்டததுக்கு வரும் அணில்ல, முயல் ரொபின் குருவிகளைப் பார்த்து அவை போடும் ஒலிகளைக் கேட்டு; மெய்மறந்து போய் நிற்பான். அவன் நாய் மெலடி கூட சொல்வதை விளஙகி நடக்கும். மெலடிக்கு அவ்வளவுக்கு பயிற்சி கொடுத்து அறிவு வளர்த்திருந்தான்.  அறிவுக்கு வயது பத்தாக இருக்கும் போது, ஒரு நாள் என்னை அழைத்து  “அப்பா இங்கே வாருங்கள் ஒரு அதிசயத்தைக் காட்டுகிறன்.  “என்ன அதிசயம் அறிவு”  “மெலடிக்கு கூட்டல் கழித்தல் கணக்கு செய்யத ;தெரியும் அப்பா”  “என்ன நீ சோல்லுகிறாய்? புரியவில்லையே . நாயுக்கு கணக்க எப்படி தெரியும்?”  “உங்களுக்கு அது புரியாது தான். இதோ பாருங்கள் நடக்கப்போவதை”  மேலடி அறிவு சொல்வதைக கேட்டபடியே அவன் முகத்தைப் பார்த்தபடியே அவன் அருகே நின்றது  “மெலடி இரண்டும் ஐந்தும் கூட்டினால் எவ்வளவு” மெலடியைப் பார்தது அறிவ கேட்டான்.  மேலடி ஏழுதடவை குரைத்து பதில் அளித்தது. நான் ஆச்சரியத்தால் நான் அசநது போனேன்.  “மேலடி ஐந்தும் ஐந்தும் கூடனாhல எவ்வளவு”? அறிவு லெடியைக் கேட்டான்  மேலடி பத்து தடவை குரைத்துச் சரியாக தன் பாஷையில் பதில் அளிதத்தது.  “மெலடி பத்தில் இருந்து நாலை கழித்தால் எவ்வளவு”?  “மெலடி ஆறில் இருந்து ஆறைக் கழித்தால் எவ்வளவு”  மெலடி குரைக்கவிலலை.  இப்படி பத்துக்குள் பல எண்களை வைத்து பல கூட்டல் கழித்தல் கணக்குளை மெலடியிடம் அறிவு; மெலடியைக் கேட்ட போது எல்லாக் கேள்விகளுக்கும்; சரியாக குரைத்து பதில் அளித்தது.  என்னால் நடப்பதை நம்ப முடியவில்லை.  “அறிவு, சரியான புத்திசாலி நாயாக மெலடி இருககிறதே”  “அப்பா நாங்கள் பேசுவது அதற்கு விளங்குகிறது. ஆனால் குரைப்பதன் காரணம் எங்களுக்கு விளங்குவதில்லை. குரைப்பதை மொழி  பெயர்கக் கூடிய கருவி ஒன்றை கண்டு பிடிக்க ஆராச்சி செய்து கொண்டிருக்கிறன்” என்றான அறிவு  “நீ  சொல்வதை எனக்கு கொஞ்சம் விளக்கமாய் தான் சொல்லேன் அறிவு”  “அப்பா எனது ஆராச்சியின நோக்கம் முதலில் நாயுடன் உரையாடக் கூடிய சொப்ட்வெயர் ஒன்றைக் கண்டு பிடிப்பது தான். அதன் மூலம் நாய குரைத்தால் அ;த ஓசையை வைத்து ஆங்கிலத்தில்; நாம் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அதோடு பேசி உறவாட முடியும்;. அது ம்டடுமல்ல மற்றைய நாய்கள் குரைத்தாலும் ஏன் குரைக்கிறது என்பதை நாம் அறியலாம். இந்தக கருவியைக் நான் கண்டு பிடித்து விட்டால் மெலடியோடு நாம் உரையாடலாம். என் ஆராச்சி வெற்றி பெற்றால்; பின் பறவைகளோடு கூட நாம் உரையாடலாம்”. அறிவு தன் ஆராச்சி பற்றி எனக்கு விளக்கம் கொடுத்தான்.   எனக்கு அறிவு சொன்னது புதிராக இருந்தது. இது நடக்கக் கூடிய காரியமா நான் யோசித்தேன்.  “அறிவு உனக்கு என்ன பைத்தியமா”. இது முடியுமா”? நான் அவனைக் கெட்டேன்.  “ அறிவியலைப் பாவித்து செயமுடியாதது ஒன்றுமேயில்லை. முயற்சி செய்தால் நிட்சயம் வெற்றி பெற முடியும் அப்பா”  நான் அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபடவிரும்பவில்லை.  “அறிவு நீ நினைத்ததை சாதிக்கும குணம் உள்ளவன்.; நீ உன் பெயருக்கு ஏற்ற  புத்திசாலி என்று எனக்குத் தெரியும். அதனால் தான் உனக்கு உனது பதினைந்தாம் பிறந்த நாளுக்கு விலை உயரச்;;த லப்டொப் ஒன்று வாங்கிக் கொடுத்திருக்கிறன். நீ புரோகிராம் எழுதுவதை பாரத்திருக்கிறேன். எனக்கு அது விளங்காது. ஏதோ உன் ஆராச்சியை தொடர்ந்து செய். என் வாழ்த்துக்கள். ஆனால் உன் படிப்பில் கவனம் செலுத்து.”  எனது வாழ்த்தோடு அறிவு தன் ஆராச்சியைத் தொடர்ந்தான்.  எங்கள்  வீட்டுத் தோட்டத்துக்கு வட அமெரிக்க ரொபின் குருவி ஒன்று அடிக்கடி வந்து போகத் தொடங்கியது. அக்குருவியின் ஆயள் காலம் சுமார் 12 வருடங்கள் என என் மைத்துனர் சொல்லி அறிந்திருந்தேன். மேலடியின் ஆயுட்காலமும் அவ்வளவே. மேலடிக்கு ஒரு கம்பீரத் தோற்ற்ம் இருந்தது, மெலடி எவ்வளவு குரைத்தாலும் பொறுமையாக தோட்டத்துக்கு ரொபின் வந்து போகும். அதன வருகை இளவேனிற்காலம ஆரமட்பமாகப் போவதைக் குறிக்கும்.  ரொபின்; பார்ப்பவர்களைக் கவரக் கூடிய அழகிய தோற்றமு;ளள குருவி.; ஆண் ரொபின் குருவி பெண் குருவியலும் பார்க்க பிரகாசமான நிறததைக்கொணடது. ஆதன்; கணணைச்சுற்றி உள் வளையமும், களுத்தில உள்ள வெள்ளைநிற அடையாளமும், அதன் வயிற்றில் உள்ள கடும் ஆரஞ்சு நிற வர்ணமும் ஆண் ரொபின் குருவிக்கு இருக்கும். அதுவே பெண் குருவியில் இருந்து  ஆண் குருவியை வேறுபடுது;திக்; காடடும். வீட்டுத் தோட்டத்துககு  வருவது பெண’ ரொபின்;குருவி என்று என்மைத்துனர் சொன்னார். வேட்டினரி சேர்ஜனான அவருக்குத் nதியாததா என்ன.?   ரொபின் போடும் ஓசையானது ஒரு இன்னிசை போல இருக்கும்.   ஜுலை முதல் ஆகஸட் மாதஙகள் வரை அவை தன் குரலின மகிமையை பாடிக்காடடுவதால் “பாடும் குருவி” என மக்கிளிடையே பெயர் ரொபின் வாங்கியது. தன்னோடு போட்டியாக ஓசை எழுப்ப ஒரு உயிர் வந்ததையிட்டு ஆரம்பத்தில்  மெலடிக்கு போறாமையாக இருந்தது, அதனால் ரொபின் பாடும் போதெல்லாம் மெலடி குரைக்கும். ஆனால் காலப்போக்கில் ரொபின் போடும் இனிமையான ஓசையால மெலடி கவரப்பட்டது. அதனால் ரொபினை தோட்டத்தில் இருந்து துறத்திவிட மெலடி விருப்பப்படவில்லை.   எங்கள் தோட்டத்துக்கு அடிக்கடி வநது போகும் பெண்  குருவி ரொபினும், அணில் ஒன்றும் சில சமயங்களில் ஒன்றாகத் தானியங்களை உண்பதைக் கண்டு மெலடி குரைத்து தன் எதிரப்;பைக் காட்டும். ரொபினுக்கும் அணிலுக்கிடையே நட்பு வளர்வதை மெலடிக்கு பிடிக்கவில்லை போலும். முயல’கள் இரண்டும் தம்பதிகள் போல் வருவதால் எங்கே மெலடி தங்களை கடித்துக் குதறி விடுமோ என்ற பயம் இருந்ததினால் சில நாட்களில்  அவை இரண்டும் தோட்டத்துக்கு வராமலே நின்று விட்டன.   ரொபினோடு ஆரம்பத்தில் மெலடிக்கு பிரச்சனை இருந்தது. ஆரம்பத்தில் ரொபினைக்; தோட்டத்துக்குள் கண்டால் வீட்டுக்குள் இருந்தபடியே குரைத்து, அதைத் தோட்டத்திலிருந்து துரத்த தன்னை வெளியே வீடும்படி ஆராவாரப்படும். தோட்டத்துக் போகும் கதவைத் திறந்து விடும்படி வாசற் கதவில் தொங்கும் மணியை மெலடி அடிக்கும். குருவிகளையும் முயல்களையும்  போய் பயமுறுத்த அதற்கு ஆவல். அவைகளை துறத்திய பின்னர் திரும்பி வந்து வீட்டுக்குள் வர கண்ணாடிக் கதவை மெலடி தன் கால்களால் தட்டும்.   “கதவைத் திறவுங்கள் எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட வேண்டும்” என்பது போல் இருக்கும் அதன் செயல்;. மெலடி வீட்டுக்குள் வர கதவைத் திறந்து விட்டால், உடனே அது உணவும் தண்ணீரும் வைத்திருக்கும் இடத்துக்கு ஓடும். தண்ணீரை மடக் மடக் என்று குடித்தபின்னரே தன் உணவைச் சாப்பிடும்.   மேலடிக்கு ஆங்கலத்திலும் தமிழிலும் நாம் பேசுவது விளங்கும். “மெலடி இரு” என்று ஆங்கிலத்தில் சொன்னால் பதுமையாக இருக்கும். “ மெலடி சத்தம் போடாதே” என்று தமிழில் சொன்னால் குரைப்பதை நிறுத்திவிடும். “மேலடி யூ ஆர் ஏ குட் போய்” என்றால் வாலை ஆட்டியபடி தனது மகழ்ச்சியைக் காட்டியவாறு என் அருகே வந்து தன்னைத் தடவச் சொல்லி முகத்தை நீட்டும். அறிவு பள்ளிக்கூடது;துக்கு போய் திரும்பும் வரை முணுமுணுத்தபடியே இருக்கு;.; அறிவு வீடு திரும்பியபின் சந்தோஷத்தால் அங்கும் இங்கும் ஓடி தன் கவனத்தை அவனிடம் இருந்து கவரப்பார்க்கும்.  அன்று தமிழ் புத்தாண்டு தினம். என் மனைவி கயல், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை ஆகியவறறை தயார் செய்தாள். சுவாமிக்கு படைக்கும் போது காகம் கனடாவில் இல்லததால் தோட்டதுக்கு வரும் ரொபினுக்கு படைக்க நினைத்து; கொஞ்சம் வெண் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் வாழை இலையில் வைத்து தோட்டத்துக்கு வரும்; குருவிகள் உண்பதற்கு வைத்தாள். இதை கவனமாக மெலடி கவனித்துக் கொண்டிருந’தது. கயல் வீட்டுக்குள் வந்த பின் மெலடி மெதுவாக தோட்டத்துக்குச் சென்றது.  கயல்; அதைக் கவனித்துவிட்டாள்.  “ஏய் மெலடி. ரொபினை சாப்பிட விடு. உனக்கு தனியாக பொங்கல் வைத்திருக்கிறன்” என்றாள் சத்தம் போட்டு. மெலடி அதை கேட்காதது போல தோட்டத்துககு;ப் போய் ரொபின்;, கயல் வாழை இலையில் வைத்த பொங்கலை உண்பதை அமைதியாக அவதானித்தபடி நின்றது. தன் குரலை உயர்த்திக் குரைக்கவில்லை. ரொபினும் மெலடியைக் கண்டு பறந்து போகவில்லை. சில நேரத்துக் பின் மெலடிக்கு என்ன தோன்றியதோ தெரியாது மெதுவாக தானும் போய் ரொபினோடு சேர்ந்து பொங்கலைப் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தது.   பொங்கலை உண்ண வந்த அணில் ஒன்றை குரைத்து மெலடி துறத்திவிட்டது. அந்த காட்சியைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மேலடியின் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்னால் அக்காட்சியை நம்பமுடியவில்லை. நான் உடனே அறிவையும் கயலையும்; கூப்பிட்டு மெலடியின் சகோதர தத்துவ உணர்வைத் சுட்டிக் காட்டினேன். கயலால்; கூட அந்தக் காட்சியை நம்பமுடியவில்லை.  “இப்ப ரொபினும்,; மெலடியின் நண்பரகளாகி விட்டார்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒற்றுமையாக வாழ ஒரு உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாக்கும்” என்றேன் நகைச்சுவையாக நான.   “ஆமாம் நாம் காணமுடியாத காதல் அவாகளுக்கிடையே உருவாகிவிட்டது அப்பா. ஆரம்பத்தில் மெலடிக்கும் ரொபினுக்கும் இடையே ஊடல். அந்த ஊடல போய்  காதலாக மாறிவிட்டது. எனறான் அறிவு.   “என்ன அறிவு சொல்லுகிறாய்”? நான் அவனைக் கேட்டேன.   தனது லப்டொப்பைக் கொண்டுவநது மெலடிக்கும் ரொபினுக்கும் இடையேலான பதிவு செய்த உறயாடலைப போட்டுக் காண்பித்தான். அவ்வுரைவாடல் ஆங்கில வார்ததைகளில் மொனிட்டரில் தெரிந்தது. என்னாலும் கயலாலும் அதை நம்பமுடியவில்லை. அறிவு தன் ஆராச்சியில் வெற்றி பெற்றுவிட்டான் என்றது என் மனம்.   “பிரமாதம் அறிவு உன் கண்டுபடிப்பு. இதை விருத்தி செய்; இதற்கு நிட்சயம் மிருகங்கள் பறவைகள் வளர்ப்போருக் கிடையே மார்க்கட் இருக்கும். கண்டுபடித்தால் உன் காப்புரிமையை பதிவு செய்து விடு” என்;றேன் நான்.   “காப்புரிமை என்றால் என்ன அப்பா”?   “பேட்டன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதைக் கண்டுபிடித்த உரிமை உன்னுடையது என்பது அர்த்தம் கயல் நான் சொல்வதைகேட்டுக் ; கொண்டிருந்தாள்.   “பார்த்தாயா கயல். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடையே கூட காதல் ஏற்பட இனம் தேவையில்லை. ஆண்நாயான மெலடிக்கு தோட்டத்துக்கு வருவது பெண் ரொபின் என்று கூடத் தெரியும் போல எனக்குத் தோனறுகிறது.” என்றேன் நான்ட சிரித்தபடி.;   “இது ஊடல் போயின் காதல் என்பது போல் மெலடிக்கும் ரொபினுக்கும் இடையே வளர்ந்த காதல். எங்களுக்கு இவ்விசித்திரமான காதல் புரியாது” என்றாள் கயல். இனி எங்கள் மகன் அறிவின கண்டுபிடிப்பினால் நாய்கள் பறவைளுக்கு இ;டையேலான உறவை நாம் அறியக் கூடியதாக இருக்கும் “ என்றாள் என் மனைவி கயல்.    கதை 11   -   விளைச்சல்      []                             என் சினேகிதி கலைச்செல்வி கொம்பியூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது.   “ பர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில் பல விதமான மூலிகைச் செடிகள் உண்டு. ரிஷகளும், சித்தர்களும் அச்செடிகளைப் சித்த வைத்தியத்துக்குப் பாவித்திருக்கிறார்கள்.; தீர்க்க முடியாத நோய்களைத் குணப்படுத்த, தற்காலத்தில் பல மூலிகைகளை உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். நீரழிவுக்கும் . சிறு நீரக வியாதிக்கும் சீனாவில் மூலிகை மருந்துகள் உண்டு. எங்களுடைய கிராமபுரத்து பச்சைப்பசேல் என்ற தோற்றமுள்ள வயல் வெளிகள் பார்பதற்காக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அதனால் கிடைக்கும்; பயன்கள் பல. உணவு தருகிறது. விவசாயிகளுக்கு வருமானம் வருகிறது. வயலில் வேலை செய்வதால் தேகநலம் கெடாது. அதுமட்டுமல்ல புத்தர் போன்ற பல ஞானிகளும், ரஷிகளும்,; சித’தர்களும் மரத்தின் கீழ இருந்தே தியானம் செய்து முக்தி; பெற்றதை நாமறிவோம். இந்துமதத்தில் கூட தல விருட்சத்துக்கு தனி மதிப்புண்டு. குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் மரத்தை பல தடவை சுற்றி வந்து வணங்கி பிள்ளை வரம் வேண்டுவார்கள். வட அமெரிக்க பூர்வகுடிமக்கள் இயற்கை கொடுத்த மரங்களை தெய்வமாகக் கருதுபவர்கள். மரங்கள், தம்மில்; உள்ள நேர்மறைச் சக்தியை தன் கீழ் அமர்ந்து தியானம் செப்பவர்களின் எதர்மறைச் சக்தியை நீக்கி தன் நேர்மறைச் சக்தியைப் பகிர்ந்து, மனித சக்தியை பரிசுத்தப்படுத்துகிறது. இது முக்திக்கு வழிவகுக்கிறது இவ்வாறு தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற என் சினெகிதி கலைச்செல்வி மரங்களைப் பற்றி எனக்கு ஒரு லெக்சர் கொடுத்தாள்;.   “அது சரி செல்வி தாவரவியல் கற்றபின் மேலும் ஆராச்சி செய்ய உனக்கு நோக்கம் ஏதும் இல்லாயா?   “ஏன் இல்லை. தாவரங்களின் வளர்ச்சியும் அவையின்; விளைச்லகள் பற்றி ஆராச்சி செய்து வருகிறேன். இது உணவு உற்பத்திக்கு வழிவகுக்கும். உரம் போட்டு வளர்ச்சியையும்; விளைச்சலையும் அதிகரிப்பதை நான் ஆதரிப்பவள் அல்ல” எனறாள் செல்வி.   “ஏன் அப்படி சொல்லுகிறாய்”?   “கடைகளில் கிடைக்கும் உரம், பல இரசாயனப் பொருட்கள் கலந்தது. நிலத்தை பாலடைய செய்து விடும். வயல்களில் உள்ள நீருடன் இரசாயனம் கலந்து, அந் நீர் வாய்க்கால் வழியே ஓடி, நதியோடு கலப்பதால் நதியை அசுத்தப்படுத்துகிறது.”   “அப்போ வயலில் விளைச்சலை அதிகரிக்க உரம் பாவிக்க கூடாது என்கிறாயா’?   “நான் அப்படி சொல்லவில்லை. இயற்கையில் கிடைக்கும் உரமே நல்லது”   “அதென்ன இயற்கையான உரம?   “மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின் சாணம்இ இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க் கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும் வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக மண்புழு உரம் கருதப்படுகிறது.”“   “அதுசரி செல்வி விளச்சலை அதிகரிக்க வேறு இயற்கையான வழி உண்டா”? நான் கேட்டேன்.    “ சில மாதங்கள் பொறுத்திருந்து பார் நான் செய்யும் பரிசோதனை நல்ல முடிவை தருமாகில் விளைச்சலில் புது புரட்சியை உண்டுபன்னலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு” என்றாள் செல்வி.  யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 14 கிமீ தூரத்தில் வழுக்கை ஆறு தழுவிச் செல்லும் கிராமம் அளவெட்டியூர். பசுமை நிறைந்த வயல் வெளிகள்.   பல நாதஸ்வர வித்துவான்களை உருவாக்கிய ஊர். அந்தக் கிராமத்தில் நாதஸ்வர வித்துவான் நாகநாதனை தெரியாதவர்கள் இல்லை. சண்முகம் வீதியில் எப்போதும் நாதஸ்வர ஒலி கேட்டபடியே இருக்கும். நாகநாதனின் தந்தை சண்முக சுந்தரம் அளவெட்டிக்குத் தன் நாதஸ்வர இசை மூலம் சிறப்பைக் கொண்டு வந்தவர். பல விருதுகள் பெற்றவர். ஆறுமுகம் பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆகிய வித்துவான்களிடம் தேர்ச்சி பெற்றவர். இசைக் கலை மூலம் செல்வம் சேர்த்து, பல வயற்காணிகளுக்குச் சண்முகசுந்தரம் சொந்தக்காரானார். அவர் செல்வம் சேர்த்த வழியே அவரின் ஒரே மகன் நாகரத்தினமும் தன் சொந்த உழைப்பால் ஒரு பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரன் ஆனார். அவரின் மகள்; கலைச்செல்வியும் நானும் ஒன்றாக சிறுவயது முதற்கொண்டே படித்தவர்கள். என் வீடு செல்வியின் விட்டில் இருந்து சண்முகம் வீதியில் அவள் வீட்டுக்;கு ஐந்து வீடுகளுக்கு வடக்கே  இருந்தது. நாங்கள் வசித்த வீதிக்கு செல்வியின் தாத்தாவும், காலம் சென்ற பிரபல நாதஸ்வர வித்துவானுமாக இருந்த சண்முகசுந்தரத்தின்  நினைவாக சண்முகம்; வீதி என்ற பெயர் இருந்து வருகிறது. சண்முகசுந்தரம் பலவருடங்களுக்கு முன் மிக பிரபல்யமான நாதஸ்வர வித்துவானாக இருந்தவர். அவரின் ஒரே மகன் தான்; செல்வியின் தந்தை நாகநாதன் அவரும் பிரபல நாதஸ்வர வித்துவானாக வருவதற்கு அவரின் தந்தையே முக்கிய காரணம். செல்வியின்; அண்ணன் தட்சனாமூர்த்தி, தந்தை நாகநாதன்  நாதஸ்வர வாசிக்கும் கோவில்களிலும் இசைவிழாக்களிலும்,  நிட்சயம் தவில் வாசிப்பான்.   நாகநாதன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்றே சொல்லாம். அவரின் மகள் கலைச்செலவி பரதநாட்டியத்தை முறைப்படி கற்றவள். அவளின் தாய் தர்மாம்பாள் ஒரு நல்ல பாட்டுக்காரி. கர்நாடக சங்கீதத்தை விரும்பி கற்றவள். சினிமா பாடல்கள் பாடுவதைத் தவிர்த்தாள் ஆனால் தர்மாம்பாள் பாரதியார் பாடல்களை பாடும் போது மெய்மறந்து கேட்டுக்கோண்டிருக்கலாம்.   செல்விக்கும் தந்தை நாகனாதனுக்கும் இசைமடடுமல்ல தாவரங்கள மேலும் அதிக ஆர்வமிருந்தது. அவர்களது பெரிய வளவு உள்ள வீட்டில் பல விதமான மலர்செடிகளும், பழம் மரங்களும் இருந்தன. தினமும் தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்து அரைமணி நேரமாவது நாதஸ்வரம் வாசிப்பதில் நாகநாதன் அமைதி கண்டார். அவரொடு சேர்ந்து அவர மகன் தட்சணாமூர்த்தியும்  தவில் வாசிப்பான்.   செல்வி தாவரவியலில் படித்து பட்டம் பெற்றபின் அளவெட்டி அருனோதயா கல்லூரியில் ஆசிரியையாக இருந்தாள். என்னையும் அத் துறையில் படிக்கும்படி அவள் வற்புறுத்தியும,; எனக்கு பௌதிகத்தின் மேல் தனி விருப்பம்.   “அபர்ணா ஏன் உனக்கு பௌதிகத்திலும் கணிதத்திலும் இவ்வளவு மோகமோ தெரியாது. நீயும் தாவரவியலை என்னோடு சேர்ந்து படித்திருக்கலாமே” என்பாள் செல்வி; அடிக்கடி.   “செல்வி எந்தப் பாடம் எனக்கு விருப்பமோ அதைத் தான் நான் படிக்க விரும்புகிறேன். என் அம்மா ஒரு கணிதம் கற்பிக்கும் ஆசிரியை. எனது அப்பா ஒரு பொளதிக ஆசரியர். அதுதானோ என்னவோ எனக்கு கணிதத்திலும்; பௌதிகத்திலும் ஈடுபாடு வர் காரணம’” என்பேன்   “அபர்ணா நீ என்னை போல் பரதநாட்டியம் அல்லது இசை கற்கலாமே”.   “செல்வி உன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். அது உங்களுக்குள் பரம்பரையாக   வந்திருக்கிறது. எங்கள் குடும்பம் அதற்கு முற்றிலும் வேறுபட்டது. எனது தநதை ஒரு பௌதிகப் பட்டதாரி. மகாஜனா கல்லூரியல் அசிரியராக இருக்கிறார். எனது தாய் அதே கல்லூரியில் கணித ஆசரிiயாக இருக்கிறா. அவர்களின் பாதிப்பு என்னை பௌதிகத்துறையில ஆர்வம் காடட் வைத்ததால் அத்துறையில் படித்துப் பட்டம் பெற்றேன. அது சரி செல்வி உன்னிடம் ஒருகேள்விகேட்க வேண்டும்.”  “கேள் அபர்ணா”   “நீயும் நானும் ஒனறாக போய் திருநெல்வேலி பண்ணையில் ரோஜா செடிகள் வாங்கி வந்து நட்டோம். ஏன் என்; செடிகள் இன்னும் பூக்கவில்லை? எங்கள் வீடடு;த் தோட்டத்து மா மரம் காயப்பது குறைவு. ஆனால் அதற்கு எதிர்மாறகா உன் வீட்டு ரோஜா செடிகள்  வளர்ந்து பூத்து குலுங்குகிறது. உங்கள் தோட்டத்து மாமரங்களிலும், பலா மரங்களில் நிறம்ப பழங்கள் உண்டு. அதெப்படி செல்வி “?   “அபர்ணா நான் சொல்வதை சற்று கவனமாகக் கேள். நான் செய்த பரிசோதனை ஓரளவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்”   “எனக்கு விளங்கவில்லை. விபராமாய் சொல்”   “இசையை உருவாக்குவது வெவ்வேறு அதிர்வுகள் கொண்ட ஒலி அலைகளே. ரிஷிகள் மந்திரங்கள் ஜெபித்து சாதனை படைத்தார்கள் . அதே போல் எங்களி வீட்டில் நான் பரதநாட்டியம் ஆடும் போது ஒலிக்கும்  சலங்கை ஒலியானது என் வீட்டு ரோஜா செடிகளைப் பூத்துக் குழுங்கவைத்தது. என் அப்பா பின் வளவில் இருந்து இயற்கையை இரசித்தவாறு நாதஸ்வரம் வாசிப்பார். அதோடு மட்டுமல்ல எங்கள் வயற் காணிக்கு அடிக்கடி சென்று அங்கும்; வாசிப்பார். அதன் விளைவாகவே  எங்கள் வயற்காணியில் மற்றவர்களின் வயல்களை விட பல மடங்கு விளச்சல். இதெல்லாம் ஒலி அலைகள் செய்யும்; சூட்டசுமம். அவ்வலைகள் மரங்களுக்கும் நெற்கதிர்களுக்கும் எடுத்து செல்வது நேர்மறையான சக்தி. அச்சக்தியை பெற்றதினால் உரம் போடாமல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இது நான் செயத பரிசோதனையில் கண்ட உண்மை. இதை நான பரிசோதித்தப் பின்னர் அப்பாவை எங்கள் தோட்டத்திலும் வயற்காணியிலும் அவரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னேன். அதன் காரணத்தை விளக்கினேன். அவர அது சாத்தியமா என்று தமிழ் நாட்டில் உள்ள அண்ணாமலை பலகலைக் கல்லூரி இசைத் துறை சார்நதவர்களிடம் விசாரித்தார். அவர்களும் அது நடப்பது சாத்தியமே என் சொன்னாரகள் அபர்ணா” என்றாள் செல்வி.  நான் அதிக விளைச்சலுக்கு அவள் சொன்ன விளக்கததை கேட்டு அதிசயப்பட்டேன். “ஒலியின மகத்துவம் தான் என்ன வெளவால்கள் கூட ஒலி அலைகள் மூலமே திசைளை அறந்து பறக்கின்றன. அது மட்டுமல்ல வைத்திய துறையலும் ஒலி அலைகள் பாவிக்கப்டுகிறத எனபது எனக்கு தெரியமு;. அதை அலடிராசவுணட் எனபாரகள். ஆகவே சொலவதை நான ஏற்றுக்கொளகிறேன் செல்வி” என்நேன் நான.   “அபர்ணா இன்னொன்று உனக்குச சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வயற்காணிக்கு அரசாங்க விவசாய இலாக்காவில் இருந்து அதிக விளைச்சலுக்காக முதல் பரிசும், விருதும் கிடைத்திருக்கிறது.   “அப்போ செல்வி உங்கள் தோட்டத்து மாமரங்கள் இப்படி இலை தெரியாமல் காய்த்து குழுங்கியதுக்கு பரிசு கிடைக்கவில்லையா” நான் கெட்டேன்.   “ஏன் இல்லை. ஒரு பெட்டி நிறம்ப கறுத்தகொழும்பான், அம்பளவி மாம்பழங்களை உனக்கு என் பரிசாக வைத்திருக்கிறேன்” என்றாள் சிரித்தபடி செல்வி. அதை ஆமோதிப்பது போல் அவள் அண்ணனின் மங்கள தவில் ஓசை கேட்டது.    கதை 12   -   நுண்ணறிவு – IQ     []                                                                 “என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை.” இது என் அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் வசனம்.   என் அப்பாவின் குறைந்த புத்திசாலித்தனத்தை பற்றி  என் அம்மாவுக்குத் தெரிந்திருந்தும் அவர் மேல ஒரு போதும் குறை சொல்லமாட்டாள். எப்படி இருந்தும் அவர், அவளின் கணவன் அல்லவா? என் அப்பாவின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுபவள் புத்திசாலியான என் அம்மா. எது நடக்கப் போகிறது அதை முன்கூட்டியே கணிக்கக் கூடியவள். வரலாற்றுத் துறையில முதலாம் வகுப்பில தேறிய  பட்டதாரி. அவள். சில காலம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்தவள். ஈPழத்து வரலாறு என்ற நூலை எழுதியவள். உலக வரலாற்றில் நடந்த முக்கிய சம்பவங்கள் எந்த ஆண்டு, எந்த மாதம் நடந்தது என்பதை நினைவில் வைத்திருப்பவள்.  என் பெற்றோர் குடும்பத்தைப் போல் என் குடும்பமும் அமைந்து விட்டது.  நான் ஒரு சாதாரண வர்த்தகன். முதிசமாக எனக்கு வந்து சேர்ந்த செல்வமும், என் மனைவி சரஸ்வதி கொண்டு வந்த சீதனமும் சேர்ந்ததால் எங்கள் குடும்பத்தில சௌகரியத்துக்கு குறைவில்லாத வாழ்வுக்கு பெரிதும் உதவியது. என் குடும்பத்தில் சில வருடங்களுக்குப் பின் பிறந்தவன் தயாநிதி. ஒரே பிள்ளை என்ற படியால் அவன் கேட்டதைக் கொடுத்தோம். அவனோடு விளையாட ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்தினோம்.   அன்று என் மனைவி சரஸ்வதி என்றுமில்லாதவாறு கவலையோடு ஹாலில் எனக்காக காத்திருந்தாள்.  “என்ன சரஸ் ஒருநாளும் இpல்லாதவாறு  எல்லா வசதிகளும் இருநதும் எதற்காக கவலையாடு இருக்குறீர்? நீர் வேலை செய்யும் இடத்தில் எதும் பிரச்சனையா”? நான் என் மனைவியைக் கேட்டேன்.  “சிவா எல்லா வசதிகளும் செல்வமும் இருந்தால் மட்டும் போதுமா, எங்கள் மகன் தயாநிதி; படித்து கல்விமானாக வேண்டாமா?” அவளிடமிருந்து நான் எதிர்பாராத பதில் வந்தது. அவளுக்கு தன் மகன் தன்னைப்போல படித்து பட்டதாரியாக வேண்டும் என்ற ஆசை இருப்பது எனக்குத் தெரியும்.  சரஸ்வதி மற்ற பெண்களைப் போல் இல்லாமல் சற்று மாறுபட்டவள். பெண்ணுரிமைக்காக போராடுபவள். அதனாலோ என்னவோ என்னை அத்தான்இ இஞ்சாருங்கோ அல்லது அப்பா என்று அழைக்காமல், சிவச்சநதரனான என்னை சுருக்கமாக சிவா என்று, திருமணமான முதல் கொண்டே அழைக்கத் தொடங்கினாள். கணவனை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் எங்கள் இனத்தவர்களிடையே இல்லாத பழக்கம். என் பெற்றோரும் தங்கள் மருமகள் என்னை சிவா என்ற அழைப்பதை விரும்பவில்லை என எனக்குத் தெரியும். ஆனால் நான் என் மனைவி என்னை அப்படி அழைத்ததை எதிர்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவளின் புத்திசாலிதனமும், அவள் வகித்த பதவியும். எனது ஏற்றுமதி பிஸ்னஸ் பிரபல்யமாக வளர்வதற்கு அவளே முக்கிய காணகர்த்தா. பிஸ்னசின் வரவு செலவுத் திட்டத்தை வருடா வருடம் தயாரித்து, மேற்பார்ப்பதும் அவளே.  எனது புத்திசாலி தனத்துக்கும் அவளது நுண்ணறிவுககும் இடைவெளி அதிகம். என் தந்தை என் அம்மாவினதும் அவரின் ஊழியரகளின் புத்திசாலிதனத்தை நம்பியே வரத்தகம் செய்து, சொத்து சேர்த்தவர். அவரை புத்தசாலி என்று சொல்லமுடியாது. எனது மந்தக குணத்தைப் புரிந்தோ என்னவோ எனக்கு வரும் மனைவி புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று கணித பட்டதாரியான சரஸ்வதியை, படித்த குடும்பத்திலிருந்து தேர்ந்தெடுத்தார்.  சரஸ்வதியின் குடும்பத்தில் எல்லோரும் படித்து பட்டம் பெற்றவர்கள். சரஸ்வதியின் தந்தை அரச வருமான வரி இலாக்காவில் பிரதம கணக்காளராக இருந்து ரிட்டடையரானவர். தாய் ஒரு விஞ்ஞான ஆசிரியை. தமையன் பௌதிக பேராசிரியர். தங்கை சாவித்திரி ஒரு மூளை சம்டபநதப்பட்ட வியாதிகளுககுக கண்சல்டன் டாக்டர். சரஸ்வதியின் தம்பி சந்திரன் மாநிலத்தில் செஸ்போட்டியில் முதலாவதாக வந்தவன். பதின்ரெண்டாம் வகுப்பு படிக்கும் அவன் படிப்பில் கெட்டிக்காரன். பொறியியலாலனாக வரவேண்டும் என்பது அவன் நோக்கம். சரஸ்வதியின் பெற்றோர் குடும்பத்தோடு, என் பெற்றோர் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தலை குனியும் நிலை என் பரம்பரைக்கு இருந்தது, செல்வம் இருந்தும் புத்திசாலித்தனம்; எனது தந்தையிடமும் , பாட்டனாரிடமும் அவ்வளவுக்கு இருந்ததில்லை என்று அம்மா எனக்குச் சொல்வதுண்டு. அநத மந்தக்குணம் மரபணு வழிவந்ததாக இருந்திருக்கலாம். அந்த தாழ்வு மனப்பான்மையோடு வளர்ந்த என் முன்னேறத்துக்கு, துணைபோனவள் மிக புத்திசாலியான என் மனைவி சரஸ்வதி என்பது எனக்குத் தெரியும்.  ஒரு பிரபல முதலீட்டு நிறுவனத்தில கணக்கியலில் பல பட்டங்கள் பெற்றதால், பிரதம கணக்காளராக அவள் வேலை செய்தாள். அவளது புத்திசாலிதனத்தால் “ஸ்மார்ட் இன்வெஸ்டர்’” என்ற அந்த நிறுவனம் வெகு விரைவாக வளர்ந்து, வணிகத்தில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நிறுவனங்களில்; மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நிறுவனத்தில் முதலீடு செயத பங்குதாரர்கள் அவள் திறமையைக் கண்டு அவளை நிறுவனத்தின் உபதலைவராக நியமித்தனர். அது எனக்கும் என் பெற்றோருக்கும் பெருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பது அவளே. அதுவும் என்னை பெயர் சொல்லி அவள் அழைப்பதை என் பெற்றோர் எதிர்க்காதற்கு ஒரு முக்கிய காரணம். நானும் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.  தன்னைப் போல் தன் மகனும் புத்திசாலியாக வளர வேண்டும்; என்பது சரஸ்வதியின்; எதிர்பார்ப்பில்; தவறில்லை. அவனுக்கு; மந்தக் குணம் என்று  தெரிந்தபடியால், அவளுக்கு தன் மகன் தயாநிதி என்னைப் போல் ஆகிவிடுவானோ என்ற பயம் இருந்து வந்தது.  தயாநிதியின் ஸ்கூல் ரிப்போர்ட் சரஸ்வதியின் கையில் இருந்ததை கண்டேன். எனக்கு ஓரளவுக்கு பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.  “என்ன சரஸ்வதி எப்படி தாயவின் ஸ்கூல் ரிப்போர்ட் இருக்குது”? நான் நேரடியாக அவளைக் கேட்டேன்.  “அதை ஏன் கேக்கறியல் சிவா. எல்லாப் பாடங்களிலும் நாற்பது மார்க்சுக்கு குறைவாகவே தாயா எடுத்திருக்கிறான். கணகில் இருபது, சயன்சில் இருபத்தைந்து, தமிழுக்கு முபத்திரண்டு. ஆங்கலத்துக்கு முப்பது. கிலாஸ் டீச்சர் எங்களை அவசியம்  தன்னை வந்து சந்திக்கச் சொல்லி;  நோட் அனுப்பியிருக்கிறா”, கவலையொடு சரஸ்வதி சொன்னாள்.  “அப்படியா?. தயாவைச் சொல்லி குற்றமில்லை. பாவம் அவனால் முடிந்தது அவ்வளவு தான்.” நான் என் மகனுக்காகப் பரிந்து சொன்னேன்.   “உங்களுக்க தெரியுமா பரீட்சைக்கு ஒரு கிழமைக்கு முதல் அவனுக்கு நான்  வைத்த ஐகியூ டெஸ்டில் அவன் எடுத்த புள்ளிகள் 50. இது அவனது புத்திசாலித்தனத்தின் அடி மட்டமான நிலையை காட்டுகிறது. என் நிறுவனத்தில் எனனை வேலைக்கு இன்டரவியூ செய்த போது அவர்கள் வைத்த ஐகியூ டெஸ்டில் எனக்குக் கிடைத்தது 155 புள்ளிகள். புpரபல விஞ்ஞானி அயன்ஸ்டைனின் ஐகியூ 170. இது நூற்றுக்கு ஒரு விகத்திலும் குறைந்தவர்களுக்கு மட்டுமே இருக்கும்”  “சரஸ் உம்மோடு உம் மகனை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம். எல்லோரின் திறமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவனுக்கு சராசரி  ஐகியூ லெவலான 100 இருந்தாலே போதுமானது”இ நான் மகனுக்காக பரிந்து சொன்னேன்.  “சிவா நான் தயாநிதியின் நுண்ணறிவைப் பற்றி  கொண்சல்டன் டாக்டராக இருக்கும் என் தங்கை சாவித்திரியிடம் ஆலோசனை கேட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவள் சொன்னாளஇ; இது மரபணு தொடவுள்ள பிரச்சனையாக இருக்கலாம். அப்படி இருநதால் இப்போது செல் திரப்பி செய்து நிலமையை சிர்திருத்த வாயப்புண்டு;. அதைவிட பல வழிகளுண்டாம். மூளை ஒப்பிரேசன் செய்வதை தவிர்க்கட்டாம்..”  “பழுதடைநத மரபணுக்களை புதிய நுண்ணறிவு திறன் அதிகமாயுள்ள ஒருவரின் மரபணுக்களினால் மாற்றினால் நுண்ணிறவு அதிகரிக்;கலாம் என்பதற்கான பரிசோதனைகள் செய்து வெற்றியும் கண்டார்களாம்” அந்த மரபணு மாற்று சிகிச்சை அமெரிக்காவில் செய்து வெற்றி கண்டிருக்கிறார்களாம். அதற்கு பணம் அதிகம் செலவாகும்: நீங்கள் என் நினைக்கிறீரகள் சிவா”, சரஸ்வதி என் பதிலை எதிர்பார்த்தாள்.  “இங்கைபாரும் சரஸ், இது போன்ற முக்கிய முடிவுகளை நீ எடுப்பது வழக்கம். மரபணுமாற்றத்தால் தயாவின் நுண்ணறிவில் முன்னேற்றம் இருக்குமாயின் எனக்கும் அந்த சிகிச்சையை தயாவுக்கு செய்வதறகு சம்மதம்”;. இதைப்பறிறி நான் என் பெற்றோரோடு பேசியபோது, அம்மாவுக்கு அந்த சிகிச்சை செய்வது சரியெனப் பட்டது” என்றேன் நான ;  “எனது பேரன் ஒரு சாணக்கியனாக வரவேண்டும் என்று நான் எதிரபாரக்கவில்லை. ஓரளவுக்கு சராசரி நுண்ணறி ஈவு இருந்தால் அதுவே போதும்.” என்றாள் அம்மா.  பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்து, மரபணு திரபி சிகிசசையை தயாவுக்கு செய்வதற்கு நியூயோரக்கில் உள்ள பிரபல்யமான மவுண்ட் சினாய் வைத்தியசாலைக்கு சரஸ்வதி அவனை அழைத்துச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.  மவுணட் சினாய் வைத்திய சாலையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தயாவின் உயிரணுக்கள் முழுவதையும் மாற்றத் தேவையில்லை என்பதை அறிந்தார்கள்.  மரபணு சிகிச்சையை பாதிக்கபட்ட  உயிரணுக்கள் திருத்தும் முயற்சியில டாகடர்கள் ஈடுபட்டனர். . நுண்ணறிவு கூடிய ஒருவரின் உயிரணுக்களை பாவித்து சிகிச்சை அளிக்பட்டது. சிகிச்சைக்கு பின் ஒரு மாதம் தயாநிதியில் ஏற்பட்ட மாற்றத்தை ஐகியூ டெஸ்ட்டுகள் செய்தபோது றுண்ணறிவு ஈவானது 110 க்கு உயர்ந்ததை டாகடர்களால் அவதானிகக் கூடியதாக இருந்தது. நல்லவேளை செய்த மறபணு சிகிச்சையினால் எதிர்பாரத்த மாற்றம் ஏற்பட்டது டாகடர்களுக்கு மகிழச்சியைக் கொடுத்தது. இச்சிச்சை எதிர்பாரத விளைவைக் கொடுகாதிருந்தால், அடுத்ததாக மூளை சிகிச்சை செய்யதிருக்க வேண்டிய நிலை ஏற்பட்;டிகலாம். ஆதனால்  உயிருக்கு ஆபத்தும் ஏறபட்டிருக்கலாம்.  சிகிசசை நடந்து ஊர் திரும்பிய பல மாதங்களுக்கு பின் தாயநிதியன் படிப்பில் மாற்த்தைக்கண்டு சரஸ்வதி மகழ்ச்சியடைந்தாள். வகுப்புpல் எல்லாப்பாடஙகளிலும் எழுபதுக்கு மேல் புள்ளிகள் பெற்று மூன்றாம் மாணவன் ஆனான்.. தான எதிர்பார்த்த நுண்ணறிவு உள்ளவானாக தயா வளர்வதைக் கண்டு நானும் சரஸ்வதியும,; என் பெற்றோரும், சரஸ்வதியின்  பெற்றோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.    (யாவும் கற்பனையே)   கதை 13   -   மனஇறுக்கம் ( Autism)                                                                                          நானும் என் கணவன் நாதனும் பார்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூட பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் கூட  சகோதரன்கள் இல்லை. சகோதரிகள் மட்டுமே இருந்தார்கள். என் பெற்றோரும் என் மாமனார் குடும்பம்; தங்கள் பெண் பிள்ளைகளைக் கரை சேர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று எனக்கும், நாதனுக்கும் மட்டுமே தெரியும்.  எங்களுக்குப் பிறந்தது மூன்று பெண் குழந்தைகள். முத்தவள் கங்கா. வாக்குக் கண். யரை அவள் பார்க்கிறாள் என்று அறிவது கடினம் இரண்டாவது ஜமுனாவுக்கு. திக்குவாய். வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வெளி வர கஷ்டப்படும். மூன்றாவது சரஸ்வதி, உடற் பருமன் கூடியவள். யானை அசைவது போல் நடப்பாள்.  இப்படி முன்று பெண்களும் ஏதாவது ஒரு குறையோடு இருந்தாலும்; படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள். மூத்தவள் கணிதப் பட்டதாரி ஆசிரியை. இரண்டாமவள் பொளதிகவியல் பட்டதாரி. கடைசிப்பெண் சரஸ்வதி மருத்துவக் கல்லாரியில் முதலாவது ஆண்டு. சரஸ்வதிக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம். அவள் ஆசைப்பட்டதால் செலவு பாராமல் ஒரு பியானொ வாங்கிக் கொடுத்தோம். நேரம் கிடைத்த போது பியானோவில் சினிமா பாடல்களை வாசிப்பாள்.     நாங்கள் இல்லாத காலத்தில் மூன்று பெண்களும் தங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற தைரியம் எங்களுக்கு இருந்தது. நான் நான்காவது தடவையாக, நாற்பத்தைந்து  வயதில் கருவுற்ற போது என் மாமியார் எனக்கு சொன்ன வார்த்தைகள் என் காதில் இன்னும் ஒலித்தபடி இருந்தது.  “எடியே சுந்தரி இதொடு நிறுத்திக் கொள.; உனக்கு கிடைக்ப்போகிறது கடைசி குழந்தையாக இருக்கட்டும். இந்தக்; குழந்தையாவது ஆணாக பிறக்கட்டும். உங்களுக்கு கொள்ளி வைக்க ஒரு ஆண் வாரிசை ஆவது பெத்துவிடு”.  “மாமி நிட்சயம் இந்த முறை பிறக்கப்போவது ஆண் குழந்தை தான்” நான் அவளுக்கு சிரித்தபடி சொன்னேன்.”  “ அதப்படி சுந்தரி சொல்லுறாய்”? மாமி கேட்டா.  “நானும், அவரும் ஹொஸ்பிடலுக்குப்; போய், ஸ்கான் செய்து பார்த்து, ஆண் குழந்தை என்று உறுதிசெய்தாச்சு”.  “அப்படியா. நல்ல செய்திதான். அவனை நல்லபடியாக வளர்த்து டாக்டருக்கோ அல்லது என்ஜினியருக்கோ படிப்பித்தவிடுங்கோ”,  என்றாள் மாமி தன் மகனைப் பார்த்து.    “என்ன பெயர் வைக்க யோசிச்சிருக்கிறியள்’? என்னை அப்பா கேட்டார்.  “ஆதித்தியா என்று பெயர் வைக்க யோசித்திருக்கிறோம் அப்பா”.  “நல்லபெயர் தான் அறிவில் சூரியனை போல் பிரகாசமாக அவன் வளரட்டும்” என் அம்மா வாழ்த்தினாள்.  எங்கள் மகனின் வரவை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம.; என் மூன்று பெண்களுக்கும் தங்களுக்கு ஒரு தம்பி வரப்போகிறான் என்ற மட்டற்ற மகிழ்ச்சி.  நான் எதிரபார்க்காவாறு அவன் குறிப்பிட்ட காலத்துக்கு முதல், குறை மாதக் குழந்தையாக , எட்டு மாதத்திலேயே, திருகோண நட்சத்திரத்தில பிறந்தான் ;. ஏன் பிரசவம் முதல் மூன்று  பிரசவங்களைப் போல் சுகப் பிரசவம் இல்லை.   “திருகோண நடசத்திரம் எனற படியால ஒரு கோணத்தை உன் மகன் ஆளுவான்” என்றாள் அம்மா.  “அம்மா உன் வாக்கு பொன் வாக்காக இருக்கட்டும் “ என்றேன் நான்.  பிறந்ததும் ஆதித்தன் அழவில்லை. சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் அழுகைக் குரல் கேட்டது. என்னருகே அவன் படத்திருந்த போது திரும்பி அவனைப் பார்த்தேன். பெயருக்கு ஏற்ற பிரகாசமான முகம். நாதனைப்போல் கொழுத்த கன்னங்களும,; நிறமும். என்னைப்போன்ற அகண்ட விழிகள். தலை நிறைய கறுத்த மயிர். குழந்தையின் அங்க  அசைவு சற்று குறைவாக எனக்குத் தெரி;ந்தது.  நாட்கள் போகப்போக  அவன் வளர்ச்சியில் ஒரு வித வித்தியாசம் இருந்ததைக் கண்டேன். அவன் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிந்தது. அங்க அசைவுகளில் ஒரு சிறு நடுக்கம். அழுகையில் கூட தொடர்ச்சி இருக்கவில்லை. எதாவது பொம்மையை கையில் கொடுத்தால், உடனே அதை மற்ற குழந்தைகள் போல் ஆசையொடு வாங்கமாட்டான். போத்தலில் பால் கொடுக்கும் போது, உறிஞ்சிக் குடிக்கமாட்டான். அதிக நேரம் எடுக்கும். எனக்கும் நாதனுக்கும் அவன் வளரும் போது தாமதித்த அவனின் அங்க அசைவுகளை காணக்கூடியதாக இருந்தது. எனக்கு பிறக்கும் மகன் குறைவற்றவனாக பிறக்க வேண்டும் என நாம் இருவரும்; எதிர்பார்த்ததுபோல்  என் மகன் இருக்கவில்லை என்பதை ஆதித்தனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது கண்டோம். எதோ ஒரு கிரகணம் சூரியனை மறைத்து விட்டது போல் எனக்குப் பட்டது. என் அம்மாவும், அப்பாவும் ஆதித்தனின் போக்கில இருந்து, சாதாரணக் குழந்தை போல் அவன் இல்லை என்பதை கவனித்துவிட்டார்கள்.  “சுந்தரி, ஆதித்தனில் ஏதோ குறையிருக்கறது போல எனக்குத் தெரிகிறது.; ஆதித்தனை நீங்கள் அவசியம் டாக்டரிடம் கொண்டு போய் காட்டு. தாமதிக்காதே “ என்றாள் என் அம்மா. என் மாமியும் அவளோடு சேர்நது கொண்டாள்.  .“பரவாயில்லை அம்மா, அவன் வளர்ந்ததும்; அவனில் மாற்றம் ஏற்படலாம். அவனுக்கு ஒரு பிரச்சனயும் இல்ல. டாக்டரைப் போய்  பார்க்க தேவையில்லை. பிறகு வெறு எதையும் பரிசோதனையில்  கண்டு பிடித்து சொல்லக் கூடாததை டாக்டர் சொன்னால், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது அம்மா. எங்களுக்கு இவன்தான் ஒரே மகன். இனி எனக்கு குழந்தைகள் வேண்டாம்”இ நான் உறுதியோடு அம்மாவுக்குச் சொன்னேன்.  வயது ஏற ஏற, அவனின் அட்டகாசம் கூடியது. வீட்டு மதிலிலும், தோட்டத்தில் இருந்த மரங்களிலும் ஏறத் தொடங்கினான். சோபாவில் ஏறி குதித்து விளையாடுவான். மேசையில் இருநத விலை உயர்ந்த கடிகாரத்தை புத்தகத்தை வீசி உடைத்துவிட்டான். நான் பொறுத்துக்கோண்டேன். எங்களுக்கு அவன் ஒரே மகன் அல்லவா?  சிலரின் ஆலோசனை படி, குழந்தைகளை பராமரிக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்த்தேன். மற்ற குழந்தைகளோடு ஆதித்தன் சேர்ந்து விளையாடினால், சில வேலை அவனில் மாற்றம் எற்படலாம் என்று  நான் நினைத்தேன். அந்த நிலையத்தில் அவன் போய் சேர்ந்து ஒரு மாதததுக்குள் எங்களுக்கு அவனைப்பற்றி; வந்த முறைபட்பாடுகள் பல.   “உங்கடை மகன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுகிறான் இல்லை. நாங்கள் சொல்வதை கேட்கிறான் இல்லை. அடம் பிடிக்கிறான். சில சமயம் மற்ற பிள்ளைகளைக் கிள்ளுகிறான். அவர்கள் அழுவதைப் பார்த்து கை தட்டிச் சிரிக்கிறான். உங்கடை மகனுக்கு “ஓட்டிசம்” என்ற மன இறுக்க நோய் இருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது. உங்கள் மகனை ஒரு மனநோய் ஸ்பெசலிஸ்ட்டிடம் கொண்டு போய் காட்டினால் நல்லது. அப்படி ஓட்டிசம் நோயாக இருந்தால் அதற்கான நிவாரணத்தை அவர் சொல்லலாம்”இ என்றாள் சிறுவர்களை பராமரிக்கும் நிலையத்தி;ன் தலமை ஆசிரியை. அவள் தனது அனுபவத்தை வைத்து  சொன்னாள். மற்ற சிறுவர்கள் உங்கள் மகனோடு சேர்ந்து விளையாட பயப்படுகிறார்கள். சில சமயம் ஒருவரோடும் பேசாது ஒரு முலையில் போய் பேசாமல் அமர்ந்திருப்பான் உங்கள் மகன,; உணவு உண்ண அடம் பிடிப்பான்., இப்படி அவனைப் பற்றி பல தரப்பட்ட முறைப்பாடுகள்.  இறுதியில் நானும,; நாதனும் ஒரு பிரபல மனோவைத்தியரிடம் ஆதித்தனை கொண்டு பொய் கட்டினோம். டாக்டர் என்ன சொல்லப் பேகிறாரோ என்ற பயம் எங்களுககு; இருந்தது. ஆதித்தனுக்கு ஒரு பொம்மையை டாக்டர் கொடுத்தார்;. அவன் அதைவாங்;கி சுழட்டி எறிந்தான். சித்திரம் வரைய பேப்பரும் வர்ணப்பென்சில்களை டாக்டர் கொடுத் போது ஆதித்தன் அதை வாங்கி சுழட்டி எறிந்தான். பேப்பரில் சித்திரம் வரையாமல் தாறுமாறாக கிறுக்கி பேப்பரை கிழித்தெறிந்தான். டாக்டர் அவன் செயல்களை  அவதானித்தவிட்டு ,என்னைப் பார்த்து.  “அம்மா இந்த சிறுவன் உங்கள் வயிற்றில் கருவாக இருக்கும் போது ஏதூவது பொக்களிப்பான, சின்ன முத்து போன்ற தொற்று நோயேதும் உங்களுக்கு வந்ததா”?  “இல்லை டாக்டர”,; என்றேன்.  “எப்போதாவது  நீஙகள் விழுந்து, பாரதூரமாக உங்கள் வயிற்றில் அடி ஏதம் பட்டதா”?  “ இல்லையே டாக்டர்.”  “உங்கள் அல்லது,  உங்கள் கணவனின் பரம்பரையில் யாராவாத மனநோயால் பாதிக்கப்பட்டிருக் கிறார்களா”.  “இல்வே இல்லை டாகடர்”  “நீங்கள் இச்சிறுவனை கருவில் வைத்திருக்கும் போது கொழுப்பு நிறைந்த மாமிசம் அதிகமாக உண்டீர்களா”?  “இல்லை டாக்டர். நாங்கள் வெஜிட்டேரியன்”  “உங்களுக்கு சர்க்கரை வியாதி உண்டா”?  “அதுவும் இல்லை டாக்டர்”  டாக்டர் சற்று நேரம் யோசித்தார். இன்னும் சில இரத்தப்;பரிசோதனை, பிரெயின் ஸ்கான் செய்த பின் என் முடிவை சில தினங்களில் சொல்லுகிறன் என்றார் டாகடர். அவர் எழுதிக் கொடுத்த  பரிசோனைகள் எல்லாவற்றையும்  ஆதித்தனுக்கு செய்தோம்.  அன்று வெள்ளிக்கழமை. ஆதித்தஆனாடு கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அரச்சனை செய்து வடுட திரும்பிய போது டாக்டரின் ஒபிசில் இருநது தன்னை வந்து சந்திக்கும் படி கோல வந்தது.    அவரை நாஙகள் இருவரும் போய் சந்தித்த போது அவர் சொன்னது எமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.  “மன்னிக்கவும.; உங்கள் மகனுக்கு மன இறுக்கம் என்ற ஓட்டிசம் (Autism) என்ற நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. பலகுழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கவலை வேண்டாம். சிலநேரம், காலம் போக உங்கடை மகனின் நிலமை மாறலாம். அவன் வாழும் சுழ்நிலையை பொறுத்தது. அவனோடு எதிர்த்து நிற்காதீர்கள். கண்டித்து பேசாதீரகள். பொறுமையாக, விடடுக்கோடுங்கள். அன்பாக இருஙகள். அவன் விரும்பியதை செய்யுங்கள். அவனில் சில வேலை மாற்றம் ஏற்படலாம். நல்லாக தூங்க விடுங்கள். மனதில் அமைதி ஏற்பட்டால், அதுவே உங்கள் மகனுக்கு இருக்கும் நோய் போக உதவும்,”  “மருந்து ஏதும் தேவையில்லையா டாக்டர்’? என் கணவர் கேட்டார்.  “இப்போதைக்கு தேவையில்லை. இயற்கை தான் மருந்து. கடவுளின் மேல் நம்பிக்கை வையுஙகள். என்னை மூன்று மாதங்களில் மகனோடு; வந்து பாருங்கள். திரும்பவும் பரிசோதித்து உங்கள் மகனில் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்”.; என்றார் டாக்டர்.  நாங்கள் வீடு திரும்பியதும் டாக்டர் சொன்னதை என் மாமன் மாமியாருக்கும் என் பெற்றோருக்கும் சொன்னோம். ஏன் மூன்று மகள்மாரும் தங்கள் தம்பியின் நோய் தீர எங்களோடு ஒத்துழைப்பதாக சொன்னார்கள்.  ஆதித்தனை டாக்டர் பரிசொதித்த போது அவனுக்கு வயது ஏழு. காலில் சில சமயம் சப்பாத்துக்ளை மாற்றி போட்டபடி நடப்பான். லேஸ்; கட்டத் தெரியாது. யாராவது அவனுக்கு உதவ வேண்டும் ஆதித்தனின் சகோதரிகள் அவனின் செயல்களைப் பொறுமையோடு ஏற்றுக்;கொண்டனர்.  அன்று சமையல் செய்து கொண்டிருந்த என் காதில் ஒரு ஆங்கில இசை பியானொவில் கேட்டது. என்ன சரஸ்வதி புதுமையாக என்றுமில்லாதவாறு ஆங்கில டியூன் வாசிக்றாள் என நான் நினைத்தேன்.  “என்ன சரஸ்வதி புதுமையாக ஆங்கில டியூன் வாசிக்கிறாய்”? நான் என் கடைசி மகளைக் கேட்டேன்.  “அம்மா நான் இல்லை பியானோ வாசிக்கிறது. ஓடி வந்து இங்கை பாரேன் யார் பியானோ வாசிக்கிறது என்று”இ என்றாள் சரஸ்வதி.  நான் ஹாலுக்குப் போய் பார்த்த போது நான் கண்ட காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.  அந்த பியானோ இசையைக் கேட்டு என் கணவரும் ஹாலுக்குள் வந்தார். பியானோவில் இசையை மீட்டியது வேறு யாரும் இல்லை, எங்கள் மகன் ஆதித்தன் தான். அவன் பார்வை  முழுவதும் கீ போர்ட்டில் இருந்ததைக் கவனித்தோம்.  நடக்கும் அதிசயத்தால் நாம் இருவரும் உறைந்து போய் நின்றோம். ஆதித்தன் டியூனை வாசித்து முடித்து, ஒன்றுமே தெரியாதவன் போல் எழும்பிப்போய் சோபாவில் அமர்ந்தான். அவன் முகத்தில் அமைதி தெரிந்தது. நாங்கள் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அவன் செயலைக் காணாதவர்கள் போல் இருந்தோம்.  “அம்மா தம்பி பியானோவில் வாசித்த டியூன் நான் ஒரு போதும் கேட்காத டியூன். இவன் பியானோ விளையாட எப்ப படித்தவன்’? சரஸ்வதி என்னைக் கேட்டாள்.  “எனக்குத் தெரியாது மகள். சில நேரம் நீ;P இல்லாத போது பியானோவை தட்டி;க கொண்டே இருப்பான். நான் தடுப்பதில்லை. நான் நினைக்கிறேன் இவனுக்கு நீ பியானோ வாசிப்பதைக் கண்டு தானும் வாசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது போலத் தெரிகிறது. இந்த இசைமேல் ஆர்வம் கடவுள் கொடுத்த வரம் என்று நான் நினைக்கிறேன் சரஸ்வதி”.  நானும் நாதனும் கலந்து அலோசித்து அவனிடம் இருந்த இசைத் திறனை விருத்தி செய்வதால் அவனுக்கு இருக்கும் ஓட்டிசம் நோயை இல்லாமல் செய்து விடலாம் எனறு தீர்மானித்து ஒரு பியானோ டீச்சரை அவனுக்கு முறைப்படி பியானோ வாசிக்க ஒழுங்கு செய்தோம்.  டீச்சர் வந்து மூன்று நாட்களில் அவ சொன்னது எம்மை ஆச்சரியப்பட வைத்தது  “உங்கள் மகன் இந்த வயதில்  ஒரு அதிசயத்தக்க திறமை உள்ளவன். இதைத் தான் புரொடிஜி என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். உங்கள் மகனுக்கு இசை தானாகவே வருகிறது. நான் அறியாத டியூன்களை எல்லாம் வாசிக்கிறான். இவனுக்கு பியோனோ டிரெயினிங் தேவையில்லை. அவன் போக்கில் வாசிக்க விடுங்கள்”இ  என்றாள் பியானோ டிச்சர்.  ஆதித்தனில் ஏற்பட்ட தீடிர் மாற்றததைப் பற்றி டாக்டருக்கு சொன்னோம்..  “நீங்கள் சொல்வதை கேட்க எனக்கு சந்தோஷமாக இருக்கு. உங்கள் மகன் ஒரு புரொடிஜி போல் எனக்குத் தெரிகிறது. நான் அறிந்த பல புரொடிஜிகளுக் ஓட்டிசம் இருந்ததாக கேள்விப்பட்டேன். இது மரபணுவோடு தொடர்புள்ளதாக இருக்கலாம்.. மோர்சாட் என்ற இசை மேதை ஐந்து வயதில்; இசை அமைக்கத் தொடங்கினவர். பேத்தோவனும் அப்படியே.  யார் கண்டது ஆதவனும் வருங்காலத்தில் ஒரு இசை மேதை ஆகலாம். இசையில் இருந்து வெளியாகும் ஒலி அலைகளின் அதிர்வுகள்;, சக்தி வாயந்தவை. அதனால் தான் பிராமணர்கள் கோவிலில் மந்திரம் சொல்லும் போது தோன்றும் அதிர்வுகளுக்கு மனதைச் சாந்தப்படுத்தும் சக்தியிருக்கிறது  எனக்குத் தெரியும் ஒரு கேஸ்;.  பாடகியான ஒரு பெண்; தன் வயற்றில் குழந்தையை கருவில் வைத்திருக்கும் போது வயலின் வாசித்து பக்தி கீர்த்தனைகள் பாடுவது வழக்கம். குழந்தை பிறந்து, அழும்போது தாய் வயலின் வாசித்துப் பாடினால் குழந்தை அழுகையை நிறுத்தி தாயைப் பாரத்தபடியே இருக்கும். அந்தப் பெண் குழந்தை மூன்று வயதிலேயே இனிமையாகப் பாடத்தொடங்கியது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்”இ என்றார் டாக்டர்.  “அப்போ டாக்டர் ஒலி அலைகள் ஓட்டிசத்தை போக்கி விடுமா”.  “இருக்கலாம். ஒலி அலைகளில் உள்ள சக்தியை மருத்துவத்துக்கு அல்டிரா சவுண்ட் என்று பாவிக்கிறார்கள். எதற்கும் சில காலம் பொறுத்திருந்து பார்;போமே. இப்பத்தான் ஓட்டிசத்தைப் போக்க மேலை நாடுகளில் ஆராச்சி செய்து வருகிறார்கள்.” என்றார் டாக்டர்.                                                           கதை 14   -   தோட்டா                                                                                              கல்விச் சேவையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஈழத்தில் பாதிப்படைந்த புத்திசாலி மாணவர்கள் பலர். அரசுக்கு திறமையான மனிதவளத்தைத் தன் இனவேற்றுமை சட்டத்தினால் இழந்ததை பற்றி கவலை இருந்ததாகத் தெரியவில்லை. அரசின் முழு நோக்கமும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று, நாட்டை ஆளுவதே. இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் விடுதலைப் போராளிகளானார்கள். பண வசதி படைத்த சில மாணவர்கள்; பாதுகாப்பு தேடி, தம் வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள். தம் அறிவைப் பயன்படுத்தி புதியதை கண்டுபிடிக்க வேண்டும், வி;ஞ்ஞானியாகி  தங்களின் தமிழ் சமூகத்துக்க உதவவேண்டும் என்ற நோக்கம் கொண்ட இரு மாணவர்கள் பற்றிய கற்பனைக் கதை இது.  சங்கரும், சீலனும் இராசாயனவியல் ஆசிரியர் மகாலிங்கத்தின் இரு மகன்கள். இவர்களில் மூத்தவன் மாதவன் அவன்pன் தம்பி சீலன்; இரு வருடங்களால்; இளமை. படித்தவர்கள் வாழும் ஊரான பருத்தித்துறையில பிறந்தவர்கள். மகாலிங்கம் மாஸ்டர் பருத்தித்துறை ஹார்ட்டிலி கல்லூரியில் உயர் வகுப்புகளுக்கு இரசாயனப் பாடம் கற்பிக்கும் பிரபல்யமான ஆசிரியர். அக்கல்லூரி பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளது. மகாலிங்கத்தின்; மனைவி இந்துமதி ஒரு கணித ஆசிரியை. பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கணித ஆசிரியையாக வேலை செய்பவள்.   சங்கரும், சீலனும் வீட்டில் வைத்து பரிசோதனைகள் செய்வதில் ஆர்வம் காட்டிவந்தார்கள். அவர்களை ஊக்கப்படுத்த அவர்கள் இருவரினதம் வேண்டுகோளுக்கு இணங்கி பரிசோதனைகள் நடத்துவதற்கு வீட்டில் தனி  அறையொன்று பெற்றோரால் ஒதுக்;கப்பட்டது. இரசயானப்; பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை,  இங்கிலாந்தில் இரசாயனப் பொறியியலாராக வேலை செய்யும் தாய்மாமன்;  அனுப்பி வந்தார்.    சங்கர், சீலனோடு ஒன்றாகப் படித்தவர்கள் ஜெயமும் ரவியும். பால்ய நண்பர்கள். உறவினர்கள் கூட. அவர்கள் இருவரும் பிரபல்யமான பிஸ்னஸ்மன் கணேசலிங்கத்தின் மகன்கள். படிப்பில் சங்கரையும் சீலனையும் போல் கெட்டிக்காரர்களாக இல்லாவிட்டாலும,; அவர்கள்; தந்தையைப்போல் வணிகத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள். பணவசதி இருந்ததால் படிப்பை இலங்கையில் தொடராமல் கனடாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். கனடா சென்ற ஜெயமும் ரவியும், ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளாகி, பிரபல்யமடைந்தார்கள் , தங்களின் பால்ய நண்பர்களான சங்கரையும் , சீலனையும் கனடாவுக்கு வரும்படி அவர்கள் பலதடவை அழைத்தும், பிறந்த மண்ணை விட்டு வரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் வேறு.  வன்னி காட்டுப் பகுதியில் ஒரு பாரிசோதனை கூடம் அமைத்து இருவரும் தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு தம் அறிவைப் பயன் படுத்த தீர்மானித்தார்கள். தங்கள் நோக்கத்தை; நண்பர்களான ஜெயத்துக்கும் ரவிக்கும் அறிவித்தார்கள்.  “உங்கள் பரிசோதனைக்கு தேவையான நிதி உதவி செய்ய நாங்கள் தயார். உங்கள் ஆராச்சி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று. நாம் உங்கள் பரிசோதனைக்கு நிதி உதவி செய்யும் விஷயம் எங்களுக்குள் மட்டுமே இரகசியமாக இருக்கட்டும். எங்கள் தந்தையாருக்கும் தெரியக் கூடாது” என்று கனடா வாழ் நண்பர்கள் இருவரிடம் இருந்து பதில் வந்தது.  பரிசோதனைக்குத் தேவப்பட்ட இராசயனப் பொருட்களையும் கருவிகளையும் பிறநாட்டில் இருந்து வாங்குவதற்கு தேவையான நிதி உதவியையும,; ஒழுங்குகளையும் ஜெயமும் ரவியிம்,  செய்தார்கள்.   சங்கரும், சீலனும் 48 மணித்தியாலங்களுக்கு உறைய வைக்கும் துப்பாக்கி தோட்டாக்களை தம் ஆராச்சி மூலம் கண்டுபடித்தனர். ஆரம்பத்தில், வன்னி காட்டில் உள்ள சில மிருகங்களில் பரிசோதனை செய்து, முழு வெற்றி கண்டார்கள். போராட்டத்தை நடத்தும் தலைவரிடம் தங்கள் கண்டு பிடிப்பைப் பற்றி எடுத்து சொன்னார்கள். அவர்களுடைய கண்டுபிடிப்பை தலைவர் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.  “உங்கள் பரிசோதனையின் வெற்றியைப் பாராட்டுகிறேன். ஆனால் நாம் இந்த உறைய வைக்கும் தோட்டாக்களை பாவிப்பதை ஊடகங்கள் அறிந்தால் நாங்கள் இராசாயன ஆயுதம் பாவிக்கிறோம் என்று எம் மேல் குற்றம் சாட்டுவார்கள். அதோடு மட்டுமல்ல இரசாயன ஆயுதங்களை போரில் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதனால் நாம் இந்த தோட்டாக்களை பாவிப்பதை தவிர்க்கவேண்டும்” என்று சொன்னார்.  “ இது 1988 இல் குர்திஷ் மகள் மேல் சதாம் ஹ_செயின் பாவித்த கடுகுவாயு   போன்ற இரசாயன ஆயுதம் போல் அல்ல இது. நேருக்கு நேர் எதிரிகளோடு துப்பாக்கி, பாவித்து சுடும் போது மட்டுமே இத் தோட்டாக்களை பாவித்து, 48 மணித்தியாலங்களுக்கு எதிரிகளை செயல் பட முடியாமல் உறைய வைக்கலாம்.; உறைந்த எதிரிகளை இலகுவில் சிறைபிடித்து போர்க் கைதிகளாக்கலாம். சிறைபிடித்தவர்களை வைத்து அரசாங்கத்தோடு பேரம் பேசி, எமக்கு வேண்டியதைப் பெறலாம். இந்த தோட்டாக்களை பாவிப்பதால் எதிரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. பொது மக்களையும் பாதிக்காது என சங்கரும்; சீலனும் தலைவருக்கு விளக்கம் கொடுத்தார்கள். அரை மனதோடு அவர் சம்மதித்தார்.   யானையிறவு போர்க்களத்தில் இவர்கள் கண்டு பிடித்த தோட்டாக்கள் நூற்றுக் கணக்கான எதிரிகளை இலகுவாக போர்க் கைதிகளாக உயிரோடு சிறைபிடிக்க  உதவியது. இனிவரும் போர்களிலும் அந்த  உறைய வைக்கும் தோட்டக்களை 72 மணித்தியாலங்களுக்கு நீண்ட நேரம் உறையவைக்கும் வகையில் பரிசொதனைகள் மூலம் தயாரிக்க  முடியுமா என்ற ஆராச்சியைத் தொடர முடிவு எடுக்கப்பட்டது.  போரின் உச்சக் கட்டத்தின் போது சங்கர் , சீலன் பரிசோதனை சாலையைப்பற்றிய விபரம் எதிரிகளுக்கு இனத் துரொகிகள் அறிவி;த்ததால் பரிசோதனைச் சாலை குண்டு தாக்குதலுக்கு உற்பட்டு அழிந்தது. அத்தாக்குதலினால் பரிசோதனை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிநது சாம்பலாயிற்று. சங்கரும்; . சீலனும் மரணத்தைத் தழுவினார்கள். தமிழ் ஈழம் சிறந்த விஞ்ஞானிகளை இழந்தது.      (யாவும் கற்பனையே)  கதை 15   -   கிரகவாசி வருகை                                                                   பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது.    உலகத்திலேயே அதிக உயரமான  29,029 அடிகள் உயரமுள்ள இமையமலையின் சிகரத்தை, பல மனிதர்கள் அடைந்தாலும்,  21,578 அடி உயரமுள்ள கைலாச மலையின் சிகரத்தை ஒருவரும் இது வரை அடையாதது ஆச்சரியத்துக்குரியது.     புனித மலையான கைலாசமலையைப் பற்றி தெரியாத இந்து, பௌத்த, ஜெயின் மதத்தவர்கள்  மிகக் குறைவு. இந்து நதி,  பிரமபுத்திரா, கங்கையின் கிளைநதி கர்னாலி, இந்து நதியின் கிளை நதி சட்லெஜ் ஆகிய நான்கு நதிகள் அம்மலையில் இருந்து உருவாகிறது. இந்துக்கள் தமது இதிகாசங்களில் குறிப்பிட்ட இம்மலை இருப்பது, பெரும்பான்மையினரான இந்துக்கள் வாழும் இந்தியாவில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 1959 இல் சீனா ஆக்கிரமித்த நாடான தீபத்தில் இம்மலை இருந்தாலும், பக்தர்கள் போய் வர பல கட்டுப்பாடுகள் உண்டு. இம்மலையில் சீன அரசின் அனுமதி பெற்று இம்மலையை 1980 இல் இத்தாலிய நாட்டு மலையேறி ஒருவர் திட்டமிடடு சீன அரசின் அனுமதி கிடைத்தாலும்,; பின் அவராகவே  சிந்தித்து தன் முயற்சியைக் கைவிட்டார்.   நேபாள தேசத்தின் அருகில் உள்ள நாடு தீபத். நேபாளத்தின் தலைநகரான கட்டமண்டுவில் இருந்து கைலாசமலைக்கு 538 கி. மீ தூரம். சிவபெருமானின் வாசஸ்தலம் என்றும்,; பல ரிஷிகள் நடமாடும் இடம் என்றும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இம்மலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. கைலாசமலை அடிவாரத்தில் இரு ஏரிகள். ஒன்று வட்ட வடிவமான மனசோலரவர் ஏரி. அவ்வேரியில் சிவனும் பார்வதியும்  நீராடுவாதாக மக்கள் நம்பிக்கை. அவ்வேரிக்கு அருகே, சந்திரனின் பிறை வடிவத்தில்  ராஷ்சத்தால் என்ற எரி உண்டு. இராவணனோடு இவ்வேரியைத் தொடர்பு படுத்தி இதிகாசக் கதைகள் உண்டு.   கைலாசமலையானது தங்கம், பளிங்கு. கருங்கல் போன்றவையை உள்ளடக்கியமலை.  உண்மையில்லாமல் இதிகாசக் கதைகள் உருவாகாது. உதாரணத்துக்கு விஸ்வாமித்திர மகா ரிஷி படைத்த திருசங்கு சொர்க்கம் உருவாகிய கதையானது பல ஆயிரம் ஆண்டுகளுக்க முன் எழுதப்பட்டது. அதன் அடிப்படையில் ஆர்தர் சி கிளார்க் என்ற அறிவியல் கதைகள் எழுதியவர், 1945 செய்மதியை பற்றி தன் நாவல் ஒன்றில் குறிப்பிட்டார். அந்நாவல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின் 1957இல் ஸ்புட்னிக் 1 என்ற செய்மதியை முதன் முதலில்  விண வெளியில் ரஷ்யா மிதக்கவிட்டதை யாவரும் அறிந்ததே.   இனி கதைக்கு வருவோம். நடக்க இருக்கும் பல கண்டு பிடிப்புகள், சம்பவங்கள மலைக் குகைளில் பதிவாகியுள்ளன என்பது மலையெறியான ஜெய்சிங்கின் கருத்து. அவரைப்போலவே திருவண்ணாமலையில் வாழும் கைலாசநாதனும் சிந்தனை உள்ளவர். பல தடவை திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தவர். அதே போல் கைலாச மலையை சுமார் 52 கிமீ கிரிவலம் வரவேண்டும் என்பது அவர் ஆசை. கைலாசமலையின் தோற்றம் சிவலிங்கம் போன்றது.   திருவண்ணாமலைக்கு கிரிவலம் தரிசனத்துக்கு வந்த நேப்பாளியான ஜெய்சிங்கோடு; எதிர்பாரத விதமாக தொடர்பு கைலாசநானுக்கு கிடைத்தது. கைலாசநாதன் சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்.  எட்மணட் ஹில்லரியோடு முதன் முதலாக இமையமலையின் சிகரத்தை அடைந்த நேபாள தேசத்து,  மலையெறியான டென்சி;ங்கின் பரம்பரை வழி வந்தவர் ஜெய்சிங். கைலாச மலையேறி, சிகரத்தைத் தொட்டு, பிரபல்யமாக வேண்;டும் என்பது அவரது நோக்கம் மட்டுமல்ல, அவரோடு தொல்லியல் ஆராய்ச்சியாளரான முனைவர் கைலாசநானுடன் சேர்ந்து கைலாசமலையினுள் புதைந்துள்ள இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அறிய வேண்டும்  என்பது அவர் நீண்ட காலத் திட்டம.; ஜெய்சிங் ஒரு மலைஏறி மட்டும் அல்ல, புது டெல்கியில் ஜியோலஜி என்ற நிலவியல் துறையில் படித்து, ஆராய்ச்சி செய்து, முனைவரானவர்.  கைலாசமலையின் சுற்றாடலைப் பற்றி அறிந்த நண்பர்களான ஜெய்சிங்கும் , கைலாசநாதனும்; தாங்கள் படித்த துறைகளில் தொடர்ந்து கைலாசமலையில் ஆராய்ச்சி செய்ய திட்டம் மிட்டார்கள். அதற்கு தேவையான  நிதி உதவியை பல இந்துமன்றங்கள் கொடுத்து உதவ முன்வந்தன. கைலாசமலை அருகே வசிக்கும் பலர், அம்மலையின் உச்சியில் இருந்து வானை நோக்கி பிரகாசமான ஒளி சென்றதைக் கண்டதாக சொன்னார்கள். முதலில் ஒருவரும் அதை நம்பவில்லை. பின் மலையடிவாரத்தில் வாழ்பவர்கள,; குறித்த நாளில் அவர்கள் சொன்னதில் உண்மை உண்டு என்பதை அறிந்தார்கள்.   ரஷ்யர்கள் தங்களின் ஆராய்ச்சி மூலம் கைலாச மலையை மனிதனால் ஊருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான பிரமிட் என குற்pப்பிட்டுள்ளார்கள். கைலாசத்தில ஏதோ ஒரு சக்தி மறைந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்த இரு நணபர்களும் தொடர்நது  தமது தொல்பொருள், நிலவியல் அறிவை கைலாசமலையில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை கண்டறிய தீபத் நாட்டுக்கு வந்தார்கள்.  சீன அரசின் பலத்த கட்டுபாடுகளைக் கடந்து மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். முதலில்  ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ஓம் பர்வதம், ஆண்டின் நான்கு மாதங்கள் தவிர பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். ஆகவே இந்த நான்கு மாதஙகளுக்குள் அவர்கள் தமது ஆராய்ச்சியை முடித்தாக வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். மலை ஏறும்; போது, அவர்களுக்கு பொதுகைகளை சுமந்து செல்ல மலையடிவாரத்தில் வாழும் இரு மலை ஏறும் தீபத்தர்கள் அமர்த்தப’படனர்.   இந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்க்ருத மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்துபோல இம்மலை மீது பரவி இருக்கும். எனவே இது ஓம் பர்வதம் (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து மானசரோவர ஏரி,; ஆயிரம் கி.மீ. தூரம். மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் எடுத்தன.  காட்மாண்டுவில் இருந்து கிளம்பி, முதலில் சென்றடைநதது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்த ஏரி இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்தடைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாசமலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ தீர்த்தங்கள் கிடைக்கும். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாசமலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாகச் ஜொலிக்கிறது. மலையை சுமார் 20 கிமீ தாரத்துக்கு கிரிவலம் வந்த பின்னரே மலையில் ஏறத் தொடங்கினார்கள். இம்மலையில் தங்கம் வெள்ளி, பளிங்கு, கிரைனைட் என்ற கருங்கல் போன்ற கனிவளங்கள்  உண்டு என்பதை கைலாசநாதன்  மலைப் பாறைகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்;தார்.  கைலாசமலை கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 21,800 அடிகள் உயரமானது.  இம்மலை 29,029 அடிகள்  உயரமான உலகிலேயே உயரமான இமையமலையோடு ஒப்பிடும் போது இம்மலையின் உயரம் எழுபத்தைந்து விகிதமே. சுமார் 21,500 அடிகள் இருவரும் ஏறியவுடன் ஒரு குகையைக் கண்டார்கள். ஒருவேளை இக்குகைக்குள் இருந்து சிவனும், ரிஷிகளும் தியானம் செய்தார்களோ? அதனுள் பிரவேசித்து ஆராய்ந்த போது குகையின் சுவர்களில் உள்ள பல ஆயிரம் காலத்துக்கு முந்திய சித்திரங்களும், பதிக்கப்பட்டிருந்த எழுத்துகளும், கைலாசநாதனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்து நதிப்பல்லதாக்கில், தொல் பொருள் ஆராய்ச்சி அவர் செய்தவராச்சே. உடனே இவ் எழுத்துக்கள் சிந்து நதி பல்லத்தாக்கு நாகரீக காலத்துக்கு முற்பட்டதாக, கி.மு 26 ஆம் நூற்றாண்டில் இருந்த சுமேரியன் காலத்து எழுத்துகளை விட, பழமை வாய்ந்தவை என்பதை அறிந்தார். அவை அச்சித்திரங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும்; ஒரு செய்தியை பூமி வாழ் மக்களுக்க சொல்கிறது என்று ஜெய்சிங் நாதனுக்குச் சுட்டிக்காட்;டினார்.  “இருக்கலாம் ஜெய். எனது கணிப்பு படி இவை வேற்று கிரகவாசிகள் பதித்த தடையங்களாக  இருக்கலாம்”  “அப்போ செவ்வாய் கிரக வாசிகள்  பதித்த தடையங்கள் என்று சொல்லுகிறீரா நாதன்’?  “செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகே உள்ள கிரகமானாலும் அது ஒரு வரண்ட கிரகம். நாசா  என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம், அக்கிரகத்தில் உயரினங்கள் வாழ்ந்தாக இதுவரை கண்டு படிக்கவில்லை” என்றார் நாதன்.  “அப்போ எங்கிருந்து வந்து இம்மலையில் இறங்கியிருப்பார்கள் என ஊகிக்கிறீர் நாதன்”? ஜெயசிங் கேட்டார்.  “நல்லகேள்வி. பூமியில் வாழும் உயரினங்களை விட அதிக புத்திசாலித்தனமும், தொழில் நுட்பத்துறையில் முன்னேறிய உயரினமாக இருக்காலம். அவர்கள் தோற்றத்தில் பூமியில் இருக்கும் மானிடர்களைப் போல் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அலை வடிவத்திலும் இருந்திருக்கலாம். ஓளியின் வேகத்தை விட வேகமாக பயணம் செய்பவர்ளாகவும் இருந்திருக்கலாம். அதனால் பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்திருக்கலாம். அவர்கள் சூரிய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது என் கருத்து ஜெய்”.  “ நீர் என்ன சொல்லவருகிறீர் என்று விளக்கமாக சொல்லமுடியமா நாதன்”?  “நான் நினைக்கிறேன் பல  ஆயிரம் ஒளி வருடத் தூரத்துக்கு அப்பால் இருக்கும் பால்வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்களே இந்து மதக் தத்துவத்துக்கு வித்திட்டவர்கள். இந்து மத கடவுள்களை தோற்றுவித்தும்  இருக்கலாம். இந்தத் தொற்றத்தினால் கைலாச மலையில வாசம் செய்யும் சிவனும் தோன்றி இருக்கலாம். ரிஷிகளும், சித்தர்களும்; அவர்கள் உருவாக்கியவர்களே. அதனால் தான் நாம் நினத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை செய்திருக்கிறார்கள் என்று இந்து ஐதீகங்கள் சொல்கிறது”.  “நாதன் இது ஒரு புதமையான சிந்தனை. இது எவ்வளவுக்கு உண்மை என்பதை நாம் மேலும் ஆராய்ச்சி செய்து அறியவேண்டும். இதுவே அம்மலையின் உச்சியை அடைய ஒருவரும் முயற்சிக்காததற்கு காரணம்”, என்றார் ஜெயசிங்.  “வாரும் முதலில்  கைலாசமலையின் உச்சியைப் போய்  அடைவோம். இன்னும் 300 அடிகள் ஏற வேண்டியிருக்கிறது நாம் உச்சியை அடைய. வெறு என்ன அதிசயங்கள் அங்கு காத்திருக்கிறதோ தெரியாது” கைலாயநாதன் சொன்னார்.   “இதை கேட்டதும் எனக்கு ஒரு ஐதீகக் கதை ஞாபகத்துக்கு வருகுது” என்றார் ஜெய்.  “என்ன கதை ஜெய்”?  “சிவனின் உச்சியையும் அடியையும் காண, பிரம்மாவும் விஷ்ணுவும் முறையே அன்னப்பறவையிலும்  வராகத்திலும் புறப்பட்ட கதைதான். யார் பெரிது என்ற ஆணவத்தை அடக்க, சிவன் வைத்த பரிசோதனை. அந்த கதையில் சிவன், முடியும், அடியும் தெரியாத ஜோதி வடிவமாக காட்சி கொடுத்தார் என்கிறது, அதனால்….” ஜெய் சொன்னார்.  “அதனால் என்ன?.”  “மலை அடிவாரத்தில் வாழும் மக்கள் கண்ட ஜோதி அந்த ஒளியாக இருக்குமோ என்று நான யோசிக்கிறேன் நாதன்.”.    “சிந்திக்க வேண்டியது தான். இப்புவியில் வாழும் நாம் வேற்று கிரகவாசிகளின் அறிவுக்கு ஈடாக வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள்; எடுக்கலாம்” என்றார் கைலாயநாதன்.  “சரி சரி வாரும் சிவனின் உச்சிக்குப்போவோம். கங்கை உருவாகுவதையும்,;  சந்திர பிறையையும் காணலாம்.” என்றார் சிரித்தபடி ஜெய்சிங்;.  நண்பர்கள் இருவரதும் ஆராய்ச்சிப் பயணம் தொடர்ந்தது,    கதை 16   -   அமரத்துவம் ( Immortality)    []                                                                லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன்;. லோநாதனின் தந்தை சிவநாதன்,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த இரு ஆண் குழந்தைகளில் மூத்தவன் லோகநாதன். பயோ கெமிஸ்டிரி துறையில் பட்டம் பெற்று உயிரி வேதியியலில் பல ஆய்வுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்   நடத்தி வருபவன். அவனது திறமை அறிந்த அவனது புரோபெசர் வில்லியம், அவன் வருங்காலத்தில புதிய கண்டுபடிப்புகளை; செய்து மனித இனத்துக்குப் பேருதவி செய்வான் என்று சக பேராசிரியர்களிடம் அடிக்கடி  சொல்லுவார்.    கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வு கூடத்தில்; மரபபணு சிகிச்சை மூலம் மனிதனின் ஆயுள் காலத்தை நீடிக்க முடியமா என்பதில் ஆராய்ச்சி நடத்தி வந்தான் லோகநாதன். அவ் ஆராய்ச்சியில் அவன் முக்கிய சிரத்தை எடுதத்துக்கு காரணம், அவனது பெற்றோர்கள் குறைந்த வயதில் மரணித்ததே. அவனது பெற்றோரின்; பரம்பரையைச் சார்ந்தவர்கள்,  குறைந்த காலம் வாழ்ந்வர்கள்.. அதனால் அவனது பரம்பரையைச் சார்ந்தவர்களின் மரபணுக்கள் வெகு விரைவில் சிதைந்ததால் அவர்களின் ஆயுற் காலாங்கள் குறைவாக இருந்திருக்கலாம்; என்று லோகநாதனுக்கு புரொபெசர் வில்லியம் சொன்னதை அவன் அடிக்கடி நினவு படுத்திக்கொள்வான். தனக்கும் அவர்களைப் போல் ஆயுள்காலம் குறைவாக இருக்கலாமோ என்று அவன்pன் புரெபசரிடம் கேட்ட போது அதற்கு அவர்,  “லோகா, உன் ஆயுளைப் பற்றி இப்ப யோசிக்காதே. வெகு விரைவில் ஆயுளை நீடித்து, நுண்ணறிவு கூடிய டொல்பின்கனைப் போல் 150 வருடங்கள் மனிதன் வாழக்கூடிய வழியை நீ கண்டு பிடித்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”என்றார்.  லோகனாதனுக்கு  ஆராய்ச்;சியில் துணையாக இருந்து, பின் துணைவியானவள் மேரி இசபெலா. அவளுடைய தந்தையும் வேதியியல் துறையில், லண்டன் பல் கலைக்கழகத்தில் பேராசிரியாரக இருந்து ரிட்டடையராகி, அறுபது வயதில் ஹார்ட் அட்டாக்கால் காலமானவர். அவரின் மனைவியும் இளமை வயதில் மார்பு புற்று நோயால் காலமானவள்.  பெற்றோர் இளம் வயதில் மரணித்தது மேரியை வேகுவாக பாதித்தது. லோகநாதனிதும், மேரியினதும பரம்பரையைச் சார்ந்தவர்கள் குறைந்த ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்ததால், மனிதனின் ஆயுளை அதிகரிக்க “ஜீன் திரபி” (புநநெ வுhநசயிhல) எனும்  மரபணு சிகிச்சை பற்றிய ஆராய்ச்சியே அவர்களின் இருவரினதும் குறிக்கோள்.  “ லோகா, நீர் இந்தியாவைச சேர்ந்தபடியால் ஜாதகத்தின் மேல் அதிகம் நம்பிக்கை உள்ளவரா”? வில்லியம் கேட்டார்  “ ஏன் சேர் அப்படி கேட்கிறியள்”?  “ இல்லை, இங்கு கணித பேராசிரியராக இருக்கும் சுப்பிரமணியன் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் தன் சாதிக்குள்  திருமணம் செய்ததாக எனக்குச் சொன்னார். அந்தப்பொருத்தத்தில் தாலிப் பொருத்தம், ஆயுள் போருத்தம் , மனப் பொருத்தம், பிள்ளைப் பொருத்தம்; ஆகியவையை முக்கியமாக பார்த்து தன் பெற்றோர் தனக்குத் திருமணம் செய்து வைத்ததாக எனக்குச் சொன்னார். ஆதனால் தான் கேட்டேன்.”  “இருக்கலாம் சேர். அப்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் கூட வெகு விரைவில் பிரிந்து இருக்கிறார்கள். இறந்தும் இருக்கிறார்கள். மேலைத் தேசங்களில் ஜாதம் பார்பதில்லையே, ஆனால் திருமணத்துக்கு முன் பிளட் டெஸ்ட் செய்வதாக கேள்வி”.  “ உண்மைதான் உலகில் ஆயுள் கூடிய மக்கள் வாழும் தேசங்களில் மொனொக்கோ (ஆழழெஉழ) முதலிடத்தில் இருக்கிறது. பல பில்லியனியர்கள் இத்தேசத்தில்  வாழ்கிறார்கள். அதற்கு அடுத்த  ஆயள் கூடிய மக்கள் வாழும் நாடு ஜப்பான். ஆனால் ஆகஸ்ட் 1945 இல் அமெரிக்கா வீசிய அனுக்குண்டால் குறைந்த ஆயுளோடு போனவர்கள் பல்லாயிரக கணக்கான ஜப்பானியர்கள்;. ஆயுள் அதிகமுள்ள மக்களைக் கொண்ட மூன்றாவது நாடாக ஹொங்கொங்.”  “கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற தேசங்களில் வாழும் மக்களின் சராசரி ஆயட்காலம்,  பல இடங்கள் கீழே உள்ளது . இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ, தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுள் குறைவு. இதற்கு வறுமையம், பொருளாதாரமும் காரணமாக இருக்கலாம்”, லோகநாதன் சொன்னார்.  “ மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆராயச்சி நல்லுது தாhன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணம் தவிரக்க முடியாதது ஒன்று. உதாரணத்துக்குப் விபத்து, போர் , பூகம்பம், சூறாவளி,  சுனாமி, போன்றவையால் ஏற்படும் மரணம் தவிர்க்க முடியாதவை”இ புரொபெசர் சொன்னார்.  “ எதற்காக வெகுவிரைவில் மனிதனுக்கு வயது அதகரிக்கும் போது, தோல்கள் சுருங்கி, நடக்கும் சக்தி இழந்து, பல வித நோய்கள் வந்து உறவு கொண்டாடுகிறது என்பதைப் பற்றியே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதிபுத்திசாலியான டொல்பினைப் பாருங்கள். அது சுமார் 150 முதல் 200 வயது வரை வாழ்கிறது. ஆமை, 400 வயது வரை வாழ்கிறது. ஏன் யானை கூட 90 வருடங்கள் வரை வாழ்கிறது. ஆனால் மற்றைய உயரினங்களை அடக்கி ஆட்சி செய்யும் மனிதன் மட்டும்; சராசரி 70 ஆண்டுகளே வாழ்கிறான்”, லோகநாதன் சொன்னார்.  “வயதாகும் போது நமது உடலில் உள்ள மரபணுக்களும் செல்களும் படிப்படியாக சிதைவதால் செயல் குறைந்து நோய்களை எதிர்க்கும் சக்தியை இழந்து விடுகிறது. அதனால் டயபடீஸ், கிட்னி வியாதி, அல்செய்மார். புற்ற நோய், இருதைய நோய் போன்றவை உடலில் சேர்ந்துவிடுகிறது. ஆனால் மரபணுக்களும்;, செல் எனபபபடும் கலங்கள்; வேகமாக சிதையாமல்  இருக்க வழிவகைகள் உண்டு சேர். சிதைவை குறைத்;தால் நோய்கள் வராமல் இருக்கமுடியும். அதனால் ஆயுளும் நீளலாம்.”இ மேரி கருத்து தெரிவித்தாள்.  “ மேரி நீர் சொல்வதில் ஓரளவுக்கு உண்மையிருக்கிறது. ஆனால் செல்கள் சிதையாமல் இருக்கும் சிகிச்சையை வெகு இலகுவாக செய்யமுடியாது என நான் நினைக்கிறேன்”இ வில்லியம் சொன்னார்..   “ சேர், செல்லின் வளர் சிதைவு பிரச்சனை உருவாக்கலாம். எமது செல்கள் கழிவுப்பொருட்களை சேகரிக்கிறது. இதனால் உயிரியல் செயல்முறைகள் சீரகுலைந்து போய்விடுகிறது.” லோகநாதன் சொன்னார்.   “லோகா. ஓன்றை நீர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, உடல் உறுப்புகள் மறு உருவாக்கம் பிரச்சினைகளை எதிர்கொண்டால் ஒவ்வொரு குரோமோசோமினில் இருக்கும் டெலிமெரஸ் எனும் மரபணுக்கள் கலங்கள் பிரியும்போது சுருங்கிக் கொண்டு போகிறது. இந்த சுருக்கத்தை தவிரக்காவிடில் செல்கள் செயல் இழந்து விடுகிறது. ஒரு கட்டத்தில செல்கள் இறுந்து விடுகின்றன. அதனால் பல்வேறு நோய்கள் உடலைப் பாதித்து மரணத்தைக் கொண்டுவரலாம்.  இதை நீங்கள் கவனத்தில் கொண்டு ஆராய்ச்சியை நடத்தவேணடும்;” பேராசிரியர் வில்லியம், லோகனாதனுக்கும் . மேரிக்கும் அறிவுரை வழங்கினார்,       “சேர் உதாரணமாக, ஒரு பொதுவான நீரிழிவுக்கு எடுக்கும் மெட்ஃபோர்மின் மருந்தை, பொறுத்தவரை, எலிகளில் செல்களின சிதைவு மெதுவாக நடக்கிறத. ஆதகால கூடிய காலம் வாழக் கூடியதாக இருக்கிறது. ஒரு (சுழரனெறழசஅ) என்றவட்டப்புழுவில் உள்ள உயிரணு வளர்ச்சிதை ஈடுபட்ட ஒரு மரபணு மாற்ற அதன் பெற்றோர்கள் விட நீண்ட ஆயுளேடு விவகுக்கும. இயற்கையானது எப்படியோ சில உயிரினங்கள தமது ஆயுளை நீடிக்கும் வழியை  கண்டுபிடிக்க உந்துகிறது.   “ லோகாஈ உமது உணரம் என்ன”?  “ ஏன் சேர் திடீரென்று என் உயரததை கேர்கிறர்கள்”?  ” காரணத்தோடு தான்”.  “ ஆறடி மூன்று அங்குலம் சேர் “.  “ உயரமானவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்றும,; செல்கள் சிதைவடைவது குறைவென்றும் எங்கையோ நான் வாசித்தது நினைவிருக்கிறது. அதனால்தான் கேட்டேன். நீங்கள் இருவரும் விடாமுயற்சியாக உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள். என் உதவி உங்களுக்கு எப்போதும் இருக்கும்”.  கினி பன்றிகள் (Guinea Pig) மருத்துவ ஆராய்ச்சி பெரிதும்  பயன்படுகின்றன? அவை ஆய்வுத் துறைகளில் பயனுள்ள பாலூட்டிகள். அவைக்கும் , மனிதர்களுக்கும் பல உயிரியல் ஒற்றுமைகள் உண்டு. பல நூற்றாண்டுகளாக அவை பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன்.'கினி பன்றி ஒரு மனித சோதனை பொருள். கினிப் பன்றிகள், சுமார் 4 முதல் 8 வருடங்கள் வாழக்கூடியவை. வைட்டமின் சி, காசநோய் பாக்டீரியம், இரத்த ஏற்றம், சிறுநீரக நோய், இரத்த உறைதல் போன்ற நோய்களுக்கான மருந்துகளை  கண்டுபிடிக்க பாவிக்கப்பட்டன. இக்காரணத்தால்; தங்களின் ஆராய்ச்சிக்கு கினி பன்றியை ஆரம்பத்தில் பாவித்தனர்.  லோகநாதனும் மேரியும் ஆரம்பத்தில்; கினி பன்றியில் செல் சிதைவைப் குறைக்கும்  மருந்தைக் கண்டுபிடித்து, பரீட்சித்துப் பார்த்தார்கள். அவ் உயிரினத்தில் செல் சிதைவின் விகிதம்  குறைந்ததை கண்டான்கள். ஆதன் காரணமாக கினி பன்றி; 15 வருடங்கள் வரை கூடிய காலம் வாழக்கூடியதாக இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு. லோகநாதனும், மேரியும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவைப்பற்றி பேராசிரியர் வில்லியத்துக்கு சொன்னபோது அதற்கு அவர்:>  “எனக்கு இப்போது வயது அறுபது. எனது தோல் சுருங்கத் தொடங்குவதைக் அவதானிக்;கிறேன். அடிக்கடி எனக்கு தடிமன், இருமல், உடம்புவலி போன்றவை வருகிறது. மறதியும் வருகிறது. வெகு தாரம் நடக்க முடியாமல் இருக்கிறது. வெகு காலம் நான் வாழ்வனோ தெரியாது, அதனால் நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு என்னைப் பயன் படுத்தினால் என்ன?” புரொபெசர் கேட்டார்.  “என்ன சேர் இப்படிச் புதுமையாக சொல்லுகிறீர்கள். நீங்கள் என்ன கினி பிக்கா (Guinea Pig)”?  “அப்படிச் சொல்லவேண்டாம். உடலின் 25 வெவ்வேறு மனித உறுப்புககளை, மாற்று நன்கொடையாக கொடுக்க முடியும். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள், ; சிறு குடல் . இரத்த நாளங்கள், எலும்புகள், இருதய வால்வுகள், மற்றும் தோல் இத்தானத்தில் ஆகியவை அடங்கும். அதேபோல் என் உடலை உங்கள் ஆராய்ச்சிக்கு பயன் படுத்த நான் ஒத்துக்கொவதால் மனித இனத்துக்கு சேவை செய்வதாக நான் கருதுகிறேன். ஊடலில் உள்ள மனித உறுப்புகள் தானம் செய்வதில்லையா? அதே போல் எனது முழு உடலையும் உங்கள் ஆராய்ச்சிக்கு நான் தானம் செய்வதாக எடுத்துக்கொள்ளுங்களேன். நான் இன்னும் பத்து வருடம் வாழ்வதாக இருந்தால், எனது ஆயள் காலம் 100  வருடங்களுக்கு மேல்  நீடிக்கலாம் அல்லவா?. என்ன இருவரும் சொல்லுகிறீர்கள்”? புரொபெசர் வில்லியம் உறுதியோடு அவர்களைக் கேட்டார்.  லோகநாதனாலும் , மேரியாலும் அவர் சொல்வதை நம்பமுடியவில்லை. அவரது வேண்டுகோளை நிராகரிக்கவும் முடியவில்லை.  “சேர் எங்களுக்கு சில மாதங்கள் தாருங்கள் எங்கள் முடிவைச் சொல்ல. நாங்கள் தற்போது செய்யும் பரிசோதனைகள் நூறு விகிதம் வெற்றி என்று அறிந்த பின், நாங்கள் கலந்து ஆவோசித்து முடிவெடுத்து, உங்கள் உடலைப் பரிசோதனைக்கு பாவிக்க சம்மதமா இல்லையா என்று சொல்லுகிறோம்”, மேரி சொன்னாள்.  “சரி ஆறுமாதங்கள் தருகிறேன். நான் ரிட்டையராக இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கு. அதற்கு முன் உங்கள் முடிவை சொல்லவேண்டும்” என்றார்  புரோபெசர் வில்லியம்.  நாட்கள் மாதங்களாயிற்று. புரொபெசர் சொன்ன ஆறு மாதங்ஙகள் முடிய இன்னும் இரு கிழமைகளே இருந்தன. தாங்கள் செய்த ஆயள் நீடிப்பு பரிசோதனைகள் வெற்றி என்பதைக் கண்ட லோகநாதனும் மேரியும், புரொபசரின் வேண்டுகோளுக்கு சம்மதிக்க அவர் வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினாரகள். அவர்களுக்கு புரொபசர் வில்லியத்தின் மகன் பீட்டர் சொன்ன செய்தி அவர்களை அதிரவைத்தது.  “என்ன புரபெசர் வில்லியம் கார் அக்சிடென்டில் இறந்துவிட்hரா?. எப்போது இது நடந்தது”?  லோகநாதன் பீட்டரைக் கேட்டார்.  “ஆமாம் நேற்று அப்பா யூனிவர்சிட்டியாலை வீடு திரும்பும் போது ஹைவேயில் ஒரு லொரியோடு அவர் கார் மோதியதால் அவர் அந்த இடத்தலேயே  இறந்திட்டார்” அழுதுகொண்டே மகன் பீட்டர் சொன்னார்.  லோகநாதன் மேரியைப் பார்த்தார். மேரி அதிரச்சியால் பேசாது நின்றாள்.  “பார்த்தாயா மேரி நாம் எவ்வளவு ஆராயச்சி செய்து ஆயுளை நீடிக்க மருந்து கண்டு பிடித்தாலும், எது எது எப்ப எப்ப நடக்க வேண்டுமோ, அது அது அப்ப அப்ப நடக்கும். அதை என்ன ஆராய்ச்சி செய்தும் யாராலும் நிறுத்த முடியாது” என்றார் லோகநாதன்.