[]     காலங்களில் சிவன் வசந்தம்  கா.பிரபாகரன்  karan.prabha1978@gmail.com      அட்டைப்படம் : கா.பிரபாகரன் - karan.prabha1978@gmail.com     மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை  - Creative Commons Attribution -NonCommercial-ShareAlike    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்பனை கூடாது        முகப்புரை அன்புள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளே… 'காலத்தின் கட்டாயம்” நீங்கள் என்வாயிலாக இந்த காலக்கணக்கை வாசிக்க சிவன் பணித்து, திருமுருகக் கிருபானந்த வாரியார் உரைத்து, என் செவிகள் அதற்கு இசைந்து அதன்வழி தற்போது உங்கள் பார்யில் படுகின்ற பெருநிகழ்வுதான் 'காலங்களில் சிவன் வசந்தம்”. எனது முதல் படைப்பான இந்த நூலை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்குள் இதுநாள்வரை இருந்துவந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது உறுதி… புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதன், தான் செல்லமுடியாத இடத்திற்கெல்லாம் செல்லமுடியும். தான் கண்டிராத காலங்களுக்கும் செல்லமுடியும். ஆம் அவ்வாறுதான் இந்த நூல் உங்களை பல்வேறு காலங்களுக்கும், யுகங்களுக்கம் கொண்டுசெல்லவிருக்கின்றது. காலங்கள் அனைத்தும் கடந்தவை, யுகங்கள் நான்கும் நிகழ்ந்தவை. சுழற்ச்சி முறையில் யுகங்கள் மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளதாக இந்து தா;மம் குறிப்பிடுகின்றது. வாருங்கள் புத்தகத்தை வாசித்து அதனுள் வசிக்கச்செல்வோம்…   ஆசிரியர் குறிப்பு உலகின் தொன்மைமிக்க தமிழகத்தில், 2019ன் இறுதியில் உறுதியான திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், காட்டூர் கிராமத்தில் காந்தீசன் ஜோதியம்மாள் தம்பதியினரின் அருந்தவப்புதல்வனாக 02.10.1978ல் பிறந்து இளங்கலை கணினி கல்வியியல் முடித்து 04.04.2004ல் கவிதா என்னும் அற்புதத்தை மணமுடித்து தற்போது இரண்டு ஆண் மகன்களுடன்…   இவ(ண்)ன் கா.பிரபாகரன் பொருளடக்கம் 1. கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா? 5  2.காலம் சொல்லும் கணக்குகள் 7  3. தர்ம உண்வும் மனித உயிரும்… 8  4. மனித்ரகளின் ஆயுட்காலம் 9  5.தேவர்களின் ஆயுட்காலம் 13  6.பிரம்மாவின் ஆயுட்காலம் 14  7.விஷ்ணுவின் ஆயுட்காலம் 15  8.இறைவன் சிரக்கின்றான் (இடைவெளி இல்லாமல்…) 16  9. அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்… 18  10. எதற்கும் அடி முதல் முடி வரை அவன் இருக்கின்றான்… 20  Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 22  கணியம் அறக்கட்டளை 29  1. கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?   நிழலில் உள்ளவரை வெயிலின் கொடுமை தெரிய வாய்ப்பில்லை..., ஆம் கிணற்றுத் தவளைக்கு ஆறு-குளம்-கடலின் அருமை தொரிவதில்லை. அதுபோலத்தான் கடந்து வந்த பாதைகளை அசைபோடத் தெரிந்த நமக்கு, நடப்புக்காலம் வரை நம்மை இயக்கியது யார்? என்று மட்டும் உணரத்தெரிவதில்லை.   காட்டுப்பாதையில் தனிமையில் செல்லும் ஒருவன் 'எங்கிருக்கிறாய் இறைவா?” வந்து என்னை உடனே தொட்டு விடு என்கிறான். ஒரு வண்ணத்துப்பூச்சி எங்கிருந்தோ வந்து அவன் தோளில் அமர்ந்தது. அதனை தட்டிவிட்டு, இதுவேறு காலம் தெரியாமல் கடந்து செல்லும் பாதையின் அச்சுருத்தல் புரியாமல் என புலம்பிக்கொண்டு செல்கிறான். இறைவா என்னருகில் வராவிட்டாலும் பரவாயில்லை, என்னோடு சற்று பேச்சுக்கொடு என்கிறான். குயிலின் அழகான பாடல் அவன் காதில் ஒலிக்கின்றது. அதனை சட்டை செய்துக்கொள்ளாமல் 'வரமாட்டாயா இறைவா” எல்லாம் சொல்வது போல் நீ இல்லாத ஒன்றுதானா? என்கிறான். தூரத்தில் அப்போது பிறந்த ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அதையும் செவிமடுக்காமல் புலம்பிக்கொண்டே இருந்தான்… காரணம் கடவுள் பற்றி அவனிடமிருந்த கற்பனைதான் என்று திரு.மாலன் அவா;கள் துக்ளக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆம் நம்மில் பலபேர் ”பலர் சொல்லக் கேட்டதையும்”, 'திரையில் பல வர்ண ஜாலங்களுடன் வெடிச்சத்தத்துடன் தோன்றும்” இறைவன் மட்டுமே பதிந்து விட்டதால், பட்டாம்பூச்சியாகவும் குயிலாகவும் குழந்தையின் குரலாகவும் அவன் அருகில் வந்தபோதும் அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். உண்டு என்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை… உருவங்கள் அற்றவன் அதனால்தான் அவன் அருவமானவன் ஆகின்றான். எங்கும் எதிலும் நீக்கமறக் கலந்து அனைத்தையும் கடந்து நிற்பவன் தான் 'கடவுள்”. நினைத்தது நடக்கும்வரை அறிவே பெரிதாய் தெரியும்… நினைத்தது நடக்காதபோது நம்பிக்கையே பெரிதாய் தெரியும்… எதிர்பார்த்தது நடந்துவிட்டால் தெய்வம் பெரிதாய் தெரியும்… எதிர்பார்த்தது நடக்காவிட்டால் ஞானம் பெரிதாய் தெரியும்… திறமை செயலிழந்து போகும்போது ஊழ்வினை பெரிதாய் தெரியும்… பெரிதாய் தெரிந்த எல்லாம் சிரிதாகத் தெரியும்… உன்னை உனக்குத் தெரிந்தபோது… உன்னை உனக்குத் தெரிந்த போது உனக்குள் இருக்கும் கடவுள் பெரிதாய் தெரியும்… ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் எமன் உயிரை எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்குகும் எப்படியோ தெரிந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்குத் தெரியும். அதனை பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தியை செய்தார். தன் திறமையெல்லாம் காட்டி தன்னைப்போலவே அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப்போய்விட்டார்   மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான், என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அரவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின்மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே.. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது. சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அடடா என்ன தத்ரூபமாக இருக்கியது.. இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயோ எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லையே.. இப்படிச்சொல்லிவிட்டு மூன்று சிலைகையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்த்து நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லோசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன? சடாரென வீசினார் கயிற்றை.. கெடுத்தது எது? தான் என்கிற அகந்தை.. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு மனவருந்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம். நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளார்களாகலாம். தெய்வம் என்ற விளக்கிற்கு வெளிச்சம் தர மட்டும்தான் தெரியும்… தேவை எங்கு என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். பயன்படுத்திக்கொள்ள முடியாத நேரத்தைத்தான், நாம் நேரம் சரியில்லை என்று சொல்லித் தப்பித்துக்கொள்கிறோம். .... 2.காலம் சொல்லும் கணக்குகள்   கலியுகத்தில் 4,32,000 மனித ஆண்டுகள் இருக்கின்றது. அதன்படி கி.பி.476ல் பிறந்த ஆரியபட்டா; என்ற வானியலார் கி.மு.2449-ல்தான் கலியுகம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதற்கிணங்க தற்போது நிகழும் 2020-ஆம் ஆண்டின்படி 4469 ஆண்டுகள் மட்டுமே முடிந்துள்ளது என்பது நிதா;சனம். (4,32,000-4,469=4,27,531ஆண்டுகள்) 4,275 நூற்றாண்டுகள் கடந்த பின்புதான் இந்த யுகம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கலியுக இயல்புகள்: 1. அரசர்கள் செங்கோல் தாழும், கொடுங்கோல் ஏற்றமுறும், வரிகள் அதிகமாகும், அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்கமாட்டாரகள். அரசே மக்களைத் துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர். 2. பொறாமை, ஒருவருக்கொருவர் வெறுப்பு, கொலைகள், காமம் மற்றும் பாலின ஒழுக்கமில்லாத மனப்பான்மையை மக்கள் மனம் பெறும். 3. ஆசிரியர்களுக்கு மதிப்புக்குறைவதோடு மட்டுமல்லாது மாணவா;களால் ஆபத்தும் உண்டாகும். 4. திருமணம் அவரவர் விருப்பப்படி நடக்குமே தவிர பெரியவர் சம்மதம் இருக்காது. 5. யுகம் முடிவில் கல்கி அவதாரம் நிகழ்ந்து வௌ;ளைக்குதிரையில் வந்து கலியுக நிகழ்வுக்குக் காரணமான 'கலி”யுடன் போரிடுவார் என்றும் அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய யுகமாம் க்ருத யுகம் பிறக்கும் என்றும் தமிழ்விக்கி குறிப்பிடுகிறது.     3. தர்ம உண்வும் மனித உயிரும்…   யுகம் வாரியாக மனிதனி உயிர் அவனது உடலில் உரைந்திருந்த இடமும் அவனின் தர்ம உணர்வு மாறுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   []     மனிதனின் ஆயுட்காலம் யுகம் மாற மாற எவ்வாறு 10ன் மடங்காக குறைந்து வந்துள்ளதோ அதேபோல், அவன் முக்தி அடையும் முறையும் எளிமையாக்கப்பட்டு விரைந்து முக்திநிலை அடைய வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. தானத்தில் உயர்ந்து தேடிப்போய் கொடுத்து வந்ததால்தான் அவர்களின் ஆயுட்காலம் அன்று க்ருத யுகத்தில் ஒரு இலட்சம் ஆண்டுகளாக இருந்துள்ளது. அவ்வளவு எளிதில் துறக்கமுடியாத உயிரையும் அவன் கொண்டிருந்தான். துவாபரா யுகத்தில் இரத்தம் சிந்தினால் இறப்பை சந்தித்த மனிதன் தற்போது கலியுகத்தில் சோறு கிடைக்காவிட்டால் இறந்துவிடுவான் என்று குறிப்பிடுகிறார் வாரியார். ….. 4. மனித்ரகளின் ஆயுட்காலம்   பூமியில் வாழும் பலருக்கும் மரணமின்றி சிரஞ்சீவியாக வாழ ஆசைதான். ஆனால், பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் மரணம் என்பது பொதுவானது. அதை அனைத்து உயிரிகளும் ஏற்றுக்கொண்டால் அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது. அறிவியலும் மருத்துவமும் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் கூட, மரணத்தை தள்ளிப்போட முடியுமே தவிர, யாரும் தவிர்க்கமுடியாது. நூறு ஆயுசு என்று பெரியவர்கள் வாழ்த்தும்போது கேள்வியுற்றிருப்போம். ஆம், மனிதனின் கலியுக ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்பது கணக்கு. அப்படியென்றால் ஒவ்வொரு யுகத்திற்கும் மனிதனின் ஆயுள் வேறுபட்டிருந்ததா? யுகங்கள் எத்தனை? என்ற கேள்விகள் எழுகின்றதல்லவா?. 100 வயதுக்கும் மேல் வாழ்பவர்களை சதம் மிஞ்சியவர்கள் என்று குறிப்பிடுவதுண்டு.  1997-ம் ஆண்டில் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிரெஞ்ச் பெண் ஜீன்கால்மென்ட் என்பவர்தான் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர் என்று கருதப்பட்டுவருகிறார். அவ்வாறு அவர் வாழ்ந்ததற்கு உடல்நலக் குறைபாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள்தான் காரணம் என்று கூறுகின்றனர் அறிவியலார் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதே உண்மை. மனிதர்களின் பாவக்கணக்குகள் அதிகமானால் அவற்றைத் தீர்க்க அவன் மறுபிறவி எடுக்க நேரிடுகிறது என்பது இந்து தர்மம். அவ்வாறு மனிதன் ஏழு பிறவிகள் வரை எடுப்பதாகவும் அறியமுடிகிறது. ஆனால் யுகங்கிளின் வரிசைப்படி முதல் யுகமான க்ருத யுகத்தையும் தற்போது நடைபெற்றுவரும் கலியுகத்தையும் ஒப்பிடும்போது மனிதனின் ஆயுட்காலம் மிகவும் சுருங்கி ஆயிரத்தில் ஒரு பங்காக உள்ளதையும், யுகங்களின் கால அளவு 4,32,000த்தின் மடங்காக குறைந்துக்கொண்டே வந்துள்ளதையும் கீழ்காணும் அட்டவணையில் காணலாம்.   []   உலகம் அழிவின் விளிம்பில் உள்ளதென்றும், சுனாமி போன்ற பேரலைகளால் பூமியின் பெரும்பகுதியோ, முழுவதுமோ கடலாக மாறும் என்றும் சிலர் மனிதர்களை பயமுறுத்திக்கொண்டிருப்பதை அறிவோம்.   உலம் 2012ல் முடிகின்றது என்று திரைபடம் மூலம் சிலரும், மாயா நாட்காட்டி என ஒன்றுள்ளதாகவும், அவற்றில் குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறைவேறியுள்ளதாகவும், அதன்படி உலகம் விரைவில் அழிவதை உறுதிசெய்துள்ளதாக சிலரும் பயமுறுத்திக்கொண்டு இருக்கின்றனா;. அவ்வளவு ஏன்.. வளர்ந்து வந்துள்ள அறிவியல் கூட வித்தியாசமாக எதையோச் சொல்லி நம்மை பயமுறுத்திக்கொண்டுதான் உள்ளது.   அவற்றில் சிலவற்றை பார்ப்போம்…   []     []   இன்றைய ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவாலும், வேதிப்பொருள் மற்றும் வேதிஉரங்கள் கலந்த உணவாலும் மனிதன் பல்வேறு சவால்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றான். ஒரு சிரிய குறை என மருத்துவரிடம் சென்றால் பரிசோதனை என்று சில குறிப்புகளை கொடுத்து, இரத்தம், தோல், சளி, சிறுநீர் என தொடர்ந்து முழுசோதனை செய்துக்கொள்ளுங்கள், எந்த பிரச்சனை இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இயற்கை சொல்லாத அனைத்து குறைகளையும் அவர் கண்டறிந்து, நம்மை அதிகம் சிந்திக்கவைத்து அதுவரை வராத அழுத்தத்தையும் வரவழைத்து, நம் செலவினத்தை அதிகப்படுத்தி, அத்துனைக்கும் மருந்துள்ளது, அதை தொடா;ந்து ஆறு மாதங்கள் தொடா;ந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி, ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாக்கி, தானாகச் சென்றால் 70 வயதில் பிரியும் உயிரை அலைக்கழித்து 60 வயதிலேயே வேற்றுலகம் அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.   இயற்கையை மதித்து, நல்ல உடல் உடல் உழைப்புடன் செயல்படும் எவரும், இவ்வாறு மருத்துவர் அச்சுறுத்தலுக்கு ஆட்படுவதில்லை. ஆம் இன்றும், சைக்கிள் மிதித்தும், ஏருழும் மக்களும் மருத்துவமனைப் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை என்பதே நிதர்சனம்.   …..   5.தேவர்களின் ஆயுட்காலம்   மனிதனின் ஆறுமாத காலம் தேவர்களின் 1 பகலாக கருதப்படுகிறது. அதேபோல்தான் அடுத்த ஆறுமாத காலம் 1 இரவாக கருதப்பட்டு, மொத்தத்தில் மனிதனின் ஓராண்டு என்பதே தேவர்களின் 1 நாளாக கருப்படுகிறது என்கிறார் வாரியார். 360 மனித ஆண்டுகளை உள்ளடக்கியது ஒரு தேவஆண்டு என்று கருதப்படும். அவ்வாறு 4000 தேவ ஆண்டுகள் சேர்ந்ததுதான் ஒரு யுகம் எனப்படும். அதன் அடிப்படையில் பின்வருமாறு யுகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. []   அரசு ஊழியார்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வதைப்போல், தேவர்களுக்கும் ஏன் கடவுள்களுக்கும் கூட ஆயுட்காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   6.பிரம்மாவின் ஆயுட்காலம்   12000 தேவ ஆண்டுகள் = 1 சதுர் யுகம்  பன்னிரண்டாயிரம் தேவ ஆண்டுகள் ஒரு சதுர் யுகம் என்றும், அந்த    சதுர் யுகத்தில் நான்கு தேவ யுகங்களும் அடக்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது. 1000 சதுர் யுகங்கள் சேரந்தது பிரம்மாவின் ஒரு பகலாகவும் + அடுத்த 1000 சதுர் யுகங்கள் சேரந்தது பிரம்மாவின் ஓரிரவாகவும் சேரந்தது பிரம்மாவின் ஒரு நாளாக கருதப்படுகிறது. மொத்தத்தில் 2000 சதுர் யுகம் பிரம்மாவின் ஒரு நாளாகி அந்த நாள் மாதமாகி (30 * 2000 = 60000), அந்த மாதம் ஆண்டாகி பிரம்மாவின் ஒரு ஆண்டாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.   அந்த ஆண்டு நூறானால் பிரம்மாவின் ஆயுள் முடிவதாகவும், பிரம்மாவிற்கு அடுத்தப்படியாக யுகபுருஷனாம் ஹனுமன் அந்த இடத்திற்கு பதவிப்பிரமானம் செய்யப்பட உள்ளதாவும் இந்து தர்மம் குறிப்பிடுறது. தற்போது ஹனுமன் கதிரிவரம் என்ற இடத்தில் தவம் புரிந்தவண்ணம் இருப்பதாகவும் அந்த தீர்க்க தரிசி குறிப்பிட்டுச் சென்றுள்ளார். பிரம்மாவிற்கும் ஆயுள் முடிகிறதா? என்னடா இது காலத்தின் கொடுமை. படைக்கும் தொழில் மேற்கொள்ளும் அவருக்கே அந்த நிலை எனும்போது நாம் எம்மாத்திரம். ……                                   7.விஷ்ணுவின் ஆயுட்காலம்     []       8.இறைவன் சிரக்கின்றான் (இடைவெளி இல்லாமல்…)   அண்டவெளி அவனானதால்… அறிவியல் வளர்ந்த காலத்தில்தான் சூhupயக்குடும்பத்தில் கோள்கள் 9 (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், ப்ளுட்டோ) என்றும், அவற்றில் ப்ளுட்டோ 1930ல் ஒரு கோளாக கண்டுபிடிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கழித்து 2006-ஆம் ஆண்டு அனைத்துலக வானியல் ஒன்றியம் அது கோள் இல்லை என்று அறிவித்தது. ஆனால் விண்கலங்களும், ராக்கெட்டுகளும் இல்லாத காலத்திலேயே தமிழரின் வானியல் அறிவு கோள்களை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். மனிதன் வாழ்வது இந்த பூமியில்தான். தாம் வாழ்கின்ற பூமியை அடிப்படையாகக் கொண்டுதான் மற்ற கிரகங்களை கணித்திருக்கின்றான். எனவே தமிழன் கண்டறிந்த கோள்களில் பூமி இடம்பெறவில்லை. இந்த பூமி ஒன்றுதான் உயிர்களுக்கு வாழ்வளிப்பதோடு கிரகிக்கும் தன்மையும் உள்ளது. சூரியன் ஒரு கிரகமாக கணிக்கப்பட்டு, சந்திரனின் கிரகிக்கும் ஈர்ப்புவிசை பூமியை பாதித்து கடலில் விசைகளை (ஏற்ற இறக்கங்களை) ஏற்படுத்தும் அளவிற்கு இருப்பதால் சந்திரனும் கிரகமாகவே கணிக்கப்படுகிறது. ஆனாலும் சூரியன், சந்திரன் இரண்டிற்கும் பிற கிரகங்களுக்கு கொடுத்த கிரகங்களுக்குரிய இடத்தைக் கொடுக்காமல் இரண்டாம் நிலைதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதனால்தான் வானியலோடு தொடர்புடைய சோதிடவியலில் மற்ற கிரகங்களுக்கு இரண்டு இடங்கள் கொடுத்தவா;கள், சூரியன், சந்திரனுக்கு மட்டும் ஒரே இடம் கொடுத்துள்ளார்கள். காரணம் சூரியன் ஒரு நட்சத்திரம், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் இயற்கையான ஒரு துணைக்கோல் என்பதால்தான். நவக்கிரகங்களை ஆலயங்களில் கண்டிருப்பீர்கள். கிழக்கில் சூரியன், மேற்கில் சந்திரன், தெற்கில் செவ்வாய் ராகு கேது, வடக்கில் புதன் குரு என்ற வரிசையில் தான் அமைந்திருக்கும். இந்தவரிசை குறிக்கும் விடயங்கள் என்னவென்று சற்று உற்றுநோக்கினால் தொupயும், நவக்கிரகங்களை ஏழு முறை கடிகாரம் சுற்றும் திசையிலும், இரண்டு முறை எதிர்ச்சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும் என்ற விதிப்படி, சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றுகின்றன என்பதையும், ராகு கேது இரண்டும் வலமிருந்து இடமாக சுற்றுகின்றன என்பதையும் அச்சுபிசகாமல் சொல்லியிருக்கிறனர் நம் முன்னோர். நமது வணக்கம் சரியான இடத்தைச் சென்று சேர்ந்தது என்றால் மகிழ்வுதானே. அதுதானே நம் கோரிக்கை. அதந்தவகையில் கடவுள்களை வணங்குவதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கடினமாக இருக்கும் என்பதால் எளிய முறையில் கடவளின் பெயரையேச் சொல்லி போற்றி என்றால் போதும் நமது வணக்கம் அவரைச்சேரும். அதன்படி கிரகங்களை வணங்கும்போது, சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு கேதுவே போற்றி எனச் சொல்லிக்கொண்டே நவக்கிரகங்களை வழிபடலாம். 13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் பெருவெடிப்பு நிகழ்ந்து வாயுக்கள் உருவாகி அதிலுள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக அறிவியல் கூறுகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் இறைவன் ஒருவனே, அவன் உருவமற்றவன், அருவமானவன் என்றும் குறிப்பிடுகின்றனா;.   ஹிக்ஸ் போசன்  கடவுளின் அணுத்துகள் (கடவுள் துகள்) இருப்பதாக சான்றுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த பிரபரஞ்சம் எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்று ஜெனிவாவில் ஒரு மாபெரும் ஆய்வு நடத்தி அறிவியல் தெளிவித்துள்ளது. ஹிக்ஸ் போசான் தான் உண்மையில் பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்கும் என்றும் அதற்கு கடவுளின் அணுத்துகள் என்றும் பெயரிட்டு ஒரு வழியாக கடவுள் இருப்பது உண்மை என்பதை இன்றைய அறிவியல் நிரூபித்துள்ளது.   []   9. அறிந்து தெரிந்து  புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்… []     சிவன் என்றால், தமிழில் 'சிவந்தவன்” என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ச்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. இந்து மதம் உலகின் உயர்ந்த மதங்களில் ஒன்றாகவும், இந்து மதத்தில் உலகின் மிக உயர்ந்த கருத்துக்கள் பலவும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், பண்டைய வேதங்களான ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் என்ற நான்குவகை சமஸ்கிருத வேதங்களும், பன்னிரு திருமுறைகளான் தமிழ்வேதங்களும் இங்கு மட்டுமே உள்ளன என்றும் தமிழ்விக்கி கூறுகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் என்னும் தமிழ்நூலின் ஒரு பகுதி சிவபுராணம் என்று அழைக்கபடுகிறது. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று போற்றப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், அவரது தந்தை பரந்தாமனுக்கும் ஒரு பிரச்சனை. யார் பெரியவர் என்று எங்கும் வரும் ஒரே பிரச்சனைதான். தன்னைப் படைத்த தந்தை மகாவிஷ்ணுவிடமே தனது தோள் வலிமையைக் காட்டிக்கொண்டிருந்தார் பிரம்மா. அப்போது தேவலோகத்தில் ஒரு அதிசயம் தோன்றியது. கண்ணிமைக்கும் கண நேரத்தில் ஒரு ஜோதி வடிவம் அவா;கள் முன் தோன்றி ஆயிரமாயிரம் சூரிய ஒளி சுவாலையுடன் நெருப்பு வடிவமாகவும், ஆனால் குளிர்ச்சி பொருந்தியதாகவும் அது விளங்கியது. அந்த லிங்க வடிவைக் கண்டவுடன் காக்கும் கடவுளுக்கும், படைக்கும் கடவுளுக்கும் ஒரு கட்டளை பிறந்தது. உங்களில் யார் எனது அடிமுடியைக் கண்டுவருகிறாரோ அவரே பெரியவர் என்றது அந்த கட்டளை. அவர்களில் அடியைக்காண ஒருவரும், முடியைக் காண ஒருவரும் புறப்பட்டனர். தேடல் பல யுகங்கள் கடந்தும் காணமுடியாமல் அலைந்துக் களைத்து, தம்மைவிட பெரிய சக்தி படைத்தவர் இவரே என அறிந்து அவன் பாதம் பணிந்தனா;. ……     10. எதற்கும் அடி முதல் முடி வரை அவன் இருக்கின்றான்…   அவரே சிவம், அதுவே இறைவனின் முதல் லிங்க தரிசனம். அப்படியென்றால்ன், பிரம்மனும், விஷ்ணுவும் அவர்களை விட சக்திமிக்க மூலவனைக அறிந்திருக்கவில்லையா? அல்லது சர்வசக்தி படைத்த இறைவன் அன்றுதான் பிறந்தாரா? இல்லை, சிவனே முதல்வன் அவனே தலைவன் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே ஏற்கட்ட விளையாட்டல்லவாஸ அது. உலகம் என்பது இங்கு மண்ணையும், வெறும் மனிதரையும் குறிப்பதாக அமையவில்லை. தேவர், அசுரர், கந்தர்வர், முனிவர், கிரகங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், யக்சர்கள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும் என்பதை உணர்த்தவே இந்தத் திருவிளையாடல். அந்த ஆதிப்பரம்பொருளையே சங்கு சக்கரம் தாங்கிய விஷ்ணுவின் மூலமாக கண்டு அவரையே மகாவிஷ்ணு என்றும் அழைக்கின்றோம். ஆதியும் அந்தமும் அற்ற, உயர்வு தாழ்வும் அற்ற, இகமும் பரமும் அற்ற, இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருளே ஈசன் என்று அழைக்கப்படுகின்ற பரப்பிரம்மம். உயிரிகள் இனப்பெருக்கம் செய்யவே ஆண் பெண்ணாக படைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இவை அனைத்திற்கும் மூலவரான இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை நிரூபிக்கத்தான் அர்த்தநாரீஸ்வராய் அவதரித்துக் காட்டியுள்ளார். பரப்பிரம்மத்தின் ஆண் உருவகமே ஆதிசங்கரன். அந்த ஆதிசங்கரனே பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், அழித்தல் தொழில் செய்யும் காலபைரவனாகவும் அவதரித்திருக்கின்றார். பரப்பிரம்த்தின் பெண் உருவகமே ஆதீசக்தி. அவரே சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும், துர்க்கையாகவும் அவதாupத்திருக்கின்றார். திருமூலார்ன் திருமந்திரம் முழுமைக்கும் உருகிச்சீராட்டுவது இந்த பரப்பிரம்மத்தைதான். “பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்  இறைவனடி சேரா தார்” மனிதன் தனது மறுபிறப்பை தவிர்க்க வேண்டுமாயின் இந்தப்பிறவியிலேயே இறைவனைப் பற்றவேண்டும் என்று வள்ளுவப்பெருந்தகை குறிப்பிடுவரும் இந்த பரப்பிரம்மைத்தான். 'அவன் ஒருவனே” அவனே ஆதியும் அந்தமும் அற்ற அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருளான ஈசன். தற்போது உங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் அந்த பரம்பொருளின் ஆசியால் சுகவசந்தம் வீசத்தொடங்கியிருக்கும். அதேபோல் அனைத்தையும் விட உயர்ந்த ஒன்று உண்டென்றார் அது அந்த பரப்பிரம்மமே என்றும், ஆம் அன்பே சிவம்  என்றும் உணர்ந்து வாழ்வோம். நம்மை எந்த தீய சக்தியும் நெருங்காமல், பலம்பொருந்திய மனம் தற்போது உருவாகியிருப்பதையும் உணர்வோம். அனைத்து காலங்களிலும் அ(சி)வனே வசந்தம்… …       []     Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்  2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர்  உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com  - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks  - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948    இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by  கணியம் அறக்கட்டளை -  http://kaniyam.com/foundation    உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I  2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses  உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். கணியம் அறக்கட்டளை   []               தொலை நோக்கு – Vision  தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்  பணி இலக்கு – Mission  அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.    தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com  - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com  கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி – Text to Speech  - எழுத்துணரி – Optical Character Recognition  - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி  - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle  - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள்  - மின்னூல்கள் உருவாக்கும் கருவி  - உரை ஒலி மாற்றி – இணைய செயலி  - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி  - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி  - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி  - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்  - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்    அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்    - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல்  - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்  - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல்  - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்    - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்  - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல்  - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல்  - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல்  - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல்  - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( https://aamozish.com/Course_preface போல)    மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.  கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும்.  நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.  பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   Kaniyam Foundation Account Number : 606101010050279 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618