[]                     கடற்கரைச் சுவடுகள்             சூழலியலுக்கேற்ப….! கடற்கரைச் சுவடுகள் – நூலைப் பற்றி   “கடற்கரைச் சுவடுகள்”, இங்கு பதிக்கப்பட்டிருக்கும் சுவடுகள் அனைத்தும் கால நிலைக்கேற்ப, சமுதாய சூழலியலுக்கேற்ப, எம் மன ஓட்டத்திற்கேற்ப உருவானவையே.   எம் பதிவுகளில் சில வடுக்களாகவும், சில காயங்களாகவும் இருக்கலாம். அவை அனைத்தும் வாசகர்களை பொருத்ததே. காயங்கள் மறைந்துவிடும், ஆனால் வடுக்கள்?   முழுமையாய் நோட்டமிடுங்கள் எம் எழுத்துச் சுவடுகள் அனைத்தையும். கடற்கரை அலைகளை நோட்டமிடுவது போல். நிச்சயம் எம் சுவடுகள் தங்கள் மனதிலும் பதியும் என்ற நம்பிக்கையில்….   நவீன் ராஜ் தங்கவேல்   கடற்கரைச் சுவடுகள்– ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது மூன்றாவது புத்தகம். எனது முதல் புத்தகம் “வகுப்பறைச் சாரல்கள்”மற்றும் இரண்டாம் புத்தகம் “எழுதுகோலின் ஓவியம்”என்னும் நூல்களுக்கு உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது மூன்றாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   வகுப்பறைச் சாரல்கள் – http://freetamilebooks.com/ebooks/vagupparai-saralgal/ எழுதுகோலின் ஓவியம் - https://freetamilebooks.com/ebooks/ezhuthukolin-oviyam/   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com காப்புரிமைத் தகவல்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License [Creative Commons License] நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work.     சமர்ப்பணம்   காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமூகத்திற்கும்; ஊக்கம் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்; பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்;         இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்….!   அன்புத் தமிழே   சித்திரம் அடி நீ எனக்கு…. சத்திரம் அடி நான் உனக்கு…. செந்தமிழே நீ எனக்கு - அதன் சந்தம் அடி நான் உனக்கு….   தமிழே…...!!!   தைப்பொங்கல்   பாரம்பரிய பட்டாடையை புத்தாடையாய் உடுத்தி நட்சத்திர தலைவனுக்கு மாலையிட்டு ‘கோ’ வெனும் சோதரனுக்கு கங்கணம் கட்டி உழவு நிலத்தில் அடுப்பை மூட்டி குயவனின் பாண்டத்தை அதன்மேல் வைத்து பச்சரிசியும், வெல்லமும் நீரோடு ஏலக்காயும் சேர்த்து பொங்கி வரும் சமயத்தில் கருங்கரும்பை கட்டியணைத்து “பொங்கலோ பொங்கல்” என சுற்றமும் நட்பும் புடைசூழ இனிதே துவங்குகிறது எம் இனத்தின் திருவிழா…...!!!   நீரின்றி அமையாது உலகு   நீரின்றி அமையாது உலகு எனில் நீயின்றியும் அமையாது உலகு எனும் உண்மையை உணர்வாய் தோழா….!   சட்டம் கண் இருட்டறையில் ஏற்றப்பட்ட சுடர்விளக்கும் திறன் இல்லா தூண்டுகோலால் அனைத்தெரிய பட்டனவே….!   எவர் மீது குற்றம் சொல்ல எதிரணியும் கரு தேட விளைவுகள் யாதொன்றையும் அரைகுறையாய் ஒளிபரப்ப எதிர்காலம் வினவுகிறது இனிமேலும் என் செய்ய….?   நம் முப்பாட்டன் தந்ததை நம் பாட்டன் தவற விட்டான்   நம் பாட்டன் தந்ததை நாமும் தவற விட்டோம் - என் செய்வோம்   நம் பேரன் வந்து கேட்டால் - என் செய்வோம்   ஆயுதம் இன்றி ஓர் அறப்போர் செய்வோம் மண்வெட்டியும் கோடரியும் முன்னிறுத்தி நெடுஞ்சாலைகள் போல் நீர் சாலைகள் அமைத்தருளி வற்றா நதிகளை ஒன்றிணைத்து   நம் முப்பாட்டன் தந்ததை மீட்டருளி நம் பேரனுக்கும் பேத்தியருக்கும் தந்திடுவோம்…...!!!   நாட்கள் தள்ளி விட்டது   அலுவல் முடிந்து, அசதியாய் வந்தவனை; அன்பால் அரவணைத்து; ஆசையாய் தழுவிவிட்டு; இளைப்பாற இடம் கொடுத்து உணவருந்த எமை அழைத்து எனக்குப் பிடித்த தோசையை - நீ சூடாய் பரிமாற நான் எடுத்து ஊட்டிவிட - நீயும் தடுத்துவிட்டாய்….!   “உள்ளிருக்கும் உயிருக்கு சுடும்” என்று கூறி சூரியனைக் கண்ட அல்லி போல் வெட்கப்படுகிறாய்…...!   நாட்கள் தள்ளிப் போவதை சொல்லாமல் சொல்லி விட்டாய் நீயும்…...! சொல்லாமல் புரிந்து கொண்டேன் நானும்…...!   ஆனந்தம் நீராய் பெருக்கெடுக்க ஆரத் தழுவினேன் நம் உயிரையும் சேர்த்து….!   மேகங்கள் பெயர்த்தெடுத்து படுக்கைகள் செய்தளிக்க எண்ணினேன்….! அதன் ஈரப்பதமும் உன்னை நிந்தனைக்குள்ளாக்கும் என்பதால்….   என் மடியினை உன் தலையணை ஆக்கினேன் நம் உயிர் உன் மடியில் தவழும் வரை இனி நீயே என் முதல் சேயாவாய்……!!! வசன் தேடல்   ஆர்ப்பரிக்கும் ஆழியிலே வானெழும் அலைகளை ஆரத்தழுவி தளம் அமைத்து கலம் எழுப்பி சபர் மேற்கொள்கிறேன்….   தமிழர் தேசம்தனில் தமிழர் வசன் தேடி….!!!   சேட்டைகள்   சின்னஞ்சிறு சேட்டைகள் செய்து எம் (மனக்) கோட்டையில் அமர்ந்துவிட்டாய்…...!   செய்யும் சேட்டைகளை நிறுத்திவிடினும் எம் கோட்டையை விட்டு வெளியேறிவிடாதே…...!!!   அரசியல் சதி இந்த பூமியும் இல்லாமல் போகட்டும் இறைவா நீ உண்மையில் இல்லை என்பதால்…...!   உன் கண்ணெதிரே எத்தனையோ சூழ்ச்சிகள் உலகமயமாதலை நோக்கி எத்தனையோ அரசியல் நகர்வுகள்….!   ஒரு சிலர் வாழ பல நூறு மக்கள் சுரண்டப்படுவது ஏன்…...? ஒரு தேச வளர்ச்சிக்கு பல தேசங்கள் வீழ்த்தப்படுவது ஏன்…...?   என்(ம்) இனம் வீழ்த்தப்பட்ட தருணந்தனில் - அதை ஏதென்று அறியா பருவத்தில் இருந்தேன்….!   இன்று கண்களால் காண்கிறேன் ‘சிரிய’ மக்களின் நிலை கண்டு இரத்தங்கள் ஆறாய் ஓடுகிறது சடலங்கள் குவியலாய் கிடக்கிறது…...!   இதுதான் “உலகமயமாதலோ” …...?   அம்மக்களின் நிலை கண்டு - எம் கண்களில் நீரல்ல ரத்தம் வழிகிறது அம்மழலைகளின் சடலம் கண்டு - எம் இதயமும் செயல் இழக்கிறது…...!   இனி ஒரு யுத்தம் காணும் சக்தி என்னுள் இல்லை….!! அப்படியொரு நிலையெனில் என்னுயிர் முதலாய் பிரியட்டும்….!!!   கவிதை படிப்பதற்கு   தினம் ஒரு கவிதை படித்திடவே ஆசை…...! தினம் ஒரு பார்வை கண்ணோடு கண்நோக்க….!   என் இச்சைகளும் வெற்றிகளே…...!!!!       எதிர்கொள்ளப்போகும் அழிவு   மழவர் நாட்டு சொந்தங்களே விண்ணை முட்டும் வானூர்தியை வியந்து பார்ப்பதன் காரணம் யாதோ…...!   நீவிர் வியந்திருக்கும் தருணந்தனில் நம் மண்ணை திருட வந்து விட்டான் ‘வளர்ச்சி’ என்னும் பெயரைச் சொல்லி நம்மை ஆளும் வியாபாரி….!   மின்னும் தங்கத்தின் தகப்பனது - கையில் சிக்கா பாத ரசத்தின் சோதரனது ‘வெண் பொன்’ என்னும் பெயரும் அது மழநாட்டு மண்ணில் நீக்கமற நிறைந்தது…...!   இவ்வளம் எடுத்துக் கொணற, மழநாடு முதல் தலைநகர் வரை பறக்கும் சாலைகள்….! பல்லாண்டுகள் முடங்கிக்கிடந்த வானூர்தி…...! வாகன நெரிசல் இல்லா இரட்டை அடுக்கு மேம்பாலம் இன்னும் பல….!   விழித்துக் கொள்வீர் - எம் மழநாட்டு சொந்தங்களே…...!   இல்லையேல்   மருத நாடும் ஆகும் அதிவிரைவாய் பாலையின் நாடாய்….   மழவர் நாட்டு வளங்களை நம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்தளிப்போம் - நம் முன்னோர் தந்த சொத்துக்களை பின்னோருக்கும் விட்டுச்செல்வோம்…...!!!   அடங்க மறுக்கும் தாகம்     என்று அடங்கும் எம் தாகம்,   கவியோ, கட்டுரையோ பெயர் பலகையோ எங்கு அவள் பெயர் இருப்பினும் காண தவிக்கிறது எம் கண்கள்…...!   காணொளியோ, வானொலியோ எங்கு அவள் குரல் கேட்பினும் கேட்க தவிக்கிறது எம் செவிகள்…...!   எழுதுகோல் கையிலிருந்து காகிதமோ, குறிப்பேடோ எது கிடைப்பினும் அவள் புகழ் எழுத தவிக்கிறது என் கரங்கள்…...!   கையொப்பம் இட வேண்டி எக்கோப்பு என் முன் இருப்பினும் அவள் மொழியையே தீட்டத்தவிக்கிறது என் விரல்கள்…...!   உண்ண ஊணும், பருக நீரும் இருந்திடினும்; இல்லாவிடினும் அவள் வார்த்தைகளை மட்டுமே உரைக்க தவிக்கிறது உதடுகள்…...!   என் ஐம்புலன்களும் தவிக்கிறது செங்குருதி துடிக்கிறது…...!   என்று அடங்கும் என் தாகம் தமிழின் மேல் கொண்ட மோகம்…...!!!   பணம்   மதிப்பில்லா காகிதத்தில் சாயம் பூச மதிப்புக்கூட்டப்பட்டுவிட்டது - ‘பணம்’ என்று….!   தேசத்திற்கு தேசம் புதிய பரிமாணம் - பெயர்களால்….   நாட்டிற்கு நாடு புதிய அளவீடு - மதிப்புக்களால்….   இன்றுவரை கண்டதில்லை குப்பைத் தொட்டிகளிலும் ஏழை வீடுகளிலும்   என்றொரு தேசம் சமதர்ம பொருளாதார தன்நிறைவடைகின்றதோ அன்றே பணம் வெற்றுக் காகிதம்……!!!   காதல் இலக்கணம்   அரிவையே,   நீ அனுப்பிய தூதினை படித்துவிட்டேன்; மனமகிழ்ந்தேன் தமிழ் இலக்கணமறியா உன்னிடத்தில் - காதல் இலக்கியம் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை இருப்பினும், சந்திப்பிழைகள் திருத்திவந்தால் சந்தித்த சந்திப்பிலிருந்து புது காதல் இலக்கணம் தொடங்கி வைப்போம்…...!!!       வளியின் விழி   அகக்கண்ணிற்கு எட்டா இப்பிரபஞ்சம்தனில் - ஒரு அண்டம் பேரண்டமாய் - அதில் அணுவின் துகள்களாய் நாம் இருக்க அனைவரையும் இணைக்கிறது வாயுவின் கரங்கள்…...!   மின்னணு யுகந்தனை படைத்து விட்டான் மனிதன் - ஆதலால் பழமையில் வாழ்ந்தவன் புதுமையை வரவேற்கிறான் - அதன் விளைவுகள் அறியாமல் இறுதியாய் எண்ணித் தவிக்கிறான்…...!   சில அங்குல உயரம் தான் பேரண்டமும் அதனுள் அடக்கம் இப்புவிதனில் ஆழியும் அலை வீச மறக்கலாம்; மனிதன் அலைபேசி பயன்படுத்த மறப்பதில்லை…...!   மனித வாழ்வில் அலைபேசி ஓர் அங்கமோ…...?   காந்த அலைகள் கொண்டு இயங்கும் அலைபேசியில் ஆபத்துகள் ஆயிரம் இதை அறிவானா மனிதன்……?   சூழ்ந்திருக்கும் வளிதனில் வேதியல் கூற்றே உள்ளது என்கிறான் - மனிதன் ஏனோ என் விழிகளுக்கு மட்டும் யாரோ ஒருவரின் மின்னணுத் தகவல் தெரிகிறது…...!   தொழில்நுட்பம் தெரிந்தவன் வளியின் துணையோடு உன் தனியுரிமையை பார்வையிடுகிறார் அனுமதியின்றி…...! தேவைப்படும் எனின் தரவிறக்கமும் செய்கிறான் இப்புவிதனில் எவன் ஒருவனின் தகவலும் பாதுகாப்பானது அன்று…...!   மின்னணு யுகந்தனில் - அலைபேசி அலைவரிசை மாற்றும் கருவி அல்ல உன் தகவலை விற்கும் கள்ளச் சந்தை…...!   உன் அலைபேசியின் முகவரி போதும் உன் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப வாதியின் உடமையாகும்…...! வளியில் ஆயிரம் விழிகள் உம்மை நோக்குகின்றன கவனம் சிதறினால் - நீயும் வாழ்வின் வலிகளை சந்திக்கலாம்…...!   அலைவரிசை விடுத்து - ஆழியின் அலைவரிசையை பார்வையிடுங்கள் அகிலம் தனில் அமைதி பரவ அடித்தளம் இடுங்கள்…...!   வளியின் விழிகள் அமைதி கொள்ளட்டும் மக்கள் வதனங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்…...!!!   அசல் நிறம்   எம் எழுத்துக்களை வண்ணங்களால் தீட்டவே எண்ணம் கொள்கிறேன்…...!   ஏனோ, எம் எழுத்துக்கள் யாவும் கருமை கொள்ளவே விருப்பம் கொள்கின்றன…...!   வண்ணங்களின் அசல் நிறம் கருமை என்பதால்…...!!!   இயற்கையே இரக்கம் கொள்   இமை மூட மறுக்கிறது இயற்கையும் இடம் தர மறுக்கிறது….   எம் தேகம் மட்டும் ஓய்வு கொள்ளவே தவிக்கிறது…...!! என் செய்வேன், இடம் தேடி அலைகிறேன் என்றும் அன்பை தேடுவது போல்….   இயற்கையே இரக்கம் கொள் ஒரு பொழுது ஆழமாய் உறங்கி ஏழவே…...!   - வேண்டுகிறேன்…...!!!   மகள்   என் வீட்டு இளவரசியை அரசியாக்கி இளவரசி பட்டத்தை தனதாக்கியவள்….!   என் காதலின் சாட்சி அவள்…...! எம் உயிரணுவின் ஓவியம் அவள்…...! என்னவளின் மறு உருவம் அவள்…...! எம் தாயின் மறுபிம்பம் அவள்…...!   அவளே என் அருமை மகள்…...!   இனி, எம்மை வழிநடத்த தலைவன் தேவை இல்லை அவள் கட்டளைகள் போதும்…...!   விளையாட மைதானங்களோ எதிரிகளோ தேவை இல்லை அவளோடு இருக்கும் உப்பரிகைகள் போதும்…...!   கேட்பதற்கு இனிய கானங்கள் தேவை இல்லை அவளின் மழலை மொழி போதும்……!   என் உலகம் அவளோடு என் துணை போதும் அவள் துணையோடு போகும்வரை…!!!   பழமையானவன்   மாறிவரும் உலகம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சமூக வளர்ச்சி நாகரிக மாற்றம் இவை யாவும் இருந்தும் பழமையானவன் ‘நான்’ …...!   மரங்களிடம் காகிதம் வாங்கி மேகங்களிடம் மழைத்துளி வாங்கி மயிலிடம் பேனா வாங்கி பதிவஞ்சல் அனுப்பும் பழமையானவன் ‘நான்’......!!!         சந்திரிகையே தேயாதே     சந்திரிகையே தேயாதே….   பணியின் நிர்பந்தமோ என்னவோ உன்னை ரசிக்க அணுவளவும் நேரமில்லை உன்னைச் செதுக்க எந்தன் மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை…...!   இரு ஈரேழு தினங்கள் கழித்து மீண்டு வருவேன் உன்னை சந்திக்க நேரமொதுக்கி எம் கவி கொண்டு உனை செதுக்கி…...!!!     வேண்டுகிறேன்   காதல் தூதனுப்பி கன்னியவள் காத்திருக்க மங்கள தேதி ஒன்னு எதிர்பார்த்து விழித்திருக்க   மன்னவன் நான் என்று முடிவுகட்டி மாங்கல்யம் முடித்துவிட்டால் இதயத்தில்…...!   கன்னிக் காதல் பூத்துக்குலுங்க அவள் அருகில் நானோ என்னருகில் அவளோ வந்தமர என் இதயம் மட்டும் எகிறிடுச்சு இதயத்துடிப்பு 200க்கு…...!   புதிய உணர்வுதான் - என் செய்வது விரும்புகிறது இதயம்…...!   சட்டென்று கையை பிடித்து செல்லமாய் நடந்துவர பட்டென்று தட்டிவிட்டு பாசாங்காய் ஊடல் கொள்கிறாள்…...!   ஊடல் இல்லையேல் காதலும் காதல் இல்லையே……!   இரசிக்கிறேன் அணுவணுவாய் உன் தலை முடி களையும் அழகு முதல் நீ எச்சில் விழுங்கும் அழகு வரை…...!   மங்கையவள் மடியினிலே மணிக்கணக்காய் கிடக்கவே வேண்டுகிறேன்…...!   சட்டென்று சொல்லிவிட்டாய் முடியாது என்று நான் ஏற்கிறேன் எனினும், என்னுள் இருக்கும் உன் இதயம் ஏற்க மறுக்கிறது கருணை காட்டுவாயாக அன்பே…...!   சிலேடை காரணம் கூடாது கருணை காட்டுவாயாக அன்பே…...!!!       தற்கால வாக்கு   ஔவை அவள் வாக்கினையே அவள் பேரன் - நான் நின்று திருத்துகிறேன்; தற்காலம் ஏற்றதுபோல் …...! “இளமையில் கல்” என்பதையே “இளமையில் உள்ளம் கல்” அஃதாற்றின் “முதுமையே கல்” ......!!!   கலைஞரின் மறைவு   எத்தனையோ இரங்கற்பாக்களை எழுதியவர் நீங்கள்…...!   ஏனோ, உங்கள் இரங்கற்பாவை எழுத நினைக்கையில் தமிழ் அன்னையிடம் வார்த்தைகளில்லை என்னிடம் துணிச்சல் இல்லை…...!   தமிழுக்கும், தமிழர் தேசத்திற்கும் நீவீர் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை; முற்போக்கானவை……!   உம் கொள்கைகளில் நாட்டமில்லாதவன் - நான் இருப்பினும் ஒன்றோ இரண்டோ உடன்படலாம்…...! எனினும் நான் மதிக்கும் தலைவர் நீங்கள்……!   ஓய்வறியா சூரியனே மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றுள்ளீர் இனியேனும் ஓய்வெடுங்கள் எம் ஆசானே…...!!!   கண்ணாடி இதயம்     கண்ணாடி இதயம் தான் என்னுள் இருப்பதும்…...!   அவள் பிம்பம் விழுந்ததும் சுக்குநூறாய் சிதறிவிட்டது……!!!   அறமோ….! அகமோ….!   அழகுப் பதுமையவள் அசையாது நிற்காமல் அமைதியாய் இருந்தவனை அற்புத மாயையால் ஆட்கொண்டுவிட்டாள்…...!   அற்புத மாயை விலக்க அறப்போர் புரிகிறேன்…...!   அன்பே,   அறம் கொண்டு புறம் வெல்ல நினைக்கிறேன் - என் அகம் கொண்டு புறம் வெல்ல நினைக்கிறேன்…...!!!   நிரந்தரம் இல்லை   நிரந்திர அரசியல் அமைப்பில்….   நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர தலைவனும் இல்லை, நிரந்தர தொண்டனும் இல்லை, நிரந்தர கட்சியும் இல்லை, நிரந்தர ஆட்சியும் இல்லை, நிரந்தர அமைப்பும் இல்லை, நிரந்தர ஆஸ்தியும் இல்லை,   எதுவும் நிரந்தரமில்லை இவ்வையகத்தில் நிரந்தர மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்கும் நிரந்தர மக்கள் நிரந்தரமில்லா தேர்தல் மூலம்…...!   இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்…...!!!     தாயுமானவன்   ஆயிரம் பொழுதுகள், ஈராயிரம் மோகங்கள், மூன்றாயிரம் காதல்கள், நான்காயிரம் முத்தங்கள், ஐந்தாயிரம் ஜனனங்கள்,       எம் கவிகளாய்…...! எனில், நானே தந்தையானவன்; நானே தாயுமானவன்; எம் கவிகளுக்கு…...!!!   உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email: freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/