[]                     உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு   ~ பகுதி – 4 ~   நவீன் ராஜ் தங்கவேல்       உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு….!       பேரன்புமிக்க வாசகர்களே, தங்களின் மேலான ஆதரவுக்கு என்றும் தலை வணங்குகிறேன். இதோ மேலும் ஒரு படைப்பு உங்களுக்காக உங்கள் கைகளில் நீங்கள் அளித்த தன்னம்பிக்கையின் பேரில்.   தமிழின்பால் நான் கொண்ட பற்று அளப்பரியது அதன் விளைவாக இந்த நூலை இத்தலைப்பின் கீழ் தேர்ந்தெடுத்து உள்ளேன்.  என் கவிகள் அனைத்தும், அது எழுதப்பட்ட சூழ்நிலையில் எந்தன் மனப்போக்கை பொருத்தே அமையப்பெற்றது. அத்தருணத்தில் தமிழோடு எந்தன் பேனா கொண்ட உறவே, இக்கவிகள்.   எண்ணங்களை தமிழ் மொழியின் வழியே வடித்துள்ளேன். சற்று படித்துப் பாருங்கள். நிறைவாய் இருப்பின் வாழ்த்துங்கள், வளருகிறேன். குறைகள் இருப்பின் திருத்துங்கள், கற்றுக்கொள்கிறேன். என் படைப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில்….!   ~ நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது ஏழாவது புத்தகம். எனது ஆறு புத்தகங்களுக்கும் உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது ஏழாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com காப்புரிமைத் தகவல்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License [Image] நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work.                   சமர்ப்பணம்   காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமூகத்திற்கும்;   ஊக்கம் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்; பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்;         இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்….!   உடைந்த கண்ணாடிச் சில்லாக   எத்தனையோ இருக்கமான சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன்....   ஒவ்வொரு சூழ்நிலையிலும் என் மனம் உடைந்த கண்ணாடிச் சில்லாக....   ஒவ்வொரு சில்லிலும் என்னவள் பின்பம் இறுக்கமான சூழ்நிலைகள் அனைத்தையும் நெருக்கமாக மாற்றிவிட்டாள்...!!!     விலகிச்செல்கிறேன்   விலகிச் செல்கிறேன் தோழமையே - நான் விலகிச் செல்கிறேன்....   தவறாக எண்ண வேண்டாம் - என்னை; ஏதோ சமூக இடைவெளியாம் விசக் கிருமியின் பரவலாம்....   கண்டம் விட்டு கண்டம் வந்தது மாந்தர் தன்மை மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் அனுப்ப தடுப்பு மருந்தும் இல்லை எதிர்ப்பு மருந்தும் இல்லை இருந்தும் ஒரு மருந்து அருமருந்தாய் சமூக இடைவெளியாய்....   கடைபிடிப்போம் விலகி இருப்போம்.... காலம் மாறும் அப்போது கூடி வாழ்வோம் ஒற்றுமையோடு...!!!     மனித நடமாட்டம் இல்லாத பூமி   ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை கொண்ட ஜீவராசிகள் அனைத்தும் சுதந்திரம் பெற்று விட்டன ஆறறிவு கொண்ட மனிதனிடம்....   இயற்கைக்கு அழிவில்லை அழிக்க நினைத்தால் மனிதா உனக்கு இடமில்லை இப்புவிதன்னில்‌...!!!       உலகின் கடைசி மனிதனாய் நான் இருந்தால்   கண்விழித்துப் பார்க்கும் நொடி கனவுகள் களவு போனது போல் மனிதன் இல்லா உலகமாய் என்னுலகம் இருக்குமானால் தயக்கமின்றி பாதம் பணிவேன் இயற்கையின் முன்....   மனிதர்கள் ஆற்றிய தவறுக்காய்; மனிதர்களில் இறுதியானவானாய்; மனித வர்க்கத்தின் சார்பாய்....   பொறுத்துக்கொள் இயற்கையே செய்த தவறுக்கும் நிகழ்ந்த அதர்மத்திற்கும்...!!!     பூமி சுழலும் வரை   அன்பே, உன் மீது நான் கொண்ட காதல் எது வரை நீடிக்கும் என்கிறாய்...? கேள்வி வாக்கியமாய்...!     என் செவ்வாய் மொழிகளில் சத்தியம் உரைக்கிறேன், பூமியும் சுழன்று நிற்கும் வரை என்று. முற்று வாக்கியமாய்...!!!     காத்திருப்பு   நித்தமும் காத்திருக்கிறேன் பேரழகே உன் வருகைக்காக...   காத்திருக்கும் நொடியெல்லாம் கற்பனைத் துணையோடு கவிமலர் தொடுக்கிறேன் - மாலையாய் கற்பனை முடிவில் கரையாமல் நீயும் வந்துவிட்டாள் காத்திருக்காமல் சூட்டுகிறேன் - மாலையை...!!!     சலிக்க சலிக்க பேசி தீர்த்தபின்   எத்தனையோ தருணங்களில் அமுதமொழி கொண்டு அன்பை பொழிந்து இருக்கையில் இன்னும் பேச வேண்டும் என்று எண்ணம் உதிக்கத்தான் செய்கிறது...!   சலிக்க சலிக்க பேசினாலும் அன்பே உன் விழி கண்டு பேசும் இச்சை குறைந்தபாடில்லை......!!!     அமைதியான இரவுகள்   நிசப்தமான இரவுகளில் கார் இருளும் ஊமைத் தென்றலும் ஆர்ப்பாட்டமின்றி சலசலக்கிறது...!!!     எழுத நினைத்த வரிகளை மறந்துவிட்டேன்   என் இதயத்தை திருடியதோடு நின்று இருக்கலாம்....   மயக்கும் விழி நோக்கி என் வார்த்தைகளையும் திருடிவிட்டாய்; மறதி என்னும் மாயை கொண்டு...!   உன்னை வர்ணிக்க வார்த்தைகளை இனி எவரிடம் யாசகம் பெருவேன்...?   கள்வி மகளே, நீயே திருப்பி தந்து விடு...!!!           வார்த்தைகள் பிரிந்திருக்கிறது   வழக்காடு மன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கிறேன்....   வார்த்தைகள் அனைத்தும் காகிதமோடு இணைய மறுப்பதால்....   அரசனும் தீர்ப்பு ஒன்று தருகிறான் உன்னவளோடு நீயும் சேர்ந்தால் வார்த்தைகளும் காகிதங்களோடு இணையும்...!!!     கற்பனைகளும் கனவுகளும்   கற்பனைகள் எந்தன் எண்ணத்தில் உதிப்பவை...!   கனவுகள் எந்தன் பேனாவில் உதிப்பவை...!       வேண்டாம் என்று வெறுத்தவைகள்   இன்று வேண்டாம் என்று வெறுப்பவையெல்லாம் என்றோ ஒரு நாள் என் பிடித்தமானவையாய் இருந்தவை...!!!         யாரும் தேடாத பொழுதில்     அண்டம் முழுதும் மனிதர்கள் வெற்றுக் காகிதத்தை மட்டுமே தேடுகின்றனர் அனுதினமும் பணம் எனும் பெயரில்....   நான் சற்று வித்தியாசமானவன் தேடுவது பணத்தை அல்ல அன்பை...!!!       புத்தம் புதிதாய் ஓர் உலகம்     சம்மதம் என்ற ஒரு வார்த்தை போதும்;   புத்தம் புதியதாய் ஓர் உலகம் உனக்காய் படைத்துவிடுவேன் நீயும் நானும் காதல் உலா சுற்றித் திரிய...!!!     ஊரடங்கு நாட்கள்   அரசாங்கம் அறிவித்தது ஊரடங்கு என்று எனக்கு மட்டுமே தெரியும் இது ஊரடங்கு அல்ல சிறைவாசம்...!!!   நண்பர்கள் இல்லா வீதிகள் ஆரவாரமில்லாத தெருக்கள் மயான அமைதி திரும்பும் திசையெல்லாம்....   என்னை நானே உணருகிறேன் ஏன் இந்த பிறவி என்று....   கவிதைகளும் கிறுக்குகிறேன் வேறு வேலை தெரியாது என்று....   என்று முடியும் இந்த ஊரடங்கு...!!!     தேடி அலையும் விழிகளில்   எண்ண அலைகள் அனைத்தும் உன்னை எண்ணியே அசை போடுகிறது....   நீ வரும் வழி பார்த்து என் விழிகளும் காத்திருக்கிறது...!!!     பாதையெங்கும் சிதறிக் கிடக்கிறது     நீண்ட தார்ச்சாலையில் ஒரு நெடும்பயணம் பொடி நடையாய் உன் கரம் பற்றி....   பாதை எங்கும் உவமைகளும் உருவகங்களும் சிதறிக் கிடக்கிறது உன்னைப்பற்றி கவி எழுத நானும் முற்படுகிறேன்...!!!     காகிதப் பூக்கள்     கவிகளைத் தீட்டுகிறேன் காகிதத்தில் அக்காகிதம் கொண்டு உருவாக்குகிறேன் வண்ண பூக்களை....   எனில் இது காகித பூக்களா...? இல்லை கவிதை பூக்களா...?   நீயே சொல்லிவிடு அகிலத்திற்கு...!!!       சுதந்திரம்   சமயம் சிலவற்றில் யாரையும் தீண்டாமல் இருப்பதே சுதந்திரம்....   நாம் அடுத்தவருக்கு அளிக்கும் சுதந்திரம்....   யாரையும் தீண்டாமல் செல்லும் அலைகள் போல...!!!       தேன்கூடு   இறைவன் அளித்த என் வாழ்வும் தேன்கூடு போல தான்...   அழகிய நினைவுகளை தேன் சொட்டுக்களாய் சேகரிக்கிறேன் - என் இதயக் கூட்டில்....   அவ்வப்போது அமாவாசையும் வருகிறது தீ பந்தத்துடன்...!!!       மழலை போல   தங்கையின் சேட்டையை அனுதினமும் ரசிக்கிறேன் நித்தம் அவள் மழலை போல் நடந்து கொள்வதால்....   கோபமும் கொள்கிறாள் பாசமும் கொள்கிறாள் ஊடலும் கொள்கிறாள் பாசாங்கும் கொள்கிறாள் நித்தம் என்னையும் கொல்கிறாள்....   அழகு குழந்தை போல்; எனில் என் மழலை அவளல்லவா...!!!     உறக்கத்தை தேடும் விழிகளுக்கு தெரியாது   என்னவளைத் தேடும் என் இரவுகள் சுகமானது....   இதை என் விழிகள் அறியாது என் உறக்கம் அறியாது எனில் என் இதயம் மட்டுமே அறியும்...!!!       இரை தேடும் பறவையாய்   உயர உயர பறக்கிறேன் சிறகுகள் வலித்தாலும் கால்கள் தளர்ந்தாலும் பறப்பதை மட்டும் நிறுத்தவில்லை   என் லட்சியம் என்னவளின் மகிழ்ச்சி அதை அடையும்வரை உயர உயர பறப்பேன் இரைதேடும் பறவையாய் பறப்பதை நிறுத்த மாட்டேன்...!!!       ஆதிமனிதன்   மனிதன் மனிதனாய் வாழ்ந்ததும்; மனிதநேயம் மாறாமல் வாழ்ந்ததும்; மற்றோரை சாராமல் வாழ்ந்ததும்; மற்போர் புரியாமல் வாழ்ந்ததும்; மண்ணை திருடாமல் வாழ்ந்ததும்; மனிதன், ஆதி மனிதன் தானே. ‌...!!!       உண்மையான நேசம் என்பது   நேசம், இதயம் சார்ந்தது; புரிதல் சார்ந்தது; உளவியல் சார்ந்தது; நினைவுகள் சார்ந்தது...!   நேசிக்கும் உயிர் தொலைவில் இருப்பினும் அருகில் இருப்பினும் உண்மையான நேசம் கொள்வோம்...!!!       ஒரே ஒரு நாள்   உன் மடி சாயும் வரம் வேண்டும்.... பின் மரணம் வரும் முன் வரை வேண்டிய வரம் தினம் வேண்டும்...!!!     மூடிய விழிகளுக்குள் எதையோ தேடுகிறாய்   கரங்கள் நான்கும் இணைந்த தருணம்....   மூடிய விழிகளோடு எதை தேடுகிறாய்...?   என்னையா...? இல்லை, என்னுள் உன்னையா...?     இரவில் ஒளிரும் விளக்குகள்   விண்மீன்களை பூமியில் மேற்பரப்பில் வைத்தவன் நானே....   இரவில் ஒளிரும் அகல் விளக்குகளாய்…     மனநிம்மதி     அலைபேசி இல்லா தருணம்; ஆழி அலைகளை ரசிக்கும் தருணம்; இன்பம் உணர்ந்த தருணம்; ஈதல் அளிக்கும் தருணம்; உயவை பயணிக்கும் தருணம்; ஊழ்கம் செய்யும் தருணம்; எழிலியை இரசிக்கும் தருணம்; ஏழ்மையாய் வாழும் தருணம்; ஐயுறவு நீக்கிய தருணம்; ஒன்னலரும் மதிக்கும் தருணம்; ஓகம் செய்யும் தருணம்; ஔவியம் இல்லா தருணம்;   மன நிம்மதியை அளிக்கும் தருணம்...!!!       கோடி நட்சத்திரங்கள் மின்ன   அவள் வருகையில், பிரபஞ்சம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் வெட்கி தலை குனிந்தது...   தம்மை விட அழகான பிரகாசம் பூமிதனில் உள்ளது என்று...!!!     இயல்பு வாழ்க்கை   எத்தனையோ கனவுகள் அனுதினமும் - என் வாழ்க்கையை பற்றி....   அத்தனையும் பொய்யாக்குகிறது காலச்சக்கரம்...! இதுதான் இயல்பான வாழ்க்கை என்று அழகாய் உரைக்கிறது...!!!     மழைக் காற்றும் மண் வாசமும்   ஈரடுக்கு மாடியில் குளிர் சாதன அரையில் வசதியாய் வாழ்ந்தென்ன....   மழை வரும் தருணம் மட்டும் சொந்த ஊர் மண்வாசம் மறந்துதான் போயிடுமோ...!!!     எதிர்காலம்   காலத்தின் பரிசாய் கிடைத்த உறவு நீ‌....   நட்பெனும் பந்தம் கொண்டு இவ்வுலகில் வலம் வந்தோம்; திருமண பந்தம் ஒன்று நம்மையும் பிரித்தது....   பேசிய வார்த்தைகளும் பழகிய நினைவுகளும் சுகமாய் இன்னும் இருக்கிறது இதயத்தில்....   எதிர்காலம் வினவுகிறது பந்தம் தொடருமா என்று.... பதில் சொல்லவியலா தவிக்கிறேன் நட்பே சொல்லிவிடு...!!!       என்னிடம் ஒரு தொடுவானம்   என் தொடுவானம் இவ்வையகத்தில் ஏதோ ஒரு மூலையில் எனக்காக காத்திருக்கிறது....   என் தொடுவானம் என்னால் தொட முடியா தூரத்தில்...!!!     விதை   நற்கவிகளை விதைக்கிறேன் இவ்வையகத்தில் கவித் திறன் மேம்பட அல்ல அன்னை தமிழுக்கு புகழ் சேர்த்திட...!!!     இரவல் புன்னகை   இரவல் வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை; இருந்தும் கேட்கிறேன் ஓர் இரவல்....   விலைமதிப்பற்ற புன்னகையை விலையாய் கொடுத்துவிடு என் காதலுக்கு...!!!       காலை முதல் மாலை வரை   காலை முதல் மாலை வரை நேரம் மட்டும் சுழல்கிறது; நான் மட்டும் இருந்த இடத்தில் இருந்தபடி;   ஊரடங்கைக் கழிக்கிறேன்...!!!     புன்னகையில் தேடுகிறேன்   எதிர் வரும் வாழ்க்கையை நித்தமும் தேடுகிறேன் சலிக்காமல் அனுதினமும்...   புன்னகைத் துணையோடு...!!!     பொழுதுபொக்கு   நித்தமும் உழைக்கிறேன் சத்தமே இல்லாமல் நித்தமும் உழைக்கிறேன் எனை காக்க...!   பொழுதுபோக்காய் உழைக்கிறேன் எவரும் அறியாமல் பொழுதுபோக்காய் உழைக்கிறேன் தமிழைக் காக்க...!!!     நினைவுகள் பின்னோக்கி நகர     ஒற்றையாய் பயணிக்கிறேன் நெடும் சாலையில்... நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி நகர எம் கண்கள் இரண்டும் கண்ணீரில் ததும்ப   உதடுகள் மட்டும் வினவுகிறது எதிர்காலத்திடம்....   இதில் அந்த நினைவுகள் மீண்டும் கிடைக்குமா...?     நடைபாதை மனிதர்கள்     நடைபாதை மனிதர்கள் நம்பிக்கை தருகின்றனர் வாழ்வியலை வாழ....   இன்றைய தினம் இன்றோடு போகட்டும் நாளைய தினம் நம்மோடு வரட்டும் என்று...!!!     இரவும் நிலவும் அறியும்   காரிருளிலும் வெண்மதியும் மட்டுமே அறியும் எந்தன் ரகசியங்களை...!!!     ஈர்ப்பு   அண்டமே ஈர்ப்பு விசையின் அடிப்படை அதில் நீயும் நானுமே சாட்சி....   இப்படி இருக்க, உன் மீது ஈர்ப்பு வந்ததற்கு காரணம் கேட்கிறாய்; கோபம் கொள்கிறாய்; என்ன விந்தையடி...!!!     வரமாய் நீ வந்தால்   என்னவளே, என் வாழ்க்கை வசந்தமாக்க வரமாய் நீ வந்தால்; உன் ஆணை நிறைவேற்றும் சேவகனாய் நான் இருப்பேன்...!   மரணம் முன் நெருங்கும் வரை இதயத்தில் சுமந்திருப்பேன்...!!!       வீடு   நிரந்தரமற்றது இதுநாள்வரையில் - வீடு நிரந்தரமற்றது....   விடுதி வாழ்க்கை ஊர் சுற்றும் பிரயாணம் பணியின் நிர்பந்தம் இவைகளோடு பிணைந்த பின் வீடு நிரந்தரமற்றது - எனக்கு இதுநாள்வரையில்...‌.!!!     வலி தாங்கும் இதயம்   இத்தனை காலமாய் எத்தனையோ வலிகளை தாங்கி விட்டேன்....   என் இதயம் மரத்துப் போய்விட்டது....   இனி எத்தனை வலிகளையும் தாங்கும்; வலி தாங்கும் இதயமாய்...!!!       தொழில்நுட்பம்   மின்னணு உலகத்தில் தொழில்நுட்பம் மனித கற்பனைக்கு எட்டா விந்தைகள் புரிகிறது...!   ஏனோ, சில சமயம் இயற்கையின் முன் மண்டியிட்டே கிடக்கிறது...!   தொழில்நுட்பம் பயில்வோம் இயற்கையின் வாயிலாய்...!!!     எழுத நினைக்கும் பொதெல்லாம்   ஒவ்வொரு முறையும் பேனா எடுத்து எழுத நினைக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து விடுகிறது உன்னைப் பற்றிய நினைவுகளும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும்....   என்ன செய்வது உன்னையும் என்னையும் பிரிக்க முடியவில்லை தான் அன்னைத் தமிழே உன்னை மறந்தால் எந்தன் பேனாவே என்னை கொல்லும்...!!!     நட்சத்திரங்கள் சொல்லும் கதைகளில்   மொட்டை மாடியில் பாய்விரித்து படுக்கையில் என்னை அழகாய் உறங்க வைக்கிறது விண்மீன்கள்...!   வாழ்வியல் கதைகளை நல்லெண்ணங்களாய் என் மனதில் ஓட வைத்து...!!!     பேரன்பு   எந்தன் வாழ்வியலில், என் சகாக்களிடம் நான் காட்டுவது அன்பு மட்டுமே....   ஆனால் தங்கையே, உன்னிடம் நான் காட்டியது பேரன்பு...!!!     உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email: freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/