[]           உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு   ~ பகுதி – 3 ~   நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு….!       பேரன்புமிக்க வாசகர்களே, தங்களின் மேலான ஆதரவுக்கு என்றும் தலை வணங்குகிறேன். இதோ மேலும் ஒரு படைப்பு உங்களுக்காக உங்கள் கைகளில் நீங்கள் அளித்த தன்னம்பிக்கையின் பேரில்.   தமிழின்பால் நான் கொண்ட பற்று அளப்பரியது அதன் விளைவாக இந்த நூலை இத்தலைப்பின் கீழ் தேர்ந்தெடுத்து உள்ளேன்.  என் கவிகள் அனைத்தும், அது எழுதப்பட்ட சூழ்நிலையில் எந்தன் மனப்போக்கை பொருத்தே அமையப்பெற்றது. அத்தருணத்தில் தமிழோடு எந்தன் பேனா கொண்ட உறவே, இக்கவிகள்.   எண்ணங்களை தமிழ் மொழியின் வழியே வடித்துள்ளேன். சற்று படித்துப் பாருங்கள். நிறைவாய் இருப்பின் வாழ்த்துங்கள், வளருகிறேன். குறைகள் இருப்பின் திருத்துங்கள், கற்றுக்கொள்கிறேன். என் படைப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில்….!   ~ நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது ஆறாவது புத்தகம். எனது ஐந்து புத்தகங்களுக்கும் உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது ஆறாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com காப்புரிமைத் தகவல்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License [Image] நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work.                   சமர்ப்பணம்   காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமூகத்திற்கும்;   ஊக்கம் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்; பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்;         இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்….!     ஆயிரம் மொழிகள் இருந்தாலும்...   அண்டம் முழுதும் ஆயிரக்கணக்கில் மொழிகள்...   இருந்தும் எதுவும் ஈடில்லை என் தாய் மொழிக்கு - எந்தன்   உதிரத்தில் கலந்த மொழி; ஊக்கம் கொடுக்கும் மொழி....   எளிமை கொண்ட மொழி - கற்றோருக்கு ஏற்றம் கொடுக்கும் மொழி....   ஐ கொண்ட மொழி...   ஒப்பில்லா மொழி - எங்கும் ஓங்கி ஒலிக்கும் மொழி....   ஔவியம் நீக்கும் மொழி....   இதுவே என் தாய்மொழி மொழிகளின் தாய்மொழி...!!!     கற்பனைக் கதைகளில்….   என் கற்பனைக் கதைகளில் நானே கதாநாயகன் நானே வில்லன் நானே தயாரிப்பாளன் நானே இயக்குனன் நானே கதாசிரியன் நானே குணச்சித்திர நடிகன்....   ஆனால் என் வாழ்வில் நான், கேள்விக்குறியாகவே இன்னும் உள்ளது என் கதாபாத்திரம்...!!!     பதற்றமில்லாத காலை நேரம்   பகலவன் அன்பாய் பாச மழை பொழிகிறான் இளங்கதிராய்.....   தேகமெங்கும் ஜீவ மழை பொழிகிறான் உயிர்ச்சத்தாய்.....   நானும் கவிதை மழை பொழிகிறேன் புத்துயிராய்....!!!     சண்டையிட்டு பேசாத நாட்களில்   குழந்தையின் குணம் ரசிக்கிறேன் அனுதினமும் நீ கோபமாய் முகம் சுளிக்கும் அழகை எனை கண்டதும்   பேரழகு தான் என்னோடு நீ சண்டையிட்டு பேசாத தருணத்தில்....!!!       என் கவிதையை படிக்கும்போது   நான் கவிஞனா, இல்லை கிறுக்கனா....   அடிக்கடி சந்தேகம் எழுகிறது எந்தன் கவிகளைப் படிக்கையில்....   உன் விழி கொண்டு என் கவி படித்து விடு... உன் மொழி கொண்டு என் நிலை சொல்லி விடு....   நான் கவிஞனா‌, இல்லை கிறுக்கனா....!!!     வாழ்க்கைப் பயணத்தில்   அடுத்த நொடி யாதென்று யூகிக்க முடியாத நிலையில் பயணிக்கிறேன்....   வாழ்வியல் எதார்த்தங்களை அனுபவமாய் கொள்கிறேன்....   பணம் என்னும் காகிதம் விடுத்து அன்பை அரவணைத்து செல்கிறேன் என் வாழ்க்கைப் பயணத்தில்....     என் ஒவ்வொரு இரவிலும்   கண் மூடி தூங்க நினைக்கிறேன் தூக்கங்கள் மட்டும் வருவதில்லை....   காரணம் யாதென்று அறியாமல் தவிக்கிறேன்.... தவிப்பைப் போக்க நினைக்கிறேன் இறைவன் அருள் இருந்தால்....   இஃது ஒவ்வொரு இரவிலும் தவறாமல் நிகழ்கிறது இறையே தயைகாட்டுவாய்....!!!     எளிமை என்பது   அணிகள் பல இருப்பினும் இலக்கணம் அழகுக்கு கூட்டினும் மரபு மெருகூட்டினும் எதுகை யதார்த்தம் சேர்பினும் சந்தம் சத்தம் கொடுப்பினும்   இவைகள் இல்லா கவிகளும் எளிமை தான்....   என் கவிகளை போல்....!!!     குழந்தையின் பிடிவாதம் போல   அன்புத் தங்கை அவள் இருபதையும் கடந்து விட்டால் மாங்கல்யம் முடித்துவிட்டால் தாய்மையும் அடைந்து விட்டால்   இருந்தும், இன்னும் அடம் பிடிக்கிறாள் இந்த அண்ணனிடம் சிறு குழந்தையைப் போல....!!!     காற்றில் கலந்துள்ளது   சுற்றியிருக்கும் பிரபஞ்சம்தனில் நிறைந்திருக்கும் காற்று....   அனைவரின் கண்ணுக்கும் காற்று காற்று தான்.... அதில் கலந்து இருப்பதும் வேதியல் கூற்று தான்....   ஏனோ, என் கண்களுக்கு மட்டும் மின்னணு தகவல்களாய்....!   இவண், மின்னணு பொறியியல் பட்டதாரி....!!!     காலம் தீரும் வரை   எந்தன் மனமானது சோர்ந்து துவளும் போதெல்லாம் பைந்தமிழ் ஒன்றே துணை வேண்டும்...   எந்தன் காலம் முடியும் வரை உடன் வேண்டும்....!!!     பிச்சைக்காரன்   போராட்ட களம் அவனின் வாழ்வு; இருப்பினும் கவலையில்லை அடுத்த நாள் பற்றி....   இன்று இந்த பொழுது பொருள் கிடைத்தால் போதும்; கிடைப்பது எதுவாயினும் இன்பம் கொள்கிறான்....   அவனையன்றி இவ்வையகத்தில் எவரும் இல்லை; கிடைப்பதைக் கொண்டு இன்பமாய் வாழ....!   உலகத்தார் மத்தியில் யாசித்து வாழ்கிறான் - பிச்சைக்காரன்....!!!     இருளும் ஒளியும் இணையும் புள்ளியில்   அதி காலையும் அந்தி மாலையும் இருளோடு வெளிச்சமும் வெளிச்சமோடு இருளும் சங்கமிக்கும் இரு பொழுதுகள்....   தென்றல் தெய்வீகமாய் வீச; மலர்களும் மலர்ந்து குலுங்குகின்றன.... எந்தன் பேனாவும் கவிகளாய் தீட்டுகின்றன....   இருளும் ஒளியும் இணையும் பொழுதில்....!!!     மழையை நினைக்கும் போதெல்லாம்   அவள் மழையை பிடிக்கும் என்று உரைத்தாள் என்னிடம்....   அன்றிலிருந்து என்னவோ காதல் வயப்பட்டேன் மழையோடு....!!!     வின்மீன்கள் வெளிச்சத்தில்   தூக்கங்கள் தொலைத்த இரவுகளாய் அனுதினமும் நகர்கிறது என் வாழ்வில்...   தினம் தினம் தேடுகிறேன் எந்தன் தூக்கத்தை வானத்து விண்மீன்கள் வெளிச்சத்தில்....   தேவதைகள் வந்து இறங்கி காரணம் சொல்லி விட்டால் விண்மீன்கள் வெளிச்சத்தில் சற்று ஓய்வு எடுப்பேன் இரவுப் பொழுதுகளில் மனக் கவலை ஏதுமின்றி....!!!     எந்திர மனிதன் இருந்தால்   அயராது உழைக்கும் அன்றாட வாழ்வில்,   எந்திர மனிதன் ஒருவன் எப்போதும் உடன் இருந்தால் எந்திரமாய் மனிதன் எப்போதும் மாறமாட்டான்....!!!     உயிரின் தேடல்   பாட்டி சொன்ன மந்திர கதைகள் பலவற்றை கேட்டு வளர்ந்தவன் - நான்....   ஏழு கடல் ஏழு மலை தாண்டி எங்கோ ஒரு குகையில் இருக்கும் பூதத்தின் உயிரை தேடிச்செல்லும் கதாநாயகனைப் போல   அன்றாடம் தேடுகிறேன் எனது உயிரை....!     யாரோ எழுதிய வரிகளில்   என் எழுத்துக்கள் என்றும் என்னைப்பற்றி உரைத்தது இல்லை உன்னை பற்றியே உரைக்கிறது இவ்வகிலத்திற்கு....   சிறு வேண்டுதல் உன்னிடம் என்னைப் பற்றி சில வரிகள் எழுது.....   எழுதும் அளவுக்கு நான் சிறந்தவன் இல்லை எனும் பரவாயில்லை யாரோ ஒருவராய் நினைத்து எழுது அகிலம் என்னை பற்றியும் அறியட்டும் உன் வரிகளில்....!!!     காற்றைப் போல   நான் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் காற்றுக்கு உவமையானதே.....   சிலநேரம் தென்றலாய்; சிலநேரம் சூறாவளியாய்; சிலநேரம் வெற்றிடமாய்;   காலச்சூழலுக்கு ஏற்ப....!!!     தேய்ந்து போன நினைவுகள்   ஆண்டுகளும் பத்தை நெருங்கி விட்டன; சில நினைவுகளும் தேய்ய தொடங்கிவிட்டன.....   உடனிருந்தோர் முகங்களும் மறையத் தொடங்கிவிட்டன; பகிர்ந்த வார்த்தைகளும் பாதை தெரியாமல் போய்விட்டன.....   இருந்தும் உன் முகம் மட்டும் என் மனதில் ஆழமாய்; உன் நினைவுகள் மட்டும் தேயாமல் பாலமாய்....   அன்பு தோழமையை வாழ்வோம் காலம் உள்ளவரை....!!!     குழந்தையின் உலகத்தில்   அரசியல் அறப்போர் இல்லை; உலகமயமாதலின் தவிப்பு இல்லை; வர்த்தகப் பரிமாற்றம் இல்லை; வாணிப பேச்சும் இல்லை;   நாளை பற்றி கவலை இல்லை; நேற்று பற்றிய சிந்தனை இல்லை;   இந்த பொழுது மட்டும்.... அமைதியாய் இன்பமாய் அன்னை மடியில்....   மழலையே, உன்னைப் போல் வாழ வேண்டும் நானும்....!!!     வானும் நிலவுமாய்   வானும் நிலவுமாய் நீயும் நானும்....   உன்னை சுமக்கும் வானம் நான்....   என்னைப் பிரதிபலிக்கும் நிலவு நீ....   வளர்பிறையாய் தேய்பிறையாய் நீ இருப்பினும்   அரண் என்னும் வானமாய் நான் இருப்பேன்....!!!     நினைவுகளின் வழியே…   அன்பான தருணங்கள் அழகான நாட்கள் அவைகள் அனைத்தும்,   அவைகள் இல்லையேல் வாழ்வே அர்த்தமற்றது....   எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எண்ணங்களில் வாழ்வோம் எனது அருமை நட்பே....!   உன்னோடு பழகிய தருணங்களை நினைக்கையில் சிலசமயம் கண்ணீரும் பலசமயம் புன்னகையும் தவறாமல் இதழோடி வந்து விடுகிறது....!!!     ஏதோ ஒன்றை தேடி   ஏதோ ஒன்றை அனுதினமும் தேடுகிறேன் அகண்ட பாரதத்தில்....   எதுவென்று சொல்லதான் முடியாமல் தவிக்கிறேன் இறை ஒருவனே அறிவான் நான் எதை தேடுகிறேன் என்றும்....!!!     உன் விழியில் என் உலகம் காண்கிறேன்   அவனியில் அவதரித்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன....   கண்ணால் காண்கிறேன் எனது விழி கொண்டு என் அகிலத்தை....   இனிவரும் காலம் உன் விழி கொண்டு காண நினைக்கிறேன் என் அகிலத்தை....   நிகழுமா என் வேண்டுதல்....!!!     ஞாபகமறதி   அன்பே கண்கொண்டு கண்ட தினம் முதல்   அன்பாய் தவிர பெயர் சொல்லி கூட அழைத்ததில்லை உன்னை....   ஞாபகமறதி கொண்டவன் நான்....   ஒரே ஒரு முறை சொல்லி விடு உந்தன் பெயரை....   நினைவு படுத்திக் கொள்கிறேன்....!!!     யாரோ ஒருத்தியேன நினைத்திருந்தேன்   கண் கொண்டு கண்ட முதல்தினம் நீ யாரோ என்று தான் நினைத்திருந்தேன்....   அன்பு செய்யும் அன்னையாய்; அரவணைக்கும் தோழியாய்; ஆசை கொண்ட சகோதரியாய்; அடம்பிடிக்கும் குழந்தையாய்; என் வாழ்வியலில் நீயே கலந்து விட்டாய்...!!!     நிறமில்லாத வானவில் போல   மணவாளன் இவன் காத்திருக்கிறேன் மங்கையவள் உன் கரம் சேர....   அதி விரைவாய் வந்து விடு ஆசை முத்தம் தந்து விடு.....   வரும் வரையும் காத்திருப்பேன்; வண்ணம் இல்லா வானவில்லாய் உன் வண்ணம் சேர காத்திருப்பேன்....!!!     பாதச்சுவடுகள்   பதியே, கடற்கரை மணலில் நீ முன் நடக்க நான் பின் நடக்க இருவரும் கரம்பற்றி உன் பாதச் சுவடில் என் பாதம் பதித்து வருகிறேன் உனக்குள்ளே நான் என்று....!!!     தொழில்நுட்ப கோளாறு   தொழில்நுட்ப உதவி இல்லா நாட்களும் நம் வாழ்வில் வேண்டும்.... மூதாதையின் வாழ்வியல் முறையை முறையாய் அறிந்துகொள்ள....!!!   தொழில்நுட்பம் கோளாறாகும் தருணம் அது நிகழ்ந்தேரும்....!!!     உன் குறுஞ்செய்தி இல்லாத நாட்களில்   உன்னோடு பேசிய தருணங்கள் நினைவுகளில் மட்டும்.... அனுதினமும் பேச நினைக்கிறேன் வாழ்வியல் அதை அனுமதிப்பதில்லை; இருந்தும், குறுஞ்செய்திகள் பரிமாற்றம் ஒன்றோ இரண்டோ; அது இல்லா நாட்களில் நினைவுகள் மட்டுமே பரிமாற்றம் உன்னை பற்றி....!!!     வர்ணம் பூசிய நிலவொன்று   வர்ணம் பூசிய நிலவு ஒன்று என் வான்வெளியில் வீதி உலா வருகிறது....   இருளிலிருந்த என் வாழ்வை வண்ணங்கள் பூசுகிறது...   நற் சுகங்கள் அனைத்தையுமே நித்தம் தேடித்தேடி தருகிறது...   விடியும் வரை இல்லாமல் என் வாழ்வு முடியும் வரை உடன் இருந்தால் நிலவுக்கும் ஜோடியுண்டு - என்று பிரகடனம் செய்திடுவேன் கவிதை உலகில்....!!!     பிரியங்களின் திசை நோக்கி   காயம் கண்ட இதயம் தான்,   ஆறுதலாய் ஒரு வார்த்தை அன்பாய் இரு வார்த்தை ஆசையாய் பேசிவிட்டாள் அடுத்த நொடி என் இதயம் என்னிடம் தான் இல்லாமல் பிரியமானவளைத் தேடி ஓடி விடுகிறது....!!!     கேள்விக்கும் பதிலுக்குமான இடைவெளியில்   நீ எழுப்பும் வினாவிற்கு நான் விடையளிக்க வேண்டுமடி....   விடையளிக்க முடியாமல் நான் திணறும் தருணத்தை உந்தன் கண்கள் ரசிக்க வேண்டுமடி....   மீறி விடையளிக்க எந்தன் வாய் திறந்தால் உன் கண்கள் என்னை மௌனமாக்க வேண்டுமடி....   இறுதி வரை விடை சொல்லா கேள்வியாய் இருக்கவே வேண்டுமடி....   எந்தன் கேள்வி நீ கேள்விக்கான பதில் நான் இருவருக்குமிடையில் காதல்....!!!     விண்னைத் தொலைத்த நிலவு   வான்வெளியில் விண்மீன்கள் சலிக்காமல் தேடுகின்றன   மதி அவள் விடுமுறை எடுக்க நீ வந்து அவ்விடம் நிரப்ப   உன்னையே இப்பூமியில்....!!!     நாள்காட்டியைப் பார்க்கும் போது   அதி காலையும் அந்தி மாலையும் - ஏன் ஒவ்வொரு பொழுதும் உனை காணும் நாட்களுக்காக தவிக்கிறேன்   நாள்காட்டியை பார்க்கும்போதெல்லாம்....!!!     வார்த்தைகள்   ஆயிரம் கனவுகளோடு அருகில் வந்தவன் நான்‌... உன் கரம் பற்றி சிரம் நோக்கி இதழ் மொழிய முன்வந்தேன்...   ஆயிரம் வார்த்தைகள் என் சிந்தையில் உன் கண் நோக்கி என் இதழ் பேச; இருந்தும் ஒரு வார்த்தையில் வந்துவிட்டேன்...   உந்தன் இன்முகப் புன்னகை போதுமென்று.....!!!     இமைக்காமல் பார்த்த முதல் சந்திப்பில்   அன்னையவள் அமுத மொழி அறியாமல் போனேனோ.... அன்பே உன் விழி மொழியே என் மொழியாய் கொள்வேனோ....!   என் மூளை செயல் இழக்க அருமருந்து தேவையில்லை உன் விழியை என் விழிகள் உடையது என்று உண்டு விட்டால்....!   காதல் மருந்தொன்று தந்துவிடு தற்காலிகமாய் குணமடைய பெற்றோர் ஆசியோடு உன்னையும் தந்துவிடு முழுவதுமாய் குணமடைய....!!!     மறந்து போன முகங்களில்   கடந்து வந்த வாழ்க்கை எண்ணற்ற பெயரின் அறிமுகங்கள் இருக்கும் ஆயிரத்துக்கும் மேல்....   சில முகங்கள் அன்றி பலர், மறந்துபோன முகங்களாய்....!!!   இதுவும் காலச்சக்கரம் தான், அதில் ஒரு சில முகங்கள் விதிவிலக்கே....!!!     வானத்தை தொட நினைக்கிறேன்   இலக்குகள் இமயம்தான் எனினும் அதையும் தாண்டி வானம் தொட ஆசை.‌‌...   இறக்கைகள் விறிக்கிறேன் இமயம் தாண்டி; இமயம் தொட்டுவிட்டால் இலக்குகள் என் வசம் - காலடியில்...!!!     உலகம் ஒரு புத்தகமாக இருந்தால்   புதிய புதிய புத்தகங்கள் நித்தமும் தேடித்தேடி படிக்கிறேன்....   உலகமும் புத்தகம் ஆனால் ஒவ்வொரு வரியையும் படித்திடுவேன் என் பிறவி முடிவதற்குள்...   ஒரு வேளை முடியும் நிலை வந்தால் மறுபிறவி வேண்டிடுவேன் விட்டதில் இருந்து தொடர....!!!     நாளை பற்றிய கவலையின்றி   வாழ்கை எது வரை என்று அறியாத இவ்வாழ்வில் நாளை பற்றிய கற்பனையே வீண்...   இன்று இந்த பொழுது இந்த நொடி தனக்கானது...   இரசித்து அனுபவிப்போம் காலம் உள்ளவரை நாளை என்ற கவலை இன்றி....!!!     கூட்டுக்குடும்பம்   ஆயிரம் உறவுகள் அத்தனை சொந்தங்கள் முதல் தலைமுறை முதல் நான்காம் தலைமுறை வரை ஒரே இடத்தில் இன்பமாய்....   நகரமயமாதல் இழந்த மிகப்பெரிய ஒன்று கூட்டுக்குடும்பம்....!!!     எழுத்துப் பிழை நீ   தமிழ் இலக்கியம் படைக்கிறேன் அதன் நாயகன் நானே....   அணிகள் கூட்டுகிறேன்; சந்தம் பூட்டுகிறேன்; மரபை மெருகேற்றுகிறேன்;   கன்னிகை உன்னையே கருப்பொருளாய் சேர்க்கிறேன்....   எழுத்துப் பிழையோடு நீ இருப்பினும் காதல் இலக்கணம் கொண்டுதிருத்துகிறேன்....!!!         அழகுமொழியில்   தீட்டிய கவிகள் அனைத்தும் மொழியின்றி தவிக்கின்றது....   உன் செவ்வாய் மொழிந்திடு எம் கவிகளை   எழுதியவை அனைத்தும் அழகு மொழி கொள்ளட்டும்....!!!     எதிர்பாராத நிகழ்வுகளில்   உள்ளம் கொள்ளும் ரணம் உவர்ப்பு நிறைந்த கண்ணீர் உண்மை எடுத்துரைக்கும் எதார்த்தம் ஊமையாக்கும் மகிழ்ச்சி   இவைகள் யாவும் கிடைக்கப்பெறுவது வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளில்....!!!       தொலைந்து போக ஆசை   தென்றல் காற்றோடு அசைந்துவரும் கலைந்தாடும் கார்முகிலில் நித்தம் தொலையத்தான் ஆசை....   வாஞ்சையோடு நீ அணைத்து இளைப்பார மடி தந்தாள் நித்தம் தொலையத்தான் ஆசை‌....   என்னருகில் நீ இருந்து நா(ன்) சுவைக்கும் விருந்து வைத்தாள் நித்தம் தொலையத்தான் ஆசை....   உன்னாசை நீ கூற ஒவ்வொன்றாய் நான் நிறைவேற்ற அதில் நீயும் களிப்படைய நித்தம் தொலையத்தான் ஆசை....   என்னோடு நீ இருந்தால் உன்னோடு நான் இருந்தால் அனுதினமும் தொலையத்தான் ஆசை....!!!     இரவின் நீளம்   காலம் சொன்னது எட்டு மணி நேரம்தான் இரவின் நீளம் என்று....   ஆனால் நான் சொல்கிறேன் கண்மூடி கண் திறக்கும் வரை மட்டுமே இரவின் நீளம் என்று....   கண்கள் திறந்தால் அது விடியல் கண்கள் திறக்கவில்லை அது விடுதலை....!!!     இன்னும் எத்தனை இரவுகள்   இன்னும் எத்தனை இரவுகளில் நான் மட்டும் தனித்து எழுதுவது கவிகளை... அன்பே வந்துவிடு என் பேனாவாய்....   கவிதைகளில் காவியம் செய்வோம் காதலெனும் இலக்கணம் கூட்டி கருவாய் நீ இருப்பின் காகிதமாய் நானும் இருப்பேன் என்றும் உன்னை சுமக்க....!!!     சிறைவாசம்   நெடுங்காலமாய் சிறைவாசம் அனுபவிக்க ஏங்குகிறேன்   அன்பே உன் இதயத்தில்....!!!     உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email: freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/