[]         உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு   ~ பகுதி – 2 ~   நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு….!       பேரன்புமிக்க வாசகர்களே, தங்களின் மேலான ஆதரவுக்கு என்றும் தலை வணங்குகிறேன். இதோ மேலும் ஒரு படைப்பு உங்களுக்காக உங்கள் கைகளில் நீங்கள் அளித்த தன்னம்பிக்கையின் பேரில்.   தமிழின்பால் நான் கொண்ட பற்று அளப்பரியது அதன் விளைவாக இந்த நூலை இத்தலைப்பின் கீழ் தேர்ந்தெடுத்து உள்ளேன்.  என் கவிகள் அனைத்தும், அது எழுதப்பட்ட சூழ்நிலையில் எந்தன் மனப்போக்கை பொருத்தே அமையப்பெற்றது. அத்தருணத்தில் தமிழோடு எந்தன் பேனா கொண்ட உறவே, இக்கவிகள்.   எண்ணங்களை தமிழ் மொழியின் வழியே வடித்துள்ளேன். சற்று படித்துப் பாருங்கள். நிறைவாய் இருப்பின் வாழ்த்துங்கள், வளருகிறேன். குறைகள் இருப்பின் திருத்துங்கள், கற்றுக்கொள்கிறேன். என் படைப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில்….!   ~ நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது ஐந்தாவது புத்தகம். எனது நான்கு புத்தகங்களுக்கும் உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது ஐந்தாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com காப்புரிமைத் தகவல்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License [Image] நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work.     சமர்ப்பணம்   காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமூகத்திற்கும்;   ஊக்கம் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்; பிழைகள் திருத்தி தந்த கவிஞருக்கும்;         இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்….!   இரவின் அழகான நிசப்தத்தில்   கார் ஒளியும் சுற்றி நிறைய ஊளைக் காற்றும் தென்றலாய் வீச என் வீட்டு மாடத்தில் நாற்காலி இட்டு நான் அமர உப்பரிகையில் இருந்தபடி மதியவளை இரசிக்கிறேன் எந்தன் மங்கையவளை நினைத்தபடி….!       எழுதும் போது மட்டும் தான்   சரி எது தவறு எது பகுத்தறியும் அவசியமில்லை….!   என் ஆழ்மனதின் கற்பனைகளுக்கு வயதும் இல்லை….!   எந்தன் பேனாவிற்கு கண்டங்கள் கடக்கும் எல்லைகளும் இல்லை….!   இலக்கணம் இல்லை இலக்கியம் இல்லை   எந்தன் கவிகளுக்கு பயமுமில்லை….!!!       எனக்கும் உனக்குமான இடைவெளி   எனக்கும் உனக்குமான இடைவெளி பூமிக்கும் ஆகாயத்திற்கும் உள்ள இடைவெளி….!   ஒன்று நீ பூமி வர வேண்டும் இல்லையேல், நான் ஆகாயம் வர வேண்டும்….!   இரண்டில் எது நடப்பினும் இருவரின் இதயமும் ஒரு பொருள் சங்கமிக்கும்...!!!       தினம் உதிக்கும் சூரியன் போல   அனுதினமும்,   புதிய புதிய அனுபவங்கள் எண்ணிலடங்கா சவால்கள் துவள வைக்கும் சோகங்கள் மீள முடியா கவலைகள்   இத்தனை இருந்தும் ஒவ்வொரு விடியலும் உற்சாகமாய் உதிக்கிறேன் தினம் உதிக்கும் சூரியன் போல…..!!!       சொல்லத் தவிக்கிறேன்   மாயவளே உன்னிடத்தில் சொல்லத்தான் தவிக்கிறேன்   எந்தன் காதலை….!   ஏனோ என் கவிகள் மட்டும் சுலபமாய் சொல்லிவிடுகிறது   எந்தன் காதலை….!   இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது என் கவிகளுக்கு என் அன்னையிடம் தமிழ்ப்பால் உண்டதாலோ….?       இரவை சிறைபிடிக்க   அனுதினமும், இரவை சிறை பிடிக்கவே எண்ணம் கொள்கிறேன்   என்னவள் துணையோடு…. அது ஏனோ இரவு என்னை சிறை பிடிக்கிறது என்னவள் துணை எனக்கு இல்லை என்பதால்….   என்னை சிறை பிடித்தாய் வானத்து அம்புலி கர்வமாய் இருமாப்பு கொள்கிறது நிச்சயம் ஒரு நாள் அம்புலியைக் கையில் அடைத்து இரவையும் சிறைபிடிப்பேன்….!!!       பேனாவின் முனையில்   ஒரு புரட்சியும் வெடிக்கிறது எந்தன் எண்ணத்தை எழுதையில்….   அது ஒரு யுத்தம் புரிகிறது காகித மேற்பரப்பில்….   ஆதி முதல் அந்தம் வரை நிகழ்ந்தேறிய அத்தனை புரட்சிக்கும் வித்திட்டது;   வாள் முனையோ; துப்பாக்கி முனையோ அல்ல   பேனாவின் முனையே…..!!!       தினம் தினம் வந்துவிடுகிறது இரவு   தினப் பொழுதுகளில் நான் நேசிக்கும் ஒரு பொழுது இரவு மட்டும்   என் இரவுக்கு மட்டுமே தெரியும் எத்தனை கனவுகளை சுமந்தவன் நான் என்று…..   எத்தனை தோல்விகளை சந்தித்தவன் நான் என்று…..   எத்தனை நிராசைகள் கொண்டவன் நான் என்று…..   எத்தனை வேதனைகள் உடையவன் நான் என்று….   அத்தனைக்கும் மருந்து போடும் ஒரே பொழுது எந்தன் இரவுப்பொழுது   அனுதினமும் வேண்டுகிறேன் இரவுப்பொழுது வரவேண்டியே….!!!       நம்பிக்கை என்பது   எந்தன் பேனா எடுத்து நான் கிறுக்கும் அனைத்தையும் கவிதைகள் - என நம்பும் நம்பிக்கையில் உள்ளது நம்பிக்கைக்கான உவமை…..!!!       இராஜ ராஜ சோழன்   தஞ்சையை தலைமையாய் கொண்டவன்; தெற்காசியாவை ஒரு குடையின் கீழ் ஆண்டவன்; தண்ணீரைத் தடுத்த சோழன் வழி வந்தவன்; தரணியே மெச்சும் பெரிய கோயில் கொண்டவன்; தண்ணீரில் கலம் நடத்தி வெற்றி கண்டவன்; தேசத்தில் நற்குடியாட்சி நடத்தியவன்; தனையனை தன்னை மிஞ்சும் புகழ்பெற வைத்தவன்;   தமிழர் தேசத்தின் அடையாளம் அவன்   அவனே, எம்பெரும் பாட்டன் அருள்மொழி வர்மன் என்னும் “இராஜ ராஜ சோழன்”....!!!       தொலைந்து போன நாட்கள்   விவரங்கள் ஏதுமறியா சுற்றித்திரிந்த தருணம் அது….   தேர்வு தேர்ச்சி பெற மட்டும் என்று உணர்ந்த தருணம் அது….   கவலைகள் சிறிதுமின்றி களிப்பாய் நகர்ந்த தருணம் அது….   தோள் கொடுக்க தோழமைகளும் வழிநடத்த நல்லாசான்களும் வழித்துணையாய் வந்த தருணம் அது….   அது, நான் தொலைத்த தருணம் அது…. எந்தன் பள்ளிச்சாலை என்னும் உருவம் அது….!!!       கவிகளின் தோட்டத்தில்   அன்னைத் தமிழுக்கு எழுத்தாணி கொண்டு சிலை வடித்து அணிகலன் பூட்டி மரபுக் பட்டுடுத்தி உயிர் கொண்டு பீடம் அமைத்து மெய் கொண்டு அர்ச்சனை நடக்கிறது கவி மலர்களால்….   கவிகளின் தோட்டத்தில்….!!!       கோடிட்ட இடத்தை நிரப்புவது போல   என்னில் பாதி நீ நிரப்ப வேண்டியே காத்திருக்கிறது அடிக்கோடிட்ட கேள்வியாய்….   உடன் வந்து நிரப்பிவிடு நம் காதல் கொண்டு….   என் வாழ்வு முற்றுப்பெற….!!!     ரோஜா   நீ, தோட்டத்தில் இளவரசியா…? இல்லை வெள்ளை மாளிகை அதிபரா…?   உந்தன் பாதுகாப்புக்கு எத்தனை வீரர்கள்…..!   உன்னை கைப்பற்றி எந்தன் சிந்தை இச்சை கொள்ளுமாயின் - முதலில் நினைவுக்கு வருவது பாதுகாப்பு அரணே….!!!       நீ வரும் வரை   காத்திருப்பேன்...   நீ வரும் வரை எந்தன் காதல் கடுகளவும் குறையாமல்   தாங்கி நிற்பேன்...   நீ வரும் வரை உந்தன் காதல் எந்தன் இதயம் விட்டு நீங்காமல்….!!!       இசையால் நிரம்பும் இரவுகள்   மெல்லிய காணம் என் அலைபேசி விட்டு செவிகளை எட்டும் தருணத்தில்….!   கார் இருளும் சூழ்ந்திருக்கும் விண்மீனும் ஒளி எழுப்பும் பஞ்சு மெத்தையும் அரியாசனம் விரிக்கும்….!   அடை மழை போல் என்னை அழகாய் ஆலிங்கனம் செய்யும் - தூக்கங்களாய்….!!!       காதல் சொல்ல வந்தேன்   தங்க நிறப் பட்டுடுத்தி தேனீர் கோப்பையை பவ்வியமாய் ஏந்தி வந்து பக்கமாய் கொடுக்கிறாய்….   இதழ்கள் இரண்டும் மௌனம் கொள்கிறது; கண்கள் நான்கும் கச்சேரி நடத்துகிறது….   அரங்கேற்றம் காணவா வந்தேன் எந்தன் காதலை சொல்வதற்கல்லவா வந்தேன் ….!!!       முழு நிலா வெளிச்சத்தில்   பௌர்ணமி தான் அன்று,   தைத்திங்கள் பௌர்ணமி தான் தைப்பூச திருநாள் தான் தமிழ் கடவுள் முருகனை தான் திரு உருவ தரிசனம் தான் திருநீறு நெற்றியில் தான் திருவளும் சேர்ந்திடும் தான்….   பௌர்ணமி திருநாள் தான் அது எங்கள் தைப்பூசத் திருநாள் தான்….!!!       திகட்டாத மிட்டாய் போல   இதயத்தில் ஒரு இச்சை,   என்னவள் என்றும் என்னை இரசிப்பதுபோல் எந்தன் கவிகளையும் திகட்டாத மிட்டாய் சுவை போல் அனுதினமும் இரசித்து சுவைக்க வேண்டும்….   அவள் இரசனைக்கேற்ப மிட்டாய் தரும் கடைக்காரனாய் நான் இருக்கவேண்டும்….!!!       பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்   கவிகள் பலவற்றை பேனா முனையில் எழுதியவன்….   உன்னை கண்டதும் பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்...   உந்தன் கண்களில் என்ன காந்தமடி எந்தன் உதடுகளை மரத்துப் போக வைக்கிறதே….   உன் உதடு கொண்டு என் உதடுகளை விடுவிப்பாய் இல்லையேல், உந்தன் கண்கள் கொண்டு எந்தன் கைகளை சிறைபிடிப்பாய்….!   அஃதாற்றின், காகிதங்களும் தீர்ந்துவிடும் உன்னோடு பேச எண்ணியதை எந்தன் கைகள் எழுதினால்….!!!         வாழ்வின் சுவாரசியங்கள்   திங்கள் ஒரு திருப்பம் தினம் ஒரு வருத்தம் இருப்பினும் கொண்டதில்லை குழப்பம்...   இதுவே வாழ்வின் சுவாரசியம்….!!!       சுமைதாங்கியாய் இரவுகள்     பொழுதுகளில் இரவுக்கு சுமை அதிகம் தான்…   ஒவ்வொரு தினமும் உதயம் முதல் அந்தம் வரை கொண்ட சோகங்கள் துக்கங்கள் துன்பங்கள் அவமரியாதைகள் அனைத்தையும் அசைபோடும் பொழுது என்பதால்….!!!       வானில் இழைத்த நீலமாய்     என் தோழமைகளோடு நான் கொண்ட உறவும்….   என்னவளோடு நான் கொண்ட உரிமையும்….   வானில் இழைத்த நீலமாய் என் வாழ்வில் கலந்தவை….   அதை பிரிக்கும் சக்தி இப்பிரபஞ்சத்தில் எவர்க்கும் இல்லை….!!!       விரல் பிடித்து நடக்கிறேன்   வயது இருபத்தி ஐந்தை கடந்தும் உந்தன் விரல் பிடித்து நடக்கிறேன் நடக்கத் தெரியாமல் அல்ல உன்னை விட்டு விலகாமல் இருக்க….   யுகங்களும் நொடிகளாகும் கற்பாதைகளும் பூப்பாதைகளாகும் நான் உன்னோடு நீ என்னோடு விரல் பிடித்து நடந்தால்….!!!       உள்ளங்கை வெம்மையில் துவங்கும் மொழி   எந்தன் உள்ளங்கை எப்பொழுதும் ஈரமாக உள்ளது நீ கொடுத்த முத்தத்தில்…..   அதனால்தான் என்னவோ எம் கவிகளும் ஈரம் சொட்ட சொட்ட நனைய வைக்கிறது கவிதை சாரலில்…..!!!       இதயத் துடிப்பின் ஓசை கேட்கையில்   நிசப்தம், அத்தருணத்தில் இதயத்தின் சப்தம் என்னுள் இருந்து….   அமைதியாய் செவிமடுக்கிறேன்….   உந்தன் குரலோசை எந்தன் இதயத்துடிப்பில்….!!!       ஒரே ஒரு முத்தம்   முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை - இது தந்தைகளுக்கு மட்டுமல்ல கவிஞர்களுக்கும் தான்….   ஒரு முத்தத்திற்கு எண்ணற்ற கவி மலர்களை பூக்க வைத்துவிட்டேன்….   வசந்த காலத்தின் அந்திப்பொழுதில் பூத்துக் குலுங்கும் மலர் தோட்டம் நிறுவ ஆசை - கவிகளால்   மீண்டும் ஒரு முத்தம் கொடுப்பாயா….?       காதல் பரிசு   உனக்கான பரிசு ‘மரியாதை’ என்று நினைத்தேன் மாலையிட்ட மறுநாளே எந்தையும் உந்தையும் தனதாக்கினார்….   ‘பாசம்’ என்று நினைத்தேன் பக்குவமாய் என் தாயும் உன் தாயும் பகிர்ந்தனர்….   இனியவளே, வேறென்ன தருவது காதலன்றி... தருகிறேன் இனி ‘என் இடம் உன்னிடம்’ ஏற்றுக்கொள் என் காதல் பரிசை….!!!       இரண்டு நிமிட சந்திப்பில்   அறிமுகம் இல்லாத நபர்கள் நாம் இருவரும் அறிமுகமானோம்….   விதியின் விளையாட்டா…? காலத்தின் கட்டளையா…?   எண்ணற்ற கனவுகள் இருவருக்குள்ளும் மணிக்கணக்காய் பேச வேண்டி வாய்ப்புக்காக காத்திருந்தோம்….   நேரெதிராய் கண்டவுடன் கண்கள் மட்டும் பேசியது இதழ்களிலும் ஏனோ மௌனம் மட்டும் உதிர்த்தது….   இரண்டு நிமிட சந்திப்பு வாழ்க்கையை பரிமாறினோம் வார்த்தைகளால் அல்ல இதயத்தால்….!!!       தரையிறங்கி வந்த நிலா   நித்தம் எழுதிடும் கவிகளில் கொஞ்சும் தமிழ்ச்சுவை பருகிட வானத்து அம்புலியும் அழகாய் தரையிறங்கியதே….   திங்களும் திரை விளக்கி திகட்டாமல் உண்டதே உப்பரிகையில் நான் அமர்ந்து வடித்தெடுத்த தமிழ் கவியை….!!!       எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்   எந்தையும் தாயும் போதித்த எந்த ஒரு பழக்கமும்….   நான் ஓதி உணர்ந்த என் அன்னைத் தமிழும்….   பாசமும் பரிவும் கொடுக்கும் அன்பு தங்கைகளும்….   நேசமும் நட்பும் கொண்ட என்னருமை சகாக்களும்….   என் வாழ்வில் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எனை விட்டு நீங்கப் போவதில்லை….!!!     உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்   உணர்வுகள் வண்ணம் பூச எண்ணினால் நிச்சயம் பூசிக் கொள்ளட்டும்….   வானவில்லின் சப்த நிறங்களும் உணர்வுகளின் உடமை ஆகட்டும்; உணர்வுகள் அனைத்தும் வாழ்வின் அங்கமாகட்டும்….   வாழ்வே வண்ணமயமாகட்டும்….!!!       இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது   மங்கையவள் உனை சேர காத்திருக்கிறேன்; மாங்கல்யம் முடித்தவுடன்….   மாயவளே மறந்திடவேண்டாம் மன்னவன் நான் உனக்காக காத்திருக்கிறேன்….   இறைவனின் சித்தம் என்னவோ யார் அறிவார்; இருவருக்கான இடைவெளியும் நீண்டு கொண்டே செல்கிறது….   காலம் தன் நம்பிக்கையை விதைத்துக் கொண்டே வருகிறது….   காத்திருக்கிறேன்….!!!       முடிவின்றி தொடர்கிறது   எழுதிய முதல் கவி முதல் தொய்வின்றி தொடர்கிறது….   முடிவில்லா இப்பயணத்தில் முடிவொன்று ஏற்படுமாயின் அது என் மரணம் நிகழும் தருணத்தில் மட்டுமே….   அதுவரை முடிவில்லா தொடரும் எம் எழுத்துப்பணி….!!!       தூரிகை தீட்டிய இடமெல்லாம்   வாழ்வியல் எச்சங்களாய் மிச்சமிருக்கும் சோதனைகளும் மெச்சு முடித்த சாதனைகளும் நீங்கா இடம்பெற்றுள்ளது….   அவைகளை அலங்கரிக்கும் ஓவியமாய் வண்ணங்கள் கலந்த வாழ்த்துக்களும், அறிவுரைகளும் ஒன்று சேர்ந்துள்ளது….   வண்ணங்கள் கலந்த தூரிகையால் தீட்டப்பட்ட ஓவியமாய் எந்தன் வாழ்வியல்….!!!       வெளிச்சம் தொலைத்த இரவு   கார் இருளை போர்வையாய் தரிக்கிறது இரவு….   வெள்ளை ரோஜா நீட்டுகிறேன் காதல் வசத்தால்….   இருளை விடுத்து என்னை தழுவுகிறது காதல் கொண்டவன் கள்வன் இவண்; இல்லையேல் மதியவள் கடத்திடுவாள் என்பதால்….!!!       இறந்தகால இழப்பு - நினைவுகளாய்   அனுவனுவாய் ரசித்துத்தான் வாழ்வினை கடந்தவன் இன்று அணுவையே விழுங்குகிறேன்….   எந்தன் இறந்தகாலம் கொடுத்து வைத்த நற்சுகங்கள் அனைத்துமே தற்காலம் மறுப்பதனால் கதியின்றி தவிக்கிறேன்….   ஒரு சுகம் மட்டும் இன்னும் என்னுள் இறந்தகாலம் என்னும் (எண்ணும்) நிகழ்காலமாய்….!!!       விடை பெறாத கனவு ஒன்று   விடை பெறாத கனவு ஒன்று வினாவோடு காத்திருக்கிறது...   விடை எழுத வருவேன் என்ற நம்பிக்கையில்…..   விடை எழுதும் வல்லமை வேண்டும் அதை சரியாய் எழுதும் நல்லறிவும் வேண்டும்….   விடை பெறாத கனவு ஒன்று விடை பெறுதல் வேண்டும் கனவாய் அல்ல நிஜமாய்….!!!     வார்த்தைகளற்ற மொழி நீ   வார்த்தைகளற்ற மொழியாய் நீ இருக்கையில்   கவிதை படைக்கும் கவிஞனாய் நான் இருக்கையில்   இருவரின் சங்கமம் நடக்கையில் புது எழுத்துறவும் பிறக்கிறது ஆதி இலக்கணமும் புத்துயிர் பெறுகிறது காதல் இலக்கிய அரங்கேற்றம் நடக்கிறது….!!!       பிரிவின் முடிவில்   கண்ணீர் துளியும் கவிதைகளான தருணம்….   நீயும் நானும் பரஸ்பரமாய் பிரிவு விடை சொல்லி பரிவுடன் பார்த்து சென்ற தருணம்….   நிச்சயம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் நகர்ந்த தருணம்….   நீயும் நானும் கொண்ட பிரிவு முடிவின் தருணம்….!!!       இருளுக்கு பழகிய விழிகள்   சுகம் என்னும் வெளிச்சம் அணைந்த பிறகு இருள் எனும் சுகத்திற்கு பழகியது மனது….   என் கண்களும் தாமாய் பழகியது இருளில் வாழ….!!!       தித்திக்கும் வார்த்தைகளில்   எந்தன் உயிரின் இனிப்பு எங்கு என தேடினேன்;   உன் செவ்வாய் மலர்களில் கண்ணாமூச்சி ஆடுதடி….   தித்திக்கும் வார்த்தைகளாய்….!!!       ஏதோ ஒரு நம்பிக்கையில்   தோல்வி ஏமாற்றம் அவமானம் வீழ்ச்சி வலி இன்னும் பல….   அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாய் என்னோடு கலந்துவிட்டது….   இருந்தும் வாழ்கிறேன் ஏதோ ஒரு நம்பிக்கையில்….!!!     உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email: freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/