[]               உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு   ~ பகுதி – 5 ~   நவீன் ராஜ் தங்கவேல்       உறவாடும் எழுத்துக்கள் - எந்தன் பேனாவோடு….!       பேரன்புமிக்க வாசகர்களே, தங்களின் மேலான ஆதரவுக்கு என்றும் தலை வணங்குகிறேன். இதோ மேலும் ஒரு படைப்பு உங்களுக்காக உங்கள் கைகளில் நீங்கள் அளித்த தன்னம்பிக்கையின் பேரில்.   தமிழின்பால் நான் கொண்ட பற்று அளப்பரியது அதன் விளைவாக இந்த நூலை இத்தலைப்பின் கீழ் தேர்ந்தெடுத்து உள்ளேன்.  என் கவிகள் அனைத்தும், அது எழுதப்பட்ட சூழ்நிலையில் எந்தன் மனப்போக்கை பொருத்தே அமையப்பெற்றது. அத்தருணத்தில் தமிழோடு எந்தன் பேனா கொண்ட உறவே, இக்கவிகள்.   எண்ணங்களை தமிழ் மொழியின் வழியே வடித்துள்ளேன். சற்று படித்துப் பாருங்கள். நிறைவாய் இருப்பின் வாழ்த்துங்கள், வளருகிறேன். குறைகள் இருப்பின் திருத்துங்கள், கற்றுக்கொள்கிறேன். என் படைப்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில்….!   ~ நவீன் ராஜ் தங்கவேல்     உறவாடும் எழுத்துக்கள் - ஆசிரியர் பற்றி   நான் நவீன் ராஜ் தங்கவேல், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவன். இது எனது எட்டாவது புத்தகம். எனது ஏழு புத்தகங்களுக்கும் உங்களின் அளப்பரியா ஆதரவை கண்டு உள மகிழ்கிறேன். எனது எட்டாவது நூலுக்கும் தங்களது மேலான ஆதரவை எதிர்பார்கிறேன்.   கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி அதை கானொளியாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன். அந்த அலைவரிசைக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்.   எங்கும் தமிழ் – https://www.youtube.com/channel/UCJ71MmTbdtwTG8AzraXOZZA   என்னை தொடர்பு கொள்ள – 8148266328 மின்னஞ்சல் அனுப்ப – naveenrajthangavel@gmail.com காப்புரிமைத் தகவல்   Creative Commons Attribution-ShareAlike 4.0 International License [Image] நூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.   இதனை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமை வழங்கப்படுகிறது.   You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work. Under the following conditions: Attribution — You must attribute the work in the manner specified by the author or licensor (but not in any way that suggests that they endorse you or your use of the work). No Derivative Works — You may not alter, transform, or build upon this work.                   சமர்ப்பணம்   காகிதங்கள் தந்த மரங்களுக்கும்; எழுதுகோல் தந்த உழைப்பாளிக்கும்; மொழி தந்த தமிழுக்கும்; கருத்துக்கள் தந்த சமூகத்திற்கும்;   ஊக்கம் தந்த நண்பர்களுக்கும்; படைக்கும் ஆற்றல் தந்த இறைவனுக்கும்;         இத்தொகுப்பினை அன்பினால் சமர்ப்பிக்கிறேன்….!   அழகு   மெய்மறந்து நிற்கிறேன் அவள் செய்யும் பாவனைகளில்; அன்பு முகம் மறைக்கிறாள் கரம் கொண்டு; விரல்களை கடிக்கிறாள் பல் கொண்டு; மழலைமொழி வீசுகிறாள் இதழ் கொண்டு....!   கைகொண்டு தூக்குகிறேன் கட்டி அணைக்கிறாள் கைகொண்டு; அன்பு மகளே, உந்தன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அடி எந்தன் அகராதியில்....!!!     மிதந்து செல்லும் மேகக் கூட்டங்களில்   நிலையில்லா மேகக்கூட்டங்கள் தினமும் மிதக்கிறது; ஒன்றை மட்டும் உணர்த்திப் போகிறது....   நிலையில்லா வாழ்க்கையில் சுகமும் துக்கமும் கவலையும் மகிழ்ச்சியும் நிலையில்லை என்பதை....!!!     உணவு   உப்பில்லா உணவும் ருசிக்கிறது அன்பே நீ உடன் இருந்தால்....!   அமிர்தமும் கசக்கிறது அன்பே நீ விலகி இருந்தால்....!!!     நீயும் நானும் பேசாத மொழிகளில்   முதலாம் சந்திப்பு வார்த்தைகள் எழவில்லை எனக்கும் உனக்கும்....   நான்கு கண்கள் மட்டும் உறவாடின; செவ்வாய் பேசாத மொழிகளை இமைகள் மட்டும் பேசியதால்....!!!     இடைவெளி   விஞ்ஞான உலகம் தான் இருந்தும் தடுமாற்றம் எத்தனையோ நுண்ணுயிர்களுக்குள் ஒன்றே ஒன்று மனித வர்க்கத்தையே ஆட்டிப்படைக்கிறது....!   சமூக இடைவெளி அதை கொல்லும் ஒரு மருந்து விஞ்ஞானம் உறைக்கிறது மெய்ஞான முறைப்படி....!   இடைவெளி காப்போம் எதிர்வரும் தலைமுறை காப்போம்...!!!     நினைத்த நொடியில்   தமிழை வேண்டுகிறேன் அனுதினமும் வேண்டுகிறேன்....!   கவி எழுதும் வரம் வேண்டும்; அனுதினமும் அது வேண்டும்; நினைத்த நொடி எழுதும் வரம் அனுதினமும் வேண்டும்...‌!!!     காயம்   காயம் கண்ட இதயம் தான் என் இதயம் காயம் ஏற்படுத்த தயங்குகிறேன்....   வழியறியாமல் அல்ல அதன் வலி உணர்ந்ததால்....!!!     சூழ்நிலையால் ஏற்படும் சிந்தனைகள்   மதி அறிகிறது சிந்தனைகள் யாவும் நிகழ வாய்ப்பே இல்லை என்று....   இருந்தும் மனம் கேட்பதே இல்லை மனதிற்கு இதமாய் இருப்பதால்....!!!     உலக அதிசயம்   அண்டத்தில் அதிசயம் ஏழாம்; அதில் உடன்பாடு எனக்கு இல்லை.... பல்லவ மன்னனும்; சோழகுல வேந்தனும்; பாண்டிய அரசனும்; விட்டுச்சென்ற எச்சங்கள் ஒவ்வொன்றும் அதிசயம் தான்; தமிழும் அதிசயம் தான்....!!!     நினைவுகள் நிழலாய் பின்தொடர   வாழ்வில் எவ்விடம் செல்கையிலும் புதைந்த நினைவுகள் நிழலாய் பின் தொடர்கிறது....   ஆதவன் அஸ்தமிக்கும் வரை நினைவுகள் என்னை விட்டு அகலாது.... பூதவுடல் தீக்கிரையாகும் வரை ஆதவன் அஸ்தமிக்காது....!!!     புத்தகம்   மை நிரப்பிய பேனா கொண்டு பிரபஞ்சம் ஆழ்கிறேன் கட்டளைகளாய் கவிகள் ஆணைகளாய் அணிகள் நான் படைத்த புத்தகத்தில்....   அப்பிரபஞ்சத்தில் நானே சக்ரவர்த்தி; கவிச்சக்கரவர்த்தி....!!!     முடிவில்லா உரையாடலில்   உன் இமை கண்ட கணம் முதல் உரையாடல் தொடங்கிவிட்டேன்....   நிறுத்தும் எண்ணம் இல்லை முடிக்கும் முடிவும் இல்லை நித்திரை கலையும் வரை....!!!       பிரிவு   கண்ணீர் விலைமதிப்பற்றது நீ தான் உரைத்தாய்.... உன்னை பிரிந்த தருணத்தில் அருவியாய் கொட்டி விட்டேன்.... விலைமதிப்பற்ற உனக்கு விலையாய்....!!!     உலகின் புதிர்களில் ஒன்று   விடை அறியா புதிர்கள் இவ்வையகத்தில் பல.... அதில் தலையானது நாளை என்னும் நிகழ்வு....!!!       உயிர்   இனக்கீற்று அமிலம் இனம் கண்டது உடலை இவ்வையகத்தில் வாழ உயிர் எனும் பெயர்கொண்டு....!!!       காத்திருப்புகள் சுகமானவை     உனக்காகத்தான் காத்திருக்கிறேன் எனினும், எந்தன் காத்திருப்பு என்று முடியும் என்று அறியாமல்....   எண்ணற்ற கனவுகள் சட்டென்று வந்து விடாதே காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து....   காத்திருப்பும் சுவாரசியமானது....!!!     கரு   நான் எழுதும் கவிகளில் நீ மட்டும் தான் என் கரு நிஜமாய்....   உன்னை அன்றி ஒருவள் இருந்தால் என் கரு கற்பனையே....!!!     நாளைய வாழ்க்கையை வாழ்ந்துவிட   மனித குலத்திற்கு மிக மிக அவசரம் தான் நாளைய வாழ்வை இன்றே வாழ்ந்து விட....   நிதர்சனம் அதுவல்ல இன்றைய வாழ்க்கை மட்டுமே அனைவரது கையில் வாழ்வோம் நாளைய அவசரம் இன்றி...!!!     வரம் கேட்டேன்   வரம் கேட்டேன் இறைவனிடம் பிடித்ததை செய்யும் வாழ்வு வேண்டுமென....   அவனும் தந்தான் அழகிய கனவுகளை பிடித்ததை செய்து கொள்ளென்று.‌.‌...   கற்பனையில் பறக்கும் கவிஞன் என்பதால்....!!!!     விழிகள்   இமைக்கக் கூட மறந்ததடி எந்தன் விழிகள் உந்தன் விழிகளோடு மோதியதும்....   இயங்கும் வரம் வேண்டும் விழிகள் இளைப்பாறவும் வேண்டும் வேண்டிய வரம் வேண்டும் வரமாய் நீயே வேண்டும்....!!!     விழித்திருக்கும் இரவுகளில்   தினமும் விழித்திருக்கிறேன் உறங்காமல் - என்னோடு என் இரவுகளும் விழித்திருக்கிறது என்னவளே உனக்காக....!!!     சரி தவறு   என் மனம் விரும்பியதை தவறாமல் செய்கிறேன்... சரி இது தவறு இது என யவர் தடுத்தாலும் விரும்பியதை மட்டும் செய்கிறேன் மன நிறைவோடு....!!!     வெட்கம்   என்னை கண்டதும் முகம் மறைக்கிறாள் இருகரம் கொண்டு...‌   வெட்கம் என்னும் பெயரில்....!!!     முடிவு   எனது கவிப் பயணத்தின் முடிவு என் வாழ்வின் முடிவே....!!!     கண்மூடித் திறக்கையில்   ஆழ்ந்த நித்திரை அழகிய கனவு - கண் விழிக்கும் தருணம் கனவு மெய்படல் வேண்டும்...!!!     கடிகார முட்களின் சுழற்சியாய்   எந்திர உலகம் வேகமாய் சுழல்கிறது... எந்தன் கைக்கடிகாரம் இணையாய் சுழல்கிறது...   நான் கை கட்டி வேடிக்கை பார்க்கிறேன் காலச் சூழலை அமைதியாய்....!!!     விடியலைத் தேடி   தேடுகிறேன் விடியலை இரவு முழுவதும்; அடுத்த நாள் விடியல் எட்டு மணி நேரத்தில்.... வாழ்க்கையின் விடியல் எத்தனை மணி நேரத்தில்....!!!     மெய்நிகர் உலகு   புதியதோர் உலகம் பொறியாளன் கையில்.... படைக்கிறான் இரசிக்கிறான் ஏன், அதில் வாழ்கிறான்.... மெய்நிகர் உலகமாய்.....!!!     பகிர்தலின் எல்லை   உலகமயமாதல் உலகை அழிக்கும் முன் பகிர்தலின் எல்லை விரியத் தான் வேண்டும்....   பசியினைப் போக்க பஞ்சத்தை விரட்ட தீவிரவாதம் ஒழிக்க அமைதி தலைக்க பகிர்தலின் எல்லை விரியத் தான் வேண்டும்....!!!     பாதை தெரியவில்லை   இலட்சியம் ஒன்றை சிந்தையில் கொண்டவன் நடக்கிறேன் நடக்கிறேன் வெகுதூரம் நடக்கிறேன் பாதை தெரியாமல் அல்ல பாதையை உருவாக்க வேண்டி....!!!     உனக்கும் எனக்குமான இடைவெளியில்   உனக்கும் எனக்குமான இடைவெளிகள் அதிகம்தான்... இருந்தும் என்செய்வது, காத்திருப்பதை அன்றி.... காலமும் வழிவிடும் காதலும் கைகூடும்....   காத்திருப்போம் அன்பே....!!!     சண்டையிடும் வார்த்தைகளிடம்   மன்றாடி வேண்டுகிறேன் வார்த்தைகளிடம்....   சண்டையிட வேண்டாம் அனைவருக்கும் முன்னுரிமை என் கவிதைகளில் உண்டு....!!!     அழகான விடியல்   செந்நிறச் சூரியனும் செங்காந்தள் மலரும் அரும்பும் தருணம்தனில் குளம்பியோடும் - ஈரம்  கலையா தலையோடும் நீ எழுப்பும்  பொழுதுகளில் உள்ளது அழகான விடியல்....!!!       வழக்கமான பாதைகளில்   வெற்றியை நோக்கி நகர்கிறேன் அனுதினமும் வழக்கமான பாதைகளில் தோல்வி மட்டுமே மிஞ்சுகிறது அவ்வப்போது வெற்றியுடன்....!!!     எவ்வளவு நேரம் சுவருடன் பேசுவது   எழுதிய கவிகள் அனைத்தையும் ஒப்புவித்து பார்க்கிறேன் என்னவளே உன் நினைவில் என் பள்ளியறை சுவரோடு....!   எத்தனை காலம் தான் சுவரோடு பேசுவது விரைந்து வந்து விடு எனக்காய் அல்ல என் கவிகளுக்காக....!!!     எங்கேயோ தொலைந்துவிட்டது   என் கனவுகள் என் ஆசைகள் என் இலட்சியங்கள் கடந்து வந்த பாதைகளில் எங்கோ தொலைந்துவிட்டது....   அன்றாடம் தேடுகிறேன்; தொலைந்த அனைத்தும் என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....!!!     புத்தகத்தில் ஒளித்து வைத்த மயிலிறகாய்   ஆசிரியர் பாடம் எடுக்க - நானும் அரைகுறையாய் கவனிக்க கைகள் மட்டும் கிறுக்குகிறது தமிழ் கவிதைகளை....   புத்தகத்தில் மறைத்து வைத்த மயிலிறகாய் - என் கவிகளும் உறங்குகிறது எழுத்தேட்டில்....!!!     சிரித்துக் கொண்டே கடந்து செல்கிறாய்   பாசம் அதிகம் தான் இருவருக்குள்ளும் இருந்தும் என் செய்வது காலத்தின் கட்டளை பிரியும் ஒவ்வொரு பொழுதும் புன்முறுவல் கொண்டு பிரிகிறாய்; இந்த அண்ணனை, தொழில்நுட்பம் இணைக்கும் என்ற நம்பிக்கையில்....     அலைக்கும் கரைக்குமான உறவு போல   எனக்கும் என் மொழிக்குமான உறவு கடலுக்கும் கரைக்குமான உறவு....   கடலாய் தமிழ் கரையாய் நான் அலையாய் என் எழுத்துக்கள்....!!!     நொடி நேரத்தில்   சுவாரசியம் கொண்டதுதான் வாழ்வு அனுதினமும் சுவாரசியம்....   அடுத்த நொடி அடுத்த நிமிடம் அடுத்த மணி நேரம் அடுத்த பொழுது அடுத்த நாள் ஒவ்வொன்றும் சுவாரசியம்....   நொடிப் பொழுதில் மாறும் வாழ்வியலில்....!!!     பிரகாசமான இரவுகளில்   இரவுகள் அழகாய் பிரகாசிக்கிறது மதியவள் வருகையால்....   மதியவள் வரா தினமும் அழகாய் பிரகாசிக்கிறது அன்பே உன் வருகையால்....!!!     ஆகாயத்தில் இல்லாத நிலவு   நிலவு, அதை வானத்தில் மட்டுமே பார்த்தவன் முதன் முதலாய் தரையிலும் பார்த்தேன் உந்தன் முகத்தை கண்டபோது....!!!     நேரத்தின் அழகு   அன்புள்ளம் கொண்டவன் நான் அன்பாய் கதைக்கிறேன் அன்பு தங்கையுடன் அழகாய் நேரம் போவதை அறியாமல்....   நேரத்தின் அழகையும் அழகாய் உணர்ந்தேன் உன்னிடம்....!!!     நிலவும் விண்மீன்களும் சூழ   இரவு நேரம் அழகே ஒரு நடைபயணம் உன்னை காண....   விண்மீன்கள் புடை சூழ அம்புலியும் துணையாய் வர ஆரவாரமாய் வருகிறேன்   தரிசனம் தந்து விடு - வேண்டும் வரமும் தந்து விடு....!!!           நட்பு   என் அன்னையும் சற்று தடுமாறுவாள் எந்த சூழ்நிலையில் - நான் எப்படி இருப்பேன் என்று....   என் நட்பு சொல்லிவிடும் முகம் காணாது செவிச் செய்தியை வைத்து....!!!     இதைபோலொரு மழை நாளில்   உன் விரல் பிடித்து நடக்க வேண்டும் - இல்லை நனைய வேண்டும் இதே போல் ஒரு மழைச்சாரலில்....!!!     எழுத்துக்களில் சிக்கித்தவிக்கிறது   நான் யார்...? பதில் தெரியா வினாவிற்கு பதில் - எந்தன் எழுத்துக்களில் சிக்கிக் கிடக்கிறது....!!!     மறந்துவிட நினைக்கிறேன்   மறந்துவிட நினைக்கிறேன் கடந்த கால வாழ்வை கசப்பான நிகழ்வை கார் இருளை இருந்தும் தவிர்க்கிறேன் சில முகங்கள் வேண்டியவையானதால்...!!!     சொல்லில் அடங்கிவிடாது   மங்கையவள் உன் மீது கொண்ட அன்பை சொல்லிவிட நினைக்கிறேன்...   எனினும் - காதல் என்னும் சொல்லில் அடங்க மறுக்கிறது அன்பே நான் கொண்ட அன்பு....!!!     புதிதாய் தினம் பிறக்கிறேன்   ஆயிரம் கவலைகள் அனுதினமும் இருக்கத்தான் செய்கிறது இருந்தும் என் செய்வது தீர்வைத் தேடி ஓடுவதைத் தவிர....   தீர்வுகள் கிடைப்பினும் கிடைக்காவிடினும் - அனுதினமும் புத்தம் புதிதாய் பிறக்கிறேன்; என் வாழ்வை எதிர்கொள்ள நம்பிக்கையோடு....!!!     உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/ தமிழில் காணொளி – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I 2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/ http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். ——————————————————————————————————– நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம். மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  – தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம். https://groups.google.com/forum/#!forum/freetamilebooks   Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள் நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும் எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com 2. www.badriseshadri.in 3. http://maattru.com 4. kaniyam.com 5. blog.ravidreams.net எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop, ebook readers like kindle, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/ நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks G +: https://plus.google.com/communities/108817760492177970948   நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஓர் எழுத்தாளர் உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும். நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம். தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும். எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். - email: freetamilebooksteam@gmail.com - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948 இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/ Supported by - Free Software Foundation TamilNadu, www.fsftn.org - Yavarukkum Software Foundation http://www.yavarkkum.org/