[]   அவளின் கலைப்பக்கங்கள்   - கவிதைகள்  கலைவாணன்  crazykalai005@gmail.com  அட்டைப்படம் : லெனின் குருசாமி - guruleninn@gmail.com    மின்னூலாக்கம் :சீ.ராஜேஸ்வரி - sraji.me@gmail.com    வெளியீடு : FreeTamilEbooks.com    உரிமை : Creative Commons Attribution-ShareAlike 4.0 International License    உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.          நூலின் அறிமுக முகம்   ஆயக் கலைகளின் 64 பக்கங்களும் அவளிடம் காண நேர்ந்தது. பெண்களுக்குள் இருக்கும் கலைகளில் என்னவளின் ஒரு சில கலைகள் என் கற்பனையின் விரிவாய் இங்கு உங்களுக்காக, தவறாக ஏதும் சித்தரிக்க பட்டிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் பிழை இருப்பின் சுட்டி காட்ட, நான் காத்திருக்கிறேன் சீர் செய்ய..            நிகழ் காலம்,கடந்த காலம்,வரும் காலமாய் திகழும் என்னவழுக்காக சமர்ப்பிக்கிறேன்..                           ஆசிரியர் அறிமுக உரை  பெயர் : கலைவாணன் தந்தை பெயர் : இளமாறன் தாயார் பெயர் : சாந்தி சொந்த ஊர் : தாத்தையங்கார்பேட்டை,  முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் கல்வி : கணினி பொறியாளர் அலைபேசி : 9943127724   இயந்திர உலகில் சுற்றிக் கொண்டு திரியும் வேளையில் என் மன அழுத்தத்தை குறைக்கவே இங்கு வந்தேன்.. ஓராயிரம் பிரச்சினைகள் சுற்றி இருப்பினும் பாடலும்,இசையும்,கவியும் சேர்ந்தால் அப்பிரச்சினைகள் தொலைந்து போகும் என்பார்கள்.. []         இதனை இங்கு பதிவு செய்ய அனுமதி வழங்கிய FreeTamilEbooks என்ற குழுமத்திற்கு நான் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்..   விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.. மின்னஞ்சல் முகவரி- crazykalai005@gmail.com பொருளடக்கம் 1.எழுத்திலக்கணம் 8  2. எழுத்தாற்றல் 9  3.கணிதவியல் 10  4.மறை 11  5.தொன்மை 12  6. இலக்கணவியல் 13  7. நய நூல் 14  8. கணியக்கலை 15  9. அறத்துப் பால் 16  10. ஓகக் கலை 17  11. மந்திரக் கலை 18  12. நிமித்தகக் கலை 19  13. சிற்ப கலை 20  14.மருத்துவக் கலை 21  15. உருவ சாத்திரம் 22  16. மரவனப்பு 23  17. வனப்பு 24  18. அணி இயல் 25  19. இனிது மொழிதல் 26  20. நாடக சாத்திரம் 27  21. நிருத்திய சாத்திரம் 28  22. சப்த பிரம்மம் 29  23. யாழியல் 30  24. வேணு கானம் 31  25. மிருதங்க சாத்திரம் 32  26. தாள சாத்திரம் 33  27.அஸ்திர பிரயோகம் 34  28. கனக பரிட்சை 35  29.ரதப் பயிற்சி 36  30. கஜ பரிட்சை 37  31. அசுவப் பரிட்சை 38  32. இரத்தின பரிட்சை 39  33.மண்ணியல் 40  34.சங்கிராமவிலக்கணம் 41  35.மல்யுத்தம் 42  36.ஆகருடணம் 43  37.உச்சாடணம் 44  38.வித்வேடணம் 45  39. மோகன சாத்திரம் 46  40. புணருங் கலை 47  41.வசியக் கலை 48  42.இதளியக் கலை 49  43.காந்தருவம் 50  44.பைபீலம் 51  45.கவுத்தகம் 52  46.தாதுவாதம் 53  47.காருடம் 54  48.இழப்பறிகை 55  49.முஷ்டி 56  50.ஆகாய பிரவேசம் 57  51.ஆகாய கமணம் 58  52.பரகாய பிரவேசம் 59  53.அதிருசியம் 60  54. இந்திர ஜாலம் 61  55.மகேந்திர ஜாலம் 62  56. ஜல ஸ்தம்பனம் 63  57.அக்கினி ஸ்தம்பனம் 64  58.வாயு ஸ்தம்பனம் 65  59. திருஷ்டி ஸ்தம்பனம் 66  60.வாக்கு ஸ்தம்பனம் 67  61.சுக்கில ஸ்தம்பனம் 68  62.கனன ஸ்தம்பனம் 69  63.கட்க ஸ்தம்பனம் 70  64.அவஸ்தை பிரயோகம் 71  Free Tamil Ebooks - எங்களைப் பற்றி 73  கணியம் அறக்கட்டளை 78  1.எழுத்திலக்கணம்   முதன் முதலாய் இலக்கணம் கற்பிக்க உன் கரங்கள் என் கரங்களை பிடித்த போது உணரவில்லையடி,   என் வாழ்வினை இவ் விலக்கணம் இப்படி திசை மாற்றும் என்பதை..   நீ எழுதிய வரிகளின் மேல் என் எழுத்தானியை வைக்க முயன்ற போது   சுருக்கென்று குத்திய முள் போல் உணர்ந்ததை நான் எங்ஙனம் கூற மொழிவேனோ..   அன்றில் இருந்து இலக்கணமே உரித்தான உன் விரல்களால் பயின்ற என் விரல்களால்   எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்று வரை அக்கரவிலக்கணத்தை..                                     2. எழுத்தாற்றல்   ஆற்றல்..   அறிவிக்கும் அப்பாற்பட்ட ஒன்று..   அதனினும் - உன்னிடம் இருந்து தோன்றிய எழுத்தாற்றல் ஏனோ அந்த சரஸ்வதிக்கும் எட்டாக் கனியாக உள்ளது..   உன் கைவண்ணத்தில் நீ வரையும் காகிதம் கூட பூச்சொரியும்..   புலவர்களும் போட்டியில் தான் உள்ளனர் இன்று வரை, உன்னிடம் இருந்து விகிதத்தை கற்க..   3.கணிதவியல்   நீ கணிக்கும் கணிப்புகளில் தெரிகிறதடி, கணிதத்தின் உச்சி,   பாடம் பயிலாத போதும் நீ போடும் மனக் கணக்கில் இங்கு பாதி மனம் சொக்கி போனதடி,   கணித மேதை ராமனுஜனும் தலை குனிவான் உன் கணித ஆற்றலை கண்டு,   சிறு பார்வையில் முழுவதுமாக கண்டேன் உன் விழிகளில் கணிதம் எனும் சாத்திரத்தை..   4.மறை   காற்றினில் மணக்கும் உன் கூந்தல் வாசமும்,   தீயினில் நீராடிய உன் கோபங்களும்,   எழிலினில் மிதக்கும் உன் நாணமும்,   விண்மீன் போல் ஜொலிக்கும் உன் மேனியின் ஸ்பரிசங்களும்   என்றுமே மறைத்து காக்கப்பட வேண்டிய மறை வேதங்களுள் அடங்கும்   5.தொன்மை   புராணங்களில் வடிக்கப்பட்ட கன்னியர்க்கும் காதல் வரும் உன் மேல்..   வர்ணனையின் ஊற்றான இளங்கோவும் பூரித்து போவான் உன்னைக் கண்டால்,   எப்படி சொல்லி புரிய வைப்பேன் இவர்களிடம்,   தொகுக்கப்பட்ட தொன்மங்கள் யாவுக்கும் மூலக் காரணம் நீ என்று..       6. இலக்கணவியல்   உன்னை கண்ட பொழுதில், கவிஞனும் பிழை புரிவான் அவன் எழுதிய இலக்கண நடையில்,   பிற மொழியாளனும் இலக்கணம் கற்க முற்படுவான்,அவ்வியல் உன்னை பற்றியதென்றால்..   பிரம்மன் படைத்த படைப்புகளுக் கெல்லாம் வகுக்கப்பட்ட இலக்கணவியல் நீயடி..   7. நய நூல்   மனிதன் எழுதிய அனைத்து நீதி சாத்திரங்களும் எரிந்து சாம்பலாகும்..   உண்மையின் விளிம்பாய் விளங்கும் உன் விழிகளின் முன்னால்..   அநீதியை காரிருள் கொண் டெரிக்கும் கண்மணியே                 8. கணியக்கலை குருவின் மகள்,   ஞாயிறின் தோற்றம்,   திங்களின் முகம்,   செவ்வாய் தேகம்,   புதன் போன்ற கன்னங்கள்,   ராகுவும் கேதுவுமாய் உன் கண்கள்,   நின்னை மணக்கும் மணாளனின்(சுக்கிரனின்) பார்வை பட,   சனி பகவான் பார்வை அகல என்றென்றும் நீ இருப்பதால்,   நானும் நம்புகிறேன் ஜோதிடத்தை..                         9. அறத்துப் பால்   மறு பிறவி எடுத்த கண்ணகியை உன் உருவில் காண்கிறேன்..   தர்மமும் நீயும் வேறில்லையடி,   வள்ளுவன் தன் எழுத்தாணி யினால் உரு பெற்ற அவ் வதிகாரமும்   சிலம்பினால் தன் னரம்  மறந் துயிர் நீத்த பாண்டியனும்   காக்க வியலா வறத்தை உன்னில் காண்கிறேன்   நீ எனை தண்டிகையில்..                                     10. ஓகக் கலை   அழகிய சிலையை வடித்தெடுத்ததால்  பிரம்மன் யோகனோ...?   அல்ல,   உன்னை போன்ற பெண்ணைப் பெற்றெடுத்ததால் உன் தந்தை யோகனோ..?   இல்லை,   இந்த அழகை ஆள போகும் கண்ணாளன் யோகனோ..?   11. மந்திரக் கலை   உன் விழிகளால் என் விழிகளை கிறங்கடிப்பாய்..   உன் செய்கைகளால் என்னை செயலற் றாக்கினாய்..   உன் மூச்சுகாற்றால் என்னை மூர்ச்சையாக்கினாய்..   எங்கு சென்று கற்றாய் இம் மந்திரக் கலையை..       12. நிமித்தகக் கலை   உம் முகம் காண பொழுதெழுவதும்   அன்றைய தினம் சிறப்பாக அமைந்ததென எண்ணி   பொழுதுறங்குவதும் கத்திரவனுக்கே உறித்தானதால் தான் ஏனோ   சகுண சாத்திரங்கள் உண்டானது போலும்..   13. சிற்ப கலை   சிற்பி என்ன   அந்த பிரம்மனும் உயிர் துறப்பான்   உனைப் போல் ஓர் சிலையை இனி வடிக்க முடியாதே என்றெண்ணி..   அக் காலம் முதல் இக் காலம் வரை கோவில்களில் மட்டும் பார்த்து வியந்த   சிற்பங்களை உன் உடலின் உதிரி பாகங்கள் எனக்கு எடுத்துரைக்கிறதடி       14.மருத்துவக் கலை   நின் விரல்கள் தீண்டுகையில் எம் காயங்கள் மறையும் மாயம் என்ன   உன் சுவாசக் காற்றில் என் பிணி நீங்கிய அதிசயம் என்ன   உன் கண் சொருகும் நொடியினில் என் வலி உருகும் ஆற்றல் என்ன   எங்கு சென்று படித்தாய் இம் மருத்துவக் கலையை..                                           15. உருவ சாத்திரம்   மூன்றாம் பிறையாய் உன் நெற்றி கோடி கண்கள் அழைகிறதடி அதனைச் சுற்றி   வார்த்தைகள் போதாதடி கூற இதைப் பற்றி புருவமெனும் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போன்ற விழிகள், தொன்மையில் கட்டப்பட்ட கோபுரங்களும் வெட்கி விழும் உன் நாசியைக் கண்டால், கொட்டும் நீரருவியில் கருமேகம் கலந்தாற் போல் உன் கூந்தல்   மலரினை ஏந்தி நிற்கும் புறவிதழ் போன்ற செழுமையான கழுத்து மழலையின் தேகத்தில் செய்த கைவிரல் யாப்பிலக்கணங்களில் காணும் எட்டுத் தொடைகளினும் சிறப்பானது உம் தொடை மெழுகைப் போல் தினம் தினம் உருகும் உன் இடை அத்தரும் வாசமாற்று போகும் உன் வாசம் முகர்ந்தால் உச்சி முதல் பாதம் வரை சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்தும் உன் உறுவமைப்பில்                                 16. மரவனப்பு   இராமாயணத்தில் இருந்த சீதையும்   மஹாபாரதத்தில் கண்ட குந்தி தேவியும் கூட   உன் வீரத்தையும்,தாய்மையையும் கண்டு உனக்கோர் இதிகாசம் எழுதச் சொல்வர்   17. வனப்பு   முன்னர் எழுந்த சிலப்பதிகாரமும்,மணிமேகலையும்   பின்னர் எழுந்த கள்ளிக்காட்டு இதிகாசமும்,கருவாச்சி காவியமும்   இன்று வரை இரட்டைக் காப்பியங்கள்   நீயும் நானும் தான் இனி இரட்டைக் காப்பியங்களாய் திகழ்வோம்   நம் காதல் வாழ்க்கையும் காவியம் என பொறிக்கப்படும் கல்வெட்டுகளில்       18. அணி இயல்   நெற்றி சுட்டியும் வழுக்கி விழும்,   கம்மலும் கலண்டு விழும்,   மூக்குத்திக்கும் முகம் கோனும்,   காசு மாலையும் கட்டவிழும்,   வளையல்களும் வசை பாடும்,   கணையாழி கூட உருகி குறுகும்,   உன் கொலுசின் மணிகளும் ஒலி அற்று போகும்,   உன் அணி அழகை கண்டு..                               19. இனிது மொழிதல்   மேலிதழ் இறங்கும் போது   பல சிகரங்களின் உச்சத்தை அடைகிறேன்   கீழிதழ் ஏறும்போது   ஆழியின் ஆழம் உணர்ந்தேன்   இவ் விதழ்கள் இணைந்ததடி என்னுயிரும் எனைப் பிரிந்ததடி,   குயிலின் பாடலா,கிளியின் கொஞ்சலா ஏதும் இல்லையடி, தேன் தெறிக்கும் உன் பேச்சு என் இனிய மொழியடி..                                 20. நாடக சாத்திரம்   கல் மனதையும் இலக வைக்கும் உன் கண்ணீர்,   மிரள வைக்கும் உன் கோபம்,   அலற வைக்கும் உன் கதறல்,   துயரில் கைக்குட்டையாகும் உன் புன்னகை,   அனைத்தும் முரண் பாடனது..   உன்னிடம் கற்க வேண்டுமடி இந்த நாடக கலையை..                                       21. நிருத்திய சாத்திரம்   யாழ் இசைக்க உன் பாதங்கள் புரள..   ஜதி ஒலியில் நின் கால்கள் உலவ,   ஸ்வர வரிசையில் உன் புருவங்கள் தாளமிட,   கை விரல்கள் கலந்து சிரிக்க,   சலங்கை யொலியில் சலனங்கள் தீர, வளர்ந்ததடி இவ் வாடற் கலை..   22. சப்த பிரம்மம்   நின் மயிரிழை யாழ் நரம்பாக,   நின் சுவாசக் காற்று குழலிசையாக,   நின் தேகம் வீணையாக,   வலையலோசையும் கொலுசொலியும் ஸ்வர வரிசையாக,   பிறந்ததடி இசை யெனும் பெண் பிள்ளை..   23. யாழியல்   காப்பியங்களில் கூட உன் பெயர் மறைக்கப் பட்டு விட்டது போலும்..   காரணமின்றி நீ தந்த இந்த யாழ் மட்டுமே அதிகம் சுட்டப்பட்டுள்ளது.   சரஸ்வதியின் சாந்த ஸ்வரூபியாக காட்சி அளிக்கிறாய்   உன் விரல் வீணையை தீண்டுகையில்..   24. வேணு கானம்   ஒரு விரல் ஒரு துளை மூட,   மறு விரல் மறு துளை திறக்க ,   கண் சொருக வைக்கும் ,   வேணு கானமானதடி   உன் மூச்சு காற்று..       25. மிருதங்க சாத்திரம்   கரு நிற கோளமாய் கரு விழிகள்,   அதனை காக்கும் படை வீரன் போல வெளிர் தட்டு,   விரல்களாய் மாறிய உன் இமை முடிகள்,   கரமாய் தெரிகிறதடி உன் இமைகள்,   கண் இமைக்கும் நொடிகளில் உணர்கிறேன்   அம் மிருதங்க இசையை..                                       26. தாள சாத்திரம்   உன் சிறு அசைவிலும்,   குறுகிய சிணுங்களிலும்   உன் பாதங்கள் அடி வைப்பதிலும்   கை விரல்கள் சொடுக்களிலும்   சோம்பல் முரிகையிலும்   தினம் தினம் உதயமாகிறதடி புது புது தாளங்கள்..   27.அஸ்திர பிரயோகம் போர் காலத்தில் நீ இருந்திருந்தால், வில் வீரர்கள் தேவை இல்லையடி,   உன் பார்வை எனும் அஸ்திரம் போதுமடி எதிரிகளை சாய்க்க..   பிரம்ம அஸ்திரம் கூட உன் மூச்சு காற்றில் கரையும்.. மனைவியாக நீ இருந்திருந்தால் கர்ணனை பிழைத்திருப்பான் போலும்..   28. கனக பரிட்சை   உன் அருகில் பொன் நகைகள் இருக்குமானால் கண் மூடி உனையே தொடுவேன்   இப் பெண்ணருகில் எப் பொண்ணும் விலையற்றதென்னி   உன் பொன்னிற மேனியால்   பொன் பொருள் தரம் பிரிக்கும்   கனகக் கலையை உன்னிடம்   கற்க வேண்டுமடி   29.ரதப் பயிற்சி   சக்கரமாய் சுழலும் கால்கள், கடவுளாய் தோற்றமளிக்கும் அவ் விரு கண்கள்   உன் பின்னந் தலையை அலங்கரித்த பூக்கள் மாலை போல் காட்சியளிக்க தீபாரதனையாக உன் நெற்றி பொட்டு முன்   வடமான உன் கைகள் பிடித்து இழுக்க வேண்டுமடி இத்தகைய ரதத்தை   30. கஜ பரிட்சை   வேழத்தின் பலமும் உன்   சிறு தூண்டல் முன் தூசி ஆகுமடி   அல்லியனின் துதிக்கை கூட உன் சுண்டு விரலால் நொறுங்குமடி   கஜனின் கால்கள் கூட உன் கண்கள் முன்னால் நடுங்குமடி   எதிரி நாட்டு யானைப் படைகளும் பின்வாங்கும் உனைக் கண்டால்                                           31. அசுவப் பரிட்சை   நீளமான கூந்தல் கொண்ட குதிரை,   அதன் மேல் அழகான பந்தல் போல ஒரு பதுமை   உன் பாதங்கள் மண்ணை தொட்டு நடக்கையில்   குதிரையின் வேகம் உணர்ந்தேன் டொக் டொக் டொக்   வேறென்ன வேண்டும் நான் சொல்ல   நடந்த போட்டியில் நீயே வெற்றி பெற்றாயடி..   32. இரத்தின பரிட்சை   பவளம் போன்று ஜொலிக்கும் நிறம்,   ரத்தினத்தின் விலை மதிப்பில்லா தரம்,   மணியின் குலுங்கி பூக்குளிக்கும் குணம்,   அனைத்தும் அறிந்தேனடி உன்னிடத்தில்     33.மண்ணியல்   நீர் வளம் செழிக்கும் உன் உதடு   நான் விளையாட ஏற்றாற்போல் உன் தேகம் எனக்கு நிலமாய்,   சுட்டெரிக்கும் உன் பார்வை எனக்கு ஒளியாய்,   என் னுயிர் தரும் உன் சுவசாசக் காற்று,   வேறென்ன வேண்டும் இங்கு நான் உயிர் வாழ,   நீயே எனக்கு பூமியானாய்..   34.சங்கிராமவிலக்கணம்   விரும்பியதை கேட்க நான் மறுக்க உலக போர் புரிவாயடி,   எத்துனை முறை நம்முள் ஊடல் வந்தாலும் நீயே உன் யுக்தியால் எனை வெல்வாயாடி.   இனி வரும் காலங்களில் போர் புரிய முற்பட்டால் உன்னிடம் கேட்டறிய வேண்டுமடி போர் தந்திரங்களை..   35.மல்யுத்தம்   பீமனும் உன்னிடத்தில் வீழ்வான்   உன் கண்கள் இடும் மல்யுத்தத்தில்   எவ்வவளவு வலிமை இந்த விழிகளுக்கு,   பிறக்கும்போதே பயிற்சி அளித்தாயோ??   36.ஆகருடணம்   நீ செய்வது பிழையோ   இல்லை சரியோ,அதனை   என்னுள் பாய்த்து என்னை ஏற்க வைக்கும்   வித்தையை நான் அறிய விளைவேன்..             37.உச்சாடணம்   உன்னிடம் நான் ஏதேதோ பேச விரைந்தால்,   எனை திசை மாற்றி பிரழ வைக்கும்   வித்தையை எங்கு சென்று நான் சொல்ல..   38.வித்வேடணம்   வேதங்களில் மறைக்கப் பட்ட உண்மைகள் யாவும் உன் உருவில் காண்கிறேன்   எரும்பிற்கும் பண்டம் வைப்பாய்   வினை விதைத்தவனுக்கும் திணை வைப்பாய்   நற்குணங்களை உன்னிடம் இருந்தே கற்க வேண்டும் நம் பிள்ளைகள்                 39. மோகன சாத்திரம்   பனி துளியில் நனைந்த இலை போல்   அரை குறையாய் துவட்டிய உன் கூந்தல்,   அருவியில் குளித்த பளிங்கு கல் போல்   வெந்நீரில் நீராடிய உன் தேகம்,   வேண்டாம் என மனம் மறுக்க கட்டி இழுக்கும் உன் கண்கள்   கார் மேகத்தில் ஏன் இந்த மோகம்??                                       40. புணருங் கலை   தேன் ஊறிய செவ்விதழ்கள் துடிக்க,   இருளினை தேடி விழிகள் அலை மோத,   கன்னங்கள் என் இதழ் சேர பூரிக்க,   கோபுரங்களாய் எழுந்து நிற்கும் உன் கொங்கைகள் எனை அழைக்க,   வில்லாய் வளைந்த மெல்லிடை மென்மையாய் பேச,   அங்கம் யாவும் நான் வந்து புணர காத்திருக்கிறது..                                       41.வசியக் கலை   உன் ஒற்றை விழி பார்வையா?   இல்லை,உன் கழுத்தின் நெழிவா?   அல்ல,உனது அன்ன நடையா?   கருத்த கூந்தலா?   கூறிய புருவங்களா?   வெட்டப் பட்ட நாவழ் பழம் போல் இருக்கும் உன் இதழ்களா?   வெட்கத்தில் மண்னைக் கிளறும் உன் பாதங்களா?   எப்போது முற்றுப் புள்ளி வைப்பாய் இவ்வசியத்திற்கு..   42.இதளியக் கலை   சிதறிக் கிடக்கும் பாதரசத் துளிகளும் ஒன்று சேர துடிக்கின்றது   பிறவி பயனை அடைந்தே ஆக வேண்டுமென எண்ணி,   உன் முகத்தை பிரதிபலிக்க காத்திருக்கிறது..   43.காந்தருவம்   உன் மெல்லிய சொல்லில் புல்லாங்குழலும்,   விக்கலில் வீணையையும்,   நாவில் நாதசுவரத்தையும்,   இடையில் வயலினையும் இணைத்தபடி   இசைக் கச்சேரி நிகழ்த்தி இடியோசையையும் கவிழ செய்தாயடி   44.பைபீலம்   பறப்பவை ஊரும்,   ஊர்வன பறக்கும்,   மிருகங்கள் உருகும்   உந்தன் அன்பினில்..   உன் பாசத்தின் முன் புலியும் பூனையாகும்..     45.கவுத்தகம்   உன் ஒற்றைப் பார்வையில் என் விழி திறந்தாய்,   உன் மூச்சுக் காற்றால் எனை மூர்ச்சையாக்கினாய்,   உன் உடல் அசைவில் எனை சிலையாக்கினாய்,   உன் மௌனத்தால் எனை ஊமை ஆக்கினாயடி..   46.தாதுவாதம்   நாடியின்றி நாதியற்று கிடக்கும் நாவில்லா உயிர் கூட   நாழே நொடிகளில் நகர்ந்து செல்லும் உன் விரல் அதன் நாடியில் பட்டால்..   நீ என்னருகில் இருக்கும் பொழுது வேகமாக துடிக்கும் இருதயம் கூட   உன் இதழ் என் இதழுடன் சேருகையில் சீரடையும்   47.காருடம்   நல்ல பாம்பின் நஞ்சும்   உன் எச்சில் எனும் பன்னீர் துளி பட்டால்   நான்கடி நகர்ந்து கரைந்தோடும்   உன் தோல் தடவினால் தேளின் கொடும் விஷமும் முறியும்   48.இழப்பறிகை உனைக் கண்ட நாள் முதல்   பழகிக் கழித்த நொடிகளில் இருந்து   இந்த தருணம் வரை என்னால் அறிய முடியவில்லையடி   என் உயிரை உன்னிடத்தில் இழந்தேன் என்பதை             49.முஷ்டி   எதிர் கொண்ட அம்பும்   சீறி வந்த வில்லும்,   வீழ்த்த வந்த வாளும்,   எதிர் திசை நோக்கி பின் வாங்கியதடி,   உன் முந்தானை பட்டதால்..   50.ஆகாய பிரவேசம்   மாரி பொழிய,   தேன் வழிய,   குயில் இசைக்க,   மயில் நடனமாட,   உனைக் கண்ட அந்த நொடியில் நான் வான் புகுந்தேனடி..     51.ஆகாய கமணம்   அன்பால் அடிக்கையில் ஆகாயத்தில் பறக்கிறேன்   கோபத்தில் கடிகையில் காற்றில் மிதக்கிறேன்..   மௌனத்தில் மடிக்கையில் மழையாய் பொழிகிறேன்..                                                   52.பரகாய பிரவேசம்   உன் விழி என்னும் கோல் கொண்டு   என் விழி எனும் மாயவன் வைத்து   காதலெனும் மந்திரம் புரிந்து   என் னுயிரை உனக்குள்ளும்   உன் னுயிரை எனக்குள்ளும்   செலுத்தி கூடு விட்டு கூடு பாய்ந்தாயடி..                                       53.அதிருசியம்   தன்னுயிர் ஈந்து   பிரவுயிர் காக்கும்   நீயும் ஓர் அதிசயமே..   அரக்கனுக்கும் இறங்கும் குணத்தை உன்னிடம் நான் பயில வேண்டுமடி..   54. இந்திர ஜாலம்   இமை மூடி இடம் மிளிர வைக்கும் உன் கண்கள்,   கண் ஜாடையில் கட்டவிழும் கட்டளை   உன் புருவம் உயர என் கோபம் குறைய   கூந்தல் முடியில் எனை சுருக்கிலிடும் மாயம் என்னவோ..   இந்திரனும் உன் காலடியில் கிடப்பான் நீ நகம் கடிக்கும் வேளையில்     55.மகேந்திர ஜாலம்   வான் சொல்லும் மண் சொல்லும்   கண் சொல்லும் தேன் சொல்லும்   இது நாள் வரை கண்டதில்லை   இனி வரும் காலங்களிலும் காணப் போவதில்லை   உனைப் போல் ஒரு மந்திரவாதியை   வானெழும் உன் வித்தையை கண்டு இப் பூமி விழும்   வானவர்க்கும் பூமி மேல் ஆசை வரும் உன் மகேந்திர ஜாலம் கண்டு..                                 56. ஜல ஸ்தம்பனம் கடலில் கலப்பேன் நீ நீரானால்,   ஊற்றில் உயிர் துறப்பேன் நீ ஜலமானால்,   அருவியில் அரண்டெழுவேன் கொட்டும் தண்ணீர் நீயானால்,   ஓடையில் ஓய்வெடுப்பேன் ஓடும் நீர் நீயானால்,   நதியின் மேல் நடப்பேன் அது நீயானால்..   57.அக்கினி ஸ்தம்பனம்   தீப் பந்தத்தையும் பூப் பந்தலாக்கும் உன் கூந்தல்   ஒளி தரும் சுடரும் என் மேல் படரும் உன் கண் அசைவினால்   சுட்டெரிக்கும் அனல் எரியும் குளிர்ந்த நீர் ஏரி யாகும் உன் பூங் குழல் காற்றால்   கொழுந்து விட்டெறியும் அக்கினியும் திக்கென திகைக்கும் உன் கோபத்தின் முன்னால்   உன் வியர்வைத் துளியால் எப்படி பட்ட நெருப்பினையும் அணைப்பாய்.   58.வாயு ஸ்தம்பனம்   காற்றினை கண்ணுக்குள் அடக்கும் உன் வித்தையை எப் புத்தகத்தில் சென்று நான் பொறிக்க..   விச்சுளி பறவையாய் மாறினாய் நீ காற்றில் மிதக்கையில்   வீசும் புயல் காற்றும் தென்றலாகும் உன் மூச்சில் கலக்கையில்,   மிதக்கும் மேகங்களுக்கு மத்தியில் நீ காற்றிடமே கோபம் கொண்ட தேனடி   59. திருஷ்டி ஸ்தம்பனம்   வில் அம்பும், வாழ் ஈட்டியும் பாய்ந்து வருவது உன் பார்வையில் மண்டியிட தானடி   ஆறறிவாம் மனிதனே உன் நோக்கு வர்மத்தில் தலை சாயும் போது,   இவ் வாயுதங்கள் எப் பொருட்டு..           60.வாக்கு ஸ்தம்பனம் நான் பேச நினைக்கும் முன் அதனை பேசி முடித்து அதில் வெற்றியும் பெற்றிருப்பாய்..   என்றுமே உன் சொல் முன்னால் என் சொல் நின்று வென்றதில்லை   உன் பேச்சுக்கு எதிர் பேச் செண்பது அவ் விண்ணுலகத் திலும் எவருக்கும் இல்லை   61.சுக்கில ஸ்தம்பனம்   நாதத்தை அடக்கி என்னால் இயன்ற இன்பத்தை கொடுக்கும் ஆற்றல்   உன்னிடம் தன்னிலை மறத்தலால் மட்டுமே நிகழும்   காய கற்ப பயிற்சி யெல்லாம் வீணடி நீ தேக கட்டிலாய் கிடக்கும் வரை               62.கனன ஸ்தம்பனம் நீ குதித்தெழ நான் விழ   இலை மறைவில் நீ மறைய   தலை தெறிக்க ஓடி வந்தேன்   உன் முகம் காண   சட்டென்ற சத்தம் கேட்டு துயில் எழ   உன் மடியினில் கிடந்த நான் கண்டேன்   ஏழு ஜென்மங்களை உன் கண்ணில்..   63.கட்க ஸ்தம்பனம்   கூர் வேலாயுதம் உன் நகக் கணுவில் பட்டால் இரண்டாக பிளவுறும்   ஆணியும் கூட உன் பாதம் தீண்ட நினைத்தால் மண்ணாக உளரும்..   நூல் கோர்க்கும் ஊசியும் உடல் இளைக்கும் உன் இடை கண்டு,       64.அவஸ்தை பிரயோகம் இமைகள் இமைக்க மறுக்கிறதே,   விழிகள் இருந்தும் பார்வை இழக்கிறேன்,   நாசிக் காற்று வெளி வர தவிக்கிறதே,   செவி மடல்கள் இருந்தும் செவிடனாய் அலைகிறேன்,   பாலைவனமாய் மாறிய உதடுகள்,   பேச மறுக்கும் நா,   புன்னகை வீச தடுமாறி எச்சில் விழுங்கும் பற்கள்,   இதயம் மட்டும் ஏனோ சீராய் உன் பெயர் சொல்லி துடிக்க   எப்படி சூனியம் செய்தாய் என் மனதை..                           கலையின் ஆரம்பம்   கலை வளர்த்த பெருமை உன் தந்தையை சேருமா?   வளர்க்க போகும் என்னைச் சேருமா?   இனி வரும் காலங்களில் உனை பாதுகாக்கும் நம் பிள்ளைககளைச் சேருமா?   என்னவாயினும் பெண்கள் கொண்ட கலைகளை மதிக்கும் இத் திருநாட்டில் நீ மட்டும் என்ன விதி விலக்கா??    - இவண் கலை                                         Free Tamil Ebooks - எங்களைப் பற்றி   மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்:  மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்:  ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்:  தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. எனவே ஒரு தமிழ் வாசகர் மேற்கூறிய “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகளை” வாங்கும்போது, அவரால் எந்த ஒரு தமிழ் புத்தகத்தையும் இலவசமாகப் பெற முடியாது. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி?  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா?  கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும்  வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FreeTamilEbooks.com  இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல்  2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?  யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்?  ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா?  உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. www.vinavu.com  2. www.badriseshadri.in  3. http://maattru.com  4. kaniyam.com  5. blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் Creative Commons உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது?  இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். <துவக்கம்> உங்களது வலைத்தளம் அருமை [வலைதளத்தின் பெயர்]. தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : freetamilebooksteam@gmail.com  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G +: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைfreetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர்  உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது?  அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும். மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?  ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை?  இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி?  நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - email : freetamilebooksteam@gmail.com  - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks  - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948    இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?  குழு – http://freetamilebooks.com/meet-the-team/    Supported by  கணியம் அறக்கட்டளை -  http://kaniyam.com/foundation    உங்கள் படைப்புகளை வெளியிடலாமே   உங்கள் படைப்புகளை மின்னூலாக இங்கு வெளியிடலாம். 1. எங்கள் திட்டம் பற்றி – http://freetamilebooks.com/about-the-project/  தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I  2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம் http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/  http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101 https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses  உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை இங்கே தேர்ந்தெடுக்கலாம். http://creativecommons.org/choose/   3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற பின்வரும் தகவல்களை எங்களுக்கு அனுப்பவும். 1. நூலின் பெயர் 2. நூல் அறிமுக உரை 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை 4. உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 5. நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம். கணியம் அறக்கட்டளை     []             தொலை நோக்கு – Vision  தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்  பணி இலக்கு – Mission  அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.    தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – kaniyam.com  - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com  கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி – Text to Speech  - எழுத்துணரி – Optical Character Recognition  - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி  - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle  - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள்  - மின்னூல்கள் உருவாக்கும் கருவி  - உரை ஒலி மாற்றி – இணைய செயலி  - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி  - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி  - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி  - WikisourceEbooksReport இந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்  - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்    அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்    - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல்  - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்  - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல்  - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்    - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்  - தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல்  - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல்  - Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல்  - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல்  - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( https://aamozish.com/Course_preface போல)    மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.    வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.  கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும்.  நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.  பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   Kaniyam Foundation Account Number : 606101010050279 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618