[] 1. Cover 2. Table of contents அற்புத மகான் ஷிர்டி சாய்பாபா அற்புத மகான் ஷிர்டி சாய்பாபா   B.L.ஷங்கர்   blshankar77@gmail.com   மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC-BY-SA கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - B.L.ஷங்கர் - blshankar77@gmail.com   மின்னூலாக்கம் - சு. ஜெயஶ்ரீ - jayasrijai3@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/arputha_mahaan_shirdi_saibaba மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: B.L.ஷங்கர் - blshankar77@gmail.com மின்னூலாக்கம்: சு. ஜெயஶ்ரீ - jayasrijai3@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: B.L.Shankar - blshankar77@gmail.com Ebook Creation: S. Jayasree - jayasrijai3@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation This Book was produced using LaTeX + Pandoc FreeTamilEbooks.com ன் பொறுப்புத் துறப்பு FreeTamilEbooks.com மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை. எந்த ஒரு மதத்தையும் கடவுளையும் போதிப்பதில்லை. FreeTamilEbooks.com ல் மருத்துவம் தொடர்பான பல மின்னூல்கள் இருப்பினும், அவை மிகவும் திருத்தமான தகவல்கள்தான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையிலுள்ளது என்பதற்கு எந்தவொரு உறுதி மொழியும் வழங்க முடியாது. இப்படியான அனேகமான கட்டுரைகள் பகுதியாகவோ அன்றேல் முழுமையாகவோ உத்தியோகபூர்வமற்றவர்களால் எழுதப்படுகிறது. மருத்துவ சம்பந்தமான ஒரு கூற்று மிகச் சரியானதாக இருந்தாலும் கூட, அந்தக் கூற்றானது, தங்களது நோய்க்கோ அல்லது அறிகுறிகளுக்கோ உபயோகிக்க முடியாததாக இருக்கலாம். FreeTamilEbooks.com ன் மின்னூல்களில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புக்கள் பொதுவான தகவல்களாக இருக்க** முடியுமேயன்றி**, ஒரு உத்தியோக பூர்வமான மருத்துவருடைய ஆலோசனையை எந்த விதத்திலும் பிரதியீடு செய்ய முடியாதது ஆகும்.  FreeTamilEbooks.com மின்னூல்கள் மருத்துவர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். மருத்துவ ஆலோசனை வழங்குவதோ அல்லது மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சியோ, FreeTamilEbooks.com திட்டத்தின் நோக்கம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். போலவே, FreeTamilEbooks.com திட்டம் எந்த மதம் சார்ந்ததும் அல்ல. ஆன்மிக வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதில்லை. இங்கு வெளியாகும் ஆன்மிகம் சார்ந்த மின்னூல்களை, முழுமையாக நம்ப வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து வெளியிடுதல் என்பது இயலாது. நூலாசிரியர்களின் உழைப்புக்கும், அவர்களது இறை நம்பிக்கைக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே அவற்றை வெளியிடுகிறோம். ஆன்மிக நூல்களில் உள்ள கருத்துகளை நம்பும் முன் அவற்றை நன்கு கேள்வி கேட்டுத் தெளிய வேண்டுகிறோம். FreeTamilEbooks.com வெளியிடும் மின்னூல்களில் காணப்படும் மருத்துவம்/ஆன்மிகம் தொடர்பான எந்தவொரு தகவலையும் பாவிப்பதனாலோ அல்லது பின்பற்றுவதனாலோ ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அல்லது முடிவுகளுக்கு, FreeTamilEbooks.com திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் எந்தவொரு தனி நபரோ, அமைப்பு இயக்குனர்களோ, பரப்புரை செய்பவர்களோ, நன்கொடை வழங்குபவர்களோ அல்லது FreeTamilEbooks.com திட்டத்துடன் தொடர்புடைய எவருமோ எந்தவொரு பொறுப்பும் ஏற்க மாட்டார்கள். அற்புத மகான் ஷிர்டி சாய்பாபா ARPUTHA MAHAAN SHIRDI SAIBABA Author : B L Shankar எழுத்தாளர் : B L Shankar e-mail – blshankar77@gmail.com Mobile - (+91) 8248381740, (+91) 8300748321 Cover design – blshankar77@gmail.com Chennai, Tamilnadu, India. Youtube - https://www.youtube.com/saishankaratv Facebook - https://www.facebook.com/saishankarachannel Blog - https://saishankaratv.blogspot.com Publisher – http://freetamilebooks.com மின்னூல் வெளியீட்டாளர் : http://freetamilebooks.com Copyright : Creative Commons Licence நன்றி எனக்கு உயிர் கொடுத்து, இன்று வரை ஊக்கம் கொடுத்து வரும் என் பெற்றோருக்கு முதற் கண் நன்றி… என்னுரை இது எனது முதல் புத்தகம் என்பதால் நான் பயன்படுத்தும் தமிழில் பிழை இருப்பின், மன்னித்து பொருத்தருள அனைவரையும் தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறேன். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படத்தொகுப்பாளராக இருந்த எனக்கு புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் வந்தது இந்த freetamilebooks.com என்கிற வலை பக்கம் பார்த்த பிறகு தான். புத்தக வாசிப்பு பயிற்சி குறைந்து வரும் இந்த காலத்தில், கடினமான உழைப்பை சேவையாக செய்து வரும் இந்த இலவச மின் புத்தக குழுவை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. புத்தகம் வாசிக்கும் உத்வேகத்தை தூண்டும் விதமாக, பல வருடங்களாக விடா முயற்சியுடன் பொது நல நோக்கத்தோடு இந்த தளத்தை நடத்தி வருவது மெய் சிலிர்ப்பான விஷயம். இந்த குழுவில் பணி புரியும் அணைத்து அன்புள்ள நல்ல உள்ளங்களுக்கும் என் பாராட்டுகளும், நன்றிகளும். என் புத்தகத்தை இந்த தலத்தில் வெளியிடுவதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன். துன்பங்கள் மனிதனை ஆட்கொள்ளும்போது அவன் இறைவனை நாடி தன்னை காக்கும்படி வேண்டுகிறான். இறைவனை வழிபடும் மனிதன் சாப விமோசனம் அடைந்த கதைகளை நாம் கேட்டதுண்டு. எப்போதெல்லாம் அநீதியும் பாவங்களும் தலைவிரித்து ஆடுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் இவ்வுலகில் மனித உருவில் அவதரித்து இந்த உலகை வழி நடத்துகிறார். இறை நம்பிக்கை இல்லாத மனிதர்கள் கூட இறைவனின் அவதாரங்களை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் அறிந்து மனம் மாறுவதுண்டு. புனித நூல்கள் பகவத் கீதை, பைபிள், குரான், வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், நன்னெறி கதைகள் வாயிலாக இறைவன் நற்சிந்தனைகளை கூறி, மனிதனை வழிநடத்துகிறார். இந்து கடவுள் குரு தத்தாத்ரேயரின் மறு அவதாரம் ஷிர்டி சாய்பாபா என்று நம்பப்படும் நிலையில். சாய் பாபாவை எல்லா மதத்தினரும் வணங்கி வருகிறோம். பாபா ஜாதி, மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர். சாய் பாபா ஒரு இந்துவா அல்லது இஸ்லாமியரா என்று உறுதியாக கண்டறியபடவில்லை என்றாலும் அவரை எல்லா மனிதர்களும் எந்த பாகுபாடின்றி வணங்கி வருவது பாபாவின் சிறப்பாகும். சாய்பாபாவுடன் வாழ்ந்த பக்தர் திரு. ஹேமத்பந்த் என்பவர் பாபாவின் கதையை எடுத்துரைக்க ’ ஸ்ரீ சாய் சத்சரித்ரம் ’ என்கிற பாபாவின் வரலாற்றை புத்தகமாக எழுதினார். ஷிர்டி சாய்பாபாவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமை. குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. ஷிர்டி சாய்பாபா குரு தத்தாத்ரேயரின் மறு அவதாரம் என்பதால் அவரை வியாழனன்று வழிபடுவது சிறப்பு. சாய் பாபா ஒரு இளைஞனாக ஷிர்டி கிராமத்திற்கு அவரது குருவின் சமாதியை காண வந்ததாக அவரின் சரித்திரம் கூறுகிறது. எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு. எல்லா கடவுளுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்த வகையில் ஷிர்டி சாய்பாபாவின் தனித்துவ சக்தி, பாபா ஷிர்டி மக்களுக்கு செய்த இலவச மருத்துவம். குறைகள் இல்லாத மனிதனே இல்லை. தீய எண்ணங்களை தவிர்த்து மனம் உருகி இறைவனை வழிபடுவது மோட்சத்திற்கான வழி. சாய் பாபாவை வணங்குவதால் கஷ்டங்கள் விலகும் என்ற நம்பிக்கையில், பாபா அருள் கிடைக்க ஷிர்டி கிராம மக்கள் அவரை பூஜித்தனர். ஆன்மீகம், இந்த உலகில் உள்ள எல்லோரின் வாழ்வையும் சிறப்பிக்கும் ஞான திறவுகோல். சாய்பாபாவின் சத் சரித்திரத்தை படிப்பது சிறப்பான பலன்களை தரும் என்று பலர் கூற கேட்டதுண்டு. எல்லா மத நம்பிக்கை மீதும் மரியாதை கொண்டிருக்க வேண்டும். எந்த மனிதனையும் மனம் புண்படுத்த கூடாது. நம்பிக்கை மற்றும் பொறுமை கொண்டவர்களுக்கு பாபாவின் அருள் கண்டிப்பாக கிடைக்கும். இறை நம்பிக்கை இல்லாத சில மனிதர்களும் இந்த சமூகத்தில் உண்டு, அவர்களின் வாழ்வும் இறைவனால் தான் வழி நடத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஷிர்டி சாய் பாபா கூறியது போல், இறைவனின் அவதாரங்களும் வடிவங்களும் வேறுபடலாம். ஆனால், இறைவன் ஒருவரே. ஜாதி, மத, இன வேற்றுமைகள் பார்க்காத நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் சமர்ப்பணம். இந்த புத்தகத்தை வாசிக்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு எனது நன்றி. வாழ்க வளமுடன்…. மனமார்ந்த நன்றி, B L Shankar (Editor, Reporter) ஷிர்டி சாய்பாபா ஷிர்டிக்கு வந்த நிகழ்வு வட இந்திய மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ஷிர்டி ஒரு கிராமம். ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் அந்த ஊரில் ஒரு நாள் ஒரு இளைஞர் வந்தார். அந்த இளைஞர் ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். அந்த ஊர் மக்கள் அந்த இளைஞரை அதுவரை பார்த்ததில்லை. ஷீரடியில் சிவனின் கோவில் ஒன்று உண்டு. அந்த சிவனை கண்டோபா சிவன் என்று அழைப்பர். அந்த கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் மகால்சாபதி. அவர் சிவனுக்கு பூஜையை முடித்த பிறகு, வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும் இளைஞரை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இந்த இளைஞரை பார்க்க அவருக்கு மிக வியப்பாக இருந்தது. தியானம் செய்த நிலையில் இருந்த இளைஞரை பார்த்து ‘யார் நீ’ என கேட்க, அந்த இளைஞர் தியானத்தில் மூழ்கி இருந்ததால் பதில் தரவில்லை. மீண்டும் சத்தமாக அவரின் தியானம் களையும்படி ’ நீ யார் ’ என்று கேட்க, சத்தம் கேட்டு தியானம் களைந்த அந்த இளைஞர், தான் இந்த ஊருக்கு தன் குருவை நினைத்து தியானம் புரிய வந்ததாகவும், தனது குருவின் சமாதி இந்த வேப்ப மற அடியில் இருப்பதாகவும் கூறினார். அந்த இளைஞரின் தோற்றமும், தியான நிலையும், குரு மீது இருந்த பக்தியும், மகால்சாபதிக்கு அந்த இளைஞர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வர செய்தது. அவர் அந்த இளைஞரை அன்பாக ’ சாய் ’ என்ற பெயருடன் அழைத்தார். அந்த பெயர், அந்த இளைஞர்க்கு பிடித்ததால் அவரும் அதை ஏற்றுகொண்டார். மகால்சாபதியின் கண்டோபா சிவன் கோவில் பிரசாதத்தை சாய் பாபாவிற்கு கொடுத்தார். அவரும் அதை ஏற்றுகொண்டார். ஷிர்டியில் மதிக்க தக்க ஒரு விவசாயி ’ அப்பா பாட்டீல் ’ என்பவர். அவரின் மனைவி பெயர் ’ பைஜா பாய் கோட்டே ’. பைஜா பாய் இறை நம்பிக்கை உடையவர். இறைவனை முழுமையான பக்தியோடு நம்புபவர். அவர் தினமும் சிவன் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு பிரசாதம் படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். பைஜா பாய், எப்போதும் போல் கோவிலுக்கு வந்தார், அர்ச்சகர் மகால்சாபதி அங்கு இல்லாததை பார்த்து அவரை தேடி வேப்ப மரத்திடம் வந்தார். அர்ச்சகர் ஒரு இளைஞனிடம் எதோ பேசியபடி நிற்பதை பார்த்து அருகில் வந்தார். அருகில் வந்து, இளைஞரை பார்த்த பைஜா பாய் அந்த இளைஞர் முகத்தில் உள்ள சக்தியால் தனக்குள் ஒரு தாய்மை உணர்வு வருவதை உணர்ந்து சிலிர்த்து போனார். குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வரும் பைஜா பாய், அர்ச்சகர் மகால்சாபதியிடம் இந்த இளைஞர் பற்றி ஆவலோடு கேட்டார். அவர் நடந்ததை கூறி, அவருக்கு சாய் என்று பெயர் வைய்துள்ளதாக கூறினார். இதை கேட்ட பைஜாபாய் அவரை ’ சாய் ’ என்று மனதில் அழைக்க, உடனே அந்த இளைஞர் அவரை உறக்கமாக ’ என்ன பைஜா மா என்னை அழைத்தாயா ? ’ என்று கேட்டார். மனதில் நினைத்தது இந்த இளைஞருக்கு எப்படி தெரித்தது என்று பைஜா பாய் ஆச்சர்யமடைந்தார். இந்த இளைஞர் சாதாரண இளைஞர் அல்ல. இவர் விசேஷ சக்தியுள்ள தெய்வ பிறவி என்பதை உணர்ந்தார். தன்னை ’ அம்மா ’ என்று அழைத்த பாபாவின் குரல் அவரின் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. நெகிழ்வான அந்த தருணத்தில் பைஜா பாய் அந்த இளைஞரிடம், என்னை அம்மா என்றழைத்து என் உள்ளத்தில் இடம் பிடித்த இந்த தருணம் மிக மகிழ்ச்சியான தருணம் என்று கூற, பைஜாமா கூறியதை கேட்ட பாபா சந்தோஷமடைந்தார். பாபாவும், பைஜாமாவும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த ஷிர்டி அரசிடம் பணிபுரியும் ஒருவர், ஷீரடியில் புதிதாக ஒரு இளைஞர் வந்தது குறித்து, அவர் மகால்சாபதி மற்றும் பைஜாவிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் கூறினார். இதை கேட்ட அரசர் இந்த இளைஞர் யார் என்று அரிய வேப்ப மரத்தை நோக்கி வந்தார். அரசர் வருவதை பார்த்த மக்கள் அங்கு வந்து கூடினர். அரசர், இந்த இளைஞரிடம் " நீ யார்? ஏன் இந்த மரத்தடியில் அமர்ந்து உள்ளாய் " என்று அரசன் கேட்க, தனது குருவின் சமாதி அந்த இடத்தில உள்ளதால் அங்கு தியானம் புரிய வந்து அமர்ந்து உள்ளதாக கூறினார் பாபா. இதை கேட்ட அரசர் சிரித்தபடி இந்த ஷிர்டி கிராமத்தில் தனக்கு தெரியாமல் அப்படி ஒரு சமாதி இருக்க வாய்ப்பில்லையே என்று கூறி, தனக்கு அந்த இளைஞர் கூறுவதில் சந்தேகம் இருப்பதாக கூறி அந்த சமாதியை தோண்டி பார்க்க தனது ஆட்களை கட்டளையிட்டார். இதை கேட்ட சாய் பாபா இந்த சமாதியை தோண்ட வேண்டாம் என்று கூறி அவர்களை தடுக்க நினைத்தார். ஆனால் அரசின் ஆணையை மீறி ஷீரடியில் எந்த ஒரு நிகழ்வும் அங்கு நடக்க வாய்ப்பில்லை என்பதால், அரசை அவமதிக்காமல் சாய் பாபாவும் அவர்கள் போக்கில் விட்டு விட்டார். குருவின் சமாதி தோண்டும் அந்த நிகழ்வு பாபாவிற்கு மிக வருத்தத்தை அளித்தது. தோண்டி கொண்டு இருந்த அரசின் ஆட்கள் அங்கு எதுவும் இல்லை என்று கூற, அரசர் மேலும் பாபாவை இழிவு படுத்தினார். சந்தேகம் வந்த பிறகு வேறு வழி இல்லை என்று, பாபாவே பைஜா பாயின் கணவரிடம் குருவின் சமாதியை தோண்ட சொன்னார். அவரும் தோண்டினார். அப்போது, நான்கு தீபங்களுடன் ஒரு சமாதி இருப்பது கண்டறியப்பட்டது. இதை பார்த்த அரசுக்கும் அனைவருக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது. பாபா மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது. தனது குருவின் சமாதியை தோண்டி எடுத்தது தன் குருவை அவமதித்தது போன்று தோன்றிய சாய் பாபாவிற்கு அங்கு இருக்க பிடிக்காமல், அந்த நிமிடமே கோவமாக ஷிர்டியை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் புறப்பட்ட அந்த நேரத்தில் மேகம் இருள் சூழ்ந்து பலத்த காற்று அடித்தது. அங்கு இருந்த அனைவருக்கும் இந்த நிகழ்வு மறக்க முடியாத விதமாக ஆனது. சாய் பாபா ஷிர்டியை விட்டு சென்றது பைஜா பாய், அப்பா பாடீல் மற்றும் மகால்சாபதிக்கு மிக வருத்தமாக இருந்தது. தன்னை தாய் என்று அழைத்த மகனை பிரிந்துவிட்டதாக நினைத்து பைஜா பாய் மிகவும் வருந்தினார். என்றாவது ஒரு நாள் சாய் பாபா மீண்டும் ஷிர்டிக்கு வருவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இந்த நம்பிக்கையோடு தினமும் அவர் அந்த வேப்ப மரத்தடியில் உணவு வெய்த்து வந்தார். அவர் நம்பிக்கை மற்றும் பொறுமை அவரை வழி நடத்தியது. ஷிர்டி சாய் பாபா மீண்டும் ஷிர்டி வந்த நிகழ்வு ஷிர்டியை விட்டு வந்த சாய் பாபா ஒரு ஊரில் தங்கி இருந்தார். அவரின் வாலிப வயது கடந்து ஒரு நடுத்தர வயதில் இருந்த சாய் பாபா, இளம் வயது கடந்தும் ஷிர்டியில் உள்ள தனது குருவின் நினைவாகவே இருந்தார். அவர் குருவின் நினைவலைகளில் அவரை நினைத்து தியானம் செய்து கொண்டு இருந்தார். என்றாவது ஒரு நாள் ஷிர்டி சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. ’ சாந்த் பாட்டீல் ’ என்ற செல்வ செழிப்போடு இருந்த செல்வந்தர் ஒருவர் தனது குடும்ப திருமண நிகழ்ச்சி பற்றி தகவல் சொல்வதற்காக தனது குதிரையில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் வெகு தூரம் என்பதால் அவர் சில இடங்களில் இளைபாறிவிட்டு சென்றார். ஒரு இடத்தில இளைப்பாறும் போது தனது குதிரை காணாமல் போய்விட, பெரும் மன உழைச்சலுக்கு ஆளானார். மிகவும் அன்பாக வளர்த்த தனது குதிரை எங்கு தேடியும் கிடைக்காததால் வருத்ததுடன் இருந்தார். ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் ஒரு இடத்தில் வந்து அமர்ந்தார். அங்கு அவருக்கு தாகம் ஏற்பட அருகில் அமர்ந்து இருந்த சாய் பாபாவிடம் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்க நினைத்தார். கேட்பதற்குள் பாபா அவரிடம் ’ என்ன சாந்த் பாடீல் தாகம் எடுக்கிறதா ? குடிக்க தண்ணீர் வேண்டுமா ? ’ என்று கேட்க, பாபா தனது பெயரை அறிந்து இருந்தது மட்டும் அல்லாது தனக்கு குடிக்க தண்ணீர் தேவை என்பதை எப்படி அறிந்தார் என்று சாந்த் பாடீல் ஆச்சரியபட்டார். பாபாவிடம், சாந்த் பாடீல் ’ என் பெயர் மற்றும் எனக்கு தண்ணீர் தாகம் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? நீங்கள் யார் பாபா ? ’ என்று கேட்டார். அதற்கு பாபா ’ நீ என்னை நம்பினால் நான் உனக்கு எல்லாம், நீ என்னை நம்பாவிடில், நான் உனக்கு ஒன்றுமே இல்லை ’ என்றார். பாபாவின் பதில் சாந்த் பாடீலுக்கு விநோதமாக இருந்தது. மேலும், பாபா புன்னகைத்தபடி ’ உனது குதிரையை தேடி வந்தாயே கிடைத்ததா ? ’ என்று கேட்க, குதிரையை துளைத்த சாந்த் பாடீலை அதிர்ச்சி அடைய செய்தது. தனது குதிரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, ஊருக்கு செல்ல முடியாமல் உள்ளேன். நீண்ட நாட்களாக வளர்த்து வரும் குதிரை என்பதால் குதிரையை பிரிந்து இருக்க வருத்தமாக உள்ளது என்று கூறி வருந்தினார். குதிரை இல்லாமல் வருந்தும் சாந்த் பாடீளிடம், ’ நீ துளைத்த குதிரையும் உன்னை தான் தேடிகொண்டு உள்ளது ’ என்றார். இந்த செய்தியை கேட்ட சாந்த் பாடீல் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். பாபா அந்த குதிரையின் பெயரை கூறி சத்தமாக அழைத்தார். சிறிது நேரத்தில் பாபாவின் குரல் கேட்ட குதிரை அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்தது. காணாமல் போன குதிரையை பார்த்த சாந்த் பாடீல் குதிரை தன்னிடம் வந்து சேர்த்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். பாபாவின் அற்புத செயலால் பாபாவின் பக்தனாக மாறிவிட்டதாக கூறி சாந்த் பாடீல் பாபாவிடம் ஆசி பெற்றார். அவருக்கு தாகம் இருப்பதை உணர்ந்த பாபா, தண்ணீர் கொடுக்க, சாந்த் பாடீல் மன நிறைவோடு தண்ணீரை குடித்தார். பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்ட சாந்த் பாடீல் தனது ஊருக்கு வருமாறு அன்புடன் கோரிக்கை விடுத்தார். அவர் அழைத்த உடன் பாபா வருவதாக கூறவில்லை. துறவு வாழ்க்கை வாழும் பாபா, இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை நீ உனது ஊருக்கு செல் என்று கூற, தனது உறவினருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும், அதற்கு பாபா வந்து ஆசி வழங்க வேண்டும் என்றும் அழைத்தார் சாந்த் பாடீல். ஷிர்டியில் திருமண நிகழ்வு நடக்க உள்ளதாக கூற, பாபாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஷிர்டிக்கு மீண்டும் எப்போது செல்வோம் என்று நினைத்து காத்திருந்த பாபாவிற்கு சாந்த் பாடீலின் அழைப்பு, தனக்கான தனது குருவின் அழைப்பாகவே மனதில் தோன்றியது. ஷிர்டி என்பதால் பாபா சம்மதித்தார். வீட்டுக்கு சென்று அனைத்து ஏற்படும் செய்து கொண்டு இருக்கும் படி சாந்த் பாடீலிடம் கூறி, இரவு ஊர்வலத்தில் கலந்து கொள்வதாக கூறினார் பாபா. தனது உறவினர் திருமணதிற்கு பாபா வரும் சந்தோஷத்தில் சாந்த் பாடீல் அங்கிருந்து விடைபெற்று சென்றார். இரவு திருமணத்திற்கு புறப்பட ஊர்வல கூட்டம் கோலாகலமாக தயாராக இருந்தது. இரவு நேரம் போக போக சாந்த் பாடீல் பாபா வரும் வழியை பார்த்து காத்துகொண்டு இருந்தார். அவரது தம்பி இன்னும் ஏன் தாமதம் புறப்பட ? என்று சாந்த் பாடீளிடம் கேட்க, ஒரு முக்கிய விருந்தினருக்காக காத்துகொண்டு இருப்பதாக கூறினார் சாந்த் பாடீல். அவரது தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்த எல்லாவற்றையும் தனது தம்பியிடம் கூறி, பாபா வந்த பிறகு தான் புறப்பட முடியும் என்று கூறினார் சாந்த் பாடீல். பாபாவை நாம் பத்திரமாக அழைத்து சென்று நல்ல முறையில் அவர் மனம் விரும்பியது போல் நடக்க வேண்டும் என்று கூறினார். சிறுது நேரம் சென்றது, சாந்த் பாடீல் இருக்கும் இடத்தை பாபா வந்தடைந்தார். பாபாவின் வருகையை பார்த்த சாந்த் பாடீல் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். பாபாவின் கைகளை பிடித்துகொண்டு, எங்கு நீங்கள் வராமல் போய்விடுவீர்களோ என்று நினைத்தேன். நல்லவேளை நீங்கள் இன்று எங்கள் குடும்ப நிகழ்வில் பங்கு கொள்ள வந்துவிட்டீர்கள் என்று கூறினார். ஷீரடிக்கு அழைத்து நான் வராமல் இருப்பேனா என்ன ? நான் பல வருடமாக செல்ல வேண்டிய இடம் ஷிர்டி. என் குருவின் அழைப்பாக தான் இந்த அழைப்பை நான் நினைக்கிறேன். வாருங்கள் தாமதிக்காமல் செல்லலாம் என்று அங்கிருந்து அனைவரும் ஷிர்டியை நோக்கி ஊர்வலமாக சந்தோஷமாக புறப்பட்டனர். இரவு நேரம் தீ பந்தத்தின் உதவியுடன் காட்டு பகுதி வழியாக ஷிர்டியை நோக்கி சாந்த் பாடீல் மற்றும் அவரது உறவினர்கள் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக பயணத்தை மேற்கொண்ட போது பாபாவும் தனக்கு பிடித்த இறைவனின் பாடல்களை பாடி ஜபித்து கொண்டு நடந்து கொண்டிருந்தார். சாந்த் பாடீலின் மகன் மட்டும் தனியாக முன்னோக்கி நடக்க தொடங்கினான். அப்போது திடீரென்று ஒரு சிறுத்தை சாந்த் பாடீலின் மகனிடம் வந்து நின்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்த் பாடீல் மற்றும் அவரின் உறவினர்கள் பயத்தில் கத்தி கூச்சளிட்டனர். பாபா அவர்களை அமைதியாக இருக்கும் படி கூறி, அந்த சிறுத்தையின் அருகில் சென்று அந்த சிறுத்தையின் கண்களை கோபத்தோடு பார்த்து நின்றார். பாபாவின் கண்களை பார்த்த உடன் எதோ ஒரு அற்புத சக்தி பாபாவிடம் இருப்பதை உணர்ந்த அந்த மிருகம் மெல்ல மெல்ல பின்னோக்கி சென்றது. பாபா, சிறுவனை தனது கரங்களால் தூக்கி எடுத்து கொண்டு வந்து சாந்த் பாடீளிடம் பத்திரமாக கொடுத்தார். சாந்த் பாடீல் மற்றும் அவருடன் வந்தபவர்கள் பாபாவிடம் நன்றி கூறி பயணத்தை தொடர்ந்தனர். காலை விடிந்தது, பாபாவும் திருமண கூட்டமும் ஷிர்டியை வந்து அடைந்தனர். பாபா ஷிர்டி மண்ணில் கால் வெய்ததும் அவர் இந்த ஊரை விட்டு சென்ற போது இருந்த அதிவேக காற்றும் மழையும் அடிப்பது போல் மக்கள் உணர்ந்தனர். பாபா நேராக கண்டோபா கோவிலுக்கு சென்று சிவனை வணங்க அந்த கோவிலில் அடி எடுத்து வெய்த்தார். பாபா, சிவன் கோவில் உள்ளே வருவதை கவனித்த அர்ச்சகர் மகால்சாபதி, அங்கேயே நில்லுங்கள் இது இந்துக்களின் கோவில், உள்ளே வர உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூற, உலகில் உள்ள எல்லா கடவுளும் ஒன்று தான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எந்த வேறுபாடும் இறைவன் பார்ப்பதில்லை, அப்படி இருக்க மனிதர்களிடம் மட்டும் ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் எங்கிருந்து வந்தது. எந்த புனித நூலிலும் மனிதருக்குள் வேறுபாடுகள் பார்க்க வேண்டும் என்று குறிப்பிடபடவில்லையே. ஒரு கோவில் அர்ச்சகராக நீங்கள் இதை உணராமல் இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறி பாபா அங்கிருந்து புறப்பட்டார். பாபா சென்ற பிறகு, அர்ச்சகர் மகால்சாபதி நடந்ததை நினைத்து வருத்தம் அடைந்தார். இளமையில் நட்டு வைத்த செடி உயர்ந்த மரமாக வளர்ந்து இருப்பதை பார்த்து, அந்த மரத்தின் நிழலை ரசித்து விட்டு, வேப்ப மரத்தை நோக்கி நடந்தார் பாபா. தனது குருவின் சமாதியை வணங்கி சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். பாபாவின் துவரகமாயி & லென்டி பூங்கா பாபா தங்கி இருந்த இடத்தில் இருந்து அருகாமையில் ஒரு பழைய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் அது சற்று பாழடைந்து இருந்தது. அதன் சுவர்கள் மேற் கூரை இல்லாமல் இடிந்த நிலையில் இருந்தது. அதனை பார்த்த பாபாவிற்கு தான் தங்கி இருக்க வேண்டிய இடம் இது தான் என்று மனதில் தோன்றியது. அதனால் அந்த இடத்தில சென்று ஒரு சில நிமிடங்கள் அமர்ந்தார். அந்த இடத்தில இருந்த அமைதி அவருக்கு நிம்மதியை கொடுத்தது. இனி ஷீரடியில் தனக்கான இடம் இது தான் என்று அவருக்கு தீர்மானம் ஏற்பட்டது. இந்த இடத்தை ஊர் மக்கள் பழைய பாழ் மண்டபம் என்று ஒதுக்கிய நிலையில், பாபா மட்டும் அந்த இடத்தில் நிலவிய அமைதியால் தியானம் செய்வதற்கு சிறந்த இடமாக கருதினார். ஷிர்டி மக்கள் பாபா பாழ் அடைந்த மசூதியில் தங்கி இருப்பதை பார்த்து வருத்தம் அடைந்தனர். மசூதி இருக்கும் பாழடைந்த நிலையில் பாபா அங்கு எப்படி தங்குவார் என்று யோசித்தனர். ஆனால் அவர்களுக்கு பாபாவிடம் சென்று இதை பற்றி கேட்க தைரியம் வரவில்லை. பாபாவின் அன்பினால் அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். பாபாவை பொறுத்தவரை அவருக்கு அந்த இடத்தில் மன நிறைவு தோன்றியது. அதனால் அந்த இடத்தை அவர் ’ துவாரகமாயி ’ என்று அழைக்க விரும்பினார். தனது தாயின் மடியில் அவர் இருப்பது போன்று அவருக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது. அந்த இடத்தை துவாரகமாயி என்று பாபா அழைத்ததால் மக்களுக்கு அது அவருக்கான இடம் என்று தெரிய வந்தது. பாபாவின் ஆசியை பெற பலர் அங்கு வந்து சென்றபடி இருந்தனர். பாபாவின் அற்புத சக்தியால் வந்தவர்கள் உடலில் எந்த குறை இருந்தாலும் அதனை தனது மருத்துவ சக்தியால் குணபடுத்தி வந்தார். பாபா ஒரு துறவி என்பதை தாண்டி அவரின் மருத்துவம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி மக்களின் தேவைகளை நல்ல முறையில் நிவர்த்தி செய்தார். பாபாவின் அன்பும், மருத்துவமும், உபதேசங்களும், ஷிர்டி மக்களுக்கு பலமாக இருந்தது. உணவிற்காக ஷீரடியில் உள்ள மக்களிடம் பாபா யாசகம் கேட்டு செல்வதை, பாபா தனது தர்மமாக கருதினார். தர்மம் செய்பவர்களுக்கு மட்டும் அல்லாது எல்லோரையும் சமமாக பாவிக்கும் குணம், பாபாவிடம் இருந்த சிறந்த குணமாகும். நம்பியவர்கள் வாழ்வில் ஒரு ஒளி விளக்காக பாபா இருந்தார் என்பது உண்மை. துறவிகளின் வாழ்க்கை, தியானம் மற்றும் இறைவனை நினைப்பது என்பதை தாண்டி மக்களுக்காக செய்ய கூடிய ஒரு சேவையாக நினைத்தார். பாபா மருத்துவம் தியானம் இறைவழிபாடு என்று அல்லாமல் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதையும் விரும்பினார். ஷீரடியில் தோட்டம் அமைத்திட வேண்டும் என்று அவருக்கு மனதில் தோன்றியதால் அவர் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து செடிகளை நட தொடங்கினார். சில நாட்களில் அந்த தோட்டம் மிக அழகாக இருந்தது. அந்த தோட்டத்தின் பெயர் லென்டி பூங்கா என்று அழைக்கபடுகிறது. பாபா துவாரகமாயி-யில் இல்லாத நேரத்தில் இந்த தோட்டத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றி பாராமரித்து வந்தார் என்று ஊர் மக்கள் அறிவர். ஊர் மக்களும் அந்த தோட்டத்தில் பாபாவின் அனுமதியோடு பயன் அடைந்தனர். சிலர் பாபாவிற்க்கு இந்த தோட்டத்தை வளர்க்க உதவியும் செய்தனர். ஒரு பக்தர் அந்த இடத்தை பாபாவிற்காக விலை கொடுத்து வாங்கி பாபாவிற்கு பரிசாக கொடுத்தார். ஷீரடியில் ஒரு மல்யுத்த வீரன் இருந்தான். அவனுக்கும் பாபாவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அவன் பாபாவை ஒரு விரோதியாகவே பாவித்து வந்தான். இந்த சூழ்நிலையில், தன்னுடன் மல்யுத்த போட்டியில் வெற்றி கொள்ள முடியுமா என்று பாபாவிடம் சவால் விடுத்தான். அவனது சவாலை பெரிதாக நினைக்காத பாபா அவனை பொருட்படுத்தாமல் தனது வேலையை பார்க்க தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல வாக்குவாதம் முற்றியது. பாபாவும் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து போட்டி இட முடிவுக்கு வந்தார். பாபாவும் அவனும் போட்டியில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். அவன் பலத்தால் பாபாவின் பலத்தை அடக்கி போட்டியில் வெற்றியை தனக்கு சாதகம் ஆக்கினான். இந்த நிகழ்வு, பாபாவிற்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு வருத்தம் அளித்தது. இந்த சம்பவம் பாபாவை யோசிக்க செய்தது. தீய சக்தி என்று தெரிந்து அந்த துஷ்டனிடம் இனி சரி சமமாக போட்டியிட கூடாது என்ற முடிவுக்கு வந்தார். பாபாவின் தோற்றம் ஒரு இளைஞனை போன்ற தோற்றத்தில் இருப்பதால் அவன் தன்னை வம்புக்கு இழுத்திருப்பான் என்று உணர்ந்து தனது உடை அணியும் முறையை மாற்றிகொண்டார் பாபா. பாபா துறவிகள் அணியும் ஆடையை போல் தன் உடைகளை மாற்றி கொண்டார். பாபா உடை அணியும் முறையை மாற்றிய பிறகு அவன் அவரிடம் வரவில்லை. பாபாவை போன்ற ஒரு ஞானியை புரிந்து கொள்ள தவறிய மல்யுத்த வீரன் போட்டியில் சண்டையிட்டு வெற்றி பெற்ற போதும் பாபாவின் அருளை பெற தவறிவிட்டான் என்பது எதார்த்தம். பாபா சேவை என்கிற தனது வாழ்வின் அர்த்தத்தை நோக்கி பயணித்தார். பாபாவின் உடை மாற்றத்தை பார்த்த ஷிர்டி மக்கள் பாபாவின் குணம் மற்றும் தெய்வீக ஞானத்திற்கு பொறுத்தமாக உள்ளதை உணர்ந்தனர். பணிவு, பக்தி, மருத்துவம், பொறுமை மற்றும் நம்பிக்கை பாபாவை ஷிர்டி மக்களின் தெய்வமாக நினைக்க செய்தது. இறைவனை இவரின் உருவில் பார்க்க தொடங்கினர். தண்ணீரால் விளக்கேற்றிய நிகழ்வு ஷிர்டி சாய்பாபாவிற்கு விளக்குகளின் வெளிச்சம் என்றால் மிகவும் பிடிக்கும், அவர் துவாரகாமாயி மசூதியில் விளக்கேற்ற ஷீரடியில் இருந்த சில கடைகளில் எண்ணை வாங்கி விளக்கேற்றுவது வழக்கம். எண்ணை வாங்க அவரிடம் பணம் இருக்காது என்று அறிந்த ஷிர்டி கடைகாரர்கள் எண்ணையை பணம் எதுவும் கேட்காமல் இலவசமாக கொடுத்து வந்தனர். சில நாட்கள் பாபா இலவசமாக கிடைத்த எண்ணையை வெய்து விளக்கேற்றி வந்தார். காலப்போக்கில் இலவசமாக எண்ணை தருவதை நிறுத்திவிட எண்ணிய கடைக்காரர்கள் பாபா எண்ணை கேட்ட போது கொடுக்க மறுத்தனர். இந்த நிகழ்வு பாபாவிற்கு வருத்தமாக இருந்தாலும் இவ்வளவு நாட்கள் இலவசமாக எண்ணை கொடுத்து உதவிய கடைக்காரர்களின் நல்ல எண்ணத்தை மனதில் கொண்டு அவர்களை மேலும் தொந்தரவு செய்ய கூடாது என்று எண்ணினார். அவர்களை எதுவும் சொல்லாமல் மசூதிக்கு திரும்பி வந்துவிட்டார் பாபா. மசூதிக்கு வந்த பாபாவிற்கு மனதில் ஆழ்ந்த சிந்தனை ஓடியது. இத்தனை நாள் உதவியவர்கள் ஏன் திடீரென்று நிறுத்திவிட்டார்கள் என்று யோசித்தார். தீபம் ஏற்ற எதாவது ஒரு வழியை நாமே கண்டறிய வேண்டும் என்று எண்ணினார். ஒரு திரியை எடுத்து விளக்கிலிட்டு அதை எரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பாபாவிற்கு எண்ணை கொடுக்க மறுத்த கடைக்காரர்கள் பாபா எப்படி விளக்கேற்ற போகிறார் என்று தெரிந்துகொள்ள ஆவளோடு மசூதி அருகில் நின்று பார்த்தனர். பாபா தனது விளக்கில் இருந்த ஒரே ஒரு துளி எண்ணையை கீழே கொட்டிவிடாமல் ஒரு தகர குவளையில் எடுத்து பத்திரமாக வாயில் ஊற்றி குடித்தார். இதை பார்த்துகொண்டு இருந்த கடைக்காரர்களுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் பாபா இவ்வாறு செய்தார் என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு மேலும் என்ன நடக்கிறது என்று பார்த்தனர். பாபா வாயில் ஊற்றிய எண்ணையை குடித்துவிட்டார். அருகில் இருந்த ஒரு குவளை தண்ணீரை எல்லா விளக்கிலும் ஊற்றினார். விளக்கேற்ற தண்ணீரை ஊற்றி வந்த பாபாவை பார்த்து மலைத்து போய் நின்றபடி இருந்தனர் கடைக்காரர்கள். பாபா விளக்குகளுக்கு தண்ணீர் ஊற்றி முடித்த பிறகு திரியில் நெருப்பை கொளுத்தினார். விளக்குகள் எண்ணை ஊற்றினால் எவ்வாறு பிரகாசமாக எரியுமோ அதே போல் தண்ணீர் நிரப்பப்பட்ட விளக்குகள் எரிய தொடங்கின. இரவு முழவதும் விளக்கு எரிந்ததை பார்த்த கடைக்காரர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டு பாபாவிடம் தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். பாபாவும் மன்னித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு இதே போல் மீண்டும் தீபாவளி வந்த போது ஒரு நிகழ்வு அரங்கேறியது. பாபாவிற்கு ஜாதி மதம் என்ற ஏற்ற தாழ்வுகளில் நம்பிக்கை இல்லை அதனால் அவர் எல்லோரிடமும் சரிசமமாக அன்பாக பழகி வந்தார். பாபாவின் அன்பிற்கு உரிய குழந்தைகளில் சிலர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ஏழை குழந்தைகள் சிலர் இருந்தனர். அந்த குழந்தைகள், தீபாவளி பண்டிகையன்று பாபா உள்ள மசூதியில் விளகேற்ற வேண்டும் என்று பணம் சேர்த்து எடுத்து கொண்டு வணிகர்களிடம் எண்ணை வாங்க சென்றனர். கடைகாரர்கள் அந்த தாழ்ந்த ஜாதி குழந்தைகள் தங்களிடம் எண்ணை வாங்க வந்திருப்பதை கண்டு கோபம் அடைந்தனர். அவர்களுக்கு எண்ணை தர கூடாது என்று நினைத்து அவர்களை உதாசினபடுத்தினர். இதனால் மனம் உடைந்த குழந்தைகள் அனைவரும் மசூதிக்கு சென்று நடந்த விவரத்தை பாபாவிடம் கூறி வருந்தினர். இதனை கேட்ட பாபா கோபமடைந்தார். குழந்தைகளுக்கு சமாதானம் கூறி முன்பு எப்படி விளக்கை தண்ணீரில் ஏற்றினாரோ அதே போல் விளக்கை தண்ணீரால் பற்ற வைத்து குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். குழந்தைகளும் பாபாவின் இந்த அற்புத நிகழ்வை கண்டு பெரும் மகிழ்ச்சியில் இது வரை கொண்டாட முடியாத பண்டிகையை வாழ்நாளில் மறக்க முடியாத அளவில் சிறப்பாக கொண்டினர். இந்த நிகழ்வு ஷிர்டி மக்களுக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. ஜாதி,மதம் என்ற பேதம் எதுவும் இல்லாமல் எல்லோரும் சமம் என்ற எண்ணம் நம் அனைவர்க்கும் வர வேண்டும் என்று பாபா உணர்த்திய இந்த நிகழ்வு ஏற்ற தாழ்வுகளை தகர்கும் பாடமாக அமைகிறது. மசூதியை பழுது பார்த்த மக்கள் பாபாவிடம் இலவச மருத்துவத்திற்காக வரும் மக்கள் அனைவரின் மனதிலும் இருந்த வருத்தம் ஒன்றே ஒன்று தான். தங்கள் வலியை உணர்ந்து தங்களுக்காக சிறப்பாக இலவச மருத்துவம் பார்க்கும் பாபா தங்கி இருக்கும் அந்த மசூதியை பார்க்கும் போதெல்லாம் அது ஒரு பழைய பாழடைந்த நிலையில் உள்ள மசூதி என்று எண்ணி வருந்தினர். இந்த மசூதியில் பாபா எப்படி ஓய்வெடுக்கிறார் என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் பாபா இந்த பாழ் அடைந்த மசூதியில் தங்கி இருந்தால், பாபாவின் ஆரோக்கியம் பாதிக்கப்பட கூடும் என்று நினைத்து எல்லோரும் ஒன்று கூடி ஒரு முடிவு செய்தனர். பாபாவிற்கு எதாவது கைமாறு செய்திட வேண்டும் என்று நினைத்தனர், அவர்களின் யோசனையை பாபாவிடம் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை என்பதால், அனுமதி பெறாமல் பாபா சாவடிக்கு சென்று இருக்கும் சமயத்தில் ஒன்று கூடி மசூதியில் உள்ள குறைகளை நீக்கி பழுது பார்த்து அதனை சீர் செய்து விட எண்ணினர். ஒரு நாள் எல்லோரும் ஒன்று கூடி பாபா இல்லாத நேரம் பார்த்து மசூதிக்கு வந்து மசூதியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். தூண்கள் மற்றும் கம்பங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய்பாபா வழக்கம் போல் சாவடி மற்றும் பூங்காவிற்கு சென்றுவிட்டு மசூதிக்கு திரும்பினார். மாற்றங்களை பார்த்து சாய்பாபா கோபம் அடைந்து அந்த கம்பங்களை அங்கிருந்து எடுத்து வெளிய எறிந்துவிட்டார். இந்த நிகழ்வு அங்கு இருந்த பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவருக்கு பிடிக்கும் என்று நினைத்து அவர்கள் அவரின் இருப்பிடத்தை புதுப்பிக்க நினைத்தனர் ஆனால் எப்போதும் போல் மசூதி இருந்தால் நல்லது என்று நினைத்தார் சாய்பாபா. கடுமையான வார்த்தைகளால் அனைவரையும் திட்டி புறக்கணித்தார். அவரின் இந்த முடிவும் செயலும் மக்களுக்கு வருத்தம் அளித்தாலும் சாய்பாபா விருப்பம் போல் விட்டுவிட எண்ணினர். எப்போதும் மெளனமாக புன்னகை முகத்துடன் அன்பாக இருக்கும் சாய்பாபா திடீரென கடுமையாக நடந்தது அனைவருக்கும் புதிராக இருந்தது. ஆனால் யாரும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. பாபாவிற்கு கோபம் வரும் என்பது அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஊர் மக்களுக்கு தெரிந்தது. சாய்பாபா கோபப்படுவது இதுவே முதல் முறை என்பதால் மக்களுக்கு இது ஆச்சர்யமாகவும் இருந்தது. ஷிர்டி மக்கள் பாபாவின் கோபத்தை அறிந்துகொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. சாய்பாபாவின் இயற்கை மற்றும் விலங்குகள் மீதான அன்பு சாய்பாபா எல்லா ஜீவன்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். பொதுவாக இயற்கை மீது மிகுந்த அன்பு கொண்ட சாய்பாபா வேத ஞானங்கள் பயிற்சி பெற்று இருந்தார். தன் மீது உள்ள பக்தியால், தன்னிடம் இருந்து பக்தர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஷீரடிக்கு வந்து அடைந்து விடுவர் என்று சாய்பாபா அடிக்கடி கூறுவதுண்டு. அதே போல் பக்தர்களும் அவர் அழைப்பை ஏற்று அவரை சென்று தரிசித்து ஆசி பெறுவது வழக்கம். தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அவர்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி அருள் புரிபவர் சாய்பாபா. சாய்பாபா ஷீரடியில் வாழ்ந்த காலத்தில் லென்டி பூங்கா என்று ஒரு பூங்காவை அமைத்து அதில் வரும் இயற்க்கை உணவை மக்களுக்கு கொடுத்தது அந்த பூங்கா மற்றும் மக்கள் மீது இருந்த அன்பை காட்டுகிறது. ஷிர்டி சாய்பாபாவின் சரித்திரம் மற்றும் அவரின் அற்புதங்களை கூற இந்த ஒரு புத்தகம் போதாது என்று கூறும் அளவில் அவர் மக்களுக்காக செய்த உதவிகளும் சாதனைகளும் இருந்தது. அவர் என்றும் நம்முடன் வாழ்த்து கொண்டு இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஷிர்டி பாபா ஒரு மகத்தான சித்தர். சித்தர்களுக்கு இருந்த சக்தி மற்றும் மகத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே. பாபாவின் அருள் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்க பெறவேண்டும் என்று ஷிர்டி சாய்பாபாவை வேண்டி வணங்குகிறேன். குருவின் மேன்மை பற்றி சாய்பாபா மனிதன் எந்த நிலையிலும் மறக்க கூடாத ஒன்று குரு பக்தி. தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு எந்த கஷ்டமும் வர கூடாது என்று என்னும் பாபா, அவர்களுக்கு எப்போதும் வாழ்க்கையை சரியாக வாழ வழிகாட்டும் போதனைகளை கூறுவதுண்டு. மானிட பிரவி என்பது மிகவும் அரிது. அதை எவரும் பாழாக்கிகொள்ள கூடாது என்று தன் பக்தர்களிடம் சாய் கூறுவார். எத்தனையோ ஜென்மங்களை தாண்டி நாம் மனிதனாக பிறக்கிறோம். ஜந்துக்கள், கிருமிகள், மிருகங்கள் என்று பல ஜென்மங்களுக்கு கிடைக்கும் அபூர்வ ஜென்மம் தான் மனித ஜென்மம் அதனால் இந்த மனித பிறவியை பயனுள்ள பிறவியாக மாற்றிகொள்வது நம்மில் தான் உள்ளது. சம்சார வாழ்க்கை, உறவுகள், பணம், அந்தஸ்து, புகழ், பொறாமை, தேவைகள், சுகம், சந்தோஷம் என்று அன்றாட எந்திர வாழ்க்கையில் மூழ்கி நாம் யார் என்கிற நிலை மறந்து, நாம் எந்த நிலையில் இருக்கிறோம், அடுத்தது எங்கே செல்ல போகிறோம் என்பது அறியாத நிலையில், தன்னை மறந்து, கடவுளை மறந்து, ஆன்மாவை மறந்து, மனம் போன போக்கில் போகும்போது, நமக்குள் நாம் யார் ? எதற்காக பிறந்தோம் ? என்கிற சில கேள்விகள் நம்முள் எழும். அப்படி எழும் கேள்விகளுக்கு பதில் கூறி நம்மை செரியான பாதையில் வாழ்க்கையை வழிநடத்த ஒருவர் தேவை, அவர் தான் குரு. அப்படி ஒரு குரு கிடைப்பது நாம் செய்த பிறவி பயன். நம் முந்தைய ஜென்ம நல்ல கர்மாவால், ஒரு நல்ல குரு கிடைப்பது நம் பாக்கியம். அப்படி கிடைத்த குருவின் அருள் ஆசி மற்றும் போதனைகள் கிடைத்தால் அதைவிட பாக்கியம் எதுவும் இல்லை. இப்படி கிடைக்கும் பாக்கியத்தை ஒரு மனிதன் பயன்படுத்தாமல் அவன் வாழ்க்கையின் அர்த்தம் அறியாமல் தீய எண்ணங்களால் தீய பழக்கங்களால் வாழ்க்கையை பாழாக்கி கொண்டால், அவனை விட முட்டாள் எவரும் இல்லை. ஆயிரம் கோடி இருக்கும் அரசன் முதல், மெத்த படித்த மேதாவிகள் முதல், சாதாரண கூலி தொழிலாளிகள் வரை அனைவரும் தேடும் ஒரே விஷயம் அமைதியான நிம்மதியான நோயற்ற வாழ்க்கை. தினம் இறைவனை பய பக்தியோடு தவறாமல் வழிபட்டு ஆன்மீகத்தில் நமக்கு கிடைக்கும் நிம்மதி வேரெதிலும் இல்லை. இவ்உலகில் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய மகான்களை நாம் வழிபடுவதும், குருவாக நினைப்பதும், நம் வாழ்கையை அவர்கள் நல்ல பாதையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான். நமக்கு வரும் துன்பங்களை நீக்கி நம்மை காக்கும் சக்தி ஆன்மீக மகான்களுக்கு உண்டு. சாய்பாபா எப்போதும், ஓம் சாய் ராம். அல்லா மாலிக். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. விட்டல பாண்டுரங்கா என்று கடவுளின் பெயரை உச்சரித்து கொண்டே இருப்பார். பாபா கடவுளின் அவதாரமாக இருந்தாலும், அவர் ஸ்ரீ ராமரையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், இஸ்லாமிய கடவுளான அல்லாவையும் வழிபட காரணம் என்ன ? பாபா நினைத்தால் அவரின் சக்தியால் நினைக்கும் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் ஆனால் மனதில் இறைவன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான் அவரை மகானாக மாற்றியது. ஜாதி மத வேற்றுமைகள் இல்லாமல் எல்லா இறைவனும் ஒருவரே என்று போதித்தார். ஸ்ரீ ராமனின் சிறந்த குணங்களையும், கிருஷ்ணனின் போதனைகளையும், இஸ்லாமிய நல்லிணக்க சிந்தனைகளையும் அவர் பின்பற்றி, இறைவனை தன் குருவாக நினைத்து, தன் பக்தர்களுக்கு பாபா போதித்து வந்தார். குரு என்பவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு இருக்கும் அனுபவத்தை தனது சீடர்களுக்கு பகிர்வதால் குரு மீதான மதிப்பு மேலும் மேலும் கூடுகிறது. அதே சமயம் சரித்திரத்தை நாம் அலசி பார்த்தால், சில தருணங்களில் சில குருவிற்கு எல்லாம் தெரியும் என்கிற ஆணவம் வரும், அப்படி குரு ஸ்தானத்தில் இருந்த ஒருவர் ஷீரடிக்கு வந்தார். அவரை ஷீரடியில் இருந்த சிலர் வழிபட்டு வந்தனர். ஷீரடியில் சாய்பாபா என்று ஒருவர் தன்னை விட சிறந்த ஞானம் பெற்றவராக விளங்குவது அவருக்கு தெரிய வந்தது. இதனை கேள்விப்பட்டு அவருக்கு சாய்பாபா மீது வெறுப்பும் பொறாமையும் அதிகரித்தது. சாய்பாபா மகால்சபதி இருக்கும் கண்டோபா சிவன் ஆலயத்திற்கு செல்லும்போது சில சமயம் அந்த குரு எதிரில் வருவதுண்டு. சாய்பாபாவை ஷிர்டி மக்கள் வணங்குவதும், மக்கள் சாய்பாபாவிடம் கொண்ட அன்பும் மேலும் வெறுப்பை அதிகரித்தது. பாபா மக்களின் செல்வாக்கை இழக்க வேண்டும் என்று எண்ணி பாபாவின் ஞானத்தை சோதிக்க நினைத்தார். அனைத்தும் அறிந்த பாபா அவரின் கேள்விகளுக்கு பதில் கூற தயாராக இருந்தார். மக்கள் முன்னிலையில் அவர் பாபாவிடம் சில கேள்விகளை கேட்டார். பாபாவும் அதற்கு சாமர்த்தியமாக பதில்களை கொடுத்தார். பதில் கொடுக்க கொடுக்க பாபாவின் ஞானம் பற்றிய புரிதல் அவருக்கு வர தொடங்கியது, அவருக்கு அது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. சில நாட்கள் பாபாவை அவமான படுத்தி பார்த்தார். அனால் பாபா அவரின் அறியாமையை தவிர்க்க தவிர்க்க குருவின் ஆணவம் அழிந்தது, தான் என்கிற அஹம்காரம் அழிந்து சில நாட்களில் அவர் சாய்பாபாவின் பக்தராக மாறினார், தன்னிடம் இருந்த சீடர்களை சாய்பாபாவை வணங்கும்படி கூறினார். இதை பார்த்த ஷிர்டி மக்கள், எந்த நிலையிலும் ஒரு மனிதன் ஆணவம் மிக்கவனாக இருப்பது எந்த அளவிற்கு தவறு என்பதை உணர்ந்தனர். குரு போதிக்கும் சாஸ்திரங்கள், வேத தர்மங்கள், பூஜைகள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் அனைத்தும் ஒரு மனிதனின் திறமையை மதிப்பிடுவதற்காக இல்லை. வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்தி வழிநடத்த தான் சாஸ்திரங்கள், ஸ்லோகங்கள். அவற்றை படித்த பின் சிந்தனையில் ஆணவம் வர கூடாது. அஹம்காரம் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் படித்து பூஜைகள் செய்தாலும் அதில் ஒருபோதும் பலன் இல்லை. படித்த பின் ஆணவம் இன்றி நடப்பவர் வாழ்க்கை ஒளி மயமாக்கும். சாய்பாபாவின் சில உபதேசமொழிகள் - அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் அவர் அவர் செய்த கர்மாவின் பலன். சோதனை மேல் சோதனை வரும் வேளையில் நாம் இறைவன் மீது கோவம் கொள்வதுண்டு. ஆனால் அந்த சோதனை காலத்தில் தான், நம் மன வலிமை மற்றும் தன்னம்பிக்கை பற்றி நாம் அறிய முடிகிறது. ஒரு மனிதன் அவன் சக்தியை அறிந்து கொள்ள இறைவன் தரும் பரீட்சை காலம் தான் சோதனை காலம். சோதனைகளை திறமையாக எதிர்கொள்ள இறைவன் துணை இருப்பார். - துன்பமும் நிலையல்ல, இன்பமும் நிலையல்ல. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து வாழ்கையை நடத்துவது தான் சாமர்த்தியம். - நாம் சில சமயம் செய்யும் சிறு பிழைகளால் நாம் இழப்பதை, முயற்சி செய்து மீட்டெடுக்க முடியும். அப்படி மீட்டெடுக்க நமக்கு பொறுமையும் நம்பிக்கையும் தேவை. நம் மனஉறுதியை தகர்க்கும் விதத்தில் எதிர்வினை எண்ணங்களை விதைக்க சிலர் முயற்சி செய்யலாம். அவற்றை தவிர்த்து நம் சுய புத்தியை நாம் உபயோகிக்க வேண்டும். இறைவன் மீது பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் நம் எதிர்வினை எண்ணங்களை தவிர்க்க இறைவன் நமக்கு துணை இருப்பார். - விட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெட்டுபோவதில்லை. சில சமயம் ஏற்படும் சண்டைகளை மறந்து மன்னித்து குழந்தைகள் அவர்களின் நண்பர்களோடு மீண்டும் இணைவது கல்மிஷம் இல்லாத அவர்களின் குணத்தை காட்டுகிறது. எப்பேர்பட்ட சண்டையாக இருந்தாலும் குழந்தைகள் அவர்கள் நண்பர்களோடு மீண்டும் உறவாடுவதை போலவே வயதில் மூத்தவர்களாகிய நாமும் ஒற்றுமையாக இருக்க பழக வேண்டும். - குழந்தைகளை வழி நடத்தும் பெற்றோர்கள் ஒரு போதும் வேற்றுமைகளை விதைக்கக்கூடாது. பெற்றோருக்கு சேவை செய்வது குழந்தைகளின் கடமை மற்றும் தர்மம், அதே போல் தனது குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக, நல்ல குணம் கொண்டவர்களாக உருவாக்குவது பெற்றோரின் சமூக கடமை. - புறம் பேச கூடாது. நாம் நம்மில் உள்ள குறைகளை மறந்து மற்றவர்களின் குறைகளை பற்றி புறம் பேசுவது தவறு. நாம் தவறுதலாக செய்யும் பிழைகளை திருத்திக்கொண்டு, அந்த தவறின் விளைவுகள் சொல்லும் பாடத்தை அனுபவமாக கற்று மீண்டும் அந்த தவறு நடக்காமல் நாம் நம் எண்ணங்களை மேம்படுத்தி கொள்வது தான் சிறப்பு. - நாம் செய்த தவறை பற்றி வருந்தி மன்னிப்பு கேட்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி நாம் மன்னிப்பு கேட்கும் போது, நம் அஹம்காரம் அழிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில நம் மதிப்பு மேலும் கூடும். வெகு சிலர் தான் இந்த அழகிய பண்பை வளர்த்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண்கிறார்கள். பிரிந்த உறவுகள் சேர்வதக்கு இந்த குணம் பாலமாக உள்ளது. - இறைவனை வணங்கும் போது பயத்துடன் அல்ல, அன்புடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். அன்புடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு எப்போதும் பலன்கள் உண்டு. நம் குடும்ப உறவுகளை நேசிப்பதை போல் இறைவனை நேசிக்க வேண்டும். - நமக்கு இறைவனோடு உள்ள உறவு மிக அற்புதமானது. அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள கூடாது. - பூஜை செய்வதாலும், கோவில் செல்வதாலும், நமக்கு இறைவனின் ஆசி கிடைப்பதில்லை. நமக்கான கடமைகளை நாம் தினம் தவறாமல் செய்திடும்போது நம் நல்ல கர்மாவின் பலனை நாம் அடைகிறோம். - எல்லா சூழ்நிலையிலும் நம் மனம் அமைதி கொண்டு நற்சிந்தனைகளோடு இருக்க, இறை வழிபாடு மற்றும் தியானம் சிறந்த வழி. - ஷிர்டி ஸ்தலத்தை எவர் ஒருவர் மிதிக்கிராரோ அவர் துன்பங்கள் ஒரு முடிவை அடைந்து , மிகுதியான சௌகர்யத்தை அடைகிறார்கள். - துவாரகமாயியை அடைந்த மாத்திரத்தில், பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும், பெரும் சந்தோஷத்தை அடைகிறார்கள். - பாபா இந்த உலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் அருள் செய்து வருகிறார். - பாபாவின் சமாதி அவரின் தீவிர பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுத்து வருகிறது. - பாபா உடலால் நம்முடன் இல்லை என்றாலும் அவர் ஆன்மா நம் அனைவரையும் வழி நடத்துகிறது. - பாபாவின் ஆன்மா அவரின் சமாதியில் இருந்து நம் குறைகளை தீர்த்து வருவது உண்மை. - துன்பங்கள் வரும்போது பாபாவிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கும், பாபா மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பாபா உயிரோடு தான் இருக்கிறார். - பாபாவிடம் நம் பாரங்களை இறக்கி வெய்த்தால் அவர் நம்மை வழிநடத்துவதை நம்மால் உணர முடியும். - பாபாவிடம் உணவு மற்றும் உதவி என்று கேட்பவர்களை ஒரு போதும் பாபா ஏமாற்றுவதில்லை. சாய்பாபாவின் சில ஞானோதய பொன்மொழிகள் - உற்சாகமாக இருப்பது - கவலைகளை விட்டு விலகி உற்சாகமாக இருக்க வேண்டும். - கோரிக்கை வெய்ப்பது - இறைவனிடம் நாம் நம் கோரிக்கைகள் வெய்க்க வேண்டும். - நம்பிக்கை வெய்ப்பது - இறைவனிடம் முழுமையான நம்பிக்கை தேவை. - கவலையை மறப்பது - நாம் வருத்தம் கொள்வதால் துன்பம் விலகாது. அதனால் கவலையை மறந்து வாழ பழக வேண்டும். - இறைவனிடம் விஸ்வாசமாக இருப்பது - ஒழுக்கத்துடன் இறைவனிடம் உணமையாக, விஸ்வாசமாக இருக்க வேண்டும். - இறைவனிடம் மனம் உருகி பேசுவது - நம் குடும்ப உறவுகளிடம் நேசத்தோடு பேசுவது போல் நாம் இறைவனிடம் பேச வேண்டும். - சமயோஜித புத்தி - எதை யாரிடம் பகிர வேண்டும் என்பதை பகுத்தரிய வேண்டும் - பொறுமை - எல்லா சூழ்நிலையையும் பொறுமையாக கையாள்வது நல்லது. - அமைதி - மனம் அமைதியுடன் இருக்கும் போது தான் இறைவனிடம் நம் பிரார்த்தனை பலன் தரும். - நம்மை நாம் நேசிப்பது - நம்மை நாம் நேசித்தால் தான் நமக்கு மற்றவர்களின் மீதும், இறைவனின் மீது நேசம் வரும், வாழ்க்கை ஒளி…மயமாகும். **c ஓம் சாய்ராம். ஜெய் சாய்ராம். /newpage பல வருடங்களாக சாய்பாபாவை வணங்கி வந்த எனக்கு ஷிர்டி கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்த வருடம் 2022 ஜனவரி மாதம் தான் ஷிர்டி சென்று சாய்பாபாவின் ஆசி பெற முடிந்தது. பாபாவை பொறுமையோடும், நம்பிக்கையோடும் வணங்கும் அனைவரின் வேண்டுகோள்களும் கண்டிப்பாக நிறைவேரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புத்தகத்தை படித்த அனைவருக்கும் ஷிர்டி சாய் பாபாவின் அருள் கிடைக்க வேண்டி வணங்குகிறேன். இந்த புத்தகத்தை வெளியிட்ட www.freetamilebooks.com குழுவிற்கு மிக்க நன்றி. நன்றி - B L Shankar FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.