[] 1. Cover 2. Table of contents அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்   என். வி. கலைமணி     மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com   உரிமை : CC0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.   அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com   மின்னூலாக்கம் - ச. ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com   This book was produced using pandoc   பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/thoughts_of_annie_besant} மின்னூல் வெளியீட்டாளர்: http://freetamilebooks.com அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com மின்னூலாக்கம்: ச. ஐஸ்வர்யா லெனின் - aishushanmugam09@gmail.com மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation Ebook Publisher: http://freetamilebooks.com Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com Ebook Creation: S.Iswarya Lenin - aishushanmugam09@gmail.com Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/vaazhvum_bowthamum This Book was produced using LaTeX + Pandoc இந்த மின்னூலைப் பற்றி உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது1 இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம். மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம். இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )2 [3] (http://www.gnu.org/copyleft/fdl.html) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: - Balajijagadesh - Arularasan. G - Info-farmer ------------------------------------------------------------------------ 1. ↑ http://ta.wikisource.org 2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/ 3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம். பதிப்புரிமை அற்றது இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை. இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம். Universal (CC0 1.0) Public Domain Dedication This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode No Copyright The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission. This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx. பதிப்புரை டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற பெயரில், அவரது வாழ்க்கையிலே நடந்த வரலாற்றுச் சம்பவங்களாக தொகுத்து இந்த நூலில் தந்துள்னோம். இது போன்ற ஒரு நூல் இதுவரை வெளிவந்ததில்லை. இந்த புத்தகத்தில் அந்த அம்மைாார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுடனும், மற்றும் இந்தியத் தலைவர்களுடனும் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காக எவ்வாறெல்லாம் போராடினார் என்ற முழு விவரத்தையும் படிக்கலாம். இங்கிலாந்து நாட்டிலே பிறந்த ஒரு பெண்மணி, தமிழ் நாட்டிற்கு வந்து, இந்திய மக்களின் கல்வித்துறைக்காகப் பெண்ணின் உரிமைக்காக, ஆன்மீகத் துறைக்காக, கதந்திரப் போராட்டத்திற்காக, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீராங்கனையாக விளங்கியுள்ள இந்த வரலாறு மாணவர்கள், பெண்கள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய ஒரு நூலாகும். அன்னி பெசண்ட் ஆம்மையார் வாழ்க்கை வரலாறும் இத்துடன் இணைந்துள்ளது. அந்த வீரர் குல மாதரசி நம்மை எவ்வாறு அவரது செயற்கரிய செயல்களால் மேம்படுத்துகிறார் என்பதைப் படித்துப் பாருங்கள். பெண் இனம் முன்னேற்றத்திற்காக அக்கறை உள்ளவர்கள் அனைவரும் பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலைப் படித்து, வழக்கம் போல பேராதரவு தருமாறு வேண்டுகிறோம். -பதிப்பகத்தார் திரு. வி. க. பாராட்டிய தியாகவல்லி "1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை ஐரோப்பாவில் பெரும் போர் நடந்தது. அதே காலத்தில் இந்தியாவிலும் அரசியல் உரிமைப் போர் மூண்டது. இப்போரை மூட்டியவர் யார்? ஆன்னி பெசண்ட் ஆம்மையqர். திலகர் பெருமான் உள்ளிட்ட தேசபக்தர் பலர் சிறைக் கோட்டம் சென்ற பின்னர் (1998) காங்கிரஸ் மிதவாதத்தில் அழுந்தியது. அதன் உறக்கத்தைப் போக்கி அதை எழச்செய்தல் வேண்டும் என்ற வேட்கை அன்னி பெசனண்ட் அம்மையாரிடை உதித்தது அவ்வேட்கை பெருஞ் சுய ஆட்சிக் கிளர்ச்சியாகப் பருத்தது. அதன் ஆடியில் இரண்டு கொள்கைகள் சிறப்பாக நிலவின. ஒன்று பிரிட்டிஷ் தொடர்புடன் சுயஆட்சிபெறல் வேண்டுமென்பது; மற்றொன்று கிளர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாயிருத்தல் வேண்டுமென்பது. இவ்விரண்டு கொள்கையை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தையும் சென்னை அரசாங்கம் ஐயுற்றது; இயக்கத் தலைவரை 1917-ம் ஆண்டில் காவலில் வைத்தது. அவர் காவலில் வைக்கப்பட்ட நாள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் கூடும்; கூட்டங்கள் அமைதியாக-மிக அமைதியாக நடைபெறும். ஒரு மூலையிலாவது சிறு குழப்பமோ, துளி இரத்தஞ் சிந்தலோ நிகழ வில்லை. சென்னையில் பல வட்டங்களில் விழாக்கள் நடைபெறும். சிலவற்றில் சிறியேன் சேவையும் சேரும். பெசண்ட் அம்மையாரின் பேச்சும், எழுத்தும் மூன்று மாதக் காவலும் இந்தியாவை ஒருமைப்படுத்தின; இங்கிலாந்தில் பார்லிமெண்டில் ‘இந்தியாவுக்கு ஜனப் பொறுப்பாட்சி நல்கப்படும்’ என்ற அறிக்கையை 1917-ஆகஸ்டில் பிறப்பிக்கச் செய்தன. சிறையினின்றும் வெளிவந்த திலகர் பெருமான் துணை அம்மையார் இயக்கத்துக்குக் கிடைத்தது. காந்தியடிகளும் பிணங்கி நின்றாரில்லை. ஜின்னாவின் இணக்கம் இயக்கத்துக்குப் பேராக்கம் தந்தது. 1947-ம் ஆண்டின் இறுதியில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸுக்குத் தலைவராக நாடு பெசண்ட் அம்மையாரைத் தெரிந்தெடுத்தது. (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், முதல்பகுதி) -என்று, தமிழ்ப் பெருமக்களால் தமிழ்த் தென்றல் திரு.வி.க என்று உளமார அழைத்துப் போற்றப்பட்ட திரு.வி. கலியான சுந்தரம் அவர்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொண்டுகளைப் பாராட்டி, தனது வாழ்க்கைக் குறிப்புகள் என்ற புத்தகத்திலே எழுதியுள்ளார்! எழுதியவர் எத்தகையவர் என்பது ஓரளவாவது தெரிந்தால், எழுதப்பட்டவர் எப்பேர்பட்டவராக இருந்திருப்பார் என்ற அருமை, பெருமைகளை நம்மால் உணர முடியும் இல்லையா? திரு.வி.க. அவர்கள் தமிழில் தன்னிகரற்ற மேதைகளிலே ஒருவர்; அவர் எழுத்துக்கள், பீடும்-மிடுக்கும், எழுச்சியும்-கிளர்ச்சியும், வீறும் வீரமும் மதர்ந்து ஏக்கழுத்தம் பெற்றதாக விளங்கும்! அவர் தமிழ் நடையிலே காவியச்சுவை கற்கண்டு பிறப்பெடுக்கும்; வீரச்சுவை காரத்தைவிட கடுமையாகத் தாண்டவமாடும்; நகைச்சுவை கரும்புச் சாறென பொழியும்; சாதுச்சுவை கருணையாக நடமாடும்; சமயச்சுவை உள்ளத்தை உருக்கும்; அரசியல் சுவை தென்றலென கவரி வீசும்; இதற்கு மேலும் பற்பலச் சுவைகள் அவர் சொற்பொழிவிலே மின்னலென பளிச்சிட்டு ஒளிகாட்டும்! இத்தகைய சுவைகள் ஒருங்கே திரண்டு உருவமெடுத்த பல்கலை வித்தகர் தான் திரு.வி.க என்று அழைக்கப்பட்ட கருனைப் பொதிகைமலையாகக்காட்சி தந்தவர் திரு.வி.க தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தொழிலாளர் தலைவராக விளங்கியவர்: வெள்ளையர் அரசு அவரை நாடு கடத்த ஆணையிடும்போது அப்போதைய முதலமைச்சர் பனகல் அரசரும், தியாகராச செட்டியாரும் ஜஸ்டிஸ் ஆட்சியைக் கலைக்கப் பதவிகளைத் துறப்போம் என்று ஒரு காங்கிரஸ் தலைவருக்காக முன்வரக் கூடிய அளவிற்கு திரு.வி.க பண்பின் பெட்டிகமாகச் சிறந்தார். அத்தகைய ஒர் அன்பாளர், பண்பாளர், அரசியல் வித்தனர், தொழிற்சங்கப் போராட்டத் தந்தை காங்கிரஸ் மேதைகளுள் மேதை, கனிந்த சொற்பொழிவாளர்; இனிய எழுத்தாளர்; வீரத்தில் அரிமாவாக விளங்கியவர், பத்திரிகைப் பேராசிரியர், இவை போன்ற அரிய செயல்கனை ஆற்றிய திறனாளரான திரு வி.க, அவர்களால் பாராட்டப் பட்டவர் அன்னி பெசண்ட் என்றால் அந்த அம்மையார் எத்தகையவராக இருப்பார்; என்னிப்பார்க்க வேண்டும்: அன்னிபெசண்ட் இங்கிலாந்து நாட்டிலே தோன்றியவர் இடுக்கண் வாழ்வுச் சம்பவங்களே அவரது இளமை வாழ்வு; பல்கலை வித்தகராக விளங்கிய வீரத்தாய்க்குலம்: தமிழகம் வந்தார்: வீரம் பிறந்த மண்ணிலே கால் வைத்தப் பண்புக்கு ஏற்றவாறு-ஒவ்வொரு துறையிலும் வீராங்கனை என்ற முத்திரையைப் பொறித்தார். தியோ சாபிகல் சங்கத்திற்குரிய தலைவியானார்: “நியூ இந்தியா” என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார்: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக ஆட்சிக் இளர்ச்சியிலே ஈடுபட்டார்: சூறாவளிப் பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு சுற்றினார்! போராட்டம் செய்தார்: கைதானார்! மூன்று மாதம் சிறைக்காவல் பெற்றார்: இங்கிலாந்திலே பிறந்த பெண் ஒருத்தி இந்தியாவிலே உள்ள தமிழகம் வந்து, சுய ஆட்சிப் போராட்டத்தில் கைதாகி, சிறைவாழ்வுப் பெற்ற ஒரு வீராங்கனையின் அஞ்சா நெஞ்ச அரசியல் வித்தகத்தைப் பாராட்டித்தான் திரு.வி.க தனது வாழ்க்கைக் குறிப்புகளிலே எழுதினாரே தவிர, நேற்று பெய்த மழையிலே முளைத்த அரசியல் காளான்களை அல்ல என்பதற்காகவே இந்த சுருக்கக் குறிப்புக்களைக் கொடுத்தோம். அப்படியானால், அன்னி பெசண்ட் அம்மையார் யார்? அவர் வரலாறு என்ன? வாழ்க்கை என்ன? சோதனைகள் என்னென்ன? சாதனைகள் என்னென்ன என்பதை சற்று விவரமாகவே பார்ப்போம்! இந்திய மக்களின் இதய வானத்திலே இரண்டு வெளி நாட்டு விண்மீன்கள் அன்றும், இன்றும், என்றும் சுடர் விட்டு ஒளியுமிழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று அன்னிபெசண்ட் அம்மையார், மற்றொன்று அன்னை தெரசாவாகும்! இரண்டு பேருமே எதிர்ப்புகளைக் கண்டு ஏறுபோல் போராடி முறியடித்த வீராங்கணைகளாவர் ஒருவர் அரசியல், சமுதாயவியல் ஆன்மீகவியல், வாழ்வியல் மதவியல்; பெண்ணியல் போன்றவற்றிலே பீடுநடை போட்ட அன்னிபெசண்ட் அம்மையார்! மற்றவர், அரசியலைப் பற்றிய சிந்தனையே தேவையற்றது; மக்கள் வளவாழ்வே நலவாழ்வு என்று நம்பி; சமுதாயத் தொண்டே உலகம் போற்றக்கூடியது என்பதுணர்ந்து, மக்கள் நலத் தொண்டர்ற்றிய சமூக சேவைத் துறையின் முடிசூடா ராணியான அன்னை தெரசா என்பவர் ஆவார். இங்கே நாம் அன்னிபெசண்ட் அம்மையின் வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கிறோம்! அவ்வளவுதான்! இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் இலண்டன் அந்த நாட்டில் “உட்” என்ற் பாரம்பரியக் குடும்பப் பெயரோடு வாழ்ந்தவர் வில்லியம் உட்; இவர்தான் அன்னியின் தந்தை இவர் டப்ளினில் உள்ள டிரினிடி கல்லூரியில் படித்தவர் டப்ளின் பல்கலைக் கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்று டாக்டர் பணி புரிந்தவர்: கூர் ஆறிவாளர் வில்லியம்; மெத்தப் படித்தக் கல்வியாளர்; தத்துவம் படித்தவர்; கணிதத்தில் வல்லவர் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம மொழிகளில் புலவர் எந்த கரியத்தில் ஈடுபட்டாலும் கிரேக்கர்களைப்போல, ஏன்? எப்படி? எதற்காக என்ற வினாக்களை விடுத்தே செயலாற்றலில் இபடுவார்; அன்னி பெசண்ட் அம்மாவின் பெயர் எமிலி லோரிஸ்; “மோரீஸ்”, என்ற குடும்பப்பாரம்பரியப் பெயரைப் பெற்றவர்; அவர் கணவருக்கு உள்ள “உட்”, என்ற பெயரைப் போல; ஆழமான மதப்பற்றிலும் கடவுட் பகுதியிலும் சிறப்புடையப் பற்றாளர்: வில்லியம் உட், எமிலி மோரிஸ் என்ற தம்பதிகள் ரொட்டியும்-ஜாமும் போல ஒற்றுமைச் சுவையோடு வாழ்ந்து இரு ஆண்களையும், ஒரு பெண்ணையும் பெற்று வளர்த்தார்கள். இவர்களுள் அந்த பெண் குழந்தைதான் அன்னி! மூத்த ஆண் குழந்தைக்கு ஹாரி என்று பெயர்: இணைய ஆண் குழந்தைக்கு ஆல்பிரட் என்று பெயர்: அன்னி இரு ஆண்ளுக்கும் இடையே 1847-ம் ஆண்டு பிறந்தவர்: ஒரே பெண் குழந்தை அன்னி! வளர்ப்பிலே வளம் தானே ஓங்கும் அதனால் அப்பாவும் அம்மாவும் அன்னி மீது அளவிடற்கரிய அன்புடன் வளர்த்தார்கள்: அழகே உருவான அன்னி ரோஜாப்பூ வண்ணம்! எவரிடமும் அன்புடன் பழகும் எழிலான சுபாவம் கறுசுதுப்பும் துடிதுடிப்பும் மிக்க.சிறுமீ; பொதுவாக அவரது நடையின் அழகைக் கண்டு அன்னியை வான்கோமி" என்றே அழைத்து மகிழ்வர் பெற்றோர்: அன்னியின் தந்தை ஒரு டாக்டர் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்கேற்ப எலும்புருக்கி நோயால் இறந்து போன ஒருவரின் உடலை அறுத்துச் சோதனை செய்யும் டாக்டர்களுக்கு உதவி செய்திட அவர்களுடன் சேர்ந்து வில்லியமும் ஈடுபட்டார். செத்த எலும்புருக்கி நோயாளியின் எலும்பு ஒன்று வில்லியம் விரலில் ஒன்றை வெட்டிவிட்டது. உடனே தொற்றக் கூடிய நோயல்லவா அந்த நோய்? அதற்கு உடனே மருந்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், வில்லியம் அந்த சிகிச்சை அலட்சியம் செய்ததால், கிருமிகள் அவர் உடலிலே குடியேறி பெருகி, மரணம் என்ற அளவுக்கு வந்துவிட்டது. ஆறுவாரம் கூட வில்லியம் உயிரோடு இருக்கவில்லை! பாவம் எலும்புருக்கி எமன் வில்லியம் உயிரைப் பறித்து விட்டது. அருமை மகளையும் அன்பு மனைவியையும், மற்ற இரு சிறுவர்களையும் தவிக்கவிட்டுவிட்டு அவர் இயேசு திருவடி சேர்ந்து விட்டார். கணவனைப் பறிகொடுத்த எமிலி கதறினார்; அழுதார் புரண்டார்; ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ ஒளவை கேட்டது கேள்வியாக நின்று விட்டது பாவம் மயங்கி வீழ்ந்தாள் எமிலி’ சிகிச்சை கொடுக்கப்பட்ட்து அவருக்கு: அன்னி சிறு வயது பெண் தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; தந்தையின் மரணம் என்ன என்றே புரியாமல் தாய் முகத்தையே பார்த்துப் பார்த்து விம்மினார்: தாயிக்கு ஆறுதலாக இருந்த இளையவன் ஆல்பிரட் நோயாகப் படுத்தான்! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப எமிலி கொடுத்த சிகிச்சை பால் ஆல்பிரட் உயிர் பெற்று எழவில்லை! ஒருநாள் அவனும் தந்தை சுவடுகள் மீதே கால்வைத்து இறந்து போனான்-பாவம்! சவப்பெட்டியிலே வைக்கப்பட்டிருந்த தம்பிக்கு அன்னி முத்தமிட்டாள்: எமிலி கண்ணிர் விட்டுக் கதறினாள்! சுற்றத்தாரும் ஐயோ பாவமே, என்று பதறினார்கள் வில்லியம் வீடு பார்ப்பதற்கே சோகமாகக் கிடந்தது! ஒரு தலைவன் இல்லாத வீடு எப்படியானது பார்த்தீர்கனா ஆயகலைகள் கற்ற அன்னி! தத்தை இல்லாமல் வெறிச்சோடிக் கொண்டிருந்த வீடு: கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டே இருந்த வீடு, இரண்டையும் கண்டு அன்னி முகத்தில் ஏதோ ஒர் சோகமேகம் படர்ந்து நகர்வது போல அவளது எண்ணங்கள் மாறி மாறி வந்து மோதின! டாக்டரான வில்லியம் பிறகு வியாபாரமும் செய்து ரதோ வாழ்ந்து வந்தார்! போதிய செல்வம் ஒன்றையும் தனக்கேன சேர்த்து வைக்கும் சிந்தனையற்று வாழ்ந்துவந்து விட்டார். தனது மகன் ஹாரியையாவது. அந்த வணிகத்தில் ஈடுபடுத்தி வழிகாட்டினாரா என்றால், அதையும் தவறி வீட்டார். மகன் ஹாரி, வழக்குரைஞராக வேண்டும், புகழ்பெற வேண்டும், பொருள் ஈட்ட வேண்டும்; பெயரும் செல்வாக்கும் ஆவனைத் தாலாட்ட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சலிலே சாகும் வரை ஆடிவிட்டாரே ஒழிய, வாழ்க்கையை அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போய்விட்டார். அவர் உயிரோடு இருந்தபோதும் இதே ஆசையைத் தனது மனையிடமும் கூறி, இந்த அவரது அவாவைத் தவறாது ஈடேற்ற வேண்டும் கேட்டுக் கொண்டார்! எமிலியும் சரி என்றே வாக்கும் தந்து விட்டார். கணவரின் அந்த ஆசையை நிறைவேற்ற வழி என்ன என்று யோசித்துக் கொண்டே இருந்தார் எமிலி! அப்போது எமிலியின் உறவினர்களான சர் வில்லியம் உட், வெஸ்டரின் உன் என்ற இருவர் அவர் வீட்டுக்கு வருகை தந்தார்கள். எப்படியும் எமிலி குடும்பம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்! உயர்திலைப் பள்ளிக் கல்விவரை ஹாரியைப் படிக்க வைத்து, பிறகு வணிகம் நடத்துவதற்குரிய முதலீட்டுப்பணமும் கொடுப்பதாகவும் கூறினார்கள். இவர்களது. உதவியை எமிலி ஒப்புக்கொள்ளவில்லை. தனது கணவரின் ஆசையை அவர்களிடம் கூறி, அதனை நிறைவேற்றவே திட்டமிட்டு வருகிறேன் என்றார் எமவி. அவளிடம் மகனைப் படிக்க வைக்கும் அளவிற்குப் பணம் இல்லை; என்றாலும், படிக்கவைத்தே தீருவேன் என்ற மன உறுதி ஒன்று போதாதா? இறுதியில் ஓர் முடிவுக்கு வந்தாள் எமிலி என்ன முடிவு அது? ஹாரோ என்ற குன்றின் மீது ஹாரோ என்ற உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கே தனது இரு மக்களையும் அழைத்துச் சென்று அந்தப் பள்ளியிலே சேர்த்துவிடவும், ஒரு வீட்டடை வாடகைக்கு எடுத்து அதிலே தங்கிக் கொண்டும், ஹாரோ பள்ளி மாணவர்களுக்காக ஒர் உணவு விடுதி நடத்தி அந்த வருவாயில் மக்களைப் படிக்க வைக்க முடியும் என்ற முடிவுக்கு எமிலி வந்தார். அதன்படி பிள்னைகனைப் பள்ளியில் சேர்த்தார்; உணவு விடுதியும் நானாவட்டத்தில் நன்றாகவே நடைபெற்று வந்தது. அதற்கு அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் அவளது கஷ்ட நிலைகளைக் கண்டு உதவியும் செய்தார். கல்வியில் ஹாரி சிறந்து விளங்கினார்: எமிலிக்கும் அதைக் கண்டு மகிழ்ச்சி; ஆன்னியும் தன்கு படித்தாள்! எமிலி உறவினர்களாக வந்தவர்களும் தங்கனால் முடித்த உதவிகளைத் தவறாமல் செய்து வந்தார்கள். தாயார் எமிலி அன்னிக்குரிய எல்லா மத ஒமுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். இவற்றுள் அன்னி இயேசு மீது காட்டிய அளவிலா அன்பும்-பற்றும் குறிப்பிடலாம்! ஒரே பெண் அல்லவா அன்னி அதனால் மகள் மீதும் அதிக ஆசை வைத்து வளர்த்து வந்தார் எமிலி, அன்னி அன்றாடம் அடுத்த வீட்டுக்குப் போய் ஆடிப் பாடி மகிழ்வார்; அப்படி ஒருநாள் ஆடிப்பாடி ஓடிவந்த அன்னியின் அழகு நிகழ்ச்சியை, அந்த வீட்டிற்குப் புதிதாக வருகை தந்திருந்த விருந்தாளி அம்மையார் பார்த்து ரசித்தார்: மான்குட்டி போல துள்ளிவந்த காட்சியினையும், அன்னியின் அழகும், உடற்பொலிவும், அறிவொளி படர்ந்த முகவழகும், இனிமையான, அமைதியான பேச்சழகும், அந்த அம்மையாரை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அன்னியை அன்போடு அழைத்த அவர், தன் மடிமீது அமரவைத்துக் கொண்டு ஏதோ பேசுமாறு சில கேள்விகளைக் கேட்டார். இனிமையாக, அடக்கமாக, அமைதியாக, மகிழ்வு ததும்ப அன்னி பதில் கூறிய பாங்கு விருந்தாளி அம்மாவுக்கு மேலும் அன்பைப் பெருக்கிற்று. அந்த அம்மையார் மறுதாள் அன்னி வீட்டிற்குள் வத்தார்! அன்னி உட்பட எமிலியும் சேர்ந்து அந்த அம்மாவை வரவேற்று உபசரித்தார்கள். விருத்தானி அம்மா. எமிலியை நோக்கி, அன்னிக்குரிய கல்வி, உணவு, உடை போன்ற செலவுகளூச் செய்து தான் வளர்த்து வருகிறேன். எனது சகோதரன் மகள் என்னுடன் தான் இருக்கிறாள். அவளுக்குத் துணையாக இருக்கும். நீங்கள் மனமார சம்மதித்து உத்திரவு தந்தால் என்னோடு அழைத்துப் போகிறேன், என்று கேட்டார். எமிலி அந்த முடிவை ஏற்கவில்லை. அப்போதும் அந்த அம்மையார்: அன்னியை விடுமுறைகள் வரும்போதெல்லாம் உங்களது வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன் அவனது கல்வி முன்னேற்றத்துக்கு நான் பொறுப்பு என்றார். எமிலி சிறிது நேரம் அமைதியாகச் சிந்தித்தார். நாம் மறுத்தக் கூறியும் கூட இந்த விருந்தாளி அம்மா ஏன் இள்வளவு விடாட்பிடியாக நம்மை வற்புறுத்துகிறார் என்று யோசித்தார்! அன்னி ஒரு பெண். நாம் மாணவர்கள் பள்ளியிலே உணவு விடுதி நடத்துகிறோம். அது நல்லதல்ல. அன்னிக்கு கல்வி அளிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகையால், இந்த அம்மாவுடன் அனுப்புவதுதான் மிகவும் நல்லது; பொறுப்பானது என்று அந்த அம்மையாரைப் பார்த்து, சரி அம்மா அழைத்துச்செல்லுங்கள் என்றார். அன்னி, அம்மாவின் அன்புச் சொல்லுக்கு ஆட்பட்டு அந்தம்மாவுடன் சென்றார். அன்னியை உடன் அழைத்துச் சென்ற அந்த அம்மையாரின் பெயரி மிஸ் மேரியட். அவர் செல்வம் அதிகமாக உள்ள ஒரு சீமாட்டி கேப்டன் மேரியட் என்ற புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியரின் தங்கை, திருமணமாகாதவர். மிஸ் மேரியட் பெருந்தன்மை மிக்கவர்; நல்ல பண்பாளர்: கருணை உள்ளம் கொண்டவர்; அவருடைய ஆண்ணனின் மகள் ஒன்றையும் அவர் அன்னியைப் போல் வளர்த்து வருகிறார்! அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் சேர்த்து கல்வியளிப்பதே மிஸ் திட்டம் ஒரு குழந்தைக்கும் பதிலாக இருவர் இருந்தால், அவர்கள் சேர்ந்து படிக்கவும் உண்ணவும், உறங்கவும், விளையாடவும் வசதியாக இருக்கும் என்பதால் அன்னியை அழைத்து வந்தார்: அன்ன சத்திரமோ, தானமோ ஆயிரம் செய்வதை விட, ஒரு குழந்தைக்குக் கல்வி கற்பிப்பது சிறந்த ஓர் அறம் என்பதனை அவர்புரிந்தவர். அதனால், அன்னியை விடாப்பீடியாகத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தார் இருவருக்கும் மிஸ் மேரியட்டே கல்வி போதித்தார், சிறு குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த வழியிலும், எளிய முறையிலும் கல்வி கற்பிப்பதே சிறந்த வழி என்ற கருத்துடையவர் அவர். அதனால், புதிய முறையிலேயே கல்வியைப் போதித்தார் இருவருக்கும். இதனால் அன்னிக்கு மேரியட் கல்வி புகட்டும் முறை அவளுக்கு எளிமையாகவும்-சுலபமாகவும் இருந்ததால், தொடர்பாக அவரிடம் கல்வி கற்றார்கள் ஆக்குழந்தைகள். அன்னி மேரியட்டிடம் சுமார் ஏழாண்டுகள் தங்கிப் படித்தார் விடுமுறைகள் வரும்போதெல்லாம் தனது தாயாரையும், தமையனையும் பார்க்க அன்னி ஹாரோ சென்று விடுவாள். மற்ற நாட்களில் மேரியட்டுடன் தங்கியே கல்வி கற்றாள்! அதற்கேற்றார் போல எந்த வசதிக் குறைவையும் மேரியட் ஏற்படுத்தியதில்லை. அன்னியையும், மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் செல்வார். இதனால் குழந்தைகள் பார்க்க வேண்டிய காட்சிகளை நேரில் பார்த்துப் பரவசப்படுவார்கள். கல்வியிலே முழுமை பெற முடியும் என்பது மேரியட் கொள்கை. இக் காலத்துப் பள்ளிகளிலும் இன்றும் மாணவர்கள் எக்ஸ்கர்ஷன் போவதைப் பார்க்கிறோம் இல்லையா அதனைப் போல: ஜேர்மனிக்கு கேரியட் அழைத்துச் செல்லும் போது அன்னிக்கு வயது பதினான்கு இருக்கக்கூடும். அந்த வயதில் உல்லாசப் பயணம் சென்றால் பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனத்தில் பகமரத்தாணி போல பதியும் அல்லவா? ஜெர்மன் நாட்டில் மூன்று மாதங்கள் தங்கி பல இடங்கனை நால்வரும் பார்த்தார்கள். அந்த பயணத்தால் குழந்தைகள் பெற்ற பயன்கள் மிக அதிகமாக இருத்தன, அந்த நேரத்தில் பள்ளி விடுமுறைக் காலம் வந்தது. ஹாரோவுக்குச் சென்று தனது தாயுடனும், அண்ணனுடன் தங்கினாள் அன்னி. விடுமுறை கழிந்த்தும் மேரிடயட்டிடம் வந்த போது மேரியட் அப்போது பாரிஸ் நகரில் தங்கி இருந்தார். அன்னியும் அவருடன் பாரிசில் தங்கினார். கல்வி கற்ற நேரம் போக, மிகுதியான நேரத்தில் பாரிசில் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களை எல்லாம் மேரியட்டுடன் சென்று அன்னியும் கண்டார். கலைக் கூடங்கள், மாதா கோயில்கள், சோலைகள் போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்றார்கள். இதனால் குழந்தைகள் உலக அறிவு, வரலாற்று அறிவு பெற்றார்கள். இவ்வாறு ஏழு மாதங்கள் பாரிஸ் நகரத்தையும், வேறு சில இடங்களையும் பார்த்துவிட்டு, மீண்டும் லண்டன் மாநகரம் திரும்பினார்கள். ஏட்டுக் கல்வி மட்டுமே ஒரு குழந்தைக்கு அறிவு வளர்ச்சியை ஊட்டிவிடாது என்பது மேரியட் கருத்து. உடற்பயிற்சியிலும், உள்ளத்தின் வளர்ச்சியிலும் குழந்தைகளுக்கு கவனமளிக்கும் பயிற்சிகளைப் பெறச் செய்தல் வேண்டும். அதற்கான உதவிகளை மேரியட் குழந்தைகளுக்குச் செய்தார். குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து உடலுறம் பெறவும், குதிரைச் சவாரி செய்யவும், நிலா விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்தும் குழந்தைகளை மகிழச் செய்தார். இதனால் குழந்தைகள் குறையே இல்லாமல் கல்வி கற்றார்கள். இத்தகைய கல்வியை அன்னி பெற்றது. அவளது நல்ல நேரமே என்று அவள் தாயார் எமிலி அடிக்கடி கர்த்தரிடம் முறையிட்டுக் கூறுவார். அதே நேரத்தில் மிஸ் மேரியட் இடத்தில் மிகவும் கராறான சம்பவங்களும் உண்டு. அந்த கண்டிப்பு மத விவகாரங்களில் மட்டும்தான்; பிற அனைத்திலும் சர்வ சாதாரணமாகவே பழகுவார். கிறிஸ்துவத்தில் மேரியட் மிகவும் ஆழ்ந்த பற்றுடையவர்; அவர் எப்படியோ இறை விஷயத்தில், அப்படியே அவரைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அந்த அம்மையார் இறை ஒழுக்கம் என்னவோ, அதே சீலங்களே அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் போதித்தார். வேறு என்ன கண்டிப்பு: காலை மாலை மாதா கோயில் தொழுகைக்குப்போக வேண்டும்: கணிந்துருகிக் கர்த்தரைத் தொழல் வேண்டும். இவற்றில் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதுதான் மேரியட்டின் கராரும். கண்டிப்புமாகும். இது கூடவா ஒழுகக்கூடாது? விளையும் பயிர் முளையிலே என்பார்களே, அதனை போல மேரியட் போட்ட இறைவிதைதான் அன்னிக்குள் உருவான மதப்பற்றும், இயேசுநாதர் அன்பும் என்றால் மிகையாகா. குழந்தைகள் ஒவ்வொன்றும் சுயமாக வாழ்வதற்குப் பயிற்சி பெறல் வேண்டும் என்பது மேரியட் கருத்து. அதற்குரிய பயிற்சிகளையும் அன்னி பெற்றார். இந்த பயிற்சியின் விடா முயற்சிதான் பிற்காலத்தில் அன்னிக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல; போதிய தைரியத்தையும் தாராளமாகக் கொடுத்தது எனலாம். பதினாறு வயது முடிந்த பாவையானாள் அன்னி; வீடு திரும்பும் நேரமும் வந்தது: கல்விப் பயிற்சியும் முடிந்தது: அப்போது மேரியட் அன்னியிடம்: "அன்னி குழந்தையாக என்னுடின் வந்தாய் இப்போது பதினாறு வயது பெண்ணாகப் போகிறாய்! என் னால் உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்தை எல்லாம் செய்து முடித்து விட்டேன் இனி உனது வாழ்க்கை உன்னுடைய கையிலேதான் இருக்கிறது’, என்று கூறியது தான் தாமதம்: அன்னி மெய்மறந்து, உணர்ச்சி மேலிட்டு ஓவெனக் கதறினாள்: ஒரே அழுகை வளர்ப்புப் பாசம் முகமெலாம் கண்ணீரும்; வியர்வையும் முத்துக்களாகின: மேரியட் அன்னிக்கு ஆறுதல் கூறினாள்; அழாதே அன்னி; நினைக்கும் நேரமெலாம் வந்து போகலாம் நீ" என்று தட்டிக் கொடுத்து தேறுதல் கூறினாள்! மேரியட் அன்னியின் கல்விக்காக எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகள், அக்கனவு உணர்வுகள், சாதாரண மானவை. பெற்ற தாயிடமும் பெற முடியாத எல்லாவித வசதிகள், வாய்ப்புகள், ஒழுக்க உணர்வுகள், சில வாழ்க்கை முறைகள் அனைத்தையும் அன்னி பெற்றாள். பிறமொழிகளான ஜெர்மன், பிரான்ஸ் மொழிகளைக் கற்க மேரியட் உதவினாள் இதனால், மிஸ் மேரியட் ஒரு சிறந்த செவிலித் தியாகவல்லியாகவும் திகழ்ந்தார். பழக்கத்தில் வளர்ந்த ஒழுக்கம் வழக்கமாகி விட்ட பிறகு, அதை மாற்றுவதென்பது மிகமிக அரிய செயலே ஆகும். மேரிட்டை விட்டுப் பிரிந்த அன்னி, ஹர்ரோவுக்கு வந்த பின்பு நேரத்தை வீணாக்கவில்லை. காலம் பொன் போன்றது என்று கூறிய அறிஞன் சிந்தனைக்கேற்ப, ஒய்வு நேரத்தில் சங்கீதம் கற்றார். நூலகத்து நூல்களை எல்லாம் புரட்டி புரட்டிப் பார்த்து ஏந்தி வந்து அதன் நுட்பங்களை எல்லாம் மனத்தில் பதித்தார்: இழந்த சொர்க்கம், மோட்சப் பயணம், சாக்ரடிஸ், பிளாட்டோ, தாந்தே, வேர்ட்ஸ் வோர்த், கூப்பர், ஷெல்லி, பைரன், கிட்ஸ், விட்மன், வால்டர்ஸ்காட், செனதே. ஸ்பென்சர், மில்டன். கிங்ஸ்லே சேக்ஸ்பியர் போன்ற எண்ணற்றோர் நூல்களை அக்கறையுடன் படித்தார். படித்தார் என்ப்து கூட சாதாரணப் பழக்கம்; அவற்றுடன் இரண்டற ஒன்றி விட்டார் எனலாம்: அன்னிக்கு வில்வித்தைப்பயிற்சியும் உண்டு நாடோடி ராணி என்ற கருப்புக் குதிரை அன்னியிடம் இருந்தது. எப்போதும் அதன் மீதே சவாரி செய்து பிடித்தமான கிராமத்து மாதா கோவில்களுக்குச் செல்வார். ராஜா தேசிங்குக்கு நீலவேணி குதிரை ஒரு வீரப் பரியாக எப்படி இருந்ததோ, அதனைப் போல ‘நாடோடி ராணியும்’ அன்னிக்கு கிராம மக்களின் ஆறிவை வளர்த்து பரிதாபத்தையும் எழுப்பும் பாடக்குதிரையாக இருந்தது என்று கூறலாம். கணவன்-மனைவி இரு துருவங்கள் அன்னிக்கு வயது பத்தொன்பது தன் தாயாருடன் அவர் தனது வீட்டுக்குச் சென்றார்: கிராமத்தில் மின்னி என்ற பெயருடைய ஒரு பென்! அன்னிக்கு அவள் உறவினள்! இருவருக்கும் ஒரே வயது தோழிகளாகவே பழகினர் இவர்கள் கிராமத்துக்குச் சென்றபோது ஈஸ்டர் விழா நாள்; பண்டிகைக்கான ஏற்பாடுகள் அந்த மாதா கோவிலில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன! சில நேரங்கள் இந்த மாதா கோவிலுக்குத்தான், அன்னி தனது நாடோடி ராணி என்ற குதிரை மீதமர்ந்து சவாரி செய்து கொண்டு வருவாள்! கிராம மக்களே அன்னியின் அஞ்சாமையினையும், அவளது அழகுச் சவாரித் தோற்றமும் கண்டு வியந்து போவார்கள்! அதனால்தான் அந்த மாதா கோவில் என்றாலே அன்னிக்கும் மின்னிக்கும் தனியொரு பாசம் ஏற்படுவது உண்டு. எனவே, ஈஸ்டர் விழாவிற்காக அந்த இரு கன்னிகளும் சேர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு கோவிலை வண்ண வண்ணமாக அலங்கரித்தார்கள். இறை பணி அல்லவா இளைஞர்களுக்கு ஒரே உற்சாகம் கொண்டாட்டம் அவர்களது கோலாகல ஆர்ப்பாட்டத்திலே கிராமமும் சேர்ந்து கொண்டது! அந்த விழாவிலேதான் பிராங்க், பெசண்ட் என்ற ஒரு கதிய மனிதர் அறிமுகமானார்: இருபத்தெட்டு வயது பாளை மதபோதகர்! வணிகரின் மகன்! கேம்பரிட்ஜில் கல்வி கற்றவர்: அன்னி எழிற் பூத்த பருவம் அடைந்தாலும், கள்ளம் கபடு, சூது வாது, உள்ளொன்று புறமொன்று, பேசாத பண்பினள்! எல்லாரிடமும் சரளமாகப் பழகும் தன்மையினள்! அன்று வரை தனது திருமணத்தைப் பற்றியோ அல்லது குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்காத நிலயினள்! அதனால்தான், கிராமத்து ஈஸ்டர் விழாவின் போது புதிதாக அறிமுகமான பெசண்ட்டுடன் எவ்விதக் களங்கமும் இல்லாமலே பேசினார் அன்னி! அன்னியின் அழகு, அன்றைய அலங்காரம்: கள்ளமான வெகுளிப் பேச்சு, வடிக்கப்பட்ட சிலை ஒன்றுடன் பேசுவது போன்ற அவளது தோற்றம் அனைத்தும் மதபோதகரை ஈர்த்தன! இந்த பேரழகுப் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டார். அன்னிக்கும் யார் இந்த பெசண்ட், என்ன அவன் வரலாறு என்பவை ஒன்றும் தெரியாது அறிமுகம் அன்றுதானே- புதுமுகம் தானே! காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதன்றோ திருமணம்: இது எல்லாம் பெசண்டுக்குத் தெரியாது! ஏனென்றால், அவர்கள் இடையே மேரேஜ் சஸ் எ காண்ட்ராக்டு தானே! பிராங்க் பெசண்ட் ஊருக்குப் புறப்படும்போது அன்னியிடம் வந்து, அன்னி! உன்னை நான் மணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்: அதைக் கேட்ட அன்னி உடல் சிலிர்க்குமாறு திடுக்கிட்டார்; ஏனென்றால், திருமணத்தைப் பற்றி அவர் நினைத்ததும் இல்லை! தாயார் எமிலியும் அதுவரை திருமணம் என்ற சொல்லையே, அன்னி காதுகளில் ஒலிக்கவும் இடந்தரவில்லை! அதனால் அன்னிக்கு உள்ளம் சிலிர்த்தது: திருமணம் என்பது தயார் செய்யும் முடிவு. அதற்கு அன்னி எப்படி, திடுதிப்பென்று சரி கூறமுடியும் மத போதகருககு இது கூடவா தெரியாது! தெரியும்; அழகு அவரை ஆட்டிப் படைத்து விட்ட ஆதிர்ச்சி பாவம்: பிராங்க் பெசண்ட் எதிர்பாராவிதமாகத் திடீரென்று ஐ லவ் யூ ஐ மேரேஜ் யூ என்றால் எப்படி இருக்கும்: ஆதனால் பதிலேதும் கூறாமல் ஆப்படியே சிலைபோல நின்று விட்டார் பாவம் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று அவர் கணக்குப் போட்டு விட்டார். அன்னியிடம், பிராங்க் கேட்ட கருத்தைக் பற்றித் தாயிடமும் கூறாமல் அலட்சியம் செய்து விட்டார். அம்மா தவறாகத் தன்னைப் புரிந்து கொள்ன இடம் தந்துவிடக்கூடாது என்ற அச்சமும் கவ்விக் கொண்டது அன்னியை: மதபோதகர் சும்மா இருப்பாரா? நேராக எமிலியிடம் சென்றார்: அன்னியை நான் மணந்து கொள்ளப் போகிறேன், என்னுடைய வரலாறு இது, என்று தனது குடும்ப் விவரங்களையும், பணிபுரியும் இடத்தையும் குறிப்பிட்டுக் கேட்டார். கோயில் பாதிரியார் என்றதுமே எமிலிக்கு ஒரு திருப்தி பிறந்திருக்கும்; அத்துடன் பிராங்க் பெசண்ட் இன்னி சம்மதம் பெற்றே தன்னிடம் வந்து கேட்டுள்ளாரோ என்ற அரை குறை நினைப்பில், திருமணத்திற்கு அன்னியைக் கேளாமலே ஒப்புக் கொண்டார். தாய் சம்மதம் கொடுத்ததை அறிந்த அன்னி வருந்தினார்: திருமணத்தை நிறுத்திடலாமா என்று சிந்தித்தார்: ஆனால், எமிலி வாக்குத் தவறாத ஒரு தாயrயிற்றே! குழப்பமடைந்தாள் அன்னி ஒருவாறு தன்னையே தான் சமாதானப்படுத்திக் கொண்டு, தாய் வாக்குக்கு ஏற்றவாறு ஒப்புக் கொண்டார்: அந்த நேரத்தில், மான்செஸ்டர் என்ற நகரிலிருந்து எமிலி குடும்ப நண்பர் ராபர்ட்ஸ் என்பவர், சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார், அவருடன் எமிலி, அன்னியுடன் கவிட்சர்லாந்து சென்றார்: இயற்கை திருவிளையாடல்களால் அழகு தவழ்ந்த பல இடங்களை அனைவரும் சுற்றிப் பார்த்தார்கள் அங்குள்ள புகழ்பெற்ற மாதா கோவில்களையும் கண்டுகளித்து விட்டு மன அமைதியுடன் லண்டன் வந்து சேர்ந்தார்கன். இதற்குப் பிறகுதான், பிராங்க் பெசண்ட் அன்னியின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது அப்போதுதான் ஹாரியின் ஹாரோ படிப்பும் முடிந்தது! கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலே ஹாரி படிப்பதற்குச் சென்றார். அன்னிக்கும் பிராங்க் பெசண்ட்டுக்கும் செயிண்ட் வியோனார்ட்ஸ் என்ற இடத்திலே திருமணம் நடந்தது. இப்போதிலிருந்து அன்னியை அன்னி பெசண்ட் என்று அழைத்தார்கள். இங்கிலாந்து நாட்டு நாகரிகப்படி திருமணம் ஆன பெண்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரையும் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால், அன்னி என்ற பண் அன்னி பெசண்ட் ஆனார். திருமணம் ஆன நாளில் இருந்தே அன்னிக்கும் அவரது கணவருக்கும் எந்தவித மனப் பொருத்தமும் இல்லை; ஏன்? பிராங்க் பெசண்ட் மதபோதகராக இருந்ததால், அவரது மனம் பழைமையிலேயே ஊறிக் கிடந்தது. அதனால், அவர் பெண்களை அடிமை என்றே கருதி நடத்தி வந்தார், வீட்டு வேலைகளைச் செய்பவளே பெண்; அவள் வேலைக்காரிகளை வேலை வாங்கத்தான் தகுதி உள்ளவள்: கணவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கடவுளால் உருவாக்கப்பட்ட ஜென்மமே பெண் ஜென்மம்; மஞ்சத்திலே புரள்வதற்கும், அடி உதைகளை வாங்குவதற்கும் உரியவளே பெண்” என்பது பிராங்க் பெசண்ட் பெண்ணினத்தைப் பற்றி கருத்துடையவர்: ஆனால், அன்னிபெசண்ட் அப்படிப்பட்டவள் அல்லள்: அவள் சுதந்தரமாக வளர்ந்தவள்; கட்டுப்பாடு என்ற வேலியே அவள் கண்டவளல்ல; ஆணும் பெண்ணும் சமமே என்ற பண்பாடுடன் பழகியவள்; வீட்டு வேலைகளும் செய்தறியாதவள்; வேலைக்காரியிடம் வேலை வாங்கவே தெரியாதவள்; நூல்களைப் படிப்பதும், மத சம்பந்தமாகவும்: இறை உணர்வோடும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவே பழகியவள். அதனால், கணவன் போக்குக்கும், நினைப்புக்கும் அவனது செயல்கள் விரோதமாகவே இருந்தன. இத்தகைய கொள்கை எதிர்ப்புகள் கணவன்-மனைவிக்கும் இடையே ஆரம்பம் முதலே உருவாகி விட்டதால், இருவரும் இரு துருவங்களாக மாறிடும் நில ஏற்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில் யாரை நோவது? காலத்தை நோவதா? அல்லது அன்னியின் வளரிப்புச் சூழலை நொந்து கொள்வதா? என்று புரியாமல் தம்பதிகள் இடையே மன மாச்சர்யங்கள் வீறிட்டு எழலாயின: குடும்பம், அன்னிக்கு ஒரு நரகமாகவே காட்சியளித்தது. இந்த மனப்போராட்டத்தின் போராட்டத்தின் வேகத்தைத் தணித்துக்கொள்ள அன்னி நூல்களைப் படிப்பதும், அதைக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதுமாக இருந்தாள். இவ்வாறு அன்னிபெசண்ட் எழுதிய சிறு கதைகளை ஃபேமிலி ஹெரால்டு என்ற குடும்பத்தூதன் பத்திரிகைக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தாள். அந்த ஏடு, அவளின் கதைகளை வெளியிட்டு அதற்குரிய பணத்தையும் அனுப்பி வைத்தது. தனது வாழ்விலே தான் சம்பாதித்துப் பெற்ற பணமல்லவா? அதனால், அந்தத் தொகையைக் கண்டு மகிழ்ச்சிப் பெற்று இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள்! சிறுகதை எழுதுவதில் அனுபவம் பெற்ற அன்னி பெசண்ட் நாவலும் எழுதி அதே பத்திரிகைக்கு அனுப்பிய போது, அந்நாவலிலே அரசியல் உணர்வுகள்: ஊடுருவியதால் அதைப் பிரசுரிக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது, ஏன் அப்படி அந்த நாவலில் அரசியலைக் கலந்து எழுதினார்? அப்போதைய இங்கிலாந்து நாட்டின் சமுதாயத்தில் பெண்களுக்குத் தன் நிலையைப் போலவே பிற பெண்களுக்கும் இருந்த அடிமை மனப்பான்மை நிலையைத் தான் அன்னிபெசண்டும் தனது நாவலிலே எதிரொலித்தார்! பெண்கள் திருமணம் ஆகாதபோது வழங்கப்பட்ட சொத்துரிமை, திருமணமான பிறகு பறிபோய்விடும் நிலை இருந்ததை விளக்கி எழுதியிருந்தார். நாகரிகத்தில் சிறந்து விளங்கி, இங்கிலாந்து நாடு: பெண்கள் உரிமையை வழங்க மறுத்ததற்காக வருந்தவில்லை- வெட்கப்படவும் இல்லை. பெண்ணினம், ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையே இருந்தது; அதற்காக யாரும் கண்ணி சிந்தவோ, கவலைப்படுவதாகவோ இல்லை என்பதையே அன்னி பெசண்ட் அந்த நாவலிலே படம் பிடித்துக் காட்டினார். அந்த காட்சிகள் எல்லாம் அரசியல் உணர்வாக இருப்பதாகக் கூறி, ஃபேமிலி ஹெரால்டு பிரசுரிக்க மறுத்து, எழுதிய கதையைத் திருப்பி அனுப்பி விட்டது: இங்கிலாந்து தாட்டு ஆட்சியிலே அப்போது எண்ணற்றோர் இவ்விதச் சமுதாயக் கொடுமைகளுக்குப் பலியாகிக் கொன்டிருந்தார்கள். அதிலே ஒருவராக அன்னி பெசண்டும் விளங்கினார். இந்த வாழ்க்கைப் போராட்டத்திலேயும் அந்தக் கணவனோடு வாழ்ந்து ஓர் ஆண் குழந்தையையும் பெற்றுவிட்டார் என்றால், அவர் எவ்வளவு சகிப்புத் தன்மையோடு வாழ்ந்திருக்கிறார் என்று நம் போன்றோர்க்குப் புரிகிறது அல்லவா? அந்த ஆண் குழந்தைக்கு ஆர்தர்டிக்பை பெசண்ட் என்று பெயரிடப்பட்டது. இக் குழந்தை அன்னியின் மனச்சுமையை ஓரளவு குறைத்தாலும், அந்தப் பிரசவத்தால் அவளது உடல் மிகவும் பலவீனமானது: இந்த நிலையில் வீட்டு வேலைகளும் அதிகரித்து விட்டன! அனைத்தையும் அவளே செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாள்! அந்த பலவீனமான உடல் நிலையிலேயே, அடுத்த ஆண்டில் ஒரு பெண் குழந்தையை அன்னி ஈன்றாள். அக் குழந்தையின் பெயர் மேயல் எமிலி. இவர் தாயாரை இப்படிப்பட்ட கணவன் எதிரில் அழைத்து வைத்துக் கொள்ள விரும்பாத அன்னி பெசண்ட், இரு குழந்தைகள் வேலைகளையும், வழக்கம் போல வீட்டுக்குரிய பணிகளையும் அவளே செய்து மிகவும் நொந்து கொண்டிருந்தாள்! அதே நேரத்தில் அவளது தாயார் எமிலிச்கு நம்பிச்கையான ஒரு வழக்குரைஞர், அந்த அம்மையாரை ஏமாற்றி இருக்கும் பணத்தைப் பறித்துச் சென்று விட்டான்! அதனால் எமிலி கடன் சிக்கலிலே மாட்டிக் கொண்டு மகளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய முடியவில்லை. குடியிருந்த வீட்டையும் எமிலி விற்று விட்டார்! மகன் ஹாரியிடமே சென்றுவிட்டார். மகன் தாயை அன்புடன் இருக்கச் செய்த்போதும்கூட, மகள் கவலையே எமிலிக்கு பெருத்த வேதனையைத் தந்துவிட்டது. இந்த நிலையில் அன்னி பெசண்டின் இரண்டாவது பெண் குழந்தைக்கு மூச்சுக் குழாயில் சளி அடைப்பு: இந்த நிலையிலே அதற்குக் கக்குவான் நோய் இருமி இருமி இளைத்ததுடன் மட்டுமல்ல; பிழைக்குமா அது என்ற சந்தேக நிலையும் ஏற்பட்டுவிட்டது. குழந்தை படும் வேதனையைக் கண்டு கண்ணிர் விட்டவாறே, இறக்கும் போதாவது அக் குழந்தை நிம்மதியாகச் சாகட்டுமே என்று எண்ணிய அன்னி, அக்குழந்தை சாக மயக்க மருந்து கொடுத்து விட்டாள். மயக்க மருந்து குழந்தையின் உடம்புக்குள் சென்றதும் குழந்தை சாகவில்ல்ை மாறாக, குழந்தையின் நோய் குணமானது; சளி அடைப்பு அற்றுப் போயிற்று பிழைத்து விட்டது குழந்தை! இதை அறிந்து அன்னி இறைவனுக்கு நன்றி கூறி, நிம்மதியானாள்: குழந்தை குணமான பின்பு அன்னியே நோயில் வீழ்ந்தாள்: படுத்தப் படுக்கையானாள்; நினைவை இழந்தார்; சிகிச்சையின் பலத்தால் அன்னி மீண்டாள்! நோய் அதிகமாகி எழுந்தபோது, அன்னியின் என்னங்களே மாறிவிட்டன: மத நம்பிக்கையிலும் இறை வழிபாட்டிலும் தளர்வு உண்டாகி, விரக்தி விளைந்து, அதுவே மத நம்பிக்கைக்கு விரோதமாகவே மாறிவிட்டது “என் வாழ்வில் மன அமைதி இல்லை. ஏதுமறியா என் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாகி உடல் மெலிந்து உருக்குலைந்தது. என் தாயாரோ, துரோகி ஒருவனால் ஏமாற்றப்பட்டுக் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். ஒளிமிகுந்த என் குறுகிய வாழ்வு அடிமைத் தளையில் சிக்கிச் சீரழிந்தது. நானும் மூன்றாண்டுகளுக்கு மேல் நோயால் அவதிப்பட்டேன். என்னுடைய மத நம்பிக்கை இன்று எனக்கு விரோதியாகி இருக்கிறது. நான் ஆண்டவனைத் தொழுதிட மறந்ததில்லை. அதாவது ஏழைகளுக்கு உதலிட மறந்ததில்லை. ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவிட மறுத்ததில்லை. இருந்தும் அவதிக்கு ஆளானேன்” என்று அன்னி பெசனண்ட் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் அவர் அனுபவித்த கஷ்டங்களே, இறைவனிடம் அன்னி கொண்டிருந்த அணைக்க முடியாத நம்பிக்கையைத் தகர்த்தன. கடவுள் என்பவர் ஒருவர் உண்டா? என்று அன்னி சந்தேகப்படலானார். மதகுருவாகப் பணியாற்றிவரும் பிராங்க் பெசண்ட். தனது மனைவி அன்னியும், மகளும் நோயினால் கஷ்டப்பட்ட முழு விவரத்தையும் அறிவார். ஆனால், ஒரு மதகுருவுக்கு, குறிப்பாக ஒரு கிறித்துவனுக்கு இருக்க வேண்டிய சாதாரண இரக்கத்தையும் அவர் இழந்துவிட்ட மிருகமானார். இரக்கம்தான் இல்லை-போகட்டும், மனைவி, மகள் என்ற பாசத்தோடு இலை மறை காய் போன்ற உதவியையாவது செய்திருக்கலாம் அல்ல்வா? குடும்பத்தில் கணவன் சரியில்லை; பெற்ற பெண் குழந்தை நோயிலே அகப்பட்டு செத்துப் பிழைத்த அபாய நிலையிலே இருந்து மீண்டது: பொழுது விடிந்து பொழுது போனால் கணவன்-மனைவியிடையே கடும் சச்சரவு சண்டை-கூச்சல்-குழப்பம். பெற்ற தாய் எமிலியிடமிருந்து, நம்பிக்கைத் துரோகி ஒருவன் பணப்பறிப்பு செய்து கொண்டு ஓடிவிட்ட துயரம்: அன்னி படுத்தப் படுக்கையாகவே படுத்துவிட்ட நோயின் கடுந்தாக்குதல்; அம்மா கடனுக்காகக் குடியிருந்த வீட்டையே விற்றுக் கடனைத் தீர்த்துவிட்டு, படுத்து உறங்க சொந்த வீடும் இல்லாத அவலம். இவ்வளவு கொடுமைகளும், துன்பங்களும் ஒன்று கூடி, அன்னியை விரக்தியின் விளிம்புக்கு அழைத்துச் சென்று விட்டதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை ஒன்றுதான் முடிவான வழியென்ற முடிவுக்கே வந்துவிட்டார். இதன் எதிரொலி என்ன தெரியுமா? குளோரோபாரம் என்னும் மயக்க மருத்தைக்கொண்டு உயிரை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். அந்த மருந்து இருந்த கண்ணாடி புட்டியை எடுத்து அதன் மூடியைத் திறந்து விட்டார்: அப்போது அவரது உள்மனம் எதிரொலித்தது. "அன்னி நீ ஒரு கோழை! இறந்த கொள்கைகளுக்காக ஆவியைத் தியாசம் செய்யவும் தயாராக இருப்பேன் என்று கூறினாயே! அந்த முடிவு என்னாயிற்று சிறிது கலமே நிற்கக்கூடிய இந்த துன்பத்தைக் கண்டா நீ இறந்து போக நினக்கிறாய்? என்று அன்னியின் மனமே வளைக்கேட்டது. உள் மனத்தின் எதிரொலியைக் கேட்டு அன்னி மனம் மாறினார். தற்கொலை கோழைத்தனம். அத்துடன் பயங்கமான செயல் என்பதையும் அவர் உணர்ந்தார். அந்த எண்ணத்தைக் கைவிட்டார். கையில் வைத்திருந்த பாட்டிலைத் தாக்கி எறிந்தார். மயக்கமாகக் கீழே சாய்ந்தார். நெடு நேரத்திற்குப் பிறகே அவர் மயக்கம் தெளிந்தது. வாழ்க்கை ஒரு கரடுமுரடான பாதை அதன் மீது நடத்தால் கல்லும் முள்ளும் குத்திக்காலைக் காயப்படுத்தாமலா இருக்கும்? இந்த துன்பங்கனை எதிர்த்துக் கடப்பதே வாழ்க்கைப் பயணம் என்று உணர்ந்து கொண்ட அன்னி ஒருவாறு தெளிந்து எழுந்து கணவன்-மனைவி இரு துருவங்கள் என்ற பாதையிலே தனது வழிப் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால், துருவங்கள் இரண்டும் ஒரு சேரமுடியாது என்பதை உணர்த்தே நடக்கலானார்! மதம் வெறுப்பு! விவாகரத்து தீர்ப்பு! இரு துருவங்கள் இணைய முடியாது என்ற வாழ்க்கைப் பயணத்தில் நடத்து கொண்டிருந்த அன்னி, மீண்டும் கணவருடன் ‘சிட்செ’ என்ற கிராமத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். பிராங்பெசண்ட் அதே கிராமத்திற்கு மதகுருவாக நியமிக்கப்பட்டதால் அன்னி அவருடன் அந்த இடத்தில் வசித்தார். இப்போது மதகுரு சம்பளம், நானுாற்றுப் பத்துப் டவுனாக உயர்ந்தது: என்ன உயர்ந்தது என்ன பயன்? அன்னியின் வாழ்வில் அமைதி அழிந்தது; கணவருடன் சுமூகமான தொடர்பு இல்லை. அடிமையாக அவரிடம் எத்தனை நாட்களுக்கு சண்டை சச்சரவுகளோடு, துன்ப வாழ்க்கை வாழ முடியும்? மதம்தான் அன்னி வாழ்வின் துயரங்களுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்! இல்லற வாழ்வுக்கு வந்த இடுக்கண்களுக்குக் காரணமே மதம்தான் என்று உணர்ந்தார்: கிறித்துவ மதத்திடம் அவர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் கொண்டிருந்தாரோ, அவ்வளவும் அவருக்கு மத எதிர்ப்பாக உருவெடுத்து விட்டது. நாளாகவாக அந்த எதிர்ப்பு மதத்தை விட்டே விலகிச் செல்லும் வெறுப்பாக மாறியது. சிடசே கிராமத்து மாதாகோவில் மிக அழகானது. இக்கோவிலுக்கு அருகே மதகுருவுக்கும் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டில்தான் அன்னியும் கணவருடன் குடியேறி வாழ்ந்தார். அந்த கிராமம் ஒரு சிறிய ஊர்: படித்தவர்கள் மிகமிகக் குறைவு. உழவர் பெருமக்களும், தொழிலாளர்களும்தான் அங்கே அதிகமாக வாழ்ந்தார்கள் சில சிறு வியாபாரிகள், ஒன்றிரண்டு பேர் குடி இருந்தார்கள். தன்னைப் போல மற்றொரு மதகுரு குடும்பத்துடன்தான் அன்னி தொடர்பு வேறு யாரும் பேச்சுத் துணைக் குக் கிடையாது. மற்றவர்களுடன் பழக்க வழக்கத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கணவருடைய கட்டளை: அன்னி வழக்கம்போல் புத்தகங்களைப் படிக்க இப்போது ஒய்வு நிரம்பக் கிடைத்தது காரணம், வீட்டு வேலை குறைவுதான்! இந்த ஓய்வுநேரம் அவருக்குக் கிறித்துவ மத எதிர்ப்பு நூல்களைப் படிக்க, சிந்திக்க கட்டுரைகள், கதைகள் எழுதும் வாய்ப்பாக அமைந்தன. இந்த சமயத்தில் அன்னிக்கு உடல் நலம் பாதிப்படைந்தது. மருத்துவத்திற்காக அவர் லண்டனில் இருந்த தாய் எமிலி வீட்டிற்குச் சென்றார். இலண்டனில் நூற்களைப் படிக்கப் போதிய நேரம் கிடைத்ததால் இஸ்லாம், பெளத்தம், இந்து மதம் ஜைன மதம், கிறிஸ்துவ எதிர்ப்பு போன்ற நூற்களைப் படித்து, தனது சிந்தனையை வளர்த்துக் கொண்டார். இந்த நூல்களைப் படித்ததால் அவருக்கு மத நம்பிக்கை தளர்ந்து வந்தது. இந்த நேரத்தில் தாமஸ் ஸ்காட் என்னும் ஒரு முதிய பகுத்தறிவாளர் தொடர்பு வீடேறி கிடைத்தது ஸ்காட் மத எதிர்ப்புக் கொள்கைகள் அன்னியினுடைய எண்ணங்கட்கு ஏற்றார் போலவே அமைந்தன. இதை உணர்ந்த அந்த மூதறிஞர், அன்னி தனது கருத்துக்களை கட்டுரை உருவில் எழுதித் தந்தால் அதைப் பத்திரிகையிலே வெளிவர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்! அன்னி அதற்கு ஒப்புதல் தந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்தார். அங்கே கிறித்துவ மதக் கொள்கைகளை மறுத்துக் கட்டுரை எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பினார், அக் கட்டுரையில் கிறித்துவக் கொள்கைகனை மறுத்தார் என்றாலும், அவர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்று திட்டவில்லை: நாத்திகவாதம் நெடியே இல்லாமல் எழுதியிருந்தார். அன்னி மாதா கோவிலுக்குச் சென்று இன்றவழிபாடுகளில் கலந்து கொண்டார். என்றாலும், பிற கூட்டு வழிபாட்டிலோ, மற்றக் கோயில் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்தக் காரணம், ஏற்கனவே மூண்டிருந்த கணவன் மனைவி எதிர்ப்புப் பிரச்னைகளுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல மோதியது. பூசலும் பிணக்கும் சேர்ந்து அவர்களது இணக்கத்தை முரித்தன! இந்த மனக் குமுறல்கள் இருவரிடையே நாளா வட்டத்தில் வளர்ந்தன. மத குரு மனைவியே கோவில் சடங்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததை கிராம மக்கள் அவரிடமே சுட்டிக் காட்டி வாதம் செய்தார்கள்! இதை பிராங்க் தனது பணிக்குரிய ஓர் அவமானமாகக் கருதி வீட்டில் குழப்பம் செய்தார்! ஆனாலும், அன்னி இதைப் பொருட்படுத்த வில்லை. மாதா கோவிலுக்கு அன்னி சென்றார்: மதச் சடங்குகளில் கலந்துகொள்ள அல்ல; இசைப் பயிற்சி பெற்றிட: ஆப்போது கோவிலில் யாரும் இல்லை! கோவில் கதவுகளைத் தாழிட்டார்! கோவில் மேடை மீது ஏறினாள் யாருமே இல்லாத ஆரங்கத்திலே அன்னி பேசினார்! தங்கு தடை இல்லை! அவை நடுக்கம் இல்லை; சொற்கள் வானத்திலே இருந்து பொழியும் மழைபோல கொட்டின! சொற்பொழிவை முடித்தார்: தாழ்களை அகற்றினார் அங்கே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து தனது பேச்சின் தன்மையைக் கண்டு வியந்தார். தன்னால் பலர் முன்னிலையில் பேசமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்: தாமஸ் ஸ்காட்டு அன்னியிடம் தந்த வாக்குறுதிப்படி கட்டுரை பத்திரிகையில் வெளிவந்ததைக்கண்டார். அந்தக் கட்டுரை கிறித்துவ எதிர்ப்புக் கட்டுரை என்பதால், அது அன்னி பெயராலே வெளியிடப்படவில்லை. இந்தக் கட்டுரையை பெசண்ட் உறவினர் ஒருவர் படித்துவிட்டார்; என்றாலும் அதன் எந்த ஒரு கருத்தையும் அவர் எதிர்க்கவில்லை. மற்றவர்கள் படித்தால் என்ன நேரிடுமோ என்று மட்டுமே வருத்தமடைந்தார். பிராங்க் பெசண்டிடமும், அன்னியிடமும் கட்டுரைப் பற்றி எடுத்துரைத்தார். இது போன்ற கருத்துக்களை எழுத வேண்டாம் என்று அன்னியைக் கேட்டுக் கொண்டார். அன்னி அவரது அறிவுரையை ஏற்க மறுத்து விட்டார். அடுத்து ஒரு கட்டுரையை அதே பாணியில் எழுதி ஸ்காட்டுக்கு அனுப்பி வெளியிட வைத்தார். கோவிலில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே பலர் பகை அன்னிக்கு வாய்த்தது. அன்னி உடல் நலம் மீண்டும் பாதித்தது. அதனால் தனது மாமனார் இல்லத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றார். குழந்தைகளையும் உடன் அழைத்துக் கொண்டு போய் தங்கி வைத்தியம் செய்தும், உடல் நலம் பெறவில்லை. அதனால், குழந்தைகளோடு லண்டனில் உள்ள தனது தாய் வீடு சென்றார். தக்க மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றார். அன்னியின் உடல் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு இதய நோயும், தரம்புத் தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதய பாதிப்பு உயிருக்கு ஆபத்தை உருவாக்குவது என்று மருத்துவர் கூறியதால், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு நடந்தன. தாய் வீட்டில் இருந்தவாறே மருத்துவம் செய்து கொண்டிருந்தார். பிராங்க பெசண்டிடம், மீண்டும் உறவினர்கள் திரண்டு வந்து அன்னி கட்டுரை பற்றி கடும்வாக்கு வாதம் செய்தார்கள். உடனே பெசண்ட் மனைவிக்குக்கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்: “அன்னி உனக்கு மதக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. ஊராருக்காகவாவது நீ மதச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். கூட்டு வழிபாட்டிலும் தொடர்ந்து பங்கு பெற வேண்டும்,” “இந்த ஏற்பாட்டிற்கு நீ சம்மதித்தால் திரும்பி வா! இல்லாவிட்டால் அங்கேயே தங்கி விடலாம்” என்று கண்டிப்பாக எழுதிவிட்டார். அந்தக் கடிதத்தைக் கண்ட அன்னி, ஒரு முடிவுக்கு வந்தார். மறுபடியும் கூலிகொடுத்துச் சூனியம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் கணவரிடம் திரும்பிப் போகக்கூடாது என்ற கண்டிப்பான தீர்மானித்துக்கு வந்தார். தனது மனதுக்குப் பிடிக்காத மதச் சடங்குகளிலும், கூட்டுக் கூட்டத்திலும் கணவனுக்காகக் கலந்து கொள்வது தனது உள் மனதுக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது என்றும், அது வெளவால் வாழ்க்கைக்குச் சமமானது என்றும் கருதி, மேற்கண்ட கண்டிப்பான முடிவை மேற் கொண்டார். தாய் வீட்டிலேயே தங்கி, வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்க முனைந்தார். இந்த முடிவைக் கண்ட எமிலி மனம் கலங்கினார். இருபத்தாறு வயது கூட ஆகாத தனது மகளின் வாழ்வு இப்படித் தலைகீழாக மாறிவிட்டதே என வருந்தினார்: கண்ணிக் விட்டார். அன்னியின் கால்கள் முன்பே மண்டியிட்டுக் கதறி, “அன்னி உனது முடிவை மாற்றிக் கொள்ளம்மா” என்று மன்றாடினார் எமிலி. “அம்மா, பெசண்ட்டை விட்டுத் தணியாகப் பிரிந்து வாழ்ந்தால் தானம்மா எனக்கு மன நிம்மதி கிடைக்கும்: அடிக்கடி நோய் வந்து என்னை வாட்டிட எனது மன வேதனைதான் காரணம்! அன்புக் காட்டாத கணவன் ஒருவரிடம் வாழ்வதைவிட நரகமே, மேலம்மா நெருப்பிலே கூடத் தூங்கி விடலாம்; இந்த சர்வாதிகார நெருப்பிலே படுக்கமுடியாது மறுபடியும் நான் கணவனிடம் போய் வாழ்வது, பாம்புடன் கூடிக்கலந்து வாழ்வதற்குச் சமம்! எப்போது அந்த ஆணாதிக்கப் பாம்பு தனது நச்சுப் பல்லால் கொத்திடுமோ என்று பயந்து பயந்து சாகின்ற வாழ்வை எத்தனை நாட்களுக்கு என்னை அனுபவிக்கச் சொல்கிறாய்?” என்று கண்ணிர் விட்டபடியே பெற்ற தாயின் பாதங்களைப் பிடித்துக் கதறி அழுதாள் அன்னி! இந்த இளம் வயதிலே வாழாவெட்டி என்ற பெயரோடு நீ இருந்தால் கூட, இந்த உலகம் தூற்றுமே உன் பெயருக்குப் பழிவந்து சேருமே என்றுதான் அஞ்சுகிறேன் அன்னி, என்று எமிலி உருகிக் கதறிக் கண்ணிர் விட்டாள். தாயும்-மகளும் இப்படி மாறி மாறி அழுகின்ற சோகத்தைக் கண்டு, இரும்பு கூட தேய்ந்து தேய்ந்து கண்ணிர் விடுமோ” என்ற திலைதான் உருவானது. உடன் பிறந்த அண்ணன் ஹாரி தழுதழுத்தாரே தவிர, ஓர் ஆறுதலும் ஒப்புக்காகக் கூடச் சொல்லவில்லை. ஆனால, பிராங்க் பெசன்டிடம் விவாகரத்து பெற்றே தீர வேண்டும் என்ற முடிவிலே அவரும் இருந்தார். நீதிமன்றம் சென்றது அன்னி விவாகரத்து வழக்கு: விவாகரத்து பெற்றார் தனது கணவரிடம் இருந்து அன்னி. ஆனால், ஆண் குழந்தை ஆர்தர் தந்தையிடமும், பென் குழந்தை மேபல் எமிலி தாயிடமும் இருக்க வேண்டும் என்றும், கணவர் பிராங்க், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாகத் தர வேண்டும் என்றும் தீர்ப்புக்கூறப்பட்டது: பிள்ளைகள் கதறின: பிராங்குக்கு அப்போதும் கல்மணமே காட்சி தந்தது. அன்னிக்கு ஜீவனாம்சம் பணம் வாழ்க்கையை நடத்தப் போதவில்லை என்பதை அறிந்த அண்ணன் ஹாரி, ஒரு நிபந்தனையுடன் வீடு ஒன்றைக் கொடுக்க முன் வந்தார்: அந்த நிபந்தனை என்ன? "மத எதிர்ப்பாளர்களிடம் தொடர்புகொள்ளக்கூடாது மதத்தைப்பற்றி எதுவும் பேசக் கூடாது, என்பதே அது. எந்த நிபந்தனைக்கும் இனிமேல் கட்டுப்படக்கூடாது; அடிமையாகக் கூடாது என்ற முடிவை மேற்கொண்ட அன்னி, தனது அண்ணன் நிபந்தனையையும் ஏற்க மறுத்தார்: எந்த நிபந்தனைக்கு அடிமையானாலும் சரி, அந்த வாழ்க்கை இருண்ட வீடாகவே இருக்கும். கூட்டில் இருந்து விடுதலைப் பெற்றால்தான் அந்த வாழ்வு சுதந்திரமாக இருக்கும். உண்ண உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, அடைத்து வைத்து அடிமைப்படுத்தாமல் இருந்தாலே போதும். எழிலான சிறகுகளுடன் சிங்காரச்சிறகடித்து சுதந்தர வானிலை பறப்பதுதான் ஏற்றமிகுவாழ்க்கை! சுதந்தரம் என்பது, மனிதன் செய்ய வேண்டிய மாமல்லபுரம்: அஜந்தா, எல்லோரா, சிற்ப ஓவிய எண்ணங்களின் விலை மதிக்க முடியாத ஒன்று: மாண்பு அது! செயல் அரிதாக இருக்கலாம். உலகம் போற்றிப் புகழ்ந்து பாராட்டிடும் பயன்பாடல்லவா? அந்த அடிப்படை உரிமையை யார் பறித்தாலும் விடமாட்டேன்! என்று அன்னி தனக்குத் தானே மனதிலே சிந்தனை ஓவியமாக்கிக் கொண்டார்: அந்த எழுச்சி எண்ணத்தோடு அன்னி தனது தாயின் வீட்டுக்கு அருகே வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக்கொண்டு, தனது மகள் மேபல் எமிலியுடன் தங்கினாள்! வேலை ஏதாவது ஒன்றில் சேரலாம்; தகுந்த வருவாய்க்கு வழி தேடலாம் என்று பலவகையிலும் முயற்சி செய்தார்! ஆனால், அவர் முயற்சி தோல்வியே தந்தது; அதனால், தனக்குத் தெரிந்த தையல் வேலையைச் சுதந்தரமாகச் செய்தார். அந்த தொழிலில் போதிய வருமானம் வரவில்லை. வேறு வேலை தேடினார்: அன்னியின் மகளுக்கும் அவருக்கும் உணவும், தங்கிட இடமும் கொடுத்து மதகுரு ஒருவர் அவரை வேலையில் அமர்த்திக் கொண்டார்; ஊதியமும் அதுவாகவே அமைந்தது. மூன்று மாதங்கள் ஆனதும், அன்னியின் தாயார் எமிலிக்கு உடல்நலமில்லை என்றதும், அன்னி லண்டனிலே உள்ள தமையன் வீட்டுக்குச் சென்று, தனது தாயாரின் அருகிருத்து, அல்லும் பகலும் பணிவிடை செய்து கொண்டிருந்தார். எமிலி உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவந்தது. ஆனாலும், மீண்டும் எமிலி தேசப்வாய் பட்டார். மரணம் அவரை நெருங்கி விட்டதைக் கண்ட அவரது தாயார், மகள் அன்னிக்கு எந்த ஆதரவையும் தேடி வைக்கவில்லையே என்ற கவலையுடன் மாண்டு போனார்: தாயை இழந்த அன்னியும்-ஹாரியும் கதறிக் கண்ணி விட்டார்கள். அன்னிபெசண்ட் ’நா’வன்மைக்குப் பெர்னாட்ஷா-பிராட்லா பாராட்டு தாயை இழந்த அன்னி நடைப்பிணம் போலவே நடமாடினார் மகன் ஆர்தர் பற்றிய மனக்கவலை ஓர்புறம்: தாய் பிரிவு மறுபுறம்: கணவனது தொல்லைகள் இன்னொரு புறம் மகள் எமிலியை எப்படி வளர்ப்பது என்ற வாட்டம் வேறோர் புறம் மத எதிர்ப்புகள் அடுத் தோர் புறம் எதிர்கால வாழ்வுக் கவலைகள் எதிர்புறம்: இவ்வாறு கவலை என்ற கடலிலே மிதக்கும் மரத் தெப்பம் போல அலைந்தது அவனது மனம்! எந்த ஆதரவும் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கும் அன்னியைத் தேற்றி ஆதரவளிக்க இரண்டு பேர்கள் மட்டுமே இருத்தார்கள்! வேறு யாருமல்ல அவர்கள்! அன்னி எழுதிய கட்டுரைகளைப் பத்திரிகையிலே வெளியிட்டுப் புகழ் தேடித் தந்தாரே தாமஸ் ஸ்காட், அவரும். அவரது மனைவியும் தான் அந்த இருவர்! தாமஸ் ஸ்காட், அன்னியின் மன வேதனையிலே இருந்து மீட்டிட, தனது நூலகத்திற்கு அழைத்தார்! அன்னி, தனது மகளுடன் சென்று புத்தகங்களைப் படித்துத் தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொண்டு, தாய் வருத்தத்தை நீக்கிக் கொண்டார். கட்டுரைகள், கதைகள் எழுதுவார்! அவற்றை ஸ்காட்டிடம் கொடுப்பார்! அவர் பத்திரிகையிலே தொடர்த்து வெளியிடுவார் பணம் வரும் அதைக் கொண்டு அன்னி தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்: மகள் எமிலியை அன்புடன் வளர்ப்பார்! தாயார் எமிலி மகள் அன்னியை எவ்வாறு அருமையுடன் வளர்த்தாரோ, அதைப் போலவே தனது மகள் எமிலியையும் தாயார் நினைப்புடன் வளர்ந்து வந்தார் கூட்டுக் குஞ்சு ஒன்றைத் தாய்ப்பறவை எப்படி வளர்க்குமோ அப்படியே மகளையும் வளர்த்தார் அன்னி! இத்தகைய இடுக்கண்கள் சூழ்ந்த நேரத்தில்தான். சார்லஸ் பிராட்லா என்ற ஒரு நாவலர் நட்பு அன்னிக்குக் கிடைத்தது. சார்லஸ் பிராட்லா யார்? . சார்பின் பிராட்லா ஒரு சிறந்த கிறிஸ்துவமத எதிர்ப்புச் சிந்தனையாளர்: பேரறிஞர்; சிறந்த நாவன்மை படைத்த அற்புதமான சொற்பொழிவாளர்: சீர்திருத்தச் செம்மல்; மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பேசக்கூடிய வலமை வாய்ந்தவர்; ஏழைகளின் ஏந்தல்: உழைப்பாளிகளின் தோழர்! அசர்லஸ் பிராட்லா பேசுகிறார் என்றால், கல்விமான்கள் படையே திரண்டு வந்து கேட்பார்கள்; இங்கிலாந்து நாட்டு இங்கர்சால் என்று அவரை இயம்பலாம். அத்தகைய ஒருவர் பேச்சை அன்னி இதற்கு முன்பு செவிமடுத்தது இல்லை; அவரது நட்பு அன்னிக்கு எதிர்பாரா விதமாகக் கிடைத்தது: மூதாதையரும்-இயேசுவின் பிறப்பும் என்ற தலைப்பிலே ஓர் அரிய சொற்பொழிவை பிராட்ல ஆற்றினார். அந்தப் பேச்சைக் கேட்கும் வரய்ப்பு அன்னிக்கு ஏற்பட்டது: அன்னியை அவரது அறிவாற்றல் ஈர்த்துவிட்டது. சார்லஸ் பிராட்லாவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றும் எண்ணம் அன்று முதல் அன்னிக்கு வந்தது. ஏழை எளியவர்கள் பிராட்லாவிடம் திரளாகக் கூடி வந்து பழகும் பழக்கத்தையும் அன்னி நேரில் பார்த்ததால், நம்மாலான பணிகளையும் இந்த ஏழை மக்கட்குச் செய்யலாமே என்ற லட்சிமும் அவருக்கு ஏற்பட்டது: ஆனால், பிராட்லா அன்னியைத் தன் கூடச் சேரக் கூடாது என்று மறுத்தார். காரணம் நான் ஓர் ஆண், என்னை மதம் சார்பாக எதிர்ப்டோர் ஏராளம் பேர்! அதனால் அவர்கள் தொல்லைகளை ஏற்றுப் போராடி வருகிறேன் நீ ஒரு பெண் உன்னால் சமாளிக்க முடியாது. வம்புகளை விலை கொடுத்து வாங்காதீர் என்று கருணையால் அவர் மறுத்தார்-எச்சரிக்கையும் செய்தார்! கேட்கவில்லை அன்னி பிடிவாதமாக, தங்களுடன் சேர்ந்துதான். நானும் மத எதிர்ப்பிலே ஈடுபடுவேன்: எனக்கும் அதே எண்ணம் உண்டு தடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அன்னி! “தேசிய சீர்திருத்தவாதி” என்ற பத்திரிகையை அப்போது பிராட்லா தடத்தி வந்தார் அன்னி அந்த ஏட்டிலே தனது கருத்துக்கனை அச்சமின்றித் தாராளமாக எழுதி வந்தார்! அதனால் ஓரளவு ஊதியமும் வந்து கொண்டிருந்தது மகளையும், குடும்பத்தையும் நடத்தினார். பிராட்லா பத்திரிகையில் மதச் சீர்திருத்தம், தொழிலாளர் துறை மாற்றங்கள், மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து எழுதி வந்ததால் பழைமை வாதிகளது பகை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது! பிராட்லா பேசும் கூட்டங்களுக்கு எல்லாம் அன்னி உடன் செல்வார்; அவருக்கும் பேச்சாற்றல் இயற்கையாகவே இருந்ததால் பிராட்லாவின் மாணவியானார்: அவருக்கும் மேடைப் பேச்சு விருப்பம் ஏற்பட்டது. அதற்கேற்ப ஒரு வாய்ப்பும் வந்தது! “பெண்கள் ஆரசியல் நிலை” என்ற தலைப்பில் உரை யாற்றிடக் கட்டுறவு நிறுவனம்சார்பாக அழைப்புவந்ததை அன்னி ஏற்றுக் கொண்டார். அச்சம் தவழும் உள்ளத்துடன் பேசச் சென்றார்: அன்னி ஆற்றிய உரையைக் கண்டு பலர் வியந்தார்கள்; பாராட்டினார்கள்! பிராட்லாவும் கேட்டார்: அற்புதம் என்று புகழ்ந்தார்: அன்று முதல் அவருடன் அன்னியும் சேர்ந்தார்! மேடைகளிலே தென்றலும்-புயலும் சேர்ந்து வீச ஆரம்பித்தன; அன்னிக்கு எதிர்ப்புகள் மலைபோல உயர்ந்து நின்றன. போற்றுதல்களும் குவிந்தன! தூற்றுதல்களும் பெருகின! சீர்திருத்தம் பேசுவோர்க்கு உலகில் வேறு என்ன கிடைத்திருக்கின்றன; கல்லடிகளும், சொல்லடிகளும், எரிநெகுப்புகளும், நாடு கடத்தல்களும், புதை குழிகளும், சித்திர வதைகளும் தானே! அதே திலையினை அன்னியும் பெற்றார். இந்தவித எதிர்ப்புகளால் மனந்தளரவில்லை அன்னி! மாறாக மனவுரமே பெற்றார்! மாலைகள் வந்து குவிந்த போது மன ஆணவம் பெற்றாரில்லை; மாறாக, மேலும் உற்சாக ஊக்கமடைந்தார்: குறிப்பாகக் கூறுவதானால், இங்கிலாந்து நாடு அன்னிக்கு பெரும்புகழைத் திரட்டி வழங்கியது எனலாம். அதேபோல, ஏளனங்களால், இகழ்மொழிகளால், வசை மழைகளால் பகையும் நெருப்பு போல எரிந்தது; புகை மூட்டங்கள் படர்ந்தன! அன்னியின் உறவுமுறைகள் அவரை ஒதுக்கி வைத்தன! பேச்சும், போக்குவரத்தும் ஏதும் அவர்களிடம் இல்லாமற் போயின. பெண்ணல்ல இவள், மதத்தைப் புழுதி வாறித் தூற்றும் பிசாசு, சாத்தான், பேய் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து விட்டார்கள். ஆனால், அன்னியின் அப்பாவுடன் பிறந்த அத்தை மேரியின் பிரான்சன் மோரிஸ் என்பவர் மட்டும் அவர் வீட்டிற்கே வந்து பாராட்டி எமிலி சிறுமியைப் பாதுகாத்து வர அன்னியுடன் தங்கிவிட்டார். மேபல் எமிலி, கல்வி கற்க எல்லா ஏற்படுகளையும் அன்னி செய்தார்; பள்ளியில் சேர்த்தார் தனது தாய் தன்னைக் கல்வி கற்க என்னென்ன ஏற்பாடுகளைச் செய்தாரோ, அதுபோலவே மகள் எமிவிக்கும் எல்லாம் செய்தார். எதிர்ப்புக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி மோதியும் கூட, அன்னி அஞ்சா நெஞ்சுடன் தனது பணிகளைச் செய்து வருவதைக் கண்ட அவரது எதிரிகள் ஒன்று கூடி பிராங்க் பெசண்டிடம் சென்று கலகமூட்டினார்கள்! பிராங்க் அன்னி மீது நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தொடுத்தார் அதில், "அன்னி மதக்கொள்கைகனில் தம்பிக்கை இல்லாதவர். அவரிடம் என் மகள் இருந்தால் தாய்ப் பழக்கமே மகளுக்கும் வந்து விடும். அதனால் என் மகள் எதிர்கால மத நம்பிக்கை கெட்டுகிடும். எனது மகளை என்னிடமே அனுப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார். வழக்கும் விசாரணைக்கு வந்தது! அன்னி தனக்காக அவரே வழக்குமன்றத்தில் வாதாடினார்! இருந்தும் தீர்ப்பு அன்னிக்குப் பாதகமாகி. மகளைத் தந்தையிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பானது மகள் பிரிக்கப்பட்ட அன்னி மனம்-தீப்பட்ட புழுபோல மாறியது: அன்னிக்கு வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சத் தொகையும் பிராங்க்கால் நிறுத்தப்பட்டுவிட்டது. மகள் பிரிவு ஏக்கம் வேறு இந்த நில்லயில் கீல்வாத நோகம் வந்தது அவருக்கு: அவ்வப்போது பிரித்த இரண்டு குழந்தைகளையும் அன்னி சென்று பார்த்துவிட்டு ஒருவித மனத் திருப்தியோடு திருப்புவார். அதற்கும் பிராங்க் தடை ஏற்படுத்தி விட்டார். அத்தத் தடையை அன்னி வழக்கு மன்றத்திலே தகர்த்தார். இருத்தும் கூட, பிராங்க் பீடிவாதமாக, தனது பின்னைகளைப் பார்க்க வரக்கூடாது என்று சொந்த பலத்தைக் காட்டி அன்னிக்கு வேதனைகளை உருவாக்கினார். அதனால் அந்தத்தாய், பெற்ற பிள்ளைகனைப் போய் பார்ப்பதை அறவே நிறுத்திக் கொண்டு, என்றாவது ஒரு நாள் பிள்ளைகள் தாயைத் தேடி வரத்தான் செய்வர் என்ற நம்பிக்கையிலே இருந்தபோது, அவர்கள். கருத்து தெரித்தவுடன் தாய் பக்கமே வந்து சேர்ந்தார்கள். இலண்டன் பல்கலைக்கழகம் பெண் கல்வி பற்றி ஒரு திட்டம் அறிவித்தது. அது பெண்கள் படித்து ப்ட்டம் பெறுவதற்கான் கல்வித் திட்டம். அன்னி அந்தத் திட்டப்படி மெட்ரிகுலேஷன் படிப்பில் சேர்த்து முதல் தரமாகத் தேர்வு பெற்றார். பிறகு, தொடர்ந்து பி.எஸ்.சி. பட்டம் பெற அதே திட்டப்படி சேர்ந்த படித்தார். அவரால் அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. காரணம், மத எதிர்ப்பு செய்து வரும் அன்னிக்கு எதிரானக் கருத்துடையவர்கள் பல்கலைக் கழகத்திலே அதிகமாக இருந்தார்கன். அதனால் பட்டம் பெறமுடியாமற் போய்விட்டது. வழக்கம் போல மேடைப் பேச்சாற்றுவதையும் பத்திரிகையில் எழுதுவதையும் மட்டும் அவர் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார், பிராட்லாவுடன் சேர்ந்து பழையபடி சொற்பொழிவாற்றி வந்தார். அன்னியை அறியாதார் இங்கிலாந்து நாட்டிலே எவரும் இல்லை. அந்த அளவுக்குப் பிராட்லாவுடன் பணியாற்றி வந்தார். தலைசிறந்த பேச்சாளர்களிலே அன்னியும் ஒருவர்-என்ற பெயரைப் பெற்றிருந்தார். எவ்வளவுதான் சிறந்த பேச்சாளராக இருந்தாலும், பிராட்லர் அரசியல் பிற்போக்குவாதி என்ற பெயரைப் பெற்றுவிட்டார் காரணம், வளர்ந்துவரும் பொதுவுடைமை தத்துவங்கட்கு அவர் பரம விரோதி: பொதுவுடைமைக் கொள்கைகளை வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், அதை வன்மையாகத் தாக்கிப் பேசுவார். மார்க்சீயத் தொண்டர்களும் பிராட்லா கொள்கைகளைத் தாக்கிப் பேசுவார்கள். இருந்தாலும், பிராட்லா “நா” வன்மையிடம் அவர்கள் பேச்சு எடுபடவில்லை: தோல்வியே கண்டது. வளர்ந்து வரும் எந்த கொள்கைக்கும் மக்களிடையே ஒரு புது மவுசு உண்டல்லவா? அதைப் பிராட்லா உணரவில்லை. பொதுவுடைமை எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பிராட்லா வன்மையாகச் செய்து வருவதைக் கண்ட அவருடைய நண்பர்கள் பலர் அவரை விட்டுப் பிரிந்து போனார்கள். அவர்களிலே அன்னியும் ஒருவராக விளங்கினார்-ஏன்? மார்க்ஸ் தத்துவங்கள் இங்கிலாந்து நாட்டிலே தோன்றி வளர்ந்தன: அங்கேதான் அந்த தத்துவங்களின் காரியாலயமும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கார்ல்மார்க்ஸ்படமுடியாத துன்பங்களை அனுபவித்து லண்டன் மாநகரிலேயே மறைந்தவர்! மக்களிடையே இந்த பாசமும்-நேசமும் அப்போது வளர்ந்து கொண்டிருக்கும் நேரம் அது! அதனால் பிராட்லா எதிர்ப்பு, அவரது நண்பர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருத்தது. அன்னிக்கும் அதே நோக்கமே! மார்க்ஸ் எப்படி வேதனைகளை ஏற்றுக்கொண்டு தனது கொள்கைளைப் பரப்பி வந்தாரோ: ஆதே போலவே, லண்டன் வாழ் மார்க்சீயர்களும், பணம் என்ற ஆசையில்லாமல், பட்டினியோடும்-பசியோடும் அந்தத் தத்துவங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த இலட்சிய வெறி, பக்தி தொண்டு, உழைப்பு, தீவிரம் இவை அன்னியின் மனதிலே ஆழப்பதிந்து அவர்கள் மீது ஒரு மதிப்பும், மரியாதையும். அன்பும் உருவானது. அதனாலும், அன்னி பிராட்லாலை விட்டுப் பிரிந்தார் எனலாம்; மார்க்சியர்களது பேச்சுக்களை அன்னி தொடர்ந்து கேட்டனர்; அந்த தத்துவங்களைப் படித்தார்! அதனால் அவருக்குப் பிராட்லா எதிர்ப்புமீது பற்றறுந்தது! உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா அப்போது ஒரு பொதுவுடைமை வாதியாக இருந்தார். அன்னிக்கும் அந்த நகைச்சுவை எழுத்தாளர் மீது ஒரு தனி மரியாதை உண்டு அவரது தொடர்பு அன்னிக்கு வாய்த்தது. பெர்னாட்ஷா, அல்லும்-பகலும் பொதுவுடைமைக், கொள்கைக்கும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது உழைத்து வருவதை, அன்னி கேட்டும்-பார்த்தும் மகிழ்ந்தார்! பெர்னாட்ஷா தொடர்பு அன்னிக்கு ஏற்பட்டது முதல், தொழிலாளர் நலனுக்காக அன்னி பேச ஆரம்பித் தார். அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அவர்களது வாழ்க்கை நிலைகளை அறிந்து வருந்தினார்: முதலாளிகள், பாட்டாளிகள் உழைப்பின் மீது மஞ்சம் விரித்துக் கொண்டு கோலாகலமாக, ஆடம்பரமாக, சீமான்களாக, கோமான்களாக வாழ்ந்து வரும் நிலைகளைப் பார்த்தார்: தொழிலாளர் மீது பரிதாபப்பட்டார். அப்போது அவருக்கு சமத்துவம் பற்றிய நினைப்பு வந்தது: எல்லாவற்றிலும் சமத்துவம் தேவை என்பதை உணர்ந்தார்! இந்த லட்சியங்கள் அன்னியைக் கவர்ந்தன. அதனால் மேடைதோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஆதரித்தும், முதலாளிகளைக் கண்டித்தும், பொதுவுடைமை பூக்க வேண்டிய உணர்வுகளைப் பற்றியும் விரிவாகப் பேசலானார். அன்னி,சொற்திறம், நாவன்மை, செஞ்சொல் ஆற்றல், உணர்வுகள் அனைத்தையும் தொழிலாளர்கள் வாழ்க்கைக்காகக் காணிக்கை ஆக்கினார். பொதுவுடைமை அன்னியாலும் வளர்த்தது; அன்னியைப் பொதுவுடைமையும் வளர்த்தது! மக்களிடையே அன்னி மார்க்சீயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்குப் பிறகு, இங்கிலாந்து நாடே மார்க்சீயமாண்பை உணர்ந்தது! தொழிலாளர்களும் அன்னியின் அரும் ஆற்றலைக் கண்டு அவருக்குப் பொறுப்புக்களை வழங்கினார்கள். எற்றவற்றுக் கேற்றவாறு பல திட்டங்களை அன்னி தீட்டினார்! அதற்காகப் பாடுபட்டார். தொழிலாளர் பல நன்மைகளைப் பெற்றார்கள், 1. அவர்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டது. 2. தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைகள் நிறுத்தப்ப்ட்டன. 3. தொழிற்சாலைகளில் சுகாதார வசதிகள் ஏற்பட்டன. 4. தேவை ஏற்பட்ட போது போராட்டங்கள் நடத்தப்பட்டன. 5. தொழிலாளர் குழந்தைகட்குரிய நலன்கள் கிடைத்தன. 6. அவர்களது கல்விகட்குரிய வசதிகள் வாய்த்தன. 7. சத்துணவு, உடைகள் ஆகியவைகட்கு மக்களிடம் திதி வசூலாயின. இவ்வளவு நன்மைகளைப் போராடியே பெற்றார் அன்னி. எப்படியும் தொழிலாளர் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று உழைத்தார். அன்னியின் கோரிக்கைகளுக்கு இங்கிலாந்து நாட்டு மக்கள், பணக்காரர்கள், அரசு அதிகாரிகள் அனைவரிடமும் செல்வாக்கு ஏற்பட்டது. அதற்கு அவரின் சொல் வாக்கே காரணம் என்றால் மிகையன்று: தொழிலாளர் வாழ்கின்ற பகுதிகளுக்கெல்லாம் சென்றும் அன்னி, அந்த மக்கள் சுகாதரத்தோடு எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அறிவுரைகளைக் கூறிவருவார். தொழிலாளர் நலன்கள் மீது இவ்வளவு ஆக்கறையும் பொறுப்பமுள்ள அன்னி, அதற்காக அவர் உழைத்து வரும் அரும்பாடுகளைக் கண்ட தொழிலாளர்கள், அந்த வீரப்பெண்மணியைத் தெய்வம் போலவே மதித்துப் போற்றி வந்தார்கள். அன்னியின் தொழிலாளர்த் தொண்டு, அவரது பேச்சாற்றல், பெரும்புகழை அவருக்கு உருவாக்கியதைக்கண்ட பெர்னாட்ஷாவைப் போன்றவர்களும் பெர்னாட்ஷாவும் மனமார மதித்துப் பாராட்டி மகிழ்த்தார்கள். இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்றத்திற்குச் சென்ற அன்னி, தொழிலாளர் நலன்களைக் கண்ட இங்கிலாந்து அரசு தொழிலாளர்களுக்குரிய நன்மைகளை விரிவாகச் செய்து வந்தது. தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக, வேலை இல்லாத மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவர்கள் பிரச்சினைகளைப் பத்திரிகையிலும் எழுதலானார். “ஒன்று மட்டும் உண்மை. வேலையற்றோர் மீது சமுதாயமும்-அரசும் அக்கறை காட்ட வேண்டும். இல்லா விட்டால் அவர்கள்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள் வருங்காலச் சமுதாயம் புரட்சிக்கு வித்திடும்” என்பதைத் தெளிவாகப் பத்திரிகையில் எழுதினார். பாராளுமன்றத்திலும் பேசினார். அன்னி இவ்வாறு பேசியதற்கு ஏற்றவாறு, வேலை இல்லாதவர்கள் லண்டனிலே உள்ள டிரபால்கர் என்ல சதுக்கத்தில் கூடி, தங்களது நிலைகளை அரசுக்கு எடுத்துக் கூறிட கூட்டம் போட்டார்கள். கருணை காட்டவில்லை அரசு; கடுமையாக நடந்து கொண்டது; சதுக்கத்தில் திரண்டிருந்த அந்த சோக வாழ்வினரால் போக்குவரத்து இடையூறு என்ற காரணத்தைக் கூறி அரசு கூட்டத்தைக் கலைத்தது. இந்தப் பிரச்சினை அன்னிக்குத் தெரிந்து, உடனே கூட்டத்திற்கு ஓடிவந்து, "கூட்டம் கூடுவதும்-குறைகளை எடுத்துச் சொல்வதும் அடிப்படை உரிமைகள்! அந்த உரிமைகளைப் பறிப்பது. அநியாயம் வேலையும் இல்லை உண்ண உணவும் இல்லை; உடுக்க துணிமணிகளும் இல்லை. இந்த நிலையில் கூட்டம் கூடித் தங்கள் நிலையை அரசுக்கு உணர்த்துவது தவறா?’ என்று அன்னி அதே கூட்டத்தில் குரல் எழுப்பினார். அந்த உரிமைகளை நிலைநாட்ட ஒரு போராட்டத்தை நடத்த முன்வந்தார், இவருடைய முடிவுக்குப் பொது மக்கள் போதரவு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஞாயிறுதோறும் லண்டனிலே உள்ள் “டிரால்கர்” சதுக்கத்தில் வேலையற்றோர்கள் கூடவேண்டும். பேசும் பேச்சுக்களிலே ஆவர்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்றார் அன்னி. அதற்கேற்ப நூறு வேலையற்றவர்கள் அன்னி தலைமையிலே ஒன்று சேர்ந்தார்கள். அரசு தடை விதித்தது. அன்னி அதைக்கண்டு தளரவில்லை; உரிமையை நிலைநாட்டும் அந்த வேலையற்றோர் போர் தொடர்ந்து நடந்தது. வேலையற்றோர் நடத்தும் கூட்டத்திற்கு அரசு தடை விதித்ததால், பொதுமக்களது அனுதாபம் அவர்களுக்கு ஏற்பட்டது, பத்திரிகைகளும் அரசு போக்கைக் கண்டித்தன. அன்னி இந்தப் போராட்டத்தைப் பற்றி இணைப்பு என்ற ஏட்டில் எழுதும்போது, “நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரம் எந்தப் புரட்சியை நோக்கிச் சென்றதோ, அந்தப் புரட்சியை நோக்கி நாமும் சென்று கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். இந்தப் போராட்ட நிலை எதிர்காலத்தில் எப்படி மாறுமோ என்று எண்ணிய அரசு, நடவடிக்கையால் வேலை வாய்ப்புகள் பெருகின: வேலையற்றோருக்கு வேலைகள் கிடைத்தன! அன்னி பெசண்ட், முன்னெடுத்த இந்த வேலையற்றோர் நலத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்! தொடர்ந்து தொழிலாளர் வளவாழ்வின் நலன்களுக்காக தொண்டாற்றினார். மானத் தலைவியின் பெண்ணுரிமைப் போர்கள்! ⁠> “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் ⁠> தோன்றலின் தோன்றாமை நன்று” –என்று பண்டையத் தமிழகத்தின் - முதலிடை கடைச்சங்கங்களின் தென் எல்லையாகயாக விளங்கும், குமரிக் கடலோரம் நின்று கொண்டிருக்கும் திருவள்ளுவர் பெருமான் கூறினார்! அக் குறளுக்கு உரை உரைக்க வந்த பிற்காலப் புலவர் பெருமக்கள் பலரும், பிறந்தால் புகழொடுப் பிற; இல்லையானால் பிறக்காதே அதாவது பிறவாமல் இருப்பதே நல்லது என்று எழுதினார்கள்! ஆனால்,. அதுதான் உன்மையா? வள்ளுவர் பெருமான் இப்படியா உரை எழுதியிருப்பார்? எனவே, வேறு ஒரு பொருள் உள்ளது. அது இது? புகழ் என்ற அதிகாரத்தில் இக்குறள் உள்ளது, புகழ் எப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு வரும்; அந்தப் புகழைப் பெற அவன் எப்படி உழைக்கவேண்டும் என்ற வழிகளை வகுத்துக் காட்டிடிய வரம்புக்கு இது ஒரு சான்றுகுறள்! "பிறவி எடுத்த ஒரு மனிதன் வாழ்வதற்காக அவன் தோன்றும் துறைகளிலே எல்லாம் புகழ் வருமாறு தோன்ற வேண்டும். அவ்வாறு பெற முடியாவிட்டால் அவன் பிறப்பதைவிட பிறவாமல் இருப்பதே மேலானது’ என்கிறார் செந்தாப் போதார். இந்தக் குறளுக்கு இலக்கணம் போல் அன்னிபெச்சண்ட் அம்மையார் விளங்குகிறார்! வாழ்க்கை என்ற ரோஜா மலரைப் பறிக்கப் பிறத்த அந்த ஆம்மையார், கரடு முரடான துன்ப, துயர, வறுமை, ஆணாதிக்க முட்களால் குத்தப்பட்டு ரணகளமான கைகளோடு காட்சித் தந்தார் அவர்! அத்தகை ஒரு பெண், அதுவும் இரண்டு பிள்ளைகளோடு கணவனைக் கைவிட்ட ஒரு பெண், செங்கோலுக்கும் விஞ்சிய சங்கீதம் எழுப்பிய அஞ்சா நெஞ்சுடைய மதவெறி எதிர்ப்புச் சிங்கமாக நடமாடினார்! அவர் தோன்றிய துறைகளான மதவியல், பத்திரிகைவியல், தொழிலாளர் வாழ்வியல், சமுதாய வாழ்வியல், சொற்பொழிவியல், கலப்பு மணம், விதவை மணம், இளம் வயது மணம் போன்ற பெண்ணுரிமைகளின் போரியல், அரசியல், ஆன்மீகவியல் போன்ற எண்ணற்ற துறைகளிலே தோன்றினார்! புகழோடு வலம் வந்தார். புவனத்தில் இதுதான் அரிய புகழ் பெறுவதற்கான இலக்கண வரம்பு! எந்தெந்த துறையிலே அந்த அம்மையார் நுழைந்தாரோ, அவற்றின் ஒவ்வொன்றிலும் அருமையான் சாதனைகளை ஆற்றிப் பெயரும் புகழும் பெற்றார். அவரது இடைவிடாமுயற்சிகளால் தொழிலாளர்கள், வேலை இல்லாதவர்கள், மத, மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள், கணவனால் கொடுமை படுத்தப்பட்ட பெண்கள் ஆகியோர் விழிப்புண்ர்வும் நன்மைகளும் பெற்றார்கள்! மக்கள் வாழ்த்தினார்கள்! இவ்வளவு பெயரும் புகழும் பெற்ற பிறகும் கூட, மக்களிடமிருந்து முழுமையான அன்பும், விசுவாசமும் வரவேற்புகளாக, வணக்கங்களாக, வாழ்த்துக்களாக வீறிட்டு வெளிவந்த பிறகும் கூட, அன்னி பெசண்ட் மனம் நிறைவு பெறாமலே இருந்தது. அந்த மன நிறைவைப் பெற ஆன்மவியல் நாற்களைத் தேடித் தேடிப் படித்தார். இந்தப் பேரண்டத்தை இயக்கும் சக்தி எது? அந்த சக்திக்குரிய காரணம் என்ன இந்த உண்மையை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தார். அதற்கான ஆதாரங்களைத் தேடிக் கொண்டே இருந்தார்! வாழ்க்கை என்பது என்ன? மனம் என்றால் என்ன? இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்தபடியே இருந்தார். அப்போது அவரது நெருங்கிய நண்பர்களிலே ஒருவரான ‘ஸ்டெட்’ என்பவர், அன்னி பெசண்ட்டைத் தேடி வத்தார். இரண்டு புத்தகங்களை அவர் வைத்திருந்தார். ‘இரகசியக் கோட்பாடு’ என்பவை அப் புத்தகங்கள் அவற்றை எச்.பி. பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதியிருந்தார். அந்த புத்தகங்களை அன்னி பேசண்டிடம் தந்து, படித்து விமரிசனம் எழுதித் தருமாறு ‘ஸ்டெட்’ கேட்டார் அவர் போன பிறகு அந்த நூல்கனைப் படித்தார். எந்த உண்மையை அறிய வேண்டும் என்று அன்னி பெசண்ட் மன நிறைவு பெறாமல் இருந்தாரோ, அந்த எண்ணம் இப் புத்தகங்களிலே இருப்பதை அறிந்து மகிழ்ச்சி பெற்றார். அந்த நூல்களை எழுதிய பிளாவட்ஸ்கி அம்மையார் மீது, அன்னி பெசண்டுக்கு அளவிலா அன்பும் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியினால் அந்த நூல்களுக்கு மிக உயர்வான விமரிசனங்களை எழுதினார். இந்த நூல்களை எழுதியவர் பிளாவட்ஸ்கி அம்மையார். இவர்தான் பிரும்மஞான சபை என்ற ஆன்மீக சபையை ஆல்காட் என்பவருடன் சேர்ந்து நிறுவியவர் ஆவார். பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகரில் அடையாறு பகுதியிலும் இதன் கிளை ஒன்று இருக்கிறது. ஒரு நேரத்தில் இதே பிளாட்வஸ்கி அம்மையாரை எதிர்த்து எழுதியவர்தான் அன்னி பெசண்ட்! பிரும்ம ஞான சபை விவரங்களும் அன்னியின் பார்வையிலே இருந்து தப்பவில்லை. ஆனால் இப்போது, தாக்கப்பட்ட அம்மையாரின் நூற்களுக்கு விமரிசனம் எழுதி மகிழ்வடைந்துள்ளார் என்றால், கால மாற்றத்தின் அறிவுச்சக்கர வேகத்தைக்கண்டு நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. ஆனால், அம்மையாரது புத்தகங்களைப் படித்த அன்னிபெசன்ட், தாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்று வருத்தப்பட்டார். பிளாவட்ஸ்கி அம்மையாரை நேரில் பார்க்க வேண்டும் என்றார். அவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று துடிதுடித்து, இறுதியாக நேரிலே சென்று ஆவரைக் கண்டார். அம்மையாரின் அமைதியான தோற்றம் தெளிவான மேன்மையான ஞானத் தெளிவு, அன்னி பெசண்டை மிகவும் ஈர்த்து விட்டது! இருந்தாலும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அளவளாவிக் கொண்டார்கள். பிரும்மஞான சபையில் அன்னிபெசண்ட் உறுப்பினராக வேண்டும் என்று நினைத்தார்! தனது வீட்டிற்கு வந்ததும் அதைப்பற்றி சிந்தித்தபடியே இருந்தார்! ஒருநாள் பிளாவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்து தனது முடிவை அவரிடம் தெரிவித்தார்! அதற்கு அவர், ‘உளவியல் ஆய்வுக்கழகம் தன்னைப் பற்றி எழுதியுள்ள புத்தகங்களை வாங்கிப் படித்து விட்டு வா’ என்ற பதிலைக் கூறி அனுப்பி விட்டார். அன்னி பெசன்ட், அந்த நூல்களை வாங்கிப் படித்தார். அந்த நூலில், ‘பினாவட்ஸ்கி ஓர் ஏமாற்றுக்காரி: தந்திரக்காரி, தீயவள்; அவளோடு சேர்ந்தவர்கள் எல்லாரும் அதே போன்றவர்கள்தான்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் தைக் கண்டார். மறுபடியும் அந்த அம்மையாரிடம் அன்னி சென்ற போது, "நான் கூறிய புத்தகங்களைப் படித்தாயா? என்றார்? "படித்தேன், நான் அதை நம்பவில்லை; என்னை தங்கள ஞான சபையிலே உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்-சேர்ந்தார்! பிரும்மஞான சபையிலே அன்னி சேர்ந்ததைக் கண்டு, இங்கிலாந்திலே எதிர்ப்புப் புயல் வீசியது. ஆவருடைய முன்னாள் நண்பர் சார்லஸ் பிராட்லா இதை ஆறித்து கடுமையாகத் தனது பத்திரிகையிலே எதிர்த்து எழுதினார்! அன்னி பெசண்ட் இந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சினாரில்லை! ஏனென்றால், அவருடைய வாழ்க்கையே ஆரம்ப முதல் எதிர்ப்பிலே நீய்ச்சல் போட்ட வாழ்க்கைதானே! அதற்குப் பிறகு பேசிய கூட்டங்களிலே, நான் ஏன் பிரும்மஞான சபையிலே சேர்ந்தேன்’ என்பதற்குரிய பதிலையே பேசினார்! ஆனாலும், பஸ், டிராம், ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்க்ளின் பணிநேரங்களைக் குறைக்க ஒரு போராட்டத்திலே ஈடுபட்டார்! பிரும்மஞான சபை சம்பந்தப்பட்ட நூற்கனைத் தேடித் தேடி படித்தார். அதன் கோட்பாடுகளைப் பரப்ப பல கூட்டங்களிலே கலந்துகொண்டு பேசினார்: பிளாவட்ஸ்கி அம்மையார் ஒரு பெண்கள் விடுதியைப் புதிதாகக்கட்டினார். அந்த விடுதிக்கு அன்னி பெசண்டைத் தலைவராக்கினார்! இதனால் இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது. உலகில் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கும், இந்திய ஐரோப்பிய இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கும். மனிதனுள் மறைந்துள்ள இயற்கைச் சக்திகளை ஆய்வதற்கும்தான், அன்னி பிரும்மஞான சங்கத்தில் சேர்த்ததாகவும் கூட்டங்களிலே குறிப்பிட்டார். அன்னிபெசண்ட் ஞானசபையில் சேர்ந்த பிறகு, இரண்டாண்டுகளில் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானார், இந்த வருத்தம் அன்னியை மிகவும் பாதித்தது. பிளாவட்ஸ்கி உயிரோடு இருந்த காலத்திலேயே பிரும்மஞான சபையின் கிளைகள் உலகம் முழுவதும் உருவாகி இருத்தன. அவர் இறந்த பிறகும் கூட, அந்த சபை பின் கிளைகள் தொய்வில்லாமல் வளர்ந்து வந்தன. கி.பி. 1893-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உலக சமையங்களின் மாநாடு நடந்தது, உலக நாடுகளிலே உள்ள சமையவாதிகள் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தும் மாநாடு அது. அந்த மாநாட்டில், இங்கிலாந்து சார்பாக அன்னி பெசண்ட் கலந்து கொண்டார். அவரது சமைய ஆற்றலின் ஆழமான ஆய்வை உலக அறிஞர்களும் மதத்தலைவர்களும் அவரை வானளாவ பாராட்டிப் பெருமைப்படுத்தினார்கள். அமெரிக்கப் புகழோடு லண்டன் திரும்பி வந்த அன்னி பெசண்டை, லண்டன் மாநகர் சிறப்போடு வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந்தது. யார் யார் அன்னியின் விரோதிகளோ, அவர்கள் எல்லாம் ஊமைகளாக நின்று ஆந்தக் காட்சிகைப் பார்த்தார்கள்! அடுத்த நிகழ்ச்சியாக, அன்னிபெசண்ட் இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள, 1893-ம் ஆண்டு நவம்பர்மாதம் 16-ம்தேதி புறப்பட்டார். லண்டன் மாநகரச் சான்றோர்கள் கல்வியாளர்கள், அறிஞர்கள், தத்தலைவர்கள். அனைவரும் அவரைப் பாராட்டி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். இந்தியாவின் தொன்மை, சிறப்பு, ஆன்மீகம், நாகரீகம், பண்பாடு, வரலாற்றுப் புகழ் அனைத்தைப்பற்றியும் அன்னி பெசண்ட் புத்தகங்கள் மூலமாகப் படித்து தெரிந்திருந்தார். இந்தியாவை மிகவும் நேசித்த அயல்நாட்டவர்களில் அன்னிபெசண்ட்டும் ஒருவர்! அதனால்தான், அவர் இந்தியாவை புனிதபூமி என்று அழைத்துப் பெருமைபட்டார். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி எவ்வாறு நடக்கின்றது என்பதை அவர் கூர்ந்து கவனித்தார். அக்ரமம், அடக்குமுறை, ஆணவப்போக்கு, மக்களது உரிமைகள் பறிப்பு காட்டுத் துர்பார் போன்ற துப்பாக்கிச் சூடுகள் நடந்ததை அறிந்து கோபாவேசம் கொண்டார். “இங்கிலாந்து’.இந்தியா - ஆப்கனிஸ்தானம்” என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார் அந்தப் புத்தகத்தில், மேற்கண்ட உண்மைகள் பலவற்றை மறைக்காமல் எடுத்துரைத்தார். - இந்தியா மீது இவ்வளவு பற்றும். மனிதாபிமான உணர்வும் கொண்ட ஒரு வீராங்கனை, இந்தியா வருவதை அறிந்த இந்தியத் தலைவர்கள், மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். இந்தியாவிற்கு வந்த அன்னிபெசண்ட் முதன் முதலாக, தமிழக மன்னிலே உள்ள தூத்துக்குடி நகரிலே வந்து இறங்கினார். அந்நகரில் சிறந்த ஒரு சொற்பொழிலை ஆற்றினார், பெங்களூர், விசயவாடா, காசி, ஆக்ரா, லாகூர் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்று, சிறந்த உரைகளை ஆற்றினார்! அந்தந்த நகர் மக்கள் திரளாகத் திரண்டு வந்து அன்னிபெசன்ட் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள். இவற்றை எல்லாம் சிறப்பாக முடித்துக்கொண்டு, பிரும்மஞான சபையின் தலைமைக் காரியாலயம் உள்ள சென்னை மாநகர் அடையாற்றுக்கு வந்தார். சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக வரவேற்கப்பட்டார். இத்தியாவைப் பரவலாக ஒரு முறைச் சுற்றிப் பார்த்த அன்னிபெசண்ட், தான் புத்தகங்களில் படித்த இந்தியாவிற்கும், தற்போதுள்ள இந்தியாவிற்கும் இடையே-முரண்பாடுகள், வேற்றுமைகள் இருப்பதைக் கண்டார். ஆங்கிலேயர் வருகையாலும், ஆட்சியாலும்தான், பண்டைய இந்திய நாகரீகம், பண்பாடு, புழக்க வழக்கங்கள் எல்லாம் சீர்கெட்டடைந்து மாறி விட்டன என்பதை அவர் தேரில் கண்டு வருத்தமடைந்தார். பிரிடடிஷ் ஆட்சிக்குப் பணியாட்கள் தேவை என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி, வெறும் குமாஸ்தா கல்வி முறையாக இருப்பது கண்டு மிகவும் வருந்தினார். அதனால், இந்தியாவுக்கு ஏற்ற தேசியக் கல்வித் திட்டம் தேவை என்று சிந்தித்தார். சேன்னை அடையாறுப் பகுதியில் பிற்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளிக்கு ஆல்காட் தாழ்த்தப்பட்டோர் பள்ளி என்று பெயரிட்டார். இந்த ஆல்காட் தான் பிரும்மஞான சபை நிறுவனர் ஆவார். சென்னை இராயப்பேட்டையில் சகோதரர் சங்கம் சார்பில், பவானி பாலிகா பெண்கள் பாடசாலை ஒன்றையும் அன்னி பெசன்ட் ஏற்படுத்தினார், சென்னை பச்சைப்பன் கல்லூரியில், அப்போது நடை பெற்ற மாணவர்கள் கட்டத்தில் கலந்து கொண்டு சொற் பொழிவுவாற்றிய அன்னி பெசண்ட், இந்தியக் கல்விமுறையில் சீர்த்திருத்தங்கள் தேவை என்று சுட்டிக் காட்டினார் இந்தியாவின் அவர் பேசிய சொற்பொழிவுகள், வரலாற்றுப் புகழ் பெற்றவைகளாக இருந்தன! அயல் நாட்டிலே இருந்து ஓர் அம்மையார், இந்து மதத்தைப் பற்றியும், இந்தியக் கல்வி முறைகள் குறித்தும் பேசிய உரைகளைக் கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்திய மக்கள் வறுமையிலே வாழ்வதையும், அவர்களது தேவைகளையும்-எதற்கும் அஞ்சாமல் அவர் எடுக்கக் காட்டினார். இங்கே தங்கியிருந்து வெளிநாடுகளுக்கும் பயணம் சென்றார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா பிரான்ஸ், இத்தாலி. ஜெர்மனி, ஸ்காட்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்கும் சென்று பிரும்மஞான சபையின் பல கூட்டங்களுக்குச் சென்று திரும்பி வந்தார். 1893-ம் ஆண்டில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய அன்னி பெசண்ட் அம்மையார் சுமார் இருபது ஆண்டுகள் உலகெங்கும் உள்ள பிரும்மஞான சபைக் கூட்டங்களில் கலந்து கொன்டார். எந்தெத்த நாடுகளுக்கு அவர் சென்றாலும், ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறும் சபையின் ஆண்டுவிழாக் கூட்டங்களில் மட்டும் தவறாது வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார். சென்னையில் பிரும்மஞான சபையை நிறுவியவர் இருவர். அவர்கள், ஆல்காட்டும். பிளாவட்ஸ்கி அம்மையார் ஆகியோர் ஆவர். ஆல்காட் பிரும்மஞான சபைத் தலைவராக இருந்தார்; அவர் மரணமடைந்த பின்பு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்று உறுப்பினர்கள் யோசித்தார்கள். அதற்கு அன்னி பெசன்ட் தான் ஏற்றவர் என்று கருதி, அந்த சபை இவரையே தலைவராகத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். பிரும்மஞான சபைத் தலைவரானதும், அம்மையார் இத்தியாவிலேயே, குறிப்பாகச் சென்னை நகரிலேயே தங்கி இருந்து தமிழக் அரசியலிலேயும் கவனம் செலுத்தலாதனார். 1914-ம் ஆண்டில், ஐரோப்பாவில் முதல் உலகப் போர் மூண்டது. அதே நேரத்தில் இந்தியாவிலும் சுயாட்சிப் போர் உருவானது. இந்தப் போருக்குத் தலைமை வகித்தவர் அன்னி பெசன்ட் அம்மையாரே ஆவார். அன்னி பெசன்ட், ‘நியூ இந்தியா’ என்ற ஒரு பத்திரிகையை ஆங்கிலத்தில் துவங்கினார். அந்தப் பத்திரிகை வாயிலாகவும், ஒவ்வொரு சம்பவத்திலும் நேரில் கலந்து கொண்டும் சுய ஆட்சிக் கிளர்ச்சியை நடத்தினார். ஆங்கிலேயருக்கு இந்திய அரசியல் அடிமைகளாக இருப்பதைக் கன்டு உள்ளம் கொதித்த அம்மையார், அவர்களுக்கு அரசியல் கதந்திரமும், நாட்டுச் சுதந்திர உரிமையும் தேவை என்று கருதினார். அதனால், ஆங்கிலேயரை எதிர்த்தே இந்திய மக்களுக்காகச் சுதந்திரப் போர் நடத்தினார். அந்தப் போர்தான் சுய ஆட்சிப் போர் என்பதாகும். ஆங்கிலேயர் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். ஆங்கிலேயரை எதிர்த்தே போர் நடத்துவதைக் கண்டு-இந்தியர்களே வியந்தார்கள்! அதனால் அந்த அம்மையார் நடத்தும் சுய ஆட்சிப் போருக்கு ஆதரவு தந்தார்கள். அப்போது சிறையிலே இருந்து விடுதலையாகி வெளியே வந்த மராட்டியச் சிங்கமான் பாலகங்காதரத்திலகர் அன்னி பெசண்ட் அம்மையார் போராட்டத்தை ஆதரித்து, அம்மையாருடன் இணைந்து அறப்போரிலே ஈடுபட்டதை இந்திய நாடும் ஆதரித்தது. அம்மையாருடன் நீதிபதியாக் இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், தமிழ்த் தென்றல் திரு வி. கலியாணசுந்தரனார், பண்டித மேதிலால் நேரு, சுப்பராய காமத், போன்றவர்கள் சேர்த்து அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டார்கள். சென்னையில் அப்போது ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக் கட்சி; பல கூட்டங்களை நடத்தியது. அதில் ஒன்று ஸ்பர்டாங்க் என்ற எழும்பூர் ஏரிக் கூட்டம், அந்தக் கூட்டம் ஆதி திராவிடர்க்கென்றே கூட்டப்பட்ட கூட்டமாகும். கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் டாக்டர் நாயர் என்பவர் ஆவார். அவர் நீதிக் கட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவர். அக் கூட்டத்திற்கு அன்னி பெசண்ட் அம்மையாரைச் சேர்ந்த சுய ஆட்சிக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான திரு.வி.க.வும் சென்றிருந்தார். திரு.வி.க., ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டத்தில் ஒரு துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்தார். அந்தச் சீட்டு கூட்டத்தவரிடையே கலவரத்தை எழுப்பிவிட்டது. ஆதனால், ஜஸ்டிஸ் கட்சித் தொண்டர்களுக்கும், சுய ஆட்சிக் கிளர்ச்சியினருக்கும் இடையே கைகலப்பு, சண்டைகளை உருவாக்கியது. அங்கே எழுத்த கலவரத்தைக் கண்ட டாக்டர் நாயர் கோபாவேசமாகப்பேசினார். அந்தக் கூட்டத்தின் கலவரம், சுய ஆட்சியினருக்கு ஆதரவாக முடிந்தது. இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர் அரசு, சுய ஆட்சிக் கிளர்ச்சிக் கட்சியின் தலைவராக இருந்த அன்னி பெசண்ட் அம்மையாரையும், அருண்டேல் வாடியா என்ற இருவரையும் சேர்ந்து 16-6-1917-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. அன்னி பெசண்ட்டும், அவர்தம் குழுவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டதால், நாடெங்கும் காங்கிரசார் உட்பட அனைவரும் கிளர்ச்சி செய்தார்கள். சென்னை மட்டுமல்ல; நாடே கொதித்தது. அப்போது மக்களிடையே எழுந்த போராட்டங்களால் அன்னி பெசண்ட் அம்மையாரும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். அக் கிளர்ச்சி மக்களிடையே மேலும் சுதந்திர உணர்வை ஊட்டியது. திரு.வி.க. நடத்தி வந்த ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகை சுயஆட்சிக் கிளர்ச்சியை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வந்ததால், சென்னை பெண்ட்லிண்டு பிரபு அரசு, ‘தேசபக்தன்’ அச்சக முன் ஜாமின் பணத்தை பறிமுதல் செய்தது. அதனால் இரண்டாவது முன்ஜாமின் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையாரும், மூதறிஞர் ராஜாஜியும் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாயையும் முன் ஜாமினாகக் கட்டினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சி, மிதவாதிகள் பிடியில் சிக்கிச் சிதறிக் கொண்டிருந்ததைக் கண்ட அன்னி பெசன்ட், அந்தச் சிதறலை தடுத்து கய அட்சி இயக்கத்தை ஆரம்பித்தார். சுய ஆட்சிக் கிளர்ச்சி இயக்கம், பிரிட்டிஷ் தொடர்புடன் சுய ஆட்சி பெறுவது; இயக்கம் தடத்தும் கின்ர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாய் இருத்தல் என்ற கொள்கையுடன் அன்னி பெசண்ட் தலைமையில் போராடி வத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1917-ம் ஆண்டில் அன்னி பெசண்ட் கைது செய்யப்பட்ட நாளை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் உரிமைக் கிளர்ச்சி நாள்ளாகக் கொண்டாடப்பட்டது. ஆங்கிலேயப் பெண் எவ்வளவு தைரியமாக, ஆங்கிலேயரையே எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிச் சிலை சென்றார் என்ற கருத்து விட, அந்த நாள் இந்தியா முழுவதுமாக இந்தியர்கள் கொண்டாடினார்கள். இதனால் அன்னி பெசண்ட் அம்மையாருக்கு பெரும்புகழ் வளர்ந்தது. எனலாம். அன்னி பெசண்ட் அம்மையாரின் எழுத்தும், பேச்சும், மூன்று மாதச் சிறையடைப்பும்,இந்திய மக்களை ஒற்றுமைபடுத்தின. இந்தியாவுக்கு மக்கள் பொறுப்பு ஆட்சி வழங்கப்படும் என்ற அறிக்கையை பிரிட்டிஷ் அரசு 1917ல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது. காந்தியடிகள், பிணங்கி நிற்கவில்லை; திலகர் பேராதரவு இயக்கத்துக்குக் கிடைத்தது: ஜனாப், ஜின்னாவும் அம்மையார் இயக்கக் கிளர்ச்சிக்குப் பேராதரவு தந்தார். இதனால், 1917-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்கு அன்னிபெசண்ட் அம்மையாரைக் காங்கிர்ஸ் பேரியக்கம் தேர்ந்தெடுத்தது. திலகர், சர்வாலண்டையன்சிரால் என்பவர் மீது லண்டனில்வழக்குத்தொடுத்திருந்தார்.அந்த வழக்குக்குரிய சான்றைக் கூறிவிட்டு, இந்தியா திரும்பும்போது தான் சென்னை வந்து இறங்கினார். பெரம்பூரில் உள்ள தேசபக்தன் காரியாலயக் காரியதரிசி சுப்பராயக் காமத் என்பவர் வீட்டில் திலகர் தங்கியிருந்தார். இந்த வழக்கில் அன்னி பேசண்ட் அம்மையாரும் ஒரு சாட்சி. அவரும் லண்டன் சென்று தனது சாட்சியத்தைக் கூறிவிட்டு இந்தியா திரும்பினார். திலகரைக் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.யும், திரு வி.க.வும், காமத்தும் சென்று வரவேற்றுப் பெரம்பூர் காமத் வீட்டில் தங்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது, அம்மூவருள் ஒருவர் திலகர் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்வி இது : நான் தங்களைத் தலைவராகக் கொண்டவன்: தங்கள் அடிச்சுவட்டைப் பற்றி நடத்தவன்; இப்போது ஒதுங்கி இருக்கிறேன். காரணம், தாங்கள் அன்னிபெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் ஆதரவு தத்து கலந்து கொண்டதுதான்! "அந்த அம்மையாரிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. போர் காலத்தில் நாட்டில் பெரும் கிளர்ச்சி எழுமென்று ஊகித்து, அதை ஒடுக்க, பெசண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் தாமே வலிந்து புகுந்தார். நாடு ஏமாந்தது. “மூன்று மாதக் காவல் அவருக்குக் கிடைத்தது என்பது வெறும் நடிப்பு: பெசண்ட் அம்மையார் ஆங்கிலேய அரசுச் சார்புடையவர். தாங்கள் அந்த அம்மையாருடன் கலந்து போராடியது குறித்து நான் வருந்துகிறேன்” என்று கேட்டார். அவர் முறையீடு வேறு சிலர் ஆதரவையும் அப்போது பெற்றது. அதற்கு அந்த மராட்டியச் சிங்கம் பதில் கூறும்போது: “நான் தனி மனிதர் மீது கருத்துச் செலுத்துவது இல்லை: எனது தேச விடுதலைக்கு எவர் முயன்றாலும் அந்த முயற்சிக்குத் துணை நிற்பது என்ற எண்ணம் உடையவன்.” “மனிதர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்: அவர் செயலால் நாட்டில் விடுதலை உணர்வு வளர்கிறதா- தேய்கிறதா என்பதைத்தான் பார்ப்பேன். வளர்வதாக இருந்தால் துணையிருப்பேன்; தேய்வதானால் துணை போகேன்.” "அன்னி பேசன்ட் அம்மையார் உள்ளம் எத்தகையதோ, அதை ஆண்டவன் அறிவான்! அந்த அம்மையா செய்து வரும் கிளர்ச்சிகளால் நாட்டில் சுயராஜ்ஜிய வேட்கை வளர்ந்திருப்பது கண்கண்ட காட்சி; யான் விரும்புவதும் அதுவே. அம்மையார் கிளர்ச்சி போலி என்றும், சிறை சென்றது வெறும் நடிப்பு என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். போலி யும்-நடிப்பும் நாட்டில் இவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணின என்றால், நீங்கள் உண்மையில் நின்று கிளர்ச்சி செய்தால், சிறையில் புகுந்தால்-அவை எவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணி இருக்கும்?" "ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள்? உண்மையை மனதில் கொண்டு களத்துக்கு வாருங்கள்; கிளர்ச்சி செய்யுங்கள் சிறைக்குச் செல்லுங்கள்; வீண் பேச்சு எதற்கு? "பெசண்ட் அம்யைார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா? தீமை விளைகிறதா? என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்; நாளைத் தீமை விளைவதைக் கண்டால் அவரது கிளர்ச்சிக்குத் துணை போகேன்; இதை ஒரு நொடியில் சாய்க்க முயல்வேன் என்று முழக்கமிட்டார். ’திலகர் பெருமான், அன்னி பெசண்ட் அம்மையாரின் இந்திய சுதந்திர போராட்ட உணர்ச்சியை உண்மையே என்று மதித்தார்! மரியாதை தந்தார்! அதைப் பாராட்டினார்: அன்னி பெசண்ட் எதிரிகள் மீது கோபம் கொள்ளமல் நீயும் வா களத்துக்கு; போராடு; சிறை போ! என்று அவரது பொறாமை உள்ளத்துக்கு உரிய வழியைக் காட்டி அழைத்தப் பண்பாளராக விளங்கினார்! இதுவன்றோ அரசியல் தலைமைக்கு அழகு! அன்னி பெசண்ட் வடநாடு சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், திலகர் போன்றவர்கள் அப்போது உடன் இருந்தார்கள். அமிர்தசரஸ் நகர் தேசிய மகாசபைக் கூட்டம் முடித்த பின்பு, அன்னி பெசண்ட் சென்னை வந்தார். அவரை வரவேற்று திரு.வி.க. ஊர்வலமாக அழைத்துச் செல்ல முயன்றபோது; அம்முயற்சியை கப்பலோட்டிய சிதம்பரமும், அவர் சார்பாளரும் தடுத்தார்கள். அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது, நான் காங்கிரஸ் கட்சி சார்பாக அன்னி பெசண்ட் அம்மையாரை வரவேற்கவில்லை; தொழிலாளர் சார்பாகவே வரவேற்கிறேன் என்றார். என்றாலும், அம்மையாருக்கு எதிரான துண்டு அறிக்கைகளும், மறுப்புக் கூட்டங்களும் நடந்தேறின. தனக்கு வரவேற்பு அளித்த சம்பவத்தில் அன்னி பெசண்ட் பேசும்போது, "இத்தகைய ஒர் ஊர்வலத்தையும் வரவேற்பையும் என் வாழ்க்கையில் நான் கண்டதே இல்லை’ என்று மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க அவர் நன்றி கூறினார். அன்று மாலை சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு வரவேற்புக் கூட்டம்; அக்கூட்டத்தில் கப்பலோட்டிய சிதம்பரமும் பேசினார்: பேசினார் என்பதை விட அம்மையாரை வசைசாடினார் என்றே கூறலாம் என்கிறார் திருவி க. தேசபக்தர் வ. உ.சி. வசைகளை பத்திரிகைகள் வெளி யிட்டன. அம்மையாருக்கும், கூட்டத்தை நடத்திய திரு.வி.க.வுக்கும் வசைத் திரட்டுகளை சிலர் அனுப்பி வைத்தார்கள். அடுத்த நாள் அன்னி பெசண்ட் அம்மையார் கார் திரு.வி.க. நடத்தும் ‘தேசபக்தன்’ பத்திரிகை காரியாலயம் முன்பு வந்து நின்றது. திரு.வி.க. சென்றார். அம்மையார் திரு.வி.க.வை வண்டியில் ஏறுமாறுக் கூறியதும் காரும் புறப்பட்டது. நேற்றைய கடற்கரையில் வ.உ. சிதம்பரம் பேசிய நிகழ்ச்சி உமக்குத் தெரியும் அல்லவா? என்று அன்னி பெசண்ட், திரு.வி.க வைக் கேட்டபோது, தெரிந்தேன்’ என்றார் ஆவர். "நான், சார்லஸ் பிராட்லாவிடம் பயின்றவள். எப்படிப்பட்ட வசைகளையும் தாங்குவேன்; நீர் தமிழ்ப் போத கர்; புண்ணியத் தொழில் புரிந்தவர்; நேற்றைய வசைகள் உமது மனதையும் புண்படுத்தி இருக்குமே; என்னால் அல்லவா உமது மனதும் புண்படும் நிலை வந்தது, என்றார் அன்னிபெசண்ட்-திரு.வி.க.விடம்! "வ உ. சிதம்பரம் பிள்னை என் சகோதரர்; அவர் தம் வசைமொழிகளை யான் வாழ்த்து மொழிகளாகவே கொண்டேன். என் மனம் புண்படவில்லை உலகுக்கும். நாட்டுக்கும் பல வழிகளிலும் நலம் புரிந்து வரும் ஒருவர் பொருட்டு என்போன்ற சிறுவர் வசை மொழிகளைத் தாங்குதல் பெரியதன்று என்று அம்மையார்க்கு திரு வி.க. ஆறுதல் கூறினார். அரசியல் துறையில் மட்டும் யான் தங்களைத் தலைவராகக் கொண்டவனல்லன். பல துறைகளில் தங்கள் அடிச் சுவட்டைப் பற்றி நடப்பவன்’ என்றார் திரு.வி.க. அதற்கு அன்னிப்பெசண்ட், "நீர் என் கட்டுக்கு அடங்குதல் வேண்டும் என்ற நியதி இல்லை; உமக்கு உரிமை உண்டு என்றார், “என்னைப் பொறுத்தவரையில் சட்ட மீறலை நாகரிகமாக நான் கொள்ள மாட்டேன். அது நாளடைவில் கொள்ளை, கொலை, புரட்சி முதலிய தீமைகளை நாட்டிலே புகுத்தி விடும்” என்ற தனது கருத்தை அம்மையார் வெளியிட்டதும் அவர் புறப்பட்டு விட்டார்! வ.உ.சிக்கு ஆடுத்தபடியாக, அன்னிபெசண்ட் அம்மையாரை இந்திய அரசியல் உலகத்திலே இருந்து துரத்த முயன்றவர்களுள் டாக்டர் வரதராஜலு நாயுடும் ஒருவராக இருந்தார். ஆணால், வரதராஜலு 29.8.1918ல் திடீரென்று கைது செய்யப்படவே அவரது முயற்சி பிசு பிசுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகுக்கு சில அறிஞர்களை வழங்கியது. அவருள் ஒருவர் டாக்டர் அன்னிபெசன்ட் பெசண்ட் அம்மையார். அவர் ஒரு நாட்டவர் அல்லர்; உலகர் என்று உரைப்பதே பொருந்தும். இந்திய தேச விடுதலைக்கு காந்தியடிகளும் தொண்டர் பெசண்ட் அம்மைாரும் தொண்டர்; காந்தியத்தால் என்னென்ன தீமைகள் விளையும் என்று அம்மையார் விளக்கிக் கூறினார். “காந்தியடிகள் அளவில் அவரது சத்தியாக்கிரகப் போராட்டம் பொருந்தி வரும். அது நாட்டளவில் மற்றவர்கள் தவறாக நடந்து நாட்டைப் பாழ்படுத்துவிார்கள்’ என்று அன்னிபெசண்ட் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இவ்வாறு அன்னிபெசண்ட் இந்திய அரசியலிலும், தமிழக அரசியல் துறையிலும் தலையிட்டு, இந்திய மக்களது சுதந்திரப் பிரச்னைக்காக சுய ஆட்சிப் போர் நடத்திக் கொண்டிருந்தார். இங்கிலாந்திலே இருந்து தனியொரு பெண்ணாகத் தமிழகத்திற்கு வந்து அரசியல் துறையிலே ஏற்கனவே அரும்பாடுபட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வீரம்செறிந்த போராட்ட உணர்வுகளை மக்கள் இடையே எழுப்பிப் போராடி வருவதைக் கண்ட அரசியல் அழுக்காறுகளுக்க மன எரிச்சல் நெருப்பாக மாறியது. அன்னி பெசண்ட் போராட்டத்திற்கு திலகர் பெருமானின் பேராதரவும், காந்தியடிகளின் பிணக்கமற்ற ஒத்துழைப்பும். முகமதலி ஜின்னாவின் தீவிர ஆதரவும் அகில இந்திய அளவில் மோதிலால் நேரு உணர்ச்சி உந்தலும் அன்னி பெசண்ட்டுக்கு திரண்டு குவிந்ததைக் கண்ட, இந்திய மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு வயிற்று கண்டது! தமிழ் மாநில அளவில் தமிழ்த் தென்றல் திரு.வி.க., காமத், டாக்டர் ஜி. சுப்பிரமணி ஐயர் போன்ற ஜட்ஜ், வழக்குரைஞர்கள் கல்வியாளர்கள், ஆன்மீகவியல் நேயர்களது ஆதரவுகள் பொங்கி வழிந்ததை, சில தீவிரவாதிகள் எனப்பட்டோர் எல்லாம் பின்னடைத்து வீரக்தியாளர் ஆனார்க்ள். இந்த நிலையிலும், அன்னி பெசண்டு சும்மாயிருக்கவில்லை. கல்வித்துறைக் குறைபாடுகளை உலகுக்கு உணர்த்த ஒரு மாதப் பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார். ஒரு நாடும் இழந்த தனது நாகரீகம், பண்பாடு சுதந்தரம் இவைகளின் மீண்டும் சீரடைய வேண்டுமானால், அந்த நாட்டு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக, கற்றவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்களது பண்டைக் காலச் சிறப்புக்களைப் பாதுகாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறை மக்களது மேம்பாட்டுக்கு ஒவ்வாத முறை, அறிவு வளர்ச்சி பெறுவதற்காகவே கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்போதுள்ள கல்வி முறை அரசு பணிகளுக்காக மட்டுமே கற்கும் முறையாக உள்ளது என்று மனம் நொந்து கல்விக் கூடக் கூட்டங்களில் பேசினார். ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களது தாய் மொழியில் தான் கல்வி கற்றாக வேண்டும். அப்போதுதான், அவர்களது வரலாறு என்ன? நாகரீகம் என்ன? பண்பாடுகள் என்ன? என்பதையெல்லாம் பிறர் தயவு இல்லாமலே பெறமுடியும். இதற்குகந்த கல்விமுறைதான் இப்போதைய தேவை என்பதை வற்புறுத்தினார். இந்தக் கருத்தை மக்களுக்கு விளக்கவே-இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். “இந்தியாவிலே உள்ள செல்வச் சீமான்களும், கல்விக் கோமான்களும் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளைத் தாராளமாக வழங்கினால்தான், இந்தியருக்குரிய கல்வி முறையை உருவாக்க முடியும்” என்று சுற்றுப்பயணம் செய்த இடங்களில் எல்லாம் வலியுறுத்தினார்! அன்னி பெசண்ட் கருத்தைக் கேட்ட பணக்காரர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களில் சிலர் தாராளமாகப் பண உதவிகளைச் செய்தார்கள். இதைக் கண்டு அம்மையார் மனம் மகிழ்ந்தார். காசி நகரில், ‘மத்திய இந்துக் கல்லூரி’ என்ற ஒரு கல்லூரியை அமைத்தார். அன்னி பெசண்ட் உருவாக்கிய அந்தக் கல்லூரிதான் அளித்து இன்று காசி இந்துப் பல்கலைக் கழகமாக உள்ளது என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். பெசண்ட் மாதப் பத்திரிகையைத் துவக்கினார் அல்லவ அது ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த ஏடு இந்தியரது கல்வி முறைக்காகவே உழைத்தது. கல்லூரியின் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல! கடல் கடந்தும் புகழ் பெற்றது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வருகை தந்தபோது, அவர் அக்கல்லூரியைக் கண்டு பாராட்டினார். அந்தக் கல்லூரி நாளடைவில் வளர்ந்து பல்கலைக் கழகமாகப் புகழ் பெற்றபோது அந்த அம்மையாருக்கு அது டாக்டர் என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை படுத்தியது மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். அன்னி பெசண்ட் அம்மையார், ஆணாதிக்க மதவெறி பிடித்த கணவனால் கொடுமை படுத்தப்பட்டவர். அதற்காக பத்திரிக்கையில் பல கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி தாமஸ் ஸ்காட் மூலம் வெளியிட்டவர் என்பதை அவர் மறக்கவில்லை. அதற்கேற்ப தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த ஓர் இந்தியர், பெண்களை அடிமைகளாக நடத்தி வந்ததைக் கேள்விப்பட்டுப் புண்பட்டமணமானார்! அதே நேரத்தில் அவருடைய சொந்த நிகழ்ச்சிகளும் அவருக்கு நிழலாடின. ஆணும், பெண்ணும் வாழ்வின் இரண்டு கண்கள். அவர்களுள் உயர்வு தாழ்வு காட்டுவது தண்டனைக்குரிய ஒன்று என்று எண்ணி அதற்கான நடவடிக்கைகளிலே தீவிரமாக ஈடுபட்டார். பெண் கல்வி அவசியத்தையும், பொதுவாழ்வில் பெண்கள் தன்னைப் போலத் துணிகரமாக ஈடுபட வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட அவர், பெண் கல்விப்பள்ளிகளை ஆங்காங்கே உருவாக்கினார். அதில் ஒன்றுதான் பவானி பாடலிகா பாடசாலை. 1919-ம் ஆண்டு. வடநாட்டிலே பெண்களுக்கு என்று ஒரு மாநாடு கூடியது. அதில் தாசிகள் சேர்க்கப்படவில்லை. அதை மறுத்து அற்புதானந்தா சுவாமிகள்- திரு.வி.க. தேசக்தின் பத்திரிகைக்கும்-ஆன்னி பெசண்ட் ஆம்மையாருக்கும் தகவல் அனுப்பினார். அன்னிபெசண்ட் தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு; திரு வி.க விடம் வந்து தாசிகள் யார்? தேவடியாள் யார்? இந்தக் கடிதத்தில் எழுதியுள்னதைப் பாருங்கள் என்று கடிதத்தைக் காட்டினார். அதற்கு திரு.வி.க. ஆங்கிலத்தில் அம்மையாருக்குக் கறும்போது Fallen.sisters என்றார்! அன்னி சிரித்து விட்டு அந்த மாநாட்டிற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்புமாறு கூறினார். இளம் வயது சிறுமிகள் திருமணம் இந்தியாவில் பழங்காலத் தொட்டு நடந்து வரும் ஒன்று. அதை ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் எதிர்த்து ஒழிக்கப்பாடுபட்டதை அம்மையார் அறிந்த ஒன்று, அதனால் இளமை மனம் நடை பெறுவதை அம்மையார் எதிர்த்தார்! சிறு வயதில் இளமை மணம் செய்யப்பட்ட சிறுமிகள் அவர்கள் கணவர்கள் என்று கூறப்படும் சிறுவர்கள் இறந்துவிட்டால் ஒன்று உடன்கட்டை ஏற்றுவர்கள்! அல்லது வெள்ளைப் புடவையைக் கொடுத்து, மொட்டையடித்து கைம்பெண் அதாவது விதவை என்று பெயரிட்டுக் கொடுமைப்படுத்துவதையும் அன்னிபெசண்ட் நேரிலேயே பார்த்தார். அதனால் விதவைகள் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் வளர வேண்டும் என்பதற்காக எழுதினார்: பேசினார்.சில செய்தும் வைத்தார்; அதற்கு பிரும்மஞான சயை ஆதரவு உண்டு என்று தீர்மானம் போட்டார். பிரும்மஞான சபை, உலகளாவிய. உலக சகோதர நேயத்தை அறிவுறுத்தும் சபையாகும். அதன் தலைவி அன்னிபெசண்ட் அம்மையார். அவர் பிறப்பில் உயர்வு தாழ்வு ஒழித்தார்; கலப்பு மணத்தைச் செய்ய முன்வருவோரை பிரும்மஞான சபை ஆதரிக்கும், ஆதரவு தரும் என்று எழுதினார்; பேசினார். சென்னையிலே கலாசேத்திரா பகுதியிலே போனால் ருக்மணி அருண்டேல் என்ற பெயரில் ஒரு வீதினயைவே பார்க்கலாம். அதன் வரலாறு என்ன? இதோ: அருண்டேலும்- ருக்மணியும் ஒருவரை ஒருவர் உணர்ந்து காதலராயினர். இவர்களது கலப்பு மணம் பிரும்ம ஞான சபையிலே நடந்தது. அப்போது இத்த திருமணத்தை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன. சென்னையிலே மட்டுமன்று தென்னாடு முழுவதுமே கிளர்ந்து எழுந்தது. ‘ஹிந்து’ என்ற ஆங்கில ஏடு அந்தக் கிளர்ச்சிக்கு எண்ணெய் வார்த்து எழுதியது: “சுதேச மித்திரன்“ பத்திரிகைக்கு வீரமே வீறிட்டது. கப்பலோட்டிய தமிழன் எனப்படும் வ.உ.சி.; கோபாவேசங்கொண்டு எதிர்ப்புத் துண்டு அறிக்கைகனை வெளி யிட்டுக் கிளர்ச்சி செய்தார். கடற்கரையிலே கூட்டங்களைக் கூட்டிக் கண்டித்தார். இத்த திருமணத்தை தடத்தும் பிரும்மஞான சபையையையும், அன்னி பெசண்டாரையும், திரு.வி.க. போன்ற தமிழரையும், அருண்டேல் என்ற கலப்பு மணமகனையும் மனம்போனபடி வசை பொழிந்து சாடினார்! அவருக்குப் பிறகு கப்பிரமணியம் சிவா என்ற பெருமைகுரிய மற்றொரு தேசபக்தர் பொங்கி எழுந்து கொந்தளித்தும் பேசினார். திரு.வி.க.வின் பத்திரிகைக் காரியாலயத்திற்கு ஓடினார்! சிங்க நோக்குடன் சிவா கர்ஜித்து, “ஒரு வெள்ளைக்காரன் அருண்டேல், நம் சென்னைப் பெண்ணை களவாடுகிறான். அதை முதலியாரே நீர் ஆதரிக்கிறீரா?” என்று முழங்கினார்! “அதற்கு திரு.வி.க. பதில் கூறும்போது: காதல் நுட்பம் உங்களுக்குத் தெரியவில்லை; இந் நுட்பத்தை உணர்த்து கொள்ளாமலே நீங்கள் காலம் கழித்து விட்டீர்கள்,” “காதல் கண்ணுக்கு வெண்மை-கருமை தோன்றுமோ காதல் நுட்பம் உணராதவர்கள் எப்படி நாட்டின் விடுதலைக்கு உழைத்தல் கூடும்? களவுதான் காதல், தொல்காப்பியத்தைப் பாருங்கள்.” “உங்களுக்கு அன்னி பெசண்டின் அரசியலில் மனம் செல்வதில்லை. அதனால்,”அருண்டேல்-ருக்மணி மணத்தையும் தூற்றுகிறீர்கள்" என்று விளக்கினார். சிவாவுக்கு கோபச்சிரிப்பு தோன்றி திரும்பினார். பிறகு ருக்மணி அருண்டேல் திருமணம் நடந்தது. தொழிலாளர் சங்கத்துக்கு அழைத்து வந்து தம்பதிகளுக்கு திரு.வி.க. வாழ்த்துக் கூறி அனுப்பினார். பெண்ணுரிமைகளைப் பேணுவதற்கும். அவர்களை விழித்தெழச் செய்வதற்கும் ஓர் பெண்ணின அமைப்புத் தேவை என்று அன்னி பெசண்ட் பேசும்போது குறிப்பிடுவார். அத்தகைய அமைப்பு ஒன்று உருவாக யோசித்தார். அன்னி பெசண்ட் முயற்சியால் ஓர் அமைப்பு ஏற்பட்டது. அதற்கு, மாதர் இந்திய சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. அச்சங்கத்தின் முதல் தலைவராக டாக்டர் அன்னிபெசண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு அடிமையாக அடங்கி ஆமைபோல, ஊமை போல வாழ்ந்த பெண்குலம்; தனது உரிமைகனைத் தட்டிக்கேட்கும் தைரியம் வரப்பெற்றதால், பெண்ணினம் அன்னி பெசண்ட் அம்மையை வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது. எந்தத் துறையில் புதுப்பது முயற்சிகளை எடுக்கின்றாரோ அன்னி பெசன்ட் அந்தத் துறை எக்காரணம் கொண்டும் தோல்வியுறுவதில்லை. மென்மேலும் அத்துறைகள் ஓங்கியே வளரும் தன்மையிலே சிறக்கும். மாதர் இந்தியச் சங்கம் சென்னையிலே மட்டுமன்று, இந்தியா முழுவதும் கிளைகள் பெருகி நன்கு வளர்ந்து போராட்டங்களை இன்றும் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மாதர் இந்தியச் சங்கத்தில் படித்த பெண்கள், குடும்பப் பெண்கள், பணியாற்றும் பெண்கள், உட்பட்ட பலர் உறுப்பினர்களாகி, தங்களுடைய எந்த ஒரு பிரச்னைகளையும் தீர யோசித்து உரிமைகளைப் போராடியோ புத்தி துட்பத்தாலோ-இன்றும் அடைந்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் தகுதி, திறத்திலே குறைந்தவர்கள் அல்லர் என்பதற்கு, மாதர் இத்தியச் சங்கத் தலைவரே ஓர் எடுத்துக்காட்டல்லவா? எனவே, பெண்களை வாழ்விக்கும் கலப்புமணம்; விதவை மணம் போன்றவைகட்கும் குருகுலமாகத் திகழ்ந்தது பிரும்மஞான சபை இளமை மணத்தை எதிர்த்துப் போராடியது, பெண் உரிமைகளுக்காக மாதர் சங்கம் கண்டது; இந்திய மக்களுக்கு சுய ஆட்சி உணர்வை ஊட்டியது; இந்தியக் கல்வி முறையில் புதிய முறையைப் புகுத்தியது; தாய் மொழியிலே கல்வி பெறும் முறை இருக்க வேண்டும் என்றது: இந்து பல்கலைக்கழகம் ஆரம்ப பெண் பாடசாலை ஆதிதிராவிடர் முன்னேற அவர்களுக்குரிய பள்ளிக்கூடம், ஆன்மீக மறுமலர்ச்சிச் செயல்கள் போன்ற துறைகளிலே அன்னி பெசண்ட் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டார். பெண்களுக்கு இந்த சமுதாயம் செய்யும் கொடுமைகளை, ஒவ்வொரு பெண்ணும் தனது மானத்துக்கு விடும் அறை கூவலாகக் கருத வேண்டும்! அத்தகையச் சவால்களோடு பெண்கள் தன்மானத்துடன் போராடினால் இந்தச் சமுதாயத்தில் உள்ள ஒவ்வோரு பெண்ணும் நாணக் கவசம் பூண்ட மானத் தலைவியாக வாழமுடியும் என்பதற்கு அன்னி பெசண்ட் ஒர் எடுத்துக்காட்டு அல்லவா? ஞானத் தாமரை வானில் பூத்தது ஆங்கிலேயர் வருகையால்; ஆட்சியால், இந்திய நாகரீகம்: கலை, பண்பாடுகள், அரசியல் வரலாறு, ஆன்மீகப் பழக்க வழக்கச் செயல்கள் எல்லாமே மாறிவிட்டன என்பதை, இந்தியாவிற்கே நாரில் வந்து பார்த்த அன்னி பெசண்டுக்கு மாறா வடுவான ஆறாப் புண்ணாகவே அப்போது தென்பட்டது. வெள்ளையன் வீசி எறிந்த பதவி, பணம், பட்டம், உத்தியோகம், பகட்டுவாழ்வு என்ற எலும்புகள் அனைத்திற்கும் அதனதன் தகுதிக்குரியவர்கள் அடிமைகளாக மாறி உழைத்தார்கள். கி.பி. 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனு போடுவதும், பிறகு ‘காட் சேவ் தி கிங்’ என்ற தேசிய கீதம் பாடுவதே அரசியல் பணியாகக் கொண்டிருந்தது. இந்த மிதவாத புத்தி, கோபால கிருஷ்ண கோகலே தலைவராக இருத்தவரை இருந்தது. திலகர் பெருமான் காங்கிரஸ் மகாசபையிலே காலெடுத்து வைத்த பிறகே, அதற்கு தன்மானம் பிறந்தது. “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என்ற மராட்டிய சிக்கக் கர்ஜனைக்குப் பிறகே, ‘சுதந்திரம்’ என்ற வார்த்த கனற்தெறிப்பாக பொறி பறந்தது. விடுதலைப்போர் என்ற கரடுமுரடான வாகனப் பாதையிலே, காத்தியடிகன் தனது அகிம்சா அறப் போராட்டங்கள் நடத்திச் சிறை தண்டனைகனைப் பெற்று, ‘சுதந்தரம்’ என்ற உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஆங்கில தர்பாருக்கே உணரவைத்தார். அன்றுவரை காங்கிரஸ் மகாசபை விடுதலை வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டதே தவிரத, ‘கொடு’ என்று தட்டிக் கேட்கவில்லை. ’இந்தியருக்கு நாட்டை ஆளும் அறிவும்- ஆற்றலும் இல்லை என்ற அடக்குமுறை ஆங்காரக் கூச்சவிட்ட போதுதான், அன்னி பெசண்ட் அம்மையார் இந்தியா வந்தார்! ஆங்கில ஆட்சியினால் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் சீர்கேடடைந்த இந்தியாவைக் கண்டு, நான் புத்தகங்களில், வரலாறுகளில் படித்த நாடா இது? என்று வியந்து பரிதாபப்பட்டார். நாட்டை ஆட்சி செய்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஆற்றலும் அறிவும் இந்தியருக்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர் ஆட்சி நடைபெற்ற நாடு இந்தியா. கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. மக்களாட்சி முறையில் மன்னர்களையும், ஊராட்சி உறுப்பினர்கனையும் பொதுமக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்: இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த இந்தியர்களுக்கா தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தெரியாது? என்று அன்னி பெசண்ட் ஆங்கில ஆட்சியைப் பார்த்துக் கேட்டார். ஆளத் தெரியாது என்றும், அந்த அறிவும் ஆற்றலும் இன்னும் வரவில்லை என்ற ஊமைக் காரணங்களால் சைகை அறிகுறிகளைக் காட்டிப் பேசுவது, இந்தியர்கனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் மாயை என்றார்! அன்னி பெசண்ட், ஆங்கிலேயரின் மூடுமந்திர வித்தைகளைப் பொது மக்களிடம் தவிடுபொடியாக்கிக் காட்டிட அவரே நேரடி அரசியலில் ஈடுபட்டார். ‘ஹோம் ரூல்’ இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கினார்! அதற்கு அவரே தலைவர்! இந்த இயக்கத்துக்கு சுய ‘ஆட்சி இயக்கம்’ என்ற பெயர் ஏற்பட்டது. பொதுமக்கள் பெசண்ட் இயக்கத்துக்குப் பேராதரவு காட்டினார்கள். அப்போதுதான் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே நடந்த போராட்டத்தினை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்: அவர் புகழ் வளர்ந்து வரும் நேரமாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்காக, “சட்டி மறுப்பு” ஒத்துழையாமை இயக்கம் போன்ற புதிய போராட்ட அறப்போர் முறைகளைக் காந்தியடிகள் மக்களிடையே அறிமுகப்படுத்தினார். இந்தக் கொள்கைகள், அன்னி பெசண்ட் அம்மையாருக்குப் பிடிக்கவில்லை; காந்தியடிகள் போராட்டத்தால் நாடு கொள்ளை, கொலை, புரட்சிக் களங்களாக மாறும் என்பது அம்மையார் கருத்து இந்த முரண்பாடுகளால், காந்தியண்ணலுக்கும் அன்னி பெசண்டுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனாலும், மக்களால் விரும்பப்பட்ட தலைவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கமல்லவா? ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள், மோதல்கள் முரண்பாடுகள், விருப்பு வெறுப்புகள் தோன்றுவது சர்வ சாதாரணம் தானே! முதல் உலகப் போர் நடைபெறும்போது, பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸ் கட்சியைக் கேட்காமலே இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தி விட்டது. இதைக் கண்ட மக்கள் கொதித்து எழுந்தார்கள். ‘இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதி மொழியை ஆங்கிலேயர் அரசு தரவேண்டும். தராவிட்டால் போரில் எந்த உதவியையும் செய்ய மாட்டோம்!’ என்று, இந்தியத் தலைவர்கள் ஒருமித்தக் குரலின் பேசினார்கள். அன்னி பெசண்ட் அம்மையார், இந்தியத் தலைவர்கள் எண்ணத்திற்கு நேர் விரோதமாக இருந்தது “பிரிட்டிஷ் அரக உறுதி மொழியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு உதவிட வேண்டும்” என்று பெசண்ட் குரல் கொடுத்தார். ஆனால், மக்கள் அவர் கருத்தை ஏற்க மறுத்து விட்டார்கள். கூறிய கருத்தையே மீண்டும் கூறிக் கூறிப் பெசன்ட் அறிக்கை விடவே, அந்த அம்மையாரை ஆதரித்தவர்கள் யார் யாரோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். இருந்தும் பெசண்ட் பிடிவாதமாகவே பேசினார்; எழுதினார்; பெசண்ட் பக்கம் ஆதரவு காட்டியவர்கள் பிரித்து போனார்கள். ஆனால், ஆன்னி பெசண்ட் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கு கய ஆட்சி தேவை என்பதை மட்டும் பேசிக் கொன்டே இருந்தார். காங்கிரஸ் கட்சியிடம் அன்னி பெசண்ட் கருத்து மீது வேறுபாடு இருந்தாலும், அவரைக் காங்கிரஸ் மறக்கவில்லை; மக்களும் மறக்கவில்லை. கல்கத்தாவில் தடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக்கு அன்னி பெசண்டை மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடித்தக்கதாகும்; மக்களும் மகிழ்ந்தார்கள். அதே ஆண்டில் பெசண்ட் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் தண்டனை பெற்றார்! ஆவருடைய புகழ் முன்பைவிடப் பன்மடங்கு உயர்ந்தது; போற்றாத தலைவரில்லை; தொண்டர்கள் அவரது புகழ் என்ற பலாச்சுளை மீது மொய்த்துக் கொன்டிருந்தார்கள். இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள் கூடாரமாகிப் போன பிறகு அதே விடுதலைக்காக ஐரோப்பிய நாட்டு வீராங்கனை ஒருவர் சிறை சென்றார் என்றால் என்ன சாதாரண விஷயமா இது மக்களும் பத்திரிகைகளும் மனமுவந்து பாராட்டின. அன்னி சிறையிலே இருந்து மீண்டார்! ஆங்கில அரசு விடுதலை செய்தது: வெளியே வந்ததும் அன்னியின் புகழ் மங்க ஆரம்பித்தது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது? காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கித்தை அன்னி குறை கூறி விமர்சித்ததே காரணமாக அமைந்தது. அது கூட அவ்வளவு முக்கியமன்று; அந்த இயக்கத்தை எதிர்க்குமாறு தொண்டர்களையே தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது! அதனால் அவர் புகழ் தேய்பிறையாக மாறியது. காந்தியடிகள் பலகோடி மக்களின் பாசமிகுத் தலைவர் அல்லவா? அவரை எதிர்த்ததால், மீண்டும் அன்னி இழந்த செல்வாக்கை இறுதிவரைப் பெற முடியாமலேயே போய்விட்டார்-பாவம்! அதற்காக அன்னி பெசண்ட் சளைத்துவிடவில்லை: தொடர்ந்து எனது பணி காந்தியடிகளை எதிர்த்துக் கொண்டிருப்பதே, என்ற சூழ்நிலையில் அவர் எதிர்த்துக் கொண்டே இருந்தார்! அன்னி பெசண்ட் நடத்தி வந்த ‘க்திய இந்தியா தி காமன்வீல்’ என்ற ஏடுகளிலும் காந்தியின் கொள்கைகளை எதிர்த்தே எழுதி வந்தார். ஆனால், ஒன்று மட்டும் உறுதி இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையிலே மட்டும் தொடர்ந்து வலியுறுத்தியும்-வற்புறுத்தியும் எழுதிக் கொண்டே வந்தார். இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும் போது எல்லாம் அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவார்! வாதாடுவார்! தயக்கமே காட்டமாட்டார்! என்றாவது ஒரு நாள் இந்தியா சுதந்திரம் பெறும் என்று அன்னி பெசண்ட் உறுதியாக நம்பினார்; என்றாலும், அந்த காந்தி எதிர்ப்பு சம்பவத்திற்குப் பிறகு, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். அரசியல் பற்றுக் குறைந்தது! இப்போது பிரும்மஞான சபை பணிகளிலே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்: இடைவிடாத உழைப்பு; அவற்றிலே எதிர்ப்பு: மீண்டும் களைப்பு! மறுபடியும் சிலிர்ப்பு! இவ்வாறு மாறிமாறித் தொண்டாற்றும்நிலை ஆரம்ப முதல் அன்று வரை இருந்து கொண்டே வந்ததால் அவர் மூப்பு தொடர்ந்து பணியாற்றத் தடையிட்டது. தனது வாழ் நாளின் இறுதிக் காலத்தைக் காசியிலே கழித்து, அங்கேயே மாண்டு போகலாம் என்ற ஆசை அவருக்கு இருந்தது. நினைப்பதெல்லாம் நடந்தா விடுகின்றது? அவர் உருவாக்கிய பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அந்தப் புகழாவது மாணவர்கள் இடையே நாள்தோறும் இணைக்கப்பட்டிருக்கக் கூடும்! அதுவும் நடைபெறவில்லை! இறுதிக் காலத்தில் அவரது உடல் நிலை காசிக்குப் போக முடியாமல் போய்விட்டது. அதனால், அவர் 1913-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதியன்று வான வெளியிலே ஞானமாகக் கலந்து விட்டார். அன்னி பெசண்ட் மறைவைக்கேட்ட மக்கள் கண்ணர் சிந்தினார்கள். பரிதாபமாக அழுகுரல் எழுப்பியது பிரும்மஞான சபை! இங்கிலாந்து நாட்டிலே பிறந்து, இங்கிலாந்திலேயே வளர்ந்து, இங்கிலாந்திலே வாழ்ந்து இறுதி நாற்பதாண்டுகளாக இந்திய மக்களுக்காகப் போராடி, இந்திய மக்கள் விடுதலைக்காக, பிறந்த நாட்டு மண்ணின் வெள்ளைக்கார ஆட்சியை இந்தியாவிலே எதிர்த்து, சிறைத் தண்டனைகளை அனுபவித்து, பென்னுரிமைப் போர்களை நடத்தி பெண்களுக்காக மாதர் சங்கம் ஒன்றை முதன் முதலில் நிறுவிய மூதாட்டிப் பெருமகள் அன்னி பெசன்ட் அம்மையார்! தன்னலம் விரும்பும் அரசியல் துறையில் எந்தவித விருப்பும் வெறுப்புமற்ற நிலையில் அன்னி பெசண்ட் வாழ்ந்தது அரசியல்வாதிகளுக்கு ஒரு மனப்பாடமாக இருக்கின்றது. மூதறிஞி, மூதாட்டி, ஞானப் பெருமாட்டி, அறிவுச் சீமாட்டி, சுதந்தரப் பிராட்டியாக வாழ்ந்த அன்னி பெசண்ட் மறைவு இந்தின் மக்களின் இதயத்தைத் துளைத்துவிட்டது. 1938-ம் ஆம் ஆண்டு இறந்த விடுதலை வீராங்கனை அன்னி பெசன்ட், மேலும் ஓர் பதினான்கு ஆண்டு காலம் வாழ்ந்திருப்பாரானால் ஆங்கிலேயரையே எதிர்த்து ஓர் ஆங்கிலப் பெண் கேட்ட சுதந்திரம் கிடைத்திருப்பதைக் கண்ணாலே கண்டிருக்கலாம்! பாவம் அன்னி துரதிருஷ்டசாலி! காந்தியடிகளைப் போல், அன்னி பெசன்டைப் போல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யைப் போல விரல்விட்டு எண்ண்க்கூடிய தன்னலமற்ற தியாகிகளின் உழைப்பும், உரமும்தான்; இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது என்பதை மட்டும் எவராலும் மறக்கவோ, மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அன்னிபெசன்ட் காலம் இந்தியாவுக்குத் தந்த ஒரு கடமைக் கொடை! அன்னி பெசண்ட் அம்மையார்: இத்திய புண்ணிய பூமிக்கு ஆன்மீகம் தந்த ஞான சிம்மாசனம்! அன்னி பெசன்ட் அம்மைப் பெருமாட்டி இந்தியாவுக்கு சட்ட வரம்புக்குட்பட்ட ஆறப்போர் தத்துவம் தந்த போராளி! அன்னி பெசண்ட் பிராட்டி: உலக மனித நேயத் தத்துவத்துக்கு பண்பு வழங்கிய அன்புருவம்! காலம் பொன் போன்றது என்ற பழமொழிக்கு மதிப்பளித்துப் பொதுவாழ்வுக் கடமையாற்றிய பெண்ணுலக விதிதகர்! அயல்நாட்டார். அவர் எவராலும்-எவ்வித லாபமும் இல்லாமல், மக்கள் தொண்டே இறைவன் தொண்டென பணியாற்றி மறைந்த மேதைகளாகத் திகழ்வது ஒரு பெரும் வியப்பாக உள்ளது. அன்னி பெசண்ட் மதத்தை எதிர்த்தார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், வால்டேர், ரூசோ போன்றவர் களைப் போல! அன்னிபெசண்ட் நிற பேதங்களை விரோதமாகக் கருதவில்லை; எல்லோரும் மனிதர்களே என்று எழுதினார்- பேசினார்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் உலகச் சமுதாய உருவாக்கத் தத்துவத்தின்படி இத்தியாவிலே வாழ்ந்து காட்டியவர். உலக மக்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வளமாக வாழவேண்டும் என்ற பரந்த நோக்குடையவர் ஆன்னிபெசன்ட்; அன்னிபெசண்ட் பழகுவதிலே இனிமையாளர்: எல்லாரையும் தேசிக்கும் பண்பாளர்! - பிறர்மணம் புண்படும்படியாக, அவர் யாரையும் பேசமாட்டார். “வாழ்க வசவாளர்” என்ற தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்த்தவர் அன்னி பெசண்ட். வாழ்க்கையில் உதவி என்று வந்தவர்களை தன்னிடம் இல்லாமற் போனாலும், இயன்றதைச் செய்துவிட்டு, மற்றவரைப் பார்க்க வழிகாட்டிவிடும் பண்புடையவர்! சொல் தவறாதவர்; புகழை விரும்பாதவர்; பெருந்தன்மை மிகுந்தவர்; ஒழுக்கம் ஓம்பும்; சீலர்! குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடும் குழந்தை மனம் கொண்ட குணாளர்: தினசரி கடமைகளை எதத நெருக்கடிகள் வந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு கடமைகளைச் செய்பவர்! ஊன் உடலே கோயில் உள்ளமே இறைவன் என்ற திருமூலர் என்னப்படி உடலைப் பேணுவதிலே வல்வராகவே வாழ்தார் அன்னி உலகம் போற்றும் நாவலர்! சிறந்த சிந்தனையாளர்! ஏற்றமிக்க எழுத்தாளர்! உணர்ச்சிகளின் உந்தகம்! புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர்; அஞ்சாமை அனைவரும் பெற வேண்டும் என்ற அரிமா நோக்காளர்! தமிழ்நாடு என்ற பொய்கையிலே வண்ணக் கோலத்துடன் வன்ன முகம் காட்டி காட்சியளித்த அன்னி பெசண்ட் என்ற ஞானத்தாமரை, வானிலே பூத்தது! வாழ்க அன்னி பெசண்ட் பிராட்டியின் மக்கள் தொண்டு! FREETAMILEBOOKS.COM மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்: மின்புத்தகங்களைப் படிப்பதற்கென்றே கையிலேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல கருவிகள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. Kindle, Nook, Android Tablets போன்றவை இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய கருவிகளின் மதிப்பு தற்போது 4000 முதல் 6000 ரூபாய் வரை குறைந்துள்ளன. எனவே பெரும்பான்மையான மக்கள் தற்போது இதனை வாங்கி வருகின்றனர். ஆங்கிலத்திலுள்ள மின்புத்தகங்கள்: ஆங்கிலத்தில் லட்சக்கணக்கான மின்புத்தகங்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. அவை PDF, EPUB, MOBI, AZW3. போன்ற வடிவங்களில் இருப்பதால், அவற்றை மேற்கூறிய கருவிகளைக் கொண்டு நாம் படித்துவிடலாம். தமிழிலுள்ள மின்புத்தகங்கள்: தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்புத்தகங்களாக கிடைக்கப்பெறுவதில்லை. ProjectMadurai.com எனும் குழு தமிழில் மின்புத்தகங்களை வெளியிடுவதற்கான ஒர் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இதுவரை வழங்கியுள்ள தமிழ் மின்புத்தகங்கள் அனைத்தும் PublicDomain-ல் உள்ளன. ஆனால் இவை மிகவும் பழைய புத்தகங்கள். சமீபத்திய புத்தகங்கள் ஏதும் இங்கு கிடைக்கப்பெறுவதில்லை. சமீபத்திய புத்தகங்களை தமிழில் பெறுவது எப்படி? அமேசான் கிண்டில் கருவியில் தமிழ் ஆதரவு தந்த பிறகு, தமிழ் மின்னூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பதிவிறக்க இயலாது. வேறு யாருக்கும் பகிர இயலாது. சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன. நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும். தமிழிலிருக்கும் எந்த வலைப்பதிவிலிருந்து வேண்டுமானாலும் பதிவுகளை எடுக்கலாமா? கூடாது. ஒவ்வொரு வலைப்பதிவும் அதற்கென்றே ஒருசில அனுமதிகளைப் பெற்றிருக்கும். ஒரு வலைப்பதிவின் ஆசிரியர் அவரது பதிப்புகளை “யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதனை நாம் பயன்படுத்த முடியும். அதாவது “Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் வரும் பதிப்புகளை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். அப்படி இல்லாமல் “All Rights Reserved” எனும் உரிமத்தின் கீழ் இருக்கும் பதிப்புகளை நம்மால் பயன்படுத்த முடியாது. வேண்டுமானால் “All Rights Reserved” என்று விளங்கும் வலைப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு அவரது பதிப்புகளை “Creative Commons” உரிமத்தின் கீழ் வெளியிடக்கோரி நாம் நமது வேண்டுகோளைத் தெரிவிக்கலாம். மேலும் அவரது படைப்புகள் அனைத்தும் அவருடைய பெயரின் கீழே தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் நாம் அளிக்க வேண்டும். பொதுவாக புதுப்புது பதிவுகளை  உருவாக்குவோருக்கு அவர்களது பதிவுகள்  நிறைய வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நாம் அவர்களது படைப்புகளை எடுத்து இலவச மின்புத்தகங்களாக வழங்குவதற்கு  நமக்கு அவர்கள் அனுமதியளித்தால், உண்மையாகவே அவர்களது படைப்புகள் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும். வாசகர்களுக்கும் நிறைய புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைக்கும் வாசகர்கள் ஆசிரியர்களின் வலைப்பதிவு முகவரிகளில் கூட அவர்களுடைய படைப்புகளை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம். ஆனால் நாங்கள் வாசகர்களின் சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஆசிரியர்களின் சிதறிய வலைப்பதிவுகளை ஒன்றாக இணைத்து ஒரு முழு மின்புத்தகங்களாக உருவாக்கும் வேலையைச் செய்கிறோம். மேலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களை “மின்புத்தகங்களைப் படிக்க உதவும் கருவிகள்”-க்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கும் வேலையையும் செய்கிறோம். FREETAMILEBOOKS.COM இந்த வலைத்தளத்தில்தான் பின்வரும் வடிவமைப்பில் மின்புத்தகங்கள் காணப்படும். PDF for desktop, PDF for 6” devices, EPUB, AZW3, ODT இந்த வலைதளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம்(download) செய்யப்பட்ட புத்தகங்களை யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக வழங்கலாம். இதில் நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்களா?  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி எங்களுக்கு அனுப்பவும். அவ்வளவுதான்! மேலும் சில பங்களிப்புகள் பின்வருமாறு: 1. ஒருசில பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு அவர்களது படைப்புகளை “Creative Commons” உரிமத்தின்கீழ் வெளியிடக்கோரி மின்னஞ்சல் அனுப்புதல் 2. தன்னார்வலர்களால் அனுப்பப்பட்ட மின்புத்தகங்களின் உரிமைகளையும் தரத்தையும் பரிசோதித்தல் 3. சோதனைகள் முடிந்து அனுமதி வழங்கப்பட்ட தரமான மின்புத்தகங்களை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் விருப்பமுள்ளவர்கள் freetamilebooksteam@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்? யாருமில்லை. இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மேலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள், ebook reader ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்பில் அமையும். இத்திட்டத்தால் பதிப்புகளை எழுதிக்கொடுக்கும் ஆசிரியர்/பதிவருக்கு என்ன லாபம்? ஆசிரியர்/பதிவர்கள் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான தொகையும் பெறப்போவதில்லை. ஏனெனில், அவர்கள் புதிதாக இதற்கென்று எந்தஒரு பதிவையும்  எழுதித்தரப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் பதிவுகளை எடுத்துத்தான் நாம் மின்புத்தகமாக வெளியிடப்போகிறோம். அதாவது அவரவர்களின் வலைதளத்தில் இந்தப் பதிவுகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து ebook reader போன்ற கருவிகளில் படிக்கும் விதத்தில் மாற்றித் தரும் வேலையை இந்தத் திட்டம் செய்கிறது. தற்போது மக்கள் பெரிய அளவில் tablets மற்றும் ebook readers போன்ற கருவிகளை நாடிச் செல்வதால் அவர்களை நெருங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். நகல் எடுப்பதை அனுமதிக்கும் வலைதளங்கள் ஏதேனும் தமிழில் உள்ளதா? உள்ளது. பின்வரும் தமிழில் உள்ள வலைதளங்கள் நகல் எடுப்பதினை அனுமதிக்கின்றன. 1. http://www.vinavu.com 2. http://www.badriseshadri.in  3. http://maattru.com  4. http://www.kaniyam.com  5. http://blog.ravidreams.net  எவ்வாறு ஒர் எழுத்தாளரிடம் CREATIVE COMMONS உரிமத்தின் கீழ் அவரது படைப்புகளை வெளியிடுமாறு கூறுவது? இதற்கு பின்வருமாறு ஒரு மின்னஞ்சலை அனுப்ப வேண்டும். துவக்கம் உங்களது வலைத்தளம் அருமை (வலைதளத்தின் பெயர்). தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான Desktop,ebook readers like kindl, nook, mobiles, tablets with android, iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் odt, pdf, ebub, azw போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும். இதற்காக நாங்கள் உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள் உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும். எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை  பிரதியெடுப்பதற்கும் அவற்றை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின் பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை “Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும் உறுதியையும் அளிக்கிறோம். http://creativecommons.org/licenses/  நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். e-mail : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM  FB : https://www.facebook.com/FreeTamilEbooks  G plus: https://plus.google.com/communities/108817760492177970948    நன்றி. முடிவு மேற்கூறியவாறு ஒரு மின்னஞ்சலை உங்களுக்குத் தெரிந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களிடமிருந்து அனுமதியைப் பெறுங்கள். முடிந்தால் அவர்களையும் “Creative Commons License”-ஐ அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்தச் சொல்லுங்கள். கடைசியாக அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்து அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைFREETAMILEBOOKSTEAM@GMAIL.COM எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.  ஓர் எழுத்தாளர் உங்களது உங்களது வேண்டுகோளை மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அவர்களையும் அவர்களது படைப்புகளையும் அப்படியே விட்டுவிட வேண்டும். ஒருசிலருக்கு அவர்களுடைய சொந்த முயற்சியில் மின்புத்தகம் தயாரிக்கும் எண்ணம்கூட இருக்கும். ஆகவே அவர்களை நாம் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்த எழுத்தாளர்களை நோக்கி நமது முயற்சியைத் தொடர வேண்டும்.   மின்புத்தகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? ஒவ்வொருவரது வலைத்தளத்திலும் குறைந்தபட்சம் நூற்றுக்கணக்கில் பதிவுகள் காணப்படும். அவை வகைப்படுத்தப்பட்டோ அல்லது வகைப்படுத்தப் படாமலோ இருக்கும்.  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு பொதுவான தலைப்பின்கீழ் வகைப்படுத்தி மின்புத்தகங்களாகத் தயாரிக்கலாம். அவ்வாறு வகைப்படுத்தப்படும் மின்புத்தகங்களை பகுதி-I பகுதி-II என்றும் கூட தனித்தனியே பிரித்துக் கொடுக்கலாம்.  தவிர்க்க வேண்டியவைகள் யாவை? இனம், பாலியல் மற்றும் வன்முறை போன்றவற்றைத் தூண்டும் வகையான பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.  எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.  - EMAIL : FREETAMILEBOOKSTEAM@GMAIL.COM   - Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks   - Google Plus: https://plus.google.com/communities/108817760492177970948   இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? குழு – http://freetamilebooks.com/meet-the-team/    SUPPORTED BY கணியம் அறக்கட்டளை http://kaniyam.com/foundation     கணியம் அறக்கட்டளை []   தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும்  கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு  – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.   தற்போதைய செயல்கள் - கணியம் மின்னிதழ் – http://kaniyam.com - கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – http://FreeTamilEbooks.com   கட்டற்ற மென்பொருட்கள் - உரை ஒலி மாற்றி –  Text to Speech - எழுத்துணரி – Optical Character Recognition - விக்கிமூலத்துக்கான எழுத்துணரி - மின்னூல்கள் கிண்டில் கருவிக்கு அனுப்புதல் – Send2Kindle - விக்கிப்பீடியாவிற்கான சிறு கருவிகள் - மின்னூல்கள் உருவாக்கும் கருவி - உரை ஒலி மாற்றி – இணைய செயலி - சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஆன்டிராய்டு செயலி - FreeTamilEbooks – ஐஒஎஸ் செயலி - WikisourceEbooksReportஇந்திய மொழிகளுக்ககான விக்கிமூலம் மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல் - FreeTamilEbooks.com – Download counter மின்னூல்கள் பதிவிறக்கப் பட்டியல்   அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்   - விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல் - முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல் - தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் - கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல் - கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல் - கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல் - மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி - எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி - தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல் - http://OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல் - தமிழ்நாடு முழுவதையும் http://OpenStreetMap.org ல் வரைதல் - குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல் - http://Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல் - http://Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல் - தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல் - தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல் - எல்லா http://FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல் - தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல் - தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( aamozish.com/Course_preface போல)   மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை  kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.   வெளிப்படைத்தன்மை கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம். கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும். நன்கொடை உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும். பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  Kaniyam Foundation Account Number : 606 1010 100 502 79 Union Bank Of India West Tambaram, Chennai IFSC – UBIN0560618 Account Type : Current Account   UPI செயலிகளுக்கான QR Code []   குறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும். Note: Sometimes UPI does not work properly, in that case kindly use Account number and IFSC code for internet banking.